கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டிதமணி நினைவு மலர் 1989

Page 1


Page 2


Page 3


Page 4
பண்டிதமணி
(
வெளி
இலக்கிய பண்டிதமணி சி. கணப நூல் வெளியீ
1 98

நினைவு மலர்
ffG ;
கலாநிதி, திப்பிள்ளை அவர்களின் ட்ருச் சபை
39

Page 5
3. Its :
மொழி :
பதிப்பு : பிரசுரத் திகதி : நூலின் பருமை : தான் :
பக்கங்கள் :
பிரதிகளின் எண்ணிக்கை :
அச்சுப் பதிவு : வெளியீடு
முகவரி :
அட்டை அமைப்பு : பதிப்புரிமை 3
Title :
Language :
Edition :
Date of Publication :
Size of book:
Paper used : Nuuber of pages : Number of copies :
Printers :
Publishers :
Address :
Cover Design : Copyright :
பண்டிதமணி தமிழ்
முதலாம் பதிப்பு 1989 ஜனவரி 23.5 cm. X l8 வாழைச்சேனை G χXXν -- 300
1000 திருமகள் அழுத்த இலக்கிய கலாநிதி களின் நூல் வெ இலக்கிய கலாநி களின் நூல் வெ: உரும்பிராய் மே வண்ணையூர் இ. இலக்கிய கலாநி களின் நூல் விெ
PANDITHIAMA
Tamil
First
January 1989 23.5 cm. x 18
Valaichenai whi
χXXν -- 300
1000
Thiru makal Pre
Dr. Pandithama Society. Dr. Pandithama Society, Urum Vannaiyoor R.
Dr. Panditham Society.

f fear6h nopi
Ο Υι. வள்ளை அச்சிடுந் தாள்
நகம், சுன்ஞகம் தி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் ளியீட்டுச் சபை தி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் எளியீட்டுச் சபை, ற்கு, உரும்பிராய் - இலங்கை
கணேசன் தி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் பளியீட்டுச் சடைக்கு
AN MEMORIAL NUMBER
C.
te printing paper
ss, Chunnakam ni S. Kanapathippillai's Books Publications
ni S. Kanapathippillai's Books Publications pirai West, Urumpirai, Sri Lanka
Ganeshan ni S. Kanapathippillai's Books Publications

Page 6
பொருள்
பதிப்புரை u o o நிழலுருவப் படங்கள் ... பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை இலக்கியகலாநிதி, பண்டிதமணி சி. க. அவர்கள் ழரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள், பண்டிதம தனங்கிளப்பு, காரைத்துர விநாயகர் ஊஞ்சல் திருவாவடுதுறை குருமகாசந்நிதானம் அவர்களி தருமையாதீன குருமகாசந்நிதானம் அவர்களின் ழரீ காசிமடம் அதிபர் அவர்களின் ஆசியுரை மதுரையாதீன குருமகாசந்நிதானம் அவர்களின் யாழ்ப்பாணம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீ பேரூராதீனம், வித்துவான் சாந்தலிங்க இராம வியாகரணசிரோமனி பிரம்மறி தி. கி. சீதாராய யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரிய
மாவை ஆதீனகர்த்தா, மஹாராஜழரீ சு. து. ஷண் கொழும்பு, தமிழ்ச்சங்கப் பொதுச்செயலாளர் தி
வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு. ஆ. சிவநேசச்ே யாழ் மாவட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. வெ. கொழும்பு விவேகானந்த சபையின் பொதுச்செ
தினபதி, சிந்தாமணி பிரதம ஆசிரியர் திரு. எஸ். மட்டுவில் பிரம்மழனி ந. கந்தசாமி ஐயர் அவர் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையின் த
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிட் - பேராசிரியர் கல அதி அற்புத விவேகி - பேராசிரியர் ஆ. வி. பண்டிதமணிகள் பலர் தோன்ற வேண்டும்- பே பண்டிதமணி துலக்கிய பண்பாட்டு வரலாறு - .ே இலக்கிய கலாநிதி பண்டிதமணியின் இலக்கிய - வித் ஆசிரிய உலகில் அணையா விளக்கு
- சிவத்தமிழ்ச் செல்வி பண்டி தமிழ்த்தாயின் தவப் புதல்வர் - தி. மாணிக்க பண்டிதமணியின் மொழிநடை-பேராசிரியர் பண்டிதமணியின் பார்வையில் ஈழத்துத் தமிழ்ப் பண்டிதமணியும் புலவர்மணியும் - பேராசிரிய

565
பக்கம்
vyr. wi
w a vid di »Ni m viii 1ன் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்-அ. ப. ix ணி அவர்களுக்கு வழங்கிய சான்றிதழ் xtw
* * 龄 * * 歌 w r. Xy
lன் ஆசியுரை R* A ar = : xix. ண் ஆசியுரை R. ES W &
w •y ‰ •፡ XXή ஆசிச் செய்தி a xxii ன ஸ்வாமிகளின் வாழ்த்துரை xxiii சாமி அடிகளாரின் ஆசியுரை . xxiv ) சாஸ்திரிகளின் ஆசியுரை a 0 XXV
ர் கலாநிதி அ. துரைராசா அவர்களின்
ஆசிச் செய்தி xxvi முகநாதக் குருக்கள் அவர்களின் ஆசியுரை xxvi
ரு. க. இ. க. கந்தசுவாமி அவர்களின்
வாழ்த்துரை XXVi செல்வன் அவர்களின் செய்தி . xxix, சபாநாயகம் அவர்களின் ஆசிச்செய்தி xxxi
Fயலாளர் திரு. க. இராஜபுவனிஸ்வரன்
அவர்களின் ஆசிச்செய்தி xxxi டி. சிவநாயகம் அவர்களின் பாராட்டுரை xxxi களது நட்புச் செய்தி 90 4 KM ΧXXν லவர் பண்டிதர் ச. சிதம்பரப்பிள்ளை
அவர்களது பிரார்த்தனை உரை XXXYர்
y 4 ❖ «ሶ ( ாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் மயில்வாகனம் அவர்கள் s ராசிரியர் வி. க. கணேசலிங்கம் அவர்கள் 7 ராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் 9 விமரிசன நோக்கு e v P " ᏗᏑ துவான் F. X, C. நடராசா அவர்கள்
... ... 16 தை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வாசகர் அவர்கள் er a e 8 சு. சுசீந்திரராசா அவர்கள் - 19
புலவர்- த. சண்முகசுந்தரம் அவர்கள் 24 ர் ப. சந்திரசேகரம் அவர்கள் . 27

Page 7
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றேன்
- திருமுறை அரசி வித்துவான் திருப ஐந்தில் ஒன்று - க. உமாமகேசுவரன் அவர் இலக்கிய ரசனை - கோவைவாணன் பண்டிதமணியின் திருநாமம் வாழ்க! வாழ்க
- வாகீச கலா, ஈழத் தமிழ்க் கல்வி வழியில் பண்டிதமணி
- பிரதம கல்வி அ எட்டினதும் எட்டாததும் - ச. பரநிருபசிங்கம் பண்டிதமணியின் குருபக்தி
- சுன்னுகம் புலவரகம் கு. பண்டிதமணி அவர்களும் கலாநிலையமும் - க. பண்டிதமணியியல்-பேராசிரியர் அ. சண்மு மனுேன்ம ( பண்டிதமணி ஒரு சகாப்த புருஷர்-ஒறேற்றர் பண்டிதமணி ஐயா அவர்கள் ஞாபகத்தில்
- பண்டித வித்து பண்டிதமணியும் சமயப் பிரசாரமும் - அச்சு6ே பண்டிதரையா - சு. வே. அவர்கள் பண்டிதமணி அவர்கள் என்றும் கையாண்ட ம
قر9Hی -سس தமிழ்ச் சைவ கலாசாலே - சகாயமணி து. வி ஐயா அவர்களின் அன்பு மொழிகள் - பண்டி திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலேப் பின்ன?
கட்டைட - ۔ ۔۔۔ பண்டிதமணி அவர்களும் பண்ணிசையும் - சங் பண்டிதமணியின் அணிந்துரைகள்-வித்துவான் எனக்குத் தெய்வமாக இருந்த பண்டிதமணிபண்டிதமணியும் சைவபாரம்பரியமும் - இரா. எம் இதயம் கவர்ந்த பண்டிதமணி- ப. சிவ பண்டிதமணி என்றேர் இமயம் - டாக்டர் ெ பண்டிதமணி அவதார புருடர் - ஆசிரியமணி பண்டிதமணியின் இலக்கிய ரசனை - பண்டிதர் நாவலர் பரம்பரை - பேராசிரியர் பொ. பூே பண்டிதமணியும் பல்கலைக்கழகமும் - மயிலங் ஈழத்திற் கந்தபுராண கலாசாரம்-ஒர் ஆய்வுபண்டிதமணி அவர்களுடைய ஆசி - ஆத்மஜே ளங்கள் ஞான குருமணி - பண்டிதை த. வே பண்டிதர் அப்பா-சில நினைவுகள் - முல்லைம யக்ளு தரிசனம் - சு. இராசநாயகம் அவர்கள் குருமூர்த்தியின் நினைவு அலைகள் - பண்டித வி பண்டிதமணி அவர்களின் மேடைப்பேச்சு - பனி பண்டிதமணி வளர்த்த தமிழர் பண்பாடு- அ

மதி வசந்தா வைத்தியதாதன் அவர்கள்
*Gr & A a
a w
நிதி கி. வா. ஜகந்நாதன் அவர்கள்
அதிகாரி கு. சோமசுந்தரம் அவர்கள்
அவர்கள் ◊ áት ($ d
முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள்
சி. குலரத்தினம் அவர்கள் is கதாஸ் அவர்கள், 8 ணி சண்முகதாஸ் அவர்கள்
சி. சுப்பிரமணியம் அவர்கள்
துவான் க. கிருஷ்ணபிள்ளை அவர்கள் வலி மு. வைத்தியலிங்கம் அவர்கள்
1ணிமொழிகள் 8 s துவக்காத்து சி. பொன்னையா அவர்கள் சுவநாதன் அவர்கள் தை பொன். பாக்கியம் அவர்கள் ணியிற் பண்டிதமணி
1றிச்சான் க. கனகசிங்கம் அவர்கள்
பக்கம்
32
33
36
37
38
44
4&
கீதபூஷணம் பி. சந்திரசேகரம் அவர்கள் 73 க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள் 74
- டி. டி. நாணயக்கார அவர்கள் . வை. கனகரத்தினம் அவர்கள் . ஞானசுப்பிரமணியம் அவர்கள் சா. சிங்காரவேலன் அவர்கள்
ஆர். ரி. சுப்பிரமணியம் அவர்கள் கா. நமசிவாயம் அவர்கள் லாகசிங்கம் அவர்கள் கூடலூர் பி. நடராசன் அவர்கள் - கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் ாதி நா. முத்தையா அவர்கள் தநாயகி அவர்கள் னி அவர்கள்
r த்துவான் பொ. கந்தையனுர் அவர்கள் ண்டிதர் அ. ஆறுமுகம் அவர்கள் ன்பகம் இ. கந்தையா அவர்கள்
86
87
90
92
94
96
97
O9
5
19
22
25
129
48
50
152

Page 8
பண்டிதமணி அவர்களின் புலமை மையம்
- பேராசிரியர் பண்டிதமணி அவர்களும் பல்கலைக்கழகப் பேரா
பண்டிதமணியும் மேனுட்டு இலக்கியச் சிந்தனையு சிவானந்தப் பெருவாழ்வு பெற்றர் - சி. முருச பண்டிதமணி அவர்களும் மில்க்வைற் தொழில:
பண்டிதமணியின் சொல்நோக்கும் பொருள் நே - பிள்
பண்டிதமணியும் தினகரனும் a
- தினகரன் பிரதம அ ஈழத்தமிழறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை
ஈழநாடும் பண்டிதமணிஐயா அவர்களும்
- ஈழநாடு பதில் அதியற்புத மனிதர் - கி. லசன்மணன் அவர்க பண்டிதர் ஐயா பற்றிய நினைவலைகள் - அ. ப
பண்டிதமணியும் திருநெல்வேலியும் w w 4
- முரசொலி பிரதம ஆ ஈழத்தமிழ் வசனநடை வரலாற்றிற் பண்டிதமணி ;) -س
சான்றேரைப் போற்றிய சான்றேன் பண்டிதம6 - உதவி அரசா? Panditha - Mani S. Kanapathipillai - Rev. தமிழ்முனி பண்டிதமணி a
--உதயன், சஞ்சீவி பிரதம ஆசிரி பண்டிதமணி அவர்களும் ஆரிய திராவிட பாஷாட்
- 6. பண்டிதர்ஐயா அவர்களின் மனக்குறை-** மூ பண்டிதமணியோ பட்டொளி வீசும் பதுமராக ம - கல்விப் பணிப்பாள பண்டிதமணி அவர்களின் நக்கிர இயல்பு
- ஈழமுரசு பிரதம ஆசிரியர் எ பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் மெய்யியலற
பண்டிதமணி அவர்களின் சிந்தனைகள் பரம 526 - கல்விப் பை University Honours Pandithamani S. Kanap: பண்டிதமணியின் சரித்திரம் தமிழ்ச் சரித்திரம் - பண்டிதமணியின் தமிழ்ப் புலமை - சுப்பையா இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் - இலக்கணவித்தக ஈழகேசரியும் பண்டிதமணியும் -த. இராசேந்

பக்கம்
A 影 始 * 155 கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் بربر சிரியர்களும் is as 171
- வே. ந. சிவராசா அவர்கள் ம்- ஆ. சபாரத்தினம் அவர்கள் 177 வேள் அவர்கள் . » V KNY 182
கமும் • - a 183 தொழிலதிபர் க. கனகராசா அவர்கள் ாக்கும் 4 is 185 ாளைக் கவி வ. சிவராசசிங்கம் அவர்கள்
e o gy o e e 190 ஆசிரியர் இ. சிவகுருநாதன் அவர்கள் ா - ஈழவேந்தன் a 193
& 8 0 is 95 ஆசிரியர் எஸ். பெருமாள் அவர்கள் ; Gir 0 to O 8 197
ஞ்சாட்சரம் அவர்கள் 9 8 KM 198
- a th ) P. 20 ஆசிரியர் எஸ். திருச்செல்வம் அவர்கள்
r UV 4 KM) O P OP 203 பராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள்
o w ao an e P D . 207 வ்க அதிபர் ஆ. மகாலிங்கம் அவர்கள்
S. Kulandran u o 0. 209
e es e. y a 211 பர் ம. வ. கானமயில்நாதன் அவர்கள் பிவிருத்திச் சங்கமும் 22 எடிதர் ச. பஞ்சாட்சரசர்மா அவர்கள் ர்த்தி ?? W NA OM O 8 A 219 னியோ ... 221 ர் ஜஞப் எம். எம். மன்சூர் அவர்கள்
O o 224 ஸ். எம். கோபாலரத்தினம் அவர்கள்
ஞன் பேக்சனும் . 225
--இ. இரத்தினம் அவர்கள்
ாஷதங்கள் a is A 229 ரிப்பாளர் இ. சுந்தரலிங்கம் அவ்ர்கள் thipillai - N. Sabaratnam . 23. --செல்வன் ச. திருஞானசம்பந்தர் 232 பிள்ளை இராஜநாயகம் அவர்கள் 233 ໂດrໃດm A 240
* இ. நமசிவாயுதேசிகர் அவர்கள் திரம் அவர்கள் 243

Page 9
பண்டிதமணியின் தத்துவங்கள்- பேராசிரியர் பண்டிதர் அப்பா-செல்வி ப. வாசுகி தமிழ் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரேஒப்புயர்வில்லா நீதியுருவினர் - க. தி. சம்பந் பண்புடைய பண்டிதப் பாவலன் - பண்டிதர் G நினைவில் நீங்கா நீள்காவியம் - நம. சிவப்பி வான்தோய் புகழ் முடித்தோன் - கலாநிதி க சிந்தனையாளர் போனுர் - கவிஞர் இ. முருை குருவே வாழ்க-பண்டிதர் சு. இராசையா பாவலர் போற்றி நிற்கும் பண்டிதமணி - வித் கவிதை அஞ்சலி - மயிலங்கூடலூர் த. கனக் மகிழ்ந்தினிது வாழ்த்துகின்றேம் - ** சாரதா பண்டிதமணி பரிவு பாமாலை அட்டகம் - " சே பண்டிதமணியும் அவருரைத்தவைகளும் - ச. பைந்தமிழ் வளர்த்த பண்டிதமணி - மு. வை காக்கவேண்டிய பெரு நிதியம் - கவிஞர் சோ பண்டிதமாமணி - சைவ பரிபாலன சபையா ஐயா உன் அமுதமொழி கேட்பதென்றே - பண் ஞாயிறு போன்றே நள்ளிருள் கடிந்த எந்தாய்
- கவி கலைச்சிகரமாயமைந்த கணபதிப்பிள்ளை - அருட் கற்றர் விழையுங் கற்பகதரு - நவாலியூர் க. எந்தமலை இருக்குதையா ஈடுசெய்ய !
- ஸாஹித்யஸாகரம் பிரம் பூதலம் போற்றும் மெய்ஞ்ஞானகுரு
- பண்டித வி பண்டிதமணிக்குச் சூட்டும் பாராட்டுப் பாமாலை - மன்மதனே நல்லுருவம் பெற்று வாழி
- சித்தாந்தக பண்டிதமாமணியின் சீர்போற்றி வாழ்வோம் - பண்டிதமணியே வாழி - இ. சிதம்பரப்பிள்ளை என் பார்வையில் பண்டிதமணி - பண்டிதர் நிலாவெங்கு சென்றதோ நீங்கி-பெளரான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்கள் பிரி
v
நீதி நெறியில் நின்றிட்டார் - பண்டித வித்து வந்தனைக்குரிய பண்டிதமணியே - புலவர் ம. இலங்கையிற் பண்டிதமணி - வாகீச கலாநிதி
கற்சிலையாமெனக் கலங்கி நின்ருளே - கண்ட இலக்கிய கலாநிதியும் வைத்திய கலாநிதிகளும் தமிழ்த்தாத்தா டாக்டர் பண்டிதமணியின் இறுதி இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பி

fV
பக்கம்
கா. கைலாசநாதக்குருக்கள் அவர்கள் 245
A P. is a a 249 கலாநிதி ஆ. கந்தையா அவர்கள் 251 தன் அவர்கள் «ዕ ቈ ‰» 257 செ. பூபாலபிள்ளை அவர்கள் e. 259 ரகாசம் அவர்கள் 0 a P 260 . செ. நடராசா அவர்கள் o 26 கயன் அவர்கள் as w s wh 262 அவர்கள் o ... 262 துவான் சி. குமாரசாமி அவர்கள் 263 கரத்தினம் அவர்கள் «p» wo . 264 9 - a a A 265 ந்தன்' . . . . - a 266 தங்கமாமயிலோன் அவர்கள் . 268 த்தியலிங்கம் அவர்கள் 270 . பத்மநாதன் அவர்கள் 27፲
· o sa - - - v 272 டிதை பொன் பர்க்கியம் அவர்கள் 73 Qes 」74
விஞர் முருகவே. பரமநாதன் அவர்கள்
கவி சீ. விநாசித்தம்பி அவர்கள் 275 சோமசுந்தரப்புலவர் அவர்கள் 276 277
மயூரீ என். வீரமணி ஐயர் அவர்கள்
.. is v 278 Iத்துவான் இ. திருநாவுக்கரசு அவர்கள் பண்டிதர் நீ. சி. முருகேசு அவர்கள் 279
a b P. . . . 280 லாநிதி க. கணபதிப்பிள்ளை அவர்கள் பண்டிதர் க. சபா. ஆனந்தர் அவர்கள் 281 அவர்கள் v. 8 0 K 282 7. சுப்பிரமணியம் அவர்கள் O 283 ரிக வித்தகர் வ. குகசர்மா அவர்கள் 284 விரங்கல் நுதலிய பரிவுரைப் பாமாலை 285
- பண்டிதர் மு. கந்தையா அவர்கள் வான் க. கிருஷ்ணபிள்ளை அவர்கள் 288
பார்வதிநாதசிவம் அவர்கள் 289 கி. வா. ஜகந்நாதன் அவர்கள் . 290 r6äTš aruuri a- a 290
- மாணவன் An ge e a 29.
யாத்திரை - சோ. பரமசாமி அவர்கள் 295 ாளை அவர்கள் பற்றிய முக்கிய விபரங்கள் 299

Page 10
Luật இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. தமிழ் அறிஞர். நாவலர் பெருமானின் அ தாம் வாழ்ந்த எண்பத்தேழு ஆண்டுகளில் வளர்ச்சியின் பொருட்டும் செய்யக்கூடிய பண்டிதர் ஐயா அவர்கள் கிருதகிருத்தியர் எழுத்தாலும் பேச்சாலும் சாதனையா? இன்னும் வாழ்ந்தாலோ என்றுதான் எண் 4 அதிகாரம் இல்லையே என்பதை உணராதிரு எந்த நேரமும் நிற்கலாம் என்பதை யாம் நடந்து கொண்டோம்.
13-3-1986 வியாழன் அதிகாலை நான் மூச்சு நின்றதும், அதையறிந்து தமிழ் கூறு பண்டிதர் ஐயா அவர்கள் ஜீவந்தராய கட்டுரைகளாக, கவிதைகளாக, நூல்களா வெளிவந்துள்ளன. பண்டிதர் ஐயா அவர்க அறிஞர்களின் கருத்துக்களையும் காலத்துக் மகிழத்தக்க வகையில் இலங்கை ஒலிபரப்ட செய்தது. டண்டிதர் ஐயா அவர்களின் சிற விழாக்கள், உரைகள் மிகமிக அநேகம் . களில் சதா ஈடுபட்டுக்கொண்டிருந்த நா நிலேக்கு ஆளாகியுள்ளோம் என்றுதான் செ பண்டிதர் ஐயா அவர்கள் இயற்கையெ முறையில் மலர் ஒன்றினையும், அவர்க தொகுத்து நூல் ஒன்றினையும் வெளியிட இருபத்தேழு கட்டுரைகளைத் தொகுத்து  ெ வெளியிட ஒழுங்குகள் செய்யப்பட்டன. ப வெளியிடவேண்டும் என்ற முழு எண்ணத்து இடம்தரவில்லே. நாம் ஒன்று நினைக்கத் ெ கட்டுரைகள் கவிதைகளை மலருக்கென அடைந்து விட்டார்கள். சிலர் தங்கள் பத விட்டார்கள். சிலர் ஒய்வும் பெற்றுவிட்டா, காலத்திலும் பார்க்க இரண்டு ஆண்டுகள் ச்
மூன்ருவது கண், வாழையடி வாழை, தலைப்புக்களைக் கொண்ட நூல்களிலும், பன் வற்றிலும், சஞ்சீவி பத்திரிகையில் வெளிவ. தொடர் கட்டுரைகளிலும், காலத்துக்குக் எழுதியுள்ள தனிக் கட்டுரைகளிலும் ட எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. எனினுட ஒன்றினை வெளியிட வேண்டிய புதிய சூழ்நிலை பண்டிதர் ஐயா அவர்களது சரித்திரம் ஆலும், பண்டிதமணி அவர்களது நினைவுமல குக்கும் எப்பொழுதும் பயன்படக்கூடிய ட என்று அறிஞர் பெருமக்கள் பலர் எமக்கு மலரினை வெளியிட விரும்பினுேம். ஒவ்வொரு

g பபுரை கணபதிப்பிள்ளை அவர்கள் நாடறிந்த சைவ டியொற்றி வாழ்ந்த பண்டிதர் ஐயா அவர்கள் சமய வளர்ச்சியின் பொருட்டும் தமிழ் உச்சமான சேவைகளைப் புரிந்துள்ளார்கள்.
லும் உன்னத இடத்தை அடைந்த அவர்கள், ணினுேம். அவ்வாறு எண்ணுவதற்கு எமக்கு ந்துவிட்டோம். அவர்களது இருதயத் துடிப்பு நன்ருக உணர்ந்தும், உணராதவர்களாக
த மணியளவில் பண்டிதர் ஐயா அவர்களின் றும் நல்லுலகம் பெருமூச்சு விட்டது. பிருக்கும் பொழுது, அவர்தம் சரித்திரங்கள் க, மணிவிழா மலராக, கலாநிதி மலராக ளின் பேச்சுக்களையும், பண்டிதர் ஐயா பற்றிய குக் காலம் ஒலிபரப்பி வானெலி நேயர்கள் |க் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை சிறப்புச் ப்பியல்புகளை எடுத்தியம்பும் வகையில் நடந்த அவ்வாருண மகிழ்ச்சிகரம் பொருந்திய வழி ம், அவர்களுக்கு நினைவுமலர் வெளியிடும் ால்லவேண்டும். ய்தியதும் அவர்களது நினைவாக விரிவான 1ள் எழுதிய கட்டுரைகளிற் சிலவற்றைத் விரும்பினுேம். பண்டிதர் ஐயா அவர்களது சந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பெயரில் நூலாக மலரினையும் நூலையும் 1986ஆம் ஆண்டிலேயே டன் இயங்கினுேம். சந்தர்ப்ப சூழ்நிலைகள் தய்வம் ஒன்று நினைத்தது.
உதவிய அன்பர்களிற் சிலர் அமரத்துவம் விகளில் இருந்து வேறு பதவிகளுக்கு மாறி ர்கள். குறித்த மலரும் நூலும் எதிர்பார்த்த கழித்தே வெளிவருகின்றன.
மட்டுவில் தந்த பண்டிதமணி சி. க. என்ற ாடிதமணி மணிமலர், கலாநிதி மலர் என்பன ந்த பண்டிதமணி வரலாறும் காலமும் என்ற காலம் பெரியார்கள், பண்டிதர் ஐயா பற்றி ண்டிதர் ஐயா அவர்களது மேதாவிலாசம் பண்டிதர் ஐயா அவர்களது நினைவாக மலர் பின்வரும் காரணங்களால் ஏற்படலாயிற்று. பல்கலைக்கழக மட்டத்தில் ஆராயப்படுவத ர் நல்லதொரு சிந்தனைக் கருவூலமாக எல்லா }ணம் வீசும் மலராக அமைய வேண்டும் ஆலோசனை கூறியதாலும் விரிவான அளவில் வருக்கும் ஒவ்வொரு தலைப்பைக் கொடுத்துப்

Page 11
பண்டிதமணி அவர்களது ஆளுமை பற் வேண்டியிருந்தோம். எம் கோரிக்கையை 6 கவிதைகளையும் எழுதி உதவிய நூற்றுக்கு நன்றி கூறி அமையாது. பழம் பெரும் ஆதீ மிகவும் சிறப்பாகத் தந்து உதவியுள்ளன. மிகமிக அதிகம். பத்திரிகை ஆசிரியர்களது
குறித்த மலரின் அட்டை எவ்வாறு அ அமரத்துவம் அடைந்த பண்டிதர் ஐயா அ கொண்டிருக்கும் பாவனையில் அட்டைப்பட அபிப்பிராயம் தெரிவித்தார்கள். இந்த வியக்கத்தக்க வகையில் அட்டைப்படத் வண்ணையூர் திரு. இ. கணேசன் அவர்கள். பட அச்சுக்களாக்கி உதவியவர்கள் இருே அறிக்கையாளர் திரு. செல்லப்பா நடரா திரு. இ. சிவகுருநாதன் அவர்களும் என்று
படப் பிடிப்பிலும் பட அச்சுக்களைத் தி ஞானம்ஸ் படப்பிடிப்பு நிலையத்தினர். மலா மிகவும் சகாயமான முறையில் பட அச்சுக் அதிபர் திரு. சூ. ஞானப்பிரகாசம் அவர்களு இளைப்பாறிய தபால் அதிபர் உரும்பிர டுரைகள் கவிதைகளை ஒழுங்குக் கிரமத்தில் அ களைப் பார்வையிட்டு இயலுமானவரை தி ஐயா அவர்களது ஆசி திரு. மு. வைத்திய பண்டிதர் ஐயா அவர்களிடம் பெருமதி பி. நடராஜன், திரு. சு. இராசநாயகம், ஐயா அவர்களின் பேரன் திரு. சி. சதாசிவ வதற்குப் பல வழிகளிலும் ஒத்தாசையாக
பண்டிதர் ஐயா அவர்களுக்கும் சுன்ன நூற்ருண்டுக்கு மேலான தொடர்பு உண்( பண்டிதர் ஐயா அவர்களின் கல்விச் சிறப்புக் ஐயா அவர்கள் சம்பந்தப்பட்ட நூல்கள் முறையிற் சிறப்பாக வெளிவர உழைத்தவ தலைப்பைக் கொண்ட இந்நூல் திறம்பட அழுத்தகத்தினரின் பங்கே அதிகமாகும். அ மிகவும் அநுபவஸ்தருமான அச்சமைப்பு மு கடின உழைப்புக்கும், ஏனைய ஊழியர்களி யும் நன்றி தெரிவிக்கலாம்.
சுன்னுகம் திருமகள் அழுத்தகத்தின் உ மான சட்டத்தரணி திரு. எஸ். கே. பொ வெளியீட்டுச் சபையினருக்கு நீண்டகாலமா பெரு நன்றிக்கு உரியது.
பண்டிதர் ஐயா அவர்களின் சரித்திரத் ளுக்கு இம் மலர் பெரிதும் பயன்படும் என் கட்டுரையாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கி வரும் பண்டிதமணி பழைய மாணவர்களுக்கும், அன்பர்களுக்கு உரும்பிராய் மேற்கு, உரும்பிராய், ill-01-1989.

றிய அவரவரது நோக்கினை எழுதுமாறு ற்றுக் காலதாமதம் இன்றிக் கட்டுரைகளையும் மேற்பட்ட பேரறிஞர்களின் ஒத்துழைப்புக்கு னங்களும் சங்கங்களும் சபைகளும் செய்திகளை செய்தித் துறையில் கல்விமான்களின் பங்கு
ஆதரவும் அமோகமாயிருந்தது. மையவேண்டும் என்று ஆலோசித்த பொழுது, வர்கள், தாம் எழுதிய நூல்களைப் பார்த்துக் ம் அமைவது பொருத்தம் என்று அன்பர்கள் ப் பொருத்தம் நல்ல - பொருத்தம் ' என்று தைத் தீட்டித் தந்தார் உழுவலன்பரான சித்திரத்தைப் பொருத்தமான முறையில் பர் பெரியார்கள். பாராளுமன்ற சிரேஷ்ட சா அவர்களும், தினகரன் பிரதம ஆசிரியர் ம் நன்றிக்கு உரியவர்கள். றம்படத் தயாரிப்பதிலும் புகழ் பெற்றவர்கள் ன் உள்ளேயுள்ள படங்களைச் சீர்படச் செய்து களையும் தயாரித்து உதவிஞர்கள். ைெடி நிலைய க்கும், நிலைய ஊழியருக்கும் மனமார்ந்த நன்றி. ாய் திரு. மு. வைத்தியலிங்கம் அவர்கள் கட் மைத்து அழகு படுத்தியதுடன் சரவைத்தாள் ருத்தங்கள் செய்தும் உதவினுர்கள். பண்டிதர் லிங்கம் அவர்களுக்கு எப்பொழுதுமிருக்கும். நிப்புக் கொண்டவர்களான மயிலங்கூடலூர் பண்டிதர் க. உமாமகேசுவரன், பண்டிதர் 1ம் உள்ளிட்டவர்கள் மலர் சிறப்புற அமை இருந்தமை குறிப்பிடத்தக்கது. கம் திருமகள் அழுத்தகத்தினருக்கும் அரை டு. பொருளை நோக்கமாகக் கொள்ளாமல் கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்; பண்டிதர் கூடுமானவரை பிழையின்றிக் காத்திரமான ர்கள். ' பண்டிதமணி நினைவுமலர்" என்ற இப்பொழுது வெளிவருவதற்கும் திருமகள் ச்சமைப்பு உலகில் மெச்சுபுகழ் பெற்றவ்ரும், தல்வர் திரு. செ. சின்னத்துரை அவர்களின் ன் சலியாத பங்களிப்புக்கும் எத்தனைமுறை
ரிமையாளரும், பிரபல சமூக சேவையாளரு ன்னம்பலம் அவர்கள், பண்டிதமணி நூல் க அளித்துவரும் ஒத்துழைப்பு என்றென்றும்
தை மேலும் மேலும் அறிய விரும்புபவர்க பது எமது எண்ணம். மலரை அலங்கரித்த ஆசிச்செய்திகளைத் தந்து உதவியவர்களுக்கும், நூல்வெளியீட்டுச்சபை உறுப்பினர்களுக்கும், ம் மீண்டும் எமது நன்றிகள் உரியனவாகுக
அ. பஞ்சாட்சரம்
காரியதரிசி, பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை

Page 12
0.
நிழலுருவப்
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. க.
(i) (ii)
(i) (ii)
(i) (ii)
(i)
(ii)
(i) (ii)
(i)
(ii)
(i)
(ii)
(i)
ii)
(i)
(ii)
தனங்கிளப்புக் காட்சிகள்.
தனங்கிளப்பு ஆசிரமம், திருநெல் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் ஒரு திரு. சி. சதாசிவம் குடும்பத்தின
பூரீலழறீ ஆறுமுகநாவலர் அவர்கள் பண்டிதமணி அவர்களது ஆசிரியர்
பண்டிதமணி அவர்கள் உபயோகி வித்துவசிரோமணி சி. கணேசைய 1951, யாழ்ப்பாணத் தமிழ்விழாவி
அழ. வள்ளியப்பா அவர்களுக்குத் வரவேற்பு. உரும்பிராய் கருணுகரப் பிள்ளையார் கந்தபுராணம் தக்ஷகாண்டம் உ பல்கலைக் கழகம்). பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கந்தபுராணம் தக்ஷகாண்டம் : வைத்தீசுவர வித்தியாலயம்). சைவாசிரிய கலாசாலையில் மூவர்பண்டிதமணி அவர்கள், அதிபர் கந்தபுராணம் தக்ஷகாண்டம் உை அவர்களுக்கு அதிபர் சி. சுவாமி கெளரவிக்கின்றர்.
சாகித்திய மண்டலத்தின் உயர் மங்கையர் கழகம்). திருவாலவாய் இல்லத்திற் பண்டித இலக்கிய கலாநிதியும், சங்கீத கல நாவலர் விழா 1969.
எண்பதாவது பிறந்த தினத்தில் ட பண்டிதமணி அவர்களும் மாணவரு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ட இலக்கிய கலாநிதிப் பட்டச் சான்
இலக்கிய கலாநிதி, பாராட்டு விழ அன்பினைந்திணை, அத்வைத சிந்தை மன்றம்). 1935ஆம் ஆண்டின்பின் பண்டிதம வளர்ச்சி.
பண்டிதமணி அவர்களின் கையெழு

படங்கள்
ணபதிப்பிள்ளை அவர்கள்.
வேலி இல்லம்.
தோற்றம்.
T.
களும், பெருமதிப்புக்கு உரியவர்களும்,
ததவை. பர் பொற்கிழிவிழா நிர்வாகசபை, பிற் பண்டிதமணி அவர்கள்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில்
* கோயில் திருத்தேர் மண்டபத் திறப்புவிழா. ரைநூல் வெளியீட்டுவிழா (பேராதனைப்
மலர்மாலை, காளாஞ்சி மரியாதை. உரைநூல் சிறப்புவிழா (யாழ்ப்பாணம்
-உப அதிபர் பூரீ பொ. கைலாசபதி அவர்கள், திரு. சி. சுவாமிநாதன் அவர்கள்.
ரை நூல் சிறப்பு விழாவில் பண்டிதமணி நாதன் அவர்கள் பொன்னடை போர்த்திக்
உறுப்பினர் விழா (வெள்ளவத்தை சைவ
மணி அவர்கள்.
ாநிதியும்.
1ண்டிதமணி அவர்கள்.
கும்.
பட்டமளிப்பு விழா.
ாறிதழ்.
ா (யாழ். வீரசிங்கம் மண்டபம்). ன வெளியீட்டு விழா (திருநெல்வேலி கலா
ணி அவர்களின் தோற்றத்தில், தசாப்த
ழத்துப் படிவம்.

Page 13
பண்டிதமணி நூல்
பண்டிதர் ச. சிதம்பரப்பிள்ளை
தலைகாட்டி, வேலணை
காரியதரிசி:
ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் உரும்பிராய் மேற்கு, !
தணுதிகாரி:
திரு, த. இராசேந்திரம் அவ 115/1, கொழும்புத்துவ
உறுப்பினர்கள்:
திரு. க. தி. சம்பந்தன் அவ மணல்தரை ஒழுங்கை, திரு. க. நல்லதம்பி அவர்கள்
காரைநகர் பண்டித வித்துவான் க. கிரு தும்பளை, பருத்தித்துை திரு. சி. க. சுப்பிரமணியம் பு கோப்பாய் வடக்கு, ே சைவப்புலவர் க. சி. குலரத்தி அம்மன் வீதி, கந்தமட பண்டிதை பொன். பாக்கியம்
சுழிபுரம் திரு. க. சோதிலிங்கம் அவர் கோண்டாவில் கிழக்கு, திரு. கெ. நடராசா அவர்கள் பண்ணுகம் வடக்கு, ப6 ஆசிரியமணி ஆர். ரி. சுப்பிரப பொற்பதி வீதி, கொச்
* திரு. சு. காசிநாதன் அவர் திருநெல்வேலி வடக் * பண்டிதர் செ. சிவப்பிரகாசு தாவடி தெற்கு, கொச் * திரு. இ. சிதம்பரப்பிள்ளை
நீர்வேலி மத்தி, நீர்வே *திரு. மு. நல்லையா அவர்க கோப்பாய் வடக்கு, ே
* அமரத்துவம் அடைந்திவர்

8.
வெளியீட்டுச் சபை
அவர்கள்
அவர்கள் உரும்பிராய்
ர்கள் றை வீதி, யாழ்ப்பாணம்
ressi திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
T
ஷ்ணபிள்ளை அவர்கள் Pдр
அவர்கள்
காப்பாய்
தினம் அவர்கள் ம், யாழ்ப்பாணம்
அவர்கள்
கள்
கோண்டாவில்
ண்டத்தரிப்பு மணியம் அவர்கள் குவில்
s கு, யாழ்ப்பாணம்
Fம் அவர்கள் குவில்
அவர்கள்
வலி
sir
s;/r L'i_{frtfi

Page 14


Page 15


Page 16
இலக்கிய பண்டிதமணி சி. கனட
திதி ே பொங்கு குரோதன ம தங்குபூர்வ பக்கத் திரு பண்டித மாமனி யாம் விண்ணேத்த நண்ணி
 

கலாநிதி பதிப்பிள்ளை அவர்கள்
வண்பா சியீர் பத்தெட்டில் தியையில் - விஞ்சுபுகழ்
ர்ை வீடு,

Page 17


Page 18
இலக்கிய பண்டிதமணி சி. கனட
வாழ்க்கை வரல
"நற்குஞ் சரக்கன்று
கற்குஞ் சரக்கன்று சு
இந்து சமுத்திர நித்திலம் என: இருதயஸ்தானம் யாழ்ப்பாணம். யாழ் பகுதி தென்மராட்சி, தென்மராட்சி மருத நிலப்பதியில் கோயில் கொ: விநாயகர்.
தென்மராட்சிப்பிரிவில் கல்வி நல பதி மட்டுவில். உரையாசிரியர் ம. க. சிவம் உள்ளிட்ட பல அறிஞர் பெருமக் லில் தருமர் என்று அன்போடு அழை தனங்கிளப்பு முருகர் மகளான வள்ள இறுதிப்பகுதியில் சிறப்புடன் வாழ்ந்த
இயல்புடைய மூவர்க்கும் நல்லார் வாழ்ந்த இவர்களைப் புத்திர பாக்கியப வாட்டியது. வள்ளியம்மையார் பெரு விநாயகரிடம் புத்திர பாக்கியம் வேண் மான காரைத்தூ விநாயகரின் அருள குறைந்த அந்தக் காலத்தில் தோணிமூ கொண்டார். வள்ளியம்மையார் சர்வலே பெருமானை வேண்டி அங்குந் தவமிரு வேண்டியாங்கு ஈந்து அருள் புரியும் சி நடராசப் பெருமானின் தரிசனத்தை தனங்கிளப்புப் பிள்ளையாரைத் தொட
இவ்வாறு கடுந்தவம் புரிந்த கார6 விகாரி வருடம் ஆனி மாசம் 14ஆம் நாள் 40 விநாடி அளவில் (27-06-1899 செ. நக்ஷத்திரத்தில் ஓர் ஆண்குழந்தையை தந்தையாரான சின்னத்தம்பியார் சந்தோஷ மிகுதியால் துள்ளிக் (S
ii

கலாநிதி திப்பிள்ளை அவர்களின்
ாற்றுச் சுருக்கம்
ண்ணிற் கலைஞானம் ாண்
(திருவருட்பயன் காப்புச் செய்யுள்)
நீ திகழும் ஈழமணித் திருநாட்டின் ப்பாணத்தில் நீர்வளம், நிலவளம் மிக்க யைச் சேர்ந்த தனங்கிளப்பு என்னும் ண்டு எழுந்தருளியுள்ளார். கார்ைத்து
ஞ் சான்ற மக்கள் வாழும் இன்னுெரு வேற்பிள்ளை, பண்டிதர் வே. மகாலிங்க 1களைத் தந்தபதி மட்டுவிற்பதி. மட்டுவி க்கப்பெற்ற சின்னத்தம்பி அவர்களும் ரியம்மையாரும் சென்ற நூற்றண்டின் 5 இலட்சியத் தம்பதிகள்
bறில் நின்ற துணையென வாழ்வாங்கு b இல்லையே என்ற கவலை பெரிதும் ங்கருணைத் தடங்கடலாகிய காரைத்துர டிப் பெருந்தவம் புரிந்தார். குலதெய்வ ாணை பெற்றுப் பிரயாண வசதிகள் மூலம் சிதம்பரதல யாத்திரையை மேற் ாகைக நாயகரான சிதம்பர நடராசப் ருந்தார். வேண்டுவார் வேண்டுவதை சிவகாமி அம்பாள் சமேதரான சிதம்பர ப் பூர்த்திசெய்துகொண்டு மீண்டார். டர்ந்தும் வேண்டுதல் செய்துவந்தார்.
நனத்தினுல் சென்ற விகாரிக்கு முந்திய செவ்வாய்க்கிழமை இரவு 42 நாழிகை வ்வாய்க்கிழமை இரவு 11 மணி) சதய ப் பெற்றெடுத்தார் வள்ளியம்மையார்.
ஆண்குழந்தையைப் பெற்றெடுத்த நதித்தார். கணபதியின் திருவருளை

Page 19
முன்னிட்டுப் பிறந்த ஆண்குழந்தைக் முஞ் செய்தனர். (மரபுவழிப் பெயர் பண்டிகமணி சி. கணபதிப்பிள்ளை அ
1902ஆம் ஆண்டு மாசிச் சிவர வள்ளியம்மையார் தமது 30ஆவது டார். சிவராத்திரியிற் சிவகதி சேர் உலகம் அம்மையாரைப் பாராட்டிய
மட்டுவில் அமெரிக்கமிஷன் பாட வித்தியாசாலை) ஆரம்பக் கல்வியைப் தடை ஏற்பட்டது. உரையாசிரியர் கூடிக்குலாவியும் சேர்ந்து படித்தும்
1912இல் தந்தையார் சின்னத்தய அழைத்துக்கொண்டு தனங்கிளப்புக்கு களான சாவகச்சேரி பொன்னையா னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்ன பிள்ளை பாடங் கேட்டார்.
1917 கார்த்திகையில் நாவலர் க ரான சுன்னுகம் பூரீமத் அ. குமார கேட்கும் பெரு வாய்ப்பு இவருக்குக் கி பாடசாலை மானேஜராக இருந்தவர் கைலாசபிள்ளை அவர்கள். பூரீமத், ை பிள்ளைக்கு ஏற்பட்ட விசேட கல்வித் ே இடமளித்தது. குமாரசுவாமிப் புலவர் ச. கந்தையாபிள்ளை (தென்கோவை தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்தும் ந ந. சுப்பையபிள்ளை அவர்களிடம் பாட 1926இல் மதுரைத் தமிழ்ச்சங்க பண் இவரோடு சேர்ந்து கற்றவர்களில் மட் பிள்ளை அவர்களும் வட்டுக்கோட்டை பிடத் தக்கவர்கள். கணபதிப்பிள்ளை பரீட்சையிற் சித்தியெய்தியமையைப் பிள்ளை அவர்கள் மாணவரான கன றைச் சூட்டி உற்சாகப்படுத்தினுர். ப டிப்பதக்கத்துக்கு ஏற்ற சங்கிலியை வர் மட்டுவில் செல்லப்பா அவர்கள் செல்லப்பா" என்றே அழைப்பது வழ

Χ
தக் கணபதிப்பிள்ளை என்று நாமகரண சட்டநாதர்.) அவரே இலக்கிய கலாநிதி வர்கள்.
rத்திரியன்று திருமதி சின்னத்தம்பி - வயசில் திடீரெனக் கண்ணை மூடிவிட் ந்த புண்ணியவதி வள்ளியம்மை என்று
5.
Fாலையில் (இப்பொழுது சந்திர மெளலீச
பெற்ற கணபதிப்பிள்ளைக்குப் படிப்பில்
ம. க. வே. அவர்களது பிள்ளைகளுடன்
வந்தார் கணபதிப்பிள்ளை.
$பியார், மகன் கணபதிப்பிள்ளையையும் ப் போய் அங்கு குடியேறிஞர். அறிஞர் உபாத்தியாயர், சாவகச்சேரி பொன் ாப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் கணபதிப்
ாவிய பாடசாலையிற் சேர்ந்து பேரறிஞ சுவாமிப் புலவர் அவர்களிடம் பாடங் டைத்தது. அப்பொழுது நாவலர் காவிய நாவலர் தமையனுர் புத்திரர் பூரீமத் த. கலாசபிள்ளை அவர்களுடன் கணபதிப் தொடர்பு கல்வியில் மேலும் வளர்ச்சிபெற
அவர்களின் மறைவுக்குப்பின் வித்தகம் பண்டிதர் ச. க.) அவர்களுடனும் கல்வித் ாவலர் காவிய பாடசாலையில் வித்துவான் ங்கேட்டார். கணபதிப்பிள்ளை அவர்கள் டிதராஞர். நாவலர் காவிய பாடசாலையில் டக்களப்பு புலவர்மணி ஏ. பெரியதம்பிப் சிவபூீரீ குருமூர்த்தி ஐயரவர்களும் குறிப் அவர்கள் மிகவும் சிறப்பாகப் பண்டித
பாராட்டி மானேஜர் பூரீமத் த. கைலாச ாபதிப்பிள்ளைக்குப் பொற்பதக்கம் ஒன் ட்டுவிலில் பெருஞ்சபை ஒன்றைக் கூட் ப் பரிசாக அளிக்க ஒழுங்கு செய்திருந்த திரு. செல்லப்பா அவர்களை 8 லோச் க்கம்,

Page 20
XË
காரைநகர் அருணசல உபாத்தியா பெறும் பொருட்டு 1927ஆம் ஆண்டு சாலையிற் சேர்ந்தார் பண்டிதர் சி. கக விதமாக அதேயாண்டில் தந்தையை இ அடைந்தது. 1929இல் திருநெல்வேலி பதவி இவரைத் தேடிவந்தது.
இவர் சைவாசிரிய கலாசாலை விரி முப்பது ஆண்டுகளும் தொடர்ந்து வர் யின் பொற்காலம் எனலாம். மிகவும் பொருந்தியவரான மயிலிட்டி சி. சுவாமி தவ முனிவரான பூரீ பொ. கைலாசபதி சைவாசிரிய கலாசாலையைத் தலைமை தோறும் சைவப் பாடசாலைகளை நிறுவி நடத்திய சிறப்பும் சைவவித்தியாவி வித்தியாவிருத்திச் சங்கத்தை அலங்க யார் அப்புக்காத்து திரு. சு. இராசரத நமக்கோர் காவலர் திரு. இராசரத்தினம் விருத்திச் சங்கத்தின் அனுசரணை அவர்கள் திருநெல்வேலியில் நடத்திவர் அந்தக் காலத்தில் ஒரு பல்கலைக்கழகம்
மெளன தவ முனிவரான உப அதி நெருங்கிய தொடர்பு தனி இலக்கிய உ பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்களைச் என்றே கூறலாம். திருநெல்வேலி சை வர்களுக்கெல்லாம் பண்டிதர் கணபதி வாகவே காட்சி அளித்தார்கள். சை ஆசிரியர்களுக்குக் கல்விக்கூடங்களில்
பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்க் சங்க வளர்ச்சிக்கு உழைத்த உழைப் கொண்டிருந்த தொடர்பு என்றும் நிை
1951இல் யாழ்ப்பாணம் திருநெல் பெற்ற தமிழ்விழாவில், தமிழ்பற்றிய யமைந்தது. இலங்கை இந்தியப் பத் பொருள் பொதிந்த பேச்சினை மிகவும் வியந்தார்கள் “பண்டிதமணி” என் இப்பொழுது அவர்கள் பண்டிதமணி யாளர் பதவியிலிருந்தும் ஓய்வுபெற்ருர்

பரின் ஆலோசனைப்படி ஆசிரிய பயிற்சி கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலா ணபதிப்பிள்ளை அவர்கள். எதிர்பாராத இழந்து தனிமரமாஞர். பயிற்சி பூரணம் சைவாசிரிய கலாசாலை விரிவுரையாளர்
வுரையாளர் பதவியை அலங்கரித்த த காலமும் சைவ-தமிழ் வளர்ச்சி கம்பீரமான தோற்றமும் ஆளுமையும் நாதன், B.A. அவர்கள் அதிபர். மெளன அவர்கள் உப அதிபர். திருநெல்வேலி ப் பாடசாலையாகக்கொண்டு ஊர்கள் ய பெருமையும் சைவ அணுதசாலையை ருத்திச் சங்கத்துக்கு உண்டு. சைவ ரித்துக்கொண்டிருந்தவர் சைவப் பெரி ந்தினம் அவர்கள். நாவலருக்குப்பின் அவர்கள் என்பார்கள். சைவவித்தியா புடன் பண்டிதர் கணபதிப்பிள்ளை ந்த மும்மொழிக் காவிய பாடசாலை போல விளங்கியது.
பரி பூரீ பொ. கைலாசபதி அவர்களது லகில் சஞ்சாரஞ் செய்துகொண்டிருந்த * சமய உலகுக்கும் இழுத்துவிட்டது வாசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்ற ப்பிள்ளை அவர்கள் ‘பண்டிதர் ஐயா? வாசிரிய கலாசாலையிற் பயிற்சிபெற்ற
நல்ல வரவேற்பும் இருந்தது.
5ள் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் பு மகத்தானது. கலாநிலையத்துடன் னவுகூரத்தக்கது.
வேலி பரமேசுவரக் கல்லூரியில் இடம் பண்டிதமணியின் உரை உச்சமா திரிகைகள் பண்டிதமணி அவர்களின் பாராட்டி எழுதின. கல்விமான்கள் ற பட்டமும் வந்து சேர்ந்தது. கணபதிப்பிள்ளை. 1959இல் விரிவுரை

Page 21
* கேட்டார்ப் பிணிக்குந் தகைய ஆற்றல் மிக்கவர்களான பண்டிதம6 சமூகம் சம்பந்தமான பேச்சுக்கள் நிகழ்ந்திருக்கின்றன. ** நெற்றிக்கண் என்று எடுத்துச் சொல்லும் பண்டித பாராட்டாமல் யாருமே இருந்ததில்லை
சைவாசிரிய கலாசாலையில் பத6 னரும் அயல் நாட்டு அறிஞர்கள் - ஈழத்துக்கு விஜயஞ்செய்த காலங்க கலந்துரையாடி அவரது கருத்துக்க:
ஈழத்துப்புலவர்களது உண்மைச்சி உரியவர்கள் பண்டிதமணி அவர்களே யெல்லாம் எழுத்தெண்ணிப் படித்து ளோடு சம்பந்தப்பட்டவர்களது சரித் களாகத் தந்துள்ளார்கள். கலைக்களஞ் கும்பாபிஷேகமலரில் ஞானப்பிரகாச பஞ்சகன்னிகைகள் என்ற தலைப்பி ஒண்ணுதவை.
இலக்கிய சம்பந்தமாகவும், அவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆ கூறலாம். பண்டிதமணி அவர்கள் எ பல நூற்றுக்கணக்கானவை. அவர்க வதற்கென்றே ஒரு பெருங் கூட்ட இருபத்துமூன்று நூல்களாக வெளிவ லத்தின் பரிசில்களைப் பெற்ற நூல் கட்டுரைகளும் நூலுருவம் பெறவுள்ள
பலபல சந்தர்ப்பங்களையொட்டி யும் செய்திருக்கின்றர்கள். காலகத் ஒன்று சேர்க்கப்பட்டு நூலுருவம் காரைத்து விநாயகர் மீது அவராலே சுவை நனிசொட்டுவன,
பண்டிதமணி அவர்கள் ஓய்வு மட்டுவிலிலும், யாழ்நகர மண்டபத்தி காலத்தில் மட்டுவிலில் அமைக்கப்பெ பொழுதும் பூரணபொலிவுடன் விளங்கு அனேகம். கந்தபுராணம் தக்ஷகாண்ட உச்சமாக விளங்கியது.

xii
பவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் ணரி அவர்களது சமயம், இலக்கியம், ஈழத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஈணைக் காட்டினுலும் குற்றம் குற்றமே ’ தமணி அவர்களின் கூரிய மதியினைப் 3.
வி வகித்த காலங்களிலும் அதன் பின் விசேடமாகத் தமிழ்நாட்டு அறிஞர்கள் ரில் பண்டிதமணி அவர்களைக் கண்டு ளை அறிந்து மிகவும் மகிழ்ந்ததுண்டு.
Fரித்திரங்களை நிலைநாட்டிய பெருமைக்கு . நாவலர் பெருமானின் எழுத்துக்களை
அவர்களது சரித்திரத்தையும் அவர்க $திரங்களையும் ஆராய்ந்து பல கட்டுரை ருசியத்தில் நாவலர் பற்றியும், சிதம்பரம் முனிவர் குறித்தும், கலைமகள் மலரில் லும் எழுதிய கட்டுரைகள் விலைமதிக்க
சமய சம்பந்தமாகவும் பண்டிதமணி ஆயிரத்துக்கு மேல் என்று துணிந்து ழுதிய அணிந்துரைகள், வாழ்த்துரைகள் களது தனி நடையை வாசித்து மகிழ் b இருந்தது. அன்னவரது ஆக்கங்கள் ந்துள்ளன. இலங்கை சாகித்திய மண்ட களும் இவற்றுள் அடங்கும். ஏனைய ான என்பது நம்பிக்கை.
ப் பண்டிதமணி அவர்கள் கவிதைகளை தியில் அவர்களது கவிதைகள் யாவும் பெறக்கூடும். தமது குலதெய்வமான ) பாடப்பெற்ற ஊஞ்சற்பாக்கள் பக்திச்
பெற்ற சமயம் திருநெல்வேலியிலும், திலும் பெருவிழாக்கள் நடந்தன. இக் ற்ற பண்டிதமணி மணிமண்டபம் இப் குகிறது. நூல் வெளியீட்டு விழாக்களோ ம் உரை நூல் வெளியீட்டு விழா மிகமிக

Page 22
X
தவத்திரு குன்றக்குடி அடிகளார் டான் பாடசாலைச் சமய விழாவிலும் அவர்களால் பேராதனைப் பல்கலைக்க கந்தபுராணம் தக்ஷகாண்டம் உரை சிரியகலாசாலை முன்னைநாள் அதிபர் வண்ணை வைத்தீசுவர வித்தியாலய தகஷ்காண்டம் உரைநூல் சிறப்புவிழா குடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டா பங்களிலும் பொன்னுடை மரியாதைக
பிற்காலத்தில் இலங்கைப் பல்க ாளுக்கு வழங்கப்பெற்ற பட்டம் * இலக் எத்தனை, எத்தனையோ பட்டங்கள் சேர்ந்து கொண்டன. பட்டங்கள் அவர்கள் ஒரு நொடிப்பொழுதாவது மாந்ததுமில்லை.
தமக்குக் கிடைத்த பொன்னும் விநாயகப்பெருமானும், மட்டுவில் மரு அநுக்கிரகித்தவை என்றும், எல்லாம் பண்டிதமணி அவர்கள் குறிப்பிடுவார்
அருள் கனிந்த பார்வை, அன்பு காட்டும் புன்னகை, மனமாரவாழ்த்தும் கையை விளக்கும் தோற்றம் என்பன ப வழங்கப் பெற்ற அருட்கொடைகளாம்.
பத்தொன்பதாம் நூற்றண்டின் இ தாம் நூற்ருண்டின் பிற்காலம் வரை பிரமசாரியாக வாழ்ந்தவர்களான பணி மட்டும் நிற்கவில்லை, சாதனையிலும் தார்கள். 86 வருடங்கள் 8 மாசங்கள் பொன்மேனி தீண்டி இருந்தது.
குரோதன வருஷம் மாசிமாசம் நாழிகை 22 விநாடியளவில் (13-03.19 பூர்வபக்கத் திருதியையும் ர்ேவதி நக்ஷ பொழுதினில் மூதறிஞர் இலக்கிய கலா அவர்கள் இயற்கை எய்தினுர்கள்.

ii
அவர்களால் பண்ணுகம் மெய்கண் $, பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் ழகக் கலை மண்டபத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவிலும், சைவா
திரு. சி. சுவாமிநாதன் அவர்களால் த்தில் இடம்பெற்ற கந்தபுராணம் விலும் பண்டிதமணி அவர்கள் பொன் ர்கள். இவற்றைவிட வேறுபல சந்தர்ப் ள் இவருக்குக் கிடைத்தன.
லைக்கழகத்தால் பண்டிதமணி அவர்க கிய கலாநிதி' என்பதாகும். இன்னும் எல்லாம் இடையில் வந்து அவரைச் அவரைத் தேடிவந்த காரணத்தினுல்
பெருமிதம் அடைந்ததுமில்லை; இறு
புகழும் குலதெய்வமான காரைத்தூ 3தடி, பனையடி விநாயக மூர்த்திகளும் அத்தெய்வங்களுக்கேயுரியவை என்றும் *கள்.
கெழுமிய வார்த்தை, மனநிறைவைக் பண்பு, ஆன்றவிந்தடங்கிய கொள் ண்டிதமணி அவர்களுக்கு இறைவணுலே
றுதிக் காலகட்டத்தில் பிறந்து இருப ", வாழ்நாள் முழுவதும் நைட்டிகப் ண்டிதமணி அவர்கள், போதனையோடு
மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந் 16 நாள்கள் இப்பூவுலகை அவரது
28ஆம் நாள் புதன்கிழமை இரவு 54 86 வியாழக்கிழமை அதிகாலை 4 மணி) பத்திரமும் பொருந்தி வந்த புண்ணியப் நிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

Page 23
சி. கணப
நாவலர் தமையனுர் புதல்வரு பரீமத் த. கைலாசபிள்
This is to certify t having gone through a c and Sanskrit at the N Jaffna, from Novembe passed the final exami creditably.
Saivaprakasa Vidyasala, Jafna, 30th July 1926

旋_
திப்பிள்ளை
user-barray
அவர்களின் ம் மானுக்கரும் ஆகிய ளே அவர்கள் எழுதியது
hat S., Kana pathippillai, Ourse of studies in Tamil availar Classical School, er 1917 to April 1926, nation of the School very
T. Kailasapillai
Manager

Page 24
6சிவமயம்
தனங்கிளட் காரைத்தூ விாகாய
காப்பு திருமாலும் நான்முகனுந் ே தெய்வதநான் மறைகள் ஒருகாலுந் தேடிமுழு துண்! உமையொருபா கத்தொ ஒருகோடும் இருசெவியும் மூ ஒமெனுநால் வாயைந்து பெருமானைக் காரைத்துரப் ட பெருங்கருணைத் தடங்க
ஊஞச சிவசைவ நாற்பாதந் தூண் திருமறைகள் ஒருநான்க் உவமணிலா அறமுதஞற் கயி உபநிடதப் பலகையின்ே பவமறுஒம் என்கின்ற பீடம் பாவஇருள் விடிந்துலகு கவலையிலா வாழ்வளிக்குங் க
காரைத்து விநாயகரே பொற்பகப்பூஞ் சோலைதரு
பொன்னுலகும் மண்ணு அற்புதசி தானந்த ஞானம்
அறிவுக்குள் ளறிவாகி நிற்குமுனை நினைந்துநினைந்
நீண்டகயி றிருகரத்தால் கற்பகமே கணியமிழ்தே கரு காரைத்தூ விநாயகரே
தேனரு மலர்பறித்துன் பா தித்திக்கும் மோதகமுங் ஞானமணி விளக்கெங்கும் வ நான்மறையி லுனதுடக மோனநிலை யெய்தியுன தரு
மூதறிவு பெற்றேரும் மு கான்வரிச் சுரும்புமுரல் கடி
காரைத்து விநாயகரே

니 கர் ஊஞ்சல்
தவர் கோவும் சிவா கமங்கள் யாவும்
வொண்ணு ருவன் உவந்து தந்த >ன்று கண்ணும்
கரமுங் கொண்ட பதியில் மேவும் டலைப் பேணி வாழ்வாம்.
"கள் ஆக கின் விட்டம் பூட்டி சிறு சேர்த்தி மேல் ஒளிரா நின்ற
ஏறிப் குதிகொண் டாடக் கருணை வள்ளால்
ஆடீ ரூஞ்சல். பூக்கள் தூவிப் லகும் புவனம் யாவும் மேவி அமல மாகி
துருகிப் பாடி
தீண்டி யாட்டக் ணை வாழ்வே ஆடீ ரூஞ்சல். தஞ் சூட்டித்
கரும்புங் காட்டி விளங்க ஏற்றி ழ் எடுத்துத் தூற்றி ளின் மூழ்கி Dடியக் காணுக் கொண் மார்பீர்
ஆடீ ரூஞ்சல்,

Page 25
Xνi
சிவகாமி அருளொழுகு விழி சிவாநந்தம் வீறிநட ர தவமுதல்வர் சம்பந்தர் தா6 தாமரையி லயன்திருமா பவவினைகள் பரிதிமுனம் ப8 பதுங்காமல் ஒதுங்காம கவனம் வெகு கவனம்வெகு
காரைத்தூ விநாயகரே
சைவமுநற் றமிழுமுல கெங் சதுர்மறையா கமங்கள்ெ உய்யவருள் அறநெறிகள் இ ஒண்டொடியார் கற்புறெ செய்யதிரு ஐந்தெழுத்தும் ! சிவனடியார் சிவமுழக்க கைவருமைங் கரத்தவரே ஆ
காரைத்தூ விநாயகரே
பாமேவு பாவலர்பா மாலை ( பண்டிதர்கள் பழையபுக நாமேவு நாவலர்கள் நலம்ட நாரதர்நான் மறையினி மாமேவு முனிவர்வினைக் க2
மாநிலத்து மாந்தர்தவ காமேவு கற்பினர்கள் வடந் காரைத்தூ விநாயகரே
விண்மணியே விண்ணுேர்கள் விழுப்பொருளே வேதா ஒண்மணியே உபநிடதத் து ஓங்காரத் தொருபெருக் தண்மணியே தத்துவங்கள்
தவத்தருளம் வளருமெ கண்மணியே கடையேமைக் காரைத்துா விநாயகரே

கள் நோக்கச் ாஜ ராடத் ாம். போடத் ல் குதிகொண் டாடப் னியைப் போலப் ல் பறந்தே யோடக் கவன மாகக்
ஆe. ரூஞ்சல்,
கு மோங்கச் ால்லாந் தழைத்து வீங்க னிது தேங்க நறி உலகைத் தாங்கச் நீறுந் தாங்கிச்
ம் விளங்கிப் பொங்கக் நடீ ரூஞ்சல்
ஆடீ ரூஞ்சல்,
சூட்டப் ழ் புதுக்கிக் காட்ட ா ராட்ட சை நரம்பி னுாட்ட ளகள் வீட்ட
விளைவை ஈட்டக் தொட் டாட்டக் ஆடீ ரூஞ்சல்,
ா விழைந்து போற்றும் ந்தத் துச்சி வைகும் 1ள்ளுற் றன கே உவம ணில்லாத் தமக்கப் பாலாய்த் ாளிர் கரும்பே தேனே கடைக்கண் நல்கும் ஆடீ ரூஞ்சல்.
5.

Page 26
xvii
முன்னைவினைக் கட்டறுப்பான் மூதறிவு தந்துபதப் டே தன்னை அவர் தம்மையென : தாமவராய்த் தழைப்பவ பொன்னை வெறும் மண்ணையின் போக்கறியோம் போக்க கன்னெயெனக் கசிந்துள்ளம்
காரைத்துர விநாயகரே
சிந்தித்த படியெவர்க்கும் தே சித்திமுத்தி யளிப்பவரே வந்தித்த வழியடியர் வாழ்வு வகைசெய்து வைப்பவே பந்தித்த பழவினையின் தொ பாவவிமோ சண்மருள்வி கந்தித்த பொழில்ககன மள காரைத்தூ விநாயகரே
பந்தவினை யறுப்பவரே ஆடீ பரமகரு ணுநிதியே ஆ சந்ததமெம் மனத்துறைவிர்
தரணியெலாந் தந்தவே தந்திமுக முடையவரே ஆடீ தனங்கிளப்புத் தவமுை கந்தனுக்கு மூத்தவரே ஆடீ
காரைத்து விநாயகரே
வாழி வள்ளுவணுர் வகுத்த அற ெ
வரம்புகண்ட ஒளவைதி விள்ளரிய குரவர்தமிழ் மழை விரிந்தசிவ சாத்திரங்கள் தள்ளரிய தனங்கிளப்புத் த6 தாயொடுதந் தையர்களி கள்ளவிழ்தா மரைவயல்கள்
காரைத்து விநாயகரே

ா முயன்ருேர் தம்மை ாது தந்து
இரண்டின் ருகித் ரே ஆடீ ரூஞ்சல் வை பொருளென் றெண்ணிப் னைத்தும் போக்கு நீக்கிக்
உருகி யோடக்
ஆடீ ரூஞ்சல்,
நட வொண்ணுச்
ஆடீ ரூஞ்சல்
Gèa D6)ir uÄ
ர ஆடீ ரூஞ்சல்
டக்கு நீக்கிப்
ர் ஆடீ ரூஞ்சல்
வு செல்வக்
ஆடீ ரூஞ்சல். 9
ரூஞ்சல்
உ ரூஞ்சல்
ஆடீ ரூஞ்சல்
ர ஆடீ ரூஞ்சல்
ரூஞ்சல்
டயீர் ஆடீ ரூஞ்சல்
ரூஞ்சல்
ஆடீ ரூஞ்சல்,
நறிகள் வாழி ரு வாக்கும் வாழி றகள் வாழி
முழுதும் வாழி ழைத்து வாழி 1ளஞ் சிறர்கள் வாழி வளங்கள் வாழி
வாழி வாழி.

Page 27
xviii
எச்சரீக்கை பொன்னேநவ மணியே மணி ெ போதேபுது மணமேமணத் கண்ணேயிரு மணியேமணிப் ட கனியேகனிச் சுவையேசுை தண்ணுரமு தனையாய்தனங் கி சாவாமுனம் உனதாாருள் கண்ணுரருள் பொழிகாரையந் கருஞகர கரிமாமுக கதிே
பராக்கு தனை நிகர் தனங்கிளப் புறைவா சத்தியமில் லார்மனத் துை கருணைபொழி காரையந் தூவா கசிந்துருகு வார்க்கிடர்கள் ஷண்முகன் வருந்தவரு கரியே தரியலர்கள் தங்களுக் கரி முன்னை வினைக் கட்டைமுடி வல் (f('? 5. SJØT f6S (GRS) if 56řit ( pgg
எத்தனை பி ழைத்திடினும் ஏழை பித்தஉல கத்தவர் பிழைகள்த தட்டறநி னைப்பவர்த மக்கருள் கட்டவிழ்ம லர்க்குள்மலர் கின் தன்னை நிகர் தன்னையொளிர் க தென்னேவளர் பெண்ணைவயற் தந்திமுக ஐந்துகT சுந்தரநற் சிந்திதம நோரததி பாகவரு மங்களம் தத்துவஒங் காரணுக்குச் சுபம சக்திதரு தீரனுக்கு ஜெயமங்க பத்தருணர் நேயனுக்குப் பரவு வித்தகர்ச காயனுக்கு வேதமு. தந்திமுக யோகனுக்குப் போக தற்பரைதன் பாலனுக்குச் சீல, தனங்கிளப்பு நாயகற்குத் தனை கனங்கொளரு ளாயவற்குக் கா
தி

பாளியே எச்சரிக்கை தேனே எச்சரிக்கை ாவாய் எச்சரிக்கை வக் கரும்பே எச்சரிக்கை ளப்பாய் எச்சரிக்கை
தருவாய் எச்சரிக்கை தூவாய் எச்சரிக்கை ய எச்சரீக்கை.
"ய் பராக்கு றையாய் பராக்கு 'ய் பராக்கு
துரவாய் பராக்கு பராக்கு யே பராக்கு ர்பே பராக்கு
தன்பே பராக்கு.
ழகளின் நேபா
விர் தூயா லாலி செய் தாதா
றமலர்ப் பாதா லாலி ாரை யந்துர வாசா பண்ணையமர் தேசா
ருளா
ft 6i 5a r53.
ங்களம் - சிவ
Tò
சுடர்த் தேயனுக்கு த லாயனுக்கு-தத்துவ
னுக்கு மங்களம் னுக்கு மங்களம் நிகர்வி நாயகற்குக் ரையந்தூ மேயவற்கு-தத்துவ
. Es sort - 95 S7. 2.

Page 28
திருக்கயிலாயபரம்பரை, தி
குருமகா ச பூநீலபூரீ சிவப்பிரகாச தேசி
வழங் ஆசி
பண்டிதமணி சி. கணபதி மொழிக்கும் சித்தாந்த சைவச் அரும்பணிகள் என்றும் பாரா வாகும்.
அவர்களது இனிய நிே வருங்காலச் சைவத் தமிழ் இை காட்டாக அமைய நினைவும6 பாராட்டுதற்குரியது.
மலர், தமிழ்நலஞ் சான்ற தாங்கித் தெய்வத் தமிழ்மண ஆன்மார்த்த மூர்த்தியாகிய பூரீ திருவடி மலர்களைச் சிந்திக்கின்ே
திருவாவடுதுறை.
 

ս 1ւն
நிருவாவடுதுறை ஆதீனம் *ந்நிதானம் 4. U JOT Ju fuj & Shalës cit
கிய
யுரை
ப்பிள்ளையவர்கள் நம் செந்தமிழ்
செந்நெறிக்கும் ஆற்றியுள்ள ட்டப் பெறுவதற்கு உரியன
7வு என்றும் நின்று நிலைத்து எஞர்க்குச் சிறந்ததோர் எடுத்துக் லர் ஒன்று வெளியிடவுள்ளது
அறிஞர்களின் ஆய்வுரைகளைத் ங் கமழ்ந்து நலம்பயக்க எம் ஞானமா நடராஜப் பெருமான்
"@lp・

Page 29
குரு
திருக்கயிலாயபரம்பரைத் தருமையா;
பூநீலபூரீ சண்முகதேசிக ஞானக்
வழங்
* ஞாலம் நின்புக ே
ஆல வாயில் உை
சைவ சமயத்துக்கும் தமி தமிழர்கள் ஆற்றியிருக்கும் ே இவ்வகையில் யாழ்ப்பாணம் சைவத் தமிழ் மூதறிஞர் இல திரு. சி. கணபதிப்பிள்ளை ஆ கட்டுரைகள் வாயிலாக அரிய இலங்கைத் தமிழ் மக்களின் இத் நினைவாக மலர் வெளியிடுவது நன்றியின் அடையாளமாகும்.
பூரீ கணபதிப்பிள்ளை அவ) நிலவிவரவும், மலர் சிறந் பூரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவி
தருமபுரம்
 

கீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் :ம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
கிய
யுரை
pமிக வேண்டும்தென்
றயும்எம் ஆதியே’
ழ் மொழிக்கும் இலங்கை வாழ்
தொண்டுகள் அளவிடற்கரியன. திருநெல்வேலியில் விளங்கிய
க்கியக் கலாநிதி பண்டிதமணி
அவர்கள் பல உரைநூல்கள்,
பல தொண்டுகளை ஆற்றியவர்.
தயங்களில் விளங்கும் இவ்வறிஞர்
அவ் அறிஞருக்குச் செய்யும்
ர்களின் தமிழ்த் தொண்டு நின்று த முறையில் வெளிவரவும் பருளைச் சிந்திக்கின்ருேம்.

Page 30
હિો
கயிலை மாமுனிவர் முத்துக்குமாரசுவாமித் தம் (அதிபர், பூ
634 μ.
ஆச்
தென்றல் பிறக்கும் தென் நற்றமிழ்க்கு ஓர் இலக்கணம் அகத்தியர்.
அங்ஙனமே,
தென்கடல்சூழ் இலங்கை; தெய்வ நலங்கனிந்த இலக்கிய பூ கணபதிப்பிள்ளை.
அவர்கள் வித்துவத்திலே இலக்கிய கலாநிதி ; நூலாக்க நெடு அனுபவத்திலே தமிழ் மூ சேர்ந்து இன்று பேரின்பம் துய இவ்வுலகு உள்ளனவும் நிலைத்
அன்னரின் நினைவாக அரிய புகழ்மணம் பரப்ப உளது. வெளிவரவும் அந்த முயற்சிய பஞ்சாட்சரம் அவர்களின் முயற் செந்திலரண்டவன் திருவருளைச்
d労ム
திருப்பனந்தாள், தஞ்சை மாவட்டம்,

ଔଖ୍ଯ
沙
பூரீலயூரீ கா சிவாசி பிரான் சுவாமிகள் அவர்கள் ரீ கிாசிமடr)
ங்கிய சியுரை
பொதிய மலையிலே எழுந்தருளி, வகுத்து எழில்பெற வைத்தவர்
த் தீவிலே வாழ்ந்து நற்றமிழ்க்குத் நூல்களை இயற்றி அழகூட்டியவர்
பண்டிதமணி; ஆராய்ச்சியிலே த்திலே ஞான சாகரம் ; நீண்ட முதறிஞர், அன்னர் இறைவனடி ப்க்கின்ருர்கள். அன்னரின் புகழ் திருக்கும் என்பதில் ஐயமில்லை. /தொரு மலர், பல்லிதழ் விரித்துப் அந்த மலர் சிறந்த முறையில் பில் ஈடுபட்டு வரும் திரு. அ. சி வெற்றியுடன் வளம் பெறவும்
சிந்தித்து வாழ்த்துகின்ருேம்.
Լ/16

Page 31
திருப்ெ பூநீலபூ அருணகிரிநாத பூரீ ஞானசம் (292ஆம் குருமகாசந்நிதான
வழ
ஆசிச்
எல்லாம் வல்ல எம்பெ( நலங்களும் எய்துக ! தாங்க கிடைத்து, நமது திருப்பெருந்நி திருக்கண்பார்வையிட்டு மகிழ் கணபதிப்பிள்ளை அவர்கள் நம மொழி, சைவசமயம், தமிழ்ச் அடைய வேண்டும் என்பதில் கருத்துக்களில் உடன்பாடு கெ பக்தியும் மிக்கவர். தூய த! யத்திற்கு அவர் ஆற்றியிருக்
* ஏழாம் நூற்ருண்டில் அ
மதுரை ஆதீனத்தை சம்பந்தரின் மறு அவதார தாங்கள்தான் ஈழத் தமி யோடு வாழ்வதற்குக் ( என்று சொன்ன பெருந்தகை, திரு. சி. கணபதிப்பிள்ளை ஆ வாழ்க ! வளர்க! எல்லோரு
70, தெற்கு ஆவணி மூலத்தெரு,
Dg6oo Jr.

பருந்திரு
பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் ாம், மதுரை ஆதீனகர்த்தர்)
}ங்கிய
செய்தி
ருமானது இன்னருளால் எல்லா ள் எழுதிய 28-03-86 மடல் ந. குரு மகாசந்நிதானம் அவர்கள் ந்தார்கள். பண்டிதமணி சி. து ஆதீனத்தின் அன்பர். தமிழ் சமுதாயம் இவைகள் வளர்ச்சி குருமகாசந்நிதானம் அவர்களின் 1ண்டவர். குருபக்தியும், இறை மிழ் எழுத்தாளர். தமிழ் இலக்கி கும் தொண்டு அளப்பரியது.
அவதரித்து ஆலவாய் நகரில் $றுவிய தமிழ்த் திருஞான 0ான 292ஆம் குருமணியே! ழ்மக்களை நிரந்தர நிம்மதி குரல் கொடுக்க வேண்டும் ” பண்டிதமணி, நமது பேரன்பர் வார்கள். அவர் புகழ் என்றும் க்கும் ஆசீர்வாதம்.

Page 32
s
(g(ht. I நல்லை திருஞானச
பூநீலழரீ சோமசுந்தர பரமாச
GJIT þj
சைவ மெய்யன்பர்களே,
பண்டிதமணி ஐயாவை நினைவுகூரும் அலை அலையாகப் பிரவாகிக்கின்றன. ஆண்டுகள் வாழ்ந்த சைவப் பெரிய7ருமா ஆற்றிய பணிகள் அளப்பரியன. சொல்ல அருளாளர். டண்டிதர் பட்டம் பெற்றேர் #ழமணித் திருநாட்டிலும் தமிழகத்திலும் அ சித்தாந்த சாஸ்திரங்களைக் கற்றறிந்த கள அமையும். அவர்கள் உருவாக்கிய தமிழறி வழங்கிய ஆசியுரைகள், அணிந்துரைகள் சரிய வாழ்க்கையையே இறுதிவரை கடை அணுகிக் கலைகள் சம்பந்தமான சந்தேக தமிழில் விளக்கம் கூறும் வன்மை அவருக் நாவலர் பெருமான் வழிநின்று தமிழன்னைன அவர்களையே சாரும்.
மரணமிலாப் பெருவாழ்வெய்திய ம ஜீவாத்மா எல்லாம் வல்ல இறைவன் இணை பெருநிலை எய்தவேண்டுமென உளமாரப்
ஓம் சாந்தி ச நல்லூர், யாழ்ப்பாணம்.

ாதம்
ம்பந்தர் ஆதீனம் ஈசிய ஸ்வாமிகள் வழங்கிய
5 துரை
போது அவர்களைப்பற்றிய மனப் பதிவுகள் தமிழ்ப் பெரும் மூதறிஞரும் எண்பத்தேழு வர். அவர்கள் சைவமும் தமிழும் வனர் ாற்றலும் எழுத்தாற்றலும் வாய்க்கப்பெற்ற
பலர் இருப்பினும் பண்டிதமணி என்ருல் ச்சொல் அவர்கனேயே குறிக்கும். வேதாந்த, ஞ்சியம். இப்பெற்றிமை யாருக்குத்தான் ஞர்கள் பலர். அவர்கள் எழுத்தாளர்களுக்கு ஆயிரம், ஆயிரம். ஆடம்பரமில்லாத பிரம டப்பிடித்தொழுகிய தருமசீலர். அவர்களை நிவர்த்தி பெற்றேர் ஏராளம். மிக இலகு கு ஒரு தனிக்கொடை. பூநீலழரீ ஆறுமுக யைத் தனிஉயர் இடத்திருத்திய பெருமை
ஹான்களில் அவருமொருவர். அன்னரின் யடிகளைச் சார்ந்து நிரதிசய, நித்தியானந்தப் பிரார்த்திப்போமாக.
33ll vill!

Page 33
பேரூர வித்துவான் சாந்தலி
வழ
ஆச்
சாந்தலிங்கர் தி தெய்வ ஒண்தீந்தமிழ் எ6 போற்றப்பெறும் நமது மொழ இலங்கையில் யாழ்ப்பாணப்ட இலக்கிய கலாநிதி சிவத்திரு. நிலையில் வைத்து எண்ணத்தக்க அவர்கள் வழியில் இலங்ை இடம்பெற்று, செந்தமிழும் 8 புராணத்தை நுண்மாண் நுண் மூலம் தெளிவாக்கிய செந்நெ நிறைந்த தமிழ்க்கடலாகிய இ வியதில் பல அருஞ்செய்திகை அருண்மிகு சாந்தலிங்க அடிக6 வைராக்கிய சதகம், வைராக் ஆதிய நூல்களை, சிவத்திரு. பித்துப் போற்றி வெளிப்படு யவர்கள் பெரிதும் ஈடுபாடு (
போற்றி நீறணிந்து உரு துள்ளே சாற்று, குருவாதி மூ6 அருள்வழியில் தாமும் தம் 6 காட்டிச் செந்தமிழ் நெறி வளர் தொடர்ந்து நடத்தவேண்டும்.
கலங்கிய இலங்கைத் ஒளிவிளக்குகள் - அவரது இே அவை தமிழுலகில் பரவும் கின்ருேம்.
பேரூர் அஞ்சல், கோயமுத்தூர்.

ாதீனம்
ங்க இராமசாமியடிகள்
ங்கிய
சியுரை
நாண்மலர் வாழ்க
ன்று நமது சமயத்தலைவர்களால் நிக்கு வளம் தந்த தலைவர்களில், குதியில் வாழ்ந்த தமிழ்மூதறிஞர் கணபதிப்பிள்ளையவர்கள் முதல் வர். சிவத்திரு. ஆறுமுகநாவலர் கவாழ் தமிழர்களது உள்ளத்தில் சிவநெறியும் பரப்பியவர். கந்த ழைபுலம் மிக்க தம் ஆய்வின் றியாளர். அடக்கமும் பண்பும் வரை இருமுறை கண்டு அளவளா ன அறியும் வாய்ப்புக் கிட்டியது. 7ார் நூல்களாகிய கொலை மறுத்தல், கிய தீபம், அவிரோத உந்தியார் ஆறுமுகநாவலர் அவர்கள் பதிப் த்தினர். அந்நூல்களில் பிள்ளை கொண்டிருந்தார்.
த்திர சாதனம் பூண்டிடு, ஐந்தெழுத் வுருவையும் தாழ்ந்திறைஞ்சு என்ற மைச் சார்ந்தோரும் ஒமுக வழி த்த அவரது இலக்கியப்பணிகளைத்
தமிழர்களது அவலம் போக்கும் லக்கியச் செறிவார்ந்த உரைகள் - செயல்முறைகள் வளர வாழ்த்து

Page 34
வியாசரன
பிரம்மபூரீ தி. கி. சீதாரா ஆசி
பண்டிதமணி சி. கணபதிப்பி சிஷ்ய பரம்பரையில் உதித்தவர். மோக்தமான சைவத்தையும், தமிழ் e யாகக் கற்றுக்கொண்டதோடு மற் திருநெல்வேலியில் அவர் நடத்தி இலக்கிய இலக்கண வகுப்புக்களை இரவிலுங்கூட இவ்வகுப்புக்கள் ந: ஆனர்கள். சிங்களமொழிப் பயிற்சி சம்ஸ்கிருதப் பயிற்சி வகுப்புக்கும் 6 வைத்தவர் பண்டிதமணி அவர்கள். திரிவேணி சங்கமமாக அந்தக் காவி அப்பாடசாலையை அங்கே நடத்தமுடி நாவலர் சைவப்பிரகாச வித்தியாச ஏற்பாடு செய்தார்.
பண்டிதமணியவர்களைப் பற்றி அவை மறக்க முடியாதன. கொழும் காக நான் யாழ்ப்பாணத்தை விட்டு, மணியிடம் சென்று பிரியாவிடை யெ உங்களை ஒருபோதும் மறக்காது. மாட்டீர்கள். இந்த நாட்டிலேயே இன் எங்களுக்கு உங்கள் தொடர்பு எப்ே கவலைப்பட வேண்டியதில்லை” என் மறுநாள் அதிகாலையில் எதிர்பாராத தந்து விபூதி பெற்றுச் சென்ருர்,
அவர் உயர்ந்த பண்பாளர்.
அந்தணராய்ப் பிரம்மதேஜஸ்லோடு அவர். அவருடைய லக்ஷயங்கள் நிை நினைவுமலர் வெளியீடு சிறப். முருகப்பெருமானைப் பிரார்த்தித்து ஆ வண்ணுர்பண்ணை, யாழ்ப்பாணம்.
ήν

.
சிரோமணி ம சாஸ்திரிகள் வழங்கிய
u|]
ள்ளை அவர்கள் ஆறுமுகநாவலரின் நாவலர் கருத்துப்படியே வேதாக ம்ஸ்கிருத மொழிகளையும் தான் முறை றவ்ர்கள் கற்கவும் வழி வகுத்தவர். ப காவிய பாடசாலையில் உயர்தர நடத்தினர். காலையிலும் மாலையிலும் டைபெற்றதால் பலர் பண்டிதர்கள் க்கும் அங்கு வசதி செய்திருந்தார். 1ணக்கும் நல்ல தொடர்பை ஏற்படுத்தி, மும்மொழிகளும் சங்கமிக்கும் ஒரு ய பாடசாலை விளங்கியது. பின்பு உயாத நிலை ஏற்பட்டபோது, வண்ணை ாலையில் அவ்வகுப்புக்களை நடத்த
ய இனிய நினைவுகள் பலவுண்டு. ]யிலிருந்த என் மகனேடு வசிப்பதற் ப் புறப்படுவதற்கு முதனள், பண்டித ற்றேன். அப்போது, “யாழ்ப்பாணம் நீங்களும் யாழ்ப்பாணத்தை மறக்க ர்னுமோரிடத்தில் இருக்கப் போவதால் பாதும் இருக்கும். ஆகையால் எவரும் று ஆறுதல் சொல்லி அனுப்பினர். விதம் வீட்டுக்கு வந்து காளாஞ்சி
பூணுரல் அணியாவிட்டாலும் ஓர் வாழ்நாள் முழுதும் வாழ்ந்த மகான் றவேற எல்லோரும் முயல வேண்டும். பாக நிறைவேறவேண்டு மென்று பூசி கூறுகிறேன்.

Page 35
யாழ்ப்பாணப் பல்கலை
பேரசிரியர் கலாநிதி அ.
ஆசிச்
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி வெளியீட்டுச் சபையினர், அன்னரின் வெளியிடுவதையிட்டு மிகவும் மகிழ்
சமய குரல7 நால்வருக்குப் பின் விடாமற் பாதுகாத்தவர் நாவலர் அவ: முன்னேடியாக விளங்கியவர் பண்டித கன08னது, காத்திரமானது. அவற்றி திறன் கொண்டது. ஊசியின் வழி ெ ஆசிரியர் பரம்பரை யுண்டு. அப்பரம் தலைமுறையினருக்கும் பயனளிக்கும் வ களே இம் மலர் தாங்கி வருவது வரே
பேராதனைப் பல்கலைக்கழகத் தம் புராண உரைநடையைப் பாராட்டி, தது. பண்டிதமணியின் இலக்கியப் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும் அ அளித்திருந்தது. அந்த வகையில் பண் மிடையே நெருக்கமான தொடர் தமிழ்ப்பணி பற்றிய ஆய்வுகளை எம வேண்டும். அவரது நினைவுமலர் எவ் வெளிவரவேண்டு மென்று வாழ்த்துகி வாழ்த்துக்கள்.
திருநெல்வேலி, யாழ்ப்பாணம். (இலங்கை)

க்கழகத் துணைவேந்தர் துரைராசா அவர்களின்
செய்தி
சி. கணபதிப்பின்னை அவர்களின் நூல் தமிழ்ப்பணி குறித்து மலர் ஒன்றினை }ச்சியடைகின்றேன்.
சைவத்தையும் தமிழையும் அழிய 'கள். நாவலருக்குப் பின் இத்துறையின் மணி அவர்களே. அவரது தமிழ்ப்பணி லும் அவரது மொழிநடை ஆராயுந் சல்லும் நூல் போல அவருக்கென ஓர் )பரையினர்க்கும் எதிர்கால நமது இனம் கையில் பல தமிழறிஞர்களின் கட்டுரை வற்கத் தக்கதே.
ழ்ச் சங்கம், பண்டிதமணியின் கந்த
ஒருமுறை அவருக்கு விழா எடுத்திருந்
பணியைக் கெனரவிக்கும் வகையில் வருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டத்தை ாடிதமணிக்கும் பல்கலைக் கழகங்களுக்கு /ண்டு. எனவே, பண்டிதமணியின் து பல்கலைக் கழகங்கள் மேற்கொன்ன வித இடையூறுமின்றி, நல்ல முறையில் ள்றேன், மலர்க் குழுவினருக்கும் எனது

Page 36
s மாவை ஆதீனகர்த்தா, மஹாராஜபூரீ க. து. ஷண்முகந ஆசி “வருஞ் சந்ததியாரின் நரடி நரம்புகளின் ஒர் உத்தம ஆத்மா கரு இருப்பதற்கு ஏற் புனித ஆத்மா உடம்பெடுக்க நேர்ந்தால் எப் அப்படிப்பட்ட தந்தை தாய் ஆகக்கூடிய பாரிலும், திருவள்ளுவரிலும் பாரதத்திலும் திருமுறைகளுஞ் சிவபுராணங்களும் பயிலு. வைத்திருக்க வேண்டாவா? உலகம் உய்ய தமது நாடும் தலைவர்களுஞ் சிந்திக்கும் ந/ இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. க. சாரம் என்ற தமது நூலில் இவ்வாறு குறி நூல் வெளியீடு 1959, பக்கம் 83)
இதுவரை இத்தகைய வாசகங்களாற் கங்களிற் காணப்படும் உண்மைக் கருத்து ஆனில் ஈடுபட்டவர்களோ யாராவது உணர அன்ருெருநாள் பகமாட்டை உயிரோ வர்களது பாதகச் செய்கையை அது போதனைகள் பிரயோசனமற்றனவாதக் கா டோடினர் ஓர் உத்தம சைவ மகாபுருஷன் * யாழ்ப்பாணத்திலே உவாந்திக்கப் சென்னபட்டணம் என் சென்ம பூமியிற் சமுத்திரமாகிப் பன்றிக்குட்டிக்கும் முலைய திருவருளினலே, சற்றே செளக்கியமாயிருச் சென்னபட்டணத்திலிருந்து தமையன கடிதத்தின் இறுதிப்பகுதியிலேயே மேற்கண் பெருமானுக்குத் தேகவியோகம் சென்ம பூமிய கழித்து நல்லூரில் நாவலர் பெருமானின் 8 கோயில் தெற்கு வீதியில் மெளனஞ்சலின பெயர்ந்தது. பண்டிதமணி அவர்கள் மன சுத்தமான ஆன்மாக்கள் மெளனிகள1. சேர்ந்த பண்டிதமணி அவர்களும் இன்று
எல்லாம் தி அன்னரின் ஆத்ம சாந்தியின் பொரு
மாவிட்டபுரம், தெல்லிப்பழை.

சிவாகம வித்யாபூஷணம் ாதக்குருக்கள் அவர்கள் வழங்கிய
ւյao T
ல் புராணேதிகாச இரத்தத்துக்கு இடமில்லை; ற ஓர் உதரம் இனி இங்கு இல்லை. ஒரு படிப்பட்ட தந்தை தாயர்களை அது நாடும்? வர்கள் நம் சமூகத்தில் உண்டா ? ஒனவை ம், இராமாயணத்திலும் முமுகித் தினத்துத் ம் ஆண்களையும் பெண்களையும் நாம் ஆக்கி ஓர் ஆத்மா கீழ் இறங்குவதெப்படி ? இதை ன் எந்த நானோ ?”
ணபதிப்பிள்ளை அவர்கள் கந்தபுராண கலா ப்பிட்டுள்ளார்கள். (கந்தபுராண கலாசாரம்
கவலைகொண்டவர்களோ அல்லது அவ்வாச க்களை ஆராய்ந்து அதற்கான நன்முயற்சி r ? டு வெட்டி, உணவு சமைத்து, நசி கண்ட மகர பாவம்' என எடுத்துரைத்தும், அப் ணப்பட்டபோது, இந்த நாட்டையே விட் i. பட்ட அகசிப் பிராணியாகிய நான், இச் சிறந்ததென்று சொல்லும்வண்ணம் கிருபர் ருத்தின சர்வசீவ தயாபரராகிய நடேசரது கின்றேன்.” ருக்கு நாவலர் பெருமான் அவர்கள் எழுதிய டவாறு குறிப்பிட்டார்கள். எனினும் நாவலர் லேயே கிடைத்தது. தொண்ணுறு ஆண்டுகள் லை நிறுவப்பட்டது. நல்லூர்க் கந்தசுவாமி ய இயற்றிவந்த நாவலர் சிலையும் நிலை ங் குலைந்தார். கலியுக தர்மம் இருந்தவாறு! 5 மறைகின்றன. நாவலர் பரம்பரையைச்
இல்லை.
சன் செயல். ட்டுத் திருவருளைப் பிரார்த்திப்போமாக.

Page 37
கொழும்புத் தமிழ்ச் சங்கக்
45. S. 3. S. &
GAV p.
வாழ்
இலக்கிய கலாநிதி பண்டிதமணி திரு வுற்ற செய்தி கேட்டுக் கொழும்புத் தமிழ் பண்டிதமணி ஐயா அவர்கள், நூல் அகத்தியனர் வழிவந்த தமிழ் முனிவர். புலவர் பெருமைகளை இக்காலத்தில் அை செயலாலும் சிந்தனையாலும் தமிழ் வளர்த்த
நாவலர் அவர்களுக்குப்பின் அவர் இலங்கைத் தமிழினதும் தமிழ்ப் புலவர்க செய்தவர். பல நூறு தமிழறிஞர்களே உ ழர்களும் தொடர்ந்து வாழ்வாங்கு வாழ் ஆக்கித் தந்துள்ளார்.
இலக்கிய கலாநிதி ஐயா அவர்கள் ராயினும் இக்காலக் கல்வி மரபில் அமைந் ராக விளங்கினர். அனைத்துத் தமிழர்கள் மதிப்புக்கு உரியவர். கண்டார் தொழு
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தோடு நீண் களாகத் தமிழ்ச் சங்கத்தின் முதன்மைக் க கும் பணிகளுக்கும் ஆசியும் ஆதரவும் ே தமிழ் நூலின் வெளியீட்டு விழா யாழ் ஐயா அவர்கள் ஆசியுரை வழங்கியமை
இலக்கிய கலாநிதி பண்டிதமணி வழிகாட்டி நெறிப்படுத்த இனி யாவர் உள
பண்டிதமணி ஐயா அவர்கள் திருவி திருவருள் அவரை ஏற்றுள்ளது. அவர் எ அவரது உயர்ந்த சிந்தனைகள் அனைத்து விளங்க அனைவரும் உழைப்போமா. அ தமிழ்ப் பணிகள் என்றும் வளர்.
6). 7, 57യ്ക്കൂൾ ஒழுங்கை, கொழும்பு - 6.

கெளரவ பொதுச் செயலாளர் ந்தசுவாமி அவர்கள்
ங்கிய
க் துரை
. சி. கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் மறை ச் சங்கம் மிக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. செய்தும் சங்கம் அமைத்தும் தமிழ் வளர்த்த சங்ககாலம் முதல் தொடர்ந்துவரும் தமிழ்ப் னவரும் அறியச் செய்தவர். சொல்லாலும் வர். அவரது வாழ்வு தமிழாகவே இருந்தது. வழிநின்று தமிழும் சைவமும் வளர்த்தவர். ளினதும் பெருமையை உலகம் உணரச் ருவாக்பியுள்ளார். இந்தாட்டில் தமிழும் தமி ந்து நிலைபெறுதற்கு அரிய பல நூல்களே
பண்டைய கல்வி மரபு முறையாகக் கற்றவ த பல்கலைக் கழகங்கள் போற்றும் பேரறிஞ. தும் அனைத்துச் சமுகத்தவர்களதும் பெரு ம் தோற்றத்தினர் : பண்பினர்; அன்பினர். டகாலத் தொடர்பு உள்ளவர். பல ஆண்டு சப்பாளராக விளங்கியவர். சங்க வளர்ச்சிக் பழங்கியவர். சங்கத்தின் ‘பாரதி பிள்ளைத் b நகரில் நிகழ்ந்தபோது இலக்கிய கலாநிதி
என்றும் நிலைத்து நிற்பதாகும்.
ஐயா அவர்களைப் போலத் தமிழுலகுக்கு i என்னும் வின அனைவரையும் உறுத்துகிறது.
பருளுக்குத் தம்மை முற்ருக ஒப்புவித்தவர். ன்றும் இன்புற்றிருக்கப் பிரார்த்திப்போமாக. ம் நிறைவுபெற்று நிலைத்து என்றும் எங்கும் வரது திருப்பெயர் என்றும் வாழ்க, அவரது

Page 38
வீரகேசரி பிர திரு. ஆ. சிவநேசச்செல்
செ
ஈழத்துத் தமிழ் இலக்கிய மரபி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவ துலக்கும் முயற்சிகள் பத்தொன்பதா வகைகளில் நடைபெற்று வந்தன. 8 இவ்வகை முயற்சிகளின் தடங்களைத் கட்டுரைகள் மூலமும் படிமுறையாக பண்டிதமணி அவர்களே ஆவர்.
பண்டிதர் ஐயா அவர்கள் கட தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் தீ ஊன்றிய இலக்கிய விழுதுகள் ஈழ, பரிமாணங்களைத் தோன்ற வைத்துள்: கொழுந்து பண்டிதமணியவர்கள். வி யின் இலக்கிய இரசனை மரபின் செழி ஆர்வலரும் பண்டிதமணியவர்களேய
பிரமகுரியம் பூண்டு தமது வாழ் இலக்கியத்துக்கும் அர்ப்பணித்த பணி பணியின் மூலம் பல்லாயிரக்கணக்கான திருநெல்வேலி சைவ ஆசிரிய கலா: ஆசானகப் பண்டிதர் ஐயர் பணிபுரி ஈழத்துத் தமிழ் இலக்கிய இரசனை
ஆசிரியப் பணியின் தொடர் விளங்கப் பண்டிதர் ஐயா ஆற்றிய யாக அமைந்த பல உண்மைகனைத் வியாக்கியானங்களும், சைவசித்தாந்த நாவலர் பாரம்பரியத்தைப் படிமுறை சைவ சித்தாந்த மரயின் மூலவிசை
பண்டிதர் ஐயாவுடன் இளமை
தந்தையார் எமக்கு உருவாக்கித்
மாணவனுக இருந்த எமது தந்தைய
பெறவேண்டும் என என்னை ஒருமுை
у

தம ஆசிரியர்
வன் அவர்கள் அளித்த
ப்தி
ன் ஆட்டளைக் கல்லாக விளங்கியவர்
ர்கள். ஈழத்து இலக்கிய வழியைத்
ம் நூற்றண்டு முதலாகப் பல்வேறு
தறுண்ட நிலையிலேயே காணப்பட்ட தமது சொற்பொழிவுகள் மூலமும்,
க் காலந்தோறும் தெளியவைத்தவர்
ந்த அரை நூற்ருண்டு காலமாகத் நமது ஆளுமையின் செழுமையால் த்து இலக்கிய மரயிலே பல்வேறு னன. நாவலர் வழி மரயின் கடைசிக் த்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை ப்பினை ஜனரஞ்சகப்படுத்திய இலக்கிய ாவர். ர்வின் முழுமையைச் சமயத்துக்கும், ண்டிதமணியவர்கள் தமது ஆசிரியப் ஏ நல்லாசிரியர்களைத் தோற்றுவித்தார். +ாலை என்ற கல்விக் கோயிலில் தமிழ் 'ந்து ஆற்றிய இலக்கியத் தவம் ” * மரபிற்கு வித்திட்டது. *சியாக மேன்மைகொள் சைவரீதி சமயப் பிரசங்கங்களும், காண்டிகை தெளியவைத்த விருத்தியுரைகளும், மரயின் விளக்கங்களாக அமைந்தன. )யாக விளக்கம் செய்த பணியே
உறுதிபெற வழிவகுத்தது.
முதல் பழகும் வாய்ப்பை எமது தந்தார். சைவாசிரிய கலாசாலையில் ார் பண்டிதர் ஐயாவிடம் ஆசீர்வாதம் ற அழைத்துச் சென்ருர், அதிபர்

Page 39
சுவாமிநாதன், உட அதிபர் கைல பும் அப்பொழுது சந்தித்தமை இ போடுகின்றது.
அந்த மாபெரும் மனிதர்க சைவாசிரிய கலாசாலை ஒரு மாபெ அது. 1ண்டிதர் ஐயா சிறிய குடு இள1ை0 ததும்பும் தோற்றத்துடனு வைத்திருந்த கற்கண்டுக் கட்டின இனிமையானது 'படி, நன்கு படி
நான்காவது தமிழ் மகாநாடு தி நடைபெற்றது. பண்டிதமணி அந் பேசிய காட்சியும் மனக்கண்முன்
பல்கலைக்கழகப் படிப்பிற்குத் 6 முதலாவது வேலையாகப் பண்டிதர்ஐ அழைத்துச் சென்ருர், அப்பொழுது வசனங்கள் இன்றும் நெஞ்சை நெகி
“ஆறுமுகம், தமிழ் இவனை வ தும் உண்மை, நாமொன்றும் அறி குறுஞ் சிரிப்புடன் சொல்லி வாழ்த்
தொடர்ச்சியாக ஒவ்வொரு நி: துக்கள் நிழலாக இருந்தமை எமது மாகும்.
பத்திரிகை உலகில் காலடி ஐயாவின் வீட்டிற்குச் சென்றேன்.
அவர் எனது கரங்களை வருடியவண் * எழுத்து, நிதானம், தேவை ’.
பண்டிதர் ஐயாவின் சிந்தனைக் இன்று ஆழமாக விழுதுன்றியுள்ளன தமிழ் மரபைப் பேணிக்காப்பது களினதும் கடனுகும்.
24, லில்லி அவெனியு, வெள்ளவத்தை.

KXX
'சதி, பண்டிதர் ஐயா ஆகிய மூவரை ப்பொழுது எம் மனக்கண்முன் இழை
ளின் அரவணைப்பில் திருநெல்வேலி ரும் அறிவாலயமாக விளங்கிய காலம் மியுடனும் சந்தனப் பொட்டுடனும் ம் இருந்தார். அப்பொழுது கையில் }யத் தந்து தமிழ் இதிலும் பார்க்க ", என ஆசீர்வாதம் செய்தார்.
நநெல்வேலி பரமேசுவரக் கல்லூரியில் த விழாவிலே சிறு குடுமி அசையப் நிற்கின்றது.
தெரிவு செய்யப்பட்டபோது தந்தையார் யாவிடம் என்னைச் சைக்கிள் வண்டியில் பண்டிதர் ஐயா அரவணைத்துக் கூறிய ழே வைக்கின்றன.
ாழவைக்கும். எப்பவோ முடிந்தது, முழு யோம்” என்ற ஆப் த வாக்கியங்களைக் த்தினர்கள். லயிலும் பண்டிதர் ஐயாவின் வாழ்த் தந்தையார் அளித்த அருஞ் செல்வ
எடுத்துவைக்க முன்னரும் பண்டிதர் மெளன தவமுனிவராகக் காட்சியளித்த "ணம் மூன்று சொற்களைச் சொன்னர்.
கருவூலங்கள் எமது இலக்கிய மரபில் 1. அவர் விட்டுச்சென்ற வழியிலே அவர்தம் மாணவர்களினதும், ஆர்வலர்

Page 40
&
யாழ் மாவட்டக் கி திரு. வெற்றிவேலு சப
ஆசிச்
மேற்படி 10லருக்கு ஆசிச்செய்தி வழ எனது கிராமமாகிய திருநெல்வேலியில் ப தமிழுக்கும், சமயத்துக்கும் அரும்பெரும் 19ாகக் கொண்ட இவர் திருநெல்வேலியைத் தமது வாழ்க்கையை நடத்தினர்.
ஆரம்பத்தில் இவர் எனது பெரியதாயார் அவரைக் காணக்கூடிய சந்தர்ப்பங்கள் பல பெற்ற மேதை என்று கூறலாம். சிலேை வன்மை வாய்ந்தவர். திருநெல்வேலி ஆசி 1ாகக் கடமையாற்றிய காலத்தில் நிகழ் குறிப்பிட விருமபுகிறேன்.
ஒருமுறை மாவட்டப் பாடசாலைப் ப பரிசோதிக்கச் சென்றிருந்தார். பண்டித பயிற்சியாளர்களைப் பரிசோதிக்கத் ெ காத்திருந்த பயிற்சியாளர்கள் வேட்டி, அழகுறக் காட்சி அளித்தனர். பரிசோதகர் இவர்கள் சால்வை அணிந்துள்ளார்கள் என் எதற்கு உதவும் ?” எனக் கேட்டார். இக் யாளர்கள் வகுப்பில் திகைத்து நின்றனர். முதலாம் ஆசனத்தில் இருந்த பயிற்சிய சால்வையை உபயோகப்படுத்துவார்கள். அ, சால்வையை வேட்டிக்கு உறுதுணையாகக் பின் உபயோகத்தை எடுத்து உரைத்தார். உணர்ந்த பரிசோதகர் பரிசோதனையைக் கை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் வேலன் தவத்திரு குன்றக்குடி அடிகனார் அவர்கள் செய்வதானல் இறைவரைப் பூசை செ * இறைவர்களாக’ ஆகவேண்டிய கட்டம் எடுத்துரைத்துப் பலரின் கரகோஷத்தைப் பெ தமிழ்நாட்டில் இருந்துவரும் அறிஞர்க தித்து உரையாடுவது வழக்கம், அவர்கள் ட அறிந்து இருந்தரர்கள். பண்டிதமணியிட னாகத் திகழ்கிருச்கள். பண்டிதமணியின் பூத முடல் ஞாலத்தில் எஞ்ஞான்றும் நிலைத்திருக்கு அறிவுரைகளையும் வெளியிட்டுத் தமிமுலகிற் நூல் வெளியீட்டுச் சபையிடம் மிகப் பணி
கல்வித் திணைக்களம், நல்லூர், யாழ்ப்பாணம்.

. iல்விப் பணிப்பாளர் நாயகம் அவர்களது
செய்தி
ங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ண்டிதமணி பல்லாண்டு காலம் வாழ்ந்து தொண்டாற்றினர். மட்டுவிலைப் பிறப்பிட தமக்குத் திரு (நல்) வேலியாக அமைத்துத்
'ன் வீட்டில் இருந்த காரணத்தால் எனக்கு 2 நேர்ந்தன. இவர் ஆழ்ந்த தமிழ் அறிவு டயாகவும், நகைச்சுவையாகவும் கதைக்கும் சிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையான த ஒரு சுவையான சம்பவத்தை இங்கு
சிசோதகர் ஒருவர் பயிற்சிக் கலாசாலையைப் மணியின் தமிழ் வகுப்பிற் புகுந்து தாடங்கினர். அவரின் வருகைக்காகக் நாசனல், சால்வை என்பன அணிந்து தான் விஜயம் செய்த காரணத்தினுல்தான் பதை அறிந்து முதலாம் வினவாக *சால்வை கேள்வியைச் சற்றும் எதிர்பாராத பயிற்சி இதனைக் கண்ணுற்ற பண்டிதமணி அவர்கள் 1ளரைப் பார்த்து “அரிசி கட்டுவதற்குச் ங்கப்பிரதட்சணம் செய்யப் போவோர்களும் கட்டுவர்” எனப் பல வகையில் சால்வை இவரின் விரிசிந்தனைப் பிரயோகத்தை விட்டு வேறு வகுப்பிற்குச் சென்றுவிட்டார். ணயில் நடைபெற்ற சமயவிழா ஒன்றில் உரையாற்றிய கூட்டத்தில், தமிழிற் பூசை ய்கின்ற பூசகர்கள் தொழில் இல்லாமல் ஏற்படும் என்று குன்றக்குடி அடிகளாருக்கு ற்ருர், ள் பலரும் பண்டிதமணி அவர்களைச் சந் 1ண்டிதமணியின் வித்துவத்தன்மையை நன்கு ம் கற்றவர்கள் பலர், தமிழில் மேதைக வுடல் இல்லாவிட்டாலும் அவருடைய புக }ம். இவர் ஆக்கிய நூல்களையும், ஆற்றிய தத் தந்துதவ வேண்டுமெனப் பண்டிதமணி வன்புடன் வேண்டிக்கொள்ளுர்கிறேன்.

Page 41
கொழும்பு விவேகான கெளரவ பெ
திரு. க. இராஜபுவன
ஆசிச்
02-04-86 அன்று நடை.ெ
கூட்டத்தில் பண்டிதமணியின் தீர்மானம் வருமாறு :
* எமது சபையின் கெளரவ பேரறிஞருமான இலக்கிய கல/ பிள்ளை அவர்கள் சிவபதம் ஆ யுற்ருேம். பூநீலழறீ ஆறுமுகநா பிரமசாரியாய் வாழ்ந்து, தமி திற்கும் பண்டிதமணி ஆற்றிய
பண்டிதமணி அவர்கள் விே தொடர்பு கொண்டு, தம்மாலா நல்கி வந்துள்ளார்.
இறையடி எய்திய பண் ஆசிரியர்க்கு, ஆசிரியனப் வ சாந்தியடையப் பிரார்த்திப்பது குடும்பத்தினர், மாணவர், அட ஆழ்ந்த அநுதாயத்தைத் தெ
விவேகானந்த சபை,
34, விவேகானந்த மேடு, கொழும்பு - 13.

னந்தசபையின் சார்பில் ாதுச்செயலாளர் ரீஸ்வரன் அவர்களின்
செய்தி
பற்ற எமது முகாமைச்சபையின் மறைவு குறித்து எடுக்கப்பட்ட
உறுப்பினரும், சைவத் தமிழ்ப் நிதி, பண்டிதமணி சி. கணபதிப் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி வலரின் வழியிலே நைட்டிகப் ழ் மொழிக்கும் சைவ சமயத் ப சேவைகள் அளப்பில.
வகானந்த சபையுடன் நெருங்கிய 'ன தொண்டுகளை அவ்வப்போது
டிதமணி அவர்கள் பல்லாயிரம் 1ழ்ந்தவர். அன்னரின் ஆன்மா துடன், அவரை இழந்த அவரின் பிமானிகள் அனைவருக்கும் எமது ரிவித்துக்கொள்ளுகிருேம்.”

Page 42
தினபதி, சிந்தாமணி திரு. எஸ். டி. சிவநாயகம் தெய்வத் தமிழைப் பிழை இ ஒரு தவம். இந்தத் தவத்திலே சிற நகர் தந்த ஆறுமுக நாவலர் இன எழுத்துப் பிழைகள் இல்லாமல் அ
அவருடைய இந்தத் தமிழ்த் குமாரசுவாமிப் புலவர். கன்னகம் கு அறிஞராக விளங்கியவர்கள் பலர். ஆ வர்கள். ஒருவர், தொல்காப்பியத்துக்கு மகாவித்துவான் சி. கணேசையர்அவர் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பி களப்பிலே தோன்றிய புலவர்மணி 6 இந்த இருவரும் ஒரு கொம்பி ஏனென்ருல், இவர்கள் இருவரும் ஒ6 ஒரே சமயத்தில் குமாரசுவாமிப் புல பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஈடு இணையற்றவராக விளங்கினர். அவர்கள் கவிதை பாடுவதிலே ஒ திகழ்ந்தார். ஒருவர் வடக்கிலும், மற் தமிழ்ப்பணி ஆற்றினர்கள். இருவரு விரிவுரையானர்களாக இருந்து, ஆயி அறிஞர்களாக ஆக்கி வெளியேற்றிரு வல்லவர்களாக இருந்தார்கள். ஒருவி அழகொமுகப் பேசினர். இறுதிக் க தாலும், சிந்தனையாலும் இணைபிரிய தார்கள. ஒருவர் கநதபுராணம, கமட மற்றவர் பகவத் கீதையை வெண்ட பண்டிதமணி அவர்களை நான் மு ஆண்டு. அப்போது நான் ஒரு இஃ ஆசிரியராக இருந்தேன். பண்டிதம சைவமங்கையர் கழக மண்டபத்தில் பிரச்சினைக்குரிய பேச்சின்போதுதான் இருந்து மாறுபட்ட ஒரு கருத்தினை
பழைய தலைமுறையில், பழை போதிலும், புரட்சிகரமான புதிய சிற் பண்டிதமணி ஆன பதிப்பிள்ளை. அது துணிகரமாகவும் எடுத்துரைத்தார்.
W

ரி பிரதம ஆசிரியர்
அவர்களின் பாரட்டுரை ல்லாமல் பேசுவது, எழுதுவது என்பது ந்து விளங்கிய ஒரு சிரேஷ்டர் நல்லை க்கண சுத்தமாக அவர் பேசிர்ை: 2) ii bf iii)as?bot f'pj5oFu Film ii.
தவ மரயிலே வந்தவர் சுன்னகம் மாரசுவாமிப் புலவரிடம் தமிழ் கற்று yவர்களில் மூவர் குறிப்பிடத் தக்க ஒப்புவமையற்ற உரைகண்டவரான கள். மற்ற இருவரில் ஒருவர், இலக்கிய ள்ளை அவர்கள். மூன்ருமவர், மட்டக் 7. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள். லே பூத்த இரு இலக்கிய மலர்கள். *ருக ஒரு வகுப்பிலே பயின்றவர்கள். வரிடம் பாடம் கேட்டவர்கள்.
அவர்கள் தமிழ் வசன நடையிலே
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை
ப்யாரும் மிக்காரும் இல்லாதவராகத் றவர் கிழக்கிலும் இருந்து நிறைவான ம் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் 'ரமாயிரம் தமிழ் ஆசிரியர்களைத் தமிழ் றர்கள். இருவரும் மேடைப் பேச்சில் Jர் ஆழமாகப் பேசினர். மற்றவர் 1லம் வரை இந்த இருவரும் எண்ணத் 7 இலக்கிய நண்பர்களாகவே வாழ்த் ராமாயணம் பற்றி நூல்கள் எழுதினர். ரவாகப் பாடினர். மதன்முதலாகத் தரிசித்தது 1948ஆம் ாஞனக, தினகரன் நாளிதழில் உதவி 0ணி அவர்கள் கொழும்புக்கு வந்து
சொற்பெருக்காற்றினர்கள். அந்தப் அவர் மகாகவி பாரதியாரின் கருத்தில் வெளியிட்டார்.
மைத் தமிழ் பயின்றவராக இருந்த தனைகளை உடையவராக விளங்கினர் மட்டுமன்றி, புரட்சிக் கருத்துக்களைத்

Page 43
அள்ளும் சிலப்பதி காரமெ யாரம் படைத்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியார் பாடியிரு மணி அவர்கள் குறிப்பிட்டு, ‘சில: சைக் கொடுப்போமேயன்றி, காவியந கொடுக்க முடியாது. வேண்டுமானல் குண்டைத் துக்கிப் போட்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் சிலப் ஆராய்ந்த அந்தத் தமிழ் அறிஞர். செய்த தவற்றுக்காக, தவறே செய் மாநகரத்தையும் எரித்த கண்ணகியின் என வாதிட்டார். கண்ணகி என்ற னின் பண்போடு உடைக்கப்படவில் பண்டிதமணியின் வாதம் அன் கொண்டிருந்த எனக்கு மிகவும் பிடித் ஏறக்குறைய முழுமையாக எழுதித் தின் அதன் பின்னர் அந்தப் பேச்சு இ இலக்கி சர்ச்சையை ஏற்படுத்தும் ( வந்தது.
பண்டிதமணி அவர்கள் கொழு நாளல் இருந்தே இந்த நாள்வரை : மும் எனக்கு மிகுந்த ஈடுபாடு ஏற். நான் மட்டக்களப்பில் இருந்த பெரியதம்பிப்பிள்ளை அவர்களிடம் பெற்றவன். அதனல், புலவர்மணிய யிடமும் மிகுந்த பற்றும் பாசமும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை தமிழ் கற்ற அறிஞர்களை இன்று ந 10ல்ல, சைவ சமயத்திலும் அவர்
அப்படியான ஒரு அறிஞரை நீ வெளியிட அவருடைய உத்தம மாரு 1ாகவும், எழுத்தராகவும் விளங்கிய திருக்கிருர்.
அவருடைய இம் முயற்சி மிக இந்தப் பணியை நான் மிகவும் பாராட்டும் என்பதில் எனக்கு ஐயம் 5, குணசேன மாவத்தை, கொழும்பு 12.

xxiv
. நெஞ்சை ன்ருேர்-மணி
நக்கிருர், இந்த வரிகளைப் பண்டித பதிகாரம் என்ற காவியத்துக்கு நெஞ் /யகியான கண்ணகிக்கு நாம் நெஞ்சைக் காதைக் கொடுப்போம்” என்று ஒரு
பதிகாரக் கதையை எடுத்து அலசி ‘பாண்டியன் என்ற ஒரு மன்னன் யாத மதுரையின் மக்களையும், மதுரை செயல் பத்தினித்தனமானது அன்று” அந்தப் பாத்திரம் ஒரு தமிழ்ப் பெண் ல்லை என்று துணிந்து சொன்னர். 1று பகுத்தறிவுக் கொள்கைப் பற்றுக் தம/னதாக இருந்தது. அவர் யேச்சை எகரன் பத்திரிகையில் வெளியிட்டேன். ந் நாட்டிலும், தமிழ் நாட்டிலும் ஒரு பேச்சாகப் பல வருடங்கள் அடிபட்டு
ழம்பில் சொற்பொழிவாற்றிய அந்த அவரிடமும், அவர்தம் கருத்துக்களிட படலாயிற்று.
காலத்தில் சிறிது காலம் புலவர்மணி நேரில் தமிழ் கற்கும் வாய்ப்புப் பின் இணை அறிஞரான பண்டிதமணி
எனக்கு வளரலாயின. அவர்களைப் போலத் துறைதோயத் ாம் காண்டது அரிது. தமிழில் மட்டு பெரும் பேரறிஞராக விளங்கினர். ங்ேகாது நினைக்கும்படியாக ஒரு மலரை ணுக்கராகவும், சீடராகவும், உதவியான வரான திரு. அ. பஞ்சாட்ச1ம் முன்வந்
உயர்வானது, சிறந்தது. அவருடைய பாராட்டுகின்றேன். தமிழ் உலகமும்

Page 44
டு
சைவாசிரிய கலாசாலை முன் மட்டுவில் பிரமயூரீ த. கர்
கடபுச வண்ண நாவலர் பாடசாலையில் ஒரு சாலையில் பண்டிதமணி அவர்கள் கற்கு! மூன்று ஆண்டுகள் கல்வி கற்றேன். அட் சென்று பண்டிதருடன் பழகும் வாய்ப்புக் அறிந்தபின்னர் ஊர்த்தொடர்பும் ஒரு காரண
so i --
:് ೨ಜ್ಪ: Pಶ 0
& ஒரு வாங்கு. வடககல ஒரு வாங்கு பூரீமத் அ. குமரரசுவாமிப் புலவர் அவர்கள் வி ம/னேஜர் பூரீமத் த. கைலாசபிள்ளை அவர்க ஐயரும், வடக்கு வாங்கில் சி. கணபதிப்பி தரங்கு மேடை போலக் காட்சியளிக்கும். பு கல்வித் தொடர்பு சி கணபதிப்பிள்ளை அ புண்ணியம் என்றே சொல்லவேண்டும். க 1ான பின்னர் பயிற்சிபெற்ற ஆசிரியருமாஞ
மேடைப் பேச்சில் அப்பொழுது முதன் சிவம் அவர்கள். அவரது பேச்சு வன்மை விஜயம்செய்திருந்த திரு. வி. க. அவர்கள் சிவம் அவர்களது மேடைப் ப்ேச்சுமுை பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்கள். செ1 சுவாமிப்புலவர் அவர்கள். புலவரவர்களது ெ மாணவரான கணபதிப்பிள்ளை அவர்களும்
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை, சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது. அதிபர் கைலாசபதி, பண்டிதர் சி. கணபதிப்பிள் வாய்த்தமை யான் பெற்ற பாக்கியம் என்றே மிகையாகாது. நாவலர் பாடசாலையில் பண் சைவாசிரிய கலாசாலையில் முதுமை பெற கொண்ட கருத்து இன்பத்துக்கு எல்லையே !
நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும்,
அாரியரைப் போல் வாழ்விலும் விளங்கியவர் அவர்கள்.
மூதறிஞர், இலக்கிய கலாநிதி, பன் மேதா விலாசத்தை எடுத்து விளக்கும் வகை குக்குக் கிடைத்தற்கரியதொரு கருவூலம் எ6
கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில்

ானைநாள் விரிவுரையாளர் ந்தசாமி ஐயர் அவர்களது
செய்தி
பகுதியாக அமைந்திருந்த காவிய டாட காலத்தில், நான் நாவலர் பாடசாலையில் பொழுது காவிய பாடசாலை அறைக்குச் கிடைத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் மாக அமையவே இனம் நண்பர்கனானுேம்,
மேற்கில் ஒரு கதிரை. தெற்கில் ஒரு கதிரை. , மேற்கில் அமைந்த கதிரையில் சுன்னகம் ரீற்றிருப்பார். தெற்கில் அமைந்த கதிரையில் ளும், கிழக்கில் உளன வாங்கில் குருமூர்த்தி 'ள்னேயும் இருப்பார்கள். வகுப்பு ஒரு கருத் லவர் அவர்களதும் மானேஜர் அவர்களதும் வர்களுக்கு ஏற்பட்டமை நம் நாடு செய்த ணபதிப்பிள்ளை அவர்கள் மதுரைப் பண்டித οή.
மை பெற்றிருந்தவர் கவிஞர் வே. மகாலிங்க யைக் கோப்புப் ஆசிரியர் கலாசாலைக்கு
வெகுவாகப் பாராட்டினர்கள். மகாலிங்க றயை அப்படியே கற்றுக்கொண்டார்கள் ால்விற்பத்தியில் மிகமிகச் சிறந்தவர் குமார சொல் விற்பத்தி முறையைப் புலவரவர்களின் மிகவும் திறமையாகக் கையாண்டார்கள்.
பில் பதினெட்டாண்டுகள் பணிபுரியும் ஒரு சி. சுவாமிநாதன், உப அதிபர் பொ. ளே ஆகியவர்களுடன் சேர்ந்து உழைக்க ற கூறலாம். அது ஒரு பொற்காலம் என்ருல் ாடிதர்வர்களுடன் நான் கொண்ட இன நட்பு, bறது. கல்வித்துறையில் நான் பரிமாறிக் இல்லை. விரிக்கின் பாரதமரய்விடும்.
அறிவு விசாலமும் பொருந்திய பீஷ்மரச் கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களது யில் வெளிவருகின்ற நினைவு மலர் தமிமுல ன்பதே எனது பணிவான கருத்தாகும்.

Page 45
பண்டிதமணி நூல் வெளி பண்டிதர் ச. சிதம்ப
பிரார்த்த
அகண்ட பிரமசரியத்துடன் = பெற முயலும் யதிகள்-பிறர் எவ: யையே தங்கள் உலக வாழ்க்கை சிவஞானிகள் என்றிவ்வாறு வழங்கு நிற்பவர்கள் கலிமுதிர்ந்த இக்காலத் பண்டிதமணி யவர்களிடம் அத்து நீண்டகாலம் -ஒரு 'மஹிமை'யை
மரணுக்கர் மத்தியில் அவர் நல்ல தலைவரென் றடியார் தம்மடி ே திருவாக்கு என்னிடம் எழுந்து கண் கூர்ந்து நோக்க * அறிவரியான் றன் வெளிப்பட்டு,
* அறிவரியான் றனையறிய யா அங்கங்கே யுயிர்க்குயிரா செறிதலினுற் றிருவேடஞ் சிவ சிவோகம்பா விக்குமத்தா குறியதனு லிதயத்தே யரனைக் சொள்கையினு லரணுவர் கெறியதனுற் சிவமேயாய் நின்ற
* நேசத்தாற் ருேழுதெழுமி
என்று என் செவியில் உபதேசஞ் இவ்வாறு வளர்கின்றதே ! !
செனன மொன்றிலே சீவன்( பரமுத்தி யடையுமாறு சிவபெரும1
குரு லிங்க சங்கம சேவை எடு
பண்டிதமணியின் ஞானபரம்ப
* மேன்மைகொன் சைவ நீதி
தலைகாட்டி, வேலணை.

.ெ
ரியீட்டுச் சபையின் தலைவர் ரப்பிள்ளை அவர்களது
னே உரை
அரணியத்தில் வாழ்ந்து சிவசம்பந்தம் லுக்குட்படாதவர்கள்-ஆத்ம வாழ்க்கை யாகக் கொண்டு சஞ்சரிப்பவர்கள்கப்படும் சொற்களுக்குப் பொருளாகி திலும் உளர் என்பதற்குச் சான்ருகிய விதியாகி நாற்பத்தைந்து வருஷம்அநுபவித்துத் தளிர்க்கின்றேன் !!
வீற்றிருக்கும் பொழுது தாயினும் போற்றிசைப் பார்கள்’ என்ற சம்பந்தர் னிர் தரும். அப்பொழுது அவரைக் எயறிய ’ என்னும் சித்தியார்ச் செய்யுள்
க்கை பாக்கி
யறிவுகொடுத் தருளாற் னுருவே யாகுஞ் ற் சிவனு மாவர்
(ກ-Gນ
ନିର୍ଣ୍ଣ; * 5pito j35 D!p! Iடுவர்” (என்றல்; ன்ே பாசத்தாள் விடவே.
செய்யும் !! என் சிவ புண்ணியம்
முத்தராகும் "லகூஜியமுடைய இவர் னைப் பிரார்த்திப்போம்.
கும் பொலிக,
ரை வளர்க.
விளங்குக உலக மெல்லாம்.

Page 46
தனங்கிளப்பில் பண்டிதமணி அவர்களது காரைத்து விநாயகர் ஆலய மேற்கு விதி நீராடும் கேணியும், பண்டிதமணி அவர் காரைத்தூ விநாயகர், உற்சவமூர்த்தி. மூலமூர்த்தி. ஆலயத்தின் முன்புறத் தோற்றம் ,
 
 

இல்லம் அமைந்திருந்த இடம் , Fயில் உள்ள நல்ல தண்ணிர்க் கிணறு.
கள் ஆறி இருந்த ஆல விருகூழ் மும் .

Page 47
தனங்கிளப்பில் பண்டிதமணி அவர்களது ஆசிரமம்
சஷ்டியப்த பூர்த்திக் காலத்திற் பண்டிதமணி அவர்களது முழுமையான தோற்றம்
 
 

திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைந்திருக்கும் பண்டிதமணி இல்லம்
பிற்காலத்திற் பண்டிதமணி அவர்களை நன்கு போஷித்து வந்த திரு. சி. சதாசிவம் குடும்பத்தின

Page 48
இலக்கிய கலாநிதி, பண்டி
பேராசிரியர், கலாநிதி சுப்பிரமணி துணைவேந்தர், யாழ்ப்ப
ஒருவருடைய சால்பு என்பது அவர் வாழ்க்கைபற்றிக் கொண்டிருக்கும் நோக்கை யும் வாழும் முறைமையையும் அவை சமு தாயத்துக்குப் பயன்படுமாற்றையும் அடிப் படையாகக் கொண்டே மதிப்பிடற்பால தாகும். வாழ்க்கையின் நோக்கம் சமுதாயத் துக்குப் பயன்படுதலே என்ற கோட்பாட்டின ராய்த் தானும் வாழ்ந்து, பிறர் வாழ வழி காட்டியும் நிற்கும் ஒருவரே சால்புடைய வ ராக-சான்ருேராக-மதிக்கப்படுகிருர் . இத் தகையோரே வரலாற்றை உருவாக்குகின் றனர். இவர்களே "உரையும் பாட்டும் உடையோ?ராகி வரலாறும் ஆகின்றனர். இவ்வாறு எமது காலப் பகுதியில் வாழ்ந்து வரலாறு ஆகிவிட்டவர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்.
தமிழ், சிமயம், தத்துவம் என்பவற்றை ஆராய்வதையும்,அவ்வாறு ஆராய்ந்து கண்ட வற்றை மாணுக்கர்க்குப் போதிப்பதையும், பொதுமக்களுக்கு நல்லறிவுச்சுடர் கொளுத்து வதையும் நோக்காகக் கொண்டு, அதற்கு வாய்ப்பாகப் பிரமசரிய விரதம் பூண்டு, அரை நூற்ருண்டுக்கு மேலாக அவர் ஆற்றி வந்துள்ள பணிகள் அவரை நமது தலைமுறை யின் முதுபெரும் சான்ருேர் என்ற நிலைக்கு இட்டுவந்தன; மூதறிஞர் என்ற தகுதிப் பாட்டையும் அவருக்கு எய்த வைத்தலும் அன்னர் ஆற்றி வந்துள்ள பணிகளின் இயல்பை விளங்கிக் கொள்வதும், அவற்றின் பெறுபேறுகளை மதிப்பிடுவதும், அவற்றுக்குக் களமாக அமைந்த சூழ்நிலைகளைத் தெளிவு படுத்திக் கொள்வதும், அவற்றின் வரலாற் றுத் தொடர்ச்சியை இனங் கண்டுகொள் வதும் இன்றைய ஆய்வுத் தேவைகள் ஆகி விட்டன. இத்தகைய விரிநிலை ஆய்வுகட்குப் பயன்படத்தக்க வகையில் அன்னர் தொடர் பான எமது தலைமுறைச் சிந்தனைகளையும் நோக்கு நிலைகளையும் பதிவுசெய்து வைத்தல் எமது கடனுகிறது.

தமணி சி. கணபதிப்பிள்ளை
பம் வித்தியானந்தன் அவர்கள் ாணப் பல்கலைக் கழகம்
பண்டிதமணி என்றவுடன் உடனடியாக எமக்கு நினைவில் வருவது பூரீலபூரீ ஆறுமுக நாவலர் பெருமான் வழிவந்த சைவத் தமிழ்க் கல்விப் பாரம்பரியமாகும். அந்நிய சமய ஆதிக்கம் ஈழத் தமிழர் பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்த முற்பட்ட ஒரு சூழலில் அதற்கெதிராகச் சைவக் காவலராக முன் னின்று இயக்கம் நடத்திய தலைமகன் பூரீலழறி ஆறுமுகநாவலர் அவர்கள். அவர் அப் பேரியக்கத்திற்குத் தமது கருவியாகத் தமிழ்க் கல்வியை வளர்த்தவர். அவ்வாறு அவர் வளர்த்த தமிழ்க் கல்வி மரபை தமது தலை முறையுடன் இணைத்து நின்ற வரலாற்றுப் பாத்திரமாக அமைந்தவர் பண்டிதமணி யவர்கள். நாவலரின் மாணவர்களாகிய சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர், த. கைலாசபிள்ளை ஆகியோரிடம் பாடங் கேட்டவர் என்ற வகையில் நாவலரின் கல்வி மரபு பண்டிதமணியவர்களுக்கு முதுசொத் தாகும். நமது தலைமுறைக்கு அம் முதுசொத் தைக் காப்பாற்றித் தந்த பெருமை அவருக்கு உரியது.
யாழ்ப்பாண மாவட்டத்திலே மட்டுவிற் கிராமத்திலே 1899ஆம் ஆண்டு ஆனி மாதம் 27ஆம் நாள் பிறந்த சி. கணபதிப்பிள்ளை அவர்கள் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை யவர்களாலே தொடக்கி வைக்கப்பெற்ற சந்திரமௌலீஸ்வரர் வித்தியாசாலையிலே தன் ஆரம்பக் கல்வியைப் பெற்று, பின்னர் யாழ்ப்பாணம்வண்ணுர்பண்ணையிலே பூரீலழறி ஆறுமுகநாவலர் பெருமானல் தொடக்கி வைக்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியா சாலையிற் குமாரசுவாமிப் புலவரிடமும் த. கைலாசபிள்ளையிடமும் கல்வி பயின் றவர்; 1926ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டித பரீட்சை யிற் சித்தியெய்தித் தமிழ்ப்பண்டிதரானவர். பின்னர் 1929இல் திருநெல்வேலிச் சைவா சிரிய பயிற்சிக் கலாசாலையிலே தமிழ்ப்

Page 49
பேராசிரியர் பதவியேற்று, முப்பது ஆண்டு கள் பணியாற்றியவர். அன்றைய ஈழத்தின் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கல்விக் கான உயர்பீடமாக அமைந்த அக் கலாசாலை பண்டிதர் கணபதிப்பிள்ளையவர்களின் ஆளு மையின் வளர்ச்சிக்குப் பல வகையிலும் களமாகஅமைந்தது.அவரைப் “பண்டிதமணி என்ற சிறப்பு நிலைக்கு இட்டு வந்தது. அங்கு பணியாற்றிய காலப்பகுதியிலே பண்டிதமணி அவர்கள் தகுதிவாய்ந்த மாணவ பரம் பரையை உருவாக்கி நாவலர் மரபை அருத் தொடர்ச்சியாக வளர்த்தெடுத்தார். அவ் வாறு அவரால் உருவாக்கப்பட்ட மாணவ பரம்பரை அவரூடாகச் பூரீலபூரீ நாவலர் பெருமானைத் தரிசித்தது.
பண்டிதமணியவர்கள் ஆசிரிய கலா சாலைப் பேராசானகப் பணியாற்றிய காலப் பகுதியிலே அங்கும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையிலும் பணியாற்றிய இரு பேரறி ஞர்களது தொடர்பு அவரின் ஆளுமை மேலும் பிரகாசிக்கத் துணைபுரிந்தது. ஒருவர் "உப அதிபர்” என்ற சுட்டாற் குறிக்கப்படும் பொ. கைலாசபதி அவர்கள். மற்றவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலைப் பண்டிதர் வே. மகாலிங்கசிவம் அவர்கள். கைலாசபதி அவர்கள் சைவசித்தாந்தத்திலே துறை தோய்ந்த புலமையாளர். மகாலிங்கசிவம் தமிழிலே அத்தகு வல்லவர், நாவலரின் மானுக்கர்களுடாகப் பண்டிதமணியவர்கள் பெற்றிருந்த சைவத் தமிழ் ஞானம் கைலாசபதி, மகாலிங்கசிவம் ஆகியோரது கூட்டுறவினுல் புதிய செழுமை பெற்றது. இத்தகைய ஞானச் செழுமையின் பெறு பேறுகளாகவே அவரது சிந்தனைகள், ஆக்கங் கள் என்பன அமைந்தன. மேடைப் பேச்சு, வானுெலி உரை, பத்திரிகைக் கட்டுரை, நூல் வெளியீடு, உரையாக்கம் ஆகிய பல் வேறு துறைகளினூடாகப் பண்டிதமணி யவர்கள் தமது சிந்தனைகளை வாரி வழங்கினர்.
பண்டிதமணியவர்களின் முனைப்பாக நின்ற கூறுகளை மூவகைப்படுத்தலாம். ஒன்று சமயமும் தத்துவமும்; இன்னென்று சமூகமும் பண்பாடும்; மூன்ருவது இலக்கிய இரசனை. இவற்றுள்ளும் முனைப்பாகத் திகழ்வது சமய தத்துவ சிந்தனையேயாம். தமிழர்

தத்துவம் எனச் சிறப்பாகப் பேசப்படும் சைவசித்தாந்தத்தின் பொருள் நுட்பங்களை மெய்கண்ட சாத்திரங்களிலே துருவித் துருவி ஆராய்ந்து அரிய கருத்துக்களை வெளிக் கொணர்வது பண்டிதமணி அவர்களுக்குப் பெரு விருப்பமான செயற்பாடாகும். சொற் குள் அடக்க முடியாத தத்துவ நுட்பங்க ளைத் தனக்கேயுரிய தனித்துவமான நடை யாலும் இன்றைய சமுதாயத்தினது உயர் திறனுக்கு ஏற்பப் பொருத்தமான எடுத்துக் காட்டுகளாலும் புலப்படுத்தும் ஆற்றல் பண்டிதமணியவர்களுக்குக் கைவந்த கலை யாகும். பூரீலபூரீ நாவலர் அவர்கள், காசிவாசி செந்திநாதையர், பொ. கைலாசபதி ஆகி யோரது சிந்தனைகளை ஆதாரமாகக் கொண்டு இவரது தத்துவ சிந்தனைகள் வெளிப்பட்டன. இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த இவரது சமயக் கட்டுரைகள் என்ற நூலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த, அத்வைத சிந்தன என்ற நூலும் பண்டித மணியவர்களின் ‘சமய தத்துவ சிந்தனை களின் பிழிசாறு எணத்தக்க சிறப்பு வாய்ந் தன. பத்திரிகைக் கட்டுரை, வாஞெலி யுரை என்னும் வகைகளில் அவ்வப்போது பண்டிதமணி புலப்படுத்திய சிந்தனைகளின் பேறுகள் இவை. சமயக் கட்டுரைகள் என்ற நூல் சைவசித்தாந்த உட்பொருள் விளக்க மாக அமைந்தது. அதன் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக அத்வைத சிந்தனை அமைந் தது. அத்வைதம் என்ற வட சொல் உட் பொருள் இரண்டல்ல ஒன்றேயாம் என்ற பொருள் தருவது. இது பொதுவாகச் சங்கரரது வேதாந்த தத்துவத்துக்கு வழங் கும் பெயராகும். இச் சொல்லுடன் "சுத்த" அடை சேர்த்துச் "சுத்தாத்வைதம்" எனும் பொழுது அத் தொடர் சைவசித்தாந் தத்தைக் குறிக்கும். பண்டிதமணியவர்கள் அத்வைத சிந்தனை என்ற நூலில் சுத்தாத் வைதத்தின் (சைவசித்தாந்தத்தின்) நுட் பங்களையே விளக்குகின்ருர்.
பண்டிதமணியவர்களது சமூக-பண் பாட்டுச் சிந்தனைகள் சமய இலக்கியக் கருத் துக்களுடன் சமூக வாழ்க்கையைத் தொடர்பு படுத்தி அமைந்தனவாகும். கந்தபுராண கலா சாரம், கந்தபுராண போதனை என்பனவாக

Page 50
·
அமைந்த நூல்களில் இவரது இத்தகு சிந் தனைகளை அவதானிக்கலாம். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமங்கள் சார்ந்த சைவாலயங்களிலும் புராண படனம் என்ற முறையில் கந்தபுராணப் பொருளை விரித் துரைத்துவந்த பண்டிதமணியவர்களின் அநுபவ வெளிப்பாடே கந்தபுராண கலா சாரம் என்ற நூலாகும். கந்தபுராணப் பயன்கேட்டலையும் அதன்படி ஒழுகுதலையும் கொண்ட ஒரு சமூக கலாசாரத்தை அந் நூல் மூலம் அவர் எமக்குக் காட்டியுள்ளார். ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டுச் சிந்தனை யிலே “கந்தபுராண கலாசாரம்" என்ற தொடரை இடம்பெறச் செய்த பெருமை பண்டிதமணியவர்களுக்கு உரியது.
இலக்கிய இரசனை என்ற வகையில் பண்டிதமணியவர்கள் கனிந்த தமிழ்ப்புலமை கொண்டவராகத் திகழ்ந்தவர். மலர்களில் தேன்தேடும் தேனீபோல இலக்கிய மலர்கள் பலவற்றிலும் சுவைத்தேன் பருகியவர் அவர், பண்டிதமணியவர்களின் இலக்கிய இரசனை ஈடுபாடு நாவலரின் மருகரான வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை யின் வழி வந்தது. பொன்னம்பலபிள்ளை எவ்வாறெல்லாம் இலக்கியங்களை நயந்தார் என்பதை எடுத்துக் கூறுவதிலே பண்டித மணிக்கு விருப்பு அதிகம், அவர் போலவே தாமும் இலக்கியங்களை நயந்து மாணுக் கர்க்கு நயப்பிக்க வேண்டும் என்பது பண்டிதமணியவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தமை அவரது ஆக்கங்களிலே புலணு கும். குறிப்பாக இலக்கியவழி, கம்பராமா யணக் காட்சிகள் ஆகிய நூல்கள் இந் நோக்கை நன்கு புலப்படுத்துவன. இலக் கியவழி என்ற நூலிலே தமிழ்ப் புலவர் பெரு மக்கள் பலரது சொல் நயம், பொருள் நயம் என்பவற்றை எடுத்துக்காட்டி அவற்றினுாடே ஒரு இலக்கிய வெளிப்பாட்டு நெறி (வழி) புலப்படுத்துவதைச் சுட்டியுள்ளார். அந் நூலில் இடம்பெற்றுள்ள "ஈழநாட்டுப் புலவர்" என்ற கட்டுரை அரசகேசரி முதல் சோமசுந்தரப் புலவர் வரையான ஈழத்துத் தமிழ்ப் புலவர்களது செய்திகளைக் குறிப்பிடுவ தோடு அவர்களூடாக ஒரு இலக்கிய வர லாற்று நெறி அமைவதை உய்த்துணர

3 -
வைப்பதாகும். சோமசுந்தரப் புலவருக்குப் பின் வந்த புலவர்களையும் பண்டிதமணி நோக்கத் தவறவில்லை. பல புலவர்களது ஆக்கங்களுக்கு முகவுரை, அணிந்துரை, பிரார்த்தனையுரை என்பவற்றை வழங்கித் தமது இலக்கியரசனையைப் புலப்படுத்தி வந் துள்ளார். குறிப்பாகப் புலவர் ம. பார்வதி நாதசிவம் அவர்களது காதலும் கருணையும் என்ற கவிதைத் தொகுதிக்கு "கற்பனை நிறைந்த காவியம் " என்ற தலைப்பிற் பண் டி தம ணிய வர்கள் வழங்கியுள்ள * சுவைக் குறிப்பு" (இலக்கியவழியில் இனிய நறுமலர்) அவரது அண்மைக்காலம் வரையி லான இலக்கிய இரசனைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பண்டிதமணியவர்களின் உரையாக்க மாக அமைந்த கந்தபுராண தக்ஷகாண்ட உரை அவரது சமயதத்துவ சிந்தனை இலக்கிய இரசனை ஆகியவற்றின் இணைந்த வெளிப் பாடாகும். புராண படன மரபில் ஊறித் திளைத்த அநுபவத்தின் வெளிப்பாடாகவும் அது அமைந்துள்ளது. இந் நூலைப் பேரா தனைப் பல்கலைக் கழகத்தின் இந்து மாணவர் சங்கம் வெளியிட்டது. பேராதனையிலே மூன்று யானைகளின் பவனியிலே பண்டித மணி அவர்கள் அழைத்து வரப்பட்ட காட் சியும், கந்தபுராண தகூடிகாண்ட உரை நூல் யானையிலே ஏற்றிவரப்பட்டு வெளி யிடப்பட்ட காட்சியும் இன்றும் எம் கண்முன் நிற்கின்றன.
இத்தகு சிறப்புக்கள் பெற்ற பண்டித மணியவர்கள் தமது வாழ்நாள் முழுவதை யும் சமயப் பணி, சமூகப் பணி, இலக்கியப் பணி என்பவற்றிற்கே அர்ப்பணித்தவர். ஆசிரிய கலாசாலைப் பேராசானுகப் பணி யாற்றிய காலத்தில் மட்டுமன்றி, அதி லிருந்து ஒய்வு பெற்ற பின்னரும் கூட அவர் தொடர்ந்து சிந்தித்து இயங்கி வந்துள்ளார். பலருக்குப் பொதுவாக உத்தியோகத்தி லிருந்து ஒய்வு பெறுதலென்பது செயலூக் கம் குன்றும் ஒரு நிலையாவதுண்டு. ஆனற் பண்டிதமணியவர்களைப் பொறுத்தவரை அது பொய்த்து விட்டது. அவர் ஒய்வு பெற்ற பின்னரே புதிய உத்வேகத்துடன் இயங்கினர். ஒய்வு பெற்ற பின் அண்மையிற் காலம்சென்ற நாள் வரையிலான இருபத் தாருண்டுக் காலப் பகுதியிலேயே அவரது சிந்தனையும் செயலும் புது வேகத்துடன் அமைந்தமையை அவதானிக்க முடிந்தது.

Page 51
அவருக்குப் புகழீட்டித் தந்த ஆக்கங்கள் பலவும் இக்காலப் பகுதியிலேயே நூல் வடிவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வாறு இவர் புது வேகத்துடன் தொடர்ந்து செயற்பட்டமைக்கு இவரின் எண்ணம் போல இயங்கும் நன்மாணுக்கரும் முக்கிய காரணர் என்பது குறிப்பிடத் தக்கது. இம் மாணவர்கள் இவரது எழுத் துக்களைத் தொகுத்து நூல்வடிவு கொடுப்ப தில் ஆற்றி வந்துள்ள பணி வேறெந்த ஆசிரியனுக்கும் கிடைக்க முடியாத அதிட் டம் என்றே கூறலாம்.
தமது நூற்ருண்டை நெருங்கிக் கொண் டிருந்த தள்ளாத வயதிலும் பண்டிதமணி பவர்கள் தொடர்ந்து மேற்கொண்டுவந்த பாரிய பணி ஏனைய ஆய்வாளர், எழுத் தாளர், கவிஞர் ஆகியோரது ஆக்கங்களை வாசித்தும், வாசிக்கக் கேட்டும் தமது சுவைக் குறிப்புக்களை வழங்கி வந்த செயற்பாடா கும். பண்டிதமணியவர்களின் மாணவர்கள் மட்டுமன்றிச் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த எல்லோருமே தமது ஆக்கங்களுக்குப் பண்டித மணி அவர்களிடம் பாயிரம் பெற விழைந்து நின்றனர். அவரும் அப் பணியை உவப் போடு ஆற்றி வந்தார்.
இவ்வாறு நாவலர் பரம்பரையின் நமது தலைமுறைத் தலைமகனுகத் திகழ்ந்த அம் முதுபெரும் அறிஞரை 1978இல் இலங்கைப் பல்கலைக் கழகம் இலக்கிய கலாநிதி (Doctor 3f Letters) என்ற கெளரவ விருதை வழங் கிக் கெளரவித்தது. இக் கெளரவத்தை வழங்கும் முயற்சியிலே முக்கிய பங்காற்றக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை மன நிறைவுடன் இப்பொழுது நினைவு கூருகின்றேன். அப்பொழுது இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகத் தலைவராகப் பணி புரிந்த யான் பட்ட மளிப்பு விழாவிலே பல்கலைக் கழக வேந் தருக்குப் பண்டிதமணி அவர்களை அறிமுகம் செய்து ஆற்றிய அறிமுகப் பேச்"சிற் குறிப் பிட்ட சிலவற்றை இங்கு மீட்டுரைப்பது பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.
* தமிழ்க் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற் றுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண் டதே அவருடைய வாழ்வாக அமைந் ჭნატl • தன்னுடைய கருத்துக்களைப் பரப்பும் நோக்கமாக அவர் பிரமசாரி பாகவே இருந்து தமிழாய்வு செய்வதி

4 -
லும், மாணவர்களுக்கும் ஆசிரிய மாண வர்களுக்கும் கற்பிப்பதிலும் தன் பெரும் LʻT@Q)fTʻ6ôT கா லத்  ைத க் கழித்தார். சைவம், இந்துதர்மம், பண்டைய தமிழ் இலக்கியம் ஆகியன பற்றி நூற்றுக் gigasuDIT Gor கட்டுரைகளை அவர் எழுதி யுள்ளார்.
e 4q r w A v இன்று இலங்கையிலே எம்முடன் வாழும் அறிஞர்களுள் சைவசித்தாந்தக் கருத்துக்களை விரித்துரைப்பதிலே தலைசிறந்த வல்லுனராக இவருள்ளார்.
s e a சிறந்த எழுத்தாளராகவும், ஊக்க முள்ள ஆசிரியராகவும், பேச்சாளராகவும், இலக்கிய விமர்சகராகவும், கவிஞராகவும், உரையாசிரியராகவும் பண்டிதமணி கண பதிப்பிள்ளை இலங்கையிலும் பிறநாடுகளி லும் புகழ் பெற்ருர்.
* r o H) e o பெருந் தொகையான பண்டிதர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் தங்கள் திறமைக் குப் பண்டி தம ணியின் நெறிப்படுத்தும் திறமையே காரணம் எனக் கொள்வார் egi......
w யாழ்ப்பாணக் கலாசாரத் தூத ராகவும் கல்வித் தூதராகவும் விளங்கும் பண்டிதமணியவர்கள் ஆறுமுகநாவலர் எவ் வாறு தமக்கென ஓர் அறிஞர் குழாம் வரிசை ufl8aðr உண்டாக்கினரோ, அதேபோல இன்று இந் நாட்டில் பண்டிதமணி, அறிஞர் குழாம் ஒன்றினை உருவாக்கியுள்ளார். * பண்டிதமணியிடம் பயின்ருேம் " என்று கூறுவதிலே இவர்கள் பெரிதும் பெருமை
j53)6)ř.**
பண்டிதமணியவர்கள் இலக்கிய கலா நிதியாவதற்குப் பெற்றிருந்த தகைமைகள் மேற்படி "அறிமுகப்பேச்சுப் பகுதியிலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. பண்டிதமணி யின் பன்முகப்பட்ட ஆளுமைகளாக மேலே சுட்டப்பட்ட பலவும் எதிர் காலத்திலே அவரைப் பற்றி நிகழக்கூடிய நுண்ணுய்வுக ளுக்குப் பொருளாகத் தக்கன. பண்டித மணியவர்கள் தொடர்பாக நிகழக்கூடிய இத்தகைய ஆய்வுகள் சி, கணபதிப்பிள்ளை என்ற ஒரு தனி மனிதர் பற்றியதாக அமை யாமல் ஈழத்தின் இருபதாம் நூற்ருண்டுச் சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தைப் பற்றிய ஆய்வாக அமைய வல்லன. அத்தகைய ஆய்வு களுக்குத் " தோற்றுவாய் செய்வதாக எனது இச் சிறு கட்டுரை அமையும் என நம்புகிறேன்.

Page 52
அதி அற்பு
பேராசிரியர் ஆ. வி. மய
சற்றேறக்குறைய 59 ஆண்டுகளுக்கு முன் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் மாணுக் களுக அமர்ந்து முறைப்படி கல்வி பயின்று வந்த காலத்தில் வள்ளுவன், இளங்கோ, கம்பன் முதலிய தமிழகத்து மேதைகள் பற்றி யான் ஏதும் அறிந்திருக்கவில்லை. பண்டைய கிரேக்க ஞானி சோக்கிரத்தீசர், உரோம மன்னனும் இருடியருமான மார்க்க அரேலியர் ஆகியோ ரின் நூல்களைப் படித்து வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டிய தத்துவங்களை மேலைநாட்டுத் தத்துவஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள் என அக் காலத்தில் நான் எண்ணினேன்.
பல ஆண்டுகள் சென்றன. மிகச் சமீபத் தில்தான் ஓரளவு ஒய்வு பெற்று மீண்டும் சமயத்துறையில் ஈடுபடலானேன். நல்வாய்ப் பாகச் செய்தித்தாள்களில் பண்டிதமணி யின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்கும் பேறும் எனக்குக் கிடைத்தது. ஆளுல் அப் பெரியாரைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்கு ஆரம்பத்தில் கிடைக்கவில்லை.
அவர்தம் நூலின் பிரதியொன்று (சம யக் கட்டுரைகள்) அன்பளிப்பாகக் கிடைத் ததும் பண்டிதமணியின் ஒளிப்படத்தை அந் நூலின்கண் பேராவலுடன் தேடினேன். அதனைக் கண்டு வியப்புற்றேன். அது போன்ற படமொன்றை எங்கேயோ பார்த்திருப்ப தாகத் தோன்றியது. ஆழ்ந்து சிந்தித்துக் கடைசியாக அது யான் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் கண்ட சோக்கிரத்தீசரின் படம் என ஞாபகத்துக்கு வந்தது. அத்துடன் புத்தர்பெருமானின் திருமொழி யொன்றை யும் நினைவுற்றேன். அதாவது, "நாம் இருக் கும் இருப்பின் சூழல் நாம் எண்ணிய எண் ணங்களின் விளைவே; அது நம் எண்ணங்க வின்மீதே அமைந்து எண்ணங்களைக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது" என்ப தாம். புத்தர்பெருமானின் தி ஆவாக்கை விரிந்த கருத்தில் பார்ப்போமானுல் மனித ஞெருவனின் சிந்தனைகள் அவன் தோற்றத்

த விவேகி
ல்வாகனம் அவர்கள்
தில் அடையாளம் பதியாமல் போகமாட்டா என்பது தெளிவாகும். இதுவே அவ்விரு படங்களின் ஒற்றுமைக்கு விளக்கமாகும்.
பண்டிதமணியின் நூல்களைப் படித் தேன்; மீண்டும் வியப்புற்றேன். சோக்கிரத் தீசர் ஒரு நிஷ்காமிய கர்மயோகி ஆவர். அவரது முதுமொழிகளில் எமது உபநிட தங்கள், கீதை, குறள் முதலியவற்றின் சாரம் படிந்திருப்பதை நாம் காண்கிருேம், மனித ஞனவன் தன் சுய கருமத்தைச் செய்து கொண்டு போகவேண்டும் என்பதே கி. மு. ஐந்தாவது நூற்ருண்டில் வாழ்ந்த சோக் கிரத்தீசரின் கருத்து.
பண்டிதமணியும் ஒரு நிஷ்காமிய கர்ம யோகி ஆவர். நூல்களிலுள்ள அவரின் முதுமொழிகளும் அவர் கையாண்ட மேற் கோள்களும் தெளிவாகக் காட்டப்படுகின் றன. மேலை நாட்டு மேதைகளாலும் பாரத நாட்டு இருடியர்களாலும் கண்டுபிடிக்கப் பட்ட பேருண்மைகளும் தத்துவங்களும் பண்டிதமணி அவர்களது சொந்தக் கருத்துக்க ளுடன் முரணின்றி ஒத்திருப்பதை நாம் காண்கிருேம். இந்த இருபதாம் நூற்ருண் டில் எங்கள் இனத்தில், எங்கள் வாழ் நாளில் உலகத் தத்துவமேதாவி ஒருவர் இருந் தார் என்பதால் நாம் பெருமிதம் கொள் கிருேம். பண்டிதமணி நீண்ட காலம் எங்க ளுடன் இருந்து எங்களுக்கு வழிகாட்டியாக விளங்கியமை எமது பிரார்த்தனையின் பெறு பேறேயாம்.
25-1-67 புதன்கிழமை எனது வாழ்க் கைச் சரித்திரத்தில் பொன்னுன நாள் ஆகும். இவங்கைப் பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் சங்க ஆதரவில் பண்டிதமணி அவர்கள் எழுதிய கந்தபுரா ணம் தக்ஷகாண்டம் உரைநூல் வெளி யீட்டுவிழா, தமிழர் சரித்திரத்தில் அதி முக்கியமானது. இவ்விழாவில் உரையாசிரியர் பண்டிதமணி 6. கணபதிப்பிள்ளை அவர்களுக்குப் பொன்னுடை போர்த்திக்

Page 53
கெளரவிக்கும் ஒரு வாய்ப்பு எனக்குச் கிடைத்தது. அது நான் செய்த பாக்கியம் என்றே கூறுவேன்.
பேரறிஞர் பண்டிதமணி அவர்களுக்கு இலங்கைப் பல்கலைக் கழகம் இலக்கிய கலா நிதி என்ற பட்டத்தினை வழங்கிக் கெளரவித் தமையை அடுத்து யாழ் வீரசிங்கம் மண்ட பத்தில் பண்டிதமணி அவர்களது சேவை யைப் பாராட்டி அவரது பழைய மாணவர்கள் எடுத்த விழாவுக்குத் தலைமை தாங்கும் பேறும் எனக்குக் கிடைத்தது. இவ் விழா வும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பெரு விழாவாகும்.
பல்கலைக் கழக விஷயங்களை யொட்டி யாழ்ப்பாணம் சென்றபோதெல்லாம் திரு நெல்வேலி கலாசாலை வீதியில் உள்ள அவரது ஆசிரமத்துக்குச் சென்று குருமூர்த்தியாய்க் காட்சிதரும் அவரைத் தரிசித்து வழிபட யான் தவறியதே இல்லை எனலாம். எனக் கும் பண்டிதமணி அவர்களுக்கும் இடையில் ஒரு நல்ல இணைப்புப் பாலமாக இருந்தார் எனது பேரன்புக்குப் பாத்திரரான திரு. அ. பஞ்சாட்சரம் அவர்கள்.
பண்டிதமணி அவர்களது இல்லத்துக்குச் சென்றதும் "வாருங்கள் வாருங்கள்’ என்று வரவேற்பார்கள் பண்டிதமணியவர்கள். “பண்டிதமணி சுகமாக இருக்கின்றீர்களா’
-
y܀
சைவர்கள் ஒதி உணர்தற்கு தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, புராணம் என்பவைகளாம். இவைகள் பட்டமையால், அருட்பாவென்று சொல்
பெரியபுராணம் சிவபுராணமாத வோர்கள் சைவாசாரியரை அடை இருத்தல் வேண்டும்.
கிருபா சமுத்திரமாகிய பரமசின் மனங்கசிந்து உருக உரோமஞ் சிலிர்ப்ப புராணத்தை அத்தியந்த ஆசையுடன் குருலிங்க சங்கம பத்தி, பிரபஞ்ச ை பெறுமாறு அறிந்து பெற்று, முத்தியை
AA AAMAqLSALAMLL LLLLLLLLSLLLLLSLMSMMeSALLLSMMLMSMLSSSMLSSSMeSLAMSASLLLLLSMMLMLSMSSSMMLSSSLALLSMHS HeLSMASSAASSASSA

, சிவபிரானது திருவருளிஞலே பாடப் }லப்படும்.
0ால், இதனை ஒதிப் பயன்பெறக் கருது து தீகூைடி பெற்றுக்கொண்டவர்களாய்
பனைத் தியானித்துத் தோத்திரம்பண்ணி
வராக்கியம், சிவஞானம் என்பவைகளைப்
6 --
என்று யான் கேட்பேன். "ஆம்" என்று தலை யசைப்பார். அத்துடன் பாடம் தொடங்கி விடும், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம் முதலியவற்றில் இருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டுவார்கள். "நானர் என் உள் ள மார்" என்ற திருவாசகத்துக்குப் பண்டிதமணி கூறிய உரை என் உள்ளத்தைப் பெரிதும் நிறைவித்தது; மறக்க முடியாத சம்பவம் அது.
அதி அற்புத விவேகியான பண்டிதமணி அவர்களை இன்று நாம் இழந்து தவிக்கின் ருேம்.
1. பண்டிதமணி அவர்கள் பெயரில் பல் கலைக் கழகத்தில் புலமைப் பரிசில் வழங்கும் திட்டம் ஒன்றை ஏற்படுத் துதல் வேண்டும். 2. பண்டிதமணி அவர்களது எழுத்துக்கள்
நூல் உருவம் பெறுதல் வேண்டும். 3. பண்டிதமணி அவர்களது நினைவு தினச் சொற்பொழிவு வருடந் தோறும் நடைபெற வேண்டிய ஒழுங்குகளைத் திட்டமிட்டுச் செய்தல் அவசியமாகும். மேற் குறிப்பிட்ட கருமங்கள் நிறைவு பெறத் தமிழ் பேசும் மக்கள் முன்வருவார் களேயானல் அதுவே பண்டிதமணி அவர்க ளுக்கு நாம் செய்யக்கூடிய அதி உயர்ந்த நன்றிக் கடன் என்பதே என் கருத்து.
M M.
அத்தியாவசியகமாய் இருக்கும் நூல்கள் திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் பெரிய
ஆனந்தவருவி சொரிய இந்தப் பெரிய ஒதுகின்றவர்களும், கேட்கின்றவர்களும்
அடைவர்கள்.
நாவலர் பெருமான்
AeSeqeSASALLLSASLLLSMLALSLkLSSLS SqASLLASA Sq S MH SiSLSSLASLSALSLALAeSqLALSLALSLALAeSLLLLSLLALAqLA qLLLSS ASSLqLALSLALA

Page 54
பண்டிதமணிகள் பல
பேராசிரியர் வி. க. கே
யாழ். பல்
பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரள வில் தெரிந்தவன் என்ற முறையில் அவரைப் பற்றிய சில விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
பண்டிதமணி அவர்கள் தனங்கிளப்பு என்ற கி ரா ம த் தி லே வளர்ந்தவர். தனங்கிளப்பு என்ற இடம் அன்பிற்கும் சமாதானத்திற்கும் பெயர் பெற்ற இடம். சோலைகள், தென்னந்தோப்புகள் அழகாக வளருமிடம், அங்கு வயல்வெளிகள் தோட் டங்கள் செறிந்து காணப்படும். இவ்விடத் திற்கு ஒரு முறை சென்றவர்கள் அவ்விடத் திற்கு மீண்டும் மீண்டும் போக எண்ணுவர். அவ்வளவு சாந்தம் கொழிக்கும் இடம். இவ் விடத்தில் வளர்ந்தவர்தான் பண்டிதமணி அவர்கள். பெரியோர்கள் பலர் கிராமங்களி லேயே வாழ்ந்தவர்கள். பண்டிதமணி பிறந் ததனுல் தனங்கிளப்பு மேலும் சிறந்த இடமாகின்றது.
பண்டிதமணியின் உணவு முக்கியமாகத் தானியவகையாகும். எள், சாமை. குரக்கன் போன்றவை விரும்பி உண்ணப்படும் உண வாக அவ்விடத்தில் கொள்ளப்படுகிறது. இதனுல் அங்குள்ளவர்கள் புரதச்சத்துக் கூடி யளவு உட்கொள்வர். இதனுல் பலமும் அதி கரிக்கும்; மூளையும் விருத்தியாகும். இதனல் தானே என்னவோ பண்டிதமணி சிறந்த அளவில் செயற்பட்டுள்ளார்.
அங்குள்ள சிறு பிள்ளைகள் சிறு சிறு வேலைகள் செய்து பெற்ருருக்கு உதவியாவர். தண்ணீரிறைத்தல், புல் பிடுங்குதல், கொத்து தல், மாடு வளர்த்தல் போன்ற வேலைகளைப் படிப்பு இல்லாத நேரங்களில் செய்வார்கள். பண்டிதமணியும் பள்ளிப் பருவத்திலே சிறு சிறு தொழில் செய்து வாழ்ந்தார். இத் தேக அப்பியாசங்களும் அவர் உண்ட உணவுமே அவரை 87 வயது வரை வாழ வைத்தது என
3) f A .

ர் தோன்ற வேண்டும் ணசலிங்கம் அவர்கள் லைக் கழகம்
சிறு பிள்ளைகளைத் தமது விருப்பப்படி கற்க விடுவதஞல் அப் பிள்ளைகளின் மூளை தானுகவே விருத்தியடைந்து அவர்கள் விரும்பும் அத் துறைகளில் திறமைசாலிகளாக வருவார்கள் என்பது இன்றைய கல்விக் கொள்கையில் ஒன்ருகும். இது போன்றே பண்டிதமணியவர்கள் தானுகவே தமிழைக் கற்கத் தொடங்கினர். அதன்படி தமிழில் ஒரு கரையைக் கண்டுகொண்டார். வேறெ வரும் அவரை வலுக்கட்டாயப்படுத்திப் படிப்பிக்காது தானகவே முயற்சி செய்து தானுகவே கல்வி கற்ற காரணத்தினல் அவருக்குத் தமிழில் ஆர்வம் தோன்றிற்று.
ஒருவன் கல்வியில் முன்னேற வேண்டும் என்ருல் அவனுடைய சுற்ருடல் சிறந்ததாக அமைய வேண்டும்.கல்வி கற்றேரின் தொடர் புகள், கல்விச் சூழல் சிறந்ததாக அமைய வேண்டும். பண்டிதமணி அவர்களின் சூழல் சிறந்த கல்விமான்கள் உள்ள ஒரு கூட மாக இருந்தது. அவருக்கு அவரது கல்வி நிறு வனத்துள்ளேயும் வெளியேயும் கற்றறிஞர் பலரின்தொடர்புகளிருந்தன.இதுவே அவரின் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய காலாகும்.
அவர் கல்வியில் சிறந்து விளங்கிய கால கட்டத்தில், பலர் அரசியலிலும் கொடி கட்டிப் பறந்துள்ளார்கள். யாழ்ப்பாணப் பகுதியில் அதே காலப் பகுதியில் பண்டித மணியைத் தெரியாதோர் இருந்திருக்க முடி யாது. எந்த மேடைகளிலும், எந்த வைபவங் களிலும், எந்தக் கொண்டாட்டங்களிலும் பண்டிதமணியவர்கள் பங்குபற்றி யுள்ளா ரெனினும் அரசியலில் அவர் பங்கெடுக் காதது தமிழ் செய்த புண்ணியமாகும்.
அவர் செய்த ஆய்வுகளைப் பொறுத்துப் பண்டிதமணி ஒரு உதாரண புருஷராக விளங்கினர். ஆய்வுகள் செய்வது பல்கலைக் கழகத்தில் இன்றியமையாதது ஒன்ருகும். பல்கலைக் கழகங்கள் பட்டதாரிகளை உற்பத்தி

Page 55
செய்யும் ஒரு தொழிற்சாலையாக இருக்கக் கூடாது. பல்கலைக்கழகங்கள் ஆய்வு நடத்தக் கூடிய ஒரு அரும் பெரும் ஸ்தாபனமாகி இருக்கவேண்டும். பண்டிதமணி அவர்கள் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஆய்வுகளைட் போன்று தானே ஆய்வுகளை நடத்தியுள்ளார். சுருங்கக் கூறின் அவர் ஒரு பல்கலைக் கழக மாகவே இருந்துள்ளார்.
தமிழ்ப் பெரியார்களைப் பெரும்பாலும் அவர்கள் உயிருடன் இருக்கும்பொழுது நாப் கெளரவிப்பதில்லை.உயிரில் லாத போதும் கெளரவிப்பதில்லை. நாவலர், யோக சுவாமிகள்,சைவர் புலவர் சிவபாதசுந்தரனர் போன்ருேருக்கு நாம் என்ன செய்துள்ளோம்: அவர்கள் இயற்றிய நூல்களைத் திரும்பத் திரும்பப் பிரசுரம் செய்து வர்த்தகம் செய் துள்ளோம். மேல்நாட்டில் சேக்ஷ்பியருக்குக கொடுக்கும் ஒரு உயர்நிலை இங்கு எம்மவ ருக்குக் கொடுக்கத் தவறியுள்ளோம். பாரதி யாருக்குப் பாரதம் கொடுக்கும் நிலையைக் கூட நாம் எம்மவருக்குக் கொடுக்கத் தவறி யுள்ளோம். இது துர் அதிஷ்டமாகும்,
பண்டிதமணி அவர்கள் வாழ்ந்துவந்த இடத்தைக் கல்விக் கூடமாக அல்லது நூலக
*TAM***"N.
அருளாவது இவை தொடர்பு லாதவை என்றும் நோக்காது இயல்ப தாகிய கருணை. அருளெனினும் கருணை உலகவின்பத்துக்குக் காரணம் பொருவே அருளேயாம்.
அருளென்னும் குணம் யாவரிடத் ளெல்லாம் சிறிதும் அணுகாது நீங்கிவிடு யாகிய திரியை இட்டு, தவமாகிய ே விளக்கை ஏற்றினல், அஞ்ஞானமாகிய பொருள் வெளிப்படும். மரணபரியந்த போலப் பிறவுயிர்களையும் வருந்திப் பா கெல்லாம் இதஞ் செய்பவனுகி, தான்

5
மாக அமைத்து அவர்கள் எழுதிய நூல்களை அங்கு வைத்துப் பேணிக் காத்தல் அவசிய மாகும். அவரது பெயரில் ஒரு நூலகம் இயங்குவது அவசியம். காலகதியில் அது ஒரு கல்விக்கூடமாக அமையும் என எதிர்பார்க் கலாம். பல்கலைக் கூடங்களின் நூலகத்தில் அவருக்கென ஒரு சிறப்பான இடத்தை உண்டுபண்ணி அவர் எழுதிய புத்தகங்களை, கட்டுரைகளை மற்றையோர் உபயோகிக்கும் வண்ணம் வைப்பது அவசியம். அங்கு அவரின் படத்தினை நிலைகொள்ளச் செய்து அவர் செய்த தமிழ்த் தொண்டினை எமது சந்ததி யாருக்கு எடுத்துக்காட்டும்படியானவற்றைச் செய்ய வேண்டும். பல்கலைக் கழகங்களில் பண்டிதமணி தமிழ் ஆராய்ச்சியினைப் பற்றி விபரமாக ஆராய்ந்து கலைமாணி,முதுமாணி போன்றவற்றிற்கு மாணவர்களை ஆராய்ச்சி யில் ஈடுபடச்செய்ய வேண்டும்.
பண்டிதமணி அவர்களின் சேவையை தமிழ் பேசும் நல்லுலகம் மறந்து விடாது நம் சந்ததியோர் அவரை நினைவில் வைத் திருக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினுல்தான் நமது சந்ததியில் பல பண்டிதமணிகள் தோன்றுவார்கள்.
ALA qLAqLqLMLMAMAMMAMLA ALAMMMASASMSASLAqALA ALeLeSLMALLLS LMM SALSALSSqSSLLLLLSLLLSqS SqS
டையவை என்றும், இவை தொடர்பில் ாகவே எல்லா உயிர்கண் மேலுஞ் செல்வ யெனினும், இரக்கமெனினும் பொருந்தும். ாயாதல் போலத் தருமத்துக்குக் காரணம்
திருக்குமோ அவரிடத்தே பழி பாவங்க ம், வாய்மையாகிய தகழியிலே பொறுமை நய்யை நிறையப் பெய்து, அருளாகிய பேரிருள் ஒட்டெடுப்ப, பதியாகிய மெய்ப் ம் தன்னுயிரை வருந்திப் பாதுகாத்தல் துகாப்பவன் யாவன், அவனே உயிர்களுக் எந்நாளும் இன்பமே வடிவாக இருப்பன்.
- நாவலர் பெருமான்
Mana Nuala/na/na-Mal”
s
:

Page 56
பண்டிதமணி துலக்கிய
பேராசிரியர், ஆ. வேலுப்பிள்ளை அவர்கள்
இலங்கைத் தமிழ் அறிஞர் மூவர் இது வரையிலே பல்கலைக்கழகங்களிலிருந்து கெள ரவ இலக்கிய கலாநிதிப்பட்டங்கள் பெற்றுள் ளனர். இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து முதலாவது கெளரவ தமிழ் இலக்கிய கலா நிதிப் பட்டத்தைப் பெற்ற திரு. சு. நடேச பிள்ளை தஞ்சாவூரிலே பிறந்து வளர்ந்தவர்; சேர் பொன்னம்பலம் இராமநாதனுடைய மருமகனக இலங்கை வந்த நடேசபிள்ளை செல்வாக்கு மிக்கவர். மறைந்தபின்பு தஞ்சா ஆர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினலே கலா நிதிப் பட்டம் அளித்துக் கெளரவிக்கப் பட்ட தனிநாயகம் அடிகள் தமிழின் அந் தஸ்தை உலக அரங்கிலே உயர்த்தியவர். நடேசபிள்ளையும் தனிநாயகமும் ஆங்கிலத் திலும் வேறு பல மொழிகளிலும் பாண் டித்தியம் உள்ளவர்கள். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளைக்குக் குறிப்பிட்டுக் கூறத் தக்க அளவுக்கு, பிறமொழி எதிலும் பாண் டித்தியம் இல்லை. தமிழ் அறிஞர் என்ற வகையிலே தவிர, பண்டிதமணிக்கு வேறு வகைச் செல்வாக்கும் இல்லை. இருபதாம் நூற்ருண்டு நடுப் பகுதியிலும் பிற் பகுதி யிலும் எழுத்துப் பணிபுரிந்து, இலக்கிய கலாநிதிப்பட்டத்துக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவரென இவர் தமிழறி ஞர்கள் அனைவராலும் மதிக்கப்படுவது ஏன் என்ற உண்மை வெளிக் கொண்டுவரப் படவேண்டும்.
பண்டிதமணியின் தகைமைகள் நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரையில் அலசி ஆராயப் படவேண்டியவை. அவருடைய பெயரில் இதுவரை இருபத்திரண்டு நூல்கள் வெளிவந் துள்ளன; இன்னும் பல நூல்கள் வெளிவர இருப்பனவாக அறியப்படுகிறது. இந் நூல் களுள் மிகப் பெரும்பாலானவை அவர் எழுதிய கட்டுரைகளைப் பொருட் பொருத்த முறத் தொகுத்தவை. கட்டுரைகள் நூல் உருப்பெற முன்பே, பண்டிதமணி பிரகாசிக் கத் தொடங்கிவிட்டார். பேச்சாளராகவும் கட்டுரையாளராகவும் புகழ் பெற்று, நல்லா சிரியராக விளங்கி நன்றியுள்ள மாணவர்
s
۔۔۔۔۔۔۔

பண்பாட்டு வரலாறு தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்
பரம்பரையைத் தோற்று வித்து விட்ட பண்டிதமணிக்குப் பல்கலைக்கழகம் கலா நிதிப் பட்டமளித்துக் கெளரவிக்க வேண்டுமென்ற கோரிக்கை, 1959ஆம் ஆண்டு வெளியான பண்டிதமணி மணி விழா மலரிலே, பண்டிதர் கா. பொ. இரத்தினத்தால் முன்வைக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டிலேயே இந்தப் பட்டம் நடேசபிள்ளைக்கு வழங்கப்பட்டது.
பண்டிதமணி தம்முடைய நூல்களிலும் கட்டுரைகளிலும் கையாண்ட பொருள் *சைவமும் தமிழும்” என்ற வட்டங்களுக்குள் அடங்குபவை. சைவம் என்ற வட்டத்துக்குள் தமிழின் ஒரு பகுதியும், தமிழென்ற வட்டத் துக்குள் சைவத்தின் ஒரு பகுதியும் அடங்கும். அதனுல், பண்டிதமணியின் பங்களிப்பில் ஒரு சில, தமிழ் என்றும் வகுக்கப்படலாம்; சைவம் என்றும் வகுக்கப்பிடலாம். கந்த புராணம் பற்றிப் பண்டிதமணி எழுதிய நூல்களை இந்த நிலைக்கு உதாரணமாகச் சுட்டலாம். கந்தபுராண கலாசாரம், கந்த புராண போதனை, கந்தபுராணம் தக்ஷகாண் டம் உரை என்பன இதுவரை வெளிவந்த நூல்கள். தெய்வயானை திருமணம் இனி வெளிவர இருப்பது. அண்மைக்கால இலங் கைத் தமிழ் ஆராய்ச்சியாளர்களிடையே காணப்படும் ஒரு குறை, சைவத்தோடு யாழ்ப்பாணத்துக்குள்ள நெருங்கியபிணைப்பு, நாவலரால் அல்லது அவர் தொடக்கி வைத்த சைவ மீட்பு இயக்கத்தால் ஏற்பட்ட விளைவு என்று கூறிவிடுவதாகும். அத்தகை யோரின் கருத்துப்படி, யாழ்ப்பாணத்துக் கந்தபுராண படன வரலாறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு உட்பட்டதேயாகும்.
கந்தபுராண கலாசாரமே யாழ்ப்பாணத் துக் கலாசாரம் என்று பண்டிதமணி நிறுவுவது இலங்கைத் தமிழரின் பண்பாட்டு வரலாற்றுக்கு ஒரு முக்கியமான பங்களிப்பு. *கண்ணுரறு' என்ற கட்டுரையிலே நாவல ரைத் தோற்றுவித்ததே கந்தபுராண கலா சாரந்தான் என்று கூறிய அவர், கந்தபுரா ணம் நாவலர் இரத்தத்தில் ஊறியிருந்த

Page 57
- (
தென விளக்குகிருர், இந்தியாவையும் யாழ்ப்பாணத்தையும் ஒப்பிட்டு, நாவலர் கூறியுள்ள மேல்வரும் கூற்றுக்கள் உற்று நோக்கத்தக்கன:
**இந்தியாவிலே சைவசமயிகளுள்ளும் சைவசமயத்தில் உட்பற்றில்லாதவர்கள் பலரேயாகவும் இவ்வியாழ்ப்பாணத்திலே கிறிஸ்து மதத்திற் புகுந்தவர்களுள்ளும் சைவசமயத்தில் உட்பற்றற்றவர் அரியர் ஆதலாகிய இத்துணை விசேடத்துக்குக் கார னந்தான் என்னை என்னிற் கூறுதும்.”*
‘'எத்துணைக்காலந் திருப்பித் திருப்பிப் படிக்கினும் கேட்பினும் எட்டுணையும் தெவிட்டாது தித்தித்தமுதுாறும் அத்தியற் புத அதிமதுரத் திவ்விய வாக்கியம் கந்த புராணத்திலுள்ள பதியிலக்கணத் திருவிருத் தங்களைக் கேட்டல் சிந்தித்தல்களினலே, இவர்கள் உள்ளத்து ஊற்றெடுத்த மெய்
புணர்வேயாம்."
'இந்தியாவிலோ வித்துவான்கள் சைவ சமய குருமார் முதலியோர்களுள்ளும் கந்த புராணம் முதலியன அறிந்தவர் சிலர்; இத் தேசத்திலோ பெண்களுள்ளும் அவை அறி பாதோர் இலர்."
இக்கூற்றில் இருந்து சில உண்மைகள் புலப்படுகின்றன. நாவலர் சுட்டிக்காட்ட முடியாத ஒரு காலத்திலிருந்தே, யாழ்ப் பாணத்திற் கந்தபுராணபடனம் நடை பெற்று வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தொடக்கத்திலே, கந்தபுராணபட னம் யாழ்ப்பாணத்திலே ஆரம்பித்திருந் தால், நாவலருக்கு அதை எடுத்துக் கூறத் தக்கவர் இருந்திருப்பர். மேலும், சைவ மீட்பு இயக்கம் நாவலருக்கு முந்தியதென்று கொள்ளவேண்டியிருக்கும். போர்த்துக்கே யர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலே கந்த புராண படனம் இலங்கையிற் பரவிய தென்று சொல்லமுடியாது. எனவே, கந்த புராணபடனம் யாழ்ப்பாணத் தமிழ் அரசர் கள் காலத்திலேயே, யாழ்ப்பாணம் முழு வதும் நிலைகொண்டிருக்கவேண்டும். கோவில் கள் அழிக்கப்பட்டுச் சைவசமய அநுட் டானங்கள் விலக்கப்பட்ட சூழ்நிலையிலும், கந்தபுராணக் கதை மக்களிடையே வழங்கி, சைவப் பண்பாட்டை ஏதோவொரு வகை யிலே பாதுகாத்துவந்திருக்கவேண்டும். நாவ லரை விளங்கிக்கொள்ள, சைவமீட்பு இயக்

) -
கத்தைத் தெரிந்துகொள்ள, யாழ்ப்பாணத் தைப் புரிந்துகொள்ள, கந்தபுராணபடனம் யாழ்ப்பாண வரலாற்றிலே பெற்றிருந்த இடம் திறவுகோலாகப் பயன்படும்.
பண்டிதமணியின் ஆறுமுகநாவலர் என்ற நூலிலே கந்தபுராணம் யாழ்ப்பா ணத்திற்கு வந்த வரலாறு ஆராயப்பட்டுள் ளது. கந்தபுராண அரங்கேற்றம் பற்றிய ஒரு செய்யுளையும் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் தோற்றம்பற்றிய ஒரு செய்யுளை யும் ஆதாரமாகக்கொண்டு பண்டிதமணி கால ஆராய்ச்சி செய்துள்ளார். 5ft 6) ஆராய்ச்சியிலே வேறு பலவகைச் சான்று களையும் இணைத்துப் பார்க்கவேண்டியிருக் கிறது. கி. பி. பதின்மூன்ரும் நூற்ருண் டிலேயே, யாழ்ப்பாணத்தரசு தோன்றியது என்பது இன்றைய வரலாற்ருய்வாளர் முடிபு. கந்தபுராணம் தோன்றிய காலத் தைப்பற்றியும் பெரிய கருத்து வேறுபாடுகள் உள. பண்டிதமணி கூறும் கி. பி. எட்டாம் நூற்ருண்டிலிருந்து தெ. பொ. மீனுட்சிசுந் தரனர் கூறும் கி. பி. பதினேழாவது நூற் முண்டுவரை, கால வேறுபாடு கூறப்பட் டுள்ளமையைக் காணலாம். தெ. பொ. மீ. தம்முடைய காலக் கணிப்புக்கு ஏது காட்ட வில்லை. கந்தபுராணத்தின் காலம் அவ்வளவு பிந்தியதாக இருந்திருந்தால், அது ஒல்லாந் தர் ஆட்சிக் காலத்திலோ, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தொடக்கத்திலோ, யாழ்ப் பாணத்துக்கு வந்து பரவியிருக்கமுடியாது. எனவே, தெ. பொ. மீ. யின் கால ஆராய்ச்சி யைத் தூக்கி எறிந்துவிடலாம். தமிழ் நாட் டிலே சைவசித்தாந்த சாத்திரங்களும் கம்ப ராமாயணமும் தோன்றிய பின்பே கந்த புராணம் தோன்றியிருக்க வேண்டுமென்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே காணப்படுகிறது. சோழப் பெருமன்னர் கால இறுதியிலே கந்தபுராணம் தோன்றி யிருக்க வேண்டுமென்ற பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் கருத்தே பொருத்தமுடை யது போலக் காணப்படுகிறது. பண்டிதமணி கருதுவதுபோல, கந்தபுராணம் தோன்றிய வுடனேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருக் கலாம். தமிழ்நாட்டிலே கந்தபுராணம் பரவிப் போற்றப்படத் தொடங்கிய பின்பே யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரப்பட்ட தென்று கூறுவதற்கில்லை. தமிழ் நாட்டிலே கந்தபுராணம் எக்காலத்திலும் பெரிய அள விலே போற்றப்பட்டதாகத் தெரியவில்லை .

Page 58
- li
யாழ்ப்பாண மன்னர்கள் கந்தபுராண படனத்தை வரவேற்றுப் பரப்பியதேன் என்ற விஞ எழுகிறது. யாழ்ப்பாண அர சிலே பண்பாட்டொருமையை ஏற்படுத்து வதற்குக் கந்தபுராணம் பயன்படுத்தப்பட் டிருக்கிறது. கி. பி. பதின்நான்காம் நூற் முண்டிலிருந்து தமிழ்நாட்டிலே ஒரே குழப்ப நிலை. தமிழ் நாட்டிலே தமிழர் ஆட்சி இல்லாதொழிகிறது. யாழ்ப்பாணத்தில் ஏற் பட்ட புதிய அரசுக்குப் பண்பாட்டடிப் படையில் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு கருத் துப் படிவம் (ideology) தேவைப்பட்டது. தென்னிலங்கையிலே தேரவாத பெளத்தம் அதே பணியைச் சிறப்பாக ஆற்றிவந் தமையை யாழ்ப்பாண அரசர் அவதானித் திருப்பர். பிற சமயங்கள் பலவற்றிலே காணப்படும் ஒருமை இந்து சமயத்தில் இல்லை. வேற்றுமையை ஏற்று இயங்கும் இந்து சமயத்துக்கு ஒற்றுமையை வற்புறுத் திக் காட்டும் பண்பு அவசியம். யாழ்ப் பாணத்திலே நிலவிய வெவ்வேறு வழிபாடு களைச் சைவசமயத்தின் தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தும் பெரும்பணிக்குக் கந்தபுரா ணம் ஏற்ற நூலாகக் காணப்பட்டது. தமிழ் மக்கள் பெரும்பாலோரின் உள்ளங் கவர் கள்வணுக முருகன் விளங்கி வருகிருன். கந்தபுராணத்துள்ள ஆறு காண்டங்களுள் ஐந்து காண்டங்களிலே முருகனைப்பற்றிய கதையே காணப்படுகிறது.
கந்தபுராணத்தின் ஆருவது காண்டம் தக்ஷகாண்டமாகும். பண்டிதமணி உரை யெழுதுவதற்குத் தெரிந்தெடுத்த காண்டம் அதுவே. யாழ்ப்பாணத்திலே பிரபல விஷ்ணு கோவில்களும் விஷ்ணு வழிபாடும் உண்டு. யாழ்ப்பாணத்துக்கு வெளியிலேயும் இவை உண்டு. ஆணுல் இலங்கைத் தமிழர்க ளிடையே, வைணவர் என்ற பிரிவினர் இல்லை. சைவாகம முறைப்படி, வைணவ கோவில்களிலே பூசை நடைபெற்றுவருகிறது. கந்தபுராணம் சிவபரத்துவக் கருத்தை நிலை நாட்டுவதிலே பெற்ற வெற்றியே, இந்த நிலைக்குக் காரணமென்று கூறவேண்டும். அடிமுடிதேடு படலம் முதலியவற்றலும் தக்கனுடைய வேள்வியிலே திருமால் பெற்ற தண்டனையை எடுத்துக் கூறுமுகத்தாலும்

சிவபரத்துவம் நிலைநாட்டப்படுகிறது. சிவ பெருமானும் கந்தசுவாமியும் ஒருவரே என்ற கருத்தும் தக்ஷகாண்டத்திலே முன் வைக்கப்பட்டுள்ளது. விநாயகா , வைரவர், வீரபத்திரர், ஐயனர் முதலிய வழிபாட்டுக் குரிய ஆண்தெய்வங்கள் யாவும் சிவபெரு மானுடைய சிருஷ்டிகளாகவும் மூர்த்தங்க ளாகவும் இதே காண்டம் விளக்குகிறது. தமிழ்ப் பொதுமக்கள் பலரின் அபிமானத் துக்குரிய தாய்த்தெய்வ வழிபாடு சிவபெரு மானை வழிபட்டுச் சித்திபெறும் சக்திவழிபா டாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இலங்கையி லுள்ள இந்து சமயம் சைவநெறியே என்ற நிலை ஏற்படக் கந்தபுராணம் தகடிகாண்டமே உதவியிருக்கிறது.
கந்தபுராணத்தின் சிறப்பியல்புகளுள் ஒன்று நூல் முழுவதும் புதைந்துள்ள சைவ சித்தாந்தக் கருத்துக்களாகும். சைவசித்தாந் தக் கருத்துக்களை வைத்துக்கொண்டு பின்னப் பட்ட கந்தசுவாமி கதையே கந்தபுராண மாகும். சைவ நற்சிந்தனைகள், சமயக் கட்டுரை கள், அத்வைத சிந்தனை என்பன பண்டித மணி சைவசித்தாந்தத்தை விளக்க எழுதிய நூல்கள். அவர் திருவருட் பயன் உரையும் எழுதியிருப்பதாக அறியப்படுகிறது. அத்வை தம் என்பது இன்று சோசியலிஸம் என்பது போல மலினப்படுத்தப்பட்ட வார்த்தை. ஆதிசங்கராசாரியாரின் ஏகான்மவாதத் துக்கு அத்வைதமென்ற பெயர் முதலிலே வழங்கியது. இராமாநுசரும் தம்முடைய தத்துவமுறையை அத்வைதமென்றதனுல், அதற்கு விசிட்டாத்துவித மென்ற பெயச் வழங்கியது. மெய்கண்டாரின் சைவசித்தாந் தமும் அத்வைதமென்ற வார்த்தைப் பிர யோகத்தை விரும்பியதால், அது சுத்தாத் துவிதமெனப்படுவதுண்டு. கந்தபுராண கலாசாரம் என்னும் நூலிலே, பண்டிதமணி, சைவசித்தாந்த கலாநிதி செந்திநாதையர் நிறுவிய உண்மையென இரண்டு கட்டுரைக ளைத் தொகுத்துள்ளமை கந்தபுராண உணர் வுக்கும் சைவசித்தாந்தத்துக்குமுள்ள தொடர்பினை எடுத்துக்காட்டுகின்றது. நாவலரின் மாணவராய செந்திநாதையர் புனிதநகராகிய காசிக்குப் போய்ச் சங்கத மொழிப் பேரறிஞர்களிடம் கற்று, சிந்தனை

Page 59
யாளராக மலர்ந்து சைவசித்தாந்தத்தின் பெருமையை விளக்கும் பல நூல்களை எழுதி ujeiromrmrti.
தமிழ்நாட்டையும் யாழ்ப்பாணத்தை யும் ஒப்பிடும்போது, சைவசித்தாந்தத்தைப் பேணவேண்டுமென்ற ஆர்வம் யாழ்ப்பா ணத்திலேயே மிகுந்து காணப்படுகிறது. சில ஆதீனங்கள், மடங்களே சைவசித்தாந்தத் தைப் பேணுவதிலே தமிழ்நாட்டில் ஆர்வம் காட்டுகின்றன. அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் சைவசித்தாந்தம் பற்றிய அறக் கட்டளைச் சொற்பொழிவுகளுக்கும் காசி இந்துப் பல்கலைக்கழகத்திலே சைவசித்தாந் தத் தவிசுக்கும் திருப்பனந்தாள் ஆதீனம் ஒழுங்கு செய்துள்ளமையை உதாரணமாகச் சுட்டலாம். அண்மையிலே உருவான தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே, சைவசித்தாந்தத் துக்குத் தனித் துறை யு ன் டு என்பது உண்மையே. மிகப் பரந்த அடிப்படையிலே தமிழ் பல துறைகளாக வகுக்கப்பட்டு ஆரா பப்படுவதால், சைவசித்தாந்தத்துக்கு அங்கே ஒரு துறை கிடைத்துள்ளமை சிறப் பாகக் குறிப்பிடக்கூடியதன்று. யாழ்ப்பா ணத்திலே, சைவசித்தாந்த ஆர்வலர் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கைப் பல்கலைக்கழகத்திலே, தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டபோதே, சைவசித்தாந்தத்துக்கு அங்கே முக்கிய இடம் வழங்கப்படவேண்டுமென்ற குரல் யாழ்ப் பாணத்திலே எழுப்பப்பட்டது. யாழ்ப்பா ணப் பல்கலைக் கழகத்திலே இந்துநாகரிகத் துறை தொடங்கியபோதும், அத் துறை சைவசித்தாந்தத்தை மையமாக வைத்தியங்க வேண்டுமென்று சிலர் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு நிறைவேருத நிலையில், தனிப் பட்டோரே பொருள் வழங்கி அறக்கட்டளைச் சைவசித்தாந்தத் தவிசை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்த முன்வந்துள் ளனர். இம் முயற்சிகள் யாவும் அறுநூ முண்டுகளாகத் தொடரும் கந்தபுராண கலாசாரத்தின் பிரதிபலிப்புகளே.
பண்டிதமணி யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியத்தின் - பாரம்பரியக் கல்வியின் - கடைசிக் கொழுந்து. யாழ்ப்பாணத்துக் கல்விப் பாரம்பரியம் மிசனரிமாரின் வருகை யுடன் ஆரம்பமாகி, இருநூருண்டுகள் வர லாறேயுடையதென்பது பொருந்தாது; அதன் வரலாறு எழுநூருண்டுகளாகும்.

محمد 12
யாழ்ப்பாண மன்னர்கள் தமிழ்ச் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தவர்களென்று வலு வான ஒரு மரபு உண்டு; தங்களுடைய பெயரிலே அக் கால அறிவிலக்கியங்களான வைத்திய, சோதிட நூல்களை ஆக்குவித்த வர்களாகவும் காணப்படுகிறர்கள். வித்துவத் தமிழிலே இரகுவமிசத்தைத் தமிழ்ப்படுத்தி யுள்ளார்கள். கந்தபுராண படனத்தை யாழ்ப்பாணம் எங்கும் - ஒழுங்குசெய்துள் ளார்கள். எனவே, செழிப்பான கல்விப் பாரம்பரியம் விளங்கிய யாழ்ப்பாணத்தி லேயே மிசனரிமார் தங்களுடைய பணியைத் தொடங்கியிருக்கிருர்கள். யாழ்ப்பாணக் கல்விப் பாரம்பரியத்தைத் தொடங்கிய பெருமையை யாழ்ப்பாண மன்னருக்கும் அறிவியல் ரீதியிலான மேனுட்டுக் கல்வியை அறிமுகப்படுத்திய பெருமையை மிசனரி மாருக்கும் வழங்கவேண்டும். மிசனரிமாரும் மிசனரிமாரிடம் கற்றவர்களும் பிறரும் இக்காலத்திலே மேனுட்டுக் கலைச்செல்வங் களைத் தமிழிலே கொண்டுவருவதற்கு, அக் கால யாழ்ப்பாண மன்னர்கள் வட இந்தி யக் கலைச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்து வழிகாட்டியிருக்கிருர்கள்.
பண்டிதமணியின் நூல்களின் அடிப் படையிலே, புதிதாக விளக்கம்பெறும் யாழ்ப்பாணப் பண்பாட்டு வரலாறு இது வரை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பண்டிதமணி நாவலரின் உபாசகர். நாவலர் பெருமை கூறும் இரண்டு நூல்கள் பண்டித மணியால் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய வீரர் என்ற விருது நாவலருக்குக் கிடைப்ப தற்கான சிந்தனைக்குப் பண்டிதமணியின் கட்டுரைகள் தூண்டுகோலாக இருந்தன. நாவலரைக் கெளரவித்துப் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்த, திருவாவடுதுறையாதீனத் தைத் ‘தமிழுக்கும் சைவத்துக்கும் ஒரே ஒரு உயர்தனிப்பீட' மெனப் பாராட்டியுள் ளார். தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் ஆகியவையும் தமிழுக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் பெருந் தொண்டாற்றி வருபவையே. பண்டிதமணியின் பங்களிப்பு மிகவும் விசாலமானது; இக் காலமுறைப் படி ஆராயவும் மதிப்பீடுசெய்யவும் விமர் சனஞ் செய்யவும் இடமிருக்கிறது.

Page 60
இலக்கிய கலாநிதி இலக்கிய விம
655 mu FT6ör F. X. C.
நாவலர் என்ருல் நல்லூர் ஆறுமுக நாவலர்.
பாரதி என்ருல் சுப்பிரமணிய பாரதி.
இலக்கிய கலாநிதி என்ருல் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.
** இலக்கிய கலாநிதி" என்ற பட்டம் இலங்கைப் பல்கலைக்கழகம் வழங்கியது; இலக்கியக் கலைக்கு வைப்புப் போன்றவர் பண்டிதமணி அவர்கள். இலக்கியக்கலை, இலக்கியமாகிய கலை என விரிவடையும். இலக்கியம் என்பது இலக்கணத்தாற் காரியப் படுவது. இலக்கணமில்லாத பண்டம் இலக் கியமாகாது. இலக்கணம் காரணம். இலக் கியம் காரியம்.
*பண்டிதமணி??-செய்தித்தாள் வழங் கியது. தினகரன் ஆசிரியர் திரு. V. K. P, நாதன் சூட்டியது. தினகரனில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரை ஆசிரியர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை எனக் குறிப்பிட்டார். நிலைத்து நின்றுவிட்டது, தகுதி காரணமாக, 1951இல் சித்திரைத் திங்கள், தமிழ் வளர்ச்சிக் கழகம் எடுத்த தமிழ் விழா நடை பெறலாயிற்று. ஆராய்ச்சிப் பேருரை "பண்டிதமணி’ என்ற மகுட நாமத்துடன் வெளிவந்தது.
இலக்கியம் என்பது இலக்கினையுடையது. வாழ்க்கைக்குரிய இலக்கினைக் குறிக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டுவது. ‘இலக்கிய வழி என்ற பண்டிதமணி ஐயாவின் நூல் வாழ்க்கைக்கு உறுதுணை.
பண்டிதமணி ஐயா அவர்கள் சிறு கதையோ, இலக்கணமில்லாத கவிதையோ, நாடகமோ-எழுதவில்லை. கதை, கவிதை, நாடகம் இவைதாம் இக்கால இலக்கியம் என்பர் வெள்ளையர். என்ருலும் இவை எழுதாத பண்டிதமணிக்கு ‘இலக்கிய கலா நிதி" என்ற பட்டம் வழங்கப்பட்டது. பொருள் பொதிந்த பட்டம், ஆகவே இலக்

பண்டிதமணியின் ரிசன கோக்கு
. 5LJT8FT 96his856ir
கியம் வேறு இக்கால இலக்கியம் என்கிருர் களே அது வேறு.
இனி, விமரிசனம். இது வட சொல். நேரிய தமிழ்ச் சொல் சிந்தித்தல், மனனம். விமர்ச என்ற சொல் விமர்ச்சம் என்ருகி, விமர்சனம், விமரிசனம். விமரிசம், விமரிசை என்று தமிழில் வந்துள்ளது, விமரிசையாகப் படிக்கவில்லை என்றுங் கேட்கின்ருேம். இக் காலத்தில் திறணுய்தல் என்கிருேம்.
இன்னுமிருப்பது நோக்கு. **ஒசை முதலியவற்ருல் கேட்டாரை மீட்டுந் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு."- சொன் ணுேக்கும் பொருணேக்கும் என்பர்.
'மாத்திரை முதலா அடிநிலை காறு
நோக்குதற் காரண நோக்கெனப் படுமே” என்பது தொல்காப்பியம். இதன் விரிவினை ஆண்டுக் காண்க.
பண்டிதமணி ஐயா எந்த நூலைப் பார்த் தாலும் அதன் சொல், பொருள் நோக்கித் தான் விமரிசனஞ் செய்வர். அவர்கள் எழுதிய இலக்கிய வழி முதலாக அத்வைத சிந்தனை ஈருக நோக்கின், பண்டிதமணியின் விமரிசன நோக்குப் புலணுகும்.
நாவலர் வழிவந்தவர் பண்டிதமணி ஐயா, வசன நடை கைவந்தவர் நாவலர், சைவமுந் தமிழும் என்பார்கள். இருவரும் சைவத்தையும் தமிழையும் வளர்த்தவர்கள்.
நாவலர், சமயப் பற்று நோக்கி வசன நடை நீண்டு செல்லும் . பண்டிதமணியின் வசன நடை ஆசிரியர், மாணுக்கர் என்ற பான்மையில் பாட்டி கதை சொல்வதுபோல் மீட்டும் மீட்டும் வாசிக்கத் தூண்டும் வகை யில் அமைந்திருக்கும்; துள்ளி மிதித்துக் குறுநடை போடும்; பொட்டிட்ட பான்மை யில் நடக்கும்; சுட்டிக் காட்டிப் பொட் டெனப் புலப்படுத்தும்.

Page 61
இலக்கிய வழியில் எடுத்தோதப்பட்ட காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள், மதியும் பிறையும், நாவலர் எழுந்தார், கம்பன் செய்த வம்பு, சொற் சித்திரம், இலக்கியத்தின் உயிரும் உடலும் போன்ற தலையங்கங்கள் விசித்திரமானவை. அபிமான புருடராகிய நாவலரையும், அவர் மருகர் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையை யும் தமது நூல்களில் நுழைத்துவிடுவார்.
சின்னத்தம்பிப் புலவரையும், அவரின் இலக்கியங்களையும் மீட்டும், மீட்டும் சுவை பட எழுதுவார். சுவைபட எழுத வேண்டு மாயின் சொன்னுேக்கும், பொருணுேக்கும் மனதிலிருத்தி அரும் பொருளை அழகுபட
எழுதுவார்.
வன்ருெண்டர் ஒருபுறம்: மறுபுறம் சிவசம்புப் புலவர். வன்ருெண்டர் அந்தாதிப் புலி; சிவசம்புப் புலவர் ஈழத்தில் பிரபந்தம் பல பாடிய சீரர். யாப்பருங்கலக்காரிகைக்குச் சிறப்புரை கண்டவர்.
பழமலையந்தாதிப் பாடல்
**தேருக் குவடு வசமாடு மாடத் தெரு வினிற் போய்" என்ற அடியினைப் பிரித்துப் பொருள்கூறவேண்டிய சந்தர்ப்பம் சிவசம்புப் புலவரைச் சார்ந்தது. பிரித்துப் பொருள் கூறினர். இதனைப் புகுவாய்மூலம் புகுந்து வெகுவாய், அழகாய், நவமாய் எடுத்தோ து கின்ருர் பண்டிதமணி ஐயா அவர்கள்.
பண்டிதமணிக்கு இராமாயணம் உயிர்; விமரிசையாகச்சுவைத்துள்ளார். பாரதத்தை, சிலப்பதிகாரத்தை, திருக்குறளை, சங்க மருவிய நூல்களை ஒப்பிட்டுக் கம்ப சித்தி ரத்தை நிலைநாட்டத் தவறவே மாட்டார். சிலப்பதிகாரக் கதையினை எடைபோட்டுக் குறைவு காட்டுவர். சீதையோ, கண்ணகியோ என்பதே விஞ. சீதையைக் கம்பன் வாக்கால் உயர்த்தி, இளங்கோ வாக்கால் கண்ணகி யைத் தாழ்த்திக் கூறுவர். கம்பன் சுவைக் கும், வில்லிபாரதச் சுவைக்கும் மேடு, மடு என்று நோக்குவர். கம்பன் வாக்குக்கு திருக் குறள், சங்கநூல்களிலிருந்து எடுத்துக்காட்டி மதிப்பிடுவர்.

14 -
கம்பராமாயணக் காட்சிகள் என்ற நூல் பண்டிதமணியின் நுண்மாண் நுழை புலத்தினை வெளிப்படுத்துகின்றது. சொல் நோக்கிப் பொருள் நோக்குகின்ருர். இரு, இணையன, ஐய, விட, சரயு, துமி போன்ற சொற்களின் விளக்கம் அளப்பரியது.
இருந்தமிழ் என்பதற்கு, பெருமைமிக்க தமிழ் என்பது நேரிய பொருள், ‘இருநதி' என்ற கம்ப சித்திரத்திற்குப் பண்டிதமணி யின் பொருள் அற்புதமானது. இரு என்ற வினையடிப் பொருள்கொண்டு இன்சுவை கூட்டுகின்றர். இரு என்ற சொல்லைப் பேணிய நதி என்று பொருள் கூறலாம். பொருத்தமான பொருள்.
அகலிகையைக் கணவராகிய முனிவர் கல்லாய் ‘இரு' என்ருர், அப்படியே இருந் தாள். அகலிகை கல்லாயிருந்தவாறு கெளசிகி நதியாயிருக்கின்றள். இருத்தலைக் கற்பு என் றும் முல்லை என்றுங் கூறுவர். காத்திருத் தல் என்பது பொருள். கணவன் கற்பித்த வழிக் காத்திருப்பது முல்லை. அகலிகை கல் லாய்க் காத்திருந்தாள். விசுவாமித்திரர் கதை சொல்லும்போதும் காத்திருக்கிருள். கெளசிகி நதியாய்க் காத்திருக்கிருள். இருவ ரும் **இரு?" என்று சொல்லிய சொல்லைப் பேணிய இரு மகளிர்கள். **இரு" என்ப தற்குப் பாத்திரமானவர்கள். அன்பினைத் திணையிற் பேசும் முல்லை மகளிர்கள் இவர்கள்.
**இணையன நிகழ்ந்த பின்னர் " என்ப தனை வைத்துக்கொண்டு பாண்டிக்குழி விளை யாடுகிருர் பண்டிதமணி. தாடகை இறந்து பட்டாள்; தேவர்கள் வாழ்த்தினர்கள்; படைக்கலங்கள் வழங்கப்பட்டன, இனை யனவாகிய இச்சம்பவங்கள் நிகழ்ந்தபின்னர்.
'ஐய' என்ற சொல் ‘கைவரை' எனத் தொடங்கும் செய்யுளில் வந்துள்ளது. *அப்பா, மகனே காட்டிக் கொடாதே; சத்தத்தின் வழி அவள் வந்துவிடுவாள் மெல் லப் பேசு' என்று கெஞ்சுகிறதொரு கொஞ்சு மொழி அந்த ‘ஐய’’ என்ற மொழி; விளி. விளக்கம் அமைந்தவாறு என்னே.

Page 62
- :
'நெய்விட்டுச் சாப்பிட்டால் நல்லா யிருக்கும்" என்ருர் ஒருவர்; மகாலிங்கசிவம் பண்டிதமணியின் ஆசான். 'நெய்விட்டுத் தான் சாப்பிடுகிருேம்" என்ருராம். “விடு? என்ற வினைமுதல், ஊற்றுதலை வேண்டுதல், வேண்டாமை இரண்டையும் குறிக்கும். ‘எடுத்த சீற்றம் விட்டு" என்ற சொற் ருெடர் வியாக்கியானம் சென்றுகொண் டிருப்பதைக் காண்டல் கூடும்,
கம்பராமாயணக் காட்சிகள் என்ற நூலிற் காணப்படும் சரயு என்பதன் பொரு 2ளச் சுட்டுமிடத்து மிகுந்த கூர்குறிப்புடன் விளக்கியுள்ளார்.
கம்பன் துமிக்குக் கலைமகள் சாட்சி. பண்டிதமணி காட்டும் சாட்சி வேறு. புளு கன் கதை அத்தாட்சியாகின்றது,
பண்டிதமணியின் “சிந்தனைக் களஞ்சியம்’ படிப்பவர் சிந்தனையைத் தூண்ட வழிவகுப் பது. பல்சுவையும் மிக்கது. அமைதியிற் சிந்தித்தவற்றைச் சுவையூட்டும் முறையிற் சமைத்துத் தந்திருக்கிருர்,
“பாரத நவமணிகள்' பண்டிதமணி யின் கைவந்த சரக்கு. கதை சொல்லுவார்; பண்டை முறையிற் கதை சொல்வார். "கேளும் ஜனமேஜய மகாராசாவே' என்று வைசம்பாயனர் சொல்லத் தொடங்கினர் என மகாபாரதக் கதை ஆரம்பமாகிறது. "நவபாரதம்" என்ற கட்டுரையும் கதை தழுவியது.
நாவலரும் நைட்டிகயிரமசாரி. பண்டித மணியும் அவ்வண்ணம் திகழ்ந்தவர். நாவலர் சென்ற வழியிற் செல்பவர். *ஆறுமுக நாவலர்’ என்ற மகுட நூலைச்செய்துள்ளார்.
உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திரு மாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு மெய்யன்புடையவர்கள் அக் கடவுளோடு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடை அன்பில்லாதபொழுது கடவுளிடத்து அ மாத்திரையேயன்றி உண்மையன்றென்ப

5 -
நாவலரின் புராணபடனம் இன்றும் நடை பெற்று வருகிறது. யாழ்ப்பாணம் வேறு; கந்தபுராணம் வேறு என்ற பிரிவு பிளவு படாமற் காத்து வருகின்றனர் மக்கள்.
சமயம் பற்றி எழுதும்போதெல்லாம் நாவலர் அடிச்சுவட்டைப் பற்றிக்கொண்டே எழுதுவார். நாவலரின் நல்வாக்கினை முதற் கூறித் தாற்பரியம் எழுதிக் கட்டுவார்.
பண்டிதமணியின் ‘அன்பினைந்திணை' அகப்பொருளைச் சுருக்கிக் கூறுவது. தொல் காப்பியத்திற்கு நேமிநாதம் வாய்த்தது போல், உரைநடையில் அன்பினைந்திணையை உளங்கொள வைப்பது.
*அத்வைத சிந்தனை ' துவைதம் மூலம் அத்துவைதம் விளக்குவது.துவைதம் என்பது இரண்டு. துவிச்சக்கரம் என்பதிலுள்ள துவி என்பதும் அது. ந+துவைதம்=அத்வைதம் என்று புணரும் . ந+ ஞானம் அஞ்ஞானம் என்று புணர்வதும் அது.
*கந்தபுராணம் தக்ஷகாண்டத்துக்கு ** உரை கண்டவர் பண்டிதமணி. உரையும் உரையாசிரியர் பலரைத் தழுவியதெனினும் தமது குறிப்பைத் தருவதிற் தவறவில்லை. சிறுபொழுது ஐந்தோ ஆருே என்பது துணி தற்பாலது. இதனை விளக்கியுள்ளார் பண்டிதமணி.
**இந்தா' என்ற நாடோடி வழக்கினை,
**இந்தாவிஃதோர் இளங்குழவி யென் றெடுத்து" என்ற அடியில் வெகு விமரிசை யான விளக்கம் தந்துள்ளார் பண்டிதமணி.
இதுவரை பண்டிதமணியின் விமரிசன நோக்கு ஒரளவு நிறைவேறலாயிற்று.
மேனிகள்; அவ்வுயிர்களுக்கு நிலைக்கள ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து, உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு டயவர்களேயாவார்கள். உயிர்களிடத்து lன்புடையவர் போல் ஒழுகுதல் நாடக து தெள்ளிதிற்றுணியப்படும்.
- நாவலர் பெருமான்

Page 63
ஆசிரிய உலகில் சிவத்தமிழ்ச்செல்வி, பண்டிதை
* எழுத்தறிவித்தவன் இறைவணுவன்" என்பது தமிழ் மக்களால் போற்றப்படும் பொன் மொழியாகும். ஆம், ஆசிரியப்பணி என்பது ஒரு தெய்வப்பணி. அது அறியாமை அகற்றி அறிவை உதயமாக்கும் ஞானப் பணி; அறிவறிந்த மக்களை உருவாக்கி உதவும் ஒரு சமூகப்பணி. ஆனல் ஆசிரி யர்கள் எல்லோரும் ஆசிரியர்களாகப் பிறப்ப வர்களல்லர். ஒரு சிலரே ஆசிரியப் பிறவியை எடுக்கிருர்கள். ஆசு+இரிதல் என்பது அரிய கருத்தைக் கொண்டது. அதாவது குற்ற மகற்றுபவர்கள் இவர்களே. குற்றம் நேருவ தற்குக் காரணம் அறியாமையாகும். இதனை நீக்கிவிடும் பணி ஆசிரியப் பெருமக்களின் தலையாய பணியாகும்.
** அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்" என்ருர் வள்ளுவர். எனவே அறிவும் ஞான மும் ஆசிரியத் தொண்டும் ஒருங்கமைந்த விடத்துத் தெய்வமே பிரசன்னமாவது போன்று ஆசிரியர்கள் விளங்குகின்ருர்கள்.
இருபதாம் நூற்றண்டில் ஈடிணையற்ற முதற் பெருங் குரவராக மதிக்கப்பட்டவர் எங்கள் பண்டிதர் ஐயா அவர்கள். ஆயிர மாயிரம் ஆசிரிய மணிகளை ஈழத் தமிழுல குக்கு உருவாக்கி உதவிய பெருமை பண்டிதர் ஐயா அவர்களுக்கேயுண்டு. குல னருள் தெய்வம் கொள்கை மேன்மை கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை அனைத்தும் ஒருசேர வாய்க்கப்பெற்ற எம்மாசான் இன்று எம் மத்தியில் இல்லை. எனினும் அவர்கள் ஏற்றி வைத்த ஆயிரக்கணக்கான அறிவுச்சுடர்கள் இந்நாட்டில் அறிவொளி பரப்பிக்கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.
பழை மை யையும் ஆசாரத்தையும் பண்போடு பேணிய பண்டிதமணி அவர்கள் கற்பித்தலிலும் கட்டுரை எழுதுவதிலும் ஒரு புதுமையைக் கையாண்டார். தானும் ரசித்து மற்றவர்களை ரசிக்க வைக்கும் திறன் மிகமிக மெச்சுதற்குரியது. சின்னஞ் சிறு கதைகள் மூலம் பென்னம் பெரிய இலக்

அணையா விளக்கு
தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
கியச் செய்யுட்களை விரித்துரைத்து நயக்க வைப்பதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய மேடைகளில் கேட்டு இறும்பூ தெய்தினேன். பழைமைக்கும் புதுமைக்கும் இவர் ஒரு இணைப்புப் பாலம். இதனுலேயே பழந்தமிழ் இலக்கிய கர்த்தாக்களும் நவீன இலக்கிய மேதைகளும் ஒருசேர நின்று போற்றுந் திறனைப் பண்டிதர் ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டார். எல்லாவற்றிலும் புதுமையை விரும்புவது இக்கால இயல்பு. பழைமையென்று கூறினவுடனேயே சிலருக்கு வெறுப்புத்தட்டி விடுகிறது. ஆனல் நாம் நீக்கினலும் பழைமை அவ்வளவு சுலபமாக எம்மை விட்டு நீங்காது. எனவேதான் எங்கள் இலக்கிய கலாநிதி அவர்கள் பழைமையினூடே புதுமை மிளிரக் காட்டி எளிமையும் இனிமையும் கலந்த இலக்கிய ஆய்வுகளை வெளியிட்டார்கள்.
ஆசிரியப் பணி பற்றிய ஒரு செய்தி காஞ்சிப் பெரியவர்களால் வெளியிடப்பட்
• idقسسا
ஜீவனம் செய்வதற்குப் பலவகை மார்க் கங்கள் இருந்தபோதிலும் உபாத்தியாயர்கள் தான், தாம் கற்ற கல்வியையே தமது ஜீவியத்துக்கு வழியாக உபயோகிக்கிருர்கள். மற்றவர்கள் தாம் கற்ற கல்வியினுல் லாப மில்லாமையால் படிப்பு முடிந்ததும் வேறு வேஷம் போட்டுக்கொள்ள நேரிடுகிறது. எனவே வேஷத்தை மாற்ருமலிருக்கும் ஆசிரியன் தனது உத்தமமான பணியை உணர்ந்து நிறைவேற்றவேண்டும்.
*" கற்றதனு லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றள் தொழாஅ ரெனின் " என்ற குறட்பாவுக்கேற்ப உள்ளத்தே ஊறிய இறை பக்தி ஐயாவுக்கு மேலும் சிறப்பை நல்கியது. இதனலே ஏனையோரின் அறிவுக் கண்களைத் திறந்து விடும் வாய்ப்பு இவர் களுக்கு நல்லபடி கிட்டியது. குரு பக்தியும் தெய்வ பக்தியும் இணைந்துவிட்டால் மணி தனே தெய்வமாக மாறிவிடுவானன்ருே?

Page 64
- l7
* அரிது, அரிது மானிடராத லரிது" என்று பாடிய ஒளவையின் வாக்கில் “ஞான மும் கல்வியும் நயத்த லரிது’ என்பதை மானிடப் பிறப்பின் பெரும் பேருகக் காட்டு கிருர். சரியை, கிரியை, யோகம் மூன்றி லும் முற்றுப் பெற்றவர்கள் எய்துவதே ஞானப் பிறப்பு. முன்னைய மூன்றும் தவ மெனப்படும். பின்னையது தவத்தின் பயன் என்று பேசப்படும். எனவேதான் ஞானமும் கல்வியும் ஒருவர்க்கு வந்து வாய்ப்பது பல பிறவிகளில் ஈட்டிய புண்ணிய வசத்தினல் என்பர். இத்தகைய புண்ணியம் வாய்க்கப் பெற்றவர் எங்கள் பண்டிதமணி அவர்கள். கல்விக் கழகத்தில் கற்ற கல்வியிலும் பார்க்க அவர்கள் கல்லாமே கற்ற கல்விதான் பெரும் பங்கினை ஏற்றது.
*உள்ளம்நிறை கலைத்துறைகள்
ஒழிவின்றிப் பயின்றவற்றல்
தெள்ளிவடித் தறிந்தபொருள்
சிவன்கழலிற் செறிவு" என்ருர் சேக்கிழார். இதனைப் பண்டிதமணி யின் வாழ்க்கையிலே நாம் காணமுடியும். இதஞலேயே இவர்களை ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றேர் வரிசையில் வைத்துப் போற்றுகின்ருேம்.
மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் தமிழ்ப் புலவர்களையும் தமக்கு நல்லுரை நவின்று புத்தி புகட்டிய குரவர்களையும் தமது உயிரினும் மேலாகப் பேணிஞர்கள். அவர்க ளின் நல்லுரைகளுக்கு அவைக்களத்தில் முதலிடம் அளித்தார்கள். ஒளவைப் பிராட் டியின் அறிவுரையால் அதிகமான் மகிழ்ந் தது நாடறிந்த செய்தியாகும். இதஞலேயே தனக்கு அரிதாகக் கிடைத்த நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்து மகிழ்ந்தான் அதிகன். இதனையுண்ட ஒளவையாரும்,
"பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றெருவன் போல மன்னுக பெரும நீயே’
என்று வாழ்த்துரை பகர்ந்ததைப் புற
நானூறு காட்டுகிறது. வழி நடந்த களைப்பி
னுல் மன்னவனின் முரசுகட்டிவில் படுத்துத்
துயின்ற மோசிகீரனுரை விசிறிகொண்டு வீசி
3

| -
மேலும் இளைப்பாற வைத்த சேர மன்னனை எண்ணும்போது அம்மன்னனுடைய தமிழ்ப் பற்றையும் தமிழ்ப் புலவர்களை ஆதரித்த சிறப்பையும் என்னென்று போற்றுவது.
புலவர்களையும் குரவர்களையும் போற்றிப் பெருமைகண்டது நமது தமிழகம். குரு பக்தியினுல் மேன்மை பெற்றவர்கள் நமது தமிழ் மக்கள். இந்தப் பண்பாட்டைப் பண்டிதமணி அவர்களின் வரலாற்றிலேயும் நாம் முழுக்க முழுக்கக் காண்கிருேம். அவர் களைப் போற்றி விழாவெடுத்த பேரறிஞர் களையும் கலாநிதிகளையும் வைத்திய மேதை களையும் நாம் பாராட்டாமல் இருக்க முடி, யாது. அத்துடன் ஆயிரமாயிரம் ஆசிரியப் பெருமக்கள் ஐயாவிடம் காட்டிய குரு பக் தியையும் நாம் போற்ருமல் இருக்க முடி Liftig. ** இரண்டு மனிதர்கள் ?? என்ற இலக்கியவழிக் கட்டுரையில் பண்டிதரையா வின் குரு பக்தியையும் நன்றியுணர்வையும் நாம் காணுகிருேம். இந்த நிலை வழிவழி யாகப் பேணப்பட்டு ஒரு ஞான பரம்பரை இன்றைக்கும் நமது ஈழவளநாட்டில் விளங்கு கிறதென்றல் அதற்கு ஒரு ஒளி விளக்காகத் திகழ்ந்தவர் ஐயா அவர்களே.
"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே’’ என்ற திருமந்திரக் கருத்தை உள்ளத்திலே கொண்டு ஒழுகுபவர்கள் இவர்களிடம் கல்வி கற்ற மாணவர்கள் என்பதை யாவரும் அறிவர்,
மேலும் இவர்களுடைய சிவபக்தியை நோக்கும்போது மேலும் சுந்தரர் பாடிய தொகை யடியார்களில் ஒரு பகுதியினரான சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்களைப் போன்ற தன்மையைக் காணலாம். இந்த நிலையிலேயே இறுதிக் காலத்தைக் கழித்தார் என்பதை உணர முடிகிறது. இவர்கள் பூரணமடைவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பு நான் சென்று தரிசித்தேன். அப்போது உரையடங்கிக் காணப்பட்டது. பஞ்சாட்சர ஜெபம் செய்யும் குறிப்புத் தென்

Page 65
தமிழ்த்தாயின்
தி. மாணிக்கவ முன்னைநாள்
தில்லைநகர் நாவலர் வழி வந்த மூதறி ஞர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் நினைவாக ஒர் மலர் வெளியிடப்படுவதில் நான் பெருமை அடைகிறேன்.
மகான்கள், விற்பன்னர்கள், மேதைகள், சரித்திர புருடர்கள் முதலியோரின் உ. ல் மறைந்தாலும் அவர்கள் நினைவு மறைவ தில்லை. அவர்கள் காலத்தை வென்றவர்கள்; மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்து நிற் போர். பண்டிதமணி ஐயா அவர்கள் எக் காலத்திற்கும் உரித்துடையர்:தமிழ்த்தாயின் தவப் புதல்வர் ; எப்போதும் நீறு பூத்த நெற்றியினர்; வீர சைவர்; தூய வெண்ணிற ஆடையினர்; என்றும் புனிதமான நடையும், தூய்மையான மனமும், சிறந்த தோற்ற மும், உரையாடுவதற்கு இனிய சுபாவமும்
26ð0 til 16 f.
தமிழ் இலக்கியம்,கல்வி, கலை, பண்பாடு முதலியவற்றின் வளர்ச்சிக்கு பண்டிதமணி ஐயா அவர்கள் ஆற்றிய பணி அளப்பிலது. ** தேமதுரத் தமிழ்ஓசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும் "
(17ஆம் பக்கத் தொடர்ச்சி)
பட்டது. முகக் குறிப்பும் கண்ணுெளியும் எமக்கு ஆசி நல்கியது. காஞ்சிப் பெரியவரைக் கலகையிலே தரிசித்த நினைப்புத்தான் எனக்கு அக்கணம் ஏற்பட்டது. "பழுத்த முது தமிழ்ப் புலவர்' என்ற பாராட்டை எம் நாட்டிலும் அயல் நாட்டிலும் ஈட்டித் தந்த இப்பெருந்தகை தமது கடமையைச் செவ்வனே முடித்துவிட்டுச் சென்றுவிட்டார். ஆம்! மனிதப் பிறவி என்பது ஒரு ஏணி. இந்த ஏணியின் மூலம் ஏறிப்போகவேண் டிய இடத்தை அடைந்துவிடுவதே பிறவி யின் நோக்கம். ஏணியிலே நிலைத்துநிற்ப தல்ல நோக்கம்! ஆகவே செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் வாழ்வளிக்க வந்த ஐயா அவர்கள் ஆயிரமாயிரம் ஆசிரிய உள்ளங்கள் கலங்கவும் அறிஞர்கள் ஏங்கிப் பிரலாபிக்க வும் பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தி விட்டார்கள்.
தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

தவப் புதல்வர்
ாசகர் அவர்கள் கல்வி அதிபதி
என்ற மகாகவி பாரதியாரின் கோட்பாட் டிற்கிணங்கவும்,
** மேன்மைகொன் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்" என்ற சிவாசாரியரின் இலட்சியத்திற்கமைய வும், அப்பெருந்தகை வாழ்ந்தார்கள். ஆகவே அவரின் நினைவு தினம் ஆண் டாண்டு தோறும் கொண்டாடப்படுவதால் சமுதாயம் இன உணர்ச்சியும், விழிப்புணர்ச் சியும், புத்துணர்ச்சியும் பெறுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இலங்கைப் பல்கலைக் கழகம் முதன் முத லாகத் தமிழ் அறிஞர் ஒருவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்துக் கெளரவித்த பெருமை பண்டிதமணி ஐயா அவர்களையே சாரும். அந் நற்செயலால் பல்கலைக் கழகமே தன்னைக் கெளரவித்துக்கொண்டது எனச் சொன்னுல் அது மிகையாகாது.
*" பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.”
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து மனம் வாடித் துயருழந்து நின்று நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின்மாயும் வேடிக்கை மனிதர்களையே இவ்வுலகில்
அடிக்கடி சந்திக்கிருேம். என்ன செய்வோம்! கலிகாலத்தின் கோலமிது. ஆனல் இவர்கள் மத்தியில் அணையா விளக்காக எரிந்து ஒளி காட்டிய ஐயாவின் பணிகள் மறக்கமுடியா தவை; தமிழுலகால் மறுக்கவும் முடியா தவை.
எனவே அமரத்துவம் எய்திய எங்கள் ஆசிரியப் பெருந்தகை, இலக்கிய கலாநிதி, பண்டிதமணி அவர்களின் திருவடிவம் என் றென்றும் எம்முள்ளத்தை விட்டு நீங்காது நின்று அவர்களின் பணிகளைத் தொடர வைக்க ஊக்குவிக்கும் என்பது எமது அசை யாத நம்பிக்கை,

Page 66
பண்டிதமணியி பேராசிரியர் சு. சுசி தலைவர், மொழி - பண்பாட்டுத்துவ
“பண்டிதமணியின் மொழிநடை" என ஒன்று உண்டா? உண்டு என்பதே விடை. ஆயின் எப்படித் தெரியும்? பண்டிதமணி யின் நூல்களைப் படித்த பழக்கத்தினுல் ஏற் படும் உள்ளுணர்வு அவ்வாறு கூறுகிறது. அந்த உள்ளுணர்வை நம்பலாமா? நிலை நாட்டுதல் கூடுமா?
உலகில் ஒருவரைப் போல மற்ருெருவர் இல்லை. இதே போன்று ஒருவரைப் போன்று மற்ருெருவர் மொழியைப் பேசுவதில்லை; எழுதுவதுமில்லை. இது மொழியியற் கருத் தும் ஆகும். எனவே மேற்கூறிய உள் ளுணர்வு பிழையாகாது. உள்ளுணர்தல் ஒன்று; அதனை நிலைநாட்டுதல் வேருென்று. உள்ளுணர்வைத் தூண்டுதலாகக்கொண்டு அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து உண்மை எனப் போற்றப்படுவதைத் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டுதல் வேண்டும்.
பண்டிதமணியின் மொழிநடை 'நல்ல நடை", "அழகான நடை", "அருமையான நடை", "எளிய நடை", *சுவையுள்ள நடை" எனப் பலர் பேசக் கேட்டுள்ளேன். ஆயின் இத்தகைய நடைகளை வரையறுத்து விளக்குவார் இல்லை. எனவே இத்தகைய கூற் றுக்கள் விளக்கமற்றுப் போகின்றன; ஆதார மற்ற தற்சார்புடைய கூற்றுக் களாக அமைந்து விடுகின்றன.
I
பண்டிதமணியின் மொழிநடையை ஏனை யோரின் மொழிநடையிலிருந்து வேறுபடுத் திய பின்னர்தான் ஒட்டு மொத்தமாகப் பண்டிதமணியின் மொழிநடை எனப் பேசுதல் கூடுமன்ருே ? வேறுபடுமாற்றை ஒப்பியல் அடிப்படையில்தான் கண்டு கொள்ள முடியும். பண்டிதமணியின் மொழி நடையை மொழி ஆட்சியின் பல நிலை களிலே புள்ளியியல் அணுகுமுறையை மேற்

ன் மொழிகடை
ந்திரராசா அவர்கள் றை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
கொண்டு ஆராய்தல் வேண்டும். பண்டிதமணி
யின் தனிக் கூறுகளை ஒப்பியல் அடிப்படை யில் சுட்டிக் காட்டுதல் வேண்டும். இதன் பொருட்டுப் பண்டிதமணியின் நூல்கள் அனைத்தையும் அவை எழுந்த கால வரிசைப் படி துருவித்துருவிப் படித்தல் வேண்டும். பண்டிதமணியின் சமகாலத்தவர் நூல்களை யும் மொழி நோக்கிலே படித்தல் வேண்டும். பழைய மொழியமைப்பையும் கருத்திற் கொள்ளல் வேண்டும். தக்கதோர் நெறி நின்று திரட்டிய தகவல்களை ஒப்பீட்டாய்வு செய்த பின்னர்தான் பண்டிதமணியின் மொழிநடை பற்றி நிதானமாகப் பேச முடி யும். இது எளிதான காரியமன்று; நீண்ட நாள் ஆய்வாகும்.
ஆதலால் இங்கு பண்டிதமணி எழுதிய நூல்களுள் “இலக்கியவழி’ என்னும் நூலை மட்டும் கருத்திற்கொண்டு அவரது மொழி பற்றிச் சில கருத்துக்களைத் தற்காலிகமாகக் கூற முற்படுவோம்."
III
ஈழநாட்டுப் புலவர் என்னுங் கட்டுரை யில் சின்னத்தம்பிப் புலவரைப் பற்றிக் கூறும்போது பண்டிதமணி "இலக்கணத் தமிழிலே, "முதலியார் வீடு யாதோ? ?? என்று வட தேசத்து வித்துவான் சிறுவர் களை விஞவிஞர்" என்று எழுதியுள்ளார். இங்கு ** இலக்கணத் தமிழ் " என்னும் தொடரையும் அது பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தையும் கருத்திற் கொள்க. இவ் விடத்து ** இலக்கணத் தமிழ் ** என்று விதந்து கூறியதன் காரணம் யாது? ‘முதலி யார் வீடு", "முதலியார் வளவு? போன்ற தொடர்கள் சாதாரண மக்கள் பேச்சிலும் சிறுவர் பேச் சிலும் வழங்குபவை. 'யாதோ’ என்பதற்குப் பதிலாக "எது? எனினும் இலக்கணத் தமிழ் ஆகும். ஆனல் * எது" என்னும் விஞச் சொல் விலக்கப்பட் டுள்ளது. காரணம் அது சிறுவர்மொழி

Page 67
2 سسم
யிலும் வழங்குவது என்றதனுல் போலும். "யாதோ’ என்பது பொதுவாகச் சிறுவர் மொழி வழக்கில் வருவதில்லை. அது சிறுவர் களுக்குப் புதுமையான மொழி வழக்காகும்* எனவேதான் அதனைச் சுவாரஸ்யமாக "இலக்கணத் தமிழ்" என்று பண்டிதமணி கறிஞரோ!
பண்டிதமணி யார் யாரை நினைவிற் கொண்டு தமது கட்டுரைகளையும் நூல்களை யும் எழுதினரோ அவர்கள் அனைவருக்கும் அவரது மொழி பெரும்பாலும் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. பண்டிதமணி கூறிய ‘இலக்கணத் தமிழ்' போன்ற தமிழ் அவரது நூலில் இல்லை எனலாம். தாம் எழுதுவது மற்றவர் பொருட்டு என்பதனை என்றும் மறந்ததில்லை. பண்டிதமணி பெரும் பாலும் தற்காலத்து வழக்கு முறைகளை அனுசரித்தே எழுதியுள்ளார்.
V
தமிழ் மொழியிலே உள்ள எத்தனையோ வகைகளுள் யாழ்ப்பாணத்துப் பேச்சுமொழி ஒருவகை. இவ் வகைக்குமட்டும் உரிய சிறப் புக் கூறுகள் உண்டு. இவை இலக்கிய வழக் கில் வருவதில்லை. இலக்கிய மொழிக்கு மட் டும் உரிய சிறப்புக்கூறுகள் உண்டு. இவை பேச்சு மொழியில் வருவதில்லை. பேச்சு மொழி, இலக்கிய மொழி ஆகிய இரண்டிற் கும் பொதுவான மொழிக் கூறுகளும் பல வுண்டு, இவை இரண்டிலும் வருபவை. பண்டிதமணியின் நூலில் மூன்ருவது வகைக் கூறுகளை அதிகம் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக **சீவக சிந்தாமணியிலே வருகின்ற கணிதரும் மரங்கள் கொடிகள் செடிகளை - சூளாமணியிலே வருகின்ற பழங்கள் நிறைந்த மாடங்களை - அந்தக் கம்பன் என்கின்ற வம்பு, பொருள் செய் கிருனில்லை" (ப. 9) என எழுதியுள்ளார். இங்கு வினைமுற்றைக் கருதுக. படிக்கிருன் இல்லை, செய்யிருன் இல்லை எனப் பேச்சில் வரும் அமைப்போடு ஒப்பிடுக. மேலும் **ஒரு காலத்தில் மண்ணுலகை விழுங்கின வர் " (ப. 7) என்னும் பண்டிதமணியின் வாக்கியத்தில் **விழுங்கினவர் ** என்பதற் குப் பதிலாக விழுங்கியவர் என்ருலும்

) -
ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டாவது அமைப்பு இலக்கிய வழக்கிலே மட்டும் வரு வது. முதலாவது அமைப்பு பேச்சிலும்
இலக்கியத்திலும் வருவது. "இவர்தான் பாடினவர் போன்ற அமைப்பு பேச்சிலே வருவதையும் "இவர்தான் பாடியவர்'
போன்ற அமைப்பு பேச்சிலே வராததை யும் கருத்திற் கொள்க. பண்டிதமணிக்கு விருப்பமானது முதலமைப்பு."
*" ஒன்று ஆண், மற்றது பெண் கண வன் மனைவி " (ப. 11), "இடிமுழக்கம், மின்னல், காற்று, மழை" (ப. 11)- இவை யும் பண்டிதமணியின் வாக்கியங்கள். மூன் ருவது வகைக் கூறுகள் அதிகம் இருப்பத ஞல்தான் பண்டிதமணியின் நடை பலருக்கு எளிய நடையாகிறது போலும், பண்டித மணி கையாண்டுள்ள வாக்கிய அமைப் புக்கள் காரணமாகப் படிப்போர்க்குக் கருத் துக் குழப்பம் தோன்றும் நிலை நூலில் இல்லை எனத் துணியலாம். கருத்திலும் கருத்து வெளிப்பாட்டிலும் அவருக்குத் தெளிவுண்டு.
பண்டிதமணி சிறிய சிறிய வாக்கியங் களை விருப்புக் காரணமாகக் கையாண்டுள் ளார். சிறிய வாக்கியங்களைப் பொருட் செறிவுடையனவாக எழுதுதல் எளிதன்று. அவ்வாறு எழுதுவதற்கு அறிவு முதிர்ச்சி யும், அநுபவமும், ஆற்றலும் வேண்டும். அவரது நூலில் ஒரு சொல்லே ஒரு வாக்கிய மாக அமைதலைக் காணலாம். இரு சொற்க ளால் அமைந்த வாக்கியங்கள் உண்டு. மூன்று, நான்கு, அல்லது ஐந்து சொற்க ளால் அமைந்த வாக்கியங்களும் உண்டு. இடையிடையே நீண்ட வாக்கியங்களும் வருகின்றன. ஒரு நீண்ட வாக்கியம் ஒரு பந்தியாகவும் உள்ளது. ஆயின் இவ் வகை மிகக் குறைவு. அவை அனைத்து வகைகளையும் புள்ளியியல் அடிப் படையில் கணக்கிட்டு மதிப்பிடமுடியும். சுருக்கமாகக் கூறின் அவரது வாக்கிய அமைப்பிலே பழமையும் உண்டு; புதுமை யும் உண்டு. பழமை குறைவு; புதுமையே அதிகம் எனலாம். வாக்கியத்தில் சொற்கள் பொருளுணர்ந்து இடமறிந்து கையாளப் பட்டுள்ளன. அதாவது தக்க இடங்களில்

Page 68
- 2
தக்க சொற்கள் வருகின்றன. அவை பெரும் பாலும் அனைவருக்கும் பழக்கமானவை.
““<3yцgштg5 иот(5) шцg.штg ”” (ւյ. 72) போன்ற பழக்கமான பழமொழிகளையும் "இடறு கட்டை’ (ப 3), "கால் வைத்
தல்’ (ப. 56 போன்ற மரபுத் தொடர் களையும் **கண்டதார் கேட்டதார்" (ப.52), “அது கிடக்க" (ப. 70) போன்ற பொருள் பொதிந்த சொற்ருெடர்களையும் கையாண் டுள்ளார். ஒரு சில சொற்கள் மட்டுமே சிலருக்குக் கடினமானவையாதல் கூடும். அவை பெரும்பாலும் வடமொழிச் சொற்க ளாகக் காணப்படுவது காரணமாகலாம். எடுத்துக்காட்டாக பிராரத்தம் (ப, 66), ஆவாகனம் (ப. 87) .
V
பண்டிதமணி தமது கட்டுரைகளிலே வரும் சில சொற்களுக்குத் தாம் கருதும் பொருளையும் கூறிச் செல்லும் நடையுத்தி யைக் கையாண்டுள்ளார். இதனை அவரது ஏனைய நூல்களிலும் காணலாம்.* இங்கு "இலக்கியவழி*யிலிருந்து சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்."
** இரட்டையர். ஒரு தாய் வயிற்றில் ஒரே கருப்பத்தில் இரட்டையாய்ப் பிறந்தவர்கள் இரட்டையர் " (ப. 1).
**காளமேகம் ஆசுகவி. ஆசுகவி என்ருல் விரைந்து பாடுகின்ற புலவன் என்பது கருத்து ’ (ப. 6).
** அந்தக் கம்பன் என்கின்ற வம்பு, பொருள் செய்கின்றனில்லை. வம்புபுதுமை "" (ப. 9).
* புலவர்கள் என்ருல் அறிஞர்கள் '
(է մ. 48).
VI * 'இலக்கியவழி"யிலே உள்ள இருபது கட்டுரைகளில் பெரும்பாலானவை இலக்கி யம் பற்றியவை. புலவர் வரலாறு, நூல் வரலாறு பற்றிய கட்டுரைகளும் உண்டு. கட்டுரைகளில் இறந்தகால நிகழ்ச்சிகளைக்

سنہ 1
கூறும்போது அவற்றை இறந்த காலத்தில் வருணிக்கலாம் ; நிகழ்காலத்திலும் வருணிக்க லாம். இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வ தற்கு இடமுண்டு. பண்டிதமணி இலக்கியக் காட்சிகளை - நிகழ்ச்சிகளை - மட்டுமன்றி ஏனைய காட்சிகளையும் பெரும்பாலும் நிகழ் காலத்திலே வருணித்துள்ளார். "நாவலர் எழுந்தார்' எனக் கட்டுரைத் தலைப்பை இறந்த காலத்தில் தந்தாராயினும் கட்டு ரையுள் காட்சிகளை நிகழ்காலத்திலேயே வருணித்துள்ளார். இது தவிர, ஒரே கருத்தை நிகழ்காலத்திலும் எதிர்காலத்தி லும் கூறக்கூடிய இடங்களிலும் பண்டிதமணி நிகழ்காலத்தையே விரும்பிக் கையாண்டுள் ளார். எடுத்துக்காட்டாக,
(அ) கதைகள் தாய்ப் பாலுடன் சேர்ந்து இரத்தத்திற் கலந்து தேகம் முழுவதும் ஒடிக்கொண் டிருக்கின்றன என்றும், மிருது வான நரம்புத்துய்களிற் குடியிருக் கின்றன என்றும் பலரும் பல விதமாகக் கதைகளைப் பற்றிக் கதைகள் சொல்லுவார்கள்.
(ஆ) கதைகள் தாய்ப் பாலு டன் சேர்ந்து இரத்தத்திற் கலந்து தேகம் முழுவதும் ஒடிக்கொண் டிருக்கின்றன என்றும், மிருது வான நரம்புத் துய்களிற் குடி யிருக்கின்றன என்றும் பலரும் பலவிதமாகக் கதைகளைப் பற்றிக் கதைகள் சொல்லுகின்றர்கள்.
ஆகிய இரு வாக்கியங்களும் ஒரே கருத் தைப் புலப்படுத்த வல்லன. ஏற்றுக்கொள் ளத் தக்கவை, ஆனல் நடையில் மட்டும் சிறிய வேறுபாடு உண்டு. பண்டிதமணியின் வாக்கியம் நிகழ்கால வினைமுற்றைக் கொண் டது (ப. 10) இங்கே இரண்டாவது. இத் தகைய நிலையில் பண்டிதமணி மிகக் குறை "வாக வருங்காலத்தையும் கையாண்டுள்ளார்.
எடுத்துக்காட்டாக,
**தாயே, என் அருமைத் தந்தை எனக்குக் கட்டளை இட, அதனைத் தாங்கள் எனக்கு வந்து சொல்லுகிறதானுல், அதைவிட வேறு

Page 69
என்ன பாக்கியம் இருக்கிறது. அருமை அன்னையே, தாங்கள் எனக்கு ஒன்று சொல்லுவதாஞல், அதனை மன்னன் கட்டளை என்ரு சொல்ல வேண்டும்" (ப. 76).
WI
“ஒன்ருகப் பழகினேம்", "ஒன்ருய்ப் பழகி னேம்" போன்ற வாக்கியங்களில் ஆக, ஆய் என்பன ஒரே பொருளைத் தருவன. ஆக இலக்கிய வழக்கில் வருவது. ஆய் இலக் கிய வழக்கு. பேச்சு வழக்கு ஆகிய இரண் டிலும் வருவது, சிலர் ஆக என்பதைக் கையாள்வர், மற்றும் சிலர் ஆய் என்பதைக் கையாள்வர். இன்னும் சிலர் இரண்டையுமே மாறி மாறிக் கையாளக் கூடும். மூன்ருவது வகையினர் எதனைக் கூடுதலாகக் கையாள் கின்றனர் எனப் புள்ளியியல் அடிப்படையில் கண்டு அதனை நடைக்கூருகக் கொள்ளலாம். பண்டிதமணி "இலக்கியவழி'யில் ஆய் என்ப தனக் கையாண்டுள்ளார். எடுத்துக் காட் டாக "இரட்டையாய்” (ப. 1), "ஆக்குவ தாய்" (ப. 3), 'மயமாய்" (ப. 8), 'தேவ ஞய்" (ப. 13), 'திரள் திரளாய்" (ப.61).
VIII
வினைகளுள் ஒரு வகை வினைகள் எதிர் மறை விகுதியை நேரடியாக ஏற்கும். எடுத் துக் காட்டாக செய்: செய்யா. மற்றும் ஒரு வகை நேரடியாக மட்டுமன்றி, க்க் சேர்ந்த பின்னரும் ஏற்கும். எடுத்துக் காட்டாக படி: படியா, படிக்கா. நமது பேச்சு வழக்கில் க்ச் பெரும்பாலும் வருவதில்லை. பண்டிதமணி க்க் என்பதை விலக்கிக் கொண்டார். எடுத் துக் காட்டாக “களையாத முடவர்" (ப.2}, *"பல்லை இளியாமல்" (ப. 7), "பறியாமலே பழுத்து. *" (ப. 8), 'மெளனத்தைக் குலை uuITLDGa)'' (Lu. 14).
ΙΧ வெவ்வேறு நடையுத்திகளால் மிகுதிட் பொருளைப் புலப்படுத் த லா மாயினும் பண்டிதமணி சொற்களை இரட்டிக்க வைத்தே அதனைப் புலப்படுத்துகின்றர். எடுத்துக் காட்டாக "விம்மி விம்மி" (ப. 6), "அழுது அழுது" (ப.58), 'திரள் திரளாய்" (ப.61),

م۔م۔م۔ 22
'இறைத்து இறைத்து" (ப. 77). பண்டித மணியின் கட்டுரைகளில் திரும்பத் திரும்பப் பயின்று வரும் சொற்களுள் "சற்றே" என்னும் சொல் சுட்டிக் காட்டத் தக்கது. அது பயின்று வரும் நூற் பக்கங்களில் சில பின்வருமாறு : ப. 9, 12, 14, 20, 26, 30, 34, 36, 72.
Χ
பெரும் மதிப்பைக் குறிப்பதற்கு "அவர் கள்" என்னும் சொல்லைப் பண்டிதமணி இயற் பெயர்களோடு பயன்படுத்தியுள்ளார். எத் தனையோ புலவர் பெயர்கள் **இலக்கியவழி** யில் வருகின்றன. எல்லோருக்கும் பண்டித மணி "அவர்கள்" என்பதை வழங்கவில்லை. சிலருக்குச் சில கட்டுரைகளில் வழங்கி வேறு சில கட்டுரைகளில் வழங்கவில்லை. ’துரை” என்னும் சொல்லை சேர் பொன். இராம நாதன் பெயரோடு சேர்த்து சேர் பொன். இராமநாதன் துரை எனக் கூறியுள்ளார் (பக். 62, 66). பல கட்டுரைகளில் "நாவலரவர்கள்? என்றே கூறும் பண்டிதமணி ஈழநாட்டுப் புலவர் என்னுங் கட்டுரையில் "அவர்கள்’ என்ற சொல்லைக் கைவிட்டுவிட்டார்.
இவ்விடத்து "இலக்கியவழி’ என்னும் நூல் பண்டிதமணி காலத்துக்குக் காலம் எழுதிய கட்டுரைகளின் (சொற்பொழிவு களின்) தொகுப்பு என்பதனை நினைவுகூர்தல் வேண்டும். கட்டுரைகள் எழுந்த காலக்கிரமம் பற்றிய செய்தி நூலிலே இல்லை. இச் செய்தி ஆய்வுக்கு குறிப்பாக மொழி ஆய்வுக்கு முக் கியமானது. இல்லாத போது ஆய்விலே சில சிக்கல்கள் எழுவதற்கு இடமுண்டு.
ΧΙ
பண்டிதமணி பிறமொழி வெறுப்பற்ற வர். கிரந்த எழுத்துக்களுடன் சொற்களைக் கையாண்டுள்ளார். எடுத்துக் காட்டாக **ஸ்தம்பித்து விட்டன" (ப. 16), ‘கேடிமந் தானே’ (ப. 69). வடமொழிச் சொற்கள் பலவற்றையும் கலந்து எழுதியுள்ளார். சில ஆங்கிலச் சொற்களையும் ஏற்றுள்ளார். **அப்பீல் "" (ப. 63) ஒர் எடுத்துக்காட்டு

Page 70
2 --س-
வடமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்தியும் தமிழ்ப்படுத்தாதும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற அவரது எண்ணம் அவரது நடை யிலே தெரிகிறது. வேடம் எனக் கொள்ளாது "வேஷம்" (ப. 17) எனக் கொண்டவர் தேவபாஷை எனக் கொள்ளாது "தேவ பாடை" (ப. 74) எனக் கொண்டுள்ளார்.7 இதே போன்று 'ஆதிசேஷன்" (ப. 7) எனவும் 'விபீடணன்" (ப. 14) எனவும் எழுதியுள்ளார்.
குறிப்பு 1. இதுவரை யாரும் பண்டிதமணியின் மொ 2. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, இல சைவாசிரிய கலாசாலைப் பழைய மாண 3. இலக்கண நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட தேர்ந்தெடுப்பது நடையியலில் 'நடை 4. பண்டிதமணியின் சமயக் கட்டுரைகள் எ (ப. 28), பிரமை - மயக்கம் (ப. 29), ச என்று பெயர் - வினவுகிறவர்கள் என்று 5. இவ்வுத்தி பண்டிதமணியின் தனிநடையி 6. விளக்கத்திற்காகச் சில சொற்களுக்குக்
7. ' தேவ பாடையி லிக்கதை செய்தவர் ?
காட்டியமையால் (ப. 74) பண்டிதமணி
பாடை என எழுதினர் என்று விளக்கங் களையும் சொற்களையும் கருத்திற்கொள்க
தமிழ் கற்றவர்களை நடுவுநிலைமையி: வல்லவர்களென நன்கு மதிக்கப்பட்டவர் சின்னமும் கொடுக்கும் சபையார் இக் கல்வியில் வல்லவர்களும் வல்லவர்களல்ல அதனுல், நமது தேசத்தாருக்குத் தமிழ்! தாயினும் இலவாயின. பண்டுதொட்டுக் பதிகள் பெருங் கருணை கூர்ந்து, கால சந்நிதானத்துக்கு விண்ணப்பஞ் செய்துெ வர்களென நன்கு மதிக்கப்பட்டவர்களு சின்னமும் கொடுத்தருளுவார்களாயின், மொழி மிக வளர்ந்தோங்குமே.

سسلم۔ 3
ΧΙΙΙ
பண்டிதமணியின் மொழிநடை பற்றி இன்னும் கூறலாம். ஆயின் ஆராயாமல் எதையும் கூறலாமா? ஆய்விலே அவசரம் ஆகாது. ஆய்விலே ஆழ்ந்த பயிற்சி பெற்ற அறிஞர்கள் பண்டிதமணியைப பல கோணங் களில் நின்று நிதானமாக ஆராய முன்வருதல் வேண்டும். ஆய்வுலகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையான கருத்துக்களைக் கூற முற் படுதல் வேண்டும்.
ழிநடையை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
க்கியவழி, திருத்தப்பதிப்பு, திருநெல்வேலி வர் சங்க வெளியீடு - 2, 1964. க் கூடியவற்றுள் ஏதேனும் ஒன்றினைத் நிலைத் தெரிவு’ எனப்படும்.
ன்னும் நூலைப் பார்க்க. பாடு - பெருமை த்து - உண்மை (ப. 45), **வைநாயிகர்’
அர்த்தம் (ப. 81).
யற் கூருகுமா எனச் சிந்தித்தல் தகும்.
கீழ் கோடிடப்பட்டுள்ளது.
எனத் தொடங்கும் பாடலை மேற்கோள் பாடலில் உள்ளதுபோல் தாமும் தேவ கூற முற்படலாம். ஆயின் ஏனைய இடங்
ன் வழுவாது பரிகூைடி செய்து, அதில் களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற பெயரும்
காலத்தில் இல்லாமையால், தமிழ்க் ாதவர்களும் ஒப்ப மதிக்கப்படுகிறர்கள். க் கல்வியில் விருப்பமும் முயற்சியும் சிறி கல்வியிற் சிறப்புற்று விளங்கும் மடாதி ந்தோறும் தமிழ் கற்றவர்களுள் தங்கள் காண்டவர்களைப் பரீசுைஷசெய்து, வல்ல க்கு அவரவர் தகுதிக்கேற்ற பெயரும் எம்மொழியினும் இனிய நமது தமிழ்
நாவலர்பெருமான்

Page 71
பண்டிதமணியி ஈழத்துத் து
த. சண்முகசு
ஈழத்துத் தமிழ்ப்புலவர்களுக்கென ஒரு இடம் உண்டு என்பதை நன்கு நேரில் வலி யுறுத்தியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர். நாவலரின் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியவர் பலர். அவரில் முக்கியமானவர் இருவர். இருவரும் தமிழ் வளர்த்த பிள்ளைகள் பெரும் பிள்ளைகள் : இருவரும் பிள்ளையார்கள். ஒருவர் வடம ராட்சியைச் சேர்ந்த தும்பளையூர் பேராசிரி யர் கலையருவி க. கணபதிப்பிள்ளை. மற்றவர் தென்மராட்சியைச் சேர்ந்த மட்டுவில் பண்டிதமணி, இலக்கிய கலாநிதி, சித்தாந்த சாகரம் சி. கணபதிப்பிள்ளை. இவர்களுக்குப் பின்னர் இக்கருத்தைப் பெரிதும் வலியுறுத்து பவர் யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்துத் துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந் $ଦ୍ଦt •
பண்டிதமணி எப்பொருளையும் விளக்கி சூலுைம் திட்டவட்டமாகத் தெளிவாக " வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்ற முறையில் விளக்குவார். ஈழத்துப் பூதந் தேவஞர் தொடக்கம் இன்றைய புலவரில் ஒருவரான ம. பார்வதிநாதசிவம் வரை பண்டிதமணி தெளிவான கொள்கையுடை யவர். "என்மஞர் புலவர்' என்ற பாணி யில் அவர் கூறுவது கிடையாது. அவருடைய கருத்துக் கடைந்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படியான கருத்து உரைக்கும் ஆற்றல் எப்படி வந்தது அவருக்கு என்பதை முதலில்
-Bornu 16VT Lb.
முதலாவதாக, பண்டிதமணியின் இள மைப் பின்னணியை நோக்கலாம். பண்டித மணியின் உறவினர் உரையாசிரியர் மட்டு வில் கணபதிப்பிள்ளை வேற்பிள்ளை. இளை ஞன் கணபதிப்பிள்ளை. வேற்பிள்ளையின் நிழலில் வாழ்ந்தவர். ஆனல் அவரிடம் முறை யாகப் பாடம் கேட்கவில்லை. ம. க. வேற் பிள்ளையின் புதல்வர் ஐவர், அவர்களில் இருவர் தமிழ் அறிஞர். இவர்களின் கருத்துப்

iன் பார்வையில் 5மிழ்ப்புலவர்
ந்தரம் அவர்கள்
பண்டிதமணியைக் கவர்ந்தது. மூத்தவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தமிழ் ஆசிரியரும் ** இந்து சாதனம் ?? பத்திரிகை ஆசிரியருமான ம. வே. திருஞானசம்பந்த பிள்ளை, மற்றவர் குருகவி மலையருவி ம. வே. மகாலிங்கசிவம். இருவரும் பண்டித மணியின் உறவினர். உறவினர் என்பதிலும் பார்க்க உற்ற நண்பர். இவ்விருவரும் ஈழத்துத் தமிழ்ப் புலவர் பரம்பரையைப் போற்றி வளர்ப்பவர்; கருத்துச்செல்வர்.
இரண்டாவதாகப் பண்டிதமணியின் நல் லாசிரியர்களைப் பற்றி நோக்கலாம். ** இராம நாதமான்மியம் " பாடிப் புகழ்பெற்ற வித்து வான் பொன்னம்பலபிள்ளை பண்டிதமணி யின் ஆசிரியரில் ஒருவர் ; சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் கல்வித் தனி முத்திரையைப் பண்டிதமணி சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் பெற்ருர், குமாரசுவாமிப் புலவரின் புலமை நிகரற்றது. தமிழ்த் தாத்தா எனப் போற்றப்படும் உ. வே. சாமிநாதஐயரின் ** சீவகசிந்தா மணி** முதற் பதிப்பிற் பிழை பல கண்டு நிறுவியவர் குமாரசுவாமிப் புலவர். நாற் பதிற்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த வர். நாவலர் பரம்பரையைப் போற்றி வளர்த்தவர். ஈழத்துப் பெருமையைக் குமார சுவாமிப் புலவர் பண்டிதமணிக்கு எடுத் துரைத்து வந்தார்.
மூன்ருவதாகப் பண்டிதமணியின் திரு நெல்வேலி * ஈரப்பலாவடி' இலக்கியப் பூம்பந்தலை நோக்குவது நன்று. இங்கிருந்த வீடு ஒன்றில் தமிழ் அறிஞர் பலரும் அவ் வப்போது கூடுவர். பேச்செல்லாம் மூச் செல்லாம் சைவமும் தமிழும் பற்றியவை யாக இருக்கும். இவர்களில் இருவர் பண்டித மணியின் உறவினர். ஒருவர் அகநூல் கலாநிதி கோ. சிவப்பிரகாசம். இவர் பருத் தித்துறையைச் சேர்ந்த பெரும்புலவர் குடும் பத்தில் தோன்றியவர். வேற்பிள்ளையின்

Page 72
- 2
தந்தையார் கணபதிப்பிள்ளை மட்டுவில் உடையார்; ஆனல் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். ஆங்கிலப் புலமை நிரம்பிய சிவப்பிரகாசம் மிகுந்த கடும் விவேகி. தமிழ் நூல்களுக்கெல்லாம் மேலைத்தேய பாணியில் விளக்கம் கொடுப்பார். மற்றவர் ம. க. வேற்பிள்ளையின் கடைசி மகன் விஞ்ஞானப் பட்டதாரி, நடராசா, விஞ்ஞான ஆசிரிய ராக இளவாலை புனித கென்றியரசர் கல்லூ ரியில் பல ஆண்டுகள் நற்பணி புரிந்தவர்; பண்டிதமணியின் நண்பர். அட்சரகணிதம் கேத்திரகணிதம் என்பவற்றைப் பண்டித மணிக்குப் படிப்பித்தவர். ஈழத்துத் தமிழ்ப் பரம்பரை என்ருல் அதனை ஒருபோதும்
விட்டுக் கொடுக்கமாட்டார். ** வடக்கே உள்ளதெல்லாம் தெற்கேயும் உண்டு ?? என்பர். வடக்கு என்பது தமிழ்நாடு ;
தெற்கு என்பது ஈழம். இது பண்டித மணியைப் பெரிதும் கவர்ந்தது.
நான்காவதாகப் பண்டிதமணியின் திரு நெல்வேலிச் சைவ ஆசிரிய கலாசாலை நண் பர்களை நோக்கலாம். பண்டிதமணியின் கல்லூரி அதிபர் கல்விமான். அவர் மயி லிட்டி சி. சுவாமிநாதன்; கலைப்பட்டதாரி; கல்குத்தாப் பல்கலைக் கழகத்தில் கற்றவர் ; இந்திய விடுதலை எழுச்சியினல் பெரிதும் கவரப்பட்டவர் ; ஈழத்து இலக்கியப் பரம் பரையை இக்கால வரலாற்றுக் கோட்பாடு களுக்கு ஏற்ப விளக்குவதில் வல்லவர்; மிகவும் சுவையாகக் கடினமான பொருள் களை எல்லாம் விளக்குவார். மற்றவர் சிந் தனைச் செல்வர் கல்விமான் அளவெட்டி திரு. பொ. கைலாசபதி. மெய்ப்பொருளில் பெரும் நாட்டம் உடையவர்; தமிழ் இலக் கிய இலக்கண வளர்ச்சிக்கு மெய்ப்பொரு ளின் அடிப்படையில் புதிய விளக்கம் கொடுப் பார்; தமிழ் நெடுங்கணக்கிற்குள் சைவ சித்தாந்த அடிப்படையில் உயிர் உடல் என்று தெளிவுபடுத்துவார். எனவே இந்த நான்கு பின்னணிகளும் பண்டிதமணியின் உள் ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆளுல் ஒன்று, தரம் குறைவான இரும்பை வைத்துக் கூரிய கத்தியை உருவாக்க முடி யாது. நல்ல உருக்கை வைத்துத்தான் கூரிய கத்தியை உருவாக்கலாம், பண்டித
4

5 -
மணி சீரிய உருக்கு. மேலும் ஒன்று உண்டு. பண்டிதமணியின் நோக்கு மூலம் ஈழத்துப் புலவர் பரம்பரை ஒளிவிட்டு வீசவேண்டும் என்பது அவரின் குலக் கடவுள் சந்திர மெளலீசுவரனின் விருப்பம்போலும் என்பர் அவரின் நண்பர்.
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் பண்டித மணியைக் காண விரும்பினர். அந்தப் பேராசிரியர் அந்தச் சந்திப்பின்போது ‘இரகு
வம்சம் ' பற்றிச் சில விளக்கம் கேட்க விரும்பினர். "இந்த இடங்களோ? " என்ற பண்டிதமணி ** அச்சொட்டாக" அந்த இடங்களைக் குறிப்பிட்டார். பேராசிரியருக் குச் சற்று வியப்பாக இருந்தது. "'உங்க
ளுடைய நிலையில் விளங்காமலிருப்பவை இவையாக இருக்கலாம்" என்ருர் பண்டித மணி. பின்னர் விளக்கமும் இடையிடையே இரகுவம்ச நூல் நயமும் பண்டிதமணியின் தமிழ் மணக்கும் வாயிலிருந்து வந்தன. அது பெரு விருந்து.
'நாவலருக்கு ஞானகுருவில்லை; எனவே அவர் வணக்கத்துக்குரியவர் அல்லர் " என்ற * புரளி'யைச் சிலர் கட்டிவிட்டனர். இது பற்றிப் பண்டிதமணியிடம் கேட்டேன். தன் தமிழ்த்தாடியைத் தடவி விட்டுப் பண்டிதமணி விளக்கம் தந்தார்: "தன்னை வணங்கும்படி நாவலர் ஐயா ஒருபோதும் கேட்டதில்லை. பின்வந்தவர்கள் நாவலரை வணங்குகின்றனர். இதற்கு நாம் என்ன செய்யலாம்? மீண்டும் அமைதி, “தோன்ருத சிவநாதனின் தோற்றம் குருநாதன். குரு நாதனிடம் ஞானதீட்சை பெறலாம்; ஆனல் சிவநாதனே குருநாதனுக வந்தால் அதுவே பூர்வ புண்ணியம். சம்பந்தபிள்ளைக்குப் பசி வந்தபோது, அப்பருக்குச் சூலை நோய் வந்த போது, சுந்தரருக்கு மால் என்னும் மயக்க நோய் வந்தபோது, மணிவாசகர் பொன் னுடன் சென்றபோது சிவநாதனே குருநாத ஞக வந்தார். இது உண்மை. அதே போன்று நாவலருக்கு வைத்தீசுவரப் பெருமானின் அருட்பார்வை கிட்டியது. இதனை அவர் தன் பெரியபுராண வசனத்தில் மிகவும் தன் னடக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்."

Page 73
عبر areas a
ஈழத்துத் தமிழ்ப் புலவர்களின் ஆக்கம் வடக்கே உள்ளவர்களின் ஆக்கத்திற்கு எவ் விதத்திலும் குறைந்தது அன்று என்பது பண்டிதமணியின் திட்டவட்டமான கருத்து. இதற்குப் பண்டிதமணி அவ்வப்போது கொடுத்த விளக்கம் பல. அவற்றை இங்கு தருவது இயலாத அலுவல், இரண்டை மட் டும் குறிப்பிடலாம். முதலாவது கலையருவி Gugit grfui க. கணபதிப்பிள்ளை பற்றி பது. பண்டிதமணியின் ‘* இலக்கியவழி ** நூலை மறுபதிப்பு வரச்செய்து, துணிந்து பாடநூலாக்கியவர் பேராசிரியர் கணபதிப் பிள்ளை. ஒரு நாள் பேராசிரியர் கணபதிப் பிள்ளை பற்றிய பேச்சைக் கிளப்பினேன். இப்படிப் பண்டிதமணியை நோண்டிவிட் டால் போதும். மணிமணியான கருத்து வெள்ளம் பெருகும். பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் ** காதலி ஆற்றுப்படை ** என் னும் செய்யுள் நூல் பற்றிப் பண்டிதமணி பேசினர். பழைய இலக்கிய வடிவை வைத் துப் புதிய பொருளைக் கையாளலாம் என் பதைப் பண்டிதமணி விளக்கினர். இதன் மறு பதிப்பை உரையுடன் வெளியிடும்படி கேட்டார் பண்டிதமணி. தானும் உதவி செய்வதாகக் கூறினர். இது கைகூடவில்லை. கலையருவியும் பண்டிதமணியும் இன்று மறைந்துவிட்டனர். பண்டிதமணியின் தூய எண்ணம் இன்று கைகூடவில்லை.
கவிஞர் தேசிகவிநாயகம்பிள்ளையின் பாடல்களை எம்மவர் சுவைத்து மகிழ்ந்தனர். பண்டிதமணியும் சுவைத்தார். அதே நேரம் பாழ்ப்பாணத்து நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் பாடல்களை மேலும் உயர்த்தி வைத்தவர் பண்டிதமணி. 'இலங்கை வளம் கேளாத செவியென்ன செவியே, இரும் பாலே செம்பாலே செய்திட்ட செவியே ** என நவாலியூர் தங்கத்தாத்தா சோமசுந்தரப்
தெய்வப் புலமைத் திருவள்ளுவ ந கருத்துக்களை அப்படியே கொள்ளாம பின் ஆராய்ந்து தெளிந்து, மெய்யா என்று உண்மைக் கருத்தைக் காண்பது

6 -
புலவரின் பாடலைச் சுவைத்தவர் பண்டித மணி. ஒருநாள் "கற்பனைவாலும் மொழி பெயர்ப்புவாலும்" பற்றிப் பண்டிதமணி குறிப்பிட்டார். தேசிகவிநாயகம்பிள்ளையின் புலிப்பாடலில் வரும் ‘* வால்நுனி சுற்றுது பார்; வட்டம் சுழலுது பார்' என்ற கருத்து ஆங்கிலக் கதையின் மொழிபெயர்ப்பு. இது
** மொழிபெயர்ப்பு வால்". சோமசுந்தரப் புலவரின் கத்தரித் தோட்டத்து வெருளி பற்றிய பாடல் "கற்பனை நிரம்பிய
சொந்த வால்” . பயிரை மேய வந்த பசு வெருளியைப் பார்த்து வெருண்டு ஓடியது. வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடியது. சும்மாக ஒடவில்லை. "வாட்டமில்லாப் பயிரை மேய வந்த பசு வாலைக் கிளப்பிக்கொண்டு ஓடி யது; வெடி வாலைக் கிளப்பிக்கொண்டு ஒடியது". இது சோமசுந்தரப்புலவரின் கற் பனையில் பிறந்த 'சொந்த வால்". ஈழத்து வால் சிறப்பானது.
இன்றும் தமிழ்நாட்டில் உள்ள பலர் "ஈழத்துத் தமிழ்ப் புலவர்' என்ருல் ஏதோ "அக்கரைச் சீமைப்புலவர்" என்ற பாணி யில் எழுதுகின்றனர்; பேசுகின்றனர். இக் கருத்தைப் போக்கி ஈழத்துத் தமிழ்ப் புல வர் பரம்பரையைத் தன் நோக்கினல் உயர்த்தியவர் பலர். அவரில் முக்கியமான ஒருவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. இவர் ஈழத்துப் புலவர் பலரின் ஆக்கங்க ளுக்கு முன்னுரை வழங்கியுள்ளார்; பாராட்டு வழங்கியுள்ளார்; சுவைக்குறிப்பு எழுதியுள்ளார். இவற்றைத் திரட்டி ஆராய இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும். இதை வழிநடத்த வல்லவர் யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்துத் துணை வேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன். இந்த நல்ல நாளை எதிர்பார்த்து நிற்போ
琶]马T子。
ாயனுர், 'நாம் எண்ணுகின்ற கேட்கின்ற ல், அக்கருத்துக்களை முதலில் ஐயுற்று, ன மூலக் கருத்தை அறிதல் வேண்டும்" ற்கு ஒரு சட்டம் வகுத்திருக்கிருர்,
- இலக்கியவழி

Page 74
பண்டிதமணியும், பேராசிரியர் ப. சந்தி கல்வியியற்புலம், யாழ்ப்
இலங்கை மணித் திருநாட்டில், வட கோடியில், தென்மராட்சிப் பகுதியில், மட்டு வில் கிராமத்தில் அவதரித்த சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களும், கிழக்குக்கோடி யில், படுவான்கரையென வர்ணிக்கப்படும் பிரதேசத்தில், மண்டூரில் அவதரித்த ஏகாம் பரபிள்ளை பெரியதம்பிப்பிள்ளை அவர்க ளும் நம் நாட்டில் பண்டிதமணி, புலவர் மணி என்று முறையே அழைக்கப்படுகின்ற வர்கள்.
இவர்களது வாழ்க்கை வரலாறு இந் நாட்டு வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் இலக்கிய வரலாறு எனக் கொள்ளுதல் முறை யாகும்.
நமது அறிஞர்கள் இருவரும் தமிழ் இயல், தமிழ் ஞானம், தமிழ் ஆத்மீகம் ஊடாக, ஈழத்தின் தமிழ் கூறும் இரு மாகா ணங்களையும் இணைத்த தமிழ்ச் சுடர்கள். இவ்விணைப்பு, தத்துவ அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் நித்தியமாக நிலைத்து நிற்பதன் மூலமே, தமிழ் ஈழம் வாழ முடியும்.
மட்டுவில் ஒரு சிறிய கிராமம். தென்ம ராட்சி, பெரியார் கணபதிப்பிள்ளை பிறந்த காலத்தில் ஆங்கில நியமக் கல்வியைப் போற்றி வளர்க்காது மரபுவழிக் கல்வியையும் முறைசாராத் தமிழ்ப் புலமையையும் வளர்த்து வந்த பகுதியாகும். பண்டிதமணி அவர்களின் தந்தையார் சின்னத்தம்பி அவர்கள் தர்மகுணசீலராக விளங்கி, புரா னங்கள் சொல்லி, உரை வாசித்து, தாம்பெற்ற அறிவுச் செல்வத்தை மக் களுக்கு வாரி வழங்கியவர். மட்டுவில் உரையாசிரியர் வேற்பிள்ளையிடம் கற்றவர். அவரது துணைவியார் வள்ளியம்மை எட்டு ஆண்டுகளாகக் குழந்தைப் பேறில்லாதிருந்து அவர்களது குல தெய்வமான தனங்கிளப்பு காரைத்துர விநாயகரை வழிபட்டு, சிதம்பரம் நடராசப் பெருமானைத் தரிசித்துப் பெற் றெடுத்த குழந்தையே கணபதிப்பிள்ளை அண்ணல்,

புலவர்மணியும் ரசேகரம் அவர்கள் பாணப் பல்கலைக்கழகம்
மண்டூர், இந்திரனுடைய மருமகனுகிய முருகன் உறையும் திருப்பதி. நல்ல நீர்வன மும், பயன் நல்கும் நிலவளமும் கொண்டு விளங்குவது. மட்டுவிலைப்போன்று மரபு வழிக் கல்வியையும் முறைசாராக் கல்வியை யும் போற்றி வளர்த்தது மண்டூர்க் கிராமம். பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் தந்தை யார் பெரியபுராணம், திருவாதவூரடிகள் புராணம், கந்தபுராணம், திருச்செந்தூர்ப் புராணம் ஆகிய நூல்களையும் கற்றறிந்தார். அவர் முப்பத்தைந்து வருடங்களாக மண்டூர் முருகன் கோயில் வண்ணக்கராய்ப் பணி புரிந்து, மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவர் துணைவியார் சின்னத்தங்கம். இவர்கள் மூத்த புதல்வன் பெரியதம்பிப்பிள்ளை.
திருக்குமாரர்கள் இருவரும் 1899ஆம் ஆண்டில் பிறந்தவர்கள். புலவர்மணியவர் கள், 1978 ஆம் ஆண்டிலும் பண்டிதமணி அவர்கள், 1986ஆம் ஆண்டிலும் சிவபதம் எய்தினுர்கள்.
1917ஆம் ஆண்டு தொடக்கம் புலவர் மணி இறைவனடி எய்துமட்டும், இணை பிரியாத உள்ஆர்ந்த நட்புடையவர்களாக இவர்கள் வாழ்ந்தார்கள்.
புலோலியைப் பிறப்பிடமாகக் கொண்
டவர் வித்துவான் சந்திரசேகர உபாத்தியா
யர். அவர் மண்டூர்க் கிராமத்திலேயேதங்கி,
பெரியதம்பிப்பிள்ளைக்கும், இன்னும் சிலருக்
கும் தமிழ் சொல்லிக் கொடுத்தார்கள். இது தொடரமுடியவில்லை. எனவே பெரியதம்
பிப்பிள்ளை கல்முனை மெதடிஸ்த பாடசாலை யில் ஆங்கிலம் கறகச் சேர்க்கப்பட்டார்.
பண்டிதமணியவர்கள் மட்டுவிலில் சந்திர மெளலீச வித்தியாசாலையில் ஆரம்ப வகுப்பில் G3FritjiesLi. untri.
இருவரும் இக் கல்லூரிகளில் கல்வியைத் தொடரவில்லை.

Page 75
இக்காலத்தில் தம்பிமுத்துப்பிள்ளை எனும் தமிழ் அறிஞர், மட்டுவிலில் வாழ்ந்தார். ஆவர் புத்தகங்கள் விற்பதைக் தொழிலாகக் கொண்டவர். அதன்வழி தமிழினையும் கற்றறிந்தவர். மண்டூர் முருகனில் பக்தி கொண்டவர். எனவே மண்டூர் செல்லும் போது அங்குள்ள தமிழ் அறிஞர்களோடு க.டிக்குலாவுவது வழக்கம். இவர்களுள் ஒருவர் ஏகாம்பரபிள்ளையுமாவர். இவரது மகஞன பெரியதம்பிப்பிள்ளையின் தமிழ் ஆர்வத்தைக்கண்ட அவர், அவரை யாழ்ப் பTணத்துக்கு அழைத்து வந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, சில மாதங்களுக்கு முன்னர் இதே தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் நல்லூர் முருகன் திருவிழாக் காலத்தில் புத்தகம் விற்கும் நோக்கத்தோடு சென் றிருந்தபொழுது, கணபதிப்பிள்ளை அவர்க ளும், அவரோடு சென்றிருந்தார். சென் றிருந்த சமயம், நாவலர் காவிய பாட சாலைத் திண்ணையில், உறங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, இக்கலைக் கோயிலில் கற்க வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டது. நாவலர் பெருமானின் பாதம் படிந்த அப் பள்ளிக்கூடத்தில் தான் கற்கவேண்டுமென்ற ஆசை மேலும் வீறிட்டு எழுந்தது. இதனைச் செய்து தருமாறு காரைத்துர விநாயகரிடம் தவம் இருந்தார்.
தம்பிமுத்தண்ணர் என்று அன்போடு அழைக்கப்பட்ட தம்பிமுத்துப்பிள்ளை அவர்க துெ வேண்டுகோளுக் கிணங்கி, இவர்கள் முன் வழிநின்ற உரையாசிரியர் ம. க. வேற் பிள்ளை அவர்களது இளைய புதல்வரான திரு. வே. நடராசா அவர்களின் ஊக்கத்தினல் கணபதிப்பிள்ளை அவர்கள் காவிய பாடசாலை பில் சேர்க்கப்பட்டார்கள். கணபதிப்பிள்ளை அவர்களின் வாழ்க்கையில் புது யுகம் பிறந்தது.
இறைவன் நியதிக்கிணங்க, பெரியதம்பிப் பிள்ளை அவர்களும், தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின் விடா முயற்சியாலும், நடராசா அவர்களின் விடாமுயற்சியாலும் காவிய பாடசாலையில் 1917ஆம் ஆண்டில் அனுமதி பெற்றனர்.
இலங்கைத் தமிழர் வரலாற்றில், இலக் கிய வரலாற்றில், இவ்விரு துருவங்களும் ஒன்றிணைந்தது தமிழ் மக்களின் பாரம்பரிய

-س 28
பிரதேசங்களின் ஆத்மீக இணைப்பாக விளங் கிற்று.
காவிய வகுப்பில், சமகாலத்தில் நடாத் தப்படும் பரீட்சைகள் இல்லாது விட்டா லும், சேர் பொன்னம்பலம் அருணுசலம் அவர்களைத் தலைவராகக் கொண்டு விளங்கிய செந்தமிழ்ப் பரிபாலன சங்கம், சில தேர்வு களை நடாத்திவந்தது. இச் சங்கம் பல பேரறி ஞர்களை அங்கத்தவர்களாகக்கொண்டு விளங் கியது. சேர் பொன்னம்பலம் அருளுசலத் தோடு, இச் சங்கத்தை வளர்க்க இணைந்து செயற்பட்டவர் சேர் அம்பலவாணர் கண்க சபை அவர்கள். அருளுசலம் அவர்களும், கனகசபை அவர்களும் தூய சிந்தனைகொண்ட அரசியல் நெறியாளர்கள்; இலங்கைப் பல் கலைக்கழகக் கல்விக்குத் தத்துவம் அளித்த வர்கள். இவர்களின் கல்வித்தொண்டு குறிப்பாகக் கனகசபை அவர்களின் கல்வித் தொண்டு செவ்வனே மதிப்பீடு செய்யப் படவில்லை.
செந்தமிழ்ப் பரிபாலன சங்கம் ஒருநாள் பரீட்சை யொன்றை நடத்தியது. பரீட்சை மண்டபத்தில் பல பேரறிஞர்கள் குழுமி யிருந்தார்கள். கல்வி நெறியாளர், அரசி யல் அறத்தினர் கனகசபை அவர்களும், விபுலாநந்த அடிகளும் இங்கு சமுகமளித் திருந்தார்கள். பரீட்சை ஆரம்பமாகி, முடிந்துவிட்டது. இதைப் பற்றி பெரிய தம்பிப்பிள்ளை அவர்கள்,
* பரீட்சை தொடங்கிவிட்டது. முழுதும் வாய்ப்பா. மாகவே மறு மொழி சொல்ல வேண்டும். எழுத்துப் பரீட்சையில்லை. மூன்று நான்கு மணி நேரம் நடந்து முடிந்தது பரீட்சை, புள்ளி அடிப்படையிற் கண்ட பரீட்சை முடிவில் சி. கணபதிப்பிள்ளை திறமை அடிப்படையில் முதலாமிடம் பெற்ருர், எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது?
எனக் கூறியுள்ளார்கள்.
இவ்விரட்டையர்களும், காவிய பாட சாலையிற் கற்றுக்கொண்டிருக்கும்போது, இவர்களுக்கிடையே விளங்கிய ஒத்துணர் வினைக் காட்டுமுகமாக, பண்டிதமணியவர் களின் கூற்று நோக்கற்பாலது.

Page 76
!2 س--.
*ஆங்கில மோகம் தலைக்கு மீறித் தாண் டவமாடிய அக் காலத்திலே-தகுதியுள்ளவர் கள் தமிழைப் புறஞ்செய்த அந்தக் காலத் திலே படிப்பு வாசனையின்றியிருந்த என்னையும் அவர்கள் அந்தக் காவிய வகுப்பில் சேர்க்க நேர்ந்தது. மட்டக்களப்பிலிருந்தும் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருக்கு ஆங்கில அறி வும் உண்டு. கவிதை புனையும் ஆற்றல் இயற் கையில் அவர்டால் இருந்தது. அங்கே தகுதி வாய்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். ஆங்கிலத்தை மேலும் விருத்தி செய்து புருஷ இலட்சணமான உத்தியோக மொன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பாமல், தமிழ் படிப்பதற்கென்று அவர் அங்கிருந்து இங்கு வந்தது எங்களுக்குப் பெரிய ஆச்சரிய மாயிருந்தது: அவர்தாம் ஏ. பெரியதம்பிப் பிள்ளை; புலவர்மணி" என்பதே டண்டிதமணி
பவர்களின் கூற்ருகும்.
காவிய பாடசாலையில் அறிஞர்களுக்கு அறிஞராக விளங்கிய குமாரசுவாமிப் புலவர் அவர்களே முதன்மை ஆசிரியராக விளங் கினர்கள்.
இப் பெரியாரின் நிழலில், அடிச்சுவட் டில் வளர்ந்து உயர்ந்தவர்கள் இரு மணி களும், கிரேக்க தத்துவஞானி சோக்கிரதீசர் அவர்களது உள்ளமும்,அவரது மாணுக்கரான சிந்தனையாளர் பிளேட்டோ அவர்களின் உள்ளமும் ஒன்றித்ததின் மூலமே,அவர்களது இணக்கத்தின் மூலமே தத்துவ ஆசிரியர்களது பரம்பரை உலகில் உருவாகிற்று.
அதேபோன்று, குமாரசுவாமிப் பெரி யாரின் உள்ளமும் கணபதிப்பிள்ளை, பெரிய தம்பிப்பிள்ளை அவர்களின் ஒன்றிணைந்த உள்ளங்களும் ஒன்றித்தன.
புலவரவர்களின் உருவாக்கங்களான இரு வரும் தங்களது பேராசானுக்குச் சூட்டும் புகழ்மாலையிலும் அஞ்சலியிலுமிருந்து நாம் இதனை அவதானிக்கலாம்.
அவர் இறைவனடி எய்தியதும், பண்டித மணியவர்கள், மனம் குழைந்து, ஆக்கிய கவிதை இதுவாகும்;

س--- 9
“செந்தமிழும் ஆரியமுந் தேர்ந்து வீறித்
தேயமெலாம் சென்றிலங்கும் சீர்த்தி ஒன்றே இந்தநில மிசையிருப்ப இணையி லாத
எண்ணில்பல கவிதழைத்த இனிய வாயும் அந்தமிலாக் கலைகள்பல எழுதி வைத்த
அம்புயநேர் திருக்கரமும் அந்தோ! அந்தோ! இந்தனத்திற் செந்தழலில் உருகி வீய
யாமிதனைப் பார்த்திருத்தல் என்னே!
என்னே!
புலவர்மணி அவர்கள்,
* வண்ணத் தமிழ்க்கு வரம்பு வடமொழியின்
உண்மைத் தெளிவுக் குரையாணி
கண்மணியென் சுன்னைக் குமார சுவாமிப் புலவனடி சென்னிக் கியான்செய் சிறப்பு.’
இரு மாணவர்களுக்கும் தமது குருவி னேடு இருந்த உறவினையிட்டு, புலவர் அவர்களின் மகன், கு. அம்பலவாணபிள்ளை யவர்கள்,
* 'இங்கும் அநேக மாணவர்கள், யாழ்ப் பாணத்தின் பல பாகங்களிலும் வெளியூர் களிலுமிருந்து வந்து கல்வி பயின்றனர். அவருட் சிலர் இருபாலை மு. வேதாரணிய தேசிகர், உடுவில் வ. மு. இரத்தினேசுவர ஐயர், மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை, மட்டக்களப்பு ஏ. பெரியதம்பிப் பிள்ளை என்போர். இவர்களில் ஈற்றில் காட்டப்பட்ட இருவரும் மேற்படி வித்தியா சாலையிலன்றித் தந்தையார் வாதநோயாற் பீடிக்கப்பட்ட காலத்து இல்லத்திலும் வந்து தொடர்ச்சியாகக் கற்றவர்கள். தகப்பனரின் அன்புக்கும் உரியவராக விருந்தவர்கள்." என்று கூறியதிலிருந்து தெளிவாக விளங்கு கின்றது.
1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில், தமிழ் விழா சிறப்பாக எடுக்கப்பட்டது. இவ் விழாவினை யொட்டி எழுதப்பட்ட தின கரன் பத்திரிகையின் உள்ளக்கிடக்கையில், பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்கள் பண்டித மணி எனக் குறிப்பிடப்பட்டார்கள். இதற்கு அநுசரணையாக, கல்கி திரு. ரா. கிருஷ்ண மூர்த்தி அவர்கள், பண்டிதமணியைப் பல வாறு புகழ்ந்து எழுதினர்கள். பண்டிதமணி

Page 77
எனும் பெயர் பாரதத் தமிழகத்தாலும், ஈழத்தாலும் எற்றுக் கொள்ளப்பட்டுவிட் t-gile
மட்டக்களப்புத் தமிழ்க்கலை மன்றம் பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் கவிதா சக்தியையும், கற்பனை வளத்தையும் போற் றும் பொருட்டு 1951ஆம் ஆண்டிலேயே புலவர்மணி எனும் பட்டத்தினை வழங்கி அவரைக் கெளரவித்தது.
1978ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள், மரபுவழித் தமிழ்க் கல்வி அறிஞனன பிரபல்யம் வாய்ந்த பண்டிதமணி கணபதிப் பிள்ளை அவர்களுக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தால் இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது.
இதனைப் பாராட்டுமுகமாகப் புலவர் மணி, பண்டிதமணி அவர்களுக்குப் பாராட் டும் நல்வாழ்த்தும் அனுப்பியிருந்தார்கள். அது முழுமையாகத் தரப்பட வேண்டியது. "இலக்கிய கலாநிதி பண்டிதமணியும், நானும் ஒரே மரத்தின் இரண்டு கிளையில் ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள்.
அவர் சற்றே இளையவர். அக்கிரபூசை பெறுவதற்கு உரியவர்.
என் பின்னவன் பெற்ற செல்வம் அடிய னேன் பெற்றதன்ருே.
பண்டிதமணிக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தமையால் இலங்கைப் பல்கலைக்கழகம் தன்னையே கெளரவித்துக்கொண்டது.
பல்கலைக் கழகத்துக்கு எனது மனம் நிறைந்த பாராட்டு உரியதாகும். பாராட்டு விழா இனிது நிறைவுறுக.
கலாநிதிப் பட்டம் பண்டிதமணியை அடைந்ததால் அது தனக்கே ஒரு மதிப் பைப் பெற்றுள்ளது,
இனிப் பண்டிதமணி எனும் காரணப் பெயர், அன்பனுக்கு இயற்பெயராக, கலா நிதி பண்டிதமணி என வழங்குவோம்.
பண்டிதமணியின் திருவருளால் நீதி வாழ்க. தனது உடைமையையும், தம்மை யும் திருவருளுக்கே அர்ப்பணம் செய்து வாழ்க’ என வாழ்த்தினர்கள்.
அன்பும், உயர்ந்த மதிப்பும், கேண்மை யும் கொண்ட பாராட்டு, நல்வாழ்த்துரை யாக இது விளங்குகின்றது.

س- 30
சமரச, சமத்துவ, சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட பகவத்கீதை யானது புலவர்மணியினது உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நூலாகும். கீதையின் சுலோகங்களை ஒவ்வொரு வெண்பாவாகப் பாடவேண்டுமென்னும் எண்ணம் உண்டா யிற்று. அவர் பகவத்கீதையை வெண்பா வாகப் பாடுவதற்கு முதல் நூலாகப் பாரதி யாரின் பகவத்கீதையையே கைக்கொண் டார். இவ் வெண்பாக்கள் வீரகேசரியில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டன.
புலவர் மணியினது பகவத்கீதை வெண் பாக்கள், யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் இருபத்தெட் டாம்ஆண்டு விழாவிலே அரங்கேற்றப் பட்டது. அப்போது பண்டிதமணி அவர்கள்,
* கீதை கவிசெய்து கீர்த்தி மிகப்பெற்ருன் ஏபெரிய தம்பி எனதன்பன்-ஒதக்கேள் பாட்டுக் கொருபுலவன் பாரதியென் றர்ஒருவர் பாட்டுக் கிவன் என்பன் யான்." எனப் பாடி, சாற்றுகவி அளித்தார்கள். இது 1952ஆம் ஆண்டில். இவ்விழாவில் பெரிய தம்பிப்பிள்ளை அவர்களுக்குப் பண்டிதமணி எனும் பட்டம் வழங்கப்பட்டது.
புலவர்மணி, பண்டிதமணிக்கு அளித்த பாராட்டுரையில் என் பின்னவன் என்ற சொல்லினை, தம்பி என்ற கருத்திலும், பண்டிதமணி பெற்ற கெளரவம் தனக்கும் உரியது என்றும், அவரைத் தனது அன்பன் என்று கூறுவதையும் காண்கின்ருேம்.
பண்டிதமணி அவர்கள் புலவர்மணியி னது கீதை வெண்பாவைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் ஆய்வு செய்தது ஒருபுறம். அதற்கு மேலாக அவரை எனதன்பன் எனக் கூறி, கவிதை ஆக்குவதில் பாரதியை விட வும் சமர்த்தன் எனும் கருத்தையும் முன் வைக்கின்ருர்,
இரு அறிஞர்களினதும், வரலாற்றினை எடுத்துப்பார்க்கும்பொழுது இறைவன் நியதியால் இவர்கள் இரட்டையர்கள் ஆணுர்கள் எனத் தோன்றுகின்றது.
1978ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழக, யாழ்ப்பாண நியமத் தலைவராக விளங் கிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களை, வேந்தருக்கு அறிமுகம் செய்யும் பொழுது, "இந்த நாட்டிலே தமிழர் சமயத்

Page 78
- 3
தினையும், பண்பாட்டினையும் பாதுகாக்க அரும்பாடுபட்ட ஆறுமுகநாவலர் தனக் கென ஒரு மரபினையும், அம்மரபினைப் பேணும் நல் அறிஞர் வரிசையினையும் உரு வாக்கிவிட்டார். அந்த வரிசையில் வந்தவர் அறிஞர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆவர். யாழ்ப்பாணக் கலாசாரத் தூதுவ ராகவும், கல்வியின் தூதுவராகவும் விளங்கும் பண்டிதமணி அவர்கள் ஆறுமுகநாவலர் எவ்வாறு தனக்கென ஒரு அறிஞர் குழாம் வரிசையை உண்டாக்கினரோ, அதேபோல, இன்று இந்நாட்டில் பண்டிதமணி, அறிஞர் குழாம் ஒன்றை உருவாக்கியுள்ளார்" என்று அறிமுகம் செய்து வைத்தார்கள்.
1980ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளைக்கு இலக்கிய வித்தகர் என்னும் விருதை வழங்கிக் கெளரவித்தது. இந்து நாகரிகத்துறைத் தலைவர், பேராசிரி யர், கா. கைலாசநாதக் குருக்கள் அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தரவர் களுக்கு அவரை அறிமுகஞ் செய்து வைத்த பொழுது, "ஈழநாட்டின் கிழக்குப் பகுதியில் வளமிக்க மட்டக்களப்பு என்னும் பெயரு டன் இணைந்து அடிக்கடி பேசப்படும் சிறப்பு வாய்ந்தது பெரியதம்பிப்பிள்ளை என்னும் பெயர். இவர் ஈழநாடு பெற்றெடுத்த தமிழர்களுள் ஒருவர்; தமக்கென உரித் தான மரபையுடையவர். . . . மட்டக் களப்பில் மட்டுமன்றித் தமிழ்ப்பேசும் ஈழம் முழுவதிலும் இவர் பெயர் பரவி இருப்பது ”.............. ... --. س۔ -.......... -۔۔۔ ۔ زنیقGڑ0T6J(t5tib <9/Bgین/9>
இலக்கியப் புலமையும், இலக்கிய இரசனை யும் இவற்றின் சிறப்புக்கு அடிப்படையாக வேண்டப்படும் தமிழ்ப்பற்று, சமயப்பற்று ஆகியன ஒங்கப் பெற்று, இலக்கியத்துறை யில் அரியதொரு பாரம்பரியத்தைப் பேணிப் புலவர்மணியாகத் திகழ்ந்து நிற்கும் ஏகாம்பரப்பிள்ளை பெரியதம்பிப்பிள்ளை என அறிமுகம் செய்து வைத்தார்கள்.
பண்டிதமணி அவர்கள் நாவலர் பெருமான் வழிநின்று, சைவசமய மறு மலர்ச்சியில் ஊன்றித் திளைத்து, சிறந்த சாஸ்திரங்களில் மெய்யுணர்வும் பெருங்காப் பியங்களின் தெளிவும் கொண்டு விளங்கு பவர்; உரைநடை வித்தகர்.
புலவர்மணி அவர்கள், குமாரசுவாமிப் புலவரால் ஆட்கொள்ளப்பட்டுப் பின்னர்

விபுலாநந்த அடிகளின் அநுசரணையில், இராமக்கிருஷ்ண சங்கத் தத்துவத்தை ஏற்று சமய சமரச வழிநின்று பக்திச் சுவையும்
சமத்துவ உணர்வும், சமபல நிறைவும், கற்போர் உள்ளத்தைக் கவரும் வண்ண மும், உணர்ச்சியோட்டமானது உயிர்த்
துடிப்போடிருக்கத்தக்கதாயும் கவிதை இயற் றும் ஆற்றல் கொண்டவர்; இலக்கிய வித்தகர்."
இருவரும் உரைநடையிலும், கவிதை ஆக்கத்திலும் சளைத்தவர்கள் அல்லர்.
திருநெல்வேலி சைவ ஆசிரிய கல்லூரி யில் வாழ்க்கை முழுவதும் தொண்டு செய்த ஆசான் பண்டிதமணியவர்கள். இடைநிலைக் கல்லூரிகளிலும், உயர்நிலைக் கல்லூரிகளிலும், மட்டக்களப்பு அர்ச். அகஸ்தீன் கல்லூரி யிலும் பணியாற்றியவர் புலவர்மணி
யவர்கள்.
பண்டிதமணி இலங்கை வளத்தில் வளம் கண்டவர். புலவர்மணி இலங்கைமணித் திருநாடு கண்டவர்.
யாழ்ப்பாண இளைஞர் வாலிப சங்கத் திலும், இலங்கை சமசமாசக் கட்சியிலும் ஊற்றெடுத்த பண்டிதமணியின் அரசியல் நோக்கு அரசியல் ஆத்மீகமாக வடிவெடுத் தது. சமதர்ம சமய சமரசத்தில் ஊற் றெடுத்த புலவர்மணியின் அரசியல் நோக்கு ஐக்கிய இலங்கை நோக்காக உருவெடுத்தது.
சிந்தனையாளர், தர்க்கவியலாளர், இளைஞர் உள்ளத்தைப் பக்குவப் படுத்தும் பணி ஆகியவற்றின் சின் ன மா ன சோக்கிரதீசர் வழி நின்று செயல்பட்டவர் பண்டிதமணி.
ஆங்கிலக் கவிவாணர் உவில்லியம் வேர்ட்ஸ்வோது வழி நின்று, தனது சம யத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதை மூலம் வேதாந்த நெறி பரப்பியவர் புலவர் LD 6ð! -
தர்க்கத்தில் எழுந்த உணர்ச்சி பண்டித மணியினது; உணர்ச்சியில் எழுந்த தர்க்கம் புலவர்மணியினது.
வடக்குக் கிழக்கு ஆக இலங்கை மக்கள் அல்லலுற்றுத் துன்பக்கேணியில் வாழ்கின்ற பொழுது இவர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஆத்மீக ஒற்றுமை வழிகாட்டட்டும்.

Page 79
*ஆன்றவிந்தடங்கிய
திருமுறை அரசி வித்துவான் திரும
l, எனப்படுவது பொறிவாழ் பூவே என்பார் சிவப்பிரகாசர், அது போன்று ** பண்டிதமணி ?? என்றவுடன் நம் நினைவுத் திரையில் நிழலாடுவது ஆறடிக்குக் குறையாத உயரம்; மெலிந்து சிவந்த தேகம் அறிவின் ஆழத்தை அளவிடும் கண்கள் அநுபவப் பரப்பைக் காட்டும் அகன்ற நெற்றி வரைவின்றி வழங்கும் கொடை மடம் பட்ட கரங்கள்; தடையின்றித் தமிழ் ஊறும் தனித் தங்க நெஞ்சம். ஆம், இவை களின் ஒட்டுமொத்த உருக்கொண்ட தமிழ் அன்னையின் தவப் புதல்வர் திரு. சி. கண பதிப்பிள்ளே அவர்களது உருவம்தான்.
நல்லாசிரியனது இலக்கணம் கூறவந்த பவணந்திமுனிவர்,
*" குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை
கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குண மினேயவும் அமைபவ னுரலுரை யாசிரி யன்னே."
என்பார். நன்னூலார் கூறும் அனைத்துப் பண்புகளும் ஒருசேரப் பெற்ற பெருமகளுர் இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணப திப்பிள்ளை அவர்கள். சைவமும், தமிழும் செழித்து மணக்கும் மட்டுவில் மண்ணின் வார்ப்பு: பேராசான் நாவலர் பெருமகனின் வழித்தோன்றல்; பூரீமத் கைலாசபிள்ளை, சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் போன்ற பழுத்த தமிழ் மரங்களினின்று பயன் கொண்ட தமிழ்க்கணி; ஆயிரம் பிறைகளுக் கும் மேற்கண்ட பேரருளாளன். தேன் பிலிற்றும் இவரது உரைகளை மாந்துவதற் கென்றே ஒர் மாணவர் கூட்டம்.
பண்டிதர் ஐயா அவர்களிடம் பாடம் கேட்டவர்கள் முற்பிறவியில் புண்ணியம் செய்தவர்கள். விரையாமல், வெகுளாமல் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம்கொளக் கூறும் அந்த ஆற்றல் போற்றற்குரியது; புகழ்தற் குரியது. தமிழிலே மட்டுமல்ல, சைவசித் தாந்தத்திலும் துறை போ கியவர்கள். சித்தாந்தக் கடலில் மூழ்கி முக்குளித்து எடுத்த நன் முத்துக்கள்தான், கந்தபுராண தகடிகாண்ட உரையும், அத்வைத சிந்தனை களும். எழுத்திலே, சொல்லிலே அவருக் கென ஓர் தனிப்பாணி ஆற்றெழுக்கான அழகிய நடை. சொற்களை அவர் தேடுவது

கொள்கைச் சான்றேன்’
தி வசந்தா வைத்தியநாதன் அவர்கள்
இல்லை. கூப்பிட்ட குரலுக்கு ஏவல் புரியும் ஏவலாள் போல சொற்கள், கைகட்டி, வாய் புதைத்து அவர்முன் நிற்கும். அரிய செய்தி களையும் எளிமையாய் விளக்கும் பாங்கு. அவரது ஆசி உரைகளும், வாழ்த்துக்களும் கூட ஒர் இலக்கியந்தான்.
இலக்கியத்தைப் படிப்பவர்கள் நம்மில் பலர் இருக்கின்ருர்கள். ஆனல் இலக்கி யத்தை இரசிப்பவர்கள்-அநுபவிப்பவர்கள் வெகு சிலர்தான். இதோ பாலைக் கலியிலே
goff t-itri - áit),
** அறம்பார்த் தல்கும் கடுங்கண் மறவர்தாம் கொள்ளும் பொருளிலர் ஆயினும் வம்பலர் துள்ளுநர் காண்மார் தொடர்ந்துயிர் வவ்வலின் புள்ளும் வழங்காப் புலம்புகொள் ஆரிடை’’
இரக்கமற்ற பாவிகளின் கொடுஞ் செயலுக்கு இதைவிட எடுத்துக்காட்டு வேறென்ன ? பாடலைப் படிக்கும்பொழுது அடிமனதில் நிழலோட்டமாகக் காட்சிகள் விரியவேண் டும். அதில் படிப்பவன் ஆறவேண்டும். அதுமட்டுமல்ல, அதுவாகவே ஆகிவிட வேண்டும். அது தா ன் உண்மையான இரசிப்பு. இரசிப்பதற்கு ஒர் தனி ஆற்றல் வேண்டும். அதனை யாரும் கற்றுத்தர முடி யாது; கலாசாலையிலும் கிடைக்காது. பண் டிதமணி அவர்கள் சிறந்த இலக்கியவாதி மட்டுமல்ல; முதிர்ந்த இரசிகரும்கூட. கம்பனை இரசிப்பதைப் போலவே கச்சியப் பரையும் இரசிப்பார். தமிழ்நாட்டிலே சுடர்விட்ட இரசிகமணியையும், இலக்கிய வானிலே ஒளிகூட்டிய பண்டிதமணியையும் இலக்கிய நெஞ்சங்கள் மறக்கா.
விதித்தன செயலும், விலக்கியன ஒழி தலும் பண்டிதர் ஐயா அவர்களது தனித்த பண்புகள். நற்குடிப் பிறப்பும், நிறை கல்வி யும், அறிவும், திருவும், அஃகா அன்பும், வெஃகா உள்ளமும், பொறையும், நிறையும், பொச்சாப்பின்மையும் கொண்ட ஆன்றவிந் தடங்கிய கொள்கைக் சான்றேன்; வருங் கால சமுதாயத்தின் கலங்கரை விளக்கம். கிழக்கிலே ஒர் புலவர்மணி, வடக்கிலே ஒர் பண்டிதமணி. கண்ணின் கருமணிக ளாம் இருமணிகளையும் இழந்து ஒளி யிழந்து வாடுகிருேம். ஆண்டுகள் பலவா ஞலும் பண்டிதமணி அவர்களின் இழப்பை ஈழத்தாயால் ஈடுசெய்ய இயலாது.
வாழ்க பண்டிதமணி அவர்களின் புகழ்.

Page 80
iT (ouT :
T5GT
ணி அவ
LJGoorgsud
பரீலபரீ ஆறுமுகா
 

இ
ழக காவலா
றிய சைவ தமி
b
இ
ஜ்
ாவலா அவர்கள்

Page 81
பண்டிதமணி அவர்கள்
சுன்னுகம்
பூரீமத் அ. குமாரசுவாமிப்புலவர் அவர்கள்
பண்டிதமணி அவர்களது (
ஆசிரியர்
புலவருக்குப் பின்,
வித்துவான் சுப்பையபிள்ளை அவர்கள்
 
 
 

ாது இரு கண்மணிகள்
நாவலர் காவிய பாடசாலை மானேஜர் பூரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள்
பெருமதிப்புக்கு உரியவர்கள்
கல்வித் தொடர்பு
வித்தகம் ச. கந்தையா பிள்ளை அவர்கள் (தென்கோவை பண்டிதர் ச. க.)

Page 82
ஐந்தில்
க, உமாமகேஸ்வர
பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் எழுதிய கதிர்மணி விளக்கம் என்னும் பேருரையின் ஒரு பகுதி (திருவாசகம் - நீத் தல் விண்ணப்பம்) 1950ஆம் ஆண்டில் வெளி வந்தது. அப்போது தெ. பொ. மீளுகF கந்தரஞர்,
திருவாசகத்தினைப்பற்றி அவர் செய்த சொற்பொழிவுகளையும், “இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து " என்பது முதலிய பகுதிகளுக்கு அவர் கூறிய தயங்களையும் கேட்டவர்கள், "இவர் உரை ஒன்று எழுதி வெளி யிடாரா" என்று விரும்பிய விருப்பம் எல்லாம் இன்று நிறைவேறி வருகிறது. இது கண்டு எந்தத் தமிழன் மனந்தான் மகிழாது.
என்றெல்லாம் பாராட்டினர்.
திருவாசகத்தில் வரும் திருச்சதகம், நீத் தல் விண்ணப்பம், திருவெம்பாவை எனும் பகுதிகளின் உரையாசிரியராகச் செட்டியார் ஆற்றிய பணியைப் பதினெட்டு ஆண்டுக ளின் பின் மதிப்பிடும் உரையாசிரியர்கள் (முதற் பதிப்பு: 1968 ஏப்ரில்) எனும் நூலும் இருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு என்ற உவமையினை அவர் விளக்கியிருக்கும் அருமை யையே பாராட்டுகிறது.?
பெருஞ்சொல் விளக்களுர், முதுபெரும் புலவர் அ. மு. சரவணமுதலியார் பாவம்! தம் மனக் குறையொன்றை மெல்ல வெளி யிடுகிருர்,
அவரது முறையீடு இது:
இது (டிெ உவமைக்கான விளக் கம்) 1937ஆம் ஆண்டு பெரிய புராண நிறை விழாவில் என்னுற் பேசப்பெற்று, 1943ஆம் ஆண்டு "இந்திரா" (செட்டி நாட்டிலிருந்து வெளிவந்த திங்கள்
S

ஒன்று
ான் அவர்கள்
இதழ்) என்னும் பத்திரிகையில் எழுதப் பெற்றதுமாகும். இதனைத் தம் கருத் தாகப் பின்னர்ச் சிலர் எழுதிக்கொண்
mrriesair. 3
தம் கருத்தாகப் பின்னர் எழுதிக்கொண் டவர் யார்? எப்போது தம்மிடம் அக் கருத்தை அவர் பெற்ருர் என்பவற்றையெல் லாம் சூசகமாகக் குறிப்பிடவும் அவர் தவற வில்லை.
திரிசிரபுரச் சைவசித்தாந்த சபை யில் நாட்டா ரையா (நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார்) அவர் கள் விருப்பப்படி 1936 முதல் என்ஞல் நடத்தப்பெற்றுவந்த பெரிய புராண விரிவுரையின் நிறை விழா 28-11-37இல் நடைபெற்றது. ஐயா (நாட்டார்) அவர்கள் முயற்சியில் நடைபெறுவதால் சிறந்த புலவர்கள் வரப்போகிறர்கள் என்பதையும், (காலஞ்சென்ற) 'மகா மகோ உபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் என்னும் பேரறிஞர் தலைமை வகிக்கிருர்கள் என் பதையும் அறிந்தேன். பெரிய புராண இறுதி "வெள்ளானைச் சருக்கம்” . அச் சருக்கத்தின் முதற் பாடலில் "காலை மலர்செங் கமலக்கண் கழறிற் றறி வார்? என்னுந் தொடரிலே என் கருத்து ஆழ்ந்தது. நுண் பொருள் புலணுகி யது; அதிலிருந்து குற்றம் நீக்கி ஆள் கின்ற பல உவமைகள் சிந்தனைக்கு வந் தன. "இருதலைக் கொள்ளியினுள்ளறும்பு ஒத்து" என்னும் திருவாசகத்திலுள்ள தொடரை அந்த இனத்திற் சேர்த்துப் பேசியகாலை, " நாவலர் " திருவாளர் சோமசுந்தர பாரதியார் என்னும் அறி ஞர் பெருமான் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து உடலைச் சிறிது மேலே துரக்கி மூன்று முறை "பேஷ் பேஷ் பேஷ்' என்று சொன்னர்கள்.4

Page 83
வெறும் வாயையே மெல்ல வல்ல ஆராய்ச்சிப் பிரியர்களுக்குப் பிடி அவலாய்ச் சுவைக்க வாய்த்த இச் செய்தி இவ்வளவிலே அமைய, " சோமலெ" தரும் செய்தி ஒன் றைக் காண்போம்.
கதிரேசனுரும் பண்டிதமணி என் னும் பட்டத்தையே சிறப்பாக மதித் தார். மகா மகோபாத்தியாயப் பட்டம் இன்னும் பலருக்கு வழங்கப்பெற்றது; அதைப் பற்றி அவர் குறைப்பட்டதில்லை. பண்டிதமணி என்ற பட்டம் இலங்கை யில் சிலருக்கு வழங்கப்பெற்றபோது, “என்ன, அப்பன், இலங்கையில் அப் பட்டத்தைத் தண்ணிர்போல எளிதாக வழங்கிவிடுகிருர்களே! என்று என்னி டம் கேட்டார்கள்.
பண்டிதமணி மு. கதிரேசச் செட்டி யாரை விட்டுவிட்டு இனி நமது இலக்கிய கலாநிதியாகிய பண்டிதமணி அவர்களைச் சற்றே திரும்பிப் பார்க்கலாம்.
சமயம் இலக்கியம் பாஷை யாவற்றுக்கும் மூல உயிர்ப்புப் பொருள் என்ற உணர்ச்சி மிக்கவரான திரு. பொ. கைலாசபதி அவர்க ளின் கூட்டரவால் தாம் மிக்க பயனடைந்த தாக மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவுகூர் பவர் நம் பண்டிதமணியவர்கள்.
அதஞலேதான்,
ஆத்மீகச் செல்வர்களான உப அதிபர் திரு. பொ. கை. அவர்களின் சந்நிதி என் சிந்தனைக்கு ஊற்ருயிருந்தது. எனவும்,
இலக்கிய ரசனை உலகுக்கு திரு. வே. மகாலிங்கசிவம் என்று பெயர். சமய தத்துவ உலகுக்கு உப அதிபர் திரு. பொ. கைலாசபதி என்று பெயர், இருவரும் இருபெருங் கற்பக தருக்கள்
சந்தன மரங்களுக்கு அண்மையில்
நின்ற குற்றத்துக்குத் தண்டனையாக சாதாரண மரமொன்றில், சந்தன நறு

மணம் வருகிறதென்ருல், அந்த மரம் "ஆம்" என்று தலையசைக்குமா? தலை குனியுமா ? மரத்தின் நிலை என்னுகும்.
சில சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட கற்பகதருக்களை நினைவு கூர்ந்து தலை குனிந்து, நிலத்தை நோக்கும் நிலை என்பால் நிலைப்பதுண்டு."
எனவும் எழுதியுள்ளார்கள். இப்படி அவர்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போதே,
மூலிகைகளைக் கண்ட சித்தர்கள், பெரியவர்கள். அம் மூலிகைகளின் அருமை அறிந்து பயன்படுத்துகின்ற சித்த வைத்தியர்கள் அவர்களுக்கு அடுத்தபடியில் வைத்து எண்ணத்தக்க பெரியவர்கள்.8
என்ற உண்மை எம் நினைவில் எழாமலில்லை. ஆயின் சமய சாதகரான அந்த மகான் திரு. பொ. கைலாசபதி அவர்களோ அதற்கும் மேலே போய்,
ஏதோ பொருளைப் பற்றி, சில பல நூல்களையுந் தழுவி, அறிகிறதற்கு நான் முயன்றிருக்கலாம். யோசனைகள்ஆராய்ச்சிகள் நடந்திருக்கலாம். அந்த யோசனைகளையும், ஆராய்ச்சிகளையும் எடுத்துச் சொல்லச் சிலர் பலர் சந்தித் திருக்கிருர்கள். அவர்களுக்கு அந்த யோசனைகளை, ஆராய்ச்சிகளைச் சொல்லு கிற முறையாலே அந்த யோசனைகள் ஆராய்ச்சிகள் விருத்திப்பட, சீர்ப்படக் கூடிய முறையும் அமைந்தது. அந்த யோசனைகளை, ஆராய்ச்சிகளை எடுத்துச் சொல்லச் சந்தித்த முக்கியஸ்தர் ஒருவர் பண்டிதரவர்கள்-பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை அவர்கள்."
என்றெல்லாம் மனமுவந்து பாராட்டு கிருர்கள். இருப்பினும் செட்டியாரவர்க &mrti G3 tu nr G av மூச்சுப் பேச்சற்றிருக்கப் பண்டிதமணியவர்களால் இயலவில்லை: இயலாது.

Page 84
- 3
சால்பென்னும் மணிமண்டபமாக விளங் குபவர் பண்டிதமணியவர்கள். அந்த மணி மண்டபத்தைத் தாங்கும் வயிர மணித் தூண்கள் ஐந்தில் (அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மை) ஒன்றை - "எவ் விடத்தும் மெய்ம்மை கூறல்" (வாய்மை) என்ற அரிய பண்பை-மட்டுமே இங்கு நாம் கண்டானந்திக்கும் பேறுபெற்ருேம்; "யாரே வடிவினை முடியக் கண்டார்?"
கேதெ (Goethe) பற்றிக் கூற நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில்,
அடிக்குறிப்புக்கள்:
1. மு. கதிரேசச் செட்டியார், திருவாசகப் உரை (காரைக்குடி, 1950) அணிந்து
2
மு. வை. அரவிந்தன், உரையாசிரியர் பரம், 1977), பக். 587-588.
3. அ. மு. சரவண முதலியார், கட்டுரை
4. மேற்படி முன்னுரை, பக். 2 - 3,
5. சோம. லெ. இலக்குமணச் செட்
Eld. 173.
6, சி. கணபதிப்பிள்ளை, சிந்தனைக்களஞ்சி
7. சி. கணபதிப்பிள்ளை, 'இரு வேறு
8. சி. கணபதிப்பிள்ளை, இலக்கியவழி
š. 105.
9. பொ. கைலாசபதி, ** பண்டிதர் அ அவர்கள் மணிவிழா மலர் (யாழ்ப்பா
10. George Sampson (Ed.) The Worksof
P. 508.

5 -
Talent alone cannot make a writer.
There must be a man behind the book'
என்று எமெசன் (Emerson) சொன்னதுண்டு.
பண்டிதமணி அவர்களின் நூல்கள் திறமையொன்ருல் மட்டும் உருவாக்கப்பட் டவையல்ல. அவற்றிலே பண்டிதமணி யென்ற மனிதர் - சமயி - வாழ்கிறர்: அவர் அமரர்,
ம் - நீத்தல் விண்ணப்பம் (கதிர்மணி விளக்கம் ரை, பக். 3.
கள் (திருத்திய இரண்டாம் பதிப்பு, சிதம்
ாப் பொழில் (சென்னை, 1955), பக். 157.
டியார், பண்டிதமணி (சென்னை, 1955)
luuüd (sisir(G9sih, 1978), Luši. xvii.
உலகம் . வாழ்த்து’’, ஈழநாடு, 1980-11-08,
(திருத்தப் பதிப்பு (சுன்னுகம், 1984),
அவர்கள் ??, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே ானம், 1959), பக்.
Ralph Waldo Emerson Vol. 1 (London, 1906).

Page 85
இலக்க
- கோவை
1936ஆம் ஆண்டிலே இலங்கைப் பல் கலைக் கழகக் கல்லூரியிலே இலத்தின், கிரேக்க மொழிகள் கற்பிக்கும் துணைப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவரிடத் திலே பல வருடமாகப் பயன்படுத்திய குறிப்புக் கொப்பிகள் இருந்தன. தொடக் கத்திலேயே செப்பமாக எழுதிய குறிப்புக்கள். ஆதலால், தொடர்ந்து எல்லா வருடங் களுக்கும் அதே குறிப்பைப் பயன்படுத்தி வந்தார். இவருக்குக் கல்வி கற்பித்தல் முறையும் தெரியும். ஆனபடியால் இடைக் கிடை இரசமான பகிடியும் விடுவார். மாணவர் சிரித்துக்கொண்டு கவனஞ் செலுத் துவார்கள். அவருக்கும் நல்ல மதிப்புண்டு
ஒரு நாள் தற்செயலாகப் பேராசிரிய ரின் குறிப்புக் கொப்பிகள் மாணவரின் கையில் சிக்கிக்கொண்டன. அவர்கள் மறை வான ஓர் இடத்துக்குக் கொண்டுபோய் பக்கம் பக்கமாக விரித்துப் பார்த்தார்கள். ஒவ்வொரு விடயம் எடுத்தாண்டு முடிவில், **பகிடி?" என்று எழுதியிருக்கும்-அடுத்த விடயும் எடுத்தாண்டு முடிவில் 'பகிடி" என்று எழுதியிருக்கும். இப்படியாக ஒருமனி நேரப் பாடத்திற்கு ஐந்து பகிடிகள் இடம் பெற்றிருக்கும்.
இதுவே மாணவருக்குப் பெருஞ் சிரிப்பை விளைவித்தது. எப்படியோ குறிப் புக் கொப்பிகள் பழையபடி இருந்த இடம் போய்விட்டன. அடுத்த நாள் பேராசிரியர் வ்குப்புக்குக் குறிப்புக் கொப்பிகளுடன் வந் தார். பாடம் தொடங்கி ஒரு விடயம் முடி கிற நேரம். மாணவர் தாமாகவே “பகிடி" எனத் தொடங்கிவிட்டனர். சிலர் "பழம் பகிடி" என்றனர். ஆசிரியரும் ஒரே கூட்டம் பகிடியை வருடாவருடம் சொல்லிவந்தது பிடிபட்டுவிட்டது.
அவருடைய பெருமைக்கு இழப்பு வராமல் புதிய குறிப்புக் கொப்பிகளையும்

ய ரசனே
'sisyoTas -
புதிய பகிடிகளையும் ஆயத்தஞ் செய்யத் தொடங்கினர். இந்தத் தருணத்தில் பழைய மாணவர் புதிய மாணவரைச் சந்தித்தனர். ஒரு புதிய இலக்கிய இரசனை நிகழ்ந்தது, குறிப்புக்களை ஒப்பிடுகையில் பகிடிகள் செயற்கையாகப் புகுத்தப்பட்டிருந்தன. எடுத்துக்கொண்ட பாடத்திற்குப் பொருத்த மில்லாதனவாகவும், சமயத்திற்கு மட்டும் சிரிப்பைக் கிளர்த்தக்கூடியனவாகவும் இருந் தன.
பண்டிதமணியின் பகிடிகள் மனதில் அழுத்தமாகப் படிவன. எடுத்த பொரு ளுடன் பின்னிப் பிணைந்து இருப்பன. எந்தப் பொருளையும் அவருடைய பகிடிக் கூடாக மீள மீள இரசிக்கலாம். இந்த இரசனை, புத்தக வாயிலாகப் படித்து உணருவதன்று. எடுத்த பொருளைப் படித்து விட்டு அதனைக் கற்பனை செய்து ஒப்புமை தேடித் தான்தான் சுயமாக இரசிப்பதே உண்மையான இரசனை. ஐயா இரசித்தார், அதை எங்களுக்கும் சுவைக்கத் தந்தார்.
இந்த விஷயத்தில் ஐயாவுக்கு ஐயாவே ஒப்பாவார். அச்சில் இன்னும் வாராத பாட்டு ஒன்றை இதுகாலவரையும் நானே வைத்து இரசித்துக்கொண்டிருந்தேன். ஐயா வுக்குத் தொய்வூசி போடுபவர்,டாக்டர் எஸ். சுப்பிரமணியம் (P.S.) அவர்கள். இவர் எனது உறவினர் என்று ஐயாவுக்குத் தெரியும். அவருக்குக் கீழ் வேலை செய்தவர்கள் பலருள் எனது தாய் மாமனும் ஒருவர். இது ஐயா வுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனல், டக்டருக்கும் இவர்களுக்கும் இடையிலான பேதத்தையும், உபசரித்து மரியாதை செய் யும் தாரதம்மியத்தையும் ஐயா கண்டு மனம் வருந்தி இலக்கியக் கண்ணுல் கண்டு இரசித் திருக்கிருர்,
அப்போது அடியேன் மட்டக்களப்பில் மாகாண வித்தியாதிகாரி. எனக்குத் தன்

Page 86
பண்டிதமணியின் திரு
கலைமகள் ஆசிரியர் வாகீச கலாநிதி
எனக்குப் பண்டிதமணியை நன்ருகத் தெரியும். தான் இலங்கைக்குப் போகும் போதெல்லாம் அவரைப் பார்த்துப் பேசி விட்டு வருவது வழக்கம். பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் இப்போது அமர ராகிவிட்டார் என்பதை அறிந்து மிக்க துயரத்தில் மூழ்கினேன். பெரும் புலவராகிய சுன்னுகம் பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவ ரிடம் பாடங் கேட்டவர் பண்டிதமணி.
ஒருமுறை நான் பண்டிதமணியைப் பார்க்கப்போன பொழுது, அவர் எனக்குக் கற்கண்டு வழங்கினர். ‘நான் தங்களைக் கண்டுகொண்டு போகலாம் என்று வந்தேன், இப்பொழுது கண்டுகொண்டு போகிறேன்"
(36ஆம் பக்கத் தொடர்ச்சி) நிலைமையை அறிவித்தால் நான் நன்முக இரசிப்பேன் என்று அவருக்குத் தெரியும், எழுதுகிருர் ஐயா, பாருங்கள்.
டெ சாந்தஸ்வரூபியும் மகாப்பிரபுவும் ஆகிய டக்டர் எஸ். சுப்பிரமணியம் அவர்களின்
வைத்தியசாலையிலே கீழுத்தியோகத்தர்களின் படாடோபங்கண்டு பாடியது
பாற்கடல்மீன் பாசியையே யுண்ணுங்கீழ்
பால்கள்தாம் மேற்படுவார் தம்பக்கல் மேவியுமென்?
--கோற்றெடிகேள் கள்ளார் மலரருகே காத்துக் கிடந்தாலும் முள்ளாருக் குண்டோ முருகு.
தங்களன்புள்ள சி. கணபதிப்பிள்ளை திரு. சை. ஆ. க. சாலை Ile-51

காமம் வாழ்க! வாழ்க!
1 யூனி கி. வா. ஜகந்நாதன் அவர்கள்
என்று சிலேடையாகச் சொன்னேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார்.
கந்தபுராணத்திலே அவருக்கு மிகத்
தேர்ச்சி உண்டு. தகடிகாண்டத்துக்கு அருமையான ஓர் உரையை எழுதியுள்ளார். அவரைப்போல எழுதுகிறவர் மிகவும்
அருமை, எத்தனையோ நுட்பமான கருத் துக்களை எடுத்துக் கூறி இருக்கிருர். அவர் அமரரானலும் அந்த உரை அவரை நினை வூட்டிக் கொண்டே இருக்கும். அவருடைய சிலையை எங்காவது செய்து வைத்தால் நல்லது. இதற்கு அன்பர்கள் முயற்சி செய் வார்கள் என்று நம்புகின்றேன்.
* பண்டிதமணியின் திருநாமம் வாழ்க, வாழ்க ? என்று வாழ்த்துகின்றேன்.
கந்தப்பொடி வாசனையன்ருே கமழுகின்றது! இந்தப்படியே மாந்தவாரும் ஜகத்தீரே!
இங்கே "காத்துக்கிடந்த முள்ளார்?" என்பதைப் பலமுறை படித்து இரசிக்கத் தோன்றுகிறது. இவர் இந்தப்பாட்டில் குறிப் பிடும் பாத்திரங்களிடம் இப் பாட்டைப் படிக்கக் கொடுத்தால் அவர்கள் எல் லோருமே தீர இரசிப்பர். ஆனல் தற்போது யாருமே உயிருடனில்லை.
அன்று, 1983
தனிநாய கஞ்சென்றல் போதுமென்றே
இனியாருஞ் செல்லாரென் றிட்டார்;-- இனியவர் சின்னத்தம் பிப்பெரியார் என்னே
இவருஞ்சேர் என்ஆசான் இன்றுசென்ற வாறு!
18-3-86

Page 87
ஈழத் தமிழ்க் கல்வி
கு. சோமசுந்தரம் அவர்கள், பிர:
'அரசகேசரியிலிருந்து நமது கண்முன் னிருந்த கணேசையர் பரியந்தம் ஓரிலக்கிய வழி தொடர்ந்து வந்திருக்கிறதென்பது ஊகிக்கத் தக்கது. இந்த வழி இடை யிடையே செடி கொடிகளில் மறைந்து தொடர்பு புலப்படாது போனலும், வழி யொன்று எவ்வாருே தொடர்புற்று வந் திருக்கிறதென்பதற்குச் சான்றுகள் உண்டு.”*
பண்டிதமணி காட்டிய ஈழத்து இலக்கிய வழி இது. இத்தகைய இலக்கிய வழியுடன் இணைந்தே தமிழ்க் கல்வி வழியும் ஈழத்தில் எவ்வாருே தொடர்ந்து பண்டிதமணி பரி யந்தம் வந்துள்ளது. இலக்கியம், கல்வியைப் பரப்பும் சிறந்த ஊடகமாக விளங்கியது. கல்வி, இலக்கிய வளர்ச்சிக்கு உதவியது.
தமிழ் மரபு தொன்று தொட்டுக் கல்வி யினை ஆத்மீக உணர்வோடு இணைத்தே வளர்த்தது. தமிழர்களின் ஆத்மீக உணர்வு களே சைவசித்தாந்தம். ஆத்மீகத்தை வலி யுறுத்தும் தமிழ்க்கல்வி, உலகியல் வாழ்க்கை நெறியைப் புறக்கணிக்கவில்லை. ** அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயன்’ என்று கொள்வது தமிழ் மரபு. நூற் பயன் என்பது கல்விப் பயன் ஆகும்.
தமிழ் மக்களின் வாழ்க்கைத் தத்து வங்களே அவர்களின் கல்வித் தத்துவங்க ளாகவும் விளங்கின. வாழ்க்கைத் தத்து வங்கள் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளி லிருந்தே பிழிந்தெடுக்கப்பட்டன. செயலி லிருந்து தத்துவம் உருவாக்கப்பட்டமையி ஞல், அத் தத்துவம் செயற்படுத்தப்பட முடிந்தது. கல்வித் தத்துவங்கள் அவர்களின் வாழ்க்கையைச் செந்நெறிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
கல்வியானது மனிதப் பண்புகள் நிறைந்த சான்றேர்களை உருவாக்க வேண்டும் என்று கொண்டது தமிழ் மரபு. அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணுேட்டம், வாய்மை எனும்

வழியில் பண்டிதமணி
நம கல்வியதிகாரி, யாழ்ப்பாணம்
ஐந்து சால்புகளையும் உடையவனே சான்' ருேன் எனக் கொண்டனர் தமிழ்மக்கள். சான்றேர்கள் மனம், மொழி, மெய்யிஞல் தூய்மையுடையவர்கள்.
* வாழ்க்கைக்கு உறுதுணையாய் வருவது தூயநற்கல்வி" என்பது திருமூலர் திருவாக்கு.
கல்வி என்பது பண்பாடு எனக் கொண்டு கல்வியானது நல்லொழுக்கம், நீதி, அறங்கள், நற்பண்புகள் என்பனவற்றை மக்களுக்குப் போதிக்க வேண்டும் என்ற குறிக்கோளை யுடையதாயிருந்தது. கல்வியைக் கற்பதுடன் நின்றுவிடாது கற்றுணர்ந்தபடி ஒழுகவும் வேண்டும் என்று தமிழ் மரபு வற்புறுத்து கிறது.
தமிழ் மக்கள் அழகினை ஆராதிப்பவர் கள். முருகியல் உணர்வுகள் நிரம்பப் பெற் றவர்கள். அத்தகையோர் அழகுகளுக்கு எல்லாம் அழகு வாய்ந்தது கல்வி என்று அதனைத் தெய்வமாக ஏற்றிப் போற்றியுள்
ளார்கள்.
ஒவ்வொரு மகனும் உலகக் குடிமகன் ஆகவேண்டும் என்று கொண்டு ** யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற மகுட வாசகத்தை உருவாக்கி உலகிற்களித்து வான் புகழ் கொண்டது பழந்தமிழ்க் கல்வி மரபு. இது தொடர்பாக, ஒளவையார் கல்விக்குத் தந்த வரைவிலக்கணமான "உலகை ஒன் முகக் காண்பதே கல்வி' என்ற வியத்தகு வாசகத்தையும் உளத்திற் கொள்வோமாக.
இத் தமிழ்க் கல்வி மரபு, ஈழத் தமிழர்க ளிடமும் தொன்று தொட்டுத் தொடர்ச்சி யாக வளர்ந்து வருகிறது. இக் கல்வி மரபு வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் ஈழத் தமி ழர்களின் பங்களிப்பும் கணிசமான அள விற்கு இருந்துள்ளது என்பதற்குச் சான்று கள் உண்டு.

Page 88
- 3
தமிழ் வழங்கும் ஈழமண்டலம் அதன் தாய்நாடாகிய தமிழ் நாட்டுடன் ஏறத்தாழ கி. மு. ஆரும் நூற்ருண்டிலிருந்தே பண் பாட்டுத் தொடர்பினை ஏற்படுத்தி யிருந் தமை பற்றித் தற்போதைய அகழ்வாராய்ச்சி கள் புலப்படுத்தி யுள்ளன. இந்த வகையில் பண்டைய ஈழத்தமிழர்களின் கல்வி, அதே காலப்பகுதியில் தமிழ் நாட்டில் நிலவிய கல்வி முறையைப் பெரும்பாலும் ஒத்திருந்த தாகவே அமைத்திருந்தது எனலாம்.
பண்டிதமணி காட்டிய ஈழத்து இலக்கிய வழி அரசகேசரியிலிருந்து தொடங்குகிறது. அரசகேசரி, யாழ்ப்பாணத் தமிழ் வேந்தர் காலத்தவர். தமிழ் வேந்தர் காலம் கி. பி. 1216 - 1621 வரை ஆகும். கி. மு. ஆரும் நூற்றண்டிலிருந்து கி. பி. பதின் மூன்ரும் நூற்ருண்டுவரை ஒரு நீண்ட இலக்கியவழி ஈழத் தமிழ்நாட்டில் இருந்திருக் கின்றது. ஆனல் அந்த வழி எமக்குப் புலப் படாதிருக்கின்றது. அரசகேசரியில் தொடங் கும் முறையான இலக்கியவழி இதன் தொடர்ச்சியே என்று கொள்ளவேண்டும். ஈழத்துப் பூதந்தேவனுர் சங்ககாலப் புலவர் வரிசையில் உள்ளார். ஈழம் பற்றிய குறிப் புக்கள் பட்டினப்பாலையிலும், சங்கச் செய் யுள்களிலும் காணப்படுகின்றன. இவற்றை நோக்குமிடத்து, ஈழத்துத் தமிழிலக்கியவழி மிகத் தொன்மையான காலத்திலிருந்து வரு கின்றது என்பதை உணர முடிகின்றது. ஒரு சிறந்த இலக்கியப் பாரம்பரியம் உருவா வதற்கு, நிலையான கல்விப் பாரம்பரியம் ஒன்று ஆங்கு நிலவி வந்திருக்க வேண்டும். இந்த வகையிலே யாழ்ப்பாணத்தில் நிலை யான ஒரு கல்விப் பாரம்பரியம் ஆதிகாலந் தொட்டு நிலவி வந்துள்ளது எனக் கூறலாம். இந்தக் கல்வி வழியும் இடையிடையே செடி கொடிகளில் மறைந்து, மணல் மேடுகளால் மூடப்பட்டும் தொடர்பு புலப்படாது போனுலும் தனித்துவம் மிக்க ஒரு வழி கல்வியைப் பொறுத்தளவில் தொடர்புற்று வந்திருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஈழத்துக் கல்வி வழி சைவநெறியுடன் இணைந்து தொன்றுதொட்டு வளர்ந்து வந்

9 -
துள்ளது. இதனுல் இக் கல்விநெறியில் சைவமும் தமிழும் மேலாண்மை கொண் டிருக்கின்றன. இந் நிலை, அதன் சிறப்புப் பண்பு.
தமிழ்க் கல்வியை அளித்துவந்த ‘ஆன் றடங்கு அறிஞர்" பரம்பரை, அறிவோடு அறம் பரப்பியவர்கள். மனிதர்களின் உள் ளத்தைப் பக்குவப்படுத்தி அவர்களை உட்புற அழிவு சிதைவுகளிலிருந்து பாதுகாத்தவர்கள். அதே வேளை, உலகியல் தொடர்பான கல்வி யையும் அளித்து மக்களின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களின் வெளிப்புறச் சீரமைப்புக்கு வழி வகுத்தவர்கள். மக்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழவும், வளமாக வாழவும் தேவையான கல்வியை அவர்க ளுக்கு வழங்கியவர்கள். முன்னுேர் வழிவந்த அறிவுச் செல்வங்களையும் கலைச்செல்வங்களை யும் பேணிப் பாதுகாத்து, மேலும் விருத்தி செய்து, அடுத்த தலைமுறையினருக்கு அளிக் கும் பொறுப்பையும் கொண்டவர்கள். தமிழ்க் கல்வியை அளித்த ஆசிரியன் “கற்கப் படுவோன்" என்றும், மாணுக்கன், ‘கற் போன்" என்றும் கொள்ளப்பட்டனர். ஆசிரியனே பாடநூலாகவும் விளங்கினன். ஆசிரியன் வாழ்ந்து காட்டியவற்றையே மாணுக்கன் கூர்ந்து அவதானித்துக் கற்று உணர்ந்து தெளிந்தான். தமிழ்க் கல்வி, மனிதர்க்கு மனிதத் தன்மையை அளித்துப் பண்பாட்டை வளர்த்தது.
தமிழ்ப் பண்பாடு பற்றிப் பண்டிதமணி பின்வருமாறு கூறுகிருர் :
*" பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் ??
என்கிறது கற்றறிந்தோர் ஏத்துங் கலித் தொகை. இங்கே பாடு என்ற சொல் விசா ரஞ் செய்யற்பாலது. பாடு - உலகப்பாடு. அஃதாவது உயர்ந்தோர் சென்ற அடிப்பாடு. உலகம்-உயர்ந்தோர். ' உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே", என்பது தொல் காப்பியம்.
உயர்ந்தோர் சென்ற காலடியை இறுகப் பற்றிக் கொண்டு அவர் சென்ற வழியிற் செல்வதே பாடறிந்தொழுகல்.

Page 89
பண்புடையார், சாதாரண உலகியலை யும் அறிந்து, யாவருக்கும் நன்மை பயக்கத் தக்க வகையில் தாம் மேற்கொண்ட வழியிற் செல்வர்.
அறிவோடு, உணர்வுக்கும் முக்கியத்து வம் அளித்தவர்கள் இக் கல்வி வழியில் வந்தவர்கள். ஈழத்துக் கல்வி வழி கி. பி. பதிஞரும் நூற்றண்டுவரை தனித்துவம் பெற்றிருந்தது. ஆனல் இந்த நூற்ருண்டி லிருந்து இலங்கை, முறையே போர்த்துக் கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பியர்களின் குடியேற்ற ஆதிக்கங் களின்கீழ் வந்தது. இதன் விளைவாகத் தமிழ்க் கல்விப் பாரம்பரியம், பண்பாடு என்பன வற்றில் பெருந்தாக்கம் ஏற்பட்டது. ஐரோப் பியர்களின் மேலேக்கல்வி, பண்பாடு என் பன படிப்படியாக இந் நாட்டில் படியத் தொடங்கின. இந்த இரண்டாவது கல்வி வழியொன்று நம் மக்களிடையே மதிப்பும் செல்வாக்கும் பெற்று வளர்ந்தது. ஏகாதி பத்திய அரசின் உதவியும் இதற்கு இருந் தது. பாடசாலைகளை ஊர்கன் தோறும் நிறுவி முறைமைக் கல்வி யளிக்கப்பட்டது.
அந்நியர் ஆட்சியின்கீழ் இந்த இரண் டாவது கல்விப் பாரம்பரியம் நிலைபெற்று, உயர் குழாம் எனும் சமூகக் குழுவினரை உருவாக்கியது. இவர்களே கற்றவர்கள் எனப்பட்டனர். மேல்நாட்டுக் கல்வி பெற்ற வர்கள் நாகரிகமானவர்கள் என்று மதிக்கப் பெற்றனர். உலகியல் வாழ்க்கை நிலையில் உயர்ந்தனர். கல்வி அதியுயர்ந்த பணப் பெறுமதியைப் பெற்றது. தமிழ்ப் பாரம் பரியக் கல்வி ஊக்குவிப்பாரின்றி மங்கி மறையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பொதுவாக, மேலைக் கல்வி கற்க வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்களே, தமிழ்க் கல்வி யைக் கற்றனர்.
மேலைக் கல்வி நம் மக்கள் மத்தியில் இடம் பிடித்துக்கொண்டமை பற்றிப் பின் வருமாறு பண்டிதமணி விமர்சித்துள்ளார்.
** வேதப் பொருளைத் தெளிவு படுத்தி வந்தவைகள் குருகுலங்கள். அவை பழைய காலத்திலே காட்டுக்குள் இருந்தவை. பிறகு

مسیه (U)
நாட்டுக்கு வந்து, திண்ணைப்பள்ளிகளி லிருந்து, இப்பொழுது நகரத்தில் நிமிர்ந்து கல்லூரிகளாய், சர்வகலாசாலைகளா யிருக் கின்றன. காலத்திற்கேற்ற கோலம் பூண்டு விட்டன. வெளித் தோற்றம் மாறுவது குற்றமன்று. ஆணுல், குருகுலங்களின் அடிப் படை நோக்கம் இப்பொழுது இருந்த இட மும் தெரியாமற் குடி போய்விட்டது. மாங் கல்யத்தை மறந்து வந்து சேர்ந்த மணமகன் நிலையாய்விட்டது. உண்டிருந்து எப்படியோ வயிறு வாழ்வதுதான் உடம்பு எடுத்த நோக்கம் என்று முடிந்தது."
"இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்." நாம் இந்த உடம்பு எடுத்த நோக்கம் பற்றி தமிழ்க் கல்வி வழியில் நின்று நாவலர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார். மூத்தி என்ருல் விடுதல் என்று பொருள் கொண்டு, விடவேண்டியது அறியாமையை என்றும் அறியாமையி னின்றும் விடுபடுதலே வீடு என்றும் பண்டிதமணி வியாக்கியானம் செய்துள்ளார்.
தமிழ்க் கல்வியின் நோக்கமும் அந்நியர் ஆட்சியின்கீழ் அளிக்கப்பட்ட கல்வியின் நோக்கமும் மேலே கூறியவற்றிலிருந்து தெளிவாகின்றன.
ஐரோப்பியர்களுடைய ஆட்சிக்காலத் தில், தமிழ்க் கல்விவழி, யாழ்ப்பாணத்தில், ஒரு வகை அச்சத்துடன் தலைமறைவாகவே தொடர்ந்து வந்துள்ளது. அந்நிய ஏகாதிபத் திய ஆட்சியும், ஆட்சியாளர்களின் பேரா தரவைப் பெற்று மேலைநாட்டுக் கல்வி நிலை பெற்றமையும், நம்மவரின் மேல்நாட்டு நாகரிக மோகமும், மரபு வழி வந்த தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தை வலுவிழக்கச் செய் தன.
இற்றைக்கு 240 வருடங்களுக்கு முன் தக்கதொரு இலக்கண இலக்கிய வழியிலே, புலமை கனிந்த பரம்பரையைச் சேர்ந் தவர் சின்னத்தம்பிப் புலவர் என்கிருர் பண்டிதமணி. இதே காலத்தில் வாழ்ந்த சுன்னுகம் வரத பண்டிதர், மாதகல்

Page 90
- 4
மயில்வாகனப் புலவர் ஆகியோர் தலைமறைவி லிருந்த தமிழ்க் கல்வி வழியினர். இவர்கள் போன்று இன்னும் பலர் கிராமங்கள் தோறும், தமிழ்க் கல்வி வழியைத் தொட ரச் செய்திருப்பர். ஆனல் அவர்களைப்பற்றி எதுவுமே தெரியாத நிலையில் உள்ளோம்.
ஒல்லாந்தர்கால முடிவிலும், ஆங்கி லேயர் காலத் தொடக்கத்திலும் வாழ்ந்து இக் கல்வி வழியைத் தொடர வைத்தவர்கள் முத்துக்குமார கவிராயர், இருபாலே சேணுதிராய முதலியார் போன்ற பெரும் ஆசான்கள் ஆவர். முத்துக்குமார கவிராயர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் ஆசிரிய ராக விளங்கியவர்.சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் கவிராயரின் உதிர பரம்பரை யினர். தமிழையும் சைவத்தையும் மறு மலர்ச்சி யடையச் செய்வதற்காக, ஏனை யோர்போல் தலைமறைவாக இருக்காது, கிளர்ந்தெழுந்து வெளிவந்து யாழ்ப்பாணத் திலும், தமிழ்நாட்டிலும் அஞ்சாது பணி புரிந்த பூரீலபூgரீ ஆறுமுகநாவலர் இக் கல்வி வழியில் வந்தவர். சேணுதிராய முதலியாரின் நன் மாணுக்கர்.
உடுப்பிட்டி சிவசம்புப்புலவர், முருகேச பண்டிதர், நீர்வேலி சிவசங்கர பண்டிதர், கோப்பாய் சபாபதி நாவலர், காசிவாசி செந்திநாதையர், புலோலி நா. கதிரைவேற் பிள்ளை, சாவகச்சேரி பொன்னம்பலம்பிள்ளை, வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை, சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர், மட்டுவில் ம. க. வேற்பிள்ளை, கவிஞர் மகாலிங்க சிவம், வித்துவான் சுப்பையபிள்ளை, பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகியோர் இக் கல்வி வழித்தோன்றல்கள்.
ஆங்கிலேயர் காலத்தில், வட்டுக்கோட் டையில் 'செமினரி” என்று வழங்கிய கல் லூரியிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி யிலும், மற்றும் ஆங்கிலக் கல்லூரிகளிலும் மேலைநாட்டு ஆங்கிலக் கல்வியைக் கற்கப் புகுந்தவர்களுட் சிலர் ஆங்காங்கு கிராமங் களில் தலைமறைவிலிருந்த தமிழ்ப் புலவர்க விடம் தமிழ் இலக்கண இலக்கியங்கள், புராண இதிகாசங்கள், சைவசித்தாந்த
6

1 -
நூல்கள், அறநூல்கள் என்பனவற்றை உள் ளடக்கிய தமிழ் மரபுக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தனர். நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, கனகசபைப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர் ஆகியோர் இத்தகையோ ராவர். இவர்கள் சைவ தமிழ்மரபு மறு மலர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கு இக் கல்வி உறுதுணையாக இருந்தது.
**பொய்யும் வழுவுந்?? தோன்றிய இக் காலகட்டத்தில் இத்தகைய ஒரு சிலர்'களவு நிலை"யில் இருந்தனர். **களவுநிலை என் ருல் பிரபஞ்ச பந்தங்களை விடவும் முடியா மல், கண்ட உண்மையைத் தொடராமல் இருக்கவும் முடியாமல் அன்பு அங்கும் இங்கும் பிரிநிலைப்பட்டு நிற்கும் நிலை" என்று பண்டிதமணி விளக்கியுள்ளார். ஆங்கிலக் கல்வி, அதனுல் கிடைக்கும் உலகியல் சார்ந்த அநுகூலங்கள் ஒருபுறம்: சைவத் தமிழ்க் கல்வியும் அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு உந்தல்களும் மறுபுறம். இருதயம் ஊசலாடியது. ஆயினும் ஈற்றில் பொய்கெட்டு மெய்யானர்கள். மேலைநாட்டுக் கல்வி தந்த உயர் பதவிகள், வேதனம், புகழ் என்பவற்றை உதறித் தள்ளிவிட்டு, தமிழுக்கு மறுமலர்ச்சி செய் யப் புறப்பட்டனர். இவர்கள் தம் முன்னை யோரைப் போலத் தலைமறைவாக இருந்து கொண்டு தமிழ்க் கல்வியைப் பரப்ப விரும்ப வில்லை. நாவலர் கிளர்ந்தெழுந்தார். வெளிப்படையாகவே சைவத் தமிழ் மறு மலர்ச்சிப்பணிகளில் ஈடுபட்டார். தனியொரு மனித இயக்கமாகவே செயற்பட்டார்.
*தமிழ்" என்பது வெறும் மொழிமாத் திரமே என்று நாவலர் கொள்ளவில்லை. கருத்துப் பரிமாற்றஞ் செய்யும் சாதனமே மொழி என்பது பொதுக் கருத்து. ‘தமிழ்" என்னும்போது பரந்த, விரிந்த, ஆழமான விடயங்களை உள்ளடக்குகின்றது. தமிழின் கருத்தை விசாரித்து உணர்ந்து தமிழ் செய் தவர்கள், அதாவது நாவலர் போன்றவர் கள், தமிழ்க் கல்வி வழித்தோன்றல்கள். இவர்களையே பண்டிதமணி இலக்கியவழியி லும், கல்விவழியிலும் வெளிப்படுத்தி

Page 91
4 ۔۔۔۔۔۔
யுள்ளார். தமிழின் கருத்தை அறியாமல், தம் கருத்தைத் தமிழ் செய்தவர்களைப் பண்டித மணி இவ் வரிசையில் சேர்த்துக்கொள்ள வில்லை.
நாவலர் நீதிமான். "பங்கயத்தயனு மாலறியா நீதியே என்பது மணிவாசகம். அதுவே * மேன்மைகொள் சைவற்தி *.
நாவலர் நீதியை உபாசித்தவர். அதற்குத் தம்மை அர்ப்பணம் செய்தவர். தமிழ்க் கல்வி வழி நீதிவழுவா நெறிமுறையில் வந்துள் ளது. நிதி பொருளன்று; நீதியே பொருள் வாய்ந்தது எனக் கொண்டது. இக் கல்வி வழியில் வந்தவர் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள். நாவலரின் கல்வி வழித் தோன்றலாக வந்த பண்டிதமணி, நாவல ரின் கல்விச் சிந்தனைகளையும், கோட்பாடு களையும் செயற்படுத்தியவர். மேலைநாட்டுக் கல்வியில் தம்மை ஈடுபடுத்தாது, நேரடி பாகவே தமிழ்க் கல்விக்குத் தம்மை அர்ப் பணித்தவர். நாவலரின் ஐந்தாண்டுத் திட் டம், சைவத் தமிழ்க் கல்வி அபிவிருத்திக் குரியது. இதனைப் பொன்போல் போற்றிய வர் பண்டிதமணி.
நாவலர் பாடசாலையில் உள்ள காவிய வகுப்பில் சுன்னுகம், அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களிடம் தமிழ்க் கல்வி கற்ற பண்டிதமணி, நாவலரின் கல்வித் திட் டத்தை நன்கு உணர்ந்தார். அதற்கு முன் னர் மட்டுவிலில் வாழ்ந்த காலத்தில், மகா லிங்கசிவத்தின் கல்விச் செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தார். நாவலர் காவிய பாட சாலையில் கற்றகாலத்தில் திருநெல்வேலியில் அமைந்த ‘* ஈரப்பலாச் சங்கம் ** புதியன வற்றை இவருக்களித்தது. நடராசா, கைலாசபதி, டக்டர் சிவப்பிரகாசம் போன் றவர்கள் இச் சங்கத்தில் இருந்தனர்.
சமுதாயத்தின் பண்டைய மரபுகள், பண்பாடுகள் என்பனவற்றை ஆராய்ந்து தெளிந்து, அவற்றிற்கு விமரிசனம் தந்து அவற்றிலிருந்து எழுகின்ற சிறந்த கருத்துக் களை, வளர்ச்சி பெற்று வருகின்ற சமகாலச் சமுதாயத்தின் தேவைகள், பண்புகள், நோக்கங்கள் என்பனவற்றிற்கு ஏற்ப உரு

வாக்கி இணைக்கும் முயற்சிகளில் பண்டித மணி ஈடுபாடுகொண்டார். பழைமையில் பற்று வைக்கும் பண்பையும், புதுமையில் கருத்தைச் செலுத்தும் பாங்கினையும் அவர் பெற்றிருந்தார். பழைமையின் அடித்தளத்தி லிருந்து புதுமை பொங்கியெழவேண்டும் என்பர். கல்வி மூலம் பழைமையையும் புதுமையையும் ஒன்றிக்கச் செய்ய விரைந் தார்.
பண்டிதர்கள் என்ருல் தனிப்போக் குடையவர்கள்; பண்டிதத் தமிழில் பேசுப வர்கள்; பழைமையில் ஊறியவர்கள்; சாதா ரண மக்களோடு உடன்போக்கு அற்றவர்கள் என்று தமிழ்ப் பண்டிதர்கள் பற்றிக் கொண் டிருந்த படத்தை மாற்றியமைத்தவர் பண்டிதமணி. அவரின் பேச்சிலோ, எழுத் திலோ பண்டித நடையைக் காணமுடிய வில்லை. புதுமையான முறையில் யாவரும் எளிதில் விளங்கிக்கொள்ளும்படி பேசினர்; எழுதினர்.
தமது கல்வி நோக்கங்கள் இரண்டினை, நாவலர் பாடசாலை முகாமையாளராகவிருந்த பூரீமத் த. கைலாசபிள்ளைக்குப் பண்டிதமணி எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
1. உண்மையான தமிழ்க் கல்வியை இலவசமாக எங்கும் அபிவிருத்தி செய்வது.
2. நாவலர் ஐயாவின் தர்மாபி விருத்திக்கு இயன்ற உதவி புரிவது.
நாவலர் வழியில், அவரின் கொள்கைகள் சிலவற்றையேனும் பரப்புதல் வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றினர் பண்டிதமணி. யாழ்ப்பாணத்தின் பழைமை யான சைவ தமிழ்ப்பண்பாட்டினைக் கல்வி மூலம் காப்பாற்றவேண்டுமென எண்ணி ஞர். இதற்காகவே, திருநெல்வேலி சைவா சிரிய கலாசாலையில் பேராசிரியரானர்; காவிய பாடசாலை நடாத்தினர்; எழுதினர்; பேசினர்; இறுதிவரை நைட்டிகப் பிரம சரியத்தைக் கடைப்பிடித்தார்.

Page 92
- 4
சைவாசிரிய கலாசாலையில் முப்பது ஆண்டு களுக்கு மேல் ஆசிரியர்களுக்கு ஆசிரியணுய் விளங்கினர். கல்வி என்பது விளக்கேற்றல் என நாவலர் கூறுவார். பண்டிதமணி என்னும் கல்வி விளக்கிலிருந்து ஆயிரக் கணக்கான நல்லாசிரியர்கள் ஒளி பெற்று ஈழம் முழுவதிலும் கல்வி விளக்கேற்றி ஞர்கள்.
பண்டிதமணி திருநெல்வேலியில் நிறு விய காவிய பாடசாலை ஈழத்துத் தமிழ்க் கல்வி வழியைத் தொடரவைக்கும் தொண் டாக விளங்கியது. சைவத் தமிழ்க் கல்வி புத்துயிர்ப்புப் பெற்றது.
யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம், சைவ பரிபாலன சபை, சைவ வித்தியாவிருத்திச் சங்கம் என்பன இந் நூற்ருண்டின் முன்னரைப் பகுதிக் காலத் தில் சைவத் தமிழ்க் கல்வியைப் பேணவும், பரப்பவும் முன்னின்றவை. இவற்றுடன் தொடர்புகொண்டு இந்த இலட்சியங்களை அடைவதற்குப் பல திட்டங்களையும், அறிக்கைகளையும் பண்டிதமணி வழங்கினர்.
ஈழத்துக் கல்வி, இலக்கியவழித் தோன் றல்களின் பெருமையைப் பேணி, உலகறியச் செய்தவர் பண்டிதமணி. இவர்களைப்பற்றி எவராதல் இகழ்ந்தால், தக்க கண்டனம் செய்யவும் தயங்காதவர். நமது மொழி,
கல்வியுடையவர் தாங் கற்றறிந்த மாணுக்கர்களுக்குக் கல்வி கற்பித்தலும் தலுமாகிய இம் மூன்றையும் எந்நா வேண்டும். இவ்வியல்புடையவரே கல்வி இம் மூன்று மில்லாதவிடத்துக் கல்விய

3 -
சமயம், கல்வி, மரபு, பண்பாடு என்பன மங்கி மறைந்த பின் பெறும் அரசியல் சுதந் திரத்தால் யாது பயனும் இல்லை என்று கூறுவார். ஆத்மீக உணர்வு, விடுதலே, பண் பாட்டு விடுதலை என்பன அரசியல் விடு தலைக்கு முன்னேடியாக விளங்கவேண்டும்.
பண்டிதமணி, ஈழத்துத் தமிழ்க் கல்வி வழியைத் தொடர வைக்க ஆற்றிய பணிகள் அளப்பரியன. இது தொடர்பாக அவர்கள் தந்த ஆலோசனைகள் இரண்டு ஆகும். அவை
if
(1) நாவலரின் ஐந்தாண்டுத் திட் டத்தை இக் காலநிலையை யோசித் துப் பயன்படுத்தவேண்டும்.
(2) மற்றச் சமயத்து இளைஞர்கள் தத்தம் சமயத்தில் நிற்க சைவ இளைஞர்கட்கு அஃதில் லா மை சிந்திக்கற்பாலது.
நாவலர் இக் கைங்கரியத்திற்கென விட் டுச்சென்ற தர்ம சொத்துக்கள், அவரின் நோக்கங்களுக்கே பயன்படுத்தப்பட வேண் டும் என்று பண்டிதமணி வலியுறுத்திவந்தார்.
இவை பண்டிதமணியின் கல்விக் கருத் தைச் சிந்திப்பார்க்கு உபகாரமாகும் சில குறிப்புக்கள் ஆகும்.
படி நல்வழியிலே ஒழுகுதலும், நன் , எல்லாருக்கும் உறுதியைப் போதித் "ளும் தமக்குக் கடனுகக் கொள்ளல் பியாலாகிய பயனை அடைந்தவராவர். பினுற் பயனில்லை.
- நாவலர்பெருமான்

Page 93
எட்டினதும்
ச. பரநிருபசி
டண்டிதமணி ஐயாவின் இறுதி ஊர் வலம் மயானத்தை அண்மித்துக் கொண் டிருந்தது. நான் பின்னே சென்றுகொண் டிருந்தேன். அவர் அமாத்துவமடைந்த செய்தி அறிந்த நேரந் தொடங்கி அவரை யும் உப அதிபரவர்களையும் பற்றிய சிந்தனை அலைகளே மனதில் வந்து போய்க்கொண், டிருந்தன. மயானத்தை அண்மித்தபொழுது உப அதிபரவர்களின் ஆசிரியரும் ஆத்மீக நெறியில் அவருக்கு ஒரு முன்னேடியாகத் திகழ்ந்தவருமாகிய திருவாளர் இரத்தின சபாபதி உபாத்தியாயர் அவர்களின் தகனக் கிரியையும் 1945இல் இதே மயானத்திற் ருனே நடைபெற்றது என்ற எண்ணம் வந்தது. அந்த இறுதி யாத்திரையில் பண்டிதரையா, உப அதிபர், காசிப்பிள்ளை உபாத்தியாயர், சின்னப்பு உபாத்தியாயர், பொன்னம்பல உபாத்தியாயர், கணபதிப் பிள்ளை உபாத்தியாயர், கதிரவேலு உபாத் தியாயர் ஆகியோருடன் இன்னும் இரண்டு மூன்று பேர் மாத்திரமே மாறிமாறிச் சுமந்து கொண்டு சென்ருர்கள் என்பதை அறிந்திருந்தேன். அவரைத் திருநெல்வேலி யில் ஒருவருக்கும் தெரியாது. அவர் அங்கே இருக்கவில்லை. உப அதிபரவர்கள் பண்டித ரையாவைப் போலவே 1923 முதல் திரு நெல்வேலியிலேயே வாழ்ந்தவர். அவருடைய இறுதி வைபவமும் மிகச் சாதாரணமுறை யில் அளவெட்டியில் நடைபெற்றது.
மூவருடைய இறுதி வைபவங்களையும் யோசித்த பொழுதுதான் * எட்டினதும் எட்டாததும் " என்ற தொடர் அந்த இடத் திலேயே மனதில் தோன்றியது. அதிலிருந்து விரிந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இக் கட்டுரை.
பண்டிதமணியவர்களிடம் கற்றுத்தேறிய அத்தனை ஆசிரியர்களும் உப அதிபரவர்க ளிடமும் கற்றிருக்கிருர்கள். பண்டித ரையாவை அறிந்திருந்த அத்தனைபேரும் உப அதிபரையும் அறிந்திருந்தார்கள். பண்டித ரையா உட அதிபரை எந்தத் தானத்திலே

எட்டாததும்
|ங்கம் அவர்கள்
வைத்திருந்தார் என்பதை யாவருமே அறிந் திருந்தார்கள். ஆணுல் ஒரு வேறுபாடு. சாதாரண இலக்கிய ரசிகன் முதல் அத்வைத சிந்தனையாளன் பரியந்தம் பலருக்கும் பண்டிதரையா அவர்கள் ஒரு சிறிதேனும் எட்டினவராயிருந்தார். ஆனல் உப அதிப ரவர்களோவெனில் பல்லாண்டுகள் பழகிய பண்டிதரையா போன்றவர்களுக்கே ஒரு சிறிதும் எட்டாதவராகவே தோன்றினர்.
இரத்தினசபாபதி உபாத்தியாயரும், உப அதிபர் திரு. பொ. கைலாசபதி அவர் களும் மெய்ப்பொருளாராய்ச்சியிலே மூழ்கி யிருந்தார்கள். உண்டிருந்து வாழ்வதற்கே உழன்றுகொண்டிருந்த சாதாரண உலகத் தோடு சேர்ந்து உழன்றுகொண்டிருக்க அவர்களால் முடியாது. அளவெட்டியிலே சனசஞ்சாரம் மிகக் குறைந்த ஒரு மூலையிலே ஒரு குடிசையில் மெய்ப்பொருளாய்வில் ஈடுபட்டுத் தவவாழ்வு வாழ்ந்துகொண்டிருந் தார் இரத்தினசபாபதி உபாத்தியாயரவர் கள். உப அதிபரவர்கள் " ஒரு கலைக்களஞ் சியம் " என்று பலராலும் போற்றப்பட்ட ஒரு சிறந்த ஆசிரியராய்த் திகழ்ந்த அதே சமயத்தில் ஒரு மெளன தவமுனிவராய் சாதாரண உலகத்தோடு ஒட்டாமல் பகிரங்க உலகிலேயே வாழ்ந்து வந்தார். எனவே இருவரும் மக்களுக்கு எட்டாதவர்களாயும் மக்கள் எடுக்கும் விழாக்களுள் அகப்படாத வர்களாயும் வாழ்ந்ததில் வியப்பொன்று மில்லை.
லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சையில் சித்தியெய்துபவர்கள் எப்பொழுதும் மிகச் சிலராகவே யிருந்தரர்கள். 1921இல் உப அதிபரவர்கள் அப்பரீட்சையில் முதற்பிரிவில் சித்தியடைந்தார். அந்த நாட்களில் ஒருநாள் திரு. பொ. கைலாசபதி அவர்கள் வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலடியில் சென்று கொண்டிருக்கையில், ** அதிலே செல்பவரும் இந்தமுறை லண்டன் மற்றிக்குலேஷன் சித்தியடைந்த ஒருவர் ' என்று தனக்கு யாரோ காண்பித்ததாகப் பண்டிதரையா

Page 94
சொல்லியிருக்கிருர். அன்றுதான் முதன் முதல் அவருடைய தோற்றத்தைப் பண்டித Gogurt &53TLITri. பின்னர் 1923இல் பரமேஸ்வராக்கல்லூரியில் இன்ரர் சயன்ஸ் வகுப்பு ஆரம்பித்தபொழுது அங்கே சேர்ந்த திரு. பொ. கை. அவர்களுடன் தெற்குத் திருநெல்வேலியில் பெயர்பெற்ற ஈரப்பலா வளவு விடுதியில் தங்கும் வாய்ப்புக் கிட்டி யது. 1930 தொடங்கி சைவாசிரியகலாசாலை யில் இருவரும் உடனுசிரியர்களாய் இருந் திருக்கிருர்கள், கலாசாலை வளவிலே ஒரே குடிசையில் வாழ்ந்துமிருக்கிருர்கள்.
பண்டிதரையா மட்டுவிலில் உரையாசி ரியர் வேற்பிள்ளை உபாத்தியாயருடைய சூழ லிலே வளர்ந்து அவருடைய பிள்ளைகளாகிய பண்டிதர்கள் திருஞானசம்பந்தர், மகாலிங்க சிவம் ஆகியோரிடத்தில் ஆரம்பக் கல்வி கற்ருர், பின்னர் வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையின் மாணுக்கர்க ளாகிய இரு பொன்னம்பலபிள்ளைகளிடம் தமிழ் கற்றர். பின் நாவலர் காவிய பாட சாலையில் அக்காலத்தில் தனக்கு ஈடிணை யின்றித் திகழ்ந்த சுன்னுகம் குமாரசுவாமிப் புலவரிடத்திலும் நல்லூர் த. கைலாசபிள்ளை யவர்களிடத்திலும் முறையாகக் கற்ருர், பண்டிதபரிட்சைக்கு வித்துவான் சுப்பைய பிள்ளையிடமும் படித்தார். திரு. கைலாசபதி யவர்கள் அளவெட்டி ஞானுேதய வித்தியா சாலையில் ஏழாம் வகுப்புவரை தமிழ் கற்ருர். பின் மல்லாகம் ஆங்கிலப் பாட சாலையில் கற்று 1920இல் E. S. L. C. பரீட் சையில் தேறினர். எந்தக் கல்லூரியிலும் வகுப்பில் சேர்ந்து படிக்காமல் 1921இல் மற்றிக்குலேஷன் பரீட்சையில் சித்தியடைந் தார். 1924இல் இன்ரர் சயன்ஸ் பரீட்சை யில் சித்தியடைந்து விக்டோரியாக் கல்லூரி யில் ஆசிரியர் சேவையிலிருந்துகொண்டு B. Sc. பட்டதாரியாகி 1930இல் சைவாசிரிய கலாசாலையில் உப அதிபரானர். 1933இல் ஒரு விடுமுறை காலத்தில் இருவரும் கீரிமலை கிருஷ்ணபிள்ளை மடத்திலே தங்கியிருந்தார் கள். பண்டிதருக்கு உப அதிபர் ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதென்றும் பண்டிதர் உப அதிபருக்குத் தொல்காப்பியம் சொல்வ தென்றும் உடன்பாடு. முதல் நாள் பண்டித

5 -
ரையா தான் வைத்திருந்த தொல்காப் பியக் குறிப்புகளை விரித்துவைத்துப் பாடத்தை ஆரம்பித்தார். இடைமறித்து உப அதிபர் தொல்காப்பியம் பற்றிச் சொல் லத் தொடங்கினர். ‘அன்று தொடக்கம் நான் அவரிடம் தமிழ் படித்துக்கொண்டே யிருக்கிறேன் ?? என்று 1954இல் நான் பண்டிதரையாவுடன் பழகத்தொடங்கிய காலத்தில் சொல்லியிருக்கிழுர்,
நாவலருடைய தர்மங்கள் பற்றிய ஒரு தர்மசங்கடமான பிரச்சினை சம்பந்தமாக 1934இல் தமது மதிப்பிற்குரிய மனேஜர் கைலாசபிள்ளையவர்களுக்குத் தான் எழுதிய கடிதத்தைப் பண்டிதரையா ஒருமுறை காட் டிஞர். 'சைவ சித்தாந்தம் தெரிந்தவர்கள் இருவர் இருக்கிருர்கள். ஒருவர் சைவாசிரிய கலாசாலை உப அதிபர் பொ. கைலாசபதி அவர்கள். அவர் மனித உருவில் ஒரு தெய்வம். மற்றவர் அவருடைய ஆசிரியர் திரு. இரத்தினசபாபதி அவர்கள். இருவரும் நாவலருடைய தருமங்கள் பற்றிய பிரச் சினைகளுக்கு அபிப்பிராயம் சொல்லக்கூடிய வர்கள், அவர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று அக்கடிதத் திற் குறிப்பிட்டிருந்ததை நான் வாசித்தேன்.
1937இல் ஒரு நாள் மதிய போசனத் திற்கு இருவரும் வீடுகளுக்குப் போய்க் கொண்டிருந்த பொழுது வழியில் நடுத் தெருவில் நின்று, ‘ டகரம் தெரிகிறது ?? என்று உப அதிபரவர்கள் சொன்ஞர்களாம். இவருக்குச் சித்த சுவாதீனமோ என்றுகடத் தான் நினைத்தாராம் பண்டிதரையா.
* புலவரிடத்திலும் மனேஜரிடத்திலும் நான் படித்தது வெறும் சொற்பொருள் தான். நூல்களின் உண்மைப் பொருளை அறிந்தது உப அதிபரிடந்தான்' என்று பலமுறை பண்டிதரையா சொல்லியிருக் கிருர், இலக்கிய கலாநிதிப்பட்டம் வழங்கிய ஞான்று யாழ் வளாகத்தினர் எடுத்த பெரு விழாவில் வழங்கிய பதிலுரை பண்டித ரையாவையும் உப அதிபரவர்களையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.அவ்வுரையில்-தம் வாழ்க்கையில் ஆற்றிய மிகப் பிரதான உரையில் உப அதிபரவர்களைப்பற்றியே

Page 95
பேசியிருக்கிருர், 'இவ்வளாகம் புண்ணியாத் மாவான மகா புனிதர் ஒருவரின் பாதங்கள் தீண்டிய இடம். என்னைப் பொறுத்தவரை யில் இது ஒரு மகா புனித ஸ்தலம்.
அந்த மகானுல் அடையக்கடவ பயனை அடைந்தாயா என்று என்னை நானே இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். . . . இவர் ஒரு ஏலாவாளி. ஏலாவாளிகள் சமயப்
போக்குள்ளவர்களாய்க் காலங்கழிக்கிருர்கள் என்ற எண்ணமே எனக்கிருந்தது. 1942ஆம் ஆண்டளவில் வாசிப்புகள் போய்ச் சிந்தனையுலகில் அவர் ஆழ்ந்திருந்தார். அப்பொழுது தோல்விகளின்மேல்தோல்விகள் எனக்குக் கிடைத்தன. அதன் பயனுக அந்த முனிவரை மெல்ல அணுகினேன். அவர் சொல்லுவது எனக்கு எட்டவில்லை. பத்துவீதத்துக்குமேல் எனக்கு விளங்குவ தில்லை. ஏன் இவற்றைச் சொல்லுகிருர் என்று எண்ணுவதுமுண்டு', இவை அவ் வுரையிலுள்ள சில வசனங்கள்.
1932இல் பண்டிதரையாவும் உப அதிப ரவர்களும் ஒரே குடிசையில் வாழ்ந்த காலம். அப்பொழுது பண்டிதரையா அவருடைய சிந்தனைகளில் அவ்வளவு ஈடுபாடு கொண் டிருக்கவில்லை. முழுவதும் தன்னுற்றலினு லேயே கலாநிலையத்தில் சின்னத்தம்பிப் புலவரைப்பற்றி விரிவுரையாற்றினர். அவ் வுரையை அமரர் ஹன்டி பேரின்பநாயகம் பாராட்டி, பேராசிரியர் பிராட்லியுடன் அவரை ஒப்பிட்டுக் கூறியவற்றை முன்னுள் இந்துக்கல்லூரி அதிபரும், ஈழநாடு ஆசிரி யருமாகிய திரு. ந. சபாரத்தினம் அவர்கள் மூலம் அறிந்துள்ளோம். அதே பேச்சை இரண்டாம் முறையும் யாழ் முற்றவெளி மைதானத்தில் மாபெருங் கூட்டத்தில் போதிய அறிவித்தலின்றியே பண்டிதமணி யைக் கொண்டு தாம் பேசுவித்ததாகவும் இன்னும் எத்தனைமுறையென்ருலும் எங்கே யென்ருலும் அந்தப் பேச்சை அவர் பேசு கிருர் என்று தாம் கேள்விப்பட்டால் தவருது போய்க் கேட்பேன் என்றும் திரு. பேரின்ப நாயகம் அவர்கள் 1959இல் பண்டிதமணி யின் பாராட்டு விழா மலரில் எழுதியிருக் கிறர். பிற்காலத்தில் உப அதிபரவர்களின் கருத்துக்களில் தமக்கெட்டிய சிலவற்றைத்

46 -
தமது இனிய தமிழிற் குழைத்துப் பண்டித மணி அவர்கள் ஊட்டியவை திரு. பேரின்ப நாயகம் அவர்களுக்கு எட்டவில்லைப்போ லும்! எட்டியிருந்தால் எப்படிப் பாராட்டி யிருப்பாரோ!
பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் அவர்கள் கிரேக்க தத்துவ ஞானிகளாகிய சோக்கிரதீசு, பிளேற்றே ஆகியோருடன் பண்டிதமணியவர்களை ஒப்பிட்டெழுதியுள் ளார். ** மேற்குலக சிந்தனையாளருள் மிக உயர்ந்தோர் சோக்கிரதீசரும் பிளேற்ருே வும்தான். அவர்களுக்கு மேலே சிந்தித் தவர் அங்கே ஒருவருமில்லை. ஆணுல் அவர்க ளிருவரும் விட்ட இடத்திலிருந்துதான் இங்கேயிருந்த வைதிக சிந்தனையாளர் ஆரம் பித்திருக்கிருர்கள்" என்பது உப அதிட ரவர்களின் கருத்து. அப்படியான சிந்தனை களிற் சிலவற்றை உப அதிபரிடமிருந்து அறியும் வாய்ப்பைப் பண்டிதரையா பெற் றிருந்தார்.
*கண்கண்ட தெய்வம் எனப் பொதுவாக மக்கள் அனைவராலும் வணங்கப்படுபவர் கொழும்புத்துறை யோகர் சுவாமிகள். இரு பதுகளின் ஆரம்ப காலத்தில் பண்டித ரையாவும் யோகர்சுவாமியும் பெரும்பாலும் ஒவ்வொரு சாயந்தரமும் சுன்னகம் சந்தியி லிருந்து வண்ணை நாவலர் சந்திவரை கூடி நடந்து செல்வது வழக்கம். யோகர் சுவாமி செல்லாச்சி அம்மா வீட்டிலிருந்து வருவார், பண்டிதரையா புலவர் வீட்டில் படித்துவிட்டு வருவார். சந்தியிலே சந்தித்து இருவரும் கூடிப் போவார்கள். மழை நேரங்களில் ஒரே குடையின்கீழ் இருவரும் போயிருக்கி முர்கள். பண்டிதரையாவின் சுபாவத்தில் எவரையும் அவமதித்து நடக்கும் வழக்க மில்லை. அதே நேரத்தில் பெரிய சுவாமி என்று யோகருடன் நடந்துகொள்ளவுமில்லை. யோகர்சுவாமியும் பண்டிதரிடத்தில் மதிப்பு வைத்திருந்தார். சிவதொண்டன் பத்திரிகை ஆரம்பித்த நாட்களில் அதில் பெரிய புரா ணத் தொண்டர்கள் பற்றி எழுதுவிக்கும் பொருட்டு திருநெல்வேலிக்குப் பண்டித ரையாவிடம் சென்றிருக்கிருர். அப்பொழுது பண்டிதரையா நின்ற இடத்தை உப அதிப

Page 96
- 4
ரவர்களே காட்டிவிட்டாராம். எக்காரணம் பற்றியோ பண்டிதரையா அவ்விஷயத்தில் ஈடுபடவில்லை. ஆனல் பின்னரும் தற்செய லாகப் பண்டிதரையாவைச் சந்திக்குமிடங் களில் யோகர்சுவாமி அவருடன் அன்பாகவே நடந்திருக்கிருர்,
1978 ஆரம்பம் என நினைக்கிறேன். பண்டிதரையாவிடமிருந்து ஒரு கடிதம் வந் தது. உடனே வந்து சந்திக்கும்படி கேட் டெழுதியிருந்தார். போனேன். 'இலங்கைப் பல்கலைக் கழகம் D. Litt பட்டம் தரப்போகு தாம். கடிதம் வரும் என்று, நேற்று வித்தி யானந்தன் வந்து சொல்லிவிட்டுப் போயி ருக்கிருர், என்ன செய்ய என்று கேட்டார். தயக்கத்துக்குப் பல காரணங்கள். ஒன்று அரசியற் சூழ்நிலை. பிரதான காரணம் ‘உப அதிபர் இருந்தால் நான் இதை ஏற்பதைப் பற்றிச் சிந்திப்பேனே ? என்றது. பிந்திய காரணத்தைப்பற்றி நான் ஒன்றும் பேசா மல் அரசியலுக்கும் பல்கலைக்கழகப் பட்டத் துக்கும் சம்பந்தமில்லை என்பதை விரித்துக் கொஞ்ச நேரம் கதைத்தேன். அவருக்கு மிகத் திருப்தி.
அவருடைய கருத்துக்களைக் கலந்துரை யாடுவதில் ஐயாவுக்கொரு தனியின்பம். அடிக்கடி திருநெல்வேலிக்கு வரும்படி கேட் பார். போகிறவேளைகளில் சில சந்தர்ப்பங்க ளில் கதைக்கக்கூடிய மனநிலை அவருக்கிருப்ப தில்லை. அதனுல் தனக்குத் தெளிவான மனநிலை இருக்கும்பொழுது தானே வருகி றேன் என்று சொல்லி, பலமுறை வந்து தங்கிக் கலந்துரையாடிச் சென்றிருக்கிருர். பிற்காலத்தில் இடையிடையே வந்துபோக வேணும் என்று கேட்டார். நான் தவருமற் போவதுண்டு.
பண்டிதரையாவுக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் கிடைத்தமையைப் பாராட்டு முகமாக யாழ் வீரசிங்க மண்டபத்தில் 14-8-78இல் பெருவிழாநடைபெற்றது.அன்று பாராட்டுவிழா மலர் ஒன்றும் வெளியிடப்பட் டது. கூட்டத்தின் பின்னர் சில நாட் கழித் துத் திருநெல்வேலிக்குப் போனபொழுது பின்வருமாறு கூறினர். மலரிலுள்ள தமிழ் தந்த பண்டிதமணி என்ற கட்டுரை கவர்ச்சி யாக இருக்கிறது. அதை ஊன்றிப் படிக்கும்

7 -
படி சிலருக்குக் கடிதங்கள்எழுதியிருக்கிறேன். அதில் பரிமேலழகருடன் ஒப்பிட்டு எழுதியது மிக மிக நன்ருயிருக்கிறது. நான் தமிழ் விழாவிலே பேசியபோது கூட அது எனக்கு மனதிலே படவில்லை ?. இக் கூற்றுக்கள் அவ ருடைய உள்ளத்தின் அடியிலிருந்து வந் தவை; அவருடைய பண்புக்கும் பெருமைக் கும் எடுத்துக்காட்டாக அமைவன. அவர் குறிப்பிட்ட பகுதியை வாசகர்களுக்காக ஈண்டுத் தருவது பொருத்தமாயிருக்கும் * அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே என்ற சூத்திரத்திற்கும் உண் மைப்பொருள் விரித்தாரில்லை. “உரையெல் லாம் பரிமேலழகன் தெரித்த உரையாமோ தெளி" என்று புலவர்களாற் போற்றப்பட்ட பரிமேலழகர் என்ன சொன்னர் ? ? ஏனைப் பொருளுமின்பமும் போலாது அறன் இம்மை மறுமை வீடென்னும் மூன்றன7யும் பயத்த லான் அவற்றின் வலியுடைத்து " என்றும் "இல்லறத்தின் வழிப்படுவனவாய் பொரு ளின்பங்களுள் இருமையும் பயப்பதாகிய பொருள் என்றும் இம்மையே பயப்ப தாகிய இன்பம் " என்றும் ஒன்றிலொன் றைத் தாழ்த்தி மிகச் சாதாரண பொருள் செய்து போயினர்."
சந்திக்கும் வேளைகளில் ** ஆவியுலகில் அவரைச் சந்திக்க முடியாதோ ?? என்பார். ** இது கர்மபூமி. இங்கேதான் ஒரு நல்ல சாதகம் நடக்க முடியும், இங்கே செய்த கர்மங்களின் பயன்களை அனுபவிக்கும் போக பூமிகள்தான் ஏனைய இடங்கள். அதனுலே தான் ‘இக்கண்டத்திற்காக அண்டமிருக்கிற தேயன்றி, அண்டத்திற்காகக் கண்டமில்லை" என்பர் பெரியோர். எனவே ஒரு உழுந்து உருளுகிற அளவு நேரமென்ருலும் இப் பூமியிலிருப்பது நல்லது. இறுதி விநாடியி லும் ஒருவனுக்கு ஒரு நல்ல எழுச்சி வரலாம். அது ஒன்றே அவனை நல்ல கதியிற் சேர்க்க வும் கூடும் " என்று அவர் சொல்லுவ துண்டு என்பேன். ' அதைத் திருப்பி இன்னு மொருக்காற் சொல்லுங்கோ" என்று கேட் பார். சொல்லி முடிய " இறக்கவேணு மென்று நினைப்பதற்குத்தானும் எங்களுக்கு என்ன உரிமை, அதிகாரம் இருக்கிறது ! " GrGiốr unir fiř.

Page 97
பண்டிதமணி
சுன்னுகம் புலவரகம், கு. மு.
சுன்னுகம் குமாரசுவாமிப் புலவருடைய தலைசிறந்த மாணவனுகிய கலாநிதி பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் இல் வுலக வாழ்வை ஒருவிப் பரமபதத்தை அடைந்து விட்டார் என்பதைக் கேள்வி யுற்ற உற்ருர் உறவினர் நண்பர்கள் மற்றுப் எல்லோரும் அருமணி இழந்த நாகம்போலக் கையாறுற்றுக் கவலையில் மூழ்கினர்.
குமாசுவாமிப் புலவரிடத்து அவா வைத்த குரு பத்தி ஈடிணையற்றது. தமது குருவாகிய குமாரசுவாமிப் புலவர் நோயுற்றி காலத்தில் பண்டிதமணியுடன் கூடிப் படித்த மாணவர்கள், ஒருவர்பின் ஒருவராகக் காவிய வகுப்பினின்றும் நீங்கப் பண்டிதமணி ஒருவர் மட்டும் அவரை விட்டு நீங்காமல் இறுதிவரை வேண்டிய பணிவிடைகளை அயராது அல்லும் பகலும் செய்தனர்.
இறந்த பின்னரும் பூத உடலோடு மய னத்துக்குச் சென்று பின்வரும் இரங்க பாவை அழுத வண்ணம் இறுதிக் கண்ணி அஞ்சலி செய்தனர். அவருடைய ஈடினை யற்ற குருபத்தியை யாண்டுங் காண்பரிது.
பா வருமாறு: செந்தமிழு மாரியமுந் தேர்ந்து வீறித்
தேயமெலாஞ்சென்றிலங்குஞ்சீர்த்தியொன்ே இந்தநில மிசையிருப்ப விணையி லாத
எண்ணில்பல கவிதழைத்த வினிய வாயும்
{47ஆம் பக்கத் தொடர்ச்சி) தமிழிலக்கிய உலகில் பண்டிதமணி ஒரு தனி யுகம் என்கிருர் பேராசிரியர் சண்மு தாஸ். முழுதும் உண்மை. அவ்வாறே மெய்! பொருளாராய்ச்சி உலகில் உபஅதிபரவர்கள் ஒரு தனியுகம் என்பதில் எட்டுணையும் ஐயபே யில்லை. மெய்ப்பொருளாராய்ச்சியின் முடி விடம் கல்லால விருட்சநீழல் என்பர்.
கல்லாலின் நீழல்தனில்
ஒருநால் வர்க்கும் கடவுள்நீ உணர்த்துவதும்
கைகாட் டென்றல்

யின் குருபத்தி
த்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள்
அந்தமிலாக் கலைகள்பல வெழுதி வைத்த
அம்புயநேர் திருக்கரமு மந்தோ! வந்தோ!!
இந்தனத்திற் செந்தழலி னுருகி வீய
யாமிதனைப் பார்த்திருத்த லென்ணே!
ra பென்னே!!
திருப்பெருகு சிவஞானமும், உவமை யிலாக் கலைஞானமும், உணர்வரிய மெய்ஞ் ஞானமும் பொதுளி உருவெடுத்த பெற்றியே யனைய நற்றவ சீலராகிய பண்டிதமணி கேட் டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் சற் பிரசங்கங்கள் செய்தும் சீரியகூரிய தீஞ்சொல்லால் ஆகிய எழுத்தே வியங்கள் இயற்றியும் 389 d'Fáil சமயத்துக்கும் தமிழுக்கும் அருந்தொண் டாற்றினர்.
அவருடைய நற்பணியை மதித்து இலங் கைப் பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதி என்னும் பட்டத்தைக் கொடுத்தது மிகவும் பாராட்டத்தக்கது. பண்டித மணியின் இழப்பினுல் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்ப முடியாததொன்று.
சொல்லாலே சொலப்படுமோ
சொல்லுந் தன்மை துரும்புபற்றிக் கடல்கடக்குந் துணிபே யன்றே.
-தாயுமானசுவாமிகள்
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல்
நினைந்துபவத்தொடக்கை வெல்வாம்.
- திருவிளையாடற்புராணம்

Page 98
பண்டிதமணி அவர்
க. சி குலரத்
tண்டிதமணி அவர்கள் நாவலர் காவிய பாடசாலையில் உருவாகி மதுரைப் பண்டித பரீட்சையில் திறமை ச் சித்தியெய்தி, கோப்பாய் ஆசிரிய கலாசாலையிற் பயிற்சி பெற்று விவேக முறுக்கேறிய வீரத் தமிழாசானக வெளியேறித் திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலையில் விரிவுரையாளரா கப் பதவியேற்றுப் பணி செய்துவந்த காலத் தில் வளர்த்த சங்கங்களுள், கலாநிலையம் என்னும் கற்றேர் பேரவையும் ஒன்று. மற் றையவை யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் என்னும் அர சறிந்த அவையும், சைவத் தமிழ்ப் பரிபால னஞ் செய்த சைவ வித்தியா விருத்திச் சங்கமுமாகும்.
கலாநிலையம் என்பது யாழ்ப்பாணத்து வண்ணுர்பண்ணை என்னும் நகரின் மேற்கில் உள்ள பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோயி லடியைச் சேர்ந்த மனையொன்றில் அறிஞர் கள் திரண்டு கலையாக்கங் கருதி 1931ஆம் ஆண்டளவில் ஆரம்பித்த கழகமாகும். கலை யாக்கங் கருதி ஆரம்பித்த இக் கழகத்தின் நோக்கம் இலக்கியம், இலக்கணம், தத் துவஞானம், பெளதிக சாத்திரம், ஓவியம், நாகரிகம், சரித்திரம் என்னும் இவற்றில் பாரத நாடும் இலங்கையும் அடைந்த பேறு களை ஆராய்தல், இவற்றை இக்காலத்து ஆராய்ச்சி அறிவின் முறையில் விளக்குதல், கலைகளின் புத்துயிர்ப்புக்காகவும் நாட்டின் நோக்கங்கள் கைகூடுதற்காகவும் முயலுதல் என்பனவாம்.
இக் கழகத்தின் அங்கத்தினர் பொது வகையினர் எனவும் சிறப்புவகையினர் என வும் இரு திறத்தினராயமையப் பொது வகையினராஞேர், தாட்டின் கலையாக்கத் தில் ஊக்கமுள்ளவராயும், சிறப்பு வகையின ரானேர் கலையாக்கத்துக்கு உபகரித்த அறிஞ ராயு மிருந்தனர். தமிழ்க் கலைகளின் வளர்ச் சியில் கருத்துடையவர்கள் பலர் இந் நிலை பத்தில் அங்கத்தவராய்ச் சேர்ந்திருந்தனர்.
7

5ளும் கலாநிலையமும் தினம் அவர்கள்
திருவாளர் சு. நடேசன் அவர்கள் தலைவ ராயும் மத்திய கல்லூரி வர்த்தக ஆசிரி யர் திரு. கந்தையா நவரத்தினம் அவர்கள் செயலாளராகவும் பணியாற்றிய கலாநிலை யத்தில் பண்டிதமணி அவர்கள் மதிப்புக் குரிய அங்கத்தவராயிருந்தார். இன்னும் பரமேஸ்வராக் கல்லூரியில் சமய குருவா யிருந்த சுவாமி உருத்திரகோடீஸ்வரர், முத லியார் சு. சிற்றம்பலம், வழக்கறிஞர் வி. நாகலிங்கம், வித்தியா தரிசி சிவத்திரு. தி. சதாசிவ ஐயர், வட்டுக்கோட்டை ஆசிரியர் திரு. க. மதியாபரணம், இந்துக்கல்லூரி ஆசிரியர் பொ. தம்பு, வைத்தீஸ்வர வித் தியாலய ஆசிரியர் திரு. கா. வைரமுத்து, மத்திய கல்லூரி ஆசிரியர் வியாகரண சிரோ மணி மகோபாத்தியாய வை. இராமசாமி சர்மா, தெல்லிப்பழை வழக்கறிஞர் வ. குமார சுவாமி, மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரி யர் திரு. ச. சுப்பிரமணியம், நியாயவாதி எஸ். ஆர். கனகநாயகம், பெரியார் எஸ். கந்தையா முதலானேர் அங்கம் வகித்தனர்.
இன்னும் சிறப்புவகை அங்கத்தவர்கள் வரிசையில் சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர்,கலாநிதி ஐசாக் தம்பையா, கலாநிதி அன்றியா ஸ்நெல், முதலியார் செ. இராசநாயகம் முதலானுேர் இருந்தனர். சுவாமி விபுலானந்தர் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்து முதல் தமிழ்ப் பேராசிரியராய் இருந்த பேற்றை விட்டு, இலங்கையில் இளைஞர்களை மனிதராக்கும் மகத்தான சேவையிலீடுபடுவதற்கு வந்தி ருந்த காலம் அது.
நடேசன் அவர்கள் தஞ்சாவூரைச்சேர்ந்த தமிழறிஞர். இளமையிலேயே பீ. ஏ. . பீ. எல். பட்டங்கள் பெற்றுச் சட்டத்தரணி யாகித் தம்மூரில் நகராட்சிச் சபைப் பிரதி நிதியாயிருந்தவர். முத்துக்கிருஷ்ண பரம ஹம்சர் என்னும் ஞானியாரிடம் படித்துத் தரிசனத்திரயம் என்னும் தத்துவப் பெரு நூல் எழுதியவர். சேர் இராமநாதன் அவர்

Page 99
- 5
களின் அன்புப் பிடியில் அகப்பட்டு அவரின் அரவணைப்பில் கடமையேற்று அவர் தம் மகள் சிவகாமசுந்தரி என்பாரைத் திரும னஞ் செய்து, பரமேஸ்வராக் கல்லூரி அதி பராயிருந்து செந்தமிழும் சைவசமயமும் கமழக் கடமையாற்றியவர். அவர் தமிழ் நாட்டையும் ஈழநாட்டையும் இணைத்த உயிர்ப் பாலமாய்க் கலேப்பந்தனஞ் செய்து இனிதிருந்தவர்.
நடேசன் அவர்கள் கலாநிலையத்தின் தலைவராயிருந்து அதன் ஆக்கவேலைகளுக்குத் தமிழ்நாட்டுப் புலவர்களையும் ஈழநாட்டுப் புலவர்களேயும் அன்புக்கரம் நீட்டி அழைத்த அமைவு பண்டைத் தமிழ்ப் பண்பாட்டி லமைந்த பெருந்தன்மையாகும்.
* தமிழகம் யாண்டுமுள்ள தமிழ் ப் புலவீர் எல்லீரும் வம்மின் ! தமிழ்த் தெய் வத்துக்குரிய பணிகள் பல செய்வதற்கு வாய்த்த தருணம் இதுவென்றுணர்வீர். தமிழ் மக்கள் தமிழ்மொழி பயிலாது அதனைப் புறக்கணித் தயர்ந்த இருள்கூர் யாமம் கழிகின்றது. பரத கண்டமெங் கும் பரந்திருந்த மாயப்படலம் சிறிது சிறி தாக மறைகிறது. ஆங்காங்குக் கவிநலமும் புத்துயிர் பெற்றுப் புதுமணங் கமழ்கின்றது. தொன்மையாலும், பிறமொழித் துணையின் றித் தானேயியங்குந் தன்மையாலும், இலக் கண வமைதியாலும், இலக்கிய உயர்ச்சி பாலும் தமிழ்மொழி இக்காலத்து வழங்கும் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் சிறந் தது என்டது ஒருதலை. தமிழ்த்தெய்வத்துக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார் இக் காலத்துப் புலவர் ஒருவர். தமிழ்த்தெய்வம் துயிலெழுந்து திருவருள் புரியுங் காலம் அணித்தாயது.
சங்கப்புலவர் காலத்திலும் சமயாசிரியர் காலத்திலும் திருவோலக்கம் கொண்டு வீற் றிருந்த தமிழ்த் தெய்வம் மீண்டும் திரு வோலக்கம் கொள்கின்ற காலம் பிறச் கின்றது. முத்தமிழ்ப் புலவீர்காள் வம்மின் விசித்திரவன்னங்களுடன் அலர்ந்த மலர்கள் போன்ற கவிகளைக் கொணர்மின். பொருள் பொதிந்த கட்டுரைகளைக் கொணர்மின் புதிய சாத்திரங்களைக் கொணர்மின், பழஞ்

0 -
சரிதங்களைக் கொணர்மின். வேற்று மொழிப் பன்மலர்த் தெரியல்களைக் கொணர்மின். தெய்வத்துள்ளங்கவரும் திப்பிய இசைப் பாக்களை ஒதுமின். ஒவியர்களே, சிற்பி களே, நீவிரும் வம்மின், தமிழ்த் தெய்வத் துக்குப் புதுக் கேட்டங்களை அமைமின். தமிழ்வீரர்களே! வேளைக்காரப் படைகளாக அணிவகுமின். தமிழ்ப் புலவர்களே ! நீவிர் முன்ன6ணி புகுமின். நாமே இவ்வுலகத்தை நடத்துகின்றேம்" என்று அழைத்தார்; தாமே பாடி வரவேற்றர்.
** இனியபல் கீதங்கள் இசைப்பதும் யாங்கள் எண்ணில்பல் கனவுகள் காண்பதும் யாங்கள் தனிமையாய்த் திரைகடற் றுறைகளிற் றிரிந்தும் துறந்தபாழ் யாற்றிடி கரையினி லிருந்தும் மனிதவாழ் வனத்தும் முலகினி லிழந்து மதியொளி தவழும் மதியிலே மெனினும் நனிபட அலகை நாளுமே யாட்டி நடத்துவோ ரம்ம நாங்களே போலும்.'
இத்தகைய புகழ்பூத்த கலாநிலையத்தின் காரியதரிசியாய கந்தையா நவரத்தினம் அவர்கள், பிற்காலத்தில் தென்னிந்திய சிற்பவடிவம் முதலான கலைசம்பந்தமான நூல்கள் எழுதியவர்; கலைப்புலவர் என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர்; வங்காளத்தில் கவியரசர் தாகூரின் சாந்திநிகேதனம் என்னும் குருகுலத்தில் கலை பயின்று வந்த மகேசுவரி மாசிலாமணி என்னும் மாதர சியை மணந்தவதனுல் கலை வளர்த்த குடும் பத்தையே நடத்திய பெருமை வாய்ந்தவர்.
இத்தகைய புகழ்பெற்ற நவரத்தினம் அவர்கள் பண்டிதமணி அவர்களின் வித்த கத்தை வெகுவாக வியந்தும் மதித்தும் பேசியும் எழுதியும் வந்தவர். அவருடைய பாராட்டுரையின் ஒரு பகுதியைப் படித் தாலே பண்டிதமணி அவர்களின் பெருமை. தன்முகப் புலப்படுவதாகும்.
** பண்டிதர் அவர்களை முப்பதாண்டுக ளாக எனக்கு நன்கு தெரியும். யாழ்ப் பாணக் கலாநிலையம் ஆரம்பித்த காலம் தொடக்கம் அவருடன் நெருங்கிப் பழகிக் கொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. கலாநிலையப் பணிகளில் சலிப்பின்றி உழைத்

Page 100
m .
தவர்களுள் இவர்களும் ஒருவர். அக்கழகத் தின் திருவாகசபையிலும், ஞாயிறு என்னும் செந்தமிழ் வெளியீட்டின் அலுவற் குழு விலும், நூலாராய்ச்சிக் குழுவிலும் உறுப் பினராக இருந்து அருந்தொண்டு ஆற்றி ஞர்கள். கலா நிலையத்தில்தான் பண்டிதர் அவர்கள் முதலில் விரிவுரைகள் ஆற்றத் தொடங்கிஞர்கள். அவரின் முதல் விரிவுரை 'சின்னத்தம்பிப் புலவர்" என்னும் பொருள் பற்றியதாகும். பின்னர் "குசே லோபாக்கியானம் ", " வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை", "நாவலரும் தமி ழும் " என்பன பற்றி விரிவுரையாற்றி ஞர்கள்."
* கலா நிலையக் கூட்டங்களுக்குத் தாம் ஒழுங்காக வருவதுடன், ஆசிரிய கலாசாலை மாணவர்களையும் உடன் அழைத்து வருவார். நிலையத்தின் தமிழாக்க வேலையில் எனக்கு அவர் செய்த உதவியை நான் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்."
** பண்டிதர் அவர்கள் ஒரு சிறந்த
நண்பர். இனிமையாகவும் அன்பாகவும் BLDSI நண்பர்களுடன் நடந்துகொள் ளும் மனப்பான்மை பொருந்தியவர்.
அறிவுத் துறையில் ஈடுபட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் விருப்புடையவர். இலக் கியத் துறையிலும் வேறு கலைத்துறையிலும் புதிய கருத்துக்களை அறிய விரும்புபவர். வாழ்க்கையில் தாம் சாதிக்காத சமயஉண்மை களை மேடையில் நின்று பேசும் மனப் பான்மை அற்றவர்கள். சைவசித்தாந்த உண்மைகளைத் தாம் நன்கு கற்று அறியும் வரை அவற்றைப் பற்றி விரிவுரைகள் நிகழ்த்துவதைத் தவறெனக் கருதி வாழ்ந்த வர்கள். இக் காரணத்தால் அக்காலத்தில் சமய விரிவுரைகள் நிகழ்த்துவதற்கு மறுத் திருந்தார்கள்."
*புலவர் ஐயா" என்று பண்டித மணி அவர்கள் போற்றிய சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களின் நினைவு விழா கலாநிலையத்தில் 23-2-1933ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை வெகு விமரிசை யாகக் கொண்டாடப் பெற்றபோது, புலவர் அவர்களின் உருவப்படத்தைக் கலாநிதி

-
ஐசாக் தம்பையா அவர்கள் திறந்துவைத் தார்கள். அதனைத் தொடர்ந்து வைத் தீஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடேசபிள்ளே அவர் களின் தலைமையில் புலவர் அவர்களைப் பற்றிப் பண்டிதமணி அவர்கள் நீண்ட நேரம் டேசினுர்,
பண்டிதமணி அவர்கள் புலவர் அவர் களின் வாழ்க்கையையும், நூலாசிரியத் தகைமையையும், அவர்களின் மொழி பெயர்ப்புத் திறமைக்கான வடமொழி தென் மொழி அறிவையும், உரைகாணும் ஆற்றலை யும், கண்டனத் தீட்டும் வல்லமையையும் பற்றிப் பேசினர். புலவர் அவர்கள் பல நூல்களைப் பிழையறப் பரிசோதித்துப் பதிப் பித்த பெருமையையும், மாணுக்கர் பலர்க்கு எதனையும் மறைக்காது பாடஞ் சொன்ன பரோபகாரத் தன்மையையும், புலமையாள ருக்குப் பல்லாற்ருனும் பேருவகையோடு உபகரித்த வள்ளல் தன்மையையும், இலங்கை யிலும் இந்தியாவிலும் மகாவித்துவானுய் விளங்கியமையையும் விளக்கி இலக்கிய உரை விருந்து அளித்தார். சிலர் புலவர் அவர்கள் பழைய முறையிற் கல்வி கற்றவர் எனக் கூறியபோதிலும், அவர் சுருங்கக் கூறல் முத லிய அழகுகள் பொருந்த இயற்றிய இலக் கண சந்திரிகை, வினைப் பகுபத விளக்கம் என்னும் நூல்கள் அவரின் இருமொழிப் புலமையை ஒருங்கு காட்டுவதுடன் அவர் செய்த சொல்லாராய்ச்சி நெறியானது ஆங்கில மொழிவல்லார் இக்காலத்தில் செய்துவரும் ஆராய்வுகளின் மேலானது என்ருர், புலவர் அவர்களின் அருமை பெருமைகளைப்பற்றிப்பண்டிதமணிஅவர்கள் கலாநிலையத்தில் பல முறை பேசியுள்ளார்.
இவ்வாருகக் கலாநிலையத்தில் காலந்தோ றும் ஆறுமுகநாவலர், வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை. கைலாசபிள்ளை முதலானேரின் உருவப்படங்கள் திரைநீக்கம் செய்யப்பெற்றபோதெல்லாம் பண்டித மணி அவர்கள் அரிய ஆய்வுரைகளே அருமை யாக நிகழ்த்தினர்கள். வித்துவசிரோமணி அவர்களின் படத்தை அவருடைய மைத் துனர் கைலாசபிள்ளை அவர்களைக்கொண்டு

Page 101
கொடுப்பித்தவரும் பண்டிதமணி அவர்களே
பாவர்.
பண்டிதமணி அவர்களின் பேச்சைப் பெரிதும் நயந்த கலாநிலையத்தார், அவரைக் கொண்டு அடிக்கடி பேசுவித்துக் கேட்டு மகிழ்ந்தனர். பண்டிதமணி அவர்கள் பள்ளுப் பிரபந்தம் பேசுவதில் புதியதொரு பாணியைக் கையாண்டு பெரும் புகழ் பெற் றிருந்தார்.
அக்காலத்திலேதான் சைவாசிரிய கலா சாலையின் உப அதிபர் அளவெட்டியூர் பொன். கைலாசபதி அவர்கள் இந்து தருக்க சாத்திர வரலாறு, இந்து தருக்க சாத்திரக் கொள்கைகள் என்னும் தலைப்புக்களில் பேசிஞர்கள், அக்காலத்தில் வரலாற்றுட் பெரியார் எனப் பெயர்பெற்ற முதலியார் செ. இராசநாயகம் அவர்கள், யாழ்ப்பா னச் சரித்திரம் சம்பந்தமாகப் பேசிஞர் கள். முதலியார் இராசநாயகம் அவர்களின் வழியிலே தமிழ்ப்பணியாற்றப் பழகி வந்த வர்கள் முதலியார் குல. சபாநாதன் அவர் களும், மக்கள் கவிமணி வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் அவர்களுமாவர்.
இன்னும் தமிழ்த் தாதா சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் நூற்றண்டு விழா கலாநிலையத்திற் கோலாகலமாக நடை பெறுவதற்கும் பண்டிதமணி அவர்களின் உங்களிப்பும் பெருமளவில் உதவியது.
பண்டிதமணி அவர்களின் பங்களிப்புச் கலாநிலையத்திற் கலகலப்பாக இருந்தமைச் குக் காரணம் அவர் யாழ்ப்பாணப் புலவர் பெருமக்களைப்பற்றிக் காலவரையறையோடு அவரவர் தமிழ்ப்பணி புரிந்த வரலாற்றை நன்ருக அறிந்திருந்தமையேயாகும். பொன் னம்பலப் பெயர் பெற்றவர்கள், சின்னத் தம்பி எனப் பெயர் பெற்றவர்கள், குமார சுவாமி எனப் பெயர் பெற்றவர்கள், சரவண முத்து எனப் பெயர் பெற்றவர்கள் பலரை பும் தனித்தனியாக அவரவர் பங்களிப் பள வைக்கொண்டு நன்கறிந்திருந்தார்கள்.அபார நினைவாற்றல் வாய்ந்த பண்டிதமணி அவா கள் முற்காலத்துப் புலவர்கள் பலரின் நுணுக்கமான வாழ்க்கைச் சம்பவங்களையும்

52 -
அறிந்திருந்தமை அவர் பிற்காலத்தில் இலக் கியவழி செய்வதற்குப் பெரிதும் உதவியா யிருந்தது.
புலவர் ஐயா என இவர் போற்றிய சுன்னுகம் குமாரசுவாமிப்புலவர் அவர்களை யும், மானேச்சர் ஐயா என இவர் போற்றிய நல்லூர் கைலாசபிள்ளை அவர்களையும் காண்பதற்கு அக்காலத்தில் வந்து போன பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர்கள் என்றித் திறத்தோர் எல்லாரையும் பண்டிதமணி அவர்கள் நன்கறிந்திருந் தார்கள்.
பண்டிதமணி அவர்கள் தமிழ்ப் பெரி யார்கள் பலரை வரிசை நோக்கிப்பொதுமை தவிர்த்து அறிந்தவகையில் அறிந்துகொள் ளத் தெரியாத நூலாசிரியர்கள் சிலர் தமிழ்ப் பெரியார்களின் பெயர் ஒற்றுமை காரணமாக முரண்பட்ட முறையில் வரலாறு எழுதிக் குவித்துள்ளார்கள்.
இந்தவகையில் தப்பும் தவறுமாக வெளி வந்த தகவல்கள் பாரதூரமானவை. நாவல ரவர்களின் மாளுக்கராய ஆறுமுகத் தம் பிரான் என்பவர் பெரியபுராணத்துக்கு அரு மையான உரை எழுதியவர்; உறுதியான சைவப்பற்றுள்ளவர்.வேருெரு ஆறுமுகத்தம் பிரான் தமது பிற்காலத்தில் வாழ்வில் வசதி பெறுவதற்கு மதம் மாறிக்கொண்டவர். இருவர் தம் பெயரொற்றுமை காரணமாக வரலாற்றில் தப்பும் தவறும் இடம்பெற்றுள் ளன. இவ்வாறே மல்லாகம் விசுவநாத பிள்ளை என்பாருக்கும், சுதுமலை விசுவநாத பிள்ளை என்பாருக்கும் வித்தியாசங் காண முடியாதவர்கள் தப்பாக வரலாறு எழுதியுள் ளார்கள். இதே வரிசையில் சரவணமுத்துப் புலவர், குமாரசுவாமிப்புலவர் என வருபவர் கள் ஆள் மாறி எழுதப்பெற்றுள்ளனர்.
கலாநிலையத்தில் சிலவேளைகளில் கருத் தரங்குகள் காரசாரமாக நடைபெறுதலும் உண்டு. ஒரு நாள் பெரியவர் ஒருவர் தலைவியின் தோள் கரும்புபோன்று இனிப் பது என்னும் கருத்தைத் தெரிவித்தார். கேட்டுக்கொண்டிருந்த பண் டி த ம ணி, தலைவியின் தோள் இனிப்பதில்லை. தோளை விளக்குவதற்குக் கரும்பை உவமையாகக்

Page 102
- 5.
கொண்டது சாயல்பற்றியேயன்றி இனிமை பற்றியன்று. சாயலுக்கு எடுத்துக் காட்டிய மூங்கிலின் இனம் பற்றிக் கரும்பைக் கருத லாமே ஒளிய இனிப்புப் பற்றியன்று எனக் கூறியமை பெரியவருக்குக் கசப்பாயிருந்தது,
ஒரு சமயம் தலைவர் நடேசன் அவர்கள், தமிழ் தாதா சுவாமிநாத ஐயர் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருவார் என்ருெரு செய்தியை வெளியிட்டார். கேட்டுக் கொண்டிருந்த பண்டிதமணி அவர் வர மாட்டார் என்று கூறிஞர். தலைவர் அவர் வருவார் என்பதை அழுத்தமாகக் கூறிய போது, ' வறுவார் ' என்று தமிழ்நாட்டுப் பேச்சு வாக்கிற் கூறியதை மீண்டும் மறுத்த பண்டிதமணி, அவர் "வருர்" எனப் பதில் மொழிந்தார். இதனைக் கேட்டிருந்தார் எல்லோரும் இளநகை யரும்பியபோது, தலைவருக்குச் சிறிதளவு மனவருத்தம் உண் டாயதும் உண்டு. அதன்பின் பண்டித மணியை **விகடசக்கரக் கணபதி ' என நகைச்சுவையாகக் கூறியதும் உண்டு.
கலாநிலையம் செய்துவந்த கலையாக்கப் பணிகளில் ஒன்று அவர்கள் இரு மாதங் களுக்கொருமுறை ஞாயிறு என்னும் பெயரில் வெளியிட்ட சஞ்சிகையாகும். அது புத்தக வுருவில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், பாடல் கள், நாடகங்கள் அமைய வெளிவந்தது. இளவேனிற்கதிர், முதுவேனிற்கதிர், கார்க் கதிர், கூதிர்க்கதிர், முன்பணிக்கதிர், பின் பனிக்கதிர் என்னும் பெயர்களில் பருவ காலம் தோறும் அது மலர்ந்து தேன் பிலிற்றி வந்தது. அதன் பெருமையை நன் கறிந்த தமிழ்நாட்டாரும் அதனை வெகுவா கப் பாராட்டியுள்ளார்கள்.
சம்ஸ்கிருதமும், தமிழும், சிவபெ செய்யப்பட்ட இலக்கண நூல்களை தழுவப்பட்டமையாலும் தம்முள் சம

3 -
** மாமலி தமிழிற் பிறமொழி தம்மில்
வயங்குறு பற்பல பொருளும் தேமலி தரவே மாந்தர்நன் குணரச் செய்வதற் கியற்றமிழ் மடந்தை பாமலி வுறநன் னடஞ்செயு மீழப்
பைதிரந் தன்னிடைத் தோன்றும் ஏமலி புகழ்சேர் ஞாயிறு விளங்க விறைனை தடிபர வுதுமே.”*
au உ. வே. சுவாமிகாதஐயர்
கலாநிலையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுவிழா கோலாகலமாக நடைபெற்ற போது தலைமைதாங்க இங்கே வருகை புரிந் தவர், தமிழ்நாட்டு மகிபாலன்பட்டியூர்ப் பண்டிதமணி மகோபாத்தியாய கதிரேசஞ் செட்டியார் என்னும் பேராசிரியப் பெருந் தகையாளராவர். அவர் கலாநிலையத்தின் தொண்டினை வெகுவாக வியந்து பாராட்டிப் பேசியதோடு, உள்ளன்போடு பாடியும் வாழ்த்தியுள்ளார்.
GalsT. If
** காவியமுஞ் சிற்பக் கலையும் இயல்நூலும்
ஒவியமுமின்னிசையும் ஒள்ளுணர்வும்
- மேவித் திகழீழ நாட்டின் திலகமென லாமால் புகழுங் கலாநிலையப் பொற்பு’’
ஆசிரிய விருத்தம் *" வளமலி யீழ நாட்டிடைத் தோன்றி மதிவலி படைத்தநல் லறிஞர் உளமலி யுவகை பெறவுய ருணர்வா
மொளிதிகழ் ஞாயிறென் றுவந்து கொளமலி பருவக் கதிரைநன் கீன்று கோதிலாத் தமிழ்மொழி தழைப்பத் தளமலி யுலகோர்க் குதவுவா னுற்ற தகுகலா நிலையம்வா ழியவே."
உடைமையாலும், ஆன்ருேர்களாலே
நாேஞலும் இருடிகளாலும் அருளிச்
த்துவமுடையனவேயாம்.
- நாவலர்பெருமான்

Page 103
பண்டிதம பேராசிரியர் அ. ச மனுேன்மணி சண்
ஈழத்திலே இலக்கியவழி காண உதவி யவர் பண்டிதமணி. அவர் ஒரு இலக்கிய விளக்காக ஒளிவீசி நின்றவர், வழியைக் காட்டும் ஒளியின் குரல் ஒலிக்கிறது.
*"ஈழமண்டலம் தாய் நா டா கிய தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி. தமிழ் நாட்டின் இலக்கிய வளம் மகா சமுத் திரம். ஈழமண்டலத்திலக்கியவழி அந்த மகா சமுத்திரத்தில் சென்று சேராதா யின் நின்று வற்றிவிடும். ஆகையினுலே இரட்டையர், காளமேகம், புகழேந்தி என்று தொடங்கிச் சிவகாமி சரிதைக்கு வந்து, பின் மேலே எழுந்து கம்பரிலே சற்று நேரம் தரித்துத் திருவள்ளு வரை வணங்கி நல்வாழ்வு பெற்றுக் கற்றறிந்தாரேத்துங் கலியைத் தீண்டி முற்றுகின்றது ‘இலக்கியவழி எனப் பெயரிய இப் புத்தகம்."
இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னுரையாக ஒலித்த குரல் எழுத்து வடிவிலே இன்றும் நிலைத்துவிட்டது. எழுதி யவர் உடல் மறைந்த பின்னர் இன்று “பண்டிதமணியியல்" என, பரந்துவிட்டது. தினகரன் வழங்கிய பட்டம் "இயல்" என் னும் சிறப்பு அடைபெற்றுச் சிறக்கவேண்டும். தொல்காப்பியர் இலக்கணக்கூறுகளை விளக்க "இயல்" என்ற சிறப்பு அடையைச் சேர்த் தார். பண்டிதமணியின் சிறப்புக்களைப் பரந்த முறையிலே ஆராயவும் "பண்டிதமணியியல்? என்ற சிறப்புத் தொடர் பொருத்தமுற அமையும்.
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்டிதமணியின் சிறப்புத்துறைகள்.இவ்விரு துறைகளிலும் அவர் பெற்றிருந்த ஆற்றலை அறிய அவரியற்றிய நூல்களே சான்ருகும். கடந்த முப்பது ஆண்டுகளாக வெளிவந்த நூல்களைப் பற்றிய மதிப்பீடு, எதிர்காலத் தில் பண்டிதமணி பற்றிய ஆய்வு நிலையாக

னியியல்
ண்முகதாஸ் அவர்கள்
முகதாஸ் அவர்கள்
வளரும். அதுவே பண்டிதமணியியலாகவும் நிலைபெறும்; மகா சமுத்திரத்திலே சென்று சேரும். ஈழத்து இலக்கிய வழியைக் காண விரும்பும் எதிர்காலத் தலைமுறையினர் பண்டிதமணியின் ‘இலக்கியவழி" என்னும் நூலைப் படித்தாலே போதுமானது. தமிழ் இலக்கியம் என்ற மகா சமுத்திரத்திலே மரக்கலம் போல உதவுபவை பண்டிதமணி யின் இலக்கிய அறிமுகங்கள். குணமும் குறியும் சொல்லி இலக்கியங்களோடு குலாவி மகிழ வழி செய்தவர் பண்டிதமணி, தான் சுவைத்த இலக்கிய இன்பத்தை மற்றவரும் சென்று சுவைத்து இன்புற வைப்பவர். நல்ல ஆற்றுப்படை இலக்கியம்போல வாழ்ந்தவர். பண்டிதர்கள் பலரை உருவாக்கிப் பரிசில ராக்கி, வரிசைகள் காண உதவியவர். திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலை யிலே பரிசில் பெற்ற கவிஞன்போல மகிழ் வுடன் இலக்கியம் கற்பித்தவர். அவர் இலக்கிய நெஞ்சம் எல்லோரையும் இணைக் கும் இனிய பாலம்.
நாவலர் ஈழத்தின் பாதுகாவலர் எனப் புகழ்பெற்ருர், பண்டிதமணியோ இலக் கியப் பாதுகாவலராய் வாழ்ந்தார். குறிப் பாக ஈழத்து இலக்கியம் பற்றிய சிந்தனை யோடு பண்டிதமணி இருந்தமையால் ஈழ நாட்டுப் புலவர்களைப் பற்றித் தனியான கவ னத்துடன் இருந்தார். ஈழமண்டலத்தின் அறிவுக் கண்களை , தவப்புதல்வர்களை எல் லோரும் அறியப் பணிசெய்தவர். தமிழ் கற்பவர்கள் ஈழமண்டலத்தில் வாழ்ந்த புலவர்களைப் பற்றியும் கருத்திலே கொள்ள வேண்டும் என்ற குறிக்கோள் பண்டிதமணி யிடம் பரந்திருந்தது. வடதேசத்து வித்து வான் ஒருவர் கேட்ட வெண்பா ஈழத்துக் கவிதைச் சிறப்புக்குச் சான்ருவதைப் பண்டிதமணி தமது இலக்கியவழி என்னும் நூலிலே எடுத்து விளக்கியுள்ளார்.

Page 104
- 5
* பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந்
தாதிறைக்கும் நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் -
மின்பிரபை வீசுபுகழ் நல்லூரான் வில்லவரா யன்கணக வாசலிடைக் கொன்றை மரம்.”*
சின்னத்தம்பிப்புலவர் சிறுபராயமாயிருந்த போது பாடிய பாடல் இது. ‘முதலியார் வீடு யாதோ?" என்ற கேள்விக்கு இறுத்த விடை. வீட்டினைக் குறிப்பாக அறியக் கொன்றை மரத்தைக் குறியாகச் சொன்ன கவிதா நயம் பண்பாட்டின் அடித்தளம். பண்டிதமணியியல் காட்டும் பண்பாட்டு ஆய்வுக்களம்.
ஈழத்து இலக்கியம் பற்றி ஆய்வுசெய்ய விரும்புவோர் நாவலர்வழி ஒன்று இருப் பதை உணரச் செய்தவர் பண்டிதமணி. நாவலர் ஈழத்தமிழர் வாழ்க்கைப் போக்கினை வழிப்படுத்தியவர். சி. வை. தாமோதரம் பிள்ளை பழந் தமிழ் நூல்களை வாழச் செய் தவர். நாவலர் நூற்பதிப்பு முயற்சி தமிழ் நூற் பேணலுக்கு முன்னேடியாக அமைந் தது. தமிழ் தந்த தாமோதரம்பிள்ளையின் தமிழ்ப்பணிக்கும் ஊக்கம் தந்தது. மேனுட்டுக் கல்வியால் தான் பெற்ற பதிப்புத்துறை பற்றிய அறிவினைத் தமிழ்நூற் பேணலுக்குப் பயன்படுத்தி, தமிழ் நூல்களைப் பதிப்பித் தார் தாமோதரம்பிள்ளை. சமய நிலையால் மக்கள் தமிழை மறந்து செல்வதை நாவலர் மாற்றினர். கிறிஸ்தவ சமயப் பரம்பலால் தமிழர் பண்பாட்டு நடை முறைகளிலே விரைவான மாற்றங்கள் புகுந்த காலம் அது. வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் அடித்துச் செல்லும்நிலை. நாவலர் நல்ல அணை போட்டதால் ஈழத் தமிழர் பண்பாடு பாதுகாக்கப்பட்டது. சைவ சமயமும் பாதுகாக்கப்பட்டது. கல்வி நலம் காரணமாக கிறிஸ்தவ சமயியாக இருந்த சி.வை.தாமோதரம்பிள்ளை வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஈழத்துச் சைவத் தமிழராகவே மடிந்தார். இதனுல் நாவலரும் சி. வை. தாமோதரம்பிள்ளையும் பண்டிதமணியின் சிந்தனைக் கருவூலமாக நிறைந்துவிட்டனர். ஈழமண்டலத்து இலக்கிய வெள்ளமும் வற்றிவிடாது வளர்ந்து சென்றது.

سسہ 5
யாழ்ப்பாணத்துச் சமயம் பற்றி அறிய விரும்புவோர் பண்டிதமணியின் ஆக்கங் களைப் படித்தேயாகவேண்டும். கந்தபுராண கலாசாரம், சைவ நற்சிந்தனைகள், கந்த புராண போதனை, சமயக் கட்டுரைகள், கோயில், கந்த புராணம் தகடிகாண்ட உரை, நாவலரும் கோயிலும் போன்ற பண்டித மணியின் நூல்கள் விரிவான தகவல் களஞ்சி யங்கள். கந்தபுராண கலாசாரம் யாழ்ப் பாணத்திற்கே உரியது என்று கருதுமள விற்கு, அதனை அறிமுகஞ் செய்தவர்களில் சிறப்பு நிலை பெறுபவர் பண்டிதமணியே. அவர் எழுத்துக்கள் இதனை இன்று கூறு கின்றன.
** முந்தொரு காலத்தில் மூவுலகந் தன்னில் வந்திடும் உயிர்செய்த வல்வினை அதனுலே அந்தமில் மறையெல்லாம் அடிதலை தடுமாறிச் சிந்திட முனிவோருந்தேவரும் மருளுற்றர்"
கந்தபுராணம் கூறுகின்ற இந்த அடிகளை நினைவிலே யாழ்ப்பாண மக்கள் வைத்து வாழ்ந்த நிலை அன்று. அதனல் கந்தபுரr ணம் கலாசாரமாக மக்களிடையே மன்னி யது. அந்தக் கலாசாரம் அருஞ் சந்தர்ப்பத் திலே நாவலரைத் தந்தது. அதுவே நாவலர் முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத் தது. பெண்கள் கூடக் கந்தபுராணத்தை அறிந்து வாழ்வு நெறியிலே இணைத்திருந் தனர். கோயில்களிலே புராண படனமாகப் பலரும் அறிந்திருந்த கந்தபுராணம் தமிழ் நாட்டின் இலக்கிய வளமாகும். அதனை ஈழத்து இனக்கிய வழியுடன் மட்டுமன்றி வாழ்க்கை வழியிலும் இணைக்கப் பண்டித மணியியல் பயன் செய்யும். ஒரு காலத்தின் குரலாக அன்றி, ஊழிக்காலம்வரை உறு துணையாகக் கந்தபுராணம் இருப்பதையும் அதுவே உணர்த்தும்.
சிதம்பர மான்மியத்தையும், கோயிற் புராணத்தையும் அடியொற்றி நாவலர் வசனங்களை அப்படியே பிரயோ கித்து கோயில் என்ற நூலை எழுதியதாகக் கூறு கின்ருர் பண்டிதமணி. கோயிலின் தேவை பற்றிக்குதர்க்கம் செய்யும் காலத்தில் மிகவும் தேவையான நூல் அது. ஈழமண்டலத் திற்கும் சிதம் பரத லத்திற்கும் உள்ள

Page 105
- 5
தொடர்பு நிலை ஒரு கால வரலாற்றினையே தெளிவுபடுத்தும். கலாசாரப் பரம்பலும் பேனலும் அவசியமானதையும் வலியுறுத் தும்.நாவலர் குரல் கோயிலோடு இணைந்து ஒலி ஜமைக்கும் காரணம் சொல்லும். பழந் தமிழ் நூல்களிலே கோயில் வரலாறு பதிவு செய்யவேண்டிய தேவையையும் இதுவே விளக்கும். ச ரீ ரத்தின் பயன்பாட்டை நாவலர் சொன்னுர், பண்டிதமணி மேலும் விளக்கிக் கூறுகிருர்,
* புண்ணியந் தெரிந்தவர்கள் அத னைச் செய்யக்கடவர்கள். அதனை விரும்புகிறவர் வலிந்து வந்து சேரு வார்கள். புண்ணியஞ் செய்யும் கட்டம் சேர்க்கப்படுவதில்லை. விண்ணப்பஞ் செய்து சேருவது, சேர்க்கத் தொடங்கி ஞல், ஒரு குடம் பாலை ஒரு துளி மதுக் கெடுத்தேவிடும்."
பண்டிதமணியியல் கம்பராமாயணக் காட்சிகளையும், மகாபாரத நினைவுகளையும் தன்னகத்தே அடக்கியது. " பாரத நவ மணிகள் • வானெலிப் பேச்சுகள். “கம்ப ராமாயணக் காட்சிகள் " தினகரன் வார மஞ்சரிக் கட்டுரைகள். இரு பெரும் இலக்கி யங்களைப் பேச்சாலும், எழுத்தாலும் விளக்கி எம்மைத் தேடிக் கற்க வைக்கும் தன்மை, நாம் பெற்ற பெரும் பேறு. மகா பாரதத் தையும் வில்லி பாரதத்தையும் இனம் பிரித்துக் காட்டும் இலக்கிய ஒப்பீட்டுநிலை பண்டிதமணியின் தனித்துவம். கம்பராமா யணக் காட்சிகளைக் காட்டி வால்மீகி ராமா யணத்துடன் ஒப்பிட ஆசையை ஏற்படுத்தும் தன்மை ஆசிரியர்க்கே உரித்தானது. கம்பரின் இலக்கிய ஆற்றலும் காலத்தின் தேவைக்குப் பொருத்தமுறப் பயன்பட் டதை நுணுக்கமாகக் காட்டும் திறன், * இலக்கிய விமர்சனம் " என்ற ஆளுமையின் தோற்றப்பாடு.
** இராமன் வில்லை வளைக்க எழுந்து நடந்தது, சீதை கைவளை திருத்துபு கடைக்கணப் பயன்படுத்தியது, எந்த இராமாயணத்திலும் காண முடி
யாதவை.’

سسسسسه 6
இது ஒன்று பண்டிதமணியின் ஆழமான இலக்கிய ஒப்பீட்டு நோக்கின் வெளிப்பாடு. ஒப்பீட்டாய்வு நெறியிலே தூரநடைபோட எண்ணுபவர்க்கும் ஒரு திறவுகோல்.
‘அன்பினைந்திணை ஆழமான இலக் கியப் பார்வை; நுணுகிப் பார்த்து ஒப்பிட்ட கருத்துகளின் தொகுப்பு: தமிழிலக்கியத்தின் பெருஞ் சிறப்பை இறையனர் களவிய லுரையின் முதற் சூத்திர முதல் தொட ரால் மகுடம் போட்டுக் காட்டியிருப்பது: எழுத்து நடையும் சொற் சிறப்பும் அதனை மேலும் துலக்கியுள்ளன. 'அத்வைத சிந்தனை" பண்டிதமணியின் இறுதிக் காலத்தில் வெளி வந்த நூல். மனித சிந்தனையின் போக்கை, காலத்தின் சுழற்சி வளர்த்துச் செல்வதைக் காட்டுகிறது. ' அத்வைத சிந்தனை ‘ வெளி வந்தவுடன் பண்டிதமணியும் அமரராகி விட்டார். வானெலியிலே அத்வைத முளை மெல்ல மெல்ல வளர்ந்தது. இறுதிக் காலத் திலே நூலாகியது. முன்னுரையிலே ‘கண் ணுள்ளவர்கள் கண்டவைகளை ஊனக் கண் ணுற் காண முயன்றதே “அத்வைத சிந்தனை" என விநயமாய்க் கூறும் வார்த்தைகள் பண்டிதமணியின் பண்பாடாய்ப் பரவும் என்பதில் ஐயமில்லை. தன்னைத் தாழ்த்திக் கொள்பவர் எப்போதுமே உயர்வடைவர்.
பண்டிதமணியின் ஆற்றல்களைப் பயன் படுத்த முன்வருபவர்களே பண்டிதமணியின் தெய்வ தரிசனத்தைக் காணமுடியும். * பண்டிதமணியியல் ? என்ற பரப்பிலே அடங்கி நிற்கும் விடயங்கள் எல்லைப்படுத் தப்பட முடியாதவை. ஈழத்து இலக்கிய வழியிலே பேராறு ஒன்று ஓடத் தொடங்கி விட்டது. அந்தப் பேராறு வற்ருத நீர்வளம் கொண்டது. ஆற்று நீரும், மழை நீரும், ஊற்று நீரும் எனப் பல்வேறு நீர்வளம் பெற்றுப் பூமி சிறக்கும். மனித வாழ்வு வளம்பெறும். அதேபோலப் பண்டிதமணி ய்ன் ஆற்றல்கள் பலவாகப் பரந்துகிடக் கின்றன. அவற்றை ஒன்று சேர்த்து நோக்கும் போது வசதியான மகுடப் பெயராகப் பண்டிதமணியியல் அமைகிறது. விஞ்ஞான நோக்கிலே எதையும் நோக்கும் காலம்

Page 106
பண்டிதமணி- ஒரு ஒறேற்றர் சி. சுப்பிரப
அமரர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களை அன்றும் இன்றும் பலரும் பல விதமாகப் பாராட்டி மகிழ்வது வழக்கம். அவரைச் செந்தமிழ்க் கடல் என்பர் சிலர். சித்தாந்த சாகரம் என்பர் இன்னும் சிலர். அறிவுக் களஞ்சியம் என்பர் வேறு சிலர். நடமாடும் பல்கலைக் கழகம் என்பர் வேருெரு சிலர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு பல்கலைக்கழகம் அவருக்கு கலா நிதிப் பட்டமளித்துக் கெளரவித்தமை அவரது கலாவிற்பன்னத்துக்கு ஒரு சிறந்த உரைகல்லாகும்.
பண்டிதமணி அவர்கள் கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் மட்டும் வாழ்ந்த தில்லை. அவர் தமது எழுத்து, பேச்சு, மூச்சு, வாழ்வு அனைத்தின் மூலம் தமது காலச் சந்ததி மீது மாபெரும் செல்வாக்கு வகித்த ஒரு சகாப்த புருஷராவர். பல்லாயிரக் கணக்கா ஞேரைப் பண்டிதர்களாகவும் ஆசிரியர்களாக வும் பயிற்றி, அவர்களை இலட்சிய வேகத் துடன் செயற்பட்டு, இந்த மாநிலம் பயன் பெற வாழும் ஒரு பரம்பரையாகவே உரு மாற்றிவிட்டார் அவர்.
பலதுறை விற் பன்னரான பண்டித மணியின் பேச்சில் சொற்சுவையும் பொருட் சுவையும் மலிந்து காணப்படும். கேட்டார் அனைவருக்கும் கிளுகிளுப்பு ஊட்டும் நகைச் சுவையும் இடையிடையே நடமாடிவரும்.
(56ஆம் பக்கத் தொடர்ச்சி)
பண்டிதமணியையும் தனித்துத் தள்ளி விடாது; சேர்த்தே வடம்பிடித்து நிற்கும். ஈழத்து இலக்கியத் தேர் அப்போது எழி லுடன் அசைந்து செல்லும்,
பல்கலைக் கழகம் தேடிப் பட்டம் கொடுத்த சிறப்பு பண்டிதமணியின் தனிச் சிறப்பு. ஈழத்திலே பல்கலைக் கழகம் செல் லாத பல்லாற்றல் படைத்தோரை, இனங் காணவும் பண்டிதமணியின் சிறப்புக்கள் நல்ல அளவு கோல்கள். மட்டுவில் கிராமம் அவர் தோற்றத்தால் பெருமை பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவர் ஆற்றல் களால் புகழ் பெற்றது; திருநெல்வேலி சிறப்புற்றது. ஒரு ஊரிலே பிறந்து இன் ணுெரு ஊரிலே வாழ்ந்து எல்லா ஊர்க ளுமே சிறப்புப் பெறத் தொண்டு செய்து பயன்பெற வாழ்ந்த பண்டிதமணி ஈழத்தின் இலக்கிய விளக்கு அதிலும் குத்துவிளக்கு. ஏழு திரியிட்டு எங்கும் ஒளிகாலும் அணையா
8

ந சகாப்த புருஷர்
Dofujib -9f5
இலக்கியங்கள், இதிகாசங்கள், வாழ்வு ஆகிய வற்றில் காணும் அரிய நிகழ்ச்சிகளை எல்லாம் நகைச்சுவையோடு மாணவர்களுக்குப் போதிப்பது அவருக்கே தனிக்கலை.
அவருடைய பேச்சுக்களை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பொழுதெல்லாம், ஆங்கிலத்தையும் லத்தின் மொழியையும் கற்றுக் காலம் கழிக்காமல், தமிழ் இ லக்கியங்களைக் கற்றிருந்தால் பண்டிதமணி அவர்களைப் போல், எத்தனை மேற்கோள்களை எடுத்துக் காட்டி, எனது மாணவர்களை இன்புறச் செய்திருப்பேன் என்று அடிக்கடி எண்ணு வது உண்டு. இவரிடம் கற்றவர்கள் பாக்கிய சாலிகள். இவ்வாறு எமது சமுதாயத்தில் பல்லாயிரக் கணக்கானேர் மீது பாரிய செல் வாக்கு வகித்த ஒரு சகாப்த புருஷர் பண் டிதமணி. அவர்களின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப் பாகும். அன்னர் உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் நம்மை விட்டுப் பிரிய மாட் டார் என்பது எனது உறுதியான நம்பிக்கை,
பொதியமலைப் பிறந்ததமிழ் வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில் துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே.
- பாரதியார்
விளக்கு. அந்த விளக்கின் ஒளியிலே இலக் கியவழி தெளிவாய்த் தெரிகிறது. குருடரும் தட்டுப்படாமல் சென்று இலக்கை அடைய ουπιb.
பண்டிதமணியியல் எல்லோரும் பயன் பெற உதவும் பொது நிதி. நேர்மையும் உறுதியும் உள்ள நெஞ்சங்கள் அந்த நிதியால் உலகு பயன்படப் பல பணிகள் செய்யலாம், பாரத நவமணிகளாய்ப் பொலியலாம். இந்த இலக்கிய வழியிலே செல்ல நினைப் போர்க்கும் சொல்லிவைத்த செய்தி உண்டு.
* காணுகிற கேட்கிற பொருள்களை அப்படியே நம்பிவிடக்கூடாது. அதே சமயத்தில் அவற்றைத் தள்ளி விடவுங் கூடாது. கண்ட கேட்ட அப் பொருள் களை வைத்துக்கொண்டு அவை அவ் வாறு இருத்தற்கு மூலகாரணம் என்ன என்பது ஆராயப்பட வேண்டும்."

Page 107
பண்டிதமணிஐயா ஆ
பண்டித வித்துவான் க.
Jண்டிதமணி ஐயா அவர்கள் பரம பதம் அடைந்துவிட்டார். சைவத்திற்கும், தமிழ் மொழிக்கும் பாதுகாவலராய், வழி காட்டியாய், முன்னுேடியாய் தம் வாழ்நாள் எல்லாம் எம்மிடையே வாழ்ந்து, ஒளி வீசிய கலைமணி அகன்றுவிட்டது. சைவத் தமிழ் மக்களுக்கு மாத்திரமேயன்றித் தமிழ்மொழி பேசும் எல்லா மக்களுக்கும் இது பேரிழப் பாகும்.
நாவலர் பெருமான் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி சைவத்தையும், தமிழையும் மேடைப் பிரசங்கங்கள் வாயி லாகவும், கலாசாலையிலும் பிறவிடங்களி லும் கல்விப் போதனைகள் மூலமாகவும். பத்திரிகைகள் வழியாகவும், நூல்கள் வடி வாகவும் வளர்த்துப் பாதுகாக்க அவர் ஆயுள் முழுவதும் செய்துகொண்டிருந்த திருத் தொண்டுகள் உலகப் பிரசித்தமானவை. எனினும், அவரால் இன்னும் சைவத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஆகவேண்டியிருந்த அவர் தொண்டுகள் முழுவதும், அவர் காலத் திலேயே நூல் வடிவில் வெளிவராமை, ஒரு பெருங் குறைவு என்றே சொல்லவேண்டும்.
கல்விச் சுவையை எடுத்துக் காட்ட லில், வித்துவசிரோன்மணி பொன்னம்பல பிள்ளை அவர்களுக்கும், வாதஞ் செய்து உண்மையை நிலைநாட்டலில், நாவலர் பெரு மான், சபாபதி நாவலர், மாயாவாத தும்ச கோளரி கதிரைவேற்பிள்ளை அவர்களுக்கும், உரைநடை எழுதுவதில், பரிமேலழகர், சிவஞான முனிவர் அவர்களுக்கும் இணையாக அவர் விளங்கினர்.
தமிழ்மொழி நூல்களையும், பிற பாஷை நூல்களையும், செய்யுள்களையும், நூலில் வரும் கதாபாத்திரங்களின் செயல் களையும் ஒப்புநோக்கி, நல்லதுகாட்டி விளக் கும் விமர்சனத் திறமையில், பண்டிதமணி ஐயாவுக்கு நிகரானவர் அவரேயாவர்.

அவர்கள் ஞாபகத்தில்
கிருஷ்ணபிள்ளை அவர்கள்
எவர்க்கும் புலனுகாமல், கிடந்து தடுமாறும் விஷயங்களையும் இலகுவில், இனி தாக எடுத்துரைத்துப் புலப்படுத்த வல்லவர் அவர். அவருடைய ஆராய்ச்சியின் ஆற்றல் களைச்-சிந்தனைகளை, அவர் எழுதிய சிந்த னைக் களஞ்சியமே எடுத்துக்காட்டும். கந்த புராண கலாசாரம், கந்தபுராண போதனை, கந்தபுராண தட்சகாண்ட உரை என்பன கந்தபுராணக் காவியக்கடலில் அவர் முழுகி, நுழைந்த பெருவள்ளல் என்பதைப் புலப் படுத்தும். கம்பராமாயணக் காட்சிகள் முழு வதையும் எடுத்துக்காட்டும் திறமை அவரிட மிருந்தும், அவற்றிற் காட்டி வெளியிட்ட சிறு பாகமே அவரது கம்பராமாயணசாகரத் தின் கரை கண்டவர் என்பதை நிரூபிக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எழுதி வெளியிட்ட அன்பினைந் திணை, அத்வைத சிந்தனை, சமயக் கட்டுரைகள் என்னும் நூல்கள், சைவசமயத்தின் உண்மை களை எடுத்துக்காட்டுதலில், அவர் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், தர்க்கம், மீமாம்சை நூல்களையும், சமயக் கொள்கை களையும் எவ்வளவு நுட்பமாக ஆராய்ந்தார் என்பதை எவர்க்கும் தெளிவுறுத்தும்.
அவர் திறமைகளைத் தொண்டுகளை எல்லாம் எழுத வல்லவர் யார்? பலவும் எழுதிச் சொல்லிப் பயன் இப்போது என்ன? பண்டிதமணிக்கு நிகரான கலாமேதை அவர் என்றே சுருக்கிக் கூறிவிடுவோம். அவர் கல்வி அறிவுகள் ஊருணியாய் கற்ருர், கல்லார் எல்லார்க்கும் பயன் தந்தமைக்கு என்றும் நன்றிகூறி, கடப்பாட்டை நினைவு கூர்வோமாக.
அவர் பூதவுடம்பு டோனலும், புக ழுடம்பு நிலைத்தேநிற்கும். என்றினிமேல் அவரைக் காண்போம்! அவர் பணியைத் தொடர்ந்து செய்ய இனி யார் உளரோ?

Page 108
பண்டிதமணியும் :
அச்சுவேலி, மு. வைத்
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதராவதற்கு முன்னரே தொடக்கம் அவருடன் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பரமேஸ்வராக் கல்லூரியின் ஆரம்ப கால மாணவர்களுள் ஒருவன் யான். அப்பொழுது தான். அதாவது ஆயிரத்துத் தொளாயிரத்து இருபதுகளின் ஆரம்பத்திலேதான் தெற்குத் திருநெல்வேலியிலே பிரசித்தி பெற்ற ஈரப் பலாச் சங்கம் இருந்தது. யான் சிறியவனுய் இருந்தாலும் அச் சங்கத்தில் ஒருவனுய், சங்க அங்கத்தவர் ஒவ்வொருவருடனும் நெருங்கிப் பழகும் பேறு பெற்றேன்.1927இல் மட்டுவில் சி. கணபதிப்பிள்ளை அவர்கள் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை ஆயினர். அவர் பழைய மரபில் தமிழை விசேடமாகக் கற்றிருந்தார். ஆசிரிய கலாசாலைப் பிரவேசத் திற்குக் கணிதம் முதலிய ஏனைய பாடங்கள் அவருக்குத் தேவைப்பட்டன. அவருடைய உறவினரும் நண்பருமான திரு. கு. சிவப் பிரகாசம் அவர்களின் கட்டளைப்படி கணிதம் முதலிய பிறபாடங்களை அவருக்குச் சொல்லிக் கொடுக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்பொழுதுதான் அவருடைய நுண்மாண் நுழைபுலத்தையும் கல்வியில் அவருக்கிருந்த ஆராமையையும் அறிந்தேன். ஈரப்பலாச் சங்க அங்கத்தவர்களுள் இன்று எஞ்சியிருப் பவர் நான் ஒருவனே என்றபடியால் அவரைப் பற்றிச் சில வசனங்களைக் கூறுவது ஏற்புடையதேயாகும்.
பண்டிதருடனும் அவருடைய பெரு மதிப்பிற்குரிய திருவாளர் பொ. கைலாசபதி அவர்களுடனும் ஈரப்பலாச் சங்கத்திலே ஆரம்பித்த தொடர்பு வாணுள் முழுவதும் நீடித்தது. எனது வாழ்க்கையிலே செம் பாகம் திருநெல்வேலியிலேயே கழிந்தது. இவர்கள் இருவரினதும் தொடர்பு எனக்கு வாய்த்திராவிட்டால் நான் ஒரு வெறும்

Fமயப் பிரசாரமும்
தியலிங்கம் அவர்கள்
மார்க்சிசவாதியாகவே வாழ்ந்திருப்பேன். பண்டிதரின் காவிய பாடசாலைக்கு திரு. என். எம். பெரேரா போன்ற இடதுசாரித் தலைவர்களை அழைத்து வந்து பிரசாரம் செய்கிற அளவுக்கு நான் ஒரு முற்போக் காளினுயிருந்தேன். ஆயினும் திரு. பொ. கைலாசபதி அவர்களின் தாக்கம் என்னை ஒரு சமய வாதியாக்கியது எனக் கூறுவது சாலவும் பொருந்தும். நான் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியணுயிருந்தேன். அதனல் கிறிஸ்தவ சங்கங்களின் பிரசாரத் திறமை களையும் சூழ்ச்சிகளையும் நன்முயறிந்து கொண்டேன். இடதுசாரித் தொடர்பு பிரசாரத்தின் வலிமையை எனக்கு நன்கு உணர்த்திற்று. இந்த இரு தாக்கங்களும் சைவ சமயப் பிரசாரம் செய்து சைவத்தைப் புனருத்தாரணம் செய்யவேண்டும் என்ற ஆவேசத்தை எனக்கு உண்டாக்கி விட்டன. அதற்கு வேண்டிய தகுதியுடையவர்களின் தொடர்பு எனக்கிருக்கிறதென நான் உணர்ந்தேன்.
சைவ சமயப் பிரசாரத்திற்கென்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த நாவல ருடைய தர்மத்திற் படித்து வளர்ந்தவர் பண்டிதரவர்கள். நாவலரைப்போல அவரும் சைவசமயப் பிரசாரகராகவே வாழவேண்டும் என்பது எனது முடிந்த முடிபு. அப்படி எண்ணம் பண்டிதருக்கிருக்கவில்லை. அதனல் இருவருக்கும் எப்பொழுதும் வாதப் பிரதி வாதங்கள் நடந்துகொண்டே யிருக்கும். ** நாவலருடைய தர்மத்தில் வளர்ந்த நீங்கள், நாவலருடைய விருப்பப்படி சமயப் lity-IT prih செய்யாமலிருப்பது பெரிய துரோகம் " என்று நட்புரிமையோடு இடித் துரைப்பேன். எனது கரைச்சல் தாங்க முடியாமல் பண்டிதர் உப அதிபரைக் காட்டுவார். “ அவருடன் பேசித் தீரும் ? என்பார். " உங்கள் நிலை உப அதிபருடைய நிலை அன்று. அவருக்கு அது கடமையும் அன்று " என்பேன்.

Page 109
இச் சந்தர்ப்பத்தில் உப அதிபர் என்று பண்டிதரவர்கள் குறிப்பிடும் திருவாளர் பொ. கைலாசபதி அவர்களைப் பற்றியும் சொல்லவேண்டியது அவசியமாகிறது. அவர் பேசா மடந்தை மெளனி என்பது பொது வான அபிப்பிராயம். ஆனல் அறியவேணும் என்ற ஆவலோடு கேள்வி கேட்பவர்களுக்கு அவரைப்போல விளக்கமளித்தவர்களை நான் காணவில்லை. 1935ஆம் ஆண்டென நினைக் கிறேன். சைவாசிரிய கலாசாலை வளவிலே பண்டிதரும், அவரும் வாழ்ந்து வந்த குடிசையிலே அவருடன் கதைத்துக் கொண் டிருந்தேன். அப்பொழுது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். * விவேகானந்தர், காந்தி, இராமக்கிருஷ்ணர் ஆகிய மூவருள் ளும் பெரியவர் யார், என்பது எனது விஞ. ஒருவித தயக்கமுமின்றி அவர் சொன்னர், இராமக்கிருஷ்ணரிலும் விவேகானந்தர் பெரியவர், விவேகானந்தரிலும் பார்க்கக் காந்தி பெரியவர் என்று கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, "இவர்கள் எல்லோரிலும் பார்க்க மிகப் பெரியவர் நாவலர். அதை இந்தச் சந்தர்ப்பத்திலே சொல்லாமல் விடுவது பிழையாகும், என்று சொன்னர். பிற்காலத்திலே புத்தி விருத்தியில் ஒவ் வொருவருடைய நிலையையும் படம்போட்டுக் காட்டியபொழுது இக் கருத்தை மேலும் தெளிவுபடுத்தினர்.
நாவலரிலே இவ்வளவு மதிப்பு வைத் திருந்தபடியால் அவரைச் சமயப் பிரசாரத் திற்குத் திருப்புவது சுலபம் என்றெண்ணி அவரோடு தர்க்கித்தேன். " உங்களைப்போல அறிவாளிகளல்லோ சமயப் பிரசாரம் செய்ய வேணும். சைவ சமயம் பலவழிகளாலும் தாக்கப்பட்டு அழிந்துகொண்டுபோகிறதே ? என்பேன். * சமயப் பிரசாரம் செய்ய வேணும் என்ற உந்துதல்-தூண்டுதல் உமக் கிருக்கிறது. அது பிழையல்ல. எனக்கும் சமயம் பற்றி ஏதாவது தெரியும் என்று நீர் நினைத்தால் வந்து நன்ருகக் கதைக்க லாம். கதைக்கிற விஷயங்களை நீர் பிரசாரம் செய்யலாம். பிரசாரம் செய்யவேணும் என்று எனக்கும் ஒரு தூண்டுதல் வந்தால் நானும் செய்கிறேன்" என்பது அவருடைய

60 -
விடை. "நாவலர், திருஞானசம்பந்தர் போன்றவர்களும் சமயப் பிரசாரம் செய் திருக்கிருர்கள்தானே. நீங்கள் ஏன் செய்யக் கூடாது" என்பது எனது வாதம். அவ ருடைய விளக்கம். "ஒவ்வொருவருடைய செயலையும் அவரவருடைய நிலையில் வைத்துப் பார்த்தல் வேண்டும். வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறைவிளங்க அவதரித்தவர் சம்பந்தர். பரசமய விருள் நீங்கிச் சைவ ஒளி பிரகாசிக்கவேணும் என்று விரும்பினர். அந்த விருப்பம் திரு வருளுக்கும் சம்மதமானுல் நடக்கட்டும் என்றுதான் ' சமணரை வாதில் வென்றழிக் கத் திருவுள்ளமே ' என்று திருவாலவாய் அரனுடைய அநுமதியை வேண்டி நின்ருர், அவர் தன் முனைப்பால் செய்யவில்லை. நாவலருக்கு மிஷனரிகளின் தாக்கம். அதனல் சமயப் பிரசாரம் செய்யவேணுமென்று யோசிக்கவில்லை. தன் முனைப்பிலே செய் தார்; தனது பற்றைச் சாதித்தார். அப்படி வேகம் இருக்கிறவர்கள் செய்யத் தான் வேணும்'.
இந்த விளக்கமொன்றும் என்னுடைய ஆவேசத்தைத் தணிக்கவில்லை. பண்டித ரைத் தூண்டிக்கொண்டே யிருந்தேன். அதன் பெறுபேறுதான் பண்டிதரையாவின் சமயப் பணிகள் என்று கூறின் மிகையா காது. உப அதிபரவர்களுக்கும் எனக்கு மிடையில் நின்று பண்டிதர் சங்கடப்பட் டார். அவர்தானே அவருக்கு இலட்சியம். அவர் செய்யாத தொன்றைச் செய்ய எப்படித் துணிவார் ! சமயப் பிரசாரம் செய்யத் துணிவு வருமா! ஆணுல் எனக்கும் மறுமொழி சொல்ல முடியவில்லை. அதன லேயே ஆரம்பத்தில் தமிழிலக்கியத்தோடும் இலக்கணத்தோடும் காலம்போக்கிய பண்டித ரவர்கள் பின்னர், சமயப் பிரசாரகர் என்ற பெயரில் தொழிற்படாவிட்டாலும் தன்னலியன்றதைச் செய்தார். வீட்டிலே சைவசித்தாந்த வகுப்புகள் நடாத்தினர்; சமயக் கட்டுரைகள் எழுதினர்; நூல்கள் எழுதினர்; சமய சம்பந்தமான பிரசங்கங்களும் செய்தார்.

Page 110
பண்டி:
母院。
நீண்ட நெடுநாட்களின் பின், அண் மையிலே, புனித தரிசனம் ஒன்று சித்தித்தது. அதுவும் என் தவப்பேறுதான்.
அன்றைய சைவாசிரிய கலாசாலையிலே, அதனை அடுத்திருந்த காவிய பாடசாலையிலே நன்கு புடமிட்ட, எழுபதைத் தொட்டுநிற்கும் நல்லதொரு பழுத்த பழம் அவர். (" "ஊரைச் சொன்னலும் பேரைச் சொல்லக் கூடாது', ஊர் : திருநெல்வேலி ; பேர் : . ) அவர் தரிசன விசேடத்தால், 1940களில் இருந்த சைவாசிரிய கலாசாலையையும் அதன் அய லிலே ஆச்சிரமங்கள் போல அமைந்த கொட் டில்களையும் அந்த ஆச்சிரமங்களிலே வாழ்ந்த தவசிரேட்டர்களையும் அவர்கள் பாதக்குறடு பட்ட செம்மண்ணையும் (செம்மை + மண் ; பல மனங்களைச் செம்மைப்படுத்திய மண்) மீண்டும் கண்ட பரவசம் என்னுள் நிலை பெறுவதாயிற்று.
அந்தச் சூழலின் " கதாநாயகன ? நினைத் தேன். அதனுல்,
'ஐயா ! இலக்கிய கலாநிதி, பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களை. ** அவர் கொடுப்புக்குட் சிரித்த அந்தச் சிரிப்பின் அதிவேக சக்தி, வாக்கியத்தை முடிக்க விடாது தடுத்தது; திகைத்தேன். அவர் முகத்தை நோக்கினேன். அவர் சொண்டை நெளித்துக்கொண்டு,
** யார் அவர்? எனக்குத் தெரியாதே !?? என்ருர், மீண்டும் ஒரு தலை அடி எனக்கு. அந்த அடியின் வேகத்தால் கால்வாசி அறிவு வந்தது.
** எங்கள் பண்டிதரையாவை.
* ஒகோ ! அப்படியா ! ?? கெக்கட்ட மிட்டுச் சிரித்தார்.
** எடே, பெடியா, அப்படிச் சொன்னுல் என்ன? அதுதானே எங்கள் பாஷை, பாஷையை மாற்றினல் எங்களுக்கு

கரையா
வே,
விளங்குமோ ! . நீ ஒன்றை மறந்து விட்டாய்."
"மறதி மன்னன்? என்று பேரெடுத் தவன் நான். தலையைச் சொறிந்தேன்.
** என்னடா, ளங்களுக்கிடையே நாங்கள் பலப்பல பரிசோதனை செய்து, விளைவுகளை ஒப்பு நோக்கி, ஆராய்ந்து, கணக்கிட்டு அமைத்த சமன்பாட்டு விதி ஒன்று உண்டே அதைத்தான் ??.
இப்போதுதான் அரைவாசி அறிவு வெளிச்சம் காட்டியது.
அந்தச் சமன்பாடு இதுதான்;
பண்டிதரையா = நாவலர் + இலக்கிய மருத் துவர் + சித்தாந்தச் சுவைஞர் *தத்துவ விசாரகர் + விமரிசனத்தாதை+உவகைச் சுவை வேந்து + உவமைச் சாகரம் + குருமணி + தருக்க குடார தாலுதாரி.
நாவலர் நல்லூர் நாவலர் பரம்பரையில் வந்த கடைசி நாவலர். கேட்பாரை வசியம் பண்ணி, காலங் காலமாய்ச் சிந்திக்கச் செய்யும் பேச்சு. கருத்தை வலியுறுத்தும் உச்சக்கட்டத்திலே பெரு விரலில் ஊன்றி நிமிர்ந்து கருத்தைப் பொழிந்துவிடும் சூல்மேகம்.
இலக்கிய மருத்துவர் : மருத்துவரின் அதி விசேட திறமை நாடியறிதல். இலக்கி யத்தின் உயிர்நாடியைத் தொட்டுக் காட்டுவது இந்த மருத்துவரின் தனி யாற்றல். சங்கப் பாட்டோ, இராமா யணப் பாட்டோ, பள்ளுப் பாட்டோ, பாரதி பாட்டோ, இந்தக்காலப் பாட்டோ, எந்தப் பாட்டையும், கை பிடித்துப் பார்த்து, நாடி என்ன பேசு கிறது என்று குணங்குறி கூறும் மருத் துவர். ஒருபான சோற்றுக்கு ஒரு சோறு பதம். கம்பராமாயணக் காட்சி.

Page 111
சித்தாந்தச் சுவைஞர் : உபஅதிபர் கைலா: பதி மகா விவேகி. விளம்பரமில்லாத மகா முனிவர். சைவசித்தாந்தக் கரு கூறுகளை, நிலைப்பாடுகளை விஞ்ஞான முறையில் அட்டவணையாக்கிக் காட்டிய வித்தகர். அவருக்குச் சீடன் இவர் அந்த அட்டவணையை விளக்கி, சுவைத்து வருவோர் போவோர்க்கெல்லாம் சொல் லிச் சொல்லி வாயூறுவார்.
தத்துவ விசாரகர் : விசாரஞ் செய்வதற்கு மூளை வேண்டும். எதிலும் ஐயத்தில் நீங்கித் தெளிர்ந்தார்க்கு வானம் (மெய்ட் பொருள்) நணியதாய் விடுமாம். இந்த விசாரத்தால் பயன் செய்த விசாரணைத் தீர்ப்புக் கொப்பிகளில் இரண்டு : அன்பி னைந்திணை, அத்வைத சிந்தன.
விமரிசனத் தாதை எப்போதோ எழுதிய கட்டுரை பிளேற்றேவின் எச்சரிக்கை" *காக்காய்ப் பொன்” விமரிசனங்கள் பல்கிப் பெருகிய இந்தக் காலத்தில் 22 கறட் தங்கமாய் நின்று பிடிக்கும் விமரிசனம்.
உவகைச் சுவை வேந்து: உள்ளார்ந்த மகிழ் வுக்கு உவகை என்றும் பெயர். பண்டித ரையா நல்லாய்ப் பகிடி விடுவார் என் பது வெகுசன வாக்கெடுப்பு. கொஞ்சம் கூர்ந்து நோக்கினல் அவை சிரித்திரன் பகிடிகளல்ல. பலவேளை பலருக்கு அவர் விடும் பகிடி விளங்காது. சில வேளை சிலருக்கு விளங்கும். சிலவேளை அந்தச் சிலருக்கும் உடனே விளங்காது; நாலு நாள் கழித்துத்தான் விளங்கும். விளங் கும்போது மனம் நிறையும் ; சிரிக்கும்.
உவமைச் சாகரம் : கூறும் பொருள் விளங்க உபகாரஞ் செய்வது உவமை. உவமை அபகாரஞ் செய்தாலோ பொரு ளைப் பணிப்புகார் மறைத்துவிடும். எங்கள் ஐயாவின் பேச்சிலோ, எழுத் திலோ உவமைகள் அச்சொட்டாய் வந்து குதித்துக் கூத்தாடும். எல்லாமே எளி மையும் இனிமையும் கொண்டன. மாதி ரிக்கு ஒன்று: 'முத்திரையின் பின்புறம்

62 -
பசை, தபாலுறையில் ஒட்டியதும் முத் திரை தபாலுறையாய் விடுகிறது. அவ் வாறே, அன்புப் பசை, ஆன்மாவைப் பரமான்மாவோடு இயைத்து ஒன்று படுத்தி விடுகிறது.
குருமணி : ஆசிரியரை மறந்துவிடும் மாண
வரும் உளர் ; மாணவரை மறந்துவிடும் ஆசிரியரும் உளர். இந்த ஞாபக மறதி சைவாசிரிய கலாசாலை மாணவருக்கும் இல்லை; பண்டிதரையாவுக்கும் இல்லை. இந்த மாணவர்க்கு மாத்திரமன்றி, தமி ழார்வலர் பலருக்கும் சைவசித்தாந்தி கள் பலருக்கும் அவர் குருமணி வரு வோர் போவோர்க்கும் அவர் குருமணி. வீட்டில் இருந்த பேரன், பேர்த்திகளும் பீட்டன், பீட்டிகளுக்கும் அவரவர் முன் னறிவை அளந்து கற்பிக்கும் குருமணி. பண்டிதரையா சீவந்தராய் இருந்த காலம் வரை அவர் எழுந்தருளியிருந்த அந்த விருந்தை எப்போதும் எவர்க்கும் குருமகாசந்நிதானம்.
தருக்க குடார தாலுதாரி தருக்கம் ஒரு கலை.
அதற்கும் வெகு விவேகம் தேவை. சரிபோலப் படுவன பல. இங்கே போல என்பது பூசிமெழுக உபயோகிக்கப்படும் சொல். விவாதம் என்று வந்துவிட்டால் காரண காரியம் காட்டி, நுணுகி ஆராய்ந்து வெட்டிப்பேசி தன்கோள் நிறுவவேண்டும். அந்த நாளில், சிலம்புச் செல்வர் ம. பொ. சி. யோடு கண்ணகி மறக் கற்புடையாள் என வாதிட்டது வெகு பிரசித்தம், அந்த நாளில் பரமேஸ்வரக் கல்லூரியில் நடந்த தமிழ் விழாவில், தங்களை விடப் பெரிய தமிழ்க்கொம்புகள் இல்லை என்ற இறு மாப்பில் பங்குபற்றிய தமிழ்நாட்டறி ஞர் சிலரினது செருக்கை தருக்கத்தால் அடக்கியவர். அதனுல் கணடனக் காரர் என்ற பட்டம் சூடியதுமுண்டு.
இத்தனையும் சமன்பாட்டில் அடங்கிய
சமன்பாட்டுக் குறியீடுகளின் விளக்கம். இந்தச் சமன்பாட்டுள் பண்டிதமணி,

Page 112
- 6:
இலக்கியகலாநிதி என்னும் குறியீடுகள் கரைந்து கலந்து சங்கமித்துவிட்டன.
அதனுல், பண்டிதரையாதான் எமது பாஷை, அத்தியற்புத அமிர்தசஞ்சீவியான அந்தச் சொல்லுள் அனைத்தும் ஒடுக்கம், பரமான்மாவுள் சீவான்மா ஒடுங்குதல் போலே,
எனவே,
(அ) பண்டிதரையா ஒரு பாடம்; எம் மால் பின்பற்றப்படவேண்டியவர். (ஆ) பண்டிதரையா ஒரு பாடம்; கணி தம், விஞ்ஞானம் மெய்யியல் போல.
இந்த இரண்டாவது வகைப் பாடத் துக்குப் பல பல நூல்கள் உள. அவை எழுதா நூல்கள்; அச்சு வாகனம் ஏழு நூல்கள்.
ஆணுல், அந்தப் பாடநூல்களின் தலைப் புக்களை ஒல்லும் வகையால் ஓரளவு உணர்த் தலாம்.
இதோ அந்நூல்களின் சில தலைப்புக்கள், வண்டிச்சவாரி, 14 வயது மாணவன், நாவ லர் பாடசாலையும், குமாரசுவாமிப்புலவரும், பண்டிதர் கணபதிப்பிள்ளை, பண்டிதரும் மகாலிங்கசிவமும், ஈரப்பலாவடிக் கூட்டம், சைவாசிரிய கலாசாலை, காவிய பாடசாலை, உப அதிபரும் பண்டிதரையாவும், பொன்னு வாத்தியார் வீட்டு மு ன் கொட்டில், பண்டிதரையாவும் தினகரனும் நாதனும், பண்டிதரையாவின் வீட்டு விருந்தை, தக்ஷ காண்ட உரை, வரிசையறிதல் .
எழுதா நூல்கள் வேத உபநிஷத காலத் தவை; குருகுலமுறையில் கன்ன பரம்பரை யாக நின்று நிலைத்தவை. ஆனல், கலியுகத் தில் நூல்களெல்லாம் எழுதும் நூல்களாக வேண்டும். அச்சுவாகனமேற்றிப் பவனி வரவேண்டும்.
இங்கேதான் மனத்தடத்திலிருந்து இரு பெரும் கேள்விக் குமிழிகள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
இந்த நூல்களை எழுதுந் தகுதிபெற்ற எழுத்தாளர்கள் யார்?

அவைகளை அச்சுவாகனமேற்றிப் பவனி aurėjo GoFuit usuri u unTrif?
இரண்டாங் கேள்வி அநாவசியம். முதலாங் கேள்விக்கு விடைகாண்பது வெகு முக்கியம்.
இந்த நூல்களை எழுதும் தகுதி பெற்ற எழுத்தாளர்கள் யார்?
பண்டிதரையாவைப்போலே,
சொல்லும் பொருளிலே ஒரு ஆழம்; ஒரு புதுமை; ஒரு உயிர்த்துடிப்பு,
பொருளின் சுவையிலே ஒரு கனிவு: ஒரு நளினம்; ஒரு மலர்ச்சி,
நடையிலே ஒரு தனித்துவம்; ஒரு சுழிப்பு; ஒரு கவர்ச்சி,
சொல்லிலே ஒரு சோதி, ஒரு லாக வம்; ஒரு விறல்.
இவையனைத்தும்  ைகவரப் பெற்ற Ly60)L'urr6f2 uurtif ?
இந்த வேளையிலேதான் பண்டிதரையா வுக்கும் எமக்குமிடையே ஊடல் பிறக்கிறது. ஊடல் - அன்பு அளைந்த சிறு கோபம்.
பண்டிதரையாவுக்கு நல்லாய்த் தெரிந் திருக்கவேண்டும்; சிலவேளை தெரிந்துமிருக் கலாம்.
தமது மறைவுக்குப்பின் தமிழின் வர லாற்றிலே பெருத்ததொரு சூனியம் பிரசவ மாகப் போகிறதென்று.
தெரிந்திருந்தாலும் தட்டித்தவறிக்கூட மூச்சுவிட்டிருக்கமாட்டார். ஏனென்ருல் நயத்தக்க நாகரிகம் தெரிந்தவர் அவர், தன் திறமை தானறிந்தும் சொல்லக் கூசும் நாகரிகம் தெரிந்தவர் அவர்.
*கிலுகிலுப்பைகள் எல்லாம் தம்மைப் பற்றி "ஆகா, ஒகோ" என்று சுயசரிதம் எழுதும் காலம் இது. கலியின் கோலத்தால் எழுத வேண்டாதவர் எழுதுவர்; எழுதியே யாக வேண்டியவர் எழுதார்.

Page 113
பண்டிதரையா தம்மைப் பற்றி ஒரு சுய சரித்திரம் எழுதி யிருந்தாலோ...! மனம் அங்கலாய்க்கிறது.
எழுதியிருந்தால்,
பண்டிதரையா என்ற பாடத்தின் பாட நூற் பிரச்சினை தீர்ந்திருக்கும்.
வெளிவந்த அவர்களது நூல்களிற் காண முடியாத அநுபவ முத்திரைகளும் கருத்துக் குவியல்களும் தத்துவ ஒளிக்கற்றைகளும் எமக்குக் கிடைத்திருக்கும்.
திரித்தும் புனைந்தும் ஏற்றியும் போற்றி யும் கூறி அவரது "ஆத்துமா? வைக் கூச்ச மடையச் செய்யும் நிலை உண்டாகாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பருப்பொரு ளாகவன்று, தொனிப்பொருளாக விளங்கும் பண்டிதரையாவின் தரிசனம் கிடைத்திருக் கும்.
மிகச் சிறந்ததொரு கலைக்களஞ்சியம் உருவாயிருக்கும்.
நிச்சயமாகப் பண்டிதரையா என்ற பாடத்தின் பாடநூல்களை எழுதும் தன்மை பெற்ற எழுத்தாளர் ஒரே ஒருவர்தான். அவர்தான் பண்டிதரையா. ஏன் அவர் இதைச் செய்யவில்லை.!
இதுவும் அவரது தனித்துவம்; நாகரிகம்; s24(a),60LD.
தானுடாவிட்டாலும் தன் தசையாடு மாம். பண்டிதரையா இந்த விடயத்தில் தானுமாட வில்லை; தன் தசையையும் ஆட்ட வில்லை.
பண்டிதரையாவுக்கும் சீடர்கள் பல்லா யிரவர். சிலர் ஒரோரோ வழி அவரைத் தரிசனம் செய்பவர். சிலர் அவரோடு ஒட்டி உறவாடி, அவரைக் "கண்டு தரிசித்து அவர் 'தசை"யாய் விளங்கியவர்கள். அவர்

۱4 ... -
களுக்குப் பல விடயங்களைக் கற்பித்தார். சில சொல்லாற் பலவற்றை உணர்த்தினர்; சில வேளை சில சின்முத்திரைகளால் காட்டினர்.
ஆனல் ஒன்றை மாத்திரம் அவர் கற் பிக்கவில்லை.
சொல்லும் பொருளின் தன்மை அறிந்து அதை எப்படி எவ்வாறு எந்த மொழி நடையிற் சொன்னுல் உள்ளுறை வெளிப் படும்; விளக்கமாகும்; மனங்களை உயர்த் தும் இனிக்கும் என்ற அந்த ஒரு குத் திரத்தைக் கற்பிக்கவில்லை.
ஒரு வேளை அச் சூத்திரவிளக்கத்தைக் கையெழுத்துப்பிரதிகளில் விட்டிருப்பாரோ: சொல்லாமற் சொல்லியிருப்பாரோ வெளி வந்த தம் நூல்கள் வாயிலாகக் காட்டியிருப் பாரோ !
என்ருலும் அந்தச் சீடர்களால் அந்த மகா சூத்திர வித்தையைப் "பிடிக்க " முடிய வில்லைப் போலும் !
எங்கோ, யாரோ ஒருவருக்கு அந்தச் சூத்திரம் விளங்கியிருந்தால் பண்டிதரையா வுக்கு ஒரு வாரிசு கிடைத்திருக்கும்; பண்டித ரையா என்ற பாடநூற் பிரச்சினையும் தோன்ருது.
பண்டிதரையாவின் திருமுன்னிலையிலே, அவர் சொல்வன வெல்லாம் "சுத்தமாய்' விளங்குவது போலிருக்கும்; வாயிற் படியில் கால் வைக்கும் போது அந்த எல்லாம்? ஒன்ருேடொன்று கலந்து குழம்பும்; படலை யைத் திறந்துகொண்டு வெளியேறியதும் அந்த "எல்லாம்? வெளியேறிவிடும்.
அவர் விளக்கமாய்ச் சொன்னவற்றையே "பிடிக்க முடியவில்லை. இந்நிலையிலே அவர் சொல்லாமற் சொன்ன, சொல்லாமற் காட் டிய அந்தச் சூத்திர வித்தையை எவ்வாறு *பிடிக்க" முடியும்.
இதுவும் அவரது நயத்தக்க நாகரிகம் தனித்துவம் ஆளுமை.

Page 114
பண்டிதமணி அவர்க
1. உருத்திராக்கங்கள், எழுதும் மேசை, மூ
2. பண்ணுகம் மெய்கண்டான் பாடசாலையி அடிகளாரவர்களினல் பண்டிதமணி அவர்
3. பண்டிதமணி அவர்கள் உபயோகித்த ட
4. மருத்துவப் பேராசிரியர் அ. சின்னத்த வழங்கப்பெற்ற திரிசக்கரவண்டி, பண்டி
 

ள் உபயோகித்தவை
க்குக் கண்ணுடி. ல் இடம்பெற்ற பெருவிழாவில் குன்றக்குடி *களுக்குப் போர்த்தப்பட்ட பட்டுப் பீதாம்பரம். புத்தகங்களும், அலுமாரியும். ம்பி அவர்களினல் பண்டிதமணி அவர்களுக்கு Lதமணி அவர்களின் ஊன்றுகோல்.

Page 115
வித்துவசிரோமணி சி. கணேசையர் 1938ல் ஏற்பாடு செய்த நிர்வாகசை பண்டிதமணி அவர்கள் இருந்தார்கள்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரே இடம்பெற்ற தமிழ் விழாவில் 'தப தமிழ் " என்னும் தலைப்பில் பண்டித
 
 

அவர்களுக்குப் பொற்கிழி வழங்குவதற்கு பயின் இணைக்காரியதரிசிகளுள் ஒருவராகப்
மசுவரக் கல்லூரியில் 1951ஆம் ஆண்டு மிழ் நுதலியது களவு, களவியல் நுதலியது மணி அவர்கள் சிறப்பாகப் பேசுகிருர்கள்.

Page 116
பண்டிதமணி சி. கண என்றும் கையான் அத்துவக்காத்து சி. ெ
பெரியோர் சம்பந்தம் பேரானந்தம். பேராசான், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் தொடர்பை நினைக்குந்தோறும் எம் மனம் களிக்கின்றது! உயர்ந்த குணமுடைய சந்தன மரத்தைச் சுற்றியுள்ள மரங்களிலும் சந்தன மரத்தின் நறுமணம் படிகின்றது. அதுபோலவே பண்டிதமணி அவர்களுடன் பழகியவர்கள் அவர்களின் தொடர்பினல், சிறு அளவினி லாகுதல் உள்ளம் வளப்பம் பெற்றிராது இருக்கமுடியாது.
இலக்கியம், இலக்கணம், இதிகாசம், சமயத் துறைகளில் சரிசமமாக அறிவு பெற் றவர்களைக் காண்டலரிது. இந்த நான்கு துறைகளிலும் பேரறிவுபெற்றுத் திகழ்ந்தவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்கள். அபாரமான மூளை வளம் படைத்தவர். அவர்களின் ஆய்வுத்திறனுக்குச் சான்ருக விளங்குவது அவர்களின் சமய நூல்கள். அதிலும் விசேடமாகவும், சிகரமாகவும் விளங்குபவை அவர் களின் "அன்பினைந் திணை', 'அத்வைத சிந்தனை” நூல்களாகும். பண்டிதமணியுடன் நெருங்கிப் பழகிய வர்கள் அவர் கையாண்ட மணி மொழி களை மறக்கமுடியாது. "புத்தியுள் இருக் கிறது உலகம்" என்று அடிக்கடி சொல்லு வார். உலக சஞ்சாரத்தில் அமிழ்ந்தி அல்ல லுறுவோருக்குக் கதி காட்டுவதாக அமைந் துள்ளது இந்த வாக்கியம். பேரவாக் கொண்ட மனிதர்கள் எங்ங்ணம் ஆறுதல் பெறுவர்! அவர்கள் ஊரூராய்த் திரிவர்! கடல் கடந்து போவர்! பொருள் திரட்டப் பொய்யும் பேசுவர்! யூகம் பல குழுவர்! துஞ்சவும்மாட்டார்! அப்பப்பா, எத்தனை பொல்லாப்புகள்! இவர்களுக்கு நிம்மதி ஏது? இவர்களைப் பார்த்து, 'மனிதர்காள்! ஏன் இத்தனை அலைச்சல்கள்! நீர் தேடும் பண் டங்கள் கழிவுப் பண்டங்களே! இவை உங்க ளுடன் வாராது! இவைகளை இங்கே களைந்து விட்டே போவீர்கள்! ஆதலால் இவைகளைத்
9

பதிப்பிள்ளை அவர்கள் ாட மணிமொழிகள்
பான்னேயா அவர்கள்
தேடி அலைவதை ஒழிமின்! இதுதான் புத்தியான வழி' என்று பண்டிதமணி கூறு வார். கழிவுப் பண்டங்கள் என்று கூறுவ தஞலே இவைகளைத் தேடுவதில் பெரும் சிரமத்தைத் தவிருங்கள் என்று சொல்லு வார். இதைப் பெரும்பாலும் பாமரமக்க ளுக்கே கூறுவார்.
ஆனல் இந்த மணிவாக்கியத்தையே சிந்தாந்த மாணவர்களுக்கு ஒருபடி உயர்ந்து நின்று கூறுவார். சுத்தாசுத்தத்தின் காரியங்க ளான மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்னும் ஏழு தத்துவங் களும் மனிதனுக்கு ஒரு விளக்கமாக அமைந் துள்ளன. இவைகளின் தொழிற்பாடு அறி வைப் பிரகாசிப்பதற்கே. இக் கருத்தை விசேடமாக வைத்தே அவைகளை வித்தியா தத்துவங்களென்றும் இவைகளினலேயே மனிதனுக்கு வாழ்க்கை விளக்கம் வரவுள்ளது என்றுங் கூறி இதற்கு ஆதாரமாக 'விடிவா மளவும் விளக்கனைய மாயை' என் னும் பெரும் வாக்கியத்தை விளக்குவார்.
இறைவனின் குணுதிசயங்களை விளக் கும்போது "நிறுத்துவதோர் குணமிலான்' என்பதை விசேடமாக எடுத்துரைப்பார். இறைவன் ‘எங்களுக்கு எல்லையில்லாத துன்பங்களைத் தருகின்றன்" என்று பாமர சனங்கள் இறைவனைக் குறைகூறுவதைச் சுட் டிக்காட்டி இதெல்லாம் விளக்கமின்மை யாலே நாம் இறைவனில் பிழை காண்கின் ருேம் என்று பண்டிதமணி கூறுவார். உண்மையில் நாம் விதைப்பதையே அறுக் கின்ருேம்; இறைவன் இதற்குப் பொறுப் பன்று, ஆனல் "அவன் எங்களுக்குக் கூலியே தருகின்றன்" என்று சொல்லுவார். "இதைத்தான் செய்" என்று இறைவன் நிறுத்துவது கிடையாது. மனிதனுக்கு அளப் பரிய சுதந்திரத்தை இறைவன் அளித்துள் ளான். மனிதன் தன்னிச்சைப்படியே வாழ இடங் கொடுத்துள்ளான்; இது தா ன் உண்மை,

Page 117
-
இந்த வாக்கியத்துடன் இணைந்து 'ஒடி மீள்கென ஆடல் பார்த்திருப்பவன்" என்று இறைவனுக்கு இன்னுமொரு பெருங்குணத் தையும் எமது ஆசான் கூறுவது வழக்கம். இந்த மணிவாக்கியத்திலும் இறைவன் நமக்கு வழங்கியுள்ள சுதந்திரம் தென்படு கின்றது. குதிரையில் சவாரி செய்பவன், குதிரை தான் நினைத்தவாறு போக இடங் கொடாது, கையிலேந்திய நாண்களைத் தான் போகவேண்டிய இடத்துக்குப் போகும்வண் ணம் இளக்கியும் இழுத்தும் குதிரையை ஒட்டு கின் ரு ன். இவ்வாறன்றி மனிதன் தன்னிச்சைப்படி செய்யவோ போகவோ நாண்களை எப்போதும் இளக்கிய வண்ணமே யிருக்கிருன் இறைவன். இந்த வாழ்க்கை நாண்களை இளக்கியும் இழுத்தும் தன்னைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை LD 62sf?g5 னிடமே விட்டிருக்கிருன் அந்த இறைவன். இதுதான் உள்ள வேறுபாடு. இது மனிதன் அடையவேண்டிய ஒரு உன்னத நிலை,
*"பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை" என்னும் மணிவாசகரின் பாடலை அடிக்கடி பண்டிதமணி தமது மாணவர்க ளுக்கு வழங்குவது வழக்கம். சக்தியை வியந்த அளவிலே நில்லாது அதன் தத்துவத்தையும் அவர் விளக்கிக் கூறுவதுமுண்டு. வயிறு பொருமியிருக்கிறது, ஓங்காளம் வருகிறது. அசீரணமாயிருக்கிறது என்று நோயாளி கூறு மிடத்து மருத்துவன் பேதி மருந்தும், பிற உரிய மருந்துகளும் கொடுத்து நோயாளியைக் குணமடையச் செய்கின்றன். அதுபோலவே சிவசக்தி ஆணவமலத்தின் அசீரணத்தால், அதன் பிடியினுல் அலைப்புண்ட சீவனுக்கு வாழ்க்கைத் தத்துவங்கள் முப்பத்தாறையும், அதாவது அவைகளின் சங்கமமாகிய மனித சரீரத்தை வழங்கி, உலக அநுபவங்களை நுகரவைத்து, தவத்தினுல், தீட்சையினுல், உபதேசத்தினுல் உணர்த்த விட்டு ஆன்மா வைத் தன் அருட்கண் பார்வையினுல் ஆட் கொள்ளுகின்றது.
தெள்ளிதின் விளக்கிய பண்டிதமணி அவர்கள் இக் கருத்துக்கள் எல்லாம் சிவஞான போதம் எட்டாம் சூத்திரத்தில் பொதி துள்ளன என்று சுட்டிக் காட்டுவார். அது தான:-

مم
6 -
** ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில்
உணர்த்தவிட்டு அன்னியம்இன்மையின்அரன்கழல்செலுமே.”* சீவன் சிவமாக விளங்குவதே அன்னியம் இன்மை என்பதன் பொருள். இதுவே அத்வைத நிலை என்று எமது ஆசான் விளக்குவார்.
'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்"
என்னும் திருமூலர் மந்திரத்தையும் எமது ஆசான் அடிக்கடி ஞாபகமூட்டுவார். எமது வாழ்வில் நல்ல ன வைச் செய்வதுதான் உயர்ந்த குறிக்கோள்; அது போலவே உட லுக்கும் நல்ல உணவை, அதாவது மாறு பாடில்லாத உணவை, ஊட்டுவதுதான் மேலானது. ஒன்றன் உடற்சுவை உண்பவன் எங்ங்ணம் ஆளும் அருள் என்று வள்ளுவர் பெருந்தகை கேட்கின்ருர், ஆதலினலே, நற் சிந்தனைக்கு, தியானத்துக்கு, உயிருக்கு மாறு பாடில்லாத உண்டியே நாம் உட்கொள்ள வேண்டுமென்பது வெள்ளிடைமலை, ஊறு செய்யாது வந்த தூய உணவை அருந்திய வனின் உடலிலிருந்து மன்னுயிர்க்கெல்லாம் தண்ணளி செய்யும் அருள் சுரக்குமென்ப தில் ஐயமில்லை.
நலம்புரி கொள்கையுடையவனுக்கு ஏகாக்கிரக சித்தம் கைகூடும். அவனே தியான வழிபாட்டில் நன்மையடைவான். இப் பக்குவத்தை அடைந்த ஒருவன் உலக பாசம் ஒரு தடையாக இருப்பதைக் காண் கின்றன். யாழ்ப்பாணம் யோகசுவாமிகளைப் பற்றிப் பண்டிதமணி ஒரு கதை சொல்லு வார்.யோகசுவாமியவர்கள் ஒருமுறை தனது குடையை ஒரு கூடத்தின் வாயிற் கடையில் வைத்துவிட்டு உள்ளே சென்று தியானத்தி லிருந்தார். சடுதியாக எழும்பி வெளியே சென்று தனது குடையை எடுத்து முறித் தெறிந்து விட்டு மீண்டும் உள்ளே சென்று நீண்டநேரம் தியானத்திலிருந்தார். குடை யின் கண் சென்ற சிந்தனை அவர்களின் தியானத்தைச் சிதைத்தது; தியானத்துக்குத் தடையாயிருந்த அந்தக் குடையை யோக சுவாமிகள் அகற்றி விட்டார் என்று
பண்டிதமணி கூறுவார்கள்.

Page 118
தமிழ்ச் சை
சகாயமணி து. வி
பலகாலமாகப் பலருக்கு ஆசிரியராக இருந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களை ஐம்பது வருடங்களுக்கு மேல் யான் அறிவேன். யான் சிறுவஞக இருந்த 1930ஆம் ஆண்டுகளில் கோப்பாய் சாதன பாட சாலைத் தலைமை ஆசிரியராய்க் கல்வி கற்பித்த எனது தந்தையார் துரையப்பா உபாத்தி யாயர் மூலம் பண்டிதமணி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன். பண்டிதமணி அவர்களுக்கும் எனது தந்தையாருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது.
பண்டிதமணி அவர்கள் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற்ற பின் திருநெல்வேலி ஆசிரிய பயிற்சிக் கலா சாலையில் பல ஆண்டுகள் விரிவுரையாள ராகப் பதவி வகித்தார்.
அக்காலந் தொடக்கம் ஆயிரக்கணக்கில் ஆசிரியர்களையும் பண்டிதர்களையும் உரு வாக்கியுள்ளார்.
பண்டிதமணியின் பாண்டித்தியம் தமிழ் இலக்கணம் இலக்கியம் சமயம் ஆகியவற் றில் ஒப்பற்றதுமட்டுமல்ல மிகவும் தெளி வானதுமாகும்.
இவ்விடயங்களில் தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்துகொண்டே இருந்தார்; ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகுந்த ஊக்கம் அளித்துக்கொண்டே வந்தார்.
கலாநிதிப்பட்டம் (Ph. D.) பெற்றவர்கள் பலர் இவரிடம் அடிக்கடி வந்து தங்கள் சந்தே கங்களைத் தீர்த்துக்கொண்டு செல்வார்கள்.
(66ஆம் பக்கத் தொடர்ச்சி)
ஒரு ஆரம்ப மாணவனுக்குச் சைவ சித் தாந்தம் இருள் செறிந்த ஒரு பெருங்காடு! பயங்கரமான விலங்குகள், பாம்புகள், பாரிய விருட்சங்கள், திரண்ட செடிகொடிகள் அடர்ந்திருக்குங் காட்டில், இருட்டு நேரத்தில் அகப்பட்ட ஒருவன் எங்ங்ணம் தான்போகும் பாதையைக் கண்டுபிடிப்பான்? ஆனல் பகலவன் உதயமாகி தன் பொன்னுெளிக் கதிர்களைப் பரப்பும் வேளையில் அந்த மனிதன் எவ்வளவு ஆனந்தமடைகிருன்! தான் வெளியே போகும் பாதைகளைக் கண்டு களிக் கிருன்! சைவ சித்தாந்த தத்துவங்களை விளங்கிக்கொள்ளுவதில் எமக்கு இடர்ப் பாடுகள் ஏற்படுவதுண்டு. ஆணுல் எமது ஆசான் பண்டிதமணியவர்கள் இவைகளை யெல்லாம்விரித்துப் பெருவிளக்கத்தைத்தந்து எமக்குப் பகலாக்கி விடுவார்! எங்களை மயக் கும் ஐயங்களைப் போக்கும் ஒளிதிகழ் குரு

hi solorTS-T2a)
சுவநாதன் அவர்கள்
1951ஆம் ஆண்டு பரமேஸ்வராக் கல்லூரி
யில் நடந்த தமிழ் விழாவில் இவர் ஆற்றிய சிறப்புரையை எனது தந்தையாரோடு யானும் சென்று கேட்டது ஞாபகத்துள்ளது. பண்டிதமணியின் பேச்சு எப்படி இருந்தது என்ற என் விஞவுக்குத் தந்தையார் "பேச் சுக் கொஞ்சங் காரங்கூடிப் போச்சு; அப்படி யும் இருக்கத்தான் வேண்டும்" என்ற பதில் எங்கள் இருவரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்தது.
யான் ஆசிரியணுகப் பணிபுரிந்துவரும் யாழ்ப்பாணக் கல்லூரியில் முன்னெருகால் தமிழ்வளர்த்த வால்வெள்ளி புகழ் அலன் ஏபிரகாம் அம்பலவாணர் அவர்களுக்கும் அப் பொழுது நாவலர் காவியபாடசாலை மாணவ ரான இளைஞர் கணபதிப்பிள்ளை அவர்களுக் கும் தமிழியல் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் நெருங்கிய தொடர்பு நிலவியதாக அவரது நண்பர் ஒருவர் மூலம் அறிந்து இறும்பூ தெய்தினேன்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சைவ கலா சாலையாக இவர் இயங்கிய காலத்திலேயே, உண்மையான சர்வகலாசாஃலயும் உருவெ டுத்தது என்பது சரித்திர நிகழ்ச்சி.
பண்டிதமணி அவர்கள் சாதி மத பேத மற்ற ஒரு சமூகத்தை அமைக்கவேண்டுமென் பதில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார்.
தமிழ் சைவ உலகுக்கு இவர் அளித்த பங்கை அடுத்து யார் அளிப்பாரென்பதற் குப் பதில் காணவேண்டியவர்களாகவே நாம் இருக்கின்ருேம். வாகவே பண்டிதமணி எமக்கு அமைந்திருந் தார்.சித்தாந்தம் விளக்கும் குருவின் பண் புகளை அவர் பெற்றிருந்தார் என்று சொல்வது மிகையாகாது.
ஈகை, விருந்தோம்பல் அவர்களின் பண்பு உண்டி, உடுதுணி ஏழைகளுக்கு வழங்குவார்.
** இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.'
என்ற திருக்குறளை ஆசான் எமக்காகச் சொல்லியருளுவர். மாற்ருரிலும் நல்லன காணும் சால்புடையோன்.அவர்களின் கண்ட னங்கள் ஆக்கபூர்வமானவை. கல்விக்காக, உயர்ந்த வாழ்க்கைக் கலைக்காக, ஒரு மாணவ பரம்பரையை உண்டாக்குவதற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணஞ் செய்து திகழ்ந்த அன்னுரின் வாழ்க்கை மனித குலத்துக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

Page 119
ஐயா அவர்களின்
பண்டிதை பொன்
* கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக ' என்பது திருவள்ளுவ நாயனரின் திருவாக்கு இவ் வாக்கிற் கமையக் கற்ருங்கு ஒழுகியவர் இன்று அமரத்துவம் அடைந்த எங்கள் குருநாதர், ஞானத்தந்தை, பண்டிதரையா அவர்கள். பல்லாயிரக்கணக்கான சைவ ஆசி யர்களை உருவாக்கிய பெருமை அன்னருக்கு உண்டு.
ஆறடிக்கு மேலான உயரம், அழகான பொன் மேனி, தூய வெண்ணிற வேஷ்டி பட்டு உத்தரியம், அதற்கேற்ற நிற ஒற றுமையுள்ள நாஷனல் சட்டை, ஒரு கையிற் குடை, மறு கையின் ஒழுங்கு மாரு வீசுநடை நெற்றியில் விபூதிக் குறிகளின் நடுவே சந்தனப்பொட்டு, அதன்மேலிட்ட குங்குமத் திலகம் இவைதான் முப்பது வருடங்களின் முன்னுல் நான் கண்ட பண்டிதரையாவின் தோற்றம்.
கற்கண்டெனவே செந்தமிழையும், சைவசித்தாந்த உண்மைகளையும் மாணவர் மனசிற் பதியச் செய்த பெருந்தகையாளன் எங்கள் ஐயா, சைவாசிரிய கலாசாலை விரிவுரை மண்டபமொன்றிற் சிரிப்பொலி கேட்கின்றதென்றல், அங்கு பண்டித ரையாவின் தமிழ்மொழி முழங்குகின்றது என்பதே அர்த்தமாகும். மஞ்சட் குளித்து முகம் மினுக்கிய சூரியகாந்தியிலிருந்து இருவரும் மாறிப்புக்கு இதயமெய்திய கம்ட ராமாயணத்தைத் தொட்டுக் காட்டி, செப் புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சப் தான் கலந்த வகையைக் கூறும் சங்கச் செய் யுளிற் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார் இலக்கியத்தின் வகையறிந்து வரிசைசெய்து காட்டிய ஐயா. இத்தகைய கலைக்களஞ் சியத்திடம் கல்வி கற்பதற்கு நாம் என்ன மாதவம் செய்தோமோ அறியோம் !
கலாசாலை வாழ்க்கை முடிந்ததுப் கல்வியும் முடிந்தது என்று எண்ணும் மாணவர் மத்தியில், மேலும் கற்கவேண்டுப்

அன்பு மொழிகள்
பாக்கியம் அவர்கள்
என்னும் ஆர்வம் படைத்த ஒரு சில மாண வரும் இருந்தனர். அவர்களே மீண்டும் பண்டிதரையாவை அணுகினர். அத்தகைய நல்லார்வம் உள்ள மாணவர்களைப் பண்டித ரையா நயந்து வரவேற்ருர். திருநெல்வேலி கலாசாலை வீதியில் இன்று நாம் காணும் பண்டிதரையாவின் தமிழ்மனை அன்று ஓர் ஆச்சிரமம். அங்கு வந்து போவோர், வந்து தங்கிப் போவோர் பற்பலர். அவர்கள் அன்ன விசாரம் அற்றவர்கள் ; ஆத்ம விசாரம் உள்ளவர்கள். இவர்கள் யாவரும் தனித்தனி பிரச்சினைகளுடன் வந்து சேருவார்கள். இளைத்துக் களைத்து வரும் அன்பர்களுக்கு முதலில் நடப்பது தாகசாந்தி. அதன்பின் னரே அவர்கள் பிரச்சினை ஆராயப்படும்.
மிகத் தூய பிரமசரிய நெறிநின்ருெழுகும் பண்டிதரையா தன்னகம் தேடி வரும் அன் பர்களுக்கு விருந்தோம்பல் செய்யும் பண் பைப் பார்க்கும் பொழுது இல்லறத்தா ஞெருவனைப் போன்றே காட்சியளிக்கலாம். அன்று அங்கு யாவரும் சமைக்கலாம். யாவரும் உண்ணலாம்.
அத்தகைய, அத்தியற்புதமான சூழலில் வாழும்பொழுது, கல்வியுலகைத் தவிர மற்றேர் உலகமுமுண்டு என்னும் எண்ணம் என் நெஞ்சத்தே ஏற்பட்டதேயில்லை. என் னளவில் ரிஷிகளின் ஆச்சிரமத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்ட பெண்களின் வாழ்வுதான் அக்கால வாழ்வு. என்னுள்ளம் வளர்ந்தது. நானும் சமுதாயத்தில் வளர்ந் தேன்.
கல்வித் தாகமுடைய மாணவர்க்குக் கார்முகிலெனக் கட்டுரைகளை வாரி வழங்கி ஞர் பண்டிதரையா. கிழமைதோறும் பல கட்டுரைகள் எழுதிக் குவிப்பார். அவை சமயம், இலக்கியம், புராணம் சம்பந்தப் பட்டவைகளாக இருக்கும். அவற்றை நமக்குத் தந்து நம்மையே வாசிக்கச் சொல்லுவார் ஐயா. எத்தனையோ மேடை களிலேறிப் பேசிப் பழக்கப்பட்ட நாம்,

Page 120
- (
பண்டிதரையாவின் முன்னிலையில் இரண் டாந்தரமோ மூன்ருந்தரமோ கற்கும் மாணவரைப் போன்றே வாசிப்போம். வாசிப்புப் பொருள் விளங்கக் கூடிய முறை யில் அமையவேண்டும். பொருள் விளங்கி யது போன்று அவர் முன்னிலையிற் பாவனை பண்ண முடியாது. கேள்விகள் மூலம் விழுத்தியடித்து விடுவார். நாம் "எத்திறத்து ஆசான் உவக்கும் அத்திறத்து அறத்திற் திரியாப்படர்ச்சி உடையவர்களாக வாழ்ந்து வந்தோம்.
நாவலர் ஐயாவின் அடியொற்றியே பண்டிதரையாவின் வாழ்க்கை நடந்தது. "இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்" என்னும் நாவலர் பெரு மானின் வசனம் அவர் வாயில் எப்பொழு தும் ஒலித்துக்கொண்டிருக்கும். அக் கால யாழ்ப்பாணத்து மக்களிடையே சைவசம யத்தையும் தமிழ் மொழியையும் வளர்ப்ப தற்காக நாவலர் பெருமான் பட்ட பாட் டினைக் கதை கதையாகக் கூறி உருகுவார். அந்த உள்ள நெகிழ்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்டதே எனது "நாவலர் சரித் திர ஆராய்ச்சி " என்னும் நூலாகும்.
காலத்தாற் சில விடயங்களை அனுசரித் துப் போகும் மக்களிடையே, எக் காலத்தும் ஒரே பெற்றித்தாய் வாழ்ந்தவர் பண்டித ரையா. தனக்கும் இரண்டாவது மனித னுக்கும் தீங்கு எண்ணுத, செய்யாத தவ வாழ்வு, தர்ம வாழ்வு பண்டிதரையாவின் வாழ்வு. சனநாயக உலகம் இப்படிச் சொல் லுமே அப்படிச் சொல்லுமே என்ற பயப் பாடு அவர் உள்ளத்தில் என்றும் இருந்த தில்லை. ' கடவுளுக்கு அஞ்சும் அச்சம் பெரு கப் பெருக மனிதனுக்கு அஞ்சும் அச்சம் குறையும் என்பது அறியீர்போலும்" என் னும் நாவலர் விஞ்ஞாபனம் பண்டிதரையா வின் வாழ்வின் குறிக்கோளாகும். இத் தகைய பெருந்தகையாளன் மாணவர்களா கிய நம்மிடமிருந்து எதுவும் பெற்றதில்லை. நாம் பெற்றதோ அனந்தம்.

جستا 9
அறிஞர் உலகம் பண்டிதரையாவிடம் பல அறிவுக் கருவூலங்களைப் பெற்றுக் கொண் டது. அவரது அன்பு மாணவர்களாகிய நமக்கு ஐயா தந்த முதுசொம் இவைதான். தந்தை தாய் பேண், மாதா பிதா குரு தெய் வம், சான்ருேரினத்திரு, பெரியாரைத் துணைக்கொள், ஏதிலார் குற்றத்தை உன் குற்றம்போல் நோக்கு, அறம் செய விரும்பு, தருமம் என்ருெரு பொருள் உளது. நன்றும் தீதும் பிறர்தர வாரா, அன்பினை வாழ்விற் சாதனை செய், உண்ணும்போதொரு பிடி யா வர் க்கு மாம், என் செயலாவது யாதொன்றுமில்லை, ஒழுக்கம் விழுப்பம் தரும், கல்வியால் வாழ்க்கையை நடாத்து என்பவை.
கணக்கிலடங்காத வல்லமை யினு ற் சாதிக்க முடியாத காரியங்களை இம் மந்திர வாசகங்கள் சாதிக்கும் என்பதை எமக்கு ஊட்டித் தாமும் வாழ்ந்து காட்டிய மாபெரி யோன் எங்கள் ஐயா அவர்கள்.
உலகாயதமெனும் மயக்கில் வீழ்ந்து கரை தெரியாது தத்தளிக்க விடாது கரை யேற்றிய ஞானத் தெப்பம், கலங்கரை விளக் கம் எங்கள் ஐயா அவர்கள். அந்தத் தெப் பம் இன்று உடைந்துவிட்டது. எனினும் பிறவாத பேரின்ப வாழ்வினைப் பெற்று அர னடிக் கீழிருந்து நம்மை ஆசீர்வதிப்பார் ஐயா என்னும் உறுதி நமக்கு உண்டு. கண்ணுக வும் கருமணியாகவும், மணியாடு பாவை யாகவும் இருந்த பண்டிதரையாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக,
சித்தாந்த சாகரத்தில் முத்தெ டுத்துத்
தீந்தமிழ்ப்பொன்னுரத்திற் றிகழ வைத்துப் புத்தகப்பூம் பந்தலின்கீழ்த் துயிலைச் செய்து
புண்ணியரே நும்முயிரை வளர்த்தீ ரையா அத்துவிதம் ஆகமங்கள் அனைத்தும் சொல்வீர்
அகப்பொருளாம் ஐந்திணைகள் அறையச்
செய்வீர் வித்தகரே வீறுநடை தமிழிற் போட்டீர்
விமலரருட் பதத்தினிதம் மேவு வீரே.

Page 121
திருநெல்வேலி சைவாசிரிய பண்டி
கட்டைபநிச்சான் க
இந்தப் பரமேசுவர வளாகத்தை எண்ணும்போது ஒரு புத்துணர்ச்சி உண் டாய்விடுகின்றது. இவ்வளாகம் புண் னியாத்மாவான மகா புனிதர் ஒருவரின் பாதங்கள் தீண்டிய இடம். என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு மகா புனித ஸ்தலம் (3 - 62). இலக்கிய கலாதி பண்டிதமணி அவர் களுக்கு 1978-06-25இல் யாழ்ப்பாணம் வளா கத்தினர் (யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்) எடுத்த பாராட்டுக்குப் பண்டிதமணி அவர் கள் வழங்கிய பதிலுரையின் ஒரு பகுதி இது. திரு. பொ. கைலாசபதி பயின்ற கல்லூரி நிலவிய இடம் என்ற காரணத்தினலே பர மேசுவர வளாகத்தைப் பண்டிதமணி அவர் கள் மகா புனித ஸ்தலம் என்பராயின் 1930ஆம் ஆண்டுமுதல் 1958ஆம் ஆண்டு வரை 29ஆண் டுகள் பொ.கைலாசபதி அவர்களுடன் ஒன்ருக, உடனுக, வேருக வாழ வாய்த்த திருநெல் வேலி சைவாசிரிய கலாசாலை வளாகத்தை எத்தகைய ஸ்தலம் எனப் பண்டிதமணி கருதியிருப்பார்கள் என எடுத்துரைக்க வேண் டியதில்லை. எனவே திருநெல்வேலி சைவா சிரிய கலாசாலைப் பின்னணியிற் பண்டித மணி அவர்களுடைய ஆளுமை மாற்ற முற்ற - வளர்ச்சி பெற்ற முறைமையினை ஆராய்வது பயன்தருஞ் செயலாய் அமையும், 1917ஆம் ஆண்டிலே நாவலர் காவிய பாட சாலையிற் சேர்ந்த பண்டிதமணி 1926ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டித தேர்விற் சித்தியெய்தினர்.
ஆசிரிய பயிற்சித் தராதரப் பத்திரம், கறிக்குத் தாளிதம் போல, பண்டிதர், புலவர், வித்துவான் என்றிருந்தவர் களுக்குச் சிறப்புச் செய்தது. வெறும் பண்டிதராயிருந்தபோது, சாதா ரண உபாத்தியாயர் வேலையே வாயாத நான், பயிற்சி பெற்றதும், அந்தக்

கலாசாலைப் பின்னணியிற் தமணி
, கனகசிங்கம் அவர்கள்
கணமே சைவாசிரிய கலாசாலையில்
விரிவுரையாளர் பதவி கிடைக்கப் பெற்
றேன் (4 : ). எனத் தமது 1928ஆம் ஆண்டு சைவா சிரிய கலாசாலைப் பிரவேசம் பற்றிப் பண்டித மணி அவர்கள் நகைச்சுவை ததும்பக் குறிப் பிட்டிருப்பது மனங்கொள்ளத்தக்கது.
பண்டிதமணி, கைலாசபதி, சுவாமிநாதன் ஆகிய மும்மூர்த்திகளின் கூட்டரவிலேயே திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை தன் பொற்காலங் கண்டு மிளிர்ந்தது.
இத்திரிவேணி சங்கமத்தின் விளைநில மாக-அலகபாத்தாக விளங்கியவர் சைவ வித்தியா விருத்திச் சங்க முகாமையாளரான அமரர் சு. இராசரத்தினம் அவர்கள். அலாவு தீனின் அற்புத விளக்காகி நினைத்த மாத் திரத்தே திருநெல்வேலி சைவாசிரிய கலா சாலை என்ற ஒன்றைத் தோற்றுவித்த கர்ம வீரன் திரு. சு. இராசரத்தினம் மட்டும் *பிறந்திலரேல்" இத் திரிவேணி சங்கமமும் இதன் விளைவாகச் சைவாசிரிய சமூகத்தில் விளைந்த மறுமலர்ச்சியும் ஒருபோதும் சாத் தியமாகி இருந்திராதெனலாம்.
காசி மத்திய இந்துக்கல்லூரியிலும், கல்கத்தாப் பல்கலைக் கழகத்திலும் கற்கும் வாய்ப்புற்றதால் இந்தியாவின் முதல் ஜனதிபதி இராசேந்திரப்பிரசாத் முதலாம் பெரியோர்களின் அன்புக்கும், ஆசீர்வாதத் துக்கும் உரியவராகும் பேறுபெற்றவர் மயி லிட்டி சி. சுவாமிநாதன். சைவாசிரிய கலாசாலையின் இரண்டாவது அதிபரான இவர் 1929-11-10 முதல் 1951-06-01 வரையி லான இருபத்திரண்டாண்டுகள் கலாசாலை யின் அதிபர் பீடத்தினை அலங்கரித்தவர். எனவே, பண்டிதமணி, கைலாசபதி ஆகியோ ரின் பெருமையை உள்ளவாறுணர்ந்து அவர்களுக்களிக்கவேண்டிய மதிப்பினை இவர் அளித்துப் போற்றியதில் வியப்பேதுமில்லை.

Page 122
- 7
திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலை யிலே அதிபர் சுவாமிநாதன் அவர்களுக் குக் கீழே உபஅதிபராயிருந்தவர் ஒப்பற்ற ஒரு தத்துவஞானி. அதிபர் பிரபு; உப அதிபர் ஞானி. பிரபு ஆகிய அதிபர் அவர்களுக்கும் ஞானியாகிய உப அதிபர் அவர்களுக்கும் கீழே நீண்டகாலம் சேவை செய்யும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத் தது. இது கிடைத்தற்கரியதொரு பெரும் பேறு (5 : 5}. எனப் பண்டிதமணி அவர்கள் பரவசமுறு வதே அவர்களுக்கிடையில் எத்தகைய ‘பாந்தவ்யம்" நிலவியது என்பதை எடுத்துக் காட்டப் போதுமானது.
உதவி வித்தியாதிகாரி உவாட்சன் அவர் களும், திரு. க. ச. அருள்நந்தி அவர்களும் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிலே ஆசிரிய மாணவர்களைப் படிப்பித்தவிற் பரீட்சிக்கிருர்கள். திடீரெனப் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் படிப்பிக்கின்ற குரல் அருள்நந்தி அவர்களது காதில் விழுகி றது. படிப்பித்தற் பரீட்சை நடக்குமிடத் தில் பண்டிதமணிக் கென்ன வேலை எனத் திகைக்கின்ருர் பரீட்சகர் அருள்நந்தி. பின்னர்தான் அது பண்டிதமணி அவர்களது குரலன்று, தமக்கு வலப்புறத்தில் நின்று படிப்பித்துக்கொண்டிருந்த ஆசிரிய மாணவ னுடைய குரலென அவர் அறிகிருர். அறிந் ததும்,
ஆண்டுகள் இரண்டினுள் ஒரு மாணவ னுடைய குரலும், பேச்சுக் கோலமும் அவ்வாறு மாறுதற்கு ஏதுவாயிருந்த எங்கள் பண்டிதமணி அவர்களின் ஆற்றல், அறிவு, அன்பு, ஆதரவு ஆகிய நற் பண்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்தான செவ்விய "தன்மை'யை, குணசீலத்தை, நன்குணர்ந்து பேருவகை கொண்டேன் (1 : 21). எனக் குதூகலிக்கின்றர். இந்நிகழ்ச்சி திரு நெல்வேலி சைவாசிரிய கலாசாலையிற் பயிற் றப்பட்ட ஆசிரியர்களின் ஆளுமையை எந்த அளவுக்குப் பண்டிதமணி அவர்களது ஆளுமை பாதித்தது-பக்குவப்படுத்தியது என்பதைத் தெளிவாக்குகிறது.

1 -
பண்டிதமணி அவர்கள் விரிவுரையாள ராகி ஈராண்டுகளின் பின்பே பொ. கைலாசபதி அவர்கள் நியமனம் பெற்ருர்கள். 1924 வரை பண்டிதமணி எத்தகைய கோட்பாடுக ளுடன் வாழ்ந்தார் என்பதற்கும், கைலாச பதி அவர்கள் பற்றிய அவர் மதிப்பீடு அக் காலகட்டத்தில் எவ்வாறிருந்தது என்பதற் கும் முற்குறிப்பிட்ட பதிலுரையின் மற் ருெரு பகுதி சான்ருகிறது.
அவரை (பொ. கை.) ஒரு கலைக் களஞ்சியமாகவே பாவித்தேன்."அருமை" தெரியவில்லை. இவர் ஒரு ஏலாவாளி. ஏலாவாளிகள் சமயப் போக்குள்ளவர்க ளாய்க் காலங்கழிக்கிருர்கள் என்ற எண் ணமே எனக்கிருந்தது.
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அந்த மகானைப் பயன்படுத்திக்கொண்டு, ஜனநாயக உலகிற் பறந்துகொண்டிருந் தேன்; பெருங் கண்டனகாரன் என்ற பழிச்சொல்லும் எனக்குக் கிடைத்தது. அஞ்ச வேண்டியதற்கும் அஞ்சாத முரட் டுப் போக்கும் போதியளவு இருந்தது.
(3 : 62)
மேற் கூறிய எடுத்துக்காட்டில் 'ஏலாவா ளிகள் சமயப் போக்குள்ளவர்களாய்க் காலங் கழிக்கிருர்கள் என்ற எண்ணமே எனக்கிருந் தது" என வரும் பகுதி பண்டிதமணி அவர் களின் அக்கால வாழ்வியற் போக்கினையும், நோக்கினையும் துலாம்பரமாகக் காட்டுகி றது. "தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அந்த மகானைப் பயன்படுத்திக்கொண்டு ஜனநாயக உலகிற் பறந்துகொண்டிருந் தேன்" என்ற பகுதி பண்டிதமணி அவர் களுக்கு வாலிபர் இயக்கம் முதலிய தாபனங் களிலேயே அக் காலகட்டத்தில் மிகுந்த ஈடு பாடு இருந்ததென்பதைச் சுட்டுகிறது.
1942ஆம் ஆண்டளவில் வாசிப்புக்கள் போய்ச்சிந்தனைஉலகில் அவர்(பொ. கை.) ஆழ்ந்திருந்தார். அப்பொழுது தோல்வி களின் மேல் தோல்விகள் எனக்குக் கிடைத்தன. அதன் பயணுக அந்த முனிவரை மெல்ல அணுகினேன் (3:63),

Page 123
இவ்வாறு பண்டிதமணி கூறுவது திரு. பொ. கைலாசபதி அவர்களிலேற்பட்ட மாற் றத்தினையும் அதனைத் தொடர்ந்து பண்டித மணி அவர்கள்பால் ஏற்பட்ட மாற்றத்தினை யும் குறிக்கிறதெனலாம். எனவே, 1942ஆம் ஆண்டிற்குப் பின்னர் பண்டிதமணி அவர் களது வாழ்க்கை,இலக்கிய,அரசியல் உலகத்தி லிருந்து சமய உலகுக்கு மாறியதெனலாம்,
கம்பர் இடத்தில் கச்சியப்பர் தோன் றினர். திருக்குறளோடு திருவருட் பயனும் ஒட்டிக்கொண்டது. மெய்கண் டாரும் உமாபதி சிவமும் மேசை முழு வதையும் ஆக்கிரமித்துக்கொண்டார் கள். (6:27) என்றவாறு பண்டிதமணி அவர்களது * எண்ணமாற்றம் " குறித்து கனக, செந்தி நாதன் குறிப்பிடுவதுங் குறிப்பிடத்தக்கது.
1942-1947 வரை அவர் ஒரு பொதுத் தொண்டாயினும் பிரசங்கமாயினும், கட்டுரையாயினும்வெளியிடாமல் சமயம் படிப்பதில் காலத்தைக் கழித்தார். 'ஒசை பெற்றுயர் பாற்கடலாகிய சமுத்திரம் (கைலாசபதி) அவர் முன் விரிந்து கிடந்தது. அதை பூனை நக்குபு புக்கென அவர் புகுந்தார்" (6:28). எனச் செந்திநாதன் மேலுங் குறிப்பிடுவது பண்டிதமணி அவர்கள் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைப் பின்னணியிற் கைலாசபதி அவர்களின் கடைக்கணிப்பில் சமயவாதியாக, சமயவாணராக உருவாகி மலர்ந்தமையை உறுதிப்படுத்துகின்றது.
பண்டிதமணி அவர்கள் இரண்டு மர புகள் சங்கமமான சைவசித்தாந்தி என்பது குறிப்பிடத்தக்கது. தாம் பிறந்த சூழலாலும் நாவலர் காவிய பாடசாலையிற் கற்றதாலும் நாவலரதுமரபின் செல்வாக்குக்கு உட்பட்டவ ரான பண்டிதமணி அவர்கள் சைவாசிரிய கலாசாலையில் இக் காலகட்டத்திலேயே (1942 முதல்) புதியதொரு நோக்கிலும், போக்கி லும் சைவசித்தாந்தப் பணி புரியக் காண் கிருேம்.

2ー
பொ. கைலாசபதி அவர்கள் விஞ்ஞானப் பட்டதாரி. கணிதப் புலமை வாய்ந்தவர். கணிதப் புலமை மிக்கவரான இரத்தினசபாபதி உபாத்தியாயரின் ஆளுமையாற் கவரப் பட்ட அவரது அன்பிற்குரிய மாணவர்; சமய சாதகர் - "மெய்யுணர்ந்த மாசறு காட்சியினூர் ? எனக் கைலாசபதி அவர்களை அவரது மாணவர் பாராட்டுவர். ஒரு சுவாமி என்ருே திருஷ்டா என்றே ஒரு நாளும் அவர் தம்மைக் கருதிய்தில்லை. சடவுலக ஆராய்ச்சிக்குக் கணித, பெளதிக அறிவும், நல்ல நுண்ணறிவும் இன்றியமையாதன போலச் சித்துலக ஆராய்ச்சிக்கு இன்றியமை யாத மனத்தூய்மையும், ஒழுக்கமும், இயல் பாகவே தத்துவஞானியாகிய கைலாசபதி அவர்களிடம் அமைந்திருந்தன.
பண்டிதமணி அவர்கள் திரு. பொ. கைலாசபதி என்ற மகானின் ஆளுமைக் குட்பட்டதன் பேருய், யாழ்ப்பாணத் துச் சைவ சித்தாந்தக் கல்வி மரபு முற் றிலும் புதியதொரு நோக்கும், போக்கு முடையதாக மாற்றமுற்றிருப்பதை ஆராய்ச்சிக் கண்கொண்டு நுனித்து நோக்குவார் உணரத் தவழுர், [2:31
பண்டிதமணி அவர்களுடைய சைவா சிரிய கலாசாலைப் பின்னணியிலான பணி களை மூன்று முக்கிய பிரிவுகளில் நோக் கலாம்.
1. சூத்திர வடிவில் கைலாசபதி வழங் கிய அரிய கருத்துக்களுக்கு விளக்க வுரை (பாஷ்யம்) வரையும் பாங்கில் நாளிதழ்கள், சஞ்சிகைகள், தனி வெளியீடுகள் என்பவற்றில் அவர் கள் தொடர்ந்து எழுதிய சமயக் கட்டுரைகள், வானெலி (இக்கால கட்டத்தில் வானெலியிலன்றி மேடைகளில் அவர் பேசியதில்லை) உரைகள் என்பவற்றிலிருந்து திரட் டப்பட்ட கட்டுரைகளை, (கந்த புராண கலாசாரம் (1959) முதல் அத்வைத சிந்தன (1985) வரை) காலத்துக்குக் காலம் நூல்களாக வெளியிட்டமை.

Page 124
பண்டிதமணி அவர்
சங்கீதபூஷணம் பி. ச
யாழ்ப்பாணத்தில் பண்டித பரீட்சை ஆரம்பமாய காலந்தொட்டுப் பண்டிதர் என்ருல் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைப் போற்ருத தமிழ் மக்கள், சான் ருேர், பண்டிதப் பெருமக்கள் இல்லை. ஆறுமுக நாவலர், பொன்னம்பலபிள்ளை, கதிரைவேற்பிள்ளை, குமாரசுவாமிப் புலவர், மகாலிங்கசிவம் என்பவர்களது வாரிசாகத் தமிழுக்கு உழைத் தவர் பண்டிதமணி அவர்கள்; ஆறுமுகநாவலருக்குப் பின் தமிழ்க் கடலில் முகந்து தமிழையும், சைவ மரபு களையும் பேணிக் காத்து வந்தார்.
இசையிலும் பண்டிதமணிக்கு மிக்க ஈடுபாடு இருந்தது. இசை தமிழிசையாக வேண்டும்; அதில் தமிழிசைக் கருவூலம் " தேவாரத் திருமுறைப் பண்ணிசை"யே நமக்குப் போதுமான தென்ற ஆழ்ந்த உறுதிப்பாடு கொண்டவராக இருந்தார். இந்தச் சர்ச்சை ஒரு சந்தர்ப்பத்தில் யாழ் குடாநாட்டில் வட இலங்கை ச் சங்கீத சபையில் முன்னுள் வித்தியாதிபதி திரு. தி. மாணிக்கவாசகர் காலத்தே நடந்தது. அவ்வமயம் "சங்கீத பூஷணங்கள் ?? எங்கள் சிலரைப் பண்டிதமணி அழைத்துப் பண் னிசை பற்றிப் பிரஸ்தாபித்தார். மேற்
72ஆம் பக்கத் தொடர்ச்சி
2, "Sp ע",
2. சைவாசிரியர்களாகப் பயிற்சி பெற்று வெளியேறும் ஆசிரியர்கள் பாலபண்டித, பண்டித உயர் தகைமைச் சான்றிதழ்கள் பெற்றி ருப்பதன் அவசியத்தை உணர்ந்து மும்மொழி (தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம்)க் காவிய பாடசாலை யொன்றைத் திருநெல்வேலி சைவா சிரிய கலாசாலை வளாகத்திற் பன்னி ரண்டாண்டுகள் (1935 - 1946) தடத்தியமை.
3. சைவ அநாத இல்லத்தில் வாழ்ந்த மாணவர்கள் உயர் கல்வி பெற்று நல்வாழ்வு வாழ வழி காட்டியமை.
இம் மூன்று பணிகளினதும் தாக்கத்தினை ஆசிரியர் கலாசாலைச் சூழலில் நின்றும் பண்டிதமணி அவர்கள் விலகி ஏறத்தாழ ஒரு வெள்ளிவிழாக் காலம் ஆனபின்பும் உண ரக்கூடியதாக இருப்பதொன்றே அப்பணி களின் வெற்றிக்கான சான்றெனலாம்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைப் பின்னணியிற் பண்டிதமணி ஆற்றியதாக விதந்தோதப்படும் பணிகள் மூன்றில், முதற்
10

5ளும் பண்ணிசையும் ந்திரசேகரம் அவர்கள்
சொன்ன அக் கருத்தையே எங்களிடமும் பண்டிதமணி வலியுறுத்தினர். அவர் வலி யுறுத்தியதின் பயனுக வடஇலங்கைச் சங்கீத சபை சார்பான பாடத்திட்டத்தில் பண் ணிசைக்குத் தகுந்த இடம் அளிக்கப்பட்டிருக் கின்றது.
இசைக் கலை உணர்வினுல் அதிலும் அவர் தாம் ஆராய்ந்து கண்ட முடிபின்படி இப் போதைய இந்திய 'தெலுங்கிசைக்கும் மூலக் கருவாக’ தமிழிசை-பண்ணிசையே இருந்த தென்பதை எமக்கறிவுறுத்தி இருந்தார். பண்டிதமணி அவர்களின் நுண்மாண் நுழைபுலமும் கலைப்பண்பு நலமும் பிறவும் எங்கட்கும் மேற்படி சம்பவத்தால் இனிது விளங்கின. பண் டி த மணி அவர்களது பண்ணிசை சம்பந்தமான நிறை பெரும் புலமைத் திறனுக்கு இஃதொரு சான்று.
இந்த நூற்ருண்டில் நாம் கண்ட தமிழ் மேதை - மானிடத் தமிழ்த் தெய்வம் பண்டிதமணி அவர்கள். தமிழிற்கு-சமயத் திற்கு - பண்டித உலகிற்கு-தமிழிசைக்கு இவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பில. பண்டிதமணி கூட்டிச் சென்ற நெறியில், அவர் தம் அடிச்சுவட்டினைப் பின்பற்றி நல் வாழ்வு வாழ முயல்வோமாக.
பணி எனக் கருதத்தக்க சமய எழுத்துப் பணி நிலைத்து நிற்கும் என்பதற்கையமில்லை. சான்று: 1. அருள்நந்தி, க. ச. ' எங்கள் பண்டித மணி", பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மணிவிழா மலர் (1959).
2. இராமநாதன், சு. (திருவாட்டி), யாழ்ப் பாணத்தில் சைவசித்தாந்தக்கல்வி மரபு (1965-1984), பட்டப் பின் கல்வித் தகைமைச் சான்றிதழ்த் தேர்வுக்கான ஆய்வு (வெளியிடப்படாதது 1981).
3. கணபதிப்பிள்ளை, சி., "பதிலுரை", இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணம திப்பிள்ளை அவர்கள் பாராட்டு விழா மலர் (1978).
4. " முறையாகத் தமிழ் பயின்ற வித்
தகர் ", ஈழநாடு (1982-07-29).
5. . . . . . . . . . . . . . . . . . . , "அதிபர் திரு. சி. சுவாமி நாதன் அவர்கள்", மயிலிட்டி, திரு. சி. சுவாமிநாதன் அவர்களின் நினைவு மலர் (1969).
6. செந்திநாதன் கனக., மூன்றவது கண்
(1959).

Page 125
பண்டிதமணியின்
வித்துவான் க. சொக்கலி
திமிழிலே நூல்கள் தோன்றத் தொடங் கிய காலத்திலிருந்தே அவற்றிற்கு அணிந் துரை பெற்று வெளியிடுதலாகிய மரபும் தொடங்கிவிட்டது எனலாம்.
முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.
(நன்னூல் க) என்ற பலவாகிய பெயர்களால் வழங்கிய பாயிரம், நூலுக்கு இன்றியமையாதது என்று கருதப்பட்டது.
ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவல் அன்றே.
(நன்னுரல் டுச) என்பது ஆன்ருேர் முடிபு. இப்பா யிரம் பொது, சிறப்பு என இருவகைப்படும். சிறப் புப் பாயிரத்தினை அணிந்துரை என்ற பழம் பெயராலும் முன்னுரை, மதிப்புரை, அறி முகவுரை என்ற புதுப் பெயர்களாலும் வழங்கிவருகின்ருேம். பொதுப்பா யிரம் நூலாசிரியனின் முகவுரை. சிறப்புப் பாயிரம் நூலாசிரியனுல் வேருெருவனிடம் பெறப் பட்டு அவனது நூலிலே சேர்க்கப்படுவ தோர் மதிப்புரை. சிறப்புப் பாயிரமாகிய அணிந்துரை தருதற்குத் தகுதியுடையவர் இவர் இவரே என்றும் நன்னூல் வரையறை செய்யும்.
தன்னு சிரியன் தன்னுெடு கற்றேன் தன்மா ஞக்கன் தகும்உரை காரனென்(று) இன்னுேர் பாயிரம் இயம்பல் கடனே.
(நன்னுரல் டுக) நூலாசிரியனது அறிவளவு, உளப்பாங்கு, ஆற்றல் என்பவற்றை நன்கு உணர்ந்து அவற்றை எடுத்துக்கூற வல்லவர் அவன் ஆசிரியனும் உடன் கற்ருேனும் மாணவ னும் உரையாசிரியனுமே என்பதால் இவர் களையே அணிந்துரை வழங்கத் தகுந்தவராய் அக்காலத்தவர் கொண்டனர். எனினும் * வாரம் பெற்றுழித் தீயவும் நல்லவாம் ? என்ற கூற்றுக்கொப்பத் தம்மவர் என்ப தாலே அணிந்துரையைப் புகழ்மாலையாகப்

அணிந்துரைகள்
ங்கம் (சொக்கன்) அவர்கள்
புனைந்து சூட்டும் வழக்கம் அக் காலத்தில் இருந்ததில்லை. இதற்கு மாருக உலகினர் ஏற்கத் தகுந்த சிறப்பான நூல்களுக்கே அணிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளமையும் கருதத்தக்கதே. அன்றியும் அணிந்துரை யிலே இவை இவையே கூறப்படல் வேண் டும் என்ற விதியும் பேணப்பட்டு வந்தது.
ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே கேட்போர் பயனுே(டு) ஆய்எண் பொருளும் வாய்ப்பக் காட்டுதல் பாயிரத் தியல்பே.
(நன்னூல் சஎ)
பொதுப்பாயிரம் ஆசிரியனின் கூற்ருக வும் சிறப்புப் பாயிரம் பிறர் கூற்ருகவும் அமையவேண்டியதன் காரணம், ஆசிரியனே தன்னைப் புகழுதல் தகாது என்பதஞலேயே.
தோன்ற தோற்றித் துறைபல முடிப்பினும் தான்தற் புகழ்தல் தகுதி அன்றே.
(நன்னூல் டூஉ) இத்தகைய அணிந்துரை மாளிகைக்குச் சித்திரமும் பெரிய நகரத்திற்குக் கோபுரமும் மூங்கில் போன்ற அழகிய தோள்கள் அமைந்த கூத்தியர்க்கு அணிகளும் போல எல்லா நூல்களுக்கும் ஆசிரியர்கள் அமைத்து வைத்தன்ர் என்பர்.
மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல்
- நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது.
(நன்னுரல் டுச ! அணிந்துரை மரபானது ஆங்கிலர் காலத் தும் தொடர்ந்தது. தற்புகழ்ச்சியையோ பிறர் புகழுரைகளையோ பொருள் செய்யாத பூரீலபூரீ ஆறுமுகநாவலரும் மகாவித்துவான் மீனட்சிசுந்தரம்பிள்ளை, தியாகராசச் செட்டி யார் முதலிய தமிழறிஞர்களின் அணிந் துரைகளைப் பெற்றுத் தம் நூல்களிலே வெளியிட்டார். இவர் காலத்திலிருந்து

Page 126
- 7
'தன்னுசிரியன், தன் மாணுக்கன், தன்னெடு கற்றேன், உரைகாரன்? என்பவர் களோடு சமகால அறிஞர்களிடமிருந்தும் அணிந்துரைகள் பெறும் புதிய வழக்கம் தோன்றலாயிற்று. எனினும் சிறப்புப்பாயி ரம் என்ற பெயரும் அது செய்யுளில் அமைவ தாகிய வழக்கமும் மாறவில்லை.
ஆங்கில முறையைப் பின்பற்றி உரை நடையில் அணிந்துரை எழுதும் வழக்கம் இருபதாம் நூற்ருண்டிலேயே தொடங்கிற் றெனலாம்.ஆக்கியோனின் வரலாறு தொடர் பான செய்திகளையும் நூல் வழங்கப்போகும் எல்லை முதலானவற்றையும் கைவிட்டுப் பெரும்பாலும் நூலோடு தொடர்பான வற்றை உரைநடையிற் கூறும் மரபு தோன் றத் தொடங்கியது. நூலின் சிறப்போடு அதன்கண் தான் காணும் குறைகளையும் நாகரிகமாகத் திறனுய்வு முறையிலே சுட்டிச் செல்லும் வழக்கமும் தோன்றியது. இம் முறைக்கு வித்திட்டவர் என்று "தமிழ்ச் சிறுகதையின் தந்தை " எனக் கொள்ளப் படும் வ. வே. ஸ". ஐயரைக் குறிப்பிட லாம். பாரதியாரின் " கண்ணன் பாட்டு’ முன்னுரையிலே, அப் பாடல்களில் உலகியல் சார்ந்த சிற்றின்பக் கருத்துக்கள் ஆங்காங்கே தோற்றுவதாகக் குறைகூறிய ஐயர், ஆண் டாள் போன்றவர்களே தவறிய பொழுது "நமது கவிஞரை’க் குற்றம் பாரிக்கவேண் டியதில்லை எனப் பொருள்படக் கருத்துரைத் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழில் நூல்கள் பல்கிப் பெருகத் தொடங்கிய இருபதாம் நூற்றண்டின் இரண் டாம் காலிலே அணிந்துரையாகிய முன் னுரைகள் தமிழகத்தில் முதன்மை பெற லாயின. இம் முதன்மையைப் போற்ருது தம் திறமை ஒன்றையே நம்பி முன்னுரை எதுவுமின்றி நூல்களை எழுதி வெளியிட்ட தமிழ் அறிஞர் என்று பேராசிரியர் மு. வரத ராசனைக் கொள்ளலாம். எனினும் இவரின் 'திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" என்ற நூலுக்குத் திரு. வி. கலியாண சுந்தரனர் சிறந்ததொரு முன்னுரை வழங்கி யுள்ளமையையும் நாம் மறந்துவிடல் இய லாது. தம்மளவில் முன்னுரைகளை நாடாத

மு. வ. எத்தனையோ எழுத்தாளருக்கு இரத் தினச் சுருக்கமான முன்னுரைகள் வழங்கியுள் ளமையும் குறிப்பிடத் தக்கதே.
இவரைப் போலவே ஈழத்துப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களும் தம் நூல்களுக்கு எவரிடமும் அணிந்துரை நாடிய தில்லை. ஆனல் அவரை நாடிச் சென்று அணிந்துரைகள் பெருத ஈழத்துத் தமிழறி ஞ்ர் சிலரே என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டியதே.
பண்டிதமணி அவர்களின் அணிந்துரைகள் (முன்னுரை, மதிப்புரை, சிறப்புப் பாயிரம், பிற்காலத்தில் பிரார்த்தனையுரை என்ற பெயர்களால் அவர் வழங்கியவை) பற்றி ஆராயமுன் அவரின் சமகாலத்தில் அவரி டம் போலவே அணிந்துரைகள் பெறப் பெரிதும் விழைந்து நாடப்பட்ட, நாடப் படுகின்ற ஈழத்துத் தமிழறிஞர்கள் சிலர் பற்றியும் இவ்விடத்திற் குறிப்பிடல் வேண்டும்.
பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண் முகதாஸ் என்போர் அணிந்துரைகளை வழங்கு வதிலே தாராள மனம் படைத்தோர் என லாம். நூலின் சாராம்சம், அதன் தேவை, சிறப்பு என்பவற்றைச் சுட்டிக் காட்டி வாச கரை ஆற்றுப்படுத்துவனவாகப் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் அணிந்துரைகள் அமைந்திருக்கும். நூலோடு தொடர்பான வரலாற்றை அலசி ஆராய்ந்து, பிற நூல்க ளுடன் ஒப்பிட்டு, நூலாசிரியரின் தகுதி யையும் தரத்தையும் மதிப்பிட்டு மிக விரி வான அணிந்துரைகளைப் பேராசிரியர் க. கைலாசபதி வழங்கினர். நூலின் தோற்றத் துக்கான சமுதாயப் பின்னணி, சமூகவியற் பாங்கான தகவல்கள் பலவற்றையும் திரட்டி இவற்றேடு நூலில் மேலும் விரித்தாராயப் பட வேண்டியவற்றைச் சூசகமாகக் குறிப் பிட்டுப் பரந்த அளவில் அணிந்துரை எழுது வது பேராசிரியர் கா. சிவத்தம்பியின் இயல்பு. நூலாசிரியரின் தரத்தையும் நூலின் பரப்பையும் அளவிட்டு நூலில் சேர்க்கப் படாதன இவை என்றும் எடுத்துக்காட்டி ஆங்காங்கே நூலின் பலவீனங்களையும் நாக

Page 127
)7 سس
ரிகமாகச் சுட்டி அணிந்துரை எழுதும் போக் கினைக் கடைப்பிடிப்பவர், பேராசிரியர் அ. சண்முகதாஸ்,
இவர்களின் போக்குக்களின் சில அமி சங்கள் பண்டிதமணி அவர்களின் அணிந் துரைகளிலே ஆங்காங்குக் காணப்படினும் அவரின் தனித்தன்மையான நோக்கும், போக்கும் மேலோங்கியே நிற்பதை அவ குடைய அணிந்துரைகளைப் படிப்போர் உண ராது டோகார், காலத்தின் போக்கு, முக தாட்சணியம் என்பவற்றேடு இயைந்து செல்லவேண்டியிருந்த காலங்களிலும் நூலா சிரியரின் தகுதிக்கு மேல் அவரைப் பாராட் டவோ தகுதியின்மைக்காக முற்ரு கத் தாழ்த்தவோ செய்யாது மிகவும் சாதுரிய மாகத் தமது அணிந்து  ைர களை ப் பண்டிதமணி எழுதினர்.
பண்டிதமணி தோடஞ்ஞரான சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவரின் மாணு க் கர். நூல்களை எடுத்த எடுப்பிலேயே குற்றம், குறை கள், தர மதிப்பீடுகள் செய்யும் ஆற்றல் அவ ருக்குக் கைவந்திருந்தது. எனினும் கண்டன காரர் என்ற தமது விசுவ ரூபத்தைச் சுருக் கிக்கொண்டு நூலாசிரியரின் மனம் புண் படாமலே கருத்தை அவர் வழங்கி வந்தார். உதாரணத்திற்குப் பண்டிதமணி, எனது * மனுேன்மணி" என்ற உரைநடை நூலுக் குத் தந்த " மதிப்புரை ’யையே முதலில் எடுத்துக்கொள்கிறேன். இரண்டே இரண்டு வாக்கியங்களில் அமைந்தது அந்த மதிப் புரை. இளமையின் வளவளப்பு நீங்காத பருவத்தில் நான் எழுதியது அந்த நூல். எனவே அதிற் குற்றங்குறைகள் இல்லாமல் இருக்கமாட்டா என்பதை இப்பொழுது என்னுல் உணரமுடிகின்றது. இதனை அன்றே பண்டிதமணி நாகரிகமாக வெளியிட்டுள்ள முறை இது:
* பிரசித்திபெற்ற மனேன்மணிய நாட கம் இயன்ற அளவு முதனுாற்சுவை குன்ருமல் நல்ல வசனநடை வடிவில் வந்திருக்கிறது. இது எட்டாம் வகுப்பு மாணவருக்குப் பாடநூலாகக் கொள்ளத் தக்கது "* சை, ஆ, கலாசாலே சி. கணபதிப்பிள்ளை திருநெல்வேலி 麓9-07-58

5
இம் மதிப்புரையில் * இயன்ற அளவு முத ணுாற் சுவை குன்றமல் நல்ல வசனநடை வடி வில்" என்ற சொற்ருெடர் கவனிக்கற்பாலது. இளைஞனகிய நான் என்னுல் இயன்ற அளவு எழுதியுள்ளேன் என்பதையும் (ஓரளவு) நல்ல வசன நடைவடிவில் நூல் அமைந்துள்ளது என்பதையும் பண்டிதமணி மதிப்பீடு செய்து கூறியதில் எவருமே தவறு காணுதல் இயலாது. " என்னே!" என்ற மிகையான புகழ்ச்சியோ, இவ்வளவு தாஞ" என்ற வஞ்சப் புகழ்ச்சியோ இன்றி அளவறிந்து உரைத்தமை பண்டிதமணி அவர்களின் அள வீட்டுத் திறனையே புலப்படுத்தி நிற்கின்றது.
பண்டிதமணி அங்கதச்சுவை கைவந்த வர். இருபொருள்படப் பேசுவதும் எழுது வதும் அவரின் ஒருகாலத்துப் பண்பாய் இருந்ததை யாவரும் அறிவர். எழுதிய வரின் எழுத்தினூடாக அவரின் மனப்பாங் கையே அளந்தறிந்திட வல்ல பேராற்றல் அவருக்கு அமைந்து கிடந்தது. ஒரு சந்தர்ப் பத்தில் அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த ஈழத்துத் தமிழ்க் கவிஞர் ஒருவர் தமது கவி தைத் தொகுதிக்கு நாமக்கல் கவிஞர் இராம லிங்கம்பிள்ளை அவர்களின் மதிப்புரையைப் பெற்று வெளியிட்டிருந்தார். கவிஞர் இராம லிங்கம் எழுதிய மதிப்புரை இரண்டே வாக் கியங்களில் அமைந்திருந்தது. இவருக்குக் கவிதை மிக எளிதாக வருகிறது" என்பது அவற்றில் ஒரு வாக்கியம். இதற்குப் பண்டித மணி கொடுத்த விளக்கம், "இராமலிங்கம் கெட்டிக்காரர், இந்தக் கவிஞருக்கு எதை யும் யாப்பிற்குள் அடக்கிவிடக்கூடிய கெட் டித்தனம் இருக்கிறது என்பதைச் சொல் லாமற் சொல்லியிருக்கின்றர். ‘வெறும் யாப்புக் கட்டினுள் அடக்கப்படுவனவெல் லாம் கவிதைகளாகா. குறித்த கவிஞர் சாமானியமான செய்யுள் கட்டும் வித்தகரே" என்ற பண்டிதமணியின் கருத்து, தற்குறிப் பேற்ற அணியாக இராமலிங்கத்தின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.
ஆளுல், பண்டிதமணி யின் அணிந் துரைகள், ஆழமும் அகலமும் பொருந் தியவை என்பதையும் நாம் கருத்திற் கொள் ளல் வேண்டும். மாதிரிக்காக, அவர் வித்து வான் பொன், முத்துக்குமாரனின் "தமிழ்

Page 128
པ་ས་ཡ་མ- 7
மரபு’க்கும் வித்துவான் க. வேந்தனரின் 'கவிதைப்பூம்பொழிலுக்கும், யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தினரின் தாமோ த ர' த்திற்கும், பூரீலபூரீ ஆறுமுகநாவலர் சபை வெளியிட்ட "கந்தபுராண வசனத்திற்கும், காரைநகர் சைவ மகாசபை வெளியீடான "திரு. ச. அருணுசலம்" என்ற நூலுக்கும் வழங்கிய அணிந்துரைகளை மட்டும் எடுத்துக்கொள் கிறேன்.
முதலில் ‘தமிழ் மரபு” என்ற நூலை நோக்கலாம். இந்நூல் பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட, மேல் வகுப்புகளுக்கான "தமிழ்மொழிப் பாடநூல்; சொல் மரபு, சொற்ருெடர் மரபு, வாக்கிய மரபு, கட்டுரை மரபு என்ற நான்கு பிரிவுகளில் அக்காலத்துச் சிரேட்ட தராதரப் பத்திர (S. S. C) மாணவருக்கான தமிழ் மொழியறிவினை வளர்த்தற்பொருட்டு எழுதப்பட்டது. இதன் முதற்பதிப்பு 1955இல் வெளியாயிற்று. இதனை எழுதியவர் வித்து வான் பொன். முத்துக்குமாரன், பி. ஒ. எல். அவர் மரபுவழித் தமிழ்க் கல்வி பெற்றுப் பின் அண்ணுமலைப் பல்கலைக்கழகம் சென்று வித்துவான் தேர்வும் கீழைத்துறை மொழிக் கலைமாணிப் பட்டமும் பெற்றவர்; தமிழ் இலக்கணப் பேரறிஞரான சோழவந்தான் கந்தசாமிப்பிள்ளையின் நன் மாணு க்கர்; சிவபுரித் தமிழ்க் கல்லூரியிலும், வண்ணை வைத்தீசுவர வித் தியா லயத்திலும், சில ஆண்டுகள் பேராதனைப் பல்கலைக்கழகத்தி லும் பணி ஆற்றியவர். ஆழ்ந்த தமிழ் அறிவு, சமய அறிவு என்பவற்றேடு ஆங்கில அறிவும் வாய்க்கப் பெற்றவர்; சிறந்த சொற் பொழிவாளர். இத்தனை தகுதிகளும் உடைய ஒருவரின் பாடநூல் பல வழிகளிலும் சிறந்த தாய் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே இவரின் நூலைப் பல்லாண்டுகள் தமிழ் ஆசிரியர்களைப் பயிற்றிய அநுபவமும் மரபுவழித் தமிழறிவோடு புதுமை வேட்கை யும் வாய்ந்த பண்டிதமணி அவர்கள், தமது அணிந்துரை மூலம் மிகவும் நன்முறையிலே அறிமுகஞ் செய்து வைத்துள்ளார்.
ஆங்கிலக் கல்விமுறையாலும் மரபுவழித் தமிழ்க் கல்விப் புறக்கணிப்பாலும் சீரழிந்து

7 -
கொண்டிருந்த தமிழ் மொழிக் கல்வியின் அன்றைய நிலையினை (இருபதாம் நூற்ருண் டின் ஐம்பதுகளின் நிலையினை)ப் பண்டிதமணி தமது அணிந்துரையின் தொடக்கத்திலேயே நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றர். மரபு வழித் தமிழ்க் கல்வியோடு இன்றைய தமிழ் மொழிக் கல்வியை அவர் ஒப்பிட்டு நோக்கி எடுத்துக் காட்டிய உண்மைகள் ஒரளவு நகைச்சுவை கொண்டனவாயினும் தாய் மொழிக் கல்வியாளரின் சிந்தனையைத் தூண்டவவ்லவை.
* வழக்குக்களா, வழக்குகளா அடிப் பட்ட சான்ருேர் வழக்கு? " என்று ஒருவர் ஒருதினங் கடாயினுர், மற் ருெ ருவர் *பொருள்களா, பொருட்களா? முட்களா, முள்களா? அடிப்பட்ட வழக்கு என்னையோ?? என்று விஞயிஞர். இன்னுஞ் சற்றே இடங் கொடுத்தால் " சுவரா, சிவரா?, திறப்பா, துறப்பா? என்று எண்ணிறந்த கேள்விகள் எழலாம். இந்தச் சம்பவம் ஒரு வகுப்பில் நடந்தது என்று வைத்துக்கொள் ளுவோம். அப்பொழுது ஆசிரியர் கண்மூடி மெளனியாய்ச் சும்மா இருந்தார். இந்தக் கடாக்கள், விஞக்கள், கேள்விகள் ஆகிய இவைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வராதா என்று அவர் சிந்தித்தார். சிந்தனை உலகத் தில் அந்த ஆசிரியர் சமாதிநிலை அடைந்தார். அவருடைய மனசு பழங்காலத்துத் திண்ணைப் பள்ளிகளிற் சஞ்சாரஞ் செய்தது. திண்ணைப் பள்ளிகள் திரைப்படங்கள் போலத் தோன்றி மறைகின்றன.??
(தமிழ்மரபு - பண்டிதமணியின் அணிந்துரை, பக். 6)
** திண்ணைப் பள்ளிக்கூடங்களில் மாணவர் அடக்கமாக இருந்து கற்றல், சொற்பொருட் டொகுதிகளாகிய நிகண்டுகளை (பன்னிரண்டு தொகுதிகள் கொண்டவை) மனனம் பண் ணுதல், பின்பு திரிபு, யமக அந்தாதிகள், மடக்குக்கள், சிலேடைகள், பல்வேறு சொற் சித்திரங்களை ஆசிரியரிடம் பாடம் கேட்டல், நல்ல பாட்டுக்கள், வசனங்களை மனனம் பண் ணுதல், அடுத்து, இலக்கண விஞவிடையி லிருந்து தமிழ் இலக்கணத்தைக் கற்கத் தொடங்கிப் படிப்படியாகக் கடின இலக்கண

Page 129
நூல்களைக் கற்றல், கற்ற இலக்கணத்தை இலக்கியங்களில் அப்பியசித்தல் ஆகிய மரபு வழிக் கல்விமுறை பற்றிப் பண்டிதமணி தொடர்ந்து விளக்கம் தருகின்ருர், "கருவிநூ லுணர்ச்சி கைவந்த மாணவர்களின் கைக ளிலே, "செல்துளைத்த துளையன்றி மெய்ப் புள்ளி விரவாத செந்நாளேடு" எத்தனையும் கொடுக்கலாம்." (டிெநூல் - பக். 7)
"இவ்வாறு கற்றவர்கள் எழுத்துப்பிழை, சொற்பிழை, தொடர்ப் பிழை, வாக்கியப் பிழை, பொருட்பிழை, மரபுப்பிழை இன்றி எழுதவும் பேசவும் வல்லவர்களுமாவார்கள்' (டிெநூல்-பக்.7) என்று கூறும் பண்டிதமணி, இக்காலத் தமிழ்க்கல்வி நிலைபற்றிக் குறைப் பட்டுக்கூறி அக்குறையினைப் போக்கத் 'தமிழ் மரபு" என்ற நூல் “எய்ப்பில் வைப்பாய்" அமையுமாற்றினைப் பின்வருமாறு குறிப்பிடு கின்ருர்:
**இந்த நிலை இந்தச் சினிமா உலகத்திலே இனியும் வருமா என்று, அந்த மெளனி யாய்ச் சும்மா இருந்த ஆசிரியர், பெருமூச்சு விட்டுக்கொண்டு கண்களை விழித்தார். அவர் எதிரில்,
** தமிழ் மரபு” என்கின்ற மொழிநூல் காட்சியளித்தது."
(டிெநூல் - பக். 7)
'தமிழ் மரபு” நூலைக் கண்டபொழுது தமக்கு அலட்சிய புத்தி ஏற்பட்டதாகவும் (பண்டிதமணி, தம்மைப் 'பழைய மனுஷர்" என்று படர்க்கையிலே குறிப்பிட்டுள்ளார்.) "இன்னுந் தமிழ் மரபா?" என்று எண்ணிய தாகவும், அந்நூலை அங்கும் இங்கும் புரட் டிப் பார்த்ததாகவும், மெல்ல மெல்லப் படித்ததாகவும், படிக்கப் படி க்க த் தம் அலகதிய புத்தி குறைந்து குறைந்து மோசம் போனதாகவும் குறிப்பிடுவது நயமிக்கது.
அடுத்து, தமிழ் மரபின் பொருளடக்கம் பற்றிய சிறு அறிமுகம் இடம்பெறுகின்றது. அதனூடாக அந்நூல் மாணவருக்கு மட்டு மன்றித் தம்போன்ற பெரியவர்களுக்கும் பயன்படுமாற்றினை அவர் அழகாக எடுத்துச் காட்டுகின்ருர்,

- 78 -
"சில தினங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழு திக்கொண்டிருக்கும்போது ஒரு சந்தேகம் குடிகொண்டது. தகழியா? தகளியா? என் பது அந்தச் சந்தேகம். அந்த இழவு சந்தே கத்தை அந்தக்ஷணமே இந்தத் தமிழ் மரபு தீர்த்து வைத்தது. இன்னும் எத்தனையோ வகையான சந்தேகங்களைத் தீர்த்துக்கொள் வதற்கு எத்தனையோ புத்தகங்கள் தேடி யலையாமல் தானே தனித்து நின்று உதவு வதற்குத் தமிழ் மரபு ஓர் ஊன்றுகோலாய் முன்னிற்கின்றது.
இவ்வாற்ருல், தமிழ்மரபு உயர் வகுப்புக்காய மொழிநூல் மாத்திரமன்று : என்போன்றவர்களுக்கும் உபகாரியான
தொரு கைந்நூலாம் "
(டிெநூல்-பக், 8)
இன்றைய தமிழ்க்கல்வி நிலையை முன்னைய கல்வி நிலையோடு ஒப்பிடல், பின்னையதன் சிறப்பையும், முற் கூறியதன் குறையையும் எடுத்துக் காட்டல், இவ் வகையிலே தமிழ்மொழிக் கல்விக்குத் ‘தமிழ் மரபு * எவ்வகையிற் பயன்படும் எனக் காட்டல், நூலின் உள்ளடக்கத்தினை அறி முகம் செய்தல், மாணவர்க்கு மட்டுமன்றிப் பெரியோர்களுக்கும் இந்நூல் உதவும் வகை யினை விதந்துரைத்தல் என்ற ஒழுங்கிலே பண்டிதமணியின் அணிந்துரை அமைந்திருத் தல் காணலாம். இவ்வளவும் எழுதிய அவர் நூலாசிரியர் பற்றிக் கூறியவை இரண்டே இரண்டு வாக்கியங்கள்தாம்.
* இந்நூலையுதவிய வித்துவான் பொன். முத்துக்குமாரன், B, O, L. தமது உபகார விசேஷத்தினலே உள்ளூர்ப் பழுத்ததொரு பயன் மரம் ஆயினர். தமிழ் உலகு அந்தக் கணிதரும் மரத்தைப் பேணி வளர்த் துப் பயன்செய்வதாக."
இவ்வணிந்துரையிலே நூலின் தேவை, உள்ளடக்கம், பயன் என்பவற்றை முதலிற் கூறி, ஈற்றில் நூலாசிரியர் பற்றிக் கூறுவது தொல்காப்பியர் காலந் தொட்டு அடிப்பட்டு வரும் மரபேயாகும். இம்மரபினைப் பேணிய வாறே தமது புதுமையான போக்கில் பொருளும் சுவையும் தனிப்பண்பும் 966) அணிந்துரை எழுதியதுதான்

Page 130
- 7
பண்டிதமணியின் தனிச்சிறப்பு. ஈழமுரசு (30-03-86) வார இதழிலே பேராசிரியர் கா. சிவத்தம்பி, பண்டிதமணியினது உரை நடைபற்றிக் குறிப்பிடுகையில் (பண்டிதமணி * காலம் " ஆகிவிட்டார்), ' . அது பண்டித மரபின் நடையன்று ; இலக் கியப் பாண்டித்தியச் சிந்தனைப் பாய்ச்ச லுக்கான வேக வாகனம். (அந்த நடையில் கூட இலக்கணப் பிழைகள் உள என்று திருத்திப் பதிப்பிக்கவேண்டிய நிர்ப்பந்திப் புக்கள் இருந்தன. அது " வெறுங் கூடு’ காவல் கொண்டவர்கள் சன்னதம் ஆடிய காலத்துச் சம்பவம்)" என்று எழுதியுள் ளார். பண்டிதமணி தமக்கென ஒரு தனி நடையை வகுத்துக்கொண்ட போதிலும் அந்த நடையின் உயிராக, அதனேடு பண்டித மரபுச் சிந்தனைகளாகிய “ வெறுங் கூட்டினையும் " இணைத்து அதனையும் இயக் கியே வந்தவர் என்பதனையும் நாம் நினைவி லிருத்துவது நன்று. இவ் வகையில் அவர் புரிந்த பணியினலேயே பல்கலைக்கழகத் தமிழறிஞர் தொடக்கம் பண்டிதமரபினர் ஈருக அனைவரும் அவரை ஒருசேரப் போற்றினர்.
அடுத்து, வித்துவான் க. வேந்தனரின் * கவிதைப் பூம்பொழில் " என்ற கவிதைத் தொகுப்பு நூலுக்குப் பண்டிதமணி வழங் கிய சிறப்புப் பாயிரத்தை நோக்குவோம். ஒரு காலத்தில் வித்துவான் க. வேந்தணுரும் பண்டிதமணியும் இரு துருவங்களாய் விளங் கியவர்கள். கம்பராமாயணம் என்ற பாற் கடலிலே துளைந்தாடித் தாம்பெற்ற இன்பங் களைத் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் வாரி வழங்கிய வித் துவ சிரோ மணி ந. ச. பொன்னம்பலபிள்ளை(நாவலரின்மருகர்}யின் வழியைப் பின்பற்றி அந்தப் பெருங் காவி யத்திற்குத் தம் உள்ளத்தினைக் காணிக்கை பாக்கியவர் பண்டிதமணி. வேற்றுச் சமய காவியம் என்பதாலும் சீதையின் கற் புக்கு முரணுன மறக்கற்புக்கொண்டவள் கண்ணகியாகிய சிலப்பதிகாரக் காப்பியத் தலைமைப் பாத்திரம் என்பதாலும் அவர் வெறுத்ததையே தலைமேற் கொண்டு போற் றியவர் வித்துவான் க. வேந்தனர். முன் னவருக்கு ஈழத்து மரபுவழிப் பட்ட தமிழறி

9 -
ஞர்களின் முடிவே ஏற்கத்தக்கதாய் விளங் கியபொழுது, பின்னவருக்கோ தமிழகத்துத் திராவிடக்கழக வழிப்பட்ட எண்ணங்களே பின்பற்றவும் போற்றவும் தக்கனவாய் அமைந்ததால் இருவரும் முரண்பாடு கொண்டதில் வியப்பில்லை. 1948ஆம் ஆண்டு ஈழகேசரி" இதழ்களிலே வித்துவான் க. வேந்தனரும் அவரின் சகாக்களும், பண்டித மணியும் அவரின் மாணவர்களும் முறையே சிலப்பதிகாரச் சார்பிலும் கம்பராமாயணச் சார்பிலும் பெரியதொரு கருத்துப் போரினைத் தொடர்ந்து நிகழ்த்தினர்கள். பண்டிதமணி "யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராண கலாசாரமே " என்று கந்த புராணத்தை உச்சிமேற்கொண்டு போற்ற, வித்துவான் வேந்தனரோ கந்தபுராணம் கம்பராமாயணத்திலிருந்து படியெடுத்த அச்சுக்காப்பியம் என்று வாதாடி வழக் குரைத்தார்.
இவ்வாறு இருவேறு உலகங்களில் உலாவி வந்த இவ்விரு பேரறிஞர்களும் பிற்காலத் தில் ஒருவரை ஒருவர் உணர்ந்து பழைய வற்றை மறந்து அன்புரிமை பூண்டு ஒழுகி யமை பெரிதும் விதந்துரைக்கத் தக்கதே. 1964ஆம் ஆண்டு வித்துவான் வேந்தனர் தமது கவிதைகளைத் தொகுத்து நூலாய் வெளியிட்டபொழுது அதற்குச் சிறப்புப் பாயிரம் ஒன்று வேண்டிப் பண்டிதமணி அவர்களை அணுகினர். பண்டிதமணி ஈழத் துக் கவிஞர்களை வரிசை அறிந்து மதித்த வர், இரசித்தவர். வித்துவான் வேந்த னரின் கவித்துவ ஆற்றலையும் அவர் நன்கு மதித்துத் தாம் வகுத்திருந்த வரிசையில் அவருக்கும் நல்லிடம் அளித்தார் என்பதற்கு அவர் அளித்த சிறப்புப் பாயிரமே சான்று
கரும்.
** ஒருநாள் Lorra) நேரத்திலே * சும்மா இருப்பதெப்படி ??? என்று சிந்தித் துக் கொண்டு நான் சும்மா இருந்தேன். ானது கண்ணுக்கணிகலம் (கண்ணுடி) 1ண்ணின் ஒத்துழைப்பின்மையால் தூரத் திலே ஒதுங்கிக் கிடந்தது. கைக்கணியான ாழுதுகோலும் எங்கேயோ மறைந்து பிட்டது.
இந்நிலையில் இருக்கும்போது கவிராயர் ருவர் அச்சுப்பிரதி ஒன்றைக் கையில்

Page 131
- 8
எடுத்துக்கொண்டு எ ன் மு ன் னி லை யில் தோன்றிஞர். நான் அவரை உபசரித்து எதிரிலே இருத்தி அவர் கைகளை நோக்கி னேன்.”*
(கவிதைப் பூம்பொழில் பண்டிதமணியின் சிறப்புப்பாயிரம்-பக். 1)
பண்டிதமணியின் சிறப்புப்பாயிரத்தின் தொடக்கமே ஒரு சிறுகதைத் தொடக்கம் போலக் களைகட்டி விடுவதைக் காண்கிருேம். அடுத்து வித்துவான் கவிதைப் பிரதியைப் பண்டிதமணியிடம் படிக்குமாறு கொடுப்ப தும் அவர் தயங்குவதும் பின்பு வித்து வானே பாடல்களைப் படித்துக் காட்டுவதும் எடுத்துரைக்கப்படுகின்றன. கவிதைகளைக் கேட்கக் கேட்கப் பண்டிதமணி கண்ட மானதக் காட்சி பின்வருமாறு:
** பூம்பொழிலில் யான் புகுந்தேன். குயில்கள் கூவின. மயில்கள் ஆடின. கிளிகள் மழலை பொழிந்தன. மந்தமாருதம் தவழ்ந்தது. மல்லிகை முல்லைகள் மலர்ந் தன. ஆறுகள் மலைகள் முகில்கள் அணி செய்தன. ஐந்திணை வளங்கள் மிகுந்தன. சிறுவர் சிறுமியர் ஆடினர். எனக்குக் குதுர கலம் வீறியது. அங்கும் இங்கும் உலாவத் தொடங்கினேன். அருமந்த பாடல்கள் இனிய இசைக்கறியோடு சற்றே அபிநய தாளிதமும் சேருமாளுல் என்னை ஆனந்தக் கூத்தாட்டியிருக்கும். முப்பது வருடங்களுக்கு முன்னே தோன்றியிருக்குமானுல் கத்தரித் தோட்டத்துக்கு அருகிலே ஆடிப்பிறப்பை அடுத்து இப்பாடல்கள் அமர்ந்திருக்கும்."
இப்பந்தி பண்டிதமணியின் இரசிகத் தன்மைக்கு நல்ல எடுத்துக்காட்டு. காலப் போக்கில் இலக்கியரசனையை விழுங்கிக் கொண்டு தத்துவ நோக்கும் சமய உணர்வும் தம்மை ஆக்கிரமித்ததை " முப்பது வருடங் களுக்கு முன்னே தோன்றியிருக்குமானுல்" எனத் தொடங்கும் வாக்கியம் அறிவுறுத்து கின்றது. திறனுய்வு நோக்கிலும் இலக்கிய ரசனையுணர்வின் திளைப்பே அவரைப் பெரிதும் கவர்ந்துகொண்டதையும் காணலாம்.
இதனை அடுத்துவரும் பந்தியிலே தம்மைக் கவர்ந்த பாடல்கள் இவை என

---س- 0
எடுத்துக்காட்டி, வேந்தனுரைச் சோமசுத் தரப்புலவருடன் ஒப்பிடுகிறர். பின்ஞெரு நாளும் வேந்தனர் வந்து பாடல்களைப் படித்துக் காட்டியதாகவும் அப்பாடல்கள் உயிர் துடிக்கும் பாடல்கள் எனவும் அவற் றின் தெளிவும் சொல்லோட்டமும் தம்மை விழுங்கி விட்டதாகவும் தமது சுமை குறைந்து போனதாகவும், "தமிழகத்தில் ஒரு கவிமணி, இங்குச் சோமசுந்தரப் புலவர் ; கிழக்கு மாகாணத்தில் விபுலாநந் தர், அவருக்கு ஒரு வாரிசு புலவர்மணி சோமசுந்தரப் புலவருக்கு ஒருவாரிசு வேந்த ஞர்" என்ற முடிவுக்குத் தாம் வந்ததாக வும் அடுத்த பந்திகளில் விளக்கம் தருகின்ருர்.
இனி, பண்டிதமணியின் சிறப்புப் பாயி ரத்தின் மூலம் அவரது கவிதை நோக்கு எத்தகையது என்பதை நாம் நோக்கினல், 1. நல்ல கவிதைகள் இயற்கையோடு ஒன்றித்துப் புலவன் பெற்ற உணர் வுகளைப் படிப்போனுக்கும் தருதல் வேண்டும். II. கவிதைகளை இசையோடும், அபிநயத் தோடும் உணர்ந்து பாடி மகிழல் வேண்டும். III. கவிதைகள் உயிர்த்துடிப்பு உடையன
வாதல் வேண்டும். IV. தெளிவும் சொல்லோட்டமும் கவிதை.
களுக்கு இன்றியமையாதவை. என்ற முடிவுக்கு வருவோம். இவற். ருேடு தமிழகக் கவிஞர்களுக்கு எவ்வகை யிலும் குறைவு பெருத நல்ல கவிஞர்கள் ஈழத்திலும் உண்டு என்ற மதிப்பீடும் அத ஞல் பெருமித உணர்வும் கொண்டவர் பண்டிதமணி என்பதையும் சிறப்புப் பாயிரம் பெறவைக்கின்றது.
கவிமணி தேசிகலிநாயகம்பிள்ளை, சோம சுந்தரப்புலவர், விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, வேந்தனர் ஆகிய கவிஞர்களை ஒரு வரிசையில் வைத்துப் போற்றிய போதிலும் பண்டிதமணியின் மதிப்பீட்டில் இவர்கள் மிக உயர்ந்த புல வர்கள் அல்லர், என்பதையும் நாம் கருத்திற் கொள்ளல் வேண்டும்.

Page 132
1. தெய்வப்புலமையுடையோர் - திருவள் ளுவர், சங்கச்சான்றேர்கள். இவர்கள் மூலிகைகளைக் கண்ட சித்தர்களை ஒத்தவர்கள்.
11. கவிச்சக்கரவர்த்திகள் - கம்பர், சேக் கிழார், கச்சியப்பர் முதலியோர். இவர்கள் மூலிகைகளைப் பயன்படுத் தும் சித்தவைத்தியர்கள் போன்ற வர்கள்.
11. சாதாரண புலவர்கள்-தமது அறிவின் எல்லைக்குள் அகப்பட்ட சாதாரண கருத்துக்களையும் இயற்கை அழகுகளை யும் சனங்களை வசீகரிக்கத்தக்க வகை யிற் சொல்லும் ஒரு சாமர்த்தியத்தை இயல்பாயுடையவர்கள்.
இவர்களின் வரிசையிலேதான் கவிமணி, சோமசுந்தரப்புலவர், விபுலாநந்தர், புலவர் மணி, வேந்தனர் ஆகியோரைப் பண்டித மணி அடக்குவார். இவர்களுக்கு அடுத்த படிகளிலே கவிதை வெறியர்கள், கடிய கொடிய வித்துவான்கள் என்றும் அவர் வரிசைப்படுத்தி யுள்ளமையைக் “கவிஞர்கள்" என்ற கட்டுரையிலே இலக்கியவழி - பக். 82-87) விரிவாகக் காணலாம். எனவே கவிதா ரசனையிலும் பல படிக்கிரமங்களை வகுத்து அவ்வப் படித்தரங்களில் உள்ள வர்களை அவரவர்கள் நிலையிலே பாராட்டுவது பண்டிதமணியின் இயல்பு எனக் கொள்ள லாம்.
இத்தகைய கவிதைக் கோட்பாட்டினைப் பண்டிதமணி கொள்வதற்குக் காரணம் யாது என்பதற்கு, திரு. ந. சபாரத்தினம் தரும் விளக்கம் இவ்விடத்திற் கவனிக்கற் LI Ir Gloġi:
** எழுத்தாளன் ஒருவனின் ஒழுக்கவிய லுணர்வே அவனது கலையாளுமையை Artistic personality) Lpi) so turrogyth gigs மாக உள்ளடக்கியதாயிருத்தல் வேண்டும்" என்று லீவியை (கேம்பிரிஜ் பல்கலைக் கழகத் தைச் சேர்ந்த கலாநிதி லீவியை)ப் போலவே பண்டிதமணியும் உறுதியாக நம்புகின்ருர்,
11

-
இக்கருத்திற்குக் கூடிய முக்கியத்துவம் அளிக் கும் பொழுதுதான் பண்டிதமணி பிரச் சினைக்குரியவராக ஆகின்றர். அவர்தம் அதீத சமய நோக்கின் காரணமாக இலக் கியத் திறனில் உன்னதமானவை எனப் போற்றப்படுகின்ற காவியங்களின் தலைமைப் பாத்திரங்களிலே அவர் பிழை காண முற் படும்பொழுது அவரை இலக்கியத் திறனுய் வாளர் கடுமையாக விமர்சிக்க முற்படு கின்றர்."
(Leavis of Tamil Literature-N. Sabaratnam-இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் பாராட்டு விழா மலர், பக்கம் 7.)
இக்கூற்று, பண்டிதமணியின் கவிஞர்ப் பிரிப்புக்கும் வரிசைக்குங் கூடப் பொருந்து வதே.
இனி, தாமோதரம் " என்ற நூலுக்கு அவர் அளித்துள்ள அணிந்துரையை நோக்கலாம்:
** திரு. நா. பொன்னையா, ஜே. பி. அவர்கள் செய்த புண்ணியத்தோடு புண்ணிய மாக, சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப் புக்களில், பிள்ளை அவர்கள் எழுதிய பதிப் புரைகளை ஒன்று சேர்த்து, ஒரு தக்க முன் னுரையோடும் அடிக்குறிப்புக்களோடும் வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள் ளுகிறேன். பிள்ளை அவர்களின் பதிப்புரை கள், தமிழ் வரலாறு தமிழ்நாட்டு வரலாறு களையும் அவற்றில் பிள்ளை அவர்களின் பங் கையும் புலப்படுத்துவதேயன்றி, உயரிய வகுப்புக்களுக்கு வரலாற்றுப் பாடமும் தமிழ் இலக்கியமுமாய் அமைந்து பயன்படுமென் பதைச் சொல்ல வேண்டியதில்லை."
(தொல்காப்பியப் பதிப்பு-தமிழ் தந்த தாமோதரம் பிள்ளையின் பரோபகாரம், பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை, ஈழகேசரி 17-09-1950 இதழில் வெளியான கட்டுரை, தாமோதரம் - அநுபந்தம் பக். 144).
மேலே தரப்பட்டுள்ள பந்தியிலே பண்டிதமணி வெளியிட்டிருந்த வேண்டு

Page 133
கோள் பொன்னையா அவர்களால் நிறை வேற்றப்படவில்லை. 1971இல் யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தினராலேயே இவ்வேண்டுகோள் நிறை வேற்றப்பட்டு இராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்களின் பதிப்புரை கள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளி யாயின. இந்நூலுக்குப் பண்டிதமணி அணிந்துரை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டு அறிஞர்களுக்குச் சமமாக வும் சமாந்தரமாகவும் நூல்களை எழுதுதல், பதிப்பித்தல், உரைகாணல் முதலாகிய தொண்டுகளை ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் பன்னெடுங் காலமாகச் செய்துவந்ததைப் பொருமை, காழ்ப்பு முதலிய காரணங்க ளாலே தமிழகத்தவர் இருட்டடிப்புச் செய்ய முற்பட்டு அதனல் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர் இராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை. தொல் காப்பியம் - சொல்லதிகாரம் - சேஞவரையம், கலித் தொகை, வீரசோழியம், சூளாமணி, தொல் காப்பியத்தின் எழுத்து, பொருளதிகாரங்கள் என்பவற்றை மிகவும் சிரமப்பட்டுத் தேடி ஆராய்ந்து நூல்களாய் வெளியிட்ட பரோப காரியான இப் பெரியாரின் பதிப்புக்களில் பிழையேற்றியும் அவற்றிற் சிலவற்றை அவ ருக்கு முன்பாகத் தாமே பதிப்பித்துவிட்ட தாகப் பொய்ப் பிரசாரம் செய்தும் தமிழகத் தவர் விளைத்த இடையூறுகள் மிகப் பல.
பண்டிதமணி இவற்றையெல்லாம் கேட்டும், நூல்கள் வாயிலாய் ஆராய்ந்து பொய்ம்மை நீக்கி உண்மைகளை நிறுவ முற் பட்டும் ஈழத் தமிழ் அறிஞர்களின் சார்பில் தம் காலத்தின் தொடக்கத்தில் பெரும் போராளியாய் விளங்கியவர். தமிழக அறி ஞர்கள், புலவர்கள், பெரியார்கள் ஆகியோ ருக்கு ஈழத்துத் தமிழறிஞர் எவ்வகையிலும் குறைந்தவரல்லர் என்று நாவலருக்குப் பிறகு நாவலிக்கப் பேசியும் கைவலிக்க எழுதியும் வந்த முன்னேடி பேராசிரியர்கள் க. கண பதிப்பிள்ளே, சு. வித் தி யானந்தன், க.கைலாசபதி,கா.சிவத்தம்பி ஆகியோருக்கு எல்லாம் முற்பட இப்பணிக்குத் தம்மை

32 -
அர்ப்பணித்தவர். இது ஒன்றே பண்டிதமணி யின் சிரஞ்சீவித்துவப் புகழுக்குப் போது மானது என்று சொல்லலாம்.
தருக்க ரீதியாகக் காரணகாரியம், மேற் கோள் முதலியவற்றை எடுத்துக் காட்டித் தமது கருத்தினை நிறுவுவதில் வல்லவர் பண்டிதமணி என்பதற்கு, " தாமோதரம் " அணி ந்து ரையே சான்று. தாமோதரம் பிள்ளை அவர்களைக் காழ்ப்புக் காரணமாகக் கண்டித்தும் குறைகூறியும் அவரின் பணிகளை இருட்டடித்தும் வந்த தமிழகத்தறிஞர்க ளுக்கு அதே தமிழகத்து நடுநிலையாளர் சிலரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டிப் பிள்ளையவர்களின் முதன்மையை நிறுவுவ தோடு அணிந்துரை தொடங்குகின்றது. இவ்வாறு மேற்கோள்களுக்குப் பயன்படுத் தப்பட்ட அறிஞர்கள் குளத்தூர் முனிசிப் வேதநாயகம்பிள்ளை (பிரதாப முதலியார் சரித்திரம் - முதல் தமிழ் நாவல் - எழுதிய வர்), வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (தமிழ் மொழி வரலாறு, நாடகவியல் நூல் களின் ஆசிரியர்), வையாபுரிப்பிள்ளை (தமிழ் மொழியியல், இலக்கிய வரலாற்ருய்வா ளர், ஆராய்ச்சிப் பதிப்பாசிரியர்) ஆகியோர். வாரம் பெற்ருே, தீரக் காய்ந்தோ உண் மைக்கு மாருக எதுவும் சொல்லாத உயர் பண்பாளர்கள் இவர்கள் என்பதையும் பண்டி தம ணி, எடுத்து விளக்குமுகமாக இவர்கள் பற்றிய கருத்துரைகளை முதலிலே தந்து அறிமுகஞ் செய்கின்ருர்.
இவர்கள் மூவருள்ளும் பண்டித பரம் பரையினரின் பெரும் கண்டனத்துக்கு உள் ளானவர் வையாபுரிப்பிள்ளை (பேராசிரி பர்). தமிழிலக்கிய இலக்கண நூல்களின் காலங்களை மிகவும் பின்னுக்குக் கொணர்ந் தவர், தமிழுக்கு வடமொழி செவிலித்தாய் என்றவர் என்னும் காரணங்களே இவர்மீது பண்டிதர்கள் வெறுப்புக் கொண்டமைக்கு அடிப்படையாகும். பண்டிதமணி தமிழ் நூல்களின் காலத்தைப் பொறுத்தவரை யிலே வையாபுரிப் பிள்ளையின் கருத்துக்கு முரணுனவராகவே இருந்திருப்பார் என்ப தற்கு ஐயம் இல்லை. ஆனல் தனித்தமிழ்க்

Page 134
கருத்துடையவர்களுக்குப் பண்டி தம ணி என்றுமே எதிரி. "வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்” என்ற அப்பர் வழியே நாவலரின் மாணுக்க பரம்பரையினரான பண்டிதமணியின் வழி யும் ஆகும். வேதசிவாகமங்கள் அருளப் பட்ட அருமந்த மொழியிற் பேரறிஞரான சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவரின் நன் மாணுக்கர், வடமொழிக் காழ்ப்புடையவ ராய் இருத்தல் எங்ங்ணம்?
ஆனல் நீரை நீக்கிப் பாலை அருந்தும் அன்னத்தை ஒத்த பண்டிதமணி, வையா புரிப்பிள்ளையின் திறமையையும் நற்பண்பு களையும் மதிக்கத் தவறவில்லை என்பதை அவர், பிள்ளைபற்றிக் கூறும் பின்வரும் கருத்துரை மூலம் அறிந்துகொள்ளலாம்:
* வையாபுரிப்பிள்ளை இந்த நூற்ருண் டிற் பிரசித்தமானவர்; சென்னைச் சர்வகலா சாலையில் தமிழ்த்துறைத் தலைவராயிருந்து, தமிழாராய்ச்சி செய்தவர்; ஆராய்ச்சித்துறை யில் பெரும்புகழ் படைத்தவர்; சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், அருமந்த நூல்களைப் பதித்தற்குப் பட்ட கஷ்டங்களை உள்ளவாறு உணர்ந்தவர்; பிள்ளையவர்களின் அழுக்காறற்ற தூய இதயத்தை நன்கு தெரிந்தவர்.”*
(தாமோதரம், அணிந்துரை, பக். IV)
தாமோதரம்பிள்ளைமீது ஆராக்காதல் கொள்ளப் பண்டிதமணிக்கு அமைந்த கார ணங்களிலே தலையாயது, அவரின் மதிப் பார்ந்த மகான் தமிழின் பொருளியல் பற்றிக் கூறிய அதி நுட்பக் கருத்துக்களுக்கெல்லாம் பிள்ளையின் தொல்காப்பியம்-சொல்லதிகார, பொருளதிகாரப் பதிப்புக்களே அத்திவார மாய் அமைந்தன, என்பதாகும்.
"தத்துவப் பெரியார் ஒரு வருக்குத் தாமோதரம்பிள்ளை அவர்களின் பதிப்புக் களில் இரு புத்தகம் உபகாரப்பட்டு, அவர் சிந்தனைக்குத்தூண்டுகோலாயமைந்தமையை நினைக்குந்தோறும் பிள்ளைபால் ஒர் ஆராமை பிறக்கிறது; உள்ளம் குளிருகிறது".
(டிெ, அணிந்துரை, பக். W)

3 -
இக்கூற்று இக்கால ஆய்வாளர்களுக்கும், விமர்சகர்களுக்கும் கஞ்சிப் பருப்புள்ளே கல் அகப்பட்டது போன்ற மனநிலையை ஏற் படுத்தும் என்பது உண்மையே. ஆளுல் பண்டிதமணி போன்றவர்கள் நூலிலும் நூலாசிரியனிலும் நூலை ஆற்றுப்படுத்திய நல்லாசிரியனை, குருவைத் தெய்வமாகப் போற்றும் மரபுவழி வந்தவர்கள் என்பதை யும் நாம் இவ்விடத்தில் மனங் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பழந்தமிழ் நூல்களின் பதிப்புத்துறை வரலாற்றினை இரத்தினச் சுருக்கமாகத் தரும் பந்தி இது:
** பதிப்புத்துறையில் சென்ற நூற்ருண் டின் மத்திய பகுதியை நாவலர் காலம் என்று சொல்லலாம் ; அவர் மக்களை வாழ் வாங்கு வாழவைக்கும் முறையில், வசன நூல்கள் எழுதியும், நூலுரைகள் செய்தும், பழைய நூலுரைகளை வெளிப்படுத்தியும் அச்சிற் பதிக்கும் துறையைப் பயன்படுத்தி ஞர்; நாவலரையடுத்துச் சென்ற நூற்ருண் டின் பிற்பகுதி தாமோதரம்பிள்ளையவர்க ளின் காலமேயாம் : அதனைத் தொடர்ந்து இந்த நூற்ருண்டுத் தொடக்கமான பகுதி சாமிநாதையர் காலமாகும்.'
(டிெ, அணிந்துரை, பக். W)
அடுத்து, நாவலர் தாமோதரம்பிள் ளையை ஊக்கி வழிநடத்திப் பதிப்புத்துறை யில் ஈடுபடுத்திய வரலாறும், பிள்ளை சாமி நாதையரை ஊக்கிப் பதிப்புத்துறையில் இறக்குவித்த வ ர ல |ா றும் சான்றுக ளோடு தரப்படுகின்றன. தொடர்ந்து பிள்ளை யவர்களின் பதிப்பும் ஆய்வுகளும் பண்டித மணியின் ஆய்வுக்கு உள்ளாகின்றன. ஆய்வு பற்றிப் பண்டிதமணி கொண்ட கருத்தும் பிள்ளையின் ஆய்வு பற்றிய தம் நோக்கும் மிகச் சுருக்கமாகத் தரப்படுகின்றன:
**ஆராய்ச்சி அவ்வவர் அறிவாற்றலுக் கேற்ற ஊகம்’ என்பது ஆராய்ச்சித்துறை யில் மேம்பட்ட மேலைத்தேச மேதை ஒரு வரின் கூற்று.

Page 135
தம் ஆராய்ச்சிகளை முடிந்த முடிபுகள் என்று பிள்ளையவர்கள் வற்புறுத்தவில்லை : நல்ல முடிபுகளை ஏற்றுக்கொள்ளும் நிலை யில் பிள்ளையவர்கள் இருந்தார்கள்.
பிள்ளையவர்களின் தமிழார்வம், விடா முயற்சி, மனப்புனிதம், பரோபகாரம் என் பவை நாமெல்லாம் பின்பற்ற வேண்டியவை. பிள்ளையவர்களின் சரித்திரம் தமிழ்ச் சரித் திரத்தின் ஒரு பகுதி."
(ஷெ, அணிந்துரை, பக். wii)
இதற்கு அடுத்தபடியாகத் தாமோதரம் பிள்ளையவர்களின் பதிப்பிற்கு முன்பே தொல்காப்பியம்-சொல்லதிகாரம் - பதிப்பு ஒன்று வெளிவந்ததாகக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி பற்றி அணிந்துரை சுருக்கமாகக் கூறுகின்றது. இதன் விரிவான விளக்கத்தினை அறிய விழைவோர் *தாமோ தரம் நூலின் அநுபந்தமாய் வெளிவந் துள்ள " தொல்காப்பியப் பதிப்பு" என்ற பண்டிதமணியின் கட்டுரையைப் படித்தல் வேண்டும். ஆதாரபூர்வமானதாயும், எடுத் துக்கொண்ட கருத்தை நிறுவுவதாயும், பண்டிதமணியின் கண்டனத்திறன், அங்கதப் போக்கு என்பவற்றை நன்கு புலப்படுத்து வதாயும் இந்த அநுபந்தக் கட்டுரை விளங்கு கின்றது.
(கட்டுரைத் தொடக்கத்தில் (நூலில்) கட்டுரை “ ஈழகேசரி’யிலே வெளியான தேதி என, 17-09-50 தரப்பட்டுள்ளது. கட்டுரை இறுதியில் 06-09-50 என இடப்பட்டிருக்கி றது. இந்தத் தேதி மாறுபாட்டிற்கான கார னம் புலப்படவில்லை - கட்டுரையாளர்
** நம்முடைய சைவசமய நூல்களை எல்லாருக்கும் எளிதில் உபயோகமாகும் பொருட்டு, வசன நடையிற் செய்து அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தின் அது பெரிய புண்ணியமாகும் என்று துணிந்து சில வரு டங்களுக்கு முன் பெரிய புராணத்தை அப் படிச் செய்தேன். அது அநேகருக்குப் பெரும் பயன் விளைத்தலைக் கண்டறிந்தமையால் கந்த புராணத்தையும் அப்படியே செய்கி றேன்" என்று துணிந்து, பூரீலபூரீ ஆறுமுக

34 -
நாவலரால் தொடங்கப் பெற்றுப் பின் அவரின் மாணவரும் சிதம்பரம் சைவப்பிர காச வித்தியாசாலையின் தருமபரிபால கராய் விளங்கியவருமான ச. பொன்னம்பல பிள்ளையவர்களால் பூர்த்தியாக்கப்பட்டு வெளியான கந்த புராண வசனம் ? இரண் டாம் பதிப்பாக, 1981ஆம் ஆண்டில் பூரீலழறீ ஆறுமுகநாவலர் சபையால் வெளியிடப் பட்டபோது, அதற்குப் பண்டிதமணியவர் கள் சிறந்ததோர் அணிந்துரை வழங்கியுள் ώτίτή .
கந்தபுராணம் தோன்றிய காலம், அதன் பெருமை, அதனை இயற்றிய ஆசிரி யர் பெருமை, அப்பெருநூல் யாழ்ப்பாணத் தில் அறிமுகமான வகை, கச்சிக் கணேசை யர் யாழ்ப்பாணம் வந்து அரியாலைச் சித்தி விநாயகர் ஆலயத்தில் புராண படன மர பினைத் தொடக்கி வைத்த செய்தி, நாவலர் அதனைப் போற்றிய விதம், கந்தபுராண வசனம் எழுத நேர்ந்த வரலாறு, அவ்வாறு எழுதப்பட்டதன் இன்றைப் பயன்பாடு என்ற பல விடயங்களையும் இவ்வணிந்துரை யிலே பண்டிதமணி விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். வழக்கமான அவரின் துள்ளிக் குதிபோடும் உரைநடையினை இவ் வணிந்துரையிலே காணல் இயலாது. தமது ஞான குரு பரம்பரையின் முதல்வரான நாவலரோடு தொடர்புபட்ட நூல் என்ற காரணத்தாற் போலும், மிகுந்த பயபத்தி யுடனும், அடக்க ஒடுக் கத்து டனும் இது எழுதப்பட்டுள்ளதெனலாம். <鹦á ருெழுக்காக இதன் அணிந்துரை அவரால் நெறிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
*" கந்தபுராணம் கம்பராமாயணத்துக்கு ஒரு நூருண்டு முந்தியது. சுப்பிரமணியக் கடவுளின் திருவருள் கைவந்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் அருளியது. திரு முறை வரிசையில் வைத்துப் போற்றுந் தகையது. *
எனத் தொடங்கும் இவ்வணிந்துரை யிலே, கந்தபுராண வசனம் பயன்படப் போகும் வகைபற்றிப் பண்டிதமணி கூறுவன சிந்தனையைத் தூண்டுவனவாயுள்ளன.

Page 136
ത്ത
** வசனம் வாசிக்கும் காலம் தூரத்தில் இல்லை. வீடுகளில் வீட்டாரும், அயலில் உள்ளவரும், சுற்றத்தவரும் விரதமிருந்து வசனத்தை வாசிக்குங் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
சுபதினத்தில் தொடங்கிச் சுபதினத்தில் பூர்த்தியாக்கலாம். பூர்த்திக் காலத்திலும், திருவவதாரம், திருக்கல்யாணம் முதலிய விசேட நிகழ்ச்சிகளிலும் இயன்ற அளவு விசேட ஆராதனை, அன்னதானம் நடக்க Grit.'
(கந்தபுராண வசனம், அணிந்துரை) காரை நகரை ப் பிறப்பிடமாகக் கொண்டவரும், நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையிலே கல்வி கற்றவரும், சில காலம் அங்கு தலைமையாசிரியராயிருந்த வரும், தெல்லிப்பழைக் கிறிஸ்தவ ஆசிரிய கலாசாலையிலே ஆசிரியர்ப் பயிற்சி பெற்று இறுதிப் பரீட்சையும் எழுதி விட்டு மறு நாள் ஞானஸ்நானம் பெறவேண்டியிருந் ததால் அதனைத் தவிர்த்துக்கொள்ள இரவுக் கிரவே கலாசாலை மதிலைத் தாண்டிக் குதித்து வீடுவந்து சேர்ந்து, கிறிஸ்தவராகாததால் ஆசிரியர் தராதரப் பத்திரத்தை நீண்ட காலம் பெற முடியாதிருந்தவரும், சைவ பாடசாலைகள் தாபிப்பதிலும் சைவாசிரியர் கலாசாலை தோற்றுவிப்பதிலும் தமது வாழ் நாளையே அர்ப்பணித்தவரும், கோப்பாய் ஐக்கியபோதஞ பாடசாலையைக் கையேற்றுச் சைவ ஆசிரியர்களை முதன் முதல் உருவாக் கியவரும், தமக்கென வாழாச் சைவர்க்கு உரியாளருமாகிய திரு. ச. அருணுசலம் (1864 - 1920) அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் 1971இல் வெளியாயிற்று.
இந் நூலுக்கு 18 பக்கங்களிலே பண்டித மணி, அணிந்துரை வழங்கியுள்ளார். நாவல ரவர்களின் யாழ்ப்பாணச் சமயநிலை" பத் தொன்பதாம் நூற்ருண்டிலே இங்கு நிலவிய சமய சீர்கேடுகளைப் பல சான்ருதாரங்க ளுடன் விளக்கும் விரிவான கட்டுரையாகும். இதேபோன்று இவ்வணிந்துரை இருபதாம் நூற்ருண்டின் முதற்காலில் யாழ்ப்பாணக் கல்விநிலை அடைந்திருந்த சீர்கேடுகளையும் சைவ மாணவர் அந்நிய சமயச் சூழலில்

5 -
அடைந்த அநர்த்தங்களேயும், அந்த அநர்த் தங்களைப் போக்க அருணுசலம் அவர்கள் மேற்கொண்ட தியாகப்பணிகளையும் மிக விரிவாக, ஆதாரபூர்வமாக எடுத்தியம்புகின் றது.அந்நிய சமயச் சூழலிலே ஆரம்பக் கல்வி பெற்ற தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை எடுத் துக் காட்டவும் பண்டிதமணி தவறவில்லை. நாவலர் பரம்பரையின் கடைசிக் கொழுந் தென்று போற்றப்பட்ட, போற்றப்படும் பண்டிதமணிக்கே இந்நிலையாஞல், அன்று மற்றையோர் எந்நிலைக்கு ஆளாகியிருப்பர் என்று சொல்லவேண்டியதில்லை. அவர்களை யெல்லாம் "புன்னெறி விலக்கி மேலாம் நன் னெறி ஒழுகச் செய்த அருணுசலம் அவர்கள் பற்றிப் பண்டிதமணி எழுதியுள்ள அணிந் துரை சிந்தனையைத் தூண்டுகின்றது; நெஞ் சைத் தொடுகின்றது. இந் நூற்ருண்டின் தொடக்க காலத்தில் யாழ்ப்பாணக் கல்வி இருந்த நிலையினை ஆராய முற்படுவோருக்கு இவரின் அணிந்துரை உசாத்துணைபுரியும் என்பதற்கு ஐயமில்லை.
அணிந்துரையின் இறுதிப் பகுதி இன் றுள்ள நிலையைத் தயை தாட்சணியமின்றிக் கண்டனம் செய்வதாயும் அமைந்துள்ளதை நோக்குகையில் அதன் ஊடாகப் பண்டித மணியின் நெற்றிக்கண் வீச்சையும் நாம் தரிசித்தவர் ஆகின்ருேம்.
‘இன்றைய நிலை யாரும் அறிந்தது. தமிழ், தமிழர், சைவம், சைவர், கோயில், குருக்கள், ஆசிரியர், மாணவர் என்றின் ஞேரன்ன வார்த்தைகள் யாவும் கருத்தற்ற எழுத்துக் கூட்டங்களாய் விட்டன.
பிரமுகர்கள் என்று வருபவர்கள் காட் டும் வழிகள் “ஆற்றிற் கிடந்த முதலை கண் டஞ்சிப்போய், ஈற்றில் கரடியை எதிர்ப் பட்ட வழிகளாய்த் தோன்றுகின்றன.
பிறழ்வுகளின் மூலத்தைத் தொட்டுக் காட்டி வழி நடத்துதற்கு நமக்கு ஆளில்லை. ஒர் அருணுசலம் உதயஞ் செய்ய வேண்டு மானல், அதற்குத் தவம் வேண்டுமே! நம்மிடம் தவம் உண்டோ!
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற்
செய்தவம் ஈண்டு முயலப் படும்."
(திரு. ச. அருணுசலம், பக். XXY)

Page 137
எனக்குத் தெய்வமாக
டி. டி. நான
பண்டிதமணி என் தமிழுக்கு ஆசியுரை அளித்த உத்தமர். அவருடைய ஆச்சிரமத் திலும் தங்கியிருந்த எனக்குத் தகப்பனைப் போல அன்பு செய்தவர். நான் 1969ஆம் ஆண்டு தமிழ்ப் பரீட்சையில் சித்தியடைந்த போது சுன்னகம் கந்தரோடை ஸ்கந்த வரோதயக் கல்லூரி ஒழுங்கு செய்த-தமிழ்ப் பண்டிதர்கள் - வித்து வான்கள்-புலவர் கள்-மேதைகள்-சான்றேர்கள் உட்படத் தமிழ் மகான்கள் பங்குபற்றிய பாராட்டு விழாவுக்கு வருகை தந்து சிறப்புரையும் வழங்கியவர் இவர். நான் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்த நூல்களில் ஒன்றுக்கு அணிந்துரை இவர் வழங்கினர். சாகித்தியப் பரிசு பெறுவதற்காகக் கொழும் புக்கு வந்து யாழ்ப்பாணம் திரும்பிய பண்டிதமணி ‘வீரகேசரி? பத்திரிகைக்கெழு திய கட்டுரையில் என்னைப் பாராட்டி எழுதி யுள்ளார். என்னுடைய குடும்பத்தவர்களு டன் 1969ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் தமது கையொப்பமும் திகதியும் இட்டு எனக்கு அன்பளிப்பாக வழங்கினர் இவர். இப்படம் தற்பொழுது ஒரு பொக்கிஷமாக என் வீட்டில் மிக முக்கியமான இடமொன்றில்
(85ஆம் பக்கத் தொடர்ச்சி)
இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றி லிருந்து பண்டிதமணியின் அணிந்துரைகள் (i) சுவையானவை, (i) ஒழுங்கு பெற அமைக்கப்பட்டவை, (iii) தெளிவோடு காரண காரிய ஒழுங்கில், தருக்கவியல் கட வாது எழுதப்பட்டவை, (iv) நூலாசிரியரின் உள்ளம், தரம், வெளிப்பாட்டுத்திறன் என்பவற்றை உணர்த்தும் வகையில் அறி முகம் செய்துவைப்பவை, (V) பண்டித மணிக்கே உரிய தனித்தன்மையான வசனப் பாங்கில் அமைந்தவை, (wi) அங்கதமும்

இருந்த பண்டிதமணி
பக்கார அவர்கள்
காட்சி அளிக்கின்றது. இன ஒற்றுமைக்காக ஒவ்வொரு சிங்களவர் தமிழும், ஒவ்வொரு தமிழர் சிங்களமும் கற்கவேண்டும் என்ற எனது கொள்கையை 1969ஆம் ஆண்டில் அநுமதித்தவர். 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழா ராய்ச்சி மகாநாட்டின் முதற் கூட்டம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த பொழுது நான் சமர்ப்பித்த கட்டுரையையும் வாசித்து அதில் அடங்கிய எல்லாக் கருத் துக்களுக்கும் அங்கீகாரம் அளித்தவரும் இவரே. சுருக்கமாகச் சொன்னுல் எனக்குத் தெய்வமாக இருந்தவர் இவர். இவருடைய மரணச் சடங்குகளில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கொழும்பில் நடக்கும் அஞ்சலிக் கூட்டத்துக்கும் வரமுடி யாமல் போயிற்று. சென்ற பெப்ரவரி 07ஆம் திகதி (7-2-86) தொடக்கம் சுகமில்லாமல் ஆஸ்பத்திரிப் படுக்கையொன்றில் ஆறுதலாக இருக்க வேண்டிய நிலையே இதற்குக் கார ணம். வேருெரு இனத்தில் பிறந்தவராகிய எனக்கு அவர் செய்த பேருதவிகளின் ஒரு துளியை மட்டுமே மேலே காட்டியுள் ளேன். பண்டிதமணி ஐயாவின் ஆன்மா சாந்தியடையும்படி எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகின்றேன்.
He
கண்டனமும் ஆங்குத் தலைகாட்டும் என் பதை ஓரளவு அறிந்துகொண்டோம்.
பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை யினர் தாம் வெளியிட்ட ஒவ்வொரு நூலி லும், பண்டிதமணியின் அணிந்துரையின் தொகுப்பு "அணிந்துரை மஞ்சரி’ என்ற பெயரில் நூல் வடிவில் வெளியாகும் என்று விளம்பரப்படுத்திவந்துள்ளனர். தாமோதரம் பிள்ளையின் பதிப்புரைத் தொகுப்பான "தாமோதரம்" போலப் பண்டிதமணியின் *அணிந்துரைமஞ்சரி’யும் ஈழத் தமிழிலக்கிய வரலாற்றின் ஒரு கூருக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Page 138
பண்டிதமணியும் ை இரா. வை. கனகர (தமிழ்த்துறை, பேராத
யாழ்ப்பாணம், செந்தமிழ்ப் புலமையும் சான்ருண்மையும் சிவநெறிச் சார்பும் செம்புலச் செல்வமும் ஒருங்கே வாய்க்கப்பெற்று மரபுநிலை திரியாத எழுத்தும் பேச்சும் ஒழுக்கமும் உடைய பல நன்மக்களைப் பெருந் தமிழகத்திற்கு உதவியுள்ளது, அத்தகைய நன்மக்க ளுள் பண்டிதமணி அவர்கள் ஒருவர் ஆவர். (சித்தாந்த சிகாமணி க. வச்சிரவேலு முதலியார்)
கிறித்து சகாப்தங்களுக்கு முன்பிருந்தே ஈழநாடு சைவப் பாரம்பரியம் மிக்க நாடாக விளங்குகின்றது. ஆரிய சக்கரவர்த்திகளின் ஆட்சியின் பின் ஏற்பட்ட ஐரோப்பியரின் படையெடுப்பால் சைவப் பாரம்பரியம் நலிவடையத் தொடங்கியது. அந்நிய மத மான கிறிஸ்து சமயத்தின் பல்வேறு பிரிவு களும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. இந்நிலையில் நின்று மக் களைக் காப்பாற்றக் கிறிஸ்துவ சமயத்தைத் கபளிகரஞ் செய்யத் தோன்றியவரே நல்லூர் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் ஆவர். நாவலர் அவர்களின் தன்னலமற்ற ஒப்பற்ற பல் வகைப் பணிகள் சைவமரபில் புதிய பாரம் பரியங்களை வளர்த்துச் செல்லக் காரணங்க ளாக அமைவதாயின. நாவலரவர்களால் மேற்கொள்ளப்பட்ட புதிய நடவடிக்கைகள், அவரினதும், அவர்கள்தம் மாணவ பரம் பரையாலும், அபிமானிகளாலும் பாரம் பரியமாக நன்கு பேணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்க தொன்ருகும். நாவலரவர் கள் தம் பாரம்பரியங்களை வரன்முறையா கப் பேணிய மாணவ பரம்பரையிலே வந்த வரே பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் ஆவார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்ம ராட்சிப் பகுதியிலே உள்ள மட்டுவில் என் னும் கிராமத்தில் 1899ஆம் ஆண்டு ஆணி மாதம் 27ஆம் திகதி பிறந்த பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தமது ஆரம்பக்

சைவ பாரம்பரியமும் த்தினம் அவர்கள் னைப் பல்கலைக் கழகம்)
கல்வியினை உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை யின் திண்ணைப் பள்ளியிலும் ச. பொன்னம் பலம்பிள்ளையின் திண்ணைப் பள்ளியிலும் அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் பெற்ருர், தமது பத்தாம் வயதிலே அமெரிக்க மிஷனை விட்டு நீங்கிய பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள் தாயாரின் மறைவின்பின் முறைசார்ந்த கல்விப்படிப்பினை விட்டு வயல் செய்வதிலும் சூதும் கவறும் விளையாடுவதி லும் பெருங் கவனம் செலுத்தி வந்தார்.2
ஆனலும் தந்தையார் ம. க. வேற்பிள்ளை யின் மரபிலும் அயலிலும் வாழ்ந்தமையால் அவரும் பெளராணிக நூல்களைப் படித்துப் பயன் சொல்லும் கல்விமுறையில் மிகுந்த நாட்டம் உடை&வராகக் காணப்பட்ட மையால், தமது பிள்ளையும் அவ்வாருன கல்வியில் தேர்ச்சி பெற்று விளங்கவேண்டு மெனும் பெரு விருப்பால் புராண காவிய ரசனைகளை வளர்க்கும் ஆசிரியர்பால் சி. க. அவர்கள் அனுப்பப்பட்டார். சுமார் பத் தொன்பது வயதுவரையும் வித்துவசிரோ மணி பொன்னம்பலபிள்ளை அவர்களின் மாணவ பரம்பரையில் வந்தோர்களிடம் பாடம் கேட்டமையால் புராண காவிய பாரம்பரியத்திலும் அவை கூறும் பொருள் மரபிலும் மிகுந்த நம்பிக்கை உடையவராக சி. கணபதிப்பிள்ளை அவர்கள் விளங்கினர். 1917ஆம் ஆண்டு ஆனி மாதத்தை அடுத்து இவர் நாவலர் அவர்களின் தமையனுர் புதல்வர் த. கைலாசபிள்ளை அவர்களால் நடத்தப்பெற்ற காவிய பாடசாலையில் கல்வி பெறும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார். இப் பாடசாலை திண்ணைப் பள்ளிக்கூடப் பாடத் திட்டங்களையும் நவீன கல்விப் பாடத் திட்டங்களையும் கொண்டு விளங்கி யது. இப் பாடசாலையின் தலைமைத் தமிழ்ப் புலவராகச் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் திகழ்ந்தார். இப் பாடசாலை தமிழ் அறி வினையும் அதன் மூலம் சைவ மரபினையும்

Page 139
வளர்த்துச் செல்வதோடு நாவலர் காட்டிய பாரம்பரிய உணர்வுகளைச் சுட்டிச் செல்வ தையும் பெரிதும் நோக்கக்கூடியதாக அமைந்திருந்தது.
பெளராணிக மரபிற்குள் உட்பட்டி ருந்த பண்டிதமணி அவர்கள் அறிவின் ஒளி யினையும், தெளிவினையும் இங்கேயே பெறும் வாய்ப்பினைப் பெற்ருர். இதனல் தான் பண்டி தம 6ணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள், ‘மனேஜர் அவர்களும் புலவர் அவர்களும் தன்னிரு கண்மணிகள்? என்று குறிப்பிட்டார் போலும். பிற்காலத்தில் சி. கணபதிப்பிள்ளை அவர்கள் பண்டித மணியாகவோ சைவ சி த் தா ந் த சாகர மாகவோ இலக்கிய கலாநிதியாகவோ மிளிர்வதற்குக் காவிய பாடசாலையில் பெற்ற கல்வியே நிலைக்களமாயிற்று. குறிப்பாகட் புலவரவர்களிடம் பெற்ற கல்வியே அச வொளியை அவருக்கு அளித்தது எனலாம், புலவர் இல்லையேல் சி. க. அவர்கள் இல்லை. அவரைத் தமிழ், சைவ உலகம் அறிந்திருக்க முடியாது. அவ்வாறு அறிவதற்கு உண்பை யான நிலைப்பாடும் இல்லை. காவிய பாட சாலைக் கல்வியையும் (1922) மதுரைத் தமிழ்க் சங்கப் பண்டிதர் பரீட்சையையும் (1926 ஆசிரிய கலாசாலை ஆசிரியத் தராதரப்பது திரப் பரீட்சையையும் (1927-28) முடித்த பண்டிதமணி 1929ஆம் ஆண்டு சைவாசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராக நிய மனம் பெற்ருர். அறிஞர் சு. இராசரத்தின. அவர்களால்4 தொடக்கப்பட்ட சைவாசிரி கலாசாலை சை. வி. வி. சங்க நோக்கத்தில் ஒரு பகுதியாகவும் அமைந்திருந்தது. அ சங்கத்தின் பாரிய நோக்கத்தின் பெரு பகுதியை நிறைவு செய்வதின் ஒரு பகுதி பொறுப்பினை இக்கலாசாலை பெற்றிருந்தது அது. "மேன்மைகொள் சைவ நீதி விளங்கு உலக மெல்லாம்" என்ற பரந்த நோக்கி தனது நோக்கினவளர்த்துச் சென்ற பொரு தும் சைவத்தையும் தமிழையும் அவற்றின் பாரம்பரியங்களையும் வளர்ப்பதே அத6 தலையாய பணியாக அமைந்திருந்தது இப் பேராற்றலுடனும் பண்டிதமணி 8 க. அவர்கள் தனது பாரம்பரிய உணர்வு

88 -
p
ளுடனும் சைவமென்னும் பரந்த நிலப்பரப் பிற்கு நீர் பாய்ச்சவேண்டிய தேவை இங்கு காணப்பட்டது. இச் சங்கத்துடன் சங்க மித்த பண்டிதமணி சி. க. அவர்கள் சைவ சமயத்தின் சமய வாழ்வினை எடுத்தியம்ப வேண்டிய அவசியம் அங்கு ஏற்பட்டது. சைவத்தின் சமய வாழ்வினைச் சிந்தித்த அவர் அதன் சித்தாந்த நெறியினையும், அவரை அறியாது சிந்திக்கத் தூண்டிற்று. பண்டிதமணியின் சித்த்ாந்த நெறி பற்றிய சிந்தனைக்கும் சை. வி. வி. சங்கமே பெரிதும் காரணமாக அமைந்திருந்தது.
1928ஆம் ஆண்டு ஆரம்பமான சைவா சிரிய கலாசாலையில் 1929ஆம் ஆண்டு பண்டிதமணி அவர்கள் தமிழ் விரிவுரை யாளராகவும் அதே ஆண்டு மயிலிட்டி சி. சுவாமிநாதன் அவர்கள் அதிபராகவும் 1930ஆம் ஆண்டு பொ. கைலாசபதி அவர் கள் உப அதிபராகவும் விளங்கினர். பண்டித மணிக்கும் கைலாசபதிக்கும் உள்ள தொடர்பு இக்கலாசாலையில் தோன்றிய தன்று. 1921ஆம் ஆண்டிலே ஈரப்பலாச் சங்கத்துடன் அத் தொடர்புகள் தொடங் கின. சில ஆண்டுகளிலே அவர்களுக்கிடை யில் தொடர்புகள் குறைந்திருந்தன. இரு வரும் ஒரே கலாசாலையிலே ஒருமித்துக் கடமை புரிய நேரிட்டமையையிட்டு இரு வரும் மகிழ்வெய்தினர். இருவரும் ஒரு வருக்கொருவர் நெருங்கிய அன்புடையவர். இருவரின் துறைகள் வேறுபடினும் நோக்கம் ஒன்ருகவே அமைந்திருந்தது. பண்டிதமணி சி. க. அவர்கள் தமிழின் துணை நின்று ஆத்மிக அறிவை நாடினர். ஆனல் பொ. கைலாசபதி அவர்கள் தமிழ், ஆங்கில மொழிகள்மூலம் பெற்ற அறிவினை ஒருங்கு திரட்டி விஞ்ஞானத்தினைக் கொண்டு பிரபல ஆராய்ச்சியையும் அதன் மூலம் ஆத்மிகத்தை யும் சிந்தித்தார். கைலாசபதி அவர்களின் சிந்தனையோட்டம் மிகவும் வேகமானது. அவரது வேகத்திற்கும் பண்டிதமணி சி. க. வேகத்திற்குமிடையே மிகுதியான இடை வெளி உண்டு. இருவரும் ஒருமித்து ஓடத் தொடங்கியபொழுதும் இடைவெளியைப் பண்டிதமணியால் நிரப்பிக்கொள்ள முடிய வில்லை. ஆணுலும் பொ. கைலாசபதியின்

Page 140
- 8
விசையின் வேகத்திலுள்ள சத்தி இவரை இழுத்துக்கொண்டே சென்றது. 1942ஆம் ஆண்டிற்குப் பின் பண்டிதமணி அவர்களால் கைலாசபதி அவர்களை ஒரளவு நெருங்க முடிந்தது. இக் கால கட்டத்தின் பின்பே தான் பண்டிதமணி அவர்களுக்கு இலக்கிய வடிவங்களின் பொருள் மரபுகளெல்லாம், பேதங்களாயும், அபேதங்களாயும், அத்து விதப்பட்டனவாயும் காணப்பட்டன. பிறி தோர் வகையாகக் குறிப்பிடின் அவை, அவையேதாளுய், உடனுய், நீக்கமின்றி ஏகளுய், நிற்பனவாகத் தெரிந்தன. இதஞலேதான் பண்டிதமணி சி. க. அவர் கள் " ஆத்மிகச் செல்வரான உப அதிபர் திரு. பொ. கைலாசபதி அவர்களின் சந்நிதி என் சிந்தனைக்கு ஊற்ருக இருந்தது ?" என்று சிறப்பித்துக் குறிப்பிட்டார் எனலாம்.
பண்டிதமணி சி. க. அவர்களைச் சைவ சித்தாந்த சாகரத்தில் மூழ்கச் செய்தவர் தவமுணி பொ. கைலாசபதி அவர்களே யாவர். கைலாசபதி அவர்களுக்கும் பண்டித மணி அவர்களுக்கும் உள்ள நெருக்கமான உறவும், அன்புப் பிணைப்பும், பண்டிதமணி கைலாசபதி மீது கொண்ட பத்தியும், சிந்தனை ஒருமைப்பாடும் பண்டிதமணி அவர்களைத் தமிழ் உலகத்தினின்று விடுபடச் செய்து சமய வாழ்வில் உட்படுத்திச் சித் தாந்தத்தில் அமிழ்த்திற்று எனலாம். இதற் கோர் புறக் காரணமாக அமைந்திருந்தது சைவ வித்தியா விருத்திச் சங்கம் என்னும் மருத நிலம். பண்டிதமணி அவர்களின் சைவப் பாரம்பரியத்தின் தொடக்கமும் முடிவும் இவ்வழிப்பட்டனவே ஆகும்.
சுருங்கக் கூறின், பண்டிதமணி அவர் களின் சைவப் பாரம்பரியம் நாவலர் அவர் களின் பரம்பரையில், குறிப்பாக வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையின் மாணவ ரான உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்கள் முதல் த. கைலாசபிள்ளை வரை தொடர்புடையோர் காலப் பகுதியில் உற் பத்தியாகி, நீர்வேலி சங்கரபண்டிதர் மாணவ பரம்பரையில் வந்த சுன்னகம் அ. குமாரசுவாமிப்புலவரவர்களுடன் கலந்து, பரந்து, பெரு நதியாகி, பொ. கைலாசபதி என்னும் கங்கையாற்றுடன் சேர்ந்து சங்கம
2

9 -
மாயிற்று. அப் பெறுபேற்றின் செழிப்பால் அறுவடையாகச் சைவ, தமிழ் உலகிற்கும் கிடைத்தனவே அவரது பிரசங்கங்களும், புராணபடனங்களும், கட்டுரைகளும், நூல்
களு
ம், உரை நூல்களும், பிரபந்தங்களும்,
பிறவுமாம். அடிக்குறிப்பு :
1.
பண்டிதமணி கணபதிப்பிள்ளே, சி., மணிவிழா மலர் பாராட்டுவிழாச் சபை வெளியீடு (1959), பக். 2. கணபதிப்பிள்ளை, சி., சிந்தனைக் களஞ் சியம், திருமகள் அழுத்தகம், சுன்னுகம் (1978), டக், 224 மேலது, பக். 231 திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்கள் 1884ளுல் ஆடிமீ" 4ஆந் திகதி வல்வெட்டியில் பிறந்தவர். தாய்மாம ஞன நீதிபதி கதிரைவேற்பிள்ளையின் அரவணைப்பில் வளர்ந்தவர்; தலைசிறந்த சட்டவல்லுநர் நல்லறிஞர். 1930ஆம் ஆண்டிற்குப்பின் தனக்குப் பெரு வரு வாய் தரும், சட்டத்தரணித் தொழிலைக் கைவிட்டுச் சைவத்தையும் தமிழ் மொழி யையும் வளர்க்க முற்பட்டு நின்றர். 1923ஆம் ஆண்டு மார்கழிமீ" 9ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் நிரந்தர உறுப்பின ராகி, 1928இல் அதன் பொதுமுகாமை யாளராகி, 1930இல் பொதுச் செய லாளராகி இருநூற்றுக்கு மேற்பட்ட பல்வகைப் பாடசாலைகளையும், ஒர் ஆசிரிய கலாசாலையையும், இரு அநாதை விடுதிகளையும் நிறுவி, ஒப்பற்ற, அப்பழுக் கற்ற சேவையாற்றினர். நாவலர் அவர்களின் பின் அவரது இலட்சியங்க ளுக்கு முழு வடிவம் கொடுத்த ஒரே மகன் சைவப் பெரியார், அறிஞர் இந்து போட் இராசரத்தினமேயாவர். ஈழநாட்டில் தமிழ்மொழி மூலம் பயிற் றப்பட்ட ஆசிரிய கலாசாலைகளுள் புகழ் மிக்க ஆசிரிய கலாசாலையாகச் சைவா சிரிய கலாசாலை விளங்கிற்று. அதற்கு மேற்கூறிய மும்மூர்த்திகள் எனக் கூறப்பட்ட பெரியோர்களே காரணம் ஆவர். கணபதிப்பிள்ளை, சி., சிந்தனைக் களஞ்
சியம் (1978), பக். xvi.

Page 141
எம் இதயம் கவர் வண்ணுர்பண்ணை நாவலர் ம. வி. அதி
இலக்கியத்தின் சுவையை இலக்கியங் கற்ருேரே அறிவர். கற்ருரைக் கற்ருரே காமுறுவர். ஆணுல் இலக்கியங் கல்லாதவரும் இலக்கியத்தினை விரும்பி இரசிக்கும் வண்ணம் உரையாடவும், உரையாற்றவும் வல்லவர் பண்டிதமணி அவர்கள். பண்பின் சிகரமான அருளாளர் பண்டிதமணியைக் கற்றவர்கள் மாத்திரமன்றிக் கல்லாதவர்களும் தேடிச் சென்று பார்த்தனர். " பாரதி " என்ருல் சுப்பிரமணிய பாரதியார் என்பதுபோல பண்டிதமணி" என்ருல் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களேதான்.
தமிழ்த்திரு நாட்டுக்கும், ஈழ நன்னட் டுக்கும் பாலம் அமைக்க விரும்பினுன் பாரதி. பூரீலழறீ ஆறுமுக நாவலருக்கும் இன்றைய சந்ததியினருக்கும் இடையே உறுதியான பாலமாய்த் திகழ்ந்தவர் பண்டிதமணி அவர்கள். ஏறத்தாழ அறுபது வருடங்கள் தமிழன்னைக்கும், சைவநெறிக்கும், நாவலர் பாரம்பரியத்துக்கும் அருந்தொண்டாற்றிய பெருந்தகை பண்டிதமணி என்ருல் அது மிகையாகாது.
நாவலர் பெருமான் தமிழுக்கும், சைவத் துக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது; ஈடுசெய்ய முடியாதது. தமிழினம் என்றென் றும் அவருக்குக் கடமைப்பட்டதாகவே இருக்கும். நாவலரின் இலட்சியங்கள், செயற் பாடுகள் அத்தனையும் தமிழினத்தின் மேம் பாட்டுக்கானவையே. இப் பெருமகனின் பெருமையையும், அவர்களின் பணிகளின் உயர்வையும் முற்று முழுதாக உணர்ந்தும், அவற்றைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தியும் வந்தவர் பண்டிதமணி அவர்கள். நாவலர் பெருமானப் பற்றியும், அவர்தம் பணிகள் பற்றியும் எத்தனை மணித்தியாலங்களா யினுஞ்சரி, எத்தனை தடவைகளாயினுஞ் சரி சலியாது பேசிக்கொண்டேயிருப்பார் இத் தமிழ் மகன்.
வண்ணுர்பண்ணை நாவலர் பாடசாலை, நாவலர் தருமம், நாவலரின் ஐந்தாண்டுத் திட்டம், நாவலரின் சைவ, தமிழ் நூல்கள்

s Ђдѣ பணடிதமண பேர் ப. சிவஞானசுப்பிரமணியம் அவர்கள்
என்பவை பற்றி யார்யாருடன் பேச வேண் டுமோ அவர்களுடன் எல்லாம் G86 பற்றிப் பேசி நாவலரின் இலட்சியங்களைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என ஆர்வத்துடனும், உறுதி யு டனும் எடுத் துரைப்பார்; எம்மிடமும் எடுத்துரைத் ģ6ī6rti.
பண்டிதமணி அவர்கள் நாவலர் தரும கர்த்தா சபையின் ஆரம்பகால முதலேயான உறுப்பினராகவிருந்து வழங்கிய ஆலோசனை களும், ஆற்றிய பணிகளும் அளவிடற்கரி யன. அவர் தள்ளாமை காரணமாகச் சபையின் கூட்டங்களுக்குச் சமுகமளிக்க முடியாமற் போனபோது, தமது அன்பிற் குரிய மாணவரான, உரும்பராய் சைவத் தமிழ் வித்தியாலய உப-அதிபர் திரு. அ. பஞ்சாட்சரம் அவர்களைத் தமது பிரதிநிதி யாக அனுப்பிவைத்தார். அவர் கூட்டங் களுக்குச் சமுகமளிக்காதபோதெல்லாம் எழுத்து மூலம் சபைக்கு அதனைத் தெரிவிக்கத் தவறி யதேயில்லை. பண்டிதமணியின் வாழ்வுக்கு ஊன்றுகோலாகவும், உற்ற துணையாகவும் விளங்கிய திரு. பஞ்சாட்சரம் அவர்களைத் தற்போது சபை தனது நிரந்தர உறுப்பின ராக்கியுள்ளது.
பண்டிதமணியின் குறிக்கோளுக்கமைய நாவலர் சைவ தமிழ்ப் பண்பாட்டு நிலை யம் அமைக்கப்பட்டு, வண்ணுர்பண்ணை நாவலர் மகா வித்தியாலய மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரவேச, பாலபண்டித வகுப்புக்கள் இலவசமாக நடத் தப்படுகின்றன. கணிசமான தொகையினர் இரு வகுப்புக்களிலும் பயில்கின்றனர். தமிழ்ப் புலமை மிக்க அறிஞர்களான பண்டிதர் திரு. மு. கந்தையா, திரு. க. சி. குலரத்தினம், வித்துவான் திரு. இ திருநாவுக் கரசு, பண்டிதர் பிரம்மழீ ச. பஞ்சாட்சர eFiLDfT, வித்துவான் சி. குமாரசாமி, வித்துவான் திரு. க. சொக்கலிங்கம், திருமதி மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம், பண்டிதை திருமதி புனிதவதி பாலசுந்தரம்,

Page 142
சைவப்புலவர் திரு. வ. கந்தசாமி, திரு. க. உமாமகேஸ்வரம் பிள்ளை, திரு. அ. பஞ்சாட் சரம், திரு. பி. நடராசா ஆகியோர் வகுப்புக் களைச் செவ்வனே நடத்தி வருகின்றனர். இப் பயனுள்ள பணி அனைவராலும் போற் றுதற்குரியது.
பூரீலபூgரீ ஆறுமுகநாவலரின் பின் எம் மத்தியில் சைவமும், தமிழும் தழைக்கத் தொண்டாற்றியவர்கள் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களே என்பதில் ஐய மில்லை. தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், சைவசித்தாந்த அறிவும் நிரம்பிய ஆசிரியர் பரம்பரையொன்றினை உருவாக்கித் தந்த பெருமைக்குரியவர் இத் தமிழ்ப் பேராசான்.
மலையகத்திலே சில ஆண்டுகளுக்கு முன் இரு முஸ்லிம் அதிபர்கள் மிக அழகாகத் தமிழில் உரையாடிக் கொண்டிருந்ததனைக் கண்டு அவர்களோடு அளவளாவி இவ்வளவு அழகாகத் தமிழைப் பேசுகின்றீர்களே!" என எனது வியப்பைத் தெரிவித்தபோது அவர் கள் தந்த பதில் அதையும் விட மேலான வியப்பினை ஏற்படுத்தியது. ** இது நாங்கள் பண்டிதமணியிடம் கற்ற தமிழ்; அதுமட்டு மன்றி அம் மகானின் தொடர்பால் நாங்க ளிருவரும் சைவ உணவையே புசிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டோம்" என்று அவர்கள் கூறினர்.
பண்டிதமணியின் சிறப்புக்கும், புகழுக் கும் காரணமானவை, அவருடைய ஒழுக்க சீலம், நுண்ணறிவு, அதீத ஞாபகசக்தி, தெய்வ வழிபாடு, குழந்தையுள்ளம், தியாக மும் எளிமையும் நிறைந்த வாழ்வு என்பன வாகும்.
வெண்ணிற ஆடையும், நெற்றியில் தூய வெண்ணிறும், குழந்தைத் தன்மை யான சிரிப்பும், அழகிய தாடியும் எவரை யும் வசீகரிக்கும் தன்மையுடையனவாய் அவரிடம் விளங்கின. தமிழ் நாட்டிலே அருள் ஒளி வீசும் காஞ்சிப் பெரியவர்போல,

-
எம்மிடையே அன்பும், பண்பும், அறிவும் நிறைந்து பேரொளிச் சுடராய் விளங்கியவர் பண்பாளர் பண்டிதமணி அவர்கள்.
வண்ணுர்பண்ணையில் அமைந்த பூரீலg ஆறுமுகநாவலரின் காவிய பாடசாலையில் 1917 முதல் 1925 வரை சுன்னுகம் பூரீமத் அ. குமாரசுவாமிப்புலவரிடமும், வித்துவான் திரு. ந. சுப்பையபிள்ளையிடமும் மிக உயர்ந்த கல்வியைக் கற்று, தெளிந்த அறி வும், நிறைந்த ஆற்றலும் பெற்ருர், பண் டிதமணி அவர்கள் எழுதிய பல்வேறு நூல் களில் இலக்கிய வழி, அன்பின் ஐத்திணை, அத்வைத சிந்தனை முதலானவை என்றும் நின்று நிலவுந் தன்மையன.
வண்ணுர்பண்ணை நாவலர் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களிடமும், மாணவர்க ளிடமும் மிகுந்த பற்றும் பாசமும் வைத் திருந்தார். அது போலவே இப் பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் அவர்களிடம் பெருமதிப்பும், பேரன்பும் வைத்திருந்த னர். நாவலர் பாடசாலையிலிருந்து பல ஆசிரியர்களும், நூற்றுக்கணக்கான மாண வர்களும், பண்டிதமணியின் பிறந்த தினத் தன்று திருநெல்வேலியில் கலாசாலை வீதியி லமைந்த அவருடைய இல்லத்துக்குக் கால் நடையாகவே சென்று வாழ்த்தியும், வணங் கியும், பண்ணிசை பாடி அவரை மகிழ் வித்தும் வந்தனர். இது போன்ற அநுபவம் இனி எங்கே கிடைக்கப்போகின்றது! அன்பே உருவான பண்டிதமணியின் நினைவு எம் மனதை விட்டு ஒருபோதும் நீங்காது. எண்பத்தாறு ஆண்டுகள் எம் மத்தியில் வாழ்ந்த பண்டிதமணி அவர்கள் ஆயிரம் பிறைகண்ட உத்தமர். அவர்களின் மறைவு எமக்குப் பேரிழப்பு. தமக்கென வாழாது பிறர்க்குரியாளனுக வாழ்ந்த பண்டிதமணி யின் ஆன்மா இறைவன் திருவடி நீழலிற் சாந்தியடைய வேண்டுமென அனைவரும் வேண்டுதல் செய்வோம்.

Page 143
பண்டிதமணி ( LTšLir Garr. 9šiš பேராசிரியர், அ. வ. அ
திமிழுக்குத் தொண்டு செய்வோருக்கு நிலைத்த வாழ்வு உண்டு; அவர்கள், "உள தாகும் சாக்காடு" எய்துகிருர்கள்; தம் உடலை மறைத்துக்கொண்டு புகழை உலகில் நிலவ விட்டுச் செல்கிருர்கள்; "மன்னு உல கத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்ற புறப் பாட்டு வரிகளுக்குச் சிறப்புருவம் தருகி முர்கள். கலாநிதி பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ் உலகு பெற்ற தவம். அவருடைய படைப்புகளில் அவர் வாழ்ந்துவருகின்ருர்; வாழ்ந்து வரு siitfi.
யாழ்ப்பாணத்துத் திருநெல்வேலியில், அவரது எளிமையான இல்லத்தில் முன் புறத்து முள்வேலியைத் தள்ளிக்கொண்டு நானும், அமரரான வழக்கறிஞர் சோமசுந்தர மும் 1979ஆம் ஆண்டில் இளவேனிற் காலத்து மாலை ஒன்றில் அவரைச் சந்தித் தோம்; 8-6-79 விவசாயத் திருநாள் அன்று.
முதுமை காரணமாகத் தளர்ந்துபோய் இருந்த அந்தத் தமிழ்க் கடல் என்னைக் கண் டதும் அன்பிலே தழுதழுத்தது. என் கை களைத் தம்முடைய அன்புக் கரங்களால் பிடித்துக்கொண்ட பண்டிதமணி "நலமாக இருக்கிறீர்களா? என்று வினவியபோது அந்தச் சொற்களில் தமிழ் நேயம் கலந்து கனிந்து உருகியதை அந்த விநாடியிலே நான் உணர்ந்தேன். திருநெல்வேலிக் கலாசாலை ஒன்றிலே பண்டிதமணி அவர்கள் தலைமையிலே அன்று என் பேச்சு இருந்தது. தமிழ் இலக்கியம் பற்றியும், நாவலர் நற் ருெண்டுகள் பற்றியும், தமிழக ஈழ இலக்கிய உறவுகள் பற்றியும் நாங்கள் மனம் கலந்து உரையாடினுேம், விணுடிகள் நீண்டன; சுவை கமழ நீண்டன.
தம்முடைய முதுமையையும் பொருட் படுத்தாமல், என்னுடன் மகிழ்வுற்று, ஒன் றியே தம் இல்லத்தை விட்டு வெளியே வந்தார். குறுகலான வீதி அது. விழா

ான்றேர் இமயம்
ாரவேலன் அவர்கள்
.
கல்லூரி, மயிலாடுதுறை
நடக்கும் இடத்திலே அழகு ஒப்பனைகள், தோரணங்கள், விழாத் தலைவர்கள், ஒலி, ஒளி ஏற்பாடுகள் எல்லாம் திருநெல்வேலித் தமிழ் இளைஞர்கள் அயரா அன்புடன் செய்த திட் டங்கள். திரளாகக் கலாசாலை முன்புறம் இருந்த திறந்த வெளியில் கூடியிருந்தார்கள், ஆடவரும் பெண்டிருமாகப் பெரியவர்களும் வந்து நிறைந்திருந்தார்கள்.
பண்டிதமணியின் தலைமையுரை நயமும் நாகரிகமும் பெருந்தன்மையும் உடைய இலக் கியப் பொழிவாக இருந்தது. கல்வித் துறைச் சிந்தனைகளாக நான் ஆற்றிய உரை முழுவதும் இருந்து கேட்டுப் பாராட்டித் தம் உடல் நலத்தையும் பாராமல் கலந் துரையாடியதை இப்போது நினைத்தாலும் கண்ணிர் ததும்புகின்றது.
பண்டிதமணியின் சந்திப்புக்குப் பிறகு அதே நாளில் இரவு 8-25க்கு மேல் காரை நகர் சென்று திருமுருகனை வழிபட்டு யாழ்ப் பாணந் திரும்பியபோது இரவு 11-00 மணி ஆயிற்று. பண்டிதமணியின் அந்தச் சந்திப் பும் அன்றைய முருக வழிபாடும் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக உள்ளன.
பண்டிதமணி அவர்களுடன் நான் நின்று எடுத்துக்கொண்ட அன்றைய நிழற்படங்கள் இன்றும் என் நினைவில், அந்த இனிய நினை வுகளை வீணையின் மெல்லிய நாதம்போல் மீட்டுகின்றன; என் நிழற்படத் தொகுப் பில் அவை, அந்நினைவின் சுவடுகளைத் தாங் கியபடி நிற்கின்றன; ஆனுல் அவர்கள்தாம் இன்று இல்லே.
நடுவில் பண்டிதமணி. இடப்புறம் பள் ளித் துணை ஆய்வாளர் அன்பர்; வலப்புறம் நான்-இப்படி ஒரு நிழற்படம். ஆறு அன் பர்கள் (நான் உட்பட) புடைசூழ, டண்டித மணியின் மற்ருெரு நிழற்படம்,
வெண்மையான முடி, நீண்ட வெண் தாடி, முழுக்கை வெள்ளைச்சட்டை, கையில்

Page 144
வளைதடி, அறிவு ஒளி வீசும் கண்களுக் குத் தடித்த விளிம்புடன் கூடிய மூக்குக் கண்ணுடி, வெள்ளை வெளேரென்ற ஆடை, மேலே கழுத்தைச் சுற்றித் தொங்கிய வெண் பட்டுத் துண்டு, நெற்றியில் திருநீற்றுக் கீற்றுகள். ஆம் இப்படித்தான் அந்த நிழற் படத்திலும் சரி; என் நெஞ்சிலும் சரி; இடம் பெற்றிருக்கிருர்கள், இவ்வினிய பெரும் புலவர்; மகா வித்துவான்; முது பெரும் புலவர்,
துள்ளிவரும் சொற்கள்; கந்தபுராணம், பெரியபுராணம், திருக்குறள், தேவார திரு வாசகங்களில் ஊறிய கருத்துக்கள்; எளிய தடை, புதிய சொல்லாட்சி, உணர்ச்சியை வெளிப்படுத்தும் தமிழ்நடை 'ஈழகேசரி", 'தினகரன்’, ‘வீரகேசரி? முதலிய தமிழ் ஈழப் பத்திரிகைகளில் எண்ணற்ற இலக்கியக் கட்டுரைகளை எழுதிய கரங்கள், பண்டித மணியின் பண்பட்ட கரங்கள்.
1969ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் காரைநகர் மணிவாசகர் சபை, என் கதி ரேச சதகத்தை வெளியிட்டு மகிழ்ந்தது. அச் சபையின் ஏழாவது வெளியீடு அந் நூல். அதற்குப் பண்டிதமணி அவர்கள் ஒர் அழகிய அணிந்துரை தமக்கே உரிய தனிநடையில் வழங்கினுர்கள்.
'தங்குதடையின்றி முழுப்பாடல்களே யும் ஒரு மூச்சிற் படித்து முடித்துவிட்டேன். மனதில் நிறைவு நிலவியது. திருமுறைக்
qSqMSqASqAASSLALLSqASqMLMLSAAAALALSLALSASSLASLqSqSLSASSSLSLSSSSSASLSSSSSSMLSSSqSqALASSSLLSLLSAAALLSSMLSSSLSLSSSSSASASS
புராணங் கேட்பவர் ஆதிதொடங்கி கேட்டல் வேண்டும். புராணமுற்றுப்பெ விசேஷ பூசை செய்வித்து, புராணம் : வருக்கும், கடவுளுடைய அடியார்களு களுக்கும், சுற்றத்தார்களுக்கும் அன் ; வருக்கும் பொருள் சொன்னவருக்கும் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.
எல்லாருங் கேட்டு உய்யும் பொ( களைக் கொண்டு புராணங்களை வாசித்து கிய புண்ணியம்.
AAA AAAASMAMSASAMSLSAAMALSLSSSMqLALALAMASMAALASMMMSMAMAASAASALAMAqMMqSAM

r
ബ
கருத்துக்கள், சித்தாந்த சாஸ்திரக் கருத் துக்கள் தம்முள் தொடர்புபட்டுப் பாடல்கள் மணம் கமழ்ந்தன. திருவள்ளுவர் ஊற்று ஆங்காங்கே சுரத்துக் கொண்டிருந்தது. தாயுமானவர் முதலிய அநுபூதிச் செல்வர் கள் காட்சியளித்தார்கள் . மிக்க வியப் டைத் தருவதொன்று. ஆசிரியரின் உள் ளெழுச்சி வேகம் இடையறவு படாமல் நுாறு பாடல்களும் ஒரே ஒரு பாடல் என்று சொல்லத்தக்க வகையில் சென்று முற்றுவ தேயாம். சொல்லொழுக்கும் கருத்துத் தெளிவும் அவ் வேகத்திற்கு அழகு செய் கின்றன."
பண்டிதமணியின் பாராட்டுக்கும் பண் புக்கும் இவ்வரிகள் போதுமானவை.
இமயம்போல் விளங்கிய பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் கடல் கடந்த தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் தமிழ்ப்பணி புரியும் என்னையும் பாராட்டி ஞர்கள்; தம் இதயத்தில் என்னையும் நினைவு கொண்டிருந்தார்கள் என்பது நான் எண்ணி எண்ணி மகிழும் செய்தி.
தமிழ் உள்ளவரை பண்டிதமணி அவர் களின் பணி நிலைத்திருக்கும். அவர்களது தமிழ், உணர்ச்சித் தமிழ் ; தெய்வத் தமிழ்; சங்கத் தமிழ் ; சான்ருண்மைத் தமிழ் ; எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு பொங்கி வரும் இன்பத் தமிழ். அவர்கள் நினைவு என்றென்றும் தமிழ் கூறும் நெல்லையில் ஒளி வீசித் திகழும்.
ஈறுவரையும் தவருமல் நியமத்தோடு bற தினத்திலே புராணத் திருமுறைக்கு வாசித்தவருக்கும், பொருள் சொன்ன க்கும், குருடர் முடவர் முதலானவர் னங் கொடுத்து, புராணம் வாசித்த தம்மால் இயன்ற பொருள்கள் வைத்து
ட்டுத் திருக்கோயில்களிலே யோக்கியர் ப் பொருள் சொல்லுவித்தல் மிக மேலா
- நாவலர் பெருமான்

Page 145
பண்டிதமணி
ஆசிரியமணி ஆர். ரி.
சிாவகச்சேரியிலே சாதனைகள் பல புரிந்து அந் நகரைக் கனகாபுரியாக்கியவர் முன்னுள் எம். பி., வே. குமாரசாமியாவார். திருக்கேதீசுவரத்தில் தென்மராட்சி மக்கள் சார்பில் விழாவெடுத்துப் பல தொண்டுகள் புரிந்த குமாரசாமி 1978இல் சிவராத்திரி வேளையிலே சிவபதம் அடைந்தார்.
இவரின் மறைவு குறித்துப் பின்வருமாறு எங்கள் ஞானத் தந்தை எழுதியுள்ளார் :
* ஒரு காலத்தில் தென்மராட்சியின் முடிசூடா மன்னனுகத் திகழ்ந்தார் அக்கால எம். பி. வே. குமாரசாமி, வள்ளல்களிடம் ஒன்று வேண்டிச் செல்வோர் வெறுங் கையுடன் திரும்புவதில்லை.அவ்வாறே எம்.பி. குமாரசாமியிடம் சென்ருேர் சும்மா திரும் புவதில்லை."
தென்மராட்சியிலே, ஐயா அவர்களின் உதவியிஞலே தமிழ்ப்பேரறிஞரானேர் எண் னிறந்தவர்கள். இவருடைய வழிகாட்டுத லில் உலகளாவிய கீர்த்தி பெற்றவர்களும் பலர் உள்ளனர்,
நான் சாவகச்சேரி "இந்து'வில் கல்வி கற்று ஆங்கிலத்திலே திறமைப் பேறடைந் தவன். அக்காலத்திலே, வகுப்பறையில் தமிழ் பேசினல், பேசிய தமிழ்ச்சொல் ஒவ் வொன்றுக்கும் குற்றப் பணம் இறுக்க வேண்டும்.
இதனுல் தமிழோ, இலக்கண இலக் கியமோ, சைவசமயச் செழும்பொருள் களோ ஊடுருவ முடியாத ஒரு கருங்கற் சித்திரமாகவே நான் படித்து வெளியேறி னேன்.
எனினும் ஏதோ பூர்வ புண்ணியப் பேறு காரணமாகத் திருநெல்வேலிச் சைவா சிரியர் கலாசாலையிலே அரை நூற்ருண் டுக்கு முன்னர் இரு வருட ஆசிரியப் பயிற்சி பெறும் பேற்றைப் பெற்றேன்.
ஆங்கு, செந்தமிழ்ப் பூஞ்சோலையின் நடுவே இலக்கிய மேடையிலே, தவிசு வீற் றிருந்து தனித்தமிழாட்சி புரிந்த -சித்தாந்த சாகரத்தின் - உதயபானுவின் திருவருட் பார்வை கிட்டியது.

ஆவதார புருடர்
சுப்பிரமணியம் அவர்கள்
தினமும் ** பின்னைச் சுப்பிரமணியம்' என்று விழிக்கப்பட்டு விரிவுரை கேட்கும் பேறு பெற்றேன். கருங்கல் அனைய யானும் கசிந்துருகி, தமிழின் நுண்மாண் நுழை புலங்களைக் கண்டேன். அத்துடன் அடங் காது பண்டிதமணியின் மேடைப்பேச்சுக் களைத் தேடித் தேடிக் கேட்டு மாந்தி, தமிழ் ஏப்பம் விட்டேன்.
சரித்திரப் பேராசான்-ஆஜானுபாகுஅதிபரின் ஆளுமையும், இடம் பெயர்ந்த குறுமுனிவரோ என வியந்த துணை அதிப ருடைய ஞானமும் சற்றுக் கைவரவேஎம்போலியர் தனித்துவமான பயிற்சியைப் பெற்றுேம்.
பண்டிதமணியின் பாடம் - நேரம் போவது தெரியாது. காஸ்யங்கள் கட்ட விழ்ந்து வரும்; தமாஸ் வெடிகள், மத்தாப் புகள் மேலுயர்ந்து வர்ணஜாலம் காட்டும். அத்தனையும் பாடங்களுடன் தொடர்பு முடையனவாகவே இருக்கும். ஓர் உதா ரணம்:
"நாம் பன்முறை படித்துள்ளோம்". இத் தொடரை ஒரு மாணவன் வாசிக்கும்போது தவறுதலாக ** நாம்பன் முறை படித்துள் ளோம்” என்று வாசித்துவிட்டான்.
‘'என்ன முறை காணும்'; இது ஐயா வின் பவளவாய் திறந்துவந்த 'மணி"யான மூன்று சொற்கள். வகுப்பறை அல்லோல கல்லோலப்பட்டது. அவ் வாரம் முழுதும் *பெண்-கள் குடிக்கும் இடம்", "திரு மதி அழகன்' போன்ற தொடர்கள் எங்கும் எடுத் தாளப்பட்டு, சுவை கெட்டதும் வீசப் பட்டன.
ஐயா அவர்களின் பல்லாயிரக்கணக்கான வாழ்த்துரைகள், பிரார்த்தனை உரைகள், மணியான அணிந்துரைகள் - அத்தனையும் பலரும் பேணிக் காப்பவைகள். அவற்றைத் தக்கவாறு ஒன்று சேர்த்து ஒரு நூலாக் கிஞலோ என்று வாயூறுகின்றேன்.

Page 146
அப்படி ஒரு வாழ்த்துரை இதோ: *" கம்ப நாடன் கவிதையிற்போற்
கற்றேர்க் கிதயங் களியாதே"
'இவ்வாறு வாயூறுகின்ருர், கம்பரில் திளைத்த இலக்கிய ரசிகரான ஒருவர். இந்த முறையில் வைத்துப் பாராட்டத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவைகள் திரு. ஆர். ரி. சுப்பிரமணியத்தின் கலைத்திறமைகள்.
ஒரு சாதாரண பாடமாயும் இருக்கலாம். அதனை எடுத்துக்கொண்டு பச்சிளம் பாலகர் களுக்கும் சரி, வளர்ந்த மாணவர்களுக்குஞ் சரி, திரு. சுப்பிரமணியம் படிப்பிக்கும்போது, பிள்ளைகள் தம்வயம் இழந்து சுப்பிரமணியத் தின் வழியில் அடங்கி அசைந்து கொண் டிருப்பதை நோக்கினல், பாவைக் கூத்தின் ஞாபகம் உண்டாகும். . . திரு. ஆர். ரி. சுப்பிரமணியம் இளைப்பாறுகின்ருர், நான் இளேப்பாரிப் பதினைந்து வருடம் கழிகின்றது. சுப்பிரமணியம் தவணைப்பரீட்சைக்குப் படிப் பித்ததொரு பாடம், கால வெள்ளத்தைத் தாண்டி, இன்னும் என் இதயத்தில் குடி யிருக்கின்றது . திரு. சுப்பிரமணியத் தின் திறமை இருந்தவாறு', மேற்கண்ட வாறு 17-3-1974இல் எமக்கெடுக்கப்பட்ட மணிவிழாவில் வெளியிடப்பட்ட மலர் ஒன்றிற்கு அனுப்பிய வாழ்த்துரையிற் குறிப்பிட்டுள்ளார்கள். இனங்கண்டு வாழ்த்துபவர்
பண்டிதர் ஐயா என்ருல் பஞ்சாட்சரத் துக்கு உயிர்; பஞ்சாட் சரம் என்ருல் பண்டிதர் ஐயாவுக்கு உயிர். "ஆசிரியர் திரு. பஞ்சாட்சரம் படிக்கிற காலந் தொடக் கம் நிழல்போலப் பிரியாது, தொடர்ந்து பல துறையிலும் உதவிவருவது அனைவரும் அறிந்தது" என்று கந்தபுராணம் தக்ஷகாண் டம் உரை நூலில் ஐயா அவர்கள் குறிப்பிட் டிருக்கின்றர்கள்.
பண்டிதமணி அவர்களுக்கு இலக்கிய கலாநிதி என்ற பட்டத்தினை இலங்கைப் பல்கலைக்கழகம் வழங்கியதையொட்டி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பாரிய கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார் திரு. பஞ்சாட்சரம்; பெரிய வித்துவசபை, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 14-8-1978 மாலை நடைபெற்ற இப் பாராட்டுப் பெருவிழாவில் பண்டிதமணி அவர்கள் தமது இரத்தினச் சுருக்கமான பதில் உரையில் "பஞ்சாட்சரம் எனக்கு வாய்த்த அனுமான்' என்று கூறி

5 -
அந்தப் பெருஞ்சபையை மிக்க குதூகலத்தில் ஆழ்த்திவிட்டார்கள்.
இனங்கண்டு வாழ்த்துவதில் ஐயா அவர்களது கருணை உள்ளம், எப்பொழுதும் பூரண பொலிவுற்றிருக்கும்.
தென்மராட்சியின் தெய்வம்
பல சைவ வித்தியாசாலைகள் தென்ம ராட்சியிலே இன்று மகாவித்தியாலயங்களாக மிளிர்வதற்கு மூலகாரணர் எங்கள் ஞானத் தந்தை பண்டிதமணி ஐயா அவர்களே иштөurr. அக்காலத்திலே, ஒரு கிராமத் திலே, பண்டிதமணி ஐயா வந்து சொற் பொழிவு நிகழ்த்துவார்கள். அன்று, அவர் தைத்த ** சைவசமய உரைகள் " மறு வாரமே ஒரு பாடசாலையாக முளை கொண்டு விடும். அடுத்த வாரம் சைவ வித்தியாவிருத்திச்சபை சார்பில் அப்புக் காத்து சு. இராசரத்தினம் வருவார் ; பாடசாலை உறுதியற்ற பதிவைப் பெற்று விடும். அது ஒரு பொற்காலம். எங்கள் சைவப்பிள்ளைகள் சைவப்பாடசாலைகளிலே, சைவாசிரியகலாசாலையிலே பயிற்சி பெற்ற சைவ ஆசிரியர்களால், சைவச் சூழலிலே கற்பிக்கப்படுதல் வேண்டும் என்ற கோட் பாட்டை இவர் வலியுறுத்திப் பேசும் பாணி யினுல் கிளர்ந்தெழுந்த சைவாபிமானிகள், ஊர்ப் பெரியவர்கள் அப் பாடசாலைகளைக் கண்ணின் இமைபோலப் பாதுகாத்துப் போஷித்து வந்தனர். ஆதியில் நல்லூரில் கந்தபுராண கலாசாரம் முளை கொண்ட போதும் உண்மையில் இக் கலாசாரம், கிளை கொண்டு பெரு விருட்சமாகி இன்று வரை நடைமுறையில் இருப்பது தென்மராட்சி யிலேயாகும்.
இன்றும் கந்தபுராணமும் பெரியபுராண மும் பல தலங்களிலேயும் படனம் பண்ணப் பெறுவது பண்டிதமணியின் பழைய மாண வர்களின் கரிசனையினுலேயாகும். மீசாலை, கல்வயல், மட்டுவில், சரசாலை, தனங்கிளப்பு ஆகிய இடங்களில் நடைபெறும் புராண படனங்களின் போது பெருவிழாக்களும், மாகேசுர பூசையும் தவருது இடம்பெற்றே வருகின்றன. தொடக்க, இறுதியில் விசேட விரிவுரைகளும் நடத்தப்படுகின்றன.
இவற்றையெல்லாம் தந்தருளிய அவதார புருடர் எங்கள் குலதெய்வம்,
ஐயாவுக்கு வணக்கம்.

Page 147
பண்டிதமணியின் பண்டிதர் கா. ந.
சாந்தநா யகிசமேத சந்திரமெள லீசனே ஐந்தொழில் விலாசனே சந்திரபுர தலவாசனே.
உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை ஆசிரியர், சைவ தமிழ் நூல்களையும், தொல் காப்பியம், நன்னுரல் காண்டிகை உரை, விருத்தி உரைகளையும் மாணுக்கர்கள் உளங் கொளக் கற்பிப்பதையும் புராண காவி யங்கட்குப் பயன் விருத்தி உரை விரிப்பதை யும் கண்ணுரக் காணவும் செவி குளிரக் கேட்கவும் பூர்வ புண்ணியப் பேறு பெற்ற விசேடம் உடையவர் பண்டித மணி அவர்கள்.
இவர்கள் திருநெல்வேலிச் சைவாசிரிய கலாசாலையில் பேராசிரியராகச் சேவை புரிந்த காலத்தில் முத்துத்தம்பி வித்தியா சாலையில் நான் ஏழாம் வகுப்பில் படித் தேன். ஆசிரிய மாணவர்கள் மாதிரிப் பாடம் படிப்பிப்பதை மேற்பார்வை செய்து திருத்த பண்டிதர் அவர்கள் வருவார். அப்பொழுது தான் இப் பெரியாரைத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்கும் வாய்த்தது. திருமுகம் சிவப்பொ லிவு காட்டியது; வாக்கு இனிமைச் சுவை சொட்டியது; சாந்தமான நடை தமிழ்ட் புலமையின் அமைதி காட்டியது.
ஒரு முறை அவரது வீட்டுக்குப் போய்த் "திருமுருகாற்றுப்படை பாடங் கேட்க வர் தேன்" என்றேன். உடனே என்னை வாசிக்க செய்து விளங்கப்படுத்தினர். ஞான அநுபூதி விளக்கமாக இருந்தது. "சேவடி படருட செம்மல் உள்ளம்", இத் தொடருக்குப் பண் டிதமணி கருத்துரை கூறித் தற்போ: மற்றுச் சிவகரணம் உற்றிருந்தார். திருமு( காற்றுப்படைக்கு ஆறுமுகநாவலர் உரைே மிகவுஞ் சிறந்தது ; அவ்வுரையைப் படிக்கு எனப் பணித்தார்.
இலக்கிய இரசனை சுவைப்பவர்; நூல்கள் பதிப்புகளில் பிரதிபேதங்கள் அதிகம் இரு

இலக்கிய ரசனை
மசிவாயம் அவர்கள்
பதை விரும்புவதில்லை. சான்றேர் இனத்தை அடைந்து அவர்களுக்கு இனியணுய் வாழ்ந்த வர்; சிற்றினஞ் சேராதவர் ; ஈழநாட்டைத் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றேடு இணைத்து ஆராய்ந்தவர் : சைவமுந் தமிழும் யா ழ்ப் பாணப் புலவர்களின் தியாகத்தாற் பாது காக்கப்பட்டதை எண்ணுந் தோறும் உள்ளம் குளிர்பவர்; இவைகளை மறைக்க அல்லது ஒழிக்கக் கரந்து நின்று எழுதுபவர்களை
நட்புப் பூணமாட்டார்.
திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரின் தமிழ்ப் பிரசங்கம் இந்த நூற்முண்டில் முத லிடம் வகித்தது. திரு. கதிரவேற்பிள்ளையின் மாணுக்கர் திரு. வி. க. அவர்களின் பெருமை யாழ்ப்பாணப் புலவர்களின் பாரம்பரிய உரிமை என்று சொல்லிப் பூரிப்பவர். மாணக்கர்களுக்குப் பாடஞ் சொல் லி த் தொண்டு செய்தார். ஆனல் வேதனம் வேண்டக் கனவிலும் விரும்ப வில்லை. * தருமமே போற்றிடின் அன்பு சார்ந்திடும் அருளெனுங் குழவியும் அணையும்" என்பதை வாழ்வின் உயர்ந்த இலட்சியமாக மறவா மல் நினைந்து கடைப்பிடித்தவர். சமணர் களின் அறவுரை புறவுரை என்பதைத் தமது அகக் கண்ணுல் நோக்கிக் கண்டவர். கந்த ஞகிய தருவை அணுக அவாவும் ஆன்மாக் கள், முதலிற் கிரியாவல்லியைப் பற்றிக் கர்ம சுத்தி எய்தும் பொருட்டு, அந்தத் தரு பூக்கத் தாமும் பூத்து, அது காய்க்கத் தாமும் காய்த்து, அவ்வாற்றற் சுத்தி எய்தி, ஞான வல்லியைத் தொடர்ந்து பற்றி அயரா அன்பு முதிர்ந்து, தாமுமத் தருவேயாய் அது உதவும் முத்திக் கனியை நுகர்ந்து பேரின்பப் பெருவாழ்வு பெறும். இவ்வுரையின் பொருட் பேறு நோக்கம் பூண்டு வாழ்வை ஒழுங்கு படுத்தி வாழ்ந்த பண்டிதமணி அவர்கள் இனிப் பிறவாமை வேண்டும் எனப் பிரார்த் திப்போம்.

Page 148
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் செய்தபோது பண்டிதமணி அவர்கள் வரவேற்று குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் அவதானிக்கின்ருர், பழம்பெரும் எழுத்தாளர் தி கேட்டு மகிழ்ந்துகொண்டிருக்கின்ருர்,
ரும்பிராய் கருளுறகரப்பிள்ளையார் கோயிலில் 10 நிறப்பு விழாவில் பண்டிதமணி அவர்கள் வீதிவலம - ண்டபத்தைப் பண்டிதமணி அவர்கள் திறந்துவைத்
ہے
5
 
 

திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைக்கு விஜயஞ் ப் பேசுகின்ருர்.
பண்டிதமணி அவர்களின் உரையை உற்று ரு. இராஜ அரியரத்தினம் அவர்கள் பேச்சைக்
-9-1965இல் இடம்பெற்ற திருத்தேர் மண்டபத் ாக அழைத்து வரப்படுகின்ருர், புதிய திருத்தேர் து உரையாற்றுகின்றர்.

Page 149
கந்தபுராணம் தக்ஷகாண்டம் உரைநூல் வெ உரைநூற் பிரதி யானைமீது ஏற்றப்பட்டு ஊர் யடுத்து விழாமண்டப வாயிலில் பேராசிரியர்களு அறிஞர்களும் கூடிப் பண்டிதமணி அவர்களை
 
 

ளியீட்டு விழாவில், தக்ஷகாண்டம் வலமாக எடுத்துவரப்பெற்றதை நம் பல்கலைக்கழக மாணவர்களும்
வரவேற்கின்ருர்கள்.
தக்ஷகாண்டம் உரை நூல் ஆசிரியர் பண்டிதமணி அவர்களுக்குப் பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் அவர்கள் பேராதனைப் பல் கலைக் கழகக் கலை மண்ட பத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா வில் பொன்னடை போர்த்திக் கெளரவிக்கின்றர்.

Page 150
ாகாவலர்
பேராசிரியர் பொ. பூே
(பேராதனைப்
திமிழ் இலக்கண வரலாற்றிலே தொல் காப்பிய பரம்பரை, வீரசோழிய பரம்பரை என்றும் தமிழ் இலக்கிய வரலாற்றிலே வள்ளுவர் பரம்பரை, கம்பர் பரம்பரை, சேக்கிழார் பரம்பரை, பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை என்றும், கலைமகள் பரம்பரை, கல்கி பரம்பரை, மணிக்கொடி பரம்பரை என்றும் இனம் பிரித்து முறைப் படுத்தும் திறனுய்வு முயற்சிகள் சில தசாப்தங்களாக அறியப்படுகின்றன.
தன் அடிச்சுவட்டைப் பின்பற்றிவரும் ஒரு பரம்பரையை உருவாக்கிவிடும் சக்தி எல் லோருக்கும் எளிதாக இருக்க முடியும் என்று எதிர்பார்ப்பது தவறு. தன்னிடம் நிரம்பி வழியும் சக்தியால் திறமைசாலி ஒருவர் தனக்குரிய பரம்பரை ஒன்றினை உருவாக்கி விடுவதை நிலவுலகிலே நாம் காண முடிகின்றது.
நாவலர் பரம்பரை என்ருெரு பரம்பரை யினை ஈழத்திலே வகுக்கமுடியும். அப் பரம் பரையினர் என்று சிலரை இனங்கண்டு சுட்டிக்காட்டுவதற்கு முன்பு இத் தொட ரால் நாம் எதனைக் குறிப்பிடுகிருேம் என் பதை நோக்குதல் அவசியம்.
கனக. செந்திநாதன் நாவலர் வழிப்பட்ட ஈழத்தின் இ லக்கிய பாரம்பரியம் (1) பொருள் முக்கியம் கொண்டது, (2) விஷ யத்திற்கேற்ப நடைகொண்டது, (3) கண் டன தர்மம் கொண்டது, (4) ஆரிய - தமிழ் என்ற பேதமற்றது, (5) பேசுவதுபோல எழுதுவது, (6) வரிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, (7) போலிப் புலமையை வெறுப்பது, (8) தன்நாட்டுணர்ச்சி கொண் டது என்று தொட்டுக் காட்டியுள்ளார்.1 அவர் சுட்டும் பண்புகளிற் சில, முக்கிய மானவையேயாயினும் நாவலர் பரம்பரைக் கென முத்திரையிடக்கூடியன சிலவற்றை அவர் தெளிவாக்காமலே விட்டுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.
13

பரம்பரை
லாகசிங்கம் அவர்கள்
ல்கலைக்கழகம்)
நாவலர் பரம்பரையினை நோக்கும்போது இலக்கிய இலக்கண சாத்திர நூற்புலமை, கல்விப்பணி, நூல் வெளியீடு, சைவசமய பிரசாரம், பிறமத கண்டனம், பிரசங்க முறை, புராணபடனம், அருட்பாக் கோட் பாடு என்பனவற்றை முக்கியமானவையாக இனங்காட்டமுடியும்.
நாவலர் பரம்பரையினர் என்று கூறும் போது, ஒரே அச்சில் வார்த்த - இம்மியும் வேறுபாடற்ற - எல்லாப் பண்புகளிலும் ஒப் பானவர்களை நாம் கருதக்கூடும். ஆயினும் அவ்வாறு கற்பனை செய்வது நடைமுறைக்குப் பொருந்துவதன்று. பின் வந்தோரின் ஆளுமை, அவர்கள் இயங்கிய சூழலில் அவர்களைப் பாதித்த செல்வாக்குகள், உல கியல் நிலைமைகள் என்பன சிலபல வேறு பாடுகளைத் தோற்றுவித்திருக்கும் என்று கூறல் தவருகாது.
நாவலரவர்களின் முதன் மாணுக்கரிலே சிறப்பிடம் அளிக்கப் பெறுபவர் நல்லூர் க. சதாசிவப்பிள்ளை (- 1910), நாவலரவர்க ளிடத்திலே எப்போது கல்வி கற்று வந்தாரோ அக் காலந் தொட்டு ஒரு காலத்தும் அவரை விட்டுப் பிரியாதவர் என்று வே. கனகரத்தின உபாத்தியாயர் அவரைப் போற்றுவர்? திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் சதாசிவப் பிள்ளைக்கு நெற்றியிலே விபூதியிட்டு விடும்போது, அவரைச் சக்தி என்றும் நாவலரவர்களைச் சிவம் என்றும் சக்தி இன் றிச் சிவம் ஒன்றும் செய்யமாட்டாது என்று புகழ்ந்ததாகவும் கைலாசபிள்ளை கூறியிருக்
&მლgif. 3 இக்கூற்றுகள் நாவலரவர்கள் எடுத்த கருமங்களுக்குச் சதாசிவப்பிள்ளை உற்ற gyðaððrujirs விளங்கியமையைக் காட்டுவன.
நாவலரவர்கள் முன்னிலையிலும் தாமாக வும் சில நூல்களைப் பரிசோதித்துப் பதிப் பித்த சதாசிவப்பிள்ளை, நாவலரவர்கள் மறைந்த பின்பு, அவர்கள் பரிசோதித்து முடித்து வைத் திருந்த நூல்களை

Page 151
- 9
வெளியிட்டதோடு, அவர் முன்பு பதிப்பித்த நூல்களை டிம் தொடர்ந்து மறுபிரசுரஞ் செய்துவந்துள்ளார். நாவலரவர்களுடன் தொடர்புள்ள சி. வை. தாமோதரம்பிள்ளை, சுன்ஞகம் அ. குமாரசுவாமிப்புலவர் முதலா னுேர் நூற்பதிப்புகளுக்கும் சதாசிவப்பிள்ளை உதவியுள்ளார்.
நாவலரவர்களின் சொத்துகளுக்கு ஆதிபத்தியம்பெற்ற சதாசிவப்பிள்ளை, அவ ருடைய பதிப்புகளை மறுபிரசுரம் செய்த தோடு அமையாது, அவருடைய அச்சகத் தையும் வித்தியாசாலைகளையும் பொறுப் பேற்று நடத்தினர். சிதம்பரம் சைவப்பிர காச வித்தியாசாலையை முதலில் தாமாகவும் பின்பு மானேஜர் மூலமாகவும் நடத்தினர். வண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆரம்ப முதல் மானேஜர் மூலமாகவே நடாத்தினுர்,
நாவுவரவர்களைப் போலவே சதாசிவப் பிள்ளையும் நைட்டிக பிரமசாரியாக வாழ்ந்த போதும் அவர்களிடம் காணப்பெருத இலெளகிகப் பற்று இவரிடம் காணப்படு கின்றது. " திரு. வி. க. எழுதிய “வித்தி யாபிமானிகளுக்கு விக்யாபன நிரசனம்" (1911) எனும் கண்டன நூலிலே அப்பற்றி ஞலே சதாசிவப்பிள்ளை செய்த சில காரி
பங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.4
சதாசிவப்பிள்ளை ஒருவருக்கு ரூபா ஐயாயிரம் செலவழித்து வீடு வாங்கிக் கொடுத்தாராம்; வேருெருவருக்கு ரூபா ஆயிரம் கொடுத்தாராம்; இன்னுமொரு வருக்குப் பி. ஏ. படிக்கப் பொருள் செல வழித்தாராம்; தமையனர் சுப்பிரமணிய பிள்ளை புத்திரியுடைய புத்திரர் இருவருக்கும் வயது வந்தபின் தனித்தனி ரூபா ஐந்நூறு கொடுக்கும்படி 1897இலே பிறப்பித்த உயி லிலே குறிப்பிட்டிருந்தாராம்.
சதாசிவப்பிள்ளை காலத்துச் சிதம்பரம் வித்தியாசாலை நடைமுறை பற்றி அறிய இரு நிகழ்ச்சிகள் உள்ளன. அங்கு முதல் உபாத்தியாயராக இருந்த சுன்னை பூ. முருகேசபண்டிதர் வேதனமின்றி உண்ண முடியாது வித்தியாசாலையை விட்டு நீங்கி யதும், பின்பு முதலுபாத்தியாயராக விளங் கிய தர்க்க குடார தாலுதாரி வை. திருஞான

8 --
சம்பந்தபிள்ளை, இரண்டாம் உபாத்தியாயர் கோப்பாய் ச. பொன்னம்பலபிள்ளையுடன் கோபித்துக்கொண்டு வித் தியா சாலை யை விட்டு நீங்கியதும் " திரு. வி. க." எழுதிய நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளன.
சம்பந்தநாத முதலியார் முதல் த. கைலாசபிள்ளைவரை வண்ணை சைவப்பிர காச வித்தியாசாலைக்குப் பலர் மானேஜராக இருந்திருக்கின்றனர். சம்பந்தநாத முதலி யார் வித்தியாசாலை அபிவிருத்தியில் சிரத்தை யில்லாதவர் செய்த கலகத்தால் தம் பத வியை வேண்டாம் என்று துறந்தனராம். கைலாசபிள்ளை வித்தியாசாலை விஷயத்தைக் குறித்து ஒருவர் மீது வழக்குத் தொடுத்த கதையும் உண்டு. கைலாசபிள்ளைக்கு முன்பு வண்ணை வித்தியாசாலையும் சதாசிவப்பிள்ளை காலத்தில் சீராக நிர்வகிக்கப்படவில்லை என்று கருதச் சான்றுகளுள.
சதாசிவப்பிள்ளை நாவலரவர்களின் நூல் வெளியீட்டுப் பணியினைத் தொடர்ந்து நன் முறையிலே நடாத்தியபோதும் அவர் தம் கல்விப் பணியை முறையாகச் செய்தனர் என்று கூறுவதற்குச் சில பல காரணங்கள் தடையாயுள்ளன.
நாவலரவர்களின் ஐந்தாம் தமையனர் ஆராய்ச்சி தம்புவின் புதல்வர் த. கைலாச பிள்ளை (- 1939). சிதம்பரத்தில் சாதாரண டு) ஐப்பசிமீ 8வ. வியோகமடைந்தபோது நல்லை க. சதாசிவப்பிள்ளைக்கு வயது 84 என் பர். அவ்வாருயின் அவர் 1826ஆம் ஆண் டளவிலே பிறந்தவராதல் வேண்டும். நாவல ரவர்களிலும் சதாசிவப்பிள்ளை நான்கு வருட மளவே இளையவராவர். கைலாசபிள்ளை 1855ஆம் ஆண்டளவிலே பிறந்தவரென்பர். எனவே அவர் சதாசிவப்பிள்ளையிலும் 29 வயதும் நாவலரவர்களிலும் 33 வயதும் குறைந்தவராதல் வேண்டும். நாவலரவர்கள் கைலாசபிள்ளைக்கு 24 வயது நடக்கும்போது வியோகமடைந்துவிட்டார். செந்திநாதையர் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் 1871 - 1878 கட்டத்திலே ஆசிரியராக விளங்கியிருக்கிருர். அக் கட்டத்திலே செந்தி நாதையரிடம் கைலாசபிள்ளை பயின்றுள் ளார். அப்போது கைலாசபிள்ளையின் வயதுக் கட்டம் 16 - 23.

Page 152
- 9
நாவலரவர்களின் வாழ்வின் கடைசித் தசாப்தத்திலே கைலாசபிள்ளை அவர் சமு கத்திலே அவருடைய எழுத்து வேலைகளையும் ஏவல்களையும் செய்துவந்தவர். இதனல் நாவலர் பரம்பரையிலே செல்வாக்குப்பெற்று விளங்கினர். 1888இலே சைவசமய பரிபா லன சபை (சைவபரிபாலன சபை) நிறுவப் பட்டபோது கைலாசபிள்ளை அதன் செய லாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1887இலே வில்லியம் நெவின்ஸ் தோற்று a 55 Native Town High School gig உயர்தர பாடசாலையாகி இந்துக் கல்லூரி யாக உயர்ந்தது. இக் கலாசாலையின் ஆரம் பக் கட்டத்தில் கைலாசபிள்ளை அங்கு சில காலம் வேதனமின்றிச் சமய பாடம் கற்பித் தார். 1889இன் கடைக் கூற்றிலே இந்து &IT g567 lb (Hindu Organ) grgill giisaதமிழ் மாதமிருமுறை பத்திரிகை வெளிவந்த போது அதன் முதல் தமிழ் ஆசிரியராக விளங்கியவர் கைலாசபிள்ளை.
நாவலரவர்களின் காலத்திற்குப் பின்பு கைலாசபிள்ளை நாவலர் பரம்பரையிலே ஒரு முக்கிய ஸ்தராக உயர்ந்துவிட்டார். வித்துவசிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை 1897ஆம் ஆண்டு திசெம்பர் மாதம் 18ஆந் தேதி வியோகமடைந்ததை அடுத்து, அவர் வகித்த வண்ணை வித்தியாசாலை மானேஜர் பதவி சதாசிவப்பிள்ளையால் கைலாசபிள் ளைக்கு வழங்கப்பட்டது. கோப்பாய் ச. பொன்னம்பலபிள்ளை நாவலரவர்களின் சொத்துகளுக்குத் த ரும பரிபாலகராக ஆதிபத்தியம் 1910இலே பெற்றபோதும் கைலாசபிள்ளை தொடர்ந்து வண்ணை மானேஜராக விளங்கினர்.
வண்ணை முதலுபாத்தியாயர் மா. வைத் தியலிங்கபிள்ளை 29-9-1902இலே வியோக மடைந்ததை அடுத்துக் கைலாசபிள்ளை, சுன் ஞகம் அ. குமாரசுவாமிப்புலவரின் உதவியுடன் வித்தியாசாலையைச் சிறப்பாக நடத்தினர். ஏற்கனவே இருவரும் இணைந்து யாழ்ப்பாணத்திலே தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி, அதன்மூலம் சில தமிழ் வகுப்புகளை நடாத்தியவர்கள்; லண்ணை வித்தியாசாலை யில் இவ்விருவரும் தோற்றுவித்த "காவிய

9 -
வகுப்பு " அதற்குப் பெருமை தேடிக் கொடுத்ததாகும். மாளுக்கருக்கு உண்டி யும் உறையுளும் வழங்கி நடந்தது காவிய வகுப்பு.
நாவலரவர்கள் தனிமனிதனுகச் செய்த சைவப்பிரசாரத்தை நிறுவன ரீதியிலே அமைத்துச் செய்யும் முயற்சிகளிலே கைலாச பிள்ளை முன்னின்றவர். சைவாபிமானிகள் சங்கம், சைவசித்தாந்த சபை, சைவ கலா விருத்திச் சங்கம், சைவசித்தாந்த மகா சமாஜம், கிறிஸ்துமத கண்டன ச.ை முதலிய பல சபைகளின் தோற்றத்திலே கைலாசபிள்ளைக்கு முக்கிய பங்குண்டு.
கைலாசபிள்ளை ஆறுமுகநாவலர் சரித் திரம் எழுதி அவருடைய துண்டுப் பிரசுரங் களையும் பாடல்களையும் ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு எனத் தொகுத்துத்தந்த வர்; செந்திநாதையரின் கட்டுரைகளை வைதிக சைவ சுத்தாத்துவித சைவ சித்தாந்த சமயம் எனத் தொகுத்து வழங்கியவர்; தம் மரபினரான ஞானப்பிரகாச முனிவரின் சங்கத நூல்களை வெளியிட்டவர் வசனத் தொடை இலக்கணஞ் செய்தவர்; பால பாடங்கள் எழுதியவர்; துண்டுப்பிரசுரங்கள் பலவற்றை எழுதி வெளியிட்டவர்; ஏனை யோர் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்ட வர்; வேறு சில நூல்களையும் வெளியிட்டவர்.
ஆயினும் இவற்றிலே கைலாசபிள்ளையின் இயல்புகளைத் தெளிவாக எடுத்துரைப்பன அவர் எழுதியனவும் பதிப்பித்தனவும் ஆகிய துண்டுப்பிரசுரங்களே எனில் மிகையாகாது. சமகால சமூக சமய தத்துவ போக்குகள் பற்றி அவரது கண்ணுேட்டமாகவும் அவற் றுக்கு எதிராக அவர் எழுப்பிய கண்டனக் குரலாகவும் அவை காணப்படுகின்றன.
நல்லுரர் க. சதாசிவப்பிள்ளையை அடுத்து நாவலர் பரம்பரையின் முக்கியஸ்தராக விளங்கிய கைலாசபிள்ளை, நாவலர் பெருமை யைக் குறைத்து மதிப்பிடும் முயற்சிகளை வன்மையாக எதிர்த்தும், நாவலர் மரபைப் பேணும் முறையை வளர்த்தும் செயற்பட்ட போதும், நாவலரவர்களின் அடிப்படை நோக்குகளைக் காலப்போக்கிற்கு ஏற்ப

Page 153
-
வளர்க்க அவரால் முடியவில்லை. அவரால்
சமகால சமூகத்துடன் இணைந்து நின்று செயல்பட முடியாது போயிற்று.
சுன்ஞகம் அ.குமாரசுவாமிப்புலவர் (18541922) கைலாசபிள்ளைக்கு ஒரு வயது மூத்தவ ராதல் வேண்டும். புலவரவர்கள் 1870இலே நாவலரவர்களே முதன் முதலாகச் சந்தித்தது முதலாக அவர்களுடைய காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டவர். தமக்கு ஏற்பட்ட சந்தேகங் களை நாவலரவர்கள் மூலம் நிவர்த்தி செய்து கொண்டதோடல் லா மல் தம்முடைய படைப்புகளை அவரிடம் காட்டி அவர் அபிப் பிராயத்தைக் கேட்பதிலும் ஆர்வமிக்கவராக விளங்கியவர்.
நாவலரவர்களுடைய மாணுக்கர் பரம் பரையில் நேரடியாக வராதவராயினும் புலவ ரவர்கள் நாவலர் பரம்பரையின் முக்கியஸ்
தருள் ஒருவராகக் கருதப்படுவர். சிலர் புலவரவர்களுடன் நாவலர் பரம்பரை
முடிந்துவிட்டதாகவும் கூறியிருக்கிருர்கள். இதற்குக் காரணம் புலவரவர்கள் செய்த பணிகளாகும்.
வண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலையை நாவலரவர்களுக்குப்பின்பு உயர்ந்த கல்விப்பீடமாக உயர்த்திய பெருமையில் புலவரவர்களுக்கு முக்கிய பங்குண்டு. அங்கு நடைபெற்ற காவிய வகுப்பில் உயிர்நாடி பாக விளங்கியவர் புலவரவர்களே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கல்வியின் பல்வேறு துறைகளிலே புலவரவர்கள் தம் காலத்திலே சிறந்து நின்ருர், புலவரவர்கள் பதிகம், ஊஞ் சல், கலிவெண்பா, இரட்டைமணிமாலை, கும்மி முதலிய பல சிறு பிரபந்தங்களைப் பாடியுள்ளார்; சங்கதத்திலிருந்து பாடல் களையும் நூல்களையும் தமிழிலே பெயர்த்துப் பாடியுள்ளார், வசன நூல்கள் எழுதியுள் ளார்; தமிழ்ப் புலவர் சரித்திரம் வரைந் துள்ளார்; இலக்கியச் சொல்லகராதி தொகுத் துள்ளார்; இலக்கியப் பிழைகளைக் கண்டித் துக் கண்டனம் செய்துள்ளார்; இலக்கணப் பிழைகளைக் கண்டித்ததோடு இலக்கண நூல்களைப் பதிப்பித்தும் புத்துரை எழுதியும் இலக்கண சந்திரிகை, வினைப்பகுபதவிளக்கம் முதலிய ஆய்வுகள் செய்தும் வந்தவர்;

00 -
இலக்கியங்களை உரையுடன் வழங்கியவர்; புலவரவர்கள் 1878 - 1888 கட்டத்திலே கிறிஸ்துமத கண்டனத்திலே முதல்வராக நின்றவர்;பின்பு அம் முனைப்புக் குறைந்துவிட் டது. புலவரவர்கள் சிறந்த பிரசங்கியாகவும் பேரெடுத்தவர் என்பர். அப்பாக் குட்டி உபாத்தியாயர் எனப்பட்ட புலவரவர்கள், நாவலரவர்களைப்போன்று, தமிழ் படித்த பலரை உருவாக்கிய பெருமை கொண்டவர். கைலாசபிள்ளை புலவரவர்களுக்கு வாய்க்கரிசி இடும்போது தமிழுக்கு வாய்க்கரிசி இடுவ தாகக் கூறி இட்டனர் என்று கதையுண்டு.
சுன்னை குமாரசுவாமிப் புலவர் ஆரம்பத் தில் சமய பிரசாரத்தில் அக்கறை மிகுந்தவ ராகவும் பின்பு கல்வி பற்றியே சிந்தனை செய்ப வராகவும் காணப்படுதல் நோக்கத்தக்கது.
நாவலரவர்களிடம் சந்தேகநிவிர்த்தி பெற்றவர்களில் ஒருவர் மாதகல் ஏரம்பையர் (1847 - 1914). நிருவாணதீட்சை பெற்றுச் சிவபூசை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு அப் பூசையைக் கிரமமாகச் செய்துவந்தவர் ஏரம் பையர், கீரிமலையிலே நாவலரவர்களின் தரு மப் பொருள்கொண்டு தாபிக்கப்பெற்ற வித் தியாசாலையை அவரே ஆசிரியராக இருந்து நடத்தினர். சைவபரிபாலன சபையார் நடாத் திய குரு வகுப்பிற்கும் அவரே, தலைமையாசிரி யராக விளங்கினர். ஏரம்பையர் செய்யுணுரல் களையும் வசன நூல்களையும் இயற்றியுள்ள போதும் அவருக்குப் பேரெடுத்துக் கொடுத் தவை அவர் செய்த சைவப் பிரசங்கங்களாம்.
சைவப் பிரசங்கங்களில் வல்லவராகவும் ஆசிரியராகவும் பேரெடுத்த,சிவபூசை செய்து வந்த வேருெருவர் அச்சுவேலி அ. வேன்மயில் வாகனச் செட்டியார் (1865 - 1912). இவர் நாவலரவர்களிடம் சித்தாந்தம் கேட்டவர் என்பர்.? நாவலரவர்களின் புலோலி சைவப் பிரகாச வித்தியாசாலையின் முதலுபாத்தி யாயராக விளங்கி, திக்கம் சி. செல்லையா பிள்ளை, வதிரி சி. நாகலிங்கம்பிள்ளை முதலா னேர் பலருக்குப் பயிற்றுவித்தவர் வேன்மயில் வாகனப் புலவர். இவர் தமிழ் நாட்டிலும் கொழும்பிலும் சில வருடங்கள் சைவப்பிர சங்கங்கள் நிகழ்த்தியுள்ளார்.

Page 154
- l(
நாவலரவர்களின் முதன் மாணுக்கருள் இடம்பெறும் சுவாமிநாதையர், விசுவநாதை பர், கந்தசாமிப்பிள்ளை என்போர் விபரங்கள் கிடைக்குமாறில்லை. நல்லூர் க. சதாசிவப் பிள்ளை முதலானேருடன் 1846இலே நாவல ரவர்களின் திண்ணைப் பள்ளியிலே பயின்ற இவர்கள் 1848இலே அவர் வண்ணையிலே தாபித்த சைவப்பிரகாசவித்தியாசாலையில் வேதனமின்றிப் படிப்பித்து வந்த னர். 1852இலும் இவர்கள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தமை அண்டர்சன் பிரபுவுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் மூலம் புலனுகின் றது. S ஆயினும் வே. கனகரத்தின உபாத்தி யாயர் ஆசிரியருட் சிலர் நீங்கிவிட்டதாகக் கூறுவதால் 1852க்குப் பின் நீங்கியவர்களுள் இவர்கள் இடம்பெறுகின்றனரோ என்பது தெரியவில்லை.?
சுன்னை குமாரசுவாமிப் புலவருக்கு நேரே முன்பு வண்ணை வித்தியாசாலை முதலுபாத்தி யாயராக விளங்கியவர் மா. வைத்தியலிங்க பிள்ளே. வைத்தியலிங்கபிள்ளை 1867 முதல் 1902 வரை முதல் உபாத்தியாயராக இருந்த னர். இவர் வித்துவசிரோமணி ச. பொன் னம்பலபிள்ளை முதலானுேருடன் நாவல ரவர்களிடம் பயின்றவர். 10
வைத்தியலிங்கபிள்ளைக்கு முன் வண்ணை முதல் உபாத்தியாயராக விளங்கிய வர் மு. தில்லைநாதபிள்ளை ( - 1867). இவர் நாவலரவர்களிலும் ஒரிரு வயது இளையவர்; சதாசிவப்பிள்ளையிலும் இரண்டு மூன்று வயது மூத்தவர். நாவலரவர்களுடன் மத்திய கல்லூரியில் மாணவனுகவும் ஆசிரியணுகவும் இருந்து கிறிஸ்து மதத்தைத் தழுவுவதாகக் கொடுத்த வாக்கை நாவலரவர்களின் போதனையில் நிறைவேற்ருது வேலையால் நீக்கப்பெற்ற தில்லைநாதபிள்ளை நாவலரவர் களின் வண்ணை சுக்கிரவாரப் பிரசங்கங் களுக்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்து கொண்டு நாவலரவர்களிடம் உயர் இலக் கண இலக்கியம் பயின்றவர். 1858 முதல் 1867வரை வண்ணை வித்தியாசாலை முத லுபாத்தியாயராக விளங்கியவர்.
மட்டுவில் க. வேற்பிள்ளை (1846 - 1930) நாவலரவர்களுக்கும் மாணவகர்; அவர்கள்

--سس۔ 1 (
சென்னைக்குச் சென்றிருந்த காலத்தும் தாமும் உடன் சென்று அங்கிருந்து கற்றவர்; ஏறக் குறைய 1907 முதல் பல வருடங்களாகச் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராக விளங்கியவர்; முன்பு யாழ்ப்பாணத்திலும் வண்ணையில் பலருக் குப் பாடஞ் சொல்லியவர்.
“வேற்பிள்ளை நல்லறிவுச் சுடர் கொளுத்த லான சந்திரமௌலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகம் முதலான பல செய்யுள் நூல்களைப் பாடியவர்; வேதாரணிய புரா ணம், சிவகாமியம்மை சதகம், ஈச்சுரன் மாலை முதலியன பதிப்பித்தவர். ஆயினும் உரையாசிரியராகவே வேற்பிள்ளை பேரெடுத் தவர். திருவாதவூரடிகள் புராணம், புலியூ ரந்தாதி, அபிராமி அந்தாதி, கெவுளிநூல் விளக்கம் என்பனவற்றிற்கு வேற்பிள்ளை உரையியற்றியுள்ளார். அத்தோடு சிறந்த புராணப் பிரசங்கியாகவும் கருதப்படுவர்.
கோவிந்தபிள்ளை எனப்படும் புலோலி வ. குமாரசுவாமிப் புலவர் (-1926) நாவல ரவர்களிடமும் பயின்றவர் என்பதை அவ ருடைய நன்னூற் காண்டிகையுரை விளக்கம் மூலம் அறியமுடிகின்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் கோப்பாய் யூனியன் பயிற்சிக்கலாசாலையிலும் தமிழ்ப் பண்டித ராக விளங்கிய கோவிந்தபிள்ளை வில்லி பாரதத்தின் பகுதிக்கு உரை எழுதிய போதும் இலக்கணக்கொத்தர் என்று சிறப் பிக்கப்பட்டவர்.
நீர் வேலி ச. சிவப்பிரகாச பண்டிதர் (1864 - 1916) சங்கரபண்டிதரின் சிரேஷ்ட புதல்வர். சங்கரபண்டிதர் நாவலரவர்களுடன் தோள்கொடுத்துநின்று சைவப் பிரசங்கமும் கிறிஸ்துமத கண்டனமும் செய்தவர். அவர் பிரமோதுரத டு புரட்டாதி மீ" புதுச்சேரி யில் வியோகமடைந்ததை அடுத்து சிவப்பிர &ாச பண்டிதர் நாவலரவர்களிடமும் சந்தேக நிவிர்த்தி பெற்றவர். வண்ணை சைவப்பிர காச வித்தியாசாலையில் குமாரசுவாமிப் புலவருக்கு உதவியாசிரியராக விளங்கிய சிவப்பிரகாசர் நீர்வேலியில் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவியவர். சிவப்பிரகாச

Page 155
பண்டிதர், திருக்கழிப்பாலைப் புராணம் முதலிய செய்யுணுரல்கள் பாடியவர்; பாலாமிர்தம் பாலபாடநூல்கள் எமுதியவர்; திருச்செந்தூர் புராணவுரை கண்டவர்; சங்கத நூல்களுக்குத் தமிழுரை தந்தவர்; சி. வை. தாமோதரம்பிள்ளைக்கும், வண்ணை சி. சுவாமிநாத பண்டி தருக்கும் நூற் பரிசோதனையிலே உதவியவர்; தந்தையின் நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தவர்.
1846இலே நாவலரவர்களின் திண்ணைப் பள்ளியிலே சேர்ந்து பயின்று 1848இலே அவர்களுடைய வண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையிலே வேதனமின்றிப் பயிற் றத் தொடங்கிய எழுவரில் ஒருவர் இணுவில் நடராசையர் (-1903). ஐவரவர்கள் சித் தாந்த சாத் தி ரத்திலே வல்லுநர் என்று பே ரெடுத்த வர் ; ஈழத்தில் மட்டுமன்றித் தமிழ் நாட்டிலும் சிதம் பரம், மதுரை முதலிய இடங்களிலும் பல நாள் வசித்துச் சித்தாந்த சாத்திரம் படிப் பித்தவர்; நாவலரவர்களின் முன்னுேரான ஞானப்பிரகாச சுவாமிகள் சிவஞானசித்தி யார் சுபக்கத்திற்குக் கண்ட உரையினைத் திருப்பற்றுாரிலே 1888இலே தனியே அச்சிட் டவர். திருவாவடுதுறை யாதீனத்தர் ஞானப்பிரகாசர் உரையினைச் சிவசமவாத வுரையாகக் கொள்ளினும் நாவலர் பரம்பரை யினர் அதனைச் சிறப்பாகப் போற்றியமை ஈண்டு மனங்கொளத்தக்கது.
வேலணை வி. கந்தப்பிள்ளை (1840-1914 நாவலரவர்களிடம் இலக்கண இலக்கியமும் அவர் மாணவர் இணுவில் நடராசையரிடம் சித்தாந்த சாத்திரமும் கற்றவர் ; நாவல ரவர்களின் கட்டளைப்படி வேலணையிலே தமிழ் வித்தியாசாலை நிறுவி நடத்தியவர் சிவபூசை கிரமமாகச் செய்த கந்தப்பிள்ளை கொழும்பு, யாழ்ப்பாணம், சிதம்பரம் முத லிய இடங்களிலே சைவப் பிரசங்கம் செய் தவர். சைவ சித்தாந்த விடயங்களைத் தெரிவிக்கும்பொருட்டு இவர் வேலணையிலே * சைவ சூக்குமார்த்த போதினி ' எனும் பத்திரிகையை நடாத்தியவர். தத்துவட் பிரகாசவுரையைப் பதிப்பித்த பிள்ளை யவர்கள் சிவநெறிப் பிரகாசத்தைப் பரிசோ

------ 02ل
தித்துப் பேரனுரைக்கொண்டு பதிப்பித்தார்" தீவுப்பகுதியிலே சைவசமயத்தின் வளர்ச் சிக்குக் காரணமானவர்களிலே கந்தப்பிள்ளை முக்கியமானவர்.
குப்பிழான் சி. செந்திநாதையர் (1848 - 1924) 1870க்கு மேல் வண்ண சைவப் பிரகாச வித்தியாசாலையில் படிப்பித்துக் கொண்டு நாவலரவர்களிடம் பாடம் கேட் டவர்; அவர் பிரசங்கங்களைக் குறிப்பெழுதிப் படித்தவர். நாவலரவர்கள் வாழ்வின் கடைசித் தசாப்தத்திலே எதிர்நோக்கிய கத்தோலிக்க பிரசாரத்தைக் கண்டிக்கப் பேருதவியாக விளங்கியவர் செந்திநாதையர். ஐயரவர்கள் நாவலரவர்களைப் போன்று புராணங்களின் உட்பொருளை விளக்கிப் பிரசங்கமாற்றுவதில் சிரத்தைமிக்கவராக விளங்கியவர். தம் வாழ்வின் பிற்காலத் தினைத் தமிழ்நாட்டிலே பெரிதும் கழித்த ஐயரவர்கள் தத்துவ ஆராய்ச்சியிலே பெரி தும் ஈடுபட்டவர். ஏகான்ம விவாதத்தினை வச்சிரதண்டம், மகாவுக்கிரக வீரபத்திராஸ் திரம் முதலியனகொண்டு தாக்கிய செந்தி நாதையர் சிவபரத்துவத்தை நாட்டும் முகமாகத் தேவாரம் வேதசாரம், சைவவே தாந்தம் முதலியனவற்றை வெளியிட்டவர். ஐயரவர்களின் சிறந்த பணியாகக் கருதப்படு வது அவருடைய நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பாகும். செந்திதா தையர் நா. கதிரைவேற்பிள்ளைக்கு எதிராக வைக்கப் பட்ட மருட்பா வழக்கிலே பிள்ளையவர்க ளின் கட்சியில் நின்று அவருக்காகச் சாட்சி கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றத்திலே வித்தியாசாலையும் பின்பு அச்சியந்திரசாலையும் வைத்து நடாத்திய செந்திநாதையர் கந்தபுராண நவநீதம், தாந்திரிக துண்ட கண்டன கண்ட னம், ஞானபோத விளக்கச் சூருவளி, வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவப் படம், வைதிக சுத்தாத்துவித சைவசித் தாந்த தத்துவப்பட விணுவிடை, சிவஞான போத வசனலங்காரதீபம்,ஞானரத்தினுலளி, பூரீ சீகாழிப் பெருவாழ்வின் ஜீவகாருண்ய மாட்சி, சென்னை ஆரியஞர் பிரமம் பரப்பிரமமாகாத சீவப்பிரமம், திருநீற்றின்

Page 156
10 ہے۔
உண்மை, சிவலிங்க மகத்துவம், இந்துஜய பேரிகை, சிவனுந் தேவஞ என்னுந் தீய தாவுக்கு ஆப்பு, வஜ்ரடங்கம், விவிலியகுற்சி தம், விவிலிய குற்சிதக் குறிப்பு, விவிலிய குற்சித கண்டன திக்காரம், சாண்கூடித்திரியப் பிரசண்டமாருதம் முதலியனவற்றைச் சுய மாக எழுதியதோடு தத்துவ விளக்கத்தைத் தம்முரையுடன் பதிப்பித்தவருமாவர்.
நாவல்ரவர்கள் வேதத்தைப் பூர்வபக்ஷ மாகக் கருதும் மரபை ஏற்றுக்கொண்ட போதும் வேதத்துக்குப் பிரசாரகராக அமைந் தாரில்லை. பெரியபுராண சூசனத்திலே நாவல ரவர்கள் எழுதியுள்ள வேதவுணர்ச்சி, சைவா கமவுணர்ச்சி எனும் விடயங்களை நோக்கு 6h1iffi அவர்தம் கருத்தைத் தெளிவாக உணர்வர், நாவலரவர்கள் சைவாகமங்க ளின் பிரசாரகராகவே காணப்படுகிறர். சிவாகமவுணர்ச்சியைப் பரப்பவும் சிவாகம நிந்தையைக் கண்டிக்கவும் நாவலரவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வைதிக மாற் றத்திலும் சைவமார்க்கம் ஈழத்திலே தழைத் தோங்கக் காலாயினதென்பதை மறுத்த லரிது. செந்திநாதையரின் தேவாரம் வேத சாரம் எனும் நூல் வேதம், வேதாந்தம், ஆகமம், ஆகமாந்தம், இதிகாசபுராணம் என்பனவற்றிலும் திருமுறைகளிலும் சிவ பரத்துவத்தை நாட்டும் ஒற்றுமைகளைக் காட்டுவது. அவருடைய சைவவேதாந்தம் பதிஞறு பிரகரணங்களில் சிவபரத்துவத்தை நாட்டும் வேதாந்தச் சான்றுகளைக் காட்டு வது. நாவலரவர்களின் தீவிரதரம் அவ ருடைய பரம்பரையிலே கண்ட மாற்றத் திற்குச் செந்திநாதையர் சான்ருவர்,
கொக்குவில் குகதாசர் ச. சபாரத்தின முதலியார் (1858 - 1922) த. கைலாசபிள்ளை யுடன் நாவலரவர்களிடம் கற்றவரென்ப.12 அரசாங்க உத்தியோகங்கள் பலவற்றை வகித்த சபாரத்தின முதலியார் கொக்குவில், நல்லூர், முனிசுரம், ஒட்டு சுட்டா ன் முதலிய திருத்தலங்களில் கோயில்கொண் டுள்ள தெய்வங்கள்மீது பல பாமாலைகளைச் சூடியபோதும் சிறந்த சித்தாந்த அறிஞராகப் பேரெடுத்தவர். இளமையிலேயே "உதய பானு 'விலும் பின்பு ‘இந்துசாதனம்" பத்தி

)3 -
ரிகையிலும் தத்துவ சம்பந்தமான பல கட்டுரைகள் எழுதியவர். சீவான்மபேதம், ஈச்சுரநிச்சயம், பிரபஞ்ச விசாரம் முதலிய அரிய சமய தத்துவ நூல்களை முதலியா ரவர்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் Essentials of Hinduism Tairgylb BT2. எழுதியிருக்கிருர். இந்தியாவிலும் இலங்கை யிலும் சித்தாந்த மாநாடுகளுக்குச் சபாரத் திணி முதலியாரைத் தலைமைதாங்கும்படி அழைத்துக் கெளரவித்திருக்கிருர்கள்.
நல்லூர் வை. திருஞானசம்பந்தப்பிள்ளை (1849-1901) நாவலரவர்களுக்கு மருமகனும் மாணவனுமாவர். தர்க்க சாத்திர ஆராய்ச்சி யிலும் தர்க்கவாதம் செய்வதிலும் ஆர்வம் மிகுந்து தர்க்ககுடார தாலுதாரி என்று பேரெடுத்தவர், நாவலரவர்களுக்கும் நல்லூர் கந்தசுவாமிகோயிலாருக்கும் இடையே உண்டு பட்ட வாதங்களிலே "நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் பிரதிகண்டன் வழு உக்களை வச்சிர குடாரம்" முதலிய கண்டனங்களை நாவல ரவர்களுக்குச் சார்பாக எழுதியவர். வட கோவை சு.சபாபதி நாவலர் 1878 வரையிலே யாழ்ப்பாணம் மீண்டு நிகழ்த்திய சமயப் பிரசங்கத்திலே அகோரசிவாசாரிய பத்ததி யைக் கண்டித்து, அதனைப் பின்பற்றுபவர்கள் சமவாத சைவர்கள் என்று தூவித்த காலை, தர்க்ககுடார தாலுதாரி 'பத்திராத் திரப் பிரயோக ஏகவசன தீபிகை' எழுதி அவரைக் கண்டித்தார். அக்காலை நாவல ரவர்களும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மீது கோபப்படவேண்டியேற்பட்டது. தர்க்க குடார தாலுதாரி நாவலரவர்களை ஐந்தாம் சைவசமய குரவர் என்று பாடியும் எழுதி யும் துதித்து நாவலரவர்களாற் கண்டிக்கப் பட்டவர், கும்பகோணம் இந்து யூனியன் உயர்தர பாடசாலையில் தமிழ்ப் பண்டித ராகப் பணிசெய்துவிட்டுச் சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையில் முதலுபாத்தி யாயராக விளங்கிய தர்க்ககுடார தாலுதாரி, கோப்பாய் ச. பொன்னம்பலபிள்ளையுடன் கோபித்துக்கொண்டு, சிதம்பரம் சொர்க்க புர மடத்தில் சித்தாந்த வித்தியாசாலே நடாத்தும்காலை வியோகமடைந்தார். வேதா கம நாமவாததீபிகை. அரிகரதாரதம்மியம்

Page 157
நாராயண பரத்துவ நிரசனம், தர்க்காமிர்த் மொழிபெயர்ப்பு என்பன பிள்ளையவர்கள் விட்டுச் சென்றவை.
ஆவரங்கால் சு. நமச்சிவாயப் புலவரும் தர்க்ககுடார தாலுதாரியவர்கள் போன்று நாவலரவர்களுக்கும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாருக்கும் இடையே நிகழ்ந்த வாதங் களில் நாவலர் அவர்களின் பக்கம் நின்று கண்டனங்கள் எழுதியவர். நாவலரவர்கள் மித்தியாவாதநிரசனத்திலே சில இடங்க Oலே 'ஆவரங்கால் தம்பி" என்று குறிட் பிடுவது நல்லதம்பி என வழங்கப்பெற்ற நமச் சிவாய்ப் புலவரையேயாகும். நமச்சிவாயட் புலவர் நாவலரவர்களிடம் பயின்றமை அறி யாதபோதும், அவர்களுடைய மாணவகர் வேற்பிள்ளை உபாத்தியாயரிடம் கற்றவராத லினுல் நாவலரவர்களை ஐந்தாம் குரவர் என்று போற்றியவராக அறியப்படுகிருர், நமச்சிவாயப் புலவர் சங்கீத ஞானம் உடை யவராய்ப் பல கீர்த்தனைகளைப் பாடியுள்
Tiri.
நாவலரவர்களின் அன்புக்குப் பாத்திர மாகி அவரிடமிருந்து இரங்கற் பாமாலையும் வாழ்க்கைச் சரித்திரமும் பெற்றவர் வி. சுப்பிரமணியபிள்ளை (-1873) என்பவராவர், சுப்பிரமணியபிள்ளையின் வியோகத்தையும் அவர் நாவலரவர்களின் சீடராய் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் உபாத்தி யாயராய் இருந்ததையும் குறிப்பிடும் வே. கனகரத்தின உபாத்தியாயர் (1882) நாவல ரவர்கள் அவருக்குச் சூட்டிய புகழாரத்தைப் பற்றி யாதும் குறிப்பிடவில்லை. நாவலரவர் களின் சொத்துக்கு ஆதிபத்தியம் பெற்ற நல்லூர் க. சதாசிவப்பிள்ளை (-1910) அவற்றை வெளியிடவேயில்லை. சி. செல் லையாபிள்ளையின், ஆறுமுகநாவலர் அவர் கள் சரித்திரச் சுருக்கமும் அவர்கள் இயற்றி யருளிய தனிப் பாமாலையும் (1914) என்ற நூலிலே சுப்பிரமணியபிள்ளை மீது பாடப் பெற்ற இரங்கற் பாக்கள் முதன்முதலாக இடம்பெற்றன. அதன் பின்பு த. கைலாச பிள்ளை தமது 'ஆறுமுகநாவலர் சரித்திரம்" என்ற நூலிலே சுப்பிரமணியபிள்ளை மீது எழுந்த சரித்திரத்தையும் இரங்கற் பாக்களை

سس 104
யும் குறிப்பிட்டார். ஆறுமுகநாவலர் பிர பந்தத் திரட்டின் முதற் பதிப்பிலே (1921) சரித்திரத்தையும் பாக்களையும் தனியே வெளியிட எண்ணியிருப்பதால் பாடல்களை அங்கு சேர்க்கவில்லை என்று கைலாசபிள்ளை கூறுகிறார். திரட்டின் பிந்திய பதிப்புகளி லேயே பாடல்கள் இடம்பெற்றன; ஆனல் சரித்திரம் வரவேயில்லை.
** சுப்பிரமணிய பிள்ளையின் சரித்திரத்தை வெளியிடுவதுபோற் பாசாங்கு செய்து பல வருடம் மறைத்து வத்திருந்து பின் அதனைச் சாம்பர்செய்துவிட்டார்கள்." என்று பண்டிதமணி சி. கணபதிப்பின்ளை கூறியிருக்கிருர்.13 இச் சரித்திரத்தைக் கண்ட பண்டிதமணியவர்கள், பன்னிரு அத்தியாயம் கொண்ட இந் நூலிலே நாவலரவர்கள் தமது நோக்கங்களையும், நம்பிக்கைகளையும் வெட்ட வெளிச் ச மாகக் கூறி இருப்பதாகக் கருதுவர்.
சுப்பிரமணியபிள்ளை மீது நாவலரவர்கள் பாடியுள்ள இரங்கற் பாக்கள் மூலம் நாவல ரவர்களின் உள்ளம் தெளிவாகப் புலப்படும். தம் லட்சிய நோக்கிற்கேற்ற மாணவனுக அவர் சுப்பிரமணியபிள்ளையைக் கருதினர். தம்முடைய ஈமக்கிரியைகளைச் செய்யும் தகுதி அவருக்கே இருந்தது என்றுகூட நாவல ரவர்கள் அன்று எண்ணினர். உறவினர் பலர் வாழ்ந்தபோதும் மாணுக்கர் பலர் திகழ்ந்தபோதும் நாவலரவர்கள் தம் கருத்தை அவர்கள் தோளில் வைக்க விரும்ப வில்லைப்போலும். 1879இலே சுந்தரமூர்த்தி நாயர்ை குருபூசையின்போது நாவலரவர்கள்,
* நான் உயிரோடு இருக்கும்போதே உங் களுக்காக ஒரு சைவப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள் ?? என்று கூறல் கவனிக்கத்தக்கது.
சுப்பிரமணியபிள்ளையின் வியோகத்தின் பின்பு நாவலரவர்கள் தம் ஈமக்கிரியைகளை நடாத்த உரிமை கொடுத்தது திரு. சு. சபாபதிச் செட்டியாருக்கு ஆகும். சிதம்பர சுப்பைய செட்டியாரின் மூத்த மகன் சுப்பிரமணியம் செட்டியார்; இளைய மகன்

Page 158
- 1
முத்துக்குமாரச் செட்டியார். கிரேட்டனின் புதல்வனே சபாபதிச் செட்டியார் ; கனிட் டனின் புதல்வன் புகழ்பெற்ற பசுபதிச் செட்டியார், சபாபதிச் செட்டியார் நாவல ரவர்கள் போதனைப்படி சைவாசார சீலராய் சிவபூஜாதுரந்தரராய் வாழ்ந்ததால் நாவல ரவர்களுக்கு ஈமக்கிரியை செய்யும் பேறு பெற்ருர்.
பச்சிலைப்பற்று மணியகாரரின் புதல்வ ரான காசிநாதபிள்ளை இளமையில் மனையாளை இழந்து, பிரபஞ்ச வாழ்வின் மயக்கம் நீங்கி சிதம்பரம் சென்று, சிவபூசை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு, முக்காலமும் சுவாமி தரிசனம் செய்து, பூமாலை கட்டிக்கொடுத் தல் முதலிய திருத்தொண்டுகளைச் செய்து கொண்டு வாழ்ந்துவருகையில் நாவலரவர்கள் பார்வையிலே அகப்பட்டனர். சிதம் பரத்திலே வித்தியாசாலையை அமைக்கும் பொறுப்பை நாவலரவர்கள் காசிநாதபிள்ளை யிடமே கொடுத்தனர். அவரும் கருமமே கண்ணுயிருந்து நாவலரவர்கள் இட்ட பணியை விரைவாக ஒப்பேற்றி முடித்தனர். இதனுல் நாவலரவர்கள் வித்தியாசாலையை ஆரம்பித்துவிட்டு, சென்னை சென்றபோது, காசிநாதபிள்ளையை மானேஜராக நியமித் தனர். நாவலரவர்கள் சுக்கில இல் (1870) யாழ்ப்பாணம் மீண்டபோது அவருடன் கூடிக்கொண்டு வந்து அவருறைவிடத்திலே அவருக்கு உதவிகளைச் செய்துகொண்டிருக் கும் காலத்திலே சுரத்தால் பீடிக்கப்பட்டு மறைந்தார். நாவலரவர்கள் அவருடைய அபரக்கிரியைகள் யாவற்றையும் சிறப்பாக நடப்பித்தனர்.
நாவலர் பரம்பரையில் நாவலரவர்களின் காலத்திலேயே அவருக்கு அடுத்த படியிலே மதிக்கப்பட்டவர் வித்துவசிரோமணி ச.பொன் னம்பலபிள்ளை (1837-1897). பிள்ளையவர்கள் தமிழிலே சிறந்த வித்துவானுயிருந்து நாவல ரவர்களைப் போலக் கைம்மாறு வேண்டாது கல்வி கற்பித்து வந்தவர்; சொல்விற்பனமும் பயன்சொல் வித்தையும் கைவந்தவர். நாவல ரவர்களிடம் கற்றவர்களும் தம் கல்வியை வித்துவசிரோமணியவர்களிடம் நிறைவு செய்ய விரும்பி நின்றனர். சமயவுண்மை
4

05 -
களுக்கு-அவற்றின் விளக்கத்திற்கு -நிலைக் களமாக நாவலரவர்கள் கொண்ட புராண படனத்தைக் காவிய இரசனைக்குப் பயன் படுத்தியவர் வித்துவசிரோமணியவர்கள். பத்திச் சுவைக்கு மாமனும் இலக்கியச் சுவைக்கு மருகனும் என்ற நிலையினை ஒரே காலத்தில் ஈழத்தவர் கண்டு களித்தனர்.
நாவலர் வழியிலே செல்லாவிட்டாலும், அவ் வழியிலே காலெடுத்து, நாவலர் பரம் பரைக்குச் சிறப்புத் தேடியவர் வித்துவ சிரோமணி ச. பொன்னம் பல பிள்ளை அவர்கள்.
ஆறுமுகத்தம்பிரானும் வடகோவை சு. சபாபதி நாவலரும் நாவலர் மரபினராக ஆரம்பித்துப் பின்பு அப் பரம்பரையினரிட மிருந்து விலகி நின்றவர்கள்,
ஆறுமுகப்பிள்ளை 1846இலே நாவலரர்ை களின் திண்ணைப்பள்ளியிலே பயிலத் தொடங்கி 1848இலே அவர்களுடைய வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையிலே ஆசிரியராக விளங்கியவர். பின்பு நாவல ரவர்களோடு யாதோ காரணத் தால் முரணி வித்தியாசாலையை விட்டு நீங்கி, திருவண்ணுமலை சென்ருர், 14 அங்கு கா க்ஷாயம் பெற்றுத் தம்பிரானுனர். இவரைப் பற்றிய செய்திகள் அதிகம் கிடைக்குமாறில்லை. ஆயினும் பெரிய புரா னத்தின் பெரும்பகுதிக்கும் திருமுறைகண்ட புராணம், சேக்கிழார் நாயனுர் புராணம், அற்புதத் திருவந்தாதி, மூத்தநாயனுர் இரட்டைமணிமாலை என்பனவற்றிற்கும் உரைகண்ட ஆசிரியராக விளங்குகிருர்,
வடகோவை சு. சபாபதி நாவலர் (18451903) நாவலரவர்களிடம் சில நூல்களைக் கேட்டவர் என்பர். சிதம்பரம் சைவப்பிர காச வித்தியாசாலையிலே தலைமையாசிரிய ராக நாவலரால் நியமிக்கப்பெற்ற சபாபதி நாவலர், அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்து அங்கே கற்று ஆதீன வித்துவானுக விளங்கி ஞர். சபாபதி நாவலரின் ஆதீன சம்பந்தம் அவருடைய செயல்களிலும் ஆக்கங்களிலும் புலனுகின்றது. நாவலரவர்களைப் போன்றும்

Page 159
- 1
அவர் பரம்பரையினர் போன்றும் சைவட் பிரசங்கம், பிற மத கண்டனம், செய்யுள் வசன நூ7 லாக் கம், அச்சியந்திரசாலை அமைத்தல், பத்திரிகை வெளியிடல் முதலிய வற்றிலே ஈடுபட்டிருந்தபோதும் ஆதீன சம்பந்தத்தினலே நாவலர் பரம்பரையினர் போற்றிய ஞானப்பிரகாச முனிவரையும் 965ffor சிவாசாரியர் பத்ததியையும் இழிக்கவும் தமிழ்ப்பணியிலே முன்னின்ற சி. வை. தாமோதரம்பிள்ளையைக் கண்டிக்க வும் சபாபதி நாவலர் முன்வருகிருர், தாமோ தரம்பிள்ளை கண்டனங்களை நோக்கும்போது ஆதீனத்தார் போற்றிய பழைமையான அமிசங்களைச் சபாபதி நாவலர் வற்புறுத்தி நிற்பதைக் காணலாம். சபாபதி நாவலர் ஆதீனப் பிடியில் இருந்து விலகாதவராகவே காணப்படுகிருர்.
நாவலர் பரம்பரையில் இடம்பெறும் அவர் மாணுக்கர்களான சுழிபுரம் திருஞான சம்பந்த உபாத்தியாயர், வண்ணை சி. பொன் னுத்துரை ஐயர், கா. வேலுப்பிள்ளை, வை. விசுவலிங்கம் பிள்ளை18, ச. பொன்னம்பல பிள்ளை' என்போர் பற்றி விதந்து கூறமுடிய வில்லை. நாவலரவர்களிடம் சேனவரையம் கேட்ட இணுவில் பொ. அம்பிகைபாக உபாத் தியாயர் இணுவையந்தாதி பாடி, வசன சூளாமணி எழுதி, தணிகைப் புராணத் திற்குப் பலருக்கு உரைகூறியவர்; சி. வை தாமோதரம்பிள்ளைக்கு உதவியாகவும் இரு தவர். வண்ணை வே. கனகரத்தின உபாத்தி பாயர் தம் குருவின் சரித்திரத்தை 1882இளே அச்சிட்டு வெளிப்படுத்தினர்.
நல்லூர் கா. தியாகராசபிள்ளை எனும் நாவல் ரவர்களின் மாணுக்கர்தாம் நாவலர் பரம் பரையிற் சிறப்பிடம் பெறும் மேலைப் புலோல நா. கதிரைவேற்பிள்ளையின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்செல்வர் காவியப் பார்வையிட்ட நல்லூர் கத்தோலிக் மிசியோன் தமிழ்ப்பண்டிதர் கா. தியாகரா பிள்ளையும், சம். பத்திரிசியார் கல்லூ ஆசிரியர் தியாகரும் இவரோ என்பது தெரிய வில்லை. கதிரைவேற்பிள்ளையின் ஆசிரிய அண்ணுமலையார் வண்ணம் பாடியிருக்கிருர்
ஊரெழு சு. சரவணமுத்துப்பிள்ளை 188 இலே வெளியிட்ட "உதயபானு (பின்

06 -
1881இலே சைவ உதயபானு, என்ஒ - பத்திரிகை நாவலரவர்களின் எண்ணத்தை ஈடேற்றியதாகும். நாவலரவர்கள் உதய பானு என்னும் பெயரோடு சைவப் பத்தி ரிகை நடாத்த முயன்று விளம்பரம் விடுத் திருந்தார். சரவணமுத்துப்பிள்ளை இலங்கை யிலும் இந்தியாவிலும் சைவப் பிரசங்கங்க ளும் புராணப் பிரசங்கங்களும் செய்த தோடு சஞ்சிகைகளுக்கு விடயதானமும் , கவிதைகளும் வழங்கியவர்.
நாவலர் பரம்பரையிலே சித. மு. பசுபதிச் செட்டியாருக்கு (1856-1906) முக்கிய இடமுண்டு. நாவலர் பெருமானின் எண் ணங்களை - கருத்துக்களைச் - செயற்படுத்த முன்னின்று உழைத்தவர் அவர். சைவ (சமய) பரிபாலன சபை, இந்து உயர்தர பாடசாலை (இந்துக் கல்லூரி), திருக்கேதீச்சரப் புன ருத்தாரணம் என்பனவற்றிலே அவர் புரிந்த பணியைச் சைவ உலகம் போற்றக் கடமைப் பட்டது. நாவலரவர்களின் போதனைப்படி சைவாசாரசீலராய் சிவபூஜா துரந்தரராய் விளங்கியவர் அவர்.
நாவலர் பரம்பரையிலே இருபதாம் நூற்றண்டிலே சிறப்பிடம் பெறுபவர்கள் மேலைப் புலோலி நா. கதிரைவேற்பிள்ளை, காரைதீவு ச. அருணுசல உபாத்தியாயர், சித்தங்கேணி ஆ. அம்பலவாண நாவலர், வண்ணை சி. சுவாமிநாத பண்டிதர் முதலியோ ராவர். உப அதிபர் பொ. கைலாசபதியையும் சிலர் இப் பரம்பரையிலே இணைப்பர். புலோலி சு. சிவபாதசுந்தரம்பிள்ளையையும், அச்சு வேலி ச. குமாரசாமிக் குருக்களையும் இப் பரம்பரையிலே இணைத்து நோக்க இடமுண்டு.
மேலைப் புலோலி நா. கதிரைவேற்பிள்ளை (1871 - 1907) தமிழ்நாடு சென்றிருந்தகாலை நாவலர் மரபின் சிறப்பினையும் அம் மரபு அடைந்திருந்த நிலையையும் கண்டுகொண் டனர். நாவலர் மரபுகளை இழிக்க முற்பட் டவர்களை எதிர்த்து நின்ற கதிரைவேலர் நாவலராகவே மாறிவிட்டார். நாவலரவர் களின் காலத்திற்குப்பின் ஏற்பட்டிருந்த புதிய சூழலிலும் நாவலரின் சிந்தனைகளைப் போற்றி மன்றேறி அவர் பெருமையை நிலைநாட்டினர். நாவலரவர்கள் அருட்பா

Page 160
- (
எனப்படுபவை யாவை என்று விளித்த வையை வற்புறுத்திநின்று நாவலரவர்களுக் குப் புகழ் தேடியவர். நாவலர் பெருமானைத் திருஞானசம்பந்த நாயனரின் அவதாரமாகப் போற்றித் துதித்தவர்.
சித்தங்கேணி ஆ. அம்பலவாண நாவல
ரும் (- 1932) நாவலர் பெருமானைச் சற்குரு வாகப் போற்றி, அவர் வாழ்ந்தவாறே வாழ முற்பட்டவர். சிதம்பரத்திலே ஆறுமுக நாவலர் சந்தான ஞானசம்பந்த சுவாமி ஆதீனம் அமைத்தவர். வித்தியாசாலை நிறுவி யும் புராணப்பிரசங்கம் செய்தும் நூல்கள் இயற்றியும் பதிப்பித்தும் நாவலர் வழி செல்ல முயன்றவர்.
வண்ணை சி. சுவாமிநாதபண்டிதர் (-1937) புராணபடனம் செய்தும், வித்தியாசாலைகள் தாபித்து நடாத்தியும், அச்சுயந்திரம் நிறுவி நூல்களைப் பதிப்பித்தும், நூல்களை இயற்றி யும் நாவலர் வழி சென்றவர். கதிரைவேற் பிள்ளைக்கு மருட்பா வழக்கின்போது உதவி யாக நின்ற சுவாமிநாத பண்டிதர், தேவாரத் திருமுறை, சிவஞான மாபாடியம் முதலிய பல அரிய பதிப்புகளை வெளியிட்ட பெரு மைக்கு உரியவர்.
காரைதீவு ச. அருளுசல உபாத்தியாயர் (1864-1920) “நாவலருக்குப்பின் ஒரேயொரு மனிதர்" என்று த. கைலாசபிள்ளையாலே போற்றப்பட்டவர். சைவப் பள்ளிகளையும் சைவாசிரியர்களையும் உருவாக்கும் முனைப் பிலே நாவலர் வழியே சென்றவர். சைவ வித்தியாவிருத்திச் சங்கம் முதலியன தோன்றுவதற்குக் கால் எடுத்துக் கொடுத் தவர்.
உப அதிபர் பொ. கைலாசபதி மேல் வரும் மேற்கோளில் சுட்டப்படுபவரில் ஒரு வர் என்பது மனங்கொளத்தக்கது.
** நாவலர் ஐயா அவர்களின் நோக்கங்களை என்னிலும் பார்க்கப் பதினுயிரம் மடங்கு நன்கு விளங்கினவர்களும், ஐயா அவர்களின் நிலையை உணர்ந்தவர்களும், அவர்களிலே அளவு கடந்த பக்தி பூண்டவர்களும் இந்த ஈழமண்டலத்திலே இரண்டே இரண்டு பேர் இருக்கிறர்கள்."

7 -
என்பது பண்டிதமணியவர்களின் கூற்று.? கைலாசபதியவர்கள் பற்றி விரிவான ஆய்வு கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
புலோலி சு. சிவபாதசுந்தரம்பிள்ளை (1878-1953) நாவலரவர்களின் சரிதத்தை ஆங்கிலத்தில் ஆசைபற்றி அறையலுற்ற தோடு அவரை முன்மாதிரியாகக் கொண்டு சைவபரிபாலனத்திற்கே தம்மை அர்ப்பணித் தவர். சைவசமய உண்மைகளை விளக்கியும் சைவசமய வழிபாட்டிற் புகுந்த மாசுகளைத் துடைக்க முயன்றும் பிற மதச் செல்வாக் கைத் தகர்த்தும் தம் மத வளர்ச்சிக்கான வழிதுறைகளில் முன்னின்று பணி புரிந்தவர்.
சிவாகம ஞானபானு சிவபூர் ச. குமார சுவாமிக் குருக்கள் (1886-1971), சைவ வித்தியாசாலை தாபித்தல், குருகுல பாட சாலை நடாத்தல், சமய நூல்களை முறைப் படி கற்பித்தல், சைவப்பிரசங்கம் செய்வித் தல், புராணபடனம் செய்வித்தல், சமய பத்திரிகை வெளியிடல், சமய நூல்களை அழி யாது பேணல், புதிய சமய நூல்களே எழுதி வெளியிடல் முதலிய செயல்கள் சைவசமய வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்று நாவலரவர்கள் கூறிவந்தனவற்றின் உண்மை உணர்ந்து, அடியொற்றிச் செயலாற்றி வந்தவர்.
சுன்னை குமாரசுவாமிப் புலவர் மறைந்த போது நாவலர் பரம்பரை அவரோடு முடிந்துவிட்டதாகச் சிலர் கூறினர்கள், நாவ லர் பரம்பரையில் அவர் பெற்றிருந்த முக் கியத்துவமே அவ்வாறு கூறுவதற்குக் காரண மாயிருத்தல் வேண்டும். நாவலர் பரம்பரை புலவரவர்களுக்குப் பின்பும் தொடர்ந்து வந் துள்ளது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை வரை அப் பரம்பரை தொடர்ந்து வந்துள் ளதை யாரும் மறுக்க முடியாது.பண்டிதமணி யவர்கள்தான் அப் பரம்பரையின் கடைசிக் கொழுந்து என்று கூறிவிடலாமோ?
நாவலர் பரம்பரையினரிலே வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையின் மாணுக் கரிஞல் ஆரம்பத்திலே நெறிப்படுத்தப் பெற்ற பண்டிதமணியவர்கள், சுன்னே குமார சுவாமிப்புலவர்,மானேஜர் த.கைலாசபிள்ளை

Page 161
ஆகிய இரு நாவலர் பரம்பரையின் முக்கி யஸ்தர்களின் செல்வாக்குக்குள்ளே அகப் பட்டுக் கிறிஸ்தவ சூழலை முற்ருக இழந்த நிலையிலே நாவலர் வழிக்கோர் காவலராக மாறினர். அத்தகைய ஒரு சூழலை அன்று தமிழ் நாடு உருவாக்கியிருந்தது. கைலாச பிள்ளையும் பண்டிதமணியவர்களும் நாவலர் பரம்பரையின் உயிர்ப்பிலே மிக்க அக்கறை யுடன் விழித்திருந்தனர்.
நாவலர் மரபுக்கு இடையூறு நீங்கியபோது நாவலர் சிந்தனையிலே பண்டிதமணியவர்கள் ஈடுபடத் தொடங்கினர். இக் கட்டத்திலே நாவலர் சித்தாந்தங்கள் புது விளக்கங்க ளோடு வெளிவந்தன. அவ் விளக்கங்களுக் கும் அ வ ற் றை விளக்கும் முறைக்கும் பண்டிதமணியவர்கள் யாருக்குக் கடமைப் Lil 'irrii?
சான்றுக் குறிப்புகள்:
1. புதுமை இலக்கியம்; அகில இலங்ை
இலங்கை முற்போக்கு எழுத்தாளர்
2
வே. கனகரத்தின உபாத்தியாயர் பூ
çc
இரண்டாம் பதிப்பு 1968, பக். 28. 3. சேற்றுார் அருணுசலக்கவிராயர், ஆறு பதிப்பு, 1984, முகவுரை பக். 13. வி. க. வித்தியாபிமானிகளுக்கு விக்யா சி. கணேசையர் ; ஈழநாட்டுத் தமிழ்ட சி. கணேசையர் ; டிெ நூல், பக். 11 சி. கணேசையர்; டிெ நூல், பக். 111
S. Thananyeyarajasingam; The Ed 1974, pp. 17, 24. 9. வே. கனகரத்தின உபாத்தியாயர்; ெ
10.
1.
கைலாசபிள்ளை, ஆறுமுகநாவலர் . கணேசையர் ; டிெ நூல், பக். 91
3.
14. 15. வே. கனகரத்தின உபாத்தியாயர் ல்ெ 16. த. கைலாசபிள்ளை; டிெ நூல், பக். 1
த
ஒ
12. சி. கணேசையர் ; டிெ நூல், பக். 15
சி. சீவரத்தினம்; நாவலர் சமயப் பண
இ
கணேசையர் ; டிெ நூல், பக். 22
17. செந்திநாதன், கனக; மூன்ருவது கண்

-س 08]
நாவலரவர்களின் வேறுபட்ட மொழி நடைகளும் மொழியாட்சிகளும் மித்தி யாவாத நிரசனத்திலும் பாலபாடக் கதைக ளிலும் அவற்றிற்குரிய முத்திரையைத் தெளி வாக்கியது போன்று பண்டிதமணியவர்க ளின் சிந்தனைக் கட்டுரைகளும் தமிழுக்கு வளமுள்ள நடையழகுகளை வழங்கியுள்ளன.
ஆயினும் பண்டிதமணியவர்களின் ஆத்ம சிந்தனை, செந்திநாதையர் வழிச் சென்று, **உப அதிபர்” வழிச் சென்று, ஆத்ம விசாரத்தினை அடைந்தபோது, பண்டிதமணி யவர்கள் ஒடுக்கத்தையே நாடிநின்ருர்கள்.
நாவலரவர்கள் போல, வித்துவசிரோ மணியவர்கள்போல, சுன்னை குமாரசுவாமிப் புலவர்போல, பண்டிதமணியவர்களும் பல மாளுக்கரை விட்டுச் சென்றுள்ளார். அவர் களால் நாவலர் பரம்பரை எவ்வாறு விளக்கம் பெறும் என்பதைக் காலம்தான் கூறமுடியும்.
கத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு மலர். சங்க வெளியீடு, கொழும்பு, 1962.
ரீலயூரீ நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம்,
முகநாவலரவர்கள் சரித்திரம், இரண்டாம்
பன நிரசனம், 1911, பக். 24, 34, 52 ப்புலவர் சரிதம், 1939, பக். 200,
S.
ucational Activities of Arumuga Navalar,
டி நூல், பக், 25, 39. சரித்திரம், 1919, பக், 13.
.158 ماہ۔ سی۔ 7 ரி, 1962, அணிந்துரை.
9.
ட நூல், பக். 86.
f.
டிெ நூல், பக். 26.

Page 162
பண்டிதமணியும்
மயிலங்கூடலூர் பி.
பல்கலைக் கழகமென்பது பாடநெறி களேப் பயிற்றுவித்துப் படிமுறையாகப் பட் டங்களை வழங்கு ம் நிறுவனமாகும். கலேமாணி, கலைமுதல்வர், கலாநிதி முதலிய பட்டங்களும் இவை போன்ற பிற பட்டங் களும் பல்கலைக் கழகங்களில் ப யி ன் று தேர்ச்சிபெற்ருேருக்கே பெரும்பாலும் வழங் கப்படுகின்றன. அறிவும் ஆற்றலும் அநு பவமும் மிக்க பேரறிஞர்க்கும் பல்கலைக் கழ கங்கள் பட்டங்களை வழங்குவதுண்டு. இது மிக அரிதாகவே நிகழ்கிறது. இத் தகைய பட்டங்களால் அவற்றைப் பெறுபவர் களுக்கு எவ்வித பெருமையும் சேர்வதில்லை. மாருக, அப் பட்டத்தை வழங்கும் பல்கலைக் கழகமே'பெருமை பெறுகிறது; பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை என்ற சைவத் தமிழறி ஞருக்கு இலக்கியப் பேரறிஞன் (Doctor of Literature) என்ற பட்டத்தை (இங்கு இலக் கியம் என்பது பொதுவகையால் கல்வியைக் குறிக்கும்) வழங்கி இலங்கைப் பல்கலைக் கழகம் பெரும் புகழ் ஈட்டிக்கொண்டது.
பண்டிதமணி அவர்கள் பல்கலைக் கழகத் திற் பயிலவில்லை; பல்கலைக் கழகப் பட்டம் எதனையும் பெறவில்லை. எனினும் அவருக் குப் பல்கலைக் கழகத்தின் அதியுயர்ந்த பட் டம் கிடைத்தது. அதற்குக் காரணம் அவ ருடைய பெரும் புலமையும் நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆய்வுகளுமேயாகும். பல் கலைக்கழக அறிஞர்கள் வியக்கும் வகையில், நவீன ஆய்வு நெறிமுறைகளுக்கு அமைவாக, முன்னுதாரணமற்ற பலதுறைகளில் அவர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் இவ்வாய்வுகளில் ஈடுபடல் பட்டம் பெற வேண்டுமென்ற நோக்குக் காரணமாக அமையவில்லை. உண்மை காணவேண்டும்; பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற பெருநோக்கங்களே அவர் ஆய்வுக்கு அடிப்படையாக அமைந்தன. இந்நோக்கங்கள் இளமைமுதல் இறுதிவரை ஆர்வத் தீயாகக் கொழுந்துவிட்டு எரிந்தன. அவர் மேற்கொண்ட ஆய்வுகளைப் பின்வரும் மூன்று துறைகளாக வகுக்கலாம்;

பல்கலைக்கழகமும்
நடராசன் அவர்கள்
1. ஈழத்து இலக்கியத்தின் தனித்துவம், மேன்மை, தொன்மை என்பனவற்றை முதன்முதலில் வரலாற்று முறைப்படி எடுத் துரைத் தமை.
2. ”இந்து மெய்யியலிற் பேரறிவு பெற்றிருந்த தேரடு சைவசித்தாந்த மேன்மையை ஒப் பியல் முறையில் ஆராய்ந்து நிறுவியமை,
3. நாவலர் பற்றிய தவறன கருத்துக்களைச் சான்றுகள் மூலம் மறுத்து உண்மையான நாவலர் வரலாற்றை நிலைநாட்டியமை.
பண்டிதமணி அவர்களுக்கு இலக்கியப் பேரறிஞன் என்ற பல்கலைக்கழகப் பட்டம் கிடைத்தமைக்கான காரணத்தைப் பேரா சிரியர் ஆ. வேலுப்பிள்ளை பின்வருமாறு வரையறை செய்கிருர் :
இலங்கைத் தமிழறிஞர்களின் புல மைத்திறம் பற்றி பிற அறிஞர்களிடையே முதன்முதல் பரப்புவதற்கு, பண்டிதமணி யின்இலக்கிய வழியே கதவு திறந்துவிட்டது. கந்தபுராண தட்சகாண்ட உரை இவருடைய ஆழ்ந்த புலமைக்கும் பெருமைக்கும் என்றென்றும் சான்று பகர்கிறது. பாரம்பரி யப் புலமை மிக்க இச் சான்றேருக்கு இலங்கைப் பல்கலைக் கழகம் கெளரவ டி. லிட். பட்டம் நல்கிப் பெருமைப் படுத்தி யது.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாறு என்ற புதிய பாடநெறி பல்கலைக்கழக மட்டத்தில் உருவாவதற்கு நாவலர்2 காட்டிய வழியைத் தொடர்ந்து பண்டிதமணி மேற்கொண்ட ஆய்வுகளே முன்னுேடியாக அமைந்தன என்பதற்கு இக்கருத்துச் சான்றகும். பண்டிதமணி ஈழத்து இலக்கியம் பற்றி ஆங் காங்கே அவ்வப்போது எழுதிய கருத்துக் களைத் தொகுத்தும் வகுத்தும் அமைத்து நூலாக வெளியிடுவது பயனுள்ள செய லாகும்.

Page 163
பண்டிதமணி அவர்களின் இந்து மெய் யியல் அறிவு ஆழமானது. காசிப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் கலை முதல்வர் (M. A.) பட்டம் பெற்ற கி. லக்ஷமணன் அவர்கள் கூறும் பின்வரும் கருத்து அவரது மெய்யியற்றுறை நுண்மாண் நுழைபுலத் திற்குச் சான்ருகும் :
டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆங்கிலத் திலே எழுதிய சில ஆழமான தத்துவக் கருத்துக்களை ஆங்கிலமும் தத்துவ ஞான மும் நன்கு அறிந்தோர்கூட நன்கு விளங் கிக்கொள்ள முடியாமற் சில சமயங்களில் இடர்ப்படுவதுண்டு. ஆணுல், அவர்கள், ராதாகிருஷ்ணன் எழுதிய அவ்வசனங்க ளூள் இரண்டொன்றை அரைகுறையாக வாவது தமிழ்ப்படுத்தினுற் போதும். பண் டிதமணி அவற்றை விளங்கிக்கொள்வர். அம்மட்டோடல்லாமல் இடர்ப்படும் அவ்வாங் கிலந் தெரிந்த அன்பருக்கே அழகாக விளங்கப்படுத்தியும்விடுவார்கள்.
பண்டிதமணி அவர்கள் மெய்யியலில் பல் கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கு மேலான அறிவும் விளக்கமும் பெற்றிருந்தார் என்ப தற்கு இக்கூற்றுச் சான்ருகும்.
மேல்நாட்டு மொழி, இலக்கியங்களின் தற்பண்புகளையெல்லாம் தமிழுக்கும் தந்து தமிழைக் காலத்துக்கேற்ற முறையில் வளர வழிகாட்டிய முன்னேடி ஆறுமுகநாவலர். அதன் பெருமை குன்ருவண்ணம் நவீனத் துவ இயல்புகளோடு நாவலர் மரபில் தம் பணியைத் தொடர்ந்தவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளையை ( இலக்கியப் பேரறிஞர் பட்டம் வழங்கி)க் கெளரவித்ததன்மூலம் இலங்கைப் பல் கலைக் கழகம் தமிழ் மறுமலர்ச்சியை ஏற் படுத்திய சைவர்களின் சீர்திருத்த வீரரா கிய ஆறுமுக நாவலரால் உருவாக்கப்பட்ட தமிழ்க் கல்வி, இலக்கியத் திறனுய்வு, சைவசித்தாந்தம் ஆகியவற்றின் புகழ் பூத்த மரபைக் கெளரவிக்கிறது எனலாம்." என, என். சபாரத்தினம் கூறுவது ஈண்டு நினைவுகூரத்தக்கது. நாவலர் மரபின்

10 -
காவலர் என்ற வகையில் நாவலர் வரலாற் றில் தமிழகத்தவரால் மேற்கொள்ளப்பட்ட இருட்டடிப்புக்கள், திரிப்புக்கள், பொய்கள் ஆகியவற்றைப் பண்டிதமணி தனியொருவ ராக நின்று இளமை முதலே எதிர்த்துக் கண்டித்து உண்மையை நிலைநாட்டிவந்தார். இதன்மூலம் பல உண்மைகள் துலங்கின. பல்கலைக்கழக ஆய்வாளர் திரு. எஸ். தனஞ் செயராசசிங்கம், வித்துவான் எஃப். எக்ஸ். சி. நடராசா ஆகியோர் நாவலர் பற்றிய பொய்ம்மைகளை அம்பலப்படுத்தியபோதெல் லாம் பண்டிதமணி மகிழ்ந்தார்; அவர்களைப் பாராட்டி ஊக்குவித்தார். அவர்களது கருத் துக்களை அடிநிலையாகக்கொண்டு மேலும் ஆராய்ந்து உண்மைகளை வெளிப்படுத்தினூர்,
ஈழத்து இலக்கிய வரலாற்று ஆய்வுகள், இந்து மெய்யியல் ஆய்வுகள், நாவலரியல் ஆய்வுகள் ஆகிய ஒவ்வொன்றும் தனித்தனி பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டங்களை ஈட்டித் தரக்கூடிய அடிப்படை ஆய்வுகளா கும். இவற்றின் சிறப்பே பல்கலைக் கழகம் பண்டிதமணி அவர்களை நாடிச் சென்று இலக் கியப் பேரறிஞன் பட்டம் வழங்கக் காரணமா
பமைந்தது.
இத்தகு திறமைகளைப் பெறும் ஆற்றல் பண்டிதமணி அவர்களுக்குக் கருவிலே வாய்த்த திருவாகும். ச. பொன்னம்பல பிள்ளை, சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர், த. கைலாசபிள்ளை, வித்துவான் சுப்பைய பிள்ளை, நீர்வேலிச் சிவசங்கர பண்டிதர் முதலியோர் பண்டிதமணி அவர்களின் தமிழ், வடமொழி அறிவுக்கு ஊற்றுக் கண்க ளாக விளங்கினர். புகழ்பெற்ற திருநெல் வேலி ** ஈரப் பலாச் சங்கம் ?? பண்டிதமணி யைப் பரந்த அறிவும் விஞ்ஞான மனப் பாங்கும் முற்போக்கு எண்ணமும் கொண்ட இலக்கியப் பேரறிஞஞக உருவாக்கியது. இச் *சங்கமத்தின் சிறப்பை மு. வைத்தியலிங்கம் பின்வருமாறு விளக்குகிருர்,
இங்கே மேலைத்தேசப் பாஷைகளில் உள்ள காவியங்கள், சொல் ஒவியங்கள், தத்துவஞானங்கள் அலசி அலசி ஆராயப் பட்டன. கற்றவர் எல்லாம் உச்சி மே ல் வைக்கும் இயற்கைப் புலவோர்களாகிய

Page 164
ஹோமர், வேஜில், ஷேக்ஸ்பியர், டிக் கின்ஸ், ஸ்கொற், ஷோ, வெல்ஸ் முதலி யோர்களின் நூல்கள் எல்லாம் வாசிக்கப் பட்டும், மொழிபெயாக்கப்பட்டும், சுவைக்கப் பட்டும், கண்டிக்கப்பட்டும் இரவு கழியும். இந்தச் சூழலில்தான் பண்டிதமணியின் கேள்வி வளம் சிறப்படைந்தது.
பண்டிதமணியின் உள்ளங் கவர்ந்த மகா புனிதராக வாய்த்த பல்கலைக்கழக விஞ்ஞா னப் பட்டதாரியும், மெய்ஞ்ஞானியுமான பொ. கைலாசபதி அவர்களின் பங்களிப்பு இங்கு விதந்து குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் என்ற வகையில் அங்கு அவரிடம் பயின்ற மாணவர்களும் அவர் நடத்திய பாலபண்டித பண்டித வகுப்பு மாணவர்களும் அவரிடம் மேலதிகமாகத் தமிழ் பயின்ற பட்டதாரி மாணவர்களும் அவரது மேடைப் பேச்சுக் களைக் கேட்ட பொதுமக்களும் பண்டிதமணி பாற் பெரிதும் கவரப்பட்டனர். பல்கலைக் கழக மட்டத்தில் முதன்முதலில் பண்டித மணியாற் கவரப்பட்டவர்கள் அறிவியல் துறையைச் சார்ந்தோரேயாவர். இதற்குக் கால்கோள் இட்டது தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 12-12-1959இல் யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற வடஇலங்கை ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் பேசிய பண்டிதமணி சமய முதன்மை பெற்ற திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் அமையவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். தமிழ்ப் பல்கலைக் கழக இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த, சைவத்திலும் தமிழிலும் நாட்டங்கொண்ட பல்கலைக் கழக விஞ்ஞானப் பேராசிரியர்க ளாகிய ஆ. வி. மயில்வாகனம், அ. சின்னத் தம்பி, பே. கனகசபாபதி ஆகியோரைப் பண்டிதமணி கவர்ந்ததில் வியப்பில்லை. இவர்களுடைய முயற்சியே பண்டிதமணி யின் கந்தபுராண தட்சகாண்ட உரை பேரா தனைப் பல்கலைக்கழக வெளியீடாக மலரக் காரணமாயிருந்ததென்பதை அனைவரு மறிவர்.
பருத்தித்துறை முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் முதிர்ந்த புலமையாளர். அவர்க

-
ளிடம் முறையாகத் தமிழும் சம்ஸ்கிருத மும் பயின்றவர் பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை. பண்டிதமணியும் பேரா சிரியரும் பல்கலைக் கழகக் கல்வி மரபுக்கும் பாரம்பரியக் கல்வி மரபுக்கும் பாலமாக விளங்கினர். இவ் வகையில் பண்டிதமணியின் இலக்கிய வழி பேராசிரியரைக் கவர்ந்தது. இதனுல் பேராசிரியரின் பரிந்துரையின் பேரில் இலக்கிய வழி பல்கலைக் கழகப் புகு முகத் தேர்வுக்குப் பாட நூலாக்கப்பட்டது.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை மட்டுமன் றிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அனைவ ருமே பண்டிதமணியை மதித்துப் போற்றினர்.
பல்கலைக் கழகத்தில் என் தமிழா சிரியர்களாய் வாய்த்த பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், அ. சதாசிவம் ஆகிய அனைவருமே பல சந்தர்ப்பங்களிற் பண்டிதமணியினைப் புகழ்ந்து பாராட்டிப் பேசியமையினே யான் அறிவேன்.8 என, சி. தில்லைநாதன் குறிப்பிடுவது கருதத் தக்கது.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம் வெளி யிட்ட பண்டிதமணியின் கம்பராமாயணக் காட்சி நூலில் கலாநிதி அ. சண்முகதாஸ் * ஒரு யுக புருஷன் பண்டிதமாமணி ** என்று போற்றியிருப்பதும் பேராசிரியர் க. கைலாசபதி இந்நூலை யாழ். பல்கலைக் கழக நுண்கலைப் பீட மாணவர்க்குப் பாட நூலாக்கியதும் இங்குக் குறிப்பிடத்தக்கன. பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, பொ. பூலோகசிங்கம் முதலியோரும் பண்டித மணியைப் பெரிதும் போற்றினர்.
யாழ். பல்கலைக் கழக அறிஞர்கள் பண்டிதமணி அவர்களின் பணிகளைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவ தென்றும் அவற்றைப் பண்டிதமணி அவர்கள் முன்னிலையில் படித்து அவரது கருத்துக்களை நேரில் கேட்பதென்றும் எண்ணியிருந்தனர். பேராசிரியர்களான க. கைலாசபதியும் கா. சிவத்தம்பியும் இதில் ஈடுபட விரும்பினர்.

Page 165
- !
பட்டம் வழங்குதல், பட்டம் வாங்குதல் என்பவை பற்றிப் பண்டிதமணியின் கருத் துக்கள் தனித்துவமானவை. பட்டமளிப்புப் பற்றிய அவரது கருத்து ஒன்று இங்கு நினைவு கூரத்தக்கது :
தமிழ் நாட்டில் தமிழுக்கும் சைவத்துக் கும் ஒரேயொரு உயர்தனிப்பீடம் திருவாவடு துறை ஆதீனம். தமிழ், சைவ அறிவை நிறுத்துப்பார்த்துத் திருவாவடுதுறை ஆதீனம் ஒருவருக்குப் பட்டம் வழங்கு மானுல் அது சர்வகலாசாலைப் பட்டங்களி லும் மிக மிக மேலானது."
இது ஆறுமுகநாவலருக்குத் திருவாவடு துறை ஆதீனம் நாவலர்ப் பட்டம் வழங்கி யது பற்றி எழுதிய கருத்தாகும். இந்த அடிப்படையில் யாழ்ப்பாணத்துச் சபை யொன்று வழங்க முன்வந்த பட்டத்தைப் பண்டிதமணி ஏற்க மறுத்திருந்தார்.
இலங்கைப் பல்கலைக் கழகம் வழங்கிய இலக்கியப் பேரறிஞன் (D. Litt.) என்ற பட் டத்தைப் பண்டிதமணி மதித்து ஏற்றமை பல்கலைக் கழகம் பெற்ற பெறலரும் பேருகும். இவ்வாறு ஏற்றமைக்கான பின்னணியைப் பண்டிதமணி பின்வருமாறு விளக்குகிருர் :
1967இல் தட்ச காண்ட உரையைப் பேராதனை வளாகம் பெருவிழா எடுத்து மதித்தது. 1967 தொடக்கம் பேராதனை வளாகமும் மற்றைய வளாகங்களும் எனக்கு நெருங்கிய தொடர்புள்ளவைகள் ஆயின. அவற்றின் வளர்ச்சி என்வளர்ச்சி ஆயது. * பண்டிதமணி அவர்களுக்குப் பல்கலைக் கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கவேண்டும் என்ற வேண்டுகோள் முதன் முதலாக 1952இல் முன்வைக்கப்பட்டது; தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்தது. எனினும் வேண்டு கோள் நிறைவேறக் கால்நூற்றண்டு சென் றது. இலங்கைப் பல்கலைக் கழகம் 1978 மே 31இல் பண்டிதமணிக்கு இலக்கியப் பேரறிஞன் (D. Litt.) என்ற பட்டத்தை அவர் வருகை தராத நிலையில் வழங்கிச் சிறப்பித்தது.
தேசிய வளாகமாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வளாகம் வரலாற்று நியதியால்

12 -
தமிழ் வளாகமாகி, தமிழர் பல்கலைக் கழக மாக மலர்ந்துள்ளது. யாழ்ப்பாணப் பல் கலைக் கழகம் துணைவேந்தரான பேராசிரி யர் சு. வித்தியானந்தன் தலைமை யில் பண்டிதமணியிடம் பட்டச் சான்றிதழை நேரடியாக வழங்கும் விழாவைக் கொண் டாடிப் பெருமைபெற்றது.
(பண்டிதமணிக்கு) கலாநிதிப் பட்டம் அளித்துப் போற்றுவதற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இங்கில்லை .? என்ற பண்டிதர் கா. பொ. இரத்தினத்தின் ஏக்கம் 1978இல் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழா மூலம் நிறைவேறியது.
பண்டிதமணியவர்களின் படைப்புக் களும் பணிகளும் பல்கலைக்கழக மாணவர் களாலும் ஆசிரியர்களாலும் பல மட்டங் களில் ஆராயப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளுக்க உதவும் வகையில் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையினர் பண்டிதமணியின் ஆக்கங்களை நூல்கள1 & வெளியிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இச் சபையினரின் பணி, சிறப்பாக - அ. பஞ்சாட்சரம் அவர்களின் பணி - பாராட்டுக்குரியது. பண்டிதமணி யின் ஆக்கங்கள் அனைத்தும் நூல் வடிவு பெறும் சூழ்நிலை விரைந்து வரவேண்டும்.
தமிழ் பற்றிய ஆராய்ச்சியை (யாழ்.) வளாக மாணவர்கள் மேற்கொள்ள வேண்டுமென்பது என் அவா.
தமிழ் போலவே சமயம் பற்றியும் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டு மென்பதும் என் கருத்து.' என ப் பல்கலைக் கழக மா ன வ ரிடம் பண்டிதமணி விடுத்த வேண்டுகோளும் இங்கு நினைவுகூரத்தக்கது.
பண்டிதமணி அவர்களுக்கும் பல்கலைக் கழக அறிஞர் சிலருக்கிடையேயும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. 1951இல் முன்பின் கண்டுகேட்டறியாத பாரிய தமிழ் மகாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்தது. பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை தலைமையில்

Page 166
ཡས་སམ་ 1
பண் டி தம ணி பேசிஞர். அப்போது நிகழ்ந்தவற்றைப் பண்டிதமணி பின்வரு மாறு நினைவுகூர்கிருர் :
என் கருத்துக் காத்திரமானதாயிருக் கலாமாயினும் தலைவர் என் விஷயத்தில் *கூனி'யாயிருந்தார். முன்னமே என் கண்டன பாணங்களுக்கு இலக்காகி இருந் தவர் தலைவர் திரு. சேதுப்பிள்ளை. அன்று தாம் நடந்துகொண்டதற்குப் பச்சாத்தாபம் உற்றர் என்று நான் அறிந்ததுண்டு.'
இவ்வாறே பேராசிரியர் தெ. பொ. மீ. யுடன் தாம் கருத்து வேற்றுமைகொண்ட நிகழ்வைப் பண்டிதமணி இவ்வாறு நினைவு கூர்கிருர்;
நாவலர் பெரியபுராண சூசனத்தை இடையில் நிறுத்தினுர், இதுபோல வேறு சிலவும் இடையில் நிறுத்தப்பட்டன. இவ் வாறு நிறுத்தியமை நாவலரின் பெருமை என்பதைப் பேசப் போயிருந்தேன். . நாவலர் எதனை விட்டது பெருமை என்று எண்ணினேனுே அதனைத் தொட்டது பெருமை என்று தெ. பொ. மீ. பேசிஞர். எனக்குப் பின் பேசியிருப்பாராயின் என் கருத்தை ஆதரித்து வலியுறுத்தியிருப்
Tr. 12
1950களில் பண்டிதமணியின் மனப் பாங்கில் பெரும்மாற்றம் நிகழ்ந்தது. கூட்டங் களிற் பேசுவதையோ, கண்டனங்களில் ஈடு படுவதையோ அவர் தவிர்த்துக்கொண்டார். பிற்காலத்தில் ஆழ்ந்து சிந்திப்பதிலும் எழுது வதிலுமே அவர் ஈடுபட்டிருந்தார். தம்மீது கூறப்பட்ட குறைகளையோ கண்டனங் களையோ அவர் பொருட்படுத்தவில்லை. பண்டிதமணியின் ஈழத்துக் கவிதை வரலாறு 1958உடன் முற் றுப் பெறுகிறது என்ற பல்கலைக்கழக ஆய்வாளரின் கருத்தை? அவர் பெரிதுபடுத்த விரும்பாமை இங்கு நினைவுகூரத்தக்கது.
வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பல பிள்ளையிடம் பண்டிதமணி மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது இலக்கிய இரசனை பற்றிக் கேள்வியுற்ற பண்டிதமணி வித்துவ சிரோமணியின் மாணவரிடமிருந்த அவரது
5

3 -
இரசனைக் குறிப்புக்களைத் திரட்டுவதில் ஈடு பட்டிருந்தார். இவ்வாறு பண்டிதமணி பெற்ற கம்பராமாயணக் குறிப்பொன்றை அண்ணுமலைப் பல்கலைக்கழகத் துணைவேந் தரும் ரா. பி. சேதுப்பிள்ளையும் கேட்டுக் கொண்டபடி கம்பராமாயண பரிசோதனத் துக்கு உபகாரமாக மேற்படி பல்கலைக்கழ கத்துக்குக் கொடுத்தார். *
இலங்கைப் பல்கலைக் கழகம் பண்டித மணிக்கு இலக்கியப் பேரறிஞன் பட்டம் வழங்கிய செயல் பல்கலைக் கழகம் மரபுவழி அறிஞர்களை மதிக்கிறது என்பதைக் காட் டும் குறியீடாகும். வெறும் பட்டத்தை வழங்குவதால் மட்டும் மதிப்பு மதிப்புப் பெற்றுவிடாது. தமிழகப் பல்கலைக் கழகங் களைப்போல் ஈழத்துப் பல்கலைக் கழகங்களும் மரபுவழி அறிஞர்களின் அறிவு கல்வியுல கிற்குப் பயன்பட வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இல்லையேல் வழங்கப்படும் இலக்கிய கலாநிதி, வித்தகர்ப் பட்டங்கள் வெறும் சடங்காசாரப் போலிகளாகவே முடி யும். வாழும் மரபுவழிப் பேரறிஞர்களின் அறிவு நலனைப் பயன்கொள்வதும் மேலை நாட்டுக் கல்வி மரபின் மிகை நிரப்பும் கூருகவும் தனித்துவம் மிக்க நெறியாகவும் பாரம்பரியக் கல்விமரபின் அருத் தொடர்ச்சி யைப் பேண வழிவகுப்பதும் தமிழ் கூறும் நல்லுலகின் கடமையாகும்.
மேனுட்டுப் பல்கலைக்கழகக் கல்வி மரபையும் எமது பாரம்பரியக் கல்வி மரபையும் ஒரு முழுமையின் இரு கூறுகளாகக் கருதி அவற்றை ஒன்றிணைத்து ஒரு புதிய கல்வி மரபை உருவாக்க ஆறுமுக நாவலர் திட்ட மிட்டார். இதற்கு அவரது ஐந்தாண்டுக் கல்வித் திட்டம் சான்ருகும். அதனை நடை முறைப் படுத் த அவர் முயன்ற ர். பண்டிதமணி அவர்கள் இரு மரபும் இணைந்த இப் புது மரபின் ஒரு கட்டமாக விளங்கினர். இதனலேயே பல்கலைக் கழகத்தினரும் பாரம் பரியக் கல்வி மரபினரும் பண்டிதமணியைப் போற்றுகின்றனர். இரு மரபும் ஒன்றிணைந்த முழுமையான கல்வி மரபினை வளர்த்தெடுப் பதே பண்டிதமணி அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனுகும்.

Page 167
சான்றுக் குறிப்புகள்:
1.
2.
10,
I.
覆尘。
வேலுப்பிள்ளை, பேராசிரியர் ஆ. , மதுரை, 1981, பக். 181-182,
பார்க்க ஆறுமுகநாவலர் , ** நல்லறி பிரபந்தத்திரட்டு-முதற்பாகம், வித்தியா
லசஷ்மணன், கி., பண்டிதமணி, சி. க திருநெல்வேலி, 1959, பக். 3.
சபாரத்தினம், ந., (ஆங்கிலக் கட்டுரை) விழா மலர், யாழ்ப்பாணம், 1978, ட
வைத்தியலிங்கம், மு., மு. கு. மலர், தில்லைநாதன், சி., மு. கு. மலர், 1978
கணபதிப்பிள்ளை, இலக்கிய கலாநிதி
ராட்சிப் பாராட்டுவிழாச் சபை, சாவ
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, சி. ,
இரத்தினம், பண்டிதர் கா. பொ., மு
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, சி.,
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி., செ யீட்டுச் சபை, உரும்பராய், 1987, பக்.
மேலது, பக். 94.
சிவத்தம்பி, பேராசிரியர் கா., **ஈழத்து தொகுதிi, இதழ் i, கலைப்பீட வெளி வேலி, 1984, பக். 28-53.
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி, சி.,

உலகத் தமிழ், காமராசர் பல்கலைக்கழகம்,
றிவுச்சுடர் கொளுத்தல்", ஆறுமுக நாவலர் நுபாலன யந்திரசாலை, 1954, பக். 122 - 140
மணிவிழா மலர், பாராட்டு விழாச் சபை,
இலக்கிய கலாநிதி பண்டிதமணி, சி. க. பாராட்டு
иф. 7.
Ꭵ959 , t ᎥᏜ . 71 .
Lisi. 16.
பண்டிதமணி, சி., ஆறுமுகநாவலர், தென்ம našGgrif, 1979, Lici, 55.
மு. கு. மலர், 1978, பச். 64.
மு. கு. மலர், 1959, பக். 6.
மு. கு, மலர், 1978, டக், 6ல்,
ந்தமிழ்க் களஞ்சியம், பண்டிதமணி நூல் வெளி
93.
எத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம்", சிந்தனை, யீடு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், திருநெல்
சிந்தனைக் களஞ்சியம், 1978, பக். 218,

Page 168
ஈழத்திற் கந்தபுராண கி
கலாநிதி இ, பாலசுந்தரம் அை
ஈழத்தின் பூர்வீக வரலாற்றினை ஆராய்ந்தோர், பெளத்த சமயம் இங்கு கால் கோள் கொள்ளமுன்பு சைவ சமயம் நிலை பெற்றிருந்ததென்பதை நிறுவியுள்ளனர். பெளத்த மதத்திற்கு முந்தியதாக இங்கு நிலவிய நாத (சிவன்) வழிபாடு, பத்தினி {அன்னை) வழிபாடு, நாக வழிபாடு பற்றிய செய்திகளும், கி. மு. 3ஆம் நூற்ருண்டு தொடக்கம் கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்ப காலப் பகுதிவரை காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்களிலுள்ள குறிப்புக் களும்? இங்கு நிலவிய இந்துமத வழிபாட்டு முறை களைச் சான்றுபடுத்துகின்றன. இச் சான்று களைக் கொண்டு நோக்கும்போது ஈழத்திற் பண்டை நாளில் இந்து மதம் நிலைபெற் றிருந்ததென்பது புலனுகின்றது.
தமிழகத்துச் சமய நெறி யில் மிகப் பழைய தெய்வங்களாக முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை முதலாம் தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் குறிப் பிடுகின்றன. இவ்விலக்கியச் சான்றுகளுக்கு முற்பட்டனவாகவுள்ள ஈழத் து ச் சிவ வழிபாட்டுச் சான்றுகள் சிவ வழிபாட்டின் பழைமையை மேலும் வற்புறுத்துகின்றன. இந்நிலையில் ஈழத்தில் முருக வழிபாடு எப் போது தோன்றிற்றென்பது ஆய்வுக்குரிய தாகின்றது.
இந்து சமயத்தைப் பின்பற்றும் பல்வேறு இனங்கள் மத்தியிலும் முருக வழிபாடு பல் வேறு அடிப்படையில் பின்பற்றப்படுகின்ற போதிலும், தமிழருக்குரிய தனித் தெய்வ மாகவே முருகன் அமைகின்ருன் என்ற கருத்தைப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் வற்புறுத்தியுள்ளார்கள்.4 திருச் செந்தூருக்கு அண்மையிலுள்ள ஆதிச்ச நல்லூர் என்னுமிடத்திலே நடந்த தொல் பொருள் ஆய்வின் மூலம் அப்பகுதியில் சுமார் கி. மு. 1200ஆம் ஆண்டளவில் முருக வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தமையை எடுத்துக்காட்டி முருக வழிபாட்டின் தொன்மையை அவர் நிறுவியுள்ளார்.*

கலாசாரம் - ஓர் ஆய்வு
ர்கள், யாழ். பல்கலைக் கழகம்
ஆறுபடை வீடுகளில் ஒன்ருகிய திருச்சீ ரலைவாய் என்பது திருச்செந்தூர் என அறி யப்படுகிறது. எனவே திருச்செந்தூரில் முருக வழிபாடு எத்தகு பழைமையுடைய தாகக் காணப்பட்டதோ அத்தகு பழைமை கதிர்காமத்து முருக வழிபாட்டிலும் அமைந் திருக்கவேண்டும் என்ற ஊகம் கொள்வதில் தவறில்லை. கந்தபுராணம் - வள்ளிநாயகி திருமணப் படலத்தில் முருகன் வள்ளியைத் திருத்தணிகையில் ஆட்கொண்ட செய்தி கூறப்படுகின்றது. ஆனல் ஈழத்துத் தொல் மரபுக் கதைகளோ கதிர்கா மமே வள்ளியின் பிறப்பிடமாகக் காட்டுகின்றன. கதிர்காமத்திற்கு அடுத்தபடியாகத் திருக் கோயில், உகந்தமலை, மண்டூர், சந்நிதி ஆகியன பழைமை வாய்ந்த முருக தலங்க ளாகும். இவை அனைத்தும் ஈழத்தின் கடற் கரையை அண்மித்தனவாகவே காணப் படுகின்றன. எனவே கடற்கரையோரங் களில் மிகப் பழங்காலம் முதலாகச் சிவ தலங்களும் முருக தலங்களும் நிலைபெற் றிருக்கின்றன என்ற உண்மை பெறப்படு கின்றது. இப் பின்னணியிலேயே ஈழத்திற் கந்தபுரiன கலாசாரம் பற்றி நோக்கு தல் பொருத்தமாகும்.
கந்தபுராண கலாசாரம் என்று கூறும் போது இரு விடயங்கள் முனைப்புப் பெறு கின்றன. அவை முருக வழிபாடும், கந்த புராண இலக்கியம் மக்கள் மத்தியில் ஏற் படுத்திய கலாசாரத் தாக்கமுமாகும். இவற் றில் முருக வழிபாட்டின் தொன்மை பற்றி மேலே கூறப்பட்டுள்ளது.
வட இலங்கையில் ஆரியச் சக்கரவர்த்தி களின் தலைமையில் தமிழ் இராச்சியம் நிலவிய காலகட்டத்தில் தமிழர் சமய--கலா சார விடயங்கள் உயர் நிலையில் இருத்திருக் கும் என்பதில் ஐயமில்லை. 5ஆம் சிங்கைச் செகராச சேகரன் காலத்திலிருந்த நல்லூர் இராசதாணிச் சூழலிலே தமிழ்ச் சங்கமும் சிறந்த நூலகமொன்றும் இயங்கிவந்திருக் கின்றன. இத் தமிழ்ச் சங்கப் புலவர் குழாத்தினரின் மேற்பார்வையில் அக்கால

Page 169
- 1
இலக்கிய நடவடிக்கைகள் நடைபெற்றிருக்க லாம். தமிழக வரலாற்றில் எவ்வாறு சோழர் காலம் சிறந்திருந்ததோ அது போன்றே ஈழத் தமிழர் வரலாற்றிலும் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலமும் பொற்காலமாகும். சோழர்காலப் பண் பாட்டு நடவடிக்கைகள் சில ஆரியச் சக்கர வர்த்திகள் காலத்திலும் மேற்கொள்ளப் படலாயின. அவ் வகையில் மருத்துவம், சோதிடம், சமயம், வரலாறு சார்ந்த ஈழத்து நூல்கள் தேடித் தொகுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.
ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசசபை சார்ந்த தமிழ்ச் சங்கப் புலவர்கள் தம் காலத் தில், தமிழகத்தில் கந்தபுராணம் செல்வாக் குப் பெற்றிருந்தமையை அறிந்து, அதன் ஏட்டுப் பிரதி ஒன்றை அரசரின் உதவியுடன் வரவழைத்திருக்கலாம். பின்பு அதனைப் படி எடுத்துத் தமிழ்ச் சங்கத்திலும் நல்லூர், மாவிட்டபுரம் முதலிய இடங்களிலிருந்த கந்தசுவாமி கோயில்களிலும் போற்றிப் பாது காத்திருக்கலாம். (மாவிட்டபுரம் கந்த சுவாமி கோயிலில் பழைமை வாய்ந்த கந்த புராண ஏடு இன்றும் பேணப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் கந்த புராணப்படிப்பு தமிழ்ச் சங்கப் புலவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு ஆலயங்களிலும் பரவியிருத்தல் இயல்பே. உயர்நிலைச் சமூகச் சூழலில் கந்தபுராணப் படிப்பு முதலில் ஆரம் பித்து, அதனைத் தொடர்ந்து சகல கிராமிய முருக தலங்களிலும் இடம்பெற்றிருக்க வேண்டும். அரச சார்பான சங்கப் பலகை யிலே தொடங்கிய கந்தபுராணப் படிப்பு சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தில் நிலேபெற்று வருகின்றமை ஈழத்துக் கந்த புராண கலாசாரத்தின் தனித்துவமான சிறப்ப7கும்.
கந்தபுராணத்தினலே தமிழும் சைவமும் ஓங்கி வளர்ந்துவருகின்ற யாழ்ப்பாணத் துக்கு ஒரு நாள் கண்ணுாறு உண்டானது. சீரும் சிறப்போடும் தமிழரசு யாழ்ப்பாணத் திலே நிலைபெற்றிருக்கும் காலத்திற் போர்த் துக்கேயரின் வருகையினலும், அதனைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சமய கலாசார அழிப்பு நடவடிக்கைகளினலும் இங்கு நிலவிய கலாசார நிலைப்பாடு நிலை

16 -
தளர்வதாயிற்று மதமாற்றம், பசுக் கொலை, சைவாசாரத் தடை என்பன மலிந்தன; தமி ழரசர் காலம் முதலாகச் சைவ மக்களை நெறிப்படுத்திவந்த கந்தபுராண கலாசாரம் ஒடுங்குதசை அடைவதாயிற்று. அப்போது தமிழ் மக்களின் உள்ளம் கொதித்துக்கொண் டிருந்தது. அந்தக் கொதிப்புக் கந்தபுராணக் கொதிப்பு. 'அந்தக் கொதிப்பினின்றும் ஒர் ஆண் குழந்தை யாழ்ப்பாணத்து நல்லூரிலே கொதித்துக்கொண்டே உதயஞ் செய்தது’*7 என நாவலரின் தோற்றத்தைப் பண்டிதமணி அவர்கள் குறிப்பிடுகிறர்கள் நாவலர் அவர்கள் கந்தபுராண கலாசா ரத்தை மீண்டும் நிலைநாட்டப் பாடுபட்டார்.
கந்தபுராணத்தின் வழி வந்த, சைவ சமய ஆசாரங்களும், சமய நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் நன்கு ஊறியிருந்தன, அதஞலேயே இம் மக்கள் பிற சமய மத மாற்றத்துக்கு ஈடு கொடுக்கக்கூடியதாக இருந்தது. ‘பாதிரிமார்கள் கிறிஸ்து மதம் எத் தேசத்திற் பரவினும் பரவும், யாழ்ப் பாணத்தில் உள்ள படி பரவாது என்று அந்தரங்கத்திற் புலம்புகிருர்கள்?" என நாவலர் அவர்கள் எழுதுவதற்குக் காரணம் மக்கள் தம் தாய்ச் சமயத்தில் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையைக் காட்டுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் இன்னுமொரு முக்கிய விடயத்தைக் குறிப்பிடல் பொருந்தும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களது எண்ணிக்கை யைச் சமயரீதியில் விகிதாசார அடிப்படை யில் நோக்கும்போது கத்தோலிக்கர் எண் ணிக்கை அதிகமாக இருப்பதைக் காணலாம். அம் மக்களின் மூத்த தலைமுறையினர் கந்த புராண கலாசாரத்திற்குட்படாத சூழலில் வாழ்ந்தமையே இத்தகைய மத மாற்றம் எளிதில் ஏற்படக் காரணமாயிற்று.
ஈழத்திலுள்ள சைவ ஆலயங்களை நோக்கும் போது அவை ஆகம நெறிப்பட்ட கிரியைகள் நடைபெறும் கோயில்களாகவும், கிராமிய மரபு வழிப்பட்ட பூசை உபசாரங்கள் நிகழ்த்தப்படும் கோயில்களாகவும் காணப் படுகின்றன. வேதநெறிப்பட்ட பிராமணியச் செல்வாக்குக் கிழக்கிலங்கையை விட யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிதாகக்

Page 170
- 1
காணப்பட்டு வந்திருக்கின்றது. ஆறுமுக நாவலர் காலத்தில் வேதாகம பிராமணிய ஆசார சீலங்கள் கோயில் நடைமுறைகளிற் பெரிதும் புகுத்தப்பட்டதோடு, அவற்றிற்கு அதீத முக்கியத்துவமும் கொடுக்கப்பட லாயின. கந்தபுராணப் படிப்பும் இத்தகைய கோயில்களிலேயே பெரிதும் இடம்பெற்றும் வந்திருக்கின்றது. கந்தபுராணப் படிப்பில் ஈடுபாடும் அதில் நம்பிக்கையும் கொண்ட மக்கள் தத்தம் பகுதிகளிலிருந்த கிராமிய வழிபாட்டுக் கோயில்களை வேதாகம நெறிப் பட்டனவாக மாற்றும் நடவடிக்கைகளி லும் ஈடுபட்டிருக்கலாம். இம் முயற்சியில் நாவலர் பெரிதும் முன்னின்று உழைத்திருக் கின்றர். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நாட் டார் வழிபாட்டுமுறையில் பேணப்பட்ட அநேக கண்ணகிஅம்மன், பேச்சியம்மன், மாரியம்மன் கோயில்கள் மனேன்மணி, இராஜேஸ்வரி அம்மன் கோயில்களாக மாற் றப்பட்டு வருகின்ற செய்தியும் அறியப் படுகின்றது. எனவே இத்தகு மாற்றங் களுக்குக் கந்தபுராணப் படிப்பும் அதனல் மக்களுக்கேற்பட்ட மனமாற்றமும் காரணி களாக இருந்திருக்கின்றன என்ற உண்மை யும் பெறப்படுகின்றது.
கோயிற் கந்தபுராணப் படிப்புப் பரவ லாக அமைந்தபோது, அதன் பின்னணி யில் இன்னுமொரு சமூக ஆபத்தும் உரு வாயிற்று என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. கோயிற் கந்தபுராணப் படிப்பு நடைபெறும்போது ஆசாரசீலர்கள் மட்டுமே கோயிலுக்கு வரலாம் என்ற கட்டுப்பாடும், நம்பிக்கையும் மக்கள் மத்தியில் வன்மை யாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. பிற்றை நாளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியும் சமூக விழிப்புணர்வும் சந்நிதியி லும் கந்தபுராணப் படிப்பை ஏற்படுத்தியுள் ளமையை ஈண்டு சுட்டிக்காட்டுதல் பொருத்த
upnr6g5 tito.
பருத்தித்துறை-நெல்லண்டைக் காளி கோயிலிலும் ஆண்டுதோறும் தொடர்ச்சி யாக மூன்று மாதங்கள் கந்தபுராணப் படிப்பு இடம்பெற்று வருதல் வழக்கமாகும். புராணப் படிப்புப் பூர்த்தியாகும் தினத்தை *" விடுமணி" என்றழைப்பர். அத் தினத் தில் விசேட பூசையும், அடியார்களுக்கு

7 -
அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றது. அடியார்கள் மிகவும் பயபத்தியுடன்--விரத சீலர்களாய்ப் புராணப் படிப்பினைக் கேட்பர். புராணப் படிப்புக் காலங்களில் மக்கள் சைவாசார உணவுப் பழக்கத்தில் கட்டுப்பா டாக இருந்திருக்கிருர்கள் என்பதுந் தெரிய வருகின்றது.
மட்டக்களப்புப் பிரதேசத்திற் பாரதக் கலாசாரமும், அதனையடுத்துக் கந்தபுராண கலாசாரமும் நிலைபெற்றுள்ளன. ஆணுல் யாழ்ப்பாணப் பகுதியில் கந்தபுராண கலாசார வெளிப்பாடுகளே முனைப்பாகத் தோன்றுகின்றன. இங்கு சைவ உணவுப் பழக்கமுடையோர் எண்ணிக்கை ஒப்பீட்டு அடிப்படையில் மிகப் பெரிதாகும். நடை முறை வாழ்க்கையில், சோதிடத்தில் அசை யாத நம்பிக்கை பின்பற்றப்படுகின்றது. சகல சமய விரதங்களையும் அநுட்டிப்போர் தொகையும் அதிகமானதே. தொடர்ச்சி யான கந்தபுராணப் படிப்பும் இங்கேயே பெரிதும் பின்பற்றப்பட்டு வருகின்றது. கந்தபுராண விழாக்கள் யாழ் குடாநாட்டிற் பெரிதும் நடைபெற்று வந்திருக்கின்றன. கந்தபுராணத்துடன் தொடர்புடைய ஏழு நூல்கள் இங்கேயே எழுதப்பட்டிருக்கின்றன. இத்தகைய காரணங்களை விரிவாக ஆராயும் போது யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே கந்தபுராண கலாசாரத்தின் தாக்கத்தினைத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
யாழ்ப்பாணத்தில் மரபுவழிக் கல்விப் பாரம்பரியம் ஒடுங்குதசையடைந்துகொண் டிருந்த காலத்தின் கடைசிக் கொழுந்தாகத் திகழ்ந்தவர் பண்டிதமணி அவர்கள். ஆதலி ஞலேயே அவரது வாழ்க்கையும், எழுத்தும், போதனைகளும் மரபுவழிக் கல்விமுறைக ளோடு இணைந்து காணப்பட்டன. 1929இல் சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரை யாளராகிய பண்டிதமணி அவர்கள் இலக்கி யப் பணியிலும் கண்டனப் பணியிலும் ஈடு பட்டுவந்தார். 1940க்குப் பின்பு அவரது அறிவுப்புலம் இலக்கியத்துறையினின்றும் சமயத்துறைக்கு மாற்றம் அடைவதாயிற்று. இம் மாற்றத்திற்குப் பொ. கைலாசபதி அவர்களின் தொடர்பே காரணம் என்றும் கூறலாம். அதுவரை காலமும் கம்பராமT யணத்தில் தோய்ந்து வந்த பண்டிதமணி, 1942க்குப் பின்பு கந்தபுராணத்தில் ஈடுபட லானுர், கம்பன் ஆட்சி செலுத்திய பண்டிதமணியிடத்தில் கச்சியப் பரின்

Page 171
-
அதிகாரம் மேலோங்கிற்று. கம்பனைக் கச்சி யப்பருடன் ஒப்பிட்டு நோக்கும் பண்டிதமணி ஒரு கட்டத்தில் கம்பனை ‘ மலடு' என்று கூறத்தக்க அளவுக்குக் கச்சியப்பரிடம் பித்தாகிய நிலையிற் காணப்படுகின்ருர்,
இத்தகு ஈடுபாடு 1955க்குப் பின்பு மேலும் அதிகரிப்பதாயிற்று. 1959இல் பண்டிதமணி அவர்கள் உத்தியோக ஒய்வு பெற்றதும் அவரது வாழ்க்கைநெறி முற்றும் சமயநெறிப் படுவதாயிற்று. அந்நெறியே கந்தபுராண சமய கலாசார நெறியாகும். நாவலருக்குப் பின்பு சோடை இழந்து காணப்பட்ட யாழ்ப்பாணத்துக் கந்த புராண கலாசாரத்தை மீண்டும் புத்துயிர் பெற வைத்தவர் பண்டிதமணி ஆவார். அன்னூர் பிறந்த கிராமச் சூழலும், அதற்குக் கால்கோளாயிற்று, ‘ வாழையடி வாழையாக வந்த எமது கந்தபுராண கலா சாரத்தை நாம் முற்றிலும் இழக்க இருந்த காலத்தில் எமது கிராமங்களுள் மட்டுவில் ஒன்று மட்டுமே யாதும் அஞ்சாது, மயக்க முருது சைவத்தையும் தமிழையும்-சுருங்கக் கூறின் எமது கலாசாரத்தைப் பேணி வளர்த்து வந்தது’* ? என்ற கருத்தும் ஈண்டு நோக்கற்பாலது. பண்டிதமணி அவர்கள் தனங்கிளப்பு காரைத்துர விநாயகர் ஆலயத்திற் கந்தபுராணப் படிப்பை ஆரம்பித்துவைத்திருக்கின்ருர், அங்கு ஆண்டு தோறும் தொடர்ந்து மூன்று மாதங்கள் புராணப் படிப்பு நடந்துவந்திருக்கின்றது. பண்டிதமணி அவர்களுக்குத் தொய்வு நோய் ஏற்படுங் காலங்களில் அவர் giftDða)
சான்றுக் குறிப்புகள் :
1. சி. க. சிற்றம்பலம் - "பெளத்தத் (புதிய தொடர்) தொகுதி i, இத 2. சி. க. சிற்றம்பலம் - "இலங்கையில் மதம், சிந்தனை தொகுதி ர், இத் முருகு என்ற தனித் தமிழ்த் திரா (முருகு+அன்) என்ற பெயர் ஆகு
3
4. ஆ. வேலுப்பிள்ளை - தமிழர் சமய 2ஆம் பதிப்பு - 1985, பக்கம் 222. 5. மேலது. பக்கம் 223. 8. சி. கணபதிப்பிள்ளை-கந்தபுராண 7. மேலது, பக்கம் 18. 8. ஆறுமுகநாவலர் - :ாழ்ப்பாணத்து 9. இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி
மலர்-யாழ்ப்பாணம், வஸ்தியன்

8 -
சிருப்பர் மடத்தில் தங்கியிருப்பது வழக்கம்.
அங்கு நடைபெறும் கந்தபுராணப் படிப்பிலும் பண்டிதமணி கலந்து கொள்வார்கள். இவ்வாறே கந்தவனக்
கடவை முருகன் கோயிலிற் புராணப் படிப்பு நடைபெறும் காலங்களிலும் அங்கு செல்வதும் பண்டிதமணியின் வழக்கமாக இருந்திருக்கின்றது. பண்டிதமணியின் பிற் கால வாழ்க்கை கந்தபுராண சாரத்தைப் புரிந்து விளக்கம் கொடுக்கும் போக்கிற் காணப்பட்டது. அதனுல் அவருக்குச் சித்தாந்தத் தெளிவு பெறுதலும் எளிதா யிற்று. அவர் எழுதிய கந்தபுராண போதனை, கந்தபுராண கலாசாரம், தக்ஷகாண்ட உரை, தெய்வயானை திருமணம் (வெளிவரவுள்ளது), டத்திரிகைகளில் வெளிவந்த கந்தபுராணக் கட்டுரைகள் ஆகியன பண்டிதமணி அவர் களுக்குக் கந்தபுராணத்திலிருந்த ஈடுபாட் டினையும், அதிலுள்ள ஆழ்ந்த புலமையினே பும் எடுத்துக்காட்டுவனவாகும்.
11ஆம் நூற்ருண்டில் பராக்கிரமபாகு மன்னன் ‘* பூஜா வலிய*’ என்ற நூலுக்குக் கொ டு த் த கௌ ர வ ம் போன்று, 25.1.1967இல் பண்டிதமணியின் தக்ஷகாண்ட உரை நூலை யானைமீது ஏற்றி, பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குப் பவனிவந்த காட்சி, அதனுல் ஏற்பட்ட " மவுசு " என்பன கந்த புராண கலாசாரத்தின் விரிவினையே விளக்கு கின்றன. பண்டிதமணி அவர்கள் கந்த புராணப் பரவலுக்கும், யாழ்ப்பாணத்திற் கந்தபுராண கலாசார நிலைப்பாட்டிற்கும் ஆற்றிய பணிகள் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும்.
திற்கு முந்திய ஈழத்து இந்துமதம்”, சிந்தனை gb ii, 983. b ஆதிப்பிரமிக் கல்வெட்டுக்கள் காட்டும் இந்து தழ் i, 1976. விடச் சொல்லினின்றும் தோன்றியதே முருகன் 5ம்.
வரலாறு - சென்னை, பாரி புத்தகப் பண்ணை,
கலாசாரம், யாழ்ப்பாணம், 1959, பக்கம் 16.
துச் சமயநிலை.
. கணபதிப்பிள்ளை அவர்கள் - பாராட்டு விழா அச்சகம், 1978, பக்கம் 11.

Page 172
பண்டிதமணி அ6 ஆத்மஜோதி நா. {
பண்டிதமணி அவர்களுடைய சந்திப்பு அடியேனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு மையம். இரண்டு வருட காலம் அவருடைய மாணவனுக இருந்தமையை வாழ்க்கையின் பெரும் பேருகக் கருதுகின் றேன். அதைத் தொடர்ந்து அரை நூற் முண்டு காலம் அவருடைய சந்திப்பு ஆத்மீக விஷயங்களில் பல ஐயங்களைப் போக்கியது.
பூரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் பாட சாஃலக் கல்வி கற்காத ஒரு ஞானி. ஆனல் அவருடைய சீடர்கள் பரமஹம்ச தேவரது அன்ருட சம்பாஷணைகளை ஒரு சொல் தவ ழுது தேதி வாரியாக எழுதிவைத்திருக்கி முர்கள், அச் சம்பாஷணைகளே இன்று ஞான பொக்கிஷமாக விளங்குகின்றன.
ஆனல் விஞ்ஞான வசதிகள் நிறைந்த காலத்தில் வாழ்ந்த பண்டிதமணி ஐயாவின் சம்பாஷணைகள், அல்லது பேச்சுக்கள் எழுதி வைக்கப்படவில்லை; ஒலிப்பதிவு செய்து வைக்கப்படவில்லை. இது அகில உலகத் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பாகும். பண்டிதமணி அவர்கள் ஒவ்வொரு காலத் தில் ஒவ்வ்ொரு நூலில் நிறைந்த ஆராய்ச்சி செய்துள்ளார்கள். அவற்றை இராமாயண காலம், பாரத காலம், கந்தபுராண காலம், சைவசித்தாந்த காலம், சமரச காலம் என்று பகுத்து ஒவ்வொன்றும் தனித்தனியே ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியது ஒன்ரு கும். பண்டிதமணி அவர்கள் ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு நூலுக்கு ஏற்றம் கொடுத்துப் பேசியதையும் கற்பித்ததை யும் யாவரும் அறிவர். அவை இன்று சம்பாஷணை உருவத்திலோ ஒலிப் பதிவு உருவத்திலோ இருந் திருக்கு மானுல் பண்டிதமணி அவர்களை முழு உருவத்தில் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருந்திருக்கும்.
பண்டிதமணி அவர்களின் மாணவர்கள் என்றும் சீடர்கள் என்றும் பேசிக்கொள்ளும் நாம், அவர்கள் பூத உடலோடு இருந்த

வர்களுடைய ஆசி
முத்தையா அவர்கள்
காலத்தில் நமக்கோ தமிழ்ச் சமுதாயத் துக்கோ பயன்படுத்தத் தவறிவிட்டோம் என்றே கருதவேண்டியிருக்கிறது.
பண்டிதர் ஐயா அவர்கள் கற்பிக்கச் செல்லுங் காலங்களில் எப்பொழுதாவது பாட ஆயத்தஞ் செய்யாது சென்றதில்லை. அதற்கு அத்தாட்சி, அவர்கள் வகுப்புக்குள் நுழையும்போது ஆறு, ஏழு நூல்களோடு வருவார்கள். அவற்றைக் கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டுப் LITL, jiż; தொடங்குவார்கள். ஆணுல் அந்த நூல்களை ஒருநாளாவது படிப்பிக்கும்போது இடையே விரித்துப் பார்த்தது கிடையாது. அவர் நூல்களைச் சுமந்துகொண்டு வந்த கருத்து என்ன? இன்றைய பாடத்தை நடத்துவ தற்கு நான் இத்தனை நூல்களையும் படித்து வைத்துள்ளேன் என்பதைச் சொல்லாமற் சொல்லி வைத்துள்ளார்கள்.
பெரிய பட்டதாரிகள், பண்டிதர்கள் இன்றும் நம் மத்தியிலே ஆசிரியர்களாக இருக்கின்ருர்கள். வகுப்புக்குள்ளே சென்ற தும் புத்தகத்தை எடுங்கள், இன்று என்ன பாடம்? நேற்றைக்கு எந்த இடத்திலே விட்டோம் என்ற கேள்வியுடன் ஆரம்பிக் கிருர்கள். இந்த ஆரம்பமே இலக்கிய இர சனையின் அரைப் பகுதியைக் கொலை செய்து விடுகின்றது.
எங்கள் வகுப்பில் முள்ளியவளையைச் சேர்ந்த தியாகராஜா என்பவர் உடன் மாணவராக இருந்தவர். அவர் இலண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்தி யடைந்து சிலகாலம் கூட்டுறவுச் சங்கப் பரிசோதகராகக் கடமை ஆற்றிப் பின்பு ஆசிரியத் தொழிலில் பயிற்சிபெற வந்தவர். பண்டிதமணி அவர்களுடைய பாட ஆரம் பத்திற்குக் கருப் பொருளாக அமைந்தவர் இந்தத் தியாகராஜா என்பவரே.
மாணவர்கள் எல்லோரும் பண்டிதமணி அவர்களுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்து இருப்பவர்கள். மாணவர் எழுந்து

Page 173
- l
இருப்பதற்குள் 'பின்னைத் தியாகராஜா" என்று பாடத்தை ஆரம்பித்துவிடுவார்கள். "எங்கள் ஊரில் ஐந்து கிணற்றுக்கு ஒரு துலாக் காணும்" என்பார்கள். தியாகராஜா திருதிரு என்று விழிப்பார். ‘ஐந்து கிணறு வட்டமாக இருக்கும். நடுவிலே துலா இருக்கும் என்று நினைக்கிறீர்போல இருக்கி றது. இங்கே ஏழாலையாரும் இருக்கினம் காணும்" என்பார். சிரிப்பொலி அடங்க ஒரு நிமிடம் ஆகும். "ஏழாலையாருடைய ஒரு கிணற்றிற்கு இரண்டு துலாக்காணும். ஆழ மான கிணறு, வற்ருத கிணறு. ஆனபடி யால் இரண்டு துலாவாலும் ஒரே நேரத்தில்
இறைப்பார்கள்."
“எங்கள் மட்டுவில் நாட்டில் சிறிய கிணறு தண்ணீரோ கொஞ்சம் துலாவும் சிறிது. ஒரு கிணறு வற்றியவுடன் அத் துலாவைத் துரக்கிக்கொண்டுபோய் அடுத்த கிணற்றில் இறைப்பார்கள்." இப்படிச் சொன்னவுடன் வகுப்புக் களைகட்டிவிடும். பாடந் தொடங்குவதும் தெரியாது; முடி கிறதும் தெரியாது. மணி ஓசைதான் பாடத்தை முடிக்கும்.
சைவாசிரிய கலாசாலையால் வெளிப் பட்ட மாணவர்கள் இடந் தேடி மானேஜர் இராசரத்தினம் அவர்களிடம் செல்வது வழக்கம். அடியேனும் அந்த மாமூலைப் பின்பற்றி இராசரத்தினம் அவர்களிடம் சென்றேன்.
* என்ன விஜயம் ? * உங்களிடம்தான் வந்தேன் ? . * என்னிடத்தில் வந்தீர் என்று தெரியுந் தானே! வந்த விடயத்தைச் சொல்லுங் காணும் ". * நான் சைவாசிரிய கலாசாலையில் படித்து ஆசிரியராகத் தேறி உள்ளேன். எனக்கு ஒரு ஆசிரியத்தொழில் தரவேண்டும் ".
* முள்ளியவளையில் ஒரு இடம் இருக்கிறது,
போகிறீரா??
* ஆம், போகிறேன்.
* கந்தப்பிள்ளை, அந்த முள்ளியவளை இடம் எப்படி ?

20 -
* அதுதானே ஐயா நிரப்பப்பட்டுவிட்டது”.
"அப்படியா ! சரி நீர்போம். இடம் வந்த வுடன் அறிவிக்கின்றேன்".
இச் சம்பாஷணையைப் பண்டிதமணி
அவர்களிடம் சென்று கூறினேன். அவர் சிரித்துவிட்டு “மானேஜர் உம்மிடம் தோற்று விட்டார் காணும் ? என்ருர், எனக்கு
எதுவும் புரியவில்லை. முள்ளியவளை இடத் தைப் பற்றி ஏன் சொன்னூர் தெரியுமா? மு ன் வி ய வ ளை தூரமாக இருக்கிறது; வேருெரு இடம் தாருங்கள் என்று நீர் கேட்பீர் அப்போது அவர் இலகுவாக வீட்டுக்குக் கிட்ட இடம் வருகிறபோது தருகிறேன் என்று சொல்லுவார். அதனுல் தன்னில் பிழை இல்லாததுபோல் நடந்து கொள்ளலாம் அல்லவா’ ?
அடியேனுக்கு நாவலப்பிட்டியில் ஒரு இடம் கிடைத்து நாவலப்பிட்டிக்குச் சென்று விட்டேன். அது ஒரு கத்தோலிக்கப் பாட சாலை. அடியேன் மயிலனிச் சைவ வித்தி யாசாலையில் ஒன்பதாம் வகுப்புவரை படித் தவன். தலைமை ஆசிரியருக்கும் மானேஜருக் கும் அடியேனிடம் ஒரு அபிமானம் உண்டு. அதனுல் மயிலனிச் சைவ வித்தியாசாலை யில் ஒரு இடம் வந்த உடனே தலைமை ஆசிரியர் உவ்விடம் நோட்டிசைக் கொடுத்து விட்டு எங்கள் பாடசாலைக்கு வா என்று தந்தி அடித்திருந்தார். வந்து ஆறு மாதம் கூட ஆகவில்லை. வெளி உலக அனுபவங் களைப் பெற்றுக்கொண்டு ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் அடியேனுடைய அபிலாஷை, அதனுல் நோட்டீஸ் கொடுக் காமலே ஊர் வந்துசேர்ந்தேன்.
அடியேன் த லை  ைம ய ராசிரியருடன் மானேஜர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே திரு. இராசரத்தினம் அவர்கள் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு ஆசிரியருடன் மானேஜரிடம் வந்திருந்தார். திரு. இராச ரத்தினம் அவர்கள் எங்கள் மானேஜரிடம் சொன்ன நியாயம், முத்தையா ஒரு கத் தோலிக்கப் பாடசாலையில் படிப்பிக்கிருர், அவர் அந்த இடத்தை விட்டால் இனிமேல் ஒரு இந்து ஆசிரியருக்குக் கிடைக்கப்போவ

Page 174
- 1
தில்லை. ஆகவே, ஒரு சைவாசிரியருக்கு அவர் நஷ்டம் செய்தவராகின்றர். அவர் இங்கு வர எப்போ நினைத்தாலும் அவருக்கு நான் இடம் கொடுக்க ஆயத்தமாக இருக்கி றேன். அந்த இடத்திற்காக வந்திருக்கும் ஆசிரியர் ஒரு குடும்பஸ்தன். ஆதலால் நீர் தான் கருணைகாட்ட வேண்டும் என்ருர், தலைமை ஆசிரியரும் மானேஜரும் எனக்கு இடம் இல்லை என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.
இருவரையும் அடியேன் தனிமையில் கண்டு பேசினேன்.நான் நோட்டீஸ் கொடுக்க வில்லை. ஆதலால் அந்த இடம் எனக்கு எப்போதும் உண்டு. இத்தத் தருமசங்கடத்தி லிருந்து நாங்கள் எல்லோருமே தப்புவ தற்கு ஒரே ஒரு வழி திரு. இராசரத்தினம் அவர்கள் கொண்டுவந்தவரை எடுப்பது தான் என்றேன். இருவருடைய முகங்களும் மலர்ந்தன. திரு. இராசரத்தினம் அவர்க ளிடம் சென்று, ஐயா ! உங்களுக்காக இந்த இடத்தை நீங்கள் அழைத்து வந்த ஆசிரியருக்கு விட்டுக்கொடுக்கிறேன் என்றதும் திரு. இராசரத்தினம் அவர்க ளுடைய அகமும் முகமும் மலர்ந்தன. "அது சரி ஐயா, அடியேன் உங்களிடம் இடம் கேட்டுவருங் காலத்தில் இதற்குப் பரிசாக எனக்கு முள்ளியவளைக்கோ நெடுந் தீவுக்கோ இடம் கிடைத்தால் அடியேன் யாரிடம் போய்ச் சொல்லுவது?
எல்லோரும் சிரித்தார்கள். ' அப்படி யெல்லாம் நான் செய்வேன ? என்று
சரீர சுகத்துக்கு ஏதுவாகிய அன்ன சுகத்துக்கு ஏதுவாகிய ஞானத்தையும் ச்ெ தானங்களினும் வித்தியாதானமே சிற கொடுத்தால், அவை அவருக்கு மாத் சிறிது பொழுது மாத்திரமே. ஒரு வி பல விளக்கும், அப்பல விளக்கினுள்ளும்
DITs, எண்ணில்லாத விளக்கு ஏற்படு கல்வி கற்பித்தல், அவ்வொருவரிடத்தி:ே ரிடத்திலே பற்பலருமாக, எண்ணில்ல ஏதுவாகும். அவர் கற்ற கல்வியோ ளினும் சென்று சென்று உதவும். ஆத தருமம் யாதொன்றுமில்லை.
6

21 -
கேட்டார் திரு. இராசரத்தினம் அவர்கள். "நீர் ஊருக்கு வரும்போதெல்லாம் என்னை வந்து தவருது சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் திரு. இராசரத்தினம் அவர்கள்.
அதன் பின்பு திரு. இராசரத்தினம் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை இறை வன் அளிக்கவில்லை. ஆனல் அவரிடம் சென்ற ஆசிரியர்களிடம் அடியேனைப் பற்றி அன்பாக ஆதரவாக விசாரித்ததாக அவர்கள் வந்து சொல்வார்கள்.
இந்த வெற்றியுடன் பண்டிதமணி அவர்களிடம் சென்று நடந்ததை எல்லாம் அடியேன் கூறினேன். அவர் சிரித்துவிட்டு * நீர் இப்போ அவசியப்பட்டு வருவதை நானும் விரும்பவில்லை" என்று கூறினர்கள். பண்டிதமணி அவர்களுடைய ஆசியேதான் அடியேனை நாற்பத்துநான்கு ஆண்டுகள் சேவை செய்ய வைத்தது என்று கூறுவ தில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
பண்டிதமணி ஐயா அடியேனுடைய அழைப்பின் பேரில் பலமுறை மலை நாட் டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் தேயிலைத் தோட்ட மக்களுக்கு எடுத்துக் கூறிய விட யங்களும் மலையகக் காட்சியை எவ்வாறு இரசித்தார்கள் என்பதும் தனியாக ஆராயப் படவேண்டிய விடயங்களாகும். திருவருள் கூட்டும்போது அதனைப் பற்றியும் சிந்திப் போம் என்று கூறி விடை பெறுகின்றேன்.
MNMrvax
ா வஸ்திர முதலியவற்றையும் ஆன்ம காடுப்பது வித்தையேயாதலின், எல்லாத் ந்தது. ஒருவருக்கு அன்னவஸ்திரங் திரமே பயன்படும். பயன்படுவதும் பிளக்கேற்றுதல், அவ்வொருவிளக்கிலே ஒவ்வொரு விளக்கிலே பற்பல விளக்கு தற்கு ஏதுவாதல்போல, ஒருவருக்குக் ல பலரும், அப்பலருள்ளும் ஒல்வொருவ ாதவர் கல்வி கற்றுக் கொள்ளுதற்கு, அப்பிறப்பினன்றி மற்றைப் பிறப்புக்க லின் வித்தியாதானத்துக்குச் சமமாகிய
- நாவலர் பெருமான்

Page 175
எங்கள் ஞ பண்டிதை த. ே
சிறியேங்கள் சிவபெருமானுக்கு “ஞான பூசை செய்து உய்யும்படி உபகரித்தருளிய "சித்தாந்த சூரியனுகிய பண்டிதமணியின் பெருமைக்கு நமஸ்காரம். அந்தப் பெருமை யிலே பிரகா சிக் கும் பரம்பொருளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
அவர் நமக்கு உபகரித்த 'அத்வைத சிந்தனை? பற்றிச் சிறிது சிந்திப்போம்.
அத்வைத சிந்தனையின் முதல் வாக்கியம் 'இறைவனை "அத்துவிதவஸ்து" என்கிருர் தாயுமானவர்" என்பது.
சாந்தம் சிவம் அத்வைதம் பிரபஞ்சோப சமம் ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய --ւԸrr&hor. 7 அவ்யவஹார்ய: பிரபஞ்சோ சம : சிவோ Sத்வைத ஸம்விசத்-யாத்மனுத்மானம் ய ஏவம் வேத, ய ஏவம் வேத
-LDrtair. 12 சிவனே ஆத்மா, அவனே அறியப்பட வேண்டியவன்- அவனே உயிரோடு அத்துவித மானவன், அவன் சாந்தன். — шопт6йт. 7 *அத்வைத வஸ்து" சிவமாயும் பிரபஞ்சம் லயிக்கும் இடமாயும் விவரிக்க முடியாத தாயும் உள்ளது.
வணங்குதல் உடன்படுதல் அழைத்தல் முதலிய கருத்துக்களைச் சுரப்பதாகிய பிர ணவம் என்னும் ஓங்காரத்தினலே சிவம் என்னும் ஆத்மாவை அடைக.
(*உங்களுக்கு மங்களம் உண்டாகுக! ஸம்விசத்-யாத்மனுத்மானம் ய ஏவம் வேத. இங்ங்ணம் உபாய மறிந்தவன் ஆத்மா வாகிய சிவத்தை அதனருள்ாலே அடைகிறன் -மாண், ! * ஆத்மாய நம, ஆத்மலிங்காய நம’
- மஹா உபநி ‘ஸதாசிவோம்’
-மஹா நாரா. உடநி

ான குருமணி தநாயகி அவர்கள்
தத்துவமசி என்பது (அது நீயாயிருக் கிருய் என்பது) இறையத்துவிதத்தைக் குறிப்பது.
இனி, உயிரத்துவிதத்தைக் குறிப்ப தொரு தொடர்,
லலில ஏகோத்ரஷ்டா அத்வைதோ பவதி (பிருஹ. உப.1 என்பது, (த்ரஷ்டா -- காண்பவன்). சிவத்தின் மஹிமையையே கண்டுகொண்டிருப்பவன் ‘அத்துவிதி" ஆகி ருன் ஒத்துச் சென்று தன் திருவடிக் கூடிடும் உபாயம் இது, நீரைப் போல ஒன்றுபட்டு *ஏக”மாகி நிற்கும் ஒழுக்கம் "லலில ஏகோ" என்று உணர்த்தப்படுகிறது.
*ஏகனகி இறைபணி நிற்க" என்று சிவ ஞான போதத்தில் உணர்த்தப்பட்ட பொருளை லலில ஏகோ (பிரஹ. உபநி.) என் பது விளக்குகின்றது. இது சாதகமே என்பது கூர்ந்து நோக்கற்பாலது.
* ப்ரஹ்மைவஸன் ப்ரஹ்மாய் னேதி” "பிரமமாயிருந்து பிரமத்தை அடைகிருன்’ என்பது காண்க, பிரமமாயிருத்தல் சாதகம், * தத்துவமசி என்பது "நீ பிரமமே, ** நான் பிரமம்" என்று நீ இறுமாந்து மகிழ்ந்திரு” என்று உபதேசிக்கவில்லை.
“காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போற்
கான உள்ளத்தைக் கண்டு காட்டலின் " என்று சித்தாந்தங் கூறும் பொருளைக் காட்டு வது "தத்துவமசி மகா வாக்கியம்.
இப்பிராணிகளெல்லாம் ஸத்திலிருந்து தோன்றி, ஸத்திலிருந்து தோன்றினுேம் என்று உணரவில்லை. எது அணுமாத்திர மான ஸஇகடிம வஸ்துவோ அதுவே நீயாக வுள்ளாய் (தத்-த்வ-ஸி) --சாந் , 6. 10. 1. ‘ஸத்திலிருந்து தோன்றுதல்" என்பது பரமாத்மாவின் உபகாரத்தால் ஆணவ மறைப்புச் சிறிது நீங்குதல். இக்கருத்து பிரம சூத்திரத்தில் விழிப்பு இதனிடமிருந்தே (பிரமத்திடமிருந்தே) (பி. சூ. 3. 2. 8) என்று கூறப்பட்டது. துரியாதீதத்துக்கும்

Page 176
-
அப்பால் 'இருளவத்தை"யாகிய கேவலா தீதத்தில் கிடந்த உயிருக்கு அறிவு விளக்கம் பெறுதல் ‘ஸத்’ ஆகிய பிரமத்திடமிருந்தே
என்க.
அந்த ஸந்-நனந்தோபவதி
- சாந், 8, 4. 2.
*"(ஆகையால்) இந்தக் கரையை அடைந் தால் குருடாயிருந்தவன் குருடு நீங்கியவனு கிருன். தாக்குண்டவன் தாக்கற்றவனுகிருன். வருத்தமடைந்தவன் வருத்தம் நீங்கியவ ஞகிருன். இந்தக் கரையை அடைந்தால் இரவே பகலாகிவிடுகிறது. இந்தப் பிரம்ம லோகம் (தோன்றி மறையாத) ஒரே பிரகா சத்தை என்றும் உடையதன்ருே."
"குருடாயிருந்தவன் இந்தக் கரையை அடைந்தால் குருடு நீங்கியவனுகிருன்."
குருடாயிருந்தவன்-அநாதியே ஆண வத்தோ டத்துவிதமான "குருட்டுக் கிழவன்". அவனது குருட்டினை நீக்கியது "குமரி அருட் சத்தி.
**குருடு நீங்கியவனகிருன்" - மெய்ஞ் ஞானத் தாணுவினுேடத்துவிதமாகிருன். மூலையிலிருந்த குமரி - இறையத்துவிதம். கரையை அடைந்து குருடு நீங்குதல் உயி ரத்துவிதம். ஆணவத்தோடத்துவிதம், தாணுவினேடத்துவிதம்.
* இருட்டறை மூலை இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம்புரிந் தாளே." ஆணவ மலத்தை இங்கே காணலாம். ஆணவம் "அநாதியாயினும் விட்டே நீங்கும். "தமஸ்" என்று உபநிஷத்தில் சொல்லப்படு வது ஆணவம்.
*சந்த்ர இவ ராஹோர் முகாத் ப்ரமுச் யதே. ராகுவின் வாயிலிருந்து விடுபட்ட சந்திரன் ஆணவத்திலிருந்து விடுபடும் உயிருக்கு உவமையாகும்.
மாயை பிரம்மசூத்திரத்தில் 'தததினத் வாதர்த்தவத்" (பி. சூ. 1. 4. 3) "அது ஈசுவர னுக்கு அதீனமாயிருப்பதால் பொருத்த மாகும்" என்று விளக்கப்படுகிறது. தநு கரண புவன போகமாகிய பிரபஞ்சம் மாயே

23 -.
யம் (மாயாகாரியம்) ஆகும். (முதல்வனுக்கு மாயை பரிக்கிரக சத்தியாகும்).
இனி, பிரமசூத்திரம் (1. 4, 6) மூன்று விஷயங்களைப் பற்றியே உபந்நியாசமும் (ப்ரச்சினை) கேள்வியும் என்று கூறுகின்றது. ஸத்யம் என்னும் பதத்தில் பிரமம், ஜீவன், (அன்ருதம்) மலம் என்ப அடங்குகின்றன. (சாந். உரி: ப்ருஹ. உப).
*குருடாயிருந்தவன்" கரையை அடைந்து குருடு நீங்குகிருன் என்பதில் முப்பொருள் காண்க.
“ “... sm. Gајпшт sniji stou
தம ஸோமா ஜியோதிர் கமu ம்ருத் யோர்மா அமிர்தம் கமய”
இது "பவமான மந்திரம்' எனப்படும். உயிர் அஸத்திலிருந்து ஸத்துக்குத் தன்னை அழைத் துச் செல்லுமாறு பிரார்த்திக்கின்றது. *சத்திநிபாத நிலையில் இவ்வுயிர் நிற்கின்றது.
இஹைவ ஸந்தோ Sதவித்மஸ்-தத்
வயந்நசே-தவேதீர்மஹதீவிநஷ்டி: ; யேதத்விது-ரம்ருதாஸ்தே பவந்த்யதேதரே து:க்கமேவாபியந்தி !
- பிருஹ. உப. 4. 4. 15. இங்கு (இந்தச் சரீரத்தில்) இருந்து கொண்டே எப்படியோ நாம் அதை (ஆத் மாவை) அறிந்துகொண்டோம். இல்லாமற் போனுல் அறியாதவர்களாகிப் பெரும் நஷ் டத்துக்குள்ளாகியிருப்போம். எவர்கள் அதை (ஆத்மாவை) அறிந்தவர்களோ அவர்கள் 'சாகாதவர்களாகிருர்கள்?-அமிர் தத்தை எய்தினவர்கள் - ஆ கி ரு ர் கள். பிறரோ எனில் துன்பத்தையே அடைகி ருர்கள் (பிருஹ, 4, 4, 15)
இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம். -நாவலர்
ஏகாத்ம-ப்ரத்யய-ஸாரம் -மாண். 7
சிவம்-அத்வைதம்-ஆகிய முதல்வன், அவன் ஒருவனே அனைத்துக்கும் ஆத்மாஉயிர்க்குயிர், என்ற அறிவால் அநுசரித் தறியத்தக்கவன்.

Page 177
-
ஈசாலாஸ்ய மிதம் ஸர்வம் --iff, L. ஸ ய அணிமைத-தாத்ம்யமிதம் ஸர்வம்
தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்-துவமஸி க்வேதகேதோ --சாந் 6, 9. 4. GTತ್ತಿ அணுமாத்திரமான ஸஅசுஷ்ம வஸ்துவே: அதையே ஆத்மாவாய்க்கொண் டது இது எல்லாம். அதுவே ஸத்யம் அதுவே ஆத்மா சுவேதகேதுவே அதுவே நீயாக உள்ளாய்.
ஸயச்சாயம் புருஷே பச்சாஸா-வாதித்யே Git) 626 -தை - ஆன - 8.
எவன் இந்தப் புருஷனிடம் (இருதய குகையில்) உள்ளவனே அவனும், எவன் சூரியனிடம் உள்ளவனே அவனும் ஒருவனே. ஏகமாகிய ஆத்மா - ஏகாத்மா) இந்தப் புருஷனிடம் இருக்கிறன்
எவன் (இருதய) குகையில் பரமாகாசத் தில் இருக்கும் பிரமத்தை அறிகிருனே அவன் பிரமத்துடன் கூடி எல்லா ஆசைகளையும் அநுபவிக்கிறன்.
* உரைசேரு மெண்பத்து நான்குநூ
ருயிரம் யோனிபேதம் நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா
யங்கங்கே நின்றன்"
-சம்பந்தர் தேவாரம். * கலந்துநின்ற பெரியான்"
-அப்பர் தேவாரம்,
ஒவ்வோருயிர்க்கும் உயிராய் நிற்பவன் முதல்வன் ‘பூதேஷ0 பூதேஷய திஷ்டன்",
தம் அநுபூதி வசனங்களாகிய திரிகளை புடைய ஒளிவளர் விளக்கை நம்மறிவிலேற்றி பரமாத்ம தரிசனஞ் செய்வித்து ஆனந்தம் ஊட்டிக்கொண்டிருக்கும் எங்கள் (5C மணிக்கு நமஸ்காரம்.
* எவர் அறிவில் இருந்துகொண்டு அறி வினுள் உறைகின்ருரோ, எவரை அறிவு அறிந்துகொள்ளவில்லையோ, எவருக்கு அறிவு உடலாகின்றதோ, எவர் அறிவினுள் நின்று அதை ஆள்கின்ருரோ, அவர்தான் உன் னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அமிர்தம். -பிரஹ. 3. 7, 22

24 -
நம் ஆத்மாவாய் அந்தர்யாமியாய் அமிர் தமாய் உள்ளவர் 'சிவம்" என்னும் அநந் யாதிபதி. அவரே நம் அதிபதி. 'அநந்யாதி பதி? -பி. சூ.
அவரை நமஸ்காரத்தினலே பூசைசெய்து கொண்டிருப்போம். அவருக்கு மிகச் சமீபத் திலிருந்து நாம் அவருக்குச் செய்யும் பூசை யைக் கண்டு உவந்திருப்பாராகுக.
永 崇 崇
தத்ய ஏவைதம் ப்ரஹ்ம லோகம் பிரஹ்மசர் யோணுணு - விந்தந்தி தேஷா-மேவைஷ ப்ரஹ்ம லோகஸ் - தேஷாம் ஸர்வேஷா லோகேஷ 9 காமசாரோ பவதி ! 4, 3 | சாந்.
4. 3. எவர்கள் பிரமசரியத்தால் இந்தப் பிரஹ்மலோகத்தை எய்துகிருர்களோ அவர் களுக்கே இந்தப் பிரம்மலோகம் உரியதாம். அவர்களுக்கு எல்லா உலகங்களிலும் சுயேச்சை உண்டு.
இந்தப் பிரமசரியம் எங்கள் குருமணி யிடம் மிகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. பிரியமும் வணக்கமும் நிறைந்தவர்களாகி அறிஞர்கள் அவரிடம் வசப்பட்டு நின்ருர்கள்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
இந்தத் திருமந்திரம் அவரிடம் விளங்க அவரை நேரிற் கண்டவர்களெல்லாரும் *கண்டுகண் " டுவந்தார்கள்.
சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று
மாபோல்
ஆரியணு மாசான்வந் தருளாற் ருேன்ற
வடிஞான மான்மாவிற் றேன்றுத் தோன்றத் தூரியனுஞ்சிவன்றேன்றுந் தானுந்தோன்றுந் தொல்லுலக மெல்லாந்தன் னுள்ளே தோன்றும்

Page 178
*பண்டிதர் அப்பா
-out முல்
1940ஆம் ஆண்டு என்று நினைவு. நான் ஏழு வயதுச் சிறுவனுக இருந்தபோது நான் படித்த முள்ளியவளை சைவப் பாட சாலைக்கு நெடிதுயர்ந்த தோற்றமுடைய ஒருவர் தேசிய உடையில் வந்திருந்தார். தங்க நிறம், ஒளிவிடும் கண்கள், வசீகரமான முகம், முழந்தாளைத் தொடும்வரை நீண்ட கைகள்-இத்தனையும் பொருந்திய அவருக்கு எனது ஆசிரியர்கள் அதிக மரியாதை செலுத்துவதைக் கண்டேன். விசாரித்த பொழுது அவர்தான் பண்டிதர் கணபதிப் பிள்ளை என்று சொன்னுர்கள். " மெத்தப் படித்தவர், வாத்திமாருக்கு வாத்தியார் ? என்று கூறினுர்கள்.
முல்லைத்தீவைச் சேர்ந்த குமாரபுரம் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் அவரது பிரசங்கம் என்று அறிந்து அங்கு சென்றேன். திருவெம்பாவை பற்றிப் பேச்சு. பேச்சின் இடையிடையே சிறுவர்க்கான கதைகள். அவரின் சின்னஞ்சிறு கதைகள் என் மனத் தில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். அக்
(124 ஆம் பக்கத் தொடர்ச்சி) நேரியணுய்ப் பரியனுமா யுயிர்க்குயிரா யெங்கு நின்றநிலை யெல்லாமுன் னிகழ்ந்து தோன்றும். - சித்தியார் 280
ஆசான் உபதேசத்தோடு தோன்றவே முதல்வன் " நேரியணுய்ப் பரியனுமாய் நின்ற நிலையெல்லாம் தோன்றும் !! எங்கள் குரு மணி ' உபதேசமே திருமேனி" யாகத் தோன்றி முதல் வன பே தரிசிக்கச் செய்தார் !! ஞானநூ றனையோத லோது வித்த
னற்பொருளைக் கேட்பித்தறன்கேட்டனன்ரு வீனமிலாப் பொருளதனைச் சிந்தித்த லைந்து
மிறைவனடி யடைவிக்கு மெழின்ஞான பூசை

- சில நினைவுகள்
LDs -
கதைகளின் உட்பொருளே வளர்ந்த பின்பு தான் உணர்ந்து கொண்டேன்.
பண்டிதமணி அவர்களின் மாமியார் செல்லம் முள்ளியவளையில் திருமணம் செய் தவர். அவரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று சுற்றத்தவர்கள் முல்லைத்தீவுப் பகுதி யில் நிறைய இருக்கிருர்கள் என்று பின் னர்தான் அறிந்தேன். இந்த உறவுத் தொடர்போ என்னவோ தமிழ் அறிஞர்கள் எவரும் எட்டியும் பாராத வன்னிப்பிரதேசத் திற்கு, பண்டிதமணி அவர்கள் நாற்பதுகளி லேயே காலடி பதித்து அறிவொளி பரப்பி யிருக்கிருர்கள்.
பண்டிதமணி அவர்களின் மாமியாரை எமது ஊரவர் * செல்லப் பெத்தா " என்றே அழைத்தனர். செல்லப் பெத்தாவின் மகள் இத்திமடு முருகுப்பிள்ளை அவர்களைத் திருமணம் செய்தவர். நைஷ்டிகப் பிரம சாரியாகிய பண்டிதமணிக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதன் பயணுக முருகுப்பிள்ளை யின் மைந்தர்களான தம்பையாவையும்,
ஊனமிலாக் கன்மங்க டபஞ்செபங்க டியான மொன்றுக்கொன் றுயருமிவை யூட்டுவது போகம்
ஆனமையான் மேலான ஞாணத்தா லரனை
யருச்சிப்பர் வீடெய்த வறிந்தோ ரெல்லாம். - சித்தியார் 275
எங்கள் குருமணியை விரும்புகின்றவர்க ளெல்லாரும் மேலான ஞானத்தால் அரனை அருச்சிப்பாராக. "இறைவனடியடைவிக்கு மெழில் ஞானபூசை செய்து உய்தி கூடுக.
சிறியேங்கள் “ஞானபூசை " செய்து உய்யும்படி உபகரித்த எங்கள் ஞான குரு மணியின் ஞானபரம்பரை வளர்க.
நாவலர் சிவபெருமானிடம் வேண்டி நின்று எங்களுக்கு ' எங்கள் குருமணி ?? யை உபகரித்தார். நாவலருடைய ' சைவப் பிரசாரகர் " விருப்பமே எங்கள் குருமணி.

Page 179
சிவராசாவையும் தன்னுடன் அழைத்துச் சென்று வளர்த்துப் படிப்பித்தார்.தம்பையா அவர்கள் திருநெல்வேலி ஆசிரியகலாசாஃ யிலும் பின்னர் பலாலி ஆசிரிய கலாசாலை யிலும் பயிற்சி பெற்ற கணித ஆசிரியர் மட்டுவிலில் வசிக்கும் இவர் சமீபத்தில் ஒய்வு பெற்ருர், சிவராசா எக்ஸ்கதிர் இயக்குந ராகச் சேவையாற்றி இளம் வயதிலே மறைந்துவிட்டார்.
1949இல் அறிஞர் சு. நடேசபிள்ளை அவர்கள் திருநெல்வேலியில் பரமேஸ்வராக் கல்லூரிக்கு அருகில் பண்டித கலாசாலை யொன்றை ஸ்தாபித்தார். இதில் சேர்ந்து படிப்பதற்காகத் திருநெல்வேலிக்கு நான் சென்றபோது ஒரு வாரம் வரை கலாசாலை வீதியில் உள்ள பண்டிதமணி அவர்களின் இல்லத்தில் தங்க நேர்ந்தது, தம்பையா, சிவராசா ஆகியோர் எனது மைத்துனர்கள். அவர்கள் என்னைப் பண்டிதமணிக்கு அறி முகம் செய்துவைத்தார்கள். இயல்பான கூச் சத்தினுல் அவருடன் நெருங்கிப் பழகவில்லை.
ஏராளமான தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் அங்கு அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு பிரமித்துப் போனேன். அங்கு சமையல் உதவியாளராக இருந்த மாணிக்கம் என்பவர் * உவ்வளவு புத்தகங்களையும் ஐயா படித்திருக்கிருர் " என்று பயபக்தியுடன் கூறுவார். காலப்போக்கில் இந்த நூல்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. யாராவது படிப்பதற்கென இரவல் கேட் டால் கொடுத்துவிடுவார். அவற்றைத் திருப்பிப் பெறவேண்டும் என்று அவர் கருதியதில்லை. சமீபத்தில் நான் அவரைச் சந்தித்தபோது “ என்னிடம் புத்தகங்கள் இல்லை; அதுவும் நல்லதுதான். புத்தகங்கள் சிந்தனைக்குத் தடையாக இருக்கின்றன’ என்று கூறினுர்,
முல்லைத்தீவுப் பகுதியில், சைவாசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்ற "பண்டிதர் ஐயா"வின் அபிமான மாணுக்கர் பலர் இருக்கிறர்கள். இவர்களில் முக்கியமானவர் கள் நால்வர். ஒருவர் எனது ஒன்றுவிட்ட தமையனுர் சி. பொன்னம்பலம் அவர்கள்.

26 -
பண்டிதமணி அவர்களின் பத்திரிகைக் கட் டுரைகளை வெட்டிவைத்துத் தானும் படித்து எனக்கும் படிக்கத் தருவார். இவைகளே எனது இலக்கிய இரசனைக்கு வித்திட்டவை எனலாம். தணியூற்று பா. ஆறுமுகம் அவர் கள் இன்னெரு அபிமான மாணவர். பண்டி தர் ஐயாவின் எல்லா நூல்களையும் வாங்கி வைத்துப் பக்தி சிரத்தையோடு படிப்பார். கனக, செந்திநாதன் எழுதிய பண்டிதமணி யின் வாழ்க்கை வரலாற்று நூலான “மூன் ழுவது கண்‘?ணை அவரிடம் நான் வாங்கிப் படித்தேன். ஒட்டுசுட்டான் மாப்பாணர் சந்திரசேகரி ஆசிரியரும் பண்டிதமணியின் மாணுக்கர்தான். பண்டிதமணியின்தொடர்பு இவரைச் சிறந்த சைவ ஆசாரசீலராக மாற்றியுள்ளது. தனியூற்று முல்லைக்குமரன் முருகேசு ஆசிரியர் பண்டிதமணியைத் தெய் வம்போல் மதித்தவர். பத்திரிகைக் கட்டுரை மூலமும், வானுெலிப் பேச்சுக்கள் மூலமும் தமது கருத்துக்களை வெளியிட்ட பண்டித மணி அவர்கள் நெடுங்காலமாக புத் தகம் ஒன்றையேனும் வெளியிட வேண்டும் என்று எண்ணியதில்லை. ‘இலக்கியவழி ' -இவரது மாணுக்கர் கனக. செந்திநாதன் தொகுத்து வரதர் வெளியீடாக வெளிவந் தது. மகரகம ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் இலக்கிய வழியை எமக்குப் பாடநூலாக விதித்தார். இந்த நூலைப் பலமுறை படித்து இரசித்தேன். இந்நூலில் எனக்கிருந்த ஈடுபாட்டை அறிந்த சக மாணவர்கள் என்னிடம் பாடங்கேட்க வந்துவிட்டார்கள்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நான் படிக்கும் காலத்தில் (1950-52) பண்டிதமணி அவர்கள் பலமுறை அங்கு சொற்பொழி வாற்ற வந்துள்ளார். அங்கு ஆசிரியராகத் திகழ்ந்த கொக்குவில் இராசநாயகம் அவர் களும் , தற்போதைய ஈழநாடு ஆசிரியர் என். சபாரத்தினம் அவர்களும் “பண்டிதர் ஐயா? வின் அபிமானத்துக்குரியவர்கள். இந்துக் கல்லூரி ஆண்டுச்சஞ்சிகைகளில் பண்டிதமணி யின் கட்டுரை எப்போதுமே இடம்பெறும். கொக்குவில் இராசநாயகம் 'இலங்கை வளம்" என்னும் கட்டுரையை இரசித்து இரசித்து எமக்கும் அறிமுகப்படுத்தினுர். திருமுரு

Page 180
- 2
காற்றுப்படையில் ‘உலகமுவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு" என்ற ஒரு அடிக்குமட்டும் ஒரு மணித்தியால நேரம் கொடுத்த விளக்கம் என்றும் மறக்க முடி ill:Tg5!.
யான் ஆசிரியஞன பின்பே பண்டிதமணி அவர்களுக்குக் கிட்டப்போகும் துணிவு ஏற் பட்டது. கலாசாலை வீதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அடிக்கடி செல்லத் தொடங் கினேன். கந்தபுராண கலாசாரம், கந்த புராண போதனை என்னும் அவரது நூல் களை அன்பளிப்புச் செய்தார். அவருக்குப் பக்கத்தில் போய் இருந்துவிட்டாற் போதும். முதலிற் சுகசேமம் விசாரிப்பார். முல்லைத் தீவு நிலைபரங்களைப் பற்றிக் கேட்டார்; பின் னர் கணிதமேதை இராமானுஜம், விஞ் ஞான மேதை ஐன்ஸ்டீன் பற்றிக் கூறுவார். சைவசித்தாந்த சிந்தனைத் துளிகள் சிதறும். அமைதியாக இருந்து கேட்பேன். அபிப்பி ராயம் சொல்லி எனது அறியாமையைக் காட்ட விரும்பியதில்லை. ஒரு நாள் மட்டும் ஒரு கேள்வி கேட்டுவிட்டேன், ‘இறைவன் உயிருக்கு உயிராக இருக்கிருன் என்கிறீர்கள்; ஆன்மாவுக்குள்ளேயே இருக்கும் இறை வன அடைவதற்கு ஆன்மா முயற்சி செய் யத் தேவையில்லைத்தானே? என்றேன். சற்றுச் சிந்தித்துவிட்டு "ஆம், இதற்கு விடை யாக ஒரு கட்டுரை எழுதப் போகிறேன்" என்ருர்,
1963ஆம் ஆண்டு என்று நினைவு ஒரு நாள் எனது மைத்துனர் தம்பையாவிடம் பண்டிதமணி கேட்டாராம் 'உந்த அறை யில் இருந்து திருக்குறள் பாடமாக்கியவர் இப்பொழுது உபாத்தியாயராக இருக்கிரு ராமே. அவரை உமது மருமகளுக்குத் திரு மணம் செய்து வைத்தால் என்ன ? ? பண் டிதமணி அவர்கள் அடியெடுத்துக் கொடுக்க தம்பையா அவர்கள் திருமணப் பேச்சைத் தொடர்ந்தார். திருமணம் நிறைவேறி விட்டது. எனது துணைவி பரமேஸ்வரி பண்டிதமணி அவர்களை ' பண்டிதர் அப்பா' என்றே அழைப்பார். நானும் எனது பிள்ளை களும் பண்டிதர் அப்பா என்றே அழைக் கிருேம். பண்டிதமணி அவர்களைப் போஷித்து வேண்டிய பணிவிடைகளை யெல்லாம் செய்து

7 -
வந்த சதாசிவம் - சந்திரலேகா தம்பதிகள், அவர்களின் பிள்ளைகள் திருஞானசம்பந்தர், திலகவதி எல்லோருக்குமே பண்டிதர் அப்பாதான். ஊரு க் கெல் லா ம் தமிழ் மூதறிஞராய், சைவசித்தாந்த சாகரமாய், இலக்கிய கலாநிதியாய், பண்டிதமணியாய் அறிமுகமாகியிருப்பவர் எம்மைப் பொறுத்த வரை ** பண்டிதர் அப்பா ‘* தான்.
கண்டனக்காரர் என்று டேர் வாங்கிய பண்டிதமணி அவர்கள் மனிதர்களைக் கண் டிக்கவில்லை ; கருத்துக்களையே கண்டித்தார். தன்னுல் கண்டிக்கப்பட்டவர்கள் நல்லன செய்யும்போது மனந்திறந்து பாராட்டத் தவறுவதில்லை. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பண்டிதர் ஐயாவின் அன்புக்கு உரியவர். கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்கள் நாவலர் பற்றித் தொடர் கட்டுரையொன்றை எழுதிய போது மனந்திறந்து பாராட்டினர். கலா நிதி தனஞ்செயராசசிங்கம் நாவலர் பணிகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்குத் துணைநின்று அவரைப் பாராட்டியுள்ளார். பேராசிரியர் கைலாசபதியிடமும் துணைவேந்தர் வித்தியா னந்தனிடமும் பண்டிதமணி அவர்களுக்குத் தனிமதிப்பு உண்டு.
சிறந்த சிந்தனையாளர் ஆகிய பண்டித மணி அவர்கள் சிந்தும் தத்துவ முத்துக் களை நேரே கேட்கும் பாக்கியம் பெற்றவன் நான். ஒருமுறை சந்தித்தபோது கூறினர்: *ஆன்மா சிவமயமாகலாம், சிவமாக முடி யாது; வேதாந்திகளில் ஒரு சாரார் ஏகான்ம வாதிகள் பரமாத்மா ஒன்றுதான் உள்ள பொருள் என்கிருர்கள். வேதாந்தம் வேறு சித்தாந்தம் வேறல்ல. வேதாந்தத் தெளிவு தான் சைவசித்தாந்தம். உப அதிபர் கைலாச பதி என்கின்ற சைவசித்தாந்த சமுத்திரத் தின் கரையிலே பொறுக்கியெடுத்த சிப்பி களும், சோகிகளும்தான் நான் கூறும் கருத் துக்கள். உப அதிபர் ஒரு பெரிய சித்தர். வேஷம் போடாததால் அவரைச் சித்தர் வரிசையில் எவரும் சேர்க்கவில்லை. உலகில் நடப்பவை எல்லாமே நீதியானவை."

Page 181
一12
பண்டிதர்அப்பாவின் வீட்டுச் சுவரில் ஒரு பெரிய அட்டவணை தொங்கவிடப்பட் டிருந்தது. அதை எனக்குக் காட்டிப் "படித்து. பாரும்" என்ருர், "ஒன்றும் விளங்கவில்லை என்றேன். "இது உப அதிபர் கைலாசபதி யின் சிந்தனை " என்ருர்,
தக்ஷகாண்ட உரை ஒன்று த ர ன் பண்டிதமணி அவர்கள் திட்டமிட்டு எழுதிய நூலாகும். அவரின் பெயரால் இருபத் தொரு நூல்களும் ஏற்கனவே எழுதப்பட்ட வைகளின் தொகுப்புக்கள். ' தனங்கிளப்பு விநாயகர் கோயிலில் கந்தபுராணத்திற்குப் பயன் சொல்கிருர்கள். பயன் சொல்பவர் களுக்குப் பயன்படட்டும் என்றுதான் இவ் வுரையை எழுதினேன். பேராசிரியர் மருத் துவ கலாநிதி சின்னத்தம்பி அவர்கள் பல்கலைக் கழகத்தில் வெளியீட்டு விழாவை யானையிலே ஏற்றிப் பிரமாதப்படுத்திவிட் டார். பொற்கிழி வழங்கினர்கள்; தனங் கிளப்புக் கோயிலுக்குக் கொடுத்து விட் டேன்' என்ருர், சமயக் கட்டுரைகள், சமயச் சொற்பொழிவுகள் தொடர்பாக வரும் வரு மானத்தைக் கோயிலுக்குக் கொடுத்து விடு GITT
நான் சிறுகதை எழுதுவதை மறந்தும் அப்பாவிடம் கூறுவதில்லை."புராணக்கதைகள் தான் சிவகதைகள்; ஏனையவை அவகதைகள்" என்பது அ ப் பா வின் கருத்து. எனது பண்டாரவன்னியன் நாடக நூலே அவருக்கு அனுப்பியிருந்தேன். ஆனல் சிறுகதைத் தொகுதியை அவரிடம் கொடுக்கத் துணிய வில்லை. ஆஞல் அவர் பேரன் இராஜன் மூலம் அந் நூல் அவருக்குக் கிடைத்து விட்டது. பேராசிரியர் க. கைலாசபதியின் அணிந்துரையையும் சில சிறுகதைகளையும்
ஒருயிருக்கும் சிறிதாயினும் தீங்கு செய்தவரிடத்தும் தான் துரோக சிந் பிறவுயிர்களுக்குத் துன்பம் வந்தபொ போல் மனந்தபித்து அதை நீக்க முயல

8 -
அப்பா வாசித்ததாகக் கேள்விப் பட்டேன்.
அதன்பின் அவரைச் சந்தித்தபோது கூறினர்:
"ஆபரணம் எந்த வடிவிலும் இருக்கலாம், அது பொன்னலானதா என்று பார்க்க வேண்டும்’. சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டதுபோல் அவரின் கருத்து த் தொனித்தது. 'தான்தோன்றி ஈசுவரன் பாமாலை" என்னும் நூலின் கையெழுத் துப் பிரதியை மட்டும் துணிந்து அவருக்குக் காட்டினேன். அதன் அணிந்துரையில் அவர், **முல்லைமணி வே. சுப்பிரமணியம் இயல் பாகவே கவி புனையும் ஆற்றல் வாய்ந்தவர்; இவர் செய்த ஆராய்ச்சிகள் வீரம் வீறிட் டெழும் வன்னியர்களைப் பற்றியவைகள் ; சரித்திரகாரருக்கு விழிப்புணர்ச்சி நல்கு பவைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். வசிட் டர் வாயால் ‘* பிரம்மரிஷி ' பட்டம் பெற்ற குதுரகலம் எனக்கு.
ஒருமுறை நான் அப்பாவைச் சந்தித்த போது " எனது டாக்குத்தர் யோகு பசுபதி ஒளஸ்திரேலியா போய்விட்டார்" என்று கவலையுடன் தெரிவித்தார். சத்திர சிகிச்சை நிபுணர் திரு. பொன்னம்பலம் அவர்கள் ஒரு சமயம் அப்பாவிற்குச் சத்திர சிகிச்சை யளித்துக் குணப்படுத்தினுர்கள். அப்பாவில் டாக்குத்தர்களுக்கு நல்ல கரிசனை இருந்தது. விஞ்ஞான கணித பேராசிரியர்கள் பண்டித மணியின் தொடர்பைப் பெரிதாக மதிக் கிருர்கள்,
எண்பத்தாறு வயது முடிந்து எண்பத் தேழாவது வயதிலும் எம்மை விட்டுப் பிரி வார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. தமிழ்கூறு நல்லுலகமே அப்பாவின் மறை வுக்காகக் கண்ணிர் வடித்தது; வடித்துக் கொண்டே இருக்கிறது.
நினைக்கலாகாது. தனக்குத் துரோகஞ் தை இல்லாதவஞய் இருத்தல்வேண்டும். ழது தன்னை நெருப்பிலே தோய்த்தாற் ல் வேண்டும்.
- நாவலர் பெருமான்

Page 182
கந்தபுராணம் தக்ஷகாண்டம் உரைநூல் வெ கலைமண்டபத்தில் 25- 1 - 9 67 புதன்
பண்டிதமணி அவர்கள் மலர்மாலை, காளாஞ்
 

ளியீட்டு விழா, பேராதனைப் பல்கலைக் கழகக்
கிழமை முற்பகல் நடைபெற்றபோது
நசி மரியாதைகளுடன் காட்சி அளிக்கின் ஒர்.

Page 183
கந்தபுராணம், தகூடிகாண்ட
2-3-1967 வியாழன் மாலை வண்ணை வைத்தி விழாவில் பண்டிதமணியுடன் வியாகரணசிரோ ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களும். விழாத்தலை தலைமைஉரை. மேடையில் பூரீ. கி. லக்ஷ்மண தெரிவித்துப் பேசுகின்ருர்,
சைவாசிரிய கலாசாலையின் மூவர் முதல்வர்கள். பண்டிதமணி அவர்கள், மூதறிஞர் அதிபர் மயிலி நாதன் அவர்கள் பண்டிதமணி அவர்களுக்குப்
 
 

-ம் உரைநூல், சிறப்பு விழா
சுேவர வித்தியாலயத்தில் நடைபெற்ற குறித்த மணி தி, கி. சீதாராமசாஸ்திரிகளும்,புலவர்மணி வர் நீதியரசர் வீர. சிவசுப்பிரமணியம் அவர்கள் ஐயரவர்கள். பண்டிதமணி அவர்கள் நன்றி
உப அதிபர் பூரீ பொ. கைலாசபதி அவர்கள், ட்டி சி. சுவாமிநாதன் அவர்கள். திரு. சி. சுவாமி பொன்னடை போர்த்திக் கெளரவிக்கின்ருர்கள்.

Page 184
யக்ஞ த
சு. இராசநாய
'ஒசை பெற்றுயர் பாற்கட லுற்றெரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென." குற்றமனுகாத வென்றியையுடைய இராமன் கதையை ‘ஆசை"யால் அறையலுற்றேன் எனத் தமிழைத் தமிழ்செய்த கம்பநாட் டாழ்வார் அவையடக்கம் சொல்கிருர்,
இராமன் கதையின் வரிசையின் முன், கம்பர் தம்மை இட்ட வரிசை அது.
பண்டிதமணி அவர்களின் வரிசை, பொய்யடிமையில்லாப் புலவர் வரிசை மெய்க்கு அடிமையானுேர் வரிசை, மெய் யைச் சொல்லாமல் இருக்கமாட்டா தோர் வரிசை. அந்த வரிசையில் நின்று, தமிழ் கண்ட நூல்களையும் சைவ சித்தாந்த சாத் திரங்களையும் ஆய்ந்தும், க ைடந்தும் பண்டிதமணி அவர்கள் நவநீதஞ் செய்த வர்கள். அந் நவநீதத் திரள்கள் குன்றுக ளாய் உயர்ந்து நூலுருப் பெற்றவை. வாயூறவைக்கும் அந் நவநீதக் குன்றுகளின் வாசனை ஈர்ப்ப, சிற்றெறும்பாய் அவற்றை நோக்கி நகருவது எம்மனுேர் வரிசை. இவ் வரிசையின் விசேடணம், அவற்றை அணுகி நுகரும் ஆசை,
'ஆசை-மாசு. ஆசை வெட்கமறியாது'
-பண்டிதமணி
அதனுல், எம்மனுேர் ஆசையால்
பண்டிதமணி அவர்கள் இயற்றிய தமிழ்
யக்ஞம் மாசு பட்டுவிடுமோ எனவும் அஞ்சு கிறேன்.
*அஞ்சுவ தஞ்சாமை பேதைமை’
兴 兴 亲
அறுபது ஆண் டு களுக்கு முன்னர், 1926ஆம் ஆண்டில், பண்டிதமணி அவர்கள் "பண்டிதர்" ஆகாத காலம். தமிழ் இலக்கண இலக்கியங்களும், சைவ சித்தாந்த சாத்திர நூலறிவும் பொங்கிப் பிரவகிக் கும் இளஞாயிறு சின்னத்தம்பி கணபதிப் பிள்ளை. இவ்விளஞாயிறு மட்டுவிலில்
17

ரிசனம்
sic en 36 sit
காவிய வகுப்புகள் நடாத்திக்கொண்டிருந்த ές τουερ.
சி. க. அவர்களின் அபிமானியும், நுண் னிய விவேகியுமான படிக்காத மேதை 'லோச் செல்லப்பா" அவர்களின் வேண்டு கோளின்பேரில், விசேட காலங்களில் மான வர் தோத்திரஞ் செய்யும்பொருட்டு, பன் றித்தலைச்சி என வழங்கும் கண்ணகி அம்மை பேரில் 'மட்டுவில் கண்ணகி அம்மை தோத்திரம்" என்னும் தோத்திரப் பாடல் நூலே சி. க. அவர்களின் கன்னிப் படைப்பு எனக் கருத இடமுண்டு; எனினும் இது அக் காலத்திலேயே அச்சிடப்படவில்லை. கையெழுத்துப் பிரதியாகவே பேணிப் பாது காத்து, 1966ஆம் ஆண்டிலே அச்சிடப் பட்டதாகத் தெரிகிறது.
நாவலர்வழிச் சொத்தாகிய காவிய பாடசாலை மாணுக்கன், மட்டுவில் காவிய பாடசாலை ஆசிரியர், பண்டிதர், ஆசிரிய கலாசாலை மாணுக்கர், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர், பண்டிதமணி ஆகிய நிலைக ளின் பரிணும வளர்ச்சியிலே, சி. க. அவர் களின் இலக்கிய நோக்கு மின்னுகிற பொன்னுயிருந்து, புடமிட்ட தங்கமாக விகளித்தது வரலாறு.
1926இல் கண்ணகி அம்மை தோத்திரப் பாடல்கள் பாடியகால இருந்த இலக்கிய நோக்கும், 1966இல் அது அச்சிடப்பட்ட வேளை வாய்த்திருந்த இலக்கிய நோக்கும் வேறுபட்டவை. எனினும் 'மறைகின்ற பழைய நினைவு" என்ற தலைப்பில் முக வுரையும், அச்சிட ஆசியும் நல்கிய பண்டித மணி அவர்களின் ஒப்புரவு இருந்தவாறு!
மாணவரோடு மாணவராய், நாமெல் லாம் கண்ணகி தோத்திரம் பாடித் தல் நிமிர, பவனிவருகிற கதிர்காமவேலவனை எமக்கெல்லாம் காட்டிப் பக்திப் பிரவா கத்துள் ஆழ்த்துகிருர் பண்டிதமணி.

Page 185
நூல் : கதிர்காம வேலவன் பவனி
வருகிறன்,
இந்நூல் வெளிவந்த காலம் நிச்சய மாகத் தெரியவில்லை. "மெய்கண்டான்" வெளி யீடாக வெளிவந்த இச் 'சுவடி", பண்டித மணி அவர்களின் கருத்துப்படி முருக பக்தர்கள் ஒதவேண்டிய முதன்மையான நூலாம் திருமுருகாற்றுப்படைக்கு நாவலர் அவர்கள் செய்த நூலுரைகளை ஞாபகஞ் செய்துவைச்குமுகமாகத் தொகுக்கப்பட்டுள் ளேது.
"தந்தொழில் முடிமார்' ஆய மாக மறுவற்ற, அறங்குடியிருக்கும் தகையோ ரின் இதயங்களிலே பிரகாசிக்கும் முருகனின் திருமுகம் ஒவ்வொன்றையும், அவ்வம் முகத் துக்குரிய திருக்கரங்களையும், அவ்வவற்றின் செயற்பாடுகளையும் அருள் ஒழுகக் கூறும் திருமுருகாற்றுப்படை வரிகளை எடுத்து,
முருகன் பவனிவருகிற திருக்கோலத்தை எம் கண்முன்னே நிலைநிறுத்தி, வேட்டுவக் குலத்தாரோடு கூடி-ஆடி-பாடி-அளைந்து குழைகின்ற அக் கதிர்காமவேலவன, கதிரை மலைக்குன்றிலே பவனி வருகின்றவனைத் தரி சிக்க வைத்து, கருணைபெறப் 'பக்தர்களே, வம்மின் வம்மின்!" எனப் பண்டிதமணி அவர்கள் கூவி அழைக்கின்ருர்கள்.
உண்மையில், அடியவரை முருகன்பால் ஆற்றுப்படுத்த எழுந்த திருமுருகாற்றுட் படையின்பாலும், கதிர்காம வேலவன் பாலும் எல்லோரையும் ஆற்றுப்படுத்துகிற அருமையான "சுவடி" இது.
இன்று இது கிடைப்பதரிது. இதனை மறுபிரசுரஞ் செய்து இலவசமாகவோ, விலைக்கோ கொடுத்தல் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையினரின் கடன். சைவர் கள், உபகாரிகளின் கடனுமாம்.
兴 崇
பண்டிதமணி அவர்களின் சிந்தனையில் உதித்த கருத்துக்கள் - பொருள் யாவும் நூலுருப் பெறவில்லை. எனினும் அவர்க ளுடைய சிந்தனைகள் சில இருபத்திரண்டு நூல்களாக எமக்குக் கிடைத்துள்ளன.

30 -
அவை வெளிவந்த காலக்கிரமத்தில் அவற்றை நோக்குவதை விட, அவற்றை வகைப்படுத்தி நோக்குவது சிறப்பாகும் என எண்ணிஞல், தமிழ், இலக்கியம், சமயம், தத்துவம் என்ற நான்கு பெரும் பிரிவுகள் தாம் அவற்றை அடக்கத்தக்கவை எனத் தோன்றுகின்றன,
எனினும்,
** இறையரைகப்பொருள் *அன்பினைந்
தினை" என்று தொடங்க,
தொல்காப்பியப் பொருளதிகாரம், "கைக்கிளை முதலாப் பெருந்திணை இறு வாய்' என்று தொடங்குவது சுப சகுனம் . S k - Y O a உரையில் பெறப்படுவதொரு கருத்து "அன்பினைந்திணைக் களவியல் என்னுத விற்றே வெனின் தமிழ் நுதலிற்று" என்பது, இவ் வசனத்தால், தமிழின் உட்பொருள் ஐந்திணையாம்"
எனவும்,
* கற்றல் வேறு: கற்றவழி நிற்றல் வேறு.
கற்றவழி நிற்கச்செய்வது கசிவு. அதற்கு
அன்பு என்று பெயர். அறிவர்களாகிய : ஆரியர்கள் - சான்றேர்கள் தாம் கண்ட அறிவைப் பயன் செய்தற்கு அன்பைச் சாதிக்கின்ருர்கள். அன்புச் சாதகத்துக் குத் தமிழ் என்று பெயர். அன்பை ஏழு திணைசெய்து அறிவுலகமாகிய பொருளை யும் அதன் ஆதாரமாகிய அறத்தை யும் அன்பின் தளமா க் கிச் சாதகஞ் செய்ததே தமிழ்"
எனவும்,
ダ * அன்பின் வெளிப்பாடு தமிழ். மக்கட்
பண்பு தமிழ்ப் பண்புமாம். கலை, கலாசாரங்கள் சென்று முற்றுமிடமே தமிழ்ப் பண்பு??
எனவும், இன்ன பலவாற்ருனும் பண்டித மணி அவர்கள் சுட்டிக் காட்டிக் கூறு மாற்றல், தமிழ் வேறு-இலக்கியம் வேறுசமயம் வேறு-தத்துவம் வேறு என்பதில்லை. எல்லாம் ஒன்றின் வெவ்வேறு தோற்றங்கள்

Page 186
- 13
அதனுல், பண்டிதமணி அவர்களின் சிந்தனையிற் பிறந்தவை, நூலுருப்பெற்றவை "தமிழ்’ என்ற ஒரு வகையி ைஎன்பதே சாலப் பொருந்தும்.
எனினும்,
மேலே குறித்த நூல்கள் இரண்டு தவிர்ந்த மற்றவற்றுள்,
. 1. இருவர் யாத்திரிகர் என்பதைத்
தனித்தும்,
11. 2. நாவலரும் கோயிலும்
3. நாவலர் 4. ஆறுமுகநாவலர் என்பவற்றை ஒரு
தொகுதியாகவும்,
11. 5. இலக்கியவழி
6. பாரத நவமணிகள் 7. கம்பராமாயணக் காட்சி என்னும் கவி
நயக் கட்டுரை S. கம்பராமாயணக் காட்சிகள் 9. அன்பினைந்திணை 10. சிந்தனேக் களஞ்சியம் என்பவற்றை
வேருெரு தொகுதியாகவும்,
1V. 11. சைவ நற் சிந்தனே கன் 12. கந்தபுராண கலாசாரம் 13. கந்தபுராண போதனை 14. சிவராத்திரியிற் சிந்திக்கத்தக்கவை 15. சமயக் கட்டுரைகள் 16. தகஷ்காண்டம்-உரை 17. சிந்தனைச் செல்வம் 18. கோயில் 19. அத்வைத சிந்தன
* சிந்தனைக் களஞ்சியம் என்பவற்றை மற்ருெரு தொகுதியாகவும் தரிசிப் பது சால்புடைத்து.
இவற்றுள், சிந்தனேக் களஞ்சியம் மூன்ரும், நான்காம் தொகுதி ஒவ்வொன்றி
லும் இடம் பெற்றிருப்பது சிந்திக்கற் t_tỉTổì)gồi.

1. 1. இருவர் யாத்திரிகர் :
ஒரு சிறுகதை. (பண்டிதமனி அவர்க ளும் ஒரு சிறுகதை எழுத்தாளர் :)
ஒரு கிராமத்தில் ஒருவருக்கு முருகா ?? என்ற பட்டப் பெயர். ** பற்றுக்களை அடக்காமல், அவை தாமே அடங்கும்படி பற்றுக்களை வழி நடத்துபவர் *. இன்ப துன்ப நிகழ்வுகளை யெல்லாம் வேறுபாடின்றி ** முருகா " என்ற ஒரு சொல்லால் ஏற்றுக்
கொண்டவர். அதனுல், அப்பட்டப் பெயர்.
மற்றவர், ' தொல்லை '. இன்பமோ - துன்பமோ, செயற்பாடோ - செயலின் மையோ எது வரினும் ** தொல்லை " , பிரச்சினை என்று பதைபதைக்கும் செயற் Lții t - L- alii.
ஒரு சமயம் ** தொல்லே’க்காரர் மனம் மாறி, ஆண்டுதோறும் கதிர்காம
யாத்திரை மேற்கொள்ளும் ‘* முருகா " வோடு கதிர்காம யாத்திரை செய்கிருர், "தொல்லை? அங்கு தொல்லை"யேயாகி.
கிராமங்களின் தரும வாழ்க்கை முறை களும், அங்கங்கே பற்றுக்கரே விடாது பற்றி நின்று தடுமாறுகிற மனித இயல்புக ளும் ரஸ்பாவங்களோடு இச் சிறுகதையில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.
இது நூலுருவில் வெளிவந்துள்ள தெனினும், வெளிவந்த ஆண்டு முதலியன அறியக் கிடைக்கவில்லை.
※ 豪
11. 2. நாவலரும் கோயிலும் :
நாவலர் தர்ம பா து கா ப் புச் சபை வெளியீடு, ' இந்து சாதனம் " மறு பிரசுரம் - 1975.
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பற்றிய நாவலர் பிரபந்தத் திரட்டின் சுருக்கத்தின் ஒரு பகுதி இந்நூல். இதனைப் பண்டிதமணி
அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

Page 187
- 1
நல்லுTர்க் கந்தசுவாமி கோயிலை ஆகம விதி பிறழாது புனரமைக்க முயன்ற நாவலர் அவர்கள், ** முதிர்ந்து கனிந்த காலத்திலே வித்திய வேதாகம சாத்திர வித்துக்களின் தொகுப்பே இத் தொகுப்பு ** என்பது முன்னுரை.
நூலில் உயிர்ப்பலி, கோயிலில் துரல லிங்கமும் குக்கும லிங்கமும் இல்லாமை, பூசகர்களின் ஆசாரமின்மை முதலிய பல குற்றங்கள் கோயிலார் மேற் சுமத்தட் பட்டுள்ளன.
** நாவலர் அவர்கள் கண்ணிர் விட்டுக் கொண்டே இவற்றைச் செய்தார்; நாவலர் பெயராலன்றி எத்தனையோ திருத்தங்கள் நடந்திருக்கின்றன" என்ற குறிப்புரை யுடன் தொகுப்பு நிறைவு பெறுகிறது.
3, நாவலர் :
நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை யின் 120ஆம் ஆண்டு ஞாபக வெளியீடு 1968 مس۔
அருட்பாச் சம்பவம், மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளை அவர்களுக்கும் நாவலர் அவர்களுக்கும் இருந்த தொடர்பு கள் பற்றிய உண்மைகளை அகச் சான்றுகள் கொண்டு நிறுவல் முன்னரைவாசியிலும், தம் காலத்து யாழ்ப்பாணச் சமயநிலை முதலியன குறித்துக் கவலை கொண்ட நாவலர் அவர்கள் பதித்த பிரசுரங்கள் பற்றியும், நாவலர் அவர்களின் மனச் கிடக்சை - தகைமைகள் பற்றியும் பின் னரைவாசியிலும் கொண்ட நூல்.
சென்ற நூற்ருண்டில் வைதிக சைவ சமயத்தின் ஏகப் பிரதிநிதியாய் விளங்கிய நாவலர் அவர்கள் கவலை கொண்டு சீராக்க முயன்ற சமயநிலை இன்றுமுண்டு : “ அவருச் குட் பின் நமது சமயத்துக்கு ஒப்புச் கொள்ளக்கூடிய ஒரு தலைவரில்லை" என்ற மன வெதும்பலோடு பண்டிதமணி அவர்கள் நூலே முடித்திருப்பது சிந்தனைக்குரியது.
*. ஆறுமுகநாவலர் :
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி அவர் களின் தென்மராட்சி பாராட்டு விழாக சபை வெளியீடு - 1979,

2 -
** பல்வேறு சந்தர்ப்பங்களில் சூழ் நிலைமை நோக்கிக் காலந்தோறும் நாவலர் பெருமானைப் பற்றி வெளி வந்த கட்டுரைகளிற் சிலவற்றின் தொகுப்பே ஆறுமுகநாவலர். இது முதற் பாகம் ஆகலாம் " எனப் பண்டிதமணி அவர்களே முன்னுரை யிற் குறிப்பிடுகிமுர்கள்.
இருபத்தேழு கட்டுரைகளும், பயன் பாடுமிக்க அநுபந்தம் ஒன்றும் தொகுப்பி லுள்ளன.
நாவலர் நூற்ருண்டு விழாவை யொட் டியும், நாவலர் சிலைத் தாபனத்தை யொட்டியும் எழுதியவையும், பேசியவையும் சில இங்குண்டு.
நாவலர் பெருமானின் மாணவப் பருவ முதல் அமரத்துவம் வரை அன்னவரது வாழ் வில் - தமிழ், சைவ நிலையில் - சம்பவித்த பல்வேறு நிகழ்ச்சிகளின் பின்னணியில், * நாவலர் அவர்களின் உயிர்நாடி நீதி ?? என்பதைக் கட்டுரைதோறும் இழையோட விட்டுள்ளார் பண்டிதமணி.
'நாவலர் சரிதை வைதிக சைவ வழி காட்டி" என ஈற்றிலமைந்த கட்டுரை நாவலர் அவர்களை, அவர்களின் பக்கு வத்தை, அவர்களின் மனுேநிலையைப் படம் பிடித்துக் காட்டுவது நோக்கற்பாலது.
** நாவலர் தாபித்த வண்ணைச் சைவப் பிரகாச வித்தியாசாலை' என்ற கட்டுரை நாவலர் அவர்கள் பெயரில் இயங்கும் சங் கங்கள் எல்லாவற்றினதும் தலையாய கவனத் துக்குரியது.
நாவலர் அவர்களின் ஐந்தாண்டுத் திட்டம் நன்கு விளக்கப்பட்டுள்ளது. சைவப்பிரகாச வித் தி யாசா லே வேறு, பண்டித - பாரதி வகுப்புகள் நடந்த காவியபாடசாலை வேறு என ஆதாரபூர்வ மாகப் பண்டிதமணி அவர்கள் விளக்கியுள் ளார்கள். நாவலர் வித்தியாலயச் சொத்து எனப்படுவன எதற்குரியவை ? <别町五 கையேற்ற வித்தியாசாலைக்குரியனவா அன்றி

Page 188
ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்தத்தக்க காவிய பாடசாலைக்குரியனவா?
'நாவலர் பெயரை உச்சரிக்கும் சபை கள், மன்றங்கள் அரசுக்கு உண்மை நிலையை எடுத்துக் காட்டிச் சொத்துக்களை நாவலர் நோக்கத்துக்குப் பயன்படுத்த வேண்டும் " எனப் பண்டிதமணி அவர்கள் கூறுவது சபைகள் - மன்றங்களின் ஆலோசனைக் குட் படுதல் வேண்டும்.
நாவலர் அவர்கள் தமது ஐம்பதாண்டின் பின்னர் உளநொந்து, உதிரங் கொதித்து, 1872இல் யாழ்ப்பாணச் சமயநில என்ற நூலில், "ஒகோ!. ’ என்று தொடங்கு கிற ஒரு வசனம் உண்டு. இந்த 'ஒகோ!' விற்குப் பண்டிதமணி அவர்கள் செய்யும் விரிவுரை தனித்துவமானது. நாவலர் அவர் களைத் தொட்ட உளநோவும், உதிரக் கொதிப்பும் பண்டிதமணி அவர்களிடமும் தொற்றிக்கொண்டிருப்பது ʻʻ t.jgrui: l u3Ö) jJt வியாதி"யோ?
அநுபந்தம்: நாவலர் சரிதை தங்குதடை யின்றி நடப்பதற்கு வழி செய்த நால்வர் பெருமக்களின் ஆராய்ச்சி முடிபுகள்; "நாவ லரைப்போல் நமக்காளில்லை?" என்ற சமய தத்துவ சாதகர் பொ. கை. அவர்கள் சொன்னவை, மிக்க பயனுடையது.
洛 崇 ※
11. 5. இலக்கியவழி:
வரதர் வெளியீடு - 1955,
திருத்தப் பதிப்பு - பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை வெளியீடு 1964-س--
(மறுபிரசுரங்கள்: 1979; 1981; 1985)
புத்தக வெளியீட்டுத்துறையில் பல புதுமைகள் செய்தவர் **வரதர்?’. அவர், பண்டிதமணி அவர்களின் பதினைந்து கட் டுரைகளை "இலக்கியவழி' என்ற பெயரில் நூல்வடிவில் வெளியிடும் பாக்கியம் கிடைத் ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமை யும் அடைந்ததாகப் பதிப்புரையில் கூறுகி

33 -
முர். இந்த வெளியீட்டுக்கு உறுதுணையும். வழிகாட்டியும் திரு. கனக. செந்திநாதன், பண்டிதமணி அவர்களின் மாணுக்கர்.
*கனவிலும் ஒரு புத்தகம் எழுத முய லாத பண்டிதமணி அவர்களின் மணி யான பதினைந்து இலக்கியவழிக் கட்டுரை களைத் தாங்கி வெளிவந்த ‘இலக்கியவழியே நூல்வடிவில், வெளியீட்டாண்டு குறித்து வெளிவந்த பண்டிதமணி அவர்களின் முதல் நூலாகும். இதனை முதலாவதாக வெளியிட் டதில் "வரதர் பெற்ற மகிழ்ச்சியும் பெரு மையும் எத்துணை என்பதிலும், அன்னவரது 'கைவியழ?? விசேடத்தால், அதன்பின் நூலுருப்பெற்ற பண்டிதமணி அவர்களின் புத்தகங்கள் எத்தனை, அதனுல் தமிழ் - சைவ உலகு பெற்ற பாக்கியம் எத்துணை என்பது சிந்திக்கற்பாலது.
"வரதர்" அவர்களின் 'கைவியழ?? விசேடம் நீடு வாழ்க!
வரதர் வெளியீடாக வெளிவந்த இந் நூல், பின்னர் திருத்தப் பதிப்பாக மேலும் ஐந்து கட்டுரைகளையும், அரும்பத விளக்கம்இரசனைக் குறிப்பு என்பவற்றையும் தாங்கி, சுன்னகம் திருமகள் அழுத்தகத்தில் பதித்து வெளிவந்துள்ளது. இலக்கியவழி க. பொ. த. உயர்தர வகுப்புக்கு ஒரு பாடநூலாக விதிக்கப்பட்டது, மாணவர் தவப்பயன்.
இரகுவமிசம் செய்த அரசகேசரியி லிருந்து, வித்துவசிரோமணிகள், புலவர்கள் ஊடாக மகாவித்துவான் கணேசையர் பரி யந்தம் எமது நாட்டில் இலக்கியவழி ஒன்று தொடர்ந்து வந்திருக்கிறது என்பதையும், புலமை கனிந்த கவிராயர்கள் முதல் இல்லா தொழியும் நிலையிலிருந்த அருந்தமிழ்ப் பொக்கிஷங்களைப் புத்தகஞ் செய்தோர் ஈருக அவ்விலக்கியவழி ** இடையிலே கிளர்ந் தெழுந்ததோர் எழுச்சியின் பெறுபேறே யாம்' என்பதையும்,இவ்வாருன பல 'முதல்" களையும் எடுத்துக்காட்டி,திருத்திய பதிப்பின் முன்னுரையில் பண்டிதமணி அவர்கள் *இலக்கிய வழிக்கு வாசகரை வழிப்படுத்து கிருர்கள்.

Page 189
. 1 س--
இலக்கிய இரசனையை "இரட்டையர்' மூலம் இனிக்க இனிக்கப் புகட்டத் தொடங் குகிருர் பண்டிதமணி. இலக்கியத்தையோ இரசனையையோ முன்னர்க் கண்டு கேட்டறி யாதவரைக் கூடக் கவிதாலோகத்திற் சஞ் சரிக்க வைக்கும் ஒரு வித்தை பண்டிதமணி அவர்களின் எழுத்தில் வியாபித்திருப்பதை இக் கட்டுரையில் உணருகிருேம்.
"மரா மரம் விட்டிங்கு வந்ததென்னே" விற்கான விளக்கமும், விடையும் பண்டித மணி அவர்களின் சொல்வண்ணத்தில் மிளிரு கின்றன.
'மண்டின்ற பாணம்' என்ற காளமே கத்தின் கவித்துவ அருமையில் தம்வச மிழந்த இரட்டையரிற் குருடர், “...வேகுதே ஐயையோ, மண்டின்ற பாணமென்ற வாய்' என்று வெந்து பாடியதைக் காட்டி, கவிஞ ரின் அருமையைக் கவிஞரே அறிவர் என்ற உண்மையை உணரவைக்கிருர் பண்டித மணி.
காவியங்களில் நாட்டுவளங் காட்டும் சோலைகள் மட்டுந்தாமா கனிகள் தருவன? பாட்டி கதை முதல் புராண - உபநிடதக் கதைகள் வரை பாரதநாட்டுக் கற்பகதருக்க ளாக வளர்ந்துநிற்பவை. அக் 'காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்'. இக் கணிக ளின் வித்துக்களிலிருந்தே நாடகம், காவியம், பிரபந்தம் என்பவை முளைத்தவை.
சின்னத்தம்பிப் புலவர், நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஆகியோர் இலங்கை வளம் பாடிய பாங்கினைப் பாங்காயுரைக் கிரு?ர் பண்டிதமணி :
அப்புத்தளையிலிருந்து புறப்பட்டு மகா வலி கங்கை காட்டி, மாணிக்க கங்கையில் நீராட விட்டு, கதிரமலை தரிசிப்பித்து, கண்டியூடாக மலைவளங் காட்டி, கொழும் பூடாக யாழ்ப்பாணம் வரும் வழியில் இயற்கை வளங்களையும், விநோதங்களையும் காட்டி நேர்மையென நெடிதுயர்ந்த பனை களினூடாக நல்லூருக்கு அழைத்து வரப் படுகிருேம்.

س- 4
கவிஞன் என்றுங் கவிஞனே, ஈழநாட்டுப் புலவர், பருளை விநாயகர் பள்ளு, நாவலர் எழுந்தார், கம்பரிற் பாலர் கல்வி, கம்பன் செய்த வம்பு என்ற கட்டுரைகளினூடாகச் சென்று, ' வித்துவசிரோமணி பொன்னம் பலபிள்ளைக் கட்டுரையில் நீண்டநேரம் தங்க வேண்டும். தங்குவது தங்கம் பெறும். வித்துவசிரோமணியின் வித்தியா மேதை யைத் தக்க கோணங்களிலிருந்து தரிசிக்க வைக்கிருர் பண்டிதமணி.
* இலக்கியங்களிலே இரசனைக்கு உரிய பொருள் எது என்று தெரிதல் வேண்டும். தெரிந்ததன் மேல் இர சனையை எடுத்துக் காட்டுதற்கு ஏற்ற தடை கைவரவேண்டும். இந்த இரண்டுமாயிருந்தவர் பொன்ச3:பல ι η 5η 25η
என்று இலக்கிய இரசனைபற்றிய உண் மைகளை வித்துவசிரோ மணி மேல் ஏற்றிக் காட்டுகிற கோலமே ஓர் இலக்கியம் : இரசனை பொலிவது.
மதுரையில் நடந்த அனைத்துலகத் தமி ழாராய்ச்சி மகாநாட்டை ஒட்டி மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் வெளியிட்ட *உலகத் தமிழ்" என்ற நூலுக்குக் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் ஒர் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்திருந்தார். கலாநிதி அவர்கள் பண்டிதமணி அவர்களை நேரிற் கண்டு அதிகம் உரையாடிய வர ல் லர். அவர் தமது கட்டுரையில், ஈழத்து இலக்கிய வரலாறுபற்றி அறியவும், எழுதவும் வழி காட்டியா யும் ஆதாரமாயும் அமைந்தது ** இலக்கியவழி ' எனக் குறிப்பிட்டிருந்தார் என அறியக் கிடக்கிறது. இதுவே, இத் நூல் ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் முதனூல் என் பதை எடுத்துக் காட்டுகிறது.
6. பாரத நவமணிகள் :
தென்மராட்சி செந்தமிழ் மன்ற வெளி யீடு-1959. இரண்டாம் பதிப்பு - 1980.
வானெலியில் தொடர்ந்து ஒலிபரப்பிய வையும், பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய வையுமாய ஒன்பது கட்டுரைகளின் தொகுதி.

Page 190
-
பாரத நாட்டு மக்களின் கலை கலாசார வாழ்வோடு ஒன்றிய மகாபாரதக் கதையை வில்லி பாடியமை, கண்ணன் காட்டும் வழி, அவன் சூழ்ச்சி, கீதாபோதம் என்பன போன்று நவமான ஒன்பது கட்டுரைகள்.
** பாரதம் தருமத்தின் சரித்திரம் ; கிருஷ்ணன் தரும மூர்த்தி " என்றும், “ பார தத்தின் கதாநாயகன் கிருஷ்ணன்" என்றும் பண்டிதமணி அவர்கள் எடுத்துக் காட்டுவ தும்,
வியாசர் ஜனமேஜயனுக்கு, ' இதிகா சம் வெறும் சரித்திரமன்று ; உலகபாத்திரங் களே எடுத்துக் கொண்டு, அவைகளில் வைத்து, தருமம் இருந்தபடியை உணர்த்து வதே இதிகாசம் ' என்றதைச் சுட்டிக் காட்டுவதும் ,
** இதிகாசங்களில் முதல் வைத்துப் பேசப்படுவது மகாபாரதம் ' என்று பண்டித மணி அவர்கள் தெரிந்து கூறுவதும் மகா பாரதத்தின் பெருஞ் சிறப்பினை எடுத் துரைப்பன.
கிருஷ்ணன் தூது செல்கிருன். விதித்த படி, அவன் சித்தங் கொண்டவாறு, சமா தானம் ஏற்படாவகை செய்தான்.
வில் விதுரர் 'வில்லிரண்டினு முயர்ந்த வில்லதனை வேறிரண்டுபட " வெட்ட வழி சமைத்தான்.
குந்தியையும், கர்ணனையும் தனித்தனி சந்தித்துப் பரம இரகசியம் ஒன்றை வெளிப் படுத்தினன்.
இந்திரனைக் கர்ணனிடம் அனுப்பி அவனது கவச குண்டலங்களைத் தானமாகப் பெறுவித்தான்.
அசுவத்தாமன் சே ஞ திபதியா காத நிலையை உருவாக்கினன்.
இவையெல்லாம் கிருஷ்ணரின் சித்தம். இவற்றல் மகாபாரதப் போரை நடைபெற வைத்தான்.
அதர்மம் அழிந்து தர்மம் ஜயிக்க அவன் செய்த திருவிளையாடல்கள் இவை.

35 -
அபிமன்யு மறைந்து விட்டான். உலகமே உறைந்து போயிற்று. துரியோதனனே உருகி அழுகிருன். தாய் மாமன், தந்தையின் தோழன் கிருஷ்ணன் வச்சிர மலையாய்ச் சலனமின்றி இருக்கிருன்.
இஃது என்ன தர்மம்?
தர்மம் முற்றுப் பெற்றவர் தரிசிப்பதும், முற்றுப் பெருதவர் த ரிசிப்பது மாகிய * தருமம் ?? வேறு பட்டது என்பதைக் கண்ணனின் இந் நிச்சலனத்தாற் சுட்டிக் காட்டுகிருர் பண்டிதமணி.
*தருமத்தின் இன்றியமையாமை", "கீதா போதம்" ஆகியவை மகாபாரதத்தின் சார மாகிய தர்மத்தை ஆராய்கின்றன.
“கீதாபோதம்", "செயலிற் செயலின்மை யையும், செயலின்மையிற் செயலையும் எவன் காண்கிருணுே அவனே புருஷோத்தமன்" என்ற வடமொழிச் சுலோ கத்தோ டு தொடங்குகிறது.
கண்ணப்பர் காளத்தியப்பருக்கு உச்சிஷ்ட ஊனை நிவேதிப்பதும், சண்டீசர் தந்தையின் தாளைத் தடிந்ததுமாகிய செயல், "செயலிற் செயலின்மை " .
இடையில், இராமாயணத்  ைத யும் தொட்டு, தருமமே உருவாய விசுவாமித் திரர் தாடகைக்கு ‘விடு பாணம்" என்னப் பாணத்தைத் தீண்டும்போது தாடகை ஒரு பெண்ணன்ருே எனக் கூசிய பூரீராமனின் கை, ஒருநாள் ஒட்டி நின்று வாலிக்குப் பாணந் தொடுக்கின்றது. இஃது எவ்வகைத் தர்மம்?
பண்டிதமணி அவர்களைக் கேட்போம்:
'ஒரோர் சந்தர்ப்பத்தில் பூரீ ராமன் செயல், செயலின்மையிற் செயல்'.
இந்தச் செயல்-செயலின் மைகளை ப் பண்டிதமணி அவர்கள் **செய்யாமை "" என்கிருர்கள்.
** செய்யாமை" பெறத் தக்கவற்றுள் மேலானது எனக் கீதாபோதம் " என்ற கட்டுரை மூலம் போதம் செய்கிருர் பண்டிதமணி.

Page 191
7
கம்பராமாயணக் காட்சி என்னுங் கதை தழுவிய கவிநயக் கட்டுரை:
முதற்பதிப்பு - 1965.
*கம்பராமாயணக் காட்சி என்னுங் கதை தழுவிய கட்டுரைத் தொடரில் நூற்றைம் பதுக்கு மதிகமான கட்டுரைகள் பண்டிதமணி அவர்களால் எழுதப்பட்டவை. அவற்றுள் 92 முதல் 104 ஈருகவுள்ள மந்தரை சூழ்ச்சிட் படலக் கட்டுரைகளையும், 105 முதல் 118 இறுதியாகவுள்ள கைகேசி சூழ்வினைப்பட லக் கட்டுரைகளையும் இத் தொகுதி கொண் டுள்ளது.
உயர்வகுப்புப் பரீட்சைகளில், நலனுய்வு பற்றிய இலகு விஞக்கள் சில தரப்படுவ துண்டு.
* இலக்கியவழி' யில், * இலக்கியத் தின் உயிரும் உடலும் ? என்ற பண்டித மணி அவர்களின் கட்டுரை இங்கு நோக்கப் படத் தக்கது.
அங்கு, இலக்கியத்தின் - கவிதையின் ' உயிர் " பற்றி, செய்யுள் முகந்து கொள் ளும் பொருளைத் தொல்காப்பியர் கூறு மாற்ருல், "முதல் கரு உரிகள் முறை சிறந்தனவே " எனச் சுருக்கிய சூத்திரத் தால் விளக்கந் தருகிருர் பண்டிதமணி.
இலக்கியங்களிலே உயிரான இரசனைக்கு உரிய பொருள் எது என்று தெரிந்து, அதனைச் சுட்ட ஏற்ற மொழிநடையும் கைவர வேண்டும். இதன் பாலதே நலஞய்வு, இது பண்டிதமணி அவர்களின் கருத்து.
இவ் வழியில், இந் நூலிலுள்ள ஒவ் வொரு கட்டுரையும் இலக்கியத்தின் உயிராய உரியை அதன் தூல சூக்கும உடல் வண் னைத்திற் காட்டி மிளிர்கிறது.
பண்டிதமணி அவர்களின் நலனுய்வு பற்றிய நலஞய்வு பாரதமாய்ப் பெருகும்.
தசரதன், ' புனையு மாமுடி புனர் திந்த நல்லறம் புரக்க நினையல் வேண்டும் " என, பூgராமன் ‘* அப்பணி தலை நின்ருன் "' ஆதலைக் கண்டு, ' உரிய மாதவன் ஒள்ளிது

136 -
என்றமைந்தனன் ' என்ற சந்தர்ப்பத்தில், ** நிலம் புரக்க " வென்னுது "நல்லறம் புரக்க ’ எனக் கம்பர் கூறியதும், பூரீ ராமன் அப்பணி தலை நின்றதும், அவனுக்கு ஒண்மை பயிற்றிய வசிட்டன் ‘* ஒள்ளிது" எனத் தம் இயல்பான சாந்தநிலை அதீத முறப் பெற்றதுமாகியவற்றின் உயிர் நிலை களையும், உயர் நிலைகளையும் பிடித்துக் காட்டுகிறர் பண்டிதமணி.
களரியில்,
*" கூனி தோன்றினுள் ',
*" துன்னருங் கொடுமனக் கூனி தோன்
றினள் * ,
* இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல் துன்னருங் கொ டு ம ன க் கூனி தோன்றினுள் "
என்று களரியையும், அணு அணுவாகக் கூனியின் சொரூபத்தையும் வாசகர்முன் கொணரும் பண்டிதமணி அவர்கள், அக் கூனி,
** கேகயன் தோகை கோயின்மேல் மண்டினுள் " என்பதில் ** மண்டினுள் " என்பதை நலனுய்வு செய்கிருரா அன்றி அவள் மண்டிய நாடகத்தை ஆட்டிக் காட்டுகிருரா எனுமாறு மொழியை நடத் திச் செல்கிருர்,
இவ்வாறு பலப்பல இடங்கள் நலன் சொட்டுவன. காட்ட இடம் போதாது.
இந் நூலில் கைகேசி யார், அவள் பிறப்பு இரகசியம் என்ன, மந்தரை யார் என்ற விடயங்கள் தரப்பட்டிருப்பதும் ஒரு GSGs Lib.
நலஞய்வு என்னும் திறனுய்வு பற்றிய நிறைவான திருட்டாந்தங்களைப் பாடசாலை மட்டத்திலிருந்து ஆசிரியர் கல்லூரி, பல் கலைக் கழகம் ஈருகவுள்ள மாணவர் பயிலவும், பின்பற்றவும் வளமான நூல் இது.

Page 192
-
8. கம்பராமாயணக் காட்சிகள்:
யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழக வெளியீடு-1980
கம்பராமாயணத்தி லிருந்து தெரிந் தெடுத்த பல செய்யுள்களைப் பண்டிதமணி அவர்கள் கட்டுரை உருவில் எழுதினர்கள். அவை " தினகரன் வார மஞ்சரியில் வெளி வந்தன. அவற்றுள் பால காண்டஞ் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந் நூல்.
முத்தமிழ் வெளியீட்டுக் கழகச் செய லாளர் திரு. க. சொக்கலிங்கம் அவர்களின் பதிப்புரையும் தலைவர் கலாநிதி அ. சண்முக தாஸ் அவர்களின் ‘* ஒரு யுக புருஷ ன் பண்டிதமணி ' என்ற சிறப்புக் கட்டுரையும் நூல் முன்னுல் உள்ளன. இச் சிறப்புக் கட் டுரை பண்டிதமணி அவர்களின் தோற்றம் முதல் அன்னவர் இலக்கிய கலாநிதியாகக் கெளரவிக்கப்பட்டது வரையிலான அன் னவரின் கல்வி, இலக்கிய-சமய நோக்குகள், அவை பற்றிய விசாரங்கள், பேச்சு - எழுத்து என்பன பற்றிய தெளிவான ஒரு கண்ணுேட்டமாகும். பண்டிதமணி அவர் களையும், அவர்களின் எழுத்துக்கள்-சிந்தனை களையும் ஆராயப் புகுவோருக்கு இக் கட் டுரை சிறந்த வழிகாட்டியா யமையும்.
நூல் :
அவைக்கு அடங்குமுகம், அவையை அடக்குமுகம் ஆய இரு முகமான கம்பரின் அவையடக்கத்திற் ருெடங்கி,
இராமாயணத்தில், சேது பந்தனத்தில் வரும் “குமுத னிட்ட குலவரை கூத்த ரின். ' என்பதே முதன் முதலிற் பாடப் tull- கம்பராமாயணச் செய்யுள். அது காப்புக்கு மூப்பு ஆன செய்யுள் என்ற கற் பனைக் கதைச் செய்தியைத் தந்து,
* எழுந்த ஞாயிறு விழுவதன்முன் கவி பாடிய தெழுநூறே 'யாய் இராம கதை ஆகர்ஷணவேகம் மிக்கதைக் காட்டி,
இராம கதை, இராமன் உதிக்க வெகு காலம் முன்னரே இப் பூவுலகில் ' எய்திய மாக்கதை"க் கதை சொல்லி,
18

17 -
சூரியகுல ஒழுகலாறு, இராமன் நடந்து போய்க் கற்று நடந்துவரும் கற்கை நெறி இராமனை வசிட்டனே வளர்த்தவன் என்ற வற்றைக் காட்டி,
தசரதன் காதுகளிலே பேரிடியென விழுந்து உயிரை நடுக்குவித்த ** கரிய செம் மல் ஒருவனைத் தந்திடுதி ' என்ற விசுவா மித்திர முனிவரின் வேண்டுகோள், "சந்நிதி விரோதம் செய்த தசரதன வசிட்டன் பாதுகாத்தருளியமை போன்ற உயிர்ப்பான விடயங்களை உயிர்ப்போடு கூறி,
விசுவாமித்திர முனிவரோடு இராம இலக்குமணர்களை "ஏழும் ஏற ஆறும் ஏற”* வைத்து,
வழியெங்கும் விசுவாமித்திரனைச் சிறு கதையாசிரியனுக்கி,
முனிவர்களைக் கோதென் றுண்டிலள் ஆகியவளும், "மருதத்தைப் பாலை செய்த” வளும், ‘மைவரை நெருப்பெரிய வந்ததென’ வந்தவளுமாகிய தாடகை சம்ஹாரத்தைக் காட்டி,
விசுவாமித்திரர் கூறிய கெளசிக நதிக் கதை, மாபலி-வாமனர் கதைகளைக் கேட்டு வழி நடந்த இராம லக்குமணர் முனிவரின் பாகங் காக்கச் செய்து,
‘மிதிலையர் கோமான் புரியும் வேள்வி யும் காண்டும் ' என மு னி வன  ைழ க்க நடந்து, கங்கை கண்டு, பகீரதன் கதை கேட்டு, மிதிலைப்புறம் வந்திறுத்து, "கால் வண்ணம் இங்குக் காண ** வைத்துக் 'கம்ப ராமாயணக் காட்சிகள் முப்பத்தெட்டுக் கட்டுரைகளோடு இங்கு பூர்த்தியாகிறது.
இவ்வளவும் கம்பராமாயணம் பால காண்டத்தில் ஆற்றுப்படலம் முதல் அகலிகைப்படலம் ஈ ரு கவுள் ள ஒன்பது படலங்களில் உயிர்ப்பான செய்யுள்களை யொட்டி எழுதப்பட்ட காட்சிகள். பால காண்டத்திலேயே இன்னும் அரைவாசிக்கு மேல் உண்டு. அதனல், இத் தொகுப்பு "கம்பராமாயணக் காட்சிகள் " என்ற தொடரில் முதற்பாகம் ஆகலாம். மற்றைப் பாகங்களும் பாகம் படுமா?

Page 193
1 سس۔
* கம்பராமாயணக் காட்சிகள் " என்ற நூலை யொட்டி, கம்பரை ' அபர பிரமன்' எனக் காட்டிய பண்டிதமணி அவர்கள் "அபர கம்பரே?’ எனல் சாலத் தகும்.
9. அன்பினேந்திணை:
பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை
சாபச் செயலாளர் திரு. அ. பஞ்சாட் சரம் அவர்களின் வெளியீட்டு  ைர, பண்டிதமணி அவர்களின் முன்னுரை, முன் னுரைக்கு முன்னுரை எ ன் ப வற்  ைற த் தொடர்ந்து, வானுெலியில் ஐந்திணை பற்றிப் பேசிய பேச்சுக்களையும், அவற் றையுந் தொடர்ந்து அநுபந்தங்களையும் தாங்கிய நூல்.
அன்பினைந்திணைத் திறவுகோல் என முன்னுரைக்கு முன்னுரை அமைந்துள்ளது.
மெய்ப்பொருளில் உண்டாகும் அன் பைக் “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்" அமைந்த கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என வகுத்துள்ளார்கள். (தொல்-பொருள்.)
நடுவணுள்ள ஐந்திணை இறையனரகப் பொருளில் ** அன்பினைந்திணை " எனட் படுவது. குறிஞ்சி, பாலை, முல்லை, நெய் தல், மருதம் என்பன அவ்வைந்திணைகள். திணை-ஒழுக்கம்.
இத் திணைகளும், இவற்றுக்கு ஆதார மான புறத்திணைகளும் ஐந்து கட்டுரைகளில் வைத்து ஆராயப்படுகின்றன.
அன்பின் தொடக்கம் கைக்கிளை. அன் பின் முடிவு பெருந்திணை. நடுவணுள்ள ஐந்திணைகளும் களவு-உடன்போக்கு-கற்ப -இரங்குதல்-ஊடல் ஆய ஒழுக்கங்களாம் மருதமாகிய ஊடலுக்கு மேற்பட்ட நில்ை * அழுக்காறும், ஆண்மை " யும் அற்ற வழிக் கைகூடும் " மறுவில் கற்பு".
இவை கட்டுரை தோறும் விளக்கப்படு கின்றன.
அதுபந்தத்தில், ** ஒருமையிற் சிறுமை கைக்கிளை இரு மையின் ஒருமை அன்பினைந்திணை

ஒருமையின் பெருமை பெருந்திணை.
இவை முறையே துவைதம், அத்
வைதம், ஏகம் எனப்படும் " என்ற பண்டிதமணி அவர்களின் சூத்திரம் விரிவுரை செய்யப்படுகிறது.
அநுபந்தத்துக்கு அநுபந்தத்தில், அகத் திணை அகங்கையாயின், புறத்திணை புறங் கையாகும் என்பதும், அப் புறத்திணைகள் பாடாண்டிணை முதலாகக் காஞ்சித்திணை ஈருகவுள்ளவை என்பதும் பொருள்செய்யப் பட்டுள்ளன.
10. சிந்தனைக் களஞ்சியம் :
(பின்னுல் காண்க. பக்கம் 1441
1W. 11. சைவநற் சிந்தனைகள் :
(i) குரும்பசிட்டி சன்மார்க்க சபை
வெளியீடு-1959.
(i) கொக்குவில் திரு. திருமதி சோம சுந்தரம் தம்பதியினர் நினைவு வெளியீடு-1980, ti) திருநெல்வேலி செல்வி பாலசிங் கம் நளினியின் நினைவாக வெளி வந்த வெளியீடு-1981.
சமயம், அறிவு, அன்பு, அருள், பொருள், . முதலிய பதின்மூன்று * கடுகு"க் கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகளிற் பெரும்பாலானவை வானுெலி நற்சிந்தனைப் பிரிவில் ஒலிபரப்பப்பட்டவை. இறுதியிலுள்ள ' கந்தபுராண சாரம் ?? தவிர்ந்த மற்றையவை இரண்டேயிரண்டு பக்கங்களில் விளங்கும் கீர்த்தி பெரிதான மூர்த்திகள்.
* பங்கயத்தயனுமாலறியா நீதி’யே கடவு ளின் வடிவம். அது சுத்த அறிவினுற் காணத்தக்கது. நீதியிலே பரிசுத்த விருப்ப முடைமை சமயம் . நீதிக்கு மற்ருெரு பெயர் சிவம். நீதியோடு தொடர்புடைய வன் சிவத்தோடு தொடர்புடையான். அவன் சைவன்.
இவை சமயம் பற்றிப் பண்டிதமணி அவர்கள் கூறுவதன் சாரம்,

Page 194
l3 -سس
அறிவு, அன்பு முதலிய மற்றைக் கட்டு ரைகள் திருக்குறள், திருவருட்பயன், சித்தி யார் என்பவற்றைத் துருவி ஆராய்ந்து கண்ட உண்மையின் சாரம். இச் சாரத்தில் மீத்தொளிர்வது நீதி.
மாணவரும், மற்றையோரும் மனனஞ் செய்து போற்றத்தக்க கட்டுரைகள்.
12. கந்தபுராண கலாசாரம் :
முதற்பதிப்பு-கார்த்திகை 1959.
யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரி யில் ஆண்டுதோறும் நடைபெற்றுவந்த * லகரிய ஜயந்தி ? விழா ஒன்றில் ‘* யாழ்ப் பான கலாசார மூலம் கந்தபுராணம் ?? என்னுந் தலைப்பில் பண்டிதமணி அவர்கள் ஒரு விரிவுரை நிகழ்த்தினர்கள். அவ் விரி வுரையின் விரிவே இந் நூல்.
தமிழரசார் காலத்துச் சைவாலயந் தோறும் ஆரம்பித்த கந்தபுராண ஊற்று யாழ்ப்பாண மக்களின் நரம்புத் துய்கள் தோறும் ஊறிக் கிடந்தது. பறங்கியர் வந்து பாவ புண்ணியங்களைத் தலைகீழ் செய்தார்கள். கந்தபுராணந் தந்த கலாசார ஊற்று அடைபட்டுக் குமுறிக்கொண்டிருந் தது. அடிவேருக்கு வெந்நீர் ஊற்றும் ஆங்கிலர் வருகையோடு அவ்வூற்றுக் குமுறிப் பிரவகித்தது. அதனுல், ஒரு நாவலர்அவர்களது சமய, மொழித் தொண்டுகள், ஒரு பொன்னம்பலபிள்ளை-அன்னவரது மேதாவிசாலம், ஒரு சி. வை. தா.--அவர் அகழ்ந்தெடுத்த தொல்காப்பியம் முதலியன, ஒரு விசுவநாதபிள்ளை-அவரது கணித விஞ் ஞானத் தமிழாக்கங்கள், ஒரு கதிரைவேற் பிள்ளை - தமிழகராதிகளுக்கே கொடுமுடி யாயும் வழிகாட்டியாயுமமைந்த அவரது அகராதித் தொகுதி, ஒரு ஆ. முத்துத்தம் பிப்பிள்ளை-தமிழ்க் கலைக்களஞ்சியத்துக்கு அவரிட்ட " அபிதான கோசம்’ என்னும் அத்திபாரம், ஒரு சபாபதிநாவலர்-அவரது ஒப்பற்ற * திராவிடப் பிரகாசிகை’-என்ற எல்லாம் பெறலரும் பேறுகளாயின.
எல்லாவற்றுக்கும் மேலாக, பிறந்த அகத்தில் ஒளிர்ந்து இருளகற்ருத கந்த

-س- 9
புராணம், புகுந்த அகமான யாழ்ப்பாணத்தில் ஒளிவிட்டு இருளகற்றிக் கற்ருேரையும் மற்ருேரையும் " சான்றவர் ஆய்ந்திடத் தக்க ஆம்பொருள் மூன்றுள ** விசாரணை யுள் விரவிய கலாசாரத்தை நிலையுறச் செய்து, அந்தப் பிறந்தகத்திற்கு யாழ்ப் பாணம் வழிகாட்டியாகும் தகைமையையுத் தந்தது.
பண்டிதமணி அவர்களின் இந் நூல் தமிழ், சமய, சமூகவியலாளர் சகலருக்கும் ஒரு வழிகாட்டி.
13, கந்தபுராண போதனை :
அகில இலங்கைச் சைவ இளைஞர் மத்திய மகாசபையினர் வெளியீடு-1960.
யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் பண்டிதமணி அவர்கள் ஆற்றிய சொற் பொழிவுத் தொடர் ஒன்றின் தொகுப்பே இந் நூல்.
கந்தபுராணம் பற்றி நாவலர் பெருமான் கூறியவற்றைக் குறிப்பிடும் முன்னுரையோடு நூல் தொடங்குகின்றது.
காசிபர் உபதேசத்திலிருந்து, சுக்கிரன் உபதேசத்தினூடாகச் சமயம் பற்றிய கருத் துக்கள், அக-புறச் சமயங்கள் என்பவற் றைக் கந்தபுராணத் தெளிபளிங்கிளுற் காட்டி,
அறம்-பொருள்-இன்பம், களவுகற்பு எனக் கச்சியப்பர் தமிழைப் பரிபூர ணஞ் செய்த பேரழகைப் பண்டிதமணி அவர்கள் தரிசனஞ் செய்ய வைக்கிருர்கள்.
கம்பனைத் தலைமேற் கொண்டு போற் றும் பண்டிதமணி அவர்களே, 'கச்சியப் பர் முன்னிலையிற் கம்பர் மலடு ?? என இலக்கிய நண்பர்களுக்குப் பிரகடன ம் பண்ணுகிற தொணி, கந்தபுராணத்தை எத்துணை உயர்வில் பண்டிதமணி அவர்க ளின் பாரம்பரியம் வைத்துப் போற்றுகிறது என்பதை உணர வைக்கிறது.
சிருட்டியாரம்ப முதல் சங்காரம் ஈருக, சிவம்-சக்தி தத்துவங்களைக் காட்டி,

Page 195
-
** நவையறு காட்சி நல்கி", so-GT60)LI) இன்பத்தை அநுக்கிரகித்து, வீடுபேற்றைத் தலைக்கூட்டும் கந்தபுராணம் ஒரு சமுத்திரம்.
பண்டிதமணி அவர்களின் கந்தபுராண போதனை அச் சமுத்திரத்தைக் கடைந் தெடுத்த நவநீதம்.
14. சிவராத்திரியிற் சிந்திக்கத் தக்கவை:
திருநெல்வேலி இந்துசமய விருத்திச் சங்க வெளியீடு-1963.
கோளறுபதிகத்தையும், திருவங்கமாலை யையும் முதற்கண் தாங்கி, பண்டிதமணி அவர்களின் சிவராத்திரியிற் சிந்திக்கத்தக்க மூன்று சிந்தனைகளைக் கொண்ட சுவடி.
* உலகத்துக்குக் கருத்தா யாவர்? "- ** சிவபெருமான்' என்ற நாவலர் அவர் களின் வின--விடையில் தொடங்கி, சிவராத் திரியின் வரலாறு கூறுவது முதற் சிந்தன.
திருவருளின் கருத்துன்னியே கருமங்கள் ஆற்றப்படல் தக்கது என்பது இரண்டாவது சிந்தனை,
** இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம் ?? என்ற நாவலர் அவர்களின் வேருெரு வசனத்தை விரிவுரை செய்வது மூன்ருவது சிந்தன.
சிட்டாட்டத்திலும், தொலைக்காட்சி முன்னுலும் இரவைக் கழிக்கிற சிவராத்திரி விரதகாரர் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்.
15. சமயக் கட்டுரைகள் :
திருநெல்வேலி, சைவாசிரிய கலாசாலைப் பழைய மாணவர்கள் வெளியீடு-1961,
சமயம் பற்றிய இருபத்தேழு கட்டுரை கள். தினகரனில் தொடர்ந்து வெளி வந்தவை.
கட்டுரைகளிற் காணும் சிந்தனைக்குரிய சிறப்பம்சங்களைத் தொட்டுக் காட்டுகிறது பண்டிதமணி அவர்களின் முகவுரை. இச் சிறப்பம்சங்களின் விரிவுகளே கட்டுரைகள் எனிற் பொருந்தும்.

40 -
* உலகத்துக்குக் கருத்தா யாவர்?" என்று தம்முள் மோதி, அடிமுடி தேடிக் காணுது போனவர்கள் படைத்தற் கடவுள் பிரமனும், காத்தற் கடவுள் விஷ்ணுவும்.
** சமயம் என்பது எது ?" என்று தேடியவர்கள், தேடப்போனவர்கள் பலர்; மிகப் பலர். அப் பலருள் பண்டிதமணி அவர் களையும் ஒருவராக வைத்தெண்ணவே வேண்டும்.
தேடியவர்களுள் ஒரு சாரார் சமயத் தின் நிழலைக் கண்டார்கள். வேறு ஒரு சாரார் ஒரிரு அங்கங்களைக் கண்டார்கள். இன்னும் ஒரு சாரார் சமயத்தின் பிறழ்வு களைக் கண்டார்கள். கண்டவற்றை அவர்கள் விடவில்லை. இறுகப் பற்றிக் கொண் டார்கள். அதனுல், ** சமய கோடிகள் ".
விசாரம் தூண்ட, அதியற்புத விவேகம் உறுதுணை செய்ய, பண்டிதமணி அவர்கள் ** சமயம் என்பது எது?" என்பதன் அடி முடி தேடி ,
சிவஞான சித்தியார், திருவாசகம், திருக்கோவையார், திருவருட்பயன், சம்பந் தர்-அப்பர் திருவருட்பாடல்கள், திருக் குறள், கந்தபுராணம், சிவப்பிரகாசம், சிவஞானபோதம், திருமந்திரம், சங்கற்ப நிராகரணம், பெரிய புராணம், திருமுரு காற்றுப்படை, பாரதம் முதலாம் நூற் பொருள்களைக் குடைந்தும், வேதாகம புரா ணங்களைப் பிரமாணங்களாக மேவியும்,
நாவலர் பாரம்பரியத்துக்குரிய இயல்பு களாய திருட்டாந்தந் தரல், நிறுவுதல், நிறுத்தல், தெளிவு ஆனவை பொருந்த,
அகமும் புறமுமான சமயங்களின் கூறு களைக் கூறிட்டு அணுவணுவாய் ஆராய்ந்து, ** அகமும் புறமுமான சமய மெல்லாம் அங்கமாயும் இல்லையாயுந் தன்பால் வந்து அடங்க, தான் அவற்றில் அடங்காது, அவற்றை யெல்லாம் தன்பாலடக்கி அவற் றின் உண்மை இயல்புகள் இருந்தபடி யைக் காட்டிக்கொண்டு, நீதி சிறிதும் கோடாது, ஒன்றே ஒன்றய நிலைத்து நிற் கின்ற அந்தச் சமயமே, உண்மைச் சமயம்' எனத் தாம் கண்டதை எமக்குத் தருகி ரூர்கள்.

Page 196
- 14
அகச் சமயம் ஆறும் தனித்தும் சேர்ந் தும் அறுபத்துமூன்று வகையில் அநுட்டிக் கப்படலாம் என்பதற்குப் பண்டிதமணி அவர்கள் கணித சூத்திரம் ஒன்றைத் தரு கிருர்கள். அச் சூத்திரம் 26 - 1 = 63 ஆகும்
இச் சூத்திரத்துக்கான கணித விளக்கத்தை அநுபந்தத்திற் காண்க.)
இந் நூல், சைவம் முதல் வைரவம் ஈருன அகச் சமயங்கள் ஆறினைக் கொள்ளவும், புறச் சமயங்களைப் புறக்கணிக்கவும் இந்த நூற்ருண்டிற் பிறந்த பிரமாண நூல் எனல் தகும்.
16. கந்தபுராணம்-தகஷகாண்டம் - உரை :- பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்க வெளியீடு-1967.
கச்சியப்ப சிவாசாரியர் அருளிய கந்த புராணத்தில் ஆருவது காண்டம் தக்ஷகாண் டம். இதில் உபதேசப் படலம் முதல் வள்ளி யம்மை திருமணப்படலம் ஈருக இருபத்து நான்கு படலங்கள், இரண்டாயிரத்து அறு பத்தேழு திருவிருத்தங்கள்.
தாவலர் மருகர் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை அவர்களின் மாணுக்க பரம்பரையினர் கையெழுத்திற் பேணிவந்த உரைக் குறிப்புக்களும், நாவலர் அவர்கள் தொடக்கஞ் செய்துவைத்த கந்தபுராண வசனமும், பாநுகவி என்பாரின் கந்தபுரா ணப் பொழிப்புரையும், காந்த மஹாபுரா ணத் தமிழுரையும் தக்ஷகாண்டத்துக்கு உரை காண உபகாரமான உறுதுணைகளாம் எனப் பண்டிதமணி அவர்கள் நன்றியுரையிற் குறிப் பிடுகின்ருர்கள்.
நீண்டதொரு முகவுரை, கந்தபுராணம், தக்ஷகாண்டம் என்பவற்றின் சாரத்தைத் தொட்டுக் காட்டுகிறது.
திருவிருத்தங்களுக்கான பதவுரையும், வேண்டியாங்கு விரிவுரையும் இலக்கணக் குறிப்புக்களும் தரப்பட்டுள்ளன.
கந்தபுராணத்தின் பெருமையையும், பண்டிதமணி அவர்கள் கண்ட தக்ஷகாண்ட உரையின் சிறப்பினையும் எடுத்துக்காட்டுந் தகுதி எமக்குண்டா என்ற விஞ எழுகிறது.

-
ஆயினும், ஒரு சிறு தரிசனம்.
தமிழைப்பரிபூரணஞ் செய்த கச்சியப்பர் செய்த கந்தபுராணம் தகடிகாண்டத்தைப் பண்டிதமணி அவர்களின் உரை அணி செய்யுமாறு, சில சமயங்களிற் புளகங் கொள்ள வைப்பதைக் காணக்கிடைத்தது.
வள்ளி திருமணப் படலத்தின் செய்யுள் களுக்குப் பண்டிதமணி அவர்கள் செய்த விரிவுரையின் சில பகுதிகளைப் பின்வருமாறு கோத்து நோக்க நேர்ந்தது :
' ஆன்ம இயல்புகளாய அறிவு, இச்சை செயல்களில் அன்பின் மூலமாகிய இச்சையை ஆன்மாக்கள்பால் விருத்தி செய்யும் முகமாக..”*
(உரை, செய். 73)
ஆறுமுகன் வள்ளிநாயகியாரைத் தேடிச் சென்று, ஆடல்கள் நிகழ வைத்து,
**வள்ளிநாயகியார் மீது மையல் செய்வது ஆன்மாக்களின் இச்சையை விருத்தி
செய்வ **தாக
(உரை, செப். 88)
* சார்புணர்ந்து சார்பு கெட ஒதி ?? (உரை, செய். 88)
ஆட்கொள்ளாமலிருத்த லா காமையா லாட்கொள்ளத் திருவுளங்கொண் டண்மிய காலை, நம்பியரசன், (ஐம்புல) வேடர் புடை (35եք ** ஒய்?" என வந்தான். வர, "ஆள்தல் பார்த்திருப்பவன், வேங்கையாய் ஆடல் செய்தான்.
வேங்கையைத் தறித்து வீழ்த்த வேடர்கள் ஆரவாரஞ் செய்கிறர்கள்.
வள்ளி நாயகியார் அஞ்சுகிருர்.
* ஐம்புல வேடுவர்கள் வெந்திறல் கொண்டெழும் போதுங் கடவுட் பேணும் பரிபக்குவ நிலை பூர்வ தவ
விசேடமாகக் கைவந்து,
உரை, செய், 93)
** ஐம்புல வேட்டுவச் சேட்டை '
(உரை, செய், 100)

Page 197
அடங்கப் பெற்ற வள்ளிநாயகியாகிய,
‘' . . .மொய் குழலாண் முன்னுகத்
தந்திக்கடவுட் டணிவாரணப் பொருப்பு வந்துற்ற" (GSFuiu. 11 ) 5வ விசேடத்தால்,
* உய்ய உள்ளத்துள் ஓங்காரமாகும்
மெய் உதயமாயிற்று".
(gd_Googr, Gogaid. I lili) ஒங்காரம் உதயமாகவே, முழுதுல கருளும் முதல்வர் தாமே பொய் வேடந் தாங்கி நின்றமை தெளிவாயிற்று".
(உரை, செய். 112) இந்நிலையில்,
இருமையின் ஒருமையாகிய அத்வைத நிலையுறுதல் ஆய "கலத்தல்" நிகழுகிறது. சயந்தனுக்குக் கனவிலே கிடைத்த திருக் கோலத் தரிசனம், வள்ளிநாயகியாருக்கு நனவிலே,
'முந்நான்கு தோளு
முகங்களோர் மூவிரண்டும்"
(செய், 116) ஆகக் கிடைக்கிறது.
தரிசனத்தால் பரவசமும், ஒன்ருே டொன்று மாறுபடும் மெய்ப்பாடுகளும் விளைவுகளாயின.
** வாசனுமல பரிசோதனம் நடத்தும் பொருட்டுப் போலும் ",
வள்ளியைத் திணைப்புனத்துக்கு முதல்வன் அனுப்புகிருன்.
அயற்புனம் காக்கும் பாங்கி வருகிருள். **முன்னுற வுணர்தல் குறையுற வுணர்தல் இருவரும் உள்வழி அவன் வரவுணர்த லென்று அம்மூன்றென்ப தோழிக் குணர்ச்சி" என்ற இறையனுர் களவியல் சூத்திரத்துக் கும் (சூத், 7),
* முன்னுற வுணர்தல் குறையுறவுணர்தல்
இருவரு முள்வழி அவன் வரவுணர்தலென்
ருெருமூன்று வகைத்தேபாங்கியுடம் பாடு” என வழிமொழிந்த நம்பியகப் பொருளுக் கும் (நம்பி. 137) திருட்டாந்தமான
urt täis,

142 -
"களவியன் மணத்தால் தலைவிபால் வேறுபாடு கண்டாள் ”*
(உரை, செய், 122)
‘நாற்றமுந்தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினைமறைப்பினும்செலவிலும்பயில்விலும் புணர்ச்சி எதிர்ப்பாடுள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி யேழினும் உணர்ந்த பின்றை '
(தொல், பொருள் 114)
** நாற்றமுந் தோற்றமு நவிலொ முக்கமு
மாற்றமுஞ் செய்கையு மனமு மற்றதும் வேற்றுமை யாதலும் விளைவு நோக்கியே தேற்றமொ டிகுளையங் கினைய செப்புவாள்' (கந்த வள்ளி, திருமணப். 122) ** இப்புன லழிதர வெங்ங் னேகினே?"
இவ்வாறு பண்டிதமணியுரை ‘தமிழ்' காட்டிச் செல்கிறது.
உரையாசிரியர் கூறுவதுபோலக் கச்சி யப்பர் தமிழைப் பரிபூரணஞ் செய்தாரா?
உரைகண்டார் தம் உரைமூலம் தமிழைப் பரிபூரணஞ் செய்தாரா ?
உரையிலும், விரிவுரையிலும் பண்டிதமணி அவர்கள் தமிழின் உட்பொருளாம் அன்பி னைந்திணை விரவத்தந்து, தமிழைப் பூரணஞ் செய்வது, "அன்பினைந்திணைக் களவியல் என்னுதலிற்ருேவெனின், தமிழ் நுதலிற்று' என்ற அன்னவர்கொண்ட தாரக மந்தி ரத்தை உச்சாடனஞ் செய்து நிற்கிறது.
சகல உபசாரங்களோடும் தக்ஷகாண்டம் பண்டிதமணியுரை குறிஞ்சிக்குமரன் கோயில் கொண்ட பேராதனையில் யானைமீதேற்றி நகர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டமையே இதன் பெருமையையும் தகைமையையும் சதா சொல்லிக்கொண்டிருக்கும். வேறெந் நூல், வேறெவ்வுரை இத்துணைக் கெளரவம் பெற்றது?
லண்டன் சர்வகலாசாலையார் கலைமாணிப் பரீட்சைக்குச் சிலகாலம் கந்தபுராணம் வில்வலன் வாதாபிப் படலத்தைத் தமிழ்ப் பாட நூலாக விதித்திருந்தனர் என ஒரு நினைவு. தக்ஷகாண்டத்தில் சில படலங்கள் இலங்கைச் சர்வகலாசாலைகளில் ஒரு பாட நூலாக விதிக்கப்படலாம்.
இந் நூல் இந்த நூற்ருண்டில் "தமிழ்" பெற்ற பெருநிதியாகும்.

Page 198
14 -سسس.
17. சிந்தனைச் செல்வம்:
குரும்பசிட்டி திருமதி சபாரத்தினம் செல்லம்மா அவர்களின் நினைவாக 1972 சித்திரையில் வெளியிடப்பட்டது.
நாவலர் அவர்களின் இரு கட்டுரை களைத் தொகுத்தும், தமது கட்டுரைகள் தான்கைச் சேர்த்தும் பண்டிதமணி அவர் கள் உதவ, இரசிகமணி கனக, செந்தி நாதன் அவர்களின் முகவுரையோடு வெளி யிடப்பட்டது.
திருக்கைலாசச் சிறப்பு, உண்மை நாயன் மார் மகிமை என்னும் இரு கட்டுரைகளும் நாவலர் அவர்கள் எழுதியவை. இரண்டா வது கட்டுரையில் நாவலர் அவர்கள், "சாதி பினுஞ் சமயமே அதிகம்" என்றது சிந்த னேக்குரியது.
* கீதை அமு த சிந்தனை" என்ற பண்டிதமணி அவர்களின் கட்டுரை சிந்த னைக்கு விருந்து. சிந்தனையைத் தூண்டுதற்கு உபகாரமானது. " என் செயலாவது யாதொன்றுமில்லை", "சந்ததமும் எனது செயல் நினது செயல்" என்ற முடிபுகளுக்கு வழிநடத்துவது,
* தேவி சந்நிதியில்", சந்நிதியின் தூய்மையை அலையும் தம் மன அலைகளால் பாதித்து மாசுபடுத்திய ராணி ராஜமணி தேவியை இராமகிருஷ்ண பரமஹம்ஸர் அடித்த கதை கூறப்படுகிறது.
* சமயக் கல்வி’ என்ற கட்டுரையில், பண்டிதமணி அவர்கள், ‘இன்றைய கல்வி வெறும் உடலோம்புஞ் சடக் கல்வி. மனக் கவலை மாற்ற வழி சமயக் கல்வியை வளர்த்த லேயாம்" என்று கூறி, "கல்வியுலகு சமயி யான நல்லாசிரியனைப் பெற்றெடுக்குமா?" எனக் கவலையுறுகின்ருர்,
* சமயம்" என்ற கட்டுரையில், 'நீதியை வஞ்சகமின்றி விசாரித்து விரும்புவது அகம். அதற்குச் சமயம் என்று பெயர் ', ‘நீதி தான் கடவுள் வடிவம்" என்பன காட்டப் படுகின்றன,

3
18. கோயில்
கொழும்பு, அன்டர்சன் மாடிநிரைச் சைவ கலாசார மன்ற வெளியீடு-1979
இப் பூமியிலே முதன்முதல் உண்டான கோயில் சிதம்பரம் ஆகலாம். அதஞல் சிதம்பரத்துக்குக் கோயில்" என்றும் பெயர். இக் கோயிலான சிதம்பரதல மகிமையையும், வியாக்கிரபாதர், பதஞ்சலிமுனிவர் ஆகியோ ருக்குச் சிதம்பரத்தில் தவ வாழ்வு சித்தித்த வரலாறுகளையும், சிங்கவன்மர் இரணிய வன்மர் ஆனதும் இரணியவன்மர் சோழர் ஆனதுமான வரலாறுகளையும், நடராஜ நிருத்தத்தையும் எடுத்துக் கூறும் நூல். இவ் வரலாறுகள், கோயிலில் வைத்துக் கோயி லோடுகொண்ட தொடர்புகள் குறித்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
19. அத்வைத சிந்தன :
பண்டிதமணி நூல் வெளியீட்டுச்சபை
*" பெரு மதிப்புக்குரியவர்களான சமய தத்துவ மேதைகள் இருவரின் தூண்டுதலின் விளைவாய், மனசில் அத்வைத சிந்தனை முளைகொண்டு', அம் "முளையைச் சற்றே வளரச்செய்தது வானெலி?--பண்டிதமணி.
இரண்டற்ற நிலை அத்வைதம். உயிர் உடம்போடு உடம்பேயாய் அத்துவிதப்பட் டிருக்கிறது: இந் நிலை அநித்தியமானது.
இறைவன் உயிர்க்குயிராய் உயிரேயாய் அத்துவிதப்பட்டிருக்கிருன். இது நித்திய
மானது. இதனல், இறைவன் ‘அத்துவித வஸ்து".
*" ஒன்று மிகினும் ஒளி உள்ளம் கவ ரும்". (பக். 2).
ஆணவ இருளில் குருடாய்க் கிடக்கும் உயிரைச் சித்தாகிய இறையொளி தன்பால் ஈர்க்கும்,இரங்காமலிருக்க மாட்டாமையால்.
இருளிலிருந்து ஈர்க்கப்பட்டு, தன்னேடு அத்துவிதப்பட்டிருக்கும் இறையோடு அத்து விதப்படுதலே உயிர்க்கு உய்தியாகும்.

Page 199
உய்திபெற வாய்த்தது ‘மாயா யந்திர தது".
தநுவைத் தரும் மாயை, விடிவாமள வும் விளக்கு. அத்துவித வஸ்துவை உயிர் அணுகுமாறு செய்யும் விளக்கு.
இவ்வாறு விளக்கம் தொடர்ந்து செல் கிறது.
சரீர இயல்புகள் எவை? தத்துவங்கள் எத்தனை? அவை எத்தனை வகை? "அது நீ யாதலும், நீ அதுவாதலும்’ என்பன என்ன வினைமுதல் யாவர்? விதைமுதல் எது: கன்மம், இச்சை, பிராரத்தம், ஆகாமியம், நல்வினை என்பவற்றின் விளக்கம் என்ன வாழ்க்கை வழி, வாழ்க்கையின் அத்திபாரம் எவை? தூய வாழ்க்கை எவ்வாறு வளர்ச்சி யுறும்?
மேலே குறித்த விடயங்களின் விளக் கங்களோடு, இவ் விஞக்கள் யாவும் திருவருட் பயன், சித்தியார், திருமந்திரம், நாவலர் வாக்கு என்பன ஆதாரமாக, திருட்டாந்தங்களோடு விடையிறுக்கப் பட்டுள்ளன.
*தான் அவனுய் அத்துவிதஞ் சாருநாள் எந்நாளோ ?? என்ற சூத்திரத்தை நினைவு கூர்வோம் என அத்வைத சிந்தனைகளைப் பூர்த்தி செய்கிருர் பண்டிதமணி.
** இறுதியில் சைவ சித்தாந்தம் எங்கே நாம் எங்கே!" என்ற அநுபந்தம் பண்டித மணி அவர்களின் விசாரத்தின் விசாலத்தை யும், ஆராமையின் ஆழத்தையும் எடுத்துச் காட்டிநிற்பது.
'அத்வைத சிந்தனை" ஒரு வசன நூலே, ஆயினும், விடய ஒழுங்கும், விளக்க வைட் புக் கிரமமும், மேற்கோள் திருட்டாந்தங்கள் விளக்கும் பொருளோடு பொருந்தும் அற்புத இசைவும் இந் நூலே ' அத்வைத சிந்தனைச் சூத்திரம்’ என அழைக்கப்படுந் தகைமை யோடு பிரகாசிக்க வைக்கின்றன.
"முகத்திற் கண்கொண்டு காண்கின்ற எம்மனுேரை விடுத்து, "மனத்துக்கண்

144 -
மாசிலர் ஆய தகையோர் ‘அத்வைத சிந்த னை'க்குப் பாடியம் செய்யவேண்டும்.
* சிந்தனைக் களஞ்சியம்
பண்டிதமணி பாராட்டு விழாச் சபை வெளியீடு - 1978,
முன்னரே குறிப்பிட்டவாறு, மூன் ரும் நான்காம் தொகுதி ஒவ்வொன்றிலும் இடம் பெறும் விசேட தகைமை “சிந்தனைக் களஞ்சியம்" என்னும் நூலுக்குமட்டும் ஏன்?
பண்டிதமணி அவர்கள் சிந்தித்தவை, கண்டவை, சொன்னவை, எழுதியவை எல் லாமே 'தமிழ்". எம்மனுேர்க்கு அவை இலக் கியம், சமயம், தத்துவம், வரலாறு எனப் பன்முகங் காட்டுவன.
பண்டிதமணி அவர்களின் "அன்பினேந் திணை முற்றி விளைந்து தண்ணுெளி பரப் பும் முத்தாரமெனின், 'அத்வைத சிந்தனை? தேவருலகத்து விசுவகர்மா பட்டை தீட்டிய வைரமணிமாலை. தக்ஷகாண்டம் பண்டிதமணி யுரை தங்கப் பாளம். இவ்வாறே மற்றவை வைடூரிய மாலையாயும் கோமேதகக் கோவை யாயும் மிளிர்வன, 'சிந்தனைக் களஞ்சியம்" கைவினை கைவந்தோர் தெரிந்து தொடை செய்த நவரத்தினமாலையாய்க் கதிரொளி பரப்பி நிற்கிறது.
முப்பது சிந்தனைகள். முப்பது இரத்தி னங்கள்.
சிந்தனைகளின் சாரம் முகப்பில் திரட் டித் தரப்பட்டுள்ளது.
சிந்தனைகளின் ஊற்றயமைந்தது ஆத் மீகச் செல்வர், உப அதிபர் திரு. பொ. கைலாசபதி அவர்களின் சந்நிதியே என நன்றி கூர்ந்து, அகக்கண் வெளித்த அச் செல்வரையிட்டுப் பண்டிதமணி அவர்கள் செய்யும் சிந்தனையை இருபத்தெட்டாம் கட்டுரையில் தரிசிக்கிருேம்,
அறம் தகழியாக, பொருள் திரியாக, இன்பம் நெய்பாக, செம்மையாய சொற்கள் தீப்பிழம்பாக, குறட்பா தண்டாக ஏற்றி வைத்த "வள்ளுவர் வாழ்க்கை விளக்கு”* என்னும் சிந்தனையை முதலில் காணுகிருேம்.

Page 200
அவ் விளக்கின் ஒளியில் வைத்து வாழ் வாங்கு வாழ்தலும், மெய்ப்பொருள் காண் டலும், மனத்துக்கண் மாசிலனுதலும், கற் றதணுலாய பயன்பெறுதலும் ஆனவை விளக் கப்படுகின்றன.
அடுத்து வரும் சிந்தனைகளுட் சில தமிழ்-ஆரியமும் தமிழும்-சங்கத் தமிழ்சங்கத் தமிழுக்குப் பிறகு என்ற தலைப்புக் களின் கீழ் தமிழையும் பொருளையும் ஆராய்கின்றன.
இவ்வாறே அகத்திணை புறத்திணைகளும், காப்பியங்களும், இலக்கிய ஒப்பீடுகளும், சமயமும், திருமுறைகளும், தமிழையும் சமயத்தையும் தம் மூச்சாகக் கொண்ட நாவலர் பெருமான் ஆதியாம் பெருமக்க ளது வரலாறுகளும் எடுத்துச் சிந்திக்கப்படு கின்றன.
சிந்தனைகளின் உயிரான சாரம் நூல் முகப்பில் திரட்டித் தரப்பட்டுள்ளமை இந் நூலின் மற்ருெரு விசேடம். அச் சாரத்தை மீளக் கூறல் தக்கதன்று.
பண்டிதமணி அவர்களின் சிந்தனைகள், **வானின்று மண்ணின்றளந்த?? வள்ளுவஞர் குறள்போல உலகை மொழி, கலை, கலாசா ரம், சமயம், தத்துவம், வரலாறு என்ற தளங்களிலிருந்து அளந்து காட்டுவன.
பண்டிதமணி அவர்களின் தமிழ் வாழ் வையும், தமிழ் யக்ஞத்தையும் முழுமை யாகத் தரிசிக்க மிக உபகாரமா யமைந் திருப்பது "சிந்தனைக் களஞ்சியம்' என்ப தோடு அமைதலே பூரணமாகும்.
来 洛 ※
1800 ஆண்டுகளுக்கு முன்னர் உரோம நாட்டுச் சக்கரவர்த்தியாய் இருந்தவர் மார்க்க அரேலியர். அவர் ஆத்மஞானி; ஜனகர் போன்றவர்.
அவர்தம் சிந்தனைகளைச் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தவர். 'ஆத்ம சிந்தனே' என்பது நூலின் பெயர்.சிந்தனை 180 பிரிவுகொண்டது.
19

سی۔ 45
சிந்திக்கற்பாலவாயபொருள் எங்கிருந்து வரினும் அவற்றைச் சிந்திப்பவர்கள் பண்டித மணி அவர்கள்.
அவர்கள் ஆத்மசிந்தனைகளை ஆய்ந்து சிந்தித்தார்கள். மெய்ப்பொருள் கண் டார்கள். ஒவ்வொரு சிந்தனையும் மனக் கவலை மாற்றும் மருந்து எனக் குறிப்பிடும் பண்டிதமணி அவர்கள், அந்த 180 சிந்தனை களையும் கடைந்து,
*உலக நிகழ்ச்சிகள்-நடந்த, நடக்கின்ற நடக்கும் நிகழ்ச்சிகள் யாவும் நீதி, தெய்வநீதி" என்று முதலாம் படியாயும் ,
"நீதியாய நிகழ்ச்சிகள் அனைத்தும் உன் நன்மையின் பொருட்டே. பிராரத்தம் தெய்வ நியதி?* என்று இரண்டாம் படியாயும்,
*பிராரத்தம் அநுபவம் பொறுக்க முடியாதிருந்தால். நீதி செய்த தெய்வத்தை வேண்டித் தவம் கிடக்க, a 4 w 8 சாந்தி உண்டாம்" என்று மூன்ரும் படியாயும், முக்கூட்டு, மாத்திரையாகத் தருகிருர் .
இது பண்டிதமணி அவர்கள் இரு பக்கங் களைத் தாண்டாது எழுதிய ஒரு சிறு கட்டுரையிலிருந்து பெறப்பட்டது. கட்டுரை "சைவ நற்சிந்தனை? இரண்டாம் மூன்ரும் பதிப்புகளுக்கு அநுபந்தம்.
மூன்று படிகளில் முக்கூட்டு மாத்திரை யாய்த் தரப்பட்ட பொருள், 180 சிந்தனை களின் சாரத்தின் சாரம் என்பது கருதத் தக்கது.
இது இவ்வாருயின், ஏற்கனவே வெளி வந்த இருபத்திரண்டு நூல்களும், ஏராள மான கட்டுரை-கட்டுரைத் தொடர்களும், அடுத்து வெளிவர விருக்கும் * செந்தமிழ்க் களஞ்சியம் " என்ற நூலும், வேறு பலவும் எத்தனை எத்தனை பிரமான நூல்களை ஆய்ந் தும், சிந்தித்தும், வாழ்ந்தும் கண்ட சாரங் களின் சாரம் என்பதைக் கணக்கிட
(plg. til Dnt ?

Page 201
- 1
சமய தத்துவ விளக்கங்கள் சிக்கல்களை எதிர்நோக்குபவை, சிக்கல்கள் தலைகாட்டி முடிச்சுக்கள் விழும்போது பண்டிதமணி அவர்களின் அறிவும் உற்சாகமும் நுனிப் பாதங்களில் எழுந்து நிற்கும்,
சொற்களும் வசனங்களும் அளவோடு வெளிவரும். சொற்கள் வசனங்களில் பொருத்தமான இடங்களிற் சென்றமரும். முடிச்சுக்கள் தாமாகவே அவிழும். சிக்கல்கள் சுவடின்றி அகலும்.விளக்கத்தில் பண்டிதமணி அவர்களின் முத்திரை தனித்துவங் காட்டி மிளிரும்,
義。
dظ9Hے சமயக் கட்டுரைகள் என்ற நூலில், எட் டாங் கட்டுரை " மனிதர் மூவகையர் " என்ற தலைப்புக் கொண்டது. அக் கட்டுரை பில், பக்கம் 62இல், பண்டிதமணி அவர் கள் பின்வருமாறு குறிப்பிடுகிருர்கள் :
** மனிதர்களுக்குரிய குறைகளை ஆருக வகுக்கலாம் என்பது பெரியோர் கருத்து.
* ஒவ்வோர் குறையைத் தீர்ப்பது ஒவ் வோர் சமயம், ஆறுவகைக் குறைகளையுந் தீர்ப்பவை அறுவகைச் சமயம்.
'ஒரு மனிதன் கழிந்த பிறப்புக்களில் ஐந்துவகைக் குறையுந் தீர்ந்து, ஒரு குறை மாத்திரம் இருப்பின், அவன் ஒரு குறை தீர ஒரு சமயத்தை அநுட்டிக்கற் பாலன். மற் ருெரு மனிதனுக்கு இரு குறை இருந்தால் இரு சமயத்தை அநுட்டிக்க வேண்டியவன் ஆகின்றன். இங்ங்ணமே மூன்று சமயத்தை -நான்கு சமயத்தை- ஐந்து சமயத்தைஆறு சமயத்தையும் அநுட்டிக்க வேண்டி வர லாம். ஆறு குறையுந் தீரவேண்டியிருந்தால் ஆறு சமயமும் அநுட்டிக்க வேண்டியனவே.
** குறையுள்ளவர்களை ஆறு குறையும் உள்ளவர்; ஐந்து குறை உள்ளவர்; நான்குமூன்று-இரண்டு-ஒன்று என்ற எண்ணிக் கையிற் குறையுள்ளவர் என்று வகுத்தால்,

46 -
இவ்வாரு?ன பண்டிதமணியைப்போல் இனி நமக்காளில்லை. பண்டிதமணி அவர்களின் தமிழ் யக்ஞத் திற் பிறந்த நூல்களையும், சிந்தனைகளையும் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பினை மகத்தான பேருகக் கருதுகிறேன்.
எனது தரிசனத்தில் ஏதுங் குறைகள் இருப்பின், அவை என்னுடையவை; மன்னித்
திடுக.
இத்தரிசனத்துக்கு வாய்ப்பளித்தோர், உபகரித்தோர் எல்லோருக்கும் எனது நன்றி யறிதல் உரித்தாகும்.
S: 岑
பந்தம்
*" குறையுள்ளவர்கள் அறுபத்துமூன்று வகையினர்கள் ஆவார்கள், 28-1= 63 என்ற கணித வாய்பாடு கொண்டு இது அறியத் தக்கது" .
விளக்கம் :
ஆறு குறைகளும் இவை இவை என் ணுது, அவற்றை இலக்கங்களாற் குறித் திடுவோம்:
குறை இல, 1, இல, 2, இல. 3, இல. 4, இல, 5, இல, 6. சுருக்கம் நோக்கி இவற்றை 1, 2, 3, 4, 5, 6 என்போம்.
எல்லாக் குறைகளினதும் கூட்டம், கணித பரிபாஷையில் குறைகளின் அகிலத் தொடை எனப்படும். ஒவ்வொரு குறையும் இத் தொடையின் ஒரு மூலகம் ஆகும்.
(தொடை - கூட்டம்; மூலகம்-அங்கம்
அகிலத்தொடை (1, 2, 3, 4, 5, 61*என
எழுதப்படும்.
குறை எதுவும் இல்லாதோர் ஒரு வகையினர். அவர்கள் இங்கு வகைப் படுத்தப்படவில்லை. (1)
து ஒவ்வொரு குறையுடையார் குறை\
பின்வருவனவற்றுள் ஒன்று.
[1], [2], [3], [4], [5], [6 ].
இச்சாரார் அறுவகையினர். (6

Page 202
- 4
சு இவ்விரண்டு குறையுடையார் குறை
கள் பின்வருவனவற்றுள் ஒரு கூட்டம் [1, 21, [1,3], [1,4], [1,5], [1,61, [2, 31, I2,41, I2, 5], [2,61, I3, 41, [3,51, [3,6], [4:51, [4,6], [5,6]. இச்சாரார் பதினைந்து வகையினர். (15)
மும்மூன்று குறையுடையார் குறைகள் பின்வருவனவற்றுள் ஒரு கூட்டம் :
[1,2,3], [1, 2,41, [1, 2,5], [1, 2, 61, I1,3,4], [1, 3,51, I1, 3,6], [1, 4,51, | 1,4,61, [1,5, 61, I2, 3, 41, I2,3,51, Լ2,3,6], [2,4,51, I2, 4, 61, I2,5, 61, 3,451, 3,4,61, 3,5,61, 4,5,61. இச்சாரார் இருபது வகையினர்.(20)
 ைநந்நான்கு குறையுடையார் குறைகள் பின்வருவனவற்றுள் ஒரு கூட்டம் :
II, 2,3,4,7, 1,2,3,51, 1,2,3,61, 1,2,4,51, II, 2,4,6,7, [1,2,5,6J, I1,3,4,51, [1,3,4,6], [1,3,5,6], I1,4,5,61, [2,3,4,51, I2,3,4,61, I2。3.5。67, (2,4,5,6], (3,4,5,61. இச்சாரார் பதினைந்து வகையினர். (15)
ஐவைந்து குறையுடையார் குறைகள் பின்வருவனவற்றுள் ஒரு கூட்டம்;
II, 2,3,4,5,7, T1,2,3,4,6,7, II, 2,3,5,6,7, II, 2,4,5,6), [1,3,4,5,6], [2,3,4,5,6,7. இச்சாரார் ஆறு வகையினர். (6)
* தொடைகளும், தொடைப் பிரிவுகளும் என்ற கவர் வடிவ அடைப்பினுள் இடப்பட போதியளவு இல்லாமையால் " T பட்டுள்ளன.

F -
த ஆறு குறை உடையார் குறைகள் பின்
வருமாறு: II, 2,3,4,5,6,7. இச்சாரார் ஒருவகையினர். Hy
குறை எதுவும் இல்லாத ஒரு வகையி னர் உட்பட மொத்தம் = 1+6+15 + 20+ 15+6 十互=64=2°。
குறை எதுவும் இல்லாதோர், சமயம் எதனையும் அநுட்டிக்க வேண்டியதில்லை. அவர்கள் ஒருவகையினர். அவர்கள் கழிந்த மிகுதியாைே64-1=63 வகையினச் 29- க3ே.
இவ்வாறு வகைப்படுத்தியது, குறை களின் அகிலத்தொடையின் மூலகங்களின் சாத்தியமான சேர்மானங்களைக்கொண்டாம். இச் சேர்மானம் ஒவ்வொன்றும் அகிலத் தொடையின் ஒவ்வொரு தொடைப்பிரிவு எனப் படும் ,
இக் கணிப்பீடு நவீனகணிதத்தின் அத்தி பாரம் எனக் கருதப்படும். தொடைக் Q5nairaos ISET Theory) Luiösta 5.
உபஅதிபர் திரு. பொ. கை. காட்டவோ அன்றித் தம் அதி அற்புத விவேகத்தால் தாமாகவோ பண்டிதமணி அவர்கள் இக் கணிப்பீட்டுச் சூத்திரத்தைக் கண்டிருப் பார்கள் எனக் கருதலாம்,
(பெரியபுராணம் வகைக்கொருவராக அறுபத்துமூன்று உதாரணங் காட்டிய:ை சிந்தனைக்குரியது எனப் பண்டிதமணி அவர்கள் கூறுவது சிந்தனைக்குரியது.1
ar بم Sy 9 அடக்கியுள்ள மூலகங்கள் }
வேண்டியவை. அவ்வகை அடைப்புக்கள் என்ற வகை அடைப்புக்கள் பயன்படுத்தப்

Page 203
குருமூர்த்தியின்
பண்டித வித்துவான் டெ
ஆயிரத்துத் தொளாயிரத்து நாற் பத்தெட்டாம் ஆண்டு தைத் திங்கள் தண்ணிய நடு நாள், சைவாசிரியர் கலா சாலை ஆரம்பமாகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும், முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், நுவரெ லியா போன்ற பல இடங்களிலிருந்தும் தெரிவுப் பரீட்சை மூலம் தெரியப்பட்ட பலர் வயது வந்தவர்கள் கூட ஆசிரியர் பயிற்சிக்காய்க் கூடுகின்றனர். நான் நுவ ரெலியாவிலிருந்து அன்று நேரே திருநெல் வேலிக்கு வந்தவன் ; முன்பின் திருநெல் வேலிச் சைவாசிரியர் கலாசாலையைத் தெரி யாதவன்; வந்தது வந்து சேரமுன், காலை எட்டு மணியிருக்கும் சுப்பிரமணியர் மண்ட பத்தின் தெற்குப் புறத்திலே வடக்குத் தெற்காய்ப் பெரியதொரு சபை கூடுகிறது.
வடக்குப்புற வாயிலை எல்லோரும் விழித்தகண் விழித்தபடி பார்க்கின்றனர்; குமிழ் மிதியடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. பொன்னின் வெண்திருநீறு புனைந்தாலன்ன திரிபுண்டரம், சந்தனப்பொட்டு, பின்குடுமி, உயர்ந்த வடிவம், பெரிய மனிதனுக்குரிய நடை, வகுப்பில் நிசப்தம் நிலவுகிறது. வடக்கு முகமாகக் குருமூர்த்தமாய் அமர் கின்றர். வகுப்பு ஆரம்பமாகிறது; இனிக்க இனிக்கக் கதைகள் ; இடைக்கிடையே கதைக்குப் பொருத்தமான திருக்குறள். நான் ஒரு சப்பல்கட்டை. திருக்குறள் முழு வதும் வாய்ப்பாடம். குருமூர்த்தி திருக் குறளின் முதலடி தொடங்க (முதல்வகுப் பிலேயே) இறுதியடியை நான் கேளாமலே சொல்வேன். குருமூர்த்தி மெல்லிய இனிய குரலில், எந்த ஊரோ ? என்று கேட்டு விட்டார். ஊர் கொடிகாமம் என்றேன். சிரித்தார். சிரித்த சிரிப்பு என்னைக் கொள்ளை கொண்டது. அவர் யார் எனச் சகபாடிகளைக் கேட்டேன். அவருடைய ஆச்சிரமத்திற்குப் போனேன் தொடர்பும் வளர்ந்தது; பயிற்சி முடிந்தது. எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். நான் திருநெல்

நினைவு அலைகள்
ா. கந்தையஞர் அவர்கள்
வேலியை விட்டு வெளியேற ஒரு காந்தம் விடவில்லை. கொடிகாமத்திலிருந்து அடிக்கடி மிக நெருக்கமாய்த் திருநெல் வே லிக்கு ப் போவேன். "வாரும்’ என்று அன்பாய் வரவேற்பதும், காலையில் வந்தால், பால் தேநீர், பத்துமணிக்கு மேல் வந்தால் மதிய உணவு, எத்தனை, எத்தனை நாள் ஒவ் வொரு நாளும் புதிது புதிதாய் வரவேற்பு ! நான் ஒரு சமயம் எந்த நாளும் வருகிற
என்னைத் தாங்கள் வாரும் வாரும் " என்று வரவேற்கத் தேவையில்லை என்று சொல்லமுன், அவர், " விருந்து " ஒரு
நாளைக்கு எத்தனை முறை வந்தாலும் புதிது புதிதாய்த்தான் வரவேற்பு என்று ஹாஸ்ய மாய்ப் பேசிவிட்டார். எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார், " அன்பர் அவர்களுக்கு ச என்று. நான் பதில் போடும்போது, ' மெய் ஞானத் தந்தைக்கு வணக்கம் ” என்று தொடங்குவேன்.
தனங்கிளப்பு விநாயகர் :
குருமூர்த்தி அவர்களின் தாய்நாடு தனங்கிளப்பு. குல தெய்வம் தனங்கிளப்பு விநாயகர். ஒவ்வொரு வார இறுதியிலும் தனங்கிளப்புக்கு வந்து சேர்ந்துவிடுவார் விநாயகருக்கு ஒரு பூமாலையுடன். இந்தப் பூமாலை தொடர்ந்து வரும்; பூமாலை யுடன் தொடர்ந்து அடியார் பஞ்சாட்சரமும் தனங்கிளப்புக்கு வந்து விடுவார். எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு. ஒவ்வொரு சனி, ஞாயிறும் தனங்கிளப்பில் தரிசனம். தரிச னம் மட்டுமல்ல, நமசிவாயம் விதானையா ரின் விருந்தும், மறக்க முடியுமா ? தனங் கிளப்பு விநாயகர் கோயிலில் கந்தபுராணப் படிப்பைக் குருமூர்த்தி ஆரம்பித்து வைப்பது வழக்கம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் புராண ஆசிரியர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். விழி சி ட் டி சங்கரப்பிள்ளை உபாத்தியார், மட்டுவில் சங்கரப்பிள்ளை, கல்வயல் அப்பாக்குட்டி, இன்னும் எத்தனையோ பேர் பயன்காரர் வந்து சேர்ந்துவிடுவார்கள். ஒரு சமயம்,

Page 204
མག་མ- 1
* புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்து ?? என்னும் கந்தபுராணச் செய்யுளுக்குக் குருமூர்த்தி அவர்கள் பயன்சொன்ன ஒரு காட்சி. வாசித்தவர் ஒரு புராண ஆசிரியர். சொல்லுக்குச் சொல் விரிவுரை அலை அலை யாய் வளர்ந்தது. மணிக்கணக்கில் தெவிட்ட Găy.
நல்லூர் க் கந்த சுவாமி கோயிலில், * வேதக் காட்சிக்கும் உபநிடத்துச்சியின் விரித்த போதக் காட்சிக்கும் " என்ற கந்தபுராணச் செய்யுளுக்கு மருகர் பொன் னம்பலபிள்ளை வாசிக்க, நாவலர் ஐயா சைவசித்தாந்தக் கருத்தை அலை அலையாய் அள்ளி வீசும் காட்சியைப் பற்றிக் குரு மூர்த்தி அடிக்கடி விமர்சித்து இரசிப்பார். அந்தக் காட்சியோ, இந்தக் காட்சி ! என்று அதிசயித்தேன்.
வே, க. ப, தாதன்:
ஐம்பதாம் ஆண்டு யான் கொழும்பில் படிப்பிக்க நேர்ந்தது. அக்காலத்தில், ஞாயிறு தினகரன் சிறப்பு மலர் ஆசிரியர் திரு. வே. க. ப. நாதன் அவர்கள். நாதன் அவர்களை அடிக்கடி சந்திப்பேன். நாதன், *" துரண்டுங்கள் எழுதட்டும் ; ஒவ்வொரு ஞாயிறும், அவருக்கு என்று ஒரு தனி இடம் ஒதுக்கியுள்ளேன் " என்பார். நாத னின் அபார மதிப்புச் சொல்லுந்தரமன்று. ஆசிரியர் தலையங்கங்கள் விமர்சனங்களுடன், இராமாயணக் காட்சிகள், கந்தபுராண, பாரதக் கட்டுரைகள் ஞாயிறு தினகரனில் தொடர்ந்து பலநூறு கட்டுரைகள் வரை வருஷக்கணக்கில் வெளிவந்தன.
சைவ சித்தாந்த வகுப்பு:
ஒரு சில காலம் குருமூர்த் தி யின் ஆச்சிரமத்தில் சைவசித்தாந்த வகுப்பு ஞாயிறு தோறும் நடைபெற்றது. சிவஞான போதம் முழுவதும் உரையுடன் உபதேசிக் கப்பட்டது. அதில் படித்தவர்கள் சாதாரண மானவர்களல்லர். பண்டிதர்கள், பட்ட தாரிகள், அப்புக்காத்துமார், எல்லோருக்கும் விருத்து உபசாரங்களுடன் உபதே சம்

49 -
நடந்து உத்தியாபனமும் ஆயிற்று. இதைத் தொடர்ந்து பெரிய சைவசித்தாந்தியாய் மாறினுர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் ஆச்சிரமம் தேடி வந்து அவரது சித்தாந்தக் கருத்துக்களை ஒலிப்பதிவு செய்து அத்வைத சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒலிபரப்பியது.
பேராதனையில் யானப் பவனி:
பேராதனைப் பல்கலைக்கழக இந்து மன்றம் குருமூர்த்தியைத் தூண்டி, கந்த புராணம் தக்ஷகாண்டத்திற்கு ஒரு பேருரை எழுதுவித்தது. அதை வெளியிட்ட பெருமை வைத்திய கலாநிதி சின்னத்தம்பி அவர் களைச் சாரும். பேராதனை விழாவுக்கு யானும் போயிருந்தேன். ஏழு யானைகள் அலங்கரிக்கப்பட்டு அணியாய்ப் பவனி. பேரியானையின் பிடர்மிசை கந்தபுராணம் தக்ஷகாண்டம். யானையின் இரு மருங்கும் குருமூர்த்தியை முன்னிட்டு துணைவேந்தர், வைத்திய கலாநிதி சின்னத்தம்பி, பேராசி ரியர் செல்வநாயகம், பேராசிரியர் வித்தி யானந்தன் போன்ற பெருமக்கள் புடை சூழப் பவனிவந்த ஒரு காட்சி அது.
இது , அநபாய சோழ மகாரா சா சேக்கிழாருக்கும், பெரிய புராணத்துக்கும் எடுத்த பெருவிழாவை விஞ்சிவிட்டதோ! இது யானைப் பவனி.
பொருட்பண்பு
நம் குருமூர்த்தி ஒரு சமயம் இரத்தின புரியில் ஆசிரியர் சங்கத்தில் * பொருளா தாரம் " என்னும் விஷயம் பற்றிப் பிரசங் கம் செய்கிருர்,
" அற்றர் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றன் பொருள்வைப் புழி'
இந்தக் குறளை விமர்சிக்கும் பொழுது மட்டுவிலிலிருந்து இரத்தினபுரிப் பிரசங்க மண்டபத்திற்கு ஒரு தந்தி வருகிறது; பாரிய பொருள் இழப்பினைக் குறிக்கும் தந்தி அது. எங்கள் குருமூர்த்தி அவர்கள் அத் தந்தியைப் பொருள் செய்யவில்லை.

Page 205
பண்டிதமணி அவர்க
பண்டிதர் அ. ஆ
1988ஆம் ஆண்டில் திருநெல்வேலி கிழக்கில் வாலிப சங்கத்தாரின் ஆண்டு விழாவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஐயா அவர்களின் இராமாயணப் பேச்சை நான் முதலாவதாகக் கேட்கும் பேறு கிடைத்தது. அந்த விழாவில் பாடசாலை மாணவர்கள் வாலிபர்களோடு வயது வந்த வர்களுமாக அநேகர் கலந்துகொண்டனர். விழாத் தொடங்கி ஒரு மணித்தியாலத்துக்கு அதிகமாகச் சங்க உறுப்பினரும் உள்ளூர்ப் பெரியவர்களும் பேசினர்கள். கூட்டத்தில் சலசலப்பும் சிறிது அமைதிக் குறைவும் காணப்பட்டன. " இனி ஐயா அவர்கள் பேசுவார்கள் ?? என்று விழாத் தலைவர் அறிவித்ததும் அங்குமிங்குமாக நின்றவர்கள் எல்லோரும் மேடையைச் சூழ்ந்து அமைதி யாக இருந்தனர். அந்தச் சடையைப் பண்டித மணி அவர்கள் சிறிது கவனித்தார்கள். சபையாரைக் கவருவதற்கு அந்த வேளையில் உயர்தர இலக்கியப் பேச்சு ஆராய்ச்சியுரை களிலும் பார்க்கக் கதைகள் கற்பனைகளே பயன்படும் என்பதை உணர்ந் தி ரு க் க வேண்டும்.
* GuiGu irria;Gan தாய்மார்களே ! வருங்காலப் பெரியோராகிய வாலிபர்களே ! மாணவர்களே ! அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கம்" என்று ஐயா பேசியதும் சபை
(149ஆம் பக்கத் தொடர்ச்சி) பஞ்சாட்சரமும் குருமூர்த்தியும்
முப்பத்தைந்து வருஷ காலம் என்று சொல்லலாம். சூரியன் உதிக்கத் தவறிஞ லும், பஞ்சாட்சரம் குருமூர்த்தியைத் தரி சிக்கக் தவறுவதில்லை. பஞ்சாட்சரம் உரும் பிராய் ; குருமூர்த்தி திருநெல்வேலி. குரு மூர்த்தியின் அணுக்கத்தொண்டர் பஞ்சாட் சரம். நான் குருமூர்த்தியைத் தரிசிக்கப் போம்பொழுதெல்லாம் பஞ்சாட்சரம் இருப்பார். இல்லாவிட்டால், "இப்பதான் பஞ்சாட்சரம் வந்திட்டுப் போகுது " என் பார். பஞ்சாட்சரம் குரு மூ ர்த் தி க்கு த் தள்ளாப்பராயத்தில் ஒர் ஊன்றுகோல். ஒரு சமயம், குருமூர்த்தி அவர்கள் பஞ்சாட்

ளின் மேடைப் பேச்சு
றுமுகம் அவர்கள்
களைகட்டத் தொடங்கியது. *" விஷ்ணு மூர்த்தி தசரதச் சக்கரவர்த்திக்கு மகளுப் இராமனுய் அவதாரம் எடுப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னமே பிரமதேவர் இந்திர லோகத்தில் இராமாயணப் பிரசங்கம் செய் தார். அந்தப் பிரசங்கத்தைக் கேட்க எல்லா உலகங்களிலுமிருந்த தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தனர். கேட்ட முனிவர்களில் ஒருவர் திரிகால ஞானியாகிய நாரதர். நாரத மகாமுனிவர் புதிய செய் தியை - இரகசியத்தை அறியப் பெறுவா ராயின் அதனைப் பிறருக்குக் கூறிப் பரகசியப் படுத்தாமல் இருக்கமாட்டார். பிரமதேவ ரின் பிரசங்கம் நிகழ்ந்த மற்றை நாள், நாரதமுனிவர் தாம் செய்யும் இராமா யணப் பிரசங்கத்தைக் கேட்கும் வண்ணம் தேவர்களை அழைத்தார். முன்னதாகவே பிரமதேவரின் வாயாற் கூறக் கேட்டுவிட்ட தால் தேவர்கள் நாரதர் கூறுவதைக் கேட்க மறுத்துவிட்டனர். சத்தியலோகத்துக்கும் பின்னர் வைகுந்தலோகத்துக்கும் போய் ஆங்காங்குள்ளாரைத் தமது பேச்சைக் கேட்குமாறு நாரதர் வேண்டியும் அவர்கள் மறுத்து விட்டனர். நாரதருக்கும் இரT மாயணப் பிரசங்கம் பெரிய தலைச் சுமை யாய் கணம்போகக் கனம் அதிகரித்தது. தலைக் கனத்தால் அவருக்கு உலகமெல்லாம் சுழல்வது போலக் கிறுதி வந்தது. தேவ
சரத்தைப் பற்றிக் கூறும்போது, "முப்பத் தைந்து வருடமும் எனக்கு அவர் செய்த சேவைக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் போட்டாலும் எவ்வளவு நான் கொடுக்க வேண்டும்! தர்மசங்கடம் என்ருர். இது குருமூர்த்தியின் செய்ந்நன்றி மறவாத உயரிய பண்பு.
நீதியை உயிரினும் மேலாக மதித்தவர் குருமணி. * நெருப்பாறு மயிர்ப்பாலம் போன்றது நீதி இறைவனுடைய சொரூ பமே நீதி; நீதிமான் சாதிமான் சாதி இரண்டு" என்பார் நங் குருமூர்த்தி.
தமிழ்-தமிழ்ப்பண்பு- நீதி-எங்கே ! நாம் எங்கே !

Page 206
லோகத்திலிருந்து கீழ்நோக்கிப் பூலோகம் வரலாஞர். வந்தவர் பூலோகத்திலே ஒரு காட்டிலே, கறையான் புற்று மேட்டிலே ** தொப்' என்று குதித்தார். குதித்தவர் அந்தப் புற்றின் வாயிலே தமது திருவாயை வைத்து இராமாயணத்தைத் தாம் கேட்ட படி ஆதியோடந்தமாக அடுக்காகச் சொல்லி முடித்தார், சொல்லி முடிந்ததும் நாரதரின் தலைக்கணம் குறைந்ததோடு கறையான் புற்றும் வெடித்துப் பிளந்தது. என்ன அதிசயம் ! அப் புற்றுக்குள் இருந்து ஒரு முனிவர் பிரசன்னமானுர், புற்றுக்கு வன் மீகம் " என்றும் பெயர். புற்றினுல் மூடப் பட்டமையால் அந்த முனிவருக்கு வான்மீகி முனிவர் என்ற காரணப் பெயரே நிலைத்து விட அவரின் இயற்பெயர் மறைந்து விட்டது. ஐம்புலன்களையும் அடக்கி ஒரே இருப்பில் ஆடாமல் அசையாமல் நெடுங் காலம் தவத்தில் இருந்தபடியால், அவரை என்னவோ மரக்குற்றி என்று நினைத்துப் போலும் கறையான் மூடிவிட்டது.
நாரத முனிவரும் தாம் சொல்ல மிகுந்த வேட்கைகொண்ட இராமாயணப் பிரசங் கத்தை வெறும் கறையான் புற்றுக்கு வீணகச் சொன்னதாயில்லாமல் மகாமுனி வருக்கு உபதேசித்தமையை அறிந்து இரட் டிப்பு மகிழ்ச்சியடைந்தார்.
வான்மீகியார் தாம் கேட்டவண்ணம் இராமாயணத்தை ஆரிய மொழியில் பாடி உலகுக்கு உபகரித்தார். நெடுங் காலத் துக்குப் பின் பல பல மொழிகளில் பல பல புலவர்கள் அதனைத் தத்தம் மொழிக ளில் பெயர்த்துப் பாடினர். தமிழில் கம்பர் பாடியது கம்பராமாயணம் எனப்படும். இவ்வாறு பண்டிதர் ஐயா அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளை யில் சபையின் நிலைமையைப் பார்க்க வேண்டுமே. வாய் அங்காந்து, கைகட்டிக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கைகொட்டிக் கலகலப்பாக ஆனந்த ஆரவாரம் செய்தனர்.
கற்றுவல்ல அறிஞர், ஆராய்ச்சியாளர் விளங்கும் சபையில் பண்டிதமணி அவர்கள் பேசுவதாயின் தமது நுண்மாண் நுழை புலத்தை வெளிப்படுத்துவார். அதற்கும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றேன்.

კო->
5 -
195ர்ஆம் ஆண்டில் பரமேசுவராக் கல்லூரியில் தமிழ்விழா நடைபெற்றது. தென்தமிழகத்திலிருந்து பேராசிரியர் சேதுப் பிள்ளை, செஞ்சொற்கொண்டல் சிங்கார வேலஞர் போன்ற பேரறிஞர்களும், ஈழத் துப் பெரும்புலவர் பலரும் விழாவிற் பங்கு பற்றினர். அந்த விழாவில் பண்டிதமணி அவர்கள் தமிழ் என்ற தலைப்பில் உரை யாற்றினர்கள்.
** இறையனர் அருளிச் செய்த அகப் பொருள் களவியல் எனவும் பெயர் பெறும். அதற்கு வகுக்கப்பட்ட பலரின் உரைகளி லும் பார்க்க மிகச் சிறந்த உரை தலைவர் நக்கீரரின் உரையேயென்பதை நடுவராகிய கந்தசுவாமியார் தீர்ப்பளிக்கக் கடைச் சங்கத்துப் புலவர் நாற்பத்தொன்பதின் மரும் ஏற்றுக்கொண்டனர். அந்த விழுமிய உரையில் களவியல் என்னுதலிற்ருே எனின் தமிழ் நுதலிற்று என்ற வாசகம் உள்ளது. இது சிந்திக்கவேண்டிய விஷயம் " எனக் கூறிய பண்டிதர் ஐயா அவர்கள் அதற்கும் பல உதாரணங்கள் காட்டி விளக்கம் கொடுத்தார்கள்,
இதுகாறும் பொதுமக்கள் குழுமிய மேடையில் பண்டிதமணி அவர்கள் பேசிய பேச்சுக்கும், கற்றுவல்ல அறிஞர் குழுமிய மேடையில் அவர்கள் பேசிய பேச்சுக்கும் ஒவ்வோர் உதாரணம் காட்டினேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த் தல் போதுமானதுதானே. பண்டிதமணி அவர்கள் சென்ற அரை நூற்ருண்டுக்கு மேலாக எந்தனையோ மேடைகளிற் பேசி யிருக்கிருர்கள். இந்தக் காலகட்டத்திலே பேச்சாளர்கள் எனப் பலநூறு அறிஞர்களை நாம் கண்டிருக்கிருேம். சிறந்த பேச்சா ளருக்கு அமையவேண்டிய அம்சங்கள் பல. எடுத்துக்கொண்ட பொருளை வழுவாது ஆற்ருெழுக்காகத் தொடர்தல், நுண்மாண் நுழைபுலம், இனிய குரல், எடுப்பான தோற்றம், சபையாரைக் கவரும் நடிப்பு, அஞ்சாமை, கண்ணியம், ஒழுக்கம் என் பவை அனைத்தும் ஒரு ங் கே ய  ைம ந் த கொடைச்சிறப்புக் கொண்டவர் பண்டித மணி அவர்கள் மட்டுமே ஆவர். அவரைப் போன்ற வேருெருவர் எங்கள் காலத்தில் வாழ்ந்ததாக நாம் அறியோம். ~3յ3չlf* அவதார புருஷர். மாந்தருக்குள் தெய்வம்

Page 207
பண்டிதமணி வளர்
அன்பகம் இ.
இலங்கையில் தமிழர் எப்பொழுது தொடங்கி வாழ்ந்தாலும், இடைக்காலங் களில் ஏற்பட்ட போத்துக்கீய, ஒல்லாந்த, ஆங்கிலேய ஆட்சிகளால் தமது மொழி யையும் பண்பையும் பெரிதும் இழந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் சிறிது நல்ல மாற்றங்களேற்பட்டாலும் இழந்த பண்புகளைப் பெற்ருர்களென்று கூறிவிட முடியாது. சரித்திரகாலங்களுக்கும் எட்டாத பண்டைக் காலந்தொட்டுப் பண்பாடே நிறைந்த தமிழினம் சீர்கெட்டுப் போனமை தான் பூரீலழறி ஆறுமுகநாவலர் பெருமானைத் தோற்றுவித்ததெனலாம். பண்பாடு வேறு, சமயம் வேறு என்று கூறிவிடமுடியாது. மனத்தில் ஏற்படுகின்ற மேலான எண் ணங்கள் பண்பாடாகவும் அவற்றை நடை முறைப்படுத்தும் செயல்கள் சமயமாகவும் பரிணமிக்கிறது எனலாம். இவையிரண்டுக் கும் இணையாக மொழி துணை செய்கிறது. இதனுலேயே தாய்மொழி, சமயம், பண்பு என்பன ஒரு சமூகத்துக்கு முக்கியமா கின்றன. அவற்றைத் தமிழர்கள் பன் னெடுங்காலமாகப் பேணி வந்தமையால், "" தமிழனென்று ஒரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு," எனக் கூறப் பட்டது போலும். ** யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்று வாழ்ந்த தமி ழினம், தங்கள் தமிழ் மொழியையும் சைவ சமயத்தையும் இரு கண்களெனப் போற்றி வந்தனர். ** யாழ்ப்பாணச் சமயநிலை" கண்ட நாவலர் பெருமான் தமது வாழ் நாள் முழுவதும் சைவத்தையும் தமிழையும் வளர்க்க நைஷ்டிகப் பிரமசரியம் பூண்டு வாழ்ந்தார். அந்தப் பெரியாருடைய இடைவிடாத முயற்சிகளால் 19ஆம் நூற் முண்டிலே யாழ்ப்பாணத்திலும் தென்னிந்தி யாவிலும் தமிழும் சைவமும் வளர்ந்தன. பிற சமயத்தவர்களுடன் சொற் போர் நடத்தியும், சைவசமய சாஸ்திரங்களையும், தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் பரிசீலனை செய்தும், தாம் படித்தும், படிப்பித்தும், முடிந்த அளவு அச்சிற் பதிப்பித்தும், மாண

த்த தமிழர் பண்பாடு
கந்தையா அவர்கள்
வர்கள் படிக்க ஆர்வமூட்டியும் அருந் தொண்டாற்றி வந்தார்கள். நாவலர் பெருமான் தமது நோக்கம் நிறைவேறக் கலாசாலைகளை நிறுவினர்கள். தமது இறுதிக் காலத்தில் நல்ல உபந்நியாசகர்களையும் ஆசிரியர்களையும் பயிற்றக் கூடிய கலாசாலை யும் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவுதற்கும் முயற்சிகள் செய்தார்கள். பாமர மக்களும் வாசித்துப் பயன்படக் கூடிய முறையில் உரைகளும், வசனநடை நூல்களும் வெளி வரவும், பாடசாலைப் பிள்ளைகளுக்கேற்ற நூல்களை ஆக்கியளிக்கவும் நாவலர் பெரு மான் முயற்சித்தார்கள். சட்டமன்றத் தேர்தல்களிலும், சாதாரணமக்களின் வாழ்க் கையைத் திருத்தச் செய்த தொண்டுகளி லும் ஆறுமுகநாவலர் ஊக்கப்பட்டுழைத் தார்கள். தமக்குப்பின் சைவத்தமிழ்த் தொண்டுகள் நாட்டில் வளரக்கூடிய முறை யில் ஒரு மாணுக்கர் பரம்பரையையும் யாழ்ப்பாணத்தில் வளர்த்து வந்தார். வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை மானேஜர் த. கைலாசபிள்ளை, உரையாசியர் ம. க. வேற்பிள்ளை போன்றவர்களைப் பின் தொடர்ந்து பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்களும் இருபதாம் நூற்ருண் டில் சைவத்தையும், தமிழையும் வளர்க்கத் தொண்டாற்றிய பெரியாரென்பதைக் கூற வேண்டும். இந்த நூற்ருண்டின் பெரும் பகுதி பண்டிதமணியவர்களின் சைவத் தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியின் பன்முகப் படுத்திய வளர்ச்சி என்று சுருக்கமாகக் கூற லாம். அதை உறுதிப்படுத்துவதுபோல இலங்கைப் பல்கலைக்கழகம் தனியத் தமிழ் கற்றுணர்ந்த பண்டிதமணிக்கு, கெளரவ இலக்கிய கலாநிதிப் பட்டமளித்துத் தன் மதிப்பையும் உயர்த்திக் கொண்டது.
பண்டிதமணி அவர்கள் பரீட்சைகளுக் காகப் படித்தவரல்லர், ஆங்கிலப் பாட சாலைகளில் படிக்கும் தமிழ் மாணவர்கள் தமிழிற் பேசினல் குற்றங் கட்ட வேண்டிய காலம் ஒன்றிருந்தது. ஆங்கிலம் நன்கு

Page 208
--
படிப்பதற்காகத் தமிழை மறக்கச் செய்த காலம் அது. அப்படியான ஒரு ஆங்கில ஆட்சிக்காலத்தில், எல்லோரும் ஆங்கி லத்தை விரும்பிக் கற்ற காலத்தில், தமிழை ஆர்வத்துடன் கற்றுப் பாண்டித்தியம் பெற்றவர்கள் பண்டிதமணி அவர்கள். இந்தக் காலத்தில் தமிழிலே புலமை பெறு வதற்கேற்ற பல வசதிகள் எங்கும் உண்டு. தமிழ் நூல்கள் ஏராளமாகவும், மலிவாகவும் கிடைக்கின்றன. அறுபது ஆண்டுகளுக்கு முன் அங்ங்ணம் இல்லை. பழந்தமிழ் நூல் கள் அச்சிடப்படவில்லை. புலமைமிக்க ஆசிரி யர்களும் சிலர்தான் இருந்தனர். ஆங்கிலம் சிறிது கற்றவுடன் உத்தியோகங்கள் கிடைத் தன. தமிழில் பண்டிதரானலும் தமிழ் ஆசிரியர் வேலே கூட நிச்சயம் இல்லே. இந்த விதமான ஒரு காலத்தில் தமது வீட்டி லிருந்து வெகுதொலைவிலுள்ள வண்ணுர் பண்ணையில் நாவலரால் ஸ்தா பிக்கப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலையில் பூரீமான் த. கைலாசபிள்ளை அவர்களின் மேற்பார் வையில் சுன்னுகம் குமாரசுவாமிப் புலவ ரிடம் தமது பதினெட்டாம் வயசில் தமிழ் கற்கத் தொடங்கினர். அக் காலத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் டண்டிதர் பரீட்சையில் சித்தி எய்தினர். அதற்குப் பின் ஆசிரிய கலாசாலைப் பயிற்சியும் பெற்றுத் திருநெல்வேலி சைவாசிரிய கலா சாலைத் தமிழ்ப் பேராசிரியராகவும் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தால் நியமனம் பெற்றுப் பண்டிதர் சி. கணபதிப்பிள்ளை என விளங்கினர். மட்டுவிலில் சிறு வயசில் தமது தகப்பனரிடத்திலும், உரை uurir Gifu ufi ம. க. வேற்பிள்ளை அவர்களி னதும், அவர்களுடைய பிள்ளைகளினதும், முக்கியமாக குருகவியும் பரீட்சை எடாத பண்டிதராகவும் விளங்கிய மகாலிங்கசிவத் துடனும் புராண இதிகாசங்கள் பல படித் திருந்தமையால். காவிய பாடசாலையில் படிக் கின்ற காலங்களிலிருந்து சிறந்த விவேகி யாகவும், நல்ல பேச்சாளராகவும், சிறந்த கதைகாரராகவும் விளங்கினூர். அக் காலத் தில், திருநெல்வேலியில் பேர்பெற்ற சில விவேகிகளைக் கொண்ட 'ஈரப்பலாச் சங்கத்? தில் பண்டிதர் கணபதிப்பிள்ளையும் சிறந்து
20

۔۔۔۔۔ 3ز
விளங்கினரென்பதும், அவருக்கிருந்து பெருந் தகைமையாகும். ஏனைய அங்கத்தவர்களெல் லோரும் ஆங்கிலம், கணிதம் முதலிய அக் காலப் படிப்புக்களில் பெருந்தகைமை பெற் றவரேனும், பண்டிதர் கணபதிப்பிள்ளையின் வித்வத்தன்மை, கண்டனங்கள், பேச்சுச் திறமைகளுக்குப் பெரும் மதிப்புக் கொடுப் பவர்கள். பண்டிதரும் எது பேசவேண்டும். எப்படிப் பேசவேண்டும் என்று பயிற்சி பெற்றதெல்லாம் இந்த ஈரப்பலாச் சங்கத்தி லென்பதைக் கண்டவர்கள் நன்கு உணர் வார்கள். தமிழ், சைவம் வளரத் தொண் டாற்ற இவ்வித பயிற்சிகளும் வேண்டும் போலும்.
யாழ்ப்பாணத்தில் இக் காலத்தில் விசா ல மனம் படைத்த இளைஞர்கள் பலர் இந்தியா வில் மகாத்மாகாந்திஜீயின் தலைமையில் நடக்கும் கலை, கலாசார, அரசியல் இயக் கங்களையும், மற்றும் இராமகிருஷ்ணசங்கம் போன்ற சமய சமூக இயக்கங்களையும் பின் பற்றி நடக்கவேண்டுமென்ற உந்துதலில் கூடிக் கலந்து பேசிவந்தனர். கொழும்புத் துறை யோகர்சுவாமிகளின் தொடர்பும், சுவாமி விபுலானந்தர் போன்றவர்களின் சேர்க்கைகளாலும் இவர்கள் கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள் தலைமையில் ‘கல7 நிலையம் ' என ஒரு ஸ்தாபனத்தை உண் டாக்கினர். தமிழ்ப் பண்பாட்டை நுணுகி ஆராயவும், இலக்கியம், சரித்திரம், தத்து வம் போன்றவற்றை அணுகி ஆராயவும் உருவான ஒரு கழகமிது. கம்பன், இளங்கோ, திருவள்ளுவர், பாரதி போன்றவர்களின் ஆராய்வுகளும் இங்கு நடந்தன. 1933ஆம் ஆண்டளவில் ஒரு நாள் சின்னத்தம்பிப் புலவரைப் பற்றி, பண்டிதர் கணபதிப்பிள்ளை பேசினுர்கள். அந்தப் பேச்சில், சொக்கிப் போன பல அறிஞர்கள், பண்டிதர் மூலமாக நாவலரைப் பற்றியும், வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையின் சிறப்புகளையும், யாழ்ப்பாணம் சம்பந்தமான பல அரிய விஷயங்களையும் கேட்டு மகிழ்ந்தனர். பூரீ யோகசுவாமிகளைப் பெரிதும் மதிப்பவர்களும், கலாநிலையம் நடத்துபவர்களும், இன்னும் யாழ்ப்பாணக் கல்லூரி, வைத்தீசுவர

Page 209
வித்தியாலயம், இந்துக்கல்லூரி, மத்திய கல்லூரி ஆசிரியர்கள் சிலருமாகப் பண்டிதரை விளங்கிய நண்பர்கள் வாலிபர் காங்கிரசி லும் இருந்தமையால், அவர்களுடைய ஒரு மகாநாட்டிலும் பண்டிதர் கணபதிப்பிள்ளை பின் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. கலாநிலையக் கூட்டங்களுக்கும் மற்றும் இலக் கியம், ச:பம், வரலாற்றுக் கூட்டங்கள் நடக்கும் பொழுதும் பண்டிதர் தமது சைவாசிரிய கலாசாலை மாணவர்களுடன் வரும்காட்சிகள் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அக்காலத்தில் எ ங் நு ன ம் பெரியவர்க ளால் வழி நடத்தப்பட்டுவந்தார்களென் பதற்கு ஒரு சிறந்த உரைகல்லாகும். பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்களுக்குத் துணையாக அதிபர் சுவாமிநாதன் அவர்க ளும், உட-அதிபர் கைலாசபதி அவர்களும் உடனிருந்து உதவியமை இக் காலத்தில் குறிப்பிடத்தக்க தொன்ருகும், இங்ங்ணம் பண்டிதர் பிறந்த குடும்பமும், கல்வி பயின்ற சூழலும், பழகிய நண்பர்களும் பணிபுரியக் கிடைத்த சைவாசிரிய கலாசாலை மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அவர் தவமுடையா ரென்பதையும், சில நோக்கங்களுடன் இறை வணுல் பூணூரிலயூரீ ஆறுமுகநாவலர் வாழ்ந்த நூற்ருண்டைத் தொடர்ந்து வாழ ஏற்படுத் தப்பட்டாரென்பதையும் சிந்திப்பவர்கள் மறுக்க முடியாததாகும். எமது பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்கள் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரித் தமிழ் விழாவில் பங்குபற்றியும் தமது ஆற்றல்களை அறிஞர் களும் வியக்கச் செய்தமை வரலாருகிவிட் -gils கம்பராமாயணத்திலும், பள்ளுப் பாட்டுகளிலும் நயங்காட்டிய பண்டிதமணி அவர்கள் கந்தபுராணத்திலும் யாழ்ப்பாணக் கலாசாரம் காட்டி நயந்தார். தக்ஷகாண்ட உரை நயம் யானைமேல் ஏறிப் பேராதனை பில் பெருமையடைந்ததும், பல்கலைக்கழகம் பண்டிதமணியை இலக்கிய கலாநிதியாக்கிய தும் சமீபகால நிகழ்ச்சிகளாகும். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய 'கலாநிதியிலும், கலாநிலையம் நடத்திய ஞாயிறு இதழ்களிலும், ஆசிரியர்கள் சங்கம் நடத்திய ஆசிரியன் பத்திரிகைகளிலும் பண்டிதமணி கற்ருேருக்கு நல்விருந்தளித் துள்ளார்கள். இளைப்பாறிய பின்னர் அவ ருடைய தத்துவ ஆராய்ச்சிகள் கூடின. கும்பாபிஷேக மலர்களும், மற்றும் விசேட மலர்களும் அவருடைய சமயக் கட்டுரைகள் கொண்டு விளங்கின. அவர் மறையும்

۔ ۔ ۔ 54
வரை ஒரு கலைக் க ள ஞ்சியமாக ஞான விளக்காகப் பிரகாசித்துக் கொண்டிருந்தமை மறக்க முடியாததாகும்.
கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள் நாவலர் பெருமான் பத் தொன்பதாம் நூற்ருண்டில் தொடக்கிய சைவப்பணி, தமிழ்ப் பணிகளைப் பூர்த்தி செய்யும் வகை இந்த நூற்ருண்டுவரை இருந்து பலவகைகளிலும் தொண்டாற்றி யுள்ளதுடன் தமக்குப்பின் இந்த வேலைகளைச் செய்ய ஒரு ஆயிரம் சைவாசிரிய நன் மக் களையும் உதவியுள்ளமையைத் தமிழும் சைவ மும் உள்ளவரை யாரும் மறக்க முடியாது. தாம் செய்யும் தொண்டுகளை வெளிப்படுத்த விரும்பாத இப் பேரறிஞர் " எம் ஆசிரியர்" என்று ஆயிரக்கணக்கானவர்கள் சொல்ல வைத்து மறைந்துள்ளார்கள். ஆசிரியர்க ளுடன் நல்லாசிரியராய், பேராசிரியராய் விளங்கியதுடன் தமிழ் ஆசிரியர்கள் பெரு மைப்படக் கூடியவகையில் தமிழ்ப் புலமை եւյւն, சைவசமய அநுபூதியும் பெற்று, நைஷ்டிகப் பிரமசாரியாய் இறைவனடி சேர்ந் தமையை யாரும் மறக்கமுடியாது. இன்று யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் நல்ல முறையில், பண்டிதமணி அவர்களுடைய மாணவ பரம்பரையினரால் பேணப்பட்டு வருவதைக் காண்கிருேம். பண்டிதமணி அவர்கள் கருவிலே திருவுடையராகத் திகழ்ந்து தமது பேச்சுக்களாலும். எழுத்துக் களாலும் மாத்திரமல்ல, சிந்தனைகளாலும் செயல்களினலும் தமிழும் சைவமும் வளர உழைத்தார். அவர் வளர்த்த தமிழர் பண்பாடு அவராலும், அவருடைய மாணுக் கர் பரம்பரையினராலும் தமிழ் வாழுமிட மெல்லாம் சிறந்து விளங்கும். சமயப் பண் பாடுகளைத் தொகுத்து அறம், பொருள், இன்பம், வீடு எனச் சான்றேர் கூறுவ துண்டு. பண்டிதமணி அவர்கள் தமிழை யும், சைவத்தையும் பேணிப் பணிபுரிவ தையே தமது அறமாகவும், பொருளாகவும், இன்பமாகவும் கொண்டு வாழ்ந்தார்கள். கல்வியை நன்கு கற்று, அறிவில் விசால மடைந்து, மனத்தகத்து அமையும் பரிபக்குவ நிலையுடன் பரம் பொருளில் ஐக்கியப் பட்டுச் சமயப்பற்றின் விளைவாக உயர் வாழ்வு வாழ்ந்து மறைந்த பண்டிதமணி அவர்கள் வளர்த்த தமிழர் பண்பாடு ' என்றும் வாழவேண்டி இறைவனை வழுத்து வோமாக. வாழ்க தமிழ்.

Page 210
பண்டிதமணி அவர்க
பேராசிரியர் கார்த்திகே தலைவர், நுண்கலைத்துறை,
இக் கட்டுரை பண்டிதமணி சி. கணப திப்பிள்ளை (1899-1986) அவர்களின் (பண் டிதமணி) புலமைத்திறனின் மைய அமிசம்அதாவது அவரது பன்முனைப்பட்ட திறன் கள் யாவற்றினதும் மையப்புள்ளி" எனக் கருதப்படத்தக்க தன்மை; புலமையின் சாரப்பிழிவு-யாது என்பதை அறிந்துகொள் வதற்கான ஒர் ஆரம்ப உசாவல் ஆகும்.
பண்டிதமணி பற்றி நிலவும் பொது வான புலப்பதிவு பின்வருமாறு:
(அ) அவர் ஆறுமுகநாவலர் பரம்பரையின் தொடர்ச்சியின் சின்னமாக அமைந் தவர் - அதாவது சைவமும் தமிழும் என எடுத்துக் கூறப்படும் கருத்துநிலை யின் அறிவுச் சுடர்களில் ஒருவர்.
(ஆ) அவர் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பாரம் பரியத்தின் சிறப்பையும் தனித்தன்மை ய்ையும் வற்புறுத்தியவர்.
(இ) இலக்கிய ரசனை உணர்ச்சி மிக்கவர்; தனித்துவமுள்ள ஓர் இலக்கிய நடை யினைக் கையாண்டவர்.
இவற்றுள் மூன்ருவது அவரது இலக்கிய ஆளுமை பற்றியதேயாகும். இலக்கிய வர லாற்று நிலைநின்று நோக்கும்பொழுது முத லிரண்டும் அவரைக் கருத்துநிலைத் தளப் படுத்தி நோக்க முனைவனவாகும். அவை ஒன் றுடன் மற்றது தொடர்புடையனவேனும் இவை இரண்டும் அன்றேல் யாதேனும் ஒன்று பண்டிதமணியை விளங்கிக்கொள்ளப் போதுமானவையா என்பது பற்றிச் சிந்தித் தல் வேண்டும்.
அவரை ஒருநிலைப்படுத்தி நாவலர் பரம் பரையினர் என்ருே, ஈழத்திலக்கிய முக்கியத் துவவாதி (இங்கு ஈழத்து இலக்கியம் என் பது பிரதானமாக நாவலர் காலத்தும் அவர் காலத்துக்குப் பிந்திய ஆளுல் நவீன காலத்

ளின் புலமை மையம்
சு சிவத்தம்பி அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
துக்கு முந்தியதுமான இலக்கியங்களையே குறிக்கும்) என்ருே கொண்டால், அது அவ ரது இலக்கிய சிந்தனை ஆளுமையை மறைக் கும் மிகை எளிமைப்பாடு ஆகிவிடும் என்ப திற் கருத்து வேறுபாடு இருத்தல் முடியாது. ஏனெனில், பண்டிதமணியின் எழுத்துக்களை நோக்கும்பொழுது அவர், நாவலருடனும், நாவலர் பரம்பரையினருடனும் சம்பந்தப் படுத்தப்படும் மத இலக்கிய விவாதவாதியாக Gaunt (Religious and literary polemicist அல்லது அந்த விவாதப் பரம்பரையினருக் குரிய வசைத்தாக்கு (invective) எழுத்தாள ராகவோ விளங்கவில்லை என்பது தெரிய வரும்.2 இதுமாத்திரமல்லாது, பண்டிதமணி இத் த  ைகய ஒரு ‘பிடிவாத நிலைக்கு அப்பாற்பட்டனவாக உள்ளனவும் மெய் பபியற்பாங்குடையனவுமான சில எழுத்துக் களை எழுதியுள்ளார் என்பதும், அந்த எழுத் துக்கள் பண்டிதமணியினைச் சர்ச்சையாளர் களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர் நிலை யில் வைத்துள்ளன என்பதும் ("சமயக் கட்டுரைகள்", அன்பினைந்திணை', அத்வைத சிந்தனை") எமக்குத் தெரிந்ததே. இத்தகைய எழுத்துக்கள் காரணமாக அவரை ஒரு குறிப்பிட்ட வாய்ப்பாட்டு வட்டத்துக்குள் அடைத்துவிடாது, அவரது புலமையின் தன்மையையும், அப் புலமையாற்றலின் மையமாக அமையும்தன்மை யாது என்பதை யும் அறிவது இலக்கிய விமர்சனமென்னும் அறிவுத்துறை எம்மீது சுமத்தும் முக்கிய பொறுப்பு ஆகும்.
இப்பணியை மேற்கொள்ள முனையும் பொழுது நாம் சில பிரச்சினைகளே எதிர் நோக்கவேண்டியுள்ளது.
அவற்றுள் முதனிலைப்படுவன:
(அ) பண்டிதமணியின் வாழ்க்கை வரலாறு இன்னும் தெளிவாகவும், திட்பமான முறையிலும் எழுதப்படாதுள்ளமை.

Page 211
чечнев.
இதன் காரணமாக இவர் யார் யாரு டைய செல்வாக்கு வட்டங்களுக்கு, எவ் வெக் காலங்களில் உட்பட்டிருந்தார் என்பது தெளிவாகவில்லை). (ஆ) பண்டிதமணியின் எழுத்துக்கள் இன் னும் திட்டவட்டமான வகையிற் கால வரன் முறைப்படுத்தப்படாதுள்ளமை (நூல்களாகத் தொகுக்கப்பெற்றவற்றி லுள்ள ஒவ்வொரு கட்டுரையும் எழுதட் பட்ட காலமும், முதலிற் பிரசுரிக்கட் பட்ட களமும் முக்கியமாகும்).
(இ) கட்டுரைகளின் மூலபாட நிர்ணய மின்மை. (சில கட்டுரைகள் மீள்பதிட் பின் பொழுது திருத்திப் பதிப்பிக்கப்பட் டுள்ளன. முதற் கட்டுரையின் பாடம் (text) யாது, அது பின்னர் எதற்காகத் *திருத்தப் பெற்றது என்பன முக்கிய விஞக்களாகும்).
இந்த ஆரம்பநிலைத் தெளிவுகள் இல்லை யேல் பண்டிதமணியின் இலக்கிய ஆளுமைட் பரிணமிப்பை அறிந்துகொள்வதும், அந்தப் பரிணமிப்பினுாடே தொழிற்பட்டு நின்ற கருத்துக்கள், கருத்து நிலைகளைத் தெளிவுற அறிந்து கொள்வதும் சிரமமான முயற்சி போகும். எனினும், இத்தகைய விணக்கள் பிறக்கும்பொழுதே அத்தகைய முயற்சிகள் விநயத்துடனும் கனதியுடனும் மேற்கொள் ளப்படுமாதலால், உள்ளவற்றைக்கொண்டு இவ்வுசாவல் மேற்கொள்ளப்படுகின்றது அந்த அளவுக்கு இந்த ஆய்வு முடிவு பரீட் சார்த்த முடிவாகவே அமையும்.
பண்டிதமணியின் எழுத்துக்களை இன் ஜள்ள நிலையில் இயன்ற அளவுக்கு காலவரன் முறைப்படுத்திப் பார்க்குப் பொழுது, பண்டிதமணியின் எழுத்துக் களினூடே சில கருத்துக்கள் மைய நிலை பட்டு, உருவாக்கம் பெற்று வளர்ந்து வரு வதை நாம் அவதானிக்கலாம். உதாரண மாக, ஐந்திணை பற்றிய, சங்க இலக்கிய எல்லை கடந்த, ஒரு கருத்தினதும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சிலவற்றினதுட படிப்படியான முதிர்வுப் போக்கினை அவரது எழுத்துக்களினூடே இனங்கண்டுகொள்ள லாம். இத்தகைய கருத்துருவாக்கப் போ! இன் காரணமாக, குறிப்பாக 1970களிற்கு

۔۔۔۔۔۔ 56
முன்னர் அவரது எழுத்துக்களில் இருமட்ட அறிக்கைத் தொழிற்பாட்டினை (Two havets 0f cognition) அவதானிக்கக்கூடியதாக இருக் கின்றது. அந்நிலையில் ஒரு மட்டத்தில் அவர் ஈழத்திலக்கிய முக்கியத்துவம் பற்றிப் பேசு பவராகவும், ஆனல் அதேவேளையில், இன் ஞெரு மட்டத்தில், பின்னர் அவரது முக்கிய இலக்கிய சிந்தனையாக முகிழ்க்கப்போகும் கருத்துக்களைப் படிப்படியாக வளர்த்தெடுத் துக்கொள்பவராகவும் காணப்படும் ஒரு தன்மையினை நாம் அவதானிக்கலாம்.
பண்டிதமணியின் இறுதிக்காலத்தை, ஏறத்தாழ இறுதிப் பத்து வருடங்களில் வெளிவந்த அவரது எழுத்துக்களையும், அவ் வெழுத்துக்கள் சுட்டும் சிந்தனைகளையும் (Thoughts), Sigi(G) Gissis&n upth (Modes of those thoughts) siri jög GBIBI'r di GS896 ஒன்றுடன் ஒன்று இறுகப் பிணைக்கப்பெற்ற, ஒன்றுக்கு மற்றது பசளையாகவும் ஊற்றுக் காலாகவும் அமைகின்ற இருதளத் தொழிற் பாட்டினைக் கண்டுகொள்ளலாம்.
ஒரு நிலையில் முக்கியமான ஒரு சைவ சித்தாந்தியைக் காணலாம். இந்நிலையில் தான் பார்க்கும் ய7வற்றையும் சைவசித் தாந்தத்தின் அச்சாணியெனத் தான் கருதும் நிலைநின்று நோக்குவது தெரியும். இந்த நிலைக்கு இன்ணுெரு பக்கல் உண்டு. அதா வது தான் காணும் சகலவற்றிலும் (அல்லது தன்னை எதிர்நோக்கும் சகலவற்றிலும்) சைவ சித்தாந்தத்தின் அந்த அச்சாணித் தன்மை யையே காணல். (இது பின்னர் விரிவாக நோக்கப்பெறும்.
மற்ற நிலையில், இலக்கியங்களினதும் இலக்கியப் பாடங்களினதும் (Literary texts) வெளிப்பாட்டு ஆற்றலின் - உயிர்ப்பு ஊற் றின-அதன் பொருள் சுவை மையத்தினை - "உணர்ந்து" எழுதும் இலக்கிய அழகறி drapa) (al(s)&5 (Literary aesthete eglaii காணப்படுகிருர்,
இந்த அழகறி சுவைத் திறனுல் மேற் குறிப்பிட்ட அச்சாணிச் சிந்தனையை உணர் பவராகவும், அறிபவராகவும், அந்த (சைவ சித்தாந்த) அச்சாணிச் சிந்தனைத் தேர்ச்சியி ணுல் இந்த அழகறி சுவைத் திறனிலே திளைப் பவராகவும் அவர் காணப்படுகின்ருர்,
இந்த நிலையினைப் பின்வருமாறு வரைபட விளக்கம் செய்யலாம்:

Page 212
உாங்குடைய உள்ளம்சித்தம்.
மு
s
L
இந்த நிலையில் மதமும் இலக்கியமும் (சைவமும் தமிழும்) இணைந்துள்ள முறைமை வேறு, நாவலர் எழுத்துக்களிற் சைவமும் தமிழும் இணைந்துள்ள முறைமை வேறு.
பண்டிதமணியின் தலைசிறந்த சிந்தனைச் சாதனை (அன்றேல் இலக்கியச் சாதனை) என்று கொள்ளக்கூடியது இந்த இணைநிலை தான்.
அவருடைய மொழிநடையிலே கூறுவ தானுல் அவரது புலமை மையம் ஒரு மதஇலக்கிய அத்துவிதம் ஆகும். இந்த மதஇலக்கிய இணைவுக்குள் நின்றே அவரது நடைத் திறனையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையை அவரது இறுதிக்கால ஆக்கங்கள் | சிந்தனை, என்று கூறப்படத்தக் கணவாய் அமைந்துள்ள அன்பினைந்திணை? (1983), 'அத்வைத சிந்தனை" (1984) என்பன வற்றிற் காணலாம்,
இந்த இருதள இணைவுத் தொழிற்பாடு எத்தகைய சிந்தனைத் தளத்திலிருந்து கிளம்பு கின்றது என்பதனை நோக்குதல் அடுத்து அவசியமாகின்றது.
I
பண்டிதமணியின் பிரதான நோக்குத் தளம் தமிழ் ! தமிழ்ப் பண்பாடு அன்று; அவரது பிரதான தளம் இந்தியா | இந்தியப் பண்பாடு ஆகும். அவர் தமிழையும் சைவ சித்தாந்தத்தையும் இந்தியப் பண்பாட்டின் பின்புலத்தில் நோக்கி, அந்தப் பண்பாட் டின் கணியாகக் கொள்கிருர்,

س. 57
ந்கியங்கள்/பாடங்களின் ք անriլյլն?&ծ7 ரும் அழகறி சுவை உணர்வு.
(இந்த ஊடாட்ட இணேவில் மதமும் இலக்கியமும் இணைகின்றன)
ஆசுத்தாத்துவிதமெனப் போற்றப்படும் சைவசித்தாத்த அடிப்படையில் சகல வற்றையும் பார்க்கும் ஒரு நோக்கு.
ஆய்வு வசதிக்காக முதலில் சைவசித் தாந்தத்தை எடுத்துக் கொள்வோம். சமயக் கட்டுரைகள் (1961) முதல் அத்வைத சிந் தன (1984) வரை இக் கருத்துத் தொடர்ந்து வருவதைக் காணலாம்.
** சமயக் கட்டுரை**களில் வரும் இரு பகுதிகள் இவ்வுண்மையை நிரூபிக்கும் :
() FLDutt 17:
தலைப்பு: இந்தச் சரீரத்தின் உதவியினுல் ஆத்மா இந்த உலகத்தைக் காணுமே தவிரத் தன்னையோ, பரமாத்மாவையோ 95GT மாட்டாது.
--சுத்தமான அத்வைதமே வேதாந்த சித்தாந்தம்
ஒரு மேற்கோள் : “ ஆத்மா சிவத்தை அறிந்து அநுபவிக்கின்ற சுத்த நிலைக்குச் சுத்த அத் வைதம் என்று பெயர். சுத்தமான அத்வைதமே வேதாந்த சித்தாந்தம், (பக்கம் 131).
() FLouar 18 :
தலைப்பு: சிவோகத்துக்கு யோகம் என்று பெயர். அகம்பிரமத்துக்கு உப நிஷதம் என்று பெயர். வேதாந் தத் தெளிவாம் சைவசித்தாந்தம்.

Page 213
மேற்கோள்: "வேதாந்தம் என்ற வார்த்தை உபநிஷதங்களுக்கு மிக்கு வழங்கு கின்றமையால், உண்மை வேதாந்தத்தை ‘வேதாந்தத் தெளிவு" என்ற தொடரால் உமாபதி சிவாசாரிய சுவாமிகள் வழங்குகின்ருர், ‘வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் என்பது சுவாமிகளின் திரு வாக்கு " (பக்கம் 138).
இந்நிலைப்பாடு ** சமயக்கட்டுரை ' களுக்கு (1961) முன்வந்த நூல்களிலும் காணப்படுகின்றது. ** பாரத நவமணிகள்'
(1959) என்னும் கட்டுரைத் தொகுதியில் வரும் கீதாபோதம் ? என்ற கட்டுரையில் கீதையில் வரும் உபதேசமொன்று எவ்வாறு சைவசித்தாந்த சாரமாக அமைகின்றது என்பதனை விளக்குகின்ருர் (பக். 90-4).
சங்கரரின் அத்வைத வியாக்கியானத் துக்குக் களமாக அமைக்கப்பட்டு விளக்கங் கள் தரப்படும் பகவத்கீதையையே சைவ சித்தாந்த நோக்கில் விளங்கிக்கொள்ளும் திறன் மிக அசாதாரணமானதாகும்.
இது ஒரு முக்கியமான விடயமாகும். சைவசித்தாந்தம் பற்றிய வற்புறுத்துகை குறிப்பாகத் தமிழகத்தில், தமிழியக்கத்தின் ஒரு புடைப் பரிமாணமாக அமைந்ததாகும் ,
** திராவிடஇன உணர்வு, தமிழக வரலாற்றுத் தொன்மையுணர்வு ஆகியன காரணமாக வளர்ந்த அறி வியக்கம் தமிழர்க்கும் பாரம்பரிய இந்து மதத்துக்குமுள்ள உறவினை எடுத்து விளக்க முனைந்தபொழுது தமிழகத்து இந்துமதப் பாரம்பரியம், ஆரிய பிராமண வழிவரும் வைதிக நெறிப்பட்டதல்ல வென்றும், அது தமிழர்க்கே யுரித்தான தனி மத நெறி யொன்றினைச் சார்ந்த தென்றும், அந்த மத, மதச்சிந்தனை நெறியைச் சைவசித்தாந்தத்திற் காணலாமென்றும் வற்புறுத்திற்று.
தமிழ், தமிழ்நாட்டுத் தனித் துவம் பற்றிய அறிவு வாதத்துக்குச் சைவசித்தாந்தம் மிக முக்கியமான பண்பாட்டமிசமாக அமைந்தது.”*

۔--س۔ 58
சைவசித்தாந்தம் பற்றிய வற்புறுத்தல் களினூடே சம்ஸ்கிருதப் பண்பாட்டிலும் பார்க்கத் தமிழ் இலக்கியப் பண்பாட்டையே விதந்து போற்றும் ஒரு செல்நெறி காணப் படுவது மறைக்கப்படத்தக்கதன்று. இது தமிழகத்து நிலை. ஈழத்திலும் தமிழுணர் வுக்கும் சைவசித்தாந்தத்துக்கும் உறவு இல் லாமல் இருக்கவில்லையென்று கூறமுடியா தெனினும், சைவசித்தாந்தத்தை முற்று முழுதான தமிழ்ப் பண்பாட்டுப் பொருளா கக் கொள்ளும் வாதம் மேலோங்கி நிற்க வில்லை. குறிப்பாக நாவலர் காலத்துக்குப் பின்வந்த ஈழத்துச் சைவசித்தாந்திகள் சைவத்தின் வடமொழித் தொடர்பை வற் புறுத்தியே வந்துள்ளனர். பிராமண எதிர்ப்பு என்பது ஈழத்தில் சமூக முக்கியத்துவம் அற்ற ஒரு கருத்துநிலையாகும். சற்று மேற் சென்று நோக்கினுல் இங்கு க சிவாசி செந்தி நாதையர் போன்றேர், சைவசித்தாந்திசு ளாக விளங்கியுள்ளனர். அவர் "நீலகண்ட பாஷ்யத் தமிழ்மொழி பெயர்ப்பு’, ‘சிவ ஞானபோத வசனலங்கார தீபம் , * சைவ வேதாந்தம் ', ' தேவாரம் வேதசாரம் , * வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவப்படம் அதுபற்றிய விஞவிடை என்னும் நூல்களை எழுதியுள்ளார். *
ஈழத்துச் சைவசித்தாந்த மரபில் சம்ஸ் கிருத எதிர்ப்புணர்வு குன்றியே காணப் படினும், பண்டிதமணி அவர்களோ சைவ சித்தாந்தத்தை இந்தியப் பாரம்பரியத்தின் * பழுத்த பழமா'கவே காண்கின்றர்.
சைவசித்தாந்த மெய்யியற் கோட்பாட் டின் அச்சாணியாக இவர் கொள்வது அத் வைதம் என்னும் கருதுகோளையே. "இந்து மதத்தில் துவைதமும் அத்துவைதமுமே. ஆஞல் அத்துவைதத்துக்குப் பல வியாக்கி யானங்கள் உள.
கேவல அத்துவைத வாதிகள் அத்து வைதம் என்ற சொல்லுக்கு ஏகம் எனவும், *தத்துவம் அசி" என்ற மகா வாக்கியத்துக்கு *அதுவே நீ" எனவும் பொருள் காண்கின்ற
னர். சைவசித்தாந்திகள் இவற்றுக்கு * இரண்டுமல்ல ஒன்றுமல்ல ” எனவும் "நீ அதுவாக வேண்டும்? எனவும் பொருள்
காண்கின்றனர்.8

Page 214
பண்டிதமணி சைவசித்தாந்தத்தின் அச்சாணியான கொள்கையாக இந்த அத்து வைத விளக்கத்தையே கொண்டுள்ளார். * அத்வைத சிந்தனை " என்னும் நூலின் அச்சாணிக் கருத்தே இந்தக் கருத்துத்தான்.
"உயிருக்கு உய்தி, இருளிலிருந்து எடுக்கப்பட்டு மாசு தீர்ந்து, தன்னேடு அத்துவிதப்பட்டிருக்கும் இறையோடு தான் அத்துவிதப்படுதலாம். இந்த அத்துவிதம் சுத்தாத்துவிதம் எனப் படும், சுத்தம் - மாசின்மை.
*சிந்தனைக் களஞ்சியத்"தில் வரும் இறுதிக் கட்டுரையான பாரத தர்மம் " இந்த நோக்கினை அதன் பூரண பொலிவுட னும் எடுத்துக் கூடுகின்றது.
* வேதாதி சமஸ்த சாத்திரங்களின் முடிந்த முடிபு, அத்துவித ஞானம் தலைப்படுவதேயாம். தலைப்படுதற்கு வழி செய்வதே பாரதத்தின் உத்த மோத்தம தர்மம் ".
瓷 ※ 盗
* அத்துவிதம் இரண்டற்ற இரு பொருட் கூட்டரவு. ஒன்ருகாமல் இரண்டாகா மல் ஒன்றும் இரண்டும் இன்ருகாமல் இருப்பதொருநிலை என்கின்றது இருபா இருபஃது. அத்துவிதம் அத்வைதம் எனவும்படும்.
* தோடுடைய செவி பாடிய குழந் தையும் சிவஞான போதந் தந்த குழந்தையும் பாரதம் தந்த இரு மழலைச் செல்வங்கள். இரண்டாவது செல் வத்தை, பொய் கண்டார் காணுப் புனிதமெனும் அத்துவித மெய்கண் டார்" என்கின்ருர் தாயுமானவர். முடிந்த முடிபாகிய புனித அத்துவிதப் பெருமை இருந்தவாறு ?? (பக்கம் {51یسے 249
இந்தியப் பாரம்பரியப் பின்புலத்தில் வைத்து நோக்கும் இப்பெருநோக்குத் * தமிழ் பற்றியும் தொழிற்படுகின்றது.

59 .
தமிழை இந்தியப் பாரம்பரியத்தின் ஒரமிசமாக நோக்கும் தன்மை எல்லாத் தமிழறிஞரிடத்தும் காணப்படுவதில்லை. தமிழைத் தனித்த ஒரு பண்பாடாகக் காணும் தன்மையும், தமிழின் இந்தியத் தன்மையை வற்புறுத்தாத தன்மையுமே பெரு வழக்காகும். தமிழ் நாட்டினை இந்திய உபகண்டத்தின் ஒரங்கமாக நோக்கும் தமிழகச் சிந்தனையாளர்கள் கூட இந்தியப் பண்பாட்டு வட்டத்தினுள் தமிழின் தனித் துவத்தை வற்புறுத்தத் தயங்குவதில்லை.
உ-ம் : சுப்பிரமணிய பாரதியார் திரு. வி. க. அவர்களிலும் பார்க்க ஒரு படி மேலே சென்று பண்டிதமணி தமிழை இந்தியப் பண்பாடு என்னும் நாணயத்தின் இன்னுெரு புறமாகவே காணுகின்ருர்,
* ஆரியமும் தமிழும் தந்தையும் தாயும்.
தந்தை தாய்ப் பேண் '
(ஆரியமும் தமிழும், சிந்தனைக் கட்டுரை
மனச் சலனமற்றவனுக்கு அறிவு களங்கமின்றிப் பிரகாசிக்கும்; இரு வகைப் பிரபஞ்ச இரகசியமும் தெரியும்; பொருள் தெரிந்தவன் ஆகின்ருன். அறத்தின் வழிநின்று மனந் தூயணுய்ப் பொருள் தெரிந்தவன் பரிபூரண வைதி கன்; அறிவன்; ஆரியன்.
ஒருவன் அறத்தின் வழிநின்று, அறிய வேண்டியவைகள் அனைத்தும் அறிந்து ஆரியணுதல் மாத்திரம் அமையாது அறிந்த அறிவில் ஒட்டிக்கொள்ள வேண் டும். அந்த அறிவில் காதலாகிக் கசிய வேண்டும். கற்றல் வேறு, கற்ற வழி நிற்றல் வேறு, கற்றவழி நிற்கச் செய் வது கசிவு, அதற்கு அன்பு என்று பெயர். அறிவர்களாகிய ஆரியர்கள், சான் ருேர்கள். தாம் கண்ட அறிவைப் பயன் செய்வதற்கு அன்பைச் சாதிக்கின்ருர் கள். அன்புச் சாதகத்துக்குத் தமிழ் என்று பெயர். அன்பை எழு திணை செய்து அறிவுலகமாகிய பொருளையும் அதன் ஆதாரமாகிய அறத்தையும் அன்பின் தளமாக்கிச் சாதகஞ்செய்ததே தமிழ். அறிவன் ஆன ஆரியன், அன்பன்

Page 215
- !
ஆதற்குத் தமிழன் ஆகின்றன். உயிர் களே வழிப்படுத்துங் கடவுள் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்.
தமிழ் அன்பு; அது ஆரியமாகிய அறிவின் கசிவு.
சிந்தனைக்க:ஞ்சியம் (திருமுறையும் நமது நிலையும்) பக்கம் 187-193.
இங்கு 'ஆரியம்", "தமிழ்" என்பன கருதுகோள்களாக அமையும் தன்மையைக் காணலாம். இப் பகுதியில் வரும் “அன்டை எழுதிணை செய்து..? எனவரும் பகுதியின் விரிவாகத்தான் பின்னர் வரும் " அன்பினைந் திணை " (1983) அமைகின்றது.
அத்துடன் ஆரியம், தமிழ் என்னும் இரண்டையுமே சைவசித்தாந்தத்து அத்து விதக் கோட்பாட்டுக்குள் வைத்து நோக்கும் ஒரு தன்மையும் இதற்குட் புலப்படுகின்றது.
இந் நோக்கு அன்பினைந்திணை முன் னுரையிலே மிகத் தெளிவாக வருகின்றது.
* அறிவு விருத்தி, அன்பின் விருத்தி, இரண்டன் சம்பந்தம், அகத்தியரின் தமிழாராய்ச்சி, தமிழின் உயிர்நாடி பொருளிலக்கணம், அன்பினைந்திணைக் களவியலின் தோற்றரவு, அகம் புறம், இரண்டன் தொடர்பு, கைக்கிளைப் புறம் ப? டாண்டிணை, பெருந்திணைப் புறம் காஞ்சி, கைக்கிளை (ஒருமையின் சிறுமை), ஐந்திணை இருமையின் ஒருமை, பெருந்திணை ஒருமையின் பெருமை.
*எழு திணையும் ஆத்ம பரமாத்ம சம்பந்தம்.
அச் சம்பந்தமே துவித அத்துவித ஏகம்";
அன்பினைந்திணை-முன்னுரைக்கு முன்னுரை (4-4-1982)
இங்கு ஏழு திணையும் சைவசித்தாந்தத்து அத்துவிதத்தின் விளக்கமாகவே அவருக்குத் தோன்றுகின்றது.
தமிழ் இலக்கியத்தை இந்தியப் பண் பாட்டு வட்டத்தினுள் வைத்துப் பார்க்கும் தன்மை மாத்திரமல்லாது, அன்பினைந்திணை யைச் சைவசித்தாந்தக் கொள்கையின் இலக் கிய நிலை விளக்கமாகக் கொள்ளும் தன்மை யும் மேற் கூறியவற்ருல் நன்கு புலணு கின்றது.

-س. 60
தமிழ்ப் புறத் திணை  ையப் பூர்வ மீமாஞ்சை என வாதிடும் சிந்தனைக்களஞ் சியக் கட்டுரை அன்பினைந்திணை"யின் அது பந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளமையை நோக் கல் வேண்டும்.
* புறம் பூர்வ மீமாஞ்சை போன்றது. அகம் உத்தர மீமாஞ்சை போன்றது. தொடர்பும் அவ்வாறே ?? அகத்துக்குப் புறம் ஆதாரம். (இவ்வாறு கூறுகின்ற ஒருவர் “ ஈழத்துத் தமிழிலக்கியத்திற்காக வரிந்து கட்டி நின்று போராடுபவர், அவர் தமிழக மேன்மையைச் சாடுபவர்' என்று கருதப்படுவது பொருத்த மாகிறதோ என்று நோக்குதல் இவ்விடத்து அவசியமாகின்றது.
இக்கட்டத்தில் ‘இலக்கிய வழி முன்னு: ரைக் குறிப்பு ஒன்று மிக முக்கியமாகின்றது. ஈழமண்டலம் தாய்நாடாகிய தமிழ் நாட்டின் ஒரு சிறு துளி. தமிழ் நாட்டின் இலக்கிய வளம் மகா சமுத்திரம்.
ஈழ மண்டலத் திலக்கியவழி அந்த மகா சமுத்திரத்திற் சென்று சேராதாயின் நின்று வற்றிவிடும். ஆகையிஞலே இரட் டையர் காளமேகம் புகழேந்தி என்று தொடங்கிச் சிவகாமி சரிதைக்கு இந்து, பின் மேலே எழுந்து கம்பரிலே சற்று நேரம் தரித்துத் தி ருவ ள் ஞ வள ர வணங்கி நல்வாழ்வு பெற்றுக் கற்றறிந் தோரேத்துங் கலியைத் தீண்டி முற்று கின்றது ? இலக்கியவழி" எனப் பெயரிய இப்புத்தகம் ”
- இலக்கியவழி-முன்னுரை XV!!--
1964
தமிழகத்து இலக்கிய வரலாற்றுச் சிந் தனையோட்டம் ஈழத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகளின் முக்கியத்துவத்தைப் புறக் கணிக்கும் பொழுது , மறுதலிக்கும் பொழு துமே அவர் அச் சிந்தனைகட்குப் பொறுப் பானவர்களைச் சாடுகின்ருர் என்பது தெரிய வரும் , இதுவே டாக்டர் உ. வே. சாமி நாதையருடன் அவருக்குள்ள முரண்ப" டாகும். இந்த முரண்பாட்டின் ஊற்று ஆறு முக நா வல ரின் பணி மதிப்பீடு பற்றிய கருத்து வேறுபாடு ஆகும். பின்னர்

Page 216
-
இலக்கியப் பதிப்புத்துறையில் சி. வை. தாமோதரம்பிள்ளையின் முக்கியத்துவத்தை மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட, அந்த விடயத்தில் முக்கியமானவரான சாமிநாதையர் மீது முழுக் கோபமும் திரும்பு வது ஆச்சரியத்தைத் தருவதன்று.
அப் பிரச்சினையில் பண்டிதமணி எடுக்கும் நிலைப்பாட்டில், தனது தோற்றத்துக்கு ஊற்றுக்காலாகவிருக்கும் ஒர் இலக்கியச் செல்நெறியினை ஆதரித்துநின்று அதன் முக்கியத்துவத்தினை எதிர்ப்போருடன் எதிர் வழக்காடும் தன்மை காணப்படுகின்றது.
ஆனல் அது ஒரு வாத - விவாத மாகவோ, வசையெழுத்து விவகாரமாகவோ மாறவில்லை என்பதை ம ன ங் கொளல் வேண்டும்.
பண் டி த மணி யின் வாழ்க்கைக் காலத்தின்பொழுது இரு தடவைகள் ஆறுமுகநாவலரின் பணிகளுக்குச் சமூக விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. முதலாவது 1954இல் தோன்றிய ஈழத்திலக்கியக் கோஷ காலத்தின் பொழுது ; பின்னர் 1979இல் நாவலர் நூற்ருண்டு விழாக்களின் பொழுது.
சொற்பிரபஞ்சச் சிந்தனையிலிருப்பவர், புறப் பிரபஞ்சத்தின் தேவைகள் உந்துதல் களுக்குப் பதிற்குறிப்புத் தெரிவிக்க வேண்டி வந்த பொழுது ஏற்பட்ட நடவடிக்கைகள் அவை. அவற்றின் முக்கியத்துவத்தைப் பின் னர்ப் பார்ப்போம். இக் கட்டத்தில் வற்புறுத் தப்படவேண்டிய உண்மை, பண்டிதமணி தமிழைக் கூறுசெய்து நோக்கவில்லை; அதனை அவர் இந்தியப் பண்பாட்டின் ஒரங்கமாகவே கண்டார் என்பதேயாகும். அதுவும் அவர் சைவசித்தாந்தக் கண்கொண்டு இந்தியப் பண்பாட்டை நோக்கும்பொழுது ஆரியமும் தமிழும் அவருக்கு அத்துவித நிலையின் செயல் விளக்க நிலை இணைவாகவே காணப் பட்டன.
2

حسب 1 (
IV
பண்டிதமணியின் இந்த நோக்குக்கு வேண்டிய தரவு, நிரூபணம் ஆதியன இலக்கி யத்தின் வழியாகவே வந்தன. பண்டிதமணி யின் ஆளுமைப் பலம் அவரது இலக்கிய ரசனைச் சிறப்பேயாகும். பண்டிதமணியின் மெய்யியற் சிந்தனை வளம் பூரணமாகப் பொலிவு பெருத காலகட்டத்தில் (1950-86 களில்) அவருடைய இலக்கிய முக்கியத்துவம் அவரது இலக்கியரசனை உணர்வுகொண்டே வற்புறுத்தப்பட்டது.?
பண்டிதமணியின் புலமை மையம் மெய் யியல் இலக்கியச் சிந்தனை வட்டத்தினுள் நிற்பதற்கு முக்கிய காரணியாக அமைவது இலக்கிய அழகியல் பற்றிய அவர் கருத்தே யாகும்.
பண்டிதமணியின் கருத்துப்படி இலக்கி யம் என்பது பின்வரும் முறையிலே தோன்று கின்றது:
இலக்கியங்களுக்கும் கவிதைகளுக்கும் உரிப்பொருளே உயிரான பொருள்; சிறந்த பொருள். இந்த உரிப் பொருளை எடுத்து வளர்க்கின்ற பொருள் கருப் பொருள். உரிக்குக் கரு செவிலித்தாய். முதற் பொருள் உரிக்குத் தந்தையும் தாயுமாய் இருக்கும்.
முதற்பொருள் காலமும் இ. மும் என இருவகைப்படும். ஒரு விசேட காலத்திலே பொருத்தமான ஓர் இடத்திலே மாசு நீங்கிய புலமை உள்ளத்திலே (அ) ஒரு நல்ல இனிய உணர்ச்சி உண்டாக
லாம். அந்த மறுவற்ற உணர்ச்சியே உரிப்பொருள். அது பேணற்பாலது, உருவம் இல்லாதது. புலவன், உரு வம் அற்றதும் நல்லதும் இனியதும் ஆன அந்த உணர்ச்சியைக் கருல் கட்டிக் (ஆ) கருப்பொருள்கள் மூலம் புலப்படுத்த
முயல்கின்றன்.

Page 217
(Rs)
- 16
குறுந்தொகையில் வரும் “parf தபிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" என்ற பாடலை உதாரணமாய்க்
கொண்டு விளக்க முனைகின்ருர், !
10 சு மறு வற்றதும் கருத்தை ஒன்றுசெய்வதுமான ஆதரவு எப்படி யிருக்கும் என்று ஒரு புலவன் சிந்திக்கின்றன். தனிக் கவிதைகளின் தொகுதி 'குறுந் தொகை" என்ற சங்க இலக்கியம். அந்த இலக்கியத்திலேதான் இந்தச் சிந்தனை வருகின்றது. பரிசுத்த ஆதரவு எப்படி இருக்கும் என்பது தான் அந்தச் சிந்தனை.
ஒருநாள் ஏற்ற ஓர் இடத் தி ல் புலவனுடைய சிந்தனை முற்றுப்பெறு கின்றது. அதனுல் புலவனுக்கு மெய்ப் யாடு பிறக்கின்றது. முற்றுப்பெற்ற சிந் தனயான அந்த நல்ல உணர்ச்சியைக் கருக்கட்டப் புலவன் முயல்கின்றன். அடுத்துப் பாடலை அறிமுகப் படுத்தித் தொடர்ந்து அந்தப் பாடலின் பாடத்தைத் தருகின்றர். * முனிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளே யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் ருெண்ணுதல் முகனே."
S S S S S S S S S S S S S S SSLS SSSS CL S S 0L 0 SL LL 0 0 0L CS S L S S L 0 S S L S0 SL SS LSL S 0 S L S SL 0 0 Y
இந்தப் பாடல் கருப்பொருட் செய்திகள் பொதிந்த ஒர் உடம்பு. ஆணுல்,
அதில் கண்ணுக்குப் புலப் படாத ஒர் உயிர் துடிக்கின்றது. அந்த உயிர் குழம்பிலே நீந்தி, உடைநெகிழ்விலே வீறி இனிது என்கின்ற வார்த்தையிலே ஒளி விடுகின்றது. அது சத்திர சிகிச் சைக்கு அகப்படாதது. அதுவே சுவைத்தற்குரியது. அதற்கு உரி என்று பெயர்.

உரிதான் இலக்கியத்தின் உயிர். இலக்கியத்தின் உயிரும் உடலும் - இலக்கியவழி பக். 142 - 154) இது பண்டிதமணியின் இலக்கியக் கொள்கை,
1. உரிப்பொருள் என்பது கவிதையின்
eš95T4; L DATGEST D Gorrijt.
s
புலவன் தன் சிந்தனை வழியாகத் தொழிற்பட்டு ஒரு உணர்ச்சியைச் சித்திரிக்கத் தீர்மா னிக்கின்றன்.
3. அந்தச் சித்திரிப்பினூடே அதன் 'உயிர் துடிக்கும். அது வார்த்தை களினூடே வரும். ஆஞல் அதனைப் பிரித்துக்காட்ட முடியாது. (சத்திர சிகிச்சையால் அந்த உயிர்த் துடிப்.ை அறிய முடியாது).
இக் கருத்தானது தொல்காப்பியத்தில் வரும் உரிப்பொருள் என்பதிலிருந்து பெரி தும் மாறுபட்டது. அங்கு அது பாடலுக்கு உரிய பொருள். பண்டிதமணியின் வியாக் கியானத்தில் வரும் ' புலவன் சிந்தனை " பற்றி அங்கு எதுவும் வெளிப்படையாகப் பேசப்படவில்லை.
தொல்காப்பியர் கூறும் உரியைப் பண் டிதமணி எவ்வாறு விளக்கஞ் செய்துகொள் கின்ருர் என்பது ஒருபுறமிருக்க, இக் கட் டத்தில், பண்டிதமணி இலக்கியப்பாடம் literary text ) spoirisai) GT6i/Gajali)6Opá காண முனைகின்றர் என்பதை அறிய முனை வோம்:
சிந்தனை -> உணர்ச்சி --> பாடல்.
எனவே, பாடலை ஆராய்வதென்பது உணர்ச்சியை அறிவது; அந்த உணர்ச்சிக்கு மையமாக (அன்றேல் கருவாக) உள்ள சிந் தனையை அறிவது ஆகும். ஆனல், இந்தச் Fந்தனை வார்த்தைகளுக்குள் அடைபட்டுக் கிடப்பது மாத்திரமன்று. அது உய்த்துணரப் படுவதுமாகும்.
பண்டிதமணிக்குச் “சிந்தனைகள்’ என்பன வெறுமனே கருதுகோள்களாக மாத்திரம் விற்காமல் உணர்ச்சியைப் புலப்படுத்தும் மையங்களாகவும் காணப்படுகின்றன.

Page 218
-
அவர் பெளதீக அதீதக் கவிதைகளாக ( metaphysical poetry ) தாயுமானவர் பாடல்கள் போன்றவற்றில் இந்த "உணர்ச்சிசிந்தனை” மையத்தையே தேடிக் கண்டு கொள்கின்றர். சைவசித்தாந்த சாஸ்திரங் களையும் இவ்வாறே நோக்குகின்றர். சைவ சித்தாந்தத்தின் சிந்தனைத்தளமான தேவார திருவாசகத்தையும் இந்தக் கண்கொண்டே நோக்குகின்ருர்,
அவர் சைவசித்தாந்தச் சிந்தனையை அச் சிந்தனை வரும் பாடலின் (இலக்கியத்தின்) இலக்கியச்சுவை வழியாக உள்வாங்கிக்கொள் கிருர். இந்த உள்வாங்கலானது ஒரே வே ளை யி ல் அறிவு நிலைப்பட்டதாகவும் உணர்ச்சி நிலைப்பட்டத:கவும் உள்ளது. இதில், புலமைத்துவமும் உணர்ச்சியும் இணைந்து தொழிற்படுகின்றன.
இதஞல் அவரது விளக்கம் ஒரே வேளை யில் அறிவுநிலைப்பட்டதாகவும், உணர்ச்சி நிலைப்பட்டதாகவும் அமைந்துள்ளது. இத ஞல், வன்மையுள்ள, மெய்ம்மை உறைப் புடன் (conviction) அந்த விளக்கம் வெளி வருகின்றது.
::
இந்நிலையில் முன்னர் எடுத்துக் காட்ட யுடன் விளக்கப்படலாம்.
இலக்கிய
நுண்ணுணர்வு வளமுடைய மெய்யியற்
tuiting,65) Lulu உள்ளம்சித்தம்.
SSSSLSSSSSSLSCSLSLSSLLLSSSLLLSLLLLLLkkkSL LSL
இவையிரண்டும் ஒன்று மற் ற தை ரஸ்பரம் தாக்கிக்கொள்வதிலுமே பண்டித

-س. 53
இந்த உறைப்பின் பலம் பரபக்கத் தினரை நோக்கியது அன்று. இது சுபக்கத் தினருக்கு எடுத்துக் கூறப்படும் ' உறைப்பு முறைமை " போகும்.
இலக்கியம் பற்றிய இந்த அழகியல் உலரn வுத் தொழிற்பாடுதான் இவரது மொழிதடைக் குக் காரணமாகின்றது.
இலக்கியப் பாடத்தில் வெளிப்படையாகச் சுட்டப்பெறும் கருத்துக்கள்கொண்டும் அட பாடத்தின் உள்ளீடாக நிற்கும் அதன் 'உரி பற்றிய உய்த்துணர்வு கொண்டும் அவர் பாடத்தை விளங்கிக்கொள்கின்றர்.
இத்தகைய பாடவிளக்கம்தான் அவரது சைவசித்தாந்த அறிவையும் வியாக்கியானத் தையும் செழுமைப்படுத்துகின்றது. லிசவ சித்தாந்த அறிவு இலக்கியப் பாடத்தின் உரியை (உயிரை)த் தெளிவுபடுத்த, இலக்கியச் சுலை} சைவசித்தாந்தத்தினுள் வார்த்தைகளுக்கு அகப்படாது நிற்பனவான உணர்ச்சிகளேயும், சிந்தனைகளையும் சுட்டுகின்றது. பண்டிதமணி யின் முதிர்வுக் காலத்தில் இந்த இயங்கியல் நிலையே அவரது அறிவின் முழுமையைத் தொழிற்படுத்தி நின்றது,
安 裘
ப்பெற்ற வரைபட விளக்கம் அர்த்த முழுமை
லக்கியங்கள்/பாடங்களின் உயிர்ப்பினை னரும் அழகறி சுவை உணர்வு.
W |
* சுத்தாத்துவிதமெனப் போற்றப்படும் சைவசித்தாந்த அடிப்படையில் சகல வற்றையும் பார்க்கும் ஒரு நோக்கு.
நோக்கிச் செல்வதிலும் ஒன்றை யொனது மணியின் புலமை மையம் அமைந்தது.

Page 219
V பண்டிதமணியின் மொழிநடையை விளங்கிக்கொள்வதற்கும் இதுவே திறவுகோ 6-7(5th.
இனி (இலக்கியத்தின்) தூல உடலை நோக்குவோம். அது சொல், சந்தம், ஓசை என்ற மூன்று வகை :ாக மேற் குறிக்கப்பட்டது.
சொற்கள் கருத்துக்களின் வெளிப்பாடுகள்; கருத்தின் கனிவுகள்; குணங்கள் . அகத்தின் அழகு முகத்திற் தெரிவதுபோலப் புலவ னுடைய புலமையிற் கனிந்த கருத்தி னழகு அவன் சொற்களிற் புலணு கும். உயரிய கருத்துக்களைப் பிரகாசிக் கின்ற சொற்களும் அக் கருத்து விசே டத்தால் தாமும் அவ்வாறு பிரகாசிக் கின்றன.
SS S SqS S LSLS S LSL LSL S0 SL SL S SL S S S S S LSL SL SL SL SL L SL SL S S0 L S SL S S S S கருத்துக் களின் எழுச்சிக்குத் தக்கவாறு சந்தங்கள் மாறியமையும். சந்தங்கள் போலவே கருத்துக் கேற்றவாறு ஓசைகளும் வேறுபடும்.
கருத்துக்களுக்குச் சந்தங்கள் ஒசை களேயன்றி, சந்தங்கள் ஓசைகளுக் குக் கருத்துக்கள் அல்ல என்பது ஊன்றிச் சிந்திக்கற்பாலது . (இலக்கியத்தின் உயிரும் உடலும் இலக் சியவழி பக். 153 - 154).
பண்டிதமணியின் மொழிநடையின் "இரகசியம்? இப்பொழுது புலணுகத் தொடங் குகின்றது. அவரது மொழிநடை “கருத்துப் பிரகாசமான” சொற்களைக் கொண்டது. இக் கருத்துப் பிரகாசம் அச் சொற்களின் (முந் தைய) இலக்கியப் பயன்பாட்டிலிருந்து அறியப்படுவது. சொற்களுக்கான கருத்துக் களேத் தரப்பட்டிருக்கும் பாடத்தின் (text) நிலைநின்று மாத்திரமல்லாது, அவற்றின் முந் தைய கையாளுகைகளின் நிலைவழியாகவும் வலுக்காட்டி விடுகின்ருர்,
இதனுல் பண்டிதமணியின் நடையில் ஒர் இருநிலைப்பாடு நிலவுவதனை அவதானிக்

64 -
கலாம். ஒன்று நாம் வாசிக்கும் பகுதி (தரப்பட்டுள்ளது); அதன் சொற்செட்டு. மற்றது இந்தச் சொற்செட்டின் முந்தைய இலக்கியப் பிரயோகம். தம்புரா ஸ்ருதிவழி நின்று பாடகன் பாடுவது போன்றது இது. பண்டிதமணி தனது எழுத்தில் இலக்கியக் கனதியுள்ள சொற்களைப் பயன்படுத்துகின் (tyrf; தேவைக்கேற்ப வார்த்தைகளின் நீளத்தை (அல்லது நீளக்குறைவை) அமைத் துக்கொள்கிருர், சொற் பரிச்சயம் காரண மாக அவற்றின் முந்தைய பயன்பாடு எமது காதுகளில் தம்புரா ஸ்ருதி என ஒலித்துக் கொண்டு நிற்கின்றது. பண்டிதமணியின் வார்த்தைகளின் நீட்சி, குறுக்கத்தினூடே எமக்கு அந்தச் (சொற்களின்) "பிரகாசங் கள்? ஸ்ருதி ஒலிபோலக் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
இது பண்டிதமணியின் சிந்தனையோட் டத்துடன் இணைந்த ஒன்ருகும். ஒரு பொரு ளுக்கு, அதற்குத் தரப்படும் வெளிப்புலக் கருத்துக்கு அப்டாலுள்ள ஒரு சூட்சுமக் கருத் தையும் அவர் சிந்தித்துக்கொள்கிருர்,
இது ஒரு நிலையிலிருந்து இன்னுெரு நிலைக்குப் பாய்வதாகும். பண்டிதமணியின் நடையில் இச் சிந்தனைப் பாய்ச்சல் முக்கிய மான அமிசமாகும். இந்தச் சிந்தனைப் பாய்ச் சல் அவர் கையாளுஞ் சொல்லின் முந்திய இலக்கியக் கையாளுகைகள் மூலம் வருவ தாகும். வாக்கியங்களின் அளவு சிந்தனை யின் பாய்ச்சலுக்கு உதவுவதாக அமையும். முந்தைய இலக்கியப் பரிச்சயமுள்ளவர்களே பண்டிதமணியினது மொழி நடை பின் பிரகாசத்தை உணர்ந்து கொள்வர்.
இவ்வேளையில், பண்டிதமணி ஒரு பொருளை “விளங்கிக்கொள்ளும்பொழுது ஒரே சமயத்தில் அதனை அறிவு பூர்வமாக வும் (அத்துடன்) உணர்ச்சி பூர்வமாகவும் உள் வாங்கிக் கொள்கின் முர் என்ற உண்மையை மீண்டும் வற்புறுத்த வேண்டி யுள்ளது. ஏனெனில் அவரது மொழி நடை யிலும் ஒரே வேளையில் அறிவுத் தொழிற் பாடும், உணர்வுத் தொழிற்பாடும் இணைந்து நிற்பதைக் காணலாம்.

Page 220
- 16
இலக்கியத்திலிருந்து மெய்யியற் சிந்தனைக்குப் பாய்தலும் மெய்யியற் சிந்தனையில் நின்றுகொண்டு அந்நிலை யின் உணர்ச்சிப் பரிமாணங்களைச் சுட்டுவதும் இவரது சிந்தனைமுறைமை யின் தன்மையாகும். இவரது மொழி நடை அச் சிந்தனைக்கேற்ற வாகன மாக அமைகின்றது.
உணர்வும் அறிவும் இணைந்த நிலையில் இந்த நடை தோன்றும். இது பண்டிதமணியின் இலக்கிய ஆளுமையின் பிரதிபலிப்பாகும். இவ்வாறு தத்தம் சிந்தனைத் தன்மைக் கேற்பத் தமக்கெனப் பிரித்தறியக்கூடியதான ஆளுமையை வளர்த்தெடுத்துக்கொண்டு, அந்த ஆளுமையினை வெளிக்கொணரும் இலக் கிய நடையினை வகுத்துக்கொண்ட இரு சிந் தனையாளரைத் தற்கால தமிழிலக்கியப் பரப்பிலே காணலாம். ஒருவர் திரு. வி. க. எனப்படும் திருவாரூர் வி. கலியாணசுந்தர முதலியார். மற்றவர் ராஜாஜி எனப்படும் சேலம் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவர். இவர்கள் இருவரது நடைகளும் தமிழிற் சிந்தனை வெளிப்பாட்டு முறைமைகள் பற்றி ஆராயப்படும்பொழுது முக்கிய இடம் பெறுவனவாகும்.
VI
பண்டிதமணியின் இந்த இலக்கிய ஆளுமை எவ்வாறு உருவாகிற்று என்பது அடுத்த முக்கிய விஞவாகின்றது.
இவர் தம்மைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, ஒரிடத்தில் (ஆறுமுகநாவலர் முன்னுரையில்)"நாவலர்தருமத்தில் வளர்ந்த எனக்கு" எனக் கூறியுள்ளார். பண்டிதமணி இலக்கிய ஆர்வலராக உருவாகிய காலத்தில் (இருபதாம் நூற்றண்டின் முதல் மூன்று தசாப்தங்களில்) ஈழத்தில் ஆறுமுகநாவல ரால் தோற்றுவிக்கப் பெற்ற சமூக - மத - இலக்கிய இயக்கம் ஒரு தரும நெறி யாகவே ஸ்தாபிதமாயிருந்தது. 1879க்குப் பின்னர் வந்த ஐம்பது வருட காலத்தினுள் அது, அவ்வழி வந்த சில முக்கியஸ்தர்களின் பங்களிப்புக்களை ஒன்றிணைத்துக்கொண்டிருந்
垒滔·

5 -
அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படவேண் டியவர்களுள் முக்கியமானுேர் பொன்னம் பலம் இராமநாதன், பொன்னம்பலபிள்ளை, குமாரசுவாமிப் புலவர் முதலானேர் ஆவர்.
பொன்னம்பலம் இராமநாதன் அவர் கள், நாவலர் தருமம், பிரித்தானிய ஏகாதி பத்திய ஆட்சியின் ஆசிகளுடன் கல்வித் துறையிலும், சமூக அரசியல் துறையிலும் தொழிற்படுவதற்கான சமூக அரசியற் சூழலை ஏற்படுத்தினர்.ஆங்கிலக் கல்வியும் சைவமும் இணைந்து செல்லும் பாடசாலை முறைமை Guiróiro (The system of denominational Schools) உருவாகிற்று. இது யாழ்ப்பாணச் சமூகத்தின் உயர் மட்டச் சமூக பண்பாட் டுத் தேவைகளைப் பூர்த்திசெய்வதாக அமைந் தது. இந்தப் பாதுகாப்புறுதி கிடைக்கப் பெற்ற ஒரு சமூகச் சூழலில் நாவலர் பரம் பரையின் இன்னெரு செல்நெறியினர் தமது பணியினை எதிர்ப்புக்கள் இடர்ப்பாடுக ளின்றிச் செய்தனர். சைவத்தையும் தமிழையும் இணைத்துப் பிற மத பண்பாட் டுத் தொடர்பை ஒதுக்கி, மதத்தை இலக்கிய மாகவும் இலக்கியத்தை மதமாகவும் கொள் கின்ற நாவலரியக்கத்தின் வாரிசுகளாக வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை, இயற்றமிழ்ப் போதகாசிரியர் வயித்தியலிங் கம்பிள்ளை, சுன்னுகம் குமாரசுவாமிப்புலவர் முதலியோர் விளங்குகின்றனர் எனலாம்.19
பண்டிதமணியின் வாழ்க்கை இந்த இரு அமிசங்களையும் உள்ளடக்கியது எனலாம். (அதாவது மதத்தை இலக்கியமாகவும் இலக் கியத்தை மதமாகவும் கருதலை) பண்டித மணியின் வாழ்க்கைக்கு வேண்டிய பொரு ளாதாரப் பாதுகாப்பு - அதாவது உத்தியோ கம் - மதப் பாடசாலை முறைமையின் சிகர மாக அமைந்த மதப் பாடசாலைகளுக்கான மத ஆசிரிய பயிற்சிக் கலாசாலையினுள்ளே - திருநெல்வேலிச் சைவ ஆசிரிய கலாசாலையி னுள்ளே - கிட்டுகின்றது. அடுத்து, பண்டிதமணியவர்கள், ஆறுமுக நாவலரின் நேரடிக் கவனத்துக்கு ஆட்பட்டவரும், சி. வை. தாமோதரம்பிள்ளை, வித்துவ SRGögsruD6oof) பொன்னம்பலபிள்ளையுடன் தொடர்பு பூண்டிருந்தவருமான, சுன்னகம்

Page 221
- 1
அ. குமாரசுவாமிப் புலவரின் மாணுக்க ராவர். இந்தப் புலமைப் பரம்பரை சமூகஅரசியற் பிரக்ஞையின்றித் தொழிற்பட்ட ஒரு கல்விக் குழாமாகும். ஆயினும் இது ஆறுமுகநாவலரின் மதத்தையும் இலக்கியத் தையும் தூய்மை வாதத்துக்குரிய ஒறுப்புணர் வுடன் நோக்கியது போன்று நோக்கவில்லை. நாவலர் தமது வாழ்க்கைக் காலத்தில் தமது ஆன்மீக வட்டத்தினுள் ஏற்காதிருந்த பொன் னம்பலபிள்ளை, நாவலர் மறைந்த பின்னர் நாவலர் பரம்பரையின் இலக்கியச் செழு 0 DS) j வளம்படுத்துபவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். குமாரசுவாமிப்புலவர் வடமொழிப் பயிற்சியில் ஆழமான தேர்ச்சி பெற்றவராவர்.
பண்டிதமணியின் இலக்கிய ஆளுமையில் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை யினதும், பண்டிதமணியின் ஆசிரியரான குமாரசுவாமிப் புலவரினதும் ஆதிக்கம் கணிசமானதாகும். பண்டிதமணியின் இலக்கிய ரசனை உணர்வின் 'ரிஷிமூலங்களில் வித்துவசிரோமணி மிக மிக முக்கியமானவர். நாவலர் பரம்பரையினரால் மத நிலைப்பாடு காரணமாகப் பெரிதும் விதந்தோதப்பெருத கம்பராமாயணத்தை இவர்கள் இருவரும் நுணுக்கமாக இரசித்தவர்கள். பண்டிதமணி யின் சைவமும் தமிழும் வட்டத்தினுள், கம்ப னின் வைஷ்ணவப்பொதுமையும் இடம்பெறு கின்றது.
குமாரசுவாமிப்புலவர் வழியாக வந்த வடமொழி இலக்கிய அறிவு, பண்டிதமணி யின் இலக்கிய சிருஷ்டியைப் பெரிதும் அகட் டிற்று என்றே கூறவேண்டும்: தமிழை இந் தியப் பண்பாட்டின் வட்டத்தினுள் வைத்து நோக்கும் முறைமையின் வளர்ச்சிக்கு இந்தப் புலமைச் செல்வாக்கு முக்கியமானதென Gapirib. 11
பண்டிதமணியின் இலக்கிய ஆளுமை யின் மிக முக்கிய அமிசம் குமாரசுவாமிப் புலவர் வழியாக வரும் நாவலர் உரைப் பாரம்பரியத்தின் பிற்கால நெகிழ்ச்சி மாத் திரமன்று. பண்டிதமணி கணபதிப்பிள்ளைக் கிருந்த நவீன தமிழிலக்கியப் பரிச்சயமும் ஈடுபாடும் அவரது நோக்கு விஸ்தீரணத் துக்கும் மொழிநடைச் சிறப்புக்கும் உதவின.

66 -
1920களில் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் நவீன தமிழிலக்கியத்தில் நிறைந்த ஈடுபாடு காட்டினுர் என்பதைக் காலஞ் சென்ற திரு. ச. அம்பிகைபாகன் இக் கட் டுரை ஆசிரியரிடத்து எடுத்துக் கூறியுள்ளார். பண்டிதமணியின் நவீன இலக்கியப் பயிற்சி பற்றிய உண்மைகள் பூரணமாக வெளிக்கொணரப்படவேண்டியது அவசிய LDiTestb. 12 -
பண்டிதமணியின் வாழ்க்கையின் பிற் கூற்றில் இது வற்புறுத்தப் படாத ஒன்ருகப் போய்விட்டது. ஆனல் அவரது எழுத்துக் களில் சிறுகதைக்குரிய "கட்புலநடை யொன்று தவழ்ந்து நிற்பதை எவரும் மறுக்க முடியாது. சிந்தனைக் களஞ்சியத்தில் வரும் * கலியுகம் 1ஆந் திகதி’ என்பது அழகான ஒரு சிறு கதையாகும்.
பண்டிதமணியின் இலக்கிய ரசனையின் ஊற்றுக் கால்கள் இப்பொழுது தெளிவாகின்
{Oଞf.
அவரது மெய்யியற் சிந்தனை வலிமை யும் வளமும் திரு. பொ. கைலாசபதியுட னிருந்த தொடர்பு காரணமாகவே வந்தது என்பது பண்டிதமணியினது எழுத்துக்களி லிருந்தே நன்கு தெரியவருகின்றது. "சிந்த னைக் களஞ்சியம்", *அத்வைத சிந்தனை" ஆகிய நூல்களில் வரும் கட்டுரைகள் இவ் வுண்மையை நிலைநாட்டுகின்றன.19
உப அதிபர் பொ. கைலாசபதியுடஞன தொடர்பு பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை யின் வாழ்க்கையில் ஒரு திருப்பு மையமாக அமைந்ததெனலாம். கைலாசபதியுடஞன தொடர்பே இவரிடத்து,
(i) வரன் முறையான மெய்யியல் ஈடு
шт{5) (ii) LD50pGGT GOT Lð (mysticism) Libabu u
சிரத்தை (ii) ஆங்கில இலக்கிய உசாவற் சிரத்தை ஆகிய பண்புகளை வளர்த்தது எனலாம்.
1930களில் இலக்கிய ரசனையாளராக மாத்திரம் மிளிர்ந்த இவர், படிப்படியாக இலக்கிய சிந்தனையாளராக (Literary thinker) மாறுவதற்குப் பொ. கைலாசபதி காரணமாக இருந்தார் என்பது மிகைப் பட்ட கூற்ருகாது.

Page 222
-
சைவசித்தாந்தத்தின் அச்சாணியாகச் சுத்தாத்துவிதத்தைக் கொள்வதற்கான ஊற்றுக்கால் திரு. கி. வகழ்மண ஐயருடன் இவருக்கிருந்த தொடர்பும் எனலாம். லக்ஷ் மண ஐயர் தமது ‘இந்திய தத்துவஞானம்” நூலை முதன்முதலில் வானெலிப் பேச்சாக நிகழ்த்திய காலத்திருந்தே சைவ சித்தாந் தத்தின் அச்சாணிப் பண்பு பற்றி இருவரும் கருத்துப் பரிமாறிக்கொண்டு வந்தனர்.
இவை பண்டிதமணியின் இலக்கிய ஆளுமையின் பரிணமிப்புக்கான காரணிகள். அவரது இலக்கிய ஆளுமையின் தளம் அவ ரது ஆசிரியத் தொழிலே-இந்த ஆசிரியத் தொழிற் பண்புதான் அவரது மொழிநடை யின் முக்கிய பண்பு ஒன்றினை-பிரகாசமான சொற்களைப் பயன்படுத்தும்பொழுது அதன் பொருளையும் கூறிச் செல்லுதல் - உண் டாக்குகின்றது. இலக்கிய ரசனையுணர்வு இலக்கியச் செம்மைகளை ஆச்சரியத்துடன் எடுத்துக் கூற ஆசிரியச் செம்மை அவற்றுக் கான அமைதியை (. இருந்தவாறு என் பது போன்று வருவன) எடுத்துக் கூறிச் செல் கின்றதெனலாம்.
பண்டிதமணியின் இ லக்கிய ஆளுமை பற்றி ஆராயும்பொழுது அவ ரிடத்துக் காணப்படும் ஒரு முக்கிய பண்பினை எடுத்துக்கூறல் அவசியமாகும். நாவலர் பரம்பரையின் "பேரின்ப" வற்புறுத்தல் காரணமாக ஆண்-பெண் பாலியல் உறவின் வழித் தோன்றும் உறவினிமையைச் சிற்றின்பம் என நோக்கி, மிகுந்த “ஒறுப்புணர்வுடன்" அது பற்றிப் பேசாதே செல்லும் ஒரு எழுத்து மரபு "சைவமும் தமிழும்" இலக்கியக் கொள்கையின் எழுதாக் கிளவியாக இருந்துவந்துள்ளமையை நாம் மறைக்கவோ மறுக்கவோ கூடாது. அந்த ஒறுப்பு நெறி "சைவமும் தமிழும்" இலக்கியப் பண்பாட்டின் ஒர் அமிச மாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பண்டிதமணியிடத்து அந்த ஒறுப்புநோக்கு இருக்கவேயில்லை. மேற்கோள் காட்டப் பெற்ற குறுந்தொகைப் பாடல் முதல் அன்பி னைந்திணைக் கட்டுரைகள்வரை பல இடங் களில் அவர் பாலியல் உறவின் இனிமைத்

سس 67
தெளிவை இலக்கிய ரசனையுடன் எடுத்துக் கூறியிருப்பது அவரது இரசனை நேர்மையின் மெய்ம்மையைநிலைநிறுத்துகின்றதுஎனலாம்.
* சிற்றின்பம் - பேரின்பம்" என்கின்ற வரையறைக்கு மேலே சென்று உறவின் இனிமைகளைத் திறந்த மனத்தோடு எடுத் துக் கூறுகின்ற கனிவும் பக்குவமும் அவரிடத் திருந்தன.
இது வற்புறுத்தப்பட வேண்டிய ஒரு அமிசமாகும்.
மெய்யியற் (தத்துவப்) பார்வை தந்த செழுமை காரணமாக அந்த மேல்நிலையில் நின்றுகொண்டு அவர், பொருள்கள் விடயங் களின் "நீதி" பற்றியே சிந்திக்கின்ற ஒருவ ராகக் காணப்பட்டார். ஆறுமுகநாவலர் பற்றிய அவரது கட்டுரைகளிலே அந்த "நீதி" வற்புறுத்தலை அவதானிக்கலாம்.
இக் குறிப்புப் பண்டிதமணியின் கருத்து நிலை (Ideology) பற்றிய விளக்கத்துக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.
V
பண்டிதமணியின் "கருத்துநிலை யாது? இக் கட்டுரையில் இது விரிவாக ஆராயப்பட முடியாதது. எனினும் அது பற்றிய திட்ட மான குறிப்பு இருத்தல் அத்தியாவசிய LoTgjub.
வயித்திலிங்கம்பிள்ளை பற்றிச் சொல்லப் பட்ட ஒரு குறிப்பு (அடிக்குறிப்பு 10) முக்கிய மானது. நாவலர் பரம்பரையின் இரண் டாவது கட்டத்தில் மதத்தை இலக்கிய மாகவும் இலக்கியத்தை மதமாகவும் கொள் கின்ற ஒரு நிலை ஏற்பட்டது. பண்டிதமணி அந்தக் கட்டத்தின் வாரிசு,நாவலரின் சமூகக் கொள்கைகளை ஏற்கவோ, மறுக்கவோ வேண் டாத நிலை இவருக்கிருந்தது. இருப்பினும் ஆறுமுக நாவலர் பற்றி எடுத்துக் கூறவேண் டிய இரு முக்கிய கால கட்டங்கள் பண்டிதமணியின் வாழ்க்கைக்காலத்தில் ஏற் பட்டன. ஒன்று 1954-60 இல் முற்போக்கு இலக்கிய அணியினரால் நாவலர் ஈழத்துத் தேசீய இலக்கியத்தின் முன்னேடி எனக் கோஷிக்கப்பெற்ற காலமாகும். இரண்டா வது 1979இல் நாவலர் நூற்ருண்டு விழா

Page 223
-
கொண்டாடப்பட்ட பொழுதாகும். இவ் விரண்டு கால கட்டங்களிலும் ஆறுமுகநாவ லர் பற்றிய பல்வேறு விளக்கங்கள் முன் வைக்கப்பட்டன. நாவலரைத் தேசீய வீரர் எனக் கூறியபொழுது, நாவலருக்கும் வள்ள லாருக்குமுள்ள வரலாற்றுச் சமாந்தரத் தன்மை வற்புறுத்தப்பட்டது.' அப் பொழுது பண்டிதமணி அந்தச் சமாந்தரத் தன்மையினை மறுத்து வள்ளலார் நாவல ருக்கு முரண்பட்டவரே என்பதை மீண்டும் நிறுவினர். இந்துசாதனத்தில் முதலில் வெளிவந்து, பின்னர் "நாவலர்" (1968) என நூலாக வெளிவந்த பிரசுரத்தின் வர லாறு இதுவேயாகும். இந்த நூலின் உபதலை யங்கம் பின்வருமாறு: "அருட்பாச் சம்பவம்: ஆலய சீர்திருத்தம் முதலியவைகளைச் சரித் திரத் தொடர்புடன் தெளிவுபடுத்துவதொரு விமர்சனக் கட்டுரை". தொடர்ந்து பதிட் புரையில் வரும் "ஆலய சீர்திருத்தகாரர்கள், அரசியல் அதிகாரிகள், நாவலர் சரித்திரத் தைக் கால அடைவிற் சிந்திப்பவர்கள் என்றின்ஞேரன்ன திறத்தினர்கள் ஆவசியகம் அறிய வேண்டிய பல்வேறு விஷயங்களும் இதில் உள்ளன? என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு வருவனவற்றில் எல்லாம் பண்டிதமணி நாவலரின் சமூகக் கருத்துக்களை வலியுறுத்தாது நாவலரின் நீதிப்பண்பினையே வலியுறுத்திச் செல்வதைக் காணலாம். இந் தியப் பண்பாட்டு வட்டத்தினுள் நின்று நோக்குந் திறன் காரணமாக நாவலரை மகாத்மா காந்தியுடன் இணைத்து நோக்கு வதிலும் அவர் தமக்குள் தவறெதையும் காணவில்லை.15
நாவலரின் சமூகக் கொள்கைக்கும் காந்தி யின் அரிசனக் கொள்கைக்குமுள்ள அடிப் படைச் சமூக முரண்பாடு பற்றிய பிரக்ஞை யில்லாமலே, நாவலரின் கருத்தான "நீதியை வற்புறுத்திச் செல்கின்ருர் பண்டிதமணி.
சமூகத் தளத்தை மறந்து குணங்களைக் கருத்துக்களாகவே காண்கின்ற ஒரு நிலைடை பண்டிதமணியின் பிற்கால எழுத்துக்களிற் காணப்படுகின்றது. அத்வைத சிந்தனையில் ஆகாமியம் II இல் வரும் "தீண்டாமை" பற் றிய சொல் விளக்கம் இதற்கான உதாரண மாகும்.

68 -
இது பண்டிதமணியின் பிற்கால வாழ்க் கையின் ஒரு முக்கியமான வரலாற்றுண் மையை வற்புறுத்துகின்றது.
பண்டிதமணியின் இலக்கிய மேன்மை அவர் வாழ்ந்த காலத்தில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் இலக்கிய சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவராக எடுத் துக்கொள்ளப்பட்டார். அவரது அறுபதா வது ஆண்டுக்குப் பின்னர் ஏறத்தாழ இரு பத்துநான்கு வருட காலம் அவர் சமூக உறவுகளிலிருந்து ஒதுங்கித் தனிப் புலமை ஈடுபாட்டிலேயே வாழ்ந்துவந்தார். இதனுல் அவரது புலமை வரவரச் சொற்பிரபஞ்சத்து ஈடுபாடாகவே இருந்துவந்தது. சமூக யதார்த்த நிலையிலிருந்து விடுபட்டவராக அவர் இருந்துவந்தார், ஏற்கனவே கருத்து முதல்வாதியாக (idealist) இருந்துவந்த அவருக்கு இந்தச் சொற்பிரபஞ்சத்திளைப்பு சிந்தனைகளுக்கு வேண்டிய சமூக வேர்கள் பற்றிய சிரத்தைக்குத்தானும் இடம் அளிக்க வில்லை. அந்நிலையில் சிந்தனை என்பது தன் னுள்தான் தொழிற்படுகின்ற ஒன்ருயிற்று.
இதன் காரணமாக அவரது சிந்தனைப் பங்களிப்பின் சில துறைகளில், எடுத்துக் காட்டப்படத்தக்க சில முரண்பாடுகள் தோன்றலாயின. உதாரணமாக அன்பி னைந்திணையில் வரும் எழுதினை விளக்கமா கும். "கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்" என்னும் எழுதிணை பற்றிய இவ் விளக்கம் தொல்காப்பியத்தில் இவை ஒவ்வொன்றுக்கும் தரப்படும் விளக்கங் களுக்கான உண்மைகளின் அடிப்படையிற் கட்டியெழுப்பப்பட்டிருக்கவேண்டிய வியாக் கியானமாகும். நியமமான அகத்திணை மரபில் * பெருந்திணை விதந்தோதப்படுவதில்லை. ஆனல் பண்டிதமணி அவர்களின் கண்ணுேட் டத்தில் பின்வருமாறு காணப்படுகிறது.
**இறுதித் திணையாகிய பெருந் திணைக்குப் புறம் காஞ்சி; நிலையாமை யைக் குறிப்பது காஞ்சி. பாசபந் தங்கள் அனைத்தும் நிலையற்றனவாய் எல்லாம் அழிந்தொழிய ஆன்மா என்றும் ஒரே நிலைமைத்தான
பரமான்மாவோடு ஏகமாம். அந் நிலையே பெருந்திணை, அஃது 'ஒருமை யின் பெருமை??.
(அன்பினைந்தினை பக், xw)

Page 224
一16
சான்றும் குறிப்பும்
(1) பண்டிதமணி பற்றிய இக்கட்டுரைய
至2)
(3)
(4)
(5)
(6)
22
நூல்களை (தொகுதிகளை)ப் பயன்படு
பாரத நவமணிகள் (1959), சை: (1959), இருவர் யாத்திரிகர் (வ இலக்கிய வழி (1964), நாவலர் கள் (1980), அன்பினைந்திணை (1
இறுதியிரண்டு நூல்களைத் தவிர்ந்: எழுதப்பட்ட கட்டுரைகளே.
நாவலர், நாவலர் பரம்பரையினரின் களிற் பெரும்பாலானேர் ஏதோ ஒ. 5rág (invective) GT(upš3lj56rhai) முருகதாஸ் மாணவ நிலையில் (19 இலக்கிய இலக்கண சர்ச்சைகள்"
பல்கலைக் கழகம்) இவ்விடயங்கள் .
நல்லூர்க் கோயில் பற்றிய ஆறுமு: துக்கு நல்ல உதாரணமாகும். நீண் ஆனல் சர்ச்சை நிலையினது (controw பண்டிதமணியின் கட்டுரைகள் இர குறிப்பிட்டுள்ளார். முதலாம் குறிப்பினை நோக்குக.
சிவத்தம்பி, கா., தனித்தமிழ் இய 1979, uji. 34) இக்குறிப்பு பண்டிதமணியின் கந்தட களில் வருகின்றது.
தேவாரம் வேதசாரத்தில் வ( பின்வரும் கூற்றில் இந் நோக்கின்
** தேவாரம் வேதசாரம் என் தான் தேவாரமோ எனின் அ யெனின் வேதம் என்று மேே ஆகமம், ஆகமாந்தம், இதிஹ காய்கள் போன்றும், மணன்
இலங்கும் சீவான்மா பரமான் நிலைகளையும் . சிவபிரான் அளவிறந்த வீரச் செய்கைகள்ை மத்தினுல் ஆதாரம் கொண்டி அது தேவாரம் எனப்படும்."
சங்கரப்பிள்ளை, பொ., சைவசித்தா 9ëögsår Paranothi V. Saiva Sidd

னை எழுதும்பொழுது பின்வரும் அவரது த்தினேன். நற்சிந்தனை (1981), கந்தபுராண கலாசாரம் ருடமில்லை), சமயக் கட்டுரைகள் (1961), பெருமான் (1968), கம்பராமாயணக் காட் 983), அத்வைத சிந்தனை (1984).
3 மற்றையவை பல்வேறு சமயங்களில்
விவாதப் போக்குகள் காரணமாக அவர் * அளவுக்கேனும் ஒரோ வேளைகளில் வசைத் ஈடுபட்டுள்ளனர். திருமதி அம்மன்கிளி 9-80) எழுதிய “ ஈழத்தறிஞர் நடத்திய எனும் சிற்ருய்வேடு (தமிழ்த்துறை யாழ் பற்றிய சில தகவல்களை உடையது.
கநாவலரின் எழுத்து, வசைத்தாக்கு எழுத் - விவாதப் போக்குக்கு இடமளிக்காததாக rsy) எனக் கொள்ளப்படத் தக்கதாக உள்ள ண்டு பற்றி (ஈழகேசரி 1948) அம்மன்கிளி
பக்கத்தின் அரசியற் பின்னணி (சென்னை,
ராண கலாசாரத்தில் (1959) இரு கட்டுரை
ரும் உபோற்காதத்தில் செந்திநாதையரின் சாரத்தைத் தருகின்றது.
றமையால் வேதத்தின் மொழிபெயர்ப்புத் 1ங்ங்ணமன்று ; பின் அதன் கருத்து என்னை ல நிரூபிக்கப்பட்ட வேதம், வேதாந்தம், ாச புராணம் என்பவைகளிலே இலைமறை மலையிற் பொடிகள் போன்றும், அங்கங்கே மாக்களின் ஐக்கியத்தினுல் நேர்ந்த ஆனந்த
ஒருவரே நிலை முடிக்கப்பட்டனவாயுமுள்ள ாயும் பிறவற்றையும், குணுேபசங்காரக் கிர யைத்துப் புகழ்ந்து தேவாரம் துதிப்பதனுல்
(தேவாரம் வேதசாரம் - சென்னை 1918)
ந்தம் - சென்னை (1985, பக். 49) nanta London 1954 - Luji. 145 - 6 luftrifis

Page 225
(7)
(8
(9)
(10)
( 11 )
(12)
(13)
(14)
(15)
- 1
* சுத்தம் - மாசின்மை " என்றத அத்துவைத விளக்கம் மாசுடைய
இவ்வாறு சிந்தனநிலையில் பலவற் படக்கூடிய மெய்ம்மைநிலைப் பொ
கனக, செந்திநாதன் - ஈழத்து இ
சிவத்தம்பி, கா., "வல்வை இயற்
ச, வைத்தியலிங்கம்பிள் வல்வெட்டித்துறை 197
பண்டிதமணியின் மொழிநடை நெ எனத் திரு. சிவலிங்கராசா அவர் பற்றிக் கலந்துரையாடியபொழுது
பண்டிதமணியின் மொழிநடையில் என்பது தீர்மானிக்கப்பட வேண்
நாவலர் மொழிநடையின் இறுக்க * நெகிழ்வு நடையொன்றினைக் க ஆல்ை, பண்டிதமணியிடத்து அ of cognition) iš Go5nTyfosibLJGS6örn தில் அறிவு பூர்வமாகவும் உண வெளிப்பாடே பண்டிதமணியின் விளக்கப்பட்டுள்ளது.
நடை (Style) என்பது ஒரு கிருர், நோக்குகின்ருர் என்பவற் Style is the man at air Liii. Lisi G அவை பிரித்துப் பார்க்க முடியா
கனக. செந்திநாதன், டிெ நூல்,
சிந்தனைக் களஞ்சியம் - அளவெட்
அத்வைத சிந்தனை--
அத்வைதசிந்தன் ஆகாமியம் II ஆகாமியம் 11
சிவத்தம்பி, கா., நாவலரும் வள்
நாவலர் நீதி - நல்ல செய்தி, ஆ

سی۔۔ 70
ன் தொனிப் பொருள், ஏகான்மவாதிகளின் து என்பதாகும்.
1றை ஒன்று எனக் கொள்ளும்பொழுது ஏற் ருந்தாமைகள் பற்றிப் பின்னர் பார்ப்போம்.
லக்கிய வளர்ச்சி, கொழும்பு 1964,
பக், 23, 51 ஆதியன.
றமிழ்ப் போதகாசிரியர்*
ள, ஓர் அறிமுகக் கைந்நூல், 5, 1 Idi. I8.
கிழ்ச்சியும் குமாரசுவாமிப் புலவர் வழிவருவதே கள், நான் அவருடன் இக் கட்டுரைப் பொருள் து தெரிவித்தார்.
வடமொழி இலக்கியத் தாக்கம் எத்தகையது டியதாகும்.
ாத்தின் பின்னர் குமாரசுவாமிப் புலவரிடத்து ாணக்கூடியதாகவுள்ளது என்பது உண்மையே. ந்த ‘நெகிழ்வு" ஒர் அறிமுறையாக (a form து. பண்டிதமணி ஒரு பொருளை ஒரே சமயத் ர்ச்சி பூர்வமாகவும் உள்வாங்கிக்கொள்வதன் நடையின் அச்சாணிப் பண்பு என்பது மேலே
வர் எவ்வாறு வடிவகைக்கொள்கிருர், சிந்திக்
றினை எடுத்துக் காட்டுவதாகும். இதனலேயே
வேறு செல்வாக்குகள் இருக்கலாம், ஆணுல்,
த கலவையாக இணைந்து நிற்கும்.
Luji . 56-57.
.டி தந்த அறிவுச் செல்வம்
ா 10-கன்மம் 5 தொடர்ந்து கன்மம் 6 இலும் காண்க.
ளலாரும், தினகரன், 1966.
றுமுக நாவலர் (பக். 110-12).

Page 226
பண்டிதமணி பல்கலைக்கழகப்
வே. ந. சிவர
பதிவாளர், யாழ்
கோயில் என்ருல் சிதம்பரம்; நாவலர் என்ருல் நல்லை நகர் ஆறுமுக நாவலர்; பண்டிதமணி என்ருல் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை. தமிழ்த் துறையிலும் சைவ நெறியிலும் துறைபோகக் கற்ற பேரறிவாளராகவும் அநுபூதிமானுக வும் விளங்கியவர் பண்டிதமணி அவர்கள்.
இத்தகு சிறப்பு வாய்ந்த பண்டிதமணி அவர்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர் களுக்குமிடையே இருந்த இணைப்பு
கங்கையும் யமுனை தானும்
கனகட லுடன்சேர்ந் தன்ன இணைப்பாகும்.
* கற்றரைக் கற்றரே காமுறுவர் " ஒரு துறை சார்ந்தோர்க்கே பொருந்துவதாகும். ஆணுல், பண்டிதமணி அவர்களைக் கணிதம், மருத்துவம், பெளதிகம், இந்து நாகரிகம், தமிழ் முதலிய பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் காமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் யாவரும் துறை எனும் பாகுபாட்டினைக் கடந்து நின்ற பேதமற்ற ஒருமைப்பாட்டு நிலையினை (unified field i GTvů6uu Giii GTGår ugi Gg56:flay.
பேராசிரியர் சுவாமி விபுலாநந்தர் :
அண்ணுமலைப் பல்கலைக் கழகம் நிறுவப் பட்டபோது (1931) அதன் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற பெருமைக் குரியரான தமிழ்ப் பேரறிஞர் சுவாமி விபுலா நந்தர் அவர்கள், இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதற்றமிழ்ப் பேராசிரியராகும் பேறும் அவருக்கே வாய்த்தது. பயிற்றப் பட்ட (விஞ்ஞான) ஆசிரியர், மதுரைப் பண்டிதர், அறிவியல் மாணி (B. Sc.) ஆகிய பட்டங்களைப் பெற்று ஆசிரியராக விளங்கிய அடிகளார் இராமகிருஷ்ண சங்கத் தால் ஈர்க்கப்பட்டுத் துறவியாஞர்.

அவர்களும் பேராசிரியர்களும்
SFFT oafisia
பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம் தூய பத்திரிசியார் கல் லூரியில் ஆசிரியராகவும் பின் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் பணி யாற்றினர். சைவ சித்தாந்த அறிஞரும் வழக்கறிஞருமான திரு. மு. திருவிளங்கம், அடிகளாரைத் தமது முகாமையிலிருந்த மேற்குறித்த கல்லூரிக்கு 1920இல் அதிபராக் கினர். இக்காலத்தில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் தொடங்கியது. அடிகளார் சங்கப் பணிகளில் ஈடுபட்டார். தி. சதாசிவ ஐயர், அ. குமாரசுவாமிப்புலவர் ஆதியோருடன் அடிகளார் பழகினர். அடிக ளாரிலும் ஏழாண்டுகள் இளையவரான பண்டிதமணி அவர்களும் இக்காலத்தில் படிப்படியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் அடிகளாகும் பண்டிதமணியும் நெருங்கிப் பழகும் வாய்ப் புக் கிடைத்தது. மட்டுநகர் வாசியான புலவர்மணி அவர்கள் யாழ்ப்பாணத்தில் அடிகளாரைத் த ரிசிக்க வைத்தவர் பண்டிதமணி அவர்களே என்பது நினைவு கூரத்தக்கது.
பண்டிதமணி அவர்கள் அடிகளாரின் அறிவாற்றலைப் பெரிதும் மதித்தார். அவ ருடைய கவிதைகளைப் பண்டிதமணி உச்சி மேல் வைத்துப் போற்றினர்.
தமிழ் உலகில் என் கண்ணுக்கெட டிய அளவில் இரு புலவர்களே தமது கவிதா சாமர்த்திய விசேஷத்தினுலே மொழிபெயர்ப்பை அதர்ப்படச் செய்து சற்றும் எடை குறையாது பெரும்புகழ் பெற்று விளங்குபவர்கள். ஒரு வர் மனேன் மணி யம் சுந்தரம்பிள்ளை . மற்றையவர் நமது சுவாமிகள்.
யூலிய சீசர் நாடகம் சுவாமிகளின் மொழிபெயர்ப்புக் கவிதை ஆங்கில வாணியில் வந்தது. பல வருடங்களுக்கு

Page 227
முன் அதனைப் படித்துச் சுவைத்த துண்டு. ஆங்கில மணமே இல்லா த என்னைச் சுவாமிகளின் கவிதை பெரிதும் கொள்ளை கொண்டு விட்டது. அஃ தொன்றுமே சுவாமிகளைக் கவிதைச் சக்கரவர்த்தி என்று பாராட்டுவதற்குப் போதுமாயிருந்தது.
.சுவாமிகளின் கவிதைகள் அனைத தையும் ஒருங்கு தொகைசெய்து நோக்கு வோமாயின் சுவாமிகள் தமது காலத் தில் கவிதைத் தனிச் சக்கரவர்த்தியாய் விளங்கினரென்பது இனிது புலனுகும். என்று பண்டிதமணி அவர்கள் அடிகளார் திறன் பற்றி அடிகளார் படிவ மலரில் எழுது வது அவரது ஈடுபாட்டைப் புலப்படுத்து கிறது.
பேராசிரியர் பேரம்பலம் கனகசபாபதி:
பேராசிரியர் கண்கசபாபதி சைவ மண மும் தமிழ் மணமும் கமழும் ஏழாலையம் பதியைப் பிறந்தகமாகக் கொண்டவர், இதனல் அவர் விஞ்ஞானப் பெரும் பேராசிரியராக விளங்கியதோடும் மெய்ஞ் ஞானம் பெற்றவராகவும் விளங்கினர். கணிதப் பேராசிரியராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் முதற் பீடாதி பதியாகவும் அவர் விளங்கினர். தமிழார்வ மும் தாய்மொழி மூலம் உயர் கல்வி புகட் டப்படவேண்டுமென்ற கோட்பாடுமுடைய பேராசிரியர் விஞ்ஞானக் கல்வியைத் தமிழில் கற்பிக்கவேண்டுமென உறுதியாக நின்று வெற்றி கண்ட மிகச் சிலருள் ஒருவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இவருக்குத் தேகாந்த நிலையிற் கலாநிதிப் பட்டம் வழங் கிக் கெளரவித்தது.
பேராசிரியர் தமிழ் மீதும் சைவத்தின் மீதும் கொண்ட ஈடுபாட்டால் பண்டிதமணி மீது இயல்பாகவே பற்றுக்கொண்டார். பண்டிதமணியின் தக்ஷகாண்ட உரையினை அச்சிட்டு வெளியிடவும் பாராட்டு விழா நடைபெறவும் ஏதுவாக இருந்தார், பேரா தனைப் பல்கலைக்கழகக் குன்றில் குறிஞ்சிக் குமரன் கோயில் உருவாக இவரது சேவை

72 -
காரணமாக இருந்தது. இப் பணி பண்டித மணி அவர்களைப் பெரிதும் கவர்ந்தது.
பேராசிரியர் அவர்களின் புண்ணியம் ஒரு வடிவெடுத்துத் தோன்றியதே பேராதனை வளாகத்துக் குறிஞ்சிக் குமரன் கோயில், அது புகழ்ப் பொருட் டு த் தோற்றுவித்ததன்று. புண்ணிய விசேடத்தால் தோன்றியது. (பேராசிரியர் நினைவுமலர் 1977, பக். 36) என்கிருர் பண்டிதமணி.
பேராசிரியர் அ. சின்னத்தம்பி :
பண்டிதமணி அவர்கள் வரலாறறில் குறிப்பிடத்தக்க பெருமைசான்ற நிகழ்வாக அமைந்தது தகூடிகாண்ட உரை வெளியீடும் வெளியீட்டு விழாவும். நூல் வெளியிடவும் விழா நிகழவும் முதற் காரணராக அமைந் தவர் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள். இப் பெருநிகழ்வு பற்றிப் பண்டிதமணி அவர் கள் பின்வருமாறு குறிப்பிட்டார்
ஓங்காரமூர்த்தியாகிய விநாயகப் பெரு மான், அதியற்புத அதிமதுரச் சுத்தச் செந்தமிழாகிய கத்தபராணத்தின் கரு வூலமான தக்ஷகாண்டத்துக்கு உரை யெழுதுவதோர் எழுச்சியை உற்பத்தி செய்தும், அது முற்றுதற்கு வேண்டும் அநுகூலங்களை அநுக்கிரகித்தும், மூலமும் உரையும் அச்சில் வருவது கருதி * அஞ்சலோம்புமதி என்று கணம் பொருந்திய வைத்திய கலாநிதி பேரா சிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் மூலம் அபயம் அளித்தும், மதிப்புக்குரிய இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாண வர் சங்க வாயிலாக வெளியீடு செய் தருளியும் முகிழ்த்த பெருங்கருணைத் திறத்தை மனமுருகி வாழ்த்தி வணங்கு வாம்.
பண்டிதமணி அவர்களின் இப் பிரார்த தனை உரைக்கு விளக்கம் போலப் பண்டித மணி அவர்களின் உத்தம சீடர் அ. பஞ்சாட் சரம் அவர்கள்,

Page 228
-
இப் பகுதியின் உயிர்நாடியாய் அமைந் தவர்கள் பேராசிரியரும், வைத்தியகலா நிதியும் ஆகிய திரு. அ. சின்னத்தம்பி அவர்கள். அவர்களின் வள்ளன்மை வான்சிறப்பைச் சேர்ந்தது.
என்று கூறுவது இங்கு கருதத்தக்கது.
பண்டிதமணி அவர்களின் தளர்ச்சியைக கண்ணுற்ற பேராசிரியர் பண்டிதமணி அவர்களுக்கு முச்சக்கரவண்டியை அன்பளிப் புச் செய்தமையும், அப்போது பண்டிதர் ஐயா " என்னிலும் பார்க்க டாக்குத்தருக் குத்தான் இந்த வண்டி இன்னும் கூடுதலாக
உபயோகப்படும்’ என்று கூறி யது ம் அவர்களிருவரதும் உயர்ந்த அன்புக்குச் சான் ருகும்.
பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் : இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பேராசி ரியர் ஆ. வி. மயில்வாகனம் பெரு மதிப் புப் பெற்றிருந்தார். குழந்தைச் சுபாவம் உடையவர். இவர் உலகறிந்த பெளதிக வியல் நிபுணர். மூன்ருண்டுகள் கலைச் சொல் லாக்கக் குழுவில் யான் அவர்களுடன் நெருங்கிப் பழகியபோது கடமை, கண்ணி யம், கட்டுப்பாடு என்பவற்றைப் போதனை யிலும் சாதனையிலும் கடைப்பிடித்தவர் என் பதைக் காணமுடிந்தது.
பேராசிரியர் மயில்வாகனம் அவர்கள் பண்டிதமணி அவர்களிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார். இவர் பண்டிதமணியின் தமிழைப் படித்துச் சுவைப்பவர். அவரு டைய வாக்கியங்களைச் செகப்பிரியரின் (சீசரின் வாயிலாக) வந்தேன். கண்டேன். GaGårGp6ồro (Vide, Vici. Vini GT6örp @Fr7 jiò சுருக்கமும் பொருட்செறிவும் வாய்ந்த கூற் றுடன் ஒப்பிட்டுப் பாராட்டினர்.
சமயக் கட்டுரைகள் நூலில் பண்டித மணி அவர்கள் எழுதிய பின்வரும் பகுதி யைப் பேராசிரியர், பண்டிதமணி அவர்களது உரைநடை மேன்மைக்குச் சான்ருகக் காட்டு கிருர்.

73 -
இராவணன் அழுதான். வாகீசர் இரங் கினர்.
அவன்குணி. அவர் குணம், காமியம் வேறு. நிஷ்காமியம் வேறு. காமியம் தருமதளத்தில் செய்வது. தருமம் திருவருளின் குறிப்பு.
மேலும் சோக்கிரதீசரின் (Socrates) உடல் உருவத்துடனும் சம்பாஷணைகளுட 99Jub ( Dialogues) Li Gior Eq- 5 n Gjof us Gir கருத்துக்களை ஒப் பி ட் டு நோக்கியவர் பேராசிரியர் .
இருவருக்குமிடையே வித்திட்டு விளைந்த அன்பு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கந்தபுராண தகூடிகாண்ட உரை வெளியீட்டு விழாவில் பண்டிதமணி அவர்களுக்குப் பொன்னுடை போர்த்திக் கெளரவிக்கும் நிகழ்ச்சியாகக் கனிந்தது. அது திருவருள் காரியமானதோர் பிணைப்பு. அது எப்பவோ முடிந்த காரியமாகும்.
பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை :
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழா ராய்ச்சிப் பாரம்பரியத்திற்கு அத்திவாரம் இட்டவரும் மொழியியல், சாசனவியல் போன்ற துறைகளில் தமது பங்களிப்பைச் செய்தவருமாகிய தமிழ்ப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் பண்டித மணி அவர்களின் பெரு மதிப்பும் அன்பும் இருந்தது. பேராசிரியர் பண்டிதமணி அவர்க ளுடன் கொண்டிருந்த அறிவுலகத் தொடர் புக்கு இலக்கியவழியை உயர்தர வகுப்புக் குப் பாடநூலாக்கியமை சான்றகும். இத் தொடர்பு பற்றி திரு. த. சண்முகசுந்தரம் அவர்கள் விரிவாகக் கலையருவி கணபதிப் பிள்ளை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சண்முகசுந்தரம் அவர்களே பேராசிரியரின் தூதுவராகப் பண்டிதமணியுடன் தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கியவழியின் விரிவான திருத்திய பதிப்பு வெளிவரப் பேராசிரியர் அவர்களே துரண்டுத லாக அமைந்தார்.

Page 229
- 1
பேராசிரியர் வி. செல்வநாயகம்:
பண்டிதமணி அவர்கள் ஆசிரியர் பயிற் சிக் கலாசாலை விரிவுரையாளராகவே சேவைக் காலம் முழுவதும் பணியாற்றியவர். பேரா சிரியர் செல்வநாயகம் அவர்களும் முதலில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாள ராகத் திகழ்ந்தவர். சமகாலத்திற் பணியாற் றிய அவர்களிடையே தொடர்பு இருந்திருப் பது இயல்பே. செல்வநாயகம் அவர்கள் பல் கலைக்கழக ஆசிரியரானபின் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்றை ஆசிரியர் கலாசாலையில் பாடநூலாகக் கற்பித்தவர் பண்டிதமணி.
பண்டிதமணி அவர்களின் கந்தபுராண தக்ஷகாண்ட உரை வெளியீட்டு விழா பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமண்டபத் தில் 25-1-1967இல் நிகழ்ந்தபோது அதற்குத் தலைமை தாங்கு பெருமை பேராசிரியர் செல்வநாயகத்துக்குக் கிடைத்தது. பேராசிரியர் ஆ. சதாசிவம் :
பண்டிதராகத் தமது ஆசிரிய வாழ்வைத் தொடங்கி உயர் கல்வி பயின்று, பட்டதாரி யாகி, கலாநிதியாகி இன்று பேராசிரியராக உயர்ந்திருப்பவர் பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்கள்.பேராசிரியர்அவர்கள் பண்டிதமணி அவர்கள்மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். இளமை முதலே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் பண்டித மணியைப் பாராட்டிப் பேசத் தவறுவதில்லை. பண்டிதமணி அவர்களும் அவரது ஆழ்ந்த புலமையை மதித்தார்.
sBugs sífiu af கா. கைலாசநாதக் குருக்கள் :
வடமொழியிலும் சைவத்திலும் தமிழி லும் அறிவும் ஆற்றலும் மிக்கவர் பேராசிரி யர் குருக்கள் அவர்கள். பண்டிதமணியின் சீடரான திருமலை ஆ. நவரத்தினம் அவர்க ளூடாக ஆரம்பத்தில் இருவரும் தொடர்பு கொண்டனர். பேராசிரியரின் சொல்லும் செயலும் வாழ்வும் இணைந்து இயங்கிய தன்மை பண்டிதமணி அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. அவர் மத ஆசாரங்களிலிருந்து இம்மியும் வழுவாமல் இருந்ததனையும் சைவா கமக் கிரியைகளை வரன் முறைப்படி மேற் கொண்டதனையும் பண்டிதமணி பெரிதும்

74 -
மதித்தார். இத்தகைய மதிப்பின் வெளிப் பாடாகவே அத்வைத சிந்தனை வெளி பீட்டு விழாவுக்குப் பேராசிரியர் குருக்களைப் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையினர் அழைத்தனர். பேராசிரியர் குருக்கள் அவர் களின் அத்வைத்த சிந்தனை பற்றிய பேச்சுச் சிறப்பாய் அமைந்தது. பேராசிரியர் சு. வித்தியானந்தன்:
ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டின் பல் வேறு மதச் சார்புகளையும் பரந்த அடிப் படையில் ஆராய்ந்தவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன். ஈழத்துத் தமிழ்ப் பண் பாட்டின் முக்கிய பகுதி வகிக்கும் சைவத் தமிழ்ப் பண்பாட்டினை ஆராயும் பேராசிரி யர் சு. வி. பண்டிதமணி பற்றி விதந்தோது கிருர்,
சிவபாதசுந்தரனுரை அடுத்து எமது கவனத்திற்கு வருபவர்கள் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளையவர்கள். நாவலர் பரம்பரை யின் நிகழ்காலச் சின்னமாகக் காட்சி அளிப்பவர். நாவலர், சைவப் பெரி யார் சிவபாதசுந்தரம் ஆகியோரைப் போலப் பொதுமக்களுக்குச் சமயக் கருத்துக்களைத் தெளிவுபடுத்திக் கூறும் ஆற்றலும், செந்திநாதையர், கதிரை வேற்பிள்ளை என்போர் போலத் தத்து வத் துறையிலே நுண்மாண் நுழைபுல னும் வாய்க்கப் பெற்றவர் இலக்கிய கலாநிதி அவர்கள். இம் மதிப்பீடு பண்டிதமணியின் பாரம்பரியத்தைத் தெளிவுபடுத்துகிறது.
அவ்வப்போது பண்டிதமணி அவர்கள் தொடர்பாக நடந்த குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்ச்சிகள் யாவற்றிலும் கலந்து மனமார மகிழ்ச்சி பொங்கப் பங்கு கொள்பவர் பேராசிரியர் சு. வி. அவர்கள், சிறப்பாக இலங்கைப் பல்கலைக் கழகத்திஞல் பண்டித மணி அவர்களுக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டபோது அப் பட்டத் தினை வழங்குமாறு பல்கலைக்கழக வேந்தரை வேண்டி விதந்துரைத்தவர் பேராசிரியர் சு. வி. அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தரான பேராசிரியர் கலாநிதி க. வித்தியானந்தன் அவர்களைப்பற்றிப் பண்டிதமணி அவர்கள் ஓர் இடத்தில் ‘கண்ணுன கண்படைத்த வர்கள் நமது துணைவேந்தர் அவர்கள் ?? என்று குறிப்பிட்டிருக்கின்றர்கள்.

Page 230
Guvn Slífui A, GaSyi útisiðn:
பேச்சைக் குறைத்துக்கொண்டு, சிந் தித்துச் செயலாற்றுவதிலும் ஆய்வு முடிவு களை எழுத்தில் வடிப்பதிலும் அமைதியாக ஈடுபட்டு வருபவர் பேராசிரியர் ஆ. வேலுப் பிள்ளை அவர்கள். அவர்கள் பண்டிதமணி அவர்கள் மீது மதிப்பும் பேரன்பும் கொண் டவர். அண்மையில் தமிழகத்தில் வெளி வந்த 'உலகத் தமிழ்" என்ற நூலில் ஈழத் தமிழ் உலகில் பண்டிதமணி அவர்க ளுக்குரிய இடத்தைச் சிறப்பாக அவர் வரையறை செய்து கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழ் அறிஞர் க ளின் புலமைத் திறம் பற்றிப் பிற அறிஞர்க ளிடையே முதன்முதல் பரப்புதற்குப் பண்டிதமணியின் இலக்கிய வழியே கதவு திறந்து விட்டது. கந்தபுராண தக்ஷகாண்ட உரை இவருடைய ஆழ்ந்த புலமைக்கும் பெருமைக்கும் என்றென் றும் சான்று பகர்கிறது. பாரம்பரியப் புல  ைம மிக் க இச் சான்ருேருக்கு இலங்கைப் பல்கலைக் கழகம் கெளரவ டி. லிட், பட்டம் நல்கிப் பெருமைப் படுத்தியது.
பேராசிரியர் ஆ. வே . அவர்கள் தேர்ந் 'தெடுத்த சொற்களைப் பயன்படுத்தி ஈழத்து இலக்கியவரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பண் டி தம ணிக் குரிய இடத்தை குன்றல் மிகல் இன்றி உண்மை யாக உரைத்திருப்பது அறியத் தக்கது.
பண்டிதமணி அவர்களது அன்பினைந் திணை நூலுக்கு நல்ல விமரிசன உரையை ஆற்றியிருக்கிருர் பேராசிரியர் ஆ. வே. அவர்கள்,
Guvâfiui a. spessor * 13:
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் சங்க இலக்கியம், நவீன இலக்கியம், இயங்கியற் பொருள் முதல் வாத விமர்சனம், இந்து நாகரிகம் முதலிய பல்வேறு துறைகளில் ஆற்றல் மிக்கவர். பண்டிதமணியவர்களின் அன்பினைந்திணை நூலைக் கையெழுத்து வடிவிலே படித்தபோது அக் கட்டுரைகளில்

75
மிகுந்த ஈடுபாடு கொண்டார். (இக்கட்டு ரைகள் அனைத்தும் 1950களில் எழுதப் பட்டவை ; அப்போதே வாஞெலியிலும் ஏடுகளிலும் வந்தவை.) பண்டிதமணி அவர்கள் அன்பினைந்திணைக் கட்டுரைகளை எழுதிய அதே மனுேதர்மத்தோடு அக் கட்டுரையைப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் படித்தார்கள் என்பது அவருடைய பின்வரும் கூற்றிலிருந்து புலனுகின்றது :
அன்பினைந்திணைக் கட்டுரைகள் பண்டித மணி அவர்களது உயர்ந்த ஆக்கங்களில் தலைசிறந்தவை. அன்பினைந்திணைக் கட் டுரைகளை விரைவில் நூல் வடிவு பெறச் செய்ய வேண்டும்.
பேராசிரியரின் மன முதிர்வையும் பண் பாட்டின் அடித்தளத்தினை நேசிக்கும் பண்பை யும் இக் கூற்றுத் தெளிவு படுத்துகிறது.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் நாவலரின் சாதனைகளைப் போற்றுபவர். பண்டிதமணியை அவரின் வாரிசாக இனங் கண்டு போற்றுபவர்: பேராசிரியர், பண்டித மணி மீது உயர்ந்த மதிப்புக் கொண்டிருந் தது போலப் பண்டிதமணி அவர்களும் பேராசிரியரை மதித்தார் என்பதைப் பின் வரும் கூற்று உறுதி செய்கிறது.
யான் எழுதிய அன்பினைந்திணைத் திறவு
கோலுக்குத் திறவுகோலாயமைந்தவர்
பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி
அவர்கள்.
திரு. அ. பஞ்சாட்சரம் அவர்கள் தரும் மேற்கோள் இது.
பேராசிரியர் சி. தில்லைநாதன்:
பல்கலைக்கழக மாணவனுக இருந்த காலத்தில் தமது பேராசிரியர்களிடமிருந்து பண்டிதமணியின் பெருமைகளை அறிந்து கொண்டதாகக் கூறும் பேராசிரியர் தில்லை நாதன் பண்டிதமணி அவர்கள்மீது மிகுந்த மதிப்புக்கொண்டவர். கலாநிதி மலரில், பண்டிதமணி அவர்களைப் பற்றிய கருத்துக் களைத் திரு. தில்லைநாதன் அவர்கள் சிறப் பாக எடுத்துக் கூறியுள்ளார்.

Page 231
! د س
பேராசிரியர் கா. சிவத்தம்பி;
அண்மைக் காலத்தில் ' பண்டிதமணி" யைப் பயின்று அவரது ஆக்கங்களை மதிப் பீடு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வரு பவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பண்டிதமணியின் மொழிநடைச் சிறப்பைப் பேராசிரியர் பெரிதும் போற்றுவர்.
சைவசித்தாந்த சாஸ்திர விளக்க மாக அமைந்துள்ள நூல்களும் அச் சாஸ்திர நூல்களுக்கு எழுதப்பட் டுள்ள உரைகளும் தமிழில் தத்துவ சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும் லாக வத்தினை நன்கு எடுத்துக் காட்டுகின் றன. இந் நூல்களிற் போதிய பரிச்சயம் ஏற்படும்பொழுது தமிழில் எக்கருத் தினையும் ஐயந்திரிபறவும் மயக்க மறவும் எடுத்துக் கூறும் நடையாற்றல் தானே ஏற்படும். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் நடைச் சிறப்புக்கு இதுவே காரணம்.
தமிழிலக்கியத்தில் மதமும் மானுட மும் என்ற நூலில் (பக். 25) பேராசிரியர் கூறும் கருத்து பண்டிதமணியின் உரைநடை மீது அவர் கொண்ட ஈடுபாட்டைக் காட்டு
கிறது.
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம :
பண்டிதமணி அவர்கள் மீது பேரன்பு பூண்ட பேராசிரியர்களுள் பூலோகசிங்கம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். நாவலர் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்; பொய்ம்மைகளை அகற்ற வேண்டு மென்று அயராது உழைத்தவர் பண்டிதமணி அவர்கள். இப் பணியைப் பேராசிரியரும் ஒரளவில் மேற்கொண்டுவருகிருர், நாவலர் பெருமையை அழிப்பவர்கள் மீது
திருவள்ளுவர் குறள் பரிமேலழக நச்சினுர்க்கினியருரை, கல்லாடம் நச்சி இடைவிடாது பலகாலும் உளங்கொ

76 -
பண்டிதமணி ஐயா கோபங்கொள்கிருர் என் பதஞலேயே அத்தகையவர்கள்மீது தாமுங் கோபங்கொண்டு கண்டனக் கணை தொடுத் தவர் திரு. பூலோகசிங்கம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிதமணி அவர் களின் இறுதிக் காலத்தில் அவரது மனதை நோகச் செய்தவர்களின் இரக்கமின்மையை எண்ணி இரங்கியவர் இவர்.
பேராசிரியர் பூலோகசிங்கம் அவர்கள் பண்டிதமணி அவர்களைப்பற்றிக் காலத்துக் குக் காலம் எழுதிய கட்டுரைகள் மிகவுங் காத்திரமானவை.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்:
பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் பண்டிதமணி அவர்களிடம் கொண்டுள்ள பற்றினை எடுத்துக் காட்டுவதற்குப் பண்டித மணி அவர்களின் கம்பராமாயணக்காட்சிகள் என்னும் நூலுக்கு அவர் முத்தமிழ் வெளி யீட்டுக் கழகத் தலைவர் என்ற முறையில் வழங்கிய ‘ஒரு யுக புருஷர் பண்டிதமாமணி” என்ற கட்டுரையே போதுமானது.
பண்டிதமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினையும் பங்களிப்பினையும் விரிவாக ஆராயப் புகுவோர்க்கு, பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் கட்டுரை ஒரு கைவிளக்காக அமையும்.
பாரம்பரியக் கல்விக்கும் பல்கலைக் கழகத் துக்கும் பாலமாக அமைந்த பண்டிதமணி அவர்களைப்பற்றிய கருத்துக்களைத் தெளி வாகவும் அழகாகவும் எடுத்துக் கூறிவரும் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் இவ் விணைப்புப் பாலத்தில் ஓர் இன்றியமையாத பகுதியாகத் தி க ழ் கி ரு ர் என்பது ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
ருரை, திருச்சிற்றம்பலக் கோவையார்
னர்க்கினியருரை என்பனவற்றைக் கற்று.
ளப் பயிலுக,
- நாவலர் பெருமான்
R

Page 232
வெள்ளவத்தை சைவ மங்கையர் க
இடம்பெற்ற ச
கந்தபுராணம், தகூடிகாண்டம் உரை நு
கலாசார அதிபர் திரு. ஹேமபூரீ பிரேமவ உயர் உறுப்பினர் என்ற விருதினைப் பண்பு பண்டிதமணி அவர்களின் பதில் உரையை விழாவுக்குத் தலைமைதாங்கிய பேராசிரியர் நாயகம், நவாலியூர் சோ. நடராஜன் ஆகி
திருஆலவாயிலில்
பண்டிதமணி அவர்கள்
வில்க்வைற் தொழிலக அதிபர் சிவதர்ம Fråg; வள்ளல் திரு. க. கனகராசா அவர்கள் அவ தமது " திருஆலவாய்" இல்லத்துக்குப் வை -ண்டிதமணி அவர்களை அழைத்து மலர் LAOf73
-72ல சூட்டி வரவேற்று ஆசிபெறுகின்(?ர்.
 
 

ழகத்தில் 4-11-68 திங்கட்கிழமை கித்திய விழா லுக்குச் சாகித்திய மண்டலப் பரிசில்.
பர்த்தன அவர்கள் சாகித்திய மண்டலத்தின் டிதமணி அவர்களுக்கு வழங்குகின்றர். த் திரு. அ. பஞ்சாட்சரம் படிக்கின்றர்.
அ. சின்னத்தம்பி, பேராசிரியர் வி. செல்வ யோர்களுடன் பண்டிதமணி அவர்கள்.
இலக்கிய கலாநிதியும் சங்கீத கலாநிதியும்
த கலாநிதி சித்தூர் சி. சுப்பிரமணியபிள்ளை கள் கோப்பாயில் இடம்பெற்ற தமது பிறந்ததின வம் ஒன்றுக்குப் பண்டிதமணி அவர்களை விசேட
அழைத்திருந்தார்.

Page 233
ாகாவலர் விழ
1. நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தெற்கு வீதி நாவலர் பெருமான் உருவச்சிலை பிரதிட்டை நாவலர் சிலைக்குப் பண்டிதமணி அவர்கள் ப நாவலர் பெருமானின் பிரதிமைப் படத்ை அவர்கள் பண்டிதமணி அவர்களுக்கு வழங் நாவலர் மணிமண்டபத்தில் பண்டிதமணி அ முற்றவெளியில் இடம்பெற்ற நாவலர் பெரு வைக்கின்ருர்.
நாவலர் சபை அங்கத் தவர்களுடன் பண்டி
 

pt 1969
யில் அமைந்துள்ள நாவலர் மணிமண்டபத்தில்
ஆரம்பவிழாவில் பண்டிதமணி அவர்கள். மலர்மாலை சூட்டுகின்றர். த நாவலர் சபையின் செயலாளர் ம. பூரீகாத்தா குகின்றர். வர்கள் நாவலர்தருமம் பற்றி உரையாற்றுகின்gர். நவிழாவைப் பண்டிதமணி அவர்கள் தொடக்கி
தமணி அவர்கள் ஆலோசனை நடத்துகின்ருர்,

Page 234
பண்டிதமணியும் மேனுட்(
ஆ. சபாரத்தி
குடுமித்தலை, தமிழ் வாத்தியாருடைய தனிச் சொத்தாகிய வேட்டி, சால்வை நீண்ட தேசிய சட்டை (' நாஷனல் "), போதாததற்குப் பண்டிதர் என்ற பட்டத் தைப் பெயருக்கு முன் முத்திரை குத்தி வைத்திருக்கிருர், வாயைத் திறந்தால் காளமேகம் போல நக்கல், குத்தல், அங்கதச் சுவை மிக்க பேச்சு 1 இந்த மனுஷ் னுக்கும் மேனுட்டு இலக்கிய கர்த்தாக்களுக் கும் என்னையா தொடர்பு?
இந்த முணு முணுப்பு, பண்டிதர் ஐயாவை இளமை முதல் அறிந்த பழைய தலைமுறையின் மத்தியில் கேட்கிறது. நானும் மஹரகமவில் ஆங்கில ஆசிரிய பயிற்சியை முடித்துக்கொண்டு அவருடன் ஒரு “ சண்டை பிடிப்பதற்காகப் போய்ச் சேர்ந்த பொழுது, (1951 பங்குனியில்) இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந் தேன். வெகு விரைவில், அவர் மற்ருெரு * வலிமையான பொருளாற் செய்யப்பட்ட Guri * (That he was made of sterner stuff) என்பது தெளிவாயிற்று. எனக்கும் நாலு ஆங்கிலக் கவிஞரைத் தெரியும்; ஒக்ஸ்போர்ட் விமர்சகர்களை ச் சாட்சிக்கு அழைக்க முடியும் என்ற என் கர்வம் தவிடுபொடியா யிற்று. இது எப்படிச் சாத்தியமானது ?
அவரே ஓர் இடத்தில் எழுதியிருக்கிருர்; தான் ஆங்கிலம் படிப்பது, உப அதிபர் தன்னிடம் தொல்காப்பியம் படிப்பது என்று கீரிமலைக்கு விடுமுறையிற் சென்ற சம்ப வத்தை. " பலமுறை முயன்றும் ஆங்கிலம் படிக்க முடியவில்லை. அந்தப் பிராப்தி எனக்கு இல்லை" என்று சிறிது அங்கலாய்ப் புடன் கூறுவார். ஆனல்,
* கற்றலில் கேட்டலே நன்று",
** செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" 23

இலக்கியச் சிந்தனையும் ணம் அவர்கள்
என்ற முதுமொழிகளுக்கேற்பக் கேள்விச் சம்பாத்தியம் மிகப் பெருகிற்று. அவர் வாழ்ந்த * ஈரப்பலா வடியில் கலாநிதி கு.சிவப்பிரகாசம், வே.நடராஜா,உபஅதிபர் க்ைலாசபதி, தென்மராட்சி நடராஜா, வைத்தியலிங்கம் போன்ற இரசிகர்கள் உடன் உறைந்தார்கள். ஹன்டி பேரின்ப நாயகம், சு. நடேசபிள்ளை போன்றேர் கலைப்புலவர் நவரத்தினத்தின் கலாநிலை யத்தில் கூடி விரிவுரைகள் ஆற்றினர்கள். * மஞ்சரி", "கலைமகள், 'ஆனந்தபோதினி போன்ற பத்திரிகைகள் நல்ல மொழி பெயர்ப்புக்களை வழங்கின. அதனுல் அவருக்கு மேனுட்டுச் சிந்தனையில் நல்ல பரிசயம் ஏற்பட்டது. டயஜனிஸ், கேத்தே, கோல்ட்ஸ்மித் போன்ற எழுத்தாளரைப் பற்றிய கதைகள் பலவற்றை அவர் சொல் லியே நான் அறிந்தேன். பிறகு இலக்கிய வரலாற்று நூல்களிற் பார்த்து வேறு பாடுகள் இருந்தால் குறிப்பிடுவேன். வாதப் பிரதிவாதங்கள் நிகழும். அவர் ஐம்பது களில் நடாத்திய சித்தாந்த வகுப்புக்களுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிற மொழி இலக்கிய அறிவு படைத்தவர்கள். கல்வி, சட்டம், மருத்துவம் போன்ற துறைகளில் நிபுணர்கள். அவர்கள் மூலமும் மேனுட்டுச் சிந்தனைகளின் தொடர்பு ஐயா அ வர் களு க் குக் கிடைத்தது. அதனுல் ** இங்கிலிஷ் எனக்குச் சுட்டுப் போட்டா லும் வராது" என்று சொன்ன தமிழ்ப் பண்டிதர் ஆங்கில மொழி மூலம் அறிந்த எத்தனையோ பிறமொழி இலக்கியகாரரை இழுத்துத் தம் விமர்சனங்களில் எழுதியும் பேசியும் வந்துள்ளார். அதனுல் ஹன்டி போன்றவர்கள் இவர் F. R. லீவிஸ் போல கேம்பிறிஜில் இருக்க வேண்டியவர் என்று பாராட்டுமளவுக்கு இலக்கிய "ஜீனியஸ் ? ஆனர். மேனுட்டு இலக்கியம் குறித்து அவர் பேசிய, எழுதிய கருத்துக்களையும் தனிப்பட்ட முறையில் உரையாடல்களின் போது விவாதித்தவற்றையும் தொட்டுச்

Page 235
- I
செல்வதே இக் கட்டுரையின நோக்கம். இவை கால முறைப்படியோ, சிந்தன வளர்ச்சிக் கிரமப்படியோ வரிசைப்படுத்தப் பட்டவை அல்ல. அதனை ஒரு " பின்பட்டப் படிப்பு " மாணவன் ஒரு நாளைக்கு மேற் கொள்வான் என நம்புகிறேன். (ஆனல் அதற்கேற்ற கருவி நூல்களைக் கற்ற அறிவுப் பரப்பு இன்றும், இனியும் பல்கலைக் கழகம் புகும் மாணவருக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியே.)
* ஜெகசிற்பிகள் " என்ற கட்டுரை * நாவலன்" (1949) இதழில் ஒரு மாணவர் பெயரில் வந்துள்ளது. ஐயா அவர்களின்
நடை அப்படியே புலப்படுகிறது. "" ஷேக்ஸ் பியர் ஒரு சமயம் மாக் அன்ரனி ஆனர்" என ஆரம்பித்து, வஞ்சனை அற்ற புறுரட்டஸ், தான் திசைதிருப்பிவிடப்பட்டதை உணரா மல் - இறக்கும் போதும் பிராயச்சித்தம் செய்யாமல் - இறக்கச் செய்தது ஷேக்ஸ் பியரின் பாத்திர சிருஷ்டியின் பலவீனம். வஞ்சனையால் பாமர மக்களைக் கிளப்பி விட்ட கள்ள மாக் அன்ரனியின் சந்தைப் பேச்சு என்ன சுவையை வாசகர் மனத்தில் உண்டாக்குகிறது என்று கண்டித்திருக்கிருர், ஆரம்ப காலத்திலிருந்தே பண்டிதமணி இலக்கியத்தின் அற அடிப்படையை (Moral Walues in Literature) a fiblioid 5 alig, மைக்கு இது முன் உதாரணமாகும். (** சிலப்பதிகாரச் சண்டை ?? இதற்கு முன் பின்னக நிகழ்ந்தது.) இது வரவர இறுகி அறக் கோட்பாட்டுக்கு அப்பாற் போவது இலக்கியமல்ல, கலை அல்ல என அடித்துக் கூறிப் பற்பல இலக்கிய சர்ச்சைகளைக் கிளப் பியதைத் தமிழிலக்கிய விமர்சன வரலாற் றறிஞர் குறிப்பிடலாம். இதனைச் சுட்டி திரு. ந. சபாரத்தினம் எழுதிய கருத்து அவதானிக்கத்தக்கது.
திரு. மா. பீதாம்பரம், சுவாமி விபுலாநந் தரின் " மதங்கசூளாமணி"யின் ஒரு பகு தியை மறுபிரசுரம் செய்ய முனைந்த வேளை பில் அச்சுப் பிரதியைப் பண்டிதமணியின் பார்வைக்கு அனுப்பி, அணிந்துரை நாடிய போது, ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் பாத் திரப் படைப்புப் பற்றிய சர்ச்சை கிளம் பியது.

78 -
* வானகம் மிளிரும் மீனினம் அனைத்தும் தற்சூழ்ந்(து) அசையத் தான்.அசை வின்றி நிலைபெறு துருவன் நிலைமைகண் டிலிரோ வான்மீ னனையர் மாநில மாந்தர் துருவன் அனயன் ஒருவன்ஈண்டு உளணுல் 2 அவன்தான் யானென அறிகுவிர்.”
தமிழ்க் கவிஞர் ஒருவர் இறுதி வரியைப் பாடிஇரார் அது கவிதை அழகுக்கு இழுக்கு என்ருர் பண்டிதமணி. நான் ஷேக்ஸ்பியரின் மூலத்தைக் காட்டி, சீஸரின் மகா கர்வத் தைப் புலப்படுத்தவே அந்த அடியை ஆக்கி யுள்ளார் என்று வாதிட்டேன். ஆங்கில இலக்கிய மாணவர்கள் பலரும் இதே அபிப் பிராயம் கொண்டிருந்தனர். ஆணுல் பண்டித மணி, ** எனக்கு இங்கிலிஷ் தெரியாது; விபுலாநந்தரின் மொழிபெயர்ப்பை வைத்துக் கொண்டுதான் என் விமர்சனத்தை முன்வைக் கிறேன்" என்ருர், திரு. ந. சபாரத்தினத் தின் மொழியில் சொல்வதானல், "அவரு டைய விமர்சன ஆழ்நோக்கு என்ற கூர் வாளின் வீச்சினல் எந்தக் கவியரசரின் பொற் சிலையும் அதன் உயர் பீடத்தினின்றும் வீழ்த்தப்படும்." பேராசிரியர் லுடோ வைக்கின் ஷேக்ஸ்பியர் விமர்சன நூல் போன்றவற்றை யாழ் நூலகத்திலிருந்து எடுத்துச் செல்லும்போது ' அதில் ஒரு பந்தி வாசித்துக் காட்டும் ?? என்பார், வாசித்ததில் தமது கருத்தைச் சொல்வார்.அவருக்கென்றே சில கட்டுரைப் பகுதிகளை மொழிபெயர்ப் பும் செய்ததுண்டு.
ஹாஸ்யரசத்தில் விசேஷ ஈடுபாடுள்ள உள்ளம் படைத்தவராதலால், மேனுட்டு இலக்கியத்தின் விகடத் துணுக்குகள் பல வற்றைச் சொல்லியும் கேட்டும் இரசிப்பார். ஒரு உதாரணம் ஒலிவர் கோல்ட்ஸ்மித்தின் கதை யொன்றில் வரும் ஒரு “கற்புக்கனல்" கணவனின் சவக்குழிக்கு அருகில் அமர்ந்து கைக் குட் டையால் வீசிக்கொண்டிருந்தா ளாம். வழிப்போக்கன் ஒருவன் பரிவுடன், ** அம்மையே இவ்வளவு தூரம் - இறந்த பிறகும் - சவக்குழியிலிருக்கும் கணவனுக்கு வியர்க்காமல் விசுக்குகிறியே; அவர் எப்படி யெல்லாம் உன்மீது அன்பாயிருந்தார் எனச் சொல் சொல்வதால் இழப்பின் வேதனை

Page 236
- 1
குறையுமல்லவா?" என்ருணும். அவள், ** இல்லைப் பாருங்கோ, அவர் சாகிறதற்கு முன், ‘என்னைப் புதைத்த சவக்குழியின் ஈரங் காயுமுன் போய் மற்றக் கலியாணம் செய்திடாதே ? என்று சொல்லிப்போட்டுப் போனவர்; அதுதான் விசுக்கிக் கெதியாய்க் காயவைக்கிறேன் ; ஒரு மனிசனின் கடைசிப் பேச்சைத் தட்டக் கூடாது அல்லவா??? என் ருளாம். கோல்ட்ஸ்மித் எந்த அழகு ஒழுகும் ஆங்கிலத்தில் சொன்னனே! எங்களுக்குப் பண்டிதமணி கதையைச் சொல்லும் பழகு தமிழ்தான் அளவில்லாமல் சிரிக்க வைக்கும். கனக. செந்திநாதன் பண்டிதமணியிடம் வரும்போதெல்லாம் நான் அவரை கோல்ட் ஸ்மித் போலத் தோற்றம் எனக் குறிப்பிடு வேன்.
ஜேர்மன் மகாகவி கேத்தே 24 வயதில் Grupgulu “ Goetz von Berlich ingen ” (773) என்ற நாடகம் எவ்வாறு பேர்ளினில் மேடை யேற்றப்பட்டுப் பெரும் சலசலப்பை ஏற் படுத்தியது என்பார். நீண்டகாலம் எப்படிக் கதையை முடிப்பது என்று கலங்கி இருந்த கேத்தே கதாபாத்திரம் தற்கொலை செய் தது என்று க  ைத  ைய முடித் தார். வெற்றிக்கொடி நாட்டிப் பிரபலமடைந்த நாடகம் பெரிய சமூகப் பாதிப்பை ஏற் படுத்தியது. ஆறு மாதத்துக்குள் பல இளிை ஞர்கள் அதேபோலச் சுட்டுச் செத்தனர். காதலில் தோல்வியுற்ற கேத்தே சொந்த வாழ்க்கையில் ஒரு தீர்மானம் எடுக்க முடி யாமல் இருந்ததை நாடகத்தில் வக்கிரமாகப் பிரதிபலிக்கச் செய்தார். சமூக விளைவு பெரும் பாதகமாக முடிந்தது. இவரைப் போன்ற கவிஞர்களைத்தான் பிளேற்ருே நாடு கடத்தச் சொன்னர் என்ற பண்டிதமணியின் புகழ் மிக்க வாதம் தமிழிலக்கிய உலகில் பிரபலமடைந்தது. இந் நாடக விபரம் எனக்குப் பலகாலம் கிடைக்கவில்லை. ஒரு சிறு விபரம் மட்டும் ஜோண் ட்றிங்வாட்ட ரைப் பதிப்பாசிரியராகக் கொண்ட உலக இலக்கிய வரலாற்றில் இருந்தது. “தாங்கள் எங்கு பெற்றீர்கள்' என்று விசாரித்தேன். மஞ்சரியில் ரா. பூரீ தேசிகன் எழுதிய கட்டுரை ஒன்றில் கண்டதாக ஞாபகம் என்ருர். பின் நாளில் ஆங்கில நாடக ஆசிரியர்

9 -
ஜோன்ஆ(ர்)டன் அதை அடியொற்றி எழுதிய "இரும்புக்கரம் " என்ற நாட கத்தைக் கண்ணுற்றேன். ஆனல் அப்போது பண்டிதமணி பயனற்ற உலகியல் இலக்கியங் களைப் பற்றிப் பேசும் மனுேநிலையில் இல்லை. (இறுதிச் சந்திப்பில் ** திருக்கோவையார் முன்னுரை பார்த்ததுண்டோ ?" எனக் கேட்டு அதில் ஒரு வாசகத்தைச் சொல்லி நூல் கிடைத்தால் பாரும் என்று பேசக் கஷ்டத்துடன் சொல்லி முடித்தார் )
1951ஆம் ஆண்டு பரமேசுவரக் கல்லூ ரித் தமிழ் விழாவில் தமிழ் பற்றிப் பேசிய ஒப்பற்ற கருத்து என் போன்ற சிலரைக் கவர்ந்து இழுத்து அவருக்கு அடிமையாக் கியபோது, நண்பர்கள் பலர் சங்க இலக்கிய அகத்துறைப் பாடல்கள் கடவுட் காதலைக் குறிப்பன அல்ல; இவர் வலிந்து பொருள் கொள்கிருர் எனக் குறை சொல்லக் கேட் டேன். அப்போது தற்செயலாகக் கிடைத்த டெனிஸ் டீ ருேஜ்மோ எழுதிய " காமமும் depascupub '' (Passion and Society 67 airp நூல் என் கண்களை அகலத் திறந்தது; பண்டிதமணியின் கருத்தை வலியுறுத்தியது. அதில் உலக இலக்கியப் பரப்பு முழுவதும் 12ஆம் நூற்றண்டுவரை கடவுட் காமமே உயர்த்திப் பேசப்பட்டது என்றும், அச் சொற்களின் பொருள் இழிந்து, உலகியற் காமத்தைக் குறிக்க வந்தது மிகப் பிந்திய நிகழ்ச்சி என்றும் பல்வேறு நாட்டு இலக்கியச் சான்று கொண்டு நிரூபித்துள்ளார். அதில் பல பகுதிகளைப் பண் டி த ர் ஐயாவுக்கும் படித்துக் காட்டினேன். தமது கருத்துக்குத் துணைபோவோர் ஐரோப்பாவிலும் உளர் என்ற திருப்தி அவருக்கு ஏற்பட்டது.
டால்ஸ்டாய் மீது பண்டிதமணிக்குப் பெரும் மோகம். அவரது நண்பரும் உப அதிபரின் பெரும் பக்தருமான திருநெல்வேலி காசிப்பிள்ளை உபாத்தியாயர் அவர்கள் ஆங் கிலத்தில் டால்ஸ்டாயை வாசித்துச் சுவைத் துப் பண்டிதமணியுடன் பேசுவார். நான் ** இளமைப்பருவம் " என்ற நூலைக் கொடுத் தேன். வாசித்துவிட்டு, "டாஸ்டாய் சிறு பிள்ளையாகத் தாயின் மீசை துடிப்பதைக் கூட எவ்வளவு நட்பமாக அவகானிக்க

Page 237
-
வர்ணிக்கிருர்’ என்று பாராட்டுவார்." "அன்ன கரின" மொழிபெயர்ப்பு ஜோதி நிலைய வெளியீடாக வந்தபோது முழுவதை பும் படித்து ரா. பூரீ தேசிகனின் முகவுரை யைச் சிலாகித்துப் பேசுவார். அதில் E. W. லூக்காஸ், மரணம் பற்றிய ஆழ்ந்த சிந்தனை களுக்கு டால்ஸ்டாய் இலக்கிய வடிவம் கொ டுக்கும் இடங்களைக் குறிப்பிட்டு, " இங்கு அவரது இலக்கிய ஊற்று வற்றிவிட்டது" என்பார். டண்டிதமணி அதை விசேடமா கச் சுட்டிக் காட்டி மறுப்பார். "இந்த இடத் தில்தான் உண்மையான இலக்கியம் பிறக் கிறது என்று கீழ்நாட்டவர் கருதுவர்" என் í frri. 5
தருமம் தலைகாக்கும்; நடமாடும் மணி தர்க்குச் செய்வது படமாடும் கோவிற் பக வற்கு ஆகும் என்ற கருத்தை வலியுறுத்தும், டால்ஸ்டாயின் ' இரு வர் யாத்திரிகர்" கதையைப் பண்டிதமணியவர்கள் நம் கிராம வாழ்வுக்கு ஏற்பத் தழுவிக் கதிர்காமம் போனதாக வருணித்துள்ளது இலக்கியச் சுவை மிக்கது. தழுவல் இலக்கியம் எப்படி அமையவேண்டுமென்பதற்கு எடுத்துக்காட் டாக உள்ளது.
டால்ஸ்டாயின் மற்ருெரு மாண்புமிக்க படைப்பான செருப்புக் கட்டியின் கதையில் வரும் காலதேவனின் தூதுவன் இறைவனின் திருச்சித்தத்தை அறியாது இரக்கம் காட்டிச் சிறகுகள் முரிந்து பூமியில் விழுந்ததும், இறைவனின் கருணை பெற்ருேரை இழந்த இரட்டைக் கழந்தைகளைச் சீமாட்டி ஒருத்தி வளர்க்கச் செய்ததைக் கண்டவுடன், திருச் சித்தத்தின் வழிநடப்பதன் சிறப்பை உணர்ந் ததும் பண்டிதமணியின் கையில் அருமந்த படைப்பாக உருப்பெற்றுள்ளது. அதனைத் திருஞானசம்பந்தரின் "ஆட்பாலவர்க்கு அரு ளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில்லை" என்ற உயர் தனிக் கருத் துடன் இணைத்துள்ள ஆற்றல் சிந்தனையுலகில் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் பெரு முயற்சியாகப் பரிணமித்துள்ளது. வேலணை யில் 1955இல் நடந்த திருமுறை விழாவில் நிகழ்த்திய மூன்று நாட் பேச்சின் முதற் பகுதி பாக இது அமைந்தபோது கொழும்புத்

80 -
தமிழர் பலரும் இவர் என்ன மிலேச்ச ருஷ்ய இலக்கியத்தில் சுவை காண்கிருர் எனக் குத் திப் பேசினர். அந்த இணைப்பின் அற்புதம் மூன்று நாட் பேச்சையும் கேட்டவர்க்கே விளங்கியது.
அறத்துக்கும் சமயத்துக்கும் தொடர்பு உண்டா, அறத்துக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டா என்ற விவாதம் மேனுட்டு வழியே நவீன தமிழ் விமர்சகர் களுக்கு இடையிலும் வந்துவிட்டது. நாவலர் வீதி (பெருமாள் கோவிலுக்கு அயலில் உள்ள) இந்து மகா சபையில் சைவ அறிஞர் நாகை யர் தலைமையில் கூட்டம், ஆபிரகாம் லிங்கன் சீனி விற்ற கதையைக் கூறி, " ஒரு நாள் லிங்கன் சைவனகலாம்; மேன்மைகொள் சைவரீதியை விளங்கலாம்" என்று பேசினர் பண்டிதமணி. தலைவர் எ மு ந் து "பண்டிதர் "எதிக்ஸ்" பேசுகிருர், எதிக்ஸ் வேறு, சமயம் வேறு’ என்ருராம். ஒழுக்க வியல், (அறக்கோட்பாடு) என்ற அடிப் படைஇல்லாமலும் ஒரு சமயம் இருக்கமுடியு மோ என்று பண்டிதமணி கேட்பார். சமய வாழ்வுக்கு - இலட்சிய வாழ்வுக்கு - வழி காட்டுவதே இலக்கியம் என்பது அவர் முடிவு. வாழ்வைக் கூறுபடுத்தி, அறம், தத்துவம், சமயம் என்று மேனட்டுத் தத்துவத்துறைப் பட்டதாரி மாணவன் படிக்கலாம். ஆனல் தீழ்நாட்டுச் சிந்தனையாளரின் நோக்கு ஒன் றிணைந்த நோக்கு என்பார்லிங்கன் கதையும், டயஜனிஸ் விளக்கு ஏந்தி மனிதரைத் தேடிய கதையும் பண்டிதமணியின் இலக் கியச் சுவை கமழும் பேச்சுக்கள் மூலம் பிரபலமாகி இன்று ஆரம்ப பாடசாலைத் 'தமிழ் மலர்'களிலும் வந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
மேலைத் தேச இலக்கிய விமர்சனத் துறைக்கு ஆதி நாயகனும் மிக்க சர்ச்சைக் gifugioh (Most controversial figure) சிந்தனையாளர் பிளேட்டோ ஆவர். அவர் கவிஞர்களைப் பற்றிக் கூறியவை இன்றுவரை பாரதூரமாக விமர்ச்சிக்கப்படுகின்றன. கவி ஞரை நாடு கடத்தவேண்டும் என்றதற்காக அவரைக் கலை இலக்கியத் தணிக்கைச் சர்வாதிகார வாதி என்று கண்டிப்பாரும் அவரில் என்ன பிழை என்று கேட்பாரும் இன்றும் உளர். அன்னரது கருத்துக்களை

Page 238
} --س--
முழுக்க முழுக்க ஏற்று இலக்கிய நயம்படக் கூறித் தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலப் படுத்திய பெருமை பண்டிதமணிக்கே உரி யது. "இலக்கிய வழி"யில் எது போனலும் கவிஞர்கள். என்ற கட்டுரைகள் தமிழில் இலக்கிய விமர்சனம் உள்ளளவும் வாழும், வாழவேண்டும். இதனைத் தமிழ் விழாப் பேச்சின் இறுதியிலும் “இன்று அவசியமாகச் செய்யவேண்டிது" என வற்புறுத்தியுள்ளார். *வா லெங்கே" என்று கர்ளமேகம் கேட்ட கவிக்குலம் நாட்டைக் கெடுக்கும்வரை இக் குரலும் எதிரொலித்துக்கொண்டே
சான்றுக் குறிப்புகள்:
t. Like Leavis Pandithamani swore by the perhaps the most important component versial figure when he over emphasised seems to have courted adverse criticism to standard works that deviated from til
இலக்கிய கலா 2. " இலக்கியவழி (திருத்தப்பதிப்பு) மு: *" துருவன் அனையன் ஒருவனிங் என்ற சீசரின் தலையெடுப்பான கூற்று என்றுமட்டும் சொல்லி, இறுதி அடி ** மாரியும் உண்டு ஈண்டு உலகு கபிலர் "அதனை எமது பாரி வென்றுவி யிருக்கும் எனக் கேலி செய்வார்கள். குறைகளை எடுத்துக் காட்டி ஒரு கவி கொள்வதைத் தவிர்த்து வந்தார்கள். 3. கலாநிதி கைலாசபதியின் இறுதிக் கr பஞ்சாட்சரம் அபிப்பிராயம் கேட்டடே உரையாடலின்போதும் இந்த ஆங்கில விரும்பிப் படித்ததாகக் கூறினர். ** 6 தான் சங்கச் சான்றேரால் பேசப்பட்ட யுள்ள அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிடி பதை அனுமதிக்கும் போக்கு அவர்பா னுக்குடன் பண்டிதமணிக்கு அறிவித்ே ஐந்திணை' பதிப்பில் முகவுரைக்கு மு 4. நட்ஹாமசனின் "நிலமெனும் நல்ல நுண்ணிய வருணனையையும் நன்கு ப உப அதிபர் அவர்கள் "மேல்நாட்டுச் அவர் தர்மம் என்ருல் என்ன என்பை ஆனல் பூரண தெளிவு பிறக்கவில்லை. அதிலிருந்துதான் கீழ்த்திசைச் சிந்தனை கூறுவார். இதன் எதிரொலி போலி
5

SI -
இருக்க வேண்டும். சமூக விரோதிகள் இலக் கியச் சுவைஞரைத் திசைதிருப்பிப் பாழ்ங் குழியில் தள்ளும்வரை இவரது எச்சரிக்கை யும் எதிர்க் குரல் எழுப்பிய வண்ணம் இருக்க வேண்டும். செவியுள்ளவர்கள் கேட்கக் கட வர். முற்போக்கு, மக்கள் சக்தி என்ற பெயரால் இக் குரலும் அடக்கப்படலாம். *நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே?* என்று அடித்துரைத்த பரம்பரை யின் இறுதிக் குரலாக ஐயா அவர்களின் குரல் இல்லாது, அவர்தம் இலக்கிய விமர் சன புத்திரர்கள் பெருகுக.
creed that the moral sensibility of a writer is of his artistic personality. le became a controthis creed, and his excessive religious outlook when he denied the merit of literary excellence he traditional norm of divinity in the hero.
-Leavis of Tamil Literature by N. Sabaratnam நிதி பாராட்டு விழா மலர் (1978) பக். 7. ன்னுரையில் குளனல்" ரப் 'புறநானூற்று" வரிசையைச் சேர்ந்தது" யைக் குறிப்பிடாமலே விட்டுவிட்டார்கள். புரப்பதுவே" என்று நிறுத்திக்கொண்ட விட்டான்?" என்று சேர்த்துப் பாடினுல் எப்படி பண்பாடு காரணமாகப் பின் நாட்களில் ஞரது "சுற்றத்தாரின் பகையைக் கட்டிக்
ாலத்தில் ‘அன்பின் ஐந்திணை' பற்றி திரு. ாது, கைலாசபதி அவர்களுடன் கடித மூலமும் நூலைக் குறிப்பிட்டேன். அவர் தாமும் அதனை வீரகாவிய காலத்தில் ?? கடவுட் காதல் மட்டுந் டது என்பதைப் பரிணும வாதத்தில் நம்பிக்கை -னும், இப்படி ஒரு நோக்கு இருக்கலாம் என் ால் காணப்பட்டது. அவ்வுரையாடலை உட தன். அதன் விளைவாய் எழுந்ததே 'அன்பின் முகவுரை என்ற குறிப்பு. ாள்" என்ற நோர்வே நாட்டு நாவலின் ாராட்டுவார். சிந்தனையாளருள் பெரியவர் சோக்கிறற்றீஸ். த வரையறுக்கப் படாதபாடு பட்டிருக்கிருர், அங்கு மேலைத் தேச சிந்தனை முடிகிறது. இலக்கியம் ஆரம்பிக்கிறது" என்று இறுக்கிக் ருக்கிறது பண்டிதமணியின் கூற்று,

Page 239
சிவானந்தப் பெ
சி. முருகவே நூலகர், யாழ்.
மூன்று சந்தர்ப்பங்களின் அடிப்படை யில் வைத்து பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை ஐயா அவர்களை நினைவுகூர விரும்பு கின்றேன். முதலாவது சந்தர்ப்பம் பரமேசு வரக் கல்லூரியில் இவ்வளாகத்தில் கிடைத் தது. இச் சந்தர்ப்பத்திலேதான் பண்டிதமணி ஐயாவை நான் முதன் முதல் கண்டேன். நீண்டு முழந்தாள் வரைக்கும் செல்கின்ற கைகளோடு கூடிய ஆஜானுபாகுவான தோற் றம் ; அதி தீட்சண்யமான கண்கள். அச் சந்தர்ப்பத்தில் இலட்சிய ஜெயந்தி விழாவில் பண்டிதமணி அவர்கள் யாழ்ப்பாணக் கலா சார மூலம் கந்தபுராணம் என்ற பொருள் பற்றி உரையாற்றினர். கந்தபுராணம், பாரத நாட்டின் சிறந்த சிந்தனைகளையும், சிறந்த உணர்வுகளையும், சிறந்தகாட்சிகளையும் தன்னகத்தேகொண்டு மிளிர்வதோர் அற்புத கலைப்படைப்பாகும். இந் நோக்கில், யாழ்ப் பாணத்தின் கலாசார மூலம் கந்தபுராண மாய் இருப்பின் அக் கலாசாரம் அகண்ட і іптіТ5 கலாசாரத்திற்குப் புறம்பான தொன்முக இருக்க முடியாது.
பண்டிதமணி ஐயாவின் இவ்வுரை பற்றிப் பல காலம் பலர் கதைத்து வந்தனர்.
இரண்டாவது சந்தர்ப்பம் பண்டிதமணி ஐயாவின் தாய்வழியூரான தனங்கிளப்பில் ஏ ற் பட் டது. திருக்கேதீசுவரத்திற்குக் கால் நடையாகச் சென்ற யாத்திரிகர்கள் கூட்டத்தில் யானும் ஒருவனுகச் சென் றிருந்தேன். யாத்திரை தொடங்கிய அன்று மாலை தனங்கிளப்பில் பண்டிதமணி ஐயா எம்மை வரவேற்ருர், அவ்வூர் பிள்ளையார் கோயிலில் ஒரு சிறிய புராணப் படிப்பும் நடைபெற்றது. யாத்திரையில் வந்த ஒருவர் வாசிக்கப் பண்டிதமணி ஐயா அவர்கள் பின் வரும் பாட்டிற்குப் பயன் சொன்னுர். வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க.
ஐயா அவர்கள் இவ்வொரு பாட்டிற்கு
ஒரு மணித்தியாலத்திற்கு மேலாகப் பயன் கூறினுர். சிறப்பாக வேதநெறி என்ற

ருவாழ்வு பெற்றர்
ள் அவர்கள்
பல்கலைக்கழகம்
தொட ருக்கு அவர் கூறிய பயன் என்னைப் பிரமிக்க வைத்தது. அவரு டைய உரைக்குப் பின்னணியில் வேத இலக் கியங்கள் பற்றியும் வைதிக சமயம் பற்றியும் ஆழ்ந்தகன்ற அறிவும் உணர்வும் இருந்தன போன்றதொரு பிரமை எனக்கு ஏற்பட் டதை இப்பொழுது நினைவுகூருகின்றேன். பண்டிதமணி ஐயாவுக்கு ஆழ்ந்த வடமொ ழிப் புலமை இருந்திருக்க நியாயமில்லை. ஆங்கில நூல்களின் வழியாக வேதங்களைப் பற்றியோ வைதிக நெறியைப் பற்றியோ அறிந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறும் இல்லை. எனின் இந்த முறையில் வேதநெறி என்ற தொடருக்கு பயன் கூற அவரால் எவ் வாறு முடிந்தது. வடமொழியையும், தமிழ் மொழியையும் இரு கண்ணேபோல் போற்றி வந்த யாழ்ப்பாணக் கந்தபுராண கலாசாரத் தின் விளைவாகத்தான் இருக்க முடியும்.
மூன்ருவது சந்தர்ப்பம் பேராதனையில் கிடைத்தது. சைவ சந்நியாசி ஒருவர் "திருச் சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்" என்று சொல் விக்கொண்டு சிங்கள அரசனின் சபையில் சென்று சிங்கள மன்னனை ஆட்கொண்ட கதை, நாம் திருவாதவூரடிகள் புராணத்துட் கண்டது. அந் நாட்களில் பேராதனையில் சிங்கள ராஜதானி எனக் கருதப்படும் கண்டிக்கு அருகாமையில் பண்டிதமணி ஐயாவின் தக்ஷகாண்ட உரை அரங்கேறி யது. தலதா மாளிகைக்குரிய பெரிய யானை யில் சுவடி பொற்பீடத்தில் வைக்கப்பெற்று இரு பக்கங்களிலும் இரு யானைகளிலிருந்தும் இரு மாணவர்கள் சாமரை வீசக் கொடி, குடை, ஆலவட்டங்களுடன் நடைபெற்ற வீதி உலாக் காட்சி கண்கொள்ளாக் காட்சி யாக இருந்தது. விழாவுக்கு வந்திருந்த பண்டிதமணி ஐயா விழா முடிந்த பின்னர் ஒரு நாள் மாலை நேரம் எனது இல்லத்திற்கு வந்திருந்தார். சில நிமிடங்கள் பண்டிதமணி ஐயாவுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ் வா று சொல்வதிலும் பார்க்க அவர் சொல்ல நான் கேட்கின்ற வாய்ப்புக் கிடைத்தது என்று கூறுவதுதான் பொருத்தம். விடைபெறும் நேரம் வந்ததும்

Page 240
பண்டிதமணி அவர்களும்
தொழிலதிபர் க.
யோ அவர்கள் வண்ணை நாவலர் காவிய பாடசாலையில் தக்க பெரியவர்களிடம் பயின்று, மதுரைத் தமிழ்ப் பண்டிதராகி, ஆசிரியர்க்கான பயிற்சி பெறுவதற்காகக் கோப்பாய் ஆசிரிய கலாசாலையிற் சேர்ந்த ஆண்டில், 1927இல் மில்க்வைற் தொழிலகம் ஆரம்பிக்கப்பெற்றது.
ஐயா அவர்கள் சைவ சிரிய கலாசாலை யில் தமிழ்ப் பேராசாணுகித் திருநெல்வேலி யில் தங்கியிருந்த காலம் முதல் மில்க்வைற் தொழிலகத் தயாரிப்புக்கு ஆதரவு கொடுத்து வந்தார்.
ஐயா அவர்கள் பெரும் பேச்சாளராக வும், எழுத்தாளராகவும், பேராசிரியராகவும் பெயர்பெற்றிருந்த காலத்திற்கூட நான் அவரை அறியவில்லை. அவரைக் கண்டறிய வில்லை; காதுகளைக் கொண்டு கேட்டறியவும் இல்லை. அவர் அக் காலத்தில் புகழ் பூத்துத் தமிழ் பேசும் உலகமெங்கும் வியாபக முள்ள ஈழகேசரி வார இதழில் வடித்த எழுத்துக்களையும் நான் எண்ணிப் படிக்க
(182ஆம் பக்கத் தொடர்ச்சி)
முற்றத்திலே வந்து திரும்பி என்னைக் குறிப் பாகப் பார்த்தார். பார்த்து, சம்பந்த சுவாமி களின் திருவெழுகூற்றிருக்கை தெரியுமோ என்று கேட்டார். தெரியும் என்கின்ற பாவனையில் தலையசைத்தேன். இறுதி அடிகள் தெரியுமோ என்று கேட்டார். ஓம் தெரியுமே என
** இருமையின் ஒருமையும் ஒருமையின்
பெருமையும் மறுவிலா மறையோர் கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் அறியும் அனைய தன்மையை யாதலின் நின்னை நினைய வல்லவர் இல்லைநீள் நிலத்தே**
என்று அவ்வடிகளையும் கூறினேன். இருமை யின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் என்ற தொடருக்கு பொருள் தெரியுமோ என்று கேட்டார். பொருள் கூற யான் எத்தனிக்கவுமில்லை. பொருள் கேட்க அவர் நிற்கவுமில்லை. அவர் சென்றதும் என் நினைவுக்கு வந்த பாடல்,

மில்க்வைற் தொழிலகமும்
கனகராசா அவர்கள்
வில்லை. அவர் தமிழ் வளர்த்த காலத்தில் நான் தொழிலகத்தை வளர்த்துவந்தேன். வேறெதிலும் என் கருத்துச் செல்லவில்லை.
மில்க்வைற் தொழிலகம் வளர என் அறிவு வளர்ந்து நான் ஒரளவு முதிர்ச்சி பெற்ற காலத்தில், நாடோடியாக வழங்கும் ஒரு தமிழ்த் தொடர் என்னைப் பெரிதும் கவர்ந்தது. " அரசனை அண்டி வாழ்தல் வேண்டும், அன்றேல் அறிஞனை அண்டி வாழ்தல் வேண்டும் " என்பதே அது. எங்கள் அயலில் வாழ்ந்த வித்துவான் ந. சுப்பையபிள்ளை அவர்களை நன்கறிந்தேன். அவரைத் தொடர்ந்து பிரம்மபூரீ சீதா ராம சாஸ்திரிகள் அவர்களையும் அறிந்தேன். பின்னர் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியரா யிருந்த ஹரன் ஐயா அவர்களையும் அறிந் தேன். இவர்கள் எல்லோரும் கூடியும் தனித்தும் அறிவு நிறைந்த உரையாடலின் போது, பண்டிதமணி அவர்களைப் பற்றி ஒரு முகமாக உயர்த்திப் பேசியதைக் கேட்டு வந்தேன்.
ஆனந்த வெள்ளத் தழுந்துமொ
ராருயி ரீருருக்கொண் டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கு மம்பலஞ்சே ரானந்த வெள்ளத் தறைகழ
லோனருள் பெற்றவரி ணுணந்த வெள்ளம் வற்றது முற்ருதிவ் வணிநலமே.
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையினையும் திருக்கோவையாரில் வரும் இச் செழும்பாடலில் வைத்து விளங்க முடி யுமோ என்னவோ?
பண்டிதமணி ஐயாவுக்கு நாம் செய்யக் கூடியது ஒன்று மில்லை. திருநெல்வேலிச் செம்பாட்டில் இருந்து கொண்டு தமிழோடு கலந்து கலந்து வாழ்ந்த அவர் நிர்மலராஞர், அதி அற்புதமான திருக்கயிலாயச் சூழலிலே சிவானந்தப் பெருவாழ்வு பெற்று நித்திய மாய் வாழ்ந்து கொண்டிருக்கிருர் என்று நம்புவோமாக.

Page 241
- *
பண்டிதமணி எப்படியானவராயிருப் பார் என்று நினைத்து அவரைக் காண்ப தற்கு விரும்பி அன்போடும் அச்சத்தோடும் பணிவோடும் அவருடைய இருப்பிடத்துக் குச் சென்றேன். மல்லிகைப் பந்தர், மலர்ச் செடிகள் சூழ்ந்த நிழலடர்ந்த சூழலில் கொட்டில்களோடு கூடிய ஒரு மனையில் காலை நேர ஆசார அநுட்டானங்கள் முடித்து ஆறுதலாக அமர்ந்து படித்துக்கொண்டிருந் a 5:TIT.
முன் பின் அறியாத என்னை 'வாருங்கள்?? என்று முகமன் கூறி வரவேற்று என்னை யாரென வினவி அறிந்துகொண்டார். தூய அன் பின், அறிவின், பண்பாட்டின் நிலைக்களனை அன்று நான் கண்டு அதி சயித்தேன்.
காந்தம் கவர்ந்த இரு பைப் போல அவராற் கவரப்பெற்ற என்னை அவர் அன் பால் ஈர்த்தார். என்னை அறியாமலே நான் பலமுறை அவரிடம் சென்று அகலாமல் அணுகாமல் அருகிருந்து உரையாடிவந்தேன்.
நான் மேற்கொண்ட பனையபிவிருத்திச் சபை, மரம் நாட்டும் பணி ஆகியவற்றைப் பற்றி அவராகவே பேசத் தொடங்கி, உள்ளூர் மூலப் பொருள்களின் மகத்துவத் தைப் பற்றி அறிவுறுத்தினர்.
பொருளிட்டும்போது அறத்தைத் துணை யாகக் கொள்ளுதலைப் பற்றி என் சிற்றறி வுக்கு எட்டிய வகையில் விளக்கினர். தம் மைச் சேர்ந்தவர்களாய தொண்டர்கள் இரு வரின் பெயர்களைக் கூறி இவர்களையும் சேர்த் துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறிஞர்.
யாழ்ப்பாணப் பிரதேசத்திலே முன்னர் பஞ்சம் பட்டினி உண்டானபோது மக்கள் பனையை நாடியதையும். சிறு தானியங்கள், இலை, தழைகள் இயன்றளவு பயன் செய் தமையையும் எடுத்து விளக்கிஞர். தாமா கவே தம் கைப்படப் பசிப் பிணிக்கு ஒரு மருந்து, விஜயதசமி நாள்களிற் செய்யக் கூடியவை, பனையபிவிருத்திக்கு வழி ஆகிய தலையங்கங்களில் பொது மக்களுக்கு உருக்க மான வழியில் எழுதித் தந்தார்.
அவர் எழுதித் தந்தவற்றை நான் பல் லாயிரக் கணக்கில் பலமுறை அச்சிட்டு நாடெங்கும் பரப்பிய வேளையில் பாடசா லைச் சிறுவர் சிறுமியர் முதல் சனசமூகசபை

34 -
அங்கத்தவராய பெரியவர்கள் வரை எமகசூ அமோக ஆதரவளித்தார்கள்.
பனையபிவிருத்திப் பணிக்குப் பல்லாயி ரம் பனம் விதைகளை எங்கள் லொறிகள், வான்கள் ஏற்றிச் செல்லக்கூடியதாக விதைகள் குவிந்தமைக்குக் காரணம் அவர் எழுதிய விஷயத்தில் ஒரு வாக்கியமேயாகும். * மில்க்வைற் வாகனங்கள் ஓம குண்டங்கள் போன்றவை. அவற்றில் நீங்கள் பனம் விதைகளை ஆகுதி செய்தால், அவை உரிய இடங்களைச் சென்றடையும்." இந்த வாக் கியம் என் மனத்தை வெகுவாக உருக்கிவிட் டமையால், இந்த வாசகத்தைத் தாரக மந்திரமாக நான் கொண்ட அளவில் பனம் விதைகள் நாடெங்கும் கிடைக்கக்கூடிய தாயின. இங்ங்னமே பனம் பண்டங்களின் பயனையும் அவர் விளக்கியதால் பனை வளத் தைப் பற்றி நன்முக அறியக்கூடியதாக இருந்தது. அவருடைய நல்லாசியைச் சிர மேற் கொண்டு பனைவளம் என்னும் பாரிய நூலொன்றையும் வெளியிடக்கூடியதா
பண்டிதமணி அவர்களின் பழக்கத்தால் நான் ஆறுமுகநாவலர் அவர்களைப் பற்றி நன்கறியக் கூடியதாயிருந்தது. காலந் தோறும் நாவலர் அவர்களின் நினைவாக மில்க்வைற் செய்தியில் சிறப்பிதழ்கள் வெளி யிட்டபோது, அவற்றின் முதற் பிரதிகளை அவரே முதலிற் கையேற்று ஆசி கூறியுள் ଘrt ft |rf .
அவர் வழிப்படுத்திய தொண்டர் இரு வரும் எவ்வித பிரதிபலனும் கருதாது வலக் கரம் இடக்கரம்போல எனக்கு உதவி செய்து வருவதைப் பாராட்டுவதற்கு மிகவும் அமைதியாக இரகசியமாகச் சூழ் நிலையை உண்டாக்கியபோது, ஐயா அவர் களே முன்னின்று பதக்கங்களை அணிவித்து மாலையிட்டுப் பட்டங்கள் சூட்டிக் கெளர வித்தார்கள். நாயன்மார்கட்டு ஆசிரியர் பரநிருபசிங்கம் அவர்களும், கந்தமடம் பல்கலைப் புலவர் குலரத்தினம் அவர்களும் இன்றும் பண்டிதமணி அவர்களை நினைவு செய்தவாறு எனக்குப் பக்க பலமாக இருக் கிருர்கள். வாழ்க பண்டிதமணி அவர்களின் திருநாமம் வளர்க அவரின் சைவத் தமிழ்ப் பண்பாட்டுப் பாரிய பன்முகப் பணி !

Page 242
பண்டிதமணியின் சொல்ே
பிள்ளைக்கவி வ. சில
நோக்கு: வனப்பு, அழகு, பார்வை என்ற பொருள்கள் பயின்ற ஓர் சொல்.
A நோக்கிய நோக்குளனும்
நுதிகொள் வேலினை ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன”*
என்பதில் நோக்கு பார்வை என்னும் பொருளது.
* திரு என்பது கண்டாரால் விரும்பப்படும்
தன்மை நோக்கம்" என்பதில் நோக்கம் அழகு என்னும் பொருளது. சொல்நோக்கு என்பது சொல் வனப்பு என்னும் பொருள் கொண்டது.
சொல் வனப்பு ஓசை நயத்தால், பொரு ஃளத் தெளிவுற உணர்த்தும் சிறப்பால் அமைவது. சாதாரண சொல்லும் அதனைக் கையாளுகின்ற எழுத்தாளனது பிரயோக விவேகத்தால், இடம் நோக்கி அமைக்கும் பொருத்தப் பண்பால் என்றுமில்லா வனப் பும் வளமும் பெறுகிறது. இத்தகைய சொல் தனித்து நிற்றலன்றிப் பிற சொல்லா யத்தோடு கூடி இலக்கியச் சோலையில் உலாப் போங்காலை மனேரம்மியமான பொருள் விகCப்ப நிற்பது.
இராம பாணத்தின் சிறப்பை உணர்த்த வந்த கவிஞர்பிராணுகிய கம்பர் அதனைச் சிறந்த கவிதைக்கு ஒப்பிட்டுள்ளார் ஒரு Lunt L-656).
நல்லியற் கவிஞர் நாவிற்
பொருள்குறித் தமைந்த நாமச் சொல்லெனச் சொல்லிற் கொண்ட
தொடையெனத் தொடையை நீக்சி
எல்லையில் செல்வம் தீரா
இசையெனப் பழுதி லாத
பல்லலங் காரப் பண்பே
காகுத்தன் பகழி மாதோ.
24

காக்கும் பொருள்கோக்கும் ராசசிங்கம் அவர்கள்
தாமச சொல்லாவது புகழ்மிக்க சொல். நாமம் - புகழ், வனப்பு. நாமச் சொல் என் பதும் சொல்நோக்கு என்பதுமாகிய தொடர்கள் சொல்வனப்பு என்னும் பொரு ளன. இனிய வனப்புடைச் சொற்கள் இணைந்து தொடையாகிறது. அவ்வாறு தொடுக்கப்படுவதனலே அத் தொடையி லிருந்து எல்லேயில் செல்வம் தீரா இசை பிறக்கிறது. இச் சொற்ருெடைச் சிறப்பை வித்துவசிரோமணியின் உரை விற்பத்தியில் வைத்துப் பண்டிதமணி அவர்கள் காட்டுவ தும் ஈண்டு ம ன ங் கொள்ளத் தக்கது. 'திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழ் பிள்ளையாரின் அருட் பாடலின் கருத்துக்கள் இசைக்கு அடங்காமல் அப்பால் நடப்பதைக் காட்டி நிற்பது; அவ்வாறே வித்துவசிரோ மணி ஒருகாலைக்கொருகால் வேறுபட்டுரைக் கும் வியாக்கியானம் கம்பரின் கற்பனைநயம் உரைக்கு அடங்காமல் உள்ளத்தை ஊடுருவி நடப்பதைத் தொட்டுக் காட்டுவதா யமை கிறது". நாமச் சொல் எல்லையில் செல் வம் தீரா இசை பயக்குமாறு இது. இராம பாணம்போல் பண்டிதமணி அவர்களின் சொல்லும் பல்லலங்காரப் பண்பினவாம். இப் பல்ல லங்கா ரங்களுள் எளிமை, இனிமை, நகை, அங்கதம், சமநிலை என் பன பண்டிதமணி அவர்களது படைப்புக் களில் பெரிதும் விரவி வருவன.
அவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கது சொல்லினிமை. சிறந்தார் நோக் கால் கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கையேபோல் எளிய சாதாரணச் சொற்களும் பண்டிதமணி அவர்களின் கையாளுகைத் திறத்தால் புதுப் பொலிவும் வனப்பும் பெறுவன. எளிய சொற்கள் கொண்டு இனிமை ததும்ப அவர் தீட்டிய வாக்கிய லாவணியங்களைச் சிந்தாமணிப் பாடல் ஒன்றுக்கு அவர் தரும் விளக்கத்தில் தரிசிக்க முடிகிறது.

Page 243
இணைபிரியாத இரண்டு குயில்கள், ஆணும் பெண்ணும், காதலனும் காதலியும், காஞ்சிமரக் கொம்பர் ஒன்றில் இருந்து கொண்டு விழித்தகண் இமையாமல் திரை யெறிகின்ற அந்த மகரந்தப் பரப்பை அநு பவிக்கின்றன. இடையிடையே தம் வயம் இழக்கின்றன. அந்த இயற்கை அழகில் ஒன்றுபட்டாலோ என்று இதயங்கள் துடிக் கின்றன. ஆண் குயில் தன்னை இழந்தே விட் டது. தன்னை அறியாமலே அந்த மகரந்தச் சமுத்திரத்தில் முழுகி உருண்டு புரண்டு பழையபடி தன் இணைபிரியாத பெடை பருகில் அமருகின்றது. அதே சமயத்தில் அந்த மகரந்தக் கடலில் இருதயத்தைப் பறிகொடுத்த பெடை அந்த அற்புத மகரந் தப் பரவசத்தைத் தன் பிராண நாதனுக்குப் பங்கு செய்து ஆச்சரியப்படும் முகமாகத் தன் பார்வையைக் கணவன் பக்கல் திருப்பு கிறது.
பண்டிதமணி அவர்களின் சொல்வனப்பு அவருக்கு இயல்பாயமைந்த நகையுணர்வு பர்ணமிக்கும் இடங்களில் நளினம் செய்வதை அவதானிக்கலாம். இந் நகையுணர்வுதானும் நையாண்டியாக, கேலியாக, பரிகாசமாக, அங்கதமாகப் பல வடிவங்களில் ஒளிர்தலையும் காணலாம்.
"அக் காலத்தில் வேத நெறி பிறழ்ந் தமையால் கைலாசத்தை அணுக முடியாத வர்களாஞர்கள் தேவர்கள். அந்த உலகச் செய்தி அப்படியானல் இந்தக் கலியுகத்தில் ஆங்கிலர் ஆட்சியில் நூற்றைம்பது வருடம் இருந்த எங்கள் செய்தி எப்படியாகும்? இந்தக் காலத்தில் எந்தக் கோயிலிலும் உட் பக எவருக்காயினும் உரிமை இருக்கமுடி பாது; எல்லாக் கோயில்களும் பூட்டப்பட வேண்டியனவே. கோயில் தோறும் பெரும் பாலும் ஒரு பலகை தொங்குகிறது. அதில் வேதாகம விதிப்படி நடைபெறும் கோயில் என்று எழுதப்பட்டிருக்கிறது. வி தி க்கு மாருக நடக்கும் கோயில் என்பதற்கு அது அடையாளம் போலும். எந்த வேதாகமங் கள் தமக்குப் பிரமாணம் என்று எவர்கள் சொல்லுகிருர்களோ அவர்களை அந்த வேதாகமங்கள் உள்ளே நிற்கவிடா."

86 -
கோயில்களில் இடம்பெறும் அனர்த்தங்க ளைச் சொல்லாமல் சொல்லுகின்ற வகை யிலே, மெல்லிய தென்றல் உராய்ந்து செல்கையில் ஏற்படும் உணர்ச்சிபோல நகை ஒளியானது சொற்களினூடே நின்று பவ் வியமாகப் பரிகாசம் செய்கின்றது.
படிப்போர்க்கமுதாய் இன்பம் விளைப் பன பண்டிதமணியின் சொல்லினிமையும் நகைச்சுவையு மென்ருல் சிந்தனை யைத் தூண்டி, கருத்துக்களை அசைபோட்டு மீட்கச் செய்வன. அவரது சமன்பாடாயமைந்த சொற்ருெடர்களும் வாக்கியங்களும் தமிழில் சேனவரையாைப் போல, ஆங்கிலத்தில் பேக் கன் (Bacon) போல, பிரான்சிய மொழியில் மொலியர் "Mollier) போல, பண்டிதமணி யவர்கள் ஒரு பொருளில் இரு வேறு பண்பு களை அயல் அயலே வைத்து அவற்றின் தாக் கச் சமன்பாட்டினுல் கூறவந்த பொருளை உள்ளத்தில் அழுந்தப் பதியுமாறு சொற்களை யாளும் விற்பன்னம் அவரது தனித்துவ முத்திரைகளில் ஒன்று. ஆரியமும் தமிழும் என்ற ஆவர்த்தம் கட்டுரையில் இவ்வமிசம் பரக்கக் காணப்படுகிறது.
ஆரியமும் தமிழும் தந்தையும் தாயும் தந்தைக்கும் தாய்க்கும் நோக்கு ஒன்றே. தந்தைக்கும் தாய்க்கும் நோக்கு ஒன்ருயி னும், போக்கு வேறு. தந்தை போக்கு அறிவுப் போக்கு. அறிந்ததில் ஆராமைப் போக்கு தாய் போக்கு. அஃதாவது அன் புப் போக்கு. ஆரியம் அறிவுநடை தமிழ் அன்புநடை காரியம் ஒன்றே.
தந்தை நடை, அறிவுக்கனல், சுடர்விட் டெரிகிறது. தாய்நடை இடையீடுபடாத தேனெழுக்கு. இத் தன்மையில் கட்டுரை முழுமையும் சமன்பாடும் ஒப்பீடும் தார்க் கிகத் தொடர்பியைபும் பயின்று விரிந்து செல்வதாய் சொல்நிறை ஒவ்வொன்றும் கனத்த கதித்த பொருள் நிறையினதாய் அமைந்து படிப்பார் சிந்தனை விருத்திக்கு முயற்சியும் பயிற்சியும் வழங்கி நிற்கக் காண்கிருேம்,
**ஆரியமும் தமிழும் ஒரு சாதியார் வழங் கிய இரு வேறு பாஷைகள். ஒன்று ஆண்; ஒன்று பெண்; நடை வேறு; பொருள் ஒன்று.

Page 244
- 1
பொருள் பிறழ நடை பிறழும்; நடை பிறழப் புற்றீசல் போலப் புதிய பாஷைகள் தோன்றும், அவை தாம் எண்ணில.??
என்பன போன்ற வாக்கியங்கள் மொழி யியலாளர்களும், ஆய்வாளர்களும் பல்கா லசைபோட்டாராயத் தக்கன.
இனிப் பண்டிதமணியின் கம்பீரியம் மிக்க சொல்நடைக்கு ஒர் உதாரணம் பார்ப் Gur ib.
இது பெரியபுராண வசனத்தில் நாவல ரின் கைலாச வர்ணனை பற்றிய விமர்சனம்.
பெரியபுராண வசனமாகிய மாளிகை முகப்பிலே செந்தமிழ் வளமாகிய ஒரு கைலாச கோபுரம் எழுந்து நிற்பதுபோல நிற்கின்றது அந்த ஏக வசன வருணனை.
அகரமுதல் னகரவிறுவாயான தமிழில் வசனநடை நடக்கும் நடைக்கு உரையாணி இது என்பதைக் காட்டுவதாயமைந்திருக் கிறது அந்த வசனம். அது சொன்னடை யாலும் த ன் னி டத் துப் பொதிந்த பொருளின் சிறப்பாலும் அப் பொருளைத் தெளிவுபெறக் காட்டும் இயல்பாலும் அவ்வெள்ளியங் கைலாசகிரியேபோல் மிளிரு கின்றது. தன்டாலமைந்த முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்ததாய், அத் தத்து வங்களால் அறியப்படுவதாய் அமைந்தது என்பதனை அறிவிப்பதுபோல முப்பத்தாறு வரிகளைக் கொண்டதாய் அவ்வாற்ருல் ஒரு தெய்வ சம்பத்தாய் அமைந்திருக்கிறது அவ் வசனம். இவ் வா ற  ைம ந் த பல் லலங்காரப் பண்புகொண்ட பண்டிதமணி அவர்களின் சொல்நலம் கனிந்த நடை பயி லும் தமிழைப் படிக்கும் எவரும் அவரது மொழியின் தனித்தன்மையை இலகுவில் உணர்வர். அவர்களது விசேடமான சொற் பிரயோகங்கள் சில அவர்தம் தனித்துவ முத்திரையை எழுத்தில் பதித்துள்ளமையை உணரலாம். உதாரணமாக அவரின்
(i) இரட்டை எதிர்மறைப் பிரயோகம் - (அ) " சக்தியின் விளையாட்டு-அஃதா வது இரங்காமலிருக்க மாட்டாமை யாகிய உயிர்கள் உய்யும் வகையான விளையாட்டு ".

37 -
(ஆ) " புலவர் அவர்களைத் தொடராமல் இருக்க முடியாமை உண்டானது."
(i) இனி வினைச்சொல் வரவேண்டிய இடங் களில் பெயரோடு செய்தல் என்னும் சொல்லை இணைத்து வினையாக்கல்.
(அ) 'நண்டுகள் நடந்த நடை ஒவ் வொன்றனையும் த னித் தனி எடுத்து இனித்தல் செய்யின் நண்டு இலக்கியம் அனந்த பேதமாம்."
(ஆ) ‘அந்த வெப்பம் ஒரு அசோக வனத்தைச் சோகஞ் செய்யுமே."
இவை போல்வன இன்னும் பலவுள.
இன. பணடிதமணியின் தனித்துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவை மலிந்த சொல் விற்பனத்தால் உணர்த்தப்படும் பொருள் நோக்குச் சற்றுச் சிந்திக்கத்தக்கது.
இங்கு பொருள் நோக்கு என்ற தொடர் இரு பொருளில் கையாளப்படுகிறது. ஒன்று பண்டிதமணி அவர்கள் பொருளே நோக்கு கின்ற நோக்கு ; இரண்டு, பண்டிதமணி அவர்களின் நோக்கால் பொருள் பெறும் வனப்பு ; அவர்தம் நோக்கால் பொருள் பெறும் புதிய விளக்கம்.
சுதந்திரனில் “ அவரவர் அபிப்பிராயம்’ என்ற தலைப்பில் அமைந்த பேட்டியில் பண்டிதமணி அவர்கள் வெளியிட்ட கருத்து, பிறர்க்கு எட்டாத, எளிதில் கிட்டாத நுண்மாண் நுழைபுல நோக்கு - அவதானித் தற் பாலது. சிலப்பதிகாரம் நெஞ்சையள் ளும் சிலப்பதிகாரம் எனப் போற்றப்படுவது பற்றிப் பேட்டி கண்டவர் வினவுக்குப் பண்டிதமணி அவர்கள் அளித்த பதில்,
தமிழ்மொழியின் விசேட இலட்சணம் என்னவெனில், ஒரு நூலுக்குச் சிறப்பு அதன் உயிர்நிலையாம் பொருளில் தங்கியிருப்பதே யாகும். சிலப்பதிகாரத்தின் பாஷை, நடை, வருணனை என்பன தமிழ் உள்ள வரைக்கும் இருக்கக் கூடியன. அந்த விசேடத்தால் மத்திரம் ஒரு நூலுக்கு உயிர்வர முடியாது. பாண்டியன் உயிர் நீத்த இடத்தில் அவன் தன் தவறை உணர்ந்தே உயிர் விட்டான்

Page 245
என்பதைக் கண்ணகி உணர்ந்திருக்கக் கூடுமே யானல், கண்ணகியின் முடிவும் வேறு வித மாகவே நிகழ்ந்திருக்கும். மேற்படி நூலில் உயிர் போன்ற இந்த இடம் சரியானபடி மதிக்கப்படவில்லை. பெரிய புராணத்திலே புகழ்ச் சோழநாயனூர் சரித்திரத்தில் பழிக் கஞ்சி உயிர் நீத்த சம்பவம் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. இக் காரணம் பற்றியே நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் எ ன்று புகழப்படுவதை ஏற்றுக்கொள்வதற்கில்லை.
இனிப் பண்டிதமணி அவர்களின் சீரிய கூரிய நோக்கால்-புதுப்பொருள்-மெய்ப் பொருள்-மேலான பொருள் துலங்குமாறு காணற்பாலது.
பாண்டவரும் பாஞ்சாலியும் வனத்தி லுறைந்த காலை நெல்லிமரமொன்றில் கனி யொன்றிருப்பக் கண்டு அதனைத் தனக்குப் பறித்துத் தரவேண்டுமெனப் பாஞ்சாலி பார்த்தனை வேண்டினுளாக அருச்சுனனும் அவள் விரும்பியவாறே செய்ய அதனைத் திரெளபதி உண்ண முயன்ற வேளை அங்கு நின்ற முனிவர்கள் பார்த்து இது அமி தத்திரன் என்னும் முனிவருக்கமைந்தது. இக் கனியைக் கொய்ததனுல் அவரின் சாபத் துக்காளாக நேரிடுமென்று சொல்ல அவ் வாபத்திலிருந்து விடுபட ஆபத்பாந்தவனுன கண்ணனைப் பாண்டவர் அழைக்க அவரும்
வந்து,
நீவிர் யாவரும்,
*" உண்மையால் நெஞ்சில் நிகழ்ந்த பட்டாங்கீண்டு உரைத்திடக் கோட்டின் மீண்டொன்றுங் கனி " எனச் செப்ப, ஒவ் வொருவரும் தத்தம் உள்ளக்கிடக்கையை
உரைப்பாராயினர்.
அறமே யாவற்றிலும் மேலானது அதனைப் பேணுவதே தனது இலட்சியமா என்ருர் தருமர்.
பிறர் மனையாளைப் பெற்ற தாயெனவும் பிறர் பொருள் எட்டியே யெனவும், பிற துயர் தன்துயரெனவும் பேணுவதே தன் மனக் கிடக்கை யென்ருன் வீமன்
மானமே புரப்ப தவணிமேலெவர்க்கு
வரிசையும் தோற் ற மும் மரபுமா மென்ருன் அருச்சுனன்.

-... م. 88
கல்வியே யாவற்றிலும் மேலானதென் ருன் நகுலன்,
மொழியே அன்னை, ஞானமே தந்தை, தருமமே துணைவன், கருணையே தோழன், சாந்தமே தாரம், பொறுமையே மைந்தன் இவ்வறுவரேயன்றி வேறெவரும் உறவாகார் என்ருன் சகாதேவன்.
இறுதியாகத் திரெளபதி தன் நெஞ்சக் கருத்தைப் பின்வருமாறு நிகழ்த்தினுள்:
ஐம்புலன் களும்போ ?லவரும் பதிக ளாகவும்
இன்னம்வே ருெருவன்
எம்பெருங் கொழுநன் ஆவதற் குருகும் இறைவனே எனது பேரிதயம்
அம்புவி தனிற்பெண் பிறந்தவர் எவர்க்கும
ஆடவ ரிலாமையி னல்லால்
நம்புதற் குளதோ என்றனன் வசிட்டன்
நல்லற மனவியே யனையாள்.
இப் பாடலில் இன்னும் வேருெரு வன் ' எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும் எனது பேரிதயம்" என்ற கூற்றுக்குப் பலர் பலவாறு பொருள் கண்டனர்.
வேருெருவனென்பது திரெளபதியின் அந்தரங்கக் கருத்துப்படி கண்ணன் எனவும்: அருச்சுனன்பால் இருந்த தனிப்பட்ட காத லால் அவனே தனித்தன்மை வாய்ந்தவளுக அதனுல் அவர் களிலும் வேறுபட்ட ஒரு வஞ கப் பாஞ்சாலியால் கணிக்கப் பட்ட எண் எனவும் வெவ்வேறு வகையில் உரை கண்டனர். . இந்நிலையில் பண்டிதமணி அவர்கள் கண்ட உரையினை, அவர்தம் நுனித்த பொருள் நோக்கினை மெய்ப் பொருள் காணும் திறனைப் புலப் படுத்துவதாகவுள்ளது அவரது விளக்கம். அது பின்வருமாறு:
இன்னும் வேருெருவன் என்றது ஈசு வரனை. ஐந்து கணவர்களுக்கும் ஊடாக அன்றி நேரில் அந்த ஈசுவரனைக் காணுதற் குத் திரெளபதியின் இருதயம் உருகிக் கொண்டிருந்தது.
அம்புவிதனில் பெண் பிறந்தவர் எவர்க் கும் ஆடவரிலாம் ஐயின் அல்லால்-கொழு நரின் சாந்நித்தியம் ஆகின்ற அந்த ஈசுவர

Page 246
- l
னிடத்தே யல்லாமல், நம்புதற்குளதோஅப் பெண்கள் நம்புதற்கு - நம்பிப் பற்றுக் கோடு செய்தற்கு - உரியதொரு பண்டமும் வேறு உளதோ, இல்லையே என்று திரெளபதி தம்மியல்பில் வைத்துப் பெண்மையின் கதியைக் காட்டுகின்ருர்,
பெண் ஒருவனைப் பற்றி ஓரகத்திருப்ப வள். அவளுக்கு இரண்டகம் இல்லை. அவள் அகத்தில் இருப்பவன் ஒருவனே. அவைதிக உலகங்கூட ஒரு பெண் ஒருவனைப் பற்றி ஒரகத்திருக்க வேண்டுமென்கிறது.
திரெளபத பெண்ணுலகில் புறநடை யானவர். அவர் யாகாக்கினியில் உதித்தவர். அக்கினியாவார் சிவபெருமானே என்று வேதம் சொல்கிறது. ஐந்து கணவர்களுக்கும் ஊடாக அக்கினியான சிவபெருமானையே அவர் தீண்டி நின்றர். அவர் கற்பு ஆத்ம நாயகனை யன்றிப் பிறரைத் தீண்டாத கற்பு
பண்டிதமணி அவர்களின் பொருள் நோக்கிற்கு இன்னுமோர் உதாரணம்
பார்ப்போம்.
தமிழின் உயிர்நாடி பொருள் இலக் கணம். பொருளிலக்கணம் அன்பின் ஐந் திணையை அடிப்படையாகக் கொண்டது. அன்பின் ஐந்திணை தமிழ் மக்களின் இல்லற ஒழுக்கத்தை விளக்குவது. பண்டிதமணி அவர்கள் உலகியலில் காணும் அன்பின் ஐந்திணை ஒழுக்கத்தை வைத்து மெய்ப் பொருளின்பால் விளையும் அன்பு நிலையை விளக்குவதாய உயிர்ப் பொருளே உடையது. சான்ருக முல்லை நிலத்தில் இருத்தலாகிய ஒழுக்கத்தினை விளக்குமிடத்து சீதாபிராட்டி அசோக வனத்தில் பூரீராமன் வரும் வரும் என்று காத்திருந்த நிலை  ைய உதாரண

. -سس- 9
மாகக் காட்டிப் பின்னர் இருடிகள், அடர்ந்த கானங்களில் அவன் தாள் வரும் வரும் என்று காத்திருக்கும் திறனையும் காட்டியுள் ளார். யுகம் யுகமாகத் தவமிருந்து வாடு கின்ற முனிவர்கள் தாம் தேடிய உண்மையை அரிதிற் காண்கிருர்கள். நீண்டு கழிந்த காலம் கணம்போலாகின்றது. வாட்டங்கள் சோகங்களை மறக்கிருர்கள். முல்லேயின் மாண்பு இருந்தவாறு இது. இங்ங்ணம் ம்ெய்ப்பொருள் நாட்டத்திலியன்ற இருத்தல் ஒழுக்கத்தினை விளக்குகின்ருர்
இவ்வாறே நெய்தல் விளக்கத்தின் இறு தியில் கடிகைமுத்துப் புலவரின் அரிய பாடல் ஒன்றைக் காட்டி, சுற்றமென்னும் தொல் பசுக்குழாங்கள் சும்மாவிடுமோ என வினவெழுப்பித் திருவாசகத்தோடு இணைத்து மெய்ப்பொருள் அன்பு முதிர்ச்சியைப் புலப் படுத்துகின்ருர், இவ்வாறே மற் றைய ஒழுக்க விளக்கங்களிலும் மெய்ப்பொருள் இன்ப வலியுறுத்தல் இடம் பெற்றுள்ள சிறப்பை அவதானிக்கலாம். மேலும் அன்பி ணைந்திணை நூல் அநுபந்தத்தில் கைக்கிளை யோடு துவைதத்தையும் அன்பின் ஐந்திணை யோடு அத்வைதத்தையும் பெருந்திணை யோடு ஏகத்தினையும் இணைத்துக் காட்டிய அருமை சிந்தித்தற் பாலது. இவ்வாற்ருல்,
மட்டாருந் தனங்கிளப்புப் பண்டிதமா
மணிப்புலவன் வரைந்த ஏட்டைத் தொட்டாலின் தமிழ்மணக்கும் சொன்னுல்தத்
துவம்மணக்கும் துருவி நோக்கின் எட்டாத அரும்பொருள்கள் இலகுவில்வாய்த்
திடுமாங்கே அறிவும் அன்பும் ஒட்டாக அமைந்திட்ட இருமையினில்
இறையொருமை உதிக்கு மன்றே.

Page 247
UiTL25LDaofu
தினகரன் பிரதம ஆசிரியர்
கொழும்புத்துறைச் சித்தர் யோக சுவாமிகளின் பெயரைப் பலர் சொல்வார் கள். அவரது நற்சிந்தனைப் பாடல்களை மேற்கோள்களாக எடுத்துக் கூறுவார்கள். யோக சுவாமிகளின் குருபூசை வேளைகளில் குறித்த இப்பெரியார்களின் குரல்கள் ஒலிப்ப துண்டு. இவர்களுட் பெரும்பாலாஞேர் சுவாமிகளை நேரில் பார்த்தவர்களல்லர் அன்னரது திருஉருவப் படத்தை மட்டுமே பார்த்தவர்கள்; அவரின் அருமை பெருமை களைப் பிறர் சொல்லக் கேட்டவர்கள் ; கட்டுரைகள் மூலம் அறிந்தவர்கள் , எனது அருமைத் தந்தையார் செல்லேயாபிள்ளை சிவகுருநாதரும் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர்; சிறுபராயத்திலிருந்தே யோக சுவாமிகளின் நேரடி அடியாராக இருந்தவர். தந்தையார் தொழிலின் நிமித்தம் கொழும் புக்குச் சென்ற பின்னர் அவருக்கும் சுவாமி களுக்கும் இடையில் இருந்த அந்தத் தின சரித் தரிசனத் தொடர்பு இல்லாது போயிற்று.
இன்று தமிழ் மக்களிற் பலர் யாழ்ப் பாணத்திற்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். இவ்வாறு 1942ஆம் ஆண்டில் ஈஸ்டர் தினத் திலே ஜப்பானியர்கள் கொழும்பில் குண்டு வீசியதும், அன்றும் தமிழ் மக்களிற் பலர் இடம் பெயர்ந்தார்கள். விளக்குகள் மூடி மறைக்கப்பட்ட புகையிரத வண்டிகளில் யாழ்ப்பாணம் வந்தனர். இப்படி இடம் பெயர்ந்த குடும்பங்களுள் எமது குடும்பமும் அடங்கிற்று. இதனுல் கொழும்புத்துறை யில் வாழும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அந்தக் காலத்தில்தான் யோக சுவாமிகளைக் காணும் பேறு பெற்றேன். என்னையும் என் சகோதரரையும் என் தந்தையார் யோக சுவாமிகளிடம் சேர்த்து வைத்தார். கொழும்புத்துறையில் நாங்கள் வசித்த காலம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழ மையும் நான் அவரிடம் சென்றதுண்டு. சிவபுராணம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவற்றைச் சுவாமிகளே எனக்குச்

பும் தினகரனும்
இ. சிவகுருநாதன் அவர்கள்
சொல்லித் தந்தார்கள். எனக்கு அவர் எழுதித்தந்த ‘நல்லூரான் திருவடியை " என்ற கிளிக்கண்ணிப் பாடலை ** நற்சிந்தனை யில் " காண்கிறபோது, சுவாமிகளின் முன் னிலையில் ‘* குஞ்சி' என்று அழைக்கும் என் சிறிய தகப்பனரின் சால்வைத் துண்டைக் கட்டியபடி வெறும் மேலுடன் அமர்ந்திருந்து பாடம் படிக்கும் அந்த இனிய காட்சிதான் மனதில் தோன்றுவதுண்டு. இன்றுகூட அந்த இனிய நாட்களை நினைத் துப் பார்க்கையில் மெய் சிலிர்க்கும். அக் காலத்திலிருந்து சுவாமிகளிடம் வந்து போன வர்களை நான் அறிவேன். இவர்கள் சுவாமி களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆளுல் சுவாமிகளைக் காணுதவர்களும் அவரை அரை குறையாக அறிந்தவர்களும் சுவாமிகளைத் தாம் தோளில் ஏற்றிவைத்திருந்தவர்களைப் போல் பேசும்போது நான் கவலைப்படுவ துண்டு.
மேலே குறிப்பிட்டவர்களைப் டே ன்று நான் எங்கள் பண்டிதமணி அவர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை. இப் பெருந் தகையை எனது வாழ்வில் இரண்டு மூன்று தடவைகள் மாத்திரமேதான் நான் சந்தித் திருக்கிறேன். விழாவொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டுப் பண்டிதமணி அவர் கள் ஒரு சமயம் கொழும்புக்கு வந்தபோது அவரைச் சந்தித்துப் பேசினேன். இலக்கி யம் பற்றியோ தமிழ் பற்றியோ அல்ல; வேறு விஷயங்கள் பற்றித்தான் உரையாடி னுேம், எனது தாயார் கந்தமடத்தைச் சேர்ந்தவர் ; இங்கேதான் நாம் குடியிருந் தோம். எனது அப்பாச்சி மட்டுவிலைச் சேர்ந்தவர். பண்டிதமணி அவர்களுக்கோ தனங்கிளப்புச் சொந்தம் பந்தம் உள்ள ஊர். மட்டுவிலும் அண்மையிலுள்ள ஊர்
தானே. இப்படியான பல விஷயங்கள் பற்றி இருவரும் உரையாடினேமே ஒழியத் தமிழ் பற்றிப் பேசவில்லை. கந்தமடம்
சைவப்பிரகாச வித்தியாசாலையில் நான் ஆரம்பக் கல்வி பெற்றேன் என்றபோது

Page 248
'l ----س-
** நாவலர் பரம்பரையின் கல்வி நிலையம் அல்லவா அது " என்று கூறி அவர் மகிழ் வெய்தியது எனக்கு இன்றுபோல் இருக் கிறது.
இதற்குப் பின்னரும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் பண்டிதமணி அவர்களைச் சந்தித்து உரையாட எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது, நீண்ட சந்திப்புக்களாக அவை அமையவில்லை. பண்டிதமணி அவர்களோ திருநெல்வேலியில், நானே மூன்று தசாப் தங்களுக்கு மேலாகத் தினகரன் பத்திரிகை அலுவலகத்தில். இதன் காரணமாக யாழ்ப் பாணம் அடிக்கடி போய்வருவதே குறைந்து விட்டது. பண்டிதமணி அவர்களுடன் அடிக்கடி நேரடித் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிடைக்காதது ஒரு பெரிய துர திருஷ்டந்தான் என்றே கூறவேண்டும். இருப்பினும் உரும்பராய், அதிபர் அ. பஞ்சாட்சரம் அவர்களில் நான் பண்டிதமணி அவர்களைக் காண்பதுண்டு. பண்டிதமணி யின் கட்டுரைகளுடன் அவருடைய கடிதங் களும் எனக்கு வரும். பண்டிதமணியின் சார்பில் எங்களை அடிக்கடி சந்திப்பவர் அதிபர் பஞ்சாட்சரம் அவர்கள்தான். அவருடன் பேசுகையில் பண்டிதமணி அவர்க ளுடன் பேசுவதுபோலவே மன நிறைவு ஏற்படும். பண்டிதமணி அவர்களை நேரில் சந்திக்கவேண்டும் என்கின்ற குறிக்கோள் இதனல் பின்போடப்பட்டுக்கொண்டே போய்விடும். அந்தச் சிந்தனை எவ்வாருே மறைந்துவிடும். அதிபர் பஞ்சாட்சரம் அவர்கள் பண்டிதமணி பற்றித் தரும் தகவல் கள் சுவை நிறைந்தவை; அறிதற்குகந்தவை; பொருள்மிக்கவை ;
எனது  ைமத்து னியின் கணவர் ஆசிரியர் இராசேந்திரம் அவர்களும் பண்டிதமணியின் மாணுக்கர்களுள் ஒருவர். அவருக்கும் பண்டிதமணியுடன் ஈடுபாடு நிறையவுண்டு. அவரும் தனது குருநாதரைப் பற்றி அடிக்கடி என்னைச் சந்தித்து உரை யாடுவதுண்டு. இவ்விதமாகத்தான் எனக்கும் பண்டிதமணி ஐயா அவர்களுக்கும் இடை யில் உள்ள தொடர்பு இருந்தது.
பண்டிதமணி அவர்களிடம் பேரபி மானங் கொண்டிருந்த வரா ன சைவ

'l -
தமிழறிஞர் திரு. செ. தனபாலசிங்கன் அவர்களும் பண்டிதமணி அவர்களது விஷ் யங்கள் தொடர்பாக என்னுடன் கலந்துரை யாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1983இல் நான் கப்பலேறிய தமிழனன பின்னர் மாதம் ஒரு தடவையாவது யாழ்ப் பாணம் செல்வதுண்டு. மனைவி மக்கள் கோண்டாவிலில். கந்த மடத்திற்கும் கோண்டாவிலுக்கும் இடையில்தான் திரு நெல்வேலி. அங்கேதான் கலாசாலை வீதியில் அத் தமிழ்க் கடவுள் குடியிருந்தார். யாழ்ப் பாணத்துப் பிரச்சினைகள் அப்பொழுதும் பண்டிதமணி அவர்களைச் சந்திக்க இடம் கொடுக்கவில்லை. பண்டிதமணி அவர்கள் திடீரெனக் காலமானபோதுதான் என் தவறை உணர்ந்தேன், பத்திரிகைகள் மூலம் பெரியவருக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ததில் வாழ்க்கையில் ஒரு திருப்தியுண்டு. இதற்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கக் காரியதரிசி திரு.க. இ. க. கந்தசுவாமி அவர்களும் இன்றைய 'முரசொலி ** ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்க ளும் என்றும் எனக்குப் பக்கபலமாக நின்று உதவிஞர்கள்.
பண்டிதமணிக்கும் தினகரனுக்கும் நெருங்கிய தொடர்பு மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இது ஐந்து தசாப் தங்களுக்கு மேற்பட்ட தொடர்பென்றே கூற வேண்டும். நான் மாணவனுக இருந்த காலத்தில் தினகரனில் ஒரு தினகரனுகப் பிரகாசித்தவர் பண்டிதமணி அவர்கள். நான் பல்கலைக் கழகத்தில் இருந்த காலத்தில் திரு. வி. கே. பி. நாதன் அவர்கள் தினகரன் ஆசிரியராகப் பதவி வகித்தார்கள். தினகர னில் 1955ஆம் வருடத்தில் நான் சேர்ந்த போதும் அவரே தினகரனுக்கு ஆசிரியர். அவருக்கும் பண்டிதமணி என்ருல் வாய்க் குள் கற்கண்டுக் கட்டிபோல. அந்தக் காலத் தில் பண்டிதமணி தினகரனில் அடிக்கடி எழுதும் தமிழ் அறிஞராக இருந்தார். பண்டிதமணி எதை எழுதினுலும் அதைத் தினகரன் பெரும் மதிப்புக் கொடுத்துப் பிரசுரிப்பது வழக்கம். பண்டிதமணியின் கட்டுரைகளைப் படிப்பதற்கென்றே பலர் தினகரன மிகவும் விரும்பி வாங்குவதையும்

Page 249
நான் அறிவேன். தினகரன வளப்படுத்திய வர்களுள் பண்டிதமணி முக்கியமானவர், பண்டிதமணியின் புகழை நாலா திசை களுக்கும் பரப்புவதிலும் அவரது மேதா விலாசத்தை மற்றவர்கள் அறிய வைப்பதி லும் தினகரன் முன்னின்றதென்றே கூற வேண்டும். பண்டிதமணியின் கட்டுரைகள் தினகரனுக்குப் பெருமையளிப்பனவாகவே என்றும் விளங்கின. பண்டிதமணியின் 'கம்ப ராமாயணக் காட்சிகள்" தொடரை நாம் தினகரனில் விரும்பிப் படித்ததுண்டு. கம்ப ராமாயணக் காட்சிகள் என்ற நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு வழங்கப்பட்ட போது தினகரன் பெரிதும் மகிழ்ந்தது. என்ன இலக்கியச் சர்ச்சை என்ருலும் பண்டிதமணி தினகரனிலே என்ன எழுதுகிறர்கள் என்ப தைத்தான் பலரும் அவதானிப்பார்கள். இவற்றையெல்லாம் அப்போது தினகரனில் பணியாற்றிக்கொண்டிருந்த கோண்டாவில் செல்லப்பா நடராசா, திருநெல்வேலி வி. சுப்பிரமணியம் ஆகியோருடன் சேர்ந்து படித்து விவாதித்து மகிழ்வதுண்டு. பண்டித மணி சொந்தம் கொண்டாடிய பத்திரிகை தினகரன். தினகரன் தலைமேல் வைத்துப் போற்றிய எழுத்தாளர் அறிஞர் பண்டித மணி. பண்டிதமணி என்ற கெளரவட் பட்டத்தை நிலைநிறுத்தியதும் தினகரனே
அனைத்துலகத் தமிழாராய்ச்சி முதல் மகாநாடு 1951இல் திருநெல்வேலி பரமேச வரக் கல்லூரியில் நடைபெற்றபோது பண்டிதமணி அவர்களின் தேசிய உணர்வ பிரபல்யமாகியது. அவருக்குத் தினகரல் உறுதுணையாக ஒரு சாதனமாக நின்றது இத் தொடர்பு இறுதிவரை நிலைத்தது. பண் டிதமணியின் உள்ளத்தில் தினகரன் தன. யிடம் பெற்றிருந்தது.
தினகரனில் பண்டிதமணி அவர்கள் எழுதிய அத்தனை விடயங்களையும் வைத்தே பலவிதமான தமிழ் ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும். தமிழ் ஆராய்ச்சித்துறை மாணி வர்கள் இதனை மேற்கொள்வார்கள் என
நம்புகின்றேன்.

பண்டிதமணி அவர்கள் எதையும் தர்க்க ரீதியாக அணுகுபவர். யார்சொன்னுல் என்ன அதில் அர்த்தமுண்டா என்று பார்க்கத் தவற மாட்டார். குற்றம் காணில் ஒளிவு மறைவு இன்றி நேரே சொல்லிவிடுவார். ஆறுமுக நாவலரின் சிறப்பம்சமான கண்டன இயல்பு இவரிடமும் இருந்தது. இதனுல் அவருக்குப் பலர் அஞ்சுவதும் உண்டு.
எனக்கு நல்ல ஞாபகமிருக்கிற சம்பவம்; வண்ணை வைத்தீசுவர வித்தியாலயத்தில் தமிழ் நாட் டறிஞர் அ. ச. ஞானசம் பந்தன் அன்று சொற்பொழிவாற்றினர்.
ஆரம்பத்திலேய்ே த மது அச்சத்தைச்
சொல்லிவிட்டார் திரு. அ. ச. ஞா. 'கந்த புராணத்தை நன்கு ஆராய்ந்தவர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் இருக்கிருர்கள் என்பது தமிழ் நாட்டறிஞர்கள் எல்லோருக்கும் தெரி யும். எனவே கந்தபுராணம் பற்றிப் பேச அச்சமாயிருக்கிறது?" என்று வெளிப்படை யாகவே சொல்லிவிட்டார். பண்டிதமணி சபையில் இருக்கின்ருரா என்றே எல்லோரும் தேடினர்கள் கண்டன இலக்கியமென்ருல் பண்டிதமணியைப் புறக்கணித்து ஆய்வாளர் செல்லமுடியாது. வெகுஜனத் தொடர்பு சாதனமான பத்திரிகை பண்டிதமணிக்கு மிக நெருக்கமாய் இருந்ததில் வியப்பதற் கெதுவுமில்லை.
பண்டிதமணி அரிய தமிழ் அறிஞர். அறி ஞர்களுள் அறிஞர் அவர். பழைமையில் தோய்ந்து புதுமையைக் காட்டிய இலக்கிய ஆய்வாளர். அவரது இடைவெளியை நிச்ச யம் எவரும் நிரப்பமுடியாது. காலத்தை வென்ற தமிழ் அறிஞராக அவர் திகழ்கின் ருர்,
எனக்கு முன்னர் தினகரன் ஆசிரியராகப் பதவி வகித்த பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும், வி. கே. பி. நாதன் அவர்களைப் போலவே பண்டிதமணி பற்றி அளவுகடந்த பெரும் மதிப்புக்கொண்டிருந்தார். எம் வழியும் அந்த வழிதான். பண்டிதமணி என்ருல் எங்கள் பண்டிதமணிதான். பிறர் பட்டம் பெற்றலும் பண்டிதமணியாக முடி tInfTğ5I.

Page 250
ஈழத்தமிழறிஞர் பண்டி
* ஈழவே
செந்நிறமேனி, எடுப்பான தோற்றம், நெற்றியில் திருநீற்றுக்குறி,சந்தனப்பொட்டு, அமைதி தவழும் புன்னகை முகம், மூக்குக் கண்ணுடி, தேசிய உடை சகிதம் நிலமடந்தை நோகாவண்ணம் நடைபயின்று வந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை, தான் ஆற் றிய 60 ஆண்டு கால செந்தமிழ்ச் சிவநெறிப் பணியை முடித்துக்கொண்டு தனது எண்பத் தேழாவது வயதில் இறைவனேடு இரண்டறக் கலந்துவிட்டார். 87 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த இவர் நிலமிசை தனது புகழை நிலைநாட்டி விட்டு மீளா உலகு சென்றுள்ளார்.
'நல்லநகர் ஆறுமுக நாவலர் பிறந்தில ரேல் சொல்லுதமிழ் எங்கே சுருதியெங்கே" என்று வாழ்த்தப் பெற்ற நாவலரின் இலக் கிய சமய மரபில் வந்தவர் இவர். ஈழத்தில் நாவலர் என்பது ஆறுமுகநாவலரையும் தமிழகத்தில் நாவலர் என்பது நாவலர் சோமசுந்தர பாரதியாரையும் குறிக்கும். அதுபோல் ஈழத்தில் பண்டிதமணி எனின் பண்டிதமணி கணபதிப்பிள்ளையையும், தமி ழகத்தில் பண்டிதமணி எனின் கதிரேசச் செட்டியாரையும் குறிக்கும். இவர்கள் பெற்ற பட்டங்கள் இவர்கள்தம் பெருமை யைப் பறைசாற்றுகின்றன. இப்போது எடுத்த எடுப்பிலேயே எல்லோருக்கும் பட்டங்கள் வழங்கப்படுவதினுல், பட்டங்கள் தனித்தகைமையை இழந்துவிட்டன. ஆனல் இப் பெருமக்கள் பெற்ற பட்டங்களோ அவர் களின் தகைமையை உணர்ந்து ஆழ்ந்த ஆய் வின் அடிப்படையில் வழங்கப்பட்டவை என்பது நினைவுகொள்ளத் தக்கது.
யாழ்ப்பாணத்தில் மட்டுவிலில் சின்னத் தம்பி என்பவருக்கும், வள்ளியம்மை என்ப வருக்கும் 27 - 6 - 1899இல் பிறந்தவர் பண்டிதமணி. மட்டுவில் சந்திர மெளலீச வித்தியாசால்யில் ஆரம்பக் கல்வி பயின்று பின் 17 வயதில், பெரியோர் சிலரின் ஆசியி குல் நாவலர் காவிய பாடசாலையில் சேர்ந் தார். படிப்பில் முழுக் கவனம் செலுத்திப் பண்டிதத் தேர்வில் சித்தியடைந்து தங்கப்
25

நமணி கணபதிப்பிள்ளை ந்தன்
பதக்கம் பரிசாகப் பெற்ருர். டி.0ாச் செல் லப்பாவின் துரண்டுதலினுல் சந்திர மெளலீச வித்தியா சாலையில் காவிய வகுப்புக்களைப் பண்டிதமணி நடத்த ஆரம்பித்தார்.
பின் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலா சாலையிற் பயின்று 30ஆவது வயதில் பயிற்சி பெற்ற ஆசிரியரானர். பண்டித பட்டமும், ஆசிரியப் பயிற்சியும் பெற்றதையடுத்துத் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையின் தமிழ்ப் பேராசிரியர் பதவியை ஏற்றர். இங்கு சேவை செய்த போது ஆயிரக் கணக்கான மாணவர்களைப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக உருவாக்கினர்.
ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திவந்த பிரவேச பாலபண்டித தேர் வுக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு இலவச இலக்கண இலக்கிய வகுப்புக்களை யும் நடத்திவந்தார். இவரை நடமாடும் இலக்கிய கலைக்களஞ்சியம் என்று கூறலாம். **யாழ்ப்பாணத்தில் ஒருவர் தட்டுத் தடு மாறித் தடுக்கி விழுந்தால் ஒரு பண்டிதர் மேல்தான் விழவேண்டி வரும்" என்று கல்கி கூறியதற்கமையப் பல பண்டிதர்களை உருவாக்கிய பெருமை, பங்களிப்புப் பண்டிதமணியைச் சாரும்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை யில் தமிழ் இலக்கியச் சுவை சொட்டும் வண்ணம் இதிகாசங்களையும் காப்பியங்களை யும் பயிற்றுவித்த பண்டிதமணி மாணவர் களின் நன்மதிப்பைப் பெற்று விளங்கினர். இராமாயணத்திலும் பாரதத்திலும் வரும் பாத்திரங்களை ஒப்புமை கூறி எடுத்து விளக் கும் இவரது தன்மை மாணவ மாணவிகள் நெஞ்சில் நிலைத்த இடம் பெற்றுள்ளது. பயிற்சிக் கல்லூரிக்கு வரும் மேற்பார்வை யாளர்களுங்கூட பண்டிதமணி நடத்துகின்ற வகுப்புக்களைப் பின் இருக்கைகளில் அமர்ந்து செவிமடுத்துச் சிந்தை நிறைவெய்தியதுண்டு. அந்த அளவு தமிழ் இலக்கியங்களில் திளைத்த பெரும் வல்லுநரான இவர் ‘இலக்கிய கலாநிதி" பட்டத்தினையும் பெற்ருர்,

Page 251
-
இலக்கிய உலகில் மூழ்கித் திளைத்த பண்டிதமணியைச் சமய உலகிற்கு அழைத்த பெருமை திருநெல்வேலி சைவாசிரிய கலா சாலைத் துணைமுதல்வர் பொ. கைலாசபதி யைச் சாரும். சைவசித்தாந்தம் என்பது திராவிட மூளையின் தெரிந்தெடுத்த படைப்பு என்று டாக்டர் ஜி. யு. போப் கூறினர்.
சைவு இலக்கியங்களில் கந்தபுராணம் இவர் உள்ளத்தைத் தனியே ஆட்கொண் டது. யாழ்ப்பாண கலாசாரத்தைக் கந்த புராண கலாசாரம் என்று இவர் அடிக்கடி கூறி மகிழ்வார். இவர் படைத்த நூல்களில் தலைசிறந்தது கந்தபுராண தகடிகாண்ட உரை. இலங்கை பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் சங்கம் இந் நூலைப் பதிப் பித்தது.
நூலினை யானை மீது ஏற்றி நகர்வலம்
வந்து ஒரு வரலாற்று நிகழ்ச்சியையும் உரு வாக்கியது.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை வெளி பிட்ட நூல்கள் இருபத்திரண்டு; வெளியிட இருந்த நூல்களும் ஏறக்குறைய அவ் வெண்ணிக்கையே. வெளிவந்தவைகளில் கோயில், கதிர்காம வேலவன் பவனி வருகின் முன், கந்தபுராண தக்ஷகாண்ட உரை, பாரத நவமணிகள், சைவநற்சிந்தனைகள், கந்தபுராண கலாசாரம், கந்தபுராண போதனைகள், இருவர் யாத்திரிகர். சமயக் கட்டுரைகள், சிந்தனைக் களஞ்சியம், அன்பி னேந்திணை, அத்வைத சிந்தனை போன்ற நூல்கள் அவருடைய சமய உணர்விற்கும், ஆய்வுத் திறனுக்கும். தமிழ்ப் புலமைக்கும், உரைநடை வளத்திற்கும் எடுத்துக்காட்டுக ளாக விளங்குகின்றன.
‘இலக்கிய வழி" என்ற நூலில் 'தமிழ் தந்த தாமோதரம்பிள்ளை" என்ற தலைப்பில் உள்ள சில சொற்ருெடர்கள் மூலம் அவரது உரைநடை வளத்தை நினைவுகொள்ளல் பொருத்தம். அவர் மொழிந்தவை இதோ:
'நாவலர் தமது சுற்ருடலில் உள்ள மக்களின் நிலைமையை நோக்கினர். தாமோ தரம்பிள்னை பழந்தமிழ்ச் செல்வம் பாழ் போகும் நிலையை நோக்கினர். நாவலரின் முயற்சி அரிச்சுவடியில் ஆரம்பமாயிற்று. தாமோதரம்பிள்ளையின் முயற்சி தொல் காப்பியத்திலே தொடங்கியது. தமிழ்ச்

سی۔ 94
சரித்திரத்தில் 19ஆம் நூற்ருண்டின் நடுப் பகுதி நாவலர் அவர்கள் சரித்திரம். பிற் பகுதி சி.வை, தாமோதரம்பிள்ளை சரித்திரம். பிறகுதான் டாக்டர் சாமிநாத ஐயரின் சரித் திரம்". இவ் வரிகளைப் படிக்கின்றபோது "பழந்தமிழ் நூல் பதிப்பிற்கு நாவலர் அடித் தளம் இட்டார். தாமோதரனுர் அவர்கள் சுவர் எழுப்பினர். சாமிநாதஐயர் கூரை வேய்ந்தார்" என்னும் திரு. வி. க. வின்
மொழியையும் ஒப்புநோக்க வேண்டும்.
ஈழத் தமிழ் மக்கள், குறிப்பாக, யாழ்ப் பாணத் தமிழ் மக்களின் புகழ் பூத்த நாவல ராகப் பழைய மரபைப் பேணிவாழ்ந்த பெரு மகன் பண்டிதமணி. தமிழ் கூறும் நல் லுலகம் பெருமைகொள்ளத்தக்க பெரும் ஆசிரியர் குழாமினை உருவாக்கித் தந்த பண்டிதமணி அவர் க ள் என்றும் நிலைத்து வாழும் பல இலக்கியச் செல்வங்களையும் அளித்துள்ளார். பண்டிதராகத் தொடங்கிய அவரது வாழ்வு பயிற்சி பெற்ற ஆசிரியராய், பேராசிரியராய், பண்டிதமணியாய், சைவ சித்தாந்த சாகரமாய், சாகித்தியமண்டலத் தின் உயர் உறுப்பினராய், இலக்கிய கலா நிதியாய் படிப்படியாய் உயர்ந்து மலர்ந்தது. யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் அவர் ஆற்றிய பணியினை நினைவில்கொண்டு விழாக்கள் பல எடுத்து அவர் எழுதி வெளியிட்டவைகள் நூல்களாக வெளிவரத் துணைநின்றனர். எனினும் அவர் எழுதிய கட்டுரைகள் பல இன்னும் நூல் வடிவம் பெறவில்லை. அவற் றினையும் வெளிக்கொணர்வது நமது நன்றி யுணர்வைக் காட்டவும், உலகுக்கு அவரது தமிழ்ப் பணியின் தன்மையை எடுத்துக் காட்டவும் துணைசெய்யும்.
நிலையாமை ஒன்றே நிலையானது என் பதற்கு ஏற்ப நில்லா உலகை விட்டு நிலை யான வீடுபேற்றை நாடி அவர் சென்றுள் ளார். நிறைவு வாழ்வு வாழ்ந்த அவர் நிலையான பலவற்றினை அறிவுரையாகவும், நூல்களாகவும், கட்டுரைகளாகவும் தந்துள் ளார். அவற்றினைப் பேணிக் காப்பேர்மாக, தமிழகத் தமிழ் அறிஞர்களை ஈழத்தமிழர் அறிந்திருக்கின்ற அளவுக்கு ஈழத் தமிழ் அறிஞர்களைத் தமிழகத்தார் அறியவில்லை என்று ஒரு குறை உண்டு. அக் குறையினை நீக்கி நிறைவினைப்பெற தமிழக மக்கள் அவர் பெருமையை நினைவுகொள்வார்களாக,
- தினமலர் 10-6-1986,

Page 252
ஈழாகாடும் பண்டிதம6
ஈழநாடு பதில் ஆசிரியர்
இருபதாம் நூற்றண்டின் முற்பகுதயில், அதாவது ஆஸிய நாடுகள் பலவும் தாம் இழந்துவிட்ட சுதந்திரத்தை மீளப் ப்ெறு வதற்காகப் போராடிக்கொண்டிருந்த கால கட்டத்தில் இந்திய மண்ணில் பிறக்கக் கொடுத்துவைத்தமைக்காகவும் அங்கு நடந்து கொண்டிருந்த விடுதலை வேள்வியில் பங் கேற்கக் கிடைத்தமைக்காகவும் கோடிக்கணக் கான பாரத மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள், பெருமை கொண்டார்கள்.
இவ்வாறு அவர்கள் மகிழ்ச்சியும் பெரு மையும் கொண்டமைக்கு இன்னெரு முக்கிய காரணம் இருக்கிறது. ஆம், மகாத்மா காந்தி எனும் காலக் கதிரவன் அந்தப் பூமி யிலே தோன்றி அடிமை இருளைப் போக்கும் விதத்தில் உலகமே வியக்கும் வண்ணம் சாத் வீகப் போரினை வெற்றிகரமாக நடத்தி முடித்த அந்தக் காலகட்டத்திலே தாமும் வாழக்கிடைத்தமையே அந்தக் காரணம் என்க. சுதந்திரப் போராட்டத்தில் பங் கேற்காது போனலும் மகாத்மாவின் காலத் திலே வாழ்ந்தவன் என்று கூறிக்கொள் வதிலே இந்தியர் அனேகர் பெருமை கொள்வ துண்டு.
ஈழநாட்டிலே பண்டிதமணி ஐயா அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரரும் அல்லர் , அரசியல் வாதியும் அல்லர். ஆனல் அவர் காலத்திலே வாழக்கிடைத்தமைக் காகத் தமிழ் அறிந்த அனைவருமே பெருமை கொள்ள முடியும்.
தமிழர் உரிமைக்காகவும் விடுதலைக்காக வும் போர் எழுச்சி யொன்று உருவாவதற் காக. பயிர் முளைவிட்டு வேரோடித் தழைத்து வளர ஆரம்பித்திருந்த காலத்திலே பண்டித மணி என்ருெரு பேராசானும் தோன்றித் தமக்கே உரிய தனித் துவ முறையிலே

E ஐயா அவர்களும்
எஸ். பெருமாள் அவர்கள்
தமிழினை வளர்ப்பதில் ஈடுபட்டிருந்தார் என்பதை நினைத்துப்பார்க்கும் பொழுது, அவர் காலத்திலே இங்கே நாமும் தமிழராய் வாழ்ந்தோம் என்று கூறிக்கொள்வதில் நமக் கெல்லாம் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற் படத்தான் செய்யும் என்பதை மறைத்திட வியலாது.
瓷
பண்டிதமணி ஐயா அவர்கள் இந்த மண்ணிலே வாழ்ந்து தமிழ் மணம் பரப்பிக் கொண்டிருந்த காலத்திலேதான் ‘ஈழநாடு ' எனும் இப் பத்திரிகையும் தோன்றி வளர்ந் தது. அப் பெருமகன் போன்ற பெரியோரின் ஆசியுடன் தமிழினத்துக்கும், தமிழர் வாழ் வுக்கும் பணியாற்றி வருகின்றது என்று கூறிக்கொள்வதில் தவறென்றுமில்லை. அங் நுனம் கூறிக்கொள்ளக் கொடுத்து வைத்தமை யும் எமக்குக் கிடைத்த பெரும் பேறே.
"ஈழநாடு’ பத்திரிகையின் பணியையும் , அதன் வளர்ச்சியையும் ஆரம்பம் முதற் கொண்டே பண்டிதமணி ஐயா அவர்கள் உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளார்கள். அவசியமானபோதெல்லாம் அவர்களது ஆக்கங்களையும் பிரசுரத்துக்குத் தந்துதவத் தவறியதில்லை.
முகஸ்துதிக்காக எவரையும் புகழ்ந்து பேசவேண்டிய அவசியம் அவருக்கிருந்த தில்லை. ஆனல் பாராட்ட வேண்டியவர்களை உரிய நேரத்தில் உரிய முறையில் பாராட்டு வதற்கும் அவர்கள் பின்நின்றதில்லை.
1980ஆம் ஆண்டு ஐயா அவர்கள் எனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பியிருந்த ஒரு வாழ்த்து மடலில் ஈழநாடு பத்திரிகையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் இன்றும் நினைவுகூரத் தக்கவை. சிறப்பாக "ஈழநாடு வாரமலரில் அவர்களுக்குப் பெரும் மதிப்பும் பற்றுமிருந்தது.

Page 253
- 1
மேலே நான் குறிப்பிட்ட வாழ்த்து மடலில் "ஈழநாடு ? பத்திரிகை தமிழ் மக்க எளின் "தவக்கொடை" எனக் குறிப்பிட்டிருந் தார்கள்,
மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத் திலே இப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது என்பது மட்டுமன்றிப் பல்வேறு சோதனை களுக்கும் முகங்கொடுத்துக்கொண்டு தமிழ் 18க்களின் நலனில் அக்கறையுடன் மேற் கொண்டுவந்த பணிகளை அறிந்திருந்தமை பாலேயே இவ்வாறு மனம் திறந்து பாராட்டி யிருக்கிருர்கள் என்பேன்.
அந்த வாழ்த்துரையின் ஒரு பகுதி வருமாறு :
ஈழநாடு பத்திரிகை தமிழ் மக்களின் தவக்கொடை, ஈழநாடேயன்றித் தாய் நாடா கிய தமிழ்நாடும் மதிக்கத் தக்க வகையில் ஈழநாடு தினசரி நடந்துவருகின்றது. சிறப் பாக ஈழநாடு வாரமலர், சமயம், இலக்கி யம், சிறுகதை, தொடர்கதை, சோதிடம், வைத்தியம், கவிதை என்றின்ஞேரன்ன எண் னிறந்த விஷயங்களைக் கொண்டதாய், தமிழ் நாட்டுப் பிரமுகர்களையும் தன்பால் வசீகரிட் பதாய் நடுவுநிலை பிறழாது, சிறந்த வrர மலருக்குரிய அம்சங்களில் சிறிதும் குறை பாமல் மணம் கமழ்ந்து வருகின்றது."
米 崇 兴
இவ்வாறு பண்டிதமணி ஐயா அவர்கள் ‘ஈழநாடு" வார மலரினைப் பாராட்டி எழுதிய காலகட்டத்தில் வாரமலரின் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றிருந் தேன் என்பதை இங்கு நினைவுகூர்வதில் தவறில்லையெனக் கருதுகின்றேன்.
இப் பாராட்டுரையானது தனிப்பட்ட முறையில் அன்றி “ ஈழநாடு" ஸ்தாபனத்தின் தொடர்புடைய அனைவருக்கும் உரிய தென்றே கருத வேண்டும்.
1984ஆம் ஆண்டு ‘ஈழநாடு ' தனது 25ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடிய வேளையிலே பண்டிதமணி ஐயா அவர்கள் அனுப்பியிருந்த ஆசியுரையானது இப்

96 -
பத்திரிகையின் ஊழியர்கள், நிர்வாகிகள், உரிமையாளர்கள் அனைவரையுமே மகிழ வைப்பதாகவும் ஊக்கம் கொள்ளச் செய்வ தாகவும் இருந்தது.
அவ்வாண்டு “ ஈழநாடு" வெளியிட்ட 60 பக்கங்கொண்ட மலருக்கு அவர்கள் அனுப்பி யிருந்த ஆசிச் செய்தியில் ஒரு காலத்தில் வட புலத்தில் கொ டி கட்டிப் பவனிவந்த 'ஈழகேசரி ஏடு இல்லாத நிலையை "ஈழநாடு" போக்கிவிட்டது எனக் குறிப்பிட்டிருந் தரர்கள்.
அவ்வாசிச் செய்தியின் ஒரு பகுதி பின்வரு மாறு :
** மிக்க நெருக்கடியான காலங்களிலும் ஆங்காங்கே முளைகொள்ளும் புதிய புதிய பிரச்சினைகள், அவை முளைகொள்ளும் போதே ‘ஈழநாடு ? அறிந்துவிடுகின்றது.
ஈழநாட்டின் முதல் பக்கத்தில் தடித்த எழுத்தில் அமைந்த தலையங்கங்களைப் பார்க் கும்போதே, ஆங்காங்கு தோன்றும் பிரச் சினைகளைக் கணப்பொழுதில் அறிந்துவிட லாம். அதனுல், சூரியன் உதிக்கும்போதே வாசகர்கள் கையில் “ ஈழநாடு உதயமாகி விடுகின்றது.
நமது நோக்கு என்ற தலையங்கத்தில் வரும் பத்திரிகாசிரியர் உரை ஊன்றிச் சிந் திக்கற்பாலது, அவ்வப்பொழுது எழும் மனமாற்ற நோய்களையும் நோய்களுக் கேற்ற மருந்துகளையும் அவ்வுரையில் காண லாம். அதனைப் படிக்கும்போது "யாதும் ஊரே " என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் இரண்டாவது அடியாகிய 'தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற அடி நினை வுக்கு வரலாம்.
தலையங்கத்தின்மேலே காணப்படும் ‘மணி வாக்கு" தலையங்கத்தின் மணிமுடி எனலாம்.
ஈழநாடு பத்திரிகையை எனணும போது “ ஈழகேசரி"யின் ஞாபகம் வருகின் றது. பத்திராதிபர் திரு. நா. பொன்னையா அவர்கள் நம் மனக்கண்முன் தோன்றுகின்
(tў?т.

Page 254
அதியற்ட கி. லக்ஷமன
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தம் வாழ்வுக்காகத் தமிழைப் பயன்படுத்தப் பிறந்தவர் அல்லர். அவர் தமிழையும் சைவத்தையும் வளம்படுத்தத் தம் வாழ்வை அர்ப்பணிக்க அவதரித்த பெருந்தகை.
அவர் காலத்துக்கும் இடத்துக்கும் தக்கதாகத் தம் பேச்சிலும் எழுத்திலும் வேண்டிய வேண்டிய மாற்றங்களைச் செய்து சாாாட்டைப் பெற விழையவருமல்லர். காலமும் இடமும் எதுவாயினும் தாம் நினைத்ததை நினைத்தபடி கூறும் மனத் துணிவுடையவர். இதன் விளைவாக அவரு டைய பேச்சுக்கள் நிகழவேண்டிய இடங் களில் நிகழாமற் போனதுமுண்டு. அவ ரிடம் கட்டுரை கேட்டுப் பெற்றவர்கள் அவற்றிலே இடம்பெற்ற துணிகரமான ஊடுருவல்களைக் கண்டு அவற்றை வெளியிட அஞ்சியும் தயங்கியும் தடதடத்த சந்தர்ப் பங்களுமுண்டு.
அசாதாரண ஆற்றல் :
பண்டிதமணியவர்களை இலங்கைச் சாகித் திய மண்டலம் கெளரவிப்பது மகிழ்ச்சிக் குரியதே. உண்மையில் பண்டிதமணியவர் களைக் கெளரவிப்பதன் மூலம் இலங்கைச் சாகித்திய மண்டலம் தனக்குக் கெளரவத் தைத் தேடிக்கொண்டது எனக் கொள்வதே
(196ஆம் பக்கத் தொடர்ச்சி) "ஈழத்தின் வடபால் ஈழகேசரியைத் தொடர்ந்து வெளிவந்த ‘ஈழநாடு ஈழ கேசரி இல்லாத குறையை வாசகர்களிடையே போக்கிவிட்டது எனின் மிகையாகாது."
※ 崇 崇
‘ஈழநாடு’ பத்திரிகைக்கும் பண்டிதமணி ஐயா அவர்களுக்கும் இடையில் ஆசிரியர் திரு. அ. பஞ்சாட்சரம் அவர்கள் இணைப் புப் பாலமாக இருந்துவந்தார்கள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
பண்டிதமணி அவர்களின் கட்டுரைகள், நூல்கள் பற்றிய விமர்சனங்கள் முதலிய வற்றைப் பெற்றுத்தருவதிலும், வேறுவித

த மனிதர்
ான் அவர்கள்
பொருத்தம் என்பதைப் பண்டிதமணியவர் களின் ஒப்பற்ற சிறப்புக்களை நன்கு அறிந்த எவரும் ஒப் புக் கொள் வர். மண்டலம் பண்டிதமணியவர்களைப் பாராட்ட முன் வந்ததைவிடப் பண்டிதமணியவர்கள் அப் பாராட்டை ஏற்றுக்கொள்ள உளங்கொண் டமையே குறிப்பிடத் தக்கது.
இலக்கியத் துறையிலும் சமயத் துறையி லும் பண்டிதமணியவர்களிடம் தவப்பயணு கப் பொருந்தியுள்ள அசாதாரண ஆற்றலை நமது நாடு இன்னும் பூரணமாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லையென்றுதான் கூறு த ல் வேண்டும்.
வானவர்கள் இறைவனை வாழ்த்துவது தாம் வாழும் பொருட்டே என மணிவா சகப் பெருமான் கூறுகின்றர். ஆளுல் சைவமும் தமிழும் வளம்பெறும் பொருட்டுப் பண்டிதமணி வாழ்க என நாம் அவரை வாழ்த்துவோம்.
(' சாகித்திய மண்டலத்தின் உயர் உறுப்பினர் " என்ற விருதினை இலங்கை சாகித்திய மண்டலம் பண்டிதமணி அவர் களுக்கு வழங்கிய ஞான்று, அப்பொழுது கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதி காரியாகப் பணிபுரிந்த பூரீ கி. லக்ஷமணன் அவர்கள் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய கட்டுரை.)
மான தொடர்புகளுக்கும் அவர் பேருதவி புரிந்துள்ளார்.
ஸ்தாபனத் தலைவர் திரு. கே. சி. தங்கராஜா அவர்களுக்குப் பண்டிதமணி ஐயா அவர்களின் நீண்டநாள் நட்புண்டு. யாழ்ப்பாணம் வரும் சமயங்களில் ஐயா அவர்களின் சுகம் பற்றி விசாரிக்காமல் செல் 6ᏍᎥᎢ fᎥ .
இவ்வாறு 'ஈழநாடு" ஸ்தாபனத்துக்கும் பண்டிதமணி ஐயா அவர்களுக்கும் நெருங் கிய தொடர்புகள் நீண்ட காலமாகவே இருந்துவந்தன. அதனுல் இந் நிறுவனமும் அதன்மூலம் இந் நாட்டுத் தமிழ் மக்களும் நன்மையடைந்தார்கள் என்றே கருதுகின்
றேன். நன்றி!

Page 255
பண்டிதர் ஐயா ப அ. பஞ்சாட்
12-3-86 புதன்கிழமை மாலை ஆறு மணிக்குத் திருநெல்வேலி ஞானப்பிரகாச முனிவர் ஞாபகார்த்த சபையின் ஆலோ சனேக் கூட்டம் திருநெல்வேலி கலா மன்றத்தில் த ட ந் தது. குறித்த ஆலோ சனைக் கூட்டம் முற்றுப்பெற இரவு எட்டு ம ணி யாயிற் று. கூட்டம் முடிந்ததும் அருகிலிருக்கும் பண்டிதர் ஐயா இல்லத்துக் குச் சென்றேன். மேற்கு வாசல் வீட்டில், வடக்குத் தெற்காக நீண்டிருக்கும் விருந்தை பில், தெற்குப் புறத்தில் உள்ள வேப்பங் கட்டிலில் படுத்திருந்தார்கள் பண்டிதர் ஐயா அவர்கள். தலை உதயதிசையையும், கால்கள் அஸ்தமன திசையையும் நோக்கி இருந்தன. கிழக்கே தலை வைத்துப் படுப்பது தான் பண்டிதர் ஐயா அவர்களது வழக்க மான முறை.
என்னைக் கண்டதும் " மோனை தேத் தண்ணீர்" என்ருர்கள். வழக்கம் போலத் தேநீர் வந்தது, பருகினேன். சில வருடங் களாக இரவு வேளைகளில் அவருடன் அதிகம் பேசி அவர்களுக்குக் களைப்பைக் கூட்டுவ தில்லை. இரவு ஒன்பது மணியளவில் 'போட்டு வாறேன் ?? என்றேன். ' போட்டு வாரும் ?? என்று கூறியவாறு அன்பு மீக்கூர அருளொழு கப் பார்த்தபடி தலையையும் அசைத்தார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வழக்கமாய்த் தினசரி நடைபெறும் சம்பிர தாயம் இது. ஒரு நாளைக்கு அவசிய தேவையை முன்னிட்டு இரண்டு மூன்று முறை திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டி இருக்கும். அவர் எழுதிய கட்டுரைகள், முகவுரைகள் சம்பந்தமாகவோ, அல்லது வேறு விஷயங்களாகவோ ஏதாவது சந்தே கங்களைக் கிளப்பினுல் ‘* மோனை அப்படித் தான் இருப்பது சரி " எ ன் பார் கள். மோகனப் புன்னகையோடு அன்பு, அருள் ததும்ப விளிக்கும் அந்த "மோனை" (மகனே என்ற சொல், எந்த விலைக்கூற்றிலும் அடங் காத சொல். அந்த அருமந்த சொல்லை 12-3-86 புதனுக்குப் பின் கேட்க முடிய வில்லையே என்று எண்ணுந்தோறும் கண்ணிர் தான் வருகின்றது.

ற்றிய நினைவலைகள்
Fரம் அவர்கள்
யான் உரும்பிராயில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அந்தக் குறைந்த நேர மெல்லாம் சிந்தனை திருநெல்வேலியிலேயே இருக்கும். அதிகமான நேரம், திருநெல் வேலியில் பண்டிதர் ஐயாவுக்குச் செய்யக் கடவ தொண்டுகளை "எல்லாம் செய்து கொண்டிருப்பதஞல் மனநிறைவு ஏற்படும். பண்டிதர் ஐயா அவர்களோடு இருந்து
விட்டுப் " போட்டு வாறன் " என்ருல் சில சமயங்களில் ' கொஞ்சம் பொறுத்துப் போகலாம் ' என்பார்கள். **பொறுத்துப்
போகலாம்" என்ற பண்டிதர் ஐயா அவர்க ளது வார்த்தைகளின் அர்த்தம், எனக்கு உடல் நிலை சீராக இல்லை; தங்கி இருந்து பார்த்துச் செல்லுங்கள் என்பதே. "கொஞ் *ம் பொறுத்துப் போகலாம்? என்ற வார்த் தையைச் சிலசில நாட்களில் பலபல முறை உபயோகித்தது முண்டு. அப்படியான நாட் களில் "போட்டுவாறன்’ என்று இரண்டாம் முறை அவர்களிடம் கூறி அநுமதிபெற முயற்சிப்பதில்லை. தமது உடல் நிலை சீரடைந்து விட்டது என்பதற்கு அறிகுறி யாக "இனி நீர் போகலாம்" என்பார்கள். அப்படிச் சொன்னுலும் மேலுஞ் சில நிமிஷங் களாவது தங்கிச் செல்வதே வழக்கம்.
12-3-86 புதன் இரவு ஒன்பது மணிக் குத் திருநெல்வேலியில் இருந்து திரும்புவ தற்கு உத்தரவு கேட்டபோது "கொஞ்சம் பொறுத்துப் போகலாம்" என்ற வார்த்தை அவர்கள் வாயில் இருந்து வரவில்லை. அவர்கள் சுகமாக இருப்பார்கள்; இன்னும் நீண்டகாலம் வாழ்ந்து எம்மை மகிழ்விப் பார்கள் என்பதுதான் எமது நம்பிக்கை யாக இருந்தது. சில சமயங்களில் அவரது உத்தரவோடு அவரது சாதகத்தை வெளியே எடுத்துச் செல்வதுண்டு. 'என்ன? எனக்கு வயசு கூட்டுகிற விஷயமாய்த்தானே சாத்திரி யாரிடம் காட்டுவதற்குச் சாதகத்தைக் கொண்டு போகிறீர்; உம்முடைய ஆசை நெடுக வாயாது காணும்; சரி ஏதோ பாரும் உம்முடைய ஆசைக்கு; நான் ஏன் இடறு கட்டையாக இருப்பான்," என்று கூறிய வாறு இலேசாகச் சிரிப்பார்கள்.

Page 256
- S
பண்டிதர் ஐயா அவர்கள் நீண்டகாலம் இன்னும் இருப்பார்கள். அவரது ஆவி பிரியும்போது நிச்சயமாக நாம் பக்கத்தில் இருப்போம் என்ற எண்ணம்தானே எமக்கு. இதைவிட நினைப்பதற்கு வேறு எண்ணந் தான் இல்லையே. 13-3-86 வியாழன் அதி காலை ஐந்து மணிக்குத் திருநெல்வேலியில் இருந்து வந்தவர்கள் எங்கள் வீட்டுப் படலை யில் கைகளைப் பிசைந்தவாறு நின்றர்கள், *"பண்டிதர் ஐயா வுக் கு ஏதோ சுக மில்லையோ?" என்றேன். 'நீங்கள் வந்த பின்னரும் நல்ல சுகமாகத்தான் இருந்தார் கள். ஆனல் விடிய நான்கு மணியளவில்" என்று தயங்கினர்கள். ‘என்ன என்ன? என்றேன். "உங்கள் ஐயா போய்விட் டார்கள்" என்றர்கள்; திருநெல்வேலிக்கு உடனே பறந்துசெல்வதைவிட வேறு என்ன செய்யமுடியும். முப்பத்தைந்து ஆண்டுக ளுக்கு மேலாகத் தினசரி எம்மைக் கண்டதும் வழக்கமாக ஒலிக்கும் அந்தச் சொற்கள் ஒலிக்கவில்லை, அது "மோனை தேத்தண்ணீர்" என்பதுதான். அழக்கூடிய மட்டும்தான் அழுதோம். அந்த இனிய ஒலி ஒலிக்கவில்லை. எப்படித்தான் ஒலி க்கு ம்! தனியணுக வந்தவர் தனியணுகவே போய்விட்டார்.
பண்டிதர் ஐயாவின் உடலைப் பூந் தண்டிகையில் வைத்துத் திருநெல்வேலி மயானத்துக்குச் சுமந்து சென்றபோது பழைய சம்பவம் ஒன்று நெஞ்சை உறுத் தியது.
பண்டிதர் ஐயா அவர்கள் அதிகாலை ஐந்து மணிக்குப்புறப்பட்டுத் திருநெல்வேலிச் சந்திக்குப் போய் வடக்கு நோக்கிப் பலாலி வீதியால் கோண்டாவில் உரும்ப ராய் கோப்பாய்ப் பகுதிகளைத் தாண்டி மீண்டும் திரும்பித் திருநெல்வேலிக்கு முத்துத்தம்பி வித்தியாசாஃல வாசலால் உலாவி வருவது வழக்கம்.இந் நிகழ்ச்சி சில சமயங்களில் மாலை வேளைகளிலும் இடம்பெறுவதுண்டு. உலாவி வரும் வேளையில் ஏற்படும் சிந்தனைகளை வந்தவுடன் ஒரு கொப்பியில் குறிப்பதும் உண்டு. ஒரு சிந்தனை ஒரு கட்டுரையாக அடுத்த நாள் பூர்த்தியடைந்திருக்கும். பல சிந்தனைகள் பல கட்டுரைகளாக வளர்ந் திருக்கக் காணலாம்.

صمس. 9
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் காலை மாலை வேளைகளில் உலாவி வரும்போது வழியில் ஒரு வேப்பங் குச்சியைப் பிடுங்கிப் பல் துலக்கியவாறு வீடு வந்து சேர்வார்கள் சில சந்தேகங்களை நீக்கும் பொருட்டு இவ ருடைய வருகையை எதிர்பார்த்துச் சிலர் வழி தெருவில் நிற்பதுண்டு. தோட்ட வெளி யில் நிற்பவர்கள், ஐயா அவர்களை வழியிற் சந்திப்பவர்கள் 'ஐயா போட்டு வாருங் கோ’ என்று தொழுத கையுடன் மிகவும் மரியாதையாகச் சொல்வார்கள். இறுதியான ஏழெட்டு ஆண்டுகளில் உடல் தளர்ச்சி காரணமாக அவர்கள் உலாவி வருவதை நிறுத்திக் கொண்டார்கள். பிற்காலத்தில் வைத்திய வசதியின் பொருட்டுத் தெற்கு நாடி யாழ்ப்பாணம் செல்லும் வழக்கமே இருந்தது.
பண்டிதர் ஐயா அவர்களுடன் அவரது இல்லத்தில் யான் இருந்த சமயம் ஒரு கிழவியார் வந்தார். திருநெல்வேலி வடக்கு எல்லேயில் இருப்பவர் அவர். அந்த மூதாட்டி யார் ‘ஒவ்வொரு நாளும் காலை மாலையில் உங்கள் தரிசனம் எங்களுக்குக் கிடைக்கும். பெரிய சந்தோஷமாக இருக்கும். ஏழெட்டு வருடங்களாக எங்கள் பக்கத்தையே எட்டிப் பார்க்கவில்லை. ஒரு நாளைக்காவது வாருங் கோவன் ஐயா எங்கள் பக்கம்' என்ருர், பண்டிதர் ஐயா "ஆச்சி, எனக்குச் சுகமில்லை யெணை, முந்தி மாதிரி நடக்க முடியாது. கடைசியாக உங்கள் பக்கத்துக்குத்தான் - நீங்கள் விரும்புகின்ற வடக்கு வழியால்தான் நிச்சயமாக நான் வருவனெண" என்ருர். உடன் எனக்கும் விளங்கவில்லை. உயிர் நீங்கிய நிலையில் தன்னுடைய உடலின் இறுதி யாத் திரை கிழவியார் கேட்ட வழியிலேயே நடக்கும் என்பதைத்தான் பண்டிதர் ஐயா குறிப்பிடுகின்ருர் என்பதைக் கண்டுபிடிக்க ஆண்டுகள் பல சென்றன. 14-3-86 வெள்ளிக் கிழமை பிற்பகல் 5 மணியள்வில் பண்டிதர் ஐயாவின் பூ த வுட் லை த் திருநெல்வேலி மயானத்துக்குச் சுமந்து செல்கையில் 'கடை சியாக உங்கள் பக்கத்துக்குத்தான் நிச்சயமாக நான் வருவனெணை ?’ என்று பண்டிதர் ஐயா அவர்கள் அன்று கூறிய சம்பவமே என் மனத்திரையை அசைத்துக் கொண்டிருந்தது.

Page 257
பண்டிதர் ஐயா அவர்களின் குடும்ப மரபுப்படி மயானத்தில் அந்தியேட்டிக் கிரி யைகள் முடிவுற்றபின் அவரது அன்புப் பேரன் திரு. சின்னத்துரை-சதாசிவம் சிதைக்குத் தீ மூட்டுகின்ற சந்தர்ப்பம்; அதற்குமுன் வாய்க்கரிசியிடும் நேரம்.
சுன்னுகம் பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களும், நவாலியூர் க. சோமி சுந்தரப் புலவர் அவர்களுமே அந்த நேரம் என் மனக்கண்முன் தோற்றம் அளித்தார்
SST
மகாவித்துவான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை அவர்களிடம் தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே, சாமிநாதையர் அவர்கள் ஆறு ஆண்டு கள் பாடங்கேட்டவர்கள், தோடஞ்ஞரான சுன்னகம் பூரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களிடம் ஈழத்துத் தமிழ் டாக் டர் பண்டிதர் ஐபா அவர்கள் பாடங் கேட்ட காலமும் ஆறு ஆண்டுகளே. குமார சுவாமிப் புலவர் அவர்கள் 9-3-1922இல் இறைவன் திருவடி நீழலை எய்தினர்கள். மயா னத்தில் வாய்க்கரிசி போடும் சந்தர்ப்பம். நாவலர் பாடசாலை மானேஜர் பூரீமத் த. கைலாசபிள்ளை அவர்கள் புலவருடைய பூத வுடலுக்கருகிற் சென்று "நான் இன்று தமி முக்கு வாய்க்கரிசி போடுகிறேன்? என்று கூறிப் பொரியைப் புலவர் வாயிற் போட் டனர். சிதைக்குத் தீ மூட்டியதும் புலவர் அவர்களை நிழல் போலத் தொடர்ந்து வந்தவ ரான பண்டிதர் ஐயா அவர்கள், LDGOTLř. மிகவும் நொந்து பாடியேவிட்டார்கள்.
"செந்தமிழும் ஆரியமுந் தேர்ந்து வீறித்
தேயமெலாம் சென்றிலங்கும் சீர்த்தி ஒன்றே இந்தநில மிசையிருப்ப இணையி லாத
எண்ணில்பல கவிதழைத்த இனிய வாயும் அந்தமிலாக் கவிகள்பல எழுதி வைத்த
அம்புயநேர் திருக்கரமும் அந்தோ! அந்தோ! இந்தனத்திற் செந்தழலில் உருகி வீய
யாமிதனைப்பார்த்திருத்தல்என்னே!என்னே
என்பதே அப்பாடல்.

:00 -
ஆடிப்பிறப்பொடு அத்தரித்தோட்டமும் ஆக்கி அளித்த புலவர்பிரான் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள். அவர்கள் இய்ற்கை எய்திய போதும் பண்டிதர் ஐயா அவர்கள் உளமுருகிப் பாடினர்கள்.
வங்கக் கவிசென்ற வானுலகம் வாழியரோ
தங்கக் கவியுமங்கே சார்ந்திட்டார்-சங்கொத்த தாடியனுர் கூடித் தகுயுலவர் தாமகிழ
ஒடிமறை கின்றர் உயர்ந்து.
'கற்றர் விழையும் கற்பகத் தரு'
* வண்டமி பூழிதமறி பண்டித மணி" என்றெல்லாம் பண்டிதர் ஐயா வை ப் போற்றிப் புகழ்ந்தவர்கள் தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்கள்.
புவவர்கள் இருவருடைய தோற்றக் களும், அவர்கள் மறைவை ஒட்டிப் பண்டிதர் ஐயா அவர் க ள் பாடிய பாடல்களுமே திருநெல்வேலி மயானத்தில் எமது நினைவுக்கு வந்தன. தமது குருநாதரான குமாரசுவாமிப் புலவரவர்களது தமிழ்வாயும், தமிழ் எழுதிய கரங்களும் எரிகின்றன என்று கலக்கினர்கள். சங்கொத்த தாடியரான சோமசுந்தரப் புலவர் அவர்கள் ஒடிமறைந்த காட்சியை யும், பண்டிதர் ஐயா அவர்கள் எமக்குப் படம் பிடித்துக் காட்டினர்கள்.
உச்சியிலிருந்து உள்ளங்கால் பரியந்தம் சைவதமிழ்ச் சுடராக ஒளி கொடுத்த எமது பண்டிதர் ஐயா அவர்களது திருவுடல், தீக் கிரையாகிய சமயம் எமது வாய் பாட வில்லையே! அழத்தானே முடிந்தது. இப்பெ7 ழுதும் அழுதுகொண்டே இருக்கின்ருேம்.
நாங்கள் அழுது கொண்டிருப்பது பண்டிதர் ஐயா அவர்களுக்கு நிச்சயம் தெரியும். அவர்கள் எங்களையே பார்த்துக் கெர்ண்டு இருக்கின்ருர்கள்.
- முரசொலி 13-3-1987

Page 258
பண்டிதமணியும் முரசொலி பிரதம ஆசிரியர்
*பண்டிதமணியும் திருநெல்வேலியும்’ என்ற தலைப்பில் கட்டுரையொன்று எழுதித் தரவேண்டும் என்பது ஆசிரியர் அ. பஞ்சாட் சரம் அவர்கள் எனக்கு இட்ட பணிப்பு.
இதனை நினைவூட்டி எனக்கொரு கடித மும் அவர் அனுப்பியிருந்தார்.
நான் பண்டிதமணியின் மாணவனல்லன். அவருடன் மிகமிக நெருக்கமாகப் பழகியவனு மல்லன். எனினும், திருநெல்வேலி வாசி என்ற ஒர் உரிமையின் பேரில் இந்தத் தலைப்பு என க்கு வழங்கப்பட்டிருக்கலா மென்று நினைக்கின்றேன்.
இங்கும் கூட எனக்கொரு சிக்கல் இருக் கிறது. நான் திருநெல்வேலியில் பிறந்து, வளர்ந்து, படித்துவந்த காலத்தில் பண்டித மணி அவர்களின் ஆற்றலை, தமிழறிவை அறிந்திருக்கவில்லை.
திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் கல்விகற்ற காலத்தில் (1950 - 1961) போதஞ பயிற்சிக்கு வரும் ஆசிரியர் களை மேற்பார்வை செய்ய, ஆறடி உயர மான, ஆஜானுபாகுவான, அழகான குடுமி யுடன், நெற்றியில் விபூதி, சந்தனத்துடன் காணப்படும் அந்த மனிதரைக் கண்டு இரசித்திருக்கிறேன். அவ்வளவுதான்!
பாடசாலையை விட்டு, பத்திரிகைத் தொழிலுக்குள் புகுந்த பின்னரே அவரின் அருமை, பெருமைகளை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வகையில் பண்டிதமணி வாழ்ந்து, தொண்டாற்றி மறைந்த திரு நெல்வேலியின் "ஆதனவழி உரிமைக்காரன் என்ற வகையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி யுண்டு; பெருமையும் கூட.
26

திருநெல்வேலியும் ாஸ். திருச்செல்வம் அவர்கள்
** பண்டிதமணியும் திருநெல்வேலியும்" என்று எழுதுவது சரியா என்ற ஐயம் முத லாவதாக இங்கு ஏற்படுகின்றது. ஏனெனில் பண்டிதமணி அவர்கள் இந்த அழகிய கிர7 மத்தை " திருநல்வேலி " என்றே அழைத்து வந்தார். நல்லவர்கள் வாழும் ஊர் என்பது அவரது கணிப்பாகும்.
亲 崇
1959ஆம் ஆண்டில் வெளிவந்த பண்டித மணி மணிவிழா மலரில் திருநெல்வேலி இந்து வாலிப சங்கம் எழுதிய கட்டுரையின் முதற்பந்தி பின்வருமாறு அமைந்துள்ளது.
** பண்டிதமணி அவர்கள் முப்பது ஆண்டுகளுக்குமேல் திருநெல்வேலியில் வாழ்ந்தார்கள். தாமும் வாழ்ந்ததோடு வாழ்ந்த இடத்தையும் வாழவைத்தார் கள். சைவாசிரிய கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றிய பண் டிதமணி ஆசிரிய மாணவர்களுக்கு மட்டும் பேராசிரியராக இருக்கவில்லை. திருநெல்வேலியில் உள்ள மக்களுக்கும் மற்றும் தமிழ் அபிமானிகளுக்கும் அவர்கள் பேராசிரியராக வீற்றிருந் தார்கள்."
இது முற் றிலும் உண்மையாகும். பண்டிதமணி அவர்கள் மட்டுவிலில் பிறந்தவ ரானலும் அவர் அரை நூற்ருண்டுகளுக்கு மேலாகத் திருநெல்வேலியில் குடிகொண் டிருந்ததால் அவர் திருநெல்வேலிக் கே சொந்தமானவராஞர்.
அதனுல்தான்போலும் ஐயாவின் இறுதிச் சடங்குகள் அவர் வாழ்ந்த இல்லத்தில்

Page 259
- 2
நடைபெற்றன. தகனக்கிரியை அவர் கல்வி போதித்த ஆசிரிய கலாசாலைக்கு அருகி
லுள்ள மயானத்தில் இடம்பெற்றது.
சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எத்தனையோ பட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும், பண்டிதமணி என்ற பட்டமே நிலைத்தது. பண்டிதமணி என்ருல் அது சி. க. அவர்களை மட்டுமே குறிக்கும். இப் பட்டத்தை வழங்கிய பெருமையும் கூடத் திருநெல்வேலியையே சாரும்.
திருநெல்வேலி பரமேசுவரக் கல்லூரி யில் நடைபெற்ற தமிழ் விழாவில் ‘சி. க." அவர்கள் நிகழ்த்திய உரையை வியந்து தினகரன் பத்திரிகை "தமிழ்ச் சாறு" என்ற பெயரில் தலையங்கம் எழுதியது. இத் தலையங்கத்தில் 'பண்டிதர் "சி. க. அவர்கள் பண்டிதமணி" என்று குறிப்பிடப்பட்டிருந் தது. இப் பட்டத்தை கல்கி அவர்கள் விமர்சனம் செய்து எழுதியிருந்தார். அன்று முதல் ‘பண்டிதமணி" என்பதுதான் அவர் பெயர் முன்னுல் நிலைத்துவிட்டது.
崇 杀 亲
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் இலக் கிய கலாநிதிப் பட்டத்தைப் பெற்ற முதலா வது தமிழறிஞர் பண்டிதமணி அவர்களே. தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக விளங்கும் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் தகுதி கண்டு முன்மொழிந்தமைக்கிணங்க பண்டிதமணி ஐயாவுக்கு 1978 மே மாதம் 31ஆம் திகதி இக் கெளரவ பட்டம் வழங்கப் பட்டது. பண்டிதமணி அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக இவ்விழாவிற்குக் கொழும்பு செல்ல முடியாததால் அவரைப் பாராட்டிக் கெளரவிக்கும் விழா 1978 ஆகஸ்ட் 14 இல் யாழ் பல்கலைக் கழகத்தில்

02 -
துணைவேந்தர் சு. வி. தலைமையிலேயே நடை பெற்றது. இவ்விழாவில் "இலக்கிய கலாநிதி" பட்டம் இப் பெருமகளுருக்குச் சூட்டப் பெற்றது.
இலக்கிய கலாநிதி பட்டத்தையும் பண்டிதமணி அவர்களுக்குத் திருநெல்வேலி யில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில் வைத்து வழங்கப்பட்டம்ை இங்கு கவனிக்கப் படத் தக்கது.
兴 来源 兴
யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு தலங்காவற் பிள்ளையார் கோயில் பற்றிய வரலாற்று நூலில் திருநெல்வேலியின் சிறப் புப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
** நாவலர் பெருமான் தோன்றிய தால் நல்லூர் புகழ்பெற்றுத் துலங்கு வதுபோல் பசுவதையை எதிர்த்துப் பரதேசம் சென்ற ஞானப்பிரகாச முனிவர் தோன்றியதால் திருநெல்வேலி சைவ உலகெங்கும் புகழ் பூத்துப் பொலிகின்றது. ஞானப்பிரகாச முனிவ ரின் சிறப்பினையும் நாவலர்பெருமானின் தொண்டினையும் எங்கள்சந்ததியினருக்கு நினைவூட்டிவரும் பண்டிதமணி அவர்கள் திருநெல்வேலியில் வாழ்ந்துவரும் சிறப் பால் இத்தலத்துக்கு மேலும் தனிப் புகழ் கிடைத்துள்ளது." இந்த வாக்கியம் அரும்பொருள் அர்த்தம் பொதிந்தது.
திருநெல்வேலியின் இரு கண்கனாக ஞானப்பிரகாசமுனிவரையும், பண்டிதமணி ஐயாவையும் நாம் போற்றித் துதிக்கவேண் டும்.
பண்டிதமணி ஐயா அவர்களால் திருநெல்வேலியின் பெயர் பூகோளத்தில் அழியாத பெயர் பெற்றுள்ளது.
அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்ப தால் எமக்கெல்லாம் அளவற்ற பெருமை.

Page 260
ஈழத்தமிழ் வசனாகடை
பேராசிரியர் சி. தில் தமிழ்த்துறைத் தலைவர், ே தமிழ் வசனநடை ஈழத்தில் வளர்ந்தவாற் நினை அறிந்துகொள்ள, 109இல் எழுதப் பட்டதாகக் கருதப்படும் விசயபாகுவின் சிலாசாசனமும், பொலநறுவைக் கல்வெட் டும், மகாபராக்கிரமபாகு பொறித்த நயினு தீவுக் கோயிற் சுவரிற் காணப்படும் கல்வெட் டும் காலத்தால் முந்திய சான்றுகளாக உள்ளன. அவை அனைத்தும் பன்னிரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்தவை. ஆரியச் சக்கர வர்த்திகள் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலப் பகுதிக்குரிய வசன நூல்கள் எதுவும் இன்று கிடைக்கவில்லை.
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங் கையை ஆட்சிபுரிந்த பதினேழாம் பதினெட் டாம் நூற்ருண்டுகளைச் சேர்ந்த குறிப்பிடத் தக்க உரையாசிரியர்கள் சிவஞானசித்தியா ருக்கு உரை கண்ட திருநெல்வேலி ஞானப் பிரகாசரும் நன்னூலுக்கு உரை கூறிய கூழங் கைத் தம்பிரானும் ஆவர். அச்சுக்கலையை இந் நாட்டில் அறிமுகப்படுத்திய ஒல்லாந்தர் பிளக்கட்டின் எனப்படும் பல கட்டளைச் சட்ட அறிவித்தல்களைத் தமிழில் வெளியிட் டனர். இவை பிரதி செய்யப்பட்டுப் பொது விடங்களிலே தகவல் பரப்ப வைக்கப்பட்டன. அவற்றில் இடம்பெற்ற வசனங்கள் இடைச் சொற்களையும் வினையெச்சங்களையும் இடை யிடை பெற்று மிக நீண்டனவாக அமைந் தன. ஏடுகளில் எழுதப்பட்டது போலச் சொற்களுக்கிடையே இடைவெளியின்றி எழுதப்பட்டதால் படிப்போர் சிரமப்பட்டே பிரித்து வாசிக்கவேண்டி யிருந்தது. அறிவித் தல்களை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதனுற் போலும் பேச்சு வழக்கு ச் சொற்கள் பல இடம்பெற்றன. போர்த் துக்கேய, ஒல்லாந்த மொழிச் சொற்களும் ஆங்காங்கு இடம்பெற்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக் கா லத் தைச் சேர்ந்ததாகக் காணப்படும் வசன நடையிற் காலத்தால் முற்பட்டது மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவ மாலையில் உள்ளதுவே. அதிலுள்ள வசனங்களும் அனேகமாக மிக நீண்டவையாகவே காணப்

வரலாற்றிற் பண்டிதமணி
லைநாதன் அவர்கள்
பராதனைப் பல்கலைக் கழகம்
படுகின்றன. பேச்சுவழக்குச் சொற்களும் இடம்பெற்றுள்ளன. ஆளுல் போர்த்துக் கேய ஒல்லாந்த மொழிச் சொற்கள் இல்லை அதிக பிரயத்தனமின்றி வாசிக்கக் கூடியதா யமைந்த கதை சொல்லும் பாணி இர சிக்கத் தக்கது.
உதயதாரகை 1841இல் வெளியான தைத் தொடர்ந்து செய்தித் தாள்கள் தோன்றியமையினுலும் பொதுமக்களிடைத் தமது சமயத்தைப் பரப்பக் கிறித்துவ மிசனரிமார் மேற்கொண்ட முயற்சிகளின லும் சாதாரண மக்களைச் சென்றடையத் தக்க எளிமையும் தெளிவும் பொருந்திய வசனநடை வளர ஆரம்பித்தது. ஆயினும் சபாபதி நாவலர் போன்றவர்கள் சிவஞான முனிவர் கையாண்டதையொத்த இறுக்க 'மான கடின நடையிலே எழுதலாயினர். சபாபதி நாவலரைப் பற்றிக் குறிப்பிடுகை யில், " அவரியற்றிய திராவிடப்பிரகாசிகை வசன நூலேயாயினும் இரகுவமிசம்போல மிகக் கடினமானது" என்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை கூறியுள்ளமை அவதானிக் கத் தக்கது.
மனதிடை எண்ணி மாசறத் தெளிந்து தொடர்பு நலத் தோடு படித்தாரைப் பிணிக்கும் வகையில் ஆற்ருெழுக்குப் போன்ற நடையில் எழுதப்படுவதுவே சிறந்த வசன நடை என்று இன்று கருதப்படுகிறது. அந்த வகையில் விதந்து குறிப்பிடத்தக்கவர் ‘வசன நடை கைவந்த வல்லாளர்" என்றும், "தற் கால இலக்கிய வசனநடையின் தந்தை " என்றும் போற்றப்படும் ஆறுமுகநாவலரே ஆவர். வசனநடை எத்தகைய காரியங் களுக்கு எவ்வாறு உபயோகமாக வேண்டும் என்பதனை உணர்ந்துகொண்ட நாவலர், ** நிறைந்த கல்வியறிவுடைய வித்துவான் களும் குறைந்த கல்வியறிவுடைய பிறரும் ஆகிய யாவரும் எக் காலத்திலும் எளிதில் வாசித்து உணரும் பொருட்டும், கல்வியறி வில்லாத ஆட வர்களும் பெண்களும் பிறரைக்கொண்டு வாசிப்பித்து உணரும் பொருட்டும் . பெரும்பான்மையும் இயற்

Page 261
- 26
சொற்களும் வடசொற்களும் பிரயோகிக்கப் படும் கத்திய ரூபமாகச் செய்து, வாசிப்பவர் களுக்கு எளிதில் பொருள் விளங்கும்படி பெரும்பான்மையும் சந்தி விகாரங்களின்றி’ அமைந்த ஒரு நடையினைக் கையாண்டு பிறருக்கு வழிகாட்டிஞர். ஆணித்தரமான சிறு வசனங்களையும் தெளிவான நீண்ட வசனங்களையும் கலந்து எழுதிய நாவலரின் பொருள் மயக்கத்தைத் தவிர்க்கும் திறனும் வேண்டியவற்றிற்கு அழுத்தம் தரும் அழகும் போற்றப்படக் கூடியவை.
ஆறுமுக நாவலர் வழியில் ஈழத்திலே தமிழ் வசனத்தை வளர்த்தோருட் சி. வை. தாமோதரம்பிள்ளை, சுன்னகம் அ. குமார சுவாமிப் புலவர், சுவாமி ஞானப்பிரகாசர், மகா வித்துவ சிரோமணி சி. கணேசையர், சுவாமி விபுலாநந்தர், பண்டி தம ணி சி. கணபதிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
ஆங்கிலப் பயிற்சியும், பத்திரிகையுலகத் தொடர்பும் உடைய சி. வை. தாமோ தரம்பிள்ளை தெளிவும் உணர்ச்சி நலமும் பொருந்திய ஒரு நடையிற் கடும் புணர்ச்சி களை ஒதுக்கி எழுதினுர், இலக்கணப் புலமை வாய்ந்த குமாரசுவாமிப்புலவரின் வசன நடை பெரும்பாலும் கடினமானதாக அமைந்தாலும் தேவை நோக்கி இலகுவான நடையினையும் அவர் கையாண்டார். மாண வர்களுக்குப் பயன்படும் பொருட்டு அவர் எழுதிய சிசுபால சரிதம், இரகுவமிச சரி தாமிர்தம், கண்ணகி கதை போன்ற நூல் களில் எளிமையான நடையினைக் காணலாம். இலக்கண, இலக்கிய, சமயச் சர்ச்சைகளில் ஈடுபட்ட குமாரசுவாமிப் புலவரின் கண்டன வலுவும் வாதத்திறனும் அவர் நாவலர் வழி வந்தவர் என்பதை உறுதிப்படுத்துவன.
தமிழ்மொழி, வரலாறு, பண்பாடுஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்ட சுவாமி ஞானப்பிரகாசரின் வசனநடையிற் கட்டுரை வன்மையினையும் தருக்கத் திறனையும் தூய தமிழ்ப் பிரயோகத்தையும் நோக்கலாம். சி. கணேசையர் தமது உரைகளிலும் கட்டுரைகளிலும் கடின பதங்களைக் கொண்ட இலக்கண நடையினைக் கையாண்டார். எனினும் சிறுவர்களுக்கு உபயோகமாக அவர்

)4 -
எழுதிய குசேலர் சரிதம், குமாரசுவாமிப் புலவர் சரித்திரம், ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் ஆகியவை நெகிழ்ந்த நடையில் அமைந்தன.
கீழைத்தேய மொழிகள், இலக்கியங் களில் மட்டுமன்றி மேலைத்தேய மொழிகள் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டவரும் இலக்கியம், கலை, சமயம் ஆகியவற்றில் மட்டுமன்றி விஞ்ஞானத்திலும் நாட்டங் கொண்டவருமான சுவாமி விபுலாநந்தரின் வசனநடையினை நோக்கும்போது பழைய இலக்கிய நெறியும் புதிய போக்கும் மருவு மாற்றினையும் தமிழ்மொழி புதுப்புலங்களிற் செல்ல ஆரம்பித்தவாற்றினையும் அவதானிக் கலாம். பழைய உரையாசிரியர்களை நினைவு படுத்தும் நீண்ட வசனங்களையும் கடின பதங்களையும் பலவிடத்துக் கையாண்ட விபுலாநந்தர் இலக்கிய நயமுடையனவும் இலகுவில் மனதிற் பதிய வல்லனவுமான சிறு சிறு வசனங்களையும் எழுதியுள்ளார்.
இந்தப் பகைப் புலத்திற் பண்டிதமணி யின் உரைநடைச் சாதனைகளை உற்று நோக்குமுன் அவரது காலத்திற் பல்வேறு துறைகளிலே தமிழ் உரைநடை வளர்ந்தமை யினையும், புனை கதை இலக்கியங்களும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பல்கிப் பெருகியமையினையும், தமிழிலக்கிய உலகிற் பிரதான இடத்தை வசனநடை பிடித்து விட்டதனையும், வசனநடையிலான ஆக்கங் களை வேண்டும் வாசகர் கூட்டம் வளர்ந்து விட்டதனையும் மனங்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வசனநடை என்ருல் என்ன ? அது எவ் வாறு அமைய வேண்டும் ? என்பன குறித்த விளக்கம் இன்று பெருகியுள்ளது. சுருக்க மாகக் கூறுவதாஞல், செய்யுளுடாகவன்றி வெளியிட முடியாதளவுக்கு உணர்வைத் தூண்டுவன தவிர்ந்த ஏனைய எண்ணக் கருத்துக்களை நெகிழ்ந்த சீர்ப்பிரமாணத்தில் வார்த்தைகளை ஒழுங்குபடுத்தி வெளியிடு வது வசனநடை எனலாம். வசனநடையில் இன்று நாம் வெறுமனே பேசுவதுபோல் எழுதுவதில்லை. வாசகனின் உள்ளத்தில் ஒரு வகைத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குகந்த முறையில் வசனநடையினை உபயோகிக்கின் ருேம்.

Page 262
- 2
நடை என்று இன்று கூறும்போது குறிப் பிட்ட ஆசிரியருக்குரிய Styleஐ, அதாவது எழுதும் பாணியையே கருதுகிருேம். அந்த வகையில் நடை என்ருல் என்ன? ஒர் ஆசிரியர் தன் எண்ணக் கருத்தைச் செவ் வனே வெளியிடக் கையாளும் முறையே அதுவெனலாம். பொருளுக்குப் பொருத்த மான வார்த்தையைத் தெரிந்து கொள்வ தால் மட்டும் அது அமைந்துவிடாது. ஒருவ னது நடை அவனையே காட்டும் என்பர், ஒன்றைப் பார்ப்பதில், உணர்வதில், அத னைப் பற்றிச் சிந்திப்பதில், அதனை எடுத்து விளக்குவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு. பண்டிதமணியின் வசனநடையைப் பற்றிக் கூறுமிடத்துப் பேராசிரியர் சு. வித் தியானந்தன், "இவரது நடை இவருக்கே அமைந்த கொடை, அந்த நடைதான் இவ சின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின் றது" என்பர்.
ஓர் எண்ணத்தை வார்த்தையில் வெளி யிடுவதோடு அமையாது, அவ்வெண்ணம் ஏற்படுத்தவேண்டிய முழுத் தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் அதனைச் செய்ய வேண்டும். மொழியைக் கையாண்டு அத னைச் செய்ய விழையும் ஆசிரியருக்கு வேண் டியவை இரண்டு. ஒன்று, கூறவந்தது குறித்த தெளிந்த சிந்தன. இரண்டாவது, அதனைச் செவ்வனே கூறவல்ல மொழியாற்றல். 'உள் ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்ருன் மகாகவி பாரதி. ஒளியூட்டும் அல்லது உணர் வைத் தூண்டும் ஆற்றல் கவிதைக்கு மட் டுமே உண்டெனச் சிலர் எண்ணக்கூடும். ஆனல், வசனநடைக்கும் அவ் வல்லமை வாய்க்கப் பெறலாம்.
" நளன் கானகத்திற் காரிருளிற் காரிகையைக் கைவிட்டான். அலறி அலறிக் கைவிட்டான். அது துறவறம் அன்று. அது சனிக் கோளாறு. மனைவி மக்களைத் துயில வைத்துவிட்டு ஒடுவது துறவன்று. அது தர்ம விரோதம். இயல்பாக அமைந்த சுற்றச் சூழலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டு மென்பதிலேதான் தர்மம் தங்கியிருக் கிறது. தன்னைப் பற்றுக்கோடாக நம்பி

05 - .
யிருப்பவர்களைத் தவிக்கச் செய்வது தர்மக்கேடு. தர்மந்தான் எல்லா வகை யான நன்மைகளுக்கும் மூல வேர். அது கெட்டுவிட்டால் யாதொன்றுஞ் சித் திக்காது. மனைவி மக்களைக் கைவிட் டோடுவது துறவென்று நினைப்பது பெரிய தவறு. தவறுகளே - அழுக்கு களைத் துறப்பதே துறவு."
*" கண்ணப்பர் கண்டறியாததைக் கண்டார். அன்னையையும் அத்தனை யும் அன்றே நீத்தார். அகன்ருர் அக லிடத்தார் ஆசாரத்தை. உலகத்தை அவர் நீக்கவில்லை. உலகம் நீங்கிவிட் டது. கண்ணப்பருக்கு அது தெரியாது. இராக்காலத்தை நாம் நீக்குவதில்லை."
பண்டிதமணி எழுதியுள்ள மேற்கண்ட பகுதிகள் அவருடைய நடையினை இனங் காண உதவும். எடுத்துக்கொண்ட கருத் துக்கள் வாசகர் மனதிற் பதியும் வகையிற் கூறப்பட்டுள்ளன. உணர்வையும் சிந்தனை யையும் தூண்டும் ஆற்றல் வாய்ந்த நடை. கருத்துச் செறிந்த சிறு வசனங்கள். வாசிப்ப திலும் புரிந்துகொள்வதிலும் சிரமமில்லை. வசனங்கள் நின்றும் தொடர்ந்தும் தரும் பொருள் கனமானது. ஆணுல், கனம் தோன்றவில்லை. சில வார்த்தைகளிலே, சில வசனங்களிலே, மயக்கமேற்படா வகை யில் ஆணித்தரமாக அறுத்துறுத்துக் கூறுவது பண்டிதமணியின் பாணி. அது "சவியுறத் தெளிந்து தண்ணென் ருெழுக்கமும் தழுவிக்" காணப்படுகிறது.
நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை, குமாரசுவாமிப் புலவர், விபுலாநந்தர் முத லானவர்களிடத்துப் பற்று மிகுந்தவரெனி னும் பண்டிதமணி யாருடைய நடையினை யும் பிரதிபண்ணவோ பின்பற்றவோ எத் தனிக்கவில்லை. யாரையாவது பின்பற்ற முனைபவர் ஒரு நடையினை வளர்த்துக் கொள்ளல் இயலாது என்று இலக்கியத் திறனுய்வாளர் கூறுவர். பண்டிதமணி வகுத் துக் கொண்டது அவருக்குரிய நடை. சபாபதி நாவலரைப் பற்றிய அவரது சுற்றிலிருந்து வசனநடை எளிமையானதாக அமைய வேண்டுமென்ற அவரது கருத்துப் புலணுகும் ,

Page 263
- 2
சொல்லலங்காரங்களிலோ எது கை மோனை அடுக்கு வசனங்களிலோ அவருக்குச் சற்றும் நாட்டமில்லை, வசனநடை வாசிப் பதற்குரியதேயன்றிக் கேட்பதற்குரியதல்ல; செவிக்கின்பம் நோக்கியதல்ல என்பதை அவர் அறிந்திருக்கிருர். பொருளையே அவர் பிரதானமாகக் கருதினுர்.
' உயிருள்ள உடலே இயங்கும் ; நிலைக் கும். அவ்வாறே பொருளுள்ள இலக் கியங்களே, கவிதைகளே வழங்கும் ; நிலைக்கும். பொருளற்றவைகள் பிணங் கள். அவைகள் காலவெள்ளத்துடன் கரந்து இருந்த இடமுந் தெரியாமற் பெயரும் வழங்கா மல் மறைந்து போகும்."
என அவர் தெளிவாகவே கூறியுள்ளார்.
ஓர் ஆசிரியன் வசனநடையினை உன்னத மாக அமைக்குமிடத்துக் கவிதையின் எல்லை யுட் பிரவேசித்து விடக்கூடும். அத்தகைய ஒரு தன்மையினைப் பண்டிதமணி எழுதி யுள்ள சிவகாமி சரிதையிற் பார்க்கலாம்.
* காலமோ நள்ளிருள். இடம் நடுக்காடு. காலை மாலை நிழல்போல நாமும் நடக் கத் தானும் நடக்கிற காடு அந்தக் காடு. எல்லாம் இருண் மயம். இடை யிடையே சிறிய சிறிய ஒளிகள். பாம்பு களின் வாயிலிருந்தும், ஆனைகளின் தந் தங்களிலிருந்தும், புலிகளின் கண்களி லிருந்தும் வருகிற ஒளிகள் அந்த ஒளிகள். இந்த ஒளிகளுக்கும், ஆகாயத்திலே கண்சிமிட்டுகின்ற தாரகைகளுக்குஞ் சந்துபேசி அங்கும் இங்கும் பந்தம் பிடிக்கின்றன மின்மினிகள். எங்கும் மெளனம், ஏகாந்தப் பெருங்ககனம். அங்கே " மனிதன் " என்ற வார்த்தைக்கு இடமேயில்லை. உலகம் வேறு, இந்தக் காடு வேறு."
ஒளியூட்டும், உணர்வூட்டும், வார்த்தை களுக்கு அப்பாற்பட்ட மறை பொருளுணர்த் தும் இதனைக் கவிதை என்றே கூறலாம்.
சில கருத்துக்களைப் படிப்போர் உள்ளங் களில் உறைக்கும் விதத்தில், ஒரோவழிட் * பொடி * வைத்தும் எழுதுவது பண்டித மணியின் ஓர் இயல்பு என்பர். சீவகசிந்தா மணி என்ற கட்டுரையிலே, சீவகன் பொய்த் துறவைப் புனைந்து செல்கின்ற சீவகசிந்தா மணியைச் சிறந்த இலக்கியமெனக் கூறிய உ. வே. சாமிநாதையரைச் சாடிப் பண்டித

D6 -
மணி எழுதியதை ஒர் உதாரணமாகக் காட்டலாம் :
* தமிழ்த் தாத்தா இப்படி உரைப் பாராயின், பொய்ம்மையில் சுவை காண்பாராயின், இனித் தாய்நாட்டு நிலையை ஆராய்வதிற் பயனில்லை. பொய்ம்மையே பெருக்கிப் பொழுதி னைச் சுருக்குவது புலைமையாமன்றிப் புலமை ஆகாதே. தாய்நாடு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் சமரசம் பண்ணிச் சாம்பார் பண்ணுகின்றது. பொருளைப் பற்றிய சிந்தனையற்ற சாதாரண கவிஞ னும், தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இன்றைய தாய்நாட்டுக்கு ஒரு பண்டந் தான். ** பண்டிதமணியிடம் காணப்படும் நகைச் சுவையும் அவருக்கே உரிய இயல்பினது
விஞ்ஞானங் கதித்த இந்த எந் திரவுலகத்திலே மனிதன் வெறும் எந் திரமாய்விட்டான்; நாயாய் அலைகிருன்; பேயாய்த் திரிகிருன். எண்சாணுடம் புக்கு வயிறே பிரதானமாய்விட்டது. உணவுப் பிரச்சினை, சிக்கனப் பிரச்சினை முதலியன இன்றைய பேச்சாய்விட்டன. இனி வருங்கால மனிதனுக்குச் சிரிப்பு வராது. அது கொட்டாவியாய் மாறி விடும் போலத் தெரிகிறது. "
இதனைப் படிக்கும்போது சிரிப்பு வரு கிறது. ஆனல், இது வெறுமனே சிரிக்க வைக்க எழுதப்பட்டதல்ல, சிந்தனையைத் துரண்டுவது.
பண்டிதமணிக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தினல் இலக்கிய கலாநிதி" என்ற கெளரவப் பட்டம் வழங்கப்பட்ட தை யொட்டி வெளியிடப்பட்ட பாராட்டு விழா மலரில் ஏலவே யாம் கூறியதை இங்கு மீண்டும் கூறுதல் ஏற்புடைத்தாகும்.
** பண்டிதமணியின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலவேளைகளில் எமக் கோர் ஆசங்கை தோன்றும். எம்மை வசீகரிப்பது அவர் கூறும் கருத்துக்களா? அல்லது அவற்றை அவர் கூறும் முறையா என்பதுவே அதுவாகும். அது பண்டிதமணியின் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டான சிறப்பு. அவ் வொளி அவரது வசனநடையிலும் தவழ் கிறது. சிறு சிறு வசனங்களிற் காத்திர DIT GÖT கருத்துக்களைப் பவனிவிடும் பண்டிதமணியின் ஆற்றல் இலேசிற் கைவரத் தக்கதன்று. ’’

Page 264
சான்றேரைப் போற்றிய
உடுவில் உதவி அரசாங்க அதி
*தன்மேல் தான் அன்புடையவன யிருத் தல் வாழ்க்கையின் அத்திபாரமான அடிப் படைத் தத்துவம். குறிப்பிட்ட அடிப் படைத் தத்துவம் நீதியை அடிப்படையாகக் கொண்டதாகும். பங்கயத் தயனும் மால றியா நீதியே " என்கிருர் மாணிக்கவாசகர். நீதி மந்திர சக்தி வாய்ந்தது.
நீதியை விசாரித்தவர் திருநெல்வேலி ஞானப்பிரகாச முனிவர் அவர்கள். இலங்கை யைப் பறங்கியர் ஆண்ட காலத்திலே, யாழ்ப்பாணத்திலிருந்த பறங்கித் தலைவனும் பரிவாரமும் விழுங்குவதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பசுவை ஒவ்வொரு வீட் டாரும் கொடுக்கவேண்டும் என்ற அநீதியை எதிர்த்தவர். இக் கொடுங்கோன்மைக்குத் தீர்வு காணப் பரதேசம் சென்றவர் திருநெல் வேலி ஞானப்பிரகாச முனிவர். அவர் சென் றடைந்த தேசம் அம்பரதேசம்; சிதம்பரம், சிதம்பரத்திலே தேவி சந்நிதியிலே நாற்பது நாள் உபவாசமிருந்து கடுந்தவம் புரிந்தார். அநுக்கிரகம் கிடைத்தது. பல நீதி சாத்தி ரங்களை ஆக்கினர். ஞானப்பிரகாச முனிவ ரின் தவ வலியால் பறங்கியர் ஆட்சி ஒடுங் கியது. மறைவில் இருந்த சைவம் தலைநீட் டியது. ஞானப்பிரகாச முனிவரின் தவம் இருந்தவாறு!"
இவை பண்டிதமணி ஐயா அவர்களின் குறிப்புக்கள். இக் குறிப்புக்களை யான் படித்த போதுதான் திருநெல்வேலி பூரீலபூரீ ஞானப் பிரகாச முனிவர் அவர்களின் சிறப்பை ஓரள வுக்கேனும் அறிய முடிந்தது. திருநெல்வேலி யைப் பண்டிதமணி ஐயா அவர்கள் குறிப் பிட்டவாறு திருநல்வேலியென்று விரும்பிக் குடிபுகுந்தவன் என்ற வகையில் திருநெல் வேலியில் பூரீலபூரீ ஞானப்பிரகாச முனிவர் அவர்களின் ஞாபகார்த்த சபை ஒன்றை நிறுவுவதற்குப் பலர் சேர்ந்து முயன்ருேம். பண்டிதமணி ஐயா அவர்களது ஆசியும் அன்பர்கள் பலரது ஒத்துழைப்புமே திருநெல் வேலி பூரீலழறி ஞானப்பிரகாச முனிவர்

சான்றேன் பண்டிதமணி
பர் ஆ. மகாலிங்கம் அவர்கள்
ஞாபகார்த்த சபையின் இன்றைய வளர்ச் சிக்குக் காரணம் எனலாம். இற்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முன் நமது நாட் டி லே தோன்றி நீதியை விசாரித்தவரான திருநெல் வேலி பூரீலபூரீ ஞானப்பிரகாசமுனிவர் பெரு மானைத் துதித்தார் நாவலர் பெருமான். "பூரண சிவாநுபூதிமான்' என்று ஞானப் பிரகாச முனிவரை வணங்கியிருக்கின்றர் நீர்வேலி சிவசங்கர பண்டிதர் அவர்கள். * பங்கயத் தயனும் மாலும் அறியா நீதியை விசாரித்தவர் ஞானப்பிரகாச முனிவர்" என்கின்ருர் பண்டிதமணி ஐயா அவர்கள்.
யான் புகுந்த ஊரான திருநெல்வேலி பூரீலழறீ ஞானப்பிரகாச முனிவரினுல் எவ் வாறு பெருமை பெற்றதோ அவ்வாறே யான் பிறந்த ஊரான குப்பிழானும் மகான் காசி வாசி செந்திநாதையர் அவர்களினல் சிறப் புப் பெற்றது. நாவலர் பெருமானின் அபி மானத்தைப் பெரிதும் பெற்றவர்களான காசிவாசி செந்திநாதையர் அவர்களைப் பற்றிப் பண்டிதமணி ஐயா அவர்கள் இரத் தினச் சுருக்கமாகக் கூறியிருப்பது கல்வி மான்கள் உள்ளத்தைப் பெரிதும் தொடுவ தாக இருக்கும்.
**மகான் செந்திநாதையர் அவர்கள் நாவலர் பெருமானின் வலக்கரம். நாவலர் அவர்களின் எழுத்திலும் பேச்சிலும் முழு கித் திளைத்தவர்கள் ஐயர் அவர்கள். அவர் களின் இல்லம், புத்தகங்கள், ஏடுகள் என்ப வற்றின் இருப்பிடமாகவேயிருந்தது. காசி வாசியாய மகான் அவர்கள் அந்திய காலத் தில் திருப்பரங்குன்ற வாசியாய் அங்கே ஓர் ஆசிரமம் அமைத்து ஆசிரம வாசியாய் அம ரத்துவம் எய்தினுர்கள். மகான் ஐயர் அவர்களைக் காணுதவர்கள் சிலை வடிவிலா வது கண்டு களிக்க அநுக்கிரகித்த தெய்வ சந்நிதியைப் போற்றுவோமாக. குப்பிழான் யாழ்ப்பாணத்தில் தலைநிமிர்ந்து விளங்குவ தொரு திருப்பரங்குன்றம்."

Page 265
ممبر iത്ത
இவ்வாறு ஈழப்புலவர்களின் சரித்திரங் களைத் தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டி ஈழம் வாழ் தமிழ் மக்களைச் சமய இலக்கிய உலகில் தலைநிமிர்ந்து நடைபயில வைத்த வர்கள் பண்டிதமணி ஐயா"அவர்கள். நாவ லரை நமக்குக் காட்டிவைத்த பெருந்தகை யாளரும் பண்டிதமணி ஐயா அவர்களே
யாழ் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. வே. ந. சிவராசா அவர்கள் திருநெல்வேலி பழங்கிணற்றடிப் பிள்ளையார் திருத்தேர் வெள்ளோட்ட விழாவில் பேசுகையில் "திரு நெல் வேலியில் இருபல்கலைக் கழகங்கள் உள்ளன. ஒன்று திருநெல்வேலியில் அமைந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். இன்னென்று நடமாடும் பல்கலைக் கழகம், பண்டிதமணி அவர்களே அந்த நடமாடும் பல்கலைக் கழகம்" என்ருர். இதைக் கேட்ட திருநெல்
A.
காவலர் காவிய பா
நடமாடும் பல்கலைக்கழகம் போன் ஐயா அவர்களும், பல்கலைக்கழக நூ மனேஜர் ஐயா அவர்களும் ஒருவர்க் ருர்கள்.
காவிய பாடசாலையில், படிப்பென் ஒரு அதிகாரம் பத்துக்குறளும், பரிடே கல்வளை அந்தாதி, திருமுல்லை வாயில் சூடாமணி நிகண்டில் சில பாட்டுகள் உதாரணமும்; சம்ஸ்கிருத சுலோகங் விக்கவேண்டும்,
நாங்கள் பன்னிரண்டு மாணுக்க ஆண்டு) யாழ்ப்பாணம் செந்தமிழ் ப. பாடசாலையிற் கூடியது. பரீட்சை ெ மாகவே மறுமொழி சொல்ல வேண்டு நான்கு மணிநேரம் நடந்து முடிந்த கண்ட பரீட்சை முடிவில் சி. கணபதி இடம் பெற்ருர், எனக்கு இரண்டாமிட முதற்பரிசாகப் பெற்ருர். சிலப்பதிகா சி. கணபதிப்பிள்ளையும் நானும் ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள்

)8 -
வேலிப் பழங்குடி மக்கள் களிபேருவகை கொண்டனர்.
திருநெல்வேலி கலாசாலைவீதி என்றதும் அங்கு குருமூர்த்தியாக எழுந்தருளியிருந்த பண்டிதமணி ஐயா அவர்களே அறிஞர்கள் மனக் கண்ணிற் காட்சியளிப்பார்கள். திருநெல்வேலி பூரீலபூரீ ஞானப்பிரகாச முனி வர் பெருமான் அவர்களது வரிசையில் திருநெல்வேலிக்குப் பெரும்புகழ் தேடித்தந்த பெருமை பண்டிதமணி ஐயா அவர்களுக்கே உரியது"
பண்டிதமணி ஐயா அவர்கள் காலத்தில், அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் நாமும் வாழக்கிடைத்தமை நாம் செய்துவைத்த புண்ணியமேயாகும்.
-
டசாலையில்.
ற சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர் ல்நிலையம் போன்ற த. கைலாசபிள்ளை கொருவர் எதிர்முகமாக வீற்றிருக்கின்
ovo
ருல் பாடமாக்குவதுதான். திருக்குறள் மலழகர் உரையும், மறைசை அந்தாதி, அந்தாதி ஏதோ ஒன்றில் ஐந்துபாட்டு: . நன்னூற் சூத்திரங்கள் உரையுடன் கள் இவ்வளவும் வாய்ப்பாடமாக ஒப்பு
ர். ஒரு குறிப்பிட்ட நாளில் (1918ஆம் ரிபாலன சங்கத்தின் செயற்குழு நாவலர் தாடங்கிவிட்டது. முழுதும் வாய்ப்பாட ம். எழுத்துப் பரீட்சையேயில்லை. மூன்று து பரீட்சை. புள்ளி அடிப்படையிற் ப்பிள்ளை திறமைச் சித்தியில் முதலாம் ம் கிடைத்தது. சி.க. சீவகசிந்தாமணியை ம் இரண்டாம் பரிசு.
s
ஒரேமரத்தின் இரண்டு கிளைகளில்
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை *" உள்ளதும் நல்லதும் "

Page 266
Panditha-Mani S.
Rev. S. Kulandran, Form
Panditha-Mani S. Kanapathipillai was a great Tamil scholar ; I am not. So the reason for my being asked to write on him must be sought elsewhere than in our common scholarship. It was the mutual relationship that was considered to have existed between us; this was neither deep nor intimate, but was regarded as adequate for the purpose of an article by the Editors of this brochure.
Whatever might have been the kind of relationship between us, I came to know him through Mr. V. Nadarajah, the youngest son of the late Vidvan Vetpillai of Madduvil who was a relative of his in someway. Mr. Kanapathipillai hailed from the remote village of Thanankilappu on the border of Chavakachcheri and lagoon. Finding him idling away his time after his early school years, Mr. Nadarajah made efforts to get him admitted to the Navalar Institute in Jaffna Town managed by T. Kailasapillai and Kumaraswamy Pulavar of Chunnakam. Though he had not performed satisfactorily at the interview held by the two eminent Tamil scholars, Mr. Nadarajah pleaded with them to give him a trial for a couple of weeks and then review his progress. His performance was so good that when Mr. Nadarajah went after three months he found them entranced with him.
Mr. Kanapathipillai passed his Pandit examination with distinction but could find no employment in any school as the Pandit examination was not recognized by the Government then. At the persuasion of
27

Kanapathipilai
er Bishop, Jaffna Diocese
Mr. Arunachalam Upathiyayaf, a teachef from Karainagar, Mr. Kanapathipillai studied the required additional subjects and gained admission to the Teachers Training College where he obtained his trained teachers certificate
In Batticaloa I met a Scholar ealled Panditha-Mani, Pulavar-Mani Periyathambipillai who said he had been a classmate of Kanapathipillai at the Navalar Institute. I said to him "I hear that the Ramayana is a summary of al Tamil literature ; so you must be a great authority on it.' He modestly confessed that he was.
Very often when Panditha-Mani was in service I had gone to consult him on various points of Tamil literature. He had given me replies with great modesty. Once when pointed out to him the Varying interpretations of G. U. Pope and Subramaniyapillai in “ Thiruvasagam , very modestly he said that both were correct. Many others in his position would have been quite dogmatic.
Once at Nadarajah's house we found a book called ga) is 60.76a).55ub. We laughed at the peculiar combination of the word. Pandithamani kept quiet and on our way back told us that the term was grammatically quite correct but usage supported a separation. The Tamil term for many of the South Indian towns is written with a re-duplicated 'P' in the middle; but pronounced without any such reduplication. On reference to Panditha-Mani he told us that South

Page 267
Indian habit was quite correct but usage and the fact that the names involved were not Tamil, permitted us to ignore the re-duplication. Another time took him a Tamil usage of a word of the 18th century which looked rather funny. He straightaway pulled out a tattered copy of Kander Alankaram kept tied together by a small cotton thread and opened out the exact page where the verse having the same phrase was used. Such was the depth of scholarship ihoused in such humble personality,
I observed that shyness was one of his besetting qualities. A shyness has got the other side of his humility. In recent
ASL TA LALSLALASALALALAAS S SAqAS SSASASAAAAAAAAqAA AAAA AAAqASJA SAMASASA AAASJSAALAAASAALAAqSALqLALqSqS
Special (
Pandit Kanapathipillai has ea Lanka and abroad as a prolific w literary critic, poet and commenta scholars the title---Siddhanta Sak Pandithamani, which literally means of his scholarship and contribution in the island owe their success t was always active in the field of He has delivered a number of le and seminars.
Like Sri La Sri Arumuga Nav Ambassador of Jaffna Culture anc of scholars who pride themselve Pandithamani.
Presented by the F Professor S. Withia
AMAqMAeA ALeMALeMMeAeAeLALTeASeALeLeeLMLMLeAeLAALeLeAeLALALALASLMMeS TLTMLMLMLMLMLALALALALALSLeMeLALeqLeMeMeLeMeLeLeLeeLMLeLMeLeLeeLeAMA LALASLeLeeLMMeLeMeLeLeeLS

20 -
years a British linguist called Ascar tried to meet. Mr. Kanapathipillai. But
he was not available.
When he was a teacher, invitations to speak at public meetings were very common
events. He was as bold as a lion
that capacity.
in
I was amused to find that in old age his shyness crept back on him. When he was at Thirunelvely used to call on him to clear grammatical points since I
was then writing a Tamil book.
By his death a country loses a.
dedicated and humble Scholar.
Convocation
rned a wide reputation both in Sri rriter, an inspiring teacher, an orator, ator. He has been conferred by local caram and is popularly known as gem among Pandits, in appreciation , Scores of Pandits and Tamil scholars o his guidance and in spiration. He
Purana Padanam at various temples. actures at many literary conferences
alar. Pandithamani Kanapathipiliai, the Learning, has produced a generation is in belonging to the school of
'resident, Jaffna Campus
nanthan
31st May, 1978
്.
LELALMALALMAALLSSLSAeALMASLMAeeSeSLMeASLMLSSLeLMeeMMLSSLMLeLeeLSSSeSLASLLLLLSSLLLLSLLAASLLLLAAAqS

Page 268
தமிழ்முனி ட
உதயன், சஞ்சீவி பிரதம ஆசிரியர்
சரித்திர காலந்தொட்டு, இன்பத் தமிழின் வளர்ச்சிக்கும் சீரிய சைவத்தின் மேம்பாட்டுக்கும் ஈழத்தவர்களின் பங்களிப்பு எப்போதும் இருந்து வந்துள்ளது. காலத் திற்குக் காலம் பல அறிஞர்கள் அந்தப் பணி யைச் செய்து வந்திருக்கிறர்கள். அவர்களில் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளையும் ஒருவர்.
பண்டிதமணி, பல்கலைக் கழகத்தின் வாடை தெரியாதவர். ஆயினும் அவரே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந் தார். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் துறை தோய்ந்த வல்லுநர் அவர். இலக் கணம், இலக்கியம், சமயம் இவற்றில் எது சம்பந்தமாகவேனும் எழும் எந்தச் சந்தேகத் தையும் தீர்க்க வல்ல தமிழ் ஞானியாக அவர் விளங்கினர்.
திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் மூன்று தசாப்தங்களாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, தமிழாசிரியர் சந்ததி ஒன்றை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. அவரிடம் பயின்ற தமிழாசிரியர்கள் ஈழத்தின் ஒவ் வொரு மூலை முடுக்கிலும் தமிழ்ப் பணி செய்தார்கள்; செய்கிறர்கள். மொத்தத்தில் பண்டிதமணியின் தமிழ்ப் பணி இன்னும் பல பரம்பரைகளுக்குத் தொடரும்.
பண்டிதமணி அவர்களின் தமிழ்ப் பணி பத்திரிகைகள் மூலமும் பெரிதும் பரவியது. அவர் எழுதாத பத்திரிகைகள் சஞ்சி கைகள் கிடையா. அவரது ஆக்கங்களைப்

fa பணடிதமண ம. வ. கானமயில்நாதன் அவர்கள்
பிரசுரிப்பது தமது வெளியீடுகளுக்கு மகுடம் சூட்டுவது போலாகும் என மதிப்பிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் பலர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெளிவரும் பாடசாலை மலர்கள், ஆலயச் சிறப்பிதழ்கள், இலக்கிய, சமய, மன்ற மலர்கள் அவரது கட்டுரை கவிதைகளைத் தாங்காமல் வெளிவருவது அபூர்வம். ஆகக் குறைந்தது அவரது ஆசி யுரை, வாழ்த்துப்பா என்பவற்றில் ஒன்றை யாவது தாங்கி வெளிவராத மலர்கள், சஞ் சிகைகள் குறைவு.
தமிழினதும் சைவத்தினதும் கரைகண் டவர் பண்டிதமணி ஐயா அவர்கள். அவர் இரண்டையும் பல வடிவங்களில் ஆராய்ந்த விற்பன்னர்; தமிழ் ஆராய்ச்சியாளர்; தமிழ் விஞ்ஞானி. தேமதுரத் தமிழோசை உலக மெலாம் பரவ வகை செய்த தமிழ் முனிவர்.
இயற்கையான பேராற்றலும் வித்து வத் தன்மையும் நுண்ணறிவும் கொடை யாகப் பெற்ற பண்டிதமணி நுண்மாண் கலைப்புலமும் கைவரப் பெற்ற சிந்தனைச் செம்மல்.
தமிழுக்கும் சைவத்துக்கும் தொண் டாற்ற - பணி செய்ய - விழைபவர்கள் பண்டிதமணியை அறியாது, அவரது ஆக்கங்களைப் படியாது எதனையும் செய்ய முடியாது என்பது திண்ணம்.
ஈழம் தந்த தமிழ்முனி பண்டிதமணி கணபதிப்பிள்ளை நாமம் தமிழ் உள்ளவரை வாழும் என்பதிலும் ஐயமில்லை.

Page 269
பண்டிதமணி ஆரிய திராவிட பாலி
பண்டிதர் ச. பஞ்ச
யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபி விருத்திச் சங்கம் 1921ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது. பண்டிதமணியவர்களுக்கு யா. ஆ. தி. பா. சங்கத்தோடு 1932 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொடர்பு, 1947ஆம் ஆண்டு வரை நீடித்திருந்ததென்பது ஆதாரபூர்வமாகத் தெரிகிறது. இந்தப் பதினுறு ஆண்டு காலத்தை அதன் தன்மை நோக்கி மூன்று பருவங்களாகப் பிரித்து ஆராயலாம்.
முதலாவது: ஒத்துழைத்து வளர்த்த
பருவம் (1932-1938) இரண்டாவது: வாதாடிப் பாதுகாத்த
பருவம் (1939-1941) மூன்ருவது: ஒதுங்கியிருந்து
ஆதரவளித்த பருவம் (1942-1947)
ஒத்துழைத்து வளர்த்த பருவம்:
முதற்பருவ காலத்தில் யா. ஆ. தி. பா. சங்க விழாக்களில் இலக்கிய விரிவுரைகளாற் றியும், பரீட்சகராயிருந்தும், நிர்வாகசபை யிலும் வித்தியா விஷய ஆலோசனைச் சபை என்னும் அறிஞர் குழுவிலும் உறுப்பின ராகிக் கூட்டங்களில் தவருது சமுகமளித்து ஆலோசனை வழங்கியும், சிறப்பாக இலக் கண இலக்கிய வகுப்புக்களை இலவசமாக நடத்திப் பரீட்சார்த்திகளைப் பரீட்சைக்குத் தோற்றச் செய்தும் பண்டிதமணி சங்கத்தை வளர்த்துவந்தார்.
சங்கத்தின் பத்தாவது ஆண்டுப் பொதுச் கூட்டம் 9-4-32இல் வைத்தீசுவர வித்தியா லயத்தில் நிகழ்ந்தபோது "யாழ்ப்பாணத் துப் பழைய தமிழ்ப் புலவர்கள்' என்னுந் தலைப்பில் பண்டிதமணி ஆற்றிய விரிவுரை யோடுதான் முதன்முதல் தொடர்பு தொடங் கியது. அடுத்த ஆண்டில் சங்கப் பரீட்சக ருள் ஒருவராய்த் தெரியப்பட்ட தோடு தொடர்பு வளர்ந்து, 1-4-88இல் சங்க ஆண்டு விழாவில் பண்டிதமணி மு. கதிரேசச் GoF ' l quirti தலைமையில் பண்டி தா சி. கணபதிப்பிள்ளையவர்கள் 'இயற்கையும்

ரியவர்களும் ஜாபிவிருத்திச் சங்கமும்
ாட்சரசர்மா அவர்கள்
புலவனும்" என்னும் பொருளில் பேச்சு நிகழ்த்தியதோடும் அடுத்த நாள் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் நிர்வாக சபை அங்கத் தவராய்த் தெரிவு பெற்றதோடும் நீக்கரிய பிணைப்பாயிற்று. பண்டிதமணி மு. க. செட்டியாரை ஆண்டு விழாவுக்கு அழைத்த தில் ஒரு குறை நிகழ்ந்துவிட்டது குறையை நிறைவு செய்ய்க் காரியதரிசி தி. சதாசிவ ஐயரால் இயல்வில்லை. முடியாததை முடித்து வைத்தவர் பண்டிதர் சி. க. அவர்களே. சங்கத்தின் வரலாற்றுக் குறிப்புக்களில் இடம் பெருத இந்தச் சம்பவத்தைப் பண்டிதர் சி. க. அவர்களின் வாக்கினல் அறியலாம்:
*" செட்டியாருக்குப் பேருபசாரம் நடந்தது. பெரிய திருப்தி. ஆனல் ஒரு குறை வந்துவிட்டது. யா. ஆ. தி. பா. சங்கத்துக்குத் தலைவராயிருந்தவர் பூரீமத். த. கைலாசபிள்ளை அவர்கள். சங்கத்தின் காரியதரிசி வித்தியாதரிசி சதாசிவ ஐயர் அவர்கள். ஏதோ மனத் தாபத்தால் த. கை. சங்கத்திலிருந்து விலகிவிட்டார். இது செட் டி யார் அறியார். அவரே த லைவர் என்று நம்பியிருந்தார்.
நாவலரின் அன்பு மாணவர் சொக்க லிங்கஞ் செட்டியார். அவர் வழியில் வந்தவர் கதிரேசச் செட்டியார். தம் வரவை பூரீமத் த. கை. அவர்கள் மதி யாதிருந்தால் தாம் வந்தும் வந்திலர் என்ருர், சதாசிவ ஐயர், த. கை. யை அணுக அஞ்சினர். அதனுல் செட்டியா ருக்கு என்னை ஓர் ஊன்று கோலாக் கினர். நான் மானேஜர் த. கை. யிடம் உத்தரவு பெற்றுச் செட் டி யா  ைர அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். பின் அக் கடன் தீரச் செட்டியார் இருக் கும் இடத்துக்குத் த. கை. அவர்களை அழைத்துச் சென்றேன். என்பால் நன்றி செட்டியாருக்குப் பெருக்கெடுத் தது. அவர் என்றும் அதனை மறந்ததே udi2). ''

Page 270
2l --س
செட்டியார் நன்றி மறக்கவில்லை. தம் அழைப்பையேற்று வந்த செட்டியார், மனக் குறையோடு திரும்பாமல் திருப்தியோடு மீள்வதற்கு வழி வகுத்தமைக்காகச் சங்கத் தாரும் நன்றி மறவா திருந் திருத்தல் வேண்டுமன்ருே! சங்கத்துக்குப் பண்டிதமணி ஆற்றிய வேறும் பல உதவிகளையும் சங்கத் தாரிற் பலர் மறவாதிருந்திருந்தால் பண்டித மணி மீது கண்டனப் பிரேரணை கொண்டுவந் திருப்பார்களா? அச் சம்பவத்தைப் பின்னே *பாதுகாத்த பருவத்திற் காணலாம்.
மேற்குறித்த ஆண்டு விழா நடந்த அதே ஆண்டில் சென்னையில் சுதேசமித்திரன் பத்திராசிரியர் சி. ஆர். பூரீநிவாசன் முன் னின்று இயக்கிய தமிழன்பர் மகாநாடு நடந்தது. தமிழுலகில் முதன்முதல் நடந்த மகாநாடாகையால் யா. ஆ. தி. பா. சங்கம் தன் பிரதிநிதிகளாக யாழ்ப்பாணத்து அறி ஞர்கள் ஆறேழு பேரைத் தெரிவுசெய்தது. பண்டிதமணியும் அவர்களுள் ஒருவர். எனி னும் அவர் சென்னை மகாநாட்டிற்குச் செல்லவில்லை. அந்த மகாநாடு தமிழில் இக் காலத்தில் வழங்கும் முப்பது எழுத்துக்களில் தேவையற்ற சிலவற்றை நீக்கலாமென்றும் தேவையான சில எழுத்துக்களைச் சேர்க்கலா மென்றும் தீர்மான மொன்  ைற நிறை வேற்றியதனுல் தமிழறிஞர் பலருடைய கண்டனத்துக்கு இலக்கானது இங்கு நினைவு கூரத்தக்கது.
1934ஆம் ஆண்டில் யT, ஆ, தி, டா, சங்கம் மிகப் பெரியதோர் நூல் வெளி யீட்டு முயற்சியில் ஈடுபடுவதற்குத் திட்ட மிட்டது. கம்பராமாயண மூலத்தைப் பிழை யறப் பரிசோதித்துக் குறிப்பு ரை யுடன் அழகிய இரண்டு புத்தகமாக இரு வருட காலத்துள் வெளியிடுவதுதான் திட்டம். இதற்கான திட்டத்தை வகுப்பதற்கு ஒர் உபசபை நியமிக்கப்பட்டது. பண்டிதமணி யையும் உறுப்பினராய்க் கொண்ட இவ்வுப சபை விரிவான திட்டமொன்றை வகுத்துச் சமர்ப்பித்தது. வித்துவான் சி. கணேசைய ரவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராயும், வித்துவான் சுப்பையபிள்ளை, பண்டிதமணி கணபதிப்பிள்ளை முதலியவர்களை உறுப்பின

-
ராயும் கொண்ட பதிப்பாசிரியர் குழுவும் அமைக்கப்பட்டு ஆரம்பச் செலவுகளுக்காக 200 ரூபாவும் அநுமதிக்கப்பட்டது. எனினும் இத் துறையில் வேண்டுகோள் விளம்பரம் முதலிய ஆரம்ப முயற்சிதானும் நடக்க வில்லை. நிதி வசதியில்லாத சங்கம் இப் பாரிய முயற்சியை நிறைவேற்ற மாட்டா தென் பதை முன்னுணர்ந்துதான் போலும் சி. க. குறித்த உபசபைக் கூட்டங்களுக்குச் சமுக மளியாதிருந்துவிட்டார்.
நாவலர் பெருமான் வரலாற்றுண்மைகள் சில, மறைக்கப்பட்டுப் பொய்ம்மைகள் பரப்பப்பட்டபோது, 1934ஆம் ஆண்டில் பண்டிதமணி எதிர்த்து நின்ருர். சுவாமி நாத பண்டிதர் மீது பாடிய இரங்கற் பாவை உ. வே. சாமிநாதையரின் செயலைக் கண்டிக்கப் பயன்படுத்தினர். கூட்டங்களி லும் கண்டித்துப் பேசினர். எனினும் அவர்க்கு உ. வே. சாமிநாதையர் மீது தனிப் பட்ட கோபம் எதுவுமில்லை. இதனை இரு நிகழ்ச்சிகளின் மூலமாக நிலைநாட்டலாம்.
1934ஆம் ஆண்டில் நடந்த ஆண்டு விழாக் கூட்ட்த்துக்கு உ. வே. சாமிநாதை யரை அல்லது டி. கே. சிதம்பரநாத முதலி யாரை அழைக்க வேண்டுமென்று ஒரு பிரேரணையை ஆலோசனைக் கூட்டத்தில் க. நவரத்தினம் பிரேரித்தபோது அதனை அநுவதித்தவர் பண்டிதமணியே என்பது கவனிக்கப்பட வேண்டியது. இச் சம்பவத் தின் பின்னணி யா. ஆ. தி. பா. சங்க வரலாற்றுக் குறிப்பி ல் இடம்பெருதது பண்டிதமணியால் அவரது முத்தி"ை நடையில் எழுதப்பட்டிருக்கிறது:
* 1934இல் ஒரு சிரிப்பு. திரு. சு. நடேச பிள்ளை மீனட்சிசுந்தரம்பிள்ளை சரித் திரத்துக்கு ஆங்கிலத்தில் விமர்சனம் எழுதிச் சென்னையிற் பிரபல பத்திரிகை யில் வெளியிட்டு ஐயரவர்களின் அன் புக்குப் பாத்திரரானர். சேர் gTTLD நாதன் குடும்பத்தில் ஐயரவர்களுக்குப் பெரு மதிப்பு. அதனு லும் நடேச பிள்ளைக்குப் பெரிய செல்வாக்கு, ஆரிய திராவிட சங்கத்துக்கு அவர் தலைவர். அந்த வருடம் டாக்டர் ஐயர் அவர்களைச்

Page 271
- 2
சங்க ஆண்டுவிழாவுக்குத் தலைமை வகிக்க அழைப்பதென்ற தீர்மானத்தை நிர் வாக சபையில் வெளியிட்டார். "அவர் வரமாட்டார்? என்று பல்லி சொன் னேன் நான். "யேன்? என்று என்மேற் பாய்ந்தார் பிள்ளை.
* ஐயா அவர்களின் பதிப்பு விசேஷங் களை நான் எடுத்துப் பேசுகிறேன். உலாவரும்போது தீவட்டி பிடிக்கிறேன். செலவுக்கு ரூபா 50 தருகிறேன். அவர் வரார்" என்றேன். மற்றையோர் காரணம் வினவினர்.
' 700 பக்கங்கொண்ட மீனு ட்சி சுந் தரம்பிள்ளை சரித்திரத்தை நாவலரும் மீனுட்சி சுந்தரம்பிள்ளையும் சந்தியாத பிரகாரம் எழுதியவர் எப்படி இங்கே வரமுடியும்??? என்றேன். எப்படியும் தம்மால் அழைக்க முடியும் என்று பிள்ளை சொன்னர். பிள்ளை எவ்வ ளவோ முயன்றும் இந்த இராக்கத பூமியில் தமது சமணத் திருவடிகளைப் பதிக்க ஐயா உடன் படவில்லை. "அடுத்த பிறவி ஐயாவுக்குச் சமணத்தில்" என்பது திரு. த. கை. அவர்களின் ஹாஸ்யம்"
- தினகரன் 5-7-81
இது முதற் சம்பஐம். அடுத்த சம்பவ மும் அதேயாண்டில் நிகழ்ந்தது. உ. வே. சாமிநாதையரவர்களுக்கு எண்பது வயசு நிறைவெய்தியபோது சதாபிஷேக விழா சென்னையில் மிக்க விமரிசையுடன் நடக்க இருந்தது. இதை அறிந்தவுடன் யா. ஆ. தி. பா. சங்கம் 50 ரூபா அன்பளிப்பும் நாண்மங்கல வாழ்த்துப்பாவும் அனுப்புவ தென்று தீர்மானித்தது. பணத்திற்காக நிர்வாக சபைக் கூட்டத்திற்கு வந்தவர்க Oடம் கையொப்பம் பெற்றபோது ஒப்ப மிட்டவருட் சிலர் உடனேயே பணங் கொடுத்தனர். இவர்களுள் பண்டிதமணி யும் ஒருவர்.
அறிஞர் பலரது ஆதரவோடு 1921ஆம் ஆண்டில் யா. ஆ. தி. பா. சங்கத்தை நிறுவி 1985வரை தம் பிள்ளைபோல் வளர்த்துவந் தவர் மும்மொழி அறிஞரான வித்தியாதரிசி

4 ar
தி. சதாசிவ ஐயரவர்கள். அவர் காலத்தில் ஆண்டுதோறும் பொதுக் கூட்டங்களும் ஆண்டு விழாக்களும் பரீட்சைகளும் பட்ட மளிப்புகளும் ஒழுங்காக நடந்துவந்தன. நிர்வாக சபைக் கூட்டங்கள் இந்துக்கல்லூரி, மத்தியகல்லூரி, பரமேசுவரக் கல்லூரி, நாவலர் வித்தியாசாலை, வைத்தீசுவர வித்தி யாலயம் என்னுமிடங்களில் கூட்டப்பட்டன. நடேசபிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர், வித்துவான் கணேசையிர், வித்துவான் சுப் பையபிள்ளை, பண்டிதர் மகாலிங்கசிவம், நவநீதகிருஷ்ண பா ர தி யார் என்னும் அறிஞர்களும் பிரமுகர்களுமாக 10, 12 பேர் சமுகமளிப்பார்கள். பண்டிதமணி தவருது சமுகமளிப்பார். பொதுக்கூட்டங்கள் 60, 70 அங்கத்தவர் முன்னிலையில் நிகழ்ந்தன. ஐங்குறுநூறு, கரவைவேலன் கோவை ான்னும் நூல்கள் வெளியிடப்பட்டன. 'கலாநிதி" என்னும் மும்மாத இதழ் வெளிவந்தது. காரியதரிசி ஐயரவர்கள் இளைஞரான பண்டிதமணியை நன்கு மதித்து அவரது அறிவாற்றலைச் சங்கத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டார்
பண்டிதமணி காவிய பாடசாலையைத் தொடங்கு முன்பே சைவாசிரிய கலாசாலை மாணவருக்குத் தனியான இலக்கிய இலக் கண வகுப்புகளே நடத்தி அவர்களிற் பலரைப் பாலபண்டித, பண்டித பரீட்சை களுக்குத் தோற்றச் செய்தார். அவர்களிற் சிலர் மதுரைத் தமிழ்ப் பண்டிதர்களாகிப் பின்பு காவிய பாடசாலை மாணவர்க்குப் போதிக்கும் திறமைசாலிகளாயினர்.
1935இல் ஆரம்பித்து 1938இல் விரிவு பெற்ற காவிய பாடசாலையில் சம்ஸ்கிருத, சிங்கள மொழிப் போதனையும் தொடங்கி யது, சுன்னுகம் பிராசீன பாடசாலையில் வட மொழிப் பகுதி கைவிடப்பட்ட பின்பு சங்கத் தின் சம்ஸ்கிருதப் பரீட்சைகள் பரீட்சைப் பாடவிதானமளவில் இருந்தன. பாடவிதா னத்தில் இடம்பெருத காலமும் உண்டு. பண்டிதமணியின் காவிய tunt LFfrðav தொடங்கிய பின்பே சம்ஸ்கிருத பரீட்சை களுக்கும் பரீட்சார்த்திகள் தோற்றினர். அடுத்தடுத்து மூவர் சம்ஸ்கிருத பண்டிதர்க

Page 272
- 2
ளாயினர். தமிழ்ப் பரீட்சைகளுக்கு 20, 30 பரீட்சார்த்திகள் தோற்றிய இடத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் தோற்றினர். இவ்வாறு பண்டிதமணியின் இடையரு முயற்சியால் மரபுக் கல்விப் பயிற்சியோடு யா. ஆ, தி. பா. சங்கமும் பெருவளர்ச்சி பெற்றது. சங்கத்தவர் சிலரது உள்ளத்தில் பொருமைத் தீயும் புகையத் தொடங்கியது. இது சங்கத்தின் செயற்பாடுகளில் புறக் கணிப்பு,கண்டனத் தீர்மானம் என்ற உருவங் களிலும் பக்கத்திலேயே போட்டியாகச் சைவாசிரியர்களுக்கான பயிற்சிச்சாலை என்ற உருவத்திலும் வெளிப்பட்டுச் சுவாலித்தது.
வாதாடிப் பாதுகாத்த பருவம்:
1935ஆம் ஆண்டில் சங்கக் காரியதரிசி தி. சதாசிவ ஐயர் இடமாற்றம் பெற்று வேறிடம் சென்றுவிடவே மீகாமனில்லா மரக்கலம்போலச் சங்கம் தத்தளித்தது. சில ஆண்டுகளின் பின்பு வந்த வித்தியாதரிசிக ளான க. கிருஷ்ணபிள்ளை, வே. கதிரவேலு, அ. சரவணமுத்து முதலியவர்களில் எவரே னும் ஒருவர் அப்போது காரியதரிசியாக வந் திருந்தால் சங்கம் தளப்பமடைந்திராது. காரியதரிசியின் திறமையின்மையைத் தமக் குச் சாதகமாக்கிய நிர்வாகிகள் சிலர், தங்கள் சுயநல காரியங்களுக்குச் சங்கத்தைப் பயன்படுத்த முனைந்தபோது பண்டிதமணி எதிர்த்து நின்றர். இவர் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தோடு பண்டித மணியை அலட்சியம் பண்ணித் தமது காரி யத்தை நிறைவேற்றியிருப்பார்கள். ஆணுல் பண்டிதமணி முன்னெச்சரிக்கையாய் நடந்து கொண்டார். நிர்வாக சபை நிகழ்ச்சி பத் திரிகைச் செய்தியாயிற்று. இதைக் கண்ட தும் சுயநலத்தவர் வெகுண்டெழுந்தனர். சட்ட வல்லுநர்கள் சிலன்ர நிர்வாக சபை யில் தங்கள் கைக்காய்களாக வைத்திருந்தும் பண்டிதமணி மீது கண்டனப் பிரேரணை கொண்டு வந்ததைத் தவிர வேறு எதுவுஞ் செய்ய அவர்களால் இயலவில்லை. நிர்வாக சபைக் கூட்டத்தில் நிகழ்ந்தவற்றைப் பத் திரிகைக்குக் கொடுத்து வெளிப்படுத்தியமை பெருங் குற்றமென்றும் அதற்காகப் பண்டித மணியை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஒரு பிரேரணை கொண்டு வந்தார்கள். சங்கத்

5 -
தைப் பாதுகாத்த பண்டிதமணி மீதும் கண்டனப் பிரேரணையா ? ஆம், பண்டித மணியாயிருந்தாலென்ன வேறெவரா யிருந் தாலென்ன என்ற சமதிருஷ்டியோடு, செக்கும் சிவலிங்கமும் சரிநிகர் சமானமென்ற * சமரச நோக்கோடு தண்டித்து நீதி வழங் கும் பாவனையில் பிரேரணை கொண்டு வந் தனர். பன்னிரண்டுபேர் அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் பிரேரணையை ஆதரிக்கத் துணிந்தவர்கள் ஆக மூவர்தான் !
சங்கத்தில் தாம் செய்ய விரும்பிய தவ ருன நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கா தது, அதற்கு இடங்கொடாமல் எதிர்த்து நின்றதுதான் பண்டிதமணி செய்த"குற்றம்", எப்போது எதற்காக இது நிகழ்ந்தது என் பதை அப்போது (18-8-39) வெளியான ஈழகேசரி அநுபந்தச் செய்தி சுவைபடக் கூறுகிறது:
"பண்டித பரீகூைடியில் படுகொலை" (இது செய்தித் தலைப்பு). "பண்டித கலாசாலைப் பிரவேசகர்களுக்கு ஒர் எச்சரிக்கை "" (இது உபதலைப்பு).
** இவ்வருடம் மேற்படி பண்டித கலாசாலையில் மருந்துக்கும் ஒரு பிராணி யாவது சித்தியெய்தவில்லையாம்! நேற்று நடந்த ஆ, தி. பா. வி. சங்கக் கூட்டத் தில் இது பெரிய கலகமாம்! வெறும் * பிறிலிம் " பிள்ளைகளை, அது வும் ஆங்கிலப் பட்டதாரிகள், இர ண் டு வருடம் நாலு மாதத்தில் பண்டிதராக் குவோ மென்ருல், சொல்வார் சொன்னு லும் கேட்பாருக்கு ம தி யெ ன்ன? மற்ரிக் எடாதவனை B. A. வகுப்பில் சேர்க்கும் தாபனம் உலகத்திலேயே இல்லை.
பெற்றேர்களே, கவனம்! கவனம் !! மூன்று வருஷம் 75 பவுண் கொட்டிய பின்பு பிள்ளையாண்டான், ‘வெறுங்கை யோ டிலங்கை சேர்ந்தால் செய்வு தென்ன? "
** யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா பிவிருத்திச் சங்கத் தாரால் நடாத் தப்படும் பண்டித பரீகூைடிப் பெறுபேறு நேற்று (17-6-39) மாலை யாழ்ப்பா ணம் இந்துக்கல்லூரி மண்டபத்தில் கூடிய மேற்படி சங்க நிர்வாக சபைமுன் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட

Page 273
தாம். இவ் வருடம் பரமேசுவரட் பண்டிதா சிரிய கலாசாலையிலிருந்து 24 பேரும் வெளியிலிருந்து 9 பேருமாக 33 பேர் பண்டித பரீட்சைக்குத் தோற்றி யும் இவர்களில் ஒருவராவது சித்தி யெய்தவில்லை யென்ற மிகவும் ஆச்சரிய மானசெய்தி கிடைத்திருக்கிறது! இம்மா திரியான ஒரு படுகொலையை நாம் கல்வி யுலகில் எங்கும் கேள்விப்பட்டதில்லை. ஆனல் நிர்வாக சபையார் பரீக்ஷகர்களை விசாரித்ததில் அவர்கள் "நாமென்ன செய்யலாம்? பையன்களுக்குச் செய்யு ளியற்றவும் தெரியாது; வியாசமெழுத வும் தெரியாது. நாங்கள் பொருளை மாத் திரம் தனியே பார்த்தும் இப்படியா ஞல் அவர்கள் பாஷை நடையும் கவ னித்திருந்தால் இதைவிட மகாமோச மான சித்திரவதையா யிருக்குமே!’ என்று தெரிவித்தார்களாம்.
**சென்ற மூன்று வருடங்களாக 75 பவுணுக்குமேல் கொட்டிவிட்டுப் பண்டித கலாசாலையை நம்பி வந்த 24 மாணவர் கதியை நினைக்கின் பெரிய பரிதாபமாயிருக்கிறது. இப்போதிருக் கும் நிலையைப் பார்த்தால் இவர்களுக் குப் பயிற்சித் த ரா த ர ப் பத்திரந் தானும் கிடைப்பது துர்லபமாயிருக்கி றது. தனியே பிறிலிம் பாஸ்பண்ணி விட்டு வந்த மாணவர் இரண்டு ஆங்கில விஞ்ஞானப் பட்டதாரிகளிடம் தொல் காப்பியமும் சீவகசிந்தாமணியும் கற்று விட எண்ணியதே பெருந் தவறு. எதுகை, மோனை யென்றல், 'எதுக்கு மோனை" என்று கேட்கும் புலவர்களும் உலகத்தில் உண்டுதான்; பண்டி த கலாசாலையின் நிலைமை இதுதான். இரண்டு ஆங்கிலப் பட்டதாரிகளும் ஒரு வித்துவானும் (இவர் வித்துவான் என்ற தாலல்ல, இன்டர்மீடியேட் ஆனதால்) சேர்ந்து சங்க இலக்கியங்களின் நுட் பங்கள் தெரிவித்துப் பண்டிதர்களைச் சிருட்டிப்பதென்ருல் எ ங் ங் ன ம் முடியும்?"
ஈழகேசரிச் செய்தியில் இதற்கு மேல் இரு ஆலோசனைகளும் கூறப்படுகின்றன. சியேட்ட பாடசாலை விடுகைத் தராதரப் பத்திரப் பரீட்சையில் (இந்த நீண்ட பெயர் படித்தவர்களிடையே எஸ். எஸ். எல். சீ. என்றும், சாதாரண மக்களிடையே பிறிலிம்

سس 6}{
என்றும் சுருங்கி வழங்கியது) தேறியவர் களுக்காக வசதியுள்ள சில பாடசாலைகளி லாவது பிரவேச, பாலபண்டித, பண்டித வகுப்புக்கள் தொடங்கி நடத்தப்படவேண்டு மென்பதும், பாலபண்டிதர்களுக்கு இரு வரு டப் பயிற்சியும் பண்டிதர்களுக்கு ஒரு வரு டப் பயிற்சியும் ஆசிரிய கலாசாலைகளில் அளிக்கப்படலாமென்பதுமே ஆலோசனைகள். அடுத்த வருடப் பயிற்சிக்காகத் தேர்ந் தெடுக்கப்பட்ட 25 மாணவரும் ஏமாருதிருப் பார்களாக என்ற எச்சரிக்கையோடும் நா. பொன்னையா என்பவரால் சுன் ணுகம் திருமகள் அழுத்தகத்தில் அச்சிடுவிக்கப்பட்ட தென்ற அடிக் குறிப்போடும் தனி நோட்டீ சாகவும் வெளியிடப்பட்டது.
இந்தச் செய்தி அறிக்கையில் யா. ஆ. தி. பா. சங்கத்தையோ நிர்வாக சபை யையே குறைகூறும் சொல் ஒன்றுதானும் இல்லாதிருக்கையில் எதற்காக இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்? பண்டிதாசிரிய கலா சாலை நிருவாகஸ்தரன்றே ஆத்திரங்கொள்ள வேண்டும். இங்கே ஓர் உண்மை அறியப் படவேண்டும்? அந்த நிருவாகஸ்தரே இந்த நிருவாகத்திலும் நீண்டு நிலைத்திருந்தார். இருவரும் ஒருவரே!
கண்டனப் பிரேரணைக்குக் கைகொடுத்த வர்களும் கைதூக்கியவர்களும் மறைந்து விட்டார்கள். மக்களும் "நீரினில் மூழ்கி நினை வொழிந்தார்களே' என்றதுபோல அன்றே அவர்களை மறந்துவிட்டார்கள். பண்டித மணியோ மறைந்தும் மறையாதவராய் மாணிக்க மணியாய்ப் பிரகாசிக்கின்ருர்,
கண்டனப் பிரேரணையைக் கண்டும் பண்டிதமணி சங்கத்தை விட்டுவிடவில்லை. நிர்வாகிகள்தான் இடமாற்றம் காலமாற் றம் செய்து விலக முயன்றர்கள். வழக்க மாகக் கூடும் இடங்களையும் நேரத்தையும் தவிர்த்து வேறிடத்தில் வேறு நேரத்தில் (கலாநிலையத்தில் காலை 10மணிக்கு) அடுத்த நிர்வாக சபைக் கூட்டத்தைக் கூட்டினர்கள். அங்கேயும் சரியான நேரத்தில் பண்டிதமணி பிரசன்னமாஞர். நிலவுக்கு அஞ்சிப் பரதே சம் போக அங்கும் அந்த முழுநிலா முகம் காட்டியது.

Page 274
- 2
1939ஆம் ஆண்டில் வருடாந்தக் கூட்டம் ஆக இருபது அங்கத்தவருடன் பரிதாப கரமாய் நடந்தது, அந்த 20 பேரில் பண்டித மணியும் ஒருவர். சங்கத்தின் வாழ்விற் போலவே தாழ்விலுங் கைகொடுத்துத விஞர். 1940ஆம் 41ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஆண்டுக் கூட்டங்களில் நிர்வாக சபை அங்கத்தவராயிருந்தார்.
ஒதுங்கியிருந்து ஆதரவளித்த பருவம்:
சில ஆண்டுகளாகச் சங்கத்தைப் பீடித் திருந்த கிரகணம் 1940ஆம் ஆண்டோடு விமோசனம் ஆகியது. வித்தியாதரிசி சதா சிவ ஐயர் மீண்டும் காரியதரிசியாகி ஒய்வு பெறும்வரை (1942) சங்கத்தை வளர்த்து வந்தார். நிர்வாகசபையிலும் "கலாநிதிப் பத்திராசிரியர் குழுவிலும் பண்டிதமணி நிய மனம் பெற்ருர். எனினும் கூட்டங்களுக்குச் சமுகமளிப்பதைக் குறைத்துக்கொண்டார். முந்திய கிரகண காலத்துக்குக் காரணமா யிருந்தவர் மீண்டும் வக்கிரகதியில் வந்த மையும் “கலாநிதி"யில் பண்டிதமணி எழுதி வந்த மகாலிங்கசிவம் வரலாற்றுக் கட்டு ரையில் சிலர் கைவைத்தமையும் இதற்குக் காரணமென்று சிலர் கருதினுலும் உண்மைக் காரணம் வேறு. அதை முன்பே (1959) கனக. செந்திநாதன் அழகாக ஆதாரபூர்வ மாகக் கூறியிருக்கிருர்:
** இடமாற்றத்தோடு அவரது மன திலும் மாற்றம் உண்டாயிற்று. இந்த எண்ண மாற்றத்துக்குக் காரணமாயிருந் தவர் உப அதிபர் பொ. கைலாசபதி அவர்களே. இலக்கியச் சூழ்நிலையில் வாழ்ந்த பண்டிதமணியை மெல்ல மெல்லச் சமயத் துறைக்குக் கைலாச பதியாகிய காந்தம் இழுத்தது. எனவே 1942ஆம் ஆண்டுக்குப் பின் அவரது வாழ்க்கை இலக்கிய உலகி லிருந்து சமய உலகுக்கு மாறுவ தாயிற்று. யாழ்ப்பாணத்திலுள்ள சங்கங்கள் சபைகளிலுள்ள ஊழல்களும்,
28

7 -
சிறிய மனிதர்கள் அவற்றை ஆக்கிர மித்துக்கொண்டு செய்யும் அட்ட காசமும், தனி மனிதர்களின் போட்டி பொருமை வஞ்சகம் முதலியனவும் அவரைத் தனிமைப்படுத்தின. F is
வித்தியா தரிசி க. கிருஷ்ணபிள்ளை காரிய
தரிசியாயிருக்கும்போது பாடப்புத்தக உப
சபையில் அங்கம் வகித்து ஆலோசனை வழங்கி
ஞர். இக்காலத்தில் பொறுப்புணர்ச்சியற்ற உப காரியதரிசி ஒருவரின் செய்கையால்
காரியதரிசிக்கு இக்கட்டான ஒரு நிலைமை
ஏற்பட்டது. சங்கத்தின் மானம் காற்றில் பறக்கவிருந்தது. இச் சமயத்
திலும் கைகொடுத்துக் காப்பாற்றியவர்
பண்டிதமணியே.
* மெளன தவம் மேற்கொண்டிருந்த இந்தக் காலத்தில் திருநெல்வேலியில் காவிய பாடசாலை நடைபெறவில்லையெனினும் அதன் ஒரு பகுதியான சம்ஸ்கிருத வகுப்பு, வண்ணை நாவலர் பாடசாலையில் தொடர்ந்து நடப்ப தற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பண்டிதமணி செய்து கொடுத்தார். இவ்வகுப்பிற் கல்வி பயின்றவர்களிற் சிலர், யா. ஆ. தி. பா. சங்கப் பரீட்சைகளுக்குத் தோற்றிச் சித்தி பெற்றனர்.
பின்பு நாவலர் தரும பரிபாலன சபை புனருத்தாரணஞ் செய்யப்பட்டுச் சிறப்புற இயங்கத் தொடங்கியபோது பண்டிதமணி, தருமகர்த்தாக்களில் ஒருவராயிருந்து, நாவலர் பாடசாலையில் ஏறக்குறைய நாற்பது வருட இடைவெளியின் பின் பண்டித வகுப் புக்களை ஆரம்பித்து வைத்தார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக நடத் தப்பட்ட இவ்வகுப்புக்களில் பெருந்தொகை யான மாணவர்கள் படித்துப் பரீட்சைக்குத் தோற்றினர்கள். இதே காலத்தில் பக்கத்தில் வைத்தீசுவர வித்தியாலயத்தில் யா. ஆ. தி. பா. சங்கம் நடத்திய வகுப்புக்களில் மாண வர் வரவு குறையத் தொடங்கியமையாற் போலும், சங்கம் வெளியிட்ட பரீட்சைப்

Page 275
பாடவிதாலத்தின் இறுதியில் **சங்கம் நடத்தும் வகுப்புக்களிற் சேர்ந்து படிப்பது சங்கப் பரீட்சைகளிற் சித்திபெற வாய்ப்பா பிருக்கும்’ என்று ஒரு விளம்பரம் வெளி பிடவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியது. குறிப்புப் பொருளமைய இவ்வாறு ஆசை காட்டி மாணவரை ஈர்ப்பது தவறு என்று எதிர்ப்புக் கிளம்பியதால் இவ்விளம்பரம் பின்பு நீக்கப்பட்டது. நாவலர் வித்தியா சாலையில் அதிபராயிருந்து இவ்வகுப்புக்களை பும் தருமகர்த்தா சபையையும் இயக்கிய வித்துவான் இ. திருநாவுக்கரசு அவர்களின் இடமாற்றத்தின் பின்பு அடுத்தடுத்து அதி பர்களாய் வந்தவர்களதும் கல்வி அதிகாரிக் ளதும் ஆதரவுக்குத் தக்கவாறு இவ்வகுப்பு வளர்வதும் தேய்வதுமாயிருந்து நின்றுவிட் டது. சென்ற ஆண்டில் மீண்டும் புனருத் தாரணம் செய்யப்பட்டு இப்போது சிறப்புற நடைபெறும் இவ்வகுப்பு, வகுப்பென்ற அளவில் அமையாமல் ஒரு காவிய பாடசாலை பாய் "பண்டிதமணி கணபதிப்பிள்ளை காவிய பாடசாலை" என்ற பெயரில் நிரந்தர ஞாபகச் சின்னமாய் நிலைத்திருக்கத் தக்க ஏற்பாடுகளை இதனுேடு சம்பந்தப்பட்ட பெரியார்கள் செய்து வைத்தல் வேண்டும் மேலும் பண்டிதமணியின் பழைய திட்டட் படி நாவலர் வித்தியாசாலையில் பிரவேச பால பண்டித வகுப்பை மாத்திரமாவது பாடசாலை நேரசூசிக்குட்பட்ட நித்திய வகுட பாகக் கல்வியதிகாரிகளின் அநுமதிபெற்று நடத்துவதும் அவசியமாகும்.
யா, ஆ. தி. பா. சங்கத்தின் வரலாற் றில் 1949ஆம், 1953ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நான்காண்டு காலம் மி உந்நதமான காலம் என்று கூறத்தக்கது பண்டிதர் புலவர், வித்துவான் என்ற நிலைய லுள்ளவர்களும் ஆங்கிலப் பட்டதாரிகளான சில ஆசிரியர்களும் நியாயவாதிகளும் மா திரமே அங்கத்துவம் பெறக்கூடிய அளவுக்கு கட்டுப்பாடுடையதாயும், சாதாரண மக்

حسن l8'
ளால் பெயர்தானும் அறியப்படாததாயும் இருந்து வந்த சங்கம் சாதாரண தமிழாசிரி யரும் பிறருமுட்பட நூற்றுக்கணக்கான அங்கத்தவரைச் சேர்த்துக்கொண்டது. இசை நாடக நிகழ்ச்சிகளோடு ஆண்டு விழாக்கள் கோலாகலமாக நடைபெற்றன. தமிழறிஞர்களுக்குக் கெளரவப் பட்டங்கள் வழங்கப்பட்டன. நூலரங்கேற்றம் நடந் தது. பரீட்சைப் பாடவிதானம் பல திருத் தங்களோடு அச்சிடப்பட்டது. 'கலாநிதி" இதழ்கள் வெளிவந்தன. இவ்வளவு சிறப்புக் கும் காரணம் செயலூக்கம் மிக்க வித்தியா தரிசி அ. சரவணமுத்து அவர்கள் சங்கக் காரியதரிசியாயிருந்தமையே. இவர் 1951ஆம் ஆண்டில் சங்கத்தின் 28ஆம் ஆண்டு நிறைவு விழாவை திரு. சு நடேசபிள்ளை தலைமையில் இரு நாட்கள் நடத்தியபோது பண்டிதமணி அவர்களை மேடையேற்றிவிட்டார். புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை இயற்றிய பகவத் கீதை வெண்பா நூல் அரங்கேற்றம் டிெ விழாவில் இரண்டாம் நாள் நடந்தபோது பண்டிதமணி தம்முடைய சகபாடியான பெரியதம்பிப் புலவரையும் அவர் நூலையும் பாராட்டிப் பேசி அழகிய ஒரு வெண்பாவில் சாற்றுகவியும் வழங்கினர்.
அடுத்த ஆண்டில் யா ஆ தி. பா. சங்கம் நடத்திய 29ஆம் ஆண்டு விழாவில் (1-12-52இல்) மகாவித்துவான் சி. கணே சையர், வித்துவான் ந. சுப்பையபிள்ளை, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, நவநீத கிருஷ்ணபாரதியார் என்னும் அறிஞர்
நால்வருக்கும் முறையே வித்துவசிரோமணி,
பண்டிதமணி, பண்டிதமணி, புலவர்மணி என்னும் சிறப்புப் பட்டங்களை வழங்கிக் கெளரவித்தது. இவ்விழாவுக்குக் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் தலைமை தாங்கினர்கள். சங்கத்தின் இந்த நன்முயற் சிக்கும் பண்டிதமணி அவர்கள் பேராதரவாக இருந்தார்கள் என்பது ஈண்டு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
பண்டிதமணி அவர்களுக்கும் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்துக்கு மிடையே நிலவிய இறுக்கமான தொடர்பு இங்கே ஒருவாறு சிந்திக்கப்பட்டுள்ளது.

Page 276
பண்டிதர் ஐயா அவ ** மூர்
யாழ்ப்பாணத்து நல்லூர் பூரீலழரீ ஆறுமுக நாவலருடைய பரம்பரையின் கடைசி வாரிசு என்று சொல்லக்கூடிய ஒரே ஒருவர் நம்மிடையே வாழ்ந்தவரென்று சொல்வதானுல் பண்டிதரையா அவர்களையே சொல்லலாம். ஏதோ பாட்டன் பூட்டன் என்ற வகையான வம்ச பரம்பரை என்ப தல்ல; அப்பெருமகளுருடைய ஒழுக்க நெறி, சமயக்கொள்கை, தமிழ்ப்பணி என்ற வகை யிலே ஒரு வாரிசுதான் பண்டிதரையா அவர்கள். நைஷ்டிகப் பிரமசரியத்திலும் சரி, கண்டனங்களைத் தொடுப்பதிலும் சரி பண்டிதரையாதான் நாவலர் பெருமானுக்கு ஒரே வாரிசாக விளங்கியவர்கள்.
திருமுருகாற்றுப்படையிலே திருவாவினன் குடிக்குப் பிரமதேவரை முன்னிட்டுத் தூது சென்ற கோஷ்டிக்குத் தலைமைதாங் கிய துனியில் காட்சி முனிவர் "களையே ஞாபகப்படுத்தும் ‘என்பெழுந்து இயங்கும் யாக்கையைச் ?? சுமந்துகொண்டு கடைசிக் காலத்திலும் அவருடைய வழக்கமான மெல் லிய குரலிலே அமைதியான நகைச்சுவை யோடு கந்தபுராணக் கருத்துக்களை - சைவ சித்தாந்தக் கருத்துக்களை-சைவசித்தாந்தத் தெளிவுகளை - எடுத்துப் பேசிக்கொண்டிருந் ததையும் கேட்டுக் கேட்டு என்போன்ற வர்கள் பயனடைந்திருக்கின்முர்கள்.
என்ன இருந்தும் பண்டிதரையா அவர்க ளிடம் நிறைவேருத மனக்குறை ஒன்றிருந்த தென்பதை அவர்களுடன் மிகமிக நெருங் கிப் பழகியவர்கள் மட்டுமே உணர்ந்திருப் பார்கள். * கந்தபுராண கலாசாரம் "தான் நமது யாழ்ப்பாணக் கலாசாரம் என்று அந்தப் பெயரிலேயே ஐயா அவர்கள் எழுதிய நூலும் ஒன்று வெளிவந்திருப்பதைப் பலரும் அறிவர். திருமுருகாற்றுப்படையிலே திருவேரகம் என்னும் பதியில் வாழ்ந்த அந்த

ர்களின் மனக்குறை த்தி
ணர் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்தியைப் பண்டிதரையா அடிக்கடி எடுத்துப் பேசுவார்.
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை யாளராகிய அந்தணர் மரபொன்றை இங்கேயே தோற்றுவிக்க வேண்டுமென்ற பெருநோ க் கத்தோ டு தா ன் நாவல ரவர்கள் சைவப்பிரகாச வித்தியாசாலையைத் தோற்றுவித்தார்கள் என்று பண்டிதரையா அவர்கள் சில சமயம் பேச்சை ஆரம்பித்து விட்டுச் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கி விடுவார்கள். நாவலர் பெருமானுடைய கனவு தலைகீழாக மாறிவிட்டதே என்ற தாபம் அப்பொழுது பண்டிதரையா அவர்க ளுடைய கண்களிலே தெரியும். அவர்க ளுடைய மனக் குறையைக் கோடிட்டுக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்க Loft (54p.
** தமிழ், சம்ஸ்கிருதம், புராண இதிகா சங்கள், வேதங்கள், ஆகமங்கள், திருமுறை கள் என்பவற்றேடு நமது சைவசமய கிரியா பாகங்கள் என்பவற்றையும் போதிப்பதற் காகவே சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் நாவலரையா அவர்கள் இந்தப் பாடசாலை யைத் தோற்றுவித்தார்கள். பழைய குருகுலமுறை அழிந்துவிடாமல் காப்பதுவே இதன் நோக்கம். இந்த நோக் கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக அந்தப் பெருமகளுர் தர்மஸ்தாபனங்களை யும் நிபந்தங்களையும் தேடிவைத்தார்கள்." இப்படிச் சொல்லிச் சொல்லிப் பண்டித ரையா அவர்கள் பலமுறை 5ம் மனக் குறையை வெளிப்படுத்தியிருந்தார்கள்:
** போயா விடுமுறை என்று இப்போது அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் நோன் மதி வழக்கத்தை நாவலரையா தமது காலத் திலேயே நடைமுறைப்படுத்தியிருக்கிருர்கள். அமாவாசை பூரனைத்தினங்களிலே பாடசாலை வகுப்புக்கள் நடைபெறுவதில்லை. விரதோத்

Page 277
2 --س-
தியானங்களும் வழிபாடுகளும் மாத்திரமே நடைபெற்று வந்தன. பாடசாலை வளவுக் குள்ளேயே சமய குரவர்களுக்குக் கோயிலும் உண்டு. ஆசிரியர்களாயினுமென்ன மானவ ராயினுமென்ன நியம நிஷ்டைகளும் ஆசார சீலமும் இல்லாதவர்கள் பாடசாலைக் குள்ளே பிரவேசிக்கவே முடியாது. என் னுடைய காலத்திலேகூடத் தேசிகர் ஒருவர் தான் இந்தப் பாடசாலைக்கும் இதன் ஒழுக் கத்துக்கும் பரிபாலகராயிருந்தார்" என்று சொல்லிச் சொல்லிப் பண்டிதரையா தமது மாணவப் பருவத்து வாழ்வை நினைந்து நெட்டுயிர்த்திருப்பதை நான் கண்டிருக் கிறேன்.
* தமிழிலே பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்ற வகுப்புக்களும் அதுபோலச் சம்ஸ்கிருதத்திலும் மூன்று வகுப்புக்களும் மற்றும் வேதாகம வகுப்புக் கள், திருமுறைப் பண்ணிசை வகுப்புக்கள், சைவசமயக் கிரியாபாக விளக்க வகுப்புக்கள் என்பனவற்றைக் குருகுல முறையிலே நடத்த இந்த மண்டபம் போதாதே? இந்த இரும்புத் தூண்கள் எப்படிப்பட்டவை? இவற்றை நிறுவி இப்போ எத்தனை காலமிருக்கும்? ஏதாவது துருப்பிடித்திருக்கின்றதா? மண்ட பத்தில் பரவியுள்ள கருங்கல் தளவரிசை எப்பேர்ப்பட்டது? இவற்றை யெல்லாம் நாவலரையா அவர்கள் ஏன் செய்துவைத்
3 அழியாப் பொருளாகிய கல்விை களையும் கொள்ளுதற்கும், பசி முதலிய கல்வி கற்றற்கும், கற்ற கல்வியை அழ தற்கும் கருவி, செல்வமே. }

۔۔۔. 20
as
தார்கள்?’’ இப்படிச் சில சமயம் ஆவேசத் தோடு டண்டிதரையா பேசுவதை என் போன்ற ஒரு சில அன்பர்கள் மாத்திரமே கேட்டிருப்பார்கள்.
காஞ்சிப் பெரியவர்கள் ஒரு சமயம், இக் காலக் கல்வி முறையையும் ஆசிரிய மாண வர்களுடைய ஒழுகலாறுகளையும் விமர்சித்து விட்டு, ‘ அந்தப் பழைய குருகுல வாச முறையை எங்கேனும் ஒரு சிறிய இடத்தி லாவது வைத்துப் பாதுகாக்கவேண்டும். நூதனசாலைப் பொருள்போல இப்படியும் ஒருமுறை நம் நாட்டிலே இருந்ததென்பதை நம்முடைய சந்ததிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்" என்று சொல்லியிருக்கிருர்கள்.
இதனை நாவலர் பெருமான் பத்தொன் பதாம் நூற்ருண்டிலே உணர்ந்து செயற் பட்டார். இரு ப த ராம் நூற்றண்டிலே பண்டிதரையா இந்த மனக்குறையை அவ் வப்போது ஆற்ருமையோடு வெளிப்படுத்தி வந்தார். நாவலர் பெருமானுடைய கனவு கனவாகவே இருக்கப் பண்டிதரையாவின் மனக்குறை குறையாகவே இருக்க அவர்கள் சிவபதம் அடைந்துவிட்டார்கள். நாவலர் பெருமானின் கனவை நனவுபடுத்த - பண்டிதர் ஐயா அவர்களது மனக்குறையை நிவிர்த்தி செய்ய - சைவப்பிரகாச வித்தியா சாலையை மையமாகக்கொண்டு நாவலர் தருமகர்த்தாசபை முயலவேண்டும்.
வைகளினல் வருந்தாது கவலையற்றிருந்து
பயும் கல்வித் தேர்ச்சிக்கு உரிய புத்தகங்
குசெய்து தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்
R y
- நாவலர் பெருமான்
S S AMSLMMMLSLkMASASqSqSqSqSAAMASAAALLLAALLLLLAASAALSLSSASAASSqqSqSqSqSqSqqqASAMLMAqALSLSSLAAMLAqMqSAAAALA LLAMAMAASAAAAAAAAqS

Page 278
பண்டிதமணியோ, பட்டொ
யாழ்ப்பாணப் பிரதேசக் கல்விப் பணிப்ட்
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் களும், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களும் ஈழத் தமிழ்த்தாயின் இரண்டு அரிய கண்மணிகளெனப் போற்றப்படுகின் றனர். புலவர்மணி கிழக்கு மாகாணத்திலே பிறந்தவர். பண்டிதமணி வடக்கு மாகாணத் திலே மட்டுவில் கிராமத்திலே உதித்தவர். பெரியதம்பிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை ஆகிய இரு பிள்ளைகளும் தமிழ்த்தாயின் தவப் புதல்வர்கள் ஆவார்கள்.
பண்டிதமணி அவர்கள் யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலே, எமது பிரதேசத்திலே, எம்முடனேயே அரைநூற்ருண்டு காலத் துக்கு மேலாக வாழ்ந்திருந்தார். இருந்தும், அவரைக் காண்பதற்கோ, பழகுவதற்கோ எனக்கு வாய்ப்புக் கிடைக்காமைக்கு எனது தவக்குறைவே காரணமாயிருக்கலாம் என்று எண்ணி யான் கவலைப்படுகிறேன்.
* இலக்கியவழியிலே, இலங்கை வளம் என்னுங் கட்டுரையிலே, நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர் கதிரைமலைச் சிறப்புப் பற்றிக் கூறுவதாக அமைந்த பாடல் ஒன்றிலே,
கதிரைமலை காணுத கண்ணென்ன கண்ணே கர்ப்பூர வொளிகாளுக் கண்னென்ன
கண்ணே
என்றமைந்த வரிகள்,
' பண்டிதரைக் காணுத கண்ணென்ன கண்ணே " என்று மாறி என்னைக் கண்டிப் பது போன்றதோர் உள்ளுணர்வு உறுத்திக் கொள்கிறது. அடுத்து,
இலங்கைவளங் கேளாத
செவியென்ன செவியே
இரும்பாலே செம்பாலே
செய்திட்ட செவியே

ளிவீசும் பதுமராக மணியோ!
1ாளர், ஜணுப் சாம். எம். மன்சூர் அவர்கள்
என்று வரும் பண்டிதமணியின் கவிக் கூற்று வேறுவிதமாக மாறியமைந்து என்னைக் கண்டிக்கும் தண்டனையிலிருந்து யான் ஒரு வாறு தப்பித்துக் கொண்டேன்.
அதாவது, யான், பண்டிதமணி அவர் களை நேரில் கண்டு, பேசி, பழகும் வாய்ப் ਸੰ கொண்டிருக்கவில்லையெனினும், அவரைப்பற்றி நிரம்பவும் கேள்விப்பட்டிருக் கின்றேன். அவரது ஆக்கங்கள் சிலவற்றை யாவது படித்திருக்கின்றேன். அவர் உரு வாக்கிவிட்டுச் சென்ற மாணவ மணிகளோடு அளவளாவிப் பண்டிதமணியவர்களைப் பற்றிப் பலவாழுய்த் தெரிந்துகொண்டிருக் கின்றேன்.
இந்த வகையிலே பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களையிட்டு யான் கொண்ட முடிவு, அன்னர் பட்டை தீட்டப்பெற்றதொரு பதுமராகம், பல்வேறு துறைகளிலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஒரு வைரமணி. இலக்கியம், சமயம், தத் துவம், பேச்சு, எழுத்து, விமர்சனம், சமூகம், கல்வி, அரசியல் ஆகிய பல்வேறு துறைகளிலுமே பண்டிதமணி பிரகாசித்துள் ளார். இவருக்கு இலக்கியகலாநிதி என்ற பட்டம் மட்டும் போதாது. சகலதுறைகளி லுமே கரைகண்டு விளங்கிய பண்டிதமணி அவர்களுக்கு, சகலகலாநிதி என்ற பட்டம் வழங்கப்பட்டிருந்தால் அது சா ல வும் பொருத்தமாய் இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்,
பண்டிதமணியவர்களைப் பற்றி அறிந்த மட்டில்,அவரைச் சாதாரணவொரு பண்டித ராகக் காணமுடியவில்லை. சங்ககாலத்துச்
சான்றேர்களில் ஒருவராகவே காணத் தோன்றுகின்றது. தெளிந்த சிந்தனை, தியாகவுள்ளம், நேரியசொல், மானுட
நேயம், குற்றங்கடிதல், ஒற்றுமை வாழ்வு,

Page 279
உயர்ந்த நோக்கு, தன்மான உணர்வு போன்ற அரிய பண்புகள் பலவும் சங்கத்துச் சான்றேரிடத்துப் போன்றே பண்டிதமணி யவர்களிடமும் படிந்து காணப்பட்டன போல் தெரிகிறது, "யாது மூரே யாவருங் கேளிர் " என்ற பண்டைப் புலவர்களின் பரந்த பண்பாடு பண்டிதமணியின் உள்ளத் தில் ஊறியிருந்தது. தாமமைத்த காவிய பாடசாலையிலே (Cassical School) தமிழோடு சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளையும் கற்பிப்பதற்கு ஆவன செய் தார். கலாசார விருத்திக்குச் சம்ஸ்கிருத மும், தேசிய ஐக்கியத்துக்குச் சிங்களமும் உதவும் என்பது அவரது எண்ணம். பண்டிதமணியின் பரந்துபட்ட Lussi பாட்டுக்கு இதைவிடச் சான்றேது.
சங்கத்துச் சான்ருேர்கள் பிற்காலப் புலவர்களைப் போலவன்றி மிகவும் ஒற்று மையாகவும், ஒருவரையொருவர் போற்றியும் வாழ்ந்து வந்தார்கள். இளங்கீரனுர், நப் பசலையார் போன்ற புலவர்கள் கபிலரைக் கனம்பண்ணிப் போற்றி வந்தனர் என்ப தைப் புறநானூறு கூறுகிறது. அதுபோன்றே பண்டிதமணி அவர்களும் தம்மோடொத்த புலவர்மணி அவர்களை வாய்த்தவிடத்தெல் லாம் வாழ்த்தியிருக்கின்றர்.
கீதை கவிசெய்து கீர்த்தி மிகப்பெற்றன் ஏபெரிய தம்பி எனதன்பன்-ஒதக்கேள் பாட்டுக்கொருபுலவன் பாரதியென் ருரொருவர் பாட்டுக் கிவனென்பன் யான்.
என்று புலவர்மணியவர்களைப் பண்டிதமணி
வாயாரப் புகழ்ந்து போற்றுவது அவரது கெழு தகைமைக்கோர் சான்ருகும்.
சங்ககாலச் சான்றேர்கள் தன்மானம் மிக்கவர்களாயிருந்தார்கள். தம்மை மதியா தார் தக்கதொரு பொற்குவைதான் தரினும் அதனைத் துச்சமென மதித்துத் தூக்கி யெறிந்திடுவார். அது போலவே, பண்டித மணி அவர்களிடமும் தன்மாணவுணர்வு தலை தூக்கி நின்றதை அறிய முடிகின்றது. உதாரணத்துக்கு ஒன்றினைக் கூறலாம். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின்

--س 222
வளர்ச்சிக்காகப் பாடுபட்டுழைத்த பண்டித மணியவர்கள், அதன் நன்மை கருதி, அதிற் காணப்பட்ட குற்றங் குறைகளையும் நேர்மை யுடன் கண்டித்து வந்தார். இதனலேற் பட்ட முரண்பாடு காரணமாக-தம்மை மதியாத-தமது கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்காத அந்தச் சங்கத்திலிருந்து விலகிக் கொண்டார். பின்னர், அந்தச் சங்கம் அவருக்கு அளித்துக் கெளரவிப்பதற்கு முன் வந்த பட்டத்தினைத் தின்மானங் காரண மாக ஏற்பதற்கு மறுத்து விட்டார்.
பண்டிதமணி அவர்களின் பைந்தமிழ் உரைநடையே தமிழ்கூறும் நல்லுலகினைப் பண்டிதமணியுடன் பிணித்துக் கட்டிய நற் றமிழ்த்தளை, மாதுளம் இறைகளுக்குள் முத் துக்களைப்போல, பொருத்தமான இடங்க ளில் பொருத்தமான சொற்களைப் பதித்து, சொற்களுக்கெல்லாம் உயிரும் வலுவும் ஊட்டி விடுவார். வள்ளுவர் கூறியதுபோல,
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல் லினையே பண்டிதமணி அவர்கள் கையாண் டார்கள். சொற்களைக் கையாண்ட முறையி லேயே பண்டிதமணியின் வெற்றியும் புகழும் தங்கியுள்ளன. பண்டிதமணி அவர்களின் உரைநடை பற்றிப் பேராசிரியர் சு. வித்தி யானந்தன் அவர்கள் ஓரிடத்தில் "இவரது நடை இவருக்கே அமைந்த கொடை. அந்த நடைதான் இவரின் தனித்துவத்தை வெளிப் படுத்துகின்றது" என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் உரைநடையின் தந்தை வீரமாமுனிவர் என்பர். வசன நடை கைவந்த வல்லாளர் ஆறுமுகநாவலர் என்பர். இவர்களையும் வென்ற எளிய, இனிய நடையாளன் எங்கள் பண்டிதமணி என்ருல் அது மிகையாகாது.
பண்டிதமணி அவர்கள் நாவலர் வழி நின்று, தமிழ், சைவம் ஆகியவற்றுக்குச் செய்த அருந்தொண்டு போலவே, கல்விக் காகவும் தம்மாலான சேவையினைச் செய் துள்ளார். 1926இல் மதுரைப் பண்டிதராகிக் கல்வித் தொண்டினையே கருத்திற் கொண்டு கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில்

Page 280
- 2
பயிற்சி பெற்று, 1929 முதல் முப்பது ஆண்டுகள் திருநெல்வேலி, சைவாசிரிய கலாசாஃவயில் தமிழ் விரிவுரையாளர் பணியி னைத் தலைமேற் கொண்டு, ஏராளமான நற்றமிழாசிரியர்களைத் தம் கைப்பட உரு வாக்கி, நாட்டுக்கு நல்கினுர், 1926இல் மட்டுவிலில் ஒரு காவிய பாடசாலையை அமைத்து இலவசக் கல்வியினை அளித்து வந்தார். பின்னர், தாம் பணியாற்றிய ஆசிரியகலாசாலை வளவில் - தாம் வாழ்ந்த தபோவனத்தில், 1935 அளவில் காவிய பாடசாலையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சைவ வித்தியாவிருத்திச் சங்கம், கலாநிலையம் போன்ற நிறுவனங்கட் கூடாக வும் பண்டிதமணி புரிந்துவந்த கல்விப்பணி புகலுந்தரமன்று. நாவலர் வழியில் வளர்ந்து வந்த பரம்பரையில் தோன்றிய பண்டித மணி அவர்கள், நாவலரைப்போன்றே, தாமும் அப்பணியினை மேற்கொள்ள விழைந் ததில் வியப்பொன்றுமில்லை.
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப் பேற்றபோது நாவலர் தர்மத்துக்குரிய சொத்துக்களையும் பொறுப்பேற்றுக்கொண் டது. கல்வித் திணைக்களத்தில் இயங்கும் நாவலர் தர்மகர்த்தா சபையில், நாவலரின் மாணவர் பரம்பரை சார்பில், நாவலரது நன்னேக்கங்களை யெல்லாம் நன்முக விளக் கியவர் பண்டிதமணி. அந் நோக்கங்களுக் கியையவே இன்றும் மேற்படி சபை கல்விப் பகுதியுடன் இணைந்து இயங்கிவருகின்றது. ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமும் கல்வித் திணைக்களத்துடன் இணைந்தே செயற்பட்டு வருகின்றது. இந்தச் சங்கத் தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுழைத்த வர் பண்டிதமணி. நாவலர் தர்மகர்த்தா சபையின் பதவிவழித் தலைவராக யாழ்ப்பா னக் கல்விப் பணிப்பாளர் என்ற கோதா வில் யான் இருந்துவருகிறேன். இதன் காரணமாகப் பண்டிதமணி அவர்களைப்பற்றி இரண்டொரு குறிப்புக்களாவது, ஈண்டு

23 -
எனக்கு எழுதக் கிடைத்த சந்தர்ப்பத்தை யிட்டு யான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
இன்னுமொரு குறிப்பினை மாத்திரம் இவ்விடத்தில் குறிப்பிடலாம் என எண்ணு கிறேன். அதாவது 1935இல் பண்டிதமணி அவர்கள் தாம் நிறுவிய காவிய பாடசாலை யிலே, தமிழோடு, சம்ஸ்கிருதத்தையும், சிங்கள மொழியையும் போதிப்பதற்கு ஏற் பாடு செய்திருந்தார். சிங்கள மொழியைப் போதிப்பதற்கு, அப்போது யாழ்ப்பாண நாகவிகாராதிபதியாகவிருந்த பூரீ ராகுல சுமண தேரோ முன்வந்திருந்தார். தேசிய ஒற்றுமைக்குத் தமிழுடன் சிங்களமும் பயன் படும் என்று கருதியதாலேயே பண்டிதமணி அவர்கள் இவ்வாறன ஏற்பாடுகளைச் செய் திருந்தார்கள். ஏனைய அறிஞர்களும், இலங்கை மக்கள் அனைவரும் இரு மொழி களையும் கற்பதற்குத் திட்டமிட்டுச் செயற் பட்டிருப்பார்களேயானல் இலங்கை மக்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ்ந்திருக் கவும் கூடும். இந்த வகையிலே பண்டிதமணி அவர்கள் எதிர்வு கூறும் ஞானம்படைத்த தீர்க்கதரிசியாகவும் காணப்படுகின்ருர்,
பண்டிதமணி அவர்கள் ‘இலக்கியவழி' முதல், 'அத்வைதம்" வரை அநேக ஆக் கங்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நன் கொடையாக அளித்துச் சென்றுள்ளார்கள். **இலக்கியவழி"யிலே, குறிப்பாக ஈழத்து இலக்கியவழியிலே, அரசகேசரி முதல் மட்டக் களப்புப் புலவர் பூபாலபிள்ளை வரை கண்டு காட்டிய பண்டிதமணி,இவ்வழியிலே தாமுங் கூட ஒரு மைல்கல்லாக-இல்லை, பட்டை தீட்டப்பெற்ற ஒரு மாணிக்கக் கல்லாகவே நின்று பிரகாசிக்கின்ருர் என்று பெருமை யுடன் கூறிக்கொள்ளலாம்.
பண்டிதமணி, பட்டொளிவீசும் ஒரு பதுமராகமணி. அன்னரின் புகழ் என்றும் நின்று நிலவுவதாக.
வாழ்க பண்டிதமணி நாமம்! வளர்க அவர் தொண்டு!!

Page 281
பண்டிதமணி அவர்
ஈழமுரசு பிரதம ஆசிரியர் எஸ்
*மகாபாரத யுத்தமும முடியக் கலியும் உதயமானது. யுத்தத்தில் நல்லவர்க ளும் மாண்டு மடிந்து போஞர்கள். நல்லவர்களில் எஞ்சியிருந்தவர்களுக் கும் யுத்தத்துக்குப் பிறகு இவ்வுலக வாழ்க்கையில் வெறுப்பு உண்டாய் விட்டது. கலிவளரத் தருமம் வரவரக் குன்றியது. கலி 2500 வரை தருமத் தின் சாயலும் அதன் மேல் 5000 வரை சாயலின் சாயலும் இருந்து வந்தன. இடையில் சரித்திரம் தொடங்கியது.'
பண்டிதமணியவர்களைப் பற்றி இன்று எழுத முற்படுகிறபோது கந்தபுராண கலா சாரம் என்ற தமது நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையின் தொடக்கமாக வரும் மேற்படி பகுதி தவிர்க்க இயலாதபடி நினைவுக்குவருகிறது.
திருநெல்வேலி கலாசாலை வீதியில் பழுத்த வயதுவரை வாழ்ந்து,கலியின் சித்து விளையாட்டுக்களின் பிற்கால வண்ணங் களையும் அவர் உள்வாங்கினரோ என்னவோ, தீட்சண்யமான அவருடைய விமரிசனப் பார்வையை இறுதிவரையில் ‘* ஒடும் செம் பொனும் ஒப்பவே நோக்குவதில்" இருந்து தவிர்த்து வந்துள்ளார்.
சைவ சித்தாந்தம், தமிழ்க்கல்வி, இலக் கியம் ஆகிய துறைகளுடன் இயைபுற்ற பண்டிதமணி அவர்களின் பெரும் பணியைச் சிலாகித்தும் விதந்தும் நூல்வல்லார் GT(pg

களின் ஈக்கிர இயல்பு
.
எம். கோபாலரத்தினம் அவர்கள்
வது இயல்பு. அன்றியும் அது நியாயமும் ஆகும். நம்மைப் போன்ற பத்திரிகையாளர் களுக்குப் பண்டிதமணியிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு இருக்கிற முக்கி ய மா ன அம்சம் அவருடைய நக்கீர இயல்பு.
நம் எல்லோரதும் மதிப்புக்குரிய சின்னத் தம்பிப் புலவரை, பண்டிதமணியவர்களால் வெகு சுலபமாகச் சாதாரண கவிஞர் என்று சொல்ல முடிந்தது. அவருடைய இலக்கிய வழி, ஈழத்து இலக்கியவழி மட்டுமல்ல தமிழிலக்கிய வழி யு மா கும். ஈழத்துத் தமிழிலக்கிய வழியை இனங்கண்டு அதனைத் தமக்கேயுரிய பாணியில் விவரணம் செய்த மையும், சைவசித்தாந்தக் கோட்பாடுக ளுடன் தொடர்புபடுத்தித் தமிழிலக்கியங் களுக்குப் புது ஒளி பாய்ச்சியமையும் பண்டித மணியின் அருமருந்தன்ன அம்சமாகும்,
கம்பரிடம் எழுபது வகையான சந்தங்கள் பயின்று வருகின்றன என்று சொல் வார்கள். பண்டிதமணியிடம் பயின்றுவரும் கவிதாரசனை நேர்த்தி எழுநூறுக்குமதிக மான படைப்புக்களில் கிடைக்கிறது என்று அறியக்கிடக்கிறது.
பண்டிதமணி அவர்களின் அனைத்துக் கட்டுரைகளையும் சொற்பொழிவுகளையும் தொகுத்து வெளியிடுவதே நாம் நமது வருங் காலத் தலைமுறைக்கு அவரை உரிய பரிமாணத்தில் அறிந்துகொள்ள உதவும் மேலான செயலாகும்.

Page 282
பண்டிதமணி அவர்களின் எண்பதாவது
பிறந்த தினத்தில் ஒரு தோற்றம்
25-6-78 ஞாயிறு யாழ். வளாகத்தி
யாழ். வளாகத் தலைவர் பேராசிரியர் சான்றுப் பத்திரத்தைப் பண்டிதமணி அவ வித்தியானந்தன் அவர்கள் தலைமையுரை நி பண்டிதமணி அவர்கள் பதில் உரை கூறுகின்
 
 

பண்டிதமணி அவர்களும் அவர்களின் அன்பு மாணவர் திரு. அ. பஞ்சாட்சரமும்
ல் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா
வித்தியானந்தன் அவர்கள் கலாநிதிப் பட்டச் ர்களுக்கு வழங்குகிருரர்கள்.
கழ்த்துகின்றர்கள்.
ரர்கள்.

Page 283
இலங்கைப் பல்கலைக் கழகம் பணி இலக்கிய கலாநிதி
UNIVERSITY
This is
was admitt
-ീed
(h
at the Sp
holden In Colo
Witness our hands
One Thousand Nur
 
 

ண்டிதமணி அவர்களுக்கு வழங்கிய ப் பட்டச் சான்றிதழ்
WI)
" OF SRI LANKA
to certify that
ed to the degree of
ചു ലdert
onori causa
ecial Convocation
mbo on 3lst May 1978
this Thirty First Day of May
c Hundred aid Seventy Eight
P24 wald
عہدہ (مraمہیبتلاہیت
Mae Chunartlow

Page 284
பண்டிதமணி க மெய்யியலறிஞ
இ. இரத்தின்
கண்டு உரையாடிப் பழகாத ஒருவரைப் பாராட்டுதல் இலகுவன்று. நேர்ப்பயிற்சி சுவையான சில விபரங்களைத் தரல்கூடும். ஆயினும் எழுத்து மூலம் அறிவதே மெய்யறி வாகும். புணர்ச்சி பழகுதல் அவசியமில்லை; உணர்ச்சியே உணர்த்திவிடும். இதை நம் பித்தான் இக் கட்டுரையை எழுதுகிறேன்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையவர்க ளிடம் நான் கல்வி கற்கவில்லை, பேசிப் பழகியதுமில்லை. அவர் எழுத்துக்களையே நான் கண்டிருக்கிறேன். முதன்முதலாக அவரின் கட்டுரைத் தொகுதியொன்றின் கைப்பிரதியைக் காணும் பேறு எனக்குக் கிடைத்தது. இது பின்னர் இலக்கிய வழி யென எழுந்தது. அதன் பின்னர் அவரின் கட்டுரைகளையும் நூல்களையும் வாசித்துள் ளேன். அவற்றில் இக் காலத்து எழுத்தாளர் பலரிடம் இல்லாத ஒரு புதுமை நலம் பொலி வதைக் கண்டேன்.
பண்டிதரவர்கள் எழுத்துக்களில் பாடு பட்டுச் சேர்த்த ஆராய்ச்சிச் செறிவையும் ஒப்பியல் முயற்சியையும் நாம் அதிகம் காண (1pւգ-Այո՞ցմ, ஆயின் அவர் கட்டுரையில் மற்றை உளம் கண்டறியாத ஒரு புதுமையை, எடுத்த பொருளில் முழு உள்ளமும் பதிந் தெடுத்த ஒர் உண்மையைக் காண்கிருேம். இவ்வாறு புதியது கூறும் திறனும், பொருள் முழுமையின் தணிநலம் காட்டும் ஆற்றலும் பண்டிதமணிக்கு எவ்வாறு கிட்டின என்று நான் பலமுறையும் என்னுள் எண்ணி வியந்ததுண்டு. அப்பொழுதுதான் பிரான்சு நாட்டுப் பெரும் தத்துவ ஞானி பேக்சன் கூறிய ஒரு பேருண்மை எனக்குத் தோன் றியது.
கருத்துக்களிலுள்ள வனப்பும் புதுமையும்:
அவர் அறிவினை இரண்டு வகையால் பெறலாம் என்று கூறுகிருர், ஒன்று பரந்த Luigia)as (Extensive Manifolds); LDfb60so
29

ணபதிப்பிள்ளையும் நன் பேக்சனும்
ugi särpuu Lu 6i) ; GS 45 (İntensive Manifolds). இங்கு பேக்சன் கூறிய ஒன்றிய பல்வகை நோக்கினை உடையவர் நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையவர்கள்.இதனுல்தான் அவர் கருத்துக்களில் ஒரு வனப்பையும் புதுமையை யும் நாம் காண்கிருேம். இனி இந்தப் பரந்த பல்வகை நோக்கு, ஒன்றிய பல்வகை நோக்கு என்ருல் என்ன எனச் சிறிது பார்ப்போம்.
எழுத்தாளர்கள் பல்வகையினர். ஒரு வகையினர் பாடுபட்டுப் பல நூல்கள் துழா விப் புதிய பல சேர்த்துப் படைப்பர். இவர்கள் பல செய்திகளை, பொருள்களை ஒப்பிட்டு அவற்றுள் விளங்கும் பொதுமை யினை, வேறுபாட்டுச் சிறப்பினை எடுத்துக் காட்டுவார்கள். சிலர் இத்தகைய ஒப்பியல் ஆராய்ச்சியில் ஈடுபடாமலே மாதுளையைப் பிய்த்துச் செம்ப வள ச் சாறெடுப்பது போன்று, எடுத்த ஓரடியிலே ஒர் அற்புதத் தைக் காட்டிவிடுவார்கள்.
இவற்றுள் முந்தியமுறை தருக்கமுறை ஆய்வு. இம் முறையில் ஒரு பொது உண்மை யைக் காண்பதற்குப் பல உதாரணங்களைத் தேடி எடுக்கவேண்டும்; ஒப்பிடவேண்டும்; பொதுமையைக் காணவ்ேண்டும். அல்லது ஒரு பொருளை எடுத்து, பகுதி பகுதியாகக் கழற்றி ஆய்தல் வேண்டும். இதனை விஞ் ஞானமுறை ஆய்வு என்றும் இலக்கண் ஆய்வு என்றும் கூறலாம். இம் மாதிரியான ஆய்விற்கு மனித உள்ளம் தாணுகத் தன்னை அமைத்துக்கொள்கிறது. விஞ்ஞானமுறைப் பயிற்சியால் நாம் எடுத்த ஒரு பொருளை உடனே அதன் பகுதிகளாக வகுத்து ஆராய் கிருேம். இப்படியே வரலாற்றிலும் ஒரு சந்தர்ப்பத்தை வகுத்தாய்கின்ருேம். இவ் வாறு வகுத்து வகுத்து ஆய்வதற்கு எம் அறிவு பழக்கப்பட்டு விட்டது. இம்முறை யில் பழகிவிட்டோம். இது இப்பொழுதைய கல்வி முறை நமக்கு அளித்த ஒரு குறைபாடு.

Page 285
இதனல் நாம் ஒரு பொருளை நிறைவாக அறிய முடியாமற் போய்விடுகிருேம். ஒன் றின் சொரூப இலக்கணம் நம் உள்ளத்தினின் றும் தப்பிவிடுகிறது. இங்கு தொழிற்படுவது மனிதனின் நுண்ணறிவு. பகுத்தறியும் பழக் கம் நுண்ணறிவின் ஒரு சேட்டை. (நுண் FIDT flot – intellect).
உள்ளொளியால் அளக்கும் இயல்பு:
இதற்கு எதிர்மாருன ஒரு முறையே ஒரு பொருளை நேரே, பகுத்துப் பகுத்துப் பாராமல் முழுவதுமாக உணர்வது. இது முழு உள்ளத்தாலும் உணரப்படுவது; பற் நறப்படுவது. இங்கே ஒரு பொருளின் முழு அறிவும் பின்னப்படாது சிறப்பிலக்கணங்க ளெல்லாம் வனப்புப்பெற அமைந்து எம் அகத்திற்படும். இங்கு தொழிற்படுவது எம் உள்ளொளி (Intuition). இவ் வகையில் அறிவு பெறும் வகையை இன்றைய எம் விஞ்ஞானமுறை வாழ்வு கெடுத்துவிட்டது. மனம் குவிவதால் இப் பயிற்சியை எம் மிடம் நிலைபெறுத்தலாம். இத்தகைய ஆற்றல் எம்மிற் சிலரிடமே யுண்டு.
இவ்வாழுக நுண்ணறிவின் (புத்தியின் உழைப்பினல் பெறப்படும் அறிவு, பரந்த பல்வகையறிவு. உள்ளொளியினல் பெறட் படும் அறிவு ஒன்றிய பல்வகையறிவு. இந்த ஒன்றிய பல்வகையறிவே பண்டிதமணி யவர்களிடம் நின்று ஒளிவிடுவது.
எடுத்த ஒரு பொருளை உள்ளொளியால் அளக்கும் ஒரியல்பு அவர்களிடம் இயல்பாக உண்டு. இது மனக் குவிவினுலும் தவத்தி ணு,லும் வருவது. இந்த இயல்பினுல்தான் அவர் எழுத்துக்களில் புதுமை நலத்தை நாம் காண்கின்ருேம். தனித்தனி நூல்களை ஆய்ந்து இங்கு நாம் கூறியதனை உதாரண முகத்தால் விளக்குவதற்குக் கட்டுரை இட அளிக்காது. எனினும் சிறிது காட்டுவோம்
உண்மையை அறிதலைப்பற்றி மே:ே கூறிய ஒன்றிய பல்வகை நோக்கினை அறி தற்கு, பண்டிதமணியின் புலநெறித்துை யாகிய இலக்கியக் கட்டுரைகளையே ஆரா தல் வேண்டும்.
உரைநடை இலக்கியத்தில் இரண்டுவை உண்டு. ஒன்று கட்டுரை. மற்றைய அணியுரை. w

26 -
**உரைநடைக் கலையை இருவகையில் ஆள லாம். ஒன்று மொழியை விடய முகமாகக் (Objectively) கையாளல். இது கட்டுரை வகை (Tomposition). மற்றையது விடயி (pós LDIT disi (Subjectively) Gibsustaitái). g.gif அணியுரை (rhetoric). இது பரந்த நோக் குடையது. கட்டுரை வகையால் எதிர்மறை யான நடையொன்றினை நாம் பெறலாம். இது இலக்கண நிறைவைக் குறிக்கோளா யுடையது. ஆணுல் ஒர் ஆக்க நடையைப் பெறக் கட்டுரையில் பண்புகள் பல செறிதல்
- Goyaö76th’’ (Herbert Read). Q6i6fluaity
பண்டிதர் நடையில் முழுவதும் உண்மை. தமிழ்நாட்டில் இவ்வாறு ஆக்கநடை எழு தும் தலையோர் மிகச் சிலருள் ஒருவர் பண் டிதர். இங்கே கட்டுரை வகை புத்தியால், நுண்ணறிவால் எழுதுவது. அணியுரை உள் ளொளியால் எழுதுவது. "உள்ளொளியென் முல், தன்னலமற்ற இயல்பூக்கம்; அது தன்னை உணர்ந்து தானெடுத்த பொருளைச் சிந்தித்து அதை முடிவின்றி விரிக்க வல்லது" என்கின்றர் பேக்சன். இது பண்டிதமணிக்கு இயல்பானது.
கட்டுரை வகைகள் எழுதுவோர் பலர். இவர்கட்கு நியமம் தொல்காப்பியம், நன் னுரல்; அவற்றையே இவர் கண்ணுங் கருத்து மாகப் போற்றுவர். புதியது முனைந்து படைப்பதில் இவர்கட்குத் துணிபும் இல்லை, ஆற்றலுமில்லை, உள்ளொளியுமில்லை. அவ் வாறு படைப்புக்களைக் கட்டுரை இலக் கணங்கொண்டே அளப்பர்.
புதுநோக்கில் பழகிய கருத்துக்கள்:
பண்டிதமணியின் ஒரு நூல் இலக்கிய வழி. இலக்கியவழியின் "புறஇதழில் ஆசி ரியர் அகவிதழை நாம் காணலாம், 'கனவி லாயினும் நாம் புத்தகம் எழுத முயன்ற தில்லை. அப்படியிருந்தும், இப் புத்தகம் எப் படியோ வெளிப்பட்டிருக்கின்றது." என் கிருர் ஆசிரியர், புலவர்க்குக் கருத்துக்கள் புறத் தூண்டல்களால் எழுவதில்லை. உள் ளத்துக் கிளர்ச்சியால் தோன்றி உள்ளொளி யில் தோய்பவை. அவ்வாறு தோன்றுபவை பொருளோடு புகழிற்காக எழுபவையல்ல.

Page 286
உண்மையான கலை, புலமை ஆகியவற்றின் அலை ஒலிகளே அவை. " புத்தகத்திற்கென்று பிரசவிக்காத கருத்துக்களே இப் புத்தகம். அதனுலே இப் புத்தகம் சற்றே வழங்கிப் பயன்படும்போலும் " என்கிறர் ஆசிரியர். புலமைக் கருத்துக்கள் என்றும் எப்பொழு தும் உதிப்பவையல்ல. அந்த உண்மையையே இங்கு ஆசிரியர் கூறுகின்றர். பொருள் சேர்க்கும் இயல்புடையோர் அகக் காட்சிகள் தோன்ரு இடைவெளிகளை எல்லாம் வெறுஞ் சொற்களால் நிரப்பிவிடுவோர். அவ்வாறு செய்யாதவர் நம் பண்டிதமணியவர்கள்.
பண்டிதமணியின் நடையினைச் சற்றே பார்ப்போம். அவர் சிந்தை செந்தமிழ்ச் சிந்தை. பொருள் இலக்கியப் பொருள். நடை குறுகுறு நடக்கும் அணிநடை. பல செந்தமிழ் நூல்களிலும் அளைந்துவரும் தென்றல். தாமரையில் மட்டுமன்றி எல்லா மலர்களிலும் தாதுரதிக் கற்பகத்தில் அடை கட்டும் வண்டு போன்றவர் பண்டிதர். பழகிய கருத்துக்களைப் புதுநோக்கில் காட்டும் சொல்லாடி, அவர் சொற்கோவை.
கட்டுரைகளை எடுத்துச் சுட்டி இதன் நயமிது என்று சொல்லாமல் சும்மா புகழ்வ தில் பயனில்லையல்லவா? எனவே இரண்டு கட்டுரைகளை எடுத்துக்கொள்வோம். முத வில் சிவகாமி சரிதையை எடுப்போம்.
இது முதன்முதல் கல்வி ஒலிபரப்பில் பேசிய பேச்சு, அன்று அது இலக்கிய முகம் என்ற தொடரில் வந்தது. உண்மையில் அன்று நான் பெற்ற இலக்கிய இன்பம் சொல்லொணுதது. அதன் முதற் பந்தியைப் பாருங்கள்:
**நள்ளிருள், நடுக்காடு, காலை மாலை நிழல்போலே நாமும் நடக்கத் தாமும் நடக் கிற காடு அந்தக் காடு. கரைதுறை திக்குத் திசை தெரியாத காடு. இருள் மயம்; இடை
யிடையே சிறிய சிறிய ஒளிகள்; பாம்புகளின்
வாயிலிருந்தும், ஆனைகளின் தந்தங்களி லிருந்தும், புலிகளின் கண்களிலிருந்தும் வரு கிற ஒளிகள் அந்த ஒளிகள்; இந்த ஒளிக ளுக்கும், ஆகாயத்திலே கண்சிமிட்டுகின்ற தா ர கைகளுக்கும் இடையே சந்து
2

27 -
பேசி அங்கும் இங்கும் பந்தம் பிடிக்கின்ற மின்மினிகள். எங்கும் மெளனம். ஏகாந்தப் பெருங் ககனம், அங்கே மனிதன் என்ற வார்த்தைக்கு இடமில்லை. உலகம் வேறு; இந்தக் காடு வேறு. "
* நள்ளிருள், நடுக்காடு'. இது இலக் கணப் பித்தருக்குப் பிடிக்காமலிருக்கலாம். எழுவாய் இல்லை; பயனிலை இல்லை என்பர். எழுந்தது எது? பயன் எது? என்று கேட் டிருந்தால் விடைகளைக் கண்டிருப்பர். பெயர் இன்றி வினையின்றி வசனமமைதல் அணி யுரையின் ஓர் உத்தி. மொழி உள்ளத் துணர்வைப் புலப்படுத்தும் ஒரு குறியீடு, வல்லான் வாய் அது எவ்வித உருவையும் எடுக்கும். மரபிற்குப் பயந்து தயங்குவது அன்று இலக்கியம். மரபை ஒட்டிப் புதுவது முனைவதுதான் இலக்கியம்.
'சந்துபேசிப் பந்தம் பிடிக்கின்ற மின் மினிகள். எங்கும் மெளனம். ஏகாந்தப் பெருங் ககனம். அங்கே மனிதன் என்ற வார்த்தைக்கு இடமில்லை." இதில் ஆசிரி யரின் மூன்ருவது வசனம்தான் மூல வாக் கியங்கட்கு ஒளி தருகின்றது.
முழுவதையும் இன்னுமொருமுறை வாசித்துப் பாருங்கள். அதில் ஒரு வண்ணம் இருக்கிறது. சொற்கள் வசனங்கள் தந்த தன்று அது கருத்துதித்த ஒழுக்கில் பிறந் தது அந்த வண்ணம். அது மற்றையவர் சொல்லும் ஒத்திசையன்று.இசையொழுக்கு.
நூலெலாம் படிந்து மணக்கும் செந்தமிழ்:
அவர் சிந்தை செந்தமிழ்ச் சிந்தை என் றேன்; பார்ப்போம். இப் பண்பு எழுத் தெல்லாம் செறிந்த ஒரியல்பு: செந்தமிழ் நூலெல்லாம் படிந்து அவற்றின் மணத் தைச் சொல்லெலாம் பொருளெல*ம் சுவை படத் தோய்ப்பது. இதற்கெடுத்துக்காட்டு:
**கிருஷ்ணன் விஷ்ணுவின் பத்து அடி தாரங்களில் ஒர் அவதாரம், துஷ்ட நிக் கிரக சிஷ்ட பரிபாலனத்துக்கு என்று அவ தரித்தவன் கிருஷ்ணன். அவனுக்குத் தருமம் என்பது ஒரு விளையாட்டு. கடவுளுக்குப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களையும்

Page 287
2 سیسہ۔
திருவிளையாட்டு என்பார்கள், கடவுள் விகார மிடையாமல் இருந்தபடியிருக்க அவர் முன் னிலையில் ஐந்தொழில்களும் நடக்கும். கிருஷ் ணன் என்ற சொல்லின் திரிபு கண்ணன், கண்ணனுக்கு உலகியல் அத்தனையும் மண் விளையாட்டு, மகாபாரத யுத்தம் அவனுக்கு ஒரு திரைப்படக் காட்சி, கண்ணன் சிறு குழந்தையாயிருக்கும்போது தாய்க்குப் பக் கத்திலே துயிலுவான். அதே சமயத்தில் அயலிலுள்ள ஒவ்வொரு வீட்டாரும், வெண் ணெயை விழுங்கினன், பாலைப் பருகிஞன், தயிரைக் கொள்ளை செய்தான் என்று ஒவ் வொரு முறையீடு கொண்டு வருவார்கள். கண்ணன் அப்படி ஒன்றுஞ் செய்யாதவன் போல் நடிப்பான். இந்த விளையாட்டுப் பிள்ளையை மகான்களாகிய முனிவர்கள் தியானித்து வணங்குகின்(?ர்கள்?". (பாரத நவமணிகள்),
இதில் கம்பராமாயணம், சைவசித் தாந்த நூல்கள், இலக்கணம், மறுமலர்ச்சி, பாரதி கவிதை யாவற்றையும் நாம் காண வாம். குறுகுறு நடக்கும் அணி நடைக்கு மேலே எடுத்துக்காட்டிய இரண்டும் காட்டு. பொருள் இலக்கியப் பொருள் என்பதற்கு, **காதைகள் சொரிவன செவிநுகர் கணிகள்" (இலக்கியவழி) சிறந்த எடுத்துக்காட்டு. இப் பண்பும் இவர் எழுத்தெலாம் செறிந்த பண்பு.
காவெலாம் ஊதிக் கற்பகங் கட்டிய தேனுக்கு எடுத்துக்காட்டு மணிவாசகர் விழா மலரில் வந்த 'ஊருணி.. யாவர்க்கும் ஊதியம்’ என்னும் அற்புதம்,
மறுமலர்ச்சிக் கவிதை போன்றுள்ள நடை:
பண்டிதமணியின் நடை ஒரு மறுமலர்ச் சிக் கவிதை போன்றது. தமிழ் மறுமலர்ச்சி களை நான் குறிப்பிடவில்லை. அவற்றில் பொருளைக் காண்பது அபூர்வம், ஆங்கிலத் தைக் குறிக்கின்றேன். சிறப்பாக 'சிவகாமி சரிதை," "ஊருணி.. யாவர்க்கும் ஊதி யம்" என்பன இரண்டும் அதிசயப் படைப் புக்கள். பிந்தியது வண்ணமும் அருளும் கலந்த கவிதை. எந்தவித கட்டளையைக் கொண்டு அளந்தாலும் அழியா வனப் புடைய சித்திரம். எல்லா அழகுகளும்

مس. 28
அமையப்பெற்ற வனப்பு. அணிநடை பயி லும் ஒரு செந்தமிழ்ச் சொற்கொடி, செதுக் கிய சொற்கள், சொல்லடக்கம், புதியது முனைதல், தருக்கமுறைக் கோப்பு, இலக்கிய மாட்டெறிவு, எல்லாம் இங்கு பின்னிக் கிடக்கின்றன. அழகை உருவாக்குவான், தன் பணிக்கெனப் புதுக் கருவிகளேயாக்கு வான். அவன் கருவிகளும் அற்புதம், அமைப்பும் அஃதே. அதை உணரும் ஆற் றல் சுவைக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லா விட்டால் அது புலவன் குறையாகாது. காலத்துக்குக் காலம் இலக்கிய வானில் புதி யது முன்ந்து முடிக்கும் ஆற்றலுடையார் தோன்றுவார். அத்தகைய புலமைன்ய அறிந்து போற்றுதல் நம் கடன்,
உண்மையில் 'ஊருணி" என்ற கட்டுரை மேனுட்டுப் புதுமைக் கவிகள் எழுதும் பாக் களின் வளமும் ஆற்றலுமுடையது. பன் முறையும் ஆங்கிலத்தில் கட்டுரை கவிதை கள் வாசித்துத் தமிழில் இல்லையே என்று ஏங்கிய என் உள்ளத்தில் தேன்ருவிபோல் விழுந்தது இக் கட்டுரை, அழகியலும் அரு ளியலும் நடமாடும் ஓர் இலக்கிய வண்ணம் அது. அதை விரித்து ஆய்வதற்கு இக் கட் டுரை இடந்தராது,
பண்டிதமணியவர்களது கட்டுரையின் பல அழகுகளைத் தனித்தனி பார்த்தால் அவரை முழுமையும் பார்த்தது ஆகாது. *பண்பாடு என்ருல் கனிவு உணர்வினை ஏற்றுக்கொள்ளும் தகுதியுடைமை" என் பார் ஒரு பேராசிரியர். பண்டிதமணியின் எழுத்துக்கள் யாவற்றிலும் இந்தப் பண் பாடு இலங்குவதை நாம் காணலாம். பழைய சங்கதிகள் அவர் உள்ளொளிபட்டுத் தமிழில் எழும்போது அங்கு நாம் எம் அடிமனத்தின் இலேசாக அறிந்த, ஆயின் விழிப்புணர்விற்கு வராத, ஒரு செய்தியைக் காண்கின்ருேம்.
மூலக்கூற்று உயிரியலிலிருந்து வான் பெளதிகம் வரை அளக்கு ம் ஏலு  ைம பண்டிதமணியிடம் இல்லாமலிருக்கலாம்; ஆயின் அணிகாவியம் ஒன்றளையினும் ஆழ்ந்திருக்கும் புலநெறி காட்டுபவர் பண் டிதர். அவர் சொல்வண்ணம் தொடர்ந்து பொலிவதாக.
தினகரன், 4-11-1968)

Page 288
பண்டிதமணி அவ UTLD ggGY கிளிநொச்சி முல்லைத்தீவுப் பிரதேசக் கல்
பூரீலழறி ஆறுமுகநாவலர் பெருமானுக்கும் அவர் வழிவந்த பூரீமத் த. கைலாசபிள்ளை அவர்களுக்கும் சுன்னகம் மகாபுருஷர் அ. குமாரசுவாமிப்புலவர் அவர்களுக்கும் கல்வி உலகிலும் சைவ உலகிலும் எத்துணைப் புகழ் பரவியிருந்ததோ அத்தனை புகழையும் தனக் காக ஆக்கிக்கொண்ட முதுபெரும் புலவ ராக வாழ்ந்து, அனைத்துத் தமிழறிஞர் உள் ளத்தும் சைவசமய ஒழுக்கநெறி நின்ற மேலோர் உள்ளத்தும் என்றும் மறக்க வொண்ணுத நினைவை நிலைபெறுத்திய பெரு மைக்கு உரியவர் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள்.
சிவநெறி ஒழுக்கத்தில் ஒருவருக்குச் சிவ வணக்கத்திலும் மிக முக்கியமானது சிவ னடியார் வணக்கம், அவ்வாறு அடியார்க்கும் அடியானுக வாழ்ந்த அப்பூதி அடிகளும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் திருமுறை காலத் தில் அடியார் புகழைப் பாடிச் சிவகதியுற் முர்கள். அவ்வாறு நாவலர் பெருமானுக்கே இடையரு அன்பு பூண்டு தமக்கு"ஞானகுரு வாக அமைந்த உரையாசிரியர் ம. க. வேற் பிள்ளை, சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம், பெளராணிகர் சாவகச்சேரி ச. பொன்ம்ை பலபிள்ளை, சுன்னுகம் பூரீமத் அ. குமார சுவாமிப்புலவர்,மானேஜர் பூரீமத் த. கைலாச பிள்ளை, வித்துவான் ந. சுப்பைய பிள்ளை, உபஅதிபர் திரு. பொ. கைலாசபதி ஆகிய ஞானிகளைத் தமக்கு உபாசன மூர்த்திகளாக நியோகித்து அவர்களின் ஆசீர்வாதத்தால் சைவசித்தாந்த சாகரமாகவும், முதுபெரும் புலவராகவும் இலக்கியகலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் விளங் கினர்.
ஆண்டுகள் தோறும் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையார் நடத்திவந்த அகில இலங்கைச் சைவமகாநாட்டுக்குத் தலைமை தாங்க வந்த பேராசிரியர் பவா னந்தம்பிள்ளை, திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார், உயர்திரு. க. வச்சிரவேலு முதலி பார், ஈசான சிவாசாரியர், சச்சிதானந்தம் பிள்ளை ஆகியோர் பண்டிதமணியின் நுண்

fகளின் சிந்தனைகள் ஷதங்கள்
பிப்பணிப்பாளர் இ. சுந்தரலிங்கம் அவர்கள்
மாண் நுழை புலமையை வியந்து பாராட் டுக்கள் செய்துள்ளனர். மேலும் கலைமகள் ஆசிரியர் பூரீ கி. வா. ஜகநாதையர் அவர்கள் அடிக்கடி வரும்போது எல்லாம் பண்டிதமணியைச் சந்தித்துக் கலந்து உரை யாடுவதில் ஒரு தனி இன்பம் கொண்டிருந் . F fT ؛ژی
தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந் தரப்புலவர் அவர்கள் 'கற்ருர் விழையும் கற்பகதரு, வண்டமிழிதமறி பண்டிதமணி? என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்தார்கள்.
பண்டிதமணியவர்கள் பேச்சுக்கள் கேட் டவர்களை வசீகரிக்கும் இயல்புடையன. அவருடைய எழுத்துக்களும் சிறிதாகச் சொல்லிப் பெரிது உணரவைக்கும் ஆற்றல் படைத்தவை. பண்டிதமணியவர்கள் ராவ் பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்க ளிடத்திலும் நாவலர் பெருமானிடத்திலும் பற்றுக்கள் வைக்கக் காரணங்கள் பலவற் றுள் ஒன்று ஏட்டிலிருந்த நூல்களைச் சரி பிழை பார்த்து அச்சுவாகனம் ஏற்றியமை யாகும். மகாமகோபாத்தியாயர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் சங்க நூல்களை அச்சிட்டு வெளியிட முன்னேடி யாக அமைந்தது, திரு. சி. வை. தாமோ தரம்பிள்ளை அவர்கள் வெளியிட்ட கலித் தொகைப் பதிப்பாகும். இதனுல் தமிழகத்தி லும் தமிழ் சைவத்துறைக்கு மறுமலர்ச்சி தந்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்களே என் பது பண்டிதமணியின் தாரக மந்திரம்.
பண்டிதமணி யவர்களின் தக்ஷகாண்ட உரை சைவ உலகுக்கோர் வரப்பிரசாதம். அதனைப் பேராதனைப் பல்கலைக் கழகம் யானை மேல் ஏற்றி வலம் வந்தது உண்மையில் பண்டிதமணிக்குச் சிறப்பெனலாகாது. அவ ரிடத்து உதித்த தமிழின் உயர்வுக்கான சிறப்பு எனலாம்.
பேசுவது போலவே எழுதுவார். எழுது வது போலவே கவிதை செய்வார். ஒவ் வொரு சொல்லிலும் நயம், ஹாஸ்யம் சொட்டும்.

Page 289
- 2
பண்டிதமணி அவர்களது உத்தம மாணக்கர்கள் ஈழமெங்கணும் ஆசிரியமணிக ளாகத் திகழ்ந்து வருகின்றர்கள். சிறந்த ஒரு கல்விப் பாரம்பரியத்தை ஏற்படுத்தி வைத்த பெருமையும் பண்டிதமணி அவர்க ளுக்கு உண்டு.
பண்டிதமணி அவர்களூடாக நாவலர் பெரும) ன் அவர்களைப் பற்றிச் சிந்திக்கும் போது மகாவித்துவான் க அம்பிகைபாகர் அவர்களும் நடராஜ ஐயரவர்களும் நம் மனக்கண்முன் தோன்றுகின்ருர்கள். சித்தி யாருக்கு உரை கண்டவர் இணுவில் நட ராஜ ஐயர் அவர்கள். இவர்கள் வரிசையில் இணுவிலம்பதியை அலங்கரித்த இன்னு மொரு பெரியார் இயற்றமிழாசிரியர் அ. க. வைத்திலிங்கம்பிள்ளை அவர்கள். இவர்களது சிறப்பு நோக்கியே பண்டிதமணி அவர்கள் இணுவிலை ** இணையில் ?? என்று குறிப்பிட் டார்கள் போலும் இணையில்லாத ஊர் இணுவில். பண்டிதமணி அவர்களது பாராட் டுக்கு உரிய இணையில் எனப்படும் இணுவி லில் தோன்றிய யான் பண்டிதமணி அவர்க ளது ஞாபகமாக யாழ். நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் சைவ தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் ஒன்றினை யாழ்ப்பாணம் பிரதேசக் கல்வி அதிபதி என்ற தோரணை யில் 12-10-88இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றேன். யாழ், கல்வித்திணைக்களத்தோடு இணைந்து இயங்கி வரும் நாவலர் தர்மகர்த்தா சபைக்குப் பண்டிதமணி அவர்கள் காலத்துக்குக்காலம் கூறிவந்த ஆலோசனைகள் மிகவும் காத்திர
to frog of
நாவலருக்குப் பின் நமக்கோர் காவலர் எனத் திகழ்ந்தவர்கள் ** இந்து போட் " இராசரத்தினம் அவர்கள். சைவப் பெரி யார் சு. இராசரத்தினம் அவர்களின் தூய முயற்சியினல் பாடசாலைகள் பல தோன் றின. திருநெல்வேலியில் சைவாசிரிய கலா சாலையும் தோன்றியது. திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் அதிபராகப் பணி புரிந்தவரான மயிலிட்டி சி. சுவாமிநாதன் அவர்களும் பண்டிதமணி அவர்களுக்கு வழி காட்டியாயமைந்தவரான உப அதிபர் திரு. பொ. கைலாசபதி அவர்களும் கல்வி உலகிற் பிரசித்திவாய்ந்தவர்கள் நல்லபண்பாளர்கள்.

سي 30
இவர்களுடன் ஆரம்பம் முதலே பணி புரிந்தவர் பண்டிதமணி அவர்கள். அதிபர், உப அதிபர், பண்டிதமணி மூவரும் மும் மூர்த்திகள் என எல்லாராலும் பாராட்டப் பட்டவர்கள். இப் பாராட்டுக்குரியவர்களை நினைவுகூரும்பொழுது சைவ வித்தியாவிருத் திச் சங்கம் எம்முன் காட்சி தருகின்றது. பண்டிதமணி அவர்கள் பின்வருமாறு கூறு கின்றர்கள்:
* சைவ வித்தியாவிருத்திச் சங்கம் சைவாசிரிய கலாசாலை மூலம் ஆயிரக் கணக் கில் சைவ ஆசிரியர்களையும், ஆசிரியைகளை யும் தோற்றுவித்து நூற்றெண்பதுக்கு மேற் பட்ட சைவப் பாடசாலைகளை ஆங்காங்கு தாபித்தும், எத்தனையோ சைவப் பாடசாலை கள் தோற்றுதற்கு வழிசெய்தும், உன்னத மானதொரு சைவ அநாதசாலையைத் தாபித் தும், சைவப்பிள்ளை தன் சொந்தச் சம யத்தை அறிதற்கு வழிசெய்திருக்கின்றது. அவ்வாறே பெளத்தப்பிள்ளை புத்தமதத் தைப் பயில வழியிருக்க வேண்டுமென்பதே மேற்படி சங்கத்தின் கருத்தாயிருந்தது : அன்றி மற்ருெரு சமயத்துக்கு இடையூறு செய்யாது சமயத்தை வளர்த்தலே அதன் குறிக்கோள்."
தலைமுறை கண்ட தலைமகளுன பண்டித மணி அவர்கள் பேச்சின் மூலமும் எழுத் தின் மூலமும் சாதனையின் மூலமும் தமிழ் பேசும் மக்களின் உள்ளங்களில் மட்டுமன்றி ஏனைய இன மக்களின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கின்றர்கள்.
இக் காலத்தில் ஒரு பல்கலைக் கழகத்தை நடத்துவதென்றல் எத்தனையோ அணி அடுக்குகள் வேண்டும். வசதிகள் குறைந்த அந்தக் காலத்திலே மும்மொழிப் பல்கலைக் கழகம் போன்றதொரு காவிய பாடசாலை யைப் பண்டிதமணி அவர்கள் நடத்தினர் என்ருல் அவரது முயற்சி எத்துணைப் பெரி தாக இருந்திருக்கும்.
பண்டிதமணி அவர்களது கல்விச் சேவையை டாக்டர் என். எம். பெரேரா, கெளரவ எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டார நாயக்கா உள்ளிட்ட அறிஞர்கள் பல்லாண்டு களுக்கு முன்னமே பாராட்டியிருக் கின்றர்கள்.
பண்டிதமணி அவர்களது பூதவுடல்தான் மறைந்தது. அவர்கள் இப்பொழுதும் அறி வுலகிற் சஞ்சரித்துக் கொண்டே இருக்கின் முர்கள்,
சைவ தமிழ்ப் பேரறிஞர், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களது சிந்தனைகள் அறியாமையாகிய நோயை மாற்றும் பரம ஒளஷதங்களாம்.

Page 290
University Pandithama ni S
N. Sga
In conferring a Dictorale of Literature on Pandithamani S, Kanapathipillai the University of Ceylon is confirming the recognition the Tamil literary world granted him years ago when it called him “Pandithamani' - a gem among scholars. For more than fifty years he has established his reputation as the most effective exponent of the Navalar tradition in Sri Lanka and South India.
If we look at Tamil prose in a particular way today it is because of Navalar. If we are able to sift genuine poetry and inspired lyrics from glorified verse it is because of Navalar.
Pandithamani who had his early grounding under Navalar's nephew-T. K. and poets of the Navalar school like Chunnakann Kumaraswamy Pulavar. acknowledged Navalar's pre-eminence by constant reference to the Savant's comments, criticisms and points of departure; and yet Pandithamani's genius, the depth of his dynamic personality, his subtle blend of idealism and sarcasm looks like originality personified.
Pandithamani made a profound and lasting impression on all lovers of Tamil literature and criticism. In fact Tamil literary criticism in his hands was something unknown before his popular book “Literary Appreciation' in Tamil and his

Honours , Kanapathipilai
Daratnam
numerous writings and speeches Kamba Ramayanam, the Sangam works, the five great epics his attack on Silapadhikaram which according to Poet Bharathi was considered soul-stirring and many other tracts and treatises made him the most controversial figure here and in South India.
By propensity and profession Pandithamani is a literary critic. His criticisms are perspicacious, bold and unequivocal. He could challenge with success the mighty myth that Tamil literature at di Sanskrit learning were the sole preserves of Brahminic tradition. The heroine of Silapadhikaram-the Goddess Kannaki who for long had conveyed the incarnation myth was successfully swept off her pedestal by the thrust of Pandithamani's wit. He was indeed an iconoclast, an anti-establishment figure for most of his life.
A highly respected teacher, a powerful speaker who could keep huge gatherings spel-bound by his inimitable wit and eloquence, he had an infinite capacity to inspire his students to pursue the study of Tamil poetry as a serious discipline and unearth the glory of poets before him like Sinnathamby Pulavar, Sivasambu Pulavar and Somasundara Pulavar whose poetry and patriotism he was able to immortalise both with his tongue and his pen.
(Ceylon Daily News. 1st June 1978)

Page 291
பண்டிதமணியின் சரித்
செல்வன் ச. தி
* உருவத்தால் நெடியன், ஒங்கும் உள்ளத்தால் நெடியன், பண்டார் பருவத் தால் முதிர்ந்தான், ஞானப் பதத்திலும் முதிர்ந்தான். '
இத்துணைச் சிறப்புக்களோடும் கூடிய பெருந்தகையாளர்தான் மூதறிஞர், இலக் கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை ஐயா அவர்கள்.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதி யிலே பிறந்து இருபதாம் நூற்றண்டின் பிற்பகுதிவரை வாழ்ந்த பெருமைக்குரியர் பண்டிதமணி ஐயா அவர்கள். பண்டிதமணி ஐயா அவர்களது சரித்திரம் தமிழ்ச் சரித் திரம் ; சைவ சரித்திரம்,
ஈழநாட்டுப் பெரியார் சரித்திரத்தில் நாவலர் பெருமானுக்குப் பின்னர் சரித்திர நாயகராகத் திகழ்ந்த பண்டிதமணி ஐயா வைப் பெற்றெடுத்த பெற்ருேர்கள் பெரும் பாக்கியசாலிகள். பண்டிதமணி ஐயாவின் அன்புத் தந்தையார் மட்டுவிலூர் சின்னத் தம்பியாரும் தாயாரான தனங்கிளப்பு வள்ளியம்மையாரும் விநாயகர் திருவருளே வேண்டிப் பெற்ற பிள்ளையே கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை யில் சுடர் விட்டுப் பிரகாசித்த மும்மணித் தீபங்களில் ஒரு தீபந்தான் பண்டிதர் கண பதிப்பிள்ளைத் தீபம். மயிலிட்டி அதிபர் சுவாமிநாதன் அவர்களும் மெளன தவமுனிவ ரான உப அதிபர் திரு. பொ. கைலாசபதி அவர்களும் மணித் தீப வரிசையைச் சேர்ந் தவர்கள். திருநெல்வேலி காவிய பாடசாலை அந்தக் காலத்திலேயே மும்மொழிப் பல் கலைக் கழகம். திருநெல்வேலியில் காவிய பாடசாலை மூலம் தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம் என்பன வளர்ச்சி பெற்றன.

திரடி தமிழ்ச் சரித்திரம்
ருஞானசம்பந்தர்
1951இல் யாழ். பரமேசுவரக் கல்லுர
ரித் தமிழ் விழா கணபதிப்பிள்ளை அவர்கள். பண்டிதமணி என்ற சிறப்புப் பட்டத்தைப்
பெற வழிவகுத்தது. பண்டிதமணியின் புகழ் எண்டிசையும் பரவியது. தமிழ் விழாவில்
தமிழ் பற்றிப் பேசிய பண்டிதமணி அவர்
கள்தான் வண்டமிழின் இதம் எப்படி என்று
எடுத்துரைக்கத்தக்கவர் என்கிருர் தங்கத்
தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள்.
பண்டிதமணி ஐயா அவர்களது எழுத் தும் பேச்சும் அகில உலகிலுள்ள இரசிக உள்ளங்களை எப்பொழுதும் நிறைவித்தன. வாழ்க்கையில் உண்மை நைஷ்டிகப் பிரமி சாரியான பண்டிதமணி ஐயா அவர்கள் எண்பத்தேழு ஆண்டுகள் வரை எம்மிடையே வாழ்ந்து எங்களே - ஈழத் தமிழர்களைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தார் என்று அறிஞர் உலகம் பெரிதும் பாராட்டுகின்றது.
ஈழத்தில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் வரிசையில் முதல் இடத்தில் வைத்து இலங்கைப் பல்கலைக் கழகம் முதன் முதலில் *இலக்கிய கலாநிதி" என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்த பெருமைக்கு உரியவர் பண்டிதமணி ஐயா அவர்கள். திருநெல் வேலி ஞானப்பிரகாச முனிவர் வரிசையில் பண்டிதமணி ஐயா அவர்கள் திருநெல்வேலி யில் வாழ்ந்தார் என்ருல் அது திருநெல் வேலிக்குரிய சிறப்பு என்று கூறுவதில் யான் மிகவும் பெருமிதமடைகிறேன்.
பண்டிதமணி ஐயா அவர்களது போதனை களைக் கடைப்பிடித்து வாழ்வோம் என்று சங்கற்பம் செய்வோமாக.
(ஈழமுரசு, 27-6-1986)

Page 292
பண்டிதமணியின்
சுப்பையாபிள்ளை இரா
பண்டிதமணியிடம் உள்ள பெருமை என்ன? ஏனைய பண்டிதர்கள் வித்துவான் களிலும் எந்த வகையில் அவர் மேன்மை யுடையவர்? என்ற விஞக்களைச் சிலர் எழுப்புவது உண்டு. ஒருவரை நிரம்பிய கல்விமான் (Scholar) என்று பாராட்டும் போது அவரிடம் நுண்மாண் நுழைபுலம், கூர்த்தமதி, எண் பொருளவாகச் செலச் சொல்லும் திறமை, புதுமையான கருத்துக் களை (Originality) எடுத்துரைத்தல் இன் னேரன்ன சிறப்பியல்புகள் அமைந்திருத்தல் வேண்டும்.
பண்டிதமணி திருநெல்வேலி, சைவாசிரிய கலாசாலையில் முப்பது ஆண்டுகள் விரிவுரை யாளராகக் கடமையாற்றியவர். பிரசித்தி பெற்ற ஆங்கிலக் கல்லூரிகளில் வரன் முறை யாகக் கல்வி கற்றவர்கள், பாலபண்டிதர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள், பல நூற் பயிற்சியும் அதுபவமும் வாய்ந்த ஆசிரியர் கள் ஆகிய பலதரப்பட்டவர்கள் அவரிடம் ஆசிரியப் பயிற்சி பெற்றர்கள்,
ஆசிரியப்பயிற்சி பெறும் மாணவர்களின் பாடவிதானத்தில் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்னும் ஐந்திலக்கணங்களின் முக்கிய அம்சங்களும் சில இலக்கியங்களும் உண்டு. அவர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு ஆசிரியப் பணியைச் செய்யும் போது இலக்கண விதிகளையும் இலக்கியங் களையும் தமது மாணவர்களுக்குச் சுவைபடக் கற்பிக்கவேண்டும். இதுவே ஆசிரியப் பயிற்சி பெறுவதன் முதன்மையான குறிக்கோள். ஆகையால் இத்தகைய பயிற்சியைப் பெறச் செய்தல் ஆசிரிய கலாசாலைப் பாடவிதானத் தின் மற்றதோர் அதிமுக்கிய அம்சமாகும்.
பிரசித்திபெற்ற ஆங்கிலக் கல்லூரி ஒன்
றில் நான் கல்வி கற்றேன். தமிழ் நூல்
களையும் சைவசமயப் பனுவல்களையும் அறி
ஞர்களிடம் படித்துணரவேண்டும் என்ற
ஆர்வம் வற்ருத ஊற்ருக என் உள்ளத்தில்
30

தமிழ்ப் புலமை
ஜநாயகம் அவர்கள்
இயல்பாக இருத்து வந்தது. தமிழ் நூல் களைப் படிப்பதிலும் தமிழ் அறிஞர் பல ரிடம் சென்று என் ஐயங்களைத் தெளிவதி லும் நான் ஈடுபட்டிருந்தேன்.
இஃது இவ்வாருகப் பண்டிதமணியின் ஆழ்ந்தகன்ற நுண்ணறிவையும் கொள் வோன் கொள்வகையறிந்து பாடஞ் சொல் லுந் திறனையும் பலர் சொல்லக் கேட்டேன். 1943ஆம் ஆண்டு நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் திருவிழாக்கள் நடந்துகொண்; டிருந்த காலம். ஒரு சனிக்கிழமை பண்டித மணியின் இல் லத்துக் குச் சென்றேன். என்னை நானே அறிமுகஞ் செய்துகொண் டேன். 'நீர் ஒரு புதுமாதிரியான ஆளாக இருக்கிறீர். ஒருவருடைய சிபார்சுமின்றிக் கொஞ்சம் தமிழ் படிக்க விரும்புகிறேன் என் கிறீர். முதலில் என்ன படிக்க விரும்புகிறீர்?" என்று கேட்டார் பண்டிதமணி அவர்கள். முதலில் யாப்பிலக்கணம் படிக்க விரும்புகி றேன் என்றேன். மலர்ந்த முகத்துடன் கனிந்த சொல்லில் 'நாளைக்கு வாரும் ' என்ருர்.
மறுநாள் அவரிடம் சென்றேன். பாடம் கிரமமாக நடைபெற்றது. யாப்பருங்கலக் காரிகை மிக விரைவில் படித்து முடிந்தது. தினமும் அப்பியாசங்களைத் தருவார். கிரம மாக விடைகளை எழுதிச் செல்வேன். மட் டற்ற மகிழ்ச்சியுடன் ' உம்மைப்போன்ற மாணவர்களைக் காண்பது அரிது. நீர் தின மும் வரலாம்" என்ருர், அப்போது எனக்கு 20 வயசு முடிந்துவிட்டது. பண்டிதமணிக்கு 44 வயசு முடிந்துவிட்டது. என்ருலும் என்னை மாணவன்போலக் கருதாமல் நண்ப ஞகவே அவர் தடத்தி வந்தார். இன்ன நூல்தான் படிப்பது என்ற நியதி இல்லை. சுவையான பாடல்களைப் பல இலக்கியங்களி லிருந்தும் எடுத்து விளக்கம் சொல்லுவார். பிரதானமான தமிழ்நூல்கள் எல்லாம் என் னிடம் இருந்தன. அவர் படிப்பித்த செய் யுள்களையும் அவற்றுக்கு முன்பின் உள்ள செய்யுள்களையும் வீடு சென்றவுடன் படித்து

Page 293
விடுவேன். மறுநாள் கேள்விகள் கேட்பார். விடைகளைச் சரியாகச் சொல்லுவேன். திருக் குறளாயின் பரிமேலழகர் உரையையும் சொல்லுவேன், இப்படியான ஞாபகசக்தியை எப்படிப்'.பெற்றீர் என்று மனங்குளிரப் பாராட்டுவார். எங்கள் நட்பு மேலும் மேலும் வளர்ந்துவந்கது
c:ჯვა
நன்னூ7ற் காண்டிகையை ஒரு புது முறையில் படிப்பித்தார். குத்திரங்களை முதலில் சொல்லொடு பொருளாக விளங் கப்படுத்துவதில்லை. அவற்றிலே அடங்கி புள்ள விதிகளுக்குத் தினசரி வாழ்க்கையி லிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் உதார ணங்களை எடுத்துக்காட்டி விதிகளை விளங் கச் செய்வார். பிழையானவகையில் பொருள் கொள்ளக்கூடிய உதாரணங்களைச் சொல்லி அவற்றை வேறுபடுத்திக் காட்டி மூல விதி களைச் சரியானவகையில் உணரவைப்பார். முடிவில் இலக்கண சூத்திரங்களுக்கும் பொருள் சொல்லுவார். இந்தமுறை என் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. இப்படி பாக இலக்கணம் இலக்கியம் இரண்டை யுங் அவரிடம் கற்று வந்தேன். அணி இலக் கணத்தையும் படிப்பித்தார். அணி என்ருல் பாது? அணிகள் தோன்றக் காரணம் என்ன? இவற்றை உலக வழக்கிலும் செய்யுள் வழக் கிலும் உதாரணங்கள் காட்டி அணி இலக் கணத்தின் சிறப்பியல்புகளை விளக்கினர். பொருள் இலக்கணத்தின் நுண்மைகளையும் இலக்கியங்களோடு பொருத்திக் காட்டினர். பண்டிதமணி வித்துவான் சுப்பையபிள்ளை யிடம் நன்னூல் விருத்தியுரை, தொல்காப் பியம், இலக்கணக்கொத்து, பிரயோக விவே கம், இலக்கண விளக்கச் சூருவளி, தருக்க சங்கிரகம் ஆகிய நூல்களையும் சில இலக் கியங்களையும் வரன் முறையாகப் படித்தவர். வித்துவானின் கூர்த்த மதியிலும் நுண்மாண் நுழை புலத்திலும் பண்டிதமணிக்கு மட் டற்ற மதிப்பு உண்டு. தன்னிடம் படிப்ப தோடு வித்துவானிடமும் சென்று அந்த நூல்களையும் அவரிடம் படிக்கும்படி சொன் னர். நானும் அல்வாற்ே செய்தேன்.
இலக்கண நூல்கள் இலக்கியங்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள் திருமுறைகள்

234 -
ஆகிய தலைசிறந்த நூல்களையும் இவற்றுக்குப் பிந்திய காலத்துப் பக்தி இலக்கியங்களையும் அறிவு விருத்தியின் பொருட்டும் ஆன்ம ஈடேற்றம் கருதியும் மிக்க ஆர்வத்துடன் பக்தி சிரத்தையோடு கருத்தூன்றிப் படிப்ப வர்கள் பலர் யாழ்ப்பாணத்தின் பல பாகங் களில் இன்றும் இருக்கின்றர்கள். அத்தகை யோரை யாழ்ப்பாணத்தில் எக்காலமும் காணலாம்.
1967ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிப் பிரார்த்தனை மண்டபத்தில் ஒரு மாசகாலம் தினந்தோறும் இரண்டு மணி நேரம் சிவஞானபோதச் சிற்றுரையைச் சைவசித்தாந்தச் செம்மல் காஞ்சிபுரம் க. வச்சிரவேல் முதலியார் விரிவாகப் பாடஞ் சொன்னர். நூற்றைம்பது அறிஞர்கள் அவ்விரிவுரைகளைக் கிரமமாகக் கேட்டுப் பயனடைந்தார்கள். பண்டிதமணியும் வித்துவான் சுப்பையபிள்ளையும் முதல் வரிசையில் சித்திரப் பாவையின் அத்தக அடங்கி என்ற அமைவுடன் இருந்து மெய்ம் மறந்து கேட்டு மகிழ்ந்தார்கள். அங்கே வந்த அறிஞர்கள் அனைவரும் மிக்க விநயத் துடன் அவ்விரிவுரைகளைக் கேட்டுக்கொண் டிருந்தபோது திருத்தக்கதேவர் சீவகசிந்தா மணியில் ஏமாங்கதநாட்டின் நிலவளம் கூறும் செய்யுளொன்று ஞாபகத்துக்கு வந்தது.
சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று, மேலலார் செல்வமே போல்தலை நிறுவித், தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.
நிரம்பிய கல்வியுடையவர்கள் எப்போ தும் மிக்க விநயத்துடன் இறுமாப்பின்றித் தலைவணக்கமுடைய சாந்த சொரூபிகளாய் இருப்பார்கள். இக் கருத்தை தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சி' என்ற சொற்ருெடரல் திருத்தக்க தேவர் இந்தச் செய்யுளில் கூறினர்.
பரீட்சைக்குத் தமிழ் நூல்களைப் படிப்ப வர்கள் படிக்கும்முறை ஒருவகை; அறிவு விருத்திக்கும் ஆன்ம ஈடேற்றத்துக்கும் நூல்

Page 294
களின் உட்பொருளை ஆராய்ந்து படிப்ப வர்கள் கையாளும் முறை வேறு வகை யானது. அவர்கள் படிக்கும்முறை மிக்க நுண்மையுடையது.
பணடிதமணியின் நண்பர்கள் அனைவ ரும் அருங்கலை விநோதர்கள். சனி, ஞாயிற் றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களி லும் வசதிக்கேற்ப அவர்கள் பண்டிதமணி யிடம் சென்று பல நுண்பொருள்களைக் கலந்துரையாடித் தங்கள் ஐயங்களைத் தெளிந்துகொண்டு செல்வார்கள். அந்த அறிஞர்களின் வித்துவத் சம்பாஷணையைக் கேட்கும்போது நாலடியார்ச் செய்யுளொன் றின் உண்மை புலணுகும் :
தவலரும் தொல்கேள்வித் தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி.
(செய்யுள் 137)
வித்துவத் சம்பாஷணையில் பண்டிதமணியின் சமயக் கருத்துக்கள் சில : (1) விஞ:
சித்தாந்த சாத்திரங்களை ஏன் படிக்க வேண்டும்?
egonL :
ஆன்ம ஈடேற்றத்துக்கு உயிர் நாடி யானவை சைவத் திருமுறைகள், திருமுறை களின் நுண்பொருளை உணர்வதற்கு மெய்கண்ட சாத்திரங்களை அவசியம் கற் றுணர்தல் வேண்டும்.
(2) விஞ:
பாராயணத்துக் குத் திருமுறைப் பாடல்கள் மாத்திரம் உரியவை என்று கூறப்படுவது ஏன் ?
விடை :
திருமுறைப் பாடல்களை அருளியவர்கள் மன்னு பசுகரணங்கள் சிவகரணங்களாக வாய்க்கப்பெற்ற மெய்யடியார்கள். அவர்கள் சாக்கிரத்தே அதீத நிலையை அடைந்த சர்வ சங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள். அவர்க ளுடைய கண்ணுக்கு உலகப் பொருள்கள்

.سس- 235
காட்சிப்படுவதில்லை ; பரஞானந் தலைப் பட்டுச் சிவாதுபவம் ஒன்றிலேயே மூழ்கி இருப்பவர்கள்; பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் LumriTntrř. அவர்களைப் 'பராவு சிவர் " என்கிருர் அருனந்தி சிவம்.
பராவு சிவர் - உலகில் மனித வடிவத் தில் சஞ்சரிக்கின்ற சிவமேயாவர்.
பராவுதல் - சஞ்சரித்தல்;
சிவர் - சிவம் என்பதன் பன்மைச் சொல். ஆகையால் திருமுறைப் பாடல்கள் அருள் வாக்குக்கள். அவை மந்திரசக்தி உடை யவை. அப்பாடல்களைச் சித்த சுத்தியோடும் பக்தி சிரத்தையோடும் பாராயணம் பண்ணி வந்தால் இஷ்ட சித்திகளும் வீடு பேறும் சித்திக்கும் என்பது நிச்சயம்.
(3) விஞ :
நியமந் தவருத இறைவழிபாட்டின் பயனை இப் பிறவியிலேயே காண முடியுமா?
விடை :
சாதகர்களின் உள்ளத்தில் காம குரோத லோப மோக மத மாற்சர்யம் ஆகிய துர்க் குணங்கள் படிப்படியாக நீங்கும்; சாந்த நிலையும் அமைதியும் உண்டாகும் சாத்து விக குணம் மேலிட்டு உலக இன்பங்களில் உவர்ப்பு உண்டாகும். இவற்றைச் சாத கனே உணரக்கூடியதாயிருக்கும். இந்த நிலை முதிர்ச்சியடைய வீட்டின்பம் சித்திக்கும்.
(4) விஞ:
தேவார திருவாசகப் பனுவல் களைப் பொருளுணர்ந்து ஓதவேண்டுமா?
விடை : சிவபுராணத்தின் கடைசி மூன்று அடி களில்,
சொல்லிய பாட்டின்
பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின்
உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து என்றும்,

Page 295
திருத்தாண்டக மொன்றில்,
சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளே வாங்கா தானே என்றும் கூறப்பட்டுள்ளன.
திருப்பாடல்களின் பொருளை உணர்ந்து அப்பொருளோடு மனம் ஒன்றுபட்டுப் பாரா யணம் செய்யாவிடில் அதனை மெய்ம்மை யான வழிபாடு என்று சொல்ல முடியாது. பொருளை உணராவிடில் மனம் ஒன்று படாது. ஆதலால் பொருளுணர்ந்து பாரா யணம் செய்தல் அவசியம்.
(5) விஞ :
திருநள்ளாற்றுத் திருத்த 1 ன் ட கீ மொன்றில்,
சலங்கெடுத்துத் தயாமூல
தன்ம மென்னும் தத்துவத்தின் வழிநின்று
தாழ்ந்தோர்க் கெல்லாம் நலம்கொடுக்கும் நம்பியை
நள்ளாற் றன நானடியேன் நினைக்கப்பெற
றுய்ந்த வாறே. என்று பாடுகின்ருர் அப்பர் சுவாமிகள்.
தயாமூல தன்மமென்னும் தத்துவத்தின் வழிநின்று தாழ்ந்தோர்க்கு என்று கூறியதன் பொருளென்ன ?
afava
அப்பர் சுவாமிகள் நெடுங்காலம் சமண ஞய் இருந்தவர், சமணமும் பெளத்தமும் கடவுட் கொள்கை இல்லாத சமயங்கள். இறைவன் திருவருளின் சகாயமின்றி மனித முயற்சியாலே யாவற்றையும் கைகூடச் செய்யலாம் என்ற கோட்பாடுடையவை. அப்பர் சுவாமிகள் சைவ சமயியாகிச் சூலை தோய் நீங்கப்பெற்று முற் பிறப்புக்களிற் செய்த தவ விசேடத்தின் நற்பயஞல் அவ ருக்குச் சிவஞானம் தலைப்பட்டது. அப் போது திருவருளொன்றே பாசபந்தங்களால் உண்டாகும் துன்பங்களைப் போக்கிப் பேரின்பப்பேற்றை நல்கும் என்பதை முற் றும் உணர்ந்தார். அந்தச் சிவாதுபவப்

236 -
பேற்றினுல் பெற்ற இன்பத்தைத் "தயா மூல தன்ம மென்னும் தத்துவத்தின் வழி நிற்றல் " என்ருர், அகங்கார மமகாரங்கள் நீங்கப்பெற்று, திருவருள் வசப்பட்டு நிற்க வேண்டும் என்பதே அத்தொடரின் பொருள்.
(6) விணு :
மணிவாசகர் தனக்கு இறைவன் பெண் ணுசையை நீக்கியதையும் அதனுல் மும்மல பந்தம் நீங்கிச் சிவப்பேறு கிடைத்ததென் றும் பல திருவாசகப் பாடல்களில் பாடு கின்ருர், மற்றைய சமய குரவர்களின் LiT t-ả86iải) அத்தகைய கருத்துக்கள் இல்லையே. பெண்ணுசையை விடுவது அவ ருக்குக் கஷ்டமாக இருந்ததா?
திருவள்ளுவர் துறவற வியலில் அவாவறுத்தலே ஞானத்தின்கடைசிப்படியாக வைத்திருக்கின்ருர், பரிமேலழகர் அவ்வதி காரத்தின் அவதாரிகையில் அவாவறுத்த லுக்கு வாசளுமலம் நீங்குதல் என்ற பொருள் பட விளக்கம் தருகிறர். 'தூஉய்மை என் பது அவாவின்மை" என்ற குறட் பாவுக்கு "ஒருவருக்கு வீடுபேறென்று சொல்லப்படு வது அவாவின்மை " என்று பொருள் கூறு கிருர், தூய்மை - பரிசுத்த தன்மை, அதனை யுடைய வீடு பேற்றுக்குப் பண்பாகு பெய ராயிற்று, இச்சை நிவிர்த்தி உண்டாவது எளிதன்று. " ஒருவனுடைய உள்ளத்தில் உள்ள இச்சைகள் எல்லாம் நீங்கப்பெற் றவன் பிரமமாகின்ருன்?" என்று கடோ: நிடதம் முடிந்த முடிபாக அந்த நூலின் இறுதியில் கூறுகின்றது.
திருவள்ளுவர் துறவறவியலை விரதம், ஞானம் என இரண்டாகப் பிரிக்கிருர், விரதங்களால் மனமrசு நீங்கியவனுக்கே மெய்ஞ்ஞானம் லபிக்கின்றது. அவர் கூறும் விர தங்களுள் கூடாவொழுக்கத்தைத்
தவிர்க்கவேண்டும் என்பதும் ஒன்று. கூடாவொழுக்கம் என்பதற்குப் பரிமே லழகர் கூறும் விளக்கம், "தாம் விட்ட
காம இன்பத்தை மன உறுதி இன்மையால் பின்னும் விரும்புதலே ?? என்பதாம்.

Page 296
2 -----۔
அப்பர் சுவாமிகள் கோயில் திருத்தாண்
சுரும்பமரும் குழல்மடவார்
கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய்த்
துறந்தோ ருள்ளப் பெரும்பயனைப் பெரும்பற்றப்
புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம்
பிறவா நாளே.
என்கிருர்.
பெண்ணுசையை அறவே ஒழித்தவ னுக்கே சிவப்பேறு சித்திக்கும் என்பது அப்பர் சுவாமிகள் பெற்ற அநுபவ ஞானம். பெண்ணுசையை நீக்குவது எளிதன்று. ஆகை யால் மணிவாசகர் அதனை அழுத்திக் கூறினர் எனலாம்.
(7) விணு :
பட்டினத்தடிகள் பெண்களை மிக இழிவு படுத்திக் கூறுகிருர். இது ஏன்?
விடை : ஞானம் தலைப்படுவதற்குப் பிரபஞ்ச வைராக்கியம் அவசியம். அதற்கு யாக்கை யின் இழிவை மக்கள் உணரவேண்டும் என்று அப்படிக் கூறினர் போலும். ஞான சாதனைக்கு வைராக்கியம், அப்பியாசம் ஆகிய இரண்டும் அவசியம் என்று சந்தான குரவர்கள் கூறுவதைப் பரக்கக் காணலாம். மணிவாசகரும்,
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து உளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை என்று யாக்கையின் இழிவைக் கூறுகிருர். அருணந்தி சிவம் ஞான மார்க்கத்துக்கு வேண்டிய சாதனையை (அப்பியாசத்தை)க் கூறும்போது,
ஞான நூல்தனை ஒதல் ஒதுவித்தல் நற்பொருளைக் கேட்பித்தல்
தான்கேட்டல் நன்கு ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும்
எழில்ஞான பூசை. 3.

57 -
என்று 8ஆம் சூத்திரத்தின் 23ஆம் செய்யூ
ளிற் கூறுகிறர்.
சொல்லாராய்ச்சிகளிற் சில :
(1) வினு:
"கடனை வாங்கித் திருப்பிக் கொடாதவன்
மறு ஜன்மத்தில் பண்டி ம்ாடாகப் பிறப்
பான்’ என்று நாவலர் "கடன் படல்" என்ற
பாடத்தில் எழுதுகிருர். பண்டி என்ருடில்
என்ன ?
விடை : புழுப்பெய்த பண்டி தன்னைப்
புறமொரு தோலால் மூடி
என்கிருர் அப்பா சுவாமிகள். பண்டினன் சொல்லை இக்காலத்தில் வண்டி என எழுது கின்றர்கள். பண்டி மாடு என்ருல் வ்ண்டி இழுக்கும் மாடு என்று பொருள். பகரம் வரும் இடங்களில் வகரம் வருவதுண்டு.
ஆபணம் - ஆவணம்
பீமன் - வீமன்
பீஷ்மர் - வீஷ்மர் இப்படிப் பல உதாரணங்கள் உண்டு.
(2) விணு :
இந்தியாவில் சுெர்சு என்கிறர்கள் யாழ்ப்பாணத்தில் நுளம்பு என்கிrேம். எது சரியான வார்த்தை?
Glen
குறுந்தொகை 86ஆம். செய்யுளில்
ஆன் நுளம்பு உலம்புதொறும் உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே என்று காணப்படுகிறது. இதிலே நுளம்பு என்ற சொற் பிரயோகம் காணப்படுகின் றது. கொசு என்ற சொல்லுக்கு நானறிந்த மட்டில் இலக்கியப் பிரயோகம்' இல்லை.
(3) விணு :
பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகம் என்று பெயர் வைத்திருக்கிறர்களே. அது சரியா?
Mß?63nL :
அப்பர் சுவாமிகள் தேவாரமொன்றில்

Page 297
- 2
வென்றிலேன் புலன்களேந்தும்
வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன் ஆத லாலே
செந்நெறி அதற்கும் சேயேன்.
இதில் வளாகம் என்ற சொற் பிரயோகம் வருகிறது. அடியார் கூடியிருக்கும் இடம் என்ற பொருளில் அவர் அந்தச் சொல்லைப் பிரயோகிக்கின்றர். ஆகையால் மாணவர் கூடியிருக்கும் இடம் என்ற பொருளில் வளா கம் எனக் கூறலாம்.
இலக்கணம் கற்பிக்கும் முறைகளுட் சில:
(a) savo :
தீன், ஊண் போன்ற சொற்களேத் தொழிற் பெயராகக் கூறுவது ஏன்?
விடை : ஒரு நோயாளி வைத்தியனிடம் சென்று தனது நோயின் தன்மைகளை விவரமாகச் சொல்லுகிறன். அப்போது ஐந்து நாட்க ளாகத் தீன் ஊண் இல்லை என்கிருன். இங்கே நோய் காரணமாகத் தின்னுதல் உண்ணு தல் செய்ய முடியவில்லை என்பதே பொருள். தீன் ஊண் என்பன முறையே தின்னுதல் உண்ணுதல் என்ற பொருளைத் தருவதனல் அவை தொழிற் பெயர்கள்.
திருக்குறளில்,
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்
வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். பாத்து ஊண் உடைத்தாயின் - பகுத்து
உண்ணுதலைச் செய்வாஞயின்.
பாத்துரண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. பாத்து ஊண் மரீஇயவனை - பகுத்து
உண்ணுதலைப் பொருந்தியவன.
இந்த இரண்டு குறட்பாக்களிலும் ஊண் என்னும் சொல் உண்ணுதல் என்னும் பொருளைத் தந்து தொழிற் பெயராகி நின்றது. இவற்றைத் தல் விகுதி புணர்ந்து கெட்டு முதலெழுத்து நீண்டு பகுதி விகா Tப்பட்ட தொழிற்பெயர் என்று கூறுதல் 4քgւI.

38 -
(2) விஞ :
நட, வா, உண், உறங்கு முதலிய சொற்கள் பெயரா வினையா இடையா உரியா ?
விடை : உம்முடைய கருத்து என்ன ?
வினவியவரின் விடை : அவை வினைச் சொற்கள்,
விஞ
வினையாயின் எக்காலத்தை உணர்த் திற்று?
விடை :
முன்னிலை ஏவல்,
வினு:
நடந்தான் என்ற சொல்லில் நட என்ற பகுதி முன்னிலை ஏவற் பொருளைத் தரு கிறதா ?
fanl
இல்லை.
வினு :
கருமை எத்தகைய சொல் ?
விடை:
பண்புப் பெயர்; குண உரி என்றும் சொல்லலாம்.
வினு :
கரியன் என்பதில் கரி என்ற பகுதி கருமை என்ற பொருளைத் தந்து குண உரி யாக நிற்கிறதா ?
விடை :
ஆம். பண்டிதமணியின் முடியான விளக்கம்:
கருமை வெண்மை செம்மை முதலியன குண உரிச் சொற்கள்.
அவ்வாறே நட, வா, உண், உறங்கு முதலியன நடத்தல், வருதல், உண்ணல், உறங்குதல் என்னும் பொருளைத் தரும் தொழிலுரிச் சொற்கள்.
தொழிற் பெயரின் காரி யம ஈ கிய பொருட் புடைபெயர்ச்சியை உணர்த்தும் போது நடந்தான், வந்தான், உண்டான் உறங்கினன் என்பன வினைச் சொற்கள்.

Page 298
- 2
3) வினு:
கறை மிடறு அணியலும் அணிந்தன்று. இந்தப் புறநானூற்றுக் கடவுள் வணக்கச் செய்யுளடியில் " அணியலும் அணிந்தன்று? என்பதன் பொருளைத் தெளிவாக விளக் குங்கள்.
விடை :
அணியல் - அழகுபடுத்தல். அணித் தன்று - அழகுபடுத்தியது. வினைச் சொற் களை இரண்டாகப் பிரிக்கலாம். அவை பொதுவினை, சிறப்புவினை என்பன.
செய் என்பது பொது வினை.
நடந்தான், உண்டான் முதலியன சிறப்பு வினைகள்.
நடந்தான் - நடத்தலைச் செய்தான். உண்டான் - உண்டலைச் செய்தான்.
இவ்வாறு பொருள் விரிக்கவேண்டும். **அணியலும் அணிந்தன்று ?? என்ற தொட ருக்கு ** அழகுபடுத்தலைச் செய்தது* என்று பொருள் கொள்ளவேண்டும். அணிந் தன்று என்ற சொல் அழகுபடுத்தியது என்ற பொருளைத் தராது செய்தது என்ற பொருளை உணர்த்திற்று. இவ்வாறு சில இடங்களில் சிறப்புவினை செய் என்னும் பொது வினையாகி நிற்பது உண்டு.
விஞ: இதற்கு வேறு இலக்கியப் பிரயோகம் e GT LIT p
விடை:
புறநானூற்றின் உரையாசிரியர் கலித் தொகையிலிருந்து * உண்ணலும் உண்
ணேன்" என்ற மேற்கோளைக் காட்டுகின் முர். இதற்கு "உண்ணலையும் செய்யேன்" என்று பொருள்.

39 -
(4) விஞ:
இரு சொற்கள் புணரும்போது நிலை மொழி வருமொழிகளில் சில இடங்களில் விகாரம் நிகழ்வதற்குக் காரணம் என்ன?
விடை : * இராமன் வந்தான் ? என்ற தொடரில் நிலைமொழியின் இறுதி எழுத்தும் வரு மொழியின் முதலெழுத்தும் இடையீடின்றி உச்சரிக்கக்கூடிய ஓசை இயைபுடையனவாய் இருக்கின்றன. இங்கே விகாரம் வேண்டிய தில்லை. இதற்குக் காரணம் மயக்கவிதி உண்மை எனப்படும்.
மயக்கவிதி உண்மை - இடையீடின்றி உச்சரிக்க ஓசை இயைபுடைமை.
‘தாள்தலே "என்ற சொற்ருெடரில் ளகர ஒற்றும் தகர ஒற்றும் இடையீடின்றி உச்சரிக் கக்கூடியனவாயில்லை. ஆகையால் இரண்டள் ஓசையையும் இயைபுபடுத்த விகாரம் வர வேண்டியதாயிற்று. எனவே, "தாள்தலை? என்ற தொடர் தாடலே என விகாரப்பட்டுப் புணர்கின்றது. இது மயக்கவிதி இன்மை யால் உண்டாய விகாரப் புணர்ச்சி எனப் LuGib.
*அவனைப் புகழ்ந்தான் " என்ற தொட ரில் உள்ள இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கு நிற்பதும் உண்டு. அப்போது அவன் புகழ்ந்தான் என வரும். இப்படி எழுதினுல் இரண்டாம் வேற்றுமைப் பொருள் தோன்ருது. ஆகையால் னகர ஒற்று விகாரப்படுகின்றது. அப்போது அவற் புகழ்ந்தான் என விகாரப்படும். இங்கே ம ய க்க விதி உளதாயிருக்கவும்" விகாரம் உண்டாயதற்குப் பொருணுேக்கம் பற்றிய விகாரப் புணர்ச்சி என்று கூறுதல் இலக்கண நூல் மரபு.
எனவே மயக்கவிதி இன்மை பற்றியும் பொருணுேக்கம் பற்றியும் விகாரம் உண் டாகும்.
இவற்றை இன்னும் விரிப்பிற் பெருகும்.

Page 299
இலக்கிய கலாரி சி. கணபதிப்பி
இலக்கண வித்தகர், பண்டிதர்
ஏறக்குறைய 1930ஆம் ஆண்டுககு முன் பாகத் தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில ஆசிரியர் களிலும் குறைந்தவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையும் திருநெல்வேலிச் சைவாசிரியர் கலாசாலையும் பிறவும் அக்குறையைப் போக்குவதற்கு உறுதுணையாக இயங்கின. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பண்டிதர் ம. வே. மகாலிங்கசிவம் அவர்கள், ஆசிரிய மாணுக்கர்களுக்குத் தமிழில் ஆர்வம் மிகு மாறும் அவர்கள் மென்மேலும் உயர்தர இலக்கண இலக்கியங்களைக் கற்கத் தூண்டு மாறும் தமது நுண்ணறிவாலும், கேட்டார்ப் பிணிக்கும் பேச்சு வன்மையாலும் பெரி தும் முயன்றவர்கள். நகைச்சுவை மலிந்த அவர்களது பேச்சுப் பொது மக்களையும் கவர்ந்தது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் தமிழார்வம் மிக, அவர்களது பணி துணை செய்தது.
பிற்காலத்தில் பண்டிதமணி, இலக்கிய கலாநிதி என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்ட அக்காலத்துப் பண்டிதர் சி. கண பதிப்பிள்ளை அவர்களும் கோப்பாய் அரசி னர் ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்கள். தமது இளமை க் காலத்திலிருந்து பண்டி தர் மகா லிங்கசிவம் அவர்களோடு தொடர்பு கொண்டிருந்த பண்டிதர் சி. கணபதிப் பிள்ளை அவர்களுக்கு அவர்களோடு இரண்டு வருடங்கள் இடையருத தொடர்பு கொள்ள அவ்வாசிரியப் பயிற்சி வழிசெய் தது. தமது ஆசிரியப் பயிற்சி நிறைவெய்தி யதும் பண்டிதர் அவர்கள் திருநெல்வேலிச் சைவாசிரியர் கலாசாலையில் விரிவுரையாள ராக நியமனம் பெற்ருர்கள். சைவத்தை யும் தமிழையும் விருத்தி செய்யத் தாபிக் கப்பட்ட அக் கலாசாலைக்குப் பண்டிதர் அவர்களின் நியமனம் வாய்ப்பானதாக அமைந்தது. கோப்பாயில் பண்டிதர் மகா

தி பண்டிதமணி ள்ளே அவர்கள்
இ. நமசிவாய தேசிகர் அவர்கள்
லிங்கசிவம் அவர்களும் திருநெல்வேலியில் பண்டிதர் கணபதிப்பிள்ளை அவர்களும் பணிபுரிந்த அக் காலம் ஆசிரியப் பயிற்சி பெறுபவர்களுக்கு ஒரு வசந்த காலமாக விளங்கிற்று.
பண்டிதர்கள் இருவரும் தங்களின் சுவை மிக்க பிரசங்கங்களினல் யாழ்ப்பாணமெங் கும் தமிழ்மணங் கமழச் செய்த அக்காலத் தில், ஆசிரியப்பயிற்சி பெறவிருந்த மாணுக் கர்களுக்கு இவ்விரண்டு கலாசாலைகளில் எதில் சேர்வோமென்ற ஐயநிலை இருந்தது. இரண்டில் எது கிடைத்தாலும் நல்லது என்ற தேற்றமும் இருந்தது. எனக்குச் சைவாசிரிய கலாசாலையே கிடைத்தது. அக்காலத்தில் அக்கலாசாலையில் உப அதிப ராக விளங்கிய மேதை பொ. கைலாசபதி அவர்களின் தொடர்புபெற அக்கலாசாலை வாய்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற் பட்டது. 1933 புரட்டாதி தொடங்கி 1935 ஆவணி முடியவுள்ள அக்காலத்தில் நான் ஆசிரியப் பயிற்சி பெற்றேன்.
அப்பயிற்சிக்காலத்துப் பண்டிதர் அவர் களின் ஆரம்ப விரிவுரை இன்று நடப்பது போல என் மனத்தில் பதிந்திருக்கின்றது. சைவத் தமிழ் மகனுக்குரிய உண்மையான தோற்றம், முகமலர்ச்சி மெல் என்று ஆரம் பித்து வரவர உயர்ந்து பின் ஒரேபடித் தாய் இனிமை தவழச் சென்ற பேச்சு, ஓசை தவருது பொருள் விளங்க, இசை மருவ எடுத்தும் படுத்தும் நலிந்தும் சென்ற பாட்டு, இடையிடையே மெல்லென்ற சிரிப்பு, வேண் டிய வேண்டிய இடங்களில் அளவான அபி நயம், பொருள் விளக்கத்தில் காணப்பட்ட உத்தி ஆகிய எல்லாம் சேர்ந்து மாணுக்கர்க ளாகிய எங்களை இன்ப வெள்ளத்திலாழ்த் தின. நேரஞ் சென்றது தெரியவில்லை. பாடம் முடிந்ததும் இனி எப்போது இவர்க ளது பாடம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எங்கள் எல்லார் மனத்திலும் நிலைத்தது.

Page 300
- 24
**உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல், அனைத்தே புலவர் தொழில்?’ என்ற தேவர் வாக்கின் பொருண்மை அன்று எங்களுக்குப் புலணுகியது.
ஆசிரியப் பயிற்சிக்கு நான் செல்ல முன்பு யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கப் பண்டித பிரவேச பரீட்சை யில் சித்தியெய்தியிருந்தேன். பண்டிதர் அவர்கள் என்னையும் இன்னும் இரு வரையும் நீங்கள் எனது வகுப்புக்களுக்கு வரவேண்டியதில்லை. அந்த நேரத்தில் பால பண்டித பரீட்சைக்குரிய நூல்களைப் படித் துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந் தார்கள். ஆணுல், எங்களுக்கோ அவர்களது விரிவுரைகளைத் தவற விடுவதில் விருப்ப மில்லாதிருந்தது. இலக்கண வகுப்புக்களுக்கு நாங்கள் செல்லாது விட்டாலும் இலக்கிய வகுப்புக்களை நாங்கள் தவறவிட்டதில்லை.
1ஆம் வருடப் பயிற்சிக்காலத்தில் இறு திப் பரீட்சைக்குரிய இலக்கியங்களைக் கற்பி யாது, தாம் பல நூல்களிலிருந்தும் தேர்ந் தெடுத்த தனிப் பாடல்களேயோ, தொடர்ச்சி யான சில பாக்களையோ கற்பிப்பது அவர் களின் அக்கால வழக்கம். மாதிரிப்பாடம் நடத்துவதுபோன்ற அவர்களின் இரசனை யான கற்பித்தலால், மாணுக்கர்களுக்குத் தமிழ் இலக்கியத்தின் மேல் ஆர்வம் பிறத்த லால் அம் மாணுக்கர்கள் தாமே இலக்கியப் பாக்களின் பொருளுணர்ந்து அவற்றை நயக் கத்தக்க ஆற்றலைப் பெற்றுவிடுவர். தமிழில் அதிக கவனம் செலுத்தாது ஆங்கிலங் கற்று வந்த மாணுக்கர்களுக்கு இக் கற்பித்தல் முறையால் அதிக பயன் ஏற்பட்டது. 2ஆம் வருடத்தில் இறுதிப் பரீட்சைக்குரிய இலக் கியங்கள் கற்பிக்கப்படும். அவற்றைக் கற்ப தில் மாணுக்கர்களுக்கு அதிக சிரமம் ஏற் படுவதில்லை.
முன்னே தமிழ் இலக்கணத்தைக் கற்றி ராதவரும் சில பாட நேரங்களில்இலக்கணப் பரப்பில் நடைமுறைக்கு வேண்டிய இலக் கணங்களை அறியத்தக்கதாகத் தாமே ஒரு பாடத்திட்டம் அமைத்துக் கற்பித்து வந் தார்கள். அத்திட்டம் ஒர் இலக்கணக் கண் ணுடியாக இருந்தது.இரண்டு வருடகாலத்தில்
32

1 -
மாணுக்கர்கள் இடைநிலை வகுப்புக்களில் இலக்கணங் கற்பித்தலுக்கு வேண்டிய அறி வைப் பெற அத்திட்டம் உதவியது. நல்லை பூgரீலழறீ ஆறுமுகநாவலர் அவர்களின் இலக் கணச்சுருக்கத்தை ஆதாரமாகக் கொண் டமைந்த அத்திட்டம் பண்டிதர் அவர்களின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுவதாகும்.
தம் மாணவர்களின் அறிவாற்றல்களைப் படிப்பிக்கத் தொடங்கிய சிறிது காலத்தி லேயே மதிப்பிடக்கூடிய ஆற்றலைப் பண்டிதர் அவர்கள் பெற்றிருந்தார்கள். மாணுக்கர் களாகிய எங்களைக்கொண்டு கட்டுரை எழுது விப்பதில் அதிக கவனம் அவர்கள் எடுக்க வில்லைப்போல எனக்குத் தெரிகிறது. ஆரம்ப காலத்தில் ஒருநாள் எங்களை ஏதாவது சிறுகதை ஒன்று எழுதி வருமாறு கூறினர் கள். நான் "கோழி திருடின கள்ளி என்ற கதையைப் பதினைந்து வரிகளுக்கண்மை யாக எழுதிக் காட்டியது ஞாபகத்திலிருக்கி றது. எல்லாருடைய கதைகளையும் வகுப் பில் வாசித்துக் காட்டினர்கள். சிலருடைய கதைகளில் இடையிடையே திருத்தமும் சொன்னுர்கள்; அவ்வளவுதான். அதற்குப் பின் கட்டுரை எழுதுவித்ததாக ஞாபகத் தில் இல்லை. அக்கதைகளிலிருந்து இவர்கள் எழுதத்தக்கவர்களென்றும் மதிப்பிட்டுவிட் டார்கள் போலும், y
ஆற்றலுள்ள மாணுக்கர்களை உயர்தர இலக்கண இலக்கியங்களைப் படிக்கத் தூண்டு வது பண்டிதர் அவர்களின் வழக்கம். அவர்க ளின் தூண்டுதலாலும் உதவியாலும் மாணுக்கர் சிலர் முதலாம் வருடப் பயிற்சிக் காலத்தில் பாலபண்டித பரீட்சைக்குத் தோன்றுவார்கள். இரண்டாம் வருடப் பயிற்சிக் காலத்தில் பயிற்சி வகுப்புப் பாடங் கரையே படிக்குமாறு சொல்லுவார்கள். பயிற்சிப் பரீட்சை முடிந்தபின், பாலபண் டித பரீட்சையிற் சித்தியெய்திய மாணவர் களைப் பண்டித பரீட்சைக்குப் படிக்கும்படி
சொல்லிவிடுவார்கள். அக் காலத்தில் வித்துவான் ந. சுப்பையபிள்ளை அவர்கள் வண்ணுர்பண்ணையிலும் மகாவித்துவான்
சி. கணேசையர் அவர்கள் சுன்னுகத்திலும் சனி, ஞாயிறு வாரங்களிற் பாலபண்டித

Page 301
a
பண்டித வகுப்புக்கள் நடத்துவது வழக்க மாக இருந்தது. பண்டிதர் அவர்கள் அவ்வவ் விடங்களுக்கு அண்மையில் வசிக்கும் மாளுக்கர்களை அவ்வவ் வகுப்புக்களிற் சேர்ந்து படிக்கும்படி வழிப்படுத்திவிடு வார்கள்
சில ஆண்டுகள் திருநெல்வேலிச் சைவா சிரியர் கலாசாலையில் சனி, ஞாயிறு வாரங் களிற் சம்ஸ்கிருத, உயர்தரத் தமிழ் வகுப் புக்கள் ஒழுங்காக நடக்க ஏற்பன செய்தும், தாமே கற்பித்தும் வந்தார்கள். யாழ்ப்பா -ணத்துப் பல ஊர்களிலுமிருந்து மாணுக்கர் களும் ஆசிரியர்களும் பிறரும் அவ்வகுப்புக் களிற் சேர்ந்து படித்துப் பெரும்பயன் பெற லாயினர்.
இடையிடையே யாழ்ப்பாணத்தின் உள் ளும் புறம்பும் நடந்த விசேட கூட்டங்களி லும் மகாநாடுகளிலும் பங்குகொண்டு, கற்றவர்களும் மற்றவர்களும் மகிழ, இனிய பொருள் செறிந்த விரிவுரைகள் ஆற்றியும் பத்திரிகைகளுக்கும் பிறவெளியீடுகளுக்கும் விஷயதானம் செய்தும் சைவத் தமிழ்ப் பயிர் களுக்கு நல்வளமூட்டி வந்தார்கள். தாம் கருதியவற்றைக் கருதியவாறே, நுட்பமாக விளக்கமாக இனிமையாகப் பிறருக்குச் சொல்லத்தக்க, எழுதத்தக்க ஆற்றல் அவர் களுக்கு இயல்பிலேயே அமைந்திருந்தது. ஆலயங்களிலும் மடாலயங்களிலும் புராணங் களுக்குப் பொருள் விரித்துரைக்கும் கலையி லும் அவர்கள் தனிஆற்றல் உள்ளவர்கள். அவர்களின் உரையாற்றல் அவர்களால் எழுதப்பட்ட, கந்தபுராணத்துத் தக்ஷ காண்ட உரையால் இனிது விளங்குவதாகும்.
யாழ்ப்பாணத்துச் சைவத் தமிழ் வரலாறு களைப் பண்டிதர் அவர்கள் நன்கறிந்திருந்த தஞல் அவைபற்றிய சந்தேகங்களைச் சான்றுக ளோடு நீக்க வல்லவராக விளங்கினர்கள். அவைபற்றிய பிழையான கருத்துக்கள் தோன்றியபோதெல்லாம் எதிர்த்தெழுதி உண்மையை நிலைநாட்டினர்கள். பிறரது நூல்கள், வெளியீடுகளுக்கு அவர்கள் அணிந் துரை. ஆசியுரைகள் வழங்குவதிலும் தனித் துவம் உடையவர்கள். அவ்வுரைகள் அந் நூல்கள், வெளியீடுகளின் உண்மை நிலையி சீனக் குறிப்பாற் காட்டியே நிற்கும்.
நல்லூர் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர் களின் பெருமகனும் மாணக்கரும் அவர்க

س- 242
ளின் அடிச்சுவடு பற்றி வாழ்ந்தவருமாகிய நல்லூர் த. கைலாசபிள்ளை அவர்கள், தம் காலத்தில் தமிழ் வழங்கிய இடங்களிலெல் லாம் தமக்கிணையின்றி விளங்கிய பெரும் புலவராகிய சுன்ஞகம் குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள், பேரறிஞர் வித்துவான் சுப்பைய பிள்ளை அவர்கள். குருகவி எனப் போற்றப் பட்ட பண்டிதர் ம. வே. மகாலிங்கசிவம் அவர்கள், மெய்ப்பொருளையே நோக்கியி ருந்த உப அதிபர் பொ. கைலாசபதி அவர்கள் முதலாய பெரிய வர்களின் தொடர்பு பண்டிதர் அவர்களுக்குப் பலவித அறிவாற் றல்களைப் பெற ஏதுவாக இருந்தது. உப அதிபர் அவர்களின் தொடர்பு பண்டிதர் அவர்களின் சிந்தனையைப் பிற்காலத்தில் திசைதிருப்பிற்று. உப அதிபர் அவர்களை மெய்கண்ட தேவர் என்று கொண்டால் பண்டிதர் அவர்களைச் சிவஞான முனிவர் என்று கொள்ளத்தக்க இயைபு அவர்களுக் கிடையிற் காணப்பட்டது.
பிரமசரியங் காத்தது, சீவிய காலமெல் லாம் சைவத்துக்கும் தமிழுக்கும் தொண்டு செய்தது, நாவன்மை, எழுத்து வன்மை முதலான ஆற்றல்கள் பெற்றிருந்தது, தவறு கண்டபோதெல்லாம் கண்டன முழக்கம் செய்தது ஆகிய பல இயல்புகளால் நாவலர் அவர்களை ஞாபகஞ் செய்யும் பண்டிதர் அவர்களைக் கற்றவர்களும் மற்றவர்களும் நன்கறிந்து போற்றினர் என்பதற்கு அவர் களுக்கு வழங்கப்பட்ட இலக்கிய கலாநிதி, பண்டிதமணி என்ற பட்டங்கள் என்றும் நின்று சான்று பகரும். பண்டிதர் அவர்க ளின் மாணுக்கர்களும் அம்மாளுக்கர்களின் மாளுக்கர்களும் பண்டிதர் அவர்களைப் போலப் பணிபுரிந்துவருகின்றனர். இப் பரம் பரை என்றும் நிலைக்கும்.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு தேவைகளுக்காகப் பண்டிதர் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளில் நூலாக்கம் பெற்றவை போக எ ஞ் சி ய வ ற் றைத் தொகுத்து நூலாக்கம் செய்யவும் அவர்களின் வரலாற்று நூலாக்கவும் வேறும் ஆவன செய்யவும் பண்டிதர் அவர்களின் மாணுக் கர்களும், அன்பர்களும், 3 அறிஞர்களும் சேர்ந்து ஒரமைப்பாக முயன்று வருவது நன்றி மறவாமையாகிய பேரறத்தைக் காப்பதோடு, பண்டிதர் அவர்களின் வாழ்க் கைப் பயன் என்றும் நிலைத்துப் பின்ஞேர்க்கு வழிகாட்டியாய் அமைய வழிசெய்வதும் ஆகும்; ஆவதாகி.

Page 302
ஈழகேசரியும் ப
த. இராசேந்தி
ஈழகேசரியைப்பற்றி ஒரு வார்த்தை: ஈழகேசரி, திரு. பொன்னேயா அவர்களின் இருதய சுவாசம்.
எனப் பண்டிதமணி அவர்கள் ஓரிடத் திற் குறிப்பிட்டிருக்கிருர்கள். எனவே, தமது அத்தியந்த நண்பரின் இருதய சுவாசத் துடன் தமது சுவாசத்தையும் பண்டிதமணி அவர்கள் இணைத்துக்கொண்ட பிணைப்பே ஈழகேசரி, பண்டிதமணி பிணைப்பாம்.
1951ஆம் ஆண்டிலே திரு. நா. பொன் னையா அவர்கள் மறைந்தபோது தமக் கிடையே அரும்பிய நட்பின் கதையைப் பண் டிதமணி அவர்கள் மிக்க ஆராமையோடு சுவாரஸ்யம் ததும்ப விவரித்திருக்கிருர்கள்:
திரு. நா. பொன்னையா அவர்களின் திருப்தி குடியிருக்கின்ற திருமுகத்தை இற்றைக்கு இருபத்திரண்டு வருடங் களுக்கு முன் கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையிலே முதன் முதல் தரிசனஞ் செய்தேன். அந்த முகம் அழுக் காற்று அக்கினியிலே வாடாமல் அச்சம் முதலிய புழுக்கடிகளாலே அழகு போகா மல் நம்பிக்கை என்கின்ற இதழ்கள் விரிந்து துணிவாகிய நறுமணம் வீசி அன்றலர்ந்த புஷ்பம்போலே எவரையும் வசீகரித்து விளங்கியது; பல வருடங்கள் பழகியது போன்று என்னுடன் அளவ ளாவியது. இருவருக்கும் நட்பு ஏற்பட்டு விட்டது.
திரு, பொன்னையா அவர்களுக்கும் தமக்கும் இடையே முகிழ்த்த நட்பாலேயே இருவேறு துறைகளிலே தாம் புக நேர்ந்த தாகப் பண்டிதமணி அவர்கள் குறிப்பிட் டிருக்கிருர்கள்.
& 8 a "கல்கி? ஆசிரியர் அவர்களும், மாலி அவர்களும் முதன்முதல் ஆகாசத்

ண்டிதமணியும்
தாலே யாழ்ப்பாணம் வந்து இறங்கினர் கள். எப்படி இருந்திருக்கும் சனக்கூட் டம். திரு. பேரின்பநாயகம் அவர்கள் தலைமையில் நகரமண்டபத்தில் பாரிய கூட்டம். திரு, பொன்னையா அவர் கள் என்னை வரவேற்புரை செய்யும்படி பணித்தார்கள். நான் அவர்கள் முகத் துக்கு நாணி' உடன்பட்டுவிட்டேன்.
எனப் பண்டிதமணி அவர்கள் எழுதி யிருப்பது சொற்பொழிவுத் துறையிற் பண் டிதமணி ஈடுபடத் திரு. பொன்னையா காரணராய் இருந்தார் என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகின்றது,
பண்டிதமணி அவர்களுடைய அரசி யற் பிரவேசத்துக்கும் திரு. பொன்னையா அவர்களே காரணராயிருந்தார் எனப் பண் டிதமணி அவர்கள் எழுதியிருக்கும் பின் வரும் பகுதியால் ஊகிக்க முடிகிறது:
9 , 0 u 4 சட்டசபைத் தெரிவுக் கூட்டங் களிலே பங்குபற்றுவதில்லை யென்று நான் சங்கற்பஞ் செய்வதுண்டு. மாலை ஐந்து மணிக்குத் திரு. பொன்னையா அவர்களின் மோட்டார் ரதம் நினையாப் பிரகாரம் வரும். திரு. பொன்னையா அவர்கள் என்னை அதில் ஏறும்படி சொல்வார்கள். நான் அவர்கள் முகத் துக்கு நேரே எப்படியோ என் சங்கற் பத்தை மறந்து ஏறிவிடுவேன். திரு. பேரின்பநாயகம் அவர்களின் தெரிவுக் கூட்டத்துக்குப் போட்டுவருவோம். 'நாலுவார்த்தைகள் செர் ன் ஞ ற் போதும் என்பார்கள். பிறகு பார்த் தால் அந்தத் தெரிவுக் கூட்டத்திலே நானூறு வார்த்தைகள் பேசுகிறவன் நானுயிருக்கலாம்
1933-06-11 முதலே பண்டிதமணி ஈழகேசரியில் எழுத ஆரம்பித்தார்கள்.

Page 303
al ത്ത 4
சுவாமிநாத பண்டிதர் மறைவு குறித்த 335 அடி ஆசிரியப்பா முதல் நவபாரதம் வரை பண்டிதமணி அவர்கள் தீட்டிய கண்ட னங்களென்ருலென்ன ஏனைவகைக் கட்டு ரைகளென்ருலென்ன ஈழகேசரியில் அவ்வப் போது வெளிவந்தன. தொல்காப்பியப் பதிப்பு, அவர்களுக்குப் பிறகு அருளுசலந்தான், புலம் புரிந்துறையுஞ் செலவு முதலிய பல கட்டுரை கள் ஈழகேசரியிலேயே வெளிவந்தன.
புனைபெயர்கள் பல (விநாயகர், புக ழேந்தி, தும்பி, ததீசி, தேனி பூண்டும் பண் டிதமணி அவர்கள் எழுதியுள்ளார்கள். இலக்கணம், விமரிசனம், இரசனைக் கட்டுரை என்பவற்றேடு விழாக்கள் சம்பந்தமான வருணனைகளையும் அவர்கள் ஈழகேசரியில் எழுதினுர்கள்.
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை முதலிய காவியங்கள் பொருட் பிறழ் வுடையவை எனப் பண்டிதமணி கொழும்பிற் செய்த சொற்பொழிவொன்றின் சுருக்கம்
qqASLLLSAAAAASASLLLS AMMJLMLSeeeSLLLLLLLJLareaSaSLJSLSSJSELSLSSSMSSSSSSASASSSSSASSA
கருவி நூல்களையும் வேதாகமங்: கருணை பக்தி வைராக்கியம் ஞானம் என் யரே மடாதிபதிகளாவதற்கு யோக்கிய முடைய நித்தியகரும முதலியனவற்றை திருமுறைகளைப் பூசைசெய்து அவ் லே அடைந்த நன்மாளுக்கர்களுக்குப் படிட் கர்களுக்கும் மற்றைச் சனங்களுக்கும் கவும் வேண்டும்.

-س- 44
ஈழகேசரியில் வெளிவந்ததைத் தொடர்ந்தே நீண்டதோர் விவாதத்தை வேந்தனர்
தொடங்கிஞர்.
உலகம் பலவிதம், சிலர் புதுமை யறிய விரும்புவர்! சிலர் கல்வியை விரும்புவர்! சிலர் அரசியல் விரும்புவர்! சிலர் ஆசாரம் விரும்புவர்! சிலர் சமயம் விரும்புவர்! சிலர் வாதம் விரும்புவர்! சிலர் போதம் விரும்புவர்! இப்படியே விருப்பம் பலவாதலால் விடயங்களும் பலவாதல் பத்திரிகைக்குப் பரிபூரணத்
தைக் கொடுக்கும்.
என்ற பத்திரிகைத் தொழில் நுட்ப இரகசியந் தெரிந்த ஈழகேசரிப் பொன்னையா அவர்கள் பண்டிதமணி அவர்களை ஈழகேசரி யில் எழுதும்படி தூண்டியதிலே வியப்பில்லை. ஈழகேசரிக்கும் பண்டிதமணி அவர்களுக்கும் இடையிலான தொடர்பு அப் பத்திரிகை வெள்ளிவிழாக் கண்டு நிறுத்தப்படும்வரை
நீடித்தது.
Ninnurr مرة "محكم
களையும் நன்முகக் கற்றறிந்தவரும் சீவ ானும் நான்கும் உடையவருமாகிய ஆசாரி ர். மடாதிபதிகள் மடத்தில் இருந்து தம் றத் தவருமற் செய்துகொண்டு வேதாகமத் தாகமங்களைத் தாம் படிக்கவும் தம்மை பிக்கவும் அம் மாணுக்கர்களுக்கும் பரிசார காலந்தோறும் சமயநெறியைப் போதிக்
- நாவலர் பெருமான்
00LLaLSASqSJSJSAALSLSLSLSLSSSeSSeSAJASLeLeLSLSLSLSLSJSLLLSLLLLLLSSASAASALSLSSSSSAS

Page 304
பண்டிதமணியி:
பேராசிரியர் கலாநிதி கா. கை
இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்
ள்ளை அவர்கள் ஆறுமுகநாவலர் அவர்கள் பரம்பரையில் வந்தவர்கள். இரு மொழிக ளிலும் வல்லுநரான சுன்னுகம் அ. குமார சுவாமிப்புலவர் அவர்களிடம் கற்றுத் தேறிய நன் மாணுக்கர், இலக்கண நூல்களை ஐயந் திரிபறக் கற்றவர்கள். இலக்கியத்திற் துறை தோய்ந்தவர்கள். இவர் கம். இராமாயண காவிய வகுப்பு நேரங்களில் விரித்துரைத்த இலக்கிய நயங்களைச் சுவைத்தனுபவித்த வர்கள் அவர் மாணவ பரம்பரையினர். இலக்கிய விமரிசனத்தில் ஒப்பாரு மிக்காரு மில்லாதவராய்ச் சிறந்து விளங்கினர். இலக்கிய இரசனை மிக்கவராய் மிளிர்ந்த பண்டிதமணி அவர்கள் அரங்குகளில் நிகழ்த் திய பேச்சுக்கள் பல.
பண்டிதமணி அவர்கள் நாவலர் பரம் பரையில் வந்தவர் என்பதைப் பல வ3:கக ளில் உணருகிருேம். வாழ்க்கையில் இருவரும் நைட்டிகப் பிரமசாரிகளாகவே வாழ்ந்தனர். இலக்கண இலக்கியங்களில் நல்ல புலமை இருவர்க்கும் இருந்தது. இருந்தும் இவற் றைக் கருவி நூல்களாகவே அவர்கள் கருதி ஞர்கள். சமய தத்துவ இலக்கியங்களில் புலமை, திறமை ஆகியவற்றை இவற்றைக் கருவியாகக் கொண்டே பெற முடித்தது, சுருங்கக் கூறின் இலக்கண இலக்கிய அறிவு, சமயம், தத்துவம் வளர்ப்பதற்குக் கருவிக ளாய் மட்டுமே அமைதல் வேண்டும் என்பது நாவலரவர்களது கருத்து. பண்டிதமணி அவர் களும் நாளடைவில் இவ் வுண்மையினை உணர்ந்தார். வாழ்க்கையில் இறுதிப் பகுதி யில் இலக்கண இலக்கியங்களில் உள்ள நாட்டம் அருகத் தொடங்கியது; சமய தத்துவ நூல்களிலேயே ஆராய்ச்சி ஓங்கி வளரலாயிற்று. சமயக் கட்டுரைகள் பல உருவாகின. அத்வைதம் பற்றிய சிந் தனைகள் ஓங்கி எழுந்தன. காணுதற்கரிய உண்மைகளை யெல்லாம் கண்டார் ; சிந்தித் தார். சிந்தனையில் ஆழப் பதிந்தார், அவற்றை ஏனையோரும் பெறல் வேண்டும்
33

* தததுவங்கள்
லாசநாதக் குருக்கள் அவர்கள்
என்ற உயர் எண்ணம் உருவாயிற்று. சிந் தனைகள், கட்டுரைகள் வடிவம் பெற்றன. இதன் விளைவே அத்வைத சிந்தலை என்ற நூல். இதற்கு முன்னேடியாக அமைந்தது * சமயக்கட்டுரைகள்' என்ற தொகுதி நூல். இடிை சைவசித்தாந்தக் கடலில் மூழ்கி மூழ்கி வெளிக்கொணர்ந்த விலை மதித்தற்கரிய முத்துக்கள். பண்டிதமணி அவர்கள் நாவலர் பரம்பரையினர் என்பதனை எடுத்துக் காட்டு வது அவரது சிந்தனையை ஊடுருவி நிற்கும் இன்னேரமிசம், இருவரும் தங்கள் பேச்சுக் களிலும் நூல்களிலும் பேசுவது வைதிக சைவம் பற்றியே. பண்டிதமணி தொடர்ச்சி யாக இதை அடிக்கடி வற்புறுத்தி வருகிறார். உபநிடதங்களில் வரும் அத்வைதb இவர் கவனத்தை ஈர்த்ததில் வியப்பேதும் இல்லே. தத்துவம் அசி போன்ற மகா வாக்கியங்கள் அத்வைதம் பற்றிய சிந்தனைகள் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புறக் கண்டார். இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்து விளக்கி எழுதத் தொடங்கினர்.
உபநிடதம் பிரமசூத்திரம் முதலிய வைதிக நூல்களில் வரும் கருத்துகளின் உட் பெருளை உரை நூல்களின் உதவியின்றியே அறிந்துகொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே உண்மையினை உணரலாம். ஏனெ னில், உரைகாரர்கள் இந் நூல்களில் தங்கள் கருத்துக்களை வலிந்து புகுத்தி அவை தம் கருத் துக்களையே கூறுவதாக விளக்கந் தருவதையே நாம் காண முடிகிறது. வெவ்வேருன இவர் கள் கருத்துக்களுக்குப் பிரமாண நூல்களாய் இந் நூல்கள் அமைகின்றன. பெரும்பாலும் உபநிடத வாக்கியங்களும் பிரம சூத்திரங்கள் முழுவதும் குறுகிய அமைப்பைக் கொண்டன. ஒவ்வொரு தரிசனத்துக்குமே மூல நூல்கள் இவை போன்று சூத்திர வடிவில் அமைந் துள்ளன. குறுகிய அமைப்பைக் கொண் டவையாதலால் சூத்திரங்கள் தெளிவு குறைந்தவை. அவற்றைத் தெளியவைக்க வேண்டியதவசியம். ஏனைய துறைகளில் இல் லாத இடர்ப்பாடு இங்கு தோன்றியது. உப

Page 305
مسي
"-
நிடதங்களுக்கும் பிரமசூத்திரத்திற்கும் பல வகை விளக்கங்கள் எழுந்தன. சங்கராத் வைதம், விசிட்டாத்வைதம், கேவலாத் வைதம், சுத்தாத்வைதம், சிவாத்வைதம், த்வைதம் என்ற எல்லாக் கோட்பாடுடை யாரும் உபநிடதங்களையே தங்கள் பிரமாண நூல்களாக, மூல நூல்களாகக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிற்று. இச் சூழ்நிலையில் இம் மூல நூல்களில் உண்மையாகக் கூறப் பட்ட செய்தி என்ன என்று தெரியாது திகைப்பு ஏற்படுவது இயல்பாயிற்று. இவ் வுரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்களையே மிகுதியும் புகுத்தி விளக்கங் கொடுத்திருக் கின்றனர் என்பதை நன்குணர்ந்த பண்டித மணி அவர்கள் இவர்களுடைய உரைகளை அறவே நிராகரித்தார். அவர்கள் உரைகளால் பாதிக்கப்பட்ட இந்த மூல நூல்களைத் தாமே ஆராய விழைந்தார், உபநிடதங் களிலோ பிரம சூத்திரத்திலோ கூறப்படுவன என்ன என்பதை உணர அவர் நீண்ட கால மாக முயன்று வந்தார். உபநிடத மகா வாக்கியங்களே இவர் கவனத்தை ஈர்த்தன. அவைகளைத் துருவித் துருவி ஆராய்ந்தார். இவர்தம் உள்ளுணர்வு இவருக்கு உண் மையை உணர்த்த முற்பட்டது. இவருக்குக் கைவந்த சக்தி அதாவது ஊடுருவி உண்மை யைச் சரியாக உய்த்துணரும் சக்தி, இவர்க் குப் பெரிதும் பயன்பட்டது. வேதங்கள் கூறுவது அத்வைதம். அது எத்தகையதென் பது இவர்தம் நுண்ணுணர்வுக்குப் புலணு யிற்று. அது எவ்வாறென்பதைத் தனக்சுே உரிய வகையில் வேருே?ரிடத்தில் புலப்படுத்து கிருர்,
நெடுங்காலமாகக் கனன்றுகொண்டிருந்த தீ யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகத்தில் அவருக்கிருந்த விழாவொன்றில் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. அங்கு விழா வில் தம் உள்ளத்தில் நெடுநாளாக இருந்து வந்த இரு விஷயங்களைப் பகிரங்கமாக வெளியிட்டார்கள். அவை இரண்டும் ஒன் ருேடொன்று தொடர்பு கொண்டவை. அவ்விரண்டனுள் ஒன்று தனக்கு வழி smruqtuur TFö திகழ்ந்த பெரியாரைப் பற்றியது, அவர் "நூதனமான பிறவி :

46 -
அவரது தோற்றம் பிரத்தியேகமானது: உயரம் அகஸ்தியரை நினைவு படுத்துவது; மிக மிக மிருதுவான தேகம் எண்ணத்தக்க சில மயிர்களாலான குடுமி : மிக்க தேஜஸ்; ஆழ்ந்த சிந்தனை இவை ஓரளவு குறிப் பிடத்தக்கன," என அவர் வருணிக்கிருர். வகுப்பிலும் வெளி விடுதியிலும் தாமரை இலையில் நீர் போல் அவர் வாழ்ந்து வந்தார். 1930ஆம் ஆண்டில் விஞ்ஞானபட்டதாரியாய் திருநெல்வேலிச் சைவ ஆசிரிய கலாசாலையில் உப அதிபர் ஆனர். இந்நிகழ்ச்சி பண்டிதமணி அவர்களுக்குப் பேரானந்தம் விளைவித்தது. அவருடன் ஒருங்கு வாழும் பாக்கியம் கிடைத்தது. ‘கிடைத்தும் என்ன?? எனத் தம்மைத் தாமே பண்டிதமணி அவர்கள் கேட்டுக் கொண்டார். அவர் போசனம் முடிந்ததும் தனிமையை நாடித் தனியிடம் சென்று விடுவார். சில சமயம் விடிந்தும் வருவார். மனத்தோடு போராடுபவராகவே இருந்தார். 1934இல் மனத்தை வெற்றி கொண்டுவிட்டார் என்பதைப் பிற்காலத்தில் அறிந்ததாகப் பண்டிதமணி அவர்கள் கூறு கிருர்கள்.
1942ஆம் ஆண்டளவில் வாசிப்புகள் போய்ச் சிந்தனை உலகில் அவர் ஆழ்ந்திருந் தார். அப்பொழுது தோல்விகள்மேல் தோல் விகளைச் சந்தித்த பண்டிதமணி அதனல் வாட்டமுற்று அந்த முனிவரை அணுகியதும் அவர் சொல்வதைத் தாம் எட்ட முடியாது திணறுவதையும் இதெல்லாவற்றுக்கும் முழுக் காரணம் அவருக்குரிய ஆச்சரியகரமான சக்தி என்பதையும் இதன் வழி அவர் சிந்தனை களும் பரம உண்மைகளாக விளங்கியதை யும், அவருக்கே உரிய அபாரமான தத்துவப் பேறுகள் விலைமதிப்பிறந்தவை என்பதையும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என் பதையும் உணர்ந்தார். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளுவது அவர் வழிகாட்டிய மையால் பண்டிதமணியவர்கள் பல உண்மை களை, நூல்களைத் துருவித்துருவியாராய்ந்தும் பெறமுடியாத தத்துவப் பொருள்களின் உட்கருத்துக்களை உள்ளுணர்வு மூலம் அறியும் வாய்ப்பினைச் சிறிது சிறிதாகப் பெற்றர் என்பதேயாம். இவ்வாறு உணர்ந்த பேருண்

Page 306
- 2
மைகள் நாளடைவில் ஆராய்ந்து நிறுவும் பொழுது, தருக்கரீதியாக நிறுவும் பொழுது அதே நிலையில் பெறப்படுவது கண்கூடு. கணித மேதைகள் தம் நுண்ணுணர்வால் உடனே சொல்லிய விடைகள் நாளடைவில் கணித முறையால் கணிக்கப்பட்டு நெடுங் காலத்தில் பெறும் விடைகளும் ஒன்ரு யிருப்பது இதற்கு எடுத்துக்காட்டு.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக விழாவில் பேச்சின்போது இவர் மனதில் குடிகொண்டு நெடுங் காலமாக அவர் கவனத்தைக் கவர்ந்துகொண்டிருந்த மற்ருெரு விஷயத் தையும் வெளியிட்டார். இதை அன்றுதான் முதன் முதலில் வெளியிட்டார் என்று சொல்வதற்கில்லை. முன்னர் பல தடவைகள் அது பற்றிக் கட்டுரைகளில் பிரஸ்தாபித் துள்ள போதும், அது பற்றித் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாக அன் றைய கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித் தார். இப்பொருள் பற்றிய சிந்தனை நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் இது பற்றிச் சில கருத்துக்களை அவ்வப்போது வந்த கட்டுரை களில் முன்னுேடியாக எடுத்துரைத்தார். ஆயின், விஷயம் விரிக்கப்படவில்லை; நன்கு விளக்கப்படவில்லை; குறிப்பான சில கருத் துக்கள் மட்டுமே அவர்களுக்கேயுரிய நடை பில் சுருக்கமாக எடுத்துக் கூறப்பட்டன.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த விழாவில் அவர் பேச்சுத் தொடரு கின்றது. தமிழ் போலவே சமயம் பற்றியும் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை முதலில் கூறிய பண்டிதமணி அவர்கள் மேலும் கூறியது, 'நமது சமயம் வைதிக சமயம், சமயத்தின் மூல தத்துவம் அத்வைதம். அஃதாவது இறைவன் இரண் டற்றிருக்கும் தன்மை, இந்த அத்வைதமும் சித்தாந்த மகாவாக்கியமும் என்ற கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்’ என்பதேயாம்.
ஏறக்குறைய நாலு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தள்ளாத வயதிலும் மேற்கொண்ட அயரா உழைப்பின் காரணமாக அத்வைத சிந்தனைகளைச் சித்தாந்த பரமாக வைதிக சைவ மரபு பிறழா வண்ணம் மனதில் பல

7 -
வாறு சிந்தித்து ஆராய்ந்து உண்மையை உணர்ந்து கட்டுரை வடிவில் வடித்துதவி யுள்ளார். வைதிக சைவம் பற்றி வற்புறுத்தி வந்தார்கள் நாவலர் அவர்கள். அவர் வழி வந்த பண்டிதமணியவர்கள் அத்துடன் நின்று விடாது ஒருபடி மேலே சென்று அக் கொள்கையினை விளக்குமுகமாகவும் சித் தாந்த மூல நூல்களில் வரும் அத்வைத பதப் பிரயோகங்களுக்கு அர்த்தங்காட்டும் வகையிலும் அத்வைதம் பற்றிய கருத்துக்களை அலசி ஆராய்ந்து கருத்துக்களை வழங்கினர். இது இவரது இறுதி ஆக்கங்களில் ஒன்றன ** அத்வைத சிந்தனை "" என்னும் நூலாக உருவாயிற்று.
பண்டிதமணி வழங்கிய சிந்தனைச் செல்வம் மிகப் பரந்த மனப்பான்மையில் நூல் வடிவம் தரப்பெற்று வழங்கப்பட்டது. பிரஸ்தான சதுட்டயம் சொன்னவற்றை மிக மிக அபூர்வமாகச் சிந்திக்க வைத்ததன் விளைவாக உருவாகிய இந்நூல் இதுவரை தோற்றமும் விளக்கமும் பெருத சிந்தனைகள் எங்கள் கருத்திலும் ஆழப் பதிந்து மேலும் சிந்திக்க வைக்கும் இயல்பு வாய்ந்தவை.
வேதங்களின் அந்தம் உபநிடதம். எனவே இது வேதாந்தம் எனப்படலாயிற்று. இங்கு அந்தம் என்ருலும் முடிவு என்ருலும் ஒன்றே முடிவு என்பது இறுதி. இப் பொரு ளுக்கு ஏற்றவாறு சங்கிதை பிராமணம் ஆரணியகம் உபநிடதம் என்னும் பகுதிகளை வரிசையாக உடைய வேதங்களின் இறுதிப் பகுதியாக உபநிடதம் வேதாந்தம் எனப் பெயர் பெற்றது பொருத்தமே. அந்தம் என் பதற்கு முடிவு, சாரம், பெறுபேறு, விளைவு என்றெல்லாம் பொருள் கொள்ளுமிடத்து உபநிடதங்கள் வேதங்களின் சாரமாக அமை வதணுல் அவை வேதாந்தம் எனப் பெய ரைப் பொருத்தமாகவே பெற்றுள்ளன. வேதாந்தத்தின் சாரம் சைவசித்தாந்தம் எனப் பிரஸ்தான சதுட்டயங்கள் கூறக் காண்கிருேம். (பிரஸ்தான சதுட்டயங்கள் என்பன சிவஞானபோதம், சித்தியார், சிவப் பிரகாசம், திருவருட்பயன் ஆகிய நான்கும் எனப் பண்டிதமணி அவர்கள் வகுத்துள் ளார்கள்.

Page 307
உயிரான உயரிய கருத்துக்களுக்கு மூல வித்து வேதாகமங்கள். தோத்திர சாத்திரங் கள் வேதாகமங்களினின்றும் வெளிப் போந்தவை என்ற உண்மையினை உணருதல் எளிதன்று. வித்துக்களினின்றும் வெளிப்பட்ட முளைகள் வளர வளர வித்துக்கள் மேலும் மேலும் மண்ணுள் புதையுண்டு மறைந்து வெளியே சற்றும் தெரியமாட்டா.வித்துக்கள் மண்ணுக்குள் மறைந்திருப்பதற்கே உரியவை. வித்துக்களுக்கும் முளைகளுக்கும், வேதாகமங் களுக்கும், தோத்திர சாத்திரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினைச் சிறிதுச் உணராராய்ச் சித்தாந்த சிந்தனையிலீடுபடு வார்க்கு விளக்கம் முறையாக அமையாது. ஆலமரத்தின் வித்தை நோக்குவோமானுல் இது போன்ற வித்து ஒன்றே கண்முன் காணும் ஆயிரக் கணக்கான விழுதுகளை வெளியிட்டுப் படர்ந்து பரவி நிற்கும் ஆலமரத்துக்கு எங்ங் ைம் வித்தாதல் கூடும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. இவ்வாறு கருதுவோர் இந் நிலையில் ஆல மரத்தின் தொடக்கம் ஆலம் விதை என் பதை எவ்வாறு ஒப்புவர்? வேதாகமங்கள் உயிர்க்கு உயிரான சைவ சித்தாந்தக் கருத் துக்களுக்கு வித்து என்பது எவ்வாறு இவர்க் குத் தெரியவரும். இவ்வாறு தெரியாது மலைத்து நிற்போருக்கு மேலும் விளக்கங் கூறி அறிய வைப்பது அத்வைத சிந்தன. இந்த அடிப்படையிலேயே அத்வைத சிந் தனக் கருப்பொருளும் விளக்கங்களும் அமைய நூலை உருவாக்கினர்.
சைவ சித்தாந்த சாத்திரங்களின் பின் வெளிவந்த ஆக்க பூர்வமான விளக்கங்களின் தொகுதி இதுவே என்பது துணிவு. இது சைவ சித்தாந்த உலகிற்கு ஒரு கலங்கரை விளக்காக அமைந்து இவ்வுலகில் தொடர்ந்து மேலே செல்ல விழைவோர்க்கு வழிகாட்டி யாக விளங்கும்.
பண்டிதமணியின் உரை நடையில் காணப்படும் சிறப்பமிசங்கள் சிலவற்றைப் பற்றிய சிறு குறிப்புரையுடன் இக் கட்டுரை நிறைவு பெறுகிறது. இலக்கிய விமரிசனம் செய்வதில் தனக்கென ஒரு வழி வகுத்துக் கொண்ட பண்டிதமணியின் விரித்து விமரி

48 -
சனம் செய்யும் ஆற்றல் கலாசாலையில் விரிவுரையாளராகக் கடமை புரிந்த காலத் தில் இன்னும் ஓங்கி வளரலாயிற்று. கடின மான இலக்கண நூல்களையும் இலக்கியங் களையும் சுவைபட மாணவர்க்குப் புகட்டி வந்தார். இலக்கிய விமரிசனங்களை அநாயாச மாக விரித்துரைக்கும் ஆற்றல் பெற்றிருந் தார். மாணவர்களும் மேன் மேலும் இதை இரசித்து அநுபவித்து வந்தனர். சிறந்த இலக்கிய விமரிசகராகவும் இரசிகராகவும் இவர் திகழ்ந்ததற்குத் தம் இரசனையை ஏற்ற மொழியில் அமைத்து வழங்கியதே காரணம், விமரிசனம் நிகழும் வேளை கண் டித்துப் பேச வேண்டிய இடங்களில் தயங் காது கண்டிப்பார்கள். சமய நூல்கள் எழுதும் பொழுது குறிப்பாக நூல்களுக்கு உரை காணும் வேளை இவர் நுண்ணறிவு சிறிது சிறிதாக வெளிப்படுகிறது. இதன் விளைவாக இவர் கையாளும் நடையில் ஒரு தனித்தன்மையும் அதே வேளையில் கை தேர்ந்த இலாகவத்தையும் காண முடிகிறது.
தத்துவம் பேசுபவரிடத்தில் இன்றியமை யாது காணப்பட வேண்டிய பண்புகள் தெளிவாகச் சிந்தித்தல், சிந்தித்தவற்றை நெறிப்படுத்தி நன்கு விளங்கும்படி எடுத் துரைத்தல், தர்க்கரீதியாகப் பேசுதல் ஆகியன வாம். இவர்கள் சிந்தனையிலும் பேச்சிலும் எழுத்திலும் இவை மிகுந்து விளங்கக் காண லாம். இவர் எடுத்தாளுவது எளிதான நடை ; இலகுவானதெனினும் இடை யிடையே கம்பீரமாக நடை மிளிரும், தெளிவாகக் கூறும் நோக்கு இருப்பதஞல்
p560) - சரளமானதாகவே அமையும். எவ்வளவு எளிதாக அமைந்தும் என்ன Liu j6ö7 ? திருஷ்டாந்தங்கள் உவமைகள்
உபகதைகள் என்பன வேண்டுமிடங்களில் தெளிவு கருதிப் பெருமளவில் எடுத்தாளப் பட்டு விளக்கம் மேன்மேலும் வருவிக்கப் Lt-- இடத்தும் எடுத்துரைக்கப்படும் விஷயம் கடினமான இயல்பு கொண்டிருப் பதணுல் அவர் தரும் சமயக் கருத்துக்கள், தத்துவக் கருத்துக்கள் சாதாரணமாக நாம் விளங்கிக்கொள்ள முடியாதவாறு சந்தர்ப் பங்களைத் தோற்றுவித்து விடுகின்றன .

Page 308
2
மீண்டும் மீண்டும் சிந்தித்த பின் மனதில் தெளிவு பிறக்கின்றது. விளக்கம் பெற முடி யாத சிக்கலான சிந்தனைகளை எவ்வளவு எளிதில் விளங்க வைக்கிருர்கள் ! அவ்வள விற்கும் அவர் எடுத்தாளும் மொழி நடையே காரணம்.
இலக்கியத் துறையிலே இவரிடம் கற்று இவர் மரபு பேணும் மாணவர்சுள் பெரு மளவினர். இத்தொகையினரோ டொப்பிடு மிடத்துச் சைவ சித்தாந்த தத்துவ நுணுக்
*பண்டித
செல்வி
ஐந்தாவது உலகத் தமிழ் மகாநாடு மதுரையில் நடந்த சந்தர்ப்பத்தில் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் "உலகத் தமிழ்" என்னும் சிறந்த நூலை வெளியிட்டது. நாற் பத்தொரு கட்டுரைகளைக் கொண்ட இந் நூலில், "இலங்கையில்" என்ற தலைப்பைக் கொண்ட கட்டுரையை எழுதியிருந்தார்கள் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை (இப்பொ ழுது யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்) அவர்கள். கட்டுரையை வாசிக் கும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது.
** இலங்கைத் தமிழ் அறிஞர்களின் புல மைத் திறம் பற்றிப் பிற அறிஞர்களிடையே முதன் முதல் பரப்புவதற்கு, பண்டிதமணி யின் இலக்கிய வழியே கதவு திறந்துவிட்டது. கந்தபுராணம் தக்ஷகாண்ட உரை அவரு டைய ஆழ்ந்த புலமைக்கும் பெருமைக்கும் என்றென்றும் சான்று பகர்கிறது. பாரம்பரிய புலமைமிக்க இச் சான்றேருக்கு இலங்கைப் பல்கலைக் கழகம் கெளரவ டி. லிட் பட்டம் நல்கிப் பெருமைப்படுத்தியது ' என்று கட் டுரையில் ஓர் இடத்தில் (உலகத் தமிழ் - பக்கம் 181, 182) குறிப்பிட்டிருக்கிருர்கள். இலக்கியவழியே கதவு திறந்துவிட்டது என்ற தொடர் என்னை மிகக் கவர்ந்துவிட்டது.
34

حس۔ 9!
கங்களை உயர் நிலையில் கற்று இச் சைவ சித்தாந்த மரபு பேணும் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையினரே. சமய தத்து வத்தினைத் தகுதிவாய்ந்த ஒரு சிலரே முறைப் படி ஒதுவதற்குரியவர் என்பதும் சிந்திக்கற் பாலது. பண்டிதமணி அவர்கள் பரப்பிய வைதிக சைவம் அவர் விட்டுச்சென்ற நூல் களில் பிரகாசித்து நிற்கின்றது. அவர் மாணவ பரம்பரை வைதிக சைவ தத்துவ சிந்தனைகளை மேன்மேலும் பரப்புவதாக.
i Dumt”
1. வாசுகி
எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கோ அளவில்லை. காரணம் உண்டு. க. பொ. த. உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நான் அப்பொழுது இலக்கிய வழியையும் படித்துக் கொண்டிருந்த காலம். எல்லாரும் இந்த இன்பத்தைப் பெற்றிருக்க முடியாது. கார ணம் உலகத் தமிழ் என்ற அந்த நூலில் விரல்விட்டு எண்ணத்தக்க பிரதிகளே இலங் கைக்கு வந்திருந்தன என்று கேள்வி. பேரா சிரியர் ‘பண்டிதர் அப்பா" பற்றிக் குறித்த இந்தப் பகுதி இருமடங்கு மகிழ்ச்சியைத் தரவே யான் மிகவும் பூரிப்பு அடைந்தேன்.
இலக்கிய வழியில் முதலாவது பாடமே மிகவும் இரசனைக்கு உரியது, இரட்டை யர்கள் என்ற பாடத்தைப் படிக்கும்போதே பண்டிதர் அப்பா எழுதிய ஏனைய பாடங்க ளும் இன்னும் இன்னும் உருசியாக இருக் கும் என்ற ஒர் அங்கலாய்ப்பும் என் உள்ளத் தில் ஏற்பட்டது. முடவரையும், குருடரை யும் பண்டிதரப்பா படம்பிடித்துக் காட்டி யிருக்கின்றர்.
* ஒரு தாய் வயிற்றில் ஒரே கருப்பத் தில் இரட்டையாகப் பிறந்தவர்கள் இரட் டையர். ஒருவர் குருடர், மற்றவர் முடவர்.

Page 309
- 2
இருவரும் புலவர். குருடரின் தோளில் முட வர் ஏறிக்கொள்வார். ஏறியதும் குருடர் நடப்பார். முடவர் வழிகாட்டுவார். ஒரு பாட்டின் ஒரு பாதியை ஒருவர் பாட மற் றவர் மறுபாதியைப் பாடுவார். இருவரிலும் அதிட்டமுடையவர் முடவர். நடப்பதன் வருத்தம் முடவருக்குத் தெரிவதில்லை. சில சமயங்களிலே வழி வேருயிருக்க, குறுக்கு வழியில் இறக்கிவிடுவார் முடவர். அந்த வழி ஏற்றமும் இறக்கமுங் குன்றுங் குழியுமா யிருக்கும். ஏற்றத்திலிருந்து இறக்கத்துக்கு, ஓடாமலிருக்க முடியாமற் குருடர் ஒடும் போது முடவருக்குப் பிரயாணம் சுகம் பேசும், குருடர் யாது செய்வார், பாலம்!’ என்பது இலக்கிய வழியில் முதலாம் பாடத் தில் (இரட்டையர் முதலாம் பந்தி,
'ஏற்றத்திலிருந்து இறக்கத்துக்கு ஒடாம லிருக்க முடியாமற் குருடர் ஒடும்போது முடவருக்குப் பிரயாணம் சுகம்பேசும் * என்ற பண்டிதர் அப்பாவின் வசனத்தில் tumrGoT சொக்கிப்போனேன். இலக்கிய வழியை வாசிக்க எமக்குச் சுகம் டேசத்
தொடங்கியது.
முதலாம் பாடத்தில் முதலாம் பந்தி இப்படி இருக்குமேயானுல் கடைசிப் பாடத் தின் (இலக்கியத்தின் உயிரும் உடலும்) கடைசிப்பந்தி எப்படி இருக்கும் என்ற எண் ணத்தினுல் இருபதாம் பாடத்தின் இறுதிப் பந்தியின் இறுதிப் பகுதியை வாசித்தேன்.
** சொல், சந்தம், ஒசை ஆகிய மூன் றும் கருத்தின் தூலமான வெளிப்பாடுகள். அதஞல் அவை இலக்கியத்தின் தூலமான உடல், சூக்கும உடல் கரு ' என்றிருந்தது. சற்றே கடினமான இப் பகுதிக்கு எனது ஆசிரியர் நன்கு விளக்கங் கொடுத்தார். சிவகாமி சரிதை, நாவலர் எழுந்தார், கவிஞர் மகாலிங்கசிவம், வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, தமிழ் தந்த தாமோ தரம்பிள்ளை உள்ளிட்ட பாடங்களையெல்லாம் இலக்கிய வழியிற் படித்துச் சித்தியடையவும் முடிந்தது.

--س.. {)5
பண்டிதர் அப்பாவின் இலக்கிய வழி யைத் தொடர்ந்து அவர்களது நூல்களையும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் படித்து நாம் மகிழ்ந்தோம். இருமடங்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டேன். பண்டிதர் அப்பாவின் எழுத்துக்களைப் படித்ததாலும், அவரது பேச்சுக்களைக் கேட்டதாலும் ஏற் பட்ட மகிழ்ச்சி ஒருவகை.
மற்றது, அவரிடம் பாடங் கேட்கக் கொடுத்து வைத்ததும் மகிழ்ச்சியைத் தரு கின்றது. இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் எனக்கு வித்தியாரம்பஞ் செய்துவைத் தவர்களும் அவர்களே. 'கணபதி துணை ’ என்று சொல்லித் தந்து என்னையும் சொல்ல வைத்ததுடன் மேலுந் தமிழ் நெடுங்கணக் கையும் தொடர்ந்து சொல்லித் தந்துவிட்டு வலது கையில் ஒரு கற்கண்டுத் துண்டையும் தந்து "நன்ருகப் படிக்கவேண்டும்; நல்லாக வரவேண்டும் எ ன்று வாழ்த்தினர்கள். பண்டிதர் அப்பாவின் வாழ்த்து நிச்சயம் பலிக்கும் என்பது எனது தம்பிக்கை,
பண்டிதர் அப்பா அவர்கள் இடை யிடையே எமது இல்லத்துக்கு வருவதுண்டு. பல சந்தர்ப்பங்களையொட்டி வந்திருக்கி ருர்கள். எமக்குக் கடவுள் தரிசனம் கிடைத் ததுபோல இருக்கும், பல சந்தர்ப்பங்களை யொட்டிப் பண்டிதர் அப்பாவைப் பார்க்க யாம் திருநெல்வேலி கலாசாலை வீதிக்குச் சென்றிருக்கின்ருேம். ஆண்டிலும் அறிவிலும் மிகப் பெரியவர்களான பண்டிதர் அப்பா அவர்கள், எம்மை உடசரித்து ஆசீர்வதித்த காட்சியை எண்ணுந்தோறும் நெஞ்சம் குமுறுகின்றது. அருள் செறிந்த அவர்களது அன்புக்கு இஃணயேதுமில்லை.
இவ்வுலகில் அதி சிறந்த ஒரு உத்த மரைக் கண்டதும் அவருடன் பழகியதும் அவரது ஆசீர்வாதத்தினைப் பெற்றதும் எமது பூர்வபுண்ணியப் பயணுகவே இருக்கலாம். பண்டிதர் அப்பா அவர்கள் எங்கள் நெஞ்சங் களில் இருந்து என்றுமே நீங்கமாட்டார்கள்.
---- FLT? f|Cf3 - || 3-3 - 1987

Page 310
தமிழ் கெஞ்சம் திறப்
கலாநிதி ஆ. கந் சிரேஷ்ட விரிவுரையாளர், இ
தறிக்குச் செத்தமிழுக்கும் உரை கல்லாகத் திகழ்ந்த பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளே அவர்கள், எனது கிராமத்துக்கு அயலிலுள்ள தனங்கிளப்பைச் சேர்ந்தவர். தனங்கிளப்பு ஒரு சிறிய கிராமம் ; ஆணுல் பெருமை மிக்கது; இயற்கை எழிலோடு மிளிர்வது தாமரைக் குளங்கள் மலிந்த மருத நிலம். செந்நெல் விளையும் வயல் நிலங் களேக் கொண்டது. அங்கே பல சைவாலயங் கள் உண்டு. பச்சைப் பசேல் என்ற சோலை
களும் அங்குண்டு. அங்கே பறவைகள் பறந்து திரியும் , வண்டுகள் பண்பாடி மகிழும். சான்ருேர் பலர் வாழும் புண்ணிய பூமி. அக்கிராமத்தைத் தன் ஊராகக் கொண்டு வாழ்ந்தார் பண்டிதமணி.
1945ஆம் ஆண்டு மார்கழி மாதம் பண்டிதனி எனது கிராமமான மறவன் புலத்துக்கு வருகை தந்தார். தனங்கிளப்பும் மறவன்புலமும் பெயரால் இரண்டு கிரா மங்கள். ஆல்ை இயற்கை அமைப்பால் ஒரே ஊர். அஃதாவது மருத நிலத்திலே இரண்டு கிராமங்கள். இரண்டு கிராம மக்களும் உறவினர்கள் போல உற&ாடி வாழ்கின்றனர். :றவன் புலத்திலுள்ள சகலகலாவல்லி வித்தி யாசாலையிற் பண்டிதமணி சொற்பொழி வாற்றுதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. " சிவநெறியும் செந்தமிழும் " பற்றியது அவர் சொற்பொழிவு.
நீண்டநேரம் பண்டிதமணி சொற் பொழிவு செய்தார். கருத்துத் தெளிவு,தருக்க அமைதி, சொற் சித்திரம், உரர்ச்சி வேகம், நகைச்சுவை என்பன அவர் சொற்பொழிவிற் பொலிந்த வண்ணம் இருந்தன. நாவலர் பெருமானின் வழிவந்தவர் அல்லவா? சைவ மும் தமிழும் பின்னிப் பிணைந்து, பிரிக்க முடியாதனவாக இருப்பதைப் பண்டிதமணி அ வர் க ளின் சொற்பொழிவிலே காண
முடிந்தது.
 
 

போர் நிற்காண்குவரே
j6ðASU! Spöffssir ங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
* பண்டிதமணி அவர்கள் ஈடிணையத்த மதிநுட்பம் உடையவர். தமிழைக் கையாள் வதிலே தனக்கென ஒரு தனி நடை கைவரப் பெற்றவர். அவர் எந்தச் சொற்களைக் கையாள எடுத்தாலும், அவர் கையிலே அந்தச் சொற்களுக்கு எங்கிருந்தோ எவ் வாறே ஒர் அசாதாரண ஆற்றல் வந்து சேர்ந்து விடுகின்றது. அவர் எழுதும் ஒவ் வொரு விஷயத்திலும், விஷயத்தைச் கையாளும் முறையிலும் ஒரு புதுமை இருக்கும். நடையிலே வேகமும் தாக்கமும் இருக்கும். கருத்திலே ஆழர் இருக்கும்’ என்பதை அவர் ஆற்றிய சொற்பொழிவு வாயிலாகக் கண்டுகொள்ள முடிந்தது.
செந்தமிழ் அவர் நாவில் நடமாடியது: சைவத் தமிழ் அவர் பேச்சில் பொலிந்து திகழ்ந்தது. சங்க இலக்கியங்களிலிருந்து சில இடங்களை எடுத்து நகைச் சுவையோடு விளக்கினர். பெரிய புராணம், கந்த புராணல் என்பவற்றிலிருந்து சில கதைகளைப் பத்திச் சுவையோடு எடுத்துரைத்தார். திருக்குறட் கருத்துக்கள் சரளமாக வெளிவந்தன. நாலடியாரிலுள்ள ஆழ்ந்த கருத்துக்கள் எளிமை பெற்றன. அதிக நேரம் பண்டிதமணி பேசியதை மக்கள் ஆடாமல் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தனர். அ ன் று அ3: பேசிய சொற்பொழிவை ஒலிப் பதிவு செய் திருந்தால், இன்று அது ஒரு பொக்கிஷமாக விளங்கிக்கொண்டிருக்கும் அ ல் ல வ ? யாழ்ப்பாணத் தமிழ் இனிமையானது: எளிமையானது; இ லக் க ண த் தோ இ சேர்ந்தது என் கைப் பண்டிதமணி அவர்க ளின் சொற்பொழிவு தெளிவு செய்தது. இதனை ‘* முல்லையெலாம் தேமணக்கு:
முற்றமெல்லாம் பூமணக்கும், கொல்லே யெலாம் பr மணக் கும், கே தறுநற்
பண்டிதரின் எல்லை யெ ல் ல 7 ம் தமிழ் மணக்கும்" என்று ஒரு கவிஞர் வியந்து பாடி மகிழ்ந்தார்.

Page 311
நாற்பது ஆண்டுகளுக்குப் பின் பண்டிதமணி அவர்கள் கூறியவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென எண்ணுகின்றேன். ** தமிழ் போலவே சமயம் பற்றியும் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. நமது சமயப் வைதிக சைவம், சமயத்தின் மூல தத்துவப் அத் வைதம். அஃதாவது இறைவன் இரண் 4-ம்றிருக்கும் தன்மை. இந்த அத்வைதம் பற்றி, அத் வைதமும் சித்தாந்த மகா வாச் கியமும்’ என்ருெரு கட்டுரை எழுதிக்கொண் டிருக்கின்றேன்." 2
பண்டிதமணி சிறந்த டேச்சாளர் மட்டு மன்று, சிறந்த எழுத்தாளரும் ஆவர். "நாவு லர் பெருமான் சமய நூல்களையும் தமிழ் இலக்கியங்களையும் எழுதியுள்ளார்; பதிப்பித் துள்ளார். இலக்கண நூல்களிற் சிறந்து விளங்குவது இலக்கணச் சுருக்கம். உரை எழுதியுள்ள நூல்கள் பல. இவ் வண்ணம் பண்டிதமணியும் சமய தத்துவக் கட்டுரை களை எழுதியதன்றிச் சமய நூல்களையும் ஆக்கியுள்ளார். ஆனல் இவரின் வசனநடை வேறு. நாவலர் வசன நடை வேறு. நாவலர் வசனநடை கைவந்தவர். பண்டிதமணியோ அவ்வாருன வசனநடையைக் கையாளாது தவில் வித்துவான் பழனி சொட்டிக் காட் டித் தாளம் அறுத்து வாசிப்பதுபோல் சொற்கள் தனித்தும் சேர்ந்தும் தமிழை மேலும் இனிமை செய்யும் "3 என்று பண்டிதமணியின் உரைநடையின் சிறப்பை ஒருவர் பாராட்டிப் பேசியுள்ளார்.
நல் லாசிரியராகவும் விளங்கினர் பண்டிதமணி. திருநெல்வேலி சைவ ஆசிரி பூர் பயிற்சிக் கலாசாலையில் 1929ஆம் ஆண்டு விரிவுரையாளராகச் சேர்ந்தார். முப்பது ஆண்டுகள் அங்கு பேராசிரியராகக் கடமை யாற்றினர். நல்லாசிரியராக இருந்து இர் நாட்டில் நல்லாசிரியர் குழாம் ஒன்றினை உருவாக்கினர். இலங்கையின் மூலைமுடுக கிற் கூடச் சைவப் பிள்ளைகள் சைவக் கல்வி யைப் பயில்வதற்குப் பெரும் பணியாற்றிய வர்களிற் பண்டிதமணி முதன்மையானவர் பண்டிதமணியிடம் படித்த மாணவர்கள் ' பண்டிதமணியிடம் படித்தோம் " என்று

52 -
கூறிப் பெருமைப்படுகின்றனர். ' சென்ற நூற்றண்டில் நாவலர் பெருமான் தமிழுக் கும் சைவத்திற்கும் மிகப் பெரிய தொண் டாற்றியதுடன், தமது மாணவ பரம்பரை ஒன்றையும் தோற்றுவித்தார். அவருக்குப் பின் ஈழத்தில் வியாபிதமான மாணவ பரம்பரையை உருவாக்கிய வர் களில் பண்டிதமணி கணபதிப்பிள்ளை குறிப்பிடத் தக்கவராவர். இவர் திருநெல்வேலி சைவா சிரிய கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி வகித்த காலத்தில் தமிழிலும் சைவத் திலும் திளைத்த நல்லாசான்களே உருவாக் கினர்' என்று வீரகேசரி அவரைப் பாராட்டி யுள்ளது.
பண்டிதமணி சி. கணபதிப் பிள் ளே அவர்கள் கந்தபுராணம் தக்ஷகாண்டத்திற்கு எழுதிய உரை, அவர் எழுதிய நூல்கள் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று அமைந்துள்ளது. அக்கிரமங்களை அழித் தொழித்துத் தருமத்தினை நிலைநாட்டிய முருகக் கடவுளின் வரலாற்றைக் கந்தபுரா ணம் எடுத்துரைக்கின்றது. இதனுல் கந்த புராணத்திற்குத் தமிழ் மக்களிடையே பெருமதிப்பு உண்டு. இதனை உணர்ந்த பண்டிதமணி தக்ஷகாண்டத்திற்கு, எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய உரை ஒன்றினை எழுதினர். 1967ஆம் ஆண்டு தைத்திங்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தக்ஷகாண்ட உரை வெளியீட்டு விழா நடை பெற்றது. ‘‘11ஆம் நூற்ருண்டிற் பராக்கிரம பாகு மன்னன் பூஜாவளி என்ற நூலை யானை மீதேற்றி நகர்வலம் வந்து அரங்கேற்றம் செய்தான். அதன்பிள் இருபதாம் நூற்ருண் டில் இன்றுதான் அப்படியான பெருவிழா வாகக் கந்தபுராண தகூடிகாண்டம் உரை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடக்கி றது.”** என்று சிங்களப் பேராசிரியர் டீ. ஈ. ஹெட்டியாராய்ச்சி பாராட்டிஞர்.
இலக்கிய விமரிசகராகவும் தமிழ்க் கவிஞ ராகவும் பண்டிதமணி திகழ்ந்தார். சைவம், இந்து தருமம், பண்டைய தமிழ் இலக்கி யம் ஆகியன பற்றி நூற்றுக்கும் அதிக மான கட்டுரைகளை எழுதியுள்ளார். சைவ நற்சிந்தனை, இலக்கியவழி, கதிர்காமவேலன்

Page 312
- 2.
பவனி வருகிறன், பாரத நவமணிகள், சமயக் கட்டுரைகள், நாவலர் ஆகியன அவர் வெளி யிட்ட நூல்களிற் சிலவாகும். கந்தபுராண போதனை, கந்தபுராண கலாசாரம், கம்பராமா யணக் காட்சிகள் ஆகியவை தலைசிறந்த ஏனைய நூல்களாகும்.
**சிறந்த எழுத்தாளராகவும், ஊக்கமுள்ள ஆசிரியராகவும், பேச்சாளராகவும், இலக்கிய விமரிசகராகவும், கவிஞராகவும், உரையா சிரியராகவும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை இலங்கையிலும் பிறநாடுகளிலும் புகழ் பெற்றர். அவருடைய திறமை கண்ட இந் நாட்டு அறிஞர்கள் அவருக்குச் சித்தாந்த சாகரம் என்னும் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தனர். எனினும் அவருக்கு அளிக் கப்பட்ட பண்டிதமணி எ ன் னு ம் பட்டமே பெரு வழக்காயுள்ளது. அவருடைய ஆராய்ச் சித் திறனையும் தமிழ்த் தொண்டினையும் பாராட்டுமுகமாகவே இப்பட்டம் வழங்கப் பட்டது. பெருந் தொகையான பண்டிதர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் தங்கள் திறமைக் குப் பண்டிதமணியின் நெறிப்படுத்தும் திறமையே காரணமெனக் கொள்வார்கள்." என்று பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கைப் பல்கலைக்கழக விசேட பட்ட மளிப்பு விழாவில், பண்டிதமணி அவர்க ளுக்கு இலக்கிய கலாநிதிப் பட்டத்தை வழங்கும்படி கேட்டு அறிமுகப்படுத்திய போது பேராசிரியர் சு. வித்தியானந்தன் பாராட்டினர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியிற் படிப்பை முடித்துக்கொண்டு 1960ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும் பினேன். கொழும்பு இந்துக் கல்லூரியிற் திரும்பவும் ஆசிரியப்பணியை மேற் கொண்டேன். 1965ஆம் ஆண்டு கல்வி அமைச்சு மாணவர் களுக்கான பாட நூல்களை எழுத நடவ டிக்கைகளை மேற்கொண்டது. ஐந்தாம் வகுப்புக்கான சைவநெறி என்ற பாடநூலை எழுதும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட் டது. அல்லும் பகலும் அயராது உழைத்து ஒரு மாதத்தில் ஐந்தாம் வகுப்புக்கான பாட நூலை எழுதி முடித்தேன். அப்புத்தகத்தைப்
35

53 -
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள் பார்வையிட்டு அனுமதிக்கவேண்டுமெனக் கல்வி அமைச்சுத் தீர்மானித்தது.
கைப்பிரதியை எடுத்துக்கொண்டு யாழ்ப் பாணத்துக்குப் பயணமானேன். ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9 மணி இருக்கும். திருநெல் வேலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி வீதிவழியே சென்றேன். ஒரு வீட்டின் வாசலில் கீற்றினுல் வேய்ந்த கொட்டிலிற் சாய்வு நாற்காலியிற் பண்டிதமணி அமர்ந்திருக்கக் கண்டேன். அமைதியோடு அவரை அணுகினேன். முன் கூட்டி அறிவிக்காமலே அவரை அணுகு கின்றேனே என்ற மன வேதனையோ டு, **வணக்கம்!’ என்றேன். "மறவன்புலம் ஆ. கந்தையாவா? வாரும், வாரும் ' என்று கூறி என்னைப் பண்டிதமணி வரவேற்ருர். அந்தக் காட்சி இன்றும் என் மனக்கண் முன்னே நிற்கின்றது!
சைவ சீலராக, தமிழ்த் தெய்வமாக என் கண்களிற் பண்டிதமணி தோற்றமளித்தார். அழகொழுகும் தோற்றம்; சாந்தம் நிலவும் முகம்; ஒளியுள்ள கண்கள்; அங்கே கனி வுள்ள பார்வை. வாய்மை, உண்மை, மெய்ம்மை என்பனவற்றை அவர் தோற்றத் திற் கண்டேன். அவரின் பக்கத்தே அமர்ந் தேன். எனது வருகைக்கான காரணத்தை எடுத்துரைத்தேன். * நல்லது இன்றே பார்த்து முடித்துவிடலாம் " " என்ருர்கள்.
பத்து மணிக்குக் கைப் பிரதியைப் படிக் கத் தொடங்கினுேம். ஒரு மணிக்கு முழுவ தும் முடிந்தது. சில திருத்தங்களைச் செய்த பின், 'ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ற நூலாக அமைந்துள்ளது" என்று எழுதிக் கைச்சாத்திட்டுக் கைப் பிரதியைப் பண்டிதமணி என்னிடம் கொடுத்தார். அதன் பின்னர் மத்தியான உணவை உண்டு விட்டுப் போகுமாறு பணித்தார்கள். இருவ ரும் அமர்ந்து உணவு உண்டோம். மறவன் புலம் பற்றி வினவிஞர்கள் : தனங்கிளப்புப் பற்றி விசாரித்தார்கள். அவரின் உரையா டல்கள் சிவநெறியையும் செந்தமிழையும் தழுவியனவாகவே இருந்தன. அப்போது,

Page 313
一 2
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.? என்ற வள்ளுவன் குறள் என் நினைவுக்கு வந்தது.
ஐந்தாம் வகுப்புச் சைவநெறியில் ஒரு பாடம் பூசலார் கட்டிய கோயிலைப் பற்றி யது. அதனை மிகவும் எளிய தமிழிற் சிறிய வசனங்களாக எழுதியிருந்தேன். உணவு அருந்தும்போது அப் பாடத்தைப் பற்றிப் பண்டிதமணி தமது கருத்தை வெளியிட் டார். பெரிய புராணத்திலுள்ள,
நின்றவூர்ப் பூச லன்ப
னெடிதுநா னினைந்து செய்த நன்றுநீ டால யத்து
நாளேநாம் புகுவோம் நீயிங் கொன்றிய செயலே நாளே
ஒழிந்துபின் கொள்வா யென்று கொன்றைவார் சடையார் தொண்டர்
கோயில்கொண் டருளப் போந்தார்.8
என்ற செய்யுளை எடுத்துச் சொல்லிப் பூச லார் கட்டிய கோயிலின் புதுமையைப் புகழ்ந்து பூரிப்படைந்தார். ஆழ்ந்த தத்து வத்தோடு கூடிய புராணக்கதை என்று பாராட்டினர். வெளிநாட்டார்களும் போற் றிப் பேசக்கூடியது என்று புகழ்ந்துரைத்தார். மேலும் பூசலாரின் க ைத  ைய எளிய தமிழிலே ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்றதாக எழுதப்பட்டுள்ளமை பொருத்த மாக உள்ளது என்று கூறினர். பண்டிதமணி அவர்களின் அந்த வார்த்தைகள் எனக்குப் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தின. விடை பெற்றுக்கொண்டு கொழும்பு திரும்பினேன்.
1942ஆம் ஆண்டு வரையும் செய்துவந்த தமிழ்த் தொண்டினை நிறுத்திவிட்டு, சமயப் பணியை மேற்கொண்டு பண்டிதமணி Gö}GF3) சமயத்துக்கு அரிய சேவைகளைச் செய்து வரு வதை எண்ணி மகிழ்ந்தேன். சீதையை மைய மாகக்கொண்டு இராமாயண இரசனைகளை மேற்கொண்ட அவர், வள்ளியம்மையாரை மையமாக க் கொண் டு கந்த புராண

54 -
இரசனையில் ஈடுபட்டார். சீவகசிந்தாமணி யிலே ஈடுபட்டு இன்பங்கண்ட அவர், பெரிய புராணத்தின் பத்தி வெள்ளத்தில் மூழ்கிப் பரவசமாஞர். சங்க இலக்கியங்களின் கற்பனை வளத்தை அநுபவித்துத் தெவிட் டாத இன்பம் பெற்ற அவர், தேவாரத் திரு முறையிலும் திருவாசகத்திலும் திளைத்து மகிழ்ந்தார். மேடைச் சொற்பொழிவுகளில் திருக்குறளையும் நாலடியாரையும் சரளமாக எடுத்தாண்டு மற்றவர்களே மகிழவைத்த அவர், கோயில்களிற் புராணங்களுக்குப் பயன் சொல்விப் பலரின் பாராட்டுகளைப் பெற்ருர்,
இருபது ஆண்டுகள் கழிந்தன. 1985ஆம் ஆண்டு பண்டிதமணி அவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினேன். நான் எழுதிய கட் டுரைகளை உள்ளடக்கிய சிந்தனவளம் என்ற நூலுக்கு அணிந்துரை ஒன்று தருமாறு கேட் டேன். அந்நூலில் பதினுெரு கட்டுரைகள் இருந்தன. அவற்றுள் இரண்டினை மட்டும் சுட்டித் தமது கருத்தை வெளியிட்டிருந் தார். 'சைவம் வளர்த்த ஈழத்து அறிஞர்கள் என்ற கட்டுரையின் மூலம், ஈழத்தின் சமய, இயக்கியப் பணியின் விரிவை எடுத்துக் காட்டுகின்ற நூலாசிரியர், பசுக் கொலைக்கு அஞ்சிப் பரதேசம் சென்ற திருநெல்வேலி ஞானப்பிரகாசர் தொடங்கி, மட்டக்களப் புச் சைவப் புலவர் கா. அருணுசல தேசிகர் வரை அவரவர்கள் செய்த சைவத் தமிழ்த் தொண்டினை நன்கு ஆராய்ந்துள்ளார். நாவலர் பெருமான், நீர்வேலிச் சங்கரபண் டிதர், புலோலி நா. கதிரைவேற்பிள்ளை இவர்களது சரித்திரங்கள் சைவத் தமிழ்ச் சரித்திரந்தான் என்பதனைக் குறித்த கட்டுரை யின் மூலம் நிறுவியுள் ளார்கள் ஆசிரியர் அவர்கள்," என்று ஒரு கட்டுரையைப் பற்றித் தமது கருத்தை வெளியிட்ட பண்டிதமணி அவர்கள், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களைப்பற்றிய கட்டுரை யைப் பற்றித் தமது கருத்தை வெளியிடும் போது ' எள் நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே " என்ற கட்டுரை மிகவும் ஆராய்ச்சிக்குரியது," என்று குறிப்பிட் டுள்ளார்.

Page 314
- 2
நாவலர் பெருமானைப்போல நாவன்மை படைத்தவர் பண்டிதமணி அவர்கள். "நெற் றிக் கண்ணைக் காட்டினுலும் குற்றம் குற் றமே என வாதிட்ட நக்கீரர் பரம்பரையில் வந்தவர், உண்மையை நிலைநாட்டுவதற்கு, அறிஞர்கள் என்று கூறப்படுபவர்களையும் சாடு வதற்கு அவர் என்றுமே பின்னின்றதில்லை. கண்டிக்க வேண்டியதைக் கண்டித்தே தீரு வார். முகத்தாட்சணியம் பார்க்கவேமாட் டார். சிலேடை, சொல்லம்பு, எழுத்தானி என்பன பண்டித மணியின் கண்டனங் களில் மலிந்து காணப்படும்; கூர்மையாகத் தைக்கும் வேகம் உள்ளனவாகவும் இருக்கும்
தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் என்பவற்றில் ஈடற்றுத் திகழ்ந்த பண்டிதமணிக்கு 1978ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் இலக்கிய கலா நிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. இலங்கைப் பல்கலைக்கழகம் தனது வரலாற் றில் இலங்கைத் தமிழ் அறிஞர் ஒருவருக் குக் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது; பாராட் டுதற்குரியது. வழமையாக வழங்கப்படும் பட்டம், அப்பட்டத்தைப் பெறுபவரை அலங்கரிப்பதாக இருக்கும். ஆணுல் இலங் கைப் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டம் பண்டிதமணியை அலங்கரிக்காது, தன் னேயே அலங்கரித்தது என்று கூறுவதே பொருத்தமாகும்.
பண்டிதமணி அவர்களுக்கு இலங்கைப் ட ல் கலைக் கழகம் பட்டம் வழங்கிய தைப் பற்றிப் பத்திரிகைகள் பலவாறு பாராட்டிப் பேசின. *. இன்றைய அர சாங்கம் தமிழ் அறிஞர்களையும் கெளரவிக்க ஏற்பாடு செய்தது. இதனல் தமிழ் பேசும் மக்களின் பாராட்டையும் அன்பையும் இவ் வரசாங்கம் பெறும் என்பது திண்ணம். அரசின் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கை கிளுக்கு இது ஒரு முன்னுேடி என்றே சிறு பான்மை இனம் கொள்கிறது; திருப்திப்

படுகிறது. "11 என்று தினகரன் வாரமஞ்சரி வாழ்த்தியது. "நம்மத்தியில் வாழும் தமிழ்ப் பேரறிஞர் ஒருவருக்குப் பல்கலைக் கழகம் "இலக்கிய கலாநிதி" பட்ட மளிப்பது குறித்து நாம் பெருமிதமடைகிருேம். இச் செயல், தமிழ் இலக்கியத் தொண்டில் தம்மை அர்ப்பணித்திருப்போருக்கு மிகுந்த உந்துதலும் உற்சாகமும் அளிப்பதாகும். இன்றைய தினத்தில் உயரிய விருது பெறும் பண்டிதமணியின் தமிழ், சைவத் தொண்டு மேலும் வியாபித்து மேலோங்கவேண்டு மென்று நாம் பிரார்த்திக்கிருேம்.??? என்று வீரகேசரி பாராட்டியது. "இலங்கைப் பல்கலைக்கழகம் தனது வரலாற்றில் முதன் முறையாக இன்று இலங்கைத் தமிழ் அறிஞர் ஒருவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் அளித்து அவரைப் பாராட்டுகிறது. பல்கலைக் கழகத்தாற் பட்டம் அளித்துப் பாராட் டப்படும் முதலாவது இலங்கைத் தமிழ் அறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையே ஆவர். இது குறித்து, தமிழ் பேசும் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறர்கள்." என்று தினபதி புகழாரம் சூட்டியது. "ஆணு லும், காலம் கடந்தாவது சைவத் தமிழ்ப் பெரியாருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவிக்க முன்வந்துள்ள இலங் கைப் பல்கலைக்கழகத்தைப் பாராட்டவேண் டும்.' என்று ஈழநாடு புகழ்ந்தது. "அவரை நாடி அண்மையில் ‘இலக்கிய கலாநிதி" பட்டம் வந்தது. எத்தனை இலக் கியக் கலாநிதிப் பட்டங்களாலும் அவரது ஆற்றலை அளவிடமுடியாது." என்று சுதந் திரன் கூறியது.
தமிழ் அன்னைக்கு ஆற்றிய பெரும் பணிகள் காரணமாகத் தமிழ் மக்கள் நெஞ் சங்களில் நிலையான ஓர் இடத்  ைத ப் பண்டிதமணி பெற்றுக்கொண்டார். அந்தத் தமிழ் நெஞ்சங்களைத் திறப்போர் அங்கே பண்டிதமணி அவர்களைக் காண்பர்.

Page 315
அடிக் குறிப்புக்கள்:
1.
2
13.
l4.
5.
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி 8 மலர்-கி. லக்ஷ்மணன் எழுதிய 6 தனிநடை கைவரப் பெற்றவர், என்ற
பாராட்டு விழா மலர்-பண்டிதமணி
பாராட்டு விழா மலர், - வித்துவாக நாவலருக்குப்பின் பண்டிதமணி, ப.
31-5-78 வீரகேசரி - பண்டிதமணி
பாராட்டு விழா மலர்-அ. பஞ்சாட் விழா என்ற கட்டுரை, ப. 54.
பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வி இலங்கைப் பல்கலைக்கழக விசேட அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர்
திருக்குறள்--கேள்வி, 2.
பெரிய புராணம்-பூசலார் நாயனுள்
சிந்தனை வளம்-திருமகள் அழுத்தக
6ð)y L. x.
4-6-1978ஆம் தேதிய தினகரன் வ
31-5-78ஆம் தேதிய வீரகேசரியைட
31-5-78 ஆம் தேதிய தினபதியைப்
31-5-78ஆம் தேதிய ஈழநாடு பத்
23-7-78ஆம் தேசிய சுதந்திரனைப்

56 -
s
கணபதிப்பிள்ளை அவர்கள் பாராட்டு விழா ாங்கள் பண்டிதமணி தமிழைக் கையாள்வதில்
கட்டுரை. ப. 10.
பின் பதிலுரை, ப. 85,
ண் F. X, C. நடராசா அவர்கள் எழுதிய
5. ܒ
யின் பணி என்ற கட்டுரையைப் பார்க்க.
Fரம் எழுதிய இன்று பண்டிதர் ஐயாவிற்கு
தேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற
பட்டமளிப்பு விழாவின் அறிமுகப் பேச்சு, சு. வித்தியானந்தன்.
புராணம் , செய்யுள் 10.
ம், சுன்னுகம், அணிந்துரை, பக், x, x,
ாரமஞ்சரியைப் பார்க்க.
பார்க்க.
#ffffjéh.
திரிகையைப் பார்க்க.
Liridës,

Page 316
14-08-1978இல் விரசிங்கம் மண்டபத்
1. விழாத்தலைவர் பேராசிரியர் ஆ. வி. மயில்வாக 2. பண்டிதமணி அவர்கள் அழைத்துவரப்படு 4. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் ச பண்டிதமணிக்கு மாலை அணிவிக்கின்(rர். 5. பண்டி களஞ்சியம் முதற்பிரதியை மருத்துவப் பேரா சு. வித்தியானந்தன் அவர்களிடம் இருந்து பெறுகி
 

ல் இலக்கிய கலாநிதிக்குப் பாராட்டு விழா
ாம் அவர்கள் பண்டிதமணிக்கு மாலே சூட்டுகின் ஓர். Baita'i. 3. பண்டிதமணியுடன் பிரமுகர்கள். ார்பில் நீர்வேலி பூரீ சு. இராஜேந்திரக் குருக்கள் தைதங்கம்மா அப்பாக்குட்டியின் உரை. 6. ‘சிந்தனைக் ரிேயர் அ. சின்னத்தம்பி அவர்கள் பேராசிரியர் ன்ருர் , 7. பண்டிதமணி அவர்களின் பதில் உாை.

Page 317
அன்பினைந்திணை, அத்வைத சி
30-6-85 ஞாயிறு முற்பகல் திருநெல்வேலி கல நடைபெற்ற நூல் வெளியீட்டுவிழாக் காட்சிகள். பண்டிதர் ச. சிதம்பரப்பிள்ளை அவர்களின் வரே களின் சிறப்புரை. பண்டிதை பொன். பாக்கியப் யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேர் னைந்திணை' அறிமுக உரை, பேராசிரியர் சு. வித்தி அ. சண்முகதாஸ் அவர்கள் அன்பினைந்திணை முத
பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையின்
"அத்வைத சிந்தனை” வெளியீட்டுரை. சிவத்தமிழ் விசேட உரை. பேராசிரியர் கா. கைலாசநாதக் அறிமுக உரை. திரு. அ. பஞ்சாட்சரம் அவர்க கூப்பிச் சபையோர் அனைவருக்கும் வணக்கம் செடி
 

ாசாலை வீதியில் உள்ள கலாமன்ற மண்டபத்தில் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையின் தலைவர் வற்புரை. பண்டிதர் க. உமாமகேசுவரன் அவர் b அவர்களின் "அன்பினைந்திணை' வெளியீட்டுரை. rாசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களின் 'அன்பி நியானந்தன் அவர்களிடம் இருந்து பேராசிரியர்
ற்பிரதியைப் பெறுகின்ருர்.
தனதிகாரி திரு. த. இராசேந்திரம் அவர்களின் ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் குருக்கள் அவர்களின் * அத்வைத சிந்தனை ளின் நன்றியுரை, பண்டிதமணி அவர்கள் கரங் லுத்துகின்ருர்,

Page 318
4
ー
ଈ. ஒப்புயர்வில்ல க. தி. சம்பந்
திருவின திகழ்வி னெய்து ே யுருவின குெப்பில் சீர்த்த
பெருமகன் பேற்றி னுற்ற குருவெனத் தவத்தின் வந்த
காலத்தைக் கடந்த சீர்த்த கி தூலத்தை யொளியி னுய்க்கு சீலத்தி னுயர்வ லர்ந்த தே மூலத்தை யறத்தி சூழ்ைந்த (
மாதவப் பேற்றி னுகி மாயத் தீதகல் செம்மை சான்ற தி( சாதனை யன்றி வேறு சார்ந் போதத்தி னுெளிபி றங்கு பு
மயக்கின ர றித லாகா மாட் பயப்பினை யரணுக் கொண்ட வியப்பினை வெறுப்பை மற்ை கயப்பின ர னுக லாகாக் கல
சத்திய நெறியை நீடு தன்ை நித்திய பிரம சாரி நீடிய த வித்தகம் விடிவா னிந்த வி2 தத்துவ வமைவி னூற்றந் த
புத்தியி னெல்லை காணுப் பு வுத்தம நிலையி னுழ்ந்த வுன் சித்தியைப் பொருளி னேற்க பத்தியி னுயர்வி ஞறு பவித்
பற்றின பொருளி னிக்கிப் ப கற்றன நிலைக்க வூழ்தான் நற்றவத் திருவி ஞரை நாடி பெற்றன நீழ லுற்றர் பேறு
இறந்தன ரிருப்ப ரெண்ணு
சிறந்துள ஞானத் தீயாற் துறந்திடல் சாங்கி யப்பேர்த் மறந்திலர் சமநோக் கிங்ங்ண்

நீகியுருவினர் நன் அவர்கள்
தசின செழித்த செவ்வி
வுயர்வின னுலகு போற்று
பிறங்கொளி பெருக நின்ற
கோதறு குணத்தின் குன்றம்.
கனிவினைக் கலைகட் கேய்ந்த நந் துாசறு சுடரை மேலாஞ் சிகன் தெரித லெட்டா முழுமையை யுணர்ந்த மேலோன்,
ந்தைப் பொருளி னிக்கு ருவுறை தெய்வீ கத்தின் திட லறியா மெய்ம்மைப் ண்ணியன் புலவ னையன்,
சியின் மலர்ந்த தூய
பண்ணவர் பரவு சீரான் >ற விருப்பினை விளைவை வேண்டு ணபதிப் பிள்ளைப் பேரோன்.
aரினு யுணர்ந்து வாழ்ந்த
வர்க்கா யீசன் ளவின ரறிஞர் போற்று தனிப்பெரு மந்த னுளன்,
துமையாய்ப் புன்மை தீண்டா ண்மையி லுறைந்த மேதை ாத் தெரிவருந் திருவி னென்று ந்திரப் பண்பார் சீலன்,
பறப்பினைப் படுத்து நீடாய்க் கழிந்திட விட்டு நாளும் யே யவரி ஞழ்ந்து ற வாழும் பெம்மான்.
ரிச்சையிற் றுறக்க மாதி மீய்ப்பவர் பொருந்து கன்மந் த் துறையினை வேறு செய்யார் ா வாழ்ந்த பண் டிதர்க னல்வர்.

Page 319
if () ,
星蓝,
• 3.
蓝4。
5.
س −
இன்னபண் பினரே கண்ண மன்னிய வுலகை மக்கள் ம கன்னலி னினிமை யூறு க பன்னரும் பண்டி தஞ்சேர்
அகம்புற மென்ன மேலோ
பகம்புற மான நெஞ்சா ய யிகம்பர மினிதி னுய்க்கு சகம்நெறிப் படுமா றுய்த்த
தருமத்தை யலசி யாய்ந்த
நிருமித்த நிழலி னிங்கா ரி பெருமைக்கு மதனி ஞய வருமைக்கோ ரருமை யாகி
நாவலன் மரபி ஞனர் நற் பாவலர் வித்த கத்தின் ப தாவருந் தயைய டக்கஞ் மேவருந் தவரின் சீர்த்த ெ
எய்திய பிராரத் தத்தி னின் பொய்யது தேக கன்மம் ே மெய்யினை மெய்யிற் கண்ட செய்தனன் செய்யுஞ் செய்
வீடும னமைய நின்று விகு
யாடுந ரழிவர் நண்ணி ய
கூடுநர் வெறுப்பர் தேடிக் பாடுநர் வேறு காணுப் ப6
சொற்றன காலந் தோறுஞ் முற்றவை யுணரு மெல்லை தெற்றெனத் தெரிந்து நிற் கற்றவர்க் கினியான் காட்
ஒப்புயர் வில்லா நீதி யுரு னெப்பரி செய்து போது துப்பொளிர் தெய்வ நீழல் கப்பிய சொரூப மெய்யன்

س- 58{
னிசைத்தபண் டிதரி ஞஞர் திப்பினைப் புகழைப் பொன்னைக் ன்னிய ருறவை நீங்கு
பண்டித மணியா மண்ணல்,
ரமைத்தநம் மாசா ரத்தை லந்தநர்க் கருளி னுேக்கி மியல்பினை யுயிரைக் காட்டிச் 5 தனிப்பெருந் தகையி ஞனுேன்.
தகையினர் வழியிற் ருனே திேயி னறவன் பொய்யாம் புகழுக்கும் பொருளே கொள்ளா
யான்றவிந் தடங்கு சான்றேன்.
றமிழ் வல்லார் போற்று bபலர் வாழ்ந்து போனுர் சத்திய மாதி யோங்கு பிடிவிவர்ப் பெற்ற ரில்லை.
யைந்தன பிணிக ளெல்லாம்
பாகென வமைந்து நீங்கி
வித்தக னுாழி னெல்லாஞ்
கை சிவத்திடை நிறுத்து சீரான்.
துரணி னினிமை பூண்டே
ணைதர வன்பி ஞட்டிக்
குறைகளை நிறைவைத் தூக்கிப்
ண்ணவர் பண்பி ஞனுேன்,
சொல்லுவ சிலவே யேனு யுலகினைக் கடந்த மூலந் குந் திருவினை யீனு மென்ட சி கருத்தினுக் கமையு மாருே.
வின ஞென்று வாழ்வி
மிலங்குமெய் யறத்தி னிங்காத்
துளங்கருட் செல்வன் ஞானங் கைலாச பதியாம் யோகன்.

Page 320
盘器。
9.
20.
2
- 25
காதலி னவனி னிங்காக் கத் போதமே பொருளி ஞகப் ெ மாதவப் பேற்றி ஞழ்ந்த ம சாதக ஞென்றே யொன்று
மாட்சியின் மலர்ந்த மைந்த காட்சியாஞ் சித்தாந் தத்தை வீட்சியி னிங்கு பேற்றின் வ சாட்சியி னுலகு கண்ட தவ
சைவசித் தாந்த மென்னுந் தெய்வசங் கற்பங் கூடத் ெ யுய்வுற வுலகு நீடா யொளி? கைவரக் காட்டி நின்ற கட6
அறிவரு மரணி ஞய வறிsெ செறிபெரும் புகழைத் தானு குறியின னென்றும் நீதி கே வெறிதுறு மனத்தி னையன்
澳
பண்புடைய பண் siT Lq gbi G. UUT
நாடிக் கயிலாயர் நற்புலவர்ப் பாடிப் படித்துநற் பண்புசெ வல்ல கணபதிப்பேர் வாய்ந்த சொல்லவரி தென்றே துணி,
என்குரவர் எல்லோர்க்கும் இ பண்புடைய பண்டிதப் பாவ பெற்று வளர்த்தோர் பெருந்த அற்புதமாய்ப் பாடல் அரிது.

9 -
யினு யென்று மொன்றிப் பாருந்திய புண்ணி யத்தின் ாணினு ஞரா வான்ம Fாந்தியி னமைந்த நீரான்.
மாசறு சிறப்பின் சைவக் நக் கசடறத் தெளிந்து சன்ம விழுமமே விளைவின் முற்று நீதவர் தகையி ஞனேன்.
தனிப்பெருங் கடலுண் மூழ்கித்
தரிவருந் திறத்தி ஞய்ந்தே சயத் துவைதத் துண்மை புண்மா மணியி ஞனேன்.
வாரு வடிவா மென்னச் ந் தீண்டிடாத் தெளிந்த ஞானக்
ாடுரு நெறியி னென்று மேதையை விரித்தற் கில்லேன்.
எடிதப் பாவலன் லபிள்ளை அவர்கள்
போற்றியே 5) ~~—- ğf?LjT(TuÄ குரு நற்புகழைச்
ன்பமுறும் நண்பினனும் ஸ்னை - அன்புடனே நவத்தை மெச்சியே
- பண்டிதமணி மணிவிழா மலர் - 1959

Page 321
7
நினைவில் நீங்
நம, சிவப்பிர
சித்தாந்த சைவநெறிச் சிற் சித்தாந்தத் துக்கோர் திற காணும் கலாநிதி கைவந்த பேணும் புலமையோர் பே
கச்சியப்ப பேராசான் கம்ப உச்சியொ டுள்ளங்கால் ஒவி கண்ட கலாநிதியின் காட்சி விண்டவுயர் வித்தை வியன்
இலக்கியத்தின் உட்பொருளி துலக்கிநுண்மை யூடுருவித்
சொன்ன கணபதிச்சேய் ெ மன்னன் கலாநிதிக்கோ ம
ஐந்திணை அன்பின் அணிவி சிந்தனையிற் செல்லத் தெளி கோவை அணியுணர்த்தும் பாவை யுவப்பர்சீர் பார்த்து
தில்லை யிரகசியந் தேரொணு சொல்லு மனைத்தேயச் சூத் விளக்கிய பண்டித மேதைசி பழக்கிய பண்பே பயன்.
கற்போனுக் காசான் கருத் பொற்பேபோல் நூலிற் புகழ் தேவர் குறளருமை சிந்தை யாவர்கை யாள்வார் இனி.
ஐயா கலாநிதியே ஆறுமுக மெய்யாஞ் சிவநெறி மேவிற மொழிப்புலவர் சிந்தனை மு பொழிப்புரைப் பாய்செம் ெ
தொன்னூல் தொகுத்தபொரு நன்னூல் நனியியற்றி நாமக கணபதிப் பிள்ளைக் கலாநிதி மணவணி செய்தார் வரம்.

கா நீள்காவியம்
காசம் அவர்கள்
ந்தனைகள் மெய்கண்ட வுகோல் - வித்தாந்தம் 5 தொன்மரபு
.!ע
ன் மகாகவி யமாய் - மெச்சியே க் கவின்பன்னூல்
ல் ஈர்த்தபடி ஆய்வு
தூய - கலைக்கருத்துச் தான்மொழிப் பண்டித ான்.
ளங்க வைத்தான் ந்தவுரை - தந்தனை கூர்மதியாய் பண்டுதமிழ்ப் 5.
ற தத்துவிதச் திரத்தை - மெல்ல த் தாந்தம்
து விளக்குமப் லுரைச் - சொற்பாணி
நிகழ்த்துநெறி
நாவலர்போல் கின்று - பொய்யா }ன்வகுத் தாங்கு பாருள.
நள் சூழ்ந்து துருவியே ட்குப் - பொன்னூல் திக்கந் தர்வ

Page 322
O,
3
- 26
சுயம்வரம் கன்னியாம் தொல் நயம்பி ரமசாரி நம்பி - வய அன்பெழு மைந்திணை அத்கு இன்பசுகம் இம்மொழிக் கீடு.
தனங்களப்பு தாரணி சாலும் தனங்க்ளபத் தார்அணி; சங் அர்ப்பணமா யங்கமைய அங் கர்ப்பத்திற் சைவக் கரு.
வான்தோய் புக கலாநிதி க. செ. த
நல்லைநகர் நாவலர்பின் நற்ற நெல்லைவதி பண்டிதசி காமன் பெய்யும் கணபதிப் பிள்ளைமு எய்தும் பலகதிர்கள் ஈன்று.
ஈன்று வளர்த்தெடுத்த இன்ற தோன்றலெனத் தொடங்கித்
சான்றேன் கணபதிப் பிள்ளை வான்றேய் புகழ்முடித்தாய் எ
வாழ்கின்றாய் வையத் தமிழரு நீள்கின்ருய் பேரால் நிலத்தள கலைக்கழகம் உன்னைக் கலாநி விலைக்கரிய பேர்பெற்ற வாறு
ஆறற்ற போதும் அறிவுப் ெ பேறுற்ற யாழ்சேர் பெரும்பத் செந்தமிழின் ஊற்ருய்த் திகழ் அந்தமுறு மாறில் அறி.
அறிவும் அடக்கமும் ஆன்ற
செறிவும் திரண்டுதமிழ் தேக் கணபதிப் பிள்ளையெனக் காட்
குணநிதியைத் தந்தமைந்த

-
புகழ் கண்ட
ஞ்சுரந்த வித மானதென்னே!
தமிழ்ச்சந் கநிவே - தனங்கொள குலித்தார் பிள்ளை இவர்
ழ் முடித்தோன்
Lyr Far saissir
மிழின் பொற்பயிர்யாழ் னியாம் - சொல்லுதமிழ் கில் பேணியதால்
மிழ்சேர் மட்டுவிலின் தொல்தமிழின் - ஆன்றநெறிச் யெனச் சால்புதரு
வாழ்.
|ளம் வான்புக்கு ாவு - யாழ்பல்
தியென் ருேதி
பருக்கருப் நியின் - வீறுற்ற பண்டிதமணிவாழ் (வு)
ஒழுக்கச் கி - உருவில் ட்டி யுயர்ந்த
5) fT OQI :

Page 323
2
参见
5
t
சிந்தனையா கவிஞர் இ. முரு
பண்டித மணிஎன் ருலே ப கண்டனச் செய்கைப் பண்ட் உண்டென எவரைச் சொல் கிண்டலின் கலைந யத்தைக்
புராணத்தில் தோய்ந்து நின் இராவென்றும் பகல் இ தென் பராபரன் நினைவென் ருலே தராசுபோல் நிறுத்துக் காட்
சேவலும் மயிலும் போற்றித் மூவிரு முகங்கள் போற்றும் நாவலர் பெருமா னுக்கு ந4 சீவியம் முழுதும் தந்த சிவ
சுருங்கிய சொற்கள் தோறும் விரும்பிய சமயம் துள்ளும் 6 பரம்பிய படிப்பி ருந்தும் ப6 தரும்புதுக் கருத்தில் நிற்கும்
இந்தமண் மணக்கும் சொல்ல சொந்தமும் சுயமும் தொன்க எந்தநாள் இனிநாம் காண்ே சிந்தனை யாளர் போஞர் சி
குருவே பண்டிதர் சு. இர
சீரியநற் குணங்கள் பல சேர் செந்தமிழ்த்தேன் மன ஆரியமும் செந்தமிழும் அை ஆசிரிய கலாசாலைக்( ஓரியல்பும் இல்லாத என்னை ஒருபொருளாய் மதித் பாரிலுயர் மட்டுவிலைப் பதிய பண்டிதமா மணியெங்

ளர் போனுர்
கயன் அவர்கள்
தியும் மதிப்புந் தோன்றும்
ற் கணபதிப் பிள்ளை யார்போல்
வோம் ஊசிபோல் மெல்லக் குத்தும்
கேட்பதோர் பேறே ஆன்ருே
ற புத்தொளிப் பண்பா டாகி
றும் எண்ணமில் லாது ழைத்தார்;
பண்ணியம் என்று நின்றர்
டும் தன்மையை மறக்கப் போமோ!
திருக்கைவேல் போற்று முன்னே முறைமைமேல் விருப்புக் கொண்ட
bலதோர் தொண்டன் ஆகிச்
த்துவம் மறக்கப் போமோ!
சுள்ளிட்டு நிரம்பி நின்று வீரியம் மறக்கப் போமோ! 0ர்காணுத் தொடர்பு கண்டு 5 தகுதியை மறுக்கப் போமோ!
லின் எழுப்பத்தை உணர்த்தி வைத்த மைத் தொடுகையும் சால்பும் பண்பும் பாம் எண்ணத்தில் இறைமை வாய்ந்த ஸ்ர்பிறர் எஞ்சி யுள்ளோம்.
வாழ்க!
fago su iT gali assir
ந்த ஆழி ழபிலிற்றும் சிறந்த மேகம் மந்த குன்றம் கு) ஏற்றும் தீபம் * தானும்
துதவி செய்த வள்ளல் ாய்க் கொண்ட
குருவே வாழ்க!

Page 324
5
பாவலர் போற்றிநிற் வித்துவான் சி. குட
நாவலர் பெருமா னன்று நட ஆவலோ டணைந்தே பெம்மா காவல, தமிழ்சை வத்தைக் பாவலர் போற்றி நிற்கும் ப
பண்டைய நூல்கள் யாவும் ட கொண்டபே ராசா ஞகிக் கு வண்டமிழ்த் தேனை மாந்தி ! தொண்டினை ஆற்று மாண்பு
காவிய பாட சாலை கண்டனை மேவியே கற்ற பல்லோர் விை நாவினின் வன்மை யெங்கும்
ஆவியும் உருகும் ஐயா அடி3
துணையதி பராம்கை லாச ப இணையிலரச் சாஸ்தி ரங்கள்
அணைபவர் மயக்கம் எல்லாம் பணைபொலி மட்டூர் தந்த பt
இந்திய அறிஞ ரேனும் ஈழத் தந்தம தெழுத்திற் பேச்சில்
சிந்தையில் அவர்தம் சீர்த்தி தந்திடும் கண்ட னங்கள் தக
கம்பனை ஆர். பி. சேதுப் பில் எம்பிரான் தகூடி காண்ட உ நம்பினுேர் கண்டு போற்ற
அம்புவிக் களித்து நின்ற ஐ
எழுதிய கட்டு ரைகள் எண்ண வழுவிடா வணம்தொ குத்து தழுவிட அச்சி லேற்றித் தக் பழுதிலாத் தொண்டர் பஞ்ச

கும் பண்டிதமணி s Jor lf saioh sir
டந்ததோர் நெறிபின் பற்றி ன் அடிச்சுவ டதனைப் போற்றுங் கண்ணிரண் டென்னக் கொண்டாட் ண்டித மணியே ஐயா,
ரம்பரை நெறியாற் கற்றுக் வலயம் போற்ற நின்ருய் மாணவ வண்டு ஆர்ப்பத் சொல்வதெவ் வாறு கூடும்.
திருநெல் வேலி ழைந்துபண் டிதர்க ளாஞர்
நாட்டினை மேடை யேறி விரல் நுனியில் நின்றல்.
திதுணை யாகக் கொண்டே இடரற நுனித்தே யாய்ந்தாய்
அகன்றிட விரித்து நின்ருய் ண்டித மணியே எந்தாய்.
*து அறிஞ ரேனும்
தவறுகள் இழைத்து விட்டால்
சிறிதுமெண் ணிடாது நின்றே
க்கவா ரிசுவாய்க் காட்டும்.
rளைகைக் கொடுத்து விட்டே ரையினை எழுத லுற்ருய் 3ற்றமிழ்ச் சைவ நூல்கள் பநின் நாமம் வாழ்க.
aரில அவற்றைப் பேணி
வைத்தவை நூலா யாக்கம்
கவா றுழைத்து நின்ற ாட் சரம்முத லோரும் வாழி.

Page 325
2
&
7
கவிதை
மயிலங்கூடலூர், தி. க்
வே
நல்லைநகர் ஆறுமுக நாவ6 சொல்லு தமிழ்வளர்த்த சே சித்தாந்த சாகரமே; சீரான நித்தமும் போற்றுதும் நின்
பண்டித மாமணியே ஐயா எண்டிசை போற்றும் கலா நல்லா சிரியர் குலம்விளங் எல்லா எழிலும் இயன்று.
இலக்கிய நன்னயங்க ளெல் துலக்கும்ரா மாயணக் கா ஓங்கு கலாசார மோதுகந்: நீங்குமோ வாழ்வில் நெறி.
செந்தமிழ் வாழ்த்தத் திரு பந்தமில் வாழ்வினைப் பற்ற வாழ"அன்பி னைந்திணை' நு நீள விளக்கினையே நின்று.
கட்டளைச்
மட்டுவில் தந்த மகாலிங்கம் கட்டுரை வல்ல கணபதிப்
சொட்டும் கலைவளம் சூழ்தி சிட்டென வாழச் சிறுகுடில்
ஆரியஞ் செந்தமிழ் ஆய்ந்: பாரிய நன்னூல் பரந்த இ சீரிய சித்தாந்தத் தேனைச்
பேரியல் பண்டித மாமணி
காவியக் கல்லூரி கண்டாய் மேவு கலாசாலை முப்பது
காவிய மன்ற முதலாய்ப் ! தேடியே பட்டங்கள் சூட்ட

அஞ்சலி னகரத்தினம் அவர்கள்
GTLT
ஸ்ர்தம் வாரிசெனச் Fாதியே - எல்லையில் ன நின்பணியை
ாறு.
பண் போடன்பாய் நிதியே - தொண்டதனுல் க வாழ்ந்தனையே
லாம் இனிதாய்த் ட்சி - இலங்கியே த புராணமாய்
சைவ நீதிநெறி றியே - சிந்தித்து ாலாக "அத்துவைதம்’
கலித்துறை
ப் பண்டிதன் மாண்பதியே
பிள் 2ளயைப் பெற்றெடுக்கச் திரு நெல்வேலி சேர்பதியிற் செய்ததென் மாதவமே,
த புலமைசேர் ஆரியனும் |லக்கியப் பண்டிதனும் சுரந்த சிவமணியாம் தம்புகழ் பேசுதுமே,
கவின்பெற ஆசிரியர் ஆண்டுப் பணிமுடித்தாய் பெரும்பல் கலைக்கழகம் த் திருவருள் தேர்ந்தனையே.

Page 326
- 26
8. சிந்தனைச் செல்வராய்ச் சேர், வந்தவர் ஐயம் வழுவிலா :ே பந்தனை யற்றுப் பழுதில் பிர முந்தையர் நாவலர் போற்றி
9. வித்தக மேலோன் விரும்பு க சுத்த விலக்கணஞ் சொல்லவ முத்தமிழ் காத்தவெம் மூதறி அத்துவிதம் காட்டி அரன்தா
10. நல்லைநகர் போற்று நாவலர் எல்லையில் இன்ப இலக்கியங் தொல்லருஞ் சித்தாந்த மாண் அல்லல் அறுத்த அறிவுச் சுட
கலிவிரு 11. எண்ணிய ஆண்டுகள் எண்ப புண்ணிய ஞானம் பொருந்த கண்ணிய பண்டித மணிதன் நண்ணியே யிறையடி நாடச்
錄
மகிழ்ந்தினிது வ
1. திருவாரும் நல்லைநகர்த் திருப பெருகார்வ முள்ளவனுய்ப் பீ கருவாகி வந்தவுயர் கருத்துக மெருகூட்டித் தமிழ்சைவம் மி
2. சொற்செட்டுப் பொருளாழம் 5 அற்புதமாய் ஆய்ந்துரைக்கும் நற்றுணையாய் இணைந்துவர பற்றுடனே பேணிவரும் பண்

$5 —
ந்தநல் சித்தாந்த சாகரமா. தாட்டிடும் வள்ளலெனப் ாம சரியநெறி ப முத்தமிழ் காத்தனையே.
ணேசையக் குருநாதர்
1ல் சுப்பைய பிள்ளைநெறி
பண்டித மாமணியும்
ள் சேர்ந்தாரிங் காருளரே.
இன்றில்லை யென்றிருக்க
காட்டிட ஈங்குதித்துத் ாபுந் தெரிவித்துத் துய்யதமிழ் -ரே அணைந்தனையே.
நத்தம்
த் தேழனுட் ப் பெற்றநல்
குத்துமா சாந்தியே.
ாழ்த்துகின்றேம்
Dகணும் நாவலர்மேற் டுறவே அன்னவர்பால்
ளைக் காதலுடன் கவளர்க்கும் வித்தகரே!
சுவையான மொழியழகு
அழகுநடை பொதுக்கவர்ச்சி
நாவலர்கோன் பரம்பரையைப்
டிதமா மணியாரே!
“சாரதா s -ஈழநாடு - 30-6-1985

Page 327
4.
பண்டிதமணி பரிவ
氨毅 G
Ge
பாராருஞ் சீர்ப்பண் டிதம6 ஆராலுந் தான்சகிக்க லா பாலமுதத் திங்கள் பகர்வி மேலதற்கு மாறுண்டோ ே
காசக்கண் ணென்கோ கரு பாசடைசேர் வன்மூங்கிற்
விண்டுரைக்கு மார்வம் மி கண்டுரைக்கும் வாய்ப்பிலே
கட்டளை
போதிப்பர் புந்திக் கிதமா சாதிப்பர் தர்ம நெறிபிறழ் பேதிப்பர் நீதிப் பிறழ்ச்சி வசதிப்பர் பண்டித மேதை
கோச்ச
தேவலருஞ் செந்தமிழ்க்செ நாவலர்நா வலரான நற்க காவலொடு மணிந்துரைத பாவலர்சீர்ப் பண்டிதர்க்கு
அறுசீரா
எண்டங் கியதமி ழாசிரி ய விண்டங் கியபுகழ் நாவலர் கண்டிங் கிதமுறு பண்டித உண்டிங் கிதமுறு முடலுய

|ப் பாமாலை அட்டகம்
st is
சததன்
வண்பா
ணரியும் வான்புக்கார் குமோ - சீராகும் ண் மறைந்தக்கால் 6,09).
துமரக் கண்ணென்கோ கண்ணென்கோ - நேசமிக குபண் டிதமணியைக் வே கண்.
க்கலித்துறை
ய நன்னடை போதித்தவை
வார்தமைத் தண்ணருளாற்
க் குறுபொரு ளானவெலாம்
கள் மாண்புகள் வந்திப்பரே.
கக் கலிப்பா
ான் சித்தநிலா வியகுருவாய் தைநாம் புனைந்ததனுக் நீ தடியேற்குக் கைகொடுத்த ப் பகர்கைமா றறியேனே.
சிரிய விருத்தம்
பத்துவம் ஏற்றேர் தம்நடையில்
* நடைநெறி வீறுறு மாறுமிக
மணியைக் காணும் விதியில்லோம்
பிர் வாழ்விற் குறுதியு மில்லோமே.

Page 328
as GSr.
சீதைக்கோ இடையில்? வசையில்லைச் செ வாதைக்கே நின்வாயில் மன்னுபுகழ் மணி போதைக்கு யாமுருகட் புன்சிரிப்பை முந் காதுசுவை தேன்பிலுற் மெட்டாத கவியினு
எண்சீர்
பேசுகின்ற ஒசையிலே
பேரறிஞர் சபையி ஊசிவிழுஞ் சத்தந்தால் உடல்குலுங்கு சிரி தேசுமிகு செந்தமிழின் தேனுயின் னமிர்த காசினியில் மேடையிே கல்வியினை ஊட்டு
நாவலர்தம் வழியினிே நம்சைவ நீதியினை காவலனுய் நற்றமிழ்த்ே
கல்வியினை மாண பாவலராய் நாம்விளங் பண்புளராய் வாழ் தேவுலகு சென்றளங்கள் செம்மலர்த்தாள் ப

-س 267
லத்துறை
ல இராமனுக்கோ ப்புதற்கு b வார்த்தையிலை யேயோர்
பொன்வாயிற் தியெழும் ]றும் “கற்பனைக்கு ஒாற்றே.
விருத்தப்பா
தனியோர் இன்பம் னிலே ஆர்வம் பொங்கும் * உணர வைக்கும் ப்பாலே உயிரே போகும்
தெவிட்டா இன்பம் ாகித் தேங்கிப் பாயும் ல பேசு தற்கும் தற்கும் ஒருவற் காணுேம்.
ல நிலைத்து நின்று r நண்ணக் காட்டி தேன் கலந்து சேர்த்துக் வராம் எமக்கே யூட்டிப் கப் பயிற்சி தந்து வாங்கு வாழப் பண்ணி ர் தெய்வம் என்றே மனத்திருத்தி வணங்கு வோமே.

Page 329
பண்டி & அவருரைத்
JF. EisLD TIL Aí
ബേ8
தீர்த்தன் திருவடியே சேவித் ஆர்த்த பிறவியலை யாற்றே நோக்கொத்த நீர்மையராய்
போக்கொத்த பண்டிதராய்ப்
சிவத்தமிழி லூறியருள் சீரெ தவத்தமைதி கண்டாங்காஞ் விட்டுவைத்துப் போஞரே ( சொட்டுவைத்தே யாரருளிற்
ஆழ்ந்தமைந்த சான்றேன் & சூழ்ந்தகுந்தத் தந்த துறை வெல்லாமு மெல்லாமே யெ6 சொல்லாழஞ் சூக்குமமாஞ்
ஒரெழுத்து மீரெழுத்து மோ
யாரெழுத்து மீக்கொள்ளா
பண்புண்மை கட்கடங்கும் கண்டண்மை காட்டறமே ச
அத்துவித சிந்தனையும் ஆக வித்துவத்துக் கெட்டா விய தான்கண்டு காட்டியதே தட் தீன்கண்டு விட்டசிவத் தீ.
சிந்திக்கத் தெய்வச் சிறப்டே வந்திக்க ஞான மகிழ்வோர் கற்புங் களவாலே காமுற6ே நிற்காதோ பண்டிதரால் நீ

கமணியும் ந்தவைகளும்
லோன் அவர்கள்
வேண்பா
ந்துஞ் சிந்தித்தும் வ - பார்த்தனன்காண்
நுண்மாண் நுழைபுலத்துப்
பூத்து.
ாழுக்க மாஞர்
சால்பின் - பவத்தொடர்பில் வேதவழிச் சைவநெறி
@g.
அகத்தமிழு றுாற்றதனைச் கண்டோன் - வாழ்ந்தமைந்த ல்லார்க்கும் நன்ருமே
சொல்.
ங்குமோர் பேரெழுத்தை வாறெழுத்தால் - பாரெழுத்தும் பண்டிதம ணித்தூயோன் 5ாண்.
மநூற் சிந்தனையும் ன்பொருளும் - தத்துவமாய்த் பாமற் சார்வார்க்கே
பாங்கு முள்ளத்தே
கும் - சந்திக்குங் வ பேரின்பம்
B.

Page 330
7.
().
ll.
13.
கற்றறிந்தார் கண்டறிந்தா முற்றறிந்த மாமுனிவன் மூ பீடார் கணபதிப் பிள்ளைய
சூடாருஞ் சொற்சுவையே
நீதிவழி நீங்கி நிதியதனை
பாதிவழி போமுன்னே ப் நின்றே பயன்செய்யும் நீள ஒன்றேனுஞ் செய்யா துய
ஆட்பா லவர்க்கருளும் அ கேட்டா ரளவில்லைக் கேடு தாவிலருங் கொள்கைத் த பூவிலரும் போதுரைத்த ே
தீண்டாமை யென்னுஞ் .ெ வேண்டாமை தானே விழு தேகம் விழுமுன்னே தீண் வேகங் கெடுத்தாள வேண்
மூவர் தமிழுணர்ந்த மூதற தேவர் குறளருமை தேர்ந் செந்தண்மை பூண்டொழு வந்தண்மை யானுனே வ
ஒன்றுந்தான் வேண்டா ஒ நின்றுய்ந்தான் என்னில் போவோர் வருவோர்க்கே தேவோ டிருந்திடுவார் தே
அறுசீராசி
அண்டிய வமரர் தம்மை
மிண்டிய மாயா வாதப் ே கண்டினுங் கனிந்த சொல் பண்டித மணியின் பாத ட

ܚܝ 269
ர் கற்பறிந்தார் கைலாயர் முப்பறிந்தார் - உற்றறிந்தார் |யர் பண்டிதராஞ்
சூழ்.
ச் சேராதீர் ாழ்போகும் - நீதிநிதி ண்மாத் திரைகுன்றில் ர்ந்து.
ற்புதமே யாகமமாய்க் படா - துாட்பாலாய்த் மதொழில் தாழாராய்ப் போற்று.
சழுஞ்செல்வம் பெற்றக்கால்
மியெழும் - ஆண்டாண்டாய்த் ாடப் படாமை பெற
ITGB.
Nஞன், மூப்பறியாத் தறிந்தோன் - யாவர்க்குஞ் கல் சீருடைமை யாயுடையோன் ாழ்ந்து.
ளிசேர் துறவறத்தில் நிகரேது - வென்றுந்தான் போதாந்த மெய்காட்டித் ர்ந்து.
ரிய விருத்தம்
யாலமுண் டவன்றன் காப்பாய் பயினை யகலக் காய்ந்த லின் கணபதிப் பிள்ளை யாசான் பங்கயங் கருத்துள் வைப்பாம்.

Page 331
பைந்தமிழ் வள
மு. வைத்தியல
கேரிசை
செந்தமிழ் மாமணியின் சி • ال
முந்துமெனைக் காண்போர் ஏற்ற மறிந்தவர்கள் என் தூற்றி யிகழார் துணிந்து
6 2. கலைமகளுந் தமிழுலகுங்
கற்றுயர்ந்த கவிவான விலைமதிக்காப் பண்டிதம விட்டகன்று சென்றது அலைகடலிற் றுரும்பதுபே மாறுதற்கு வழியுண்ே மலைமகளின் பாகன்ருள்
மாண்பிறப்பின் பயன்
3
காலமெலாந் தமிழ்சைவ ட தன்னுவி யுடல்பொரு ஞாலமதில் நாவலரின் பரம் நல்ல தமிழ் வல்லாரை சீலமொடு நைட்டிகமாம்
திறம்பாது அரனருள் ஆலமுண்ட கண்டனருள்
தாணுவினுே டத்துவி
4
விண்ணுலக வமரர்நல் லப் விருந்தயர வேண்டுெ தண்டமிழின் சுவையமிர்து தருக்கித்துத் தமிழமி கண்ணுதலோன் கழலடை கற்பனவு மினியமைய மண்ணுலக வாழ்வொரீஇச் மறுமையினு மீண்டு:
அறுசீராசிரி ஆண்டொன்று சென்ருலு மையாவுன் மீண்டேதுஞ் சுவைப்பதற்கு விரும்பாே தீண்டாதே; தித்திக்குஞ் சொற்பொழிை வேண்டாதே; நின்னுருவங் காணுக்க

ர்த்த பண்டிதமணி பிங்கம் அவர்கள்
G66 ioTust
8
ர்ேத்தி யுரைப்பனென
முறுவலிப்பர் - எந்தைதமிழ் னுடைய புன்மொழியைத்
.
ரிய விருத்தம் கலங்கி யேங்கக் னர் கண்ணிர் சிந்த ா மணியே யெம்மை துயர் விளம்பற் பாற்றே! ா ல்லையு நெஞ்ச டா வறியோ மையா மன்னி நின்றீர் ாபெற்றீர் மகிழ்வுற் றீரே !
மிரண்டி னுக்கும் ள்க ளர்ப்ப னித்தும் ப ரைக்கு ாச் சிருட்டி செய்தும்
TLD Fífuuh பார்த் திருந்த ஞான்று கூட்ட ஞானத் தம் சார்ந்து ஸ்ரீரே!
ர்ெத விரித்து மன விழைந்தா ரேனும் பக் கின்றே யென்று ர்த மாந்தி நிற்பீர் யுஞ் சித்தம் வாய்ப்பக் |ங் கருத்தைக் கொண்டோ
சுவர்க்கம் புக்கீர் ரா வரம்பெற் றிரே!
ய விருத்தம் தமிழ்த்தேனைச் சுவைத்த வாய்கள் வ; விண்ணுேரின் அமிழ் தென் ருலும் வைக் கேட்டசெவி பிறிதோர் கானம் ண் வேற்றுருபுக் கண்க ளாமே.

Page 332
காக்கவேண்
கவிஞர் (GSF M.
i. ‘எங்களுக் கென்ருே இங்கது தொட சங்கம்வீற் றிருந்த
தனிப்பெரும் ப பொங்கிய எங்கள் 6 தம்பியின் புல6 தங்கமா புலவன் த
படுத்திய கண
2
*
நாவலர் எழுந்தார் நாயகன் ராகவ மேவியங் கிருந்த ெ
வேகமாய் எழு கூவினுர்: “கொண்டு
கொய்துகொய் நோயுமஞ் சியது!- நோற்றனம் ப
நீதியை உணர்ந்த
நாவலன் நேர் பாதிரி மாரும் பை பயப்படும் நெ( வேதியர், மக்கள் ெ வேஷதா ரிகளு சாதியின் அதிகம்
தத்துவந் தந்த
母. வண்டுக ளாகி மான மரநிழல், தெரு என்றுள இடங்கள்
சுவையினை இ6 தொண்டினைச் செய் பலபிள்ளை திற பண்டித மணி சி.
பணிமிகப் பெர்

ாடிய பெருநிதியம்
பத்மநாதன் அவர்கள்
ர் இலக்கிய வழியுண்(டு): ங்குதல் காண்க:
அரசகே. சரியின் டைப்பிது ஊற்ருய்ப் வரகவி சின்னத் மையீ தின்னும் மிழி(து)"என் முற்றுப் பதிப் பிள்ளை!
?- எப்படி? கம்பன் பன் மிதிலை வில்லினை வளைக்க ந்தது போல } வாதந்திக் கட்டை” திழுக்குமத் தொய்வு இக் காட்சியைக் காண ண்டித மணியால்
ஒருபெரு மனிதன் மையின் ஆணி; கவரும் மதித்துப் ருப்பவன்; போலி சாத்தினைத் திருடும் }க்குக் கூற்றம்; சமயமென் றுயர்ந்த
வித் தகனும்!
னவர் சூழ த,திண்ணை, மடங்கள்
எங்கணும் கவிதைச் விரிதெடுத் துரைக்கும் த சிரோமணி பொன்னம் மைகள் விரித்த கணபதிப் பிள்ளை ரிதெனச் சொல்வேன்!

Page 333
5
- 272
குற்றிய லுகரம் போ வழிகுறு குக’என கற்பனை சிகரம் அர் காட்டிய கணபதி சொற்பொழி வெழுத்து துறையெலாம் இ பெற்றன; தமிழா சி பெரும்பயன் பெ
செறிவினுக் கரிய உ செப்பமும் நுட்ப சிறுகதை வடிவம் டெ சரிதையைப் பல துறவிலே தேவேந் தி வகன், கெளத் தம குறைகளை நிறுவும் ட
கூரிய மதியி2ள
நாவலர் தாமோ தர
நாட்டவர் புரிதம் யாவையும் மூடிப் பு
புனைபவர் பொய் தேவனும் எங்கள் பன்
பணிமிகப் பெரி காவிய மாகும் இனி காக்கவேண் டிய
பண்டித
வெண்
செந்தமழ்ச் சைவநெறிச் வந்தமணி, பண்டித மா விட்டந்த மேலுலகில் லே பட்டமுற மேவினர்விண்

-
"லிவள் செல்லும் னும் சிவத்தின் புதம் என்று
5' 62% து பாடஞ்சொல் லுகை-இத் வன்தொடத் துலக்கம் ரியரிங் கிவனுல் ற்றனர், உய்ந்தார்!
ரைநடைக் கழகும் மும் வாய்ந்த பறு சிவ காமி முறை படிப்பேன்! ரன்,அருச் சுனன்,சீ Dன்-இவர் துறவின் பண்டித மணியின் வியப்பேன்!
பிேள்ளை முதலெம் Sழ்ப் பணிகள் துவர லாறு ம்மையைச் சாடுந் ண்டித மணிசெய் 'து); அவன் வாழ்க்கை வருந் தமிழர் நிதி யமுமாம்!
DITLDaxof
* சீர்மரபு வாழ்வித்து
மணி, - இந்தவுடல்
வதசிவ வித்தகப்
பால்.
சைவபரிபாலன சபையார், யாழ்ப்பாணம்,

Page 334
38
ஐயா உன் அமுதமெ!
பண்டிதை பொன். ப
செங்கமலப் பூவிதழ்கள் வி
சிறந்தவிரு நயனங்க அங்கமெலாம் குலுங்கப்பு
ஐயா நீர் எங்குற்றிர் தங்கமெனும் நும்மேனி
தாரணியில் நாமெல் சிங்கமெனக் கர்ச்சனை செ சென்றனையோ வானு
மூத்தவுன்றன் புதல்வர்ப முத்தமிழ்சேர் சங்கெ பார்த்திருப்பர் தம்பையர்
பாங்கான கனகசெந் வேத்தவையில் நின்புலை விண்ணவர்க்குத் தண் காத்திருந்த எங்களுளம்
கைலாச பதிஐயா அ
பண்டிதமா மணியாம்நீ ரு
L6örlsr60T Dms00T6) கண்டெனவே தமிழதனைக் கனவிதுதான் வாழ்ெ எண்டிசையும் உமதுபுகழ் இறுமாந்தோம் எமச் அண்டருல குமையழைக் ஐயாவுன் அமுதமோ
கைகட்டி வாய் புதைத்துக் கார்முகிலே நுங்கவி மெய்விட்டு நும்முயிரை
மேதினியில் யாமிரு நெய்யிட்ட தசரதனின்
நித்தமுமே வைத்தி பொய்விட்டு மெய்யதனை
பொன்னுருவே எங்க

ாழி கேட்ப தென்றே!
ாக்கியம் அவர்கள்
பிரிந்து தோன்றக்
ள் ஒளியை வீச ன். முறுவல் பூக்கும்
அறிவிப் பீரோ" Frħlu g ressiħ Rாம் கதறி யேங்கச் ய் தமிழின் செல்வா அலகு செப்பு வாயே
லர் முந்தி விட்டார் மான்றை அமைத்து விட்டார்
துரைசிங் கத்தார் தி இன்னும் பல்லோர் ம விளங்கி யின்று ாணமுதாய் அமைந்த தையா சாம்ப ராகக் அழைத்திட் டாரோ,
நலகுக் கெல்லாம் க்கோ ஞானத் தந்தை * சுவைக்கச் செய்தீர்
வனவே உணரச் செய்தீர் } ஓங்கி நிற்க
கிணையார் என்றே நின்ருேம் க ஆற்ற மாட்டோம் ழி கேட்ப தென்ருே.
கருத்து மூன்றிக் தை நயங்கள் கேட்போம் யமனும் கொள்ள க்க நியாய முண்டோ உடலைப் போன்று ருக்க ஆசை கொண்டோம்
நீர்பெற் றலும் களுளம் வேகு தைய) .

Page 335
ཨ་དཔྱད་གང་ཚང་ལ། །
பாரதத்தின் வீட்டுமரை, பண்டிதரை யாவெ நோவர்க்கு இல்லையென நீள்துயிலால் இன் ( பேரறிவற் கெங்களது
பெம்மானே சென் சாருதற்குத் துணையிழ
தரபரிக்க யாருமில்
6o , சித்தாந்த சாகரத்தில் ( தீந்தமிழ்ப்பொன் ( புத்தகப்பூமி பந்தரின்கீ புண்ணியரே நும்மு அத்துவைதம் ஆகமங்க அகப்பொருளாம் ஐ வித்தகரே வீறுநடை த விமலரருட் பதத்தி
ஞாயிறு போன்றே கள் கவிஞர் முருக
ஆயிரமி பிறைகள் கண்டே அரு பாயிரமீ பனுவல் செய்த பண்டி ஞாயிறு போன்றே எங்கள் நள் மாயிரு உலகம் போற்ற மறைந்
முதிதென்கோ மணியென்கே மூவாத செந்தமிழின் ச வித்தென்கோ விளைவென்கே விண்ணவரும் போற்று கோத்தென்கோ மலரென்கே கொள்கையிலே சிறந்த சித்தென்கோ சீரென்கோ சீ சிந்தையிலே உயர்ந்தத்

274 -
ப் படியிற் கண்டோம் னவே அழைத்து நின்ருேக
நினைத்து விட்டோம் றெம்மை நீங்கிச் சென்ருர் விண்ணப் பத்தைப் றெடுத்துக் கூறி நிற்பார் ந்தோம் தமிழின் தந்தாய் லைத் தவிக்கின் ருேமே
முத்தெ டுத்துத் னுகரத்தில் திகழ வைத்து ழ் துயிலைச் செய்து உயிரை வளர்த்தி ரையா iள் அனைத்தும் சொல்வீர் 2ந்திணையும் அறியச் செய்வீர் மிழிற் போட்டீர் னிதம் மேவு வீரே.
ாளிருள் கடிந்த எந்தாய்
வே. பரமநாதன்
தினம் ஹரிஓம் என்று த மணியே ஞால ளிருள் கடிந்த எந்தாய்! தனை வாழ்க என்றும் ,
ா பவள மென்கோ சுவைதா னென்கோ ா விமல னென்கோ கின்ற அமிர்த மென்கோ ா கோமளமே யென்கோ தொரு கோல மென்கோ லன் என்கோ திரு சி. க. வெனும் செமீமலேயே

Page 336
கலைச்சிகரமாயமை
அருட்கவி சி. வித
திதிே மன்னுங் குரோதன மாசி பொன்னின் திருதியை பூ கண்ணியன்மெய்ஞ் ஞானி புண்ணியன்ருள் சேர்ந்த
(
மனங்குளிர ஐந்தடக்கி வாழ் தனங்கிளப்புக் கணபதியைத் ஐயாபண் டிதமணியே ஆன் கைகூப்பிக் கண்குளிரக் கரு கலைச்சிகர மாயமைந்த கண நிலைத்தடிகழ்த் தூயவரே நீ அருமந்த நெறியளக்கும் அ கருணைதரு சிவசமயக் கற்ப
கம்பரை வள்ளுவரைக் கச்சி செம்பொருட் சேக்கிழாரைத் சொல்லுசங்கப் புலவர்தமை நல்லிலக்க ணங்குழைத்து ஓங்கும் சிவாயநம ஒளிவீசு தாங்குமா ருதாரம் சார்ந்த ஞானிகை லாசபதி நற்றவ ஞான நடங் காணுமுயர் நை
கந்தன் கணேசனென்ருல் ச சொந்தம் சிவசக்திச் சோதி வந்தஇதி காசங்கள் வழங்கி முந்துதிரு மூலரருள் முதும சாறுகண்டு நீறுகொண்டு ச பேறுகொண்ட பெருந்தகைே நூறுகண்டு நிற்குமென நே மாறுகொண்ட இவ்வுலகின்
எம்மை விட்டுச் சென்றனையே செம்மைப் பொருளினிதே ெ சிவத்தைப் பிடிப்பவர்க்குத் தவத்தைக் கடைப்பிடிக்கத்
சங்கக் கவிபுகட்டும் சத்தா பொங்கித் ததும்புமுரிப் பொ

ந்த கணபதிப்பிள்ளை
ாசித்தம்பி அவர்கள்
வண்பா
பிரு பானெட்டில் ர்வபக்கம் - உன்னுகலைக்
கணபதிப் பிள்ளைதில்லைப் பொழுது.
பெறு
}த்தி வணங்கிநித்தம் த் தவமிருந்து தாள்பிடித்த றேர்கள் ஆசிரியர் தத்துவக்க வந்தவரே ாபதிப் பிள்ளையெனும் திநின்ற மாமுதலே ளவுகோல் ஆனவரே பகமே கலைக்கடலே.
யப்ப நாயகனை
திகழ்வில்லி யைக்கீரனை , தொல்காப் பியமுதலாம் நமக்களித்த நற்ருயே ம் மந்திரத்தால் வெளித் தத்துவத்தின் த்தோ னுடன்தெளிந்து டையேணி கண்டவரே.
கனிந்தமுத வாயூறிச்
யென உய்த்துணர்ந்து ய புராணங்கள் }றையி ஞகமத்தின் தாசிவத்தை உள்ளமைத்த யே, பெற்றவனே நின்ஞயுள் ான்பிருந்தோம் ஐயாவே வாழ்க்கையினிப் போதுமென
ப இலக்கியத்தி லிலக்கணத்தில்
சப்புவதற் கிங்கினியார் ? தெய்வீக மொழிகூறித் தகுந்தவழி சொல்பவர்யார்? ன உட்கருத்திற் ாருளுரைப்பார் யாரையா?

Page 337
~ .276 سس۔
ஐந்திணையின் பாதையிலே அரு சிந்தனைத்தேன் உண்டுமனம் த்ெ தமிழும் சிவமதமும் தருவதுயர்
இமையாது நின்றுரைப்பார் ஏந்:
நால்வேதப் பொருள் பழுத்த நாள் பால்பழமாய் எமக் கூட்டும் பான் எந்தத் துறைகளிலும் எந்தெந்த வந்தவர்க்குத் தேனுன மருந்துவி தமிழுள்ள காலமெல்லாம் தந்தை இமயவல்லி நாதனரு விணையடிச் பூவுலகோர் நின்றேத்தப் பொன். சீவன் சிவலிங்கத் தெய்வமணி !
※
கற்றர் விழையுங்
நவாலியூர் க சோமசுந்த
விருத்தம் தன்ணுெப் பில்லாச் சுன்னைக் கு தண்டமி ழாரிய மொழிக ளி மன்னுஞ் சைவா சிரிய கலாநிை
வற்றக் கல்விப் புதுமழை பொன்ணுெப் பாகிய ஈழப் புலவ
பூவல யம்தொழு நாவலர் வன்னத் துணையொடு மன்னப் ெ
வண்டமி பூழிதமறி பண்டித
வற்ரு மதுரச் செந்தமிழ்ப் பாற் மாயா வுணர்வே வாசுகி வ சற்றே யெனினு மூன மிலாதெ( தண்டேன் சுவையே சாருஞ் கற்ருர் விழையுங் கற்பக தருவே கனியினி லூறும் பலசுவை மற்ரு ரும்புகழ் மாண்புறு பண்
வண்டமி பூழிதமறி பண்டித

ட்சுவையைக் காணுகின்ற நளியவைப்பார் யாரையா?
நீதியென
தலே எவருளரோ ?
வலரின் வாக்குகளைப் மையினுர் எவருளரோ?
வேளையிலும் , டை சொல்லுவையே, நநீ இங்கிருப்பாய் *கீ ழங்கிருப்பாய் னுலகோர் வரவேற்கச் UT603u.
கற்பகதரு
ரப்புலவர் அவர்கள்
மார சுவாமிப் புலவனிடந் ரண்டுஞ் சார்ந்து முகந்துலவி v மலைமேல் நிலையாகி பொழியும் மதுர கலாமுகிலே ர்கள் புகழ்பொழி பொற்புயலே சஞ்சிகை போற்றிடு புரவலனே படைதுயில் மட்டுவில் வளநகர்வாழ்
மணியே வாழிய வாழியவே.
கடல் மதியே மத்தாக டமாய் மதித்துழி யுடனுகச் ழ தண்ணமு தேதேனே
சுவையிற் றங்குஞ் சுகவிளைவே தருவிற் கணிகனியே நறவே கவிநய முறுமலையே பே மட்டுவில் வளநகர்வாழ் மணியே வாழிய வாழியவே.
பண்டிதமணி மணிவிழா மலர் - 1959

Page 338
3)
எந்தமலே இருக்கு
ஸாஹி
பிரம்மபூரீ என். வி
செந்தமிழின் பெரும? செழுந்தமிழின் ஆறு நந்தமிழர் பண்பையெ நன்னூல்கள் பல பைந்தமிழர் நெஞ்செ பண்டிதரின் மன அந்தமலை சரிந்திட:ே எந்தமலை இருக்கு
செந்தமிழ் சைவமதம் செகத்தில்கண ட பந்தமுடன் பாமலர்க பசுந்தமிழின் பதி சிந்தனைகள் அத்வை
சித்தாந்த சிகரத் அந்தமலை சரிந்திடே எந்தமலை இருக்கு
துடிக்கின்ருேம் அவர் துன்பத்தின் ஈட வடிக்கின்ருேம் வண்ட வாயாரக் கதறுகி படித்திடவே பைந்தம் பலர்போற்று நூ முடித்திடவோ தன்வ முத்தமிழைக் கா
அத்வை
ஒன்றிலே ஒன்றி
ஒன்றன்மேல் ஒன்றியே ஒன்ற ஒன்றனை ஒ ஒன்றதே ஒன்ற
ஒன்றுமே ஒ ஒன்றிய ஒன்றை ஒன்றதாய் ஒ

குதையா ஈடு செய்ய!
த்யஸாகரம் வீரமணிஐயர் அவர்கள்
லயாய் நின்ற அண்ணல்
பல பொழிந்த செம்மல் பல்லாம் நயந்து போற்ற வடித்துத் தந்த ஐயன் ல்லாம் பதைப தைக்கப் சியெனவே பல்லோர் போற்றும் வா அவனி தன்னில் 556RP) ğ5u u fT GqF(B Qg-zii uu?
செய்த பேருே பதிப்பிள்ளை தந்த நூல்கள் ள் தொடுத்தே அன்னை நம்சூட்டி மகிழ்வார் ஐயா! தம் செயல்கள் யாவும் தில் நின்று செய்யும் வா அவனி தன்னில் குதையா ஈடு செய்ய?
பிரிவால் துயரம் பொங்கத் ல்தனிலே அழுந்திக் கண்ணீர் -மிழின் அன்னை வெம்பி ருர் வருவார் தானே? லிழில் பண்பு யாவும் லுருவில் தந்த அன்னுர் ாழ்வை முடிவு காணு த்தமலை சரிய லாமோ?
த கவரீதம்
ஞளும் ) ஒன்றி ஞளும் ப் ஒன்றும் ன்று வார்க்கு தாய ன்றும் ஒன்றாய்
ஒன்றி ஒன்று வேனே.

Page 339
பூதலம் போற்றும்
பண்டித வித்துவான் இ
கலி
வெண்கமல மாது விரும்பி ஒண்டமிழ்த் தேன் ஊறும் ஒ சைவசித் தாந்த சமயமே தெய்வ அருட்கருணைத் தே நுண்கலைகட் கெல்லாம் சிக றெண்கனிந்திவ் வையகம் கம்பரா மாயணக் காட்சிக உம்பர்தரு தேனுவின் பால் கற்போர்க் குயர்கரும்பின் சொற்பா இலக்கிய வழிதந் கந்த புராண கலாசாரம் 6 செந்தமிழார் யாழ்ப்பாண நல்லைநகர் ஆறுமுக நாவல எல்லவரும் தேறிமெய்ஞ் ஞ $ந்த புராணநற் போதனை சிந்தைநிறை ஞானகரு வூ தகூடிகாண் டத்திற் குயருை உச்சிமேற் கொண்ட உபர் போதமலி மெய்ஞ்ஞான ட பூதலம் போற்றுமெய்ஞ் ஞ பேரா வியற்கையுறு கனட பேரா சிரிய பெருந்தகைம நாவலர் சீட பரம்பரையில் நாவலர் மாவித்தி யாலயத் ஆரிய தி ராவிடடா ஷாவிரு சீரிய பரீட்சகர் சிரேஷ்ட ஒ செந்தமிழும் வாழத் திருெ வந்துறைந் தாசிரிய கலா: பேரா சிரியனும் ஆசிரியர் ஆரா அறிவன்பு தந்தோன பொங்கவுயர் காவிய டாட சங்கத் தமிழ்டரந்த தக்கே மதுரைத் தமிழ்ச்சங்கம் ய சதுர்மிக்க பண்டிதர்கள் ே தீந்தமிழும் ஆரியமும் சிங் ஓங்க உழைத்த உயர் ஞான மட்டுவில் நன்னகர் மருவு மட்டிமைசேர் பிள்ளையார் கந்த புராண படனம்தனி சிந்தைவழி பல்லாண்டு ெ வையம் ஆதிக்கக் கலாநி
c
து:யசைவ சித்தாந்த சா

2 மெய்ஞ்ஞான குரு
இ. திருநாவுக்கரசு அவர்கள்
G86au soinor Lurr
நடம் நவிலும் ஒளிர்நாவும் - பண்கனிந்த மெய்யெனுமிநற் னுாறும் - மெய்யுணர்வும் ஈர: இலக்கியமென்
ஈடேறத் - தண்டமிழிற் ள் தந்துகற்போர்
ஊற்றருளும் - செம்பனுவற் சாற்றின் சுவைமல்கும் 3தும் - பொற்பார்ந்த கைவநத தேசத்து - வந்துதித்த பின் காட்டுநெறி நானமுறை - நல்லதன்சேர் கள் தந்துகற்போர் லமுறை - அந்தமில்சீர் ரையும் தந்தறிஞர் ஞான - நச்சு சிவ ண்டிதம ணிஐயா ானகுரு - ஈதன்றி திப் பிள் 2ளப் ன் - சீரார்ந்த
வந்துவண்ணை தின் - காவலனும் த்திச் சங்கத்தின் றும் - ஆரியமும் நல்வே லிப்பதியில் சாலை - முந்துதமிழ்ப் க் காசாஞய் றும் - பேரார்வம் சா லைநிறுவி "னும் - துங்க *ழ்ப்பான சங்கத்துச் தான்ற - மதுரித்த கள மும் பயில ரியும் - தேங்குசெல்வ
தணங்கிளப்பில் கோயிலில் - திட்பமார்
நாவலன் *ய்வித்தும் - பந்தமற்று நியாய் மெய்ந்நெறியாம் காழும் - மெய்யிறைவன்

Page 340
27 -س--
பாதமலர் குடுமுயர் பண்டித
ஒதி யுணர்ந்து பிறர்க்குரைத் ஓங்குணர்வி னுள்ளொடுங்கி தீந்துயிலின் ஆழ்ந்தவுயர் செ ஒப்பாரும் மிக்காரும் இல்லா இப்பார் துதிக்கும் இசைஞா: கற்றுயர்ந்த மாணவரும் கற் பற்றினுல் கண்களில் நீர்சொ உறவினர்கண் ணிர்மல்க உம் துறவுநெறி போற்று குணசீல வையம் தளிர்ப்ப வழிகாட்டி
ஐயா உமைமறவோம் நாம்.
濠
பண்டிதமணிக்குச் சூட்(
girls i நீ. 剑。 y
விருத்த
நல்லறத்தின் திருவுருவே! நற்றமிழின் எல்லையிலாக் கருணையெனும் பெரும்ப மல் குதிரு அருள் மணியே மாற்றரிய ப நல்ல ஆசிரிய கல்லூரி நாயகமே! நா
அன்பினுல் ஒருநாள்தான் பழகிடினும் இன்ப உரை ஆற்றியவா ! இதயமெல துன்பமெனப் பிறரஞ்சும் இல்லறத்தை மன்பதைக்கோ ரிலக்கியமாய் மாசற்ற
சாந்தமுறு கலாசாலை வீதிதனில் கட் சாந்தஉரை தனில்மிளிர வைத்திடுவா மாந்தர்களுக் கேற்றநல்ல நூல்கள் பல ஆய்ந்தஒரு சீடனு யேற்றுமிக அருை
சங்கநூல் களில் தோய்ந்து நாவலர் ப துங்கமார் பொருளெல்லாம் நின்னுளே தங்கமாய் எழுதியறி யாதவரும் தமிழ சிங்கமாய் செயுமுன்றன் சீரென்றும்
பண்டிதனே : பாவலனே! பாரிலுள ம கண்முன்னே நிற்கின்றப் சேவைநலம் நண்பரெலாம் புகழ்வதன்றி இகழ்வாரி வானுறையும் தெய்வம்நீ வணங்குகிே

-سس 9
ιριτιρ60oήμιό தும் - நீதியொடு உள்ளம்பே ரானந்தத் ஈம்மலும் - பாங்குநிகர்
உயர்ஞானி னி - சொற்பால ருேரும் மற்ருேரும் ரிய - உற்ருர் பருயர் தேனுவாய் }ன் - அறநெறியில்
வானடைந்த
நிம் பாராட்டுப் பாமாலை ருகேசு அவர்கள்
தப்பா
தனித்துணையே நட்டோர் யார்க்கும் ண்பே! இதயத்தின் இருளை நீக்கி சும்பொன்னே 1 திருநெல் வேலி 'டுபுகழ் நாவலோயே!
ஆயிரமாண் டுறைந்தார் போல ாம் குளிர்விக்கும் இயல்பு சான்ருேய் !
மிகவெறுத்து நல்ல நூல்கள்
பெருவாழ்வில் மலர்ந்த தேனே!
டியவோ ரில்லத்தில் கனிந்துவாழ்ந்து
சரித்திரமோ சங்க நூலோ
தந்தவனே! மாசில்பஞ் சாட்சரத்தை மபெறு நூல்கள் பல ஆக்கிவைத்தோய் !
ரக்பரையை நாட்டி வைத்தாய் ! த ஆராய்ந்து தோற்றம் சான்ற றிவில் தலைமை பெற்றுச் அழிவுருமல் சிறந்து வாழ்க !
ாந்த ரெலாம் பாராட்டக்
மறக்க லம்யாம் காண்பரிய
ல்லை இஞ்ஞாலம் இஃது உண்மை
ரம் பலமுறையும் வாழ்க நன்றே !

Page 341
மன்மதனே! கல்லு
சித்தாந்த கலாநிதி க. ச
பூவுலகில் தேவருமே வ புவியிலுள்ளோர் க நாவுலகின் மன்னவனுய் நற்றெப்வம் பண்டி காவுலவும் மயிலென்னக்
கருணைமழை பொ தேவுலகின் தேசுமிகுந்
செங்கதிரே! நின்வ
குளிர்மைதரு வெண்ணி குறையுடலில் வாழு ஒளிர்வுதரும் புன்னகை ஓங்கியநல் நெறிமு மிளிர்ந்தபெரும் பண்டி மிரண்டதனுல் இரு தளர்வுற்ற தண்மதியே! தயங்காது தலைநிமி
மன்னவரும் மதிக்கின்ற மன்மதனே! நின் ஆ சொன்னயமும் பொருை சொல்லவல்ல பண் நன்னயஞ்சேர் நடைய
ஞாலத்தில் அங்கம மின்னுருவம் தானுமின் மீண்டுமுன்றன் நல்
நல்லைநகர் நாவலரே! எ நானிலத்தில் நின்ட 5ால்லையிலா தெடுத்தியம் எண்டிசையும் நீவா கல்லையுமே கணியாக்கும்
கண்கண்ட பண்டி சொல்லவல்ல சுவையமு சுவைத்தாரோ கண்
f 冷 செந்தமிழே சிவநெறியே சீரான நல்லெழி2ல சிந்தைநிறை வந்தனேக திருப்பள்ளி யெழுச் சந்ததமும் தமிழமுதம் சால்புமிகு பண்டித ஐ.ந்தமுளம் விட்டகலா
ஓயாது செய்தவர்:

ருவம் பெற்று வாழி
ணபதிப்பிள்ளை அவர்கள்
ாழ்வ துண்டு ண்ணுரக் கண்டு வக்கு
வாழ்ந்த எங்கள் தமா மணியே சான்று; கண்டோர் பார்க்கும் Nகுரவர் மேலே சென்று தெய்வ மானுர் ாழ்வும் வாழ்வு தாஞ்ே!
லவே ஒளிபு மின்றிக் ஓமுன்றன் குறையை நீக்க பால் பேச்சால் மூச்சால் றையால் உயர்ந்தோ ஞகி தமா மணியைக் கண்டு ண்டிருந்தாய் உண்மை யன்ருே
தலைமை ஏற்றுத்
ர்ந்து வாழ்க வாழ்க!
அழக சூனை அழகும் அழகு தானே! 3ாயமும் சுவைத்தேன் சொட்டச் டிதமா மணியாம் ஞானி ழகன் பிரம சாரி ாதல் கண்டு நாணி றி அனங்க ஞணுய் bலுருவம் பெற்றே வாழி,
ாங்கள் நாதா
கழை நாளும் நாளும் $பி இறுமாப் பெய்தி ாழ வழிகள் செய்த * கருணைத் தெய்வம் தமா மனியைப் போலச் தைத் தேவர் தாமும் சடாரோ சொல்லு மையா,
என்றும் உங்கள் யாரும் கண்டே ள் நாளும் செய்யத் *சிதனைச் செய்த செம்மல்
தந்த வள்ளல் மா மணியே பன்றே! உண்மைத் தொண்டை ஈர் சொன்மின் சொன் மின்'

Page 342
பண்டித மாமணியின் சீ
பண்டிதர் க. ச18 ஆ
வேண்பா
முத்தமிழை ஆய்ந்து முனிவின் வித்தகனுய்ச் சித்தாந்த மேன்ன பார்போற்ற வாழ்வுகொண்ட ப சீர்போற்றி வாழ்வோம் சிறந்த
எண்சீர் ஆசிரிய சங்கமெழு நூல்களெலாஞ் சார்
தண்டமிழை ஆய்ந்துகற்கு பொங்குபுகழ் மட்டுவிற்குப் புக பூதலத்தில் நிகரற்ற புதுை எங்கள்தமிழ் வாழவென்றே இை இலக்கியங்கள் தோய்ந்துமி கங்கைசடை முடிகொண்டோன்
கருதரிய தமிழ்த்தொண்டு
வாசமிகு சோலைகளில் வளங்கள் வனப்பான குன்றுகளில் த பாசமுடன் தழுவியெங்கள் உட
பரவசத்தை உருவாக்கும் ஆசையுடன் இலக்கியங்கள் இ6 அவையெல்லாம் அரவணைத் நேசமொடெம் நெஞ்சமெலாம்
நீள்புவியில் புகழ்பெற்ருய்
கடல்படித்து நீருண்டு கறுத்து
ககனத்தே நின்று
ଟିଙ୍ଗ୍ ସ୍ଫର୍ଥ: ୫) {
உடல்பாதி உமையவளோ (டிரு
கண்டமெனக் காட்சிதரும்
தடம்பெருக இயலிசையும் நாட
ததும்புகின்ற கடல:ைத்து
^ ངའ་ 32 محمد திடமுடனே அறிஞர்சடை திக
 
 
 

ர்போற்றி வாழ்வோம்
னநதா அவர்கள்
றிப் பேசுகின்ற மைசொலும் - உத்தமனுய் ண்டித மாமணியின்
f.
விருத்தம் ந்து நின்றே ம் தகுதி பெற்றேன் ழே சேர்க்கப் ம செய்தோன் ணயில் லாத க இன்பங் கண்டோன்
கருணை யாலே
கண்டோம் யாமே.
i மேவும் ாவிச் சென்று ல மெல்லாம் பாங்கில் நின்றே ஐக்க னங்கள் ந்தே உனதாய்க் கொண்டு குளிரச் செய்தே
வாழி ஐயா,
(oosi ாட்சி தந்து க்கும் பெம்மான்
போக்கில் நீயும் -கமும் ஏனையாவும் ம் முற்ற யுண்டு
}! வாழி மன்ஞே.

Page 343
நீர்வேஜி 276-84
}2 --س-
வாடுகின்ற பயிர்களெலாம் வ வளம்பலவும் உலகெங்கு காடுகளும் கரம்பைகளும் க
களிகொள்ள வான்பொழி ஏடுகளில் எழுதுகின்ற இன்ட இலக்கியஞ்சேர் விமர்சன தேடுகின்ற அறிஞருள்ளம் ெ செந்தமிழின் வளங்கொபூ
வடமொழியும் தென்றமிழும் மாண்புடனே சீர்மலிவி இடமகன்ற உள்ளத்திற் பத்
டுத்தொகையுங் கீழ்க்கண குடமுனியாய்க் கொள்கலனுய் கூறுசைவ சித்தாந்த ே திடமுடனே நானிலத்தோர்
செல்லுகின்ற ஆறெனவே
வண்ணை நகர் வித்வசிரோ ம வாய்ப்பான கவிநயத்தை சுன்னை நகர் தமிழ்ப்புலவன்
சுடர்மிகுந்த அறிவதனைக் மன்னுதமிழ் நூல்களெலாம் :
வளமிகுந்த பண்டிதமா விண்ணகத்தில் இருந்துகொ6 விளங்குதமிழ்க் காற்றென
浏
u3OTg5 LD: நாவலர் சந்த திக்கோர் நலி காவலர் இல்2ல யென்ற கவ: பாவலர் வியக்கும் எங்கள் ப காவலெம் பெருமான் தெய்வ
நீதியைக் குறுக்கி யீங்கே நி மேதினி காண மின்னி மிகஇ சாதித்துத் தானே யார்க்குஞ் ஆதித்த னென்ன வந்த அரு

۔۔۔۔۔ 82
ாட்டம் நீங்கி ம் ஓங்கி நிற்கக் ழனி யாவும் யும் காட்சி போன்றே ம் மிக்க ாங்கள் நல்லாக் கங்கள் தவிட்டச் செய்தே ஜித்து நின்றாய் வாழி.
வளமாய்க் கற்று வேகங் கொண்டு துப் பாட்டெட் சக்கு நூல்கள் முற்றும் 1 யாவுங் கொண்டு வகம் மிக்குத் செழிப்புற் ருேங்கச்
சென்ருய் வாழி.
ாணிக் கத்தின் த வெளவிக் கொண்டு துலங்கு கல்விச் * சொந்த மாக்கி வாய்ப்பக் கற்றே மணியே நீங்கள் ண்டு வீசுந் தென்றல் ாநின் ருெளிர்க வாழி!
ணரியே வாழி
வுகள் நாடா வண்ணம் லைகள் ஏது மின்றிப் 1ண்டித மணியாய் நின்ற க் கணபதிப் பிள்ளை வாழி !
திசெய்வா ராழ்க வென்று இடி முழக்க மிட்டுச்
சாட்சியாய் நின்று காட்டி நங்குரு மணியே வாழி !
மானவன் இ. சிதம்பரப்பின்ளே

Page 344
என் பார்வையில்
பண்டிதர் ச. சுப்பிரம
கட்டளைக் க3
பண்டிதமணி :
சுன்னைக் குமார சுவாமிப் புல: முன்னைக் கணேசர்பின் முன்னி பின்னப் படாவகை சைவமும்
மன்னக் கணபதிப் பிள்ளையாம்
தமிழ்ச் செய்யில் சைவ நல்லையில் நாவலன் நாட்டும சொல்லேயிம் மண்மிசை மீட்டு நெல்லையி லேசைவம் நாறு நி
எல்லையி ஞனெங் கணபதிப் பி
சொல் - நெல்லுமாம், மேழி - எ நெல்லை - திருநெல்வேலி.
புகழொடு தோன்றி தோன்றிற் புகழொடு தோன்று தோன்றிப் பயில்பல் நடைமேற் தோன்றிப் பிடிநடை என்னத் தோன்றிச் சுடர்ந்தோன் கண
பிடி ந: ட - இரட் டுற மொ வினைத்தொகை என இருவகைய தோன்றி - பேச்சிலும் எழுத்திலு
எண்முகக் க
பண்டிதர் மாமணி பாடும் கவி கண்டிதம் செய்மணி கட்டுரை துண்டிதம் செய்மணி ஆசிரி ய ஆண்டிதம் கொண்ட கணபதிப்
கண்டு + இதம் + செய்தல், து நிராகரித்தல், மெய் கண்டு -

பண்டிதமணி னியம் அவர்கள் த்ெதுறை
கல்விமரபு
பரின் மாணவருள் ன் றமுதத் தமிழ்மொழியைப் பின்னியே பேணினன்நம்
பண்டிதர் மாமணியே.
ம் விளைவித்தோன்
வரம்பினுள் நாற்குரவர் b தமிழ்விளை மேழிதொட்டான் பமத்தில் நீடிநின்ற
6ir 827 ur TỀ 5 T6n (360r.
ாழுதுகோல், நாறு - நாற்றிடல்,
ய தோன்றல்
க என்றசொல் தூக்கிமுன்னே
* சுவைகொள் சுகுணநடை
தமிழ்க்குத்தன் சொல்லெழுத்தில்
பதிப் பிள்ளையென் தோன்றலன்றே,
f
Nதல். உவ மத் தொகை பாலும் விரிக்க. சொல் எழுத்தில் ம் பணியாற்ற முற்பட்டு.
ண்மணி
மணி பாச்சுவைகள்
யின்மணி பொங்கரவைத்
ார்மணி சொன்மணிமெய்
பிள்ளையாம் கண்மணியே.
துண்டிதம் செய்தல் - மெய்யுணர்வு பெற்று.

Page 345
- 284
ஏகாதசத்துத் படித்தேன் பகர்ந்த செவிமடுத் பிடித்தேன் பிழைவிடுத் தேன் நடித்தே னலன்நம்பி வந்தேன் வடித்தேன் கணபதிப் பிள்ளை 6
கைகண்ட வ சொல்லும்சொல் லால்மெய் திரித வெல்லும்சொல் வேறில தாயே சொல்லுஞ்சொல் வல்ல கலாநி கல்லுஞ்சொல் வன்மை புலயை
கல்லும் - முன்னிலை ஏவற் பன் எ
சிலாவெங்கு செ
பெளராணிக வித்தகர் வ
தங்குமின் சொல்லால் பொங்கும் அலையாய்ப்
கலாநிதி யாம்சீர்க் கண நிலாவெங்கு சென்றதே
கம்பர் கவித்திறனைக் நம்புசீர் அத்துவித நல் ஆரெடுத் தோதுவார் சீரெடுத் தோதல் சிறப்

தேன் தேன்சொற்ற பண்புகடைப் எம்பி ரானருள் தேன்குடித்தேன் நலம்படைத் தேனென்பரால் பாய்த் தேனுண்ட மாணவரே.
ழிகாட்டி 3துப் பொய்த்தோற்றம் துலக்குரையை துக் காட்டி விலக்கிமெய்யே தி பண்டிதர் சொல்லுரையே கை வந்திடும் கைகண்டதே.
மை முற்று - படியுங்கள்.
ன்றதோ நீங்கி
1. குகசர்டிா அவர்கள்
தமிழ்வல்லோர் தம்மிதயம் புரளுமால் - துங்க Tபதிப் பிள்ளை
ா நீங்கி,
கச்சியப்பர் பாவளத்தை நிலையை - அம்புவியில் ஆற்றலுறு சீர்மணிபோல்
..

Page 346
பண்டிதமணி சி. கண பிரிவிரங்கல்
பரிவுரைப்
பண்டிதர் மு. கந்ை
ഖങ്ങ! தேமாலைச் செந்தமிழ்த்தே ஞர் பாமாலை சாத்தும் பரிசறியோம்
செவ்வித் தமிழின்பஞ் சீர்த்த கெவ்வித்மா மோவென் றெணி.
கண்டவர்வாய் தேனுர் கணிதமி பண்டிதரின் றெங்கேயோ பாவ பொற்பொளிருஞ் சொர்க்கப் ட சொற்பொழிவுக் குற்றர் தொட
கம்பன் தமிழ்மிதிலைக் காட்சிநி பம்புசுவைக் கண்ணன்பாட் ட
நாவலனுர் கோட்டம் நணுகுவ தேவுலகார் செய்திரெலெக்ஸ் சீ
மயங்கிசைக் கோ குறுமுனிவன் பொதியமலைக் கு துறுபயணு லுலகமெலா மூட்டின் தீண்டாத கற்புவளர் கன்னித வேண்டாத மனிதமணம் விரும்
திருவேட்ட கன்னிதனைத் திருே ஒருகோட்டத் துய்த்துயர்த்தி தெண்ணில்தமி ழாசிரிய இளம துண்ணெகிழ்சீ ரன்பதனுல் உ
நரப்பெல்லாந் தமிழுணர்ச்சி ந பரப்பெல்லாம் மெய்ப்பாட்டுப் நக்கீரர் தமிழ்கேட்ட நல்லுருத் பொற்பூரத் தமிழ்சுவைக்கும் பு
(இவை மூன்றும் நr 40

பதிப்பிள்ளையவர்கள்
நுதலிய பாமாலை
Ester sea issir
பண் டிதமணிக்குப்
- தாமாருஞ் திருவுளத்துக்
ழ்த்தீம் பாகனைய பலீர் - தண்டமிழ்ச்சீர்ப் புலவர் புதிதுண்ணச்
ர்ந்து,
கழ் வாலிவதம்
முைற்றி - உம்பரொளிர் ராம் நம்புமிது
i.
ச்சகக் கலிப்பா
iமரியென என்றுமிகுந் பள ரெழிலணங்கு னத் திருவேட்டு பாத விறலுடையோய்.
வட்ட நெல்வேலி புவள்கோட்ட மனைத்துமறுத் }லைக் கனிகளளித் பிர்தளிர்க்கு முயர்பெரியோய்,
னிதுடிக்க நண்ணுமுடற் பகர்குறிகள் பொடிப்பெய்த
ஜன்மனெனப் திருக்குப் புதிரானுேய். ன் கடித் தரவு)

Page 347
எம்மையுமோர் பொருளாக செம்மைநலம் யாமுமுறத்
பாராட்டும் பரிவுரையாற் ட சீராட்டி நம நூற்குஞ் சிறப் (இவையிரண்டும்
கந்தையர் தகைவினவுங் க முந்தவொரு பத்திரிகை ெ இந்தநப ராமென்னி லெடு சிந்தைநிகழ் தெளிவுபெறச்
பழையபா னியின் புதிய ப விழைதகவார் பத்திரிகை வி பிழைதவிரும் நாவலர்சீர் ே கிழமை நலம் பிறர்நுகரக் ே அந்தமிலா அரியவொடு ெ டிந்தவிதற் கியாழ்ப்பாணத் சிந்தைகுளிர் தண்ணளியார் கெந்தவகை யினும்மீளா ெ
(இவை மூன்றும்
திருமலி சவிவடி வருதமி பொருவரு நினதியல் புகல்
அரிதுணர் பொருளன திரி தெரிவகை யுரைதரு தெளி
அறிபொரு ளறிவகை யறி தெறிகட னுலகினி லெவரு
குயிலொலி யினிமையி னமீ பயில்மொழி வலவதி னருள் (இவை அ
நிரம்பாத புலமையிஞர் ே தரம்பார்த்துக் கண்டிதஞ்ெ தமையறியாத் தருக்கினர்க் தனங்கிளப்பு விரகறியாத்
(நாற்சீரீர
1. சாலி வாடீ - நெல்வேலி ஐ சிம்ம சொப்பனம்

28f -
எண்ணிநின கண்ணியத்தால்
திருவுளஞ்செய் தருளினைநீ
பண்பூட்டும் அணிந் இரையாற் பூட்டித் தந்தனை நீ
ஈரடித் தாழிசை)
ாரியார்த் திகள் சிலர்க்கு படுத்துவிரித் தெதிர்காட்டி க்கலா மெனவன்னுேர்
சிபார்சுமளித் தருளினை நீ.
ாணியென வொருபுதிரால் விமர்சனமொன் றுலகறிபூஉப் பேசுபிள்ளைக் கவிநூலின் 'கடில்பதம் வகுத்தனை நீ. பரியவுமா மந்நூல்கண் * திவரலரின் றெனும் புகழ்மை ற் செப்பியவப் பெருந்தகைமைக் தமைக்கடமைப் படுத்தினைநீ தான்கடித் தாழிசை)
ழருமுனி
வகை யெளிதல
6L 66 S6
பொரு ளறிவினை
பவர் நினையல மொர் பிறரிலர்
ழ்துகு தமிழிசை மையி னுருகுதும்
Trfslb.)
நர்மையிழந் துரைப்பனகள் சய் தரமார்பண் டிதமணிநீ குச் சிமசுவப்ன* மாபவனி தனங்கிளப்புத் தவமுனிநீ ாடி இரண்டு)

Page 348
தத்துவ வாதி நீ சத்திய சாயி நி1
(முச்சீரோ
அன்பனி கலைஞனி நீதிநீ நேர்மைநி
(இருசீரே (இவை அட
என வாங்கு, (இது தனிச்சொல்} மாணவத் திறமெனும் வாய் பேணுநற் றமிழ்விழை பெரு ஏணுறு சிறப்பமர் இன்றமி பாவுசெம் புலமைசால் பண் நாவலர் நடைநெறி காவல நாவலர் தகையிகழ் நாதிய சிம்மசொப் பணமாம் பக்த சொன்னலம் பொருணலந் தன்மமும் அதன்மமும் நீதி மன்னிய வெல்லைகள் வரைய வச்சிர வூசியென் றிச்சகத் மெச்சிட மிளிர்ந்த பொச்ச கந்த புராணக் கலைபொதிக இந்நாள், *காடு போந்தனன் இந்திர6 பாடு சேர்ந்த”தென் பணுவ நீடுமெம் நினைவிடை நெரு * நின்முகங் காணு மருத்திே கலையொளி மங்கிய கலாசா வெற்றுட லாயநின் வீடும்நி நிலையிலா வுலகியல் நேரெடு கண்டுகண் டிரங்கி நெக்குெ தேமரு சித்தந் தெளிவகை பாமரர் ஆயினம் 8ցաl யாமகிழ் திறமினி யேதுமொ
(இது அக
1. சத்தியத்தில் உறைந்தவர் 2. ஸ்நானுதி நித்தியானுஷ்டானி

سسسس 287
சத்துவ போத னி நித்திய ஸ்நாயி நீ2 ரடி நான்கு)
அறிஞனி கவிஞனி
நியமநி
; நியாயநீ ாரடி எட்டு) ம்போதரங்கம்)
பத்திலா வெனையும் ருந்தக வாற்றழிஇ ழ்க் குருமணி "Eq-5 uDITLD6oof?
தேவலர் ற் றேர்க்கொரு
சிகாமணி துளும்புபே ருரையால் யும் அநீதியும் பறுத் துணர்த்துமோர்
தறிஞர் மில் புகழ்மணி கலாநிதி
* பொன்னகர் ற் செம்பொருள் ப்புமிழ் துயர்தப னம்’ என்னே! ல வீதியும் ன் கதிரையும் த் துணர்த்தக் நக் கேங்கித் யறியாப்
ன் றிலமே. வற் சுரிதகம்)

Page 349
2
நீதி கெறியில்
பண்டித வித்துவான் க.
கச்சி யப்பர் செய்திட்ட கந்த
உச்ச மான தகூடி காண்டத் துை இச்ச கத்தோர் யானைப்பிடர்மே நச்ச வாழ்ந்த ஞானியன்ருே ந
கந்த புராண கலாசாரம் கந்த
பந்த மறுக்கும் பாரத நூல் படி எந்தை கணட திப்பிள்ளே இல சிந்தை அகத்தை ஞானங்களைத்
ஓதி உணர்ந்தார்; பிறர்க்குரைத்த ஏத மெவர்க்கும் இறையேனும் ! நீதி நெறியில் நின்றிட்டார்; நெ பேதி யாமல்; கணபதிப் பிள்ளை
தொல்காப்பியமே முதலெழுத்தின் பல்காப் பியங்கள் சமயநூல் நீ பல்லா யிரம்பேர் ஆசிரியர், ப எல்லா இடத்தும் இலங்கவைத்
அன்பினைந் திணையில், அத்துவி கண்புதைந் தவர்கள் கருதுகின் மண்புதைந் திருந்த மாணிக்கா பண்பனன் ருேவிப் பண்டிதப்ே

நின்றிட்டார்
கிருஷ்ணபிள்ளை அவர்கள்
புராண காவியத்தின் ரையை எழுதிக் குறைநிறைப்பால் }ல் ஏற்றி இருத்தி ஊர்வலமாய் ம்பண் டிதமா நன்மணியே.
புராண போதனைகள் க்கப் பணிக்கும் நவமணிகள்
க்கி யப்பேர்க் கலாநிதியின்
த் திறந்திங் கென்று தெரிந்திடுமே.
நார்; ஒழுக்கத் துயர்ந்தார் அடக்கமுடன் இயற்றிடாத வாழ்வு காட்டி ஞ்சும் சொல்லும் செயலுமொன்றப்
ப் பேர் நம் பெருமணியே.
சொல்லின் பொருளின் இலக்கணங்கள் தி நூல்கள் பயிலவைத்துப் ண்டி தர்கள் வித்வான்கள் தார் எம்பண் டிதப்பேர் எழின்மணியே.
த தாதன் மியமாம் அருணிலையில் rற கருத்தின் களங்கங் களைந்தருளி
வ் கழுவி நூலின் மாட்டளித்த பர்ப் பரம குருவாம் பரஞ்சுடரே.

Page 350
4.
ରuff தனேக்குரிய
Laoso iš LD. LJ ia
சிந்தனையால் மிகஉயர்ந்தும் தெளிவுறவே எடுத்துை வந்தனைக்கே ஆளான பண் வையகத்தே நின்நாமம்
அன்பார்ந்த உளத்தினணுய் அனைவர்தம் உளத்தேய
பண்பார்ந்த நூலனைத்தும்
பாரினிலே நின்வாழ்வில்
இந்நாடும் பிறநாடும் போற் என்றென்றும் தர்மத்தி எந்நாடும் உவந்தேற்கும் நூ எம்மரிய மாமணியே வி
ஈழத்துப் புலவர்தம் பாடல் எங்கெங்கும் மேடைதெ ஈழத்துப் புலவர்தம் பெருை ஏற்கின்ற விதத்தினிலே
பண்டையவாம் சித்தாந்த !
பாரிடையே யாவருமே
கண்டனைய சுவைநடையிற்
கருணைமிகு மாமணியே
ஆண்டவனின் அருணுேக்ை அறிந்தந்த வழியினிலே வேண்டுவன அவனறிவான்
வித்தகனே 1 மாமணியே
புண்ணியத்தின் வடிவமென புகழுக்கே உறைவிடம் பண்ணியநற் றவப்பயன்நீ
பண்டிதமா மணியேநின்

பண்டிதமணியே!
நாதசிவம் அவர்கள்
சிந்தித்த அதனைத் ரத்தும் எழுதியுமே உலகோர் டிதமா மணியே! > என்றென்றும் வாழ்க.
இன்சொல்லே பேசி பும் தெய்வமெனப் பொலிந்தாய் எடுத்துரைத்த நலன்கள் ல் விளங்கிடவே வாழ்ந்தாய் !
bறு புகழ் கொண்டாய் ! ன் வடிவமெனத் திகழ்ந்தாய் ! நூல்பலவும் தந்தாய்! பாழியநின் நாமம்.
களை எடுத்தே ாறும் பொருள்விளக்கஞ் செய்தே மயினை உலகே
பிரசங்கம் செய்தாய் !
நூலனைத்தும் கற்றே
விளங்குகின்ற வகையில் கட்டுரையாய்த் தந்த
வாழிய நின் நாமம்,
க அறிவதுதான் சமயம்
0 நிற்பதுதான் தர்மம் என்றேதான் உரைத்த
! நின்நாமம் வாழ்க.
நினைஉரைத்தல் பொருந்தும் நீ எனஉரைத்தல் பொருந்தும் என்றிடினும் பொருந்தும் நாமமென்றும் வாழ்க.

Page 351
இலங்கையிற் வாகீச கலாநிதி கி. வா
கந்த புராணப் பகு கவினும் தட்ச செந்த மிழ் நூற் பு சிறப்பார் உை முந்தும் இலங்கை மொழியும் சங் தந்த பெயரும் ஆ பொன்னும் ச
இலங்கை யிற்பண்
றெவரும் போ நலங்கண் டினிது
நயமார் நூல்க புலங்கள் ஒடுக்கும்
பிள்ளை புகழுட டலங்கற் கடம்பன் ஆண்டு பலவு ''காந்தமலே " சென்னை 28, 3-10-68
கற்சிலை யாமெனக்
கண்டாவ6ை
முற்றிய ஞானியாம் மு நற்றமிழ் வல்லுநன் ப3 பற்றினன் சிவபத மென் கற்சிலை யாமெனக் கல
கல்வியின் வரம்பி3னக்
தொல்லியல் நூல்களைச் பல்கலை ஞானியாம் பன் இல்லையெ னில்தமிழ் எ
பைந்தமிழ் வளர்த்தளம் செந்தமிழ் ஒதவோ தே6 இன் தமிழ் இங்கெலாம் 6 என்தமிழ் நாட்டினர் ஏ

பண்டிதமணி ஜகந்நாதன் அவர்கள் குதியெனக் * காண்டத்தைச் லமையினுல்
ரயால் விளக்குமண்ணல்
அரசினர்தாம் கச் சான்ருேணுத் யிரம்வெண் ாரப் பெற்றனே.
டிதமணியென் ற்றத் தமிழ்க்கடலின் கடந்து பல 5ள் வழங்கியவன்
கணபதிப்பேர்ப் ம் வலிமையுங்கொண்
திருவருளால் ம் வாழியவே !
* ※
கலங்கி நின்றளே ! ாக் கவிராயர்
த்தமிழ் ஒதுநம் ண்டித மாமணி ானலும் தமிழனை ங்கி நின்ருளே !
கண்டபே ரறிஞஞய்த்
சுவைதர விளக்குநன் ண்டித மாமணி ந்நிலை யாகுமோ
பண்டித மாமணி வுல கேகினன் எந்நிலை யாகுமோ ங்கியுள் வாடவே !
- ஈழநாடு வாரமலர் - 20.4-SS

Page 352
1985ஆம் ஆ பண்டிதமணி அவ
சாப்த
1966 19
 
 
 

ண்டின் பின்னர்
களின் தோற்றத்தில், வளர்ச்சி
46 1956
76 1986

Page 353
Yawann/N/NYN/Nas ra/N/r
பண்டிதமணி அவர்களி
a;ސ 2 - من لا ف<ه oاکسط
ඊ حلج چ ح ه به تازه" که نےیہ کے او با موگر ضحيه لم يده ، خياح 6 نہ بعد ۔
ས། run u
V - rs 2--- i
'~~ 2\- GSK , ཅོག་༽L. ནས་ ༥(/) >> فلاک رحلے\کا ~\
• 284^^で・・。三身ー、> *) u ܛܒܗܘ.0ܠܰܡܗܝ
یحیی عباس جیسو. و یا ژاند ཁྱ---་ཀ༽༤- ༢ ནག་(ཊི་ دان ۔ ۱}ہ (مجھے نه سوی یحیی خیمه ع» « به جبهه ۷۰
് ། aسنة (2 - كيه (عمحي * ܕ ܟ ¬ܕ ܟܳ ܖwܝܙ ܝܽ ܬ ܐ ܦ̇ܬܝ`ܣ6 ܓܟ: 2) is ta- ۳۰27لاسیہ\ vسo. &ج <<' づてr Aや> へ っケ“。2-s>。 >~,% ১ - ৮.৯ • >< • لیلا با تلك حتها f ) Gسد که المرة / {-ہ~ه (سب کچھ نے خا^سماندلس)
༨༣ ”ད་ كامور 竺 爱 数 عسير أن تصمي
3 3Yے ولاد کس<سs 2 *'[/(( А у و تنیس کرد.
eج<. خلود، $fr-لرسہ ༦ན་ལ། རྩ་བ། བ་ た多 رہ کہہ لاہ “ ۲۱ کلا یعے ۶Y
f
శిల్కిg(NS ۶۱۰ ر (یہ k کا کہ ༽པར་ اس-۰۰" ^ --> *ら4 f\ہوتی۔ ہم چوحہج\ పP~_
ചെയ്തെ ിജ്ഞ.

ன் கையெழுத்துப் படிவம்
:ج ہسپ یہ Y
ープー/
7人ー〜 حیہ~Tحہ۔ یہ کے 63ضح تحہ صارtحمحلات
یہ ہےسےحتیجے 2 سے T جہ یہ نے سمجمو؟ وہ حس? جب نبیخ
خ برہنہ سچn~/ , مج » يَب\ م?کسہ^صار ؟ ?
می» 2 ۲ مسیحیجاج (خ ۴ خمینی ဂုံ <<تے تھے۔ ”لاAS ۶ 2-F^*タード・)・へsー、 ノ
༢,༡ ༈ ༣༽ 4 * Ac ܐܢ-- 2<ܧ བ>ཐལ་དུ་
— Slav.G. Det
*$/g, 11,4723 حال بررسی با اح وی: y
( به سر دهستی» را در۲۰ جس کی /حکہ خS .+( } \e۔ مهمه خطور محد
དེ་ལ་༧༡་༡/ ། لوی \۔r *\ ناروے
‘દ-> ཆ༦༡ ཌ་ "y 777 نینہہ ♔ خهـ;n
ー。
ʻ< »hn)~ وحده يجد " نة «ح ۱ را با دهقG یا گک ۷ فتس لی» میدهد. ت 5ਅ5) 勢- タ .}^.) గ
/os( * 1( وهم صصحريح _އް ܩܶܢܝܡܡܹ
ܕ݁ܢܰ܆ ܝܧܓܠ % , ന്- دهه دوم،
. مسدس "مت , "-^عصممبرۂسمبر068

Page 354
இலக்கிய கலாநிதியும்
* சுழிபுரத்திலே ஒரு பெரிய பரிகாரி யார், வண்ணுர்பண்ணையிலே கஸ்தூரியார், நாயன்மார்கட்டிலே மயிலு அவர்கள். ஒரு காலத்திலே மூன்று பிரபல வைத்தியர்கள். மகா விவேகிகள், அநுபவஸ்தர்கள்.
கஸ்துரரியார் வீடு தவச் செல்வரான யோக சுவாமிகளின் முழுமையான ஆசிக்குப் பாத்திரமானது, கனம்பொருந்திய வைத் தியர் முத்துக்குமாரு அவர்களும், அவர்க வின் அருமைப் புதல்வரான கதிரைவேற் பிள்ளை அவர்களும் ஏழைகளுக்கு மருந்தும் உதவி, அநுபானத்துக்குப் பணமும் உதவு பவர்கள், **
இவை, பண்டிதர் ஐயா அவர்களின் வசனங்கள். ஐயா அவர்களுக்கு "ஆஸ்த்மா' நோய் ஏற்பட்ட காலங்களில் ஏற்ற மருந்து வகைகளை உதவி அவரது சரீர சுகத்தைப் பேணி வைத்தவர்கள் கஸ்தூரியார் வைத் தியசாலே வைத்தியமணிகள். திரு. பரராச சிங்கம் அவர்களது காலம்வரை குறித்த உதவிகள் தொடர்ந்தும் இருந்தன.
ஈழகேசரி நா. பொன்னையா அவர்களை யும் கஸ்தூரியார் கதிரைவேற்பிள்ளை அவர் களையும் "இரண்டு பெருங் கைகள் " என்று ஒரு கட்டுரையிற் பண்டிதர்ஐயா அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றர்கள்.
வைத்தியமணி கதிரை வேற் பிள்ளை அவர்கள் இயற்கையெய்திய பொழுது,
பண்டிதர் ஐயா அவர்கள் பாடிய பாடல்
இது :
*"மருந்துதவி வாழ்வித்த மாலேபோல் வையம் மருந்துதவி வாழ்வித்த வள்ளால்-மருந்தை இருந்துதவ நின்போல் இனியார்! இனியார்! இருந்திணியென் செய்வோம் இனி."
பண்டிதர் ஐயா அவர்கள் கஸ்தூரி யார் வைத்தியர்கள் மீது கொண்டிருந்த நன்றி உணர்ச்சியை மேற்கண்ட பாடல் விளக்குகின்றது.

வைத்திய கலாநிதிகளும் எவன் -
ஆஸ்த்மா அகோரங் கொள்ளுகிற பொழுது, அந்நோயின் அகோரத்தைப் படிப் படியே குறைத்துவந்த பெருமைக்கு உரியவர் பெரிய டாக்குத்தர். இந்த நூற்றண்டின் மத்திய காலத்தில் பெரிய டாக்குத்தர் என்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்பட்டவர் டாக்டர் பி. எஸ். சுப்பிரமணியம் அவர்கள். டாக்டர் அவர்களுக்கும் இந்த ஆஸ்த்மா வருத்தம் இருந்தது.
பி. எஸ். அவர்களிடம் சென்றதும் முத வில் ஒரு பெரிய ஊசி. பின்னர் குளிகைகள், சிவப்பு நிறத்தில் ஒரு தண்ணிர் மருந்து. அத்துடன் எனிமா (Enema) வும் இருக்கும். சில சமயங்களில் கரையூரிலுள்ள பி. எஸ். மருத்துவமனையில் தங்கியிருந்த சந்தர்ப்பங் களும் உண்டு, டாக்டர் சுப்பிரமணியம் என்று பண்டிதர் ஐயா அவர்கள் பி. எஸ். அவர்களை அழைப்பதில்லை. பெரிய டாக் குத்தர், டாக்குத்தர்க் கிழவன் என்று மட் டுமே அழைப்பார்கள். உயிர் கொடுக்கும் உத்தமர் என்று பி. எஸ். அவர்களைப் பண்டிதர் ஐயா அவர்கள் பாராட்டி இருக் கின்றர்கள். டாக்டர் பி. எஸ். அவர்கள் சிவபதம் எய்திய ஞான்று ** இவ்வுலகத் தெய்வம்" என்று பண்டிதர் ஐயா அவர்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
** மனிதருள்ளுந் தேவர் மனிதவுருத் தாங்கி இனிதமர்வ துண்டேயா மெங்கள்-கனியமிர்தம் டாக்டர்சுப் ரஹ்மண்யம் இவ்வுலகத்
தெய்வங்காண் மாப்பெரியார் இந்த மகான்."
5-5-1963 ஞாயிறு பண்டிதர் ஐயா அவர்களது ' சமயக் கட்டுரைகள்' நூல் வெளியீட்டுவிழா. முன்னுள் உதவி வித்தி யாதிபதி க. ச. அருள்நந்தி அவர்கள் விழாத் தலைவர். விழாவிற் பங்குபற்றி முதற் பிர தியைப் பெற்றுக்கொள்ளுவதற்கு டாக்டர் பி. எஸ். அவர்கள் இணக்கந் தெரிவித்து இருந்தார்கள்.

Page 355
- 2
* அறிவிலே ஆற்றலிலே குறைந்தவர் கள் பெரியோர்கள் இருக்குமிடந் தேடிப் போய் அவர்களிடம் ஆசி பெறுவதுதான் வழக் கம். சுப்பிரமணிய ஐயா போன்ற கல்வி வல்லுநர்களே நாம் இருக்குமிடத்துக்கு வர வழைத்து அவர்களது ஆசியைப் பெறுவது மரபன்று' என்பது பண்டிதர் ஐயாவின் கருத்து. எனவே விழாவுக்கு வந்து கஷ்டப் படவேண்டாம் என்று சுப்பிரமணிய டாக் குத்தருக்கு ஒருவர் மூலம் இரகசிய அறிவித் தலைப் பண்டிதர் ஐயா கொடுத்திருந்தார். பி. எஸ். ஐயா அவர்கள் குறித்த நேரத் துக்கு வந்து சேரவில்லை. 'கிழவன் வந்து சேராதது நல்லது?" என்று பண்டிதர் ஐயா தமக்குள்ளே மகிழ்ந்துகொண்டு இருக்கின் முர். இரவு 7 மணி 30 நிமிஷம் அளவில் வந்து சேர்ந்தார் டாக்டர் பி. எஸ். ஐயா அவர் கள். வைத்தீசுவர வித்தியாலயத்தில் விழாக் காண வந்திருந்த ரசிகப் பெருமக்கள் கர கோஷஞ் செய்து பி. எஸ். அவர்களை வரவேற் முர்கள். விழாச் சிறப்பைக் கண்ட கிழவனுர் குமரன் ஆகிவிட்டார்கள்.
பி. எஸ். ஐயா அவர்களது வள்ளன்மை யைப் பண்டிதர் ஐயா அவர்கள் ஒரு சந் தர்ப்பத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக் கின்ருர்கள்.
"கேட்பவர்கள் மனம் பூரிப்பு அடைய அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மக் கரம் பி. எஸ். அவர்களது வலது கரம்; கொடுத்துக் கொடுத்து நீண்ட கரம்; வலதுகரம் கொடுத் தது இன்னதுதான் என்று என்றும் அறி யாதது ஐயாவினது இடது கரம்’.
涤 米
கொழும்புத்துறைத் தவமுனிவரில் பக்தி செலுத்தியவரான கஸ்தூரியார் வளவு டாக் டர் வை. த. பசுபதி அவர்கள் தமது அரு மைப் புதல்வர்களில் ஒருவருக்கு "யோகு" என்று பெயர் சூட்டியதில் நூதன மேயில்லை. வைத்தியநிபுணர் யோகு பசுபதி அவர்களிடம் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வைத்திய வசதியைப் பெற்றவர்கள் பண்டிதர் ஐயா அவர்கள். பல நூறு தடவைகள் பண்டிதர் ஐயா அவர்களது உடல்நிலையை யோகு அவர்கள் பரிசோதனை செய்திருப்பார்கள். ஒரு சதங்கூடப் பெற்றதில்லை,

92 -
ஆஸ்த்மா நோயுடன் குடலிறக்க நோயும் பண்டிதர் ஐயா அவர்களை <毁L கொண்டுவிட்டது. குணப்படுத்துவதற்கு யோகு அவர்கள் படாதபாடுபட்டார்கள். 21-1-82 வியாழன் இரவு குடலிறக்க நோயி ணுல் மிகவும் உபாதியடைந்தார்கள் பண்டிதர் ஐயா அவர்கள். செய்தி கேட்டதும் இரவு 11 மணிக்குத் திருநெல்வேலிக்கு வந்து விட்டார்கள் யோகு அவர்கள். பரிசோதனை ந.ந்தது.
**சத்திர சிகிச்சையை விட வேறுவழி இனி இல்லை; உடனடியாக நிகழவேண்டும்; தாம திக்காமல் மருத்துவமனைக்குச் செல்லவேண் டும்' என்ருர்கள். மணியும் பன்னிரண்டு அடித்து ஒய்ந்தது. சத்திரசிகிச்சை என்ற தும் பெரிதும் அச்சமாகவே இருந்தது. இர வோடிரவாக ஆனப்பந்தி தனியார் மருத்துவ மனையில் பண்டிதர் ஐயா அவர்கள் சேர்க்கப் டட்டார்கள்.
22-1-82 வெள்ளி அதிகாலையில் வந்து சேர்ந்தார்கள் சத்திரசிகிச்சை நிபுணர் திரு. சுப்பிரமணியம் பொன்னம்பலம் அவர்கள். சத்திர சிகிச்சைக்கான பணம் முழுவதும் மருத்துவமனையில் முன்னரே செலுத்தப்பட் டிருந்தது. "இன்று மத்தியானம் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும்? என்று கூறிவிட்டுப் போனர்கள்; நண்பகல் வந்து சேர்ந்தார்கள். டாக்டர் பொன்னம்பலம் அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர் வைத்தியநிபுணர் இராசையா கணேசமூர்த்தி அவர்கள். டாக்டர் பொன்னம்பலம் அவர்கள் லெற்பென்சிலினுல் தமது தலையில் இலேசாகத் தட்டியவாறு " இவர்தானே இலக்கிய கலாநிதி, பண்டிதமணி G. கணபதிப்பிள்ளை ? என்று கேட்ட வண் னம் சத்திர சிகிச்சை மண்டபத்துள் நுழைந்தார். சத்திரசிகிச்சை பூர்த்தியடைந் தது. டாக்டர்கள் முகங்களை நோக்கினுேம். "கடவுள் காப்பாற்றுவார்" என்ருர் டாக்டர் பொன்னம்பலம் அவர்கள்
மருத்துவ மனையில் உள்ள அலுவ லகத்தை நோக்கி விரைந்த டாக்டர்கள் * இந்தச் சத்திர சிகிச்சைக்கு எமக்கு ஒரு சதமும் வேண்டியதில்லை. பணத்தைத் திருப் பிக் கொடுத்துவிடுங்கள்" என்ருர்கள். மருத் துவ மனை வட்டாரமே வைத்திய நிபுணர்கள் செயல்கண்டு பெருவியப்பு அடைந்தது.

Page 356
- 2
* உங்களுக்குரிய பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுவதுதானே நீதி' என்று மிகுந்த அச்சத்துடனும் மரியாதையுடனும் டாக்டர் பொன்னம்பலம் அவர்களைக் கேட்டபோது, “பண்டிதமணி அவர்கள் நாட றிந்த தமிழ் அறிஞர், மூதறிஞர். அவரது தமிழை விலே கொடுத்து வாங்க முடியாது. அவர் நீடூழி வாழ வேண்டும்; வாழ்வார்கள். அதுவே எமது பிரார்த்தனை? என்ருர்கள்.
* ஐயாவுக்கு எப்படி இருக்கின்றது ' என்று கேட்டுக்கொண்டே இரவு 12 மணிக்கு வந்தார்கள் டாக்டர் யோகு பசுபதி அவர் கள். உடலைப் பரிசோதனை செய்துவிட்டு 'மிகவும் திருப்தியாக இருக்கின்ருர்கள்.கெதி யில் நல்ல சுகம் வரும் " என்ருர்கள். அங்கு தங்கியிருந்த ஐம்பத்துமூன்று தினங்களில் மட்டும் நாற்பது தடவைகள் பண்டிதர் ஐயா அவர்களை டாக்டர் யோகு அவர்கள் பார்வை யிட்டு வேண்டியன செய்தார்கள். எல்லாம் இலவச சேவையே.
பண்டிதர் ஐயா அவர்கள் ஆனைப்பந்தி தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்த காலங்களில் அவரது உடல் நிலையைக் கவனித்து வந்த சத்திர சிகிச்சை நிபுணர் திரு. பொ ன் னம் பல ம் அவர்கள், திருநெல்வேலி கலாசாலை வீதியில் உள்ள பண்டிதர் ஐயா அவர்களது குடிசைக்கு வந்து மேலும் பல வைத்திய ஆலோசனைகளைக் கூறிச் சென்ற காட்சி இப்பொழுதும் பசுமையாகவே இருக்கின்றது.
வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஒன்று டாக்டர் யோகு பசுபதி அவர்களுக்கு ஏற் பட்டது. பண்டிதர் ஐயா அவர்களைத் தொடர்ந்து கவனிக்கும் விடயமாக உரை யாடிய போது யோகு, வைத்தியகலாநிதி யோகநாதனைச் சிபார்சு செய்தார். சைவாபி மானியும் தமிழ் ஆர்வலருமான வண்ணை டாக்டர் வேலுப்பிள்ளை யோகநாதன் அவர்களும் தென்மராட்சியைச் சேர்ந்தவர் கள். பண்டிதர்ஐயா அவர்கள் பிறந்தகத்தை உட்படுத்தி ' எங்கள் பண்டிதர்?’ என்று அடிக்கடி கூறி உரிமை கொண்டர்டுவார்கள். ஐயா அவர்களில் டாக்டருக்கு அவ்வள வுக்குப் பற்று இருந்தது.
பண்டிதர் ஐயா அவர்களைத் தமது மருத்துவ மண்க்கு அழைத்து அலைக்கக்
42

93 -
கூடாது என்ற கருத்தினுல் மாசம் ஒரு முறையேனும் திருநெல்வேலிக்கு வருவார் டாக்டர் வே. யோகநாதன் அவர்கள். ஒரு நாள் இரவு 7 மணியளவில் பண்டிதர் ஐயா அவர்களைப் பார்த்து விட்டு அவர் தமது இல்லம் திரும்புகையில் நானும் உடன் சென் றேன். “பண்டிதர் ஐயா மிகவும் சோர்வாக இருக்கிருர், நாடி எப்படி இருக்கிறது’ என் றேன்.
** மாஸ்ரர், நீங்கள் கேட்கிறது எனக்கு விளங்குகிறது. பழைய தேய்ந்த மெஷினுக்கு எண்ணெய் விட்டால் சத்தம் இல்லாமல் வேலை செய்யும். தொடர்ந்துtல் நீண்ட காலம் வேலே செய்யும் என்று சொல்ல முடியாது. பண்டிதர் ஐயா அவர்கள் எண் பத்தாறு வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந் திருக்கின்றர். நாங்கள் கொடுக்கும் மருந்து அவருக்குள்ள உடல் வருத் தங்களைக் குறைக்கும். ஆனல் நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி அவரது வயசைக் கூட்டாது. நாடி குறைந்துகொண்டு டோகின்றது. எப்பொ ழுது நிற்கும் என்று சொல்ல முடியாது’ என்ருர்கள். கவலையாக இருந்தாலும் அவரது பேச்சில் உறுதி இருந்தது. இன்னுஞ் சில காலமாவது !.ண்டிதர் ஐபா அவர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருந் தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. வாழ்ந்தார்கள்.
பண்டிதர் ஐயா அவர்களின் இறுதிச் சடங்கின் போது (14-3-1986 வெள்ளிக் கிழமை) இடம்பெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் டாக்டர் வே. யோகநாதன் அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை அங்கிருந்தவர்களின் உள்ளங் களையெல்லாம் கசிய வைத்துவிட்டது.
杀 豪
மேலே குறிப்பிடப் பெற்ற வைத்திய கலாநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பண்டிதர் ஐயா அவர்களது உடல்நலத்தைப் பேணிய வர்கள். பண்டிதர் ஐயா அவர்களது உள நலத்தைப் பேணுவதற்கு வந்து சேர்ந்தார் இன்னெரு வைத்திய கலாநிதி. அவர்தான் மருத்துவப் பேராசிரியர் அப்பாக்குட்டி சின்னத்தம்பி அவர்கள்.
கந்தபுராண படனத்திற் பங்குபற்றும் உரைகாரர்களுக்கு உதவி செய்யும் முக மாகத் தக்ஷகாண்டச் செய்யுள்களுக்கு உரை எழுதினுல் நல்லது வருங்காலத்திற் பல ருக்கும் பயன்படும் என்ற எண்ணத்துடன் 1965இல் உரை எழுதிக் கொண்டிருந் தார்கள் பண்டிதர் ஐயா அவர்கள். குறித்த ஆண்டு இறுதிப் பகுதியில் உரை எழுதும் வேலை பூர்த்தியடைந்தது. * அச்சில்

Page 357
வந்தால் நல்லது ”” என்ற எண்ணமும் ஐயா வுக்குச் சிறிது இருந்தது.
பேராதனைப் பல்கலைக் கழக இநது மாணவர் சங்கம் ஏதாவது ஒரு சமய நூ வெளியிட விரும்பி இருந்த காலம் அது. இறைவன் திருவருளினல் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களைச் சந்திக்கும் சந் தர்ப்பம் ஏற்பட்டது. கந்தபுராணம் தக்ஷ காண்ட உரையைப் (கையெழுத்துப் பிரதி) பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாண Griff சங்கம் விரும்பினுல் அச்சிட்டு வெளியிடலாம் என்ற கருத்துப் பேராசிரியர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. பேரா சிரியர் அவர்கள் மிகவும் குதூகலம் அடைந் தவராய் ' என்ன நூலை வெளியிடலாம் என்றிருந்தோம், வாய்ச்சுப் போச்சுது ; பண்டிதமணி அவர்களின் தகடிகாண்ட உரையை வெளியிடுவோம்" என்ருர்கள்.
தகூடி காண்ட உரைநூல் வெளிவந்தது. அதுபற்றிப் பண்டிதர் ஐயா? அவர்களது வணக்க உரையை இங்கே எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமாகும்.
சிவமயம் வணக்கம்
ஓங்கார மூர்த்தியாகிய விநாயகப்பெருமான் அத்தியற்புத அதிமதுரசுத்தச் செந்தமிழாகிய கந்த புராணத்தின் கருவூலமான தக்ஷ காண்டத்துக்கு உரையெழுதுவதோர் எழுச்சியை உற்பத்தி செய்தும், அது முற்றுதற்கு வேண்டும் அநுகூலங்களை அநுக்கிரகித்தும், மூலமும் உரையும் அச்சில் வருவது கருதி
*அஞ்சலோம்புமதி
என்று கனம் பொருந்திய வைத்திய கலாநிதி பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் மூலம் அபயம் அளித்தும், மதிப்புக்குரிய இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்க வாயிலாக வெளியீடு செய்தருளியும் முகிழ்த்த பெருங் கருண்ைத் திறத்தை மனமுருகி வாழ்த்தி வணங்குவாம்,

س- 94
தக்ஷகாண்டஉரைநூல் வெளியீட்டு விழா பேராதனைப் பல்கலைக்கழகக் கலைமண்டபத் தில் 25-1-67 புதன்கிழமை காலை 10 மணி யளவில் பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெருவிழாவாக நடை பெற்றது. பேராசிரியர் ஆ. வி. மயில்வாகனம் அவர்கள் பொன்னுடை போர்த்தியும் பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் பொற்கிழி வழங்கியும் பண்டிதர் ஐயா அவர்களைக் கெளரவித்தார்கள்.குறித்த விழா வரலாற்றுப் புகழ் மிக்கது.
கந்தபுராணம் தகடிகாண்ட உரை நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத் தது. அதற்கான பெருவிழா வெள்ளவத்தை சைவமங்கையர் கழக மண்டபத்தில் 4-11-68 திங்கள் முற்பகல் வைத்தியகலாநிதி பேரா சிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் தலைமை யில் நடைபெற்றது. கலாசார அதிபர் திரு. ஹேமசிரி பிரேமவர்த்தணு அவர்கள் சாகித் திய மண்டலப் பரிசையும், சாகித்திய மண்டலத்தின் உயர் உறுப்பினர் என்ற விருதினையும் பண்டிதர் ஐயா அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள். வைத்திய கலாநிதி பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்களின் தலைமை உரை மிகவும் காத்திர மாக அமைந்தது என்பது ஈண்டு விசேட மாகக் குறிப்பிடத் தக்கது.
பண்டிதர் ஐயா அவர்களுக்கும் வைத்திய கலாநிதி பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்களுக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பு இருபது ஆண்டுகள் நீடித்தது. பண்டிதர் ஐயா அவர்களது சுக நயங்களில் கண்ணுங் கருத்துமாக இருந்தவர்கள் பேரா சிரியர் அவர்கள்.
திரிகரணசுத்தி உடையவர்களான பேரா சிரியர் அவர்கள், திரிசக்கரம் பொருந்தி: (கதிரை வண்டி ஒன்றுடன் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார். உடல் வலிமை குன்றிய நிலையில் காணப்பட்ட அவர்கள் திருநெல் வேலியில் இருந்து திரும்பியதும் "டாக்குத் தர் என்னை முந்தி விடுவார் போல இருக் கிறது. இந்தத் திரிசக்கரவண்டி அவருக் கல்லவா அவசியம் தேவைப்படும்" என்று ஹாஸ்யமாகப் புண்டிதர் ஐயா அவர்கள் கூறினர்கள். பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் பண்டிதர் ஐயாவை முந்தித்தான் விட்டார்கள்! பண்டிதர் ஐயா அவர்களும் தொடர்ந்து சென்றுவிட்டார்கள். விதியின் வலிமை இருந்தவாறு !

Page 358
தமிழ்த் தாத்தா டாக் இறுதி ய
Ggs N (9ûl: 347.
13-03-86 வியாழனன்று உள்ளூ ராட்சிச் சேவைத்திணைக்களத்திலிருந்து நான் தங்கியிருக்கும் கொழும்பு விவேகானந்த சபைக்கு வழமை போல வந்தேன். நேரம் மாலை 6-05 மணி. வானெலியிற் செய்தி ஒலிபரப்பானது காதில் விழுந்தது. நாட்டில் இங்கும் அங்குமாக நடைபெறும் அழிவுகள் அவலங்கள் பற்றி ஏதாவது சொல்லுவார் களா என்பதை அறிவதற்காக வானெலிப் பெட்டிக்கு அருகில் நெருங்கினேன்,
எதிர்பாராத விதமாக - காதில் விழக் கூடாத விடயமாக - மூதறிஞரும், இலக்கிய கலாநிதியுமான பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை இன்று அதிகாலை 4-00 மணிக்குக் காலமானர் என்ற செய்தியை அறிவிப் பாளர் சொன்னதும் என் தலையிலும் நெஞ்சிலும் யாரோ அடித்தது போல் இருந்தது. பக்கத்தில் நின்றவரோ பண்டிதமணி என்ருல் யாரென்று தெரியா தவர்.அவருடன் என் உள்ளத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கூறிக்கொள்ள முடியவில்லை. இதயக் கதவுகள் " பட பட" வென அடித் துக் கொண்டிருந்தன. வாஞெலிச் செய்தி தவருக இருக்கக்கூடாதா என்று மனம் அங்க லாய்த்தது. நடுங்கும் நெஞ்சத்துடன் உடைகளை மாற்றிவிட்டுச் சபை மண்டபத் துக்கு வெளியே யோசித்துக் கொண்டு நின்றேன்.
பொல்லாத இரவு
அப்பொழுது யாழ. பல்கலைக் கழகப் பதிவாளர் திரு. வே. ந. சிவராசா அவர்கள் என்னைச் சந்திப்பதற்காக அங்கு வந்தார், அவருக்கு வானெலியில் அறிவித்த செய்தி தெரிந்திருந்தது. அதனுல் என்னைப் பார்த்து * உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா? " என் முர். பண்டிதமணியின் மறைவுச் செய்தியைத் தானே கேட்கிறீர்கள் என்றேன். " ஆம் ? எனப் பதிலளிக்கும் வகையில் தலையசைத்து

டர் பண்டிதமணியின் ாத்திரை
பரமசாமி அவர்கள்
விட்டு, ' வி. சி. உம் இங்கு நிற்கிருர் நானும் வந்துள்ளேன்; ஐயாவின் இறுதி அஞ்சலியிற் கலந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் போகி நீர்களா? என்ருர்,
கலங்கிய நெஞ்சத்துடன் நின்ற எனக்கு எதுவுமே நிதானமாய்ச் சொல்ல முடிய வில்லை. ' போகத்தான் மனம் துரண்டு கிறது" என்றேன்.
வேதனை உள்ளத்தைக் குடைந்தது ; கண்கள் உறங்க மறுத்தன. அன்றைய பொல்லாத இரவு முக்கி முனகி நீண்டு கொண்டிருந்தது.
உறக்கமற்ற இரவு அதிகாலை 4-30 மணியானதும் கோட்டைப் புகைவண்டி நிலையத்திற்கு வந்தேன். யாழ்ப்பாணம் செல்லும் பயணிகள் தொகை அதிகமா யிருந்தது. பயணச் சீட்டுப் பெறுவது சந்தேகம் போல் தோன்றியது. ஆயினும் நண்பர் ஒருவரின் உதவியுடன் பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு புகை வண்டியில் ஏறினேன். நேரம் சரியாக 5-45 மணியானதும் புகைவண்டி கொழும்பி லிருந்து யாழ்நகர் நோக்கி நகரத் தொடங் கியது.
பண்டிதர் ஐயாவின் பிரிவு, உள்ளத்தில் உலுக்கிக் கொண்டிருந்த போதிலும், இன்னும் சில மணி நேரம் கழிந்ததும் அன் ஞரின் பூதவுடலைக் காண்பதற்கு வாய்ப்பாகி விட்டது என்று மனதில் ஓர் ஆறுதல். அன் றைய வண்டி கொழும்பு-யாழ் நகர்ப்புறக் கடுகதி வண்டி. ஆதலால் அது விரைந்தோடி, பகல் 1-00 மணியளவில் யாழ்ப்பாணம் வந் தடைந்தது. அவசரமாக வண்டியிலிருந்து இறங்கிய நான் வழியில் எவ்விடத்திலும் நில்லாது பண்டிதமணியின் குடில் அமைந் துள்ள திருநெல்வேலிக்கு நேராகச் சென் றேன்.

Page 359
பத்திரிகை, வானுெலிச் செய்திகளின்படி அவரின் இறுதிக் கிரியைகள் பகல் 12-00 மணி முதல் பி. ப. 2-00 மணிவரை நடை பெற்ற பின்னர், அவரது பொன்னுடலைப் பொது மக்களின் அஞ்சலிக்காகப் பக்கத்தி லுள்ள கலாமன்ற மண்டபத்தில் கொண்டு வந்து வைத்திருந்தனர்.
மக்கள் அஞ்சலி
நான் அங்கு சென்றபோது மக்களின் அஞ்சலியைத் தொடர்ந்து பண்டிதமணியின் அணுக்கத் தொண்டரும் பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபையின் செயலாளருமான திரு. அ. பஞ்சாட்சரம் அவர்கள் தலைமை பில் இரங்கலுரை ஆரம்பமாகி இருந்தது. நான் மிகவும் அடக்கத்துடன் ஐயாவின் பூதவுடலைச் சென்று வழிபட்டுவிட்டு அங்கி ருந்த நாற்காலி ஒன்றில் அமைதியாக இருந் தேன்.
ஐயாவைப் பற்றிய சில குறிப்புகளைத் தலைவர் சொல்லிய பின்னர் மண்டபத்தி லிருந்த அன்னுரின் பழைய மாணவர்கள், அபிமானிகள் ஆகியோரை அழைத்துச் சில வார்த்தைகள் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். பண்டிதமணி நூல் வெளியீட் டுச் சபையின் தனதிகாரி திரு. த. இரா சேந்திரம் அவர்கள் உள்ளம் உருகத் திரு முறைகளை ஒதினர்கள்.
இரங்கலுரையில் முதலிடத்தைப் பிடித் துக்கொண்டவர் திருநெல்வேலி கலாமன்றத் தின் போஷகர் திரு. ஆ. மகாலிங்கம் அவர் கள். ஒரு பசுவதைக்குப் பயந்து சிதம்பரத் துக்குச் சென்று தமது இறுதி வாழ்க்கை யைக் கழித்த சுவாமி ஞானப்பிரகாசர் பிறந்த திருநெல்வேலிக்கு மட்டுவிலில் பிறந்த பண்டிதமணி அவர்கள் பெருமை தேடித் தந்ததை நன்றியுணர்வுடன் நினைவுபடுத் தினர். ஐயா அவர்களிடம் அன்பு பூண்ட திருநெல்வேலி மக்கள் பலாலி வீதியிலுள்ள திருநெல்வேலிச் சந்தியில் தமது துயரைத் தெரிவிக்கும்வகையில் கறுப்புக் கொடிகளைத் தொங்கவிட்டும், திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் இருந்து ஐயா வாழ்ந்த இல்லம்வரை மகர தோரணம் கட்டியும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

س--- 96
பண்டிதமணியின் பூதஉடலை இறுதியா கக் காண்பதற்குத் திரண்டுவந்த மக்கள் கூட்டத்திற்குப் போதிய வசதியளிக்கும் வகையில் திருநெல்வேலி கலாமன்றத்தி னர் தமது மண்டபத்தை அலங்கரித்து இருக்கை வசதிகளும் செய்து கொடுத்த மையை எத்தனைமுறை புகழ்தலும் தகும். மக்களின் பாராட்டைப் பெற்றதோடு தமது அன்பை நிறுத்திக்கொள்ளாமல் பண்டிதமணி நாள்தோறும் திருவுலர் வந்து சிறப்பித்த கலாசாலை வீதியைப் பண்டிதமணி கணபதிப் பிள்ளை வீதியெனப் பெயர் சூட்டவேண்டும் என்றும் திரு. மகாலிங்கம் குறிப்பிட்டது எல்லார் இதயத்திலும் தேனுய் இனித்தது.
இறுதிக் கிரியைகள்
இரங்கலுரை நிகழும் போதே நான் அவ்விடம் சென்றதால், ஐயாவின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு எங்கே நடைபெற்றன என்பதை அறிவதில் என் மனம் அங்க லாய்த்தது.
அருகிலிருந்த நண்பரிடம் அது பற்றிக் கேட்டேன். பண்டிதமணியின் இறுதிக் கிரியைகளை அவரின் குடும்பத்திற்குரிய மட்டுவிலைச் சேர்ந்த குருக்களே வந்து அவ் வூர்ப் பாங்கின்படி செய்தார் என்றும், அவற்றைச் செய்யும் போது கல்விமான்களும் பண்டிதர்களும், சங்கீத வித்துவான்களும் அங்கு திரண்டு நின்று திருமுறைகள் இசைத் துத் திருப்பொற்சுண்ணமும் ஒதினர்கள் என்றும் வாயூறி யூறிச் சொன்னூர். அவர் அவ்வாறு சொன்னதும் அவற்றைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று நெடுமூச்சு விட்டேன்.
இதற்கிடையில் இரங்கலுரைக்கு ஆட் களை அழைத்த தலைவர் உரை நிகழ்த்து வோருக்கும் பண்டிதமணிக்கும் உள்ள பிணைப் பினைக் கூறி அறிமுகம் செய்து வைத்தபோது யார் யாரெல்லாமோ பண்டிதமணியுடன் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
புலவர் ம. பார்வதிநாதசிவம் உரை நிகழ்த்தும் முறை வந்தபோது அவரது

Page 360
குடும்பத்திற்கும் பண்டிதமணிக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைத் தலைவர் பலர் அறியக் கூறினர். பண்டிதர் ஐய்ாவை மீண்டும் கல்வி உலகில் புகுத்திய உரை யாசிரியர் மட்டுவில் ம. க. வேற்பிள்ளை உபாத்தியாயரின் புதல்வர் திரு. வே. நட ராசா அவர்களின் சகோதரரும், பண்டித மணியால் பரீட்சை எடாத பண்டிதர் எனப் போற்றப்பட்டவருமான வரகவி மகாலிங்கசிவத்தின் மகன் திரு பார்வதிநாத சிவம் சில வார்த்தைகள் பேசுவார் என்ற தும், திரு. பார்வதிநாதசிவம் எழுந்து, *தருமம் என்ருெரு பொருள் உளது என் பதை மையமாக வைத்தே ஐயா அவர்கள் வாழ்ந்தார்" எனக் குறிப்பிட்டார்.
அடுத்து, சிவத்தமிழ்ச் செல்வியும் துர்க்கா துரந்தரியுமான பண்டிதை தங் கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தமது உரை யில் அறிஞர்கள் மத்தியிலே தமிழ்த் தலை வர்கள் பலர் உளர் எனினும், அவர்களுள் தமிழ் மொழிக்குத் தலைவராய்த் திகழ்ந்தவர் பண்டிதமணி ஐயா அவர்களேயாவர்.அவரை இன்று இழந்துவிட்டோம். தமிழ், சைவம் இரண்டும் தொடர்பாக எழுந்த ஐயங்களைப் போக்குவதற்கு உதவிய பேரறிஞர் ஐயா அவர்கள். அவர் விட்டுச்சென்ற தத்துவ இலக்கிய நூல்கள் எமக்கு என்றும் பயன் தருவன” என்ருர்,
அதனைத் தொடர்ந்து இந்துசாதன ஆசி ரியரும் பண்டிதமணியால் "புகழேந்தி" எனப் பாராட்டப்பட்டவருமாகிய திரு. நம.சிவப் பிரகாசம் அவர்கள் ' பண்டிதமணி ஒரு நெடுங்காப்பியம். அக் காப்பியத்தைப்பற்றி எத்தனையோ சொல்லலாம். ஆனல் அவற்றை யெல்லாம் சொல்லிச் சபையோரின் நேரத்தைப் போக்காது அவர்மீது பாடிய வெண்பா ஒன்றைப் பாடுகிறேன் " எனக் கூறி அப் பாடலைப் படித்துக் காட்டினர்.
* ஈழமுரசு ஆசிரியர் திரு. எஸ். திருச் செல்வம் பேசுகையில், தமது ‘இரங்கல் உரை? தான்சார்ந்த ஈழமுரசு பத்திரிகையின் சார் பில் மாத்திரமன்றி, தமக்கு மூத்தவரான தினகரன் ஆசிரியர் .திரு. இ. சிவகுரு

سسسس 97
நாதன் சார்பிலும் தால் இரங்கலுரை நிகழ்த் துவதாகக் கூறினுர். பண்டிதர் ஐயா அவர்கள் ஈழமுரசுக்கு அளித்த வாழ்த்தில்ை அப் பத்திரிகை நன்கு வளர்ந்து ஒராண்டு நிறை வுற்று, புதுப் பொலிவோடு திகழ்கிறது என் றும் குறிப்பிட்டார்.
பண்டிதமணியின் பழைய மாணவரும் , * மில்க்வைற் செய்தி ஆசிரியருமான திரு க, சி. குலரத்தினம் அவர்கள் உரையாற் றுகையில், இந்த நாட்டில் முடிசூடா மன்ன ராய்த் திகழ்ந்த சேர் பொன். இராமநாதன் அவர்கள் ஒருமுறை பண்டிதமணி பிறந்த மட்டுவிலுக்குச் சென்றபோது, ஐயா அவர் கள் ஒரு கவிதை பாடி அவர்களை வரவேற் ரூர்கள் என்று அக் கவிதையையும் படித்து, அதன் விளக்கத்தையும் சொன்னர். ஐயா வைப்பற்றிய வரலாறென்று தம்மிடம் உள்ளதென்றும் அதனை வெளியிட வேண் டிய காலம் வரும்போது வெளியிடுவதாகவும் சொன்னுர்,
அவரைத் தொடர்ந்து பிரபல தொழி லதிபரும் கொடை வள்ளலுமான 1 மில்க் வைற் தாபன அதிபர் திரு. க. கனகராசா அவர்கள் பண்டிதமணி அவர்களை ஒரு தெய்வமாக மதித்து அவரின் ஆசி பெறு வதில் தமக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. எஸ். சிவலிங்கராசா பேசுகையில் பண்டித மணியின் இலக்கியத் திறனுய்வையும் இர சனையையும் வெகுவாகப் பாராட்டிக் கவிதை அஞ்சலியும் செலுத்தினர்.
கல்விமான்கள் சேரும் இல்லம்
பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேசுகையில், தாம் மாத்திரமன்றித் தமது மனைவியும் பண் டிதமணியிடம் பெரு மதிப்புடையவர் என் றும், பண்டிதமணி வாழ்ந்த இல்லத்துக்குப் பல கல்விமான்கள் வருகைதந்து சென்றுள் ளனர் என்றும், இனிமேல் அவரில்லாத அவ் வில்லம் பொலிவிழந்துபோகாமல் அதை ஒரு கோயில்போலப் பேணவேண்டும் என் றும் கூறினர்.

Page 361
- 2
பின்னர் பேராசிரியர் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை பேசுகையில் தமிழ் மரபு வழிக் கல்வியைப் பயின்றேரின் கருத்துக் களைப் பல்கலைக்கழக மட்டத்திலுள்ளோர் சிலவேளைகளில் ஏற்றுக்கொள்ளாது விடு கின்றபோதிலும், பண்டிதமணியின் கருத்துக் களோ புதுமையும், இனிமையும், சுவையும் மிக்கன என்றும், அதனுலேயே யாழ் பல்கலைக் கழகம் அவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் அளித்துக் கெளரவித்தது என்றும், தமது இரங்கலுரை யாழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் மாத்திரமன்றி, பேராதனைப் பல் கலைக் கழகத்தின் சார்பிலும் அமைகிறது எனவும் கூறிஞர்.
பண்டிதமணியின் இரங்கலுரையில் அவ ரைப் பலமுறையில் தெரிந்தவர்கள் மாத்திர மன்றி அவருடன் நேரில் நெருங்கிப் பழகா மலேயே, தமது ஆசிரியரான முன்னுள் கல்விப் பணிப்பாளர் லக்ஷமண ஐயர் வாயி லாகக் கேட்டறிந்து அவர் மீது அபிமானம் கொண்டிருந்த (தற்போது குளியாப்பிட்டி யில் மாவட்ட நீதிபதியாகப் பதவி வகிக்கும்) திரு. திலகர் அவர்கள் பண்டிதமணி ஏறக் குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை (அலடினில் வராத மந்திரவாதி) ஒன்றைக் கொண்டு வந்து அதனை வரி தவருது படித்துக் காட்டிப் பண்டிதமணியின் புலமையை மெச்சினர்.
பண்டிதமணியின் பிரிவைத் தாங்காது பலரும் தத்தமது இரங்கலுரையை நிகழ்த்த விரும்பிய போதும் நேரம் போதாமையால் எல்லோருக்கும் வாய்ப்பளிக்க இயலாத நிலையில் யாழ் மாவட்டக் கல்விப் பணிப் பாளர் திரு. இ. சுந்தரலிங்கம் யாழ் மாவட் டப் பாடசாலை ஆசிரியர், மாணவர்கள் சார்பில் ஐயாவின் பூதவுடலுக்கு மலர்மாலை சூட்டி இரங்கலுரையும் நிகழ்த்தினூர்.
இவரைப் போலவே முன்னுள் கல்விப் பணிப்பாளர் திரு. தி. மாணிக்கவாசகர் அவர்களும் தழுதழுத்த குரலில் ஐயாவுக்கு அஞ்சலி உரை நிகழ்த்தி, அவரின் தனித்து வத்தையும் மெச்சினர்.

98 -
யாழ். முத்தமிழ் வெளியீட்டுக் கழகத் தின் செயலாளர் திரு. க. சொக்கலிங்கம் (சொக்கன்) வைத்தியகலாநிதி வே. யோக நாதன், ஆசிரியகலாசாலை முன்னைநாள் விரி வுரையாளர் பண்டிதர் சு. இராசையா, ஆசிரியமணி ஆர். ரி. சுப்பிரமணியம் ஆகியோர்களின் இரங்கலுரைகள் சபையில் நிறைந்திருந்த அறிஞர் பெருமக்களின் உள்ளங்களை யெல்லாழ் உருகச் செய்து விட்டன எனலாம்.
தலைவர் இரங்கலுரை
ஈற்றில் தலைவர் தமது தொகுப்புரை யிலே கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளாக ஐயாவுடன் உறவாடியும், அவரிடம் பாடங் கேட்டும், அவருக்காக மேடைகளில் பேசியும், அவர் எழுதியவற்றை வாசித்தும், அவரது நூல்களைப் பதிப்பித்தும், அவர் நோயுற்ற போது உடன் இருந்தும், அவர் இட்ட பணி களைச் செய்தும், நாள் தோறும் அவரைத் தரிசித்தும் வந்துள்ளதாகவும், அவர் தமக்குத் தந்தையாய்த் தாயுமாய்த் திகழ்ந்தார் என்றும் கூறினர்.
இறுதியாக ஐயாவின் முதுமைக்காலத் தில் அவருக்கு வேண்டிய பணிகள் பலவற் றையும் செய்த அவரது அன்புப் பேரன் திரு. சி. சதாசிவத்திற்கும் அவரின் இனிய மனைவிக்கும் தமது நன்றியைத் தெரிவித்து தோடு இறுதிச்சடங்கைச் சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த:.
பின்னர் பூந்தண்டிகையில் வைக்கப் பெற்ற ஐயாவின் பொன்னுடலை அவரின் அன்புக்குரியோர் தீது தோள்களில் வைத்து மெதுவாகச் சுமந்து அவர் ஜீவந்த ராய் நடமாடிய கலாசாலை வீதி வழியே திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலய மாணவர்கள் இருமருங்கும் நின்று அஞ்சலி செலுத்த அதனைக் கடந்து வடதிசையில் அமைந்துள்ள திருநெல்வேலிச் செம்பாட்டு மயானத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு வேதாகம விதிப்படி அவரின் அபி மாணிகளின் திருமுறை ஒதும் ஒலி முழங்க மட்டுவில் ஊர் வழக்கப்படி மயானத்தில்

Page 362
29 س
பூதவுடலின் மேல் அந்தியேட்டிக் கிரியை களைச் செய்த பின்னர், பல்லாயிரக் கணக் கான மக்கள் மத்தியிற் சிங்கேறென நின்று சொற்பொழிவாற்றிய அவ்வுத்தமரின் பூத வுடலைத் தாங்கிய சிதைக்கு அவரது அன்புப் பேரரான திரு. சின்னத்துரை சதாசிவம் தீ மூட்டிய பொழுது அங்கு நின்றேர் அனை வரும் விளைவு கற்பூரத்தையும் சந்தனக் கட்டைகளையும் அவரது பொன்னுடலுக்கு மேல் வைத்துக் கதறி அழுதனர்.
பண்டிதமணி அவர்களைச் சந்தித்த நாள் முதல் இன்று வரை பண்டிதமணி அவர்களை நிழல் போல் தொடர்ந்தவரான அன்பு மாணவர் திரு. அ. பஞ்சாட்சரம் கதறியழுத வண்ணம் பண்டிதமணியின் பாதத்தைத் தொட்டுத் தொழுத பின், மீண்டும் நிலத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிய காட்சி, அங்குள்ளவர்களை மேலும் கலங்க வைத்தது.
2
o
3
l.
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. முக்கிய வ
பிறந்த திகதி : விகாரிடு) ஆனிமீ" 14s 1899ஆம் ஆண்டு யூன இரவு 11 மணி.
நக்ஷத்திரம் : சதயம் 2ஆம் பாதம். மரபுவழிப் பெயர் : சட்டநாதர். தந்தையார் : சின்னத்தம்பி (தருமர்), ப தாயார் : வள்ளியம்மை, தனங்கிளப்பு. பிறந்த இடம் : மட்டுவில், தென்மராட் வளர்ந்த இடம் : தனங்கிளப்பு, தென்ம வாழ்ந்த இடம் * திருநெல்வேலி, யாழ்ப் குலதெய்வம் : தனங்கிளப்பு, காரைத்து
வழிபடு தெய்வங்கள் : மருதடிப்பிள்ளை பனையடிப்பிள்ை

9 -
விதி யாரைத்தான் விட்டது ! வந்தவா றெங்ங்னே போமா றேதோ " என்ற அப்பர் வாக்கை யாவரும் வாயில் மீட்டுக் கொண்ட னர். ஐயாவின் ஆன்மா சாந்தியடைய அனை வரும் ஆண்டவனை வேண்டிக்கொண்டனர்.
பண்டிதமணியின் மறைவு குறித்து யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகை கள் மட்டுமன்றிக் கொழும்பிலிருந்து வெளி வரும் செய்தித் தாள்கள் அனைத்தும் அவ ரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டும் ஆசிரியத் தலையங்கம் தீட்டியும் ஐயா வைப் பெருமை ப்படுத்தின. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சேவையிலும் தொலைக்காட்சிச் சேவையிலும் இச் செய் தியை அறிவித்தமை தமிழ்ப் பேரறிஞர் ஒரு வருக்கு அவர்கள் காட்டிய பெருமதிப்பை வெளிப்படுத்தியது என்பது சொல்லாமலே அமையும்.
வாழ்க அவர் நாமம்.
கணபதிப்பிள்ளை அவர்கள் பற்றிய விபரங்கள்
ஆம் நாள் இரவு 42 நாழிகை 40 விநாடி. ன் மாதம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
மட்டுவில் (சந்திரபுரம்).
சிப் பிரிவு. grrrl of Lifflay. பாணப் பிரிவு. நூ விநாயகர்.
யார், மட்டுவில். ாயார், மட்டுவில்.

Page 363
Il.
12.
13.
14.
15.
16.
17,
8.
9.
20.
22。
23.
25,
)م അ: '
ஆரம்பக் கல்வி : மட்டுவில் அமெரிக்
மெளலீச வித்தியாசாலை). மட்டுவிலில் இருந்து தனங்கிளப்புக்கு (உ ஆசிரியர்கள் (1912-1916) சாவகச்ே சாவகச்ே சாவகச்ே
குருகுலக் கல்வி : 1917 கார்த்திகை,
காவிய பாடசாலை. ஆசிரியர்கள் : சுன்னுகம் பூரீமத் அ. பூரீமத் த. கைலாசபிள் வித்துவான் ந. சுப்பைய
4 来
வித்தகம் ச. கந்தையா நாவலர் காவிய பாடசாலை உடன் மான
தம்பிப்பிள்ளை அவர்கள். மதுரைப் பண்டிதர் பரீட்சையிற் சித்தி : ஆசிரியர் பயிற்சி : கோப்பாய் அரசின. சேவை : திருநெல்வேலி சைவாசிரிய
மும்மொழிக் காவியபாடசா பட்டங்கள் : பண்டிதமணி, சைவசித்த
உறுப்பினர், முதுபெரும் பண்டிதமணி அவர்களின் நூல்கள் : (ெ வேலவன் பவனி வருகிருன், இல நவமணிகள், கந்தபுராண கலாசா சிந்திக்கத் தக்கவைகள், இரு இலக்கியவழி (திருத்தப் பதிப்பு), கந்தபுராணம் தகூடிகாண்டம் உ!ை கோயிலும், சிந்தனைக் களஞ்சியம், காட்சிகள், அன்பினைந்திணை, அத்
பண்டிதமணி அவர்களின் தேசிய அடை பண்டிதமணி அவர்களின் ஓய்வூதிய இல பண்டிதமணி அவர்கள் இறுதியாகப் பெ
1986 பெப்ரவரி-ரூபா 1185 சதம் இயற்கை எய்திய தினம் : குரோதன( 54 நாழிை நக்ஷத்திரம் 1986ஆம் கிழமை அ

س۔۔۔۔ 00
கமிஷன் பாடசாலை (இப்பொழுது சந்திர
ஊர்மாற்றம்); 1912ஆம் ஆண்டு.
சரி பொன்னைய உபாத்தியாயர் அவர்கள் சரி பொன்னம்பலப் புலவர் அவர்கள், சரி பொன்னப்பாபிள்ளை அவர்கள்.
1926 சித்திரை-வண்ணுர்பண்ணை நாவலன்
குமாரசுவாமிப்புலவர் அவர்கள், ளே அவர்கள், பபிள்ளை அவர்கள்,
AA
பிள்ளை அவர்கள்.
னவர்களில் ஒருவர் : புலவர்மணி ஏ. பெரி:
1926ஆம் ஆண்டு. ர் ஆசிரியர் கலாசாலை-1927-1928.
கலாசாலையில் விரிவுரையாளர்--1929-1959, லை, திருநெல்வேலி-1935-1946.
ாந்த சாகரம், சாகித்தியமண்டலத்தின் உயர் புலவர், மஹாவித்துவான், இலக்கிய கலாநிதி.
வளிவந்தவை) கண்ணகி தோத்திரம், கதிர்காம க்கிய வழி, சைவநற் சிந்தனைகள், பாரத ரம், கந்தபுராண போதனை, சிவராத்திரியிற் வர் யாத்திரிகர், சமயக் கட்டுரைகள், கம்பராமாயணக் காட்சி (கவிநயக் கட்டுரை), ா, நாவலர், சிந்தனைச் செல்வம், நாவலரும் கோயில், ஆறுமுக நாவலர், கம்பராமாயணக் வைத சிந்தனை, செந்தமிழ்க் களஞ்சியம்,
யாள அட்டை இலக்கம் : 99 18 0099 X. க்கம் : T 6824.
ற்ற ஓய்வூதியம் :
75. டு மாசிமீ" 28ஆம் நாள் புதன்கிழமை இரவு 5, 32 விநாடி. பூர்வபக்கத் திருதியை, ரேவதி
ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி வியாழக் திகாலை 4 மணி.
spes----

Page 364


Page 365


Page 366