கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மணி விழா வாழ்த்து மலர் 2004

Page 1


Page 2

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மணிவிழா வாழ்த்து மலர்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மணிவிழாக் குழு 2004

Page 3
தலைப்பு பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மணிவிழா வாழ்த்து மலர்
பதிப்பு
மார்கழி 2004
வெளியீடு
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மணிவிழாக் குழு 24 1/1. ஃபிராங்.போர்ட் பிளேஸ், கொழும்பு 4.
வழவமைப்பும் அச்சும்
குமரன அசசகம
,یر . ܙܟܝ
201, டாம் வீதி, கொழும்பு 2.
حس
Title Prof. S. Sandarasegaram Manivila Vaalthu Malar
EC7jfjOn
December 2004
Published by Prof. S.Sandarasegaram Manivila Committee No. 24. /), Frankfort Place,
Colombo 04.
Designed & Printed by Kumaran PreSS (Pvt) Ltd. 20, Dann Street Colombo - 2. elephone 242 1388

முன்னுரை
எமது பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய பேராசிரியர் 1ே 1ந்திர)ே கரம் அவர்கள் தமிழ்க்கல்வி உலகுக்கும் சமூகத்துக்கும் ஆற்றி|in (o|ரும் 1ணிை களுக்காகவும் உயரிய பங்களிப்புகளுக்காகவும் அவரை புர். அவர்தம் பாரியாரையும் கெளரவித்து இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்த நடத்துகின்ற இம் மணி விழாவில் இவ் வாழ்த்துமலரை சமர்ப் பணம் dெ 'வதில் நாம் இறும்பூதெய்துகின்றோம்.
பன்முக ஆளுமையும் பல்துறை ஆற்றலும் கொண்ட பேராசிரியர் அவர்கள் தமது தீராத செயலாண்மையினாலும் உயரிய மானிடப் பண்புகளிலtலும் இந்தத் தேசத்தில் வாழும் மக்களிடையே பெற்றுக் கொண்ட அன்பு ஆதரவ. பாசம், கெளரவம் ஆகிய அனைத்தையும் இம் மலரின் பக்கங்கள் பறைசாற்றி
ஆவணப்படுத்துகின்றன.
சமயப் பெரியார்கள், பல்கலைக்கழகப் புலமையினர். அரச அலுவலர் இலக்கியகாரர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், உறவினர்கள் என அனைத்து தரப்பினரும் பேராசிரியரைப் பற்றிய தமது படிமங்களையும் நினைவலைகளையும் இம்மலரில் பதிவு செய்துள்ளனர். எமக்குக் கிடைத்த சகல வாழ்த்துக்களையும் இம்மலரின் இதழ்களாக ஆக்கிவிட வேண்டும் என்னும் வேணவாவின் காரணமாக வாழ்த்துகளின் உயிரோட்டம் குறைந்துவிடாமல் செம்மையாக்கியுள்ளோம். அதனைக் குறையாகக் கருதமாட்டிகள் எனண்ணும் திடநம்பிக்கையுடன் வாழ்த்துக்கள் அனுப்பிய அனைவருக்கும் நாம் பணிவுடன் நன்றி கூறுகிறோம்.
பேராசிரியரைக் கெளரவிக்கும் இம்முயற்சியை உங்களை நம்பியே நாம் ஆரம்பித்தோம். எமது நம்பிக்கை வீண்போகவில்லை. சென்ற இடமெல்லாம் எம்மை இன்முகம் காட்டி வரவேற்று பொருளுதவி வழங்கி உற்சாகப்படுத்தியமை கண்டு நாம் நெகிழ்ந்து போனோம். எம் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுவதோடு தாங்கள் காட்டிய அன்பையும் ஆதரவையும் இம்மலரின் இறுதிப் பக்கங்களில் ஆவணப்படுத்தியுள்ளோம் என்பதையும் பணிவுடன் கூறிவைக்க விரும்புகிறோம்.

Page 4
ரோன்றிi) புகழொடு தோன்றுக என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப பேராசிரியர் தமது வாழ்வின் பயன்கள் அனைத்தையும் பெற்று தமது இலட்சியப் |டினத்தின் இன்னுமொரு மைல்கல்லை அடைகின்ற இத்தருணத்தில் அவரை ', 'ரித்த அவரது பெற்றாரைப் பெருமையுடன் நினைவுகூர்வதும் எமது 'il t0) fou Jill Gölb.
பேராசிரியர் அவர்கள் வாழ்வின் சகல நலன்களையும் பெற்று வாழ்வாங்கு
வாழ்ந்து மென்மேலும் உயர்வுபெற வேண்டுமென உங்களோடு இணைந்து, அவரை
உளமாற வாழ்த் துவதுடன் இம் மலரின் மணத்தை முகர்ந்து மகிழுமாறு பணிவன்புடன் உங்களை அழைக்கின்றோம்.
அன்புடன்
மணிவிழாக் குழுவினர்
19.12.2004

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஒரு விபரக் குறிப்பு
5.
ଗuuuff
பிறந்த இடமும் திகதியும்
முகவரி
கல்வி : 1950 - 1960
1961 - 1962
1967 س- 1963
977 - 1978
{1980 م 978}
தற்போதைய பதவி
சோமசுந்தரம் சந்திரசேகரம்
83/3, 1/1, 37வது ஒழுங்கை, வெள்ளவத்தை. கொழும்பு 6.
ஊவாக் கல்லூரி, பதுளை.
மகாஜனாக் கல்லூரி, தெல்லிப்பளை
பேராதனைப் பல்கலைக்கழகம் - B.Ed. (Hons)
ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக் கழகம், ஜப்பான் (ஜப்பானிய மொழி, பண்பாட்டியல் சான்றிதழ்)
ஹிரோசிமாப் பல்கலைக்கழகம், gi J. J.T6öi (M.Ed.)
இணைப் பேராசிரியர். கல்விட் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 5
6. (9) எழுதிய நால்கள்
iii,
iv.
vi.
vii.
viii.
xi.
xii.
xiii.
Xiv.
XV.
Xν.
6
இலங்கை இந்தியர் வரலாறு
கல்வியியல் கட்டுரைகள்
இலங்கையின் கல்வி வளர்ச்சி (இணை ஆசிரியர்)
இலங்கையில் கல்வி (இணை ஆசிரியர்)
கல்வியும் மனித மேம்பாடும் (இணை ஆசிரியர்)
புதிய நூற்றாண்டுக்கான கல்வி
கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள்
உயர்கல்வியில் புதிய செல்நெறிகள் (பேராசிரியர் வித்தியானந்தன் நினைவுச் சொற்பொழிவு)
கல்விச் சிந்தனையில் புதிய செல்நெறிகள் (பேராசிரியர் ப. சந்திரசேகரம் நினைவுச் சொற்பொழிவு)
இலங்கையில் தமிழர் கல்வி
அபிவிருத்தியும் கல்வியும்
கல்வியியல் சிந்தனைகள்
மலையகக் கல்வி . சில
சிந்தனைகள்
கல்வி ஒரு பன்முக நோக்கு
New Trends in Education
Education of the Disadvantaged Communities

XVi. கல்வித் திட்டமிடல்
(இணை ஆசிரியர்)
XVi. கல்வியும் மனிதவள விருத்தியும்
(இணை ஆசிரியர்)
6. (ஆ) கட்டுரைகள், ஆய்வறிக்கைகள், கருத்தரங்க ஆய்வுத்தாள்கள் :
i.
vi.
vii.
Progressive Educational Thoughts', Green Book Research Seminar,
New Delhi, 1984.
Great Democratic Experiments Somme Comments in Frced () in and Democracy, World Center for Research on the Green Book, Tripoli. 1984,
Assessment Oriented Learning and Adult Work Attitudes : The Development of Measures of Student Learning Orientations. Journal of the National Education Society of Sri Lanka. vod. 24, 1985. (Co-author)
Education of the Indian Tamil Community. Seminar Paper. International Center for Ethnic Studies, Colombo, 1985.
Educational Problems of the Indian Tamil Community. Seminar Paper. MIRJE, Colombo, 1990. (Based in iv above)
Professional Status of Teachers (in Tamil). Shikshatna, Ministry of Education, 1991.
Some Thoughts on Language Teaching (in Tamil). Tamil Day Journal, Ministry of Education. 1992.

Page 6
Viii.
xi.
Xii.
Xiii.
Xiv.
XV.
Process of Educational Planning - Past and Present (in Tamil). A claiyapatna Chin thana, College of Education Journal, Vol. 2, 1993.
Education in Sri Lanka Years 2000. Towards the 21st Century, C. R. D. S. & K. V. G. de Silva Ltd., 1995 (Co - author).
Peace in Sri Lanka: The Indian Tamil Factor in Sri Lanka. Perspecti n'es on the Resolution Oil Conflict, Monograph No. 9, Indian Ocean Center for Peace Studies. Australia. 1993.
Higher Education of the Muslims in Sri Lanka (in Tamil). Peradeniya University Muslims – Majlis Seminar paper, 1993.
Teaching of Tamil for Secondary Levels Students. Some Observations Peradeniya University Tamil Department Seminar Paper, 1991.
Peace in Sri Lanka. The Indian Tamil Factor (Tamil Translation of 10 Above). Markam, Marga Institute. Journal for the Study of Society, Vol. 2, 1994.
Enhancement Of Language. Proficiency of Students. Some Suggestions. Special Tunil Day Is Site, Ministry of Education Publication, 1994.
Education of Indian Minorities in Sri Lanka Journal of Education, Planning (tild Administ ration, Vol. XIV, NO. 4 Oct. 2004.
 

ஜ்
பேராசிரியர் சந்திரசேகரம் தம்பதியினர் - அன்றும் இன்றும்

Page 7

གྱི་

Page 8

7. மொழிபெயர்ப்புப் பணி
iii.
iv.
vi.
8. வகித்த பதவிகள்
1968
1979
1970 - 1972
1975 س- 1973
இந்தியாவும் அதன் தென்னாசிய அயல் h (டுகளும்' பண்டார நாயக் கா சர்வதேச கற்கை நிலையம், 1992.
3 (!pg|57 (4) 5)çW6) , ' oi, o). இலினோய் பல்பலைக் கழகத்தின் பயிற்சிக் கையேடு, 1993.
"சனநாயகம் என்றால் என்ன?" மார்கா நிறுவனம். கொழும்பு 1994 (இணை மொழிபெயர்ப்பாளர்).
"அபிவிருத்தி மாதிரிகள்' மார்கா நிறுவனம், கொழும்பு. 1995 (இணை மொழிபெயர்ப்பாளர்),
"சனநாயக அரசாங்க மாதிரிகள்" மார்கா நிறுவனம், கொழும்பு, 1995, (இணை மொழிபெயர்ப்பாளர்).
"உழைப்பால் கல்வியில் உயர் வோர்' சமூக விஞ்ஞானிகள் சங்கம். கொழும்பு, 2.
போதனாசிரியர் (கல்வியியல்), பேராதனைப் பல்கலைக்கழகம்
மொழிபெயர்ப்பாளர். மத்தியவங்கி
ஆசிரியர். அரபா மகா வித்தி யாலயம், வெலிகம
விரிவுரையாளர், கோப்பாய் ஆசி ரியர் பயிற்சிக் கலாசாலை (இதே காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்வி யியல் திப்ளோமாவுக்காகப் பாடங் கள் எழுதும் பணியிலும் ஈடுபடல்)

Page 9
1975 - 1980
986} سه 1880
S3935} سه 183836S
1995
9. அ. தேசிய பங்களிப்பு
iii.
vi.
vii.
viii.
()
உதவி விரிவுரையாளர். கல்விப் பீடம் கொழும்புப் பல்கலைக் கழகம்
முதுநிலை விரிவுரையாளர்
முதுநிலை விரிவுரையாளர் (தரம் 1)
இணைப் பேராசிரியர்
உறுப்பினர். தேசிய கல்வி ஆணைக்குழு
உறுப்பினர். ஆசிரியர் கல்விக் கான தேசிய அதிகார சபை
உறுப்பினர். தேசிய கல்வி
நிறுவகப் பேரவை
தலைவர், ஜப்பானியபட்டதாரிகள் சங்கம்
தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்
உறுப்பினர். உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக சிண்டிகேட்
உறுப்பினர். தமிழ் இணையம், இலங்கைக் கிளை
உறுப்பினர். தேசிய கல்வி ஆணைக் குழுவின் பொதுக் கல்விக்கான நிலையியற் குழு
உறுப்பினர், தேசிய கலைத் திட்டக் குழு (தேசிய கல்வி நிறுவகம்)
உறுப்பினர். பாடநூல் மதிப்பீட்டுக் குழு (கல்வி அமைச்சு)

9. ஆ. தற்போதைய பதவிகள்
xi.
Xii.
xiii.
Xiv.
XV.
Xvi.
iii.
vi.
νi.
உறுப்பினர். தேசிய நூலக ஆவலண்ாைக்கல் சபை
ஆலோசகர், "திருப்பம்" சஞ்சிகை
ஆலோசகர். இந்து சமய கலாசார அமைச்சு
ஆலோசகர். சார்க் நாடுக ளுக் கான கல்வியியல் ஆராய்ச்சி சஞ்சிகை
உறுப்பினர். ஐ லக இந்து மநாட்டின் கல்விக்குழு
வருகைதரு பேராசிரியர், ஒபோர்ன் பல்கலைக் கழகம். அலபாமா, ஐக்கிய அமெரிக்கா
வெளிநிலை விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம்
வெளிநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக் கழகம்
வெளிநிலை விரிவுரையாளர், இலங்கை பத்திரிகை நிறுவனம்
உறுப்பினர், கலைச்சொல்லாக்க உயர்நிலைக் குழு (அரசகரும மொழிகள் ஆணைக்குழு)
உறுப்பினர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் போதனாபீடச் சபை
ஆலோசகர், "அகவிழி, சஞ்சிகை
காப்பாளர், கொழும்பு தமிழ்க் கல்விக் கழகம்

Page 10
wi. துணைக் காப்பாளர், கொழும்புத்
தமிழ்ச் சங்கம்
iX. உறுப்பினர், ஜப்பானிய பட்ட தாரிகள் சங்க நிறைவேற்றுக் குழு
10. புலமைப் பரிசில்களும் விருதுகளும் :
i. ஜப்பானிய அரசாங்கப் புலமைப்
Irfafsi (1978 - 1980)
ii. ஊவா மாகாண ஆளுநரின் கல்விப்
புலமையாளர் விருது
iii. ஊவா மாகாண. மத்திய மாகாண சாகித்திய விழாக்களில் கல்வி மான் விருது
ν. ஐக்கிய அமெரிக்க அலபாமா மாநிலத்தின் ஒபோன் பல்கலைக் கழகத்தின் புலமைப் பரிசில் (1998)
冰
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் எழுதிய சஞ்சிகை மற்றும் பத்திரிகைக் கட்டுரைகள் பற்றிய ஆய்வடங்கல் தனிப் பதிப்பாக வெளியிடப்படவுள்ளது.

நல்லாசிகள்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களது வைர விழாவை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு இவ் வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள். தனது கல்வித் தகைமையினாலும் கல்வியியல் துறைசார் ஆழ்ந்த புலமையினாலும், அவையெல்லாவற்றிற்கும் மேலாக, தனது எளிமையான சுபாவத்தினாலும், அனைவரது நன்மதிப்பிற்கும், நட்பிற்கும் உரிய பெருந்தகையாக உயர்ந்து நிற்கிறார்.
மலையகத்தின் முதற் பேராசிரியர் என்ற பெருமையை உடைய இவர், இந்நாட்டின் கல்வித் துறைக்கு ஆற்றியுள்ள சேவை மகத்தானது. கல்வித் துறையில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட புத்தகங்களையும், ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர் தேசிய கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், பல கல்விசார் நிறுவனங்களின் ஆலோசகராகவும் இருந்து, இந்நாட்டின் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றி வருகிறார். இன்று இந்நாட்டில் 21ஆம் நூற்றாண்டு கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார். இவர் பல மேலை நாடுகளுக்கும் சென்று, அங்கு நடைபெற்ற கருத்தரங்குகளில் பங்கு பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஒரு தரமான ஆசிரியர் குழாத்தைத் தோற்றுவித்துள்ளார் என்பது. கல்வித்துறையில் இவர் பெற்றுள்ள மகத்தான பெறுபேறு எனலாம். சிறுபான்மை மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும் உண்மையான அக்கறை உடையவர் இவர்.
மேற்கூறியதிலிருந்து, விடயங்களை அப்படியே மூளையில் திணித்து, பின்னர் வேண்டிய போது அவற்றை வெளியிடும் திறன் கொண்ட வெற்றுப் பண்டிதரல்ல திரு. சந்திரசேகரம் அவர்கள் என்பது விளங்கும். அவர் ஒரு செயல் வீரர். அத்தோடு, வாழ்க்கையை வளம்படுத்தும் அன்பும், பண்பும், பணிவும் கொண்ட நிறை மனிதரும்கூட
வைரவிழா காணும் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களை இன்னும் பல்லாண்டுகள் வாழ உளமார வாழ்த்துவதோடு, அவரது கல்விப்பணி மென்மேலும் சிறப்பெய்த இறைவன் திருவருள் புரியப் பிரார்த்திக்கின்றோம்.
சுவாமி ஆத்மகனானந்தஜி

Page 11
உள்ளத்தால் பொய்யாது ஒழுகுபவர்.
பேராசிரியர் எஸ். சந்திரசேகரம் அவர்களுக்கு அறுபது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவிருக்கின்றது என்று அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தேன்.
சந்திரசேகரம் அவர்கள் ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்னர் சில மாதங்கள் என்னிடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்றவர். அதற்குப் பின்னர் என்னை எந்த கூட்டத்திற் கண்டாலும் இதோ எனது ஆசானும் இங்கு இருக்கிறார் என்று கூறி பேச்சை ஆரம்பிப்பார். இப்படிப்பட்ட குரு பக்தியை எனது 65 வருட வாழ்க்கையில் எங்குமே கண்டதேயில்லை.
சந்திரசேகரம் எந்தவிதமான காழ்ப்பு உணர்வுமற்றவர். ஜவஹர்லால் (SBG5606) is uigi 69(b6f He was singularly devoid of any bitterness 616ta} குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட மனிதர்களை இக்காலத்தில் பார்ப்பது மிகமிக அரிது. உள்ளத்தால் பொய்யாது ஒழுகி எல்லா இன மக்கள் மீதும் உண்மையான அன்போடு பழகுபவர் சந்திரசேகரம். அவருடைய இயல்பினை அவருடைய சகபாடிகளும் மற்றவர்களும் கற்றுக்கொண்டால் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும்.
பேராசிரியர் அவர்கள் கல்வித்துறையில் அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடின உழைப்பு, காய்தல் உவத்தலற்ற ஆய்வு. தெளிந்த சிந்தனை. இவை அவரை சிறந்த சிந்தனையாளனாக்கியுள்ளன.
பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களும் குடும்பத்தினரும் இன்பமாக நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றேன்.
அதி. வண. கலாநிதி எஸ். ஜெயநேசன் பேராயர் தென்னிந்திய திருச்சபை

விழாக் குழுவினர் வாழ்த்துகின்றனர்.
மனத்தின் கண் மாசிலனாகி உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் அறுபதாவது அகவையை அடைவதை யிட்டு மேற்கொள்ளும் இம்மணிவிழா மலருக்கு வாழ்த்துச் செய்தி தருவதில் மகிழ்வுறுகின்றோம்.
எத்தனைகாலம் வாழ்ந்தார் என்பதிலும் எப்படி வாழ்ந்தார் என்பதுதான் ஒருவரின் வாழ்வில் எஞ்சியிருப்பதாகும். அவ்வகையில் தனது வாழ்நாளை தமிழ்க் கல்வியோடு தொடர்புபடுத்தி, அத்துறையில் ஆக்கமுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இருபதுக்கு மேற்பட்ட நூல்களையும் எழுதி தமிழ் க் கல்வியுலகில் தனது மகிமையை பேராசிரியர் நிலைநாட்டியுள்ளார்.
கல்விச் செயன் முறையில் பயிற்றுவிப்பாளராகச் செயற்படும் கல்வியியலாளரான பேராசிரியர் அவர்கள் தமிழ்க் கல்வி தொடர்பான புதிய பரிமாணங்களை இனங்கண்டு அவற்றுக்குப் பொருத்தமான முன்மொழிவுகளைப் பல்வேறு ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணர்வதில் மிக்க ஆர்வம் உடையவர்.
கல்வி என்பது காலத்தோடு இயைந்து, இணைந்து செயற்படும் ஒரு கருமத் தொடராகும். பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள் ஒப்பீட்டுக் கல்வித்துறையில் கைவந்த வல்லாளராவார். இவர் இத்துறையின் ஊடாக உலகளாவிய ரீதியில் கல்வியில் ஏற்படும் மாற்றங்களை இலங்கையின் கல்வித்துறையில் ஏற்படும் மாற்றங்களுடன் ஒப்பிட்டு இலங்கைக் கல்வியின் பலம், பலவீனங்கள் தொடர்பான முன்மொழிவுகளை தான் பங்குகொள்ளும் நிறுவனங்களுக்கு ஊடாக முன்வைத்து அவற்றை நாட்டின் சமகால கல்வித் தேவையுடன் இணைப்பதில் ஈடுபட்டு வருகின்றார்.
இத்தகைய பெருமகனாருக்கு விழாவெடுப்பது விழாவுக்கு பெருமையே தவிர அவருக்கல்ல. அவர் எல்லா வளத்துடனும் நீடூழி வாழ எல்லாம்வல்ல இறையாசியை இறைஞ்சுகின்றோம்.
உலகநாதர் நவரத்தினம்
தலைவர் மணிவிழாக் குழுவினர் சார்பாக

Page 12
A Well-known Educationist...
I write this message to the Professor S. Sandarasegaram's felicitation volume with great pleasure. Prof. Sandarasegaram is a colleague working with me in the Faculty of Education. Though we are working in two different areas of specialty we bear the same line of thinking about the educational issues in the country.
Prof. Sandarasegaram is a well known educationist among those who take interest in education of the country. He is highly recognized in his community as a renowned scholar who has contributed to the development of education of the Tamil community. He has the reputation of Serving many important educational committees in the country. There are number of books published by him on various problems in education.
Prof. Sandarasegaram has contributed in many research studies completed by the NEREC of the Faculty of Education of the University of Colombo. At present he is serving as a member of the team working on preparing a General Ability Test Battery to be used in the schools in Sri Lanka.
This felicitation volume is intended to evaluate the services he has done in the field of education and contributions he has made to the country. I really appreciate the initiation taken by the organizing committee of this felicitation ceremony.
I wish him success in his future activities.
Prof. L.S. Perera
University of Colombo IDean/Education
Colonibo 3
6

An Asset to Education ...
Prof. S. Sandrasegaram has been attached to this epartment from 1975. Since then, starting as an assistant lacturer, he his riscn himself to the position of Associate Professor in Education.
After persuing a brilliant academic career in education Prof. Sandarasegaram has by now reached an unsurpassable professional status bringing glory not only to himself but also to this l)epartment and the Faculty of Education. He is now an nationally recognized and acclaimed educationist.
On many occasions he has visited other educational institutions in many parts of the world including the USA, Japan, India and many more countries. He has published many books and journal articles specially in Tamil. A very special greatest of his achievement is his competency in the Sinhala Language which has enabled him to participate in and contribute to many seminars and workshops conducted in the Sinhala Language. He is as asset in all its true sense to the Faculty of Education.
His experience and achievement have earned him a place as a brilliant and a prominent scholar in Education not only in this Department but also in several national bodies dealing with education and peace in Sri Lanka.
He is a deeply reverred friend of all those he associates with. and is being treated with honour and dignity by all.
I wish him sussess and long life.
H. M. SetúVÍrafie
Head/ Department of Social Science Edit cation Faculty of Education University of Colombo
7

Page 13
An Exemplary Teacher ...
It is with much pleasure that I write this message for the felicitation volume in appreciation of the contribution Prof. S. Sandrasegaram has made to the field of education in his 30 years of service in the University. My association with Prof. Sandrasegaram also spans a quarter of a century, when both of us became members of the same Faculty of Education, in the Department of Social Science Education.
Even after I joined the Open University of Sri Lanka in 1993, our friendship and professional collaboration Sustained and my respect for Prof. Sandrasegaram as a committed educationist, an exemplary teacher and a prolific writer has deepened with time.
It is with a tinge of nostalgia and sadness that I recollect the time I spent with our colleagues at the Faculty of Education. There were intense debates on education, which lent professionalism to our conversations over lunch but we also shared our joys and sorrows as a close community of friends. Sandre was always there except when he was in India on vacation with his family. Those soul - Searching discussions, which at times prolonged well after the lunch hour, helped us all to grow collectively, enriching each other.
During the last decade, Prof. Sandrasegaram has become quite visible in the national arena and has now made his mark in the sphere of education. He was a member of several national bodies such as the National Education Commission and the Council of the National Institute of Education. He continues to serve similar bodies even at
present.
8

His contribution to the extension of educational opportunities for the Tamil community is perhaps unparalleled. With the assistance of a handful of other University academics, Prof. Sandrasegaram has shouldered the heavy responsibility of the Tamil medium programmes conducted by the Faculty. He has enriched the educational literature in Tamil and has contributed immensely to the educational resources available to Tamil students.
It is my duty on behalf of my own institution, the Open University of Sri Lanka to thank Prof. Sandrasegaram for the unstinted Support he has extended to us at all times. In the Masters programmes, conducted by the Open University in the Tamil medium, we depend On Prof. Sandrasegaram and his colleagues to a large extent. As a member of the Faculty Board of Education in our University, he makes a distinct contribution to its quality of academic dialogue,
I would like to take this opportunity to offer Prof. Sandrasegaram my sincére good wishes in all his endeavours in education and
continued success in his professional career.
Prof. (Mrs) G.I.C. GAILAWardate
O USL Dean Na wala Facility of Education Nugegoda

Page 14
பல்லாண்டு வாழ்க .
அக இருள் அகற்றும் அறிவு ஒளியை விளக்கப் பயன்படுவதாய் அமைந்த கல்விச் சேவையின் சிறப்பு அளவிடற்கரியது. அத்தகு கல்வித்தானம் செய்வோர் கடவுளை ஒத்தவராவர். அச் சிறப்புகளை உடைய கல்விச் சேவையில் மணிவிழாக் காணும் எனது நண்பர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களின் மணிவிழா மலருக்கு ஆசிச் செய்தியொன்றை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மலையகத்தின் ஊவா பிராந்தியம் பல கல்விமான்களையும், எழுத்தாளர் களையும், இலக்கியவாதிகளையும் உருவாக்கிய பிரதேசம். பேராசிரியர் கல்வி பயின்ற காலத்தில் தற்போதைய மாணவர் சமுதாயம் அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் இருக்கவில்லை. அரசியல் வழிகாட்டல்கள் இருக்கவில்லை. ஆனால் அப்பிரதேசத்தில் கல்விமான்கள் உருவாகினார்கள். மூன்று பேராசிரியர்களை உருவாக்கிய பிரதேசம் ஊவா பிரதேசம், அவர்களில் ஒருவர் பேராசிரியர் சந்திரசேகரன்.
ஆகவே, மணிவிழாக் காணும் பேராசிரியர் அவர்களது அடிச்சுவட்டை சவாலாகக் கொண்டு மலையக மாணவ சமூகம் கல்வியே மலையக சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாகக் கருதி கல்வியில் உயர்ச்சியடைய திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
எனது குடும்பத்தவர்களுடன் மிகவும் நெருக்கமாக கண்டி மாவட்டத்தில் வாழ்ந்தவர்கள் தற்போது தமிழ்நாட்டில் வசிக்கும் மதிப்பிற்குரிய திரு. ஆர்.எம். ராமலிங்கம் அவர்கள். இவரது புதல்வி செல்வி சாந்தா பேராசிரியர் அவர்களுக்கு பொருத்தமான துணைவியாரானார். இதனால் பேராசிரியரின் உயர்ச்சி இரட்டிப்பானது எனலாம்!
மணிவிழாப் பாராட்டினைப் பெறும் பேராசிரியர் மீது அன்பும் மதிப்பும் கொண்டு நன்றியுடன் விழா எடுக்கும் அவரது மாணவர்கள், நண்பர்கள், புத்திஜிகள் மிகவும் பெருமைக்குரியவர்கள். இவர்களது இம்முயற்சி போற்றற்கரியது. மலையகத்தில் இது ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துவிட்டது.
பேராசிரியர் எனது நண்பர். சோ. சந்திரசேகரன் பல்லாண்டுகள் வாழ்ந்து மலையக சமூகத்திற்கு இன்னும் , இன்னும் கல்விப் பணி ஆற்றுவதற்கு ஆண்டவனை வேண்டி நல்லாசிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சுற்றுலாத் துறை அமைச்சு கலாநிதி பிரதாய் இராமானுஜம் 64 காலி வீதி செயலாளர்
கொழும்பு - 03

நுண்ணிய புலமையாளர்.
எமது பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய பேராசான் சோ சந்திரசேகரt) அவர்கள் தமது அறுபதாவது அகவையை எய்துகின்ற இத்தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழக் கிடைத்த இந்த வாய்ப்பினை நான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
பன்முக ஆளுமையும் உயர்ந்த மானிடப் பண்புகளும் கொண்ட நல்லாசிரியரான எமது பேராசிரியரை முதன்முதலில் 1982ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா மாணவனாக சந்தித்த நினைவுகள் இன்றும் பசுமையாகவே உள்ளன. ஆசிரியன் - மாணவன் என அன்று துளிர்த்த ള gഖ இன்று இரு தசாப்தங்களுக்குப் பின்னர் சகோதர வாஞ்சையாக பரிணமித்திருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
பேராசிரியரிடம் கல்வியியல் பாடம் கேட்ட நாட்கள் பயனுள்ளவை, மறக்க முடியாதவை. அவரது துறை சார்ந்த புலமை நுண்ணியது. ஆழமும் அகலமும் கொண்டது. ஒரு விடயத்தை அதன் பல்வேறு பரிமாணங்களில் எளிமையுடன் எடுத்துரைத்து தனது மாணவர்களின் பார்வையையும், விடய ஞானத்தையும் ஆழமாக்கி அவர்தம் சிந்தனையைத் தூண்டுகின்றமை பேராசிரியரில் நான் கண்ட தனிச்சிறப்பு
1983ஆம் ஆண்டின் துன்பியல் நிகழ்வுகள் பேராசிரியரையும் அலைக் கழிக்கத் தவறவில்லை. அவர் இங்கேயும், மனைவி பிள்ளைகள் தமிழ்நாட்டிலுமாக சோதனையும் வேதனையும் நிறைந்த அந்த காலகட்டத்தில் பேராசிரியரின் தோளோடு தோள் நின்று சோதனைகளை சாதனைகளாக்கி இன்று மணிவிழா காணவைத்த பெருமையில் பெரும்பங்கு அவரது துணைவியும் எமது பாசமிகு சகோதரியுமான சாந்தா அம்மையார் அவர்களையே சாரும் என நான் நம்புகின்றேன். தனது உயரிய மனித நேயத்தினாலும், நட்புணர்வினாலும் நேர்மைத் திறத்தாலும் ஆயிரக்கணக்கானோரின் இதயங்களை வென்று இன்று மணிவிழா காணுகின்ற பேராசிரியர் எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் நானும் எனது துணைவியும் பெருமிதமடைகிறோம்.
தை. தனராஜ் தேசிய கல்வி நிறுவகம் பணிப்பாளர், தமிழ்த்துறை
மகரகம

Page 15
Remarkably a Superior Person ...
Prof. S. Sandarasegaram was a student of mine in Peradeniya and perfomed extremely impressively in his studies during the first year. I appreciated his dedication to work and his systematic approach to academic activities. He gained a good grasp of his disciplines in the First in Arts Examination and qualified to enter the then coveted course leading to the Bachelor of Education. His final performance earned him a place on the academic staff which was then a hallmark of intellectual ability and promise. He continued a life devoted to studies and it was no surprise that he reached the status of Associate Professor which was a sure sign of and acknowlegement of exceptional Scholarship. He is a liberal hearted generous associate on whom one can count with certainty for aid and assistance in time of adversity and difficulty. He is endowed not only with a captivating nature but also has winning ways with those whom he consorts with,
His sense of humor is charming. Above all his knowledge of political scenario in Sri Lanka, and India to an extent, can only be excelled by his learning amd wisdom in education. As a lecturer, tutor, guide, and counselor Sandarasegaram has shown himself to be remarkably a Superior person.
I wish him years of success, greater attainment, good health and
good fortune.
Prof. Bertra III Bastía Hylilai C/22/1/2, Soygapura Flats
Moratu wa
2
2

My Devoted Student ...
It is my great privilege and pleasure to send my grectings and felicitation from Canada to my devoted and for mer s t u den t, Prof.S.Sandarasegaram on the occasion of his 60th birthday celebration that is being organized in Colombo by his loving family members, students and friends.
Suffice to say, my perception of the old Mahajanans living worldwide as constituting a talent-tank is amply demonstrated by the multifacéted achievements of Prof.S.S. who has distinguished himself as one belonging to the intellectual elite, a prolific writer both in Tamil and English, a keen researcher and educationist par excellence.
I am glad he has lived up to my expectations blossoming forth as a academician of international distinction.
My wife and children are delighted to join me in extending to Prof.S. Sandrasegaram and his wife, Shantha and their childran our best wishes and blessings for many more years of good health, happiness
and achievements of excellence.
M. Karthies. Fini: Tect cher Mahajana College Tellippalai
Toronto, Canada
2
3

Page 16
மணிவிழா வாழ்த்துப் பாமாலை
இயற்கை அன்னையின் வரம் பெற்று பச்சைப் பசேலென்று கண்களுக்கு இனிமை தருகின்ற பார்ப்போர் மனங்களை பசுமையால் குளிரச் செய்கின்ற உயரமான நிலப்பரப்பாம் எழில் கொஞ்சும் மலையகத்தில் பதளை மாநகரத்தின் ஒளிச்சுடராய் பாரில் வந்துதித்த சோமசுந்தரம் சந்திரசேகரன் வாழியவே!
மகத்தான கல்விதனை தெல்லிப்பளை மஹாஜனாக் கல்லூரியிலும் கல்விமாணிப் பட்டத்தை ~ கண்கவரும் பொழில்களெல்லாம் நிறைந்த மணம் வீசி மனங்களை மகிழுவைக்கும் மாநகராம் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திலே பக்குவமாய் பெற்றீர்!
கொழும்புப் பல்கலைக்கழக கல்விப்பீடத்திலே சமூக விஞ்ஞானத்துறையில் அன்று தலைமைப் பதவி பெற்று இன்றும் பேராசானாய் பணியாற்றி நின்றீர்! ஈழத்தில் மட்டுமல்ல கடல் கடந்து அமெரிக்க ஒபர்ன் பல்கலைக்கழகத்திலும் அதிதிப்பேராசிரியராய் பணியாற்றினீர்!
கற்றலுடன் நின்றவிடாத தனித்துவமான கற்பித்தல் பணிதனையும் ஐயேழு ஆண்டுகளாய் ஆர்வமுடன் ஆற்றினீர்! கற்பிக்கும் பணியிலே களைத்துவிடாமல் - தானே ஒரு சிற்பியாய் செதுக்கிய மாணாக்கர் எனும் சிற்பங்கள் தான் எத்தனை எத்தனை:
ஈழத்தின் அழுகை மட்டும் மெருகூட்டவில்லை டோக்கியோ மணிலா, புதுடெல்லியிலும் நடைபெற்ற மாநாடுகளில் நீ கலந்து எம்மண்ணின் மணங்கமழ சென்று சிறப்பித்தீர்! எம் கல்லூரியிலும் வந்த ப. சந்திரசேகரம் நினைவு பேருரையும் தந்தீர்!
தன் உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் உருக்கொடுத்து உயிர் கொடுத்து தரணியர் மனம் நெகிழ தந்திட்டாய் நால்களாக்கி கல்வியின் மேன்மைதனை கருவாக்கி, வரிவடிவமாக்கி இன்று கல்வியெனும் உளிகொண்டு பல சிற்பங்களை இன்னும் வடித்துக்கொண்டிருக்கின்றீர்

கல்வியிலே பிறரையும் ஊக்குவிக்க தன் எண்ணங்களையெல்லாம் கல்வியின் மேம்பாடு, இலங்கையின் கல்வி வளர்ச்சி, கல்வியும் அபிவிருத்தியும், கல்வித்திட்டமிடல், இலங்கையில் தமிழர் கல்வி, மலையகக் கல்வி சில சிந்தனைகள் கல்வி ஒரு பன்முகநோக்கு, எதிர்காலவியல் நோக்கில் கல்விமுறை
என நால்களாக்கினீர்!
லேபரிங் ரூ லேன் (Labouring to learn) என்ற ஆங்கில நூலுக்கு உழைப்பால் கல்வியில் உயர்வோர் என்று தமிழ்வடிவம் கொடுத்திட்டீர்! ஆங்கில நூலாம் நியூ ரெண்ட்ஸ்இன் எடுயுகேசனையும் நீ படைத்தாய் இலங்கை இந்தியர் என்ற வரலாற்று நாலையும் நீ தந்திட்டீர்
அன்போடு அரவணைக்கும் மனித நேயராய், இரசனைத் திறன் மிகுந்தவராய் முற்போக்கு சிந்தனையுள்ள பண்பட்ட கலைஞனான நீ ஏட்டுக்கல்வியிலல்ல அனுபவக் கல்வியிலே நாட்டங்கொண்டீர் தனது பேராசான் திரு. ச. முத்துலிங்கத்தைப் போலவே பாடுவதிலும் வல்லவனே!
மனம் மகிழ்ந்து பாடுகின்றோம் எம் பாவினால் வாழ்க வாழியவே! நின்பணி வாழியவே! வான்வரை உயர இளையோர் யாம் வாழ்த்துகின்றோம் வாழ்க வாழியவே! நீ யென்றும் நீடூழி வாழியவே!
பெயரிற்கேற்றாற் போல் தண்ணொளியால் மயக்கும் நிலவைப்போல் தன் பணியாலும், திறனாலும் மனித மனங்களைக் கொள்ளை கொண்டு மயக்கிய மாமேதையே! உன் நாமம் வாழ்கவே! நின்பணி இத்தரணியில் என்றும் தொடரவே நம் அருமை மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளை மற்றும் நண்பர்கள், சுற்றமுடன் பல்லாண்டு நலமாக வாழ உம்மை நாம் வாழ்த்துகின்றோம்! வாழ்க வாழியவே! நீயென்றும் வாழியவே!
பீடாதிபதி
உப பீடாதிபதிகள்
விரிவுரை இணைப்பாளர்
விரிவுரையாளர்கள்
கல்விசாரா உத்தியோகத்தர்கள்
ஆசிரிய பயிலுனர்கள்
வித்தியாதீபம் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 11 ஆவது ஆண்டு மலர் - 2004 வவுனியா

Page 17
மலையகத்தின் அறிவுப் புரட்சி.
பின்தங்கிய ஒரு மாவட்டத்தில் பின்தங்கிய ஒரு சமூகத்தில் பிறந்து பல இன்னல்கள். தடைகளுக்கிடையில் யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகம், ஒசாக்கா பல்கலைக்கழகம், ஹிரோஷிமா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்று பேராசிரியராகப் பத்தாண்டுகாலம் பல்கலைக்கழகத்தில் பெருஞ்சேவை புரிந்துள்ள திரு. சோ. சந்திரசேகரம் அவர்களின் அறுபதாவது பிறந்த தினத்தையிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமக்குத் தெரிய இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் கல்வியாளர்கள் சகலரையும் எடுத்துக் கொண் டால் கல்வியியல் துறை பற்றி ஏராளமான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவரில் சோ. சந்திரசேகரம் முன்னணியில் திகழ்கின்றார். ஆசிரியர்களின் தொழிற்தகைமை மேம்பாட்டில் மட்டுமன்றி. கல்வித்துறையில் பின்தங்கியுள்ள மலையகத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தென்னாசியப் பிராந்தியத்தில் வாழும் ஏனைய பின்தங்கிய பிரிவினரின் கல்விப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
கல்வி மேம்பாடு பற்றிய தேசிய சர்வதேசியக் கருத்தரங்குகளில் அடிக்கடி கலந்து உரையாற்றியுள்ள சந்திரசேகரம் அவர்களின் கல்வியியல் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகள் பல சர்வதேச சஞ்சிகைகளில் வெளியாகி உள்ளன. பேராசிரியர் அஞ்சலா லிட்டில் எழுதிய (இலண்டன் பல்கலைக்கழம்) Labouting to Learn என்ற விரிவான ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்துள்ளார்.
இவருடைய முன்னுதாரணம் மலையக இளைஞர்களுக்கு முக்கியமானது. முயற்சித்தால் மலையகத்தவர்களும் அரச பணியில் உயர்நிலை அடையாளம் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம். இவர் போன்ற உதாரணத்தை மலையக இளைஞர் தத்தம் அறிவுத்துறைகளில் பின்பற்றினால் மலையகத்தில் ஒரு அறிவுப் புரட்சியையே ஏற்படுத்தி விட முடியும்.
எஸ். அசோகன்
பரீஸ் பிரான்ஸ்

பேராசிரியர் பிறை நூறு கானட்டும்
மனிதனது பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைக்காலத்தில் வாழும் வாழ்க் கையே மனிதனை மறக்கமுடியாத மானுடனாக மாற்றி விடுகிறது. அதனால்தான் ருஷ்ய இலக்கிய மேதை மாக்ஸிம் கோர்க்கி "மனிதனை எத்தகைய அற்புதமானவன்” என்றார்.
அத்தகைய அற்புதமான மனிதர்களில் ஒருவர்தான் பேராசிரியர் சோ. சந்திரசேகரம். மலையகக் கல்வி வரலாற்றில் பேராசிரியருக்கு ஒர் அத்தியாயம் எழுதப்படுவது அவசியமாகும். பேராசிரியரின் இனிய சுபாவமும் எளிமையான பழகும் தன்மையும் அனைவரையும் அணைத்துச் செல்லும் ஆற்றலும் ஆளுமையும் கொண்டவர்.
பேராசிரியர் சந்திரசேகரம் இலங்கையின் கல்வி வளர்ச்சிக்காகவும் தனது சமூகத்தைச் சேர்ந்த மலையக மக்களின் கல்வி வளர்ச் சிக்காக தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் காத்திரமான பல கட்டுரைகள் எழுதி யுள்ளார். பத்துக்கு மேற்பட்ட கல்வியியல் நூல்களையும் எழுதி வெளியிட்டு ஆசிரியர் சமூகத்தின் அறிவுக் கண்ணுக்கு மிகப் பரந்த புதிய வழிமுறைகளை வெளிச்சம் காட்டியுள்ளார். அது மாத்திரமல்ல "இலங்கை இந்தியர் வரலாறு" என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். இலங்கை வாழ் இந்திய சமூகத்தின் வரலாற்றை எழுதுபவர்களுக்கு இந்த நூல் ஒரு முன்னோடி நூலாக அமையும் என்பதை ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
பேராசிரியரின் பேச்சாற்றல் பலரையும் கவரும் தன்மை கொண்டது. நூல் அறிமுக விழாக் களில் அவரது விமர்சன உரை படைப் பாளிகளின் மனம் புண்படாதவாறு நகைச்சுவையாக குற்றம் குறைகளை எடுத்துக் கூறுவார்.
பேராசிரியரிடம் எனக்குப் பிடித்த பண்பு பெரியவர். சிறியவர் என்று பாராமல் அவர்களோடு மனம் திறந்து உரையாடுவார். ஒருவரிடம் ஏதாவது திறமை இருக்கிறது என்று அறிந்தால் அவரை ஊக்குவிப்பதில் முன் நிற்பவர்.
நான் கடந்த கால் நூற்றாண்டாக பேராசிரியரிடம் கொண்ட நட்பு சத்தியமானது. எனது இலக்கியப் பணிகளை தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பவர். மணிவிழாக்காணும் பேராசிரியரின் இத்தகைய சிறப்புக்கு ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்ற வாக்கிற்கொப்ப பேராசிரியருக்கு உறுதுணையாக இருப்பவர் அவரது துணைவியார், எல்லோரும் ஒர் குலம் எல்லோரும் ஒர் இனம் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை என்ற பாரதியின் கவிதா வாசகத்திற்கு ஏற்ப வாழும் பேராசிரியர் மணிவிழா மாத்திரமன்றி பிறை நூறு கண்டு பெருவாழ்வு வாழட்டும்.
அந்தனி ஜீவா

Page 18
கலங்கரை விளக்கு.
1962 ஆம் ஆண்டின் பல்கலைக்கழக புகுமுகத் தேர்வில் மாத்தளை
புனித தோமையர் கல்லூரி மாணவனாகத் தேர்ச்சி பெற்ற நான் 1963 ஆம் ஆண்டில் பேராதனை வளாகத்தில் நுழைந்தேன். பேராதனை வளாகம் எனக்குப் புதியதல்ல. எனக்கு கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்கள் நா.இராசரத்தினம், முனைவர் வி.கந்தவனம் ஆகியோர் புகுமுக மாணவர்களை பேராதனை வளாகத்தில் நடைபெற்ற நூல் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அது மட்டுமின்றி புகுமுகத் தேர்வையும் பேராதனை வளாக உள்ளக விளையாட்டரங்கில் தான் எழுதினேன். இருப்பினும் பல்கலைக் கழகப் பழைய மாணவர்களின் கேளிக்கைகளுக்கு நானும் இலக் காகி எனது அழகிய அரும்பு மீசையை இழந்தேன்.
பல்கலைக்கழகத்தில் வடபுலத்திலிருந்து வந்த மலையக மாணவர் களைத் தேடினேன். விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் மலையக மாணவர்கள் இருந்தனர். ஒருவாறு நண்பர் சந்திரசேகரத்தைக் கண்டுபிடித்தேன்.
அவர் பல்கலைக் கழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கல்வித்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டார். பொதுக்கலைத் தகுதித் தேர்வில் சிறப்புப் புள்ளிகள் பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே கல்வித்துறைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அதில் முதலிடத்தை நண்பர் வகித்தார். பல்கலைக்கழகத்தில் நண்பரை "சீத்தலைச் சாத்தான் என்ற பெயரில் ஏனையோர் அழைப்பதுண்டு.
ஆசிரியர் என்பவர் ஒரு சிற்பி. பேராசிரியரால் உருவாக்கப்பட்டவர்கள் ஏராளம். அவரிடம் கற்க வருபவர்கட்கு அவர் என்றும் ஒளி வீசும் அணையா கலங்கரை விளக்கு. நண்பர் மென்மேலும் கல்வித் துறைக்கு நற்பணிகள் புரிந்து
நல்மாணவர்களை உருவாக்க எனது வாழ்த்துக்கள்.
வீ. அருணாசலம்பிள்ளை ஓய்வுபெற்ற மூத்த உதவிப் பணிப்பாளர் இலங்கை மத்திய வங்கி
பூம்புகார் 202 அலுத்மாவத்தை வழி, கொழும்பு - 15

கல்வியியலில் ஒரு கலங்கரை .
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்விப்பீட பேராசிரியர் சோ. சந்திர சேகரம் அவர்களுடைய மணிவிழா மலரில், என்னுடைய வாழ்த்துக் கட்டுரையும் இடம்பெறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதாகும். இதனை எனக்குத் தரப்பட்ட ஒரு கெளரவமாகவே நான் கருதுகின்றேன்.
உலகம் மாற்றம் பெற்றுக்கொண்டே வருகின்றது. கல்விச் செயற்பாடு களிலும் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், கற்றல் கற்பித்தல் தொழிற்பாட்டில் தம்மை இணைத்துக்கொண்ட ஆசிரியர்களின் வகிபங்கிலும் மாணவர்களின் போக்கிலும் பாரிய செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.
ஆசிரியர்களின் அறிவுத்துறையான கல்வியியல் ஒரு பரந்ததுறையாக இன்று வள்ர்ச்சியடைந்துள்ளது. இன்றையக் கல்வியியல் அறிவினை ஆசிரியர்கள் நன்கு கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்மொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இத்தகைய தரத்தையும் தகுதியையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும் என முயலும் வழிகாட்டிகளுள் தலையாய வழிகாட்டியாக விளங்குபவர் மணிவிழாக் காணும் பேராசிரியர் உயர்திரு. சோ. சந்திரசேகரம். தமிழ்மொழி யடிப்படையில், இருட்டிலே கிடந்த கல்வியியலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததோடு மட்டும் அமையாது அத்துறையிலே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அற்புத மனிதர் அவர். கல்வியிலும் கல்வியியலிலும் ஏற்படும் புதிய செல்நெறிகளையும் நவீன சிந்தனைகளையும் உலகளாவிய ரீதியில் அதன் போக்கையும் அழகு தமிழில் எடுத்துக் கூறும் ஆற்றலும் ஆளுமையும் அவருக் குண்டு. கல்வியியலைப் பேசும்போதும் எழுதும் போதும் நகைச்சுவையை நாசுக்காகப் புகுத்தி அதனைச் சுவைபடத் தருவதில் பேராசிரியர் வல்லவர்.
கல்வியியல் துறையைப் பரந்த அடிப்படையில் விரிவாக்கி விசாலமாக்கி, இலகுவாக்கி, இனிக்க வைத்துத் தமிழ் மொழிமூலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அடைபட்டிருந்த கதவைத் திறந்துவிட்ட அவர் ஒரு கலங்கரையேதான்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் பல்லாண்டுகாலம் மேலும் வாழ்ந்து தமிழ்க்கல்விக்கும் தமிழ்க் கல்வியியலுக்கும் பெரும் தொண்டாற்ற வல்ல இறைவன் சுகத்தையும் வாய்ப்புக்களையும் உவந்து நல்கவேண்டும் என்று பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
அல்ஹாஜ் எம்.வை.எம். முஸ்லிம் ஜே.பி.
முன்னைநாள் மேலதிக கல்விப் பணிப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம், கணடி மத்திய நிலையம் தலைவர், கண்டி தமிழ்க் கல்விக் கழகம்
29

Page 19
வாழ்த்துப்பா .
தென்தமிழ் நாட்ழல் செந்தமிழ் வளர்த்த சேதுபதி சீமையிலே சிறப்புமிகு சிக்கல் மாநகரை பூர்வீக தலமாய் கொண்டு பின் சீர் மேவும் இலங்கை சென்று வாழ்ந்த எம் நீங்கா நினைவில் வாழும் திரு. செ. சோமசுந்தரம், ருக்குமணி தம்பதியினரின் மூத்தகுமாரர் திரு. சோ. சந்திரசேகரன் அவர்களின் 60வது ஆண்டு வாழ்த்துப்பா
அன்னை தந்தை உனை வாழ்த்த அருகே இல்லை, அவர் சார்பில் வாழ்த்த வந்தேன் மருகன் நானே, சூரியனின் கடும் ஒளியை தன்னுள் வாங்கி குளுமையாய் தருகின்ற சந்திரனே எங்கள் - சந்திரசேகரனே! காரிருளில் ஒளியை இந்த உலகிற்கீந்தும் கர்வமிலா சந்திரன் போல் வாழும் நீயே, எளிமையின் சிகரமாம் எங்கள் சந்திர சேகரனே உனை எப்படி நான் வாழ்த்துவதரி பூப்போன்ற உள்ளமதை பெற்றதாலா, புகழ் மணக்கும் காவியங்கள் படைத்து நின்றாய்! எப்போதும் உன்னுடனே உள்ள ஆற்றல் இனிமேலும் சிறந்த நிற்க வாழ்த்துகின்றேன்.
இச்சகத்தில் உனது புகழ் என்றும் வாழும் இமயத்தின் சிகரம் போலே உயர்ந்து நிற்கும் மெச்சும் உன் அறிவாற்றல் கூர்மையாலே மேதினியில் - உன் - சரித்திரங்கள் நிலைத்த நிற்கும்.
30

தயருற்ற போது என் அருகில் வந்து ~ என் தன்பமதை தீர்த்திட்ட மருந்தாய் ஆனாய் பல்வேறு வெப்பமதை உன்னுள் வைத்து பாசமென்ற பேரொளியை எமக்குத் தந்தாய்,
சந்திரனின் ஒளி பெற்ற தாரகை போல் - உன் அறிவுப் பொட்டகத்தை பலருக்கும் தந்த பண்புமிகு பேராசிரியன் நீ. உன் பக்குவ நடைமுறையை பலரும் வந்து பாராட்ட நான் உவகை கொள்வேன் ~ அத சமயம் உவந்த நிற்பேண் தமிழின் பால் நீ கொண்ட புலமையாலே தலைவர் என்ற பதவியினை உனக்குத் தந்தார் ~ கொழும்பு தமிழ்ச் சங்க தலைவராய் நீ ஆற்றிய தொண்டு அளப்பரியது.
இலங்கை - கல்வியின் வளர்ச்சியை முன்னே வைத்து கணக்கிலா நால்களை நீ ஆக்கித் தந்தாய் ~ அவை ஒவ்வொன்றும் உனது புகழ் உயர்த்திக் காட்டும் ஒப்பற்ற பொக்கிஷமாய், திகழ்ந்து நிற்கும் - ஊன்றுகோலாய் அமைந்திருக்கும் ஆசிரியர்கட்கு பன்னாட்டு சாத்திரங்கள் கற்றதாலே பல்வேறு இயக்கத்தின் தலைமை ஏற்றாய். பக்குவமாய் வாழுகின்ற உனது வாழ்க்கை பாரெல்லாம் மணம் பரப்பும் மலராய் என்றும்.
உன்னுடைய கற்பனையில் உருவான பதினாறு காவியமும் உனது புகழ் பறை சாற்றும் பதினாறு பேறுகளாம். இப்பேறுதனை அடைய, முப்பிறப்பில் நீ என்ன தவம் செய்தனையோ, அறியேன் நானே!
உன்னுடைய பேராற்றல் உலகோர்கண்டு உவகையுடன் அழைத்திட்டார் அவர்தம் நாடு சர்வதேசக் கருத்தரங்கில் கலந்து நின்று ~ பல சாதனைகள் நிகழ்த்தியதை ஏடு சொல்லும் பயனுள்ள நால்களை நீ படைத்ததாலே, பாரெல்லாம் உனது புகழ் ஓங்கி நிற்கும்.
3

Page 20
2.ண்ைைடய அறிவாற்றல் கண்டு தானே ~ இலங்கை அரசு, ஜூ வந்தளித்தார் பதவிகளை ஒன்றோடொன்று. அமெரிக்கா அல்பமா பல்கலைக் கழகத்திற்கே நீ அன்பான வருகைதரு விரிவுரையாளர். திறந்த வெளி பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கல்வி நிறுவகமும் சேர்ந்து அறிவான உந்தனத செயல் வியந்த அளித்திட்டார் வள அறிஞர் பதவி தன்னை. அங்கு பல்வேறு ஆசிரியர்க்கும் கல்வி ஈந்து அவர் பாங்குடனே கல்வி மணம் பரப்பச் செய்தாய்.
கருவிலே உருவான ஞானம் உன் கற்பனை வளர்ச்சியில் உருவான எண்ணம் - பல சரித்திரம் படைத்திட்ட உள்ளம் ~ உனை ~ மக்கள் ~ மறக்கவே மாட்டார்கள் திண்ணம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் ~ எம் குலதெய்வம் - கூரிச்சாத்த அய்யனார் உன் தணையாய் நிற்பார். குவலயமே அதிர்ந்தாலும் கவலை வேண்டாம் உன் குலம் வளரும் வையகத்தில் ஆலைப்போலே,
கலைமகளும் மலைமகளும் சேர்ந்து வாழ்த்தும் கட்டுரைக் காவியங்கள் பல புனைந்து ஒளிர நின்றாய் இப்புவியில் உனது புகழ் உயர்வு கண்டு வையத்தள் வாழ்வாங்கு வாழ என, உன்னை வானகத்தில் இருந்துமே வாழ்த்துகின்றார் ~ நம் அன்னை தந்தை
பொறுமையின் சிகரமாம் நம் மனைவி சாந்தாவோடு, புகழ் மணக்கும் மக்களுடன் மழலையர் செல்வம் சூழ இன்றுபோல் என்றும் வாழ்ந்து இணையிலா செல்வம் பெற்று பல்லாண்டு, பல்லாண்டு நீவிர் வாழ்க என்று பரமனை நான் வேண்டுகிறேன் ~ தணையாய் நிற்பார்.
- வணக்கம் -
எஸ். அப்பாவுராஜ் பரமக்குடி பொதுப் பணித்துறைக் கண்காணிப்பாளர்
தமிழ் நாடு
3
2

பேராசிரியரின் பணிகள் தொடரட்டும்
நண்பர் சந்திரசேகரனுடன் நான் கடந்த நான்கு தசாப்தங்களாக நெருங்கிப் பழகியவன். 1960களின் பிற்பகுதியில் நான் வெலிகம அறயா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் சந்திரசேகரன் அவர்கள் ஆசிரியராக நியமனம் பெற்று எம்முடன் வந்து சேர்ந்தார். ஆசிரியராகச் சிலவருடங்களே அவர் கடமையாற்றியபோதிலும் அனுபவமிக்க ஆசிரியருக்குரிய சகல ஆற்றல்களையும் அவரிடம் காணக் கூடியதாக இருந்தது. பல்கலைக்கழக விரிவுரையாளராக வருவதற்குரிய சகல திறமைகளும் தகைமைகளும் இருந்தும் அவருக்கு அவ்வாய்ப்பு உடன் கிடைக்காததையிட்டு நான் அவ்வேளையில் விசனப்பட்டதுண்டு. எனினும் நான் எண்ணியவாறு அவருக்குப் பேராதனைக் கல்விப் பீடத்திலிருந்து அழைப்பு வந்தது. சந்திரசேகரன் இருக்கும் இடம் பாட்டும் கதையுமாக வெகு கலகலப்பாக இருக்கும். அவருடைய பேச்சில் நகைச்சுவை ததும்பும், அதேவேளை ஆழமான சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள் வெளிப்படும். நான் தேசிய கல்வி நிறுவகத்தில் கடமையாற்றிய வேளை அவரது உதவியைப் பல தடவைகள் பெற்றுக் கொண்டேன். திறந்த பல்கலைக் கழகத்தில் நாம் நடத்துகின்ற முதுகல் விமாணி நிகழ்ச் சித் திட்டங்களில் அவரது உதவி எமக்குக் கிடைத்துள்ளமை எமது பழுவினைப் பெரிதும் குறைத்துள்ளது.
நண்பர் சந்திரசேகரனது எதிர்காலக் கல்விப் பணிகள் புதிய பரிமாணங்களைப் பெறவேண்டுமென்பதே எனது ஆவல்.
சி.து. இராஜேந்திரம் கல்விப்பீடம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

Page 21
கூர்மையான நுண்மதியாளர்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் மணி விழாவிற்கு வாழ்த்துரை வழங்குவதை நான் ஓர் அரிய பேறாகக் கருதுகின்றேன்.
இலவசக் கல்வியின் பயனாகப் பல்கலைக்கழகக் கல்வித்துறையிலே ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்த போதுதான் திரு. சோ. சந்திரசேகரம் பல்கலைக்கழக அனுமதி பெற்றார். அதாவது 1963 ல் ஏற்கனவே ஊவா மாகாணத்திலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த நான்கு பட்டதாரி மாணவர்களுடன் ஐந்தாமவராக இவர் இணைந்தார். அந்த நான்கு பட்டதாரி மாணவர்களில் இன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராக விளங்கும் திருவாளர் சின்னத்தம்பியும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது. அக்காலத்தில் பெருந்தோட்டத்துறையில் பதுளை மாவட்டம் கல்வியில் ஒரு முன்னோடியாகவே திகழ்ந்தது.
பேராசிரியர் அவர்கள் எந்தச் சிக்கலான விடயத்தையும் மிக வேகமாகப் புரிந்து கொள்ளும் அதி கூர்மையான நுண்மதியாளர் என்பது அவருடன் நெருங்கிப்பழகும் எல்லோரும் அறிந்த உண்மை. எந்த ஒரு விடயத்தையும் புதுமையான, வேறுபட்ட நோக்கிலே காண்பது இவருக்குக் கைவந்த கலை. இடதுசாரி அரசியல் கருத்துக்களுடன் தொடர்பு கொண்டிருந்தமையால் எந்த விடயத்தையம் விஞ்ஞான பூர்வமாகவே நோக்குவார். புத்தம் புது விளக்கங் களையும் அளிப்பார்.
பேராசிரியர் அவர்கள் ஒரு நகைச்சுவை மன்னர் எந்த ஒரு விடயத்தையும் மிகவும் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையுடனும் பேசுவார். வந்தவர்களை எல்லாம் வீட்டில் இன்முகத்துடன் வரவேற்பார். அவருக்கு ஏற்ற அவரது துணைவியார் பேராசிரியருக்குப் பக்கபலமாக நின்று குடும்ப வாழ்வை இனிதே நடத்திச் செல்லுகிறார்.
மணிவிழாக் காணும் பேராசிரியருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவிப்பதோடு அவர் நீண்டகாலம் தனது சேவையைத் தொடர்ந்து செய்து சமூகத்திற்குப் பெருமை தேடித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
வை. இவரங்கண்
ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் பதுளை
34

வாழிய வாழி நூற்றாண்டுகள் வாழி.
முகமலர் விரிவில் அகம் தெரிகிறது அகமதின் தெளிவு அறிவினைக் காட்டும் அறிவின் உயர்வில் கல்வி ஒளிரும் ஒளிப்பிரகாசம் உலகெலாம் துலங்கும் ஒழுக்கமும் கல்வியும் உடன் விரிவடையும் இந்த விரிவு எம்முடைத் தேசிய இலங்கையின் கல்வியை இசைவுடன் காட்டும் கல்விமான் சோ சந்திரசேகரம்
கல்வி வளர்ச்சியின் வரலாற் றண்மைகள் கல்வி வளரக் காட்டிடும் சிறப்புகள் பல்வித அறிவு நணுக்கங் காட்டி எந்நேரமும் எழுதிக் குவிக்கும் பன்முக எழுத்தின் காவலராகப் பங்கு கொள்பவர் எங்கள் பேராசான் சந்திர சேகரம் அவர்பணி பெரிது! தமிழ் இலக்கியக் கல்வி சார்புடனே தமிழ்மொழி விரிவைத் தரும் ஒரு பெரியார் இவர்பணி எங்கும் ஒலி பெருக்கிடுதல் ஒவ்வொரு நாளும் காணுதல் உண்மை ஓய்ந்திடாக் கல்வியில் ஆழ்ந்து நிற்பவராம்!
இப்பெரியாரின் அகவை அறுபது அறுபத வயதின் அறுவடை அதிகம் அறுவடை அத்தனை ஒன்றியல் இணைத்த நால் வடிவில் நாம் நுணுகுதல் வேண்டும்

Page 22
இச்செயல் நமது பொறுப்புடைக்கடமை இவர் சிறப்பதனுள் நிறைந்து வழியும் அற்புதமான அறிவினில் ஆழும் பொற்புடை மனிதர் புகழுக்குரியார்!
கல்விப் பெரியார் கனதியுடன் தமிழ் இலக்கியம் தருவார் இன்னு மதிகக் கல்விச் சிந்தனை கற்பவர்க் கீந்தம் வித்தியாசமாய் விளக்கம் புரிபவர் மரபுடன் புதவழி நவின்றிடும் இவரது எதிர்வரும் சிந்தனை எழிற் சிறப்புடைத்து அத்தனை புதிய சிந்தனைக் குரிய மெத்தப் பெரிய மேன்மை யுடையார்
சோ சந்திரசேகரம் சளைத்திடா தயர்ந்து இன்னு மின்னும் இளைஞ ராகவே எம்மிடை வாழுப் பாது காவலும் சுகத்துடன் ஆரோக்கியம் பெற்றும் வாழ்ந்திட இறை அருள் வாழிய வாழி நாற்றாண்டுகள் வாழி:
கவிஞர் ஏ. இக்பால்
36

எங்கும் எப்போதும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
அதிகாலை கடமைகளுள் ஒன்றாக பத்திரிகைகளின் பக்கங்களைப் பார்த்து சில செய்திகளைப் படிப்பதுண்டு. அடிக்கடி நடுப்பக்கங்களில் பிரதான கட்டுரைகள் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் எழுதியதாக இருக்கும். பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்த தேடல்களின் பதிவுகளாக, தெரிந்துகொள்ள வேண்டிய புள்ளிவிபரங்களாக அமைந்திருக்கும்.
வாகனத்தில் காலை அலுவலகம் செல்லும்போது வானொலி கேட்கும் வசதி, பேராசிரியரின் குரல் ஒலிக்கிறது. வெளிநாட்டு முக்கிய தகவல்களோடு தனது அபிப்பிராயத்தையும் தெரிவிக்கின்றார். பயனுள்ளவை.
மாலையில் நூல் வெளியீடா, அல்லது கலந்துரையாடலா, ஒன்றுகூடலா, சிறப்பு விழாக்களா - பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும். தலைமை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பின் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்பவர் பேராசிரியராக இருக்கும். சபையைக் கலகலப்பாக்கி கனதியான கருத்துக்களைச் சொல்வார்.
அவ்வப்போது சோ. சந்திரசேகரம் அவர்களை எங்கும் எப்போதும் தரிசிக்கக்கூடியதாக இருக்கும். மிகவும் எளிமையானவர். பண்பாகவும் அன்பாகவும் நெஞ்சுக்கு நெருக்கமாகப் பழகும் நண்பர்.
எந்த விடயத்திலும் எழுதவும், பேசவும் கருத்து பரிமாறவும் வல்ல பேராசிரியர் இன்னும் பல்லாண்டு பல துறைகளிலும் முன்னணியில் திகழ வாழ்த்துகின்றேன்.
உடுவை எஸ். தில்லைநடராசா கல்வி அமைச்சு மேலதிக செயலாளர் இசுறுபாய பத்தரமுல்ல

Page 23
எல்லா நலன்களும் கிட்டுக.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே (பேராதனை) என்னிடம் சிறிது காலம் கல்வி கற்றவர். சிறிது காலம் எனினும் அவரை நான் கற்கவும் என்னை அவர் கற்கவும் அது வாய்ப்பளித்தது. இக் கற்கை காரணமாக நாமிருவரும் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
நண்பர் சந்திரசேகரம் யாழ்ப்பாணத்திலே கல்விப் பணி ஆற்றும் வேளையிலே நாம் அடிக்கடி சந்தித்துப் பேசி மகிழ்வோம். அவர் நகைச்சுவையாகப் பேச வல்லவர். மிகவும் ஆழமான பொருளினை மிகுந்த அறிவாற்றலுடன் ஒழுங்கான எண்ணக் கருக்களுடன் விளக்க வல்லவர், எல்லாவற்றையும் தெளிவாக விளக்கிய பின்னர் ஏதாவது ஒன்றை நகைச் சுவையுடன் கூறுவார். சிரிக்கத் தெரியாதவர் கூடச் சிரித்து விடுவார்.
அறுபது அகவையை அடைந்தபோதும் சென்ற காலத் திரைப்படப் பாடல்களை நன்கு பாடுவார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை தரமணியிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிலே இருவரும் பங்குபற்றினோம். ஒய்வு நேரங்களிலே இவருடைய பாடல்களைக் கேட்பதற்காக பேராளர்கள் பலர் விரும்பி வருவார்கள்.
பேராசிரியர் சந்திரசேகரம் இன்றுபோல் என்றும் அவர் வாழ வாழ்த்துகிறேன். அவர் ஆற்றுவதற்குப் பல பணிகள் இருக்கின்றன. அவற்றை ஆற்றி நிறைவு செய்ய அவருக்கு நிறைந்த ஆயுளும் நல்ல உடல், உளவலுவும், எல்லா வகை நலன்களும் கிட்ட வேண்டுமென இறையருளை வேண்டி இந்த வாழ்த்துரையை நிறைவு செய்கின்றேன்.
பேராசியர் அ. சண்முகதாஸ்
தலைவர் தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
38

சமூகத் தலைவர் .
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் மணிவிழாவை கொண்டாடும் இவ்வேளை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் நாமிருவரும் படித்த பசுமை நினைவுகள் என் மனத்திரையில் ஒடுகின்றன. பதுளையில் எஸ்.எஸ்.சி. வரை படித்துவிட்டு எச்.எஸ்.சி. முதலாம் ஆண்டில் மகாஜனாவில் இணைந்து கொண்டார். நான் எச்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அக்காலத்தில் எச்.எஸ்.சி. மாணவர்களுக்கு நூலக நேரம் என்று ஒன்றரை மணிநேர ஓய்வு கொடுப்பார்கள். அவ்வேளை நூலகத்தில் உற்சாகத்தோடு வாசிப்பில் ஈடுபடும் சிலரில் சந்திரசேகரமும் ஒருவர். கல்லூரி நூலகமும் அங்குள்ள புத்தகங்களும் எங்கள் இருவருக்கும் இடையிலான நட்புப் பாலமாக இருந்தன. அவரின் அறிவுத் தாகமும் தேடலும் அவரை ஒரு பேராசிரியர் நிலைக்கு இன்று உயர்த்தி உள்ளன.
நாம் சந்திக்கும்போது கடந்துவந்த பாதையை திருப்பிப் பார்ப்போம். அலசுவோம். நகைச் சுவையாக தன் வாழ்க்கை வரலாற்றைச் சந்திரசேகரம் விபரிக்கும் பாங்கு அலாதியானது. தன்னை மையப்படுத்தி தன்முனைப்பு இல்லாமல் விமர்சிப்பார். உரையாடல் அவருக்குக் கைவந்த தனிக்கலை. "அக்காலத்தில் பதுளையில் எஸ்.எஸ்.சி.க்கு மேல் படிப்பதற்குப் பள்ளிக்கூடங்கள் இருக்கவில்லை. அதனால் என் தந்தையார் மகாஜனாவிற்கு என்னை அனுப்பினார்”, என்பார் சந்திரசேகரம்.
சந்திரசேகரம் விஞ்ஞானம் கற்காமல் கல்வியியலைக் கற்றமையானது, ஒரு வகையில் எம் சமூகத்திற்கு நன்மையாக முடிந்தது. அவர் ஒரு சமூக விஞ்ஞானியாக, எங்கள் சமூகத்தின் நோய்களை அறிந்து சொல்லும் மருத்துவராக பரிணாமம் பெற்றது நமது அதிஷ்டமே. எமது சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள். தலைமையேற்று வழிநடத்தக்கூடியவர்கள் எம்மத்தியில் இல்லையே என்பது பெரும் குறை. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் சந்திரசேகரம் போன்ற ஓரிருவராவது இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.
சந்திரசேகரம் என்ற தனிநபர் வாழ்வின் ஊடாக எமது தலைமுறையின் சமூக வரலாற்றை, அதன் ஏற்ற இறக்கங்களை, கொந்தளிப்புகளை, குமுறல்களை நான் தரிசிக்கின்றேன்.
க. சண்முகலிங்கம் முன்னாள் மேலதிக செயலாளர்
புனர்வாழ்வு, புனர்நிர்மாண அமைச்சு
39

Page 24
நடமாடும் கருவுலம் .
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களுக்கு மணி விழா நடத்துவது அறிந்து உவகை அடைகின்றேன்.
பேராசிரியர் அவர்கள் நடமாடும் அறிவுக் கருவூலமாக செயற்பட்டுவருபவர். மலையக மாணவர்களின் கல்வி தொடர்பாக பல ஆய்வுகளை செய்து பெறுமதி மிக்க ஆவணங்களை உருவாக்கி வருபவர்,
கல்வி மற்றும் இலக்கியத் துறையில் அவரது சேவை இடைவெளியில்லாத சமூகத் தொண்டாக தொடர்ந்து இருக்கின்றது. இன்று வரையிலும் அரசியலில் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாத தனித்துவ மனிதராக இவர் வாழ்ந்து வருகின்றார்.
ஆனால் தேவை ஏற்படும் போதெல்லாம் மலையக தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பக்கத் துணையாக இருந்து பல ஆலோசனைகளை வழங்குகின்ற சமூக சிந்தனையாளராக வாழ்ந்து வருகின்றார்.
எக்காலத்திலும் அரசியல் வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள் சமூக சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எவரோடும் முரண்பட்டுக் கொள்ளாத அவரது முதிர்ச்சியடைந்த அணுகுமுறையை கண்டு நான் வியக்கின்றேன்.
பழகுவதற்கு இனிமையானவர். எளிமையானவர், வியத்தகு விடயங்களை எடுத்துச் சொல்லும் போதும் கூட யதார்த்தமாகவும் நகைச் சுவையாகவும் சரளமாகவும் பேசிக் கொண்டு போவதை நான் அவதானித்திருக்கின்றேன். மேதாவித்தனமோ தலைக்கணமோ எப்போதும் அவரிடம் இருந்து வெளிப்பட்டதே யில்லை.
பேராசிரியர் சோ சந்திரசேகரன் அவர்களுக்கு மணி விழா நடத்துவது எல்லா வகையிலும் ஏற்புடையது மட்டுமல்ல மலையக சமூதாயத்தின் கடமையுமாகும்.
இவ்விழா ஏற்பாட்டு குழுவினருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, திரு. சோ. சந்திரசேகரன் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் மலையக சமூகத்தின் மேம்பாட்டிற்காக நீடித்து வாழ வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
பெ. சந்திரசேகரன் பா.உ
தலைவர் மலையக மக்கள் முன்னணி
4()

நெருங்கிய நண்பன் .
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களது மணிவிழாவில் எனது வாழ்த்துரையையும் இடம்பெற வைத்த விழாக்குழுவினருக்கு என் நன்றியைத் தெரிவித்து இப்பேறு எனக்குக் கிடைத்தமைக்கு என் இறைவனை துதிக்கிறேன். பேராசிரியர் அவர்களை நான் முதன்முறையாக சந்தித்தது 1971ம் ஆண்டு. நாங்கள் இருவரும் வெலிகம அறபா மகாவித்தியாலயத்தில் கற்பிக்கும்போதே எங்கள் இருவரின் உறவும் மிக நெருக்கமடையத் தொடங்கியது.
பேராசிரியர் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் விகடமாகவும் எல்லோருடினும் சரிசமமாகவும் வர்க்க வேறுபாடின்றியும் பழகும் சுபாவம் படைத்த ஒரு கனவான். பேராசிரியர் தனது மாணவர்களிடமும் மிக அன்னியோன்னிய மாகவும் அன்பாகவும் விகடமாகவும் பழகும் தன்மை படைத்தவர். இவரது வகுப்பறைக் கற்பித்தல் கூட மிகக் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் காலம் போவது தெரியாமலும் கழிவதோடு பாடம் முடிந்து வெளியேறும் மாணவர்கள் மிகச் சந்தோஷமாக மலர்ந்த முகத்தோடு வெளியேறுவது வழமை. இவரது வகுப்பறையில் நானும் ஒரு மாணவனாக கல்வி டிப்ளோமா துறையில் கற்றேன்.
இவர் பதினைந்திற்கும் மேற்பட்ட கல்வியியல் துறை நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பிரசுரமாக்கி யுள்ளார். இவைகளையெல்லாம் செய்தும் பேராசிரியர் அவர் பிறந்த மண்ணின் மைந்தர்களை மறக்கவில்லை. முதலாவதாக நூல்வடிவம் பெற்ற அவரது புத்தகம் "இலங்கை இந்தியர் வரலாறு என்பதாகும். பேராசிரியர் கல்வித்துறையில் மட்டுமல்ல அன்றாட சமூக அரசியல் பிரச்சினைகள் பற்றிப் பல்வேறு மட்டங்களிலும் பேசுபவர். மேலும் "சார்க் நாடுகளின் கல்வியியல் ஆராய்ச்சி சஞ்சிகையின் ஆசிரியர்பீட ஆலோசகராகவும் ஆசிரியர் கல்வி அதிகாரசபையின் உறுப்பின ராகவும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இன்னும் பல உயர் மட்ட ஆலோசனைக் குழுக்களின் அங்கத்தவராகவும் எம்நாட்டுக்கு சேவை புரிகின்றார். ஒரு நெருங்கிய சகோதரனான பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களின் சேவை நம் அனைவர்க்கும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே இவரது சேவை வாழவேண்டும். அதுவாழ இவர் நீடூழி வாழ வேண்டும். அதற்காக எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
எம். ஐ. சம்சுதீன் சட்டத்தரணி
4

Page 25
கண்டிப்பான நேர்மையாளர்.
பேராசிரியர் சந்திரசேகரம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராக இருந்த பொழுது மிக நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டமைக்குப் பல சந்தர்ப்பங்களுண்டு. உதாரணமாக, ஒரு விசேட பொதுக் கூட்டத்தில் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிட முனைந்த பொழுது அவர் அப்பதவிக்குப் போட்டியிடச் சிறிதும் அருகதையற்றவர் என மிகுந்த நேர்மையாகத் தீர்ப்புக் கூறினார். இன்னொரு கட்டத்தில் இவர் இல்லாதபொழுது தற்காலிகமாகத் தலைமை தாங்கிய ஒருவர் அவர் செயலாளர் பதவிக்குப் போட்டியிடலாம் எனத் தீர்ப்புக் கூறினார். உடனே உறுப்பினர் ஒருவர் நீதிமன்றம் சென்று இவர் போட்டியிடமுடியாது என வழக்குத் தொடுத்து அதன்படி தற்காலிகக் கட்டளை பெறலானார். பின்னர் நிரந்தர தீர்ப்புப்பெற அவரும் நீதிமன்றம் சென்று அவ்வழக்குச் சார்பாக வாதிட ஆயத்தமானார். அந்த வழக்கில் இவருடைய சாட்சியும் இல்லாமலே வழக்குத் தாக்கல் செய்தவர் சார்பாகத் தீர்ப்பு வழங்கப் பட்டது. எனவே இவர் சாட்சியம் அளிக்க வேண்டிய தேவையேற்படவில்லை.
இவ்வாறு இவர் நேர்மையைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்துக் கண்ணியமாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நடந்துள்ளார்.
தமது அறுபதாவது அகவையில் காலடி எடுத்து வைத்து மணிவிழாவின் நாயகனாக பெருமைபெறும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களை வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
மலையகத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் கல்வி கற்று பேராதனைப் பல்கழைக்கழகத்திலும் உயர் பட்டங்களைப் பெற்று இன்று நாடளாவிய ரீதியில் புகழ்பெற்றுள்ள பேராசிரியர் அவர்களுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது அவர் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த போதாகும்.
எனவே இவர் கண்ணியமாகப் பேராசிரியர் பதவியை மாத்திரமன்றி எத்துறையிலும் பெரும் மதிப்புடன் விளங்கி வருகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ச. சரவணமுத்து இளைப்பாறிய மொழிபெயர்ப்பு அத்தியட்சகர்

எங்கும் ஜொலிப்பவர்.
செய்தி நாகலிங்கம் - பேராசிரியரின் மனைவியின் தந்தை, அவர்களோடு அறுபதுகளில் ஏற்பட்ட தொடர்பு இன்று அவரது மருமகன் பேரtசிரியர் சோ. சந்திரசேகரனிடமும் தொடர்ந்து நீடிக்கிறதென்பதே மகிழ்ச்சியான செய்திதான். இந்த மகிழ்ச்சிக்கு பல காரணங்களுண்டு.
நாங்களிருவரும் சம வயதினர் - இந்த ஆண்டில் அறுபது வயதை எட்டிப் பிடித்தவர்கள். மலையக எதிர்காலம் குறித்து கவலைப்படுபவர்கள். மலையகத்தைச் சார்ந்தவர்கள் என்பவைகள் பிரதானமானவைகள்,
இன்று இந்தப் பின்னணியில் இருக்கும் பேராசிரியர்களின் பல்கலை மட்டத்துக்கு வெளியே பல மட்டங்களிலும் அறியப்பட்டவராக அன்றி செயற்படுபவராக இருப்பவர் நமது பேராசிரியர் ஒருவரே.
கொழும்பு, மலைநாடு, தமிழ்நாடு என்று எங்கு நடக்கும் விழாவிலும் கல்நதுகொண்டு ஜொலிக்கும் வாய்ப்பு இவருக்குத்தானுண்டு.
பல்கலை வட்டத்துக்குள்ளாகவே மூடி மறைத்துக் கொள்ளப்பட்ட திரவியமாக இல்லாது, வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் இரவு நேரங்களில் தொலை பேசியில் உரையாடி எங்களுக்குள் நிலவுகின்ற நெருக்கத்தைப் பேணுவதில் இவர் காட்டும் சிரத்தை உண்மையில் ஆச்சரியப்படத்தக்கது.
பெரியசாமி பீ.ஏ. ஆகிவிட்டான் என்ற சிறுகதையில் சொல்லப்பட்டதைப் போல, எமது படித்த இளைஞர்களின் செயற்பாடுகள் கேள்விக்குரித்தாக்கப்பட்ட கால கட்டத்தில் பேராசிரியர் சந்திரசேகரம் நின்று நிலைக்கிற பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு உழைப்பதை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
மணிவிழாக்காணும் பேராசிரியரின் வைரவிழாவிலும் வாழ்த்துக்கூறும் வாய்ப்புக் கிட்டும் என்ற நினைவுகளுடன்
சாரல் நாடன்

Page 26
பேராசிரியர் சோ.சந்திரசேகரனும் நானும் .
அறுபது வயதையடையும் இளமை நெஞ்சன், கல்விமான், பண்பாளன், தேடுதலைத் தொடர்ந்து மேற்கொள்பவன், இருமொழிப் புலமையாளன், ஆடம்பரம், "பந்தா” போன்றவற்றைக் காட்டாதவன், யாவரையும் அணைத்து நட்புறவு கொள்பவன், யாவர்க்கும் உதவ வேண்டும் என்ற வேணவா கொண்டவன். சொல்லாடல் வல்லான், எடுத்துக் கொண்ட பொருளைக் கோவையாகவும், அதனுடன் தொடர்புடைய பொருள்களைப் பொருத்தமான முறையில் தொடுத்துத் தரும் சுவையான பேச்சாளன். எழுத்து வடிவத்திலும் பண்டிதத் தன்மை காட்டாது, இலகு தமிழில் எழுதும் வல்லான். பயனுள்ள பல நூல்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தந்திருப்பவன் - இன்னும் பல ஆளுமைகளைக் கொண்ட இவன் ஒர் ஆய்வறிவாளன்.
இவனுடன் நான் கொண்ட தொடர்பு நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமானது. பூவோடு சேர்ந்த நார் போல, பிரதேச எல்லைகளைத் தாண்டிய பார்வை கொண்ட இந்த மலையக மைந்தனுடன் உறவு கொண்டு நானும் மணம் பெற்றேன்.
கே. எஸ். சிவகுமாரன்
திளனாய்வாளர் / பத்தி எழுத்தாளர்
44

கல்வியாளன் . கல்வியியலாளன் .
நன்னூலார் ஆசிரியரிடம் மாணவர்கள் பணிந்து கற்க வேண்டும் என்று சொல்ல, பேராசிரியர் மாணவரிடம் இருந்து அனேக விடயங்கள் கற்க வேண்டும் என்பார்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்பொருள் காண்ப தறிவு
என்னும் திருவள்ளுவரின் இலக்கணத்தை பேராசிரியர் சந்திரசேகரன் நிறுவி விடுகிறார்.
பேராசிரியர் சந்திரசேகரன் சிறிதுகாலம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கும் தலைவராய் இருந்திருக்கிறார். அதேபோல் இன்னொரு பேராசிரியரான அருள் நந்தியும் ஆரம்ப காலத்தில் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைவராய் இருந்திருக்கிறார். கல்கி இலங்கைக்கு விஜயம் செய்துவிட்டு தமிழ்ச் சங்கத் தலைவரைப் பற்றிக் கூறுகையில் "பேராசிரியர் அருள்நந்தி அவர்களை அறிவுக்களஞ்சியம்” என்றார். எமது பேராசிரியர் நவீன மேனாட்டுக் கல்வியில் தலை சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பழந்தமிழ் நூல்களைக் கற்றவர். எவ்வளவுக்குப் படித்தவரோ அவ்வளவுக்கும் அடக்கம் வாய்ந்தவர். எனினும் அவருடைய உள்ளத்தில் பொங்கும் தமிழன்பை வெளியிடச் சந்தர்ப்பம் நேரும்போது அவருடைய அடக்கம் பறந்துவிடுகிறது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றிலேயே அதற்கு இரண்டு பேராசிரியர்கள்தான் தலைமை வகித்திருக்கிறார்கள், ஒருவர் பேராசிரியர் அருள்நந்தி. மற்றவர் பேராசிரியர் சந்திரசேகரன்.
அறிவின் சுவை தெரிந்தவர்களே அறிவைத் தேடுவார்கள். அற்றவர்கள் என்ன செய்வார்கள்? 'அறிதேற அறியாமை கண்டற்று அறிவைத் தேடுபவர்கள் பேராசிரியர் சந்திரசேகரனை தேடுவார்கள். அவர் கல்வியாளன், கல்வியியலாளன்.
சிவராசசிங்கம் கந்தசாமி தபாலதிபர் கொள்ளுப்பிட்டி
45

Page 27
வாழ்க! வளர்க!
சிந்தையில் சிறந்தவர்
சீரோடு வாழ்பவர் ஆளும் திறன் அதிகம் கொண்ட ஆசானிற்கு அணி திரள் மக்கள் அனைவரும் இணைந்து பெரும்பணி செய்பவருக்கு பேருவகை கொண்டு மணிவிழா எடுப்பதை கண்ணில் நிறுத்தியே கவிச்சரம் தொடுப்பதை பண்ணிய தவம் என எண்ணிடும் சிவராம்
அறநெறியோடு வாழ்கின்றவர் அறிவுக்கண் திறப்பவர் பேராசிரியனாய் நல்லாசானாய் சாந்தமான மெல்லிதயம் கொண்டு சாந்தாவை இல்லத்துணையாக்கி அறிவுநிறை அரும்புதல்வர் பெற்று கோடி நட்சத்திரம் நடுவே சிரிக்கும் பூரண சந்திரனாய் வையத்த வாழ்பவர்க்கு வழிகாட்டி வாழ்வில் தவறுபவர்க்கு விழிகாட்டி வறுமையில் வீழ்ந்தோருக்கு ஒளியூட்டி கூடிய நண்பர்கட்கு களியூட்டி உங்கள் வாழ்க்கை எமக்கு கைகாட்டி
சந்திரசேகரன் இன்றைய நாயகன் மணிவிழா என்றதும் நினைவினில் வந்தது எண்வீட்டில் அப்போது அன்பாக நண்பருடன் கூடியே அருந்திய உணவு
46

தோழுமையோடு பழகிய நாட்கள் நல் உறவாளனாய் நண்பனாய் இருப்பவரை வாயார வாழ்த்துகின்றேன் இறையருளோடு இன்னும் பல மணிவிழா எடுத்தலைக் காண்பேன் நலமோடு பணிதொடர கடல் கடந்த வாழ்ந்தாலும் ~ நான் இங்கிருப்பது தான் தாரம் ~ உங்கள் நினைவு என் இதயத்துள் எப்போதும் ஓடும் தேடும் இனிய முகத்தை வாழ்த்துவதால் இறங்கியது கொஞ்சம் பாரம் வாழ்வீர் நீங்கள் நீடுழிகாலம் வளர்வீர் தொடரும் பணி ~ நீளும் நலம் நிறைந்து வாழ்க வளர்க
சிவராம் குடும்பத்தினர்
பிரான்ஸ்
47

Page 28
உரிமை கொண்ட நண்பன் .
தனது அறுபதாவது அகவினை பூர்த்தி செய்யும் பேராசிரியர் சந்திரசேகரத்தின் கல்வியியற் செயற்பாடுகளை ஒரு சக மாணவன், நண்பன், தொடர்கல்வி மாணவன் என்ற நிலையிலிருந்து நோக்குவதே இச்செய்தியின் நோக்கமாகும்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களுடனான எனது தொடர்பு 1963லிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டதாகும்.
நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்க தலைவனாக இருந்த காலத்தில் இடம்பெற்ற சகல விவாத மேடைகளிலும் நண்பன் சந்திரசேகரத்தின் திறமை எம்மிருவர் இடையேயும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்தியது. அக்காலப்பகுதியில் நாம் பங்குபற்றிய சகல விவாத போட்டிகளிலும் வெற்றி பெற்றோம் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நினைவுப் பதிவாகும்.
பல்கலைக்கழகத்தில் நான் பொருளியலைச் சிறப்புப் பாடமாகவும் நண்பன் கல்வியியலைச் சிறப்புப் பாடமாகவும் கொண்டு கல்வி கற்றோம். தனது பேச்சுத் திறன், வாதத்திறன் ஊடாக மட்டுமன்றி மெதுமையான பண்பாட்டு செயற்பாடுகளுடாகவும் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற மூவின மாணவர்கிடையேயும் தனக்கொரு இடத்தினை நண்பன் சந்திரசேகரம் பெற்றிருந்தார். இதற்கு அவரது ஆங்கில, சிங்கள மொழித்திறன் உதவியது எனலாம். விவாத மேடைகளில் பேசித் திரிந்த நாம் அரசியற் சித்தார்த்தத்தினாலும் இணைக்கப்பட்டோம். மாக்சிய சிந்தனைகளால் கவரப்பட்ட நாம் இருவரும் அக்கால தலைவர்களினால் பேராதனைப் பூங்காவிலும் பல்கலைக்கழகத்திலும் நடாத்தப்பட்ட மாக்சிய வகுப்புக்களிலும் பங்குபற்றினோம். இங்கு நாம் பெற்றுக் கொண்ட மாக்சிய அறிவும் பாடங்களும் பிற்காலத்தில் நாம் சார்ந்த துறைகளில் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு சிந்திப்பதற்கும் வேறுபட்டு நிற்பதற்கும் பாமர மக்களை முன்னிலைப்படுத்திப் பார்ப்பதற்கும் பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் ஒதுக்கப்பட்ட மக்கள் விடுதலையடைய வேண்டும் என்ற சிந்தனையடைவதற்கும் வித்திட்டன 6.160160Tip.
பெரும்பாலான கல்வியியற் சிந்தனயைாளர்கள் கடந்தகால தற்கால கல்வி வரலாறு, கல்வி வளர்ச்சி என்பன பற்றி சிந்திக்கின்றபோது சந்திரசேகரம் அவர்கள் எதிர்காலவியல் நோக்கில் கல்வியைப் பார்த்துள்ளார். கல்வியின் நோக்கம், இலக்கு என்பன பற்றி பல்வேறு கோட்பாடுகள் சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்ற
48

இக்காலத்தில் எமது கல்வி எதிர்கால தேவைக்கேற்ற வகையில் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் அல்லது சிந்திக்கப்பட வேண்டும் என்று கருதி அதற்கேற்ற சிந்தனைகளை முன் வைப்பவர் சந்திரசேகரம் ஆவti
மலையக மக்களின் கல்வி பற்றி சிந்திக்கும் பேராசிரியர் முஸ்லிம் மக்கள். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஆகியோரது கல்வி பற்றி சிந்திக்கத் தவறவில்லை. பல்கலைக்கழக புதுமுக பரீட்சையில் தமிழ்பேசும் மாணவர்களுக்கு விசேடமாக யாழ்ப்பாண மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட த ைர், தரப்படுத்தல் என்பவற்றுக்கெதிராக பேராசிரியர் அவர்கள் குறிப்பிடத்தக்க நல்லாச்ரங்கள் பலவற்றை தந்துள்ளார். இவர்களது கல்வி வளர்ச் சிக்குத் தடையாக முன் வைக்கப்பட்ட சகல முயற்சிகளுக்கும் எதிராக அவர் தன் கருத்துக்களை வலுவாக முன்வைத்துச் செயற்பட்டுள்ளார்.
பேராசிரியர்கள் பலர் பொது ஊடகங்களில் எழுதுவது அறிவியல் துறையினை மல்லினப்படுத்தும் ஒரு கொச்சை நடவடிக்கை என்றுகருதுகின்ற இக்காலத்தில் பேராசிரியர் அவர்கள் தான் பெற்ற கல்வியினைப் பாமர மக்களுக்கு ஏற்ற வகையில் பொது ஊடகங்கள் ஊடாக அறியத் தருவது போற்றப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும். ஒவ்வொரு கல்வியியற் சிந்தனையாளனும் தனது அறிவியல் தீபத்தினை'மக்களின் விருத்திக்காக தொடர்ந்து ஏற்றி வைத்திருக்க வேண்டும் என்பதே அறிவியல் சார் உலகில் எதிர்பார்ப்பாகும்.
இதனையே அண்மையில் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் 96).jf356i I will keep the lamp of knowledge to achieve a vision - a developed indian என்று கூறியள்ளார். இதனை பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள் நிறைவாகக் கடைப்பிடிக்கிறார் எனக் கூறலாம்.
ஏடுகளில் எழுதி, வீடுகளில் கல்வி பரப்பிய நண்பன் சந்திரசேகரம் எனது உயர்கல்விக்கு ஏடெடுத்து தருகின்றான் என்ற நன்றியுணர்வோடு இச்செய்தியை நிறைவு செய்கின்றேன்.
சுந்தரம் டிவகலாலா முன்னாள் செயலாளர், கல்வியமைச்சு வடக்கு கிழக்கு மாகாணம், தொழில்நுட்ப ஆலோசகர் ஜி.ரி.இசட் செயற்றிட்டம்
வவுனியா,
49

Page 29
கண்துஞ்சல் அறியா கடமைவீரர்.
எம் இனிய நண்பர் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்களுக்கு மணிவிழாவா? அதற்குள் அவருக்கு அறுபதாகிவிட்டதா! நேற்றுப் போல இருக்கிறது. அவருடன் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நெருங்கிப் பழகிவருகிறேன். இளைஞனைப் போன்ற தோற்றத்தில் அவர் சுறுசுறுப்பாக கூட்டங்களுக்கு வருவதும், கருத்து நிறைந்த உரைகளைக் கம்பீரமாக வழங்குவதும் தமது பேச்சுக்களிடையே சிரிப்பு வெடிகளை கொழுத்தி எறிந்து சபையைக் கலகலப்பாக்குவதும் தமது உரை முடிந்ததும் அடக்கமான மாணவனைப் போல, ஆசனத்தில் அமர்ந்து ஏனைய நிகழ்ச்சிகளை அக்கறையாக அவதானித்துக் கொண்டிருப்பார். அவருடனான சம்பாசணைகளில்தான் எத்தனை இனிமை! ஒரு பேராசிரியர் என்ற பெருமையோ தலைக்கணமோ கிஞ்சித்தும் அவரிடம் காணப்படுவதில்லை. மனித நேயமும் தோழமையும் அடக்கமும் மிக்க, மரியாதைக்குரிய அறிஞர் அவர் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி அவரிடம் கேட்டால் அவரின் வாய் நுனியில் விளக்கம் காத்திருக்கும்!
அவரின் சிந்தனை தெளிவானது:அறிவு ஆழமானது. அவரின் எழுத்து வேகத்துக்கு எல்லையே இல்லை. கல்வி பற்றி புள்ளி விபரங்களுடன் பத்திரிகைகளில் அடிக்கடி பக்கம் பக்கமாக எழுதுவதும் விளக்கமான கட்டுரைகள் எண்ணிக்கையில் அடங்காதவை.
சென்ற ஆண்டில் வெளிவந்த எனது மனைவியின் நூலுக்கு வெளியீட்டுரை நிகழ்த்த வேண்டுமெனக் கேட்ட போது, எடுத்த எடுப்பில் ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால் திடீரென்று காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்ற மூன்று நாள் வதிவிடக் கலந்துறையாடலிலும் அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. விழாவன்று மாலை இடைவேளையைப் பயன்படுத்தி அங்கிருந்து காரொன்றில் கொழும்புக்கு ஓடோடி வந்து குறிப்பிட்ட நேரத்தில் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்திவிட்டு, உடனேயே அங்கு திரும்பிச் சென்று விட்டார்! அலுப்பு, பசி, கண் துஞ்சல் அறியாக் கடமைவீரராக, வாக் குறுதி தவறா ச் சத்தியவானாக அவரை நான் மதிக்கிறேன்.
பேராசிரியர் அவர்கள் வாழ்க பல்லாண்டு!
என். சோமகாந்தன்
5()

திறந்த மனதுடன் பேசுபவர்.
பேரசிரியரின் கருத்துக்கள் வெளிப்படை யானவை. அதனால் படைப்பாளிகள் இவரை நெருங்கி வந்துள்ளனர். சில வகைப் பேராசிரியர்களைக் கடந்த கால இலக்கியக் கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தபது பேராசிரியர் தளத்தை வைத்துக் கொண்டு நம்மைப் போன்ற படைப்பlளிகளை மட்டம் தட்டிமேடைகளில் கருத்துக்களைச் சொல்லி வந்துள்ளனர். ஆனால் நமது பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள் இந்தக் கணிப்பீட்டுக் கண்ணோட்டத்தில் மிகத் தெளிவாகவே இருந்து வந்துள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் தான் அறிவு நிர்ணயிக்கப்படுகின்றது என்ற உட்யர் கல்விக் கருத்தை இவர் ஏற்றுக் கொள்வதற்கு மாறாக அறிவு பல்கலைக் கழகங்களுக்கு வெளியேயும் தனது அறிவுசார் ஆளுமையை நிலைநாட்டி வருகின்றது என்பதை மனந்திறந்து பல மேடைகளில் பாராட்டியிருக்கிறார்.
அறிஞன் படைப்பாளியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதே போல, படைப்பாளி அல்லது கலைஞன் பட்டங்கள் பெற்ற கல்விமானாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. இதைச் சரிவரப் புரிந்து கொண்டவர் என்ற காரணத்தினால்தான் என்னைப் போன்றவர்கள் அவரை எங்களில் ஒருவராகக் கணித்து வைத்துள்ளோம். அவரை நேசிக்கக் கற்றுக் கொண்டுள்ளோம். படிப்பு வேறு, படைப்புத்திறன் வேறு என்ற கருத்தைப் பல மேடைகளில் பேராசிரியர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
இவரிடம் உள்ள சிறப்பான குணங்களில் ஒன்று எதையுமே வெளிப்படையாகத் திறந்த மனதுடன் பேசுவதுதான். அந்தச் செயல் கல்வித் தளத்தினரிடம் இல்லாத ஒன்று.
அதன் வெளிப்பாடாகவே பேராசிரியரது உருவத்தை மல்லிகையின் அட்டைப்படமாகப் பதிப்பித்து நான் வெளியிட்டிருந்த சமயம் பலரும் என்னைப் பாராட்டினர் என்பது எனக்கு நிறைந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அப்பொழுது தந்தது. அவரை மனசார வாழ்த்த எனக்கு வயது போதுமென நினைக்கிறேன். எனவே அவரும் அவர் வெளியிட்டு வரும் கருத்துக்களும் வாழ்க என வாழ்த்துகின்றேன்.
டொமினிக் ஜீவா

Page 30
வாஞ்சைமிக்க உறவாடுனன் .
பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் தனது அறுபதாவது அகவையில் அடியெடுத்து வைப்பதையிட்டு வெளியிடப்படும் இந்தச் சிறப்புமலருக்கான வாழ்த்துச் செய்தியினை அனுப்பும் வாய்ப்பு எனக்கு இரட்டிப்பு மகிழ்வைத் தருகின்றது. கல்வியுலகைப் பொறுத்தவரையில் எனது சக பயணி என்ற விதத்திலும் தனிப்பட்ட ரீதியில் வாஞ்சை மிக்க உறவாடுனன் என்றளவிலும் இந்த மகிழ்ச்சியில் ஒருவித பெருமிதம் இழையோடுவதை நியாயப்படுத்தியே ஆகவேண்டும்.
கல்வியுலகைச் சேர்ந்த ஒருவரைக் கெளரவித்தல் என்பது ஏன் ஒரு சமூகக் கடமையாகின்றது. என்பதற்குப் பல காரணங்களைக் கூறமுடியும். இது தனிமனித ஆளுமைக்கு அப்பாற்போய் ஒரு சமூக ஆளுமையோடு சம்பந்தப்பட்ட விடயமாகின்றது என்பதே இவற்றுள் தலையாய காரணமாக அமைகின்றது. அந்தவகையில் பேராசிரியருக்கான இன்றைய பாராட்டுவிழா ஒரு சமூகம் தன்னைத் தானே பாராட்டுவதற்குள்ள தார்மீகத் தகுதியினை வெளிப்படுத்த எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது.
35606 616ÖTLg5 L160ÖTUTIọ6DD6OTÜ LUTLÜ JäF3HLb ?(ab ujä563uu (eduction is a technique of transmitting civilisation) 676āT3 6)160)J6ngUIGBĝbĝ5ÜIUĽo_GB6iT6ITĝ5J. db6ö6iĵd5@bib ஏனைய பேறுகளுக்குமிடையிலான வேறுபாடு இங்கே தான் அழுத்தமாக வெளிப்படுகின்றது. லெளகீக வாழ்வில் ஏனைய செல்வங்கள் யாவும் ஏதோவொரு இலக்கை அடைவதற்கான வழிவகையாகவே பயன்பட வல்லவையாக இருக்க, கல்வியோ எனின் தன்னளவிலேயே மிகச் சிறந்த இலக்காக அமைந்துவிடுகின்றது. அதாவது, கல்வி தன்னளவிலேயே ஒரு சேரிடமே தவிர செல்வழியல்ல என்பதுதான் அதன் சிறப்பியல்பு. எனவே தான் கல்வியாளர்கள் சிறப்புற வேண்டும். சமூகம் அவர்களைப் பெருமைப்படுத்தித் தன் பண்பாட்டைக் காத்துக்கொள்ள வேண்டும். பேராசிரியர் சந்திரசேகரன் இந்தப் பெருமைக்கும் பாராட்டுக்கும் எல்லா விதத்திலும் தகுதியுடையவர் என்பதில் இரு கருத்திருக்க முடியாது. பல்பரிமாண ஆளுமை கொண்ட அறிஞன் ஒருவனது வாழ்வில் நானறிந்தளவிலான மட்டுப்படுத்தப்பட்ட பக்கங்கள் மீதே என்னால் மதிப்பீடு செய்திட முடியும் என்ற எனது தகவீனத்தின் காரணமாகவும் இந்த ஆதங்கம் எழ வாய்ப்புண்டு.
52

கல்வியாளனாக மட்டுமின்றி கலா நேசனாகவும் அதியுயர் மானிட நேசனாகவும் மிளிரும் பேராசிரியர் சந்திரசேகரனின் தயாள மனது அவரது கல்விப் t|6).5g56)f 1560) Jóbt bgol URL I6)603, Joseph Addison 6565. The Spectato 676Tug56)
வரும் பின்வரும் வரிகளின் மூலம் தொட்டுக் காட்டுதல் பொருந்தும்:
Education is a companion which no misfortune can de press, no Crime (cin (destroy, 110 enemy (cun clienctte, no despotismo can enslah'e. At home au fricional, clubroatal an introduction, in solitude a solace, and in society an Ornament. It chaStens vice, it guides virtutes, it giv'dos
at Once, grace and genius."
பேராசிரியர் அருகிலிருக்கும் ஒவ்வொரு கணத்திலும் மேலுள்ள வரிகளின் பொருத்தப்பாட்டை அவர் வடிவிலேயே நான் தரிசிப்பதுண்டு. அந்தத் தரிசனம் எல்லோருக்குமாக இன்னும் பல்லாண்டுகள் தொடர வேண்டும் என்று எல்லாம்
வல்லோனை வணங்கிப் பிரார்த்தித்து நின்று வாழ்த்துகின்றேன்!
வி. ரி. தமிழ்மாறன் சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
5
3

Page 31
வாழ்த்தும் வணக்கமும் .
எனது தந்தையும் கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியருமான திரு. சோ. சந்திரசேகரன் அவர்களின் மணிவிழாவை முன்னிட்டு அவரை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. அனைவரையும் அவர் சமமாக மதிக்கும் பண்புள்ளவர். உயர்ந்தவர். தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகள் அவரிடம் கிடையாது. வீண் ஆடம்பரங்களை அவர் அறவே வெறுப்பவர். அனைத்து விடயங்களிலும் எளிமையையே கடைப்பிடிக்க விரும்புகின்றவர். நட்புக்கு இலக்கணம் எனது தந்தை தான் என்று தாராளமாகக் குறிப்பிடலாம். அவருடைய மிகப் பலமே நண்பர்கள்தான். அவரிடம் ஒரே ஒருமுறை பழகியவருக்குக்கூட மீண்டும் அவரைத் தேடி வராமல் இருக்க முடியாது. எங்கள் வீட்டில் இடைவிடாமல் ஒலிக்கும் தொலைபேசியும், வாசல் அழைப்பு மணியுமே இதற்கு நல்ல சான்றுகளாகும். எங்களுக்கு அறிவுரைகளோ ஆலோசனைகளோ கூறும் பொழுது அவர் ஒரு தந்தையாக இல்லாமல் நண்பராகவே பழகுவார். எனவே எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் அவருடன் தயக்கமின்றி கலந்தாலோசிக்கலாம். அவர் அற்புதமான நகைச் சுவை உணர்வு கொண்டவர். தன்னுடைய நகைச் சுவை அனுபவங்களை அவர் எங்களுடன் பகிர்ந்து கொள்வதும், நாங்கள் இடைவிடாமல் சிரிப்பதும், எங்கள் வீட்டில் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சியாகும். கல்வித் துறையில் அவர் செய்த சாதனைகள் ஏராளம், அவர் எழுதியுள்ள பல புத்தகங்களும், ஏராளமான கட்டுரைகளும் தமிழ்ச் சமுதாயத்துக்கு அருமையான தகவல் களஞ்சியங்களாக விளங்குகின்றன. அவருடைய ஆழ்ந்த கல்வியறிவும், தெளிவான சிந்தனைகளும் இவ்வுலகம் அறிந்ததே. எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் அவருடன் விவாதிக்கலாம். அவருக்குத் தெரியாதவை மிகமிகக் குறைவு. அவருடைய அறிவும் ஆற்றலும் நம் தமிழ்ச் சமுதாயத்துக்கு இன்னும் நிறைய பயன்பட வேண்டும் அதற்காக அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று இந்த மணிவிழா கொண்டாடும் வேளையில் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
ச. தயாளன்
24/3 பாமன்கடை ஒழுங்கை கொழும்பு - 6
S4

மானிடம் தழுவிய பார்வை .
நண்பர் சந்திரி. "தன்பெண்டு தன்பிள்ளை. சோறு. வீடு, சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என இருப்பவராக அல்லாமல், மனித சமூக மேம்பாடு கருதி உழைக்கும் ஒருவர் ஆகையால், அவருக்கு மணிவிழா எடுக்கப்படுவது கேட்டு மகிழ்ச்சி அடைவதுடன், அவரது ஆர்வமும் உற்சாகமும் மிகுந்த பணிகள் தொடரவேண்டுமென்ற வேண்டுதலையும் முன்வைக்கிறோம்.
இன்று கொழும்புப் பல்கலைக் கழகத்தின் கல்வித் துறையில் பேராசிரியராகத் திகழும் சந்திரசேகரம் பதுளையில் பிறந்து அங்கு ஆரம்பக் கல்வி பெற்றவர். யாழ்ப்பாணத்துத் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றவர்; பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் யப்பானியப் பல்கலைக்கழகங்களிற் கற்று உயர்பட்டம் பெற்றவர். இங்கு யான் வலியுறுத்த விழைவது அவர் பல்வேறு பிரதேசங்களையும் நாடுகளையும் மக்களையும் அறிந்தவர் என்பதை அல்ல; அவரது பார்வை பரந்த மானிடம் தழுவியது என்பதையே ஆகும்.
பேராசிரியர் சந்திரசேகரம் சிறந்த கல்வியியலாளர், பல்லாயிரம் மாணவர்களின் பிரியத்துக்குப் பாத்திரமான நல்லாசிரியர், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர், பேச்சாளர், ஆராய்ச்சியாளர், விமர்சகர். எல்லாவற்றுக்கும் மேலாக, மானிடம் பயனுற வாழ வேண்டுமெனும் வேட்கை மீதுரப் பெற்றவர். கல்வியியல் சம்பந்தமாகப் பல நூல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பதைக் காட்டிலும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது யாதெனின், கல்வியின் மூலமாகப் "பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவிகொள்ள வேண்டும் என்ற அவருடைய வேணவா ஆகும்.
ஒதுக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள். பின்தள்ளப்பட்டவர்கள் மத்தியில் அறிவொளி பரவவேண்டுமென்பதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பதைப் பேராசிரியர் சந்திரசேகரம் கல்வி வளர்ச்சி பற்றி எழுதியவற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். இருபத்தோராம் நூற்றாண்டின் தேவைகளுக்கும் உலகமயமாக்கச் சவால்களுக்கும் முகம் கொடுப்பதற்கு எமது கல்வி முறைகள் எவ்வாறு புனரமைக்கப்பட வேண்டும் என்பது குறித்துப் பயனுள்ள கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார். கல்வி, பயன்பாடு, கைத்தொழில், விவசாயம் முதலானவற்றின் அபிவிருத்திக்கு அத்துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனைகள் பெறப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் diù19dbóbfTL19u6T6TTri.

Page 32
பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் பரஸ்பர புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கு ஏற்ற வழிமுறைகள் என்ன, பொருத்தமான கல்வித்திட்டம் யாது என்பவை குறித்து அவர் நிதானமாகச் சிந்தித்து நிறைய எழுதியுள்ளார்.
பல சமூக, பண்பாட்டுப் பணிகளில் உற்சாகத்தோடு ஈடுபட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகரம் அத்துறைகளில் ஏனையவர்களுக்கு ஊக்கமும் அனுசரனையும் அளிப்பவராகவும் விளங்குவது விதந்து குறிப்பிடத்தக்கதாகும். வெள்ளை உள்ளம் படைத்தவரும் உற்சாகம் மிகுந்தவரும் பழகுவதற்கு இனியவருமான பேராசிரியர் சந்திரசேகரத்தின் நட்பு நவில்தொறும் நூல்நயம் போன்றது.
அவரும் அவரது வாழ்க்கைத் துணைவியாரும் அவரது குடும்பத்தினரும் ஆரோக்கியத்தோடும் மகிழ்வோடும் நெடிது வாழ்ந்திருக்கப் பிரார்த்திக்கிறோம்.
பேராசிரியர் சி. தில்லைநாதன்
உறுப்பினர்
அரசகரும மொழி ஆணைக்குழு
நிபுணத்துவ ஆலோசகர்
418/9, வெலிப் பார தேசிய ஒன்றிணைப்பு தலவத்துகொட வேலைத்திட்ட அலகு (NIPU)

இன்னுமொரு 60 ஆண்டுகள்
பேராசிரியர் சோ, சந்திரசேகரன் அவர்களுக்கு அறுபது வயது என்பதை நம்பவா முடிகிறது!
கல்வியில் பின்தள்ளப்பட்டு விட்டதால் சகலதுறைகளிலும் பின்தள்ளப்பட்டு விட்ட மலையகத்தின் ஒரு மூலையான பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு மலையகத் தமிழரான சோமசுந்தரம் சந்திரசேகரன் கொழும்பு பல்கலைக்கழகம் போன்றதொரு முக்கியமான பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறைத் தலைவராகவும். கல்வியியல் பேராசிரியராகவும் இருப்பதை மட்டும் நம்பவா முடிகிறது
நாம் நம்பியே ஆக வேண்டிய நிஜங்கள் இவை. ஒரு சமூக விஞ்ஞான, கல்வித்துறை பேராசிரியரான இவருக்கு மலையக சமூகத்தின் உயர்வின் உயிர்நாடியாகத் திகழ்வது கல்வியே என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.
மலையகக் கல்வி மேம்பாட்டிற்கான ஒரு அசைவியக்கமாகவே இவருடைய செயற்பாடுகள் அமைகின்றன.
மலையகக் கல்வி மற்றும் உயர்கல்வி சம்பந்தமான இவருடைய நூற்றுக்கும் மேற்பட்ட கல்வியியற் கட்டுரைகளும் கட்டுரை நூல்களும் சமுதாய விழிப்புக்கும் மேன்மைக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான இவருடைய கடும் உழைப்புக்கள்.
பத்திரிகைகளுக்கு இலக்கியக் கட்டுரைகள் எழுதும் மரபிற்கு ஏறத்தாழ என்பது வருட வரலாறு உண்டு. இம் மரபினை ஆரம்பித்துவைத்த பெருமை பாரதியைச் சேர்கிறது. இந்த மரபினூடாக பல்வேறு தளங்களில் இவ்விலக்கியக் கட்டுரைத்துறையை வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையிலும் கல்வியியல் தொடர்பான கட்டுரைகள் தமிழகத்தில் கூட அவ்வளவாக இல்லை. பெருந்தொகை யான கல்வி சம்பந்தமான கட்டுரைகளை எழுதியவர் என்ற பெருமை இப்பேராசிரி யரைச் சேர்கின்றது.
ஆசிரியர்கள். மாணவர்கள். பெற்றோர்கள் மற்றும் கல்வி ஈடுபாட்டாளர்கள் சகலரினதும் அறிதலுக்கும், சிந்தனைக்கும் ஏற்ற கட்டுரைகளாக இவைகள் அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடியது.
5
7

Page 33
Iண்ணடியில் தண்ணீர் இருக்கும் இடமெல்லாம் தேடித்தேடி வேர் நீட்டும் |சரi) போல் கல்வித்துறையின் சகல மட்டங்களுக்குள்ளும் நுழைந்து மீண்டும் தேடுதல்கள் செய்து, அதன் சிறப்புக்களை சிக்கல்களை நெளிவு சுழிவுகளை எம் போன்ற சாதாரணர்களுக்கும் விளக்கிக்காட்டும் முதன்மைக் கல்விமான் இவர்.
மலையகக் கல்வி, அதன் வரலாறு, வளர்ச்சி, மலையகத்தின் எதிர்காலக் கல்வி வாய்ப்புக்கள் மலையக சமூகமும் உயர்கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியில் பின்தங்கியிருக்கும் மலையகம், மலையகத்துக்கென ஒரு பல்கலைக் கழகம் என்னும் தலைப்புக்களிலான பதின்மூன்று கட்டுரைகளின் தொகுப்பு மலையகக் கல்வி - சில சிந்தனைகள் என்னும் நூலாக வெளிவந்துள்ளது.
கல்வியுலகைப் புரிந்துகொள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தம்மளவில் ஒரு ஆய்வாளனாக இருக்க வேண்டும் அல்லது ஆய்வாளனாக மாறவேண்டும் அவர்களால் தான் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கோர் உதாரணமாய்த் திகழ்கின்றவர் சோ. சந்திரசேகரன் அவர்கள்.
பதுளையின் ஊவா கல்லூரியில் தனது கல்வியை ஆரம்பித்த இப்பேராசிரியர் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக் கழகம், ஜப்பான் ஹிரோஷிமா பல்கலைக்கழகம், ஒசாக்கா பல்கலைக்கழகம் எனப் பன்முக வளக் கல்விமானான இவர் "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் கொள்கையுடன் சகல இளம் சந்ததியினரையும் குறிப்பாக மலையக இளைய சமூகத்தினரையும் கல்வியியல் மேன்மையுறச் செய்ய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் செயற்பாடுகளும் போற்றுதலுக்குரியவை.
"இலங்கைக் கல்வியுலகு இவரிடம் பட்டகடன் ஏராளம்” என்னும் சட்டவியல் முதுநிலை விரிவுரையாளர் வி.டி. தமிழ்மாறனின் கூற்று அர்த்தம் பொதிந்தது.
1944 டிசம்பரில் பிறந்திருக்கின்றார் என்றால் (23-12-1944) அறுபது வயது ஆகின்றதுதான். ஆனாலும் எம்மனைவருக்கும் இவர் இளைஞரே.
Age cannot wither him 6T 6ÖT 60) tỀ (36? djö 6ùTUJÍ jinsi 31 36|(5đ5 (5 Lò பொருந்திவர இவரது நலம்பேணி பொதுத்துறைகளில் இவரது பணி சிறக்கப் பலவகைகளிலும் உதவி வரும் இவரது அன்புத்துணைவியாரையும் இவ்விடத்தில் வாழ்த்துவது பொருத்தமானதே.
வாழ்க இன்னுமொரு அறுபதாண்டு.
தெளிவத்தை ஜோசப் எழுத்தாளர்

தமிழின பொக்கிஷம்
"நாடு உனக்கு என்ன செய்தது என்பதை விட நாட்டுக்கு தான் சார்ந்த சமூகத்துக்கு என்ன செய்தோம் என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேள்வி கேட்டுக் கொள்வதே சிறந்தது. அந்த வகையில் அகவை அறுபதில் காலடி பதிக்கும் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் இந்த நாட்டுக்காகவும் தமிழ்ச் சமூகத்துக்காகவும் ஆற்றிய, ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணி மகத்தானது. இந்த மண் அத்தகைய மாமனிதனின் சேவையைப் பாராட் டி கெளரவிக்க முன்வந்துள்ளமையே இதற்குத் தக்க சான்றாகும். கல்வித்துறையில் மாத்திரமன்றி அறிவு சார் பல்துறைகளில் ஆழ்ந்த புலமையும் ஆளுமையும் கொண்டவராக பேர்ாசிரியர் சந்திரசேகரன் மிளிர்வது அறிவுசார் உலகிற்குப் பெருமை தரும் விடயமாகும். குறிப்பாகத் தமிழினத்துக்குக் கிடைத்த பொக்கிஷமாக போற்றப்படுபவர் இவர். இவரைத் தந்த பதுளைமண் இதையிட்டுப் பெருமையுடன் பூரித்து நிற்கின்றது. ஒரு நல்ல நண்பராக, நல்லாசிரியராக, வழிகாட்டியாக, ஆலோசகராக - இவ்வாறு பல்வேறு உருவில் திருமாலாகவும் என்னுடன் அவர் கொண்டுள்ள உறவு இலகுவில் மறந்துவிடக்கூடிய ஓர் உறவல்ல. மனதில் சந்தோஷத்துடன் சென்றால் அந்த சந்தோஷத்துடன் மேலும் பல சந்தோஷங்களை அள்ளித் தருபவர் அவர். அதே போன்று உள்ளக் குமுறலுடன், சோகத்துடன் அவர் முன்போய் நின்றால், அந்தக் குமுறலும் சோகமும், இருந்த இடம் தெரியாமல் ஒரு நொடியில் பறந்தோட வைக்கும் அவரது ஆற்றலைக் கண்டு நான் மட்டுமல்ல பலரும் வியந்ததுண்டு. இத்தகைய இனிய உள்ளத்துக்கு அகவை அறுபது. அவரை வாழ்த்துவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இறைவா, எனது நல்ல நண்பன் இன்று போல் என்றும் வாழ உனது ஆசியைக் கொடு, அருளை வழங்கு.
வி. தேவராஜ் ஆசிரியர் வீரகேசரி வார வெளியீடு
59

Page 34
வளமான சந்திரசேகரனார் வாழ்க
அறுபது அகவை நிறைந்த
அறிஞர் சந்திர சேகரத்தின் பெருமையைப் பாடப் பாடப்
பெருகி வரும் கருத்தக்களை உரைத்திடில் அருமையாய் அமையும்!
உன்னதப் பேராசிரியர் ஆற்றலை விரித்திடில் பெருநாலாய் மாறும்!
விடிந்திடில் கற்பவர் ஆழ்வர்!
பல்தறை புலமை மிகுந்த
பட்டங்கள் பலவும் பெற்ற வல்லவர் நட்பமாய் கற்றதை
வாயார வாரி வழங்கும் நல்லவர்! எங்கள் பேராசிரியர்
நன் மதிப்பிற்கு உரியவர்: சொல்லிலே ஆழமும் இனிமையும்
சுவையாகச் சொட்ட உரைப்பவர்
காலை மலர்ந்ததும் தனது
கடுமையான முயற்சியால் வடித்த நாலுக்கு அணிந்துரை தருக வென
நணுக்கமாய், கனிவாய், தினமும் கேட்போரும் பலபேர் உண்டு:
கேண்மையும் உறவும் செழிக்க நாட்குறித்து இலக்கிய நிகழ்விற்கு
நயமாக அழைப்பார் பலபேர்
60

புத்தக வெளியீட்டுக்கு அழைத்த,
சிரித்து திகதி பெற்று சித்தம் மகிழ்ந்து செல்வோர்
செயல் இவர் வீட்டில் நடக்கும்! வாரமெல்லாம் இது போல்,
வந்த வெளியூருக்கழைப்போர் தீராத கூட்டமாக நிறைவது
தினம் வீட்டு நடப்புமாகும்.
கல்வி அபிவிருத்திக்கு சிறந்த
கருத்தாழும் மிக்க வழிகளை பல்வித கோணங்களில் நாலாய்
படைத்து தந்தவர் வாழி உலக நாடுகள் சென்று
உயர்கல்வி பட்டம் பெற்று, நலமோடு திரும்பி வந்து,
நல்விரிவுரை நிகழ்த்துகின்றார்.
மற்றவர் வியக்கும் வண்மை
‘மலையகத் தமிழர் வரலாறை கற்றவர் தெளிவு பெறும்
களஞ்சியமாய் தந்த ஆசானின், ஆய்வு அறிவை வியந்த,
அறிஞர்கள் போற்றிப் புகழ்வர்! தோயும் சிந்தனைப் புதுமையை
தொடர்ந்து கேட்போர் மகிழ்வர்.
என்றும் இளைஞனைப் போல்
எடுப்பாக மேடையில் ஏறி, இன்றும் முழக்கம் செய்யும்,
எங்கள் பேராசிரியர் வாழ்கவென பல்லாண்டு நல்வாழ்த்தப் பாடி
பரவசமாய் பாமாலை தொடுப்போம் வல்லமை தைரியம் பெற்று
வளமாக சந்திரசேகரம் வாழ்க!
கலாபூஷணம் தமிழோவியன்
6

Page 35
தனித்தன்மை வாய்ந்தவர்.
பேராசிரியர் சந்திரசேகரன் தனது அறுபதாண்டு நிறைவு விழாவை கொண்டாடவுள்ள இச் சந்தர்ப்பத்தில் அவருக்கு நல் வாழ்த்துக் களையும். இதயபூர்வமான பாராட்டுக்களையும் வழங்குவதில் பெரிதும் மகிழ்கிறேன்.
1973இல் கல்முனையில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்த்தின போட்டி களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். மட்டக்களப்பு இரயில் நிலையத்தில் பேராசிரியர் திரு. அ. சண்முகதாஸ் திரு. சந்திரசேகரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அக்கால கட்டத்தில் தொழில் அதிபராகவும் "செய்தி" பத்திரிகையின் உரிமையாளராகவும் திகழ்ந்த திரு. சந்திரசேகரனின் மாமனாரான திரு. ஆர். எம். நாகலிங்கம் எனது நண்பர். எனவே எங்கள் நட்பு தொடர்ந்தது.
1980களின் இறுதியில் எனது துணைவியும் நானும் பேராசிரியரின் மாணவர்களானோம். நாங்கள் திறந்த பல்கலைக்கழகத்தில், எங்கள் பட்டப்பின் படிப்பை மேற்கொண்ட பொழுது பேராசிரியர் சந்திரசேகரனை எங்கள் விரிவுரை யாளர்களுள் ஒருவராகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஒரு பல்கலைக் கழக ஆசிரியனுக்கு வேண்டப்படும் கற்றல், கற்பித்தல், ஆராய்தல் எனும் மூன்றிலும் அவர் தனித்தன்மை வாய்ந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டோம். சாதாரண உரையாடல் பாணியிலேயே அவரது விரிவுரைகள் அமைந்திருக்கும். அரிய தகவல்கள் புதைந்திருக்கும். தமது மாணவர்களை சிரிக்கவைத்து சிந்திக்க வைப்பதில் சமர்த்தர் அவர்.
பேராசிரியர் பல்வேறு துறை சார்ந்த தமது ஆய்வு கட்டுரைகள் வாயிலாக தமது சிந்தனைகளை மக்கள் முன், குறிப்பாக மலையக மக்கள் முன் எடுத்துச் செல்கிறார். இம்மக்களின் சமூக, சமய, கலாசார பிரச்சினைகள் சம்பந்தமாக நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்க மலையகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே உள்ளனர் என்பது வேதனையான உண்மையாகும். இவர்களுள் பேராசிரியர் சந்திரசேகரன் தலையானவராகத் திகழ்கிறார்.
மணிவிழாக் காணும் பேராசிரியர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
சீ. நடராஜா அசோகா வித்தியாலயம் அதிபர் கணர்டி

கல்வி உணர்வுட்டித் துலங்கிடும் உதயதாரகை
மணிவிழாக் காணும் மாண்புடைப் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் தன் வாக்காலும் வாழ்வாலும் வாழ்வித்து வரும் கல்வி வள்ளலாவார். பல்கலைக் கழகக் கல்விச் சூழலை மகிழ்வுடையதாக்க அரும்பணியாற்றி வரும் பேராசிரியர் கல்வியாளரால் பெரிதும் பாராட்டப்படும் பெற்றியர். அறிவுதேடலில் ஆர்வம் மிக்கவர்களை ஆற்றுப்படுத்தும் உதயதாரகையாய் உறுதுணை புரிந்து வருவது குறிப்பாக முன்னேற்ற முனைப்புள்ள மலையக இளைய தலைமுறைக்கு உணர்வூட்டி வருவது பெரும் கொடை எனக் கொள்ளலாம்.
கல்வி வளத்தினைப் பெருக்குவதே விடிவுக்கு வழி எனக் கருதி ஆசிரியவாண்மை மிக்கோரை உருவாக்குவதில் அவர் பெரிதும் ஆர்வம் மிக்கவர். தனது கல்விப் பணியின் பயனை உறுதிப்படுத்தத் தனது ஆய்வுகளையும் தேடல்களையும் நூலாக்கங்களையும் தொடர்வதோடு கொழும்புத் தமிழ்ச் சங்கச் செயற்பாடுக்கும் பெரும் பங்களிப்புச் செய்து அவரது கல்வி விருத்திப் பரிமாணத்தினை விரிவாக்கி வருவது பாராட்டப்பட வேண்டியதாகும்.
ஒவ்வொருவரும் தான் இருக்கும் இடத்தைத் தான் வரும் போது இருந்ததை விடச் சிறந்த இடமாக விட்டுச் செல்ல முயற்சிப்பது சிறந்த வாழ்க்கைக் கோட் பாடாகும். இதனைப் பேராசிரியர் சந்திரசேகரம் ஆர்வத்தோடு பேணிப் பாதுகாப்ப தோடு நின்றுவிடாது பிறரும் மேற்கொண்டு இம்மாநிலம் பயனுற வாழ்ந்து வாழ்விக்கப் பயிற்றும் பேராசிரியரின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை எனலாம். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மூன்று தசாப்தங்களின் முன் இவர் விரிவுரை யாளராகத் துடிப்போடு பணியாற்றிய காலப் பகுதியில் கலந்துரையாடிப் பயன்பெற்று எனது வினைத்திறனை விருத்தி செய்ததை நன்றியோடு நினைவு கூருகின்றேன்.
கல்வித் துறையில் குறைதீர்வும் புதுமை மேற்கொள்ளவும் அவசியம் உள்ளது. வேண்டிய அறிவாற்றல் ஆர்வம் மனப் பாங்குள்ள பேராசிரியர் சந்திரசேகரம் போன்றோர் வாய்ப்பும் வசதியும் வழங்கப்பட்டுச் சமூகம் கல்வியால் புத்தெழுச்சி காணச் சூழல் உருவாக்கப்படுவது பெரும் நன்மை தருவதாகும். நீண்டகாலம் அர்ப்பணிப்போடு சேவையில் ஈடுபடும் பண்பாளர் விலைமதிப்பு மிக்க சமூகச் சொத்தாவர். இவர்கள் நீண்டகாலம் நிறைவான சேவை செய்யப் பிரார்த்திப்பதும் உதவுவதும் கற்றோர் கடன் என வாழ்த்தி அமைகின்றேன்.
ஆர். எஸ். நடராசா முன்னாள் அதிபர் பலாலி ஆசிரியர் கலாசாலை
63

Page 36
துணிச்சல் மிக்க பேராசான் .
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் மணிவிழாவுக்கு வாழ்த்துரையை வரைவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
கல்வியியல் சம்பந்தமாக மிகப்பெரும் பணியினை ஆற்றியவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள். தனது கல்விக் கருத்துக்களுடாக கற்றோர், மற்றோர் எல்லோர் மனத்திலும் இடம்பிடித்துக் கொண்டவர் அவர் முக்கியமாக சம காலத்திற்குப் பொருத்தமான கல்வி விடயங்கள். அவற்றின் தேவைகள், அதற்கான நடைமுறைகள் முதலியவற்றை சிறந்த நுட்ப முறைகளினுடாகத் தெளிவாகச் சொல்லுவனவாக அவரெழுதிய கல்வியியல் நூல்கள் அமைந்துள்ளன. பொதுவாக எளியமுறையில் விடயங்களை அணுகி ஆராய்வதும், அதற்கான உடன் தீர்வு நடவடிக்கைகளை அவ்வப்போது கூறிச் செல்வதும் அவரது நூல் நடையில் நாம் கண்டு தெளியக்கூடிய உண்மை.
நண்பர் சந்திரசேகரம் தனது கருத்துக்களை மேடையிலும் சரி, நேரிலும் சரி வெளிப்படையாகத் துணிச்சலுடன் சிரித்துச் சிரித்துக் கூறக்கூடிய ஒரு பேராசான். எளிமையான போக்கும், சிரித்துக் கொண்டே எந்தச் சவாலையும் எதிர்நோக்கக்கூடிய மன உரமும் கொண்ட நண்பரின் பணி, ஏனையோருக்கு முன்னுதாரணம்.
காலஞ்சென்ற கல்வி உளவியற் பேராசிரியர் ச. முத்துலிங்கம் அவர்களுடன் நானும் மணிவிழாக்காணும் நண்பர் சந்திரசேகரனும் அடிக்கடி அன்புத் தொடர்பு கொள்வதுடன், நண்பர்களாகப் பழகி மகிழக்கூடிய பாக்கியத்தையும் பெற்றிருந்தோம். அப்போது, கவலைகள் உடன் பறக்கும். பேராசிரியர் முத்துலிங்கம் அவர்கள் இன்றிருந்திருந்தால் தனது மாணாக்கன் மணிவிழாக்காணும் சந்தோஷத்தை அனுபவித்திருப்பார் என்பது உறுதி.
அன்பு நண்பர் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களது சேவையைப் பாராட்டும் மணிவிழா சிறப்புற நடைபெற வேண்டும். அவரது பணி மென்மேலும் ஓங்கவேண்டும் என வாழ்த்துகின்றேன்.
என். நடராஜா கல்வியமைச்சு பணிப்பாளர் இசுருபாய', பத்தரமுல்லை தமிழ்மொழிப் பிரிவு
64

மனித நேயம் மிக்க மக்கள் பேராசிரியர்.
நான் 1991 இல் வீரகேசரி அலுவலக நிருபராக பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்தே பேராசிரியரை நன்கு அறிவேன். பத்திரிகைத் தொடர்பு மூலம் ஏற்பட்ட பழக்கம் சில நாட்களுக்குள் எம்மிடையே மிகுந்த நெருக்கத்தையும் நட்புறவையும் ஏற்படுத்திவிட்டது.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அறிவாற்றலும் ஆளுமையும் அன்பும் பண்பும் துணிவும் பணிவும் எளிமையும் தூய்மையும் வாய்மையும் நீதிநேர்மையும் உள்ள பெரியார் என்பது யாவரும் அறிந்ததே. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மனித நேயம்மிக்க மக்கள் பேராசிரியனாகவே நான் இவரைப் பார்க்கிறேன்.
"வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம், பயிற்றிப் பல கல்வி கற்று இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்” என்ற பாரதி வழியில் நின்று பாடுபட்டு வரும் பேராசிரியர், 'யாரோடும் பகை கொள்கிலன் என்ற பின் போரொடுங்கும் புகழ் ஒடுங்காது" என்ற கம்பனின் வைர வரிகளை நினைவில் கொண்டு வாழ்ந்து வருவதால்தான் இவர் எல்லோருக்கும் நல்லவராகவும் வல்லவராகவும் காணப்படுகிறார்.
அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரின் பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரியவரான எமது பேராசிரியர் சில வேளைகளில் இவர்களின் இலவச ஆலோசகராகவும் இவரைக் கொண்டிருப்பதை நான் நன்கு அறிவோம்.
பல்துறை ஆற்றல்கள் மிக்க பேராசிரியரின் பாரிய சாதனைகளின் பின்னணியில் காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து வரும் இவரின் அருமைத் துணைவியான பூரீசாந்தா, என்ற சாந்தசொரூபியின் திருவுருவம் தெளிவாகத் தெரிகிறது. இறுதியாக,
கல்வியும் அறிவும் போல கவிதையும் நயமும் போல உள்ளமும் உணர்வும் போல ஊக்கமும் உயர்வும் போல செல்வமும் செழிப்பும் போல செந்தமிழ்ச் சுவையைப் போல வல்லமை எல்லாம் பெற்று வளமெலாம் பெற்று வாழி என்று வாழ்த்தி, வணங்கி இவர் இன்றுபோல என்றும் இன்புற்று வாழ்ந்து பல்லாண்டு காலம் மக்கள் பணியாற்ற இறைவன் திருவருளை இறைஞ்சி நிற்கும்.
கே.பி. நடனசிகாமணி
செயலாளர் நாயகம் இலங்கை மக்கள் பொதுப்பணி மன்றம்
65

Page 37
அந்த நாள் ஞாபகம்.
1956 ம் ஆண்டில். பதுளை ஊவாக் கல்லூரியில் ஒரு மாணவனாக சேர்ந்த போதுதான் நண்பர் சந்திரசேகரம் எனக்கு முதன் முதலில் அறிமுகமானார். அப்போது, ஊவாக்கல்லூரி தமிழ், சிங்கள பாட விதானங்களைக் கொண்ட ஒரு பாடசாலையாக இருந்தது.
ஆறாம் வகுப்பை அதன் வகுப்பாசிரியர் மூன்றாகப் பிரித்து வைத்திருந்தார். வகுப்பின் முதல் வரிசைகளில் கல்வியில் தம்மை அர்ப்பணித்த மாணவர்கள் இருந்தார்கள். இடை வரிசைகள் எதிலுமே அக்கறை காட்டாத மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கடைசி வரிசை குழப்பக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் கணேசன், ரசாக், குருசாமி, பத்மராஜ் என்ற பல மாணவர் மத்தியில் நண்பர் சந்திரசேகரனும் இருந்தார். இந்த வரிசைகாரர்களால் கவரப்பட்ட நானும் கடைசி வரிசையில் எனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டேன்.
கடைசி வரிசை மாணவர்கள், ஒதுக்கப்பட்ட ஜன்மங்களாக கணிக்கப்பட்ட போதும் இலக்கிய விழாக்களில், பாடல். பேச்சுப் போட்டிகளில் பரிசுகளை அள்ளிக் கொண்டு வருபவர்கள் இவர்களாகவே திகழ்ந்தார்கள்.
சந்திரசேகரம் தனது மாணவப் பருவத்தில் ஒரு சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் மாணவர்களை பொதுவில் கவர்ந்த தி.மு.க. வின் அடுக்குமொழியின் தாக்கங்கள் இவரையும் ஆட்கொண்டன.
ஆனால், காலப் போக்கில் சிங்களம் மாத்திரம் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த கலாநிதி என்.எம்.பெரேரா அவர்களின் சமசமாஜ கட்சியின் மீது மாணவர்களின் அக்கறை திரும்பியது. இதுவும் நண்பர் சந்திரசேகரனையும் விட்டு வைக்கவில்லை. ஆயினும் இந்த உறவு அப்படி ஆழமான ஒன்றாக இருக்கவில்லை. அன்று, எமது ஆசிரியர்களாக கடமை புரிந்தவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். இவர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழ் ஆசிரியர் கதிரவேல் ஐயா. கணக்காசிரியர் வீரகத்தி ஐயா. பூகோள ஆசிரியர் சுப்ரமணியம் ஐயா அவர்களுமாகும். இன்று நண்பர் சந்திரசேகரம் பேசும், எழுதும் தமிழுக்கு உரிமைக்காரர்கள் இவர்கள்தான் என்னதான் குறும்புக்காரர்கள் என்றாலும் தம் மாணவர்கள் கல்வியில் தேறவேண்டும் , வாழ்க்கையில் உயர்நிலை அடையவேண்டும் என்று அக்கறை காட்டி, ஆவன செய்ததன் காரணமா வே சந்திரசேகரனைப் போன்ற பேராசிரியர்கள் உருவாகினார்கள்.
66

சரித்திரம், குடியியல் என்ற பாடங்களுக்கு எமது ஆசிரியராக இருந்த கரவெட்டியைச் சேர்ந்த ஞ.கே. நாகராஜ ஐயா அவர்தான் ஜனநாயகம், ஜனநாயக உரிமைகள் என்பன குறித்து மாணவர்களுக்கு கற்பித்து அவர்கள் சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். இதனால் ஒரு பாரிய சிந்தனை மாற்றங்களுக் குள்ளான மாணவர்களில் நண்பர் சந்திரசேகரனும் ஒருவர்.
பள்ளி மாணவனாக நண்பர் சந்திரசேகரன் இருந்த போது அவர் கல்வியை தவிர்ந்த பல்வேறு விசயங்களில் கவனம் செலுத்தினli , சிவாஜி கணேசனா அல்லது மார்லன் பிராண்டாவா சிறந்த நடிகர்' கண்ணதாசன அல்லது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா சிறந்த பாடலாசிரியர்? ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா சிறந்தது? என்பது போன்ற பல விவாதங்களில் பள்ளி மே ைகளிலும் வகுப்பறையிலும் ஈடுபட்டார். பல நாடங்களில் கலந்து கொண்ட கலைஞரின் வசனங்களை பேசினார். "எடுத்துக் கொள்ளும் உமது வாளை தடுத்துக் கொள்ளும் உமது சாவை என்று பேசி, எம்.ஜி.ஆர். போல் வாள் சண்டையெல்லாம் பிடித்தவர்தான்.
ஆயினும், தான் கல்வித் துறையில் முன்னேற வேண்டும் என்ற இலட்சியத்தை மனதில் ஆழப்புதைத்து அது நோக்கிய தமது நடையில் முன்னேறிய வண்ணமே இருந்தார். ஆரியக் கூத்து ஆடினாலும், காரியத்தில் கண்ணாகவே இருந்தார். இங்குதான் இவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நின்றார். பதுளையில் அவர் ஒரு பள்ளி மாணவனாக இருந்த போது இவர் ஆங்கில அறிவை அவ்வளவாக பெற்றிருக்கவில்லை. ஆனால் பல்கலைக்கழக அனுமதி அதன் அவசியத்தை உணர்த்தியது. இவரின் இடைவிடாத முயற்சி ஆங்கில நூல்களையே இயற்றும் அறிவை இவருக்களித்தது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கு ஒரு உன்னத உதாரணமாய் இருப்பவர் சந்திரசேகரம்.
இவரின் வாழ்க்கை வரலாறு இன்றைய தலைமுறை இளைஞருக்குப் பல நல்ல பாடங்களை புகட்டுகிறது. இவரது நண்பராக இவருடன் கல்வி பயின்ற பத்மராஜ், மகேந்திரன், நயிம் ஆகிய நாம் இன்றும் இவருடைய நண்பர்களாக இருக்கிறோம். நட்புக்கு இவர் தரும் மரியாதைக்கு இவை உதாரணங்களாக உள்ளன.
இவர் மேலும் புகழ் பெற்று. இவரைப் பெற்ற மலையக மண்ணுக்கும் பிறந்த நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
சி. எம். நவரத்தினம்
67

Page 38
தமிழர் முஸ்லிம் ஐக்கியத்துக்கோர் ஆதர்சம் .
பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரசேகரம். பதுளை ஊவாக்கல்லூரி உருவாக்கிவிட்ட கல்விமான் அவர். பதுளை என்கின்றபோது எனக்குப் பல ஞாபகங்கள் வருவதுண்டு. கவிஞர் அப்துல்காதர் லெவ்வை தனது அதிக காலத்தைக் களித்தது இங்குதான். சமீம், பண்ணாமத்துக் கவிராயர், எனது மிக நெருங்கிய நண்பன் மு. நித்தியானந்தன், பேராசிரியர் எம். சின்னத்தம்பி என்றெல்லாம் இந்த மண்ணின் பல மைந்தர்கள் என் அன்புக்குரியவர்கள். புலவர் அப்துல் காதர் லெவ்வையின் மகன் அமீர் அலியிடம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பொருளியல் படித்தவர் சந்திரசேகரம்."
சந்திரசேகரம் 1982இல் இன்குலாப் சஞ்சிகையிலும், 1995 இல் பேராதனை முஸ்லிம் மஜ்லிஸ் மலரிலும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி வெளியீடுகளிலும் முஸ்லிம்களின் கல்வி பற்றி எழுதியிருக்கிறார். மலையகம் தந்த அறிஞர் பெருமான் எம்.ஸி. சித்திலெவ்வை பற்றி மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ.யில் சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். அறிஞர் ஏ.எம்.ஏ. அஸிஸின் கல்விப் பணிகளால் ஈர்க்கப்பட்டவர். "அஸிஸ9ம் தமிழும்” என்ற எனது நூலுக்கு அவர் எழுதிய விமரிசனம் இன்னும் எனது ஞாபகத்தை விட்டகலவில்லை.
லிபியத் தலைவர் கடாபியின் Green Book ஐ"பசுமை நூல்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர் இவர்தான். அத்துடன் நின்றுவிடாமல் கடாபியின் சிந்தனை களை மையப்படுத்தி இரு ஆய்வுக் கட்டுரைகளை புதுடில்லி மகா நாடொன்றில் படித்திருக்கிறார்.
இந்த நல்ல மனிதரோடு நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்கும் நீண்ட காலமாகக் கிடைத்தது. அதனாற்றான் இந்த ஓரிரண்டு வரிகளை அவர் பற்றி எழுதும் பேறு பெற்றிருக்கின்றேன். வெறும் வாய்ச் சொல்லில் மட்டும் இவர் ஐக்கியம் பேசுவதில்லை. உள்ளத்தால் முஸ்லிம்களை நேசிப்பவர் இக் கல்விமான், அவரது மணிவிழா மிகச் சிறப்புற நிகழ்ந்து அதன் தெம்பில் ஊக்கம்பெற்று இன்னும் பல காலம் வாழ்ந்து மேலும் பல நூல்களை எழுதி தமிழுக்கும் கல்விக்கும் பணிசெய்ய வேண்டும் என அவாவுகிறேன். அவரின் மனைவி மக்கள். மகிழ்ச்சியுடன் வாழ்ந்து அவரது தொடரும் பணிக்கு முட்டுக்கொடுக்க வேண்டும் எனவும் உளமாற வாழ்த்துகின்றேன். புனர்வாழ்வு, புனர்நிர்மாண அமைச்சு 6]. бий. b625uilt கொழும்பு பணிப்பாளர்
68

வெற்றியுடன் உம்பணிகள் தொடர வாழி.
கல்வியியல் ஆழியில் முத்தெடுப்பான்
கவின் கலையருவியில் களித்திடுவான் சொல்லரும் கலையான பேச்சுதனால்
சொக்க வைப்பான் புகழ் தக்க வைப்பான் தொல் புகழ் அறிவியல் தத்தவங்கள், அவை
அத்தனையும் கற்றுணர் வித்தகனே! - நீ பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று
பரமனைப் பணிந்து வாழ்த்திடுவோம்!
இயற்கை எழில் கொஞ்சும் கோவையிலே
இலங்கும் பெண் ஆசிரியர் கலாசாலையிலே, பயிற்சி நெறியாளர் நற்பேறதனால் அன்று
வந்த நின்றான் கோகுலக் கண்ணனாக அயர்ச்சி சிறிதமின்றி ஆற்றிடுவான் நல்
அறிவு பொதிந்த விரிவுரைகள் ~ அவர் உயர்ச்சி பெற்று உத்தம ஆசானாக
உலகினிலே வலம் வரச் செய்தான் வாழி
வரலாற்றுச் சிறப்புக்கள் காட்டிடுவான்
வளர்முக நாடுகள் வளங்கள் எல்லாம் சிரத்தையற்று சீரழியும் எம் நாட்டுக்கல்வி
சீர் பெறவே நல்ல சீர்திருத்தம் சொன்னான் தரமற்ற சமூகத்தின் உயர்வு தாழ்வு
தகுதி பெறும் ஆசிரியர் தவிர்க்க வேண்டும் விரல் சுட்டும் வீரனாய் திகழ்ந்தான் அன்று
வெற்றியுடன் அவன் பணிகள் தொடரவாழி
69

Page 39
புரியாது வாழ்க்கை என்று பாடினாலும்
புரிந்தணர்ந்த மாமனிதன் நீதான் அப்பா! தரியாத பாய்ந்தோடும் நதியைப் போல
தங்கு தடையின்றி உண்சேவை சென்று அரிதான ஒப்பீட்டுக் கல்வி மூலம்
அனைத்துலகக் கல்வியையும் புரிய வைத்தீர் சிரிப்புடனே கையிரண்டை இணைத்து நீவீர்
சுவையுடனே விளக்கும் உம் ஆற்றல் என்னே!
சுவையான நிகழ்வுகளின் நினைவலைகள்
நெஞ்சத்தில் முகிழ்த்தெழுந்து ஆசி கூறும் தகைப்புடனே கலைஞர் கருணாநிதி பேச்சு
நடித்து நீர், அவர் குரலில் கூறும்போத திகைப்புடனே பயிலுனர்கள் சக ஆசான்கள்
தீந்தமிழின் சுவையின்பம் மாந்தி நிற்பார் அவையடங்கப் பேசும் நின் ஆற்றல் அன்று
ஆயர்பாடிக் காட்சியினைப் படம் பிடிக்கும்
மலையகம் ஈன்ற மைந்தன்
மணிவிழாக் காணும் அன்பன் உலகெலாம் ஒன்று கூறும்
ஒப்பியல் பயின்ற ஆசான் பல கலை கற்றுணர்ந்த
பார் புகழ் சொல்லின் வல்லோன் சில போது கோப்பாய் மண்ணில்
தங்கினான், பெருமை எமதே!
திருமதி பாலராணி சண்முகராஜா முன்னாள் விரிவுரையாளர்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை
70

போற்றப்பட வேண்டிய கல்விமான் .
நமது பெருமதிப்பிற்கும். பேரன்பிற்கும் உரிய பேராசிரியர் சோ. சந்திர சேகரம் அவர்களின் மணிவிழாவை அவரது மாணவர்கள் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளமையையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அவருடைய சிரேஷ்ட மாணவர்களில் ஒருவர் நான் என்ற காரணத்தாலும், அவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த காரணத்தாலும், அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
அவருடைய மணிவிழா மலருக்கு எனது வாழ்த்துச் செய்தியை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் என்ற வகையில் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒருவருடைய வாழ்க்கையில் மணிவிழாக் காண்பது ஒரு மகத்தான நிகழ்ச்சியாகும். பொது வாழ்விலும் கல்விப் பணியிலும் ஈடுபட்டுள்ள பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள் பெருமையோடு போற்றப்பட வேண்டிய ஒரு கல்விமான். கல்வித்துறையில் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அரும்பணிகள் பல புரிந்த கல்வி நெறியாளர் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள் என்றால் மிகையாகாது. ஆசிரிய மணிகள் பலரைக் கல்வி உலகிற்குப் பட்டை தீட்டிய வைரமணிகளாக ஆக்கிய பெருமைக்குரியவர் இவர். அவருடைய மாணவர் பரம்பரை கல்வி ஒளிபரப்பும் ஞான விளக்குகளாக ஈழநாட்டின் பல பாகங்களிலும் பணி ஆற்றி வருகின்றனர்.
1980ம் ஆண்டில் அவருடன் எனக்கு ஏற்பட்ட நட்பும் தொடர்பும் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது என்று கூறுவதில் நான் பெருமைப்படுகின்றேன். w
வாழ்வாங்கு வாழும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் இன்றுபோல் என்றும் நற்பணிகள் புரிந்து பல்லாண்டு காலம் நலமும் வளமும் பெற்று வாழ, இறைவன் அருள்புரிய வேண்டும் என மனமார வாழ்த்துகின்றேன்.
பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம் தலைவர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
7

Page 40
சமுதாய நலனோக்கு கொண்டவர்.
ஒரு சமுதாயத்தின் எழுச்சியும், உயர்ச்சியும் இருப்பின் பெருமையும் அச்சமுதாயத்திலுள்ள கல்விமான்களிலேயே தங்கியுள்ளது. இன்று நமது நாட்டில் கல்விமான்கள் அதிலும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட கல்விமான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையிலே கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் சோ, சந்திரசேகரம் அவர்கள் சமுதாய நலநோக்கு கொண்ட ஒருவர் என்று துணிவடையலாம். பெருமைப்படலாம். தமிழ்ச் சமுதாயத்திற்கேற்பட்டுள்ள தாக்கங்களின் ஏதுக்களை ஆய்ந்தவர். பலநூறு கட்டுரைகள், பல நூல்கள் ஆக்கியவர். நல்ல கருத்தாழம் மிக்க ஆய்வு வெளிப்பாடுகளைத் தனது சொற்பொழிவுகள் மூலம் வழங்கி வருபவர். இன்று இலங்கைத் தமிழர்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அறிஞராகத் திகழ்பவர். தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் பெருமுயற்சியில் ஈடுபட்டு வருபவர். பல கல்வித்துறைசார்ந்தவர்களை உருவாக்கியவர். உருவாக்குபவர்.
கல்வி, சமய, சமூக, அரசியல் துறைகளில் வழிகாட்டக்கூடியவர்கள் அருகிவிட்ட எமது சமூகத்தில் மேற்படி துறைகளில் நேர்மையாக சிந்தித்துச் செயற்படும் நல்லவர்களை வாழ்த்தி, வரவேற்று, உற்சாகமூட்ட வேண்டியது சமுதாயக் கடமையாகும். அந்த வகையிலே பேராசிரியருக்கு விழா எடுத்து வாழ்த்தி அவரது பணியின் மேன்மையை வெளிக்கொண்டு வரும் நன்முயற்சி சமுதாய தேவை என்றே கூறவேண்டும்.
பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள் மேற்கொண்டுவரும் சமுதாய நோக்கிலமைந்த பணி தொய்வின்றித் தொடர வேண்டும். அவரது ஆய்வுகள் வரலாற்றுப் பதிவுகளாகத் திகழவும் வேண்டும் என்ற எனது விருப்பை வெளிப்படுத்து வதுடன், பேராசிரியர் அவர்கள் பல்லாண்டு தொடர்ந்து நற்பணியாற்ற எல்லாம் வல்ல இறைவன் திருவருள் கிட்டும் என வேண்டுகிறேன்.
த. மனோகரன்
பொதுச் செயலாளர் அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் துணைத் தலைவர். கல்விக்குழுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
72

நலமோங்க வாழ்வீர்.
மிக எளிமையான வாழ்வையும் உயர்வான எண்ணங்களையும் கொண்டிருப்பதுதான் மக்கட்பண்பு: அதுவே உயர்ந்த நாகரிகமுமாகின்றது. ஆடம்பரத்திலோ இடாம்பீக வாழ்விலோ, வெளிப்பகட்டிலோ ஒருவனது வாழ்வு பெருமைப்பட்டு விடுவதில்லை. அதுபோலவே எமது பேராசிரியரும் வாழ்ந்து வருகிறார். நிறைகுடமாக - கதிர்முற்றிய நெல் மணிகள் தலை தாழ்த்தி நிற்பது போலவும் பணிவோடு எம்முடன் பழகி வருகிறார். எளிமை வாழ்வு ஒர் அறமாகவும் திகழ்வது எனலாம். அந்த எளிமையான வாழ்வின் மூலம் எம் மனத்தினைக் கவர்ந்துள்ள பேராசிரியர் அவர்களுக்கு இத்தகைய நல்லொழுக்கம், கட்டுப்பாடு, பணிவு, கீழ்ப்படிவு என்பன பிறந்தது முதலே அவருக்கு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் வாழ்விலே இத்தகைய உயர்ச்சியைப் பெற்றிருக்க முடிந்திருக்கிறது.
எமது பேராசிரியர் சமுதாயத்திற்கென பெரும் பணிகள் பல ஆற்றியுள்ளார். அதிலே மிக முக்கியமானதும் குறிப்பிடத்தக்கதுமாக அவரது கல்விப் பணி திகழ்கின்றது. கல்வியில் ஈடுபாடு கொண்ட சகலரதும் ஆவலைத் தீர்க்கும் வண்ணம் கல்வியியல் சார்ந்த விடயங்களைக் கட்டுரையாக, புத்தகமாக ஆவணப் படுத்தி வருகின்றார் பேராசிரியர். அதற்காக கல்வி உலகே அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.
செல்வங்கள் நிறைய இருப்பினும் உயர் பதவிகள் வகிப்பினும் புகழும் அந்தஸ்துப் பட்டங்களும் விருதுகளும் பெற்றிருப்பினும் பேராசிரியர் அவர்கள் பண்புள்ளம் கொண்டவராக விளங்குகின்றார். யாராக இருந்தாலும் தனது சிரிப்பினால் அவர்களது மனங்களை வென்று விடுகிறார்.
மதிப்பைக் கொடுத்துத்தான் மதிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். மரியாதையை வழங்கித்தான் மரியாதையை எதிர்பார்க்க முடியும் என்பதை நினைவில் இருத்தி மதிப்பு மரியாதை, கணிப்பு என்பனவற்றைப் பிறருக்கு வழங்கி தானும் அவற்றை இழக்காது இன்பமாக வாழும் சோ, சந்திரசேகரம் அவர்கள் இன்னும் நல்வாழ்வு வாழ்ந்து நலம் பல சேர்க்க வேண்டுமென எல்லாம் வல்ல வித்தக விநாயகரை வேண்டுகிறேன்.
தா. முத்துக்குமாரசாமி அதிபர் இந்துக்கல்லூரி, கொழும்பு.

Page 41
நேசமாகுவதில் பேராசிரியர் இவர் .
நாம் ஒருவர் மீது செலுத்தும் மரியாதையானது ஏதோ விதத்தில் அவருக்கும் எமக்குமிடையிலோர் இடைவெளியை ஏற்படுத்தவே செய்யும். அந்த இடைவெளியின் காரணமாக, என்னதான் அவரைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருந்தாலும், ஆழமான சில விடயங்கள் தெரியாமல் போய் விடுவதுண்டு. ஆனால் ஒருவர் மீது நாம் கொள்ளும் நேசமானது, அவரின் பலங்கள், பலவீனங்கள் பற்றியும் எமக்குத் தெரிய வைக்கிறது. அவ்வாறான அறிதலின் மூலம் அவரது சுயமும் நிஜமும் நமக்கு தரிசனமாகிறது. அத்தரிசனம் அவர் பற்றிய ஒரு மதிப்புக்குரிய படிமத்தை எமக்கு ஏற்படுத்துகிறத.
அவ்வாறான ஒரு நேசமிக்க படிமம் மணி விழா காணும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் மீது எனக்கு எப்பொழுதுமே இருக்கிறது.
முப்பது வருட கால எனது கலை இலக்கிய வாழ்வில் நான் பல்துறை சார்ந்த பேராசிரியர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் மீதெலாம் எனக்கு மதிப்பு கலந்த மரியாதை என்றால் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள் மீது எனக்கு நேசம் கலந்த மதிப்பே இருந்து வந்தள்ளத.
இலக்கிய நிகழ்வுகளுக்காக பல தடவை பல பயணங்கள் அவருடன் இணைந்து போய் இருக்கிறேன். அப்பயணங்களில் எல்லாம் சம வயதான ஒரு தோழர் எவ்வாறு நம்முடன் நடந்த கொள்வாரோ அவ்வாறான உணர்வுடனும், நடத்தையுடனும் அவர் நடந்து கொள்வதைக் கண்டு நான் வியப்படைந்து இருக்கிறேன். அவ்வாறான பயணங்களின் பொழுதும் சரி, அல்லது பல்வேறு நிகழ்வுகளில் சந்திக்க கிடைக்கின்ற பொழுதும் சரி, அவருடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பல்வேறு விடயங்களைப் பற்றியெல்லாம் பேசி இருக்கிறேன். அந்த கலந்துரையாடலின் வழியாக எனது இலக்கிய ஆர்வத்தையும், எனத தேடலை பற்றிய தனக்குள் ஒரு கருத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு எனது மீண்டும் வசிப்பதற்காக" எனும் நால் வெளியீட்டின்போது ஆற்றிய உரையில் என்னை அடையாளப்படுத்தினார். அப்பொழுதுதான், அவர் என்னை எந்த அளவுக்கு
74

அவதானித்து வந்துள்ளார் என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அத்தோடு அவ்வுரையினை ஆங்கிலத்தில் எனது மேமண் சங்க செய்தி மடல் சஞ்சிகையான சமாஜார்” இதழுக்கு எழுதி கொடுத்ததன் மூலம் மேமன் சமூகத்தினரிடையே என்னைப் பற்றிய நல்லதொரு அறிமுகத்தையும் செய்வதில் பங்காற்றினார் என்பதையும் நான் நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.
என்னோடு மட்டுமல்லாமல் அவருடன் பழகும் ஒவ்வொரு நலன் ரின் பிந்தனைப்
போக்கை மிக அவதானத்துடன் நோக்குவார். அவ்வாறு நோக்குகின்ற வேளையில் எந்த விதமான பந்தாவுமின்றி, எந்த விதமான வெளிகாட்டலுமின்றி. அவ்வாறு அவர் எம்மை நோக்குகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாத நிலையில் மிகவும் இயல்பான முறையில், எளிமையாகப் பழகுவார். கல்வித்தறை சம்பந்தமான அவரது பார்வையும் இன்றைய நமது கல்வி அமைப்புச் சம்பந்தமான அவரது பார்வையும் புதுமையானவை. விமர்சனபூர்வமானவை.
இவ்வாறாக, தனது கல்வித் தகைமைகளை வைத்தக் கொண்டு, பல்கலைக்கழக மட்டத்தினருக்கும் படைப்பாளிகளுக்கும் ஒரு இடைவெளி நிலவுகிறது எண்பதற்கு விதி விலக்கான நிலையில் ஒரு நல்ல நண்பராக பண்புமிக்க மனிதராகத் திகழும் பேராசிரியர் சந்திரசேகரம் அவர்கள் இன்று மணி விழா காண்கிறார் என
அறியும்பொழுது மனம் திகழ்கிறது.
கல்வித்துறையில் பேராசிரியராகத் திகழும் பேராசிரியர் அவர்கள், நேசமாக இருப்பதிலும் அவர் ஒரு பேராசிரியராகத் திகழ்கிறார் என்பதை அவருடன் பழகுபவர்கள் ஒத்துக் கொள்வார்கள். அத்தகைய ஒருவருக்கு அவருக்கான மணிவிழா வாழ்த்தை ஒரு நேச உணர்வுடன் பதிவு செய்கிறேன்.
மேமண் கவி

Page 42
இடுக்கண் வரும்போது நகைப்பவர்.
பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரனுக்கு எடுக்கப்படும் மணி விழாவில் வெளியிடப்படும் மலரில் வாழ்த்துரை எழுதுவது குறித்து பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
1965 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் இளம் பட்டதாரி மாணவர் காலத்தில் ஏற்பட்ட எங்கள் அறிமுகம் இன்றுவரை தொடர்ந்து வந்துள்ளது. ஏறத்தாழ நான்கு தசாப்த காலமாக சிநேகிதர்களாக இருந்திருக்கின்றோம். இந்நீண்ட காலப் பகுதியில் சமகால மாணவர்களாக இருந்திருக்கின்றோம். விரிவுரையாளர்களாக ஒரே பல்கலைக்கழகத்தில் பணியாற்றியிருக்கின்றோம். இவை மாத்திரமின்றி கல்வி மற்றும் சமூகப் பணிகள் பலவற்றில் இணைந்து ஈடுபட்டு பணியாற்றியிருக்கின்றோம்.
நண்பரது தனித்தன்மை "இடுக்கண் வருங்கால் நகுக” என்ற தத்துவத்தை முற்று முழுதாக தனது வாழ்க்கைத் தத்துவமாக ஏற்று வாழ்ந்ததுதான். அத்தத்துவத்தை மனிதராக குத்தகைக்கு எடுத்துக் கொண்டாரோ என அவரை அறிந்தவர்களுக்கு எண்ணத் தோன்றும். பிரச்சினை எதுவானாலும் - அவரது உள் மனம் முதலில் கலங்கினாலும் கூட, அதனைக் காட்டிக் கொள்ளாது அவ்வேதனையினையும் நகைச்சுவையாக்கி விமர்சித்து தனது மனப் பளுவினையும் மற்றோர் வேதனைச் சுமையினையும் அகற்றிவிடக் கூடிய குணநலனும், மனப்பக்குவமும் எப்போதும் அவரிடம் இருந்ததனை நான் கண்டிருக்கின்றேன். ஒரு புறத்தில், அது அவரது தனித்துவமாகும். மறு புறத்தில் அது அவரது பலமுமாகும்.
கடந்த காலத்தில் அவர் ஆற்றியுள்ள கல்விப் பணிகள் நன்கறியப்பட்டவை. பல நிறுவனங்கள் அவற்றை அங்கீகரித்துள்ளன. அவருடைய கல்வியியல் ஆய்வுகளும், யாவற்றிற்கும் மேலாக புதினப் பத்திரிகை ஆக்கங்களும் பிரசித்தமானவை. அந்தளவுக்கு அவரது கல்விப் பரப்பும் பணியும் பல்கலைக்கழக ஆராய்ச்சி என்ற வலைக்குள் மட்டும் சிக்கிவிடாது சமூகத்தின் அனைத்து மட்ட மக்களதும் சிந்தனை வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்கி பிரசித்த வெளியீடுகளாகவும் பரிணமித்தன.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் பொது ஊடக(புதினப் பத்திரிகைகள்) வாயிலாக அறிவைப் பரப்பும் பணியில் உக்கிரமாக ஈடுபடலாம் என்ற சம்பிரதாயத்திற்கு உரமிட்ட பெருமை பேராசிரியரைச் சாரும் என எதுவிதத் தயக்கமுமின்றிக் கூறலாம். அனைத்து ஊடகங்கள் மூலமும் அவர் ஆற்றிய அறிவுப் பணி அளப்பரியது, பிரசித்தமானது என்பது கண்கூடு.
76

நல்ல மனிதனுக்குரிய அவரது அனைத்து மனித நேயப் பண்புகளும் அவருக்கு அளவில்லாத அளவில் தோழர்களைத் தந்துள்ளன. பல மட்டங்களையும், பல துறைகளையும் சார்ந்தவர்களின் அறிமுகமும் தோழமையும் அவரின் மற்றுமோர் பலமாகும். குழந்தைகள் முதல் வயோதிடர் வரை யாவருடனும் கலகலப்பாக தொடர்ந்து உரையாடவும் உறவாடவும் அவரால் முடியும். பேராசிரியர்கள் பலர் அவர்களுடைய பல்கலைக்கழக சகாக்கள் மற்றும் அத்தகையோர் தவிர்ந்தவர்களுடன் பேசத் தயக்கம் அல்லது உரையாட முடியாதவர்களாக இருப்பது சகஜம். ஆனால் இத்தகையவற்றிற்கு புறநடை யாகவும், விதிவிலக்காகவும் பேராசிரியர் விளங்கினார்.
பேராசிரியரின் அனைத்து சாதனைகளுக்கு திருமதி சந்திரசேகரன் அர்த்தமிக்க துணைவியாக பங்காற்றி உயர்ந்து நின்றார் என நெருங்கிய குடும்ப நண்பன் என்ற முறையில் என்னால் கூறமுடியும். பெயருக்கேற்ப சாந்தமானவராகவும் அன்பாகவும், கணவனின் சிநேக கலாசாரத்தைத் தானும் ஏற்று இல்லம் தேடி வந்தவர்களை இன் முகத்துடன் உபசரிக்கும் இல்லத்தரசியாகவும் உயர் பண்புகளைக் கொண்ட பெண்மணியாகவும் திகழ்ந்தார். இவர்களின் இல்லறம் நல்லறமாக இதுவரை காலம் நிறைவேறியதைப் போன்று தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு மணிவிழா காணும் பேராசிரியரது கல்விப் பணி தொடர அவருக்குச் சிறந்த ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் தந்தருளுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
பேராசிரியர் மா.செ. (ழ்க்கையா புவியியல் துறை பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை
77

Page 43
அறிவுக் கூர்மை மிக்கவர்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் துடிப்பும், ஆர்வமும் அக்கறையும் கொண்ட பள்ளி மாணவனாக இருந்த போதும் அறிவில் ஆராய்ந்து, தேர்ந்து, தெரிந்து கொள்வதில் அக்கறை கொண்டவராகவிருந்தார். அறிவுக் கூர்மைமிக்க இவரின் இயல்பினை அறிந்து நல்ல நூல்களை வாசிக்குப்படி கூறிவைத்தேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த வகையில் மார்க்ஸிம் கோர்க்கியின் தாய், குப்ரினின் அடிச்சுவடு - செகர்வின் புனிதம் தஸ்தாவஸ்கியின் புதுமை, டால்ஸ்டாயின் எழுத்துக்கள் லெனினின் வேலைத் திட்டங்கள் பற்றிய நூல்களும் காந்திஜியின் மாற்றத்திற்கு காரணமாகவிருந்த UNTO THE LAST - புத்தகத்தைப் பற்றியும் மு. வரதராஜாவின் நூல்கள் பற்றியும் சொல்லிவைத்தேன்.
நான் தொழிற்சங்க வாழ்க்கையில் முழுமையாக ஈடுபாடு கொண்டிருந்ததால் அவரின் தொடர்புகள் தொடர்ந்து இல்லாமல் போய் விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகள் கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியாகி வெளிவந்த சமயத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் திரு. சந்திரசேகரனைப் பேராசிரியர் சந்திரசேகரனாகக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
மலையக மக்களின் வரலாற்றைக் குறிப்பிடும் படி எழுதியவர். கல்வி சம்பந்தமாக பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
மலையக சமுதாயம் இந்த மேதையின் அறிவாற்றலை, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் தான் மலையகத்தில் படித்த அறிஞர்களாக உள்ளனர். கல்வியியல் துறையில் பேரறிஞராக இருக்கும் இவரின் ஆற்றலை மலையக சமுதாயம் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும், கல்வித்துறையின் சிறப்பான அம்சங்களை மலையக மக்கள் பயனடையும் வண்ணம் இவரை பயன்படுத்திக்கொள்ள அரசினை வலியுறுத்த நமது தலைமைகள் முன்வர வேண்டும்.
ởfl. 66). JIGMinum II
78

எளிமையாகப் பழகுபவர்.
மறைந்த எம் ஐயா அவர்கள், பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் மீது கொண்டிருந்த மதிப்பையும் பேராசிரியர் அவர்கள் ஐயா மீது கொண்டிருந்த அன்பையும் நாங்கள் நன்கு அறிவோம். ஜயா வாழ்ந்த காலத்திலும் சரி. மறைந்த பின்னும் சரி, துரைவியின் கணிசமான நிகழ்வுகளில் பேராசிரியர் அவர்கள் தனது பங்களிப்பைச் செய்து இருக்கிறார். பழகுவதில் எளிமையும், பார்வையில் கூர்மையும் கொண்ட அவர் மலையக மக்களின் வரலாறு சம்பந்தமான மேற்கொண்ட ஆய்வுகள் கனதியானவை.
அத்தகைய பணிகளை சிறப்பாக செய்துகொண்டு எளிமையாக பழகிவரும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களுக்கு துரை வியின் சார்பாக மணிவிழாவுக்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ராஜ் பிரசாத் துரை விஸ்வநாதன்
85. பூரீ இரட்ணஜோதி
சரவணமுத்து மாவத்தை கொழும்பு 13
79

Page 44
எப்போதும் எம்மோடிருக்க வேண்டும் .
எப்போதம் எக்காலமும் எம்மோடிருந்து
அனைத்திலும் நிறைபங்கு
கொண்டு
உலகம் உள்ளளவும்
அன்பு, பற்று, பாசம்
எம் அனைவருக்கும் புத்தாக்கமும் புரிந்துணர்வும் தந்து வாழ்ந்த இன்று அறுபதாம் அகவையை
எய்தம் எமது சந்திரசேகரன், மேலும்
ஆண்டு பல ஆண்டு வாழ்ந்த
கல்வி, சமூகம், குடும்பம் எனும்
தறைகளில் பல பணி புரிந்திட
எல்லாவற்றும் இலக்கணமாய் வாழ்த்தம்
- ஆர். எம். நாகலிங்கம், இந்திராணி
. எஸ். கந்தசாமி பிரேமாவதி
- எஸ். தயாளன், மேனகா
எம். இராமசாமி, கிருபாலினி - எஸ். கணேசன் கிருஷ்ணவேணி
- எஸ். விஜயலட்சுமி
. எஸ். அசோகன் - செல்வாம்பிகை
. எம். எண். சிவராம் - மல்லிகா
. எம். என். அசோகன் - சாந்தி - ஆர். முந்தர் - வசந்தி
80
(மதுரை)
(கொழும்பு)
(கொழும்பு)
(கொழும்பு)
(Lg്വങ്ങബ്)
(மதுரை)
(பிரான்ஸ்)
(பிரான்ஸ்)
(பதுளை)
(கோயம்புத்துார்)

பதினாறு செல்வங்களும் பெறுக .
ஆயுள்காரகன் சனிபகவான். இவர் 12 இராசிகளையும் சுற்றி வருவதற்கு 30 ஆண்டுகள் ஆகும். ஒரு மனிதனின் வாழ்நாளில் மந்தன் 4 முறை வருவார். ஆதலால் மனிதனின் பூரண ஆயுள் 120.
இதில் பாதியாகிய 60 ஆண்டுகள் வாழ்ந்து விட்டாலே வாழ்வு பூரண மடைந்ததாகக் கருதியே இதற்கு விழா எடுக்கின்றனர். 60 ஆண்டுகள் வாழ்வில் தடம் பதித்தவர்கள் 60 வயதிற்கு மேல் இறை சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்பதைக் குறிக்குமுகமாகவே 60 ஆண்டு பூர்த்திக்கு விழா எடுக்கின்றோம்.
கால வட்டத்தில் 60 என்பது சிறப்புப் பொருந்தியது. ஒரு நாளிற்கு 60 நாழிகை. ஒரு மணிக்கு 60 நிமிடங்கள். தமிழ் ஆண்டு அறுபது. ஆகையினால் ஒருவரது வயதும் 60 ஆண்டுகளைக் கடக்கும் பொழுது பூரணம் பெறுகின்றது.
60 ஆண்டுகள் மனைவி, குழந்தைகளுடன் நிறைவாழ்வு வாழ்ந்த ஒருவர் 61ம் ஆண்டில் கால் பதிக்கும் பொழுது இவ்விழா எடுக்கப்படுகிறது. 61ஐத் திருப்பிப் பார்த்தால் 16. தம்பதிகள் என்றும் பதினாறாக, பதினாறு செல்வ வளங்களும் பெற்று வாழ வேண்டும் என்பதும் குறிப்பாகப் பெறப்படும்.
அருள்மொழி அரசி, வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
8

Page 45
பல்கலைக்கழகத்தை அலங்கரிக்க
வேண்டும்
மணிவிழா காணும் பேராசிரியர் சோ. சந்திரசேகரனை வாழ்த்துகின்றமையை ஒரு பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
அறுபதுகளின் மலையகம் மறுமலர்ச்சியில் முகிழ்த்தது. கடந்த நான்கு தசாப்த காலகட்டத்தில் பொதுவாக மலையக முன்னேற்றத்திலும் குறிப்பாக கல்வித்துறை வளர்ச்சியிலும், முத்திரை பதித்தவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஆவார். 1967 - 1968 ம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அவரோடு சமகால மாணவனாக பயின்ற காலத்தில் ஏற்பட்ட நட்பு, தொடர்ந்து வந்த காலத்தில் சமூகத் தொடர்புகளுக்கமைவாக ஏற்பட்ட, புத்திஜீவித ஈடுபாடுகளால் இறுக்கடைந்தது. துறை, தொழில் என்பன வேறுபட்டிருந்தாலும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பொதுமையும், அந்த சமூகத்தில் கற்று வந்தவர்கள் அந்த சமூகத்திற்கான சமூகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற வேணவாவும் பல்வேறு நடவடிக்கைகளில் இருவரையும் ஈடுபடவைத்தன. பொதுவான கொள்கை, அணுகுமுறை நிலைப்பாடு என்பனவும் இந்த ஈடுபாட்டினை வசதிப்படுத்தின.
பேராசிரியர் சந்திரசேகரன் பல்கலைக்கழக ஆய்வுகளை சமூகத்திற்கு கொண்டு செல்வதில் முன்னோடியாக திகழ்ந்தார். பல்கலைக்கழக ஆய்வுகள் பண்புரீதியாக உயர்வாக அமையவேண்டும் என்பதால், அவை சாதாரண சராசரி மனிதனைப் போய்ச் சேருவதில் பல தடவைகளை எதிர்நோக்குகின்றன. இத்தகு ஆய்வு முயற்சிகள் அறிவுலகத்திற்கு அணிசேர்ப்பதாக அமையலாம். அத்தோடு, அவை சமூகத்திற்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கை அடைய இலகு நடையில் பத்திரிகை கட்டுரைகள், நூல்கள் மூலமாக செயற்பட்டவர் பேராசிரியர் அந்த முயற்சிகள் தொடரவேண்டும் என்பதே எனது ஆவல்.
பேராசிரியர் இன்னுமொரு உள்ளக்கிடக்கை மலையத்திற்கென ஒரு பல்கலைக் கழகத்தை ஆரம்பிப்பதென்பதாகும். அவர் மணிவிழாக் காணும் சந்தர்ப்பத்தில் அவருடைய வேணவா விரைவில் நிறைவேறி அப் பல்கலைக் கழகத்தை அவர் அலங்கரிக்க வேண்டும் என நம்புவோமாக.
எம். வாமதேவன் தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் மேலதிக செயலாளர்
சமூக அபிவிருத்தி அமைச்சு

மலையகத்தின் விடிவெள்ளி.
கல்வியியல் என்றதும் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் பெயரும், உருவமும் எங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஒரு கணம் நிமிரச் செய்யும், கல்வியியல் பட்டதாரியாகி கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் தலைவராக உயர்ந்து இன்று தனது அறுபது அகவையை நிறைவு செய்யும் பேராசிரியர் அவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன்.
கல்வியிலும் பொருளாதாரத்திலும், சமூக அசைவியக்கத்திலும் மலையகம் அன்று தாழ்நிலையில் இருந்தபோது எதிர்நோக்கிய சவால்களை யெல்லாம் உடைத்தெறிந்து மலையகத்தின் விடிவெள்ளியாக ஒளிவீசும் பேராசிரியர் அவர்களின் கல்விப் பாரம்பரியம் இன்று பல கல்வியியலாளர்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தைக் கொடுத்துள்ளது.
சகலருக்கும் கல்வி, சகல மக்களுக்கும் பொதுவளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் என்ற உயர்ந்த மாக்சியச் சிந்தனையூடாகத் தன்னை வளர்த்துக்கொண்டு வந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் தனது பல்வேறு கல்வியியல் சார்ந்த ஆய்வுகளினூடாக சாதாரண மக்கள் மத்தியிலும் கூட கல்விச் சிந்தனையை வளர்த்தெடுத்தவர்.
தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களை மட்டுமல்லாது, ஒரு தடவை பேசிப் பழகியவர்களைக் கூட என்றும் மறக்காது அவர்களின் பெயரைக் கூறி அழைத்துப் பழகும் பண்பு பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்தில் இருந்து இற்றைவரை இவரிடம் தொடர்கிறது.
நல்ல பண்பாளனாக சமூகத்தை நேசிக்கும் மனித நேயனாக, இலங்கையின் உன்னதமான கல்வியியலாளனாக எங்கள் முன் நடமாடி வரும் பன்முகப் பரிமாணம் கொண்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமே வாழ்ந்து கல்விப் பணியையும், சமூக சேவையையும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
இ. விசாகலிங்கம்
மாகாணக் கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வித் திணைக்களம் வடக்கு கிழக்கு மாகாணம் திருகோணமலை
83

Page 46
பேராசிரியருடனான தொடர்பு பெருமிதம் தருகிறது .
மணிவிழாக் காணும் பேராசிரியர் சந்திரசேகரத்தை வாழ்த்துவதற்கு எனக்கு கிடைத்த இவ்வாய்ப்பை உண்மையில் நான் ஒரு வரப்பிரசாதமாகவே கருதுகின்றேன்.
பேராசிரியருடனான எனது தொடர்பு பல முனைகளிலானது. எனக்கு இசைவான அரசியற் கொள்கைகளுடன் அவருக்கு ஏற்கனவேயிருந்த பற்று எமக் கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு வசதியாயமைந்தது. ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் என்னுடனான அவரது தொடர்புக்கு வயது மிகவும் குறைவு. ஆனால் அதற்கு முன்னரேயே அடிக்கடி சந்தித்துக்கொள்ள முடியாவிட்டாலும் இருவருக்கும் இடையிலான அரசியல் உணர்வின் ஒத்திசைவு எம்மை நெருக்கமானவர்களாகவே எப்போதும் வைத்திருந்தது.
தினக் குரல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட வேளையில் நான் செய்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். இயல்பாகவே ஒரு கல்வியாளனுக்கு இருக்கக் கூடிய இயல்புகள் தினக்குரலின் மேம்பாட்டில் பேராசிரியரை அக்கறை கொள்ள வைத்தன. கல்வித்துறை சம்பந்தமான எண்ணற்ற கட்டுரைகளை எமது பத்திரிகைக்கு அவர், தனக்கு இருக்கின்ற பல நெருக்குதல்களுக்கு மத்தியிலும் எழுதினார். தொடர்ந்தும் எழுதிவருகின்றார்.
விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக உலகளாவிய ரீதியில் கல்வித்துறையில் ஏற்பட்டு வருகின்ற அபரிமிதமான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற நெருக்குதல்கள் குறித்து சாதாரண மக்களுக்கு விளங்க வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பத்திரிகைகளின் ஊடாக பேராசிரியர் சந்திரசேகரம் செய்துவருகின்ற பங்களிப்பு பெரும் பாராட்டுக்குரியது. பல்கலைக்கழகப் பணிகளின் பளு சில சந்தர்ப்பங்களில் அவரை பத்திரிகைகளுக்கு எழுத முடியாமல் அசெளகரியப்படுத்துவதை எம்மால் உணர முடியாமல் இல்லை. ஆனால், அத்தகைய சந்தர்ப்பங்களில் நான் தொடர்பு கொண்டு நீண்டநாட்களாக உங்கள் கட்டுரைகளைக் காணவில்லையே என்று கேட்டேன். எழுதுவதற்கு
84

எத்தனையோ கல்விப் பிரச்சினைகளை மனதில் வைத்திருக்கின்றேன். ஆனால், நேரம்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்று அவர் தனது வேதனையை என்னிடம் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி யிருக்கிறார், பேராசிரியரின் பங்களிப்பு எமது பத்திரிகைத்துறைக்கு தடையின்றித் தொடரவேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு.
பல்கலைக்கழகத்தில் பார்த்த காலத்தில் இருந்து அவரிடம் ஊறிப்போன இடதுசாரிச் சிந்தனைகள் எந்தக் கணத்திலும் சாதாரண மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவராகவும் அவர்களால் அணுகப்படக்கூடியவராகவும் அவரை வழிநடத்தி இன்றைய பெருமைக்குரிய நிலைக்கு அவரைக் கொண்டு வந்திருக்கின்றன என்று நான் உறுதியாக நம்புகின்றேன். கல்வியாளரிடம் இருக்கக் கூடாதென்ற போதிலும் பலரிடம் எம்மால் காணப்படக் கூடியதாயிருக்கின்ற செருக்கு, அகம்பாவம் ஆகியவற்றின் ரேகைகளை நான் ஒருபோதுமே அவரிடம் கண்டதில்லை. அவரின் உன்னதமான போக்கிற்கு மேம்பாட்டு நினைவுக்கும் இக் குணாம்சங்கள் மேலும் அணிகலன்களா யமைந்திருக்கின்றன.
கல்விச் சமுதாயத்திற்கும் அதனோடிணைந்த ஏனைய துறைகளுக்குமான பேராசிரியரின் பணிகள் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு. மணிவிழாக்காணும் அவர் நீடுழிவாழ வாழ்த்துகின்றேன்.
வீரகத்தி தனபாலசிங்கம் பிரதம ஆசிரியர் தினக்குரல்
68 எலி ஹவுஸ் ரோட் கொழும்பு - 15
85

Page 47
நாவண்மை மிக்கவர்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களின் மணிவிழாவுக்கு இவ்வாழ்த்தினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு அறிமுகமான பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களிடம் பல அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கொழும்புப் பல்கலைக் கழகத்திலும் எனக்குக் கிடைத்தது.
கல்விப்பீடம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பிரபல்யமடைந்தபோது, கல்வியைச் சிறப்புப் பயிற்சி நெறியாகத் தெரிவுசெய்வதில் மாணவர்களிடையே ஆர்வத்தினையும் ஊக்கத்தினையும் ஏற்படுத்துவதில் பேராசிரியர் அரும்பணி யாற்றினார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்ததுடன் பல்வேறு சமூக கலாசார மற்றும் நூல் வெளியீட்டு வைபவங்களிலும் கலந்து கொண்டு ஆற்றிய சொற்பொழிவுகளால் தமது நாவண்மையை வெளிப்படுத்தி யுள்ளார். தொடர்புசாதனங்களினூடாக இவர் ஆற்றிய உரைகளும் கல்வியியல் தொடர்பான நூல்களும் பொதுமக்களின் கல்விசார் விழிப்புணர்வுக்கும் பெரிதும் துணைபுரிந்துள்ளன.
பேராசிரியர் அவர்கள் எளிமையான பண்புடையவர். இன்முகத்துடன் எவ்வித பிரச்சினையையும் சுலபமாகத் தெளிவுபடுத்தும் திறனாற்றல் கொண்டவர். இந்நற்பண்புகள் கொண்டவரான பேராசிரியருக்குப் பல்கலைக்கழகச் சகாக்கள், மாணவர்கள் மற்றும் பல ஆசிரியர்களின் தொடர்புகள் நிலைத்துள்ளமை வியப்புக்குரிய விடயமல்ல.
இந்து மக்களின் கலாசாரத்தில் ஒரு சிறப்பு நிகழ்வாக விளங்கும் மணிவிழா அவரது வாழ்க்கைக்கும் போற்றத்தகுந்த சேவைக்கும் மகுடம் சூட்டுதல் போன்றதாகும். மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களும் இறைவனின் நல்லாசிகளும் பேராசிரியருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் உரித்தாகட்டும்
செல்வி முற்கனநாதன் விரிவுரையாளர் பொருளியல்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
86

விவேகம் நிறைந்தவர்.
20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் துரித வளர்ச்சியுடன், வலிவடக்கில் உள்ள மாணவர்கள் சகலரும் தகுதியுள்ள விடத்து, உயர் கல்வி பெறும் வாய்ப்பு கிட்டியது. வேறு மாவட்டங்களிலிருந்தும் உயர் கல்வியைப் பெற மகாஜனாக் கல்லூரியை நாடிப் பல மாணவர்கள் வந்து சேர்ந்தனர்.
பதுளை மாவட்டத்திலிருந்து உயர்கல்வி பெற மகாஜனாவுக்கு வந்த விவேகம் நிறைந்த மாணவர்களில் ஒருவரே. இன்று கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வித்துறைப் பேராசிரியராக திகழும் திரு. சந்திரசேகரம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியராகிய திரு. மு. சின்னத்தம்பி அவர்களும் மகாஜனா மாணவரே.
பேராசிரியர் அவர்கள் கல்லூரி வைபவங்களிலும் எமது பழைய மாணவர் சங்க வைபவங்களிலும் கலந்து, வெளியீடுகளுக்கு சிறந்த கட்டுரைகளையும் தந்தும் வைபவங்களில் சொற்பெருக்காற்றியும் சிறப்பித்து வருகின்றார்.
விழாக் காணும் பேராசிரியர் அவர்களின் உயர்ச்சி கண்டு பெருமை கொள்வதுடன் அவரை பாராட்டி வாழ்த்துவதில் எமது பழையமாணவர் சங்கம் பெருமகிழ்ச்சி அடைகின்றது. அவரது சேவை முழுநாட்டிற்கும் குறிப்பாக எமது கல்லூரிக்கும் என்றென்றும் கிடைக்க வேண்டுமென வேண்டி, அவரது விழா சிறப்பாக அமைய பழைய மாணவர் சங்கம் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துகின்றேன்.
ச. முற்கனநாதன்
தலைவர் தெ. மகாஜன பழைய மாணவர் சங்கம் கொழும்பு.
87

Page 48
வாழிபல்லாண்டென வாழ்த்துவோம்.
bluWirUn
அகவை அறுபதென் றானதிவ் வாண்டெம் தகைசால் அறிஞர் தமக்காம் - அகமொன்றிப் பேராசான் சந்திர சேகரந் தம்முடைச் சீர்சொல்லி வாழ்த்துரைப் போம்.
கட்டளைக் கலித்துறை
பண்மரி தேர்ந்ததற் பண்டிதன் கல்விப் பணிதொடரத் தன்வழி பற்பலர் தோன்றிடச் செய்தோன் தனைத் தொடர்வோம் முன்னிலை நிற்க முறைமைகள் செய்பவன் மாண்புடையோன் தன்னோர்மை நேர்மைத் தனமுடைச் சந்திர சேகரனே.
எவர்க்கும் இனியவன் ஏற்போரெலாரும் எதிர்ப்பிலாதான். எவரெவ ராயினும் இன்புப் பேசும் இயல்புடையோன் தவிர்க்த் படியொரு சொல்லெனஞ் சொல்லான் சொலவிளைந்தால் செவிக்கும் படிசொல் செலந் திரு. சந்திர சேகரனே.
கல்விக் கடலெனிற் சுடற்றினிற் பெய்மைக் கிடமிலையே பல்வகை நால்கள் பயின்றவன் ஆய்ந்தோம் படித்தறியப் பல்வகை நால்களின் பங்கினைச் சேர்ந்தவன் பொற்புறுநற் சொல்லினில் வல்லான் திருமிகு சந்திர சேகரனே.
பொதுப்பணி செய்யும் பெருமனங் கொண்டவன் பற்பலநற் பொதுப்பணி மன்றப் பதவிகள் ஏற்றுப் பணிபுரிவோன் மதிப்பவன் மாற்றார் மதிதிறன் தம்மைய் மாண்புறச் சந் ததம்பணி செய்திடுஞ சீரியன் சந்திர சேகரனே.
88

7,
O,
தமிழ்மொழி யோங்கத் தனதுயர் பங்கினைத் தந்துதவத் தமிழ்மொழி யோங்கத் துணைதரு சீர்செய்த் தலங்கொழும்புத் தமிழ்சங் கமேற்ற தலைவனாய் நின்று தமிழ் வளர்த்தோன் தமிழ்த்தாய் மகிழ்பணி செய்திடுஞ் சந்திர சேகரனே.
தலைமைக் குவந்ததற் சான்றாண்மை யுன்முன் தலைபணியும் தலைவனாய்க் கொண்டுநாம் செய்தனம் ஆணை தனதைத்தொடர்ந்தோம். தலைவனாய் நீயும் செயலனாய் நான்பணி செய்தவண்காண் தலைவனே என்னுயிர் தோழனே சந்திர சேகரனே.
மலையக மீன்ற மனிதப் புனிதன் மலையகத்தோர் தலைநிமிர்ந் தள்ளம் தணிவுறத் தோள்தரு தாயமகன் அலைகடல் சூழ்நிதி ஆம் எமதீழத் திருவெனவே சொலத்தகு செம்மல் தமிழன் சோ. சந்திர சேகரனே.
கல்வியோ டாட்சிக் கடனிலும் நம்பணி கொண்டனரும் வல்லமை ஒர்ந்தே வரித்தனர் நுண்மதி வாகுசெய்தாய் பல்லினர் வாழ்பதிப் பங்கெம தேதெனப் பங்கு செய்வோர் சொல்லிப் பெறவழி செய்தனை சந்திர சேகரனே.
புன்னகை என்றுமே பூக்கும் வதனமுண் பொன்மத்தின் கண்ணாடி யாமோ குணத்தினைக் காட்டும் குறிப்புலமோ வன்மொழி தேராய் வரும்பகைக் கஞ்சாய் வழங்கலன்றித் தன்னலம் நோக்கிடாத் தாயனே சந்திர சேகரனே.
வாழிபல் லாண்டென வாழ்த்துவோம் வாழிவின் வளமனைத்தும் வாழுநாள் முற்றும் வழங்கிட வல்லோன் வழியிரப்போம் தோழமைக் குன்னத தோழனாம் சந்திர சேகரனின் தோழமை கொள்வோம் தணையிறை சந்திர சேகரனே.
ஜின்னாஹற் ஷரிபுத்தீன்
89

Page 49
A Good Human Being ...
It is my honour and privilege to extend my sinceregreetings to a dear friend and scholar, Professor Sandarasegaram on his 60eth birthday. Throughout my long career in education I have been blessed to work with many devoted and gifted teachers and professors of education from different countries. Among them, I consider Professor Sandarasegaram as one of the eminent scholars who approached education not from an ivory tower perspective but from that of a committed practitioner. He has been an academic guide and personal mentor for many teachers and administrators. During my long association with him, I have known him as a good human being, critically reflective on issues confronting educators all over the world. I consider him, a man for all seasons and an ethical exemplar to numerous teachers in Sri Lanka.
While pursuing my master's degree in education at University of Ceylon, Peradeniya in the early 1970's our paths crossed. During that time I was invited to join a team of young academics preparing lectures in Tamil medium for a correspondence course in education. It was a challenging assignment as we were the pioneers in the field of developing Tamil medium lectures for graduate level students. We had a common mentor in the late professor S. Muthulingam, who later became our common colleague and friend. At that time, Professor Muthulingam considered Professor Sandarasegaram to be one of the brightest lights in education and a potential university professor of education capable of inspiring future teachers.
My friendship and admiration of Sandarasegaram grew as I found him refreshingly constructive and insightful in our discussions. He had tremendous energy and ideas. He was affodable to all at different University campuses and enjoyed a wide circle of friends among all
3C6:S.
90

In the 1980's our interaction was not as intense as we would have wished, as I lived in the United States of America. Our association was rekin led when Prof. Sandarasegaram came to University of Auburn at Alabama on his sabbatical leave. We had long, in - depth telephone conversations relating to our work, common friends and perennial problems of our country of birth.
In recent visits to Sri Lanka, I found him with the same questioning mind and passion for enhancing the quality of teacher education for all. His involvement was not limited to Tamil medium. As always he was fresh with new ideas and eager to challenge traditional nations about purposes and methods of instuction in education. Although he has several scholarly publications to his credit in English and Tamil, I found him enthusiastic about taking an exploratory and provocative look at the interplay of theory and proatice in global educationl, especially in the context of developing countries.
I have seen first hand the passion in the eyes of my friend
Professor Sandarasegaram to identify high quality teacher education materials and resources for the benefit of Sri Lankan teachers. I am certain that his eagerness is infectious and continues to ignite similar passion in his students.
In spite of his work in many academic councils, both at national and international levels, he is actively involved in Community activities. I was told by my friends that it is difficult to identify a Tamil function, social or literary, without the presence of Professor Sandarasegarm. He continues to amaze us with the thoroughness and breadth of his interests and scholarship. Nothing we do in life as teachers is more important than igniting the passion for life long learning in others. Professor
Sandarasegaram's life fully exemplifies this.
AIthony GLAVLA rajah
Associate Superintendent of Schools Ardhdiocese of Seattle Seattle, Washington, U.S.A.
9

Page 50
Universally Respected Person ...
By any standard Professor Sandrasegaram is a rare and remarkable personality. If he is distinguished by scholarship, an impressive capacity for lucidity and a keen interest in a variety of subjects including literature, music and other arts he also seem to have a predilection for hiding his achievements behind a disarming simplicity and humanity. He is quick to discount his accomplishments if anyone were to make reference to them.
Professor Sandarasegaram's sense of humor and bon homie has endeared him to his friends of whom he has a very large number. As a well informed and articulate speaker he is very much in demand in variety of functions whether it is literary, cultural, social or religious. There is hardly a Tamil literary or cultural function of importance in which he is not a speaker. He is the author of several books and has written innumerable articles and also presented papers at seminars. Above everything else it is his deep humanism and social concern that stand out as his most outstanding qualities. He is equally at ease with the exalted and the humble and is always ready to oblige when anyone wishes to draw on the storehouse of knowledge, which he has accumulated in his mind. He has shown a willingness to share this knowledge and render assistance to anyone who may want it.
I have had the pleasure and privilege of enjoying Professor Sandarasegaram's acquaintance and friendship for several decades immensely benefiting through the interactions with him.
When I was a State Minister Professor Sandarasegaram functioned as a Consultant/Advisor. We used to travel together to many places. He was a fantastic travelling companion. It is during these travels together that I became more acquainted with him and benefited from his deep knowledge on many matters. He can sing, he can recite poetry

both classical and modern and also long passages from outstanding Tamil speakers. I had the habit of not being able to sleep during travels and needed a constant need for conversation. Professor Sandrasegaram also seemed to be afflicted by the some malady. I still remember with nostalgia the conversations I had with him during these trips.
Professor Sandarasegaram's home town is Badulla and he is one of the few outstanding scholars from among the Indian Origin Tamil community. His breath of vision and sense of equality has earned for him the approbation of all communities. While being firmly rooted in his origin as a Indian origin Tamil he has developed the vision that transcends sectionalism. He is universally respected.
I must congratulate and express my appreciation for the organizing committee who have undertaken the task of organizing this celebration.
We celebrate not only the Diamond Jubilee of Professor Sandarasegaram but also the success of a son of the hill country who has brought pride to all of us.
I wish Professor Sandarasegaram good health, long life and many
De SCCSSCS
P. P. Devaraj Former Minister of State
93

Page 51
A Learning Academic ...
It is a privilege to write a valedictory about a "Welcome” friend of the academia whose service to the Sri Lankan life generally and specially to the 'unseen Upcountry plantation community to uplift their educational and socio ethos is remarkebally significant.
Professor Sandarasegaram's outstanding characteristic is that he is at home everywhere and out of place now here. He could more easily with the elite as well as with the commers with a ringle of good chemistry. He is not bounded by "narrow domestic walls" of caste, class creed or ethnic steneotypes and to me he is the intellectual bridge between the Plantations and the Colombo academia and the social elite. Perhaps, I may stretch a point and say that he is the typical proto - type of the Sri Lankan - a harmonious blend of Sinhala + Tamil + Muslims and other persona, for the realization of the first of the Sri Lankan educational goals. Perhaps his outlook and attitudes are more than of a Sri Lankan but of a cosmopolitan too.
His formative years spent in his social milieu in the aesthetically pleasing, velvetty verdent valleys of cool climes of the Upcountry - an idyllic environ to grow up which after month helped him to become a generous genial person of warmth. More you associate him, more you begin to like him. Thus, increased familiarity with him breeds not contempt but becomea a desire to "read him anew". His relationships are remarkably "I and Thou” and not at all “I and It”, as conceptualized by Martin Buber the renowned philosopher. I and than attitude is the essence of human relationships in an emerging scenanio of a depersanalized world in a 'state of anomie - a condition in which norms and values are so weak and people tend to be ego-Centric, ruth lessly competitive consumption - oriented, and are driven by a "possesive
happiness' - of having more and more goods than being good.
94.

Although Professor Sandarasegaram's breadth of activities - both educational and societal - keeps him as busy as a bee, neertheless he keeps abreast of the rapidly exploding knowledge landscape by being a learning academic rather than a learned academic.
He has authored and co-authored several volumes and learned articles both in Tamil and English which are of emmence value of the "thirst for learning" educands spread far and wide.
We wish him and his extended congenial family the best of the best in the coming years to serve our nation with much more vigaur and vitability, for all of us are here for the sake of others.
Prof. C. Kariya WASANYA
Former Head, Department of Humanities Education University of Colombo.
9
5

Page 52
Creator of Social Harmony ...
I first met Prof.S. Sandarasega ram as a bright, young undergraduate who was very popular among the students at Mars Hall of the University of Peradeniya during 1960s.
He joined the Faculty of Education as an assistant lecturer and later promoted to the post of Associate professor due to his hard work and research. He also worked as the Head of the Department of Social Science Education, where he did a great deal of work to develop the department during his period.
Prof.Sandarasegaram has visited many countries as a research scholar and he also has worked as a Visiting Professor at the Auburn University, Alabama, USA. He has written a book named 'Education of Disadvantaged Communities In South Asia' with Prof. Raja Gunawardhane during his stay at this University.
Prof.Sandarasegaram has written extensively on various topics on education and his books and articles are highly appreciated. His fluency in Tamil, English and Sinhala, not only helped him to contribute to the development education in Sri Lanka but also to link Tamil community with Sinhala community in order to create social harmony in the country at large.
I wish him a very happy birthday and a great future.
Prof. WG. Kularafie
Faculty of Education University of Colombo
O6

Symbol of Ethnic Harmony ...
I am very pleased to send this message for the celebration of 60th birthday of Prof. S. Sandarasegaram.
Prof. Sandarasegaram is a Member of the Executive Committee of Japanese Graduates Alumni Association of Sri Lanka (JAGAAS) and he had the honour of being the President of this organisation from 2003 to 2004.
Sandra as we dearly call him is a very active Member of our organisation contributing enormously to the activities of JAGAAS conducting seminars and delivering lectures on Japanese Education Systems for the benefit of Sri Lankan Society. He is an asset to our organisation being able to deliver these lectures not only in English and Tamil but also in Sinhala. The students in rural areas as far away as Hasalaka, Badulla, and Talawakelle loved and admired his lectures which he conducted in Sinhala. He is a beautiful human being admired and loved not only by Tamils also by Sinhalese. He is a unique symbol of ethnic harmony in this Country. His vast experience in education field has made him a specialist on educational matters and we being Members of Executive Committee of JAGAAS have been very fortunate and privileged to utilize his vast knowledge and experience in this field for improving the cultural and educational relations between Japan and Sri Lanka. I wish him a longer healthy and active life so that we JAGAAS would be able to obtain his services for many more years to come.
Dear Sandra, on behalf of President and Executive Committee of JAGAAS we wish you all the happiness and good health at your 60th Birthday celebrations.
PB M147Lasinghe Secretary - JAGAAS
97

Page 53
A Humane uman ...
I am very much previleged in forwarding this message on the occasion to facilitate the sixteeth birthday of Prof. S. Sandarasegaram.
I greatly honour and respect him for the enormous services he is rendering to the discipline of education and particularly to the disadvantaged community to which both of us belong. His services to the community in other spheres are also great. With all his education and position he is humane, amenable and easily approachable.
I have found him an advisor on many problem facing our community to the leaders, politicians and everyone who sought his advice. I am very much pleased to be associated with a highly acclaimed personality of his calibre. I wish him a happy birthday and may god shower blessings on him and his family.
P. Radhakrishnan, M.P
7 A, Es vary Road Colombo 6.
98

A Great Intelectual ...
The Tamils of Indian Origin of Sri Lanka are proud of the great achievements of their worthy son - Prof. S. Sandarasegeram - who has emerged as a great scholar and educationist. Tamil is one of the oldest language of the world; thousands and thousands of scholars, and acadamics have emerged among the Tamilians of Tamilnadu, Sri Lanka, Singapore, Malasiya and other countries, since the dawn of civilisation. And Prof.Sandarasegeram has followed the footsteps of his predecessors and compatriots to shine as a great eduacationist, intellectual, leader and scholar. Many have written on many occasions about his carrier and achievements.
I just want to comment on his extra-ordinary capacity to develop friendly human relationship with all - irrespective of race, religion, political, academic or social status. He could not only lecture, teach and write, but also mingle with people, sing and dance displaying fellowship devoid of intellctual arrogance.
I wish him great success. May he live long to serve his and other people through further contributions to educational development.
O.A. RAHAiah
Secretary General JPTUC and Redflag Union (CPWU)
99

Page 54
Esteened Dear Friend ...
I am extremely delighted to join in felicitating my esteemed and dear friend Professor S. Sandarasegaram on his sixteeth birthday by contributing this short message to the Felicitation Volume to be published on the happy and memorable occasion.
Leaving behind a family environment saturated with love, affection and good will he arrived in Peradeniya as a confident, well - adjusted and personable youth ready to begin an eventful march on the road to success and fame.
As a bright and talented undergraduate at the University of Ceylon he was attracted to the study of education at the University's Departments of Education wich in its heyday in the nineteen sixties boasted a number of eminent teachers and educationists of varying specialities under whose advice and direction he undertook his studies in earnest. On successful completion of the degree of B.Ed., still a novelty at the time, he was absorbed to the academic staff of the Department. I was indeed very fortunate to make my early acquaintance with him at this point im time.
As a probationary Assistant Lecturer he won a scholarship to Japan, which enabled him to undertake postgraduate studies in the University of Hiroshima. Apart from completing studies in his chosen field this period spent in Japan offered him a wonderful opportunity to master the Japanese Language and immerse himself in Japanese culture and history.
As a University Lecturer he has been imbued with an idealism which has fired his activities and programmes through life. He has always given of his best to his students, to the university and his academic colleagues. He very quickly acquired a reputation as an effective teacher in both English and Tamil media. He developed good
1 (OO)

rapport with both his colleagues and his students who all appreciated the immense and dedicated contribution he so painstakingly made to their education and development. Time and again, he has sought to expand and deepen his knowledge and experience in Education by undertaking periods of study and research in foreign universities. Both local and foreign researchers have sought to have him on their research teams for the wealth of knowledge and experience he commands especially on the education of underprivileged groups such as the estate workers of Sri Lanka.
As his successful professional career continues to flower and flourish he has already earned for himself an honourable position among top-ranking Sri Lankan educationists as confirmed by his appointment by Her Excellency the president as a member of the highest policy advisory body in Sri Lankan education, the National Education Commission, in 2001. As a member of the Standing Committee on General Education he was associated with the production of the historic document entitled Envisioning Education for Human Development ... Proposals for National Policy Framework on General Education in Sri Lanka (December 2003). He played a very prominent role in translaing this document into Tamil. He has risen to be a prominent spokesman on educational matters generally, and those affecting the estate population of Indian origin in particular, his contributions on whose educational and cultural problems are conidered as being authoritative. His advice and opinion have frequently been sought even by foreign scholars of repute in understanding and solving problems connected with estate education.
Professor Sandarasegaram has played a much greater role in life than that of a leading educationist alone. He has been an ideal family man, a loving husband and a devoted father. Paying back the debt of love and affection owed to his parents he tended and cared for them in old age and showed great filial concern for his brothers and sisters whose welfare he always considered to be a prime responsibility that devolved on him. For most of the time he has had his own family on both sides of the Palk Srait which necessitated him to cross the Indian Ocean several times in the year in order to be physically united with all members of the family at least part of the time and fulfil his parental
()

Page 55
obligations. As a good and kindly father he has seen to it that all his children received a worthwhile education and settled down securely and comfortably in life. In this way he has fulfilled his duties and responsibilities towards his family.
He associates a wide circle if worthy friends both within the University and outside commanding their great love and respect. He has never failed to help and care for his friends and teachers struck by misfortune at times providing them with security in addition to all material requirements in the safety of his own home. Ever standing by his friends, he has endeared him to them through his sincerity, openness, empathy and propensity to share. To strike a personal note here, I would like to recall with immense gratitude the kind help and assistance I have recieved from him on numerous occasions.
I am sure as he looks back on his achievements in his life spent so far Professor Sandrasegaram has every reason to be happy and content. His family, his students, his friends and colleagues and the country in general, will require his services for a very long time to come. On this auspicious occasion of his sixtieth birthday, while treasuring the memories of over three decades of very close assoiciation with him I beg to offer my heartiest congratulations and most sincere best wishes for his continued good health, happiness and success and wish him long life.
W.A. de Silva
Formerly Senior Professor of Humanities Education and Dean of the Faculty of Education University of Colombo
Sri Lanka
02

Sincere Colleague ...
It is my pleasure and privilege to reflect on my long association with Prof. S. sandarasegaram and pen a few words in appreciation, on the occasion of his 60th birth anniversary. First and foremost I wish to pay a tribute to Sandre, my colleague whose humane qualities, sincerity and humble disposition personifies him, over and above all his other accompalishments. In his career as a professional, he has reached the heights that university academics aspire to and ideally should reach. As a university academic his record of teaching, research and dissemination is indeed praiseworthy. He has reached the highest pinnacle among members of his community by the gigantic contribution he has made over the years by a tireless effort to educate and enlighten them. As a friend and confidante who associated with him closely over the last thirty years, my reflections on his life and times range over varying vissitudes that he weathered with equanimity. He takes all trials and tribulations in life as challenges, rejoices in sharing his joys and achievements with those near and dear to him, and the number of people near and dear to him are impressively large. This celebration is itself a fitting tribute to the way he has lived his life and conducted his affairs over the years. I take pleasure in paying tribute to him on this auspicious day when he celebrates his 60th birthday and to bless him long life, good health. and many more achievements in
the future.
Prof. SWAYILA Wijet.Age Faculty of Education Professor of Educational Psychology University of Colombo Director (NEREC)
O3

Page 56
A Man of Good Will ...
It gives me great pleasure to express my warm greetings to Prof. S.Sandarasegaram on this happy occasion of his sixtieth birthday.
My association with the Professor who is recognized as a leading personality in the field of education, stretches back to well over two decades. As a lecturer, researcher, scholar and author of books his contribution to teacher education is immense. We owe a special debt of gratitude to him for his pioneering contribution and untiring effort to promote higher education through the medium of Thamil.
At the University he is well appreciated by his colleagues and students of all communities for his goodwill, understanding, humour and close co-operation at all levels to make the faculty a pleasant place to work in.
We wish him happiness, success and many more years of service
in his chosen field.
Dr. Vinala Krishnapilai Former Lecturer Faculty of Education University of Colombo 15, Valukarama Road Colombo 3
104

அறிவைச் சகல மட்டங்களுக்கும் கொண்டு செல்லும் மனிதர்.
ஆசிரியர்கள் மத்தியில் சுயசிந்தனைக்கும், சுயதேடலுக்குமான வாயில்கள் திறக்கப்படுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. மாறிவரும் உலகச் சூழலில் ஆசிரியரின் வகிபாகம் எத்தகையது என்பதுபற்றிய தெளிவை வழங்கும் வகையில்தான் இன்றைய கல்விப்பணியும் ஆசிரியர் பயிற்சியும் புத்தாக்கம் பெறவேண்டியுள்ளது.
ஆக இன்று கல்வியியலாளர் என்பவர், பன்முகப்பட்ட அறிவுத் தொகுதிகளுடன் ஊடாட்டம் கொண்ட உயிர்ப்புமிகு சமூக ஜீவியாக இயங்குவதன் மூலம் தான்"கல்வி - சமூகம் - மனிதர்'மீதான குறுக்கீட்டைக் காத்திரமாகச் செய்ய முடியும். அத்தகையவர்களே சமூகத்தின் மதிப்பீடுகளில் சிந்தனைகளில் மாற்றம் விளைவிப்பவர்களாக இருக்க முடியும்.
தமிழில் இவ்வாறு இயக்கம் கொண்ட ஓர் கல்வியியலாளர் தான் பேரா. சோ. சந்திரசேகரம். அவரது பணிகள் பலதரப்பட்டவை.
பல்கலைக்கழக மட்டத்தில் 1964ம் ஆண்டு தொடக்கம் கல்வியியல் துறை சார்ந்த பாடங்கள் தமிழ் மொழியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கல்விமாணிப்பட்ட மாணவர்களுக்காகவே தமிழ்மொழிக் கல்வி தொடங்கப்பட்டது. 1973 வரை ஆங்கில மொழி மூலம் நடத்தப்பட்டு வந்த பட்டப்பின் படிப்பு டிப்ளோமா கற்கைநெறி அவ்வாண்டிலிருந்து சுதேசிய மொழிகளில் கற்பிக்கப்படலாயிற்று.
இம்முயற்சியின் முன்னோடிகளாக பேராசிரியர்கள் ப. சந்திரசேகரம், ச. முத்துலிங்கம் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது கற்றல் - கற்பித்தல் பாங்கு, இத்துறை சார் விருத்தியில் அடுத்த ஓர் தலைமுறைப் பேராசிரியர்களைக் கொண்டு வந்தது. இந்த மரபில் தற்போது குறிப்பிடத்தக்க பேராசிரியராக விளங்குபவர் பேரா. சோ. சந்திரசேகரன்.
இவர் கல்வியியல் துறையில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பணி புரிந்து வருபவர். இன்று வாழ்ந்து வரும் பேராசிரியர்களிடையே கூட ஓர் தனித்தன்மை வாய்ந்தவராகவும் உள்ளார். வெறும் புத்தகக் கல்வியூடான கல்வியியலாளராக பல்கலைக்கழக சமூகத்துடன் மற்றும் உயர் கல்விச் சமூகத்துடன் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், சமூகத்தின் பல்வேறு
105

Page 57
அமைப்புகளுடனும் தொடர்புகொண்டவர். சமூக, அரசியல், கலாசார விடயங்களிலும் தனக்கான புரிதலை முன்வைத்து செயற்படுபவர். தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் உள்ளிட். பிரிவினர்களின் தனித்தன்மைகள், அடையாள அரசியல் பிரக்ஞைக்கான காரணகாரியங்களையும் விளங்கிக்கொண்டு இயங்குபவர்.
சந்திரசேகரனின் புலமை, ஆளுமை வித்தியாசமானது. இதுவே பலர் அவர் மீது ஈர்ப்புக் கொள்ளக் காரணமாகும். அவரது மனோபாவங்கள், நடத்தைகள் யாவும் அனைவராலும் புரிந்துகொள்ளத்தக்கது. அனைவரோடும் சகஜமாகப்பழகக் கூடியவர். கற்றோர் குழாமுடன் மட்டுமே தொடர்பு கொண்டவர் அல்லர். எந்த மட்டத்திலும் அவர்களில் ஒருவராக ஒழுகும் பண்புகொண்டவர். அவருக்குள் எப்போதும் ஓர் கலைஞர் உள்ளார். இதனால் அவர் இருக்கும் இடத்தில் கலகலப்பு கரைகட்டி நிற்கும். சிறந்த மனிதநேயப்பண்புகளையும் கொண்டவர்.
அவர் அறிவுத் தொழிற்பாட்டில் தன்முனைப்புக் கொண்டவர் அல்ல. கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டவர். தன்னோடு பணி புரிபவர்கள், தொடர்புகொண்டவர்கள் எவருடனும், இணைந்து பணியாற்றும் பாங்கு அவரது தனிச்சிறப்பு. கலாநிதி மா. கருணாநிதி, முதுநிலை விரிவுரையாளர் மா. சின்னத்தம்பி உள்ளிட்ட இளம் கல்வியியலாளர்களுடன் கூட சேர்ந்துநூல்களை எழுதி வெளியிடும் திறந்த மனப்பக்குவம் அவருக்கு உண்டு.
மும்மொழிப் புலமை. பல்துறை அறிவு, தொடர்ந்த வாசிப்பு, தொடர்ந்த நண்பர்கள் சந்திப்பு, உரையாடல். தேடல் . யாவும் சந்திரசேகரது ஆளுமை விகசிப்பில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இதுவே, அவரை சளைக்காத அறிவு, சமூகச் செயற்பாட்டில் இயங்க வைக்கிறது.
I
சமீப காலங்களில் உலகளாவியரீதியில், கல்வியியல்துறையில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகளையும் சிந்தனை மாற்றங்களையும் புதிய ஆய்வு முடிவுகளையும் உடனுக்குடன் தமிழில் எழுதி வருபவர். ஆசிரியர்கள் தமது தொழிற்தகுதியை உயர்த்திக் கொள்ள, தமிழ்மொழியில் கல்வியியல் நூல்கள் ஏராளமாக வரவேண்டிய தேவை உண்டு. இதனை நிறைவு செய்ய வேண்டுமென்ற உணர்வு கொண்டவர் பேராசிரியர் சந்திரசேகரன்.
1960களில் இருந்து உலக ரீதியாக "கல்வித்திட்டமிடல்”ஒழுங்குமுறையாக வளர்ச்சியடைந்தது. இதன் பயனாக "கல்வியியலாளர்கள் அதிக கவனத்துக்குரிய நபர்களாக மாறினார்கள். கல்வி பற்றிய நோக்கிலும் சிந்தனையிலும் நவீன பார்வைகள். உலகளாவிய போக்குகள் வெளிப்பட்டன. நவீன கல்விச் செல்நெறிகள் பற்றிய விழிப்புணர்வு, தேடல் தவிர்க்க முடியாததாயிற்று. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மட்டத்திலும்நவீன கல்விச் சிந்தனைகள் பற்றிய கவனயீர்ப்பு மேற்கிளம்பத்தொடங்கின.
இவ்வாறு வளர்ந்துவந்த நவீன கல்விச் சிந்தனைகளின் அறிவுத்தொகுதிகளை, தமிழில் அறிமுகம் செய்யவும் அவற்றினைப் பேசுபொருளாக்கவும் பேரா. சந்திரசேகரன் முயற்சி செய்து வருகின்றார். இதனை தனது முழு முதற் பணியாகவும் கொண்டு இயங்குகின்றார். இதற்கு ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்றார்.
O6

குறிப்பாக 1980களின் நடுப்பகுதியில் தொடங்கி இன்றுவரை அவர் எழுதிவரும் கட்டுரைகள், நூல்கள் மற்றும் பேச்சுகள் இவ்வாறுதான் அமைகின்றன. தமிழில் புதிய கல்விச் சிந்தனைகளை பயன்பாடு நோக்கி கருத்தாக்கம் செய்து அறிமுகப்படுத்துவதில் ஒரு முன்னோடிக் கல்வியியலாளராகவே உள்ளார்.
I
கல்வியியல் துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை - ஆய்வுகளை அவை பற்றிய தகவல்களை அவற்றில் இடம் பெறும் வாதங்களை பொது வாசகர்களுக்காக தமிழில் தரும் முயற்சிகளில் பேரா. சந்திரசேகரன் பணிகள் சிறப்புக்குரியன. இவ்வாறு வெளிவரும் எழுத்துகளை "அறிவுப் பரம்பல்" (knowledge dissemination) goodbóu Jib 676, a si60.pdó6)Tib.
அறிவுப் பரம்பல் கட்டுரைகளில், எழுத்தாளர் மூலத்தை வாசித்து நன்கு கிரகித்து, ஓரளவு தனித்துவத்தோடும் விமரிசனக் கண்ணோட்டத்துடனும் அந்த அறிவை உள்ளுர் நிலைப்படுத்தி தன் சொந்த வார்த்தைகளில் தருகிறார். அதேநேரம் இத்தகைய எழுத்துகள் "அறிவு உருவாக்க" (knowledge Construction) எழுத்துகளில் இருந்து வேறுபட்டவை. அறிவுருவாக்கலில் - எழுத்தாளர் தம் சொந்தச் சிந்தனைகளையும். ஆய்வுக் கண்டுபிடிப்புகளையும் புதிதாக வெளியிடுகின்றார். இங்கு சந்திரசேகரன் எழுத்துக்களில் பெரும்பாலானவை "அறிவுப் பரம்பல்" இலக்கியம் என்று கூறத்தக்க வகையிலேயே உள்ளன.
கல்விவியல் சார்ந்த புதிய சிந்தனைகளை சமூகத்தின் சகல மட்டங்களுக்கும் எடுத்துச் செல்வதில் சந்திரசேகரனின் முயற்சிகள், முன்னயை கல்வியியல் பேராசிரியத் தலைமுறையிலிருந்து வேறுபடுகிறது. இந்தப் பணிக்கான வாய்ப்பும் வசதியும் அவருக்கு சாதகமாக இருந்தமையால் இதற்கு அவரால் செயலுருவம் கொடுக்க முடிந்தது.
IV
கல்வியியல் பின்புலத்தில் வைத்து பேரா. சந்திரசேகரனை புரிந்து கொள்ள முற்பட்ட பொழுது இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அப்பொழுது தான் அவர் பற்றிய பார்வை முழுமை பெறும்.
பேராசிரியர் சிறந்த சொற்பொழிவாளர். அனைவரது உள்ளத்தையும் தொடும் வண்ணம் பேசும் ஆற்றல் அவரிடம் உண்டு. இதில் அவர் ஒரு தனிப் பாணியை வைத்திருக்கிறார். அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் மிக எளிமையாகப் பேசுவார். கனமான சிந்தனைகளையும் பேச்சுத்தமிழ் கலந்து பேசுவார். ஏற்ற-இறக்கம் கொடுத்து உணர்வுபூர்வமாகப் பேசுவார். சிரிக்க வேண்டிய இடத்தில் நிறுத்தி தாமே சிரிப்பார். பேச்சின் இடையிடையேசுவையான கதை. அறிஞர் சிலரின் கூற்று, துணுக்ககள் சொல்வார். சிலநேரம் வினாவை எழுப்பி விடை கூறும் போக்கு உண்டு. சொற்பொழிவுபலரை ஈர்க்கும் வகையில் இருக்கும். சலிப்புத்தட்டாது
()7

Page 58
மகிழ்ச்சியாக வைத்திருக்கும் இந்த சொற்பொழிவு ஆற்றும் பண்பு ஏனைய பேராசிரியர்களிடமிருந்து அவரைத் தனித்து அடையாளப்படுத்தும். எந்தக் கூட்டமாயினும் விரும்பி அழைத்தால் நிச்சயம் கலந்து கொள்ளக்கூடியவர். இதனால் பெரும்பாலான அவரது சிந்தனைகள் அவரது பேச்சோடு போய்விடுகிறது. ஆறஅமர இருந்து ஆய்வுநிலைப்பட்ட அறிவுநிலைப்பட்ட கட்டுரைகளை எழுதுமளவிற்குரிய நேரங்களை கூட்டங்கள் விழுங்கி விடுகின்றன. ஆனாலும், அவரது கற்றல்-கற்பித்தல் செயற்பாட்டுடன் எழுத்துச் செயற்பாடும் ஒருங்கிணைந்துதான் உள்ளன.
V
தமிழ் அறிவுலகச் சூழலில் விருப்புடன் இயங்கி வருபவர் சந்திரசேகரன். கல்வியியல் சார் நடவடிக்கைகளில், தமிழ் நிலைப்பட்ட ஊற்றுக்களையும் . மூலங்களையும் தேடுவதற்கான தடம் அமைத்துக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளார். கல்வியில் புதிய செல்நெறிகளும் கருத்தோட்டங்களும் தமிழில் மலர்ச்சி பெற்று செழுமையடைவதற்கான எத்தனங்கள் நோக்கிய கவனக்குவிப்பில் பேரா. சந்திரசேகரனின் பார்வையும் தேடலும் தொடர்கிறது.
பேராசிரியரின் இந்தக் கல்வியியல் பின்புலம், செயல்வாதம் யாவும் சேர்ந்து "அகவிழி’ இதழ் தொடர்ந்து வெளிவரக் காரணமாகவுள்ளது. ஆசிரியத்துவ நோக்குக்காக. "அகவிழி மாத இதழாக தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்து வருவதில், அவரது பங்களிப்பு பெரிதாக உள்ளது. அவரது "ஆய்வறிவு மேலும் காத்திரமான கருத்துக்களையும் ஆலோசனையும் வழங்கி அகவிழி இதழ் செழுமை பெற்று வளர்ச்சி அடைந்து வர, தனது முழு ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் நல்கி வருகிறார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
பேராசிரியர் பணிகள் மேலும் மேலும் சிறக்க வேண்டும். கல்வியியல் துறை அவரது பணிகளால் வளம் பெற வேண்டும். தமிழ்க் கல்விச் சூழல் விரிவும் ஆழமும் தேடி பயணிக்கட்டும்.
தெ. மதுசூதனன் ஆசிரியர் - அகவிழி ஊடகவியலாளர்
08

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் மணிவிழாக் குழு
Prof. S. Sandarasegaram Dia mond Jubilee Committee
24/3, 1/1, Frank fort Place, Colombo - 4 T. Phone : 2594204
காட்பாளர்கள்
பேராசிரியர் பேற்ரம் பஸ்தியாம்பிள்ளை ப்ேராசிரியர் கா. சிவத்தம்பி
பேராசிரியர் எம். சின்னத்தம்பி
பேராசிரியர் மா. செ. மூக்கையா
கலாநிதி ஏ. ஜீ. ஹுசைன் இஸ்மாயில்
கலாநிதி பி. இராமானுஜம்
திரு. எம். வாமதேவன்
தலைவர்
திரு. உ. நவரத்தினம், 83/9, 37வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6.
துணைத் தலைவர்
திரு. தை. தனராஜ், இல, 7, அலெக்ஸ்சாந்திரா டெரஸ், கொழும்பு 6.
09

Page 59
இனைச் செயலாளர்கள்
திரு. மா. கணபதிப்பிள்ளை, 24/3, 1/1, பிராங்பர்ட் பிளேஸ், கொழும்பு 4.
திரு. க. ஞானசேகரம், 83/3, 1/1,37வது ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு
6.
பொருளாளர்
திரு. க.க. உதயகுமார், 83/3, 3/2, 37வது ஒழுங்கை, வெள்ளவத்தை,
கொழும்பு 6.
பதிப்பாசிரியர்
கலாநிதி மா. கருணாநிதி, 992/4, விஸ்வைக் தொடர்மாடி, விஸ்வைக் வீதி,
கொழும்பு 15.
உறுப்பினர்கள்
திரு. கா. சந்திரலிங்கம், தொண்டர் வித்தியாலயம், மருதானை, கொழும்பு 10.
திரு. எஸ். அன்ரனி நோபேட், 2/3, சீவலி வீதி, கல்கிசை,
திரு. என். நடராசா, எம், 3/9, சொய்சாபுரம். மொறட்டுவை.
திரு. ஜே. லெனின் மதிவாணம், 15/10. திம்புள்ள வீதி, ஹட்டன்.
திரு. சி. ரி. ராஜேந்திரன், சி. 27 - 2/2, சொய்சாபுரம், மொறட்டுவை.
திரு. வீ. சண்முகராஜா, 8/2ஏ. விகாரை வீதி, கல்கிசை,
திரு. க. குமரன், 93 - 3/1, கல்லூரி வீதி, கொழும்பு 13.
10

எமக்கு ஆதரவு தந்தி எம்மை ஊக்குவித்தோர்*
Balasaroja Stores கொழும்பு இந்துக் கல்லூரி Dana Group of Companies Pilot Stationers (pvt) Ltd. Ram Bros. புஸ்பயோகேந்திரன் Omega Traders Colonial Hardware நோபட் அந்தனி P. M. Mohamed Ali & Co. Radha Stores Bobby Jewilers
. S. D Ceylon & Overseas Traders விழுது
Silicon
Gnanam Imports if(b. (LDTT i (Robenson) 13.12.2004 வங்கி வரவு மோதர இந்துக் கல்லூரி எஸ். கணேசன் எம்.என். அசோகன் நடன சிகாமணி நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயம் எஸ். இளகுப் பிள்ளை வி. ரி. தமிழ்மாறன் Liberty Tradings Mallika Tradings Center கல்வியியல் கல்லூரி, வவுனிய United Stores Daya Palace Jewellers Sakura Steel Centre TranSteel Merchants Aruna Enterprises
Ramco Traders ஜி.துரைச்சாமி பி. தங்கவேல் Karuna Steel K. Ganagaratnam சுந்தரம் டிவகலால் எஸ். திருச்செல்வம் ஜின்னா செரிபுதீன் வி. மகேஸ்வரன் கதிர்காமநாதன் யூரீதர் சிங் நல்லாயன் கன்னியர்மடம் மகளிர்
வித்தியாலயம் கல்வியியல் கல்லூரி. தர்காடவுன் Highlands College Hatton New Amieko Enterprise Thulashi Traders Care Lanka றுரீகணநாதன் கோட்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இன்ப தேவராஜா எம். செல்வராசா என். பாலசுந்தரம் எஸ். முருகையா. நாவலப்பிட்டி செல்வி எஸ். யோகராணி பெ. விஜயரட்ணம் ஏ. எஸ். யோகராஜா எம். வாமதேவன் எம். நடராஜன் ஏ. கே. சுப்பையா சித்திவிநாயகர் வித்தியாயலயம்,
D6160TT if
ஏ. எஸ். குமார் கே. மெய்யநாதன்

Page 60
N (ഥങ്ങlറ്റൺ
கிருஸ்ணபிள்ளை Metro Metals Sevana Steel எஸ். கந்தையா Gold Steel பி. நாகலிங்கம் கே. கணேசலிங்கம் M.P.M. Shibly Leon Ravel
எம். வை. மஸ்லீம் வி. தியாகராஜா 03.12.2004 வங்கி வரவு
Sri Thiruppathy (pvt) Ltd.
சிவராஜா R. K.V. International Wood Lands Company நளினி ஆலாலசுந்தரம் சந்திரபோஸ் கே. ஜோதிராஜ் வி. பிரபாகரன் லெனின் மதிவாணன் கணபதிப்பிள்ளை நவரட்ணம் தை. தனராஜ் கருணாநிதி ஞானசேகரம் க. குமரன் உதயகுமார் சந்திரலிங்கம் அமீட் அல் உசைனி 10.12.2004 வங்கி வரவு எஸ். முருகையா திருமதி. வேதநாயகம் கே. நாகேஸ்வரன் கே. எஸ். சிவகுமாரன்
பி. வேதானந்த மூர்த்தி கே. வீரசிங்கம் எஸ். அருந்தவபாலன் M.H.M. Yakooth எஸ். சுப்பிரமணியம் F. M. Eawan Deen எம். செல்வராசா ஆர்.ழரீகாந்தன் ஏ. கந்தசாமி (கொழும்புத் தமிழ்ச் சங்கம்) A. S. Najudeen M.M.A. Wahab, N. Krishanathasan, M/S K. Somakanthan, C. Sutheson, Issipathana College Mrs. P. Ganeshamoorthy வி. காண்டீபன் எஸ். சித்திரா ரஞச்ன் ரி. சிதம்பரநாதன் ரி. முகுந்தன் எஸ். செல்வநாயகம் எஸ். தட்சணாமூர்த்தி கே. செல்வராசா பி. ஆறுமுகம் எம். பி. நடராஜா செல்வி ஆர். கலாரமணி எம். கே. நஜிமுல்லா ரி. தயானந்தராசா ஈ. லோகநாதன் ஐ.அப்துல் ஹக்கீம் திருமதி ஆர். மலர்மணி செல்வி. மீரா வில்லவராஜன் எம்.எச்.எம். ஹஸன் சுமதி சந்திரிக்கா எஸ். செல்வநாயகம் எஸ். தட்சணாமூர்த்தி 13.12.2004 வங்கி வரவு
ቌ:
17.12.2004 வரை உள்ள விபரம்
39.316

பேராசிரியர் சோ.
முன் வரிசை (இ-வ): கலாநிதி மா. கருணாநிதி (பதிப்பாசிரியர்),
திருமதி சந்திரசேகரம், திரு. உ. நவரத்தினப
பின் வரிசை: (இ-வ): திரு. எஸ். அன்ரனி நோபேட், திரு. க. ஞா திரு. ஜே. லெனின் மதிவாணம், திரு. வீ. ச

Page 61
ாசிரியர் சோ. சந்திரசேகரம் மணி
1ணாநிதி (பதிப்பாசிரியர்), திரு. தை.தனராஜ் (துணைத் தலை ரம், திரு. உ. நவரத்தினம் (தலைவர்), திரு. மா. கணபதிப்ட
ரி நோபேட், திரு. க. ஞானசேகரம் (இணைச் செயளாளர்), மதிவாணம், திரு. வீ. சண்முகராஜா, திரு. க. குமரன், திரு
 

வர்), திரு. என். நடராசா, பேராசிரியர் சோ. சந்திரசேகரம், பிள்ளை (இணைச் செயளாளர்)
திரு. க. க. உதயகுமார் (பொருளாளர்), ந. கா. சந்திரலிங்கம்.

Page 62


Page 63