கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அபிவிருத்தி மாதிரிகள்

Page 1
பொதுசன கல்வி நிகழ்ச்
 


Page 2


Page 3

அபிவிருத்தி மாதிரிகள்
மைக்கேல் ரோய்மர் ஸ்ரனிஸ்லோ வெல்லிஸ் பிலிப்பா லாம் சின் சோ எஸ். சி. ரிசியாங்
தமிழாக்கம் சோ. சந்திரசேகரன்
மா. கருணாநிதி எஸ். அன்ரனி நோபேட்
பதிப்பாசிரியர்
எஸ். அன்ரனி நோபேட்
புவியியற்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 4
APIVRUTH MATRIKAL
(Models of Development)
Michael Roemer et al
Translated by: S.Sandarasegaran, M. Karunanithy and
S. Antony Norbert
Edited by : S. Antony Norbert
First Published 1995
© Copy Right : Marga Institute
Type Setting : UniqueTypesetters,Wellawatte, Colombo - 6. Printing : Unie Arts (Pvt) Ltd., Colombo - 13.
Please address inquiries and orders to:
Newton Fernando Asst. Director Communication / Publication Division Marga Institute P.O.Box. 601 61, Isipathana Mawatha, Colombo - 5, Sri Lanka.
ADVISORY COMMITTEE
Godfrey Gunatilleke Shelton Wanasinghe Newton Fernando S. Antony Norbert P.P.M. Gunatilleke Sarath Madduma
This Series of Publication has the Financial Support of the Canadian International Development Agency (CIDA).
 
 
 
 
 
 

பொருளடக்கம்
முன்னுரை
கானா 1950 - 1980 : தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள்
1. 30 வருடச் சான்றுகள் 2. மாறிவரும் கொள்கைகளுக்கான சூழல்கள் 1950 - 80 3. உறுதியான நிலையும் தாராளமயமாக்கமும் 1966 - 1971 4. 1971 இன் பெறுமதியிறக்கம் 5. தேக்க நிலையில் 1970 கள் 6. கானாவுக்கும் ஆபிரிக்காவுக்குமான படிப்பினைகள் 7. கருத்துரைகள்
மொறிசியஸ்
அறிமுகம்
1. வரலாற்றுப் பின்னணி
(i) பொருளாதாரம் (ii) அரசியலமைப்பு ஆட்சிமுறை (ii) சமூகப்பட்ையாக்கம்
(ty) அரசியல்
2. இரண்டாம் உலகயுத்தம் தொடக்கம் 1962 வரை
(1) பொருளாதாரம் (ii) சமூகமும் அரசியலும் (i) பொருளாதார சமூகக் கொள்கைகள் (tv) சனத்தொகைப் பெருக்கம் (v) மீட் அறிக்கை
3. இறக்குமதிப் பிரதியீட்டு உபாயம் (1963 - 1972)
(1) அரசியல்ரீதியான அபிவிருத்திகள் (i) பொருளாதாரம்
18 22 32 36 41 43 45
51 53 55 56 57
58 58 61 65
ܝܺܝܢ
68
69 69 71

Page 5
சீனிச் செழிப்பும் அதன் பின்பும் 1972 - 1979
(1) செழிப்பு வருடங்களில் அரசியல் (ii) சமூகக் கொள்கைகள் (ii) நிதி மற்றும் வரவு செலவுத்திட்டக்
கொள்கைகள் (iv) ஏற்றுமதி நோக்குடைய கைத்தொழிலாக்கம் (v) செழிப்புக்குப் பின்னருள்ள நிலைமைகள்
சிக்கன வழிகளைக் கையாளுதலும் மீட்சியும்1979-1988
(1) அரசியல்ரீதியான விருத்திகள் (i) பொருளாதாரச் சிக்கன வழிமுறைகள்
தாராளமயமாக்கலும் அமைப்புரீதியான சீர்திருத்தமும்.
(1) சீனி ஏற்றுமதி வரி (i) ஏற்றுமதி நோக்குடைய கைத்தொழிலாக்கம் (ii) சமூகக் கொள்கைகள் (iv) எதிர்காலம் பற்றிய நோக்கு
முடிவுரை
பகுதி 1
தாய்வானின் பொருளாதார அற்புதம்:
76 78 78
80 82 85
86
89
91. 93 94 96 97
99
பொருளாதார அபிவிருத்தியின் படிப்பினைகள்
அறிமுகம் போருக்குப் பிந்திய நேரடியான அனுபவம் இறக்குமதிப் பதிலீட்டு அபிவிருத்தி உபாயங்களின் தோல்வி மதிப்பிறக்கமும் தாராளமயப்படுத்தலும் உலகக் கேள்வியின் வரையறுக்கப்பட்ட நெகிழ்ச்சி வட்டிவீதக் கொள்கையும் பணவீக்கமும் சேமிப்புக்களும் பொருளாதார விடுபடு கட்டமும் வருமானப் பரம்பல்
கருத்துரைகள்
103 104
106 107 113 117 122
126
128
 

முன்னுரை
இத் தொகுதியானது சந்தைப் பொருளாதாரத்தின் இயல்பும் அதன் செயற்பாடுகளும் பற்றிய ஐந்து வெளியீடுகளில் முதலாவதாகும். சனநாயகம் பற்றி வெளிவரவிருக்கின்ற ஐந்து நூல்வெளியீடுகளுடன் இணைந்தமுறையில், அதன் தொடர்ச்சியாக இது அமைந்திருக்கின்றது. வாசகர்களுக்குப் பொருளாதாரம் மற்றும் அரச முகாமைத்துவம் ஆகிய இரு முறைமைகளின் பிரதான அம்சங்களைத் தருவதற்கு இரு தொடர் வெளியீடுகள் மார்கா நிறுவகத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சமூக சிந்தனையாளர்கள் விவாதிப்பது போன்று பொருளாதாரம், அரச முகாமைத்துவம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இணைந்துள்ளது. சந்தைப் பொருளாதாரத்தினை நிர்வகிக்கவும், விருத்தி செய்யவும் முயற்சிக்கின்ற அதேவேளை, அவையின்றிச் சனநாயக நிறுவனங்களைப் பேணுவதும், வலுவூட்டுவதும் மிகக் கடினமானது. இரு முறைமைகளின் அடிப்படைகள் சிலவற்றினைப் பற்றிய விளக்கங்களை இவ் இரு வரிசைத் தொடர் வெளியீடுகள் எடுத்துக்காட்டுகின்றதுடன் சந்தைப் பொருளாதாரத்துக்குத் தளமாக அமையக் கூடிய சனநாயக முதிர்ச்சிக்கு இது மிக அவசியமானதாகும். இவ்விணைவானது உள்ளார்ந்தரீதியில் உறுதியாகவும் நீண்டகாலத்துக்கு நிலைக்கக் கூடிய ஆற்றலையும் கொண்டிருந்தாலும், சனநாயகரீதியற்ற அரசியல் முறைமைகளுக்கிடையில் சந்தைப் பொருளாதாரம் செயற்பட்டு நின்றதற்குப் பல உதாரணங்களை நாம் கொண்டுள்ளோம். இத்தகைய விடயங்களில் சிலவற்றைச்சன்நாயகம் பற்றிய இந்நூல்வரிசைத்தொடரில் மிக ஆழமாக ஆராயப்படுகின்றதுடன் சந்தைப் பொருளாதாரத்துடனான அவற்றின் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்படுகின்றது.
இத்தொகுதியில், இதன் தலையங்கம் கூறுவதுபோற் சந்தைப் பொருளாதாரம் எந்த வழிகளிற் செயற்படுகின்றது என்பது பற்றிய தெளிவான விளக்கத்தையும் ஏனைய பொருளாதார முறைமைகளுடன் ஒப்பிடும்போது ஏன் அது சிறந்ததாக உள்ளது என்பதற்குமான விளக்க்த்தையும் அளிக்கின்றது. சந்தைப் பொருளாதாரம் பற்றி அதற்குச் சார்பாகவும் எதிராகவும் பல தவறான எண்ணக் கருக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் நீண்ட மரபினைக் கொண்ட சோலிசக் கருத்தியலானது சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமைகள் பற்றிய சந்தேகத்தை வளர்க்கும் மனோபாவங்களைத் தோற்றுவித்துள்ளது. முதலாளித்துவம், சோசலிசம், திட்டமிட்ட பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் ஆகிய கருத்தாழம் மிக்க சொற்கள் பல காணப்படுவதுடன் ஒவ்வொன்றும் ஒருவரின் கருத்தியல் சார்பு நிலைக்கேற்ப நேர்கணிய, எதிர்கணிய பொருளைத் தருவதாக

Page 6
உள்ளது. இத்தொடரில் வெளிவர இருக்கும் நூல்கள் இவற்றினைத் தெளிவுபடுத்தும் வகையில் காணப்படுகின்றது. ஸ்கண்டிநேவியப் பொருளாதாரங்களும், சந்தைப் பொருளாதாரத்துடனான அவற்றின் கலப்பும், சமூகநலன் மற்றும் பொதுச் சேவை முறைமைகளும் ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மிகவும் வேறுபட்டனவாக உள்ளன. மத்திய திட்டமிடப்பட்ட பொருளாதாரங்களைக் கொண்ட கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக அப்பொருளாதார முறைமையானது உடைந்து போவதற்கு முன்பேயே ஹங்கேரியானது சமூக சந்தை முறைமை அமைப்புக்கான ஒரு பரிசோதனையாக விளங்கியது.
யூகோஸ்செலாவியா, வேறுபட்ட சோசலிசமுறைமையாகச்
சோவியத்தினின்றும் வித்தியாசமானதாகப் பரிணமித்தது. எனவே இத்தகைய சொற்களைப் பயன்படுத்தலில், பிரயோகித்தலில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அத்துடன் பொருளாதாரப் பரிமாணங்கள் அரசியலிருந்து பிரித்தறியப் படவேண்டும். பொருளாதார,
அரசியல்ரீதியாகப் பூரணமான மனித ஒழுங்கு காணப்படாததினால் வன்மையான யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவற்றைத் தொடங்க வேண்டிய தேவையுள்ளது. மனிதன் தேடுகின்ற முறைமை பூரணமற்றதொன்று. அது சமுதாயம் முழுவதற்கும், சாத்தியமான உயர் வாழ்க்கைத் தரத்தை அடைவதற்குக் கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்தவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
முதல் (Capital) என்பதுமுதலாளித்துவம் (Capitalism)என்ற சொல்லுடன் ஒத்த கருத்துடையதல்ல. இது பண்டைய பிரபுத்துவ, சோசலிச அல்லது முதலாளித்துவ முறைமையின் பிரதான கூறாக இருந்தது. முதல் என்பது ஒரு சமுதாயத்தின் உற்பத்திக்கான செல்வத்தைக் கொண்டிருக்கின்றதுடன் பயிர்செய்யக்கூடிய நிலம், கட்டிடங்கள், ஆலைகள், கருவிகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறுபட்ட பெளதீக முதலையும் குறித்து நிற்கின்றது. தொழிலாளர், அறிவு, தொழிற்றிறன், நுட்பத்திறன் என்பன மனித முதல். இயற்கையினால் அளிக்கப்பட்ட கொடையாக உள்ள பெளதீகச் சூழல், அதில் காணப்படும். வாழ்க்கை ஆதாரத்துக்கும், பொருளாதாரப் பயன்பாட்டுக்கும் பயன்படுகின்ற வளங்கள் இயற்கை முதல் என முதல் பல வகைப்படும். ஒரு பொருளாதார முைறமை இம் முதலைப் பயன்படுத்தக் கூடியதாகவும் மக்களின் நலனை முற்றாக அடைந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் எதிர்காலத்துக்கு அவற்றைப் பேணிப் பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
பேண்-தகு மனித அபிவிருத்தியானது (Sustainablehuman development) அபிவிருத்திச் செயல்முறையை விளக்குவதற்குத் தற்போது பயன்படுத்தப்படுகின்ற சொல்லாகும். இத்தகைய அபிவிருத்திச்
6

செயல்முறைகளுடன் தொடர்பாக முதலாளித்துவம், சோசலிசம் ஆகிய எண்ணக்கருக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மீள் வரையறை செய்யப்படவேண்டும். பேண்-தகு மனித அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு எவ்வாறு இந்த முறைமைகள் தகுதிபெற்றுள்ளன என்பதை ஆராய வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
சந்தைப் பொருளாதாரம் ஒரு முறைமையாகவே காணப்படுகின்றதுடன் அது செல் வந்தர்களுக்குச் சார்பாகவும் , ஒப்புரவின் மையைத் தூண்டுவதாகவுமே கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு முறைமைக்குள் இயங்குகின்ற சந்தையில் வளங்களின் உரிமையும் அதற்கான அடைவும் ஒப்புரவற்ற முறையிலேயே பரம்பியுள்ளது. சந்தையும் இவ் ஒப்புரவற்ற தன்மைகளை அதிகரிக்கக் கூடும், ஏனெனில் வளங்களைக் கொண்டிருப்போர் செல்வத்தின் மீதும் மேலர்ண்மையைக் கொண்டிருப்பர். சந்தையின் உள்ளார்ந்த அம்சமானது உற்பத்தியாளர், விற்பனையாளர்களிடையே போட்டியைக் கொண்டிருப்பதே. ஆனால் இப்போட்டியானது சமனற்ற அடிப்படையில் ஆரம்பிக்கின்றது என சோசலிஸ்ட் சார்பானி விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
சந்தைப் பொருளாதாரத்தின் மீதான விமர்சனமானது அம்முறைமையின் எதிர்கணியப் பண்பினையே முன்னிலைப் படுத்துவதாக உள்ளது. சந்தையைப் பொறுத்தவரை அவை சமூக, பொருளாதார அமைப்புக்களினால் சூழப்பட்டுள்ளதால் ஒப்புரவின் மைகளைச் சரிப்படுத்துவதற்குப் போதுமானதாக அவை காணப்படவில்லை. உண்மையானதும், திறமையானதுமான அரசியற்பொருளாதாரத்திலேயே பெருமளவு தங்கியுள்ளது. இக்காரணத்துக்காகத் தான் சனநாயக முறைமையானது, சந்தையைப் பேணிப்பாதுகாக்கின்ற, மேன்மைப் படுத்துகின்ற அரசியற் பொருளதாதாரத்தை உருவாக்குகின்ற சிறந்த வழியாக மாறுகின்றதுடன் அத்தகைய ஒரு அரசிற் பல்வேறு வகையான பொருளாதாரப் பிரிவுகளுக்கிடையில் ஒன்றுடன் ஒன்று பேரம் பேசவும், இணக்கத்துக்கு வரவும் சுதந்திரம் உள்ளது. இம் முறைமை ஓர் இயக்கச் செயல் முறையைக் கொண்டதாக இருப்பதுடன், தொழிலாளர் வேலையாட்கள், பங்கு முதலீட்டாளர்கள், நுகர்வோர் ஆகியோரின் முரண்படும் நலன்களைச் சமப்படுத்திச், சமரசத்துக்கும் முயற்சிக்கின்றது.
சந்தைப் பொருளாதாரம் திறமையாகச் செயறபடுவதுடன் ஏனைய சோசலிசக் கருத்தியலிருந்து வரும் திட்டமிட்ட ப்ொருளாதாரத்திலும் பஈர்க்க மிக ஒப்புரவுத் தன்மையுடையதாகவும் இருக்கின்றது. கைத்தொழில்ரீதியாக முன்னேறிய சனநாயகங்களின் சந்தைப் பொருளாதாரம், மாக்சிய சோசலிசக் கருத்தியலிருந்து வளர்ச்சியடைந்த மத்திய திட்டமிடற் பொருளாதாரம் ஆகிய இரு பொருளாதாரங்களின் பிரதான அம்சங்கள் இத்தொகுதியில் ஆராயப்படுகின்றது. சந்தைப்
7

Page 7
பொருளாதாரத்தை வேறுபடுத்திக் காட்டும் பிரதான காரணியானது நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சந்தைச் செயல்முறையே. இதனுTடாகவே பொருட்கள் சேவைகளின் பரம்பலும் உற்பத்தியும் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. நுகர்வோரின் முன் பல தெரிவுகளுக்கான வீச்சுக் காணப்படுவதுபோன்று உற்பத்தியாளர்கள், பங்கீட்டாளர் களுக்கிடையில் சந்தர்ப்பத்துக்கான சுதந்திரமும் காணப்படுகின்றது. இதனால் சந்தைப் பொருளாதாரம் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை யுடையதாகவும், நுகர்வு மற்றும் உற்பத்திச் சாத்தியங்களை வரிவாக்குவதற்கான பயனுறுதிவாய்ந்த கருவியாகவும் இருக்கின்றது.
மத்திய திட்டமிடற் பொருளாதாரம் இத்தகைய திறனாற்றலைக்
கொண்டிருக்கவில்லை என்று “சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன”
என்ற கட்டுரையின் ஆசிரியர்கள் விவாதிக்கின்றனர். ஏனெனில்பொருட்கள் சேவைகளின் நிரம்பலானது திட்டமிடல் நுட்பங்கள் மற்றும்
முறையியல்களினூடாகத் தீர்மானிக்கப்படுகின்றதுடன் அவை மத்திய
திட்டமிடல் முகவரகத்தில் பணிபுரியும் தொழில்நுணுக்க அறிஞர்களினாற்
(Technocrates) பிரயோகிக்கப்படுகின்றது. அடிப்படைத்தேவைகளைத் திருப்தி செய்யும் சில பொருட்கள் சேவைகளைப் பொறுத்தவரையில் இந்நுட்பங்கள் அளவறியும் முறையில் நிர்ணயிப்பதற்குப் போதுமானது.
ஆனால் அவை பரந்தளவான தெரிவுகளுடன் அல்லது வளர்ச்சியடைந்து வரும் நுகர்வோர் சமுதாயத்தினால் வேண்டப்படுகின்ற பல வகையான தரங்களின் வீச்சைக் கொண்ட தெரிவுகளுடன் ஒத்துப்போக மாட்டாது.
மத்திய திட்டமிட்டபொருளாதாரங்கள், அவை வளர்ச்சிஅடையும்போதும்,
நுகர்வுப்போக்குகள் மாறுபடும்போதும்பொருளாதார முகாமைத்துவத்தின் பாரிய பிரச்சினைகளுக்குள் ஏன் தள்ளப்படுகின்றதென்பதற்கு இது ஒரு விளக்கமாக அமைகின்றது.
சந்தைப் பொருளாதாரம் பற்றிய பிரதான விமர்சனமானது அது முதலாளித்துவ முறைமையின் கருவியாகவும், எல்லாவகையான ஒப்புரவின்மைகளையும், சமூக நீதியின்மையையும் அதிகரிக்கின்றது என்பதே. சோசலிச அமைப்பின் மூலதத்துவத்தினை முன் மொழிபவர்கள் இத்தகைய பிரச்சினையானது உண்மையில் வளங்களின் தனியார் உடைமையில் தனது மூலவேர்களைக் கொண்டிருக்கின்றது என்றும் எல்லா உற்பத்திக்குரிய செல்வமும் பொதுமக்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டுமென்றும் வாதாடலாம். அரசினால் வழிநடாத்தப்படும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலிருந்து பெறப்பட்ட அனுபவத்தின்படி அரசுடை மையானது தன்னளவில் ஒப்புரவிற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை வெளிப்படுத்தின. இங்கு பிரதானமானது வளங்களின் மீதான அதிக உரிமை என்ற விடயம் அல்ல அவற்றின் மீதான கட்டுப்பாடும் முகாமைத்துவமே முக்கியம்.

அரச கட்டுப்பாட்டுப்பொருளாதாரங்களில் கட்டுப்பாடானது எப்பொழுதும் சுயநல நோக்குடைய அரசியல் அதிகார வர்க்கத்தினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் கைகளிலேயே காணப்படுகின்றது. சனநாயக சமூகங்களில் காணப்படும் அரசியல் அதிகாரவர்க்கத்தினர் மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பதுபோல் இவர்கள் காணப்படமாட்டார்கள். இத்தகைய நிலைமைகளில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரவர்க்கத்தினர் விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தைக் கைப்பற்றக்கூடும். தனியார் செல்வத்தின் உரிமை மீது காணப்படும் கட்டுப்பாடுகளின் காரணமாக இச் சமூகங்கள் அதீதமான செல்வத்தையும் நுகர்வுத்தன்மையையும் வெளிக்காட்ட விரும்புவதில்லை. யப்பான், தாய்வான், தென்கொரியா போன்ற தனியார் துறைச் சந்தைப் பொருளாதாரங்கள் ஒப்புரவுத்தன்மையுடைய வருமானப் பரம்பல் அமைப்புக்களைக் கொண்டுள்ளன. அத்துடன் அந்நாடுகளில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்குமிடையிலான வருமானத்தில் காணப்படும் வேறுபாடுகள் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகக் காணப்படுகின்றன.
ஒப்புரவின்மை பற்றிக் கூறும்போது ஒன்றை மனதிற்கொள்ள வேண்டும். ஒப்புரவின்மை மட்டமானது (degreeofinequality) மக்களின் நலன்பற்றிய நிலைமையை வெளிக் காட்டும் குறிகாட்டி அல்ல. வருமான ஒப்புரவின்மையானது சமுதாயங்கள் குறைந்த மட்ட வருமானத்தைக் டிருக்கும்போது தாழ்ந்த நிலையிலும், பொருளாதாரங்கள் வளர்ச்சியடையும்போது அதிகரித்தும், உயர்மட்ட அபிவிருத்தியை
குறிப்பிடத்தக்களவு நன்மையடைந்தனர். இவ்வாறு நிகழ்ந்தற்குக் காரணம், தென்கொரியாவின் அபிவிருத்தியானது பரந்த அடிப்படையில் அமைந்திருந்ததுடன் பொருளாதார அபிவிருத்தி மனித வள அபிவிருத்தியுடன் இணைந்திருந்தமையே ஆகும். இதற்கு மாறான
றமைகள் ஏதேச்சாதிகாரத் தன்மையுடையதாக இருப்பதுடன் ருத்திக்கான தூண்டுதல்களை எப்பொழுதும் குறைப்பனவாகவே துடன் பொருளாதாரத்தேக்கத்தை உருவாக்குகின்றதினால் எல்லா ானப் பிரிவினரும் குறைந்த மட்டத்திலான நலனில் சிக்கிவிடுகின்றனர்.

Page 8
தனியார் சொத்துரிமை என்னும் எண்ணக்கருவானது சனநாயகத்திலும், சந்தையிலும் ஓர் உள்ளார்ந்த அம்சமாகும். தனிப்பட்டவர்களின் சுதந்திரமானது ஒருவர் வளங்களை அனுபவிக்கவும், கட்டுப்படுத்தவும் கொண்டிருக்கக் கூடிய இயலளவுடன் தொடர்புபடுகின்றது. அதன்மீது ஏனையோர் உரிமை கொண்டாடவோ, ஆக்கிரமிக்கவோ முடியாதவாறு அரசினால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நோக்கில் அறிந்து கொள்ளப்படும் தனியார் சொத்து என்பது தனிப்பட்டவர்களின் உத்தரவாதம் என்பதுடன், தனிப்பட்டவர்களின் அந்தரங்கமாகவும் உள்ளது. அரச அதிகாரத்தில் இது வரையறைகளை ஏற்படுத்துகின்றது. தனியார் சொத்து, பயனுறுதி வாய்ந்த சந்தைப் பொருளாதாரம் செயற்படுவதற்கு இன்றியமையாதது. ஏனெனில்அது ஒன்றுதான் வேலை, சேமிப்பு, சொத்துக்களைப் பெறல் ஆகியவற்றுக்கான சிறந்த தூண்டுதல்களை அளிக்கின்றன. சீனாவில் இடம்பெற்ற விவசாயச் சீர்திருத்தங்கள் இவற்றினைத்தெளிவாக விளக்கிக்காட்டுகின்றன. கூட்டுப் பண்ணைக்ளிலிருந்து குடியிருப்பாளனின் பண்ணைகளாக மாற்றம் அடைந்தபோது விவசாயக் குடியிருப்பாளரின் சராசரி தேறிய வருமானமானது 1978 - 1985க்கு இடையில் மூன்று மடங்காக அதிகரித்தது. தனியார் தூண்டுதலின்மை எவ்வாறு ஒரு சமுதாயத்தின் தீர்மானத்திற் பரந்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதனைச் சூழற் பாதுகாப்பு மற்றும் சேதங்களிலிருந்து தெளிவாக விளக்கப்பட்டது.
எல்லோருக்கும் சொந்தமாக உள்ள சொத்துக்கள் எப்பொழுதும் தவறாகப் பயன்படுத்தப்படும் அல்லது அளவுக்கதிமாகச் சுரண்டப்படும் என்பதற்கு உதாரணமாகக் காடுகளிலும், மேச்சல் நிலங்களிலும் ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிடலாம். தனிப்பட்ட பிரிவினர் இதனைச்
உறுதிசெய்வதற்கும்பாரிய தூண்டுதல் இருக்கவேண்டும். அரசுடை பொதுசன சொத்தும் இதனையொத்த பிரச்சினைக
பயன்பாட்டுக்காக இதனை நிர்வகிப்பதற்குமான தூண்டுதல் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொருவரினதும் சொத்து என்பதால் எவரும் தனிப்பட்ட முறையிற் சொந்தம் கொண்டாட முடியாது. இத்தகைய காரணங்களினால்தான் பொதுவான அரசுடமை நிறுவனங்கள் பயனுறுதிவாய்ந்ததாகவும் இழ்ாப நோக்குடையதாகவும் இருப்பதில்லை. உற்பத்தி மற்றும் வியாபரம் போன்றதுறைகளில் சந்தைப்பொருளாதாரம் ஏன் தனியார் நிறுவனங்களிற் பெரிதும் தங்கியுள்ளதென்பதற்கு இதுவே பிரதான காரணமாகும்.
10
 
 

அரசமுறைமையானது இலாபத்தை அடைவதற்குச் சுதந்திரமாக இயங்கக் கூடியவர்களைக் கொண்டுள்ளதேயன்றி அவர்களின் முயற்சிக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை. அரசுடமையைப் பெரிதும் கொண்ட ஒரு முறைமையில் அல்லது பொருட்களை அல்லது வருமான ஆதரவினை இலவசமாக அளிக்கின்ற பாரிய சமூக நல நிகழ்ச்சித் திட்டத்தினைக் கொண்ட முறைமைகளில், சந்தைப் பொருளாதாரத்திலும் பார்க்க அதிகமான "இலவசமாகச் சவாரி” செய்வோரைக் (free - riders) கொண்டுள்ளது. இதே வகையான பிரச்சினைகளினால்தான் இலங்கைப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் பொதுப்பணம் தொடர்பாக மிகவும் தாராளப் போக்கைக்கொண்டிருந்தன. பொதுமக்களும், சேவைகளையும்வருமானப் பரிமாற்றங்களையும் பரஸ்பரக் கொடுப்பனவு அல்லது முயற்சி இன்றி எதிர்பார்க்கின்ற போக்கினையும் கொண்டுள்ளனர்.
மரபுரீதியான சமூகங்களில் தனிப்பட்டோர், சமுதாயங்களின் உரிமைகள், கடப்பாடுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அங்கு சமூக நடைமுறை, அதிகார அமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவை சிலவேளைகளில் தனியார் சொத்துரிமைமுறைமையின்றி இன்று சந்தைப் பொருளாதாரத்தில் காணப்படுவது போன்று மிகவும் தாக்கமுடையதாக இருந்தது. இத்தகைய சமூகக் கட்டுப்பாட்டு அமைப்புக்களைச், சமூக பொருளாதார மாற்றத்தின் சக்திகள் தவிர்க்கமுடியாதபடி அழித்துவிட்டன. எனவே புதிய அமைப்புக்கள், அபிவிருத்தி மற்றும் நவீனத்துவமான செயல் முறைகளில் மீளவும்கொண்டுவரப்படவேண்டும். சுதந்திரமான தடையற்ற வாங்கவும் விற்கவும் கூடிய தனியார் சொத்துரிமை அமைப்புக்கள், சொத்துக்கள், இத்தகைய பரிமாற்றங்களைக் கவனிப்பதற்கான சட்டங்கள் மற்றும் ஒப்பந்தரீதியான தொடர்புகள் சந்தைப்பொருளாதாரத்தில் இடம் பெறுகின்றன.
தனியார் சொத்துரிமை மற்றும் சந்தை அமைப்புக்கள் இவற்றுக்கே உரியது என்பது கருத்தல்ல. ஒவ்வொன்றிலும் பூரணத்துவமற்ற தன்மை காணப்படுகின்றதுடன் அவற்றினைத் திருத்துவதற்குத் தலையீடு மிக அவசியமானது. சுதந்திர சந்தை அல்லது நிறைபோட்டிச் சந்தை காணப்படும் ஒரு முறைமை மிகச் சிறந்தது. ஆனால் யாதார்த்த உலகில் அது காணப்படவில்லை. அரசியற் பொருளியலாளர்கள் “சந்தைப் பொருளாதாரம் என்பது அரசின் பங்கினைக் குறைத்தல் என்பதன் கருத்தல்ல" என்று வாதாடுகின்றனர். "அரசானது வர்த்தக முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதானது புதிய பங்காற்றலை மேற்கொள்வதற்காகவே இருக்கவேண்டும்” என்ற கருத்தினை மட்டுமே குறிக்கின்றது. பொருளியலாளர்களினால் "சந்தைகளின் செயலொழிவு” (marketfailures) என்று விபரிக்கப்பட்டவற்றில் பிரதான பங்கினை அரசு கொண்டுள்ளது. சந்தைச் சக்திகள் விதிமுறைகளை மீறிச் சுயமாகச்
11

Page 9
செயற்படும்பொழுது இடம்பெறும் சூழல் மாசுபடலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். போட்டியானது நெறிமுறையானதாக இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தவும், தனியுரிமை வளர்ச்சிகளைத் தடைசெய்தல், பயனுறுதிவாய்ந்த பொருளாதாரத்திற்கும், நுகர்வோரின் விருப்புக்கள் ஆகிய இரண்டிற்கும் ஊறு விளைவிக்கக்கூடிய சொத்துரிமை மற்றும் முகாமைத்துவ விடயங்களில் அரசு தலையீடு செய்தல் வேண்டும்.
அரசானது பரந்த வீச்சுக் கொண்ட பொதுசன பொருட்கள் குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு என்பதிலிருந்து பொதுச் சுகாதாரம், பொதுசனக் கல்வி, வீதிகள், துறைமுகங்கள், சக்தி ஆலைகள், தொலைத்தொடர்பு போன்ற பொருளாதாரக் கட்டுமானத்தின் பெரும் பங்கினுக்குப் பொறுப்புடையது எனக் கருதுதல் வேண்டும். இவற்றுக்குமேலாக, எதிர்காலச்சமுதாயத்தின் நோக்கினை விருத்தி செய்வதற்கும், அபிவிருத்திக்காக மக்களைத் தயார்ப்படுத்துவதற்குமான பொருளாதாரத்துக்கும் அரசு உதவவேண்டும். இதனால்தான் மேற்குச் சனநாயகங்களில் உள்ள சோசலிசக் கட்சிகள் "மத்திய திட்டமிட்டமுறைமையின் உடைவானது எவ்வகையிலும்கூட்டுப் பொறுப்பு மற்றும் பொதுமக்களின் பொறுப்புடைமை மீது அழுத்தங்களை முன்வைக்கின்ற சோசலிசக் கருத்தியலின் அடிப்படைகளைப் பலினமடையச் செய்யவில்லை” என வாதிடுகின்றனர். எனவே சந்தைப் பொருளாதாரம் என்ற கட்டமைப்பினுள் புதிய சோசலிச நிகழ்ச்சி நிரலை அவர்கள் முன் வைக்கலாம்.
இத்தொகுதியினை அடுத்து வெளிவரவிருக்கின்ற நான்கு வெளியீடுகளில் இத்தகைய பல விடயங்கள் ஆராயப்படவிருக்கின்றன. இரண்டாவது தொகுதியானது தேர்ந்த சில நாடுகளின் அனுபவங்கள், அவற்றிலிருந்து பெறப்பட்ட அபிவிருத்திப் படிப்பினைகள் பற்றி ஆராய்கின்றது. இந்நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள், செயலாற்றங்கள் என்பன சந்தையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையுடைய நாடுகளுடனும் அரச கட்டுப்பாட்டு முறையைக் கொண்ட நாடுகளுடனும் ஒப்பீடு செய்யப்படுகின்றது. பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், சீரமைப்பையும் கொண்ட நாடுகள் பயனுறுதி வாய்ந்த முறையில் உலகப் பொருளாதாரத்துடன் தம்மை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளன. இந்நாடுகள் விரைவாக வளர்ச்சியடையவேண்டுமாக இருந்தால், மக்களின் வாழ்க்கைத்தர நிலைமைகளை விருத்தி செய்யவேண்டின் இந்நாடுகள் சர்வதேசரீதியாகப் போட்டியை உருவாக்க வேண்டியனவாகவும், தாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களை உலக சந்தையில் விற்பனை செய்யக்கூடிய தகுதியையுடையனவாகவும் மாறவேண்டும். வேறு மாற்று வழிகள் இல்லை. இதனை மேற்கொள்ளுவதற்கு இந்நாடுகளின் பொருளாதாரங்கள் திறந்த அமைப்புடையனவாக இருத்தல் வேண்டும். அதில் சந்தையானது பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வள ஒதுக்கீட்டுக்கான பிரதான ஊக்கியாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.
12

இரண்டாவது தொகுதியில் காணப்படும் சில நாடுகளைப்பற்றிய சிறப்பான ஆய்வுகள் இவை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை விபரிக்கின்றன. அரசும் சந்தையும் என்ற மூன்றாவது தொகுதியில் ஆராயப்படுகின்ற சில விடயங்கள் இவ் அறிமுகத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவது தொகுதியானது சந்தைப் பொருளாதாரத்துக்குஅடிப்படையான அபிவிருத்திக்கோட்பாடுகள் பற்றிய பிரதான கலைக்கூடச் சிந்தனைகளின் படைப்புக்கள் பற்றிய சில மாதிரியங்களைக் கொண்டுள்ளது. ஐந்தாவது தொகுதியானது தனியார்துறையின் பங்கும் தொழிற்துறையும் என்ற விடயத்தினை மையமாகக் கொண்டு வெளிவரவிருக்கின்றது.
கொட்பிரே குணதிலக மார்கா நிறுவகம்
13

Page 10

பகுதி 1
g5 6.OTT 1950 - 1980: தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள்
மைக்கேல் ரோய்மர்
தமிழாக்கம்
சோ. சந்திரசேகரன் தலைவர் சமூக விஞ்ஞானக் கல்வித்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
எஸ். அன்ரனி நோபேட்
புவியியற்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 11

கானா 1950 - 1980 : தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள்
1957 இல் கானா சுதந்திரம் அடைந்தபோது கறுப்பு ஆபிரிக்காவில் அது செல்வம்மிக்க நாடாகவும் உயர்ந்த கல்விவிருத்தியைக்கொண்ட நாடாகவும் விளங்கியது. 1960 இல் அந்நாட்டின் தலாவருமானம் ஏறக்குறைய 500 டொலராக இருந்ததினால் உலக வங்கியின் வகைப்படுத்தலின்படி மத்திய வருமான நாடுகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. 1950களில் கானாவின் ஏற்றுமதிகளானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதமாக இருந்தது. இத்தகைய நம்பிக்கைதரும் ஆரம்பத்தைக் கானா கொண்டிருந்தாலும் இன்று கலைந்த கனவுகளின் வரலாற்றையே அது பிரதிபலித்து நிற்கின்றது. முப்பது வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்தலையீடுகளிலும், தாராள அளவு முறைகளிலும் அந் நாட்டின் அபிவிருத்தியின் உள்ளார்ந்த தன்மையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முயற்சித்தபோதும் வருடாந்தம் 0.7 சதவீதவீழ்ச்சியைத்தலாஒருவருக்கான மொத்த தேசிய உற்பத்தியில் ஏற்படுத்தியது. 1980இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இதன் மூலதன முதலீடானது(capital investment) 1950 களில் 20 சதவீதமாக இருந்து 5 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக இதன் ஏற்றுமதிகள் 12 சதவீதமாகவே இருந்தன. தொடர்ச்சியான இதன் வீழ்ச்சி விரைவில் கானாவை உலகின் வறிய நாடுகளுள் ஒன்றாக மாற்றிவிடக் கூடும்.
கானாவின் இத்தகைய நெருக்கடியின் வரலாறுஒருவகையில் 1950களிலும் 1960களிலும் குறிப்பிடத்தக்கதாக இருந்த இறக்குமதிப் பிரதியீட்டு அணுகுமுறைகளைக்கொண்ட நம்பிக்கையற்ற அபிவிருத்திக்கோட்பாட்டு வரலாற்றின் ஒரு பகுதியாகவும் இருந்தது. மத்திய திட்டமிடற் பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கிய முறையில் இத்தகைய அபிவிருத்தி உபாயங்களை உள்ளடக்கிய வகையில் கானா ஒரு முக்கிய மாறியாக விளங்கியது. உயர்வான வர்த்தகத்தடைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட கைத்தொழில் அபிவிருத்தியில் விசேட ஈடுபாடு காட்டப்பட்டது. வெளிநாட்டு இறக்குமதிகளுக்கான தகுதியற்ற உள்நாட்டு உற்பத்தியின் பதிலீடானது மிகத்திறமையான ஏற்றுமதிக்கான உற்பத்தியின் மூலம் நிதி வழங்கப்பட்டது. தவறான ஒதுக்கீடுகளும் திறமையின்மையும்பெரும்பாலும் நிதியியல் முகாமைத்துவமின்மையினால் மேலும் மோசமான நிலையையடைந்தது. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மூலதன நிகழ்ச்சித்திட்டங்களைக் கானா வலியுறுத்தினாலும் செயற்றிட்டத்திறனானது சிறிய பங்களிப்பையே கொண்டிருந்தது.
17

Page 12
1960களின் மத்திய பகுதியில், பொதுத்துறை நிறுவனங்களில் காணப்பட்ட இழப்புக்களும், கட்டுமீறிக் காணப்பட்ட பொதுத்துறைச் செலவீடுகளும் இணைந்து கடன்தீர்க்க வகையற்ற நிலைக்கு நாட்டினை இட்டுச் சென்றது.
இக் கொள்கைகளின் விளைவான மிக உச்சநிலை 1961 - 1966 குவாமே நிக்குருமா (Kwame Nkrumah) அரசாங்க காலத்தில் காணப்பட்டதுடன் அதுமுதற் கொண்டு அவை தொடர்ச்சியாகக் காணப்பட்டபோதும் இடையிடையே ஏற்பட்டதாராளக்கொள்கை மற்றும் சீர்திருத்தங்களினால் குறுக்கீடு செய்யப்பட்டும் வந்தன. கடந்தகாலப் பதிவுகளை மீள்பார்வை செய்யும்போது, பல விடயங்களில் எப்படி அபிவிருத்தி செய்யக் கூடாது என்பதற்குக் கானா ஒருமாதிரியாக உள்ளது என்ற தீர்மானத்துக்கு வருவது கடினமானதல்ல. கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, ஆபிரிக்காவில் கெனியா, ஐவரிகோஸ்ட் ஆகியவற்றில் நீண்டகாலமாக வலிமையான பொருளாதார வளர்ச்சி வீதம் நிலை நிறுத்தப்பட்டு வருவதற்கும் ஏனைய நாடுகளில் அவ்வாறு காணப்படாமல் இருப்பதற்குமான காரணங்களை விளங்கிக்கொள்வதற்குக் கானா ஒரு பயன்மிக்க ஆய்வுக்குரிய மாதிரியாக விளங்குகின்றது. இதன் மிகக் குறைவான பொருளாதார செயலாற்றங்களுக்கான நேரடிக் காரணங்கள் , கானாவின் மூலவளங்களைத் திறமையாகப் பயன்படுத்துவதற்கு ஊக்கம் கொடுக்காத பொருளாதாரக் கொள்கைகளே எனினும் அதற்குப் பின்னணியாகக் காணப்படுவது அரசியற் காரணங்களே. அரசியல் ஈடுபாடுகள் பொருளாதாரக் கொள்கை வகுத்தலைச் சீர்குலைத்தல் பல நாடுகளில் காணப்பட்டிருந்தாலும், கடந்த பல வருடங்களாகக் கானாவில் காணப்பட்டிருந்த அரசியலின் நிலையற்றதன்மை பொருளாதாரக் கொள்கையொன்றின் சாத்தியத்தை முற்றிலும்இல்லாமற்செய்துவிட்டது.
30 வருட சான்றுகள்
கானாவின் 30 வருட தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களுக்கான பதிவுகளை மீளாய்வுசெய்யும்போது அதனை ஒருமேல்நோக்காகப்பார்ப்பதே சிறந்தது. கானாவின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 1950 - 1980 க்கு இடைப்பட்ட காலத்தில் வருடாந்தம் 0.7 சதவீதமாக வீழ்ச்சி யடைந்திருந்தாலும் 1970கள் மிகக் குறைவான செயலாற்றங்கள்கொண்ட தசாப்தமாக இருந்தது. தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி வருடாந்தம் 4.0 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. அயல்நாடுகளிலிருந்து இடப்பெயர்வுக்குட்பட்ட மக்களின் அதிகரிப்பினால் சனத்தொகை வளர்ச்சியானது இதிலும் உயர்வாக உயர்ந்தது. 1960 களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்த வளர்ச்சியானது 2.0 சதவிதத்துக்குச் சற்று உயர்வாக இருந்தது. 1950 ஆம் ஆண்டுகளிலிருந்து மிகவும் திருப்திகரமான வளர்ச்சிக் காலம் 1950 களின் இரணிடாவது அரைப்
18

பகுதியிலேயே இடம் பெற்றிருந்ததுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருடாந்தம் 6 சதவீதமாக வளர்ச்சி பெற்றிருந்தது. (அட்டவணை 1 )
அட்டவணை 1 : வளர்ச்சி வீதங்கள் - கானா (தலா வருடத்துக்கான
சதவீதம்)
NLCAPP NRC நிக்குருமா காலம் அரசாங்கங்கள் அரசாங்கம்
1950-71 1955-60 1960-65 1960-661 1965-11 1966-11 1971-77
மொ.உ.உற்பத்தி 2.7 5.9 3.1 1.8 2.8. 4.3 - 0.2
விவசாயம் N. A. N. A. N. A. N. A 4.1 4.6 - 2.0 தயாரிப்பு N. A. N. A. N. A. N. A 10.0 12.6 - 6.9 இறக்குமதிகள் - 0.6 7.0 0.6 -1.1 -5.1 0.0 -14.4 ஏற்றுமதிகள் - i.4 7.4 7.3 4.0 -3.2 . - 1.6 - 13.5 மூலதனம் - 0.7 12.6 2.1 -3.7 -2.3 3.9 -15.6
Source: World Bank, World Tables, 2nded. (Washington D.C.;
World Bank, 1980), pp 86-87.
திரட்சியான மூலவளங்களின் பேண்-தகு தன்மையற்ற (Unsustainable) பயன்பாட்டினாலேயே இத்தகைய வளர்ச்சிக்கான சாத்தியம் நிறைவேற்றப்பட்டது. 1966 இன் ஆரம்ப காலத்தில் நிக்குருமா தூக்கி எறியப்பட்ட பின் கொள்கைகளில் ஏற்பட்ட திருப்பு முனைகளைக் கானாவின் வரலாற்றில் எவரும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும். செயல்திறனற்ற பொருளாதாரக் கொள்கை குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்தது. பொருளாதார முகாமைத்துவம் விருத்தியடைந்தது. 1986இன் பின்பும்பொருளாதார வளர்ச்சிஅதிகரிப்பைக் கொண்டிருந்தது. ஆனால் 1966க்குப்பிந்திய கொள்கைகள் நிக்குருமாவின் அரசாங்கத்துடன் ஒப்பிடக்கூடிய அளவுக்குச் சில முக்கிய ஒற்றுமைத்தன்மையை கொண்டிருந்தன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட நகர்வுகளினால் வெளிப்பட்ட கருத்துக்கள் அமைப்பு ரீதியான மாற்றத்தை எடுத்துக் காட்டும் குறிகாட்டிகளினால் உறுதியாக்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கானது 41 சதவீதமாக, 1950 களில் காணப்பட்டதுபோலவே 1970 களிலும் இருந்தது. தயாரிப்புத்துறையின் பங்கானது 10 சதவீதத்திலேயே காணப்பட்டது. (அட்டவணை 2) இக்காலத்தில் தொழிற்படையில் சில நுகர்வுகள் இருந்தபோதும், 1980 இல் தொழிற் படையில் ஏறக்குறைய 50 வீதத்துக்கு மேலானவர்கள் விவசாயத்தில் தங்கியிருந்தனர். சுரங்கம், கட்டுமானம், பயன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய கைத்தொழிலில் 20 சதவீதமானவர்கள்
19

Page 13
தங்கியிருந்தனர். கானாவின் முன்னைய செழிப்பானது கொக்கோவை முக்கியமாகவும் கணிப்பொருட்கள், மரம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய அதன்முதன்மை ஏற்றுமதிகளினையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாட்டின் பின்னடைவுக்கும் வீழ்ச்சிக்கும் பிரதான காரணம் அதன் ஏற்றுமதிகளின் மிகக் குறைவான பன்முகப்படுத்தலாகும். முன்பு கூறியதுபோல, 1950இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதமாக இருந்த அதன் ஏற்றுமதிகள் 1980 இல் 12 வீதமாக வீழ்ச்சியடைந்தது. நிக்குருமாவின் காலத்தில் (1955 - 65 காலத்தில் வருடாந்தம் 7 சதவீதத்துக்குமேலாக) ஏற்றுமதி அளவு விரைவாக வளர்ச்சியடைந்தாலும் கொக்கோவின் விலைகள் 50 சதவிதத்துக்கு மேலாக வீழ்ச்சியடைந்ததனால் ஏற்றுமதி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகராக வளர்ச்சியடைய முடியவில்லை.
அட்டவணை 2 : அமைப்புரீதியான பண்புகள் - கானா
(மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக, நடைமுறை விலைகளில்)
1950 1960 1965 1971 1977
விவசாயம் N.A 41 41 44 38
தயாரிப்பு NA 10 10 11 9 இறக்குமதிகள் 22 35 27 20 8 ஏற்றுமதிகள் 34 28 17 16 8 முதலீடு 15 24 8 14 5
Source: World Bank, World Tables, 2nd ed. (Washington D.C.; World Bank, 1980), pp 86-87
1974 இன் பின்பு ஏற்பட்ட உலக ரீதியான பெற்றோலிய விலைகளின் உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றினால் முதன்நிலைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஏற்பட்ட ஏற்றுமதி வீழ்ச்சிகள் வர்த்தக மாற்றுவீதத்தில் பாதகமான நிலைமைகளை ஏற்படுத்தின. 1970 களில் கானாவின் ஏற்றுமதி விலைகள் மிதக்கும் தன்மையுடையவையாக இருந்தன. 1977 இல் மொத்த ஏற்றுமதியில் ஏறக்குறைய 60 வீதத்தைக் கொண்டிருந்த கொக்கோ ஏற்றுமதியின் அலகுப் பெறுமதியானது (unit value). 1971 இல் காணப்பட்டதிலும் பார்க்க ஆறு மடங்கு அதிகமாக இருந்ததுடன் செழிப்புமிக்க வருடமாகவும் இருந்தது. எண்ணெய் ஏற்றுமதி செய்யாத, விருத்தி குறைந்த நாடுகளுக்கான இறக்குமதியின் அலகு பெறுமதியைப் பயன்படுத்தும் கொக்கோ வர்த்தமாற்றுவீதமானது (1975 100) 1960 இல் 53 ஆகவும் 1971 இல் 96 ஆகவும் இருந்து 1977இல் 193 ஆக உயர்வடைந்தது. (1972 இல் இருந்து கொக்கோவின் மொத்த விற்பனை விலைகள் 1977 விலைகளிலும் பார்க்க உயர்வாக இருந்தது).
20

இக்காலத்தில் கொக்கோ ஏற்றுமதிகளின் அளவில் வீழ்ச்சிகாணப்பட்டது. 1977 இல் இதன் நிறையானது 1970 இல் காணப்பட்டதிலும் அரைவாசியாக இருந்ததுடன் 1960களில் எந்தவருடத்துக்குரிய குறைவாகவே இருந்தது. ஏனைய ஏற்றுமதிகளின் செயலாற்றமும் நன்நிலையில் காணப்படவில்லை. கானாவின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் கொக்கோ வருமானத்தின் பங்கு மாற்றமற்று திலையானதாகக் காணப்பட, முதன்நிலை அல்லாத பொருட்களின் ாற்றுமதியின் பங்கானது 1960 இல் 10 வீதத்திலிருந்து 1978 இல் 4விதமாக வீழ்ச்சியடைந்தது.
அட்டவணை 3 விலைக் குறிகாட்டிகள் - கானா (1970 = 100)
wo
1950 1955 1940 1965 1971. 1977 .
மொ. உ. உற்பத்திச்
சுருக்கி 40.5 47.6 50.4 72.9 105.3 702.8 வெளிநாட்டு நாணயமாற்று வீதம் (cedi/S) 0.714 0.714 0.714 0.714 1,029 1.15 கொக்கோ விலைகள்  ைஅலகுக்கான பெறுமதி NA 77 52 34 77 466
சு உற்பத்தியாளர் விலைகள் 65 113 87 70 100 N.A
உண்மையான
உற்பத்தியாளன் விலைகள் 160 237 173 96 95 NA உண்மையான பயன்பாட்டு
நா. மா. வீதங்கள (a)
சு இறக்குமதிகள் N.A 128 121 106 9. N.A
கொக்கோ அல்லாத சற்றுமதிகள் N.A 108 101 71 NA N.A
*கொக்கோ ஏற்றுமதிகள் NA 61. 83 33 NA N.A
1969 இறக்குமதிவீதம் = 100, 1969 இல் கொக்கோ அல்லாத ஏற்று மதிகளின் வீதச் சுட்டெண் 75, கொக்கோ ஏற்றுமதி வீதச்சுட்டெண் 39
Source • World Bank, World Tables, 2nd ed. (Washington, D.C: World
Bank, 1980), pp 86-87
• International Financial Statistics Yearbook, 1982.
• IMF, Surveys of African Economics, Vol 6, 1975. p. 99.
ஏற்றுமதிகளுடன் இணைந்து பேரினப் பொருளாதாரக் கூட்டுக்கள் விழ்ச்சியடைந்தமை ஆச்சரியப்படத்தக்கதல்ல. வெளிநாட்டு உதவிஅல்லது மூதலீடுகளில் ஈடுசெய்யும் மாற்றங்கள் ஏதுமின்றிக் கானாவின்
21

Page 14
இறக்குமதியானது ஏற்றுமதியுடன் சேர்ந்து அழுத்தத்தைக் கொண்டிருந்ததுடன் 1950 களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீதமாக இருந்து 1979 இல் 12 வீதமாக வீழ்ச்சியடைந்தது. 1965 - 1977 காலத்தில் தயாரிப்புத்துறையின் கூட்டப்பட்ட பெறுமதியானது வருடாந்தம் 1 வீதத்துக்கு மேலாக அதிகரித்ததினால் இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில்களின் பங்களிப்புக் குறிப்பிடத்தக்கதாகக் காணப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1950களில் சராசரியாக 20 வீதத்தைக் கொண்ட மொத்த உள்நாட்டு முதலீடுகள் 1980 இல் 5 வீதமாகக் குறைவடைந்தது. கானாவின் அறிக்கைகளில் இருந்து, முதலீடுகளின் மீட்புக்கு (Disinvestment) வீதிகளின் சீரற்றதன்மையும், ஏனைய கட்டுமானங்களின் பொருத்தமற்ற தன்மையுமே காரணமாக இருந்திருந்தன என்பதை அறியமுடிந்தது.
1957 இல் கானா சுதந்திரமடைந்தபோது கறுப்பு ஆபிரிக்காவில் மிகக் கூடிய கல்வியறிவு கொண்ட மக்களைக் கொண்டிருந்தது. அன்றிலிருந்து ஆரம்பநிலைப் பாடசாலைகளில் பதிவுசெய்யப்பட்ட தகுதியுள்ள சனத்தொகையின் பங்கானது இரட்டிப்பாகியுள்ளதுடன் தகுதியான வயதுப்பிரிவில் இது 30 வீதமாகவும் உள்ளது. சுகாதாரம் தொடர்பான அம்சங்களிலும் விருத்தி ஏற்பட்டுள்ளது. வாழ்வு எதிர்பார்ப்புக்காலம்1960 இல் 40 வருடங்களிலிருந்து 1980இல் 49 வருடங்களாக உயர்வடைந்தது. சிசுமரணம் 28 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மருத்துவர்களின் தலா எண்ணிக்கையும் அதிகரித்தது. தாதிமார்களின் தலா எண்ணிக்கை 20 வருடங்களில் ஒன்பது மடங்கு அதிகரித்தது. இருப்பினும் 1977 இல் கலோரி உட்கொள்ளலின் தேவையானது 85 சதவீதமாகவே இருந்தது.
மனித மூலதனத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆரம்ப முதலீட்டின்போது கானாவின் அபிவிருத்திச்செழிப்பானது விருத்தியடைந்திருக்கவேண்டும். ஏனைய ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது சுதந்திர உரிமையானது சாதகமாக இருந்தபோதும் நல்லமுறையில் விருத்திபெற்றுள்ளன. 1980 களில் கூட, சிறந்த செயலாற்றங்களைக் கொண்ட ஆபிரிக்க நாடுகள் இடைநிலைப் பாடசாலைகளினுTடாகக் குறிப்பிட்ட, சிறியளவான சனத்தொகைக்குக் கல்வியைப் புகட்டியுள்ளன. ஆனால் 1979இல் இருந்து அங்கு காணப்பட்ட அரசியற் கிளர்ச்சிகள் கானாவைச் சீரழிந்துவிட்டது. கல்வி, சுகாதாரம் பற்றிய தரவுகளும், நிலைநிற்கக்கூடிய விருத்திகளும், சேவைகளின் தரத்தில் நிலையானதன்மையும் காணப்படுமென்பது சந்தேகத்துக்குரியதே.
2. மாறிவரும் கொள்கைகளுக்கான சூழல்கள் 1950 - 80
அண்மைக்காலக் கானாவின் பொருளாதார வரலாறானது வேறுபடுத்திக் காட்டக்கூடிய கொள்கைச் சூழல்களைக் கொண்ட நான்கு பிரிவுகளாகப்
22

பிரிக்கப்படலாம். 1950 களில் கானாவை வழிநடத்திச் சென்ற நிக்குருமா சுதந்திரமடையும் வரை உள்நாட்டு சுய ஆட்சி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருந்தார். பொருளாதாரக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க ஆர்வம் இல்லாதிருந்தாலும் காலனித்துவ காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கானா கொண்டிருந்தது. 1961 இல் நிக்குருமாவின் பிரதான கவனம் பொருளாதாரக் கொள்கையின் சார்பாகத் திருப்பப்பட்டபோது, கைத்தொழிலாக்கச், சமூக, பொதுநலன் மற் றும் பாதுகாப்புக் (Protection) கொள்கைகளின் வரைவமைப்புக்களினை நோக்கி நகர்த்தப்பட்டார். இக் கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் காலம் 1966 இன் ஆரம்பப் பகுதியில் ஏற்பட்ட புரட்சியினால் சடுதியாகக் கொண்டுவரப்பட்டதுடன் தேசீய 6íG56p6vä s6ysörflső6ör (National Liberation Council-NLC) ágygy Tgy61 ஆட்சியின் கீழ்கொண்டுவரப்பட்டது. 1969இல் கோஃபியூசியர் (Kofibusia) வின் தலைமையில் முன்னேற்றக் கட்சி (ProgreSS Party) யின் அரசாங்கம் தெரிவு செய்யப்படும் வரை இராணுவ ஆட்சி தொடர்ந்திருந்தது. இக்காலத்தில் சார்பளவில் பொருளாதார ஸ்திரத்தன்மையும் தாராளக் கொள்கையைப் பகுதியாகக் கொண்டிருந்த தன்மையும் காணப்பட்டது. 1972 ஜனவரி மாதத்தில் பூசியாவின் அரசாங்கமானது தேசிய மீட்புக் é56y6örfleij (NRC - National Redemption Council) 676örp gr6örlsr6151 இராணுவ அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டது. பாரிய நாணயப் பெறுமதியிறக்கம் செய்யப்பட்டு மூன்று கிழமைகளுக்குள் இது நடைபெற்றதுடன் நிக்குருமா காலத்தில் மேற் கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள் சார்பாக தேசிய மீட்புக் கவுன்சில் கவனம் செலுத்தியது.
1978 இல் இருந்து இன்றுவரையுள்ள ஐந்தாவது காலத்தில் அரசியலில் ஸ்திரத்தன்மையற்ற குழப்ப நிலையே காணப்படுகின்றது. தேசிய மீட்புக் கவுன்சில் பிரிவினருக்குள் அரண்மனைப் புரட்சிகள் இடம் பெற்றன. தேர்தல்இடம்பெறுவதற்கு முன்ஜெரிறோலிங்ஸ் என்பவரால் முதலாவது புரட்சி மேற் கொள்ளப்பட்டாலும் ஹிலா லிமானின் குறுகியகால மக்கள் அரசாங்கம் காணப்பட்டதுடன் 1981இல் றோலிங்ஸ் என்பவரால் இரண்டாவது புரட்சியும் மேற்கொள்ளப்பட்டது.1978 வரையும் காணப்பட்ட மிகக்குறைவான பொருளாதாரச் செயலாற்றங்கள் இத்தகைய அரசியல் அழிவுநிலையில் மேலும் மோசமடைந்தது. இக்காலத்திலிருந்து ஒரு வித்தியாசமான பொருளாதாரக் கொள்கை எதனையும் காண முடியாதிருந்தது.
நிக்குருமாவின் பொருளாதாரக் கொள்கைகள் சார்பளவில் தாராளக் கொள்கையை உடையதாகவும், சர்வதேசியத் தன்மையுடையதாகவும் இருந்தது. ஸ்ரேலிங் சந்தையில் கானாவின் வர்த்தகமும், கொடுப்பனவுகளும் கடன்சுமை இல்லா நிலையிலேயே காணப்பட்டது. ஆனால் இப்பகுதிகளுக்கு வெளியே கொடுப்பனவுகளில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. இறக்குமதிகள் மீதான (விலை, காப்புறுதி, கப்பல் சுமை)
23

Page 15
சராசரி சுங்கத் தீர்வைச் சேகரிப்புக்களின் (tariffCollections) வீதம் 1955 - 60 காலத்தில் 17 வீதமாக இருந்ததுடன் இக்காலத்தில் ஏனைய வரிகளோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் கொக்கோ ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதிகளில் (fobபெறுமதி) 13 - 50 வீதம் வரையில் மிகக்கூடிய வரிகளைச் செலுத்தினர். விவசாயிகள் நிலையான விலையைப் பெற்றுக் கொண்டமையினால் கொக்கோவின் வீதமும் மாறுபட்டதாக இருந்தது. அதன் காரணமாக, குறுங்கால எல்லைவரிவீதமானது 100 வீதமாகக் காணப்பட்டது. கொக்கோவுக்கான விவசாயிகள் விலைமட்டமானது பொருளாதார்த்தில் ஒரு இறுக்கமான கொள்கைக் காரணிகளாக விளங்கியது. உண்மையான, உண்மையல்லா மாற்றுவீதங்களில் உற்பத்தியாளர் விலைகள் 1950 களில் மிக உயர்வாக இருந்து 1960 களின் ஆரம்ப காலத்தில் வீழ்ச்சியடைந்தது. கொரியன் யுத்தத்தினால் தூண்டப்பட்ட பண்டப்பொருட்களின் செழிப்பினால் உலக கொக்கோ விலைகள் 1950 களின் ஆரம்பத்தில் சடுதியாக உயர்ச்சியடைந்தது. இதனால் கானாவின் கொக்கோ வருமானம், வெளிநாட்டு இருப்பை விரைவாகக் கட்டியெழுப்பக் காரணமாக இருந்ததுடன் சுதந்திரத்தின் பின் அடையப்பட்ட மாற்றங்களுள் முக்கியமானதாகவும் இருந்தது. 1956 இன் இறுதியில் அதாவது சுதந்திரத்துக்கு முதல் வருடத்தில் தேறிய இருப்புக்கள் 252 மில்லியன் டொலர்களாக இருந்ததுடன் அது 17 மாதங்களுக்கான இறக்குமதிக்குச் சமமானதாகவும் காணப்பட்டது. 1961 இல் இறக்குமதிகள் வளர்ச்சியடைய, இருப்புக்கள் அரைவாசியாகக் குறைவடைந்தது. 1950 களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட இருப்புக்களின் திரட்சிக்கு அரசின் விரிவாக்கமுடைய, தாராளக் கொள்கைகளே காரணமாக இருந்தன.
1950களில் முதலீடானது மிகஉயர்வாக இருந்ததுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரித்த பங்குகொண்டதாகவும், சராசரியாக அப் பத்து வருட காலத்தில் 20 சதவீதத்தைக் கொண்டும் காணப்பட்டன. 1955 - 1961 க்கும் இடையில் முதல் இருப்பானது மூன்றில் இரண்டு மடங்காக அதிகரித்தது. இத்தசாப்தத்தின் இறுதிக் காலம் கடந்த 30 வருடத்தில் இல்லாத மிதமான வளர்ச்சிகொண்ட காலப்பகுதியாகக் காணப்பட்டதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருடாந்தம் 5.9 வீதத்தில் விரிவாக்கத்தைக் கொண்டிருந்தது. மூலதன இருப்பு (capital stock)மிக விரைவாக வளர்ச்சியடைந்தது. 1955 - 1961 காலத்துக்கான அதிகரிப்புக் கொண்ட மூலதன வெளியீட்டு வீதமானது (கொக்கோவைத் தவிர்த்து) 3.6 ஆக இருந்தது. இவ் உயர்வீதம் மூன்று காரணிகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
(1) கொக்கோ நடுவதற்குக் காடுகளை வெட்டியழிப்பதற்கு வேண்டிய தொழிலாளருக்குப் பாரிய முதலீடு அவசியமாக இருந்தது. அத்துடன் புதிய கொக்கோத் தாவரங்கள் வளர்ந்து பலன்தருவதற்கு
24

5 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தேவையாக இருந்தது.
(2) தாராளக் கொள்கை மற்றும் விரிவாக்க காலகட்டத்தில் நிக்குருமா உள்கட்டுமானத்தை முக்கிய துறையாக வலியுறுத்தியிருந்தார். நேரடியாக உற்பத்தி நடவடிக்கைகளைத் தூண்டும் விதத்தில் அரசாங்கத்தினால் கட்டியெழுப்பப்பட்டபோக்குவரத்து, பயன்பாட்டு மற்றும் சேவைகள் அமைந்திருந்தன.
(3) இத்தகைய விரிவாக்கச் சூழ்நிலைகளில் செயற்றிட்டக் கட்டமைப்பும் ஆய்வுகளும் கவனமாகச் செய்யப்படவில்லை என்பது சந்தேகமற்ற உண்மையாகும். 1960 களின் ஆரம்பத்தில் இதன் தோல்விகள் அதிகரிக்கத் தொடங்கியது.
நிக்குருமாவின் பாரிய உந்துதல் (1961 - 66)
1961 ஆம் ஆண்டு நிக்குருமாவின் பொருளாதாரக் கொள்கைகளில் பாரிய
திருப்புமுனை ஏற்பட்டது. இவ் ஆண்டுவரையும், அதாவது அரசாங்கம் பெரும்பாலும் காலனித்துவ அரசாங்கம் போன்று திரட்சியாகக் காணப்பட்ட வெளிநாட்டு நாணய இருப்புக்களைச் செலவழிக்கும் விருப்பத்தினையும், உள்நாட்டுக்கடன்வாங்குதலுடன் அபிவிருத்திச்செலவீடுகளுக்குநிதியுதவி செய்யும் நோக்கினையும் கொண்டிருந்தது. 1950 களின் பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டபோதும், 1961 ஆம் ஆண்டளவில் நிக்குருமா, மேலதிகமான பொருளாதார மாற்றங்களை அளிப்பதன் தேவையை உணர்ந்து கொண்டார். சுதந்திரத்தின்போது வாக்களித்ததன்படி, கானாவில் வழி நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த (pg gig fidis stayágyidror Fisoa56du (Integrated pan- African Market) அடிப்படையாகக் கொண்ட நடைமுறைக்கொவ்வாத தந்திரோபாயத்தை அமுல்படுத்தத் தொடங்கினார்.
நிக்குருமாவின் இப்புதிய பாதையானது அக்காலத்தின் மிகச் செல்வாக்குமிக்க அபிவிருத்திப் பொருளியலாளர்களினால் முன்வைக்கப் பட்டதன்படி அமைந்திருந்தது. 1960 களின் ஆரம்பகாலத் தந்திரோபாயமானது அதிக முதலீடுகளைக் கொண்ட பாரிய Aisassógirlsrs Giggold 5&arajll-i60s (vicious circle of poverty) உடைப்பதாக இருந்ததுடன் சுயமான வளர்ச்சியினைக் கொண்ட விடுபடு கட்டத்தையும் அடைந்துகொண்டது. இது ஒரு சமநிலைப்படாத வளர்ச்சித் திறமுறையாகவே இருந்தது. இறக்குமதிப் பதிலீட்டினைக் கொண்ட கைத்தொழில் மிக உயர்வான பாதுகாப்புத் தடைகளைப்பின்னணியாகக் கொண்டியங்கும் முன்னணித்துறையாக இருந்தது. புதிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழிலாளர்களை விவசாயத்
25

Page 16
துறையானது தனது உபரித் தொழிலாளர்களின்மூலம் வழங்கியது. கானாவின் பொருளாதாரத்தைச் சூழ்ந்து கொண்டிருந்த காலனித்துவ வெடிகுண்டின் தோலை உரிப்பதற்கு நிக்குருமா உறுதிபூண்டார். முதன்நிலை ஏற்றுமதிகளில் தங்கியிருப்பதைக் குறைத்துக் கானாவின் தயாரிப்புத் தொழில்களை அதிகரிக்க விரும்பினார். அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட வளப் பங்கீட்டின் அதிகரிப்பின் ஊடாகப் பொதுமுதலீட்டு ஒதுக்கீடுளை மையமாகக் கொண்டு தேசிய திட்டமிடல் அமைந்திருந்தது. எழுச்சிபெற்று வரும் ஆபிரிக்கா முழுவதையும் உள்ளடக்கிய சந்தைக்கு நிரம்பல் செய்வதற்குப் போதுமான இயலளவு கொண்டதாகக் கைத்தொழிலைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது.
அபிவிருத்திப் பொருளாதார யுகத்துக்குப் பொருத்தமானதாக நிக்குருமாவின் தந்திரோபாயமானது அமைந்திருந்தது. 1950 களில் அபிவிருத்தி பற்றிய மாணவர்களின் வாசிப்புக்குத் தேவையான ஹரட் மற்றும் டோமர், சிட்டோவிஸ்கி, றோசன்ரைன்-ரோடான், ஹோர்ஸ்மன், லூவிஸ், பெரிபிஸ்ச், சிங்கர், நேர்க்ஸ்சி, கல்டோர் போன்றவர்களினதும் ஏனையவர்களினதும் பங்களிப்புக்களை உள்வாங்கியிருந்தார். லூவிஸ், கல்டோர், டட்லி சியர்ஸ் போன்றவர்கள் குறிப்பிட்டகாலத்தில் நிக் குருமாவுக்கு அறிவுரை வழங்கியிருந்தனர். இருந்தாலும், இருவிடயங்கள் நிக் குருமாவின் அணுகுமுறையில் அதிக முரண்பாடுடையதாக இருந்தன.
(1) சோசலிசவாதியாக இருந்தபோதும் அவர் அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குவதற்குப் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய கருவியாகக் கொண்டிருந்தார். அரச ஆதரவுடனான நிறுவனங்கள் எல்லாத்துறைகளிலும் பரவியிருந்தன. ஆனால் அவற்றின் பாரிய தாக்கம் விவசாயத்திலும், தயாரிப்புத் துறையிலுமே காணப்பட்டது. அரச நிறுவனங்கள் மீது வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான பணிசுமத்தப்பட்டது. பொதுவாக இவ் வேலைவாய்ப்பு, தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி நிக்குருமாவின் தேர்தல் தொகுதிகளில் முக்கியமானவர்களாகக் காணப்பட்ட பாடசாலையை விட்டுவிலகுகின்ற இளைஞர்களுக்கும் அவசியமாக இருந்தது.
(2) உள்ளூர்த் தொழிற்றுறை உரிமையாளர்களில் நிக்குருமா நம்பிக்கையற்று இருந்ததுடன் அவர்கள் அபிவிருத்திக்கான ஒரு கருவி என்பதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை ஊக்கப்படுத்துவதிலேயே ஆர்வமாக இருந்தார். 1963 இன் மூலதன முதலீட்டுச் சட்டம், முதலீட்டாளர்களுக்கு இறைச் சலுகைகளை வழங்குவதாக இருந்தது. பாரிய, மற்றும் பல வழிகளில் மிக வெற்றிகரமான இக்காலத்துக்குரிய ஒரு
26

செயற்றிட்டம் வொல்ரா அணைத்திட்டமாகும். இத்துடன் இணைந்திருந்த வல்கோ அலுமீனியம் சுத்திகரிப்பு தொழிலில் கூட்டாக இணைந்திருந்த கெய்சர் அலுமீனியம் மற்றும் றெனோல்ட்ஸ் என்பன முக்கிய பங்கினைக் கொண்டிருந்தன.
அரசாங்கமானது ஒருமுறை அதன் பொருளாதார நோக்கங்களையும், அதனை அட்ைவதற்கான முதன்நிலை நோக்கங்களையும் தீர்மானிக்கும் போது பேரினப் பொருளாதார உறுதியும், நுண்பாகப் பொருளாதாரத் திறமையும் ஆகிய இரட்டைப் பொருளாதார முகாமைத்துவப் பணிகள் முக்கியமானவையாக உள்ளன. இந்த இருவிடயங்களிலும் நிக்குருமாவின் அரசாங்கம் தோல்வியை அடைந்து 1961க்குமுன்புவெளிநாட்டுப் பற்றாக் குறைகள் (external deficits) கானாவைச் சீரழிக்க ஆரம்பித்துவிட்டன. இருப்புக்களில் வீழ்ச்சி பற்றி முன்பே கூறப்பட்டது. ஆனால் கொக்கோ விலைகள் 1960 களின் ஆரம்பத்தில் செங்குத்தாக வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதி வருமானங்கள், கொக்கோவின் ஏற்றுமதி அளவுகள் இரட்டிப்பாக இருந்தபோதும் அவை தேக்கநிலையிலேயே காணப்பட்டன. கானாவின் பொருளாதாரக் கொள்கைகள் கடுமையான மாறுந்தன்மை கொண்ட கொக்கோ விலைகளுக்கு ஒருபிணையாகக் காணப்பட்டிருந்தது. எல்லா அரசாங்கங்களிலும் பார்க்க இந்த அச்சுறுத்தலினால் நிக்குருமாவின் அரசு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பாரிய உந்துதலுக்கான இறக்குமதிக் கேள்விகள் வெளிவாரிக் கொடுப்பனவுகளில் கட்டுப்படுத்த முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. 1960-65 காலத்தில் புதிய இறக்குமதி வரிகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாகப் 15 விதமாகக் காணப்பட்ட நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையானது 1965 இல் மிக உயர்ந்த நிலையாக 20 வீதத்தை அடைந்தது. இவற்றில் அரைவாசி மட்டுமே நீண்டகால முதல் உட்பாய்ச்சலினால் நிதிப்படுத்தப்பட்டது. 1965 இல் தேறிய இருப்புக்கள் எதுவும் காணப்படவில்லை.
பதிவு செய்யப்பட்ட வரவு செலவுத் தரவுகளின் அடிப்படையில் நிதி முகாமைத்துவம் ஓரளவு நன்றாகக் காணப்பட்டது. நிக்குருமாவின் நிதிச் செயலாற்றங்கள் போதுமானவை. அரசாங்கமானது கைத்தொழி லாக்கத்தில் பாரிய உந்துதலை ஏற்படுத்துவதற்கான நிதியை வரிகளை உயர்த்துவதன்மூலம் பெற்றுக் கொள்ள உறுதியான முயற்சியை மேற்கொண்டது. கொக்கோ தவிர்ந்த ஏனையவற்றின் வருமானம் 1961 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.4 வீதமாக இருந்து 1965 இல் 147 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இக்காலத்தில் அரசாங்கத்தின் பதியப்பெற்ற செலவீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 25 வீதமாக இருந்தது. இத்தகைய செலவீடுகள் 1960 களினதும் ஆரம்ப வருடங்களினதும் சராசரியான 21 சதவீதத்திலிருந்து ஏற்பட்ட பாய்ச்சலைக் குறித்து நிற்கின்றதுடன் கொக்கோ வருமான வீழ்ச்சியுடனும்
27

Page 17
இணைந்திருந்தது. அத்துடன் அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் பதியப்படாத செலவுகளும் காணப்பட்டிருந்தன.
1960 இல் இருந்து 1965 வரையான அரசாங்கத் திரட்டுப் பற்றாக்குறையானது பதிவுபெற்ற பற்றாக்குறையிலும் பார்க்க 50 சதவீதம் அதிகமாக இருந்ததுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாகப் 12 வீதமாகக் காணப்பட்டது. இவ்வேறுபாடானது, தயாரிப்புக் கருவிகள் மற்றும் ஏனையவற்றிலிருந்து குறுங்காலக் கடன்களின் வழங்குநர்கள் மூலமாக நிதிப்படுத்தப்பட்டது. இத்தகைய நீண்டகால அமைப்புச் சீராக்கலை நிதிப்படுத்துவதற்கான குறுங்காலக் கடன் வழங்கலின் பயன்பாடானது கானாவின் பொருளாதார முகாமைத்துவத்தின் பண்பாக மாற்றமடைந்ததுடன் பிற்காலக் கொடுப்பனவுப் பிரச்சினைகளைத் தூண்டிவிடுவதற்கும் காரணமாகவிருந்தது. மூலவளங்களின் மீது அரசாங்கம் தனது கட்டுப்பாடுகளை மட்டும் அதிகரிக்கவில்லை. மாறாகப் பொருளாதாரத்தின் மீது பணவீக்க அழுத்தங்களையும் சுமத்தியது. வரவு செலவுத்திட்டச் செய்முறையின் கீழ் அடிப்படையான நுண் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து குறிப்பிடத்தக்க அபிவிருத்திச் செயற்றிட்டங்களைத் தடுத்துவிட்டமையே பாரிய இழப்பீடாக இருந்தது. 1960 க்கு முன் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பணவீக்கமானது 1960 இல் இருந்து வருடாந்தம் சராசரியாக 7.6 வீதமாக 1965 ஆம் ஆண்டினை நோக்கி உயர்வடைந்தது.
கடுமையான தொழில்ரீதியான மதிப்பீடுகளில் இருந்து பல முதலீட்டுச் செயற்றிட்டங்களைத் தடுத்து வைத்தலானது நிக்குருமாவின் பிந்திய வருட காலத்துக்குரிய ஒரு முக்கிய பொருளாதார முகாமைத்துவமாக இருந்தது. இதற்கான சான்றுகள் நுணுக்கமான கதைகளாக இருந்தாலும்,"வெள்ளை யானைகள்” பற்றிய கதைகள் தவிர்க்கப்பட முடியாதவை. அருந்தலான இறக்குமதி செய்யப்பட்ட முதல் கருவிகளைச் செறிவாகப் பயன்படுத்தும் ஏராளமான நிலங்களுடன் பயிர் செய்வதற்கு அரச பண்ணை நிலங்களையும் உள்ளடக்கிய முறையில் திட்டவமைப்பு அமைந்திருந்தது. மருந்துப்பொருட்களை உற்பத்திசெய்யும் ஆலையானது அதன் நடைமுறைப் பொருத்தத்திலும் பார்க்கப் பத்து மடங்கு செலவுடையதாக இருந்தது. கண்ணாடித் தட்டுக்களை (sheet - glass) உற்பத்தி செய்கின்ற ஆலையானது உள்ளூர்ச் சந்தையின் மூன்று மடங்கினை உற்பத்திசெய்யும்முறையில் திட்டமிடப்பட்டதுடன் இறுதியில் புட்டிகள் செய்யும் ஆலையாக மாற்றப்பட்டது. பாதணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று நான்கு வகையான பாதணிகளை உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்டாலும் அவற்றுள் இரண்டு வகை உள்ளூரில் நுகரப்படவில்லை. கானாவின் தென்பகுதியில் அமைந்திருந்த தோல் பதனிடும் தொழிற்சாலையானது தனக்குரிய தோல் மூலாதாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் இறைச்சித்தொழிற்சாலையை 500 மைல்களுக்கப்பால்
28

வடபகுதியில் கொண்டிருந்தது. தோலினைப் பயன்படுத்தும் பாதணித் தொழிற்சாலையானது 200 மைல்களுக்கப்பால் அமைந்திருந்தது. கரும்புத் தொழிற்சாலைகள் அவற்றின் மூலப்பொருட்களைப் பயிரிடுவதற்குமுன்பே பூர்த்தி செய்யப்பட்டன. தக்காளி - மாம்பழம் தகரத்திலடைக்கும் ஆலை இப் பயிர்களின் 2500 ஏக்கர் உற்பத்தியைப் பயன்படுத்துமளவுக்குக் கட்டப்பட்டது. ஆனால் இவை வளர்ச்சியடைந்த பகுதிகளில் அவற்றினை வர்த்தகரீதியாக ஆகக் குறைந்தது 5 வருடங்களுக்குச் செய்யமுடியாமல் இருந்தது. 1961 க்கு முன்பு 2.5 - 3.0 வீச்சினைக் கொண்டு காணப்பட்ட அதிகரிப்புக் கொண்டமூலதன. வெளியீட்டு விகிதம் (capital-Outputratio) மேல் நோக்கிய நிலையான நகர்வினைக் கொண்டிருந்ததுடன் 1980-1965 க்கு இடையில் 6.1 விகிதமாகக் காணப்பட்டது. பேரினப் பொருளாதாரச் சக்திகளும், மெதுவான வளர்ச்சியும் இத்தகைய போக்குகளுக்குக் காரணமாக இருந்தபோதும் பெருக்கமடைந்து வந்த தரமற்ற செயற்றிட்டங்கள் முக்கிய பங்கினை ஆற்றியிருக்க வேண்டும்.
அரசாங்கத்தின் முதலீடுகள் புதிதாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை முயற்சித் திட்டங்களுக்கூடாக அரச பண்ணைகளிலிருந்து தங்கச் சுரங்கங்களுக்கும், தயாரிப்புத்துறைக் கம்பனிகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் செலுத்தப்பட்டன. 1964-65 இல் காணப்பட்ட இத்தகைய 22 தொழிற்றிட்டங்களில் 13 திட்டங்கள் இழப்புக்களை ஏற்படுத்தியது. தேசிய வர்த்தகக் கூட்டுத்தாபனமானது இறக்குமதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதில் முன்னுரிமைத் தன்மையைக் கொண்டிருந்தமையினால் பாரிய இலாபத்தைப் பெற்றது. கானா நாணயத்தில் இது 6.5 மில்லியன்சேடிஸ் ஆக இருந்தது. அதற்குமேலாக, அரச நிறுவனங்கள் இவ்வருடத்தில் 14.1 மில்லியன் சேடிஸ் இழப்பைக் காட்டியது. தனியார் தொழில் முயற்சிகளில் தலா வேலையாளுக்கான கூட்டப்பட்ட பெறுமதியின் அரைவாசியிலும் பார்க்கக் குறைவாகவே அரசகம்பனிகள் கொண்டிருந்தன. அசந்திதங்க வயல்களில்(Ashantigold fields) பெறப்பட்ட படிவுகளின் அலகுக்கான செலவானது அரச தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒன்றாக இருந்தது. சிறிய தனியார் பண்ணைகளின் பொருளாதாரச் செயலாற்றங்களை நோக்கும்போது அவை அரச பண்ணைக் கூட்டுத்தாபனத்திலும் பார்க்க அதிக செயலாற்றங்களைக் கொண்டிருந்ததுடன் ஐந்து மடங்கு அதிக விளைச்சலையும் கொண்டிருந்தது.
அரசகம் பணிகளானது சமூக நோக்கங்கள், வேலைவாய்ப்பை உருவாக்குதல், நிக்குருமாவின் கனவாகிய முழு ஆபிரிக்காவையும் உள்ளடக்கிய சந்தை ஆகிய மேலதிக சுமைகளைத் தாங்கிச் செல்ல வேண்டியிருந்தமையினால் உயர்வான செலவுகளைக் கொண்டிருந்தன. இதற்காகவே கானாவின் பாரிய தொழிற்சாலைகள் முன்யோசனையுடன் திட்டமிடப்பட்டன. ஆனால் அரச செயற்றிட்டங்களின் தவறான
29

Page 18
கொண்டுநடத்தல்களில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத தன்மைகள் பற்றித் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டாலும், குறைவான முகாமைத்துவமும், உறுதியான ஊக்குவிப்பு (incentive System) முறைமையும் திறமையற்ற உற்பத்திக்கான பிரதான காரணங்களாக இருந்தமையை வலிமையாக ஊகிக்க முடிகின்றது.
1960களில் நிக்குருமாவின் அரசாங்கம் நுண்பாகப்பொருளாதார விலைச் சூழலுடன் பிரச்சினைக்குட்பட ஆரம்பித்ததுடன் ஒதுக்கீட்டுக்கான திறனும் சீர்கெட்டது. சார்புரீதியாக 1950 களில் தாராளவர்த்தக அரசாங்கதத்தின் உயர்வான தீர்வை காரணமாக சுமை அதிகரித்தது. 1960 இல் தீர்வை வரிச் சேகரிப்புக்கள் சராசரியாக 17 வீதத்திலிருந்து 1965இல் 26 வீதமாக உயர்வடைந்ததுடன் மேலதிகமான ஏனைய வரிகள் ஒன்றாகச் சேர்ந்து மொத்தமாக 1965 இல் 22 வீதமாக இருந்தது. இறக்குமதி அனுமதிப்பத்திரம் 1961 இன் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் பொருளாதார நோக்கங்களைப் பன்மடங்காக்கியது. குறிப்பாக, ஏற்றுமதி வருமானங்கள் தேக்க நிலையை அடையும்போது இறக்குமதிச் செலவீடுகளைக் கட்டுப்படுத்தல், இறக்குமதிப்பதிலீட்டுக்கைத்தொழிலாக்கத்தைத் தூண்டுவதற்கு உள்ளூர் தயாரிப்புக்களைப் பாதுகாத்தல் போன்றனவும்; இறக்குமதி வரிகளைப் பொறுத்தவரையில், அவை கொக்கோ வருமானத்தின் வளர்ச்சியை மீள் நிலைப்படுத்துவதற்கும் அதிகரித்த வருமானத்தைப் பெறுவதற்கும், வளர்ச்சியடைந்துவரும் முதலீட்டுக்கு நிதிப்படுத்தவும் வழியாக இருக்கும் எனவும் கருதப்பட்டது.
சில விடயங்களைப் பொறுத்தவரையில் புதிய வர்த்தக முறைமையானது அதன் நோக்கங்களைப் பூர்த்தி செய்தது. வர்த்தக மற்றும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தபோதும் அவை இறக்குமதிகள் கட்டுப்பாட்டின்கீழ்கொண்டுவரப்பட்டன. மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் அவற்றின் விகிதமானது 1960, 1961 ஆம் ஆண்டுகளில் 30 வீதமாக இருந்து அடுத்த 4 வருடங்களில் 24 வீதமாகக் குறைவடைந்தது. இறக்குமதிப் பதிலீடு இடம் பெற்றதுட்ன் இறக்குமதிக் கூட்டினையும் சடுதியாக மாற்றிவிட்டது. இறக்குமதிகளில் ஏறக்குறைய அரைவாசியாகக் காணப்பட்ட நுகர்வுப் பொருட்கள் 1960 களின் இறுதியில் மொத்தத்தில் 30 வீதமாக வீழ்ச்சியடைந்தது. அதேவேளை உற்பத்தியாளருக்கான இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் 25 விதத்திலிருந்து 40 வீதமாகவும் உயர்வடைந்தது. நிக்குருமாவின் நிகழ்ச்சித்திட்டம் 1961 - 1966 வரை வருடாந்தம் 10.3 வீத வளர்ச்சியைக் கொண்ட தயாரிப்புக்களுக்கு கணிசமான அளவு கடனை வழங்கியிருக்க வேண்டும். இத் தசாப்தத்தின் இரண்டாவது அரைப் பகுதியிலும் இத்தகைய போக்குத் தொடர்ந்திருந்ததுடன் இக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருடாந்தம் 2.1 வீதமளவிலேயே வளர்ச்சி பெற்றது.
30

நிக்குருமாவின் வர்த்தகக் கொள்கையானது உண்மையில் பேணக்கூடிய வளர்ச்சியை உருவாக்கத் தவறிவிட்டது. இத்தகைய காரணங்கள் அபிவிருத்திப் பொருளியலாளர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தவைகளே. இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில்கள் தூண்டப்பட்டபோது ஏற்றுமதிகள் ஊக்குவிக்கப்படவில்லை. 1960 களின் ஆரம்பத்தில் காணப்பட்ட நிலையான நாணயமாற்று விதத்தின்போதும், 7.6 வீதமாக இருந்த வருடாந்த உள்நாட்டுப் பணவீக்க நிலைமைகளின்போதும், எல்லாப் பண்டப் பொருட்களுக்குமான விலை வீக்கமுடைய நாணயமாற்றுவீதம் வீழ்ச்சியடைந்தது. 1960 இன் விலைகளில் இறக்குமதிகளுக்கான சராசரி விலைவீக்கமுடைய As T689Tuudrôg 6ľsúb (price-deflatedexchangerate)905 Gu-T6uQ5še5 0.84 சேடிஸ்சிலிருந்து 0.78 சேடிஸ் ஆக வீழ்ச்சியடைந்தது. இதன் கருத்து என்னவெனில் உயர்வான வேறுபாடு கொண்ட, ஒழுங்கற்ற பாதுகாப்பு அமைப்பானதுசார்பளவில் பாரியதாக்கத்தை உற்பத்தி மற்றும் முதலீட்டுத் தீர்மானங்களில் ஏற்படுத்துவதாக இருந்தது. கொக்கோ அல்லாத ஏற்றுமதிகள் பயனுறுதி வாய்ந்த நாணயமாற்று வீதத்தில் பாரிய வீழ்ச்சியைக் காட்டின. கொக்கோ அல்லாத ஏற்றுமதி வீதம் 16 வீதமாக 1960 இன் இறக்குமதி வீதத்திலும் பார்க்க குறைவாக இருந்தபோதிலும், 1965 இல் இருந்து இது 33 வீதம் குறைவாக இருந்தது. கொக்கோ உற்பத்தியாளரின் விலைகள் 1959 இல் இருந்து 1965க்கு மெய்யல்லா வீதங்களில் வீழ்ச்சியடைந்ததுடன் பயிரிடுவோரின் ஊக்குவிப்புக்களையும் குறைத்தது. ஆனால் உலக விலைகள் கானாவின் அலகுக்கான பெறுமதிகளின் மூலம் அளவிடப்பட்டதன்படி அரைவாசியாகக் குறைவடைந்தது. இதனால் ஏற்றுமதி வருமானம் தேக்க நிலையை அடைந்தபோது அரசாங்கம் ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்துவதற்கு அல்லது அவற்றை அதிகரிப்பதற்கு ஊக்குவிப்புக்களைக் குறைத்தது.
இவ்வருடகாலங்களில் அமுலாக்கப்பட்ட பாதுகாப்புத் தீர்வைகள் அதிகவேறுபாடுகொண்டவை. அத்துடன் இறக்குமதி அனுமதிப்பத்திரம் என்பதும் குழப்பமான முறைமைகளை ஏற்படுத்தின. உற்பத்திப் பயன்பாட்டுவீதமானது பல ஏற்றுமதிக் கைத்தொழில்களுக்குப்பூச்சியமாக அல்ல எதிர்மறையானதாகவும் பழங்கள், மரக்கறி பதனிடல், பிஸ்கட், இனிப்புவகைகள், புடவைகள், பாதணிகள், வானொலி போன்ற கைத்தொழிற்துறைக்கு 200 வீதமாகவும் இருந்தது. கொக்கோ பதனிடல், கைப்பைகள், வடிகட்டுதல், வர்ணத் தீந்தைகள் ஆகிய கைத்தொழில்கள் பயன்படுத்திய உள்ளிட்டுப் பொருட்கள் உலக விலைகளிலேயே பெறப்பட்டதுடன் அவற்றின் வெளியீட்டிலும் பார்க்க இலாபமாக இருந்தது. ஆலைகளின் அடிப்படையிலும் துறைகளுக்கிடையில் பல வேறுபாடுகள் காணப்பட்டன.
காரணி விலைகளை நோக்கிய கொள்கைகள் நிக்குருமாவின் வர்த்தக ஊக்குவிப்புமுறைமையினால் ஏற்பட்ட பாதகமான தாக்கங்களை மேலும்
31

Page 19
தூண்டிவிடுவதாக அமைந்தது. ஆகக் குறைந்த வேதனச் சட்டம், கட்டுப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள், மிகைப் பெறுமதியுடைய நாணய மாற்றுவீதம் , மூலதன கருவிகளின் தீர்வையற்ற இறக்குமதி, வரிக்குறைப்பைக் கொண்ட முதலீட்டாளர் ஊக்குவிப்புகள் என்பன ஒன்றாக இணைந்து சார்பளவில் செயற்கையான செலவுமிக்கதொன்றாக மாற்றியது. இது முதல் செறிவுடைய கைத்தொழில் மற்றும்தொழில்நுட்பத் தெரிவுகளைத் தூண்டுவதாக இருந்தது. 1960 இல் இருந்து 1965 வரை முதல் வாடகைக்கான வேதன விகிதங்கள், வெளிநாட்டு நிதியிடப்பட்ட முதலீடுகளுக்கு அவை வருமான வரிகள் செலுத்துவனவாயின் 8 வீதமாகவும், வரிமுறையை அனுபவிப்பவையாயின் 24 சதவீதமாகவும், வரிவிடுமுறையற்ற உள்நாட்டு நிதியிடப்பட்ட முதலீடுகளாயின் 23 வீதமாகவும் உயர்ந்தது. வேதன-வாடகை விகிதத்தில் 25 வீத உயர்வு 5 வருடத்துக்கு மேலாகக், கானா போன்ற நாடுகளில் வேலை உருவாக்கத்தை 20-25 வீதத்தினால் குறைக்கக்கூடும். 1961-65 காலத்தில் மெய் வட்டி வீதங்கள் வருடாந்தம் (-2)-(-23) வீத வீச்சுக்குள் காணப்பட்டதுடன் இரட்டைத் தன்மை வாய்ந்த நிதிச் சந்தைகளை வலுவூட்டுவதாகவும் இருந்தது.
1966 ஆம் ஆண்டு ஆரம்பித்தபோது நிக்குருமாவின் கொள்கைகள் கானாவைச் சர்வதேசரீதியாக நிதியற்ற நிலைக்குத் தள்ளி விட்டது. மிகைமதிப்பீடுசெய்யப்பட்டபொருளாதாரம் நீண்டகாலத்துக்கு இறக்குமதி மற்றும் விலைக் கட்டுப்பாடுகளினால் கட்டுக்கடங்கியிருக்காது. பெரியளவிலான பொதுத்துறையானது கானாவின் கிடைக்கக்கூடிய மனித சக்தியினால் பயனுறுதி வாய்ந்த முறையில் நிர்வகிக்கப்பட முடியாது. கானாவின் உயர்வடைந்துவரும் தேக்க நிலைக்கு விலை அமைப்பு ஒரு தீர்வாகமாட்டாது என்பது நிரூபிக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இராணுவம் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்தது.
3. உறுதியான நிலையும் தாராளமயமாக்கமும் 1966 - 1971
தேசிய விடுதலைக் கவுன்சிலானது (NLC) உள்நாட்டு, வெளிநாட்டுப் பேரினப் பொருளாதாரச் சமநிலையை நிலைநிறுத்துவதற்கான் கவனத்தைக் கொண்டிருந்தது. 1966-71 காலத்தின் 6 வருடங்களில் தேசிய விடுதலைக் கவுன்சிலும், 1969 இல் தெரிவுசெய்யப்பட்ட கோஃபி பூசியாவின் தலைமையிலான முன்னேற்றக் கட்சியும் (PP) அரசாங்க நுகர்வையும், மொத்த உள்நாட்டு முதலீட்டினையும், இறக்குமதிகளையும் நிக்குருமாவின் இறுதி முழுவருடத்தின் உண்மையான மட்டத்துக்குக் கீழாக வைத்திருந்தன. ஏற்றுமதி அளவுகள் வீழ்ச்சியடைந்தபோதும் இவ் அரசாங்கங்களின் காலத்தில் 1971 வரையும் கொக்கோ விலைகள் உயர்வடைந்தன. இதனால் நடைமுறைக் கணக்குச் சமநிலையானது
32

நிலையான ஒடுக்கத்துக்குள்ளாகியதுடன் தேறிய இருப்புக்கள் இத் தசாப்தத்தில் முதல் தடவையாக அதிகரித்தது.
தேசிய விடுதலைக் கவுன்சில் பொருளாதாரத்தில் கட்டுப்பாட்டு நீக்கச் செய்முறைகளை ஆரம்பித்தது. இதனை முன்னேற்றக் கட்சி அரசாங்கம் முடித்து வைப்பதற்கு உறுதிபூண்டது. இறக்குமதிக்கட்டுப்பாடுகள் முக்கிய இலக்குகளாக இருந்தன. 1967 இல் மேற்கொள்ளப்பட்ட 43 வீத சேடிஸ் டொலர் நாணய மாற்றுவீதப் பெறுமதி இறக்கம் முதன்மையான உந்துதலாக இருந்தது. நாணயப் பெறுமதியிறக்கமானது சில தீர்வைகளையும் ஏனைய இறக்குமதிகளின் மீதான கட்டணங்களையும் வெட்டிவிடும் தன்மையுடன் இணைந்திருந்தபோதிலும் இறக்குமதி களுக்கான பயனுறுதி வாய்ந்த நாணயமாற்று வீதம் 39 வீதத்தினால் அதிகரித்ததுடன் ஏற்றுமதிகளுக்கு 43 வீதமாக அதிகரித்தது. எவ்வாறிருப்பினும் இறக்குமதிவரிகளில் தொடர்ச்சியான குறைப்பும், பணவீக்கத்தின் உறுதியான நிலையும் வருடாந்தம் 12 சத வீதத்துக்கு விரைவுபடுத்தியவுடன் பெறுமதியிறக்க விலைத்தாக்கத்தை இரண்டு வருடங்களுக்குள் படிப்படியாக அழித்துவிட்டது. மெய் நாணய மாற்று வீதத்தின் அழிவு வர்த்தக நிலுவையை ஏற்படுத்தியதாக இருந்தாலும் இந் நிலைமை நாணயப் பெறுமதியிறக்கத்தினால் தோற்றுவிக்கப் படவில்லை என்பதே. நிலுவைகளில் ஏற்பட்ட வீக்க நிலைமைகளினால் குறிப்பாக 1966-67 காலத்துக்குரிய விரிவாக்கமுடைய இறைக் கொள்கைகளினாலேயே அவை ஏற்பட்டன.
1967 இல் மேற்கொள்ளப்பட்ட பெறுமதி இறக்கச் சீரற்ற நிலையிலும் கூட இறக்குமதித் தாராளமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டது. 1970 இல் அனுமதிப்பத்திரமுறையின் கீழ் முன்பு இருந்த 60 வீதமான பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. 1970, 1971 இல் பூசியா அரசாங்கத்தினால் சேவைக் கொடுப்பனவுகள் மீது விதிக்கப்பட்ட 10-25 வீத வரிகளினால் மிகைக் கட்டணமும் விற்பனை வரியும் அதிகரித்தது. 1968இல் பெறுமதியிறக்கத்தினால் இறக்குமதிகளானது 16 வீதத்தினால் குறைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்திருந்த பகுதிக் கட்டுப்பாடுகள் 1968-70 காலத்தில் மெய்வீதங்களில் 21 வீதமாக அதிகரித்தது. 1967இல் இருந்து 1970 வரை அலகுப் பெறுமதியில் கொக்கோவின் விலைகள் இரண்டுமடங்காக மாறியதுடன் பெறுமதியிறக்கத்தின் பின் வெளிநாட்டு உதவியில் கணிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டது. இது 1971 வரையும் சென்மதி நிலுவைப் பிரச்சினைகளைத் தடுத்து நிறுத்தியது.
1989 ஒக்டோபர் மாதம் முன்னேற்றக் கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. தேசிய விடுதலைக் கவுன்சிலினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தாராளமயுமாக் கலைத் தொடர்வதற்கு உறுதி கொண்டதுடன், அபிவிருத்திக்கான பல நிகழ்ச்சித் திட்டங்களிலும் ஆவலாக இருந்தது.
33

Page 20
இவ் அரசாங்கத்தின் நிதி மந்திரி ஜே.எச்.மென்சா என்பவர் நிக்குருமாவின் பிரதான திட்டமிடலாளராக இருந்தவர், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தத் தீர்மானித்தார். கிராமிய, நகரப் பகுதிகளின் வாழ்க்கைத் தரத்தில் காணப்படும் வேறுபாடுகளைச் சீர்ப்படுத்தவும், வேலை வாய்ப்பு உருவாக்கத்தைத் துரிதப்படுத்தவும் அதி உயர்வான முதலீடுகளும், விரிவாக்கமுடைய ஏற்றுமதிகளும் அவசியம் என உணர்ந்தார். இக் கொள்கையின் தெளிவான வெளிப்படுத்தலினால் முதல் செலவீடுகளில் சடுதியான விரிவாக்கம் இடம் பெற்றதுடன் இரண்டு வருடங்களில் பெரும்பாலும் இரட்டிப்பாகியது. கொக்கோ வருமானங்களும், அதிகரித்த வெளிநாட்டு உதவியும் இவ் விரிவாக்கத்துக்கு நிதியிட்டன. 1971 இன் இறுதியில் கொக்கோ விலைகள் துல்லியமான வீழ்ச்சியை அடையுமட்டும் வரவு செலவுத் திட்டத்தினைச் சமநிலைக்குக் கிட்டவாக விட்டிருந்தது. முன்னேற்றக் கட்சியானது இதன் கொக்கோ வருவாய்கள் எல்லாவற்றையும் செழிப்புக் காலத்திலேயே செலவழித்து விட்டது. 1971 இல் கொக்கோ விலைகள் வீழ்ச்சியடையத் தொடங்க தேறிய இருப்புக்கள் அற்ற நிலையைக் கானா அடைந்தது. மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையானது 1971-72 இல்
6 வீதமாகக் காணப்பட்டது.
வருமானப் பரம்பல் பற்றிய மென்சாவின் (Mensah) கருத்துக்கள் சுவாரசியமானது. ஆரம்பத்தில் கிராமியக் குடியிருப்பாளர்களுக்குச் சார்பாக வருமானத்தை மீள் பங்கீடு செய்யவேண்டுமென வாதாடினார். அவரின் பார்வையில் ஒப்புரவின்மையானது மரபொழுங்கின் சார்பான உணர்வாக இருந்தாலும் அது தவறானதாகவும் இருக்கலாம். 1971 இல் குறைவான வேதனம் பெறுகின்ற நகரவேலையாட்கள் உண்மையில் செல்வம் மிக்க நகரச் சிறுபான்மையினரிலும் பார்க்கச் சார்புரீதியாகக் கீழ் நிலையில் காணப்படுகிறார்கள் என மென்சா தெளிவுபடக்கூறினார். அதேவேளையில் விவசாயிகளும் வேறு கிராமக் குடியிருப்பாளர்களும் உண்மையில் வறுமையான வகுப்பினராக உள்ளனர். நிக்குருமாவின் காலத்தில் இருந்தவற்றுக்குப் பதில் நடவடிக்கையாக, முதலாளிகளிடமிருந்து நகர வேலையாட்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஆகக் குறைந்த வேதனம் விதிக்கப்படவேண்டும். இதனால் கொக்கோ விலைகளும் , வருமானங்களும், கைத்தொழிலாக்கத்துக்கு நிதியிடுவதற்காகக் கிராமியப் பகுதிகளில் இருந்து உபரியைப் பறிப்பதற்கு ஊக்கங் கொடுக்கும். கொக்கோ வளரும் பகுதிகளுடன் இணைந்த முறையில் முன்னேற்றக் கட்சியின் பிரதான ஆதரவுத்தளங்கள் அமைந்திருந்ததினால் முன்னேற்றக் கட்சியின் தொகுதி அரசியலை அறிமுகப்படுத்துவதாகவும் இருந்தது. பொருளாதாரக்கொள்கைகளில் காணப்படும் வேறுபாடுகள் பழங்குடிமக்கள் தொடர்பாகவே காணப்பட்டது. கொக்கோ பயிரிடுவோர் பெரும்பாலும் அசந்தி மற்றும் அவர்களுடன் சார்பான இனப்பிரிவினரே. நிக்குருமா இவ் அசந்தி பிரிவினரின் அரசியல் சக்தியை உடைக்க விரும்பினார்.
34

ஏனெனில் இவர்களின் பாரிய ஆதரவைப் பெற்றதாக முன்னேற்றக் க்ட்சி விளங்கியது. 1971 இல் தனது வரவு செலவுத் திட்டத்தில் மென்சா சடுதியாகத் தனது வருமானப் பங்கீடு தொடர்பான நோக்கினைச் செயற்படுத்தினார். நகர வேலையாட்களின் வருமானத்தின் மீது மென்சா 5 வீத அபிவிருத்தி வரியை (development leWy) விதித்தார். இராணுவச் செலவினை 12 வீதத்தினால் வெட்டினார். மிகை வருமானங்களில் (perquisities) குறைப்பு செய்வதன் ஊடாக அரச ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினரின் வருமானங்களை 25 வீதத்தினால் குறைத்தார்.
கானாவின் வருமானப் பங்கீடு பற்றிய மென்சாவின் கருத்தியலானது தவறானதாகக் காணப்பட்டது. கொக்கோ விவசாயிகள் அனைவருக்குமான மொத்தக் கொடுப்பனவுகளானது வீக்கமற்ற நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்பட்டபோது இச் சுட்டெண் 1960 இல் 100 ஆக இருந்து 1966 இல் 34 ஆக வீழ்ச்சியடைந்தது. ஆனால் அவை முன்னேற்றக் கட்சியின் தேர்தல் வெற்றியின்போது 62 ஆக உயர்வடைந்தது. ஆகக் குறைந்த வேதனமட்டமும் 1960இல் 100 ஆக இருந்து 1966 இல் 56 ஆக அதன் கொள்வனவுச் சக்தியில் வீழ்ச்சியைக் காட்டியது. இத்தசாப்தத்தில் சராசரி மெய்வேதனமும், சம்பளக் கொடுப்பனவுகளும் சிறியளவில் வீழ்ச்சியடைந்தன. கொக்கோ விவசாயிகள் மெய் விலைகளிலும் வருமானங்களிலும் ஏற்பட்ட வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டபோதும் பெரும்பாலான விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற உணவுப் பொருட்கள் சார்பளவில் வருமான நன்மைகளை அடைந்தன. அவற்றின் வர்த்தக நிலுவை 1960 இல் 100 ஆக இருந்து 1966 இல் 132 ஆக உச்ச நிலையை அடைந்ததுடன் மீண்டும் 1971 இல் உயர்வடைந்தது. கிராமியத் தொழிலாளர்கள் பெற்றுக்கொண்ட வருமானங்கள், மிகக் குறைந்த வருமானம் பெறுகின்ற நகர வேலையாட்களுடன் ஒப்பிடுகையில் அதிக வேறுபாடு கொண்டதல்ல என்பதையும் காண முடிந்தது.
அரசாங்கத்தின் நோக்கங்கள் என்னவாக இருந்தாலும் நிக்குருமாவின் கொள்கைகள் நகர வேலையாட்களுக்குச் சாதகமானது என்ற முக்கிய கருத்துத் தவறானது. கொக்கோ உற்பத்தியாளர்களின் வருமானத்தில் ஏற்பட்ட பெரும்பாலான வீழ்ச்சிக்கான காரணங்களை நோக்கினால் அவை உள்நாட்டுக் கொள்கைகளினால் அல்லாது உலக விலைகளின் வீழ்ச்சியினாலேயே ஏற்பட்டதென்பது புலனாகும். ஒட்டுமொத்தமாக நிக்குருமாவினதும், அடுத்து வந்த அரசாங்கங்களினதும் ஆட்சியில் கிராமியக் குடியிருப்பாளர் தமது சார்பளவான நிலைமைகளை விருத்தி செய்துள்ளனர். ஏனெனில் உணவுக்கான விலைகள் சார்புரீதியாக ஏனைய விலைகளிலும் பார்க்க உயர்வாக இருந்தன.
தேசியவிடுதலைக் கவுன்சில், முன்னேற்றக் கட்சி அரசாங்கங்களினதும் நிக்குருமாவினதும் ஆட்சியில் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றமற்ற
35

Page 21
நிலையில் தொடர்ந்திருந்ததையே அவதானிக்க முடிகின்றது. கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான முயற்சிகளே பகுதியாக இருந்ததுடன் பொதுவான போக்காகவும் காணப்பட்டது. கணிசமான அளவு இறக்குமதித் தாராளமாகக்கல் பூசியா நிர்வாகம் வரும்வரையும் 1967 இன் பெறுமதியிறக்கத்தின் இரண்டு வருடங்களின் பின்பும், பணவீக்கத்தினால் தாராளமயமாக்கலின் பயனுறுதி வாய்ந்த தன்மைகள் சிதறடிக்கப்பட்ட பின்பும் ஏற்படவில்லை. அப்பொழுது விதிக்கப்பட்ட இறக்குமதி மிகைக் கட்டணமானது சராசரி இறக்குமதிச் செலவில் 6 வீதத்தைக் கூட்டியது. கொக்கோ விலைச் செழிப்பு முடிவடைந்தபின் பேண்தகு மட்டத்துக்கு இறக்குமதிகளைப் பங்கீடு செய்வது போதாமல் இருந்தது. உள்நாட்டு விலைக்கட்டுப்பாடுகள் இக் காலம் முழுவதும் ஒருபோதும் கலைக்கப்படவில்லை. அத்துடன் அவை கொள்கை வகுப்போர்களினால் தொடர்ந்து முக்கியமானவையாகக் கருதப்பட்டன. தேசிய விடுதலைக் கவுன்சில் சில அரச பண்ணைகளை மூடிவிட்டது. சில அரச தொழில் முயற்சிகளை விற்பனை செய்தது. ஏனையவற்றை மீள் ஒழுங்குபடுத்தியது. அத்துடன் அநேக கைத்தொழில் நிறுவனங்களின் அரச முகாமைத்துவம் தொடர்ச்சியாகத் தேவை என்பதை ஏற்றுக் கொண்டது. தேசிய விடுதலைக் கவுன்சில் நிக்குருமாவின் இறைக் கொள்கையுடன் முரண்பாட்டைக் கொண்டிருந்தாலும் அரசாங்கச் செலவீடுகளையும், கூட்டுக் கேள்வியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சித்தது. பூசியா, மென்சாவின் கீழ் அரசாங்கமானது அபிவிருத்திச் செலவினங்களை விரிவாக்கியதுடன் அச் செலவுகள் நிக்குருமா அனுபவித்ததிலும் பார்க்கக் குறைவாகவே இருந்தது. 1965-71 காலத்தில் பொது, தனியார்துறை நுகர்வு சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90 வீதமாக இருந்ததுடன் அது 87 வீதத்துக்குக் கீழ் வீழ்ச்சியடையவே இல்லை. நிலையான-தாராளமயமாக்கல் காலப்பகுதியானது செயலாற்றத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுள்ளதா என்பது அடியாண்டைத் தெரிவு செய்வதில் தங்கியிருந்தது. 1965 இல் இருந்து 1971 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வருடாந்தம் 2.8 வீதமாக வளர்ச்சியடைந்தது. இது 1960-65 காலத்தில் பதிவுசெய்யப்பட்டதிலும் பார்க்கச் சிறிது குறைவாகக் காணப்பட்டது. ஆனால் 1965ஆம் ஆண்டுபேண்தகு தன்மையற்ற செலவுகளைக்கொண்ட வருடமாகவும் 1966 இன் பின்னடைவுக்கு இட்டுச் சென்றதாகவும் அமைந்திருந்தது. பின்னையதை அடியாண்டாகக் கொள்ளப்படின் வளர்ச்சியானது சிறந்ததாக 4.3 விதமாகக் காணப்படும் அல்லது தலா ஒருவருக்கு 2 சத வீதமாக இருக்கும்.
4. 1971 இன் பெறுமதியிறக்கம்
நிக்குருமாவுக்கு எதிரான புரட்சியின் பின், உண்மையிலேயே இறுக்கமான காலம் 1971 இன் இரண்டாவது அரைப் பகுதிக் காலமே. இக்காலத்தில்
36

அச்சுறுத்துகின்ற சென்மதி நிலுவைப் பிரச்சினை பெறுமதியிறக்கத்துக்கு இட்டுச் சென்றபோதும் அது தாராளமயமாக்கலுக்கான அரசாங்க உறுதிப்பாட்டை மேலும் நெருக்கியது. ஆனால் இரண்டு வாரங்களின் பின்பு ஏற்பட்ட கானாவின் இரண்டாவது இராணுவப் புரட்சியின் பின்பு சந்தைச் சக்திகள் அபிவிருத்தியையும், வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கான பிரதான கருவியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் பெறுமதியிறக்கமானது நவீன கானாவின் பொருளாதார வரலாற்றில் முக்கிய ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. அதன் தீர்மானங்களையும், அமுலாக்கத்தையும் விரிவாக ஆராய்வது பயன்மிக்கது.
1971 இன் யூல்ையில் இடம் பெற்ற மென்சாவின் வரவு செலவுத்திட்ட உரையின் பின்பே 1971 ஆம் ஆண்டு நெருக்கடி ஆரம்பமாகியது. இறக்குமதிகள் கணிசமான அளவு தாராளமயமாக்கப்பட்டிருந்தாலும் மெய்த்தாக்க நாணயமாற்று வீதமானது 1967 ஆம் ஆண்டின் பெறுமதியிறக்கத்துக்குப் பிந்திய மட்டத்துக்குக் கீழாக 30 வீதமாகக் காணப்பட்டது. இறக்குமதிகள் பேண்தகு மட்டத்துக்கப்பால் உயர்வடைந்தது. வர்த்தகக் கடன்களில் நிலுவைகளுக்கு மேலாக வீழ்ச்சிநிலையைக் கானா அடைந்தபோது செப்ரெம்பரில் இறக்குமதிக்கான நிதிக்கடன்களில் வெட்டினை மேற்கொள்ளப்போவதாக வழங்குநர்கள் எச்சரிக்கை செய்தனர். கொக்கோவிலைகள் அவற்றின் 1970ஆம் ஆண்டின் உயர்ச்சியிலிருந்து பின்வாங்கும் நிலை காணப்பட்டது. 1970-1971 வரை சராசரியான மொத்த விற்பனை விலைகள் 26 வீதம் வீழ்ச்சியடைந்தது. அடுத்துவரும் வருடத்துக்கு மேலும் சரியும் என எதிர்வு கூறப்பட்டது. கொக்கோ தவிர்ந்த ஏனைய ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதன் அவசியம் பரந்தளவில் அங்கீகரிக்கப்பட்டது. பிரதம மந்திரி பூசியா, அதிகரித்துவரும் நெருக்கடி பற்றி எச்சரிக்கை செய்ததுடன் மேலதிக வெளிநாட்டு உதவியையும், கடன்மீட்பு நிதியையும் கோரியபோது பெரும்பாலான கடன் வழங்குநர்கள் முக்கிய கொள்கை மாற்றங்களை வேண்டிநின்றனர். இத்தகைய கொள்கைகள் அச்சுறுத்தும் சென் மதி நிலுவைப் பிரச்சினைகளைச் சரி செய்யலாம் எனவும் தாராளமயமாக்கலுக்கான ஈடுபாட்டினை மேலும் வலுப்படுத்தும் எனவும் கருதப்பட்டது. ஆனால் தொடர்பில்லாத சில நிகழ்ச்சிகள் நெருக்கடிகளை அதிகரித்துவிட்டன. வர்த்தக சங்க காங்கிரஸ் (TUC) புதிய அபிவிருத்தி வரிக்கும், வீழ்ச்சியடையும் ஆகக் குறைந்த மெய் வேதனத்துக்கு எதிராகவும் வெளிப்பட்டது. இதற்குப்பதிலாக அரசாங்கம் வர்த்தக சங்கக் காங்கிரசைக் கலைத்ததுடன் நகர வேலையாட்களை மேலும் தனிமைப்படுத்தியது.
நவம்பரில் நெருக்கடிகளை ஆராய்வதற்கு மந்திரிசபை கூடியது. நிதிமந்திரி எத்தகைய பிரதான கொள்கை மாற்றத்துக்கும் குறிப்பாகப் பெறுமதியிறக்கத்துக்கு எதிராகக் காணப்பட்டார். இதனை ஏற்படுத்துவதன் மூலம் தனது அபிவிருத்தி இலக்குகளை
37

Page 22
இடர்ப்படுத்திவிடும் என நம்பினார். ஆனால் அத்தகைய அவரின் சிந்தனைக்கான காரணங்கள் கூறப்படவில்லை. உண்மையில் பிரதம மந்திரி இந் நெருக்கடியை உறுதியுடன் எதிர்நோக்க விரும்பினார். இதன் காரணமாக மத்திய வங்கிஆளுநர் ஜே. எச். பிறிம்போங்-அன்சா என்பவரை பொருளியல் வல்லுனர்களின் குழு ஒன்றைக் கூட்டிக் கொள்கைத் தெரிவுகளை ஆராய்ந்து அறிக்கையாக மந்திரிசபைக்குச் சமர்ப்பிக்குமாறு பணித்தார். கானா நாட்டவர்களையும், வெளிநாட்டுப் பொருளிய லாளர்களையும் கொண்ட குழுவானது தனது பணியைத் தீவிரமாக மேற்கொண்டதுடன் சில மாதங்களுக்குள் தமது பணியை நிறைவேற்றின. அவர்களினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பரிந்துரைகளில் இரண்டு அல்லது மூன்று வருட காலத்தில் அடிப்படையான சென்மதி நிலுவையில் எதிர்பார்க்கப்பட்ட 100 மில்லியன் சேடிஸ் பற்றாக் குறையை நிவர்த்திப்பதற்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. மூன்று தெரிவுகள் கவனத்தில் எடுக்கப்பட்டன. (1) இறக்குமதி அனுமதிப்பத்திரமுறைக்குத் திரும்புதல். (2) தீர்வைகளில் பாரிய அதிகரிப்பு (3) நாணயப் பெறுமதி இறக்கம். பொருளாதார நோக்கில் இறுதியானது ஏனைய இரண்டிலும் பார்க்க முன்னிலையில் காணப்பட்டமை தெளிவாகத் தெரிந்ததுடன் மந்திரிசபையினால் ஆர்வத்துடன் கவனத்திலெடுக்கப்பட்டதெரிவாகவும் இருந்தது. அனுமதிப்பத்திர முறையானது அரசாங்கத்தின் தாராளமயமாக்கலுக்கான ஈடுபாட்டுக்கு எதிரானதாக அமையும் என்பதினால் அதனைக் கடுமையாக எதிர்த்தன்ர். இத்தகைய விடயங்கள் பெரும்பாலான கொள்கை வகுப்போர்களுக்கு நடுத்தர நிலுவைப் பிரச்சினையாகவே தோற்றமளித்தது. ஆனால் பொருளியலாளர்கள் நீண்டகால அமைப்பு மாற்றத்தை மேம்படுத்தவும், குறிப்பாக ஏற்றுமதிப் பன்முகப்படுத்தல் மற்றும் வளர்ச்சி, வள ஒதுக்கீட்டுக்கான அதிகதிறன்களை உள்ளடக்கிய கொள்கைகளுக்கான தேவைபற்றிய ஆழமான உணர்வுடையவர்களாகக் காணப்பட்டனர்.
பெறுமதியிறக்கத்தை நம்பவைக்கின்ற கவர்ச்சியான காரணங்களைப் பெரும்பாலான பொருளாதார ஆக்கங்கள் அளித்தாலும் பெறுமதி யிறக்கத்தின் விரிவாக்கம் பற்றிய குறைவான வழிகாட்டல்களையே அவை கொண்டிருந்தன. இக்குழுவானது பொருத்தமான நிகழ்ச்சி கொண்ட பொருளாதாரஅளவீட்டு மதிப்பீடுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டது. பல வருடங்களாக இறக்குமதிக்கட்டுப்பாடுகள் ஆதிக்கம் செலுத்தியதினாலும், ஆரம்பகால வருடங்களுக்கான தரவுப் பற்றாக்குறையும் இறக்குமதி களுக்கான கேள்வி நெகிழ்ச்சியை மதிப்பிடுவதைச் சாத்தியமற்ற தாக்கிவிட்டது. அதனால் இக் குழுவானது தனது தரவுக்கும், முன்னிட்சி எதிர்வு கூறலுக்கும் பெருமளவில் ஊகங்களிலேயே தங்கியிருந்தது. குழுவின் மதிப்பீட்டின்படி 50 வீத பெறுமதியிறக்கம் (தலா டொலருக்கு 1.52சேடிஸ்)கொடுப்பனவுகளின் சமநிலையின்மையை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திருத்தியமைத்துவிடும் எனக் காட்டப்பட்டதுடன்
38

கடன் வழங்குவோரினால் அதிகரிக்கப்படும் நிதிப்பாச்சல்களும் குறிப்பிடப்பட்டது. ஆனால் மந்திரிசபையானது குறிப்பிட்ட பதிலீடான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் பெறுமதியிறக்கத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. (1) அரசாங்கச் செலவீட்டின் வெட்டு தடைசெய்யப்பட வேண்டும் . பதிலாக, அரசாங்க கொக்கோ வருமானங்களின் மீதான பெறுமதியிறக்கத் தாக்கமும், இறக்குமதி வரி வருமானங்களும் வரவு செலவுத் திட்டத்தினைச் சமநிலைப்படுத்த வேண்டும். (2) அரசாங்கத்தின் தொழில் அபிவிருத்திக்கான தேர்தல் த்ொகுதிவாரியான திறமுறைகளும், ஈடுபாடும் கொக்கோ உற்பத்தியாளர் விலைகளை உயர்த்தவேண்டுமென்ற கருத்துடையதாக இருக்கவேண்டும். (3) தொழிலாளர் சுமையினைக் குறைப்பதற்கு குறைந்த மட்டவேதனத்தில் சில அதிகரிப்புக்கள் செய்யப்பட வேண்டும். இத்தகைய நோக்கங்களை நிறைவேற்றும் பட்சத்தில் மந்திரிசபையானது 100 வீத தாக்கமுடைய பெறுமதியிறக்கத்தை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. எல்லாப் பக்கத்திலும் காணப்படும் நெருக்குதல்களைக் குறைப்பதற்கான ஒரு சாதகமானதெரிவாகபெறுமதியிறக்கம் தோற்றமளித்தது. பெறுமதியிறக்க வேலைகளை மேற்கொள்ள, மெய்வருமானங்களைக் குறைப்பதற்கான தேவையைத் தெரிவிக்கும் முயற்சிகளில் பொருளியலாளர்கள் காணப்பட்டாலும், கொள்கை வகுப்போர் இந்த அவசியத்தன்மையை ஏற்கும் போக்குடையவர்களாகக் காட்டிக் கொள்ளவில்லை. நுகர்வின் முதன்மைத் தன்மைதான் கானாவின் அரசியல் பொருளாதாரத்தில் மிக ஆழமாகப் பதிந்திருக்கும் பிரதான அம்சமே அன்றி அரசியல் அதிகாரமோ அதன்பாற்பட்ட விருப்புக்களோ அல்ல.
பொருளாதார வல்லுனர் குழுவானது வெளிநாட்டு, உள்நாட்டு நிதிநோக்கங்களைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் 75 வீத பெறுமதியிறக்கத்தை முன் மொழிந்தனர். அபிவிருத்தி வரி, ஏற்றுமதி ஊதியம் (export bonuses) இறக்குமதிக்கான மேலதிகக் கட்டணம் ஆகியவற்றை அகற்றுதல், கொக்கோ உற்பத்தியாளர் விலைகளில் 25 வீத அதிகரிப்பு: ஆகக் குறைந்த வ்ேதன மட்டத்தில் 14 வீத அதிகரிப்பு: செலவீட்டில் 48 மில்லியன் சேடிஸ் வெட்டு என்பன பிரதானமானவை. தொழில்நுட்பக் குழு எச்சரிக்கை செய்யும் குறிப்பையும் தயாரித்திருந்தது. அதில் நகர மத்திய வகுப்பினர், உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள், வர்த்தகர்கள் பெறுமதியிறக்கத்தினால் இழப்புக்களையும், கொக்கோ விவசாயிகள், ஏனைய ஏற்றுமதியாளர்கள், இறக்குமதிப்பதிலீட்ட விளர்கள், அரசாங்க வேலையாட்கள் நன்மைகளையும் அடைவர் எனக் குறி. :ட்டது. இப் பட்டியலில் இராணுவத்தை ஒரு, ம் சேர்த்துக் கொள்ள :)லை. இத்தகைய முக்கிய மதிப்பீடுளைப் பற்ற மந்திரிசபையில் உள்ளவர்களின் இறுதி உரைகள் மோசமான, தவறான விபரணத்துக்குட்பட்டன.
பெறுமதியிறக்கம் பற்றிய இறுதி முடிவு வஞ்சகத்தன்மை கொண்டதாக அமைந்திருந்தது. நிதி அமைச்சர், இறுதியில் 85 சதவி: உயர்வான
39

Page 23
மறுசீரமைப்பினை மேற்கொண்டதுடன் ஏற்றுமதி ஊதியத்தையும் இறக்குமதி மிகைக் கட்டணங்களையும் அகற்றாது நிறுத்தி வைத்துக் கொண்டார். மந்திரிசபையும் மனமார உறுதியளித்தது. இத்தீர்மானம் நத்தார் தினத்துக்குமுன் எடுக்கப்பட்டதுடன் நத்தார் தினத்தில் அறிவிக்கப்பட்டாலும் அடுத்த வாரத்துக்குப் பின்போடப்பட்டது. ஆரம்பத்தில் பொதுசன அபிப்பிராயம் சாதகமாக இருந்தது. ஆனால் வர்த்தகர்கள் விலைகளை உயர்த்த ஆரம்பித்தபோதுமக்களின் மனநிலை விரைவாக மாற்றமடைந்தது. வியாபாரிகள் பொருட்க்ளைக் கடைகளில் இருந்து அப்புறப்படுத்தினார்கள், வர்த்தகர்கள் தமது எதிர்ப்புணர்வைக் காட்டினாலும் விலைகள் படிப்படியாகக் குறைவடைந்திருக்கும். ஆனால் அரசாங்கத்தின் காலங்கடத்தும் தன்மையானது எதிர்விளைவுகளை இருவழிகளில் தூண்டிவிட்டது.
(1) மத்திய வங்கியிலிருந்து வெளிநாட்டு நாணயத்தைக் கொள்வனவு செய்யும் இறக்குமதியாளர்களுக்கு 180 நாள் வர்த்தகக் கடன்களை அனுமதிப்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் பெரும்பாலான பொருட்கள் ஏலவே விற்கப்பட்டோ அல்லது கடையில் தேங்கி, பணம் செலுத்தப்படாது இருந்ததினால் வர்த்தகர்கள் தாம் உயர்வான நாணயமாற்று வீதத்தில் வெளிநாட்டு நாணயமாற்றினை வாங்கவேண்டியிருக்கும் எனக் கருதிக் கொண்டனர். ஜனவரியின் ஆரம்பத்தில் அரசாங்கம், அத்தகைய கடன்கள் பழைய வீதத்திலேயே திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என அறிவித்தது. ஆனால் முரட்டுத்தனமான விலை அதிகரிப்புக்களைப் பற்றிய பொதுமக்களின் மனோநிலையை மாற்றுவது கடினமாக இருந்தது.
(2) அரசாங்கமானது விலைக்கட்டுபாடுகளைச் சீரமைப்பது அல்லது அகற்றுவது பற்றி மெதுவான போக்கினைக் கொண்டிருந்தது. அநேக வியாபாரிகள் கட்டுப்பாட்டுப் பொருட்களைக் கடைகளில் இருந்து இலகுவாக அகற்றி விட்டனர். இதனால் அருந்தல் நிலைமைகள் நெருக்குதல்களை ஏற்படுத்தின. வெளிநாடுகளில் இருந்து உதவி பற்றிய புதிய செய்திகள் எதுவும் வரவில்லை.
எந்த மூலாதாரங்களிலிருந்தும் மேலதிகமான அல்லது கடன் மீட்புநிதிகளைப் பெற்றுக்கொள்வதற்குமுன் பூசியா ஆலோசனைக்கு எதிராகச் செய்ற்பட்டார். சில உதவிகள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், உலக வங்கி ஆகியவற்றிடம் இருந்து கிடைக்கலாம் என பூசியா எண்ணம் கொண்டிருந்தாலும், பெறுமதியிறக்கத்தின் பின் இந்த நன்கொடையாளர்கள் எவரும் ஈடுபாடு காட்டவில்லை. பொதுமக்களோ வெளிநாட்டவர்களுக்கான கடன்களைத் திரும்பக் கொடுப்பதற்கு தமது வாழ்க்கைத் தரத்தில் குறைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்பதற்கான சாத்தியப்பாட்டை உணர்ந்து கொண்டவர்களாயினர்.
40

அடுத்த புரட்சி பொதுமக்கள் அபிப்பிராயம் அரசாங்கத்துக்கு எதிராக இருந்தபோது இடம் பெற்றது. கேர்ணல் "இக்னேசியஸ் அக்கீம் பொங்" (Colonel Ignatius Acheampons) 6T6 rushi for slas TD 9A565 L பொருளாதாரத்தைப்பற்றியோ அல்லது பெறுமதியிறக்கத்தைப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லையெனினும் இராணுவம் நடத்தப்பட்டவிதம்பற்றிக் கவனம் செலுத்தியிருந்தது. ஒரு நாளின் பின்பு, புரட்சி செய்த இராணுவத் தலைவர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்களுடன் கலந்து பேசிய பின் பெறுமதியிறக்கமானது விளக்கமான முறையில் நடத்திக்காட்டப்பட்டது. உண்மையில் சதிப்புரட்சியான" பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டது. அக்கீம் பொங்கின் பிரிவினர் பெறுமதியிறக்கத்துக்குப் பிந்திய அதிருப்தியைப் பயன்படுத்தியிருந்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பூசியா இங்கிலாந்து சென்றமையினால் ஏற்பட்ட சூழல் அவருக்குச் சாதகமாக அமைந்தது.
மதிப்பிறக்கமானது பூசியாவின் தேர்தல் தொகுதியை அடிப்படையாகக் கொண்ட அரசியலுக்குச் சிறந்த கருவியாக இருந்திருக்கும். கொக்கோ விவசாயிகள் போன்ற சாதகமான பிரிவினர் அவரது கட்சிக்கு வாக்களித்தனர். இது வேலையாட்களை அமைதிப்படுத்தியிருக்கும். ஆனால் நகரக் குடியிருப்பாளர்கள் அரசாங்கத்துடன் வெறுப்புக் கொண்டிருந்தமையினால் இராணுவச் சதியானது எவ்விதத் தயக்கமுமில்லாமல் இலகுவாக வெற்றியளித்தது. பெறுமதியிறக்கமானது நகரத்தில் வாழ்ந்த மத்தியதர வகுப்பினரை மிகக் கடுமையாகப் பாதித்தது. இவர்களே சதிப்புரட்சியை வரவேற்றுநின்றனர். குறுங்காலத்தில், நிரம்பல் நெகிழ்ச்சி பெரியதாக வருவதற்கிடையில் படிப்படியாக நன்மைகளைப் பெறுவோர் எனக் கருதப்பட்டவர்களும் பெறுமதியிறக்கத்திலிருந்து நன்மைகளைப் பெறவில்லை. ஆனால் இழப்புக்குரியவர்கள் விளைவுகளைத் துன்பங்களுடன் உணர்ந்து கொண்டனர்.
5. தேக்கநிலையில் 1970கள்
அக்கீம் பொங் அரசாங்கத்தின் தேசிய மீட்புக் கவுன்சில் (NRC) கானாவின் சேடிஸ் நாணயத்தை 1978 இல் 1.15 ஆக மீள்மதிப்பீடு செய்தது. உண்மையில் அண்மைக்கால வரலாற்றில் பற்றாக்குறையுடைய நாடுதான் அவ்வாறு செய்யும். நிக்குருமாவின் கடனின் பெரும்பகுதி பேச்சு வார்த்தைகளின் மூலம் வெற்றிகரமாக ஒழித்துக்கட்டப்பட்டது. பொருளாதாரக் கொள்கையின் கருவியாக இது மீண்டும் கட்டுப்பாடுகளுக்கும், அறிவுரைகூறலுக்கும் திரும்பிச் சென்றது. இக் காலத்துக்குரிய பொருளாதார வரலாறு எழுதப்படவில்லை. வெளியிடப்படவும் இல்லை. கொக்கோ விலைகளின் பதிவேடுகளின்படி 1970-77 வரைப்பட்ட காலத்தில் மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் எவ்வித வளர்ச்சியும் காணப்படவில்லை. ஏற்றுமதி, இறக்குமதிகளின்
41

Page 24
மெய்ப்பெறுமானம் வருடாந்தம் 10 வீதமாக வீழ்ச்சியடைந்தது. மொத்த உள்நாட்டு முதலீடும் வருடாந்தம் 9 வீதமாக வீழ்ச்சி பெற்றது.
1973-1979 காலத்தில் ஏற்பட்ட கொக்கோ விலைகளின் செழிப்பு எதிர்பார்க்கப்படாத ஒன்றாக இருந்ததுடன் 1971 ஆம் ஆண்டின் முதல்தரமான எதிர்வு கூறலாகவும் இருந்தது. 1971 இல் இருந்து 1977 வரை கொக்கோவுக்கான அலகுப் பெறுமதிகள் நான்கு மடங்குக்கு மேலாக அதிகரித்ததுடன் கானாவின் வர்த்தக மாற்று வீதத்தினை அக்காலத்துக்குரிய நாலில் ஒரு பகுதியில் விருத்திசெய்யப்போதுமானதாக இருந்தது. தேசிய மீட்புக் கவுன்சிலினால் மேற் கொள்ளப்பட்ட தவறான முகாமைத்துவத்தினால் இத்தகைய சாதகமான சூழ்நிலைகளைச் சரிவரப் பயன்படுத்தத் தவறிவிட்டது. மக்களின் அரசாங்கம் பிரதானமாக பெறுமதியிறக்கத்தையும், தாராளமயமாக்கலையும் வேண்டிநின்றபோது தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு அதிகாரம்பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் இராணுவ அரசாங்கம் தேவையான அதிகாரத்தைக் கொண்டிருந்தபோதும் விளங்கிக்கொள்கின்ற தன்மை அல்லது மனத்திடம் இல்லாதிருந்தது. ஏழுவருட 30 வீத பணவீக்கத்தின் பின் தேசிய மீட்புக் கவுன்சில் இறுதியாக தலா டொலருக்கு 3.58 சேடிஸ் என்ற வீதத்தில் கடுமையாக மதிப்பிறக்கம் செய்தது. நடைமுறையிலான மற்றும் தொடரும் பணவீக்க நிலைமையினைக் கவனத்திற் கொள்ளும்போது இது போதுமானதாக இருக்கவில்லை. 1978 பெறுமதியிறக்கமும் பூசியா மரணமும் பெருமளவிலான திருத்தங்களைக் கொண்ட ஆசிரிய தலையங்களை வெளிக் கொணர்ந்தது. அவற்றில் 1971 இல் பூசியா பெறுமதியிறக்கத்தின் தேவையைக் கானா நாட்டு மக்களின் மனதில் பதியவைக்கப்பெருமுயற்சிசெய்தார் என்பதை நினைப்பூட்டும் விடயங்கள் இடம் பெற்றிருந்தன.
அடுத்து வந்த அரசியல்ஸ்திரமற்றதன்மை பொருளாதாரக்கொள்கையைக் கேலிக்கிடமாக்கியது. அக் கிம் பொங் கினைப் பதவியிலிருந்து இறக்கியவர்கள் ஆட்சியின் சுமையாகக் காணப்பட்ட இராணுவத்தையும் ஆட்சியிலிருந்து இறக்கினர். மக்களாட்சிக்குத் திரும்புவதை நிறைவேற்றுவதற்கு முன்பு விமான அதிகாரியான றோலிங்ஸ் என்பவர் தனது இரு சதிப்புரட்சிகளில் ஒன்றை நிகழ்த்தினார். ஒரு மாதம் ஆட்சி செய்தபின் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட லிமான் அரசாங்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்தார். இரண்டு வருடங்களின் பின், 1971இல் பூசியா மேற்கொண்டது போன்ற தீர்மானங்கள் மீண்டும் வரவிருக்கின்றன என்ற மக்களின் வதந்தியை அடுத்து றோலிங்ஸ் மீண்டும் தலையிட்டார். அவர் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்ததுடன், தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கைத் தரத்தினை நிறுத்துவதற்கான எவ்வித தெளிவான பொருளாதாரக் கொள்கையையும் முன்வைக்கவில்லை. அதேநேரம், பணவீக்கம் மும்மடங்கு தசமவிதத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது.
42

உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. உத்தியோகபூர்வ வீதத்தினைவிட கறுப்புச் சந்தை தாணயமாற்று வீதம் பல மடங்கு உயர்வடைந்தது.
6. கானாவுக்கும் ஆபிரிக்காவுக்குமான படிப்பினை
கானாவின் பொருளாதாரத் திறமுறைக்கான தெரிவு, அங்கு காணப்பட்ட பயிற்சி பெற்ற, அனுபவமுள்ள கொள்கை ஆய்வாளர்கள், பொதுநிர்வாகிகள் ஆகியோரின் பற்றாக்குறையினாலேயே பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் மூளைசாலிகள் வெளியேற்றம் அண்மைக் காலங்களில் தீவிரமடைந்துள்ளதையும் காணலாம். பொருளாதாரக் கட்டுப்பாடுகளோ அல்லது பரந்தளவில் பொதுத்துறைத் தொழிற்றுறை களில் தங்கியிருத்தலோ அல்லது உயர்வான வேறுபாடு கொண்ட ஊக்குவிப்பு முறைகள் என்பன பயனுறுதி வாய்ந்த முறையில் இத்தகைய மனித சக்தியின் இக்கட்டான நிலைமைகளில் நிர்வகிக்கக் கூடியதாக இருக்கும். இச் சூழ்நிலைகளில் எந்த அரசாங்கமும் இயலுமான அளவுக்குச் சந்தைகளில் தங்கியிருக்க வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்குச்சிறியளவில் தலையீட்டினையும் கொண்டிருக்க வேண்டும். அதற்கு மேலாக இதன் சந்தையடிப்படையிலான கொள்கைகள் எளிமையாகவும், விரிவற்றமுறையிலும் வரையறையற்றதாகவும் இருக்கவேண்டும்.
கானாவும், பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளும் இத்தகைய திறமுறை வேலைகளை மேற்கொள்ளக்கூடியவர்களையே சந்தைப் பங்காளர்களாகக் கொண்டுள்ளது. மரபுரீதியான விவசாயிகளினதும், வாழ்க்கைப் பொருளாதாரங்களினதும் உருமாதிரியானது காலனித்துவ காலத்திலிருந்தே ஏற்பட்டுவந்துள்ளதுடன் 1950 களில் சில அபிவிருத்திப் பொருளியலாளர்களினால் நிலைநிறுத்தப்பட்டும் உள்ளது. இது யதார்த்தத்துக்கு மாறான கற்பனாவாதமாகும். பொருளாதார, மானிடவியல் வரலாறுகளில் இன்று உணவு, மூலப் பொருட்கள், எளியமுறையிலான தயாரிப்புக்கள் ஆகியவற்றில் நீண்டதுாரச் சந்தைகள் காலனித்துவ காலத்தின் வருகைக்கு முன்பே நன்கு செயல்பட்டிருந்ததை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கானாவில் இந் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொருளாதார ஊக்குவிப்பினால் ஏற்பட்ட கொக்கோ விவசாயிகளின் இடப்பெயர்வு, சந்தைப் பெண்களினால் நடத்தப்பட்ட உயர்பயன்பாடுடைய சில்லறை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகம் என்பன சந்தைச் சந்தர்ப்பங்களின் அனுகூலங்களை எடுத்துக்கொள்வதன் தகுதியைக் காட்டுகின்றது. ஆபிரிக்கத் தொழின்முறையாளர்கள் நவீன பொருளாதாரங்களில் செயற்படும்போது அவற்றில் முன்நில்ைக்கு வரும்வரையில் அல்லது தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் வரையில் பல தண்டகளைத் தாண்டவேண்டியுள்ளது. ஆனால் கானாவிலோ வேறு எந்த ஆபிரிக்க நாடுகளிலோ இத்தடைகள் அதிகம் சோதனைக்
43

Page 25
குட்படவில்லை. சந்தைப் பெண்கள் எப்பொழுதும் அரசாங்கக் கொள்கைகளின் பலிக்கடாவாகத்தான் தெரிகிறார்கள். அபிவிருத்தியின் முகவர்களாக அல்ல எதிரிகளாகவே தென்படுகின்றனர். கானாவில் கொக்கோ விவசாயிகள்தான் அதிக வரியைச் செலுத்துபவர்களாக உள்ளனர். இதனால் அவர்கள் கொக்கோவை, கொக்கோ வரிகள் குறைவாகக் காணப்படும் அயல்நாடுகளுக்குக் கடத்திச் செல்வதன் மூலம் தமது புத்திக் கூர்மையைச் காட்டிக் கொள்கின்றனர்.
பலர் கருத்துத் தெரிவித்துள்ளதன்படி தாராள, சர்வதேசமயப்பட்ட அபிவிருத்தித் திறமுறைகள் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளுக்குப்பாரிய வளர்ச்சியையும், வேலை உருவாக்கத்தையும், அதிக நன்மைகளின் பங்கீட்டினையும் அளிக்கக் கூடியது.1950-1980 வரைப்பட்ட கானாவின் அனுபவமானது இந்தக் கருதுகோளைச் சோதனை செய்வதாக அமையவில்லை. பொருளாதாரக் கட்டுப்பாடுகள் முற்றாக நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியபொழுது தாராளக் கொள்கைகள் குறுகிய காலப்பகுதிக்குள்தான் காணப்பட்டிருந்ததுடன் அதன் பயன்பாடு பற்றி அறிந்துகொள்வதற்குமுன்பேயே அவை துண்டிக்கப்பட்டுவிட்டன. 1950 இல் இருந்து கானாவின் மிக விரைவான வளர்ச்சியானது 1950 களின் இரண்டாவது அரைப்பகுதியில் விரிவாக்கக் கொள்கைகள் இருந்தபோதும் தாராளமயமாக்கலின் கீழேயே இடம் பெற்றிருந்தது. இவ் வளர்ச்சியானது பேண்தகு தன்மையுடையதாக இருக்கவில்லை. 1960 களின் இறுதிக் காலத்தில் ஸ்திரமான தாராளமயமாக்கல் காலத்தில் ஓரளவு பாரிய வளர்ச்சி தூண்டப்பட்டது. இதற்கான சான்றுகளும் தெளிவற்றதாக உள்ளது. எனவேதாராள பொருளாதாரக்கொள்கைகளை, அரசாங்கமானது ஏனைய நாடுகளின் அனுபவத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கானாவின் அண்மைக்கால வரலாறு சில பாடங்களைத் தந்துள்ளது. கட்டுப்பாடுகளைக் கொண்ட அரசாங்கத்திலிருந்து தாராளமய மாக்கலுக்கான பாதை எந்த அரசாங்கத்துக்கும் அபாயகரமானது. அரசியலில் ஸ்திரநிலையற்ற கானாவும் ஏனைய ஆபிரிக்க நாடுகளும் எந்த விடயத்திலும் முதன்மையான பதிலைத் தருவதில் ஊக்கமற்றவையாகவே காணப்படுகின்றன. ஏனெனில் அரசாங்கங்கள் தமது கொள்கைகளில் அடிப்படையான மாற்றங்களை நிலைநிறுத்த முடியாது என்னும் எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்றன. பயனுறுதி வாய்ந்ததாக இருக்கவேண்டுமெனின் குறிப்பிட்ட காலத்துக்குப் புதிய கொள்கைகளானது கடினமான சூழ்நிலைகளில் நிர்வகிக்கப்படவேண்டும். அத்தகைய மாற்றங்களை நிறுவனமயப்படுத்துவதற்கு வலிமையான அரசாங்கங்கள் அவசியம். ஆபிரிக்காவில் இதுவரையும் அத்தகைய அரசாங்கங்களும் அவற்றின் தலைவர்களும் மிகச் சிறியளவிலேயே கான்னப்பட்டதுடன் தாராளக் கொள்கைகளின் தேவையையும்
44

அறிந்திருந்தனர். ஆனால் கானாவின் அனுபவத்தில் அத்தகைய சிந்தனையுடையோர் அதிகாரப்பற்றாக்குறையைக்கொண்டிருந்தமையும், அதிகாரத்திலிருந்தோர் அத்தகைய சிந்தனையற்று இருந்தமையையும் காணமுடிகின்றது.
இறுதியாகத், தொடர்ந்து நிகழ்ந்துவரும் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் பொருளாதாரக் கொள்கைக்கான பங்குசிறியளவாகவே உள்ளது. தவறான முறையில் நிர்வகிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் நிலையான அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கே பங்களித்துள்ளது. ஆனால் சிறந்த கொள்கைகள் இதனைத் தீர்த்துவைக்கமுடியும். இன்று கானாவில் சிறந்த கொள்கைகள் தோற்றம் பெறும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. அப்படிச் சிறந்த கொள்கைகளை யாரும் முன்வைப்பார்களாயின் முன்பு இடம் பெற்றது போன்ற சதிப்புரட்சிகள் இவற்றினை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். கானாவில், உகண்டா, சாட் நாடுகளில் காணப்படுவதுபோன்று அரசியல் தீர்வானது பயனுறுதி வாய்ந்த பொருளாதாரக் கொள்கையினை முன்வைப்பதற்கு முன்பு காணப்பட வேண்டும். ஆபிரிக்கக் கண்டத்தின் ஏனைய நாடுகளுக்கும் இது பொருத்தமானது.
7. கருத்துரைகள் (comments)
யோஅன்சு
கானாவின் பொருளாதாரத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் அதன் பொருளாதார முறைமையின் இறுக்கத் தன்மையே. பொருளாதாரப்
பிரச்சினைகளைக் கையாள்வதற்கு பொருளாதாரக் கருவிகளைத்தான் பயன்படுத்தவேண்டுமென்ற அவசியம் கானா அரசாங்கத்துக்கு எப்பொழுதும் இருக்கவில்லை. ஏனெனில் எல்லா முக்கியமான பொருளாதார விடயங்களும் அரசியல் நெருக்கடிகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. பரந்தளவான கட்டுப்பாடுகளை நாட்டின் பொருளாதார நடவடிக்கை மீது பரீட்சிக்க விரும்புவதுபோல் அரசு தோன்றினாலும்,
யதார்த்தரீதியாக அடுத்துவந்த அரசாங்கங்களின் அனுபவமானது அரசாங்கம் உண்மையில் அத்தகைய கட்டுப்பாடுகளைக்
கொண்டிருக்கவில்லை எனக் காட்டியது. இத்தகைய முரண்பாட்டுக்குக் காரணம் என்ன?.
இம் முரண்பாடு, சிலவேளைகளில் தெளிவாகத் தெரிந்ததன்படி,
அரசாங்கமானது பொருளாதாரத்தில் பிரதான வேலை வழங்குநராக இருந்தமையே. (அட்டவணை 4).
45

Page 26
அட்டவணை 4: பொதுத்துறை வேலைவாய்ப்பு
(மொத்த வேலைப்படையின் சதவீதமாக)
1964 64.8 1966 72.9 1968 72.6 1970 70.1 1974 72.7 1976 76.1. 1978 77.8
Source: killick, (1978), p.314 for 1964-1970 data; Central Bureau Statistics,
1981, p. 218 for data from 1974-1978.
கூட்டான மெய்நுகர்வுச் செலவீட்டினைக் குறைக்கும் பிரச்சினையைக் கவனத்திற் கொள்ளும்போது மைக்கல் ரோஃமர் அவதானித்ததுபோன்று நிக்குருமாவுக்குப் பின் அரசாங்கமானது அவ்வாறு செய்வதில் சிக்கலை எதிர்நோக்கியது. குறைக்கப்பட்ட செலவானது மீண்டும் வரி அதிகரிப்பு மூலமோ அல்லது பெறுமதியிறக்கம் மூலமோ நிறைவு செய்யப்பட்டது. இவை இரண்டும் செலவுசெய்யக் கூடிய வருமானத்தைக் குறைத்துவிடும். இக் கொள்கையின் தாக்கமானது, வேதன அதிகரிப்புக்களுக்கான கேள்விகளைத் தடுக்கும் வேலை வழங்குநர்களின் ஆற்றலிலேயே தங்கியுள்ளது. அரசாங்கம் வேலை வழங்குநராக இருக்கும்போது அடிப்படையில் கைத்தொழில் பிரச்சினையாகக் காணப்படும் ஒன்று அரசியல் நெருக்கடியாக மாறலாம். ஒரு வகையில் அரசாங்கம் நுகர்வோர் செலவினைக் குறைப்பதற்காக அளவுமுறைகளை ஏற்றுக்கொள்கின்றது. மறுவகையில் வேலையாட்களுடன் சண்டையிட்டு இத்தகைய அளவீடுகளை மெய்வெட்டுக்காக மாற்றுகின்றது.
மைக்கல் ரோஃமரின் 1971 பெறுமதியிறக்கமானது சடுதியாகக் காட்டுகின்றதென்னவெனில் விளைவானது ஒரு ஏமாற்றுவித்தை என்பதே. மானியங்கள் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்புக்களின் வடிவில் ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு நஸ்டஈடு கொடுக்க முடியும், அத்தகைய சூழ்நிலைகளில், எல்லா அதிகாரக்குழுவினரையும் திருப்திப்படுத்துவதற்கு அதிக பணத்தை அச்சிடுவதற்கான விருப்பினைத் தடுப்பது கடினமானது. கொடுப்பனவு அதிகரிப்புக்கான ஒதுக்கீடு ஒரு பிரச்சினையாக இல்லாதிருந்தாலும் நுகர்வுக்கான அடைவு மிகக் கவனத்திற்குரியது. வளங்களானது விலைகள் மூலமாகவன்றி பங்கீட்டுமுறை மூலம் ஒதுக்கப்படும் ஒரு முறைமையில் பொருட்கள் மீதான வருமானத்துக்கும் ஆணைக்குமிடைப்பட்ட தொடர்புகள் தளர்வுடையன. கானாவின் முறைமையில் அரசாங்கமானது இறக்குமதி செய்யக் கூடியவற்றின் பங்கீட்டில் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதுடன் அவை நுகர்வின் முக்கிய
46

பகுதியாகவும் உள்ளன. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் இறுக்க மடைகின்றபோது பல்வேறு அரசாங்கங்கள் வழக்கமாக அரசாங்க வேலையாட்களுக்கு விசேட சலுகைகளை ஏற்படுத்துகின்றன. இது விசேட தண்டங்களைக் (penalities) கிராமியக் கொக்கோ விவசாயிகள் மீது சுமத்துகின்றது. இத்தகைய தனிச் சலுகைகளுக்கு உட்படாதவர்கள் பொருட்களை அதற்கு இணைவான சந்தைகளில் (parallel markets) கட்டாயம் கொள்வனவு செய்வர். நாணயங்களில் இத்தகைய வர்த்தகம் சட்டரீதியற்றதாக இருந்தால் இறக்குமதிகளைக் கடத்துகின்றனர். பொருட்கள் அரசாங்கக் கடைகளில் இருந்து திசை திருப்பப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் ஏற்றுமதிக் கடத்தலானது கொக்கோ விவசாயிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. அவர்கள் எதிர்நோக்குகின்ற இணையான சந்தை விலைகளில் தமது கொள்வனவுச் சக்தியைப் பேணுவதற்கான சந்தர்ப்பங்களை இது அளிக்கின்றது. கொக்கோவின் உற்பத்தியாளர் விலையானது உத்தியோகபூர்வமான நாணயமாற்று வீதத்தில் 1977 இல் இருந்து பெரும்பாலான வருடங்களுக்கு ஐவரிக்கோஸ்ட்டிலும் பார்க்கக் கானாவில் அதிகமாக இருந்தது. எனவே முடிவுப் பொருளை ஐவரிக்கோஸ்டில் விற்பதிலும் பார்க்கக் கானாவில் விற்பது உற்பத்தியாளர் நலன் அதிகமாக இருக்கும் என்பதை மறைமுகமாகச் சுட்டுகின்றது. ஐவரிக்கோஸ்ட் நாட்டுக்குள் கடத்திச் செல்வது தொடர்ந்தும் காணப்படுகின்றது. ஏனெனில் கானாவின் நாணயம் பெருமளவு மிகைப் பெறுமதியுடையதுடன் கறுப்புச் சந்தை நாணயமாற்று வீதத்தில் கொக்கோ விலைகள் கானாவிலும் பார்க்க ஐவரிக்கோஸ்டில் பத்து அல்லது அதற்கு மேலான காரணிகளினால் உயர்வானதாகக் காணப்படுகின்றது. (அட்டவணை 5).
அட்டவணை 5: கொக்கோ விலைகளும் கறுப்புச் சந்தை நாணயமாற்று
வீதங்களும்
(தலா மெற்றிக் தொன்னுக்கு உற்பத்தி விலை (சேடிஸ் நாணயத்தில்)
கானாவில் ஐவரிக்கோஸ்டில்
உத்தியோக நாணய கறுப்புச் சந்தையில் மாற்றுவீதம் நாணய மாற்றுவீதம்
1977 944 927 7115
1978 1778 1678 9637
1979 3333 3400 16867
1980 4000 3905 31240
1981 5333 3036 45450
1982 12000 2511 Π.8ι
source: International monetary fund, International Finance Statistics, 1982;
Picks Currency Yearbook and Economist Intelligence Unit,
47

Page 27
மெய்நுகர்வில் ஏற்படும்வெட்டுக்களுக்கான நேரடித்தடைகளை அரசாங்கத் தொழிலாளர் மேற்கொள்ளும்போது இவ்வெட்டானது கொக்கோ விவசாயிகள் போன்ற பலவீனமான பிரிவினர்க்கு மாற்றம் செய்யப்படுகின்றது. சனத்தொகையில் இவர்கள் அதிக உற்பத்திப் பிரிவினராக உள்ளனர். பெரிய பிரிவினர் இத்தகைய வெட்டுக்களிலிருந்து விதிவிலக்குப் பெறச், சிறிய பிரிவினரின் மீது இப்பாரிய சுமையானது வீழ்கின்றது. கடத்தல்மூலம் மறைமுகமாக ஊக்குவிப்பின் பெரும்பகுதி தடுக்கப்படுகின்றது. கொக்கோத் தோட்டங்களில் அறுவடை செய்ய மறுக்கப்படுகின்றது. அரசாங்கத்துக்கூடாக விற்க முடியாத வேறு பயிர்களைக் கொக்கோப் பயிர்களுக்குப் பதிலாக நடுதல் மூலம் எதிர்ப்புக் காட்டப்படுகின்றது. அரசியற் காரணங்களுக்காக அரசாங்கம் தனது ஊழியர்களைப் படியவைக்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு மேலாக, அரசாங்கமானது இதன் வாடகை வீதத்தையும் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. 1974 இல் இருந்து அரசாங்க வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதுடன் இக் காலத்தில் அரசாங்கப்பொருட்கள் சேவைகளின் வெளியீடு குறிப்பாகப் பெளதீகக் கட்டுமானத்தின் நிர்வகிப்பு உட்பட எல்லாம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே கானா அரசாங்கம் பொருளாதார நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதுபோல் தோன்றினாலும் யதார்த்தரீதியாகச்சிறிதளவையே கட்டுப்படுத்தியுள்ளது. அரசாங்கமானது தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வரைக்கும், நாட்டின் உற்பத்திச் சக்திகளை மேலெழும்பஅனுமதிக்கும் வரைக்கும்பொருளாதாரத்துக்கான நம்பிக்கை சிறிதளவே காணப்படுகின்றது.
KO 10 20 {X X X

பகுதி II
மொறிசியஸ்
ஸ்ரனிஸ்லோ வெல்லிஸ் பிலிப்பா லாம் சின் சோ
தமிழாக்கம்
மா. கருணாநிதி சமூக விஞ்ஞானக் கல்வித்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 28

மொறிசியஸ்
அறிமுகம்
மொறிசியஸ் ஒர் எரிமலைத் தீவாகும். இத் தீவு 81 கிலோ மீற்றர் நீளமும் 47 கிலோ மீற்றர் அகலமும் உடையது. அத்துடன் மடகஸ்காருக்குக் கிழக்கே 800 கிலோமீற்றர் தூரத்தில்இந்து சமுத்திரத்தில்அமைந்துள்ளது. ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் இத் தீவில் வாழ்கின்றனர். இத் தீவின் 1865 சதுர கிலோ மீற்றரில் ஏறக்குறைய அரைப்பங்கு நிலப்பரப்பு விவசாயத்துக்கு உகந்ததாகும். பல தீவுகளைக் கொண்ட மொரீசியஸ்சில் மிகப் பெரியது ரொட்றிக்கோ என்னும் தீவாகும். இது 560 கிலோ மீற்றர் தூரத்தில் கிழக்கேயமைந்துள்ளது. ரொட்றிக்கோ தீவு 104 சதுர கிலோமீற்றர் பரப்பையும் 35,000 பேருக்குக் கூடுதலான மக்களையும் கொண்டது.
மொறிசியஸ் வளமான எரிமலை மண்ணைக் கொண்டிருப்பதால் பல்வேறு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாயுள்ளது. உபஅயனக் காலநிலையும் இதற்குச் சாதகமாகவுள்ளது. மலைப் பாங்கான தன்மையினால், காலநிலையில் உப பிரிவுகளும் நிலவுகின்றன. மலைப்பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி கிடைக்கிறது. ஒவ்வொரு வருடத்தின் கோடை மாதங்களில் இடம் பெறும் சூறாவளிகள் விவசாயத்திற்குப் பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்துகின்றதுடன் ஐந்து அல்லது ஆறு வருடத்துக்கொருமுறை பேரழிவுகளுக்குக் காரணமாகவும் அமைந்துவிடுகின்றது. இடையிடையே வரட்சியும் நிலவுகின்றது. உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய அழகிய நிலத் தோற்றங்களைத் தவிர வேறெந்த இயற்கை வளமும் இத் தீவில் இல்லை. போட் லூயிஸ் சிறந்த இயற்கைத் துறைமுகமாகும். ஆயினும்மொறிசியஸ் இன்றைய கடல் வழிப்போக்குகளிலிருந்தும் மிகத் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1. வரலாற்றுப் பின்னணி
போர்த்துக்கேயரால் 1510 இல் இத் தீவு கண்டுபிடிக்கப்பட்டபோது குடியிருப்புக்கள் அற்றதாகவே காணப்பட்டது. 1658 வரையில் இத்தீவு போர்த்துக்கேயரது அல்லது ஒல்லாந்தரது கட்டுப்பாட்டின் கீழ்வரவில்லை. அத்துடன் நிரந்தரக் குடியிருப்புக்களும் உருவாக்கப்படவில்லை. (ஆயினும் ஒல்லாந்தர் இரு சந்தர்ப்பங்களில் குடியேற்றங்களை அமைக்க முயன்றார்கள்) வெளிநாட்டவர்கள் தீவின் இயற்கைத் தாவரங்களையும்
51

Page 29
விலங்குகளையும் பெருமளவில் அழித்தார்கள். அடர்ந்து வளர்ந்து காணப்பட்ட வைரமரக் காடுகள் அழிக்கப்பட்டன.
முதலாவது நிரந்தரக் குடியிருப்பு 1772 இல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியைச்சேர்ந்த முகவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. 1766 ஆம் ஆண்டில் மொரீசியஸ் பிரான்சியக் குடியேற்றநாடாக மாறியது. 1810ஆம் ஆண்டில் பிரித்தானியர் ஆட்சிக்கு உட்பட்டது. எனினும் குடியிருப்பாளர்கள் தமது கலாசார உரிமைகளைப் பேண உத்தரவாதமளிக்கப்பட்டதுடன் பிரான்சு நாட்டுச் சட்டமுறைமையும் பாதுகாக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் மொறிசியஸ் தன்னாதிக்கம் கொண்ட நாடாக மாறியதுடன், 1968இல் பூரண சுதந்திர நாடாகவும், பொதுநலவாயத்தின் அங்கத்துவ நாடாகவும் விளங்கியது.
பிரான்சு நாட்டுக் குடியேற்றவாசிகள் இத் தீவில் கரும்புத் தோட்டங்களை அமைத்ததுடன், அத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மடகஸ்கார், கிழக்கு ஆபிரிக்கா முதலிய நாடுகளிலிருந்து அடிமைகளைக் கொண்டு வந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இங்கு வாழ்ந்தோரில் ஒவ்வொரு நால்வருக்கும் ஒருவர் என்ற விகிதத்தில் வெள்ளையர்கள் இடம்பெற்றிருந்தனர். 1807, 1839 ஆகிய ஆண்டுகளில் அடிமை வியாபாரம் அதிகரித்துக் காணப்பட்டதாயினும் நான்கு வருடகால இடைவெளிக்குப் பின்னர் அது தானாகவே ஒழிந்துவிட்டது. 18 ஆம் நூற்றாண்டில், பெருந்தோட்டங்களைப் போன்று துறைமுகத் தொழில் தீவின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியதாயினும், பிரித்தானியராட்சிக் காலத்தில் அது வீழ்ச்சியுற்றது. இதனைத் தொடர்ந்து பெருந்தோட்டங்கள் மீண்டும் வளம்பெறத் தொடங்கின. அத்துடன் 1820 க்கும் 1840 க்கும் இடைப்பட்ட காலத்தில் கரும்புச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பு ஐந்து மடங்காகப் பெருகியது.
அடிமைகளுக்கு விடுதலையளிக்கப்பட்டபோது, அவர்களுட் பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டங்களை விட்டுச் சென்றமையால், தொழிலாளருக்கு ஏற்பட்ட கேள்வியை ஈடுசெய்ய இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டனர். ஆரம்பத்தில் இத்தொழிலாளர்கள் அவர்களுடைய ஐந்தாண்டு ஒப்பந்த முடிவில் நாடு திருப்பியனுப்பப் பட்டார்களாயினும் பின்னர் பலர் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினர். அடிமையொழிப்பு நிகழ்ந்த வருடத்திலேயே முதலாவது வருகை இடம் பெற்றது. 1850 ஆம் ஆண்டளவில் தேறிய உள்வருகை 58,700 ஆக உயர்ந்ததுடன் 1860 ஆம் ஆண்டளவில் இது 101,000 ஆக மாறியது. இதன் பின்னர் இந்தியாவிலிருந்து வருவோர் தொகை வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டதுடன் 1880 இன் பின்னர் அதற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் இந்தியர்களே பெரும்பான்மை யினராகவும் காணப்பட்டனர். மிக அண்மைக் காலத்தில் மொறிசியசுக்கு
52

வந்து சேர்ந்த இனக் குழுக்களில் சீனரும் அடங்குவர். 1830 இல் சிறு தொகையினராக வரத் தொடங்கியவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெருந்தொகையாக வரத் தொடங்கினர். ஆரம்பத்தில் பெருமளவுக்கு ஆண்களே வந்தனராயினும் முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் பெண்களும் வரத் தொடங்கினர்.
மொறிசியஸ் தீவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றதெனினும் அவற்றுள் கிறெயோல்(creo)மொழியே முக்கிய இடத்தைப்பெறுகின்றது. இம்மொழி பிரெஞ்சுப் பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டதுடன் கலப்பின மக்களால் (creole) பேசப்படுகிறது. சிறுதொகையினரான செல்வாக்கு மிகுந்த குழுவினரான பிரான்சிய-மொறிசியர்கள் பிரெஞ்சு மொழியைப் பேசுகின்றனர். சகல இனக் குழுவினரின் பின்னணிக்கு ஏற்ப கல்வி கற்பிக்கப்படுகின்றது. ஆரம்ப நிலையில், பிரான்சிய மொழி, இந்தி, தமிழ் மற்றும் சீனமொழிப்பாடசாலைகள் உள்ளன. இவ் வெளிப்படையான முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஆங்கிலத்திலும் பிரான்சு மொழியிலும் தேர்ச்சியடைதல் தமது வர்த்தகத் தொடர்புகளுக்கு நன்மையாக இருக்கும் எனப்பலர் நம்புகின்றனர்
(1) பொருளாதாரம்
பிரித்தானியராட்சிக் காலத்தின் ஆரம்ப வருடங்களில் 1830 களில் இருந்து 1860 களின் பிற்பகுதிவரை மொறிசியசின் பொருளாதாரம் செழிப்பாக இருந்தது. 1826 இல் பெரிய பிரித்தானியா மொறிசியஸ் நாட்டுச் சீனிக்கு சலுகையடிப்படையிலான இறக்குமதித் தீர்வை அந்தஸ்தை வழங்கியிருந்தது. பிரித்தானிய மேற்கிந்தியர்கள் அன்றிலிருந்து அதனை அனுபவித்து வந்தனர். மொறிசியசின் உற்பத்தி விலை 1823 இல் 100 இறாத்தலுக்கு 25 சிலிங்கிலிருந்து 1826 இல் 58 சிலிங் வரை உயர்ந்தது. கரும்புச் செய்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பு 1820 - 1830 களில் 26,000 ஏக்கராகவும் அதனைத் தொடர்ந்து வந்த தசாப்தத்தில் 40,000 ஏக்கராகவும், 1840 களில் 59,000 ஏக்கராகவும் 1850 களில் 110,000 ஏக்கராகவும் விரிவடைந்தது. சீனியுற்பத்தியானது 1820களின் பின்னரைப் பகுதியில் சராசரி 23,000 மெட்ரிக் தொன்னிலிருந்து 1850 இல் 55,000 தொன்னாகவும், 1860 இல் 130,000 தொன்னாகவும் அதிகரித்தது. இதனையடுத்து வந்த தசாப்தங்களில் வளர்ச்சி தாமதமடைந்தது. பயிர்ச்செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பின் அளவும் குறைவாகவே அதிகரித்தது. 1861-1900 காலப்பகுதியில் 124,000 ஏக்கரளவிலிருந்து, 1901-1908 காலப்பகுதிவரை 127,000 ஏக்கராக உயர்ந்தது. தொழில்நுட்பத்தில் உண்டான முன்னேற்றங்கள் 1860 க்கும் அந் நூற்றாண்டு இறுதிவரைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 45 சதவீத அதிகரிப்பை ஏற்படுத்தியது எனினும் பயிர்ச்செய்கையின் மூலம் பெற்ற இலாபம் குறைவடைந்தே காணப்பட்டது.
53

Page 30
1800 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார மந்தப் போக்கிற்குப் புறக்காரணிகளே காரணமாக இருந்தன எனலாம். 1846 இல் பெரிய பிரித்தானியா தனது முன்னுரிமை முறைமையை (preferential system) நிறுத்திக் கொண்டமையுடன் முதன்முறையாக, உற்பத்தியாளரைச் சுதந்திரமான போட்டிக்கு முகங்கொடுக்கவும் இடமளித்தது. நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யும் வகையில் பெரிய பிரித்தானியா சகல சீனி இறக்குமதிகள் மீதும் தீர்வையை விதித்தது. இச் சுங்கத் தீர்வை 1874 இல் நீக்கப்பட்டதாயினும், 1901 இல் மீண்டும் விதிக்கப்பட்டது. அதேவேளை ஏனைய ஐரோப்பிய நாடுகள் அரும்புவிடத் தொடங்கிய தமது பீற் சீனித் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதில் சிரத்தையுடையவையாயிருந்தன. அதன் விளைவாக மொரீசியஸ், சீனிக்கு உறுதியான சந்தையைத் தேடும் பொருட்டு இந்தியாவை நாடியது. எவ்வாறாயினும் அவை பிரித்தானியக் குடியேற்ற ஆட்சிக் காலத்திலும் பார்க்கக், குறைந்த வருவாய் தருவனவாகவே இருந்தன.
இன்னொரு பிரச்சினையாக, 1850, 1860களில் நிலவிய செழிப்பின் பின்னர் கப்பல் மூலமான வர்த்தகம் மெதுவாக வீழ்ச்சியடைந்ததைக் குறிப்பிடலாம். 1850 இல் மட்டும் லூயிஸ் துறைமுகத்துக்கு 470 கப்பல்கள் 136,000 தொன் பொருட்களை இடம் மாற்றுவதற்கு வருகை தந்திருந்தன. கப்பல் வழிச் சட்டங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டில் பிரித்தானியக் கப்பல்கள் அல்லாதவற்றின் வர்த்தக நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. துறைமுகத்தில் இன்னும் கூடியளவில் வர்த்தகம் நடைபெற்றது. குறிப்பாக அவுஸ்திரேலியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், அது கப்பல்களுக்குப் பொருட்களை மாற்றும் பாரிய சந்தையாக விரிவடைந்தது. 1858 இல் இத்துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பல்களின் தொகை 825 ஆகவும், அவற்றில் மொத்த இடம்மாற்றல் 308,000 தொன்னாகவும் உயர்ந்தது . ஆனால் , 1869 இல் சுயஸ் கால் வாய் திறக்கப்பட்டதனால், ஐரோப்பாபிலிருந்து இந்தியாவுக்கும், அவுஸ்ரேலியாவுக்குமான போக்குவரத்துத் தூரம் குறைவடைந்தது. அத்துடன் நீராவிக்கப்பல்கள் வருகைதரத் தொடங்கியபின், லூயிஸ் துறைமுகத்தின் வசதிகள் போதாதிருந்தமையால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது.
இந்நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் ஏற்பட்ட இயற்கையழிவு மொரீசியசையும் பாதித்தது. 1854 இல் கொலரா என்னும் தொற்று நோயால் 17,000 பேர் இறந்தனர். மற்றும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மலேரியா நோயினால் 1866-1868 க்கு இடைப்பட்ட காலத்தில் 50,000 பேர் கொல்லப்பட்டனர். 1892 இல் வீசிய சூறாவளி பெருமளவு சொத்துக்களை அழித்ததுடன் 1200 பேர் வரையில்இறந்தனர். மலேரியா காரணமாக லூயிஸ்துறைமுகம் மக்களால் கைவிடப்பட்டதுடன் 1893 இல் ஏற்பட்ட பெருந்தீயினாலும் முற்றாகச் சேதமாகியது.
54

மந்தைகளும் பொதிசுமக்கும் விலங்குகளும் நோயினால் அடிக்கடி பாதிக்கப்பட்டன. மற்றும் 1902இல் ஏற்பட்ட வெப்பமண்டல குருதிக்குறை (Surra epidemic) என்னும் கொடிய நோயினால் குதிரைகளும் கோவேறு கழுதைகளும் கொல்லப்பட்டன. இவை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்குக் கரும்பு அறுவடையையும்போக்குவரத்தையும் பாதித்தன.
முதலாம் உலக யுத்தத்தின் பின்னர், மொறிசியஸ் ஒரு புத்துயிர்ப்பை அனுபவித்தது. 1919 இல் ஏகாதிபத்திய முன்னுரிமை முறைமை தோற்றுவிக்கப்படலாயிற்று. இது மீண்டும் சிலவகைப் பாதுகாப்புடன் சீனிக்கான சந்தையைப் பெற்றுக்கொடுத்ததுடன் விலையும் உயர்வடைந்தது. மற்றும் சீனி உற்பத்தி 1920 இல் 259,000 தொன்னுக்கு மேலாக உயர்வடைந்தது. ஆனால், 1920 களின் இறுதியிலும் விஷேடமாக 1930 களிலும் எதிர்பாராத பல கஷ்டங்களினால் நிலைகுலைந்தது. இரண்டாம் உலக யுத்தம்முடியும்வரை பொருளாதாரம் மந்த நிலையிலேயே இருந்தது.
(ii) a Jáfu 6-d5ðLDÚL LáF(pomp (The Constitutional Regime)
பிரித்தானிய குடியேற்றங்களுள் மொறிசியஸ் வழக்கத்துக்கு மாறான தன்மை கொண்டது. சமூக, பொருளாதார ரீதியாக முன்னிலை வகித்த குழுவினர் ஐரோப்பியராகவே இருந்தனர். பிரித்தானியர் நாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்னர் பிரெஞ்சுக் குடிகள் சுயஆட்சி முறையை நன்கு அனுபவித்தனர். எதிர்க்குழுவினருக்குத் தன்னாதிக்கத்தை வழங்குவதற்குப் பிரித்தானியர்கள் விரும்பவில்லை. அத்துடன் தீவின் கற்றோர் குழாத்தை அந்நியப்படுத்திக்கொள்ளவும் முயலவில்லை. அதே வேளையில், குடியேற்ற ஆட்சி அலுவலர்கள் ஏனைய சமூகக் குழுக்களின் விருப்பங்களைப் பேண வேண்டிய நிலைக்கு உட்பட்டிருந்தனர். குறிப்பாக நிறத்தவர்களையும் (இரத்தக் கலப்பு, ஆபிரிக்கர்) இந்தியர்களையும் பாதுகாக்க வேண்டியேற்பட்டது.
இத்தகைய உள்ளகப் பிரச்சினைகள் காரணமாக, நீண்ட காலத்துக்கு ஆளுநர் தனித்து அதிகாரம் கொண்டவராக விளங்கினார் எனினும் 1825 இல் ஆளுநரையும் ஏனைய நான்கு பதவி வழிவந்த உத்தியோகத்தர்களையும் உறுப்பினராகக் கொண்ட ஆட்சிக் கவுன்சில் உருவாக்கப்பட்டது. 1882 இல் இக் குழுவானது மாற்றியமைக்கப் பட்டதுடன் அப் புதிய அமைப்பில் ஆளுநரும் பதவிவழிவந்த உத்தியோகத்தர்கள் ஏழுபேரும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட ஏழு மொறிசியர்களும் இடம் பெற்றனர்.
உண்மையான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அரசாங்கம் 1885 இல் ஆரம்பித்தது. இது யாப்புமுறையில் சில மாற்றங்களையும், புதிய கவுன்சில்
ஒன்றையும் உருவாக்குவதன் மூலம் அமைக்கப்பட்டது. இக் கவுன்சில்
55

Page 31
ஆளுநருக்குப் புறம்பாக 8 பதவிவழிவந்த உத்தியோகத்தர்களையும் 9 நியமன உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. வெள்ளையர்களுக்கும், செல் வந்த கலப்பினத்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்குதல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் 1886 இன் ஆரம்பத்தில் ஆளுநர் இந்தியர் ஒருவரை அரசுக் கவுன்சிலுக்கு நியமித்தார். அவ்வாறிருந்துங்கூட 1926 வரையில் தேர்தல்தொகுதிகளில் இந்தியர்கள் வெற்றிபெறவில்லை. இந்த அரசியல்யாப்பானது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரும் வலுவுடையதாக இருந்தது.
(iii) sepasi ulu Taisib (Social Stratification)
இத் தீவின் பொருளாதார அமைப்பு சொத்துரிமையுடைய வகுப்பினருக்கும் தொழிலாளருக்குமிடையே பெரும் முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கரும்புச் செய்கை மற்றும் பதனிடல் போன்றவுற்றில் எத்தகைய நுட்பங்களும் பயன்படுத்தப்படவில்லை. உற்பத்தியின் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் விளைவாக, நிலச் சொந்தக்காரர்கள் குறைந்த கூலிக் கொள்கையைத் தொடர்ந்தும் கடைப் பிடிக்கத் தொடங்கினர். மலிவான தொழிலாளரைப் பெருந்தொகையாகப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் இவர்கள் இந்தியாவை நாடினர்.
தொழில்முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்த முறைமை (indenture System) அடிமைமுறையை ஒழித்ததாயினும் நிலப்பிரபுக்களுக்குமுக்கிய அந்தஸ்தை வழங்கியது மட்டுமன்றி, அதிகாரத்தைத் தவறான வழியிற்பிரயோகிக்கவும் உதவியது. வேலையாட்கள் சார்பாக முடிக்கும் (Crown) பல்வேறு மேன்முறையீடுகள் செய்யப்பட்டபோதும் அவற்றைக் கண்டுபிடிக்கப் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தியத் தொழிலாளரைப் பாதுகாக்கும் பல சட்டங்கள் நிறைவேற்றப்படலாயின. 1907ஆம் ஆண்டில் முடிக்குரிய ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் மேலும் இந்தியர் நாட்டுக்குள் வருவது தடைசெய்யப்பட்டது. இவை மொறிசியத் தொழிலாளரின் நிலைமையைப் பலப்படுத்தியது. 1922ஆம் ஆண்டின் தொழிற்சட்டமொன்று (Labour law) தொழிலாளர்கள் நீண்டகால அடிப்படையில் பெருந்தோட்டங்களில் இருக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தை நீக்கியது. அரசாங்க ஒழுங்கு விதிகள் எப்பொழுதும் பயனுடையனவாக இருக்கவில்லை. (உண்மையில் 1887 ஆம் ஆண்டுச் சட்டம் தொழிலாளரைப் பாதுகாக்கவென இயற்றப்பட்டதாயினும், அதற்குத் தொழிலாளரைக் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருக்கக் கூடியவகையில் விளக்கமளிக்கப்பட்டது) இவ்விதமான அணுகுமுறை தொழிலாளரின் கோபத்தைத் தணித்ததுடன் அந்நேரத்தில் குழப்பம் உருவாவதையும் தடுத்தது.
56

செல்வம் மிகுந்த நிலச்சொந்தக்காரருக்கும் வறிய தொழிலாளருக்கு மிடையே நிலவியிருந்த முரண்பாடுகள் இடைத்தர வருமானமுடைய இரண்டு குழுக்களின் தோற்றத்துடன் சிறிதளவு பரவலாக்கப்பட்டது எனலாம். இதில் கிறெயோல்ஸ் (creoles) குழுவில் சிலர் அடிமைமுறை நீக்கப்படுவதற்கு முன்னரே சொத்துக்கள் மற்றும் கல்வி போன்றவற்றைப் பெற்றுக் கொண்டார்கள் . அத்துடன் நிர்வாகம் அல்லது உயர்தொழில்களிலும் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். இரண்டாவது குழு சிறிய அல்லது இடைத்தர அளவான கரும்புத்தோட்டச் சொந்தக்காரரை உள்ளடக்கியது. இக் குழு இந்தியக் களஉத்தியோகத்தர் மத்தியிலிருந்து தோன்றயது. இவர்கள் பெருந்தோட்டங்களுக்குத் தொழிலாளார்களை வழங்குதன் மூலமும் அவர்களை மேற்பார்வை செய்வதன் மூலமும், தொழிலாளருக்குக் கடன்கொடுப்பதன் மூலமும் தம்மை வளப்படுத்திக் கொண்டனர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சிர்டாஸ் (sirdars) எனப்படுபவர்கள் தமக்கெனச் சொந்தமாக நிலங்களை வாங்க முயற்சி செய்தனர். சீனி விலை வீழ்ச்சி, கூலிச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட நிலவுரிமையாளர்கள் தமது நிலங்களை இவர்களுக்கு விற்பனை செய்தனர். குறைவான உற்பத்தித்திறன் கொண்ட நிலங்களில் கலப்புப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த நூற்றாண்டில் பெருந்தோட்டங்களினால் ஏறக்குறைய 32 சதவீதமான கரும்புச் செய்கை நிலங்கள் விற்கப்பட்டன அல்லது குத்தகைக்கு விடப்பட்டன.
(iv) og gáfuusio
1885 இல் அரசியல் யாப்பின் அறிமுகத்தினைத் தொடர்ந்து, வாக்குரிமை பெற்றவர்கள் இரண்டு எதிரணிகளாகப் பிரிந்து கொண்டனர். ஒலிகார்ச் (Oligarchs) கட்சி, முற்போக்குக் கட்சி என்பன உருவாக்கப்பட்டன. 1907 இல் நிறத்தவர்களால் ஆதரவு நல்கப்பட்ட முற்போக்குக் கட்சியும், தாராண்மைப் போக்குடைய வெள்ளையர்களும் முறையான கட்சியமைப்பொன்றை உருவாக்கினர். அக் கட்சி "The Action Liberale" என அழைக்கப்பட்டது. அரசியலில் மக்களின் பங்குபற்றல் இடம்பெறவில்லையாயினும் 1936 வரை பிரித்தானிய தொழிற்கட்சியை முன்மாதிரியாகக் கொண்டு மொறிசிய தொழிற்கட்சியைக் கலாநிதி மெளரிஸ் கூர் என்ற கிறெயோல் தலைவர், இந்திய-மொரீசியரான ராமா சகாடியோ (RamaSahadeo) என்பவரைப் பொதுச் செயலாளராகவும் கொண்டு உருவாக்கினார். மொறிசிய அரசியலில் மிக விரைவில் தொழிற் கட்சி முக்கிய இடத்தைப் பெற்றது. 1937 இல் வேலை நிறுத்தங்களும் புரட்சிகளும் பரவத் தொடங்கியபோது, இக் கட்சி தொழிலாளரின் பிரதிநிதியாகத் தோற்றம் பெற்றது. 1940 இல் கலாநிதி (பிற்காலத்தில் சேர்) சேவுசாகுர்ராம்கூலம் என்ற கட்சியின்முக்கிய பிரமுகர் கவுன்சிலுக்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் தன்னைத் தொழிலாளர்களின்
57

Page 32
நாயகனாகவும் சுதந்திரத்தினை ஆதரிப்பவராகவும் நிலைப்படுத்திக் கொண்டார்.
1937 ஆம் ஆண்டுக் கலகத்தின் பின்விளைவாக அரசாங்கமானது, விசாரணைக்கான ஆணைக்குழுவினை நியமித்துக்கொண்டது (கூப்பர் ஆணைக் குழு). பெருந்தோட்டத் தொழிலாளரினதும் , சிறு விவசாயிகளினதும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை இவ் ஆணைக் குழு நோக்காகக் கொண்டது. ஆணைக் குழுவின் விதந்துரைகளுக்கேற்ப 1938 இல் கைத்தொழில் இணைப்புச் சட்டம் தொழிற்சங்கங்களைச் சட்டரீதியாக ஏற்றுக்கொண்டது. எனினும் தொழிற்சங்க நடவடிக்கைகள் நோக்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. கைத்தொழில் சம்பந்தமான தகராறுகள் ஆளுநரால் நியமிக்கப்பட்ட இணக்கச் சபைக் குச் சமர்ப்பிக்கப்பட்டன. 30 நாட்களுக்குள் தீர்த்துவைக்கப்படாத தகராறுகள் சம்பந்தமாகவே வேலை நிறுத்தங்கள் தொடர இடமளிக்கப்பட்டது. மீண்டும் 1943 இல் தொழிலாளர் பிரச்சினைகள் கிளர்ந்தெழுந்தன. இதன் பலனாக இறுதியில் அரசாங்கம் தொழிலாளர் அமைப்புகள் மீது விதித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. உள்ளூருக்குரிய பண்புகள் கொண்ட முதலாவது தொழிற்சங்கமும் அதில் அங்கம் வகித்தவர்களும் 1943 வரையில் தேர்ச்சி பெற்ற தொழிலாளராக இருந்தனர். ஒன்றிணைந்த தொழிலாளர் சங்கத்தை உருவாக்க விவசாயத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தபோது இந் நிலை காணப்பட்டது. இதன் பின்னர், தொழிற்சங்கங்கள் ஒரு தனியான, அரசியல் ரீதியாக ஐக்கியமுடைய அமைப்பாக உருவாக முடியாவிட்டாலும் பொதுவாழ்க்கையில் அவை முக்கிய பங்கினை ஏற்கத் தொடங்கின.
2. இரண்டாம் உலகயுத்தம் தொடக்கம் 1962 வரை
இரண்டாம் உலக யுத்தத்துக்கும் 1962 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் பழைய ஆட்சிமுறையின் முடிவு காலமாகக் கொள்ளப்பட்டது. இக் காலப்பகுதியிலேயே தீவு சுய- ஆட்சி மற்றும் சுதந்திரம் நோக்கிய துரித முன்னேற்றங்களைக் கண்டது. அது இன்றும் கரும்புப் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால் அதன் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. பொருளாதாரக் கொள்கையில் தீவிரமான மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
(1) பொருளாதாரம்
முதலாம் உலகயுத்தம் பொருளாதாரத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு முரணாக இரண்டாம் உலகயுத்தம் தீவின் முக்கிய வாடிக்கையாளரையும், நிரம்பலுக்கான மூலகங்களையும் படிப்படியாக இழக்கச் செய்தது. இதன் விளைவாக அரசாங்கம்
58

பெருந்தோட்டங்களுக்கும் பெருந்தோட்டக்காரர்களுக்கும் உணவுப் பயிர்களைப் பயிரிடுமாறு கட்டளையிட்டது. உணவு நிரம் பல் பற்றாக்குறையாக இருந்தாலும்போரின் பின்னர் அதிகாரம் வாய்ந்தவர்கள் மானிய முறையையும், உத்தரவாத விலைத் திட்டத்தையும் அறிமுகம் செய்தனர். மீண்டும் எவ்வித கட்டுப்பாடுமின்றி இறக்குமதி உணவுப் பொருட்கள் கிடைத்தபோது அவை நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து உணவு உற்பத்தி விரைவாக வீழ்ச்சியடைந்தது.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது சீனி உற்பத்திக்கான சந்தைகள் பாதிப்படைந்தன. 1945 ஆம் ஆண்டில் உற்பத்தி 138,000 தொண்னாக இருந்தது. 1860 ஆம் ஆண்டிலும் பார்க்க இது 8000 தொன்களால் மட்டும் கூடுதலாக இருந்தது. போர் நிலவரங்களின் முடிவில் பிரித்தானிய அரசாங்கத்தின் 2.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் கடனுதவியாலும் உலக விலைகளின் உயர்வு காரணமாகவும் கைத்தொழில் விரைவில் மீட்சி பெற்றது. இன்னொரு தூண்டுதல் 1951 ஆம் ஆண்டில் பொதுநலவாயச் £6f p L6irut dispasusair ep6)b (Commonwealth Sugar Agreement) முன்னுரிமை விலைகளில் சீனிக்கான கிடைப்புப் பங்கினை (quota) பிரித்தானிய அரசாங்கம் மொறிசியசுக்கு வழங்கியபோது ஏற்பட்டது எனலாம். 1950 இல் சீனியுற்பத்தி 457,000 தொன்னாகவும் 1953 இல் 530,000 தொன்னுக்கு கூடுதலாகவும் அதிகரித்தது.
சீனிக்கைத்தொழிலின் மீட்சி அதற்கு முதன்மையைப் பெற்றுக்கொடுத்தது. 1958 இல் கரும்புச் செய்கை மொத்தத் தேசிய உற்பத்தியின் 35 சதவீதத்தைப்பெற்றுக்கொடுத்தது. ஏறக்குறைய 55,000 பேருக்கும் வேலை வழங்கியது. (அட்டவணை 1). இது பொருளாதார ரீதியாகப் பயன்பாடுமிக்க சனத்தொகையில் 35 சதவீதத்தைக் கொண்டிருந்தது. ஏனைய பயிர்ச்செய்கை மொத்தத் தேசிய உற்பத்தியில் 10 சதவீதத்திலும் குறைவான பங்கினை வகித்த்து. குறைந்த இலாபம் தரும் தேயிலை, புகையிலைச் செய்கை மற்றும் கொப்பரா உற்பத்தி போன்றவை அரசாங்கத்தின் உதவியுடன் நடைபெற்றன. ஆனால், கரும்புப் பயிர்ச் செய்கையல்லாதவை சிறிய உப பண்ணைகளாக இருந்ததுடன், அவற்றின் உற்பத்திகள் உள்ளூர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டன. மொத்தத் தேசிய உற்பத்தியில் தயாரிப்புக் கைத்தொழில்களின் பங்கு 6 அல்லது 7 சதவீதமாகவும் 10,000 க்கும் குறைந்த தொழிலாளரையும் கொண்டிருந்தன. கைத்தொழிற் பொருட்கள் என்ற வகையில் குடிவகை, மரத்தாலான பொருட்கள், ஆடைகள் (எல்லாம் உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக) என்பன அடங்கும். போட்லுயிஸில் ஓர் உல்லாசப் பயணவிடுதி அமைந்திருந்ததாயினும் அது கரையோரங்களிலிருந்து தூர உள்ளது.
59

Page 33
அட்டவணை 1: மொத்தத் தேசிய உற்பத்தி அமைப்பு (காரணிச் செலவில்)
- 1958
பொருளாதாரத்துறை மில்லியன் சதவீதம்
ரூபா
விவசாயம், காட்டுத்தொழில், மீன்பிடி 206 31.3 சீனி 147 22.3
660060TU606) 59 9.0 சுரங்கத்தொழிலும் கல்லுடைத்தலும் 1. 0.2 தயாரிப்புத் தொழில் 121 18.4 சினி 78 11.9
666T66 43 6.5
நிர்மாணத் தொழில் 30 4.6 மின்சக்தியும் நீரும் 11 1.7 போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல், தொடர்பாடல் 76 1.6 மொத்த, சில்லறை வியாபாரம் 67 10.2 வங்கி, காப்புறுதி, பெருந்தோட்டம் , 2 1.8 வாழிட உரிமை 45 6.8 பொது நிர்வாகம், பாதுகாப்பு 24 3.7 ஏனைய சேவைகள் 61 9.3
மொத்த உள்நாட்டு உற்பத்தி 654 99.4 உலகநாடுகளிலிருந்து ஏனைய காரணி வருமானம் 4 0.6 மொத்தத் தேசிய உற்பத்தி 658 100.0
Source: Meade and others, 1961:44
இத்தகைய உயர்மட்டத் திறந்த பொருளாதார அமைப்பில் 1957-1958 இல் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதிகள் 47.5 சதவீதத்தையும் மொத்த உள்நாட்டுச்செலவீட்டில் இறக்குமதிகள் 40.4 சதவீதத்தையும் வகித்தன. சீனியும், வெல்லக்கட்டியும் ஏற்றுமதியில் 98 சதவீதமாக இருந்ததுடன் தேயிலையும், கொப்பராவும் ஏனைய முக்கிய பொருள்களாக விளங்கின. மொத்த் இறக்குமதியில் உணவு, குடிவகை மற்றும் புகையிலை போன்றவை ஏறக்குறைய 30 சதவீதத்தை வகித்தன. இந்நாடு பெருமளவு உணவுப்
60

பொருட்களின் இறக்குமதியிலே தங்கியுள்ளமை ஓர் ஆச்சரியந்தரும் விடயமல்ல. இன்னொரு 30 சதவீதமான இறக்குமதிகள் ஏனைய நுகர்வுப் பொருட்களையும் மிகுதியானவை எரிபொருள், போக்குவரத்துச் சாதனங்கள், விவசாய இயந்திர சாதனங்கள் மற்றும் உரவகைகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தன.
மொரீசியஸில்வெளிநாட்டுமுதலீடுகள் படிப்படியாக இல்லாமற்போயின. பதிலாக மொறிசியர்கள் வெளிநாடுகளில் குறிப்பாக ஆபிரிக்கக் கண்டம், தென்அமெரிக்கா ஆகியவற்றின் நாடுகளிலுள்ள கரும்புத் தோட்டங்களில் முதலீடு செய்திருந்தனர். மொறிசியப்பெருந்தோட்டக்காரருக்கு உள்ளூரில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. தாம் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துறைகளில் வெளிநாட்டு உதவிகளை ஸ்தாபித்து வந்தனர்.
1950 களில் நாடு செழிப்பு நிலையை அனுபவித்தது. 1957 இல் இந் நாட்டின் தலா (ஒருவருக்கான) மொத்தத் தேசிய உற்பத்திMR1,097 ஆக மதிப்பிடப்பட்டது. (ஏறக்குறைய82ஸ்ரேலிங் பவுணி) வேலைகொள்வோர் இழப்பீடு (Employee Compensation) தேசிய வருமானத்தின் 51 சதவீதத்திலும் குறைவாக அமைந்து, 1954 இல் 55.5 சதவீதமாக உயர்ந்தது. கூலிநிர்ணயப் பொறிமுறை (Wagefixingmechanism) மற்றும் தொழிற்சங்கங்களில் ஈடுபாடு என்பன காணப்பட்டபோதிலும் சந்தைச் சக்திகளில் சம்பளங்கள் செல்வாக்குச் செலுத்திவந்தன. சீனிக் கைத்தொழிலின் இயல்பு காரணமாகக் கணிசமான அளவு பருவகால வேலையின்மை நிலவிவந்தது. ஆனால் பருவகால உச்சக் கட்டத்தில் வேலைப் பற்றாக்குறை இருக்கவில்லை. இருந்தாலும் கரும்புச்செய்கைக்கு ஒதுக்கப்பட்ட பகுதியானது 1950 களில் வருடாந்தம் ஏறக்குறைய 3 சதவீதமாக அதிகரித்தது. மொத்தத் தேசிய உற்பத்திஉயர்வடைந்தது. வருமானம் சனத்தொகைப் பெருக்கத்துடன் இணைந்த முறையில் அதிகரிக்கவில்லை. நீண்ட காலத்தில் வருமானங்களில் வீழ்ச்சியும் வேலையின்மையில் உயர்ச்சியும் ஏற்படும் அபாயம் அதிகரித்தது.
(ii) gepas(pub e Jáuulub (Society and Politics)
1962 இல் மொறிசியஸ் தீவின் சனத்தொகையில் 345,000 இந்துக்களும் 110,000 முஸ்லிம்களும் (இந்திய மரபினர்) 230,000 சீன-மொரீசியர்களும் காணப்பட்டனர். பொதுச் சனத்தொகை (general population) என்ற வகையில் 204,000 குடியிருப்பாளர்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தனர். இத்தகைய வகுப்பில் கிறெயோல்ஸ், தூய ஆபிரிக்கர்கள், மலகாசிபூர்வீகர் மற்றும் 1200 பிரான்சிய-மொறிசியர் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். ஏற்கனவே கூறியதுபோன்று, பிரான்சிய - மொறிசியர்கள் நிலச் சொந்தக்காரர்களாகவும் உயர்தொழில் வகிக்கும் கற்றோர் குழாமாகவும்
61

Page 34
உள்ளனர். ஏறக்குறைய 51 சதவீதமான கரும்புச் செய்கை நிலங்களைக் கொண்டிருந்த 25 பாரிய மில்லரின் பெருந்தோட்டங்கள் பிரான்சியமொறிசியக் குடும்பங்களுக்குச்சொந்தமானவை. பிரான்சிய மொரீசியர்கள் உள்நாட்டுக் கம்பனிகளிலும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்துள்ளனர். இந்துக்களில் பெரும்பாலானோர் குறிப்பிடத்தக்க பல பொருளாதார முன்னேற்றங்களை அடைந்திருந்தும் இன்னும் கிராமியக் கூலிகளாகவே வேலை செய்கின்றனர். 1950 களின் பிற்பகுதியில் 2,700 பண்ணையாளர்கள் இருந்தனர். இவர்களுடைய பெருந் தோட்டங்களின் அளவானது குறைந்தது 10 ஆர்பென்ற் தொடக்கம் 200 ஆர்பென்றுக்கு மேற்பட்டதாக இருந்தன. (1 ஆர்பென்ற் =1,043 ஏக்கர்). இவற்றுட் சில குத்தகை விவசாயிகளால் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டன. மிகுதியான நிலங்களில் அநேகமானவை இந்துக்களுக்குச் சொந்தமானவை. இந்துக்களில் ஏனையோர் அரசாங்க உத்தியோகஸ்தர்களாகவும் அல்லது உயர்தொழில் புரிவோராகவும் பொது நிர்வாகப் பணிபுரிபவராகவும் விளங்கினர். சீன-மொறிசியர்கள் பிரதானமாக வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். முஸ்லிம்கள் நகரத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். கிறேயோல்சுகளில் பலர் கரும்புத் தோட்டங்களில் முகாரிகளாகவும் (foremen) மேற்பார்வை யாளர்களாகவும், தேர்ச்சி பெற்ற தொழிலாளராகவும், அரசுத் தொழில் செய்வோராகவும் உள்ளனர். தூய ஆபிரிக்க மரபினர் மிகவும் பின்தங்கிய குழுவினராவர். இவர்களிற் பலர் பயிர்ச்செய்கையிலும் குறைந்த தேர்ச்சியுடைய தொழில்களிலும் ஈடுபட்டனர். இத்தகைய இனப் பிரிவினைகள் இறுக்கமானவையன்று. அத்துடன் சகல சமூகங்களைச் சார்ந்த உறுப்பினர்களும் எல்லாத் தொழில்களிலும் உள்ளனர்.
இரண்டாம் உலகமகாயுத்தத்தைத் தொடர்ந்து, பிரித்தானியத் தொழிற்கட்சி அரசாங்கமானது தீவுக்குப் பெருமளவு தன்னாதிக்கத்தை வழங்கவும் ஆட்சியைச் சனநாயகப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது. 1947 இல் ஆளுநராக இருந்த “மக்கென்சி கென்னடி"யால் ஒழுங்கு செய்யப்பட்ட சீர்திருத்த ஆலோசனைகள் (பெரும்பாலான) இந்துத் தொழிலாளர், (பெரும்பாலான) பிரான்சிய-மொரீசியர் மற்றும் கிறேயோல் சொத்துரிமை வகுப்பினரிடையே பிரதிநிதித்துவம் பற்றி நிலவிய முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்தது. இந்துக்கள் தொழிற்கட்சியின் திட்டங்களுக்கு ஆதரவளித்தனர். இவர்கள் சர்வசன வாக்குரிமையையும் ஓர் அங்கத்தவர் தொகுதியையும் சுய ஆட்சியையும் மற்றும் பூரண சுதந்திரத்தையும் ஆதரித்து நின்றனர். பின்னையவர்கள் இந்துக்களின் முதன்மைக்கும் சமதர்மத்துக்கும் பயந்து சர்வசன வாக்குரிமையை எதிர்த்தனர். அத்துடன் தமது உரிமைகளைப் பாதுகாக்கக் கோரினர். வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தால், தனி இனக்குழுக்களாக இயங்கவும் விரும்பினர். அல்லது ஆகக் குறைந்தது விகிதாசாரப் பிரதி நிதித்துவத்தை வரவேற்றனர்.
62

1947 ஆம் ஆண்டு டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட கட்டளைச் சட்டப்படி இரண்டு குழுக்களுக்குமிடையே இணக்கம் காணப்பட்டது. இது 40 அங்கத்தவர்களைக் கொண்ட சட்டவாக்கக் கழகத்தின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. இவர்களுள் பத்தொன்பது பேர் தெரிவு செய்யப்பட்டனர். பன்னிரெண்டு பேர் நியமன உறுப்பினர், எட்டுப்பேர் பதவிவழி உறுப்பினராவர். ஆளுநர் சபையின் தலைவராக விளங்கினார். வயது வந்த ஆண்கள் எல்லோரும் 9 மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக இருந்தால் (ஆங்கிலம், பிரான்சுமொழி, கிறேயோல், குஜராத்தி, இந்துஸ்தானி, தமிழ், தெலுங்கு, உருதுஅல்லது சீனமொழி) அவர்களுக்குவாக்குரிமை வழங்கப்பட்டது. 1945 இல் 12,000 பேர் மாத்திரம் வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். 1948 இல் 72,000 பேர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தனர்.
வாக்களிக்கும் உரிமை பரவலாக்கப்பட்டபோது இன அடிப்படைச் சிந்தனை மற்றும் அரசியல் வேறுபாடுகள் வேறு வடிவம் பெற்றன. பிரான்சிய மொறிசியருக்கும் மறுபக்கத்தில் கிறேயோல் சுக்கும் பிரான்சிய முற்போக்காளருக்கும் இடையே வரலாற்று ரீதியாக நிலவிவந்த பகைமையைத் தற்பொழுது மறந்து, இவ்விரு குழுவினரும் இந்தியத் தொழிலாளருக்கு எதிராக நடந்துகொண்டனர்.
1948ஆம் ஆண்டுப்பொதுத் தேர்தலில், புதிய சட்டப்படி நடந்த முதலாவது தேர்தலில் இனவேறுபாடு பிரதான பங்கினை வகித்தது. தொகுதிவாரிப் பிரதிநிதிகள் 19 பேரில் இந்து வேட்பாளர்கள் 11 ஆசனங்களைக் கைப்பற்றினர். கிறேயோல் நிறத்தவர்களுக்கு 8 ஆசனங்களும் வெள்ளையருக்கு ஒன்றும் கிடைத்தன. இத் தேர்தலைத் தொடர்ந்து டாக்டர் ராம்கூலம் தொழிற்கட்சியை மறுசீரமைத்துக்கொண்டார். (இந்தக் கட்சி போர்க்காலத்தில் அதன் முக்கியத்துவத்தை இழந்திருந்தது) இக் கட்சிக்கு விரிவானதொரு இன அடிப்படையும் தெளிவான சோஷலிச நோக்கும் இருந்தது. தெரிவு செய்யப்பட்ட 19 அங்கத்தவரில் 18 பேர் தொழிற்கட்சிக்கு ஆதரவு நல்கினர். அரச சபைக்குப் பழமைவாதிகளை நியமிப்பதன் மூலமே இவர்களுடைய மேன்மை குறைக்கப்படலாயிற்று. அடுத்த பொதுத் தேர்தல் 1952 இல் நடைபெற்றபோது தொழிற்கட்சி 13 ஆசனங்களை வென்றது. வெள்ளையர் முன்னிலை வகித்த பழமைபேண்குழுவொன்று இரண்டு ஆசனங்களையும் சுயேச்சைக்குழுவினர் நான்கு ஆசனங்களையும்பெற்றனர். இச்சந்தர்ப்பத்தில் தீவின் அரசியலில் தனிக்கட்சியொன்று முன்னிலை வகித்திருந்தமையைக் காணலாம்.
1947 இல் அரசாங்க அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டபோது சட்ட சபைக்கும் (Legislative Council) நிறைவேற்றுத்துறைக்குமிடையே தெளிவான எல்லை வகுக்கப்பட்டிருந்தது. இவை ஆளுநர் மற்றும் நியமன உத்தியோகத்தர்கள் கையில் இருந்தன. மேலும் வளர்ந்தோரில்
63

Page 35
பெரும்பாலானவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. 1955 ஆண்டு தொடக்கம் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மகாநாடுகள் பல தொடாந்து லண்டனில் நடைபெற்றன. இம் மகாநாடுகள் படிப்படியாக 1965 இல் முழுமையான பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு வழிவகுத்தது. இறுதியாக 1968 இல் சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டது.
சர்வசன வாக்குரிமையின் கீழ் முதலாவது பொதுத் தேர்தல் 1959 இல் நடைபெற்றது. அப்பொழுது 277,500 பதிவு செய்யப்பட்ட வாக்காளர் காணப்பட்டனர். நான்கு கட்சிகளிலிருந்து அபேட்சகர்கள் போட்டியிட்டனர். அவையாவன தொழிற்கட்சி, CAM (Comited Actipn Musalman), IFB (Independent Forward Bloc), PMSD (Parti Mauricien Social Democrate) என்பனவாகும். CAM கட்சி 1958 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுடன் முஸ்லிம் சனத்தொகையின் உரிமைகளைப் பாதுகாக்கும் அவசர நோக்குடையதாக இருந்தது. ஏனைய அம்சங்களில் இக் கட்சியினுடைய நிகழ்ச்சித் திட்டங்கள் தொழிற்கட்சியுடன் ஒத்துச் சென்றன. மற்றும் இவ்விரண்டு கட்சிகளும் தேர்தல் உடன்பாடுகளையும் செய்துகொண்டன. 1958 இல் அம்ைக்கப்பட்ட IFB கட்சியானது சமூக பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனஞ் செலுத்தியது. இதனுடைய பிரதான அம்சம் என்னவெனில் அதன் ஆரம்ப கர்த்தாவான "6rs. 56) smos 65r Glitus)" (S.Bissoondoyal) 6T6irus) (56) Lu ஆளுமையாகும். இக் கட்சிக்கான ஆதரவு பெரும்பாலும் இந்து சமுதாயத்திலிருந்து கிடைத்தது. PMSD கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் சுதந்திரத்தை ஆதரித்தன. கிறெயோல் மற்றும் பிரான்சிய - மொறிசியர்களைப் பிரதிநிதித்துவம் செய்த PMSD கட்சி 1955 இல் ஆரம்பிக்கப்பட்டது. அது வெள்ளையின மொரீசியர்களையும் சேர்த்து அமைக்கப்படலாயிற்று. இக் குழுவின் தலைவரே PMSD யினுடைய குழுத்தலைவராக வந்தார். 1966 இல் கிறெயோல் சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான "கெய்ரன் டியூவால்" (Gaetan Duva) கட்சித் தலைவரானார். இவர் தனது கட்சியைப் பல இனக் குழுக்கள் கொண்ட அமைப்பாக மாற்றினார். எனினும் அக் கட்சி பிரதானமாக கிறெயோல்களையே அங்கத்தவராகக் கொண்டிருந்தது.
பொதுத்தேர்தலிலே, தொழிற்கட்சி 26 ஆசனங்களை வென்றது. CAM
5 ஆசனங்களையும், IFB 6 ஆசனங்களையும் PMSD 3 ஆசனங்களையும் பெற்றன. சுதந்திரத்துக்கு ஆதரவான 3 கட்சிகளும் கூட்டாட்சி ஒன்றை அமைத்தன. PMSD மட்டும் எதிர்க்கட்சியாகத் தொழிற்பட்டது. தேர்தல் முடிவுகள் தொழிற்கட்சியின் பலத்தை உறுதிப்படுத்தின. ஆனால் இவை பல கட்சி முறையின் தோற்றத்துக்கு வழிகோலின. எனினும் அங்கு இனத்துவம் மற்றும் தனிப்பட்ட தலைமைத்துவம் கருத்தியல்ரீதியாக அல்லது சமூக வகுப்புரீதியாக முக்கிய பங்கேற்றன. 1957 இல் தொழிற் கட்சியால் பின்பற்றப்பட்ட சட்டங்கள் தவறானவையாக
64

இருந்தாலும் அவை கொள்கையளவில் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கு மிடையே சக்தி வாய்ந்த இணைப்பாக விளங்கின. இச் சட்டங்களின்படி, தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச்சங்கங்கள் மற்றும் ஏனைய கூட்டமைப்புகள் எல்லாம் ஒன்றிணைந்த அங்கத்தவர்களாகும் உரிமையைப் பெற்றுக்கொண்டன. ஆயினும் நடைமுறையில், 1959, 1963ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல்களில் சங்கங்கள் அத்தகைய முக்கிய பங்கினை வகிக்கவில்லை. கட்சியின் உறுப்பினர்களாக எல்லோரும் தெரிவு செய்யப்படவில்லை. மற்றும் அவ்வாறு சேர்ந்து கொண்டவர்கள் கூட தேசிய அரசியலிலும் பார்க்கத் தமது உடனடி விருப்பங்கள் மீதான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தினர்.
(i) பொருளாதார, சமூகக் கொள்கைகள்
பெரிய பிரித்தானியாவில் தொழிற் கட்சி அரசாங்கம் பதவியை ஏற்றுக்கொண்டபோது மொறிசியஸின் குடியேற்றவாத அரசாங்கமானது விரைவான பொருளாதாரக் கொள்கையையும் மற்றும் திட்டமிடல் பற்றிய எண்ணக் கருவைத் தழுவிய முறையிலும் ஏற்றுக்கொண்டது. 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அபிவிருத்தி மற்றும் நலன்பேண்குழுவையும் உருவாக்கியது. இக் குழுக்கள் உடனடியாக, 1946 - 1947 தொடக்கம் 1956 - 1957 வரையுள்ள காலப்பகுதிக்கான 10 வருட அபிவிருத்தி மற்றும் Gurgissois is ill-islapsT (Welfare and Development) occo) stidssor. 1955 இல் அது பிரதான அடிப்படை வசதிகள் பற்றிய செய்தித் திட்டமொன்றுக்கான முதலீட்டுச் செலவு நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனுள் துறைமுகம், விமானநிலையம் ஆகியவற்றின்நவீனமயமாக்கமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. திட்டத்தைச் செயற்படுத்துவதில் அரசாங்கம் பெருமளவுக்குத் தனியார் துறையையே நம்பியிருந்தது. சந்தைப் பொறிமுறையில் மிகவும் அருமையாக அல்லது தொடர்ச்சியற்ற முறையிலே தலையிட்டது. உதாரணமாக, இது விவசாயப் பன்முகப்படுத்தலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1947க்கும் 1949 க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கமானது உணவுப் பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்காக விலைரீதியாக ஆதரவு (price Support) வழங்கியது. 1955 இல் தேயிலைச் செய்கைக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் அரசாங்க நிலங்களைப் பயன்படுத்தியது. இப்பயிர்ச்செய்கையும் அரசாங்க நிதியுதவியைப் பெற்றது. புகையிலைச் செய்கையாளரை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையுடன் அவர்களுக்கு நடுகைக் கேள்விப் பத்திரமும் வழங்கப்பட்டது. ஆனால் சீனிக் கைத்தொழிலுக்கும் ஊக்கம் வழங்கப்பட்டது. பெரிய பிரித்தானியாவிலிருந்து கடனையும், புதிதாக உருவாக்கப்பட்ட சீனிக் கைத் தொழில் ஆராய்ச்சி நிலையத்துக்கான உதவிகளையும் பெற்றுக்கொண்டது. தயாரிப்புத் தொழிலை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்க்ையாக, 1954 ஆம் ஆண்டுச் சுங்கத்தீர்வைக் கட்டளைச்
65

Page 36
சட்டத்தைக் (1954CustomsTariffOrdinance) கூறலாம். இச் சட்டமானது குறிப்பிட்ட இறக்குமதி, நாட்டின் உற்பத்தி முயற்சிக்கு நன்மை பயக்கும் எனக் கருதுமிடத்துச் சுங்கத் தீர்வையை மாற்றும் உரிமையை ஆளுநருக்கு வழங்கியது.
சமூக நலனை மேம்படுத்தும் முயற்சியில், அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டமொன்றை உருவாக்கியது. இத் திட்டத்துக்கென, வேலை கொள்வோரும், வேலை கொடுப்போரும் பங்களிப்புச் செய்தனர். மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளரின் ஆகக் குறைந்த சம்பளத்தை நிர்ணயிக்கத், தொழிற்சபைக்கு அதிகாரம் இருந்தது. அரசாங்கம் அரிசி, கோதுமை மா போன்றவற்றை இறக்குமதி செய்யும் பொறுப்பை ஏற்றதுடன், அவற்றை இறக்குமதி செய்த விலையிலேயே விற்றது. சில சந்தர்ப்பங்களில் அப்பொருட்களுக்கு மானியமும் வழங்கியது. செல் வந்தர்களுக்கு வருமானவரியும் விதிக்கப்பட்டது. 1947 தொடக்கம் 1949 வரை அரசாங்கம் மலேரியா ஒழிப்புக்கான மருந்து தெளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இத் தீவில் பிளேக் நோயும் பரவியிருந்தது. இம் மருந்து தெளிக்கும் நடவடிக்கை படிப்படியாக நோயைக் கட்டுப்படுத்தியதுடன் மக்கள் நலனில் முன்னேற்றங்களையும் உண்டாக்கியது. தொழிலாளரையும் உற்பத்தித்திறன் மிக்கவர் களாக்கியது. அதேவேளையில் வளர்ச்சியின் விரைவான அதிகரிப்பு ஒரு புதிய சனத்தொகைப் பிரச்சினையைத் தோற்றுவித்தது.
(iv) சனத்தொகைப் பெருக்கம்
19 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் கரும்புச் செய்கை செழிப்புக் காலத்தில் அத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர் இத் தீவுக்கு வந்தனர். விலை வீழ்ச்சியடைந்தபோது தொழிலாளர்கள் கொண்டுவரப்படவில்லை. தீவில் வாழ்ந்த மக்கள் தொகை அதிகரிப்பை நோய்கள் (பிரதானமாக மலேரியா) கட்டுப்படுத்தின. ஆகவே இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு முன்னர் வருடாந்தம் 0.5 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. 1958 ஆம் ஆண்டளவில் மலேரியா பரவுதல் தடுக்கப்பட்டதனாலும் பொதுச் சுகாதார வசதிகள் முன்னேற்றமடைந்தமையாலும் வருடாந்த வளர்ச்சிவீதம் 3.0 சதவீதமாகச் சடுதியர்க உயர்ந்தது.
1957 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 594,000 பேர் மொரீசியஸில் வாழ்ந்தனர். அவர்களில் 317,000 பேர் வேலை செய்யும் வயதினர். அந்த நேரத்தில் 1972 அளவில் இவ்வெண்ணிக்கை 490,000 ஆக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. நாட்டின் உள்வருகைக்கான சந்தர்ப்பங்கள் கட்டுப்படுத்தப்பட்டமையால் 90,000 க்கு மேற்பட்ட புதிய வேலைகள்
66

1960 க்கும் 1972 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகியிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எதிர்வுகூறப்பட்ட அதிகரிப்பைச் சமாளிக்கக் கூடியதாய் இருக்கும். நீண்ட காலம் கருதி இன்னும் அவதானமாக நோக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மதிப்பீட்டின்படி மாறாத கருவளமும், சரிந்து செல்லும் பிறப்பு வீதமும் காரணமாக 2002 ஆம் ஆண்டளவில் இந் நாட்டின் சனத்தொகை 2,869,000 ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
சனத்தொகை வளர்ச்சி காரணமாகத் தோன்றும் பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வுகள் எவையுமில்லை. கரும்புச் செய்கைக்கு உட்படும் நிலப்பரப்பை விரிவுபடுத்த முடியாத கட்டத்தில் கரும்புப் பெருந்தோட்டங்களில் அநேக வேலை வாய்ப்புக்களை வழங்க முடியாமலுள்ளது. மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டதனாலும் தொழிலாளருக்கான கேள்வி குறைந்து செல்கிறது. பொதுவாக மில்லர் பெருந்தோட்டம் திறமையாக இயங்குகிறது. பாரிய தொழில்நுட்ப மாற்றங்கள் இங்கு இடம் பெறாமையால், உற்பத்தியும் விரைவான அதிகரிப்பைப் பெறும் என எதிர்பார்க்க முடியாது. இப் பெருந்தோட்டங்களின் உற்பத்தித்திறன் மிகக் குறைவு. சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத இணைப்புகளினூடாகவன்றி வேறு வழியில் உற்பத்தியைப் பெருக்கமுடியாமல் உள்ளது. மேலும் கேள்வியும் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனிக்கான இத் தீவின் கேள்வியளவு 518,000 தொன்களாகும். இவற்றுடன் உள்நாட்டுச் சந்தையில் இன்னுமொரு 23,000 தொன் நுகர்வு காணப்படுகின்றது. எந்தவொரு மேலதிக உற்பத்தியும் சர்வதேசச் சந்தையில் விற்கப்படலாம் என்பது நிச்சயமற்றது. விலைத் தளம்பலும் உண்டு. இவை உற்பத்திச் செலவை ஈடுசெய்யப் போதாதவையாக இருக்கும்.
ஏனைய கைத்தொழில்களுக்கான எதிர்பார்ப்புகளும் சாதகமாக இல்லை. புவியியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டிருத்தல், மற்றும் இயற்கை வளங்கள் இன்மை, அல்லது கைத்தொழில் சார்பான அனுபவமின்மை போன்றவற்றால் இந்தத் தீவு உலக சந்தைக்குப் பொருள்களை உற்பத்தி செய்து வழங்குவதற்கான சந்தர்ப்பங்களைக் குறைவாகக் கொண்டிருக் கின்றது. ஆனால் இங்கு குறைவான கூலியும், உயர்வான எழுத்தறிவு வீதமும் (மொத்த சனத்தொகையில் 85வீதம்) காணப்படுகின்றது. பயிர்ப் பன்முகப்படுத்தலைச் செய்வத்ன் மூலம் விவசாய இறக்குமதிப் பதிலீடுகளைச் செய்யலாம் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. வீட்டுப்பாவனைக்கான சிலவகை உற்பத்திகளைச் சிறியளவில் உற்பத்தி செய்யமுடியுமெனினும் உள்ளக நோக்குடைய கைத்தொழிலாக்கத்துக்கு ஆதரவு தரும் உள்நாட்டுச் சந்தையானது மிகச் சிறியதாகவே காணப்படுகின்றது.
67

Page 37
(v) if a 5.5.53, (The Meade Report)
1959 ஆம் ஆண்டில் மொறிசிய அரசாங்கம் “ஜேம்ஸ் மீட்” (JamesMeade) என்பவரின் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. சமகாலத்திலும், எதிர்காலத்திலும் காணப்படும் சனத்தொகைப்போக்குகளைக் கவனத்திற் கொண்டு, இந் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய சிபார்சுகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு இவர் பணிக்கப்பட்டார். 1961 இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கையானது குடியேற்றவாத ஆட்சிக்கால இறுதிக் கட்டத்திலும் சுதந்திரகாலத்தின் ஆரம்பக் கட்டத்திலும் நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் முக்கிய பங்கினை வகித்தது.
நடைமுறையிலிருந்த சந்தைப்படுத்தும் ஒழுங்கு முறைகள், சீனி உற்பத்தியை மிகையாக விரிவுபடுத்தும் ஊக்குவிப்புகளைப் பண்ணையாளர்களுக்கு வழங்கியிருந்தது என மீட் ஆணைக்குழுவினர் அறிந்தனர். சீனிக் கூட்டவை (Sugar Syndicate) முழுமையான ஏற்றுமதியாளராக விளங்கியதுடன், சகல விற்பனையின் மூலமும் கிடைத்த சராசரி விலையையே உற்பத்தியாளருக்கு வழங்கியது. பங்கு விலை, சந்தை விலையிலும் கூடுதலாக இருந்ததால், உற்பத்தியாளருக்குக் கொடுக்கப்பட்ட விலை, கூட்டு விற்பனையின் மூலம் பெறப்பட்ட விலையிலும் பார்க்கக் கூடுதலாக இருந்தது. விலை வேறுபாடுகளைத் தடுக்கும் பொருட்டு, நடைமுறையிலுள்ள சீனி ஏற்றுமதித் தீர்வையான தொன்னுக்கு 10 தொடக்கம் 30 சதம் வரை 5 சதவீத ஏற்றுமதி வரியின் மூலம் ஈடுசெய்யப்பட்டது. எதிர்காலத்தில் வரிமட்டம் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் தேவையைப் பொறுத்துச் சரி செய்யப்படும். வரியின் மூலம் கிடைத்த இலாபம் அல்லது வருமானம் பன்முகப்படுத்தலுக்கு நிதிவழங்கப் பயன்படுத்தப்படும். அத்துடன் சீனி உற்பத்தியைத் தடுக்கப் பயன்படும் ஆணைக்குழுவானது பன்முகப்படுத்தப்பட்ட ஏனைய பயிர்களின் வாய்ப்புகள் பற்றிப் பரிசீலித்ததுடன், நிலப்பயன்பாட்டில் கட்டாய மாற்றங்களை ஏற்படுத்துதல், விலை ஆதரவு, அரசாங்க அனுசரனையுடன் கூடிய ஆராய்ச்சி, மற்றும் களஞ்சியப்படுத்தும் வசதிகள் ஆகியவற்றின் மூலமாக உறுதியான நன்மைகளை அடையலாம் என்ற முடிவுக்கு வந்தது. இது சந்தைப்படுத்தும் சபைகளின் உருவாக்கத்துக்கும் சிபார்சு செய்தது.
இறக்குமதிப் பிரதியீட்டுக் கைத்தொழிலாக்கத்தையும் மேம்படுத்த வேண்டியிருந்தது. சுங்கத் தீர்வை முறை திருத்தியமைக்கப்படவேண்டும்; மற்றும் முடிவுப் பொருளிலும் பார்க்க, மூலப்பொருளுக்கான தீர்வை கூடுதலாகக் காணப்பட்டால் சகல விதமான அசாதாரண நிலைமைகளும் நீக்கப்பட வேண்டும். கட்டுமானத்தின் அளவுக்கேற்பச் சுங்கத் தீர்வை
68

இணைந்து செல்ல வேண்டியிருந்தது. வீட்டுப்பாவனைப் பொருட்கள் போன்றவற்றைக் குறைந்த அளவில் உற்பத்தி செய்யும் கைத் தொழில்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கவேண்டியிருந்தது. அரசாங்கம் கைத்தொழில் அபிவிருத்திச் சபையொன்றை உருவாக்க வேண்டும்; அது ஏனைய விடயங்களுக்கு மத்தியில் கைத்தொழிற் பேட்டைகளின் அபிவிருத்திக்குப் பொறுப்பாக இருக்கவேண்டும்; மற்றும் தெரிவு செய்யப்பட்ட புதிய வியாபாரங்களுக்கு வரி விடுதலையளித்தல் பற்றி அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க வேண்டும். சுருங்கக் கூறின், அறிக்கையானது நிதி சார்பான ஊக்குவிப்புகள், ஊக்குவிப்பின்மைகள் மூலம் கைத்தொழிலாக்கத்தைப் பன்முகப்படுத்த அரசாங்கம் உற்சாகமூட்ட வேண்டும் என்பதற்குத் தூண்டுதலளித்தது. இவ்வறிக்கை கூலி பற்றிய கட்டுப்பாடுகளை விதந்துரைத்தது. அதிகரித்துவரும் வேலைப்படைக்கு வேலை வழங்கப்பட்டிருந்தால் கூலி குறைந்திருக்கும். ஏற்றுமதி
நோக்குடைய உற்பத்தி அதிகரிப்புக்குக் குறைந்த கூலியும் உதவியது
எனலாம்.
3. இறக்குமதிப் பிரதியிட்டு உபாயம் 1963 - 1972
இறுதியாக 1968 இல் மொறிசியஸ் சுதந்திரமடைந்தபோது இனக் கலவரங்கள், இடதுசாரிப்போக்குடையோரின் சவால்கள், வர்த்தக மாற்றுவித வீழ்ச்சியால் உண்டான கஷ்டங்கள், விரைவாக அதிகரித்துவரும் சனத்தொகை மற்றும் வேலைப்படை போன்றவற்றை எதிர்நோக்க வேண்டுமென அறிந்தது. இத்தகைய கஷ்டங்களுக்குப் பதிலாகக் குடியேற்றவாத ஆட்சியாளரால் மேற்கொள்ளப்பட்ட பொதுவான உபாயங்களை அனுசரித்து உறுதியான கொள்கைகளை உருவாக்கின. இவை யாவும் பொருளாதாரப் பன்முகப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை அறிமுகஞ் செய்தது எனினும் மீட் அறிக்கை விதந்துரைத்த குறைந்த கூலிக் கொள்கைகள் சில அரசியற் காரணங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
(1) அரசியல்ரீதியான விருத்திகள் (Political Developments)
1963 இல் தொழிற்கட்சியைச் சேர்ந்த "சேர் சீவூ சாகூர் ராம் கூலம்” 40 சதவீதமான வாக்குகளையும், சுதந்திர எதிர்ப்புக் கட்சியான PMSD கட்சி 20 சதவீதமான வாக்குகளையும் பெற்றன. எனவே சுதந்திரத்தை நோக்கிய நகர்வு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இது சம்பந்தமாக 1965 இல் லண்டனில் யாப்புச் சம்பந்தமான மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்கள் வெஸ்மினிஸ்டர் வண்க சார்ந்த அரசியல் யாப்பினைப் பிரேரித்தனர்.எதிர்க்கட்சியினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க திருத்தியமைக்கப்பட்ட அமைப்பு 1966 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வாக்களிக்கும் முறையை உருவாக்கியது.
69

Page 38
இனத்துவச் சமநிலையை உறுதிசெய்தது. தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் 60 பேர் உள்ளடங்கிய மொத்தம் 72 பேர் கொண்ட சட்டசபையொன்று அமைக்கப்பட்டது. இவர்களுள் 6 பேர் 3 அங்கத்தவர் தொகுதியிலிருந்தும் இருவர் ரொட்றிக்கோவிலுள்ள இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர். மிகுதியாயுள்ள 8 ஆசனங்களும் தோல்வி காண்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அங்கீகரிக்கப்பட்ட4 இனக் குழுவினரும் அவர்களுடைய எண்ணிக்கையின் அடிப்படையில் ஏறக் குறைய விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற வகையில் இது அமைந்தது.இவ்வாறான ஆசன ஒதுக்கீடு தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களிடையேயுள்ள கட்சிச் சமநிலையை மாற்றுவதாக இருக்கக்கூடாது.
சுதந்திரத்துக்கான மக்கள் விருப்பை அறியும் பொதுத்தேர்தலொன்று 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்றது. தொழிற்கட்சியும் அதன் சகாக்களும் IFB,CAM கட்சிகளும் 56 சதவீதமான வாக்குகளையும் 47 சட்ட சபை ஆசனங்களையும் வென்றன. எதிர்க்கட்சியான PMSD 27 ஆசனங்களை வென்றன. (அட்டவணை 2) முழுமையான சுயாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர், 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி இது சுதந்திர நாடாக மாறியது.
அட்டவணை 2: சட்டசபைப் பொதுத்தேர்தல் முடிவுகள் 1967 - 1983
அரசியற்குழு 1967 1976 1982 1983
சுயேட்சை முற்போக்கு அணி 12 man Comite d’ Action Musulman 5 O -
தொழிற்கட்சி 26 28 2 14
PMSD 27 8 2 5
மொறிசிய சோசலிசக் கட்சி - 18 மொறிசிய சோசலிச இயக்கம் 27
MMM 34 42 22
றொட்றிக்கரின் மக்கள் இயக்கம் 2 2
மொத்தம் 70 70 66 70
குறிப்பு : 1982 இல் தோற்றவர்களில் முன்னணி வகித்தோருக்கு
4 ஆசனங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன.
70

அந்த வருடத்தில் கிறெயோல்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பெருங்கலகம் மூண்டது. தேசிய ஐக்கியத்தைப் பேண தொழிற்கட்சியானது CAM மற்றும் PMSD ஆகிய கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து கூட்டரசாங்க மொன்றை அமைத்தது. ஆனால் புதிய கட்சி வடிவில் இன்னொரு சவால் அங்கு தோற்றம் பெற்றது. மொறிசிய ஆயுதபாணிகளின் இயக்கம் (The Movement Militant Mouricien - MMM) 6T6irgjid as discs g6Tid இடதுசாரிகளும் தொழிலாளர் சம்மேளனத்திலிருந்து தீவிர தொழிற்சங்கங்களும் ஆதரவு நல்கின. மொறிசிய நாட்டு அரசியலைத் தீவிரமயப்படுத்தும் இத்தகைய போக்கு நாடு சுதந்திரமடைந்தபோது விரக்தியடைந்த மக்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொருளாதாரபலம் இப்பொழுதும் பிரான்சிய - மொறிசியர்களின் கைகளில் இருந்தமையும் முன்பு வ்றியவர்களாக இருந்த வெள்ளையரல்லாதோர் கைகளில் இருந்தமையும் இதற்கு அடிப்படையாயிற்று. இவ்விடயங்களை மேலும் மோசமாக்கும் வகையில் போருக்குப் பிந்திய பரம்பரையினர் வளர்ச்சி பெற்றமையினால் ஏற்பட்ட பிரச்சினைகளும், வேலையின்மையும் காணப்பட்டது. எவ்வாறாயினும் அரசாங்கமும் குடியேற்ற ஆட்சிக் காலத்திலிருந்த அதே கொள்ளைகளையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வநதது.
இதற்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக, மாக்சிய MMM கட்சியும் தீவிரவாத சங்கங்களும் “போல் பெய்ரிங்கர்” என்பவரது முயற்சியால் இடதுசாரிப் பிரான்சிய - மொறிசியர்கள் என்ற பெயரில் பாரிய அமைப்பாக ஒழுங்கு செய்யப்பட்டது. இந்த இயக்கம் மேற்கூறிய பிரச்சினைகளுக்கு நேரடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வற்புறுத்தியது. 1971 இல் MMM கட்சி வேலை நிறுத்தங்களிலும் கலகங்களிலும் ஈடுபட்டது. இதனால் 1972 இல் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தது. அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது. பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டன. தீவிரவாதத்தலைவர்களைச் சிறையில் தள்ளியது. சனநாயக முறையைத் தற்காலிகமாகக் கைவிடுவதன்மூலம் உறுதித்தன்மை பாதுகாக்கப்பட்டது. ஆளும் கூட்டரசாங்கம் 1976 வரை அதிகாரத்திலிருந்தது. அவ்வருடத்தில் நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தல் இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பின்தள்ளி வைக்கப்பட்டது.
(i) பொருளாதாரம் (The Economy)
1960 களிலும் 1970 களின் ஆரம்பத்திலும் மொரீசியசின் பொருளாதார அதிஷ்டம் தவிர்க்கமுடியாதளவுக்குச் சீனிக் கைத்தொழிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. 1960 இல் வீசிய இரண்டு கடும் சூறாவளிக்குப் பின்னர் கரும்புப் பயிர்பெருமளவு சேதத்துக்குட்பட்டதுடன், அந்நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 1959 இல் நிலவிய மட்டத்திலிருந்து 12சதவீத வீழ்ச்சியை ஏற்படுத்தியது. நெருக்கடியைத் தாங்க வளர்க்கப்பட்ட
71

Page 39
பயிர் மற்றும் சார்பளவில் கிடைத்த நல்ல விலை மொத்தத் தேசிய உற்பத்தியை முன்னைய வருடங்களிலும் பார்க்க 1963 இல் 31 சதவீதத்துக்கு மேலாக உயரச் செய்தது. 1960 களில் மெய் மொத்தத் தேசிய உற்பத்தி வளர்ச்சியடையவில்லையாயினும் சனத்தொகை வருடாந்தம் 2.8 சதவீதத்தினால் உயர்ந்தது. எனவே தலா மொத்தத் தேசிய உற்பத்தி (மொத்த உள்நாட்டு உற்பத்தியும்) வீழ்ச்சியடைந்தது. (அட்டவணை 3 )
அட்டவணை 3 : மொத்த உள்நாட்டு உற்பத்தி (1976 இன் நிலையான
சந்தை விலைகளில்) 1960 - 1972.
வருடம் | மொ.உ.உ. வளர்ச்சி A561st வளர்ச்சி
(மில்.ரூபா) வீதம் % மொ.உ.உ. வீதம் %
ரூபாவில்
1960 2,274 -1.3 3,445 -i.3
1961 2,794 22.9 4,139 20.
1962 2,816 0.8 4,075 -1.5 1963 3,207 13.9 4,537 11.3
1964 2,986 -6.9 4,130 -9.0 1965 3,082 3.2 4, 1.65 0.8 1966 2,972 -3.6 3,925 -5.7 1967. 3,102 4.4 4,008 2.1
1968 2,888 -6.9 3,647 -9.0
1969 3,031 4.9 3,742 2.6
1970 3,019 -0.4 3,642 -2.7
1971 3, 48 4.3 3,743 2.8
Source: World Bank data
மீட் ஆணைக்குழுவின் விதந்துரையின்படி, உற்பத்தியைப் பயன்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1961 இல் சீனி ஏற்றுமதிக்கு 5 சதவீத வரியுடன் தொடங்கி 1971 இல் அவ் வரி 6 சத வீதமாகக் கூட்டப்பட்டது. 1964 இல் கைத்தொழில்களுக்கு நீண்டகால நிதியுதவி வழங்குவதற்கு, அபிவிருத்தி வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இவை யாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக், கைத்தொழில் அபிவிருத்தித் திட்டத்தின் அறிமுகத்தைக் கூறலாம். அபிவிருத்தித் திட்டமானது, அபிவிருத்தி அத்தாட்சிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்குக் கூட்டு வரி மற்றும் பங்கு இலாபங்களுக்கான வரி என்பவற்றிலிருந்து விடுதலையளித்தது. அபிவிருத்தி அத்தாட்சிப் பத்திரக் கம்பனி
72

வெளிநாட்டுப் போட்டியிலிருந்து தன்னைப் பாதுகாக்கவும், உயர் சுங்கத் தீர்வை அல்லது (1969 தொடக்கம்) ஒரு பங்கு என்ற வடிவிலும் விண்ணப்பிக்கலாம். ஆரம்பத் திட்டத்தின் கீழ் மூலதனப் பொருட்களை 3 வருடங்களுக்குத் தீர்வையின்றி இறக்குமதி செய்யலாம். அத்தாட்சிப் பத்திரம் வைத்திருப்போர் மூலப்பொருட்கள் மீதான தீர்வையிலிருந்து விலக்குப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தீவின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வகிக்கும் கைத்தொழில்களுக்கு மாத்திரமே அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டது என்பதை உறுதிசெய்வதாக இச் சிக்கல் வாய்ந்த விதிமுறை அறிமுகமானது எனலாம். ஆனால் அதற்குரிய நியதிகள் உறுதியற்றனவாகவும், பக்கச்சார்புடையனவாகவும் அமைந்தன. இறக்குமதிப் பிரதியீடுகளிe' செலவுகளையும் நன்மைகளையும் அளவிடும் பிரச்சினை 20 வருடங்களுக்குப் பின்னரும் எழுப்பப்படவில்லை.
இறக்குமதிப்பிரதியீடு கைத்தொழிலாக்கத்துக்கு மட்டுமே உறுதி கூறியது. மொறிசிய முயற்சியாளர்கள் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்தும் அனுபவங்களிற் குறைந்தவர்களாக இருந்தனர். மற்றும் ஏற்றுமதி நோக்குடைய தயாரிப்புகளில் ஈடுபடவும் விரும்பவில்லை. விருப்பமின்றி வெளிநாட்டு மூலதனம் இச்சிறிய, பின்தங்கிய நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவது அரசியல் ஸ்திரமற்றதன்மையை அதிகரிக்கும் என்பதற்கு அடையாளமாக விளங்கும். இருப்பினும் இறக்குமதிப் பிரதியீடுகளுக்கு இது உடனடிச்சந்தையை உருவாக்கியது. இது சிறியதாக இருந்தாலும் நன்கு பாதுகாப்பானவை. அங்கு மூலதனத்தைப்பெறும் உடனடி மூலகமும் இருந்தது. சீனியின் மூலம் கிடைக்கும் இலாபத்திலிருந்து இது உருவாக்கப்பட்டது. ஏற்கனவே கூறியது போன்று சுதந்திரத்துக்கு முன் இவை வெளிநாட்டுக் கரும்புப் பெருந் தோட்டங்களில் முதலீடு செய்வதாக இருந்ததெனினும் மூலதன ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக அமுல் நடத்தியதன் மூலம் அவை உள்நாட்டுமுதலீடுகளுக்குப் பயன்படலாயிற்று.
1960 களில் ஏறக்குறைய 100 அபிவிருத்தி அத்தாட்சிப் பத்திரங்கள் பல்வகைப்பட்ட கைத்தொழில்களுக்கு வழங்கப்பட்டன. உணவு பதனிடல், தளபாட உற்பத்தி, பிளாஸ்ரிக் உற்பத்திகள், பற்றறிகள், வண்ணப் பூச்சுகள் என்பன இதனுள் அடங்கும் . புள்ளிவிபரத் தகவல் சரியாகக் கிடைக்கவில்லையாயினும் அபிவிருத்தி அத்தாட்சிப் பத்திரக் கம்பனிகள் ஒப்பீட்டளவில்முதலீட்டுச்செறிவுமுறைகளில் தங்கியிருந்தன. தீர்வையற்ற முதலீட்டுப் பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் அரசாங்கத்தின் சம்பளக் கொள்கை என்பன ஆச்சரியத்துக்குரியவையல்ல. அபிவிருத்தி அத்தாட்சிப் பத்திரக் கம்பனிகள் 5000 பேரிலும் குறைவாகவே வேலைக் கமர்த்தியிருந்தன.
அரசாங்கம் தனது சம்பளக் கொள்கை காரணமாகப், பொருளாதாரம் மற்றும் அரசியல் விடயங்களுக்கிடையே ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த
73

Page 40
முடியவில்லை. அரசியல் நோக்கில் பார்த்தால் தொழிற்கட்சி யானது அதனுடைய பெரும்பான்மை ஆதரவை இந்து சமுதாயத்திலிருந்தே பெற்றுக் கொண்டதை அறியலாம். இவர்களுள், அநேகர் கரும்புச் செய்கையில் ஈடுபடுவோராவர். எனினும் கரும்புச்செய்கைத் தொழிலாளர் உயர்வான கூலியையும் சட்டரீதியான பாதுகாப்பையும்வேண்டிநின்றனர். அவர்கள் இப்பொழுதும் ஒப்பந்த அடிப்படைத் தொழிலாளர் என்ற வகையிலேயே கணிக்கப்படுகின்றனர். தொழிலாளரின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் 1963 இல் சம்பளச் சபை ஒன்றை அமைத்துக் கொண்டதுடன், சீனிக் கைத்தொழில்துறைக்கு ஆகக் குறைந்த (கூலியை) சம்பளத்தை நிர்ணயிக்கும் வலுவையும் கொடுத்தது. 1966 இல் அது தொழிற்பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தை(சீனிக் கைத்தொழில்) நடைமுறைப்படுத்தியதுடன், நிரந்தரத் தொழிலாளருக்குத் தொழிற் பாதுகாப்பையும் வழங்கியது. அதாவது, வருடத்தில் ஆகக் குறைந்தது குறிப்பிட்டளவான நாட்களுக்கு மேல் வேலை செய்தோருக்கு இப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
முதலாவது சம்பளக் கட்டளை 1963 இல் வழங்கப்பட்டதுடன் அதன் முன்னைய வருடச் சராசரி நிலையிலும் பார்க்க 25 சதவீதம் உயர்வாகவும் இருந்தது. இதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில் ஆகக் குறைந்த சம்பளமானது பயிரின் இலாபத்தையும், வாழ்க்கைச்செலவையும் பொறுத்து ஒன்றில் அதிகரித்தோ அல்லது நிலையானதாகவோ காணப்பட்டது. இதன் விளைவாக, இந்த அமைப்பானது பணக்கூலியில் குறைந்துசெல்லும் நெகிழ்ச்சியின்மையை அறிமுகம் செய்தது. தொடக்கத்தில் , சீனிக் கைத்தொழில்துறைக்கே ஆகக் குறைந்த சம்பளம் பிரயோகிக்கப்படலாயிற்று. ஏனெனில் தீவின் பொருளாதாரத்தில், இக் கைத்தொழிலே முக்கியத்துவம் பெறுகின்றது. அத்துடன் ஏனைய துறைகளில் தொழிலாளர் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளுக்கும் அவை வழிகாட்டியாக அமைந்தன. படிப்படியாக, ஏனைய கைத்தொழில்களிலும் சம்பளச்சபைகள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாகத், தனிப்பட்ட நிறுவனங்கள் தொடக்கம், கைத்தொழில் மட்டம் வரையில் கூலி தொடர்பான பேரம் பேசல் நீக்கப்பட்டது. 1958,1968ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் செலவு 50 சதவீதத்தால் உயர்ந்தது. அதேவேளையில் வாழ்க்கைச் செலவு 12 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. மெய்க்கூலியில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பு தொழிலாளருக்கான கேள்வி நிலையாக இருந்தபோது ஏற்பட்டது. பொருளாதாரரீதியாகச் செயற்படக் கூடிய மக்கள் தொகை வருடாந்தம் 2 சதவீதமாக அதிகரித்தபோது அங்கு முழுமையான ஸ்தம்பித நிலை உண்டானது.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தேவையைப் பொறுத்து உயர் கூலிக் கொள்கை வேறுபடும் என்பதில் ஐயம் இல்லை. ஆயினும் கூலி நெகிழ்ச்சியுடையதாக இருந்தால் குறுங்காலத்தில் வேவைவாய்ப்புகளை
74

எந்தளவுக்குக் கூட்டலாம் என்பது ஒரு பிரச்சினையாகும். சீனி உற்பத்தியில் தொழிலாளருக்கும் உற்பத்திக்குமான விகிதம் குறுங்காலத்தில் ஓரளவுக்கு மாறாதவையாக உள்ளன. இத்தொகை ஒப்பந்தப்பங்கின் அடிப்படையிலே தீர்மானிக்கப்படுகிறது. இறக்குமதிப் பிரதியீட்டுக் கைத்தொழில் ஒப்பீட்டளவில் செலவுக்கு ஊக்குவிப்பாக இருக்கும். இவை அபிவிருத்தி அத்தாட்சிப் பத்திரத் திட்டத்தின் கீழ் பெறப்படும் பாதுகாப்பின் அளவைப் பொறுத்து இருக்கும். இறக்குமதிக்கும் உற்பத்திக்கும் உள்ள செலவின் வேறுபாடாக இத் திட்டம் அமையும். உயர்கூலிக் கொள்கையானது உற்பத்தியில் மூலதனச் செறிவு முறைகளைப் பயன்படுத்த உற்சாகமூட்டியது. ஆனால் சீனிக் கைத்தொழிலினைப் பொறுத்தளவில் முழுமையான பாதிப்புக் குறைவாகவே இருந்தது. எவ்வாறாயினும் உயர்விலைகள் வாடகையையும் இலாபத்தையும் குறைத்தது. எனவே முதலீடும் குறைந்தது. இக் கொள்கை நீண்ட காலத்தில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குறுங்காலத்தில், உயர்கூலிகள் எத்தகைய உடனடிப் பொருளாதார விரயமுமின்றிச் சமூக ஒற்றுமையைக் கொண்டுவந்தது எனலாம்.
உத்தியோகபூர்வமான தரவுகளின் அடிப்படையில், மொறிசியசில் வேலையின்மை 1962 இல் 2 சதவீதத்தில் இருந்து 1972 இல் 13 சதவீதமாக உயர்ந்தது. இத் தரவுகள் நம்பகமானவையல்ல. ஆயினும் வேலையின்மை பற்றிய பதிவேடு வேலை தேடும் அத்தனை பேரினதும் பெயர்களை உள்ளடக்கவில்லை; வேலை கிடைத்தோரின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கவும் இல்லை. அரசாங்கம் அவசரகாலப் பொதுவேலை நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலத்தில் இவை கடும் பிரச்சினையாக அமைந்தன. இதன் உச்சக் கட்டத்தில் 30,000 தொழிலாளர் (1967 ஆம் ஆண்டின் மூன்றாம் காற்பகுதியில்) வேலைக்கமர்த்தப்பட்டிருந்தனர் அல்லது சகலவிதமான சம்பளம் பெறுவோரில் 18 சதவீதமாக இது இருந்தது. இந் நிகழ்ச்சித் திட்டமும் ஏனைய நலன்புரிசேவை நடவடிக்கைகளும் அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்குக் கடுஞ்சுமையாக விளங்கியன. 1964 -1965 வரை அரசாங்கம் நடைமுறைக் கணக்கில் பெற்ற மிகையைப் பொது முதலீடுகளுக்குப் பயன்படுத்தியது. அடுத்த இரண்டு வருடங்களில் 20 மில்லியன் ரூபா பற்றாக்குறையை அனுபவித்தது. எனவே நிகழ்ச்சித் திட்டத்தின் அளவினைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலை தோன்றியது.
1963இல் இரண்டு தனிப்பட்ட குடும்பத்திட்டமிடல் திட்டத்தை அறிமுகம் செய்ததன் மூலம் சனத்தொகைக் கட்டுப்பாடு என்னும் விடயத்தில் அரசாங்கம்பெருவெற்றியடைந்தது. இதன் விளைவாக வேலைப்படையின் வளர்ச்சிவீதத்தில் உடனடிப்பாதிப்புகள் ஏற்படவில்லையாயினும் அடுத்து வந்த 7 ஆண்டுகளில் படுமட்டமான பிறப்பு வீதம் 1000க்கு 40 இல்
75

Page 41
இருந்து 1000க்கு 27 ஆகக் குறைந்தது. 1972ஆம் ஆண்டில், சனத்தொகை 826,000மாக இருந்தது. இது 12 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்வு கூறப்பட்ட குறைந்த சனத்தொகை அளவிலும் பார்க்க 3,000ஆல் குறைவாகக் காணப்பட்டது. தற்கால மதிப்பீடுகளின்படி, மொறிசியசில் 1.2 மில்லியனுக்கும் 1.4 மில்லியனுக்கும் இடைப்பட்ட மக்கள் இந் நூற்றாண்டின் இறுதியில் வாழலாம் என்னும் மீட் என்பவருடைய கருத்தின்படி இத்தொகை 3 மடங்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. சீனிச் செழிப்பும் அதன் பின்பும் 1972 - 1979
1960 களின் வீழ்ச்சிப் போக்குக்கு முரணாக, 1970 களில் எதிர்பாராத வகையில்பொருளாதார வளர்ச்சி சீனிச்செழிப்பால் தூண்டப்பட்டமையால் நாட்டின் வர்த்தக மாற்றுவீதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஏற்றுமதியடிப்படையிலான தயாரிப்புத் தொழில்களின் துரித வளர்ச்சியும் விரிவுபடுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டக் கொள்கையும் செழிப்புக்குப் பங்களிப்புச் செய்தது. (அட்டவணை 4 யும், வரைபடம் 1,2யும் பார்க்க.)
அட்டவணை 4: மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1972 - 1979
(நிலையான 1976 சந்தை விலையில்)
வருடம் மொ.உ. உற்பத்தி வளர்ச்சி வீதம்
(மி.ரூபா) (சதவீதம்)
1972 3,410 8.3 1973 3,819 12.0 1974 4,156 8.8 1975 4, 193 8.9 1976 4,707 12.2 1977 5,075 7.9 1978 5,368 5.8 1979 5,674 5.7
Source: World Bank data
உலக சீனி விலை 1971 இல் அதிகரிக்கத் தொடங்கியது. 1972 -1975 க்கும் இடைப்பட்ட காலத்தில், மொறிசியசின் உற்பத்தி மிகச் சிறந்து விளங்கியது. 1975 இல் 30 சதவீதமளவிலான பயிர் சூறாவளியினால் அழிக்கப்பட்டது. ஆனால் உலக சந்தையில் கிடைத்த உயர்விலைகள் பொருளாதாரத்தை நீடித்து நிலவச் செய்தன. 1975 - 1976 ஆம்
76

வரைபடம் 1 மொத்த உள்நாட்டு உற்பத்தி சந்தை விலைகளில்,
மொறிசியஸ், 1958 - 85
7
6
5
4.
3
2
0 I
1960 1965 1970 1975, 1980 1985 வரைபடம் 2: பண்டப் பொருள் வர்த்தகம், மொறிசியஸ், 1950 - 84
700
600
34.5 OOO O
مسا
2
O
O
All exports
1.
O
O
O -
1950 1955 1960 1965, 1970 1975 1980 1984
Source: World Bank data
7ך

Page 42
ஆண்டுகளில் செழிப்பு உச்சக் கட்டத்தை அடைந்தது. அதன் பின்னர் விலைகள் திடீரென வீழ்ச்சியடைந்தது. பரந்த முறையில் அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதன் மூலம் இத் தசாப்தத்தின் இறுதிவரையில் வீழ்ச்சியின் பாதிப்புகளைப் பின்தள்ளிவைக்கக் கூடிய தாயிருந்தது. இக் காலத்தில் உச்ச நிலையை அடைந்த வெளிநாட்டுக் கடன்கள் நாட்டினைக் கடன்தீர்க்க வகையற்ற நிலைக்கு இட்டுச்சென்றது.
(1) செழிப்புக் காலங்களில் அரசியல்
அரசாங்கம் இடதுசாரிகளின் புரட்சிகளை அடக்கியதுடன் 1972ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலும் நடத்தப்படவில்லை. இது இடதுசாரிகளின் பாதிப்பு என்பது தெளிவாகிறது. விலையேற்ற காலத்துக் கொள்கைகள், தொழிற்கட்சியும் அதன் கூட்டுகளும், சமூக சேவைகள், கல்வி மற்றும் வேலை நிலைமைகள் ஆகியவற்றை முன்னேற்றும் நோக்குடன் பல நடவடிக்கைகளை அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டு MMM கட்சியினுடைய ஆனால், வெளிநாட்டுக் கொள்கையினால் உண்டான விவகாரங்களின் விளைவாக, ஆளுங் கூட்டாட்சியில் பிளவு ஏற்பட்டு, 1976 இல் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டியதாயிற்று. கடந்த காலங்களில் செழிப்பில் மிதந்த தொழிற்கட்சி தனது பிரசித்தி வாய்ந்த கொள்கைகளினால் போதியளவு ஆசனங்களை வென்று கூட்டரசாங்கத்தை அமைத்தது. ஆனால் MMM கட்சி தனிப்பெருங் கட்சியாகத் தோன்றி ஒரு பெரும் சக்தியாகவும் உருவெடுத்தது.
(ii) சமூகக் கொள்கைகள்
1973 இல் கைத்தொழில் உறவுச் சட்டமானது, கூலிச் சபைக்குப் பதிலாக தேசிய சம்பளச்சபையை (National Remuneration Board) அமைத்தது. இச்சபை அரசாங்கப் பிரதிநிதிகளையும் தொழிலாளர் மற்றும் தொழில் கொள்வோர் அமைப்புகளையும் அங்கத்தவர்களாகக் கொண்டிருந்தது. தேசியச் சம்பளச் சபைக்குத் , தனியார்துறைக் கைத்தொழில் மற்றும் தொழில்களின் வகை என்ற அடிப்படையில் ஆகக் குறைந்த சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. மற்றும் நடைமுறையில், உண்மைச் சம்பளம் அவற்றின் இயல்புக்கு ஏற்பவே உறுதிசெய்யப்பட்டது. ஆகவே தேசியச் சம்பளச் சபையானது இரு பக்கச் சம்பளப் பேரம் பேசலை நீக்கித் தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் குறைத்து, அரசாங்கமானது தொழிற் தகராறுகளுக்கு மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் எனக் கூறியது. இத்தகைய முறையின் வெளிப்படையான ஒரு பாதகமான அம்சம் என்னவெனில் நடைமுறைப் படுத்தப்பட்ட கூலியில் தொழிலாளர் நிரம்பலுக்கும் கேள்விக்குமிடையே சமநிலையைத் தோற்றுவிக்காததாகும். இதன் சாதகமான அம்சமாக முகாமைத்துவத்தின் விருப்பப்படியும் தேசியச் சம்பளச் சபை கூறுவது போலவும் தொழிலாளர் நடந்து கொள்ளல், கைத்தொழில் முரண்
78

பாடுகளைக் குறைக்க உதவும். இந்த இசைவான சூழ்நிலை வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்து கைத்தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை.
விலையேற்ற காலத்தின் முதலாவது கட்டத்தில் கூலிச் சபையும் பின்பு தேசிய சம்பளச் சபையும் நவீனமயமாக்கம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தது. சீனிக்கைத்தொழிலில் காணப்பட்டமெய்க்கூலிசிறிதளவு மாத்திரமே உயர்ந்தது. இவ்வேளையில் ஏனைய கைத்தொழில்களில் கொடுக்கப்பட்ட பணக்கூலி வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன் இணைந்து செல்வதில் தோல்வி கண்டது. 1973 இல் சிவில் சேவையாளரின் வேலை நிலைமைகளை மீளாய்வு செய்யவென நியமிக்கப்பட்ட சம்பளக் கமிஷனர்,சராசரி 30 சதவீதச் சம்பள அதிகரிப்புக்குச் சிபார்சு செய்தார்.இச் சிபார்சுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வெகுமதிக்கான நிபந்தனைகள் படிப்படியாகச் சகல பொதுக் கூட்டுத்தாபனத் தொழிலாளருக்கும் பரவலாக்கப்பட்டதுடன் வாழ்க்கைச் செலவைச் சீராக்குதல், தனியார் மற்றும் பொதுத்துறைகளிலுள்ள சகல தொழிலாளருக்கும் சட்டப்படி இடம்பெறவேண்டும். 1979 வரை வாழ்க்கைச்செலவில் ஏற்பட்ட அதிகரிப்பு இரண்டுவருடத்துக்கு ஒருமுறை சகல தொழிலாளருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் சீராக்கங்கள் வருடா வருடம் இடம்பெற்றன.
1974-1976இல் தேசியச் சம்பளச்சபை வெகுமதிகள், பொருளாதாரத்தின் சகல பிரிவுகளிலும் மெய்க்கூலி அதிகரிப்புக்கு வழிவகுத்தது. அத்துடன் நாட்கூலியையும் (தேர்ச்சி பெறாத தொழிலாளருக்கு) மற்றும் வாராந்தக் கூலி (தேர்ச்சி பெற்ற தொழிலாளருக்கு)யையும் ஒன்றாக்கியது. 1971 - 1976 வரையுள்ள ஆண்டுகளைத் தொகுத்து நோக்கினால், தொழிலாளருக்குக் கொடுத்த நாளாந்த மெய்க்கூலி சீனிக் கைத்தொழிலில் ஈடுபட்டோருக்கு 46 சதவீதத்தாலும் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டோருக்கு 18 சதவீதத்தாலும் உயர்ந்தது. அதே வேளையில் வாராந்தம் வழங்கப்பட்ட கூலி 10 சதவீதமாக மட்டுமே கூடியது.
இக் காலத்தில் நிகழ்ந்த இன்னொரு புத்தாக்கமாக, இடைநிறுத்தப் படுவோருக்கு தொழில் இழப்பீடு வழங்கப்படுதல் 1975 ஆம் ஆண்டின் தொழிற்சட்டப்படி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வருடத்துக்கு மேற்பட்ட சேவைக் காலத்தையுடைய எல்லோரும் சேவைக் காலத்தின் அளவிற்கேற்ப விகித அடிப்படையில் சம்பளத்தைப் பெறும் உரிமையுடையவராயினர். 10 பேருக்கு மேற்பட்டோரை வேலை நீக்கம் செய்ய விரும்பும் வேலை கொள்வோர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்படும் சேவைச்சபைக்கு அதனைத் தெரியப்படுத்த வேண்டும். 1982 ஆம் ஆண்டின் பிற்சேர்க்கையான்து அறிவித்தலுக்கும், வேலைநீக்கத்துக்குமிடையே 120 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதை அறிமுகப்படுத்தியதன் மூலம் மேலும் தொழிற்பாதுகாப்பை வழங்கியது.
79

Page 43
அரசாங்கம் சுகாதாரம், கல்விவசதிகள், நீரும் வடிகாலும் மற்றும் குறைந்த வருமான் வீடமைப்பு ஆகியவற்றுக்கு அதிகளவில் செலவு செய்தது. சமூக சேவைக்கு வரவு செலவுத் திட்டத்தில் செலவு செய்த பங்கு 1970-1971 இல் 40 சதவீதத்திலிருந்து 1973-1974 இல் 54 சதவீதமாக உயர்ந்தது. ஆயினும் இந்த அதிகரிப்பு முழுமையாக அரிசி மற்றும் கோதுமை மாவின் மானியத்தில் உண்டான அதிகரிப்பில் சேர்க்கப்பட்டு, வறியவர்களுக்கு உதவும் முகமாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் குறைக்க வழங்கப்பட்டது. 1973-1974 இல் (இத்தகைய கொடுப்பனவு வழங்கப்பட்ட முதலாவது வருடம்) மானியமாக வழங்கப்பட்ட தொகை 107 மில்லியனாகவும் தொடர்ந்துவரும் வருடங்களில் அத்தொகை மேலும் அதிகமாகவும் இருந்தது.
சுருங்கக் கூறின் விலையேற்றக் காலத்தில் அரசாங்கம் மெய்க்கூலியைக் கூட்டுவதன் மூலமும் சமூக சேவைகளை விரிவாக்குதல் மூலமும் உதவ முயன்றது.இக் கொள்கைகளை நிறைவேற்றுவது கடினம் என்பது நிரூபிக்கப்பட்டது. உண்மையிலே, விலையேற்றம் குறைந்தபின் சமூகச் செலவினங்கள் மூலதன மற்றும் நடைமுறைச் செலவுகள் தொடர்ந்து உயர்வடைந்தது. சகல இடைநிலைக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தினால் கொடுப்பனவுகள் 1978-1979 ஆம் ஆண்டுகளில் 104 மில்லியனாக அதிகரித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக இருந்த சமூகச் செலவினங்கள். நாட்டின் வளங்கள்மீது சகிக்க முடியாத கஷ்டங்களை மிகக் கவனமாக மறுசீராக்கம் செய்யவேண்டிய தேவையையும் ஏற்படுத்தியது.
(i) நிதி மற்றும் வரவு செலவுத் திட்டக் கொள்கை
விலையேற்ற காலத்தில் பெற்ற உயர் வருமானம் இன்றும் செலவு செய்யப்படுவதனால், அரசாங்கம் சீனி வரியைக் கூட்டியது. 1973 இல் 6 சதவீதமான சீனி ஏற்றுமதி வரிக்குப் பதிலாக கிரமமாய் வகுக்கப்பட்ட வரி (graduatedtax) கொண்டுவரப்பட்டது. 20 தொன்னுக்குக் குறைவாக ஏற்றுமதி செய்யும் பண்ணையாளர்களுக்கு வரி விலக்களிக்கப்பட்டது. அதே வேளையில் 5,000 தொன்னுக்கு மேற்பட்ட பெருந் தோட்டங்கள் உயர்வரிக்கு இலக்காயின. இவற்றின் தொடக்கவரி 9 சதவீதமாக இருந்தது. கிரமமாய் வகுக்கப்பட்ட வரி செல்வமிக்க பிரான்சிய மொரீசியர்களைப் பிரதானமாகப் பாதித்தமையால் அவை பிரபல்யம் பெற்றன. விலையேற்றம் நீடித்தபோது அது பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. அதற்காகப், பெருந்தோட்டங்கள் தமது வாடகையை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்தியது. ஆனால் விலையேற்றம் முடிவடைந்ததுடன் அரசாங்கத்தின்வருமானத்திற்கான தேவை அதிகரித்தது. வரியும் அதனை நீக்கப்படுவதற்குப்பதிலாக அதிகரித்ததுடன்முன்னேற்றங்களைத் தந்தது.
80

(அட்டவணை 5). எனினும் சீனிக் கைத்தொழிலின் மிக முக்கிய பகுதி கடும் பாதிப்புக்குள்ளானது. பாரிய பெருந்தோட்டங்கள் இழப்புகளினால் பாதிப்படைந்தன. படிப்படியாக அவற்றில் மூலதனம் குறைந்துள்ளது. சீனிவரி விரைவில் ஒரு சமூக - அரசியல் விவகாரமாக மாறியதுடன், 1980 கள் வரையில் அவை தீர்த்துவைக்கப்படவில்லை.
வரி அதிகரிப்பு தாங்கும் சக்தியற்றதாகையால், விலையுயர்வான காலத்திலும் அரசாங்கம் பற்றாக்குறையை அனுபவித்தது. 1970 - 1971 இல் விலையேற்றத்துக்கு முற்பட்ட கடைசிநிதிவருடத்தில், மொரீசியசின் நடைமுறைக் கணக்கில் 9 மில்லியன் ரூபா மிகை காணப்பட்டதுடன் பொதுவான பற்றாக்குறை 61 மில்லியன் ரூபாவாக இருந்தது. 1973 - 1974 அளவில் 19 மில்லியன் ரூபா நடைமுறைக் கணக்கில் பற்றாக்குறையாகவும் சகலவிதமான பற்றாக்குறை 259 மில்லியன் ரூபாவாகவும் இருந்தது. நிலையான விலையில் கணக்கிடப்பட்ட அரசாங்க வருமானம் 3 வருடங்களுக்குள் 40 சதவீதத்தினால் அதிகரித்தது. எனினும் பற்றாக்குறை 6 மடங்கினால் கூடியது.
அட்டவணை 5 : சீனி ஏற்றுமதி வரி - 1973,1977,1979 பயிர் வருடம் (சதவீதம்)
ஏற்றுமதியளவு (மெற்றிக் தொன்) 1973 1977 1979
20 இலும் குறைவு O 0.0 0.0 20 அல்லது கூட,75 இலும் குறைய 6 6.0 10.5 75 அல்லது கூட, 1000 இலும் குறைய 7 7.0 12.3 1000அல்லது கூட, 3000இலும் குறைய 8 9.0 15.8 3000 அல்லது கூட 9 13.5 23.6
Source: Mauritius Chamber of Agriculture.
அரசாங்கம் பற்றாக்குறையை நிதிப்படுத்துவதற்கு உள்நாட்டுக் கடன்களிலேயே பெருமளவுக்குத் (மத்திய வங்கி, வணிக வங்கி) தங்கியிருந்தது. பொதுப்படுகடன் 1971 ஜூலையில் 381 மில்லியன் ரூபாவிலிருந்து 1975 ஜூலையில் 1,021 மில்லியன் ரூபாவாக உயர்ந்தது. விலையேற்றம் குறைவடைந்ததும், வருமானத்திற்கும் தொடர்ந்தும் அதிகரித்த செலவினங்களுக்குமிடையேயுள்ள இடைவெளி அதிகரித்தது. 1975-1976 நிதியாண்டுக்கும் 1978-1979 நிதியாண்டுக்கும்இடைப்பட்ட காலத்தில் வருமானம் 33.2 சதவீதத்தாலும் , செலவினங்கள் 80.5 சதவீதத்தாலும் உயர்ந்தது. அதேவளையில் 1960 ஆம் ஆண்டினை
81

Page 44
அடிப்படையாகக் கொண்ட நுகர்வோர் விலைச் சுட்டெண் 35.7 சதவீதமாக உயர்ந்தது. 1979 அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 13 சதவீதமாகவும், பொதுப்படுகடன் 48 சதவீதமாகவும் இருந்தது.
பணவீக்கத்தை மட்டுப்படுத்தவும் வர்த்தக நிலுவையைப் பேணவும் அரசாங்கமானது என்றுமில்லாத அளவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. சகல முக்கியமான உற்பத்திகள் மீதும் விலைக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியது. வர்த்தகத் துறைக்கான வங்கிக் கடன்கள் 1976 ஆம் ஆண்டிலிருந்த நிலைக்குக் குறைக்கப்பட்டது.வணிக வங்கிகள் தமது பணரீதியான சொத்துக்களை அல்லது அரசாங்கப் பிணைகளை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. அத்துடன் 1979 இல் மொறிசியஸ் வங்கி மீள்கழிவு வசதிகளை (rediscount facilities) ஒழித்துவிட்டன. இத்தகைய கட்டுப்பாடுகள் அரசாங்க வைப்புகளின் விரிவாக்கத்தை வரையறை செய்யாமல் தனியார் கடன் பெருகுவதற்கு உதவியது. 1976 க்கும் 1979 க்கும் இடைப்பட்ட காலத்தில் உள்நாட்டுக் கடன்களில் அரசாங்கத்தின் தேசியப் பங்கு மூன்றிலொன்றாக இருந்து இரண்டிலொரு பங்காக அதிகரித்தது. சகல இறக்குமதிகளுக்கும் படிப்படியாகத் தரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆயினும் வெளிநாட்டு ஒதுக்கீடுகளில் தேய்வு ஏற்பட்டது. 1979 ஆம் ஆண்டு கோடை காலத்தில் அவை ஒருவாரத்துக்கான இறக்குமதிகளை ஈடுசெய்யவே போதுமானவையாக இருந்தன.
(iv) ஏற்றுமதி நோக்குடைய கைத்தொழிலாக்கம்
(Export - Oriented Industrialisation)
விலையேற்ற்காலத்தில் சீனியின் மூலம்பெறப்பட்ட இலாபத்தின் உயர்வால் 1964-1966ஆம் ஆண்டு காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்தச் சேமிப்பின் அளவு 12.8 சதவீதம் அதிகரித்தது. இவ்வதிகரிப்பு 1970 - 1972 இல் 15.2 சதவீதமாகவும் 1974 - 1975 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34 .2 ச்தவீதமாக உச்சநிலையை அடைந்தது. ஆயினும் வழமையான முதலீட்டு வசதிகள் வரையறுக்கப்பட்டன. உள்நாட்டுச் சீனிக் கைத்தொழிலுக்குப் போதியளவு முதலீடு செய்யப்பட்டது. இவ்வேளையில் வெளிநாட்டுப் பெருந்தோட்டங்களில் முதலீடு செய்தல், மூலதன ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்பட்டது. இலகுபடுத்தப்பட்ட இறக்குமதிப் பிரதியீடுகளுக்கான சாத்தியக் கூறுகள் பெருமளவுக்கு வலுவிழந்தன.
1970 இல் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிச் செய்முறை வலயச் (EPZ) சட்டத்தின் மூலம் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாகின. இச் சட்டமானது முழுமையான ஏற்றுமதி நோக்கில் உற்பத்தியில் ஈடுபடும்
82

அட்டவணை 6 : மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்,
1970/1971 - 1975/1976 (மில்லியன் ரூபாவில்)
விடயம் 1970-71. 1971-72 1972-73 1973-74, 1974-75 1975-76
நடைமுறை
வருமானம் (a) 260 294 377 515 745 1,077 நடைமுறைச்
செலவு 251 268 311 535 734 991
நடைமுறை
நிலுவை 9 26 65 - 19 - 11 85
மூலதன
வருமானம்(b) 14 1. 1. 5 46 18
மூலதனச்
செலவு 84 101 127 245 259 423
மூலதன
நிலுவை - 70 - 99 - 126 - 240 - 213 - 405
மொத்த
நிலுவை (c) - 61 - 74 - 61 - 259 -203 - 320
வெளிநாட்டு
கடன் 12 9 18 - 39 58 37
உள்நாட்டுக்
as L6ir 60 104 109 84 306 207
(a) Excludes transfers to capital budget.
(b) Excludes transfers from current budget.
(c) Overall deficit equals external plus internal borrowings plus
changes in reserves.
Source: Mauritius, Central Statistical Office.
முயற்சியாளருக்கு அமைவிட வேறுபாடின்றிச் சகல இறக்குமதித் தீர்வைகளிலிருந்தும் விலக்களித்தது. வெளிநாட்டு இருப்புகளை வைத்திருப்போருக்கு ஏற்றுமதிச் செய்முறை வலயத்தின் முயற்சிகளிலிருந்து இலாபத்தை மீட்டெடுக்கவும் மூலதன முதலீட்டைப் பெறவும் அனுமதி வழங்கப்பட்டது. ஏற்றுமதிச் செய்முறை வலய நிறுவனங்களும் 10 வருடக் கூட்டு வரி விதிவிலக்கைப் பெற்றன. விடுதிக்
83

Page 45
கைத்தொழிலிலும் (hotel industry) இதனைப் போன்ற சட்டமொன்று பின்பற்றப்பட்டது.
1971 - 1976 ஆம் ஆண்டுகளில் சீனியின் மூலம் பெறப்பட்ட இலாபத்தின் மூலம் துரித வளர்ச்சியைக் கண்டுவரும் ஏற்றுமதிச் செய்முறை வலயத்துறைக்கு 50 சதவீதமான மூலதனம் வழங்கப்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டின் மிகுதி வெளிநாடுகளிலிருந்து கிடைத்தன. லோம் மற்றும் யோண்டே (LOme and Yaounde) வழக்காற்றின்படிமொறிசியஸ்சில் தயாரிக்கப்படும் உற்பத்திகள் ஐரோப்பிய பொருளாதாரச் சமூக நாடுகளுக்குக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி அடையக் கூடியதாக இருந்ததினால் ஸ்திரமற்ற கைத்தொழில்களுக்கான வெளியீட்டு நிதிக்கு மொறிசியஸ் அனுகூலமான இடமாக அமைந்தது. இவ்வகையான சலுகைகளை ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் அனுபவித்தனவாயினும் அவற்றிலும் பார்க்க,மொறிசியஸ் பாரிய அரசியல் மற்றும் சமூக உறுதிப்பாட்டுடன் விளங்கியது. இதனுடைய அடிப்படை வசதிகளும் சாதகமாக இருந்தன. ஹொங்கொங்கிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய பொருளாதாரச் சமூகமும், ஐக்கிய அமெரிக்காவும் விதித்த தடைகளினால் மொறிசியசும் நன்மையடைந்தது. அதேபோலக் குடியேற்ற நாட்டின் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மைகளும் நிலவின.
1971 இல் ஏற்றுமதிச் செய்முறை வலயத்துறையானது 644 பேரைக் கொண்ட 9 நிறுவனங்களையும் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 1 சதவீதத்தையும்கொண்டமைந்தது. 5 வருடங்களின் பின்னர் மொரீசியஸ் மொத்தமாக 85 ஏற்றுமதிச் செய்முறை வலய நிறுவனங்களைக் கொண்டிருந்தது. இவற்றுள் பெரும்பாலானவை 17,171 தொழிலாளரைக் கொண்ட ஆடையுற்பத்தித்துறையாக விளங்கின. ஏற்றுமதியில் ஏற்றுமதிச் செய்முறை வலயத்துறையின் பங்கு13 சதவீதமாக அதிகரித்தது. ஏற்றுமதிச் செய்முறைவலயத் தொழிற்சாலைகளின் சில வகையான பணிகள் உடலுழைப்புடன் கூடியவை. அத்துடன் ஆரம்ப வருடங்களில் வழங்கப்பட்ட ஆகக் குறைந்த கூலி பெண்களிலும் பார்க்க ஆண்களுக்குக் கூடுதலாக இருந்தது. எனவே ஏற்றுமதிச் செய்முறைவலயத் தொழிற்சாலைகள் அநேகமாகப் பெண்களையே வேலைக்கமர்த்தி இருந்தன. (அட்டவணை 7). 1976 இன் பின்னர் ஏற்றுமதிச் செய்முறைவலயத்தின் கைத்தொழில்களின் வளர்ச்சி வீதம் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. சீனியின் மூலம் பெறப்பட்ட இலாபம் குறைந்தது. உலகளாவியரீதியில் ஏற்பட்ட மந்தநிலையின் விளைவான பொருளாதார நெருக்கடிகளினால் மொரீசியசுக்கு முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்காமற் போயிற்று,
84

(V) செழிப்புக்குப் பின்னருள்ள நிலைமைகள்
1971 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பாரிய நிறுவனங்களில் உள்ள தொழிலாளர் தொகை, 17,000 துணையுதவித் தொழிலாளர் உட்பட 142,000 ஆக இருந்தது. அதே வருடத்தின் டிசம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வேலையின் மை 30,600 ஆகக் காணப்பட்டது. 4 வருடங்களின் பின்னர் இத் தொகை 173,000 ஆக உயர்ந்தது. துணையுதவித் தொழிலாளார் தொகை 6,000 ஆகவும் பதிவுசெய்யப்பட்ட வேலையின்மையளவு 20,000 இலும் குறைவாகவும் இருந்தது. விலையேற்றம் குறைந்தபோது தொழிலாக்கமும் குறைந்தது. ஆயினும் 1979 செப்ரெம்பரில் மொத்த வேலையின் அளவு 199,000 இலும் கூடுதலாகவும் பதிவு செய்யப்பட்ட வேலையின்மையின் அளவு வருடமுடிவில் 23,000 ஆகவும் மாறியது.
அட்டவணை 7 ஏற்றுமதிச் செய்முறை வலயக் கைத்தொழில்களில்
வேலைவாய்ப்பு 1971 - 1986
வருடம் ஆண் பெண் மொத்தத் தொழிலாளர்
1971 214 430 644 1972 384 2204 2588 1973 770 5030 5800 1974 1088 7881 8469 1975 1670 8591 10261
1976 3478 13693 17171
1977 3087 14385 17474 1978 3186 15137 18323
1979 3381 7361 20742
1980 3854 17490 21344
1981 4473 19128 236.00
1982 4393 19083 23476 1983 4807 2O719 255.26 1984 7.913 29.609 37522
1985 14883 39068 4983
1986 242O2 49813 74018
Source: Mauritius, Central Statistical Office.
சீனிக் கைத்தொழில் இன்றும் பிரதான நடவடிக்கையாக இருந்தாலும் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கத் தவறிவிட்டது. 1971
85

Page 46
செப்ரெம்பருக்கும் 1972 செப்ரெம் பருக்குமிடையில் சீனித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 54,800 இலிருந்து 57,800 ஆக உயர்வடைந்தது. ஆனால் 1979 செப்ரெம்பரில் இது 52,700 பேராக வீழ்ச்சியடைந்தது. வேலைவாய்ப்புக்கள் பெரும்பாலும் தயாரிப்புத் துறையிலேயே உருவாக்கப்பட்டது. 1971 செப்ரெம்பரில் 9800 பேராக இருந்த வேலைவாய்ப்பு:1975 செப்ரெம்பரில் 22,500ஆக அதிகரித்ததுடன் 1979 செப்ரெம்பரில் 35600 பேரைத்தொழிலாளர்களாகக் கொண்டிருந்தது. இத்தகைய அதிகரிப்புக்கு 1970 ஆம் ஆண்டின் ஏற்றுமதிச் செய்முறை வலயத்திட்டத்தின் கீழ் இயங்கிய ஏற்றுமதிப்போக்கான கைத்தொழில்களே பெரும் பங்களித்தன.
செழிப்புக் காலத்தின் ஏனைய கொள்கைகள் பிரச்சினைக்குரியவையாக இருந்தன. பொருளாதாரத் தேக்கமானது சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளப் படத்தக்கதாக, அதி உச்சத் தீர்வைத் தராவிட்டாலும் பொருளாதார ரீதியாகத் திருப்திகரமானதாகக் காணப்பட்டது. நாணயத்தின் மிகை மதிப்பாக்கம் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்தது. செங்குத்தாகப் படிப்படியாக அதிகரித்த வரிகள் சீனிக் கைத்தொழிலைப் பாதித்தன. மிகையான செலவுகள் பொருளாதாரத்தைப் பொருத்தமற்றமுறையில் தூண்டின.
5. சிக்கன வழிகளைக் கையாளுதலும் மீட்சியும் 1979 - 1988
சீனிவிலையேற்றத்தைத்தொடர்ந்து இடம்பெற்ற நிதிவிரிவாக்கம் பற்றிய கொள்கை மற்றும் நேரடிக் கட்டுப்பாடுகள் என்பன ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அத்துடன் 1979 இல் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் உதவி கோரியது. இந்த இரு நிறுவனங்களும் கடன் வழங்க ஆர்வமாக இருந்ததெனினும் செலவுமிக்க சமூக நிகழ்ச்சித் திட்டங்களைக் குறைத்துக்கொள்ளும்படி அவை மொறிசிய அரசாங்கத்தை வலியுறுத்தின. மற்றும் நிதிப்பாதுகாப்பு, கட்டுப்பாடுகளை நீக்குதல் தொடர்பாகக் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டன.
சிக்கன வழிகளைக் கையாளுதல் அரசாங்கத்தின் செல்வாக்கினைக் குறைத்தது. மற்றும் MMM கட்சி பொதுத்தேர்தலில் அளப்பரிய வெற்றியீட்டியது. MMM கட்சியானது பொருளாதாரத் தடைகளை அங்கீகரித்ததுடன், முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட அதே கொள்கைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தது. அரசியற் பிளவு மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் பின்னர் இன்னொரு கூட்டு உருவாக்கப்பட்டது. எனவேMMMமீண்டும் எதிர்க்கட்சியாகவே இருந்தது. அரசியல் கொந்தளிப்புக்குப் பதிலாகத், தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் நிலையான பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்தும்
86

கடைப்பிடித்தன. தமது செல்வாக்கு மிகுந்த நிலை மற்றும் சமூகத்துறையில் அரசாங்கக் கட்டுப்பாட்டுக் கொள்கை என்பவற்றைக் கைவிடாது, பொதுச் செலவினங்களைக் குறைத் தன. மற்றும் பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கின. பொருளாதாரத்தில் சிறிதளவு பிளவு ஏற்பட்டபின் அது ஏற்றுமதியடிப்படையிலான புதியதொரு வளர்ச்சிக் காலத்தை உருவாக்கியது. (அட்டவணை 8)
அட்டவணை 8 வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (நிலையான
விலைகளில்) 1976 - 86(சதவீதத்தில்)
வருடம் வளர்ச்சிவீதம்
1976 16.7
1977 7.0
1978 4.0
1979 3.6
1980 10.0
1981 6.4 1982 5.8
1983 0.4
1984 4.7
1985 6.8
1986 8.9
Source: Mauritius, Central Statistical Office.
(1) அரசியல் ரீதியான விருத்திகள்
1976 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் பிரசார வேலைகளின்போது, ஆளுங் கூட்டாட்சியானது சமத்துவத்தைப் பேணும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் மெய்க்கூலியையும் அதிகரித்ததுடன் சுகாதார மற்றும் கல்வி வசதிகளையும் மேம்படுத்தியது.
1976 - 1979 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிடைக்கும் வளங்களை அதிகளவில் பயன்படுத்தச் செய்தன. சர்வதேச நாணயநிதி மற்றும் உலக வங்கி என்பவற்றால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாக, 1979ஆம் ஆண்டின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிக்கனவழிக் கொள்கைகள் எதிர்க் கட்சியாகிய MMM கட்சிக்குச் சர்வதேச நிறுவனங்களுக்கு அரசாங்கம் விற்பனைகளை மேற்கொள்கிறது என்ற
87

Page 47
குற்றச்சாட்டைச் சுமத்துவதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. தொழிற்கட்சி பின்னர் ஆதரவை இழக்கத் தொடங்கியபோது அதற்கு மாற்றுக்கட்சியாக MMM மாறத் தொடங்கியது. இக் காலம் தொடக்கம் சோஷலிசத்தை எழுந்தமானத்தில் நடைமுறைப்படுத்துவதிலிருந்து விலகி நவீனமயப்படுத்துவதில் ஈடுபட்டதுடன் பாராளுமன்ற அமைப்புமுறையை நோக்கிய நேரடிச் செயற்பாட்டிலும் இறங்கியது. கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் 1970 இல் வழங்கப்பட்டதுடன் மேலும் 1976 இல் விரிவுபடுத்தப்படலாயிற்று. இது பரந்தளவிலான தேசியமயமாக்கம் மற்றும் தொழிலாளர் சுயஆட்சி என்பவற்றுக்கு வழிகோலியது. ஆனால் 1970 களின் இறுதிப் பகுதியில் பொருளாதார நெருக்கடி அதிகரித்தமையால், கட்சியின் தலைவரான "போல் பிரேம்கர்” (Paul Berenger) "புதிய சமூக ஒருமைப்பாடு” (new Social consensus) என்பதை அதிகளவில் வலியுறுத்தியதுடன், கட்சியின் மாக்ஸ்சியக் கோட்பாடுகளையும் முன்வைத்தார்.
இத்தகைய நடவடிக்கை MMM கட்சியானது மொரீசிய சோசலிசக் கட்சியுடன் (PSM)தேர்தல் கூட்டு ஒன்றைச் செய்து கொள்ள இடமளித்தது. கிராமிய இந்துக் குழுவொன்று 1979 செப்ரெம்பரில் தொழிற்கட்சியிலிருந்து பிரிந்து சென்றது. MMM-PSM ஆகியவற்றின் கூட்டுத் தேர்தல் பிரசாரமானது உத்தேசிக்கப்பட்ட மந்திரிசபையை உயர்பொறுப்புவாய்ந்த ஒரு குழுவாக, சுதந்திரத்துக்கு முன்னைய நாட்கள் தொடக்கம் ஆட்சியிலிருந்து வந்த “களைத்துப்போன முதிய மனிதர்களின்” (tiredold men) தொழிற்கட்சியினரை அகற்ற ஆயத்தமாக இருந்தது. தேர்தல் விஞ்ஞாபனமானது வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும் குறைந்த மட்டக் கூலியை உயர்த்தவும் அதிக நலன்கனைப் பேணவும் உறுதி கூறியது. இந் நிகழ்ச்சித் திட்டத்தில் காணப்பட்ட சோசலிச அம்சங்கள் சொத்துவரி என்ற அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இவ் வரியானது செல்வந்தரில் ஒரு குழுவினரை மாத்திரமே பாதிக்கக்கூடும். மற்றும் நட்டத்தில் இயங்கும் இரண்டு சீனித் தொழிற்சாலைகளைத் தேசியமயமாக்குதல், விடுதிக் கைத்தொழிலில் 50 சதவீதமான பங்குகளைச் சுவீகரித்தலும் இடம் பெற்றது. அதே வேளையில் MMM கட்சியானது சுதந்திரமான முயற்சிகளை மேம்படுத்தல், தனிப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்தல் என்பவற்றிலும் நாட்டஞ் செலுத்தியது.
1972 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் MMM உம், PSM உம் பாராளுமன்ற ஆசனங்கள் அனைத்தையும் வென்றன. புதிய அரசாங்கம் அதிகாரத்திலிருந்தபோது பேரினப் பொருளாதார முகாமைத்துவத்தை மேம்படுத்தவும், தகுந்த நேரத்தில் தேசியமயமாக்கலை ஒதுக்கிவிடவும் கவனமெடுத்தது. இத்தகைய நடுநிலைத்தன்மை உபாயமானது PSM கட்சிக்கும் பரந்தளவில் ஆதரவைத் தேடிக் கொடுத்தது.(வெளிநாட்டு ஆதரவையும் பெற்றது) ஆனால், கட்சியின் தீவிரவாதப் பிரிவினரை
88

ஒதுக்கிவிட்டது. அரிசி மற்றும் மா போன்ற பொருட்களுக்கான மானியக் குறைப்பு, சீனி ஏற்றுமதிக் குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் பரந்தளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுமை பற்றிய முரண்பாடுகள் நிலைமைகளை மேலும் பிரச்சினைக்குள்ளர்க்கியது. MMM ஆட்சியின் 6 மாதங்களின் பின்னர் “போல் பிறேம்கர்’ நிதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து அதன் பின்னர் MMM இன் உறுப்பினர் பலரை எதிர்க்கட்சியினரின் பக்கம் சேர்த்துக் கொண்டார். MMM இன் பிரதம அமைச்சரான அனிறுாட் யுக்நாத் (aneerood jugnauth) தனது ஆதரவாளரையும் PSM ஐயும் சேர்த்து, மொறிசிய சோசலிச இயக்கம் என்னும் புதிய கட்சியை உருவாக்கினார். இவர்களில் அநேகர் இந்துக்கள்.
1983இல் “யுக்நாத்” பாராளுமன்றப்பெரும்பான்மையைப் பெறமுடியாமல் போனதால், பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இத் தேர்தலில் MSM தொழிற்கட்சி மற்றும் PMSDஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்தது. தற்பொழுது MMM ஆனது முக்கியமாக நகரவாழ் முஸ்லீம்களையும் தொழிலாளரையும் கொண்டிருப்பதுடன் வறிய மக்கள், தீவின் இனக்குழுக்களைச் சேர்ந்த தீவிர உறுப்பினர்கள், கற்றோர் ஆகியோரது பரவலான ஆதரவையும் பெற்றுள்ளது. MMM 46 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. ஆயினும் 22 பாராளுமன்ற ஆசனங்களை மட்டும் பெறமுடிந்தது. MSM உம் அதன் கூட்டுக் கட்சிகளும் 48 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டன. முன்னணியின் உறுப்பினர்கள் MMM இன் விருப்பின்மைக்கு ஆளாயினர். ஆளுங்கூட்டுக் கட்சிகள் அரசியல் அபிப்பிராயங்களைப் பரவலாக முன்வைத்தன. அவை தனிப்பட்ட விரோதங்களுக்கும் பிற்காலங்களில் அவதூறுகளுக்கும் உட்பட்டன. 1987 ஆம் ஆண்டில் கூட்டு முன்னணி மீண்டும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றது. ஆயினும் 1983 இல் MMM ஏனைய கட்சிகள் யாவற்றிலும் பார்க்க அதிகளவான வாக்குகளைப் பெற்றது.
(i) பொருளாதாரச் சிக்கன வழிமுறைகள்
(Economic Retrenchment)
1979 இல் நாடு கடனைத் தீர்க்கும் வழிவகைகளில் மூழ்கியிருந்தது. 1972 ஆம் ஆண்டின் இறுதிக்கும் 1989 ஆம் ஆண்டின் இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டுக்கடன் நிலுவை 32.6 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 226 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது. அத்துடன் வருடாந்தக் கடன் சேவை 2.2 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 18.9 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. நன்கொடைகளையும் சலுகையடிப்படைக் கடன்களையும் பெற்றுக் கொள்ளல் கடினமாக இருந்தது. வணிக வங்கியும் காலக்கெடுவை வலுப்படுத்தியது. கடன்களுக்கான சராசரி வட்டிவீதம் 1973 இல் 2.9 சதவீதத்திலிருந்து 1979 இல் 10.3 சதவீதமாகக் கூடியது. அவற்றின்
89

Page 48
முதிர்வுக் காலம் 35 வருடங்களிலிருந்து 10 வருடங்களாகக் குறைக்கப்பட்டது. அந்நியச் செலாவணி ஒதுக்குகள் (வங்கியமைப்பில் தேறிய சொத்துக்கள் என வரையறை செய்யப்பட்டவை). 1972 இன் இறுதிப் பகுதியில் 406 மில்லியனிலிருந்து 1979 ஆம் ஆண்டு முடிவில் 206 மில்லியனாகக் குறைந்தது.
1979 ஒக்டோபரில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒர் உடன்படிக்கையைச் செய்து கொண்டது. இவ் உடன்படிக்கையின்படி இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலத்துக்கு விசேட எடுப்புரிமையாக 73 மில்லியன் ரூபாவை மொறிசியஸ் பெற்றுக்கொண்டது. மேலும் 1979 செப்ரெம்பர் 23 ஆம் திகதி மொறிசிய நாணயத்தின் பெறுமதி 22.9 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கும் திட்டம் உடன்படிக்கையில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. இவை அரசாங்கத்தின் குறுங்கால, இடைக்காலக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. மற்றும் உயர்கழிவு வீதம் தனிப்பட்ட கடனுக்கான கட்டுப்பாடு என்பவற்றையும் குறிப்பிட்டிருந்தன.
1979 இன் இறுதிப் பகுதியிலும் 1980 இன் ஆரம்பத்திலும் சூறாவளி, வெள்ளம் போன்றவற்றால் மொறிசியஸ் பாதிப்படைந்தது. இதன் காரணமாகப் பயிர்கள் அழிந்தன. வீடுகளுக்குப் பரவலான சேதம் உண்டாயிற்று. அவசரகால நிவாரண நடவடிக்கைகள் காரணமாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கும் நிலையைத் தடைசெய்தது. ஆயினும் அவர்களுடைய நிலைமைகள் காரணமாக, உரிமையை விட்டுக்கொடுக்கும் நிலையேற்பட்டமையால், அங்கு மேற்கொள்ளப்பட்ட அவசர ஒழுங்குகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 1980 செப்ரெம்பரில் கைச்சாத்திடப்பட்ட புதிய உடன்படிக்கையின் மூலம் விசேட எடுப்புரிமையான 40 மில்லியன் மேலதிகமாகப் பெறப்பட்டது. ஓராண்டில் சென்மதி நிலுவைக்கு உதவும் வகையில் 35 மில்லியன் பெற்றுக் கொள்ளப்பட்டது. மூன்றாவது அவசர உடன்படிக்கை 1981 செப்ரெம்பரில் கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் மேலும் 30 மில்லியன் விசேட எடுப்புரிமைக்கு வசதி கிட்டியது. அத்துடன் நான்காவது சென்மதி நிறுவை ஆதார உடன்படிக்கையின் மூலம் 1983 இல் 49.5 மில்லியன் கிடைத்தது. இத்தகைய உடன்படிக்கைகள் விரிவான முறையில் நிதி மற்றும் நாணயக் கொள்கைகளுக்கு விளக்கமளித்ததுடன் கூலிக்கட்டுப்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டன.
மிக எளிமையான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கைகளின் விளைவுகள் 1980 களின் ஆரம்பத்தில் ஓரளவுக்கு நிலையற்றனவாகக் காணப்பட்டன. நடைமுறையிலான நிதிப்பற்றாக்குறை 1981-1982 இல் 1,384 மில்லியன் ரூபாவிலிருந்து, (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.5 சதவீதம்) 1986 - 1987 இல் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
90

2.2 சதவீதம்) 424 மில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்தது (அட்டவணை 9). சென்மதி நிலுவையிலும் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது. 1985இல் அத் தசாப்தத்தில் முதன் முறையாக வெளிநாட்டுக் கணக்கிலும் மிகைநிலை காணப்பட்டது (அட்டவணை10). மேலும் மேற்கொள்ளப்பட்ட நாணயப் பெறுமதி இறக்கத்தின் காரணமாக விசேட எடுப்புரிமை களிலிருந்து ரூபாய்த் தொடர்பை நீக்கிக் கொண்டதுடன் வர்த்தக மூலமான நாணயக் கூடையுடன் தொடர்பினை 1983 பெப்ரவரியில் ஏற்படுத்தியது. அடுத்த இரு வருடங்களுக்கு இதன் டொலர் தொடர்பான பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் 1985-1987 இல் உயர்வடைந்தது (அட்டவணை 11).
அட்டவணை 9:நிதிப்பற்றாக்குறை, நிதியாண்டு 1981 -1982தொடக்கம் நிதியாண்டு 1986-1987 வரை (மில்லியன் ரூபாய்களில்)
1981-82 1982-83 1983-84 1984-85 1985-86 1986-87 (a)
மொத்த வருமானம் 2288 / 2825 31.22 3562 4131 5036
மொத்தச் செலவு 3673 3985 3980 4386 4770 5456
பற்றாக் w குறை 1384 1160 858 824 639 420
GDP ulair சதவீதமாக பற்றாக்
குறை 12.6 9.5 6.4 5.4 3.7 2.1
(a) Includes grants Source: Bank of Mauritius, Annual Report, various issues.
6. தாராளமயமாக்கலும் அமைப்புரீதியான சீர்திருத்தமும்
1982 - 83 இல் MMM மும் அதனைத் தொடர்ந்து வந்த அரசாங்கமும் அமைப்புரீதியான சீராக்க நிகழ்ச்சித் திட்ட அடிப்படையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணயநிதியத்துடன் 1985 - 1986 நிதி நடவடிக்கை பற்றிய உடன்பாட்டுக்கு வந்தன. பொதுத்துறை முதலீடுகளைக் கையாளுதல், பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கல் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் என்னும் விடயங்களில் இவ் உடன்பாடு ஏற்பட்டது.
91

Page 49
அட்டவணை 10: சென்மதி நிலுவை 1975 -1979
(மில்லியன் ரூபாய்களில்)
வருடம் மிகை அல்லது பற்றாக்குறை
1975 351 1976 - 514 1977 - 328 1978 - 330 1979 - 634 1980 - 161 1981 922 س۔ 1982 - 484 1983 - 513 1984 - 253 1985 - 258
1986 1,718
Source: Mauritius, Central Statistical Office.
அட்டவணை 11: சராசரிநாணயமாற்று வீதம், 1978 - 1987
(தலா அமெரிக்க டொலருக்கு மொறிசிய ரூபாய்கள்)
வருடம் நாணயமாற்று வீதம்
1978 6.16 1979 6.31. 1980 7.68 1981 8.94 1982 10.87 1983 11.71 1984 13.80 1985 15.44 1986 13.84 1987 12.88
Source: IMF statistics
மீளமைப்பு மிக வேகமாக இடம்பெற்றது. 1983 டிசம்பரில் 22 பொருட்களுக்கான இறக்குமதிக் கோட்டா நீக்கப்பட்டது. 1984 ஏப்ரலில் மேலும் 193 பொருட்களுக்கும் ஆகஸ்டில் 60 பொருட்களுக்கும் இவ்
92

விடுதலை கிடைத்தது. இறுதியாக 1985 பெப்ரவரியில் கோட்டாமுறை முழுமையாக நீக்கப்படலாயிற்று. இருந்தாலும் உள்நாட்டு இறக்குமதிப் பிரதியீட்டுக் கைத் தொழில்களுக்கும் மேலதிக பாதுகாப்பினை வழங்குவதற்காகச் சில வகையான சுங்கத் தீர்வைகள் விதிக்கப்பட்டன. அநேகமான உள்நாட்டு விலைக் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டன. 1985இல் இடம்பெற்ற பரவலான தாராளமயமாக்கத்தின் பின்னர் அரிசி, மா, வெதுப்பி, உருளைக்கிழங்கு, கருவாடு, சீமெந்து மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்குக் கட்டுப்பாட்டுவிலை இருந்தது.
அளவுரீதியான கடன்கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவங்கியும் எவ்வளவு கடனை வழங்கலாம் என்பதைத் தீர்மானிக்க ஒரு சிக்கலான வாய்ப்பாடு (formula) அமைக்கப்பட்டது.இது ஏற்றுமதி நோக்குடைய கைத்தொழில்களுக்கும் முன்னுரிமை வழங்கியது. மற்றும் வர்த்தகக் கடன்களுக்குப் பாகுபாடு காட்டியது. இதன் மூலம் இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடாகவும் விளங்கியது.
இறக்குமதித் தீர்வையில் தங்கியிருத்தலைக் குறைத்துக் கொள்ள அரசாங்கம் 1983 இல் 5 சதவீத விற்பனை வரியை அறிமுகம் செய்தது. 1984 - 1986 இல் சர்வதேச நாணய நிதிய நிபுணர்களின் உதவியுடன் சகல வரிமுறைகளையும் முற்றிலும் சீர்திருத்தியமைத்தது. கம்பனிவரியை ஊக்குவிக்கும் முகமாகப், பகிர்ந்தளிக்கப்படாத இலாபத்தின் மீதான வரியாக தனியார்துறையிடமிருந்து 86 சதவீதத்தையும், பொதுத்துறைக் கம்பனிகளிடமிருந்து 55 சதவீதத்தையும் அறவிட்டதாயினும் 1984 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதியிலான நிதிச்சட்டப்படி மொத்த இலாபத்தில் 35 சதவீத வரிஎன்ற வன்கயில் ஒரே அளவினதாக மாற்றியமைக்கப்பட்டது. தனியாள் வருமானவரியின் அளவு எட்டிலிருந்து நான்காகக் குறைக்கப்பட்டது. மேல் மட்டத்தினருக்கு விதிக்கப்படக் கூடிய எல்லை வீதம்70 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வரி வருமானம் வீழ்ச்சியடைந்தது எனினும் வரிச் சேகரிப்பு முறைமை முன்னேற்றகரமாக இருந்தது.
(1) சீனி ஏற்றுமதி வரி
1982 ஆம் ஆண்டில் உலக வங்கியுடனான ஒப்பந்தத்தின் படி சீனிக்கைத்தொழில்சம்பந்தமான கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தவென 3 அங்கத்தவர் கொண்ட ஆணைக்குழுவை நியமித்தது. 1984 ஜூன் மாதத்தில் இரு வேறுபட்ட அறிக்கைகளை ஆணைக்குழு வெளியிட்டது. இவற்றுள் ஒன்று குழுவின் தலைவரான "ட்ராகொஸ்லாவ் அவ்ராமொவிக்" (Dragosaw AVranovic) என்பவரால் ஒப்பமிடப்பட்டது. இவர் வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மகாநாட்டின் சிரேஷ்ட ஆலோசகராவர். சீனி ஏற்றுமதி வரி பல வினைத்திறன்மிக்க பிரிவுகளைப்
93

Page 50
பாதித்தது என அவர் அறிந்ததுடன், ஏற்றுமதி வரிக்குப் பதிலாக இலாப வரி விதிக்கப்பட வேண்டும் என விதந்துரைத்தார். அடுத்த அறிக்கை இரண்டு மொறிசிய உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்டது. ஏற்றுமதி வரி மாற்றப்படக்கூடாது என இவர்கள் கூறினர். இவ்விரு அறிக்கைகளும் சீனி அதிகாரசபை ஒன்றை உருவாக்க வேணடும் எனக் கூறின. இத்தகைய விதந்துரைகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
1985 பெப்ரவரியில் சீனி அதிகாரசபை ஒரு செயல் திட்டத்தை வெளியிட்டது. கரும்பு ஆலைகளைப் பாரிய அலகுகளாக அமைப்பதன் மூலம் வினைத்திறனை அதிகரித்தல் என்ற வகையில் செயற்திட்டம் அமைந்திருந்தது. இந் நடவடிக்கை ஆலைச் சொந்தக்காரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தொழிலாளர்கள் அதனை எதிர்த்தனர். ஆயினும் மீளவும் வேலை வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் அவர்கள் தற்பொழுது அதற்கு உடன்பட்டுள்ளனர். நிலங்களை மாற்றும் வழிமுறைகளும், மற்றும் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டன.
ஏற்றுமதி பற்றிய விவகாரத்தில், அரசாங்கத்தின் போக்கு படிப்படியாக வினைத்திறனைக் கருத்திற்கொண்டு இயக்குவதாகக் காணப்பட்டது. சீனித்துறையின் தீர்மான விடயச் சட்டமானது (The Sugar Sectorpackage deal Act) முதல் 1000 தொன்னுக்கு ஏற்றுமதி வரியை நீக்கியது. அடுத்த 2,000 தொன்னுக்கு 15.75 சதவீதமாகவும், எஞ்சிய தொகைக்கு 23.625 சதவீதமாகவும் வரிவிதிக்கப்படலாயிற்று. 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சீனிக்கைத்தொழில் வினைத்திறன் சட்டம் (Sugar IndustryEificiency Act)விதிவிலக்களிக்கப்படும்தொகையை 3,000 தொன் வரை உயர்த்தியது. மற்றும் கூட்டுறவுத்துறைகளினால் செலுத்தப்பட்ட சராசரித் தீர்வை (19 சீனி ஆலைகளும் 21 கரும்புப் பெருந்தோட்டங்களும் என வரையறுக்கப்பட்டுள்ளது)20 சதவீதத்திலிருந்து 13.5 சதவீதமாகக் குறைந்தது. மீண்டும் பொருளாதார வினைத்திறனுக்கும் அரசியல் சார்ந்த விருப்புகளுக்குமிடையே சாதகமான ஒருமைப்பாடு காணப்பட்டது.
(i) ஏற்றுமதி நோக்குடைய கைத்தொழிலாக்கம்
நிதிச் சமநிலை பற்றிய கொள்கை, நாணயப் பெறுமதியிறக்கம், மற்றும் கூலிக்கட்டுப்பாடுகள் என்பன ஏற்றுமதி நோக்குடைய தயாரிப்புக் கைத்தொழில்களின் போட்டி நிலையை மேம்படுத்தியது. 1985 ஆம் ஆண்டின் ஆண் தொழிலாளருக்கான குறைந்த கூலிவீதம் ஏற்றுமதிச் செய்முறை வலயத்தின் முயற்சியாளரிடத்தும் பிரயோகிக்கப்படலாயிற்று. இவை ஆண்களை வேலைக்கமர்த்துவதை இலாபகரமாக்கியது. ஆண் தொழிலாளரின் விகிதாசாரம் 1984 ஆம் ஆண்டு டிசம்பரில் 21 சதவீதத்தி லிருந்து 1986 டிசம்பரில் 33 சதவீதமாக உயர்ந்தது. (அட்டவணை T).
94

1985ஆம் ஆண்டின் வரிமுறைமை பல நிரந்தர நிறுவனங்கள் உருவாவதை ஊக்கப்படுத்தும் வகையில் மாற்றப்பட்டது. இதற்கு முரணாக, 1970 ஆம் ஆண்டுத் திட்டம் சாதாரண வீதத்திலான வரிவிதிப்பினைப் பின்பற்றி 10 ஆண்டு விடுதலையை அளித்தது.இது குறுங்காலச் செயற் திட்டங்களுக்குச் சாதகமாக இருந்தது. புதிய திட்டம் வரி விடுதலையை நீக்கியது எனினும் இலாப வரியை 15 சதவீதமாகக் கட்டுப்படுத்தியது.சர்வதேசச் சந்தைகளைக் கருத்திற்கொண்டு, இறக்குமதிப் பிரதியீட்டு முயற்சிகளை மீண்டும் நெறிப்படுத்தி ஊக்கமளிக்க, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்கப்பட்ட முயற்சிகளுக்கு அவற்றின் ஏற்றுமதி வியாபாரத் தொகைக்கேற்பக் கூட்டுவரியைக் குறைக்க அனுமதி வழங்கப்பட்டது.
உலக பொருளாதாரத்தின் மீட்சி ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. எவ்வாறாயினும் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்திலும் வளர்ந்துவரும் பாதுகாப்புவாதம் மொறிசியசுக்கும் சாதகமாக அமைந்தது. ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் சுயமாகவோ அல்லது வேறு வழியிலோ முக்கிய ஏற்றுமதியாளர்கள்மீது விதிக்கப்பட்டமை, கைத்தொழில் நாடுகளுக்கு இன்னும் அச்சுறுத்தலாக விளங்காத ஏற்றுமதிகளைக் கொண்ட நாடுகளுக்குச் சார்பாகத் தொழிற்பட்டன. இதனை உறுதி செய்வதாக, மொரீசியசின் நெசவு மற்றும் ஆடைக் கைத்தொழில்கள் விரிவாக்கப்பட்டன. இவை ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு ஆளாகியுள்ளன. ஆயினும் ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்துடன் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணிக்கொண்டன. வெளிநாட்டு மூலதனம் தொடர்ச்சியாகக் ஹொங்கொங் முதலீட்டாளரிடமிருந்து கிடைக்கக் கூடியதாக இருந்தது. இவ்ர்கள் எதிர்காலத்தில் குடியேற்ற நாடு மீதான இறைமை மாற்றத்தால் உண்ட்ாகக் கூடிய விளைவுகளையிட்டு அஞ்சினராயினும் மொரீசியசில் சீன சமூகத்தினர் வாழ்வதினால் கவரப்பட்டனர்.
புதிய ஏற்றுமதிகளினால் பெற்ற விலையேற்றம் ஏற்றுமதிச் செய்முறை வலயத்தின் வேலை வாய்ப்புகளையும் பெருகச் செய்தது. 1983 க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 190 சதவீதமாக அமைந்தது. 1988 இன் நடு ஆண்டில் ஏற்றுமதி நோக்குடைய நிகழ்ச்சிகளினால் சேகரிக்கப்பட்டவருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக இருந்தது. இது 5 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததைவிட இரண்டு மடங்காகக் காணப்பட்டது. உல்லாசப் பயணத்துறையும் விரைவாக விருத்தியடைந்தது. 1981 ஆம் ஆண்டுக்கும் 1987 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வருகை தந்தோர் தொகை 119,000 ஆக இருந்து 208,000 ஆக உயர்ந்தது. அத்துடன் மொத்த வருமானம் 450 மில்லியன் ரூபாவிலிருந்து 1,786 மில்லியன் ரூபாவாக அதிகரித்தது. ஆகவே மொறிசியசின் அமைப்புரீதியான உருமாற்றங்கள் (structural transformation) பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக மாறியது.
95

Page 51
இவை சீனி விலையேற்றத்தின்போது ஆரம்பமாகி, 1970 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட சிறு சச்சரவுகளின் பின்னர் புதிய சக்தியாக உருவெடுத்தன.
(ii) சமூகக் கொள்கைகள்
மொறிசியசின் பிரதான அரசியல் கட்சிகள் தொழிலாளர் நலன்களையும், சமூகத்தின் வறிய வகுப்பினரையும் பாதுகாப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் முன்னேற்றகரமானவையாக இருந்தன. இதன் விளைவாகச் சர்வதேச நாணய நிதியும் உலக வங்கியும் மெய்க்கூலியைக் கட்டுப்படுத்த வேண்டும்,சமூகச் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியபோது மொறிசியஸ் இருதலைக் கொள்ளி நிலைக்குள்ளானது.அரசாங்கம் தனது நன்மைக்காக ஆதரவை இழந்து கொள்ளாமல் கடன் வசதிகளையும் கைத்தொழில் சம்பந்தமான சமூக நிலையையும் பேணி வந்தது.
அதன் ஒரு பகுதியாக செல்வந்தர்க்கிடையேயான மீள் பங்கீட்டினை மட்டுப்படுத்தல் என்றவகையில் இதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தது. ஆகவே 1979 ஆம் ஆண்டின் நாணயப் பெறுமதி இறக்கத்தின்போது, இப்பெறுமதியிறக்கத்தால் ஏற்படக்கூடிய எதிர்பாராத இலாபத்தைப் பெற்றுக்கொள்ள ஏற்றுமதி வரியில் 75 சதவீதமான மிகைக் கட்டணத்தை விதித்தது. 1979 நவம்பரில் அது 13 சதவீதத்தால் கூலியை உயர்த்தியது. இதில் 4 சதவீதம் முன்னைய ஆண்டு நுகர்வோர் சுட்டெண்ணில் ஏற்பட்ட 8 சதவீத அதிகரிப்புக்கான இழப்பீட்டின் ஒரு பகுதியாகவும், 9 சதவீதமானது நாணயப்பெறுமதியிறக்கத்தின் விளைவாக வாழ்க்கைச் செலவில் எதிர்பார்க்கப்படும் பாதிப்பை ஈடுசெய்யவும் பயன்படும். கூலியில் உண்டான அதிகரிப்பு, நாணயப் பெறுமதி யிறக்கத்தின் விளைவுகளில் அரைப் பங்கினை இல்லாமற் செய்துவிட்டது. ஆயினும் 1973 ஆம் ஆண்டு தொடக்கம் முதன் முறையாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் கூலிகள் திருத்தியமைக்கப் படவில்லையென்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. அதனையடுத்த வருடங்களில் கூலிக்கட்டுப்பாடுகள், மெய்க்கூலி 1987 வரை ஓரளவுக்கு நிலையானதாக இருக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது (அட்டவணை12).
இன்னொரு முக்கியமான ஆனால் பிரபல்யமற்ற ஒரு நடவடிக்கையாக, அரசாங்கமானது அரிசிக்கும் கோதுமை மாவுக்குமான மானியத்தைக் குறைத்தமையைக் கூறலாம். 1981 - 1982 இல் மானியத்தின் அளவு இவ்விரு பொருள்களின் c.i.t பெறுமதியின் 46 சதவீதத்துக்குச் சமனாகக் காணப்பட்டது. அத்துடன் மானியச் செலவான 280 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையின் 20 சதவீதமாகக் கணக்கிடப்பட்டது. 1985 - 1986 நிதியாண்டுக்கான மானியங்கள் 72 மில்லியன்
96

ரூபாவாக வீழ்ச்சியடைந்தது அல்லது c.i.tபெறுமதியின் 15 சதவீதத்துக்குக்
குறைவாக இருந்தது.
அட்டவணை 12: பாரிய நிறுவனங்களில் நாட்கூலி பெறும் தொழிலாளரின் மெய்ச் சராசரி மாதாந்த உழைப்புச் சுட்டெண் (செப்ரெம்பர் 1980 - செப்ரெம்பர் 1988)
வருடம் சுட்டெண்
1980 100.0 1981 103.2 1982 99.8 1983 105.9 1984 98.4 1985 97.9 1986 102.6 1987 122.1 1988 114.4
Source: Mauritius, Central Statistical Office, Biannual Surveys of
Employment and Earnings.
கூலிக்கட்டுப்பாடு இருந்த நிலையிலுங்கூட, 1983 - 1987 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மெய்த்தலா வருமான, மொத்த உள்நாட்டு உற்பத்தி28 சதவீதமாக அதிகரித்தது. வீட்டுக்குரிய தலா வருமானத்தின் இடையம் 18 சதவீதத்தால் அதிகரித்தது. நலனில் ஏற்பட்ட இவ்வதிகரிப்பானது, சனத்தொகைக்கான வேலை வாய்ப்பு விகிதத்தில் அதிகரித்தலைப் பிரதிபலித்தது. நான்கு வருட காலப்பகுதியில், வேலை வாய்ப்பு 124,000 அளவில் அதிகரித்தது. அதில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு 40 சதவீதமாகவும் ஆண்களுக்கு 6 வீத அதிகரிப்பைக் காட்டியது. வேலையின்மைக் குறைப்பு 38 வீதமாக இருந்ததுடன் வேலை செய்யும் வயதினரின் அதிகரிப்பு 16 சதவீதமாக மட்டும் இருந்தது. ஆகவே குடும்ப அலகொன்றுக்கான அதிகரித்த வேலைவாய்ப்பு, கூலிக்கட்டுப்பாடு என்ற கொள்கை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் 1987 இல் தொடர்ச்சியான தொழிலாக்கத்திலும் மற்றும் தொழில் ஒதுக்குகளின் அருகிச் செல்லும் நிலையினாலும், மெய்க்கூலி என்பன விரைவாக உயர்ந்தன.
(iv) எதிர்காலம் பற்றிய நோக்கு மொரீசியசின் பொருளாதார முன்னேற்றங்கள், அந்நாட்டு மக்களின்
முயற்சிக்கும் அரசியல் தலைமைத்துவம் பற்றிய ஞானம் மற்றும் மிதமான போக்கு என்பவற்றுக்கும் ஒரு காணிக்கையாகும். ஆயினும், சகிக்க
97

Page 52
முடியாத அளவுக்கு இருந்தாலும் இம் முன்னேற்றமானது, பெரும் சக்திகளினால் மேற்கொள்ளப்பட்ட சலுகை வியாபாரக் கொள்கைகளின் விளைவாக அமைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனி 12 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்கினை இப்பொழுதும் வகிக்கிறது. மற்றும் அந்நியச் செலாவணியீட்டும் பிரதான பொருளாகவும் உள்ளது. கரும்புச் செய்கை இலாபகரமானது. ஏனெனில், ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில் அதன் பங்கு விலையும் (அது சீனி உற்பத்தியில் ஏறக்குறைய 75 சதவீதத்தைக் கொள்வனவு செய்கிறது) ஐக்கிய அமெரிக்காவும் (இன்னொரு 2 சதவீதம்) உலக விலைக்குக் கூடுதலான விலையை வழங்கின. ஆதரவு விலையைக் குறைத்தல் அல்லது மொறிசியசுக்கு வழங்கப்பட்ட பங்கு விலையைக் குறைத்தல் என்பதால், கைத்தொழிலானது பெரும் பிரச்சினையை நோக்க வேண்டியதாயிற்று.
வர்த்தகச் சலுகையும் பெருமளவுக்கு ஏற்றுமதியடிப்படைக் கைத்தொழிலை நிலைத்திருக்கச் செய்தது. ஏற்றுமதிச் செய்முறை வலயத் தொழிற் சாலைகளில் இருந்த தொழிலாளர்களில் 87 சதவீதத்தனர் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். ஏற்றுமதிச் செய்முறைவலய ஏற்றுமதிகளில் ஏறக்குறைய 75 வீதம் பிரதானமாகப் பிரான்சு மற்றும் ஜேர்மனிய நாட்டுப் பொதுச் சந்தைகளுக்குச் சென்றன. நல்ல இடவமைவைக் கொண்ட குறைந்த கூலியைக் கொண்ட நாடுகள் (உதாரணமாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா) ஆடைக்கைத்தொழிலை விருத்தி செய்து, மொறிசியசைப் போன்று ஐரோப்பிய பொதுச் சந்தையிலிருந்து ஒரே மாதிரியான சலுகையைப் பெற்றுக்கொண்டால், இக் கைத்தொழிலானது வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எனலாம்.
தீவின் பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வுகள் இல்லை. கைத்தொழில்களைப் பன்முகப்படுத்தலுக்கு உயர்ந்த தேர்ச்சி தேவைப்படுமிடத்து உயர்தேர்ச்சிபெற்ற தொழிலாளரைக் கொண்ட புதிய கைத்தொழில்மயப் பொருளாதாரத்துடன் கடும் போட்டியிட்டு இயங்கவேண்டி ஏற்படும். தீவுக்கு வரும் உல்லாசப் பயணிகளின் தொகையும் குறைவு. மற்றும் தற்பொழுது கரும்புச் செய்கைக்கு உட்படும் நிலப் பகுதியை வேறு அயனவலய ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டாயினும் தற்சமயம் ஒப்பீட்டுரீதியான முன்னேற்றத்தில் கவனஞ் செலுத்துவதன் மூலம் விவசாய இறக்குமதிப்பிரதியீட்டுக்கொள்கை தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக சமூகப் பொருளாதாரத்துறை சார்ந்த கட்டுப்பாட்டுக் கொள்கைகளை மீண்டும் கொண்டு வருவதற்கான அறிகுறிகள் உண்டெனினும் இதுவரையில் அக்கொள்கையினால் எதுவித பாதிப்பும் இல்லை.அவற்றினை மேலும் செறிவான முறையில் பயன்படுத்தினால் வளர்ச்சிக்கு இடமுண்டு.
98

7. (typ டிவுரை
மொறிசியஸ் கடந்த 25 ஆண்டுகளாகப் பல நன்மைகளை அனுபவித்து வந்துள்ளது. அதனுடைய வரலாற்றுப் பின்னணியும், மூலப் பொருள் வளங்களில் பின் தங்கியிருப்பதும் மற்றும் அதன் சந்தைகளைப் பன்முகப்படுத்தத் தேவைப்படும் ஆதரவும் குறிப்பிட்ட வேகத்தில் அந் நாட்டை ஒரு நடுத்தர கைத்தொழில்மய நாடாகவும் ஏற்றுமதிநோக்குடைய நாடாகவும் மாற்றியது. புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், சனத்தொகை வளர்ச்சிக் கட்டுப்பாடு என்பவற்றுக்கான பிரசாரம் நடைபெற்றது. இவை செயலாற்றல் அற்ற மக்கள் கூட்டத்தினரால் நிரம்பி வழியும் நாடு என்ற நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றியது. இது வறிய நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படவில்லையாயினும் நடுத்தர வருமானம் என்ற வகையுள் இலகுவாக அடக்க முடியும். இனவேறுபாடு மற்றும் வகுப்புப்பேதம் என்பவற்றுக்குப் பதிலாக மொறிசியஸ் பல கட்சி முறைமையைப் பேணிவந்துள்ளது. தீவின் மதம், மொழி மற்றும் தொழிற்குழுக்களிடையே நிலவிய இசைவற்ற தன்மைகளைக் கருத்திற் கொண்டு நோக்குமிடத்து, இத்தகைய நிறைவேற்றங்கள் யாவும் குறிப்பிடத்தக்கவை. ஏனெனில் குழுக்களிடையே காணப்பட்ட உறவுகள் சக்திமிக்கவை, எப்பொழுதும் மாற்றத்துக்கு உட்படுபவை. மொறிசியர்கள் ஒன்று சேர்ந்து நன்கு பிணைக்கப்பட்ட சமுதாயமாக உருவாக முடியாதா என ஒருவர் வினாவலாம்.
இவ்வாறான வேற்றுமைகள் நிச்சயிக்கப்பட்டநன்மைகளையுடையவையாக இருந்தமையைக் காணலாம். பல்வேறு குழுக்களும் இணைந்து வாழும் முயற்சியில் இரண்டாம் நிலைத் தீர்வாகத் தெரிந்து கொண்டவை பொருளாதாரரீதியாக வினைத்திறன்மிக்கவையாகவோ, அல்லது அரசியல் மற்றும் சமூக நோக்கில் திருப்தி தருபவையாகவோ இருக்கவில்லை. இருந்தாலும் எந்த ஒரு குழுவும் தன்னல நோக்குடன் செயற்படவில்லை என்பதை உறுதிசெய்வதன்மூலம் சமுதாய முன்னேற்றத்தை முழுமையாகப் பாதுகாத்தன. ஆளுங் கூட்டாட்சி பல சந்தர்ப்பங்களில் உறுதியற்றதாக இருந்தாலும் அவையெல்லாம் உடன்பாடுகளைத் தெரிவித்ததுடன் உறுதியான மற்றும் நிலையான கொள்கைகளைப் பேணியும் வந்தன.
Six. Kx 880x
99

Page 53

LI (g5g III
தாய்வானின் பொருளாதார அற்புதம்: பொருளாதார அபிவிருத்தியின்
படிப்பினைகள்
எஸ். சி. ரிசியாங்
தமிழாக்கம்
எஸ். அன்ரனி நோபேட் புவியியற்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசனக் கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 54

தாய்வானின் பொருளாதார அற்புதம்: பொருளாதார அபிவிருத்தியின்
படிப்பினைகள்
அறிமுகம்
கடந்த முப்பது வருடங்களாகத் தாய்வான், தென்கொரியா, ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் வளர்முக நாடுகளுக்கான பொருளாதார வளர்ச்சி மாதிரிகளாகக் கருதப்படும் நிலைக்கு வளர்ச்சி பெற்றன. தாய்வானை உதாரணமாகக் கொண்டால் அது ஒரு சிறிய தீவாகவும் 13,900 சதுரமைல் பரப்புடையதாகவும் சொற்ப இயற்கை வளங்களுடன் மிக அடர்த்தியான சனத்தொகையைக் கொண்டதாகவும் இருக்கின்றது. 1952 இல் இருந்து 1980 வரைப்பட்ட காலத்தில் இதன் சனத்தொகையானது 8.14 மில்லியனிலிருந்து 17.8 மில்லியனாக இரு மடங்கு அதிகரித்தபோதும் அதன் தலா மெய்வருமானம் ஐந்து மடங்கு அதிகரிப்பை அடைந்தது. இத்தகைய சாதனையானது அதன் நிரந்தர இராணுவத் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவையினுTடாக அடையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இக் காலம் முழுவதும் அரை மில்லியனுக்குக் குறையாத இராணுவத்தினர் எந்நேரமும் ஆயுதந் தரித்த நிலையிலேயே இருந்தனர்.
தாய்வானின் இத்தைகைய அனுபவம்ானது சில போருக்குப் பிந்திய அபிவிருத்திக் கோட்பாடுகளினைத் தவிர்த்ததினாலேயே கட்டியெழுப்பப்பட்டதுடன் வளங்களின் சந்தை ஒதுக்கீட்டின் மூலம் மரபுரீதியான உபாயங்களின் அடிப்படையில் இவை அமைந்திருந்தன. இத்தகைய இரு வித்தியாசமான உபாயங்களின் விளைவுகளை ஒப்பீடு செய்வதற்குப் போருக்குப் பிந்திய அபிவிருத்திப் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. இதன் முடிவுகள் மிகவும் தெளிவாக இருந்தன. இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில்களுக்கான பாதுகாப்பான உள்நாட்டுச் சந்தையை உறுதி செய்வதற்குத் தரக்கட்டுப்பாடுகளையும், சுங்கத் தடைகளையும் பயன்படுத்தும் நடவடிக்கைகளைப் பின்பற்றியபோது தாய்வான் தளர்வடைந்தது. அத்துடன் வங்கிகளின் கடுமையான ஒழுங்குமுறைகளினாலும் ஏனைய நிதி சார்ந்த விடயங்களினாலும் வட்டி வீதமானது குறைந்த நிலையில் வைத்திருக்கப்பட்டது.
1950 களின் நடுப்பகுதியில் சந்தையினால் தீர்மானிக்கப்படுகின்ற வட்டி வீதத்தின் மூலம் தனியார் சேமிப்பு மற்றும் பயனுறுதி வாய்ந்த முதல் நிதி
103

Page 55
ஒதுக்கீடுகளைத் தூண்டுவதற்கும், சமநிலையான நாணய மாற்றுவீதத்தில் ஏற்றுமதிகளைத் தூண்டவும், வர்த்தகக் கட்டுப்பாடுகளைத் தாராளமய மாக்கவும், அடிப்படையான சீர்திருத்தங்களைக் கொள்கைரீதியாக அமுல் நடத்தியது. இத்தகைய் கொள்கைகள் தாய்வானின் பொருளாதாரத்தின் வெளியீட்டுச் சேர்க்கையிற் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் கணிசமான வருமான ஒப்புரவுத் தன்மையுடன் மிக விரைவான வருமான வளர்ச்சியையும் ஊக்குவித்தது. தாய்வானின் வறிய விவசாயிகள் ஒப்பீட்டுரீதியான அனுகூலங்களைக் கொண்டிருக்காத திறனற்ற விவசாய உற்பத்தியைக் குறைவான முதல் செறிவுடைய கைத்தொழில் உற்பத்தியாக மாற்றுவதற்கான தூண்டுதல்களினால் 1954 க்கும் 1980 க்கும் இடையில் தாய்வானின் வெளிநாட்டு வர்த்தகம் 200 மடங்காக அதிகரித்தது. இக் காலத்தில் குறிப்பாக 1950 களின் ஆரம்பத்தில் விவசாயமானது ஏற்றுமதியில் 90 வீதமாக இருந்து 1980 இல் 10 வீதமாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் கைத்தொழில் ஏற்றுமதிகள் 10 வீதத்திலிருந்து 90 வீதமாக உயர்ந்தது. கைத்தொழில் வெளியீட்டில் ஏற்பட்ட இவ் அதிகரிப்பானது சேமிப்பைத் துாண்டுவதற்கான ஊக்குவிப்புக் கொள்கைகளின் விளைவினால் தனியார் சேமிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பினாலேயே ஏற்பட்டது. 1950 களின் ஆரம்பத்தில் உள்நாட்டுச் சேமிப்பான்து தேசியவருமானத்தில் 5 வீதத்திலிருந்து 1970 களின் இறுதியில் 90 வீதமாக அதிகரித்தது.
கடந்த 30 வருடங்களுக்குமேலாகத் தாய்வானின் விரைவான பொருளாதார அபிவிருத்திக்கான ஒரு தளத்தை இவ் உபாயமே ஏற்படுத்தியது. அத்துடனர் அதே உபாயமே அநேக வருடங்களுக்குப் பின்பும் மேற்கொள்ளப்பட்டபோது தென்கொரியா, ஏனைய பசுபிக் வடிநில நாடுகளில் அதே பெறுபேறுகளையே தந்தன. இத்தகைய உறுதியான வெற்றியானது ஏனைய நாடுகளுக்கும் முக்கிய படிப்பினைகளைத் தந்ததுடன் அவற்றின் வளர்ச்சி அனுபவமானது ஒருகாலத்தில் வழக்கிலிருந்த அபிவிருத்திக் கோட்பாடுகளின் செல்வாக்கினால் ஏற்பட்ட தோல்வியையே எடுத்துக் காட்டியது. அத்தகைய படிப்பினைகளின் இயல்பினைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்குத் தாய்வானின் “பொருளாதார அற்புதத்தை” (EconomicMiracle) ஏற்படுத்திய சந்தையை அடிப்படையாகக் கொண்ட உபாயங்கள் எவ்வாறு உதவின என்பதை மீளாய்வு செய்வது அவசியமானது.
1. போருக்குப் பிந்திய நேரடியான அனுபவம்
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் தாய்வானின் பொருளாதாரப் போக்கானது மிகவும் மங்கிய நிலையில் காணப்பட்டது. தீவின் பிரதான கைத்தொழில்கள் யுத்த காலத்தின் விமானத் தாக்குதலினால் சதமடைந்திருந்தன. ஏறக்குறைய 2 மில்லியன் போர் வீரர்களும்
104

அகதிகளும் பிரதான நிலத்தைக் (mainland) கொமியூனிஸ்ட்டுகள் கையேற்றபோது ஏறக்குறைய 6 மில்லியன் தீவக மக்களுடன் இணைந்து கொண்டதினால் தீவின் சனத்தொகையானது திடீரென அதிகரித்தது. யப்பானியரால் விட்டுச் செல்லப்பட்ட கைத்தொழில்களும் யப்பானிய சந்தைக்கே நிரம்பல் செய்யும் பொருட்களை உற்பத்தி செய்வனவாகவோ (சீனி, அரிசி, கைத்தொழில்கள்) அல்லது யப்பானிய இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வனவாகவோ இருந்தனவேயன்றிச் சுதந்திரமான பொருளாதாரத் தளத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏனைய கைத்தொழில்கள் மிகச் சிறிய கைத்தொழில்களாக இருந்ததுடன் உள்ளூர் மக்களின் பெரும்படியான நாளாந்த தேவைகளுக்கு நிரம்பல் செய்வனவாகக் காண ஃபட்டன. புலம் பெயர்ந்த அகதிக் கைத்தொழிலாளார்களினால் அரசாங்க உதவியுடன் சில பருத்தி மற்றும் கம்பளிப் புடவைக் கைத்தொழில்கள் தாய்வானில் நிறுவப்பட்டன.
பாரிய இராணுவத்துக்கும், பொருளாதாரத்தின் உள்ளகக் கட்டுமானத்தை நிலைநிறுத்துவதற்கான அவசியத் தேவைக்கு உதவுகின்ற முக்கிய நிதித் தேவையானது வரவு செலவுத் திட்டத்தில் சமநிலையை ஏற்படுத்துவதில் சிக்கலை உருவாக்கியது. இதனால் போருக்குப் பிந்திய ஆரம்ப வருடங்களில் விரைவான பணவீக்கம் தவிர்க்க முடியாததாகியது.இதே காலத்தில் தாய்வானில் உள்ள சீனக் குடியரசின் பொருளாதார அதிகாரசபைகள் அக்காலத்தில் உயர்கல் விக் குழாத்தினரிடையே வழக்கிலிருந்த பொருளாதாரக் கொள்கையின் இரு பிரபல்யமான தவறான கருத்துக்களின் கீழ்முயற்சிகளை மேற்கொண்டது. அவையாவன:
(1) வளர்முக நாடு ஒன்றின் குழந்தைநிலைக் கைத்தொழில்களை விருத்தி செய்வதற்குச் சிறந்த வழியாக உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்க வேண்டும். இப் பாதுகாப்பினை உயர்வான சுங்கத் தீர்வைகள் அல்லது இறக்குமதித் தரக் கட்டுப்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம்.
(2) பணவீக்க நிலைமைகள் குறிப்பிடத்தக்க நிலையில் காணப்பட்டாலும் வட்டிவீதங்கள் குறைவான நிலையில் வைத்திருக்கப்படவேண்டும். இதனால் உள்நாட்டுப் புதிய கைத்தொழில்களுக்கான மலிவான கடன் வழங்கல் உறுதி செய்யப்படும்.
இந்த இரு கொள்கைகளும் எதிர்பாராத வகையில் பாதகமாக இருந்ததுடன் அவற்றினைப் பின்பற்றிய வளர்முகநாடுகள் இன்று தமது செயலாற்றங்களில் பின் தங்கியவையாகக் காணப்படுகின்றன. இந்த உபாயங்களில் இருந்து விடுபட்டு வந்த நாடுகளில் தாய்வானே முதலாவதாகும். பண வீக்கச் சூழ்நிலையிலும் குறைந்த வட்டி வீதக்
105

Page 56
கொள்கையை இந் நாடு இல்லாமற் செய்தது. அதன்பின் இறக்குமதிப் பிரதியீடு என்பதிலிருந்து ஏற்றுமதி மேம்பாடு என்பதற்குத் தனது கைத்தொழிலாக்கத்தின் அழுத்தத்தினை நகர்த்தியது. யதார்த்தரீதியான மட்டத்துக்குத் தனது நாணயத்தை மதிப்பிறக்கம் செய்தது. இந் நடவடிக்கையினால் தரக் கட்டுப்பாடுகளும்(quantitativerestrictions) சுங்கத் தடைகளும் அகற்றப்படும் தேவையை ஏற்படுத்தின.
2. இறக்குமதிப் பதிலிட்டு உபாயங்களின் தோல்வி
வளர்முக நாடுகளில் மரபுரீதியான மூலப்பொருட்களை உற்பத்திசெய்கின்ற விவசாயம் மற்றும் சுரங்கக் கைத்தொழில்கள் தவிர்ந்த கைத்தொழில்கள், வளர்ச்சி பெற்ற நாடுகளின் கைத்தொழில்களுடன் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்ற வாதம் இவ் உபாயம் தொடர்பாகக் கூறப்பட்டது. எனவே ஒரு வளர்முக நாடு தனது மரபுரீதியான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் பங்கிலிருந்து விலகி ஏனைய துறைகளுக்குத் தனது உற்பத்தியைப் பன்முகப்படுத்த வேண்டுமாகில் தனது வளர்ச்சி பெறாத கைத்தொழில்களுக்குக் கடுமையான பாதுகாப்புஅளிக்கவேண்டியிருந்தது. இவ் விவாதமானது வளர்முக நாடுகளுக்கு ஒப்பீட்டுரீதியான அனுகூலங்கள் காணப்படுகின்றன என்பதனை மறுப்பதாக உள்ளது. நாணய மாற்றுவீதம் மதிப்பேற்றம் செய்யும்போது எந்தக் கைத்தொழிலிலும் முழுமையான அனுகூலங்கள் காணப்படமாட்டாதென்பது தெளிவு. இதனைச் சிலர் ஒரு கைத்தொழிலின் ஒப்பீட்டுரீதியான அனுகூலமற்ற தன்மையுடன் தொடர்புபடுத்திவிளக்கமற்ற தன்மையைப்பெறக்கூடும். எவ்வாறாயினும், முடிவில் ஏற்றுமதிகளுடன்தான் இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்த முடியும் . எனவே ஒப்பீட்டுரீதியான அனுகூலங்களை எந்தக் கைத்தொழில்களும் கொண்டிருக்கவில்லை என்பதுமுடியாதது. அத்துடன் மரபுரீதியான ஏற்றுமதிக் கைத்தொழில்கள்கூட சுதந்திர வர்த்தகம் மற்றும் சமநிலைத்தன்மையுடைய நாணயமாற்றுவீதங்களின் கீழ் உயர் உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்கலாம்.அவை ஒப்பீட்டுரீதியானமுழுமையான விலை அனுகூலங்களைக் (cost advantages) கொண்ட கைத்தொழில்களே என்பதைக் காட்டக்கூடும்.
இறக்குமதிப்பதிலீடு தொடர்பான வாதங்கள் முன்வைப்பதுபோல் வளர்முக நாடுகளின் ஏற்றுமதிக்கான உலக கேள்வியானது நெகிழ்ச்சித் தன்மையற்றது எனக் கூறப்படுகின்றது.அப்படியாயின், பாதுகாப்புத் தன்மையுடைய சுங்கத் தீர்வைகளின் நீக்கம் அல்லது இறக்குமதிகள் மீதான அளவுக் கட்டுப்பாடுகளுடன் இணைந்த நாணயப் பெறுமதியிறக்கமானது வர்த்தக மாற்றுவீதச் சீரழிவு போன்றவற்றுக்கு இட்டுச் செல்லலாம்.ஏற்றுமதியில் அதிகரிப்புக் காணப்பட்டபோதும் இந் நிலையில் நாட்டின் வாழ்க்கை நலன் உண்மையில் பாதிக்கப்படலாம். பின்னைய நிகழ்வுகள் எல்லாம் இத்தகைய நெகிழ்ச்சித் தன்மையின்
106

தோல்விக்கு உத்தரவாதமில்லை எனக் காட்டியது. உண்மையில் இவ் எடுகோள் தவறானது என நிரூபித்தது. பின்னைய அறிவுசார் வழக்காறானது எதிர்ப்பக்கமாக நகரத் தொடங்கியதுடன் ஒரு சிறிய நாட்டிலிருந்து எல்லா வர்த்தகப்படுத்தப்படக் கூடிய பொருட்களையும் உலகக் கேள்வியின் முழுமையான நெகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக நடத்துகின்றது. ஆனால் நெகிழ்ச்சியின் நம்பிக்கையின்மையை ஏற்றுக்கொண்ட நாடுகள் தமது கிடைக்கக் கூடிய வளங்களின் மெய் உற்பத்தியை வர்த்தகம் மற்றும் மீள் ஒதுக்கீடுகளினூடாக விருத்தி செய்வதற்கான பொன்னான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுள்ளன எனலாம். பொருளாதார விடுபடுகட்டத்தினை நோக்கிய தமது முயற்சிகளில் நன்மைகளை அனுபவித்த ,கிய கைத்தொழில்மயப்படுத்தப்பட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும் சக்தி வாய்ந்த செழிப்பினைக் கொண்ட தாய்வான் போன்றவற்றினைப் பின்பற்ற அவை தவறிவிட்டன.
1950 களின் ஆரம்பத்தில் அக் காலத்தின் செல்வாக்குமிக்க அபிவிருத்தி உபாயத்தினைத் தாய்வான் பின்பற்றியது. தனது நாணயத்தை உள்நாட்டில் வீக்கத் தன்மையுடயதாகவும், மொத்தமாகப் பெறுமதியேற்றமுடையதாகவும் வைத் திருந்ததுடன் செண் மதி நிலுவையைக் கடுமையான அளவுக் கட்டுப்பாடுகளினாலும், உயர் சுங்கத் தடுப்புக்களினாலும் சமநிலையில் வைத்திருந்தது. இக் கொள்கைகளின் கீழ் தாய்வானின் மரபுரீதியான ஏற்றுமதிகளில் அடங்குகின்ற சீனி, நெல், அன்னாசி அத்துடன் சில சிறுவகைப் பொருட்களும் போருக்கு முந்திய வர்த்தகத் தொடர்புகளினுTடாக ஸ்தாபிக்கப்பட்ட சந்தைகளுக்குச் சென்றன. உதாரணமாக யப்பானுக்குச் சென்றன. ஏற்றுமதிகளுக்கான புதிய சந்தைகளும், புதிய ஏற்றுமதிக் கைத்தொழில்களும் சாதாரணமாக விருத்தி செய்யப்படவில்லை. கடுமையான பாதுகாப்புத் தன்மையுடைய ஆனால் சார்பளவில் சிறிய - உள்நாட்டுச் சந்தைக்கு மலிவான நுகர்வோர் உற்பத்திகளை உற்பத்தி செய்கின்ற கைத்தொழில்களில் அபிவிருத்தி முயற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது.
3. மதிப்பிறக்கமும் தாராளமயப்படுத்தலும்
ஒப்பீட்டுரீதியான அனுகூலத்தைப் பயன்படுத்த முடியுமென்பதைத் தாய்வான் கண்டுணர்ந்தமை பொருளாதார விருத்திக்கு அவசியமானது. அத்துடன் சிறப்புத் தேர்ச்சி பெறவேண்டியிருந்தது. தனது கைத்தொழில்களைப் பொருளாதாரரீதியான அளவுத் திட்ட உற்பத்திக்குக் கொண்டுவருவதற்கு, ஏற்றுமதிப்பொருட்களுக்கான பரந்த வெளிநாட்டுச் சந்தைகளைத் தேடவேண்டியிருந்தது. இதனால் சீனக் குடியரசின் அரசாங்கமானது 1954 இன் கோடை காலத்தில் பொருளாதாரக் கொள்கைமீதான ஆலோசனைக்காகப் பேராசிரியர் ரி.சி. லியூ மற்றும் எஸ். சி. ரிசியாங் என்னும் இருவரையும் அழைத்தது. வர்த்தகத்
107

Page 57
தாராளமயமாக்கலுடன் இணைந்த நாணயப் பெறுமதியிறக்கக் கொள்கையை மேற்கொள்ளுமாறு இவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது. அதாவது உள்நாட்டு நாணயத்தின் மாற்றுவீதத்தினைப் பொருத்தமான நிலைக்கு மதிப்பிறக்கம் செய்வதினால் அது உயர்வான பாதுகாப்புத்தன்மையுடைய இருப்புக்கள் மற்றும் அளவுசார் கட்டுப்பாடுகள் இன்றி வர்த்தகநிலுவைச் சமநிலையை உறுதிசெய்யும் என்பதாகும். இக் காலத்தில் சீனி மற்றும் அரிசியானது ஏற்றுமதிப்பெறுமதியில் 80 வீதத்தை வகித்தது. தாய்வானின் சீனி ஏற்றுமதியானது நடைமுறையில், சர்வதேச சீனி உடன்படிக்கையின்படி அதில் பங்கு கொள்ளும் சீனி உற்பத்தி நாடுகளுக்கு ஒதுக்கப்பட்ட வருடாந்த உலக சந்தையின் பங்கின்படி அமைந்திருந்தது. இதன் அரிசி ஏற்றுமதியானது யப்பானுக்குச் சென்றதுடன் அதன் அளவும், விலைகளும் (யு.எஸ். டொலர்களில்) இரு அரசாங்கங்களுக்கிடையிலான நேரடிப் பேச்சுகளின் மூலம் வருடாந்தம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் இவ்விரு பிரதான ஏற்றுமதிகளும் நாணய மாற்று வீதம் தொடர்பாகப் பூச்சிய கேள்வி நெகிழ்ச்சியுடன் முரண்பாடு கொண்டதாக இருந்தது. தாய்வானைப் பொறுத்தளவில் வளர்முக நாட்டுக்குரிய பண்புகளுடன் சொற்ப மரபுரீதியான ஏற்றுமதிகளையே உற்பத்தி செய்யும் தகுதியைக் கொண்டிருந்தது. அவை நெகிழ்ச்சியற்ற உலக கேள்வியைக் கொண்டிருக்கின்றன. நாணயப் பெறுமதி யிறக்கமானது அப்போதைய நடைமுறை அறிவின்படி வர்த்தக மாற்றுவீதத்தை மோசமாக்கக் கூடியதாக இருந்தது. இறக்குமதிப் பொருட்களின் உள்நாட்டு விலைகளை உயர்வடையச் செய்ததினால் உள்நாட்டுப் பணவீக்கத்தினைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.
இருந்தபோதும்,சிறு நெகிழ்ச்சியுடைய வெளிநாட்டுக் கேள்விக்கு எதிராக மரபுரீதியான பிரதான ஏற்றுமதிகள் இருக்குமாயின் நூற்றுக்கணக்கான புதிய உற்பத்திகளை மலிவான தொழிலாளர் நிரம்பலுடன் உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும் . அத்துடன் பற்றாக் குறையான தொழிலாளரைக் கொண்டிருக்கும் நாடுகளில் அவை எப்பொழுதும் விற்கப்படமுடியும் . ஆனால் தாய் வானின் நாணயப் பெறுமதி ஏற்றத்தினால் அங்கு காணப்பட்ட சார்பளவில் அதிகமானதும் மலிவானதுமான தொழிலாளர் செயற்கையான முறையிற் கூடப் பாதுகாக்கப்படவில்லை. இந் நோக்குக்கு எதிராக, மதிப்பிறக்கம் உண்மையில் உள்நாட்டுப் பணவீக்கத்தைத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால்முன்பு குறிப்பிட்டதன்படி, இறக்குமதிப்பொருட்களின் உள்நாட்டுச் சந்தை விலைகளானது அவற்றின் தரையிறக்கற் செலவுகளினால் (landed costs) நிர்ணயிக்கப்படவில்லை. அவற்றின் நிரம்பல்கள் அளவுசார்ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாறாக, அவற்றின் சந்தை விலைகள் உள்நாட்டுப் பயனுறுதி வாய்ந்த கேள்வியின் வலிமையினாலேயே நிர்ணயிக்கப்படும் போக்குக் காணப்பட்டது. நாணயப் பெறுமதியிறக்கம் வர்த்தகத் தாராள
108

மயமாக்கலுடன் உள்ளார்ந்த இயலளவு கொண்ட எல்லா ஏற்றுமதி களுக்குமான வெளியீட்டுக் கேள்வியானது நெகிழ்ச்சியற்றது எனக் கருதிக் கொண்டால் ஏற்றுமதி முனைப்புக்கள் அதிகரிக்கும். அத்துடன் அனுமதிக்கப்பட்ட இறக்குமதி அளவுகளும் அதிகரிக்கும். மறுபக்கமாக, ஏற்றுமதிகளுக்கேற்ப இறக்குமதிகளும் விரிவடைய அனுமதிக்கப்பட்டால் (அதாவது நாணயப் பெறுமதியிறக்கம் மற்றும் தாராளமயமாக்கலின் பின்) வர்த்தகமானது சமநிலையை நோக்கிச் செல்லும், பணரீதியில் பயனுறுதி வாய்ந்த கூட்டுக் கேள்வியில் விரிவு காணப்படமாட்டாது. எனவே நாணயப் பெறுமதியிறக்கமானது வர்த்தகத் தாராளமயமாக்கலுடன் இணைந்து செல்லும்போது இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் ஏன் அதிகரிக்கும் என்பதற்கு ஒரு காரணமும் இல்லை.
இறக்குமதிகளின் மீதான அளவுசார் வரையறை கொண்ட முழுமையான இறுப்புக்களும் தற்போது காணப்படும் வெளிப்படையான இறுப்புக்களும் சேர்ந்து அதிஉத்தம இறுப்பு வீதத்துக்கு அதிகமாக இருக்கும் காலத்தில் சிறியநாடுகளின் ஏற்றுமதிக்கான உலக கேள்வியின் நெகிழ்ச்சியானது நெகிழ்தன்மையுடையதாகப் பூச்சியமில்லாமல், குறைந்த நிலையில் காணப்படும். அதிஉத்தம இறுப்புவீதம் - நாட்டின் மெய்வருமானம் நிச்சயமாக அதிகரிக்கும், ஏற்றுமதிகளும், இறக்குமதிகளும் ஒரே நேரத்தில் சமமான விரிவு கொண்டதாகப், பயனுறுதிவாய்ந்த முறையில் வளங்களை ஒதுக்கீடு செய்யும்போது இவ் அதிகரிப்புச் சாத்தியமாகும். வளங்களை மீள் ஒதுக்கீடு செய்யும் செய்முறைக் காலத்தில் எத்தகைய பணரீதியான விரிவாக்கமும் கவனக்குறைவாக அனுமதிக்கப்படமாட்டாது என்னும் நிலையில் பொதுவிலைமட்டமானது உயர்வடைவதற்குப் பதிலாக வீழ்ச்சியையே கொண்டிருக்கும்.
எதிர்பாராத வகையில் ஆலோசகர்களின் வாதங்கள் மெதுவாக, ஆனால் படிப்படியாக அரசரங்கத்தின் அனுமதியைப் பெற்றது. வர்த்தகத் தாராளமயமாக்கல் என்பதுடன் பெறுமதியிறக்கத்தத்துவங்கள் இண்ைந்து, இறுதியில் 1958 ஏப்ரலில் கொள்கை இலக்குகளைப் படிப்படியாக அடைவதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டது. அம் மாதத்தில் அடிப்படை நாணயமாற்று வீதமானது NTS 15. 55 இல் இருந்து வாங்குவதற்கு NTS24.58 ஆகவும் விற்பதற்கு NT$24.78 ஆகவும் பெறுமதியிறக்கம் செய்யப்பட்டது. இதன் பின் மிக முக்கியமான அம்சமாக சீனி, அரிசி, உப்பு, தவிர்ந்த ஏற்றுமதியாளர்கள் தமது முழு ஏற்றுமதி நடவடிக்கை களையும் காட்டுகின்ற நாணயமாற்று ஒப்புவிப்புப் பத்திரம் வழங்கப் பட்டது. தாய்வான் வங்கியினால் வழங்கப்பட்ட இதனைச் சந்தையில் இறக்குமதியாளர்களுக்கு விற்பனை செய்யலாம். அவர்கள் தமது இறக்குமதிகளுக்குத் தாய்வான் வங்கியிலிருந்து கொள்வனவு செய்ய விரும்பியதற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதே நேரம், நாணய மாற்றுவீதப் பத்திரங்களுக்கான சந்தைக் கேள்வியைச் சரியாகப்
109

Page 58
பிரதிபலிக்கும் வகையில் இறக்குமதிக்கான சந்தைக் கேள்வி அமைந்திருந்தது. அத்துடன் அனுமதிக்கக் கூடிய எல்லா வகையான இறக்குமதிகளுக்கான கோட்டாக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. ஆனால் ஆடம்பரப் பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டவற்றுக்குத் தடை நீக்கப்படவில்லை. பொதுவாக, இறக்குமதிகளின் மீது காணப்படும் உயர்வான இறுப்புக்கள் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டது. இறக்குமதிப் பெறுமதிகளின் அடிப்படையில் மதிப்பிடப் பயன்படுத்தப்பட்ட 20 வீத பாதுகாப்பு மிகைவரி (Surcharge) யானது இதன் பின்செலுத்தப்படும் சுங்கத் தீர்வையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. இதனால் பத்திரங்களின் சந்தை நிர்ணயவிலையானது உறுதியான அடிப்படை வீதத்துடன் சேர்க்கப்படும் வகையில் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருந்தது. இதன் விளைவாக ஏற்படும் பயனுறுதி வாய்ந்த வீதமானது நடைமுறை இறுப்பு முறைமையின் கீழ் சமநிலை நாணய மாற்று வீதத்தினை அடைய முடியும். அத்துடன் அது கேள்வி-நிரம்பல் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தன்னியக்கமாகச் சீராக்கும் எனலாம்.
இவ்வடிப்படையிற் பெறப்பட்ட பயனுறுவீதமானது படிப்படியாக எல்லா இறக்குமதிகளுக்கும், கொடுப்பனவுகளுக்கும், பணவரவுகளுக்கும் பிரயோகிக்கக்கூடியதாக இருந்தது. சிக்கல் வாய்ந்த பல நாணய மாற்றுவீத முறைமை இறுதியில் ஒருங்கிணைக்கப்பட்டது. 1959 ஒகஸ்டில் சர்வதேச நாணய நிதியத்தின் விதிகளுக்கிணங்கப் பயனுறுதி வாய்ந்த நாணய மாற்று வீதத்தினை இரு கூறாகப் பிரிப்பதனைத் தாய்வான். வங்கி நிறுத்தியது. (அடிப்படை வீதம், நாணய மாற்றுவீதப் பத்திரங்களின் விலை என இரண்டாக). அத்துடன் தாய்வானின் புதிய யுவானின் நாணய மாற்றுவீதம் ஒரு யு.எஸ். டொலருக்குNT$38.08வாங்கும் விலையாகவும் NT$38.38விற்கும் விலையாகவும் பிரகடனம் செய்தது. இவ் விகிதமானது 1960 இல் ஒரு யு. எஸ். டொலருக்கு NTS40.00 வரையும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
தாய்வானின் வெளிநாட்டு வர்த்தகத்தில் இத்தகைய தாராளக் கொள்கை மற்றும் நாணய மதிப்பிறக்கத்தின் தாக்கமானது குறிப்பிடத்தக்க அம்சமாகக் காணப்பட்டன என்பதனை அட்டவணை 1 விளக்கி நிற்கின்றது. 1955 இல் ஆரம்பமான ஏற்றுமதிகளின் மீதான நாணயப் பெறுமதியிறக்கமும் வரி விடுவிப்பும் (taxrebate) உண்மையில் 1954 இன் அதன் மிகக் குறைந்த நிலையிலிருந்து ஏற்றுமதி வர்த்தகத்தைத் தழைக்கச் செய்வதற்கு உண்மையாகவே பயன்பட்டது. ஆனால் உண்மையில் 1960 களில்தான், குறிப்பாக மாற்றுவீதமானது இறக்குமதிகளுக்கான தாராளமயப்பட்ட கேள்வியுடன் தொடர்புபடுத்தப்பட்ட பின்பே ஏற்றுமதிகளின் விரிவாக்கமானது உண்மையில் விடுபடுகட்டத்தை அடைந்தது. 1970 இல் தாய்வான் ஏற்றுமதிகளின் யு.எஸ். டொலர் பெறுமதியானது 16 வருடங்களில் 15.3 மடங்காக 1469 மில்லியனாகக்
110

காணப்பட்டது. 1960களில் வருடாந்த அதிகரிப்பு வீதமானது சராசரியாக 23.6 வீதமாக இருந்தது. இவ் விரைவான விரிவாக்கத்தன்மை 1970 களிலும், தொடர்ந்து 1980 களிலும் காணப்பட்டதுடன் 1954 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 200 மடங்கு அதிகமாகக் காணப்பட்டதுடன் தாய்வானின் ஏற்றுமதிகளானது டொலர் பெறுமதியில் பார்க்கும்போது 19,575 மில்லியனாகக் காணப்பட்டது. 1970 களில் வருடாந்த அதிகரிப்பு வீதம் சராசரியாக 29.6 வீதமாக இருந்தது.
அட்டவணை 1 சீனக் குடியரசின் (தாய்வான்) வர்த்தகம்
(மில்லியன் யு.எஸ். டொலர்களில்)
ஏற்றுமதிகள் | 10 வருட இறக்குமதிகள் | 10 வருட வர்த்தக்
Forrs if rJraf நிலுவை
வருடாந்த வருடாந்த
வளர்ச்சி வளர்ச்சி
வீதம் வீதம்
1950 93.1, 123.9 e -30.8 1955 127.1 5.8% 184.7 8.7% -57.6 1960 164.0 w 286.5 -122.5
1965 450.8 |24.5% 517.2 16.9% , -66.5
1970 1468.6 R 1363.4 105.2
l971 2047.2 o 1754.6 292.6
1972 2979.3 233.9 647.4
1973 4476.0 - 374.1.8 766.0
1974 5592.0 6422.4 -811.9 1975 5304.1 29.6% 5558.6. 30.4% -254.5 1976 78.09.6 71.25.0 wis . 699.9
1977 9517.2 8316.9 - 1214.7 1978 12602.0 - || 10 2234.6 - 367.4 و 1979 |15828.9 - 14,421.3 1407. 6 1980 19575.0 w 19428.0 ap 147.0
Source: Financial Statistics Monthly, Taiwan District, The Republic of
China, The Central bank of China, various issues.
111

Page 59
வர்த்தகத் தாராளமயமாக்கலின் கீழும், மிகப் பொருத்தமான மாற்று வீதத்தினாலும் ஏற்பட்ட ஏற்றுமதிகளின் விரைவான விரிவாக்கமானது தாய்வானின் பொருளாதாரம் கைத்தொழில்களிற் தனது கவனத்தைச் செலுத்தலாம் என்பதை அழுத்திக் கூறியது. தாய்வானின் வளங்கள் இதற்குப் பாரிய அனுகூலமாக இருந்தது. இதன் காரணமாகத் தாய்வானின் ஏற்றுமதி அமைப்பிலும், அதன் கைத்தொழில்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. 1952 இல் மொத்த ஏற்றுமதிப் பெறுமானத்தில் விவசாய உற்பத்திகளும், விவசாயப் பதனிடல் உற்பத்திகளும் 91.9 விதத்தைக் கொண்டிருந்தன. 1970 ஆம் ஆண்டில் இவ்விரு பிரிவின் கூட்டான பங்கானது 21.4 வீதமாக வீழ்ச்சியடைந்ததுடன் 1980 இல் 9.2 வீதமாகக் காணப்பட்டது. மாறாக, ஏற்றுமதிகளில் கைத்தொழில் உற்பத்திகள் 1952 இல் 8.1 வீதத்திலிருந்து 1970 இல் 78.6 வீதமாக உயர்வடைந்து 1980 இல் 90.8 வீதத்தை அடைந்தது. (அட்டவணை 2).
அட்டவணை 2: தாய்வானின் ஏற்றுமதிகளில் விவசாய, கைத்தொழில் உற்பத்திகளின் சார்புரீதியான பங்கு.
விவசாய உற்பத்திகள்(a) கைத்தொழில் உற்பத்திகள்
1951 91.9 8.1
1955 89.6 10.4
1960 67.7 32.3
1965 54.0 46.0
1970 21.4 78.6
1975 16.4 83.6
1980 9.2 90.8
(a) including processed agricultural products. Source: Taiwan Statistical Data Book, Council for Economic Planning and
Development, 1982.
தாய்வானின் மூன்றிலொரு பகுதி பயிர் செய்யக் கூடிய நிலமாகும். அதன் பொதுவான சனத்தொகை அடர்த்தி நெதர்லாந்திலும் அதிகமாகக் காணப்படுகின்றது. எனவே விவசாய உற்பத்திகளினால் தெளிவான ஒப்பீட்டுரீதியான அனுகூலங்களை வழங்க முடியாது. ஆனால் இதன் ஒப்பீட்டுரீதியான அனுகூலமானது அதிக தொழிலாளரை வேண்டி நிற்கின்ற கைத்தொழிலுக்குச் சாதகமாக இருந்தது. ஏனெனில் அதிக அளவிலான தொழிலாளர், சிறிய நிலப்பகுதி, உற்பத்தி செய்வதற்கான
112

நடுத்தர அளவிலான முதல் என்பன காணப்பட்டது. எனவே ஆரம்ப நிலையில் தாய்வானின் பெளதீக நிலைமைகளுக்கு ஏற்பப் புடவை உற்பத்திகள், ஆடை, சப்பாத்து, குடைகள், விளையாட்டுப் பொருட்கள், மென்கைத்தொழில்கள், ஏனைய உற்பத்திகள் என்பன மிகவும் பொருந்துவனவாக இருந்தன. தாய்வானின் ஏற்றுமதிப் பட்டியலில் காணப்பட்ட விவசாய உற்பத்திகளின் பண்புகளும் மாற்றமடைந்தன. உற்பத்தி செய்வதற்கான அதிக நிலத்தை வேண்டி நின்ற உற்பத்திகள் குறிப்பாக அரிசி, சீனி என்பவற்றுக்குப் பதிலாகப் புதிய விவசாய உற்பத்திகள், தொழிலாளர் செறிவு கொண்டதாக, நிலப் பொருளாதாரச் flés6IIßg5–6ör Jo, tu (Land - economizing) siTSITT6örssit, asparagus, விலாங்கு (யப்பானுக்கு), நத்தைகள் (பிரான்சுக்கு) என்பன உற்பத்தி செய்யப்பட்டன.
4. உலகக் கேள்வியின் வரையறுக்கப்பட்ட நெகிழ்ச்சி
நாணய மதிப்பிறக்கம் , தாராளமயப்படுத்தலின் பின் சடுதியான விரிவாக்கத்துக்குட்பட்ட தாய்வானின் ஏற்றுமதிகள், போருக்குப் பிந்திய ஆரம்ப வருடங்களில் காணப்பட்டதுபோன்ற நெகிழ்ச்சியின் தோல்வி மனப்பான்மையைத் தவறு எனக் காட்டியது. மறுவகையில் தாய்வானின் அனுபவமானது பெரும்பாலான பொருளியலாளார்களிடையே புதிய பாணிக்கான ஆதரவைப் பெறமுடியவில்லை. ஏனெனில் இப் பொருளியலாளர்கள் ஒரு சிறிய நாட்டினுடைய வர்த்தகம் செய்யக் கூடிய பொருட்களுக்கான கேள்வி உலக சந்தையில் முடிவற்ற நெகிழ்வு கொண்டதெனக் கருதி வந்தனர். தாய்வானின் மொத்த ஏற்றுமதிகள் மதிப்பிறக்கம், தாராளமயப்படுத்தலின் பின் விரிவாக்கத்துக்குட்பட்டாலும் குறிப்பிட்ட சில வகையான பொருட்கள் வெளிநாட்டுப் பாதுகாப்பை (foreign protectionism) எதிர்கொள்ள வேண்டியும் இருந்தது. ஒவ்வொரு ஏற்றுமதி உற்பத்திக்கான வெளிநாட்டுக் கேள்விக் கோடானது சடுதியாக ஏறக்குறையக் கிடையான நிலையிலிருந்து திரும்பும்போது முடிவற்ற நெகிழ்வுக் கோடானது பூச்சிய நெகிழ்ச்சி கொண்ட கீழ்நோக்கிய குத்தான கோடாகக் காணப்படும். வெளிநாட்டுடன் போட்டியிடும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், தாம் அச்சுறுத்தப்படுவதாக உணரும்போது அவர்கள் குறிப்பிட்ட இறக்குமதி உற்பத்திமீது அளவுசார் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி அரசாங்கத்துக்கு மனுச்செய்யலாம். இத்தகைய விடயங்களில் அவ்வுற்பத்திக்கான புதிய ஏற்றுமதிச் சந்தைகளைக் கண்டறிய முயற்சிப்பதே தாய்வானின் நோக்காக இருந்தது. அல்லது ஏற்றுமதி செய்வதற்கான புதிய உற்பத்திகளை உற்பத்தி செய்ய முயற்சித்தது.
இச்செயல்முறைகளானது தாய்வானின் விவசாயம், தயாரிப்புஏற்றுமதிகள் ஆகிய இரண்டின் அபிவிருத்தியில் தெளிவாக விளக்கப்படுகின்றது. சனத்தொகை அடர்த்தியில் ஏற்ப்ட்ட அதிகரிப்பு ஏற்றுமதிக்கான அரிசி
113

Page 60
உற்பத்தியை இலாபகரமற்றது எனக் காட்டியது. பதிலாகக், காளானைப் புதிய ஏற்றுமதிப் பயிராகத் தாய்வான் விருத்தி செய்தது. மிசச் சிறிய நிலப் பகுதியில் அடர்த்தியாக இப் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இப் புதிய பயிர் பிரதான ஏற்றுமதி வகையாக விரிவடைந்ததுடன் வருடாந்தம் 100 மில்லியனுக்கு மேற்பட்ட டொலர் கிடைத்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா, தாய்வானின் காளான் ஏற்றுமதியின் மீது தனது நாட்டில் தன்னியலான வரையறைகளை விதித்தது. இதனால் ஐரோப்பிய பொதுச் சந்தையில் தனது காளான் உற்பத்திகளுக்கான விற்பனை நிலையங்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.அதேநேரத்தில் அஸ்பராகஸ் (asparagus) என்ற புதிய ஏற்றுமதிப் பயிரையும் விருத்தி செய்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவும், பொதுச் சந்தையும் அளவுசார் கட்டுப்பாடுகளைத் தாய்வானில் இருந்து ஏற்றுமதியாகும் அஸ்பர்ாகஸ் உற்பத்திக்கும் விதித்தன. இதனால் தாய்வான் தொடர்ச்சியாகப் புதிய ஏற்றுமதி உற்பத்திகளை விருத்திசெய்ததுடன், புதிய சந்தைகளையும் கண்டறிந்தது. யப்பானிய சந்தைக்கான விலாங்கு (eels), வெங்காயம் போன்ற உற்பத்திகளையும் பிரான்சிய சந்தைக்கு உணவுக்கான நத்தைகளையும் (edible snails) 6JAðgpLDś @Filius55.
தாய்வானின் தயாரிப்புத்துறை ஏற்றுமதிகளின் விரிவாக்கமும் இதே வகையான செயன்முறையையே கொண்டிருந்தது. உதாரணமாகப், புடவை ஏற்றுமதிகள், பாதணிகள், குடைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மின்னியல் மற்றும் பொறியியல் விளையாட்டுப் பொருட்கள் என்பன ஐக்கிய அமெரிக்காவிலும்,மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டன. ஆனால் தாய்வான் இதற்கு அடிபணியாது புதிய ஏற்றுமதி உற்பத்திகளின் தொடர்ச்சியான விருத்தியினாலும் புதிய கண்டுபிடிப்புக்களினாலும் தனது மொத்த ஏற்றுமதியைக் குறிப்பிடத்தக்க வீதத்தில் விரிவாக்கம் செய்தது.
உலகக் கேள்வியானது, சிறிய, ஒரு வளர்முக நாட்டுடன் முரண்பட்டது. ஆரம்பகால நெகிழ்ச்சியின் நிச்சயமின்மைக்காக வாதாடியவர்களினால் கருதப்பட்டது போன்று தாய்வானின் ஏற்றுமதி செய்யக் கூடிய பொருட்களுக்கான நெகிழ்ச்சியற்ற கேள்வியாகவோ அல்லது சர்வதேச வர்த்தகம், நிதி தொடர்பான நவீன பாடப்புத்தக எழுத்தாளர்களினால் கருதப்பட்ட முடிவற்ற நெகிழ்ச்சி கொண்ட கேள்வியாகவோ இல்லாமல் இம் முரண்பாட்டு நிலை தோன்றியது. இத்தகைய ஒரு வளர்முக நாட்டிற் காணப்படும் கூட்டுக் கேள்விக்கான கோடானது குறிப்பிட்ட வீச்சுக்கு மேலாக உயர்வான நெகிழ்வைக்கொண்டிருக்கும். ஆனால்இங்குகுத்தான கீழ்நோக்கிய வளைவைச் சடுதியாக ஏற்படுத்தியது. இருந்தபோதிலும், நாட்டின் முயற்சியாளர்கள் வளமூலாதாரம் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் உடனடியாக ஏற்றுமதிக்கான புதிய உற்பத்திகளையோ அல்லது சந்தைகளையோ கண்டுபிடித்துவிடுவார்கள். அந்நிலையிற் பிறிதொரு
114

கிடையான கேள்விக்கோடு அமையும். அதுவும் மீண்டும் கீழ்நோக்கிய குத்தான வளைவை அடையும். எனவே கூட்டான உலகக் கேள்வியின் கோடானது எல்லா ஏற்றுமதி செய்யக் கூடிய பொருட்களுக்கும் ஒரு படிமுறைச் செயலாகவே கருதப்படுகின்றது. முயற்சியாளர்கள் வள மூலாதாரத்தினைப் போதியளவு கொண்டிருப்பார்களாயின் இத்தகைய கிடையான படிகள் குத்தான பரிணாமமுடையதாக மிக நெருக்கமான இடம் கொண்டமையும். இதன் விளைவாக ஏற்படும் கூட்டுக்கேள்விக் கோடானது உயர்வான நெகிழ்வு கொண்ட சீரான கோடாக மாற்றமடையும். முயற்சியாளர்கள் வளமூலாதாரமற்றவர்களாகவிருப்பின் இப் படிமுறையானது செங்குத்துச் சாய்வு கொண்டதாக அமையும். இதன் விளைவாக ஏற்படும் கூட்டுக்கேள்வியின் கோடானது சார்பளவில் நெகிழ்ச்சியற்ற கோடாக அமையும்.தாய்வானைப் பொறுத்தவரையில் தகுதிவாய்ந்த முயற்சியாளர்கள் பெருமளவு அங்கு காணப்படுகின்றார்கள். ஆனால் செயல்திறனுடைய மாற்றுவீதம் மூலம் அளிக்கப்படுகின்ற பொருத்தமான தூண்டுதல்கள்தான் ஏற்றுமதியாளருக்கு நன்மைபயக்கும். அதற்கு மேலாக, உள்நாட்டுக் கைத்தொழில்களில் வெளிநாட்டு நேரடி மூலதனம், வெளிநாட்டாரின் பங்களிப்பு நோக்கிய தாய்வானின் திறந்த மனப்பான்மை மிகப் பயனுடையதாக இருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எப்பொழுதும் உற்பத்திகள் பற்றிய புதிய சிந்தனைகளையும் , அறியப்படாத சந்தைகள் பற்றிய புதிய தொடர்புகளையும் கொண்டிருப்பர்.
ஏற்றுமதிகளின் கூட்டில் பரந்தளவான மாற்றங்களும், ஏற்றுமதிக்கான சார்பளவிலான உற்பத்தியின் முக்கியத்துவத்தில் விரைவான அதிகரிப்பும் இயற்கையாகவே தாய்வானின் பொருளாதார அமைப்பில் தொடர்புறும் மாற்றங்களை ஏற்படுத்தின. 1951இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாய வெளியீடானது 35.5 வீதத்தைக் கொண்டிருந்தது. தயாரிப்பு, சுரங்கத் தொழில், பயன்பாடு, கட்டுமான அமைப்பு என்பவற்றை உள்ளடக்கிய கைத்தொழில் வெளியீடு 23.9 வீதமாகவே இருந்தது. 1970 இல் விவசாய உற்பத்தியின் பங்கானது 15.5 வீதமாக வீழ்ச்சியடைந்தது. அதேவேளை கைத்தொழில் வெளியீடு 41.3 வீதமாக உயர்வடைந்தது. இப்போக்குத் தொடர்ந்திருந்ததுடன் 1980 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கலாசார உற்பத்திகள் (cultural products) 7.7 வீதத்தையே கொண்டிருந்தது. அதே நேரம் கைத்தொழில் உற்பத்திகள் மேலும் அதிகரித்து 52.2 வீதத்தைக் காட்டியது. (அட்டவனை 3).
விவசாயத்திலிருந்து கைத்தொழில் உற்பத்திக்கான மாற்றமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரியதொரு நகர்வாகக் காணப்பட்டது. அத்துடன் தாய்வான் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும், தலா மெய்வருமறுனத்திலும் நிலையான முன்னேற்றம் காண்பதற்கான முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தது. தாய்வான் போன்ற மக்கள்
115

Page 61
அட்டவணை 3 : தாய்வானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாய,
கைத்தொழில் உற்பத்திகளின் சார்பளவிலான பங்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக)
விவசாயம் கைத்தொழில் (a) சேவை
1951 35.5 23.9 43.6
1955 29.2 26.4 44.4
1960 28.7 29.6 4.7
1965 23.7 33.9 42.4
1970 15.5 41.3 43.2
1975 12.8 45.9 41.3
1980 7.7 52.2 40.1
(a) including agricultural produce processing industries. Source: National Income of the Republic of China, Directorate - General of
Budget, Accounting and Statistics. 1982.
நெருக்கமிக்க தீவொன்றுக்கு விவசாயமானது தவிர்க்க முடியாதபடி குறைந்துசெல்லும் விளைவு விதிக்குட்பட்டிருந்தது. இவ்விதியைப் பெரிய அளவுத் திட்டத்தில் வளைக்க வேண்டுமாக இருந்தால் விவசாயத்திலிருந்து தொழிலாளர் நகர்த்தப்பட வேண்டும். ஏனெனில் நிலம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட காரணியாக விளங்குகின்றது. விவசாயத்திலிருந்து கைத்தொழில் உற்பத்திக்கான இவ் உற்பத்திக்குரிய வளங்களின் மீள் ஒதுக்கீடும், அக்கைத்தொழில்களிற் கவனம் செலுத்துவதற்கான தாய்வானின் திறமை என்பவற்றைப் பொறுத்தவரையில் உண்மையான ஒப்பீட்டுரீதியான அனுகூலத்தைத் தாய் வான் பெற்றது. இவ் அனுகூலமானது பாரிய தனது சனத்தொகைக்கு (1952 இல் 8.13 மில்லியனாக இருந்த சனத்தொகை 1980 இல் 17.81 மில்லியனாக வளர்ச்சியடைந்தது) உதவியாக மட்டுமன்றித் தலா ஒருவருக்கான மெய்வருமானத்தையும் ஐந்து மடங்கு உயர்வான நிலைக்கு இட்டுச் சென்றது. (அட்டவணை 4).
116

அட்டவணை 4: சந்தை விலைகளிலான தாய்வானின் தேசிய வருமானம்
(1976 இன் நிலையான விலைகளில்)
கூட்டுத்தேசிய வருமானம் தலா வருமானம்
அளவு சுட்டெண் அளவு சுட்டெண் NT S u6)6ö65 uu6ör | (1976 =100) || NT S (1976 =100)
M 1952 87,308 13.5 10,222 25.9 1955 112,760 17.5 11,895 30.1 1960 151,718 23.5 13,601 34.5 1965 240,229 37.3 18, 582 47.1 1970 387,166 60. 26,582 67.4 1975 558,598 86.7 34,910 88.5 1980 879, 139 136.4 49,832 126.3 1981 918,899 142.6 51,161. 129.6
Source: Taiwan Statistical Data Book, Council for Economic Planning and
Development, Executive Yuan, 1982.
5. வட்டிவீதக் கொள்கையும் பணவீக்கமும்
வளர்முக நாடொன்று தனது வறுமைத் தளையிலிருந்து விடுபடும் முயற்சியிற் பாரிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. அந்நாடுசுயஆற்றல் மூலமான வளர்ச்சியை அதிகரிப்பதற்குத் தேவையான சேமிப்புக்களை உருவாக்க வேண்டியுள்ளது. அந் நாட்டிற் காணப்படும் தலைக்கான வருமானம் மிகக் குறைந்த நிலையில் உள்ளது. கருவி களுக்கான முதலுக்குத் தேவையான மூலதன நிதி அதிகரித்துவருகின்றது. அதிகரித்து வரும் சனத்தொகையினால் தலா தொழிலாளர் அலகுக்கான உற்பத்திக்குரிய முதல்தேவை அதிகரித்துவருகின்றது. பேராசிரியர்டபிள்யு. ஏ. லூவிஸ் (W.A. lewis) பின்வருமாறு கூறுகின்றார். s
பொருளாதார வளர்ச்சிக் கோட்பாட்டின் மத்திய பிரச்சினையானது சமுதாயத்தை 5 வீதத்திலிருந்து 12 வீத சேமிப்பாளனாக (முதலீடு செய்பவராக) மாற்றுகின்ற செய்முறையை விளங்கிக்கொள்வதுதான். மனோபாவங்கள், நிறுவனங்கள், நுட்பமுறைகள் என்பவற்றில் ஏற்படும் எல்லா வகையான மாற்றங்களும் இந் நிலைமாற்றத்துடன் இணைந்துள்ளன.
117

Page 62
1950 களிலும், 1960 களிலும் நாணயக் கோட்பாட்டில் (monetary theory) நிலவிய கற்றறிவாளரின் பாணியானது (வழக்காறு) மொத்தத்தில் தவறான தொரு நாணயக்கொள்கையை ஆலோசனை கூறியது. அவை பொதுமக்களிடையே சேமிப்புக்களைத் தூண்டுவதற்குப் பதிலாக பின் வாங்கச் செய்தது. அந்நிலைமையானது, கெயின் சியப் பொருளாதாரத்தின் செல்வாக்கினால், பெரும்பாலான வளர்முக நாடுகள், உள்நாட்டு வங்கியியல் முறைமைகளின் வட்டிவீத அமைப்பைத் தாழ்நிலையில் (விருத்திபெற்ற நாடுகளின் மரபுரீதியான மட்டங்களுக்கு ஒப்பானது) வைத்திருக்கத் தூண்டப்பட்டது. இங்கு மூலதன நிரம்பல் அதிகமாகவும், விலைகள் நிலையான தன்மையுடையனவாகவும் இருந்தன. ஆலோசிக்கப்பட்ட இக் கொள்கை மெய் மூலதனத்தையும், வளர்ச்சியையும் தூண்டுவதற்கு அவசியமானதுடன் விலைத்தூண்டற் பணவீக்கத்தைத் தடுப்பதற்கும் சாதகமானது. உண்மையில், பணவீக்க நிலைமைகளிலும், முதலுக்கான பாரிய அருந்தல் காணப்படும் நிலைமைகளிலும் இத்தகையதொரு, "அரசாங்கம் வலிந்து செயற்படுத்துகின்ற குறைந்த வட்டிவீதக் கொள்கை"யானது உள்நாட்டுப் பணவீக்கத்துக்கு எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும். வங்கிக் கடன்களுக்கான பாரிய மிகைக் கேள்வியை உருவாக்குவதுடன் உள்நாட்டில் மெய்மூலதனவாக்கத்தையும் தடுக்கின்றது. நிறுவனரீதியான நிதி நடுவர்களை நோக்கிய சேமிப்பு உட்பாய்ச்சல்களைப் பின்வாங்கச் செய்கின்றதுடன் பொதுமக்களை வெளிநாட்டுநாணய மாற்றினை அல்லது விலைமதிப்புடைய உலோகங்களில் அல்லது நிலக் கொள்வனவிற்கான தனியார் மூலதனங்களில் அல்லது உற்பத்திசாரா முறைகளில் பணத்தைக் குவித்து வைத்திருக்கத் தூண்டுகின்றது.
வளர்முக நாடுகளில் முதல் நாடாகத் தாய்வான் சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறைந்த வட்டிவீதக் கொள்கையை இரத்துச் செய்தது. அந்நாட்டிற் காணப்பட்ட விலைப் பணவீக்க வீதத்துக்கு ஏற்பச் சேமிப்பு வைப்புக்களின் மீதான வட்டிவீதத்தை உயர்த்தியது. 1950 மார்ச்சில் “முன்னுரிமை வட்டிவீதச் சேமிப்புக்கள்” (PIRD - Preferential Interest Rate Deposits) எனப்படும் சேமிப்பு வைப்புக்களின் சிறப்பு முறைமையைத் தாய்வான் வங்கி அறிமுகம் செய்ததுடன் மாதாந்தம் 7 சதவீத வட்டி வழங்கியது. இது வருடாந்தம், மாதக்கூட்டின் அடிப்படையில் 125 வீதமாக இருந்தது.
இத்தகைய உயர் வட்டிவீதக் கொள்கை எதிர்பார்க்கப்பட்ட பயனை அளித்தது. 1950 ஆம் ஆண்டு மார்ச் இறுதி நாட்களில் 6 மில்லியன் NT டொலர்களாக இருந்த மொத்தச் சேமிப்பும், காலவைப்புக்களும் அதேயாண்டு யூன் மாத இறுதியில் 28 மில்லியன் NT டொலர்களாக உயர்வடைந்தன. இது அக்காலப்பணநிரம்பலில் ஏறக்குறைய 7 வீதமாக இருந்தது. இன்னும் குறிப்பிடக் கூடியதாக விலைத்தூண்டற் பணவீக்கம்
118

விரைவாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 1950 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில் சராசரி மாதாந்த விலைப் பணவீக்க வீதமானது மாதாந்தம் 10.3 வீதமாக இருந்து, இரண்டாவது காலப்பகுதியில் 0.4 வீதமாகச் சடுதியாக வீழ்ச்சியடைந்தது. 1950 மே மாதத்தின் பின் விலைகள் சிறிதளவு வீழ்ச்சியடைந்தன. யூலை மாதத்தில் தாய்வானுக்கான ஐக்கிய அமெரிக்க உதவி மீண்டும் தொடங்குவதற்கு முதல் இவை நிகழ்ந்தன.
வருடாந்த வட்டி வீதமான 125 வீதம் நிலையான விலைகளுடன் ஒத்துப் போகாததினால் அரசாங்கம் வட்டிவீதத்தைக் குறைக்கத் தொடங்கியது. ஒரு மாத சேமிப்பு வைப்புக்களுக்கு வழங்கக் கூடிய வட்டிவீதத்தினை 1950 யூலையில் அரைவாசியாகவும் ஒக்டோபரில் 3 வீதமாகவும் குறைத்தது. அரசாங்கம் தனது உயர் வட்டிவீதக் கொள்கையைத் தொடர்ந்த சிறிது காலத்துக்குள், அதிலிருந்து பின்வாங்குவதனை அறிந்த பொதுமக்கள் வங்கிகளில் இருந்து தமது வைப்புக்களை மீளப் பெறத் தொடங்கினர். வங்கியியல்முறைமையினுள் புதிய சேமிப்புக்களின் பாய்ச்சல் நிறுத்தப்பட்டது. 1950 இன் டிசம்பர் முடிவில் (அதே வருடம்) மொத்தச் சேமிப்புக்களும், தவணைவைப்புக்களும் 26 மில்லியன் NT டொலர்களாக வீழ்ச்சியடைந்தன. நடைமுறைப் பண நிரம்பலில் இது 4.5 வீதமாகக் காணப்பட்டது. விலைகள் விரைவான அதிகரிப்புக்கு உட்பட்டன. 1951ஆம் ஆண்டு பெப்ரவரி வரைக்கும் 1950 யூலையுடன் ஒப்பிடும்போது 65 வீதம் அதிகமாக இருந்தது.
புதிதான பணவீக்க நிலைமைகள் தென்படக் கூடிய சாத்தியத்தினால் நாணய அதிகார சபைகள் 1951ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி ஒரு மாத சேமிப்புக்களுக்கான மாதாந்த வட்டிவீதத்தினை 3 வீதத்திலிருந்து 4.2 வீதமாக உயர்த்தத் தீர்மானித்தன. பொதுமக்களும் சமாதானமடைந்து வைப் பிலிடத் தொடங்கினர் . சேமிப்புக்களின் பாய்ச்சலானது குறிப்பிடத்தக்க வேகத்தைக் கொண்டிருந்ததுடன் ஒரு வருடத்தின் பின் மொத்தச் சேமிப்புக்களும் தவணைவைப்புக்களும் 271 மில்லியன் NT டொலர்களாக உயர்வடைந்தது. அக்காலப் பணநிரம்பலில் 31.2 வீதமாக இருந்ததுடன் அடுத்த ஆறு மாதத்தின் பின் இது 541 மில்லியன் NT டொலர்களாக அல்லது பணநிரம்பலின் 56.4 வீதமாக உயர்ந்தது. விலைகள் திரும்பவும் முற்றாக உறுதிநிலையை அடைந்தன.
இக்காலந் தொடக்கம் நாணய அதிகாரசபைகள் வட்டிவீதத்தை முன்னெச்சரிக்கையுடன் படிப்படியாகக் குறைத்து வந்தன. இக்காலத்தில் கட்டற்ற நாணயச்சந்தை காணப்படாததினால் அடுத்தடுத்து வந்த சீரமைப்புக்கள் சரியாக வழிநடத்தப்படவில்லை. பொதுமக்களின் விலைப் பணவீக்கம் பற்றிய எதிர்கால எதிர்பார்ப்புக்கள் விடயரீதியாகவே நோக்கப்பட்டது. இவ் அதிகாரசபைகள் விலை உறுதி பற்றிய
119

Page 63
பொதுமக்களின் நம்பிக்கையை மிகை மதிப்பீடுசெய்தன. எவ்வாறிருப்பினும் வட்டிவீதம் உயர்வடைந்தபோது விலைகள் மீண்டும் உறுதிநிலைய்ை அடையும். அப்பொழுது சேமிப்புக்கள் மற்றும் தவணைவைப்புக்களின் மேல்நோக்கிய போக்குகள் வங்கி முறைமையில் மீண்டும் ஏற்படும். இங்கு ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 1972 இலும் 1973 இலும் உலகரீதியான பண வீக்கம் தாய்வானுக்கு இரு வருடத்தில் பாரிய வர்த்தக மிகையைக் கொடுத்தன. இது முறையே 647 மில்லியன், 766 மில்லியன் யு. எஸ். டொலராகவும் இருந்தன. மத்தியவங்கி வெளிநாட்டு நாணய மாற்றின் எல்லா மிகை நிரம்பல்களையும் உள்ளிழுத்தலை அவசியமாக்கியது. இதனால் உள்நாட்டுப் பணநிரம்பல் 38 வீதமாக அதிகரித்ததுடன் அடுத்த வருடத்தில் 49 வீதமாக உயர்ந்தது. ஆனால் பணநிரம்பலின் விரிவாக்க வீதத்தின் இலக்கு 20 வீதமாகவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அட்டவணை 5).
இதன் விளைவாக விலைகள் அதிகரிக்கத் தொடங்கியது.1972 இல் 7.3 வீதமாகவும் 1973 இல் 40.3 வீதமாகவும் உயர்வடைந்தது. பண வீக்கம் பற்றிய சிந்தனை மக்கள் மனதில் நிலையாகப் படிந்து விட்டது. சேமிப்புக்கள் மற்றும் தவணை வைப்புக்களின் வருடாந்த அதிகரிப்பு வீதம் 1971 இல் 40 வீதத்திலிருந்து 1973இல் 21.5 வீதமாக வீழ்ச்சியடைந்தது. உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததினால் அதிகரிப்பு வீதம் எதிர் கணிய விளைவுகளை நிலையாக ஏற்படுத்திவிடக்கூடுமென்பதினால் நாணய அதிகாரசபைகள் இறுதியாக ஒரு வருட காலத்துக்கான சேமிப்புக்கள், தவணை வைப்புக்கள் என்பவற்றின் மீதான வட்டிவீதத்தினை 1973 யூலை மாதம் 8.75 வீதத்திலிருந்து 9.5 வீதமாக உயர்த்தின. இது மீண்டும் ஒக்டோபரில் 11 வீதமாகவும் 1974 ஜனவரியில் 15வீதமாகவும் உயர்த்தப்பட்டது. சேமிப்புக்களில் வீழ்ச்சியடைந்து செல்லும் அதிகரிப்பு வீதத்தினைக் கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இம்முயற்சிகள் இறுதியில் வெற்றியை அளித்தன. 1974 இல் மொத்தச் சேமிப்பு மற்றும் தவணை வைப்புக்கள் 44.9 பில்லியன் NT டொலர்களாக அதிகரித்தது. இதனை 1973ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது20 பில்லியன் NT டொலர்களாக அல்லது 21.5 வீதமாகவே காணப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அதிகரிப்பானது (44.9B.NTS) அவ்வாண்டின் மொத்தப் பண் நிரம்பலில் (M) 50 வீதமாக இருந்தது. இது பண வீக்கத்தினைத் தணிக்கின்ற, அதற்கெதிரான சக்தியாக அமைந்ததுடன் அவ்வாண்டில் ஏற்பட்ட பாரிய வர்த்தகப் பற்றாக்குறையை(U.S.$ 811.9 million) நிவர்த்திக்கப் பயன்பட்டது. இவ் வர்த்தகப் பற்றாக்குறைக்கான பகுதிக் காரணம் உலகளாவிய மந்த நிலைமையே. அரசாங்கமும் ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. இவ்ஆடம்பரப் பொருட்களில் வெளிநாட்டு ஆடம்பர வாகனங்களும் உள்ளடங்கியிருந்தன. பெருமளவு மூலப்பொருட்களையும், இயந்திர
120

அட்டவணை 5: பணநிரம்பல், சேமிப்பு, தவணைவைப்புக்கள், வட்டிவீதம்,
மொத்த விற்னை விலைகள்.
பணநிரம்பல் சேமிப்பும் நிரை 1 இன் 1 வருட அடுத்துவரும்
மில்லியன் தவணைவைப்பும் சதவீதமாக சேமிப்புக் வருடத்தின்
NTS மில்லியன் NTS | நிரை 2 களின் மீதான சராசரி விலை
வட்டிவீதம் வட்டிவீதம் அதிகரிப்பு வீதம்
(வருடாந்த (வகுடாந்த (வீதத்தில்) சதவீதம்) சதவீதம்)
1955 2,555 993 38.9 20.98 |14.08 1960 6,037 4,536 75.1 18.43 14.51 1965 16,194 21,602 |133.4 10.80 -4,66 1970 32,035 60,378 188.5 9.72 2.72 1971 39,980 79,222 198.2 9.25 0.02
1972 55,126 101,837 1847 8.75 7.25 4.45(b) 1973 82,310 120,450 146.3 11.00(a) 40.34 22.86 1974 88,079 165,387 187.8 13.50(a) 14.87 40.58 1975, 111,780 212,313 189.9 12.00(a) -0.60 -5.07 1976 137,560 270,367 1965 10.75 4.50 2.76
1977, 177,575 360,579 203.1 9.50 2.76 1978 238,079 467,950 1966 9.50 3.54 1979 254,703 514,504 202.4 12.50 - 13.84
1980 305, 444 631,752 206.8 12.50 - 21.54
Source: Financial Statistics Monthly, Taiwan District, The Republic of China, The
(a)
(b)
Central Bank of China, various issues; Quarterly Economic Trends, Taiwan Area, The Republic of China, DGBAS; Monthly Statistics of the Republic of China, Directorate - General of budget. Accounting and Statistics, various issues.
1973 யூலை 26 இல் வட்டிவீதம் முதன்முதலில் 9.5 வீதத்துக்கு உயர்த்தப்பட்டது. அதன்பின் 1973 ஒக்டோபர் 24 இல் 11 வீதமாகவும், இறுதியாக 1974 ஜனவரி 27 இல் 15 வீதமாகவும் உயர்த்தப்பட்டது. 1974 செப்ரெம்பர் 19 இல் 14 வீதமாகவும், டிசம்பர் 13 இல் 13.5 வீதமாகவும், 1975 பெப்ரவரி 22 இல் 12.75 வீதமாகவும், 1975 ஏப்ரல் 21 இல் 12 வீதமாகவும் குறைக்கப்பட்டது.
முழுத் தீவுக்குமான திருத்தியமைக்கப்பட்ட மொத்த விற்பனை விலைச்சுட்டெண் இந்நிரையில் தரப்படுகின்றது. அடுத்துவரும் தரவுகள் தாய்பே பகுதிக்குரியது.
121

Page 64
வகைகளையும் இறக்குமதி செய்யுமாறு தனியார் தயாரிப்பு நிறுவனங்களைத் துTண்டியது. இந்த ஒரு வலிமை வாய்ந்த பணவீக்கத்துக்கு எதிரான சக்திகள் பணநிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பைத் தடுப்பதற்கான சக்தியுள்ளவையாக இருந்ததுடன் 1974 இல் அதிகரிப்பு வீதத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மொத்தவிற்பனை விலையின் *ட்டெண மீள்பரிசீலனை செய்யப்பட்டதினால் விலைப்பணவீக்கம் 44.9 வீதத்துக்குக் குறைக்கப்பட்டது. 1975 இல் பண வீக்கம் முற்றாகவே *ழிக்கப்பட்டது.
தாய்வானின் அனுபவமானது நம்பிக்கையுடனும், திரும்பவும் ஒன்றை வெளிப்படுத்தி நிற்கின்றது. சேமிப்புக்கள், காலவைப்புக்கள் என்பவற்றில் போதுமான வட்டிவீதம் அவசியமானது. வங் கிமுறைமைக்குள் பொதுமக்களின் சேமிப்பைத் தன்னியல்பாகக் கவருவதில் அது முக்கிய பங்கு வகிக்கின்றதுடன் அவை பணவீக்கத்துக்கு எதிரான ஒரு முக்கிய கருவியாகவும் விளங்குகின்றது. விலைத் தூண்டற் பணவீக்கக் கோட்பாட்டாளர்களின் “உத்தியோக பூர்வமான கட்டுப்பாடு கொண்ட குறைவான வட்டி வீதங்கள் பணவீக்கத்தை உள்நாட்டில் அதிகரிக்கும்” என்ற கோரிக்கை தவறானதாகக் காணப்பட்டது.
6. சேமிப்புக்களும் பொருளாதார விடுபடு கட்டமும்
சார்பளவில் உறுதியான விலைகளும், சேமிப்பு வைப்புக்களுக்கான கவர்ச்சிகரமான வட்டிவீதங்களும் சீன மக்களின் மரபுரீதியான சிக்கன மனப்பாங்கினைத் தூண்டச் செய்தது. சேமிப்பினையும் , முதலீட்டையும் தூண்டுவதற்கு மேலதிக வரிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தனியார் வருமானம், சேமிப்பு, காலவைப்புக்களிலிருந்து கிடைக்கும் வருமானம் என்பவற்றிலிருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டது. கூட்டுத்தாபன வருமானவரி இலாபத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. இவை போன்ற தூண்டுதல்கள் தன்னியல்பான சேமிப்புக்களின் உட்பாய்ச்சலை விரைவான பெருக்கத்துக்கு உட்படுத்தியது. இவை புதிய ஏற்றுமதித் தூண்டற் கொள்கைகளினால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு முதலீட்டுச் சந்தர்ப்பங்களுக்கான பணவீக்கமற்ற நிதிவசதிகளை அளித்தது. இத்தகைய வீக்கமில்லா மூலாதாரங்களிலிருந்து வரும் முதலீடுகள் தலா வேலையாளுக்கான உற்பத்தியில் 1960 இல் இருந்து விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தியது. மெய்வருமானத்தில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சியின் காரணமாக சேமிப்புக்கள் இலகுவாக இடம்பெறலாயிற்று. இவ்வாறு தாய்வான் சேமிப்பின் குறைவான நிலையிலிருந்து உயர் சேமிப்புப் போக்கினைக் கொண்ட நாடாக மாற்றமடைந்தது.
1952இல் தேசிய வருமானத்தில் 5.2 வீதமே சேமிக்கப்பட்டது. 1963 இல் இது 13.2 வீதமாக அதிகரித்து ஐக்கிய இராச்சியம் (9.8 வீதம்), ஐக்கிய
122
 
 
 

அமெரிக்கா (9.1 வீதம்) ஆகிய நாடுகளையும் கடந்து நின்றது. 1971 இல் இருந்து தாய்வானில் சேமிக்கப்பட்ட தேசிய வருமானத்தின் வீதமானது உலகிலேயே அதி உயர்வினைக் கொண்ட யப்பானையும்விட அதிகமாக இருந்தது. 1978 இல் இச் சேமிப்பு அளவானது என்றுமில்லாதவாறு ஆச்சரியந்தரும் வகையில் 35.2 வீதத்தை அடைந்தது. இக் காலத்தில் இச் சேமிப்பு அளவானது யப்பானில் 20 வீதமாகவும், ஐக்கிய இராச்சியத்தில் 8.3 வீதமாகவும், ஐக்கிய அமெரிக்காவில் 6.5 வீதமாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. (அட்டவணை 6)
அட்டவணை 6: தேறிய உள்நாட்டுச் சேமிப்பு (தேசிய வருமானத்தின் சதவீதமாக)
தாய்வான் யப்பான் ஐக்கிய ஐக்கிய
இராச்சியம் அமெரிக்கா
1952 5.2 24.1 6.4 10.4 1955 4.9 20.4 9.8 12.2 1960 7.6 27.7 10.9 8.6 1961 8.0 29.9 11.0 8.4 1962 7.6 28.4 9.4 9.0 1963 13.4 26.6 9.8 9.1 1964 16.3 25.2 1.2 9.8 1965 16.5 23.3 12.4 11.5 1970 23.8 30.5 13.6 7.6 1975 25.3 21.4 5.3 3.8 1978 35.2 20.0 8.3 6.5 1979 34.9 R 事 1980 32.9 率
Source: For Taiwan, Taiwan Statistical Data Book, 1981; for other countries, Year Book of National Accounts Statistics, 1979, United Nations.
டபிள்யு.டபிள்யு. றொஸ்ரோவ் (WW. ROstow) வினுடைய பொருளாதார விடுபடுகட்டத்தினை (economictakeoffstage) விளக்கி நிற்கின்ற சிறந்த உதாரணமாகத் தாய்வான் விளங்கியது. இந் நிலை எப்பொழுது ஏற்படும் என்பதனை றொஸ்ரோவ் வரையறை செய்கிறார். அதிகரித்துவரும் சனத்தொகையைக் கொண்ட ஒரு விருத்தி குன்றிய நாடு. அதிகரித்துவரும் சனத்தொகை அமுக்கத்தினால் வீழ்ச்சியடைந்து செல்லும் வாழ்க்கைத் தரத்தினை வெற்றி கொள்கின்றதுடன் வெளிநாட்டு உதவியுடனோ அல்லது அதுவுமின்றியோதலாமெய்வருமானத்தில் சுயஆற்றல் கொண்ட
123

Page 65
வளர்ச்சியை அடைந்து கொள்ளலாகும். தாய்வானின் அனுபவம் காட்டுவதுபோல் “சேமிப்புக்களினால் நிதிப்படுத்தப்பட்ட உற்பத்திக்குரிய முதலில் தொடர்ச்சியான முதலீட்டுடன் இணைந்த வகையில் மெய் உற்பத்திஇயலளவில் தொடர்ச்சியான அதிகரிப்புஅடையப்படவேண்டும். (அட்டவணை 7).
அட்டவணை 7: தாய்வானின் பொருளாதார விடுபடுகட்டம் இடம்பெற்ற
சரியான வருடத்தின் மதிப்பீடு
முதல்/ சனத்தொகை நிரை 1. சேமிப்பு/ நிரை IVவெளியீடு வளர்ச்சி நிரை Il வருமான நிரை V விகிதம் 1 வீதம் விகிதம்
K ї, K. ii || S. S - K.L Y L Y L Y Y Y L
952 6.0 3.3 19.8 5.2 i4.6
1955 4.8 3.8 18.2 4.9 -13.3
1960 3.7 3.5 13.0 7.6 - 5.4 1961 3.6 3.3 11.9 8.0 - 3.9 1962 3.4 3.3 11.2 7.6 - 3.6 1963 3.2 3.2 10.2 13.4 3.2 1964 2.9 3.1 9.0 16.3 7.3 1965 2.7 3.0 8.1 16.5 8.4 1970 2.2 2.4 5.3 23.8 18.5 1974 2.1 1.8 3.8 31.5 27.7
1978 2.0 1.9 3.8 35.2 31.4
Source: Taiwan, Taiwan Statistical Data Book, Council for Economic
Planning and Development, 1981.Theratio (kly) is the estimate of Professor R.I. Wu, of the Chung-Hsing University of Taiwan and myself.
எனவே "லூவிஸ்” என்பவரால் கூறப்பட்ட 12 வீதம் அல்லது உயர் சேமிப்புப்போக்குப்பொருளாதார அபிவிருத்தியில் வெற்றியை அளித்தது. “எஸ். சி. ரிசியாங்” வாதாடுவதுபோல் பொருளாதார விடுபடுகட்டத்தின் அடிப்படை நிலையானது தலா ஒருவருக்கான உள்நாட்டுச் சேமிப்பை அடைந்து கொள்வதே. சனத்தொகை அதிகரிப்புக்கு மத்தியிலும் முதல் - தொழிலாளர் விகிதத்தில் உறுதியான அதிகரிப்பைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு இது போதுமானது. தேசிய உற்பத்திக்கு வெளியே சேமிக்கப்பட்ட வீதமானது, முதல் வெளியீட்டு விகிதத்தினைச்
124

சனத்தொகை வளர்ச்சி வீதத்தினால் பெருக்கி வருவதிலும் பார்க்க அதிகமாக இருக்கவேண்டும்.
1950களின் பின்னரைக் காலத்தில் பெறுமதியிறக்கம் மற்றும் வர்த்தகத் தாராளமயமாக்கற் கொள்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு விடுபடுகட்டத்துக்கான சூழ்நிலைகள் திருப்தி தருவதாக அமைந்திருக்கவில்லை.வர்த்தகத் தாராளமயமாக்கமும், அதனையடுத்து வந்த ஏற்றுமதி விரிவாக்கமும் முழுஅளவில் இடம் பெற்றபோது பொருத்தமான வட்டிவீதக் கொள்கையானது சீன மக்களின் மரபுரீதியான சிக்கனத்தன்மைகளால் நிலைபெறத்தொடங்கின. 1963இல் சனத்தொகை வளர்ச்சிப் போக்குடன் நிலையான முதல் - தொழிலாளர் விகிதத்த்ை நிலைநிறுத்துவதற்குத் தேவையான முதலீடுகளுக்கு மேலதிகமாக உள்நாட்டுச்சேமிப்புப்போக்குக் காணப்பட்டது. இவ்வாண்டில் உள்நாட்டுச் சேமிப்பின் மிகையானது 3 வீதமாகக் காணப்பட்டதுடன் அவ்வாண்டின் பின் குறிப்பிடத்தக்களவில் அதிகரிக்கவும் தொடங்கியது. 1970 களில் தாய்வானின் தொடர்ச்சியான சேமிப்புப் போக்கானது 20 வீதத்துக்கு மேலாகக் காணப்பட்டது. இதிலிருந்து விளங்குவதென்னவெனில் வெளிநாட்டு மூலதன உதவியின்றித் தலா ஒருவருக்கான மெய் வருமானத்தில் திருப்திகரமான அதேவேளை தொடர்ச்சியான நிலையை அடைவதற்கான இயலளவைத் தாய்வான் கொண்டிருந்ததென்பதே.
1963 ஆம் ஆண்டு விடுபடுகட்டத்தின் முன்பு தாய்வான் பெருமளவில் தனது மூலதன உருவாக்கத்துக்கு முதல் உட்பாச்சலிலும் வெளிநாட்டு உதவியிலும் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்பட்டது. 1962 வரைக்கும் உதவியும், மூலதன உள்வருகையும் மொத்த மூலதன உருவாக்கத்தில் 30 - 50 வீதத்துக்குக் குறைவாகக் காணப்படவில்லை. (அட்டவணை 8).
அட்டவணை 8:தாய்வானின் மொத்த உள்நாட்டு மூலதன உருவாக்கத்துக்கான நிதி மூலாதாரங்கள்
மொத்த மொத்த வெளிநாட்டு உள்நாட்டு உள்நாட்டுச் முதல் மூலதனவக்கம் சேமிப்புக்கள் உள்வருகை 1952 - 55 1.00 59.3 40.7 1956 - 60 100 60.0 40.0 1961 - 65 100 85.1 14,9 1966 - 70 100 95.0 5.0 1971-75 100 97.4 2.6 1976 - 80 100 106.0 6.0
Source: Taiwan Statistical Data Book, 1981.
125

Page 66
1963 இன் பின் வெளிநாட்டு முதல் உள்வருகையிலும், மாற்றுகைகளிலும் துல்லியமான வீழ்ச்சி காணப்பட்டது. தாய்வானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவி இக்காலத்திலிருந்து விரைவாகக் குறைவடைந்து வந்தாலும் 1965 இல் முற்றாக நிறுத்தப்பட்டது. 1963இல் பொருளாதார விடுபடுகட்டமும் அதன் முன்னரான உள்நாட்டுச் சேமிப்புக்களும் வெளிநாட்டு உதவிகள் விட்டுச் சென்ற இடைவெளிகளை நிரப்பியது மாத்திரமின்றி அதிகரித்துச் செல்லும் வீதத்தில் உள்நாட்டு மூலதன உருவாக்கத்தினையும் தழைக்கச் செய்தது. 1975 இன் பின் தாய்வான் ஒரு மூலதன ஏற்றுமதி (Capitalexporting) நாடாக மாறுவதற்குரிய தன்மைகளை வெளிக்காட்டியது.
7. வருமானப் பரம்பல்
தாய்வானின் அபிவிருத்தி உபாயத்தின் ஒரு முக்கிய நன்மை தரும் தாக்கமாக, விரைவான கைத்தொழில் வளர்ச்சிவீதம் காணப்பட்டிருந்தாலும் 1975 வரைக்கும் வருமானப் பரம்பலானது மிக ஒப்புரவுத் தன்மையுடையதாகக் காணப்பட்டது. (அட்டவணை 9). பெரும்பாலான முக்கிய அபிவிருத்திப்பொருளியலாளர்கள் இதற்கு மாறாக, வளர்ச்சிக்கும் ஒப்புரவுக்குமிடையிற் தவிர்க்க முடியாதபடி வர்த்தகக் குழப்பநிலை காணப்படும் எனக் கூறியிருந்தனர். இத்தகைய விரைவான வளர்ச்சித் தோற்றப்பாட்டினை விளக்குவது கடினமானதல்ல. தாய் வானின் அபிவிருத்தி உபாயத்தின் இரு துTண்களும் கடந்த காலத்தில் தொழிலாளருக்குச் சார்பான வருமானப் பரம்பலை முன்னேற்றுவதற்குப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
(1) வர்த்தகத் தாராளமயமாக்கலும், ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கைகளும் பொருத்தமான நாணய மாற்றுவீதத்தின்பின் நிலச்செறிவு கொண்ட விவசாயத்திலிருந்து பரந்தளவிலான தொழிலாளர் நிரம்பலில் நகர்வைத் தூண்டியது. விவசாயமானது வரையறுக்கப்பட்ட நிலத்தினைக் கொண்டிருந்ததினால் குறைந்து செல்லும் வருமானத்தினாற் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதிய தொழிலாளர் செறிவு கொண்ட ஏற்றுமதிக் கைத்தொழில்களில் ஒப்பீட்டுரீதியான அனுகூலங்களைத் தாய்வான் கொண்டிருந்தது. தொழிலாளர் நிரம்பலில் ஏற்பட்ட இத்தகைய பாரிய நகர்வு தொழிலாளரின் எல்லை உற்பத்தியிலும் அதனால் மெய்வேதன வீதத்திலும் பாரிய, தேறிய அதிகரிப்பைக் காட்டியது.
(2) செயற்கையான, அரசாங்கத்தினால் தூண்டப்பட்ட குறைவான வட்டிவீதக் கொள்கையானது தாய்வானை மிகையான மூலதனச் செறிவுடைய, தொழிலாளரை மிச்சப்படுத்தும் உற்பத்தி முறைகளைத் தவிர்ப்பததற்கு வசதியளித்தது. அநேக வளர்முக
126

அட்டவணை 9: தாய்வானின் வருமானப் பரம்பலில் மாற்றங்கள்
(பத்துவீத குடும்பத்தினரின் கூட்டுவருமானத்தில்
சதவீதப்பங்கு)
முதல் பத்துவீத குடும்பங்கள் (தாழ்நிலை வருமானத்திலிருந்து உயர்வருமானம் வரை) 1964 1970 1974 1978 1979
1 வது தசமணை (தாழ்வருமானம்) 7.7 8.4 8.8 8.9 8.6 2வது தசமணையினர் 12.6 3.3 13.5 13.7 13.7 3வதுதசமணையினர் 16.6|17,1 |17.0 17.5| 17.5 4வது தசமணையினர் 22.0 22.5 22.1 22.7 22.7 5வது தசமணையினர் (உயர்வருமானம்) 41.1 38.7 38.6 37.2 37.5 வறிய தசமணையினருக்கு செல்வந்தர்களின் வருமானப் பங்குவிகிதம் 5.3 4.6 4.4 4.2 4.4
Source: Reporton the Survey of Personel Income Distribution in Taiwan
area, Republic of China (1977). Directorate-General of Budget, Accounting and Statistics, Executive year, 1981.
நாடுகள் மூலதன மலிவுத் தன்மை (cheapness of Capital) என்ற தவறான தன்மையினால் இத்தகைய முறைகளையும் கைத் தொழில் களையும் ஏற்றுக் கொள்வதற்கு விருப்புக் கொண்டனவாகக் காணப்பட்டன. பெரும்பாலான வளர்முக நாடுகளின் பிரபல்யமான தாழ்ந்த வட்டிவீதக் கொள்கைகள் தொழிலாளரின் எண்ணிக்கையைக் குறைப்பனவாகவே காணப்பட்டன. வேலைப்படையின் பெரும்பகுதி மரபுரீதியான குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட வேலைகளில் சிக்கிக் கொண்டது. இத்தகைய கொள்கைகளினால் நிதிநிறுவனங் களுக்கான சேமிப்புக்களின் உள்வருகை குறைவடைந்தது. முதலீட்டுக்கான வீக்கமற்ற நிதிநிரம்பலையும் குறைத்துவிட்டது. இவ்வாறான பொதுவான தவறுகளை நீக்கியதன் மூலம் தாய்வான் புதிய வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்களை விரைவாக அளித்து வந்தது. இதனாற் தொழிலாளர் படையானது விரிவடைந்துவரும் ஏற்றுமதிக் கைத்தொழில்களில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றதுடன் தமது மெய் வருமானங்களிலும் விரைவான அதிகரிப்பைப் பெற்றனர்.
127

Page 67
ஒப்புரவுத் தன்மையுடன் கூடிய தாய்வானின் விரைவான பொருளாதார வளர்ச்சியானது ஏனைய வளர்முக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும். நீடித்த விரைவான வளர்ச்சியானது எவ்வாறு கண்ணிரும், இரத்தமும் சிந்தாது அமைதியான (பழம் பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில்)முறையில் அடையப்பட்டதென்பதை விளக்குகின்றது. சமூக, எதேச்சாதிகார ஆட்சித் தன்மைகளைக் கொண்ட் ஏனைய வளர்முக நாடுகளுக்கு, தவறான வழிநடத்தலில் பொருளாதாரக் கொள்கைகளில் தோல்வியைக்கொண்டிருக்கும் இந்நாடுகளுக்குத் தாய்வானின் அனுபவம் ஒரு மாற்று உதாரணமாகப் பரிந்துரை செய்யப்படலாம்.
8. கருத்துரைகள் - லோறன்ஸ் ஜே. லாவி
தாய்வானின் பொருளாதாரச் செயலாற்றம் கடந்த 25 வருடங்களில் ஏற்பட்ட ஒரு பாரிய வெற்றி என்றே குறிப்பிடப்படவேண்டும். மெய்த்தலா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வீதமானது வருடாந்தம் 7 ஆக வளர்ச்சியடைந்தது. பணவீக்கம் நடுத்தரமாகக் காணப்பட்டது. வருமானப் பரம்பல் உலகிலேயே அதிக ஒப்புரவுத் தன்மை கொண்டதாக விளங்கியது. சென்மதி நிலுவை சாதகமாகக் காணப்பட்டது. நாணய மாற்றுவீதம் நிலையானதாக இருந்தது. 1965இன் பின் எந்தவெளிநாட்டுஉதவியையும் தாய்வான் பெறவில்லை. தாய்வான் அடைந்துகொண்ட இந்த வெற்றியின் இரகசியம் என்ன? பேராசிரியர் எஸ்.சி. ரிசியாங், பேராசிரியர் ரி.சி. லியு (S.C.Tsiang and T.C.Liu) Sélu 2)(56), (5 th á5 frú 6), ff 6ðflsIT T síð மேற்கொள்ளப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உபாயத்தின் விற்பன்னர்கள். ரிசியாங் என்பவர் தாய்வானின் அனுபவம் பற்றிய ஆழமான ஆராய்வினை மேற்கொண்டார். தாய்வானின் உபாயம் பற்றிய இரு மிக முக்கியமான கூறுகளை இவர் அடையாளம் செய்துள்ளார்.
(1) சர்வதேசததுறையைத் தாராளமயமாக்கல். இதன் அர்த்தம் என்னவெனின் சமநிலை நாணய மாற்றுவீதத்துக்கு ஒத்ததான நாணய மாற்றுவீதத்தினை ஏற்படுத்தலாகும். அத்துடன் இறக்குமதித் தீர்வைகளையும், கோட்டாக்களையும் அகற்றுதல் அல்லது குறைத்தலும் அடங்கும். தாய்வானைப் போன்ற ஒரு சிறிய நாட்டுக்கு இத்தகைய தாராளக் கொள்கையானது அழுத்திச் சொல்வது என்னவெனில் இறக்குமதிப் பதிலீட்டுக்குப் பதிலான ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கையையே.
(i) கடன்துறையைத் தாராளமயப்படுத்தல் என்பது சமநிலை வீதத்துக்கு
ஒத்ததான வட்டிவீதத்தினை ஏற்படுத்தலாகும்.
இத்தகைய இரு முறைகளும் இறக்குமதிப் பதிலீடு, குறைவான வட்டிவீதம் ஆகிய இரட்டைத் தன்மை வாய்ந்த கொள்கைகளுக்கு எதிரானதாகும்.ஆனால் 1950களிலும், 1960களிலும் வளர்முக நாடுகளிற்
128

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பொருளியலாளர்களினால் முன்வைக்கப்பட்டவைகளாகவே இருந்தன. தாய்வானின் அனுபவமானது தனிப்பட்ட ஒரு விடயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்நாட்டினாற் பயன்படுத்தப்பட்ட உபாயங்களைப் போன்று ஹொங்கொங், சிங்கப்பூர், தென்கொரிய நாடுகளிலும் பிரயோகிக்கப்பட்டன. இம் மூன்று பொருளாதாரங்களும் மிகவும் வெற்றிகரமாக இயங்கின. இந் நாடுகளின் மெய்த்தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 1960 - 1980 க்கு இடைப்பட்ட காலத்தில் வருடாந்தம் சராசரியாக 7 வீதமாக உயர்ந்தது.
எனவே இந் நாடுகளின் அனுபவத்திலிருந்து (தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், தென்கொரியா) எதனை விளங்கிக் கொள்ள முடிகின்றது. சர்வதேச மற்றும் கடன் துறைகளின் தாராளமயப்படுத்தல் செயற்பட்டிருக்கின்ற தன்மை புலனாகின்றது. இங்கு இன்னொரு சுவாரஸ்சியமான விடயம் தாய்வானின் உபாயத்தை ஏனைய வளர்முக நாடுகளுக்கு, இன்று ஆரம்ப நிலையில் காணப்படும் நாடுகளுக்குப் பிரயோகிக்கலாமா? என்பதாகும். அதாவது தாய்வானை ஒத்த கொள்கைகள் சுயஆற்றல் கொண்ட பொருளாதார வளர்ச்சிக்காலத்தினுள் பிரவேசிப்பதற்கு வளர்முக நாடொன்றுக்கு அவசியமானதா என்பதே. இது பற்றிக் கருத்துரை கூறுவது கடினம். எனினும் தாய்வானின் அனுபவத்தினடிப்படையில் ஒன்றிணைக்கக் கூடிய மேலதிகக் காரணிகளையும் சூழ்நிலைகளையும் குறிப்பிட முடியும்.
(1) தாய்வானானது ஹொங்கொங், சிங்கப்பூர், தென்கொரியா போன்று
சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. உள்நாட்டுச் சந்தையானது சனத்தொகை அளவினாலும், வருமான மட்டத்தினாலும் வரையறுக்கப்பட்டிருந்தது. இறக்குமதி செய்யப்படும் பண்டப் பொருட்கள் மீது தனியுரிமைக் கட்டுப்பாடுகளும் காணப்பட்டிருந்தன. அதேபோல் ஏற்றுமதியிலும் காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் வர்த்தகத்தின் மீதான நன்மைகள் (ஏற்றுமதிவரி, இறக்குமதித்தீர்வைகள், கோட்டாக்கள்) மிகவும் குறைவாக இருந்தன.
(2) தாய்வான்சார்பளவில் குறைவானதலா தேசியவருமான மட்டத்தில் உயர்வான சேமிப்பு வீதத்தினை அடைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருந்தது. 1965 இல் தலா தேசிய வருமானம் யு. எஸ். டொலர் 350 ஆகக் காணப்படத் தேறிய உள்நாட்டுச் சேமிப்பு வீதம் தேசிய வருமானத்தின் சதவீதமாக 16.5 வீதமாக இருந்தது. வருமானம் உயரச் சேமிப்புவீதம் அதிகரித்தது. 1970 களில் தாய்வானின் தேறிய உள்நாட்டுச் சேமிப்பு வீதம் சராசரியாக 30 வீதத்துக்கு மேலாக இருந்தது. உயர்வான சேமிப்பு நாடு எனக்கருதப்பட்டயப்பான்கூட25 வீதத்தையே இக்காலத்தில்
129

Page 68
(3)
(4)
கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் 10 வீதத்துக்குக் குறைவாகவே கொண்டிருந்தன. சனத்தொகை வளர்ச்சி காணப்பட்டாலும், தலா தொழிலாளர் அலகுக்கான மூலதனத்தை நிலைக்கச் செய்வதற்கு தேறிய உள்நாட்டுச் சேமிப்பு வீதம் உயர்வாகக் காணப்பட வேண்டும். சுயஆற்றல் கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கு இது அவசியமானது எனப் பேராசிரியர் ரிசியாங் தனது மாதிரியில் வெளிப்படுத்துகின்றார்.
இருந்தாலும் உயர்வான சேமிப்பு வீதம் மாத்திரம் ஒரு பொருளாதாரத்தைச் சுயஆற்றல் கொண்ட வளர்ச்சிக்கான விடுபடுகட்டத்தை உத்தரவாதப்படுத்தும் எனக்கூறமுடியாது. சீனப் பெருநிலப்பகுதியை எடுத்துநோக்கினால், 1960-1980 காலத்தில் சீனாவின் சேமிப்பு வீதம் சராசரியாக தேசிய வருமானத்தில் 30 வீதமாக இருந்தது. உயர்வான சேமிப்பு வீதம் என்பது முதலீட்டுக்கான வளங்கள் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும். ஆனால் அம் முதலீடுகளைச் சரியான முறையிலோ அல்லது பயனுறுதி வாய்ந்த முறையிலோ பயன்படுத்தல் என்பதனைக் குறிப்பிடாது.
தாய்வான், ஏனைய நாடுகளான ஹொங்கொங், சிங்கப்பூர், தென்கொரியா போன்று குறிப்பிடத்தக்களவு தொழிலாளரைக் கொண்டுள்ளன. கல்வியறிவு வீதம் உயர்வானது. புதிய திறன்களைப் பெறுவதற்கான திறமையும், ஊக்கமும் கொண்டவர்கள். தொழில் முயற்சியாளர்களை அதிகம் கொண்டதுடன் அவர்களுட் பெரும்பாலானவர்கள் குடியேறிகளாகவும் இருந்தனர். உயர்வான கல்வியறிவு வீதம் புதிய தொழில் நுணுக்கங்களை இலகுவாக உள்வாங்க வசதியாக இருந்தது. இதனால் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை வெற்றியளித்தது. ஆனால் உயர் கல்வியறிவு வீதம் மட்டும் போதுமானது என்று கூறமுடியாது என்பதற்குச்சிறந்த உதாரணம் யமேக்காவாகும்.
இங்கு மிக முக்கியமானது நிலையான , போட்டித் தன்மையுள்ள சுதந்திர நிறுவனங்களைக் கொண்ட சூழலாகும். யப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது தாய் வானின் பொருளாதாரச் சக்தியானது மிகவும் விரிந்து பரவிக் காணப்பட்டதுடன் ஒப்புரவான வருமானப் பரம்பலையும் கொண்டிருந்தது. தொழிலாளர் சங்கங்களும் கடும்போக்கானவை அல்ல. சந்தைகள் (தொழிலாளர் சந்தைகள் உட்பட) பொதுவாகப் போட்டித்தன்மையுடையவை. கைத்தொழில்களுக்கு உள்ளே நுழையவும், வெளியேறவும் இலகுவாக இருந்தது.
130

தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் கூடத் தமது சுயநலன்களை அடையச் சுதந்திரம் காணப்பட்டது. இலாபங்களினாற் தனிப்பட்டவர்கள் தூண்டப்பட்டனர். இச் சூழ்நிலைகளினால் திறனற்ற நடவடிக்கைகள் களைந்தெறியப்பட்டன. சர்வதேசரீதியான மற்றும் கடன்துறைகளின் தாராளமயப்படுத் தலினால் உருவாக்கப்பட்ட புதிய சந்தர்ப்பங்களின் முழு அனுகூலங்களையும்" மதிநுட்பமுடைய மூலாதாரமிக்க” முயற்சியாளர்கள் பெற்றுக்கொண்டனர் எனப் பேராசிரியர் ரிசியாங் குறிப்பிடுகிறார்.
808
131

Page 69


Page 70


Page 71
PRINTED BYUNIEARTS (P)

T) LTD. TEL: 330195