கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சின்னராசா சரஸ்வதி (நினைவு மலர்)

Page 1


Page 2

}
S.
வண்ணார்பண்ணை-தலையாழியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
3šteryIrg|Egy
அவர்களின் சிவபதப்பேற குறித்த
f
3D
«KM, 4)
நூபகார்த்த வெளியீடு
924 O92, 92GOCOGS

Page 3
குடும்பத்தின் ஒளிவிளக்காகத் திகழ்ந்து
அன்போடும், பண்போடும், பாசத்தோடும்
எமை வளர்த்த முறையாகக் கல்வி புகட்டி வாழ்வில் வழிகாட்டியாக இருந்து எம் நலனுக்காக தன்னலம் பாராது
爵 வாழ்ந்து இன்று தெய்வத்தோடு
I கலந்து விட்ட எம் அன்புத் தெய்வத்தின்
ẩ பாதார விந்தங்களில் இம்மலரைச்
சமர்ப்பிக்கின்றோம்.
37/10, இராமநாதன் வீதி, இங்ஙனம், தலையாழி ஒழுங்கை, குரும்பத்தினர்
யாழ்ப்பாணம்.
 
 

sfallotuð
toephal
O7. 11, 1927
உதிர்ஜீ
25- 01- 200Ꮆ .
அமரர் திருமதி சின்னராசா சரஸ்வதி அவர்கள்
திதி நிர்ணய வெண்பா ஆண்டு பார்த்திய அழகுதை பன்னிரண்டில் தூண்டு ஏகாதசி திதிமிளிர - ஈண்டுபுகற் நல்ல சரஸ்வதியும் மேதினியை விட்டிவர்ந்து சொக்கண்டி ஈர்ந்த தினம்.

Page 4

Q
புத்திரியாக 7.11.1927 இல் அமரர் சின்னராசா - சரஸ்வதி
கற்றார்.
Rఈ ="%
அறர் திருவூதி - சின்னராசரி சரஸ்வதி
அவர்கவின் O O 姿
ஈழத் திருநாட்டின் வண்ணையம்பதியில் அமைந்துள்ள தலையாழி எனும் அழகிய ஊரில் உயர்திரு சின்னையா - பொன்னம்மா தம்பதிகளுக்கு மூன்றாவது மகவாக, சிரேஷ்ட
பிறந்தார்.
இவருடன் கூடப் பிறந்தவர்கள் அமரர் கணேசு, அமரர் கனகசபாபதி, மகேஸ்வரி, மாசிலாமணி, புவனேஸ்வரி ஆகியோராவார். இவர் தனது கல்வியை அயற்கிராமத்திலுள்ள பெரியபுலம் மகா வித்தியாலயத்தில்
தனது பெற்றோர் சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் போது தக்கபருவம் வந்ததும் பெற்றோர் இவருக்கு வரன் தேடத் தொடங்கினர். அத்தருணம் யாழ்ப்பாணத்திலுள்ள கந்தர்மடம் எனும் வளம் மிக்க ஊரிலுள்ள தம்பிப்பிள்ளை - மாணிக்கம் தம்பதியினரின் அன்புப் புத்திரனான வர்த்தகர் சின்னராசா அவர்களை 1949 இல் இவரது வாழ்க்கைத் துணைவனாக அமைத்துக் கொண்டனர். இவர்களது இன்பகரமான இல்வாழ்க்கையின் U66 51D5] அன்புச் செல்வங்களாக மகேசன், காலஞ்சென்ற கமலநாதன், கமலாதேவி, விஜலட்சுமி, சத்தியமூர்த்தி, சண்முகானந்தன், சத்தியசீலன், காலஞ்சென்ற குமரதாஸ், சத்தியலட்சுமி ஆகியோரைப் பெற்றனர். இவர்கள் தமது பிள்ளைகளுடன் பதினாறும்
nSS 2ر 3) صوت

Page 5
N W线
பெற்று 66DTES வாழ்ந்து அயற்கிராமத்து ஆலயங்களுக்கும் உபகாரங்கள் செய்து வந்தனர்.
இவர்கள் தமது மூத்த மகன் மகேசனுக்கு ஜெகதீஸ்வரியை மணமுடித்து வைத்து ஜெகன், குகன், ஜெயந்தன், ஜெனுசா, சிந்துயன் ஆகியோரைப்
பேரர்களாகப் பெற்றனர். மூத்த மகள் கமலாதேவியை காந்தகுமாருக்கு மணமுடித்து Dr. பிரகலாதன், பிருந்தாபன் ஆகியோரைப் பேரர்களாகப் பெற்றனர். шрањ6ії விஜலட்சுமியை அன்னாரின் அண்ணன் மகன் சிவபாத சுந்தரத்திற்கு மணமுடித்து மீராஜினி, தியாகினி, சுபாஜினி, பிரசாந் ஆகியோரைப் பேரர்களாகப் பெற்றனர். மகன் சத்தியமூர்த்தியை அன்னபூரணிக்கு மணம்முடித்து இவர்கள் லண்டனில் வசிக்கின்றனர். uᏝᏋᏏ6Ꮝ. சண்முகானந்தனை கலையரசிக்கு மணமுடித்து சாருஜா, காலஞ்சென்ற கம்சியா, அபிநயா, நிருசிகா, மிதுசா, பிருந்திகா, அர்பிந்தா ஆகியோரைப் பேரர்களாகப் பெற்றனர். LD856i சத்தியசீலனை, சசிகலாவிற்கு மணம்முடித்து ஆரபிகா, ஆர்த்திகன் ஆகியோரைப் பேரர்களாகப் பெற்றனர். கடைசி மகள் சத்தியலட்சுமியை மோகனுக்கு மணமுடித்து வைத்தனர்.
இவர் தன் கணவர் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நேரத்தில் 01-02-1996 அன்று அன்னாரது கணவரான திரு. த. சின்னராசா அவர்கள் இறைவனடி சேர்ந்தார். பின்பு இவர் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நேரம் 2002 இல் இருந்து புற்று நோயால் பிடிக்கப்பட்டிருந்தார். இறுதியாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை 25-01-2006 மதியம் காலதேவனின் அழைப்பில் இறைவனடி சேர்ந்தார். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோமாக
i.
S. NGS =)4( موت
d

இந்தியாவிலிருந்து கண்ணி அஞ்சலி
அறம் மிக்க ஆட்சி செய்யும் மன்னர் தம்மை
ஆன்றோர்கள் மன்னர்க்கு மன்னர் என்பார் உறவாலே இவரெமது அன்னைக்(கு) அன்னை
அன்பினிலும் இவரெமது அன்னைக்(கு) அன்னை இறப்பாலே இவரெம்மைப் பிரிந்தால் கூட
இதயத்தால் நினைவுகளால் என்றும் இவரை மறவோம் நாம் எனக்கூறிக் கண்ணிர் மல்கி
மனம் வாடி அஞ்சலிகள் செலுத்து கின்றோம்!
முன்பொருநாள் மலேசியாவில் நாமிருந்தோம்
உறவுகளை அறியாது தனித் திருந்தோம் அன்புசெய்து எமையெல்லாம் மகிழ்வித்து
ஆதரிக்க முதல் வந்தார் இவரே யாவார். பின்பொருநாள் இந்தியாவில் அனைவரையும்
பிரிந்திருந்த போதினிலும் தேடி வந்தார். என்புதனை உருக்கின்ற நோயில் கூட
எமைநாடி வந்தாரெம் அன்னைக்(கு) அன்னை
மாற்றுச் சிறிதும் குறையாப் பொன்னைப் போல மனம் கொண்டார்! நாமிருவர் கல்வியிலே
ஏற்றம் பெற்ற போதிலெல்லாம் உவகை கொள்வார்!
எழுபிறப்பும் இவரெமக்கு அம்மம்மாவாய்
தோற்ற வேண்டும் என இறைஞ்சி வேண்டுகின்றோம்! தேடிவந்து உதவிகளைச் செய்யும் இவரை
கூற்றுவனே உதவி கேட்க வந்தான் போலும்!
குலதெய்வமாகி இவர் வாழ்வார் எம்முள்.
கால தேவன் இவருடலில் ‘புற்று' வைத்து குடியேறி உயிர்குடித்த போதி னிலும் ஞாலத்தில் சிறந்த இவர் அன்பு மட்டும்
சிறிதளவும் குறையவில்லை. உறவுகட்கு பாலமென வாழ்ந்தார் ஒரு துயரா மெனின்
பதறி முதல் வருபவரும் இவரே யன்றோ! ஒலமிடும் உறவுகளை விட்டு விட்டு
ஒய்வு பெறச் சென்று விட்டார் சிவனடியில்.
- கா. பிருந்தாபன்.
S.
&8$$ههج
)C5 موقع

Page 6
N r്
இலண்டனிலிருந்து அஞ்சலி தூயவளம் தாயவளே தெய்வத்தின் திருவடிவம்
தாயென்னும் உறவாகி தெய்வத்தின் வடிவாகி நோயினை நீபெற்று நோகாமல் எமைபெற்று தூயபால் தந்தவுன் தனங்களைப் பறித்தார்கள் காயங்கள் ஆறியதும் கொடியவலி தீர்ந்திருக்க மாயமாய் மறுதலித்து மூச்சுப்பை சென்றடைந்து தீயதொரு நீர்சேர்ந்து திண்டாட வைத்ததுவோ ஓயாமல் ஊசிகளை ஒவ்வொன்றாய்க் குத்திவிட தாயவளே நீயழுதாய் தாங்காது துடித்தோமே!
கைம்மாறு செய்தாலும் கைப்பொருளை ஈர்ந்தாலும் உய்யவழி காட்டியவள் உயிர்தந்த அன்னையவள் செய்துவிட்ட சேவைக்கு செகத்தினிலே ஈடுண்டோ மெய்வருந்தி எமைப்பெற்று முலைப்பாலை ஊட்டியவள் கைகளிலே தாங்கியெமை கண்மூடா விழித்திருந்து பையவே வளர்த்தெடுத்து பாசத்தைப் பொழிந்திட்ட தூயவளாம் தாயவளோ தெய்வத்தின் திருவடிவம் மாயமாய் மறைந்திட்டாய் மனங்களிலே நிறைந்திட்டாய்!
கட்டிக் கொஞ்சியே கவலை போக்கியே கட்டிப் கரும்பென்று அழைக்கவே - அன்பைக் கொட்டி மார்போடு அணைக்கவே எட்டி எட்டியே உன்னை உதைத்தே முட்டி முட்டிப் பால் பருகினோம் - பாழுங் கெட்ட வினை வந்து தொட்டதோ - அதை
வெட்ட வழிசெய்து விட்டதோ - உனைப்
பட்ட மரமாக்கிப் பார்த்ததோ - பறை
n.SR =(6 ک= موعاً
絮

6སྟེང་ 1633 கொட்டி அழைத்தே சென்றதோ -அம்மா 乞 சுட்டு விட்டதோ தீயுமோ - நாம் நட்டு ஆற்றிலே விட்ட ஒடமாய் தட்டுத் தடுமாறித் தவிக்கிறோம் - உன் பட்டுக் கைகளால் தொட்டுத் தடவியே தட்டிக் கொடுத்திடும் அன்புதான் - இனிக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமோ - அது
பேருக்கும் நிகர்கொண்டு பெற்றோரும் மற்றோரும் போற்றவே வாழ்ந்தெமைப் பெற்றவள் சரஸ்வதி ஆருக்கும் தீங்கிளைத்து அறியாதே உன் - உள்ளம் அன்பாலே எம்மையே ஆட்கொண்ட திருவுள்ளம் ஊருக்கும் உறவுக்கும் உனைப் போற்றும் சேய்களுக்கும் உன் வாழ்வின் உன்னதம் உணர்த்தினாய் உத்தமியே பாருக்குள் தாய்மையைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் பகுத்தறிவும் பெற்றதனால் பாதங்கள் தொழுகின்றோம்!
கருப்பையில் உருப்பெற்றுக் காசினியைக் கண்டதுமே கறந்தோமோ உன்பாலைக் கைமாறு என்செய்தோம் நெருப்போடும் அடுப்போடும் நெடுநேரம் திண்டாடி நாவுக்குச் சுவையாக நீசமைத்து ஊட்டிவிட்டாய் உருப்படியாய் நாமுண்டு உடல்வளர்த்தோமே - அம்மா உயிர்குடிக்கும் நோய்வந்து உனைக்கொண்டு போகையிலே விருத்தெரிந்த நாள்முதல் நீவிரும்பிச்செய்த பணியெல்லாம் விரைந்து எமது மனக்கண்ணில் வந்துவந்து வாட்டுதம்மா
9. சத்தியமூர்த்தி.
N C7)= సే= موقع

Page 7
N= *3%
2 霊 اسشده ܫܠ ஓம் விரட் விஸ்வப்பிரம்மனே நமஹ' "8ാരിയാക്കെട് (ഖ് ിഞ്ഞിജ്ഞ ഉസ്മെർബ്
9.sous
பூரீதர் வில்லிசைக் கலைஞர்
சைவப்புவவர் 291,நாவலர் வீதி, கவிமணி, சிவநெறிக்கலாநிதி éaportug5), மரபுக்கலைச்சுடர் uursusreo dið. சிவநெறித் தொண்டர் 15-02-2006 திரு.இராசைன ருரீதரன்
அன்பு அன்னைக்கு எமது அஞ்சலி திருமதி சின்னராசா சரஸ்வதி
அன்னையே எங்களது அன்புத் தெய்வமே
ஆதரவு காட்டி பாசமுடன் வளர்த்தாயே! உன்னையே நாங்கள் உரிமையுடன் தொழுகின்றோம்
உண்மையாய் உன்னுருவம் மறையவில்லை அம்மா! என்னையே எப்போதும் குசலம் விசாரிப்பாயே
எம்மைத் தவிக்கவிட்டு எங்கம்மா சென்றாய்? தன்னையே கொடுத்த தாய்மையின் இருப்பிடமே!
தவியாய்த் தவிக்கின்றோம் தாயே வணக்கம் அம்மா!
புண்ணியமே செய்திட்ட புனிதம்நிறை தாயே
புகழோடு வாழ்ந்திருந்தாய் புவிமீது நீயே! கண்ணியமே கருந்தனமாய் காசினியில் திகழ்ந்தநீ
காமாட்சித் தாயின் கழலிணையில் சேர்ந்தாயோ! எண்ணிய கருமமெல்லாம் ஏற்றமுடன் செய்துவிட்டு
ஏனம்மா எமைப்பிரிந்தாய் ஏங்கியே துடிக்கின்றோம்! மண்ணிலே நின்புகழ் மாண்புடன் நிலவும்.அம்மா
மனம்நெகிழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம் தாயே!
- இராசையா யூனிதரன்
ar
يع وغ
.38,ке (8 ک= موعة

N
31.
வின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அன்னை
袭
唇ZY
= ܒܟP
திருமதி ல்வதி
p கள்
இறைபதம் எய்தியதையிட்டு நாம் மிகவும் கவலையடைகின்றோம். அவர் எம்மைவிட்டுப் பிரியவில்லை. அவரது உருவம் எம் மனதில் என்றும்
லாடுகின்றது. த்தின அன்னாரை இழந்து தவிக்கும் அவரது மக்கட் செல்வங்களுக்கும் குடும்ப ருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்க்ளைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாச்சிமார் C5aTuÎaong, இல்லினம்,
unhữLUGunuid- சிவநெறிக் கலாநிதி-கவி
ΘδματαOεταπτυμέριμαία
குடும்பத்தினர்.
冢 adh % ́`N
C9.

Page 8
s சிவமயம்
பஞ்ச புராணம்
விநாயகர் வணக்கம் திருச்சிற்றம்பலம் விநாயகனே வெவ்வினையை வேரனுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து
தேவாரம்
ஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழு தேத்தும் சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
திருவாசகம்
அன்றே எந்தன் ஆவியும் உடலும்
உடமை எல்லாமும் குன்றே அணையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலையோ இன்றோ ரிடையூ றெனக் குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே.
S.
C10) NQS مومية
 

N
می
s
gasahabarfun நீறணிபவளக் குன்றமே நின்ற
நெற்றிக் கண்ணுடையதோர் நெருப்பே வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடையெம் மற்புதக் கூத்தா வம்பொன் செயம் பலத்தரசே ஏறணி கொடியெம் மீசனே யுன்னைத்
தொண்டனே னிசையு மாறிசையே.
திருப்பண்ாைண்ரு சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகுங் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகிச் சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும்ஆகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி.
திருப் ●
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே V,
ஈசனுடன் ஞானமொழி பேசு முகமொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே மாறுபடு சூரனை வதைத்த முகமொன்றே
வள்ளியை மணம்புணர வந்த முகமொன்றே ஆறுமுக மானபொருள் நீயருள வேண்டும்
ஆதி அருணாசல மமர்ந்த பெருமாளே.
P- -
shuggalog வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
C1 TD- NSS= موع
a.

Page 9
புற்றுநோயும் விஞ்ஞானமும்
Dr. கா. பிரகலாதன் (சென்னை பொது மருத்துவ மனை)
ஆங்கிலத்தில் புற்றுநோயைக் குறிக்கும் வார்த்தையும், கடகராசியைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஒன்றென்பது எம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இவை இரண்டுக்கும் ஒரே வார்த்தை வந்ததன் காரணம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது சந்தேகமே!
கிரேக்க மொழியில் "Cancer என்பது நண்டு எனப் பொருள்படும். இதனால் நண்டு வடிவிலமைந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு கான்சர் (Cancer) என்னும் பெயர் உண்டாயிற்று. இதே போன்றே, புற்றுநோயானது அது பாதிக்கும் அவயங்களின் திசுக்களை நண்டுதன் கால்கள் கொண்டு பிடிப்பது போன்று பீடிப்பதனால், அதன் பெயரே இதற்கும் வழங்கலாயிற்று.
ஆயினும், இத்தகைய நண்டுக்கால்களையும் இன்றைய மருத்துவ விஞ்ஞானம் தளர்த்த ஆரம்பித்திருப்பது நம்பிக்கையூட்டும் வளர்ச்சிதான் ஆயினும், புற்றுநோயைத் தோற்றுவிக்கும் காரணிகளை ஆராய முற்பட்டோமானால், புற்றுநோயை அகற்றுவதில் விஞ்ஞானத்தின் பங்கு சற்றே கேள்விக்குறியாகி விடுவதாகவே தோன்றுகிறது.
புற்றுநோய் உருவாக்கத்தில் பங்கரிக்குக் காரணிகள்
புற்றுநோயை உருவாக்கும் காரணிகளை மூன்று வகைப்படுத்தலாம். அவையாவன, இரசாயனப் பொருட்கள், கதிர்வீச்சு மற்றும் சிலவகை நுண்கிருமிகள். இவற்றுள் கடைசியாகக் குறிப்பிட்டது தவிர, முதல் இரண்டு காரணிகளும் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக நாம் உருவாக்கிக் கொண்டவை என்பது கண்கூடு.
இரசாயனப் பதார்த்தங்களில் ரப்பர், சாயவகைகள், ஹைட்ரோ காபன்கள் ஆகியன முக்கியமானவை. இதன்படி ரப்பர் மற்றும் அனிலின் (Amiline) சாயத்தொழிற்சாலைகளில்
C12) NSS موعة2
3,
尧征

:)C13 موقع
(N శజ్ఞ வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறுநீர்ப்பைப் புற்றுநோய்
அதிக அளவில் உண்டாவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, புகைப்பழக்கத்தின் மூலம் தம்மை நிக்கோட்டின் (Nicotine) இரசாயனத் தாக்கத்திற்கு உள்ளாக்கிக் கொள்வோருக்கு, நுரையீரல் புற்றுநோய் மற்றோரைக் காட்டிலும் 9 மடங்கு அதிகளவில் உண்டாக வாய்ப்புண்டு.
சிலவகைக் காளானின் நச்சுப் பொருட்களும், உணவுப் பதார்த்தங்கள் கெட்டுப்போகாது பாதுகாக்கும் இரசாயனப் பொருட்களும் புற்றுநோயை உண்டாக்க வல்லன. serious babori) . Geofferi) (Aspergillus Flowus) - 6166tb ஒருவகைக் காளான் உற்பத்திசெய்யும் நச்சுப்பதார்த்தம் ஈரல்
புற்றுநோயைத் தோற்றுவிப்பதை ஆராய்ச்சிகள் தெளிவு
படுத்தியுள்ளன.
இவைதவிர நிக்கல், குரோமியம் போன்ற உலோகங் களும், வினைல் குளோரைட் (Vinyl Chloride), அஸ் பெஸ்டோல் (Asbestos) GB JT6örgp60b6nJuub புற்றுநோயை விளைவிப்பனவே.
மனிதன் உருவாக்கிக் கொண்ட புற்றுநோய் ஊக்கிகளுள் கதிர்வீச்சும் கதிரியக்கப் பொருட்களும் அடங்கும். ஓசோன் மண்டலத்தை அழிப்பதன் மூலம் தன்னைச் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளமை தோல்புற்றுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. இவைதவிர, அணுகுண்டு, அணுஉலைகள் போன்ற கதிரியக்க விஞ்ஞான வளர்ச்சிகளும் புற்றுநோயின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது.
இது தவிர, ஹெபாட்டைடிஸ் - b (HBV) வைரஸ், ஈரல்புற்று நோயையும், பப்பில்லோமா (HPV) வைரஸ் கருப்பை வாய்ப் புற்றுநோயையும் தோற்றுவிப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
புத்துகோவைத்தோர்னூகிக்குக் கார்ரமுடியாக் காரணிகள்
அவ்வாறெனில், இரசாயனங்களின் தாக்கத்தைக் குறைப்பதும், கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதும், நுண்கிருமித்

Page 10
தொற்றினைத் தடுப்பதும், புற்றுநோயை முற்றிலும் அழித்து விடுமா, என்றால் அதுவும் இல்லை!
ஏனெனில், அதிகவயதும் மரபுவழிவரும் ஜீன்களும் கூடப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் காரணிகளாகும்.
பெரும்பாலான புற்றுநோய்கள் S5 வயதுக்கு மேற்பட்டோரையே தாக்குகிறது.
இவைதவிர விழித்திரைப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், U6) கூறுகள் கொண்ட அகஞ்சுரக்கும் தொகுதியைத் தாக்கும் புற்று நோய்கள் (Multiple Endocrine Neoplasia) போன்றன ஜீன்களின் மூலம் பெருமளவு பரவுகின்றன. மேலும், மார்பகப் புற்றுநோய், சூல்பைப் புற்றுநோய் ஆகியவையும் சிறிதளவு மரபுவழியில் பரவ வாய்ப்புண்டு.
புற்றுநோய்க் கலங்களின் தோற்றமூக், உடலில் புற்றுநோயின் sižfuš
சரி, மேற்குறிப்பிட்ட காரணிகள் யாவும் புற்றுநோயை எவ்வாறு தோற்றுவிக்கின்றன? இதற்கான விடையை அண்மைய காலத்து முன்னேற்றங்களில் ஒன்றான மூலக்கூற்று உயிரியல் (Molecular bio) Qg56sogp 656Tigdigipg.
இரசாயனப் பதார்த்தங்களும், கதிர்வீச்சுக்களும், நமது உடலைத் தாக்கும்போது நமது கலங்களின் கருவில் காணப்படும் டீ.என்.எ (DNA) இதன் தாக்கத்தின் காரணமாகப்
பழுதடைகின்றது. பழுதடையும் ஜீன்களைத் தாங்கிய கலங்கள்
பெரும்பாலும் இறந்துவிடுகின்றன. என்றாலும், சிலவகைக் கலங்கள் தமது கட்டுப்பாட்டிற்குட்பட்ட பெருக்கத்தை இழந்து, அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றது. இதையே நாம் புற்றுநோய் என்கிறோம். உண்மையில் புற்றுநோய் என்பது வழக்கமான கட்டுப்பாட்டை இழந்து தன்னிச்சையாகப் பல்கிப்பெருகும் கலவரக் கலங்கள்தான்.
இவ்வாறாக உடலில் புற்றுநோய்க்கலங்கள் உருவான பின்பும் கூட இவை உடலின் பல்வேறு தற்காப்புத் தொகுதிகளைக் கடந்தே புற்றுநோயை உருவாக்க இயலும். முதலில் பழதடைந்த DNA க்களை, கலத்தின் டீ.என்.ஏ பழுது
திருத்தும் (DNA Repair) அமைப்பு உடனடியாகச் சரிசெய்ய
荷
N
. S. .C14)- NGOŞ مومية

முயலும். இவ்வாறு பழுதுதிருத்த முடியாத தறுவாயில் அந்தக் 2 கலங்களை முளையிலேயே அழித்துவிடும் நோக்குடன், *கட்டுப்படுத்தப்பட்ட கல அழிப்பு செயல்பாடு’ (Apoptosis) அடுத்துச் செயல்படுத்தப்படும். -
இந்தவகைத் தற்காப்புக்களையும் தாண்டி வாகை சூடும் கலமே பின்னர் புற்றுநோயை உண்டாக்கும்.
புர்றுநோயின் பரவல்
புற்றுநோய்க் கலங்கள் முதலில் தம்மை எண்ணிக்கையில் பெருக்கிக் கொள்ளும். பின்னர் தாம் அளவில் பெரிதானவுடன் தமக்கு வேண்டிய இரத்த ஓட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் புதிய இரத்தக் குழாய்களையும் தாமே உருவாக்கிக் கொள்ளும்(Anglogenesis) பெரிதான புற்றுநோய்க் கலங்கள் பின்னர், தம்மைச் சூழ்ந்த இரத்தக் குழாய்களைத் துளைக்கின்றது. இவ்வாறு இரத்தக்குழாய்களுக்குள் சென்றுவிட்ட புற்று நோய்க்கலங்கள் சில தமது கூட்டத்திலிருந்து இரத்தத்திற்குள் விடப்படுகின்றது. இந்தக் கலங்கள் தமது வளர்ச்சிக்கு ஏற்ற ஓர் இடத்தில் மீண்டும் இரத்தக்குழாய்களின் வழியாக வெளியேறி அங்கு வளர ஆரம்பிக்கின்றது.
இவ்வகையான புற்றுநோயின் பரவல், நோய் வீரியமடைந்த பின்னரே நிகழவாய்ப்புண்டு. இது புற்றுநோய் வளர்ச்சியின் நான்காவது படி (Stage 4) எனப்படும்.
இது தவிர புற்றுநோயின் பரவல், இரத்தக்குழாய்களின் வழியாக மட்டுமன்றி நிணநீர்க்கலங்களின் வழியாகவும். நேரடியாகத் தொடர்புடைய உடலின் இன்னொரு பாகத்திற்கும் பரவல அடையலாம
புற்றுநோயின் அறிகுறிகர்
புற்றுநோயானது உடலின் வெளியுறுப்புக்களைப் பாதிக்கும்போது இது தாக்கும் உடலின் பகுதியில் கட்டிகளாகவோ அல்லது புண்கள் போன்றோ வெளிப்படக்கூடும். மார்பகம், வாய் மற்றும் தோல் புற்றுநோய்கள் இதற்கு உதாரணமாகும்.
S
s
28ܓܶܢ
})
ìk

Page 11
絮
இது தவிர புற்றுநோய் உடலின் உட்பாகங்களில் தோன்றும்போது அதன் விளைவு பின்வருவனவற்றில் ஒன்றாக அமையலாம்.
(1) புற்றுநோயின் வளர்ச்சி அதனைச் சூழ்ந்த பகுதிகளில்
அழுத்தும்போது உண்டாகும் அறிகுறிகள்.
(2) புற்றுநோய் தாக்கும் உடற்பாகத்தின் தொழிற்பாடு
பாதிப்புறுவதனால் உண்டாகும் அறிகுறிகள்.
(3) குருதிப்போக்கு மற்றும் புற்றுநோய்ப்பகுதியில் ஏற்படும்
கிருமித் தொற்றால் உண்டாகும் அறிகுறிகள்.
பெரும்பாலும் சுரப்பிகளைத் தாக்கும் புற்றுநோய்கள் அந்தச் சுரப்பிகளின் செயல்பாட்டினை அழிக்கின்றன. இதனால் பிட்டியூட்டரி சுரப்பி (Pituitary gland) என்னும் தலைமைச் சுரப்பியில் உண்டாகும் புற்றுநோய் வளர்ச்சி உடலின் அகஞ்சுரக்கும் தொகுதி முழுவதையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதே போன்று தைராய்டு (Thyraid), சதையி (Pancreas) போன்ற சுரப்பிகளில் தோன்றும் புற்றுநோய்கள் முறையே தைராய்டு குறைபாடு, இன்சுலின் குறைபாடு போன்றவற்றை உருவாக்கலாம்.
புற்றுநோயினால் உண்டாகும் மற்றொரு முக்கிய அறிகுறி பசியின்மையும், உடல்மெலிவுறுதலும் ஆகும். புற்றுநோய்க்கலங்கள் சுரக்கும் சைட்டோகைன்கள் (Cytokines) எனப்படும். D. Luis ரசாயனப் பதார்த்தங்கள் பசியைக் குறைப்பதுடன், உடல் உபயோகப்படுத்தும் கலோரி அளவையும் அதிகப்படுத்துகின்றது. இதன் விளைவாகப் புற்றுநோயினால் உண்டாகும் உடல் நலிவுறுதல் வழக்கத்தை விட வேகமாக நடைபெறுகின்றது.
புற்றுநோயைத் தரம்பிரித்தல்
புற்றுநோயை அதன் கலங்களின் தோற்ற அடிப்படையிலும், அதன் வளர்ச்சி, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும் தரம்பிரிக்கலாம்.
கலத்தின் விருத்தி அடிப்படையிலான தரம்பிரித்தல், ‘Grading’ எனப்படும். இதன்படி புற்றுநோய்க் கலமானது, அதன்
f 苓
N
9 C16) NQÈSK موعه

M?: நிஜக்கலத்தின் விருத்தியிலிருந்து எவ்வளவு மாறுபடுகிறது என்பது நுண்ணோக்கப்படுகிறது. நிஜக்கலத்தின் விருத்தியுடன் பெருமளவு ஒத்திருக்கம் புற்றுநோய்வகை ‘Grade 1’ எனவும், பெருமளவு வேறுபட்டிருக்கும் (அதாவது தனது நிஜத் தோற்றத்தை ஏறத்தாழ இழந்திருக்கும்) கலங்கள் Grade - 4 எனவும் தரம்பிரிக்கப்படுகிறது."Grade 4’வகையே மிகவும் வீரியம் வாய்ந்தது.
“Staging என்பது புற்றுநோய் உடலில் பரவியுள்ள அளவைக்குறிக்கும். இது,
(1) Lyöp (3yöTuilä 859uloi e6T6. (Tumour Size) (2) புற்று நோய்க் கலங்கள் நிணநீர் முடிச்சுக்களில்
பரவியுள்ள அளவு (Nodes) (3) வேறு உடற்பகுதிகளை ஆக்கிரமித்தல் (Metostasi)
போன்ற மூன்று விடயங்கள் தங்கியுள்ளது. புற்றுநோய்க் கட்டியின் அளவு அடிப்படையில் (Tumour Size) இது T0 முதல் T4 வரையிலும், நிணநீர் முடிச்சுக்களில் பரவியுள்ள அளவின் அடிப்படையில் N0 முதல் முதல் N3 (Nodes) வரையிலும், இதர உடற்பாகங்களுக்கும் பரவியுள்ளதன் அடிப்படையில் (Metostasis) M0 முதல் M1 வரையிலும் தரம்பிரிக்கப்படுகின்றன.
“Staging என்பது ஒவ்வோர் பாகத்தைத் தாக்கும் புற்று நோய்க்கு ஏற்றவாறு வேறுபடுகின்றது என்றாலும், பெரும்பாலும் நிணநீர் முடிச்சுக்களை உள்ளடக்காத புற்றுநோய்கள் Stage ! அல்லது Stage 2 இன் முற்பகுதியிலும், மற்றப்பாகங்களில் பரவப்பெற்ற நோய் Stage 4 எனவும் தரம்பிரிக்கப்டுகின்றது.
&مح? -)C17 :مهم

Page 12
గ్రాN *
புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள்
புற்றுநோய்கள் முதலில் மருத்துவரின் பரிசோதனை மூலமாகவோ அல்லது X-ray, CT- Scan போன்ற தொழில் நுட்பசாதனங்கள் வாயிலாகவும் கண்டறியப்படுகின்றன.
ஆயினும், கண்டறியப்பட்டது புற்றுநோயின் வளர்ச்சிதானா, என்பது ஆய்வாகப் பரிசோதனைகளின் மூலமாக மட்டுமே நிரூபிக்கப்பட முடியும். கலப்பரிசோதனைகள்:-
புற்றுநோய்க் கட்டியை முற்றிலுமாக அகற்றிப் பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியும் முறை Excision Biopsy' எனப்படுகின்றது. மேலும், சந்தேகத்திற்குரிய கட்டியைச் சிறிய ஊசி மூலம் துளைத்து எடுக்கப்படும் கலங்களை நுணுக்குக் காட்டிமூலம் ஆராய்ந்து கண்டுபிடிக்கும் முறையும் இன்று பரவலாக உபயோகிக்கப்படுகின்றது.
இவைதவிர, புற்றுநோய் வளர்ச்சியின் காரணமாக உண்டாகும் புண்ணிலிருந்து சுரண்டி எடுக்கப்படும் கலங்களை ஆய்ந்தும் பரிசோதனை செய்யப்படலாம்.
மூலக்கூற்று ஆய்வுகள்:-
இதன்படி சிலவகைப் புற்றுநோய்களுக்கு தனிவிஷேடமாக விளங்கும் அசாதாரண DNA மூலக்கூறுகள் நவீன தொழில்நுட்ப முறையில் கண்டறியப்படுகின்றன. பெரும்பாலான இரத்தப்புற்றுநோய்களில் இவ்வகை அசாதாரண DNAக்கள் காணப்படும் வாய்ப்புக்கள் உண்டு.
மார்பகப் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றுக்கும் இவ்வகைப் பரிசோதனைகள் உதவிபுரியக்கூடும். புற்றுநோய்க்கலங்கள் சுரக்கும் விசேட இரசாயனங்கள்:-
ஈரல்புற்றுநோய், விரைப்புற்றுநோய் ஆகியன AlphaFetoprotein எனும் இரசாயனத்தையும், பெருங்குடல், சதையி, 360)Jù60ou LsÖp(35Tu656 Catcino Embryonic Antigen 6T6golò
ير
yr
G18D Nసే=– ہموات
مـــــــ
وغ

$1. 苓
لی வேதிப்பொருளையும், மார்பகப்புற்றுநோய் CA - 125 என்னும் வேதிமத்தையும் சுரக்கவல்லன.
எனவே, இவ்வகை இரசாயனப் பதார்த்தங்களின் அளவு அதிகரிப்பது இவ்வகைப் புற்றுநோய்களைக் கண்டறிய உதவிபுரியும். புற்றுநோய்க்கான சிகிச்சை
புற்றுநோய்க்கான சிகிச்சையை அடிப்படையில் மூன்று வகைப்டுத்தலாம்.
(1) அறுவைச் சிகிச்சை மூலம் புற்றுநோய்க் கட்டியை
seissborgb6). (Surgery) (2) புற்றுநோய்க் கட்டிகளையும் கலங்களையும் அழிக்கும்
LD5536i6085866i (Chemotherapy) (3) கதிர்வீச்சு மூலம் புற்றுக்கலங்களை அழித்தல் (Radio
Therapy)
பெரும்பாலான புற்று நோய்க்கட்டிகள் அறுவை சிகிச்சை
மூலம் அகற்றப்படுவது இன்றியமையாதது. எனினும் சிலவகை விரைப் புற்றுநோய்கள், மூளையில் உருவாகும் சிலவகைப் புற்றுநோய்கள் ஆகியவற்றிற்கு முதற்கட்டமாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுவதும் உண்டு.
எல்லாவகையான இரத்தப் புற்றுநோய்களுக்கும் மருந்து ep6)LDIT8666) சிகிச்சை வழங்கப்படுகின்றது. எனினும், இரத்தப்புற்று நோயானது எலும்புமச்சை மாற்று சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்தப்படலாம்.
ஆக மொத்தத்தில், புற்றுநோய்க்கான சிகிச்சை அதனை விரைவாகக் கண்டறிவதிலேயே தங்கியுள்ளது.
மெலும், இரசாயனப் பதார்த்தங்களின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு, கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தல், ஓசோன் மண்டல மீளமைப்பிற்குரிய சுற்றுப்புற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியன புற்றுநோயின் சுமையைக் குறைக்கப் பெரும்பங்கு வகிக்கக்கூடியன.
இவையெல்லாம் மேற்கொள்ளப்பட்டாலும் கூடப் புற்றுநோயின் இராட்சதக் கரங்களை இவை தளர்த்துமேயன்றி, அவற்றை முற்றிலும் ஒடிப்பதற்கு விஞ்ஞானம் கற்றுக்கொள்வதற்கான 856)) வெகுதொலைவில்
உள்ளதென்பது கசப்பான உண்மை.
Dr - கா. பிரகலாதன். Y SN 2

Page 13
মু'কৈও rg
உலகில் நிலப்பரப்பில் பெரிய நாடுகள்
(1) ரஷ்யா 17,075000 ச.கி.மீ (2) கனடா 9,976 139 சதி.மீ (3) ઈ60IIT 9,561 000 g..t5 (4) அமெரிக்கா 9, 372 614 g.g6.5 (5) பிரேசில் 8, 51 1965 ...5 (6) அவுஸ்திரேலியா 7, 682 300 er.ઠી.u6 (7) இந்தியா 3, 287 263 8.ઠી.u6 (8) அர்ஜென்டினா 2,776 654 ச.கி.மீ (9) கஸாக்ஸ்தான் 2, 717 300 g.a.L5 (10)சூடான் 2, 508 813 εκ.εξ. ιδ
உலகில் மக்கள் தொகையில் கூடிய நாடுகள் (astub UNDP Report 2004)
(1) doTIT 1, 294.9 மில்லியன் (2) இந்தியா 1,049.5 மில்லியன் (3) அமெரிக்கா 291.0 மில்லியன் (4) இந்தோனேசியா 217.0 மில்லியன் (5) பிரேசில் 176.3 மில்லியன் (6) பாகிஸ்தான் 1499 மில்லியன் (7) ரஷ்யா 144.1 மில்லியன் (8) பங்களாதேசம் 143.8 மில்லியன் (9) ஜப்பான் 127.5 மில்லியன் (10) நைஜீரியா 120.9 மில்லியன்
r
ሰር
INDFk )20( موعة

* ܒܨܟor
R
உலகில் நிலப்பரப்பில் சிறிய நாடுகள்
வாடிகன் நகரம் 0.44 ச.கி.மீ
மொனாக்கோ 1.95 ச.கி.மீ
நெளரு 21.10 s.a.LS
T69 26.00 ச.கி.மீ
சான்மரினோ 61.00 ச.கி.மீ
லிச்டென்ஸ்டெயின் 160.00 ағ.аE].ш5 மார்ஷல்தீவுகள் 18100 ச.கி.மீ செ.கிட்ஸ் நெவிஸ் 269.00 ઠr.8ી.u5 மாலை தீவுகள் 298.00 ச.கி.மீ
LDIT6)LIT 316.00 g..t5
உலகில் மக்கள் தொகையில் குறைந்த நாடுகள் (sangi UNDP Report 2004)
மக்கள் தொகை வாடிகன் 900
துரவலு 11,300 நெளரு 13,000 LugosT6 20,000 FIT6 Df(360TT 28,000 மொனாக்கோ 31,693 லிச்டென்ஸ்டெயின் 32, 204 செ.கிட்ஸ் நெவிஸ் 39,000 ஆண்டிகுவா - பார்புடா 1, 00.000 டொமினிகா 1, 00 000
C2)= కాసే جموعة

Page 14
గ్రాN =్క
உலகில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மிகப்பெரிய பத்துநகரங்கள் (2OO3)
மக்கள் தொகை
擎
டோக்கியோ (ஜப்பான்) 2, 66, 83,000 சவோபெளலோ (பிரேசில்) 1, 89, 16,000 மெக்சிக்கோநகரம் (மெக்சிக்கோ) 1,85,80,000 மும்பை (இந்தியா) 1, 73, 84,000 நியூயோர்க் (அமெரிக்கா) 1, 69, 79,000 டாக்கா (பங்களாதேசம்) l, 44, 14,000 தில்லி (இந்தியா) l, 40, 67,000 கொல்கத்தா (இந்தியா) l, 37, 84,000 லொஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) 1,37, 84,000 ஷங்காய் (சீனா) l, 30, 23,000
உலகில் நீளமான ஆறுகள்
பெயர் பாயும் இடம் நீளம் (கி.மீ) நைல்நதி எகிப்து 6690 அமேஸன் பிரேசில் 6570 மிஸிப்பி - மிஸெரி அமெரிக்கஜக்கிய
நாடுகள் 6O20
யாங்கட்டிசிகியாங் சீனா 5980 யெனிசி J6rouT 5870 அமூர் கெநான் ரஸ்யா 5780 ஒட்கிர்டிச் J6ίύu Π 5410 6TL அர்ஜென்டினா 4880 ஹோவாங்கோ - மஞ்சள்நதி சீனா 4840
காங்கோ அங்கோலா 4630
፳?
ஃ -G22 `). Nసే
2
R

గ్రాN =}°ෂු
VM
உலக கண்டங்களின் பரப்பளவு f
Quir பரப்பு (ச.கி.மீ)
ஆசியா 44. 493 000 ஆப்பிரிக்கா 30 293 000
வட அமெரிக்கா 24. 454 000
தென் அமெரிக்கா 17 838 000
அண்டார்க்டிக்கா 13 975 000
ஐரோப்பா 10, 245 000 ஒவழியானியா 8 945 000
(அவுஸ்திரேலியா மற்றும் 14 நாடுகள்)
உலகின் சமுத்திரங்களின் பரப்பு
Grufr pri (af.aŝe.euß)
பசுபிக் 18, 13,00.000
அட்லாண்டிக் 8, 22, 17.000
இந்தியா பெருங்கடல் 7,34, 26.000
ஆர்க்டிக் 1, 39, 86.000
உலகின் முக்கிய மொழிகள்
மொழியின் பெயர் பேகவோய் எண்ணிக்கை மாண்டரின் (சீனமொழி) 1025 மில்லியன் ஆங்கிலம் 497 மில்லியன் ஹிந்தி 476 மில்லியன் ஸ்பானிஷ் 409 மில்லியன் ரஷ்யன் 279 மில்லியன்
N 2 "بر
.

Page 15
அரேபிய மொழி 235 மில்லியன் வங்கமொழி 207 மில்லியன் போத்துக்கேய மொழி 187 மில்லியன் LD6DIT 170 மில்லியன் ஜப்பானிய மொழி 126 மில்லியன் பிரெஞ்சு 126 மில்லியன் ஜெர்மன் மொழி 126 மில்லியன்
உலக அதிசயங்கள்
பண்டைய உலக அதிசயங்கள்
(1) எகிப்தின் பிரமிடுகள் (2) எ.பிஸ்ஸில் உள்ள ஆர்ட்டிமிஸ் ஆலயம் (3) ஹேலிகார்னஸிஸ்ஸில் உள்ள கல்லறைமாடம் (4) அலெக்ஸாந்திரியாவில் உள்ள ஃபாரோஸ் கலங்கரை
விளக்கம்
(5) பாபிலோனியாவின் தொங்குதோட்டம் (6) ஒலிம்பஸ்ஸிலிருந்த ஜிப்ஸ் சிலை (7) ரோட்ஸில் உள்ள பேருருவச் சிலை (கொலாலஸ்)
இடைக்கால உலக அதிசயங்கள்
(1) ரோமின் கொல்லோசியம் அரங்கம் (2) நான் கிங்கின் பீங்கான் கோபுரம் (3) இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்சல் எனப்படும் மனிதப்
புதைவிடக் கற்கள் (4) பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் (5) சைனாவின் பெரிய சுவர் (6) கான்ஸடாண்டி நோபிளின் புனித சோபியா மசூதி (7) அலெக்ஸாந்திரியாவின் அடிநிலக் குடைவுக் கல்லறைகள்.
阙
S. ്. (24)= N,3ỳể

-rUr
R நவீன உலக அதிசயங்கள் (1) ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் (2) டிஸ்னிலாந்து (3) பாரிஸிலுள்ள ஜஃபில் கோபுரம் (4) பிக்பென் கடிகாரம் (S) அமர்நாத் பணிலிங்கம் (6) லிபர்ட்டி சிலை, அமெரிக்கா (7) சீனாவின் மலர்த்தோட்டம்
உலகின் சமயங்கள்
arbuo மக்கள் தொகை (2003) கிருத்தவம் 2 06 98 83 000 ரோமன் கத்தோலிக்கம் 1 09 28 53 000 புரட்டஸ்டண்ட் 36 45 30 000 ஆர்த்தடக்ஸ் 21 70 30 000 ஆங்லிகன்ஸ் 7. 99 88 000 இஸ்லாம் 1 25 42 22 000 இந்து 83 72 62 000 சீனநாட்டுப்புற சமயங்கள் 39 81 06 300 புத்தமதம் 37 29 74 000 இனக்குழு சமயம் 23 80 96 000 புத்திய மதம் 10 51 06 100 சீக்கியம் 2 42 95 200 யூதமதம் 1 45 51 000 ஆன்மிகவாதம் 27 32 600 பஹாயிஸ் 75 03 000 கன்ஃப்யூஷியன்ஸ் 64 25 300 ஜைனம் 44 13 700 ஷின் போயிஸ்ட் 26 80 300 6,6060Fu FLDub 11 18 000 சமயமற்றவர்கள் 78 42 69 000
艾父 G25)= NRGOS= مولا

Page 16
ܝܠ
ஜப்பான் பிரான்ஸ்
ஜேர்மன்
நாடு
இங்கிலாந்து
சுவீடன்
இத்தாலி
அமெரிக்கா
செல்லும்துரம்
உலகின் அதிவேக இரயில்கள்
நேர 44 நிமிடம் 48 நிமிடம் 135 நிமிடம் 101 நிமிடம் 35 நிமிடம் 95 நிமிடம் 42 நிமிடம்
உலகப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள்
e_uIprib(s)
807
774
610
600
491
487
457
435
426
421
410
365
192Km
203.4 Km
470.5 Km
303.3 Km
98Km
261 Km
10.1 Kim
(GUİT நாடு 1. ஏஞ்சல் வெனிசுவேலா 2. மோன்கி'போசன் நார்வே 3. குகேனம் வெனிசுலா 4. உதிகார்ட் நார்வே 5. ரிப்பன் அமெரிக்கா
6. drugir VI 856 7. GJm6oJuDT 56 8. அப்பர்யோசிமிட் அமெரிக்கா
9. கொலம்போ தான்சானியா 10. காவர்னி பிரான்ஸ் 11. துகேலா தென்னாபிரிக்கா
12. தகக்காவ் &56I_T
C26Ᏹ مومية
ూసీ

፨፩8`ቅ§ =2
இலகள் பெரும் பாலைவனங்கள்
Qufr நாடு பரப்பு(ச.கி.மீ) 1. சஹாரா வட ஆப்பிரிக்கா 90,64, 650 2. அரேபியன் மத்திய கிழக்கு 25, 89,800 3. கோபி சீனா 12, 94,950 4. படகோனியன் அர்ஜென்டினா 6, 73,374 5. கிரேட்விக்டோரியா அவுஸ்ரேலியா 6, 47,475 6. கலாஹாரி தென்னாபிரிக்கா 5, 82,727 7. கிரேட்பாசின் அமெரிக்கன் 4, 92,081 8. தார் இந்தியா, பாகிஸ்தான் 4,88,485 9. கிரேட்-சாண்டி அவுஸ்ரேலியா 3, 49,636 10.காரா-கும் மேற்காசியா 3, 36,687
அளவுகளும் எடைகளும்
ைெற்றிக் அமைப்பு
புவியின் மத்திய கோட்டின் நீளத்தின் 4 கோடியில் ஒரு பாகமே ஒரு மீற்றர் எனக்கொள்ளப்பட்டது. இதன்படி புவியின் சுற்றளவு 4 கோடி மீற்றர் அதாவது 40, 000Km ஆகும். ஒரு கன டெசிமீற்றர் 0.001 கன மீற்றர் கொள்ளளவு நீரின் நிறையே 1Kg என கொள்ளப்பட்டது. அத்துடன் ஒரு கனடெசி மீற்றர் (0.001 கன மீற்றர்) கொள்ளளவே ஒரு லீற்றர் எனக் கொள்ளப்பட்டது.
芝 C27)= NeFik= جموعة

Page 17
P6š6 9660as
Gӕ5шѓъ
ஒரு மனித உடலில் நாள் ஒன்றுக்கு 27949.3 இரத்தம் 99776.6 km நீளமுள்ள இரத்தக்குழாய்கள் வழியாக செலுத்தப் படுகிறது. பிறதசைகள் போலன்றி இதயத்தின் தசைகள் தன்னிச்சையாக செயற்படுகின்றன. கருவில் குழந்தை 4 வாரமாக இருக்கும்போதே நரம்புகள் தோன்றுவதற்கு முன்பே சிசுவின் உடம்புக்கு வெளியே திரவத்தில் மிதந்து கொண்டு இதயம் துடிக்கதொடங்குகிறது.
மூளை
1.36Kg எடையுள்ளது. சுமார் 100 டிரிலியன் ஒரு டிரிலியன் என்பது ஒன்றுக்கு பக்கத்தில் 18 பூச்சியங்கள் கொண்டது. செய்தி துணுக்குகளை சேகரித்துவைக்கும் திறன் கொண்டது. பயன்படுத்தும் சக்தி 20வாற் பல்புக்கு தேவையான மின்சாரத்தின் அளவு. மனித உடலில் மிக நீளமான செல் நியூரான் செல். முழு வளர்ச்சியடைந்த மூளையில் 100 பில்லியன் நியூரோன்கள் உள்ளன. ஆனால் மனிதனின் அறிவுக்கும் நியூரோன்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. நியூரோன்களின் இணைப்பு பிறப்புக்கு முன்பே தொடங்கி 2 வயது வரை தொடர்கிறது. நியூரோன் ரான்ஸ்மீற்றர் மூலம் செய்திகள் அனுப்பப்படுகின்றன.
கல்லீரல் கல்லீரல் சுமார் ஆயிரம் விதமான பணிகளை மெற்கொள்கிறது. உடலுறுப்புக்களில் கல்லீரல் மட்டுமே தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் திறன் உள்ளது. 2/3 பகுதி எடுக்கப்பட்டுவிட்டாலும் கூட அது மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.
Q8Ꭰ ూసే هموعه
p
系
مح۔

உணவுக் குழாய்கள்
வாயில் தொடங்கி மலத்துவாரம் வரையிலான குழாய் தான் உணவை நுண்ணிய துணுக்குகளாக பிரித்து உடலுக்கு அனுப்புகிறது. 70 ஆண்டுகளில் சுமார் 40 மெற்றிக் தொன் உணவை சமிபாட்டுக்காக பதப்படுத்துகின்றன.
விலுடுபு
எலும்புகளின் மொத்த எண்ணிக்கை 206. தொடை என்பு மிக நீளமானது - மிகச் சிறிய என்பு காதின் நடுப்பக்கத் திலிருக்கும் என்பு ஆகும். மிக வலிமையான என்பு கணுக்காலையும் முழங்காலையும் இணைக்கும் (Shin) எலும்பு ஆகும். சுமார் 1600Kg எடையைத் தாங்கும் சக்தி இதற்குண்டு.
தலைமயிர்
தலையில் ஒரு இலட்சத்து 25ஆயிரம் மயிர்கள் முளைக்கின்றன. தினசரி 45 மயிர்கள் விழுந்து விடுகின்றன. ஒவ்வொரு மயிர்க்காலும் தனது வாழ்நாளில் 9.14m உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
காது, நாக்கு, மூக்கு, க்ன, நரடுபு
நமது காதுகள் 1500 வெவ்வேறு ஒலிகளை கேட்டு கண், நரம்பு உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவை. நாக்கில் 10,000க்கும் மேற்பட்ட உணர்ச்சி குமிழ்கள் இருக்கின்றன. வாரந்தோறும் அவை தம்மை புதுப்பிக்கின்றன. மனிதனின் நாக்கு சமார் 500 விதமான சுவைகளை உணரும் திறன் கொண்டது. 2000 முதல் 4000 வரையிலான மணத்தை மூக்கால் உணரமுடியம். சுமார் 10,000 நிறங்களை மனிதனின் கண்களால் பகுத்தறிய முடியும். நரம்புகள் மணிக்கு 360Km வேகத்தில் செய்திகளை அனுப்புகின்றன. அதிகப்படியான வேகம் 532Km QLstgirds), அப்பென்டிக்ஸ் இரண்டும் தேவையற்ற உறுப்புக்கள் இவை இல்லாமல் எந்த பாதிப்புமின்றி மனிதனால் வாழமுடியும்.
Š
.A )29( موعة

Page 18
N 412;
リ வலையினால் நீர் பிடித்தல் சிலியின் வடபகுதியிலுள்ள மலைக்கிராமமான கலேட்டாவில் வாழும் மக்கள் தங்கள் நீர்த் தேவைக்காக பல மைல் தூரம் சென்றே நீரைப்பெற்று வந்தனர். காரணம்
மிகக்குறைந்த மழை வீழ்ச்சியே இந்நிலையில் சிலியின் சூழலியலாளர்கள் இரவில் கலேட்டாவின் மேலால் செல்லும் மேக கூட்டங்களுக்கிடையில் விளம்பரத்தட்டி போன்று அமைந்த வலையை பிடித்தனர். அதன்போது வலையில் படிந்த நீர்திவலைகள் மழையாக பொழிந்தன. இவ்விதம் ஒரு வலையில் 700 L நீர் பெறப்பட்டது. இவ்வாறு ஒரு மாதத்தில் 3 இலட்சம் L நீர் பெறப்படுகிறது. இந்நீர் அக்கிராமத்துக்கு போதுமானது.
கின்னஸில் இருந்து
> ஒரு பிரசவத்தில் பிறந்து வாழ்கின்ற மிக அதிக
குழந்தைகள் போபி மெக்கா ஹேக்கு (அமெரிக்கா) நவம்பர் 19 1997 இல் 7 குழந்தைகள் பிறந்தன. (நான்கு ஆண் மூன்று பெண்)
> மிக அதிக குழந்தைகளை பெற்றெடுத்த தாய்
ஃபியோடா வாஸில் யேவ் (ரஷ்யா) 27 பிரசவங்கள் மூலம் பிறந்த மொத்த குழந்தைகள் 69
> மிக அதிக வாரிசுகள்
முரோக்கோ சக்கரவர்த்தி இஸ்மைலுக்கு (பலதரம்) 867 வாரிசுகள் (525 மகன்கள், 342 மகள்கள்)
i 貓
冗
AG
1.
G30 `)
O
፳..ዽ
FK

ஒரு தாரம் மனம் புரிந்த சாமுவெல் எல்மாஸ்ட் (அமெரிக்கா) 1992 இல் இறக்கும்போது மொத்தவாரிசுகள் 824 (11 மகன்கள், 97 பேரன்கள், 634 கொள்ளு பேரன்கள், 82 கொள்ளு கொள்ள பேரன்கள்)
பிரசவத்துக்கு இடையே மிக நீண்ட இடைவெளி ஒரு தாயின் 2 குழந்தைகளுக்கிடையான இடைவெளி 41 வருடங்கள் எலிசபத் ஆன் எனும் இவரது முதல் குழந்தை 1956 இல் பிறந்தது இரண்டாவது குழந்தை 1997 இல் பிறந்தது.
மிகப்பெரிய இந்து ஆலயம் ரீ ரங்கம் கோயில் திருச்சிராப்பள்ளி, இந்தியா மொத்தப்பரப்பு 156 ஏக்கர்.
மிகப்பெரிய தேவாலயம் சென்-ஜோன் த டிவைன், நியூயோர்க், அமெரிக்கா. இதன் தரைப்பரப்பு 1,21,000 சதுர அடி
மிகப்பெரிய புத்த கோயில் போரோ புதுர் மத்திய ஜாவா, இந்தோனேசியா. இதன் uyůL 60,000 m2
மிகப்பெரிய மசூதி ஷாஃபைல்பால் மசூதி, இஸ்லாமபாத், பாகிஸ்தான். பரப்பு 46.87 ஏக்கர். இதன் ஹோலில் 1 லட்சம் பேருக்கு இடமுண்டு.
மிக அதிக உணவு உட்கொள்வோர் அயர்லாந்துக்காரர்கள் நாளொன்றுக்கு 3962 கலோரி
S. (3) NOŞ.

Page 19
వ్వR ኅ..”፡ 鑒
y al பிரபஞ்ச் 19ர்9ங்கள் ;
வெற்றிடம், பிரபஞ்சம், பிரக்ஞை
1930களில் வெற்றிடத்தில் விசைகள் உருவாகிற தெனவும் இவ்விசைகள் மிக நுண்ணியவை எனவும் கண்டுபிடித்தார். கஸ்மிர் எனும் இயற்பியலாளர் வெற்றிடம் என நாம் பிரபஞ்சத்தின் எந்த புள்ளியையும் கருதமுடியாது. வெற்றிடம் எனப்படுவதில் குவாண்டசலனங்கள் இருக்கின்றன என்கின்றனர் இயற்பியலாளர்கள். ரோஜா பென் ரோஸ் எனும் அறிஞர் “தன்னுணர்வை” (Consciousness) குவாண்டம் இயற்பியல் மூலம் விளக்க முற்படுகிறார்கள். பிரக்ஞைகுவாண்டம் தன்மை கொண்டதெனில் அதில் கஸ்மிர் விசைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கலாம். நுண்ணிய கஸ்மிர் விசையை அளவிட தற்போது கருவிகள் உருவாக்கப்பட்ட நிலையில் இவ் வெற்றிடத்தின் விசையை அளவிடுதல் மூலம் தன்னுணர்வின் மர்மத்தை நாம் அறிவோமா? பிரபஞ்சவியலின் சில மிகவும் ஆழ்ந்த மர்மங்களை நாம் அறியவும் கஸ்மிர்விசை பயன்படக்கூடும். பிரபஞ்சவிரிதல், பிரபஞ்சத்தோற்றம் ஆகியவற்றை அறிவியல் இன்னமும் (p(p60) pures அறிந்து விடமுடியவில்லை. குவாண்டம் வெற்றிடச்சலனக் கிளர்ச்சிகள் இப்பிரபஞ்ச நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம். என சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர் என்கிறார்கள். கஸ்மிர் விசையை அளப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கும் கொலம்பிய பல்கலைக்கழக இயற்பியலாளர் உமர் மொகைதீன். பிரபஞ்சம், பிரக்ஞை ஆகியவற்றை இணைக்கிறது வெற்றிடத்தின் விசை.
; を 啤
%
C32)
an
慈
ரs

அண்டவெளி கருத்துளைகள் (Black holes)
Buck holes என பிரபல்யமாகியுள்ள அண்டவெளி கருத் துளைகளை ஒளியையும் வெளிவிடாத அளவு கடும் வலு கொண்ட ஈர்ப்பு புலமுடைய பிரதேசங்கள் ஒரு கருத்துளையின் நிறை 10 கோடி சூரியன்களின் நிறைவுக்கு சமனாகும் இதன் ஈர்ப்பு சக்திக்கு நமது பூமி சென்றால் நமது பூமி ஒரு தோடம்பழத்தின் அளவுக்கு சுருங்கி விடும். அதிகமான நிறையும், அதிக அடர்த்தியும் கொண்ட விண்மீன்கள் தங்கள் எரிபொருள் தீரும் நிலையில் கருத்துளைகளாக மாறுவதாக வானவியலாளர்கள் கருதுகின்றனர். 1916இல் ஜன்ஸ்டைனின் Gungs & Tiru656 (Genaral theory of relativity) asqigapon கருதுகோளை முன் வைத்தவர் ஜெர்மனிய வானவியலாளரான கார்ல்ஸ்வார்ட் ஸ்சைல்ட் ஆவார். கருத்துளை தொடர்பான முக்கியக் கண்டுபிடிப்புகளை செய்தவர் சந்திரசேகர சுப்பிரமணியம். கருத்துளைகள் உண்மையில் உண்டா என்பதை எவ்வாறு அறிவது? கருத்துளைகள் எதையும் வெளிவிடாது என்பதே ஏற்கப்பட்ட கருத்தாக இருந்தது. ஆனால் 1974இல் ஸ்டிபன் ஹாக்கிங்கருத்துளைகள், துகள்களை ஒரு சீரளவில் உமிழும் எனக் கண்டுபிடித்தார். ஒளியையும் வெளிவிடாத வலுவான ஈர்ப்புப்புல பிரதேசம் எவ்வாறு இவ்வாறு இயக்க முடியும்? ஆனால் தம் சமன்பாடுகள் மூலம் இது உண்மை என நிருபித்தார் ஹாக்கிங் கருத்துளையின் விளிம்பு “Event horizon” என அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் பல இடங்களில் கருத்துளைகள் இருப்பதாக கருதப்பட்டாலும் ( உதாரணமாக சைக்னஸ் -X1) இன்னமும் அவை உறுதி செய்யப்படவில்லை. கருத்துளை காலமும் வெளியும் முடிவில் வளைவுகொள்ளும் அண்டவெளி பிரதேசம். இதன் இயற்கை என்ன? இது வேறு பிரபஞ்சங்களை உற்பத்தி செய்யக் கூடுமோ? பிரபஞ்சத்தின் ஆழ்ந்த மர்மங்களும் இதுவும் ஒன்று.
G33`). ፖፍm مومية
2;
虔会
R

Page 20
N= Ky
இருப்பருப்பொருள் (Dark Matter)
மின் காந்த அலைகளால் கண்டுபிடிக்கப்படமுடியாத இத்தகைய பருப்பொருள் பிரபஞ்சத்திலிருக்க வேண்டும் என பிரபஞ்சவியலாளர்கள் கருதுகின்றனர். காலக்ஸிகா எனப்படும் விண்மீன் மண்டலங்களை ஆராய்ந்த வானவியலாளர்கள் அவை தம் நிறைக்கு ஏற்றவாறு அல்லாமல் இரு மடங்குக்கும் அதிக வேகத்துடன் சுழல்வதை கண்டறிந்தனர். இதற்கு அவற்றில் இருக்கும் இருட்பருப்பொருளே காரணமாயிருக்க வேண்டும். மின் காந்த அலைகளால் (ஒளி, அகச்சிவப்பு, x கதிர்கள், GyugC8uT போன்றவை) அறியப்படமுடியாத இருப்பருப்பொருள் பிரபஞ்ச பொருளில் 90% இருந்தாலும் இது எங்குள்ளது? இதன் தன்மை என்ன? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.
எதிர் பருப்பொருள் (Anti Mater)
நாமறியும் ஒவ்வொரு பருப்பொருட்துகள்களுக்கும் அதன் எதிர்-துகள் உண்டு. உதாரணமாக எலெக்ட்ரான்பாஸிட்ரான் இவை இணைகையில் ஒன்றையொன்று அழித்துக்கொள்ளும் இத்தகைய பொருளிலான கிரகம் இருக்க முடியுமா? அத்தகைய பொருட்கள் நம் பூமி அல்லது சூரிய குடும்பம் மோத நேர்ந்தால் என்னவாகும்? எனும் கேள்விகள் எழுகின்றன. பிரபஞ்சத்தின் அணைத்து புள்ளிகளிலும் இத்தகைய பருப்பொருள் ஜோடித்துகள்கள் உருவாவதாக கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங். அத்தகைய எதிர்ப்பருப்பொருள் அல்லது இருபருப் பொருளை நாம் காலத்தில் பின்னோக்கி நகரும் சாதாரண பருப்பொருளாகக் காணமுடியும். எனக் காட்டினார் புகழ்பெற்ற இயற்பியலாளரான ரிச்சாட் பெயன்மான் அதாவது பாஸிட்டரான் என்பது காலத்தில் பின்னோக்கி நகரும் எலக்ட்ரான்,
وع
prw
ZN
$

3.
;
R= =1.
வாழ்க்கை
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
அதை நழுவ விடாதீர்கள் வாழ்க்கை ஒரு பயணம்
அதை சென்று முடியுங்கள் வாழ்க்கை ஒரு விடுகதை
அதை விடுவியுங்கள் வாழ்க்கை ஒரு விளையாட்டு
அதில் ஈடுபடுங்கள் வாழ்க்கை ஒரு போராட்டம்
அதை வென்று காட்டுங்கள் வாழ்க்கை ஒரு வெகுமதி
அதை ஏற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு போட்டி
அதில் வெற்றி பெறுங்கள் வாழ்க்கை ஒரு கலை
அதை அழகுபடுத்துங்கள் வாழ்க்கை ஒரு வேதனை
அதை தாங்கிக் கொள்ளுங்கள் வாழ்க்கை ஒரு சவால்
அதை எதிர் நோக்குங்கள் வாழ்க்கை ஒரு சோகம்
அதற்கு மனம் தளராதீர்கள் வாழ்க்கை ஒரு பிரச்சினை
அதற்கு தீர்வு காணுங்கள்
EC 35) -NS صوم

Page 21
;
ص
எமது குரும்பத் தலைவிய்ான எங்கள் அன்னை
அமரர் திருமதி சின்னராசா சரஸ்வதி அவர்களின் இறுதிக் கிரியைகள் மற்றும் இன்று நடைபெறும் அந்தியேட்டிக் கிரியைகளில் பங்கு கொண்டவர்களுக்கும், அன்னார் நோய்வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் 26ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவ் விடுதியில் நிலவும் மிகப் பெரும் வேலைப் பழுவுக்கு மத்தியிலும் அங்கிருக்கும் நோயாளர்களிடம் அன்பாகவும் பண்பாகவும் பழகி அந்நோயாளர்களுக்கு பெரும் சேவை புரியும் வைத்தியர்கள், தாதியர்கள் குறிப்பாக அவ்விடுதியின் பொறுப்பாளரும் டாக்டர்களுக்கெல்லாம் தன் சேவையாலும், பண்பாலும் இலக்கணமாகத் திகழும் வைத்திய கலாநிதி Dr. N. ஜெயக்குமார் அவர்களுக்கும், மற்றும் எமத தக்கத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் மலர்வளையம் சாத்தியோருக்கும், தந்தி தொலைபேசி, தொலைநகல் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இம்மலரை அழகாக அச்சிட்டுத்தந்த நாச்சிமார்கோவிலடி சாந்தி அச்சகத்தினருக்கும் எங்கள் இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்தக் கொள்கின்றோம்.
37/10, இராமநாதன் வீதி, இங்ங்னம்
தலையாழி ஒழுங்கை யாழ்ப்பாணம். குடும்பத்தினர்参
Ag ஒவ்செற் பிரிண்ட் சாந்தி 9ீதற் ஒ: யாழ்ப்பாணம்.
GT6 ; 222 2821 s C36) r-SS موعه
 


Page 22
அமரர் சின்னை
அமர் க்னேக அமர் கனகசபாபதி அமர் சரஸ்வ -H -H அமரர் சரஸ்வதி அமர்
சின்னராச
அமரர் தம்பிப்பிள்
அமரர் நடராசா அமர் நாகர்த்தினம் அமர் கணேசன்
-- -- 十 69lupyň அமர் ehog aљшеопошпет சொக்கலிங்கம் மனோன்மணி
IDG363Fair கமலாதேவி விஜயலட்சுமி சத்தியப்முர்த்தி f
-H -H --
-- ஜெகதீஸ்வரி காந்தகுமார் சிவாந்தரம் அன்னபூரணி
ஜெகன் பிரகலாதன் மீராஜினி
குகன பிருந்தாபன் தியாகினி ஜெயந்தன் -கமாஜினி e92SDSFIT பிரசாந் சிந்துஜன்
காலஞ்சென்ற கமலநாதன்

ல்சாவழி
IT -- gerDprir GhreirearibDr
V.
தி IDGæstbeanf DráforDGP புவனேஸ்வரி
-- -- 十 Θυσή பரமேஸ்வரி 3563sF6) ஞானகந்தரம்
ளை + அமரர்மானிக்கம்
அமர் சின்னராசா موسمؤسس அமரர் சண்முகநாதன்
-- -- -H elabyr ерлії சரஸ்வதி gI-rir&m 6TITerribDIT -
முதன் சத்தியசீலன் காலஞ்சென்ற சத்தியட்ைகமி
十 -- குமரதாளில் 十
கலையரசி σεΡεοπ αποπαδοί ” &FITogbegnr ܩܫܬܐܵܗ
காலஞ்சென்ற "கம்சியா ஆள்த்திகன்
அபிநயா நிருசிகா
மிதுசா
.பிருந்திகா
அர்பிந்தா

Page 23
இலங்கையின் பிரதான நகரங்களுக்கு இை
—{ 5sぬ蹴ug
O 21
七与3点01
110 219 68
107 251 64
164 157 71
14164 47
18532 142
172 295 124
207 111113
−=−
•••••ņırmsgjëơn
O
32
137 230 356 185
994图QQ
O
øvsusog)
O 352 320 408 237 32
338 39 42 68 237 26
18 335 30339029 295
đæsonpos:9ņus
O
159 457 121
187398 225 217 112 295 212
*gg
O
自e?晚母的
0 439 320
2 72 232 529 192 209 314428 257
quissouriņđầurm |
546 193245 563227 .243 191462 270
O
•7 uogosuriqiko
0 |335|241|219|961259|110|79
Jogos rūdī£
0 290 124
&su學
o T264. 23298 248 19272.266 87 55 148 the 173238 396 43 16 414 77 93
Istoolphợng
O
191|204|232|230 112|453排175|131|471|149|173|991374月156
58 130 142 172 167 378 69 98 396 60 76
hợ đìușe
O
211. 303 163 381139 261 378 346
gewooáng)
O
167 44 230 206 256 199 134 454 206 134 472 159 175 57 370 159
Hņieșș-i-non
O
172285 131
u9«»Non
O
196 272 196271 206 66 322 57 364 195249 138 212153 121
ıssorellegekeo
O
qıúhậu úsỆs@>
0 269 285 172 70 170 350 235 332 215 209 459 335 185 483.224 227 113 38206
đư9unqiło

10 Sவல்லவாய ( 0 1941வவுனியா ܚܚܚܚܚܚܚܚܐ LGouur60 தூரங்கள் O +++అది - 201 105 430 தலைமன்னார் -w-marO 264 쓰이LZ_ சியம்பலாண்டுவ O 188 283 280 |121|இரத்தினபுரி ----
18012725 புத்தளம்
142128 பொலன்னறுவை 303 299 11111 பெல்மடுல்ல
0 | 175 | 241 | 214
i
129
0 261 225 1972 -- 0 89 243 159 69 259 285 282 190 பாணந்துறை O 1821292.17 206148 165 259 256 87 நுவரெலியா 0 18377 89 340 314108 168 383 38897 நோனாகம p | 32| 230| 256274 16 101 254 341111 109 26 319 மதவாச்சி l 0 | 358| 130|126 12 133|387 1368 149| 36|470 | 261 321 136 மொனறாகலை | 0 | 191|389| 61||245||132||150|377|293||169|230|501|418|415||158| orš5op | 303 28 127286103 169|18714|154 168|24 238|156 153 1921 மாத்தளை 473 450 84 446 314 357 200 | 185 338 478 || 27 || 174 || 77 402 incremř 269| 84|2207 115 12:2211107 198 201120 334 20 248 110 மஹியங்கனை 254||246||135||227||119||121||138||122||87||119||282||246||164||161|206 || 90p"** 238 1253|167|21 103 | 105|12 154 119 103 279 1278 196 193 198 கேகாலை 575 494 185 | 547| 415| 41|459301236 14395801264 256 159 1502 காங்கேசன்துறை 277 204 153 249 77 143160 140 129 142 240 264 182 179164 &Girl -- 116| 240 | 272 1771 192| 16 197 1259 175 177 1279 1283 301 298 198 களுத்துறை 557 |476 1871529 398 13:341 283 269 14225621246 1238 14214341 யாழ்ப்பாணம் 77 || 113 || 378 || 16 || 167 || 21 105 323 330 || 124 | 152 489 || 367 || 404 || 80 || SuðungsGastral335 269 73 319 173 21 230|45 193 121426 185 186 99 2671 ஹபரண 45 235 344; 106 1290 | 89 160 |332 1248 |150 275 1465 1873 370 | 208| காலி - 309 296 80 282 150 175 93 68 140 174313192 109 106 237 sileiros" 160 || 254 |229||222 || 180 || 27 || 121 ||216 || 142 || 101 293 340 ||257 254 || 222 || Qasrub 19079 (285 128 53 15770264. 261 86 109 397 31331136 Guysene) 336 159 1211 |275|24 328 278| 95 201296 12 132 (138 237 179| மட்டக்களப்பு 211 | 89 286|150 |56 19 109|233|262129|125 1398 277 1312 (53 பதுளை ܫܚܚ 187 | 190 211 150 | 122 | 6 || 63 198 163 | 43 |228 l322 |240 237 64 | ●sâorasner 367 215 27 348 21623 259 101.74 240 319 138 106 |53 296 அநுராதபுரம் -- 288 92 296 225 22 318 28185 1311 24557 1408 206 308 128 அம்பாறை --س}
d 8 nത്ത~ a. GES 8 - a 5 a S. 5 립 ĝNTOJLO a S S 영 安 榜 E | 3 | * 摆 E a
| || | 3| | ?| | ஐ | || 3| | ஆ | 3| கிலோ மீட்டரில் 隠| 壁 |器| 愛| さ 器| 壺| 悪| 還|歪 | 歪| 選| 麗|器 (a) D督| 至 总|旨 引 旁|器 督|显 s g a a. 工 s 6 S | G || 5 | É5 | S | | d | G || 5 | GI | 6 | 5 || 5 | G | G

Page 24
*}
ಇಂ
雪
手
 
 

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இறந்தாப். எதற்காக நீ அழுகிறாய் ? எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு ? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
鹭、量毽22芝282彗