கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசம்பு சண்முகராஜா (நினைவு மலர்)

Page 1
政 溪SISÍGH{ 2007.10.07 திகதிய சில
எம் நினைவுகளில் 6
சண்முது
 
 
 

பதப்பேறு குறித்து எழுந்து ஒளிரும்
தீழ்த்

Page 2
-
-
 
 
 
 
 

சொல்லாரம் ஒன்று உம் திருவடியில் சூட்டிட
கோபுரத்தின் கலசங்களாய் - மிளிர்ந்திட வையகத்தில் எம்மை
வடிவமைத்து வளமாக்கி- ஒன்று வானுறையும் தெய்வத்துள் ஒன்றாகிவிருந்தாகி- என்றும் சிந்தையில் சிறந்திருக்கும் எம்குடும்பத்தலைவராய்-மண்னும்
சண்முகராஜாதிலகத்தின்
தூய திருவடியில் GUTLTLDSupTes-Bettg
மகிறதொருத்திரும்
ஒத்தமிழாரம் திசையெங்கும்-ஒளிரட்டும்
உங்கள் திருவடியை அலங்கரித்து உள்ளம் உவக்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Page 3

N
ØG
须
விண்ணில் நிறைந்தது 08-10-2007

Page 4

Ë 聽團 雕塑
猴
fauljala i 還鬥

Page 5

XX
திருச்சிற்றம்பலம்
தேதிதிர்பி ப4டலிகள்
ஜிநாயகர் காப்பு
விநாயகனே வெவ்வினையை வேரனுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் - தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம் தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயினும் பிணியுந் தொழிலர்பால் னிக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் றோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றா னிமையவர்க் கன்பன் றிருப்பா திருப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
சாரா ணன்தந்தை எம்பி ரான்எந்தை தம்பி ரான் என்பொன் மாமணி பேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் (யென்று நாரணன்பிர மன்தொழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக் கார ணாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லுநா நமச்சி வாயவே.

Page 6
xxxxxxxxxxxxxxxxxx essadňrupessu?»
திருவாசகம்
அரசனே அன்பர்க்கு அடியனே லுடைய
அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணவே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.
XXXXXXXXXXXX
δΦδωσύυπ இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருடபிழம் பறவெறிந்தெழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதி! அடல்விடைப் பாகா! அம்பலக் கூத்தா!
அயனொடு மாலறி யாமைப் படரொளி பரப்பிப் பரந்துநின்றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.
திருப்பல்லாண்டு
சீருந் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்; பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகுங் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
திருமந்திரம் சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.
s&
 
 
 
 

திருப்புராணம்
தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம்ஆம் என்று கண்ணில் ஆனந்த அருவிநீர்சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
einoni efl.-edrupesurren 8

Page 7
அமரர் வாழ்வூத் சித்திரத்தின்
ஹனுற்னுமிகு வடிவங்கள்.
வளங்களின் குவிப்பாக வையத்தில் விளங்குவது ஈழவள நாடு. ஈழத்தில் என்றும் தனிப்பாகமாய் அமைந்து தலையாய் மிளிர்வது யாழ்ப்பாண தீபகற்பம். கற்பங்கள் பல கழிந்தாலும் சிதையாத செழுமை கொண்ட வளமைமிக்க யாழ் மண்ணில் விண்ணளவு புகழ்கொண்டு மண்ணெங்கும் விளங்குவது இனிய சங்கைநகர். சீர்பூத்த சங்கை நகரில் பார்புகழ விளங்கும் ஏரோடும் பாராளும் வேளாண்குல திலகராய், வேந்தற்கு உரியவராய், வேதசைவ சீலராய் விளங்கியவர் சிவசம்பு சீராளர்.
சீர் மிகுந்த சிவசம்பு பெரியாருக்கும் மாசில்லா மாணிக்க அம்மையாருக்கும் வளமிகுந்த வாழ்வின் இனிய வடிவங்களாக இப்பாருலகில் வந்து அமைந்தனர் பிள்ளைகள் ஐவர். அவர்களில் அன்னபூரணம், சிவப்பிரகாசம், இராமநாதன், சரவணமுத்து என முன்னவர்கள் நால்வர் தன் முன்தோன்றி விளங்க இளைய செல்வமாய் இளமை அழகனாய் 1933.03.28ல் மண்ணில் மலர்ந்தார் திருவாளர் சிவசம்பு சண்முகராஜா அவர்கள். வளரும் பயிரை முளையில் தெரியும் என்பது போல குழந்தைப் பருவத்திலேயே தன்னுடைய திறனாற்றலைக் காட்டி வளர்ந்தார் திரு.சண்முகராஜா.
தானங்களுள் பெரியது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் எனப்படும் அறவழிக்கிணங்க தன்னுடைய தகப்பனால் தகபெற அமைக்கப்பட்ட வித்தியாலயமாக விளங்கும் சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் தன் பிள்ளைப் பருவ கல்வியைக் கற்றார். அருமைத் தந்தையரால் அவர்களுடைய சொந்த மண்ணில் முகிழ்விக்கப் பெற்ற இக் கல்விக்கூடம் அமரரான சண்முகராசா அவர்களின் தமையன் சிவப்பிரகாசம் அவர்களின் நினைவாக ஸ்தாபிதம் பெற்று, 1930 களில் ஆலமரமாக முளைவிட தொடங்கிய கல்விச் சாலை இது. சுதேசிய நினைவும், சைவ ஆச்சாரமும், தமிழின் உயிர்ப்பும் கொண்ட இவர் தந்தையார் சிவசம்பு பெரியார் ஆற்றிய பல சமூகப் பணிகள் இவ்விடத்தில் நினைவுகூறற்பாலது. எனவே தந்தை அமைத்த கல்விக் களத்திலே சிறப்புற தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.
பின்னர் உயர் கல்விக்காக ஆங்கில மொழிக் கற்பித்தலோடு விளங்கிய தமது பிறப்பிடத்திற்கு அருகில் அமைந்த சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் அக்காலத்திய S.S.C. எனப்படும் க.பொ.த.
69Hopyrir ef.A. er-esgadfruypersonTermT & XXXXXXXXXXXX & &:CD4
 
 
 

& XXXXXXXXXXXXXXXXX ен-sociru pasgub
உயர்தரக் கல்வியினைக் கற்று நிறைவெய்தினார். கல்வியில் களங்கண்டு உளம் மகிழ்ந்த திரு.சண்முகராஜா அவர்கள் உதி தியோகம் புருஷ லட் சணம் எனப் G8 u GF Lü Lu G6 Lió பொன்மொழிக்கிணங்க 1950களில் யாழ் சுகாதாரத் திணைக்களத் திலே மலேரியா நோய்த் தடுப்பு அதிகாரியாகத் தொழில் பெற்று எழில்பெற சேவையாற்றினார். மந்திகை, காரைநகர், நெடுந்தீவு, சங்கானை ஆகிய பிரதேசங்களில் உள்ள முன்னைய சந்ததியினர் இன்றுகூட அவர் பெயரை நினைவுகூர்ந்து உரையாடுவது அப்பிரதேசங்களில் அவர் ஆற்றிய சேவையின் சிறப்பினையும், மக்கள் மனங்களில் உறைந்தவர் என்கின்ற மாண்பினையும் வெளிப்படுத்து வனவாக அமையும்.
இவ்வாறு வளமுடன் சிறந்து திறனுடன் இலங்கிய விளை நிலமாக மிளிர்ந்த திரு.சண்முகராஜா அவர்களைக் குடும்பத்தினர் 1971இல் திருமண வாழ்வில் இணைத்தனர். அக்காலத்தில் சங்கானை தொட்டிலடியில் சீரும் சிறப்பும் உருப்பெற விளங்கிய காசிநாதர் பரமேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வியாக அழகுடன் பொலிந்த செல்வி அழகேஸ்வரி அவர்களை இனிய மனைக்கிழத்தியாக நன் இல்வாழ்வில் இணைத்துக்கொண்டார், திருமண வாழ்வில் இனிமை கண்டார்.
இல்வாழ்வின் இனிமையும் கனிவும் வழங்கிய இனிய கோலங்களாக தம்பதிகள் தம் வாழ்வில் காத்திரமான புத்திரச் செல்வங்களைப் பெற்றனர். நாமிருவர் நமக்கு நால்வர் - நன்மையிலும் தீமையிலும் நம்மைத் தாங்க நால்வர் என்ற கருத்தோட்டம் தோன்றும் வண்ணம் பிள்ளைகளின் பிறப்புக்கள் அவர்களுக்கு பெரும் பேறாக இறையருளால் அமைந்தன.
அவ்வகையில் 1973ல் சிவாஜினி என அழைக்கப்படும் தனது முதற் புதல்வியினையும் 1975ல் சிவசிறி என பெயர் கொண்ட மூத்த புதல்வனையும் ஆசைக்கோர் பெண்ணும் ஆஸ்திக்கோர் ஆணுமாக கண்டு மகிழ்ந்த தம்பதியினர், சிவ அருட்கடாட்சத்தால் 1976இல் மேலும் ஒரு புத்திரனை பெற்று சிவ அருள் என அழைத்து மகிழ்ந்தனர். மேலும் இவ்வருட் தொடர் தொடர கடைக்குட்டியாக பொன்போல் பெண் மகவு ஒன்று 1980இல் பொலியக் கண்டு சிவ அருட்செல்வியாக நாமம் இட்டு நாளும் பொழுதும் தம் புத்திரச் செல்வங்களை நலம்பெற பேணி வளர்த்தனர் சண்முகராஜா தம்பதியினர்.
சிந்தையும் செயலும் சிவமணம் கமழ வாழ்வியல் கருமம் கண்ட அமரர் தன் புத்திரச் செல்வங்களால் சிவ பரம்பரை ஒன்றை சிவசம்புப்
t LLSLLLLLSLSLLLLLSLL SLSLLS S LLLLLLLrLLL SLLLL SLLL HH HHHLHLLLLHLHHLL Sq W LLLLT LS LTTGTCTTTLC L0LrL0e0e00eeecKceL LKcKcLeLc0e XK

Page 8
xxxxxxxxxx esse-sacruypassaASUuð பெரியார் வழியில் அமைத்தார். வாழ்வின் சிறப்பும் திறப்பும் இதுவே! இவ்வாறு சற்புத்திரர்களை தன் சந்ததிகளாக சித்தம் மகிழக் கண்ட சண்முகராஜப் பெரியார், அவர்களை அறிவுச் செல்வங்களாக ஆற்றலின் விளைபுலங்களாக அவனியில் மேன்மைபெறச் செய்தார். இளமையின் வளமையான நிறைவோடு விளங்கிய தன் மூத்த புதல்வியை இவ்வேளை வாழ்வியலில் நிலைநிறுத்தி அவருடைய இனிய தலைவனாக நெல்லியடிப் பதியினைச் சேர்ந்த கதிர்காமநாதன் தம்பதியினரின் புதல்வனாம் சசிகரன் அவர்களை இணைவித்து உறுபணி புரிந்தார். வாழ்வியலில் வளப்பத்தில் இவர் கனடா சென்று கவின்பெற வாழ்கையில் அவர்கள் வழங்கிய அன்புச் செல்வங்களாம் தக்ஷன், யாதவன், ஜனனி ஆகிய பேரப்பிள்ளைகளை பெருமையுற கண்டு பேரின்பம் அடைந்தார்.
புதல்வியின் கடமையில் நிறைவுகண்டவாறு போல தமது மூத்த புதல்வனின் ஆக்கத்திலும் ஊக்கமுடன் முனைந்தார். இவ்வகையில் யாழ். பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பட்டதாரியாக தன்னைப் பரிணமித்துக் கொண்ட செல்வன்.சிவசிறி முன்னைப் பயனும் பின்னைய முயற்சியும் இணைய பாராளும் பணியாகிய இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தி எய்தி, பளைப் பிரதேச உதவிப் பிரதேச செயலராக செம்மையுற இம்மை வாழ்வில் அளவில்லா ஆனந்தம் கண்டார். பின்னர் அவர் பணிபுரியும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவிலேயே தன் புதல்வனுக்கான இல்லாளையும் இனம்கண்டு, நெல்லியடி பதிவாழ் சிவராசா தம்பதியினரின் புதல்வியாம் செல்வி.தர்மிலா அவர்களை மகனின் மனையாக்கி தன் அருமை மருமகளாக கண்டு மகிழ்ந்தார். ஆசிரிய உலகில் சீரிய பணிபுரியும் மருமகளும் இவ்வளத்தினால் உளம் மகிழ்ந்தார்.
முன்னைய தன் இரு பிள்ளைகளின் வாழ்வியல் வளப்பத்தில் சிறப்பமைத்தது போல தன்னுடைய மூன்றாவது பிள்ளையின் வளர்ச்சியிலும் கருத்துடன் செயற்பட்டார். லண்டன் மாநகரில் வணிகத்துறையில் விருத்தி பெற்ற தன் மகன் சிவeருள் என அழைக்கப்படும் இரண்டாவது புதல்வனை பொருத்தமுற இல்வாழ்வில் இணைவிக்கும் வகையில் 2004ம் ஆண்டு சங்குவேலியைச் சேர்ந்த இரத்தினேஸ்வரன் தம்பதிகளின் செல்வப் புதல்வியாம் ராஜி என்னும் கன்னிகையை லண்டனில் திருமணம் புரிவித்து பெருமகிழ்வு கொண்டார்.
இவ்வாறே செல்வி. செல்வி.!! என்ன செல்லமாக அனுதினமும் அழைக்கும் தன் கடைக்குட்டி மகளாம் சிவஅருள் செல்வியினை யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவத் துறை
际司 ---- X
XXXXXXXXXXXXXXXXXX
etuppi, «A. erresoxirrupesaurren 8X8XXXXXX
 
 
 
 
 
 
 
 
 

O x சண்முகதீபம் பட்டதாரியாக்கி, மானிப்பாய் பிரதேச சபையில் மனிதவள அபிவிருத்தி உதவியாளராக கடமை புரியும் நிலையமைத்தார். வளம் கொண்ட பயிராக விளங்கிய தன் புதல்விக்கு மனம் கொண்ட கணவனாக அராலிப் பதியினைச் சேர்ந்த விக்கினேஸ்வர கடாட்சம் தம்பதியினரின் மூத்த புதல்வனாம் வைத்திய கலாநிதி கிருபாலர் என்னும் மைந்தனை ஆக்குவித்து அகமிக மகிழ்ந்தார்.
வாழ்வியல் E6DDE6D6 செப்பமுற நிறைவுசெய்து எல்லோருடனும் ஒப்புரவாக வாழ்ந்து, வாழ்வில் சிறந்ததொரு செயல்வீரனாக தன்னை நிலைநிறுத்தினார் சண்முகராஜா அவர்கள். ஆழமான சமுத்திரம் அமைதியாக ஆரவாரமின்றி நீள நிலைப்பது என்ற குணசித்திர வடிவில் தன்னை உருவமைத்து உலாவிய உத்தமராக, ராசா அண்ணை என அனைவராலும் ஓயாது அழைக்கப்படும் அன்புள்ளமாக துலங்கிய இம்மாமனிதர் தன் இறுதிக் காலத்தை சமூக சமய பணிகளில் நன்கு பிணைத்துக்கொண்டார். சங்கானை நாச்சிமார் கோயில் பரிபாலன சபையின் தலைவராக ஆத்மீகப் பணிபுரிந்தார். தனது முன்னோர் ஆக்கியமைத்த யா/சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தின் சிறப்பான சரித்திர வளர்ச்சிக்கு உரித்துடையவராக அதன் பல ஆக்க வழிகளில் பொருந்தி நின்று பொறுப்பேற்று செயற்பட்டார். ஆண்டாண்டு தோறும் இக்கல்வி நிறுவனத்தின் நிறுவுனர் நினைவு நிகழ்வில் பங்குகொள்ளும் முதன்மை மனிதனாக சங்கை நகரில் சிறந்தார்.
அளப்பரிய புகழ் வளங்களை தன் உளம் மகிழ பெற்றுக்கொண்ட திரு.சண்முகராசா அவர்களை அவரது காலம் அறிந்து காலனும் அணுக தொடங்கினான் போலும். கடமை முடித்து கடமை வீரனாக குவலயத்தில் கனிந்திருந்த இம்மனிதனை இறைபதத்துள் நிறைவிக்க காலனும் நோய் என்ற போர்வையை அவர் மேனியில் சிறு காலம் உறைவித்து காரணம் காட்டினான். வாழ்விலே நிறைவு எனவே இனி என் உறைவு சிவஅருள் சந்நிதானமே என சிந்தை கொண்ட ராஜமுகம் - ஆம் சண்முகராசா எனப் பேசப்பட்ட பெருமனிதர், தன்னை 2007ம் ஆண்டு சர்வசித்து வருடம் புரட்டாதித் திங்கள் மதிதேயும் துவாதசி திதியில் மதி வளரும் நதி பாயும் அரனடியில் அணைவித்து அளவிலா ஆனந்தம் -ஆத்மசாந்தி கொண்டார். பேறுபெற்ற அவரின் ஆத்ம சீலத்திற்கு என்றும் பிரார்த்திப்போம்.
ஓம் சாநிதி, ஓம் பூரணம், ஓம் ஆனந்தம்.

Page 9
அன்புத்துணையின்துயரத்துண்Uம்:
உயர்ந்த வாழை நிறைந்த குலை தந்து
மறைந்து போய் மண்ணில் மேவுவது கண்டேன் என் கண்ணில் உறைந்த தேனாய் நிறைந்த உயிராய்
உற்ற நீ - எனைவிடுத்து விண்ணில் நிறைந்த மதியாய் சிறந்து விளங்குவது
(3u?
பிள்ணைகனின் பிரிவுப் பரிவு :
பிஞ்சாய் தஞ்சம் நீ என்று எஞ்ஞான்றும் உன்னால் தாங்கி நின்றோம் - இன்றும் மஞ்சத்தில் மலர்கண் துஞ்சும் சுகம் கண்டோம் கண்ணாய் எமைக்காக்கும் இமையாய் கருத்தில் உறைவாய் - அறைவாய் நீ யின்று எமைவிடுத்தே விண்ணாள நினைத்தது ஏனென்று!
மருமக்கள் மனம் மறுகன் :
மா மனிதன் எம் மாமா - மலையென
மாண்பு கொண்டோம் மருமக்கள் எம் பெயரில் - உனக்குறும்
புது மக்கள் நாம் உருவில் புது உறவில் பழந்தேனாய் நயந்து - எமக்கு என்றும்
இனிமை பயந்தாய் பயந்தே பயனற்றுப் போனோம் நீ - நயந்தே நீடு
வானுலகில் பாய்ந்து மறைந்ததினால்
பேரர்கள் தேடன் :
தாதா எமக்கொரு தாத்தா தாயிடம் தேடுகிறோம் வாவா என வாய் நிறைய நீ அழைக்கும் ஒசைக்காய் .
ஒடுகிறோம் பூப்பூவாய் விரியும் உன் பொன்வாய் சிரிப்பிற்காய்
ஏங்குகின்றோம் வாவா வந்தொருகால் எமக்குன் திருவடிவம்
திரும்பக் காட்டாயோ!
S&
9Huor esse. ag*cadrupasqyrtaronT
 
 
 
 

நீத்தார் நயப்பூரை=
சங்கானை செங்கற்படை மகாதேவப் பிள்ளையார் ஆயை பிரதமசிவாச்சாரியாரின் இரங்கற்செய்தி
பார்த்தவரை சிந்தை குளிர வைப்பவர், கலந்துரையாடியவர் களை உள்ளம் உவக்கச் செய்பவர், நாடிவந்தவருக்கு வேண்டிய உதவிகளை ஒடி ஓடி வழங்குவர் என சிந்தனையாலும் சொல்லாலும், செயலாலும் அனைவரும் வந்து அணையும் அன்பு வடிவம் கொண்டவர் திரு.சிவசம்பு சண்முகராசா அவர்கள். தன்னுடைய குலதெய்வமாம் செங்கற்படை மகாதேவப் பிள்ளையாரை வணங்கிப் பணிவதிலும், தான் அறங்காவலராக பணிபுரிந்த நாச்சிமார் கோவிலின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவதிலும் தனக்கு நிகர் தானே என தொழிற்பட்ட ஒரு தலைமகன் ராஜவடிவம் அமரர் அவர்கள்.
கடவுள் பணியில் மட்டுமன்றி கல்விப் பணியிலும் தம்மை இணைத்துக் கொண்ட குடும்பப் பின்னணியில் வந்த சிவசம்புப் பெரியாரின் இனிய மகன் என்பது மட்டுமல்ல கூடவே சீவ தொண்டே சிவதொண்டு என மக்களுக்கு வாழ்ந்து காட்டிய பெருமனிதர் இவர்.
அவரது மறைவு எம் அனைவருக்கும் வைரம் இழந்த நகையின் வடிவம் போல மனக்கவலை தருவது. எனினும் தன் கடன் பணிசெய்தல் என வாழ்ந்து இன்று இறைவனால் இனிதே தாங்கப்பெறும் பேறு பெற்றுள்ளார். இத்தகைய பெரியாரின் ஆத்ம ஷேமத்திற்காக மகாதேவப் பிள்ளையாரை என்றும் பிரார்த்திப்பதுடன் அவரது பிரிவால் துயருறும் மனைவி, மக்கள், மருமக்கள் அனைவருக்கும் ஆறுதலும் வழங்கி அமைதி பெறுகின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!! சர்வே ஜனா சுகினோ பவந்து.
கா.கி.கைலாசநாதக்குருக்கள் தேவாலய பிரதம சிவாச்சாரியார், செங்கற்படை மகாதேவப் பிள்ளையார் தேவஸ்தானம், சங்கானை.
அமரர் சி.கண்முகராகா

Page 10
ხhaთრoröthრo//7რთrru/ სMi/hu/რoწ’ “பிறப்பாற் தொடரும் உறவுகளைவிட பிணைப்பாற் தொடரும் உறவுகள் உன்னதமானவை” எனும் கவிஞர் கண்ணதாசன் வாசகத்தை மெய்ப்பித்த பெருந்தகை அமரர் சிவசம்பு சண்முகராசா அவர்கள்.
சங்கானை ஏழை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தனது காணியை இலவசமாக வித்தியாலயத்திற்கு வழங்கி சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தை 100 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த நிறுவுநர் அமரர் சரவணமுத்து சிவசம்பு அவர்களின் புதல்வர் அமரர் சண்முகராசா என்று கூறுவதில் நாம் பெருமிதமடைகிறோம்.
ஒரு வருடத்திற்கு முன்னர் எம்முடன் பழகத் தொடங்கிய உறவு விரைவில் எம்மை விட்டுச் செல்லும் என்று நாம் எதிர்பார்க்கவேயில்லை. கடைசிக் காலம் வரை மிகுந்த உற்சாகமாக இருந்தவர் தன் இளைய மகளின் திருமணத்தினை இனிதே அண்மையில் நிகழ்த்தி மகிழ்வடைந்தார். அமரருடன் பழகிய இனிய நினைவுகள் என்றும் நெஞ்சைவிட்டு அகலா எங்கள் குடும்பத்தில் ஒருவரானார். இனிமையாகப் பேசுவார்; இங்கிதமானவர்; அன்பாகப் பழகுவார்; பண்பட்டவர். இத் தன்மைகளினால் எம் உள்ளங்களில் இடம்பிடித்த இணையிலாப் பிரியன்.
எம்முடன் மட்டுமல்ல இம்மண்ணில் 73 ஆண்டுகள் இனிதே வாழ்ந்த பெருந்தகை. அவர் பழகிய உள்ளங்கள் அனைத்திலும் நிறைந்திருக்கின்றார்; என்றும் நினைந்திருப்பார்.
அன்னார் தனக்குவமை இல்லாதான் தாளடைந்து ஆத்மா சாந்தியுறப் பிரார்த்திக்கின்றோம்.
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு.
(உத்தரவேதம்)
அஞ்சலிக்கும், அன்பு உள்ளம், க.சிவராசா (சம்பந்தி) ஆசிரிய ஆலோசகர் கணிதம், வடமராட்சிக் கல்வி வலயம், பருத்தித்துறை.
 
 

XXXX
நீத்தார் நயப்பூரை=3
திபத்தின் சுடரொன்று அணைந்தது!
இன்னறும் கனிச் சோலைகள் செய்தல்
இனிய தீர்த்தத்தின் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தல் ஆலயம் பதினாயிரம் தாட்டல்
*பின்னருள்ள தர்மங்கள் யாவினும் கோடி புண்ணியம் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
பாரதியின் இப்பாடல் சண்முகராசா அண்ணர் அவர்களது இழப்பைக் கேள்வியுற்றதும் என் சிந்தனைக்கு வந்தது. ஆலயங்களிற்கும் அன்னதானங்களிற்கும் ஆயிரமாயிரம் பொற்காசுகளை அள்ளிவழங்கிக் கொண்டிருக்கும் அன்பர்கள் மத்தியிலும் அதனின் உயர்ந்த சீரிய மேன்மைமிகு அறப்பணியை இனங்கண்டு சங்கைநகர் மக்களின் அளிவொளி பிரகாசிக்க யா/சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் என்னும் செம்மைமிகு விளக்கை ஏற்றிவைத்த பெருந்தகை சிவசம்பு பெரியார் அவர்கள்.
‘எழுத்தறிவித்தவன் இறைவனாவான்’ ஒரு சாண் மண்ணிற்காக அயலாருடன் போட்டியிட்டு சண்டைபோடும் மக்கள் மத்தியில் தன் சொந்த மண், பணம் என்பனவற்றை ஏழைகளுக்கு எழுத்தறிவிக்கின்ற இலவச பாடசாலையை அமைக்க வழங்கிய செம்மல் சிவசம்பு அவர்களது மகனான சண்முகராசா அவர்கள் தந்தை ஏற்றிவைத்த இக்கல்வித் தீபம் என்றும் பிரகாசிக்க தன்னாலான உதவிகள் பல செய்து வந்தார்.
பாடசாலை பல வழிகளில் பிரகாசித்துக் கொண்டிருந்த இவ்வேளையில் இச்சுடர் அணைந்தது காலத்தின் நியதியோ! காலனின் செயலோ!! யாம் என்ன செய்ய முடியும். படைத்தவன் ஆட்டுகின்றான் நாம் ஆடுகின்றோம். அன்னாரது ஆத்மா, நாம் ஆடுவதற்காக தானும் சதிர் ஆடிக்கொண்டிருக்கும் கூத்த பிரானின் குஞ்சித பாதங்களை அடைய இறைவனை இறைஞ்சுகின்றேன்.
திருமதி.ச.யோகேஸ்வரன்,
அதிபர், யா/சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம், சங்கானை.

Page 11
நீத்தார் நயப்பூரை-4
The Greatness and Wertues of Late S.Sanmugarajah, in Summary
You Lived to your Name
Born to a renowned family, monumentis Sivapiragasa Maha Vidyalayam,
Chankamai. Sincere
A dutiful son to your father and mother Active
Married to a descendant of respectable family N oble
Worked at Government hospitals, as Malaria Preventive officer, outdoor Morality
Earned a memorable image among colleagues United
A devoted Husband to your wife G enerous
A loving Father to your sons and daughters A daptable
Bred your, Children with morality Responsive
Took keen interest in their studies that promoted them to popular positions Acumen
An optimist and orthodox • ustice
Always in the forefront in all functions A micable
Have left legacy "A compassionate man" to all who knew you Hurinamitarian
In conclusion, we express our sincere Condolences of S.Sanmugarajah Demise to Lady Alageswary, his wife, for her never ending Endurance of Love and Affection in looking after him during his ill health. Our sympathies to his children, Sivaginee family (in Canada) Mr. Mrs.Sivasiri, SivaArul family (in London) SivaArulchelvi and her Husband Kerupaalar (in London)
May your soul rest in peace
Poologasuntharam family, Chankanai.
eHogiT afR.a-esgdirpasgnTa-nT 8X2
 
 

r.
XX
நீத்தார் நயப்பூரை=5
Amacıpasü நிதம் காணும் அன்பு முகங்களில் - ஓர் ராஜமுகம் திறம் காட்டும் மனிதர்களில் - ஓர் ராஜபுருஷன் பணி செய்யும் புனித பண்புகளில் - ஓர் ராஜவீரன் அணி காட்டும் அழகு வடிவங்களில் - ஓர் ராஜமோகன் கனி சொட்டு வார்த்தை வளத்தில் - ஓர் ராஜகிதன்
இதம் காட்டும் மனமோக யோகத்தில் - ஓர் ராஜயோகன்
ஆம் இவ்வாறு ஆறு வாழ்வு ஆதாரத்திலும் என் அண்ணை ஓர் சண்(6)முகராஜா - ஆறு இடங்களிலும் அனைவருக்கும் ஆறுதலளிக்கும் தேறுதல் வழங்கும் பெருந்தலைவன். அவர் வழிகாட்டலில் வாழ்வு பெற்றோர் பலர். திசை காட்டியாய், குறிகாட்டி ஒளிவிடும் கலங்கரை விளக்காய் பலர் துன்பம் களைந்தவர் துயர் கலைத்தவர், அவர்களை இன்பத்தில் கரைத்தவர் அமரர் சண்முகராஜா. எம்மை எல்லாம் இன்று துயர வெள்ளத்தில் துவளவிட்டு விண்ணவர்க்கு S60flu விருந்தாக அவர் வாழ்வளிக்கின்றார். பிறப்பு, இறப்பு என்பது பூட்டித் திறக்கும் வீட்டின் கதவுபோல. ஆனால் அமரர் அவர்கள் தமது கர்மயோக சிறப்பால் இன்று பிறப்பு இறப்பில்லா பெருவாழ்வு பெற்று பேரானந்தம் தரும் சிவகதியில் சிறந்துள்ளார். அவர் பிரிவுத் துயரால் வாட்டமுறும் குடும்பத்தினருக்கு ஆறுதலும் பரிவும் வழங்குவதுடன் அமரரின் ஆத்ம சாந்திக்காக ஆனைமுக கடவுளின் பாத பதுமங்களை அன்புடன் பணிகின்றேன்.
அஞ்சலிக்கும்,
அன்பு உள்ளம்,
தி.சிவதட்சணாமுர்த்தி உதவிப் பணிப்பாளர் - தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், uusTUp LDT6)ILLLö.
XXXXXXXXXX

Page 12
அமரர் சண்முகராஜா அவர்களின்
நினைவாக...
ല്പ .. <
ഭമ് { zarárff fasfig ருைத்துதிக் குறிcேtக்கள்
இப்போதும் நீங்கள் இப்படியா..?
இனிமேலும் வேண்டாம் .
எமது உடலிலே.
ஏன். இதற்கு இப்படி?
நம்பினால் நம்புங்கள்
 
 

兹
安
母
X: assoarUpeaAULE இப்போதும் நீங்கள் இப்படியா?
கண்கள் சிவந்து காணப்படும் சந்தர்ப்பங்களில் அதைப் போக்குவதற்காக தாய்ப்பாலை கண்ணின் மீது விடுபவர்களும் உள்ளனர். இது மிகத் தவறானதாகும். தாய்ப்பாலுக்கும் கண்ணின் சிவப்புக்கும் எதுவிதமான தொடர்புமில்லை.
அடிக்கடி காதுக்குள் எண்ணையோ, சொட்டு மருந்துகளோ விட்டுக்கொண்டிருந்தால் பூஞ்சைபடர்ந்து வலி அதிகமாகிவிடும். செவிப்பறை ஒட்டையாகியிருந்தால் உள்ளேயெல்லாம் பூஞ்சையின் ஆதிக்கம் அதிகமாகி சீழ் வடிய ஆரம்பிக்கும். காது கேட்பது படிப்படியாக குறைந்துவிடும்.
நிறம் குறைவாக இருப்பவர்களில் பலர் பலவிதமான சோப்புகளையும், கிறீம்களையும் உபயோகித்து நிறத்தை அதிகரிக்க முயற்சிப்பார்கள். என்னதான் செய்தாலும் எம் தோலின் நிறம் மாறாது என்பதே உண்மையாகும்.
சராசரியாக மனிதன் ஒருவனுக்கு 05.mm நீளம் தினமும் தலைமுடி வளர்கிறது. அடிக்கடி “சேவ்” செய்தால் முடி அடர்த்தியாக வளரும் என்பதிலும் மொட்டை அடித்தால் முடி கருகருவென்று வளரும் என்பதிலும் உண்மையே இல்லை.
தொழுநோயினை ஏற்படுத்து Leprabacili எனும் பற்றீரியா. இது மிகச் சிறியது என்றாலும் இதை அழிப்பதற்கு பலமுனைத் தாக்குதல் தேவை. இவ்வாறான சிகிச்சை Multi drug theraphy எனப்படுகிறது. சிலரது கூற்றுப் போல் பாவ புண்ணியத்திற்கும் தொழுநோய்க்கும் எதுவித தொடர்புமில்லை.
இரத்தக் கொதிப்புடையவர்கள் (High Blood Pressure) பொதுவாக ரொம்பக் கோபப்படுவார்கள், எதற்கெடுத்தாலும் கத்துவார்கள், என்று பேசப்படுவதிலும் துளியும் உண்மை இல்லை. கோபம் இரத்தக் கொதிப்பின் ஓர் அடையாளமே இல்லை.
காக்கைவலிப்பு நோய் ஏற்படுபவர்களுக்கு வலிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அநேகமானோர் இரும்புப் பொருட்களைக் கையில் கொடுப்பார்கள். இது ஒரு மூடத்தனமான நம்பிக்கை.
குறட்டைவிடும்போது சுவாசம் தடைப்படுவதால், இரத்தத்தில்
ஒட்சிசன் அளவு குறைகின்றது. இப்படியே தொடர்ந்து குறட்டை விட்டுக்கொண்டிருந்தால் குறைவான ஒட்சிசனால் மூளையின்
KKKKKK
0LLTL LTLLLLLTTTCTL ceLLDDBkkkkDkDkDkDBDDDeBLLLLLLLLL

Page 13
CCCCCCC C xxxxxxxxxxxxxxx aspeksodrypasssub செயல் திறன் குறைந்து மறதி, எரிச்சல், கோபம் என்று பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர இரத்தக் கொதிப்பு, நெஞ்சுவலி, பக்கவாதம் போன்றவை உண்டாகலாம். இது குறட்டைவிட்டு தூங்கி நிம்மதி அடைய எண்ணுவோரின் கவனத்திற்கு!.
XXXXXXXXXXXXXXXX
X
இனிமேலும் வேண்டாம்.
* காதில் இருக்கும் குரும்பியை வெளியேற்றுவதற்காக அநேகமானோர் பலவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பர். ஆனால் உண்மையில் குரும்பி என்பது செவிப்பறையைப் பாதுகாப்பதற்காக உள்ள ஒரு பதார்த்தமாகும். செரமினஸ் சுரப்பியால் சுரக்கப்படும் இக்குரும்பி துசுகளோ வேறு அழுக்குகளோ செவிப்பறையை அடையாது தடுத்து நிறுத்துகின்றது. அத்துடன் இது தானாகவே வெளியேறிவிடும் இயல்புடையது.
* காதுவலி என்றாலோ, காதுக்குள் ஏதாவது பிரச்சினை என்றாலோ நாம் தொடவே கூடாத பொருள் “பட்ஸ்” (earbuds) ஆகும் காதுக்குரும்பியை எடுப்பதற்காக பட்ஸ் பயன்படுத்தும் போது குரும்பியை இன்னும் உள்ளே தள்ளி விடுகின்றோம். இதனால் செவிப்பறை பாதிப்படையும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
* பெரும் சத்தமும் இரைச்சலும் மனோரீதியாக நமக்குப் பிரச்சனையை ஏற்படுத்துவதோடு வயிற்றில் புண். அஜீரணக் கோளாறு, இரத்த அழுத்தம் என்பவற்றிற்கும் காரணமாக அமையும் கண்ணின் பார்வையைக்கூட சதத்தம் பாதிக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். எனவே இனியாவது இவற்றை இயன்றவரை குறைப்போமா?
* சிலர் குழந்தைகளை உயரே தூக்கிப் போட்டுப் பிடிக்கும் போது குழந்தை சிரிப்பதைக் கண்டு சந்தோசப்பட்டுக் கொள்வர். ஆனால் அந்த மழலையின் சிரிப்பிற்குப் பின்னால் “தலைகுலுக்ககாயம் (Shaking Headlinjury) எனும் உயிராபத்து இருப்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் மூளை கடுமையாகப் பாதிக்கப்படும் குழந்தை சிறிது நேரம் கழித்து
அழும் பின்பு தூங்கும். சில நேரம். விழிக்காமலே போய்விடும். * சிலவேளைகளில் முக்கியமான இடங்களில் நிற்கும் போது தும்மல் வந்தால் நாகரீகம் கருதி அதை அடக்க முயற்சிப்போம். ஆனால் இதனால் பலவிதமான ஆபத்துக்கள் ஏற்படும்
x16
S
69tionsir ef. epreseudrupassymrgrm
 
 
 
 
 
 
 

சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. தும்மும் போது சுமார் 100 மைல் வேகத்தில் காற்று உள்ளேயிருந்து வெளிவருகின்றது. எனவே இதை அடக்கும் போது இக்காற்று எங்கெல்லாம் புகமுடியுமோ அங்கெல்லாம் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
புகைப்பவர்களினை அது 75% பாதிக்கின்றது என்றால் அந்தப் புகைகளை சுவாசிக்க நேரிடும் ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் இதனால் 25% பாதிப்புக்குள்ளாகின்றார்கள். எனவே தயவுசெய்து புகைத்தலைத் தவிர்த்து அதனால் நீங்களும் வாழ்ந்து மற்றோரையும் வாழவிடுங்களேன்!
மூக்கினுள் அதிகமான இரத்தக் குழாய்கள் செல்கின்றன. மூக்கை நோண்டும் போது இவை சேதமடைவதால் ஏற்படும் பாதிப்பு மூளைவரை கூட சென்றுவிடும். எனவே இதைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகின்றது. எனவே பொழுது போகாதவிடின் இத்தகைய முயற்சியில் இறங்கிவிடாதீர்கள்.
முறையான உடற்பயிற்சிகள் இதயத்தின் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது உண்மை தான். அதேநேரம் சில பயிற்சிகள் இதயத்துக்கு எதிரானதாகவும் காணப்படுகின்றன. போட்டிகளில் பங்குபற்றுபவர்களைவிட ஏனையோர் பளுதூக்குதல் போன்றவற்றில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. பளு தூக்கும் வீரர்களை ஹார்ட் அட்டாக் அதிகளவில் பாதிக்கின்றது என அறியப்பட்டுள்ளது. பேரழகனாக முயல்வோரே பேராபத்து புரிகிறதா?
அதிகமாக பேசுவது, அதிகநேரமாக பேசுவது, குரல் மாற்றி பேசுவது போன்றவற்றால் குரல் நாணில் வீக்கம் ஏற்பட்டுவிடு கின்றது. சிலர் இரகசியமாக மற்றவர்களுக்கு கேட்காமல் குசுகுசுவென சத்தமே இல்லாமல் பேசுவார்கள். இதுதான் மற்ற எல்லாரையும்விட குரல் நானுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த இரகசியத்தின் இரகசியம் எப்படி இருக்கிறது!
குண்டாக இருப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழு உடலும் குண்டாக இருப்பது. மற்றையது வயிற்றுப்பகுதி மட்டும் குண்டாக இருப்பது (தொப்பை). முதல் வகையினரோடு ஒப்பிடும் போது இந்தத் தொப்பை உள்ளவர்களுக்குத்தான் பெரும்பாலான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே தொப்பைக்கு போடுவோம் குட்பை

Page 14
என்புகளின் எண்ணிக்கை - 206
மிகப் பெரிய அங்கம் - தோல் தசைகளின் எண்ணிக்கை - 639 மிகப் பெரிய சுரப்பி - ஈரல்
மிகப் பெரியதும், மிக நீளமானதும், மிகப் பலம் வாய்ந்ததுமான என்பு தொடை என்பு ஆகும்.
மிகச் சிறிய என்பு செவிச்சிற்றென்பு. எமது உடலின் தலைமைச் சுரப்பி - கபச்சுரப்பி
நீளமான என்புகளில் (டுழபெ டிழநெள) உடலச்சுக்கு கிடையாக அமைந்திருப்பது - சிறுசாவி என்பு
மிகவும் நீளமான கலம் - நரம்புக்கலம் அகஞ்சுரக்கும் சுரப்பியாகவும், புறஞ்சுரக்கும் சுரப்பியாகவும் தொழிற்படுவது - சதையி கருத்தரித்த பின் முளையத்தில் முதல் தோன்றும் அங்கம் - இதயம்
இறந்த பின்னரும் வளர்பவை - மயில், நகம்
ஏழு துவாரங்கள் சந்திக்கின்ற ஓரிடம் - தொண்டை. இங்கு ஊத்தேக்கியாவின் துவாரம் 2, மூக்குத் துவாரம் 2, வாய்த் துவாரம், உணவுக் கால்வாய், குரல்வளை என்பன திறக்கின்றன.
மிகப் பெரிய முள்ளந்தண்டென்பு - ஐந்தாம் நாரி முள்ளந்தண்டென்பு ஏனையவற்றிலும் பார்க்க அதிகளவு அசைவக் காட்டும் மூட்டு தோள் மூட்டு.
&
 
 

oesorpesus ஏன். இதற்கு இப்படி?
சிறுவர்களில் சிலருக்கு வரிசையாக விரல் வைத்து வாசிப்பது, பேனாவை ஒரேயடியாகச் சாய்த்து / நிமிர்த்திப் பிடித்து எழுதுவது, பார்த்து எழுதும் போது தப்பாக எழுதுவது போன்ற பழக்கங்கள் காணப்படும். இவை “டிஷலெக்ஸியார்” எனும் நோய்க்கான அறிகுறிகளாகும். இது மூளையின் வலது, இடது பக்கங்களுக்கு இடையில் சரியான தொடர்பு இல்லாததால் ஏற்படுகின்றது. புகழ் பெற்ற விஞ்ஞானிகளான ஜன்ஸ்ரீன், எடிசன் போன்றோர்கூட இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
冈灭兀
AA
எமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தனக்குரிய இரத்தப் பங்கைப் பெறப் போட்டியிடுகின்றன. இதனாலேயே வயிறு நிறையச் சாப்பிடும் போது அது சமிபாடடைவதற்காக வயிற்றுப் பகுதிக்கு அதிக இரத்தம் தேவைப்பட மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவடைகின்றது. இதனால் தலையினுள் நிகழும் சிறிய குழப்பத்தையே “உண்ட மயக்கம்” என்கிறோம்.
மூக்கடைப்பு என்பது வயது வேறுபாடின்றி அனைவருக்கும் ஏற்படுகின்ற ஒரு சிக்கல் ஆகும். பொதுவாக ஜலதோஷம், அலர்ஜி போன்றவற்றாலேயே முக்கடைப்பு ஏற்படுகின்றது. சிலருக்கு மூக்கினுள் உள்ள எலும்பு வளைந்திருப்பதாலும் சதை வளர்ச்சியாலும் இது ஏற்படுகின்றது. இச்சதை வளர்ச்சி கவனிக்கப்படாவிட்டால் ஆஸ்துமா நேரிடும் வாய்ப்புண்டு.
நாம் கைகளையும் கால்களையும் அசைப்பது மூளையின் நரம்புக் கலங்களிலிருந்து வெளிப்படும் மின்சக்தியால் தான் நிகழ்கின்றது. இம்மின்சக்தி அசாதாரணமான அளவுக்கு அதிகரிக்கும் போது உடலுறுப்புக்கள் வழமைக்கு மாறாக கட்டுப்படின்றி அவையும். இதுவே பொதுவாக வலிப்பு ஏற்படுகின்றது.
சூரிய வெளிச்சத்தை நேரடியாகப் பார்த்தாலும் சத்துணவு குறைபாட்டினாலும் (விற்றமின் யு) மாலைக்கண் நோய் ஏற்படுகின்றது. தொடர்ந்து தேவையான சத்துணவு கொடுத்துவர இந்நிலை மாறிவிடும்.
சிலர் அருகில் வரும்போது கெட்டநாற்றம் வீசுகின்றது. சிலவேளை அவர் உடற் சுத்தமற்றவரோ என நினைத்தால் அவர் ஒரு நாளைக்கு இரு தடவை குளிப்பவராகக்கூட இருப்பார். உண்மையில் அந்நாற்றத்துக்கு காரணமானது பழுதுபட்டிருக்கும்

Page 15
கலந்து உடம்பு முழுவதும் பரவும் போதே துர்நாற்றம் வீசுகிறது.
வயிற்றுப்புரட்டல், வாந்தி என்பன நோய் அல்ல. நோய் வருவதற்கான முன்னெச்சரிக்கையே ஆகும். வயிற்றுக்குள் மோசமான பற்றிரியாக்கள் அல்லது இரசாயனங்கள் புகுந்தால் இரப்பைச் சுவரிலுள்ள கலங்கள் அதைக் கண்டறிந்து மூளைக்கு தகவல் அனுப்ப மூளையின் கட்டளைப்படி சிறுகுடல் உணவை மேல்நோக்கி தள்ளிவிடும். அப்போதே வாந்தி ஏற்படுகிறது.
வாந்தி எடுப்பதற்கும் கூட சம்பந்தம் உள்ளது. "காதுகளில் அரை வட்டக் கால்வாய்கள் எனும் பகுதி இருக்கிறது. எமது உடலின் சமநிலை குழம்பும் போது இது மூளையில் இருக்கும் comiting Centre ற்கு தகவல் சொல்ல உடனடியாக வாந்தி ஏற்படுகின்றது. இதனால் தான் கடற் பயனணத்தின் போதும், சில சமயம் பேரூந்துகளில் செல்லும் போதும் உடல் அசைவினால் வாந்தி ஏற்படுகின்றது. இரைப்பை, சிறுகுடல் பகுதிகளில் உணவிலுள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்ட பின் பெருங்குடலை அடையும் உணவுச் சக்கையில் 80மூ நீர் காணப்படும். இதில் பெரும் பகுதியை பெருங்குடல் உறிஞ்சிக்கொள்ளும். கெட்டுப்போன உணவோ, கிருமியோ, வயிற்றுக்குள் புகுந்தால் பெருங்குடல் நீரை உறிஞ்சாமல் வேலை நிறுத்தம் செய்யும். இதனாலேயே பேதி (வயிற்றோட்டம்) ஏற்படுகின்றது.
இதயத்தசை நார்களுக்கு இரத்தத்தையும் ஒட்சிசனையும் எடுத்துச் செல்லும் குழாய்களில் யுவொநசழளஉடநசழளளை எனும் கொழுப்பம் குடிைசெை எனப்படும் ஒரு பொருளும் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த அடைப்பு இரத்தக் குழாயின் குறுக்குப் பரப்பில் 75மூ லும் மேற்பட்ட இடத்தை அடைக்கும் போது தான் யுபெெைய எனும் மார்புவலி ஏற்பட்டு ஹார்ட் அட்டாக் உண்டாகின்றது.
எம்முடைய தாடையிலுள்ள தசைகள் நாம் விழிப்பாக இருக்கும் போதுதான் உறுதியாக இருக்கும். தூங்கும் போது இவை தளர்வடைந்து ஆழ்ந்து தூக்கமெனின் இவை கொழகொழ வென்று சரிந்து சுவாசக் குழாயின் மேல் விழுந்து அதை அழுத்தும். இதனால் சுவாசத் தடங்கல் ஏற்பட்டு காற்றுப்போகும் போதும், வரும் போதும் இத்தசையை தள்ளுகின்ற முயற்சி நடைபெறும். இதன்போதே ‘கொர்ர்ர்.” என்று குறட்டை உண்டாகிmச
elloy, a. சண்முகராசா
 
 
 
 

兹
வயிற்றுவலி என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் ஆகும். நாம் உட்கொள்ளும் உணவு இரைப்பையில் அமிலங்களால் தாக்கப்படும். இந்த அமிலங்கள் அபார சக்தி படைத்தவை. ஆனால் இவற்றைச் சுரக்கும் இரைப்பையை இவ் அமிலங்கள் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் சுரக்கப்படும் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் இரைப்பை பாதிக்கப்பட்டு உண்டாகும் புண்ணே அல்சர் ஆகும்.
நம்பினால் நம்புங்கள்
மருத்துவ ரீதியாக வெள்ளைத்தோலைவிட கறுப்புத் தோலே சிறந்ததாக உள்ளதாம். கறுப்பு மற்றும் பிரெளண் நிற தோல் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் தோல் புற்றுநோய் வருவதில்லை. வெள்ளைக் காரர்களுக்கு வரும் தோல் வியாதிகள் பலவற்றின் பெயர்கள்கூட நம்பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.
காது கேட்காமல் போகும் ஆபத்து ஆண்களைவிட பெண்களுக்கு இரண்டு LDLIB (5 அதிகம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். ஆனால் ஏன் அவ்வாறு இருக்கின்றது என்பதற்கான சரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை.
எமது மனத்துக்கும் உணர்வுக்கும் இருப்பிடமாக அந்தக் காலத்தில் இருந்து இதயத்தையே குறித்து வந்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் உணர்வு, சிந்தனை, காதல் எல்லாவற்றுக்கும் தளபதியாக இருப்பது மூளைதான் மனம் என்று குறியீடாக சொல்லப்படுவதும் மூளைதான்.
பெண்களைவிட ஆண்களின் இதயம் சற்றுப் பருமன் கூடியது. ஆண்களுடைய இதயத்தின் எடை 325 - 400 கிராம் ஆக இருக்க பெண்களில் இது 275 - 350 கிராமாக உள்ளது.
இதயம் பம்ப் செய்யும் இரத்தம் அறுபதாயிரம் மைல் தூரம் நம் உடலில் பயணிக்கின்றது. அதாவது பூமியிலிருந்து நிலவின் தூரத்தின் கால் பங்கு தூரம் நமது கடலிலுள்ள சகல இரத்தக் குழாய்களையும் இணைத்தால் பெறப்படுவதே இவ்வளவு தூரமாகும். இந்த மிகப்பெரிய தூரத்தைக் கடக்க இரத்தம் எடுக்கும் நேரம் ஒரு நிமிடம்தான்.
எமது மூக்கின் மணத்தை உணரும் பகுதி இரண்டு சென்ரிமீற்றர் மட்டுமே நீளம் கொண்டது. ஆனால் இச்சிறிய பகுதி பத்தாயிரம்
cellory ef. ap-Gerdrupas gyntaf=rir XXXXXXXXX&

Page 16
வரையான வாசனைகளை உணர்வதோடு அவற்றில் ஐயாயிரம் வாசனைகளை பாகுபடுத்தியும் காட்ட முடியும்.
பிறந்த இரண்டாவது நாளிலேயே வாசனையை வைத்து தன் தாயை அடையாளம் கண்டுகொள்கின்ற திறமை பச்சிளம் குழந்தைக்கு வந்துவிடுகின்றது. அவ்வளவு சக்திவாய்ந்தது நம் வாசனை அறியும் திறன். ஊசிபோட்டுக்கொள்வது, மாத்திரை விழுங்குவது போல வாசனை பிடிப்பதன் மூலமும் சில மருந்துகளை நம் உடலுக்குள் லுெத்த முடியும்.
அலர்ஜியை ஏற்படுத்தும் முக்கிய எதிரிகள் “மைட்ஸ்” (அவைநள) எனப்படும் நுண்ணிய பூச்சிகளாகும். வீடுகளில் மெத்தை, தலையணை, காபேட் போன்வற்றில் இவை கோடிக்கணக்கில் இருக்கின்றன. துல்லியமாகச் சுத்தம் செய்த தலையணை ஒன்றிலேயே சுமார் நாற்பதாயிரம் ‘மைட்ஸ்” இருக்குமாம். எமது தோலில் உள்ள இறந்த கலங்களையே இவை உணவாகப் பயன்படுத்துகின்றன.
எமது முகத்திலே ஆபத்தான இடம் என அழைக்கப்படுவது மூக்கை உள்ளடக்கிய ஒரு முக்கோணப் பிரதேசமாகும். எனவே மூக்கு இந்த ஆபத்தான இடத்தில் இருப்பதால் மூக்கில் ஏற்படும் பாதிப்பு மற்றைய உறுப்புக்களையும் பாதித்துவிடுகின்றது. கண்கள், பல், தொண்டை, தோல் என்று பல அக்கங்களும் மூக்கினால் பாதிக்கப்படுகின்றது.
19ருத்துவ குறிப்புக்கள்
முக அழகைப் பாதுகாக்க.
母
காலையில் எழுந்ததும் அவரை இலைச்சாற்றை முகத்தில் தடவி வைத்திருந்து, ஒரு மணிநேரம் கழித்துக் குளித்து வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டால் முகம் நாள் முழுவதும் பளபளப்பாயிருக்கும்.
சந்தனத்தை நீரில் கரைத்து அத்துடன் பாசிப்பயறு சேர்த்து ஊறவைத்து அம்மியில் அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளித்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள்ளடைவில் மறைந்துவிடும்.
 
 
 

தலைமுடியைப் பாதுகாக்க.
* ஆலமரத்தின் இளம் பிஞ்சு வேர்களை எடுத்து வந்து, செம்பரத்தைப் பூக்களையும் சேர்த்துக் காயவைத்து இடித்துப் பொடிசெய்து, தேய்காய் எண்ணெய்யுடன் அந்தத் தூளைப் போட்டு ஊறவைத்து எடுத்து வைத்துக்கொண்டு தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி கறுப்பாக வளரும்.
* எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறெடுத்து, இந்தச் சாற்றை ஊற்றி நெல்லிக்காயை அம்மியில் வைத்து நன்கு மைபோல அரைத்தெடுத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஜவத்திருந்து பின்னர் குளித்துவந்தால் தலைமுடி உதிர்வு
றகும.
தலைவலி குணமாக.
* மருதோன்றி இலையைப் பறித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து சிறிது தாய்ப்பால் விட்டு விழுதாக அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி விரைவில் குணமாகும்.
* சளியினால் தலைப்பாரம் ஏற்பட்டிருக்குமானால், ઈી6o கராம்புகளை எடுத்துத் தண்ணிர் விட்டரைத்து நெற்றியின் மேல் பற்றாக இட்டால் தலைப்பாரம் நிற்கும்.
கண்களைப் பாதுகாக்க.
* சிறிதளவு தாய்ப்பாலுடன் சிறிதளவு ஆமணங்கு எண்ணெயையும் கலந்து, அதில் இரண்டு சொட்டு அளவு எண்ணெயைக் கண்களில் இரவில் தூங்குவதற்கு முன் விட்டுப் படுத்துத் தூங்கி எழுந்தால் மறுநாள் காலையில் கண்வலி நீங்கிக் குணமாகும்.
* மிகுதியான வெப்பத்தின் விளைவாகச் சிலருக்கு கண்களில் கட்டி தோன்றும். சிறிதளவு மிளகை எடுத்து, சிறிது வெந்நீர் விட்டு விழுதாக அரைத்தெடுத்து, கட்டியின் மீது தடவினால் கண் கட்டி குணமாகும்.
காது நோய்கள் குணமாக. O
* பனை மரத்தின் மட்டையை வெட்டி, நெருப்பில் வாட்டி பிழிந்து அதன் சாற்றை எடுத்து காதில் 2, 3 சொட்டு விட்டால் காது வலி குணமாகும்.

Page 17
காது வலியால் அவதிப்படும் சிலருக்குக் காதில் சீழ்
வடியக்கூடும். அத்தகையவர்கள் மாதுளம் பழத்தைப் பிழிந்து சாற்றை எடுத்து, பின்பு அதைச் சற்று நேரம் சூடுபடுத்தி ஆறவைத்து வலியுள்ள காதில் இரண்டு துளிகள் விட்டால் சீழ் வடிவது நிற்கும்.
சளித்தொல்லை குணமாக.
தூதுவளை இலைகளைச் சேகரம் செய்து வந்து, நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து அத்துடன் சிறிதளவு பச்சரிசியைச் சேர்த்து அரைத்து, ரொட்டி போல் தட்டித் தோசைக் கல்லில் போட்டு நெய்விட்டு வேகவைத்துச் சாப்பிட்டால் நெஞ்சுச்சளி குறைந்து குணமாகும்.
சுக்கு, மிளகு, சிற்றரத்தை, அதிமதுரம் ஆகிய பொருள்களைச் சம அளவு எடுத்து 100 மி.லி. தண்ணிர் விட்டு பாதியளவாக வற்றும்வரை காய்ச்சியெடுத்து, அந்த நீரை ஒரு நாளைக்கு இருவேளை எனக் காலை, மாலை பருகி வந்தால் சளித்தொல்லை அகலும்.
LIGöGQIGS SGOTLDT35 . . . . . .
兹
பல் வலி உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு நெல்லிக்காயை நசுக்கி சாறெடுத்து, அந்தச் சாற்றை வாயில் ஊற்றி (விழுங்கிவிடாமல்) அப்படியே சற்று நேரம் கொப்பளித்துப் பிறகு உமிழ்ந்துவிடவேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பல் நோய்கள் குணமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரையின் சாற்றைப் பிழிந்தெடுத்து, அந்தச் சாற்றை வலியுள்ள பற்களின் ஈறுகளில் தேய்த்தால் பல்வலி நீங்கும்.
வாய்நாற்றம் நீங்க .
母
ஒரு மண் சட்டியில் 20 கிராம் படிகாரத்தைப் போட்டு சிறிது தண்ணிர் விட்டுக் கரைய விட்டு அந்தத் தண்ணிரில் சிறிதளவு உப்பையும் போட்டு அந்தத் தண்ணிரால் தினசரி வாயைக் கொப்பளித்து வந்தால் வாய்நாற்றம் நீங்கும்.
வாய்நாற்றம் உள்ளவர்கள் தினமும் காலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வாயில் அரைலிற்றர் அளவுக்குத்
 
 
 
 
 

XXXXXXXXXX
தண்ணிரைப் பருகிவிட்டு, எலுமிச்சம் பழச் சாற்றில் தண்ணிர் கலந்து அதனால் வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் அகலும்,
நெஞ்சுவலி குணமாக.
* அகத்திக் கீரையை கழுவிச் சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி எடுத்து சன்னமாக இடித்துத் தூள் சய்ெது சலித்து எடுத்து வைத்துக்கொண்டு நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் இரண்டு தேக்கரண்டி தூளை வெந்நீரில் கலக்கிக் குடித்து வந்தால் நாளடைவில் நெஞ்சுவலி குணமாகும்.
ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து அடிக்கடி பருகி வந்தால், இதயம் சம்பந்தமான எவ்விதமான கோளாறுகளும் ஏற்படாதிருக்க உதவும்.
总
இருமல் குணமாக .
* உடல் உஷ்ணமாவதன் காரணமாக சிலருக்கு வறட்டு இருமல் ஏற்பட்டுத் தொல்லைதரும். இந்தத் தொல்லை உள்ளவர்கள் இரண்டு வெங்காயங்களை நசுக்கி, சாறு பிழிந்து, மோருடன் கலந்து காலை, மாலை இருவேளை பருகி வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
வயிற்றுக் கோளாறுகள் குணமாக.
* வில்வப் பிஞ்சைப் பறித்து எடுத்து வந்து, அத்துடன் சம அளவு எள்ளையும் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலக்கி, சிறிது நெய்யும் சேர்த்து உட்கொண்டு வந்தால் சீதபேதி விரைவில் குணமாகும்.
வயிற்றுப் போக்கை குணமாக்க ஓர் எளிய மருந்து.
* வெங்காயம், நற்சீரகம், அத்திப்பட்டை ஆகிய மூன்று வகைக்கு 5 கிராம் எடுத்துக்கொண்டு, வெங்காயத்தைத் தோல் நீக்கி அத்துடன் நற்சீரகம், அத்திப்பட்டை ஆகியவற்றைச் சேர்த்து அம்மியில் வைத்து சிறிது பரும்பால் தெளித்து விழுதாக அரைத் தெடுத்துக்கொள்ளவும். இதில் சரி பாதியை எடுத்து 150 மி.லி பசும்பாலில் சேர்த்து காலையிலும், அதேபோல மறு பாதியை எடுத்து 150 மி.லி. பசும்பாலில் சேர்த்து மாலையிலும்

Page 18
osasadrupats45Uõ
உட்கொள்ளவும். வயிற்றுப் போக்கு குணமாகும் வரை இம்மருந்தை உட்கொண்டு வரவும். சின்னவெங்காயம் 250 கிராம் வாங்கிவந்து மேல் தோலை உரித்து இடித்துச் சாறு பிழிந்து அந்தச் சாற்றுடன் 25 கிராம் பசும் நெய்யும் சேர்த்து காலை, மாலை தினமும் இருவேளை பருகி வந்தால் இரத்த பேதி படிப்படியாய்க் குணமாகும்.
அல்சர் என்னும் குடற்புண் குணமாக.
குடற்புண் உள்ளவர்கள் நாள்தோறும் சிறிதளவு அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் படிப்பாடியாய்க் குடற்புண் குணமாகும். குடற்புண் உள்ளவர்கள் காலையில் உணவுக்குப் பின் இளநீரின் தண்ணிரைப் பருகி வருவது குடற்புண்ணை ஆற்றச் சிறந்த மருந்தாகும்.
(pa GibsTinase,600TLDITas. . . . . .
மாதுளம் பழத்தின் தோலைத் தண்ணிரில் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு, மலம் கழித்தபின் மலவாயைக் கழுவி வந்தால் அங்கே ஏற்பட்டுள்ள புண் குணமாகி ரத்தப்போக்கும் நிற்கும். நூறுகிராம் வெங்காயம், நூறுகிராம் வெள்ளைப்பூண்டு இரண்டையும் நன்கு தோல் நீக்கிக்கொள்ளவும். மணித்தக்காளி இலைகளை நிறையப் பறித்து வந்து கழுவிச் சுத்தம் செய்து இடித்து 500 மி.லி. சாறெடுத்துக் கொள்ளவும். பின்னர் 500 மி.லீ. சாற்றுக்கு 100 மி.லி. என்ற அளவில் விளக்கெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி, நன்கு வெந்து சிவந்ததும் இறக்கி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் 10 கிராம் கடுகு ரோகிணியை வறுத்துப் பொடிசெய்து மருந்தில் கலக்கி வைத்துக் கொள்ளவும். இந்த மருந்திலிருந்து காலை, மாலை என இருவேளையும் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் உட்கொண்டு வந்தால் சிறிது சிறிதாக மூலச்சூடு நீங்கும்.
வாய்வுத் தொல்லை குணமாக.
i
வெள்ளைப் பூண்டு இரண்டு, இஞ்சி ஒரு துண்டு ஆகிய இரண்டையும் அம்மியில் வைத்து மைபோல அரைத்தெடுத்து
2Lonů af. ergoňruparrer
 
 

வாய்வுப் பிடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தாய் வாய்வுத்
X8XXXXXX aresaodfruypasAA3ufb
தொல்லை குணமாகும்.
* சுக்கை இடித்துத் தூள்செய்து வைத்துக்கொண்டு, வாய்வுத் தொல்லை ஏற்படும் நேரங்களில் அரைத் தேக்கரண்டி தூளை வெந்நீரில் கலந்து பருகினால் வாய்வுத் தொல்லை குணமாகும்.
வாந்தி குணமாக.
* நாரத்த மர இலைகளைச் சுத்தம் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்ட வந்தால் பித்தம் தணிந்து பித்த வாந்தியும் நிற்கும். * எலுமிச்சை இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து நீர் விட்டு அரைத்து, சிறிது உப்புப் போட்டு தண்ணிரில் கலந்து பருகினால் வாந்தி வருவது நிற்கும்.
பித்தம் குணமாக.
* பித்தம் அதிகமாக உள்ளதெனத் தெரிந்தால் அவர்கள் தினசரி
வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால் பித்தம் தணியும். * இஞ்சித் துண்டு ஒன்றை எடுத்து கழுவி, தோல் நீக்கி, சிறிய
வில்லைகளாக நறுக்கி அத்துடன் சிறிதளவு தேனைக் கலந்து வாணலியில் இட்டு அடுப்பிலேற்றி வதக்கிய பிறகு மேலும் அத்துடன் சிறிது தண்ணிர் விட்டுக் காய்ச்சி அத்துடன் சிறிது எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து குடித்து வந்தால் பித்தத்தால் ஏற்பட்ட மயக்கம் குணமாகும்.
நீரிழிவு நோய் குணமாக.
母
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் தினசரியோ அல்லது அடிக்கடியோ வெந்தயக் கீரையைச் சேர்த்து உண்டு வந்தால் நீரிழிவு நோயைக் குணப்படுத்தலாம்.
பத்து நாவல் பழத்தின் கொட்டைகளை எடுத்து இடித்து தண்ணிரில் போட்டு சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு அந்தத் தண்ணிரை ஒரு நாளைக்கு காலை, மாலை என இருவேளை பருகி வந்தால் நீரிழிவு படிப்படியாய்க் குணமாகும்.

Page 19
xesodrupas Aufs
lso
母
கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், அத்திப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, சுண்டைக்காய், மாதுளை, கொய்யா, தேங்காய் ஆகியவற்றை அடிக்கடி உணவில் உட்கொண்டு வந்தால் புற்றுநோயைத் தடுக்கலாம். வந்த பிறகு படிப்படியாக குணமாகவும் இவை பயன்தரும்.
அறுகம்புல், வேப்பிலை, கீழாநெல்லி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து வெயிலில் காயவைத்து, இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலையிலும், இரவிலும் உணவருந்துவதற்கு முன் அரைத் தேக்கரண்டி தூளை எடுத்து நீரில் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து பருகி வந்த பிறகு, வாரத்தில் ஒரு நாள் பருகி வந்தால் புற்றுநோய் பரவாமல் தடுக்கலாம்.
சிறுநீரக நோய்கள் குணமாக.
இளம் வாழைத்தண்டுகளை வாங்கி வந்து கழுவிச் சுத்தம் செய்து இடித்துச் சாறெடுத்து அந்தச் சாற்றில் ஒரு டம்ளர் அளவுக்கு நாள்தோறும் பருகிவந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் கரைந்து விடும். அல்லது வாழைத் தண்டைப் பொரியல் செய்து உணவுடன் சேர்த்து உட்கொள்வதும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களைக் கரைக்கும்.
தக்காளிப் பழங்களைப் பிழிந்து அதன் சாற்றை எடுத்து அடிக்கடி
பருகிவந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து அடைப்பு நீங்கி குணமாகும். (விதைகளை நீக்கிவிட வேண்டும்)
காய்ச்சல் குணமாக.
வில்வ மரத்தின் வேர்களை பறித்து வந்து கழுவிச் சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நீர் ஊற்றி ஒருநாள் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்தக் கீரை உட்கொண்டால் எந்த விதமான காய்ச்சலும் உடனே குணமாகும்.
தண்ணிரைக் கொதிக்கவைத்து, அதில் வெண்நொச்சி இலைகளைப் போட்டு அதில் வரும் நீராவியை முகர்ந்தால் குப்பென்று வியர்வை வெளியேறி கடும் காய்ச்சலும் குணமாகும்.
 
 

(1ņ9-ıığ0909) sựœungƆƐe 十 goqo e[97-1@oreog ふア
(0998ורע) ışsıo9u8o † (ụúdio) 9肉u自因um西
十 (II~110998) grooq,soreshgrooq,soofiko
î—ff 16子
4íreqoqi@sri + ļošu spuse
| †
(ụúdio) oogiquIoIIrrig,
十十
(ụúnio) T篇9切清的回总洛甫G
(ụ(also)(ụúGIR?)(ụúgif@)(ụúGIF@) lleus ofisso e foșđìkserese ipsosuoaluse qiellońsıņreae quas sofilosofo
1子子*子子*子 武学 qopojose un + hqiserego

Page 20
சொல் முத்துக்கள் சில.
முத்தனைய சொத்தான எங்கள் குடும்பத் தலைவராம் சிவசம்பு சண்முகராஜா அவர்கள் சிவகதி அடைந்த செய்தி கேட்டு அவரது இறுதிச் சடங்குகளில் ஆதரவுடன் பங்கு கொண்டு அஞ்சலி அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக் கும் எம் நன்றிகள். குறிப்பாக நிகழ்வுகளின் ஒழுங்கமைப்பிற்கு உதவிய அர்ை புள்ளங்கள், உறவுகள் மற்றும் மலர் வளையங்கள், இரங்கற் செய்திகள் வழங்கிய பரிவாளர்கள் அனைவருக்கும் பaர்பான நன்றிகள். காலத்திற்கு காலம் எம் இல்லம் வந்து தேறுதல் வழங்கிய நல் நெஞ்சங்களுக்கும் எம் நன்றிகள்.
கூடவே அவரது ஆத்ம சாந்தி நிகழ்வுகளில் பங்குகொண்டு பேருதவி புரிந்த பaர்பாளர்கள் பிரார்த்தனை கள் புரிந்த பேராளர்கள், உற்றார், உறவுகள், நர்ைபர்கள், நலன் ஆர்வலர்கள் சகலருக்கும் எம் சித்தம் செழித்த செந்நன்றிகள்.
இறுதியாக இம் மலரை அழகு வணினத்தில் அனைவரதும் கைகளில் தவள விட்டிட வழிசமைத்த சரணியா ஒவ்(f)செற் பிறிண்ரேஸ் ஸ்தாபனத்தினருக்கும் எம் இனிய
பாராட்டுக்கள் - நன்றிகள் பற்பல.
இங்ங்னம்,
foops குடும்பத்தினர்
 


Page 21
கொண்டாயோ,
த எடுக்கப்பட்டது. T(655 Teul, கேயே கொடுக்கப்பட்டது.
ள மற்றொருவருடையதாகிறது.
நாள் அது வேறொருவருடையதாகு
றம் உலக நியதியாகும்.