கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இராசரத்தினம் நித்தியானந்தன் (நினைவு மலர்)

Page 1


Page 2

சிவமயம்
நித்தியான
நதன
திரு
அவர்களின்
சிவபதப்பேறு குறித்த 31ம் நாள்
நினைவு மலர்

Page 3
δ.Ιοίύτιωτώ
தந்தையே! எம்மை
அன்புடன் வளர்த்த ஆதரவு அளித்திட்ட எம் தெய்வமே!
உன்னையே நம்பி உலகினில் வாழ்ந்த உயர்நிலை அடைந்திட்டோமின்று
என்றமே உந்தண் தாழினைத் தொழுது - நாம் பழுதிலா வாழ்வை பாரினில் தொடர
அருவமாய் நின்றவ அருணாசி தந்திடும் - ஐயனே
நிண் பாதக் கமலங்கட்கு படைக்கின்றோம் இம் மலரை
சமர்ப்பணமாக, ஒம் சாந்தி! ஓம் சாந்தி!! ஒம் சாந்தி!!!
இங்ங்ணம்
குடும்பத்தினர்
 
 

அமரர் _ܓܣܬ
திரு.இராசரத்தினம் நித்தியானந்தன் ஒர் அவர்கள் .
് 06: *o= 306 ?င်္ဂ07 s திதி நிர்ணயவெண்பா ܢ¬
, ஆண்டு சர்வசித்து ஆனி நல்முழுமதி பூரணை
: திதியதனில் இணுவையூர் புகழ் நித்தியானந்தன் இவ்வுலக
வாழ்வகற்றிவேப்பங்குளம் சித்தி விநாயகன் పై திருவடி சரணடைந்தார்.

Page 4

2&sjLAuth
அமரர் திரு. நித்தியானந்தன் அவர்களின்
வாழகதைச சுவரு
(egs as9Xegs as9) இந்து மா சமுத்திரத்தின் நடுவே எழில் பெற்று விளங்குவதும் சிவபூமி எனத் திருமூலரால் சிறப்பிக்கப் பெற்றதும், வேத இலக்கியங்க்ளான இதிகாச புராணங்களிலே புகழ் பெற்றதும், நீர்வள நிலவளத்தால் நிரம்ப பெற்றதுமான ஈழவள நாட்டின் இருதயமாக இலங்குகின்ற யாழ்ப்பாணத் திருநகரில் இசைப்புலமை பெற்றோர் பலரைக் கொண்ட இணுவையம் பதியின் மேற்குப் பகுதியில் சைவ ஆலயங்கள் சூழப்பெற்ற ஊரில் புகையிரத நிலைய அதிபராக பணியாற்றிய கந்தையா இராசரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகள் தமது இல் லத்தின் அருகே சிவகாமி அம்பாளை தமது குலதெய்வமாக தொழுது வந்தனர். இவர்களின் இனிய இல்லறத்தின் பயனாக தவப்புதல்வராக முதல் முத்தென 1948ம் ஆண்டு
ஆடித்திங்கள் 06ம் நாள் அவனியில் அவதரித்தார்.
அன்னாரின் சகோதரர்களாக புஸ்பகுமாரி (யாழ்ப்பாணம்), அமரர் கமலானந்தன், வசந்தகுமாரி (யாழ்ப்பாணம்), அமரர் பவானந்தன், தாரணி (கனடா), மணிவண்ணன் (ஜேர்மனி), வான்மதி (லண்டன்) ஆகியோரை அடையப் பெற்றார். இவர் சகோதரர்களில் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அமரரின் மைத்துனர் மைத்துணிகளாக அ.அருள்நாதன் (மின் அத்தியட்சகர் இலங்கை மின்சாரசபை யாழ்ப்பாணம்), அமரர் மா.தேவநேரு (கிராம அலுவலர்), வே.கருணாநிதி (கனடா), பிர்கிற் (Birgit) (ஜேர்மனி), ரவிதாஸ் (இங்கிலாந்து) ஆகியோர் திகழ்கிறார்கள்.
இவர் வளர்பிறைபோல் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வரும் நாளில் கல்வி கற்கும் பருவம் வந்ததும் தனது ஆரம்ப கல்வியை இணுவில் சைவ மகாஜன வித்தியாசாலையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்று கற்று தேர்ந்தார். இவர் உயர் கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக கல்வி கிட்டிய போதிலும் அவர் அதனை ஏற்க மறுத்து கொழும்பு தொழில் நுட்ப கல்லூரியில் கற்று தேறினார். அன்னாரின் ஆங்கில மொழிப்புலமை அந்நாளில் போற்றி பாராட்டப்பட்டது.

Page 5
தொழில் நுட்பக் கல்லூரியில் வியாபாரக் கற்கைநெறியை கற்றுத் தேறினார். இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் கணக்காய்வாளராக பணியாற்றி வந்தார். பின்பு இவர் கப்பலில் பணியாற்றிய காலத்தில் உலகின் பல பாகங்களுக்கும் சென்று வந்தார். பின் மனிதப் பிறவியில் சிறந்த தர்மம் எனப் போற்றப்படும் இல்லறதர்மத்தில் இவரை ஈடுபடுத்துவதற்காக கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட பொன்னப்பா செங்கமலம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியான தனலட்சுமியை 1984ம் ஆண்டு கைத்தலம் பற்றினார். இவரது மைத்துனர்களாக குகனேஸ்வரன் (அவுஸ்திரேலியா), உதயகுமாரி (கனடா), செல்வமலர் (யாழ்ப்பாணம்), குருபரன் (கனடா), திலகம் (கொழும்பு) ஆகிய்ோர் திகழ்கிறார்கள்.
இவருக்குத் துணையாக விளங்கிய மனையாளுடன் அன்பும் அறனும் சிறந்து பொலிவுற இல்லறப் பூங்காவில் இனிது வாழ்ந்து வரும் காலத்தில் ஆசைக்கொரு பெண்ணாக சோபனாவையும், ஆஸ்திக்கொரு ஆணாக நிர்ஷாந் எனும் மழலைச் செல்வங்களை இரு கண்மணிகளென பெற்று அகமகிழ்வடைந்தனர். இவர்களுக்கு சகல நற்பண்புகளையும் கல்வியையும் வழங்கி வரும் காலத்தில் 1995ல் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து 1996ல் வவுனியாவில் குடியேறினார்கள்.
இங்கு வந்தபின் பிள்ளைகள் தம் கல்வியை சிறப்புறத் தொடர்ந்தார்கள். சோபனா தகவல் தொழில் நுட்பத் துறையில் தனது உயர் கல்வியை கொழும்பில் கற்றுக்கொண்டு இருக்கும் வேளையில் நிர்ஷாந் பல்கலைக்கழக கலவியைத் தொடர தெரிவாகியுள்ளார். தனது புத்திரச் செல்வங்களின் கல்விச் சிறப்பை கண்டு அகமகிழ்ந்திருக்கும் வேளையில் ஏற்பட்டிருந்த நோயின் காரணமாக மண்ணில் பிறந்த அனைவரும் ஒருநாள் அதிலிருந்து நீங்குதல் நியதி என்னும் கூற்றுக்கு அமைய 30.06.2007 அன்று அவர் தம்புனித ஆத்மா மனைவி. மக்கள், சகோதரர்கள், உற்றார், உறவினர்கள் அனைவரையும் பரிதவிக்கவிட்டு சிவகாமி அம்பாளின் அடிக்கமலங்களை அரவணைத்து அன்னாரின் ஆன்மா நித்தியானந்தப் பேறுபெற்று நிறைவடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!

தயரில் பகிர்வு
இந்துமா கடலின் முத்து என வர்ணிக்கப்படும் இயற்கை வளம் இகாண்ட ஈழ மணித்திருநாட்டிலே சிகரமாக விளங்கும் பல கில்விமான்களைக் கொண்ட தமிழ் மணம் கமிழும் வீணாகானபுரம் எனப் போற்றப்படும் யாழ்நகரிலே வேளாண்மைத் தொழிலின் மேன்மையும் பண்ணோடு கலந்த இசையும் யாழின் நாதமும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஊராம் "இணுவையம்பதி"
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். என்பது சான்றோர் வாக்கு. எட்டு திசைகளிலும் ஆலயமணியோசை ஒலித்துக்கொண்டிருக்கும் இணுவையூரில் செகராசசேகரப்பிள்ளையார் கந்தசாமி கோயில் அருகிலே அவதரித்தார். திரு.நித்தியானந்தன் அவர்கள் கணக்கியலின் தொழில்நுட்பமும் பரந்த ஆங்கில அறிவும் கொண்டவர். அடக்கமும் அமைதியும் கொண்ட அவர் தனது மக்களாகிய சோபனா, நிர்ஷாந் கல்வி வளர்ச்சி மேலோங்கி வருவதை கண்டு மகிழ்ச்சியுற்றிருக்கும் காலத்தில் திடீரென நோயுற்று அமைதியும் பொறுமையும் கொண்ட மனைவியையும் மக்களையும் விட்டு இறைவனடி சேர்ந்தார்.
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தே" என்னும் வாக்கிற்கமைய அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தவருக்கு துயரில் எமது பங்கை செலுத்திஅவரின் ஆத்ம சாந்திக்காய் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியின் பாதார விந்தங்களை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
6ம் ஒழுங்கை பூரீ வாமதேவன் வேப்பங்குளம். குடும்பம்.
M
بر%///tل
S.
雀
2.
Š
W

Page 6
曼__ சிவமயம்
பஞ்சபுராணம்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம்
உடையாள் உன்தன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவிரும்
இருப்பதனால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்
புரியாய் பொன்னம் பலத்தெம் முடியா முதலே என் கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரோடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே ஆரோடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்ட நீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே.
திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றஆம நின்ற
நெற்றிக் கண்ணுடைய தோர்நெருப்பே வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடையெம் மற்புதக் கூத்தா
அம்பொன் செயம்பலத் தரசே ஏறணி கொடியெம் மீசனே உன்னைத்
தொண்டனே ரிைசையுமா றிசையே.
 

திருப்பல்லாண்டு மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள் வஞ்சகர்கள் போயகலப் பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க அன்ன நடைமட வாளுமை கோனடியோ
முக்கருள் புரிந்து பின்னைப் பிறவி யருக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு வேண்டிப்
பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்
நான் மகிழ்ந்துபாடி அறவா நீ ஆடும் போதுன் அடியின்
கீழ் இருக்க என்றார்
திருப்புகழ் பக்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி மத்தனா மாறெனப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணனேயா
ஒப்பிலா மாமணி கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமானே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை அறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்

Page 7
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்'அருளிய
திருஅருட்பா - இரண்டாம் திருமுறை வடிவுடை மாணிக்க மாலை
வடிவுடை மாணிக்க மாலை இரண்டாம் திருமுறையில் காணப்படும் இரண்டாவது மாலையாகும். திருவொற்றியூரில் கோயில் கொண்டுள்ள அன்னை வடிவுடை மாணிக்கத்தின் மேல் தொடுக்கப்பட்ட சொல் மாலையாதலின் இப்பெயர் பொருந்தும். ஒவ்வொரு இறுதியடியிலும் வடிவுடை மாணிக்கமே என முடியும். 101 கட்டளைக் கலித்துறைப் பாக்களையுடையது முதல் 60 பாடல்களில் அன்னையின் பெருங்கருணையும், பின்வரும் பாடல்களில் தமது புன்மையும் அவற்றை நீக்கி அன்னையின் அருள் வேண்டுதலும் கூறப்படுகின்றன.
காப்பு கட்டளைக் கலித்துறை kbddshpthugth
0. சீர்கொண்ட ஒற்றிப் பதியுடை யானிடம் சேர்ந்தமணி
வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
ஏர்கொண்ட நல்லருள் ஈயும் குணாலய ஏரம்பனே.
கட்டளைக் கலித்துறை ÉkbddsöptbuSolf
Ol. கடலமு தேசெங் கரும்பே அருட்கற்ப கக்கனியே
உடல்உயி ரேஉயிர்க் குள்உணர் வேஉணர் வுள்ஒளியே
அடல்விடை யார்ஒற்றி யார்இடங் கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
02. அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
குணியேளம் வாழ்க்கைக் குலதெய்வ மேழலைக் கோன் தவமே பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா மணியேளன் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.
03. மானேர் விழிமலை மானேனம் மானிடம் வாழ்மயிலே
கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசக்தியே வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.
ஆத

04.
O5.
O6.
O7.
O8.
O9.
10.
பொருளே அடியர் புகலிட மேலுற்றிப் பூரணன் தண் அருளேனம் ஆருயிர்க் காந்துணை யேவிண் ணவர்புகழும் தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மரிக்கமே.
திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத் தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும் பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும்
பித்தன்மலை மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.
உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப் பொன்னேஅப் பொன்னற் புதலுளி யேமலர்ப் பொன்வணங்கும் அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ் மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.
கண்ணே அக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய் விண்ணே வியன்ஒற்றி யூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
மலையான் தவஞ்செய்து பெற்றமுத் தேஜற்றி வாழ்கனகச் சிலையான் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே அலையான் மலிகடல் பள்ளிகொண் டான்தொழும் ஆரமுதே வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.
காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச் சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின் வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.
கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருத்தவமே வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.

Page 8
11.
12.
13.
14.
15.
6.
17.
நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடி யெனைப் போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர் தம் பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.
கங்கைகொண் டோன்ஒற்றி யூர்அண்ணல் வாமம் கலந்தருள்செய் நங்கைஎல் லாஉல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத் தங்கைஎன் கோ அன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.
சோலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டரன்பின் வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித் தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்து முன்னாள் மாலையிட் டாய்இ. தென்னே வடிவுடை மாணிக்கமே.
தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய் வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ எனையாள் அருளொற்றி பூர்வா ழவன்றன் னிடத்துமொரு மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.
பின்னின்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ முன்னின்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவா மொய்யசுரர் கொன்னின்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே மன்னின்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச் செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய் மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
இலையாற்று நிமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம் தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூமகள்
தன்னைத்தள்ளாய் நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான் மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
ξ10Σε

18.
19.
20.
21.
22.
23.
24.
கலைமக ளேநின் பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள் அலைமக ளோஅன் பொடுபிடித் தாள்எற் கறைதிகண்டாய் தலைமக ளேஅருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன் மலைமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற்கல்வி தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ மன்னோ டெழிலொற்றி பூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.
காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைசுற்றி யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல் நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம் ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால் ஏற்றார் திருவொற்றி யூரார் களக்கறுப் பேற்றவரே மாற்றா இயல்கொண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும் நெருப்புறு கையும் கனல்மேனி யும்கண்டு நெஞசம்அஞ்சாய் மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.
அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித் தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல் மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.
ஒருரு வாய்ஒற்றி யூர் அமர்ந் தார்நின் னுடையவர்பெண் சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.
a 12

Page 9
Z5.
26.
27.
28.
29.
30.
31.
சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடை மேல் சிறை
செய்தனர்ஒண் வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.
நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப் பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனைப் பெற்றளிக்கும் தாயே கருணைத் தடங்கட லேஓற்றிச் சார்குமுத வாயேர் சவுந்தர 1 மானே வடிவுடை மாணிக்கமே.
முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ் ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய் மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.
மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப் பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம் பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள் மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந் நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின் தேய்க்குறி மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர் வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.
செங்கம லாசனன் தேவிபொன் நானும் திருமுதலோ சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத் துங்கமு றாதுளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.
சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க ஏடார் டொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.
1 செளந்தரம் என்பது சவுந்தரம் எனப் போலியாயிற்று.
丞择

32. புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
33.
34.
35.
36.
37.
38.
39.
கரநோக்கி 2 நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினர்ஆ
தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே. உன்னும் திருவொற்றி பூருடை யார்நெஞ் சுவப்பனNல் துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின் மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
வெள்ளம் குளிரும் சடைமுடி யோன் ஒற்றி வித்தகன் தன் உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் தெள்ளம் குளிர்அன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.
மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன் றாநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே காநந்த வோங்கும் எழிலொற்றி யார்உட் களித்தியலும் வாநந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.
வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே லான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால் யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.
முத்தேவர் விண்ணன் 3 முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம் செத்தே பிறக்கும் சிறியர் அன் றோஒற்றித் தேவர்நற்றா மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்தியாநாள் கருநாள் எனமறை எல்லாம் புகலும் கருத்தறிந்தே ஒருநாளினுநின் றனைமற வார் அன்பர் ஒற்றியில்வாழ் மகுநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
வாணாள் அடைவர் வறுமை யுறார்நன் மனைமக்கள்யொன் பூனாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும் காணார் நின் நாமம் கருதுகின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால் மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.
2. கரம்- விடம் 3. விண்ணன். இந்திரன்
查鲈

Page 10
41.
42.
43.
45.
சீரறி வாய்த்திருவொற்றிப் பரம சிவத்தைநினைப் போரறி வாய் அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய் யாரறி வார் நின்னை நாயேன் அறிவ தழகுடைத்தே வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.
போற்றிடுவோர்தம் பிழைஆயிரமும் பொறுத்தருள்செய் வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார் இடத்தில் இலங்கும்உயர் மாற்றொளிரும்பசும் பொன்னே வடிவுடை மாணிக்கமே.
ஆசைடள் ளார்.அயன் மால் ஆதி தேவர்கள் யாரும்நின்தாள் பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார் தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார் இடஞ் சேர்மயிலே மாசையுள் 4 ளார்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில் பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள் நின் பத்தர்பதம் கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர் வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.
அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
முடியாமல் அடிக்குப் பெருமைபெற்றார் அம் முகுந்தன்சந்தக் கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட்செம்பால் வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.
ஒவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்துபாடில் ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றுங்கொலோ காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
இட்டார் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னஞ்சற்றும் எட்டாநின் பொன்னடிப் போதெளியேன்தலைக் கெட்டுங்கொலோ
முடி ஒற்றிஎம் மான்நெஞ் e o மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.
4. மாசை - பொன்
查擎

47.
48.
49.
50.
5.
52.
53.
வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநின்ை ஒப்பவரார் எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி மளியாநின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.
விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும் அன்றி வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின் குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான் எனக் கூறுவர் உன் மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.
பன்னும்பல் வேறண்டம் எல்லாம் அவ் அண்டப் பரப்பினின்று துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
சினங்கடந் தோர் உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறை அன்னமே தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.
வல்லாரும் வலலவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல் எல்லாரும் நின் செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல் இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய் மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.
எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.
தெருட்பா லுறும் ஜங்கைச் செல்வர்க்கும் நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந் தருட்பால் அளிக்கும் தனத்தன மேளம் அகங்கலந்த இருட்பால் அகற்றும் இருஞ்சுட ரேஒற்றி எந்தை உள்ளம் மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.

Page 11
54.
55.
56.
57.
58.
60.
அயிலேந்து பள்ளைநற் றாயே திருவொற்றிஐயர்மலர்க் கயிலேந் 5 தரும்பெறல் முத்தே இசையில் கனிந்த குரல் குயிலே குயின்மென் குழற்பிடியே மலைக கோன்பயந்த மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.
செய்யகம் ஓங்கும் திருவொற்றி யூரில் சிவபெருமான் மெய்யகம் ஓங்குநல் அன்பேநின் பால் அன்பு மேவுகின்றோர் கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.
தரும்பேர் அருளொற்றி யூருடை யான்இடஞ் சார்ந்தபசுங் கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே இரும்பேய் மனத்தினர் பால் இசை யாத இளங்கிளியே வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.
சேலேர் விழியருள் தேனே அடியருள்தித்திக்கும்செம் பாலே மதுரச்செம் பாகேசொல் வேதம் பனுவல் முடி மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார். மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.
எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொணடிருக்கும் இறைச் செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே.
ஏமமுய்ப் போர்எமக் கொன்றே இளைக்கில் எடுக்கவைத்த சேமவைப் பே அன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே தாமமைக் கார் மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய் வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற்றார் அவர்தாம் முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும்ஒற்றி வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.
5 கையிலேந்து எனற்பாலது கயிலேந்து எனப் போலியாயிற்று.
差丞圣

61.
62.
63.
66.
67.
கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக் கடல்கடந்தே குணமொன்றி லேன் எது செய்கேன் நின் உள்ளக் குறிப்பறியேன் பணமொன்று பாம்பணி ஒற்றிஎம் மானிடப் பாலில் தெய்வ மணமொன்று பச்சைக் கொடியே வடிவுடை மாணிக்கமே.
கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக் குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும் அந்தத் திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத்தந்த மருவே மருவு மலரே வடிவுடை மாணிக்கமே.
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன் அருள் பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால் மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.
தீதுசெய் தாலும் நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று வாதுசெய் தாலும் நின் தாள்மறந் தாலும் மதியிலியேன் ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
மருந்தினின் றான்ஒற்றி பூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும் திருந்திநின்றார் புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு வருந்திநின் றேன் இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.
என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைளப் போதும்எங்கும் நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால் பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய் மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
துன்பே மிகும் இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள் இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தை உயிர்க் கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால் வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.

Page 12
68.
69.
70.
7.
ܗܝ ܡܣ
? --
73.
74.
சற்றே யெனினும் என் நெஞ்சத் துயரம் தவிரவும்நின் பொற்றே மலர்ப்பதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய் சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம் மற்றேர் புயத்தனை மானே வடிவுடை மாணிக்கமே.
சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் அந்தோ ஒருதமியேன்மட்டும் வாடல் அருட்கழகோ நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால் வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
அடியேன் மிசைஎப் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச் செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக் கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.
கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ளஒற்றி நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே எண்ணப் படாஎழில் ஒவிய மேஎமை ஏன்றுகொண்ட வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.
கற்பே விகற்பம் கடியும்ஒன் றேளங்கள் கண்நிறைந்த பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருட்போதஇன்டே சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.
மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள் தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும் சுகவேலைமூழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப்பெற்ற மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.
வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாயப் பூதங்க ளாய்ப்பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னை இப் பேதைஎன்வாய் வாதங்களால் அறிவேனோ வடிவுடை மாணிக்கமே.

75.
76.
.7ך
78.
79.
80.
81.
மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைந்த நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்திலாலயே கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் சாவலர்பால் வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.
ஆறாத் துயரத் தழுந்துகின்றேனை இங் கஞ்சல்என்றே கூறாக் குறைஎன் குறையே இனிநின் குறிப்பறியேன் தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ் மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.
எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச் சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
செவ்வேலை வென்றகண் மின்னேநின் சித்தம் திரும்பிஎனக் கெவ்வேலை செய்என் றிடினும்அவ் வேலை இயற்றுவல்காண் தெவ்வேலை வற்றச்செய் அவ்வேலை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.
தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச் சேயேன் படுந்துயர் நீக்கிஎன் னேஉளம் செய்திலையே நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு வாயேளம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.
நானே நினைக்கடி யேன்என் பிழைகளை நாடியநீ தானே எனைவிடில் அந்தோ இனிஎவர் தாங்குகின்றோர் தேனேநல் வேதத் தெளிவே கதிக்குச் செலுநெறியே வானேர் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
கல்லா ரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர் நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையோ வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

Page 13
82.
83.
84.
85.
86.
87.
88.
சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலும்பைங்கிள்ளாய் கந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய் அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ மந்தர நேர்கொங்கை மங்காய் வடிவுடை மாணிக்கமே.
பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே சுத்தமெய்ஞ்ஞான ஒளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன் மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.
பூவாய்மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப் பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய் காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர் மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய் மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.
களந்திரும் பா இக் கடையேனை ஆளக் கருணைகொண்டுன் உளந்திரும் பாமைக்கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன் குளந்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற வளந்திரும் பாஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந் தோரணம் பூத்த எழில்ஒற்றி யூர்மகிழ் சுந்தரிசற் காரணம் பூத்த சிவைபார்ப் பதிநங் கவுரிஎன்னும் வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.
திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎம் கருவல்லி நீக்கும் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி மருவல்லி என்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.

89.
90.
91.
92.
93.
94.
95.
உடையென்ன ஒண்புலித் தோல் உடையார்கண் டுவக்குமிள நடையன்ன மேமமலர்ப் பொன்முதலாம்பெண்கள் நாயகமே படையன்ன நீள்விழிமின்னேர் இடைப்பொற் பசுங்கிளியே மடைமன்னு நீர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப் பொற்பதம் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே சொற்பதமாய் அவைகி கப்புற மாய்நின்ற தூய்ச்சுடரே மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே,
நின்னால் எனக்குள எல்லா நலனும் நினை அடைந்த என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே முன்னால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே மன்னான் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.
நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈ தென்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய் மன்றேர் எழில்ஒற்ற வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும் இம் மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.
கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோகதிக் குறித்திடும்என் தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில் ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின் மாறா தமர்ந்தமயிலே வடிவுடை மாணிக்கமே.
ஒயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல்போல் ஈயா விடினும்ஒர் எள்ளளவேனும் இரங்குகண்டாய் சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

Page 14
97.
98.
99.
100.
101.
பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில் துரும்பே என அலை கின்றேன் புணைநின் துணைப்பதமே கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே வரும்பேர் அருள்ஒற்றி வாழவே வடிவுடை மாணிக்கமே.
காதரவால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள் ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில் மாதர சேஓற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
பொன்னுடை யார் அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார் என்னுடை யார் என ஏசுகின்றார் இ. தென்னை அன்னே மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண் மன்னுடை யாய்என்னுடையாய் வடிவுடை மாணிக்கமே.
பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம் கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே மெய்விட்டி டாருள் விளை இன்ப மேலுற்றி வித்தகமே மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.
நேயானு கூல மனமுடை யாய் இனி நீயும்என்றன் தாயாகில் யான் உன் தனையனும் ஆகில் என் தன் உளத்தில் ஒயா துறுந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ் வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.
வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள் வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர் வாழிஎன் உள்ளத்தில் நீயுதின் ஒற்றி மகிழ்நரும்நீ வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.
 

எப்படித்தானி வாழ்வது ஒரு மனிதன் ஏழையாய் இருந்தால் அப்பாவி என இகழப்படுகிறான். *பணக்காரன் ஆகிவிட்டால் அயோக்கியன் என
தாற்றப்படுகிறான். * தருமம் செய்தால் டம்பன் என்கிறார்கள். *தருமம் செய்யாவிட்டால் கஞ்சன் என்கிறார்கள் * அப்படி இல்லாவிட்டால் பஞ்சமா பாதகன் என்கிறார்கள். * எல்லோரையும் நேசித்தால் மகாகோழை என்கிறார்கள். * யாரையும் மதிக்காமல் இருந்தால் திமிர்பிடித்தவன்
என்கிறார்கள். *பணம் சேர்த்தால் உலோபி என்கிறார்கள். * செலவளித்தால் ஊதாரி என்கிறார்கள். *கஸ்ரப்பட்டு உழைத்தால் இயந்திரம் என்கிறார்கள். * உழைக்காமல் இருந்தால் உதவாக்கரை என்று திட்டுகிறார்கள்
பின்னப்படித்தான் இவ்வுலகில் வாழ்வது.

Page 15
Ύ --
==ప్ర్రాగే Nā= * B
நன்றிருவில்ல் 8ܟܸܧܠ
C
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய்த் திகழ்ந்த குடும்பத் தலைவர், அவர்கள் இறையடி சேர்ந்த செய்திகேட்டு ஓடோடி வந்த உற்றார் உறவினர் நண்பர்களுக்கும், ஈமைக்கிரியைகள் இறுதி ஊர்வலங்களில் பங்கு பற்றியவர்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும்
அஞ்சலி உரை ஆற்றியோருக்கும் மற்றும் $欧 பல வழிகளில் உதவி புரிந்தோருக்கும் 数 இன்று எமது இல்லத்தில் நடைபெறுகின்ற ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் மதிய A. போசனத்திலும் கலந்து கொண்டோருக்கும் *
இம்மலரினை அழகுற அச்சிட்டுத் தந்த அச்சகத்தினருக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இங்ங்ணம்
குடும்பத்தினர்
 
 
 


Page 16