கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலாம்பிகை கனகரெத்தினம் (நினைவு மலர்)

Page 1
$ y S. 、 父 父 、 、
 

§. < 、 、 、 、 、 、

Page 2

சிவமயம்
நயினை றி நாகபூஷணி அம்பாள்

Page 3

& 義
சமர்ப்பணம்
கொழும்பு, வெள்ளவத்தையை வதிவிடமாகவும், நயினாதீவு 2ம் வட்டாரம் சைவவேளாண்குலத்தில் பிறந்து 10.12.1996 செவ்வாய்க்கிழமை, கொழும்பில் இறைகழலடி மேலெனக் கருதி இயற்கை எய்திய எங்கள் இல்லத் தலைவி, குல தெய்வத்தின் ஆத்ம சாந்திக்காக இந்த நூலை அன்னையின் பாதக் கமலங்களில் சமர்ப்பிக்கிறோம்.
பண்பால், பாசத்தால் உயர்ந்து நின்று எம்மை ஆளாக்கி வளர்த்த எம் குலவிளக்கின் பாத கமலங்களுக்கு எமது சிரம் தாழ்த்திக் கரம் கூப்பி வணங்குகின்றோம்.
தன்னலங்கருதாது பதிபத்தினியாய், உற்ற அன்னையாய், அன்புமாமியாய், பாசமுள்ள பாட்டியாய், அருமைச் சகோதரியாய், அன்பு மைத்துணியாய் எங்களுக்காகவே வாழ்ந்து, எங்களுக்காகவே பிரார்த்தித்து எங்கள் நினைவுடனேயே தனது இறுதி யாத்திரையை மேற்கொண்ட எம் குல தெய்வத்தின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல நயினை பூரீ நாகபூஷணி அம்பிகையையும் பூரீ வீரபத்திரப் பெருமானையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொள்கிறோம்.
சாந்தி. சாந்தி. சாந்தி
響
t1
鄒
1

Page 4
என உள்ளடக்கம்
நான் கண்ட இறைபதம் எய்திய.
பிறப்பிலிருந்து அன்புச் சீனியம்மா நயினைமாதா பெற்றெடுத்த அருந்தவ. அம்மா என்ற அம்பிகை பாசமிகு அம்மா வாழ்க்கை வரலாறு தேவாரங்கள் திருமுறைப் பாடல்கள் நாகபூஷணி அம்மை திருவூஞ்சல் . நாகேஸ்வரியம்மை பதிகம் . நயினை தோத்திரமாலை . நயினை மான்மியம் நாகபூஷணி அம்மை தோத்திரம். அபிராமி அந்தாதி திரிக்கடவூர் அபிராமியம்மை பதிகம் . கந்தர் சஷ்டி கவசம் சிவபுராணம் நவநாயகர்களின் நல்லருள் பெற . திருநீற்றுப் பதிகம் நமசிவாயத் திருப்பதிகம் கோளறு பதிகம் திருப்பள்ளியெழுச்சி திருத்தாண்டகம் திருப்பொற்சுண்ணம் திருவெம்பாவை திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருப்புராணம் திருப்புகழ் . உடறகூறறு வணணம பட்டிணத்தார் பாடல் கந்தரலங்காரம் முதுமை-கண்ணதாசன் சிவபதவி அவனிடம் பேசுகிறேன் நன்றிநவிலல்
குடும்பவிருட்சம்
7
8
O
14
16
21
24
28
31 33
34
47
53
60
63
65
67
69
71
74
78
83
88
94
97
100
102
107.
111
12
114
116
17

ஒம் அம்பாள் துணை
திருமதி பாலாம்பிகை கணகரெத்தினம்
தோற்றும் 21-01-1930 ؟g மறைவு 10-12-1996
திதி நிர்ணய வெண்பா தாது வருடத்துத் தன்னிகரில் கார்த்திகையில் போதுபுலர் பூர்வப் பிரதமையில்-கோதில் கனகம்சேர் ரெத்தினத்தின் கண்மணிபா லாம்பிகையாள் தனதுலக வாழ்விகந்தாள் தான்.

Page 5

நான் கண்ட இறைபதம் எய்திய திருமதி பாலாம்பிகை-கணகரெத்தின
“வையத்துள் வாழ்வாங்கு" வாழ்ந்து கடந்த 10.12.1996 செவ்வாய்க்கிழமை சிவபதமைடைந்த திருமதி. பாலாம்பிகை கனகரெத்தினம் அவர்களின் அந்தியேட்டிக்கிரியைகளை முன்னிட்டு வெளியிடப்படும் இதழுக்கு அன்னாரைப் பற்றி சில வார்த்தைகள் குறிப்பிடுவது சாலப் பொருத்தம்.
பாலாம்பிகை அம்மா இறைபதம் அடைந்த செய்தி, வானொலி மூலமாக அறிந்து கவலையுற்றோம். திருமதி பாலாம்பிகை கனகரெத்தினம் அவர்களைப் பல ஆண்டு காலம் நன்கு தெரியும். ஒரு நாள் நாங்கள் நாகபூஷணி அம்பாள் ஆலத்திற்குச் சென்ற போது, எங்களை தம் இல்லம் கூட்டிச் சென்று, உபசரித்து நல்விருந்தோம்பியும் அனுப்பியதை இன்றும் மறக்கமுடியவில்லை. காரணம் யாதெனில் அம்மாவின் இறைபக்தி, குருபக்தி அப்படிப்பட்டது. தாயின் பாசத்தை எவராலும் நிரப்ப முடியாது. இது மனித வரலாற்றின் நியதி. இறைவன் நியதி எதுவோ அதன்படிதான் எதுவும் நடக்கும். இதற்கு உதாரணமாகக் கவியரசு கண்ணதாசன் மிக அழகாகக் கூறி வைத்துச் சென்றார். மரத்திலிருந்து விழும் இலை. அது தண்ணிரில் விழுந்தால் கொஞ்ச நாட்கள் மிதக்கும். பூமாலையில் கட்டப்பட்டால் இறைவன் கழுத்தில் சூட்டப்பட்டுக் காணப்படும். எதிலும் சிக்காமல் இருந்தால் காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறந்தடிக்கும். தீயில் விழுந்தால் எரிந்து சாம்பலாகிவிடும்."எதிலே விழுவது?" என்பது இலையின் விருப்பத்தைப் பொறுத்ததல்ல. இதுதான் மனித வாழ்வின் நியதி' எனக்கருதி, இறைவன் கழுத்தில் மாலை போன்று பாலாம்பிகை அம்மையார் தம் பேரின் பப் பெருவாழ்வு இறையடியில் நிலைத்து நிற்கப் பிரார்த்திப்போமாக. நன்றி.
ஓம் சாந்தி
புங்குடுதீவு - மடத்துவெளி. சின்னத்துரைக் குருக்கள் மகனார் சிவழி, சிவகுமார் குருக்கள்.
1.

Page 6
حو احساسیص
சப்த தீவுகளில் பெயர் பூத்த தீவுகளில் சிறந்து விளங்குவது நயினாதீவு. அறுபத்தினான்கு சக்தி பீடங்களில் புவனேஸ்வரி சக்தி பீடத்தைத்தன்னகத்தே அமைத்துக்கொண்டபூரீநாகபூஷணி அம்பாள் நற்தவம் புரியும் நயினையம்பதியில், புகழ்பூத்த பரம்பரைச் சார்ந்தோர் பலர் பிறந்து அருட்செல்வம், பொருட்செல்வம் பல பெற்று, ஊரின் பெயரைக் காப்பாற்றி வந்தவர்கள் பலர். இதில் காசியர் பரம்பரையில் 1930ம் ஆண்டு தைமாதம்(ஆங்கியம்)21ம் திகதி அமரர் திரு.சுப்பையா அவர்கட்கும் அமரர் திருமதி சுப்பையா இராமாசிப்பிள்ளை அவர்கட்கும் நான்காவது பிள்ளையாகவும் சிரேஷ்ட புதல்வியாகவும் பிறந்தவர் தான் அமரர் திருமதி பாலாம்பிகை கணகரெத்தினம் அவர்கள்.
சிறு வயதிலேயே அமரர் அவர்கள், அவர்களது இல்லத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள வைரவர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்.இவர்தம் அண்ணர்மார்சுந்தரமூர்த்தி, பாலசுந்தரம் இருவரும் முன்னரே இறையடி எய்தி விட்டனர் என்பது சோக நிகழ்வாகும். அமரருக்குநேரே மூத்த சகோதரர் மயில்வாகனம் என்றழைக்கப்படும் திரு. பொன்னம்பலம் இன்றும் நயினாதீவில் வாழ்ந்து வருகின்றார் என்பது இறைக் கொடை வரமெனக் கூறலாம். இவர் ஒய்வு பெற்ற பாடசாலை அதிபரும் ஆவார். அமரர் தம் இளைய சகோதரிகள் பவானி, அன்னபூரணி இருவரும்உரியவேளையில் திருமணம் புரிந்து இனிதே இல்லறம் நடாத்தி வருகின்றனர். நாட்டின் இன்றைய நிலையில் பொதுவாக வடமாகாண மக்கள் அனைவரும் பிறந்த மண்ணை விட்டுநாளுக்கொரு இடமாக, இன்னல்நிறைந்தநிலையில் வாழ வேண்டியிருப்பது இறைவிருப்போ! தலைவிதியோ எனத் தமிழன்னை கண்ணிர் வடிக்கும் சூழ்நிலை.
திருமணப்பருவகாலம் வந்ததும் அமரர்தம் தகப்பனார்,தாயார்,
சகோதர்கள் அனைவரும் சேர்ந்து அமரருக்குப் பொருத்தமான
வரனைத் தேர்ந்தெடுக்துக் கொள்ள எல்லாம் வல்லழரீ நாகபூஷணி
அம்பாளின் துணையை வேண்டி நின்றனர். இவர்களது நல்ல
முயற்சியினால் நயினாதீவில் புகழ் பூத்த குடும்பத்தில் பிறந்த அமரர்
திரு. கந்தர், அமரர் திருமதி சின்னம்மா கந்தர் அவர்களது
2
 
 

இரண்டாவது புதல்வரும் கொழும்பில் சிறந்த வர்த்தகராகத் திகழ்ந்தவருமான கணகரெத்தினம் அவர்ளை பெரியோர்தம் நல் விருப்புக்கேற்ப அமரர் திருமணம் புரிந்து கொண்டார். தற்போது அமரரின் கணவர், கொழும்பு ஒல்கொட் மாவத்தையிலுள்ள "தேவா ஸ்ரோர்ஸ்", யாழ்ப்பாணம், ஆஸ்பத்திரி வீதி, பேரூந்து நிலையம் முன்பாக உள்ள "ஹோட்டல் சோபிகா” என்பவற்றின் உரிமையாளாராக இருக்கின்றார்கள்.
“ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து" இது வள்ளுவப் பெருமானின் அருள் வாக்கு. இதன் பொருள், மற்றவர்களையும் அறநெறியில் ஒழுகச் செய்து தாமும் அறம் தவறாத இல் வாழ்க்கை நடாத்துவார்களெனின், தவம் செய்வோரை விட மிகக் கூடுதலான சிறப்பும் வல்லமையும் பெற்ற வாழ்க்கை என்பதாகும். இவ்வாறான அறநெறியில் தெய்வீக வாழ்க்கையை நடாத்தி வந்தவர்களே திரு. கனகரெத்தினம் அவர்களும் அமரர் திருமதி பாலாம்பிகை அம்மையார் அவர்களும் என்றால் அது மிகையல்ல. இல்லறத்தை நல்லறமாக்கி வரும் காலத்தே இவர்கள் தம் தவப்பலனாகக் கிடைத்த குழந்தைச் செல்வங்கள் ஏழு பேர். இவர்களுக்கு முதல் செல்லப்பிள்ளையாக ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அக் குழந்தைக்கு கேசவராணி எனும் நாமத்தைச் சூட்டினர்.
அமரர்தம் மகளார் செல்விகேசவராணி அவர்கட்குப்பெரியோர் தம் பெருவிருப்புக்கு அமைய, நயினாதீவில் விதானையாராகக் கடமை ஆற்றிய திரு. திருமதி கா.க. சிவசிதம்பரம் அவர்கள் தம் மகனார் திரு. சிவானந்தர் ஆசிரியர் அவர்களைத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ராதிகா, தர்மிகா என இரண்டு புதல்விகளும் ரஜீவ், ஆதன் என இரண்டு புதல்வர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அமரரின் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றனர். யாழ்ப்பாணத்துத் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக அமரரின் ஈமக்கிரியைகளில் அனைவரும் பங்கு கொள்ள முடியவில்லை. மகளார் கேசவராணி அவர்களும் பேத்தி ஒருவரையும், பேரன் ஒருவரையும் தவிர ஏனையோர் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இது மருகர் திரு. சிவானந்தர் அவர்களுக்கு நீங்காத வேதனையும் கவலையும் நிறைந்த சந்தர்ப்பம். அமரர் தாம் வாழும் காலத்தே தம் கணவருடன் இலங்கையிலுள்ள திருத்தலங்கள், தென்னிந்தியாவிலுள்ள
3

Page 7
திருத்தலங்கள் போன்றவற்றைத் தரிசிக்கும் பாக்கியத்தையும் பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமொன்றாகும். அத்துடன் சிங்கப்பூருக்கும் சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாகப் பிறந்தவர் திரு. சித்தானந்தன் அவர்கள். அமரரின் விருப்புக்கு ஏற்ப அவரது அண்ணர் திரு. பொன்னம்பலம் திருமதி நாகமுத்து பொன்னம்பலம் அவர்களின் ஏக புதல்வி செல்வி. வாசுகியைத்திருமணம்புரிந்துகொழும்பில் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்கள் அப்பிள் திராட்சைப்பழம், தோடம்பழம் என்பவற்றை மொத்தமாக இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி சிெய்து விற்பனை செய்து வருகின்றார். இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் முறையே சோபியா, சுலக்ஷனா, சுகன்யா, துசியா, பேத்தி சுலக்ஷனாவின் பூப்புனித நீராட்டு விழா கடந்த 23.11.96 இல் வெகு விமரிசையாக நடைபெற்றது. அமரர் அவர்கள் இறுதியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி இதுவாகும். இறுதிவரை மூத்த புதல்வர் சித்தானந்த னுடனேயே அமரர் வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது பிள்ளையாக திரு.பரமானந்தன். இவர்திரு.திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும் ஆசிரியையுமான ஜெயசிறி அவர்களை மனம் விரும்பி, திருமணம் புரிந்து இனிது வாழக்கை நடாத்தி வருகின்றார்கள். திரு. பரமானந்தன் அவர்கள் இலங்கைப் பொலிசில் முன்னர் வேலை செய்தவர். தற்போது இருவரும் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்கள். அமரரின் தீடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு, ஆறாத்துயரில், இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக இவர் கொழும்பு வந்துள்ளார்.
நான்காவது பிள்ளையாகப் பிறந்தவர் திரு. தேவானந்தன். இவர் யாழ்ப்பாணம் தேசிய வீடமைப்புஅதிகார சபையில் லிகிதராக வேலை செய்தவர். அங்கு வேலை செய்யும் போது திரு. திருமதி இரத்தினசிங்கம் தம்பதிகளின் புதல்வி செல்வி. வாசுகியை (இவரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையில் வேலை செய்தவர்) மனம் விரும்பி, பெற்றோரின் விருப்பத்துடன் திருமணம் செய்து, சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள். இருவரும் தற்சமயம் ஒய்வு பெற்ற நிலையில், கொழும்பு வெள்ளவத்தையில் "தேவா றேடர்ஸ்” எனும் வியாபாரத் ஸ்தாபனத்தை நன்கு நடாத்தி வருகின்றனர். இவர்களுக்கு மிராஜ், சுரேன் என இரு புதல்வர்கள் உள்ளனர்.
ஐந்தாவது திரு. சர்வானந்தன் அவர்கள். இவரை எல்லோரும் அன்பாக சிவம் என்று அழைப்பர். இவர் திரு. திருமதி சுப்பிரமணியம்
4

தம்பதிகளின் புதல்விசெல்வி.நளாயினியை மனம் விரும்பிதிருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு துளசிகா, சர்சியா என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இலண்டன் மாநகரில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அமரரின் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இது மகனார் சர்வானந்தனின் குடும்பத்திற்கே நீங்காத வேதனையாக இன்று வரை உள்ளது.
ஆறாவதாகப் பிறந்தவர் தயானந்தன் அவர்கள். இவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக இலண்டனில் வசித்துவருகின்றார். இவர் திரு.திருமதிசிவபாதசுந்தரம்தம்பதிகளின்புதல்விசெல்விரஜனியைத் திருமணம் செய்து சீரும் சிறப்புமாக இலண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேன் என்ற புதல்வரும், தனுஷா என்ற புதல்வியும் உள்ளனர். அமரரின் தீடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு, ஆழ்ந்த கவலையில் குடும்பசகிதம்உடனடியாக கொழும்புக்கு வந்து அமரரின் ஈமக்கிரியைகளின் கலந்து கொண்டுள்ளார்கள்.
இறுதிப் பிள்ளையாகப் பிறந்தவர் கிருபானந்தன். இவர் திரு. திருமதி கந்தசாமி தம்பதிகளின் புதல்வி முகுந்தினியைத் திருமணம் செய்துதற்சமயம் கனடாவில் வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களுக்கு விஷ்ணுகா, துர்க்கா என இருபெண்குழந்தைகள்.இவரும் அமரரின் மறைவையிட்டு இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக கனடாவிலிருந்து வந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்று மீண்டும் கனடா சென்றுள்ளார்.
சிவபதமெய்திய திருமதி பாலாம்பிகை அம்மையார் அவர்கள் ஓர் சிறந்த இல்லத்தரசி. இல்லத்திற்கு வருபவர்களை இன்முகம் காட்டி வரவேற்றும் நல்விருந்தோம்பியும் வாழ்ந்தவர். இல்லார்க்கு ஈதல், இரப்போரைப் பேணல், இறந்தோர்க்கு இரங்குதல் என்பன இவர்கள் தனது வாழ்வின் கடைப்பிடித்ததொன்றாகும். பிள்ளைகள் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று தினமும் இறைவியை இறைஞ்சிவாழ்ந்தார்.தீயவழிகளில் அல்லாமல் நல்வழியில்பொருட்கள் சேர்க்கப்படல் வேண்டும் என விரும்பிய அமரர் சேர்த்த பொருளின் பயனைப் பகிர்ந்து, வாழ வேண்டும் என குடும்ப வாழ்வில் திடகார்த்தமாக இருந்தார். அமரர் தாம் பெற்ற பிள்ளைகளோடு மட்டுமன்றி, மருமக்கள் பேரப்பிள்ளைகள் எல்லோருடனும் பாசமாகத் திகழ்ந்தார். அமரர் தனது 66 வயது வரை இம் மண்ணுலகில் வாழ வரம் பெற்றிருந்தார். இவ்வளவு விரைவில் கொடிய காலன் அவரைக் கவர்ந்துசெல்வான் என எவரும்நினைத்திருக்கவில்லை."நல்லவர்கள் நெடுநாள் வாழ்வதில்லை” என்று கூற்றுக் கிணங்க இறைவன் அமரரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான் போலும்.
5

Page 8
அன்னார் தம் நல்ல ஆத்மா இறையடியில் நித்திய சாந்தி பெற எல்லாம் வல்ல அன்னை சக்தி பூரீ நாகபூஷணி அம்பாளின் திருப்பாதங்களைக் காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்க அக்கண்ணிரால் அவள் தன் திருப்பாதங்களைக் கழுவி மன்றாடித் துதிப்போமாக!
ஓம் சாந்தி - ஒம் சாந்தி - ஓம் சாந்தி
---
Cஅன்புச் சீனியம்மாட)
பாசமிகு சீனியம்மா,
a-the
நீங்கள் இறைகழலடியாகிவிட்ட செய்தியால் நாங்கள் துன்பத் துயரில் துடிக்கின்றோம். உங்கள் அன்புருவத்தை இனிக் காணமுடியாதே எண்ணிப் பார்க்கவே முடியவில்லைச் சீனியம்மா, உங்கள் அன்பகலாத வார்த்தைகளை இனி நாங்கள் யாரிடம்கேட்போம்? சீனி அம்மா உங்கள் தீடீர் பிரிவால் சீனி ஐயா வருந்தி துடித்து வாடுகிறார்களே! எமக்கெல்லாம் ஆறுதல் கூறி ஆதரிக்க உடன் வரவேண்டும் சீனிஅம்மா நீங்கள் இனி வரமாட்டீர்கள் ஏன்என்றால் மீண்டும் வராத பெரும் பேறு பெற்று விட்டீர்கள் சீனிஅம்மா உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவி பூரீ நாகபூஷணி அம்பாளின் அடியில் நித்தியமாக நிலைத்து நிற்கும் உங்கள் பிரிவால் கலங்கி நிற்கும்
அன்புப் பெறாமக்கள், பொன்-திருச்செல்வம் பொன்-மகேஸ்வரன்.

“நயினைமாதா பெற்றெடுத்த அருந்தவப்புதல்வி”
நயினை மாதாவின் அருந்தவப் புதல்விகளுள் தலை சிறந்த ஒருவர் அமரர் திருமதி பாலாம்பிகை கணகரெத்தினம் அவர்கள். அன்பு, இரக்கம், அறிவு, பண்பு, அனுபவம் என்பன ஒருங்கே அமையப் பெற்றவராக, நயினை அம்பாள் ஆலய அருகாமையிலே இரண்டாம் வட்டாரத்திலே குற்றமிலாது குடி செய்து வாழ்ந்தவர் இவர்.
உலகத்திலே, மானிடராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் நிச்சயம் உண்டு. ஆனால் சிலரது மரணங்கள் ஏற்படுத்தும் பிரிவுத் துயர் நீங்காத, அகலாத சோகமாய் நின்று நிலைத்து விடுகின்றது. அந்த மரணங்களுள் ஒன்று தான் திருமதி பாலாம்பிகை கனகரெத்தினம் அவர்களுடையது. அந்த மரணம் எப்போ வரும், எவ்விடத்தில் வரும் எந்நேரத்தில் வரும் என்று ஒருவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
எழிமையான வாழ்வும், உறுதியான உள்ளமும் தான் ஒரு மனிதனை மனிதனாக வாழ வைக்கும் என்ற நம்பிக்கை இவரிடம் நன்கு பதிந்து இருந்தமையால் இவர் அனைத்துநயினை மக்களாலும் மதிக்கப்பட்டார். போற்றப்பட்டார்.
"தற்காத்து தற்கொண்டாற் பேணித்தகை சான்ற சொற்காத்துச் சோர்விலா பெண்”
என வள்ளுவப் பெருந்தகை கூறியவாறு, இல்வாழ்க்கையில் சிறப்புற வாழ்ந்தவர். இல்வாழ்க்கையின் பயனாக நன் மக்களைப் பெற்று அவர்களை அவையத்துள் முந்தியிருக்கச் செய்த பேறு பெற்றவர்.
திருமதி பாலாம்பிகை கணகரெத்தினம் அவர்கள் கொழும்பில் காலமாகி விட்டார் என்ற செய்தியை நயினை மக்கள் வானொலி மூலம் அறிந்து கவலையடைந்தார்கள். நயினை மாதா தனது புதல்வி ஒருவரை இழந்து விட்ட நிலையில் கவலையடைகின்றாள். நயினைமக்கள் தங்கள் உற்ற சகோதரி ஒருவரை இழந்துவிட்டோம் எனக் கண்ணிர் வடிக்கின்றார்கள். அன்னாருடைய பிரிவுத் துயரால் கவலையுற்றிருக்கும். துணைவர், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் எல்லோருக்கும் ஆறுதல் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல நயினை பூரீ நாகபூஷணி அம்பாளையும், இரட்டங்காரி
7

Page 9
பூரீ முருகப் பெருமானையும் பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி: சாந்தி!! சாந்தி!!!
நா. க. குமாரசூரியர் J.P (சமாதான நீதிவான்) தபாலதிபர் நயினாதீவு
Sibo Geir SibleIDE5
அம்மா என்ற அம்பிகை அடைந்து விட்டாள்! நாகாம்பிகை பாதத்தில்! எம்மால் தாங்க முடியாது!
இனியாரை.
"அம்மா” என்று அழைப்பது
ஆராரோ பாடி அரவணைத்தாள்; -இனி யார் யாரோ எம்மை அரவணைப்பார்!? நூறாண்டு சென்றாலும் உங்கள் நினைவை கூறாமல் இருக்க முடியாதம்மா!
பாலூட்டி சீராட்டி
பக்குவமாய், பள்ளிக்கு அனுப்பி படிப்பித்து, பாரினிலே எங்கள் புகழினை பரப்பிவிட்டு, நீங்கள்! பரலோகம் சென்றது g-rflujIT? ejúbLDT!
தாயிற் சிறந்த கோயிலை நாங்கள் இனித் தாரணியில் காணமாட்டோம்.! தீயாகி நெஞ்சம் குமுறுதம்மா உங்கள், தீந்தமிழால் ஒரு மொழி எமக்கு கூறிடம்மா!
"துன்பம்” என்ற ஒருவார்த்தையே இல்லாமல்,

இன்பமாக நீங்கள் சென்றுவிட்டீர்! எஞ்சிய உங்கள், கனக பிள்ளைகளை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை? என்ன பிழை செய்தோம்?
அம்மா.நாங்கள்! எங்கள் கண்கண்ட தெய்வத்தை
gT600; லண்டனில் இருந்து ஓடிவந்தோம், கனடாவில் இருந்து பறந்து வந்தோம்!
யாழில் இருந்து விரைந்து வந்தோம்! பாரிலே எப்போ உங்கள் உருவினைப் பார்க்கப் போறோம்;?
உங்கள் பிரிவால் நாங்கள், குடம் இல்லாக் கும்பங்களாய், குலைந்த கோலங்களாய்; வடமில்லா தேர்களாக, வாசலில் நிற்கின்றோம்; வந்து விடை கூறிடம்மா!
அம்பிகையே! ஆரணியே எங்கள் பாலாம்பிகைத் தாயே!
நீங்கள், நாகம்பிகை தாயின் பாதத்தில் நற்கதி அடைந்து "தாடலை” போல் கூடி தன்னிகரா தனித்துவத்தைப் பெற்று தரணியில் என்றும் எம் வாழ்விற்கும் தந்திடுங்கள் உங்கள் ஆசீர்வாதத்தை.
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவிழரீ நாகபூஷணி அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.
ஆறாத்துயரில் பிள்ளைகள்.

Page 10
பாசமிகு அம்மா
காலமெலாம் எம்மைக்காத்து கனிவுடனே மழலை மொழி பேசி கற்க கசடறக்கற்க வழிகள் பல தந்து, நிற்க அதற்கு தக என வேண்டி நின்றீர் அம்மா, எம்மைவிட்டு எங்கு சென்றீர் பிறப்புக்கு இறப்பு மறுபக்கம் எனினும் எதிர்பாரா வேளையில் எம்மையெல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு சென்ற அவசரம் ஏனம்மா? நீங்கள் இல்லையே என்ற குறைதான் ஒன்று இன்று எமக்கு அம்மா, எம்மக்கள் மத்தியில் மதிப்புடன் வாழ வைத்திட்ட அன்னையே உங்கள் நெஞ்சமதில் எம் நினைவே சுமந்து நின்றீர் கடைசிவரை எங்களுக்காய் கலக்கமுற்ற தெய்வமே எம்மைவிட்டு எங்கு சென்றீர்? பிள்ளைகளே என்னரிய பேறான செல்வங்களென பேணி வளர்த்தெம்மை பெருமையுற வைத்தீர்கள்! எங்கள் அரவணைப்பில் இருக்கின்ற வேளை வர ஏனம்மா எமைவிட்டு இக்கெதியில் சென்றீர்கள்? மாமி உயர் மாமியென தனிப்பற்று வைத்திருந்த உங்கள் மருகரிங்கு உளம் நொந்து வாடுகிறார் இனியுங்கள் அன்புருவை எங்கே அவர் காணவென - லண்டன் தனில் ஏங்கும் மகன் சிவத்தை நாம் தேற்றுவது எவ்வாறோ..? மழலைக்குரலெடுத்து மகிழ்ச்சியுடன் அப்பம்மா எனச் சொல்லி மகிழ்ந்த பேரக் குழந்தைகளும் எங்கள் முகம் பார்த்து ஏங்கி நிற்கும் காட்சிதனை என்னென்று நாம் விளக்க முடியாது தவிக்கின்றோம். அம்மா சகோதரர்கள் அண்டியோர் வேதனையில் பங்கெடுத்து பரிதவிக்கின்றோம் நாமிங்கே.
உங்கள் பிரிவால் துயருறும் அன்புக் கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
10

வாழ்க்கை வரலாறு
-----------
ஏழ்கடற் பரப்பில் எழிலுற உலகெலாம் ஆழ்பவள் நாக பூஷணி 9to60)LD நாள்பொழு தெல்லாம் g|ഖ് பசிப்பிணி சூழ்வரு பிறவிப் பிணியெலாம் தீர்ப்பவள் அன்னவள் எழிலூர் நயினையம் பதியில் முன்னைப் uuj60TT6) காவற் 9-660)6T 666ਹੀਂ ஏத்திய சுப்பை யாவும் தண்ணனி இராமா சியெனும் துணையும் செய்த பெருந்தவம் uuj60TT வந்து உய்த UT6)ITD பிகையெனும் நல்லாள் அவ்வூர் முத்தர் கந்தர் மகனாம் செவ்விய 960T ரெத்தினச் சீரோன் கைப்பிடித் தன்பும் அறமும் பெருக ஒப்புடன் d-6) libg இல்வாழ் வியந்தினர் தக்கவ JTg, மக்களைப் பெற்ற மிக்க பேறும் மிகுநிதி வளமும் பக்க பலமும் பண்பும் LIT6ծT60)ւDպլb விக்கின மில்லா விளைவும் பெற்றனர் யாழ்நகர் கொழும்பு வர்த்தகப் பேறும் சூழ்நல் |5ււյմ) சுற்றமும் உற்றனர் 6Tsosort to இல்லத் தலைவியின் சிறப்பே அல்லா தொன்று ஆகுதல் ஆகுமோ! வல்லான் வகுத்த வழியே சென்று நல்லார் எனவே நாளும் வாழ்ந்தனர்
மக்கள் சிறப்பு ஆறு முகமாய் ஆண்களைப் பெற்று தேறு தலுக்கோர் பெண்ணையும் தந்தனர் கேசவ п60ff] சித்தா னந்தன் நேச (p60)Lu uJLDT னந்தன் தேவா நந்தன் சர்வா னந்தன் ஒவா தோர்தயா னந்தன், கிருபா "6T6 மக்களாய் மூவா மருந்தாய்” சேவா சேவையிற் திகழ: இலண்டன்
6TLT கொழும்பு யாழ்நகர்த் திசையெலாம் D6OTLD Tui நயினையின் மகத்துவம் பெருக்கினர்
11

Page 11
360TLDIT தனமாய்
ஆங்கில ஓங்கிய
பாங்குறு தீங்கிலா
பீடுறு நீடுறு பேருறு சீருறு ஒருற நேருற
பதினாறும்
பதினாறாய்
இராதிகா
ஏதிலாத்
வாதிலாத்
தீதிலா
மைத்துனர்
வைத்துன பார்வதி
சீர்பெறு
ബഖങ്ങjub அன்பால் இதனையே தானாய்ப்
மருமக்கள் மானன்பு ஆசான் சிவாநந் வாசுகி ஜெயசீறீ நளாயினி ரஜனி மருகர் மருகிய
sa Loir 'plair T6) சுந்தரப் சுந்தர மூர்த்தி பொன்னம் USutDrto usitof அன்ன 6TUL68T பிறந்து நிம்மதி கண்டு
EL SñTDGT56ñ பெற்றுப் பெருவாழ்வு பாங்கில் பேரரும் பெற்ற பெருமாட்டி பற்றியே மனிதினிற் ராஜீவ் தர்மிகா சோபியா சுகன்னியா துஸ்சியா மிராஜ் துளசியா grésuurt தனுஜா விஸ்ணுஷா வளர்வுறத் தளர்விலா அன்பினில் திழைத்து திருப்தியில் திருப்தியாய்
യോളങ്ങ്, ജാള്ളങ്ങ്
குழந்தைவேலு மற்றுள மருவிடு சங்கரப் பொன்னம்பல வளமும் விசாலாட்சி பரவிடு u60TLST நாக விசாலாட்சி சிவகாமி திருவுற வாழ்ந்தனர்
12
இனைத்தனர்
போற்றினர்
தருடன் வாசுகி
முகுந்தினியை)
ராக்கினன்
பெரியோனும் நிறையோனும் ஆசானும் பூரணியும் ஒன்றாய் நிறைந்தனர்.
6JT95gs பேத்தியர் 5 floooot பதிப்பமே ஆதன் சுலகஷனா சுரேன் மகேன் துர்க்கா நிலையில் மனம்நிறை வாழ்ந்தனன்.
தங்கேஸ்வரன் பிள்ளையுடன் மைத்துணியர் நாகமுத்து ரெத்தினமும் தையலமமை சிறப்பாய்.

துணைவரின் துடிப்பு
இல்லாளாய் எல்லாமே எப்போதும் எந்தனுக்காய் பல்லாண்டு தொண்டாற்றிப் பணிசெய்தாய் - நல்லானே!
"பொற்தாலி யோடெல்லாம் போமென்றார்” என்செய்வேன்! நற்கதியே நாகம்மாள் தான்
பிள்ளைகள் பெருந்தவிப்பு
கருவுற்ற நாள்முதலாய் அம்மாஉன் கருத்தெல்லாம் உருகிற்று எங்கள் உயர்விற்காய் - ஒரு சற்றும் ஒன்றுமே சொல்லாமல் ஓடி ஒளித்தனையே
என்றுநாம் காண்போம் இனி
BUT BLI SUGDTL IIIb தாயும் தந்தையும் போலெமைப் பார்த்துத்
தயவும் பரிவும் காட்டினை பாட்டி: நோயும் மெலிவும் போக்கி எம்முடல்
நுகரும் U6šOTL (půb தந்தனை 26عIL-وا; நேயம் மிக்கதாய்க் கதைகளும் சொல்லி
நித்தம் மயக்குவை தொட்டிலை ஆட்டி, LonTulub செய்துவிட் டெங்குநீ சென்றாய்
மனது வெதும்புதே எங்களை வாட்டி
ാട് ടീഗ് ബീച്ച് வேற்றுமை ஒன்றறியோம் விகர்ப்பமும் நாமறியோம்
ஏற்றமாய் எம்மையெலாம் எப்போதும் sigj60)LDurru(i) போற்றி ஊக்குவித்த பெருந்தகையே மாமியாரே! வீற்றி ருந்தவீடு வெறிச்சோடிக் கிடக்கிறதே!
உடன் பிறப்புக்கள் உளச்சோர்வு உற்றவிடத்து உதவி எமையெல்லாம் உள்ளன்பால் பெற்றதாய் போலப் பேணிவந்தாய் சோதரியே! சற்றும் நாம் எதிர்பா ராவிதத்தில் எம்மிலிருந்த
பற்றற்றுப் பாலாம் பிகையேநீ போனதென்ன!
BöjjDLb
நாம்பெற்ற வாழ்வும் நற்பெண்டிர் பிள்ளைகளும்
ஆம் பற்றும் எல்லாமே; அம்பாள் அடியிணக்கே
போம்பற்று வந்தால் போய்விடுமே! தேம்பி நிதம்
கூம்பிநீர் வாடாமல் குவித்துக்கை கும்பிடுங்கள்.
13

Page 12
பவளமால் வரையில் நிலவெறிப்பது போல்
பரந்த நீற்றழகு பச்சுடம்பில் திவள மாதுடன் நின்றாடிய பரமன்
சிறுவனைப் பாரதப் பெரும்போர் தவளமா மருப்பொன் றொடித்தொரு
கரத்தில் தரித்துயர் கிரிப்புறத்தெழுதும் கவளமா களிற்றின் திருமுகம் படைத்த
கடவுளை நினைந்து கைதொழுவாம்.
தத்துவ நிலையைத் தந்தெனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே!
அம்பிகை துதி
பரந்தெழுந்த சமண்முதலாம்
பரசமய இருள் நீங்கச் சிரந்தழுவு சைவ நெறித்
திருநீற்றின் ஒளி விளங்க அரந்தை கெடப் புகலியர்கோன்
அமுது செயத் திருமுலைப்பால் சுரந்தளித்த சிவகாம
சுந்தரிபூங்கழல் போற்றி!
அன்பர் என்பவர்க்கே நல்லன வெல்லாம் தரும் அபிராமி கடைக் கண்களே!
4
 

சிவன் துதி
கற்பனை கடந்தசோதி
கருணையே உருவமாகி அற்புதக் கோலம் நீடி
அருமறை சிரத்தின் மேலாம் சிற்பரவியோகமாகும் திருச்
சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற
பூங்கழல் போற்றி போற்றி!
குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போல கசிந்துருக வேண்டுவனே.
முருகன் துதி
மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொழி கருணை போற்றி ஏவருந் துதிக்க நின்ற
ஈராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள்
மலரடி போற்றி யன்னான் சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி!
வித்தகா ஞானசத்தினி பாதா வெற்றி வேலாயுதப் பெருமாளே.

Page 13
திருமுறைப் பாடல்கள்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் பாடல்கள்
திருவுங் கல்வியுஞ் சீரும் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவ மாய்நமதுள்ளம் பழுக்கவும் பெருகு மாழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமதம் ஐந்துகரம் மூன்று விழிநால்வாய் யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்போம்.
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளியவை
தோடுடையசெவியன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடையசுட லைப்பொடியூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட் பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
வேதமோதி வெண்ணுரல் பூண்டு வெள்ளையெரு தேறி பூதஞ்சூழப் பொழியவருவார் புலியி னுரிதோலார் நாதாவெனவு நக்காவெனவு நம்பாவென நின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.
பூவார்மலர் கொண்டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் மூவார்புரங்களெரித்த வன்று மூவர்க்கருள் செய்தார் தூமாமழை நின்றதிர வெருவித் தொறுவின் னிரையோடு மாமாம்பிணை வந்தனையுஞ் சாரலண்ணா மலையாரே.
16

காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி யோதுவார் தமைநன்னெறிக் குய்ப்பது வேதநான் கினுமெய்ப்பொருளாவது நாதனாம நமச்சிவாயவே.
கண்காட்டுநுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டு முருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டு மிசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டி லுறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
உண்ணாமுலை யுமையாளொடு முடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான் மலைதிருமா மணிதிகழ மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணமறுமே.
நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளே றொன்றுடையானை யுமையொரு பாகமுடை யானைச் சென்றடையாத திருவுடை யானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறவென் னுள்ளங் குளிரும்மே.
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநாயகனால்
வேதமும் பொருள்களு மருளி அங்கயர்க் கண்ணி தன்னொடு மமர்ந்த
ஆலவா யாவது மிதுவே.
வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆள்க தீயதெல்லாமரனாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே.
கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார்வாழ் தில்லைச் சிற்றம் பலமேய முற்றாவெண் டிங்கண் முதல்வன் பாதமே பற்றாநின்றாரைப் பற்றா பாவமே.
17

Page 14
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியவை
கூற்றாயினவா றுவிலக் ககலீர்
கொடுமை பலசெய்தனநானறியேன் ஏற்றா யடிக்கே யிரவும் பகலும்
பிரியா துவணங்குவனெப் பொழுதும் தோற்றா தென்வயிற்றினகம் படியே குடரோடுதுடக் கிமுடக்கியிட ஆற்றே னடியே னதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே.
மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்பாடி போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடுபடா மலையா றடைகின்ற போது காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.
பக்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி யெத்தனாற் பக்திசெய்கே னென்னைநீ யிகழவேண்டா முத்தனே முதல்வா தில்லையம்பலத் தாடுகின்ற வத்தாவுன் னடல்காண் பாண்டியனேன் வந்தவாறே.
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை யென்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே.
பனைக்கை மும்முத வேழ முரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமா மம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழுதும்மறந் துய்வனே.
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை அப்போது மலர்தூவி ஐம்புலனு மகத்தடக்கி எப்போது மினியானை யென்மனத்தே வைத்தேனே.
குனித்தபுருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் பனித்தசடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.
18

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி யென்மனத்தே வழுவா திருக்கவரந் தரவேண்டும்மிவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கியிருந்தருள்செய் பாதிரிப்புலியூர்ச் செழுநீர்ப்புனற் கங்கை செஞ்சடை மேல்வைத்ததீவண்ணனே.
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்கடன் னடியேனையுந் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே.
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியவை
பித்தாபிறைசூடி பெருமானே யருளாளா வெத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி அல்லே னெனலாமே.
பொன்னார் மேனியனே புலித்தோலை யரைக்கசைத்து மின்னார்செஞ்சடைமேல் மிளிர்கொன்றையணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுண் மாணிக்கமே அன்னேயுன் னையல்லா லினியாரை நினைக்கேனே.
மற்றுப்பற் றெனக்கின்றி நின்றிருப்பாதமே மனம்பாவித்தேன் பெற்றலும் பிறந் தேனினிப் பிறவாததன்மை வந்தெய்தினேன் கற்றவர்தொழுதேத்துஞ்சீர்க் கரையூரிற் பாண்டிக்கொடுமுடி நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே.
மருவார்கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல வருவார்விடை மேல்மாதோடு மகிழ்ந்து பூதப்படைசூழத் திருமால்பிரம னிந்திரற்குந் தேவர்நாகர் தானவர்க்கும் பெருமான்கடவூர் மயானத்துப் பெரியபெருமா னடிகளே.
19

Page 15
நத்தார்படை ஞானன் பசுவேறி நனைகவிழ்வாய் மத்தம்மத யானையுரி போர்த்த மணவாளன் பத்தாகிய தொண்டர் தொழுபாலாவி யின்கரைமேற் செத்தாரெலும் பணிவான் திருக்கேதீச்சரத்தானே.
எங்கேனும் மிருந்துன்னடி யேனுனை நினைத்தால் அங்கேவந் தென்னொடு முடனாகி நின்றருளி இங்கேயென் வினையை யறுத்திட் டெனையாளுங் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட்சுட ரொப்பாய் மண்ணிடை யடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
தில்லைவாழந்தணர் தமடியார்க்கு மடியேன்
திருநீலகண் டத்துக்குயவனார்க்கடியேன் இல்லையேயென் னாதவியற்ப கைக்குமடியேன்
இளையான் றன்குடிமாற னாயனார்க்குமடியேன் வெல்லுமாமிக வல்லமெய்ப் பொருளுக்கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கடியேன் அல்லிமென்முல்லை யந்தார்.அமர் நீதிக்கடியேன்
ஆரூரனா ரூரிலம்மா னுக்காளே.
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்கா துடையானே உறவிலே னுனையன்றி மற்றடியென்
ஒருபிழை பொறுத்தா லிழிவுண்டோ சிறைவண்டார் பொழில்சூழ் திருவாரூர்ச்
செம்பொன் திருவாவடு துறையுள் அறவனே யெனையஞ்சலென்றருளாய் ஆரெனக் குறவமவரர் களேறே.
திருச்சிற்றம்பலம்
శకి
20

நயினை றி நாகபூஷணி அம்பாள் திருவூஞ்சல்
சத்திபை ரவிகெளரி அக்கணியு முக்கணி
சடாதரி சடாட்ச ரத்தி சங்கரி சுமங்கலி மதங்கியரு ளம்பிகை
சவுந்தரி சண்ட சண்டி உத்தமி பராபரை மனோன்மணி சிவானந்தி
யுமையிமைய முதவு மங்கை உலகுதவு மன்னையா மளைபொன்னினம்பலவ
ருடனிட மகிழ்ந்து மேவும் நித்தியகல் யாணிசாம் பவிபுவன கெளமாரி
நிமலமக மாயி யென்றே நெஞ்சில்நித முந்நினைவு தந்துனை வணங்கவரு
நின்னடியவர்க் கருளுவாய் நத்துலவு சுத்தமணி யெய்துநயி னாநகரில்
நாளுமுறை யாழின் மொழியே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ நாகரஸ்வரி அம்மையே.

Page 16

நயினை a
ரீ நாகபூசணியம்மை திருவூஞ்சல்
புரிழைரி ம. அமரசிங்கபுலவர்
காப்பு
சீர்பூத்த தென்னிலங்கை தன்னில் மேவும்
திரைபூத்த கடநயினை நகரில் வாழும் ஏர்பூத்த நாகேசு வரியைப் போற்றி
இசைபூத்த செந்தமிழால் ஊஞ்சல் பாட ஆர்பூத்த சடைமெளலி யரனா ரீன்ற
அருள்பூத்த லறிவிச்சை தொழிலென் றோதும் கார்பூத்த மும்மைமத களிற்றின் பாதம்
கரம்பூத்த மலர்கொண்டே கருதி வாழ்வாம். 1
பலனோங்கு செம்பவளங் கால்க ளாக பகர்வைர ரத்தினமே விட்ட மாக குலனோங்கு வெண்டரளங் கயிற தாக
கூறரிய மாணிக்கம் பலகை யாக வலனோங்கு மூஞ்சன்மிசை யினிது வைகி
மலர்மகளுங் கலைமகளும் வடந்தொட் டாட்ட நலநோங்கு திருநயினை நகரில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடிருஞ்சல். 2
உவகையொடு மலரயன் மால் கரங்கள் கூப்ப ஒசைமணி வாயிலிட்ட பாலர் காப்ப தவமறையோர் தூயமொடு தீபங் காட்ட
தாழ்ந்துகண நாதர்புகழ் மாலை சூட்ட அவரிடப துவசமகள் வானந் தூர்ப்ப
அனந்தன்முதலுர கர்செய செயவென் றார்ப்ப நவையறுசீர் நயினைநகர் தன்னில் வாழும்
நாகபுர மேஸ்வரியே யாடீரூஞ்சல். 3
21

Page 17
கொம்பினொடு துடிமுரசு முழவ மோங்க
குடைகளுட னாலவட்டம் குழுமி யோங்க தும்புருநா ரதர்வேதம் கீதம் பாட
தொண்டரக மகிழ்தகக வாழ்வு கூட வம்பவிழு மலர்மாரி யமர் பெய்ய
வரமுனிய ரடிபரவி யாசி செய்ய நம்புமடி யவர்க்கருளி நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடிரூஞ்சல். 4
அன்னநடை யயிராணி கவிதை தாங்க
அயிலைநிகர் விழியரம்பை ஆசி யேந்த வன்னமுலை யுருவ சிவெண் கவரி வீச
மணிகொள்கிரு தாசிகமண் டலங்கைக் கொள்ள மின்னிடமே னகைவெளிலை பாகு நல்க
வியந்திலோத் தகை விசித நடனஞ் செய நன்னயஞ்சேர் நயினை நகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடிருஞ்சல். 5
மதிமுகமா லினிபனிபனிநீர் வாசந் தூவ
மயிலைநிகர் சுகேசமலரடிக ணிவ விதிமுறைமங் கலைமுதலோ ராலஞ் சாற்ற வேதியர்தம் மகளிர்சுப வசனஞ் சாற்ற அதிவினைய மொடுசுமனை யாடி காட்ட
அன்பினநிந் திதைககந்த வருக்க நீட்ட நிதியுலவு நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 6
கோலமுறு வைரமணிச் சுட்டி யாட
குலவுமெழின் மாணிக்கத் தோடு மாட வாலியமுத் தாரமொடு மாதணி யாட
வயங்குவளை தொடியுடனங் கதமுமாட சாலவொளிர் பாடகமுஞ் சிலம்புமாட
தண்டையோடு பாதசரந் தயங்கி யாட ஞாலமுக மெனவிளங்கு நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 7
முந்துதவ மாதர்துதி கூறி யாட
முகமனொடு புனன்மாதர் முன்னின் றாட
வந்தளையோ ருரகமட மாதராட
வரையிலுறை மாதரடி வணங்கி யாட
கந்தருவ மாதரிசை பாடி யாட
கருதரிய புவிமாதர் களிகொண் டாட
22

நந்துதவழ் கழனிசெறி நயினை வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 8
ஆரணியே யம்பிகையே யாடீ ரூஞ்சல்
அந்தரியே செளந்தரியே யாடீ ரூஞ்சல் பூரணியே புங்கவியே யாடீ ரூஞ்சல்
புராதனியே புரந்தகியே யாடீ ரூஞ்சல் காரணியே காருணியே யாடீ ரூஞ்சல்
கன்னிகையே கண்மணியே யாடீ ரூஞ்சல் நாரணியே நாயகியே யாடீ ரூஞ்சல்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 9
பனிவரையில் வருமுமையே பரையே போற்றி
பகருமற மெண்ணான்கும் வளர்த்தாய் போற்றி தனிமுதலாம் பரமன்டத் தவளே போற்றி
தணப்பில் பல சத்திவடி வானாய் போற்றி இனிமைமிகு மாரமுதே கனியே போற்றி
எவ்வுயிர்க்குத் தாயாகி இருந்தாய் போற்றி தனிகுலவு நயினைநகர் தன்னில் வாழும்
நாகபர மேஸ்வரியே யாடீ ரூஞ்சல். 10
ஆவாழி யந்தனரோ டரசர் வாழி
அரியதவ மகநிகமா கமமும் வாழி தாவில்குல மங்கையர்கள் கற்பும் வாழி
சைவசமய மும்மறமும் தழைத்து வாழி பாவார்வெண் ணிறுபஞ்சாட்சரமும் வாழி
பாடியவுஞ் சற்றமிழும் பாரில் வாழி நாவலர்கள் புகழ்நயினை நகரும் வாழி
நாகபர மேஸ்வரியும் வாழி வாழி. 11
இக்காலத்தில் பாடப்பகம் பாடல்
சீர்வாழி சிவசமயம் வாழி
தேவாதி தேவுமெல்லாத் தேவும் வாழி பார்வழி மதிதொறுமும் மாரி வாழி
பசுக்குலம் வேதியர் தருமம் பலவும் வாழி நீர்வாழி நயினை நகருறைவோர் வாழி
நீடாயுளன்ன சொர்ணம் நிறைந்து வாழி ஏர் வாழி இராமச்சந்திர மகிபன் வாழி
இனம்வாழி இவ்வூஞ்சல் வாழி மாதோ. 12
23

Page 18
நயினாதீவு நாகேஸ்வரியம்மை பதிகம்
முத்துக்குமாரும் புலவர்
சந்திரபூரணரத்ன தங்கோ டக்கிரிட
தண்ணின்ற தவழ வட்டத் தனபதியை நிகர்மன்ன ரடி தொழச்சதுரங்க
தாளைவெள் ளங்கள் சூழச் சிந்துரப் பகைமைபிடர் பீடிகையிருந்”தெண்டி
சாமுகமு மேயி றைஞ்சத் தேவேந்திர சுகமுற் றிருப்பவர்களுன்பாத
சேவைபுரி பவர்களன்றோ மந்திர காரண ரூபரூ பாதசிவ
மகமாயி புவன நேசி வாலசுந்தரி கெளரி நயினைமா நகர்க்கண் வைகியருள் செய்யு மொருதாய் நந்துறு கரன்பிரம னங்கமணி கங்களொடு
நஞ்சணி பிறங்கு களமே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே. 1.
சோடுற்ற நவரத்ன கும்பியும் மேலிட்ட
தொங்கலும் அகில ளாவிச் சொருகிட்ட கொண்டையுஞ் சுட்டியும் மலர்க்கையால்
தொட்டிட்ட சிந்தூ ரமும் தோடுற்ற கொந்தழக மரகதக் கொப்புமார் துணைவிழியி லெழுது மையும் துகளற்ற வெண்டரள முருகுநற் பவளவாய்த்
துவருமொளிர் நளின முகமும் தேடுற்ற செங்கமல பொற்பதமு மழகான
திருவு மறிவினாலே தெரிசிக்க வருடந்து நீடாயுளும் பெருஞ்
செல்வ முந்தா வேண்டுநீ நாடுற்ற பலவளமு முறையுமெழில் நயினா நகர்க்கண் மருவுங் கெளரியே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மேைய. 2
24

ஆரணத் துபநிடத வக்கரத் தொனியாகி
யாகாய வட்ட மாகி அறுகோண மிருகோண முக்கோண நாற்கோண
மாகிநிற மைந்து மாகி காரணத் துருவாகி யருவாகி யாவுமாய்க்
காக்குமுன் பெருமை யெளிதோ கருணைப்பிர வாகமா மானந்த வெள்ளங்
கசித்து றுபே ராழியே ஏரணைத் திடுமருத வேலிசூழ் நயினா வெனும்பதி சிறந்து மேவும் யாமள செளந்தர் கோமள சொரூபியே
JпGLJU (308 6Јf(3ш நராணற்கொரு சகோதரியென்ன வந்தருளும்
நாகபூசணி நாரணி நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ நாக ஈஸ்வரி அம்மையே.
சத்திபை ரவிகெளரி அக்கணியு முக்கணி
சடாதரி சடாட்ச ரத்தி சங்கரி சுமங்கலி மதங்கியரு ளம்பிகை
சவுந்தரி சண்ட சண்டி உத்தமி பராயரை மனோன்மணி சிவானந்தி
யுமையிமைய முதவு மங்கை உலகுதவு மன்னையா மளைபொன்னினம்பலவ
ருடனிட மகிழ்ந்து மேவும் நித்தியகல் யாணிசாம் பவிபுவன கெளமாரி
நிமலமக மாயி யென்றே நெஞ்சில்நித முந்நினைவு தந்துனை வணங்கவரு
நின்னடியவர்க் கருளுவாய் நத்துலவு சுத்தமணி யெய்துநயி னாநகரில் நாளுமுறை யாழின் மொழியே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாகாஸ்வரி அம்மையே. 4.
ஆகமது கூனித் தளர்ந்துரோ மம்வெளுத் தைம்புல னொடுங்கி மேலாம்
அறவழிந் தைமே லெழுந்ததீ தத்தினுயி
ரணுகுமக் காலை தனிலே
வேகவெங்கட மையிடர் நெளியவரு ஞமெணற்கு
25

Page 19
விடுகயிறு முடுகி யடுமுன் வினையேனை யஞ்சேலென் றுனதுநாயகருடன்
வெள்ளை விடைமீ தேறியே பாகமுற வந்துநின் றடிமைகொண் டெனையும்நீ
பாதுகாத் தருள வேண்டும் பைங்குலைத் தெங்கிளஞ் சோலைசெறி நயினைநகர்
பண்பு கொண்டுறை செல்வியே நாகமடர் தாருவென மேவிமுனி வோர்களுறை
நாடிவரு கோய விடமார் நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே. 5
மாற்றிற் சிறந்தபொற் குவையென்ன வளர்சாலி
வயலிற் கிடந்த நத்தம் மடையிற் றவழ்ந்தேறி மனையிற் புகுந்துழவர்
மனைமுன்றி லினு முத்தை ஆற்றிற் சிறந்திடத் தண்டுலங் களையுநீர்
அள்ளிப் புறத்தின் மேவி அருகுற்ற சோலையினு மிகுதுற்ற வாவியினு
மரவிந்த வோடைக ளினும் காற்றிற் சிறந்துலவு கால்கொண் டுலாவக்
கயற்கண்ணி வந்து மோதக் கமுகினிற் றெங்கினிற் கதலியில் வருக்கையிற்
களியு மடலுஞ் சிதறியே நாற்றிற்கு மேகமழு மதுமாரி சொரியுநயி னாநகரி னண்ணு முமையே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே. 6
வன்கய மருப்பென நிமிர்ந்தபடி பருத்திறுகி
மணிவா ரறுத்து விம்மி வட்டமிட் டெழுகும்ப முலைமுகங் காட்டியிரு
மகர விழிவலை வீசியே மின்கய மதனசாலுள் விட்டடைத் துளபெரு வெறுக்கையைப் பற்றி யேற்கும் வேசியர் தனக்கடிமை செய்விக்கு மென்னைமுன்
வினைநூறியருளு தவுவாய் பொங்கிடு நெடுந்திரைப் புணரிநாற் றிசையும்
பொருந்தநடு மேவி யுலகிற் புகழ்பெருகு நயினைமா நகரினி லிருந்துமிகு
26

புதுமதைரு புனித தாயே நன்கிய விளம்பிறையொ டொன்றைவேண் டிச்சடில
நண்பு கொண்டிடு நஞ்சுமார் நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே.
சம்புசிவ சங்கர திகம்பர நடம்புரி சமர்த்தாதி யாதி யாய தற்பர மதிச்சடில முக்குண சதுர்ப்புய
சதாசிவ சிவாசி வாய எம்பரம வென்றுபதி னெண்கணமு மிம்பரு மிறைஞ்சிவரு கணவ ருடனே இங்கித முடன்கயிலை தங்கியுறை யம்பிகையி
னின்புக Nயம்ப வெளிதோ அம்புயமடந்தைய ரம்பையர் வயர்தளவு
மரியநவ சக்தி களெலா மன்பினொடு தொண்டுசெயு முந்தனர விந்தபத
மந்தநிழல் தந்த ருளுவாய் நம்பிவரு தொண்டர்பெற மங்கல மிகுந்தநயி
னாநகரி னன்னு முமையே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ நாக ஈஸ்வரி யம்மையே.
கந்தான சொசியச் சினக்கும் கடாதடக்
கைமலை முகத்த வுணனைக் கால்கொண் டுதைத்துவன் றோலுரித் துப்போர்த்த
காத லனைமன் றாடியே முந்தாத ரத்தினொடு மிருநாழி நெற்பெற்று
முடிவிலா துயிர்க ளுய்ய முப்பத் திரண்டறந் தன்னையுத வியவன்னை
மூவுலகு நீயா கையால் சிந்தா குலங்கொண்டு திரியநான் முறையோ தினந்தி னம்சொல வேண்டுமோ திருவுள மிரங்கியே சற்றுன் கடைக்கண் திருப்பி னால்வெகு பாரமோ நந்தாத வரமுதவு நங்கையே நயினா
நகர்க்கண் மருவும் கெளரியே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ நாக ஈஸ்வரி யம்மையே.
27

Page 20
சீர்திங்கு தண்சுனை யெனச்சேர் மனத்திற்
றிளைத்துக் குழைத் தரும்பும் செஞ்சரண கஞ்சமலர் தஞ்சமெனு மென்புன்
சிரக்கஞ்ச மீதில் வைத்தே ஏர்தங்கு நல்லருட் பேறுதவி நெஞ்சத்
திடுக்கண் தவிர்த்து அஞ்சேல் என்றுமுன் நின்றெமக் கீடேற்ற முதவுவார்
யாருன்னை யின்றி யம்மா பேர்தங்கு மகிலாண்ட டுக்குமதி லுாறுபொருட்
பிரிவுஞ் சராச ரமெனும் பேருயிர்க ளுந்தந்து பாதுகாத் தருளுமுன் GLJ(b60)LDUTib UITL Q6)J6sc35/T நார்தங்கு சற்குணத் தொண்டருய வென்றுநயி
னாகரி னண்ணு முமையே நாகமணி யும்பரமர் பாகமுறு மேகசிவ
நாக ஈஸ்வரி யம்மையே. 10
迎笼°迎笼°迎笼
பூரீமத் முத்துக்குமார சுவாமிகள் பாடிய நயினை நாகேஸ்வரி தோத்திரமாலை
காப்பு ஐம்புலனோ டாணவத்தை அறமிதித்து
அன்பர்தனக் கின்பந் தந்து உம்பருல கரசியற்ரும் திருமாற்கும் வரமருளே ரம்பா வென்று வம்பலையக் கயமுகனார் சிரமரிந்து அமரர்குல வாழ்வாய் வந்த அம்பலவாணானந்த விநாயகன்தாள்
பரவிவினை யகற்றி வாழ்வாம்.
28
 

நூல் கற்பகக் கன்றைக் கடம்பனைத்
தந்த கனகவரை அற்புத மோன அருளாழி
ஞான அமிர்த வல்லி தற்பரை வாமம் தழைத்தே சரம சராதிதரு நற்பதி யேன்னைப் பெற்ற
சதானந்த நாகம்மையே.
பெற்றதாய் பார்க்கப் பிள்ளையான் வருந்திப்
பிறப்பெனும் சாகரத்தாழ நற்றவ மில்லா என்னை நீ விட்டால்
நியாயமோ நல்லுரையாகச் செற்றவக் கரையிலேறியான் உய்யத்
துணைஉனையன்றியா ருளர்சொல் கற்றவர்க் கினியாய் நயினாயம் பதிவாழ்
கண்மணி நாகபூஷணியே.
அம்பிகை அமலை அரியவர்க் கெட்டா
ஆரணி பூரணி கெளரி நம்பினோர்க் கின்பம் தருமனோன் மணியே
நற்றவரோ டுறவாக வெம்பி வாடாதுன் சேயேனைச் சேர்த்து
விடுவதுன் கடன்வினை நீக்கித் தம்பிரான் மோன சற்குரு போகம்
தந்தருள் நாகபூஷணியே.
தந்தருள் ஞான சாதனம் சத்தியம்
தவறிலா நெறிபொறை அறிவு பந்தமால் எய்யாப்பக்தி பேரன்பு பகலிரவுன் அரவிந்த அந்தமே யில்லா அடியிணை மாறா
தருள்புணர்ந் தோங்கு நற்றியான சிந்தையாய் மோன தேசிகன் திருத்தாள்
சேர்த்தருள் நாகபூசணியே.
29

Page 21
சேர்த்தருள் அன்னே தீவினை கழியச்
ஜெனனமு மரணமு மொழியக் காத்தருள் என்னை நின்கையில் தந்தேன்
கருணையே ஒளிவிழி பரப்பிப் பார்த்தருள் ஈன்ற பகவதி ஆயி
பங்கயத் தாள்முடி முடி நீந்தருள் பாவ நிலைகெட மோன நிலையருள் நாகபூசணியே.
பாவமே விளையும் பாழ்வினை ஏதும்
பற்றிடா திருக்க நின்பாலே தாகமே மறவா தோர்நிலை பக்தி
தண்ணளி வள மருள் ஞான யோகமே உதவி உலகெலா மீன்ற உத்தம ருக்குற வாகிப் பாகமே நீங்காப் பரபரா னந்த
பதமருள் நாகபூசணியே.
கற்றவர்க் கினியாய் நயினையம் பதிவாழஞ
காரணி நாரணன் தங்காய் மற்றவரிறியா மரகத வரையின்
வாமமே வளர்பசுங் கொடியே நற்றவ நிலையின் சேயெனை இருத்தி
நாதநா தாந்தமும் காட்டி முற்றுமாய் நிறைந்த பூரணா னந்த முத்திதா நாகபூஷணியே.
முத்தியாங் கரையைப் பற்றி நானுய்ய
முன்னதாய் முரணலை மோதி வற்றிடா மாய வாரிதியதனில்
மயங்கி வீழ்ந் தாழ்ந்திட வாறு சத்தியாய்ச் சிவமாய்த் தனிப்பரம் தானே தானுமாய் நின்ற தற்பதையே சித்தெலாம் வல்லாய் சேயெனைக் காத்தாள்
திருமணி நாகபூஷணியே.
காத்தெனையாளும் கனகமா வரையே
கமலையும் காயையும் மருங்கே
30

நீந்தவர் அமரர் கருடகெந் திருவத்
நின்பணி புரிபவர் அன்னே
வேர்த்தவ ராய் நின் றுயிர்த்திர ளாட்டு வினையெலாம் பற்றி நீறாகப்
பார்த்தருள் விழியைப் பரப்புதி என்ற
பார்ப்பதி நாகபூசணியே. 9
பார்ப்பதி யேக பதியரன் பங்கி
பங்கயச் சிருட்டிபல்லுயிர்க்கம் கார்ப்பதிபதியாய்க் கதிதரு கங்கா
நங்கையே கருணைமா கடலே சீர்ப்பதி யாகித் தெளிவுற ஈன்ற
சேயென உணர்த்தி ஈத்து என்றே பார்த்துள ராதாண்ட டருள்புரி ஞான
அம்பிகை நாகபூசணியே. 10
vir vir vir
நயினை வரகவி நாகமணிப்புலவர் பாடிய
நயினை மான்மியம்
சரஸ்வதி துதி
மருப்பாளை மலர்க்கமலத் துறைவாளை
வழிபடுவார் மாசு தீர்க்கும் விருப்பாளை யுடையணிமெய் வெளுப்பாளை
கொடுத்தபொருள் விட்டு நீங்கத் திருப்பாளை யெவர்கனுந்தித் திப்பாளை
நான்முகத்தோன் செய்ய நாம் திருப்பாளை யெனைக்கரை சேர்த்திடுவாளை
யென்னாளு மேத்து கிற்பாம்.
31

Page 22
தோத்திரம் உள்ளத் துணர்வார்க் குணர்வாகி
யுறைவாய் நின்சீறடிபோற்றி விள்ளற் கரிதாம் சத்திகளாய்
விரிந்தாய் நின்சீறடிபோற்றி அள்ளற் பிறவிக் கடல்கடப்பார்க்
கருள்வாய் நின்சீறடிபோற்றி எள்ளிற் றயில மெனவுலகோ
டிருந்தாள் நின்சீறடிபோற்றி.
தாயே யானா யுன் சரணந்
தமரே யானா யுன் சரணஞ் சேயே யானா யுன்சரணந்
திருவே யானா யுன்சரணங் காயே யானா யுன்சரணங்
கனிலே யானா யுள்சரணந் நாயேற் கன்று கலைமகள்போ
னயந்தோ டளித்தா யுன்சரணம்.
அன்னை பெற்றதா லன்னை பெறுமுயிரனைத்தும் பேணலா லன்னை பெற்றிடவோ ருற்றதா லன்னை விரும்பிய வனைத்து
முதவலா லன்னை யெக்கலையுஞ் சொற்றதா லன்னை யுலகொடு வானுந்
தொழுதா லன்னை யென்றென்றும் பற்றதாங் கருணை பொழிதலா லன்னை
பராயரை நாக பூஷணியால்,
கூறுவது அறம்
செல்வமு நில்லா தாளுந்
தேயமு நில்லா வீண்டும் பல்வள நில்லார் மைந்தர்
பாரியர் நில்லார் கற்க வில்வல நில்லா தாக்கை
வீழ்மர மென்னக் காற்றுக் கொல்வது செயுங்கா னின்று கூடுவதறமே யன்றோ.
32

நாகபூசணியம்மை தோத்திரம்
(நயினை க. இராமச்சந்திரா)
எனக்கொன்றோர் தனிவரம் யான் கேட்கவில்லை.
என்இனத்தார் வாழ்வொன்றே கருதவில்லை உனக்கெல்வா உயிர்களுமே சொந்த மென்ற
உண்மையையான் ஒருபோதும் மறந்ததில்லை சினங்கொண்டு தீங்கிழைக்குந் தீயர் தாமும்
சீலமுற வேண்டுமென்றே வேண்டுகிறேன் தன்கொருவ ரொப்பில்லாத் தாயே! இந்தத்
தாரணியில் சாந்தியையே தருவாய் நீயே!
முந்நாளில் முருகனுக்குச் சக்தி யீந்தாய்
முனிவரர்க்குந் தேவர்கட்கும் முதன்மை யீந்தாய் பிந்நாளில் சங்கரர்க்கும் பெருமை யீந்தாய்
பேரின்பக் காதல் வளம் பெருக வைத்தாய் இந்நாளில் இராமகிருஷ்ணர் ரமணர்போன்ற
இணையற்ற ஞானியரை உலகுக் கீந்தாய் இந்ாட்டைச் சொந்த மென்றும் இருஇனத்தார்
இணங்கி வாழ்ந்திடச் செய்தல் அரிதோ அன்றாய்?
அருளுவாய் அனைத்துயிர்க்கும் அன்னையாகி
ஐந்தொழில்கள் புரிஆதி சக்தியேநின் கருணையின்றி கணக்கில்லாக் கஷ்டமுற்றக் கதறிநிற்கும் உயிர்களுளத்தின்றுசூழந்த இருளகல வழியேதும் இல்லையென்ற
ஈடற்ற உறுதியுடன் இந்த ஏழை உருகி நின்றுள் சந்தியில் கேட்டயாவும்
உவந்தளிப்பதுன் கடனாம் ஒப்பில்தாயே.
ല്ല

Page 23
காப்பு
தாரமர் கொன்றையுஞ் சண்பக மாலையுஞ் சாத்துந்தில்லை யூரர்தம் பாகத் துமமைந்த னேயுல கேழும்பெற்ற சீரபி ராமியந் தாதியெப் போதுமென் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே.
SISO
உதிக்கின்ற செங்கதிருச்சித் திலக முணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்க மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனியபிராமி யென்றன் விழுத்துணையே.
துணையுந் தொழுந்தெய்வ மும்பெற்ற தாயுஞ் சுருதிகளின் பணையுங் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கணையுங் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமுங்கையி லணையுந் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே.
அறிந்தே னெவருமறியா மறையை யறிந்துகொண்டு செறிந்தே னுனது திருவடிக் கேதிரு வேவெருவிப் பிறிந்தேனின் னன்பர் பெருமை யெண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.
மனிதருந் தேவரு மாயா முனிவரும் வந்துசென்னி குனிதருஞ் சேவடிக் கோமள மேகொன்றை வார்சடைமேற் பனிதருந் திங்களும் பாம்பும் பகீரதி யும்படைத்த புனிதரு நீயுமென் புந்தியெந் நாளும் பொருந்துகவே.
34
 

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோ னருந்திய நஞ்சமு தாக்கிய வம்பிகை யம்புயமேற் றிருந்திய சுந்தரி யந்தரி பாதமென் சென்னியதே.
சென்னிய துன்பொற் றிருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னிய துன்றிரு மந்திரஞ் சிந்துர வண்ணப்பெண்ணே முன்னிய நின்னடி யாருடன் கூடி முறைமுறையே பன்னிய தென்றுமுன் றன்பரமாகம பத்ததியே.
ததியுறு மத்திற் சுழலுமென் னாவி தளர்விலதோர் கதியுறு வண்ணங் கருதுகண் டாய்கமலாலயனு மதியுறு வேணி மகிழ்நனு மாலும் வணங்கியென்றுந் துதியுறு சேவடி யாய்சிந்து ரானன சுந்தரியே.
சுந்தரி யெந்தை துணைவியென் பாசத் தொடரையெல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாண்மகி டன்றலைமே லந்தரி நீலி யழியாத கன்னிகை யாரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள்மலர்த் தாளென் கருத்தனவே.
கருத்தன வெந்தைதன் கண்ணன வண்ணக் கணகவெற்பிற் பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர் திருத்தன பாரமுஞ் செங்கைச் சிலையுமம்பும் முருத்தன மூரலு நீயுமம் மேவந்தென் முன்னிற்கவே.
நின்று மிருந்துங் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை யென்றும் வணங்குவ துன்மலர்த் தாளெழு தாமறையி னொன்று மரும்பொருளேயருளேயுமையே யிமயத் தன்றும் பிறந்தவளேயழி யாமுத்தி யானந்தமே.
ஆனந்த மாயென் னறிவாய் நிறைந்த வமுதமுமாய் வானந்த மான வடிவுடை யாள்மறை நான்கினுக்குந் தானந்த மான சரணார விந்தந் தவளநிறக் கானந்த மாடரங் காமெம்பி ரான்முடிக் கண்ணியதே.
கண்ணிய துன்புகழ் கற்றதுன் னாமங் கசிந்துபத்தி பண்ணிய துன்னிரு பாதாம் புயத்திற் பகலிரவா நண்ணிய துன்னை நயந்தோ ரவையத்து நான்முன்செய்த புண்ணிய மேதென்னம் மேபுவி யேழையும் பூத்தவளே.
35

Page 24
பூத்தவ ளேபுவண்ம்பதினான்கையும் பூத்தவண்ணங் காத்தவ ளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு மூத்தவளேயென்று மூவா முகுந்தற் கிளையவளே மாத்தவ ளேயுன்னை யன்றிமற்றோர்தெய்வம் வந்திப்பதே. 13
வந்திப் பவருன்னை வானவர் தானவரானவர்கள் சிந்திப் பவர்நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப் பவரழி யாப்பர மானந்தர் பாரிலுன்னைச் சந்திப் பவர்க்கெளி தாமெம்பி ராட்டிநின் றண்ணளியே. 14
தண்ணளிக் கென்றுமுன்னேபல கோடி தவங்கள் செய்தார் மண்ணளிக் குஞ்செல்வ மோபெறு வார்மதி வானவர்தம் விண்ணளிக் குஞ்செல்வமுமழி யாமுத்தி வீடுமன்றோ பண்ணளிக் குஞ்சொற் பரிபள யாமளைப் பைங்கிளியே. 15
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரு மொளியே யொளிரு மொளிக்கிடமே யெண்ணி லொன்றுமில்லா வெளியே வெளிமுதற் பூதங்க ளாகி விரிந்தவம்மே யளியே னறிவள விற்கள வான யதிசயமே. 16
அதிசயமான வடிவுடை யாளர விந்தமெல்லாந் துதிசய வானன சுந்தர வல்லி துணையிரதி பதிசயமான தபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசயமாகவன் றோவாம பாகத்தை வவ்வியதே. 17
வவ்விய பாகத் திறைவரு நீயு மகிழ்ந்திருக்குஞ் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமுஞ் சிந்தையுள்ளே யவ்வியந் தீர்த்தென்னை யாண்டபொற் பாதமுமாகிவந்து வெவ்விய காலனென் மேல்வரும் போது வெளிநிற்கவே. 18
வெளிநின்ற நின்றிரு மேனியைப் பார்த்தேன் விழியுநெஞ்சுங் களிறின்ற வெள்ளங் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானந் திகழ்கின்ற தென்ன திருவுளமோ வெளிநின்ற கோணங்க ளொன்பது மேவி யுறைபவளே. 19
உறைகின்ற நின்றிருக் கோயிலின் கேள்வ ரொருபக்கமோ வறைகின்ற நான்மறை யின்னடி யோமுடி யோவமுதம் நிறைகின்ற வெண்டிங்க ளோகஞ் சகமோவென்ற னெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோபூரணாசல மங்கலையே. 20
36

மங்கலை செங்கல சம்முலையாள்மலையாள்வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயிற் றாவுகங்கை பொங்கலை தங்கும் புரிசடை யோன்புடையாளுடையாள் பிங்கலை நீலிசெய்யாள்வெளி யாள்பசும் பெண்கொடியே. 21
கொடியே யிளவஞ்சிக் கொம்பே யெனக்குவம் பேபழுத்த படியே மறையின் பரிமள மேபனி மாலியப் பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்றவம்மே யடியே னிறந்திங் கினிப்பிற வாமல்வந் தாண்டுகொள்ளே. 22
கொள்ளேன் மனத்தினின் கோலமல்லாதன்பர் கூட்டந்தன்னை விள்ளேன் பரசமயம்விரும் பேன்வியன் மூவிலகுக் குள்ளே னைத்தினுக்கும்புறம் பேயுள்ளத் தேவிளைந்த கள்ளே களிக்குங்களியே யளியவென் கண்மணியே. 23
மணியே மணியி னொளியே யொளிரு மணிபுனைந்த வணியே யணியு மணிக்கழ கேயணு காதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே யமரர் பெருவிருந்தே பணியே னொருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே. 24
பின்னே திரிந்துன் னடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கண் முயன்றுகொண்டேன்முதன் மூவருக்கு மன்னே யுலகுக் கபிராமி யென்னு மருமருந்தே யென்னே யினிபுன்னை யான்மற வாமனின் றேத்துவனே. 25
ஏத்து மடியவ ரீரே ழுலகினை யும்படைத்துங் காத்து மழித்துந் திரிபவராங்கமழ் பூங்கடம்பு சாத்துங் குழலணங் கேமண நாறுநின்றாளிணைக்கென் னாத்தங்கு புன்மொழி யேறிய வாறு நகையுடைத்தே. 26
உடைத்தனை வஞ்சப் பிறவியை யுள்ள முருகுமன்பு படைத்தனை பத்ம பதயுகஞ் சூடும் பணியெனக்கே யடைத்தனை நெஞ்சத் தழுக்கையெல் லாநின் னருட்புனலாற் றுடைத்தனை சுந்தரி நின்னருளேதென்று சொல்லுவதே. 27
சொல்லும் பொருளு மெனநட மாடுந் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தா ளல்லும் பகலுந் தொழுமவர்க் கேயழி யாவரசுஞ் செல்லுந் தவநெறியுஞ்சிவ லோகமுஞ் சித்திக்குமே. 28
37

Page 25
சித்தியுஞ் சித்தி தருந்தெய்வமாகித் திகழும்பரா சத்தியுஞ் சத்தி தழைக்குஞ் சிவமுந் தவமுயல்வார் முத்தியு முத்திக்கு வித்தும்வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே. 29
அன்றே தடுத்தென்னை யாண்டுகொண்டாய் கொண்டதல்லவென்கை நன்றே யுனக்கினி நானென் செயினு நடுக்கடலுட் சென்றே விழினுங் கரையேற்றுகைநின்றிருவுளமே யொன்றே பலவுரு வேயரு வேயென் னுமையவளே. 30
உமையு முமையொரு பாகரு மேக வுருவில்வந்திங் கெமையுந் தமக்கன்பு செய்யவைத் தாரினியெண்ணுதற்குச் சமையங்களுமில்லை யீன்றெடுப் பாளொரு தாயுமில்லை யமையு மமையுறு தோளியர் மேல்வைத்த வாசையுமே. 3.
ஆசைக் கடலி லகப்பட்டருளற்ற வந்தகன்கைப் பாசத்திலல்லபற் படவிருந் தேனைநின் பாதமென்னும் வாசக் கமலந் தலைமேல் வலியவைத் தாண்டுகொண்ட நேசத்தை யென்சொல்லு வேனிசர் பாகத்து நேரிழையே. 32
இழைக்கும் வினைவழியேயடுங் கால னெனைநடுங்க அழைக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாயத்தர் சித்தமெல்லாங் குழைக்குங் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே யுழைக்கும் பொழுதுன்னை யேயன்னை யேயென்பனோடிவந்தே. 33
வந்தே சரணம் புகுமடி யாருக்கு வானுலகந் தந்தே பரிவொடு தான்போ யிருக்குஞ் சதுர்முகமும் பைந்தே னலங்கற் பருமனி யாகமும் பாகமும்பொற் செந்தேன் மலரு மலர்கதிர் ஞாயிறுந் திங்களுமே. 34
திங்கட் பகவின் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க வெங்கட் கொருதவ மெய்திய வாவெண் ணிறத்தவிண்ணோர் தங்கட்கு மிந்தத் தவமெய்து மோதரங்கக்கடலுள் வெங்கட் பணியணை மேற்றுயில் கூரும் விழுப்பொருளே. 35 பொருளே பொருண்முடிக் கும்போக மேயரும் போகஞ்செய்யு மருளே மருளில் வருந்தெருளேயென் மனத்துவஞ்சத்
திருளேது மின்றி யொளிவெளியாகியிருக்குமுன்ற னருளே தறிகின்றி லேனம்பு யாதனத் தம்பிகையே. 36
38

கைக்கே யணிவது கன்னலும் பூவுங் கமலமன்ன மெய்க்கே யணிவது வெண்முத்து மாலை விடவரவின் பைக்கே யணிவது பன்மணிக் கோவையும் பட்டுமெட்டுத் திக்கே யணியுந் திருவுடை யானிடஞ் சேர்பவளே. 37
பவளக் கொடியிற் பழுத்தசெவ் வாயும் பணிமுறுவற் றவளத் திருநகை யுந்துணை யாவெங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்குந் துணைமுலையா ளவளைப் பணிமின்கண் டீரம ராவதி யாளுகைக்கே. 38
ஆளுகைக் குன்ற னடித்தா மரைகளுண் டந்தகன்பால் மீளுகைக் குன்றன் விழியின் கடையுண்டு மேலிவற்றின் மூளுகைக் கென்குறை நின்குறையேயன்று முப்புரங்கள் மாளுகைக் கம்பு தொடுத்தவில் லான்பங்கில் வாணுதலே. 39
வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற் கெண்ணிய வெம்பெரு மாட்டியைப் பேதைநெஞ்சிற் காணுதற் கண்ணிய ளல்லாத கன்னியைக் காணுமன்பு பூணுதற் கெண்ணிய வெண்ணமன் றோமுன்செய் புண்ணியமே. 40
புண்ணியஞ் செய்தன மேமன மேபுதுப் பூங்குவளைக் கண்ணியுஞ் செய்ய கணவருங் கூடிநங் காரணத்தா னண்ணியிங் கேவந்து தம்மடி யார்கணடுவிருக்கப் பண்ணிநஞ் சென்னியின் மேற்பத்ம பாதம் பதித்திடவே. 41
இடங்கொண்டு விம்மி யிணைகொண்டிறுகி யிளகிமுத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண் டிறைவர் வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்வரவின் படங்கொண்ட வல்குற் பனிமொழி வேதப் பரிபுரையே. 42
பரிபுரச் சீறடிப் பாசாங் குசைபஞ்ச பாணியின்சொற் றிரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சிற் புரிபுர வஞ்சரை யஞ்சக் குனிபொருப்புச்சிலைக்கை யெரிபுரை மேனியிறைவர்செம் பாகத் திருந்தவளே. 43
தவளே யிவளெங்கள் சங்கரனார்மனை மங்கலமா மவளே யவர்தமக் கன்னையுமாயின ளாகையினா லிவளே கடவுளர் யாவர்க்கு மேலை யிறைவியுமாந் துவளேனரினியொரு தெய்வமுண் டாகமெய்த் தொண்டுசெய்தே. 44
39

Page 26
தொண்டுசெய்யாதுநின் பாதந் தொழாது துணிந்திச்சையே பண்டுசெய்தாருள ரோவில ரோவப் பரிசடியேன் கண்டுசெய்தாலது கைதவ மோவன்றிச் செய்தவமோ மிண்டுசெய்தாலும் பொறுக்கைநன்றேபின் வெறுக்கையன்றே. 45
வெறுக்குந் தகைமைகள் செய்யினுந் தம்மடி யாரைமிக்கோர் பொறுக்குந் தகைமை புதியதன் றேபது நஞ்சையுண்டு கறுக்குந் திருமிடற் றாணிடப் பாகங் கலந்தபொன்னே மறுக்குந் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே. 46
வாழும் படியொன்று கண்டுகொண்டேன்மனத் தேயொருவர் வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநில மேழும் பருவரை யெட்டுமெட் டாம லிரவுபகற் சூழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47
சுடருங் கலைமதி துன்றுஞ் சடைமுடிக் குன்றிலொன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சி லிடருந் தவிர்த்திமைப் போதிருப் பார் பின்னு மெய்துவரோ குடருங் கொழுவுங் குருதியுந் தோயுங் குரம்பையிலே. 48
குரம்பை யடுத்துத் குடிபுக்க வாவிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை யடுத்து மறுகுமப் போது வளைக்கையமைத் தரம்பை யடுத்த வரிவையர் சூழவந் தஞ்சலென்பாய் நரம்பை யடுத்த விசைவடி வாய்நின்ற நாயகியே. 49
நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச சாயகி சாம்பவி சங்பரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென் றாயகி யாதி யுடையாள் சரண மரணமக்கே. 50
அரணம் பொருளென் றருளொன் றிலாத வசுரர்தங்கண் முரணன் றழிய முனிந்தபெம் மானு முகுந்தனுமே சரணஞ் சரண மெனநின்ற நாயகி தன்னடியார் மரணம் பிறவி யிரண்டுமெய் தாரிந்த வையகத்தே. 51
வையந் துரக மதகரி மாமகு டஞ்சிவிகை பெய்யுங் கனகம் பெருவிலை யாரம் பிறைமுடித்த வையன் றிருமனை யாளடித் தாமரைக் கன்புமுன்பு செய்யுந் தவமுடை யார்க்குள வாகிய சின்னங்களே. 52
40

சின்னஞ் சிறிய மருங்கினிற் சாத்திய செய்யபட்டும் பென்னம் பெரிய முலையிமுத்தாரமும் பிச்சிமொய்த்த கன்னங் கரிய குழலுங்கண் மூன்றுங் கருத்தில்வைத்துத் தன்னந் தனியிருப் பார்க்கிது போலுந் தவமில்லையே. 53
இல்லாமை சொல்லி யொருவர்தம் பாற்சென் றிழிவுபட்டு நில்லாமை நெஞ்சினினைகுவி ரேனித்த நீடுதவங் கல்லாமை கற்ற கயவர்தம் பாலொரு காலத்திலுஞ் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54
மின்னா யிரமொரு மெய்வடிவாகி விளங்குகின்ற தன்னா ளகமகிழானந்த வல்லி யருமறைக்கு முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்விதன்னை யுன்னா தொழியினு முன்னினும் வேண்டுவ தொன்றில்லையே. 55
ஒன்றாயரும்பிப் பலவாய் விரிந்திவ்வுலகெங்குமாய் நின்றா ளனைத்தையு நீங்கிநிற் பாளென்ற னெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்ற வாவிப் பொருளறிவா ரன்றா லிலையிற் றுயின்றபெம் மானுமென்னையனுமே. 56
ஐயனளந்த படியிரு நாழிகொண் டண்டமெல்லா முய்ய வறஞ்செயு முன்னையும் போற்றி யொருவர்தம்பாற் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையுங்கொண்டு சென்றுபொய்யு மெய்யுமியம்பவைத் தாயிது வோவுன்றன் மெய்யருளே. 57
அருணாம் புயத்துமென் சித்தாம் புயத்து மமர்ந்திருக்குந் தருணாம் புயமுலைத் தையனல் லாடகை சேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமுங் கராம்புயமுஞ் சரணாம் புயமுமல் லாற்கண்டி லேனொரு தஞ்சமுமே. 58
தஞ்சம் பிறிதில்லை யீதல்ல தென்றுன்றவநெறிக்கே நெஞ்சம் பயில நினைகின்றி லேனொற்றை நீள்சிலையு மஞ்சம்பு மிக்கல ராகநின்றாயறி யாரெனினும் பஞ்சஞ்சு மெல்லடி யாரடி யார்பெற்ற பாலரையே. 59
பாலினுஞ் சொல்லினியாய்பணி மாமலர்ப் பாதம்வைக்க மாலினுந் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின் மேலினுங் கீழ்நின்று வேதங்கள் பாடுமெய்ய பீடமொரு நாலினுஞ் சாலநன்றோவடி யேன்முடை நாய்த்தலையே. 60
41

Page 27
நாயே னையுமிங் கொருபொருளாகநயந்துவந்து நீயே நினைவின்றி யாண்டுகொண் டாய் நின்னை யுள்ளவண்ணம் பேயே னறியு மறிவுதந்தாயென்ன பேறுபெற்றேன் றாயே மலைமகளே செங்கண் மாறிருத் தங்கைச்சியே.
தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரஞ் சாய்த்துமத வெங்கட் கரியுரி போர்த்தசெஞ் சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகநகக் செங்கைக் கரும்பு மலருமெப் போதுமென் சிந்தையதே.
தேறும் படிசில வேதுவுங் காட்டிமுன் செல்கதிக்குக் கூறும் பொருள் குன்றிற் கொட்டுந் தறிகுறிக் குஞ்சமய மாறுந் தலைவி யிவளா யிருப்ப தறிந்திருந்தும் வேறுஞ் சமயமுண் டென்றுகொண் டாடிய வீணருக்கே.
வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்கவன்பு பூணே னுனக்கன்பு பூண்டுகொண் டேனின் புகழ்ச்சியன்றிப் பேணே னொருபொழுதுந்திருமேனிப்ர காசம்ன்றிக் காணே னிருநில முந்திசை நான்குங் ககனமுமே.
ககனமும் வானும் புவனமுங் காணவிற் காமனங்கந் தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையுஞ்செம் முகனுமுந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனுமுண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.
வல்லப மொன்றறியேன்சிறியேனின் மலரடிச்செம் பல்லவ மல்லது பற்றொன் றிலேன்பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப் பாய்வினை யேன்றொடுத்த சொல்லவ மாயினு நின்றிரு நாமங்கடோத்திரமே.
தோத்திரஞ் செய்து தொழுதுமின் போலுநின் றோற்றமொரு மாத்திரைப் போது மனத்தில்வை யாதவர் வண்மைகுலங் கோத்திரங் கல்வி குணங்குன்றி நாளுங் குடில்கடொறும் பாத்திரங்கொண்டு பலிக்குழ லாநிற்பர் பாரெங்குமே. பாரும் புனலுங் கனலும்வெங் காலும் படர்விசும்பு மூரு முருகு சுவையொளி யூறொலி யொன்றுபடச்
சேருந் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாருந் தவமுடை யார்படை யாத தனமில்லையே.
42
61
62
63
64
65
66
67
68

தனந்தருங் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா மனந்தருந் தெய்வ வடிவந் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா வினந்தரு நல்லன வெல்லாந் தருமன்பரென்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள்அபிராமி கடைக்கண்களே.
கண்களிக் கும்படி கண்டுகொண் டேன்கடம் பாடவியிற் பண்களிக் குங்குரல் வீணையுங் கையும் பயோதரமு மண்களிக் கும்பச்சை வண்ணமுமாகி மதங்கர்குலப் பெண்களிற் றோன்றிய வெம்பெரு மாட்டிதன் பேரழகே.
அழகுக் கொருவரு மொவ்வாத வல்லி யருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்பனி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க விழவுற்று நின்றநெஞ் சேயிரங் கேலுனக் கென்குறையே.
என்குறை தீரநின் றேத்துகின்றேனினி யான்பிறக்கி னின்குறையேயன்றி யார்குறை காணிரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய் தன்குறை தீரவெங் கோன்சடை மேல்வைத்த தாமரையே.
தாமங் கடம்பு படைபஞ்ச பாணந்தனுக்கரும்பி யாமம் வயிரவ ரேத்தும் பொழுதெமக் கென்றுவைத்த சேமந்திருவடி செங்கைக ணான்கொளி செம்மையம்மை நாமந்திரிபுரை யொன்றோ டிரண்டு நயனங்களே.
நயனங்கண் மூன்றுடை நாதனும் வேதமு நாரணனு மயனும் பரவு மபிராம வல்லி யடியிணையைப் பயனென்று கொண்டவர் பாவைய ராடவும் பாடவும்பொற் சயனம் பொருந்து தபணியக் காவினிற் றங்குவரே.
தங்குவர் கற்பகத் தாருவினிழலிற் றாயரின்றி மங்குவர் மண்ணில் வழுவாப் பிறவியை மால்வரையும் பொங்குவ ராழியு மீரேழ் புவனமும் பூத்தவுந்திக் கொங்கிவர் பூங்குழ லாடிருமேனி குறித்தவரே.
குறித்தேன் மனத்தினின் கோலமெல் லாநின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டுகிண்டீ
வெறித்தே னவிழ்கொன்றை வேணிப் பிரானொரு கூற்றைமெய்யிற்
பறித்தே குடிபுகு தும்பஞ்ச பாண பயிரவியே.
43
69
70
71
72
73
74
75
76

Page 28
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணிவஞ்ச ருயிரவியுண்ணு முயர்சண்டி காளியொளிருங்கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே. 77
செப்புங் கனக கலசமும் போலுந் திருமுலைமே லப்புங் களப வபிராம வல்லி யணிதரளக் கொப்பும் வயிரவக் குழையும் விழியின் கொழுங்கடையுந் துப்பு நிலவு மெழுதிவைத் தேனென்றுணைவிழிக்கே. 78
விழிக்கே யருளுண் டபிராம வல்லிக்கு வேதஞ்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண் டெமக்கவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்களேசெய்து பாழ்நகரக் குழிக்கே யழுந்துங் கயவர்தம் மோடென்ன கூட்டினியே. 79
கூட்டிய வாவென்னைத் தன்னடி யாரிற் கொடியவினை யோட்டிய வாவென்கணோடிய வாதன்னை யுள்ளவண்ணங் காட்டிய வாகண்ட கண்ணும் மனமுங் களிக்கின்றவா வாட்டிய வாநட மாடகத் தாமரை யாரணங்கே. 8O
அணங்கே யணங்குக ணரின்பரி வாரங்க ளாகையினால் வணங்கே னொருவரை வாழ்த்துகிலே னெஞ்சில் வஞ்சகரோ டிணங்கே னெனதுன தென்றிருப் பார்சிலர் யாவரொடும் பிணங்கே னறிவொன்றி லேனென்கணிவைத்த பேரளியே. 81
அளியார் கமலத்தி லாரணங் கேயகி லாண்டமுநின் னொளிாக நின்ற வொளிர்திருமேனியை யுள்ளுதொறுங் களியாகி யந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு வெளியாய் விடினெங்ங் னேமறப்பேனின் விரகினையே. 82
விரவும் புதுமல ரிட்டுநின் பாத விரைக்கமல மிரவும் பகலு மிறைஞ்சவல் லாரிமை யோரெவரும் பரவும் பதமு மயிரா வதமும் பகீரதியு முரவுங் குலிசமுங் கற்பகக் காவு முடையவரே. 83
உடையாளை யொல்குசெம்பட்டுடை யாளையொளிர்மதிச்செஞ் சடையாளை வஞ்சகர் நெஞ்சடை யாளைத் தயங்கு நுண்ணுா லிடையாளை யெங்கள்பெம் மானிடையாளை யிங்கென்னையினிப் படையாளை யுங்களை யும்படையாவண்ணம் பார்த்திருமே. 84
44

பார்க்குந் திசைதொறும் பாசாங் குசமும் பணிச்சிறைவண் டார்க்கும் புதுமலரைந்துங் கரும்புமென் னல்லலெல்லாந் தீர்க்குந் திரிபுரையாடிருமேனியுஞ் சிற்றிடையும் வார்க்குங் குமமுலையும்முலை மேன்முத்து மாலையுமே.
மாலயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற காலையுஞ் சூடகக் கையையுங் கொண்டு கதித்தகப்பு வேலைவெங் காலனென் மேல்விடும் போதுங் வெளிநில்கண்டாய் பாலையுந் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
85
88
மொழிக்கும் நினைவுக்கும் மெட்டாத நின்றிரு மூர்த்தியென்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்விழி யான்மதனை யழிக்குந் தலைவரழியா விரதத்தை யண்டமெல்லாம் பழிக்கும் படியொரு பாகங்கொண் டாளும் பராயரையே.
பரமென்றுனையடைந்தேன்றமியேனுமுன் பக்தருக்குட் தரமன் றிவனென்று தள்ளத் தகாது தரியலர்தம் புரமன் றெரியப் பொருப்புவில் வாங்கிய போதிலயன் சிரமொன்று செற்றகை யானிடப் பாகஞ் சிறந்தவளே.
சிறக்குங் கமலத் திருவேநின் சேவடி சென்னிவைக்கத் துறக்கந் தருநின்றுணைவரு நீயுந் துரியமற்ற வுறக்கந் தரவந் துடம்போ டுயிருற வற்றறிவு
மறக்கும் பொழுதென்முன்னேவரல் வேண்டும் வருந்தியுமே.
வருந்தா வகையென் மனத்தா மரையினில் வந்துபுகுந் திருந்தாள் பழைய விருப்பிட மாக வினியெனக்குப் பொருந்தா தொருபொருளில்லைவிண் மேவும் புலவருக்கு விருந்தாக வேலை மருந்தா னதைநல்கு மெல்லியலே.
மெல்லிய நுண்ணிடை மின்னனை யாளை விரிசடையோன் புல்லிய மென்முலை பொன்னனை யாளைப் புகழ்ந்துமறை சொல்லிய வண்ணத் தொழுமடி யாரைத் தொழுமவர்க்குப் பல்லிய மார்த்தெழ வெண்பக டூரும் பதந்தருமே.
பதத்தே யுருகிநின் பாதத்தி லேமனம் பற்றியுன்ற னிதத்தே யொழுக வடிமைகொண் டாயினி யானொருவர் மதத்தே மதிமயங் கேனவர் போன வழியுஞ்செல்லேன் முதத்தேவர் மூவரும் யாவரும் போற்று முகிழ்நகையே.
45
87
88
89
90
91
92

Page 29
நகையே யிதிந்த ஞாலமெல்லாம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவிலந்த வகையே பிறவியும் வம்பே மலைமக ளென்பதுநா மிகையேயிவடன் றகைமையை நாடி விரும்புவதே. 93
விரும்பித் தொழுமடி யார்விழி நீர்மல்கி மெய்புளக மரும்பித்ததும்பிய வானந்த மாகி யறிவிழந்து சுரும்பிற் களித்து மொழிதடு மாறிமுன் சொன்னவெல்லாந் தரும்பித்த ராவரென் றாலபிராமி சமயநன்றே. 94
நன்றே வருகினுந் தீதே விளைகினு நானறிவ தொன்றேயு மில்லை யுனக்கே பரமெனக் குள்ளவெல்லா மன்றே யுனதென் றணித்துவிட் டேனழியாதகுணக் குன்றே யருகட்கட லேயிம வான்பெற்ற கோமளமே. 95
கோமளவல்லியை யல்லியந் தாமரைக் கோயில்வைகும் யாமளவல்லியை யேதமி லாளை யெழுதரிய சாமள மேனிச் சகல கலாமயிறன்னைத்தம்மா லாமள வந்தொழு வாரெழு பாருக்கு மாதியரே. 96
ஆதித்தனம்புலியங்கி குபேர னமரர்தங்கோன் போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதற் சாதித்த புண்ணிய ரெண்ணிலர் போற்றுவர் தையலையே. 97
தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக் கைவந்த தீயுந் தலைவந்த வாறுங் கரந்ததெங்கே மெய்வந்த நெஞ்சினல் லாலொரு காலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சிற் புகவறி யாமடப் பூங்குயிலே. 98
குயிலா யிருக்குங் கடம்பா டவியிடைக் கோலவியன் மயிலா யிருக்கு மிமயா சலத்திடை வந்துதித்த வெயிலா யிருக்கும் விசும்பிற் கமலத்தின் மீதன்னமாங் கயிலா யருக்கன் றிமவானளித்த கணங்குழையே. 99
குழையைத் தழுவிய கொன்றையந்தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளுங் கரும்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையு உழையைப் பொருகண்ணு நெஞ்சிலெப்போது முதிக்கின்றவே. 100
46

நூற்பயன் ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூநிறத் தாளை, புவி அடங்கக் காத்தாளை, அம்குச பாசாங் குசமும் கரும்பும் அங்கை சேர்ந்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே. முற்றிற்று.
ශිෂ්‍යතුහිනෙන ශිෂ්‍යතුහින
திரிக்கடவுபூர் அபிராமியம்மை பதிகம்
ծնոմւ
தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதநால் வாயைக் கரன்றாள் வழுத்தவாம் - நேயர்நிதம் எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபி ராமவல்லி நண்ணும்பொற் பாதத்தில் நன்கு.
நாள் ஆசிரிய விருத்தம்
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
47

Page 30
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமி யே!
காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும்
கரிய புருவச் சிலைகளும்
கர்ணகுண்டலமுமதி முகமண்ட லம்நுதற்
கஸ்தூரிப் பொட்டு மிட்டுக்
கூரணிந் திடுவிழியும் அமுதமொழியுஞ் சிறிய
கொவ்வையின் கனிய தரமும் குமிழனைய நாசியும் முத்தநிகர் தந்தமும்
கோடுசோ டான களமும் வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும்
மணிநூ புரப்பா தமும் வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக வல்வினையை மாற்று வாயே
ஆரமணி வானிலுறை தாரகைகள் போலநிறை
ஆதிகட வியூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி ! அபிராமி யே!
மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில்
மறைந்து வாளைத் துறந்து
மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள்
வரம்பெற்ற பேர்க ளன்றோ?
செகமுழுமீ வொற்றைத் தனிக்குடை கவித்துமேற்
சிங்கா சனத்தி லுற்றுச்
செங்கோலும் மனுநீதி முறைமையும் பெற்றுமிகு
திகிரியுல காண்டு பின்பு
புகர்முகத்(து) ஐராவதப் பாக ராகிநிரை
புத்தேளிர் வந்து போற்றிப்
போக தேவேந்திரன் எனப்புகழ விண்ணில் புலோமிசை யொடுஞ்சு கிப்பர்
அகரமுத லாகிவளர் ஆனந்த ரூபியே!
48

ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே !
மறிகடல்கள் ஏழையுந் திகிரிஇரு நான்கையும்
மாதிறல் கரியெட் டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும்
மாகூர்மம் ஆனதையு மோர்
பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும்
புத்தேளிர் கூட்டத் தையும்
பூமகளை யுந்திகிரி மாயவனை யும்அரையிற்
புலியாடை உடையா னையும்
முறைமுறைக ளாயீன்ற முதியவர்களாய்ப் பழைமை
முறைகள் தெரியாத நின்னை மூவுலகிலுள்ளவர்கள் வாலையென் றறியாமல்
மொழிகின்ற தேது சொல்வாய் அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
ஆதிகட வியூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி ! அபிராமி யே!
வாடாமல் உயிரெனும் பயிர்தழைத் தோங்கிவர
அருள்மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன்பெனுஞ் சிறகால் வருந்தா மலேய ணைத்துக்
கோடாமல் வளர்சிற் றெறும்புமுதல் குஞ்சரக்
கூட்டமுத லான சீவ
கோடிகள் தமக்குப் புசிக்கும் புசிப்பினைக்
குறையாம லேகொ டுத்து
நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய்
நின்னுதர பந்தி பூக்கும் நின்மலி! அகிலங்களுக்கு) அன்னை என்றோதும்
நீலிமயன்(று) ஒது வாரோ?
ஆடாத நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ்
49

Page 31
ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி ! அபிராமி யே!
பல்குஞ் சரந்தொட் டெறும்புகடை யானதொரு
பல்லுயிர்க் குங்கல் லிடைப்
பட்டதே ரைக்கும்அன் றுற்பவித் திடுகருப்
பையுறு சீவ னுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தி னுக்கும்
மற்றுமொரு மூவர்க்கு மியாவர்க்கும் அவரவர்
மனச்சலிப் பில்லா மலே
நல்குத் தொழிற்பெருமை உண்டா யிருந்துமிகு
நவநிதி உனக்கி ருந்தும்
நானொருவன் வறுமையிற் சிறியனா னால்அந்
நகைப்புனக்கேஅல்ல வோ?
அல்கலந்தும்பர்நா டளவெடுக் குஞ்சோலை
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமி யே!
நீடுல கங்களுக்கு) ஆதரவாய் நின்று நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத் திரண்டறம் வளர்க்கின்ற
நீமனை வியாய்இ ருந்தும்
வீடுவீடுகடோறும் ஓடிப் புகுந்துகால் வேசற்(று) இலச்சை யும்போய்
வெண்டுகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமுங் கொண்டு கைக்கோர்
ஒடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்துநின்(று)
உன்மத்த னாகி அம்மா!
உன்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந் தேங்கி
உழல்கின்ற தேது சொல்வாய்
ஆடுகொடி மாடமிசை மாதர்விளை யாடிவரும்
50

ஆதிகட வியூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமி யே!
ஞானந் தழைத்துன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தி னிற்போய்
நடுவி னிலிருந்துவந் தடிமையும் பூண்டவர் நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனதுநா னெனுமானம்
இல்லா மலேது ரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்துநெஞ்(சு)
இருளற விளக்கேற் றியே
ஆனந்த மாணவிழி அன்னமே! உன்னைஎன்
அகத்தா மரைப்போ திலே
வைத்துவே றேகலை யற்றுமே லுற்றபர
வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்
ஆதிகட வியூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமி யே!
சலதியுல கத்திற் சராசரங் களையீன்ற
தாயா கினாலெ னக்குத் தாயல்ல வோ? யான் உன் மைந்த னன்றோ? எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன் முலைசுரந் தொழுகுபா லுட்டிஎன் முகத்தைஉன்
முன்தானை யால்து டைத்து மொழிகின்ற மழலைக் குகந்துகொண் டிளநிலா
முறுவல்இன் புற்றரு கில்யான்
குலவிவிளையாடல் கொண்டருண் மழைபொழிந்து)
அங்கைகொட்டி வாவென்முறு) அழைத்துக்
குஞ்சரமு கன்கந்தனுக்கு) இளையன் என்றெனைக்
கூறினால் ஈனம் உண்டோ?
அலைகடலி லேதோன்று மாறாத அமுதமே!
51

Page 32
ஆதிகட வூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! 9
கைப்போது கொண்டுன் பதப்போது தன்னில் கணப்போதும் அர்ச்சிக் கிலேன்
கண்போதி னாலுன் முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்
முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே
முன்னிஉன் ஆல யத்தின்
முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்
மோசமே போய்உ ழன்றேன்
மைப்போத கத்திற்கு நிகரெனப் போதெரு
மைக்கடா மீதேறியே
மாகோர காலன் வரும்போது தமியேன்
மனங்கலங் கித்தி யங்கும்
அப்போது வந்துன் அருட்போது தந்தருள்
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமி யே! 10
மிகையுந் துரத்தவெம் பிணியுந் துரத்த
வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்தநரை திரையும் துரத்தமிகு
வேதனை களுந்து ரத்த
பகையுந் துரத்தவஞ் சனையுஞ் துரத்த
பசியென் பதுந்து ரத்த பாவந் துரத்த பதிமோகந் துரத்த பலகா ரியமுந் துரத்த நகையுந் துரத்தஊழ் வினையுந் துரத்த நாளும் துரத்த வெகுவாய் நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானே?
அகிலஉல கங்கட்கும் ஆதார தெய்வமே!
S2

ஆதிகட வூரின் வாழ்வே ! அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமி யே! 11
也k 也k
கந்தர் சஷ்டி கவசம்
öTLIL துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம்பாடக் கிண்கிணியாட மையல் நடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெனைக் காக்கவென்றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக
53

Page 33
வாசவன்'மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக J6aJ6OOT LJ6aJgo JJJJ JJJ rfleu600T u6ug forfirforf forff விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலைபெற்றென்முன் நித்தமும் மொளிரும் சண்முகன் தீயும் தனியொளியொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈரறு செவியில் இலகுகுண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
S4

செககண செககண செககண செகண மொகமொகமொகமொகமொகமொகமொகென நகநக நகநக நகநக நகெனெ டிகுகுண டிகுடிகு டிகுகுன டிகுண்
JIJIJJ JJJJ JJJJ JJJ fffffffffffirs forffirs forff 6666 (6.666 (6000 (660 டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் surrsunt surrourt Guntsort Gaug(po லீலா லீலா லீலா விநோதனென்று உன்திரு வடியை உறுதியென்று எண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
55

Page 34
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா நாடியை முனைவேல் காக்க எப்பொழுதுமெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க அரையிரு டன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியில்னோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்லபூதம் வாலாட்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமரா கூrதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும்
56

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகளென்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகளுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும், காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும், ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட, காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோடப் படியினிற் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடனங்கம் கதறிடக் கட்டு! கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோடப் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடுத்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினி லிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி பக்கப் பிளவை படர் தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
57

Page 35
பற்குத் தரணை வருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவணபவனே! சையொளி பவனே! திரிபுர பவனே! திகழொளி பவனே! பரிபுர பவனே! பவமொழி பவனே! அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே! கார்த்திகை மைந்தா கடம்பா! கடம்பனை இடும்பனையழித்த இனியவேல் முருகா! தணிகா சலனே சங்கரன் புதல்வா! கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா! பழநிப் பதிவாழ் பால குமாரா! ஆவினன் குடிவாழ் அழகிய வேலா! செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! சமரா புரிவாழ் சண்முகத் தரசே! காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னாவிருக்க, யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினே ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடனிரகூரி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயுதனார் சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க! வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க! வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க! வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்!
58

வாழ்க வாழ்க வாரணத்துவசம்! வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் னிகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென்றன்பாயப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துட னாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகி கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாயத் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாக சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத்தேழ்வர்க் குவந்தமுதளித்த குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி
59

Page 36
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவணபவழம் சரணம் சரணம் சண்முகா சரணம்
(கந்தசஷ்டி கவசம் முற்றிற்று)
<リ審エ3<リー3<リ審ー3
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன்அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
60
 

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா அநின்றஇத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யன்ன் உள்ளத்துள் ஓங்கார மாய் நின்ற மெய்ய விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினனல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தோனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
61

Page 37
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலணைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலச்சுடரே தேசனே தேன்.ஆர் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெருமானே ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரி பேர் ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற தோற்றச் சுடர்ஒளியாய் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
62

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஒஎன்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
(பதிகம் முற்றிற்று)
-ܝܚܚܚܣܡܘܼܚܗ- ܚܘܝܚܚܫܚ-ܗ ܚ-ܝܚܚ
நவநாயகர்களின் நல்லருள் பெற ஒரு நற்றமிழ் மந்திரம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்பமோ, துன்பமோ எது நேர்வதாயினும் அதற்கு நவக்கிரகங்களுக்கு ஒருமுக்கியமான பங்கு இருக்கிறது என்பதை நமக்குச் சோதிட நூல்கள் நன்கு உணர்த்துகின்றன.
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் போன்ற அருளாளர்களும் கூட இன்னல் நேரலாம் என்றவேளை “கோளறு பதிகம்” பாடி நவநாயர்களின் நல்லருளைப் பெற்றதை நாம் அறிவோம். இன்னல் சூழ்ந்த இந்நாட்களில் இந்நவநாயகர்களை எளிய தமிழில்துதிசெய்து, எப்போதும் நலமடையஇதோ ஒர் இனியதமிழ்த்தோத்திரம்.இதைத் தினந்தோறும் பாராணஞ் செய்து நவக்கிரகமூர்த்திகளைப் போற்றித் துதித்து நல்லருள் பெறுவோமாக!
சூரிய பகவான் சீரருள் மிகச்சு ரந்து செகத்துயிர் அனைத்துங் காக்கப் பேரருள் பிதாவு மாகிப் பெருந்துன்ப இருளையோட்டிக் காரருள் சுகத்தை நல்கக் கதிர்களா யிரம்பரப்பும் பாரருள் பரிதிப் புத்தேள் பதமலர் சென்னி வைப்பாம்.
63

Page 38
சந்திர பகவான் செழித்திடச் செல்வம் நல்கிச் செகத்தள உயிர்கட்கெல்லாம் வழுத்திடும் பிதாவுமாகி வல்லிருள் தன்னையோட்டித் தழைத்திட அமுதமாகத் தக்கதோர் கதிர்பரப்பிப் பொழிந்திடுஞ் சோமநாதன் பொற்பதம் தலைக் கொள்வோமே.
அங்காரக (செவ்வாய்) பகவான் வெற்றியும் வீரம் ஆண்மை விதரணம் பராக்கிரமங்கள் சுற்றமாம் தீரம் நல்கிச் சோதரன் தானும் ஆகிப் பற்றிய பூமியின்பம் பரன்பிரு தான்னியம் ஓங்கி எற்றிசைப் புகழும் சேயின் இருபதம் தலைக்கொள்வோமே.
புத (புதன்) பகவான் இணக்கமாம் மகிழ்ச்சி இன்பம் இயலுறும் புத்தி, யுக்தி வணக்கமாம் கல்வி மேன்மை வருந்தனம் மகிழ்ச்சி புண்யம் துணக்கமாம் பந்துவாகித் துலங்கிடச் சுகங்கள் நல்கும் கணக்கனாம் எந்தை பாதம் கழலடி சென்னி வைப்பாம்.
வியாழ பகவான் பெருநிறை செல்வம் மேன்மை பெற்றிடுஞ் சுகங்கல்யாணம் வருநிறை மரபு நீடி வாய்க்குஞ்சந்ததிதழைக்கத்
தருநிறை ஆடை ரத்னந் தான்பெற அருளும் தேவ குருநிறை வியாழன் பொற்றாள் குரைகழல் தலைக்கொள் வோமே.
சுக்கிர (வெள்ளி) பகவான் திரைகடல் சூழும் பூமி சேர்ந்திடும் உயிர்கட்கெல்லாம் நிறைதரும் யோக போகம் நீடிய மனைவி இன்பம் தரைபுகழ் வாகனங்கள் தக்கதோர் சுகத்தை நல்கும் மறைமொழி புகரின் பொற்றாள் மலரடிதலைக்கொள்வோமே.
சனிபகவான் கோரிய உலகத்தின்கண் குலவிய உயிர்கட்கெல்லாம் மீறிடச் சுகமளித்து மெய்த்தளர் பிணியை நீக்கிச் சீறிய துன்பந் தீர்த்து சிறக்கத்தீர்க் காயுள் நல்கும் காரியின் கமல பாதக கடிமலர் தலைக்கொள்வோமே.
64

இராகு பகவான் பணியென உருவம் ஆகிப் பட்சமாய் அமுதம் உண்டு தணியென உயிர்கட் கெல்லாம் தகும்படி யோக போகம் துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும் மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்.
கேதுபகவான் மாதுமை பாகன் சொற்ற வரத்தினால் அமுதபானக் கேதுவும் உடைய னாகி எவ்வுயிர் களுந்த ழைக்கக்
கோதிலா ஞானம் மோட்சம் குருபத்தி அருளும் நல்கும் கேதுவாம் பகவான் பாதம் கிளர்முடி மிசைகொள் வோமே.
SSSe4O2OSsSSa
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் அருளிய திருநீற்றுப் பதிகம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. 1
வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஒதத் தகுவது நீறு உண்மையிலுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. 2
6S

Page 39
முக்தி தருவது நீறு முனிவரணிவது நீறு சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணியணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேணந்தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக்கெல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.
அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு வருத்தம் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே.
எயிலத அட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தாலவாயான் திருநீறே.
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திருமேனி ஆலவாயான் திருநீறே.
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏலவுடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு ஆலமது உண்டமிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.
66
3.
4.
5
8
7

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணியாயினை தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 11
MSMSSSLSSLLSSLS SSSSSSMSSSLSSSLLLLSLLSLSMMMM SSSSSLSSSMMSSS
திருநாவுக்கரசு நாயனார் அருளிய
மசிவாயத் திருப்பதிகம்
நான்காம் திருமுறை பொது பண் - காந்தாரபஞ்சமம்
ஐந்தெழுத்துண்மை
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சி வாயவே.
பூவினுக் கருங்கலம் ப்ொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரணஞ் சாடுதல் கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது நாவினும் கருங்கலம் நமச்சி வாயவே. 2
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் நறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட்டிருக்கினும் இரந்தியாரையும் விடுக்கிற் பிரானென்று வினாவுவோ மல்லோம் அடுக்கிற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. 4.
67

Page 40
வெந்த்ரீ றருங்கலம் விரதி கட்கெல்லாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்கு வான்நலம் குலமில ராகினுங் குலத்துக் கேற்பதோர் நலமிலக் கொடுப்பது நமச்சி வாயவே.
வீடினார் உலகினின் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஒடினேன் ஒடிச் சென்றுறுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
இல்லக விளக்கது இருள்கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
முன்னேறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறியேசரணாதல் திண்ணமே அந்நெறி ெேயசன்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழக் நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் துதெத்வல் லார்தமக் கிடுக்க ணல்லையே.
器数

கோளறு பதிகம்
வேயுறு தோழிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம்பி ரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால் ஒன்பதோடு ஒன்றோடு ஏழு பதினெட்டோடு ஆறும்
உடனயா நாள்கள் அவைதான் அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீறு னிந்து
உமையோடும்.வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமேலணிந்து என்
உளமே புகுந்து அதனால் திருமகள் கலையதுார்த்தி செய மாதுபூமி
திசைதெய்வமான பலவும் அருநெறி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடுவட பாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலணங்கி நமனோடு தூதர் கொடுநோய்களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.
69

Page 41
நஞ்சனி கண்டன் எந்தை மடவாள் தனோடு
விடையேறு எங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும்மின்னு
மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.
வாள்வரி யதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னிகொன்ற நதிசூடிவந்த என்
உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன்மங்கை யொருபாகமாக
விடையேறு செல்வன் அடைவான் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேலனிந்து என்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வேள்பட விழிச்செய்தன்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடிவந்தென்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்ற தனோடும்.
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடெருக்கும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசை யோனுமாலும் மறையோடுதேவர்
70

வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாக முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால் புத்தாராடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 10
தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிராமாபுரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளு நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே !
6SORN
திருச்சிற்றம்பலம்
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருண் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை னாயெனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளியெழுந்தருளாயே. 1
71

Page 42
அருணனிந்திரன்திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாம் திரள்நிரையறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தருளாயே.
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளியொளி உதயத்
தொருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெருமான்பள்ளியெழுந்தருளாயே.
பூதங்கள் தோறுநின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்(து) ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே.
72

பப்பற வீட்டிருந்துணருநின் னடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றாரணங்கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே இப்பிறப்பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு) அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு வத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுவெமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெரு மான்பள்ளியெழுந்தருளாயே.
முந்திய முதல்நடு இறுதியுமானாய்
மூவருமறிகில ரியாவர்மற்றறிவார் பந்தனை விரலியும் நீயுநின் னடியார்
பழங்குடில் தொறுமெழுந்தருளிய பரனே செந்தழல் புரைதிருமேனியுங் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலுங் காட்டி அந்தன னாவதுங் காட்டிவந் தாண்டாய் ஆரமுதேபள்ளியெழுந்தருளாயே.
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பெருளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய்தானே
வண்திருப் பெருந்துறையாய்வழி யடியேம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாயுலகுக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளியெழுந்தருளாயே.
73

Page 43
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்தாம்
போக்குகின்றேமவமேயிந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந்துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவ னாசைப்
படவுநின்னலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதேபள்ளியெழுந்தருளாயே. o
திருச்சிற்றம்பலம்
fllemstil skib
திருச்சிற்றம்பலம்
மைப்படிந்த கண்ணாளுந் தானுங்கச்சி
மயானத்தான் வார்சடையான என்னின் அல்லான் ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
ஒர் ஊரன் அல்லன் ஒர் உவமன் இல்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவன் அருளே கண்ணாகக் காணின்அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொண்ணாதே. 1
நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்பட்டோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்னையான
சங்கரன்நற் சங்கவெண்குழையோர் காதின் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கோய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகினோமே. 2
74
 

அரியானை யந்தணர்தஞ் சிந்தையானை
யருமறையி னகத்தானை யணுவையார்க்குந் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொழியைத் தேவர்கடங்கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்துநின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே.
எத்தாய ரெத்தந்தை யெச்சுற்றத்தா
ரெம்மாடு சம்மாடா மேவர் நல்லார் செத்தால் வந்துதவு வாரொருவரில்லைச் சிறுவிற காற்றீமூட்டிச் செல்லாநிற்பர் சித்தாய வேடததாய் நீடுபொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா வென்ற னத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றா
லல்லகண்டங் கொண்டையே னென்செய்கேனே.
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமேயா ளென்னைக கொண்டாய் போற்றி யூற்றாகியுள்ளே யொளித்தாய் போற்றி
யோவரத சத்தத்தொலியே போற்றி யாற்றாகி யங்கே யமர்ந்தாய் போற்றி
யாறங்கநால் வேதமானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலைமலை யானேபோற்றி போற்றி.
அப்பநீயம்மைநீ யையனுநீ
யன்புடைய மாமனு மாமியுநீ ஒப்படையா மாதரு மொண்பொருளுநீ யொருகுல முஞ்சுற்றமு மோரூருநீ துய்ப்பனவு முய்ப்பனவுந் தோற்றுவாய்நீ
துணையா யென்னெஞ்சந் துறப்பிப்பாய்நீ இம்பொன்னி யிம்மணிநீயிர்முத்துநீ
யிறைவனி யேறுர்ந்த செல்வனியே.
திருக்கோயிலில்லாத திருவிலூருந்
திருவெண்ணி றணியாத திருவிலூம் பருக்கோடிப் பத்திமையாற் பாடாவூரும்
75

Page 44
பாங்கினொடு பலதளிகளில்லாவூரும் விருப்போடு வெண்சங்க மூதாவூரும்
விதானமும் வெண்கொடியுமில்லாவூரும் மருப்போடு மலர்பரித்திட்டுண்ணாவூரு
மவையெல்லா மூரல்ல வடவிகாடே.
திருநாமமஞ் செழுத்துஞ் செப்பாராகில்
தீவண்ணர் திறமொருகாற் பேசாராகில் ஒருக்காலுந் திருக்கோயில் சூழாராகில்
உண்பதன்முன் மலர் பறித்திட்டுண்ணாராகில் அருநோய்கள்கெட வெண்ணி றணியாராகில் அளியற்றார் பிறந்தவாறேதோ வென்னில் பெருநோய்கண் மிகருலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி யிருக்கினறாரே.
சங்கநிதி பதுமநிதி யிரணடுந்தந்து
தரணிகொடு வானாளத் தருவரேனு மங்குவாரவர் செல்வ மதிப்போமல்லோ
மாதேவர்க் கேகாந்தரல்லராகில் அங்கமெல்லாங் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துக் தின்றுழலும் புலையலேனும் கங்கைவார் சடைக்கரந்தார் கன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே.
எல்லாவுலகமுமானாய் நீயே
எகம்பமேவி யிருந்தாய் நீயே நல்லாரை நன்மையறிவாய் நீயே
ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லாவினை களறுப்பாய் நீயே
புகழ்ச்சேவடியென் மேல்வைத்தாய் நீயே செல்வாயா செல்வந்தருவாய் நீயே
திருவையாற கலாதசெம்பொற் சோதீ.
திருவேயென் செல்வமேதேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதிமிக்க
உருவேயென்னுறவேயேன் னுமே யூனின் உள்ளமே யுள்ளத்தினுள்ளேநின்ற
கருவேயென் கற்பகமே கண்ணேகண்ணிற்
கண்மணியே மணியோடு பாவாய்காவாய்
76
8

அருவாயவல் வினைநோய் யடையாவண்ணம் ஆவடுதண டுறையுறையுமமரரேறே.
வடிவேறுதிரி சூலந்தோன்றுந் தோன்றும்
வளர்சடைமே லிளமதியந்தோன்றுந் தோன்றும் கடியேறுகமழ் கொன்றைக் கண்ணிதோன்றும்
காதில் வெண் குழைதோடு கலந்து தோன்று மிடியேறுகளிற்றுரிவைப் போர்வை தோன்று
மெழிறிகழுந் திரு முடியுமிலங்கிததோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம புனிதனார்கே.
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றிபோற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி புண்ணியனே நின்பாதம் போற்றி அங்கமலத் தயனோடு மாலுங்காணா
அனுலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி.
பேராயிரம் பரவிவானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலாவடி யார்க்கென்றம் வாராத செல்வம்வரு விப்பானை
மந்திரமுந் தந்திரமு மருந்துமாகித் தீராதநோய் திர்த்தருளவல் லான்றன்னைத்
திரிப்புரங்கடி யெழத்திண்சிலை கைக்கொண்ட பேராணைப்புள்ளிருக்குவேளூரானைப்
போற்றாதே யாற்றநாள் போக்கினேனே.
கற்றானைக் கங்கைவார் சடையான றன்னைக் காவிரிசூழ் வலஞ்சுழி யுங்கருதி னானை அற்றார்க்கு மலர்ந்தார்க்கு மருள் செய்வானை யாரூரும் புகுவானை யறிந்தோ மன்றே மற்றாருந் தன்னொப் பாரில்லா தானை
வானவர் கெளப்பொழுதும் வணங்கி யேத்தப் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே.
திருச்சிற்றம்பலம்
77
11
12
13
14
15

Page 45
(திருப்பொற்கண்ணம்
திருச்சிற்றம்பலம்
முத்தநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சக்தியுஞ் சோமியும் பார்மகளும்
நாமகளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி
ஆடற்பொற் சுண்ணம் இடித்துநாமே.
பூவியல் வார்சடை எம்பிரார்க்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணீர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்னங் கோன்னங்கூத்தன் தேவியும் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
சுந்தர நீறணிந்தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் (கு)
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே.
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை
நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
தேசமெல்லாம்புகழ்ந்தாடுங்கச்சித்
78

திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
அறுகெடுப் பார்அயனும்அரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்கணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினிர் முக்கண்அப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெலாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார்
காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்துநாமே.
சூடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந்தார்ப்பஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்ப பாடக மெல்லடி யார்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு) ஆடக மாமலை அன்னகோவுக் (கு)
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோட்டிரு முண்டந்துதைந்திலங்கச்
சோத்தெம்பிரான்என்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள பாடிப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
79

Page 46
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம்ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
மாடு நாகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெருமானைத்தேடிச்
சித்தங்களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக் (கு)
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பி ரானைநம்மை
அகப்படுத் தாட்கொண்டருமைகாட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் பையரவல்குல் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
80

என்னுடை ஆரமு(து) எங்கள் அப்பன்
எம்பெரு மான்இம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
தமையன்எம் ஐயன் தாள்கள்பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாய்இதழுந்துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை
நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோ(டு)
ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க னாவினுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும்
81

Page 47
ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்யஅன்று
போனகமாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே.
அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி அருக்கன் எயிறு பறித்தல்பாடி கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடி
காலனைக்காலால் உதைத்தல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடியாடி
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே.
வட்டமலர்க் கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும்பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம்பலத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம்பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின்றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே.
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்மையும் ஆயினார்க்குச் சோதியுமாய் இருளாயினார்க்குத்
துன்பமுமாய்இன்பம் ஆயினார்க்குப் பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமுமாய்வீடும் ஆயினார்க்(கு) ஆதியும் அந்தமும் ஆயினாருக்(கு)
ஆடற்பொற் சுண்ணம் இடித்துநாமே.
திருச்சிற்றம்பலம்
82

திருவெம்பாவை
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்நுண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
பாசம் பரஞ்சோதிக் கென்யாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்க்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற றம்பலத்துள்
ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
83

Page 48
உண்ண்ெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து)
எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய். 4.
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேனன்று ஒலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய். 5
மானேநீநென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
எனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 6
அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லாமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந்துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய். 7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆறுமாறும் இவ்வாறோ ஊழிமுதல்வனாய் நின்ற ஒருவனை ஊழிமுதலர்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங்காளனையே பாடேலோ ரெம்பாவாய், 8
84

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொபம்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எனக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய். 9
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயில் பிணாப்பிள்ளைகாள் ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய், 10
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வடியடியோம் வாழ்ந்தோங்காண்ஆரழல்போற்
செய்யாவெண் ணிறாடிச் செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநி ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வைகயெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற்றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீராடேலோ ரெம்பாவாய். 12
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
85

Page 49
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடெலோ ரெம்பாவாய்.
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான்பணியாள் போரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்.
முன்னிக் கடலைச் சுருக்கியெழுந் துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
86
14
15

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானப்ை பாடி நமலந்திகழப்
பங்கயம் பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய். 17
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவிறற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப்பூம்புனல்பாய்ந்தாடேலோ ரெம்பாவாய். 8
உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று) அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 9
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 20
திருச்சிற்றம்பலம்
నైg,నైg,నైg,
87

Page 50
திருவாசகம்
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்த்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங் கைதான் நெகிழ விடேன்உடையாயென்னைக் கண்டுகொள்ளே. 1
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினதடி யாரொடல் லால்நரம் கம்புகினும் எள்ளேன் திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே. 2
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட் டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை யேத்தாகே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்லுகின்ற்ேன பல்காலும் வீழ்கின்றாய் நீயவலக் கடலாய் வெள்ளத்தே. 3
வெள்ளந்தாழ் விரிசடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகு மவர்நிற்க என்னை யாண்டாய்க் குள்ளந்தாள் நின்றுச்சியளவு நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய்அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணினையும் மரமாம் தீவினையி நேற்கே. 4.
ஆடு கின்றலை கூத்துடை
யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றலை பதைப்பதும்
செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின்
றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவதோ நலநிலை செய்வதொன்றறியேனே. 5
88

யானே பொய்யென் நெஞ்சும் பொய்யென் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவேதித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே. 6
வான நாடரும் அறியொ ணாதநீ
மறையிலிறுமன் தொடரொணாதநீ ஏனை நாடருந் தெரியொ ணாதநீ
என்னை யின்னிதாய் ஆண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடு வித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத் துடைய விச்சையே. 7
கொம்பரில் லாக்கொடி போல்அல
மந்தனன் கோமளமே வெம்புகின் றேனை விடுதிகண்
டாய்விண்ணர் நண்ணுகில்லா உம்பருள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்கரசே அம்பர மேநில னேஅனல்
காலொடொப் பானவனே. 8
தனித்துணை நீநிற்க யான்தருக் கித்திலை யால் நடந்த விணைத்துணை யேனை விடுதிகண்
டாய்வினை யேனுடைய மனத்துணை யேன்ன்தன் வாழ்முதலே
எனக்கெய்ப்பி வைப்பே தினைத்துணை யேனும் பொறேன்
துயராக்கையின் திண்வலையே. 9
நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார் வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலமே சென்றுதாய் கோத்தும்பீ 10
89

Page 51
பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயா என் ஆருயிரே அம்பலவா என்றவன் செய்யார் மலரடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 11
வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல்நீர் மண்கெடினுந் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்னையனுக்கு) ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ. 12
வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்துவைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத் தெம்பெருமான் அணங்கொ டணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 13
உடையாள் உன்தன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்பதானால் அடியேனுன் அடியார் நடுவுளிருக்கும்
அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே. 14
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய் காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய் கங்கை யாய் அங்கி தங்கிய கையாய் மாலும் ஓலமிட்ட டலறும் அம் மலர்க்கே
மரக்க னேனையும் வந்திடப் பணியாய் சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே. 15
வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதியின்மையால் தழங்கருந்தேனன்ன தண்ணிர் பருகத்தந் துய்யக் கொண்டாய் அழுங்கு கின்றேன் உடையாய் அடியேனுன் அடைக்கலமே. 16
90

கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண் டெய்யாதென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென் றையா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற் றரசே ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே. 17
அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தருவம் அமரர் கோனுஞ் சொல்லிப் பரவும் நாமத்தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறையின் புணர்வ தென்று கொல்லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. 18
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநன் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே. 19
பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவதுன்னோ டுவப்பதும் உன்னை
உணர்த்துவ துன்க்கெனக் குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே. 20
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண் நீற்றாய்
பங்கயத் தயனும்மா லறியா நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தமே வியகீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே. 21
91

Page 52
பிணக்கி லாதபெருந்துறைப்பெரு
மானுன் னாமங்கள் பேசுவார்க்(கு) இணக்கி லாததோர் இன்ப மேவரும்
துன்பமே துடைத் தெம்பிரான் உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை யொத்தபின் கணக்கி லாத்திருக் கோல நீவந்து காட்டினாய் கழுக் குன்றிலே.
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன்றுண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே.
அன்றே என்தன் ஆவியும்
உடலும் உடைமையும் எல்லாமுங் குன்றே யனையாய் என்னையாட்
கொண்ட போதே தொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குணடோ
என்தோள் முக்க்ண எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
பிணியெலாம் வரினும் அஞ்சேன்
பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியி னான்தன்
தொழும்பரோ டழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச்
சேவடி பரவி வெண்ணி றணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
92
22
23
24
25

உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.. 26
நானேயோ தவஞ்செய்தேன் சிவயநம எனப்பெற்றேன் தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே, 27
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையுங் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாவுன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 28
கண்க ளிரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள் தம் வாழ்விலென்
வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடும் ஆகாதே மாலறியாமலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்க்ளி கூர்தரு பாடலோ
LITLs) u60fairs (6 LDT.g.TGs பாண்டினன் னாடுடை யான்படை ஆட்சி பாடுதும் ஆகாதே விண்களிகூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே மீன்வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படுமாயிடிலே. 29
என்னா லறியாப் பதந்தந்தாய்
யான தறியா தேகெட்டேன் உன்னா லொன்றுங் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன் பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடிய ரொடுங்கூடா
93

Page 53
தென்னா யகமே பிற்பட்டிங்
கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே. சீல மின்றி நோன்பின்றிச்
செறிவே யின்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாடடாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி
வாராவுலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியே னென்றோ கூடுவதே.
முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணஞ் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கியெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவாரச்சோவே.
滋?緋忍?緋忍?
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மாலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளம் சிவனைத்
திருவீழி மிழலைவீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளம்
குளிரளன் கண்குளிர்ந்தனவே.
94

தன்னடி நிழற்கீழ் என்னையுந்தகைத்த சசிகுலா மவுலியைத் தானே என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர் மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின் பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டு கொண்டேனே.
தாயினே ரிரங்குந் தலைவரோ என்றும்
தமியனேன் துணைவவோ என்றும் நாயினே ரிைருந்து புலம்பினா லிரங்கி நலம்புரி பரமர்தங் கோயில் வாயினே ரரும்பு மணிமுருக் கலர
வளரிளஞ் சோலைமாந்தளிர்செந் தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவாளர் திருச்சிற்றம் பலமே.
அம்பரா அனலா அனிலமே புவிநீ
அம்புவே இந்துவே இரவி உம்பரால் ஒன்றும் அறிவொனா அணுவாய்
ஒழிவற நிறைந்தஒண் சுடரே மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறிவாளர்
முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே
எந்தையும் தாயுமா யினையே.
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ங்னே பெரியநீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன் முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணாநாற்பெருந் தடந்தோட் கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத்தானே.
செங்கணா போற்றி திசைமுகா போற்றி
சிவபுர நகருள்வீற்றிருந்த
95

Page 54
அங்கனே போற்றி அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந்தருளும்
எங்கணாயகனே போற்றிஏ பூழிருக்கை
யிறைவனே போற்றியே போற்றி.
சித்தனே அருளாய் செங்கணா அருளாய்
சிவபுர நகருள்வீற் றிருந்த அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக் குடியுள்ஏ பூழிருக்கை முத்தனே அருளாய் முதல்வனே அருளாய்
முன்னவா துயர்கெடுத் தெனக்கே.
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத்தவர்க்கே தித்தியா திருக்கும் தேவர்காள் இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே.
எங்களை ஆளுடை ஈசனேயோ
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற் பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப்
பனிமதி நிலவதென் மேற்படரச் செங்கயல் புனரகண்ணி மார்கள் முன்னே திருச்சிற்றம் பலமுட னேயுகுந்து அங்குன பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத் திருக்கலாமே.
g=

gůLeibaTEDIG
சேந்தனார் அருளியவை
மன்னுகதில்லை! வளர்கநம்
பக்தர்கள்! வஞ்சகர் போய்அகல பொன்னின்செய் மண்டத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவுயறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந் தண்டங் கடந்தபொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே. 2
நிட்டையிலாவுடல் நீத்தென்னை
ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்
சீராட்டுத் திறங்களுமே சிந்தித்து) அட்ட மூர்த்திக்கென் அகம்நெக
ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநிழற் பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3
சொல்லாண் டசுருதிப்பொருள்
சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண் டிற்சிதை யுஞ்சில
தேவர் சிறுநெறி சேராமே வில்லாண் டகன கத்திரன்
மேசு விடங்கள் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4.
97

Page 55
சேவிக்க வந்தயன் இந்திரன்
செங்கண்மால் எங்குந்திசை திசையன கூவிக் கவர்ந்து செருங்கிக்
குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத
தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற்ளேன்பெற்ற
தார்பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற உளறி
உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
சேலுங் கயலுந் திளைக்குங்
கண்ணார் இளங்கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்
குமென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா
நெறிதந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின்
நானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
தாதையைத் தாளற வீசிய
சண்டிக்கிவ் அண்டத்தொடு முடனே
98

பூதலத்தோரும் வணங்கப்பொற்
கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசுவைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்குங் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்ற
விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. O
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாராயணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே,
拳拳

Page 56
Alaupumb
சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த திருப்புரானம்
உலகெலானுணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
ஐந்துபேரறிவுங் கண்களே கொள்ள
வளப்பருங் கரணங்க ணான்குஞ் சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந்
திருந்துசாத்துவிகமே யாக இந்துவாழ் சடையானாடுமா னந்த
வெல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேரின்ப வெள்ளத்துட்டிளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
தெண்ணிலா மலர்ந்த வேனியா யுன்றன்
றிருநடங்கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதா மின்பமா மென்று கண்ணிலா னந்த வருவிநீர் சொரியக் கைமலருச்சிமேற் குவித்துப் பண்ணினா னிடி யறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.
கற்பனை கடந்த சோதி கருணையே யுருவ மாகி அற்புதக் கோல நீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம் பலத்துணின்று பொற்புடனடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால் இன்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போலயாக்கைத் தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றுமற அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ.
100

தூயவெண் ணிறுதுகைந்தபொன் மேனியுந் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவருஞ் சிந்தையுந் நைத்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச்செஞ்சொல் மேயசெவ் வாயு முடையார் புகுந்தனர் வீதியுள்ளே.
அண்ணலே யெனையாண்டு கொண்டருளிய அமுதே விண்ணிலே மறைந்தருள்புரி வேதநாயகனே கண்ணினால் திருக்கயிலையில் இருந்த நின்கோலம் நண்ணிநான் தொழநயந் தருள்புரி எனப்பணிந்தார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவா நீஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.
மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறிந் திசைபாட அண்ணலவர்க் கருள்புரிந்த ஆக்கப்பா டருள்செய்தார்.
மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர்நல் விழாப்பொழிவு கண்டார்தல் உண்மையாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.
காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் நாணாது நேடியமால் நான்முகனுங் காணநடுச் சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய்.
நின்றாலு மிருந்தாலுங் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலுந் துயின்றாலும் விழித்தாலு மிமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்றாத உணர்வுடையார் தொண்டராங் குணமிக்கார்.
Pd:PPd|Pd
101

Page 57
திருப்புகழ்
விநாயகர் துதி
கப்பிய கரிமுகன்
கற்றிடும் அடியவர் புத்தியிலுறைபவர்
கற்பக எனவினை
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிள் மலர்கொடு முத்தமிழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முப்புரம் எரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய் அத்துயரதுகெட சுப்பிரமணிபடும்
அப்புனம் அதனிடை அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள்
நிம்பபுரம் அஞ்சுவித பூத முங்கரண நாலும்
அந்திபகல் யாதும் அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி வந்தசரணாரவிந்தமது பாட
வண்டமிழ்விநோதம் குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர கும்பதன மீது சென்றனையுமார்ப
குன்றுதடு மாற வெஞ்சமரசூர னெஞ்சுபக வீர வென்றிவடி வேலை விம்பமதில் குழு நிம்பபுர வான
விண்டலம கீபர்
102
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
அடிபேணிக்
கடிதேகும்
மதயானை
பணிவேனே
முதல்வோனே
அதிதீரா
இபமாகி
பெருமாளே.
அறியாத
பெறுமாறு
வனமீது
அருள்வாயே
வதிரேகக்
விடுகோப
விடுவோனே
பெருமாளே.
 

திருத்தணிகை உடலினுாடு போய்மீளு முயிரினூடு மாயாத
உணர்வினூடு வானூடு முதுதீயுள் உலவை யூடு நீரூடு புவியினூடு வாதாடு
மொருவ ரோடு மேவாத தனிஞானச் சுடரினூடு நால்வேத முடியினூடு மூடாடு
துரிய வாகு லாதீத சிவரூபம் தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொல் அருள்வாயே மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவரால்கு வால்சாய 9LDJT9. மதகு சாடி மீதோடி யுழவரால்வி டவோடை
மடயை மோதி யாறுடு தடமாறிக் கடல்பு காத மாமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு மலர்வாவி கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் பெருமாளே.
திருச்செந்தூர் பரிமள களபசு கந்தச் சந்தத் தனமானார் படையம படையென வஞ்சிக் குங்கட் கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே
மறுகிடு மருளனை யின்புற் றன்புற் றருள்வாயே அரிதிரு மருகக டம்பத் தொங்கற் 55LDTfurt
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் குருநாதா
செயசெய ஹரஹர செந்திற் கந்தப் பெருமாளே.
தில்லை இருவினையின் மதிமயங்கித் திரியாதே
எழுநரகிலுழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள்நினைந்திட் டுணர்வாலே பரிவிதரி சனையை யென்றெற் கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே சிவனருளு முருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியுமன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
103

Page 58
உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றணுயிர்க் காதரவுற் றருள்வாய்
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத்தானைமுகப் பெருமாளே. 1
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தெனன் நென்னுற் றுளைநாளும்
கண்டுகொண்டன்புற் றிடுவேனோ தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் doo6.jLITSum செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே. 2
இயலிசையிலுசிதவஞ்சிக் கயர்வாகி இரவுபகல் மனதுசிந்தித் துழலாதே உயர்கருணை புரியு மின்பக் கடல்மூழ்கி
உனையெனதுளறியுமன்பைத் தருவாயே மயில் தகர்கலிடையரந்தத் தினைகாவல்
வனசகுற மகளைவந்தித் தனைவோனே கயிலை மலை யனைய செந்திற் பெருவாழ்வே
கரிமுகவனிளைய கந்தப் பெருமாளே. 3
அபகார நிந்தைபட் டுழலாதே அழியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே
உனைநானினைந்தருட் பெறுவேனோ இபமாமு கன்தனக் கிளையோனே
இமவான்மடந்தையுத் gifurrourt ஜெபமாலை தந்தசற் குருநாதா
திருவாவினன்குடிப் பெருமாளே. 4
104

காமியத் தழுந்தி
காலர்கைப்படிந்து ஒமெழுத்திலன்பு
ஒவியத்தி லந்த தூமமெய்க் கணிந்த
சூரனைக் கடிந்த ஏமவெற் புயர்ந்த
ஏரகத் தமர்ந்த
பத்தியால் யானுனைப்
பற்றியே மாதிருப் முத்தனா மாறெனைப்
முத்தியே சேர்வதற் உத்தமாதானசற்
ஒப்பிலா மாமணிக் வித்தகா ஞானசத்
வெற்றிவேலாயுதப்
காரணமதாக வந்து
காலனணு காதிசைந்து நாரணனு வேதன்முன்பு ஞானநட மேபுரிந்து ஆரமுதமான தந்தி
ஆறுமுக மாறிரண்டு சூரர்கிளை மாளவென்ற
சோலைமலை மேவிநின்ற
எதிரிலாத பத்தி
இனிய தாணிணைப்பை இதய வாரிதிக்கு
எனது ளேசிறக்க கதிரகாம வெற்பி
கனகமேரு வொத்த மதுரவாணி யுற்ற
வழுதி கூனிமித்த
105
யிளையாதே மடியாதே மிகவுறி மருள்வாயே சுகலிலா கதிர்வேலா மயில்வீரா பெருமாளே.
பலகாலும் புகழ்பாடி பெருவாழ்வின் கருள்வாயே குணர்நேயா eflsflaufrgir திணிபாதா பெருமாளே.
புவிமீதே கதிகாண தெரியாத வருவாயே
O6066 விழியோனே கதிர்வேலா பெருமாளே.
தனைமேவி யிருபோதும் ளுறவாகி அருள்வாயே லுறைவோனே புயவீரா கழலோனே பெருமாளே.
5
6
7
8

Page 59
ஈன மிகுத் துளயிறவி யணுகாதே
யானுமுனக் கடிமையென 66).T. ஞான வருட் டனையருளி வினைதீர நாண மகள்றிய கருணை புரிவாயே தான தவத்தினின் மிகுதி பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ முருகோனே ஆன திருப்பதிகமரு ளிளையோனே ஆறு திருப் பதியில் வளர் பெருமானே, 9
இருவினையின் மதிமயங்கித் திரியாதே
எழுநரகிலுழலு நெஞ்சுற் றலையாதே பரமகுரு அருள்நினைந்திட் டுணர்வாலே பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் புலவோனே சிவனருளு முருக செம்பொற் கழலோனே கருணைநெறி புரியுமன்பர்க் கெளியோனே
கனகசபை மருவு கந்தப் பெருமாளே. 10
உருவாயருவாயுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவாயுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாயருள்வாய் குகனே.
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங் காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன் வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே.
நோயுற் றடராமல் நொந்துமணம் வாடாமல் பாயில் கிடவாமல் பாவியேன் - காயத்தை ஒர்நொடிக்குள் நீக்கியெனை ஒண்போரூர் ஐயாநின் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.
GalTys ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறிசெய்தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியாரெல்லாம்.
106

ஆலம் விழுதுகள் போல் ஊரார்.ஆயிரமிருந்துமென்ன வேரென நீயிருந்தாய் நாம் வீழ்ந்து விடாதிருந்தோம்
- கணவர்
சக்தி வடிவானவளே அன்னை! அன்னை!! அவள்தானறிவாள் தான் வளர்த்தத கண்ணை கண்ணை!! சக்தி ஓம்! சக்தி ஓம்!
-மக்கள்
LuLGorjgjl fis6DisTuri siggarfuu உடற்கூற்று வண்ணம்
ஒருமட மாது மொருவனுமாகி
இன்ப சுகந்தரு மன்பு பொருந்தி
யுணர் கலங்கி வொழுகிய விந்து
வூறு சுரோணித மீது கலந்து
பனியிலொர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும வரும்பு கமடமிதென்று
பார்வை மெய்வாய்செவி கால்கை ளென்ற
உருவமு மாகியுயிர்வளர் மாத
மொன்பது மொன்று நிறைந்து மடந்தை
யுதர மகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமு நாளு மறிந்து
மகளிர்கள் சேனைதரவனை யாடை
மண்படி வந்தியுதைந்து கவிழ்ந்து
மடமயில் கொங்கை யமுத மருந்தி
யோரறி வீரறி வாகி வளர்ந்து
ஒளி நகை யூற லிதழ்மட வாரு
முவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியிலிருந்து மழலை மொழிந்து
வாவிரு போவென நாமம் விளம்ப
107

Page 60
to 60L.D60of turroll userjejL DrtL
உண்பவர் தின்பவர் தங்களொடுண்டு
தெருவில் இருந்து புழுதியளைந்து தேடிய பாலரொடோடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே
உயர்தரு ஞான குருவுபதேச
முத்தமிழின் கலையுங் கரைகண்டு
வளர்பிறை யென்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மயிர்முடி கோதி யறுபத நீல
வண்டிமிர் தண்டொடை கொண்டை புனைந்து
மணிபொ னிலங்கும் பணிகளனிந்து
மாகதர் போகதர் கூடி வணங்க
மதன சொரூபனிவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழிய வெறிந்து
மாமயில் போலவர் போவது கண்டு
மனது பொறாம லவர்பிற கோடி
மங்கல செங்கல சந்திகழ் கொங்கை
மருவ மயங்கி யிதழமு துண்டு
தேடிய மாமுதல் சேர வழங்கி
ஒரு முதலாகி முதுபொருளாக
இருந்த தனங்களும் வம்பி லிழந்து
மதன சுகந்த விதன மிதென்று
வாலிப போலமும் வேறு பிரிந்து
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பல் விழுந்திரு கண்களிருண்டு
வயது முதிர்ந்துநரைதிரை வந்து வாத விரோத குரோதமடைந்து
செங்கையி னில்ஒர் தடியுமாகியே
வருவது போல தொருமுது கூனும்
மந்தியெனும்படி குந்தி நடந்து மதியு மழிந்து செவிதிமிர் வந்து
108

வாயறியாமல் விடாமல் மொழிந்து
துயில்வரு நேர மிருமல் பொறாது
தொண்டையு நெஞ்சு முலர்ந்து வறண்டு
துகிலுமிழந்து கணையுமழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு
கவியுக மீதி லிவர்மரியாதை
கண்டிடு மென்பவர் சஞ்சல மிஞ்ச
கலகல வென்று மலசலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து
தெளிவு மிராம லுரைதடு மாறி
சிந்தையு நெஞ்சு முலைந்து மருண்டு
திடமு முலைந்து மிகவு மலைந்து
தேறி நாலதர வேதென நொந்து
மறையவன் வேத னெழுதிய வாறு
வந்தது கண்டமு மென்று தெளிந்து
இனியென கண்ட மினியென தொந்த
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற
கடன்முறை பேசு மெனவுரைநாவு
றங்கி விழுந்துகை கொண்டு மொழிந்து
கடைவிழிகஞ்சியொழுகிட வைந்து பூதமுநாலு சுவாசமுநின்று
நெஞ்சு தடுமாறி வருநேரமே.
வளர்பிறை போல வெயிறு முரோம
முஞ்சடையும் சிறுகுஞ்சியும் விஞ்ச
மனது மிருண்ட வடிவு மிலங்க
மாமலை போல்யமதூதர்கள் வந்து
வலைகொடு வீசியுயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியி விழுந்த மனைவி புலம்ப
மாழ்கின ரேயிவர் கால சறிந்து
பழையவர் காணு மெனுமய susters6ir
109

Page 61
பஞ்சு பறந்திட நின்றவர் பந்த ரிடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியுமென்று
வரிசை கெடாமலெடுமென வோடி
வந்திளமைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை யடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி யழல்கொடு போட
வெந்து விழுந்து முறிந்த நின்ங்க
ஞருகியெலும்புகருகியடங்கியோர்பீடிநீறு மிலாதவுடம்பை
நம்புமடி யேனை யினியாஸ்மே
கட்டி யணைத்திடும் பெண்டீரு மக்களுங் காலத்தச்சன் வெட்டி முறிக்கு மரம் போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற் கொட்டி முழுக்கியழுவார் மயானங் குறுகியப்பா லெட்டியடி வைப்பரோ விறைவாகச்சி யேகம்பனே.
பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை; பிறந்துமண்மே லிறக்கும் பொழுது கொடுபோவதில்லை யிடைநடுவிற் குறிக்குமிச் செல்வம் சிவன்றந்த தென்று கொடுக்கறியா திறக்குங் குமாமருக்கென் சொல்லுவேன் கச்சியேகம்பனே.
அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ வப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ பிள்ளை யெத்தனை யெத்தனை பெண்டிரோ
பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ முன்னம் யெத்தனை யெத்தனை செம்மமோ
மூட னாயடி யேனுமறிந்திலே னின்ன மெத்தனை யெத்தனை சென்மமோ வென்செய்வேன் கச்சியேகம்ப நாதனே!
முடிசார்ந்த மன்னரு மற்றுள் ளோரு முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங்கண்டு பின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால் பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றேயறிவாரில்லயே.
110

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப் பையலென்றபோதே பரிந்தெடுத்துச்-செய்யஇரு கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி?
முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்திபகலாய்ச்சிவனை ஆதரித்துத்-தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்மூட்டு வேன்.
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?
நொந்து சுமந்துபெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன்!
அரிசியோ நான்இடுவேன்? ஆத்தாள் தனக்கு வரிசையிட்டப் பார்த்த மகிழாமல்-உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே எனஅழைத் வாய்க்கு?
அள்ளிஇடுவது அரிசியோ! தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்?-மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே எனஅழைத்த வாய்க்கு.
முன்னை இட்டதீ முப்புரத்திலே பின்னை இட்டதீ தென் இலங்கையிலே அன்னை இட்டதீ அடிவயிற்றிலே யானும் இட்டதீ மூள்கமூள்கவே!!
111

Page 62
வேகுதே தீயதனில்; வெந்து பொடிசாம்பல் ஆகுமே பாவியேன் ஐயகோ-மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை.
வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில் வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன் தன்னையே ஈன்றெடுத்த தாய்!
வீற்றிருந்தாள் அன்னை, வீதிதனில் இருந்தாள்! நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள்-பால்தெளிக்க எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.
கந்தரலங்காரம்
αυ/τύι அடல் அருனைத்திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகில் சென்ற கண்டு கொண்டேன் வருவார் தலையில் தடபடெனப்படுகுட்டுடன் சாக்கரை மொக்கியகைக் கடதடதும்பக்கனிதற்றுக்கிளய களித்திளையே.
TD பேற்றைக் தவஞ்சற்றுமில்லாத வெள்ளைப்ரபஞ்சமெனுஞ் சேற்றைக்கழிய வழிவிட்ட வாசெஞ்சடாடவிமே வாற்றைப் பணியை யிதழியைத்தும் பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன்கிரு பாகரனே.
அழித்துப் பிறக்கவொட்டா வயில் வேலன் கவியை யன்பா லெழுத்துப் பிழையறக்கற்கின்றி விரெரிமூண்டதென்ன விழித்தும் புகையெழப் பொங்குவங் கூற்றன் விடுங்கயிற்றொந் கழுத்திற் சுருக்கிட்டிழுக்கு மன்றேகவி சுற்கின்றதே.
112

தேரணியிட்டுப் புரமெரித்தான்மகன் செங்கையில்வேற் கூரணியிட்டணு வாகிக் கிரெனஞ்சங் சூலைந்தரக்கர் நேரணியிட்டு வளைந்தகடக தெளிந்தது சூரிப் பேரணி கெட்டதுதே வேந்த்ரலோகம் பிழைத்ததுவே.
தேனென்று பாகென்று வமிக்கோனன மொழித்தெய்வ வள்ளி கோனன் றெனக்குபதேசித்த தொன்றுண்டு கூறவற்றோ வாணன்று காலன்று தீயன்று நீரண்டு மண்ணுமன்று தானன்று நானன்ற சரி ரியன்று சரிரியன்றே.
கோழிக் கொடியனடிபணியாமற் குவலயத்தே வாழக் கருது மதியிலிகாளுங்கள் வல்வினைநோ யூழிற் பெருவலி யுண்ண வொட்டாதுங்க எத்த மெல்லா மாழப் புகைத்து வைத்தால்வரு மோதும் மடிப்பிறகே.
சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார்யமன் சடைக்கஞ்சர் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயனுகார் கலங்கார் புவிக்கும் கரடிக்கும் யானைக்குங் கந்தனன் நூல் அலங்கார நுற்று ளொருகவி தான்கற்றறிந்தவரே.
வாழதத வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரச செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்னை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
ஆண்டான்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில் வேண்டா நமக்குமது வழியே நாம்போமளவும் எமக்கென்ன என்று இட்டுண்டிரும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
g=
113

Page 63
அதோ, அந்த ஆலமரத்து நிழலில், அந்தக் கிழவன் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான்.
கடந்துபோன காலக்கணக்குகளை ஐந்தொகை போடும் வயது. கால நெடுஞ் சாலையிலே கடைசி மைல் கல்லிலே அவன் நிற்கிறான்.
பருவ காலம் படுத்திய பாட்டை இப்போது அவன் எண்ணிப் பார்க்கிறான்.
அந்நாளில் அழகழகாக அலங்கரிக்கப்பட்ட ரோமங்கள் சிக்குப்பிடித்துவிட்டன.
பளபள வென்றிருந்த கன்னங்களிலே காலதேவன் முத்திரைக் கோடுகளைப்போட்டு விட்டான்.
வண்டியில்ஏற்றுவதற்காகச் சரக்கு ஸ்டேஷனுக்குவந்துவிட்டது. மெளன தேவதையின் பரிபூரண ஆட்சியில் அவன் அமைதியுற்றிருந்தான்.
அவனது பிரார்த்தனை எல்லாம் இது தான்: “960pGJIT! "சொர்க்கம், நரகம் என்று இரண்டிருப்பது உண்மையானால், என்னை நரகத்தக்குக் கொண்டு போ!
"இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அதுதான் நியாயம்.
"ஆசை, காதல், அன்பு, பாசம் என்ற சொற்சிலம்பங்களில் எதிலே நான் அதிகம் ஆடினேன் என்பது உனக்குத் தெரிந்ததே!
"ரத்தம் சூடாக இருந்த போது, சித்தம் கல்லாக இருந்தது.
"நரம்புகள் முறுக்கேறி இருந்தபோது, விரும்பியவை, கோடானு கோடி.
“இப்படியொருமுதுமை எனக்கும்உண்டுஎன்றுநான்எண்ணிப் பார்த்ததில்லை.
"ஆன்மாதனதுபலவிதப்பயணங்களில்எந்தஸ்டேஷனில் அதிகம் நின்றதோ, எனக்குத் தெரியாது.
114
 

“ஏதோ சில பாவங்களை நானும் செய்திருக்கிறேன். "கொதிக்கின்றவெந்நீர்,மூடியைத்தள்ளுவதுபோல்,துடிக்கின்ற ரத்தம், அச்சத்தை விலக்கியிருக்கிறது.
"செத்துப் போன ஜூலியஸ் சீஸரின் உடைவாளும் செயலற்றுப் போனது போல், முடிந்து விட்ட பருவமும் செயலற்றுப் போனதே!
"ஆரோக்கியத்தை இனி நான் எதிர்பாக்க முடியாது. "உனது அருள் வேண்டியே இந்தத் தவம். "விரும்பினாலும், விரும்பா விட்டாலும் முதுமைக் காலம் தவக்கோலமே. "geopart! "மறுபடியும் நான் பிறப்பதானால், என்னை ஒர் ஆலமரமாகப் பிறப்பித்து விடு.
"காரணம், சிலருக்காவது நிழல் தந்த வரலாறு அதற்கு இருக்கிறது".
கிழவனின் வேதாந்த ராகம் இங்கே முடிகிறது. லோகாயத வாதம் அப்போது சாரமற்றுப் போகிறது. தெய்வ தத்துவமே கண் முன்னால் தோன்றுகிறது.
பரம நாத்திகனும், படுக்கையில் படுத்த பின் இறைவனை நினைக்கிறான்.
அவனது பிரார்த்தனை பலிக்கிறதோ இல்லையோ, ஆத்மா சாந்தியடைந்து விடுகிறது.
அதோ, அந்தமரத்தடியில் கிழவன்தூங்கிக்கொண்டிருக்கிறான்.
நீங்கள் ஏன் அவனை எழுப்ப முயற்சி செய்கிறீர்கள்?
அவன் நிரந்தரமாகத் தூங்கி வெகு நேரமாகிவிட்டது.

Page 64
இறந்து போனவனை சைவர்கள் "சிவபதவி அடைந்தான் என்கிறார்கள். அந்தப்பதவி இந்தப்பதவிஎன்று அலைகின்றமனிதன், கடைசியாக அடைகின்ற பதவியே சிவபதவி. உச்சமான பதவி அது. உன்னதமான பதவி அது. எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய பதவி அது போட்டியிடுவோர் இல்லாத பதவி அது. சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்றுபலரும் விரும்பாத பதவி அது.நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தப்ப முடியாத பதவி அது. அந்தப் பதவி தவிக்க முடியாதது.
இறைவனுக்கும் நமக்கும் மட்டுழிேதரிந்த ரகசியங்களுக்காக அழவேண்டி நேர்ந்தால், நாமும் அவனும்தான் அழுதாக வேண்டும்.
மனைவி இறந்தால் மறுமணம் செய்யலாம்; பிள்ளை மடிந்தால் பெற்றுக்கொள்ளலாம்; பெற்ற தாய் பிரிந்தால் பிரிந்ததே.
நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்குப் பயப்படுவதில் அர்த்தமில்லை.
தன் ஆன்மாவை வருத்திக் கொள்வதன் மூலம், மற்ற ஆன்மாக்களைத் திருத்தியமைக்கும் தர்மகர்த்தா தியாகத்திற்குத் தயாராகுங்கள்.
உனது ஆற்றல் உண்மையிலேயே ஆற்றலாக இருக்க வேண்டுமானால், உண்மை உனக்கு உதவவேண்டும்.
மரத்தைப் கட்டிப்பிடித்துக் கொண்டு, போகிறேன் போகிறேன்" என்றால் போக முடியாது; மரத்தை விட்டால் தான் போகலாம்.
படைப்பின் நோக்கங்கள், படைப்பின் போதே தெளிவாக்கப்பட்டு விட்டன. தினமும்பாடஞ் சொல்லிக் கொண்டிருப்பது என் வேலையல்ல.
116
 

அவனிடம் பேசுகின்றேன்!
இறைவா! இரவு என்ற ஒன்றையும், உறக்கம் என்ற ஒன்றையும் மட்டும் நீ படைக்காமல் இருந்திருந்தால், மனிதர்கள் இருபது வயதுக்குமேல் வாழமாட்டார்கள்.
* உடல் இறைவன் கொடுத்த ஒரு இயந்திரம். பிறப்பிலிருந்து பருவத்துக்குப் பருவம் வளர்ந்து வரும் இயந்திரம் நாற்பது வயதுக்குப் பிறகு தேயத் தொடங்குகிறது.
உடம்பு தன் சக்தியை இழந்து விடும்போது உலகே மயங்கித் தெரிகிறது.
* சந்நியாசி அளந்து வாழ்கின்றான். சம்சாரி அளவுக்கு மீறி வாழ்கின்றான்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொன்னானே அவனை இப்பொழுது தான் நினைக்கின்றேன்.
நீங்கள் இப்பொழுதிருந்தே நினையுங்கள். தீய பழக்க வழக்கங்கள், உணவுகள் உடம்பை எவ்வளவுகெடுத்துவிடுகின்றன. இதற்கு என் அனுபவங்களே போதும்.
-கவியரசர் கண்ணதாசன்.
தேற்றம் இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும்.
-ஒளவைப் பிராட்டியார்
117

Page 65
எமது குடும்பத்தலைவியின் பிரிவுச் செய்தி கேட்டு
வெளிநாடுகளில் இருந்தும், உள்ளூரிலிருந்தும் தொலைபேசியிலும் நேரிலும் வந்து ஆறுதல் கூறியும் மலர்வளையங்கள் வைத்தும் உள்ளக் கிடக்கை தெரிவித்த இனிய நெஞ்சங்களுக்கும், எம்மோடு பல வகைகளிலும் தோள்கொடுத்தும் எமது குடும்பத் தலைவியின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று எமக்கு ஆறுதல் கூறிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், இன்றைய சபிண்டீகரண நிகழ்வில் எமது குடும்பத்தலைவியின் ஆத்மா சாந்திக்காக நடைபெற்ற பூசையில் பங்கேற்ற யாவருக்கும், இந்நூலை நன்றாக அச்சிட்டுத் தந்த லகூழ்மி அச்சகத்தாருக்கும் நன்றி கூறுகின்றோம்.
இங்ங்ணம் கணவர் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் 54, பசல்ஸ் லேன், வெள்ளவத்தை, கொழும்பு-06. தொ.பே: 590206
 

шпngФ5恒9%。
Imiqoq?!?Iloguļos Isqoq?||?IJótos@qốIlml?1ļo后94四9III096 9sq9o月9窗4 ~~******||**** possoff)qe&ísayımlooișæIR9ĴmooșÐIR9ĮĶĶnonsep 十十十十十十十
Y0LYYLY YLYL YLLLLLL LLLLLL YLLLLLL YLLYYL YLLLL
saec*ཐམ༠ན་ཚན་ཨrརྩ༠༠༩་༠རྒྱལ་*ན་མgཆ༠
•_vae aer"_*_m IIGIq|Iqolqoự||goqjq?19ơ919ŲITĻĢIJGIII(số|Imricơ9ņọ
•}|qsąžđì)*шпng?шче
역半島니a:国民명g ng高島

Page 66


Page 67

Printed by:
Luximi Printer - 195, Wolfendhal Street, Cos-13 T.P. 448545
|(330588
罰
雷
ಟ್ರಿ!
FEELD
է515)