கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வித்தியோதயம் 1975-76

Page 1


Page 2
Zith the 3e
of
ASSOCIATED BATTE (CEYL0

if Compliments
RY MANUFACTURERS N) LTD.

Page 3
வித்திே νιDYΟι
197
தமிழ் இலங்கைப் பல்கலைக் கழ நுே
THAMIL
UNIVERSITY OF SRI IL NUC
 

u I T ğb u] (f AYAN
r5-76
யாசிரியர்கள்:
இரத்தினசிங்கம்
பணவான்
LD 5OOLD pகம், வித்தியோதய வளாகம் ககொடிை.
, MANTRAM ANKA, VIDYODAYA CAMPUS
EGOIDA.

Page 4


Page 5
FIDi'LIGODT (t). . . . . . .
தமிழே! தேனே! தா
அமிழ்தே! அன்பே !
எழிலே! அறிவே! எ
பொழிலே! புகழே !
திருவே! உருவே! தி
தருவே! நிழலே! நியூ
தாயே உந்தன் பாத எமது மன்றத்தின் வெளி எனும் சஞ்சிகையின் இரண்
சமர்ப்பிக்கின்ருேம்.
 

ங்கக் கனியே!
அழகுக் கலையே!
ண்ணச் சுடரே!
பொன்னின் மணியே!
ங்கட் குளிரே!
ழல்தரு சுகமே!
ார விந்தங்களில் யீடான 'வித்தியோதயம்'
டாவது ஆண்டு மலரைச்

Page 6
SYSSSSLLLLSSASLSLMSS S AAASL SS AYSJJSSASJSSJASLSSqqSS AAAASLMS
*۔--سی_~-سیم_حسس۔ <-- مسیح --سمہ ~ -- .حم~~~~-بہ ۔ - یہ
அட்டைப்பட வி
S.
ଅର୍ବ
qq AA AAA AAAASSSSSSSAAASSSSSSSSSSS SSqqS qASASSAASTSA
அவன் பெரும் ( அவன் மகா ச எழுத்தாளனது எண்ணத்தில் க பேசிய - எழுதி பொருளாதார பொங்கி வரும்
பெருகி வரும்
தங்கு தடையா தணியாத பிரச் இவற்றினைத் தீா நெடு வாழ்வுப் நீண்ட காலத் தி சிந்தனையின் சி திட்ட மொன்று தீவிரமாய் முத6 வட்ட மிடும் அ வண்ணத்தின் ஆ மலர் ந்ததுவே

ASJASuMS SqqSqSJSLSASMSASeMMMMASLLLS AASAAeSLMqAALSMSMASMMMSASASeeMASAMMeSASA ASeMMAeSeMM SASAeASASeSeeLeLSASASeSASMMAAeSeMSLMTTLMLMLTLM LALASSSLLSLSSLALALSLM AeMSM AAAAS AAAASSSSSASASS
எழுத்தாளன் அல்ல; 5 விஞனுமல்ல; ம் கவிஞனதும் ற்பனையில்
ய நாட்டின் ச் சீர்கேடு. சனப் பெருக்கம் வேலையின்மை ய் ஒடிவரும் சினைகள்
ர்க்க
பனையே போல்
ட்டமிடும் ற்பியவன் று உருவாக்கி ன்மை பெற வன் சிந்தை உதயமாய்
'வித்தியோதயம்'
ASqS SqLA AS SSLLAASLLLAAASAA S LqLASMLASqLA S LSAAAS AAALASqLAAS LALASSSLLSeS SAAA AAAA SiASLLALA SM ALASLLA SSMAMSMSMMAMMM ALASMMAMMMAMSMMAMJSJS

Page 7
lsage hom the Asident -
With the passing of a
peaceful and harmonious rela in our Campus, uve can certa
harmonious and fruitful futur to a very high degree of und our students and staff that ut With regard to student a d1 Vidyodaya, numbers have re the last few years, but we a doors wider and enable mor
I am very much a uva 1 Vidgyoda ya. Tha mil. Mantra m. I1 many laudable activities to fa and to help each other, in all
again, the Mantram is busy with I wish to eacpress my we and the continued success of
25th June, 1976.
- iii

Aduodaya Campus
nother academic year of eactre mely tions betube en various communities inly look forward to an even more e, in all our activities. It is due er standing and co-operatiom a mong e have been able to achieve this, missions to the Tamil stream at mained more or less static during 'e making every effort to open our e Tamil medium students to enter
re of the good work done by the
is leadership is in the forefront of
2ster good-upill đã mong their felloups,
l their activities. This year, once the publication of VIDY OTHAYAM,
rmest good uvishes for its success. the Montram.
Professor W. M. K Wijetunga
President.

Page 8
: < <
ബ-86Iങ്ങ് குழாய்களைத் தேர் ஐந்து பெரும் பயன் 2ங்களுடையதாகு
தொழில் நுட்ப ஆலோசனை
★ * விசேஷ உருவமைப்புகள் வ * குழாய்ப் பணியாளர் சேவையு ச * தலப் பரிசோதனை
D
ta33 தொழில்
 
 
 

6i5.
ந்தெடுக்கும் போது
56 Lih!
தேர்ந்தெடுக்கும் போதே முன் னணியில் திகழ வைப்பது எஸ்-லோன் ! h−
எஸ்-லோனைத் தேர்ந்தெடுத் தால், தொழில் நுட்ப ஆலோ சனை, விசேஷ உருவமைப்புகள்,
குழாய்ப் பணியாளர் சேவை,
பயிற்சி ஆகியன உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். எஸ்-லோனைப் பொருத்தினுல், தலப் பரிசோதனையும் விற்ப னேக்குப் பிந்திய சேவையும் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். ஓர் முழுத் திட்டத்தை வழங்கு வது எஸ்-லோன் மட்டுமே !
ம், பயிற்சியும்
Eேஒன்லிறிட்டெட்
நுட்ப விற்பனே, சேவைப் பிரிவு

Page 9
flessage from the -lting N
In recent years, Con popular subject of study bo The Vidyodaya Campus, 1 Management and Business Lanka, started the four-year in both Sinhala and Tamil with the B. Com. de gree wi
The Commerce Studen Campus have been very acti their academic interests. A
the publication of this jour production of a journal of enthusiasm and 2eal with
activities. The Society deser I hope the good work that h of this journal uvill contin come. I uvish the Tha mil M
thayam '' every success,
Facult
ه 76-09 - ()i

ean of the لتacally
ni merce has become an increasingly th in schools and in the university. Dhich pioneered the education in Studies at University level in Sri ' B. Com. degree programme in I972 media. The first batch of students ill be passing out in early 1977.
its in the Tamil Society at Vidy oda ya ve in organizing themselves to further mong their many and varied activities, na is a very encouragi ng event. The
this nature is a reflection of the which the society has conducted its 'ves our congratulations for this effort. as been initiated with the publica toin we to be maintained in the years to antram and their publication “Vidyo
Professor S. Tillakaratna Dean (Acting) / of Management Studies & Comm.

Page 10
B E R
SATT
ARG PULILY SA
FULL STEEL PROTEC AND SIDES, PREVEN" CORROSON,
BEREC - FOR GREATER F
| BEREGC (CEYLC
empas
madása
With The Besi of The Ma
 

R E C
RS
TION - TOP BOTTOM TS SWELLING AND
OWER AND LONGER LIFE
DN) LMT)
t Compliments nufacturers
S S SS LS SS SS SS SSAASSiSiSSiSSiS
. . . . . . . . . . . . . . . . . . " . " . " , " . . . . . . . . . . . . . . . . . .
A s
) ) - O - d. A LL S0SLS L S L SLS SL S SSLSL S SL S SLSL SLSS SLS S SS SS SS SSLS S L S SLLL SS SS SSL SSL S L S S L S SLSL S LSL S S S S S S S Sq SS qqSS S S SS LSL S S LLLL SLSLS SLS S L SLL SS SS SS SSL SSS S SS S SL S LS S LS SLLSL S S S LSL S LS S S L SLL SS SS SS SS S SS SL S SLS
L S S SLSSLL LSLSLSS SS qS S S S SLSSS SLL SS SS SS SSLSSSSSSSL SSSSL0LSSSSSSLS SS SSS
. प्रीष्ट- D AB 4) 8 de i 8 9 LSLS S SLSL S SSL SSL SS SLSSLS SSSSSLS SSLS S LS S S S S S LSLS S LSLLSSS SSLL SS Y SS SSL S S Y S LLLL LLLLLL S SSLLS S0LS S0SLS S S0SL S SLLLSL S SS0SS S SLL SSSSY SSSSSLS S L ه م اه - * * * * * * * * * * * * * "s " = ** " مجھ لکھے۔ سر گھل مگس • شھ*ع عڈھ“ گھو “
M
.: ,
YSS SYS S SYS S SLL SSS E S YS S S YS S LLSL S SSS S S SHH S S SLLSS S LLS SSS qq
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
8 . . . . . . . . . . . . . . . . . . . . .
مہ۔ • • هے ج ۔ ۔ ۔ ۔ ۔ م ۔ * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ۔ ۔ م ۔ SSSSSSSiSSSiSSSSSS S SS S SS SS SS SSSSSSS SSSSSSSS SSSLSSLL LSSLALL LLLLL SLLSSLL LLLL LLL LLLL ALLL SSLLSS AAA LLL LLA LAL LLLLSS
SSS SS SSLSSS SS SSL SSS SLSL SSLSLS SS 0S S L S L0 S 0L S LS S 0L S LL S LSL
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

Page 11
سمبر
(
ــــــ۔۔۔۔
surr L. r6r fsär
இலங்கைப் பல்கலைக் க மன்றக் காப்பாளர் என்ற கோ சஞ்சிகை உதயமாகி இரண்டா தைக் குறிக்கும் இவ் வெளியீ வழங்குவதில் மிக மகிழ்ச்சி அை
மாணவ சமூகம் நுகர்ே மாகக் கொண்ட வர்த்தகம், முக் சுயேச்சையாகத் தனித்து காலத் தேவைகளையும் வருங்க களையும் எதிர்நின்று செயற்பட வாக்குவதாகவே கல்விமுறை ப
சர்வகலாசாலை மட்டத் கப்படுகின்ற கல்வி நெறியானது யும் தெரிவு செய்வதற்கான சுத நுகர்வோர் - உற்பத்தியாளர் எ படுவதற்கு உதவுவதால் அவர் சமுதாயத்துக்கும் ஈடில்லாச் ଘେରଣ
எமது வித்தியோதய ம றையே எனது வாழ்த்துச் செய்
18 - 8 - 1976 •
- vii -

ஆசிச் செய்தி
x^Wrx,
ழக வித்தியோதய வளாகத் தமிழ் நாவில் "வித்தியோதயம்' என்னும் பது ஆண்டு நிறைவேறும் வைபவத் ட்டிற்கு எனது ஆசிச் செய்திகளை டகின்றேன்.
வார்க்குச் சந்தைப்படுத்தலே ம்ைய காமை போன்ற கல்வித் துறைகளில் இயங்காமல் இலங்கையின் எதிர் ாலச் சமுதாயத்தின் அறைகூவல் க்கூடிய இளம் பட்டதாரிகளை உரு
யன்படவேண்டும்.
தில் எமது மாணவ உலகுக்கு அளிக் விசாலமானதும் எந்தத் தொழிலை iந்திரத்தையும் அளித்து அவர்களே ான்ற பாங்கிலே இயங்கிச் செயற் கள் தமக்கும், தாம் வாழுகின்ற Fாத்துக்களாகத் திகழ்கின்ருர்கள்.
ாணவர்கள் எல்லோருக்கும் இவற்
திகளாகக் கூறவிரும்புகிறேன்.
சி. மாணிக்கவாசகர், வர்த்தக நெறி விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம் வித்தியோதய வளாகம்.

Page 12
வெண்ணிற பளிச்சிடும் வெண்ை
“ (3 ng ut
நீங்களும் 'ருேயல் நீலம்" என்
ஏக விநியோகவதர்கள் :
சேகர் அன் பிறதர்ஸ் ஆதம்மலி கட்டிடம், 20, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு.
தொலைபேசி : 35 0 49
Lith the
Ceylon Carbon
Manufacturers of : “As
Typewriter Ribbons
No. 6. Glen
Colom
Telephone : 827.53
LALAeSLMLSLeMeLMLMMMMJSMLMLLkSMMSeSMMMASASASASASJSaeSLSLSLSLSJSLLLSJSMMAeMMLeLeeSaMMMeJkSLekSLMMA

ஆடைகளுக்கு மயைக கொடுப்பது
if "
று கேட்டு வாங்கத் தவறத்ர்கள்.
தயாரிப்பாளர்கள் :
சிவா இன்டஸ்ரீஸ்
112 13, 4ம் குறுக்குத் தெரு,
சொழும்பு-11.
------....-
Compliments
f
Paper Co., Ltd.
soka” Carbon Papers,
& stencil Papers.
Aber Place, bo-3.
LSLSeLSAALeMLSa MAeALSMAMMSJMMMMMMMMSMLSJSMMLASeASLMeALSMSLSeALSASeAASLqMLSSkeeSkSqSMkeSeMMMkMLM eAeSqqSLLSAAkSeSeMMAeMLS AAMLA LMMMS

Page 13
பெரும் பொருளாளரின் ஆ
ASLSLSSSSSASLSALSLSLS AAALSLSLSLSLSS SAALLSSMSSASLSLSLSLSASSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLeSLMLSeSMLLLLLSLSLLLSLSeSMSMASLSLALAqSqqSLLLSqqSqSLLSqSqSqSqLqSLSLSLSLSASqSLSLSLSLSASSMLASAMLSSSLLLSLLLMLMLMLALLS
sa-a-M
இம்மலர், வித்தி யினை எடுத்துக் கூறு
முதலாவது மல அறிஞர்களிடையே ரைப் பெரிதும் உற் காரணமாக இம்மலி
கொணர்ந்துள்ளனர்.
எமது தமிழ் மன டவன் எனும் வகையி சியைத் தருகின்றது.
வணிகத்துறை எமது மாணவர் ஆ தமிழ் இலக்கிய வர பது எமது துணிபு.
இம்மலர், ஆர்
அன்புப் படையல்.
அவர்களது தமி தாக இம்மலர் அ.ை
எனது மாணவர்
10-9-76.

சியுரை
நியோதய வளாகத்துத் தமிழ்ப்பணி ம் இரண்டாவ்து படைப்பாகும்.
ருக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், கிடைத்த வரவேற்பு எமது மாணவ சாகப்படுத்தியுள்ளது. அவ்வுற்சாகம் ரை மேலும் சிறப்புடன் வெளிக்
எறத்துடன் நெருங்கிய உறவு கொண் ல், இம்முயற்சி எனக்குப் பெருமகிழ்ச்
தமிழில் வியாபித்து வளருவற்கு றறும் இச்சிறு பங்களிப்பு ஈழத்துத் லாற்றில் த வருது இடம்பெறும் என்
வம் நிறைந்த மாணவர் குழுவின்
ழார்வத்தினை நன்கு புலப்படுத்துவ
மந்துள்ளது.
கட்கு எனது தமிழ்தோய்த்த நன்றிகள்!
கார்த்திகேசு சிவத்தம்பி
சிரேஷ்ட விரிவுரையாளன்.

Page 14
SLSSqSSLMSALSLSS qSSqqSqSASASqJSLASLSLLqA qALAJSqSSSLSASASLSSASqSASASSSLqSSSqSSASAqSLSLSqSMLASqSSJSqMSASSASSASASASLSASALJSLSLS LASSMLMSSSSASASSSLSSASTqSSLSLSSLSLSSLSLSA AA
நெல்லு, அ
(p56
குறித்த
K
t
அரைத்தும், குற்றி
0 Ꮷ ii Ꭿl Ꮷ
вътъ தசாமி G3.
}
வவு
iSiMqSASSSAASSSSSSS LSSSS S ALSMMMSA AMSMMSMSLLSASMSMLSSSMSLS SLSAAAASqAASLSqSLMSSSLSLSLSSSLLLLSLLASLLALAMSLLMSMeLS

AAA AASLLLLSLLLSMLAASqSLALMLMLSqALSLSLLLLLSSLMSLAMALALSLqAMMAAALLLSS SLqAqAqASqSALAMSLAqASMLMLSL MLMLSLMSAAqAqAqLMM AeAeSeSLMASLLALMLALSLSSLLLLSMMMLALLSASLMSS
ரிசி, மிளகாய்
மியன
நேரத்தில்
பும் கொடுக்கப்படும்.

Page 15
தமிழ் மன்றத் த
வித்தியோதய 61s தமிழ் மன்றம் தையடைந்த ஒரு மழலைக்குழந்தை. அதன் வ னும்இம் ம்லர் குறுகிய காலத்தில் பொருள மத்தியில் நன்கு அறிந்த ஒரு தரமான ெ வெளிவரும் என்ற நம்பிக்கையோடும் நமது யோடும் என் கருத்தைப் பகருகிறேன்.
அன்பும் அறனும் இன்பமும் வீரமும் இவ்ற்றில் ஒன்று குறைவு பட்டாலும் அது எண்ணுவான் தமிழன். இப்படியான வாழ்க்ல வும் உறுதுணையாக இருந்த எண்ணங்கள் ப திக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டு முடிவுகள் மக்கள் எய்தியிருந்த நாகரிக நிலைக்கேற்பவு பாட்டுக்கேற்பவும் கொள்கைகள் பூத்தன தொன்மை மிக்க தமிழ் மக்கள் தம்முடன் தே கருத்துக் கருவூலமாகத் திகழ்ந்த இலக்கியங் அந்த தமிழர் நாகரிகமே பண்பாட்டின் அடி தோன்ருக் காலத்தே வாளோடு முன் தோ பேசுகின்ருேம் அன்று கொடியும் முடியும் குை இருந்த காலம் ஒன்று வீரமூம் காதலும் இருந்த காலம் ஒன்று, ஒரு மொழி வைத்து வந்துள்ளான் என்ருல் நமது வீரமும் விவேகி யாகும். புரண்டு வரும் ஆற்று வெள்ளத்தி, தான் வரம் பெடுத்த வயலில் வளத்தைக் கா வாழவும் முடியும். அதை செய்யும் பணியிே
கணிதம் பன்னிரண்டா கார் கொள் வாளிலே அணி செய் காவியம் ஆழ்ந்திருக்கும் கவியுள் வணிகமும் பொருள் வாழ நாட்டிற் பொரு துணியும் ஆயிரம் சா, சொல்லுவார் எட்டுை ஒரு நம்பிக்கையை மனதில் வைத்து செயல்ப நான்கு மறைதீர்ப்பு. வாஸ்கொடகாமாவின் கொலம்பஸின் நம்பிக்கை அவன் தாய் நா. முன்னேற வேண்டும் என்ருல் நம்பிக்கையில் தருகிறது, நிம்மதி தருகிறது. நியாயமாக ந செயல் படுவோம் என்ருல் நமது பாதை ( னேர் அகநானூறு படைத்தனர், புறநானுறு

லவரின் தகவுரை
வளர்ந்து வரும் பாதையிலே இரண்டு வய ளர்ச்சி பாதையிலே 'வித்தியோதயம்' என் யல் வர்த்தக முகாமை கற்கும் மாணவர்கள் வளியீடு. இவ் வாடா மலர் தொடர்ந்து மன்றத்தின் பணி தொடரும் என்ற உறுதி
தமிழ் மகனின் இதயத்தோடு ஒன்றியவை. வே நிறைவு கொண்ட வாழ்வல்ல என்று க வளம் பெறவும் நலம் பெறவும் முன்னேற லப்பல. அந்த எண்ணங்கள் பல காலும் சிந் ா காணப்பட்டு தத்துவங்களாக விரிந்தன. ம் அவர்தம் உள்ளத்திலே அரும்பிய பண் இலக்கியங்கள் மலர்ந்து மணம் ஊட்டின. ான்றி இயற்கையாக வளர்ந்த ஈடு இனையற்ற களில் நாகரிகத்தின் எல்லையைக் கண்டனர். டத்தளம். இதனுலேயே “கல் தோன்றி மண் ன்றிய மூத்த குடி' என்று குலப் பெருமை டயும் கொண்டு குவலயம் மெச்சிட வாழ்ந்து விளையாட வீரப் பெரு வாழ்வு வாழ்ந்து து உல காண்ட தமிழன் இன்று இழி நிலைக்கு மும் வீணுன வழியில் விரையமாக்கப்பட்டதே ற்கு அணைகள் கட்டி வாய்க்கால் வகுத்தால் ணமுடியும், அவ் வழியே நின்று தலை நிமிர்ந்து ல நாம் ஈடுபடவேண்டும்.
rண்டு பயில் வார் பின் ார் மீனில் தேர்ந்திலார்
ஆயிரம் கற்கினும்
ாம் காண்கிலார்
நூலும் பிதற்றுவார்
குள் கெடல் கேட்டிலர்
த்திர நாமங்கள்
ாப் பலன் கண்டிலர் என்று இருக்காமல் டுவோம். “நம்பினுர் கெடுவதில்லை’ என்பது நம்பிக்கை புதிய நிலத்தைக் கண்டு பிடித்தது ட்டுக்கு ஒரு புதிய நிலத்தைத் தந்தது. நாம் தான் முடியும், தெய்வ நம்பிக்கை பொருள் டக்கச் சொல்கிறது. ஆகவே நம்பிக்கையோடு தறுகியது. அந்த வகையிலேதான் நமது முன் படைத்தனர், கலிங்கத்து பரணி படைத்

Page 16
தனர். தொல் காப்பியமும், சிலப்பதிகாரமும் னர். ஆனல் தற்காலத்துக்குகந்த விஞ்ஞான கள் இல்லை. அவற்றை வளர்த்தல் மூலமே ெ நிமிர்ந்து வாழ முடியும் எங்கள் தமிழ் உய தோம்; குறை களைந்தோமில்லை. எனவே த தமிழ் மகனே கலையை உணர்ந்த நீ உன் நீ தேவை இல்லை. நலிவான காரணத்தை கண் நன் முயற்சியில் ஈடுபடு. அந்த நன் முயற் பயன் தர மாட்டாது கிடைப்பதும் அவர் 8 வளம் பெற, பெற்ற வளம் அனைவருக்கும் பய திட தனித்தனியே முயற்சி செய்யப்படுவது தாகும். அந்த கடமையை செம்மையாக ச்ெ றல் கூட்டு முயற்சியிலேயே மிகுந்து சிறப்ெ
கூட்டு முயற்சி சிறப்பெய்ய வேண்டுெ வேண்டும். ஆணுல் நடப்பதுவோ வேறு. இ இட்டுக் கட்டுவதும் இடர் மொழி பேசுவது செல்ல முடிகிறது ஆதிக்கக்காரர்களால். எனே இனியும் வாதாட முடியாது. நாமே ஒற்றுமை கிடக்கும் சீர் கெட்ட நிலைமைக்கு வழி காண ே வும் தரமும் மிகப் பெரிது. அவற்றை பகிர்ந்து இளவல்களே படிப்பதும் பட்டம் பெறுவதும் தமிழுக்கு நல்ல தொண்டு மூலம் நானிலமும் வழியிலே வித்தியோதய வளாகத் தமிழ் ம யோதயம் என்னும் இம் மலரை தமிழ்த் தா யோதய வளாகத்தில் கல்வி பயிலுகிறது. உரிய தனிப் பங்காக செலுத்துகின்ருேம், இ டிய ஊக்கத்திலும் இதழாசிரியர்களின் தீவிரப டாவது மலரை அதன் வளர்ச்சி பாதையை ே கம் ஆக்கமும் ஊக்கமும் காட்டி வளர்க்க வே முக்கோர் அழிவு வந்தால் அது பொறுப்பது டோம் அவ்வழி நின்று பெருமை மிக்க எம் வருங்கால இளவல்கள் வளமான முறையில் கொண்டு பயிராலே நிலம் அறிமுகமாவ்து முகமாவது உண்மை. அங்ங்ணம் நாட்டினை அ வீசுவது இலக்கியங்களிலேயே, எனவே புத் ஆடிவரும் அருவி போல அசைந்து வரும் ெ
எந்த மொழியும் எமது சொந்த மொழி செம்மாந்து பேசுவர். தேமதுரத் தமிழோை என்று முரசு கொட்டுவர், எட்டுத் திசையி நிலையினை இன்று எண்ணில் பாரீர்! அத%ன
வாழ்க தமிழ்!

படைத்தனர். குறளோவியமும் கொண்ட முகாமை வர்த்தக கல்விக்குகந்த கலைச் செல் பருங்கால தமிழனும் தமிழ் மொழியும், தலை ார் வென்று சொல்லி தலைமுறை பல கழித் }ன்னை மறந்த தமிழினமே தன்மானமுள்ள லையை உணர்ந்து கொள்ள காலம் இனியும் டறிந்து கேடு களைந்திட, நலம் விளைத்திட சியும் ஒருவர், சிறு குழு மேற்கொண்டால் 5ட்கு மட்டும்ே போய்ச் சேரும். தமிழ் மொழி ன்பட, பயன்படும் முறையை பாழாக்காதிருந் வளர்ந்து விட்ட சமுதாயத்திலே முடியாத Fய்து முடிக்க ஆற்றல் வேண்டும் அவ் ஆற்
பய்தும்.
மன்ருல் அரசு முறை நேர்மையாக்கப்பட ந்த நாட்டிலே இவ் இருபதாம் நூற்ருண்டிலே தும் இருட்டடிப்பிலே தள்ளுவதும் நடத்தி வ மனிதன்மைக்காகவும் பகுத்தறிவுக்காகவும் }ப்பட்டு சாதி கழைந்திட வேண்டும். புரண்டு வண்டும் இயற்கை வளங்கும் பொருளின் அள ண்டு வேகமுடன் உழைக்க வேண்டும். நமது சோற்றுக்கு மட்டுமல்ல என்பதை உணர்த்து
கண்டு பெருமைப்பட ஆற்ற வேண்டும். அவ் ன்றம் சிறந்த பணியாக சீரிய பணியாக வித்தி "ய்க்குச் சமர்பிக்கின்ருேம். சிறிய குழு வித்தி நமது பணியை உயர் தனிச்செம் மொழிக்கு }ன்னல் இடர் நடுவே நமது செயற் குழு காட் ான முயற்சியாலும் மலர்ந்து இருக்கும் இரண் நாக்கி வளர்ந்து செல்ல தமிழ் பேசும் நல்லுல ண்டியது உங்கள் கடமை அழியக்கூடாத தமி ஒரு நாளுமில்லை என்பதைப் புரிந்து கொண் மொழிக்கு சீரிய பணியை செய்து முடிக்க தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறிக் போல மொழியிலே ஒரு நாடு உலகிற்கு அறி அறிமுகப்படுத்தும் மொழியும் மலர்ந்து மணம் தம் புதிய கலைகள் பஞ்ச பூதத்தின் செயல் தன்றல் போல வளர வாழ்த்தி நிற்கின்ருேம்,
மிக்கு இணையாகாது என்று நமது இளைஞர் ச உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம் லும் தமிழன் ஏற்ற முற்று விளங்கிய அந்த எய்தியே தீருவோம்! பணி செய்ய வாரீர்!
வளர்சு தமிழ்!
நடராசா சிவஞானசுந்தரம்பிள்ளை
ii ----

Page 17
உபதலைவர் உரைக்கி
Y~^ ^*Na N^ ́/^*Na Y~^°^*~a N^^*N`N
திமிழன்னைக்கு வி மன்றத்தின் வருடாந்த டாம் ஆண்டு மலரைத் மகிழ்வெய்துகின்ருேம். றினும் "வித்தியோத தொடர்ந்து செல்லும், வாழ்த்துகிருேம்.
s
5
XC e
ஏனைய பல்கலைக் க
( தமிழ் பேசும் அங்கத்த
தவர்களைக் கொண்டு 6
) வெளியிடவும், விழா
அதிகமாயிற்று. இருப்பி
( தொடர்ந்தும் தமிழ்ப்ட
தொடரவுள்ளோரையும்
) அழைக்கின் ருேம்.
( தமிழையும் தமிழ்ச்
盗 களும் - சங்கங்களும் ஆ மலர்களை வெளியிட்டும்
) நடவடிக்கைகள் இவற்
德 தமிழையும், தமிழ் மக்
( கால ஒட்டத்திற்கேற்பு
ка
ད།
泰
எம் அறிவின் பஞ் காலத்தின் கருத்தோட் களிலும் வளமாக்க மு முயற்சியிலேயே ஈரான் மேலும் தமிழ்மொழியில் களைந்து, தமிழின் தூய விக்க செயல் முறையி
டியதும் நம் கடமையf
Se
s
崇

afi
حصہ سمبی
ழா எடுக்கும் இவ்வேளையில் எமது தமிழ் 5 வெளியிடான “வித்தியோதயம்" இரண் தங்கள் கரங்களில் தவழ விடுவதையிட்டு போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற் 5 ամ, " " தன் பாதையில் தயக்கமின்றித்
*" வித்தியோதயம்" மென்மேலும் பிரகாசிக்க
ழக வளாகங்கள் போலன்றி மிகக் குறைந்த }வர்களை - குறிப்பாக 69 தமிழ் பேசும் அங்கத் ாம் மன்றம் இயங்கி வருகிறது. இதனுல் மலர் ாடுப்பதற்கும் நாம் வகிக்க வேண்டிய பங்கு னும் தமிழ் மீது கொண்ட பற்று எம்மைத் பணி செய்யத்தூண்டிற்று இனியும் எம்பணி வாருங்கள் தொடருங்கள் என்று அன்புடன்
5 கலாசாரத்தையும் வளர்த்து வரும் மன்றங் பூண் டாண்டு தோறும் விழாக்களை நடத்தியும் வருகின்றன. இம்மன்றங்களின் - சங்கங்களின் றுடன் நின்று விடாது ஒரு படி மேலாக களையும் வாழவைக்கும் நல்லதோர் பணியை
செய்ய முன் வரவேண்டும்.
சத்தை எம் மொழியின் பஞ்சமாக ஆக்காது, டத்திற்கேற்ப நம்மொழியைப் பல துறை பல்வது எமது தலையாய கடனுகும். இம் ாடு காலமாக நாமும் ஈடுபட்டு வருகிருேம் ) படிந்துள்ள எல்லைமீறிய பிறமொழி மாசினைக் ப்மையைப் பேணி தமிழைத் தமிழாக வாழ் ல் ஆக்கபூர்வமான பணியினைப் புரிய வேண்
"கும.
இ. இராசசுந்தரம்
iii —

Page 18
எங்களிடம் மலிவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
s 然 i 蔓 S.
SD:
s
$ விளம்பரதாரர்களை
* ஆதரியுங்கள்.
*೨ಜತೀಜ-ತಿಲಿಜಿಜಿಜಿ,
 

:Branch ܙܰܐ݂
Sovereign Jewellery Stores
Sea Street, Colombo-11
TPhone: 26731
藻 s s
s s
s s PLEASE PATRONSE
s s
OUR s s s s s ADVERTISERS. ကီး.....ဏa.or a.za.za.or:#ခီ

Page 19
இதழாசிரியர்களின் இத
*பட்டினி கிடந்து
பாழ்பட நேர்ந் கட்டுடல் வளைந்து
கவலை மிகுந்தா கெட்டு நடுத்தெரு
கீழ்நிலை யுற்ருலு தொட்டு வளர்த்த
துடைக்க மறப்ே
என்ற கவிஞனின் பாடலுக்கு இலககை உள்ளத்திலும் நீக்கமற நிறைந்துள்ள எமது மன்றத்தின் வெளியீடான 'வ இரண்டாவது ஆண்டு மலரினைச் ச கின் ருேம்.
கடந்த ஆண்டுதான் முதன் மு இம்மலரினை வெளியிட்டோம். இம்மலி யினர் வர்த்தக உலகிற்கு தமிழில் இது கிஷம் எனப் புகழ்ந்தனர்; பாராட்டி சார்ந்தவர்கள் கலைப் படைப்புக்களு வில்லை; இலக்கியத்துறைக்கு முதன்டை மொன்று செய்யும் வேலையை தமிழ் சனம் செய்தனர். புதியதொரு முயற் மாகிறதோ அங்கே அவற்றிற்குச் சில அவற்றிற்கெல்லாம் முகங்கொடுத்து எனவே இந்நிலையில் ஏன் வணிகத்துை என இங்கு சிலவற்றைப் புகன்றிடல்
* புத்தம் புதிய கலை பூதச் செயல்கள் மெத்த வளருது மே மேன்மைக் கலை
என முழங்கினன் பாவேந்தன் பாரதி
X " -. سسس

யங்கள் பேசுகின்றன.
பசியால் மெலிந்து தாலும் - என்றன் கைகால் தளர்ந்து லும் - வாழ்வு வோடுகிடந்து பம் - மன்னர், தமிழ் மகளின் துயர் பேணு?*
னமாய்த் திகழ்பவர்களின் உணர்விலும்
தமிழன்னையின் அழகுத் திருவடிகளில் பித்தியோதயம்' எனும் சஞ்சிகையின் Fமர்ப்பிப்பதையிட்டு பெருமிதமடை
மதலாக எமது மன்றத்தின் சார்பில் 0ரினைக் கண்ணுற்ற வர்த்தகத் துறை வரை கிடைக்காத அளப்பரிய பொக் னர். அதே சமயம் கலைத்துறையைச் }க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட ம வழங்கப்படவில்லை; வணிக மன்ற மன்றம் செய்திருக்கின்றது என விமர் சி, புதியதொரு கருத்து எங்கே உதய தடைகள் ஏற்படத்தான் செய்யும். வெற்றி காண்பது தான் சிறந்தது. றைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் பொருந்துமென எமக்குப்படுகிறது.
கள் - பஞ்ச சின் நுட்பங்கள் கூறும் றகே - அந்த கள் தமிழினில் இல்லை"

Page 20
'அறிவியல் கற்று
அளவிலா உவ பொறியியல் தேர் பூரித்து மகிழ் பொருளியல் துறை புகழ்ந்தனர் அ இருளினில் மூழ்கி இனத்திலோர்
மருத்துவத் துறைய மருந்தியல் நெ உயிரியல் தோய்ந்து உடலியல் ஆய் மூதுணர் வுடையா மொழியியல் ட ஆதலின் நிமிர்ந்து அருந்தமிழ் த
கற்ற அத் துறைக் கருத்தினில் .ே பெற்ற நம் தாய்
பிற மொழிக் முற்றிய வளர்ச்சி
முயற்சியில் யா பன்னருங் கலைகள் பைந்தமிழ் அ6
என நன்னிலை தமிழுக்காக நயந்து ே
இவர்களின் கன வினை நனவாக்
இவர்களின் கனவு நனவாக :ே கையில் இலக்கியத்துறைக்கும் கலைப்பன மையின் - முக்கியத்துவத்தின் கோர
- X

வந்தீர் கை கொண்டேன்; ந்து வந்தீர் வு பெற்றேன்: றயில் தேர்ந்தீர் 2யல் நாட்டாரும்
நின்ற
ஒளியைக் கண்டேன்.
|ங் கற்றீர் தறியும் பெற்றீர் து கற்றீர் 1ந்து கற்றீர் 'ர் சொன்ன பலவுங் கற்றீர்
நின்றேன் ழைக்கும் என்றே.
கள் யாவுங் தக்கி வைத்துப் மொழிக்குள் கலைகளெல்லாம்
காணும் ாது செய்தீர்?
யாவும் டையச் செய்வீர்' "
வண்டுகிருன் மற்ருெரு கவிஞன். கிட வேண்டாமா?
வண்டுமானுல் வெளியிடப்படும் சஞ்சி டைப்புக்களுக்கும் வழங்கப்படும் முதன் ங்கள் குறைக்கப்பட்டு அவற்றுக்குப்
V i wm

Page 21
பிரதியீடாக விஞ்ஞான வர்த்தகத் து வேண்டும். இதற்காகவே நாம் எமது ச முகாமையியல், வர்த்தகவியல், சட்ட வரிவிதிப்பு போன்ற புத்தம் புதிய க வருகிருேம்; வணிக நிர்வாகக் கல்வியி இந்த இலட்சிய எண்ணக் கருவின் தி( இதற்காக கலைப்பட்ைப்புக்களுக்கு மு: றங்களின்-சங்கங்களின் சஞ்சிகைகளை ஆ
மேலும் இன்று தமிழ்மொழி மூ எதிர்நோக்கியுள்ள அடிப்படைப் பிர பாட நூல்கள் இன்மையே. இந்நிலையி திற்கு கைநூலாகப் பயன்படவேண்டு! இந்த அவா. ஈடேறுவதற்கு வேண்டி என்றுமே பின்னிற்கப் போவதில்லை.
புதுமையையும் அதனல் பொது துக் கொண்டிருக்கும் உங்கள் இனிய நேரம் தடுத்து நிறுத்தித் தாமதம் செய தோம்; என்றல்லாட்டல் படித்தோம்; ப மிளிர வேண்டுமென்ற பேராவலுடன் செய்ய இதழிதலாக முன்னேறுங்கள் மதுவை அருந்தி மகிழுங்கள். ஆனல்
யுங்கள்.
-r- . XV

றையில் நமது பார்வைகள் நீட்டப்பட ஞ்சிகையில் பொருளியல், கணக்கியல், ), கணக்காய்வு, கிரயவியல், கணிதம், லகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ன் தூய நறுமணத்தை ஊட்டுகிருேம். நவே இந்த மலரில் காணப்படுபவை. $கியத்துவம் கொடுக்கும் ஏனைய மன் புது தவறென நாம் கொக்கரிக்கவில்லை.
லம் உயர்கல்வி பெறும் மாணவர்களை ச்சனை தமிழ் மொழியில் போதியளவு ல் எமது சஞ்சிகை மாணவ சமுதாயத் ம். இதுவே எமது தணியாத அவா. ய போதெல்லாம் செயலாற்ற நாம்
மையையும் காண வேகத்துடன் துடித் இதய வேகத்தை இனியும் நாம் அதிக ப்ய விரும்பவில்லை. பார்த்தோம், படித் பயனுற்ருேம் எனும் வகையில் இம்மலர் செயற்பட்டோம். எம் ஆவலை நிறைவு r - மணத்தை முகருங்கள் - மலரின் மயங்காதீர்கள்! தமிழ் வளர உழை
பொன். இரத்தினசிங்கம்,
நி. சரவணபவான்.
il -

Page 22
வித்தியோதயத்தின் கதி
ஆக்கங்கள்
பொருளியல்:-
வெளிநாட்டு உதவியின் தத்துவ இலங்கையில் பணவீக்க
நெருக்கடிச
தேயிலையும் இலங்கையின்
பொருளாதாரழு இலங்கையில் வங்கித்
தொழில்முை இலங்கையிற் கைத்தொழில்
வளர்
ஆயிரம் ரூபாய் சேமிப்பும் அதன் பொருளாதார விளைவுகளு பேரினப் பொருளியலில் பெருச் கெண்ணின் தொழிற்ப மத்திய வங்கியின் கடன்
கட்டுப்பாட்டு முறைச
முகாமையியல்:-
இலங்கையில் மூலதன
முதலீட்டுத் தீர்மானங்க நிகழ்ச்சித்திட்ட, செயல்திட்ட வர செலவுத் திட்டமிடலுக்கோர்
- அறிமு இலங்கையின் பொருளாதார
விருத்தியில் திட்டமிடுதலும் முகாமையின் பங்கு
முகாமை விஞ்ஞான

ஆக்கியோர் பக்கம்
கலாநிதி வி. நித்தியானந்தம் 1
கள் ஆர். ஜெயரத்தினராசா 23
pம் கலாநிதி க. சுந்தரலிங்கம் 41
றை இ. பாலசிங்கம் 49
ச்சி பொ. சங்கரப்பிள்ளை 57
5
நம் க. மென்டிஸ் அப்பு 65
ாடு கே. எஸ். நடராசா 75
6ள் வ. அன்ரனி 81
கள் ஹேமா விஜயவர்த்தளு 93
'6ւ
கம் பொ. சிவசுப்பிரமணியம 97
D
கும் சி. சிறீஸ்கந்தராசா 105
எஸ். எம். கிறிஸ்ரி 117
viii -

Page 23
கணக்கியல்:-
கணக்கியலில் புதிய திருப்பம்
கம்பனிக் கணக்குகளில் ஏற்பாடு களும் ஒதுக்கீடுகளும் உபயோகிக்
கப்படவேண்டிய மு
இலங்கையில் வரியமைப்பு
முறையும் 1976 வரவு
செலவுத் திட்டிரு கணக்காய்வாளரின்
பொறுப்புக்
நிர்மாண வேலைகளுக்கு நிதித்
திட்டமிடுதலும் கிரயச்
கட்டுப்பா கிரயக் கணக்குகளையும் நிதிக்
கணக்குகளையும் இணங்க செய் கணக்கியல் விகித ஆய்வினுக்
கோர் அறிமு
புவியியல்:-
மூலவளக் கோட்பாடும்
மூலவளப் பயன்பா
3 t' - L bl
பங்குடைமைச் சட்டம்
சிறு கதைகள்:-
இதயங்கள் வெல்லப்படுகின்றன மேலும் ஒரு திரை கிழிகின்றது
தமிழ் மன்றச் செய்திகள்:-

றை
pib
கள்
சு. சிவகுரு
ச. தம்பிப்பிள்ளை
ந. மஞேரஞ்சன்
எஸ். இராசதுரை
டி. ரி. இராஜரட்ணம்
டி ரி இராஜரட்ணம்
எஸ். சிதம்பரநாதன்
மா செ. மூக்கையா
செ. தங்கராஜா
சன். அருள்சோதி
ஏ. ஜே. மலன்கோவ்
Xix -
23
31
137
14$
15
159
65
171
183
200
205

Page 24


Page 25
வெளிநாட்டு உதவியி
கலா சிரேஷ்ட விரிவுரைய பகுதிநேர எ
பொருளாதார அபிவிருத்திக்கு
வேண்டிய வளங்களின் தேவையில் மூலதன ஆக்கம் ஒரு முக்கிய இடம்வகிக்கின்றது. ஒரு குறைவிருத்தி நாட்டின் அபிவிருத் திக்கு அவசியமான மூலதனம் முழுவதை யும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அந்நாட்டின் உள்நாட்டு முதலீடுகளின் மூலம் பெறமுடியாமலிருக்கும். இந்நிலையில் மூலதனத் தேவைக்கும் கிடைக்கின்ற மூல தனத்துக்குமிடையே ஓர் இடையீடு தோன் றுவது பல குறைவிருத்தி நாடுகளில் வழக்க மாயிருந்து வருகின்றது. இந்த இடை யீட்டை நிரப்புவதற்கு வெளிநாட்டுத் தனியார் முதலீடுகள் முன்வர வேண்டு மென அரசாங்கங்கள் எதிர்பார்த்தாலும், தகுந்த தாராளக் கொள்கைகளின் மத்தி யிலும், பல நாடுகளில் எதிர்பார்த்தள வுக்கு வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்ப தில்லை. இவ்வகையில் இலங்கையின் நிலை பெரிதும் மோசமானதொன்ருகும். ஏனைய அபிவிருத்தியடையும் நாடுகளுடன் ஒப் பிடுமிடத்து, இலங்கை பெற்றுக்கொள் ளும் அந்நிய, தனியார் மூலதனத்தின் பாய்ச்சல் மிகக் குறைவானதாகும். உதா ரணமாக, கிரீஸ் தேசத்தில் 1950-1961 க்கு மிடைப்பட்ட காலப்பகுதியில், தொடர்ச்சி யாக ஏற்பட்ட அந்நிய (தனியார்) முத லீடுகளின் பாய்ச்சல் அந்நாட்டின் மொத்த மூலதன ஆக்கத்தின் 54 சதவீதமாயிருந் தது. கொரியா தேசத்தின் பொருளாதா ரத்தில் 1957-1966க்குமிடைப்பட்ட காலப் பகுதியில், இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு முதலீட்டின் 82 சதவீதமா
1 سس

ன் தத்துவம்
SAASAASAASAASSAASS SSSSAASSMMAkSASASASaSASMSSASSASSASSASaSAMASM ASJqLMASAS SqS AMSMMASkSASLSAMASA AAASS
நிதி வி. நித்தியானந்தம் ாளர் - பொருளியற்றுறை, கொழும்பு வளாகம் பிரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்.
யிருந்தது. ஆனல் இலங்கையில்,1960-1972 க்குமிடைப்பட்ட காலப்பகுதியில், வெளி நாட்டு மூலதனத்தின் மொத்தத் தேறிய உட்பாய்ச்சல், இக் காலப் பகுதியின் மொத்த மூலதன ஆக்கத்தின் 14 சதவீத மாக மாத்திரமே இருந்தது. ஆகவே, ஏற்றுமதி வருமானங்களின் வளர்ச்சியடை யாத தன்மையுடன் சேர்ந்து, இவ்வாருன வெளிநாட்டுத் தனியார் மூலதன உட் பாய்ச்சலின் குறைந்த மட்டம், இலங்கைப் பொருளாதாரத்தின் எமது வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமெனக் குறிப்பிடப் படுகின்றது. தனியார் மூலதனம் மாத்திர மன்றித், தனியார் துறையினுாடாகத் தொழில்நுட்ப உதவியோ அல்லது வேறு வகைப்பட்ட உதவிகளோ கிடைப்பதும் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில், வெளிநாட்டு அரசாங்கங் களிடமிருந்து பெறப்படும் கடன்கள், நிதி கள் என்பன ஒரு குறைவிருத்தி நாட்டின் மூலதனத் தேவையில் முக்கிய பங்கு வகிக் கின்றன. அத்துடன், இருபக்க அல்லது பலபக்க ஒப்பந்தங்களினூடாக மனித வளங்களும், தொழில்நுட்ப வளங்களும் சர்வ்தேச ரீதியில் பரிமாறப்படுவதும் குறைவிருத்தி நாடுகளைப் பொறுத்தவரை அவசியமாகின்றது. இதுதவிர, உணவுப் பொருட்கள், இயந்திர சாதனங்கள் என் பனவும் இந்நாடுகளுக்கு வழங்கப்படலாம். இவ்வாருகப் பண வடிவிலும், பொருள் வடிவிலும், ஊழிய வடிவிலும், தொழில் நுட்ப வடிவிலும் ஒரு குறைவிருத்தி நாடு

Page 26
வெளிநாட்டு உதவியின்.
பெற்றுக் கொள்வனவற்றைக் கூட்டாக வெளிநாட்டு உதவி என அழைக்கலாம்.
வெளிநாட்டு உதவி பற்றிய கொள்கை களும், திட்டங்களும் தேர்ந்தெடுக்கப் பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகியவை எனக் கூறமுடியாது. ஆரம் பத்தில் இவை ஒருவகை விசேட தேவை யைக் கருதி வெளியிடப்பட்டனவாகவே இருந்தன. இவற்றுக்குத் தர்க்க ரீதியான விளக்கம் தரவேண்டிய ஒரு தேவை பின்பு தான் உருவாகியது. எனினும், சமீப காலத்தில், வெளிநாட்டு உதவியின் ஒவ் வொரு அம்சத்தைப் பற்றியும் விளக்கும் நூல்களதும் , கட்டுரைகளதும் எண் ணிைக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதி கரித்துள்ளது. இவை வெளிநாட்டு உதவி பற்றிய வேறுபட்ட கருத்துக்களையும் அலசி ஆராய்வனவாக உள்ளன.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை யின் வேறெந்த அம்சத்தையும் விட வெளி நாட்டு உதவியே இன்று ஓரளவுக்குக் குழப்பம் நிறைந்ததொன்ரு கவும், பொரு ளியலாளர் மத்தியில் சர்ச்சைக்குரியதொன் ருகவும் இருந்துவருகின்றது. இதனல் அபி விருத்திப் பொருளியல் ஆய்விலும் இது முக்கிய இடம் வகிக்கின்றது. (ରର Jeff] நாட்டு உதவியின் பல்வேறு அம்சங்களையும் ஒரளவு விரிவு படுத்துவதே இக் கட்டு ரையின் நோக்கமாகும். வெளிநாட்டு உதவியின் தோற்றம், அதன் அளவு என் பன முதலாவது பகுதியிலும், வெளி நாட்டு உதவி பற்றிய தகைமைகள் இரண் டாவது பகுதியிலும் ஆராயப்படுகின்றன. வெளிநாட்டு உதவி ஏன் அவசியம், அதன் கடமைகள் என்ன என்பவற்றை மூன்ரு வது பகுதி ஆராய, இக்கடமைகளில் ஏற் படும் சந்தேகங்களையும் அவை பற்றிய வேறுபட்ட கருத்துக்களையும் நான்காவது பகுதி எடுத்துக்கூறுகிறது. இறுதிப்பகுதி யாகிய ஐந்தாவது பகுதி, வெளிநாட்டு உதவி பற்றிய பலவித கருத்துக்களின் மத்தியிலும் அதன் அவசியம் என்ன என்

வி. நித்தியானந்தம்
பதைக் கூறுவது மட்டுமன்றி, இந்த உத வியை அதிகரிப்பதற்குக் குறைவிருத்தி நாடுகள் சமீப காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளையும் எடுத்து விளக்குகின்றது.
- I -
அபிவிருத்தியடைந்த நாடுகள் வறிய நாடுகளின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்ற கொள்கை, குறிப்பாக, இரண்டாவது உலக மகா եւ 5 தத்திற்குப் பின்பு உருவாகியதொன்றே யாகும். 1945ம் ஆண்டுக்குப் பிற்பட்ட தசாப்தத்தில் நான்கு முக்கிய காரணிகள் அபிவிருத்த யடைந்த நாடுகளை வெளி நாட்டு உதவித் திட்டங்களிற் பங்குகொள் வதற்குத் துரண்டுதல் அளித்துக்கொண்டி ருந்தன எனலாம்.
(i) இக் காலப்பகுதி பல நாடுகளும் அரசியற் சுதந்திரம் பெற்றுக்கொண்டிருந்த ஒரு காலப்பகுதியாயிருந்தது. வறுமையும், சர்வதேச ரீதியிலான சமமின்மையும், இது வரை காலனித்துவ அல்லது குடியேற்ற நாட்டுத் தொடர்புகளினல் முடி மறைக் கப்பட்டிருந்தாலும், தற்போது ஒவ்வொரு புதிய அரசும் தீர்க்கவேண்டிய முதற்தரப் பிரச்சனைகளாயிருந்தன. முன்பு ஏகாதி பத்திய வல்லரசுகளாயிருந்த நாடுகளும், அத்தகைய காலனித்துவப் பின்னணியைக் கொண்டிராத நாடுகளும், தாமே இப் பிரச்சனையை உணர்ந்துகொண்டது மாத் திரமன்றி, இதைத் தீர்ப்பதற்கு உதவி யளிக்க வேண்டியது தம்முடைய பொது வான பொறுப்பு என்பதையும் வேறுபட்ட தராதரங்களுடன் ஏற்றுக் கொண்டன. இந்த உணர்வு திடீரென ஏற்பட்டதொன் றெனவும் கூறிவிடமுடியாது. அபிவிருத்தி யடைந்த நாடுகள், உள்நாட்டுக் கொள்கை யைப் பொறுத்தவரை, மேன்மேலும் நலன் புரி அரசுகளாக இக்காலப்பகுதியில் மாறிக் கொண்டிருந்தன. வெளிநாட்டு உதவித் திட்டங்களில் இவை காட்டிய அக்கறை, இதனுடைய ஒரு சர்வதேச வெளிப்பாடு
எனலாம்,
2 -

Page 27
வெளிநாட்டு உதவியின்.
(i) இரண்டாவது உலக மகாயுத்தத் திற்குப் பிந்திய காலப்பகுதியில் இடம் பெற்ற வல்லரசுகளிடையேயான தண் போர் இக்காலப்பகுதியின் சர்வதேச அர சியலின் முக்கிய அம்சமாயிருந்தது. இப் போரில் வெற்றியடைவதற்குரிய ஒரு பிர தான ஆயுதமாக வெளிநாட்டு உதவி நோக்கப்பட்டது. குறிப்பாக, அமெரிக்க வெளிநாட்டு உதவித்திட்டத்தின் ஒரு முக் கிய பண்பாக இது திகழ்ந்ததை அவதா னிக்கலாம். மக்களாட்சி அரசியலமைப் பைக்கொண்ட, கம்யூனிசமல்லாத ஒரு பொருளாதார அமைப்பின் கீழ் உயர்ந்த வளர்ச்சி விகிதத்தை அடைய முடியுமென் பதைக் குறைவிருத்தி நாடுகளுக்கு நிரு பிப்பதை அமெரிக்கா தனது வெளிநாட்டு உதவியின் முக்கிய குறிக்கோளாகக் கரு தியது. ஆகவே தாம் வழங்கும் உதவியின் அடிப்படையில் பொறுப்புடைய பிரதிநிதித் துவ சுதந்திர அரசாங்கங்களை உலகில் உரு வாக்குவதே அதனுடைய நோக்கமாகும். இவ்வாறு உருவாகும் அரசாங்கங்கள் மேற்கு நாடுகளுக்கு எதிராக இராதென்ப தோடு தண்போர் மெய்ப்போர் வடிவெடுப் பின் இவை ஐக்கிய அமெரிக்காவுக்குச்
சார்பாக இருக்கும் அல்லது நடுவுநிலைமை
வகிக்குமென அது கருதியது. அத்துடன் உலகின் ஏனைய பகுதிகளில் கூடியளவு வறுமை நிலவுமானல், அது மேற்குநாடு களின் பாதுகாப்பு, சமாதானம், சுதந் திரம் என்பவற்றுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடுமெனவும் கொள்ளப்பட்டது. மறுபுறம், சமவுடமை நாடுகளும், ஐக்கிய அமெரிக் காவின் அளவுக்கு இல்லாவிட்டாலும், தமக்கு ஆதரவு தேடும் வகையில் குறை விருத்தி நாடுகளுக்குப் பெருமளவு உத வியை வழங்கியுள்ளன. சமீப காலத்தில் சீன பல்வேறு வடிவங்களில் குறைவிருத்தி நாடுகளுக்கு வழங்கிவரும் உதவி இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே வெளிநாட்டு உதவியின் பின்னணியில் அரசியல் நோக் கம் எப்போதுமே ஒரு முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. வெளிநாட்டு உதவி பற்றிய பல கண்டணங்களுக்கும் இதுவே பொறுப்பாகவும் இருந்துள்ளது.
3

(ii) பொருளாதார இயலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் வெளி நாட்டு உதவியை ஊக்குவித்த காரணி களுள் ஒன்றெனலாம் 1930ம் ஆண்டுக் காலப்பகுதியில் ஏற்பட்ட பெரு மந்தத் தின்போது அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவும் பெரும் வேலையின்மையையும்,ஏனைய பல பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்நோக்கின. இந்நெருக்கடிகள் பலவும் கெயின்சியப் புரட்சியின் மூலம், அதாவது நாணய, இறைக் கொள்கைகளினுடாக மொத்தக் கேள்வி மட்டத்தைத் தகுந்த வகையில் நிர்வகிப்பதன்மூலம், நீக்கப்பட லாமென எடுத்துக்காட்டப்பட்டது. இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்ட நிலையில், பொரு ளியலாளர் நீண்டகாலமாக அக்கறை கொண்டிருந்த வேருெரு பிரச்சனை நோக் கித் தமது கவனத்தைத் திருப்பினர். அதாவது, உயர் வேலை மட்டத்தில் பொரு ளாதாரங்களே உறுதிப்படுத்துவது மட்டு மன்றி, உறுதியான பொருளாதார வளர்ச் சியை எவ்வகையில் அடைய முடியுமென் பது பற்றியும் அவர்கள் சிந்திக்கத் தலைப் பட்டனர். பொருளாதார விடயங்கள் பலவும் தர்க்கரீதியான ஒழுங்குமுறைக்குட் பட்ட வகையில் மாற்றப்படக்கூடியவை என்பது இவர்களுடைய கருத்தாயிருந்தது. ஏற்கெனவே இவர்கள் அடைந்திருந்த சில வெற்றிகள் இக் கருத்துக்கு மேலும் வலிமை கொடுத்தன. வளர்ச்சிப் பொருளாதாரத் தில் ஏற்பட்ட புதிய அக்கறையின் விளை வாக உருவாகிய கோட்பாடுகள் வறிய நாடுகளின் நெருக்கடி நிலைகளுக்குப் பிர யோகிக்கப்படலாயின. இதன் அடிப்படை யில் அபிவிருத்திப் பொருளியல் பற்றி ஏராளமான நூல்கள் வெளியிடப்பட்டன. இதனுடன் சேர்ந்து, தவிர்க்கமுடியாத வகையில், வெளிநாட்டு உதவியும் கூடி யளவு முக்கியத்துவம் பெறலாயிற்று.
(iv) வெளிநாட்டு உதவியின் ஒருவகை நடைமுறை உதாரணமாக ஜேர்மனி திகழ்ந்தமை அத்தகைய உதவியின் முக்கி யத்துவத்தைப் பெருமளவுக்கு அதிகப்

Page 28
வெளிநாட்டு உதவியின்.
படுத்தியதெனலாம். உலக மகா யுத்த முடி வில் ஜேர்மனி பொருளாதார ரீதியில் பெரிதும் சீர்குலைக்கப்பட்டு மிகக்கூடிய வறுமை நிலவும் ஒரு குறைவிருத்தி நாட் டின் நிலைக்குத் தரம் குறைக்கப்பட்டிருந் தது. பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன் சீரழிக்கப்பட்டிருந்ததோடு, இயந் திர சாதனங்கள், பாதைகள், புகையிரத வீதிகள் என்பனவெல்லாம் முற்ருக நாச மாக்கப்பட்டிருந்தன. எனினும், மார்ஷல் உதவியின்கீழ் ஏராளமான அமெரிக்க மூல தனம் முதலீடு செய்யப்பட்டதால் ஜேர் மணி மிக விரைவில் பொருளாதார உன் ன த நிலைக்குத் திரும்பக்கூடியதாயிருந்தது. ஆகவே ஐரோப்பாவில் பலனளித்த வெளி நாட்டு உதவி உலகின் ஏனைய பகுதிகளி லுள்ள வறிய நாடுகளின் நிலையைச் சீர் திருத்துவதிலும் பெரிதும் பயனளிக்குமென் பது மேற்கு நாடுகளின் கருத்தாக இருந் தது. இதன் அடிப்படையிலும் அவை வெளிநாட்டு உதவித் திட்டங்களில் பங்கு
கொள்ள முன்வந்தன.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே வெளிநாட்டு உதவியானது அதனுடைய அளவிற் பெருகிச் செல்லலாயிற்று. 1968ம் ஆண்டுவரை சமவுடமையல்லாத நாடுகளி ட மிருந்தும், வேறு பலபக்க நிறுவனங் களிடமிருந்தும் 12.8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குக் குறையாத ஒரு தொகை குறைவிருத்தி நாடுகளைச் சென்றடைந்தி ருந்தது. பின்வரும் அட்டவணை (அட்ட வணை 1) 1968ம் ஆண்டு வரை குறை விருத்தி நாடுகளைச் சென்றடைந்திருந்த
வளங்களின் தேறிய பாய்ச்சலைக் காட்டு
கின்றது.

வி. நித்தியானந்தம்
அட்டவணை 1
குறைவிருத்தி நாடுகள் நோக்கிய, வளங்களின் தேறிய பாய்ச்சல்
(பில்லியன் அமெரிக்க டொலர்கள்)
छJाaी
1950-55 1956 196 1963 1967 1968
3.5 6.2 9.2 8.6 11.2 12.8
மூலம்:- பியர்சன் கமிஷன் அறிக்கை
அட்டவணையிலிருந்து, 1956-1961 க்கு மிடையில் வளங்களின் பாய்ச்சலில் 50 சத வீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதையும், 1960ம் ஆண்டுக் காலப்பகுதியின் இறுதிக் கட்டத்தில், 1950ம் ஆண்டுக் காலப்பகுதி யின் நடுப்பகுதியிலிருந்ததைவிட உதவி இரும்டங்காகியிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
1960-1970க்குமிடைப்பட்ட காலப் பகுதியில், இலங்கை ஏறக்குறைய 2,600 மில்லியன் ரூபாவை வெளிநாட்டு உதவி யாகப் பெற்றிருந்தது. இது நிறுவன ரீதி uGaoit அல்லது வேறு வகையிலோ இலங்கை பெற்றுக்கொண்ட அத்தனை உதவிகளையும் உள்ளடக்குகின்றது. பின் வரும் அட்டவணை (அட்டவணை 11) 19501969க்குமிடையில் இலங்கை பெற்றுக் கொண்ட வெளிநாட்டு உதவியின் அளவை யும், அதன் வ ை'யையும், அது கிடைத்த
மார்க்கத்தையும் காட்டுகின்றது.
-

Page 29
வெளிநாட்டு உதவியின்.
அட்டவ
இலங்கை பெற்ற வெளிநாட்டு உதவியின்
6ોufૌકાne; ofTffisso
I ஐக்கிய அமெரிக்கா 2 35687 - f7 3 ஐக்கிய இராச்சியம் 4 அபிவிருத்தி புனர்நிர்மாணம்
என்பவற்றுக்கான சர்வதேச வங்:
5 மேற்கு ஜேர்மனி 6 மக்கள் சீனக்குடியரசு 7 ஜப்பான் 8 சோவியத் ரூசியா 9 கிழக்கு ஜேர்மனி 0 அவுஸ்திரேலியா 1 I l?prrrarah) 12 இந்தியா 13 ஐக்கிய நாடுகள் சபை 14 நியூசிலாந்து 15 யூகோஸ்லாவியா I6 சுவீடன்
7 போலந்து 8 ஏனையவை
மொத்தம்
* செப்டெம்பர் 30, 1969வரை
இவ்வட்டவணையிலிருந்து 1950 - 69க்கு மிடையில் பெறப்பட்ட மொத்தம் 1,895 மில்லியன் ரூபா வெளிநாட்டு உதவியில், 497 மில்லியன் ரூபா அல்லது 26 சதவீதம் நிதிகளின் வடிவில் பெறப்பட்டதையும், மிகுதி 1,398 மில்லியன் ரூபா அல்லது 74 சதவீதம் கடன்களின் வடிவில் பெறப் பட்டதையும் காணமுடிகின்றது. பலநாடு
- 5

வி. நித்தியானந்தம்
kan II
ag6 miren, 6 huas, Lurrño itsasíño 1950 — 1969**
(மில்லியன் ரூபா)
மொத்ததின்
மொத்தம் நிதிகள் கடன்கள் %மாகநிதிகள்
4夏7 84 333 2O 255 180 75 70. 6. 225 18 2O7 8. O
178 - 178 apar
70 15 155 8.8 26 70 56 55。6 101 2 99 2 , Oji
95 re 95 чыны»
89 89 var
69 69 w~~~~ 1 000 60 5 55 8.3
37 VM 37 ----
30 30 mar 1 000 2 12 I O O. O. 9 - 9
9 9 1m I 09. O
6 1-ar
7 3 4 42.9
1,895 497 1,398 26.2
மூலம் : மத்திய வங்கி ஆய்வு
கள் நிதிகளையும், கடன்களையும் சேர்த்தே இலங்கைக்கு உதவி வழங்கின. இவற்றில் கனடாவும், மக்கள் சீனுவும் 50சதவீதத் துக்கு மேற்பட்ட தொகையை நிதிகளாக வழங்கியுள்ளன. 1970ம் ஆண்டு, வேறு பட்ட மார்க்கங்களிலிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு உதவியின் வீதாசாரப் பரம்பலை அட்டவணைIகாட்டு கின்றது.

Page 30
வெளிநாட்டு உதவியின்.
அட்டவணை 11
வேறுபட்ட மார்க்கங்களிலிருந்து இலங்கை பெற்ற பொருளியல் உதவி 1970
(சதவீதம்)
ஐக்கிய அமெரிக்கா 22.9 சமவுடமை முகாம் 24.9 s 4.2 g|LIT să 5.8 ஐக்கிய இராச்சியம் 11.5 இந்தியா 3.1 ஏனைய மேற்கு
ஐரோப்பிய நாடுகள் 16.4 சர்வதேச நிறுவனங்கள் 10.7
மூலம் : மத்திய வங்கி ஆய்வு
இலங்கை பெற்றுக்கொண்ட வெளி நாட்டு உதவியின் மிகப்பெரும் பகுதி திட்டங்களுடன் இணைக்கப்பட்டதாகவோ அல்லது நாணயங்களுடன் இணைக்கப்பட்ட தாகவோ இருந்தது. 1970ம் ஆண்டின் முடிவில் முதலாவது வகையைச் சார்ந்த உதவி ஏறக்குறைய 1,000 மில்லியன் ரூபா வாகவும், இரண்டாவது வகையிலான உதவி 1,218 மில்லியன் ரூபாவாகவும் இருந் தது. இருபக்க அடிப்படையிலும் இலங்கை பல நாடுகளிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் சீனு, அவுஸ்தி ரேலியா, பிரித்தானியா, கனடா, யூகோஸ் லாவியா, இந்தியா போன்றவை இவற்றிற் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, வேறு பட்ட உதவித்திட்டங்களின் கீழ், பல நிபு ணர்களின் சேவையையும் இலங்கை பயன் படுத்திக் கொண்டிருந்தது. இந்நிபுணர்கள் பரந்ததொரு வகையில் ஐக்கிய நாடுகள் சபையினலும், கொழும்புத் திட்டத்தின லும், திட்டங்களின் அடிப்படையில் உதவி வழங்கும் நாடுகளினலும் அனுப்பி வைக் கப்பட்டிருந்ததோடு பல்வேறு அபிவிருத் தித் திட்டங்களுக்கு ஆலோசகர்கள்" என்ற முறையிலும் தருவிக்கப்பட்டிருந்தனர். 1975ம் ஆண்டில் மாத்திரம், ஐக்கிய நாடு கள் சபையைச் சேர்ந்த ஏறக்குறைய 105 நிபுணர்கள் இலங்கையில் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் முக்கியமாக உணவு விவசாய ஸ்தாபனம் (FAO), உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), சர்வதேச தொழில் ஸ்தாபனம் (ILO), ஆகியவற்றின்
- 6

வி. நித்தியானந்தம்
ஆதரவுடன் வரவழைக்கப்பட்டிருந்தனர். 1950 - 1974க்குமிடைப்பட்ட கால் நூற் முண்டு காலப்பகுதியில் 800 க்கும் மேற் பட்ட கொழும்புத்திட்ட நிபுணர்கள் இலங்கையிற் சேவை செய்தனர். இவர்கள் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து விவசாயம் , கல்வி, பொதுநிர்வாகம், கைத்தொழில், சுகாதாரம், வர்த்தகம் போன்ற துறை களில் ஆலோசனை வழங்க வந்திருந்தனர். அத்துடன் இருபக்க உதவித்திட்டங்களின் கீழும் பல நிபுணர்கள், முக்கியமாகப், பொறியியற்துறையில் ஆலோசனை வழங்கு வதற்குத் தருவிக்கப்பட்டிருந்தனர். இவர் களின் உதவியைப் பெற்ற அல்லது பெற் றுக் கொண்டிருக்கும் திட்டங்களில் மகா வலித்திட்டம் (ஆசிய அபிவிருத்தி வங்கி, உலகவங்கி), சமணலவெலத்திட்டம் (சோவி யத் ரூசியா), தென்மேல் கரையோர வடி காற்திட்டம் (உலகவங்கி), ஜின் கங்கைத் திட்டம் (மக்கள் சீன), பூகோள செய்மதித் தொடர்புத்திட்டம் (ஜப்பான்), மின்னே ரியா நெசவாலைத்திட்டம் (மக்கள் சீன) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆகவே மேலே தரப்பட்ட விபரங்க ளிலிருந்து, கணிசமானதொரு தொகை குறைவிருத்தி நாடுகளுக்கு வழங்கப்பட் டுக் கொண்டிருந்தது மட்டுமன்றி, இ காலப்போக்கில் வளர்ந்து கொண்டிருந்த தெனவும் கூறமுடிகின்றது. எனினும், இத் தகைய முடிவு ஒரு விரைந்த முடிவாக இருக்க முடியுமே தவிர நன்கு சீர்தூக்கிப் பார்த்து எடுக்கப்பட்ட முடிவெனக் கூற முடியாது. இத்தரவுகள் வெளிப்படையாக எடுத்துக் காட்டுவதுபோல, உண்மையில் அபிவிருத்தியடைந்த நாடுகளிடமிருந்து கிடைக்கும்வெளிநாட்டுஉதவி காலப்போக் கில் அதிகரித்துச் சென்றுள்ளதா? இதனை அறிவதற்கு, அதாவது தரப்பட்ட புள்ளி விபரங்களை வெளிநாட்டு உதவியின் குறி காட்டியாகப் பயன்படுத்துவதற்கு, அவற் றைச் சில தகமைகளுக்குட்படுத்த வேண் டியது அவசியமாகும்.

Page 31
வெளிநாட்டு உதவியின்.
- 1 -
அட்டவணை 1 இல் காட்டப்பட்டிருக் கும் குறைவிருத்தி நாடுகள் நோக்கிய வளங்களின் பாய்ச்சல் மொத்த ரீதியில் அதிகரித்தபோதும், அதிகரிப்பு விகிதத்தை எடுத்து நோக்கின், அது 1960ம் ஆண்டுக் காலப்பகுதியில், உண்மையில், வேகம் குறைந்ததொன்ருயிருந்ததெனலாம். es கப் பணவீக்க விளைவுகளுக்கு இடமளித்து மெய்ப் பண வடிவில் இப்பாய்ச்சலை நோக் இன் வெளிநாட்டு உதவியின் அதிகரிப்பு விகிதம் ஒன்றில் நிலையாக இருந்தது அல் லது குறைவடைந்ததென்றே கூறவேண்டும். இவற்றிற் சில நாடுகளின் நிலையை அட்ட வணை 3V காட்டுகின்றது. எல்லா முக்கிய அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத் தவரையும், அவை வழங்கிய வெளிநாட்டு உதவியை அவற்றின் மொத்தத் தேசிய உற்பத்தியின் வீதாசாரமாகப் பார்க்குமி டத்து உதவியின் அளவு குறைவடைந்தி குப்பதை அல்லது பெருமளவு அதிகரிக்கா மையை அட்டவணையிலிருந்து அறிய முடி கின்றது. எனினும், இக்காலப்பகுதியிலேயே அபிவிருத்தியடைந்த நாடு ஒவ்வொன்றும் தனது செல்வத்தை மேன்மேலும் பெருக் இக்கொண்டு சென்றம்ை குறிப்பிடத்தக் கது. 12.8 பில்மியன் டொலர்கள் குறை விருத்தி நாடுகளுக்கு, அபிவிருத்தியடைந்த நாடுகளால் உதவியாக 1968ம் ஆண்டு வழங்கப்பட்ட போதும், பியர்சன் கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டுவது போன்று, அபி விருத்தியடைந்த நாடுகள் தற்போது வரு டமொன்றுக்கு 15 பில்லியன் டொலர்க ளைச் சிகரட்டின் மீதும், 35 பில்லியன் டொலர்களைக் குடிவகைகள் மீதும் செல விடுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

வி. நித்தியானந்தம்
John Lauzsa IV மொத்தத் தேசிய உற்பத்தியின் வீதாசாரமாக
வளங்களின் பாய்ச்சல்
(சத வீதம்)
1960 1967 1968 ___-----------------------~~~~----- س -----------------------------------------۔ ஐக்கிய அமெரிக்கா 0.75 0.69 O 65 ஐக்கியஇராச்சியம் 1, 21 O. 77 0.83 self 0. 39 0.44 0.49 பிரான்ஸ் 2.19 1.23 1. 24 மேற்கு ஜேர்மனி 0.88 0.94 22 ஜப்பான் 0. 58 0.69 0.74 அவுஸ்திரேலியா 0.38 0, 74 O. 6
மூலம் பியர்சன் கமிஷன் அறிக்கை
அட்டவணை 1ஆம், TVலும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் தரவுகள் உண்மை யில் வறிய நாடுகள் பெற்ற மொத்த வளங்களின் பாய்ச்சலேயாகும். இந்த மொத்தம் இருவகை உதவிகளின் கூட்டுத் தொகையாகும். (i ) அரசாங்கங்கள் உத் தியோக ரீதியில், சலுகைகளின் அடிப்ப டையில் வழங்கும் நிதி நாட்டுத் தனியார் முதலீடுகளின் படி சல். 1960ம் ஆண்டுக் காலப்பகுதியில் நோக் கப்பட்ட வெளிநாட்டு உதவியின் பெரும் பகுதி தனியார் முதலீடுகளேயாகும். کےyT” சாங்க அடிப்படையில் கிடைத்த உதவி 1960ம் ஆண்டுக் காலப்பகுதியின் இறுதிக் கட்டத்தில் வீழ்ச்சியடையவும் முற்பட்ட தென்பதைப் பின்வரும் அட்டவணை மூலம் (அட்டவணை V) அறியலாம்.
e Laža V அரசாங்க ரீதியிலான உதவி (அமெரிக்க பில்லியன் டொலர்கள்)
Furnir F if? 1950-55 1956 1961 1963 1967 1968 I. 9 3.3 5, 2 5.9 6.6 6.4
மூலம்: பியர்சன் கமிஷன் அறிக்கை
இது தவிர, உதவி வழங்கும் நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து, அரசாங்க ரீதியிற் கிடைக் கும் உதவி எவ்வளவு சிறியதென்பதைப் பின்வரும் அட்டவணை (J-gey L'LL 6hu8äOOT VI) காட்டுகின்றது.
7 -

Page 32
வெளிநாட்டு உதவியின்.
அட்டவண்ண VI
அரசாங்க ரீதியிற் கிடைக்கும் உதவி, மொத்தத் தேசிய உற்பத்தியின் வீதாசாரமாக (1968)
நாடு சதவீதம் (%)
ஐக்கிய அமெரிக்கா O 38 ஐக்கிய இராச்சியம் 0.42 3, 60 left 0.29 பிரான்ஸ் f}。72 மேற்கு ஜேர்மனி 0.42 ஜப்பான் ር} . 25 அவுஸ்திரேலியா (.57 நெதர்லாந்து U4 5 ه ز பெல்ஜியம் Ο . 42
மூலம் பியர்சன் கமிஷன் அறிக்கை.
அட்டவணையிலிருந்து எந்த ஒரு நாடு தன்னும், தன் மொத்தத் தேசிய உற்பத்தி யின் ஒரு சத வீதத்தையாவது வெளி நாட்டு உதவியாக வழங்கவில்லையென்பதை அறிய முடிகின்றது.
மே ற் கூறி ய பாகுபாட்டினடிப்படை யில் வெளிநாட்டுத் தனியார் முதலீடுகளை வெளிநாட்டு உதவியாகக் கருதமுடியுமா என்ற பிரச்சனை எழுகின்றது. உதவி எனக் கூறுமிடத்து வெறுமனே வர்த்தக ரீதியில் நடைபெறும் கொடுக்கல் வாங்கல்களையும் அதிற் சேர்த்துக்கொள்வது தவருனதொரு கருத்துக்கு இடமளிக்கும். அபிவிருத்திய டைந்த நாடொன்றின் முதலாளி குறை விருத்தி நாட்டில் வர்த்தக நடவடிக்கை யொன்றை ஆரம்பிக்கின்ருஞயின், அதில் தகுந்த லாபம் பெறலாமென்பதனற்ருன் அவ்வாறு செய்கின்ருனேயன்றிக் குறைவி ருத்தி நாட்டுக்கு உதவி செய்வது அவனு டைய நோக்கமல்ல. அவனுடைய நடவ டிக்கையின் மூலம் குறைவிருத்தி நாட்டின் அபிவிருத்திஊக்குவிக்கப்படலாமெனினும், அது ஒரு பக்க விளைவேயன்றி அவனுடைய நோக்கத்தினடிப்படையிலேற்பட்ட முக்கி

வி. நித்தியானந்தம்
யமான விளைவோ அல்லது பிரதம விளைவோ வல்ல. ஆகவே இதனை "உதவி" என்ற வரை விலக்கணத்தினுள் அடக்க முடியாது.
இன்னெரு வகைப்பட்ட உதவியின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் உதவி வழங்கப்படுகின்றது. ஆணுல் அதே நேரத் தில் அந்தப் பணம் உதவி வழங்கிய நாட் டின் பொருட்களை வாங்குவதிலேயே செல விடப்பட வேண்டுமென்ற நிபந்தனையும் இடப்படுகின்றது. இக்குறிப்பிட்ட நாடு ஒரு பொருளுக்கு வசூலிக்கும் விலை, அதே பொருளுக்கு ஏனைய நாடுகள் வசூலிக்கும் விலையை விடக்கூடுதலாக இருக்கலாம். இதனுல் குறைந்த வட்டி விகிதத்தின் மூலம் பெறப்படும் நன்0ை இல்லாமலாக்கப்படு கின்றது. இத்தகைய *இனேக்கப்பட்ட உதவி குறைவிருத்தி நாடுகள் பெற்றுக் கொள்ளும் உதவியில் மிகச் சாதனமா னதொன் ருகக் காணப்படுகின்றது இவ் வாறு பெறப்படுவதையும் இறுககமான தொரு வரைவிலக்கணத்தின் கீழ் 'உதவி என அழைப்பது கடினமானது மேலும், பொருளாதார அபிவிருத்திக்கு உதவாத வகையில், இராணுவ நோக்கங்கள் கரு தியோ அல்லது அரசியல் நோக்கங்கள் கருதியோ உதவி வழங்கப்படலாம். இத் தகைய உதவியையும், பொருளாதார அபி விருத்தியைக் கருத்திற்கொண்டு உதவிக்கு நாம் கொடுத்திருக்கும் வரைவிலக்கணத் தினுள் சேர்த்துக் கொள்ளமுடியாது.
6 if gif வரைவிலக்கணத்துக்கமைய அபிவிருத்தியடைந்த நாடுகள் உதவி வழங்க முன்வரும்போது கூட, அதனைத் தர ரீதியான சோதனை முறைக்குட்படுத்த வேண்டியதவசியமாகும். அதாவது, குறிப் பிட்ட உதவியொன்றின் உதவித்தன்மை எவ்வளவென்பது அறியப்படவேண்டும். ஒரு நாட்டுக்குக் கிடைக்கும் உதவியின் அளவைவிட, அந்த உதவியின் உதவித் தன்மையே முக்கியமானதாகும். உதவித் தன்மை என்பதற்கு வழங்கப்படக்கூடிய மிக எளிம்ையான வரைவிலக்கணம் யாதெ
8 -

Page 33
வெளிநாட்டு உதவியின்.
னில், ஒரு குறிப்பிட்ட நிதிப் பாய்ச்சலின் ஆரம்பப் பெறுமதிக்கும், அதனைத் தற் போது திரும்பக் கொடுக்கும் முறையின் பெறுமதிக்கும் (வட்டி போன்றவை) இடை யேயான வேறுபாட்டை மூலதனத்தின் சந் தர்ப்பச் செலவைப் பிரதிநிதித்துவம் செய் யும் ஒரு விகிதத்தில் கழிவு செய்வதாகும் , ஆகவே வெளிநாட்டு உதவியின் உதவித் தன்மை, அந்த உதவி வழங்கப்பட்டுள்ள சலுகை நிபந்தனையின் தொழிற்பாடாகும். குறைவிருத்தி நாட்டுக்குக் கிடைக்கும் நிதியின் உதவித் தனமை 100 சதவீதமா கும். ஏனெனில் அது முற்றும் இனுமாகக் கிடைக்கின்ற ஒரு தொகையாகும். அதே நேரம் ஒரு கடனின் உதவித்தன்மை, அத 2னத் திருப்பிக் கொடுப்பதற்கான காலப் பகுதி, வட்டியற்ற காலப்பகுதி, அதற்கான வட்டி விகிதம் என்பவற்றில் தங்கியுள்ளது. கடன்களின் உதவித் தன்மையைக் கணிப் பிடும்போது, ஒரு நியம வட்டி விகிதம் அல்லது இன்னும் குறிப்பாக ஒரு கழிவு விகிதம் பயன்படுத்தப்படுகின்றது. இவ் விகிதம் எப்போதும் ஏறக்குறையச் சந்தை யில் நிலவும் வட்டி விகிதத்துக்குச் சமமா னதெனக் கொள்ளப்படுகின்றது. உதவித் தன்மையைக் கணிப்பதற்குக் கழிவு விகி தம் மிக முக்கியமானதெனலாம். உதவித் தன்மைக்கும், கழிவு விகிதத்துக்குமிடையே எப்போதும் நேர் க் கணியத் தொடர் பொன்று காணப்படுகின்றது. அதாவது, கழிவு விகிதம் எவ்வளவு கூடுதலாயுள்ளதோ அந்தளவுக்கு உதவித் தன்மையும் கூடிய
Sí Lau? இலங்கை பெற்ற கடன்
வருடாந்த மு நாடு வட்டி
விகிதம் (
ஐக்கிய அமெரிக்கா (a) 3.5 ஐக்கிய அமெரிக்கா (b) 3.5 ஐக்கிய இராச்சியம் இலவசம் மேற்கு ஜெர்மனி 3. O 7, Golf இலவசம் ஜப்பான் 5.25 சோவியத் ரூசியா (a) 2.5
சோவியத் ரூசியா (b) 2,5

வி. நித்தியானந்தம்
தாகும். கழிவு விகிதம் குறைவாயின், உத வித் தன்மையும் குறைவாகும். கழிவு விகி தமும், வட்டி விகிதமும் சமமாயின் உத வித் தன்மை O ஆகக் காணப்படும். வட்டி விகிதத்தை விடக் கழிவு விகிதம் குறைவா யின் உதவித் தன்மை எதிர்க்கணியமாயி ருக்கும். தகுந்ததொரு கழிவு விகிதத்தைத் தெரிவு செய்வதே உதவித் தன்மையை பொறுத் தவ்ரை கடினமான விடயமாகும். அது உதவி வழங்கும் நாட்டின் உதவித் தன் மையா அல்லது உதவி பெறும் நாட்டின் உதவித் தன்மையா நோக்கப்படுகின்ற தென்பதைப் பொறுத்ததாகும். உதவி வழங்கும் நாட்டின் உதவித்தன்மையா யின், பயன்படுத்தப்படும் விகிதம் வழங்கப் படும் பணத்தின் சந்தர்ப்பச் செலவைப் பிரதிநிதித்துவம் செய்வதாயிருக்க வேண் டும். உதவி பெறும் நாட்டின் உதவித் தன்மையெனில், அக்குறைவிருத்தி நாடு அதே தொகையைக் கட்டற்ற சந்தையில் பெற முன்வருமிடத்து அதற்குக் கொடுக்க வேண்டிய வட்டி விகிதத்தைப் பிரதிநிதித்து வம் செய்வதாயிருக்கவேண்டும். கடன் பெறப்பட்ட வட்டி விகிதம், சந்தை வட்டி விகிதத்தை விடக்குறைந்ததாயின், அது குறைவிருத்தி நாட்டுக்கு நன்மை பயப்ப தாயிருக்கும்.
இலங்கை பெற்றுக் கொண்டிருந்த வெளிநாட்டு உதவியின் ஒரு மாதிரியை எடுத்து நோக்குமிடத்துக் கடன்களின் உதவித் தன்மையைப் பின்வரும் அட்ட வணை (அட்டவணை V11) காட்டுகின்றது.
sy VII களின் உதவித் தன்மை
திர்ச்சிக் கடன் வழங்கும் கடனுக்கு காலம் நாட்டில் உதவித் வருடம்) நிலவும் வட்டி தன்மையின்
விகிதம் விகிதாசாரம் (%)
30 4.0 14
25 50 29
25 7.0 6 I
25 6.5 36
50 6.8 76
II 0 8.0 23
20 5. O 25
20 6.0 33
மூலம்: மத்திய வங்கி ஆய்வு

Page 34
வெளிநாட்டு உதவியின்.
அட்டவணையைக் கொண்டு நோக்கு மிடத்துப் பிரித்தானியா, கனடா ஆகிய இரு நாடுகளும் இலவச உதவியை வழங்கி யுள்ள போதிலும், நீண்ட முதிர்ச்சிக் காலத் தின் அடிப்படையில் கனடாவின் உதவி 75 சத வீதத்துக்கும் மேற்பட்ட உதவித் தன் மையைக் கொண்டிருக்கின்றது. இலங்கை மத்திய வங்கி ஆய்வொன்றின் Il1950 - 69 க்குமிடைப்பட்ட காலப்பகுதி யில் இலங்கை பெற்றுக் கொண்ட வெளி நாட்டு உதவியில் உதவித்தன்மை 1182.7 மில்லியன் ரூபா அல்லது உதவிகளின் நியம உட்பாய்ச்சலின் 62.4 சத வீதம் என மதிப் இடப்பட்டிருக்கின்றது. இதில் 497.6 மில் லியன் ரூபா முற்ருக வழங்கப்பட்ட நிதி உதவியாகவும், 685.1 மில்லியன் ரூபா கடன் உதவிக்கும், நிலவுகின்ற சேவைக் கொடுப்பனவுகளின் கழிக்கப்பட்ட பெறு மதிக்குமிடையிலான வேறுபாடாகவும் காணப்பட்டது. கடன் உதவி பொறுத்து, உதவித் தன்மை நியம மதிப்பீட்டின் 49.0 சத வீதமாகவே காணப்பட்டது. பிரதேச ரீதியில் மேற்கு நாடுகளின் உதவியே கூடி யளவு உதவித் தன்மை கொண்டதாக, அதாவது அவர்களது நியம வழங்கலில் 65.8 சதவீத உதவித் தன்ம்ை கொண்ட ாகக் காணப்பட்டது. அதே நேரத்தில் பலபக்க உதவியே மிகக் குறைந்த உதவித் தன்மையைக் கொண்டிருந்தது.
குறைவிருத்தி நாடுகளுக்குக் கிடைக் கும் வெளிநாட்டு உதவியின் அளவை மதிப் பிடும் போது கருத்திலெடுக்க வேண்டிய இன்னெரு தகமை யாதெனில், குறை விருத்தி நாடுகளிலிருந்து அபிவிருத்தி யடைந்த நாடிகளுக்குச் செல்லும் வளங் களின் அளவாகும், வெளிநாட்டு உதவியின் தேறிய அளவைக் கணிக்கும்போது இவ்வா முன எதிர்ப் பாய்ச்சலின் அளவை மொத் தப் பாய்ச்சலிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த "எதிர்ப் பாய்ச்சல் மூன்று அம்சங்களை உள்ளடக்கிய
தாகும்.
1 س--

வி. நித்தியானந்தம்
(1) பழைய கடன்களின் மேல் அபிவிருத் தியடைந்த நாடுகள் உழைக்கும் வட்டி, பல அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை, அவை வழங்கும் உதவியின் ஒரு கணிசமான வீதாசார மாக இது காணப்படுகின்றது.
(i) தனியார் முதலீடுகளினுரடாக வெளி
யேற்றப்படும் லாபம்.
(i) வறிய நாடுகளின் பயிற்சி மக்கள் அபி
விருத்தியடைந்த நாடுகளுக்குச் செல்
வதன் மூலம், வறிய நாடுகள் இழக் கும் மனித மூலதனம்,
இவை யாவும், உண்மையில், வெளி நாட்டு உதவித் தத்துவத்தின் மிக முக்கிய பிரச்சனைகளாகும். குறைவிருத்தி நாடுகள் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்களின் எண்ணிக்கை, ஏறக்குறைய வருடாந்த வெளிநாட்டு உதவியின் பாய்ச்சலின் நான்கு மடங்கு என மதிப்பிடப்படுகின் றது. இந்தக் கடன்களின் மீது கொடுக்கப் பட வேண்டிய வட்டி ஒரு புறமிருக்கத் தனியார் முதலீடுகளின் மீதான் லாபமும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்குப் பெரு மளவு அனுப்பப்படுகின்றது. இத்தகைய கடன்களைப் பெறுவதன் நோக்கம் இக் கடன்களையும் வட்டியையும் திருப்பிக் கொடுப்பதுடன், உள்நாட்டுப் பொருளா தாரமும் அபிவிருத்தியடையுமென்பதே யாகும். ஆஞல் திருப்பிக் கொடுக்கும் கடன், வட்டி என்பன அந்நிய நாணயத்திலிருக்க வேண்டியிருப்பதால், அந்நியச் செலாவணி உழைக்கக் கூடிய ஏற்றுமதித் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியது அவசிய மாகின்றது, எனினும், சார்பு ரீதியில் உட் பாயும் மூலதனம் உற்பத்தித் திறமையற் றிருப்பதனலும், சர்வதேச வர்த்தகத்தில் குறைவிருத்தி நாடுகள் எதிர்நோக்கும் தடைகளின் காரணமாகவும் பல குறை விருத்தி நாடுகள் கடனைத் திருப்பிக் கொடுப்பதிற் பிரச்சினைகளை எதிர்நோக்கு கின்றன. பல நாடுகளில் ஏற்றுமதி வரு
0 -

Page 35
வெளிநாட்டு உதவியின்.
மானத்தின் 20 சத வீதம் வரை கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கே செலவாகிற தென மதிப்பிடப்படுகிறது. குறைவிருத்தி நாடுகளை முற்ருக எடுத்து நோக்குமிடத் துப் புதிதாகக் கிடைக்கும் உதவியின் அரைப்பகுதி பழைய கடன்களைத் திருப் பிக் கொடுப்பதற்கே செலவாகிறதென aðfrtb .
இதே போன்று, குறைவிருத்தி நாடு களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளால் மேன் மேலும் வழங்கப்படும் தொழில் நுட்ப உதவி (இது தற்போது மொத்த உதவியின் ஏறக்குறைய 20 சத வீதமாயுள் ளது). வறிய நாடுகளிலிருந்து அபிவிருத்தி படைந்த நாடுகள் நோக்கி ஏற்படும் குடிப் பெயர்வினல் சமப்படுத்தப்படுகின்றது. சில வகைத் திறமைகளின் தட்டுப்பாடு குறைவிருத்தி நாடுகள் பலவும் எதிர்நோக் கும் முக்கிய பிரச்சினையாதலால், இத்த கைய தொழில் நுட்ப ரீதியான உதவி பெரிதும் பலனளிக்கக் கூடியதொன்றே பாகும். எனினும், நடைமுறையில் இத்த கைய உதவி குறைவிருத்தி நாடுகளின் உள் நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வன வாயன்றி, மூலதனம் மிகுந்த அபிவிருத்தி படைந்த நாடுகளின் நிலைமைக்கேற்றன வாகவே காணப்படுகின்றது, அத்துடன் சில சமயங்களில், இந்த உதவி குறை விருத்தி நாடுகளின் மேல் ஒரு சுமையாக வும் மாறுகின்றது. ஏனெனில், தொழில் துட்ப ஆலோசனை அளிக்க முன்வரு வோருக்கு, வேதனத்தில் ஏற்படக் கூடிய இடையீட்டை வறிய நாடு நிவர்த்தி செய்ய வேண்டியிருப்பதுடன், அவர்களுக் குத் தரமான வீட்டு வசதி, போக்குவரத்து மற்றும் வசதிகளையும் வழங்க வேண்டியேற் படுகின்றது. இவை யாவும் மேலதிக செல வுடைய அம்சங்களாகும். தொழில் நுட்ப உதவியின் மூலம் கிடைக்கும் பயிற்சியை அபிவிருத்தியடைந்த நாட்டிற் தங்கி விருந்து தான்பெற வேண்டுமாயின், இவ் வாறுபயிற்சி பெறும் குறைவிருத்தி நாடு களைச் சேர்ந்த பலர் மேடுைகளிலேயே
- 1)

வி. நித்தியானந்தம்
நிரந்தரமாகத் தங்கி விடுவதால் குறை விருத்தி நாடுகள் எதிர்பார்க்கும் பயன் கிடைப்பதில்லை. இதுவே திறமைசாலிகள் வெளியேற்றம் அல்லது மூளைசாலிகள் வெளியேற்றம் என அழைக்கப்படுகின்றது. இன்றைய அபிவிருத்தியடையும் நாடுகள் எதிர் நோக்கும் முதற்தரப் பிரச்சினையாக இது காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக் காவைப் பொறுத்தவரை அது வழங்கு கின்ற தொழில் நுட்ப உதவியை விட, குறைவிருத்தி நாடுகளின் மனித வளங்கள் மூலம் அது பெற்றுக் கொள்ளும் உதவி மிகக் கூடியதொன்றென மதிப்பிடப்படு கின்றது. இதே போன்று, ஐக்கிய இராச்சி யத்தைப் பொறுத்த வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் அளவுக்கு இல்லாவிட்டா லும், நிலுவை ஐக்கிய இராச்சியத்துக்குச் சாதகமாக இருப்பதாகவே கருதப்படுகின் றது. இன்றைய நிலையில், இத்தகைய எதிர்ப் பாய்ச்சல் கணிசமானளவில் அதி கரித்திருப்பதால், அபிவிருத்தியடைந்த நாடுகள் குறைவிருத்தி நாடுகளுக்குதவி செய்வதில்லை, ஆனல் குறைவிருத்தி நாடு கள் தான் அபிவிருத்தியடைந்த நாடு களுக்கு உதவி செய்கின்றன எனப்படுகின் றது. உதாரணமாக, லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஐக்கிய அமெரிக்காவினுட் பாயும் மூலதனம், ஐக்கிய அமெரிக்கா இந் நாடுகளுக்கு வழங்குவதை விட நான்கு மடங்கானதென மதிப்பிடப்படுகின்றது. ஆகவே உண்மையில், லத்தீன் அமெரிக்க நாடுகளே உலகின் அதி செல்வந்த நாடா கிய அமெரிக்காவுக்கு வெளிநாட்டு உத வியை அளிக்கின்றன எனலாம்.
ஆகவே மேற்கூறிய தகமைகள் பல வற்றையும் கருத்திற் கொள்ளுமிடத்துக் குறைவிருத்தி நா டு கள் அபிவிருத்தி யடைந்த நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்ளும் மொத்த வெளிநாட்டு உதவி, பகுதி 1ல் தரப்பட்ட தரவுகள் எடுத்துக் காட்டுவதைவிடப் பெரிதும் குறைவான தென்பதை அறிய முடிகின்றது. ஆகவே வெளிநாட்டு உதவியின் அளவு அதிகரிக்கப் படுவதற்கு முன், குறைவிருத்தி நாடு
t =

Page 36
வெளிநாட்டு உதவியின்.
களுக்கு வெளிநாட்டு உதவி அவசியம் தானு, அதன் கடமைகள் எவை என்ற விட யங்களை ஆராய வேண்டியது அவசியமா கின்றது.
— III. —
சலுகை அடிப்படையில் உதவிக்கு வரைவிலக்கணம் அளிக்கப்புகின், குறை விருத்தி நாடுகளினை நோக்கி வளங்களின் பாய்ச்சலை இயக்குவதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் மேற்கொள்ளும் உண்மை முயற்சி எனலாம். சாதாரணமாக, அபி விருத்தியடைந்த நாடுகளின் முயற்சியின்றி இவ்வளங்கள் அபிவிருத்தியடையும் நாடு கள் நோக்கிப் பாய மாட்டாதென்பது
இங்கு குறிப்பிடத்தக்கது.
இல நாடுகளின் பொருளாதார வளர்ச் சியில் அரசாங்கங்கள் இவ்வாறு தலையிட ஒமென்பது, சர்வதேசப் பொருளியல் மரபுரீதியான சிந்தனைக்கு முர ஞன ஒர் அம்சமேயாகும் பழம் டொரு ளியலாளர் இத்தகைய தலையீடுகளை ஏற் றுக்கோள்ளாமல், இயற்கைச் சக்திகள் அபிவிருத்தியை ஏற்படுத்தி, நாடுகளிடை யேயான ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கு மென வாதிடுவர். இவர்களுடைய கருத்துப் படி, அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிகக் கூடியளவான மூலதனம் காணப்படுகின் றது. அதேநேரத்தில் இந்நாடுகளில் ஊழி
மூல
. --ജത്തങ്ങ
.ങ്ങത്തൂങ്ങ
G
மலிந்த மூலதனம் அருமை ஊழியம்
 
 

வி. நித்தியானந்தம்
யம் அருமையாகவும், அதனல் அதன் பெறு மதி கூடியும் காணப்படுகின்றது. ஆனல் வறிய நாடுகளைப் பொறுத்த நிலைமை இதற்கு எதிர்மாறனதாகும். மூலதனம் குறைநிரம்பல் நிலையிலும், வேண்டியளவு மலிந்த ஊழியமும் காணப்படுகின்றது. ஆகவே தடைகளற்ற ஒரு சந்தையமைப் பில் இருவகைச் சக்திகள் இயங்க ஆரம் பிக்கும். முதலாவதாகச் செல்வம் மிகுந்த நாடுகளின் மூலதனம் கூடியளவு விளைவினை எதிர்பார்த்து வறிய நாடுகள் நோக்கிப் பாய்ந்து அங்குள்ள மலிந்த ஊழியத்துடன் இணைந்து கொள்ளும். மறுபுறம், அதே நேரத்தில் ஊழியம் இதற்கு எதிர்ப்புற
மாக இயங்கும். அதாவது குறைவிருத்தி நாடுகளின் ஊழியம் உயர்ந்த வேத னத்தை எதிர்பார்த்து அபிவிருத்தி
யடைந்த நாடுகள் நோக்கிப் பாய்ந்து சென்று அங்குள்ள Th tg. ш. மூலதனத்துடன் சேர்ந்துகொள்ளும். எனவே ஊழியம், மூலதனம் என்பவற்றின் பூரண அசைவி ஞல் இரு நாடு களதும் வருமானங்கள் இறுதியில் சமனுக்கப்படும், காரணிகளி டையே பூரண அசைவில்லையென்பதைப் பொருளியலாளர் ஏற்றுக்கொண்டாலும், காரணிகளின் பாய்ச்சல் சமநிலையை ஏற் படுத்தக்கூடிய சக்தியைப் பெற்றுள்ள தென அவர்கள் கருதினர். பின்வரும் வரைபடம் அவர்கள் எதிர்பார்த்த நிலை யைப் புலப்படுத்துகின்றது.
Φ 6οτιο
ாழியம்
அரும்ை மூலதனம் மலிந்த ஊழியம்

Page 37
வெளிநாட்டு உதவியின்.
ஆஞல், துரதிஷ்டவசமாகப் பழம் பொருளியலாளரின் இந்த இலட்சிய சிந் தனை நடைமுறைக்குப் பெரிதும் புறம் பான தொன்ரு கக் காணப்படுகின்றது. தனியார் மூலதனம், தனியார் லாபமுழைக் கக்கூடிய பிரதேசங்களை நோக்கியே செல் கின்றது. லாபமுழைப்பதற்கான வாய்ப் புக் ஓஸ் குறைவிருத்தி நாடுகளிற் குறைவே யாகும். குறைவிருத்தி நாடுகளில் ஊழியம் மலிவாகக் கிடைக்கிறதென்பது உண்மை னும், இது அபிவிருத்தியடைந்த நாடு குப் பெரிதும் பயனுடையதெனல் யாது. ஏனெனில் இந்த : பூழியம் நவீன தோழில் நுட்பங்களில் பழக்கப்படாத, திறமையற்ற, பயிற்சிபெருத ஊழியமாகும். இது தவிர, அபிவிருத்தியடையும் நாட்டின் ஏ:ே ய அம்சங்களாகி தளர்ந்த நிர்வாகம், த* dடு நிறைந்த பொருளாதாரக் கொள்கை, அரசியல் ஸ்திர மின்மை என் பன நிச்சயமற்றதொரு தன்மையை ஏற் படுத்திக் தனியார் முதலீட்டைப் பல வீனப்படுத்துகின்றன. ‘வெற்றி மேலதிக வெற்றிக்கு வழிவகுக்கும்" என்பதே தனி ய: + மூலதனத்தின் முக்கிய சுலோகமா கும். வெளிப்புறச் சிக்கனங்கள் அதிகமா யுள்ள பிரதேசங்களிலேயே அது ஒன்று திரள முற்படுகின்றது. பயிற்சிபெற்ற திறமையான ஊழியம், தகுந்த போக்கு வரத்து வசதிகள், சந்தைக்கு அண்மித்த நிலை என்பன இத்தகைய சிக்கனங்களில் முக்கியமானவையாகும். அபிவிருத்திய டைந்த நாடுகளிலேயே செழிப்புக் குறைந்த பிரதேசங்களில் தனியார் முதலீடுகளைப் பரப்புவது கடினமானதொரு செயலாகக் காணப்படுகின்றது. உதாரணமாகப் பிரித் தானியாவின் சமீப காலத்திய பொருளா தாரச் செழிப்பு நிலை லண்டன், மிட்லாந்து பகுதிகளினுாடாகச் செல்லும் தென்கிழக் குப் பிரதேசத்திலேயே நெருக்கமாகக் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் குறைந்த வருமானமும், கூடிய வேலை யின்மையும் முக்கிய தன்மைகளாக விளங்கு கின்றன . இத்தகைய பிரதேசங்களில் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதாயின்
யாயி
ή ( 2
 
 
 
 

வி. நித்தியானந்தம்
அரசாங்கம் பல சலுகை சளே முயற்சியாள ருக்கு வழங்க வேண்டியதாயுள்ளது. எனவே, உள்நாட்டிலேயே நிலைமை இவ் வாறிருக்குமிடத்துப்,பொருளாதார தரம், சமூக நிலை, கலாச்சாரம் என்பன பெரிதும் வேறுபடும். குறைவிருத்தி நாடுகள் நோக்கி மூலதனமானது பூரணமாக அசைந்து செல்லுமென எந்நிலையிலும் எதிர்பார்க்க முடியாது. மூலதனம் செல்வந்த நாடுகளி லிருந்து வறிய நாடுகளுக்குச் செல்வதற் குப் பதிலாகச், சாதகமான நிலைமைகளை எதிர்பார்த்து, வறிய நாடுகளின் மூல தனமே நடைமுறையில் அபிவிருத்தி யடைந்த நாடுகள் நோக்கிச் செல்கின்றது. இவ்வாருக மூல கனம் நாட்டைவிட்டு வெளியேருமல், அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் குறை விருத்தி நாடு களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
மூலதனத்தைவிட ஊழியம் சர்வதேச ரீதியில் அசைந்துசெல்லும் தன்மை குறை வாயிருப்பதால், இது நாடுகளின் பொரு ளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமப்படுத்து மென எதிர்பார்க்க முடியாது. இயல்பாக வே குறைந்திருக்கும் ஊழிய அசைவுத் தன்மை, அபிவிருத்தியடைந்த நாடுகளின் குடிவரவுத் தடைக் கொள்கைகளினுல் மேலும் பலப்படுத்தத் படுகின்றது அவ் வாறு அபிவிருத்தியடைந்த நாடுகள் நோக்கி ஊழியம் அசைந்துசெல்கிறதென எடுத்துக்கொண்டாலும், எத்தகைய ஊழி யம் இந்நாடுகள் நோக்கி அசைகின்றது? பயிற்சிபெற்ற, திறமை மிகுந்த, இளம் தலைமுறையைச் சேர்ந்த ஊழியரே இவ் வாறு அபிவிருத்தியடைந்த நாடுகள் நோக்கிச் செல்கின்றனர். இத்தகைய ஊழி யத்தின் சேவை குறைவிருத்தி நாடுகளின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு இன்றியமை யாததொன்ருகும்.
ஆகவே மூலதனம் , ஊழியம் என்பன பற்றிய வழமையான கருதுகோள்களில் சில பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியமாகின்றது.
13 -

Page 38
வெளிநாட்டு உதவியின்.
ep6
ల
A
மூலதனச் செறி
குடிவரவுத் தடைகள்
அதாவது, இவை அபிவிருத்தியடைந்த, அடைகின்ற நாடுகளிடையே அசைந்து சென்ருலும், அந்நாடுகளின் சமமின்மை யைக் குறைப்பதற்குப் பதிலாக, அதனை மேலும் அதிகப்படுத்துகின்றன. காரணி களின் பாய்ச்சல் வறிய நாடுகளை மேலும் வறியனவாக்கிச் செல்வந்த நாடுகளை மேலும் செல்வந்தர்களாக்குகின்றது.
இங்கு வெளிப்படும் முக்கிய கருத்து யாதெனில், வறிய நாடுகளிலிருந்து அபி விருத்தியடைந்த நாடுகளுக்கு அசைந்து செல்லும் ஊழியம் மூலதனச் செறிவுடைய ஊழியமாகும். கல்வி, பயிற்சி என்பவற்றி னுாடாகப் பெருமதிப்புடைய வளங்கள் இவர்கள்மீது முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சமூக ரீதியில் குறைவிருத்தி நாடு களுக்கு ஏற்படும் இழப்பு, அபிவிருத்தி யடைந்த நாடுகளுக்கு இதன்வழி கிடைக் கும் லாபத்தினைவிடக் கூடியதொன்ரு கும். அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடு களுக்கு இலங்கையின் டாக்டர்களும், பொறியியலாளரும், பொருளியலாளரும் குடிபெயர்ந்து செல்வதால் அந்நாடுகளுக் குக் கிடைக்கக்கூடிய எல்லைப்பயன் சிறி தாயினும் இலங்கைக்கு அதன்மூலம் ஏற் பட்ட இழப்பை அளவிடின், அது மிகக் கூடியதொன்ருயிருக்கும். சமீபத்திய ஒரு
- 1

வி. நித்தியானந்தம்
மூலதன வெளிப்பாய்ச்சல் மீது கட்டுப்பாடுகள்.
தனம்
வறுமை
புடைய ஊழியம்
மதிப்பீட்டின் படி, இலங்கை வருடாவரு டம் ஏறக்குறைய 128 மில்லியன் ரூபா வை, உதவியின் இந்த எதிர்ப் பாய்ச்சல் மூலம் இழப்பதாகக் கருதப்படுகின்றது. சில குறைவிருத்தி நாடுகளில் இது மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். உதாரணமாக, உலகின் மிக வறிய நாடுகளுள் ஒன்ருகிய எத்தியோப்பியாவில் 62,000 மக்களுக்குத் தலா ஒரு டாக்டர் வீதம் இருந்தும், 1964-1966க்கு மிடைப் பட்ட காலப்பகுதியில் 13 எத்தியோப் பிய டாக்டர்கள், 650 மக்களுக்குத் தலா ஒரு டாக்டர் வீதம் இருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து சென்ற னர். இத்தகைய பாதகமான விளைவுகளைத் தடுக்கும் நோக்கத்துடன் குறைவிருத்தி நாடுகளின் அரசாங்கங்கள் இத்தகைய குடிப்பெயர்வைக் கட்டுப்படுத்தும் முயற் சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசிய மாகின்றது.
மேலும் தனியார் மூலதனமும் குறை விருத்தி நாடுகளை நோக்கி அசைந்து சென் ரு லும், ஏற்கெனவே எடுத்துக்காட்டியபடி, இது கூடியளவு லாபம் தரும், மூலதனச் செறிவுடைய, வெளிநாட்டுச் சந்தைக்குத வக் கூடிய துறைகளை நோக்கியே செல்லு கின்றது. இம்முதலீடுகளிலிருந்து உள்நாட்
4 -

Page 39
வெளிநாட்டு உதவியின்.
டுப் பொருளாதாரம் நோக்கி ஏற்படு கின்ற பரவல் விளைவுகள் மிகக் குறைவா கும். இவ்வாறு குறைவாகப் பயனளிக்கும் நிலையிலும் வெளிநாட்டு மூலதனம் பெரு மளவு அரசியல் உறுதியுடைய, தமக்குக் கூடியளவு சலுகை வழங்கும் நாடுகளை நோக்கியே செல்ல முற்படுகின்றது. உண் மையில், நாட்டினபிவிருத்திக்குதவிக்கூடிய நிலைமைகளைக்கொண்ட, உதாரணமாகச் செலாவணிக் கட்டுப்பாடுகள், லாபத்தின் மீது கட்டுப்பாடு என்பவற்றைக்கொண்ட, நாடுகளை நோக்கி இந்த மூலதனம் செல்ல வில்லை. இதன் காரணமாகவே, ஒரு குறை விருத்தி நாட்டில் அபிவிருத்தி முயற்சிகள் எந்தளவுக்குக் கூடிக் காணப்படுகின்றன வோ, அந்த அளவுக்கு வெளிநாட்டுத் தனி யார் மூலதனத்தின் செல்வாக்கும் குறைந் திருக்கும் எனப்படுகின்றது. ஆகவே இந் நிலையில், உத்தியோக ரீதியில் வழங்கப் படும் அரசாங்க உதவியே வெளிநாட்டு உதவியில் முக்கியமானதாகும். எனவே வளங்கள் சர்வதேச ரீதியில் தானகப் பாயாத நிலையில் இத்தகைய தலையீடுகள் மூலம், அதாவது வெளிநாட்டு உதவிமுலம் அப்பாய்ச்சலை இயக்க முற்பட வேண்டியது அவசியமெனலாம். இவ்வாறு கூறுமிடத்து வெளிநாட்டு உதவியின் கடமைகள் அல் லது அது சாதிப்பது என்ன?
பரந்த வகையில் வெளிநாட்டு உதவி மூன்று கடமைகளை ஆற்றும்படி எதிர் பார்க்கப்படுகிற தெனலாம்.
(1) உள்நாட்டில் போதிய மூலதன ஆக்க மில்லாத நிலையில், வெளியிலிருந்து இது ஈடுசெய்யப்படுகின்றது.
(1) பொருளாதார அபிவிருத்தியின் மீது அந்நியச் செலாவணி ஏற்படுத்தக் கூடிய கட்டுப்பாடுகளை முறியடிக்கின் „T) ჭj] .
-) சர்வதேச ரீதியில் தொழில்நுட்ப அறி வையும், பொருளியல் அறிவையும் குறைவிருத்தி நாடுகளிடையே பரப்பு வதற்குதவுகின்றது.

வி. நித்தியானந்தம்
இம்மூன்று கடமைகளும் ஒன்றிலிருந்து மற்றது முற்றக வேறுபட்டதெனக் கூற முடியாது. எனினும் இவை அபிவிருத்திச் செய் முறைக்கிருக்கக் கூடிய முட்டுக்கட் டைகளையும் , அவற்றை வெளிநாட்டு உதவிழுலம் என்ன வகையில் ஒரளவுக்குத் தீர்த்துக்கொள்ள முடியுமென்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. ஆனல் இக்கட மைகளை வெளிநாட்டு உதவி சரிவரச் செய் கின்றதா? குறைவிருத்தி நாடுகள் வேண்டி யளவு பயனை இதிலிருந்து பெற்றுக் கொள் கின்றனவா?
— IV -
வெளிநாட்டு உதவிக்குச் சாதகமான கருத்துத் தெரிவிப்போர் மேற்கூறிய மூன்று கடமைகளுள், முதலாவதையே, அதாவது, மூலதன ஆக்கத்துக்குதவி செய் வதனையே பெரிதும் வலியுறுத்துவர். இரண் டாவது உலக மகாயுத்தத்துக்குப் பிந்திய பல வெளிநாட்டு உதவித் திட்டங்களிலும் இதுவே முக்கிய குறிக்கோளாக எடுத்துக்
காட்டப்பட்டது.
எனினும், அபிவிருத்தியடைந்த நாடு களின் பொருளாதார வளர்ச்சியை எடுத்தா ராயும் பொருளியலாளர் மூலதனத் திரட்சி யின் பங்கினை ஒரளவுக்கு மிகைப்படுத்தியே கூறுகின்றனரெனலாம். பொருளாதார அபிவிருத்தி மூலதன அளவின் தொழிற் பாடு எனக் கருதும் இத்தகைய இலகு வான கொள்கையைக் குறைவிருத்தி நாடு களுக்குப் பிரயோகிக்க முற்பட்ட பொரு ளியலாளர், குறைவிருத்தி நாடுகளின் பிரச் சனைகள் குறைந்த வருமானத்தின் காரண மாகச் சேமிப்புக் குறைவடைவதிலிருந்தெ ழுபவை என்ற முறை யில் நோக்கினர். சேமிப்பை மையமாகக்கொண்ட இக்கோட் பாடு, எதிர் கால உற்பத்தி கருதி நடை முறை நுகர்வினை விட்டுக்கொடுக்க வேண் டுமெனக் கூறுகிறது. எனினும் இதன் உண்மை பற்றி இன்று சில சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளன . அபிவிருத்திய டைந்த நாடுகளின் வளர்ச்சிக்கு மூலதனம்

Page 40
வெளிநாட்டு உதவியின்.
காரணமாயிருந்ததென்பதை விட, அந்நா டுகளின் விரைந்த பொருளாதார அபிவி ருத்தியே கூடியளவு மூலதனத் திரட்சியை ஏற்படுத்தியதெனப் பீற்றர் டொனல்சன் (Peter Donaldson) 61 657 gp g6furi (5sili பிடுகின்ருர், மூலதனம் அபிவிருத்திச் செய் முறையின் ஒரு முக்கிய காரணி என்பது உணமையாயினும், ஏனைய காரணிகளின் ஒத்துழைப்பின்றி அதுமட்டும் பொருளா தார வளர்ச்சியை ஏற்படுத்தி விட முடி யாது. தொழில் நுட்ப முறைகள் பற்றிய அறிவு, வேலைகள் பற்றிய சட்ட திட்டம், முயற்சி, அபிவிருத்தி பற்றிய உணர்வு போன்றவை இத்தகைய காரணிகளில் முக்கியமானவையாகும். ஆகவே வெறு மனே மூலதனத்தை உட்செலுத்துவதனுல் மாத்திரம் குறைவிருத்தி நாடுகள் பொரு ளாதார முன்னேற்றத்தை அடைய முடி யாதெனலாம்.
மீண்டும், உள்நாட்டுச் சேமிப்பின் குறைவை ஈடு செய்வதற்கே வெளிநாட்டு உதவி அவசியமென்ற கருத்து, குறைந்த தலா வருமானங்களின் காரணமாக வறிய நாடுகள் தமது சேமிப்பைக் கூட்ட முடி யாமையிலிருந்தே பெருமளவுக்கு ஏற்பட் டது. ஆனல் அதே நேரத்தில் குறைவி ருத்தி நாடுகள் மிகுந்த வருமானச் சம மின்மை உடைய நாடுகள் என்பதும், இவ் வருமானச் சமமின்மையைக் குறைப்பதன் மூலம் பெருமளவு சேமிப்பைத் திரட்டிக் கொள்ள முடியுமென்பதும் இந்த வாதத் தில் மறக்கப்படுகின்றது. உயர் வருமான மட்டங்களில் உள்ளவர்களின் வருமானங் களைக் குறைப்பதன் வாயிலாக நாட்டின் சேமிப்பு மட்டத்தை உயர்த்தலாமென்பது பல குறைவிருத்தி நாடுகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது. சேமிப்பை உயர்த்துவது மாத்திரம் தான் அபிவிருத்தியின் பிரச்ச னையாயின் குறைவிருத்தி நாடுகள், அபி விருத்தியடைந்த நாடுகளை விடத் திறமை யாகவே செய்திருப்பதைப் பியர்சன் கமி
ஷன் அறிக்கை சுட்டிக் சுாட்டுகின்றது.

வி. நித்தியானந்தம்
வெளிநாட்டு மூலகங்களினுரடாச உள் நாட்டுச் சேமிப்புக்களை எவ்வகையில் அதி கரிக்கலாம்ெ ன்பது பொறுத்து மூன்று அம் சங்கள் முக்கிய மா க வலியுறுத்தப்பட வேண்டும்.
(i) வெளிநாடுகளினின்றும் பெறப்ப டும் நிதிகள் உள்நாட்டிற் சேமிப்புக்களே அதிகரிக்கக்கூடிய தூண்டுதல்களே இல்லா மற் செய்யக்கூடும். இது விடயத்தில் வெளிநாட்டு உதவி உள்நாட்டுச் சேமிப்பை அதிகரிப்பதற்குப் பதிலாக, உள்நாட்டிற் சேமிப்புப் பெருகக்கூடிய மார்க்கங்களைப் பயன்படுத்துவதற்கொரு தடையாக இருக் கக்கூடும்.
(i) பல சந்தர்ப்பங்களில் வெளி நாட்டு மூலதனம் பிற நாடுகளில் நடை முறையிலிருக்கும் தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதாயிருக்கின்றது. இ  ைவ தொழில் நுட்ப ரீதியில் முன்னேற்றம டைந்தவையாகவும், மூலதனச் செறிவுடை யவையாகவும் விளங்குகின்றன. இதனுல் இலகுவான வளர்ச்சி மாதிரிகளைக்கொண்ட குறைவிருத்தி நாடுகளின் பொருளாதா ரங்களுக்கு இவை பொருத்த மற்றவையா யிருக்கலாம். இந்த முறைகள் கூடியளவு முதல் - வெளியீட்டு விகிதாசாரத்தைக் கொண்டிருப்பதால், மூலதனம் குறைவிரு த்தி நாடுகளில் உண்மையாக அதிகரித்தி ருந்தாலும், அந்த அதிகரிப்பை இல்லா மற் செய்துவிடுகின்றன. மேலும், ஏற்கெனவே எடுத்துக் காட்டியபடி, இவை குறைவி ருத்தி நாடுகளின் சூழ்நிலைக்குப் பொருத் தமற்றிருப்பதால், தகுந்த முறையில் திற மையாகப் பயன்படுத்தப்படுவதும் இல்லை. இதனுல் முதல்-வெளியீட்டு விகிதாசாரம் மேலும் அதிகரிப்பதற்கே வாய்ப்பேற்படு கின்றது. w
(iii) வெளிநாட்டு மூலதனத்தின் பெரும்பகுதி தனியார் முதலீடுகளாயிருக் கும்போது, அது பெருந்தோட்டங்கள், சுரங்கங்கள் போன்ற ஒரு முகப்பட்ட,
குறைவிருத்தி நாடுகளுக்கு பெரிதும் பயன
16 -

Page 41
வெளிநாட்டு உதவியின்.
ளிக்காத துறைகள் நோக்கியே செல்வ தால், உள்நாட்டில் அபிவிருத்தியேற்படக் கூடிய வகையில் இதிலிருந்தேற்படும் பர வல் விளைவுகள் மிகவும் குறைவாகும். இது தவிர்ந்த, உள்நாட்டு அபிவிருத்திக் குதவக்கூடிய முறையில், வெளிநாட்டுத் தனியார் மூலதனம் முடக்கப்படுவது மிக வும் குறைவென்றே கூறலாம்.
ஆகவே, தொகுத்து நோக்குமிடத்துக் கடந்த இரு தசாப்தங்களிலும் அபிவிருத்தி பற்றிய பிரச்சனைகளை எடுத்துப் பார்க்கு மிடத்து, மூலதனத்தின் பற்ருக்குறை தான் வறிய நாடுகளின் முன்னேற்றமின் மைக்குக் காரணமாக இருந்துள்ளதா என் பது பற்றிச் சந்தேகமே ஏற்படுகின்றது. எனினும் சில நாடுகளில், மூலதனம் ஏனைய நாடுகளை விட அபிவிருத்திக்குக் கூடியளவு அவசியமாயிருப்பது மட்டும் உண்மையா கும். இந்நாடுகளிற்கூட வெளிநாட்டு உதவி அபிவிருத்தியின் ஏனைய அம்சங்களை மூடி மறைத்து விடாமலிருப்பதிற் கவன மாயிருத்தல் அவசியமாகும். உள்நாட்டுச் சேமிப்புக்களைப் பயன்படுத்தக்கூடிய வகை பிலான நேர்க் கொள்கைகள் கையாளப் பட வேண்டியதுடன், அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதும் முக்கியமா னதாகும். இது மட்டுமன்றி, உதவி பய னுடையதாயிருக்க வேண்டுமாயின், அது சரியான முறையில், சூழ்நிலைக்கேற்ற நுட் பங்களைக்கொண்டு அபிவிருத்திக்கேற்ற வகையில் அமைந்திருக்க வேண்டியது அவ சியமாகும். அதாவது, உதவி வழங்கும் நாட்டின் நலனன்றி உதவியைப் பெற்றுக் கொள்ளும் நாட்டின் நலனே முக்கியமா கக் கவனிக்கப்பட வேண்டும். ஆகவே உதவி எந்த அளவு கிடைக்கிறது அல்லது எவ்வளவு தொகை கிடைக்கிறது என்ற அம்சங்களைவிட மேற்கூறிய தர ரீதியான அம்சங்களே வெளிநாட்டு உதவியைப் பொறுத்துக் கருத்திலெடுக்கப்பட வேண் டியவையாகும். ஆனல் அதே நேரத்தில் தர ரீதியான அம்சங்களைக் கவனியாது, வெளிநாட்டு உதவியைக்கொண்டு சென்று
17 سس۔

வி. நித்தியானந்தம்
ஒரு நாட்டிற் குவிப்பதன் மூலமும் பொரு ளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடி யுமென்பதும் கவனிக்கத் தக்கது. தாய் வான், தென்கொரியா போன்ற இடங்க ளில் இத்தகையதொரு அபிவிருத்தியே ஏற்பட்டது ஆனல் இத்தகைய மிதமிஞ் சிய உதவி நாடுகளின் கலாச்சாரத் தனித் துவத்தை முற்ருக இல்லாமற் செய்து விடக் கூடியதாகும். ஆகவே இது விரும் பத் தக்கதல்ல.
குறைவிருத்தி நாடுகள் பலவற்றின் பொருளாதார அபிவிருத்தியில் அந்நியச் செலாவணிப் பற்ருக்குறையே தடையாக உள்ளது. முதல் விளைவுப் பொருட்களின் ஏற்றுமதியிற் பெரும்பகு தியும் தங்கியிருக்கும் இந்நாடுகள் கைத் தொழில பி விருத்திக் கெதிரா கப் பல தடைகளை எதிர்நோக்குவதுடன், சென்மதி நிலுவை நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டியவையாயுள்ளன, தமக்குத் தேவை யான அத்தியாவசியப் பொருட்களை இறக் குமதி செய்து கொள்வதற்கும், கடன்க ளைத் திருப்பிக் கொடுப்பதற்குமான வேண் டியளவு அந்நியச் செலாவணியை அவை உழைத்துக்கொள்ள முடிவதில்லை. இதன் கருத்து, குறைவிருத்தி நாடுகள் தொடர்ந் தும் தமக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு இறக்குமதியிற் தங்கியிருக்க வேண்டுமென் பதல்ல. எனினும் சில அடிப்படைக் கைத்தொழிற் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாமை அபிவிருத்தி யுடன் தொடர்புடைய பல செய்முறைக ளின் இயக்கத்தைத் தடைப்படுத்தி வைக் கலாம். இவ் வாரு ன சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு உதவி பெருமளவு பயன்தரு வதாயிருக்கலாம். ஆனல் உதவி எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற அந்நியச் செலாவ ணியாயிருப்பதே கூடியளவு பயனுடைய தாகும் எனினும் இத்தகைய உதவி பெரி தும் மட்டுப்படுத்தப்பட்டதேயாகும்.
சர்வதேசத் தொழில்நுட்ப முறை களைப் பரப்புவதற்கும் வெளிநாட்டு உதவி

Page 42
வெளிநாட்டு உதவியின்.
உகந்ததொரு சாதனம் என்பது உண்மை யேயாகும். இது பண வடிவிலோ பொருள் வடிவிலோ அல்லாமல் தொழில்நுட்பப் பயிற்சி வடிவில் அமைந்திருக்கும். ஜப் பான் விரைவில் அபிவிருத்தியடைந்த மைக்கு, மேற்கு நாடுகளிலிருந்து கிடைத்த தொழில்நுட்ப உதவியே பெருமளவு பொறுப்பாயிருந்தது. ஆனல், ஏற்கனவே எடுத்துக் காட்டியபடி, உதவி குறைவிருத்தி நாட்டுக்குப் பொருத்தமானதாக அமைந் திருக்க வேண்டியதவசியமாகும். எனினும் பல சந்தர்ப்பங்களில் இது இவ்வாறிருப்ப தில்லை. தொழில்நுட்பப் பயிற்சி முடித்து பலர் நாடு திரும்புவதில்லையென்பதுடன், அவ்வாறு திரும்புவோரும் மேனடுகளின் நிலையில் கூடியளவு நுகர்வில் ஈடுபடுவதால், நாட்டின் சேமிப்புத்தன்மை குறைவடைய இடம் ஏற்படுகின்றது. நாடு திரும்பிச் சில காலத்தின் பின்பு நாட்டைவிட்டுச் செல்பவர்களுடைய தொகையும் கணிச மான அளவில் இருப்பதால், இவர்களு டைய சேவையும் நாட்டுக்கு இழக்கப்படு கின்றது.
ஆகவே மேலே காட்டிய பல விடயங் களிலிருந்தும், தற்போதைய உதவிகள் குறைவிருத்திநாடுகளுக்குப் பொருத்த மற்று, அவற்றுக்கு உதவாதவை போலக் காணப்படுகின்றன எனலாம். இன்னெரு வகையிற் கூறின், குறைவிருத்தி நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு இவை எவ் வளவு தூரம் உதவுகின்றன என்பது பற் றிப் பலத்த சந்தேகங்கள் கிளப்பப்பட் டுள்ளன. இத்தகைய சந்தேகங்கள், இயல் பாகவே, வெளிநாட்டு உதவி பற்றிய பல் வேறு கண்டனங்களுக்கும் இடமளித்துள் ளன. இக் கண்டனங்களை வலதுசாரி, இடது சாரி என்ற இருவகை அரசியற் சித்தாந் தங்களின் அடிப்படையிலும் நோக்கக் கூடியதாயுள்ளது. இருசாராரும் வேறு பட்ட காரணங்களுக்காக வெளிநாட்டு உதவியைக் கண்டித்து குறைவிருத்தி நாடு
களின் அபிவிருத்திக்கு இது அவசியமில்லை யென வாதிடுகின்றனர்.

வி. நித்தியானந்தம்
வலதுசாரி நிலையில் லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீற்றர் Guntuu tř (Peter Bauer) GT Gör Lurrri G6, Gif? " நாட்டு உதவியை வன்மையாகக் கண்டித் துள்ளார். இவருடைய கருத்தின்படி வெளி நாட்டு உதவி அபிவிருத்திக்கு அவசிய மானதொரு நிபந்தனையாக இருக்க முடி யாது. ஏனெனில், இன்றைய அபிவிருத்தி யடைந்த நாடுகள் அத்தகைய உதவியின் றியே வளர்ச்சியடைந்துள்ளன. மூலதனப் பற்ருக்குறைதான் அபிவிருத்திக்குத் தடை யாயுள்ளதாயின், அதனை வர்த்தக அடிப் படையிற் பெற்றுக்கொள்ளலாம். மேலும் இவருடைய கருத்துப்படி வெளிநாட்டு உதவி பாதகமான பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.
(i) இது மிகையான எதிர்பார்க்கைகளைக் கொண்ட திட்டமிடலுக்கு வழி வகுக் கின்றது. இதன் மூலம் அதிகாரமும் கூடியளவு மத்திமப்படுத்தப்பட ஏது வாகின்றது.
(ii) அரசாங்கங்கள் பணவீக்கத்தன்மையு டைய நாணய, இறைக்கொள்கைகளைக் கையாண்டு அந்நியச் செலாவணி ஒதுக்குகளை விரயம் செய்யும்படி தூண்டு கிறது.
(ii) அபிவிருத்தியானது பொருத்த மற்ற வெளிநாட்டு மாதிரிகளுக்குச் சார்பு டையதாகிப் பொருளாதார அபிவி ருத்தியை ஊக்குவிப்பதற்குப் பதிலா கத் தடைப்படுத்துகின்றது. ஆகவே ஏற்கெனவே நாம் பல தடவை சுட்டிக் காட்டிய சில குறைபாடுகளின் அடிப் படையிலேயே வலதுசாரிக்கொள்கை யுடையோர் வெளிநாட்டு உதவியைக் கண்டிக்கின்றன. ரெனலாம்.
இடதுசாரிக் கொள்கை யு  ைட ய G35 GTF sar G3 aprif (Teresa Hayter) GT Gör Lurr ருடைய கருத்துப்படி வெளிநாட்டு உதவி என்பது ஏகாதிபத்தியவாதமர்கும். இவரு டைய முடிவுகள் லத்தீன் அமெரிக்காவில்
18 -

Page 43
வெளிநாட்டு உதவியின்.
உலகவங்கியின் செயற்பாடுகளை ஆதார மாகக் கொண்டு அமைந்தவையாகும். மூன் 3வது மண்டல நாடுகளில் முதலாளித்துவ முறையை உறுதியடையச் செய்வதற் கன்றி வேருென்றுக்கும் வெளிநாட்டு உதவி பயன் படுவதில்லை. இதனுல் மூன்ருவது மண்டல தாடுகளுக்கு ஏதேனும் நன்மை ஏற்படு கிறதாயினும் அது எதிர்க்கணியமானதே பாகும். எவ்வாறயினும் முதலாளித்து வத்தைப் பரப்புவதற்கு வெளிநாட்டு உதவி தகுந்ததொரு கருவியல்லாவென்ப தால், சமீப காலத்தில் இதன் அளவும் குறைந்து கொண்டு செல்கிறதென இவர் கருதுகிருர், அது மட்டுமன்றி கிடைக்கின்ற உதவிகூடக், குறைவிருத்தி நாட்டின் வளங்கள் மேன்மேலும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கே வழி வகுக்கும். இவை வட்டிகளின் வடிவிலும், லாபங்களின் வடி விலும் நாட்டைவிட்டுச் செல்கின்றன. இதேபோன்று லத்தின் அமெரிக்காவைப் பற்றி எழுதும் கீத் கிரிபின் (Keith Griffin) என்ற ஆசிரியர் ஹேரர் கண்டித்த அதே பளவு வன்மையாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டு உதவி மூலம் நன்மை இல்லை யென்பதைச் சுட்டிக்காட்டுகின்ருர், இவ ருடைய முடிவின்படி வெளிநாட்டு உதவி பொருளாதார அபிவிருத்தியை வேகப் படுத்துகிறதென்ற வழமையான கருத் துக்கு எதுவித ஆதாரமும் இல்லை. ஆனல் அதே நேரம் கூடிய மூலதன - வெளியீட்டு விகிதத்தால் குறைவிருத்தி நாட்டுக்குத் தீமை ஏற்படலாமென அவர் குறிப்பிடு ecirapti.
வலதுசாரி, இடதுசாரி ஆகிய இரு புறங்களிலிருந்தும் வெளிநாட்டு உதவிக்கு ஏற்படும் எதிர்ப்புக்களின் தாற்பரியம் தெளிவானது. வலதுசாரியினர், வெளி நாட்டு உதவியின் றிச் சந்தைச் சக்திகள் மூலம் அபிவிருத்தியேற்படும்படி விடப்பட வேண்டுமென்கின்றனர். இவ்வாறு கூறுமி டத்துச் சந்தையின் நிறைவற்ற அம்சங்களை பும், சந்தைச் சமமின்மையின் அடிப்படை யிலெழும் பங்கீட்டு விளைவுகளையும் இவர்

வி. நித்தியானந்தம்
கள் கருத்திலெடுப்பதில்லை. ஆனல் இடது சாரியினர் இவற்றை வலியுறுத்தின் குறை விருத்தி நாட்டின் அரசாங்கங்கள் பொரு ளாதார விடயங்களில் நேரடியாகத் தலை யிட வேண்டுமென வாதிடுவர். ஆணுல் வெளிநாட்டு உதவி அவசியமில்லையென்ப தற்கு இவர்கள் இரு சாராரும் கூறும் காரணங்கள் பெரிதும் பொதுவானவையே யாகும் எவ்வாருயினும், வெளிநாட்டு உதவி பொருளாதார அபிவிருத்தி பற்றிய சில தீர்மானங்களைச் சுலபப்படுத்துவதற்கு, அதாவது பொருளாதார அபிவிருத்திக்கு ஒரு வகைக்குறுக்கு வழியாகப் பயன்பட் டிருக்கிறதென்பதையும், குறைவிருத்தி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை விட வழங்கிய நாட்டின் நலனே பலசந் தர்ப்புங்களிற் கூடுதலாக வலியுறுத்தப் பட்டிருக்கிறதென்பிதையும் மறுக்கமுடி uLung/ .
— V —
இவ்வாருக வெளிநாட்டு உதவி பல வகைகளிற் கண்டனங்களுக்குட்ட போதி லும், வெளிநாட்டு உதவி குறைவிருத்தி நாடுகளுக்குத் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்மென்பதிற் பல அபிவிருத்திப் பொருளியலாளரும் இணக்கம் தெரிவித் துள்ளனர். இவ்வாறு அவர்கள் கருதுவதற் குக் குறிப்பாக இரு காரணங்கள் தெரிவிக் கப்படுகின்றன.
(i) உள்நாட்டில் நலன்புரி கொள்கை களைக் கடைப்பிடிக்கும் அபிவிருத்தி யடைந்த நாடுகளின் அரசாங்கங்கள், அத னைச் சர்வதேச ரீதியிலும் செயற்படுத்த வேண்டும். வெளிநாட்டு உதவித் திட்டங் களில் அவை பங்கு கொள்ளாதவிடத்து வெளிநாட்டுக் கொள்கைகளே வேறுபட்ட தகுதித் தீர்மானங்களின் அடிப்படையில் அவை செயற்படுத்துவதாகக் குற்றம் சாட் படப்படுகின்றன. வறுமை, சமமின்மை என் பன உள்நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டுமென அபிவிருத்தியடைந்த நாடு
9 -

Page 44
வெளிநாட்டு உதவியின்.
கள் கருதுமாயின், சர்வதேச அரங்கில் அவற்றை இல்லாமற் செய்வதற்கும் இந் நாடுகள் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும்.
(ii) சர்வதேசரீதியில் நாடுகளிடையே இத்தகைய சமமின்மையும் வறுமையும் ஏற்படுவதற்கு இன்றைய அபிவிருத்திய டைத்ந நாடுகளே பெரிதும் பொறுப்பாயி ருந்துள்ளன. காலனித்துவ ஏகாதிபத்திய வாதம் குறைவிருத்திநாடுகளின் வளங்களைச் சுரண்டியது மாத்திரமன்றித் தனக்குச் சாதகமான வகையிலேயே இந் நாடுகளின் பொருளாதாரங்களை வழிநடத்திச் சென் றுள்ளது. ஏகாதிபத்தியவாதம் இல்லாத நிலையில் இன்றைய குறைவிருத்தி நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளாயிருக்கு மென்பது நிச்சயமற்றதாயினும், அவை பொருளாதார அபிவிருத்தியின்மையிலி ருந்து ‘விடுபடு’ காலப்பகுதியொன்றை நோக்கிச் செல்வதை ஏகாதிபத்தியவாதம் பல வகைகளிற் தடுத்து வைத்துதென்பது மட்டும் உண்மையாகும் இவ் வகையில், காலனித்துவ ஏகாதிபத்தியவாதம் குறை விருத்தி நாடுகளின் அபிவிருத்தியின்மைக் குப் பொறுப்பாயிருந்திருக்கின்றது. இதன் மூலம் அபிவிருத்தியடைந்த நாடுகள் அபி விருத்தியடைந்து கொண்டிருக்கக் குறை விருத்தி நாடுகள் பின்தங்கி விட்டதால், இருசாராருக்குமிடையிலான சமமின்மை மேன்மேலும் வளர்ந்து செல்லலாயிற்று. ஆகவே அபிவிருத்தியடைந்த நாடுகள் பொறுப்பாயிருந்த குறைவிருத்தி நிலை மைக்கு அந் நாடுகளே நிவாரணம் வழங்க வேண்டுமென்ற குறைவிருத்தி நாடுகளின் கோரிக்கை நியாயமானதொன்றேயென
ey | D,
ஆனல் இதனைவிட முக்கியமான தென்னவெனில் அபிவிருத்தியடைந்த நாடு கள் கூடவெளிநாட்டு உதவியின்றிப் பொரு ளாதார அபிவிருத்தியை அடையவில்லை யென்பதேயாகும். இது கிடைத்த வடிவம் தான் வேறுபட்டதாயிருந்தது. உலகப்

வி. நித்தியானந்தம்
பொருளாதார அபிவிருத்தியின் ஆரம்பக் கட்டங்களில் வளர்ச்சியடைந்தன என்ற காரணத்தினல் அவை வளங்கள் நிறைந்த ஏனைய நாடுகளைக் காலனித்துவ ஏகாதிபத் தியவாதத்தின் மூலம்ோ அல்லது தமக்குச் சார்பான வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலமோ சுரண்டிக் கொண்டன. இது மட்டுமன்றிக் குறைவிருத்தி நாடுகளின் பயிற்சி பெருத ஊ பூழிய த்  ைத யும் அபிவிருத்தியடைந்த நாடுகள் ஏராள LD nr 354 பயன்படுத்திக் கொண்டன. அடிமை முறை இதற்குரிய ஒரு சிறந்த உதாரணமாகும். ஆனல் குறைவிருத்தி நாடுகள் அபிவிருத்தியடையத் தொடங் கிய போது இந்த வாய்ப்புகள் எதுவுமே யிருக்கவில்லை. தமக்கு வேண்டிய வளங் களைப் பெறு வ த ற் கு க் காலனித்துவ வாதத்தை அவை ஒரு கருவியாகப் பயன் படுத்த முடியவில்லை. வெளிநாட்டு வர்த் தகத்திற் பங்கு பற்றுவதற்கெதிராகப் பல தடைகளையும் அவை எதிர்நோக்க வேண்டி யிருந்தன. இந் நிலையில், முன்பு அபி விருத்தியடைந்த நாடுகள் காலனித்துவத் தின் மூலமும், வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலமும் பெற்றுக் கொண்டவற்றை இன்று குறைவிருத்தி நாடுகள் வெளிநாட்டு உத வியை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்க வேண்டியேற்பட்டுள்ளது. ஆகவே, இவ் வகையிற் பார்க்குமிடத்துப், பல நெருக் கடிகளின் மத்தியில் சிறிய அளவிற் கிடைக் கும் வெளிநாட்டு உதவியைக் கொண்டு குறைவிருத்தி நாடுகள் பாராட்டத்தக்க வகையில் அபிவிருத்தியடைந்திருப்பதாகக் கூறலாம்.
குறைவிருத்தி நாடுகளின் அபிவிருத் திக்கு வெளிநாட்டு உதவி அவசியம் என்ற அடிப்படையிற் குறைவிருத்தி நாடுகள் ஒன்று திரண்டு வெளிநாட்டு வளங்களின் மொத்தப் பாய்ச்சலை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் முயற்சியும் குறிப்பிடத்தக்க தொன்றகும். 1964ம் ஆண்டு வர்த்தகம் அபிவிருத்தி என்பவை பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது மகாநாடு,
20 -

Page 45
வெளிநாட்டு உதவியின்.
அபிவிருத்தியடைந்த நாடுகள் as Digil தேசிய வருமானத்தின் ஒரு சத வீதத்தைக் குறை விருத்தி நாடுகளுக்கு வருடாந்தம் உதவியாக வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டது. இதே கோரிக்கை 1968ம் ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது மகா நாட்டிலும் வலியுறுத்தப்பட்டது. சர்வ தேச அபிவிருத்தி பற்றி ஆராய்ந்த பியர் சன் கமிஷனும் இதனையே எடுத்துக் கூறி யது. செல்வந்த நாடுகள் தமது தேசிய வருமானத்தின் குறைந்தது ஒரு சதவீதத் தையாவது குறைவிருத்தி நாடுகளுக்கு உத வியாக வழங்கும் இந்த இலக்கு 1975ம் ஆண்டுக்குப் பிந்தாமல் அடையப்பட வேண்டும்மெனக் கமிஷனின் அறிக்கை எடுத்துக் கூறியது. உத்தியோக ரீதியிற் கிடைக்கும் உதவி, மொத்த வெளிநாட்டு உதவியின் 70 சத வீதமாக, அதாவது மொத்தத் தேசிய உற்பத்தியின் 0.7 சத வீதமாக இருக்க வேண்டுமெனக் கூறப் பட்டது. எனினும் இந்த இலக்கை 1975ம் ஆண்டு அடைந்ததற்கான சாத்தியக் கூறு கள் எதுவும் இல்லையென்றே கூறவேண்டும். உதாரணமாக உலகின் பெரும் ஏகாதிபத் திய வல்லரசாயிருந்த பிரித்தானியாவின்
6p :
மென்மையும் அழகும் வாய்ந்த தினர் தமிழ் நாட்டுக் கவிஞர். இத பெண்ணுக்கு அமைவதாயிற்று. பூவி பெண்ணுக்கும் பேதை, பெதும்பை, களைப் புலவர்கள் வகுத்தனர். இல்வா அவ்வாழ்க்கையில் தலைப்படும்போது பம் பயக்கின்றது. ஆதலால் கல்யான என்று கூறுவோராயினர். எனவே பூவி கும் உள்ள ஒற்றுமையாலேயே ‘ம6
குறிப்பதாயிற்று.

வி. நித்தியானந்தம்
உதவி 1973 - 74ம் ஆண்டிற் கூட பிரித் தானியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி யின் 0.43 சதவீதமாகவே இருந்தது. 1968ம் ஆண்டிலிருந்து, ஏறக்குறைய 1973 ம் ஆண்டு வரை, அபிவிருத்தியடைந்த நாடு களின் மொத்தத் தேசிய உற்பத்தியின் 0.77 சத வீதம் வரை தான் அபிவிருத்தியடை யும் நாடுகளுக்குச் சென்றுள்ளது. இதிலும் உத்தியோக ரீதியிற் பெறப்பட்டது 0.39 சத வீதமேயாகும். பியர் சன் கமிஷனின் இலக்குகள் வளங்களின் பா ய் ச் ச லி ற் பெரும் வேகத்தை எதிர்பார்க்கின்றன. கமிஷன் குறிப் பி ட் ட இலக்கு 1975ம் ஆண்டு அடையப்பட்டிருக்க வேண்டு மாயின் உத்தியோக ரீதியான வளங்களின் பாய்ச்சல் மாத்திரம் வருடா வருடம் 14.1 சத வீத வேகத்தில் இருந்திருக்க வேண்டும். 1968ம் ஆண்டு பாய்ச்சலின் வேகம் 1.9 சத வீதமாக மாத்திரம் இருந்ததென்பது,பியர் சன் கமிசனின் மிதமான இலக்குகள் கூட நடைமுறைக்கு எவ்வளவு அப்பாற்பட்ட தென்பதை எடுத்துக் காட்டுகின்றது. ஆகவே வெளிநாட்டு உதவியின் அளவு மேலும் விரிவடைய வேண்டிய்து அவசிய
மாகும்.
636) laicist D
; பூவிற்கு நிகராகப் பெண்களைக் கரு ஞலேயே 'பூவை’ என்னும் பெயர் பிற்குப் பல பருவங்களை வகுத்தவாறு
மங்கை, மடந்தை முதலிய பருவங் ழ்க்கையே பெண்களுக்கு நல்வாழ்க்கை பெண்மை மணக்கின்றது; சிறந்த இன் ணம் என்னும் மங்கலத்தை ‘‘மணம்’ பின் தன்மைக்கும் பெண்ணின் நீர்மைக் ணம்’ என்ற சொல் கல்யாணத்தை
- ரா. பி. சேதுப்பிள்ளை

Page 46
‘Uits the Bes
(
M/s. K. G.
545, Sri Sanga COLOM
3ňanufacturers °of:
Corrugated. Boa Corrugated Cari Box Board Ca Pilot Ball Poi
Pilot Fountain Kayjee Fountain
and Litho Printers.

t Comptiments
f
i
YA
B
ndustrieS
raja Mawatha,
BO)- (0,
Tel: 21668 and 2 1 669
rds,
COS,
ritoms,
nt Pens,
Pens, Pens

Page 47
இலங்கையில் பணவீக்க
용, பொருள பகுதி(
இன்று பணவீக்கம் என்பது முதலா ளித்துவ பொருளாதாரங்களின் இயல்பான தன்மைகளில் ஒன்று என்ற கருத்து மாறி, அது சமூக உடமை நாடுகளையும் பாதிக்கக் கூடியது என்ற உண்மை உணரப்பட்டுவிட் டது. ஆளுலும் முதலாளித்துவ நாடுகளு டன் ஒப்பிடும்போது சமூக உடமை நாடு களிற் பணவீக்கத்தின் தாக்க விகிதம் குறைவானதாகும், கிழக்கு ஐரோப்பிய பொருளாதாரக் குழுவில் அங்கத்துவம் வகிக்காத யூகோஸ்லேவியாவில் மட்டுமே மேற்கத்தேய முறையில் அமைந்த பண வீக்கம் காணப்படுகின்றது. இங்கு பண வீக்க அதிகரிப்பானது ஏறக்குறைய 20 சதவீதமாகக் காணப்படுகின்றது. எப்போ தும் பணவீக்கமானது ஒரு நாட்டிலுள்ள அரசியல்வாதிகள், நிர்வாகிகள், முதலாளி கள், தொழிலாளர்கள், சாதாரண மக்கள் போன்ற எல்லா வகுப்பினரையும் நேரடி யாகப் பாதிக்கக்கூடியதொன்ருகும். ஆன லும் குறைந்த வருமான வகுப்பினரையே இது தீவிரமாகப் பாதிக்கும் தன்மை வாய்ந்ததாகும்.
உலக நாடுகளின் இன்றைய பணவீக்க நெருக்கடிகளுக்கு பணநிரம்பலில் ஏற்பட்ட அதிகரிப்பு, உலக ரீதியாக ஏற்பட்டுள்ள உணவுப் பற்ருக்குறை, பெற்ருேலிய பொருட்களின் விலை அதிகரிப்பினல் ஏற் பட்டுள்ள மறைமுகமான தாக்கம் ஆகி யனவே காரணம் எனக் கூறப்படுகின்றது. ஆனல் இவை யாவும் உண்மை நிலையான பொருளாதார சமூக அரசியல் அமைப்
- 2

நெருக்கடிகள்
1. ஜெயரத்தினராசா B. A. (Hons) யற்றுறை விரிவுரையாளர் - கொழும்பு வளாகம் நர விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்,
புக்கள் ஆகியவற்றின் அமைப்பு ரீதியான குறைபாடுகளை மறைப்பதாகவோ அன்றித் தவிர்ப்பதாகவோ மட்டுமே காணப்படு கின்றன. இலங்கையின் பணவீக்க நெருக் கடிகளை பணநிரம்பல், உணவுப் பற்ருக் குறை, பெற்ருேலிய விலை அதிகரிப்பு என்ற அடிப்படையில் மட்டும் அணுகுவது பூர னத்துவம் வாய்ந்த ஆய்வாக அமைய மாட்டாது. மேலும் எமது பொருளாதார அமைப்பின் குறைபாடுகள், அதில் அண் மைக் காலத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங் கள் போன்றவற்றினையும் இணைத்து ஆராய் வதே பொருத்தமும் பயனும் நிறைந்த ஒன்ருகும்.
பண வீக்கம் - ஒரு விளக்கம்
பணவீக்கம் என்னும்போது பொது வாகப் பொருட்கள் சேவைகளின் பொது விலைமட்டத்தில் ஏற்படுகின்ற தொடர்ச்சி யான அதிகரிப்பினையே குறித்து நிற்கின் றது. விலையேற்றத்தினைப் பணவீக்கத்தின் வெளிப்படையான குறியீடாக மட்டுமே கருத முடியும். ஏனென்ருல் கடுமையான விலைக் கட்டுப்பாட்டு முறை, பங்கீட்டுமுறை ஆகியன மூலம் விலையேற்றமானது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையிற் கூடப் பொருளாதாரத்திற் பண வீக்கமானது இருக்கமுடியும். சமூகவுடமை நாடுகள் இத் தகைய அமுக்கப்பட்ட பணவீக்கத்தினையே இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றன. குறைந்த பொருட்களைக் கூடிய பணம் விட்டுத் துரத்தும் நிலையினை இது குறிக் கின்றது. சோவியத் யூனியன் 1960லிருந்து

Page 48
இலங்கையில் பணவீக்க.
1972ஆம் ஆண்டுவரை உள்ள காலப்பகுதி யில் மெய்க்கூலியினை ஜ் பங்கால் அதிகரித் துள்ளதாகக் கூறுகின்றது. ஆனல் அதே நேரத்தில் 1966ஆம் ஆண்டிற்கும் 1970 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மக்களின் சேமிப்பு மூன்று மடங் காக அதிகரித்ததுடன், மேலும் 1973ஆம் ஆண்டுக்கிடையில் இது 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதற்கு கவர்ச்சிகரமான நுகர்வுப்பொருட்களின் பற்ருக்குறையினல் மக்களின் பெருமளவு வருமானம் சேமிப் பாக மாற்றப்பட்டமையே காரணமாகும். அதாவது பொருட்கள் சேவைகளினது மொத்தக் கேள்வி அதிகரிப்பிற்கேற்ப மொத்த நிரம்பலானது அதிகரிக்காத நிலையினையே இது குறித்து நிற்கின்றது. இந்நிலையினைச் சுருங்கக்கூறின் பணமானது தனது கொள்வனவுச் சக்தியினே இழந்து செல்கின்றது எனலாம். இதனுற்ருன் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல் கின்ற சூழ்நிலையிற்கூட, அவற்றின் கேள் வியும் கூடிச்செல்லும் முரண்பட்ட பொரு ளாதார நடவடிக்கையினை வீக்க காலங் களில் அவதானிக்க முடிகின்றது.
பணவீக்கத்தின் தோற்றத்தினை அடிப் படையாகக்கொண்டு கேள்வித்தூண்டல் வீக்கம், செலவுத்தூண்டல் வீக்கம், துறை சார் வீக்கம் என மூன்று வகையாக வகைப்படுத்த முடியும். கேள்வித்தூண்டல் வீக்கம் எனும்போது பொருளாதாரமா னது நிறைதொழில் மட்டத்திலிருக்கின்ற நிலையில் மொத்தக் கேள்வியில் அதிகரிப் பேற்படும்போது உற்பத்தியில் அதிகரிப் பேற்படாத காரணத்தினல் விலைமட்டத் திலேற்படுகின்ற அதிகரிப்பினையே இது குறிக்கின்றது. இலங்கை போன்ற அபி விருத்தியடைந்து வரும் நாடுகளில் குறை தொழில் மட்டமே காணப்படுகின்றது. ஆனலும் முதற் தட்டுப்பாடு, தொழில் நுட்ப வளர்ச்சியின்மை, முயற்சியாளர் பற்ருக்குறை, போதிய வெளிநாட்டுச் செலாவணியின்மை ஆகியன குறுங்காலத் தில் உற்பத்தியினை அதிகரிக்க முடியாத
- 24

ஆர். ஜெயரத்தினராசா
நிறைதொழில் மட்டத் தன்மையினை ஏற் படுத்திவிடுகின்றது. இந்நிலையிற் பணநிரம் பல்; முதலீடு ஆகியவற்றின் அதிகரிப்பு வர்த்தக செழிப்பு போன்ற காரணிகளால் மக்களின் வருமானத்தில் அதிகரிப்பேற் பட்டு மொத்தக்கேள்வி கூடும்போது வீக்க நிலையானது உருவாகின்றது. இக்கேள்வித் தூண்டல் வீக்கமானது வீக்கத்தின் தோற் றத்தினை நுகர்வோர் பக்கமாக விளக்கும் ஓர் கோட்பாடாகும்.
செலவுத்தூண்டல் வீக்கமானது வீக்கத் தின் தோற்றத்தினை நிரம்பற் பக்கமாக விளக்கும் கோட்பாடாகும். கேள்வித்துரண் டல் வீக்கம் என்பதுடன் தொடர்பற்ற முறையில் உற்பத்திச் செலவில் ஏற்படும் அதிகரிப்புக் காரணமாக விலை மட்ட மானது கூடிச் செல்வதினையே செலவுத் தூண்டல் வீக்கம் என வரையறை செய்யப் படுகின்றது. இவ் உற்பத்திச் செலவு அதி கரிப்பிற்கு மூலப்பொருட்களின் விலையேற் றம், கூலி உயர்வு, வரிக்கொள்கை ஆகி யன காரணமாக இருக்கலாம். செலவுத் தூண்டல் வீக்கக் கோட்பாட்டாளர்கள் தொழிற்சங்கங்களின் கூலி உ ய ர் வு க் கோரிக்கையே இதற்கு முக்கிய காரணம் என வற்புறுத்துகின்ருர் கள். ஏனெனில் இரண்டாவது உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து அமெரிக்கா போன்ற நாடு களில் ஏற்பட்ட தொழிற்சங்க இயக்க வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட கூலி உயர்வுக் கோரிக்கைகளின் வெற்றியும், அது தொடர்பாக ஏற்பட்ட விலையேற்ற மும் இதற்கு ஆதாரமாக அமைந்திருந் தது.
நெடுங்காலமாக வீக்கத்தின் தோற் றத்தினை கேள்வியின் தூண்டல், செலவின் உந்தல் என்ற அடிப்படையிலுமே விளக் கப்பட்டு வரப்பட்டது. ஆனுல் துறைசார் வீக்கம் பற்றிய விளக்கமானது அண்மைக் கால விளக்கமாகும். நாட்டின் மொத்தக் கேள்வியினது மாற்றமற்ற நிலையில் ஒரு
4 -

Page 49
இலங்கையில் பணவீக்க.
துறையின் கேள்வி குறைந்து மற்றத் துறை யிற் கேள்வி அதிகரிப்பதனுற் குறிப்பிட்ட துறையில் மிகைக் கேள்வியானது ஏற்படு கின்றது. இக்குறிப்பிட்ட துறையில் ஏற்ப டுகின்ற மிகைக் கேள்வியே பண வீக்கத் திற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது என்பது இக்கோட்பாட்டாளர் களது வாத மாகும். சமீப காலத்திற் பல நாடுகளின் பணவீக்க அனுபவத்தினை அவதானிக்கும் போது பொருளாதாரத்தின் ஒரு துறை யில் பண வீக்கமானது கூடிய தாக்கம் நிறைந்ததாகக் காணப்படுவதே இத்த கைய ஒரு கோட்பாட்டிற்கு ஆதாரமாக அமைந்திருந்தது.
ஒரு பொருளாதாரத்தில் வீக்கமானது கேள்வித் தூண்டல் வழியாகவோ அன் றிச் செலவுத் தூண்டல் வழியாகவோ அல்லது துறைசார் வீக்கமாகவோ ஏற்பட முடியும். ஆனல் வீக்கமானது தொடர்ந்து திரண்ட முறையாக செயற்படுவதற்கு இவையாவும் இணைந்து செயற்படுதல் அவ சியமாகும். ஆனலும் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஏற்படுகின்ற வீக்கத்தில் இந்த மூன்றில் ஏதோ ஒன்று சக்தி வாய்ந் ததாக அமைந்திருக்கும். எனவேதான் பணவீக்கம் பற்றிய ஆய்வினில் இம் மூன்று காரணிகளையும் சேர்த்து ஆராய்வதே உண்மை நிலையினே அணுகுவதற்கு சிறந்த தொரு ஆய்வாக அமைந்திருக்கும்.
இலங்கையிற் பணவீக்கத்தின் போக்கு
பணவீக்கத்தின் போக்கு பொதுவாக விலைச் சுட்டெண்கள் மூலமே அளவிடப் படுகின்றன். இலங்கையிற் பண வீக்கத் தின் போக்கிணைச் சரியான முறையில் அள விடவும், விளக்கவும் போதிய விலைச் சுட் டெண்கள் இன்மையிஞல் அதன் போக்கி இனச் சிறந்த முறையில் விளக்குவது கடின மாகக் காணப்படுகின்றது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மட்டுமே ஒரேயொரு அளவுகோலாக இலங்கையிற் பயன்படுத்தப்படுகின்றது. இச் சுட்டெண் ணுனது கட்டுப்பாட்டு விலைகளையும், பங்
- 2

ஆர். ஜெயரத்தினராசா
கீட்டுப் பொருட்களின் விலையையும் பெரு மளவு அடிப்படையாகக் கொண்டு கணிக் கப்படுவதல்ை உண்மையான விலையேற்றப் போக்கினைவிட இது குறைவான விலையேற் றத்தினையே பிரதிபலிப்பதாக அமைந்தி ருக்கும். ஆளுலும் விலையேற்றப் போக்கின் மிகக் குறைந்த எல்லையாக மட்டுமே இச் சுட்டெண்ணைக் கருதிப் பணவீக்கப் போக்
கினை ஆராய்தல் பொருத்தமானதாகும்.
1959 ஆம் ஆண்டிலிருந்து 1974 ஆம் ஆண்டுவரையுள்ள காலப்பகுதியிற் பண வீக்கத்தின் போக்கினை இரு காலப் பிரிவு களாகப் பிரித்து ஆராய முடியும். இதில் 1959 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 1967ஆம் ஆண்டுவரை பணவீக்கப் போக் கிற்கும் பண நிரம்பலுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதன அவதா னிக்க முடிகின்றது. இக்காலப் பகுதியில் 1960ஆம் ஆண்டு மட்டும் தேசிய வருமான அதிகரிப்பினைவிட பணநிரம்பல் அதிகரிப் பானது குறைவானதாக ஏற்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணும் 105.2 வீதத்திலிருந்து 103.5 சத வீதமாக வீழ்ச்சியடைந்துள் ளது. ஆனல் 1961லிருந்து 1967 வரை தேசிய வருமான அதிகரிப்பினை விட பண நிரம்பல் அதிகரிப்பானது கூடியதாக அமைந்திருக்கின்றது. கேள்விப் பக்கத்தில் ஏற்பட்ட பண ரீதியான அதிகரிப்பினை விட நிரம்பற் பக்கத்தில் ஏற்பட்ட மெய் ரீதியான உற்பத்திப் பெருக்கமானது குறை வாக இருந்தமையே இக்காலத்தில் விலை யேற்றத்திற்கு முக்கிய காரணமாகவுள் ளது. இதனைச் சுருக்கமாகக் கூறுவதானுல் இக்காலப் பகுதியில் பணவீக்கமானது கேள் வித் தூண்டல் வழியாகவே ஏற்பட்டதெ னலாம். மேலும் இக்காலப் பகுதியில் விலையேற்றமானது மிகக் குறைந்த வேகத் திலேயே ஏற்பட்டுள்ளது. 1959ஆம் ஆண்டு 105.2 சதவீதமாக இருந்த வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் 1967ல் 114.8 சதவீத
மாக மட்டுமே அதிகரித்துள்ளது.
-سس- 5

Page 50
இலங்கையில் பணவீக்க.
அட்ட இலங்கையிற் பணநிரம்பல், தேசிய வருமான
தேசிய வருமானச் காலம் சுட்டெண் (100 تا 1959|
1959 1 00
960 106.7 961 1 07.1 1962 I 103 1963 I I 5.3 1964 123.7
五 965 1270
1966 130.6 967 1 4 0.2
1968 67.6 969 182.0 1970 1 96 - 2 971 200.0 1972 2 1 5. 0 1973 257.2 1974 3.34.2
elpedo:
1968 ஆம் ஆண்டிலிருந்து 1975 ஆம் ஆண்டுவரை பண நிரம்பலில் ஏற்பட்ட அதிகரிப்பினைவிட, தேசிய வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்புக் கூடியதாகும். 1968 இல் 167.6 சதவீதமாக இருந்த தேசிய வருமானச் சுட்டெண் 1974 இல் 334, 2 சதவீதமாக மாற்றமடைந்துள்ளது. ஆனல் இதே காலப்பகுதியில் பண நிரம்பலானது 162.5 சதவீதத்திலிருந்து 250.1 சதவீத ம்ாக மட்டுமே அதிகரித்துள்ளது. எனவே இக்காலப் பகுதியில் தேசிய வருமான அதி கசீப்புடன் ஒப்பிடும்போது பணநிரம்பல் கூடியளவு அதிகரித்துள்ளது எனக் கூறமு டியாது. இதனுல் இக்காலப் பகுதியில் பண வீக்கத்தின் வேகமானது மிகக் குறைந்த நிலையிலேயே காணப்படவேண்டும். ஆனல்
- 2

ஆர். ஜெயரத்தினராசா
1&07 1
வளர்ச்சி ஆகியவற்றின் போக்கு 1954-1974
ser வாழ்க்கைச் நிரம்பல் செலவு சுட்டெண் சுட்டெண் 1959-100 1952 OO
I 00 I 05, 2 102.6 103.5 09.4 104.8 I 140 1 06 3 1279 108.8 377 I 1.2.2 45.7 112.5 1 4 0.8 12.3 53.5 114.8 625 12 l. 5 159.9 13 0.5 1670 1. 38.2 1820 41.9 20.7 150.8 235。& I 55.4 250. I 185.8
இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்.
இக் காலப் பகுதியிற்தான் விலைமட்ட அதி கரிப்பானது மிகக் கூடியதாகக் காணப்ப டுகின்றது. 1967இல் 114.8 சதவீதமாக இருந்த வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் 1974இல் 185.8 சதவீதத்தினுல் உயர்வ டைந்திருக்கின்றது. தேசிய வருமான அதி கரிப்புடன் ஒப்பிடும்போது பண நிரம்ப லானது மிகக் குறைவாகவுள்ள காலப் பகு தியிற்தான் வீக்க நிலையானது மிக வேக மாக ஏற்பட்டுள்ளது எனலாம். எனவே இக்காலப்பகுதி வீக்க நிலையிலே பணநிரம் பலினை விட அமைப்பு ரீதியான காரணி களே கூடிய சக்தி வாய்ந்தனவாக செயற் பட்டிருக்கின்றன என்ற அம்சம் தெளிவா கின்றன.

Page 51
இலங்கையில் பணவீக்க.
அரசாங்கத்தின் குறைநிலை வரவுசெலவுத் திட்டக் கொள்கை
முதலாளித்துவு பொருளாதாரத்தினை மந்த காலப் பிணியிலிருந்து விடுவிப்பதற் கான பரிகாரமாக கெயின்சினல் சிபார்சு செய்யப்பட்ட குறைநிலை வரவு செலவுத் திட்டத்தினை இன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமது பொருளாதாரப் பிணிக்குப் பரி கா ரமா கப் பயன்படுத்த முயன்றமை பணவீக்க நிலைக்கே வழிவகுத் துள்ளது. ஏனெனில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ பொருளாதாரத் தின் அமைப்பும் அதன் பிரச்சனைகளும் அபிவி ருத்தியடைந்து வரும் நாட்டுப் பொருளா தாரங்களின் தன்மை, பிரச்சினை ஆகியவற் றிலிருந்து வேறுபட்டதாகும், இலங்கை யில் 1956லிருந்து குறைநிலுை வரவுசெல ஷத்திட்டமானது தொடர்ச்சியாக அமு லாக்கப்பட்டுள்ளன. ஒரு குறைநிலை வரவு செலவுத் திட்டமானது எவ்வளவு தூரம் பண வீக்கத்தினை ஏற்படுத்தக்கூடியன என் பதனை, குறைநிலையின் அளவு, குறைநிதி பீட்டம் செய்யப்பட்ட முறை, அரசாங்கச் செலவின் தன்மை, அரசாங்க வருமானம் பெறப்பட்டுள்ள முறை ஆகிய நான்கு காரணிகளில் நிர்ணயம் செய்யப்படுவன வாக அமைந்திருக்கும்,
அட்டவ8
இலங்கை அரசாங்கத்தினது மொத்த வருமான வீடுகளும் மாற்றுக் கொடுப்பனவுக
T
மொத்த
வருமானம்
மில்லியன்
ரூபாக்களில்
1965-66 833.3
1966-67 1954.8
1967-68 2156.4
968-69 2497.3
969 - 70 2736.4 1970-71 2853 1971-72 4五02.0 97.3 4034。0
1974 4794.5
மூலம்: இ
- 27

ஆர். ஜெயரத்தினராசா
இலங்கை அரசாங்கத்தின் மொத்த வருமானத்தினை விட, மொத்தச் செலவி டானது 1956இலிருந்து ஒவ்வொரு வருட மும் படிப்படியாக அதிகரித்துச் செல்கின் றது. 1965-66ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானத்தின விடக் கூடிய செலவானது 566.5 மில்லியன் ரூபாவாக இருந்து 1974 ஆம் ஆண்டு 1,025.9 மில்லியன் ரூபா வாக அதிகரித்துச் சென்றுள்ளது, அர சாங்கமானது இக்காலப் பகுதியில் தனது குறைநிலையினை இரண்டு மடங்காக அதிக ரித்துச் சென்றுள்ளது. மேலும் இக்குறை நிலை முழுவதும் உள்நாட்டு வெளிநாட்டுக் கடன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருப் பின் பணவீக்கத்தின் தாக்கம் குறைவான தாக இருக்கும். ஆனல் இக்குறைநிலையின் ஒரு பகுதி நோட்டு வெளியீட்டின் மூலமே ஈட்டம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இலங்கை மத்திய வங்கியானது அரசாங் கத்தின் வங்கியாக அன்றி, அரசாங்க அச் சகமாகவே செயற்பட்டுள்ளது எனலாம். மேலதிக பண நிரம்பலுக்கேற்ப பொருளா தாரத்தில் உற்பத்திப் பெருக்கம் ஏற்படு வதற்கு பல்வேறு போத்தற் கழுத்துக்கள் தடையாக இருப்பதனுல் விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.
Oor II ாமும், மொத்தச் செலவீட்டில் சமூகச் செல ளும் கொண்டுள்ள பங்கும் 1965-74
vypsát மொத்தச் செலவீடுகளும் செலவிடுகள் மாற்றுக்
மில்லியன் கொடுப்பனவு ரூபாக்களில் asigis tio
சதவீதமாக
23.99.8 52.4 2561.3 51.0 2872. I 5.2. 6
32&4。9 51.7
36 72.0 50.8
3898.6 54.6 5396.8 49.8
50 14 . 9 54。& 5829.6 53.5
இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்.

Page 52
இலங்கையில் பணவீக்க.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பொருளாதாரத்தில் அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே வறுமையினை ஒழிக்க முடியும் என்பதிற் கூடியளவு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. மாருக உணவு மான்யம் போன்ற மாற் றுக் கொடுப்பனவுகளையும், சுகாதாரம், மருத்துவம், கல்வி, சமூக சேவைகள், வீட்டு வசதி போன்ற சமூகச் செலவீடுக ளையும் அதிகரிப்பதன் மூலமே வறுமையினை ஒழிக்க முனைந்துள்ளன. இதனல் வரவு செலவுத் திட்டத்தில் மிகக் கூடிய பங்கினை இச்செலவுகள் கொண்டிருந்தன. இலங்கை யில் குறைநிலை வரவு செலவுத் திட்டம் அமுலாக்கப்பட்டு வருவதற்கும் அதன் குறைநிலை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதற்கும் அரசாங்கங்களினல் சமூக செலவீடுகளையும் மாற்றுக் கொடுப்பனவு களையும் கட்டுப்படுத்த முடியாமையே கார ணமாகும். 1965-66ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் மொத்தச் செலவீட்டில் சமூகச் செலவீடுகளும் மாற்றுக் கொடுப்பனவுக ளும் 52.4 சதவீதமாக அமைந்திருந்தது. 1974 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில்கூட இச் செலவீடுகள் 53.5 சதவீதமாகக்
அட்டவ இலங்கை அரசாங்கத்தின் மொத்த வருமா
கொண்டு 1962 - 1974
காலம் மொத்த s வருமானம 1962-63 68.6 1963-64 7.5 1964-65 72.2 1965-66 71.9 1966-67 74. 1967-68 70. 6 1968-69 90.6 1969-70 9. 1 1970-71 83.2 1971-72 80. 4. 1973- 78.6 1974- 83.6
மூ6

ஆர். ஜெயரத்தினராசா
காணப்பட்டது. இதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் மொத்தச் செலவீடுகளா னது இரண்டு மடங்காக அதிகரித்தமைக்கு இச் செலவுகளே முக்கிய காரணமாகும். இச் சமூக செலவீடுகளும் மாற்றுக் கொடுப் பனவுகளும் மக்களின் பணவருமான அதி கரிப்பிற்கு மட்டுமே காரணமாக அமைந் திருக்கும். எனவே மக்களின் பண வரு மான அதிகரிப்பிற்கு ஏற்ப உற்பத்தி அதி கரிக் காத நிலையில் மிகைக் கேள்வியும் விலையேற்றமும் ஏற்படுதல் தவிர்க்க முடி யாததாகும். ஆனல் குறைநிலை வரவு செலவுத் திட்டத்தில் கூடிய முதலீட்டுச் செலவுகட்கு கூடிய பங்கு அளிக்கப்பட்டி ருக்குமேயானல் பணவீக்கத்தின் வேகம் குறைவானதாக அமைந்திருக்கமுடியும்.
இலங்கை அரசாங்கமானது தனது வருமானத்தினைப் பெற்றுக்கொண்டுள்ள முறையும் விலையேற்றத்தினை ஏற்படுத்திய முக்கிய காரணியாக அமைந்துள்ளது. அர சாங்கத்தின் மொத்த வருமானத்தில் வரி மூலம் பெறப்படும் வருமானம் மிகக்கூடிய பங்கினைக் கொண்டதாகவிருக்கின்றது. 1962-63 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வரி மூலம் பெற்ற வருமானம் மொத்த வருமானத்தில் 68.6 சதவீதமாகவும், 1974இல் 83.6 சதவீதமாகவும் காணப் படுகின்றது. *
&OOT III னத்தில் நேர்வரிகள், நேரில் வரிகள் ஆகியன
ள்ள பங்கு
(சதவீதமாக)
நேர் நேரில் வரிகள் வரிகள்
14.9 53.7 7.2 54.3 7.4 54.8 15.9 56.0 16.4 57.7 14.9 55.7 17.4 73.2 19.5 71.6 8.8 64.4 16.1 64.3 16.7 6.9 15.1 68.5
hyo:
இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை.
8 -

Page 53
இலங்கையில் பணவீக்க.
மேலும் அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் நேரில் வரிகள் மிகக்கூடிய பங்கினை வகிக்கின்றன. 1962 - 63 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மொத்த வரு மானத்தில் நேரில் வரிகள் கொண்டுள்ள பங்கு 53.7 சதவீதமாகவும், 1974இல் இதன் பங்கு 68.5 சதவீதமாகவும் அமைந் திருக்கின்றது. நேரில் வரிகள் முழுப் பகுதியோ அன்றி பெரும் பகுதியினையோ விலையேற்றத்தின் மூலம் நுகர்வோர் மீது சுமத்தக்கூடியதாகும். இலங்கையின் வரிக் கொள்கையானது கூடியளவிற்கு சமூக நீதிக்கு முக்கியம் கொடுக்கும் விருத்தி முறை வரிமுறை என வர்ணிக்கப்படுகின் றது. ஆனல் அரசாங்க வருமானத்தில் நேரில்வரி மூலம் பெறப்படும் வருமானம் எக்காலப் பகுதியிலும் ஏறக்குறைய 15 சதவீதமாகவே காணப்ப டு கி ன் ற து . பொருட் தட்டுப்பாடு, பங்கீட்டுப்பொருள் போதியதாக இன்மை, விலைக்கட்டுப்பாட் டினேச் சிறந்த முறையில் பரந்த அடிப் படையில் செயற்படுத்த முடியாத நிர்வாக பலவீனம் ஆகியன காணப்படும் ஒரு சூழ் நிலையில் நேரில்வரியின் சுமையினைக்கூட உற்பத்தியாளர்களாலும், விற்பனையாளர் களாலும் விலையேற்றத்தின்மூலம் நுகர் வோர்மீது சுமத்த முடியும். எனவேதான் இலங்கையின் வரிமுறைகூட செலவுத்தூண் டல் வழியாக பணவீக்கத்தினை ஏற்படுத் தும் இயக்குவிசையாகச் செயற்படுகின்றது.
கூலி உயர்வு
கூலி உயர்வே பணவீக்கத்திற்கான அடிப்படைக் காரணம் என்பதே செலவுத் தூண்டல் வீக்க கோட்பாட்டாளர்களது முக்கிய வாதமாகும். கூலி உயர்வானது ஒரு நாட்டினது தொழிற்சங்க இயக்க வளர்ச்சியுடன் தொடர்புபட்டதாகும். இலங்கையினைப் பொறுத்த மட்டில் ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது மேற்கத்தேய முறையில் அமைந்த வளர்ச்சியடைந்த தொழிற்சங்க இயக்கமானது காணப்படுகின்றது. இதனுல் தனியார் துறையினர் தொழிற்சங்க இயக் கங்களின் கூலி உயர்வினை முற்ருக நிரா கரிக்கமுடியாத நிலையில் காணப்படுகின்
امي

ஆர். ஜெயரத்தினராசா
es
றனர். மேலும் 1956லிருந்து அரசாங்கத் துறையின் வளர்ச்சி, உற்பத்தி, சேவை ஆகிய துறைகளில் வேகமாக வளர்ச்சி யடைந்தமையினுல் குறைந்தபட்சக் கூலிக் கொள்கையானது பரந்த அடிப்படையில் அமுலாக்கக்கூடியதாகவுள்ளது. இதனுற் முன் இலங்கையிலே சமீபகாலத்தில் மிக வேகமான முறையில் பணக்கூலி மட்டமா னது அதிகரித்துச் சென்றுள்ள தெனலாம். 1965ஆம் ஆண்டு 116, 3 ஆக இருந்த விவசாய ஊழியத்தின் குறைந்தபட்ச கூலிச் சுட்டெண் 1974ல் 210 சதவீதத்தால் அதி கரித்துள்ளது. இதே காலப்பகுதியில் கைத் தொழில் ஊழியத்திற்கான குறைந்தபட்சக் கூலிச் சுட்டெண் 132.8 லிருந்து 235.8 ஆகவும், எல்லா மத்திய அரசாங்க ஊழி யத்திற்கான குறைந்தபட்ச கூலிச் சுட் டெண் 126.7லிருந்து 202.8ஆல் அதிகரித் துள்ளது. ஏறக்குறைய பத்து வருடகாலப் பகுதியில் குறைந்தபட்ச கூலியானது எல் லாத் துறைகளிலும் ஏறக்குறைய 100 சத விதத்தால் அதிகரித்துள்ளது. எனவே பல் வேறு துறைகளிலும் மிக வேகமாக உற் பத்திச்செலவு அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக இது அமைந்துள்ளது.
பணக் கூலி அதிகரித்தது போன்று மெய்க் கூலியில் பெரும் அதிகரிப்பெதுவும் ஏற்படவில்லை. 1965ல் 103.4 ஆக இருந்த விவசாய ஊழியத்தின் மெய்க் கூலிச் சுட் டெண்ணுனது 1974ல் 113.0 சதவீதமாக வும் கைத்தொழில் ஊழியத்தின் மெய்க் கூலிச் சுட்டெண்ணுனது 118.0 வீதத்தி லிருந்து 126.9 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனல் எல்லா மத்திய அரசாங்கத்தின் மெய்க் கூலிச் சுட்டெண்ணு னது இக்காலப் பகுதியில் 112.6 சதவீதத்தி லிருந்து 109.2 சதவீதமாக வீழ்ச்சியடைந் துள்ளது. ஒரு பணவீக்கப் பொருளா தாரத்தில் பணக் கூலி உயர்வானது பொருட்களின் உற்பத்திச் செலவினைக் கூட்டி மேலும் விலையேற்றத்திற்கு வழி வகுப்பதாக இருக்குமேயொழிய மெய் வரு மானத்தினை அதிகரிப்பதற்கு வழி வகுப்ப தில்லை. கூலி உயர்வானது ஒரு புறம் செல வுத் தூண்டல் காரணியாக மட்டுமன்றி, மறுபுறம் மொத்தக் கேள்வியிலும் அதிகரிப் பினை ஏற்படுத்தி விலையேற்றத்தினைத் துரி தப்படுத்தும் சக்தி வாய்ந்ததாகும், அதா வது இக்கூலி உயர்வானது இரு வழியாக வும் பண வீக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது
எனலாம்.
29 -

Page 54
இலங்கையில் பணவீக்க.
6- ا-تا بویه
இலங்கையில் குறைந்தபட்ச கூலிச்சுட்டெண்ணு
1952:
விவசாய ஊழியம் கைத்தெ YLLLLLLL S S S S S S S குறைந்தபட்ச மெய்க்கூலிச் குறைந்தப கூலிச் சுட்டெண் கூலிச் சுட்டெண் சுட்டெ
1965 II 6.3 03.4 I 32.8
1966 116.2 I O3.5 I 33.2
1967 20.4 104.9 1. 38.9
1968 38.8 ll 4 3 I 61.6
969 388 1063 I 6 i. 7
1970 1 4 0.2 1 0 1.5 I 66.
1971 II 4 Il ... 6 99.8 176.1
972 I 48.5 98.4 18 1.4 973 168. I 101.5 99.7
1974 21 O. O. 13.0 235.8
monum
சர்வதேச சந்தையின் பாதகமான விலை
சர்வதேச வர்த்தகத்திற் தங்கியிருக் கும் நாடுகளின் பொருளாதாரத்தினை வர்த்தகச் சகட ஒட்டத் தாக்குதல் களி லிருந்து தவிர்த்துக் கொள்ளல் கடினமான தொன்ரு கும். மேலும் உணவுப் பொருள் இறக்குமதியில் ஒரு நாடு தங்கியிருக்குமே யானுல் விவசாயப் பொருட்களின் சிலந்தி வலைத் தட்டாந்த விலை விளைவு கூடிய தாக் குதல்களை ஏற்படுத்துவதாக அமைந்திருக் கும். இலங்கையின் மொத்த நுகர்விலும், முதலீட்டிலும் இறக்குமதிப் பொருட்கள் ஏறக்குறைய 24 சத வீதமாகவுள்ளது. எனவே அண்மைக் காலத்தில் சர்வதேச சந்
- 30

ஆர். ஜெயரத்தினராசா
85557 IV
ம் மெய்க்கூலிச் சுட்டெண்ணும் 1965 1974-۔سی۔سی۔
= 100
எல்லா மத்திய அரசாங்க நாழில் ஊழியம் ஊழியமும் ட்ச மெய்க்கூலிச் குறைந்தபட்ச மெய்க்கூலிச்
சுட்டெண் கூலிச் சுட்டெண் মৃত্যু சுட்டெண்
8.0 126.7 12.6
86 26 7 28
121.0 I 31.3 l 4.4
133. 1 52.6 25.7
23.9 57. - 2 Ο - 4 120.2 1713 星24。C)
24, 2 ፲ 7 } . 3 2 O 8
I 203 I 71 - 7 I 38
I 20.7 8 O. O88
I 269 2028 I 09.2
மூலம்: தொழிற் திணைக் களம், இலங்கை மத்திய வங்கி
தையில் உணவுப் பொருட்களின் மிகக் கூடிய விலையேற்றமானது உள் நாட்டிற் கூடிய விலையேற்றத்திற்கு முக்கிய காரண மாகும். இலங்கையினைப் பொறுத்த மட் டில் அதன் இறக்கும்தி விலச் சுட்டெண்ணு னது 1967இலிருந்து மிக வேகமான அதி கரிப்பினைக் கொண்டுள்ளது. 1967ல் 100 சத வீதமாக இருந்த இறக்குமதி விலைச் சுட்டெண் 1972ல் 158 சத வீதமாகவும், 1974ல் 370 சத வீதத்தாலும் அதிகரித் துள்ளது. ஒரு அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரத்தினல் இத்தகைய ஒரு பெரும் விலையேற்றத்தினை தாங்குதல் மிகக் கடினமானதாகும்.

Page 55
இலங்கையில் பணவீக்க.
j9HiylLRu2s vvT V இலங்கையின் மொத்த இறக்குமதிப்
பொருட்களின்
விலைச் சுட்டெண் 1967 - 1974
காலம் w இறக்குமதி
விலைச் சுட்டெண்
1967 100 1968 126 1969 134 1970 1 4 0 1971 150 1972 158 1973 209 974 370
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்.
இறக்குமதி விலைச் சுட்டெண் அதிகரிப் பிற்கும், வாழ்க்கைச் செலவுச் சுட்டெண் அதிகரிப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பினையும் அவதானிக்க முடிகின் றது. இறக்குமதி விலைச் சுட்டெண் மிக வேகமாக அதி க ரி த் த 1972க்கும் 1974க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணில் ஏற் பட்ட அதிகரிப்பு 35 சதவீதமாகவுள்ளது. சர்வதேச சந்தை விலை மாற்றமானது உள் நாட்டுக் கைத்தொழில், விவசாய உற்பத் தியினையும் கூடிய அளவில் நேரடியாகப் பாதித்துள்ளது. இன்றைய வேகமான பண வீக்க அதிகரிப்பிற்கு மிக முக்கிய கார ணியாக சர்வதேச சந்தை விலையேற்ற மானது அமைந்துள்ளது.
தவறன கைத்தொழிலாக்கம்
1956ஆம் ஆண்டிலிருந்து இலங்கை யிலேற்பட்ட வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினை காரணமாக உள்நாட்டில் விரை வான கைத்தொழிலாக்கத்தினை ஏற்படுத் துவதற்கு அரசாங்கம்ானது பல நட வடிக்கைகளை மேற்கொண்டது, தனியார்
- 3.

ஆர். ஜெயரத்தினராசா
துறைக்கு வரிச் சலுகைகள், கடன் வசதி கள், தொழில் நுட்ப உதவிகள், சுங்கப் பாதுகாப்புக்கள் போன்றவற்றினை அளித்த துடன் கூட்டுத்தாபனங்களை அமைத்து அரசாங்கமும் நேரடியாக கைத்தொழில் முயற்சிகளை மேற்கொண்டது. இதனல் கைத்தொழில் உற்பத்தியானது விரைவாக அதிகரித்துள்ளது என்பதினை மறுப்பதற் கில்லை. 1959ஆம் ஆண்டு 682.1 மில்லியன் ரூபாவாக இருந்த மொத்தக் கைத் தொழில் உற்பத்தியின் பெறுமதியானது 1965ஆம் ஆண்டு 936.9 மில்லியன் ரூபா வாகவும் 1974ல் 1,359.4 மில்லியன் ரூபா வாகவும் அதிகரித்துள்ளது. அதாவது ஏறக்குறைய 16 வருடங்களில் இலங்கை யின் கைத்தொழில் உ ற் பத்தியானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதென லாம்.
உள்நாட்டுக் கைத்தொழில் உற்பத்தி யில் அதிகரிப்பு ஏற்பட்டபோதிலும் கூட வற்றின் விலைகளிலும் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுச் சென்றுள்ளது.
Jgās VI
இலங்கையில் கைத்தொழில் உற்பத்தி அதிகரிப்பு
(1965 - 1974) (1959 நிலையான காரணி விலைகளில்)
காலம் மொத்த உற்பத்தி
(மில்லியன் ரூபாக்களில் )
I959 682, 1 1965 936.9 1966 1 008. I 1967 105.2.1 1968 l 1540 1969 1260.5 1970 133 1.8 1971 1378.9 1972 1400.5 1973 1Ꮞ Ꭵ 7.2 1974 1359.4
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள்,

Page 56
இலங்கையில் பணவீக்க .
1956ஆம் ஆண்டிற்குப் பின்பு தனி யார் துறையினுல் உருவாக்கப்பட்ட கைத் தொழில்கள் பல வெளிநாட்டு மூலப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். மேலும் வெளி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட் களை இங்கு பெட்டிகளில் அடைத்தல் அல் லது உதிரிப் பாகங்களை இணைத்தல் என்ற அடிப்படையிலேயே பெருமளவு கைத் தொழில்கள் காணப்படுகின்றன. சுருங்கக் கூறின் வெளிநாட்டுக் கைத்தொழில் நிறு வனங்களின் இலங்கைக் கிளைகளாகவே இவை செயற்படுகின்றன. உள்நாட்டு மூலப் பொருட்களைக் கொண்டு செயற்படும் தனியார் கைத்தொழில்கள் மிகக் குறை வாகவே காணப்படுகின்றன. இதனல் வெளிநாடுகளில் கைத்தொழிற் பொருட்க ளுக்கு ஏற்படும் விலையேற்றம், இறக்குமதி வரி அதிகரிப்பு ஆகியன எல்லாம் உள்நாட் டுக் கைத்தொழில் பொருட்களின் விலை உயர் விற்கு காரணமாகவிருக்கின்றது.
மேலும் இலங்கையின் கைத்தொழில் உற்பத்திகள் பெருமளவிற்கு மத்திய வகுப் பினரின் ஆடம்பரப் பொருட்களாகவோ, அன்றி உயர் வகுப்பினரது அத்தியாவசிய ஆடம்பரப் பொருட்கள்ாகவோ காணப் படுகின்றன. ஏனெனில் இத்தகைய பொருட்களுக்கு ஒரு பணவீக்கப் பொருளா தாரத்தில் கூடிய கேள்வி காணப்படுவதால் கூடிய விலையினை விதித்து அதிக இலாபத் தினைப் பெறலாம் என்பதே தனியார் துறையினரது நம்பிக்கையாகும். இதனுல் தான் நாட்டின் கைத்தொழிற் துறை யானது சாதாரண மக்களின் கைத் தொழில் நுகர்வுப் டொருட்களே பூர்த்தி செய்ய முடியாததொன் ருகக் காண்ப்படு கின்றது. அத்தியாவசிய கைத்தொழிற் பெ ா ரு ட் க ளி ன் பற்ருக்குறையானது மேலும் விலையேற்றத்திற்கு வழி வகுப்ப தாக அமைந்திருக்கின்றது.
ஒரு நிறைபோட்டி சமூக நலப் பொரு ளாதாரத்தில் குறைந்த செலவில் உற்பத்தி
- 32

ஆர். ஜெயரத்தினராசா
செய்து கூடிய பொருட்களை விற்பதன் மூலமே இலாபமானது பெறப்படுகின்றது. ஆணுல் இலங்கையினைப் பொறுத்தமட்டில் தனியார் கைத்தொழில்களும், அரசாங்கக் கைத்தொழில்களும் பொருட் பற்ருக் குறை காரணமாக தனியுரிமைச் சக்தி வாய்ந்தனவாகக் காணப்படுகின்றது. இன்று கைத்தொழில் உற்பத்தியாளர் களின் இலாபம்ானது கூடிய பொருள் உற் பத்தியினலன்றி கூடிய விலையினுற் பெறும் ஒன்று என்ற கருத்து நிலைத்து விட்டது. இதனுல் உற்பத்திச் செலவு பற்றிய கட்டுப் பாடுகளில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. கூடிய உற்பத்திச் செல வானது தவருன சாதன ஒதுக் கலிஞல் கைத்தொழில்கள் முழு இயலளவில் இயங்க முடியாமை, இரட்டைத் தன்மை வாய்ந்த சம்பளமுறை ஆகியன முக்கிய காரண மாகும். இரட்டைத் தன்மை வாய்ந்த சம்பளமுறை எனும்போது அரசாங்க நிர் வாக, தொழில்நுட்ப ஊழியத்தின் சம்பளத் துடன் ஒப்பிடும்போது மிகக் கூடிய சம் பளம் நிர்வாக தொழில் நுட்ப பகுதியின ருக்கும் தொழிலாள வகுப்பினருக்குச் சாதாரண அல்லது குறைவான சம்பளமும் வழங்குவதைக் குறிப்பதாகும். அரசாங்கக் கூட்டுத்தாபனங்களிற் கூட இத்தகைய சம் பளமுறை பின்பற்றப்படுவது வரவேற்கக் கூடியதொன்றல்ல. எமது நாட்டில் ஏற் பட்ட சிக்கனமற்ற கைத்தொழிலாக்க மானது நுகர்வோரின் நுகர்வுத் தேவை யினைப் பூர்த்தி செய்வதற்கு பதில், மேலும் சுமையினே அதிகரிப்பதற்கே தூண்டுதல் அளித்துள்ளது.
உள்நாட்டு விவசாயத்துறையிலேற்பட்ட மாற்றம்
இன்றைய பண வீக்க நிலையினை விவ சாயத்துறையுடன் தொடர்புபடுத்தாமல் விளக்க முடியாததாகும். இதற்குச் சமீப காலத்தில் உணவுப் பொருட்களின் விலை யில் ஏற்பட்ட வேகமான அதிகரிப்பு மட் டும் காரணமன்று. அத்துடன் இலங்கை
2

Page 57
இலங்கையில் பணவீக்க.
பின் பொருளாதாரத்தில் விவசாயத்துறை வகிக்கின்ற பங்கும் முக்கியமானதாகும். இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தி பில் விவசாய உற்பத்தி 33 சத வீதமாக இருப்பதுடன், மொத்த சனத் தொகையில் ஏறக்குறைய 55 சத வீதமாஞேர் விவ சாயத்திற் தங்கியிருப்போர்ாகவும் காணப் படுகின்றனர் மேலும் விவசாய உற்பத்தி -கள் பல கைத்தொழில் மூலப் பொருட் 35 காணப்படுவதுடன், உணவுப் பொருட்களின் விலையேற்றமானது கைத் தொழில் ஊழியத்தின் கூலி உயர்விற்கும் காரணமாக அமைகின்றது. எனவேதான் இன்றைய பண வீக்கமானது விவசாயத் துறையிலிருந்து கைத் தொழிற் துறைக்குப் பரவியதொன்ருகக் காணப்படுகின்றது.
நெடுங்காலமாக சர்வதேச சந்தை சக்திகளின் விலை மாற்றங்களினுல் இலங் கையின் கிராமியப் பொருளாதாரமானது பாதிக்கப்பட்டிருக்கவில்லை. ஏனெனில் கிரா மிய விவசாயமானது குடும்ப முறையில் அமைந்த உற்பத்தி முறையாக இருந்தது டன், சுயதேவைப்பூர்த்தி, இலாப நோக் கற்ற தன்மை ஆகியன அதன் முக்கிய இயற்பண்புகளாகவும் காணப்பட்டன. ஆனல் அண்மைக்க்ாலத்தில் கிராமிய வர்க்க அமைப்பில் ஏற்பட்ட மாற்றமா ளது கிராமிய பொருளாதாரத்தின் இயற் பண்பினை த கர்த்தெறிந்த காரணியாக -வுள்ளது உணவு பற்ருக்குறை, விலையேற் ஹம் ஆகியன நிலச்சுவான், உயர்குடியா ளவர் வகுப்பு ஆகியோரை அடிப்படை யாகக் கொண்ட ஒரு முதலாளித்துவ விவ சாய முறை கிராமிய பொருளாதாரத்தில் உருவாகியுள்ளது. இத்தகைய முதலாளித் துவ விவசாய முறையானது படித்த இளே ஞர்களின் குடியேற்றத் திட்டங்களிலும் பெருமளவு காணக் கூடியதாகவுள்ளது. இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை மாற்றத்தினை கிராமிய உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம், சந்தைப்படுத்தலில் ஏற்பட்ட மாற்றம் என இரு வகையாக விளக்க முடியும் ,
கிராமிய உற்பத்தி முறையின் மாற் றத்தினை ஊழியத்தினை அடிப்படையாகக் கொண்டும், தொழில் நுட்பமாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டும் அணுகுதல்
- 33

ஆர். ஜெயரத்தினராசா
அவசியமானதாகும். நிலச்சுவான், குடியா னவன், படித்த இளைஞர்களின் விவசாய உற்பத்தியில் விவசாயக் கூலிகள் முக்கிய இடம் பெறுகின்றனர். முன்பு கிராமிய விவசாயத்தில் பெருமளவு கூலி வழங்கப் படாத குடும்ப ஊழியம் பயன்படுத்தப் பட்டமையால் பணரீதியான உற்பத்திச் செலவானது மிகக் குறைவானதாகக் காணப்பட்டது. ஆனல் முதலாளித்துவ விவசாய முறையினுற் கூலி வழங்கும் முறை உருவானதாற் கிராமிய உற்பத்திகளின் பணரீதியான உற்பத்திச் செலவு அதிகரித் துள்ளது. முதலாளித்துவ விவசாய முறை யானது நவீன இயந்திரங்கள், கிருமிநாசி னிகள், வளமாக்கிகள் போன்ற புதிய உள்ளீடுகளை உற்பத்தித்திறனினை அதிகரிப் பதற்காகப் பயன்படுத்துவதும் இயல்பான ஒரு அம்சமாகும். கிராமிய விவசாயத் துறையிற் பயன்படுத்தப்படும் இப்புதிய உள்ளிடுகள் சர்வதேச சந்தை விலையேற் றத்தினுல் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய தொன்ருகும். பெற்ருேலியப் பொருட் களின் விலையேற்றமும் கூட, கிராமிய உற் பத்திப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்குமளவிற்குக் காரணியாக மட்டும் அமைந்ததன்றி சர்வதேச பொருளாதார அரங்கில் அடைபட்ட கதவுகள் இன்று திறக்கப்பட்டு விட்டன எனலாம். முதலா ளித்துவ விவசாய முறையினல் ஏற்பட்ட நவீனமயமே மிகக் குறுகிய காலத்தில் கிராமிய உற்பத்தியினை அதிகரிக்க வாய்ப் பாக அமைந்தது. அட்டவணை VIன்படி, பயறு, உழுந்து, சோளம் போன்றவற்றின் உற்பத்தி இருவருட காலப் பகுதியில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதைக் குறிப்பிடலாம். நெல் உற்பத்திகூட 1950 இல் 31 மில்லியன் புசல்களாக இருந்து 1973 - 74ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 77.8 மில்லியன் புசல்களாக அதிகரித்துள் ளது. ஒரு கிராமிய பொருளாதார உற் பத்தி முறையில் இத்தகைய வேகமான உற்பத்திப் பெருக்கம் ஏற்படுத்துவது சாத் தியமற்றதாகும். இவ்வேகமான உற்பத் திப் பெருக்கத்திற்கு கிராமிய பொருளா தாரத்தின் அமைப்பு ரீதியான மாற்றமே காரணமாகும்.

Page 58
இலங்கையில் பணவீக்க.
அட்டவ
சில உப உணவுப் பொருட்
(உற்பத்தி
உணவுப் பொருள் I972
மரவள்ளி 13,02. சோளம் 26 மிளகாய் 38
է մնան) 6. உழுந்து 6 வெண் காயம் l, 35
அட்டவ நெல் உற்பத்தியும், உத்தரவா 1967 -
காலம் மொத்த உற்பத்தி
(000 புசல்களில்)
1950 31,300.0 1969 - 70 77,447.0 1970 - 71 66, 895.0 1971 - 72 62,720. O 1972 - 73 62,900.0 76,798.0 74 سسس 1973
மூலம்: விவசாயக் காணி
கிராமிய பொருளாதாரத்தில் முத லாளித்துவ உற்பத்தி முறையுடன் இலாப நோக்கும் முக்கிய இடம்பெற்றமை இலங் கையில் ஒர் அண்மைக் கால மாற்றமாகும். எனவே உற்பத்திக்கு கூடிய விலை கிடைக் கும் வகையிற் சந்தைப்படுத்தல் அவசிய மானது. 1971ஆம் ஆண்டிலிருந்து நெல்
- 3

ஆர். ஜெயரத்தினராசா
208 VII
களின் உற்பத்தி 1972 - 74 அந்தர்களில்)
4 7 حبس 3 97 H 3 7 -سم
,600 16,723,912 3,381 469,394 2,427 31 2,580 2,852 1 19,991 5,817 12,877
7,443 1,418,387
மூலம்: விவசாயக் காணி அமைச்சு.
%t VIII
ாத விலை நெற் கொள்வனவும்
- 1974
உத்தரவாத விலையில் மொத்த நெல்
கொள்வனவு உற்பத்தியில் உ.வி. (000 புசல்களில்) கொள்வனவு சத,
வீதமாக
26 , 2 18 .Ꮞ 33.9 33,376.5 48.4 25,213.7 40.2 22,892.1 36.4 20,864. 9 27.2
அமைச்சு, நெல் சந்தைப்படுத்தற் சபை.
உற்பத்தியிலும் உபடணவுப்பயிர்ச்செய்கை, யிலும் கணிசமான அளவு உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டுள்ளன. அதே நேரத் தில் இவ் உணவுப் பொருட்களின் விலை களிலும் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள் ளது. விவசாய உற்பத்திக்கு கூடிய விலை கிடைப்பதற்காகப் பதுக்கிவைக்கும் முத

Page 59
இலங்கையில் பணவீக்க.
லாளித்துவ நடவடிக்கை , கிராமியப் பொருளாதாரத்தின் புதியதொரு அம்ச மாக வளர்ச்சி அடைந்துள்ளது. 1970-71 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மொத்த நெல் உற்பத்தியில் 48.4 சதவீதத்தினை உத்தரவாத விலையில் அரசாங்கம் கொள் வனவு செய்யவிருந்தது. ஆனல் 1973-74 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மொத்த நெல் உற்பத்தியில் 27.2 சதவீதத்தினை மட்டுமே கொள்வனவு செய்திருந்தது. இக் காலப் பகுதியில் நெல்லிற்கான உத்தரவாத விலையை அரசாங்கம் படிப்படியாக உயர்த் தியபோதும்கூட பெருமளவு நெல் பதுக்கி
வைக்கப்பட்டதுடன், கறுப்புச்சந்தையி லேயே விற்பனையும் செய்யப்பட்டிருக்கின் றன. விவசாய உற்பத்திப்பொருட்கள்
பெருமளவு பதுக்கலுக்கும், கறுப்புச்சந்தை விற்பனைக்கும் உள்ளாக்கப்பட்டமை ஒரு புறம் பொருட் தட்டுப்பாட்டினையும், மறு புறம் விலையேற்றத்தினையும் உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது.
பதுக்கல்
பணவீக்கப் பொருளாதாரத்தில் பதுக் கலானது பொருட்களை அடிப்படையாகக் கொண்டும், பணத்தினை அடிப்படையாகக் கொண்டும் ஏற்படலாம். இவ்விரு பதுக்கல் களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணவீக்க நிலையினை அதிகரிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்கும். பொருட் களின் விலையானது தொடர்ச்சியாக அதி கசித்துச் செல்வதனுல் நிகழ்காலத்தில் பொருட்களைப் பதுக்கிவைத்து எதிர்காலத் தில் கூடிய இலாபத்தினைப் பெறுவதற்கு உற்பத்தியாளர்கள் முனேவார்கள். இதனுல் சந்தையில் பொருட்களின் பற்ருக்குறை அல்லது நிரம்பல் வீழ்ச்சி செயற்கையாக உருவாக்கப்படுகின்றது. நுகர்வோர்களும் எதிர்காலத்தில் மேலும் பொருட் தட்டுப் பாடும் விலையேற்றமும் ஏற்படும் என்ற உளவியல் ரீதியான எதிர்பார்க்கையில், கூடிய பொருட்களை வாங்கிப் பதுக்கி வைக்க முனை வார்கள். நுகர்வோர்களின் பதுக்கல் பொருட்களுக்கான கேள்வியினை மேலும் அதிகரிப்பதாக அமையும். உற் பத்தியாளரின் பதுக்கலினுல் உருவாகும்
- 35

ஆர். ஜெயரத்தினராசா
பொருட்பற்ருக்குறை, நுகர்வோர்களினுல் செய்யப்படும் பதுக்கல் நடவடிக்கைகளி ல்ை ஏற்படும் மேலதிக கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து விலையேற்றத்தில் விரை வான அதிகரிப்பினே ஏற்படுத்த முனையும் 3 TGSf6)ff'i C.
பணவீக்கப் பொருளாதாரத்தில் இரு காரணிகளால் பணரீதியான பதுக்கல்கள் ஏற்படலாம் முதலாவதாக பணவீக்க காலத்தில் வர்த்தகர்கள், உற்பத்தியாளர் கள், முதலாளித்துவ விவசாயிகள் ஆகி யோர் சட்டத்திற்கு மாருன நடவடிக்கை களை மேற்கொள்வதன்மூலம் மிகக்கூடிய இலாபத்தினைப் பெறுவதால் இவற்றினைக் கறுப்புப் பணமாகவே பதுக்கிவைக்க முடி யும். மேலும் பணவீக்கத்தினைக் கட்டுப் படுத்த அரசாங்கம்ானது கூடிய விருத்தி முறை வரிகளை அமுலாக்கும்போது வரி வலையிலிருந்து தப்புவதற்காகவும் மக்கள் கூடிய பணத்தினை கறுப்புப்பணமாகப் பதுக்க முனைவார்கள், இலங்கையில் கறுப் புப்பணம் பற்றிய போதிய புள்ளிவிபரங் கள் இன்மையிஞல் இதனைத் திட்டவட்ட மாக வரையறைசெய்து விளக்குதல் கடின மானதாகும். ஆளுல் பணப்பதுக்கல் ஏற் படும்போது பெருமளவு பெரிய நோட்டுக் களின் கேள்வியானது அதிகரித்துச்செல் வது முக்கிய பண்பாகும். பெரிய நோட்டுக் களின் கேள்வியானது பொருட்களின் கூடிய விலையேற்றத்தினை கொடுக்கல் வாங் கல்களுக்குப் பயன்படுத்துவதற்காகவும் ஏற்படமுடியும். பெரிய நோட்டுக்களின் நிரம்பலானது அதிகரித்துச் செல்வது பதுக்கல் நடக்கின்றது என்பதனை மட்டு மன்றி, விலையேற்றத்தினை விளக்கும் ஒரு குறியீடாகவும் கருதமுடியும். 1953ஆம் ஆண்டளவில் மொத்த நாணய வெளியீட் டில் 100 ரூபா நோட்டுக்கள் 26.8 சத வீதமாகவும், 50 ரூபா நோட்டுக்கள் 18.8 சதவீதமாகவும் ஏனையவை சிறிய தாள் வெளியீடாகவும் காணப்பட்டது. ஆனல் 1974ல் 100 ரூபா நோட்டுக்கள் 42.5 சத வீதமாகவும், 50 ரூபா நோட்டுக்கள் 24 1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 1974 ஆம் ஆண்டில் பெரிய நோட்டுக்கள் மொத் தப் பண நிரம்பலில் 66.6 சதவீதமாயும், சிறிய நாணயங்கள் 33.4 சதவீதமாயும் மட்டுமே காணப்படுகின்றது.

Page 60
இலங்கையில் பணவீக்க.
அட்டவி
நாணய வெளியீட்டில் பெரிய நோட்டுக்க
I 953-1974
காலம் டிசம்பர் 10 0 ரூபா
1953 26.8 1956 25.9 1960 23.0 1965 23.9 1970 23. 19, 1 32.8 1972 36.8 1973 39.8 1974 42.5
elp said: gé
பணரீதியான பதுக்கலானது பண வீக்கத்தினைப் பல வழிகளிற் துரிதப்படுத் தும் - இயக்குவிசைகளாகப் பொருளாதா ரத்திற் செயற்படவும், எப்பொழுதும் பெருமளவு கறுப்புப்பணமானது வீண் ஆடம்பரமான வீடுகள், குளிர்ச்சியூட்டப் பட்ட படமாளிகைகள், உண்வு விடுதிகள், தங்கம், விலையுயர்ந்த கற்கள், உலோகங் கள் போன்றவற்றிலேயே முதலீடு செய் யப்படுகின்றன. இத்தகைய முதலீடுகள் நாட்டின் உற்பத்தி மட்டத்தினை அதி கரிப்பதற்கு சாதகமானதல்ல மேலும் கறுப்புப்பணமானது ஆடம்பரமான நுகர் வுப் பொருட்களின் கேள்வியினையே கூட்டு வதாக அமைந்திருக்கும். எனவே நாட்டின் அருமையான மூலவளங்களில் ஒரு பகுதி இத்தகைய உயர் ஆடம்பரப் பொருட் களின் உற்பத்திக்கு முடக்கப்படும் நிலை யினை உருவாக்குகின்றது. அத்துடன் அர சாங்கம் இறக்குமதித் தடைவிதித்த ஆடம் பரப் பொருட்களை கள்ளக்கடத்தல் மூலம் பெறுவதற்கான வெளிநாட்டுச் செலாவணி மோசடிகளையும் இது மறைமுகமாக உரு வாக்குகின்றது. இந்தக் கறுப்புப்பணமே
- 3

ஆர். ஜெயரத்தினராசா
r, சிறிய நோட்டுக்கள் ஆகியவற்றின் பங்கு (சதவீதத்தில்)
சிறிய 50 Lt Lumr நோட்டுக்கள்
8,8 54.4 22.0 52. 23.0 54.0 29.7 46.4 23.9 53.0 24.3 9 24.3 ノ.9 25.4 34.8 24. l 33.4
லங்கை மத்திய வங்கிஆண்டறிக்கைகள்.
கறுப்புச்சந்தை வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி பொருட் தட்டுப்பாட்டை ஏற் படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது. இறுதியாக கறுப்புப்பணம் மேலும் பல கறுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாட்டிற் பயன்படுத்தப்படலாம். உதா ரணமாக நிர்வாக உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகள் போன்ருேருக்கு இலஞ் சம் வழங்கி, நல்ல திட்டங்களை நடை முறைப்படுத்தவிடாது ஸ்தம்பிக்கச் செய் யும் நடவடிக்கைகளைச் சிறப்பாக குறிப் பிட முடியும். கறுப்புப் பணமானது பண வீக்க நிலையினை உருவாக்குவதற்கு மட்டு மன்றி நீண்டகாலப் பொருளாதார வளர்ச் சிக்குப் பாதகமானதாகவும் விளங்குகின் sD3) ·
பணவீக்கத்தின் விளைவுகள்
பல முதலாளித்துவ நாடுகளின் அனு பவத்தினை நோக்கும்போது, பணவீக்க LD nr 63T51 பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமானது என்ற கெயின்சின் பொரு ளாதார ஆய்வுகளை வறட்டுத் தத்துவ
5 -

Page 61
இலங்கையில் பணவீக்க.
மாக்கிவிடுகின்றன. விலையேற்றமானது உற்பத்திக்குத் தூண்டுகோலாக இருக்கும் என்ற கருத்து, இலங்கையில் அண்மைக் காலத்தில் விவசாயம், கைத்தொழில் ஆகிய துறைகளில் ஏற்பட்ட உற்பத்திப் பெருக் கத்துடன் உடன்படுவதாக உள்ளது. இவ் உற்பத்திப் பெருக்கத்தினைவிட பணவீக்கத் தினுல் தேசிய பொருளாதாரத்தில் ஏற் பட்ட பாதகமான விளைவுகளே அதிக மானவையாக மடடுமன்றி சக்தி வாய்ந் தனவாகவுமுள்ளன.
முதலாவதாகப் பணவீக்க காலத்தில் கூடிய இலாபத்தினைப் பெறுவதற்காக உற் பத்தியாளர்கள் இலாபம்கூடிய துறைகளி லேயே உற்பத்திச்சாதனங்களை ஒதுக்குவார் கள். நாட்டின் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள், பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத உற்பத்தி துறைகள் ஆகியவற்றில் முதலீட்டுப் பற்ருக்குறை காணப்படும். இலங்கையிலே ஆடம்பரக் கைத்தொழில்கள், உல்லாச விடுதிகள் போன்றவற்றில் கூடிய முதலீடுகள் முத லிடப்பட்டமையினைச் சிறப்பாகக் குறிப் பிடலாம். இதனுல் நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் தவருக ஒதுக்கப்படுவதனல் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி தடைப்படுவதுடன், தேக்க நிலையினையும் உருவாக்கிவிடும்.
இரண்டாவதாகப் பணவீக்கத்திற்கு முதலிற் பலியா கின்றவர்கள் மத்திய வகுப் பினரும், குறைந்த வருமானமுள்ள வகுப் பினருமேயாவர். வ்ருமானம் உயர்ந்த மக்களினது நுகர்வு மட்டம் விலையேற்றத் தினுல் பாதிக்கப்படுவதில்லை. ஆனல் உயர் வகுப்பினரது சேமிப்புக்களை மட்டுமே அதிகரிக்கும். வாழ்க்கைச் செலவானது குறைப்பதாக அமையும். இலங்கையில் 1970இல் வணிக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் மொத்தச் சேமிப்பு வைப்புக்கள் 31 17.9 மில்லியன் ரூபாவாக விருந்து 1974இல் 4770.9 மில்லியன் ரூபா வாக அதிகரித்துள்ளது. இவ்வாறு மொத்
தச் சேமிப்பு அதிகரித்தமைக்கு

ஆர். ஜெயரத்தினராசா
வகுப்பினரது வருமான அதிகரிப்பும், அவ் வருமான அதிகரிப்பிற்கு ஏற்ப நுகர்வுப் பொருட்கள் இன்மையுமே காரணமாக இருக்கலாம்.
மூன்ருவதாகப் பணவீக்க காலத்தில் வருமானம் கூடிய வகுப்பினர் மேலும் வருமானத்தினை அதிகரிப்பதற்கு சாத்திய மான ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. அதா வது கறுப்புச்சந்தை பதுக்கல் நடவடிக்கை கள், கள்ளக் கடத்தல் போன்றவற்றினைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். நாட்டில் பொருட் தட்டுப்பாடு அதிகரித்துச் செல் லும்போது இந்நடவடிக்கைகளின் பங்கும் வேகமாக அதிகரித்துச்செல்லும். இதனல் அரசாங்கக் கட்டுப்பாட்டிற்கும், கங்காணி ப்புக்கும் அப்பாற்பட்ட ஒரு புதிய துறை யும், புதிய பணக்கார வகுப்பும் படிப்படி யாக வளர்ச்சியடைந்து சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதி" யிலும்கூட பெரும் சவாலாக அமைந்து விடும்.
இறுதியாக விலையேற்றமானது பணத் தினது கொள்வனவுச் சக்தியினே க் குறைத்து அதன் பெறுமதியினை இழக்கச் செய்துவிடும். சுருங்கக்கூறின் தொடர்ச்சி யான விலையேற்றமானது நாணயப் பொரு ளாதாரத்தினைப் படிப்படியாக நலிவுறச் செய்துவிடும். இறுதியாகக்கூறின், பண வீக்கமானது தவருண முறையில் கொள்ளை இலாபம்பெற முனையும் சமூக விரோதி கட்குச் சாதகமான தொன் ருகும்.
கட்டுப்பாடுகள்
பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற் காக முதலாளித்துவ நாடுகளில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவும் இறுதியில் தோல்வியினையே அளித்துள்ளன. இந்நாடுகளில் அமுலாக்கப்பட்ட கட்டுப் பாட்டு முறைகட்கிடையேயுள்ள முரண் பாடுகள் மட்டுமன்றி, அவற்றினைப் ԼեU 6ծծl மாக அமுலாக்குவதற்கு முதலாளித்துவ
7 -

Page 62
இலங்கையில் பணவீக்க.
பொருளாதார சமூக அரசியல் அமைப் பின் முரண்பட்ட தன்மைகளும் முக்கிய காரணமாகும். வீக்கத்தினைக் குறைப்பதற் காக மக்களின் செலவிடும் வருமானத் தினக் குறைக்கக்கூடிய விருத்திமுறை வரி களை விதிக்கும்போது மேலும் இரு பிரச் சினைகள் எழுகின்றன. முதலாவதாக மக் களின் சேமிப்புக் குறைந்து முதலீடுகள் பாதிக்கப்படுகின்றன . இரண்டாவதாக உற்பத்தியாளர்கள் இந்த நேர் வரித் தாக்கத்தினைப் பொருட்களின் விலையேற் றம் மூலம் நுகர்வோர்மீது சுமத்தும்போது வீக்கத்தினை மேலும் அதிகரிக்கின்றது. குறைநிலை வரவு செலவுத்திட்டத்தில் சமூ கச் செலவுகளைக் குறைக்கும் போது அத ஞல் வருமானம் குறைந்த வகுப்பினர் பெருமளவு பாதிக்கப்படுவர். இதே போன்று வங்கிக் கொடுகடனைக் கட்டுப் படுத்த முனையும்போதும் கூட அது முத லீட்டு நடவடிக்கைகளைப் பாதிப்பதாக அமைந்திருக்கும். வீக்கக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும்போது நிகழ்காலச் சமூக நலன், நீண்டகாலப்பொருளாதார விருத்தி ஆகியவற்றினையும் கருத்திற் கொள்ளல் வேண்டும். இதனை வேறுவிதமாகக்கூறின், நிகழ்காலமாகிய மப்பு மந்தாரத்தில் தடு மாறும் மனிதனுக்கு இடறிவிழாமல் இருப் பதற்கு ஒளிவிளக்கைக் கொடுக்கின்ற அதேநேரத்தில் தூரத்தில் தெரியும் ஒளியை நாடிச்செல்லக் கூடியதாகவும் வழிகாட்டுதல் அவசியமானதாகும்.எனவே தான் பின்வரும் கட்டுப்பாட்டு முறைகளை ஒரே நேரத்திற் செயற்படுத்தல் அவசிய மானதாகும்.
1. பரந்த அடிப்படையிலும் தொ டர் புவிலைகளையும் கருத்திற்கொண்ட விலைக் கட்டுப்பாடு, பங்கீட்டு முறை ஆகியவற் றினை அமுலாக்குதல். இன்று இலங்கையில் விலைக்கட்டுப்பாடுகள் செயற்படமுடியா மைக்குக் காரணம் அவை பரந்த ரீதியி லும் தொடர்பு விலைகளையும் அடிப்படை யாகக் கொள்ளாது அமுலாக்க முனைந்தமை யாகும். உதாரணமாக ஒரு இருத்தல்

ஆர். ஜெயரத்தி"ைராசா
மாட்டிறைச்சி, 1ளூபா 25 சதமாகக் கட்டுப் பாட்டு விலை விதிக்கப்பட்ட அதே நேரத் தில் உருளைக்கிழங்கின் விலை பொதுச் சந் தையில் 2 ரூபாவாக விலைப்படுவதனக் காண முடிகின்றது. இதே நேரத்திற் சிந் தற்றிக் பிடவையின் மிகக்கூடிய கட்டுப் பாட்டு விலை 18ரூபா 50 சதமாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு யார் பருத்திப் பிடவை 20 ரூபாவாகக் கூட விற்பனை செய் யப்படுகின்றது. எனவே ஒரு பொருளுக் குக் கட்டுப்பாட்டுவிலையினை விதிக்கும் போது அதனுடைய எல்லாப் பிரதியீட் டுப் பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலைவிதிக்க வேண்டும்.
2. கறுப்புச் சந்தை, கள்ளக்கடத்தல், பதுக்கல் போன்ற சமூகத் துரோசு தடவ டிக்கைகள் அனைத்து 3 தேசத்து"ோகக் குற்றத்திற்குள்ளாக்கிச் சொத்துப்பறி முதல், போன்ற கடும் தண்டனை களை விதித்தல்.
3 வருமானத்திற்கு உச்சரம் பு விதித்தல்.
4. வருமான உச்ச வரம்புக்கு இணை யாகச் சொத்து உச்சவரம்பும் செயற் படுத்தப்படவேண்டும். சொத்து உச்ச வரம் பிற்குள் தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த கற்கள், நகர்ப்புறச் சொத்துக்களான கட் டிடங்கள், போன்றவையும் உட்படுத்தப் படல் வேண்டும்.
5. தனியார் துறை நிறுவனங்கள், விற்பனை நிலையங்களின் இலாபங்கட்கும் உச்சவரம்பு விதிக்கப்படவேண்டும்.
6. கைத்தொழில் வர்த்த கத்துறை களில் தனியுரிமை உருவாக்குதலைத் தடுத்து தொழிற் செறிவான சிறிய உற்பத்தி முயற்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும்.
7. வெளிநாட்டு வர்த்தகமும், உள் நாட்டு வர்த்தகமும் படிப்படியாக அர சாங்க மயமாக்கப்பட வேண்டும். இதில் உள்நாட்டு வர்த்தகத்தில் கூட்டுறவு முறை யிலமைந்த வர்த்தக நிலையங்களின் எண் னிக்கையினை அதிகரிக்க வேண்டும்.
38 -

Page 63
இலங்கையில் பணவீக்க.
8. குறைநிலை வரவுசெலவுத் திட்டத் தில் குறுங்கால நீண்டகால உற்பத்தி முத லீட்டுச் செலவுகளின் அளவு அதிகரிக்கப் பட வேண்டும்.
9. அரசாங்கக் கூட்டுத்தாபனங்களின் முதலாளித்துவ முறையிலமைந்த நடவடிக் கைகள் நீக்கப்பட்டு புனர்நிர்மானம் செய் யப்பட வேண்டும். உதாரணமாக விலையி னைக்கூட்டி இலாபத்தினைப் பெற முனைவ தற்குப் பதில் செலவுக் கட்டுப்பாடுகள், உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகியவற் றினை மேற்கொள்ளல். முதலாளித்துவ உற்பத்தி நிறுவனங்களில் உயர்நிர்வாகி களுக்கு வழங்கும் மிகக்கூடிய சம்பளம், சலுகைகள் ஆகியனவற்றை அரசாங்க கூட்டுத்தாபனங்களிற் பின்பற்றது இரட் டைச் சம்பள முறையின் அகன்ற இடை வெளியினைக் குறைத்தல் வேண்டும் ,
10. கைத்தொழிற் துறையில் அர சாங்கக் கூட்டுத்தாபனங்களின் பங்கினை மேலும் அதிகரித்தல். "
11. இன்றைய காணிச்சீர்திருத்தத் தினக் கிராமிய பொருளாதாரத்தில் அடிப்படையான மாற்றத்தினை ஏற்படுத் தும் வண்ணம் மாற்றித் தீவிரமாக அமு லாக்கல். அதாவது நிலச்சுவான் இடை நிலைத் தரகர்கள் போன்ருேரின் ஆதிக்கத் தினை நீக்கி குடியானவனின் சமூக பொரு ளாதார நிலையினை உயர்த்தல்,
12. ஏற்றுமதி பன்முகப்படுத்தப்படு வதுடன் கூடியாவிற்கு உணவு, அத்தியா வசிய கைத்தொழிற் பொருட்கள், ஆகிய வற்றில் சுயதேவைப் பூர்த்தியடைய முனைதல்.
13. மொத்தவரி வருமானத்தில் நேரில் வரியின் பங்கினைக் குறைத்து நேர்வரியின் பங்கினை அதிகரிக்கக்கூடிய வகையில் வரிய மைப்பில் மாற்றம் செய்யப்படவேண்டும். ஏனெனில் நேரில் வரியானது எப்போதும் விலையதிகரிப்பினை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கும். எனவே அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமன்றி மத்திய வகுப்
* பேச்சைக் காட்டிலும் எழுத்து எதுவும் நாடகத்துக்கு அருகில் வர இ சீர்திருத்த விரும்புவன் கையாள வேல்
- 39

ஆர். ஜெயரத்தினராசா
பினரின் ஆடம்பரப்பொருட்களுக்கும்கூட குறைவான வரிவிதித்தல் வேண்டும். அதே நேரத்தில் வருமான வரியின் ஆரம்ப எல்லையினை 500 ரூபாவாகக்குறைப்பதுடன், வரி எல்லைகளை அதிகரிப்பதன் மூலம் நேர் வரியின் பங்கினை அதிகரிக்க முடியும்.
14. நீண்டகால அரசாங்க ஆவணங் கள் போன்றவற்றில் முதலீடு செய்வோ ருக்கு கூடிய வரிச்சலுகைகளை அளித்தல் வேண்டும். இப்போது மறுமுதலீடு செய் தல் போன்றவற்றிற்கு அளிக்கும் வரிச் சலுகைகள் பல மோசடிகட்கு வழிவகுப் பதஞல் இவற்றினை நீக்குதல் அவசியமான தாகும். இதஞல் தனியார்துறையின் சேமிப்புக்கள் பெருமளவிற்கு அரசாங்க ஆவணங்களில் முதலீடு செய்வதால் அர சாங்கத் துறையினை வளர்ச்சியடையச் செய்வதற்கான நிதிகளைப் பெரும்ளவிற் குப் பெறக்கூடியதாக இருக்கும்.
15. எந்தவொரு உற்பத்திப் பொரு ளுக்கும் 10 சதவீதத்திற்கு மேல் இலாபம் வைத்து விற்றலைக் கட்டுப்படுத்தவேண்டும்.
இக்கட்டுப்பாடுகளை ஒரேநேரத்தில் அமு லாக்குவதற்கு பயிற்றப்பட்ட நிர்வாகம், நாட்டுப்பற்றுள்ள மக்கள், இலஞ்ச ஊழ லற்ற அரசாங்க அதிகாரிகள், பெருமளவு மூலதனம் ஆகியன பற்ருக்குறையாக இருப் பது முக்கிய பிரச்சினையாகும். இவற்றி னைத் தீவிர சமூக பொருளாதார அரசியல் மாற்றப் பின்னணியிலேயே எமது நாட்டில் வெற்றிகரமாக அமுலாக்க முடியும். அதே நேரத்தில் மரபுகளிலும் சம்பிரதாயங்களி லும் நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத் திலே இத்தகைய மாற்றம் குறுங்கால நோக்கில் சாத்தியமானதா? என்பதும் சந்தேகத்திற்குரியதாகும் ஆனலும் தீவிர மாற்றங்களாலன்றிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதினையும் மக்கள் உணர்ந்து செயற்படவேண்டும். நெருக்கடி கள் எப்பொழுதும் மாற்றத்திற்கான திருப்புமுனைகள் மட்டுமன்றி முன் சூழ் நிலைகளும் என்று கூறுதல் பொருத்தமான தாகும்.
வலிவுடையது. ஆனல் பேச்சு எழுத்து
இயலாது. ஜனசமூகத்தை உண்மைப்பில்
ண்டிய சாதனம் நாடகமே ஆகும்.
- கல்கி

Page 64
| “வித்தியோதயம்' நல்லபடி மலர ; எமது நல்வாழ்த்துக்கள்.
妻
லிங்கம் சில்க் ஹவுஸ் இல, 18, மக்கள் நவீன சந்தை, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்.
PONLUCK INDUSTRIES,
NDUSTRIAL ESTATE,
ATCHUVELY.

5fest Camptinents fuam
游
i
FAZ ZAL 3 ROS.
74, Keyzer Street, Colombo-11.
Zith the best Compliments
ዐ f°
N
N
KARS
95, 2nd Cross Street, Colombo-11.

Page 65
தேயிலையும் இலங்கையி
SSLLSAAAASLLSAAJSLLLSASLLLSAAAqSqSAAJSqSAMAASLLLLSAAAAASSiqSMAS
V!, Sc. í t; con.){ பதில் பகுதிநேர
தேயிலைப் பயிர்ச் செய்கை சம்பந்த மாக ஏறத்தாழ ஐந்து இலட்சம் மக்கள் நேர்வகையில் உழைப்புக் கொண்டுள்ள னர். அத்தொழிற்றுறை தொடர்பான மற்றும் பல துறைகளூடாக (போக்கு வரத்து, ஏற்றுமதி, காப்புறுதி, விற்பனை) நேரில் உழைப்புக் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சம் என மதிப்பிட ஏதுவாகும்.
நேர் வகையில் தொழில் கொண்டுள்ள வர்களில் பெரும்பங்கினர் (80.0%) இந்திய வம்சா வழியினர். கடந்த 30 வருடங்க ளுக்கு முன்னர் கிரமமாக இந்தியாவிலி ருந்து வரப்பெற்ற தொழிலாளர்கள் இலங் கைத் தோட்டங்களில் தாழ்ந்த ஊதியத் துக்குள்ளான உழைப்பினை வழங்கி வந்த தன் காரணமாகவே இந்நாட்டுத் தேயி *லத் தொழிற்றுறை மிகவும் விருத்திக்கே துவாயிற்றதென்றும், அதனுளடாக நாட் டுக்கு ஏதுவான தேறிய நற்பலன்கள் அதி கூடியதெனவும் பல தரத்தினர் கருத்துக் கொண்டுள்ளனரெனினும்,ஆழ்ந்த ஆராய்ச் சிகள் அவ்வாரு  ைதன்ம்ைகளைத் தவிர்க் கும் இயல்பினைக் கொண்டு காணப்படு கின்றன.
1950 கால அளவுகளில் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியினில் தேயி 2லயின் பங்கு அதி உயர்வாகக் காணப்பட் டது. அதே போன்று, தேயிலையின் ஏற்று மதி மூலம் கொண்ட அந்நிய செலாவணித் தொகை நாட்டின் மொத்த அந்நிய செலா வணித் தொகையினில் அதிகூடுதலான பங்கிற்கு உரித்தாகக் காணப்பட்டது.

等 པཚ་ 运 ன் பொருளாதாரமும்
கலாநிதி க. சுந்தரலிங்கம் Lond); Ph. D. (Lond. A. M. Ins. T. (Lond.)
பணிப்பாளர் - மார்கா நிறுவனம். விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்,
ஆஞல், 1960-1975 கால கட்டத்தினில் அவ்விரு பங்கு களும் படிப்படியாகக் குறைவு கொண்டு வந்துள்ளன. 1964இல் மொத்தத் தேசிய உற்பத்தியினில் 15, 5% ஆக காணப்பட்ட தேயிலையின் பங்கு 1970-72 காலத்தறுவாயில் 11.6% ஆக வீழ்ச்சி யுற்றுள்ளது.
அதே போன்று, அந்நிய செலாவணி உழைப்பினில்தேயிலைக்கான பங்கு 1964இல் 60.9% ஆகவிருந்து 1970இல் 55.1% ஆக வும், 1973இல் 48.2% ஆகவும் வீழ்ச்சி கொண்டுள்ளது. மொத்தத் தேசிய உற் பத்தியினில் தேயிலைக்கான பங்கு தாழ் வுற்றதற்கு மறு தொழிற் துறைகளில் உற் பத்தியளவு வி ஸ் த ரிப் புக் கொண் டதே பிரதானமான காரணமாகும். நாட்டின் பொருளாதாரமும் அதே கால வேளைகளில் கூடுதலான பன்முகப்ப டுத்துதலுக்கு உள்ளாகி இன்று பல புதிய துறை உற்பத்தி இடம் கொண்டுள்ளதும் புலஞகும். தேயிலேயூடாகக்கொண்ட அந் நிய செலாவணிப் பங்கு குறைவுற்றுள்ள தற்கு அதற்கான உலகச் சந்தை விலைகள் பொதுவாக 1960 தொட்டு வீழ்ச்சியுற் றுள்ளதே பிரதான காரணமாகும். உதா ரணமாக, 1964இல் 455.7 மில்லியன் இருத் தல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூபா 1142 மில்லியன் வருவாயாகக் பெறப்பட் டதெனினும் 1974இல் 453.6 மில்லியன் இருத்தல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூபா 1260 மில்லியன் மட்டுமே பெறப் பட்டது. அதாவது, 1964இல் சராசரி விலை ரூபா 2.50 1974இல், 10 வருடங்களுக்குப்
41 -

Page 66
தேயிலேயும் இலங்கையின்.
பின்னர் மற்றும் பொருட்களின் விலைகள் பொதுவாக 300% அதிகரிப்புக் கொண்டி ருந்த வேளையில் தேயிலைக்கான விலை 15% அதிகரிப்புக்கு மட்டுமே அருகதையாயிற்று. ஒரு இருத்தல் விலை ரூ. 2.88 ஆக உயர்ச்சி பெற்றுள்ளது
தேயிலைக்கான உலக கேள்வி, வழங் கல் அமைப்புகளின் அடிப்படையில் அவ் வாருன தாழ்வான முன்னேற்றத்தையே அதனுக்கான விலை அமைப்பினில் எதிர் நோக்க இடமுண்டெனினும், தேயிலை இலங்கையின் பொருளாதாரத்தினில் எதிர் வரும் 10-15 வருடங்களுக்கு முக்கியத்து வப வாய்ந்த தொழிற்றுறையாகத் திகழ் வதையும் எதிர்பார்க்கலாம். மேலும், இன் றைய உலக சூழ்நிலைகளில் பொதுவாக சகல பொருட்களின் விலைகளும் உயர்வு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. அந்நிலையில் தேயிலையின் விலை அமைப்பி னிலும் துரிதமான உயர்வு ஏற்படுவ தற்கு சந்தர்ப்பம் நிலவும் எனும் அடிப் படையிலும் தேயிலையின் முக்கியத்துவத்தை உறுத்தும் வாய்ப்புண்டு. -
தேயிலை பின் தங்கிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் அடிப்படைப் பொருட்க ளில் ஒன்று, (இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் முதலிடம் கொண்டது.) பானம் எனும் வகையில் தேயிலைக்குப் போட்டியாகப் பல பொருட்கள் உண்டு. அவற்றினில் கோப்பி, கொக்கோ ஆகிய இரண்டும் திரும்பவும் பின் தங்கிய நாடு களிலேயே உற்பத்தியாக்கப்பட்டு, கைத் தொழிற்றுறையில் முன்னேற்றம்கொண்ட செல்வந்த மேற்கத்திய நாடுகளுக்கு ஏற் றுமதியாக்கப்படுவன, தேயிலைக்க்ான விலை அமைப்பினை உயர்த்தும் நியதியில் எத் தூரம் கோப்பி, கொக்கோ ஆகிய பொருட் களுக்கான கேள்வி அமைப்பினில் தேயி லைக்கு விரோதமான வகையில் மாற்றம் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதும் அவசியமாகும். அதே போன்று, மேற்கத் திய நாடுகளிலேயே உற்பத்தியாக்கப்படும்
42 ܘܝܒܐ

க. சுந்தரலிங்கம்
போட்டிப் பொருட்களின் பியர், கொக்கோ கோலா, கேள்வி, வழங்கல் அமைப்புகளில் மாற்றங்கள் நிறுவும் என்பதையும் உணர் ந்து கொள்ளவேண்டியதாகும். சிலர், தேயி லையின் விலையினை உயர்த்துவதற்கு அதன் வழங்கலில் கட்டுப்பாட்டை உறுத்துவது விரும்பத் தகுந்தது என்று கூறி அதற் கான அடிப்படை அம்சமாக சகல உற் பத்தி நாடுகளும் ஒன்று சேர்ந்து தத்தம் நாடுகளுக்கான "கோட்டாக்களை நிறுவிக் கொள்ளலாம் என்று உபாயம் வழங்குகின் றனர். வேறும் சிலர், தேயிலைக்கான விலை பொதுவாக அதன் கேள்வி வழங்கல் அமைப்புகளிலல்லாது தேயிலையை விலைக் குக் கொள்ளும் அந் நிய கம்பனிகளின் சூழ்ச்சிகளே அதற்குக் காரணம் என்றும் , அவற்றின் சூழ்ச்சிகளைத் தவிர்த்துக் கொள் ளூம் வகையில் உற்பத்தி செய்யும் சகல நாடுகளும் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட விற்பனை அமைப்பினை உருவாக்க வேண்டும் என்றும் உபாயம் வழங்குகின்றனர். எவ் வாருண முயற்சிகள் எடுக்கப்படினும் தேயி லைக்கான விலைகளை உயர்த்துவதாயின் (இன் றைய வழங்கல் அமைப்பின் அடிப்படை யில்) சகல உற்பத்தி செய்யும் நாடுகளும் ஒன்று சேர்ந்து கூட்டான முயற்சியை மேற்கொள்வது அவசியம் என்பது தெளி வாகின்றது.
இன்று தேயிலைப் பயிர் செய்யும் நாடு களில் பிரதானமானவை ஆசியா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்க ளிலேயே காணப்படுகின்றன. ஆசியாவில் இலங்கை, இந்தியா, சீனு, ஜப்பான் ஆகிய நாடுகள் முக்கியமானவை. சீன தனது உற்பத்தித் தொகையினில் 75% தன் சுய தேவைகளுக்குப் பாவிக்கின்றது. மிகுதி ஏற்றுமதி செய்யப்படினும் உலக நுகர்ச் சித் தேவைகளில் ஒரு சிறிய பங்கினையே அது பூர்த்தி செய்கின்றது. அதே போன்று ஜப்பானின் உற்பத்தித் தொகையினில் கூடிய பங்கு உள்நாட்டு நுகர்ச்சிக் காகின் றது. ஆசியாக் கண்டத்தினில் ஏற்றுமதிக் காக உற்பத்தி செய்யும் நாடுகள் பிரதா னமாக இலங்கையும் இந்தியாவுமேயாகும்.

Page 67
தேயிலையும் இலங்கையின்.
தென் அமெரிக்காவிலும், ஆபிரிக்காவி லும் கடந்த 20 - 25 வருடங்களுள் தேயி லையின் உற்பத்தி பெருமளவில் விஸ்தரிக்கப் பட்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் எதி ராகப் போட்டி அதிகரித்து வருகின்றது. 1950-54 கால அளவில் தென்,அமெரிக் காவில் 20,500 ஏக்கர்களில் பயிர் செய் யப்பட்ட தேயிலை, 1970இல் 103,000 ஏக் கர்களுக்கு பரவப்பட்டுள்ளது. 1950, 54 கால அளவில் உலகத் தேயிலை உற்பத்தித் தொகையின் 1.02% ஆன அக்கண்டத்தின் பங்கு 1970இல் 3.8% ஆக அதிகரிப்புக் கொண்டுள்ளது. அதே காலத் தவணையில், (1950-54) ஆசியாவில் 1,891,500 ஏக்கர் களாகவும், 1970இல் 2,259,250 ஏக்கர்களா கவும் தேயிலைக்கான நிலப்பரப்பு விஸ்த ரிப்புக்குள்ளாயிற்றெனினும், அக்கண்டத் தின் உலகப்பங்கு 1950/54இல் 94, 28% ஆக விருந்து 1970இல்84.5% ஆக வீழ்ச்சி கொண் டுள்ளது.
இலங்கையைத் தனிப்பட நோக்குமி டத்து, அதே கால அளவிற்குள் 31,750 ஏக்கர்கள் மட்டுமே தேயிலைப் பயிருக்குக் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (அதாவது வருடாந்தம் 1500 ஏக்கர்கள் மட்டுமே கூட்டப்பட்டுள்ளன). அதுவல் லாது, அதே கால அளவில் இலங்கையின் உலகப் பங்கு 28.55% இலிருந்து 22,64%க்கு வீழ்ச்சி கொண்டுள்ளது. இந்தியாவில் அதே கால அளவில் கிட்டத்தட்ட 97,000 கூடு தலான ஏக்கர்கள் தேயிலைப் பயிர்ச் செய் கைக்குள்ளாயிருந்தும் அதன் உலகப் பங்கு 1950ல் 39.59%ஆகவிருந்து 1970இல் 33.38% ஆகத் தாழ்வுற்றுள்ளது. அதாவது, ஏற் றுமதித் துறையினில் முதல் இரண்டு இடங் களையும் வகித்து வந்த நாடுகளின் முக்கி பத்துவம் படிப்படியாகத் தாழ்வு கொள் வதை உணர ஏதுவாகின்றது. 1950 கால அளவினில் இலங்கையும் இந்தியாவும் கூட் டாக உலகத் தேயிலைக்குள்ளான நிலப் பரப்பினில் 68%க்கும், தேயிலை உற்பத்தித் தொகையினில் 72%க்கும் உரித்தான நிலை கள், 1970இல் 56%, 61% எனும் தாழ்ந்த திலைகளைக் கொண்டுள்ளன.
எதிர்நிலையில், ஆபிரிக்க நாடுகளை நோக்குமிடத்து,1950இல் 94, 250 ஏக்கர்க னாகக் காணப்பட்ட தேயிலைக்குள்ளான நிலப்பரப்பு:1970இல் 310,500 ஏக்கர்களான பரப்பிற்கு உயர்வு கொண்டுள்ளது. 1950 இல் 4.7% எனும் உலகப் பங்கிற்கு அருகதை யானநிலை 1970இல் 11.63% ஆக அதிகரிப்
;4 -سس

க. சுந்தரலிங்கம்
புக்குள்ளாயிற்று. அதாவது 250% விஸ்த ரிப்பு. ஆபிரிக்கக் கண்டத்தில், கினியா வின் முன்னேற்றம் முக்கியமானது. 1950இல் 20,175 ஏக்கர்களே தேயிலைக்குள்ளான நிலப்பரப்பு. ஆணுல், 1970இல் 100,073 ஏக் கர்களாக அது உயர்ச்சிபெற்று, அந்நாட்டின் உலகப் பங்கு 4.0% க்கு உயர்ச்சி கொண் டுள்ளாது.
உலக உணவு விவசாய சம்மேளனத் தின் (FAO} ஆராய்ச்சிப் பிரகாரம் இந்நூற் ருண்டு முடிவுறுமுன் தேயிலையின் உற்பத்தி யளவினில் மேலும் விஸ்தரிப்பை எதிர் நோக்கலாம். 1970இல் 1,314,000 தொன் ஞகவிருந்த முழு உலக உற்பத்தித் தொகை 1975இல் 1,352,000 தொன் னுகவும், 1980 இல் 1,867,000 தொன்னகவும் அதிகரிப்புக் கொள்ளுமென மதிப்பிடப்பட்டுள்ளது. (வருடாந்த வளர்ச்சி, 1970 கால முற்பகு தியில் 3.4%மாகவிருந்து பிற்பகுதியில் 3.8% ஆக அதிகரிப்புறும்).
கிழக்கா பிரிக்கா நாடுகளிலல்லாது வேறும் நாடுகளிலும் தேயிலைப் பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்படுகின்றது. உதா ரணம்ாக, பப்பூவா நியூகினியில் 1966இல் 600 ஏக்கர்கள் பயிருக்குள்ளாக்கப்பட்டன. 1971இல் அப்பரப்பு 8383 ஏக்கர்களாக அதி கரிப்புக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியா வில் குவீன்ஸ் லன்ட் பிரதேசத்தில், தேயி லைப்பயிர்ச் செய்கை படிப்படியாக விஸ்த ரிப்புற்று வருகின்றது. அமெரிக்காவிலும், ரூஷியாவிலும் தேயிலைப் பயிர்ச் செய்கை விஸ்தரிப்புறுவதற்கான வழிவகைகள் மும் முரமாக மேற் கொள்ளப்படுகின்றன. எனவே, எதிர்வரும் 20-25 வருடங்களில் இலங்கைக்குப் போட்டியாக பலநாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுகொண்டு, இலங் கைத் தேயிலைக்கான கேள்வி அமைப்பி னில் பேரளவு தாக்கத்தை உறுத்தும் நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்க
இடமுண்டு.
நிலப்பரப்பில் விஸ்தரிப்பு ஏற்படுவ தைக்கொண்டு உற்பத்தித் தொகையில் விஸ்தரிப்பு ஏற்படுவதுடன், மறு வழிகளி லும் உற்பத்தித் தொகை விஸ்தரிப்புற்று இலங்கைத் தேயிலைக்குப் போட்டி ஏற்ப டும் நியதியையும் எதிர்பார்க்கலாம். அத் தன்மைகள், பிரதானமாக (1) புதிய பிர தேசங்களில் கூடுதலான விளைவினைக் கொடுக்கவல்ல புதிய இனச் செடிகளைப் பயிர் செய்வது. காலப்போக்குடன் புதிய

Page 68
தேயிலையும் இலங்கையின்.
இனவர்க்கங்களை ஆராய்ச்சி மூலம் தயார் செய்து அவற்றினைக் குறைந்த விளைவைக் கொடுக்கும் செடியினங்களுக்குப் பதிலாக ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் புதிய நிலப்பரப்பில் பயிர் செய்யப்படுவதால் அந் நாடுகளில் ஏக்கர் பிரமாணம் கூடுதலான வெளியீடு பெறப்படுகின்றது. (2) பழைய நிலங்களில் திரும்ப நடப்படும் செடிகள் கூடுதலான விளைவைக் கொடுக்கவல்ல இனங்களாகையால் ஆங்கும் கூடுதலான வெளியீடு காணப்படுகின்றது. ஆணுல், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலேயே கூடுதலாக பழைய நிலங்களைப் புதுப்பிக் கும் தன்ம்ை நிலவும். ஆயினும், புதுப்பிக் கப்படுவதற்கான செலவு அதிகமாகையால் இந்நாடுகளில் புதுப்பிக்கும் திட்டம் குறைந்த வேகத்திலேயே அமுலாக்கப்படு கின்றது. உதாரணமாக இலங்கையில் கடந்த வருடங்களில் புதுப்பிக்கப்பட்ட நிலப்பரப்பினளவு சராசரி 4000 ஏக்கர்க ளாகும். அத்தொகை முழுப்பரப்பின் .006% பங்கு மட்டுமே.
இவ்வாருன இக்கட்டான நிலைமையி லும் இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளுள் தேயிலை உற்பத்தியில் விஸ்தரிப்பு ஏற்பட் டுள்ளதைக் கவனிக்கலாம். 1950 - 54இல் 150500 தொன்னகவிருந்த மட்டம் 197074இல் 211,800 தொன்னக மட்டத்திற்கு лp и ї бу கொண்டுள்ளது. ஆயினும், அந்த விஸ்தரிப்பு திருப்தியற்றதென்றே கூறலாம். 1960 கால அளவில் விஸ்தரிப்பு இடம் கொண்டதற்குப் பிரதானமாக அக் காலத்தில் உரப்பிரயோகத்தில் ஏற்பட்ட விஸ்தரிப்பும், சாதகமான சீதோஷ்ண நிலை மையும் காரணமாகலாம். பொதுவாக, அக்காலத்துள் ஏக்கர் பிரமாணம் கூடுத லான செலவு இடம்கொண்டது. ஆளுல் 1980 க்குப் பின்னர் உற்பத்தித் தொகை யில் வீழ்ச்சி ஏற்பட்டதற்குப் பல கார OO LY0 LL S S J LSLLLS 0LLS LLSLLLS S S LSS s S
? :) விலைவாசிகளில் ஏற்பட்ட தாழ்வு;
(2) அதன் காரணமாக ஏற்பட்ட குறைந்த இலாபம் தேயிலைத் தோட்டங்களுக்கு
44 سست۔

க சுந்தரலிங்கம்
உரித்தானேர்களை பயிர்களில் கூடுத f அக்கறை காட்டாது தடுத்தது எனலாம்;
(3) தோட்டங்கள் சிறு துண்டுகளாக்கப் பட்டதன் பலனக சிக்கனங்கள் குன்றி tij 68) i D;
(4) நிலச் சீரமைப்புத் திட்டத்தால் ஏற் படக்கூடிய பலாபலன்களையொட்டிய நிதான மற்ற எண்ணக் கருத்துக்களின் காரணமாக தோட்டங்களில் அக்க றைக் குறைவு; பிரதானமாகப் பல தோட்டங்களில் உரப் பிரயோகம் நிறுத்தப்பட்டது புலணுகும்;
(5) திருப்தியற்ற சீதோஷ்ண நிலைமைகள். அடுத்தடுத்து மழை இல்லாது பயிர் கள் காய்ந்தும், வெளியீட்டுத்தொகை குன்றியதும்.
இவ்வாருண காரணங்களின் பேரால் தேயிலை உற்பத்தித் தொகையில் ஏற்பட வேண்டிய விஸ்தரிப்பிற்குப் பதிலாக அதிக குறைவான விஸ்தரிப்பையே காணவேண்டி யதாயிற்று. எதிர்வரும் காலத்தில் இத் தன்மைகள் தவிர்க்கப்பட்டுக் கூடுதலான உற்பத்தி இடம்பெறும் என எதிர்பார்க் கப்படுகின்றது. ஆயினும், அவ்வாருன விஸ் தரிப்பு பிரதானமாக கூடுதலான நிலப்பரப் பினைப் பயனுக்குள்ளாக்காது, இன்று பயி ருக்குள்ளாய நிலப்பரப்பினிலும் எல்லைப் பயனுக்குள்ளான நிலங்களைத் தவிர்த்து, ஒவ்வொரு ஏக்கர் பிரமாணமும் இன்றை யிலும் மும்மடங்கு வெளியீட்டினை கொள் வத8 பேராலேயே இடம் கொள்ளும். 1999 வருட அளவில் ஒவ்வொரு ஏக்க ருக்கும் 3000 இரு த் த ல் வழங்கவல்ல உயர் இனத் தேயிலைப் பயிரின நிறுவி 200,000 ஏக்கர்களில் 6 0 0 மில்லியன் இழுத்தலைப் பேற்றுக்கொள்ளும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது. எனவே, குறைந்த நிலப்பாவினை ஒரு புறமும், ஏக்கர் பிரமா ணம் செலவு அதி குறைவாக இருப்பது மறுபுறமுமாக இருப்பது தேயிலைத் தொழிற் றுறைகூடுதலான இலாபங்களுக்கு அருகதை யானஒரு இயக்கமாக மாறும் தன்மையை உண்டாக்கலாம்.
-

Page 69
தேயிலையும் இலங்கையின்.
தேயிலைக்குள்ளான நிலப்பரப்பினை எதிர்வரும் வருடங்களில் மேலும் விஸ்தரிக் கும் வாய்ப்பு இலங்கையில் காண்பது சுலம மல்ல. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவை பொருளியல் சம்பந்தமான காரணங் களல்லாது இலங்கையின் இன்றைய அரசி யல் சமூக சூழ் நிலைகளுக்கு ஒப்பனவாகத் தோன்றுகின்றன. தேயிலைத் தொழிற் றுறை ஒரு அரசியல் ஆதிக்க அம்ைப்பின் பிரதிபிம்பம் எனும் கருத்து அடிப்படை புடன், இலங்கையின் பூர்வீக மக்களின் நலன்களை அவமதித்து நிறுவப்பட்டு பிற நாட்டாரின் நலன்களை உறுத்தி வந்த ஒரு இயக்கம் எனும் கருத்தும்பலதரப்பட்ட அர சியல் வாதிகளிடம், பிரதானமாக மலை நாட்டுச் சிங்கள மக்களிடம் நிலை கொண் டுள்ளது. ஆங்கிலேய ஆதிக்கத்தினில் மலை தாட்டுச் சிங்கள மக்கள் பெரிதும் பொரு ளாதார தாக்கத்துக்கு உள்ளானர்கள் எனும் கருத்துக்கியைய இன்று மலை நாட் டுப் பகுதிகளில் தேயிலைக்குள்ளான நிலப்பரப்பினை விஸ்தரிக்கும் தன்மை காணப்படாதிருப்பதுடன் ஏ ற் கன வே தே யி லைக் கு ஸ் ள |ா ன நிலப்பரப்பினைப் பகிர்ந்து அப்பகுதி மக்களுக்கே திரும்பவும் வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தும் தலை நோக்கியுள்ளது; எனவே, நிலச் சீர மைப்புத் திட்டத்தின் கீழ் சகல பெருந் தோட்டங்களும் பொதுவுடமை யாக்கப் பட்டு, பெருந் தோட்டங்களில் பல சிறு சிறு துண்டுகளாகப் பகிரப்பட்டு பூர்வீக மக்களுக்குத் திரும்ப வழங்கப்பட்டு வரு வது இன்று நிலவும் தன்மை, இம் முயற்சி கள் எத்தகைய பொருளாதார நன்மை தீமைகளை வழங்கும் வாய்ப்புக்களை கொண் டுள்ளனவென்று இதுவரை எவரும் ஆராய வில்லை, அதாவது சுருங்க கூறின் இம்முயற் சிகள் அரசாங்க எண்ணக் கருத்துக்களுக்கு ஒப்பனவாகத் திகழ்வதாயினும், 1999 அளவில் 600 மில்லியன் இருத்தல்களை 200,000 ஏக்கர் நிலத்திலிருந்து பெறும் வாய்ப்பினை எத்தூரம் கொண்டுள்ளனவோ என்று கூறுவது கடினமாகும். இன்றைய திலைமையை நோக்குமிடத்து அந்த நோக் கினை இலங்கை அடைவது அசாத்தியமென ாைம். இவ்வாறன நிலைமையிலும் இலங்கை தேயிலை சம்பந்தமாக தான் முன் கொண் டிருந்த உலக நிலையை சிறிது காலம் வைத் திருக்கும் சந்தர்ப்பம் உண்டு எனலாம் உலகச் சந்தையில் தேயிலைக்கான விலைகள் வீழ்ச்சி கொள்வதற்கு வழங்கல் கேள்விக்கு மேலதிகமாக இருப்பதே காரணமென்று வர்த்தக வட்டாரங்கள் நிலையுறுத்த முயல்
4 س--

க. சுந்தரலிங்கம்
கின்றன. ஆயினும், ஏற்கனவே தேயிலை உற்பத்தியில் விசேடத்துவம் கொண்ட நாடுகளான இலங்கையும், இந்தியாவும் தத்தம் கோட்டாக்களை நிவர்த்தி செய்யா திருக்கும் அதே வேளையில் புதிய நாடுகள் (பிரதானமாக ஆபிரிக்காகக் கண்டத்தில்) தம் தேயிலைக்கான நிலப்பரப்பினை விஸ் தரிப்பதற்கு உலக வர்த்தக சம்மேளனங் கள் தம் சொந்தக் காரணங்களைக் கொண்டு ஊக்குவிக்கின்றன. பொதுவாக உலகத் தின் தேயிலைக்கான கேள்வி, மறு போட் டிப் பொருட்கள் இருக்கும் நியதியில் தாழ் வாக இருப்பதற்கு காரணமுண்டு எனலாம். ஆயினும் செல்வந்த நாடுகளில் இதுகாறும் தேயிலைக்கென செலவழித்து வந்த தலாவீத வருமானம் கடந்த சில வருடங்களில் குறை யுறுவதை காண ஏதுவாகிறது. இதே போக்கு எதிர்வரும் காலங்களிலும், இருக்குமென்று கூறமுடியாதெனினும் பொதுவாக தலாவருமான வளர்ச்சி ஏற் படும் நியதியில் கூடுதலான பங்கை தணிப் பட்ட ஒவ்வொரு மேற்கத்திய நாட்டு தேயிலை நுகர்வோரும் செலவு செய்யக் கூடுமென்றும் எதிர்பார்க்கலாம். உண்ம்ை யில் இன்று தேயிலைக்கான இடர்கள் ஏற்கனவே தேயில் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து வருவதற்கெதிராக பிற சம்மேளனங்களின் வாயிலாக வருவதை உணரலாம். உதாரணமாக உலக வங்கி 1972ஆம் ஆண்டுவரை இந்தோனேசியா, கீனியா, மொறிஷியஸ், தன்சாளியா, உகண்டா ஆகிய நாடுகளுக்கு 44.5 மில்லி யன் அமெரிக்க டொலர்களை உதவி மூலம் வழங்கியது. இத் தொகை முழுவதும் தேயிலையின் உற்பத்தி விஸ்தரிப்புக்கே யாகும். உலக வங்கியே இவ் வழிவகைகளை மேற் கொள்ளுமிடத்து தனிப்பட்ட நாடு கள் எவ்வாறு தம் சொந்த நலன்களை அர்ப் பணித்து பொது நலன்களுக்காகப் பாடு பட முடியுமென்று கேட்கலாம்.
1973-74இல் இலங்கையின் உண்மை யான ஏற்றுமதித் தொகை அதற்கென ஒதுக்கப்பட்ட கோட்டாத் தொகையின் 92% ஆகும். 1974/75இல் இலங்கையின் கோட்டா 214,000 தொன் னில் இருந்து 210,000 ஆகக் குறைக்கப்பட்டு, பின்னர் 1975/76இல் 215,000 தொன் ஆக உயர்த் தப்பட்டது. அதாவது, இலங்கை தனக் கென்று ஒதுக்கப்பட்ட கோட்டாவிலும்
5 -

Page 70
தேயிலையும் இலங்கையின்.
குறைவான தொகையையே ஏற்றுமதி செய் துள்ளது. இவ்வாருன நிலை  ைம யி ல் இலங்கை மேலும் தேயிலையின் உற்பத் தியை எதிர்வரும் வருடங்களில் விஸ்தரிக்க முடியுமாயினும் அத்தன்1ை6 இடம் பெறும் சந்தர்ப்பம் இல்லையென்பது முன் காட்டப் . ட்டுள்ளது.
யூன் 1974இல் உலக விவசாய சம்மேள னத்தின் (FAO) கீழ் தேயிலை ஏற்றுமதி யாளர்களைக் கொண்ட ஏழாம் டகோ நாட் டில் தீர்மானம் செய்யப்பட்ட பிரகாரம் இலங்கை தனக்கென ஒதுக்கப்பட்ட கோட்டா"வை ஏற்றுமதி செய்யமுடியாது இருந்ததென முன் குறிப்பிட்டதையடுத்து கூடுதலான உற்பத்தியை இலங்கை மேற் கொள்ளலாம் எனும் அபிப் பிராயம் இடம் கொண்டிருந்ததெனினும், அவ்வ ரு சை தன்மை நிலவுவது கடினமாகத் தோன்று கின்றது.
கூடுதலான தேயிலையை இலங்கை உற் பத்திசெய்து, ஏற்றுமதி செய்வதாயின், பிரதானமாக, ஆபிரிக்க நாடுகளின் தொழிற்திறனைப் போன்ற திறன் இங்கு அவசியமாகும். தொழிற்திறன் 6 T gğ)I மிடத்து முக்கியமாக தேயிலைக்கான உற் பததிச் செலவையே அது குறிக்கின்றது. இலங்கையின் உற்பத்திச் செலவு இது கா றும் அலகுக் கணிப்பில் தாழ்ந்ததாக இருந்ததுமல்லாது உயர்ந்த தரத் தேயிலை யும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றைய சூழ்நிலைகளை நோக்குமிடத்து அலகுக் கணிப் பில் உற்பத்திச்செலவு அதிகரித்துள்ளது; அதாவது, இலங்கைக்குப் போட்டியாகக் காணப்படும் நாடுகளில் நிலவும் உற்பத் திச்செலவிலும் பார்க்க அதிகரிப்பாக இருக்கின்றது. அந்நிலையில் எவரும் தாழ்ந்த விலைக்குள்ளான தேயிலையையே நாடு வர் என்பது ஏற் கப்பாலது. அதுவல்லாது, கூடிய தரம் கொண்ட தேயிலைக்குக் கூடுத லான விலையைக் கொடுக்க முன்வருபவரும் தரம் குறைவுறும் நியதியில் அப்பொருளை நாடுவது கடினம் என்பதும் நியாயமே. இத்தன்மைகள் இரண்டும் இலங்கைத் தேயிலையின் ஏற்றுமதி வியாபாரத்தைப் பெருமளவில் பாதிக்கவல்லன.
இன்றைய நிலையில் ஆபிரிக்க நாடுகள் இலங்கைத் தேயிலையின் ஏற்றுமதித் துறைக்குப் பெருமளவு போட்டியை வழங்கு வனவாகும். மேலும், அந்நாடுகளில் தேயி
m 4

க. சுந்தரலிங்கம்
லையை உற்பத்தி செய்வதற்கான சலுகை களை மேற்கத்திய நாடுகளில் தேயிலையைக் கொள்ளும் கம்பணிகள் வழங்குவதுடன் அந்நாடுகளின் தேயிலைக்குச் சாதகமான விளம்பரப்படுத்துதலேயும், பெரிதளவில் அவை மேற்கொண்டும் விஸ்தரித்துமுள் ளன பொதுவாக, அந்நாடுகளில் தேயிலைத் துறையில் ஈடுகொண்டுள்ள கம்பனிகள் இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடு களிலிருந்தும் வெளியேறியனவாகும் , தம் செல்வாக்கு இந்நாடுகளில் குறைவடை வதை உணர்ந்து தம் மூலதனத்தையும் அத்துடன் தம் அநுபவத்தையும் சேர்த்து எடுத்துச்சென்று தம் சொந்த அக் கறை களே அந்நாடுகளில் நிலைநாட்டும நோக் கத்தை அவை கொண்டன . அக் கம்பனி களுடன் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேயிலை கொள்ளும் பெரும் வியாபாரச் சம்மேளனங்களும் தம் சொந்த நலன்களை (மன் வைத்து ஆபிரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் தேயிலைகளுக்கு கூடிய விற்பன வசதிகளை ஈட்டுவதும் புலனுகும்.
இலங்கைத் தேயிலே க்கு மரபுவாய்ந்த கேள்வி அமைப்பு எங்கு இதுகாறும் இருந் ததோ அத்தன்மை இன்றைய நிலையில் தவிர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக, இங் கிலாந்தில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி அமைப்பு பெரிதும் தாழ்வுற்றுள் ளது. 1960 அளவில் இலங்கை, இங்கி லாந்துக்கு ஏறக்குறைய சராசரி வருடம் ஒன்றுக்கு 78,500 தொன் தேயிலையை ஏற்றுமதி செய்தவிடத்தில் 1971 - 73 வரு டங்களில் சராசரி 37,700 தொன் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது, 1960 அளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதித்தொகை யில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதியான தொகை 36.9%. 1970-73இல் அப்பங்கு விகிதம் 19.0 மட்டுமே. அவ்வாரு ன வீழ்ச் சிக்குப் பல காரணங்கள் காணப்பட்டன,
(1) முன்னர் இலண்டனில் ஏலத்திற்காக விடுத்த தேயிலைத் தொகை அண்மை யில் கொழும்பு ஏலத்திற்கு விடுக்கப் பட்டுள்ளது. இலண்டனில் தேயிலை பைக்கொள்ளும் வியாபாரிகளுக்கு கொழும்பு ஏலத்தில் தேயிலைகொள் வது கூடிய செலவைக் கொடுக்கும்.
(2) கிழக்காபிரிக்கத் தேயிலை இலண்ட னுக்கு ஏற்றுமதியாவதற்கு போக்கு வரத்துச்செலவு குறைவு; எனவே விலையும் குறைவு.

Page 71
தேயிலையும் இலங்கையின் w
(3) இலங்கைத் தேயிலைகளின் தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள அதே நேரத் தில் ஆபிரிக்கத் தேயிலைகளின் தரம் முன்னேற்றம் கொண்டுள்ளது.
(4) 'சிலோன்’ என்று இருந்த பெயரை பூரீலங்கா என்று மாற்றியது சிறு இடர்களை இலங்கைத் தேயிலைக் குக் கொணர்ந்துள்ளது.
(5) இங்கிலாந்தில் தேயிலையின் தலா நுகர்ச்சியும் தாழ்வு கொண்டுள்ளது. 1966இல் 8.83 இருத்தலாக விருந்த தலா நுகர்ச்சியளவு, 1973இல் 7.76 இருத்தல்களாக வீழ்ச்சியுற்றுள்ளது. அதாவது ஏறக்குறைய 50 மில்லியன் இருத்தல்களால் இங்கி லா ந் து க் கேள்வி குறைவுற்றுள்ளது.
(6) இலங்கையும் இங்கிலாந்துச் சந்தை யில் முன்னேயது போன்ற அக்கறை யும் ஆர்வமும் காட்டாது புதிய சந்தைகளை நாடியுள்ளது. இலங் கைத் தேயிலைக்கான கேள்வி மத்திய கிழக்கு நாடுகளிலேயே பெருமளவில் விஸ்தரிப்புக் கொண்டுள்ளது. 196365இல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியான வருடாந்த சராசரித் தொகை 40,900 தொன்.1971-73இல் அத்தொகை 64100 தொன்களாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியான தொகை அதே கால அளவுக்கிடையே 200 தொன்களிலிருந்து 2,900 தொன்களாக உயர்த்தி கொண்டுள் ளது.
இங்கிலாந்துச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்றே மற்றும் மரபு வாய்ந்த ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள் ான, கனடா, ஐக்கிய அமெரிக்கா சேர் வாக 1963-65 வருடங்களில் இறக்குமதி செய்த வருடாந்த சராசரியான தொகை 28400 தொன்களிலிருந்து 1971-73 வருடங் களில் 24 300 தொன்களாகக் குறைவுற்
* சிறிய விளக்கு அதிக தொலைவி, நற்செயல்கள் சிறிதாயினும் பல

க, சுந்தரலிங்கம்
றுள்ளது. அவுஸ்திரேலியாவின் பங்கும் அதே வருடகாலங்களுள் 24900 தொன் களிலிருந்து 18000 தொன்களுக்குத் தாழ் வுற்றுள்ளது.
இவ்வாருண பாதகமான நிலைமைக்கெ திராக இலங்கைத் தேயிலைக்கு நில நெய் உற்பத்திச் செய்யும் புதிய செல்வந்தரான நாடுகளில் கேள்வி விஸ்தரித்துள்ளது. அந்நாடுகள் பெரும்பாலும் மத்தியகிழக்கு நாடுகளாகும். அந்நாடுகள் இலங்கைத் தேயிலையை விரும்புவதற்கு பொருளாதா ரக் காரணமல்லாது அரசியல் காரணமும் ஒன்று உண்டு. இலங்கை இஸ்ரவேலுடன் முன்கொண்டிருந்த அரசியல் தொடர்பை துண்டித்து அரபுநாடுகளுக்குச் சார்பான இராஜதந்திரக் கொள்கையை மேற்கொண் டுள்ளது ஒரு வகையில் இலங்கையின் தேயிலையை அந்நாடுகள் விரும்புவதற்கு அரு கதையாகக் காணப்பட்டது எனலாம். ஆனல், அதேவேளையில் இங்கிலாந்திலுள்ள இஸ்ரவேலுக்குச் சார்பான யூதர் கம் பணிகள் இலங்கைத் தேயிலையைப் புறக் கணித்து அதனிடத்தில் ஆபிரிக்க நாடுகளி லிருந்து இறக்குமதியாகும் தேயிலையை விரும்பச்செய்ததும் இலங்கையின் இஸ்ர வேலுக்கு எதிரான கொள்கையின் பிரதி பலிப்பு என்பதும் ஒரு அளவு ஏற்கப்பட ᎶᏍ [ ᎩᎥ Ꭰ .
நில நெய் உற்பத்தி செய்யும் நாடு களல்லாது, ஸ்கான்டினேவிய நாடுகளான நெதர்லாந்து, சுவீடன், போன்ற நாடுக ளுடன் ஆங்கிலம் பேசா முன்னேற்றமுறும் நாடுகளும் உண்டு அவ்வாருண் தன்ம்ை நிலவுவதாயினும் எதிர்காலத்தில் இலங் கையின் தேயிலை பெருமளவு போட்டிக் குள்ளாகும் என்பதில் ஐயமில்லை. போட் டியில் வெற்றிகொள்வதாயின் இலங்கை தன்து தேயிலையின் தரத்தினை உயர்த்தும் அதேவேளையில் உற்பத்திச் செலவையும் குறைப்பது அவசியம் ஆணுல், எதிர்வரும் காலத்தில் எத்தூரம் அவ்விரு தன்மை களும் இடம்பெறக்கூடும் என்பது ஒரு பெரும் கேள்விக்குறி.
ற்கு தன் ஒளியைக் காட்டுவதுபோல, ருக்கு அது நன்மையாயிருக்கும்.
- இயேசுநாதர்

Page 72
வணிகத்துறை மானவ
வித்தியோதய வளாகத்தினு வணிகப் பட்டதாரியாக sெ
இன்றே தொடர்பு கொள்ளுங்கள்:-
க. பொ. த. ப. உயர்தரப் பரீட்சை
34, U5)T55. 55
கல்வி போத
134, KAND JUNC
JAF
BRIG HITT

மணிகளே!
றுள் நுழைந்து நீங்களும் வளியேற விரும்புகிறீர்களா?
ந ைநிலையம்
தி யாழ்ப்பாணம்
gー
க்கு ஒரே வருடத்தில் தோற்றலாம்.
சிறப்புடன் மலர கின்றேம்
CENTRE
ARMADAM, TION,
FNA .

Page 73
இலங்கையில் வங்கித் ெ
பகுதி
இலங்கையில் 11 வர்த்தக வங்கிகள், 3 வங்கி நிறுவனங்கள் மற்றும் 338 கிரா மிய வங்கிகளும் இவைகளின் 109 கிளைக ளும் உள்ளன. இவைகளில் இலங்கை வங் கியானது அரசாங்கத்தின் உடமையாகவும் மக்கள் வங்கி அரசாங்கத்தினதும் கூட்டு றவு இயக்கத்தினதும் உடமையாகவும் உள்ளன. இரண்டு வங்கிகள் அவை யாவன ஹற்றன் நாஷனல் வங்கி, இலங்கை வர்த் தக வங்கி என்பன இலங்கையில் கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பனிச் சட்டத்திற் கிணங்க நிறுவப்பட்டு இலங்கையினரதும் அந்நிய வங்கிகளினதும் உடமையாக உள் ளன. ஏனைய ஏழு வங்கிகளும் அவையா வன சாட்டட் வங்கி, ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோர்ப்பறேசன், வரையறுக்கப்பட்ட ஹபீப் வங்கி, இந்தி பன் வங்கி, இந்தியன் ஒவசீஸ் வங்கி, கிறீன் லேஸ் வங்கி (வரையறுக்கப்பட்டது), ஸ்ரேற் பாங் ஒவ் இந்தியா என்பன வெளி நாட்டு வங்கிகளின் கிளைகளாகும். வங்கி நிறுவனங்கள் எனப்படுபவை அரசாங்கத் தினது கூட்டுத்தாபனங்களாக, குறிக்கப் பட்ட ஒருபகுதி வங்கித் தொழிலை ஆற்று வதன் பொருட்டு நிறுவப்பட்டனவாகும். அவையாவன தேசிய சேமிப்பு வங்கி, தேசிய ஈட்டு வங்கி, இலங்கைக் கைத் தொழில் கமத்தொழில் கடன்கொடு கூட் டுத்தாபனம் என்பனவாகும்.
இலங்கையில் வங்கித் தொழில் முறை யைப் பொறுத்த வரையில் தனியான ஒரு சட்டம் இல்லை. ஆகவே, வங்கி என்பதற்கு பலவிதமான கருத்துக்களைக் கொடுக்க முடியும். எனினும் இச்சொல்லை சட்டரீதி யாக ஆராயும் பொழுது கம்பனிச் சட்டம் "காசோலை உண்டியல் கட்டளை என்பவற் றின் மூலமாக திரும்பப் பெறுவதற்கு உட் பட்ட நடைமுறைக் கணக்கில் அல்லது வேறு விதத்தில் பண வைப்புக்களை ஏற் பதை தனது பிரதான தொழிலாக நடாத்
தும்’ ஒரு கம்பனியை வங்கித் தொழில்
- 4

தாழில்முறை
3. L' si sugà il suo A. I. B. (London) நேர விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்
கம்பனி" என வரைவிலக்கணம் கொடுக் கின்றது. ஆகவே வங்கித் தொழில் நடாத் தும் கம்பனியல்லாத ஒரு நிறுவனத்திற்கு இவ்வரைவிலக்கணம் பொருந்தாது. ஆனல் நாணயச் சட்டம் “வங்கி" என்ற சொல் லுக்கு வரைவிலக்கணம் கொடுக்காது இருந்தபொழுதும் "வங்கி நிறுவனம்" என் பதற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது.
வங்கி நிறுவனம் என்ருல்
1. வர்த்தக வங்கிகள்.
2. அரசாங்கத்தின் முகவராகவோ அல் லது வேறு எவ்வித நிறுவனமாகவோ இயங்கும் ஒரு நிறுவனமானது பொதுமக்களிடமிருந்து வைப்புக்க ளைப் பெற்ருே அல்லது முற்பணம் கடன் முதலியவற்றைக் கொடு த்தோ முதலீடுகளில் ஈடுபடும் ஒரு நிறுவனம்.
3. நிதி அமைச்சரினல் வங்கி நிறுவனம் எ ன ப் பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு நிறுவனம்.
இதே சட்டம் மேலே கொடுக்கப் பட்ட வரைவிலக்கணத்தில் காணப்படும் “வர்த்தகவங்கி’ என்பதற்குப்பின்வருமாறு வரைவில்க்கணம் கொடுத்துள்ளது:
தனிப்பட்ட ஒரு ஆள் அல்லது ஆட் களைக்கொண்ட ஒரு உறுப்பானது இலங்கையில் மத்திய வங்கி நீங்க லாக பொதுமக்களிடமிருந்து கேள்வி வைப்புக்களை ஏற்று அல்லது உரு வாக்கி தொழிற்படுமாயின் அது வர்த்தக வங்கியாகும்.

Page 74
இலங்கையில் வங்கித்.
இலங்கையில் வங்கி எனப்படும்பொ ழுது அது முக்கியமாக ஒரு வர்த்தக வங் கியையே குறிக்கும். எனினும் வர்த்தக வங்கியல்லாத நிறுவனங்கள் அரசாங்கத் தின் முகவராகவோ அல்லது அரசாங்கத் தினுல் நிறுவப்பட்டதாகவோ இருந்து அவை வைப்புக்களைப் பெற்ருே அல்லது கடன்களைக் கொடுத்தோ இருந்தால் அவை வங்கி நிறுவனங்களாகும். இவ்வாரு ன வங்கி நிறுவனங்கள் இலங்கையில் தேசிய சேமிப்பு வங்கி, தேசிய ஈட்டு வங்கி, இலங் கைக் கைத்தொழில் கமத் தொழில் கடன் சொடு கூட்டுத்தாபனம் ஆகியவையாகும். முன்னையது சேமிப்புக்களைத் திரட்டுவதை தனது முக்கிய குறிக்கோளாகக் கொண் டிருக்கும் பொழுது மற்றைய இரண்டும் குறிக்கப்பட்ட நோக்கங்களுக்கு கடன் கொடுப்பதை த மது குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
இலங்கையிலுள்ள வர் த் தக வங்கிக ளின் தொழில், செயல்முறைகளே இலங்கை மத் திய வங்கி ஒழுங்குபடுத்துகின்றது. இலங்கை மத்திய வங்கியானது இந்நாட்டி லுள்ள வங்கித் தொழில்முறையின் மைய மாகவுள்ள ஒரு நிறுவனமாகும். இலங்கை மத்திய வங்கியானது நாணயச் சட்டத் தின் கீழ் நிறுவப்பட்டு அதே சட்டத்தின் படி இயங்கி தனது அதிகாரங்களைப் பெறு கின்றது. இலங்கையிலுள்ள வங்கிகளின் தொழில் முறைக்கு மற்றைய சட்டங்கள் அனுசரணையாக இருந்தபோதிலும் அச்சட் டங்களிலுள்ள ஏற்பாடுகளுக்கும் நாணயச் சட்டத்திலுள்ள ஏற்ப்ாடுகளுக்கும் முரண் பாடு இருந்தால் நாணயச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படியே செயல்படுத்தப்படும்.
இலங்கையில் வங்கி களை நிறுவுவ தற்கோ அல்லது அவைகளின் செயல்களை நடாத்துவதற்கு அனுசரணையாகவுள்ள சட் டங்களோ ஒன்று திரட்டப்பட்டு ஒரு தனிச் சட்டம்ாகவில்லை. எச்சட்டங்களுக்கு அமைய வங்கிகள் நிறுவப்படுகின்றனவோ அச்சட் டங்களுக்கேற்றவாறும் அத்துடன் இத்தொ ழிலுக்கு அனுசரணையாகவுள்ள மற்றும் சட் டங்களைக் கொண்டுமே வங்கிகள் நிறுவப் பட்டு செயற்படுகின்றன. எனினும் புதிய வங்கிகள் நிறுவுவதிலும், வங்கிகளின் செயற் பாட்டின் மீதும் ஆதிக்க ம் செலுத்துவ தற்கு நிதியமைச்சும், இலங்கை மத்திய வங்கியும் பரவலான பல அதிகாரங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக நாணயச் சட்டத்தின் படி புதிதாக இலங்கையில் வங்
- 50

இ. பாலசிங்கம்
கிகளை நிறுவுவதற்கோ அல்லது இந்நாட் டில் இயங்கும் வங்கிகள் புதிய கிளைகளை அமைப்பதற்கோ நிதியமைச்சிடமிருந்து அனுமதி பெறவேண்டும். அத்துடன் புதிய வங்கிசள் இலங்சையரிடமிருந்தோ இலங் கையர் ஈடுபாடுள்ள நிறுவனங்களிடமி ருந்தோ வைப்புக்களைப் பெறுவதற்கு முன் 1961ஆம் ஆண்டின் நிதிச்சட்டம் இலக்கம் 65 (1968ஆம் ஆண்டு திருத்தம்) க்கு இணங்க இச்சட்டத்தின் ஏற்பாடுகளிலிருந்து தவிர்ப் புப் பெறவேண்டும். இவ்வாரு ன தவிர்ப்பு நிதி மந்திரியினல் நாணயச்சபையின் சிபார் சின் பேரில் கொடுக்கப்படும். இவ்வாருண தவிர்ப்பு வழங்கப்படும்பொழுது நாணயச் சபையானது அது விரும்பினுல் வரைய றைகளும் நிபந்தனைகளும் இடுவதற்கு உத் தரவாதம் பெற்றுள்ளது.
இலங்கை மத்திய வங்கி
பொருளாதாரக் கொள்கை தொடர் பாக அரசாங்கத்திஞல் எடுக்கப்பட்ட முக் கியமான தீர்ம்ானம் இலங்கை மத்திய வங் கியை நிறுவுவதாகும். இலங்கை மத்திய வங்கியை நிறுவுவதற்கான நாணய விதிச் சட்டம் 1949 இல் நிறைவேற்றப்பட்டு வங்கி 1950 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தொழிலாற்றத் தொடங்கியது. மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் பரந்த அடிப் படையில் நாணயவிதிச் சட்டத்தில் குறிக் கப்பட்டுள்ளன. மத்திய வங்கி முக்கிய ம்ாக இலங்கையின் நாணய, வங்கித் தொழில் முறைகளின் நிர்வாகம், ஒழுங்கு என்பவற்றுக்குப் பொறுப்பான மன்றமாக நிறுவப்பட்டது. አ'
ம த் திய வங்கி நிறுவப்பட்டதும், நாணய ஆணையாளர் சபையினல் நிருவ கிக்கப்பட்டு வந்த நாணய வழங்கலின் பழைய முறைக்குப் பதிலாக மத்திய வங்கி வழங்கல் இடம் பெற்றது. வர்த்தக வங்கி களின் தொழிற்பாடுகளையும் கொடுகடன் கொடுக்கக்கூடிய அளவினையும் ஒழுங்கு படுத்தி தனது கடமைகளை நிறைவேற்று வதற்கு மத்திய வங்கிக்கு பரந்த அளவி லான அதிகா ரங்கள் கொடுக்கப்பட் டுள்ளன.
நாணய விதிச்சட்டத்தின்படி மொத்த அளவு அல்லது எந்தவொரு குறிப்பிட்ட வகையான சொத்திற்கும் வர்த்தக வங்கி களின் மூலதனம் மிகையும் கொண்டிருக்க

Page 75
இலங்கையில் வங்கித்.
வேண்டிய ஆகக் குறைந்த வீதங்களைத் தீர் மாணிப்பதற்கு நாணயச் சபைக்கு அதிகா
வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியி டம் ஒதுக்குகளை வைத்திருக்கும்படி வேண் டப்படுகின்றன. வேண்டப்படும் இவ்வொ துக்குகள் வைப்புப் பொறுப்புக்களின் அள விற்கு விகிதாசாரமாகக் குறிக்கப்படும். தவனே சேமிப்பு வைப்புக்களைப் பொறுத் தவரை ஐந்து சதவீதத்திற்கு குறையாம லும் இருபது சதவீதத்திற்கு மேற்படாம தும் உள்ள வேளைகளிலும் கேள்வி வைப் புக்களையும் மேலதிகப் பற்று வரையறை பின் பாவிக்கப்படாத நிலுவைகளையும் பொறுத்தவரை பத்து சதவீதத்திற்குக் குறையாமலும் நாற்பது சதவீதத்திற்குக் கடாமலும் உள்ள வேளை களிலும் நான audi F6)u (Monetary Board) g)6i G)6urg die) வீதங்களை வேறுபடுத்துவுதற்கு அனுமதிக் கப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்ட நியதிகளுக்கு ஏற்ப வர்த்தக வங்கிகள் இலங்கை மத்திய வங் கியிடம் தமது கேள்வி வைப்புக்களில் 12 சதவீதமான ஒதுக் கினை யும் தவணை, சேமிப்பு வைப்புக்களில் 5 சதவீதமான முதுக்கினையும் வைத்திருக்கும்படி வேண்டப் படுகின்றன. இவ்வாருன ஒதுக்குத் தேவை களுடன் எந்தவகையான வைப்புப் பொறுப் புக்களிலும் குறிக்கப்பட்ட காலத்தில் ஏற் படும் அதிகரிப்பில் அதன் 100 சதவீதத் நிற்கு மேற்படாமல் சிறப்பான உயர்ந்த ஒதுக்கு வீதத்தை விதிப்பதற்கு நாணய விதிச்சட்டத்தின் படி நாணயசபை அதிகா ரம் பெற்றுள்ளது. இவ்வொழுங்கின்படி வர்த்தக வங்கிகள் (1961இல் நிறுவப்பட்ட மக்கள் வங்கி நீங்கலாக) 10-2-61இலிருந்து 1-2-61இல் தமது தொழில் மூடும்போது இருந்து கேள்வி வைப்புக்களின் மட்டத் திற்கு மேலாக ஏற்பட்டுள்ள அதிகரிப்பில் 38 சதவீத அளவான சிறப்பு ஒதுக்கை வைத்திருக்கும்படி வேண்டப்படுகின்றது. 18-6-65இல் இருந்து மக்கள் வங்கியானது 9-6-65இல் தமது தொழில் மூடும்போது
51

இருந்த கேள்வி வைப்புக்களின் மட்டத் திற்கு மேலாக ஏற்பட்டுள்ள அதிகரிப்பில் 28 சதவீதத்தை சிறப்பு ஒதுக்காக வைத் திருக்கும்படி வேண்டப்படுகின்றது. 1961 ஐ லையிலிருந்து வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியிடம் தமது ஒதுக்கில் ஒரு பகுதியை தம்மிடம் பணமாகவும் ஒரு பகுதியை மத் திய வங்கியிடம் வைப்பாகவும் வைத்தி ருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வங்கிகள் பல்வகையான வைப்புக்கள் மீது செலுத்தவேண்டிய வட்டி வீதங்கள், முற்பணங்கள் மீது அறவிடப் படும் வட்டிவீதங்கள் என்பனவற்றின் ஆகக் கூடிய வீதத்தை நிர்ணயிப்பதற்கு நாணய சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட் டுள்ளது. எனினும் வழமையாக வட்டி வீதங்கள் அவ்வவ் வங்கிகளினுலேயே குறிக் கப்படுகின்றன. ஆஞல் அவ்வாருன வட்டி வீதங்கள் மத்திய வங்கி வர்த்தக வங்கிக ளுக்கு முற்பணங்கள் வழங்கும் வீதமாகிய **வங்கி வீதத்தின்' செல்வாக்கிற்கு உட் பட்டே இருக்கின்றன. வங்கிகளின் கட் டணங்களாகிய வட்டிவீதங்கள், பணிக்கட் டணங்கள், செலாவணி வீதங்கள் என்பன வற்றை நிர்ணயிக்கையில் வர்த்தகவங்கி கள் ஒழுங்கான ஒரு முறையையே பின் பற்றுகின்றன.
இலங்கையில் அந்நிய செலாவண்ணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி அந்நிய செலாவணி நடவடிக்கைகளில் ஈடுபடுவ தற்கு முள் வர்த்தக வங்கிகள் நிதி அமைச்சரிடமிருந்து அதிகாரம் பெறவேண் டியிருக்கின்றது. இவ்வாருண் தொழிற் பாடுகள் மத்திய வங்கியினலேயே செயல் படுத்தப்படுகின்றது. ஆகவே அந்நிய செலாவணி நடவடிக்கைகளில் ஈடுபடுவ தற்கு அதிகாரம் பெற்றுள்ள வர்த்தக வங்கிகள் மத்திய வங்கியின் கட்டுப்பாட் டிற்கிணங்கவே இத்தொழிலையும் நடாத்து கின்றன −
நாணயச்சட்டத்தின்படி எல்லா வங்கி நிறுவனங்களும் மத்திய வங்கியினல் மேற் பார்வை செப்பப்பட்டு காலத்திற்கு

Page 76
இலங்கையில் வங்கித்.
காலம் பரிசோதிக்கப்படுகின்றன, இம் முறையானது பொதுமக்களின் பணத்தை வைப்பாக பெறும் வங்கிகள் அவ்வைப்புக் களே திரும்பச் செலுத்தக்கூடிய தன்மை யில் தம் தொழில் நடாத்துகின்றனவா என நிர்ணயிப்பதற்கே ஆகும். இதன் மூலம் மத்தியவங்கியானது வைப்பாளரின் நன்மையைக் கருதி அவர்கள் வங்கிகளில் வைப்புச் செய்த பணத்திற்கு ஒரளவு பாதுகாப்பை அளிப்பதற்கேயாகும். எந்த ஒரு வங்கியாவது கடன் தீர்க்க முடியாத அல்லது அதன் வைப்ப ளரின் கேள்விகளை நிறைவு செய்ய முடியாத நிலையில் இருப் பதை மத்திய வங்கியின் பரிசோதனை சுட் டிக்காட்டுமாயின் அத்தகைய வங்கியின் தெ7ழிலை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நாணய சபைக்கு அதிகாரம் உள்ளது. இவ் வாருக தொழில் நிறுத்தப்பட்ட ஒரு வங் கியின் வைப்பாளரது நலனே பாதுகாப்ப தற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய வங்கிக்கு பரந்த முறையிலான அதிகாரங்களை நாணயச் சட்டம் வழங்கி
யுள்ளது.
மத்திய வங்கியானது வர்த்தக வங்கிக ளுக்கான பணிகள் முழுவதையும் பொறுப் பேற்பதுடன் வெளிநாட்டு செலாவணிச் சந்தைகளில் தாட்டின் தேவைக்கேற்ப நாளாந்த தொழிற்பாடுகளையும் கையாளு கின்றது. அத்துடன் வர்த்தக வங்கிகளு டன் நெருங்கிய தொடர் டையும் வைத் திருக்கின்றது. மத்திய வங்கி தனி வாடிக் கையாளர் எவரினதும் கணக்குகள் எதனை யும் வைத்திருக்காதபடியாலும் அந்நிய செலாவணி நடவடிக்கைகளை வர்த்தக வங்கிகளுக்கூடாக செயற்படுத்துவதாலும் பொதுமக்களுக்கும் அதற்கும் a sit 6st தொடர்பு மிகச் சிறிதேயாகும். நாண யத்தாள்களையும் குத்தி நாணயங்களையும் வழங்குவதுடன் மத்திய வங்கி சுற்ருேட் டத்திலுள்ள பழைய நாணயத்தாள்களை மீளப்பெற்று அவற்றுக்குப் பதிலாக புதிய த7 ஸ் களை ;ேழங்குவதையும் கூடிய தொகை யாய் உள்ள நாள்ை யத்தாள்களுக்கு குறைந்த
A.

இ. பாலசிங்கம்
தாள்களையும் குத்தி நாணயங்களையும் வழங்குவதையும் தனது தொழிலாகவும் கொண்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வங்கிகளின் வங்கியாகச் செயற்பட்டு எல்லா வர்த்தக வங்கிகளும் கணக்கு வைத்திருப்பதற்கு வசதி அளித்துள்ளது. வர்த்தக வங்கி களுக்கிடையிலான தீர்ப்பனவு வேலையை யும் தீர்ப்பனவு இல்லத்தின் மூலமாக நடாத்துகின்றது. வங்கிகளுக்கிடையிலான தீர்ப்பனவு இவ்வில்லத்தில் ஒரு நாளுக்கு இரண்டுமுறை நடைபெறுகின்றது.
மத்திய வங்கி வெளிநாட்டு இருபுடை வர்த்தகக் கணக்குகளையும் பேணுகின்றது. அத்துடன் உடன் முன்மாற்று முறைகளில் ஸ்ரேலிங் பவுண், ஐக்கிய அமெரிக்க டொலர், இந்திய ரூபாய் என்பவற்றின் வெளிநாட்டுச் செலாவணியின் கொள்வ னவுவிற்பனைவுகளிலும் ஈடுபடுகின்றது.இவ் வாருன கொடுக்கல் வாங்கல்கள் வர்த்தக வங்கிகள், அரசாங்கம், அரசாங்க முகவர் நிலையங்கள் என்பனவற்றின் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கியானது குறிக் கப்பட்ட நோக்கங்களுக்காக வர்த்தக வங் கிகளிஞல் வழங்கப்படும் கடன்களுக்கு எதிராக மீளநிதியிடலிலும் ஈடுபடுகின்றது. முக்கியமாக கைத்தொழில் வேளாண்மை வர்த்தகம் - (ஏற்றுமதி இறக்குமதி) ஆகிய தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக வங்கி நிறுவனங்களுக்கு குறுகிய கால மீள நிதிக் கடன்களை வழங்குகின்றது. அத்து டன் நாட்டின் அபிவிருத்தி நோக்கங்
களுக்காக "கடன் நிறுவனங்களால்?" (வங்கி நிறுவனங்கள், அபிவிருத்திநிதிக் கூட்டுத்தாபனம்) மத்திய, நீண்டகால
மீள நிதிக் கடன்களையும் வழங்குகின்றது. அத்துடன் வங்கிகளுக்கு அரசாங்கப் பிணை கள் வங்கிகளின் வாக்குறுதிப் பத்திரங்கள் என்பனவற்றுக்கெதிராக முற்பணங்களை யும் வழங்குகின்றது.
2 -

Page 77
இலங்கையில் வங்கித்.
இலங்கை மத்தியவங்கி அரசாங்கத் தின் சார்பில் குறுகியகால பயிர்ச்செய்கை கடன் திட்டத்தை அமுல்படுத்துவதுடன் அவ்வாருன கடன்களை வழங்கும் வங்கிக ளுக்கு மீளநிதி கடன்களை வழங்கியும் அர சாங்கத்தின் சார்பில் 75 சதவீதத்திற்கான உத்தரவாதத்தையும் அளிக்கின்றது,
அரசாங்கத்தின் வெளிநாட்டு உரிமைச் சான்றிதல் திட்டத்தையும் இலங்கை மத் தியவங்கி நிருவகிக்கின்றது. குறிக்கப் பட்ட ஏற்றுமதிகள் வருமதிகள் முதலிய வற்றுக்காகவும் இறக்குமதிகள் அந்நிய செலுத்துமதிகள் என்பவற்றுக்கெதிராக ஷம் இவ்வாருன சான்றிதழ்களை வழங்கி அவற்றின் மீதான செலுத்துமதிகளை செலுத்தியும் வருமதிகளைப் பெற்றும் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றது.
5T GOTussau (Monetary Board)
மத்திய வங்கியை உருவாக்கும் நாணய விதிச்சட்டம் நாணயசபைக்கு மத்திய வங் கியை இயக்கும் அதிகாரங்களையும் வங்கி நிறுவனங்களின் செயல்முறையின்மீது நட வடிக்கைகள் எடுப்பதற்கான அதிகாரங் களையும் வழங்கியுள்ளது. இதே சட்டம் இலங்கை மத்திய வங்கியின் முகாமை, செயற்பாடுகள், நிருவாகம் என்பவற்றுக் கும் பொறுப்பை வழங்கியுள்ளது. நாணய சபையின் செயற்பாடுகள் மத்தியவங்கி பின் முகாம்ை, வங்கி நிறுவனங்களின் மீதான அதிகாரம் மட்டுமன்றி தேசிய பொருளாதாரம் சம்பந்தமான பிரச்சினை களுக்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவதற்கும் சட்டரீதியாக வேண்டப்பட் டிருக்கின்றது.
வர்த்தக வங்கித் தொழில் முறை
இலங்கையில்வர்த்தக வங்கித் தொழில் முறையானது ஆரம்ப காலத்தில் பிரித் தானிய, இந்திய வங்கிகளின் கிளைக னினு லேயே வழங்கப்பட்டது. இவ்வா 3ன வெளிநாட்டு வங்கிகளின் கிளை

இ. பாலசிங்கம்
கள் இந்நாட்டின் பொருளாதாரத்தின்
குறிக்கப்பட்ட சி ல துறைகளுக்கு மாத்திரமே பணியாற்றியதுடன் எவ் வெவ் விடங்களில் அத் தொழில்
முயற்சிகள் நிறுவப்பட்டிருந்தனவோ அந் நகரங்களிலேயே தம் கிளைகளையும் வைத் திருக்கும் நோக்கினைக் கொண்டிருந்தன. உதாரணமாக பிரித்தானிய வங்கிகள் இந் நாட்டிலுள்ள பெருந் தோட்டத் தொழி லில் ஈடுபட்டிருந்த பிரித்தானியருக்கோ பிரித்தானிய நிறுவனங்களுக்கோ பணி செய்யும் தொழிலினையே தமது முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தன. அதே போல இந்தியவங்கிகளின் கிளைகளும் இந்நா ட்டில் இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டி லிருந்த இந்திய வியாபாரிகளுக்கே முக்கிய மாக தமது சேவைகளை அளிக்கும் நோக் கினையும் கொண்டிருந்தன. எனவே இவ் வாருண் வங்கிகள் உள்நாட்டு மக்களுடன் கூடுதலான தொடர்பைக் கொண்டிருக்கத் தவறின அல்லது முயற்சி செய்யாதிருந்தன.
1930ஆம் ஆண்டுகளின் முற் பகுதியில் இந் நாட்டு மக்களாலேயே நிறுவப்பட்ட ஒரு தேசிய வங்கி அமைக்கப்பட வேண்டு மென்ற ஒரு கிளர்ச்சி இருந்தது. இதற் கிணங்க 1934ஆம் ஆண்டில் ஒரு வங்கி ஆணைக் குழு நியமிக்கப்பட்டது. இவ் வானைக்குழுவின் விதந்துரைப்புக்களின் விளைவாகவே சட்டரீதியாக இலங்கை வங்கி நிறுவப்பட்டது. இவ்வங்கி 1939ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் நாள் தனது தொழிலைத் தொடங்கியது. இவ் வங்கியினல் வழங்கப்பட்ட பங்குமுதலா னவை அரசாங்கத்தினதும் பொதுமக்களி னதும் உடமையாகும். எனினும் 1961ஆம் ஆண்டு இலங்கை வங்கி நாட்டுடைமை யாக்கப்பட்டு அரசாங்கம் அதன் தனி யுரிமையாளராக வந்தது. இலங்கை வங்கி நாட்டுடைமையாக்கப்பட்டதுடன் வங்கித் தொழில் முறையில் இந் நாட்டில் மேலும் பல அபிவிருத்திகள் இடம் பெற்றன. இலங்கை வங்கி நாட்டுடைமை ஆக்கப் பட்ட அதே ஆண்டில் நாடாளுமன்ற சட் டத்தினுல் கூட்டுறவு இயக்கத்தின் உச்சி வங்கியாக மக்கள் வங்கி நிறுவப்பட்டது.
53 -

Page 78
இலங்கையில் வங்கித்.
மக்கள் வங்கியானது அரசாங்கத்தினதும் கூட்டுறவு இயக்கத்தினதும் உடமையாக நிறுவப்பட்டது. மக்கள் வங்கி அது நிறுவப் பட்டபோது இலங்கைக் கூ ட் டு ற வு இணைப்பு வங்கியினதும் மக்கள் வங்கியுடன் இணைய விரும்பிய பல கூட்டுறவு மாகாண ! மாவட்ட வங்கிகளின் தும் சொத்துக்களை யும் பொறுப்புக்களையும் பொறுப்பேற்றது. அத்தகைய ஏனைய ஆறு கூட்டுறவு வங்கி கள் 1971ஆம் ஆண்டு மக்கள் வங்கியினுல் உரிமையாக்கப்பட்டன. மக்கள் வங்கியை நிறுவிய சட்டம் வழமையான வர்த்தக வங்கித் தொழில்களை நடாத்தும் சக்தியை யும் அத்துடன் சில சிறப்புத் துறையான நடவடிக்கைகளை மேற் கொள்வதற் கான சக்தியையும் ஏற்படுத்திக் கொடுத் தது. மக்கள் வங்கியானது 'கூட்டுறவுச் சங் கங்கள், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், பயிர்ச் செய்கைக் குழுக்கள், ஏனைய ஆட் கள் ஆகியோருக்கு நிதி மற்றும் சேவை களை வழங்குவதன் மூலம் இலங்கையில் கூட் டுறவு இயக்கம், கிராமிய வங்கித்தொழில், வேளாண்மைக் கொடுகடன் என்பவற்றை அபிவிருத்தியடையச் செய்வதே வங்கியின் நோக்கங்களாகும்’ என அதை நிறு வி ய சட்டம் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. இதற்கிணங்க மக்கள் வங்கியானது கிரா மிய வங்கிகளினுTடாக வங்கித் தொழில் வசதிகளை வழங்குகின்றது. அத்துடன் மக் கள் வங்கியானது நகை அடைவு பிடிக்கும் தொழில் நடத்தும் தனியுரிமையைப் பெற் றுள்ள ஒரு வங்கியாகும். இத் தொழிலையும் மக்கள் வங்கி கிராமிய வங்கிகளினூடாக வும் நடத்துகின்றது. கிராமிய வங்கிகள் ஆரம்ப கூட்டுறவுச் சங்கங்களின் உப பிரிவு களாக இருப்பதுடன் அவை கேள்வி வைப் புக்களைப் பெறுவதில்லை ஆகவே நாணயச் சட்டத்தின்படி இவ்வங்கிகள் "வங்கி நிறு வனங்களாகக் கருதப்படுவதில்லை’ எனவே இவ்வங்கிகள் வர்த்தக வங்கிகளும் அல்ல.
வர்த்தக வங்கித் தொழில் வளர்ச்சி
இலங்கையின் பொருளாதார வளர்ச் சிக்கேற்ப ஒரு வர்த்தக வங்கி இலங்கையில்

இ. பாலசிங்கம்
நிறுவப்பட வேண்டுமென்ற கிளர்ச்சிக் கிணங்க இலங்கை வங்கி நிறுவப்பட்டி ருந்த பொழுதிலும் வங்கி வளர்ச்சியானது முக்கியமாக பரந்த அடிப்படையிலான கிளைகளை நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நிறுவி வளர்ச்சியேற்பட்டதனை 1961ஆம் ஆண்டிற்குப் பின்பே காணக் கூடியல்ாக இருக்கின்றது.
1960ஆம் ஆண்டு முடிவில் மொத்த மாக 45 வங்கி அலுவலகங்களே இலங்கை யில் இருந்தன. 1965 முடிவில் 97 வங்கி அலுவலகங்களும் 1970ஆம் ஆண்டு முடி வில் 156 வங்கி அலுவலகங்களும் இருந் தன. 1960ஆம் ஆண்டிற்கும் 1970ஆம் ஆண்டிற்கும் இடையிலான வங்கி அலுவல கங்களின் அதிகரிப்பிற்கு மக்கள் விக்கி நிறுவியதே முக்கிய சாரணமாகும். மக்கள் வங்கி நிறுவியதன் பின்பு இலங்கை வங்கி யும் பட்டினப் பகுதிகளல்லாத பகுதிகளி லும் தமது அலுவலகங்களை நிறுவியது. எனினும் 1975 ஆம் ஆண்டு முடிவில் இலங் கையில் கிட்டத்தட்ட 600 வங்கி அலு வலகங்கள் இருந்தன. இவ்வதிகரிப்பு முக் கியமாக கமத்தொழில் சேவை நிலையங் sofi (Aggriculture Service Centres) இலங்கை வங்கியினல் நிறுவப்பட்ட அலு வலகங்களினலேயே ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு முடிவில் கமத்தொழில் சேவை நிலை யங்களில் நிறுவப்பட்ட இலங்கை வங்கிக் 3)&ı serfsir தொகை கிட்டத்தட்ட 300 ஆகும். இதே நேரத்தில் 1964ஆம் ஆண்டில் மக்கள் வங்கியின் ஊக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய வங்கிகளும் கூடிக்கொண்டே வந்து 1975ஆம் ஆண்டு முடிவில் 300க்கும் சற்று அதிகமாக இருக் கின்றன. இவ்வாருண கிராமிய வங்கிகளின் கிளைகளும் 100க்கு மேற்பட்டதாகும்.
இதே காலப் பகுதியில் வர்த்தக வங்கி களின் வைப்புத் தொகையும் அதிகரித்தே இருக்கின்றது. 1960ஆம் ஆண்டு முடிவில் 1057.1 மில்லியன்ரூபாவாகவிருந்தமொத்த வைப்புக்கள் வளர்ச்சியடைந்து 1965ஆம்
54 -

Page 79
இலங்கையில் வங்கித்.
ஆண்டு முடிவில் 1545 8 மில்லியன் ரூபா வாசு வளர்ந்து 1970ஆம் ஆண்டு முடிவில் 239 4.0 மில்லியன் ரூபாவாக இருந்தது. எனினும் 1975ஆம் ஆண்டு முடிவில் வர்த்தக வங்கிகளிடம் இருந்த மொத்த வைப்புத் தொகை 3610.5 மில்லியன் உருபாவாக வளர்ச்சியடைந்துள்ளது, இதே சாலப்பகுதியில் வர்த்தக வங்கிகளின் கொடுகடன் தொகையிலும் குறிக்கப்பட்ட வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு முடிவில் வர்த்தக வங்கிகளிஞல் வழங்கப் டட்ட கடன் தொகை 543 .9 மில்லியன் *ரு பாவாக இருந்தது, 1965 ஆம் ஆண்டு முடிவில் 850 2 மில்லியன் ரூபாவாக இருந்து 1970ஆம் ஆண்டு முடிவில் 1547, 7 மில்லியன் ரூபாவாக வளர்ச்சியடைதிருந் தது. எனினும் 1975ஆம் ஆண்டு முடிவில்
கற்பு என்ருல் வாழ்நாள் முழுவ என்று சொல்வார்கள். அது பழங்க காலத்தில் கைத்தொழில் வளர்ச்சி ட நெறியும் அதில் நம்பிக்கையும் இ தொழில் வேகமாக வளர்ந்து வருகி
மிகுதியாக உள்ள காலம் இது. ஆக
N
Tழும்படி நேரலாம். ஒருவனை விட தவறு. எப்போது எவனுடன் வா,
சய்யாமல் இருந்தால்போதும் அதுத

இ. பாலசிங்கம்
வர்த்தக வங்கிகளினல் வழங்கப்பட்டிருந்த கடன் தொகை 3533.0 மில்லியன் ரூபா வாக என்றுமில்லாத மிகையான வளர்ச்சி
யைக் கொண்டிருந்தது.
வர்த்தக வங்கிகளின் அலுவலகங்கள், வைப்புக்கள், வழங்கிய கடன் தொகை இம் மூன்றையும் நோக்கும் பொழுது 1960ஆம் ஆண்டுக்குப் பின்னர் வளர்ச்சி யில் காலத்திற்கு காலம் கூடிய வளர்ச்சி பெற்றிருப்பதைக் காணக் கூடியதாகவுள் ளது. இவ்வாரு ன வளர்ச்சி எந்தக் காரணி யைக் கொண்டு கணிக்கும் பொழுதும் 1970ஆம் ஆண்டிற்கும், 1975ஆம் ஆண்டிற் கும் இடைப்பட்ட காலத்திலேயே மிகை T6 வளர்ச்சியுற்று இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
pl.
தும் ஒருவன் ஒருத்தியாக வாழ்வது ாலத்திற்கு மிகப் பொருந்தும். பழங் மட்டும் இருந்தது. அப்பொழுது ஒரு ருந்தது. இந்த க்காலத்தில் இயந்திரத் றது. ஆராய்தலும் அனுபவித்தலும் வே ஒருவனை விட்டு இன்னுெருவனுடன் ாமல் இன்ஞெருவனுடன் வாழ்வதுதான் ழ்கின்ருளோ அவனுக்குத் துரோகஞ் ான் கற்பு.
- டாக்டர் மு. வரதராசன்

Page 80
ஸ்ரார் எலெ ★ அ ரேணிக
STAR ELECTRIC WELDE
233, ஸ்ரான்லி வீதி, Tele:
LurribùLIT 600Th.
இயந்திரங்களின் சக திருத்துவதற்கும்,
STAR A
uurp
Muneeswaran Electr முனிஸ்வரன் வெல்டிங்
31, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
கார், லொறி, டிராக்ரர், மெஷி அலுமீனியம், பீட்டா, மெ மின்சாரத்தினுல் நிர
31, ஸ்ரான் u_IrpüIIJ

நீறிக் வெல்டேஸ் '6i
வேக்ஸ்
RS & TURNING WORKS
7352 233, Stanley Road,
Jafna .
ல உதிரிப்பாகங்கள் இணக்குவதற்கும்
ஸ்ரார்
Dr Sorb
'ic Welding Works
எலெக்றிக் வேக்ஸ்
31, STANLEY ROAD, JAFFNA.
ன் வள்ளங்களுக்குரிய பித்தளை, ற்றல், ஆகிய உறுப்புக்கள் ப்பிக் கொடுக்கப்படும்.
ாலி ருேட்,
: Ergorrib.

Page 81
இலங்கையிற் கைத்தொழி
பொ
B.A. (Lond.), B.Com. Lond.) பகுதிநேர விரிவுை
ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் எமது அாடு விவசாய நாடாக இருந்தது. தேயிலை, இரப்பர், தென்னைப் பொருட்களை ஏற்று 2தி செய்து எமக்கு வேண்டிய கைத் தொழிற் பொருட்களை இறக்குமதி செய் தோம். கத்தி, மேசைக்கரண்டி, சவர்க் காரம், பவுடர், கைச்சட்டை முதலிய அற்ப சாதாரணப்பொருட்களைக்கூடப் பிற நாடுகளிலிருந்து வருவித்தோம். பொறித் தொழிற் பொருட்களுடன் போட்டியிட வியலாது, எமது நாட்டிலிருந்த நுண்பணித் தொழில்கள் அழிந்தன. நாட்டிற் கைத் தொழில்களை வளர்க்க வேண்டுமென்ற எண்ணமோ அக்கறையோ அரசாங்கத் துக்கு இருக்கவில்லை.
முதலாம் யுத்தத்தின் போது, கப்பற் போக்குவரத்தில்லாதபடியினுல் இறக்குமதி கள் தடைப்பட்டன. 1916இல் அரசாங் கம் கைத்தொழில் ஆணைக்குழு ஒன்றை நீயமித்தது. இக்குழுவின் அறிக்கை 1922 இல் அச்சிடப்பட்டது ஆராய்ச்சி, தனி அபார் துறைக்குப் புத்திமதி, இலங்கைப் பொருட்களை வெளிநாடுகளில் விளம்பரப் படுத்தல், கைத்தொழில் வளர்ச்சிக்கு அத் தியாவசியமான சமூக மேலமைப்புக்களை உருவாக்கல் முதலியவை மட்டுமே அர சாங்கத்தின் தொழில் எனவும், அரசாங் கம் கைத்தொழில்களில் நேராக ஈடுபடப் படாது எனவும் இலாபகரமானவையாயின் இத்தொழில்களைத் தனியார்துறை நிறு வளங்கள் தொடங்குவதற்கு அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டுமெனவும் இக்குழு சிபார்சு செய்தது. இக்குழுவின் அறிக்கைக்
- 5

i QJSTij
சங்கரப்பிள்ளை ), M. Sc.(Econ.) (Lond.), A. M. Ins. T. (Londo ரயாளர் - வித்தியோதய வளாகம்.
குப் பின்பு, ஒருசில காலம் பாராளுமன்றத் திலும், தினசரிகளிலும் இவ்விடயத்தைப் பற்றிப் பெரும் வாதங்கள் நடைபெற்றன. ஆனல், இறக்குமதிகள் மறுபடியும் வரத் தொடங்கிய பின், மக்கள் இப்பிரச்சினையை மறந்தனர்.
1931இல் இலங்கை ஒரளவு சுதந்திரம் பெற்றது. தொழிலாளர் பிரச்சினை, கைத் தொழில், வர்த்தகம் எனும் மூன்றிற்கும் ஒரு செயலாட்சிக் குழு நியமிக்கப்பட்டது. எனினும், கைத்தொழில் இவ்வமைச்சில் மிக அற்ப திணைக்களமாக இருந்தது. அர சாங்கம் சில முன்மாதிரித் தொழிற்சாலை களே நடத்தித் தனியார்துறைக்கு வழி கர்ட்ட வேண்டுமென முடிவு செய்யப்பட்ட போதிலும், பண நெருக்கடியினுல் இம் முடிவு செயற்படுத்தப்படவில்லை 1934இல் வெளிவந்த வங்கிக்குழு அறிக்கையும் இலங்கையிற் கைத்தொழில் வளர்ச்சியை வலியுறுத்தி இக் கருத்தை ஆதரித்தது. பற்பல முன்மாதிரித் தொழிற்சாலைகளை நிறுவ அரசாங்கம் 1938இல் திட்டமிட் டது. இரண்டாம் யுத்தத்தின்போது இறக்கு மதிகள் மறுபடியும் தடைபட்டன. பின் வரும் தொழிற்சாலைகளை அரசாங்கம் நிறு வித் தானே பொறுப்பேற்று நடத்திற்று:- புளிங்காடித்திரவம், மருந்து வகைகள், எஃகு, கண்ணுடி, தோற்பொருட்கள், மண் பாண்டப் பொருட்கள் இறக்குமதிகள் இல்லாதபடியினுலும், மக்கள் வருமானத் திலும் விலைகளிலும் அக்காலத்திலுண்டான வீக்கத்தினுலும் அரசாங்கம் இத்தொழில் களிலிருந்து பெரும் இலாபம் பெற்றது.

Page 82
இலங்கையிற் கைத்தொழில்.
ஆனல் யுத்தத்திற்குப் பின்பு இறக்குமதி கள் வரத் தொடங்கியவுடன் இவை நட்ட மடைந்தன.
கைத்தொழிற் கொள்கையில் ஏற் பட்ட முக்கிய மாற்றத்தைக் கவனிக்க வேண்டும். ஒரு தொழிலை அரசாங்கம் நேராக நடத்தப்படாது என்ற கருத்து இதுவரையும் இருந்துவந்தது. இக் கருத்தி ஞல் அரசாங்கம் யுத்தத்திற்குப் பின்பு சில யாக்கங்களைத் தனியார் துறைக்கு ஒப்படைக்கவும் எத்தனித்தது. அபிவிருத்தி யடையும் நாடுகளில் அடிப்படைக் கைத் தொழில்களை அரசாங்கம் நடத்தவேண்டும் என்ற கொள்கை 1946இல் ஏற்றுக்கொள் ளப்பட்டது. தொழில்கள் மூன்று தொகுதி களாக வகுக் கப்பட்டன.
(அ) பாரத் தொழில்களும் அடிப்படைத் தொழில்களும் - அரசாங்கத்துறை. இவை பெரும்பாலும் பெருவீதத் தொழில்களாகும். ஏனைய தொழில் களின் உள்ளிடுகளை உற்பத்தி செய் கின்றன.
(ஆ) அரசாங்கத்துறையும் தனியார்துறை யும் போட்டியிடும் தொழில்கள் - சப்பாத்து உற்பத்திஉதாரணமாகும்.
(இ) தனியார் துறைத் தொழில்கள், இவை பெரும்பாலும் பற்பல நுகர் வுப் பொருட்களை உற்பத்திசெய்யும் இலேசான தொழில் களாகும்.
ஆனல், இத்தொகுதிகளிலிடையில் வரம்புகள் திடமாக வரையறை செய்யப் படவில்லை, காலத்துக்குக் காலம் மாறு கின்றன.
இலங்கையிற் கைத்தொழில் வளர்ச் சிக்குப் பத்தாண்டுத்திட்டம் வழிவகுத்தது. நாட்டின் அபிவிருத்திக்குக் கைத்தொழில் வளர்ச்சி முக்கிய காரணம் என்பதை இது வலியுறுத்திற்று. 1960இற்குப் பின்புதான் இலங்கையில் உண்மையான கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. 1957ஆம் ஆண்டு
- 5

பொ. சங்கரப்பிள்ளை
"அரசாங்கக் கைத் தொழிற்சட்டத்தின் கீழ்' கைத்தொழில் யாக்கம் ஒன்றை நிறு வுவதற்கு அமைச்சன் தனது கட்டளையை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவது போதுமாகும். இச்சட்டத்துக்குப் பின்பு பல யாக்கங்கள் நிறுவப்பட்டன. இப் போது செயற்படும் யாக்கங்கள் 25 ஆகும். 1974முடிவில் இவற்றில் முதலீடு ரூபா 2346மில்லியனுகும். 1967இல் கைத்தொ ழில்துறை மொத்த உற்பத்திப் பெறுமதி ரூபா 1270 மில்லியன். இதில் அரசாங்கக் கைத்தொழில் யாக்கங்களின் உற்பத்திப் பெறுமதி ரூ. 194மில்லியன் மட்டுமே-15%. 1974இல் யாக்கங்களின் பங்கு 40 சதவீத மாகிவிட்டது.
1960இற்குப்பின் தனியார் கைத்தொ ழில்துறை துரித வளர்ச்சியடைந்தது இது வரையும் கைத்தொழில்களில் முதலிட விரும்பாத இலங்கை மக்கள், இவற்றில் முதலிடப் போட்டியிட்டனர். இதற்குக் காரணம் இலங்கை அரசாங்கம் அளித்த சலுகைகளாகும். கைத்தொழில் வளர்ச் சியை அரசாங்கம் பல வழிகளில் ஊக்கு வித்தது. இவற்றிற் சில பின்வருவனவா கும்.
(அ) தொழினுட்ப விஞ்ஞான ஆராய்ச்சி
கள்.
(ஆ) முன்னேற்ற ஆக்கமுயற்சிகளும் உத
விகளும்.
(இ) ஆலோசனை, புத்திமதிகள்,
(ஈ) வரிச்சலுகைகள்:-
(1) வரியிலிருந்து விடுதலை. (ii) கூட்டு மொத்தத் தேய்மானம் (ii) அபிவிருத்தித் தள்ளுபடி (iv) மூலப்பொருட்களிலும் எந்தி
ரங்களிலும் குறைந்த இறக்கு மதி வரிகள்.
(உ) பாதுகாப்பு:- இறக்குமதிகளை முற்ரு கத் தடைசெய்தல்; இறக்குமதி வரி களை உயர்த்தல்.

Page 83
இலங்கையிற் கைத்தொழில்.
(ஊ) கைத்தொழில்களுக்குக் கடன் உதவி
கள்.
(எ) கைத்தொழில் ஏற்றுமதிகளை ஊக்கு
வித்தல்.
1960-64 காலத்தவணையில் 206 முக் கிய திட்டங்களும் 896சிறு வீதத் திட்டங் களும் அங்கீகரிக்கப்பட்டன. 1965 - 68 காலத்தவணையில் அங்கீகரிக்கப்பட்ட கைத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1881இலிருந்து 1804 இற்கு அதிகரித்தது.
1960 இற்குப் பிற்பட்ட கைத்தொழில் வளர்ச்சியைப் பின் வரும் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
1959ம் ஆண்டு மாறவிலே தேசிய வரு
களிற் கைத்தொழில் மானத்திற்
உற்பத்திப் பெறுமதி சதவீதம்
(ரூபா மில்லியன்)
1959 682 1.6 1970 1335 138 1971 1379 14, 1972 1401 14. O 1973 1417 13.6 1974 359 12.6 1975 1462 13 2.
தணியளவிற் பார்க்கும்போது கைத் தொழில்துறை இருமடங்குக்கு மே ல் வளர்ந்துவிட்டது. ஆஞல், ஒப்பளவில் வளர்ச்சியில்லை. அதாவது, பொருளாதா ரம் வளர்ச்சியடைய ஏனைய துறைகளுடன் ஒப்பாகக் கைத்தொழில்துறையும் வளர்ந் திருக்கிறதேயன்றிப் புரட்சிமாற்றம் ஏற் படவில்லை. இலங்கை கைத்தொழில் நாடா வதற்குத் தேசியவருமானத்தில் கைத் தொழில்களின் பங்கு குறைந்த பட்சம் 25% ஆக இருக்கவேண்டும்.
இலங்கைப் பொருளாதாரத்திற் கைத் தொழில்துறையின் பங்கென்ன?
எமது கைத்தொழில்கள் எமக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களை உற்

பொ. சங்கரப்பிள்ளை
பத்தி செய்வதனுல் நாம் ஒவ்வொரு வரு டமும் ரூபா 900 மில்லியன் பெறுமதியான பிறநாட்டுச் செலாவணியைச் சேமிக்கி ருேம். 1971ஆம்ஆண்டில் உற்பத்தி செய்த கைத்தொழிற் பொருட்களை நாம் இறக்கு மதி செய்யவேண்டியிருந்தால், ரூ.1700 மில் லியன் பிறநாட்டுச் செலாவணி செலவா யிருக்கும். இதை உற்பத்தி செய்வதற்கு இறக்குமதி மூலப்பொருட்களிற் பிறநாட் டுச் செலாவணிச் செலவு ரூ 800 மில்லியன். கைத்தொழிற் பொருட்களின் ஏற்றுமதி களிலிருந்து வருடாவருடம் ரூ.300 மில்லி யன் பிறநாட்டுச் செலாவணியை உழைக் கிருேம். எனவே, உழைப்பினுலும் சேமிப் பிஞலும் கைத்தொழில்துறை எமது பொரு ளாதாரத்துக்கு வருடாவருடம் გtნ. i 2 0 0 மில்லியன் பிறநாட்டுச் செலாவணியை உதவுகிறது.
1972ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக் கையின்படி, கைத்தொழில் துறையிலுள்ள 1897 நிறுவனங்களில் நேராக வேலை செய் வோரின் எண்ணிக்கை 1,23,986. இதிற் பல சிறிய நிறுவனங்களும் சொந்தக் கைத் தொழில்களும் சேர்க்கப்படவில்லை. இவற் றில் வேலை செய்வோரின் எண்ணிக்கையைக் குறைந்தபட்சம் 75,000ஆக மதிப்பிடலாம். இவற்றைவிட 100,000 ஆட்களுக்குக் கைத் தொழில்துறை மறைமுகமாக வேலையளிக் கிறது. அதாவது இக்கைத்தொழில்களின் மூலப்பொருட்களையும் துணைப்பொருட்களை யும் உதிரிப்பாகங்களையும் உற்பத்தி செய் யும் தொழில்களிலும் இவற்றை ஊடுகாவுந் தொழில்களிலும் இவற்றின் விநியோகத் தொழில்களிலும் என்க. மொத்தத்திற் கைத்தொழில் துறை 300,000 பேருக்கு வேலை அளிக்கிறது.
1975இல் நடப்பு விலையில் மொத்தத் தேசிய விளைவு ரூபா 21,935 மில்லியன். கைத்தொழில் உற்பத்தி ரூ. 3217 மில்லி யன். இது தேசிய வருமானத்தில் ஏறக் குறைய 15 சதவீதமாகும். கைத்தொழில் வளர்ச்சியினல் ஏற்பட்ட இவ்வளவிடக் கூடிய நேரான நன்மைகளைவிட, அளவிட
59 -

Page 84
இலங்கையிற் கைத்தொழில்.
முடியாத மறைமுகமான பல நன்மைகளைக் குறிப்பிடலாம். தொழிலாளரின் பயிற்சிக் கும் அவர்களுடைய வினை திறன் அதிகரித் தமைக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் கைத்தொழில் வளர்ச்சியே முக்கிய கார ணம். 1960 வரையும் எமது நாட்டில் இல் லாத புதிய ஒரு வகுப்பை - அதாவது ஆள் வினைஞரையும் நிருவாகிகளையும் கைத் தொழில்துறை உருவாக்கிவிட்டது. அறிவு, விஞ்ஞானம், பொருளாதார மனப்பான்மை, இலாப நோக்கம் முதலியன தோன்றிப் பரந்து வளர்வதற்கும் கைத்தொழில்கள் அத்திவாரமாகும். வருங்காலத்தில் அதிக பிற நாட்டுச் செலாவணியை உழைக்கத் தக்க புதிய ஏற்றுமதித்துறையொன்றிற்கு அத்திவாரம் போட்டு விட்டோம்.
1970 இற்குப் பின்பு கைத்தொழில் துறை சீரழிந்து விட்டது. ஐந்தாண்டுத் திட்டத்தின்படி 6 சதவீதப் பொருளாதார வளர்ச்சியையும் 10 சதவீதக் கைத்தொ ழில் வளர்ச்சியையும் எதிர்பார்த்தோம். எல்லா நாடுகளிலும் ஏனைய துறைகளைப் பார்க்கினும் கைத்தொழில்துறை அதிவேக வளர்ச்சி அடைவது கண்கூடு. 1966-70 ஐந்தாண்டுக் காலத்திற் பொருளாதாரத் தின் வருட வளர்ச்சி 5.1 சதவீதம். கைத் தொழில்களின் வருட வளர்ச்சி 8, 2 சதவீ தம் ஆணுல், 1970-75 ஐந்தாண்டுக் காலத் திற் பொருளாதாரத்தின் வருட வளர்ச்சி 2.8 சதவீதம். கைத்தொழில்களின் வருட வளர்ச்சி 1.9 சதவீதம். இத்தேக்க நிலைக்கு முக்கிய காரணம் பிறநாட்டுச் செலாவ ணிப் பற்ருக்குறையாகும். ஆனல் வேறு பல காரணங்களுமுண்டு. தவருண அரசாங் கக் கொள்கைகள். நம்பிக்கையற்ற அரசியல் சமூகச் சூழ்நிலைகள், தி ற ன ற் ற அரசாங்க நிருவாகம், தனியார் துறையை அழிப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக் கைகள் முதலியவை யாவும் காரணங்க ளாகும். புதிய செல்வத்தைப் படைப்பதிற் கவனஞ் செலுத்தாது, உள்ள செல்வத் தைச் சிலரிடமிருந்து எடுத்து மற்றவர்க ளுக்குக் ?ொடுப்பதில் அரசாங்கம் கவனஞ் செலுத்திற்று.
- 6

பொ. சங்கரப்பிள்ளை
யாக்கத்துறை உற்பத்திச் சுட்டெண்
1970.71 - 168.44
168.61 -۔ 1971 208.87 --سس 1972 205.12 سس- 1973
14 .207 ܚ- 1974 1975 - 209.29
சென்ற மூன்று வருடங்களிலும் நாம் புதிய யாக்கங்களை நிறுவிய போதிலும் உற்பத்தி பெருகவில்லை.
கைத்தொழில் உற்பத்தி (1959 மாரு விலைகளில்) மில்லியன் ரூபா
1970 - 1331.8 13789 مس - 1971| 5 1400 -سس 1972 1973 . 1417.2 1974 - 1359.4 1975 - 1461.5
வேலையாட்களின் எண்ணிக்கை முதலியவை
வருடம் வேலையாட்களின் வேலைசெய்தமொத்த ஆளுக்கு,
எண்ணிக்கை மனித நாட்கள் வேலை (ஆயிரத்தில்) நாட்கள்
1972 123,986 31,610 255 1973 105,715 24,962 238 1974 96,668 21,609 205
1974இல் உற்பத்தி ஆற்றலிற் பயன் படுத்தப்பட்ட சத வீதம் 40.
எ ம து கைத்தொழிலமைப்பிலுள்ள குறைபாடுகள் பின்வருவனவாகும்.
(அ) கைத்தொழில் வள ர் ச் சிக் கு அடிப்படையான பொறியியல் தொழில்கள் எமது நாட்டில் வளர்ச்சியடையாதபடியி ஞல் இயந்திரங்களையும் உதிரிப்பாகங்களே யும் துணைக் கருவிகளையும் இறக்குமதி செய் வதற்கு ஒவ்வொரு வருடமும் பெருந் தொகை பிற நாட்டுச் செலாவணி வேண்டி யிருக்கிறது. எமது நாட்டில் இரசாயனப் பொறியியல் தொழில்கள் முற்ருக வில்லை
எனலாம்.

Page 85
இலங்கையிற் கைத்தொழில்.
(ஆ) எ மது கைத்தொழில்களுக்கு அத்தியாவசியமான மூலப் பொருட்களிற் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிருேம். 800 மில்லியன் ரூபாய் - ட்டில் இதற்கு ஒவ்வொரு வருடமும் வேண்டும். பிற நாட்டுச் செலாவணிப் பற் ருக் குறையே எமது கைத்தொழில்கள் உற் பத்தி ஆற்றலில் 40% மட்டுமே பயன்படுத் தப்படுவதற்கு காரணம். உள்நாட்டு மூலப் பொருட்களைப் பெரும்பாலும் அடிப்படை பாகக் கொண்ட தொழில்களை நாம் நிறுவி யிருக்க வேண்டும். உள்நாட்டு மூலப் பொருட்களைப் பிற நாட்டு மூலப் பொருட் களுக்குப் பதிலிடும் முயற்சியில் அற்ப அளவே சித்தியடைந்திருக்கிருேம்.1974இல் கைத்தொழில் துறையிற் பயன்படுத்தப் பட்ட மூலப் பொருட்களில் 75% இறக்கு மதி செய்யப்பட்டவையாகும்.
(இ) 1960 களில் அமைக்கப்பட்ட எமது கைத்தொழில்கள் மூலதனத்தைச் செறிவாகப் பயன்படுத்தும் அபிவிருத்தி படைந்த நாடுகளின் தொழில் நுட்பங் களை கண்மூடித்தனமாகப் பின்பற்றின. இத ஞல் ஏற்பட்ட விளைவுகள் இரண்டாகும்.
(1) நாம் எதிர்பார்த்த அளவுக்குக் கைத்தொழில் துறையில் வேலைவாய்ப்புக் கிடைக்க வில்லை. வேலையின்மையே எமது நாட்டின் மிக முக்கிய பிரச்சினை. வேலையில் லாதோரின் எண்ணிக்கை 850.000 ஆக மதிப்பிடப்படுகிறது. உழைப்பைச் செறி வாகப் பயன்படுத்தும், உள்நாட்டு அல்லது நடுத்தரத் தொழில் நுட்பங்களைப் பின் பற்றும் சிறு வீதக் கைத்தொழில்களுக்கு நாம் முதலிடம் அளித்திருந்தால், அதிக வேலைவாய்ப்பை உண்டாக்கியிருக்கலாம்,
(ii) பிறநாட்டுத் தொழில்நுட்பங்களை பின்பற்றிய காரணத்தினுல் இயந்திரங்களி லும், உதிரிப்பாகங்களிலும் வருடாவருடம் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிருேம்.
(ஈ) எமது கைத்தொழில்கள் பெரும் பாலும் இறக்குமதிப் பதிலீட்டுத் தொழில்
61

பொ. சங்கரப்பிள்ளை
களாகும். உள்நாட்டுச் சந்தையை நோக் கிய எமது மூலப் பொருட்களை அடிப் படையாகக் கொ எண் ட ஏற்றுமதித் தொழில்களுக்கு நாம் முதலிடம் அளிக்க வேண்டும். இவற்றை வளர்க்க வேண்டும்.
(உ) கைத்தொழில் வளர்ச்சி பெரும் பாலும் கொழும்பு மாவட்டத்தில் மட் டுமே ஏற்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தி லுள்ள நிறுவனங்கள் கைத்தொழில் பெறு மதியில் 89% உற்பத்தி செய்கின்றன. ஏனைய மாவட்ட மக்கள் கைத்தொழில் வளர்ச்சியினல் அதிக நன்மை பெறவில்லை. எனவே கைத்தொழில் துறை மக்களுடன் தொடர்பில்லாத அன்னிய துறை போல இருக்கிறது. நாடு முழுவதும் கைத்தொழில் கள் பரவ வேண்டும். எல்லா மக்களும் கைத்தொழில் வளர்ச்சியிஞல் நன்மை யடைய வேண்டும்.
(ஊ) எமது கைத்தொழில்கள் பெரும் பாலும் லைசென்சு, பெமிற்றுக் கைத் தொழில்கள். கடும் பாதுகாப்பில்லாது தொழிற்படக் கூடிய திறமை இவற்றும் கில்லை. கைத்தொழில் துறையில் தனி யுரிமைகளும், சிலருரிமைகளும் பரவி விட் டன. இதற்குக் காரணம் தற்போதுள்ள பெமிற்று முறையாகும். அரசாங்கத்தின் ஆதரவாளரும் அரசியற் செல்வாக்குடைய வரும் மட்டுமே பெமிற்றுகளைப் பெறலாம். தொழில்களை நடத்த அனுபவமும், ஆற்ற லும், ஆள்வினைமையும் இவர்களுக்கில்லை. பெமிற்றுக்களை விற்றுக் காசுழைக்கின்ற னர். பெமிற்று, லைசென்சு முறையினலும் கட்டுப்பாடுகளினலும் எந்த fB FTL — fT 6)J ğ5# முன்னேற முடியாது.
(எ) கைத் தொழில் துறை உடைமை யும் ஆட்சியும் சிலர் கையில் இருக்கின் றன. இம்முதலாளித்துவம் விரும்பத்தக்க தன்று. எமது கைத்தொழில் துறை மக்கள் உடைமையாக - மக்கள் ஆட்சியாக மலர வேண்டும். தனியார் முதலாளித்துவத்திற்கு அரசாங்க முதலாளித்துவம் பரிகாரமன்று என்பதை நாம் உணர வேண்டும்.

Page 86
இலங்கையிற் கைத்தொழில்.
எமதுகைத்தொழில் துறையில் விரை வாகச் செய்ய வேண்டிய திருத்தங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
(அ) அடிப்படையான பொறியியல் தொழில்களை நாடு முழுவதும் பரப்பவேண் டும்
(ஆ) எமது மூல்ப் பொருட்களை அடிப் படையாகக் கொண்ட ஏற்றுமதித்தொழில் களை வளர்க்க வேண்டும். பிறநாட்டுச் சந்தைகளிற் போட்டியிடவேண்டுமாதலால் இத்தொழில்கள் மூலதனத்தைச் செறி வாகப் பயன்படுத்தும் திறனை தொழி னுட்பங்களை பின்பற்றும் தொழில்களாக இருக்கலாம்.
(இ) இறக்குமதி மூலப் பொருட் களுக்கு எமது நாட்டு மூலப் பொருட்களை இயன்ற அளவுக்குப் பதிலிட வேண்டும். மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதில் நாம் அதிக கவனஞ் செய்யவேண்டும்.
(ஈ) கைத் தொழில்கள் நாடு முழு வதும் பரவ வேண்டும்.
சிறந்த சொற்ெ
**சொற் பொழிவாளர் மூன்று தர்களின் இயல்பான தன்மையையும் இரண்டாவது பிரிவினர் தர்க்கரீதிய கிறவர்கள்; மூன்ருவது பிரிவினர் ஆ மிடுபவர்கள். உலகிலுள்ள கிட்டத்த இந்த மூன்று பிரிவுகளுக்குள் அடங்கி சொற்பொழிவாளராக விருப்பவர் மூன்று வகையினராகவும் மாறவே6 கையாள வேண்டும். '

பொ. சங்கரப்பிள்ளை
(உ) கைத்தொழில் துறை ம க் க ள் ஆட்சி மக்கள் உடைமைத் துறையாகத் திகழவேண்டும். ஒரு சிலரன்றி மக்கள் பயனே அடைய வேண்டும் இத் தெ T பூழி ல் கள் உழைப்பைச் செறிவாகப் பயன்படுத்த வேண்டும். எமது அல்லது திருத்தியமைக்கப் பட்ட நடுத்தரத் தொழினுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்.
(ஊ) இப்படிப்பட்ட சிறு வீதக் கைத் தொழில் துறைக்கு நாம் முதலிடம் அளிக்க வேண்டும். பலவகைப்பட்ட சலுகைகளி ஞல் அதை ஊக்குவிக்க வேண்டும். "சிறி யவை அழகிச1வை’ என்பதை நாம் உணர வேண்டும்.
சனநாயகம், சுதந்திரம், 1ொருளாதார வளர்ச்சி, வாழ்க்கை முன்னேற்றம், தேசீய வருமானமும் செல்வமும் நீதியாகப் பங் கிடப்படல் இவையே மக்களின் நோக்கங் கள். இவற்றை அடைவதற்கு எம்முறைமை உதவுகிறதோ அம்முறைமை சிறந்ததாகும். சுலோகங்களும் மேடைப் பேச்சு வீரமும் பயனற்றவை.
பாழிவாளர் ።uffiጽ፧”
வகைப்படுவர். முதல் பிரிவினர் பல்னி
நகைச்சுவையையும் தூண்டுபவர்கள்; ாகவும் அறிவுக்கு விருந்தாகவும் பேசு வேசத்தைக் கிளறும் வகையில் முழக்க ட்ட எல்லாச் சொற்பொழிவாளர்களும் விடுவார்கள். என்ருலும் தலைசிறந்த சந்தர்பத்திற்கு ஏற்றவகையில் இந்த ண்டும்; இந்த மூன்று முறைகளையும்
- அறிஞர் ஷெல்டன்

Page 87
சுன்னகம் பலநோக்கு
(வரைவு சுன்சூ
சுன்னுகம் பல, நோ. கூ. சங்க தோர் தொழிற்பரப்பான சுன் உடுவில் கிராமசபைகளை உள்ளடச் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி வளங்களைப் பேணுவதிலும், சி கடைப்பிடிப்பதிலும், வேலையில்ல வதிலும், முன்னணியில் நின்று:
3)
4)
S
ル
49 கிளைகள் மூலமாக பாவனை விநியோகத்தில் தன்னிகரற்று கட்டிடப் பொருட்களை மலிவா விவசாயத்திற்குத் தேவையா யோகிக்கின்றது. வேலையில்லாத் திண்டாட்ட தொழிற்பாடுகளான பீடி உற நிலையம், கடதாசி உற்பத்தி ! ஒப்பந்த வேலைகள், லொறிச் ே படுத்துகின்றது.
சிறுவர் பாடசாலைகளையும் ஆ கல்வி வசதியையும் செய்து ெ மண்ணெய் பெற்றேல் விநிே நிலையத்தை சிறப்பாக இயக்
கிராமிய வங்கிகள் ஊடாக
வசதிகளை பூர்த்தியாக்குவதுட வேலைகளையும், திட்டங்களையும்
ஏனைய சங்கங்களுக்கு முன் பு கலை கலாசாரத்திற்கு புத்துயி விளங்குகின்றது.
'மக்களின் தேவைகளே!
சுன்னுகம் பல. நே

க் கூட்டுறவுச் சங்கம்
ப்ளது) )கம்
D யாழ் குடா நாட்டின் பெரிய கைம் பட்டினசபை, ஏழாலை கிய 49000 மக்களது அன்றட செய்வதிலும், பொருளாதார கன சேமிப்புத் திட்டங்களைக் ாத் திண்டாட்டத்தைப் போக்கு
ாயாளர்களின் பங்கீட்டுப் பொருள்
விளங்குகின்றது. ன விலையில் விற்பனை செய்கின்றது. ன பொருட்களை தரமாக விநி
த்தைப் போக்குவதற்காக கைத் ற்பத்தி நிலையம், பாண் உற்பத்தி நிலையம், நெசவு நிலையம், கட்டிட சவைகள் ஆகியவற்றைத் தொழிற்
ங்காங்கே அமைத்து சிறுவர்களின் காடுத்து வருகின்றது.
யோகத்துக்காக ஒர் எரிபொருள்
கி வருகின்றது.
மக்களுக்குத் தேவையான கடன் ன், இன்னும் இன்னுேரன்ன ஆக்க தன்னகத்தே உள்ளடக்குகின்றது.
ாதிரியாக மறைந்து கிடந்த எமது r கொடுத்து, முன்னணியில் சிறந்து
' கூ. சங்கத்தின் சேவைகள்'
ܝ
-

Page 88
அன்பளிப்பு
செல்வலட்சுமி ஸ்ரோஸ்
பிடவை மாளிகை 翁夏 கொல்லங்கலட்டி,
தெல்லிப்பளை.
வித்தியோதயத்திற்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
N
* த்
GJI E GJ i GDJ Gb sh. இல, 14, மக்கள் நவீன சந்தை. மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

இலங்கைப் பல்கலைக்கழக
வித்தியோதய வளாகத்
தமிழ் மன்றத்திற்கு
எமது வாழ்த்துக்கள்.
★
வின்ரோ றேடிங் கம்பனி 6, மக்கள் நவீன சந்தை,
(மேல் மாடி) யாழ்ப்பாணம்.
தரமான புடவைகளுக்கு முதன்மை ஸ்தாபனம்.
இன்றே விஜயம் செய்யுங்கள்.
NEW Y(DINGS 107, 3rd Cross Street, COLOMBO-11.

Page 89
*S*Soàok*Sđộ so sáềokość &
ஆயிரம் ரூபா அதன் பொருளா
な基**み、“リ
- க. மென்ட
வர்த்தகவியல் -
ஒரேவிதமான வசதி கொண்ட மக்களைப் பார்க்கின்ருேம். சிலர் நன்கு உண்டு உடுத் துச் செழிப்புடன் காணப்படுகின்றனர். சினர் அளவுடன் செலவுசெய்து எஞ்சியவற் றைச் சேமித்து வீடுமனை கட்டிச் செல்வம் சேர்த்து அதனல் பூரிக்கின்றனர். சிலகிரா மங்களைப் பார்க்கின்ருேம். அன்றிருந்த மாதிரியே இன்றும் இருக்கின்றது. வேறு சில கிராமங்களில் நாள்தோறும் புதுப்புது மாடிவீடுகள் எழும்புகின்றன. மின்சாரம் ஒளியூட்டுகின்றது. தொழிற்சாலைகளும் கடைத்தெருக்களும் மலிகின்றன. இவற்
றுக்குக் காரணம் யாது?
வருமானம் முழுவதும் செலவுசெய்யப் படுமானல் அது வளர்ந்துவரும் சமூகத் துக்கு நல்லதென் பார்கள் பொருளியலா சர். ஆனமுதலில் அதிகம் செலவாஞல் மானமிழந்து மதிகெடும் என்பர் மறுசா ரார். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணுக வல்லவா தெரிகின்றது.
ஒருவரது வரும்ானம் மற்றவரது செலவு. ஆக்கக் காரணிகள் பெறும் வருமானம் நிறு வனத்துறையின் செலவு. ஆக்கக் காரணி களே விற்பனை செய்த வீட்டுத்துறையினர்
- 6

家**。"r"&cm'y\リ ய் சேமிப்பும் தார விளைவுகளும்
3 SEKAKÉčGSÉGRÉ
டிஸ் அப்பு - இறுதி வருடம்.
தாம் பெற்ற வருமானத்தை பொருள் களில் செலவிடும்போது அது நிறுவனத் துறைக்கு வருமானமாகின்றது. தேசிய வருமானம் என்பதஞல் குறித்தகால இடை வெளியில் ஒருநாட்டின் மக்கள் உற்பத்தி செய்த பொருட்களினதும் சேவைகளின தும் பணப்பெறுமதியைக் குறிக்கின்ருேம். உற்பத்திப் பொருள்களின் பணப்பெறுமதி என்பது ஆக்கக் காரணிகள் பெற்ற வருமா னத்தைக் குறிக்கின்றது. அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்காக உ ற் பத்தியாளர்களால் செய்யப்பட்ட செலவு களைக் குறிக்கின்றது. ஒருவர் செய்யும் செலவு குறைந்தால் மற்றவரது வருமானம் குறைகிறது. மற்றவர் வருமானம் குறைந் தால் உற்பத்தி குறைகின்றது. எனவே செலவு குறைந்தால் தேசிய வருமானம் குறைவுபடுகின்றது.
இதன் மூடப்பட்ட பொருளாதார மொன்றை அடிப்படையாகக் கொண்டு மிகச்சுருக்கம்ாக விளங்குவோம். ஒரு நாட் டில் நிறுவனத்துறையும் வீட்டுத்துறையும் மட்டுமே உண்டு எனவும் ஒரே இனப் பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்கி முர்கள் எனவும் வீட்டுத்துறையினர் வரு மானம் முழுவதையும் செலவிடுகிருர்கள் எனவும் கொள்வோம்.
5 -

Page 90
ஆயிரம் ரூபாய் சேமிப்பும்
Μ வீட்டுத்துறை
1 000
வீட்டுத்துறை ஆக்கக் காரணிகளை விற்று 1000 மில்லியன் ரூபாவை வருமான மாக நிறுவனத்துறையினரிடமிருந்து பெறு கின்றதெனக் கொள்ளுவோம். அவை முழு வதையும் நிறுவனத்துறைக்கு விலைப்பண மாகக் கொடுத்து உற்பத்தி முழுவதையும் கொள்கிறது எனவும் கொள்வோம். நிறு வனத்துறையின் செலவு 1000மில்லியன் ரூபா வீட்டுத்துறையின் வருமானம் 1000 மில்லியன் ரூபா; வீட்டுத்துறையின் செலவு 1000 மில்லியன் ரூபா நிறுவனத்துறையின் வருமானம் 1000மில்லியன் ரூபா. எனவே தேசிய உற்பத்தி 1000 மில்லியன் ரூபா தேசிய வருமானம் 1000மில்லியன் ரூபா தேசியச் செலவு 1000 மில்லியன் ரூபா. வீட்டுத்துறை வருமானம் முழுவதையும் செலவிடும் வரை தேசிய வருமானம் 1000 மில்லியன் ரூபாவாகவே இருக்கும். அந்த 1690 மில்லியன் ரூபாவும் வீட்டுத்துறையி லிருந்து நிறுவனத்துறைக்குச் சென்று நிறு :ெனத்துறையிலிருந்து வீட்டுத்துறைக்குச் சென்று சுற்றிக்கொண்டிருக்கும். இதில் 1000 ரூபாவை தனது பணப்பெட்டியில் ஒருவன் இட்டுவைத்தால் அதாவது சேமித்

க. மென்டிஸ் அப்பு
LLLLLL LSLSLSLSLSLSLSLSLSLSLSLSSSkkS
தால் யாது நடக்கும். நிறுவனத்துறையின் வருமானம் 1000 ரூபாவால்குறைந்துவிடும். உற்பத்தி செய்த பொருள்களை விற்கமுடி யாவிட்டால் எந்தப் புத்தியுள்ள உற்பத்தி யாளனும் உற்பத்தியைக் குறைக்கவே செய்வான். இதனுல் ஆக்கக்காரணிகள் வேலையிழக்கவேண்டியேற்படும். ஆக்கக்கா ரணியின் வருமானம் குறையும் அதாவது வீட்டுத்துறையினரின் வருமானம் குறை யும். வேலைவாய்ப்பு இல்லாமல் போகின் றது. எனவே நாட்டின் பொருளாதார நிலை சீர்கெடுகின்றது. தேசிய வருமானம் குறைகின்றது காரணம் என்ன? 1000 ரூபா சேமிப்பு.
வருமானம் முழுவதையும் செலவு செய் பவன் சீவிய காலம் முழுவதிலும் வரும்ா னத்தினையே நம்பியிருக்கவேண்டும். குடியி ருக்கும் வீட்டுக்குக்கூட வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். அவசர தேவைகள் நோய் நொடிகள் ஏற்படும்போது ஏனைய செலவு களைச் சுருக்கவேண்டியேற்படும். எதிர்பா ராத செலவுகள் ஏற்பட்டால் கஷ்டப்பட வேண்டியேற்படும். இவ்விதமான மக்கள்
66 —

Page 91
ஆயிரம் ரூபாய் சேமிப்பும்.
வாழும் கிராமங்கள் முன்சொன்னவாறு அன்றிருந்தவாறு என்றும் காணப்படும். எனவே சேமிப்பு அவசியம் என்பது உண் மையே.
வருமானம் முழுவதும் செலவு செய்ய வேண்டும் என்பதும் சேமிக்கவேண்டும் என்பதும் முரண்பாடுடையது போ ல் தோன்றினும் அவைமுரண்பட நியாய மில்லை, சேமிப்பதால் செலவு செய்வது பாதிக்கப்படுகின்றதென்பது சேமிக்கும் முறையைப் பொறுத்து அமையும் .
நான் 1000 ரூபாவைச் சேமிக்கின்றேன் எனும்போது எனது பணப்பெட்டியில் போட்டுவைக்கலாம். அல்லது வேருெரு வருக்குக் கடனுக வழங்கலாம். அல்லது கம்பனிப் பங்குகளில் முதலிடலாம். அல் லது வியாபாரமொன்றில் முதலிடலாம். என்னைப்பொறுத்தவரை இவை யாவும் சேமிப்பாக நான் கொள்ளுவேன். ஆனல் இவற்றில் மூ ன் று கருப்பொருள்கள் உண்டு. ஒன்று சேமிப்பு; மற்றது முதலீடு; மற்றது செலவு. சேமித்தபணம் 1000 ரூபா பெட்டியில் இருக்கும்போது என்செலவு குறைகின்றது. நுகர்வு குறைகின்றது. சேமித்தபணம் மேற்சொன்னவைகளில் பணப்பெட்டியில் இ டு ம் சந்தர்ப்பம் தவிர்ந்த மற்ற எல்லாச் சந்தர்ப்பங்களி லும் மற்றவர் கையில் அது செலவிடப் படாத சேமிப்பாகவோ, நுகர்ச்சிச் செல வாகவோ அல்லது முதலீட்டுச் செலவா கவோ இருக்கலாம். எனவே எனது சேமிப்பு எனும்போது இன்ஞெருவர் நுகர்ச்சிச் செலவாகலாம். அல்லது வேருெ ருவர் முதலீட்டுச் செலவாகலாம். அன் றேல் சேமிப்பாக இருக்கலாம். எனவே சேமிப்பு செலவைப் பாதிக்கக்கூடிய சந் தர்ப்பம் ஒன்றுமட்டுமே. அதாவது பணப் பெட்டியில் இட்டு வைக்கப்படும் சந்தர்ப் பம் மட்டும். மற்றெல்லாச் சந்தர்ப்பங்களி லும் அது செலவாகவே இருக்கும். எனவே சேமிப்பு சமன் செலவு என்பதை நிறுவ வேண்டுமானல் சேமிப்பு எதுவும் பணப்
- 67

க. மென்டிஸ் அப்பு
பெட்டியில் இட்டுவ்ைக்கப்படவில்லே என் னும் எடுகோள் தேவை.
சேமிப்புப் பனங் கூட நுகர்ச்சிச் செல வாகவும் முதலீட்டுச் செலவாகவும் இருக் கலாம். அதிலும் நுகர்ச்சிச்செலவைக் கழித்து மிஞ்சுவதே உண்மையான சேமிப் பாகும். அந்தச் சேமிப்புமுதலீட்டுக்குச் சம ஞக இருக்கும்போது சேமிப்பு செலவுக்குச் சமனக இருக்கும். எனவே பணப்பெட்டி யில் சேமிப்பு இட்டு வைக்கப்படாத பொ ழுது செலவு 61 ல்விதத்திலும் பாதிப்படை யத் தேவையில்லை என்பதை உணரலாம்.
இந்த நிலையிலிருந்து பணப்பெட்டியில் சேர்த்துவைத்த ஓராயிரம் ரூபாவினுல் ஏற் படக்கூடிய பொருளாதார விளைவுகளைப் பார்ப்போம்.
பழம்பொருளியலாளர் கொள்கைப்படி M V = P T, MI ... u 6837 b, V L 6807 , ie 625o 36 iż; குக்கை மாறும் வேகம், P பொருளின் விலை, T உற்பத்திப் பொருள். T யும் V யும் குறுகிய காலத்தில் மாருதது எனக்கொண் டால் M இல் ஏற்படும் குறைவு P யினைக் கும் நாட்டில் புழக்கத்தில் உள்ள பணம் ஐயாயிரம் ரூபாவும் கைக்குக் கைமாறும் வேகம் 6 எனவும் மொத்த உற்பத்திப் பொருள்கள் ஒரே இனமான 2000 பொருள்கள் எனவும் எடுகோள்க :ாகக் கொள்வோம்.
gujGur(pgi (5000X6=P X 2000) விலைசமன் 15 ரூபா. 1000 ரூபாவை பெட் டியில் வைத்திருந்தால் பணப்புழக்கத்தில் 4000 ரூபா மட்டுமே இருக்கும். அப்போது sóða) (4000 X 6 = P X 2000) Fuosir 12 ரூபாவாகும். பணப்பெட்டியில் 1000 ரூபாவை வைத்ததால் விலையானது 3 ரூபா வால் இறங்கிவிட்டது.
முன்னர் உதாரணத்துக்கு எடுத்தபடி மூடிய பொருளாதாரத்தையே எடுத்து மேலே காட்டிய உதாராணப்படி பொரு ளின் விலை 15 ரூபாவும் உற்பத்தி செய யப்பட்ட பொருள்கள் 2000 மட்டுமே எனவும் கொள்வோம். நிறுவனத்துறை பெற்ற விற்பனை வருமானம் 30000 jrז வீட்டுத்துறையினரிடமிருந்து கிடைத்தி ருக்கும். வீட்டுத்துறைக்கு அது எவ்வண் ணம் கிடைத்திருக்கும்.

Page 92
ஆயிரம் ரூபாய் சேமிப்பும்.
விலைப்ப
வீட்டுத்துறை
م- : 0 {0 0 30
A
காரணி வரு
ஆக்கக் காரணிகளை நிறுவனத்துக்கு விற்ற தாலென்க. எனவே நாட்டின் தேசிய வருமானம் 30 000 ரூபா. (முன்னர் மூடிய பொருளாதாரத்துக்கு எடுத்த எடுகோள் இதற்கும் பொருந்தும்.)
1000 ரூபாவை பணப்பெட்டியில் வைத்திருந்தபோது விலை 15 ரூபாவிலி ருந்து 12 ரூபாவாக இறங்கியதல்லவா? எனவே இப்போது நிறுவனத்துறை 2000 பொருள்களையும் 2000 X 12 = 24000
، انبaقی -
வீட்டுத்துறை
24000/-
AWA
காரணி வரு
தேசிய வருமானம் 6000 ரூபாவால் குறைய உற்பத்திக் காரணிகள் வேலை யிழக்கின்றன.
முதலீடு ஆர்வமிழக்கின்றது, காரணம் இலாபம் குறைகின்றது. நிலம், தொழில், முதல் முயற்சி ஆகிய உற்பத்திக் காரணி களில் அமைப்பு பெற்ற இலாபம் முந்திய உதாரணப்படி 10000 ரூபா எனக்கொள் வோம். எனவே, அமைப்பாளன் முதலிட்ட தொகை (30000-10000) = 20 000 ரூபா. தற்போது விலை குறைந்ததால் அமைப் பாளன் பெறும் காரணி வருமானங்களி லொன்ரு:ன இலாபம் 10000 ரூபாவிலி

க. மென்டிஸ் அப்பு
5owLib
W
நிறுவனத்துறை
15 Χ 2 0 0 0 = 3 0 0 0 0 |-
மானம்
ரூபாவுக்கே விற்கலாம். இப்போது நிறு வனத்துறையின் விற்பனை வருமானம் 30000 ரூபாவிலிருந்து 24000 ரூபாவாகக் குறைந்துவிட்டது. எனவே புத்தியுள்ள உற்பத்தியாளன் உற்பத்திக் காரணிகளை வேலையிலிருந்து நீக்கி உற்பத்திக் காரணி களில் செலவிடும் தொகையைச் சுருக்கி 24000 ரூபாவாக ஆக்கிக் கொள்ளுவான். இதனல் வருமானச் சுற்றில் 6000 ei5 Lu Ir வெளியேற்றம் ஏற்படுகின்றது. எனவே
Μ
நிறுவனத்துறை 12 X 2000 = 24000/-
மானம்
ருந்து (24000 - 20000) = 4000 ரூபா வாகக் குறைந்துவிட்டது. முன்னர் 20000 ரூபா முதலீட்டுக்கு 10000 இலாபம் பெற் றவன் தற்போது 4000 ரூபா மட்டுமே இலாபம் பெறுகின்றன். ஆகவே மூலதனத் தின் எல்லை விளை திறன் குறைவடையும். உற்பத்தியாளர்கள் மூலதனத்தின் எல்லை விளை திறனைக் கருத்தில் கொண்டே (P5 லீடுகி(?ர் கள் எனக் கொண்டால் முதலீடு பாதிக்கப்படும். அவர்கள் வட்டிவீதத் தைக் கருத்தில் கொண்டு இலாபத்தினை முன்னுணருவார்களானல், மேலும் முத லிட நினைக்கும் தொகைக்கு நடைமுறை

Page 93
ஆயிரம் ரூபாய் சேமிப்பும்.
வட்டி வீதத்தையும் கருத்தில் கொண்டு அத் தொகையை முதலிடுவதனுல் முதலீட்டுக் கும் வட்டிக்கும் மேலாக விற்பக்ன வருமா னம் வருமென எதிர்பார்ப்பார்களாஞல் கடன் பெற்றேனும் மேலதிகமாக முதலிடு வார்கள் சந்தையில் 20% வட்டி நிலவு கிறதெனக் கொள்வோம். 1000 ரூபா வைக் கடன் வாங்கி முதலிடுகின்ற ரென வு கொள்வோம். எனவே வருடமுடிவில் கடனை மீட்க வட்டியும் முதலுமாக 1200 ரூபா வேண்டும் முன்னைய உதாரணப்படி 20,000 ரூபா முதலீட்டிற்கு 2000 உற் பத்தி. எனவே மேலதிக முதலீடு 1000
20 U 0. ரூபாவிற்கு - X 1000 - 100 உற்
20,000 பத்தி. 100 பொருள்களையும் 1000 ரூபா வைச் சேமித்த பின் அதன் விளைவால் ஏற் பட் ட 12- விலைப்படிதான் விற்க முடியு மானுல் ரூபா 1200 தேறும். ஆகவே 1000 ரூபா கடன் பெறுவதால் இலாப மில்லையென்பதை உற்பத்தியாளர் உணர் வர். இப்படியான நிலையில் முதலீடு செய்ய
மாட்டார்கள்.
பணப் பெட்டியில் சேமித்த பணம் வட்டி வீதத்தைத் தன்னும் குறைக்க மாட்டாது. முன்னர் கூறிய 20% வட்டி பை பெற நினைக்கும் சேமிப்பாக இருந் தால் அது முதலீட்டுச் சந்தைக்கு வந்தி ருக்கும். அதனல் வட்டி வீதம் ஏதோ சொற்பமாவது குறைந்திருக்கும். உதார ணத்திற்கு 18% வீதத்திற்காவது குறைந்தி ருக்குமெனக்கொள்வோம். அப்படியெனில் உற்பத்தியாளர் பெற்ற கடனை வட்டியும் முதலுமாக அடைக்க 1180 ரூபா தேவைப் படும் அச்சந்தர்ப்பத்தில் விலை 15 ரூபா விலிருந்து 12 ரூபாவிற்கு குறைந்திருக் மாட்டாது. அப்படிக் குறைந்துதான்
5 5v2 1000 - 1000 () +- 1000 () - 10C
-= = 1000 x 6 = 6000
6
6.

க. மென்டிஸ் அப்பு
இருந்ததெனக் கொண்டாலும் மேலதிக உற்பத்தியை விற்பதினுல் 12 OO ரூபா விற்பனை வருமானம் வருமாகையால் 20 ரூபாவாவது இலாபம் கிடைத்திருக் கும். முதலிடும் ஆர்வம் குன்றியிராது. இப்போது வட்டி வீதம் 20%விதமாகவே இருக்குமாதலால் முதலீடு ஆ7ண்டப் Lit - Tigji .
பிற் காலப் பொருளியல் அறிஞரான கீன்சின் கொள்கைப்படி பெருக்கெண் துணைகொண்டு பணப்பெட்டிச் சேமிப்பு 1000 ரூபா பற்றி ஆராய்வோம்.
உளவியல் கருத்தினை அடிப்படையா
கக் கொண்டு அவர் விளக்கிய எல்லை
5
நுகர்ச்சி நாட்டம் - எனக் கொள்வோம்.
6
அதாவது மக்கள் தம் அதிகரிப்பு வருமா
5
னத்தில் - ஐச் செலவிடுவார்களெனவும்
6
- சேமிக்கிருர்கள் எனவும் கொள்வோம்.
6 பெட்டியில் போட்ட ஓராயிரம் மற்ருெரு வரின் வருமானத்தில் 1000 (IBU nr 60d6 mu j; குறைக்க, அந்த மற்ருெருவர் அந்த 1000
5 ரூபாவில் செலவிடுவதான 1000 X — ge
6 குறைக்க,வேருெருவர் அதிலிருந்து பெறும்
y2 வருமானமான 1000 X (...) ஐ இழக்க
இப்படியே மிக அற்பமாகும் வரை இன்
6 அடுக்கு முடிவிலியாகும் வரை வருமானம் குறைகின்றது. பெட்டியில் சேமித்த 1000 ரூபாவால் மொத்தத்தில் ஏனையோர் பெறும் வருமானத்தில் ஏற்பட்ட குறைவு
O () v * 4. ... * * *o o wo w ~ * , , ...1000() 二

Page 94
ஆயிரம் ரூபாய் சேமிப்பும்
எனவே தேசிய வருமானம் ரூபா 8000 ஆல் குறைகின்றது. 30000 ரூபா வென எடுத்த தேசிய வருமானம் 24000 ரூபா வாக மாறிவிடுகின்றது தேசிய வருமா னத்தில் ஏற்படும் வீழ்ச்சி ஆக்கக் காரணி கள் வேலையிழந்த மையைக் காட்டுகின்
· 103 ·
பெட்டியில் பணம் சேமித்தால் சீவிக் கும் காலத்தில் வட்டியைத் தானும் பெற மாட்டேன். பொருள்களைத்தானும் வாங்கி உபயோகிக்கவில்லை. எல்லா நாடுகளிலும் காணப்படும் பணத்தின் கொள்வனவு வலுக்குறைவினல் சேமிப்பின் 1,000 பெறு மதியை நாள்தோறும் இழந்து கொண்டி ருப்பேன். கறுப்புப் பணம் என்ற பெயரை அப்பணத்துக்கு வாங்கிக் கொடுப்பேன். எனக்குத்தான் உபகாரமாக இல்லாவிடி னும் நாட்டுக்குத்தானும் உபகாரமாக இருக்காதவஞகிவிடுவேன். இ த ஞ லே T *பாடுபட்டுத் தேடிப் ப ண த்  ைத ப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மாளிடரே கேளுங்கள், கூடுவிட்டு காவிதான் போன பின்னர் யார்தான் அனுபவிப்பர் பாவி காள் இந்தப் பணம்’ என்ருர்கள் எனவே நான் இந்த ஒராயிரம் ரூபாவை வங்கியில் சேமிக்கின்றேன் எனக்கொண்டு அதனல் ஏற்படும் பொருளாதார விக்ளவுகளைச் சுருக்கமாக ஆராய்வோம்.
என் செலவு 1,000 ரூபாவால் குறைவு றுகின்றது. இதனுல் தேசிய வருமானம் அத்தொகையால் குறைவுபடும் என்பது உண்மையே. ஆனல் வங்கி அந்த 1,000 ரூபாவை வைத்துக் கொண்டு அதன் ஆற்ற லுக்கேற்ப முதலைப் படைக்கும். வைப்பு களுக்காக 10% வங்கியில் இருந்தால் போதுமெனில் வங்கி 10,000 ரூபாவைக் கடனுகக் கொடுக்கும். இத்தொகை முதலீட் டுச் செலவையோ நுகர்ச்சிச் செலவையோ கூட்டும். இதனுல் அந்தப் பத்தாயிரத்தால் தேசிய வருமானத்தில் ஒர் அதிகரிப்பு ஏற் uGib.

க. மென்டிஸ் அப்பு
நுகர்வில் அத்தொகை முழுவதும் செலவிடப்படுமானல் நுகர்வுப் பொருள் களுக்கான கேள்வி கூடும் நுகர்வினுல் பூ த லீடு தூண்டப்படும். நுகர்வுப் பொருள் களுக்குரிய கேள்வி விவசாயப் பொருள் களுக்குரிய கேள்வியாக இருந்தால் அல்லது அக்கேள்வி கைத்தொழில் பொருள்களுக் கான கேள்வியாக இருக்கும் போது இயந் திரங்கள் இயலகா வுச் சக்தியுடையனவாக அல்லது மாற்று நேர வேலை வசதியுடையன வாக இருக்குமானுல் கேள்வியின் விகிதா சாரமாக முதலீடு தாண்டப்படும். தேவைப் படும் பொருட் தொகைக்குரிய மூலப் பொருள் செலவு, மேலதிகச் செலவு, தொழிற்சாலைச் செலவு என்பன விகிதா சாரமாகத் தேவைப்படும் எனவே முத லீடும் கேள்வியின் விகிகாரசாரமாக இருக் கும். வங்கிச் சேமிப்பு காரணமாக நுகர்வு அதிகரித்து, நுகர்வு அதிகரித்ததனுல் முதலீடு அதிகரிக்கும். இவ்வித அதிகரிப்பு மூலதன விரிவு என்பர்.
நுகர்வு அதிகரிப்பு கைத்தொழில் பொருள்களுக்குரியதாக இரு ந் த ல், பொருட்களை உற்பத்தி செய்யும் இயந் திரங்கள் இயலளவு உச்ச மட்டத்தில் இயங்குகின்றன எனக் கொண்டால் முத லீட்டுப் பொருள்களுக்கான கேள்வி பல மடங்கு அதிகரிக்கும். இதனை ஜே. எம். கிளாக் என்னும் பொருளியலறிஞரின் வழி வந்த தேவையின் வேக வளர்ச்சி விதி யைக்கொண்டு விளக்குவோம்
வங்கிச் சேமிப்பினுல், வங்கி மேலதிக கடனைப் படைக்க அக்கடனுல் நுகர்ச்சிச் செலவு 10% கூடுகின்றது எனக் கொள்ளு வோம். ஆணுல் இந்த நேரத்தில் 10 வரு டம் நீடித்துழைக்கக் கூடிய 1,000 பஸ் வண்டிகள் தற்போதைய மக்களின் தேவை யைப் பூர்த்தி செய்யத்தக் கவிதமாக ஒடிக் கொண்டிருக்கின்றன எனவும் கொள்ளு வோம். ஆகவே வருடம் தோறும் தேய்வை
1000 ஈடு செய்ய - - 100 பஸ் வண் டி க ள்
O உற்பத்தி செய்தால் போதுமானது. இப்போது தேவை 10% அதிகரித்துள்ளமை
10
X 1000 == 1 ,10() L 5}) 35 6ir -----۔۔۔ ر uJ[T
100
70 -

Page 95
ஆயிரம் ரூபாய் சேமிபபும்.
சேவையில் ஈடுபடுத்தப்பட வேண் டும் , எனவே பெறுமானத் தேய்வை ஈடு செய்வதற்கான 100 பஸ்களைவிட மேலதிக மாக இன்னும் 100 பஸ்கள் உற்பத்தி செய்ய வேண்டும். எனவே வருடம் தோறும் தேவைப்பட்ட 100 பஸ்கள் வங் இச் சேமிப்பால் 200 பஸ்கள் ஆகியுள்ளன. துகர்ச்சித் தேவையில் ஏற்பட்ட 10% அதி கரிப்பு முதலீட்டுக்கான தேவையில் 100% அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த மேலதிக பஸ் தேவை தொடர்ந்த ஆண்டுகளில் இல்லாவிடினும் குறித்த ஆண் டில் 100% அதிகரிப்பைக் காட்டுகின்றது. இதனுல் முதலீட்டுசெலவு பன்மடங்கு அதி கரிக்க தேசிய வருமானத்தில் அந்த அதி கரிப்பு கீன் சியனின் பெருக்கெண்விதியின் படி செயல்படுமானல் வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் பலருக்கு வேலை வாய்ப்பையும் ஆக்கக் காரணிகளுக்கு காரணி வருமானத்தையும் கொடுக்கும். எனவே வங்கிச் சேமிப்பு இவ்விதமான மூலதனச் செறிவுக்கு வழிவகுக்கின்றது.
வேருெரு முறையாகப் பார்த்தால் வங் கிச் சேமிப்புக் காரணமாக வங்கி, கடன் பணத்தைப் படைப்பதால் பண நிரம்பல் அதிகரிக்கும். அது பணவீக்க நிலையைப் பிரதிபலிக்கும். பணவீக்க நிலையிலும் முத லீட்டாளர்களுக்கு இலாபம் அதிகமாகக் சாணப்படும் . அதனலும் முதலீடு தூண்டப் படும். வேலைவாய்ப்புக்கள் பெருகும்.
1,000 ரூபாவைச் சேமிக்கும் போது வங்கியினுல் படைக்கப்பட்ட பணம் முத லீட்டாளர்களுக்குக் கடனுகக் கொடுக்கப் பட்டால் நாட்டில் ஒரு புதிய கைத் தொழிலோ ஒரு தொழிற்சாலையோ ஒரு வீடோ உருவெடுக்கும். அதில் செலவிடப் பட்ட பணம் அவ்வளவும் இன்னுெருவ ருக்கு வருமானமாகையால் அதுதேசிய வரு மனத்திலும் அதிகரிப்பைக் காட்டும்.
அத்தொகை அரசுக்குக் கடனுகக்
கோடுக்கப்பட்டால் அது ஒன்றில் பாதை கள், பாலங்கள் போடச் செலவிடப்படு
- 71

க. மென்டிஸ் அப்பு
மானல் அது Lurr SM 5 Wu nr 5), u tr 6 LO T -f ji காட்சியளிக்கும். சமுக நலனுக்கான மானி யங்களாகச் செலவிடப்படுமானுல் >5#ثق திரும்பவும் நுகர்வுச் செலவாகும். சுட் டுத்தாபனங்களில் முதலிடப்படுமானுல் அது பொறிகளிலோ தொழிற்சாலையிலே 7 சேர்ந்திருக்கும்.
அந்த 1,000 ரூபாவை கம்பனிப் பங்கு களில் முதலிட்டிருந்தால் அது முதலீட்டுச் செலவாக உருவெடுக்கும். பழைய கம் பனிப் பங்குகளில் முதலிட்டிருந்தால் நுகர்ச்சிச் செலவு குறைவதற்குப் பதில் எனக்கு அப்பங்குகளை விற்றவனுடைய நுகர்ச்சிச் செலவு கூடலாம். இதனலும் தேசிய வருமானத்தில் மாற்றம்இருக்காது.
அந்த ஓராயிரம் ரூபாவை வியாபாரத் தில் முதலிட்டிருந்தால் நுகர்வுச் செலவு குறைகின்றது. அது மொத்த வியாபாரிக்கு வருமானமாகின்றது. அப்பொருள் சம்பந்த மாக மொத்த வியாபாரி 900 ரூபாவை செலவிட்டிருந்தால் மொத்த வியாபாரி 100 ரூபா இலாபம் பெறுகின்ருன், ஆகவே வியாபாரியின் இலாபமான 100 e5ur மட்டுமே தேசிய வ ரு ம ன த் தி ல் அதி கரிப்பை ஏற்படுத்தும். இடைத்தரப் பொருள்கள் கைமாற்றம் செய்யப்படு வதால் உற்பத்தி ஏற்படுவதில்லை. உற்பத்தி ஏற்பட்டால் மட்டுமே தேசிய வருமானத் தில் அதிகரிப்பு ஏற்படும். கைமாற்றத்தால் மொத்த வியாபாரி பெறும் இலாபம் தேசிய வருமானமாகும். எனவே வியா பாரத்தில் 1,000 ரூபாவை முதலிடுவதால் தேசிய வருமானத்தில் 100 ரூபா அதி கரிப்பு ஏற்படுகின்றது.

Page 96
ஆயிரம் ரூபாய் சேமிப்பும்.
கடன் கொடுத்தோன் ஒருவனுக்கு இந்த ஒராயிரம் ரூபா வைக் கொடுத்துத் தீர்க்கின்றேன் எனக்கொள்வோம். என் நுகர்ச்சிச் செலவு குறைவதற்குப் பதில் வேருெருவன் நுகர்ச்சிச் செலவு அதிகரிக் கும். அது முதலிடப்பட்டால் முதலீட்டுச் செலவு அதிகரிக்கும். இதனுல் தேசிய வரு மானத்தில் அதிகரிப்பு இல்லை. குறைவு ம இல்லை. கடன் செலுத்துவதால் செலுத்தும் வட்டித்தொகை குறைகின்றது. இதனல் என் வருமானம் அதிகரிக்கின்றது. அதே வேளையில் வேருெவனின் வட்டி வருமானம் குறைகின்றது. அதலுைம் தேசிய வரு மானத்தில் மாற்றம் இல்லை.
இவை யாவற்றுக்கும் நான் சேமிக்க வேண்டும். சேமிப்பு வருமானத்தில் தங்கி யிருக்கும். வருமானம் மாறமாற செலவும் சேமிப்பும் மாறும். இதனை உளவியல் அடிப் படையில் கீன் சியன் விளக்கினர் அதனடிப் படையில் தயாரிக்கப்பட்ட நுகர்ச்சி தாட்ட அட்டவனே பின்வருமாறு,
டனம் Gliritu
‘ஒரு மனிதன் பணத்தைத் தேடிஞ கிருேம்; அதை வைத்துக் கொண்டிரு வழித்தால் அவனே ஆடம்பரக்காரன் பணத்தை சம்பாதிக்காவிட்டால் உத தேட முயலாவிட்டால் சுத்த மக்கு எ படாமல் பணத்தை அடைந்தால் கள்ள நாள் முழுவதும் பாடுபட்டுப் பண வாழத்தெரியாத பேர்வழி என்று கை
72 س

M
க. மென்டிஸ் அப்பு
செலவிடக் சேமிப்பு செலவு
3.49. U
வருமானம்
3000 ۔۔۔۔ H 70 3 1 70 4000 - I O 41 1 0 5000 O 5000 6 OOO 15 O 585) 7000 400 66 OO 8 0 0 ባ 76 O. 724 O 9 OOO 1 OOO 8 O GO 1 00 00 I 640 83.6 G.
அட்டவணையின்படி 3000 வருமானமாகப் பெறுமொருவன் 3 170 ரூபாவைச் செலவிடு வான். அவனது இருப்புச் சொத்தை விற்ரு வது அவன் சீவிக்கவேண்டும். எனவே அவ னது எதிர்க் கணிய சேமிப்பு 170 ரூபா தான் இப்போ 5 000 ரூபா வருமானம் பெறுகின் றேன். எனது செலவுக்கே இது போதும். எனக்குச் சேமிப்பு இல்லாதபோது சிந்தனே எதற்கு? 9000 ரூபா வருமானம் பெறக் கூடிய எதிர்காலத்தை எதிர்பார்க்கின் றேன். அப்போது வாழ்க்கைச்செலவுக் குறி காட்டி மாரு திருக்குமானுல் நிச்சயமா 1000 ரூபா சேமிப்பேன் அதுவும் நிச்சய மாக காசுப் பெட்டியிலல்ல.
ம் கொடுமை
ஒல் அவன் பணப் பைத்தியம் என் ந்தால் முதலாளி என்கிருேம்; செல r என்று இழிவாகப் பேசுகிருேம்; வாக்கரை என்று தட்டிக்கழிக்கிருேம்; ‘ன்று கிண்டல் செய்கிருேம்; சிரமப் க்கடத்தல்காரன் என்கிருேம்; வாழ் த்தை தேடி வைத்தவனைப் பார்த்து நக்கிருேம்.'
- மெல்போர்ண் டைஜஸ்ட்

Page 97
வித்தியோதயம்
வாழ்த்துச்
சங்க பலநோக்குக் கூ
மாதிரி விற்ப வலி கோப் ரெக்ஸ், சின்தெ
யாழ்ரோ பனங்கள்ளு,
பொருட்கள்
11, மக்கள் ந
(மேல்
யாழ்ப்ப
கவர்ச்சி மிகுந்த உயர்ந்த ரக நவீன டிசைன்களில் றெ
மற்றும் சகல விதமாக
விஜயம் ெ
றஞ்சனுஸ் பிட
இல. 17, 18, மக்க
LI I ript'i []

சிறப்புடன் மலர ன்ெருேம்.
ான
ட்டுறவுச்சங்கம்
ன நிலையம்: ட்டிக்ஸ் பிடவை வகைகள்,
அத்தியவாசிய பாவனை
முதலியன
வீன சந்தை DIT Lą)
T 600T lib.
Mor
சாறிகளுக்கும் டிமேட் ஆடைகளுக்கும் ண பிடவைத் திணிசுகளுக்கும்
சய்யுங்கள்
வை மாளிகை
ள் நவீன சந்தை, ாணம்.

Page 98
வாழ்த்துக்கள்
உள்ளூர் விளைபொருட்களின் விற்பனையாளர்கள்
மலைமகள் அன் கோ. 174, 4-ம் குறுக்குத்தெரு, கொழும்பு-11. தொலைபேசி: 24364
*வித்தியோதயம்’ நல்லபடி மலர எமது நல்வாழ்த்துக்கள்.
சுனிதா
றிகல்
சோனி
சோப் தய ாரிப்பாளர்கள்
சபிதா சோப் இன்டள்ட்றீஸ் 84, சோண்டர்ஸ் பிளேஸ்,
கொழும்பு-12.

‘Uits
tse
56est
Compliments
Atuam
MOWLAN EATING HOUSE
No. 477, 2nd Division, Maradana.
உற்பத்தியாளர்களும் நுகர்வோரும்
உவகையுடன்
நாடுவது
S. P. N. & COMPANY
18 1/185, Keyzer Street, COLOMBO - 1 1.
Telephone: 20 615 Telegrams: “ESPEYEN'

Page 99
حسیح سیف سہہ سحسف سفسحسن
பேரினப் பெ
()
) பெருக்கெண்ணினி
-།《། 《།《། 《།《། 《།《། iLiqS AJSLSqSMSAASqSLSLSAASLqSASLq qSAJSLSqSLSAAMJSqSAJSuSAAASLiLMLS
- கே. எஸ்.
வர்த்தகவியல் - இ
Pேதலீட்டில் ஏற்படுகின்ற ஒருகுறித்த தொகையான மாற்றத்தினுல் வருமானம் எவ்வாறன மாற்றத்திற்குள்ளாகும் என் பதை அளவீடு செய்வதே பெருக்கெண்ணு கும். அதாவது முதலில் ஏற்படுகின்ற அதி கரிப்பானது எந்தளவுக்கு வருமானத்தை உயர்த்துகின்றதென்பதும், அல்லது முத வில் ஏற்படுகின்ற குறைவானது வரும்ா காத்தில் எவ்வளவு வீழ்ச்சியை உருவாக்கு மென்பதும் பெருக்கெண்ணைப் பொறுத்த தாகும். உண்மையில் முதலீடு, நுகர்வு என் பனவற்றில் ஏற்படுகின்ற வீதாசார மாற் றத்திலும் பார்க்க, வருமானத்தில் ஏற்ப டுகின்ற வீதாசார மாற்றம் அதிகமாக இருக்கும்.உதாரணமாக வேலையின்மையிருக் ரும் பொருளாதாரமொன்றில் முதலீட்டுச் செலவானது 10 மில்லியன் ரூபாவிஞல் அதி கரிக்குமாயின் சிலருக்கு வேலை கிடைக்கும் - கலியாட்கள் மூலப்பொருள் உற்பத்தியில் ஈடுபடுவோர் தொழில்நுட்ப நிபுணர்கள் கட்டிடத் தொழிலாளிகள் போன்ருேருக்கு வேலை கிடைக்கும். எனவே வேலை யின் மூலம் பெற்றுக்கொண்ட புதிய வருமா ாங்களை இவர்கள் செலவு செய்யுமிடத்து மேலும் சிலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக் கும். இவ்வாறு இரண்டாம், மூன்ரும்படித் தொழிலாளிகளும் தமது புதிய வருமானத் ாதச் செலவு செய்வதனல் இதே விளைவு ஏற்படும். எனவே வருமானமும், வேலை வாய்ப்பும் அதிகரித்துக்கொண்டு செல்லும்.
- 7

*سہحلا مسحلا سسس~لا مسحلاس~لا مسحلاسہحلاسہ
ாருளியலில்
தொழிற்பாடு (S 22222222ਏ
நடராசா -
Nறுதி வருடம்.
ஆயினும் வருமானத்தில் ஏற்படுகின்ற அதி கரிப்பானது படிப்படியாகக் குறைந்து செல் லும். உதாரணமாக அமைதியான குளம் ஒன்றில் கல்லொன்றைப் போடுமிடத்து அதனைச் சுற்றி ஏற்படுகின்ற அலைகள் படிப் படியாகக் குறைந்து செல்வது போன்றதா கும். முதலீட்டில் ஏதேனும் குறைவுண்டா குமிடத்து வருமானம் குறைந்து அதனுல் செலவு குறைந்து வேலையின்மையானது அதிகரிக்கும்.
முதன்முதலாகப் பெருக்கெண் தத்து வத்தை ஆர். எவ். கான் என்பவர் ‘உள் நாட்டு முதலீட்டுக்கும் வேலை வாய்ப்புக் கும் உள்ள தொடர்பு’ என்ற கட்டுரை யில் வெளியிட்டார். பெருக்கெண்ணின் தொகையை அறிய வேண்டுமாயின் எல்லே நுகர்வு நாட்டம், எல்லைச் சேமிப்பு நாட் டம் ஆகியன பற்றி அறிந்தாக வேண்டும். வருமானம் அதிகரிக்குமிடத்து நுகர்வு, சேமிப்பு (வரியும் இறக்குமதிச் செலவும் சேமிப்பினுள் அடங்குவதாகக் கொள் வோம்.) ஆகியன எவ்வாறன மாற்றத் துக்குள்ளாகும் என்பதை முறையே எல்லே நுகர்வு நாட்டமும், எல்லைச் சேமிப்பு நாட் டமும் வெளிக்காட்டும். இதனை அறிவதற் குப் பின்வரும் அட்டவணை நன்கு உதவும்.

Page 100
பேரினப் பொருளியலில்.
வருமானம், நுகர்வு
பங்கிடக்கூடிய எல்லைச் வருமானம் சேமிப்பு நா
OOO - 300
O 2000 - 200
O 3000 O
O 4000 -- 300
O 5000 - 700
O 6000 -- 200
மேற்கண்ட அட்டவணையின்படி வரு மானம் அதிகரிக்க அதிகரிக்க எ ல் லை நுகர்வு நாட் டம் குறைந்து, எல்லைச் சேமிப்பு நாட்டம் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கலாம் வருமானமானது 1000 ரூபாவிலிருந்து 3000 ரூபாவுக்கு அதிகரிக் கும் வரையில் எதிர்க்கணிய சேமிப்பு இருப் பதையும், 3000 ரூபாவிலிருந்து வருமா னம் அதிகரிக்கும் பொழுது சேமிப்பு ஏற் படுவதையும் அவதானி க் கலாம். ஒரு குறித்த எல்லைக் கப்பால் வருமானம் அதி கரிப்பின் எல்லை நுகர்வு படிப்படியாகக் குறைகின்றதென்பதையே இது காட்டுகி றது ஆயினும் வருமானம் 1000 ரூபாவி லிருத்து 2000 ரூபாவுக்கு அதிகரிக்கும் பொழுது எதிர்க்கணிய சேமிப்பானது 200 ரூபாவிலிருந்து 100 ரூபாவுக்குக் குறைந்து சேமிப்பு 100 ரூபா உருவாகியுள்ளதென் பதை அவதானிக்க வேண்டும்.
எல்லை நுகர்வில் ஏற்படுகின்ற ஒவ் வொரு அதிகரிப்பும் பெருக்கெண்ணின் அளவை உயர்த்தும். பெருக்கெண் குறை வதற்குக் காரணம் எல்லை நுகர்வில் ஏற் படுகின்ற வீழ்ச்சியேயாகும். எல்லை நுகர் வில் ஏற்படுகின்ற அதிகரிப்பானது வருமா
- 7

கே. எஸ். நடராசா
சேமிப்பு அட்டவணை
சேமிப்பு எல்லை நுகர்வு
- L-L நுகர்வு நாட்டம்
1300
1 0.9 2200
.2 0.8 3000
.3 0.7 3700
.4 0.6 4300
5 0.5 4800
னத்தை உயர்த்தி வேலை மட்டத்தை அதி கரிக்கும். எனவே சேமிப்பின் அதிகரிப்பா னது தனிப்பட்ட ஒரு நபர் அல்லது சில ரைப் பொறுத்தவரையில் நன்மையளிக்கக் கூடியதாக இருப்பினும் ஒரு நாட்டின் முழுச் சமுதாயத்தையும் எடுத்து நோக்கு மிடத்து பாதகமானதாகவே தோன்றும். சேமிப்பை உயர்த்துவதற்கு எண்ணிய ஒரு சமுதாயத்தில் நுகர்வு குறைவதனல் வரு மானம் குறைந்து அதன் காரணமாக ஆரம்பத்தில் சேமிக்கக்கூடியதாக இருந்த தொகையைக் கூடச் சேமிக்க முடியாத நிலை உருவாகும்.
வருமானம் எவ்வளவு அதிகரிக்குமென் பது எல்லை நுகர்வு நாட்டத்தைப்பொறுத்த தாகும். உதாரணமாக முதலீடானது 20 மில்லியன் ரூபாவால் அதிகரிக்குமிடத்து எல்லை நுகர்வு நாட்டம் பங்கெனக் கொண்டால்- பங்கு எல்லைச் சேமிப்பு நாட் படம் - வருமானம் 80 மில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்கும். இந்த 80மில்லியன் ரூபா உயர் வும் உடனடியாக ஏற்பட்டுவிடமுடியாது. அது பெறப்பட்ட வருமானம் செலவு செய்ய எடுக்கும் காலஎல்லையைப் பொறுத்
o
ததாகும் 3 மாதங்களே சராசரியான

Page 101
பேரினப் பொருளியலில்.
செலவுக் காலமென்று கொள்வோமாயின் சுமார் 30 மாதங்களின் பின்னர் 80 மில்லி யன் ரூபாவுக்கு வருமானம் உயரும். பெருக் கெண்ணுல் பெறும் வருமானம் பின்வரு மாருகும்:
20 (1 + i + i + 3 + ...... + :) = 80 மில் லியன் ரூபாவாகும். இதனை இன்னுெரு முறையிலும் குறிக்கலாம்.
AY = AI (1 + C+C+C+...... + C).
அடைப்புக் குறிக்குள் கூறப்பட்டதைக் கணித மூலம் மேலும் எளிதாகச் சுருக்க லாம்: E என்பதாகும். வருமானம் எவ் வளவு அதிகரிக்குமென்று இதனைக்கொண்டு சொல்ல முடியும்.
V 1. A X′ = A I. ĉio
1.
1
எல்லை நுகர்வு நாட்டம்ானது 0 க்கும். 1 க்குமிடையில் இருக்கும். எல்லை நுகர்வு எவ்வளவுக்கு 1 க்கு அண்மையாக உள் ளதோ அவ்வளவுக்குப் பெருக்கெண் அதிக மாக இருக்கும். முதலீட்டில் ஏற்படுகின்ற உயர்வினல் மட்டுமன்றி நுகர்வு, அரசாங் கச் செலவு, ஏற்றுமதி ஆகியனவற்றில் ஏற் படுகின்ற அதிகரிப்பும் வருமானத்தை உயர்த்தும் - பெருக்கெண்ணின் அளவை உயர்த்தும். ஆனல் முதலீட்டில் ஏற்படு கின்ற அதிகரிப்புக்குக் காரணம் இலாப நோக்கம், அரசாங்கச் செலவில் ஏற்படு கின்ற உயர்வானது சமுதாய நலன் கரு தியோ அன்றிப் பொருளாதார நலன்கரு தியோ பெருக்கியை உயர்த்துவதற்காகச் செய்யப்பட்டதாகும். இவை இரண்டும் நோக்கத்தில்வித்தியாசப்பட்டனவாயினும் அவற்றின் தன்மையைப் பொறுத்தவரை பில் பெருக்கியை அதிகரிக்கவே செய்யும்.
"7 ܚ

கே. எஸ். நடராசா
நுகர்வானது உள்நாட்டுப் பொருளைக் கொண்டதாகவோ, வெளிநாட்டு இறக்கு மதியைக் கொண்டதாகவோ அமையலாம். நுகர்வானது இறக்குமதியையும் உள்ளடக் கியதாக இருப்பின் பெருக்கெண் குறைவா னதாகும். உதாரணமாக இறக் கு மதி எல்லை நாட்டம் 4 எனக் கொண்டால்
1 1. 1-(C-M) 1-C + M T 1-3
==
2.
(பெருக்கெண்) ஆகும். ஆகவே பெருமளவி லுள்ள வரும்ானத்தில் உள்நாட்டுப்பொ ருளை வாங்குவதற்குச் செலவிடும் பணம் அவ்வருமானத்தை மேலும் உயர்த்தும். ஆயினும் வெளிநாடுகளில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதனலோ அல்லது வெளி நாட்டவர்களின் வருமானம் உயர்ந்தமை யினலோ ஏற்றுமதி அதிகரிக்குமிடத்து - ஏற்றுமதியிலும் மிகச் சிறிய தொகையை இறக்குமதி வகிக்குமாயின் உண்மையில் மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்பொ முது எல்லை நுகர்வு நாட்டத்தில் ஒரு சிறிய பகுதியே இறக்குமதி எல்லை நாட்டமாக இருக்கும். இவ்வாருயின் வருமானம் உயர வாய்ப்புண்டு,
பெருக்கியின் வாய்ப்பாட்டை மேலும் இலகுவாக்க முடியும். 1 C என்பதற்குப் பதிலாக S என்ற எழுத்தைப் போடலாம். 1-C என்பது ஒரு ரூபா வருமானத்திற் கும், அதிலிருந்து செலவிடப்படும் தொகைக் குமுள்ள வித்தியாசமான சேமிப்புக்கும். வரிக்கும் செல்வதைக் குறிக்கும். இந்த உள்நாட்டு ஒதுக்கலுக்கு (Leakage)S என்று குறிக்கலாம். இப் போது பெருக்கெண் sနီM ஆகிறது. இவ்வாரு க வேலை வாய்ப் பில் ஏற்படும் மாற்றத்தையும் குறிக்கலாம். முதலீட்டுத் தொழில்களில் முதற்படி வேலை வாய்ப்பு ஒரு குறித்த தொகையி னல் அதிகரிக்குமாயின் மொத்த வேலை வாய்ப்பு அத்தொகையின் எம்மடங்கு பெரு குமென்பதை வேலை வாய்ப்புப் பெருக்கி
7 -

Page 102
பேரினப் பொருளியலில்
(வேலை வாய்ப்புப் பெருக்கியை K1 என எடுக்கப்படுகிறது) அளவிடும். அதாவது A1 முதலீட்டு ஏற்றத்தினுல், முதலீட்டுத் தொழில்களில் முதற் படி வேலை வாய்ப்பு /\ N2 ஏற்றமடையுமாயின் மொத்த வேலை வாய்ப் பி ன் ஏற்றம் /\ N = K /\, N2 g(35 tř
ஒரு நாட்டின் வருமானம் மாறும் பொழுது அதன் இறக்குமதியில் ஏற்படும் மாற்றத்தினல் உலகின் பிற் நாடுகளுக்கும் வருமானம் பரவும். இலங்கையின் வருமா னம் உயர்ந்தால் அதன் இறக்குமதி அதி கரிக்க அதனுல் உலகின் பிற பகுதிகளில் வருமானம் உயரும். வெளிநாடுகளின் வரு மானம் உயர அவற்றின் இறக்குமதிகளும் உயரும். அவற்றில் சில இலங்கையிலிருந் தும் போகும்; ஆதலில் இலங்கை வரும்ா னமும் வேலைவாய்ப்பும் மேலும் உயரும்.
பெருக்கெண்ணுக்கும், வேக வளர்ச்சித் தத்துவத்திற்குமுள்ள வேறுபாட்டையும் அறிதல் வேண்டும் முதலீட்டில் ஏற்படும் ஒரு சிறு மாற்றத்தினுல் வருமானம், வேலை, நுகர்ச்சி என்பனவற்றில் பெரிதுபடுத்தப் பட்டதொரு விளைவை ஏற்படுத்த முடியு மென்பதை நுகர்ச்சி, வருமானம் என்பன தொடர்பாக முதலீட்டில் ஏற்படும் மாற் றங்களின் விளைவைப் பெருக்கெண் விளக் குகிறது. ஆணுல் வேக வளர்ச்சித் தத்து வம்ானது, எந்த ஒரு நுகர் பொருளுக்கான கேள்வியும் அதிகரிக்குமாயின் அப்பொருளை ஆக்குகின்ற உற்பத் திச் சாதனமான பொறிகளுக்கான கேள்வியும் அதிகரிக்கு மென்பதை விளக்கும். ஆனல் பொறிக ளுக்கான கேள்வி, அப்பொறிகளால் உற் பத்தியாக்கப்படும் பொருளுக்கான கேள்வி அதிகரிப்பதற்குச் சம விகிதத்தில் அல்லது அதனிலும் விரைவாக அதிகரிக்கும். பெருக் குமெண்ணுனது முதலீட்டில் நுகர்ச்சி தங் கியுள்ளமையைக் காட்டுகிறது: வேகவளர்ச் சியானது நுகர்ச்சியில் முதலீடு தங்கியுள் ளமையைக் காட்டுகிறது.
78 ܚܝ

கே. எஸ். நடராசா
இதுவரையும் முதலீட்டின் தேறிய உயர்வே கூறப்பட்டது. ஆதலால் இம் முடிவுகளை அரசாங்கச் செலவுகள் அதிக ரிப்பதனுல் ஏற்படும் விளைவுக்கும் பொ ருத்த முடியும் அரசாங்கத்தின் செயலி னுல் மற்றைய துறைகளில் முதலீடு குறை யாதெனவும், எல்லை நுகர்வு நாட்டம் மாரு தெனவும் கொள்ளப்படுமிடத்து அரசாங் கச் செலவானது முதன்நிலையில் 5000 பேருக்கு வேலைகொடுக்குமிடத்து பெருக்கி நான்காக இருக்குமாயின் மொத்த வேலை வாய்ப்பு 20,000 ஆட்களுக்கு அதிகரிக்கு மெனக் கொள்ள முடியாது. இதற்கான காரணங்கள் பின் வருவனவாகும்.
(i) அரசாங்கமானது தனது செலவுகளுக்
கான வருமானத்தைப்பெற வரியை
உயர்த்துவ தலுைம், கடன் பத்திரங்
கள் உண்டியல்களை வழங்குவதஞலும் வேலைவாய்ப்பு ஏற்றமடைவதுடன் வட்டிவீதமும் உயரும். வட்டிவீத உயர் வைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடின் ஏனே யதுறைகளில் முதலீடு குறையும்; அதே நேரத்தில் சாதனங்களின் விலை உயர் தெணுல் முதலீடுவோரின் எல்லை விளை திறன் குன்றும். இதனை ஈடுசெய்ய வேண்டு ம்ாயின் வட்டிவீதம் குறைதல் வேண்
டும்.
(ii) அரசாங்கத்திட்டத்தினுல் மக்கள் தம் பிக்கையிழக்கக் கூடும். அவ்வாருயின் திரவத்தேர்வு அதிகரிக்கும். அல்லது எல்லைவிளைநிறன் குறையும். இதனை ஈடுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கா விடின் இது ஏனைய முதலீடுகளைக் குறைக்கும்.
(i) வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பின் காரணமான முதலீட்டு உயர்வில்ை ஏற்படும் பெருக்கியின் ஒருபாகம் பிற நாடுகளின் வேலைவாய்ப்புக்கே பயன் படும் - மறுதலையாக பிற நாட்டில், பெருக்கி பொருளாதார முயற்சிக

Page 103
பேரினப் பொருளியலில்.
ளைத் தூண்டுவதனுல் எமது நாட்டில் ஏற்படக்கூடிய நன்மையான எதிர்த் தாக்கத்தினல் இதில் ஒரு பகுதியை எமது நாடு திரும்பப்பெறும்.
(iv) குறுகிய காலத்தில் விளைவு குறைந்து செல்வதனல் வேலைவாய்ப்பு அதிகரிக்கு மிடத்து மொத்தவருமானத்தில் முயற் சியாளர் பெறக்கூடிய தொகை உய ரும்: சமூகச் சராசரி நுகர்விலும் பார்க்க முயற்சியாளரின் எல்லைநகர்வு
நாட்டம் குறைவானதாகும்.
(v) வேலையின்மைக் காலத்தில் சிலரின் சேமிப்பு எதிர்க்கணியமாக இருக்க லாம். இவர்கள் திரும்ப வேலைபெறு மிடத்து இவ்வெதிர்க்கணிய சேமிப்பு கள் படிப்படியாகக் குறையும். எனவே இச்சந்தர்ப்பங்களில் எல்லைநுகர்வு நாட்டம் குறைவுறும்.
சமூகத்தின் எல்லை நுகர்வைக் கூட்ட வேண்டுமாயின், வரிகளைக் குறைத்துப் பங் கிடக்கூடிய வருமானத்தை உயர்த்தலாம். ஆஞல் வரியைக் குறைப்பதஞல் கிடைக்
'தாங்க முடியாத துயரத்தின் அசைக்க முடியாத உறுதி தோன்றுகிற களால் தான் நெஞ்சில் வைரம் பாய்கி தான் மனிதனுக்கு விவேகம் பிறக்கிறது; போதுதான் பொறுமை புடம் போட்
காசிக்கிறது.*
- 79

கே. எஸ். நடராசா
கக்கூடிய வருமான அதிகரிப்பானது - வேலை உயர்வானது முதலீட்டையோ அன்றி அரசாங்கச் செலவையோ உயர்த் துவதஞல் அடையக்கூடிய வருமான அதி கரிப்பிலும் பார்க்கக் குறைவாக இருக்கும்.
முழுவேலையுடைமையுள்ள ஒரு பொரு ளாதாரத்தில் புதிதாகச் செய்யப்படும் முதலீடோ, அரசாங்கச் செலவோ அன்றி வரிக்குறைப்போ உண்மையில் பணவீக்கத் தையே உருவாக்கும். பணவீக்கமானது முழுவேலையுடைமையிலேயே ஏ ற் ப டு மென்று கூறமுடியாது; முழுவேலையுடை மையிலும் ஏற்படலாம்.
மேலே கூறப்பட்டவற்றிலிருந்து பின் வருமாறு சுருக்கிக்கூறலாம். எல்லை நுகர்வு நாட்டம் ஒன்றிலும் சிறியளவு குறைந்த தாயின், முதலீட்டில் சிறிய மாற்றங்கள் ஏற்படும்போது வேலைவாய்ப்பிலும், வரு மானத்திலும் பெருமாற்றங்கள் தோன் றும். அல்லது எல்லை நுகர்வு நாட்டம் பூச்சி யத்திலும் சிறியளவே அதிகமாயின் முத லீட்டில் சிறிய மாற்றங்கள் ஏற்படும்போது வேலைவாய்ப்பிலும், வருமானத்திலும் அற்ப மாற்றங்கள் தோன்றும்.
இறுதியில்தான் மனித உள்ளத்தில் து; அடுத்தடுத்து வரும் ஏமாற்றங் றது; கடுமையான சோதனைகளால் கஷ்டத்திற்கு மேல் கஷ்டமாக வரும் .ட பொன்போல் சுடர்விட்டுப் பிர
— 6тшрfї з 6öт

Page 104
SUT IT AAN S
M. M. Sultan Abdul Cader &
Brothers
importers Merchants Agents.
Safety Transport Service
31, OLD MOOR STREET, COLOMBO 12.
Head Office: Chavakachcheri
72ith the best
Compliments
of
Basheer Traders
TEXTILE MERCHANTS
210, Main Street, Colombo - 11.

SURYA
5fReadlu ta Duiné
Produced from the picked
well selected Fresh Varieties Of Jaffna Fruits.
MANG O NECTAR TOMATO NECTAR PASSION CORCIAL
& YA CHOCKLET NECTAR
Office:
SURYA INDUSTRIES
331, Havelock Road Colombo - 6
:
folitb Best (ompliments
fram
Esescee (Ceylon) Ltd.
169, Second Cross Street, Colombo-ll.
Telephone: 29040

Page 105
ಜ್ಞರಾಣ
9 D -------سے
வர்த்தகவியல் -
வங்கிக் கொடுகடனைக் கட்டுப்படுத்து வது மத்திய வங்கியின் முக்கிய தொழில் எனக் கூறலாம். மத்திய வங்கியின் தொ ழில்கள் அனைத்தும் இதற்குச் சம்பந்தமா னவை. நோட்டுகளை வெளியீடு செய்வது, அரசாங்கத்திற்கு வங்கியாக இருப்பது, ஒதுக்குகளை வைத்திருப்பது போன்ற தொ ழில்கள் தனித்தனியாக தோன்றியனவா யினும் இவைகள் எல்லாம் இத்தொழி லுக்குத் துணைத்தொழில்களேயாகும். மத் திய வங்கி வங்கிக் கொடுகடனைக் கட்டுப் படுத்தும் பொறுப்பை பெறக்காரணம் வங்கிக்கொடுகடன் தற்காலத்தில் பண திரம்பலில் முக்கிய பகுதியாக இருப்பதே யாகும். ஒரு காலத்தில் கடன் கட்டுப்பாட் டின் நோக்கம் மாற்றுவீதத்தை (Exchange note) நிலைப்படுத்துவதாக இருந்தது. தங்கநாணயத் திட்டம் இருந்த போது மாற்றுவீத நிலைப்பு முக்கியமாகக் கருதப் .لق سL-"اله
எனவே 1914ஆம் ஆண்டுக்கு முன்பு *சர்வதேச தங்கநாணயத்திட்டம் சிறந்த முறையில் செயற்பட்ட காலத்தில் வெளி நாட்டு நாணய உறுதியைப் பாதுகாப்பதே கடன்கட்டுப்பாட்டின் முக்கிய குறிக்கோ னாக இருந்தது. ஆனல் தங்கநாணயதிட் டம் முறிவுற்றதுடன் 1930ஆம் ஆண்டு உலக மந்தத்தை அண்டிய காலப்பகுதி களில் உள்நாட்டுப் பொருளாதார உறு
 

隱隱
பாட்டு முறைகள்
வங்கியின்
i
மூன்ரும் வருடம்.
தியை பாதுகாப்பதே கடன் கட்டுப்பாட் டின் குறிக்கோளாக இருந்தது. 1980இல் முதலாளித்துவ பொருளாதாரங்களில் நிறைதொழில் மட்டம் என ஒன்று இல்லை யெனக் கெயின்ஸ் தனது பொதுக்கொள்கை என்ற நூலில் விளக்கியதைத் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்து வதே கடன் கட்டுப்பாட்டின் முக்கியகுறிக் கோளாக கருதப்பட்டது. எனவே தான் கடன்கட்டுப்பாட்டினது குறிக்கோளானது காலத்திற்குக் காலம் மாற்றியும், மாற் றப்பட்டும், வளர்ச்சி அடைந்துள்ளது. ஆகவே கடன்கட்டுப்பாடு என்பது ஒரு நாட்டின் வங்கிக் கடன் நிரம்பலை பொரு ளாதார உறுதி, வளர்ச்சி என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குபடுத் திக் கட்டுப்படுத்துவதைக் குறிப்பதாகும்.
மத்திய வங்கியின் கடன் கட்டுப்பாடு கள் வெற்றிகரமாக செயல்பட சில நட வடிக்கைகளே செய்யவேண்டும். அதாவது நாட்டில் ஆளப்படும் எல்லாக் கடன்வசதி களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மத்திய வங்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரல் வேண்டும். இதற்காக மத் திய வங்கி வர்த்தக வங்கிகளுடன் மட்டு மல்லாது மற்றய நிதிநிறுவனங்களுடனும் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யவேண் டும். நேரடியாக வணிக வங்கிகளுடன் தொட்ர்பு கொண்டு அவைகளைக் கட்டுப்

Page 106
மத்திய வங்கியின் கடன்.
படுத்தல் இலகுவான காரியமல்ல. அவை க3ள கட்டுப்படுத்த அதிகாரமும் வேண் டும். அதாவது மத்திய வங்கியிடம் எல்லா வர்த்தக வங்கிகளும் கொடுக்கல் வாங்கல் கள் செய்யவேண்டும். மத்திய வங்கிக்கு அவைகளின் நடவடிக்கைகள் பற்றி வெளிப் படுத்த விபரங்கள் வேண்டும். அத்துடன் வர்த்தக வங்கிகளும் மத்திய வங்கியின் கொள்கைகளை முழுதாகக் கடைப்பிடிக்க
வேண்டும்.
பணத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு மதிப்பை நிலை நிறுத்துவது மத்திய வங்கி களின் முதன்மையான பொறுப்பாக இருக் கின்றது. இதற்கு நாட்டில் புழக்கத்தில் இருக்கின்ற பணத்தின் அளவை கட்டுப் படுத்துகின்ற தொழிலை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. நாட்டின் ச ட் - முறைப் பணத்தோடு வங்கிப் பணமும் புழக்கத்திலிருக்கிறது. வங்கிகளின் வங்கி என்ற முறையிலும் நாட்டின் நலம்பேணும் அரசின் வங்கி என்ற முறையிலும் கடன் அளவைக் கட்டுப்படுத்தல் மத்திய வங்கி யின் பொறுப்பாக இருக்கிறது.
வணிக வங்கிகளின் கடனின் அளவைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி இரு முறை களைப் பின்பற்றுகிறது.
(i) கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறை (Quantitative credit control) pygi லது தொகைக்கட்டுப்பாடு அல்லது பொதுக்கட்டுப்பாடு என்பர்.
(i) கடன் தன்மைக்கட்டுப்பாட்டு முறை (Qualitative credit control) gyáv6).51 தெரிவுக்கட்டுப்பாடு அல்லது பண் புக்கட்டுப்பாடு என்பர்.
கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறைகள் வங்கிகள் தருகின்ற மொத்தக் கடனின் அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப் படுகின்றன. இக் கட்டுப்பாடு பொதுவாக மரபு ரீதியான கட்டுப்பாடு எனவும் கூறப் படுகின்றது. இக்கட்டுப்பாடுகள் ஆங்கில
8 -سس

வ. அன்ரனி
வங்கி அனுபவத்தின் பின்னணியில் எழுந்த காரணத்தால் இதனை மரபுரீதியான கட் டுப்பாடு எனவும் கூறுவர். நாட்டின் வங் கிக் கடன் நிரம்பலை மொத்தமாகக் கட் டுப்படுத்துவதே கடன் அளவுக் கட்டுப் பாட்டு முறையின் நோக்கமாகும். அதா வது வணிக வங்கிக் கடன்கள் என்ன துறைக்குக் கொடுக்கப்படுகின்றது, என்ன காரணங்களுக்காகக் கொடுக்கப்படுகின் றது, என்ன அடிப்படையில் வழங்கப்படு கிறது. எவ்வளவு வழங்கப்படுகின்றது என்ற வேறுபாடின்றி மொத்தமாக வங் கிக் கடன் நிரம்பலைக் கட்டுப்படுத்துவ தைக் குறிப்பதாகும். இக்கடன் அளவுக் கட்டுப்பாட்டை மத்திய வங்கி 3 முறையா கச் செய்கின்றது.
A. வங்கிவீதம் அல்லது கழிவு வீதக் G5It Gir 60pF (Bank Rate or Discount Rate policy)
B. பகிரங்க சந்தை நடவடிக்கை (Open
market Operation)
C. உரொக்க இருப்பு வீதம் மாறுதல்
(Variation of cash ratios)
A. வங்கிவீதம் அல்லது கழிவு வீதக்
கொள்கை
மத்திய வங்கி கையாலும் கடன் கட் டுப்பாட்டு முறைகளில் மிகவும் பழமையா னது வங்கிவீதக் கொள்கையாகும். இம் முறை 1837ஆம் ஆண்டு இங்கிலாந்தில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் பல நாடுகளில் சூழ் நிலைகளுக்கு ஏற்ப பின்பற்றப்பட்டு வந்தன. இங்கு வங்கி வீதம் என் னும்போது மத்திய வங்கி என்ன வீதத் தில் தகுதியான மாற்றுண்டியல்களை கழிவு செய்து கொண்டதோ, தக்க கடன் பத்தி ரங்கள் மீது முற்பணமாகவோ, கொடுக் கின்ற தென்பதைக் குறிக்கின்றது. இந்த வீதம் அலுவலக அடிப்படையில் மிகவும் குறைவான வீதமாகும். இந்தக் குறைந்த வீதத்தில் வணிக வங்கிகள் வேறு எங்கும் கடன் பெற முடியாது.
32 -

Page 107
மத்திய வங்கியின் கடன்.
வங்கி வீதத்தை மாற்றுவதன் மூலம் மத்திய வங்கி எந்த வட்டி வீதத்தில் வர்த்தக வங்கிகள் அதனிடமிருந்து பண வசதியைப் பெறலாம் என்று தீர்மானிக் கிறது. வங்கிவீதம் கூடுகின்றபோது வணிக வங்கிகள் கூடிய செலவில் கடன் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனுல் கடன் அளவு கட்டுப்படுத்தப்படுவதைக் காணலாம். வங்கிவீதம் குறையின் இதற்கு எதிர்மாருக நிகழும். இவ்வங்கி வீதம் வட்டி வீத அமைப்பின் அச்சாணியாக இருக்கின்றது. ஏனெனில் நன்கு வளர்ச்சி யடைந்த பணச்சந்தை இருக்கும் நாடு களில் வங்கி வீதத்திற்கும், பணச்சந்தை யில் நிலவுகின்ற வைப்புவீதம் (Deposit rate), 9, 60lp LjL 695 lb (Call rate), 35 l-Gör வீதம் (Loan rate), அக் காடிக் கழிவு வீதம் (Market discount rate) 2,5u Udi Goup வட்டி வீதங்களுக்கும் தொடர்புகள் உண்டு. இந்த வட்டி வீதங்கள் வங்கி வீதத்தின் ஏற்றத்தாழ்வை சார்ந்து கூடவோ, குறை யவோ செய்கின்றது. வங்கி வீதம் திறமை யாக செயல்படுகின்றதென்ருல் வங்கி வீதம் மாற்றம் அடையும்போது எந்த அளவிற்கு மற்றய வட்டிவீதங்கள் மாற் றம் அடைகின்றதென்பதனை ஒட்டி அம்ை Utp -
வங்கிவீதம் தண்டனை வீதமாகவோ அல்லது வசதிவீதமாகவோ (Accommodate rate) இருக்கலாம். சந்தையில் நிலவுகின்ற வட்டி வீதத்தைவிட வங்கிவீதம் அதிகமா யின் அது தண்டனை வீதமாகக் கருதப் படும் உ+ம். இங்கிலாந்தின் வங்கிவீதம் கழிவுச்சந்தை வீதத்தைவிட அதிகமாகும். மாற்றுண்டியல்களை கழிவு அகங்களில் (Discount house) gjai vág a 6Nofi 35 Gau iš 6 களில் கழிவு செய்து பணத்தைப் பெறு கின்ற வீதத்தைவிட இங்கிலாந்து வங்கி யின் கழிவுவீதம் அதிகமாக இருக்கின்றது. ஆதலால் வங்கிகள் இங்கிலாந்து வங்கியில் உண்டியல்களே கழிவு செய்து பணத்தைப் பெறுவதற்குத் தண்டனை போல் அதிக வட்டி கொடுக்கவேண்டும். இவ் அதிக தண்

வ. அன்ரனி
டனை வீதம் அறவிட க்காரணம் வர்த்தக வங்கிகள் தமது வாடிக்கை காரர்கள் போட்ட பணத்தைக் கடன் கொடுத்தால் வாடிக்கைக்காரர்கள் தமது பணத்தை திரும்பக் கேட்கும்போது கொடுப்பதற்குப் போதிய பணமில்லையாயின் கழிவு செய்த உண்டியல்களை அல்லது கடன் பத்திரங்களே மத்திய வங்கியிடம் கொடுத்துப் பணம் பெறும். அதற்கு மத்திய வங்கியால் அறவி டப்படும் வட்டிவீதம் கூடவாக இருக்கும். இது தண்டனை வீதம் எனப்படும். இவ் வங்கிவீதத்தில் மாற்றம் ஏற்படும்போது 2 விளைவுகள் ஏற்படலாம்.
1. நாட்டின் செலுத்து நிலையில் குறிப் பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வரும்.
2. நாட்டின் பொருளாதார நடவடிக் கைகளில் மாற்றத்தைக் கொண்டு வரும். இவை இரண்டில் ஒன்று மாறுவதாயின் வங்கிவீதம் மாறும்.
ஆகவே வங்கிவீதம் உயர்ந்தால் கடன் உற்பத்தி அளவு கட்டுப்படுத்தப்படுகின் றது. மத்திய வங்கி கடன் கொடுக்கும் வட்டிவீதம் அதிகமாக இருப்பின் வணிக வங்கிகளும் உயர்ந்த வட்டி வீதத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கும். இதஞல் கடன் அளவு குறை யும். கடன் அளவு மட்டுமல்லாது முதலீடு களிலும் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. வட்டிவீதம் குறையுமாயின் எளிதாகப் பணத்தைப் பெற்று முதலீடு செய்து உற் பத்தியை பெருக்கமுடியும். வட்டிவீதம் கூடவாயின் முதலீடும் இல்லை; உற்பத்தி யும் இல்லை. அத்துடன் வங்கிவீதம் மாற் றம் அடையும்போது விலைகள், வருவாய் களில் மாற்றத்தையும் தங்களின் ஏற்று மதி இறக்கும்தி அளவைக் கட்டுப்படுத்த வும் அந்நியச் செலாவணித் தேவை அளிப் பில், சமன்பாட்டை ஏற்படுத்தவும் இது உதவியாக உள்ளது.
இவ்வகையாக பல நாடுகளில் வங்கி வீதம் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும்
3 -

Page 108
மத்திய வங்கியின் கடன்.
கூட சமீப காலத்தில் ஒரு சிறப்பிழந்த கடன் கட்டுப்பாட்டுக் கருவியாகவே பயன் பட்டது இதற்குப் பின் வரும் காரணங் கள் கூறலாம்.
(1) மத்திய வங்கி, வங்கி வீதத்தை அதிகரிக்கும் போது சந்தையில் உள்ள எல்லா வட்டி வீதமும் உடனடியாக அதி கரிக்கப் படவேண்டும். இவ்வாறு சந்தை யில் வட்டி வீதம் உடனடியாக மாறு வதற்கு ஒரு வளர்ச்சியடைந்த பணச் சந்தை அவசியம். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ச்சியடைந்த பணச் சந்தை இருப்பது போல வளர்ச்சி யடைகின்ற இலங்கை போன்ற பல நாடு களில் பணச் சந்தை இருப்பதில்லை. இந்தி யாவில் பெயரளவில் ஒரு பணச் சந்தை இருந்த போதிலும் கூட பணச் சந்தையில் காணப்படும் பல்வேறு பிரிவுகளும் இணைக் கப்படாத தன்மை வங்கி வீதத்தை சிறந்த முறையில் பயன்படுத்த முடியாமைக்கு முக்கிய காரணமாகும். அதே போல் வளர்ச்சியடைந்த வ ணி க வங்கி முறை யைக் கொண்ட அவுஸ்திரேலியால் ஒரு வளர்ச்சியடைந்த பணச் சந்தையின்மை வங்கி வீதத்தை பயன்படுத்தாமைக்கு கார ணம் எனலாம்.
(2) ஒரு மத்திய வங்கி எவ்வளவுக்கு இறுதிக் கடன் கொடுக்கும் தாபனமாக கடமையாற்றுகின்றதென்பதைப் பொறுத் ததாகும். ஆனல் பல நாடுகளில் வணிக வங்கிகள் மேல திகத் திரவத் தன்மை கொண்டிருப்பதனுல் மத்திய வங்கியிடம் கடன் பெறச் செல்வதில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட பொருளாதாரச் செழிப்பின்போது அல்லது பூரிப்புக்காலங் களில் வணிக வங்கிகள் அதிகளவில் திர வச் சொத்துக்களை பெற்றிருப்பதால் இத் தகைய நிலை ஏற்படுவதில்லை.
(3) தங்க நாணய மாற்றுத் திட்டத் தின்போது வங்கி வீதம் வெற்றியளித்த மைக்கு இரு காரணங்கள் உண்டு. உதா ரணமாக இங்கிலாந்து அமெரிக்காவிற்கு
84

50 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் கடனுகக் கொடுக்க வேண்டும். எனவே இங்கிலாந் திலிருந்து அமெரிக்காவிற்கு 50 மில்லியன் பெறுமதியான தங்கம் ஏற்றுமதி செய்யப் படும். இங்கிலாந்து வங்கியின் தங்க இருப்பு 50 மில்லியன் குறைவதால் இங்கிலாந்து வங்கி பண நிரம்பலை குறைப்பதற்கு வங்கி வீதத்தைக் கூட்டும். வங்கி வீதம் கூடும் போது கடன் நிரம்பல் குறைந்து வரும்ா னம் குறைவானதால் மொத்தக் கடன் நிரம்பல் குறைந்து இங்கிலாந்தில் விலை மட்டம் குறையும். இதற்கு மாருக அமெ ரிக்க கூட்டு ஒதுக்கு வங்கியில் 50 மில்லி யன் ஸ்ரேலின் பவுண் அதிகரிப்பதால் பண நிரம்பலை அதிகரிக்க கூட்டு ஒதுக்கு வங்கி, வங்கி வீதத் தைக் குறைக்கும். எனவே கடன் நிரம்பல் அதிகரித்து வரு மான மட்டம் கூடி மொத்தக் கேள்வி அதி கரிப்பதால் அமெரிக்காவின் விலை மட்டம் கூடும். எனவே விலைமட்டம் கூடிய அமெ ரிக்காவுக்கு விலைமட்டம் குறைந்த இங்கி லாந்துப் பொருட்கள் ஏற்றுமதியாக வழி வகுக்கும். இரண்டாவதாக இங்கிலாந்தில் வட்டி வீதம் கூடு த லால் வட்டி வீதம் குறைந்த அமெரிக்க முதல் இங்கிலாந்துக் குப் பாய்கிறது.
(4) தங்க நாணயத் திட்டத்தின் போது மக்கள் திரவத் தன்மையைக் கருதி குறுங்கால ஆவணங்களிலும், பிணைப்பத்தி ரங்களிலும் முதலீடு செய்தார்கள். ஆனல் இன்று இலாப நோக்கம் கருதி நீண்டகால ஆவணங்களிலும் பிணைப் பத்திரங்களிலும் முதலீடு செய்வர். எனவே இந்த நீண்ட கால நிதி முதலீடுகளை குறுங்கால வங்கி வீதம் பாதிப்பதில்லை.
(5) இன்று பணச் சந்தையில் நவீன வளர்ச்சியான பல்வேறு நிதித்தாபனங்கள் தோன்றியுள்ளன. இந்தப் பல்வேறு நிதித் தாபனங்களும் பெருமளவு கடனை நாட் டில் நிரம்பல் செய்கின்றன. வங்கி வீதம் நேரடியாக வர்த்தக வங்கிகளை பாதிப்பத தணுல் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இந்நிதித் தாபனங்கள் பண நிரம்பலை கட்டுப்படுத்த முடியா.

Page 109
மத்திய வங்கியின் கடன்
(6) 1956இல்'றட்லிவ் 'குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது வட்டி வீதம் முத லீடுகளைப் பாதிப்பதில்லை என்ற புதிய உண்மையைக் கூறினர். வட்டிவீத மாற் றம் 3 காரணங்களினல் முதலீட்டினைக் கட்டுப்படுத்த முடியாதெனக் கூறினர்கள். முதலாவது மொத்த முதலிட்டுத் தொகை பில் வட்டி கொடுக்கும் பங்கு மிகச் சிறிய தொகை. இரண்டாவதாக கூடிய வட்டிக் குக் கடன்பெற்று முதலீடு செய்வதாலும் பொருளின் விலையைக் கூட்டுவதன் மூலம் இலாபம் பெறலாம். மூன்ருவதாக முத வீட்டினைச் சந்தை வாய்ப்பு, தொழில்நுட்ப மூலவளம் போன்ற காரணிகள் அதிகம் நிர்ணயிக்கின்றன. எனவே வங்கி வீத மாற் றத்தால் முதலீட்டைக் கட்டுப்படுத்த
p-lu.
(7) தங்க நாணயத் திட்டத்தின் போது பொருளாதாரம் நெகிழ்ச்சியுடை பதாகக் காணப்பட்டது. அதாவது வட்டி வீதம் குன்றயும்போது கடன் நிரம்பல் அதி கரித்து மக்களின் வரும்ான மட்டம் உயர் தல் போன்ற நெகிழ்ச்சித் தன்மை அக் காலத்தில் காணப்பட்டது. ஆளுல் இத் தகைய நெகிழ்ச்சித் தன்மை இன்று பல் வேறு அரசியல் பொருளாதார காரணங் களுக்காகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வங்கி வீதச் செயற்பாடு தவிர்க் கப்பட்டுவிட்டது எனலாம்.
(8) 1931ஆம் ஆண்டிலிருந்து1950ஆம் ஆண்டு ஈருக பல ஐரோப்பிய நாடுகள் மலிவுப் பணக் கொள்கை என்ற புதிய கொள்கையைக் கடைப்பிடித்தனர். மலி வுப் பணக் கொள்கை என்பது கடன் பெறு தலுக்கான செலவை.குறைந்த மட்டத்தில் வைத்திருத்தலாகும், அதாவது இங்கிலாந் தில் இது மலிவுப் பணக் கொள்கை என வும், ஐக்கிய அமெரிக்காவில் இலகு பணக் கொள்கை என வும் வைத்திருந்தனர். எனவே இக்கால இடைவெளியில் பல நாடு களில் மத்தியவங்கியைப் பொறுத்தமட்டில் வங்கி வீதத்தைக் கூட்டல் அல்லது குறைத் தல் நடைமுறையில் சாத்தியமற்றதாகும்.
m 8

வ. அன்ரனி
இதனல் அதன் முக்கியத்துவம் குறைத லாயிற்று.
(9) 1930ஆம் ஆண்டைத் தொடர்ந்து யுத்த நெருக்கடிகளாலும் பல்வேறு கார ணங்களினலும், அரசாங்கச் செலவு அதி கரித்துச் சென்றதாலும் அரசாங்கம் பெரும் கடனைப் பல வர்த்தகத் துறையினரிடமி ருந்து பெறவேண்டியிருந்தது. இத்தகைய நிலையில் வங்கி வீதத்தைக் கூட்டுவதன் மூலம் அரசாங்கம் பெறும் பகிரங்கக் ás Gör செலவு அதிகரிப்பதால் பல |51r LG) er சாங்கம் வங்கி வீதத்தை அதிகரிக்கத் தயங்கியது.
B. பகிரங்கச் சந்தை நடவடிக்கை.
பகிரங்கச் சந்தை நடவடிக்கை என் பது நாட்டின் பண நிரம்பலைக் G560sodas அல்லது அதிகரிக்கும் முகமாக பகிரங்கச் சந்தையில் மத்திய வங்கியானது அரசாங்க ஆவணங்களையோ அல்லது உண்டியல்க ளையோ விற் றல் அல்லது கொள்வனவு செய்தலைக் குறிப்பதாகும்.
1914 ஆம் ஆண்டிலிருந்து பல நாடுக ளின் மத்திய வங்கிகளால் அதிகளவு பின் பற்றப்படும் ஒரு கடன் கட்டுப்பாட்டு முறை இப்பகிரங்கச் சந்தை நடவடிக்கை யாகும். இவ்வாறு 1914ஆம் ஆண்டிலிருந்து இக்கட்டுப்பாட்டு முறை அதிகளவில் பின் பற்றப்பட்டுவர இரண்டு காரணங்களைக் கூறலாம், முதலாவதாக 1914 ஆம் ஆண்டி லிருந்து வணிக வங்கிகளின் திரவத் தன்மை ஒரளவு அதிகரிக்க முற்பட்டது. இரண்டா வதாக அரசாங்கம் பெறும் பகிரங்கக்கடன் தொகையும் அதிகரித்து வந்தது. இக்கட் டுப்பாட்டின் எளிமையும், அரசாங்கத்தின் கடன் பசியும் இக்கட்டுப்பாட்டு முறையை பல நாடுகளில் பிரபல்யம் அடையச் செய்தது.
மத்திய வங்கி பகிரங்கச் சந்தையில் கடன் பத்திரங்களை வேண்டுதல், அதாவது பத்திரங்களை வேண்டிக்கொண்டு பணம்
5 - .

Page 110
மத்திய வங்கியின் கடன் .
கொடுக்கிறது. அல்லது அதன் மீது வரை யறுத்த காசோலையைக் கொடுக்கலாம். பத்திரங்களை விற் பனை செய்தவர்கள் கிடைத்த பணத்தையோ அல்லது காசோ லையையோ வர்த்தக வங்கிகளிடம் செலுத் துகின்றனர் உரொக்கப் பணம் கிடைத் தால் வணிக வங்கியின் த ரொக்க இருப்பு அதிகரிக்கும் அல்லது மத்திய வங்கியிடம் இருக்கும் இருப்புக் கூடினல் பொது மக்க ளுக்கு கடன் கொடுக்கும் ஆற்றல் அதிக ரிக்கும். எ ன வே, வர்த்தக வங்கியின் மொத்தக் கடனின் அளவு அதிகரிக்கிறது. இந்த அளவிற்கு பொதுமக்களின் கையில் இருக்கும் புழக்கப் பணத்தின் அளவு கூடு கிறது. இதல்ை பொருளாதார நடவ டிக்கை அதிகமாகும். ஆனல் மத்திய வங்கி பத்திரங்களை விற்பனை செய்தால் இதற்கு நேர்மாறன எதிர் விளைவுகள் ஏற்படும்.
இந்நடவடிக்கை மூலம் மத்திய வங்கி தானே பண அளவைக் கட்டுப்படுத்த லாம். வணிக வங்கியின் ஒத்துழைப்புக் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மத் திய வங்கியால் பகிரங்க சந்தை நடவடிக் கையை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் வர்த்தக வங்கிகளின் கடன்களை கட் டுப்படுத்தமுடியும். இச்சந்தை நடவடிக்கை வங்கி வீதத்திற்கும் துணையாக உள்ளது. வங்கி வீதம் மாறினல் எதிர்பார்க்கும் பலன் கிடைக்க பகிரங்க சந்தை நடவ டிக்கை துணை செய்கிறது. மலிவுப் பணக் கொள்கையை பின்பற்றி வட்டி வீதத்தைக் குறைப்பதோடு பத்திரங்களை விலைக்கு வேண்டி நாட்டின் பணத்தின் அளவையும் கூட்டலாம். இச்சந்தை நடவடிக்கை அர சின் கடனுக்கும் ஆதரவாக அமைகிறது. அரசு கடன் பத்திரங்களை வெளியீடு செய் யும்போது மத்திய வங்கி வேண்டக்கூடிய தாக உள்ளது. அத்துடன் விலைகளையும் அந்நி யச் செலாவணியையும், கட்டுப்படுத்த இச் சந்தை உதவி செய்கிறது.
இப்படியாகப் பண நிரம்பலைக் கட்டுப் படுத்த வேண்டின் மத்திய வங்கியானது
8 حس۔

வ. அன்ரனி
பகிரங்கச் சந்தையில் தன் ஆவணங்களே விற்பனை செய்யும். இவ்வாறு விற்பனை செய் யும்போது பின்வரும் விளைவுகள் சந்தை யில் ஏற்படும்:
(i ) வங்கிகள் இவற்றைப் பெரும்ளவு கொள்வனவு செய்தால் வங்கிகளின் திரவத் தன்மை குறைக் கப்படுகிறது. (கடனுகச் சக்தி) மக்கள் இவற்றைக் கொள்வனவு செய்தால் மக்களால் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்ட ஒரு பகு தி மீட்கப்படுவதால் இவ் அடிப்படையிலும் வங்கிகளின் திரவத் தன்மையும் கடனக் கச் ச க் தி யும் குறைக்கப்படுகிறது.
(ii) மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல வேறு நிதிஸ்தாப னங்களும் தம் சொத்துக்களின் பாது காப்புக் கருதி அரசாங்க உண்டியல் களைக் கொள்வனவு செ ய் வ த r ல் இவற்றினது திரவத் தன்மை கட்டுப் படுத்தப்பட்டு கடனுக்கச் சக்தி குறைக் கப்படுகிறது. எனவேதான் இக் கட்டுப் பாட்டு முறையினல் மத்திய வங்கிக்கு அப்பாற்பட்ட நிதிஸ்தாபனங்களையும் கட்டுப்படுத்த முடியும்.
(iii) சந்தையில் குறிக்கப்பட்ட வகை ஆவ ணங்கள், உண்டியல்களின் தொகை விலை அதிகரிப்பதால் அவற்றின் விலை குறைகிறது. இவ் விலைக் குறைப்பு மக் களின் மொத்தச் சொத்துப் பெறுமதி யைக் குறைப்பதால் அவர்களது மொத் தச் செலவீடும் குறைக்கப்படுகின்றது.
(iv) சந்தையில் ஆவணங்களின் பெறுமதி குறைவதால் வட்டி வீதம் அதிகரிக் கிறது. எனவே கடனுக்கான செலவு கட்டுப்படுத்தப்படுகின்றது.
(V) சந்தையில் உத்தேச நடவடிக்கைக Oலும் திடீர் மாற்றத்தை ஏற்படுத்து கிறது.
இலங்கை மத்திய வங்கி 1956இலும்,
1957இலும் பொருளாதாரம் அசாதாரண
6 -

Page 111
மத்திய வங்கியின் கடன்.
முறையில் திரவத் தன்மையுடையதாய் இருக்கையில் மேலதிக திரவத் தன்மையை நீக்குவதற்கு தன் சொந்தப் பிணைகளை வெளியிட்டது. ஆனல் இக்கட்டுப்பாட்டு முறைகள் அதிகளவு வெற்றி அடைய சில தடைகள் இயல்பாக உண்டு.
1. பகிரங்க சந்தையில் மத்திய வங்கி surr GOT gj உண்டியல்கள் ஆவணங்களை கொள்வனவு, விற்பனை வு செய்ய ஓர் வளர்ச்சியடைந்த ஆவணச் சந்தை இருத் தல் அவசியம். அமெரிக்காவில் ஆவணச் சந்தை இருப்பது போல குறைவிருத்தி நாடுகளில் இருப்பதில்லை. இந்தியா, இலங் கையில் ஒர் ஆவ்ணச் சந்தையை வளர்ச்சி படையச் செய்ய சமீப காலத்திலேயே மத் திய வங்கி சில நடவடிக்கைகளை மேற் கொண்டது. மேற்கு நாடுகளில் இருப்பது போல ஒரு வளர்ச்சியடைந்த ஆவணச் சந்தையினை இந்தியா ஏற்படுத்துவதற்காக 1952ஆம் ஆண்டு உண்டியல் சந்தைத் திட் டம் என்ற ஒரு புதிய திட்டத்தை இந்திய ஒதுக்கு வங்கி ஆரம்பித்தது. இலங்கை மத் திய வங்கியும் 1956இல் இருந்து சந்தையில் பல்வேறு முதிர்வுக் காலங்களைக் கொண்ட உண்டியல்களின் விற்பனையை அதிகரித்தது,
II. பல நாடுகளில் வணிக வங்கிகளின் திரவத் தன்மை அதிக அளவில் இருப்ப தால் பகிரங்கச் சந்தை நடவடிக்கை பானது வணிக வங்கிகளின் திரவத் தன் மையை குறைக்க ஓரளவு பயன்படுகிறதே யொழிய கடன் கட்டுப்பாட்டைப் போக்க போதியதாக அமையவில்லை.
iI. அரசாங்கக் கடன்களைப் பாதிக் கிறது.
C. உரொக்க இருப்பு வீதம் மாறுதல்.
மரபுவழிக் கடன் கட்டுப்பாட்டு முறையான வங்கிவீதக்கொள்கையிலும் பகி ரங்கச் சந்தை நடவடிக்கைகளிலும் சில உள்ளார்ந்த குறைபாடுகள் இருந்ததால் வங்கிகளின் உரொக்க இருப்பது வீத மாறு
- 8

வ. அன்ரனி
தல்களின் மூலம் அவற்றின் கடன் அள வைக் கட்டுப்படுத்துகிற புதிய முறை பின்பற்றப்பட்டுவருகிறது.
வணிக வங்கிகள் அவற்றின் வைப்புக் களில் ஒரு பகுதியை மத்திய வங்கியில் இருப்பாக வைத்திருக்க சட்டம் வலியுறுத் துகிறது. இத்தகைய இருப்பு முதலினை ஏற்படுத்துவதன் மூலம் வங் கி க ளின் உரொக்கத் தன்மையை காப்பாற்ற வேண் டுமென்பதாகவே இருந்தது பின்னர் இந்த உரொக்க இருப்பு வீதத்தில் ம்ாறுதல்களை ஏற்படுத்துவதன் மூலம் மத்திய வங்கி மற் றையவங்கிகளின், கடன் அளிக்கும் சக்தியை கட்டுப்படுத்தத் தொடங்கியது.
ஆளுல் உரொக்க இருப்பு வீதம் நடை முறை வைப்புக்கும் கால சேமிப் பு வைப்புக்கும் வேறுபடலாம். இது நாட் டிற்கு நாடு வேறுபடலாம். அமெரிக் காவை எடுத்தால் ஆளுனர் குழு வங்கி யின் இருப்பு வீதத்தில் மாற்றம் செய் கின்ற அதிகாரம் பெற்றிருக்கின்றது. அங்கு காலவைப்பில் 3 முதல் 6 சதவீத மும், நடைமுறை வைப்பில் வங்கிகள் அமைந்திருக்கும் இடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப 7 முதல் 14 சதவீதமும், 10 முதல் 20 சதவீதமும், 13 முதல் 26 சதவீதமும் மாறலாம். இலங்கையில் இவ் ஒதுக்கு வீதம் சட்டப்படியாக கேள்வி வைப்புக் களில் 10% தொடக்கம் 40% வரையும் தவணை வைப்புக்களில் 5% தொடக்கம் 20% வரையும் அமைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி 1960ஆம் ஆண்டிலிருந்து கேள்வி  ைவ ப் புக் களி ல் 10% மான ஒதுக்கு வீதத்தைப் 12% ஆக்கிய பின்பு, தற்போது தொடர்ந்தும் வைத்து வருகின்றது. அதேபோல பல நாட்டு மத் திய வங்கிகளும், இக்கட்டுப்பாட்டு முறை நேரடியாகவும் அத்துடன் தீவிரமான கட் டுப்பாட்டு முறையாகவும் இருந்ததால் இதனைப் பயன்படுத்தினர். ஆணுல் பொது வாக இக்கட்டுப்பாட்டை வணிக வங்கி கள் விரும்புவதில்லை.
7 -

Page 112
மத்திய வங்கியின் கடன்.
மத்திய வங்கி உரொக்க இருப்புவீதத் தைக் குறைக்கும்போது வங்கிகளின் கடன் அளவு கூடும். இருக்கின்ற உரொக்க இருப்பை பயன்படுத்தியே வங்கிகள் கடன் கொடுக்கும் அளவைத் தீர்மானிக்கும். மத்திய வங்கி கடன் அளவைக் குறைக்க உரொக்க இருப்பு வீதத்தைக் கூட்டும். உரொக்க இருப்பு வீதம் உடனடியாகப் பலன் கொடுக்கக்கூடிய முறையாகும். ஏனெனில் மத்திய வங்கி உரொக்க இருப்பு வீதத்தைக் கூட்டியவுடன் வர்த்தக வங்கி கள் தங்கள் கடன் கொடுக்கும் அள வைக் குறைக்க வேண்டியுள்ளது. எனவே இது மற்றய கடன் கட்டுப்பாட்டுக் கருவி போல் அல்லாது நேரடியான விளைவை ஏற்படுத்துகிறது. மற்றய முறைகளின் வெற்றிக்கு இது மிகவும் உதவியாக உள் ளது.
உரொக்க இருப்பு வீதத்தால் வங்கிக ளின் கடன் அளவைக் கட்டுப்படுத்தலில் கூடிய பலன் கிட்டிய விடத்திலும் சில குறைபாடுகளும் உள. மத்திய வங்கி உரொக்க இருப்பு வீதத்தை மாற்றும் போது ஒரளவுக்கு வணிக வங்கிகள் எப். படி என்ன நிலைமையில் நடந்துகொண்டி ருக்கின்றன எனவும் அறியவேண்டும். அறிவதன் நிமித்தம் விளைவுகள் இருக்கும். உ + ம். மத்திய வங்கி பண வீக்கத்தை கட்டுப்படுத்த உரொக்க இருப்பு வீதத் தைக் கூட்டுகிறது. ஆனல் வணிக வங்கி கள் மத்திய வங்கியிடம் சட்டப்படி உரொக்க இருப்பை வைத்துக்கொண்டு தங்களிடமுள்ள இருப்பை வழக்கத்தை விட குறைத்துவிடலாம். பணப் புழக்கக் காலத்தில் மத்திய வங்கி கடன் அளவைக் கூட்டக் கருதி உரொக்க இருப்பு வீதத் தைக் குறைக்கலாம். அப்போது வர்த்தக வங்கிகள் புழக்கத்தை விடக் கூடிய பணத்தை வைத்துக் கொள்ளலாம். ஆளுல் மத்திய வங்கி எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படாது போகலாம். அத்துடன் உரொக்க இரு ப் பு வீ த த்  ைத மாற்றுவதனை வணிக வங்கிகள் அதிகம்

அன்ரனி
விரும்பாது, அடுத்து உரொக்க இருப்பு வீதம் கூடும்போது வணிக வங்கிகள் மத் திய வங்கியில் கூடுதலான பணத்தை வைத்திருந்தாலும் வட்டி இல்லை. இதற் காக வணிக வங்கிகள் தாங்கள் கொடுக் கும் கடனுக்கு அதிக வட்டி அறவிடு கின்றன. இது சரியான முறையல்ல எனச் சிலர் கருதுகின்றனர்.
கடன் தன்மைக் கட்டுப்பாடு முறை என்னும்போது வணிக வங்கிகளினது வங் கிக் கடனனது என்ன துறைகளுக்கு கொடுக் கப்படுகின்றது என்ன அடிப்படை யில் கொடுக் கப்படுகின்றது, எவ்வளவு கொடுக்கப்படுகின்றது என்பதனை ஆதார மாகக் கொண்டு அவற்றில் கிடைக்கக் கூடியளவு அக் கடனுக்கான செலவு என் பவற்றின் தெரிவின் அடிப்படையில் ஏற் படுத்திக் சுட்டுப்படுத்துவதாகும். அதா வது ஒரு நாட்டின் வங்கிக் கடன் நிரம் பலைமொத்தமாகவன்றி சில துறைகளுக்குச் செல்லும் கடன்களை மட்டும் கட்டுப்படுத் துவதாகும். இக்கட்டுப்பாட்டு முறையா னது ஆரம்பத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பரீட்சிக்கப்பட்டு 1930 ஆண்டு உலக மந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டு ஒதுக்கு வங்கியால் அதிகளவு பயன் படுத்தப்பட்டு இன்று பல நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின் றது. அவுஸ்திரேலிய பொதுநல வங்கியா னது 1950ஆம் ஆண்டில் இருந்தே இக்கட் டுப்பாட்டு முறையை பின்பற்றியது. இதேபோல் இலங்கை மத்திய வங்கியும் நாட்டில் ஏற்பட்ட தீவிர விலைமட்ட அதி கரிப்பையும் வெளிநாட்டுச் செலாவணி யையும் கட்டுப்படுத்த 1960ஆம் ஆண்டு அதிக அளவு பயன்படுத்தியது.
1. வரம்புத் தேவைகளை குறித்தல் -
(Margin Requirements)
இம்முறையின்படி பங்கு முதல் சந்தை
uái (Stock exchange market) 237 35 out பாரம் அளவு கடந்து செல்வதைத் தடுக்க
-سس- 8

Page 113
மத்திய வங்கியின் கடன்.
இம் முறை பயன்படுத்தப்படுகின்றது. பங்கு முதல் சந்தையில் ஈடுபடுகின்றவர் கள் மேலும் பங்குகளை வேண்ட பணம் தேவைப்படும்போது தங்களிடம் உள்ள பங்குகளை வணிக வங்கியிடம் ஈடாகக் கொடுத்து பணம் பெறுகின்றனர். பங்கு களின் மீது எந்த வரம்பு (Margin) கட் டிக்கொண்டு வணிக வங்கிகள் கடன் கொடுக்க வேண்டுமென்பதை மத்திய வங்கி வரையறுக்கிறது. இதன் மூலம் மத்திய வங்கி வணிக வங்கிகளின் கடனின் அள வைக் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக வரம்பு 10 சதவீதமென்றல் வணிக வங்கி 100 ரூபா மதிப்புள்ள பத்திர ஈட்டின் மீது 90 ரூபா வைத்தான் கடன் தரலாம். வரம்பின் அளவை 30 சதவீதம் உயர்த் தினுல் 70 ரூபாதான் கடன் கொடுக்க முடியும். வரம்பு ஏதாவது ஒரு குறிக்கப் பட்ட வணிகப் பத்திரத்திற்கு 100 சத வீதம் என உயர்த்திவிட்டால் அப்பத்தி ரத்தை வைத்து வங்கியில் கடன் பெற இயலாது.
2. நுகர்வோன் கடனை நெறிப்படுத்தல்,
(Regulation of consumer's credit)
வணிக வங்கிகள் நுகர்வோர்களுக்கு பல பொருட்களை கொள்வனவு செய்ய கடன் கொடுக்கிறது. இத்தகைய கடன் கள் அளவு கடந்து போகும்ானுல் அந்த அளவிற்கு பொருளுற்பத்தி வேகமாக நடைபெருவிட்டால் பணவீக்கம் ஏற்ப டும். அத்துடன் விலைகள் அதிகரித்துச் செல்லும். இத்தகைய கடன்கள் பொது வாக தவணை முறையில் டொருட்களை கொள்வனவு செய்ய பயன்படுகின்றது. எனவே நுகர்வோருக்கு வழங்கும் கடன் களால் பணவீக்கம் ஏற்படும்போது அத 2ணக் கட்டுப்படுத்த மத்திய வங்கி எத்த கைய பொருட்களை வாங்குவதற்கு மட் இம் வணிக வங்கிகள் கடன் கொடுக்க லாம் என வரையறுக்கலாம். தவணை முறையில் கடனுக்குப் பொருட்களை வேண் டும்போது முதலில் ஒர் அளவு உரொக்
-in 8

வ. அன்ரனி
கப் பணம் கட்டவேண்டும். இந்த அள வைக் கூட்டினுல் இந்த அளவு பணத் தைக் கட்டமுடியாதவர்கள் எல்லோரும் தவணை முறையில் கடன் பெறமாட்டார் கள். இதனுல் நுகர்வோர்கள் கடன் அளவு கட்டுப்படும். அத்துடன் கடன் கால அளவைக் குறைப்பதால் மாதம், மாதம் கட்டுப் பணத்தின் அளவு அதி கரிப்பதால் வேண்டமாட்டார்கள்.
3. ஆணைகள் மூலம் கட்டுப்பாடு
வணிக வங்கிகளின் கடன்களை நேரடி யாக ஆணைகளை அனுப்பி கட்டுப்படுத் தும் அதிகாரம் மத்திய வங்கிக்குச் சட் டம் வழங்குகிறது. ஆணைகள் மூலம் கட் டுப்படுத்தும் முறையின் வெற்றி மத்திய வங்கிக்கு இருக்கும் செல்வாக்கை ஒட்டி அமைகிறது. நாட்டில் வணிக வங்கிகள் அதிகம் இருப்பின் மத்திய வங்கியின் ஆணைகளை வணிக வங்கிகள் சரியாக செய் கின்றனவா என்று கவனிக்க முடியாது. பொதுவாக வங்கிகளுக்கிடையில் இருக் கும் உறவுமுறை மூலம் இதை செய்ய முடியும்.
4. Joó algg55sio (Moral Su asion)
மத்திய வங்கி வணிக வங்கிகளை நாட் டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப பனக் கொள்கைகளை பின்பற்றும்படி வேண்டுதல் மூலம் தூண்டலாம், பணவீக்க காலங்களில் கடன் அளவைக் குறைக்கலாம். பணச் சுருக்க காலங்களில் கடன் அள வைக் கூட்டலாம். இதற்கு மத்திய வங்கி அறிவுரைகள் வ்ழங்கலாம். மத்திய வங்கி அதிக செல்வாக்குடையதால் இந்த முறை சிறப்பான பலனை கொடுக்கும்.
5. sL6ör ui 38 (Rationing of Credit)
நாட்டின் பொருளாதாரத்துறையில் எந்த, எந்தத் துறைக்கு கூடுதலான கடன் பங்கீடு செய்தல் அதற்கு ஏற்ப மத்திய வங்கி கடனை நெறிப்படுத்தும், இதனைப் பின்பற்றி வணிக வங்கிகள் எந்த, எந்தத்
9 -

Page 114
மத்திய வங்கியின் கடன்.
துறைக்கு எவ்வளவு கடன்கள், மொத்தக் கடனின் அளவு எவ்வளவாக இருக்கலாம் என்பதனை அறிந்து கொள்ளுதல், அத் துடன் வணிக வங்கிகளின் சொத்துக்கும் மூலதனத்துக்கும் இருக்க வேண் டி ய தொடர்பை வரையறுக்கலாம். அதாவது வங்கிகள் அளிக்கும் கடனுக்கும் அவற்றின் மூலதனத்திற்கும் ஒரு விகிதத்தைக் குறிப் பிடுவதன் மூலம் மொத்தக் கடன் அள வைக் கட்டுப்படுத்தலாம்.
பல்வேறுவகையான கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறைகளிலிருந்து ஒவ்வொரு நாடும் அதனுடைய பொருளாதார சூழ் நிலைகளுக்கேற்ப பணக் கொள்கையைப் பின்பற்றத்தக்க புதிய முறையைக் கண்டு பிடிக்க முயல்கின்றதென்பதை அறிகின் ருேம். சில நாடுகளில் பண, வங்கி முறை கள்வளர்ச்சியடையவில்லை.இத்தகையநாடு களில் கடனளவுக்கட்டுப்பாட்டு முறை களைத் திறம்பட பின்பற்ற இயல்வதில்லை. அங்கெல்லாம் கடன் தன்மைக் கட்டுப் Luit Gap 6D so (Qualitative Credit Control) கள் நல்ல பயனை வின் விக்கின்றன. நிதி முறைகளை நன்கு நிர்வகிக்கின்ற பொழுது தான் நாட்டில் சமன்பட்ட வளர்ச்சி இருக்குமென்பதைக் காண்கின்ருேம். இதற் குக் கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறை கள் பெரிதும் துணை செய்கின்றன. நன்கு வளர்ச்சி பெற்ற பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் சில தெரிந்தெடுத்த நேரடியான கடன் கட்டுப்பாட்டு முறை களைப் பின்பற்ற வேண்டிய தேவைகள் எழுகின்றன.
இன்று பல நாடுகளில் கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறையை விட கடன் தன் மைக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்ற பல காரணங்கள் உள.
1. கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறைகளான வங்கி வீதத்தையோ அல்லது பகிரங்கச் சந்தை நடவடிக்கையையோ அமுலாக்குவதற்கு ஓர் வளர்ச்சியடைந்த பணச் சந்தை இருக்க வேண்டும். எனவே
- 90

வ. அன்ரனி
வளர்ச்சியடைந்து கொண்டு வரும் நாடு களில் பணச் சந்தை வளர்ச்சியடையாத லால் கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறை யைப் பின்பற்ற முடியாமல் இருக்கின்றது.
2. இன்று அநேக நாடுகளில் வணிக வங்கிகளின் திரவத் தன்மை அதிகரித்து வருகின்றது. குறைவிருத்திப் பொருளா தாரங்களில் அப்பொருளாதாரங்களின் குறைவிருத்தி காரணமாக வணிக வங்கி கள் மே ல தி க த் திரவத் தன்மையைக் கொண்டுள்ளன. எனவே திரவத் தன்மை கூடிய ஒரு வணிக வங்கி முறையில் வங்கி வீதமோ அல்லது பகிரங்கச் சந்தை நடவடிக்கையோ பயனளிக்க முடியாது. இதனுல் கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறை பின்பற்ற முடியாதிருக்கிறது,
3. இன்று பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் மிக முக்கியமானதாகும். கடன் அளவுக் கட்டுப்பாட்டு முறை மூலம் நாட்டின் வங்கிக் கடனை மொத்தமாக கட்டுப்படுத்துவ்தால் நாட்டின் பொருளா தார வளர்ச்சி அதிக அளவு தேக்கமுறும்.
4. இன்று பல நாடுகளில் அரசாங்கங் கள் அதிகளவில் வங்கித்துறையிலிருந்து பகிரங்கக் கடனைப் பெறுகின்றது. மொத்த மாக கடன் கட்டுப்பாட்டை ஏற்படுத்து வதன் மூலம் பகிரங்கக் கடன் ஏற்படுத்து வதற்கு அதிக செலவு காரணமாக நட்ட மேற்படுவதால் அரசாங்கங்களுக்கு இது ஆபத்தாக உள்ளது. எனவேதான் பகிரங் கக் கடனை மத்திய வங்கியில் இருந்து பெறும் அரசாங்கம் கடன் தன்மைக் கட் டுப்பாட்டு முறையை பயன்படுத்துகிறது.
. 5. நாட்டின் ப ண நிர ம் பலை த்
தொகை ரீதியாக கட்டுப்படுத்தும் போது நாணய புழக்க சுற்றேட்ட வேகமானது பல நாடுகளில் அதிகரிக்க முற்பட்டமையே காரணமெனலாம். எ ன வே நாணயப் புழக்க சுற்றேட்ட வேக அதிகரிப்பைத் தடுப்பதற்கு பண நிரம்பலைத் தொகை ரீதி யாக கட்டுப்படுத்துவதைக் கு  ைற க் க முனைந்தன.

Page 115
மத்திய வங்கியின் கடன்.
6. இன்று பல நாடுகளில் பண வீக்க மானது இயல்பான் பொருளாதார அம்ச மாக உள்ளது. குறைவிருத்திப் பொருளா தாரங்களில் அபிவிருத்தித் திட்டங்களா லும் குறை நிலை வரவு செலவுத் திட்டங் களாலும் இது ஏற்படுகிறது. எனவே வீக் கம் உள்ள ஒரு பொருளாதாரத்தில் கட னுக்கான செலவை அதிகரிப்பதன் மூலம் கடனைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே தான் கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறை பின்பற்றப்படுகிறது,
7. இன்று பணச் சந்தையில் பல நிதித்தாபனங்கள் தோ ன் றி யுள் ள ன. இந்த நிதித்தாபனங்களுக்குச் செல்லும் வங்கிக் கடனை தொகை ரீதியாக கட்டுப் படுத்த முடியாது. எனவேதான் நிதித் தாபனங்களைக் கட்டுப்படுத்தவும் கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறை பயன்படு கின்றது,
மொழிச்சி,
உலகின் பிரதான மொழிகளை ெ மிக்க பேரறிஞர்களும் ஒவ்வொரு
செய்து கருத்து வெளியிட்டுள்ளார்கள்
தீர்க்கமான முடிவுகளுக்கு உட்பட்ட
ஆங்கிலம் வணிக
லத்தீன் சட்டத்தி
கிரேக்கம் இசை
ஜெர்மன் தத்து
பிரெஞ்சு தூதிை
இத்தாலியன் க
ரஷ்யன் அரசிய
தமிழ் இரக்கத்தி

வ. அன்ரனி
8. நவீன நாணயக் கொள்கையென் பது பொருளாதார உறுதி, வளர்ச்சி ஆகிய இரண்டு அம்சங்களையும் அடிப்படையாக் கொண்டுள்ளது. கடன் அளவுக் கட்டுப் பாட்டு முறை மூலம் பொருளாதார உறு தியை மட்டுமே பாதுகாக்கலாம். ஆனல் கடன் தன்மைக் கட்டுப்பாட்டு முறை மூலம் உறுதியையும் வளர்ச்சியையும் ஏற் படுத்தமுடியும். எனவே தான் இத்தகைய
காரணங்களுக்காகப் பல நாடுகள் கடன் தன்மைக் கட்டுப்பாட்டைக் கையா ஞகின் றன. கடன் தன்மைக் கட்டுப்பாடு என்பது சமூக ரீதியில் விரும்பக் கூடியதும், பொரு ளாதார ரீதியில் பயனுள்ள முறையிலும்
வங்கிக் கடனப்பாய்ச்சும் ஒரு முறை எனப்
பேராசிரியர் "கிறவுதர்' கூறியுள்ளார்.
plu urifii
மாழி வல்லுநர்களும் மொழித் தேர்ச்சி துறைக்கும் சிறப்பானதென முடிவு ர். இதுவரை மொழி வல்லுநர்களின்
வை பின்வருமாறு:-
கத்தின் மொழி. இன் மொழி. பின் மொழி. வத்தின் மொழி. ன் மொழி. ாதலின் மொழி. லின் மொழி. ன் மொழி,
91 -

Page 116
SSASASqSqqSTSS
~~-—mത്തmത്ത
உள்ளுர் உற்பத்தி கமிசன் விற்
வெலிகம
139, 4ம் குறுக்
கொழும்
தொலைபேசி 2 3 2 7 I
* நீங்கள் (
II TGS 63)6).
* மில்க்வை கொடுக்கு
தார வல் வாகும்.
ళక్కే O O மல்க்வைற் சவர்க்க யாழ்ப்பா கிளை 79, மெசென்ஜர் வீதி, கொழும்பு-12. தொலைபேசி 3 6 0 6 3
 

ப் பொருட்களின் பனையாளர்கள்
- ò GLI iù
க்குத் தெரு,
-11.
தொலைபேசி : 7 2 3 3
கொடுக்கும் பணத்திற்குப் பெறுமதி
மில்க்வைற் தயாரிப்புக்களே.
R ற் தயாரிப்புக்களுக்கு நீங்க ள் தம் ஆதரவு நாட்டின் பொருளா ார்ச்சிக்கு நீங்கள் கொடுக்கும் ஆதர
ாரத் தொழிலகம்
TD
MLSSSLLLSLLLMMMMSLLLMASqqMA SLSASSLLAAS SASAMqSqLLLLA SLLAAAASLLA ASASLALALSLA AAAAASLALLSLLLAAASLLiLLLSSASASASASASASASM AMSASASSAMSAAASSASAAA

Page 117
இலங்கையில் மூலதன
Y Yo Y Yo Yo Yo Y (Y Yo Yo Yo Yo Yo Yo Yo Y c
B. வணி
மூலதன முதலீட்டுத் தீர்மானங்கள் நிதி முகாகையில் முக்கிய இடத்தை வகிக் கின்றன. இலங்கையிலுள்ள பொது அலு வலகங்களிலோ அல்லது தனியார் துறை களிலோ இவை இன்றியமையாதவை.
மூலதன செலவுத் திட்டமைப்புக்களில் உபயோகிக்கப்படவேண்டிய நிதியைப்பற் நிய தீர்மானங்களே இங்கு மூலதன முத லீட்டுத் தீர்மானங்கள் எனக் கருதப்பட் டுள்ளன. உதாரணமாக, ஒரு உற்பத்தி நிறுவனத்தில் எவ்வகையான பொறிகள், எப்படியான உபகரணங்கள் நிறுவப்பட வேண்டுமென்பதைப்பற்றி முகாமையாளர் தீர்மானம் எடுக்கவேண்டும். பொது நிறு வனங்களிலும் இவ்வாறே தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும். தெருக்கள் எங்கு அமைக்கப்படவேண்டும், எவ்வகையான நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்பட வேண் டும், ள்வ்வாருண கைத்தொழில் சாலைகள் நிறுவப்பட வேண்டுமென்பது அரசாங்கத் தால் எடுக்கப்பட வேண்டிய மூலதன முத லீட்டுத் தீர்மானங்களாகும்.
மூலதன முதலீட்டுத் திட்டமைப்புக் களில் உபயோகிக்கப்பட வேண்டிய நிதி பெரும் தொகையானது மட்டுமன்றி கடனையழிப்பதற்கும் பல காலம் எடுக்கும். இவ்வாருண முதலீடுகளிற்குத் தேவையான பெரும் தொகையான பணத்தை ஒரு வியாபார நிறுவனத்தின் உள் முதலி லிருந்து பெறுவது அரிது. ஆகவே இந் நிதியை வெளிமுதலிலிருந்து பெறுவதே கட்டாயமானவழியாகின்றது,இலங்கையில்

முதலீட்டுத் தீர்மானங்கள்
¥ လူရှာ လူရှာ လူ၃ ရာ လူး၊ လူရှာ လူရှာ’ လူr) လူနာ လူရှာ လူ? လူ? လူ) လူ? လူo ရှာ လူရှာ၊
ஹேமா விஜயவர்த்தணு A., Dip. Com., M. B. A., A. M. B. I. M. கவியற்றுறைத் தலைவர் - வித்தியோதய வளாகம்,
வெளிமுதல்பெறுவது மிக கஷ்டமானதால் அதனைப் பெறும் செலவும் அதிகம்.
மூலதன முதலீட்டுக்குத் தேவையான நிதி பெரும் தொகையானது மட்டுமன்றி அதனைத் தீர்க்கும் காலமும் நீடியதாக இருப்பதனல் பிழையான தீர்மானம் பொருளாதாரத்தில் வெகும் சிக்கலான நிலைமையை ஏற்படுத்தும். இவ்வாருண தவருண தீர்மானங்களினல் ஒரு வியாபார நிறுவனம் மோசமான நிலைமையை அடை வது அரிதெனக் கூறமுடியாது.
இதற்கு மாருக நடைமுறைச் சொத் தில் உபயோகிக்கப்படும் நிதி மிகக் குறை வானது மட்டுமன்றி அக்கடனை அழிக் கும் காலமும் மிகச் சிறிது. ஆகவே தவ ருண முடிவை எடுத்தாலும் பாரதூர மான நட்டத்திற்கு ஆளாகாது, தவறை நீக்கக்கூடியதாயிருக்கும். ஆனல் மூலதன முதலீட்டில் தவருண முடிவு எடுத்தால் அது இலகுவாக நிவர்த்தி செய்ய Clipg யாது. இதை உணர்த்துவதற்கு ஒரு உதா ரணத்தை எடுப்போம், ஒரு உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை புதிய உற்பத்திப் பொருளொன்றை உற்பத்தி செய்வதற்கு ஐந்து லட்சம் ரூபா வெளி நாட்டுச் செலாவணியில் புதிய இயந்திர மொன்றை வாங்கி, அதை நிறுவுவதற்குச் செலவழித்த பின்னர் அது உகந்ததில்லை யென அறியப்பட்டது. அதை மாற்றி அமைப்பதற்கும் முடியவில்லை. அதை வேறு உற்பத்தியாளருக்குக் கொடுப்பதற்கும், அது பிரயோசனமானதல்ல. இதிலிருந்து
93 -

Page 118
இலங்கையில் மூலதன.
தவருண முடிவால் பெருந்தொகையான நிதி எவ்வாறு வீணுகுமென்பது புலனுகின்றது,
இவ்வுதாரணம் விளக்கத்திற்காகக் கூறப்பட்டாலும், இந்நாட்டின் பொது நிறுவனங்களில் இப்படியான நிகழ்ச்சி ஏற் படுவது அரிதல்ல. இப்பெறுமதியானதும் தட்டுப்பாடானதுமான மூலதனத்தை இவ் வாறு வீணுக்குவது மோசடிச் செயலென் பதை நான் வற்புறுத்த விரும்புகின்றேன். எனவே, பொது நிறுவனங்களிலும் தனி யார்த் துறைகளிலும் தொழில் புரியும் நிர் வாகிகள் முதலீடு செய்வதில் தீர்மான மெடுப்பதில் மிக ஊக்கம் செலுத்தவேண் டும் .
முதலீடு செய்வதில் எடுக்கவேண்டிய தீர்மானத்தைப் பற்றிப் பிரசுரிக்கப்பட் டுள்ள பிரசுரங்கள், கைத்தொழிலில் உயர் நிலையை அடைந்த நாடுகளில் பல உண்டு. இவ்ை இத்தீர்மான முறைகளில் மிக கஷ் டமான முறைகளைக் கூறினலும், முதலீடு செய்யும் முதலீடுகளிலுள்ள அடிப்படை யான அம்சங்களைக் கூறுவதுமில்லை, முத லீடு செய்வதற்கு வேறு வசதிகளைத் தேடு வதுமில்லை; ஆராய்வதுமில்லை. இவ்வகை யான குறைபாடுகள் இந்நாடுகளில் இடை யூறுகளைக் கொடுக்காமல் இருக்கின்ற காரணமாக இருக்கக் கூடும்.
எது ச
‘சிறு வயதிலிருந்து ஒருவனை ஒ( எது அவனை ஒழுங்குள்ள பிரஜையாக வணுகச் செய்கிறதோ, எது அந்தப் பி கும் ஆளப்படுவதற்கும் தெரியப்படுத் நாம் சொல்லுகிருேம்.
விஷயத் துணுக்குகளை மூளையிலே மாவின் கண்ணை அறிவு வெளிச்சத்தின்

ஹேமா விஜயவர்த்தளு
இவ்வகையான நிலைமை இலங்கையில் முற்முக வேருனது. திறமையான முதலீடு செய்யும் சந்தர்ப்பங்கள் இங்கு மறைந்து கிடப்பதனுல் இவற்றை ஆராய்வதில் கூடிய ஊக்கம் செலுத்த வேண்டும். ஆகவே, முதலீட்டு முறைகளின் அடிப்படை ஒழுங் குகளைக் கையாளுவதே இலங்கையில் முக் கியமானது.
இலங்கையில் முதலீடு செய்யுமுறை, ஒரு திட்டமைப்பின் பெறுமானத்தைக் கணிப்பதிலும் அதை வழக்கத்தோடு ஒப் பிடுவதையும் விட மேலானது. முதன் முதலாக, முதலீடு செய்யும் வசதிகளை ஆராயவேண்டும். இரண்டாவதாக, மாற் நீடுகள் பற்றிய மதிப்பீடு, வரவு செலவு மாற்றம் எனும் தகவல்களைப் பெறவேண் டும். மூன்ருவதாக, தேவையான மதிப் பீடுகளை உபயோகிப்பதற்கும் தேவை யற்ற காரணிகளைப் புறக்கணிப்பதை நிச் சயப்படுத்துவதற்காகவும் பெற்ற தகவல் களுக்கு உயர் காரணங்கள் பிரயோகிக்கப் படவேண்டும். மூலதன முதலீட்டைப் பெறுமானம் கணித்து தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த முன்பு மேற்கூறிய பகுதி களுக்கே இலங்கையில் முதலீட்டுத் தீர்மா னம் எடுப்போர் அவதானத்தைச் செலுத்தவேண்டும்.
ടഖി ?
ழக்கத்தில் பயிலுவிப்பது எதுவ்ோ, இருக்க வேண்டுமென்ற ஆவலுடைய ரஜைக்கு நீதி முறையாக ஆள்வதற் துகிறதோ அதற்குத்தான் கல்வி என்று
திணிக்கச் செய்வது கல்வியல்ல; ஆத்
பக்கம் திருப்புவதுதான் கல்வி. '
- பிளேட்டோ

Page 119
உங்கள் விளை
உயர்ந்த விலையில் நம்பிக்கையும் ந
உன்னத 6
Messrs. N. A. VAR
GENERAL MERCHANTS
N.O. 173, KEY
COLOM ||
Telephone: 2557 7
சகலவிதமான உள்ளு Bg5.1 60TLD! GOH Grif2;bu? நம்பிக்கை நான
ஸ்தாட வி. செல்வரா
27, 4-ம் குறு
கொழு
W. SELVARA
GENERAL MERCHANTS
FOR LOCAL
27, 4th CRO COLOM
 
 

பொருட்களை சந்தைப்படுத்தும் ாணயமும் மிக்க
ஸ்தாபனம்.
NAKULASINGAM ||
S., COMMISSION AGENTS
ZER STREET,
O-1 .
f விளை பொருட்களை ல் சந்தைப்படுத்தும் னயம் நிறைந்த
IGOT).
ஜா அன் கோ.
க்குத் தெரு, ம்பு-11.
AJAH & CO.
& COMMISSION AGENTS
PRODUCES
SS STREET, /BO - 1

Page 120
زیررد) Z// Z | /
C EY ON S
Dealers in : Stationers Pape
108, PRINC
COLOM
(SRI L 3 Telephone : 2 4 6 1 2 - 20 296 Res : 8 57 34
wn-Malalan MalaM
qA AALSLLeSSMSLLSLLASAqJSqqSLLSLLSLLSLLLeeeSSSLSLLLLS LALS LAMASJSLLASLSLLLSLSeLM LSLSLMMAJSLSLSLMAeMLMASASLSSLSLSSLMSeeSLALSLSeESLSL S LSESLSLSSLASqSq
70ith the 53es
DOLLAR SOA
No. 46, SAUN
COLOM
Telephone: 26 85 4

സ Z را / ز
A T ONERS
tr & Printers Requirements.
8
E STREET,
BO-11. s ANKA)
s
V
lan-Nean Mrs M.M. M-M-an-alatar
f Compliments
尸
INDUSTRIES
DERS PACE,
BO-2.

Page 121
55j 35II , GJulsi;
Jalilai Li I
F. C. பதில் பகுதிே
திணிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவ னங்களைப் போன்று அரசாங்கங்களும் தம் முன்னேயுள்ள பொருளாதார வளங்களின் அருமை நிலையினை எதிர்நோக்குகின்றன. வளங்களின் கிடைக்குந் தன்மை அரசாங் கமானது குறிப்பிட்டதொரு இலக்கினை அடையத் (உதாரணமாக சுகாதாரம், கல்வி, பொருளாதார அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு) தூண்டுகோலாக இருப்பது மட்டுமல்லாமல் அவ் இலக்குகளின் தன்மை யினையும் பாதிக்கின்றது. மறுபக்கத்தில், அரசாங்கமானது தனது இலக்குகளைத் துTண்டுகின்ற அளவானது வரி, கடன்படு தல் அல்லது ஏனைய வழிவகைகள் போன் தவற்றினுல் அதற்குக் கிடைக்கின்ற வளங் களினைப் பாதிக்கின்றது. இதன் விளைவாக அரசாங்க வரவுசெலவுத்திட்டமானது பின் வருவனவற்றினை உறுதிப்படுத்துதல் வேண்
டும்.
அ) பணமானது ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாங்கத்தின் இலக்குகளை மிகத் திறனுடையதாக அடையக்கூடிய வகையிலும் மக்களின் விருப்பிற்கு ஏற்ற வகையிலும் செலவிடப்படு தல் வேண்டும்;
ஆ) வரிச் சுமையானது அரசியல் ரீதியி லும் பொருளாதார ரீதியிலும் ஏற்

G'L
க்கோர் அறிமுகம்
பொ. சிவசுப்பிரமணியம்
M. A., Dip. P. F. M., M. Inst, S. M. M. பணிப்பாளர் (ஒழுங்குவிதிகள்) - நிதி அமைச்சு. நர விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்.
றுக் கொள்ளக்கூடிய மு  ை) யி ல் பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும்;
இ) பொருளாதார அபிவிருத்தி போன்ற நீண்டகாலப் பொருளாதார இலக்கு களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
பாரம்பரியமாக, அரசாங்க வரவு செல வுத் திட்டங்கள் நிர்வாகத் திணைக்களங் கள் அவற்றின் உட்பிரிவுகளான தலைப்பு, வாக்கு, உபதலைப்பு என்ற முறையில் தயா ரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன. ஒவ் வொரு திணைக்களமும் ஒரு தெளிவான தொழிற்பாட்டினைச் செய்வதால் மொத்த செலவினமும் அதில் ஏற்படும் மாற்றங் களும் அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங் களின் குறிகாட்டிகளாக உள்ளன. ஆனல் காலவோட்டத்தில் தொழிற்பாடுகளின் சிக்கலான தன்மையிஞல் நவீன அரசாங் கங்கள் பாரம்பரிய முறையினை மேற்கொள் ளுதல் திருப்திகரமற்றதாகக் காணப்படு கின்றது. ஏனெனில்,
அ) திணைக் களத்தின் பெயரானது அத் திணைக் களம் எதனைச் செய்கின்ற தென விபரிக்கப் போதாமையாக உள்ளது;

Page 122
நிகழ்ச்சித்திட்ட, செயல்திட்ட.
<器儿
இ)
Fr}
-)
ат)
வேலைக்கமர்த்தப்பட்டோரின் எண் ணிக்கை அல்லது பிரிவு அவர்கள் ஆற்றுகின்ற கடமையினை அளவீடு செய்ய மாட்டாது;
பல வருடங்களுக்கான விளைவினைக் கொண்ட செலவினங்களின் முக்கி யத்துவத்தினை குறுகிய காலமான ஒரு வருடம் சிறிதளவு மட்டுமே வெளிக் கொணர்கின்றது;
வருடாந்த ஒதுக்கீடுகள் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் போதுமான தாக இருப்பினும் நிர்மாண வேலைத் திட்டங்களுக்கும் நீண்ட காலத் திற்கு நீடிக்கின்ற வேலைத்திட்டங் களுக்கும் போதாது உள்ளது;
வரவுசெலவுத் திட்டமிடல் முக்கிய மாக எதிர்காலத்திற்கு தயாரிக்கப் படுவதால் நிலையற்ற எதிர்காலம் பற்றிய நீண்டகால மதிப்பீட்டினே ஏற்படுத்துகின்றது:
வரவுசெலவுத்திட்டமிடல் நிகழ்கா லம், எதிர்காலம் என்பவற்றிற்கி டையே பொருளாதார வளங்களை ஒதுக்கீடு செய்வதையும் அரசாங்கத் தின்வெவ்வேறுஇலக்குகளுக்கிடையே உச்ச இலாபத்தினைக் கொடுக்கக் கூடிய வகையில் இணக்கங் காணுத லையும் ஏற்படுத்துகின்றது;
'மிகைகளையும் சேமிப்பையும் பரி சீலனை செய்கின்ற பிற்பட்ட நடவ டிக்கையானதும், செ ல வு களின் ஒழுங்கான தன்மையானதும், நிதிக் கண்ணுேட்டத்திலும் நிர்வாகக் கட் டுப்பாட்டிலும் நன்மையுடையதாக இருப்பினும்,
(1) செலவினங்களின் திறமையினை மதிப்பீடு செய்தலிலும்;
(ii) நடவடிக்கைகளின் மட்டத் தினை அல்லது செயல்திட்டத் தினை (வெளியீடு) அளவீடு செய்தலிலும்;
۔ 98 مسی

பொ. சிவசுப்பிரமணியம்
(i) செலவினங்களை செயல்திட் டத்தினதும் அலகு ரீதியான செலவினதும் அடிப்படையில் மதிப்பீடு செய்தலிலும்,
(iv) நிறுவனத்தின் திறமையினை அல்லது அதன் இயங்குத லினை அளவீடு செய்தலிலும் பி ர தி கூ ல மு  ைடயதாகக் காணப்படுகின்றது.
அரசியல் திட்டத்தின் öFfr fi Lj rr 6asr பொதுநிதியும்கூட இந்நோக்கிற்குப் போது மானதல்ல. இது பிரதானமாக நடவடிக் கைகளின் அபிவிருத்தியுடனும், திறை சேரிச் செயலாளர், கணக்காய்வாளர் அதி பதி போன்ற பதவிகளுடனும், பணமானது சட்டரீதியாகச் செலவிடப்பட்டதென உறுதியளிக்கின்ற பாராளுமன்ற நிறுவ னங்களான பொதுக்கணக்குக் குழுவுடனும் தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றது. இவை பரந்த கண்ணுேட்டத்தில் செலவி னங்கள் திறமையாகச் செலவிடப்பட்டுள் ளதா என்பதில் குறைந்த கவனத்தினையே செலுத்துகின்றன. கணக்கியல் சட்டமைப் பும்கூட முகாமைத் தேவையினையும் பொரு ளாதாரத்திறனை கணிப்பீடு செய்வதனையும் தவிர்த்து சட்டரீதியான கணக்கியல் தேவையினையே கருத்திற் கொண்டுள்ளது.
பாரம்பரிய முறையிலான அரசாங்க வரவு செலவுத் திட்டங்களின் முழுமை யின்ம்ை ஐக்கிய அமெரிக்காவில் ராப்ற் ga,007 5(5 (p6207 (Taft Commission) iu மனம் செய்ய வழிவகுத்தது. இவ் ஆணைக் குழு 1912ஆம் ஆண்டளவில் பின்வரும் சிபார்சுகளை வெளியிட்டது.
அ) எல்லாவற்றையும் உள்ளடக்குகின்ற
நிர்வாக வரவு செலவுத்திட்டம்; ஆ) வரவுசெலவுத் திட்டத்தினை நிகழ்ச் சித்திட்டம் , தொழிற்பாடுகள் என்ற வகையில் வகைப்படுத்தல்; இ) வரவுசெலவுத் திட்டத்தினை மூலதன, நடைமுறை அடிப்படையில் மேலும் வகைப்படுத்தல்; ஈ) வரவுசெலவுத்திட்டத்தினை ஒழுங்கு
ரீதியில் விமர்சித்தல்;

Page 123
நிகழ்ச்சித்திட்ட, செயல்திட்ட.
1949இல் கூவர் ஆணைக்குழு (Hoover Commission U.S. A. , ''g' LD6hlq- 9) ut frr it கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் முழுக் கருதுகோள்களினை தொழிற் பாடுகள், செயற்பாடுகள், திட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கியதான முறையில் மா ற் றி அமைக்கப்படவேண்டும்-அதாவது செயல் திட்ட வரவு செலவுத் திட்டம்' - என சிபார்சு செய்தது. 1955இல் இரண்டாவது கூவர் ஆணைக்குழு "நிகழ்ச்சித்திட்ட வரவு செலவுத்திட்டத்தினை' சிபார்சு செய்தது. செயல்திட்ட வரவுசெலவுத்திட்டம் செலவி னங்களுக்கும் (உள்ளிடுகைகள் அல்லது செலவினங்களின் நோக்கம்) சாதனைகளுக் கும் (வெளியீடு) இடையேயுள்ள தொடர் பினை வெளிப்படுத்துகின்றது பாரம்பரிய முறையிலான வரவுசெலவுத்திட்டம் ஒன் றில் உள்ளிடுகைகளை செலவினங்களின் நோக்கத்தினை உதாரணமாக சம்பளங்கள், மூலப்பொருள்களின் செலவு, வாடகை, மின்சாரம், பிரயாணம் போன்றவை) அல் லது வெளியீட்டினை (உதாரணமாக, இவ் வளவு தொகை கட்டிடங்கள், அல்லது வீதிகள் அல்லது நீர்ப்பாசனத் திட்டங்கள்) மாத்திரம் எடுத்துக் கூறுகின்றது. ஆனல் இது ஒவ்வொரு நடவடிக்கை அல்லது திட்டத்துடன் தொடர்பான உள்ளீடு, வெளியீடு என்ற இரண்டினையும் எடுத்துக் கூறுவதில்லை. உதாரணமாக வரவுசெலவுத் திட்ட ஒதுக்கத்தின்கீழ் உள்ள வாக்கு 4 - சுகாதார இலாகாவிஞல் அளிக்கப்படு கின்ற சேவைகள்-செலவினங்களின் இலக் கினையே நிரல்படுத்துகின்றது. அதாவது வைத்திய அதிகாரிகளுக்கும் ஏனைய உத்தி யோகத்தர்களுக்குமான சம்பளங்கள், படி கள் மருந்துகளின் செலவினங்கள், உணவு களின் செலவினங்கள், காகிதாதி, போக்கு வரத்து ஆகியனவாகும். எவ்வகையிலும் இச்செலவினங்களினல் எதிர்பார்க்கப்படு சின்ற சாதனையினை எடுத்துக் கூறுவதில்லை. அதாவது சிகிச்சை அளிக்கப்படவேண்டிய உள்வாரி அல்லது வெளிவாரி நோயாளி களின் எண்ணிக்கை அல்லது குறிக்கப் டட்டதோர் நோயிலிருந்து காப்பாற்றப்
9 س۔

பொ. சிவசுப்பிரமணியம்
படவேண்டியோரின் எண்ணிக்கை என்பன வ: கும். மறுபக்கத்தில் வரவுசெலவுத்திட் டத்தின் கீழ் உள்ள வாக்கு 5 இதே இலா காவின் வெளியீடுகளை மாத்திரம் நிரல் படுத்துகின்றது. உதாரணமாக செலவி னங்களின் இலக்கினேப் பற்றி எதுவும் குறிப் பிடாது, ‘புதிய வைத்தியசாலை, அவிசா வலே, ரூபா 3,400,000’’. அதாவது இவ் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வளவு தொகை கூலி, கட்டிடப்பொருட்கள், மேற்பார்வை, போக்குவரத்து, வைத்திய உபகரணங்கள், தளபாடம் ஆகியவற்றின் மீது செலவிடப்பட்டுள்ளது என குறிப்பி டப்படவில்லை.
செயல்திட்ட வரவு செலவுத் திட்டக் கோட்பாடானது செலவினங்களின் இலக் கினுக்கும் (உள்ளிடுகைகள்) சாதனைகளுக் கும் (வெளியீடு) இடையே முக்கிய தொடர் பினை ஏற்படுத்துவதுடன் நிர்வாகிகளுக் குப் பின் வரும் வகையில் பயன்படு
கின்றது:
அ) செலவினங்களை அதன் செயல்திட் டத்தின் (வெளியீடு) அடிப்படையில் மதிப்பிட முடிகிறது;
ஆ) செயல்திட்டத்தினை அளவீடு செய் யப் பொருத்தமான அளவு கருவி யாக உள்ளது;
இ) அஸ்கொன்றிற்கான செலவினை நிர்
ணயிக்க முடிகின்றது:
ஈ) நடவடிக்கைகள், திட்டங்கள், நிகழ்ச் சித் திட்டங்கள் ஆகியவற்றின் திறனை மதிப்பிட முடிகின்றது.
உதாரணமாக செயல்திட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வீதி நிர்ணயிப் பதற்கான் வரவு செலவுத் திட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியிருத்தல்
வேண்டும்:
9 -

Page 124
நிகழ்ச்சித்திட்ட, செயல்திட்ட.
அ) நிர்மாண காலப் பகுதி களி லா ன
மொத்த நிர்மாணச்செலவு:
ஆ) வீதியின் அகலமும் அதன் தூரமும்; பாலங்கள் ஒவ்வொன்றினதும் அள வும் அவற்றின் எண்ணிக்கையும்;
இ) வீதி, பாலம் ஆகியவற்றின் சதுர
யார் ஒன்றிற்கான செலவு:
ஈ) நிகழ்ச்சித்திட்டத்தின் திறன். அதா
வது;
(1) வீதியிஞ ல் இணைக்கப்பட்ட இடங்களுக்கான பிரயா ண நேரத்தில் ஏற்படும் குறைவு;
(2) வீதியின் மீது செல்கின்ற வாக
னங்கள்;
(3) ஏற்கெனவே உள்ள வீதியில் நெருக்கம், விபத்து வீதம் ஆகி யன குறைதல்;
(4) அப் பகுதிக்குக் கிடைக்கின்ற பொருளாதார நன் மை கள் ஆகியன.
நிகழ்ச்சித் திட்ட வரவுசெலவுத் திட் டம் செயல்திட்ட வரவுசெலவுத் திட்டத் திலும் முன்னேற்றமானதாகும். அது பின் வருவனவற்றைக் கருத் தி ற் கொண்ட செயற்பாடாகும்:
அ) அரசாங்கத்தின் கொள்கை ரீதியான
இலக்கு;
ஆ) செலவினங்கள், அதாவது சிறந்த
முறையில் வளங்களை ஒதுக்குதல் :
இ) கால அளவு, அதாவது போதிய கால இடைவெளிகளுக்கிடையில் செயல்களின் எதிர்பார்க்கைகள்:
ஈ) மாற்று வழி வகைகள் தேசிய இலக்குகளுக்கு அவற்றின் பங்கு;
சிறந்த மாற் று வழிவகைகளைத் தெரிவு செய்வதற்கான முறைகள்;
- I(

பொ. சிவசுப்பிரமணியம்
உ) பெளதீக ரீதியான முன்னேற்றத்தி னையும் செயல்திட்டத்தினையும் அள வீடு செய்கின்ற முறை,
ஆனுல் நிகழ்ச்சித் திட்டமிடலும் வரவு செலவுத் திட்டமிடலும் ஒத்த செயல் முறைகளல்ல. அவை ஒரே இயக்கத்தின் கூட்டு அம்சங்களாகும்.
'குறிக்கப்பட்ட காலப்பகுதிக்கு முன் னரே, இக் காலப் பகுதியில் குறித்த இலக் கினை அடைவதற்காக, அக்காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய கொள்கையினை நிதி அல்லது தொகை ரீதியான கூற்ருகத் தயாரித்து ஏற்றுக்கொள்ளப்படுதலை வரவு செலவுத் திட்டம் எனலாம். இது வருமா னம், செலவீடு, முடக்கிய மூலதனம் என் பவற்றை உள்ளடக்கும்.
* வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடு (Budgetary Control) 6767 Lug, Gsmtar 69) is iš தேவையுடன் நிர்வாகிகளின் பொறுப்பி னைத் தொடர்புபடுத்தி வரவு செலவுத் திட்டத்தினை அமைத்தலும், கொள்கையின் இலக்கினை ஒவ்வொரு தனித்த நடவடிக் கையிலிருந்து பாதுகாப்பளிக்க அல்லது அதன் மீளாய்வுக்கு வழிவகுக்க உண்மை யினை (Actual) வரவு செலவுத் திட்டமிட்ட 5sö7 68km6) 5GBL-6ö7 (Budgeted Results) தொடர்ந்தேர்ச்சியாக ஒப்பிடுதலுமாகும்'.
ஒவ்வொரு அரசாங்கமும் அல்லது தனி நிறுவனமும் நடைமுறை வருடத்துக் கான சிறந்த திட்டங்களை மேற்கொள்ளு கின்ற பொழுது அடுத்த வருடத்தினேயும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இதன் காரணமாக நிகழ்ச்சித் திட்டங்களும் வரவுசெலவுத் திட்டங்களும் ஒன்றுட னென்று உடன்பட்டவை. நிகழ்ச்சித் திட் டத்தில் மீளாய்வு செய்தல் வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றங்களை வேண்டி நிற் கின்றது.
)0 -

Page 125
நிகழ்ச்சித்திட்ட, செயல்திட்ட.
நிகழ்ச்சித் திட்ட வரவுசெலவுத் திட் டத்தின் முதற்படி அரசாங்க நடவடிக்கை களின் பிரதான பகுதிகள் ஒவ்வொன்றி னதும் அடிப்படை இலக்கினைக் கவனமாக ஆய்வு செய்த லாகும். இது அரசாங்கத் திணைக் களங்களிலுள்ள நிர்வாகிகளை இப் போது தாம் ஈடுபட்டுள்ள திணைக் களங்க ளின் இலக்குகளைப் பார்வையிடும் நடவ டிக்கையிலிருந்து தேசிய இலக்குகளுடன் தொடர்பாக அவர்களின் கவனத்தினை இழுத்துச் செல்லும். உதாரணமாகப் போக்குவரத்து நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் சாதாரணமாக மோட்டார் வீதி களை அமைத்தல் அல்ல. வீதிகளை உயர்த்த இலக்குகளை திருப்திப்படுத்தின் அவை பய னுடையவை அதா வது மக்களையும் பொருட்களையும் திறமையாகவும் பாது காப்பாகவும் போக்குவரத்துச் செய்தலா கும். ஒரு முறை இது இலக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டால் பின்னர் விமானப் போக்குவரத்து, புகையிரதப் பாதைகள், மோட்டார் வீதிகள், நீர்ப் பாதைகள் போன்றவற்றினை ஆய்வு செய்ய முடிவது டன் சிறந்த போக்குவரத்துப் பின்னல் வேலையினைத் தீர்மானிக்கவும் முடியும். எல்லாப் பிரதான பகுதிகளின் இவ்வா முன ஆய்வானது,
அ) தேசிய இலக்கினைச் சரியாகவும்
தொடர்ச்சியாகவும் கண்டறிதல்;
ஆ) இவ்வாருண இலக்குகளிலிருந்து மிக வும் அவசரமாகத் தேவையான ஒன்றினைத் தேர்வு செய்தல்;
இ) இலக்குகளுடன் தொடர்பா ன செயல் திட்டங்களை மதிப்பீடு செய் வதற்கான வழிவகையினை ஏற்படுத் தல் போன்றவற்றினை உள்ளடக்கு தல் வேண்டும்.
- 10

பொ. சிவசுப்பிரமணியம்
நிகழ்ச்சித் திட்ட வரவு செலவுத் திட் டத்தின் இரண்டாவது படி சிறந்த மாற்று வழிவகையினை அல்லது அவற்றின் சேர்க் கையினைத் தெரிந்தெடுத்தலும் நடவடிக் கைளின் ஒவ்வொரு பிரதான பகுதிகளுக் குமான நிகழ்ச்சித் திட்ட அமைப்பினைத் தயாரித்தலுமாகும். கொடு க் கப்பட்ட எந்த இலக்கினையும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக அடைய (1Քւգ Այւն . உதாரணமாக உணவு உற்பத்தி அதிகரிப் பானது;
அ) அதிகளவு ஏக்கர் நிலத்தினைப் பயிர்ச் செய்கைக்குக் கீழ் கொண்டு வருவ தன் மூலம்; அல்லது
ஆ) சிறந்த வழிமுறைகள் அல்லது அதிக வருவாயினைக் கொடுக்கின்ற விதை கள், விஞ்ஞான ரீதியிலான பசளை யிடல் போன்றவற்றினைப் புகுத்து வதன் மூலம் ஏக்கர் ஒன்றிற்கான வருவாயினை அதிகரித்தல் மூலம் அடைய முடிகின்றது.
நாட்டின் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட் டமானது சிறந்த தரைப்படை, d5t-f படை, ஆகாயப் படை என்பவற்றினூ டாக கட்டி எழுப்பப்படலாம். இதே இலக் கினை ஏனைய உலகத்துடன் சமாதான் ரீதி யிலான தொடர்பினை இராஜ தந்திரிகள் ஊடாக ஏற்படுத்துவதன் மூலமும் அடைய முடிகின்றது. சில நிகழ்ச்சித் திட்டங்கள் ஒன்றுடன் ஒன்று விலக்கக் கூடியவை. சில ஒன்றுக்கொன்று இணைப்புத் தன்மையுடை யவை. நிகழ்ச்சித் திட்ட வரவு செலவுத் திட்டமிடல் வெற்றியானது,

Page 126
நிகழ்ச்சித்திட்ட, செயல்திட்ட.
(1) குறிக்கப்பட்ட இலக்கினை அடைவ தற்கான ஒவ்வொரு மாற்று வழி வகையான நடவடிக்கைகளை ஒழுங் காகப் பரிசீலனை செய்தலும் மதிப் பீடு செய்தலும்;
(2) மேலதிகமாகத் தேவையெனக் கரு துகின்ற மாற்று வழி வகையினைத் தயாரித்தல்;
(3) சிறந்த மாற்று வழிவகையினை அல் லது இரண்டு அல்லது அதற்கு மேற் பட்ட அவற்றின் சேர்க்கையினைத் தெரிவு செய்தல் என்பவற்றில் தங் கியுள்ளது.
பெண்கள் தங்களைத் தாங்களே என்று கருதுவதை விட்டுவிட வேண் ஆண்களைக் காட்டிலும் பெண்களி ஆணுக்குச் சமமான கூட்டாளியாக
அவளுடைய கணவன் உட்பட எந்த
கொள்ள மறுத்துவிட வேண்டும். இராமனைத் திருப்தி செய்ய சீதை ஒ கற்பனை செய்து கொள்ள முடியாது.
- C

பொ. சிவசுப்பிரமணியம்
அடுத்து தர்க்க ரீதியிலான படிமுறை வரவு செலவுத் திட்டத்தினை வகைப்படுத் தலுடன், கணக்கியல், நிதி முகாமை என்ற இரு அமைப்புக்களை இணைத்தலுமாகும், இறுதிப்படி பெளதீக ரீதியிலான முன் னேற்றத்தினையும் செயல் திட்டத்தினையும் அளவீடு செய்கின்ற முறையினை அறிமுகப் படுத்துவதனை உள்ளடக்குகின்றது. ஒவ் வொரு நிகழ்ச்சித் திட்டமும் அதன் செயல் திட்டத்தினை அளவீடு செய்கின்ற அலகு களையும், குறிகாட்டிகளையும் நிர்ணயிக் கின்ற வகையில் அதன் சொந்தப் பிரச்ச னைகளை எடுத்துக் காட்டுகின்றது. இதற் கான திருப்திகரமான விடையினைக் கண் டறிய விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல் வேண்டும்.
ஆண்களின் இச்சைக்கான சாதனம்
டும். அத்தகைய நிலைக்குப் பரிகாரம்
கையிலேயே அதிகம் இருக்கிறது. அவள் இருக்க வேண்டுமாயின் அவள்
ஆடவருக்காகவும் அலங்காரம் செய்து
உடல் சம்மந்தமான கவர்ச்சிகளால்
ரு விநாடி கூட வீணுக்கியதாக நான்
- காந்திஜி

Page 127
பருத்தி
இலங்கையில் தமி தட்டச்சின் ஆரம்பகர்த்தாவும், கற்பித்தலி 54 வருடம் அனுபவம் உை 0 L, A/L (5T2al) LDT2)) { வெளிநாடு செல்வோருக்கான சுருக்/தட்டச் உங்களுக்காகவே விற்ப
கடந்தகால வினவிடை
25aumoria:Sud) O-L, A-L உயர் கணக்கியல் A-L வர்த்தகமும் நிதியும் O-L, A-L பொருளாதாரம் O-L, A-L வர்த்தக கணிதம் O -L
இவற்றை எம்மிடமும் வர்த்தகக் கல்லு
வர்த்தகக் கல்லூரி,
பருத்தித்துறை
ர ர ம கி மு
ஸ் ர n ன்
u Typů |
(LDg LLTÍ 6l J460 ül, ராய்க்டர் என்ஜின்களுக் கட்டிங் தமிழ் பிரதேச தொடங்கி நடா
போட் உதிரிப்பாக ர ர ம கி (
u I r p Č
G: Fr 6óT: 7 1 7 9

கல்லூரி த்துறை. ழ் சுருக்கெழுத்து ன் (சுருக்-தட்டச்சு தமிழ்/ஆங்கிலம் உட்பட) டயவரால் கற்பிக்கப்படுவதும் வர்த்தகம் கலை வகுப்புகள். சு வகுப்பும் உண்டு, விடுதி வசதியும் உண்டு.
னைக்கு இருக்கின்றன.
ரோட்ஸ் குறிப்புகள் வர்த்தகமும் நிதியும் O-L, A-L பொருளாதாரம் O-L, A-L பிட்மன் சுருக்கெழுத்து
(தமிழ்) 1 & i கணக்கியல் & i
ரி மன்னுரிலும் பெற்றுக்கொள்ளலாம்.
- வே. வா. வேலுப்பிள்ளை
ரு ஷ் ண ஸ் லி வீதி,
தண்ணிர் பம், வள்ளம், குறிபோறிங், கிருங்சாவ்ற் ஈத்தில் முதன் முதலாக ந்தும் ஸ்தாபனம்.
விநியோகஸ்தர். ரு ஷ் ண ஸ்
I r 6 or rit.
தந்தி 'குருதேவ்'

Page 128
lik தரமான ஜவுளித் 次 றெடிமேட் 2D – oÖ)
மற_ |* அழகு சா தனப்
ராஜ்கே
47. பெரிய கடை
மின்சார உபகரணங்கள்
“GG” GDJ,
எஸ்-லோன்
எவரெ
uDÖ)
“GJEGIA” DIGGJUM GÖT2
If I
வடமாகாண பிரதா6
நியூரோன் 6
பிரபல மின்சார ஒப்பந்தக்
141, 143, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம். தொலைபேசி: 7 0 1 6

ந்தெரிவுகளுக்கும், டகளுக்கும், றும்
பொருட்களுக்கும்|
s ல்ஸ்
யாழ்ப்பாணம்,
p
Gir
6ĐLJỦ டி பற்றரிகள் 1. பி. ஈ. மின்பல்புகள் )Iů ன நீர் இறைக்கும் யந்திரம் ults  ைவிநியோகஸ்தர்:
"லெக்ரிக்கல்ஸ்
காரரும், விற்பனையாளரும்
கிளை: 440, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.

Page 129
இலங்கையின் பொரு திட்டமிடுதலும் முக்
- சி. சிறிஸ்
வர்த்தகவியல் - மூ
பொருளாதார விருத்தியை நோக்க மாகக் கொண்டு செயல்படும் வளர்முக நாடுகள் தமது நோக்கை அடைவதற்காகத் திட்டமிட்டு செயல்படுகின்றன. அநேக நாடுகளில் இத்தகைய திட்டங்கள் ஆரம் பிக்கப்பட்டிருந்தும் அவற்றைத் திறனுக முகாமைப்படுத்தாமையினல் குறித் த இலக்கை அடைய முடியவில்லை. இவ் வளர் முக நாடுகளில் ஒன்றனதும், குறைவிருத் திப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது மான இலங்கை, சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்தும், முகாமைக் கருமங்களை சரியான முறையில் கடைப்பிடியாமையால் திட்ட நோக்கை அடைய முடியாது இடையில் கைவிட வ்ேண்டிய நிலை கூட ஏற்பட்டது எனலாம். முகாமைக் கரும்ங்களில் மிகவும் முக்கியமான திட்டமிடலும், ஏனைய கரு மங்களும் திறனுக செயற்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார விருத்தியை துரி தப்படுத்திக் குறித்த நோக்கை அடைய முடியும் என்பதை ஆதாரமாகக் கொண்டு, முகாமை என்ருல் என்ன? முகாமையின் செயற் கருமங்கள் யாவை? அச் செயற் கருமங்களில் மிகப் பிரதான கருமமாகிய திட்டமிடல் என்ருல் என்ன? அதன் நோக் சம், செயற்பாடுயாது? இலங்கையில் திட்ட
- 10:
 
 
 

福峦烈 ဒွိကြွဒွိ ဒွိုဒွိုဇိုးငြှို3
ளாதார விருத்தியில்
காமையின் பங்கும்
※
G
协创
影
sந்தராசா - ழன்ரும் வருடம்
மிடல்களின் செயற்பாடும், அவற்றின் குறைபாடுகளும் யாவை? இதனை நிவர்த்தி செய்ய முகாமைக் கருமங்களை எவ்விதம் இயக்க வேண்டும் என்பதை இக் கட்டுரை ஆராய்கின்றது.
(pass and (Management):-
ஏற்று நிறுவப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் நிறுவனம் ஒன்றின் இயக்கப் பாடுகளுக்கு வழிகாட்டி அவற்றை நடப் பிக்கும் வினைத் தொடர் தான் முகாமை யாகும். முகாமை கிடைக்கக் கூடிய மனித செல்வத்தையும், இயற்கை வளங்களையும் பயன்படுத்தி குறித்த இலக்கை அடையும் நோக்குடன், திட்டமிடல், வே லை க் கு அமர்த்துதல், நெறிப்படுத்துதல், திசைப் படுத்துதல், பொருள், மனித சக்தி ஆகிய வளங்களை முறைப்படுத்துதல் போன்ற அடிப்படைக் கரும்ங்களைக் கொண்ட ஒரு தெளிவான விஞ்ஞானக் கலையாகும். முகா மையாளர் பணியிலிருந்து ஆளுகை செயல் முறைகளை அறியலாம். முகாமையாளர் மனிதனுடனும், மற்றைய வளங்களுட னும் சேர்ந்து தொழில் புரிவதன் மூலம், தமது நோக்கை அடைய கருமமாற்றுகின் முன், அவர் மற்றையோரது கருமங்களை இயைபு படுத்தி, விரைவாக்குவதே ஒழிய தாமே தொழில் புரிவதில்லை. முகாமைக்

Page 130
இலங்கையின் பொருளாதார.
கடமைகளை திட்டமிடுதல், ஒழுங்குபடுத்து தல், ஒன்றுபடுத்துதல், கட்டுப்படுத்துதல் என்ற நான்கு தொழிற்பாடுகளையும் குறிப் பிடலாம். ஈ. எப். எல். பிறெச்ற என்பவர் ஒழுங்குபடுத்தலுக்குப் பதிலாக தூண்டு தலைக் குறிப்பிடுகிறர்கள். நூற்ஸ் உம் ஒ டொனல் உம், தமது நூலில் பதவியினரை வேலைக்கு அமர்த்தல், கட்டளையிடல் என்ப வற்றையும் குறிப்பிடுகிருர் கள் முகாமை கடமைகளைபலவகைகளாக விரித்துச் செல் லலாம். ஆணுல் மேற் குறிப்பிட்ட நான்கு கடமைகளுக்கு மேலாக விரித்துச் செல்வது தேவையற்றது என்பது ரெரி என்பவரின் கூற்ருகும். இக் கரு மங்க ள் ஒன்ருே டொன்று இணைந்தும், ஒன்றின் மேல் ஒன்று பரவியும் காணப்படுகின்றது. இக்கருமங் களை ஆராய்வோம்.
திட்டமிடல் கருமத்தை ஆற்றும்
போது என்ன தேவை, இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எப்போது ம்ேற் கொள்ளப்பட வேண்டும், என்பவற் றைக் கருத்தில் கொண்டு, பெற்றுக் கொள் ளப்பட்ட தரவுகளின் மத்தியில் நோக் கத்தை வகுக்க வேண்டும். இந்நோக்கை அடைவதற்கு கொள்கைகள், திட்டம், நடைமுறை விதிகள், செயற்படுத்தும் முறைகள் வகுக்கப்படவேண்டும். இவ்விதம் வகுக்கும் போது மனிதன், இயற்கை வளம், நிதி, தொழில் நுட்பம் போன்றவற்றையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், திட்டத்தை பல வழிகளில் தேர்ந்தெடுக்க வேண்டும். திட்டமிடல் செயல்படுத்தும் முகாமையாளருக்கு ஒரு ஆலோசனைச் சேவையாகவே அமையும். இதனை முகா மையாளரிடமிருந்து பிரிக்க முடியாது.
திட்ட நோக்கை அடைவதற்கு மணி தன், இயற்கை வளத்தையும் இலகுவாக செயல்படுத்தும் விதத்தில் ஒழுங்கமைப்பு கருமத்தை ஆற்ற வேண்டும். முதலில் தேவையான நடவடிக்கையை தீர்மானிக்க வேண்டும். அதன் பின்பு சகல கருமங்களை யும் தொகுத்து, வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். அப்பிரிவுகளை செயல்
-

சி. சிறீஸ்கந்தராசா
படுத்த திணைக்களங்களாக்கவேண்டும். அத் திணைக்களத் தலைவர்களுக்கு கடமைகளை
பகிர்ந்து அளிக்க வேண்டும். அவர்கள் கட
மையாற்ற அதிகாரமும் பொறுப்பும்
கொடுக்க வேண்டும். எங்கு, யார் என்ன
வேலை செய்ய வேண்டும் என்பதைக் கவ
னத்தில் கொண்டு வேலைப்பகிர்வு, வேலையை ஒதுக்குதல், அதிகாரம் ஒப்படைத்தல்
செய்வதன் மூலம் திட்டமிடலை திறனன
முறையில் முகாமை செய்யலாம். நிறு
வனத்தின் தேவையைப் பொறுத்து ஒழுங் கமைப்பு மாறுபடும். இலக்கை அடை
வதற்கு சிறந்த கருவியாக ஒழுங்குபடுத் தல் விளங்குகின்றது,
திட்டமிட்டு ஒழுங்கமைப்புச்செய்யப்ப ட்ட சகல கருமங்களையும்ஒன்றுபடுத்துவதன் மூலமே நிறுவனத்தின் நோக்கை இலகுவில் அடைய முடியும். ஒன்றிணைப்பு என்பது இறுதிப் பொது விளைவு ஒன்றை நோக்கி நிறுவனம் ஒன்றின் பிரிவுகள் அனைத்தின தும் முயற்சிகளை ஒரே சீராக்கி இலகுபடுத் தும் முறையை குறித்து நிற்கின்றது. இது நோக்கங்களை ஏற்றுக்கொள்ளல், ஒன் றிணைப்பின் தேவையை மதித்தல், காலம் என்ற காரணி, செய்தி பரிமாறல் போன்ற அடிப்படைக் காரணிகளை ஒன்றுபடுத்தல் கொண்டுள்ளது மேரி பாக்கர் பெலற் என் பவர் இதன் முக்கிய அம்சமாக நேரடித் தொடர்பு, திட்டமிடுதல் கொள்கை வகுத்தலின் போது ஒன்றுபடுத்தலுக்கு முக்கிய கவனம், ஓர் சூழலில் உள்ள எல் லாக் காரணிகளும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புபடுத்தப்பட்டதாக இருத்தல் போன்றவைகளையும், மேற் பார்வை, கலந் துரையாடல், தொடர்பு உ6ழியர்களைப் பயன்படுத்தல் போன்ற ஒன்றுபடுத்தல் நுட்பங்களையும், தனது ஒன்றுபடுத்தல் கோட்பாட்டில் விரிவாக விளக்கியுள்ளார். நல்ல ஒன்றுபடுத்தல், தோன்றும் பிரச்சினை களைத் தடுத்து குறித்த இலக்கை வெற்றி யடையச் செய்யும் ஒரு சிறந்த முகாமைக் கருமமாகும்.
06 -

Page 131
இலங்கையின் பொருளாதார.
கட்டுப்படுத்தல் என்ற முகாம்ைக் கருமம் திட்டத்துக்கு அமைய நிறுவனத் தின் இலக்குகள் அடையப்படுவதை உறு திப்படுத்த, கீழ் பணியாளர்களின் செயற் பாடுகளை திருத துதலும், அளவிடுதலும் போன்ற பணிகளை குறித்து நிற்கின்றது: திட்டமிடலும் கட்டுப்படுத்தலும் இரட் றைக் குழந்தைகள் எனக் கூறலாம். கட்டுப் படுத்தல் நிகழ்ச்சிகளை உறுதிப்படுத்தி திட்டம் சரியாக நிறைவேறும் என்பதை யும் உறுதிப்படுத்துகின்றது. பிழைகளைக் கண்டு பிடித்து அவற்றைத்திருத்துகின்றது. பொறுப்புக்களை குறித்துக் கொடுப்பதற் கும் அதிகரிக்க வேண்டிய செயல் விளைவு களை அடைய வழிகாட்டுகின்றது. இக் கடமை திறமையாக அமைவதன் மூலம் முகாமைக்கு பல வழிகளில் உதவுகின்றது. முகாமை மையங்களில் திறமையைக் கூட்ட நடவடிக்கை எடுப்பதுடன், மையங்களை p. 65T gulfrsh கட்டுப்படுத்துகின்றது. பிழை களைத் திருத்தல், அடையாளம் காணுதல், முன்ணுணர்தல் இவற்றுக்கு இக்கருமம் அவசியமாகின்றது. மாற்றங்களுக்கான தேவையை அறிதலும், வேலையை பகிர்ந்து அதிகாரத்தை பகிர்வு செய்து விரும்பிய விளைவை ஒப்பிடவும் இது உதவுகின்றது. தரத்தை நிர்ணயம் செய்து, தரத்தை உண்மையான விளைவுடன் ஒப் பி ட் டு, நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வும் கட்டுப்படுத்தல் கருமம் பயன்படுகின் றது. இதனை திறனுக இயக்கி குறித்த நோக்கை, குறித்த காலத்தில் அடைய, வரவு செலவுத் திட்டம், கன் சார்ட் வரை படம், வலைவேலை ஆய்வு போன்ற வரை படங்கள் மூலம், முகாமையை முறைப் படுத்துகின்றது.
திட்டமிடல், ஒழுங்கமைத்தல், ஒன்று படுத்தல், கட்டுப்படுத்தல் ஆகிய கருமங் களை திறனுக இயக்க தலைமைவகித்தல் என்ற முகாமைக் கருமமும் அவசியமானது. தலைமை வகித்தலில் மேற்பார்வை தூண்டு தல், வழி நடத்தல் போன்ற உப செயற்
பாடுகளையும் இயக்குவதன் மூலம் நிறு வனத்தின் நோக்கை விரைவாக அடைய
- {{

சி. சிறீஸ்கந்தராசா
முடியும். எனவே தலைமை வகித்தல் என்பது சகல கருமங்களுக்கும் தலைமை த ரா ந் கி கொண்டு நடத்த ஒருவர் செயல்படுவ தாகும். தலைம்ை வகிப்பவர் தனக்குக் கீழ் உள்ளவர்களுடன் உற்சா கத்தோடு, சுய தொடர்பு கொண்டு வேலையில் ஈடுபடுவது டன், அமைக்கப்பட்ட இடங்கள், பதவி களுக்கு ஏற்ப அவர்களின் நடத்தையை வழி நடத்தி தூண்டுதல் செய்வதோடு, அவர்களின் உணர்ச்சிகளையும், அறிந்து தீர்க்கும் நடவடிக்கைகளையும் செய்யவேண் டும். இத்தகைய ஒரு தலைவர் தொகுதி யினரால் தெரிவு செய்யப்பட்டவராகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவராகவோ அல்லது நியமனம் செய்யப்பட்டவரா கவோ இருக்கலாம், இவருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இவர் தலைமை வகிக்கும் போது மற்றையோர் நிலைக்குள் ளாகி உணர்தல் (Empathy} சுய அறி nјетi dog (Self awareness) Lago) 653T i 65 தன்மை கொண்டு ம்ற்றவர்களை வழி நடத்த வேண்டும் அத்துடன் இவர் தன் னிச்சையான கூட்டுறவை அபிவிருத்தி செய் வதுடன், சுயேட்சையான ஐக்கியத்துக்கும் கட்டுக்கோப்புக்கும் வழிவகுத்து நடத் தையை வழிகாட்ட வேண்டும். இவருக்கும் இ வ ர து கீழ்படியிலுள்ளவர்களுக்கும் இடையே இரு வழித் தொடர்பை ஏற் படுத்தி, மற்றையோரின் கருத்துக்கு மதிப் பளிப்பதுடன் தமது கருமத்தை மற்ற வருக்கு எடுத்துக் கூறி குறித்த நோக்கை அடைய செயலாற்ற வேண்டும்.
தலைமை வகிப்பவரின் பிரதான கரு மங்களில் ஒன்று தூண்டுதலாகும். தூண்டு தல் என்பது மனிதர்களை வேலை செய்யும் படி உற்சாகப்படுத்துவதனைக் குறித்து நிற்கின்றது. இதனுல் ஊழியர் செயற் திறன், தரமான சிறந்த உற்பத்தி, வேலை யைப் பாதுகாத்தல், உற்பத்தியை அதே அளவில் அல்லது அதிகரிக்கவும் இத்தூண் டுதல் கருமத்தினுல் அடையமுடியும். தூண்டுதல் காரணிகளாக, பொருள் ரீதி யாக பணம், பாதுகாப்பு போன்றவற்றை
--سے 07

Page 132
இலங்கையின் பொருளாதார.
யும், சமூகரீதியாக சுயகெளரவம் என்ப வற்றையும் தனிமனிதரீதியாக, தொகுதி ரீதியாக கலந்துரையாடல், பயம் நீக்கல், ஆவல், அதிகாரம் போன்றவற்றையும் குறிப்பிடலாம். மனிதன் திறனுக வேலை செய்ய காற்ருேட்டம் , ஒளியூட்டல், பாது காப்பு போன்ற பெளதீகக் காரணிகள் பழம் காலம் தொட்டே நிறைவேற்றப் பட்டு வந்திருக்கின்றன. எனவே மனித னது அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி
சமூகம் அரசியல் தெ
V V M. M.
வளங்கள் முகாமைக் கடமைகள் 1. மனிதன் 1. திட்டமிடல் 2. இயற்கை மூலவளம் ட, 2. ஒழுங்கமைத்தல் 3. முதலீட்டு நிதி 3. ஒன்றுபடுத்தல் 4。 பொறி வசதி 4. கட்டுப்படுத்தல் 5. செயல் முறைகள் 5. தலைமை வகித்தல் 3. le முறை 6. தூண்டுதல்.
Λ Λ Λ
வெளிநாட்டுத் தாக்கம் பண வீக்கம் 莎委ü
இலங்கையில் உள்ள மனித செல்வத் தையும், இயற்கை வளங்களையும், முதலீட்டு நிதிகளையும், மூலப்பொருள் வளத்தையும், பொறி வசதிகளையும், பொருளாதார முறைமைகளுக்கு ஏற்றவிதமாக ஒன்று சேர்த்து, உயர்ந்த விருத்தி நோக்குடன் செயல்படுவதற்கு முகாமைக் கருமங்க ளான திட்டமிடல், ஒழுங்கு படுத்தல், ஒன்றினைத்தல், கட்டுப்படுத்தல், தலைமை வசித்தல் , தூண்டுதல் போன்ற செயல்
- 1

சி. சிறீஸ்கந்தராசா
செய்வதன் மூலம்தான் நோக்கை விரை வாக அடையலாம் என்ற கருத்தில்
டொக்டர் A. H. மார்சலோ ‘தேவை விருட்சம்" என்ற கோட்பாட்டில் மஞே ரீதியானவை, பாதுகாப்புரீதியானவை,
அன்பு, பெருமதிப்பு, சுயதிருப்தி என்ற ஐந்து தேவைகளையும் குறிப்பிட்டுள்ளார். குறித்த இலக்கை அடைய விரைவுபடுத் தும் மிகப் பிரதான முகாமைக் கருமமாக தூண்டுதல் விளங்குகின்றது.
ாழில் நுட்பம் மனிதப்பெறுமதி
f வேலைகளே சரியான шш6йт
1. இடம் 1. தனி மனிதன்
----g> 2. முறை * 2. நிறுவனம்
3. sits) 3. தொகுதி 4. வழியில் 4. சமூகம்
V
த்தொகைப் பெருக்கம் பொருளாதாரம்
பாடுகளை செய்யும்போது சமூகம், அரசி யல், தொழில் நுட்பம், மனிதர் பெறுமதி, வெளிநாட்டுத் தாக்கம், பணவீக்கம், சனத் தொகை பெருக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்ய வேலைகளின் செயல்பாடு களை சரியான இடத்தில், சரியான காலத் தில், சரியான முறையில், சரியான வழி யில் செயல்பட வழி வகுப்பது முகாமைக் கருமங்களேயாகும். இதனல் மனிதன்,
8 -

Page 133
இலங்கையின் பொருளாதார.
தொகுதி, நிறுவனம், சமூகம் போன்றவர் கள் நன்மை பெறுவதுடன், நாடு உச்ச நோக்கை அடைய வழிவகுப்பதும் முகா மையின் பெரும் செயற்பாடாகும்.
Still flat) (Planning)
முகாமைக் கருமங்களில் மிக முக்கிய இடத்தைத் திட்டமிடல் வகிக்கின்றது. திட்டமிடல் என்பது முன்பே தீர்மானிக் கப்பட்ட நோக்கு சளே அடையத் தொடர் பான உண்மைகளையும், ஊக்கங்களையும், முன் கூட்டியே ஆலோசித்து ஸ்திரப்படுத் தும் ஒரு செயற்பாடாகும், நாம் விரும்பு கின்ற நோக்குகளை முன்னவே தெளிதல், தோன்றக்கூடிய பிரச்சினைகளை எதிர்பார்த் த ல், அவற்றை நிவர்த்திசெய்யும் வழிவகை களைக் கைக்கொள்ளுதலே முகாமைத் திட்டமிடலாகும். இது குறிக்கப்பட்ட நோக்கத்திற்கான வழங்கள் உதவி, திட்ட மிடலின் அடிப்படை அம்சங்கள், திட்டத் தின் விரிவு, அதன் திறன், அது எவ்வ ளவு தூரத்துக்கு எதிர்பார்த்த நோக்கை, குறுகிய முறையில், பலனிலும் பார்க்க குறைந்த செலவில் அடையக்கூடிய வித மாக இருக்கின்றது என்பன போன்ற முக் கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
எதிர்காலம் நிச்சயமற்றதாகக் காணப் படுகின்றது. நாள்தோறும் பல்வேறு மாற் றங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எவ்வளவுக்கு எவ்வளவு நீண்டகாலமாக அமைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நிச்ச பமற்றதன்மையும் அதிகரிக்கின்றது. பொரு ளாதார விருத்தி அடையப் பல வழிமுறை * ஸ் இருந்தால், சிறந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் திட்டமிடல் அவசியமா கின்றது. பொருளாதாரப் போக்கைக் கணிக்க முடியாத போது நிச்சயமற்ற தன்மை கூடுதலாகக் காணப்படுவதால் திட்டமிடல் மிக முக்கியத்துவம் பெறுகின் றது. திட்டமிடல் நிறுவனத்தின் நோக்கை வெளிக்காட்டி நிற்பதுடன், சகல வழிகளி ஆம் நோக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி
- 1

G。 சிறீஸ்கந்தராசா
நிற்கின்றது. திறனன முறையில் அமைக் கப்பட்ட திட்டம் திணைக் களங்களின் நி1. வடிக்கை நோக்கை நோக்கியே செயல்பட வும், குறித்த நோக்கை அடைவதில் கவ னம் செலுத்தவும், திட்டத்தை மீளாய்வு செய்யவும் திட்டமிடல் அவசியமாகின் றது. செலவுகளைக் குறைக்கவும், ஒருங் கிணைந்த கூட்டுமுறையை மேற்கொள்ள வும் இது உதவுகின்றது. இத்திட்டமிடல் எல்லா முடிவுகளையும் ஒருவழிப்படுத்தி இலாபம் அடைய வழி வகுக்கின்றது. இது செயற்பாடுகளின் கட்டுப்பாட்டுக்கு அவசியமாகின்றது. ஒரு கீழ் ஊழியன் எதிர்பார்த்ததை செய்துள்ளான என்ப தற்கு திட்டமிடல் மிக முக்கியம் பெறு: கின்றது.
எந்த ஒரு முகாமையாளனும் திட்ட மிடுதல், நிகழ்ச் சித் தி ட் டமிடுதல் செயற் பா ட் டை க் கிட்டுப்படுத்தல் என்ற மூன்று கருமங்களையும் புரிகின் முன். அவன் கிடைக்கக்கூடிய வளங்கா պւն, தான் ஆற்றவேண்டிய வேஜல களையும் கொண்டு, குறித்த நோக்கை, குறித்த நேரத்தில் அடைய முயல்கின் ருன். இதேபோல் வளர்முக நாடுகளும், வளர்ச்சியுற்ற நாடுகளும், குறுகிய காலத் தில் குறைந்த செலவில் உயர்ந்த விருத்தி யடைய பொருளாதாரத்திட்டங்கஜ D. (5, வாக்கிச் செயல்படுகின்றன. பொருளாதா ரத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின் வருவனவாகும்.
1. திட்டம் வரையப்படுதல். திட்டத்தின் கால எல்ஜல. 3. திட்டத்திற் குறிப்பிட்டதற்
கமைய முதலீடு செய்தல். 4. திட்டத்தின் பிரகாரம் எல்லையை
அடைதல்,
(1) திட்டம் வரைதல்
தற்போதைய நிலைமையை ஆராய்தல் வேண்டும். இப்போது என்ன செய்யப்படு கின்றது. முன்பு என்ன செய்யப்பட்டது.
9 -

Page 134
இலங்கையின் பொருளாதார.
கிடைக்கக்கூடிய வளம், மனிதன், நிதி, இயந்திர முறைகள் போன்றவற்றை நுணுகி ஆராய வேண்டும் இதற்காகத் தரவுகள் சேகரித்தல் முக்கிய இடம் பெறு கின்றது. தரவுகள் சூழல் பற்றிய தரவு கள், போட்டியாளர் தரவுகள், உள்ளகத் தரவுகள் போன்றவையா கப் if is லாம். இத்தரவுகள் சேகரிப்பதற்குப் புள்ளி விபர, கணித நுட்பங்கள் கைக்கொள்ளப் படுகின்றது. இத்தரவுகள் பொருளாதார மதிப்பீடுகள், சமூகவியற் காரணிகள், அரச கட்டுப்பாடுகள், வரி நடவடிக்கை கள், தொழிலுக்கான கேள்வி. பொது சன மனப்பான்மை, தனிப்பட்ட தாபனத் தின் தரவுகள் என்பனவற்றிலிருந்து பெற லாம். பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளி லிருந்து தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தீர்மானம் செய்தல் திட்டமிடலில் முக்கியம் பெறுகின்றது. பல்வேறு மக்க ளும் தீர்மானத்தை மேற்கொள்ளவும், ஒருங்கிணைக்கும் முக்கிய வழிகளையும் கடைப்பிடிப்பதோடு அவர்களின் கருத்து ணர்வுகளையும் அபிப்பிராயங்களையும் பெற வேண்டும். தீர்மானத்தை மேற்கொள்ளும் போது ஏற்படும் பொதுவான பிரச்சினைகளை யும், பிரதான தடங்கல்களையும், இதனை நிறைவடையச் செய்யும் வழிவகைகளையும் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும். இத்தீர்மானத்தின் அடிப்படை யில் நோக்கத்தை ஏற்படுத்த வேண்டும் இது நீண்டகால வரம்பாகவும், குறுகிய கால வரம்பாகவும் இருக்கலாம், நோக்கை நிர்ணயிக்கும் போது நிலைமைக்கேற்ப, நடைமுறைப்படுத்தக் கூடிய விதமாக, நெகிழும் தன்மையாக நிர்ணயிக்கப்பட வேண்டும். நோக்கிற்கேற்ப, நிகழ்ச்சிகளைக் கோவைப்படுத்தி செயல் வியூகத்தைப் பட மாக வரைந்துகொள்ள வேண்டும். இதற்கு பொருளியலறிஞர், சட்டவறிஞர், பொறி யியலாளர், கணக்கியலறிஞர் இவர்களின் உதவியையும் கொண்டு வரையப்படல் வேண்டும்.

சி. சிறீஸ்கந்தராசா
(2,(3) திட்டத்தின் கால எல்லையும் முதலீடும்:
திட்டமிடப்பட்ட செயல் கருமங்களே செய்துமுடிக்கும் அல்லது செய்துமுடிக்க வேண்டும் எனத் துணியும் கால எல்லை திட்டத்தின் கால எல்லை எனப்படும். பொருளாதாரத் திட்டங்களை நீண்ட காலத் திட்டம், குறுகிய காலத்திட்டம் என இரண்டாக வகுக்கலாம். 7, 10, 30 வரு டங்களை கொண்ட திட்டங்களை நீண்டகா லத் திட்டம் என்றும், 2, 3, வருடங்களை கொண்டவைகளைக் குறுகியகாலத் திட்டங் கள் என்றும் அழைக்கப்படும் பெரும்பா லான நாடுகளில் 5 ஆண்டுத்திடடமே கைக்கொள்ளப்படுகின்றது. இக்கால எல் லையில் வழமையான முதலீட்டைவிட அதிகமான முதலீட்டைச் செய்யவேண் டும். இம்முதலீடு செய்வதற்கான நிதி உள்ளுரில் பெறமுடியுமா அல்லது வெளி யூரில் பெறமுடியுமா? என்பதையும், தனி யார் துறையும், அரசாங்கத் துறையும் என்ன என்ன வீதத்தில் முதலீடு செய்யப் பட வேண்டும் என்பவற்றையும் கவனத் தில் கொண்டு செயல்படவேண்டும்.
4. திட்டத்தை நிறைவேற்றுதல் :
எழுத்துருவில் வரையப்பட்ட திட் டத்தை செயல்படுத்திக் காட்டுவதே நிறை வேற்றுதல் எனப்படும். குறித்த இலக்கை அடைய வேண்டுமானுல் திறமான முகா மைக் கட்டுப்பாடுகள் அவசியமாகும். குறிக் கப்பட்ட நோக்கின்படி செயல்கள் ஒழுங் காக நடைபெறுகின்றனவா என்பதைக் கவனித்தல் வேண்டும். அத்துடன் திட் டத்தை மறுஆய்வு செய்தல் வேண்டும். இ த ற் கு ஒருங்கிணைத்தல் கூட்டங்கள், வேலைத்தள மேற்பார்வை, வேலைத் தளக் கூட்டங்கள் கூடி கலந்துரையாடி செயல் படலாம். அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட திட்டத்துடன் ஒப்பீடுகளை மேற்கொன் டும், குறைகளைக் கண்டறிந்தும், இக்குறை கள் அல்லது தவறுதலுக்கான காரணங் களைக் கண்டறிந்தும், அதனை நிவர்த்தியும் செய்யவேண்டும். இவ்வாறு திறனுண முகா
.0 -

Page 135
இலங்கையின் பொருளாதார.
மைக் கட்டுப்பாடுகளைச் செயற்படுத்தினல் திட்டங்களை நிறைவேற்றுவதில் இடர்கள் ஏற்படமாட்டாது.
இலங்கையில் திட்டமிடலும் நிறைவேற்றலும்:
இலங்கை சுதந்திரமடைந்ததும், பல் வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டி யேற்பட்டது. சனத்தொகை வேகமாகப் பெருகியது. இதனைத் தொடர்ந்து உண வுப் பொருள் தட்டுப்பாடும், வேலையில்லா மையும் அந்நியச் செலவாணிப் பிரச்சினே யும், முதலீட்டுப் பிரச்சினையும் ஏற்பட்டது. தொடர்ந்து பெருகி வரும் பிரச்சினைகளை முறியடித்து, பொருளாதார விருத்தியைக் காணத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இத்திட்டங்கள் எவ்வளவு தூரத்துக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைச் சிறிது நோக்குவோம்.
பத்தாண்டுத் திட்டம்:
இத்திட்டம் 1959 தொடக்கம் 1968 வரையுள்ள 10 ஆண்டுக் காலப்பகுதியில் பொருளாதார விருத்தி நோக்கை அடை யும் வகையில் 1958 ஆம் ஆண்டு வகுக் கப்பட்டது. இது,
(i) தேசிய வருமானத்தை 88% மாக
அதிகரித்தல், (i) மேலதிகமாக 1.4 மில்லியன் மக்க ளுக்கு வேலை வாய்ப்பளித்தல். (i) வருமான சம பங்கீடு. (iv) சென் மதி நிலுவையைச் சமப்ப
டுத்தல். (V) தொழில் மயமாக்குதல்.
போன்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட் டது. அத்துடன் வெளிநாட்டு நிபுணர்க ளின் உதவி, வெளிநாட்டு நிதி உதவி எவ் வளவு கிடைக்கும் என்றும், அக்காலத்தில் ஜனத் தொகை வளர்ச்சி 3% மாகவும் முதலீட்டு வெளியீடு 2:6 ஆகவும், நுகர்வு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும் என்னும் எடுகோள்களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்
11

G. சிறீஸ்கந்தராசா
டது. பத்தாண்டுகளில் முதலீடு 13600 மில்லியன் ரூபாவாகவும், 1968இல் முதலீடு 1350 மில்லியன் ரூபாவாகவும், அந்த ஆண் டில் உள்நாட்டு உற்பத்தி 4470 மில்லிய ஞக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப் பட்டது. முதலில் விவசாயத்தை அதிக ரிக்கச் செய்து பின் மக்களின் வருவாயை அதிகரிக்க, சந்தை ஏற்பட கைத்தொழில் இயந்திரப் பொறிகளை இறக்குமதி செய்து கைத்தொழிலப் பெருக்கலாம் என எடுத் துக் கொள்ளப்பட்டது. முதலீடு அரசாங் கம் 61.6%எனவும், தனியார் 32.2% என வும் எடுக்கப்பட்டது,
முதலீட்டுத் திட்டம் தயாரித்தல், நிதி யைப் பெறல் என்பன திட்டத்தை நிறை, வேற்ற மிக அவசியமானது. முதலீட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆளுல் நிதி பெறும் வழி கைவிடப்பட்டது. வெளி நாட்டு நிதி, ஆண்டுக்கு 130 மில்லியன் ரூபா எனக் கணிக்கப்பட்டது. ஆளுல் இதில் 4 பங்குகூடக் கிடைக்கவில்&ல. எடு: கோள்கள் பிழையானமையால் திட்டம் தோல்வி அடைந்தது.
மூன்ருண்டுத் திட்டம்
பத்தாண்டுத் திட்ட த் தின் முதல் இலக்கை அடையவும், உழைப்பை விருத்தி செய்யவும், ஆரம்ப முதலீட்டை பெருக் குவதற்காகவும், நீண்ட காலத் திட்டத்தி லேற்படும் குறைபாட்டை நிவர்த்தி செய் யவும், பிரச்சினைகளைக் குறைப்பதற்காக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட் டத்தின் அடிப்படையில் தனியார் வருமா னம் 2% ஆகவும், முதலீட்டு வெளியீட்டு வீதம் 3:5 ஆகவும், ஜனத் தொகை 2.8 ஆகவும் உயரும் எனவும் எதிர்பார்க்கப் பட்டது. முதல் வருடம் முதலீடு 1085 மில்லியன் ரூபாவும், இதில் அரசாங்கம் 60%மும், தனியார் 40%மும் முதலீடு செய் வதாகவும், 2ம் வருடம் 680 மில்லியன் ரூபா அரசாங்கமும், 450 மில்லியன் ரூபா தனியாரும் முதலிடுவதாக எடுத்துக்கொள் ளப்பட்டது. இதிலும் முதலீடுகளுக்குரிய

Page 136
இலங்கையின் பொருளாதார.
பணம் எப்படிப் பெறலாம் என்க் கூறப் படவில்லை.
இத் திட்டத்தில் தேசிய அபிவிருத்தி வரியாக 75 மில்லியன் ரூபா, வங்கி உள்நாட்டுக் கடன் 505 மில்லியன் ரூபா, பிற வரிகள் 105 மில்லியன் ரூபா,அரசாங்கக் கூட்டுத்தாபனம் 105 மில்லியன் ரூபா,வெளி நாட்டு உதவி 375 மில்லியன் ரூபா எனக் கணிக்கப்பட்டது. தேசிய அபிவிருத்தி வரி கைவிடப்பட்டது. வங்கிக் கடன் (505) என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது பற்றி ஆராயாமல் எடுக்கப்பட் டது. த னியா ர் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கப்பட்டதாயினும், நுகர்வு அதி கரித்தது. கூட்டுத்தாபனங்கள் நட்டத் தில் இயங்கியமையால் எதிர்பார்க்கப்பட்ட முதலீடுகளைப் பெற முடியவில்லை வெளி நாட்டுக்கடன் 30-40 மில்லியன் ரூபாதான் கிடைத்தது. இவ்வாறு எதிர்பார்க்கப் பட்ட முதலீட்டு நிதியைப் பெறமுடியா மையால் திட்டம் உரிய இலக்கை அடைய வில்லை.
ஐந்தாண்டுத் திட்டம்:
இத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியி னரால் 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட் டதாகும். இது 1966ஆம் ஆண்டு முதல் அடுத்து வரும் 5 ஆண்டுகளைக் கொண்ட தாகும். இக்காலப்பகுதியில் மொத்த முத லீடு 8630 மில்லியன் ரூபா எனவும், ஏற் றுமதி விவசாய உற்பத்தி 1572 இலிருந்து 1883 மில்லியன் ரூபாவிற்கு உயரும் என் றும், நெல் உற்பத்தி 358 இலிருந்து 643 மில்லியனுகவும், மீன் 147 இலிருந்து 294 மில்லியனுகவும், தொழிற்சாலை உற்பத்தி 1087 இலிருந்து 1824 மில்லியனுக உயரும் என வும் எடுத்துக் கொள்ளப்பட்டது. சேவைகளின் பெறுமதி 3255 இலிருந்து 4240 மில்லியனுக உயரும், இவ்வாறு மொத்த உள்நாட்டு உற்பத்தி 7404 இலி ருந்து 10060 மில்லியஞக உயரும். இத ஞல் வருடத்துக்கு 5.2% உற்பத்தி அதிக

சி. சிறீஸ்கந்தராசா
ரிக்கும். வருடா வருடம் மக்கள் தொகை அதிகரிப்பதைவிட 2.5% கூடிதலாக உற் பத்தி அதிகரிப்பதோடு, 5 வருடங்களில் 6.9 இலட்சம் மக்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என எடுத்துக் கொள்ளப் பட்டது. இத்திட்டம் நிறைவேற்ற முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டனவாயினும் . வாழ்க்கைச் செலவு உயர்வு, வேலையின்மை பெருகியதே அல்லாமல் தி ட் டம் எதிர் பார்த்த இலக்கை அடையவில்லை.
(2வது) ஐந்தாண்டுத் திட்டம் :
இத்திட்டம் 1971 ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டது. இது இலங்கையின் பொரு ளாதார சுதந்திரத்துக்கும் , சுபீட்சத்துக் கும் வழிவகுக்கவும், ஏழை பணக்காரர் என்ற சமூக ஏற்றத் தாழ்வை ஒழித்து சமத்துவ சமுதாயத்தை தோற்றுவிப்ப தையும், பொருளாதார வளர்ச்சிக்கு வழி செய்து, நாட்டின் நிதி நெருக்கடியைத் தளர்த்துவதையும், பொருட்களில் நாடு தன்னிறைவு காணக்கூடிய வகையில் உண வுப் பொருட்களினதும், பாவனைப் பொருட் களினதும் உற்பத்தியைப் பெருக்கி, இறக் குமதியைக் குறைப்பதையும், 8 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிப்ப தையும், உள்ளூர் விவசாய மூலப் பொருட் களை கைத்தொழிலுக்குப் பயன்படுத்துவ தையும், முக்கிய நோக்கமாகக் கொண்டு மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தி ணுல் ஆரம்பிக்கப்பட்டது. இது 1972 தொடக்கம் 1976 ஆம் ஆண்டு வரையு முள்ள காலப்பகுதியை அடக்கியதாகும்.
இந் நோக்கை அடைய க ட் ட யச் சேமிப்பு, காணிச் சீர்திருத்தம், இறக்கு மதிக் கட்டுப்பாடு, ஏற்றுமதியை ஊக்கு வித்தல், கல்வி அபிவிருத்தி, போக்குவரத்து அபிவிருத்தி, உற்பத்தியை ஊக்குவித்தல், வளங்களை சிறந்த முறையில் உபயோகித் தல், விவசாயத்தையும், கைத் தொழில் களையும் சிறிய அமைப்பு முறையில் வளர்த் தல், விலைப்பொறிக் கொள்கை, சந்தைப் படுத்தும் வழி, வாழ்க்கைச் செலவைக்
| 2 -

Page 137
இலங்கையின் பொருளாதார.
குறைத்தல், போன்றவைகளைக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. இத் திட்டத் தின் கால எல்லையில் மொத்த முதலீடு 15000 மில்லியனகும். இதில் அரசாங்கம் 50%மும், தனியார் 50%மும் முதலிடுவதாக வும், மக்களின் சேமிப்பு 12.5% இலிருந்து 17% மாகக் கூடும் எனவும் தேசிய உற் பத்தி 3526 மில்லியனுக அதிகரிக்கும் என வும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இத் திட்டத்தை சிறந்த முறையில் செயற்படுத்த பிரதமரின் தலைமையின் கீழ் பொறுப்பாக திட்டமிடல் பொருளாதார அமைச்சு இயங்குகின்றது. இதன் கீழ் திட் டத்தைப் பரவலாக்கும் நோக்குடன் இலங் கையில் உள்ள 22 மாவட்டங்களிலும் 22 மாவட்ட அரசியல் அதிகாரிகளை நிய மித்து அவர்களின் தலைமையில் திட்டமிடல் காரியாலயங்கள், அம்மாவட்ட கச்சேரி களில் நிறுவப்பட்டுள்ளது. இவ் அரசியல் அதிகாரி மாவட்டத்தில் உள்ள சகல அர சாங்க காரியாலயங்களுடனும் சகல மக் களுடனும் நேரடியாக பங்குகொள்ளும் வண்ணம் செய்யப்பட்டதுடன், அதற்கான முழு அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் பிரதேச அபிவிருத்தி மன்றம், பல நோக்கு கூட்டுறவுச் சங்கம், கமத் தொழில் தினைக் களம், அரசாங்க அதிபர், உப அர சாங்க அதிபர், பிரதேச குடியல் பொறி யியலாளர் அமைப்பு (T. C. E. 0.) வைத் தியசாலை,சுகாதாரத்திணைக்களம்,பொலிஸ், தபால், மின்சாரம் போ ன் ற சகல தி னை க் க ளங்க ளு ட னு ம் நேரடித் தொடர்பும், மேற்பார்வையும் செய்வ தோடு திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்த கூடிய உற்சாகமும் காட்டுவதால் திட்டம் கூடிய வெற்றி அளிக்கும்.
இத் திட்டம் குறித்த இ ல க்  ைக அடைய வில்லை என்ருலும், கிராமியப் பொருளாதாரத்தை உ ய ர் வ  ைட ய ச் செய்த பெ ரு  ைம இத் திட்டத்தையே சாரும். இத் திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்ட அரசியல் அதிகாரிகள்,

சி. சிறீஸ்கந்தராசா
சகல குழு இயக்கங்களிலும் தமது கட்சி யில் பற்றுள்ளவர்களை நியமித்தமையால் தமது கட்சியினர்கள் மோசடிகள் செய் வதை தடை செய்ய முடியவில்லை. தனியார் முதலீடு 50% என எடுத்துக் கொள்ளப்பட் டது. அரசாங்கத்தின் கொள்கைகளில் ஏற் பட்ட மாற்றம் தனியார் முதலீட்டைக் குறைத்து விட்டது. வெளிநாட்டு முதலீடு வரும் என எதிர்பாக்கப்பட்டது. ஆணுல் அரசாங்கத்தின் தேசிய மயக் கொள்கையி ஞல், எதிர்பார்த்த முதலீட்டு நிதி கிடைக்கவில்லை. நெல் உற்பத்தி அதிகரிக் கும் எனக் கூறப்பட்டது. ஆனல் இயற்கை யின் தாக்கத்தினல் நெல் உற்பத்தி குறை வடைந்தது. இத்தகைய காரணங்களால் இவ் ஐந்தாண்டுத் திட்டம் குறி த் த இலக்கை அடைய முடியவில்லை.
திட்டங்கள் வெற்றி பெற முகாமையின் முக்கியத்துவம்
நாட்டில் அமைந்துள்ள இயற்கை வளங்களையும், மனித வளத்தையும், நிதி முறைமைகள் போன்ற வளங்கள் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படுதல், அத் தரவு களே அலுவலகங்களில் அலசி ஆராய்தல், அத் தரவுகளின்படி திட்ட வரை படத்தை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய திட்ட மிடல் கரு மங்களே திறனுக இயக்குவதற்கு முகாமை அவசியமாகின்றது. இலங்கையில் திட்டங்களின் தோ ல் விக் கு எடுத்துக் கொள்ளப்பட்ட எடு கோள்களில் ஏற் பட்ட பிழைபாடேயாகும். சில யூகங்களில் தெரிந்தெடுக்கப்பட்ட தரவுகள் பூரண மான உண்மைகளைத் தரவில்லை. பத்தாண் டுத் திட்டத்தில் சனத் தொகை 2.8% என எடுக்கப்பட்டது. ஆனல் 3% அதிகரிப்பு ஏற்பட்டது. 3 ஆண்டுத் திட்டத்தில் முத லீடு பற்றி குறிப்பிட்ட தொகை பெற முடியவில்லை. எனவே தரவுகள் உண்மை யாக அமைய வேண்டுமானுல் முகாமைப் படுத்தலை திறனுக இயக்க வேண்டும். இத ஞல கூடியளவுக்கு தரவுகள் ச ரி யா க பெறப்பட்டால் திட்டம் அதிகளவுக்கு வில காது வெற்றியடையும்.
13 -

Page 138
இலங்கையின் பொருளாதார.
எழுத்துருவில் உ ரு வா க் கி ய திட் டத்தை செயல் முறைப்படுத்துவதற்கு முகாமை அவசியமாகும். பொருளாதார திட்டத்தை உருவாக்கி, ஒழுங்கமைத்து, ஒன்றுபடுத்திக் கட்டுப்படுத்தினுல் தான் குறித்த இலக்கை அடைய முடியும். இவ் வாறு ஒழுங்குபடுத்திய திட்டத்தை செயல் படுத்த அதற்கொரு தலைமை வேண்டும். அவர் தூண்டுதல், வழி நடத்தல், ஆளணி சேர்த்தல் போன்றவற்றைப்புரியவேண்டும். இக் கருமங்கள யாவும் முகாமைக் கருமங் களேயாகும். இவைகள் திறனுக அமை வதன் மூலம் திட்டம் வெற்றியடையும் " கடந்த 10, 3, ஆண்டுத் திட்டங்கள் முகா மைக்கு முக்கியத்துவம் வழங்காமையினுல் தான் குறித்த இலக்கை அடைய முடிய வில்லை. ஆனல் 1971ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டஐந்தாண்டுத்திட்டம் திட்டமிடல், ஒழுங்மைத்தல் ஒன்றுபடுத்தல் கருமங்கள் திறனுக செயற்பட்டனவாயினும் நல்ல முகாமைக் கட்டுப்பாடு இன்மையே திட்ட இலக்கை அடையக் கஷ்டமாக இருந்தது,
திட்டங்களை செயற்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்ப்பதும், முன்னுணர்தலும் அவற்றை நிவர்த்தி செய்யும் முறையையும், நல்ல முகாமையினல் தான் செயல்படுத்த முடியும். மக்கள் ஐக்கிய முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டுத் திட் டத்தை செயல்படுத்தும் வேளையில் வெளி நாட்டில் ஏற்பட்ட பண வீக்கம் இதனல் இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் செலவீடு களின் பெறுமதியை உயரச் செய்தது. இவ் வாறு பிரச்சினைகள் ஏற்படுவதை ஒரளவு தவிர்ப்பதற்கும், அதனை உடனடியாக நிவர்த்தி செய்வதன் மூலம் திட்டம் தங்கு தடையின்றி நிறைவேற்றலாம். எனவே எந்தப் பிரச்சினைகளையும் திறனுன முறை யில் முகாமைப்படுத்துவதன் மூ ல ம் , அவற்றை சீர் செய்து தொடர்ந்து செயற் பாடுகளைத் துரிதப்படுத்தலாம்,
திட்டத்தின் த ரத் தோ டு நடந்து முடிந்த விளைவுகளை ஒப்பிடுவதற்கும், திட்
- 11

சி. சிறீஸ்கந்தராசா
டத்திலிருந்து விலகியிருந்தால் அதற்குரிய காரணங்களை ஆராய்வதற்கும், நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை மேற் கொள் வதற்கும் முகாமைக் கருமங்கள் அவசியமா னது. இக்கருமங்கள் திட்டத்தை வெற்றி யடைச் செய்யும். திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, முடிவடைந்த வேலைகளை மதிப்பிடவும், அவைகள் நிர்ண யித்தபடி நடைபெருவிட்டால் அதற்குரிய சரியான காரணத்தை அறிந்து அதனை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். இலங் கையில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் நடந்து முடிந்த வேலை மதிப்பிடப் படுவதில்லை. அப்படி மதிப்பிட்டாலும், தமது குறைபாடுகளை வெளியில் காட்ட விரும்பாமையால் திட்டம் தோல்வி காண வேண்டி ஏற்படுகின்றது. யார் மீதாயினும் குறைபாடு இருந்தாலும், அதனை நன்ருக துணுகி ஆராய்ந்து பிழைகளைத் திருத்தி யமைக்க வேண்டும். சில சமயம் திட்டத் தையே மாற்ற வேண்டி ஏற்பட்டாலும் அதனை மாற்றும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்தில் என்ன கைக் கொள்ளப்பட வேண்டும் என்பதை முகாமைப்படுத்தல், திட்டமிடலில் பெரும் உதவி புரிகின்றது.
திட்டத்தின் செயற்பாடுகளை எளிமை யாக்கி வேலைகளை இலகுபடுத்தி, துரிதப் படுத்த முகாமைப்படுத்தல் அவசியமாகின் றது. திட்டத்தில் எந்த நடவடிக்கை முதல் மேற் கொள்ள வேண்டும், சமனக எந்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். எந்த நடவடிக்கை முடிவடைந்த நடவடிக் கையைத் தொடரவேண்டும். எந்த நடவ டிக்கை ஆரம்பிக்கப்படுவதை, எந்தக் காரணி கட்டுப்படுத்துகின்றது. முடிவுக்குக் கொண்டுவர எந்தக் காரணி கட்டுப்படுத் துகின்றது போன்றவைகளைத்திறனுகஇயக்க முகாமை உதவுகின்றது. இதனுல் திட்ட பல வருடங்களில் காணவேண்டிய அபிவி ருத்தியை குறுகிய காலத்தில் அடைய (Լուգயும். சோவியத் சமவுடமைக் குடியரசு 100 ஆண்டுகளில் அடைய வேண்டிய விருத்
4 -

Page 139
இலங்கையின் பொருளாதார.
தியை 25 ஆண்டுகளில் அடைய வழிவகுத் தது அது திட்டமிட்டுத் தொழிற்பட்டமை யேயாகும். எனவே செயற்பாடுகளை எளி மைப்படுத்தி ஆக்கம் அதிகரிக்கவும், சேவை கள் திருந்தவும், பாதுகாப்பு நிலை திருந் தவும், முறைகள் திருந்தவும், தொழிற் பாட்டுச் சூழ்நிலை திருந்தவும். இதனுல் செலவு குறையவும், அழிவு குறையவும், உரிய இலக்கை வெகுவிரைவாக அடைய வழி வகுப்பதும் முகாமைக் கருமங்களின் எளிமையாக்கல் செயற்பாடேயாகும்.
திட்ட நோக்கை நோக்கித் திட்ட எல் லையை அடைவதற்காக ஊக்குவிப்பதோடு திட்டத்திலிருந்து விலகாது, அப்படி விலகி ஞல் அதற்குரிய காரணத்தைக் கண்டு,
அதனை நிவர்த்தி செய்து, திட்டத்தை திற ணுக கட்டுப்படுத்தி உரிய இலக்கை அடைய
உசாத்துணை
Principles of Management Executive Decision Making Management Planning and Control - Management and Organisation -
Simplifying Office Work ۔۔۔۔ ஐந்தாண்டுத் திட்டம் 1972 - 76. ஆரம்ப பொருளியல் அரசாங்கத் துறை முன்னேற்றம்.
எது ந
**நாகரிகம் என்பது பெரும்பா ஆடைகளை உடுப்பதும் அணிகளை அன வாழ்வதும் அன்று; அரிதின் முயன்று ட களைப் பயன்படுத்தி வாழ்வதால் மட் இல்லை. நாகரிகம் என்பது புதியன அதாவது நுண்ணறிவுப் பெருக்கமும் வெற்றியுமே நாச ரிகம் என்று சொல்
ം 11

சி. சிறீஸ்கந்தராசா
வழி செய்வது முகாமைப்படுத்தலேயாகும் திட்டமிடலை திறனுக கட்டுப்படுத்துவதன் மூலம், திட்டம் விலகாது செயல்படும் கட் டுப்பாடுகள் முறையாக செயல்படுத்தினுல் குறித்த இலக்கை நிச்சயம் அடையலாம். இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங் கள் அனைத்தும், திறனுக கட்டுப் படுத்த தாமையினுல் தவறியிருக்கின்றன. எந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் முறை :ாக கட்டுப்பாடு செய்தால் வெற்றி பெறுவது நிச்சயமாகும். பொருளாதார விருத்தி கருதி ஆரம்பிக்கப்படும் தி ட்ட ங் களி ல் செயல்பாடுகளையும், செ ய ல் ப டு த் து ம் திணைக் களங்களையும், அதிகாரிகளையும் முகாமைக்கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கச் செய்தால் இலக்கை இலகுவில் அடைய முடி யும் என்பது வெள்ளிடைமலையாகும் ,
நூல்கள்
- Harold Koontz & Cyril O' Donnell - M., H. Jones.
— B. E. Goetz.
- L. A. Allen.
- O. Standing Ford.
- அ. விஸ்வநாதன்.
ாகரிகம்
லோர் நினைப்பதுபோல உயர்ந்த ரிவதும் பல்வேறு வசதிகளைப் பெற்று பலரால் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் டும் ஒருவர் நாகரிகமுடையவராதல் வற்றைக் கண்டு பிடிப்பதேயாகும். அவ்வறிவுப் பெருக்கத்தால் விளைந்த லத்தக்கன.'
- டாக்டர். ஜே. ஈ. எம். ஜோடு

Page 140
சென்றிக் நீர் இை
ஓட்டோஸ்
107, கண்
வவுன
அழகிய பவுண் நகை
வைர
* ۔ -ے۔ سے وہ -۔ (död. (oToðIT. OVLAD
தங்கப்பவுண்
நகை விய
கன்னுதிட்டி, யாழ்ப்பாணம்.
A list Jeweller
ستر'\\,\,\ \X
జ్ఞ
K. N. M. ME
SOVERESGN
JEWELLERS & DIA Kannathiddy, Jaffna.
 

றக்கும் இயந்திரம்
/
ஏஜன்சீஸ் ாடி வீதி,
கள் தங்கப் பவுண் ங்கள் மீருரன் சாஹிப் நகைமாளிகை
ாபாரம்
தொலைபேசி: 5 85
ies, Sovereigns
& Brilliants
RAN SAH 23 ||
PALACE [OND MERCHANTS
Phone: 585

Page 141
முகாமை விஞ்ஞானம்
+ + + + + + + + + + + + -+ + + + + -+ + + + ܝܕܼܿܚ + + + ܚ+ + +، ܝܘܼܲܚ
B. Sc. (Cey.); M. B. A. (Ce பகுதிநேர விரிவுன
வியாபார, கைத் தொழிற் துறைக ளின் திறமை வாய்ந்த தொழிற்பாட் டிற்கு, வரையறுக்கப்பட்ட செம்மையான திட்டங்களும், செய்முறைகளும் இன்றிய மையாதவை. உற்பத்தித்திறன், பொருட் தராதரம், விற்பனை அளவு, இறுதி இலா பம் போன்ற காரணிகள் முகாமையின் திட்டமிடும் திறமையை எடுத்துக் காட்டு வதற்குப் பயன்படுகின்றன. நோக்கங்கள், திட்டங்கள், கொள்கைகள் என்பனவற் றிற்கிடையில் நெருங்கிய தொடர்பு இல் லாவிடில் செலவுகள் அதிகரித்து வினைத் திறன் குன்ற நேரிடும்.
புதுமை தலைவிரித்தாடும் இந் நவீன உலகில், தொழில் நுட்ப முறைகளும் வெகு விரைவாக விருத்தியடைகின்றன. இவ்விருத்திகளின் பயனுக உற்பத்தி முறை களிலும், சந்தைப்படுத்தும் முறைகளிலும் பல மாற்றங்கள் வெகு விரைவாக உரு வாகின்றன. இம்மாற்றங்களினுல் வியா பார, கைத்தொழில் நிறுவனங்களில் அமைந்துள்ள வெவ்வேறு பகுதிகளுக்கிடை யிலுள்ள தொழிற்பாடுகளை ஒன்றித் தினைப்பதில் மிகச் சிக்கலான பிரச்சினை கள் எழுகின்றன. இப்பிரச்சினைகளைத் தீர்ப் பதற்கு பலவழிகள் தோன்றினலும், அவற் றினுள் மிகச் சிறந்த வழியைத் தேர்ந் தெடுப்பதே முகாமையாளரின் புத்திசா லித்தனமாகும். முகாமையாளரை எதிர் நோக்கியிருக்கும் மாறிகளையும் இணைத்து சிறந்த வழியை வகுக்கும் சிரம :ான பிரச்சினைகளால் அவர் தன்னம்
- 11

எஸ். எம். கிறிஸ்ரி y.); C. Eng., M. I. E. (Cey.); A. M. B. I. M. ரையாளர் - வித்தியோதய வளாகம்.
பிக்கை இழந்து தத்தளிக்கவும் கூடும். இவ்வேளையில் அவருக்கு நம்பிக்கையை ஊட்டி, தைரியத்தை வழங்கி, சிறந்த முறையில் தீர்வுகளை எடுப்பதற்கு ஏதுவாக இருப்பது முகாமை விஞ்ஞானம்.
முகாமை விஞ்ஞானம் என்ருல் என்ன? என்பது பலரின் மனதில் எழக்கூடிய கேள்வி. இதற்கு வரைவிலக்கணம் கூறுவ தற்கு அதில் அடங்கியுள்ள இரு சொற்க ளின் ஆராய்வு விடையைக் கொடுக்கின் றது. முகாம்ையின் அடிப்படை அம்சம் முகாமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகா ணல். விஞ்ஞானம் அதில் அடங்கியுள்ள அம்சங்களைப் பகுத்து காரணங்களோடு விளக்குவதாகும். எனவே முகாமை விஞ் ஞானமானது முகாமைப் பிரச்சினைக3 விஞ்ஞான முறையில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு வழி வகுக்கின்றது. முகாமை விஞ்ஞானத்தை உபயோகித்து முகாமைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பின்வரும் ஒழுங்குகள் கையாளப்படும்.
1. முகாமையை எதிர் நோக்கியிருக் கும் பிரச்சினைகளை பகுத்து, அப்பிரச்சினை களே உருவாக்கிய காரணிகளைக் கணியப் படுத்தி பிரச்சினையை ஒரு கணிதச் சூத்தி ரத்தில் கூறவேண்டும். இச்சூத்திரங்கள் **கணித மாதிரியுருக்கள்’ எனப்படும். இக் கணிதச் சூத்திரங்களை கணித முறையால் தீர்க்க வேண்டும். கணித மாதிரியுருக் களைத் தீர்ப்பதற்கு கணித முறைகள் சிக் கலானவையாக இருக்குமானல் "கணனி'
(Computer) எனும் உபகரணம் உபயோ கிக்கப்படும்.
7 -

Page 142
முகாமை விஞ்ஞானம்
2. பிரச்சினைகளைப் பகுப்பதற்கு கருது கோளொன்று விருத்தி செய்யப்படும்.
3. பகுப்பின் பயனக கணித மாதிரி யுருக்களில் அடங்கியுள்ள சார்பு மாறிக ளுக்கிடையிலுள்ள தொடர்பை வெகு தெளிவாக எடுத்துக்காட்டி தீர்வுகளைச் சிறந்த முறையில் பெறலாம்.
4. பெற்ற தீர்வுகள் மீண்டும் ஆரா
யப்பட்டு அவற்றின் வலிமை சோதிக்கப்
uGib.
5. இறுதியில் தகுந்த தீர்வுகளை வெளி
யீட்ட வேண்டும்.
பெறப்பட்ட மாதிரியுருக்கள், முக்கிய
மாகக் கருதப்படவேண்டிய காரணிகளை
அடங்கியுள்ளனவா என நிச்சயிப்பதற்கு
வலிமைச் சோதனை (Validity test) நடத்
தப்படும். மாதிரி யுருபின் உள்ளீடு மாறு
வதன் காரணத்தினுல் வெளியீடு எவ்வாறு
மாறுகிறதென்பதை யறிய உணர்த்திற
Grrrasakur (Sensitivity test) Gods surror luGub.
ஒரு பரந்த தொகுதியில் அமைந்துள்ள
எல்லா முக்கிய அம்சங்களை எடுத்துக் காட்டி ஒரு மாதிரியுருவை அமைப்பதே முகாமை விஞ்ஞான மாதிரி யுரு எனப்
படும். மாதிரியுரு குறிக்கும்முறைகள் நாலு
வகைப்படும்.

எஸ். எம். கிறிஸ்ரி
1. 2 cir 6tarii Drt Shujas (Implicit
model)
2. வாய் மொழி மாதிரியுரு (Verban
model)
3. தருக்கமுறைப் பாய்ச்சல் மாதிரி
u(D5 (Logical Flow model)
4. 3, 682sf?5 uofT g6),if?uq(t5 (Mathematical
model)
உள்ளார் மாதிரியுரு: எழுத்து மூலமோ அல்லது பேச்சு மூலமோ கூறப்படாத மாதிரியுரு உள்ளார் மாதிரியுரு எனப்படும்.
வாய் மொழி மாதிரியுரு: எழுத்து மூலம் அல்லது வாய் மொழி மூலம் கூறப்படும் மாதிரியுரு வாய்மொழி மாதிரியுரு எனப் படும்.
தருக்க முறைப் பாய்ச்சல் மாதிரியுரு: வரிப்பட மூலம் எடுத்துக்காட்டும் மாதிரி யுரு தருக்க முறைப் பாய்ச்சல் மாதிரியுரு எனப்படும். -
கணித மாதிரியுரு காரணிகளைக் கணி யப்படுத்தி கணிதச் சமன்பாட்டில் கூறப் படும் மாதிரியுரு கணித மாதிரியுரு எனப் படும்.
உதாரணங்கள்:
1. வாய்மொழி மாதிரியுரு: "நான் விலையை மாற்றினல் எனது போட்டியா ளரும் தாங்கள் விலையை மாற்றுவதனுல் அவர்களுக்கு நட்டம் ஏற்படாவிடில் அவர் களும் விலையை மாற்றுவார்கள்."
18 -

Page 143
முகாமை விஞ்ஞானம்
2. தருக்கமுறைப் பாய்ச்சல் மாதிரியுரு :
ஆரம்பம்
இ விலை மாற்றப்பட்டதா ?
* ஆம்
இம்மாற்றத்தால் போட்டியாளருக்கு
நட்டம் ஏற்படுமா ?
|ath
போட்டியாளர் விலையை மாற்றுவார்
CypLL IS
3. கணித மாதிரியுரு:
P = (l — I) Pe + I Pm
{{. P Q - C < O -e, 6i6i) l 1, P Q - C:- > Oleg Għa)
இதில் P= போட்டியாளரின் புதுவிலை
P = போட்டியாளரின் பழையவிலை P = எனது விலே
Qc = P விலையில் போட்டியாளர்
விற்கக்கூடிய அளவு C = Q அளவை உற்பத்திசெய்து விற்பனை செய்வதில் ஏற் படும் மொத்தச் செலவு.
- 11

ஆம் ->
V V
போட்டியாளர் விலையை மாற்றமாட்டார்
சந்தைப்படுத்தும் முகாமை, உற்பத்தி முகாமை, நிதி முகாமை, என்பவற்றில் முகாமை விஞ்ஞானம் பெரும்பாலும் உப யோகிக்கப்படுகின்றது.
சந்தைப்படுத்தும் முகாமையில், சந்தை உணர்வு ம்ாதிரியுருக்கள், விளம்பரத் தீர்வு, விலைத்தீர்வு, பரவல் தீர்வு எனும் வெவ்வேறு பகுதிகளிலும் முகாமை விஞ் ஞானம் மிக உதவியளிக்கின்றது,
விலைத்தீர்வில் முகாமை விஞ்ஞானத் தின் உபயோகத்தைத் தெளிவாக்க உதா ரணம்:

Page 144
முகாமை விஞ்ஞானம் .
1, இலாபத்தை உச்சப்படுத்துதல்
p = விலை q - விற்பனை அளவு F (p) = விலைச் சார்பு
T C ன முழுச் செலவு
C (q) = q வின் சார்பில் முழுமாறும்
செலவு.
TR = விலை p ஆக இருக்கும்பொழுது q எனும் பொருட்களை விற்ப பால் பெறும் மொத்த வரு மானம்.
α = F (ρ) T C = C (q) -- FC
- Τ R = p α: p = f(α)
F (p), C (q) இரு முறை வகையீடு செய்ய முடியுமானுல்;
g9)6Umru ub P c= T R — T C
= pq - c (q) - F C
if (q) q c (q) — F C = R (q) — c (q) — F C
dP dR (q) d C (q)
dq dq dq
dP
இலாபம் உச்சமாவதற்கு - = O
dR(q) dC(q)
dα dq
dR (q) dC (q)
diq dq
இதிலிருந்து இலாபத்தை உச்சப்படுத் துவதற்கு எல்லைச் செலவு = எல்லை வரு ம்ானமாக இருக்கவேண்டுமென்பது புலஞ கின்றது.
கிடைக்கும் பெறுமானம் உயர்வா அல்
லது இழிவா என நிச்சயிப்படுத்துவதற்கு இரண்டாவது வகையீடு காணவேண்டும்.
- 2

எஸ். எம். கிறிஸ்ரி
d2R (q) d2C (q) --- - -- < 0 ஆக இருக்
dq2 dq?
குமானுல் இலாபம் உயர்வுப் பெறுமா னத்தையுடையதாக இருக்கும்.
2. Zij56ong, dit 35sus) mu (Marketing Mix)
சந்தைப்படுத்தும் திட்டம் அமைப்பில் சிறந்த சந்தைக் கலவையைத் தெரிந்தெ @š5 GGJ GẩoT @tib. Luair LDT Iš (Multivariate) தொடர்பால் விலைக்கும் விளம்பரச் செல வுக்குமிடையிலுள்ள சிறந்த கலவையைப் பெறலாம்.
P = g Gymruid p - ஒரலகின் விலை A = விளம்பரச் செலவு
விலைப்படும் எண்ணிக்கை q ஆனது விலை p இனதும் விளம்பரச் செலவு A இன தும் சார்பையுடையது. ஃ q = F (p, A)
C = c (q) = மொத்த மாறும் செலவு. FC = நிலையான செலவு
p விலையிலும் A விளம்பரச் செலவிலும் பெறும் வருமானம் = R (p, A)
வருமானம் R = pq.
3 R (p, A) = p F (p, A)
p விலையிலும் A விளம்பரச் செலவி லும், மொத்த மாறும் செலவு C எனின் C = C F (p., A) J
பொது இலாபம் P எனின் P = pq -- C(q) - A — FC
= p (p., A) - C F (p., A) J-A-FC = R (p, A) — Čo(p, A) — A — FC
அதியுயர் இலாப நிபந்தனைகள் பெறுவ
தற்கு இச்சமன்பாட்டை பல் மாறல் நுண் கணிதம் உபயோகிக்கப்படவேண்டும்.
0 -

Page 145
முகாமை விஞ்ஞானம்
eP e R (p, A) e C (p, A)
cp op Op
eP SR (p, A) eÖ(p, A)
CA SÒ A CA
இவ்விரு சமன்பாடுகளிலிருந்து அதியு
பர் அல்லது இழிவுப் பெறுமானங்களைப் பெறலாம். அதியுயர்ப் பெறுமானத்தைப் பெறுவதற்கு 32 P
-- < O
&p?
e2P 62P er? er ea a 2P a2P > O o Aep cA2
எனும் நிபந்தனைகள் உபயோகிக்கப்படும்.
இவற்றை விளக்குவதற்கு உதாரணங் assir :
(1) வருமானம் R ஆனது
R=400-3g2-4q+2qA-5A2 + 48A
எனும் சமன்பாட்டால் கொடுக்கப்பட் டுள்ளது. இரண்டாம் வரிசை நிபந் தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதெனக் கருதி, இலாபத்தை உச்சப்படுத்தும் q, A என்பனவற்றின் பெறுமானங்க ளைக் கணிக்க A= விளம்பரச் செலவு.
R=400-3c2-4q + 2d A-5A2 + 48A
3R
こq
o 6α + 2A = 4
3CR
QA
q-5A = -24 -- 3 α + A = 2 எனும சமன பாடுகளிலிருந்து
- 1 = O
12

எஸ். எம். கிறிஸ்ரி
|-24 - 5
2 1 -24 + 10 - 4 q * -- ----------------------- == --------- ......................---- =1 =س= --س----- كسمی
1 -5: 1-15 -4 1 --س -3 A so. 5 q = 1
(2)
தனிப்பிரத்தியேக உரிமையாளரால் வழங்கப்படும் இரு தனித்தனி சந்தை களின் கேள்விச் சார்புகள்
p1 = 12 - q
p2 - 20 - 3q) எனும் சமன்பாடுக ளால் கொடுக் கப்பட்டுள்ளன.
தனிப் பிரத்தியேக உரிமையாளரின்
செலவுச் சார்பு
C = 3 + 2 (q1 + q2)
விலை பிரித்துக்காட்டல் ஆட்சியின்கீழ் இரு சந்தைகள் பெறும் விலை, விற்பனை, எல்லை வருமானம் ஆகியவற்றைக் கணித்து, உரி மையாளரின் இலாபத்தையும் கணிக்க: இலாபம் P - p q1 + p , q2 - C
o O و
= (12-q) q1 + (20-3 q)
q2-3-2 (q1 + q2) = 12q1- q + 20 q2 - 3α
- 3 - 2d 1 - 2q2 = 10 q-q + 18q9-3g. - 3 SP - 10 - 2q = 0
Dq 1 ძზ q 1 = 5 SP — = 18 - 6q2 = () ’
2 dلى б% q2 = 3 p = 12 - 5 = 7 11 ܚܙܘ 9 - 20 = p9 P = 49
இரு சந்தைகள் பெறும் விலை = 7, ll இரு சந்தைகள் பெறும் விற்பனை = 5, 3 உரிமையாளரின் இலாபம் is 49

Page 146
(be
est
(
Telephone :
PRODUCE
Proprietor :
23 1/, CA
COLON
SR /
 

BROKERS.
P. JACOB.
NA I ROW,
EO-1.
A NI KA .

Page 147
கணக்கியலில் புதிய திரு
S LLLL SLLLLLLLL LLLLTSLLLLLLSLLiiiLLLLLLLSYSLSLSYLLLL LLL LLTL LLTLL LLL LLLLLLLLM LLL LLLL LL LL SLLLLLLS
சு. சிவகு மேலதிக பணிப்பாளர் - ை பகுதிநேர விரி
இன்றைய 20ஆம் நூற்ருண்டில், ஒவ் வொரு கால் நூற்ருண்டிலும் நாம் பிரமிக் கத்தக்க செயல்கள் நடைபெற்றுள்ளன. முதல் கால் நூற்ருண்டில் 1914-1918 ஆம் ஆண்டுகளில் முதன் முதலில் உலக மகாயுத்தம் நடைபெற்றது. இரண்டாம் கால் நூற்ருண்டில் மக்கள் வியக்கத்தக்க முறையில் இரண்டாம் உலக மகாயுத்தம் 1939ஆம் ஆண்டில் தொடங்கி 1945ஆம் ஆண்டு முடிவுற்றது. மூன்றம் கால் நூற் முண்டில் மனிதனே நம்பமுடியாத முறையில் உலகம்பிரமிக்கத்தக்கவாறு ஆறடி மனிதன் இரண்டரை இலட்சம் மைல்களுக்கு அப் பாலுள்ள சந்திரனில் 1972ஆம் ஆண்டு காலடி வைத்தான். இன்று நாம் நாலாம் கால் நூற்ருண்டு தொடக்கத்தில் வாழ் கிருேம். இக்கால் நூற்ருண்டு முடிவதற் குள் மனிதன் தன்னையே நம்பமுடியாத விதத்தில் பல புதிய திருப்பங்களை காண விருக்கிருன் என்று கூறலாம்.
விவசாயம், கைத்தொழில், கல்வி, போக்குவரத்து, மருத்துவம், பொறியியல் துறை, கட்டிடக் கலை போன்ற ஒவ்வொரு துறையிலும் கொம்பியூட்டர் உட்பட்ட பல நவீன சிறந்த திருப்பங்கள் ஏற்பட்
டுள்ளதை நாம் காண்கின்ருேம். அத்துடன்

Lib
தடு B. A. (Cey.), F. C. A.
கத்தொழில் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு. வுரையாளர் - வித்தியோதய வளாகம்,
அரசியல், சமூக, பொருளாதாரத்துறை களிலும் 19 நூற்ருண்டுவரை ஒரு சிலரின் நன்மைக்காக இருந்துவந்த முதலாளித்துவ அமைப்பு முறை, பலரின் நன்மைக்கும் உதவக்கூடிய கால்மாக்ஸ் வித்திட்ட பொது
வுடைமை அமைப்பு முறையாக மாறிவரு வதையும் நாம் காண்கிருேம். இவ்வாரு ன பலதுறை மாற்றங்களோடு எமது கனக் கியல்துறையும் புதிய திருப்பம் ஏற்படா திருக்க முடியாது. இவ்வாறன பல புதிய மாற்றங்களையும் நடைமுறைப் படுத்துவ தற்கு மூலகாரணமாக விளங்கிய கூட்டுத் தொகுதிக் கம்பெனிகளும் இப்பல்வேறு துறையிலுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தங் களது கணக்குகளைத் தயாரிப்பதிலும் வெளியிடுவதிலும் உபயோகிப்பதிலும்
புதிய திருப்பங்களை கையாண்டன.
பங்குடமைச் சட்டத்தினுல் பங்குடை
மைகள் கட்டுப்படுத்தப்படுதல் போல இலங்கையில் கம்பெனிச் சட்டத்தினுல் கூட்டுப்பங்கு தொகுதிக் கம்பெனிகள் கட் டுப்படுத்தப்படுகின்றன. இலங்கை கம்பெ னிச் சட்டம் 1938ஆம் ஆண்டு 51ஆம் இலக் கச் சட்டமாகும். இது பிரித்தானியாவில் அமுல் செய்யப்பட்ட 1929 ஆம் ஆண்டின் கம்பெனிச் சட்டத்தைத் தழுவியதாகும்.
سسیسی۔ 123

Page 148
கணக்கியலில் புதிய.
இச்சட்டத்தின் பின் பிரித்தானியாவில் 1948லும், 1967லும் கம்பெனிச் சட்டத் தில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை முறையே 1948ஆம் ஆண்டு கம்பெனிச் சட்டம், 1967ஆம் ஆண்டு கம்பெனிச்சட்டம் எனப்பெயர் டொறும். இச்சட்டங்களில் கம் பெனிகளை உருவாக்குதல், பங்குகள், தொகு திக்கடன், நிர்வாகம், கணக்கு வைத்தல், பரிசோதித்தல், கலைத்தல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இது ஒரு மனித னின் பிறப்பு, வளர்ச்சி, முடிவு போன்ற வற்றை ஒத்திருக்கின்றது. இவற்றுள் நாம் கம்பெனிக் கணக்குகள், அவற்றின் பரிசோ தன என்பவற்றை இங்கு ஆராய்வோம். பிரித்தானியாவில் இப்புதிய கம்பெனி சட்டங்களால் கொண்டு வரப்பட்ட மாற் றங்கள் இலங்கையில் சட்டமூலமாகக் கொண்டுவரப்படவில்லை. எனினும் நடை முறையில் இப்புதிய மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன. சட்டத்திற்கு அப்பாற்பட்ட பல மாற்றங்கள் பிரித்தானியாவில் சமூ க நன்மை கருதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்படியான சட்டமாற்றங்கள் இலங்கை யில் ஏற்படாவிடினும் கணக்கு வைத்தல், பரிசோதனை முறைகளில் இப்புதிய திருப் பங்களை அனுசரித்து கணக்குகளை தயா ரித்தும், வெளியிட்டும், உபயோகித்தும் வருகின்ருேம். ஆகவே சட்டமூலமும் நடை முறையிலும் உள்ள புதிய கணக்கு முறை கள் எல்லாம் எமது நாட்டில் கையாளப்
பட்டு வருகிறது.
தயாரித்தல் :
கம்பெனி முறையிலே தான் கூடிய தொகை விவசாய, கைத்தொழில் முயற் சிகள் நடைபெறுவதால் இவற்றின் கணக்கு வைக்கும் முறையில் இப்புதிய மாற்றங்கள் of fibull-607. (Bound Ledger) 5 Ligliu பேரேடுகளில் கணக்கு வைப்பதே பழைய வழக்கமாக இருந்து வந்தது. வியாபார நடவடிக்கைகள் அதிகரித்ததினுல் இம் முறை அதற்கு ஏற்றவாறு ஈடுகொடுக்க முடியாது இருந்தது. ஆகவே கட்டாத

சு. சிவகுரு
தாள் பேரேட்டு முறையும், துண்டுமுறை யும் புகுத்தப்பட்டது.
அதிகரித்த வியாபார நடவடிக்கைகளை விரைவாக பதிவதற்கு பேரேட்டுப் பதிவு இயந்திரங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. இதைத்தொடர்ந்து துணை அட்டை இயந்திரங்களும், அதன் பின் அதி விரைவில் தகவல்களைச் சேகரித்து வெளி யிடுவதுமான நுட்பமான “கொம்பியூட் டர்’ இயந்திரங்கள் நடைமுறைக்கு வந் துள்ளன.
வெளியிடல் :
வியாபார, இலாப நட்டக் கணக்குகளை யும் ஐந்தொகையையும் நடைமுறையில் தயாரிப்பதே சாதாரண கணக்கியல் முறை யாக இற்றைக்கு சிலகாலத்திற்கு முன்ன தாக கருதப்பட்டு வந்தது. இம்முறையில் பல குறைபாடுகள் இருந்தன. முக்கியமாக கணக்கியல் அறிவுள்ள கணக்கியல் வல்லு நர்களுக்கு மட்டுமே இம்முறை பயன்பட் டது. பெரும்பான்ம்ையான பொது மக்க ளுக்கு இவற்றை அறிந்து பயன்பட முடி யாது இருந்தது. இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கென உருவாக்கப் பட்ட புதிய முறையே தற்போது நடை முறையில் உள்ள செங்குத்து முறையாகும். பங்குதாரர்களுக்கு எனப் பிரசுரிக்கவேண் டிய வியாபார இலாப, நட்டக்கணக்குகளும், ஐந்தொகையும் இம்முறையிலேதான் தயா ரிக்கப்பட வேண்டுமென கம்பெனிச்சட்டம் கூறுகிறது. ஏனெனில் இம்முறை கணக்கி யல் அறிவில்லாத சாதாரண பங்குதாரர் களும் இலகுவில் விளங்கக்கூடிய தொன் ருகும் இன்றும் கம்பெனி பங்குதாரர் களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப் படும் வியாபார, இலாப நட்ட கணக்கு களும், ஐந்தொகையும் கிடைமுறையில் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக் கதா கும். பின்வரும் உதாரண விளக்கம் இதைக் காட்டுகிறது:
4 -

Page 149
கணக்கியலில் புதிய.
வரையறுக்கப்பட்ட X கம்பனியின்
இலாப நட்டக் கணக்கு (பங்கு
1974
வரி கழிக்க முன் இலாபம்
பெறுமானத் தேய்வு தொகுதிக் கடன் வட்டி வங்கிக் கடன் வட்டி இயக்குனர் பெற்றது:
கட்டணம் XXX ஏனையவை XXX கணக்குப் பரிசோதகர்
கட்டணம் முதலீட்டு வருமானம்:-
விலை கூறு XXX வில் கூருதது XXX
கழி: இவ்வருட வரி
வரி கழித்த பின் இலா
கழி: பகிர்வுகள்:
பங்கு இலாபம் செலுத்திய பங்கிலாபம் தீர்மானிக்கப்ப
பொது ஒதுக்கம்
இவ்வருட பகிரப்படாத இல இலாபநட்டக் கணக்கு மீதி (! கூட்டு/கழி கடந்த வருடவரி
கம்/குறைவு
பகிரப்படாத இலாபம் (கீ/ெ
குறிப்பு: l.
வருட மொத்த விற்பை
2. இயக்குனர் பெற்றவை
தலைவர்
இயக்குனரில் அதிஉயர் கொடுப்பனவு, 3. பெறுமானத் தேய்வு க
படாத சொத்து

母后。 சிவகுரு
31-12-75ல் முடிவடைந்த கால தாரர்களுக்குச் சமர்ப்பிப்பது)
XXXX
XXX XXX XXX
K * XXX
XXX
& Κ XXX
t | XXXX up XXXX
| XXX ட்டது | XXX XXX -ཁ་ཁབ་ཁ་ -ཅེ་ཚོ་ཅི་ཅོnrub XXXX /ேகொ/வ) XXX
மேலதி
- XXX XXX 5Ira) XXXXX
...---.............. .
ணிக்கப் துக்கள்: |

Page 150
கணக்கியலில் புதிய.
வரையறுக்கப்பட்ட X கம்பனியின் 31
1974
பயன்படுத்தப்பட்ட மூலதனம் :
. . .%திரண்ட ஒவ்வொன்றும்
பெறுமதி. (LP.J. ஒவ்வொன்றும் ரூ. பெறுமதிய
、 Ffr l-l.
ஒதுக்கங்கள்:
பங்குவட்டம் பொது ஒதுக்கம் இலாப நட்டக் கணக்கு
%தொகுதிக் கடன்கள் (F பின்வருவனவற்றல் பிரதிப்படுத் நிலையான சொத்துக்கள் :
நிலம், கட்டிடம் பொறி, பொறிவிருட்சம் தளபாடம் நன்மதிப்பு: முதலீடுகள்:- உபகம்பனி முதலீடுகள் நடைமுறைச் சொத்துக்கள்:
சரக்கிருப்பு கடன்பட்டோர் வங்கி
●真了ö
கழி: நடைமுறைக் கடன்கள்
கடன் கொடுத்தோர் உபகம்பனி கடன் தீர்மானிக்கப்பட்ட பங்கிலாபம் கொடுக்கவேண்டிய வரி
குறிப்பு:
1. மூலதன பொறுப்புக்கள் :-
ஒப்பந்தங்கள். 2. நிலையான சொத்துக்களின்
விபரங்கள்.

சு. சிவகுரு
2-75ல் உள்ளபடியான ஐந்தொகை
வழங்கி முற் அனுமதித் ருக இறுக்கப் தது LلL- -ارتھے
ტIb . ..
XXXX XXXX
Tur XXXX XXXX XXXX XXXX
XXX XXX XXX ΣXX
XXXX
கொ.வி. தி.பெ.தே.
XXXX XXX XXXX XXXX XXX XXXX XXXX XXX XXXX XXXX XXXX XXXX
XXX XXX XXX XXX XXXX
XXX XXX XXX XXX XXXX XXXX XXXXX
2-ートlb
மாற்ற

Page 151
கணக்கியலில் புதிய.
சிறந்த முறையில் கணக்குகளை தயா ரிக்கும் கம்பெனிகள் குறைந்தபட்சம் சட்டமூலம் காட்டப்பட வேண்டியவற்ருேடு மட்டுமல்லாது மேலதிகமாகப் பல சிறந்த நிதி மூலக் கூற்றுக்களையும், வரை படங் களையும். புள்ளி விபரங்களையும், கணக்கி டும் விகிதங்களையும் தயாரிக்கின்றன. இவை யாவும் கம்பெனியின் நிலைமை பற் றிய தெளிவான விளக்கத்தைக் கொடுக் கின்றன. இவற்றுள் இங்கு பிரதானமாக குறிப்பிடக்கூடியது நிதி மூலக் கூற்ருகும். (Source and application of fund). Sy கம்பெனியில் ஆரம்பத்தில் இருந்த காசை
வரையறுக்கப்பட்
31-12-75ல் முடிவடைந்த
1. ஆரம்ப காசு மீதி
2. காசு ஒட்டம்:-
இவ்வருட இலாபம் இவ்வருட பெறுமானத் தேய்வு கழி: - தீர்மானித்த பங்கிலாபம்
கொடுக்க வேண்டிய வரி
3. நிதி பெற்ற மூலங்கள்:-
பங்கு முதல் பங்கு வட்டம்
பொறிவிற்பனை
4. நிதிப் பிரயோகம்:-
காணி கொள்வனவு தளபாடம் கொள்வளவு
あ
தொழிற்படுமுதல் மாற்றம் :-
சரக்கிருப்பு அதிகரிப்பு கி. பட்டோரில் அதிகரிப்பு க. கொடுத்தோரின் அதிகரிப்பு உப கம்பெனி முதலீடு தீர்மானிக்கப்பட்ட பங்கிலாபம் வரி
தேறிய பிரயோகம் இறுதி காசு மீதி

சு. சிவகுரு
யும், அதன் உள்தொழிற்பாட்டால் அதி கரித்த காசையும் அவை எங்கு சென்றுள் ளன என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் அதிகரித்த வெளி நிதியால் கம் பெனி கொடுத்த தொகைக்கும் பெற்ற தொகை களுக்குமுள்ள வித்தியாசங்களும் காட்டப்படும். பெற்ற தொகைகள் அதி கமாக இருப்பின் மீதிக் காசுடன் கூட்டப் படும். குறைவாக இருப்பின் கழிக்கப் படும்.
பின்வரும் உதாரணம் இதை விளக் குகிறது. -L X subuff கால நிதி அசைவுக் கூற்று
கடந்த வருடம்
5000
15470
3630 19100 3000 5100 8100 1 1000
10000 2000 5000 17000 33000
8000 2000 10000 23000
பெற்ற பிர
மூலம் யோகம் 150 3000 2000
4000 800 1000 ബ— 3800 8500
4700 18300

Page 152
கணக்கியலில் புதிய.
நிதியக் கூற்று:
ஒரு கம்பனியின் நிலவரத்தை ஆராய் வதற்கு கணக்காளர்கள் மூன்று முறைக ளைக் கையாள்வது வழக்கம் அவையாவன: ,
1. ஐந்தொகை இலாப நட்டக் கணக்கு களிலிருந்து நேரடியாக அபிப்பிரா யத்தைப் பெறல். 2. விகிதாசார முறை. 3. நிதி அசைவுக் கூற்று.
இவ்வாராய்வுகள் பின்வருவோரினல் தங் கள் தேவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
Luis Ge535nterni ssir . 2. தொகுதிக் கடன் உட்பட்ட நீண்ட
காலக் கடன் கொடுத்தோர். 3. வங்கி முகாமையாளர், நிதி ஸ்தா
பனங்கள் முதலியன. 4. முதலீடு செய்வோரும் அவர்களின்
ஆலோசகர்கள் முதலியோர்.
5. நிதி தொடர்பான பத்திரிகை நிரு
பர், விம்ர்சகர்.
6 வருமானவரித் திணைக் களம்.
முன்பு கூறப்பட்ட மூன்று முறைகளி லும் பிரதானமான நிதி அசைவுக்கூற்றை ஆராய்வோம். இது ‘நிதி பிரயோக மூலக் கூற்று" என்றும் அழைக்கப்படும். ஆரம் பத்திலுள்ள ஐந்தொகையையும் இறுதியி லுள்ள ஐந்தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்து, இக்கால எல்லையுள் ஏற்பட்ட சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் மாற்றங்களை இதனுல் அறிய முடிகிறது. பொதுவாக ஒரு நிதியாண்டிற்கு, இது தயாரிக்கப்பட்டாலும் கால் ஆண்டுக்கோ மாதமொருமுறையோ அல்லது எக்கால எல்லைக்கோ தயாரிக்கப்படலாம்.
விளக்க உதாரணத்தில் கொடுக்கப் பட்டதில்;
1. ஆரம்ப காசு மீதியைக் காட்டுகிறது.
12

. சிவகுரு
2. காசு ஒட்டத்தைக் காட்டுகிறது. அதாவது வியாபாரத்தினுல் உரு வாக்கப்பட்ட புதிய நிதிகளின் பெறு மதியையும் அவை வியாபாரத்தில் எவ்வாறு செறிந்துள்ளன என்பதை யும் காட்டுகிறது. இவற்றுள் பின் வருவன அடங்கும்.
இவ்வருட தேறிய இலாபமும் அத் துடன் வியாபாரத்திற்கு வெளியே செல்லாத இலாபத்திலிருந்து கழிக் கப்பட்ட செலவுகள். உ+ம் :-
அ. ஆரம்பச் செலவுகள்.
ஆ. பெறுமானத் தேய்வுகள்
இ. வரிக்காக மேலதிகமாக சென்ற வருடத்தில் ஒதுக்கியது. (குறை கழிக்கப்படவேண்டும்.)
3. நீண்ட காலத் தவனே யில் வெளியி லிருந்து பெற்றதை இது காட்டு கிறது
4. நீண்ட கால உபயோகத்திற்கான நிலையான சொத்துக்களைக் கொள்வ னவு செய்வதற்கும், நீண்ட காலக் கடன்களைத் திருப்பிக் கொடுப்பதற் கும் உபயோகப்படுத்தியதைக் காட் டுகிறது.
5. தொழிற்படுமுதலின் மாற்றங்களைக்
காட்டுகிறது.
பழைய கணக்கியல் முறை, நிதிக் கணக்கியல் முறையையே அடிப்படையா கக் கொண்டிருந்தது. இதனுல் உபயோகம் அடைந்தவர்கள் கடன் கொடுத்தோர், பணம் முதலீடு செய்ய விரும்புவோர், வரு மான வரித் திணைக் களம், கணக்கியல் பரி சோதகர், கணக்கியல் வல்லுநர்களுமே யாகும், கணக்கியல் ஒரு ஸ்தாபனத்தின் நடவடிக்கைகளை முற்போக்காகக் கவனிப் பதற்கு இக்கணக்கியல் முறை உகந்ததல்ல. முகாமையாளர் முன்கூட்டியே உற்பத்தி செய்யப்படவுள்ள பொருளையோ, விற்பனை களைப் பற்றியோ, உத்தேச இலாபங்களைப்
3 -

Page 153
கணக்கியலில் புதிய.
பற்றியோ விரிவாக ஆராய்ந்து அறிவ தற்கு இப்பழைய முறை உதவவில்லை. ஆகவே தான் கணக்கியல் வல்லுனர்கள் புதிய முறைகளைக் கையாளத் தொடங்கி னர். இப்புதியமுறை முகாமையாளர் முன் கூட்டியே எடுக்கவேண்டிய தீர்மானங்களுக் குத் தேவையான அடிப்படைத் தகவல் களை ஒரு முறைபடுத்திக் கொடுக்கிறது. இதனுல் நிறுவனமும் சிறந்த முறையில் முகாமையாளரால் வழிநடத்தப்படுகிறது. இன்றைய வியாபார நிறுவனங்களின் முற் போக்கான நிலைக்கு ஏதுவாய் அமைந்த வரவுசெலவுத் திட்டமும், அதைக் கட்டுப் படுத்தலுக்கும் மூல காரணமாக அமைந் தது இப்புதிய வழிமுறைகளேயாகும். எளிய முறையில் தயாரிக்கப்பட்ட இப்புது முறைக் கணக்குகளால், முகாமையாளரை விட நுகர்வோரும், பாமர மக்களும், 11ங் குதாரர்களும் பெரிதும் பயனடைகின்ற னர். இப்புதிய முறை, கணக்கியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனல் மேலும் பல திருப்பங்கள் புகுத் தப்படல்வேண்டும். தற்போதுள்ள கணக்கு முறைகள், பணத்தின் நாளாந்தப் பெறு மதிக் குறைவையோ பண வீக்கத்தையோ எடுத்துக் காட்டுவதாக இல்லை. இவற்றை எடுத்துக் காட்டக்கூடிய முறையில் எதிர் காலத்தில் கணக்கு முறைகள் மாற்றம் அடைய வேண்டும். நிலையான சொத்துக் களை எல்லாம் நாம் இன்றும் பழைய
கலை ஓர் இன மக்களின் மன தோன்றும் தெளிவு வீரம் ஆகியவற்ற இன வளர்ச்சிக்கு ஏற்றபடி டய்ாறியும் வினரின் துணிபு. கலை உலகில் அ இனத்துக்கோா கலேயும், இடத்தின் றுக்கு ஏற்ற முறையிலும் கலே உண்ட
12 --س-

முறைப்படி திரண்ட பெறுமானத் தேய்வு களை அவற்றின் கொள்விலையில் சுழித்து, அத்தொகை உண்மையான பெறுமதியெ னக் காட்டுகிருேம். இது உண்மை நிலை யைக் காட்டுவதாக இல்லை. ஏனெனில், இப் புத்தக விலை சந்தை விலையுடன் பேரி தும் மாறுபட்டதாக இருப்பதைக் காண் கிருேம். எனவே இம்முறையில் தயாரிக் கப்பட்ட கணக்குகள் சரியானவையா? என் பது ஒரு பெரிய கேள்விக் குறியாகும். இதே போன்று நடைமுறைச் சொத்து களிலும் பிரச்சினைகள் உண்டு.
பிரதானமாக கம்பெனிகள், கூட்டுத் தாபனங்கள் ஆகியவற்றின் கணக்கு முறை களில், ஆரம்பத்தில் இருந்த முறைகள் மாற்றம் அடைந்து புதிய முறைகள் நூற் பட்டுள்ளன. கணக்கியல் ஒரு வளரும் கலையாகும். இவ்வளர்ச்சியின் மாற்றங்கள் எல்லாம் இந்நாட்டின் பொருளாதாரத் தில் முக்கிய பங்கு கொள்ளும் கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பெனிகளிலும், கூட் டுத்தாபனங்களிலும் பிரதிபலிக்க வேண் டும். கம்பெனிகளுக்கும் கூட்டுத்தாபனங் களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருப்பினும் கணக்குகள் தயாரிப்பதிலும் வெளியிடுவதிலும் பொதுவான பல ஒற் றுமைகள் உண்டு என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.
ப் பண்பு. இவ்வின மக்களிடையே பின் எடுத்துக்காட்டு. எனவே கலை விரிந்தும் வருமென்பதே நுண்ணறி வ்வப்போது மாறுதல் உண்டாகும். இயல்பு, தட்ப வெப்பம் ஆகியவற் -ாகும், வளரும், மாறும் .
- அறிஞர் அண்ணு
9 -

Page 154
ES WES
R(DM
Wenkadeswara Stores
General Merchants & Dealers in Groceries
195, 4th Cross Street, Colombo-11.
Telephone : 26 878
Space
b
M/s. S. Sinna
39, K. K. JAF)
 
 

(citly the 33 est (sampliments of
ぎ、
EMPIREHOTEL
WAWUNIYA.
Donated
у
S. ROAD, FINA,

Page 155
கம்பனிக் கணக்குகளில் ஏற்பாடுகளும் ஒதுக்கீடுக உபயோகிக்கப்படவேண்
ச. தம் பதில் பணிப்ப
பகுதிநே
முன்னுரை
1948ஆம் ஆண்டிற்கு முன் கணக்கறி ஞர்களில் உபயோகிக்கப்பட்ட "ஒதுக்கீடு' என்ற சொல் மூன்று வெவ்வேறு கருத்துக் களைக் கொண்டிருந்தது. முதலாவதாக தற்பொழுது உபயோகிக்கப்படுவதைப் போன்று அது பங்கிடப்படாத இலா பத்தை அல்லது மிகை இ லா ப த்  ைத (Surpius) காட்டுவதற்கு உபயோகிக்கப் பட்டது. இரண்டாவதாக அது பொறுப்புக் களைக் (Liabilities) காட்டுவதற்கு உப யோகிக்கப்பட்டது. உதாரணமாக சில சமயங்களில் நிச்சமற்ற தொகையினைக் கொண்ட நின்ற செலவுகளைக் காட்டுவ தற்கு உபயோகிக்கப்பட்டது. மூன்ருவ தாக சில சொத்துக்களின் பெறுமதியில் ஏற்படும் குறைவிற்கு கணக்குகளில் ஏற் பாடு வழங்கப்பட்டதோடு அவ் ஏற்பாட் டுத் தொகைகளை புறம்பான மீதிகளாக ஏடுகளில் காட்டுவதற்கும் ஒதுக்கீடு என்ற பதம் உபயோகிக்கப்பட்டது. உதாரண மாக தேய்மானத்துக்கானதொரு ஒதுக்கீடு அல்லது ஐயக் கடன்களுக்கானதொரு ஒதுக்கீடு. இந்த மூன்றுவகையான ஒதுக் கீடுகளும் இரட்டைப் பதிவு முறைப்படி செலவு மீதிகளாகவிருந்த பொதுவான தன்மையைக் கொண்டிருந்தன. கணக்
- 13

ளும் lylll 6iᎠ50Ꭰ
îIII îl sirom, A. C. A., Dip. in. Accy. ாளர்-(வரவுசெலவுத்திட்டம்) பொதுத் திறைசேரி.
ர விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்,
கீட்டு முறைகளில் பயற்சி பெருதவர் *ள் கம்பனிக் கணக்குகளிலுள்ள ஒதுக்கீடுகளைப் பற்றி அடிக்கடி தடுமாற்றமும் குழப்டமும் அடைந்ததற்கு இதுவே காரணம் எனில் அது மிகையாகாது.
1930ஆம் ஆண்டிற்குப் பின்னர் கையாண்டுவந்த முறை:-
1930ஆம் ஆண்டுகளில் கம்பனி களிஞல் வெளியிடப்படும் பிரசுரக் கணக்குகள் தெளிவாகவும் முழுமையான விபரங்களைக் கொண்டனவாகவும் இருக்க வேண் டு ம் மென்பதே பலரின் அபிப்பிராயமாக இருந் தது. அத்துடன் சில சொற்களுக்கு மிகத் தெளிவான வரைவிலக்கணம் இருக்க வேண் டியதன் அவசியமும் உணரப்பட்டது. இக் கருத்துக்கள் இங்கிலாந்து, வேல்ஸ் பட்ட யக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தினுல் 1943ஆம் ஆண்டிலும் அடுத்து வந்த ஆண்டு களிலும் வெளியிடப்பட்ட கணக்கீட்டுக் கோட்பாடுகளின் மீதான விதப்புரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 1943ஆம் ஆண்டு ஒக்டோபரில் இந் நிறுவனம் "ஒதுக்கீடு' என்ற சொல் 'ஐந் தொகைத் திகதியில் இருப்பதாகக் காணப்படும் எ ந் த ப் பொறுப்பையோ, நிகழத்தக்க பொறுப் பையோ, பாரப்படுத்துதலையோ அல்லது சொத்துக்களின் பெறும்தியிலுள்ள குன்று

Page 156
கம்பனிக் கணக்குகளில்.
தேேயா இறுப்பதற்குக் கருதப்படாமல் இலாபங்களில் இருந்தும் பிற மிகைகளில் இருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்ட தொகை களேக் குறிப் ப த ஜ் கு உபயோக்கப்பட வேண்டுமென்று விதப்புரை செய்தது.'
1948ஆம் ஆண்டில் இங்கிலாந்துக் கம்பனிச் சட்டத்தின் கீழ் கையாண்டு வந்த முறை:-
1948ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கம் பணிச் சட்டம் இறுதியாக "ஒதுக்கீடு' என்ற சொல் பரந்த அளவில் வித்தியாச மான கருத்துக்களுடன் உபயோகிக்கப்படு வதற்கு முற்றுப்புள்ளியிட்டது. ‘ஏற்பாடு’ (Provision) என்ற சொல் சொத்துக்களின் பெறுமதியில் தேய்மானத்திற்கு, புதுப்பித் தல்களுக்கு அல்லது குன்றுதலுக்கு ஏற் பாடுவழங்கும் நோக்கில் பதிவழிக்கப்படும்; அல்லது வைத்திருக்கப்படும் தொகைசைக் குறிக்கும்; அல்லது கணிசமான செம்மை யுடன் தொகை நிர்ணயிக்கப்பட முடியாத ஏதாவது தெரிந்த பொறுப்புக்கு ஏற்பாடு வழங்குவதன் நோக்கில் வைத்திருக்கப் படும் தொகையைக் குறிக்கும் ,
'ஒதுக்கீடு’ (Reserve) என்ற சொல் சொத்துக்களின் பெறுமதியில் ஏற்படும் தேய்மானத்திற்கு, புதுப்பித்தல்களுக்கு அல்லது குன்றுதலுக்கு பதிவழிக்கப்படும் அல்லது வைத்திருக்கப்படும் எத் தொகை யையும் அல்லது ஏதாவது தெ ரி ந் த பொறுப்பிற்கு ஏற்பாடு வழங்குவதன் நோக்கில் வைத்திருக்கப்படும் எத் தொகை பையும் உள்ளடக்காது.
கம்பனி பணிப்பாளரின் அபிப்பிராயப் படி ஒரு ஏற்பாடு நோக்கத்திற்கு நியாய மாகத் தேவைப்படுவதனைவிட மிகையான தாக இருக்குமிடத்து அந்த மிகை ஏற் பாடாகக் க ரு த ப் ப ட (ா ம ல் ஒதுக்கீடு டொன் ருகக் கருதப்பட வேண்டும். எனவே ஒது க் கீ டு என்ற சொல் ஐந் தொகைத் தேதியில் இருப்பதாகக் காணப்படும் எந் தப் பொறுப்பையோ அல்லது நிகழத்தக்க பொறுப்பையோ சொத்துக்களின் பெறுமதி
- 13

ச. தம்பிப்பிள்ளை
யில் உள்ள குன்றுதலையோ கருதப்படாது வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மூலத னத்தின் பகுதியாக விருக்கின்ற இலாபங் கள், பிற மிகைகளில் இருந்து ஒதுக்கி வைக் கப்பட்ட பணத் தொகைகள் ஆகியவற்றை விபரிப்பதற்கே உபயோகிக்கப்பட வேண்டு மென்பது தெளிவாகிறது. எனவே ஏற்பாடு என்ற சொல் கணிசமான அளவு செம்மை யுடன் நிர்ணகிக்க முடியாத தொகையைக் கொண்ட குறித்த பொறுப்புக்களை இறுப்ப தற்கும் ஐந்தொகைத் தே தி யில் உள்ள சொத்துக்களின் பெறுமதியில் ஏற்படும் எந்தக் குறைவையும் இறுப்பதற்கும் இலா பத்தில் தாக்கல் செய்ய ப் பட் டு ஸ் ள தொகைகளை விபரிப்பதற்கு உபயோகிக்கப் படவேண்டும். சுருங்கக் கூறின் ஏற்பாடு ஒன்றினைத் தோற்றுவித்தல் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தேறிய சொத்துக் களை குறைக்கின்றது.
ஏற்பாடு இலாபங்களுக்குகெதிரான வொரு தாக்கலாகவிருக்கையில் ஒதுக்கீடு டொன்று இலாபங்களின் பகிர்தலொன் ரு கவுள்ளது. கணக்குகள் உண்மையானதும் நியாயமானதுமானவொரு நோக்கினைக் காண்பிக்க வேண்டியதாகவிருந்தால் சொத் துக்களின் பெறுமதியில் தேய்மானத்திற்கு அல்லது குன்றுதலுக்கான ஏற்பாட்டினை வழங்குவதற்கு வர்த்தகத் தேவையுள்ளது. வேறு சொற்களில் கூறுவதானல் சொத்துக் களின் பெறுமதியில் தேய்மானத்தை அல் லது குன்றுதலை ஈடு செய்வதற்கு போதிய ஏற்பாடு வழங்கப்படாவிட்டால் கம்பனி ஒன்றின் இலாபங்கள் மிகையாகவும், நட் டங்கள் குறைவாகவும் காண்பிக்கப்படும்.
ஒரு குறிக்கப்பட்ட சொத்து தேறும் போது ஏற்படக் கூடிய நட்டங்களுக்கு அல் லது செலுத்தப்படாத பொறுப்புக்களுக்கு ஏற்பாடு வழங்கப்படலாம். குறிக்கப்பட்ட சொத்து தேறும்போது ஏற்படக்கூடிய நட்டங்களுக்கான ஏற்பாட்டிற்கு உதார ணம் ஐயக் கடன்களுக்கான ஏற்பாடாகும். காப்புறுதியினல் முழுமையாக பாதுகாக்
2 -

Page 157
கம்பனிக் கணக்குகளில் -
கப்படாத தீயினல் ஏற்படும் நட்டம்,
பெரும்பாலும் மதிப்பளிக்கப்படாமல் இருக்கக் கூடிய கழிவிடப்பட்ட உண்டியல் களின் மீதான நட்டம் ஆகியன செலுத் தப்படாத பொறுப்புக்களுக்கான ஏற்பாட் டிற்கு உதாரணங்களாகும். மதிப்பிடப் பட்ட எல்லாக் கடன்களும் பதிவழிக்கப் டட்டுள்ளனவா அல்லது அவற்றிற்கு இந்த முறையில் ஏற்பாடு வழங்கப்பட்டுள்ள வைா அல்லது செலுத்தப்படாத பொறுப் புக்களுக்கு ஏற்பாடு வழங்கப்பட்டுள்ள னவா என்பதைப்பற்றி தம்மைத்தாமே திருப்திப்படுத்திக் கொள்ளுதல் கணக்காய் வாளரின் கடமையாகும் ,
நடைமுறை சொத்துக்களாக வைத் திருக்கப்படும் முதலீட்டினது சந்தைப் பெறுமதியானது ஐந் தொகைத் தேதியில் புத்தகப் பெறுமதியைவிடக் குறைவான தாகவிருந்தால் ஏற்பட்ட நட்டத்திற்கு ஏற் பாடுவழங்குதல் அத்தியாவசியமானதாகும். எனினும் முதலீடுகள் நிலையான சொத்துக் களாக வைத்திருக்கப்படுமிடத்து அந்த நட்டம் நிரந்தரமானதாக தெரிந்தாலன்றி அந் நட்டத்திற்கு ஏற்பாடு வழங்குதல் அத்தியாவசியமானதன்று.
1938ஆம் ஆண்டின் இலங்கை கம்பனிச் சட்டத்தின் கீழ் கையாளப்படும் முறை:-
வெளியீட்டுக் கணக்குகளில் மூலதனத் திற்கும் வருமானத்திற்கும் இ  ைட யி ல் ஒதுக்கீடுகளின் பிரிவு காண்பிக்கப்பட வேண்டுமென்பது 1938ஆம் ஆண்டின் 51ம் இலக்க கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் தேவையாகும். மூலதன ஒதுக்கீடு இலாப நட்டக் கணக்கிற் கூடாக பங்கிடப்படு வதற்கான தொரு ஒதுக்கீடாகக் கருதப் படுவதில்லை. வருமான ஒதுக்கீடுகள் இலாப நட்டக் கணக்கிற் கூடாக பங்கிடப்படு வதற்கான ஒதுக்கீடுகளாகக் கருதப்படுகின் றன. மூலதன ஒதுக்கீடு மூலதனக் கொடுக் கல், வாங்கல்களின் விளைவாக தோன்று கின்றது. அதாவது பங்குவட்டம், நிலை யான சொத்துக்களின் விற்பனை மீதான
13

ச. தம்பிப்பிள்ளை
இலாபம், நிலையான சொத்துக்களின் மீள் மதிப்பீட்டின் பேரிலான இலாபம், கம்பனி உருவாக்க முன்புள்ள இலாபம் ஆகியன வாகும். மூலதன ஒதுக்கீடு குறித்த ஒரு நோக்கத்திற்காக ஒதுக்கீடு ஒன்றை தோற் றுவிப்பதற்கான பணிப்பாளர் கொள்கை யின் விளைவாகவும் கூடத் தோன்றலாம். அதாவது நிலையான சொத்து பதிலிடல் ஒதுக்கீடு. வருமான ஒதுக்கீடு கம்பனியின் நிதி நிலையை பலப்படுத்துவதற்காக தோற் றுவிக்கப்படலாம். இது பொதுவாக இலா பங்களிலிருந்து பகிர்வு செய்யப்படுகிறது. பொது ஒதுக்கீடு, பங்கு இலாபச் சமப் படுத்தும் ஒதுக்கீடு, தொகுதிக்கடன் மீட்பு ஒதுக்கீடுகள், பகிரப்படாத இலாபம் ஆகி யன வருமான ஒதுக்கீடுகளாகும்.
தோற்றுவிக்கப்பட்டு ஒதுக்கீட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்ட பணத் தொகை வணிகத்தில் வைத்திருக்கப்பட வேண்டுமா அல்லது வணிகத்திற்கு வெளியே முதலீடு செய்யப்பட வேண்டுமாவென்பது பணிப் பாளர் கொள்கையிலேயே தங்கியுள்ளது. மேலதிக தொழிற்படு மூலதனம் வணிகத் தில் உபயோககரமாகவும் இலாபகரமாக வும் ஈடுபடுத்தக் கூடியதாகவிருக்குமிடத்து அவ்வாறு பயன்படுத்தப்பட்ட தொகை அது சந்தைப்படுத்தக் கூடிய முறிகளில் (Marketable Securities) (upg,656. Garul ult படுவதிலிருந்து கிடைக்கக் கூடியதைவிட கூடுதலான வருவாயைக் கொடுக்கக்கூடிய தஞல் அத்தகைய இலாபங்களை வணிகத் தில் விடுவது சிறந்த நிதிக் கொள்கை யாகும். எனினும் வணிகத்தில் இலாபகர மாக ஈடுபடுத்தக் கூடியதைவிட மிகையாக இருந்தால் அத் தொகையை ஒரு குறித்த முதலீட்டில் முறிகளாக (Securities) வைத்திருக்க வேண்டும். வணிகத்திற்கு வெளியே அவ்வண்ணம் முதலீடு செய்யப் பட்டுள்ள ஒரு ஒதுக்கீடு வணிகத்தை பலப் படுத்துவதற்கான கணிசமானதொரு வள மாகும். ஏனெனில் உடனடியாக காசாக்கக் கூடிய சொத்துக் களில் வணிகத்திற்கு வெளியே முதலீடு செய்யப்படும்போது,
3 -

Page 158
கம்பனிக் கணக்குகளில்.
வணிகத்தின் மீது தீடீர் அழைப்பு ஏற்படு மிடத்து எந் நேரத்திலும் பயன்படுத்தக் கூடியனவாகவிருக்கும் என்பதனுலேயேயா கும். எனினும் ஒதுக்கீடானது இம் முறை
யில் முதலீடு செய்யப்படாமல் வணிகத்தில் வைத்திருக்கப்படுவது எவ்விதத்திலும் பல வீனத்திற்கானதொரு அறிகுறியாகாது. ஏனெனில் அது வணிகம் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றதென்றும்
அதன் விளைவாக அதற்கு மேலதிக மூல தனம் தேவைப்படுகிறதென்றும் குறிப் பிடக் கூடுமென்பதனுலேயாகும். அதே வேளையில் அத்தகையதொரு ஒதுக்கீடு இருப்பது சொத்துக்களின் மீது போடப் படும் மதிப்பீட்டின் மீதே முழுமையாக தங்கியுள்ளது. தேய்மானத்திற்கான ஏற் பாடு தவறவிடப்பட்டதன் காரணமாக அல்லது பிற் காரணங்களின் பொருட்டு மதிப்பீடு மிகையானதாகவிருந்தால் ஒதுக் கீடு உண்மையிலேயே ஐந்தொகையில் காணப்படும் தொகையைவிட கணிசமான
அளவில் குறைவானதாகவிருக்கும்.
வணிகத்திற்கு வெளியே ஒதுக்கி டொன்று முதலீடு செய்யப்பட்டிருக்கு மிடத்து அது ஒரு "ஒதுக்கீட்டு நிதி” (Reserve Fund) 676ër o sapi'iu@lb. gj. சொல் வணிகத்திற்கு வெளியே முதலீடு செய்யப்படாத ஒதுக்கீடுகளுக்கும் இறுக்க மின்றி நடைமுறையில் பிரயோகிக்கப்படு 6,760s (loosely applied in practice) -9L-i கடி காணக்கூடியதாகவுள்ளது. தவருன கருத்தைத் தவிர்ப்பதன் பொருட்டு வணி கத்திற்கு வெளியே முதலீடு செய்யப்
- 13

ச. தம்பிப்பிள்ளை
படாத எல்லா ஒதுக்கீடுகளையும் குறிப் பதற்கு "ஒதுக்கீட்டு நிதி” என்ற சொல்லை விட “ஒதுக்கீட்டு கணக்கு" என்ற சொல்லை உபயோகித்தல் விரும்பத்தக்கது. நியதிச் சட்ட முறை தேவைப்பாடுகளின் விளை வாக விதிவிலக்குகள் எழும். இந் நியதிச் சட்டமுறைத் தேவைப்பாடுகள் ஒதுக்கீ டொன்று "நிதி" (Fund) என விபரிக்கப் பட வேண்டுமென்று தேவைப்படுத்துகின் றன. 1938ஆம் ஆண்டின் 51:ம் இலக்க கம் பனிகள் கட்டளைச் சட்டம் பங்கு இலா பங்களாக பகிரப்படுவதற்கு கிடைக்கக் கூடியதாகவுள்ள இலாபங்களிலிருந்து மீட் கத்தக்க முன்னுரிமைப் பங்குகள் மீட்கப் பட்டால் “மூலதன மீட்பு ஒதுக்கு நிதி" Capital Redemption Reserve Fun dj sr Gas dës கூறப்படும் குறிப்பிட்ட ஒதுக்கீடொன்று உருவாக்கப்படுவதை வே ண் டு கி றது. ஒதுக்கீடொன்று ‘நிதி' என விபரிக்கப்பட வேண்டுமென அமைப்புப் புறவிதியிலும், அமைப்பு அகவிதியிலும் கம்பணிகள் கட் டக்ளச் சட்டத்திலும் உள்ளதொருதேவைப் பாட்ாக இருந்தாலன்றி 'ஒதுக்கீட்டு திதி' என்ற் சொல் வணிகத்திற்கு வெளியே முத லீடு செய்யப்பட்டுள்ளதொரு ஒதுக்கீட்டை குறிப்பதற்கு உபயோகிக்கப்பட வேண்டு
மென்பது கவனிக்கப்பட வேண்டும்.
சட்ட ஏற்பாடுகளுக்கும் சிறந்த கணக் கீட்டு நடைமுறைகளுக்கும் இணங்க பின் வரும் ஐந்தொகையின் சுருக்கம் கம்பனிக் கணக்குகளில் ஏற்பாடுகள், ஒதுக்கீடுகள் என்ற சொற்களை பயன்படுத்துவதில் கையாளப்படும் முறைகளை விபரிக்கின்றது.
4 -

Page 159
கம்பனிக் கணக்குகளில்.
X Y எனும் வரையறு 31-12-1975 அன்று உ
முடக்கப்பட்ட மூலதனம்
பங்கு மூலதனம்:
200,000 ஒவவொன்றும் 10 ரூபா பெறு 10% திரண்ட முன்னுரிமைப்
500,000 ஒவ்வொன்றும் 10 ரூபா பெறும
சாதாரண
மூலதன ஒதுக்கீடுகள்:
மூலதன மீட்பு ஒதுக்கு நிதி நிலையான சொத்துக்களின் மீள் மதிப்பீட்ப
மூலதன ஒதுக்கீடு
பங்கு வட்டம் நிலையான சொத்துக்களின் பதிலீட்டு ஒது
வருமான ஒதுக்கீடுகள்:
பங்கிலாபச் சமப்படுத்தும் நிதி தொகுதிக் கடன் மீட்பு ஒதுக்கு நிதி பொது ஒதுக்கீடு இலாப நட்டக் கணக்கு மீதி
கழி:- ஆரம்ப தொடக்கச் செலவுகள்
பங்கு மூலதனமும் ஒதுக்கீடுகளும்
جی۔
** இன் பத் தமிழ்க் கல்வி யாவருட என்றுரைக்கும் நிலை எய்திவிட்ட துன்பங்கள் நீங்கும், சுகம் வரு தூய்மை உண்டாகிவிடும், வீரட்
- 13.

ச. தம்பிப்பிள்ளை
க்கப்பட்ட கம்பனியின்
ள்ளபடி ஐந்தொகை
அனுமதிக்கப் வழங்கப்பட்டு முற்றிலும் لكن سL. L لا
செலுத்தப்பட்டது தியான பங்குகள் 2,000,000 1,000,000 தியான பங்குகள் 5,000,000 3,000,000 7,000,000 4,000,000
டிலான
jig; S XXXXX
XXXXX
XXXXX
XXXX XXXXXX
XXXXXXX
b கற்றகர் டால் - ம் நெஞ்சினில்
b வரும்’’. - பாரதிதாசன்.

Page 160
(Clith Best (Lampliments
of
MAHALAKSHMISTORES
Dealer for
Elephant Brand Soft Drinks
V AV UNIY A.
“ciu JITGöI 6ú Gaussif Sğı DIT ’ ”
உங்கள் வீட்டுத்
தளபாடங்களுக்கு
நவநாகரீக புதிய அமைப்புகளை
கொண்ட தளபாடங்களுக்கு
‘ஸ்ரான்லி பேணிசிங் மாட்'
ஸ்ரான்லி பேணிசிங் மாட் 5 & 7, ஸரான்லி றேட்,
யாழ்ப்பாணம்.

அன்பளிப்பு
பூரீகாந்தா அச்சகம் புத்தகசாலே
213, காங்கேசன்துறை வீதி. யாழ்ப்பாணம்.
uu råkar Dariřiš குளிர்பானங்கள்
ஏஜண்ட்:
rðurf SGI If
உரிமையாளர்:
க. இராசதுரை 31, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி: தந்தி:
7 6 6 எலிபென்ட்

Page 161
இலங்கையில் வரியயை 1976 வரவு செலவுத் தி
ந
6If tD
பகுதிே
இலங்கையின் வரி அமைப்பு முறை யில் 1976ஆம் வருட வரவுசெலவுத் திட் டம் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத் தியுள்ளது. இக் கட்டுரையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினுல் பரிபாலிக் கப்படும் வரிமுறையிலான சில முக்கிய மான மாற்றங்களை ஆராய்வோம்.
வரிமுறை அரசாங்கத்துக்குத்தேவைப் படும் வருமானத்தைப் பெறுவதைப் பிர தானமான நோக்கமாகக் கொள்ளும். ஆணுல் வருமானத்தைப் பெறுவது அதன் தனி நோக்கம் அல்ல. தற்போதைய வரி முறைகள் பொருளாதார வளர்ச்சிக்கும் அரசாங்கத்தின் சமூகக் கொள்கைகளை அமுல் செய்வதற்கும் உபயோகிக்கப்படு கின்றன. இலங்கை போன்ற வளர்ச்சி யுறும் நாடுகளில் பொருளாதார வளர்ச் சிக்குத் திசை காட்டுவதிலும் வழிவகுப்ப திலும் வரிமுறை முக்கியமான பங்கினை வகிக்கிறது.
1969-70இலிருந்து 1974-75 வரை படிமுறையாக 65 சதவீதம் வரை கூடிச் செல்லும் வருமான வரி விகிதங்கள் நடை முறையில் இருந்தன. ஆனல் அனுமதிக்கப் பட்ட சில கம்பனிகளில் சாதாரனப் பங்கு களை வாங்குவதில் முதலீடு செய்யும்போது வரிச்சலுகை அளிப்பதன் மூலம் வருமான வரி குறைக்கப்பட்டது. உயர்ந்த வரி விகி தங்கள் அமுலிலிருக்கும்பொழுது இத்த கைய முதலீட்டு நிவாரணங்கள் தேர்ந்

DÍ
LG(so y 65d Sir B. A. (Hons.) (Cey.)
திப்பாளர் - உள்நாட்டு இறைவரித் திணைக்களம். நர விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்
37
தெடுக்கப்பட்ட பொருளாதாரத் துறை களுக்கு முதலீட்டைத் திருப்ப உதவின. அத்துடன் கட்டாயச் சேமிப்பும் வருமான உச்சவரம்புச் சட்டமும் அமுலிலிருந்தது. இதன்படி ஒருவர் தானே சேமித்து முத லீடு செய்யாதவிடத்து அவர் அரசாங்கத் திற்குக் கட்டாயச் சேமிப்பாகக் குறிக்கப் பட்ட சில தொகைகளைச் செலுத்தவேண்டி யிருந்தது. வருமான உச்சவரம்பின் கீழ் வருமானத்திலிருந்து நுகர்வுக்குச் செல விடக்கூடிய தொகை மட்டுப்படுத்தப் ill-l-gil.
பொருளாதார வளர்ச்சியை ஊக்கு விப்பதற்கு வரி விடுதலைகளும் பாவிக்கப் பட்டன. இவை பிரதானமாக வெளி நாட்டுச் செலாவணியைப் பெறும் துறை களிற்கு மாத்திரம் பொருந்தியவையாக இருந்தன. பாரம்பரியமற்ற ஏற்றுமதித் துறைக்கும், உல்லாசப் பிரயாணத்துறைக் கும், இரத்தினக்கல் விற்பனைக்கும் இவ் வரி விடுதலைகள் வழங்கப்பட்டன. வரி விடுதலையும், கட்டாயச்சேமிப்பையும் வரு மான உச்சவரம்பையும் கணிக்கும்போது வரி விடுதலைபெற்ற வருமானங்கள் சேர்க் கப்படாததும், இத்துறையின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தன.
1976இன் வரவுசெலவுத்திட்டத்தின் ஏற்பாடுகள் இவ்வமைப்பை 1976-77 ஆம் வரிமதிப்பு ஆண்டிலிருந்து மாற்றி முத லீட்டை வளர்ப்பதற்குப் புதிய மார்க்க மொன்றை அமைத்துள்ளன.

Page 162
இலங்கையில் வரியமைப்பும்.
(1) வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு உச்சவரி விகிதம் 50 சதவீதமாக நிறுவப்பட்டது. வரிவிகிதங்களைக் குறைப்பதன் மூலம் முயற்சிசெய்து வருமானத்தை ஈட்டுவது தூண் டப்படுகின்றது. இவ்வருமானம் முதலீட்டுக்குப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.
(ii) முதலீடுசெய்து வரியிலிருந்து நிவா ரணம் பெறக்கூடிய துறைகளும் விரிவாக்கப்பட்டன.
(ii) நுகர்வுச்செலவை மட்டுப்படுத்து வதற்காக நுகர்வுச் செலவின் மீதான செலவின வரி அம்ைக்கப் பட்டது. முன்னர் இருந்த கட் டாயச் சேமிப்பும் வருமான உச்ச வரம்பும் விலக்கப்பட்டன.
(iv) பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்காக முயற்சியுடன் தொடர்புகொண்ட விசேட வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டன.
(v) வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட தாலும், முயற்சிக்கும் முதலீட் டுக்கும் நிவாரணங்கள் அளிக்கப் பட்டதாலும், வரி விடுதலைகளைக் கட்டுப்படுத்தும் கொள்கையும் பிரகடனப்படுத்தப்பட்டது.
1976இன் வரவுசெலவுத் திட்டம் ஊழி யர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்குகின் றது. மேலும் தொழில் முயற்சியில் பொது மக்கள் கலந்துகொள்வதை ஊக்குவிப்பதற் காக 'மக்கள் கம்பனிகள்" என்ற கம்பனி களுக்குக் குறைவான வரிவிகிதம் நியமிக்கப் பட்டிருக்கிறது.
வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படல்
1976-77ஆம் ஆண்டிலிருந்து வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 1975-76 வருடத்தில் வரி விகிதம் 75 சத வீதம் வரை படிமுறையாக அதிகரித்துச்
- 1.

ந. மனுேரஞ்
சன்
சென்றது. 1976-77 இலிருந்து உச்சவரி வீதம் 50 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட் டுள்ளது இக்குறைக்கப்பட்ட வரி வீதங் களிலும் முன் வருடங்களிற் பார்க்கக் கூடிய வரியைச் சேர்க்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது, வரி விகிதங் கள் நியாயமானவை என ஒருவர் கருதும் போது அவர் வரி நோக்கங்களுக்காகத் தனது முழு வருமானத்தையும் காட்டி வரியைச் செலுத்துவார் என எதிர்பார்க் 5 til L L — ģ5.
கம்பனிகளும் அனுமதிக்கப்பட்ட (LP5 லீட்டுத் திட்டங்களின்கீழ் முதலீடு செய் வதன்மூலம் வரிச்சலுகைகளைப் பெற முடியும்
வருமான வரி விகிதங்கள் குறைக்கப் பட்ட போதிலும் மிக உயர்ந்த வரும்ா னத்தைப் பெறுபவர்கள் நுகர்வுச்செலவின் விளைவாகச் செலவின வரியைக் கட்ட வேண்டியவிடத்து மொத்த வரிச்சுமை அதிகரிக்கக்கூடியதாக இருக்கின்றது.
முதலீட்டு நிவாரணம் விரிவாக்கப்படல்
1974-75 வருடத்தில் முதலீட்டு நிவா ரனம் பாரம்பரியமற்ற ஏ ற் று ம தி த் துறைக்கு அளிக்கப்பட்டிருந்தது. இத் துறையில் அமைக்கப்பட்டு நிதியமைச்சரின் அனுமதியைப் பெற்ற ஒரு கம்பனியின் சாதாரணப் பங்குகளை நேரடியாக வாங்கு பவன் அம்முதலீட்டுத் தொகையை வரி செலுத்த வேண்டிய வருமானத்தைக் கணிக்கும் போது கழிக்கலாம். ஆயினும் அம் முதலீட்டுத் தொகை வருமானத்தின் ஐந்திலொரு பாகத்துக்குக் கூடியிருப்பின் வருமானத்தின் ஐந்திலொரு பாகத்தை மட்டும்ே கழிக்கலாம்.
18-06-1976 இல் சட்டமாகிய உள் நாட்டிறைவரித் திருத்தச் சட்டத்தின்படி முதலீட்டு நிவாரணம் பெறக் கூடிய துறை விரிவாக்கப்பட்டது. நிதியமைச்ச ரால் அங்கீகரிக்கப்பட்ட வீடமைப்புக்
8 -

Page 163
இலங்கையில் வரியமைப்பும்.
காணி சீர்திருத்தக் கம்பனிகளிலும், பொரு ளாதார வளர்ச்சிக்கு அவசியமென அவ ரால் கருதப்படும் கம்பனி களிலும் , சாதா ரணப் பங்குகளை வாங்கி முதலீட்டு நிவார ணத்தைப் பெறலாம். குறிக்கப்பட்ட ਓਸੇ சந்தர்ப்பங்களில் வீடமைப்புச் செலவுக் காகவும் வீடு அல்லது வீட்டினை அமைப்ப தற்காகக் காணி என்பவற்றை வாங்குவதற் கான செலவுக்காகவும்முதலீட்டுநிவாரணம் அளிக்கப்படும். அத்துடன் வீடமைப்பு, முதலாவது வீடு கொள்வனவு ஆகியவற் நிற்காக 01-04-1973இன் பின் அனுமதிக் கப்பட்ட நிறுவனங்களில் எடுக்கப்பட்ட கடன்களைக் கட்டுவதற்கான தொகை களி லும், வாடகை மூலம் வீட்டுக் கொள்வன வுக்காகச்செலுத்தப்பட்ட தொகைகளிலும் சில நிபந்தனைகளுக்குட்பட வரி நிவாரணம் வழங்கப்படும்.
செலவின வரி
வரிமதிப்பு வருடம் 1976-77 இலிருந்து இலங்கை வரியமைப்பில் செலவின வரிடம் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாகக் கூறும் போது இவ்வரி 1959-60ஆம் ஆண்டி லிருந்து 1962-63ஆம் ஆண்டுவரை அமு லில் இருந்த செலவின வரியைத் தழுவியே அமைக்கப்பட்டுள்ளது. இது நுகர்வுச் செலவின் மீதான வரியாகும். ஒரு வரி மதிப்பு வருடத்துக்கான செலவினவரி அவ் வருடத்துக்கு முன்னைய வருடத்தின் செல விணத்தில் தங்கும். உ தா ர ண மாக 01.04-1975 இலிருந்து 31-03-1976 வரை யுள்ள செலவினத்தின் மீது வரிமதிப்பு ஆண்டு 1976-77இற்கு செ ல வி ன வ ரி செலுத்தப்படும். இதன் நோக்கம் நுகர் வுச் செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் முதலீட்டை வளர்ப்பதேயாகும்.
செலவின வரியும் வ ரு ம 7 ன வ ரி போலவே குடும்பத்தை வரி செலுத்தும் அலகாகக் கொண்டுள்ளது. எனவே குடும் பத்தலைவனினதும் அங்கத்தவரினதும் செலவினங்கள் ஒருங்கு சேர்க்கப்பட்டு குடும்பத் தலைவன் மீது வரிக்குட்படுத்தப்

ந. மஞேரஞ்சன்
படும். குடும்பமொன்றைச் சேராத தனி யாள் ஒருவர் தன் செலவினத்தின் மீது செலவின வரியைச் செலுத்த வேண்டிய வராவார்.
ஒரு வ ர து செலவினம் தானே செல விட்ட தொகைகளை மட்டுமன்றிப் பிறரின் செலவின் பிரகாரம் பெற்றுக் கொண்ட நுகர்வுப் பொருட்களினதும், வசதிகளின தும் பெறுமானத்தையும் உட்கொள்ளும்.
செலவினத் தொகையைக் கணக்கும் போது ஒருவருடைய மொத்தச் செலவைக் கணித்து அதிலிருந்து வரி விலக்குப் பெற்ற செலவினங்களைக் கழிக்கலாம். மேல் வரு வன செலவின வரிக்கு உட்படாத செலவு களிற் பிரதானமானவை.
* வருமான வரிக்காக வருமானத்தைக் கணிக்கும்போது செலவுகளாக அனு மதிக்கப்படும் தொகைகள், விளம் பரச் செலவுகள் முதலியன:
அசைவற்ற ஆதனங்களை வாங்குவது, கட்டடங்களைக் கட்டுவது, போன்ற செலவுகள்;
* வங்கி வைப்புக்கணக்குகளில் இட்ட தொகைகள், பிறருக்குக் கொடுத்த கட ன் கள், பெற்றுக் கொண்ட கடன்களை மீட்பதற்காகக்கொடுத்தி தொகைகள் ஆகியன:
※
நன்கொடைகள்;
* செலுத்திய வரிகள், நீதி நடவடிக்
கைச் செலவுகள் முதலியன:
ரூபா 3000 ற்கு மேற்பட்ட வைத் தியச் செலவுகள்; * குடும்ப அங்கத்தவரொருவரின் மர ணம் சம்பந்தப்பட்ட, ரூ. 5000க்கு மேற்படாத செலவுகள்
* பிள்ளை ஒருவரின் திருமணத்திற்காக செலவிடப்பட்ட ரூபா 10,000க்கு மேற்படாத தொகைகள்,
139 -

Page 164
இலங்கையில் வரியமைப்பும்.
வரிக்குட்படும் செலவினங்கள் குறித்த சில தொகைகளிற்கு மேலதிகமாக இருக் கும் போதுதான் செலவின வரி அறவிடப் படும். இத்தொகைகள் குடும்ப அங்கத்த
வரின் எண்ணிக்கையைப் பொறுத்து வேறுபடும்
செலவினா வரியில்லாத விடுதொகை 36.000 கணவனும் மனைவியும் 40,000
பிள்ளைகளும், அண்டிவாழும்
உறவினரும் ஒவ்வொருவருக்கும் 2,000 (இவ்விடு
தொகை மூவ ருக்கு மட்டுமே பொருந்தும்.)
வரிக்குட்படும் செலவினத்தின் மீது பின் வரும் அட்டவணையின் படி வரி செலுத் தப்படவேண்டும்.
முதல் ரூபா 6000 இல் 10 சதவீதம் ரூபா 6000 இல் 25 சதவீதம் 555) وقد அடுத்த ரூபா 6000 இல் 50 சத வீதம் மிகுதியில் 100 சதவீதம்
ஷேட நிவாரணங்கள்
உள்நாட்டிறைவரித் திருத்தச் சட்டத் தின் கீழ் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்குச் சில விஷேட நிவாரணங் கள் அளிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் விளைவு தொடர்புள்ள சலுகைகளாகும் , அதாவது, இச்சலுகைகளைப் பெறுவதற்கு ஒருவன் முயற்சியில் ஈடுபட்டுக் குறிக்கப் பட்ட விளைவுகளை அடைய வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுத் திட்! நீகளுக்கான நிவாரணம்.
அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டுத் திட்ட மொன்றுக்கிணங்க ஒரு கம் பனி அது நடாத்திவரும் முயற்சியில் முதலீடு செய் தால், கம்பனிக்கு வரிச் சலுகை அளிக்கப் படும். தான் செலுத்த வேண்டிய வரியி லிருந்து அக் கம்பனி முதலீட்டுத் தொகை யைக் கழிக்கலாம். ஆயினும் கம்பனியின்
- 14C

ந. மனுேரஞ்சன்
வரிவிதிப்புக்குட்படும் வருமானத்தின் 10 சதவீதம் முதலீட்டிலும் பார்க்கக் குறைந் திருப்பின் அக்குறைந்த தொகையையே கழிக்கலாம். முதலீட்டுக்கான தூண்டு கோல்களில் இதுமுக்கியமானதொன்ற கும், இச் சலுகை 60 சதவீதத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட வீதத்தில் வரி செலுத் தும் கம்பனிகளுக்கே பொருந்தும்.
வெளிநாட்டுச் செலாவணியைப் பெறுவதற்கான நிவாரணம்.
தொழில் முயற்சி ஒன்றை நடாத்தும் ஒரு ஆள் அம் முயற்சிக்காகத் தானே ஏற் பாடு செய்து வெளி நா ட் டு ச் செலா வணியை இலங்கைக்குக் கொண்டு வந்தால் அவர் அத்தொகையை வருமான வரி யிலிருந்து கழிக்கலாம்; ஆயினும் அத் தொகை அம் முயற்சியிலிருந்து பெற்ற வரு மானத்தின் மேல் செலுத்த வேண்டிய வரு மான வரியின் 20 சத வீதத்துக்கு மேற் படும் போது 20 சதவீதத்தையே கழிக்க லாம். சாதாரண வெளிநாட்டு வியாபார வரவுகள் இச் சலுகைக்காக வெளிநாட்டுச் செலாவணியாகக் கருதப்படமாட்டா. இந் நிவாரணம் வெளிநாட்டு முதலீட்டைச் சொந்த முயற்சியால் பெற்றுப் பாவிப் பதை ஊக்குவிப்பதற்காகும்.
வீடமைப்பு, காணி அபிவிருத்தித் திட்டங்க்ள் தொடர்பிலான நிவாரணம்.
வீடுகளை நிருமாணித்து விற்பதில் ஈடு படுவோர்க்கும் வீடமைப்பு அமைச்சரால் அனுமதிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் கட் டிட நோக்கங்களுக்காகக் காணியை அபி விருத்தி செய்து விற்பதில் ஈடுபடுவோருக் கும் வரிச்சலுகையாக அம்முயற்சியிலிருந்து எழும் வருமானத்தின் மீது செலுத்த வேண் டிய எரி 20 சத வீதத்தால் குறைக்கப் படும், வீடமைப்பை ஊக்குவிப்பதே இச் சலுகையின் நோக்கமாகும்.
தொழிலாளர் அதிகரிப்பு தொடர்பிலான நிவாரணம்.
1976ஆம் ஆண்டில் குறிக்கப்பட்ட சில துறைகளில் தமது தொழில் முயற்சியில்

Page 165
இலங்கையில் வரியமைப்பும்.
வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் தொகையைக் கூட்டுபவர்களுக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும். 1976இல் ஒரு வர் தனது தொழில் முயற்சியில் தொழி லாள சின் எண்ணிக்கையை இருமடங் காக்கினுல் வ ரி ம தி ப் பு வருடம் 1977/ 1978 இற்கு அம்முயற்சியிலிருந்து பெற்ற வருமானத்தில் செலுத்த வேண்டிய வரு மா ைவரி 20 சத வீதத்தால் குறைக்கப் படும். இக்குறைப்பு வீதம் தொழிலாளரின் எண்ணிக்கையின் அதிகரிப்பைப் பொறுத்து வேறுபடும். புதிதாக வேலைக்கமர்த்தப் படும் தொழிலாரர் ஊழியர் சேமலாப நிதி அங்கத்தவராகப் பதிவு செய்யப்பட வேண் 3`ւt.
1976இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தும் 50இற்கு மேற்பட்ட தொழிலாளரைக் கொண்டதுமான தொழில் முயற்சி ஒன்றும் வரிமதி வருடம் 77/78 இற்கு அம்முயற்சி யின் இலாபத்தின் மீது செலுத்த வேண் டிய வருமான வரியை 20 சத வீதத்தால் குறைக்கலாம்.
உற்பத்தி, ஏற்றுமதி என்பவற்றின் அதிகரிப்புக்கான நிவாரணம்,
பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களின் ஏற்றுமதித் தொகையை அல்லது உற்பத் தித் தொகையை அதிகரிக்கும் ஒரு முயற் சிக்கும் வரிச்சலுகைகளுண்டு. ஒரு தொழில் முயற்சி 1-4-74இல் ஆரம்பித்த வருடத் தில் உற்பத்தி செய்த அல்லது ஏற்றுமதி செய்த பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட் களின் தொகையை பின்வரும் ஆண்டுகளில் பெருக்கினல் அவ்வதிகரிப்பின் விளைவாக எழுந்த இலாபத்தில் செலுத்த வேண்டிய வரியில் குறிக்கப்பட்ட ஒரு பகுதி விலக்கப் படும்.
நி:ைாரணங்களுக்கு உச்சவரம்பு
வெளிநாட்டுச் செலாவணி, வீடமைப்பு, காணி அபிவிருத்தி, தொழிலாளர் அதி கரிப்பு, உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றுக் கான நிவாரணங்களின் கூட்டுத் தொகை
- 1

ந. மஞேரஞ்சன்
ஒருவர் செலுத்த வேண்டிய வரியின் மூன் றில் ஒரு பாகத்துக்கு மேற்படாது அமைய வேண்டும்.
வரி விடுதலைகளைக் கட்டுப்படுத்துதல்:
வரியமைப்பில் வருமான வரி விகிதங் கள் உயர்நிலையிலிருக்கும் போது தேர்ந் தெடுக்கப்பட்ட சில துறைகளில் வளர்ச் சியை ஏற்படுத்துவதற்கு வரி விடுதலைகள் முக்கியமான தூண்டுகோல்கள் ஆகும். வரி விகிதங்கள் தரமானவை எனின் இத்த கைய துண்டுகோல்களின் அவசியம் குறை கின்றது. மேலும் வரி விடுதலைகள் பொரு ளாதார அமைப்பில் 'பாதுகாக்கப்பட்ட ஒரு வகுப்பினரை ’ ஏற்படுத்துகின்றன. 1976 வரவு செலவுத் திட்டம் பொருளா தார வளர்ச்சிக்காகச் சில நேரடியான தூண்டுகோல்களையும் கொண்டுள்ளது. எனவே வரி விடுதலை வருமானங்கள் . டுப்படுத்தப்பட்டுள்ளன.
(i) இரத்தினக் கற்களை அரசாங்க இரத் தினக்கல் கூட்டுத்தாபனத்தின் அனு மதியுடன் ஏற்றுமதி செய்வதால் அல்லது உல்லாசப் பிரயாணிகளுக்கு விற்பதால் ஏற்படும் இலாபங்கள் 01-4-1975 இலிருந்து வருமான வரிக்குட்படும்.
(ii) வரிவிடுதலைக்காக 05-11-1974இன் பின் அனுமதிக்கப்பட்ட கம்பனிகள் வெளியிடும் டங்கிலாபங்கள் வரு மான வரிக்குட்படும்,
(ii) 06-11-1974இற்கு முன் வரிவிடுத லைக்காக அனுமதிக்கப்பட்ட கம் பணிகள் 01-04-1974 இன் பின் சட்டத்தில் குறிக்கப்பட்ட அள வான பங்கிலாபங்களை மட்டுமே வரி விடுதலை பெற்ற பங்கிலாபங்களாக வெளியிடலாம். சட்டத்தின்படி ஒரு கணக்காண்டின் இலாபத்திலிருந்து வெளியிடப்பட்ட பங்கு இலாபத்தில் 05-11-1974 இல் சாதாரண பங்கு களில் செலுத்தப்பட்டிருந்த (pg.35.
صسه 41

Page 166
இலங்கையில் வரியமைப்பும் .
னத்தின் 10 சதவீதமே வரிவிடுதலை பெறும். டங்கிலாபம் இவ்வீதத்தை கூடும்போது மிகுதியில் வரி செலுத் தப்படவேண்டும்.
1975-76ஆம் ஆண்டிலிருந்து வரிவிடு தலைக் கம்பனிப் பங்குகளும் அங்கீகரிக்கப் பட்ட முதலீடுகளும் செல்வ வரிக்குட்படும்,
ஊழிய வருமானத்தின் மீது வருமான வரியைக் கணித்தல்:
வரிமதிப்பு வருடம் 1976-77 இலிருந்து ஊழிய வருமானத்தின் மீது வரிமதிப்பதில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள் ளன. ஊழிய வருமானத்தை மட்டுமே பெறும் ஒருவரின் வருமானம் ரூபா 9000 க் குக் குறைவாக இருப்பின் அவர் வருமான வரியிலிருந்து விலக்குப் பெறுவார். இவ் விலக்கீட்டைக் கணிக்கும்போது ஒவ்வொரு ஊழியரும் தனியொருவராக மதிக்கப்படு வார். கணவனும் மனைவியும் இருவரும் ஊழியராக இருக்குமிடத்து அவர்கள் தனியாட்களாகக் கருதப்படுவர்.
ஊழிய வருமானம் ரூபா 9000க்குக் குறைவாக இருக்கும்போது மற்றைய வரு மான மார்க்கங்களிலிருந்து ஒரு குடும்பம் பெற்ற வருமானம் ரூ. 1200 க்குக் குறை வாக இருப்பின் அவ்வருமானமும் வரு மான வரிக்குட்படாது.
சாதாரணமாக ஒரு குடும்ப உறுப்பி னரின் வரும்ானங்கள் வரி நோக்கங்களுக் காக ஒருங்கு சேர்க்கப்படும். ஆயினும் குறிக்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் வரு மானங்களை ஒருங்கு சேர்க்கும் நியதி ஊழி யருக்குப் பொருந்தாது. கணவனும் மன வியும் ஒவ்வொரு ஊழியத்தில் அமர்ந்து ஊழிய வருமானத்தை மட்டுமே பெறும் போது அவர்களது மொத்த ஊழிய வரு மானம் ரூபா 30,000 ஐ மீருதிருப்பின் அவர்கள் இருவரும் வெவ்வேறு ஆட்களாக வருமான வரிக்குட்படுவர் அவர்களின் வருமானங்கள் ஒருங்கு சேர்க்கப்படமாட்
= |

ந. மஞேரஞ்சன்
42
டாது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேருக 9000 ரூபா வரியில்லாத விடுதொகையாக வருமானத்திலிருந்து கழிக்கப்பட்டு மிகுதி வருமானத்தில் மட்டுமே வருமான வரி அற விடப்படும். இத்தகைய ஒரு குடும் பத்தில் ஊழியத்தைத் தவிர்த்த மற்றைய வரு மான மார்க்கங்களிலிருந்து பெற்ற விருமா னம் வருடத்துக்கு ரூபா 1200க்குக் குறை வாக இருப்பின் அம்மற்றைய வருமானங் கள் வரிக்குட்படா. அவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக் களத்துக்கு வருthான வரித் திரட்டுக்களும் சமர்ப்பிக்க வேண்டி யதில்லை. தொழில் தருனர் உழைக்கும் போதே செலுத்தும் திட்டத்தின் கீழ் கழிக் கும் வருமான வரியே அவர்கள் செலுத் தும் வருமான வரியாகும்.
கணவன் அல்லது மனைவி ஒன்றுக்கு மேற்பட்ட ஊழியங்களில் ஈடுபட்டால் அல்லது அவர்களின் பொத்த ஜூா ழிய வருமானம் ரூபா 30,000 க்கு மேற்பட்டால் அல்லது குடும்பத்தின் ஊழிய வருமான மற்ற ஏனேய வருமானங்கள் ரூபா 1200க்கு மேற்பட்டால், அவர்களது வருமானங்கள் ஒருங்கு சேர்க்கப்பட்டு வருமான வரிக்குட் படுத்தப்படும். இவர்கள் வருமானத் திரட் டுகளைப் பூர்த்தி செய்து, தாம் செலுத்த வேண்டிய வரிகளைக் கணித்து, அவ்வரிகள் உழைக்கும் போதே வரி செலுத்தும் திட் டத்தின்கீழ் தொழில் தருனரால் கழிக்கப் பட்ட வரிகளிலும் பார்க்கக் கூடுதலாக இருந்தால் தாமே மிகுதித் தொகையைச் செலுத்த வேண்டும். இத்தருணத்திலும் ஒவ்வொரு ஊழியர் சார்பிலும் ரூபா 9000 வரியில்லாத விடுதொகையாக வருமானத் திலிருந்து கழிக்கப்பட்டு மிகுதி வருமா னமே வருமான வரிக்குட்படும். ஆயினும் ஒருவரின் ஊழிய வருமானம் ரூபா 9000க் குக் குறைவாக இருப்பின் அவர் சார்பில் அக்குறைவான தொகையையே வரிக்குட் படாத விடுதொகையாகப் பெறலாம் .
ரூபா 9000 மாக அனுமதிக்கப்படும் விடுதொகை உள்நாட்டு இறைவரிச் சட்

Page 167
இலங்கையில் வரியமைப்பும்.
டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள விதவை அனதை நிதிக்கட்டுப்பணத்திற்கான கழிவு, குடும்பவிடுதொகை, செலுத்தப்பட்ட வட் டிக்கான கழிவு,அங்கீகரிக்கப்பட்ட முதலீட் டுக்கான விடுதொகை போன்ற மற்றைய எல்லா விடுதொகைகளுக்கும் பதிலானதா கும். அவ்விடுதொகைகள் ரூபா 9000க்கு மேற்பட்டிருப்பின் வரி செலுத்துவோன் அத்தொகைகளைக் கழிவாகக் கோரலாம்.
இவ்வேற்பாடுகள் யாவும் ஊழியருக் குச் சலுகைகளை வழங்குவதற்காக அமைக் கப்பட்டுள்ளன. பணவீக்கத்தால் அதிக மாகப் பாதிக்கப்பட்டுள்ள இவ்வகுப்புக்கு நிவாரணம் அளிப்பதே இவற்றின் நோக்க மாகும். இவ்வருமானம் சொந்த உழைப்பி ல்ேயே தங்கியுள்ளதால் அதன் மேலான வரிச்சுமை குறைக்கப்பட வேண்டுமெனவும் கருதப்பட்டது. எனவே இவ்வேற்பாடுகள் குடும்ப வியாபாரங்களில் ஊழியத்திலமர்ந் திருக்கும் அக்குடும்ப அங்கத்தவருக்குப் பொருந்தாதவை.
மக்கள் கம்பனிகள்:
பொருளாதார வளர்ச்சியில் பொது மக்களின் ஒத்துழைப்பைத் தூண்டுவதற் காக மக்கள் கம்பணிகள் செலுத்தவேண் டிய வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சாதாரண இலங்கைக் கம்பனிகள் தமது வரி விதிப்புக்குட்படும் வருமானத்தில் 60
கலைஞனே! நீ புகழை எதிர்பார், கிடைக்காமலேபோகலாம். பொருளு வையே விற்றுவிடுவாய். உன் உள்ளத் ஆனந்தத்துக்காக நீ கலைப்பணியில் ஒ விடு. பிறகு ஒருவேளை நீ எதிர்பாரா தேடி வந்தாலும் வரலாம்.
- 14

ந. மஞேரஞ்சன்
சதவீதத்தையும் வெளியிடும் பங்கிலாபங் களின் மொத்தத் தொகையில் 33 1/3 சத வீதத்தையும் வருமான வரியாகச் செலுத்த வேண்டும். மக்கள் கம்பனிகள் சார்பில் 60 சதவிகித வரி 40 சதவிகிதமாகக் குறைக் கப்பட்டுள்ளது.
வரிமதிப்பு வருடமொன்றிற்கு முன் னைய வருடம் முழுவதும் சில நிபந்தனைக ளுக்குட்பட்டிருந்ததெனக் கம்பனிப் பதி வாளரிடமிருந்து உறுதிப்பத்திரத்தைப் பெற்றுள்ள கம்பனியே மக்கள் கம்பனி யாகும். மக்கள் கம்பனி தனிப்பட்ட கம் பணி அல்லாத இலங்கைக் கம்பனியாகவும், ஐம்பதுக்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட பங்குக் காரர்கள் உள்ளதாகவும், ஒவ்வொருவரும் பங்குக் காரரான மூன் றுக்கு மேற்பட்ட பணிப்பாளரைக் கொண் டதாகவும் இருக்க வேண்டும். அக்கம்பனிப் பங்கொன்றின் பெயரளவிலான பெறுமதி பத்து ரூபாவுக்கு மேற்படாதிருப்பதுடன் ஒருவன் அப்பங்குகள் ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்ட தொகையையோ வாங் கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆயினும் ஆளெவரேனும் தனியாக அல்லது அவரது மனைவியுடன் அல்லது பராயமடையாத பிள்ளைகளுடன் சேர்ந்து வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தில் பத்து சதவீதத்திற்கு மேற்பட வ்ைத்திருக்க முடியாது.
த்து உழைக்காதே; அது உனக்குக் க்காக உழைக்காதே உன் ஆத்மா தின் நிறைவுக்காக, உன் ஆத்மாவின் ன்றிவிடு; உழைப்பில் உன்னை மறந்து D (66) புகழும் பொருளும் உன்னைத்
- கவிஞன் கென்யன் காக்ஸ்

Page 168
Direct Importers
Motor Spare Parl
Stocki
**Gen
B. E. W. C., Austin, Vorris
Access
MUTHAH M(
89, Kasthu
JAF
Phone : 5 4
teith Best compliments of
M. M. Shahul Hameed 8 Bros.
372, 373, 374 Bazaar Street, VA VUNYA.
T'phone : 592 Grams : Hameeds.
595

& Distributors of
ts & Accessories,
st of
uine"
suzu, Track Spare Parts
sories.
TOR STORES
riar Road,
FINA.
Grams : ''Genuine " '
தரமான உணவு வகைகளுக்கு
இன்றே விஜயம் செய்யுங்கள்
நியூசுத்தானந்த பவான் சைவ போசனசாலை
வவுனியா,
Tphone: 595
ஒடர்கள் விஷேசமாக கவனிக்கப்படும்.

Page 169
கணக்காய்வா ளரின் GƏL
SASASSASSMSSASSASSASeSeSSeSSSSSSSSASASASASiL
கணக்க
பகுதி
பொறுப்பு வழிவாய்கள்
கணக்காய்வாளரின் பொறுப்பு, அவர் ஆய்வு செய்த கணக்குகளைத் தொடர்ந்து சாதாரண சட்டத்தின் கீழ் கவனயீனம் என்ற காரணத்தாலும், மற்றும் சட்டங் களின் கீழ் சிவில், குற்றவியல் வழிவாய்களா லும் எழச் செய்யலாம். சாதாரண சட்டத் தின் கீழ் கவனயீனத்திற்கு பொறுப்பு முக வர்-காரகர் என்ற முறையில் கணக்காய வாளர், காரகர் என்று அமர்த்தப்பட்ட வேலையில் நியாயமான திறமையையும் நுட் பத்தையும் காட்ட வேண்டும் என்ற அடிப் படையில் கவனிக்கப்படுவார். எனவே அவர் நியாயமான தரத்தில் தமது கவனத் தைச் செலுத்த வேண்டியவராவர். இதில் வழுவிருப்பின் முகவர், கார கரைப் பொறுப் புள்ளவராக்க முடியும். இவ்வாருண தரம் தொழில் ரீதியில் உள்ள அங்கத்தவர்களின் கால சூழ்நிலைகளில் இருக்கும் தரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்
சட்டத்தின் கீழ் எழும் சிவில் பொறுப்பு கம்பனிச் சட்டத்தின் கீழ், ஓர் கம்பனியைக் கலைக்கும் பொழுது கணக் காய்வாளரும் நம்பிக்கைத் துரோகத்திற்கு அல்லது சட்ட ரீதியற்ற முறையில் ஓர் செயலை ஆற்றியதற்கு குற்றவாளியாகத் தோன் றின், அவரை ஓர் கம்பனி உத்தியோகத் தர் என்ற மு  ைற யி ல் பொறுப்புடைய வராக்கலாம். நீதிமன்றம் இவ்வாறு எழும் விண்ணப்பத்தின் பிரகாரம் அவரது நடத் தையைப் பரிசீலனை செய்யவும், கம்பனியின்

ܝ ܟܖ
எஸ். இராசதுரை
B.Com. (Cey.), A. C. A., A. C. C. A. ாய்வு அத்தியட்சகர் - இலங்கை விமான சேவை"
நேர விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்.
சொத்துக்களுக்கு நட்ட ஈடு செய்யுமாறும் அவரை வற்புறுத்தலாம்.
இவ்வாருண பொறுப்பு ஓர் கம்பனி யைக் கலைக்கும் பொழுதே எழலாம். இருந் தும் இவ்வாறு எழும் பொறுப்பை நீதிம்ன் றம் ஓர் அளவிற்கு மன்னிக்க முடியும். அதற்கு, அவர் பொறுப்புடையவரான போதிலும், அவர் நேர்மையாகவும் நியாய மாகவும் நடந்துள்ளா ரெனவும், இந்தச் சூழ்நிலைகளைக் கவனிக்கும் பொழுது, கவன யீனத்திற்கு அவர் ஓர் அளவிற்கு மன்னிக்க வேண்டியவராயும் இருக்க வேண்டும். இவ் வாறிப்பின் நீதிமன்றம் இதற்கு நிவாரண மளிக்கும்.
குற்றவியல் பொறுப்பு பலவித சூழ் நிலைகளில் எழலாம். முதலாவதாக ஒர் க ண க் காய் வா ள ர் எந்த ஓர் அறிக்கையிலோ, சான்றிதழிலோ, ஐந் தொகையிலோ அல்லது வேறு எந்தப் பத் திரங்களிலோ கணிசமான விபரத்தில் உண் மையற்ற விதத்தில் ஒர் கூற்றை வேண்டு மென்றே அமைப்பாராயின் அவர் குற்ற வியல் பொறுப்பிற்குள்ளாவர். இரண்டா வதாக கம்பனிச் சட்டத்தின் பலவித பிரி வின் கீழ் வேண்டப்படுவதில், கம்பனி உத்தி யோகத்தர்கள் தவறியிருப்பாராயின், அவர்கள் மேல் குற்றங்கள் திணிக்கப்பட லாம். இவ்வாறு திணிக்கப்படுவதற்கு "கம் பனி உத்தியோகத்தர்’ என்று கருதும் சொற் ருெ ட ர் கணக்காய்வாளரையும் சேர்த்துக் கொள்ளுமென சில நீதிமன்றத்

Page 170
கணக்காய்வாளரின் பொறுப்பு
தீர்ப்புக் களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள் CH
மேலும் கணக் காய்வாளர் கம்பனி முன் விவரணத்தில் கபட நோக்குடன் பிழையாகக் கூற்றைத் தயாரித்திருந்தால் அல்லது கம்பனிச் சொத்துக்களைத் துர்ப் பிரயோகம் செய்திருந்தால் அல்லது கம் பனிப் பத்திரங்களே நாசமாக்கியிருந்தால் அல்லது மற்றும் பலவிதத்தில் குற்றம் விளைத் திருந்தால், குற்றவியல் பொறுப்பிற்
குற்பட்டவராவர்.
சட்டத் தீர்ப்புக்கள்
இவ்வாரு ன பொறுப்புக்கள் பலவித தீர்ப்புக்களில் எழுந்திருப்பது, எமக்கு ஆதாரமாகவுள்ளன. அவற்றுள் சில கம் பணிச் சட்டத்தின் கீழ் உள்ள கணக்காய்வி லும், சில தனிப்பட்ட கணக்காய்விலும் எழுந்துள்ளனவாகும். கம்பனிச் சட்டத் துள் எழுந்தவை சட்ட ரீதியானவை. முத லில் இவற்றின் சிலவற்றைக் கவனிப்போம்.
(1) செப்கேட்டிற்கு மாருக வீட்ஸ் எஸ்ரேட் பில்டிங் அன்ட் இன் வெஸ்ட்மெனற் கம் பனி யி ல், (Leeds Estate Building and Investment Co, Vs Shepherd) பணிப்பாளரின் அதிகாரத்திற்கு அப்பாற் பட்ட கொடுக்கல் வாங் கல்களைக் கணக்காய்வாளர் பரி சீலனை செய்து தம்மைத் திருப்தி யடையச் செய்யாவிடின் கவன யீன காரணமாகப் பொறுப்புடை யவராவர். இங்கு ஒர் கம்பனி ஈடு களில் பணம் வட்டிக்குக் கொடுப் பதற்கு நிறுவப்பட்டது. பணிப் பாளரின் ஊதியம் இலாபத்தி லிருந்து பங்கிலாபம் செலுத்தப் பட்ட விகிதத்திற்கேற்ப செலுத் தப்பட வேண்டியுள்ளது. உண்மை யில் கம்பனி வணிகத்தில் ஒரு வரு டத்தைத் தவிர மற்றைய வருடங் களில் இலாபம் பெறவில்லை. கம்
- 14

(ii)
எஸ். இராசதுரை
பணியால், பணிப்பாளர், (tp 5i 33)LO யாளர் கணக்காய்வாளர் ஆகி யோருக்கு எதிராக மூலதனத்தி லிருந்து, பங் கி லா ப மாகவும், பணிப்பாளர் முகாமையாளருக்கு கட்டணங்கள் go. Lj5r prsité,6rir கவும் செலுத்தப்பட்ட தொகைக் குப் பொறுப் புள்ள வ ரா க்கு வதற்கு வழக்குத் தொடரப்பட் டுள்ளது. ஐந்தொகைகள் பிழை யான வழியில் கொண்டு செல்லக் கூடியதாகவும், பங்கிலாபத்தைப் பிரகடனம் செய்யக் கூடியவிதத் தில் புனர் அம்சங்களுடன் Stitsr ரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறுள்ள கணக்குகளை கணக்காய்வாளர் ஆய்வு செய்துள்ளார். ஆணுல் கம் பணியின் அமைப்பு அகவிதியைக் கணக்காய்வாளருக்குக் கொடுக் காததால், அவ்விதிகளை அவர் கவ னிக்க முடியவில்லை. பணிப்பாளர் கள் பங்கிலாபங்களை மூலதனத்தி லிருந்து செலுத்தப்பட்டதையோ அல்லது ஐந்தொகைகள் பிழை այfr && காட்டப்பட்டதையோ அறியவில்லை. இவ்வாறுள்ள குழ் நிலையில் நீதிமன்றத் தீர்ப்பின் பொழுது கணக் காய் வா ள ர் கடமை சாதாரண ஆய்வில் மட் டும் தங்காது, கம்பனியின் விவகார நிலை உண்மையாவும் சரியாகவும் பிரதிநிதித்துவம் வகித்துள்ள தென்பதைக் கவனிக்க வேண்டு மென வலியுறுத்தப்பட்டது அமைப்பு அகவிதியைக் காணுதது ஒரு சாட்டாக ஏற்கக் கூடியதல்ல எனவும் உரைக்கப்பட்டுள்ளது.
இலண்டன் அன்ட் ஜெனரல் பாங் at 657 so 6.2Lu 556 (In Re-London and General Bank) giGs stood சீராக வரையப்படாதிருக்கும் பொழுது, ஒர் கணக்காய்வாளர் அந்த விடய 2- soir son un 5 &nt

Page 171
கணக்காய்வாளரின் பொறுப்பு
அறிக்கையிடாதிருப்பின், அவர் பொறுப்புடையவராவா ரென த் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உண்மையில் பணங்களை வாடிக்கைக் காருக்குக் கடனுகக் குறைந்த சொத்துப் பொறுப்புக் களுடன் வழங்கி, அதனுல் வர வேண்டிய வட்டிகளை இலாப நட் டக் கணக்கிற்கு வருமானம்ாகக் காட்டி பங்கிலாபங்கள் செலுத் தப்பட்டன. உண்மையில் அவ் வாருன வட்டிகள் செலுத்தப்பட வில்லை. அவற்றிற்கு அறவிட முடி யாக் கடன்களாக போதிய ஒதுக் கம் செய்யப்பட்டிருந்தால் இலாப நட்டக் கணக்கு இலாபமில்லாது நட்டத்தைக் காட்டியிருக்கும். நீதிமன்றம், கனக் காய்வாளர் இடர் சூழ்நிலையை தெ ரி ந் து கொண்டும் பங்காளருக்கு இவ் வுண் மைகளை அறிக்கையிடாத தால் அவர் இப்பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்கு பொறுப் புள்ளவரெனத் தீர்ப்பு அளித்தது. (i) மற்றும் பல சந்தர்ப்பங்களில் கையிருப்பு, சில்லறைக் காசு, முத லீடுகள், பொறுப்புக்கள், ஆகிய வற்றை மெய்மையா யாது தவறிய தாலும், அறவிட முடியாக் கடன் களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை பற்ருதென்பதை அறிக்கையிடாது தவறியதற்கும் அவர் பொறுப் புள்ளவரெனப் பல வழக்குத் தீர்ப்புக்களிலும் கொள்ளப்பட் டுள்ளது.
மேலும் தனிக் கணக்காய்வுகளில் கணக் காய்வாளர்கள் கணக்கியல் வேலையில் அமர்த்தப்பட்டு, அவ்வித வேலை ஒப்பந்தங் கள் தெளிவான விதத்தில் வரையறுக் கப் படாததால் அவ்வித கணக்குகளில் எழுந்த மோசடிகளால் ஏற்பட்ட நட்டங்களுக்குக் கனக் காய்வாளர்களும் பொறுப்புள்ள வராக நீதிமன்றம் சில வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது.

எஸ். இராசதுரை
மேலே கூறப்பட்ட விபரங்கள் யாவும் சிவில் பொறுப்பிலானவை. ஆணுல் கில் சான் அன்ட் மோர்லாண்டிற்கு மாருக றெக்ஸ் (Rex. Vs Kylsant and morland) Sir Gör smo வழக்கில் குற்றவியல் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட ருேயல் மெயில் ஸ்டீம் L 15 g,ö– † 10 Lossflussöl (Royal mail Steam Packet Co. Ltd.) 53a sug5ág5Lb 5637 s sír íj வாளருக்கும் மாருக எடுக்கப்பட்டுள்ளது. இதில் கம்பனித் தலைவர் பங்காளருக்கு பிழையான வருடாந்த அறிக்கைகளை, அவர்களை ஏமாற்றும் முகமாக வழங்கிய தாகவும்; அத்துடன் கனக் காய்வாளர் அவ்வாறு வழங்கிய அறிக்கைகளுக்கு உடந் தையாக விருந்ததாகவும் சாட்டப்பட்டுள் ளது. இருந்தும், இந்தச் சாட்ட அவர்கள் குற்றவாளிகளெனக் காணப்பட வில்லை. ஆ ஞ) ல், த லை வ ர் மேலும் (Prospectus) முன் விவரணத்தில் பிழை யான தகவலை அறிந்துகொண்டும் கொடுத் துள்ளார் என்பதற்குக் குற்றவாளியாகக் கருதப்பட்டார். இந்த வழக்கில் தோன் றியது யாதெனில், உண்மையாகப் பல வரு டங்களில் ருேயல் மெயில் கம்பனி வியா பார நட்டங்களை அடைந்துள்ளது. ஆல்ை பிரசுரிக்கப்பட்ட கணக்குகள் பங்கிலாப மாகப் பிரிக்கக்கூடிய விதத்தில் கணிசமான இலாபங்களைக் காட்டியுள்ளன. இந்த நிலை பெருமளவில் முன்சென்ற வருடங்களில் உருவாக்கப்பட்ட காப்பொதுக்கங்கள் மற் றும் வரி ஒதுக்கங்கள் ஆகியவ்ற்றை, உரு வாக்கப்பட்ட காரணத்திற்கு மேல்வரும் வருடங்களிற்கு தேவையில்லையெனக் கண்டு பிரயோசனப்படுத்திக் கொண்டுவரப்பட் டுள்ளது
:கரில்
உண்மையில், இந்தக் காப்பொதுக்கங் கள் மறைமுகக் காப்பொதுக்கங்களாகவுள் ளன. அவை கணக்குகளில் காட்டப்பட வில்லை. கணக்குகளில் உண்மையில் சுட் டாக நின்ற சொற்ஜெடர்கள் “வரிக்காப் பொதுக்கங்களுக்கு திருத்தம் செய்தபிள் இலாபங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன." என்பதே. இது இலாப நட்டக் கணக்கில்
سے 47]

Page 172
கணக்காய்வாளரின் பொறுப்பு
ஒரே அம்சமாகக் காட்டப்பட்டுள்ளது. 1921-27ஆம் வருட காலங்களில் கம்பணி யால் சுமார் 8 5,000,000 இலாப நட்டக் கணக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் விளைவு பங்காளரை கம்பனி வியா பாரத்தில் உண்மையில் நட்டமடையவும், இலாபமாகவுள்ளதென்பதை நம்பவைப்ப தற்குமாகவே. இந்த விடயத்தில் கணக் காய்வாளர் ஒத்தாசையாகவிருந்தாரெனக் சாட்டப்பட்டுள்ளார். இருந்தும் இறுதியில் இச்சாட்டுதலிலிருந்து மிகப் பிரயத்தனத் துடன் விலகியுள்ளார்.
மூன்றம் பகுதியினருக்குப் பொறுப்புடையவ ராதல்;
இவ்வாறு எழுந்துள்ள வழக்குத் தீர்ப் புக்கள் அனைத்தும் கணக்காய்வாளரின் ஒப்பந்தத்துடன் எழுந்துள்ளன. அவ்வா ருன ஒப்பந்தங்களுக்கு அவர் ஒரு பகுதி யினராவர். இருந்தும் ஒப்பந்தத்துடன் சம்பந்தப்படாத பகுதியினர்க்கும் கணக் காய்வாளர் பொறுப்புடையவராவாரா? என்பது சில வழக்குத் தீர்ப்புக் களில் ஆரா யப்பட்டுள்ளது. இவ்வாருன பொறுப்பு சாதாரண சட்டத்தின் கீழ் மூன்ரும் ஆட் களின் சிவில் பொறுப்பாகும். உண்மையில் மூன்ரும் பகுதியினர் தாம் அடைந்துள்ள நட்டங்களை, ஒப்பந்தங்கள் இல்லாதபோ திலும், ஈடுசெய்யுமாறு இருக்கும் சட்டப் பரிகாரங்கள் பல வழக்குத் தீர்ப்புக்களி லுள்ளன. உதாரணமாக கிறேன் கிறிஸ் மஸ் அன்ட் கம்பெனிக்கு மாரு க கான்ட் sysi (Candler VS Crane Christmas and C( 1951) என்ற வழக்கில் கணக்காய்வா ளரால் ஆய்வு செய்யப்பட்ட கணக்குகளை நம்பி மூன்ரும் பகுதியினர் கடன் வசதி க்ளைக் கம்பனிக்குக் கொடுத்து நட்டப்பட் டதால் இப்பகுதியினருக்கு நட்டங்களிற்கு கனக் காய்வாளர் சிவில் பொறுப்பு ஏற் பாரா என்னும் விஞ கவனிக்கப்பட்டது. இந்த விடயத்தில் உண்மையில் முகாமைப் பணிப்பாளர், கணக்காய்வுப் பயிற்சியிலி ருக்கும் நிறுவனமொன்றை கம்பனியின்
- 148

எஸ். இராசதுரை
கணக்குகளைத் தயாரிக்குமாறு வேண்டியுள் ளார். வரையப்பட்ட கணக்குகள் இந்த வழக்கிலுள்ள வழக்காளிக்கு கணக்காய் வாளரின் இலிகிதருக்கு முன்னுல் காட்டப் பட்டு, அவர் அதை நம்பி அந்தக் கம்ப னியில் பங்குகளுக்கு முதலீடு செய்தார். ஆனல் அவ்வாறு தயாரிக்கப்பட்ட கணக் குகள் மோசடியில்லாது கவனயீனமாகத் தயாரிக்கப்பட்டன. அக்கம்பனி கலைக்கப் படும் பொழுது, வழக்காளி கம்பனியின் பங்குகளில் போடப்பட்ட பணத்தை இழந் தார். இதன் பிரகாரம் வழக்காளி, எதி ரியிடமிருந்து நட்டங்களை ஈடுசெய்ய அல் லது கம்பனியின் பங்காளரென அவருக்கு சீரான தகவல்களைக் கணக்காய்வாளர் அளிக்காததற்கும் கம்பனியின் கணக்காய் வாளர் கடமையில் தவறியதற்கும் வழக் குத் தொடர்ந்தார். நீதிமன்றம் கணக் காய்வாளரின் கவனயீனத்திற்கு வழக்காளி எதிரிக்குமாருக நடவடிக்கை எடுப்பது செல்லுபடியாகாது எனக் கொண்டுள்ளது. காரணம், இவ்விரு பகுதியினருக்கும் ஒப் பந்தத்தொடர்பு இல்ல் என்பதனலேயாம்.
இதைத் தொடர்ந்தும் பல தீர்ப்புக் கள் மூன்ரும் பகுதியினர் பொறுப்பில் எழுந்துள்ளன.முக்கியம்ாக 1963ஆம் ஆண் டில் எழுந்த கெல்லர் அன்ட் பாட்னே சுக்கு மாருக கெட்லி பேண் அன் கோ (Hedley Byrne & Co. Vs Heller and Partners 1963) என்ற வழக்கில் முன் கூறிய கான்ட் லர் வழக்கு பிழையாகத் தீாமானிக்கப் பட்டுள்ளதென பிரபுக்கள் சபை கருத்துக் கொண்டுள்ளது. கெட்லிபேண் எ ன் ற வழக்கு கணக்காய்வாளரைத் தொடர வில்லை. அது உண்மையில் வங்கியால் ஓர் வாடிக்கைக் காரனின் நிதித் தராதரத் தையொட்டிய சான்றிதழ் கவனயீனமாக வழங்கப்பட்டதைச் சார்ந்தது. இந்தத் தீர்ப்பின் விளைவால், மூன்றம் பகுதியினர் கணக்குகளிலுள்ள பிழையான கூற்றுக்களை நம்பி அடைந்த நட்டங்களை ஈடுசெய்வு தற்கு எழும் பொறுப்பிலிருந்து கணக்காட் வாளரும் தவற முடியாதெனக் கருதப்பட் டுள்ளது.

Page 173
கணக்காய்வாளரின் பொறுப்பு
இதன் பின் எழுந்துள்ள ஐயப்பாட்டு நிலையால் கணக்காய்வாளரைப் பாதிக்கும் பொறுப்புப் பரவியல் மிகைப்பதால் பட் டயக் கணக்காய்வாளர் நிறுவனம் தத்துவ நிபுணர்களின் அபிப்பிராயத்தைப் பெற் றுள்ளது. இந்த அபிப்பிராயம் நியூயோக் கில் தீர்மானித்த ரச்சே நிவண் அன்ட் கோவிற்கு மாருக அல்ரா மேயர்ஸ் கோர்ப் U Gpa 67 Ultramares Corporation Vs Touche Niven and Co.) 67 si, p 5till Sait அடிப்படையிலுள்ளதாகும். இந்த வழக் கைத் தீர்மானிக்கும்பொழுது, கணக் காய் வாளரை எண்ணமற்ற பிழைகளுக்கு, தவ. றுதல்களுக்கு அல்லது களவு மோசடிகளைக் கண்டுபிடியாததற்கு "கணிக்க முடியாத தொகையில், கணிக்கமுடியாத காலவரை யில், கணிக்கமுடியாத பகுதியினருக்கு அல்லது வகுப்பினருக்கு’ பொறுப்புடை யவராக வைத்துக் கொள்வது அபாயகர மானதெனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பிரதம நீதிபதி, பிழைகளுக்குத் தொடர்ந்து வரும் பொறுப்பு உடன்படிக்கையால் எல் லைப்படுத்தப்பட்டதெனவும், ஒப்பந்தம் செய்தோரால்தான் அவை வலியுறுத்தப் படவேண்மெனவும் மேலும் கூறியுள்ளார்.
இதன் பிரகாரம் மூன்ரும் பகுதியின ரால் நம்பிய பிழையான கூற்றுக்களால் நிகழக்கூடிய பொறுப்பின் பரவியல் கணி சமான அளவிற்குக் குறுக்கிக் கொள்ளப் பட்டுள்ளது. எனவே சுருக்கமாக நிலைமை தற்பொழுது பின்வரும் விதத்தில் தோற் றம் அமைகின்றது
G ‘உண்மையைக் கடைப்பிடித்து
ஆனல் உண்மையைக் கடைப்பி
இந்த உலகினில் இனிது வாழல!

எஸ். இராசதுரை
ஒருவர் ஒப்பந்தக் கடமையில்லாது இன்னெருவருக்குத் தகவலைக் கொடுத்து அந்தச் சூழ்நிலையில் அத்தகவலைக் கொடுப் பவரின் திறமையையோ அல்லது தீர்ப் பையோ நம்பியிருந்தால், அவர் அதில் போதிய திறமையையும் கவனத்தையும் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்கு ஒர் சட்ட ரீதியான கடம்ை தங்குகின்றது. அத்துடன் அவர் இவ்வாறு செய்யத்தவறி அத்தகவலை நம்பிப் பெற்றவர் அதஞல் நிதி நட்டமடைந்தால் தகவலைக் கொடுப் பவர் தகவல் கொடுக்கும்பொழுது தமது பொறுப்பைத் தெளிவாகத் தவிர்த்துக் கொள்ளாவிடில், அவர் பொறுப்புள்ளவ Η Πτολμίί.
கணக்காய்வாளர் பொறுப்பு பலவித வழிவாய்களால் எழுகின்றன. இவைகள் காலத்துக்கேற்பதாயும் சூழ்நிலைக்கேற்ப தாயும் அமையும். உண்மையில் கம்பணிப் பணிப்பாளர்களே முதலில் கம்பனியின் கணக்குகளிற்கும், நிதிக் கட்டுப்பாட்டிற் கும் பொறுப்புடையவராவர். பணிப்பா ளர் பங்காளருக்கு சமர்ப்பித்த கணக்குக ளில் தொழில் ரீதியான அபிப்பிராயத்தை அமைத்துக் கூறுவதே உண்மையில் கணக் காய்வாளர் கடமையாகும், எனவே உகந்த முகாமைக் கட்டுப்பாட்டிற்குப் பதிலாக கணக் காய்வை வைத்துக்கொள்ள முடி யாது. இந்த அடிப்படையிலே கணக்காய் வாளர் பொறுப்புக்கள் கவனிக்கப்படு கின்றன.
இந்த உலகினில் இனிது வாழமுடியாது. டித்து வாழ்வதாக நடிப்பவன்தான்
Τι ή - சாக்ரடீஸ்,

Page 174
Space Λ
V
Š. ŠFAVARA
Beedi Manufacturers No. 15, VVoife
COLOM
Ölíth the est
frc
RAJASINGHAM
(General Hardware Merchan
Manufacturers of .
Galvanized Cranck Bolts, Hook
Iron Gates; Wheel B
Office :
23, Ouarry Road, Colombo Telephone : 35 68 0
- Worksite :
414/10A. K. Cyril C. Perera

nated وكل
NAARME & GC) : & Tobacco Sellers. ndhal Street,
i
BO.- 13.
Tel : 3 1 9 7 4
(6amplíments
NDUSTRS
S 8 Government Suppliers)
Bolts Nuts, Washers, G. I. Tanks, arrows, Buckets etc.
i
12:
Mavatha, Colombo-13.
---

Page 175
நிர்மாண வேலைகளுக்கு
நிதித் திட்டமிடுதலும் கிர
iSiqSMASqSMASLSLMSMASAJSLAqS ASLqiLSSSSASASSSLuS AAJSiqSASAJSiSAASSi
Dip. in. பதில் பணி பகுதிநேர
கட்டுவேலை முகவர் நிலையங்கள் தமது எதிர் காலத்தினை முன்கூட்டியே திட்டமிடு தல் அவசியம். இதை வரவு செலவுத் திட் டங்கள் மூலமே செய்யக் கூடியதாகவிருக் கும். வரவு செலவுத் திட்டங்களைத் திரட்டு வதணுல், கட்டுவேலை முகவர் நிலையங்கள் அந்த வேலையை நிறைவேற்றுவதற்கு எவ் வளவு மூலவளங்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்த பின்னர், அதன் திட்டங்களுக்கு விலை குறிப்பதில் ஈடுபடக் கூடியதாயிருக் கும். அந்த முகவர் நிலையம் எவ்வளவு மூல தனம் தேவை என்பதை அறிந்து இத்தக வலை வைத்துக் கொண்டு வ ர் த் த க ப் போட்டி, கோரிக்கை ஆகியவற்றை கவனத் தில் எடுத்து தனது முயற்சிகளை விரிவாக் கவோ அல்லது சுருக்கவோ முடியும்.
செயல்திட்ட வரவு செலவுத் திட்டங்கள் மூலம் நிதித்திட்டமிடல்
எவ்வளவு மூ ல த ண ம் தேவைப்பட இருக்கின்றதென்றும், அது எப்பொழுது தேவைப்படுகின்றதென்றும் முன்னராகவே மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மூல தனத்தேவையை நிச்சயப்படுத்துவதற்குக் கட்டிட முகவர் நிலையம் அத்திட்டத்துக் கான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை வரைந்து, அதிலிருந்து குறிப்பிடப்பட்ட கால எல் லைக்குள் ஏற்படக் கூடிய செலவின் வீதத் தையும் எதிர்பார்க்கும் வருமானத்தின் வீதத்தையும் காண வேண்டும்.
- 1

யக் கட்டுப்பாடும்
سسسسس~لا كسسسسس~لا سح٦ سمسسسس~۷ سمسسجلاسمسسسسسس
டி. ரி. இராஜரட்னம்
\ccy. Dip. P. F. M., F. C. M. A. (Lond.)
|ப்பாளர் (நிதி) - வீடமைப்பு நிர்மாண அமைச்சு
விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்,
கீழ்க் காணப்படுவனவற்றுக்கு வ ர வு செலவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டாக வேண்டும்,
(அ) உப யோ கி க் கப்படவிருக்கும் தொழில்
(ஆ) பொருட் தேவைகள் (இ) பொறி வாடகை
(ஈ) தாபனத்திற்கான மேலதிகச் செலவுகள்.
மேலே சொல்லப்பட்ட வரவு செலவுத் திட்டங்களை நிலை நாட்டுவதால், வைக்கப் பட்ட இலக்கின அடைய முடியும். இது வரவு செலவுத் திட்டத்தைக் கட்டுப்படுத் தும் முறைமை மூலம் பெறலாம். வ ர வு செலவுத் திட்டக் கட்டுப்பாடு தொடர்ச்சி யாக அவதானிக்கப்படல் வேண்டும். திட்டமிடப்பட்டதுடன் e Gior Sol fou u f'T GOT பெறுகையுடன் ஒப்பிடுகையால், திட்டத் திலிருந்து ஏதேனும் மாற்றங்கள் உண்டாகு வதை அறிவுறுத்தியதும் மறுபடி விடயங் களை வழியில் கொண்டுவருவதற்கு அல்லது திட்டத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பேற்படும்,
அத்தியாவசிய வரவு செலவுத் திட்டங் களை நிறுவி நேர அ ட் ட வணை க் குத் தொடர்புபடுத்துவதால், ஒரு முழுமை யான பெளதிக, நிதி நிகழ்ச்சித் திட்டம்
51 -

Page 176
நிர்மாண வேலைகளுக்கு.
வ  ைர ய ப் ப ட க் கூடியதாகவிருக்கும் பெளதிக, நிதி நிகழ்ச்சித் திட்டத்தையும், திட்டத்தின் கால எல்லையையும், திட்டத் தைச் செயற்படுத்துவதில் எந்தக் கட்டத் திலும் மதிப்பிடப்பட்ட செலவையும், காசு பெறுகைகளும், திட்டத்தைச் செயற்படுத்
A.
等°C。3i
அ-இ = நிதித்தேவை
அ-ஆ = மதிப்பிடப்பட்ட செலவில் செய்யப்பட்ட உண்மையான வே லை யி ன் பெறுமதி.
ஆ-இ = பொருட்கள், பொறி த் தொகுதியின் வாடகை முதலியவற்றின்
திட்டமிடப்பட்ட கொள்வனவுகளின்
பெறும்தி,
 

டி. ரி. இராஜரட்னம்
துவதில் எந்தக் கட்டத்திலுமுள்ள நிதித் தேவையும்,எந்த நேரத்திலும் செய்யப்பட்ட வேலையின் பெறுமதியையும் காட்டுவதற்கு அமைய நிறைவேற்றுக் கோட்டுப் படத் தில் இது எடுத்துக் காட்டப்படக் கூடும் , அத்தகைய கோட்டுப் படத்தின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
古一‘可 રહીને bama جنةته
கட்டிட முயற்சிகளின் கட்டுப்பாடு
கட்டிட மு ய ர் சி க ள் பின்வரும் தொழிற்பாடுகளின் தெ (ா ட ர் ச் சி யி ல் தொழிற்பாட்டுக் கடம்ைகளாகப் பகுக்கப்
பட்டுள்ளன,
(1) கட்டும் இ ட ம் கிடைப்பதும், வேலை முடியும் தன்மையைப் படித்தலும்
(2) வரை படங்களை வரைதல்.

Page 177
(3) கட்டடக்கலை, நிர்மாண அமைப்பு தண்ணிர்ச் சேவைகள், சாக்கடை ஆகிய எல்லா வரை படங்களையும் முடிவாக்குதல்.
(4) கணியப்பட்டியலைமுடிவாக்குதல்,
(5) கட்டு வேலைக் காலத்தை மதிப் பிடுதல் - தொடக்கத் தேதியைத் தீர் மானித்தல்;
(6) உறு தி யா ன மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
(7) மதிப்பீட்டினை அங்கீகரித்தல்.
(8) தற்காலிகமான வேலைக் கொட் டில்கள், அலுவலகங்கள், வேலிகள் இடல், உபகரணம் , சாதனங்களைப் பெறுதல், காவற்காரர்களை நியமித்தல் போன்ற தொடக்கத்தில் இடம் அமைப்புக்குக் கவ னம் செலுத்துதல்,
(9) செயற்படுத்தும் திட்டங்களைத் தயாரித்தல், தடைக் கோட்டுப்படங்களைத் தயாரித்தல்,
(10) பொருட்கள், உபகரணங்கள், சாதனங்கள் முதலியவற்றை வழங்குதல்.
(11) வரைப்படங்கள், விளக்கங்கள், நேர அட்டவணைகளுக்கு அமைய, கட்டு வேலைக்கான சரியான இடங்களை அமைத்த அலும் இயக்குதலும்.
(12) செலவுக்கு அமைய வேலையாட் களையும், கட்டிடப் பொருட்களையும் கட்டுப் படுத்தல்,
(13) தொழில், பொருட்கள் முதலிய வற்றின் நாட் பதிவேடுகளைப் பேணுதல்.
(14) கையிருப்புப் புத்தகங்களைப் பேணு தல்.
(15) வேலையின் பூர்த்தியாக்கப்பட்ட விடயங்களை அளவிடுதல்,
(16) பொருட்கள், உண்  ைம ப ா ன் அளவுகளின்படி வேலையின் உண்மையான
- 15

டி. ரி. இராஜரட்னம்
அளவின் மீது வேலை முறிவு முதலியவற்றை அளவிடுதல், பதிவு செய்தல்,
(17) நாள் தோறும் பெ ா ரு ள் கையிருப்பைப் பெறுதல்.
(18) மின்சார இடுதல் கள் மீது நட வடிக்கை தொடங்கிப் பின் தொடருதல்.
(19) மாதந்தோறும் தடைக் கோட் டுப் படங்களைத் தயாரித்தல்,
(20) அதே மாதத்தில் நிறைவேற்று வதற்குத் திட்டமிடப்பட்ட வேலையின் கூற் றுக்களைத் தயாரித்தல்.
(21) மதிப்பிடப்பட்ட தொகைக் கு மேலாகக் கூடுதலான செலவில் அறிக்கை யைத் தயாரித்தல்
(22) வேலை மு டி த் த ல் அறிக்கை களைத் தயாரித்தல்,
(23) வேலை முடிப்பதலால் இடத்துப் பதிவேடுகளையும் சாதனங்களையும் கையளித் தல்.
(24) எ ல் ல r உபகரணங்களையும் மே ல தி க பொருட்களையும் திருப்பிக் கொடுத்தல்.
மேலே குறிப்பிட்ட தொழிற்பாட்டுக் கடமைகளைக் கண்டறிந்த பின்னர், ஒரு நிலையுள்ள நிகழ்ச்சித் திட்டம், முன் னேற்றக் கோட்டுப்படம் ஆகியன தயாரிக்கப்பட வேண்டும். இந்தக் கோட்டுப்படம் ஒவ்வொரு முயற்சிக் குள்ளும் எதிர் பார்க்கப்பட்ட பெளதிக விளைவையும், ஒவ்வொரு முயற்சியினதும் மதிப்பிடப்பட்ட செலவையும் திட்டமிடப் பட்ட விளைவை அடைவதற்குத் தொழில், பொருட்கள், பொறிவாடகை முதலியவற் றின் தேவைகளையும் காட்டுகின்றது. நிலை யான நிகழ்ச்சித் திட்டத்தினதும் முன் னேற்றக் கோட்டுப் படத்தினதும் உருவம் கீழே காட்டப்பட்டுள்ளது,
இப்படம் ஒ வ் வொ ரு முயற்சிக்கும் தயாரிக்கப்பட வேண்டும்.
3 -

Page 178
喻949gosigurilo)
|||||| ||
• | | | ||│ │ │ — !| |弓弩“德:写 :h。 ||· |qıú11 reĝoệle | | | | | |1@@gogiquoo o ===|-|-giúil fogosto · || 1飄麟 ||业qøgsfioriæ · {||qoỹipals, |! |het riņī£ qino · * * * * • •喻; ;Ɔ8Vー 々 gooooersti į įsijui“”二gieg针egoneotsusen · Igorweg) · sosoip.e 1, "I'm as a w o {}(-r〜う}} 〜J J・J { J 〜t - 、* ~, : TC, km2%, , "나: ~~~”,:3村: 니니다~, 「야구 - ?? ─?-1····):1-11-1 :==仁仁大仁)仁仁seasoɔ ' ondoj-こt}< ---------------------- –ł sw us før qi fûtúqílasgoigs (f)ailwɔ(gún ritg)くış»Unsurgrug)Lġġ !! styகுர்ோரி) giới)-rag oặego fiosgi mbi lawrwg)-ri irisaeg)fotos@s)rutosoɛ ɖogĎuris,w)itou,9 togs for
qıfù-ırı sı9), uog)oúqí 1991godf)qi (fi) 17@ §§§đfiosos109 sinas? g
 

o usumaŋ wɔ ɑɑmɑwɑ,5
= TI" ()
yron oặgòg muń@ := q
1ĝo údo?áılsıęsgn = {
199±gig) = W
1çseșGÉ = O |||||||||||* z I ||||* I I
|||· |||||() I |||||||||||"6 |||||||*8 | | | || |||- |||-| |Z

Page 179
நிர்மாண வேலைகளுக்கு.
நிகழ்ச்சித் திட்ட முன்னேற்றக் கோ ரிக்கப்பட்டவுடனே, திட்டமிடப்பட்ட முய யில் தொழில், பொருட்கள், பொறித் தெ1 நடவடிக்கையாகும். இந்தக் கட்டுப்பாடு ( வாடகை, கட்டுப்பாட்டுத் தாள்கள் நாள்ே தப்படுகின்றது. இதன் விபரம் பின்வருமா
தொழில் கட்டுப்பா
முயற்சி இல .
முயற்சியின் சுருக்கமான விவரணம்:
தொழில் தரம்
தேதி மேசன் , தச்சன் நிே
A B A B A
தை 1
2
3
4.
5
6
7
8
A = நாளில் ஈடுபட்டவர்களின் எண் எ B = நாள் முடிவில் மதிப்பீடுகளில் கி
- 1

டி. ரி. இராஜரட்னம்
ட்டுப் படம் ஒவ்வொரு முயற்சிக்கும் தயா }சிகள் ஒவ்வொன்றுக்கும் நாள் அடிப்படை "குதியின் நுகர்வைக் கட்டுப்படுத்தல் அடுத்த தொழில், பொருட்கள், பொறித் தொகுதி தாறும் பதிவு செய்வதன் மூலம் செயற்படுத் - -: עש.
ட்டின் நாட்பதிவு
காலம் :
--- ஆள்-நாள்
ழாய் திறகமயற்ற த்துபவர் மின்சாரக்காரன் தொழிலாளர்
B A B A. B
aரிக்கை.
டைக்கப்பெற்ற மீதி.
55 -

Page 180
நிர்மாண வேலைகளுக்கு .
பொருட் கட்டுப்பா
முயற்சி இல :
முயற்சியின் சுருக்க விவரணம் :
தேதி பொருட்களி சிமெந்து சுண்ணும்பு செங்க x Y X Y. х
தை ! 2 3 4 5
6
-
X = அந்த நாளுக்கு உபயோகப்படுத் Y = நாட் கடைசியில் மதிப்பீட்டில்
பொறி மணித்தியாலக்
முயற்சி இல .
முயற்சியின் சுருக்க விவரணம் :
மணித்தியாலங்கனி தேதி LSLSLSSSLSSLLSLSLLSLLSLLAASLLALSLSLSqLLSLSqS SqSqSLLLL SLSLSLSSLLLLLL
பொறி 1 GALI T5, III பொறி
Po Tp op
தை 1 2
3.
4. 5 6
P = அந்த நாளிற் செய்யப்பட்ட மணி () = நாளின் முடிவில் மதிப்பீடுகளில் கி
}15 س

டி, ரி. இராஜரட்ணம்
ட்டின் நாட்பதிவு
முயற்சியின் காலம் :
க் தப்பட்ட அளவு. கிடைக்கத்தக்க மீதி அளவு.
கட்டுப்பாடு-நாட்பதிவு
முயற்சியின் காலம் :
ல் உபயோகப்படுத்தப்பட்ட பொறி
I பொறி IV .
Ο P Q
த்தியாலங்களின் எண்ணிக்கை
டைக்கக்கூடிய மீதி.
5 -

Page 181
with Beat comptii
Анат
:
K. A.
55, 3rd CRO
COLOM
The
A
General Hard W
109, Messen Colomb
Tel : 95 957

ܝܕܝܥ- •
-۔۔۔۔۔۔۔۔۔
tentø.
RAUFF
SS STREET,
BO.-1.
2 Best Wishes
from
STORES
vare MerChant
ger Street, O-12.

Page 182
ASAeSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSSMSSSLSSSqqSLLSMSqLSqSLLLLS LALSLMASeSLSLSLSLSLS SSSLSLSSqSLSALMLSeASLLALSLS SSLLLLLLSS
رکرر) کر کZر)
SHREE THM{
239, K. K.
JAF
SMSLMLASLSSSLSSSMSSSLSSSMSSSMMLSJSLSLSLSLSLSLSLSLSMLSSLSLSALSSASSSLSeeSSLSLS SASLLLLLLM LSSLSLSLSLS
Zith the 3es
Ο
SWA (CD)
roprietor:
Dunagaha.
3 2 7 9

ربربر زبر// ک/رج
2
)THARA WILAS
S. ROAD, FNA.
ASMLMLASLSLSSLSLMLSSSMMLMMSqLMSMLSSA LLLLLLLLSMMLLSLLLSMLSSSqSLMLMLSLSLMSSSLASSSAASLSSLSLMSLSMLMLSSLASLLASLSLSL SAMMMSSLSLMSMMMSASASLSSASSMLMLMASMSASAS AAAAAALSLSLSASSLLLLSAAALSLSLSASSLLSASSASSASSASSASLSSASLSSASAAAS
f Compliments 尸
& FHBERIE
S.
Office :-
15, Wolfendha Street, Colombo-l3.

Page 183
பிரதானமாக மாணவர்களுக்கானது.
கிரயக்கணக்குகளையும்
SiS S SiS S SiSiSiSSSTS SLiiSiiiSSS i SiSiS
བྱ། །
இணங்கச்
.........-
Dip, in. பதில் பணி பகுதிநேர
நிதிக்கணக்கு முறையால் பெற்ற முடி வுக்கும் கிரயக்கணக்கு முறையால் பெற்ற முடிவுக்கும் இணக்கம் காண்பது அவசியம்.
இவ்விரு கணக்குமுறைகளிலும் உடன் பாடாக பொதுவாக உள்ளவிடயங்கள் பின் வருவனவாகும் :-
(அ) இருப்புப் பொருள்கள் கொள்ளல். (ஆ) விசேஷ தொழில்களுக்குரிய கொள்
ளல்.
(இ) நேர்க் கூலிகள் (ஈ) மறைமுகக் கூலிகள் (உ) மறைமுகச் செலவுகள் (ஊ) விற்பனைகள்.
கிரயக் கணக்குகளுக்கும் நிதிக் கணக்கு களுக்கும் உடன்பாடற்ற விடயங்களாவன பின்வருவனவாகும்:-
(அ) இருப்புப் பொருள்கள், புத்துருவ்ா கும்வேலை, முடிந்த பண்டங்கள் ஆகி யவற்றின் கையிருப்புப் பெறுமதி. நிதிக்கணக்கில் இவற்றின் பெறுமதி கிரயக்கணக்கில் உள்ள பெறுமானத் திலும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காணப்படும்.
15

நிதிக்கணக்குகளையும்
*துச
டி. ரி. இராஜரட்னம் Accy, Dip. P. F. M., F. C. M. A. (Lond.) பாளர் (நிதி) - வீடமைப்பு நிர்மாண அமைச்சு. விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்,
(ஆ) நிதிக்கணக்கில் மாத்திரம் காணப்
படும் விடயங்கள் பல உள. அவை
10.
Il II .
2.
3.
14.
15.
வருமானவரி
இலாபவரி
இலாப ஒதுக்கீடு
பங்கிலாபம் பூர்வாங்கச் செலவுகள் பதிவ ழிப்பு. தர்மத்துக்கு வழங்கும் நன் கொடை மிகையான தேய்மானம் அசாதாரனமான ந பட் ட க்
கடன் வட்டிவரவும், பங்கிலாப வர
வும்.
வாடகை வரவு முதலீட்டு விற்பனையால் அடை யும் இலாப நட்டம் நிலையான சொத்துக்கள் விற்ப தால் உண்டாகும் இலாப நட்டம் கடன் வட்டி, மேலதிகப்பற்று வட்டி
வழக்கிழப்பு
மேலதிகமான சட்டச் செலவு

Page 184
கிரயக்கணக்குகளையும்.
(இ) சொந்தமாக வளவு இருப்பின் வாட கைக்குப்பதிலாக அறவிடும் செலவு கிரயக் கணக்கில் மாத்திரம் காணப் படும்.
ஆகவே, கிரயக்கணக்குகளையும் நிதிக் கணக்குகளையும் இணங்கச் செய்வதற்கு மேலே குறிப்பிட்டவற்றை கவனத்திற்கெ டுக்கவேண்டும்.
இலாப நட்டக்கணக்கு
e5UT ரூபா ஆரம்பக் கையிருப்பு 540,000 கொள்ளல் 150,000
690,000 முடிவுக் கையிருப்பு 140,000
550,000 நேர்க் கூலி 45,000 தொழிற்சாலை மேலதிகச் செலவு 40,000 மொத்த இலாபம் 115,000
750,000
நிர்வாகச் செலவு 20,000 விற்பனைச் செலவு 46,000 தேறிய இலாபம் 50,000 116,000
கிரயக் கணக்குகளின் பதிவேட்டின்படி பின் கூறப்பட்டுள்ளவை காணப்படுகின்றன :-
(அ) பேரேட்டுக்கணக்கில் கையிருப்பின்
முடிவுத்தொக்கு ரூபா. 160,000. (ஆ) நேர்க்கூலிக் கணக்கின் இறுதிச்செலவு
நிலுவை ரூபா 46,000,

டி. ரி. இராஜரட்னம்
உதாரணமாக;-
ஒரு வருடத்தில் ஒரு கம்பனியின் இலாபம் கிரயக் கணக்கு முறைப்படி ரூபா 75000ஆக மதிப்பிடப்பட்டது.ஆனல் நிதிக் கணக்கு முறைப்படி அவ்வருட இலாபம் ரூபா 50,000 என்று வெளிப்படுத்தியது. பின்வரும் தகவல்களைப்பாவித்து ஒரு இனக் கக்கூற்று தயாராக்குக.
31 - 12 - 19...... ause J
விற்பனை 750,000
மொத்த இலாபம் 115,000 சில்லறை வரவு 1000
(இ) தொழிற்சாலைமேந்தலை உள்ளடக்கக் கணக்கின் இறுதிச் செலவு நிலுவை ebl Jnr 3 9, 0 0 0
(ஈ) நிர்வாகச் செலவு விற்பனையில் 3 %
மாகக் கணிக்கப்பட்டுள்ளது,
(உ) விற்பனைச்செலவு விற்பனையில் 5% மாகக் கணிக்கப்பட்டுள்ளது.
(ஊ) சில்லறை வரவைப்பற்றி ஒன்றும்
குறிக்கப்படவில்லை.

Page 185
"கிரயக்கணக்குகளையும்.
விடை:
இணக்கக் கூற்று -
கிரயக் கணக்கின் படி உள்ள இலாபம்
கூட்டுக:
(1) சில்லறை வரவு (2) கூடுதலாக அறவிட்ட தொகைகள்
(அ) கூலி (ஆ) நிர்வாகச் செலவு
கழிவு:
(3) குறைவாக அறவிட்ட தொகைகள்
(அ) தொழிற்சாலை மேலதிகச் ெ (ஆ) விற்பனை மேலதிகச் செலவு
(4) கையிருப்பு
பேரேட்டின்படி நிதிக் கணக்கில் எடுக்கப்பட்டவை
நிதிக் கணக்கின்படி உள்ள இலா
குறிப்பு:
(1) சில்லறை வரவு:
நிதி இலாப நட்டக் கணக்கில் ரூபா
1000 காட்டப்பட்டுள்ளது. கிரயக் கணக்கு முறையால் காட்டப்பட்டுள்ள இலாபத் தில் இத்தொகை அடங்கியிருக்கவில்லை. ஆகவே கிரயக் கணக்குமுறை இலாபத் நிற்கு இத்தொகையைக் கூட்டவேண்டும்.
2. (அ) நேர்க்கூலி :
ரூபர் 46,000 கிரயக் கணக்கில் வகு லிக்கப்பட்டுள்ளது. ஆனல், நிதி இலாப நட்டக் கணக்கின்படி ரூபா 45,000 செல
விடப்பட்டிருக்கின்றன. ஆகவே, ரூபா
- 16

டி. ரி. இராஜரட்ணம்
31-12-19. வரை
ரூபா ரூபா
75,000
1000
1000 2500 3500 4500 79,500
சலவு 000
8500 9500
1,60000 1,40000 20,000 29,500 பம் 50,000
1000 கிரயக் கணக்கில் மேலதிகமாக வசூ லிக்கப்பட்டிருப்பதனுல் இத்தொகையை கிரயக் கணக்கு முறைப்படி உள்ள இலா
பத்திற்குக் கூட்டவேண்டும்.
2. (ஆ) நிர்வாகச் செலவு:
உண்மையான செலவு- ரூபா 20,000, கிரயக் கணக்கில் வசூலிக்கப்பட்ட செலவு விற்பனையில் 3% அல்லது ரூபா 22,500. மேலதிகமாக வசூலிக்கப்பட்ட தொகை ரூபா 2500. ஆகவே இத்தொகையை கிர யக் கணக்கு இலாபத்திற்கு கூட்டவேண்
டும்.
1 -

Page 186
கிரயக்கணக்குகளையும்.
3. (அ) தொழிற்சாலை மேலதிகச் செலவு: நிதி இலாப நட்டக் கணக்கின்படி உண்மையான செலவு ரூபா 40,000 கிர யக் கணக்கில் வசூலிக்கப்பட்ட செலவு ரூபா 39,000. அதாவது ரூபா 1000 குறைவாக வசூலிக்கப்பட்டிருப்பதால் இத் தொகையை கிரயக் கணக்கு இலாபத்தி லிருந்து குறைக்கவேண்டும்.
3. (ஆ) விற்பனை மேலதிகச் செலவு:
உண்மையான செலவு ரூபா 46,000 . வசூலிக்கப்பட்ட செலவு விற்பனையில் 5% அல்லது ரூபா 37,500. ஆகவே, வசூலிக் கப்பட்ட தொகை ரூபா 8500 ஆல் குறை
காகிதத்தில் பேணு வைத்து நீங்க என்பவளை உங்கள் சொந்தத் தாயாக வரட்சியால் வாடிக்கிடக்கும் வையகத் பொழிவதுபோல உங்கள் எழுதுகோல்
பொழிந்துவிடும்!
- 16

டி. ரி. இராஜரட்னம்
வாக இருப்பதால் இத்தொகையை கிர யக் கணக்கு இலாபத்திலிருந்து குறைக்க வேண்டும்.
4. கையிருப்பு:
நிதிக் கணக்கில் கையிருப்பின் பெறு மானம் ரூபா 140,000 ஆக எடுக்கப்பட் டுள்ளன. ஆனல் பேரேட்டின்படி கையி ருப்பு முடிவுத் தொக்கு ரூபா 160,000, அதாவது ரூபா 20,000 நட்டம் ஏற்பட் டிருக்கின்றது. இந்த நட்டம் கிரயக்கணக் கில் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. ஆகவே கிரயக் கணக்கு இலாபத்திலிருந்து குறைக்கவேண்டும்.
இரகசியம்
ள் எழுதத் தொடங்குமுன் பெண் 5 நினைத்துக்கொள்ளுங்கள். உடனே துக்கு வானத்திலிருந்து வண்ண மழை பிலிருந்தும் தூய்மையான இலக்கியம்
- மகாத்மா காந்தி.

Page 187
'llita Bea
Вто
Megamo. Su
374, Mail Negal
8
‘llnited Úleuade«
81 15, Prin
Colom
Telep one : 375 Est di : 19
UNEXUNMU
DIRECT IMP.
Exclusively high class Dealers in Wholesale 8 Retail
PAVVN E Principal Distributors of L
No, 183, BAZA
WAVU

'liaea
f
pe Mafet
Street, mbo.
» dĴIndustruieas
ce Street, bo-11.
26 Telegrams : "Muthus"
"II" T r"
th. H. hnid has hun
DRTERS OF
Textiles Sr Sarees.
Piece-Goods Merchants Etc.
ROKERS anka Salu Sala Textiles.
AR STREET, NIYA

Page 188
ST. CHRISTOP
Proprietor : Mei
DANKO
fel : KOChchikade
9 4 DankOtuWa 8 0 1
70ith the 53es
O
മ്യ
貓 貓 BV)J:
Proprietor : C. Dev
DANKO
e : DankOtuVva 8 03
 
 

引A町
|-忽
HERDC MILLS
)TUWA.
it Compliments
e Fernando Pilai.
TUWA

Page 189
கணக்கியல் விகித ஆ
(“An Introduction to the Ana
*a’ என்ற எண் “b' என்ற எண்ணுடன் கொண்டுள்ள தொடர்பினை “a’க்கு'b'என்ற விகிதமாக அதாவது a,b என்று அல்லது இலகுவாக நூற்று விகிதமாகக் கூறுவதனை விகிதம் என அழைப்பர். முதலீட்டு ஆய்வு (Im v estiment analysis) s Gör guiu any (Credit analysis) என்பன போன்று கணக்கியல் விகித ஆய்வும் முக்கியத்துவம் வாய்ந்த தொன் ருகக்காணப்படுகின்றது.குறிப்பாகக் கணக்கியல், வர்த்தகம் என்ற இரு அறிவுக் கல்வியிலும் இவ் விகித ஆய்வு முதலிடம் பெறுகின்றது.
கணக்கியல் விகித ஆய்வானது நிதிக் கூற்றுக்களின் அடிப்படையில் எண் ரீதியி of St தொகைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குகின்றது.இதன் உதவி கொண்டு குறிக்கப்பட்ட திகதியில் இரு எண் தொகைகளுக்கிடையில் அல்லது வேறு பட்ட இரு திகதியிலுள்ள எண் தொகை களுக்கிடையில் உள்ள தொடர்பினை ஒப் பிட்டு நோக்கலாம். கணக்கியல் விகிதங் கள் வியாபாரத்தின் இலாபப் போக்கு, அதன் வளர்ச்சி அல்லது சுருக்கம் போன்ற வற்றினை அளவீடு செய்யத் துரிதமானதும் நம்பிக்கையானதுமான வழியாகும். அது மட்டுமல்லாமல் வியாபாரத்தின் பலம் அல் லது பலமற்ற நிலையினையும் இது எடுத்துக் காட்டுகின்றது. மேலும் உடலின் வெப்ப நிலை, இரத்தோட்டம், நாடி முதலியன மனித உடலின் சுகாதார நிலையினை எடுத் துக் காட்டுவது போன்று கணக்கியல் விகி
- 16

ப்வினுக்கோர் அறிமுகம்
lysis of Accounting Ratios).
எஸ். சிதம்பரநாதன் B. Com. (Hons.) (Cey.) உதவி விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்
தங்களும் பொதுத் துறை அல்லது தனி யார்துறை நிறுவனங்களின் வர்த்தக நட வடிக்கையின் சுக , நிலையினை எடுத்துக் காட்டுகின்றன. எனவே நிதிக் கூற்றுக் களைக் கணக்கியல் விகிதங்களின் துணை கொண்டு இலகுவாகப் புரிந்து கொள்ள லாம்.
பொதுவாக கணக்கியல் விகிதங்களே மூன்று வகையான நிதிக் கூற்றுக்களின் துணை கொண்டு கணித்துக் கொள்ளலாம். அவையாவன:-
(1) வியாபார இலாப நட்டக் ககு. (2) ஐந்தொகை.
(3) வியாபார இலாப நட்டக் கணக் கும் ஐந்தொகையும் ஆகும்.
இதனை விபரமாகக் கூறின் சில கணக் கியல் விகிதங்களை வியாபார இலாப நட் டக் கணக்கின் உதவி கொண்டும், வேறு சில கணக்கியல் விகிதங்களை ஐந்தொகையின் உதவிகொண்டும், மேலும் சில கணக்கியல் விகிதங்களை இவ்விரண்டின் துணை கொண் டும் கணிக்க முடிகின்றது.
உபயோகங்கள்:-
கணக்கியல் விகிதங்கள் முகாமை, பங்குதாரர்கள் அல்லது முதலீட்டாளர் கள், குறுங்காலக் கடன் கொடுத்தோர், நீண்டகாலக் கடன் கொடுத்தோர், கணக் குப் பரிசோதகர் என்போருக்குப் பல வழி களில் பயன்படுகின்றது.
55 -

Page 190
கணக்கியல் விகித . .
( ) (upstem LD (Management)
எந்தவொரு வியாபார நிறுவனத்தின் முகாமையும் அந் நிறுவனத்தின் திறனையும் இலாபத்தினையும் அதிகரிக்கின்ற தீர்மானங் களை எடுப்பதற்கு அடிப்படையான தகவல் களை வேண்டி நிற்கும். இத் தகவல்களை கணக்கியல் விகிதங்கள் கொடுக்கின்றன. வேறு வார்த்தையில் கூறின் முகாமையை, கவனத்தில் கொண்டு தீர்மானங்களை மேற் கொள்ளத் தேவையானதும் முக்கியமானது மான வியாபாரத்தின் போக்கு, தகவல்கள் என்பனவற்றினை நீண்ட விளக்கத்தினைக் கொண்டதாக அல்லாமல் தேவையான தகவல்களை இலகுவாக அளிக்கின்ற ஊடக மாகக் கணக்கியல் விகிதங்கள் காணப்படு கின்றன. இவ்வாறு குறைந்தளவு தகவல் களை வழங்குகின்ற பொழுது திறமை வாய்ந்த முகாமையாக இருப்பின் தீர் மானங்களை உடனடியாக எடுக்க வழியேற்
படுகின்றது.
கணக்கியல் விகிதங்கள் வியாபார நிறு வனத்தின் நிலைமையினை எடுத்துக் காட்டு வதால் கணக்காளர் வெவ்வேறு வகை விகி தங்களின் உதவி கொண்டு தனது நிறுவனத் தின் பலவீனத்தினை அல்லது குறை நிலை யினை அறிந்து கொள்ள முடிகின்றது. இன் னும் கணக்கியல் விகிதங்கள் முகாமை யானது,
(1) வியாபார நிறுவனத்தின் நிதி நிலை மையினை மதிப்பிடவும்:
(i) தம்மிடமுள்ள வளங்களினைச் சிக் கனமாகவும், இலாபமான முறையிலும் பயன்படுத்துகின்ற முகாமைத் திறனை மதிப்பிடவும்;
(iii) வியாபார நிறுவனத்தின் போக் கினை எடுத்துக் காட்டுவதன் மூலம் அதன் எதிர்காலத்தினைத் திட்டமிடவும்;
(iv) வியாபார நிறுவனத்தின் சாத னையையும் அது தொடர்பான செலவுகளை யும் அந் நிறுவனத்தின் முன்னைய வருட
16 سس۔

எஸ். சிதம்பரநாதன்
செயல் திட்டத்துடனும் ஏனைய நிறுவனங் களுடனும் ஒப்பிடவும் பயன்படுகின்றது.
(ஆ) குறுங்காலக் கடன் கொத்தோர் (Short term Creditors)
வணிக வங்கிகள், வியாபாரக் கடன் கொடுத்தோர் மற்றும் ஏனைய குறுங்கால க் கடன் கொடுத்தோர் கணக்கியல் விகிதங் களின் துணை கொண்டு கடன் படுவோர் தமது கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி உடையவர்களா என்பதனை அறிய முடிகின் றது. குறுங் காலக் கடன் கொடுத்தோர் குறிப்பாக நடைமுறை விகிதம் (Current Ratio) திரவ விகிதம் அ ல் ல து துரிதச் G) + frg, g) sá 6. S Lð (Liquidity Ratis) or Quick Assets Ratio) at 657 ua)7 Glit 657 so கணக்கியல் விகிதங்களில் கவனஞ்செலுத்து
శu f} .
(இ) நீண்டகாலக் கடன் கொடுத்தோர்
(Long Term Creditors)
குறுங்காலக் கடன் கொடுத்தோருக்கு மட்டுமல்லாது நீண்டக் காலக் க ட ன் கொடுத்தோருக்கும் கணக்கியல் விகிதங் கள் பயனுடையவையாகும். வியாபார நிறு வனத்தின் இலாபம் குறைவடைகின்ற போதும் கடன்படுவோர் வட்டியையும் முதலையும் செலுத்தும் தகுதியுடைவர்களா என்பதனை நீண்ட காலக் கடன் கொடுத் தோர் அறிந்து கொள்ளக் கணக்கியல் விகி தங்கள் உதவுகின்றன. இதனைக் கடன் படு வோரின் தொழிற் படுமுதல் விகிதத்தினக் (Working Capital Ratio) 55 GODiflu u 5 Gör மூலம் அறிந்து கொள்ளலாம். இன்னும் நிலை யான சொத்துக்களுக்குச் சாதாரண பங்கு elpøvg 6ar sé6) g; b (Fixed Assets to Ow; er's Equity) மொத்த சொத்துக்களுக்குச் சாதா !TGööT LJất & ệup6ì) 956ư 6ớì6)öth (Total Assets to Owner’sEquity)மொத்தக்கடன்களுக்குச் சாதாரண பங்கு மூலதன விகிதம் (Total Liabilities to Owner's Equity) stairuana நீண்ட காலக் கடன் கொடுத்தோருக்கும் பயனுடைய விகிதங்களாக உள்ளன.
6 -

Page 191
கணக்கியல் விகித.
(FF) u Š(55 Jiř85 sir (Shareholders)
பங்குதாரர்கள் அல்லது முதலீட்டா ளர்கள் பங்கொன்றிற்கான இலாபத்தினை அறிவதனை முக்கிய நோக்கமாகக் கொண்ட வர்கள் அதாவது, அவர்கள் கம்பனி ஒன் றில் பங்குகளை வைத்திருப்பதன் பிரதான இலக்கு தாம் இட்ட முதலுக்குக் கிடைக் கின்ற எதிர் கால வருவாயாகும் இதனைப் பங்குதாரர்கள் அறிந்து கொள்ள முதலுக் 5 fragt su Q561) fruis SS Lb (Return on Capital) பயன்படுகின்றது. இம் முதலுக்கான வருவாய் விகிதம் நிகழ்காலப் பங்குதாரர் களுக்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் u li fir u tT LT நிறுவனத்தின் பங்குகள்ை க் கொள்வனவு செய்யும் அல்லது கம்பனியில் முதலீடு செய்யும் எதிர் காலப் பங்குதாரர் as Gisdics in (Prospective Shareholder) Liu னுடையதாகின்றது.
(உ) கணக்குப் பரிசோதகர் ( Auditor)
கணக்கியல் விகிதங்கள் வியாபார நிறு வனத்தின் நிலைமையினைப் படம் பிடித்துக் காட்டுவதனுல் இதன் உதவி கொண்டு வியாபார நிறுவனத்தின் குறைபாடுடைய அல்லது கண்டனத்துக்குக்குள்ளாகின்ற பகுதிகளைக் கணக்குப் பரிசோதகர் கண்ட றிந்து பரிசோதனைகளை மேற்கொள்வார்.
குறைபாடுகள்:-
கணக்கியல் விகிதங்கள் உபயோகமுள் ளவையாக இருந்தபோதிலும் அவை குறை பாடுடையனவாகவும் காணப்படுகின்றன. குறிப்பாக இரு அம்சங்களில் கணக்கியல் விகிதங்கள் கண்டனத்துக்குள்ளாகின்றன.
(1) கணக்கியல் விகிதங்கள் நிதிக் கூற்றுக் களிலிருந்து கணிக்கப்படுவதனல் நிதிக் கூற்றுக்கள் எந்த ள வுக் கு உண்மை யானவை என்பதில் விகிதங்களின் பயன் பாடும் தங்கியுள்ளது. ஆய்வாளன் விகிதங் களில் உள்ளடக்கியுள்ள கணக்கியல் வரை விலக்கணத்தை கவனத்தில் கொள்ளவேண்
- 16

எஸ். சிதம்பரநாதன்
டும். உதாரணமாகச் சில நிறுவனங்கள் முற்பணங்களை நடைமுறைச்சொத்துக்களி லும் ஏனையவையை ஐந்தொகையின் வே ருெருபகுதியிலும் உள்ளடக்கலாம். அதுமட் டுமல்லாமல் வீக்கம் ஏற்படுகின்றபொழுது நிதிக்கூற்றுக்கள் உண்மையான கணக்குகளைப் பிரதிபலிக்காததால் கணக்கியல் விகிதங் களும் குறைபாடுடையனவாக உள்ளன. மேலும் முகாமையின் தன்னிச்சையான கொள்கைத் தீர்மானங்களும்(உதாரணமாக பெறுமானத் தேய்வு ஒதுக்கம்) நிதிக்கூற் றுக்களைப் பாதிப்பதனுல் இறுதியில் கணக் கியல் விகிதங்கள் உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டுவதிலிருந்து தவறுகின்றன.
(ii) கணக்கியல் விகிதங்கள் தாமாகக்
கருத்துடையனவல்ல. அவை முன்னேய காலப்பகுதி அல்லது ஏனைய நிறுவனங்கள் என்பவற்றின் நியமத்துடன் (Standard) ஒப்பிடுகின்றபொழுது பயனுடையனவாக 2-6î76Teür. எனவே, விகிதங்களிலிருந்து பெறப்படுகின்ற முடிவுகள் ஆய்வாளனல் தெரிந்தெடுக்கப்படுகின்ற நியமத்தின் தன் மையில் தங்கியுள்ளது.
கணக்கியல் விகிதங்களின் வகைகள்:
கணக்கியல்விகிதங்களைப் பல்வேறுநாடு களின் கணக்கறிஞர் நிறுவனங்களும், ஆய் வாளர்களும் பல்வேறு அடிப்படையில் வகுத்த போதிலும் அவை ஒத்த தன்மை யுடையதாகவே காணப்படுகின்றன. பொது வாகக் கணக்கியல் விகிதங்களை ஐந்து வகையாகப் பிரித்து நோக்கலாம்.
(i) (p5ibsy staggio (Primary ratio) :
இவ்விகிதம் முடக்கப்பட்ட மூலதனத்திற் staj Gjajaj Tu?&vë (Return on Capital Employed) (51555,657 pg5!. g.g52,575 G5.5 silu சொத்துகளுக்கான வ ரு வா ய் எனவும் அழைக்கலாம். முதற்தர விகிதங்கள், முகா மையானது தம்மிடமுள்ள நிதியினைப் பயன் படுத்துகின்ற முகாமைத் திறனை, அதே கைத்தொழிலுள்ள ஏனைய நிறுவனங்கள்
57 -

Page 192
கணக்கியல் விகித.
அல்லது ஏனைய கைத்தொழில்கள் அல்லது அதே நிறுவனத்தின் முன்னைய காலப்பகுதி என்பவற்றின் மூலதனத்திலிருந்து கிடைக் கின்ற வருவாயுடன் ஒப்பிட்டு நோக்கு கின்றது.
(ii) g5urtu assissir (Profitability ratios):
இலாப விகிதங்கள் வியாபார நிறுவ னத்தின் இலாப நிலையினை எடுத்துக் காட் டுகின்றன. இவ் இலாப விகிதங்கள் குறிக் கப்பட்ட நிறுவனத்தினை அதே தொழிலில் ஈடுபட்டுள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அந்நிறுவனத்தின் திறனை மதிப் பிட உதவுகின்றன . இலாப விகிதங்களில் தேறிய இலாப விகிதம், மொத்த இலாப விகிதம் என்ற இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தேறிய இலாப விகிதம் வியாபாரத்தின் இ லா ப நிலையினையும் மொத்த இலாப விகிதம் வியாபாரத்தின் பலவீனமான அல்லது குறைபாடுடைய பகுதிகளையும் எடுத்துக் காட்டுகின்றன.
(iii) pass T sassissir (Capital ratios):
மூலதன விகிதங்களின் மூல த ன ghostill 655ui (Capital Gearing ratio) முக்கியத்துவம் வாய்ந்தது. நிலை யான சொத்துக்கும் தேறிய பெறுமதிக்கும் அல் லது நிலையான சொத்துக்கும் நிலையான மூலதனத்திற்கும் இடையேயுள்ள விகித மாக மூலதன இணைப்பு விகிதத்தினைக் கூறலாம். இவ்விகிதம் நிலையான சொத் துக்களில் எந்தளவு பங்கு பங்குதாரர்க ளின் நிதியினுல் கொள்வனவு செய்யப்பட் டவை என எடுத்துக் காட்டுகின்றது. மேலும் நிலையான சொத்துக்கள் முழுவ தாக அதன் அங்கத்தவர்களின் நிதியினுல் பெறப்படாவிடின் தொகுதிக் கடன்காரர். கடன் கொடுத்தோர் போன்ற வெளிநபர் கள் தமது பணத்தினைத் திரும்பச் செலுத் துமாறு கேட்கின்றபொழுது நிறுவனமா னது முறிவடைய வேண்டிய சூழ்நிலை ஏற் படலாம். இந்த நிலை ஏற்படாது நிறுவ னத்தின் நிலையை அறிந்து கொள்ள மூல
- 1

எஸ். சிதம்பரநாதன்
தன விகிதம் பயன்படுகின்றது. உயர் இணைப்புக் காணப்படுகின்றபொழுது சாதா ரண பங்குதாரர்களுக்குக் கிடைக்கின்ற இலாபப் பங்கீட் டி ல் விகிதாசார மற்ற ஏற்ற இறக்கம் ஏற்படுகின்றது.
மூலதன விகிதங்களில் இரண்டாவ தாக மொத்தக் கடன்களுக்கு முதலிடப் Lu LʻlL — eup6n»,5 6or 69?9,)55ó595)?b0T (Total indebtedness to Capital Employed) G is staig, வோம், இவ்விகிதம் மொத்தச் சொத்துக் களில் எந்தளவு பங்கினைத் தொகுதிக்கடன் காரர், கடன் கொடுத்தோர் சொந்த மா கக் கொண்டுள்ளனர் என எடுத்துக் காட் டுகின்றது. பொதுவாக 1,3 என்ற விகி தத்திற்கு மேலாக உள்ள நிலை வியாபார நிறுவனத்தின் பலவீனத்தின் அறிகுறியா கக் கருத்திற் கொள்ளப்படுகின்றது ,
மூலதன விகிதங்களில் நிலை யான சொத்துக்கு தேறிய பெறுமதி அல்லது நிலையான மூலதன விகிதம் (Fixed assets to Net worth or Permanent Capital (p j; கியமானதாகும். இவ்விகிதம் நிலையான சொத்துக்களில் எந்தளவு பங்கு சாதாரண பங்குதாரர்களின் நிதியினுல் அடக்கப்படு கின்றதென்பதனை எடுத்துக் காட்டுகின் றது. நிலையான சொத்துக்கள் முழுவதாக பங்குதாரர்களினுல் சொந்தமாக்கப்படா விடின் தொகுதிக் கடன்காரர், கடன் கொடுத்தோர் போன்ற வெளி நபர்கள் தமது பணத்தினைத் திருப்பிச் செலுத்தும் படி கோருகின்றபொழுது நிறுவனம் பல வந்தமாகக் கலைக்கப்பட வேண்டிய ஆபத்து நேரிடுகின்றது. இந் நிலை ஏற்படாது தக வல்களை அறிய இவ் விகிதம் பயன்படு கின்றது.
(iv) திரவ விகிதங்கள் அல்லது தொழிற்படு (p5te assissir (Liquidity ratios or Working Capital ratios):
திரவ விகிதங்கள் வியாபார நிறுவ னத்தின் திரவத் தன்மையினை அளவீடு செய்யப் பயன்படுகின்றன. திரவ விகிதங்
68 -

Page 193
கணக்கியல் விகித .
களில் இரண்டு விகிதங்கள் முக்கியமா
sனவை;
(அ) நடைமுறை விகிதம் :
இவ்விகிதம் நடைமுறைக்கடன் எந்த ளவுக்கு நடைமுறைச் சொத்துக்களால் அடக்கப்படுகின்றன என்பதையும் நிறுவ னத்தின் சொந்த நிதியில் எந்தளவு 1ங்கு நடைமுறைச் சொத்துக்களைக் கொள்வ னவு செய்யப் பயன்படுத்தப்பட்டன என் பதையும் எடுத்துக் காட்டுகின்றது. நடை முறைச் சொத்துக்கள் (இருப்பு, கடன் பட் டோர், முற்பணங்கள், விலை கூறப்பட்ட முதலீடுகள், வருமதி உண்டியல், வங்கி, காசு முதலியன.) ஆகக் குறைந்தது நடை முறைக் கடன்களின் (வியாடாரக் கடன் கொடுத்தோர் நின்ற கொடுக்குமதிகள், வரி, வங்கி மேலதிகப் பற்று, செலுத்த வேண்டிய பங்கிலாபம் முதலியன.) இரு மடங்காக இருத்தல் வேண்டும் 67 ன்பது பொது விதியாகும் வங்கிகள் கடன் வழங் குகின்ற பொழுது இவ்விகிதத்தினைக் கவ னத்தில் கொள்கின்றன இருப்பினும் நடைமுறை விகிதம் கைத்தொழிலுக்குக் கைத்தொழில், பருவத்திற்குப் பருவம் வேறுபட்டுக் காணப்படுகின்றது.
(ஆ) துரிதச் சொத்து விகிதம்:
இருப்பு தவிர்ந்த எல்லா நடைமுறைச் சொத்துக்களுக்கும் நடைமுறைக் கடன் களுக்கும் இடையேயுள்ள விகிதமாக துரி தச் சொத்து விகிதம் காணப்படுகின்றது. நிறுவனத்தின் கடன்கொடுத்தோர் எல் லோரும் ஒரே நேரத்தில் தமது கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கோருகின்ற பொழுது செலுத்தும் ஆற்றலை இவ்விகிதம் எடுத்துக் காட்டுகின்றது. இன்னும் துரிதச் சொத்துக்கள் நடைமுறைக் கடன்களுக்குச் சமமாக இருக்கவேண்டியது விதியாகும். இவ்விகிதமும் நடைமுறை விகிதம்போன்று கைத்தொழிலுக்குக் கைத்தொழில், பருவத் திற்குப் பருவம் வேறுபட்டுக் காணப்படும். இருப்பினை உடனடியாகப் பணமாக மாற்று வதில் காலதாமதமும் கஷ்டமும் ஏற்படு
* ‘'நீ பாழ்பட விரும்புவா யானுல்
கொள் , **
അr l

எஸ். சிதம்பரநாதன்
வதால் துரிதச்சொத்து விகிதத்தினக் கணிக்கின்ற பொழுது நடைமுறைச்சொத் துக்களில் இது சேர்க்கப்படுவதில்லை,
(v) உள்வாரிக் கட்டுப்பாட்டு விகிதங்கள்:
(Internal control ratios)
உள்வாரிக் கட்டுப்பாட்டு விகிதங்கள் கணக்குப் பரிசோதகர்கள் தமது கடமை யினத் திறம்பட ஆற்றுவதற்கு ப் பயனு
டையவையாக உள்ளன.
இவ்விகிதங்களில் முதன்மையான ஆாக மொத்த இலாப விகிதம் காணப்படுகின் றது. கணக்குப் பரிசோதனைக்கு இவ்விகிதம் பெறுமதி வாய்ந்த ஆய்வு கருவியாக விளங் குகின்றது. மொத்த இலாப விகிதம் விற் பனை விலையினைக் குறிப்பதுடன் தொடர் புடையதாகவும் இறுதி இருப்புப் பெறுமதி யினை சரிபார்த்துக் கொள்வதற்கான பெறு மதி வாய்ந்த கருவியாகவும் உள்ளது.
உள்வாரிக் கட்டுப்பாட்டு விகிதங்களில் கையிருப்புத் தொகை மாற்றுவிகிதமும் (Stock turnover ratio) (p.53, duud IT 67a; srg, Lib. இவ்விகிதம் மூலப்பொருட்கள், முடிவுருப் பொருட்கள், முடிவுப் பொருட்கள் என்ப வற்றில் முடக்கப்பட்டுள்ள பணமானது வருடமொன்றுக்கு எத்தனை தடவை சுழற்சி பெறுகின்றதென்பதனை எடுத்துக் காட்டுகின்றது. வருடமொன்றுக்கு ஆறு தடவைக்குக் குறைவாகச் சுழற்சி அடை தல் திருப்திகரமற்றதெனப் பல கைத்தொ ழிலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடன்பட்டோர் தொகை மாற்றுவிகித (plb (Debtors turnover ratio) oliraurrifš கட்டுப்பாட்டு விகிதங்களில் ஒன்முகும். இது வருடாந்த கடன் விற்பனைக்கும் கடன் பட்டோரிடம் நிலுவையாக உள்ள சரா சரி மீதிக்கும் இடையேயுள்ள விகிதமாகும். கடன்பட்டோர் தொகை மாற்று விகிதம் கடன்கட்ப்ேபாட்டுத் திறனையும் கடன் மீளப்பெறுதலையும் எடுத்துக்காட்டுகின் ,f)gi}
உன்னைவிட பணக்காரியை மணந்து - மைல்லெட்.

Page 194
With the Besi
O
V
St. Catherin
Proprietor: J. R.
KUDAW
Te: Kochchikade 96
Madampe 52
V重T疆 T疆重 疆
PALANGATUR
Proprietor; R.
KOCH Cl
Tel : Kochchi kade 96

* Compliments
f
f
e D/C Mills
Fermando Piai.
VEWA.
SS WISES
E D/C MILLS
John Cheliah.
H. KAD E.

Page 195
மூலவளும் பற்றிய கோ
حلا سب س~لا مسسس~لا س~‘ سم سے حلا سمسےیہ سمسح (سمسح^
உதவி விரிவுரை
பகுதிநேர
உலகில் அண்மைக் காலத்தில் ஏற் பட்டிருக்கும் பொருளாதார மாற்றத்தின் போக்குகளில் மூலங்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க பங்கினே வகித்துள்ளதை நாம் உணர முடியும். விவசாய வளர்ச்சி யிலாயினும் கைத்தொழில் வளர்ச்சியிலாயி னும் மூலவளங்களின் பயன்பாட்டுப் பிரச் சனைகள் குறித்து இன்று ஆள்வோரும் ஆய்வாளரும் அதிக கவனம் செலுத்தி வருகிருர்கள். உலக நாடுகள் அனைத்தி லும் இன்று ஏற்பட்டிருக்கும் பண விக்க நிலைமையும், பொருட்கள், பண்டங்களின் சடுதியான விலையேற்றங்களும், பஞ்சத் தின் விளிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கும் குறை விருத்தி நாடுக ளின் ஏழ்மை நிலையும், மூலவளங்களை அர சியல் ஆயுதமாக நாடுகள் பாவிக்கும் புதிய போக்கு, நகராக்கம், புதிய தொழில் நுட்பங்கள் ஆகியவற்றின் தாக்கமும் மூல வளங்களின் பயன்பாடு பற்றிய கருத்துக் களில் புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளது. இந்நூற்றண்டின் மத்திய காலத்தோடு உலக மக்கள் தொகையில் ஏற்பட்ட அதி கரிப்பும், விருத்தியடைந்து வரும் நாடுக ளிடையே தமது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவ லும் அதிகரித்தமை மூலவளங்களின் பயன் பாடு பற்றிய கருத்துக்களுக்கு புதிய அழுத்தத்தைத் தந்தது எனலாம்.

'LIT Cİ
மூலவளுப் பயன்பாடும்
صحسس~~~لا سمیسسیح سمسسیس~~لا سمسنس~لا سمس~لا سمسسہ حلا سببیہح^
மா. செ. மூக்கையா யாளர், புவியியல் துறை - கொழும்பு வளாகம்.
விரிவுரையாளர் - வித்தியோதய வளாகம்,
மூலவளம் என்னும் சொல் பொது வாகப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோர்க ளாலும், பல்வேறு நிலைமைகளிலும் பாவிக் கப்பட்டபோதிலும், அதற்கான வரைவிலக் கணம் பற்றியோ அல்லது விளக்கம் பற் றியோ அண்மைக் காலம் வரை அத்துனே அக்கறை காட்டப்படவில்லை. ஆணுல் மூல வளங்கள் தான் நாடுகளினது பொருளா தாரம், பாதுகாப்பு என்பனவற்றிற்கான அடிப்படை அம்சங்களாக அமைந்துள் ளன. உலகினது கடந்த கால வரலாற் றில் மனித இனத்தின் போர் நடவடிக்கை கள், சமாதான வாழ்வு ஆகியவற்றை மூலவளங்களே நிர்ணயித்திருப்பதையும் காணலாம். இந்த நூற்றண்டில் ஏற்பட்ட இரண்டு உலக மகா யுத்தங்களுக்கும் இனி ஏற்படலாம் என உலகினை அச்சுறுத்தும் மூன்ரும் யுத்தத்திற்கும் கூட மூலவளங் களின் செல்வாக்கே ஏனைய காரணிகளை விடவும் கூடிய முக்கியத்துவம் கொண்ட தாயிருக்கும். ஆனல், மூலவளம் என்ற அம்சம் யாது என்பதில் பலரிடையேயும் கருத்து வேற்றுமைகள் காணப்படுகின் றன. இதனைப் பற்றி வரையறுப்பதா ஞல், "மூலவளம்" என்னும் சொல் ஒரு பொருளினையோ அல்லது ஒன்றினது சாராம்சத்தினையோ குறிக்காது. ஆனல் அப்பொருளினது தொழிற்பாடு அல்லது அதன் இயக்கத்தின் தன்மையினை அடிப் படையாகக் கொண்டு மூலவளமா அல்லது
17 -

Page 196
மூலவளம் பற்றிய
வேரு என்பது நிர்ணயிக்கப்படலாம், விளக்கங்கள் எவ்வாறயினும் மூலவளம் என்ற சொல் சமூகத்தின் நீண்ட காலப் போக்கில் அதன் அடிப்படைச் சொத்துக் களைக் குறிப்பதாகவே இருந்து வந்துள்ளது.
கடந்த சில காலம் வரையில் நாடுக ளின் பொருளாதாரத்தில் மூலவளங்களின் பயன்பாட்டிற்கு அத்துணை முக்கியம் அளிக்கப்படவில்லை. அப்படி ஒரு சில சந் தர்ப்பங்களில் அது பற்றி அக்கறை கொண் டிருந்தாலும், முக்கியம்ான பொருளாதார இயக்கக் காரணிகளுடன் இணைக்கப்படாம லேயே அவை காணப்பட்டன. அப்போது மூலவளம் பற்றிய ஆய்வினை பொருளியல் துறையைவிட இயற்  ைக அறிவியல் துறையே கூடியளவில் முக்கியத்துப்படுத் தியது எனலாம்.
மூலவளம் என்பதற்கு மிக மேலோட் அர்த்தங்கள் அண்மைக்காலம் வரையில் கொடுக்கப்பட்டிருந்தன. மூல வளங்கள் என்பன கணிப்பொருள்கள், விலை மதிப்புள்ள பொருள்கள் என்பனவே என்பது போன்ற பொது மக்கள் வழக்கி லுள்ள கருத்துக்களும் சில காலங்களில் முக்கியமானதாக இருந்து வந்துள்ளன. இது ஓரளவில் சரியான கருத்தென்ருலும், முழுமையான கருத்தாகக் கொள்ளமுடி யாது. ஒரு சிலவகை மூலவளங்களே பார்க் கவும், தொட்டும் அடையாளம் செய்யத் கூடியனவாக உள்ளன . அவை கணிப் பொருள்களாகவும், விலை மதிப்புள்ள பொருள்களாகவும் இருக்கலாம். நிலக்கரி, கரும்பு, பெற்ருேலியம், செம்பு போன் றன முன்னையதற்கும், வைரம், இரத்தி னக் கற்கள், பொன் போன்றன பின்னை யதற்கும் சிறந்த உதாரணங்களாகும்.
ஆஜல் இவை மட்டும் தான் நாடுகளின்
மூலவளமாக இருக்கவேண்டும் என்பதில்லை. வெஸ்லி சி. மிட்செல் என்பவர் மனித அறிவே உலகின் ஏனைய எல்லாவகை மூல வளங்களையும் விட சிறந்தது என்றும் அதுவே மூலவளங்கள் எல்லாவற்றிற்கும்
72

மா. செ. மூக்கையா
பிறப்பிடம் என்றும் கூறியுள்ளார். அறிவு தான் மூலவளங்கள் யாவற்றிற்கும் தாய் என்பதை அவர் மிகத் திட்டவட்டமாக jნმეp/6)|&)დpf.
வட அமெரிக்காவில் ஆதியில் குடி யேறியோரில் பெரும்பான்மையினர் வறு ) Dit in 6 பீடிக்கப்பட்டவர்களும் வாழ்க் கையில் முன்னேற இனி தாய்நாட்டில் வழி இல்லை என்ற முடிவிற்கு வந்தவர் களுமாவர். அவர்களுக்கு ஆரம்பத்தில் நிலக்கரியோ, அல்லது நில நெய்யோ அல் லது வேறெந்த உலோகங்களோ இலகு வாகக் கிடைக்கவில்லை. நீர் மின்சக்தி பற்றி எத்த அறிகுறியும் தென்படவில் ஆல. அவர் களுடைய விவசாய நடவடிக்கைகளும் மிகவும் ஆரம்ப நிலையினதாகவே சிறு சிறு நிலத் துண்டுகளில் அமைந்து கானப்பட்
• او سن
ஆனல் பின்னர் வட அமெரிக்காவில் கணி வளங்களின் உற்பத்தியில் உலகின் முன்னணிக்குக்கொண்டு வந்ததும், உல கின் தானியக் களஞ்சியமாக்கியதற்கும், அறிவு வளர்ச்சியே பொறுப்பாயிருந்தது என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. இத்தகைய அறிவு வளர்ச்சி யாவற்றிலும் சிறந்த மூலவளம் என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து வளர்ச்சிபெற்று வரும் அறிவியலாலும், அதன் நவீனசெய் முறைப் பிரயோகங்களும் காலத்திற்குக் காலம், புது மூலவளங்கள் கண்டு பிடிப்ப தற்கு காரணமாயிருப்பதுடன் மூலவளங் களைச் சிக்கனமாயும், பல் பயனுடையதாய் பாவிப்பதற்கும் வழிவகைகளை தந்துதவு கின்றது.
சூன்யமான இருண்ட காலப் பகுதியி லிருந்து நவீன காலத்தை நோக்கிச் செல் லச் செல்ல மனித இனம் அறிவியல் மூலமே எதனையும் வெற்றிகொள்ள (Մ)ւգսյւն Grahr னும் கருத்தில் பெரும் நம்பிக்கையினைப் பெற்றுவிட்டது எனலாம்.
புவியில் அச்சத்துடனும், துன்பத்துட னும் அலைந்து திரிந்த மனிதன் இன்று
·

Page 197
மூலவளம் பற்றிய .
பெரும் வசதிகளுடன், பா து கா ப் புக்களுடன் வாழ்வதற்கு அறிவுதான் காரணம் என்பதிலும் அதன் வளர்ச்சி தான் காரணம் என்பதிலும் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது.
இரசாயனவியல், பெளதீகவியல் என் பவற்றின் விளைவாகவே பெற்ருே ல், இயற்கை வாயு, கந்தகம் என்பன பற்றி அறியப்பட்டது. பிரமிக்கத்தக்க கருவி கள், பாரிய யந்திரங்கள், 56orriji gf mt pr விருத்திகள் யாவுமே அறிவின் பிரயோகத் தின் விளைவுகளே. சுதந்திரம், விவேகம் யாவும் அறிவின் விளைவுகளாகவும் மூல வளங்களின் வரிசையில் முன்னணியில் உள் ளனவாகவும் காணப்படுகின்றன.
இத்தகைய அடிப்படையில் பார்க்கும் போது மூலவளம் என்னும் கோட்பாடு முற்ருக இயக்கத்தின் அடிப்படையில் எழுந்த ஒன்ருகவும், அதனை மனித தேவை களில் இருந்தும், அவர்களின் தகுதிகளில் இருந்தும் பார்க்க முடியாத ஒன்ருகவும் கருதலாம். எனவே தான் இக்கோட்பாட் டினைச் சமூக அறிவியலாளரது கோட்பாடு என்றும் ஆய்வாளர் கருதுகின்றனர்.
அறிவு எந்தளவில் சிறந்த மூலவள மாகக் கருதப்படலாமோ அந்தளவிற்கு மக் களின் ஆரோக்கியம், சமூக ஐக்கியம் விவேகமான கொள்கைகள், சுதந்திரம், யாவுமே மூலவளங்களாகக் கொள்ளப்பட 60frb.
ஆனல் இவ்வகையான மூலவளங்களைப் பார்க்கவோ, தொடவோ முடியாது. அதன் முன்னர் இவை மூலவளங்களாகக் கருதப்படவில்லை. இத்தகைய மூலவளங் களைப் பற்றி கூறும்போது "உலகில் உள்ள இரும்பு, தங்கம், வெள்ளி என்பவற்றின் முழு இருப்பினையும் சணக்கில் எடுத்தால் ஏற்படும் பெறுமதியின் நன்மையினை விட, இரண்டாவதாகக் கூறப்பட்ட அறிவு, ஆரோக்கியம், சமூக ஐக்கியம், விவேக மான கொள்கைகள், சுதந்திரம் ஆகிய
- 173

மா. செ. மூக்கையா
பெரு மூலவளங்களின் பெறுமதி அதிகமா கும்' என்று தனது நூலொன்றில் கூறி யுள்ளார். லியோன் சீ. மார்ஷல் போன் ருேரும் இக்கருத்துக்களை ஆதரித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
பொதுவாகக் கூறுவதானுல் மூலவளங் கள் பற்றிய கருத்து மனித இனத்திற்கு புதிதான ஒன்றல்ல. வரலாற்றில் பல் வேறு காலகட்டங்களிலும் வருங்காலத்திற் கான உணவுப் பொருளை எவ்வாறு பெற லாம் என்பதே மக்கள் இனத்தினது புதி ராக இருந்து வந்துள்ளது. இவற்றுடன் தொடர்பான நிலப்பிரச்சனையும் மனித இனம் தோன்றிய நாள் முதலாகவே பல் வேறு கோணங்களில், நிலவி வருகின்றது. அது போன்றே மிதமிஞ்சிய நீர் அல்லது வெள்ளப் பெருக்கு குறித்த கணிப்பொருள் மீதான கட்டுப்பாடுகள் என்பனவும் வர லாற்றுக் காலமுதலாக இருந்து வந்துள்ள பெரும் பிரச்சனைகளாகும். இன்றும் இப் பிரச்சனைகள் உலக நாடுகளை எதிர்நோக்கு வனவாக இருந்தாலும், மேற்கு நாடுகள் இன்று ஓரளவில் தமது மூலவளங்களைப் பற். றிய சிறந்த அறிவினையும், அவற்றிஐ பயன்படுத்துவதில் திறன் மிக்க மக்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. ஆனல் விருத்தியுறும் நிலையிலுள்ள நாடு கள் இன்றும் தமது மூலவளங்களை இனங் காணுது இருக்கின்றமையும், கண்டறிந்த சிலவற்றிலிருந்து தானும் உச்சப்பயன்பாட் டினை பெற்றுக்கொள்ளும் அளவு வளர்ச்சி யடையாது இருக்கின்றமையும், அந்நாடு களின் வறுமைக்கு முக்கிய காரணங்களா கும்.
இதுவரை காலம் மக்கள் மூலவளங்க ளின் பிறந்த பயன்பாட்டைப் பெறமுடி யாது இருந்த நிலைமை மாறி பின்னர் அதற்குப் பொறுப்பாயிருந்த தடைகளைத் தாண்டியமை பொருளியல் வரலாற்றில் முக்கியமான சம்பவமாகும். இ த ரை வளர்ச்சிக்குரிய . ஒரு நடவடிக்கையாகக் கொள்ளலாமே யொழிய முற்ருக உலக நாடுகள் யாவற்றிலும் வெற்றியடைந்த AB L-GNUuq, i 63) as tuumras š; கருதமுடியாது.

Page 198
மூலவளம் பற்றிய.
மானியமுறைச் சமுதாயத்தின் வீழ்ச்சி யுடன் புதிய பெரும் கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் ஏற்பட்ட காலப்பகுதி யோடு தான் சமுதாயங்களின் போக்கில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாயின. ஐரோப்பியர் சந்தர்ப்பங்களை சிறப்பாக பயன்படுத்த அனுபவம் பெற்றதுடன் வாய்ப்புக்களை விஸ்தரித்தும் கொண்டனர். பேரரசுகளை அமைத்ததும், குடியேற்றங் களைப் பெற்றதும் இக்காலமேயாகும். புதிய கைத்தொழில்களும் உருவாக்கம் பெற்றன. இவற்றின் காரணமாக ஐரோப்பிய பகுதி கள் வளர்ச்சியடைவது தவிர்க்க முடியாத தாகவே காணப்டட்டது. பிறநாடுகளிலி ருந்து மூலப்பொருள்களைப் பெறுவதும் அவற்றைப் பின்னர் உற்பத்தி செய்து குடி யேற்றங்களில் சந்தைப்படுத்துவதும், அவர் களின் நிருவாகம், படைப்பலம், வர்த்தகத் திறன், பரும்படியாக்க வளர்ச்சி என்பன வற்றிலேயே பெரிதும் தங்கியிருந்தது என லாம். இவற்றிற்கெல்லாம் அடிப்படை யாக அமைந்தது அறிவு வளர்ச்சியும் அதன் விளைவாக ஏற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்களும் ஆராய்ச்சிகளுமேயா குமி.
இவ்வகையான பார்க்க முடியாததும், தொட்டு உணர முடியாததுமான மூலவ ளங்களைத் தவிர்த்த வகையான மூலவ ளங்கள் உலக நாடுகளின் பொருளாதா ரத்தில் பெரும் பங்கினை வகிக்கின்றன. இவ்வகையினவே பெருமளவில் மக்களால் மூலவளங்கள் எனக் கருதப்படுகின்றன. எம்க்கு அரசியல் ரீதியாக அதிகாரத்தின் அடிப்படையில் கிடைக்கக் கூடியதான நிலத்தின் உரிமையினுல் பெறக்கூடிய மூல வளங்கள் மாத்திரமன்றி சம்பிரதாயமாக ஒவ்வொரு நாடும் தமது நிலப்பரப்பிற்கு மேலுள்ள வளிமண்டலத்தினையும், அங்கே நடைபெறும் பொறிமுறைகளையும் மூலவ ளங்களாகப் பெற்றுள்ளன. சூரிய வெளிச் சமும், மழை வீழ்ச்சியும் எந்தளவில் நமக்கு அத்தியாவசியமானது என்பதனை இங்கே கூறி முடித்துவிட முடியாது.

மா. செ. மூக்கையா
இவற்றைவிட தமது கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியைவிட கடலெல்லை கொண்ட நாடுகள் யாவும் தமது படைப் பலம், பெளதீக சூழ்நிலை என்பனவற்றின் அடிப்படையில் கடல் பகுதியிலும் ஆதிக் கம் கொண்டுள்ளன. மத்திய காலப்பகுதி களில் ஒரு நாடு தனது கடற் கரையிலி ருந்து எவ்வளவு தூரத்திற்குத் தன்னிட முள்ள பீரங்கியால் சுடமுடியுமோ அவ்வ ளவு தூரத்தை ஆட்புலதீராக கொண்டி ருந்தது இத்தகைய உரிமையுள்ள கடல் பகுதி கடற்கரையை கொண்ட நாடுகள் யாவற்றிற்குமே உண்டெனலாம். இவ ற் றைத் தவிர உலகநாடுகளின் கட்டுப்பாட் டிற்குள் இல்லாத திருந்த கடல் பகுதிகள் சர்வதேச போக்குவரத்திற்கு பயனுகின் றது. மூடிய கடல்பகுதிகள் எனப்படும் நாடுகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட கடல் பகுதிகளில் மீன் பிடி கணிப்பொருள் அகழ்தல், உப்பு உற்பத்தி செய்தல், துறை முகங்கள் அமைத்தல், சங்கு முத்து குளித் தல் போன்ற பல்வேறு பொருளாதாரத் தேவைகளுக்குப் பயனுகின்றன. இப்பகுதி களின் எல்லை இன்று நாட்டுக்கு நாடு வேறு பட்டுக் காணப்படுகின்றது.
நாடுகளின் இயற்கை அமைப்புக் கார ணமாக, சமவெளிகள், பள்ளத்தாக்குகள், மேட்டு நிலங்கள், ச ம நிலங்கள் என்பன போன்ற பல்வேறு தரைத்தோற் றங்கள் காணப்படுகின்றன. இவ்வாரு ன அமைப்புகள் பல்வேறு வகையான வாய்ப் புகளைப் பொருளாதார நடவடிக்கைகளை உலுக்குவிப்பனவாக அமைந்துள்ளன. மலைப் பாங்கான நிலம் குறித்த வகை விவசாய நடவடிக்கைக்கு ஏற்றதல்லாததாக 60 על( Lמ யலாம். ஆனல் அப்பகுதி முற்ற க பொரு ளாதார நடவடிக்கைக்கு ஏற்றதல்ல என்று உதறித் தள்ளிவிடமுடியாது.
கணிப்பொருள்களினது பயன்பாடு பல் லாயிரக்கணக்கான வருடங்களாகக் காணப் பட்டு வந்தாலும், கைத்தொழில் புரட்சி யின் பின்னர்தான் பயன்பாட்டிலும் முக் கியத்துவத்திலும் அதிகரிப்பு எற்பட்டுள்
سی- 4 7

Page 199
மூலவளம் பற்றிய.
ளது எனலாம். காடுகள் எரிபொருளுக் காக அழிக்கப்படும் நிலைமை மாற்றம் பெறு வதற்கு, நிலக் கரியும், நீர் மின் சக்தியும் எரிபொருளாக ப யன் ப டு த் தக் கூடிய நிலைமை உருவாகிய மையே காரணம் என லாம். இன்றைய உலக நாகரீகத்தின் அடித் தளமான இயந்திரங்களின் உற்பத்தியில் கணிப்பொருள்கள் முக்கியமான இடத்தினை வகிப்பதுடன், உற்பத்திகளும் கணிப்பொ ருளில் கணிசமான அளவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கணிப்பொருள்கள் உலகின் பல பாகங் களிலும், பாறை அமைப்பிற்கு ஏற்றவகை யில் அமைந்து காணப்படுகின்றன. அடை யற் பாறை பகுதிகளில் நிலநெய், நிலக்கரி, இரத்தினக் கற்கள் போன்றனவும், உருமா றிய பாறைகளைக் கொண்ட பகுதிகளில் இரும்புத்தாது, மாங்கனிஸ், வெள்ளி, ஈயம் என்பனவும் காணப்படலாம். இதுவரை கணிப்பொருளியலாளரால் 1600க்கு மேற் பட்ட வகையான கணிப்பொருள்கள் அடை யாளம் செய்யப்பட்டுள்ளபோதிலும் 200 வகைகளே வர்த்தக, கைத்தொழில் தேவைகளின் அடிப்படையில் பெறக்கூடியன வாகஉள்ளன. இதில் கி பங்கிற்குக் குறைந்த ளவான இன்றைய இயந்திர நாகரீக உல கிற்கு ஏற்றனவாக இல்லை. இவை எரி பொருள்கள், உலோகம், உலோகமற்றவை எனப் பிரிக்கப்பட்டபோதிலும் அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் பல்வேறு வகையினவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
உலகரீதியாகப் பார்க்கும் போ து 18ஆம் நூற்றண்டளவில் சராசரியாக ஆண்டிற்குரிய கணிப்பொருள் உற்பத்தி மிகக் குறைவாகவேயிருந்தது. 19ஆம் நூற் ருண்டில் இது ஓரளவு பெருகி, 20ஆம் நூற்ருண்டில் அது 8மடங்காகப்பெருகிற்று. இந்நிலைமை கடந்த ஆண்டுகளில் பெரும ளவாகப் பெருகியது. 1950ஆம் ஆண்டின் உலகக் கணிப்பொருள் உற்பத்தியுடன் ஒப்பி கையில் 1963ஆம் ஆண்டில் இருமடங்கு உற்பத்தி ஏற்பட்டது. ஆனலும் இத்தொ ழிலில் ஈடுபட்டுள்ளவர் தொகையினை

LDT. 3 F. Plų iš SINsUT
மொத்தத் தொழிலாளர் தொகையுடன் ஒப்பிடுகையில் நமக்கு வேருன ஒரு கருத்து உணர்த்தப்படுவதனைக் கானலாம்
கணிப்பொருள் அகழும் தொழில் உலக ரீதியாகப் பார்க்கும்போது, மொத்தத் தொழில் புரிபவர்களில் 2 வீதமாஞேரே இத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகத் தில் ஏறத்தாழ 15வீதமானுேர் ஈடுபட் டுள்ளனர். இதிலிருந்து உலகில் இயற்கை யாகக் காணப்படும் மூலவளங்களை பெறுவ தில் ஏற்பட்டுள்ள ஈடுபாடு ஒப்பளவில் குறைவாகும் என்பதனை உணர முடிகிறது.
பல்வேறு வகையான கணிப்பொருள் கள், பல்வேறு நாடுகளிலும் பரந்து காணப் படுகின்றன. மணல், கல், போன்றன எல்லா நாடு சளிலும் காணப்பட்டாலும், ஏனைய இரும்புத்தாது, நிலக்கரி, நிலநெய் போன்றனவும், விலைமதிப்புள்ள கல்வ.ை களும் குறித்த சில இடங்களில் மாத்திரமே காணப்படுவதுடன், அவற்றினைப் பயன் பாட்டிற்குக் கொண்டுவர பதனிடும் செல வும் அதிகமாகும். ஆதலால் இவற்றிற்கு மதிப்புக் கூடவாக உள்ளது. அத்துடன் இவை எந்த இடத்தில் இருக்கின்றதென் பதும் எவ்வாறு பெறப்படலாம் என்பதும் பிரச்சினைக்குரியதாகும்.
இவ்வாருக இயற்கையினல் தரப்பட்ட மூலவளங்களை இனங்காணுவதிலும் பெரு மளவில் பயன்படுத்துவதிலுமே f5 Dgif வெற்றி தங்கியுள்ளது. எந்த நாடும் மூல வ்ளத்தில் குறைந்தது என்று கூறிவிட முடியாது. ஒவ்வொரு நாடும் தமது இயற்கைச்சூழலில் காணப்படுவனவற்றை பயன்படுத்தும் திறமையினை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். மத்திய கிழக்கி லுள்ள நில நெய்யினையோ, அமெரிக்க நிலக்கரியினையோ இறக்குமதி செய்தால் தான் சுவிற்சர்லாந்தில் தொழில்கள் இயங்க முடியும் என்ற நிலை இருந்தால், சுவிற்சர்லாந்தில் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமாகவே இருக்கும். எவ்வாறு ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ ஒரு
س- 75

Page 200
மூலவளம் பற்றிய.
திறமை இருக்கவேண்டும், அல்லது இருக் கும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்கி ருேமோ, அதேபோன்று ஒவ்வொரு நாட் டிலும் ஏதோ வகையான மூலவளங்கள் இருக்கத்தான் செய்யும். அதனை அடை யாளம் செய்து, கண்டுபிடித்து முன்னேறும் நாடுகளே இன்று பொருளாதாரப் பாதை யில் கம்பீர நடைபோடுகின்றன.
அடுத்ததாக மூலவளங்களைப்பேணுதல் பற்றிய சில கருத்துக்களைப் பார்ப்போம். மூலவளங்களைப் பேணுதல் என்பதில் சமுதா யங்களின் வருங்கால நன்மை என்ற கருத்தே முக்கியமாகும் இன்று காணப் படும் மூலவளங்களை சிக்கனமாக பயன் படுத்தலும், அவற்றினைப் பல்பயனுடைய தாகப் பயன்படுத்தலும் மிக முக்கியமான தாகும். இயற்கை அமைப்பு, கணிப்பொ ருள்கள், விவசாய மூலப்பொருள்கள், மனித வலு மனித அறிவு, போன்ற பல்” வேறு மூலவளங்களிலுமே இப்பிரச்சினை காணப்படுகின்றது.
சிக்கனப்படுத்துதல் என்னும் போது, குறித்தளவு மூலவளத்திலிருந்து கூடிய பயன்பாட்டினைப் பெறுதலையே குறித்து நிற்கின்றது பல் பயனுடையதாக்கல் என் னும்போது குறித்த பொருள் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துதலைக் குறிக் கின்றது. இவற்றுடன் பதில் பொருள் களினைக் கண்டுபிடித்தலும் மிக முக்கியமா கும். ஏனெனில் இது குறித்த மூலப்பொரு ளின் தனியுரிமையினை இல்லாதொழிக்க 6h)Tlb.
இவற்றைவிட மனித வலு, மனித அறிவு என்பனவற்றில் இன்று ஏற்பட் டுள்ளமுக்கியபிரச்சனை மூளைசாலிகள் வெளி யேற்றமாகும். இது பொதுவாக விருத்தி யுறும் நாடுகளில் இன்றைய பெரிய பிரச் சனையாக இருப்பதுடன் வளர்ந்து செல் லும் பிரச்சனையாகவும் இருந்து வருகின் /1955) •

ம்ா. செ. மூக்கையா
மூலவளப் பயன்பாடு
அபிவிருத்தி நிலையிலுள்ள உலக நாடு கள் யாவற்றிலும் மூலவளப் பயன்பாடு பற்றிய பிரச்சினை மிக முக்கியமானதாக காணப்படுகின்றது, அத்தகைய பிரச்சனை இலங்கையினையும் எதிர் நோக்குகின்றமை ஆச்சரியத்திற்குரியதல்ல.
மக்களது வாழ்க்கைத்தரம் என்பது ஒரு வகையில் அவர்களின் பொருளாதார நட வடிக்கைகளின் பிரதிபலிப்பேயாகும். வளர்ச்சியுற்ற பொருளாதார நடவடிக்கை களை மேற் கொண்டுள்ள நாட்டினரே உயர் வாழ்க்கைத்தரத்தினைப்பெற்றுக் கானப்படு கின்ருர்கள். இத்தகைய வளர்ச்சி பெற்ற பொருளாதாரங்கள் என நாம் கருதும் உயர் விருத்தி பெற்றுள்ள நாடுகள் கைத் தொழில் - வர் த் த க பொருளாதாரங் களாகக் காணப்படுகின்றன.இவை உலகில் 8 வீத மக்களையே கொண்டு காணப்படுகின் றன. ஆங்கில அமெரிக்க நாடுகள், மேற் கைரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியனவே இவ்வகைப்பாட் டில் அடங்கும் நாடுகளாக உள்ளன. இவ் வகைப்பட்ட நாடுகளில் கைத் தொழில் வர்த்தக நடவடிக்கைகளே பெருமளவில் காணப்படுகின்றன. இந் நா டு களின் மொத்தத் தொழிலாளர்களில் 20 வீதம் குறைந்தளவினரே விவசாயத்தில் ஈடுபட் டுள்ளனர்.
ஆணுல் உலகின் 50%விதமான மக்கள் குறை விருத்தி அல்லது விருத்தி பெறும் பொருளாதார நிலையிலுள்ள நாடுகளி லேயே வாழுகின்றனர். இத்தகைய தாடு களில் வாழ்வோரில் 60 - 70 வீதம் வரை யில் விவசாயத்தில் தங்கியவராக வாழு கின்றனர், இவர்களுடைய வாழ்க்கைத் தரம் விருத்தியுற்ற நாட்டவர்களுடன் ஒப் பிடுகையில் மிகவும் குறைந்ததாக உள்ளது
இத்தகைய வேறுபாடுகள் பெருமள வில். அவ்வப்பகுதிகளில் மக்கள் தமது மூல வளங்களை அடையாளம் கண்டமை, அவற்
سم 6"

Page 201
மூலவளம் பற்றிய .
நினேப் பயன்படுத்துல், அவற்றினைப் பாது காத்தல் என்பனவற்றின் காரணமாக ஏற் பட்டது என்றே கொள்ளுதல் வேண்டும். இவற்றின் விளைவினுலேயே பின் தங்கிய நாடுகளின் தலைக்குரிய வருவாயானது 75 டொலர் வரையில் குறைந்திருக்க அமெ ரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளின் தலைக்குரிய வருவாயானது 4000 டொலர் வரை அதிகரித்துக் காணப்படுகின்றது, அதற்கு அந் நாடுகளில் கூடிய மூலவளங் கள் காணப்படுகின்றன என்பது பொருத்த மான விளக்கமாக இல்லை. அங்கே மூல வளங்கள் கூடியளவில் அறிய ப் பட் டு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அவற்றின் பயன்பாடு பல் பயனுடையன வாக்கப்பட்டு, உச்சப் பயன்பாட்டினை பெற முயற்சிப்பதும். நீண்ட கால நன்மையினைக் கருதி மூலவளங்களைப் பாதுகாக்கமுயற்சிப் பதுமே பொருத்தமான காரணம் எனலாம்.
மாருக பின்தங்கிய பொருளாதார நிலையிலுள்ள நாடுகளில் முன்னர் கூறியது போன்று தொழிலாளர்களில் 60 முதல் 70 வீதம் ஆனேர் விவசாய நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர். இது நேரடியாக நிலத்தை பொருளாதார நடவடிக்கைக் காக பயன்படுத்தும் முயற்சியாகும். நிலத் திலிருந்து, பெறக்கூடிய கணிப்பொருட்கள் மற்றும் மூலவளங்களைப் பயன்படுத்துவதில் பின்னிற்கும் நிலைமையினை எடுத்துக் காட்டு வதாயுள்ளது, விவசாயத் தொழிலாளர்கள் என்ற வகைப்பாட்டில் பயிர்ச் செய்கை, மீன் பிடி, விலங்குகளை வளர்த்தல், காட் டாக்கம் ஆகிய தொழிகளில் ஈடுபட்டவர் களையே அடக்குவதாக உள்ளது, ஆனல் பின்தங்கிய இந்நாடுகளில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோரிலும் கூட பெரும்பான் மையினர் பயிர்ச் செய்கையிலேயே கூடி யளவு ஈடுபட்டுள்ளனர். இந்த அம்சத்தி லும் கூடிய வருவாயினைத் தருவதும், வளர்ச்சி பெற்ற முறையுமான வர்த்தக நோக்கில் மந்தை மேய்த்தல், மீன் பிடி, காட்டாக்கம் என்பனவற்றில் கூடிய கவ
*னத்தினை இந் நாடுகள் செலுத்தத் தவறி

Lott, G3. Pipán-suT
யுள்ளன. மறுபுறத்தில் உயர் விருத்தி பொருளாதார நாடுகளில் விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் வீதம் குறைவாக இருப் பதுடன் ஈடுபட்டுள்ளோரிலும் பெரும் பான்மையினர் பயிர்ச் செய்கை தவிர்ந்த தான வர்த்தக நோக்கில் மந்தை மேய்த் த ல், மீன் பிடித்தல், காட்டாக்கம் ஆகிய வற்றிலேயே பெருமளவில் ஈடுபட்டுள்ளனர். இவற்றிலிருந்து குறைவிருத்திப் பொருளா தாரங்களைக் கொண்ட நாடுகளில் மூல வளங்களைச் சிறப்பாகவும் பல் பயனுடைய தாகவும் பயன்படுத்தும் திறன் வளர்ச்சி யடைந்தமை போதாது என்றுதான் கூற வேண்டியுள்ளது.
இவ்வாரு க மூலவளங்களை ப்பயன்படுத் துவதில் வளர்ச்சியடையாமை, திறமை யாகப் பயன்படுத்தாம்ைபோன்ற பிரச்சனே க ளு க் க 7 ன கா ர ன ங் களை யு ம் இக்குறைபாடுகள் எவ்வாறு தீர்க்கப்பட லாம் என்பதுமே இந்நாடுகளின் திட்டமிடு வோரது பெரும் பிரச்சனையாக உள்ளது. நாடுகள் ரீதியாக குறித்த நாட்டின் திட்ட மிடும் குழுவும், பிரதேச ரீதியாக பொரு ளாதார கூட்டமைப்புகளும், உலக ரீதியாக உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் தனிப் பட்ட திட்ட சபைகளும், இப் பிரச்சனை யைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை காலத் திற்கு காலம் மேற்கொண்டு வந்துள்ளன. இவற்றைவிட உலகின் பல்வேறு நாடுகளி லுள்ள பல்கலைக்கழகங்களும் இத்தகைய ஆராய்ச்சிகளை நாடு, பிரதேசம், உலகம் என்ற ரீதியில் பெருமளவு ஆய்வுகளை மேற் கொள்கின்றன. இத்தகைய ஆய்வுகளின் விளைவாக ஒவ்வொரு பகுதியும், கடந்த காலங்களில் பல்வேறு முறைகளில் நன்மை யினைப் பெற்று வந்துள்ளன.
இந்நிலையில் இலங்கையில் இன்று மூல வளப் பயன்பாட்டினைப் பற்றி நோக்கும் போது பின்வரும் அம்சங்கள் அதில் முக்கி யம்பெறுகின்றன.
(1) இலங்கையில் உள்ள மூலவளங் கள்.
77 -

Page 202
(2) இலங்கையில் இன்று பயன்படுத் தப்படும் மூலவளங்கள்.
(3) மூலவளங்களை பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள்.
இலங்கையைப்பொறுத்து அதன் புவியியல் அமைவிடமே அதற்குப்பெரும் நன்கொடை யாகும். வரலாற்றுக் காலமுதலாகஇலங்கை அதன் கேந்திர நிலையம் காரணமாகப் பல் வேறு நாடுகளையும் கவர்ந்து வந்துள்ளது, முழு உலகமும் அறியப்பட்டதன் பின்னர் மேற்கைரோப்பிய நாடுகளில் இருந்து செல்லும் தூர கிழக்காசிய அவுஸ்ரேலியா பகுதிகளை நோக்கிய பிரயாணங்களின் போது இலங்கையின் நிலையம் முக்கி யத்துவம் வாய்ந்ததாகியது. இந்து சமுத் திரத்தில் மத்திய பகுதியைச் சார்ந்த நிலை யம் பல்வேறு காலங்களிலும் உலக அரசி யல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டோ ரின் கவனத்தினையும் ஈர்ந்துள்ளதுடன், அவர்களை இலங்கை மீது அக்கறை காட் டவும் செய்துள்ளது. இதன் காரணமாக மற்ற நாட்டவர்களிடையே நாம் செல் வ்ாக்கினைப் பெறமுடிந்தது,
நாற்புறமும் கடல் சூழப்பட்ட தீவு அமைப்பு காரணமாக 800 மைலுக்கு மேற் பட்ட முறிவுபட்ட கரையோரங்களும், அதனைச் சூழ்ந்த ஆழமற்ற கண்டத் திட்டு களும் வளைகுடாக்கள், குடாக்கள். தீபகற் பங்கள் போன்றனவும் தலைசிறந்த மூல வளங்களேயாகும். இயற்கை அமைப்பு, சிறந்த இயற்கைத் துறைமுகங்கள். அமைப் பதற்கு சாதகமானதாக இருந்தது. உதா ரணமாக திருகோணமலை துறைமுகத்தைக் கூறலாம். இவ்வாருன சிறந்த துறைமுக அமைப்புக்களுடன் உலகின் சிறந்த கேந் திரப்பகுதியில் இருப்பதால் பெறக்கூடிய பல்வேறு நன் மைகளைப் பற்றி இங்கே கூற வேண்டியது அவசியமில்லை.
ஆழமற்ற கண்டத்திட்டுக்கள் பலகாணப் படுவதுடன் 30இற்கு மேற்பட்ட ஆறுகள் கடலில் வந்து சேரும்போது கொண்டு
17

oT . GoIF. epätansuu
வந்து சேர்க்கும் பலவித பொருட்களும் மீன்கள் அங்கே பெருக வாய்ப்பாவதால் மீன் பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடையச் சாதகமாக உள்ளது.
நிலையம் காரணமாக இத்தகைய வாய்ப்புக்களை இலங்கை கொண்டிருப்பது மாத்திரம் அன்றி உள்நாட்டுப் பகுதியும், அதன் இயற்கைத் தோற்றமும் பல்வேறு மூலவளங்களை அளிப்பதாக உள்ளது. 8,000 அடிவரை உயர்ந்துள்ள நிலப்பகுதி கள் உயர் நிலப் பகுதி தாவரங்களுக்கு வாய்ப்பாக இருப்பதுடன், இலங்கையின் பாரம்பரிய உணவுத் தானியமான நெல் லும் விளைவிக்கப்படலாம். தெ ன் இன போன்ற உப உணவுப் பொருள்களை விளை விக்கவும் தேவையான நிலப்பகுதியினையே தீவின் 70% நிலப்பகுதியில் காணக்கூடிய தாக உள்ளது. நீர்ப்பாசனத்திற்கு அடிப் படையான ஆறுகள் பல காணப்படுவது டன், அதன் பராமரிப்புக்குத் தேவையான சார்பு மிக்க கால நிலையினையும் நாம் காணக் கூடியதாக உள்ளது. உயர் நிலங்களும் புல் நிலங்களும் மந்தை மேய்த்தல் தொழி லுக்கு ஏற்றதாக இருப்பதுடன், பெரும ளவு காடுகள் மீண்டும் காட்டாக்கத்திற் கான் வாய்ப்பினையும் அளிப்பதாக உள்ளன.
விவசாயத்திற்கான பெளதீக மூலவ ளங்கள் இவ்வாறு காணப்படுவதுடன் அக ழும் தொழில்கள் வளர்ச்சியடைவதற்கான சூழல்களும் உள்ளன. தீவின் வடம்ேற்கு, வடக்குப் பகுதிகளில் காணப்படும் அடை யல் பாறைப் பகுதிகள் அங்கே பல்வேறு வகையான கணிப்பொருள்களின் இருப்பினை உணர்த்துவதாக உள்ளது. தீவின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக வடகிழக்குக் கரை யோரம் தென்மேற்குப் பகுதி மத்திய பகு திகளில், பலவகைப்பட்ட கணிப் பொருள் கள் இன்று அடையாளம் செய்யப்பட் டுள்ளன.
கைத்தொழில்களின் வளர்ச்சிக்கான
மூலவளங்களைப் பொறுத்தமட்டில், இலங் கையில் இதுவரை காலம் வளர்ச்சிபெற்று
3 -

Page 203
மூலவளம் பற்றிய.
வந்துள்ள பெருந்தோட்டப் பயிர்ச் செய் கையினை அடிப்படையாகக்கொண்ட ‘விவ சாயம் சார்பான ’ கைத்தொழில் களைத் தொடர்ந்து நடாத்தவும், அவற்றினைப் பெருமளவு அபிவிருத்தி செய்வதற்குமான சாத்தியக் கூறுகள் பெருமளவில் உள்ளன. றப்பர், தென்னை உற்பத்திகளை மூலப் பொருள்களாகக் கொண்ட தொழில்கள் மிகச் சிறப்பாக விருத்தியடையச் செய்ய முடியும். கைத்தொழில்களுக்கு அடிப்ப டைத் தேவைகளாக மூலப் பொருள்கள், மூலதனம், தொழிலாளர், சந்தை, தொழில் நுட்பம் போன்ற பல அமைந்து காணப்
படுகின்றன,
இவற்றில் மூலதனம் பிரச்சனையாகக் காணப்பட்டாலும், மூலப்பொருள், தொழி லாளர், சந்தை, தொழில் நுட்பம் போன் றன சில தொழில்களுக்கு சார்பாக அமைந் துள்ளன. டயர் உற்பத்தி, காகித உற் பத்தி, மீன் தகரத்திலடைத்தல், சீமெந்து உற்பத்தி, விலங்கு உற்பத்திகள், பதனி டல், தோல் பதனிட ல், தளபாடத் தொழில்கள் போன்றனவும் சவர்க்காரம், ஆகிய நுகர்வுப்பொருள்கள் நன்கு விருத்தி பெறவும் பல சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவற்றிற்கான மூலப் பொருள்கள் கணிப் பொருள்கள், விவசாய உற்பத்திகள் என்பனவாக உள்ளன. விவசாய உற்பத் திகளில் குறிப்பாக ற ப் பர் போன்றன இன்று பெருமளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன. கரும்பு, பருத்தி போன்றன போதியளவில் இலங்கையில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிலம், நீர், தொழிலாளர் என்பனவும், ஏனைய சாதக நிலைமைகளும் போதியளவில் உள்ளன.
இத்தகைய பல்வேறு வகையான மூல வளங்களுடன் மனித வலுவும், மனித அறி வும் இலங்கையைப் பொறுத்து பெருமள வில் காணப்படுவது சிறப்பான அம்சமா கும். கடந்த சில வருடங்களாகக் குடிப் பெருக்கத்தினைப் பொறுத்து உலக நாடுக ளிடையே ஒப்பளவில் கூடிய வீதத்தினைக்

மா. செ. மூக்கையா
கொண்டதாயிருந்தது. இன்றைய குடித் தொகையில் 82%க்கு மேற்பட்டோர் கல்வி யறிவுடையவர்களாகவோ எழுதப் படிக் கத் தெரிந்தவர்களாகவோ உள்ளனர். சில அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இந்த விகிதாசாரத்தில் இல்லை. ஆஞல் இத்க கைய பெரும் மூலவளமானது எவ்வகை யில் பொருளாதார அபிவிருத்திக்கு இலங் கையில் பயன்படுத்தப்படுகின்றது என்பது கேள்விக்குரியதாக உள்ளது.
இவ்வாறு காணப்படும் பல்வேறு மூல வளங்களும் இலங்கையில் பூரணமாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே பொரு ளாதாரத் திட்டமிடுபவர்களையும், ஆப்லா ளர்களையும் கவலையுறச் செய்வதாக உள்ளது.
பெரு 10 ள வ வாய்ப்புகள் இருந்தும் இலங்கையருக்குத் தேவையானவற்றில் 40 வீதமான அரிசி, 85 வீதமான சீனி, 95 வீதமான பருத்தி நூல் என்பன இன் னும் இறக்குமதி செய்யப்படுவது பொரு ளாதார நோக்கில் மகிழ்ச்சிக்குரியதல்ல. விளை நிலங்களை முறையாக விவசாயத்திற்கு உட்படுத்துவதன் மூலம், இப்பொருள்களை உற்பத்தி செய்வதில் வெற்றி காணலாம். கடந்த காலங்களில் உப உணவுப் பொருள் களே இறக்குமதி செய்வது தடைசெய்யப் பட்டதும், அப்பொருள்களின் உற்பத்தி பெருகியமை இங்கே குறிப்பிடத்தக்கது. அதுபோன்றே இப்போது அரிசி, சீனி போன்ற பொருட்களினதும் உள்நாட்டு உற்பத்தி குறித்து எடுக்கப்பட்டுள்ள இறக் குமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நாட்டின் எதிர்காலப் பொருளாதார அபி விருத்தியினைப் பொறுத்த மட்டில் குறிப்பி டத்தக்கதாகும். உணவுப் பொருள்களின் விலைகளும், அவற்றை உற்பத்திப் பகுதிக ளிலிருந்து கொண்டுவர ஏற்படும் போக்கு வரத்துச் செலவுகளின் அதிகரிப்பும் உள் நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க வேண் டிய சூழ்நிலையினை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கைத்தொழில் க
سس 79

Page 204
மூலவளம் பற்றிய.
அளப் பொறுத்தமட்டில் உள்நாட்டில் மூல வளங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட வில்&ல என்ற குற்றச்சாட்டு மிகையான தல்ல. முன்னர் கூறியது போன்று நமது அத்தியாவசியத் தேவைகளில், பெரும்பா லானவற்றை இலங்கையிலேயே நிச்சயமாக உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், பற்ருக்குறை அவற்றில் நிலவு வது நியாயப்படுத்த முடியாததாக உள் ளது. பருத்தி, கரும்பு போன்றன உள் நாட்டில் தேவைக்கான அளவினை உற்பத்தி செய்ய பெளதீக தேவைகளான நிலம், நீர், காலநிலை வாய்ப்புக்கள் இருந்தும் உற்பத்தி நடவடிக்கை பெருகாததன் காரணமாகவே இப்பொருள்களுக்கான பற்ருக்குறை நில வுகின்றது. இறக்குமதியாகும் ஒவ்வொரு பொருளுமே விலை கூடிச் செல்கின்றது. அந்நிலையில் நமது முக்கிய ஏற்றுமதிப் பொருள்களான தேயிலை, இறப் பர், தென்னைப்பொருள்களின் விலையில் சிறிய ஏற்றம் இருந்தாலும், உற்பத்தியின் அள வில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினல் நமது இறக்குமதிகளில் ஏற்படுகின்ற அதிகரிப் பினை சமப்படுத்த முடியாதுள்ளது. எனவே அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதனையும் நிறுத்தவோ அல்லது குறைக்கவோ வேண்டிய சூழ்நிலை உருவா கியுள்ளது.
இத்தகைய பிரச்சனைகள் யாவற்றிற் கும் அடிப்படையாக அமைவது நமது மூல வளங்களை முறையாகப் பயன்படுத்தாமை யேயாகும்.
தமது மூலவளங்களைப் பயன்படுத்துதல் போதாது என்பதுடன், அறிந்த மூலவளங் களைத்தானும், அல்லது வளர்ச்சி பெற் றுள்ள மூலவளங்களைத் தானும் நாம் ஒழுங் காகப் பயன்படுத்துகின்ருேமா என்பது நமது பிரச்சனைகளில் முக்கியமானதாகும். பல்வேறு மூலவளங்களையும் பாதுகாப்பது டன் இங்கே குறிப்பிடத்தக்கனவாக சில seasir Gomr6or .
* கோபம், தீங்கிழைத்தல், அழுக்க னுக்குக் கேடு விளைவிப்பவை. அ கள் அவனது வாழ்வை வளர்க்கு
}1 مس۔

LDT. Ga. epäsonsuT
1. கணிப் பொருள்களை தாதாக ஏற்று
மதி செய்தல்.
2. விவசாய மூலப் பொருள்களை முத னிலைப் பொருள்களாக ஏற்றுமதி செய்தல்,
3. மூளை சாலிகளின் வெளியேற்றம்,
இலங்கையில் கடந்த காலங்களில் காரீ யம், மைக்கா என்பன ஏற்றுமதி செய்யப் பட்டது. தொடர்ந்து இல்மனைட்டும் இலங்கையைப் பொறுத்து இன்றைய நிலை யில் மூலப் பொருளாகவே ஏற்றுமதி செய் தல் தவிர்க்க முடியாததாகும். ஆனல் விவசாய மூலப் பொருள் வகைகளைச் சார்ந்த இறப்பர் போன்றவற்றை இன்று ஏற்றுமதி செய்தலை குறைத்து உள்நாட்டு இறப்பரை மூலப் பொருளாகக் கொண்ட தொழில்களை வளர்த்தல் வரவேற்கவும், நடைமுறைப்படுத்தவும் வேண்டியதாகும். இவை பொதுவாக விருத்தியடைந்து வரும் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகின்ற பிரச்சனைகளாகும். குறிப்பாக மூளை சாலி களின் வெளியேற்றம் இலங்கையினை இன்று எதிர்நோக்கும் பெரியதோர் மூலவளப் பாதுகாப்புப் பிர்ச்சனையாகும். வளர்ச்சி பெற்றுவரும் இந்நிலையில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களும், தொழில் நுட்பவிய லாளர்களும் நாட்டை விட்டு வெளியேறு தல் தொடர்ந்து ஏற்பட வேண்டிய வளர்ச் சிகளுக்கு பெரும் தடையாக அமைகின் றது. இத்தகைய குறைபாடுகள் மாத்திர மன்றி, மூலவளங்களைப் பயன்படுத்துவதி லும் கூட இன்று பெருமளவில் குறைபா டுகள் காணப்படுகின்றன. மூலவளங்களைப் பல்பயனுடையனவாக்குதல் மிக அத்தி யாவசியமாக உள்ளது.
இவ்வாருக இலங்கையில் காணப்படு கின்ற பல்வேறு மூலவளங்களையும் சிறப் பான முறையில் பயன்படுத்தும் பட்சத் தில் பொருளாதார சுபீட்சம் வெகுவிரை வில் ஏற்படுதல் கடினமில்லை என்பதனை உறுதியாகக் கூறலாம்.
5ாறுமுதலிய பேய்த்தன்மைகள் மனித புன்பு, இரக்கம் முதலிய தெய்வ நீர்மை iம், - திரு. வி. க.
30 -

Page 205
ÕTíth est
BOGANMUWANAWA
Proprietor : R. Johs
YAKK Telephone: 033 - 2419
ữäítỉ Best (La
Σ X d BENARTC
Producers of Des
Proprietor : R. Johl
KATA
el : KOCh Chikade 9 6

(Lampliment
D/C MS
Cheliah & Bros.
ALA.
the mplíment5 f
N MILLS iccated Coconuts.
Chelliah at Bros.
ANA.
t

Page 206
With Best Compliments
from
sf
i
THANANMISS
General Merchants & Commission Agents. No. 5, First Cross Street, VAWUNIYA.
G. C. E. O/L & A/L, N. C. G. E.
CLASSES
Conduct :
Bitman Institute
MANPAY.
Regd. No. 9437
ARUINA N. BALAKRISHNAN
Director. Master.

சபாஸ் தேயில்
நாம் எல்லோரும் விரும்புவது
சபாஸ் தேயிலை
விநியோகஸ்தர்கள் :-
ராஜா ஸ்ரோர்ஸ்
நெல்லியடி,
கரவெட்டி.
È G. C. E. (A/IL), G. C, E. (O; L}
(கலை / வர்த்தக) மாணவ மாணவிகள்
உவந்தளிக்கும் gygir ligfail.
V/
Modern Education Centre
KARAWEDDY.

Page 207
பங்குடைமைச் சட்டம்
செ. தர்
B. Sc. (Madras), L. L. B. (Cey.), Asst.
பகுதிநேர விரிவுரையாளர் .
பங்குடைமையின் தன்மையும் இலங்கையில் பங்குடைமைச் சட்டமும்:
சொந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள் ளோர் பலர் இருந்தபோதிலும் பெரிய அளவில் வியாபாரஞ் செய்வதென்ருல் அதில் பலர் பங்குகொள்வது தவிர்க்கமுடி யாதவொன்ருகும். இவ்வாறு பல பேர் சேர்ந்து செய்யும் முயற்சியை பங்குடைமை முயற்சி என்றழைக்கலாம்.
பங்குடைமை பற்றிய சட்டமானது ரோமச்சட்டத்தில் இருந்து தோன்றிய தெனலாம். தற்போதைய நிலைமைப்படி, ஆங்கில நாட்டின் பொதுச்சட்டமே பங்கு டைமைச் சட்டத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பங்குடைமை பற்றிய ஆங்கி லேய சட்டம் இலங்கையில் புகுத்தப்பட் டது. இதனுல் ரோம டச்சுச் சட்டத்தின் சொசயிற்ருஸ் (Societas) பற்றிய சட்டக் கோட்பாடுகளை எமது நீதிமன்றங்கள் ஏற் புடையனவாக்க முடியாது போயிற்று, பங் குடைமைச் சட்டத்தின் தற்போதைய நிலை பற்றி 1866 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்கக் கட்டளைச் சட்டம் பின்வருமாறு கூறுகிறது. "பங்குடைமைச் சட்டம் தொடர்பாக இலங்கையில் எழும் எல்லாக் கேள்விகளுக் கும் பிரச்சினைகளுக்கும், ஏதேனும் சட்ட வாக்கத்தில் வேறுவிதமாக ஏற்பாடு செய் பப்பட்டிருந்தாலன்றி, அப்பிரச்சினை அல் லது கேள்வி எழுந்துள்ள காலப்பகுதியில் அதேவித வழக்குகளில் ஏற்புடையதாக ಸೆಕ್ಟ್ರಿಅರು" (சிவில் சட்டக் கட்டளைச்சட்
-- 18

கராஜா egal Draughtsman, Attorney-at-Law. வித்தியோதய வளாகம்.
மேற்படி வாசகத்திலிருந்து இலங்கை யிலுள்ள பங்குடைமை பற்றிய சட்டம் ஆங்கிலேய பங்குடைமைச் சட்டமே என் பது புலனுகும். அன்றியும் பங்குடைமை பற்றிய ஆங்கிலேய நியதிச்சட்டம் மாத்தி ரமல்லாமல் ஆங்கிலேய பொதுச்சட்டமும் பங்குடைமைச் சட்டத்திற்கு ஏற்புடையன வாகும் என்பது ஈண்டு கவனிக்கத்தக்கது.
ஆங்கிலேய சட்டம் தவிர, இலங்கை யின் நியதிச்சட்டங்கள் சிலவும் பங்கு டைமை தொடர்பில் ஏற்புடையனவாகும்.
பங்குடைமையின் வரைவிலக்கணம்:
இலாபத்தைப் பெறும் நோக்கத்துடன் வியாபாரமொன்றைப்பொதுவில் கொண்டு நடாத்தும் நபர்களுக்கிடையேயுள்ள உறவு தான் பங்குடைமையாகும் என்று 1890ஆம் ஆண்டின் ஆங்கிலேயப் பங்குடைமைச் சட் டம் வரைவிலக்கணம் கூறுகிறது. இவ் வரைவிலக்கணம் மூன்று முக்கிய அம்சங் களைக் கொண்டுள்ளது. அவையாவன :
(i) சம்பந்தப்பட்ட எல்லா ஆட்களின லும் உடன்படிக் கையொன்று செய் யப்பட்டிருக்க வேண்டும்;
(i) வியாபாரத்தில் இருந்துவரும் இலா பத்தைப் பங்கிடுவதே உடன்படிக் கையின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்;
(i) வியாபாரமானது சம்பந்தப்பட்ட எல்லா ஆட்களாலும் அல்லது அவர் களுள் எவராலும் மற்றவர்களது சார்பில் நடாத்தப்படவேண்டும்.

Page 208
பங்குடைமைச் சட்டம்
மேற்கூறிய மூன்று முக்கிய அம்சங்களை யும் விரிவாக ஆராய்வோம். வியாபாரம் என்பது ஆங்கிலேய பங்குடைமைச் சட் டப்படி, ‘ஏதேனும் வியாபாரம், தொழில் அல்லது தான்புரிதொழில் எதனையும்" உள் ளடக்குவதாகும். வியாபாரம்பற்றிய வரை விலக்கணம் மிகவும் விரிவானதாகத் தோன் றினலும், அன்டர்கில் (Underhil) என்னும் அறிஞர், இவ்வரைவிலக்கணமானது மணி தர்கள் தமது வர்த்தக, வியாபாரப் பொருள்களை விற்பதற்கான அல்லது தமது பொறிப்பணிகளை அல்லது வேறு சேவை களே அளிப்பதற்கான முயற்சிகளை மட் டுமே உள்ளடக்குவதாகவுள்ளது என்று கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது.
பதிவு செய்யப்பட்ட கம்பனிகள், நிய திச்சட்டக் கம்பனி கள் மற்றும் சார்ட் டர்ட் கம்பணிகள் என்பன மேற்படி வரை விலக்கணத்திலிருந்து விலக்களிக்கப்பட் டுள்ளன. அத்துடன் இலாபம் பெறும் எண்ணமில்லாத கழகம் ஒன்று ஒருபோ தும் பங்குடைமையாகாது என்பதுவும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
பங்குடைமையும் பங்குடைமை போன்ற உறவு களும் :
பங்குடைமை வேறு கூட்டுச்சொத்து வம் வேறு. கூட்டுச்சொத்துவத்தில் கூட்டுச் சொந்தக்காரர்கள் இலாபத்தில் பங்கெ டுப்பினும்கூட, அவர்கள் பங்குடைமையை உருவாக்குவதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் இலாபம் பெறும் நோக்குடன் வியாபாரம் செய்யாமையேயாகும். அதே போன்று சிமித் எதிர் அண்டர்சன் (1880) 15 247 என்ற வழக்கில், தமது உறுப்பினர் களின் பொது நன்மைக்கென்று பணம் முதலீடு செய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கமொன்றின் உறுப்பினர்கள் அதன் பங்காளர்கள் ஆகார் என்று தீர்ப்பளிக்கப் பட்டமை இக்கருத்துக்கு ஆதாரமாகவுள் ளது. அதே வழக்கில் நீதியரசர் பிரேன்ற் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
- 1

செ. தங்கராஜா
*பொது நன்மை பெறும் நோக்குடன் முத லீடு செய்வதற்கும் இலாபம் பெறும் நோக் கோடு பணம் செலவு செய்வதற்கும் இடை யில் வேறுபாடு உண்டு. இவ்வேறுபாடே கூட்டுச்சொத்துவத்திற்கும் பங்குடைமைக் கும் உள்ள வேறுபாடாகும்.'"
வியாபாரமொன்றின் தேறிய இலாபத் தில் பங்கெடுப்பது என்பது, அது சொத்து வத்தினுடைய அல்லது வியாபாரத்தினு டைய கூட்டுச்சொத்துவத்துடன் கூடிய தாக இருப்பினும்கூட, பங்குடை1ை0யா
வியாபாரமொன்றின் இலாபத்தில் பங்குகொள்ளுவதென்ற ஒன்றே அவ்வாறு பங்குகொள்ளுபவரை பங்காள ராக்கும்
என்ற கருத்து நீண்டகாலமாக இங்கிலாந் தில் நிலவி வந்திருக்கிறது. இது பல்வேறு வழக்குகளிலும் பின்பற்றப்பட்டு வந்து, ஈற் றில் கொக்ஸ் எதிர் கிக்மன் (1860)8 268 என்ற வழக்கில் பிரபுக்கள் சபையால் நிராகரிக்கப்பட்டுப் புதிய விதி படைக்கப் பட்டது. இலாபத்தில் பங்குகொள்ளும் உரிமை இருப்பதே பங்குடைமையின் தலை யாய சிறப்பம்சமாக இருந்தபோதும் அத் தகைய உறவு உள்ளதா இல்லையா என்பது திறத்தவர்களின் உண்மையான உட்கருத் திலேயே தங்கியுள்ளது என்ற கருத்து பிர புக்கள் சபையினுல் மேற்படி வழக்கில் தெரிவிக்கப்பட்டது. கொக்ஸ் எதிர் கிக்மன் வழக்கின் தீர்ப்பே இன்றும் நடைமுறை யிலுள்ள சட்டமாக இருந்து வரினும், 1890ஆம் ஆண்டின் ஆங்கிலேய பங்குடை மைச் சட்டத்தின் 2 (3), 3 ஆகிய பிரிவுக ளில் காணப்படும் வாசகங்கள் சிக்கல் நிறைந்தனவாகக் காணப்படுகின்றன. எனி னும், பல்வேறு வழக்கு முற்றீர்ப்புக்களின் அடிப்படையில், இலாபத்தில் பங்குகொள் வது பங்குடைமை ஒன்று உண்டு என்ப தற்கு முதற்ருேற்ற அளவிலான ஊகச் சான்ற க இருந்தபோதும், இலாபத்தில் பங்கெடுக்கும் நோக்கம் வேறு காரணத் திற்காகவென்று எண்பிப்பதன்மூலம், இவ் வூகமானது தவறென்று எண்பிக்கப்பட லாம். உதாரணமாக:-
-س- 84

Page 209
பங்குடைமைச் Fulto
() இலாபங்களிலிருந்து தவணை முறை
யில் கடனை அடைப்பது:
(ii) வியாபாரத்திலுள்ள ஊழியருக்கு அல்லது முகவருக்கு இலாபத்திலி ருந்து வேதனமளிப்பது:
(i) இறந்த பங்காளர் ஒருவரின் கைம் பெண்ணுக்கு அல்லது அநாதைக்கு இலாபத்திலிருந்து கொடை வழங்கு வது;
(iv) வியாபாரத்திற்காக வழங்கப்பட்ட கடன் மீது இலாபத்திலிருந்து வட்டி கொடுப்பது;
(w) நல்லெண்ணத்தை விற் ற வருக்கு வியாபார இலாபத்திலிருந்து பணம் செலுத்துவது.
எனவே, பங்குடைமை உள்ளதா இல் லையா என்பது உறவின் சூழ்நிலைகளையும் திறத்தவர்களின் உட்கருத்துக்களையுமே பொறுத்தது என்பது தெளிவாகிறது. வாக்கர் எதிர் கிர்ஷ் (1884) என்ற வழக்கில் தெரிவிக்கப்பட்ட கருத்தின் படி, இலாபத் தில் பங்கெடுப்பதிலும் நட்டத்தில் பங்கு கொள்வதே பங்குடைமை உண்டு என்ப தற்குச் சிறந்த சான் ருகும். எனினும் இக் கருத்து முடிவானதொன்றல்ல. இலங்கை யிலும் இதுபற்றிய "சட்டம் இங்கிலாந்துச் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைந் துள்ளது.
பங்காளர்களின் எண்ணிக்கை
பொதுச்சட்டத்தின் கீழ் பங்குடை மையை ஆக்கும் உறுப்பினர்களின் எண் ணிக்கை பற்றி எவ்வித வரையறையும் இல்லை. கம்பணிகள் கட்டளைச்சட்டத்தின் படி தனியார் கம்பணிகளில் ஆகக்குறைந் தது இரு உறுப்பினர்களும் ஆகக்கூடியது ஐம்பது உறுப்பினர்களும் இருக்கவேண் டும் பகிரங்கக்கம்பனியில் ஆகக்கூடிய தொகைக்கு வரையறை இல்லை. வங்கி தொடர்பான பங்குடைமையில்'ஆக க்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்து ஆகும். ஆயினும் 1967ஆம் ஆண்டின் ஆங்
1 جمض

செ. தங்க்ராஜா
கில கம்பனிச் சட்டத்தின் திருத்தத்தினுல் இவ்வெண்ணிக்கை இருபது ஆக உயர்ந் துள்ளது என்பதும் சிவில் சட்டக் கட்ட ளைச்சட்டத்தின் ஏற்பாடுகளும் ஈண்டு கவ னிக்கத்தக்கவையாகும்.
பங்குடைமைக்கு அவசியமான சம்பிரதாயங்கள்:
பங்குடைமை உருவாகுவதற்கு, ஆங்கி லேய சட்டத்தின்படி எழுத்திலான உடன் படிக்கை பொதுவாக அவசியமில் லே. ஆனல் இலங்கைச் சட்டத்தின் கீழ் மேற் படி விதிக்குப் பல்வேறு விதிவிலக்குகள் உள. "ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட மூலதனம் இருக்குமிடத்து, வாக்குறுதி, ஒப்பந்தம், கொடுக்கல் வாங்கல் அல்லது உடன்படிக்கை எதுவும், எழுத்தில் செய் யப்பட்டு அதைச் செய்யும் திறத்தவர்க ளால் அல்லது சட்டப்படி அதிகாரமளிக் கப்பட்டவர்களால் ஒப்ப மி டப்பட்டா லன்றி,பங்குடைமையொன்ரு கச்சட்டப்படி வலியுறுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ மாட்டாது" என்று மோசடித் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் 18ஆம் பிரிவு ஏற் பாடு செய்கிறது. ஆனல் அதே பிரிவுக் கான காப்பு வாசகம், "இப்பிரிவானது, பங்காளர்களை அல்லது அவ்வாரு க செயற் படும் ஆட்களை வழக்குப் போடுவதையோ, தடுப்பதாகவோ, பங்காளர்களுக்கிடையே யான கொடுக்கல் வாங்கல்களில் அல்லது கணக்கு நிர்ணயங்களில் வாய்ச் சாட்சியத் தைத் தவிர்ப்பதாகவோ பொருள் கொள் ளப்படுதலாகாது’ என்று கூறுகின்றது.
மேற்கூறிய வாசகங்களின்படி, பங்கு டைமை எழுத்தில் இல்லாதபோது, பங் காளர்களுக்கிடையே கணக்கு வழக்குகளை நிர்ணயிப்பதற்காக, கூட்டுச்சொத்துவம் என்ற அடிப்படையில் ஒரு வழக்குத் தொடர முடியாது. அவ்வாறு வழக் கொன்று தொடரப்படின், எதிராளி உண் மையாகவே த மக்கும் வழக்காளிக்கும் இடையே பங்குடைமை உண்டு என்று எண் பிக்கவும், சுப்பையா எதிர் கனகரட்டினம்
-س- 85

Page 210
பங்குடைமைச் சட்டம்
(1960) 61 பு, ச. அ. 53 என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது போன்று வழக்காளி யின் வழக்கைத் தள்ளுபடி செய்விக்கவும் முடியும். மேலும் சிவகுமாரன் எதிர் ராஜ சேகரம் (1962) 63 பு. ச. அ. 556 என்ற வழக்கில் பிரிவுக்கவுன்சில் தீர்ப்பளித்த வண்ணம், வழக்காளி வழக்கில் தனது வழக்கிற்கான ஏது நம்பிக்கைப் பொறுப்பு முறிவு என்று கூறிவிடமுடியாது. ஆணுல், முன்னரே கூறியது போன்று மூன்ரும் திறத்தவர்கள் வாய் மொழிச்சான்று மூலம் குறிப்பிட்டவர்களுக்கிடையில் ஒரு பங்கு டைமை இருந்தது என்று தாபிக்கலாம். அதுபோலவே, ஒரு பங்காளரின் நிறை வேற்றுநர் ஒருவர் பங்குடைமை இருந்தது என்று எண்பிப்பதற்காக வாய்மொழிச் சான்றைக் கொண்டுவரலாம்.
ஆயிரம் ரூபாவிற்கு அதிகமாகாத மூல தனம் உடைய பங்குடைமையை மோச டித் தடுப்புக் கட்டளைச் சட்டம் பாதிக் காது. எனவே அத்தகைய விடயங்களில் பங்குடைமை எழுத்திலில்லாதபோதும்கூட பங்காளர் ஒருவர் வழக்கிட முடியும். தீர்ப் பளிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளிலி ருந்து, மேலே குறிப்பிடப்பட்ட மூலதன மானது தொடக்க மூலதனத்தை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகிறது. எனவே, பின்னர் அதிக ரித்த மூலதனத்தைக் கொண்ட பங்குடைமை ஒன்றுக்கு மோச டித் தடுப்புக் கட்டளைச் சட்டம் ஏற்புடை யதாகாது.
சட்டவிரோதமான பங்குடைமைகள்
பின்வரும் சந்தர்ப்பங்களில் பங்குடை
மையானது சட்டவிரோதமானதாக வரும்
(அ) அதன் குறிக்கோள் சட்டவிரோத
மாகவுள்ளபோது;
(ஆ) அ த ன் உறுப்பினர்களின் 6 Gior ணிக்கை நியதிச் சட்ட எண்ணிக்கை யிலும் பார்க்கக் கூடுதலாகவுள்ள போது;
(இ) சட்டத்தினுல் தவிர்க்கப்பட்ட சங் கம் ஒன்ருக அது இருக்கும்போது ;
18

செ. தங்கராஜா
பங்குடைமையொன்று சட்டவிரோத மானதாகவுள்ளபோது அது வறிதானதா கும். எனவே நீதி மன்றங்கள் அத்தகைய பங்குடைமைகளைப் பற்றிக் கவனஞ் செலுத் துவதில்லை. ஷோ எதிர் பென்சன் 11 563 என்ற ஆங்கிலேய வழக்கில் கூறப்பட்டது போன்று, பங்குடைமை சட்டவிரோதமா னதாக உள்ளபோது பங்குடைமைத் திறத் தவர்களுக்கிடையே கணக்கைச் சீர்செய் வதற்காகவோ அன்றி மற்றைய திறத்த வருக்கு உறப்பட்ட நட்டத்தை ஈடு செய் யும்படியோ நீதிமன்றம் கட்டளையிடாது. ஆணுல் பங்குடைமைத் திறத்தவர்களுள் ஒருவர் தவறு இழைக்காதவராக அல்லது சட்டவிரோதமாகத் தன்மை பற்றி ஏதே னும் அறியாதவராக உள்ளபோது, நீதி மன்றம் முறைமை நீதியின் அடிப்படை யில், அவருக்கு நிவாரணமளிக்கலாம்"
சில சமயங்களில், ஆரம்பத்தில் சட்ட முறையாக இருந்த அல்லது தொடங்கிய பங்குடைமைகள் சில சூழ்நிலைகள் அல்லது சட்ட மாற்றங்கள் காரணமாகச் சட்ட விரோதமான பங்குடைமைகளாக மாற லாம். உதாரணமாக இலங்கையில் தேயி இலக் கட்டுப்பாட்டுச் சட்டம் நடைமு றைக்கு வந்ததனல், ஆரம்பத்தில் சட்ட முறையாக இருந்த, தேயிலைத் தோட்டங் களை நிர்வகிக்கும், பல பங்குடைமைகள் சட்ட விரோதமான பங்குடைமைகளாக மாறின.
பங்குடைமைகளின் சட்ட விரோதத் தன்மையினல் விளையும் பயன்கள் பின்வரு வனவாகும் ;-
(i) பங்குடைமைத் திறத்தவர்கள் தமக் கிடையே எவையேனும் உரிமைக ளையோ கடப்பாடுகளையோ வலியு றுத்த முடியாதவர்களாயிருப்பர்.
(ii) ஏதும் அறியா வெளியாருக்கெதிரா கப் பங்குடைமைத் திறத்தவர்கள் எவ்வொப்பந்தத்தையும் வலியுறுத் தலா காது.

Page 211
பங்குடைமைச் சட்டம்
(ii) ஏதும் அறியா வெளியார் பங்குடை மைத் திறத்தவர்களுக்கெதிரா கக் கொண்டுவரும் எவ்வழக்கிலும் பங்
குடைமை சட்ட விரோதமானது என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
யார் பங்காளராகலாம் என்பது :
ஏதேனும் நியதிச்சட்டம் முரணுக ஏற் பாடு செய்திருந்தாலன்றி, ஒப்பந்தம் செய் யும் தகைமையுடைய எவரும் பங்குடை மைத் திறத்தவராகலாம். இலங்கையில் பங்குடைமை பற்றிய சட்டம் ஆங்கிலேய சட்டமாக இருப்பினும் கூட, திறத்தவர்க ளின் ஒப்பந்தத்தகைமை அவர்களின் வதி விடச் சட்டத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இலங் கையில் பொதுச்சட்டமான ரோம டச்சுச் சட்டத்துடன் கூட, கண்டியச் சட்டம், தேச வழமை, முஸ்லிம் சட்டம் போன்ற பல் வேறு சட்டமுறைகள் உள்ளன என்பதை நாம் கவனத்திலிருத்த வேண்டும்.
பங்குடைமைப் பெயர்:
பங்குடைமையொன்று குழுமப் பெய ரின்கீழ் வியாபாரம் செய்யலாம். குழுமப் பெயர்கள் ஏற்கனவே உள் ள குழுமப் பெயர்களுடனுே அல்லது கம்பனிப் பெயர் களுடனே ஒத்தனவாக அல்லது ஒத்திருப் பன போன்று இருத்தலாகா . குழுமப் பெயர்கள், வியாபாரப் பெயர்கள் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். இங்கிலாந்தில் குழு மப் பெயர் கொண்டு பங்குடைமைக்கெதி ராக ஒருவர் வழக்கிடலாம். ஆனல், இலங் கையில் குழுமத்திற்கெதிரான வழக்கு அதன் பங்காளர்களின் பெயரில் தொட ரப்படவேண்டும். வியாபாரப் பெயர்கள் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்படாத குழுமத்துக்கு எதிராகவும் மூன்ரும் திறத்தவர் ஒ ரு வ ர் ஒப்பந்த மொன்றை வலியுறுத்த வழக்கிடலாம் (பெர்ணுண்டோ எதிர் ஜெயசிங்க 33 பு. ச.
அ. 231)

செ. தங்கராஜா
இலங்கையில் வியாபாரம் நடத்தம் இந்தியச் செட்டிகள் தங்களது குழும்ப் பெயர்களே ஆட்களின் முதலெழுத்துக்க ளிஞல் குறிப்பிடுகிறர்கள். உதார ைமT க தெ. பா. மு. க. என்பது தென் பாண்டி முத்துக் கறுப்பன் என்னும் ஒரு 11ங்கா ளரை மட்டுமல்லாது அவர் சார்ந்துள்ள பங்குடைமையையும் குறிக்கும். அத்தகைய பெயர் செட்டி விலாசம் எனப்படும் ,
இந்தியச் செட்டி வர்த்தக சமுதாயத் தில், தமது இந்தியப் பங்குடைமை வியா பாரத்தை இலங்கையில் கொண்டு நடாத் தத் தமது செட்டி இனத்தைச் சேர்ந்த ஒருவரை முகவராக நியமிப்பதும், அவர் எ ல் லா க் கொடுக்கல் வாங்கல்களிலும் தமது பெயருடன் விலாசத்தையும் டயன் படுத்துவதும் வழக்கமாகும். ஆகவே இந்தி யச் சார்டர்ட் வங்கி எதிர் பழனியப்ப செட்டி 19 பு. ச. அ 417 என்ற வழக்கில் கூறப் பட்டது போன்று முகவரொருவர் தமது பெயரை விலாசப் பெயருடன் சேர்த்துப் பயன்படுத்தி ஒரு புரோநோட்டில் ஒப்ப மிட்டிருந்தால், அவர் முழுப்பங்குடைமை யையும் அப் புரோநோட்டுக்கு ஆளாக்கு Sorprř.
பங்காளர்களுக்குள்ள அதிகாரம்:
வியாபார நோக்கங்களுக்காகப் பங் காளர் ஒவ்வொருவரும் ஏனைய பங்காளர் களின் முகவராவார் என்பது பங்குடை மைச் சட்டத்தின் முக்கியமான அம்சமா கும். ஒரு வியாபாரத்தின் கூட்டு முகா மையாளர்கள் என்ற தன்மையில் ஒரு பங் காளர் அவ் வியாபாரத்தைக் கொண்டு நடாத்துவதற்கு அவசியமானதும் தகுந் ததுமான சில தத்துவங்களை, வியாபார வழக்கப்படி, கொண்டிருப்பார். வெளிப் படையான வரையறை ஏதும் இல்லாத போது, பங்காளர் ஒருவர் அத்தகைய த த் துவங்களை உடையவர் என்று சட்டம் கரு தும். அத்தகைய தத்துவங்களில் பிரயோ கவெல்லை பங்குடைமையின் தன்மையை யும் பங்குடைமை அமைந்துள்ள இடப்பரப்
87 -

Page 212
பங்குடைமைச் சட்டம்
பில் காணப்படும் வியாபாரப் பழக்க வழக் கங்களையும் பொறுத்ததாகும்.
ஒவ்வொரு பொதுப் பங்காளரும் பங்கு டைமைக் குழுமத்தின் உட்கிடையான பங் காளரே, ஆளுல் குழுமத்தின் வியாபாரத் தத்துவ எல்லையை மீறி எதுவும் செய்யவோ குழுமத்தைக் கட்டுப்படுத்தவோ அவருக்கு உட்கிடையான அதிகாரம் எதுவும் இல்லை.
பங்காளர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ள வேருள் ஒருவர் பங்காளரின் முகவராண்மை மீதுள்ள ஏதேனும் இரக சிய வரையறைகளினல், அவர் அதுபற்றி முன்னரே அறிந்திருந்தாலன்றி அல்லது அவர் ஒரு பங்காளர் என்று நம்பியிருந்தா லொழிய, பங்குடைமை பாதிக்கப்படமாட்
is .
பங்குடைமையின் கடன்கள் மற்றும் ஒப்பந்தக் கடப்பாடுகளில் பங்காளர்களுக் குள்ள பொறுப்புக் கூட்டுப்பொறுப்பாகும். ஆகவே, கடன் கொடுத்தவர் ஒருவர் எல் லாப் பங்காளர்களேயும் கூட்டாக அல்லது குழுக் கடனுக்காக எவரேனும் ஒரு பங்கா ளரைத் தனியாக வழக்கிட முடியும், கென் டால் எதிர் கமில்ரன் என்ற ஆங்கிலேய வழக் கின் தீர்ப்பிலிருந்து பெறப்பட்ட விதிக்கி ணங்க, கடன் கொடுத்தவர் யாரை எவ்வி தம் வழக்கிட வேண்டும் என்பதை முன் னரே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஒருமுறை எடுக்கப்பட்ட தீர்மானத்தை அவர் மாற்ற முடியாது.
உட்கிடையான முகவராண்மையின் விரிவெல்லே
பங்காளர் ஒருவர் பின்வரும் உட்கிடை யான அதிகாரங்களை உடையவராவார் :-
(அ) பங்காளர் ஒருவர் பங்குடை மைக்கெதிரான, நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட கோரிக்கைகளை இணக்கஞ் செய்யவும் சமரசம் செய்யவும், அக்கோரிக் கைகளைச் செலுத்தவும் தத்துவமுடைய ராவரர். குழுமத்தின் நிதியங்களிலிருந்து அவர் கடன்களைச் செலுத்தலாம் அல்லது
- 188

செ. தங்கராஜர்
குழுமத்தின் ஆதனங்களைக் கடன் கொடுத் தவர்களுக்கு மாற்றுவதன் மூலம் அவர் அக் கடன்களை அடைக்கலாம். தமது சொந்தக் கடனைக் குழுமத்தின் நிதியங் களிலிருந்து செலுத்த அவருக்குத் தத்து வம் இல்லாதபோதும், கடன் கொடுத்தவர் ஒருவர் அத்தகைய கொடுப்பனவை நல் லெண்ணத்துடனும், குழுமத்தின் சொத் துக்களிலிருந்து அது வருகிறது என்ற அறிவு இல்லாமலும் பெற்ருராயின், அவர்க் குச் சட்டம் பாதுகாப்பளிக்கும்.
(ஆ) பங்காளர் ஒருவர் குழுமத்தின் பணக் கோரிக்கைகளைச் சமரசம் செய்யவும் பணம் பெறவும், கடன்களிலிருந்து விடு விக்கவும் அதிகாரமுடையவராவார் அவர் கடன் பணத்தைத் திரும்பிப் பெறும்போது பனமாக அல்லது கைமாறத் தகு சாதன மாக அதைப் பெறலாம்; ஆனல் பொருளா கவல்ல. பங்கு  ைட மை க்கு ப் Li607 Lib செலுத்த வேண்டிய ஒருவர் பங்காளர்களுள் ஒருவரிடம் அப்பணத்தைச் செலுத்த அப் பங்காளர் அப் பணத்தைத் தனது சொந் தத் தேவைக்காகச் செலவு செய்தால் குழுமம் அதனை அவ் வெளியாளிடமிருந்து அறவிடமுடியாது,
(இ) வியாபாரக் குழுமத்தின் பங் காளர் ஒருவர் பங்குடைமை நோக்கங் களுக்காகக் கடன் வாங்கலாம் (Gsus எதிர் வில்லியம்ஸ்) அவ்வாறு செய்யும்போது அவர் குழுமத்தின் பெயரில் கைமாறத் தகு சாதனமொன்றை வழங்கலாம் அ ல் ல து குழுமத்தின் ஆதனத்தைப் பிணைப்பொறுப் பாக வைக்கலாம் அல்லது ஈடுவைக்கலாம். மூன்ரும் திறத்தவர் ஒருவர் நல்லெண்ணத் துடன் செயற்படின், மேற்படி கொடுக்கல் வாங்கல்களில் பங்காளர் பணத்தைத் தமக்கே உரித்தாக்கிக்கொண்டிருந்தாலும், உடன் படிக்கை செல்லுபடியானதாயிருக் கும்.
(ஈ) பங்காளர் ஒருவர் சாதாரண
6? ut urrurTDT நோக்கங்களுக்காக குழுமத்தின் பொருட்களை விற்கலாம். (டோர் எதிர் வில்

Page 213
பங்குடைமைச் சட்டம்
கின்சன்) ஆணுல் அவ்வாறு விற்பதற்குள்ள உரிமை விற்பனைக்கென்று வைக்கப்பட்ட பொருட்களுக்கு மாத்திரமே ஏற்புடை. யனவாகும்.எனவே நாற்காலிகள் செய்வதற் கான குழுமத்தின் பங்காளர் ஒருவர் அக் குழுமத்தின் செய்கருவிகளை விற்ரு ல், அக் கொடுக்கல் வாங்கலில் பங்குடைமை கட். டுப்பட்டதாகாது.
(உ) குழுமத்தின் ஆதனத்தைக் காப் புறுதி செய்யவும். செய்த காப்புறுதியை நீக் கவும், நட்டங்களை எண்பிக்கவும், அதனை நிர்ணயித்து ஏற்றுக்கொள்ளவும் பங்காளர் ஒருவர் அதிகாரமுடைவவராவர்.
(ஊ) வியாபார நோக்கங்களுக்காக ஊழியர்களையும், முகவர்களையும் நியமிக்கப் பங்காளர் அதிகாரமுடையவராவார். அத் துடன், அவர் பங்குடைமைக்காக ஒரு சொலிசிற்றரையும் தொழிலுக்கமர்த்த லாம். (தொமில்சன் எதிர் புரோட்சிமித்)
(எ) குழுமத்தின் பெயரால் குழுமத் திற்காகப் பங்காளர் ஒருவர் செய்யும் எச் செயலும் குழுமத்தைக் கட்டுப்படுத்துவ தாகும்.
ஆணுல் உறுதிகளை எழுதி நிறைவேற்று வதற்கோ, நடுக் கட்டலுக்குப் பிணக்கு களை ஆற்றுப்படுத்துவதற்கோ, அல்லது குழுமத்தின் பெயரில் உத்தரவாதமளிப் பதற்கோ (உத்தரவாதமளிப்பது குழுமத் தின் தொழிலாயிருந்தாலொழிய) பங்கா ளர் ஒருவருக்கு உட்கிடை அதிகாரம் எது வும் இல்லை என்பது ஈண்டு கவனிக்கத்தக் (955].
அதிகார வரையறை
சாதாரணமாகப் பங்காளர்களின் அதி esfr juruh பங்குடைமை உடன்படிக்கை மூலம் மட்டுப்படுத்தப்படலாம். ஆனல் அந்த மட்டுப்பாடு பங்காளர்களை மாத்தி ரமே கட்டுப்படுத்துமேயல்லாது நல்லெண் னத்துடன் அத்தகைய பங்காளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஆட்களின்
184 بسسبه

செ. தங்கராஜா
ஒப்பந்தங்களை வலிதற்றதாக்காது. எனி னும், அத்தகைய ஆட்கள் பங்காளர் மீது உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ள வரை யறையைத் தெரிந்து கொண்டிருந்தும் அவ் வரையறையை மீறி அவர்களுடன் ஒப்பந் தம் செய்து கொண்டிருந்தால், அவ்வொப் பந்தம் செல்லுபடியற்றதாக்கப்படலாம்.
பல்வேறு வகைப் பங்காளர்களுக்குள்ள பொறுப்பு:
புதிதாகச் சேரும் பங்காளர் ஒருவர் தான் சேரு முன்னர் பங்குடைமையால் உற ப் பட்ட கடன்களுக்காக எவ்வித பொறுப்பும் எடுக்கத் தேவையில் ஆல. அதே போல இளைப்பாறும் பங்காளர் ஒருவர் தான் இளைப்பாறிய பின்னர் பங்குடைமை யால் உறப்பட்ட கடன்களுக்காக எவ்வித பொறுப்பும் எ டு க் கத் தேவையில்லை. ஆளுல்ை அவர் பங்காளராக இருந்த காலத் தில் பங்குடைமையால் உறப்பட்ட கடன் களுக்கும் பொறுப்புக்களுக்கும் அ வ்ர் இளேப்பாறிய பின்னரும் ஆளாகவேண்டும். இம்பொறுப்பானது இளைப்பாறும் பங் காளர்களுக்கும் ஏனைய பழைய, புதிய பங் காளர்களுக்குமிடையே ஏற்படும் புதிய வோர் ஒப்பந்தம் மூல மா க வே இல்லா தொழிக்கப்படலாம்.
மேலும், தான் தொடர்ந்து பங்கும் டைமையில் இருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கும் பங்காளர் ஒருவர், அவர் இளைப்பாறியிருப்பினுங்கூட, தொடர்ந்து பங்குடைமைப் பொறுப்புக்களுக்கு se entras வேண்டும். இத்தகைய பொறுப்பிலிருந்து அவர் விடுபட வேண்டுமாயின், அவர் தாம் இளைப்பாறியதைப் பற்றி தாம் முன்னர் தொடர்பு கொண்டிருந்த எல்லா ஆட் களுக்கும் அறிவிக்க வேண்டும். மேலும் அக் குழு மத்து டன் தொடர்பு கொள்ளப் போகும் ஏனைய ஆட்களுக்கு அவர் இளைப் பாறியதுபற்றி விளம்பரம் மூலம் அறிவிக்க வேண்டும்,
பங்காளர் ஒருவர் வங்குரோத்தாக வருமிடத்து அல்லது இறக்குமிடத்து, அவ
9 -

Page 214
பங்குடைமைச் சட்டம்
ரது மரணச் சொத்தாவது, அவர் வங்கு ரோத்தாக வந்த பின்னர் அல்லது இறந்த பின்னர் பங்குடைமைக் கடன்களுக்கு Jeg erTnr 5 Tg ,
குழுமத்தின் உறுப்பினரென கடன் கொடுத்தவர்களுக்குத் தெரியாத பொதுப் பங்காளர் ஒருவர், பங்குடைமையில் தீவிர் மாகப் பங்கெடுத்திருப்பின், அதன் பின்னர உறப்பட்ட கடன்களுக்கு ஆளாகமாட்டார்’ ஆணுல் தான் ஒரு பங்காளர் எனக் காட்டிக் கொண்டுள்ள அல்லது மற்றவர்களை அவ் வாறு நம்ப வைத்துக் கொண்டிருக்கும் நபர் அத்தகைய வெளிக்காட்டல்களை நம்பி அவரை ஒரு பங்காளராகக் கருதி ஒப்பந் தம் செய்துள்ள ஒருவருக்குப் பொறுப்பாக இருப்பார். அவர் சட்டத்தில் பங்காளரா கவே கருதப்படுவார்.
பொறுப்பின் தன்மை :
பங்காளர் குழுமத்தின் ஒப்பந்தங்க ளுக்குக் கூட்டுப் பொறுப்பாளிகளாவர். பங்காளர்கள் வெளிப்படையாக உடன் பட்டுக்கொண்டால், அத்தகைய பொறுப்பு கூட்டானதும் தனித்தனியானதுமாகவிருக் கும.
குழுமத்தின் சார்பில் அல்லது அதன் தொடர்பில் செய்யப்பட்ட தீங்கியற்ற தவறுகளுக்குப் பங்காளர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பாதல் வேண் டும்.
பங்காளர்களின் உரிமைகளும் கடமைகளும்:
சட்டத்திற்குத் தெரிந்த நம்பக உற வில் சிறந்த உறவு கூட்டுப்பங்குடமையே யாகும். இந்தகைய உறவில் தனி மனிதன் ஒருவனின் ஆதனம், ஆதன உரிமைகள் யாவும் பெருமளவில் வேருெருவரின் கட் டுப்பாட்டுக்கும் நிருவாகத்திற்கும் அமைந் துள்ளமை, அந்நம்பக உறவின் தன்மையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது பங்கா ளர்களின் உரிமைகளும் கடமைகளும் இத் தகைய உறவின் அடிப்படையிலேயே அமைந்தனவாகும்.

செ. தங்கராஜா
பங்குடைமையொன்று வெளிப்படை யான உடன்படிக்கை மூலம் உருவாக்கப் படுமிடத்து, அவ்வுடன்படிக்கையின்படியே பங்காளர்களுக்கிடையேயான உரிமைகளும் கடமைகளும் அமையும் இதைவிடுத்து உட்கிடையாகப் பங்குடைமை ஒன்று ஏற் படுமிடத்து அல்லது உரிமைகள், கடப் பாடுகள் என்பன பற்றி உடன்படிக்கை மெளனமாக இருக்குமிடத்து, பங்காளர் களின் உரிமைகளும் கடமைகளும் நியதிச் சட்டத்தினுல் ஆளப்படும்.
பங்காளர்களின் கடமைகள், உரிமை கள் என்பன முகவரொருவரின் கடமை களையும் உரிமைகளையும் பெருமளவில் ஒத் திருக்குமென்பதைப் பின்வருவனவற்றிலி ருந்து அறியலாம்.
(அ) பங்காளர்கள் ஒவ்வொருவரும் குழுமத்திற்கு விசுவாசமாக இருக்கவேண் டும். எனவே பங்காளர் ஒருவர் குழுமத் தின் வியாபாரத்தில் சிறந்த கவனம் எடுக்க வேண்டும் என்பதுடன் குழுமத் தின் பெயரைப் பயன்படுத்தி அல்லது அதன் பெயரில் இரகசிய லாபம் எதுவும் பெறுதலுமாகாது. மேலும் குழுமத்தின் நிதியங்களைப் பயன்படுத்தி அவரவர் சொந்த நலன் பெறுதலாகாது. பங்காளர் ஒவ்வொருவரும் குழுமத்தின் நலனில் அக்கறையுடையவர்களாக அத ளுேடு பற்றுறுதியுடன் செயற்படுதல் அவ சியம். அவர் தனது தத்துவங்களையும் குழுமத்தின் ஆதனத்தையும் த ன து சொந்த நலனுக்குப் பயன்படுத்தாது, பங் காளர்களின் பொது நன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும்.
பங்காளர் ஒருவர் பங்குடைமைத் தொழிலின் அபிவிருத்திக்கு தமது காலத் தையும் சக்தியையும் முழுமையாகச் செல வழிக்க வேண்டும். பங்குடைமையோடு போட்டி போடும் வேறு எவையேனும் தாபனங்களை ஊக்கப்படுத்துவதில் பங்கா ளர்கள் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுப வர்கள் அக்காலத்தில் அதனுலேற்படும் நட்டத்துக்குப் பொறுப்புடையவர்களா of T.
0 -

Page 215
பங்குடைமைச் சட்டம்
(ஆ) கீழ்ப்படிதல்
பங்குடைமை உடன்படிக்கையினல் தேவைப்படுத்தப்படும் எல்லாவற்றையும் புரிவதற்குப் பங்காளர் ஒவ்வொரு வரும் கட்டுப்பாடுடையவர்களாவார். பங்குடை மையின் அகவிதி அதன் உறுப்பினர்களின் மீது கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம். உதாரணமாக, வியாபாரத் தில் பங்கெடுக்க பங்காளர் ஒருவர் விரும்ப வில் லை எ ன வைத்துக்கொள்வோம். ஆனல், அதன்மேல் பங்குடைமைக்கு ஏற் படும் நட்டத்தையோ ஏனைய பங்காளர் களுக்கு ஏற்படும் நட்டத்தையோ அவர் கொடுத்துதவ வேண்டும்.
மேலும் வியாபாரத்தின் சாதாரண வியாபாரம் தொடர்பில் பெரும்பான்மை யான பங்காளர்கள் விதிக்கும் எத் தனையோ கட்டுப்பாடுகளை ஏனைய பங்கா ளர் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண் டியது அவசியம். உதாரணமாகக் கட னுக்குப் பொருள்களை விற்கக் கூடாதெ னப் பங்காளர்களுள் பெரும்பான்மையா னவர்கள் கருத்துத் தெரிவிப்பர். அப் பொழுது இவ்விதிக்கு இணங்கவே ஏனைய பங்காளர்கள், செயற்படுதல் வேண்டும்.
(இ) நியாயமான கவனம்
குழுமத்தின் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் பங்காளரொருவர் நியாய மான கவனத்தையுடையவராக இருக்க வேண்டும். அவர் அவ்வாறு இருக்கத் தவ றினல், அதனல் ஏற்படும் நட்டத்துக்கு அவரே பொறுப்பாவார். எனினும் நேர் மையான பிழைகளுக்கு அல்லது கணிப் புத் தவறுகளுக்கு அவர் ஆளாக மாட்டார்.
(ஈ) பங்குடைமை தொடர்பான கரு மங்கள் எல்லாவற்றையும் பற்றி எல்லாப் பங்காளர்களுக்கும் அறிவிக்க வேண்டிய கடமை அவர் க ள் ஒல்வொருவருக்கும் உண்டு.

செ. தங்கராஜா
(உ) பங்காளர் ஒருவர் குழுமத்திற் காக அவரால் செய்யப்பட்ட எல்லா விய" பாரக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றியும் முறையானவையும் சரியானவையுமான கணக்குகளையும், பதிவேடுகளையும் வைத் திருத்தல் வேண்டும். பங்காளர்கள் பலர் சமமாக இவ்விடயத்தில் தவறினலும், அட் படிச் செய்பவர்கள் எவரும் மாற்றத்துக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியாது.
அநேகமாகக் குழுமத்தின் புத்தகங் களையோ, கணக்குகளையோ, பேணிக் பாது காப்பதற்கு பங்காளர் ஒருவர் பொறுப் பாகவிருப்பார். அத்தகைய சந்தர்ப்பத்தில் முறையான பதிவேடுகளை வைத்துப் பேணு தல் அவரது கடமையாகும் அதில் ஏதே னும் கணக்கு அல்லது கூற்றுப் பிழையாகக் காணப்பட்டால் பதிவேடுகளிலுள்ள அத் தகைய கணக்குகளினதும், பதிவேடுகளின தும் உண்மைத் தன்மையை எண்பிப்பது அப்பங்காளரின் கடமையாகும். எண் பிப் பால் ஏற்படும் ஐயம் எதுவும் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்.
சொல்லப்பட்ட கடமைகளோடு பங்கா ளர்கள்பங்குடைமையின் சொந்தக்காரர்கள் என்ற தன்மையில் பல்வேறு வகையான உழ மைகளையும் கொண்டிருப்பர். இவ்வுரிமை கள் பங்குடைமையின் கூட்டுச் சொந்தக் காரர்கள் என்ற முறையில் அவர்களுக்கு உரித்தானவையாகும் என்பது இவ்வுரி மையின் தன்மையைக் கவனிப்பின் புலன கும். பங்காளர்களின் உரிமைகளில் முக்கிய மானவை பின்வருமாறு
(அ) முகாமை
பங்காளர் ஒவ்வொருவரும் குழுமத் தின் வியாபாரத்தில் சமம்ாகப் பங்கெடுப் பதற்கு உரிமையுடையவராவார். எடுத் துக்காட்டாக, மூன்று நபர்கள் சேர்ந்து ஒரு பங்குடைமையை உருவாக்குகிருர்கள் என வைத்துக்கொள்வோம். முதலாமவர் ஐயாயிரம் ரூபா பணம் கொடுக்கிருர் . இரண்டாமவர் மூவாயிரம் ரூபா பெறுமதி
91 -

Page 216
பங்குடைமைச் சட்டம்
யான ஆதனத்தை வழங்குகிருர், மூன்ரு மவர் தன்னுடைய உடலுழைப்பையும், திறனையும் மட்டுமே வழங்குகிறர். ஆணுல் அவர்கள் ஒவ்வொருவரும் பங்குடைமை வியாபாரத்தின் நடத்தையில் பங்கெடுப் பதற்கு சமமான உரிமைகளைக் கொண்டி ருக்கிருர்கள். எனவே பங்காளர் ஒருவர் பங்குடைமைக்கு வழங்கிய தொகை அல் லது அளவு, பங்குடைமை முகாமையில் அவர் வைத்திருக்கும் உரிமையை அளவி டுவதாக இருக்கிறது என்பது ஈண்டு கவ னிக்கத்தக்கது.
பங்குடைமையை முகாமை செய்வதற் கான உரிமை எனும்போது, பங்குடைமை நோக்கங்களுக்கு பங்குடைமை ஆதனத் தின் உடைமையை வைத்திருக்கும் உரிமை யையே அது குறிக்கும்.
(ஆ) புத்தகங்களைப் பரிசோதித்தல் :
பங்குடைமை தொடர்பான எல்லாப் புத்தகங்களும் குழுமத்தின் பிரதான தொழிலிடத்தில் வைத்திருக்கப்பட வேண் டும். அப்புத்தகங்களைப் பரிசோதனையிட வும், விரும்பினுல் அப்புத்தகங்களின் படி களை எடுக்கவும் ஒவ்வொரு பங்காளருக்கும் உரிமையுண்டு.
(இ) இலாபங்களில் பங்குகொள்ளல் :
இலாபங்களில் பங்குகொள்வதற்குப் பங்காளர் ஒவ்வொருவருக்கும் உரிமை யுண்டு. தேவை ஏற்படின், இலாபங்கள் மூலதனத்துக்கு ஒப்ப பங்கிடப்படவேண்டு மென்று பங்காளர்கள் தமக்குள் உடன் பட்டுக்கொள்ளலாம் ஆணுல் அத்தகைய ஏற்பாடு எதுவும் இல்லா விட்டால், பங்கா ளர்கள் ஒவ்வொரு வரும் இலாபத்தில் சமமாகப் பங்குகொள்ள உரித்துடைய வராவர். இலாபத்தில் பங்குகொள்ளும் உரிமையானது பங்குடைமை ஆதனத்தின் தன்மையிலிருந்து வேறுபட்ட ஒரு தனித்த ஆதனமாகக் கருதப்படும்.
(ஈ) பங்காளர் ஒருவர் பங்குடைமைக்கு ஏதேனும் பணமுற்பணம் கொடுத்திருப்

செ. தங்கராஜா
பாராயின், அப்பணத்தின்மீது நியதிச்சட்ட வட்டியைப்பெற அவர் உரித்துடையவரா வார். மூலதனத்துக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தின்மீது வட்டிபெற அவர் உரிமை யுடையவர்.
(உ) நட்டஈடு :
பங்குடைமை வியாபாரத்தில் பங்கா ளர் ஒருவர் ஏனைய பங்காளரிலும் பார்க்க கூடுதலான சேவை செய்திருந்தாலும்கூட அல்லது மேலதிகக் கடமைகளைப் புரிந்தி ருந்தாலும்கூட, அவர் ஏனைய பங்காளரை விடக்கூடுதலாக இலாபத்தைப் பெறமுடி யாதெனினும், ஒப்பந்தம் ஒன்றின் மூலம் வேலைசெய்யும் பங்காளர் ஒருவர் ஏனை யோரிலும் பார்க்கக்கூடுதலான பணம் பெற முடியும். எனினும் பங்காளர்கள் பங்குடை 1ை0க்குச் செய்யும் சேவைக்கு உஷதியம் பெற உரித்துடையவரல்லர். ஆனல், பங்காளர் ஒருவர் பெயரால் உறப்பட்ட செலவினங் களுக்கு அவர்கள் நட்டஈடுபெற உரித்து டையவராவா ,
(ஊ) மூலதனத்தை விநியோகித்தல்:
பங்குடைமை ஒன்று கலைக் கப்படும் பொழுது பங்குடைமை ஆதனத்தில் ஒரு பங்கைப் பெறுவதற்கு ஒவ்வொரு பங்கா ளருக்கும் உரிமையுண்டு. குழுமத்திற்குக் கடன்கொடுத்தவர்கள் எல்லோருக்கும் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்ட பின் னர் எஞ்சியுள்ள ஆதனம் பங்காளர்களுக் கிடையே விநியோகிக்கப்படும். வேறுவித மான அல்லது முரணுன ஒப்பந்தம் செய் யப்பட்டிருந்தால் ஏனைய ஒவ்வொரு பங் காளரும் அவர்தாம் உதவிய மூலதனத் தொகையைத் திரும்பப்பெற முடியும்,
பங்குடைமை ஆதனம் :
பங்குடைமை ஆதனம் யாவும் பங்கு டைமை விதிகளுக்கினங்க குழுமத்தின் நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தட் படும். ஆதனம் ஒன்று பங்குடைம்ை ஆத னமா அல்லவா என்று தீர்மானிக்கப்பட வேண்டியது நிகழ்வுகளின் அடிப்படையி
92 -

Page 217
0ங்குடைமைச் சட்டம்
லேயேயாகும். "பங்குடைமை ஆதனம்' என்பது பின்வரும் ஆதனங்களை உள்ள டக்கும்:-
(i) பங்குடைமைக்கு முதன் முதலில்
கொண்டுவரப்பட்ட ஆதனம் :
(i) பங்குடைமை நோக்கத்துக்காகவும் பங்குடைமை வியாபாரத்திலும் குழு மத்தின் கணக்கு கழிபடும் ஆதனம்;
(ii) குழுமத்தின் காசுகளைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட, ஆத 67 Lt.
எனவே, ஒரு காணியின் கூட்டுச்சொந் தக்காரர்கள் என்ற முறையிலும் அதிலி ருந்து இலாபத்தைப் பெறுபவர்கள் என்ற முறையிலும் பங்காளர்கள் ஒரு பங்குடை மையைத் தோற்றுவிக்கலாம் என்பது புலனுகின்றது. மேலே கூறப்பட்ட மூன்று வகையில் ஒன்றனுக்கு அமைய பங்கு டைமை ஆதனம் இருந்தால் மட்டுமே, பங்குடைமை உருவாகும். பங்காளர்களுக் கிடையே பங்குடைமைக்காணி அதனது சொத்தாகக் கருதப்படும். பங்காளர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்ற முறையில் காணியின் சொந்தக்காரர்களா கவே இருப்பர்.
பங்காளர்களுக்கான நிவாரணங்கள் :
குழுமத்தின் உறுப் பி ன ர் களுக்குக் கிடைக்கக்கூடிய நிவாரணங்கள் என்ற தன்மையில் அவர்களுக்குள்ள உறவினல் அல்லது அவர்களுடைய கோரிக்கைகளின் தன்மையினுல் வரையறுக் கப்பட்டனவா கும். பங்காளர்கள் பொதுச்சட்டப்படியோ முறைம்ைச்சட்டப்படியோ நிவாரணம் பெற உரித்துடையவர்கள். 1.Jță 6 spLமைக்கு எதிரான கோரிக்கையொன்றன் மீது பங்காளர்கள் ஒருவர் குழுமத்திற்கு எதிராகச் சட்டப்படி வழக்குத் தொடர முடியாது. இதற்கான க | ர ண |ங்கள் இரண்டு.
- 1

செ. தங்கராஜா
(அ) பங்காளர் பங்குடைமையில் ஓர் அங்கமாக இருப்பதால் பங்காளர் பங்கு டைமைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் எதிர்வாதியாகவும் இருக்கவேண் டும். எனவே ஒரே வழக்கில் ஒருவர் வாதி யாகவும் அவரே எதிர்வாதியாகவும் இருக்க நடவடிக்கைமுறை இடம் கொடுக்காது ,
(ஆ) முறைப்பாடு செய்யும் பங்காள ச் களுக்கு குழுமம் எதையேனும் கொடுக்க வேண்டுமா என்பதை ஆராய்வதற்காக மாத்திரம்ே கணக்கிற்கான தொகை விடப் படுதல் வேண்டும். பொதுச்சட்டத்தின் படி இப்பிரச்சினையைத் தீர்க்கப்போது மான வழிவகைகள் இல்லை.
முதல் கூறப்பட்ட காரணத்தினடிப் படையில், பங்குடைமையானது இ ன் று பொதுச் சட்டத்தின்கீழ், பங்காளர் ஒரு வருக்கு எதிராக வழக்குத் தொடரமுடி யாது. ஏதேனும் நியதிச் சட்டம் அதிகா ரம் வழங்கினுலொழிய, புதிதான புங்கா ளர் இருக்குமிடத்து, ஒரு பங்குடைமை வேறேதேனும் டங்குடைமைக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது.
இதேபோல் பங் கு  ைட  ைம யி ல் தொடர்பு கொண்டுள்ள பங்காளர்கள் இருவரில் ஒருவருக்கு எதிராக மற்றவர் வழக்குத் தொடர முடியாது. ஆனல் உடன்படிக்கையின் போது குழுமத்தின் கொடுக்கல் வாங்கல்களில் தொடர்புபட்ட வேறு எவையேனும் கொடுக்கல் வாங்கல் களுக்கு நிலுவைகளுக்கென பங்காளர்கள் இருவரில் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மேலும் குழுமத் தின் கணக்குகள் சமப்படுத்தப்பட்ட பின் னர் ஒரு தொகை வேருெருவருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் பங்காளர் ஒருவர் வேருெரு பங்காளருக்கு எதிராக வழக்குத் தொடரலாம்.
கடன் கொடுத்தவர் ஒருவர் தனிப் பட்ட பங்காளருக்கு எதிராக வழக்குத்
தொடர்ந்து அதற்கு எதிரான தீர்ப்பைப்
)3 -

Page 218
பங்குடைமைச் சட்டம்
பெற்ருல் அந்தத் தீர்ப்பை நிறைவேற்று வதற்கு LJ så SGML–60) ud ஆதனத்தைக் சிையாளுதல் ஆகாது. ஆதலால் அத்த கைய பங்காளருக்குப் பங்குடைமையிலி ருத்து சேரவேண்டிய தொகையை அல்லது இலாபப் பங்கைப் பெற்றுத் தனது கடனை அடைக்கும்படி கொடுத்தவர் கோரலாம் ,
சாதாரணமாகப் ப ங் கு  ைட  ைம க் கொடுக்கல் வாங்கல்களால் ஏற்படும் பிரச்சினைகள் முறைமைச் சட்டத்தின் படி தீர்க்க வேண்டியனவாகும். தகுந்த கார ணம் காட்டப்பட்டதன்மேல், பங்காளர் ஒருவர் வேருெருவருக்கு எதிராக அல்லது வேருெருவரது செயலைத் தடுக்குமுகமா கத் தடையீட்டெழுத்தாணையானது, பங் குடைமை கலைக்கப்படுமுன்னர் அல்லது கலைக்கப்படுகையில் அல்லது கலைத்த பின் செய்யப்படும் செய்கைகளினல் புரியப் படும் ஊறுகளைத் தடுப்பதற்காக வழங் கப்படுகின்றது
அநேக சந்தர்ப்பங்களில் பங்குடைமை யின் கணக்குகள் முடிவதற்கும் பங்குடை மையைக் கலைப்பதற்கும் முறைமைச் சட் டத்தின் துணையை நாடுவது இயல்பே. பங்குடைமை குலைத்தலும் கணக்கு முடித் தலும் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளா (35D.
பங்குடைமை குலைத்தல்:
பங்குடைமை குலைத்தலின் விளைவு பங்குடைமையை முடிவுறுத்தலாகும், குழு மத்தின் கடன்களைக் கொடுத்துத் தீர்ப் பது, பின் எஞ்சிய சொத்துக்களைத் தமக் குள் பங்குகொள்வதற்குப் பங்காளர் களுக்கு இக்கலைப்பு உரிமையளிக்கிறது. இவ்வழிகளில் பங்குடைமைக் கலைப்பு ஏற்
Ju - 6n) nrifol.
(1) பங்குடைமை வி தி க ஞ க் கு
இணங்க கலைத்தல்;
(2) வெளிப்படையானதும், ஏகமன தானதுமான உடன்படிக்கையின் மூலம் ;
- 194

செ. தங்கராஜா
(3) சட்டச் செயற்பாடு மூலம்; (4) பங்காளர் ஒருவரின் இறப்பின்
மூலம் : (5) இடையிட்ட சட்ட முரண்பாடு
மூலம்; (6) நீதிமன்றத்தின் கட்டளைமூலம்.
இவற்றை விரிவாகப் பார்ப்போம்.
உடன்படிக்கைமூலம் கலைத்தல்:
திறத்தவர்களது கூட்டு உடன் படிக் கைகளின் நியதிகளுக்கிணங்க பங்குடைமை ஒன்று கலைக் கப்படலாம். எடுத்துக்காட் டாகப் பங்குடமை ஒன்று ஐந்து வருடங் களுக்கு என்று செய்யப்பட்டால் ஐந்து வருட முடிவில் அப்பங்குடைமை கலைக்கப் படலாம். பங்குடைமையானது பின்னர் செய்யப்பட்ட உடன்படிக்கை யொன்றின் மூலமும் கலைக்கப்படலாம். பங்காளர்கள் பங்குடைமையைக் கலைக்குமுன்னர் அல் லது பங்குடைமையின் நோக்கம் நிற்ை வேற்றப்படுமுன்னர் எக்காலத்திலும் தங் களுக்குள் உடன்பட்டுக்கொண்டு பங்குடை மையைக் கலைக்கலாம். பங்காளர் ஒருவர் பங்குடைமையில் தமக்குரிய தொகையை வேறு ஒருவருக்கு அல்லது ஏனைய பங்கா ளர்களுக்குக் குறித்தொதுக்குவதன்மூலம் அல்லது தீர்ப்பினைச் செய்வதன்மூலம் பங் குடைமை கலைக்கப்படமாட்டாது.
சட்டச் செயற்பாடுமூலம் கலைத்தல்:
LuiÄi (g560) L—625)LD gña 6ö7 qov குறிப்பிடட காலத்துக்கென அல்லது ஒரு தனிப்பட்ட நோக்கத்தை அடைவதற்கென உருவாக் கப்பட்டிருப்பின், அந்தக் காலம் முடிவ டைந்ததன்மேல் அல்லது குறிப்பிட்ட நோக்கம் அடையப்பட்டதன்மேல் குழு மம் ஒன்று கலைக்கப்படலாம் என்று அவ தானித்தோம்; ஆயின் அப்பங்குடைமை யானது அல்லது குழுமமானது முன்னரே உடன் பட்டுக் கொண்ட காலத்திலும் பார்க்கக் கூடுதலான காலத்துக்குத் தொடர்ந்து செயற்பட்டால், அப்பங்கு டைமை தொடர்பில் பங்காளர்களின் உரி

Page 219
பங்குடைமைச் சட்டம்
மைகளும் கடமைகளும் தொடர்ந்திருக் கும் என்பது கவனிக்கத்தக்கது. பங்கு டைமை குறிப்பிட்ட காலத்திற்கென உரு வாக்கப்பட்டிருப்பின், பங்காளர் எவரும் ஏனைய பங்காளர்களுக்கு அறிவித்தல் கொடுப்பதன்மூலம் பங்குடைமையை முடி வுறுத்தலாம். பங்குடைமையானது முத லில் உரித்து மூலம் உருவாக்கப்பட்டிருந் தால் உரித்துப்பற்றிய அறிவித்தலானது எழுத்தில் இருத்தல் வேண்டும். கலைத்த லைப் பற்றிய அறிவித்தல் கொடுக்கப்படு மிடத்து பங்குடைமையானது அறிவித்த லில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து அல் லது அறிவித்தலில் அது குறிப்பிடப் படாதுவிட்டால், ஏனைய பங்காளர்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்ட தேதியிலி ருந்து அப்பங்குடைமையானது சலைக்கப் பட்டதாகக் கருதப்படும்.
பங்காளர் ஒருவர் இறப்பதன் மூலம் :-
சாதாரண பங்குடைமை ஒன்று அதன் எவரேனும் பங்காளர் இறந்ததன்மேல் உடனடியாகக் கலைக்கப்படும். சில சந்தர்ப் பங்களில் இதைத் தடுப்பதற்கு உடன் படிக்கையில் வேறுவகையாக ஏற்பாடு செய் யப்பட்டிருக்கலாம். அதன்படி பங்குடை மையானது பங்காளர் ஒருவர் இறந்த பின்னரும் தொடர்ந்து செயலாற்றலாம்: பங்குடைமையொன்று பங்காளி இறந்த பின்னரும் அவரது மரண சாதனத்தத் துவகாரர் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால், அப்பங்குடைமையா னது புதுப்பங்குடைமையாகக் கருதப் படும்.
குழுமத்தின் அல்லது பங்காளர் எவ ரினதும் வங்குரோத்து, குழுமத்தைக் கலைக் கும். கடனிறுக்க வகையற்ற தன்மை மட் டும் இதற்குப் புதிது. ஆங்கிலேயச் சட்டத் தின்படி பங்காளர் ஒருவர் பங்குடைமை யில் உள்ள பங்கைத் தனது சொந்தக் கடன்களுக்குப் பிணை வைத்திருப்பின், இச் செய்கையானது ஏனைய பங்காளர்கள் பங்குடையைக் கலைக்க அவர்களுக்கு உரிமை அளிப்பதாக இருக்கும்.
19 سيس

செ. தங்கராஜா
இடையிட்ட சட்ட முரண்பாடு:-
சந்தர்ப்ப சூழ்நிலைத் தீர்ப்புக்கள் கார ணமாக நிகழ்வுகளில் ஏற்படுகின்ற மாற் ஹம்மூலம் சிலவேளைகளில் சில மனிதர்கள் பங்குடைமை வியாபாரத்தைச் ச ட ட விரோதமாக்கலாம். குறிப்பிட்ட விளைவு நாட்டின் பொதுச் சட்டத்தில் ஏற்படும் முறிவாலும் ஏற்படலாம்.
நீதிமன்றக் கட்டளைமூலம் கலத்தல்:-
பின்வரும் சந்தர்ப்பங்களில் பங்காளர் எவரும் பங்குடைமையொன்று கஃ க்கப் டட வேண்டும் என்று கட்டளையிடும்படி கோரி நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் ஒன் றைச் செய்யலாம், x
(அ) எவரேனும் பங்காளருக்கு ஏற் பட்ட மனநோய் காரணமாக அவர் ஒப் பந்தம் செய்யும் தன்மை அற்றவரால்ை:
(ஆ) பங்காளர் ஒருவர் ஒப்பந்தம் செய்யும் தகைமையை நிரந்தரமாக இழந் தவரானுல் உதாரணமாக பங்காளர் ஒரு வருக்கு ஏற்பட்ட கடும் காயம் ஒன்று அவ ரைப் பங்குடைமையில் செயலாற்ற இய லாதவர் ஆக்கலாம். அத்தகைய இச்செய லினது தன்மை அப்பங்குடைமையைக் கலைப்பதற்குக் காரணமாக இருக்கும்.
(இ) துர்நடத்தை பங்குடைமையைப் பாதிக்கும் வகையில் பங்காளர் ஒருவர் செயலாற்றுகிருர் என்ற காரணத்தின்மீது, வேறு ஒரு பங்காளர் பங்குடைமையைக் கலைக்கும்படி விண்ணப்பிக்கலாம். பங்கா ளர் ஒருவர் நடப்பது பங்குடைமையைக் கலைக்க அவருக்குப் போதிய காரணமாக இருக்கலாம் என்று நியார் எதிர் என்ற ஆங்கிலேய வழக்கில் குறிப்பிடப்பட்டது ஈண்டு கவனிக்கத்தக்கது.
(ஈ) பங்குடைமை உடன்படிக்கை தாக்கப்படும்போது அத்தாக்கத்தினுல் இன் எனலுற்ற பங்காளர் ஒருவர் பங்குடைமை கலைக்கப்படவேண்டுமென்று நீதிமன்றத்

Page 220
பங்குடைமைச் சட்டம்
துக்கு விண்ணப்பிக்கலாம். சில வேளைகளில் பங்காளர் ஒருவரின் நடத்தையானது ஏ னை ய பங்காளர்கள் டங்குடைமையில் பங்குகொள்ள முடியாதுபோகும் தன்மை யுடைய அத்தகையதாக இருக்கலாம். இத்தகைய இந்நிலையிலும் பங்குடைமை கலக்கப்படவேண்டுமென்று விண்ணப்ப மொன்று செய்யப்படலாம்.
(உ) பங்குடைம்ை வியாபாரம் நட்டத் துடன்தான் கொண்டு நடாத்தப்படலாம் என்றநிலை ஏற்படும்போது, பங்குடைமையா னது நீதிமன்றத்தினுல் கலைக்கப்படலாம். சிலசந்தர்ப்பங்களில் நீதிமன்றம்நியாயமான தும் நீதியானதும் என்று தமது தற்றுணி பில் அபிப்பிராயப்படுமிடத்து, Luigi டைமை ஒன்றைக் கலைக்கும்படி கட்டளை யிடலாம். உதாரணமாக பங்குடைம்ை ஒன்று இரண்டு பங்காளர்களை மாத்திரம் கொண்டிருந்தால், அவர்கள் இருவரும் ஒரு வரிலொருவர் முரணுன கருத்துடையவ ராக இருந்தால், அப்பங்குடைமை கலைக் கப்பபலாம். (இந்திய ரொபாக்கோ கம் பனி லிமிற்றெட் என்ற ஆங்கிலேய வழக் கில்) பங்குடைமை ஒன்று கலைக்கப்பட்ட பின்னரும் அவ்வாறு கலைக்கப்பட்டமை பற்றிப் பொதுமக்களுக்கும் வாடிக்கைக் காரர்களுக்கும் அறிவிக்கப்படாது விட் டால், தொடர்ந்து பொறுப்புக்களை ஏற்க வேண்டியிருக்கும். இவ்வாறு ஏற்படும் கெடுதலின் பொறுப்பைத் தீர்க்குமுகம்ாக பங்காளர் ஒருவர் பங்குடைமைத் தொழில் பற்றிய அறிவித்தலொன்றை வெளியிட லாம் என்பதோடு அவரோடு கூட பங்கா ளர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்று அவர் கட்டாயப்படுத்தலாம்.
பங்குடைமையைக் கலைப்பதன் விளைவு :
குழுமத்தைக் கட்டுப்படுத்தப் பங்கா ளர்களுக்குள்ள அதிகாரம் அவ்வியாபா ரத்தைக் கலைப்பதற்கு அவசியமான வ் ற் றைக் கொண்டு நடாத்தலாம். ஆயினும் வங்குரோத்தான பங்காள ர் ஒருவரின் செயலிஞல் அது ஏற்பட்டிருந்தால், குழும மானது இதற்குப் பொறுப்பானதல்ல.
- 1

செ. தங்கராஜா,
மேலும் பங்காளர் ஒவ்வொருவரும் குழுமத்தில் கடன்களைச் செலுத்துவதற்கு ஏற்புடைத்தானதென அறிவிப்புக் கூறுவ தற்கென இதற்கு இருந்த உரிமை ஒரு முறைமைச் சட்டத்தின் கீழான உரிமை யாகும். இவ்வுரிமை இனிது நிறைவுறு மெனலாம், பங்குடைமை கலைக் கப்பட்ட பின்னர் பொதுவான கடப்பாடுகளை உரு வாக்குவதற்கு பங்காளர்களுக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட வியாபாரத்தை மூடுவதற்கு அவசியமாகாத அத்தகைய செயல்களைச் செய்வதற்கு அவர்கள் அதி காரத்தைப் பெற்றிருப்பார்கள். எடுத்துக் காட்டாக பணம் கொடுக்கப்படுவது நாணய மாற்றுப் பட்டியல் ஒன்று பற்றிய அறிவித்தலைப் பெற்றுக் கொள்வதற்குப் பங்காளர் ஒருவர் பங்குடைமை குலைக்கப் பட்ட பின்னரும் அதிகாரமுடையவராவர்.
சொத்துக்களை விநியோகித்தல்:
பங்குடைமைச் சொத்துக்களின் மொத் தக் கடன் கொடுத்தவர்கள் மற்றவ்ர்களி லும் பார்க்க மேலதிகமாகப் பெற உரித் துடையவர்களாவர். சில வேளைகளில் குழு மத்துக்குக் கடன் கொடுத்தவர்களுக்கும் தனிப்பட்ட பங்காளர்களுக்குக் கடன் கொடுத்தவர்களுக்குமிடையே போட்டியெ ழும்போது, தாக்கல் ஏற்படும். குழுமத் தின் சொத்துக்கள் மீது குழுமத்துக்குக் கடன் கொடுத்தவர்கள் அம்மோதலில் கோரிக்கைசெய்ய உரித்துடையவராவர். தனிப்பட்ட பங்காளர்களுக்குக் க டன் கொடுத்தவர்கள், ஏனைய சொத்துக்கள், ஏதேனும் இருப்பின், அவற்றின் மீது கோரிக்கை செய்யலாம். ஆனல் தனிப் பட்ட பங்காளர்களின் தனிப்பட்ட சொத் துக்கள் விநியோகிக் கப்படும் போது தனிப் பட்ட பங்காளர்களுக்குக் கடன் கொடுத் தவர்களே முன்னுரிமையுடையவர்களா வர். குழுமத்தின் பங்காளர்கள் யாவரின தும் அல்லது எல்லோரினதும் பொறுப்பு கள் யாவும் பங்குடைம்ையினல் கொடுத் துத் தீர்க்கப்பட்ட பின்னர் பங்குடைமை
96 --

Page 221
பங்குடைமைச் சட்டம்
யின் ஏனைய சொத்துக்கள் பின்வரும் வகை யில் பின்வருவோருக்கு விநியோகிக்கப்பட வேண்டும்:-
(1) பங்காளர் ஒவ்வொருவரும் குழுமத் துக்குரிய அல்லது குழுமத்துக்குச் சேர வேண்டிய முற்பணங்களைத் திரும்பப்பெற உரித்துடையவர்கள்.
(2) குழுமத்துக்கான மூலதனத்துக்கெ னக் கொடுக்கப்பட்ட உதவுதொகை கள் பின்னர் திருப்பிக் கொடுக் கப் டாடும்.
(3) மேற்படி செலுத்துகைகள் செய்யப் பட்ட பின் ன ர், பங்குடைமைச் சொத்து, ஏதேனும் எஞ்சியிருப்பின், அச்சொத்தானது இலாபங்கள் பங் கிடப்படுவது போன்று சமமாகப் பங்காளர்களுக்கிடையே பிரித்து வழங்கப்பட வேண்டும். இதே போன்று பங்குடைம்ை நட்டமடைந் திருப்பின், அந்நட்டத்தைப் பங்கா ளர்கள் அனைவரும் சமமாகத் தமக் குள் பங்கிட்டுக் கொள்ளவேண்டும்.
பங்காளர்களுக்கிடையே விநியோகிக் கப்பட வேண்டிய சொத்து எதுவும் அவ் வாறு விநியோகிக்கப்பட்டதும் பங்காளர் ஒருவரினுல் அவ்வாறு வேருெரு தொழில் முயற்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் இச்செயலினுல் இன்னலுற்ற மற்றைய பங் காளர்கள் அப்போதுள்ள தொழில் முயற் சியின் இலாபங்களிலிருந்து பங்குபெற உரித்துடையவராவார்.
பங்குடைமை ஒன்று கலைக்கப்பட்டு அதன் சொத்துக்கள் விநியோகிக்கப்படும் பொழுது கடன் கொடுத்தவர்களுக்கும் முற்பணமாகச் செலுத்திய பங்காளர்க ளுக்கும் பணம் செலுத்தப்பட்டபின், மூல தனத்தை எல்லாப் பங்காளர்களுக்கும் திருப்பிச் செலுத்துவதற்குப் போதிய சொத்துக்கள் இல்லா விட்டால், நேவிர் எதிர் நோவல் என்ற ஆங்கிலேய வழக்கில் குறிப்பிடப்பட்டது போன்று, எஞ்சியதை
- 19

செ. தங்கராஜா
பங்காளர்கள் சமமாகத் தமக்குள் பிரித் துக்கொள்ள வேண்டும். ஆனல் காணர்மறே என்ற வழக்கில் கூறப்பட்ட விதியின்கீழ்,
அத்தகைய மீதம் பங்காளர்களுள் ஒருவர்
கடனிறுக்க வகையற்ற தன்மையினல் ஏற். பட்டிருப்பின், அது ஏனைய பங்காளர்களி ஞல் கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட்ட
மூலதனத்தின் விகிதாசாரப்படி பிரித்துக்
கொள்ளப்பட வேண்டும்.
உதாரணமாக அ, ஆ, இ, ஆ கி ய மூன்று பங்காளர்கள் சமமற்ற மூலதனத் தைப்போட்டு ஒரு பங்குடைமையை உரு வாக்குகிருர்கள். பங்குடைம்ை கலைக்கப் பட்டதன்மேல் அவர்களுடைய ஐந்தொகை பின்வருமாறு:-
ஐந்தொகை
மூலதனம்: அ 2500 காசு 189 மூலதனம்: ஆ 314 இ: கடன் 263
குறை 660 923
2814 2814
தீர்ப்பு:
(அ) குழுமத்தின் நட்டமான 660 ரூபா, பங்காளர்களுக்குச் சமமாகப் பிரிக் கப்படவேண்டும்.
(ஆ) இ வினது மொத்தத் தொகை (அதாவது 268உ 660இல் மூன்றி லொன்றும் அதாவது மொத்தம் 483) அ, வாலும் ஆ, வாலும் அவர் கள் கடைசியாக ஒப்புக்கொண்ட மூலதன விகிதத்துக்கு ஏற்ப (ஒரு வர் 2500, 314) இருத்தல் வேண்டும்.
நன்மதிப்பு:
நன்மதிப்பு என்பது பங்குடைமையின் சொத்தாகும். பங்குடைமை வியாபாரம் செய்த காலத்தில் அதற்கு ஏற்பட்ட மதிப் பும் அதன் வியாபாரத் தொடர்புகளும் பெறுமதி வாய்ந்தவை. அவையே நன் மதிப்பு எனப்படும்.
سسه 7(

Page 222
பங்குடைமைச் சட்டம்
வேறுவிதமாக ஒப்பந்தம் செய்யப்பட் டிருந்தாலன்றி, பங்குடைமை கலைக்கப்ப டும்போது நன்மதிப்புத் தீர்க்கப்பட்டு அதன் பெறுமதி பங்குடைமைச் சொத் தோடு சேர்க்கப்படவேண்டும். டேவிட்டும் மத்தியுசும் என்ற வழக்கில் கூறப்பட்டதி லிருந்து இறப்பினல் பங்குடைமை கலைக் கப்படுமிடத்து இறந்த பங்காளியின் சொத் தும் நன்மதிப்புப் பெறுமதியில் பங்குபெற உரித்துடையதாகும். நன்மதிப்புத் தீர்க் கப்படாவிட்டால் அல்லது அது தீர்க்கப் பட்டதற்கான ஒப்பந்தம் எதுவும் இல்லா விட்டால், எவரேனும் பங்காளர் அதே குழுமத்தின் பெயரைக் கொண்டு கூட்டு வியாபாரத்தைத் தொடர்ந்து நடாத்த லாம். ஆனல் அவ்வாறு செய்வதினுல் மாத்திரமே பங்காளர் எவரையும் பொறுப் புக்குட்படுத்தமாட்டார் என்று வெளிப் படையாக ஏற்பாடு செய்திருத்தல் வேண் டும் ,
சிறப்புப் பங்குடைமை
1907 ஆம் ஆண்டில் வரையறுக்கப் பட்ட பங்குடைமைச் சட்டம் இலங்கைக்கு ஏற்புடையதாகும். இப்பங்குடைமையில் பங்காளர்கள் வரையறுக்கப்பட்ட பொறுப் புடையவர்களாக இருக்கலாம். ஆனல் ஒரு பங்காளராவது வரையறுக் கப்படாத பொறுப்புடையவராக இருத்தல் வேண்டும். இத்தகைய வரையறுக்கப்பட்ட பங்கு டைமை முயற்சி கள் சாதாரணமாகக் காணப்படுவதில்லை. இதற்குக் காரணம் பதிவுசெய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றைத் தாபித்தல் அதிலும் பார்க்க இலகுவானதும் வில்லங்கமற்றது LDrtg5th.
வரையறுக்கப்பட்ட பங்குடைமையின்
சிறப்பியல்புகள்:
(அ) பங்குடைமை உறுப்பினர்களின் எண்ணிக்கை இருபது பேர்களுக்குக் கூடு தலாக இருத்தலாகாது. பங்குடைமை வங் கித் தொழில் தொடர்புடையதாயின்,
- 19

செ. தங்கராஜா
உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துப் பேருக்கு மேற்படுதலாகாது. ஆனல் எல் லாவகைப் பங்குடைமைகளின் படியும் ஒரு பொதுப்பங்காளருக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கள் இருத்தல் வேண்டும்.
பொதுப்பங்காளர், குழுமத்தின் எல் லாக் கடன்களுக்கும் கடப்பாடுகளுக்கும் முழுமையாகப் பொறுப்புடையவராவார். அத்துடன் அவர் பங்குடைமை முகாமை யில் பங்கு கொள்ளவும் உரித்துடையவ rrit ni mrrf.
வரையறுக்கப்பட்ட பங்காளர் குறிப் பிட்ட தொகையொன்றை பங்குடைமை மூலதனத்துக்குச் செலுத்துவார். அதற்கு மேலாக விஞ் சி ய எத்தொகைக்கும், பொறுப்பாக மாட்டார். அவருடைய மூல தனம் டங்குடைமை கலைக்கப்பட்டாலொ ழிய, எந்நேரத்திலும் விடுதலை பெறமுடி பாததாகும். வரையறுக்கப்பட்ட பங்காளர் முகாமையில் பங்கு எடுக்கமுடியாது. அவ் வாறு அக்கட்டுப்பாட்டை மீறி முகாமை யில் பங்கெடுத்தால் அவர்களுடைய பொறுப்பு வரையறுக்கப்படாததாகிவிடும். வரையறுக்கப்பட்ட பங்காளர் ஒருவர் குழு மத்தின் முகவால்லர். குழுமத்தின் கணக்கு களைப் பரிசோதனை செய்யும் தத்துவம் அவருக்கில்லை
வரையறுக்கப்பட்ட பங்குடைமை பதிவு செய்யப்படுதல் வேண்டும். பின்வரும் விட பங்கள் பதியப்படுதல் வேண்டும்.
(அ) குழுமத்தின் பெயர்;
(ஆ) வியாபாரத்தின் தன்மை :
(இ) வியாபாரத்தின் பிரதான தொழி
லிடம்;
(ஈ) பங்காளர் ஒவ்வொருவரினதும்
முழுப்பெயரும், முகவரியும்:
(உ) பங்குடைமையின் காலவரையறை:
(ஊ) பங்காளர்களின் பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்டமை 11 ஜ்றிய விபரங்கள்;
(எ) பங்காளர் ஒவ்வொருவரினுலும்
கொடுத்துதவப்பட்ட தொகை,

Page 223
பங்குடைமைச் சட்டம்
குழுமம் முறைப்படி பதிவு செய்யப் படாவிடின் அது வரையறுக்கப்பட்ட பெய
ரைப் பெறமுடியாது.
சாதாரண பங்குடைமையில் எல்லாப் பங்காளர்களினதும் வகைகள் கணக்கிலெ டுக்கப்படும். ஆணுல் வேறுவிதமாக ஏற் கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தா லன்றி, வரையறுக்கப்பட்ட பங்குடைமை யில் பொதுப்பங்காளர்களின் வகைகள்
மாத்திரமே கணக்கிலெடுக்கப்படும்.
சாதாரண குழுமம் ஒன்றில் புதிய உறுப்பினர்கள் ஏனைய உறுப்பினர்களின் சம்மதத்துடனேயே சேர்த்துக்கொள்ளப் படுவ்ர். ஆனல் வரையறுக்கப்பட்ட பங்கு
டைமையில் வரையறுக்கப்பட்ட பங்காளர்
GrCPjšGTIDS stb. fu
எழுதியோ பிழை எண்ணம் கொண் எழுத்தாளனே! ! தேடி வைத்த பழுதில்லாச் செ1 அல்லால் உன்றன் பாரியாள் கழுத் பலமாய் உண்டே விழுமிய செல்வர் உறவேனும் உண் வீடாயினும் சொ பொறுப்பில் உண் தொழுதடிமை எ மாதா மாதம் தொடர்ந்து வரு சற்ருவது உண்ே

செ. தங்கராஜா
களின் சம்மதமின்றிப் புதிய பங்காளர் ஒரு
வர் சேர்த்துக்கொள்ளப்படலாம். மேலும்
வரையறுக்கப்பட்ட
பங்காளர்
ஒருவர்
தனது பங்கை வேருேர் ஆளுக்கு புதுப்பங் காளியின் சம்மதத்துடன், ஆனல் ஏனைய
வரையறுக்கப்பட்ட
பங்காளர்களின் சம்
மதமின்றிக், குறித்தொதுக்கலாம்.
வரையறுக்கப்ப
அறிவித்தல்
மூலம்
பட்ட பங்காளர் ஒருவர்
பங்குடைமையைக்
கலைத்தலாகாது. மேலும் அத்தகைய பங்
காளர்களின் இறப்பு, வங்குரோத்து அல்
லது சித்த சுவாதீன
மையைக்
வல்ல,
பிழைப்பே க்க நீ
T LTulip
TL LGöt
ாத்துண்டோ? t
தில் நகை
sffr ?
ர்தர்
GLIT?
ாந்தப்
T(βι το
ன்ருலும்
ம் ஊதியம்
IT? - uuIT GJIT
குலைக்கும்
ம் என்பன பங்குடை
தன்மையுடையன
(5
-س--- 99

Page 224
- சண் - அரு வர்த்தகவியல் - இ
உலகம் எல்லாம் உறங்கிய வேளையில் அவன் மட்டும் உறங்கவில்லை. உறக்கம் எப்படி வரும்? உறவுகள் பிரிவுகின்றபோது உள்ளம் துடிக்கின்ற போது, இரவுகள் தான் எப்படி வரும்? உறவுகள் எல்லாம் சொல்லிக் கொண்டா வருகின்றன? அவை களை அனைத்துக் கொள்ளும் நாம் அதன் பின்னுல் பிரிவு என்ற ஒன்றும் வருவதை உணர்ந்து கொள்வதில்லை. அவைகள் நம் மை, பற்றிக் கொள்ளும் போதுதான் அதை இனம் காணுகிருேம். செல்வம் இன்றுதான் அதை உணர்ந்தான். அவன் உள்ளத்தில் தாங்க முடியாத வேதனைகள் வழிந்தோடியது. தணியாத துன்பத்தீ அவன் உள்ளத்தை வாட்டியது. அவன் இதயத்தை யாரோ கூரிய கத்தி கொண்டு அரிவது போன்ற ஒரு மரண வேதனை. படுக்கை அவனுக்கு முள்ளாகக் குத்தியது. நித்திரை வெகு தூரத்தில் நின்று கொண் டது மனதில் நிம்மதியில்லாத போது நித்திரைதான் ஏது? எழுந்து பக்கத்தில் இருந்த சிகரட் பெட்டியை எடுத்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண் டான்.
திறந்திருந்த அந்த யன்னலூடாக வெளியே தோக்கினன். மங்கிய நிலவொளி யில் அந்த மாமரம் . .உலகத்துக்கும்
- 2

நள் சோதி --
இரண்டாம் வருடம்.
எனக்கும் வெகு தூரம் என்பது போல், உணர்ச்சியற்றுக் காணப்பட்டது அந்த மாமரம் . .அதன் கீழ் அதன் இருளிலே அவர்கள் பாடிய இன்பக் கவிதைகளை அந்த மாம்ரம் இன்று திருப்பிக் கூறுமானுல். அவள் மடிமீது இருந்து சாய்ந்து மழலை போல் பேசிமகிழ்ந்த அந்த இனிய நாட்கள் இனித்திரும்புமா?. இதழோரம் இதழ் சேர்த்து இன்ப ராகம் மீட்டிய அந்த இரவுகள் தான் இனி வருமா? காலமெல் லாம் உன்னை என் மடியில் வைத்து தாலாட் டுவேன் என்று காதல் மொழி பேசியவள் இன்று . . நேற்று வரை மஞ்சு தனக் குரியவள் என்றுதான் செல்வம் நினைத் திருந்தான். அவன் நண்பர்களுக்கும் இது தெரியும். அவன் நண்பர்கள் அவனுடன் பேசும் போது மஞ்சு என்ற அந்த அடை மொழியை சேர்க்காமல் எந்த வார்த்தை யையும் உச்சரித்ததில்லை. அந்த மஞ்சு வுக்கு . . இன்று அவன் கேள்விப்பட்டவை அவனுல் நம்பவே முடியவில்லை. மஞ்சுவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாம். அவனுடைய தாய் கூறிய வார்த்தைகள் அதிர்ச்சியையே கொடுத்தன.
செல்வம்! உங்கப்பாவும் இது பற்றி கேட்டு முகத்தில் கரியை பூசிக்கொண்டது தான் மிச்சம் செல்வம்! மஞ்சுசுடஇதற்கு சம்மதித்து விட்டபிறகு நீ கவலைப்பட்டு
(0 -

Page 225
இதயங்கள் .
என்னப்பா பிரயோசனம்! யாருக்கு யார்
என்று அங்கே எழுதப்பட்டு விட்டதப்பா செல்வ்ம் அதற்கு மேல் எதையுமே வாங்கிக் கொள்ளவில்லை.
சிகரட் விரல்களைச் சுட்டபோது அவன் சிந்தனைகள் தடைப்பட்டது. இன்னும் அவன் அந்த மாமரத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு சிகரட்டாக எரிய, பெட்டியும் காலியாகிக் கொண்டிருந் தது. பெட்டிதான் காலியானதே தவிர அவன் இதயம் துயரங்களால் முட்டி வழிந் தது. மஞ்சு வைப் பிரிந்து அவனல்வாழ முடி யுமா? அப்படி ஒருவாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இதற்கு மஞ்சு வும் சம்மதித்து விட்டாளாம். இது தான் அவனை மிகவும் இறுக்கியது. மஞ்சு காட் டிய பாசமும் பரிவும் இவ்வளவுதான? அவனல் ஜீரணிக்க முடியவில்லை.
மஞ்சு. .
செல்வத்தின் பருவம் என்ற வீணையை மீட்டியவள் மஞ்சுதான். பெண் என்ற உணர்ச்சிகளை புரிந்து கொண்ட போது அவன் நெஞ்சில் இடம் பிடித்துக் கொண் டவள் அவள், குறு குறு எனும் அவள் கரு விழிகள், கோல மயில் தன் காலடியில் எனும் அவள் கருங்கூந்தல், வீதியோரத்து நிழல் மரங்கள் போல் அன்றி வேலி யோரத்து பசுங் கொடி போன்ற அவள் மெலிந்த உடல் கட்டு, இதயத்தை தொட்டு வரும் அவள் இனிமையான குரல், அவ ளுடைய அந்த பெரிய மாந்தோட்டத்தில் புள்ளி மாளென துள்ளி திரிந்த போது தான் அவன் தன் இதயத்தைப் பறி கொடுத்தான்; அவளும் பறித்தெடுத்தாள்
வேலியோரத்தில் ஆரம்பித்து பாதை ஒரத்தில் பரிமாறி மாந்தோட்டத்துக் கிளி களாயினர். இரவு நேரம் உலக மெல்லாம் உறங்கும் வேளையில் அந்த இரு உள்ளங் களும் உறங்கியதே இல்லை. இரவெல்லாம் ஆசை ஆசையாகப் பேசுவார்கள். கண்டும்
காணுதது மாதிரி இதழோரம் இதழ் சேர்ப்

சண் - அருள்சோதி
பார்கள். அந்த இரவுகளில் என்றுமே அவர் களைத் தூக்கம் அணைத்ததில்லை. அவன தன் மடியில் வைத்து தாலாட்டுவாள். அவனே கண்ணணுக மன்னனுக லீலைகள் செய்வான். இவர்களின் இன் பக்கதைகளுக்கு அந்த மாமரம் தான் சாட்சி. அதன் இரு ளிலேதான் இன்பக் கதை பல கேட்கும். இத்தனைக்கும் மஞ்சு செல்வத்தின் சொந்த மச்சாள்தான் ஆனல் சொந்தங்கள் வாழ் வதற்கு சொத்துகளும் தொடர வேண்டும். செல்வத்தின் தந்தை வாழ்க்கையில் நொந்து போனவர். தன் சாதாரண சம் பளத்தைக் கொண்டு குடும்பத்தை ஒட்டிக் கொண்டிருக்கிருர், இதனலோ என்னவோ மஞ்சுவின் குடும்பத்துக்கும் செல்வத்தின் குடும்பத்துக்கும் நீண்டஇடைவெளி - இதை இதயங்களால் நிரப்ப முடியாதாம்; இலட் சங்களால்தான் நிரப்பமுடியும் என்பது மஞ்சுவின் தந்தையின் வேதாந்தம். இந்த நிலையில் தான் தொடர்ந்து கொண்டிருந் தது அவர்கள் காதல்! ஆனல் இன்று.
செல்வத்தின் பொழுதெல்லாம் அர்த்த மற்ற சிந்தனைகளுடன் கழிந்து கொண்டிந் தது. அவனுல் மஞ்சுவை சந்திக்கவும் முடிய வில்லை. வாழ்க்கையே ஒரு சுவையற்ற ஸ்வரங்களாக தோன்றியது. இரவு வத் ததும் அந்த மாமரத்தையே வெறித்து நோக்கிக் கொண்டிருப்பான். அதன் இருளில் மஞ்சுவின் முகம், அவனுடைய தாயின் கண்ணிர் தோய்ந்த முகம், தந்தையின் துயரம் தாங்கிய் முகம், புது மணமகனின் புரியாத உருவம், மறுபடி மஞ்சுவின் முகம் இப்படியே திரைப்படம் போல் ஒடிக்கொண் டிருக்கும். மஞ்சுவின் முகம் மட்டும் எது வித சலனமற்று நிர்மலமாகத் தோன்றும் , அவளை அவனுல் புரிந்து கொள்ளவே முடிய வில்லை. அவனது குழப்பங்களுக்கு பதிலே கிடைப்பதில்லை. மஞ்சுவை எப்படியாவது சந்திக்கவேண்டும். அப்போதுதான் தன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். ஒரு வித நிம்மதியுடன் கண்ணை மூடிக்கொள்வான்.
ஒரு நாள் சற்றும் எதிர்பாரமால் மஞ்சு விடம் இருந்து ஒரு கடிதம், யாரோ ஒரு
20 -

Page 226
இதuங்கள்.
பையன் கொண்டுவந்து கொடுத்தான். செல்வம் அவசரம் அவசரமாக அதை உடைத்தான். அவன் கைகள் என்றுமில் லாதவாறு நடுங்கின.
இன்று இரவு மாமரத்தடியில் சந்திக் கவும் தவற வேண்டாம்.
மஞ்சு
அதைப்படித்துமுடித்தபோது செல்வத்தின்
உள்ளத்தில் ஓர் துடிப்பு. எங்கோ தூரத்
தில் ஒரு அகல் விளக்கு பிரகாசிப்பது போன்ற ஒரு நம்பிக்கை கோடிட்டது. இன்று எப்படியாவது ஒரு முடிவுக்கு வர லாம் என்று அவன் மனம் எடை போட் டது, நேரங்கள் ஆம்ை வேகத்தில் அசைவு போட்டது. செல்வம் கடிதம் கிடைத்த நேரம் தொடக்கம் அந்த அறைக்குள் சுற் றிக் கொண்டிருந்தான். அடிக்கடி யன்னல் ஊடாக அந்த மரத்தை பார்த்துக் கொள் வான். அவன் நெஞ்சு படபடத்தது. அந்த மஞ்சு எப்போது வருவாள். அவள் . . . அவள் என்ன சொல் வாள்; அலை கடலில் சிக்கிய துரும்புபோலத் தத்தளித்தான்.
அதே மாமரம், அதே நிலவு, எல்லாம் அமைதியாகத்தான் இருந்தது. ஆனல் செல் வத்தின் மனதில் மட்டும் அமைதியில்லை. அவன் நம்பிக்கையெல்லாம் அடியோடு சரிந்து விட்டன. மஞ்சு அந்த மாங்கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு நின்ருள். மாமரத்தினுள் ஊடுருவிய அந்த நில வொளியில் அவள் கன்னங்களில் இரு வெள்ளிக் கோடுகள் பளிச்சிட்டன. இடை யிடையே நீண்ட பெருமூச்சுகள் தோன்றி காற்ளுேடு கலந்தன. செல்வம் வந்ததும் வராததுமாக கேட்ட முதல் கேள்வி ‘என்ன மஞ்சு உனக்கு கல்யாணமாம் நீயும் இதற்கு சம்மதித்து விட்டாயம்’! மஞ்சு இதை எதிர் பார்த்தாளோ இல்லையோ தடுமாறிப் போஞள்.
செல்வம் என்னை மன்னித்துவிடுங் கள். நான் விரும்பினுலும் விரும்பாவிட் டாலும் நான் இதற்கு சம்மதித்து விட் டேன்.

சண் - அருள்சோதி
இதை அவன் நிச்சயமாக GT5 it irri is வில்லை. தூரத்தே தெரிந்த ஒளி ஒன்று பட்டென அணைந்து கொண்டது. இதற்குப் பின் தான் அந்த நீண்ட மெளனம்.
மெளனத்தைக் கலைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது இடையிடையே எழுந்த அவளது நீண்ட பெருமூச்சுகள்தான்.
இனம் இனத்தை தேடுகிறது; சொத்து, சுக போகம் நிறைந்த வாழ்க்கையை தேடி நீயும் ஒடுகிருய்; இரவு பகல் பாராது அள்ளி வழங்கும் சீமான்கள் உன் காலடியில் கிடக் கும் போது இந்த செல்வம் எம்மாத்திரம்? அப்படித்தானே ! . செல்வம் அடிபட்ட வேங்கைப்போல் சீறினன்.
செல்வம் அப்படியெல்லாம் பழி சுமத்தாதீர்கள்! சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த சொத்து சுகத்தையும் விரும் பிப் போகவில்லை. சொத்து சுக போகங் களை எல்லாம் விரும்பினல் இன்று இந்த செல்வத்தைத் தேடி வந்திருக்க வேண்டிய அவசியமே இராது.
அப்படியாளுல் . . . .
சந்தர்ப்பம் சூழ்நிலை என்னை உங்க ளிடம் இருந்து பிரிக்க வைக்கிறது.
ஒ உனது அற்ப ஆசைகளுக்கும் போலி வாழ்க்கைக்கும் சந்தர்ப்பம் என்று பேர் சூட்டுகிருயா?
ம். செல்வம் நான் எது சொன் னலும் நீங்கள் கேட்கபோவதில்லை. சந் தர்ப்பம் சூழ்நிலை என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டது. நான் ஒருவருக்கு இரண் டாம் தாரமாக மணமாகப் போகிறேன்.
இரண்டாம்தாரமா?. . அவன் திடுக் குற்றன்.
ஆம். அவர் இச்சைகளை பூர்த்தி
செய்யவல்ல, தாயை இழந்து விட்ட இரு மழலை செல்வங்களுக்கு தாயாகப் போகி றேன். புயலில் சிக்கிவிட்ட அந்த படகிற்கு

Page 227
இதயங்கள்.
துடுப்பாகப் போகிறேன். ஆனல் இந்த திருமணம் உலகத்தின் கண்களுக்கு ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருக்கும் அல் லாமல் வேறு எந்த உறவும் எமக்கிடையே இராது. இதை அந்தப்புனிதவான் சத்திNம் செய்து கொடுத்துள்ளார்.
மஞ்சு . செல்வத்தின் குரல் ஆச் சரியத்துடன் ஒலித்தது.
ஆம் அவள் என்றும் புனிதமாகவே வாழுவாள். அவள் தன் இதயத்தை ஒரு நல் லவனிடம் பறி கொடுத்திருந்தாள். இன்று பறித்துச் செல்கிருள். இதற்கு அவள் தந் தையோ, தாயோ, பண அந்தஸ்தோ காரண மில்லை. தன்னையும் மீறிய பாச உணர்ச்சி யும் கடமையும் தான். எந்த பாச உணர்ச்சி யால் செல்வத்தை நேசித்தாளோ அதே உணர்ச்சியால் தன்னை மனதார நேசித் தவனைப் பிரிந்து போகிருள். இந்த பிரி வால் துடிப்பவர்களின் துயரங்களைக் கண்டு அவள் துடிக்கிருள். இதைத் தவிர வேறு எதையும் அவளால் செய்ய முடியவில்லை.
செல்வம் உணர்ச்சியற்ற மரம் போல அந்த மரத்தோடு சாய்ந்து நின்று கொண் டிருந்தான் .
இந்த உலகத்தில் நான் உங்களுக்கு செய்த துரோகம் போல் யாருமே செய் திருக்கமாட்டார்கள். அதற்காக, அடுத்த பிறவியிலாவது உங்களுக்கு மனைவியாகப் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண் டப் போகின்றேன். இந்த பிறவியில் உங் களுக்காக ஒருத்தி வருவாள்; ஆணுல் அவள் நிச்சயமாக இந்த மஞ்சுவைப் போல் உங் களை ஏமாற்றமாட்டாள். கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள் நிறைவேற்றுவீர்களா?
செல்வம், கலங்கிய கண்களுடன் மஞ் சுவை உற்றுநோக்கினன். அந்த இரவிலும் அவள் கண்களில் ஒரு அதீத ஒளி.
இந்த மஞ்சு மீது கொண்ட வெறுப் பினுல் இதை மறுத்து விடாதீர்கள்; நான்

என்றும் உங்களுடன் வாழவே ஆசைப்பட் டேன். கிடைக்கவில்லை; அது தான் கிடைக்க வில்லை; என் நினைவுகளாவது உங்களுடன் வாழட்டும் உங்கள் குழந்தைக்கு மஞ்சு என்று பெயரிடுங்கள். இது தான் என் கடைசி வேண்டுகோள். நிறைவேற்றுவீர் み 57fr?
அவன் க எண் கள் கு ள ம 7 கி ன. இதயத்தை u utr G3par fr கசக்கி பிழிவது போன்ற வேத%ன. அவன் மெளனமாக த*லயசைத்தான் ,
இனியும் இங்கு நின்று உங்கள் மன தைப் புண்ணுக்க விரும்பவில்லை. தான் போய்வருகிறேன். உறவுகளை வ: "த்து கொள்ள சாட்சியான இந்த மாமரம் தான் இன்று அவைகள் பிரிந்து கொள்ளும் போது சாட்சி. இந்த மஞ்சு உங்கள் வாழ் வில் ஒரு கெட்ட கனவு அவளுடன் பழகிய அந்த நாட்கலெல்லாம் வெறும் பிரேமை கள் என நினைத்து மறந்து விடுங்கள், உங் களை அன்புடன் நேசிக்கும் ஒருத்தியிடம் உங்கள் இதயத்தை ஒப்படையுங்கள். என்ன கடமை அழைக்கின்றது. இறைவன் வரம் கொடுத்தால் அடுத்த பிறவியில் நிச்சயமாக உங்கள் அடிமையாகவே பிறப் பேன். அது வரையும். நான் போய் வருகிறேன்.
மெல்லச்சென்று குனிந்து அவன் பாதங் களைத் தொட்டு கண்ணி ல் ஒற்றிக்கொண் u—rr 6fr.
போய் வரட்டுமா செல்வம் .
அவள் நிமிர்ந்து நோக்கினுள் அவளால் முடியவில்லை அவள் உதடுகள் துடித்தது: கண் களில் நீர் முட்டியது.
போய் வா. . . தெய்வங்கள் அழக் 8fik i.—f7"ğ5I .. . . . . , .
அந்த டிங்கிய நிலவொளியில் அவள் உருவம் மெல்ல மெல்ல மறைந்து கொண்
03 -

Page 228
இதயங்கள்.
டிருந்தது. அவள் மறைந்து கொண்டிருந் தாளா? அல்லது அவன் கண்களில் முட்டிய நீர் அதை மறைத்துக் கொண்டிருந்ததா? அவன் கண்களை வெட்டினன்; மீண்டும் திறந்த போது. . அவள் மறைந்து விட் டாள், அவள் தான் மறைந்து விட்டாள் ஆஞல் அவள் விட்டு சென்ற நினைவுகள் மறைந்து போமா? அவன் இதயத்தில் அவள் இப்போது ஒரு சுவாதி நட்சத்திரம் அதன் ஒளியில் அவன் இதயமே ஒளிமய மாகிறது.மனிதர்களுக்கு இடையில் தானே மஞ்சுவும் பிறந்தாள் அவள் ஒரு புரிய முடியாத புதிர்தான். இன்ப துன்பங்களைத் துறந்து மனதில் கொண்டவனை மறந்து எங்கோ இரண்டு உயிர்கள் வாழ, தன்னை ஒப்படைக்கப் போகின்ருள் . .
நான் வெற்றி பெறுகின்ற ஒவ் தோல்விகளை எண்ணிப் பார்க்: கின்ற ஒவ்வொரு தடவையு! ணிப் பார்க்கிறேன். வெற்றிக ஒன்று தழுவிக் கொள்ளுகின் தரை ஒன்றை எனது வாழ்ச் கொள்கிறேன். இந்த மனப்ட வரை எனது வாழ்க்கைப் ப தடைகளையும் எதிர்த்து எதிர்
யிருப்பேன். அது வரை என
கலின்றித் தொடரும்.
- 20

சண் - அருள்சோதி
மஞ்சு தன் கைப்படவே எழுதி ஒரு திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்ததும் அவன் கண்கள் கலங் கின. ஓர் இணைபிரியாத உள்ளங்களின் தொடர்கதையின் முற்றுப்புள்ளி. மஞ்சல் அணிந்து மாலை அணிந்து பொட்டிட்டு புது வாழ்வு புகப் போகின்ருள். அவன் வழி யனுப்ப வேண்டுமாம்; திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் அழைப்பிதழ்கள் அச்சகத்தில் தான் அச் சடிக்கப்படுகின்றன. அந்த அச்சகமும் சொர்க்கத்திலுேயே இருந்து விட்டால் .
(யாவும் கற்பனை) ,
1வொரு தடவையும், பெற்ற கிறேன், நான் தோல்வி பெறு ம், பெற்ற வெற்றிகளை எண் ளும், தோல்விகளும் ஒன்றை றன. மேடு பள்ள மற்ற சம கையில் நானே உருவாக்கிச் 1க்குவம் என்னுள் இருக்கும் யணத்தில் ஏற்படும் எந்தத் நீச்சல் போட்டுக் கொண்டே
வாழ்க்கைப் பயணம் தடங்
- "பவான்”

Page 229
- ஏ. ஜே. ம வர்த்தகவியல் - இ
சுந்தரத்தை நினைத்தபொழுது அவ ளுக்கு எரிச்சல் எரிச்சலாகத்தான் வந்தது. அந்த அசட்டுக்கு ஒன்றுமே புரிவதில்லை யென்று தனக்குத் தானே நொந்து கொண் டாள். பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் என்ன இன்பமாக பல்கலைக் கழக வாழ்க்கையை அனுவிக்கிருர் கள் என்று நினைத்த பொழுது சுந்தரத் தின் மீது அவளுக்குக் கோபம் இரட்டித் 855 «
கீதாவிற்கு அன்று தூக்கமே பிடிக்க வில்லை. ஒருதரம் தலையை உயர்த்தி தனது கட்டிலுக்கு வலப்புறம் தூங்கிக்கொண்டி ருக்கும் ராஜியையும், தனக்குக் கீழ் கட்டி வில் தூங்கிக்கொண்டிருக்கும் இந்துமதி யையும் பார்த்த பொழுது ஒரு நீண்ட பெருமூச்சு புயலாக கிளம்பி அடங்கியது. ராஜியும் இந்துவும் தங்கள் தங்கள் ‘போய்ஃபிரண்ஸ்' சோடு என்ன சந்தோ ஷமாக இருந்துவிட்டு வந்து நிம்மதியாகத் தூங்குகிருர்கள், மீண்டும் ஒரு தடவை அவர்களைப் பார்த்துவிட்டு மறுபக்கம் புரண்டு படுத்துக் கொண்டாள்.
சுந்தரம் கீதாவின் போய்ஃபிரண்ட். இங்கு 'ஃபிரண்ட்ஸ் பிடிப்பதே ஒரு தனி "கிரேட்." இங்கு எல்லோருக்கும் கேள் ஃபிரண்டும் போய்ஃபிரண்டும் உண்டு. இல்லையெனின், அவர்கள் 'கம்பஸ்" வாழ்க் கையை முற்ருக அனுபவிக்கவில்லை என் பதுதான் அர்த்தம். எங்கெங்கோ எல்
- 20

ரை கிழிகின்றது”
LqSLSLSLSSSLS LSLSLSSSLSSSSSSiSLLCLLSSS LLLLS
** vir RSF
~ མ་
-re
லன் கோவ் -
இரண்டாம் வருடம்.
ஒாம். இருந்து இங்கு வந்து காந்தமும் இரும்புமாக "பட்” என்று ஒட்டிக்கொள் கிருர்கள்.
ஒரு பெண் தந்தை சகோதரன் என்ற உறவுக்கு புறம்பான ஒரு புதிய உறவை யும், ஒரு ஆண் தாய் தங்கை என்ற உற இக்கு புறம்பான ஒரு புதிய உறவையும்
இந்த புதிய உலகத்தில் தான் உண்மை யாக சந்திக்கிருர்கள்,
அன்று முதலாம் வருட மாணர்கள் பல்கலைக் கழக பிரவேசம் பெற்று வளா சத்திற்கு வந்த நாள். சுந்தரத்திற்கு எப் படியும் ஒரு சரக்கு போட்டுக்கொடுப்ப தென்ற தீர்மானம் அவனின் நண்பர்களின் சபையில் ஏற்கனவே ஏகமனதாக தீர் மானமாகியது. அதற்கிணங்க மணியம், யேசு, அன்ரன் இவர்கள் கீதாவை "ராக்" பண்ணுகின்ற பாணியில் இருக்க சுந்தரம் அவளைப் போய் காப்பாற்றுகிற மாதிரி ஒரு "ஐடியா’ முன்னம்ே திட்டமிடப்பட்
-gil.
முகாமையியல் படிக்கும் சுந்தரத்தின் நண்பர்கள் சரக்கு சம்பந்தமாக ஒரு திட் டம் தீட்டினல் தவறுமா என்ன? திட்டத் தின்படி எல்லாம் சுமூகமாக முடிந்தது. சுந்தரத்திற்கு கீதா கேள்ஃபிரண்ட் என் பதற்கான பார்ட்டியும் வைத்தாகிவிட்
-Eilo
சுந்தரம், அவன் தன் மட்டில் ஒரு இலட்சிய வாதிதான். தமிழ் பெண்கள்

Page 230
மேலும் ஒரு திரை.
பண்பாடு, பாரம் பரியம் என்னும் விடயங் களில் மற்றவர்களைவிட ஒரு அதீதபோக்கு கொண்டவன். அவன் சிந்திப்பது சரியோ தவருே தனது பண்பாடு பாரம்பரியம் கட்டிக் காக்கப்பட வேணும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன். இதே கருது கோளில் தான் பல்கலைக் கழக தமிழ் மன்ற மேடைகளில் அடித்துக் கூறியிருக் கிருன் . ஏன் ? கீதாவுக்குக் கூட இந்த விடயத்தைப்பற்றி அழுத்திக் கூறியிருக் கிருன் ,
கீதாவைப் பொறுத்தவரை இந்தக் கருத்தை ஜீரணிப்பது ரொம்ப கஷ்டமா கத்தான் இருந்தது. அவளின் வாழ்க்கைச் சூழலோ என்னவோ அப்படி அவளை உரு வாக்கி விட்டது. ஆனலும் அவள் சுந்த ரத்தோடு கூட இருந்து அவனையும் தனது கருத்துக்கு உடன்பட முயற்சி செய்தாள்.
நாட்கள் மாதமாக திரண்டது. அன்று வணிகப்பட்டதாரி மாணவர் மன்றத்தால் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விருந்துபசாரமும் கலை நிகழ்ச்சிகளும் ஏற் பாடாகி இருந்தது. இது தமிழ் மாணவர் களும் சிங்கள மாணவர்களும் இணைந்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி.
வண்ண மின் விளக்குகளாலும் கட தாசி தோரணங்களாலும் நவீன கலையு ணர்வுச் சித்திரங்களாலும் அந்த லெனின் மண்டபம் தேவ லோகம்போல் காட்சி பளித்தது.
முதலில் அங்கு எல்லா இருக்கை களும் வட்டமாக்கப்பட்டு உணவுப் பண் டங்கள் பரிமாறப்பட்டது. பின் “ஜோக்” நிகழ்ச்சியில், ஒரு மாணவன் கண்ணைக் கட்டிக்கொண்டு மேடையிலே இசைக்கப் படும் வாத்தியத்திற்கிணங்க ஆடி க் கொண்டு வருவான். இசை நிற்கும்பொ ழுது யாரோ எவரின் கையைப் பிடித்தா லும் அவர் மேடைக்குப் போய் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி அவர்கள் சொல்வதையும் செய்யவேண்டும்.

ஏ. ஜே. மலன்கோள்
மூன்ருவது தடவையாக இசை நின்ற பொழுது, அந்த சிங்கள மாணவன் கீதா வின் கையைப் பிடித்த பொழுது சுந்தரத் திற்கு சுருக்கென்று இதயத்தில் மு ஸ் தைத் தது போன்று இருந்தது ஆணுல் அவள் சர்வ சாதாரணமாக சிரித்தபடியே மேடைக்குச் சென்று சபையையே சிரிப்பில் ஆழ்த்திவிட்டாள். அடுத்து எல்லா மாண வர்களும் ஆடும்பொருட்டு இசை ஒலிக்கத் தொடங்கியது. கீதா ஆடினுள். எல்லா மாணவ மாணவிகளும் தமது சிநேகிதர் க ளுடன் ஆரம்பத்தில் அனைத்தவண்ணம் ஆடத் தொடங்கினர்கள், வாத்தியங்கா கொஞ்சம் கூடி ஒழிக்க எல்லோரும் கால் லாருடனும் மாறி மாறி ஆடத்தொடங் கிர்ைகள். கீதாவும் வேறு வேறு மான ர்ெகளுடன் ஆடினுள்.
சில பொருள் இயங்கினுல்தான் அழகு. சில பொருள் இயங்கா விட்டால்தான் அழகு. இன்னும் சில பொருள் இயங்கி னுலும் இயங்காவிட்டாலும், எப்படியானு லும் அழகுதான் . . அப்படித்தான் அவ ளுடைய அமைதியிலும் அழகின் இயக்கம் உண்டு. அ வ ளு  ைட ய இயக்கத்திலும் அமைதியின் அழகு உண்டு. அவளுடைய பார்வையில் பேச்சு உண்டு. மெளனமாய் மொட்டுப்போல கூம்பியிருந்தாலும் அவள் அழகுதான்.
இதற்கு மேலும் மண்டபத்திற்குள் நிற்க சகிக்காத சுந்தரம் சட்டென வெளி யேறி விடுதியை நோக்கி நடந்தான்.
அந்த நாள் இரவு தான் சுந்தரத்தை யும் கீதாவையும் தூக்கம் தழுவ மறுத்த இரவு - தனது கருத்தை எப்படிச்சொல்லி யும் கீதா அதை ஏற்றுக் கொள்கிருள் இல் லையே என்று சுந்தரம் தவித்த இரவு-நவீன உலக ஒட்டத்தின் வேகத்தை சுந்தரத் திற்கு புரியவைக்க முடியவில்லையே என்று கீதா சிந்தித்து ஏங்கிய இரவு.
பெண் தன்னுடனேயே கூடப் படிக்கிருள்.

Page 231
மேலும் ஒரு திரை.
ஒரே திறமையில் பல்கலைக்கழகத்திற்கு வந் தவள் - அவளும் ஒரு மனிதப் பிறவிதான் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்க அவனின் உள்ளத்தில் ஒரு திரை போடப் பட்டிருந்தோ என்னவோ அதை அவனுல் சிந்திக்க முடியவில்லை.
அடுத்த நாள் மாலை வி ரிவு  ைர க ள் முடிந்து எல்லோரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்கள். கல கல வென்ற சிரிப் பொலி எழும் போதே முதலாம் வருட மாணவர்களுக்குத்தான் விரிவுரை முடிந்து விட்டதென்பதை சுந்தரம் அனுமானித்துக் கொண்டான். நூல் நிலையத்தில் புத்தகமும் கையுமாக இரு ந் த அவனுக்கு வாசகமே ஏறவில்லை. நினைவெல்லாம் கீதாவைச் சுற் றித்தான்.
‘அடேயப்பா என்ன அவ்வளவு இன்ர றஸ்ரிங்கான புத்தகம்’ என்ற யாழ் நாதம் போன்ற குரலொலி அவனை சுய நினைவிற்கு வரவைத்தது. கீதா வேதான் என்று நினைத் தாலும் அவளை நிமிர்ந்து பார்க்கவோ விருப்பமில்லாமல் அவன் புத்தகத்தையே பார்த்தபடி சிலையாக இருந்தான்.
அவன் படித்த புத்தகத்தை இரு கைக ளாலும் மறைத்த வண்ணம் சற்றுக்குனிந்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள், எவ் வளவு தான் கோபம் இருந்தாலும் அவ ளின் புன்னகையில் அவன் தன்னை மறக்கத் தான் செய்தான்.
இன்று எப்படியும் த ன் னை ஆட்டிப் படைக்கும் பிரச்சனைக்கு வி ைட கா ன வேண்டுமென்ற உறுதியான தீர்மானத் துடன் 'சுந்தரம் அப்படி வாருமேன் அந்த கல்லில் இருந்து பேசலாம்’ என சுந்தரத் தின் கையை பிடித்து இழுத்த வண்ணம் முன்னுேக்கி நடந்தாள்.
இருவரும் அந்தக் கல்லில் அமர்ந்திருந் தார்கள்.ஒருவரை ஒருவர் பார்ப்பதும் பின் பல பக்கங்களையும் நோட்டம் விடுவதுமாக சிறிது நேரம் கழிந்தது. இவர்கள் மட்டும்
- 207

ஏ. ஜே மலன்கோவ்
தானு அந்தக் கல்லில் இருக்கிருர் கள்? அந் தப் பூங்காவின் ஒவ்வொரு ஒவ்வொரு கல் லிலும் ஒவ்வொரு ஜோடி- ஆனல் இவர் தள் செய்யாத லீலைகளை அவர்கள் புரிகிருர்கள். இம் மாலைப் பொழுதே L9TőÖ81 at, infrg55 e. களுக்கு ஓர் இங்கிதமான நேரம்
கீதா இவற்றையெல்லாம் நோட்டம் விட்டு சுந்தரத்தை பார்க்கும் ஒவ்வொரு தடவையிலும் நானும் ஒரு பெண்தானே. எனக்கும் உணர்ச்சிகள் உண்டுதானே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினுள் ஆணுல் சுந் தரம் ஒவ்வொரு தடவையும் நோட்டம் விட்டு நிலத்தைப் பார்க்கும் பாவனை எனக் கும் உணர்ச்சிகள் உண்டு. அதை நான் ஒரு கன்னிப் பெண்ணுேடு விளையாட விடக் கூடாது; எனவே நான் அந்த தியை நானு கவே அனைத்துக் கொள்கிறேன் என்பதைப் புரியவைத்தான்,
நீண்டமெளனத்தைக் கலைக்கும் வார்த் தையாக“கீதா! அந்த விருந்துபசார நிகழ்ச் சியில் அப்படி ஆடியிருக்க கூடாது. அது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை" 67 ses." சற்றுக் கோபமாக கூறினன்.
கீதா சட்டென்று நிமிர்ந்து சுந்தரத் தின் முகத்தில் எதையே தேடுவதுபோல் அவனை துருவி பார் த் தாள். அவன் தொடர்ந்தான் "என்னைப் பொறுத்தவரை நான் பெண் என்ற சொல்லுக்குப் பெரு மதிப்பு கொடுக்கிறேன். o LDés/ Uusim u T__ டிற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகை யில் ஒவ்வொரு பெண்ணும் இருக்க வேண் டும் என்பது தான் "சிது ஆசை. பெண் விடுதலை பெண் சமத்துவம் என்ற கோதா வில் குதிக்கின்ற பொழுது வெறும் உடல் இச்சைகளுக்கு மாத்திரம் அடிமையாவதை நான் விரும்பவில்லை. ஒரு பட்டதாரி மாணவி தனது கற்பை இழந்து தான் ஒரு பட்டத்தைப் பெற வேண் டு ம்? அல்லது கற்பை இழந்தவர்கள் என்று கொடுக்கும் ஒரு பட்டமா அது?" என சுந்தரத்தின் குரல் உடைந்து ஒலித்து ஓய்ந்தது.

Page 232
மேலும் ஒரு திரை.
சுந்தரத்தின் பேச்சுக்கிடையில் பக் கத்து கல்லில் இருந்த ஜோடிகளின் கொஞ் சல் ஓசை காற்றில் மிதந்து வந்து இருவரி னதும் காதுகளை முத்தமிட்டுச் சென்றது.
கீதாவிற்கு இதற்கு மேலும் அமை தியைப் பேணமுடியவில்லை * சுந்தரம் ஒரு மூடச் சமூகம் ஒரு பெண்ணிடம் கற்பு என்ற ஒன்றைத் தவிர வேறு ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை அல்லவா? ஒரு த் தி எவ்வளவு மோசமான மனைவியாக, தாயாக சமூகத்தின் நோயாகக் கூட இருக்கலாம். அவள் தன் கணவனைத்தவிர வேறு ஒரு வனேடு - பரபுருஷனேடு திருமண வாழ்க் கைக்கு முன்னலோ பின்னலோ இடை யிலோ உடல் உறவு கொள்ளாமல் இருந் தால் போதும் - அதுவே பெரிய ஒழுக்கம்அவள் பத்தினி - அவள் தெய்வம் - இந்த சூத்திரத்திற்கு பொருந்தி வரக் கூடிய பெண்களைத்தான் இந்த சமூகம் உற்பத்தி செய்கிறது. இதை நான் முற்றுக வெறுக் கிறேன். எல்லாவகையிலும் முன்னேற லாம் என்று ஏட்டளவில் அனுமதி வழங் கும் இந்த சமுதாயம் நடைமுறையில் ஏன், அதை ஏற்றுக் கொள்வதில்லை? நீங்கள் அடிக்கடி கூறுவீர்களே பாரம்பரியம் கலாச் சாரமென்று; இந்தக் காலத்தால் அழிந்த கருத்துக்களின் சுமைதாங்கிகளாகப் பெண் கள் மாத்திரம் இருப்பதை நான் அடி யோடு மாற்ற முயற்சிக்கிறேன். தமிழ் பண் பாடு பாரம்பரியம் என்பதற்கு தனக்குத் தானே ஒரு கருதுகோளை உருவாக்கி அதை ஒரு பெண்ணிடம் மாத்திரம் எதிர்பார்ப் பது இந்த ஆணினத்தின் எவ்வளவு மூடத் தனமான செயல் - அதே கருதுகோளை ஏன் ஒரு ஆணிடம் இந்த சமு த T யம் எதிர் பார்க்க வில்லை?"
O இன்பம் அனுபவிக்க நீ விரும்பி குறுக்கு வழியும், கோணல் நடத்தைய இன்பம் துய்க்க முடியாது. மற்றவ. செல்லவேண்டும்.

ஏ. ஜே. மலன்கோவ்
'நான் பல்கலைக்கழக அனுமதி பெற்று வரும் போதே ஊரில் என்னைப்பற்றி கீழ்த் தரமாக கதைத்த கதைகளை என் காது பட்ட மொழிகளிலும் என்னைக் கண்டு அசடுவழிய சிரிச்ச சிரிப்பிலும் நான் அறிந் திருக்கின்றேன். ஏதோ கற்பைத்தான் இந்த சமுதாய ஒட்டுண்ணிகள் பெரி தாக பிடித்து வைத்திருக்கிருர் கள். அதை சர்வசாதாரணமாக மதிக்கிறேன். கம்பஸ்’ பாஷையில் சொல்வதானுல் சதையோடு சதை சேருவதில் என்ன வந்து விட்டது?"
சட்டென சுந்தரம் நிமிர்ந்த பொழுது தான் அவள் தன்னை மறந்து மிகவு: கொடூ ரமாக, ஒரு ஆண் முன்னுல் நிற்பத்தை கூட மறந்து வார்த்தைகளை வாசிவிட்டதை உணர்ந்தாள்,
சுந்தரம் வாய் அடைத்துப்1ே1 இருந் தான். அருகில் இருந்த ஒவ்வொரு ஜோடி களும் எழுந்து அந்த இருள் சூழ்ந்த படி களை நோக்கி செல்கிரு:ர்கள். மயக்கம் அரும்பும் வரை கல்லில் இருப்பார்கள். பின் அதே படிக்கட்டுகள் தான்
கோட்டான் குருவிகளின் ஒலம் அந்த அமைதிப் பொழுதைக் கிழித்தது.
w
கீதா தன்னை சுதாகரித்துக் கொண்ட வளாய் “குட் நயிட்” என்று கூறிய வண்ணம் மெல்லிய புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்த்தாள்,
சுந்தரம் ஸ்தம்பித்து நின்றன் அவ ளின் சிரிப்பொலி அந்தப்பூங்காவை நிறைக் கின்றது.
(முற்றும்) (யாவும் கற்பனை)
னுல் பிறர் இன்பம் அடைய வழி செய்! பும் கடைப் பிடிப்பதால் நீ நிச்சயமாக ர்களையும் அணைத்துக் கொண்டு தான்
-- இங்கர்ஸால்
س 208

Page 233
தமிழ்
மன்ற
(1975
 

- 76)

Page 234
செயற்குழு
g5rru unresarti ssir :- கலாநிதி
திரு. A. Lo (வணிகத்துறை
பெரும் பொருளாளர் :- கலாநிதி
தலைவர் :- திரு. ந. 剑
துணைத்தலைவர் :- திரு. இ. g
செயலாளர் : )Uj. دal. 1
துணைச்செயலாளர் :- ஜஞப். (P.
பொருளாளர் :- திரு. 6. .
இணை இதழாசிரியர்கள் :- திரு. பொ.
திரு. நி. ச
செயற்குழு உறுப்பினர்கள் :- திரு. இ. ஒ செல்வி சா
۶۹ eme

1975-76
பிள்யூ. எம். கே. விஜேதுங்க (வளாகத் தலைவர்)
ாணிக்கவாசகர்
சிரேஷ்ட விரிவுரையாளர்)
ா. சிவத்தம்பி
வஞானசுந்தரம்பிள்ளை
இராசசுந்தரம்
கியூட்டன்
இரத்தினசிங்கம்
FT S 60CT L 6, fT sö
றிஸ்கந்தராசா ரதாதேவி கதிரவேற்பிள்ளை
-س 10{

Page 235
སྒྲི
སྐྱེ་
 

SLLLLLLL YYZYS 0LYYSZ L SLL Y SLLLLLLLSYY LYYS 0000 LLLLL LL 00 SZSZ SLLLZYYLYSK0TTLLL 0KSK SZ SLLLLLLLLLLS SLLL0LYSL SZSLLLLLLLYYL00LYS LLLLLLLLZY0KS0LLSZ SLLLLSK LLLLLS LLL 0ZYTLLLL S SYZ SLLLLL LL000K KSLLLLLSL SL0000L00LLSK LLS LL L LLLLLLL0YY KZTTL0L K L0SLLLLL00 0000S KLLTYLL 0YZZLLLL SLLLLSY LLL 00 LLL 0ZYTLL LLLLL SK ST SLLLLLLS ZYY00KSZSL L L K SZTLK SL0L0L0L0 S 0YLLLZYLL 0L S SKZ SLL000LS 000 0LLZSYSYT SLLLLL 00L0L0SYS LLLLLLLSK

Page 236


Page 237
செயலாளர் சிந்தையிலி
VYNAMYvwalapvv waar vir VAA7 w Var vrv Aar wgTY VA4r w war w waar wo-waar wir wag
* தமிழுண்டு தமிழ் தமிழுக்கு நாளுட ஆம்! தமிழையும் தமிழ்க் கலாசாரத் தொளாயிரத்து எழுபத்தி நான் காம் =%? அவனியில் தோன்றிய வித் தியோ தய வள வந்து இன்று இரண்டாவது தடவையாக எடுத்து நிற்கும் இவ்வேளையிலே கடநத க பாதையினைத் திரும்பிப் பார்ப்பது له م .T تم قيا
வணிக நிர்வாகத்துறையைச் சேர்ந்த தமிழ்க்கலாசாரத்தின் மீதும் கொண்டுள்ள காக்க வேண்டும் என்ற அவாவினுல் உந்தட எமது மன்றத்தை வளர்த்து வருகின்ருேம்
எமது மன்றத்தின் முதலாவது கலை
தாம் ஆண்டு ஆவணித்திங்கள் பத்தாம் த
மண்டபத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக வெகு
றத்தின் பெரும் பொருளாளர் கலாநிதி கா
றலுடன் ஆரம்பமான காலை நிகழ்ச்சியில் க பெற்றன.
இன்றைய வர்த்தகத் து
O புள்ளிவிபர
கனக்கியல்
O பாரம்பரிய
மொழிபெய
முகாமையிய
எனும் விடயம் பற்றி நடைபெற்ற கருத்த!
ஏனைய வளாக விரிவுரையாளர்களும், தமிழ்
தரங்கைத் தொடர்ந்து நடைபெற்ற விவா
"இலங்கையில் தேசிய ஒரு தீர்க்கப்படவேண்டியது ே பொருளாதாரப் பிரச்சிஃ
எனும் விடயம் பற்றி வாதிகளாக 6t LP 3, . பிரதிவாதிகளாகக் கட்டுப்பெத்தை வளாக கொண்டனர்.
மாலை நிகழ்ச்சிகள் திரு. சி. அருளான தலைமையில் ஆரம்பமாகின. திருவாளர் மு. பொழிவினையும் அதைத் தொடர்ந்து எமது

நந்து
raprovy V4r)
மக்களுண்டு சை- இன்பத்
செய்வோம் நல்ல தொண்டு '
தயும் பேனிப் பாதுகாப்பதற்காக ஆயிரத்து டு ஆவணித் திங்கள் பத்தொன்பதாம் நாள் கத் தமிழ் மன்றம் லாட்டமின்றி வளர்ந்து வெற்றிப் பெருமிதத்துடன் தமிழுக்கு விழா 73. த்தில் எமது தமிழ் மன்றம் கடந்து வந்த த மென்று எண்ணுகிறேன்.
மாணவர்களாகிய நாம் தமிழ்மொழிமீதும், பெரு விருப்பினுல், அவற்றைப் பேணிப் பாது பட்டு பலவித இன்னல்களுக்கு மத்தியிலும்
விழா ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந் ாள் வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மன்
சிவத்தம்பி அவர்களின் மங்கள விளக்கேற் ருத்தரங்கம் விவாத அாங்கம் ஆகியன இடம்
1றையில்.... . . .
வியல்
h
Iர்ப்பு
பல்
ாங்கில் எமது வளாக விரிவுரையாளர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டனர் கருத்
த அரங்கில்
மைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு முதலில் தசிய சிறுபான்மையினரின் பிரச்சினையல்ல,
வளாகத் தமிழ் மன்ற விவாதக் குழுவினரும் த் தமிழ்ச்சங்க விவாதக் குழுவினரும் கலந்து
ந்தநாதன் (முன்னுள் தமிழ் மன்றத்தலைவர்) சிவசிதம்பரம் அவர்களின் சிறப்புச் சொற் கன்னி வெளியீடான 'வித்தியோதயம்'
ll

Page 238
சஞ்சிகை வெளியீட்டு விழாவும் நடைபெற் நிகழ்ச்சிகளில் செல்வி தேவகி வாமதேவன் கலையகம் அளித்த நடன நிகழ்ச்சியும் நை கள் அளித்த கதாகாலேட்சபத்துடன் விழ
எமது மன்ற மாணவர்களின் விவாதி வளாகத் தமிழ் மாணவ்ர்களுடனுன ஒற்று யும் விருத்தி செய்யும் முகமாகவும் காலத் களுடன் பல விவாத அரங்குகளை ஏற்படுத் பர் மாதம் இரண்டாம் திகதி "தேசிய ஏ காணலாம்' என்ற தலைப்பில் இலங்கைப் கத்தினரால் நடாத்தப்பட்ட விவாத அர களாகக் கலந்து கொண்டனர். 1976ஆம் ஆ பல்கலைக்கழக வித்தியாலங்கார வளாகத் அரங்கில் "தரப்படுத்துதல் மூலம் கல்விய பிலும் எமது மன்ற விவாதக் குழுவினர் ட வளாகங்களுடன் மட்டுமன்றி எமது மன் விவாத அரங்குகளைக் காலத்திற்குக் கால
விவாத அரங்குகளை ஒழுங்குபடுத்து பிடும்போது எமது வளாகத்தில் முக்கிய பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை வாகம், வியாபார நிருவாகம் போன்ற பட் அயராது உழைத்து இன்று ஓரளவிற்கேனு டிருக்கிறது என்பதனைக் குறிப்பிடுவதில் (
எங்கள் மத்தியில் உள்ள இளம் க! கலைகள் மேலும் மெருக்கூட்டப்படவேண் கொண்டு முத்தமிழில் ஒன்றன நாடகத்து இதன் பிரதிபலிப்பாகவே இன்று நடை.ெ நின்று "ஒலங்கள்" போடுகின்ருேம்.
இறுதியாக, அல்லும் பகலும் அயர டியில் எமது சஞ்சிகையான வித்தியோத இணை இதழாசிரியர்கட்கும், எம்முடன் தே வினருக்கும், ஒலங்கள் நாடகத்தின் பிரதி அவர் கட்கும் மிகக் குறுகிய காலத்தில் ந யாள்கையாளர் திரு அ. தாசீசியஸ் அவ ரத்தினம், திரு. ஜே. ஜே. பேர்ணுட், திரு வளர்ச்சிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி
எதிர்காலத்தில் மன்றம் யினைப் புரிந்திட எமது உரித்தாகுக.

றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை ன் இன்னிசை விருந்தும் கார்த்தி கா ஆடற் டபெற்றது. இறுதியாக எமது மன்ற மாணவர் ா இனிதே முடிவுற்றது.
க்கும் ஆற்றலை வளர்ப்பதற்காகவும் ஏனைய மயையும் பரஸ்பர நல்லெண்ணத் தொடர்பை திற்குக் காலம் ஏனைய பல்கலைக்கழக வளாகங் தி வந்திருக்கின்ருேம், 1975ஆம் ஆண்டு ஒக்டோ ற்றுமை மூலம் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு
பல்கலைக்கழக கொழும்பு வளாகத் தமிழ்ச் சங் ங்கில் எமது மன்ற மாணவர்கள் பிரதிவாதி ண்டு பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி இலங்கைப் தமிழ்க் கலைமன்றத்தினரின் கலைவிழா விவாத பில் சமத்துவம் காணமுடியாது’ எனும் தலைப் ரதிவாதிகளாகக் கலந்து கொண்டனர். ஏனேய ற மாணவர்களுக்கிடையேயும் பலதரப்பட்ட ம் நடாத்தியுள்ளோம்
வது மட்டுமன்றி ஏனேய வளாகங்களுடன் ஒப் குறைபாடாகவுள்ள தமிழ்மொழி மூலம் கல்வி க் கூட்டவும், தமிழ்மொழி மூலம் பொது நிரு .டமாணிகளை ஆரம்பிப்பதற்கும் எமது மன்றம் ம் அதன் பிரதிபலனை அனுபவித்துக் கொண் பெருமகிழ்வெய்துகின்ருேம்.
லஞர்களின் திறமை ஊக்குவிப்பதுடன் தமிழ்க் ாடும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் றைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிருேம். பற்றுக் கொண்டிருக்கும் கலைவிழாவில், மேடை
ாது உழைப்பினை நல்கி தமிழ்த்தாயின் திருவ யத்தின் இரண்டாவது மலரைச் சமர்ப்பித்த ாளோடு தோள் நின்று உழைத்த செயற்குழு யினைத் தந்துதவிய திரு. நா. சுந்தரலிங்கம் ாடகத்தை மேடை ஏற்றுவதற்குதவிய நெறி ர்கட்கும் மற்றும் செல்வி ஆனந்தராணி ராஜ . க. பாலேந்திரா ஆகியோருக்கும், எமது மன்ற கூருவிடில் நாம் நன்றி மறந்தவர்களாவோம் .
:ென்மேலும் ஆக்கபூர்வமான பணி மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
- அ. நியூட்டன்
۔۔۔۔۔۔۔ 212

Page 239
SqAkeSkSLMLeMLSSSMSSSLSSAeeSAMALASAMALLASSSASLSLqeA eAALeMALASLSSASSSAAAASSASAALSEL SSAAAAAAL AAASAAMLALSLSMALLSLLLAAAAASSASALALASSSASLSS LAAAAALAAAAALATALSALSAAqASAAASAAASLALALALLSAAAA SLESLLALAqAALALASMS SLLLSSSAAASSSSSASASSSLqLALAqq
மேன்மைக்
ஒன்ரு
வணிகக் கலை
கொணர் வித்தியோதய
நீண்ட ஆயு
தமிழை வ
வாழ்த்துகி
201, LITín sí),

AAA AASAASASASASASASqSqqSSSSASASASASASASA ASA SSASASAAALAAS SSASS LSLALSqSSqS SAASAASAASAASALLLSMSSqqSSSS SSLLLSSAAAASSAS A SASASASJSAA JASqAASLLLAAASAA SMMSMA SS S A ASASS
s2k)(56fli)
}கிய ]யை தமிழில்
ந்துவரும் தமிழ் மன்றம் ளைப் பெற்று
1ளர்த்திட
ன்ெறேன்.
ரன்
கொழும்பு-12.

Page 240
நன்றியுடன் கரங்
இம்மலரை அணிசெய்யம் வண்ணம் 8 தந்துதவிய விரிவுரையாளர்களுக்கும் ம
மன்றத்தின் வளர்ச்சிக்கு எல்லாவகைச யீட்டுக்கு ஆலோசனைகள் வழங்கி எம்ை கவாசகர், பெரும் பொருளாளர் கலாநி விரிவுரையாளர்களுக்கும், மலருக்கான மன்ற மாணவர்களின் வி கண்ட சகல விரிவுரையாளர்களுக்கும்,
இது எமது மலர் எனக்கொண்டு மலா உழைத்து சொல்லாலும் செயலாலும் செயற்குழுவினர்க்கும் குறிப்பாக தலைவி இ. இராசசுந்தரம் செயலாளர் அ. நி யோருக்கும், மலர் வெளியீட்டிற்காக யாழ்ப்பாணத் விக் காட்சிக்கும் கொழும்பில் நடாத்த ஆதரவு நல்கிய அனைவருக்கும் நுழைவு களுக்கும் நண்பிகளுக்கும் மற்றும் இ
புரிந்தோருக்கும்.
விளம்பரங்கள் சேகரிப்பதற்குப் பேருத வல்கள் அமைச்சின் மேலதிக பணிப்ட திரு. சு. சிவகுரு அவர்களுக்கும், இந்தாருங்கள் விளம்பரங்கள் என ஈய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தாரர்களுக்கும், அதனைச் சேகரித்துதவி ந. சிவஞானசுந்தரம்பிள்ளை கு. வீமரா எம். எஸ். இத் கான் சி. உலகநாதன் எம். ஜமால், எஸ். ஏ. ஏ. ஹலீம் வ. இம்மலருக்கு ஆசிச் செய்தி வழங்கிய கே. விஜேதுங்க அவர்களுக்கும் பீடத்த களுக்கும் காப்பாளர் திரு. சி. மாணி ளாளர் கலாநிதி கா. சிவத்தம்பி அவ
அட்டைப் படத்தினை அழகாகவும் நுட் மிகக் குறுகிய காலத்தில், சிறப்பாக இ கத்தினருக்கும் ஊழியர்களுக்கும், நாம குறிப்பிட மறந்த - ஆனல் குறி களுக்கும், மண்டபம் தந்துதவிய இராமகிருஷ்ண
எமது மனமார்ந்த நன்றியைத்
- 214
 

ரிய கருத்துக்களுடனுன விடயதானங்கள் ாணவர்களுக்கும்,
ளிலும் உறுதுணையாக இருந்து, மலர் வெளி ம ஊக்குவித்த காப்பாளர் திரு. சி. மாணிக் தி கா. சிவத்தம்பி ஆகியோருக்கும் மற்றும்
டயதானங்களைச் சரிபிழை பார்த்து தகவு
சிறப்புற உடலாலும் உள்ளத்தாலும் எம்மை உற்சாகப்படுத்திய இவ்வாண்டுச் பர் ந. சிவஞானசுந்தரம்பிள்ளை உபதலைவர் பூட்டன் பொருளாளர் வ. அன்ரனி ஆகி
தில் நடாத்தப்பட்ட தெய்வமகன் நிதியுத ப்பட்ட நவராத்திரி நிதியுதவிக் காட்சிக்கும் ச்சீட்டுக்கள் விற்பனை செய்துதவிய நண்பர் க்காட்சிகளை ஒழுங்குபடுத்துவதில் உதவி
வி புரிந்த கைத்தொழில் விஞ்ஞான அலு ாளரும் பகுதிநேர விரிவுரையாளருமான
இயலாத நிலையிலும்கூட மலர் வளம்பெற உவந்து விளம்பரம் தந்த எமது விளம்பர ப எம் அருமை நண்பர்களான வ. அன்ரனி சா சி. பரம்சோதி ச. புவனேந்திரராஜா நீ, மரியாம்பிள்ளை இ. இராசசுந்தரம், சண்முகநாதன் ஆகியோருக்கும், வளாகத்தலைவர் கலாநிதி டபிள்யூ. எம். லைவர் கலாநிதி எஸ். திலகரத்தின அவர் க்கவாசகர் அவர்களுக்கும் பெரும் பொரு * களுக்கும் , பமாகவும் வரைந்து உதவிய அன்பருக்கும், ம்மலரை அச்சிட்டுத் தந்த குமரன் அச்ச
'ப்பறிந்து உதவிய - எண்ணற்ற அன்பர்
மிஷன் நிர்வாகத்தினருக்கும்,
தெரிவித்துக் கொள்ளுகிருேம்.
- இணை இதழாசிரியர்கள் -

Page 241
qqLSLMqkqSASALLLSeSMMqqSALASqSMMLeSASSLAMeLSLMSLeMMTAMAeLALeLeLMMAeLML0LMLeAMLeLALAAMMMMeLAALALALeMeLA AeAMALSeAeAeASeSeSLeDMLMMMLALALA ALAqSASALASLALALAML0MMASLSeLSMMASASMeMLSSASSLAMAeALALAMSeSAe AALMMAMAAA LASLLAL ALASS AAALSAALLLLLAASAALALALASSSAAS
(citly est (
mill
V
UNION CAR
Cables: "" UN || CARB || DE COLOMBO''
UN ON CARB DE
སོ།། 《་
SSSJSSAJSASLTeJSEJASASASAAALASSeAMASqSqAeSeSeLMLMqkSkLMAMAeLeeSeAMeSMLMLMLMLMeSLMAeALMASLMMM0SLAMMSeSLSALMMMAALLAAAAALLAAAALMSqeSALeLASAeSLMMALMS ASMSLeSLALekSqMAMSqLeSeMALASLSSLMMeSMAMMMMMSMqA AeMMASAS SLSAAqAeSLSLAMMMALSLSeSeSMLATqASAAA SLAe SqTAAqSLALAMSa

qMSMqMMqLkSLLLSAAAAAALLLSAqALALALASLLALLSAeLALLAMALALALALALAMALLAMALMALMAeMMASAeALSMMeeLMLAMLMAL ALMLeSeLMLAe LMALALASLLALASLALMLAMAMALLLAALLLLLALeSeLASeSeSeMLMeLASLLAeAeMMAeAeLAeALAMqMSLALALASqASASAAALLLAMLM AMLS
mpliment
3DECEYLON LTD.
Tphone: O76-452

Page 242
(MOVEMENT OF
FESTA OF
Presented
Mrs. Kamalla
(Dip, Bharata Nat Proceeds in
"Paada G
| SIRI SITHIVI NAY
N = α Ο Ν Venue : Town Hall Date : 9th Octobe:
Time : 6.00 p. m.
Under the Distinguish SRI. K. LAKSHMANA I
Director of Education
SRMATITHE BALAMİ İLA
Tickets Available at .
NADA RAJAHS Green Stree MEGOMBO GOLD HOUSE. " SRI LANKA STORES. Te1 : 2 CZ 572 a eze ĉinute
Reaeuwe 'Jouw Tickets €axég
181 DAM
COLOMB
Tel : 3 2 3 O2
qSqSqS SqMSMSqASMSqAMSqSAqSqqSSqSASASAMSMMSqMSqSMA SASASASASASASASAMMMASMSqqSqSqSqSqSMMSSSMSSSSSSS SSq
அச்சு & குமரன் அச்சகம், 201, டாம் வீதி, ே
භී
 

2halana'
THE FEET) DANCE I By M
Jaya tilleke yarn, Madras)
αίd of
AGAR TEMPLE 魯露@。 , Negombo, r 1976 (Saturday)
led Patronage of YER. M. A., Dip. in. Ed
, Ministry of Ed KSHMANA YER B. A.
: Rates ܬ . 巅。 Rs... 100/- (2Seats) Te : 2306 Rs 25/- 100 Rs... 10/-
Actainment ! Ea aaa aid disappointment ! ! '
কািঠ ] = "-" [" , 37 སྙི༼༦gལ་ཡོད་ ΙάΕ 5ς ΕΕ, Sές
: نبیصلى الله عليه وسلم >
Ca
கொழும்பு-12, தொலேபேசி : 2 13 & 8