கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2011.07
Page 1
O = E [Ge;
GA
essa 'C)
Page 2
தரமான தங்க நகைகளுக்கு.
NAGALING
Je
Design Manufact Ur Sovereign G JeUG
101, Colombo
Te : O81
(SÈ CENTR SU
SUPPLIERs "O CONF
Dealers in all find Food Colours, Food Chemi
76 B, Kings Tel : O81-2224187, 081
ers and
ers of 229246.T. old Quality ellery
Street, Kandy - 2232545
AL ESSENCE PPLIERS
ECTIONERS G BAIKERS
s of Food essences Cals, Cake Ingredients etc.
Street, Kandy -2204480, 081-4471.563
Page 3
regeri . . . . . . . .
潭”鼬*花”蔷*磁
பகிர்தலின் gGolf
jՈ6լհ
eggggf ogo
TETIO
ஆசிரியர் தி. ஞானசேகரன்
இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன்
ஓவியர்
சிவா கௌதமன்
தலைமை அலுவலகம் கண்டி
தொடர்புகளுக்கு: தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3- B46வது ஒழுங்கை கொழும்பு - 06 தொலைபேசி: 011-2586013
O777-306506 61 02 80077270 தொலைநகல்: 011-2362862
E-mail: editor(CDgnanaminfo web :www.gnanam.info
வெளிநாட்டு உள்நாட்டு
வங்கித் தொடர்புகள். SWiftCOde -HBLLKLX T. Gnana Sekaran Hatton National Bank Wella Watha Branch A\C No. 009010344631
专 LLLL L LLLLL LL LLLLL L L L L L LLLLLLCLSLCSLCLCCC
இதழ் O áðØýbO,
கிண்ண ஈழக்க: தனங்கி கவிதா தாட்சா கவிஞர் தாரணி
O ast66 தெளிவு d56lbs. கலாநிதி
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கரு பொறுப்புடையவர்கள். புனைபெயரில் எழுதுபவர்கள் த வேறாக இணைத்தல் வேண்டும். பிரசுரத்திற்கு
செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு. - ஆ
இனுள்ளே . தகள்
ரியா ஏ. எம். எம். அலி 10 )? 10 ளப்பு வ. சின்னப்பா 16 17 பணி 30 பதியத்தளாவ பாறாக் 34 50 ரகள் த்தை ஜேசப் O3 சணம் புன்னியாமீன் 24 நா. சுப்பிரமணியன் 42 48 ப்யியல்புக்கட்டுரை ந்தராஜா 11
ஃப் சிஹாப்தீன் O7 பகுமாரன் 20 யகுமார் 32 h). சுதாகர் 35 ர்முகம்மது 38
ፖ፴7U0
சிங்கம் 18
07 முருகானந்தன் 28 ான கலை இலக்கிய 2ஷகன் பான்னுத்துரை 51
67( தி தர்ைமனோகரன் 36 மகாதேவா 41 ஜயன் 53 5ர்பேசுகிறார் 55
த்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே NA
மது சொந்தப் பெயர், முகவரி ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச்
சிரியர்
Page 4
கலை,இலக்கியமாதஇதழ்
தலைநகரில் தமிழ்மக்
தலைநகர் கொழும்பில் தமிழர்தம் தலையாய நிறுவ 1942ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், 69 ஆண்டுகாலச் சே காலடி எடுத்து வைத்துள்ளது.
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, மற்றும் கலைக இலக்காகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கிவருகிறது. சேவை அர்ப்பணிப்பாளரின் ஒருமித்த உழைப்பை மதிப்பளித்து அவை ஒவ்வொன்றின் வளர்ச்சிக்கும் விரு ஏனைய கல்விப்புல நிறுவனங்களின் தகவல் பரிமாற்று ர இலக்கியச் சந்திப்புகள், நூல் அறிமுக விழாக்கள், 3 என இந்நிறுவனத்தின் வாராந்த மாதாந்த நிகழ்வுகள் இருபதுக்கும் குறையாத கலை இலக்கிய நிகழ்வுகள் இக் நிறுவனங்களிலும் இடம்பெறாத அளவுக்கு அதிகமான
இதேவேளை சமூக அக்கறையுள்ள விடயங்களை அவ்வப்போது செய்து வருகிறது. கடந்த காலங்களில் ந ஏற்பட்டவேளைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் ே உதவிகளையும் பகிர்ந்தளித்து சீரிய பணியாற்றியிருக்: தமிழ்ச்சங்கத்தின் பெரும் சொத்தாகத் திகழ்வது அ க்கும் அதிகமான நூல்கள் இருக்கின்றன. உயர்நிலை பூர்த்தி செய்வதாகவும் தமிழ் மொழியின் வாசிப்பின் வருகிறது. இலங்கையின் மற்ற நூலகங்களில் இல்லாத சி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலகம் இன இலக்கிய ஆர்வலர்களின் இரசனையை மேம்ட வெளியிடப்படுகிறது. இதுதவிர இச்சங்கத்தின் செயற்பா வெளியிடப்படுகிறது.
இச்சங்கத்தின் செயற்பாடுகள் பல்வேறு குழுக்களால் நூலகக்குழு , உறுப்புரிமைக்குழு, நிலைய அமை சமூகமேம்பாட்டுக்குழு என்பன அவற்றுள் சிலவாகும்.
1942ல் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அது ஒரு புரவலர்களின் அன்பளிப்புகளாலும் தொடர்ந்துவந்த செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் அயராத உ மூன்றுமாடிகளைக்கொண்ட நிறுவனமாக உயர்ச்சி பெ சமீபகாலங்களில் இச்சங்கத்தின் வளர்ச்சியில் துரித 42 பேர்ச்சில் அமைந்துள்ள இந்தச் சங்கக் கட்டிடத்ெ அமைக்கப்பட்ட ‘விருந்தினரகம்’ அறைத் தொகுதியு கட்டிடத்திறப்புவிழா தற்போதைய தலைவர் மு. கதிர் சிறப்பாக நடந்தேறியது.
பல்வேறு தேவைகளுக்காக நாட்டின் நாலா பகுதிகள் தமிழர்கள் எவ்வித பயமோ கெடுபிடிகளோ இன்றி குறை விருந்தினரகம் கொண்டுள்ளது.
இன்று சர்வதேச ரீதியில் அறியப்பட்ட நிறுவனம பணிகள் மென்மேலும் சிறந்தோங்க வேண்டுமென ஞ
விப்பெருக்கும் மேவுமாயின்
வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
sளின் கலாசாரக் கேந்திரம்
னமாக இன்று கொழும்புத் தமிழ்ச்சங்கம் விளங்குகிறது. வையை நிறைவுசெய்து தற்போது எழுபதாம் அகவையில்
ள்சார் துறைகளில் வளர்ச்சியையும் செழுமையையும்
உள்வாங்கித் தமிழ்ப் பண்பாட்டின் பன்முகத்தன்மைக்கு த்திக்கும் தமிழ் ஆய்வுக்கும் ஊக்கமளித்து வருவதோடு நிறுவனமாகவும் கொழும்புத் தமிழ்ச்சங்கம் இயங்குகிறது. 9றிவோர் ஒன்றுகூடல்இலக்கியக்களம், அற்றைத்திங்கள் பலதரப்பட்டனவாய் விரிந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் சங்கத்தில் இடம்பெறுகின்றன. இலங்கையில் வேறெந்த கலை இலக்கிய நிகழ்வுகள் இங்கு இடம்பெறுகின்றன.
முன்னெடுப்பதிலும் இச்சங்கம் தம்மாலான பணிகளை ாட்டில் பலதரப்பட்ட நெருக்கடிகள், போரின் அவலங்கள் பொருட்களைச் சேகரித்து வழங்கியதோடு நிவாரண கிறது. தன் நூலகமாகும். இந்த நூலகத்தில் தற்போது 45,000 ஆய்வு, உசாத்துணை உட்பட தேவைகள் பலவற்றைப் தளத்தை விரிவுபடுத்துவதாகவும் இந்நூலகம் இயங்கி ல அரிய நூல்களை இந்நூலகத்தின் உசாத்துனைட்பிரிவு டயறாது தன்னைப் புதுக்கிக் கொள்கிறது. டுத்த சங்கத்தமிழ்' என்ற சஞ்சிகை இச்சங்கத்தால் டுகளை விளக்கும் செய்தி மடல்’ பிரசுரமும் மாதாந்தம்
மேற்கொள்ளப்படுகின்றன. இலக்கியக் குழு, கல்விக்குழு, ப்புக்குழு, பரிசில் நிதியக் குழு, பதிப்புத் துறைக் குழு,
சிறிய குடிசையில் அமைந்திருந்தது. தமிழ் ஆர்வலர்கள், காலங்களில் இச்சங்கத்தில் பணிபுரிந்த தலைவர்கள், ழைப்பாலும் படிப்படியாக இச்சங்கம் வளர்ச்சிபெற்று bறிருக்கிறது.
முன்னேற்றம் காணப்படுகிறது. தாகுதியின் கட்டுமான வேலைகள் மூன்றாவது தளத்தில் -ன் நிறைவெய்தியுள்ளது. இந்த விருந்தினரகத்தின் ாமநாதன் தலைமையில் 24-06-2011 அன்று வெகு
லிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கொழும்புக்கு வரும் ந்த கட்டணத்தில் தங்கிச் செல்லக்கூடிய வசதியை.இந்த
க வளர்ச்சிகண்டுள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் னம் வாழ்த்துகிறது.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 5
ஈழத்தம்ழ் இலக்கிய ஒரு சர்வதேச பரிமான ஏற்படுத்துகின்ற முக்கிய
црффшшптбот5uйј
'தெளிவத்தை ஜோ
ர் கொழும்புரில் 13-07-1951ல் பிறந்த லெ.முருகபூபதி அவர்களுக்கு 2011 ஜூலையில் அறுபது வயது பிறக்கிறது.
நம்ப முடியவில்லைத்தான். அதற்காக மணிவிழா ஆண்டை மாற்றிக்கொள்ளவா முடியும்.
இதே ஜூலை மாதத்தில்தான் ஒரு நாற்பதாண்டு களுக்கு முன், 1972ல் மல்லிகை மூலம் ஒரு சிறுகதை யாளனாக இலக்கியப் பிரவேசம் செய்கின்றார் இருபது வயது இளைஞன் முருகபூபதி.
அந்த முதல் படைப்பின் பெயர் 'கனவுகள் ஆயிரம்' இலக்கியமே வாழ்வாகிப் போன இவருடைய இலக்கியக் கனவுகளும் ஆயிரம்தான்.
நீர்கொழும்பின் கடற்கரைவாழ் மீனவர் சமூகத்தின் வாழ்வியல்புகளை - வாழ்க்கை முறைமைகளை வெகு இயல்பான சித்திரிப்பாலும் யதார்த்தமான பிரதேச மொழிச் செழுமையுடாகவும் ஒரு அருமையான படைப்பைத் தந்திருக்கின்றார் முருகபூபதி என்று முதல் கதையே நிறையப் பேசப்பட்டிருக்கிறது.
மல்லிகையில் முதல் கதை வந்ததைத் தொடர்ந்து அந்தப் பிறவிகள்' என்னும் இரண்டாவது கதை பூரணியிலும், மூன்றாவது கதை தரையும் தாரகையும்' புது யுகத்திலும் வெளிவருகின்றன.
இந்த மூன்று கதைகளுமே நீர்கொழும்பின் கடல் வாழ்வை மிகத் தத்ரூபமாகப் படம் பிடித்திருந்தன.
ஈழத்து இலக்கிய உலகிற்கு ஒரு புதிய வளர்ந்து வரும் குறும்புனைக் கதையாளரை மல்லிகை கைகாட்டி இருக்கிறது என்று தினகரனில் குறித்து வைக்கின்றார் எம்.சிறீபதி அவர்கள்.
எழுபதுகளின் முற்போக்கு முகாமுக்குள் பேராசிரியர்களான கைலாசபதி - சிவத்தம்பி ஆகிய பெரியவர்களுக்கடுத்த, புதுக் குரலாக இளங்குரலாக ஒலித்த இருவருள் ஒருவர் சிறீபதி. மற்றவர் நித்தியானந்தன்.
பூரணியின் ஆசிரியர் குழுவில் ஒருவரான இமையவன் என்கின்ற இ.ஜீவகாருண்யன் தேடுதலும் ஆளுமையும் மிக்க ஒரு தனித்துவமான விமர்சகர்.
"உங்களுடைய 'அந்தப் பிறவிகள் கதையையும் மகாகவியின் புதியதொரு வீட்டையும் ஒப்பிட்டு ஒரு விமர்சனம் எழுத உத்தேசித் திருப்பதாக ஜீவகாருண்யன் கூறிய தகவலை முருகபூபதியே
ஞானம் n. 6oo 66oóefu työdlootis - ஜூலை 2011
ஓரிடத்தில் பதிந்து வைக்கின்றார். ‘அந்த பிறவிகள் கதை பூரணியில் வெளிவந்த கதை என்பது குறிப்பிடக் கூடியதே.
பூரணியில் இந்தக் கதை வந்த கட்டோடு அதன் ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் அவர்கள் முருகபூபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
"உங்கள் கதை பிரபல சிங்கள நாடகாசிரியர் கலப்பதியின் மேடை நாடகமான 'மூது புத்த'வின் அப்பட்டமான தழுவல் என்று அநு.வை.நாகராஜன் ஒரு புகார் கடிதம் எழுதி இருப்பதாகவும் அதற்கான உங்கள் பதில் என்ன? என்றும் கேட்டிருந்தது கடிதம்.
தழுவல் என்று குற்றம் சாட்டப்பட்ட அந்த மேடை நாடகத்தை நான் அதுவரை பார்த்ததில்லை என்றும் பிறதொரு சமயம் அது நீர் கொழும்பில் மேடை ஏற்றப்பட்டபோது ஓடிச் சென்று பார்த்ததையும், நாடகாசிரியர் கலப்பதியுடன் தனக்கேற்பட்ட இக்கட்டுக்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் எனது எழுத்துலகம் கட்டுரையில் குறிக்கின்றார் முருகபூபதி. (ஞானம் இதழ் 29 ஒக்டோபர் 2002)
நீர்கொழும்பு என்றதுமே முதலில் மனதில் விரிவது முருகபூபதி என்னும் பெயர் அடுத்து விரிவது நீர்கொழும்பு இலக்கிய வட்டம்.
எழுபதுகளின் உதய காலங்களில் இந்தச் சங்கம் ஆற்றிய இலக்கியப் பணிகள் மகத்தானவை. இந்த இலக்கியச் சங்கத்தின் ஸ்தாபகரும் செயலாளரும் முருகபூபதிதான்.
நூல் அறிமுகம், வெளியீட்டு விழா, விமர்சனக் கூட்டம், கலந்துரையாடல், இலக்கிய சந்திப்பு என்று ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களையும், நீர்கொழும்பின் இளம் படைப்பாளிகள் இலக்கிய ஆர்வலர்களுடன் கலந்துரையாடச் செய்து க்ல கலத்துக்கிடந்த நாட்கள் (960)6.
பிந்திய அறுபதுகளில் நீர் கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களை அழைத்து ஒன்றிணைத்து பழைய மாணவர் சங்கம் அமைத்து செயற்பட்டவர் கல்லூரியின் ஆரம்ப கால முதல் மாணவனான இந்த முருகபூபதி.
நீர் கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளராக இவர் இருந்த நாட்கள் சரித்திரம் படைத்தவை.
Page 6
தமிழ் விழா, கவியரங்கு, நாடகம் என்று நீர் கொழும்பை ஒரு இலக்கிய பூமியாக்கிக் கொண்டிருந்த நாட்கள் அவை.
மகாகவி, இளம்பிறை ரஹற்மான், எஸ்.பொ., அநு. வை.நாகராஜன், என்றும் டொமினிக் ஜீவா, இளங்கீரன், தெணியான், சோமகாந்தன், பத்மா சோமகாந்தன், ராஜ முநீகாந்தன், மு.கனகராஜன் என்றும் எத்தனை வ்ரலாறுகள். எத்தனை இலக்கிய ஆளுமைகளின் கால் மிதித்த மண் இது. அத்தனை பேரும் வந்திருந்து கதை பல பேசிக் களித்திருந்த மண் ઉgl.
நீர்கொழும்பின் இத்தனை செயற்பாட்டுகளுக் குள்ளும் காற்றென கலந்து கிடந்தவர் முருகபூபதி.
தன்னைப் பற்றிய பிரக்ஞைகளற்று முற்றிலும் இலக்கிய தாகம் கொண்டலைகின்ற இலட்சியப் படைப்பாளிகள் சிலர் பற்றி நான் அறிந்திருக்கின்றேன். அந்தச் சிலரின் ஒருவராக நான் நண்பர் முருக பூபதியைக் கணிப்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல என்று குறிக்கின்றார், நீர்கொழும்புகலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் முருகபூபதியின் நெருங்கிய நண்பருமான மு.பவர் அவர்கள். -
முருகபூபதியின் முதல் சிறுகதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் நீர்கொழும்பு இலக்கிய வட்ட வெளியீடாக 1975ல் வெளிவந்தது. அந்த ஆண்டுக்கான இலங்கை சாஹித்திய விருதினையும் பெற்றுக் கொண்டது.
தெணியானின் 'விடிவை நோக்கி நாவல் வீரகேசரி வெளியீடாக 1973ல் வந்தது.
நீர்கொழும்பு இலக்கிய வட்டம் இந்த நாவலுக்கான வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.
டொமினிக் ஜீவா அவர்களையும் என்னையும் பேச அழைத்திருந்தார். எழுபதுகளில் நான் அவ்வளவாக மேடை ஏறியதில்லை. ஆகவே முதலில் மறுத்தாலும் முருகபூபதி விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு போய்விட்டார். என்னுடைய முதல் நீர்கொழும்புப் பயணமும் அதுதான்.
தேசாபிமானியில் பணியாற்றிக் கொண்டிருந்த மு.கனகராஜன் வந்திருந்தார். தேசாபிமானியின் இலக்கியப் பகுதி மு.கனகராஜனுடையது.
இந்த வெளியீட்டுவிழா பற்றிய இலக்கியக் குறிப்பை "ஈழத்து இலக்கிய விமர்சகர்களிடம் கேள்விக்கணை தொடுத்த தெளிவத்தை' என்று தலைப்பிட்டுத்தான் எழுதி இருந்தார் மு.க.
மு.கனகராஜன் மிக நெருக்கமான இலக்கிய நண்பர். மல்லிகையின் அட்டைப்படக் கட்டுரைக்காக என்னைச் சந்தித்தவர் அவர்தான்.
மு.கனகராஜன் எண்பதுகளில் வெளியிட்ட பகவானின் பாதங்களில் என்னும் சிறுகதைத் தொகுதி வித்தியாசமானது. 1 கதைகள் கொண்ட இத்தொகுதி யின் ஒவ்வொரு கதைக்கும் ஒவ் வாரு தரமான எழுத்தாளர்களிடமிருந்து ஒரு சிறிய பதிப்புரை பெற்று அந்த மதிப்புரையுடனேயே ஒவ்வொரு கதையும் இந்தத் தொகுதியில் இடம் பெறுகிறது. எஸ்.பொ.
தொடங்கி இளங்கீரன் வரையிலான இந்த மதிப்பீட்டாளர்களுள் முருகபூபதியும் ஒருவர் என்பது குறிப்பிடக் கூடியது.
பிந்திய அறுபதுகளில் தன்னுடைய பதின் வயதில் இலக்கிய ஆர்வம் கொண்ட இளைஞனாக உலாவந்து 72ல் இலக்கியப் பிரவேசம் செய்து, 75ல் முதல் தொகுதி வெளியிட்டு, சங்கங்கள் அமைத்து இலக்கியப் பணிகளாற்றி 76ல் சாகித்திய விருது பெற்று எண்பதில் இன்னொரு தீவிர இலக்கிய வாதியான மு.க.வின் சிறுகதைக்கு மதிப்புரை வழங்கி. என்று நண்பர் முருகபூபதியின் அபரிமிதமான வளர்ச்சி தனித்துவ மானது. அழுத்தமும் ஆழமும் கொண்டது: ஆரவாரமற்றது.
எழுபதுகளின் நடுப்பகுதிகளில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது தேசிய சபைக்குள் முருகபூபதி என்கின்ற இளம் இலக்கியவாதியை, சுறுசுறுப்பிாக இயங்கும் ஒரு செயற்பாட்டாளனை உள்வாங்கிக் கொள்கிறது.
1975ல் இ.மு.எ.ச நடத்திய தமிழ் - சிங்கள எழுத்தாளர் தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு சம்பந்தமான செயற்பாடுகளில், பூபதியின் பங்களிப்பை சங்கம் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டது. முதற் கூட்டம் கொரஸ்ஸ என்ற சிங்களக் கிராமத்தில் ரத்னவன்ச தேரர் முன்னிலையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலவை உறுப்பினர் லெ.முருகபூபதி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்று எழுதுகின்றார் இளங்கீரன் அவர்கள்.
அதன் பிறகு சங்கத்தின் வெள்ளி விழா, மாதாமாதக் கருத்தரங்கு; புதுமை இலக்கியம் சஞ்சிகையின் ஒருமைப்பாட்டு எழுத்தாளர் மாநாட்டு மலர்; எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், பாரதி நூற்றாண்டு விழா, தமிழக எழுத்தாளர் வருகைகள் என்று முருகபூபதியும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கடலும் நீலமும் போல் கலந்து போயிருந்தனர்.
பாரதி நூற்றாண்டு விழாவுக்கான, புத்தகம் மற்றும் புகைப்படக் கண்காட்சி, மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது என்கின்ற ஏகோபித்த குரல்களுக்கு முருகபூபதியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளே காரணம் என்று கூறுவார் அவருடன் இணைந்து செயற்பட்ட வேலமுதன் அவர்கள்.
பிந்திய அறுபதுகளில் நான் கொழும்பு நோக்கித் தள்ளப்பட்டேன். ஆபீஸ் முடிந்த அந்திய பொழுதுகள், வீரகேசரி எடிட்டோரியலில் கார்மேகம் அவர்களுடனேயே கழியும். அப்படியான ஒரு மாலையில்தான் "இவர் முருகபூபதி என்று கார்மேகம் எனக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தார்.
ஒப்புநோக்காளர் பகுதியில் கிடந்த அவரை வீரகேசரியில் யாரும் கண்டு கொள்ளவதில்லை. ராஜகோபால் அவர்கள் கூட இவருடைய ஒரு கதையையும் வீரகேசரியில் போடவில்லை. மல்லிகை, பூரணி, புதுயுகம் என்று நிறையப் பேசப்பட்டவர்தான் பூபதி.
ஞானம் - கறை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 7
இவர்தான் முருகபூபதி இளம் படைப்பாளி என்று கார்மேகம் அறிமுகம் செய்தபோது அவருடைய அகம் எனக்கு அந்த முகத்தில் தெரிந்தது. அதன் அழகும் தெரிந்தது.
தினமும் மாலை வேளைகளில் அவர் வேலை முடித்து வெளியேறும்போது இலக்கியம் பேசுவோம். ஒரு சில நாட்கள் ஆமர் வீதி வரை நடப்போம்.
முருகபூபதியை விட வயதால் 17வருடங்களும் எழுத்துப் பிரவேசத்தால் 12 வருடங்களும் முதியவன் நான்.
சிறுகதை, நாவல், என்று நான் கூடுதலாக எழுதிய காலம் அது.
அவருடைய கதைகள் பற்றிய எனது கருத்துக்களை ஒரு பவ்யத்துடன் கேட்டுக் கொள்வார்.
என்னையும் ஒரு பெரிய எழுத்தாளனாக நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை.
1977க்குச் சற்று முன் பின்னான காலத்திலிருந்து வீரகேசரியின் ஒப்பு நோக்காளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அவரை வீரகேசரியில் யாரும் கண்டுகொள்வதில்லை என்று முன்னே கூறினேன்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியஸ்தர் களில் ஒருவராக, இன்றியமையாதவராக, இன்னொரு அடித்துணாக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்ட கால கட்டத்தில், வீரகேசரியின் ஆசிரிய பீடத்துக்குள் துணையாசிரியர் என்ற மதிப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்.
எழுபது எண்பதுகளில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சக்தி மிகக் கொண்டிருந்தது என்பது உண்மைதான்.
அந்த சங்கத்துக்குள் தனது அடக்கமான நடத்தைகளால், தீவிரமிகு பிரசன்னத்தால், அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளால், தீவிர உழைப்பால், இன்னொரு பிரேம்ஜியாக, இன்னொரு சோமகாந்தனாக, இன்னொரு துனாக அவர் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் திடீரென அவர் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயரும் செய்தி ஊர்ஜிதமானது.
வெளியே காட்டிககொள்ளா விட்டாலும்கூட முற் போக்கு எழுத்தாளர் சங்கம் உள்ளூரத்திகைத்துத்தான் போய் விட்டது.
"பூபதி அவுஸ்திரேலியா போகப்போகும் சங்கதி எனக்கு நம்பமுடியாத அதிர்ச்சியைத் தந்தது. அவர்
செய்யவேண்டிய வேலைகள் இங்கு நிறையக் காத்திருக்கின்றன. அவரது எதிர்காலம் இங்கு ரொம்பவும் பிரகாசிக்கக் கூடிய சூழ்நிலை நிலவியது. என்னால் அவரது இந்த முடிவை ஜீரணிக்கமுடியவில்லை. அன்று இரவெல்லாம் சரியான தூக்கமில்லை, ஒரே மனப்பாரம், நெஞ்சு நோவு. என்று எழுதுகின்றார் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா. முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள் பதிப்புரை - 1997)
“முருகபூபதி அவுஸ்திரேலியா புறப்படுவதை அறிந்ததும் அவரது தனிப்பட்ட தேவை கருதி எவரும் மறுதலிக்க முயலவில்லை. ஆனாலும் முற்போக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
எழுத்தாளர் சங்கம், சுறுசுறுப்பாக இயங்கிய இளைய இரத்த ஓட்டம் உறைந்து போய்விட்டதாக உணர்ந்தது என்று குறிக்கின்றார் திக்குவல்லைக் கமால் (மல்லிகை ஜீவா மனப்பதிவுகள் -பக் 124)
ஒரு நாள் வீரகேசரியிலிருந்து ஆபீசுக்குப் போன் போட்டு சாயந்தரம் வீட்டில் இருப்பீர்களா என்று விசாரித்து அந்தி நேரம் ஓடி வந்தார்.
நாளை மறுநாள் பயணம் என்றார். அதைப் பகிர்ந்து கொள்ளத்தான் சென்ற வாரம் போல நீர் கொழும்பு வீட்டுக்கு சில இலக்கிய நண்பர்கள் வருகின்றார்கள். நீங்களும் ஜீவாவுடன் இணைந்து வாருங்கள் என்றேன். ஒரு பிரிவுபசாரப் பகல் உணவு. நீங்கள் வரவில்லை என்று வருத்தப்பட்டார்.
வாழ்த்துக்கூறி நெற்றியில் சிலுவையிட்டு ஆசீர்வாதம் சொல்லி அனுப்பினேன்.
எழுத்து இலக்கியம் இலக்கியச் செயற்பாடு என்பது மனிதனை ஆட்கொள்வது. வானமும் பூமியும் போன்றது. கடலையும் அலையையும் போன்றது. காலை இல்லை மால்ை இல்லை. இரவு பகல் என்றில்லை. இக்கரை இல்லை அக்கரை இல்லை. சதா சர்வகாலமும் ஜீவிதம் கொண்டிருப்பது. இயங்கிக் கொண்டிருப்பது.
முருகபூபதியும் அப்படித்தான். எழுத்தால் இலக்கியத்தால் சதா காலமும் ஆட்கொள்ளப்பட்டி ருப்பவர்.
நான் அவுஸ்திரேலியா வந்ததும் எனது இனத்தவர் யார் யார் எங்கொங்கே இருக்கின்றார்கள் என்று தேடத் தொடங்கினேன் என்கின்றார் இவர்.
எனது இனத்தவர் என்பது கலை இலக்கிய வாதிகளை என்று விளக்கமும் தருகின்றார்.இனப்பற்று என்பது ஒவ்வொரு மனித மனதுக்குள்ளும் இயங்கும் ஒரு மா கடல். ‘ஒரு மனிதன் இனத்தை நேசிக்கிறான் என்பது மற்ற இனத்தை வெறுக்கிறான் என்பதாகாது" என்று சத்தியம் செய்கின்றார் மகாத்மா காந்தி.
நவசோதி, மாத்தளை சோமு, கலாநிதி காசிநாதர் லகூழ்மண ஐயர் தம்பதிகள், டொக்டர் வாமதேவன், பேராசிரியர் இந்திரபாலா, எஸ்.பொ.மாவை நித்தியானந்தன், அம்பி, ஆசி.கந்தராசா, அருண் விஜயராணி என்று எத்தனை பேர் இந்த அவுஸ்திரேலியாவுக்குள் (மல்லிகை, அவுஸ்திரேலிய மலர் - நவம்பர் 2000)
இவர் நிறுவி இயங்கும், இயக்கும் 'இலங்கை மாணவர் கல்விநிதியம் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட இலங்கை மாணவர்களுக்கு ஆற்றிவரும் சேவை é96TÜ Lufuuga.
2000மாம் ஆண்டிலிருந்து இயங்கும் அவுஸ்தி ரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் இவர் தோற்றுவித்தது.
இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து இக்கலைச் சங்கம் ஆற்றும் பணிகள், ஆண்டு தோறும் மெல்பர்ன், சிட்னி, விக்டோரியா, கன்பரா என்று நடத்தும் தமிழ் இலக்கிய விழாக்கள் உலகப் பிரசித்தம் கொண்டவை.
Page 8
2004ல் கண்பராவில் நடந்த நான்காவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான சிறப்பு மலரை ஞானம் வெளியிட்டு கெளரவம் செய்திருக்கிறது.
இலங்கை, தமிழகம் போன்ற பிறநாடுகளில் இருந்து இலக்கிய வாதிகளை சிறப்பு விருந்தினராக சங்கச் செலவிலேயே அழைத்து கெளரவிக்கும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் இலக்கியப் பணிகள் பாரட்டக் கூடியவை.
இதனூடாக அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் களின் சிறுகதை நுால் உயிர்ப்பு: கவிதை நூல் வானவில், BEING ALIVE என்னும் மொழி பெயர்ப்புச் சிறுகதை நூல், நம்மவர் என்னும் விழா மலர் ஆகிய நூல்களையும் தொகுப்பாளராக இருந்து வெளியிட்டுள்ளார் திரு.முருகபூபதி.
1975ல் நீர்கொழும்பு இலக்கிய வட்டம் இவருடைய சுமையின் பங்காளிகள் நூலை வெளியிட்டது. 1987ல் இவர் தனது பதினைந்து வருடகால தீவிர இலக்கியச் செயற்பாடுகளை அறுத்துக் கொண்டு அவுஸ்திரேலியா வுக்குக் கிளம்பும் வரை இவருடைய வேறெந்த நூலும் வெளிவரவில்லை. இவர் ஒன்றித்துக் கிடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1976ல் உருவாக்கிய எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமும் முருகபூபதியின் நூல் ஒன்றை வெளியிட முன்வரவில்லை. இவரும் போட்டுக்கொள்ள முயலவில்லை.அதுதான் முருகபூபதி
அவுஸ்திரேலிய புலம் பெயர்வுக்குப் பிறகு சமாந்தரங்கள் - சிறுகதைகள் 1988, தனது சோவியத் யூனியனுக்கான பயணக் கட்டுரைநூல் சமதர்ம்ப் பூங்காவில் 1989-இவர் வீரகேசரியில் பணியாற்றிய போது மேற்கொண்ட பயணம் இது) என்று 17நூல்களை வெளியிட்டு சாதனை நிகழ்த்த வல்லமை பெற்றுள்ளார். இந்த வல்லமைக்கான காரணமும் இவருடைய இலக்கிய நெஞ்சமும், கடுமையான உழைப்புமே ஆகிறது.
2004 ஏப்பிரலில் நண்பர் ராஜ முறிகாந்தன் அமரர் ஆனார்.
அவரது நினைவாக முருகபூபதி எழுதி வெளியிட்டுள்ள நூல் அன்பின், நட்பின், நேசிப்பின் மகத்துவத்தைப் பேசுகிறது.
கவிஞர் அம்பி பற்றிய ஆய்வுநூல்: மல்லிகை ஜீவா நினைவுகள், பறவைகள் என்னும் நாவல்.
2001ல் வெளிவந்த "பறவைகள் இவருக்கு இரண்டாவது முறையாகவும் சாகித்திய விருதினைப் பெற்றுக் கொடுத்தது.
விக்டோரியா மானிலத்தின் டெரபின் மாநகர சபை சிறந்த பிரஜைக்கான அவுஸ்திரேலிய தின விருதினை 2002 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கிப் பெருமைப் படுத்தியது. பெருமையும் கொண்டது.
(சமகால கலை இ6
வாசகர்களே, எழுத்தாளர்களே, கலைஞர்களே
உங்கள் பகுதியில் இடம்பெறும் கலை இலக்கி அனுப்பிவையுங்கள். ஒவ்வொரு மாதமும் 20ஆம் திகதிச் f இடம்பெறும். 200 சொற்களுக்கு மேற்படில் அச்செய்திபி
தி. ஞானசேகரன் அவர்கள் தன்னுடைய அவுஸ்திரேலியப் பயணக் கதை நூலில் (1999) . முருகபூபதியுடனான நட்பு பற்றி, பகைமை பாராட்டாத அவரது இலக்கிய மனம் பற்றி, மெல்பர்னில் அவரில்லத்தில் கழித்த இரண்டு நாள் இனிய நினைவு பற்றியெல்லாம் குறித்திருக்கின்றார்.
‘வாழ்வு மீதான நம்பிக்கையை பெறுவதற்கும், இன்னல்களையும் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்வதற்கும் ஏற்ற ஆத்ம பலத்தை எனக்குத் தருகின்ற சக்தியாக கலை இலக்கியங்களையே நான் கொள்ளுகின்றேன’ என்று 1997ல் தான் தொகுத்து வ்ெளியிட்ட நம்மவர் மலரில் குறிக்கின்றார் நண்பர் முருகபூபதி.
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில் நடப்பதற்கான செய்திகள் வெளிவந்தபோதே நெருக்கடிகள் தோன்றின. சவால்கள் மேலெழுந்தன. மனம் வலிக்கும் இன்னல்கள் மண்டிக் கிளம்பின.
மேலை நாடுகளிலிருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும், இலங்கையில் இருந்தும்கூட எல்லாம் தெரிந்தவர்களின் எதிர்ப்பும், சக்தி மிக்கவர்களின் சதியும், பலம் கொண்டவர்களின் பகையும் பரவலாக பலவாறாகக் aloTbiloT.
அத்தனை எதிர்ப்புக்களையும், அகத் தாக்குதல் களையும், "மாநாட்டை நடத்திமுடித்துவிட்டு முருகபூபதி அவுஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வருவாரா என்னும் அச்சுறுத்தல்களையும் மீறி கொழும்பில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நான்குநாள் விழாவாக, ஒரு வெற்றி மாநாடாக நடத்திக் காட்டிய பெரும்ை திரு. முருகபூபதி அவர்களின் இத்தனை வருடகால இலக்கியப் பணிகளுக்கும் ஒரு சிகரமாக அமைகின்றது.
கலையும் இலக்கியமும் வழங்கிய அருங் கொடையான ஆன்மபலமே முருகபூபதியின் இந்த விஸ்வரூபம்.
வண்ணாத்திக்குளம் நாவலாசிரியரும் டொக்டரு மான நடேசன் கூறுவதுபோல் "டொக்டர் தி.ஞான சேகரனினதும், குடும்பத்தினரதும், அவருடன் இயங்கிய அமைப்புக் குழுவினரதும் அயராதபணியே இந்த மாநாட்டின் வெற்றிக்கான அடித்தளம் ஆகும்.
இந்தச் செயற்பாட்டுக் குழுவினரைத் தெரிவுசெய்து செயல்புரியவைத்ததும்கூட பகைமை பாராட்டாத அந்த ஆன்மபலமேதான்.
அறுபது வயதடையும் திரு.முருகபூபதி அவர்களை நீடு வாழ வாழ்த்தும் அதே வேளை அவருக்குள் இருந்து மூச்சுக் காற்றாய் இயங்கும் சக்தியாகத் திகழும் திருமதி மாலதி முருகபூபதிக்கும் பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஸ்க்கிய நிகழ்வுகள்)
ய நிகழ்வுச் செய்திகளை சுருக்கமாக எழுதி எமக்கு குமுன்னர் கிடைக்கும் செய்திகள் அடுத்துவரும் இதழில் சுரிக்கப்படமாட்டாது. - கே.பொன்னுத்துரை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 9
கலாபூஷணம் YGGDSrGólur சிறுகதைப்போட்டியில் ஆறு
"லேடீஸ் அன்ட் ஜென்டில் " மன். நவ். த பிக் வண்...!
அகில உலக சமுத்திரச் சண்டையின் அதிபாரச் சண்டியனுக் கான வெற்றிக் கிண்ணம்.”
அறிவிப்பாளர் உற்சாகம் நிரம்பிய உச்சக் குரலில் சத்த மிட்டார். அவர் இட்ட சத்தத்தில் அவரது மூலம் வெளியே வந்து விடும் என்று தோன்றியது.
ஆழ்கடலின் அற்புதங்களின் ஒளிப்பதிவே நம் உள்ளத்தை அள்ளிக் கொண்டு போகிறது என்றால் கடலுக்குள் நடக்கும் ஒரு சர்வதேசப் போட்டி எவ்வளவு பரவசத்தைத் தரும் என்று நினைத்துப் பாருங்கள். அந்தப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின் உச்சக்கட்டம் அது. பெயரைச் சொல்வதற்கிடையில் சண்டியர் கெத்தாக முன்னால் வந்தார். அவரது பார்வையில் ஓர் அலட்சியம் பொங்கி வழிந்தது. அகில உலகக் கடற் சண்டியரல்லவா?
米米米
I மைக் டைசனைப் போல் யாருடைய அங்க அவயங்களையும் கடிக்கக் கூடாது என்பது போட்டியின் l அதி முக்கியமான விதி. போட்டி நடைபெறும் * எல்லைக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய அறிவித்தலாக இந்த விதி பெரிய எழுத்துக்களில் பதாதையாகத் ெேதாங்க விடப்பட்டிருந்தது.
90களில் போட்டிகள் நடத்தப்படவில்லை. * ஆனால் ஏற்பாட்டுக் குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விதி முறைகள் பற்றிக் கலந்துரையாடல் 墨 நடத்திக் கொண்டுதான் இருந்தது. 89ல் கடைசியாக
நடந்த போட்டியில் போட்டியாளர்களின் தொகையும் அதிகம். அந்தப் போட்டியும் மிகக் கோரமானதாக வேறு இருந்தது. போட்டியாளர்கள் சிலர் போட்டியின் போது இரத்தத்தில் தோய்ந்தார்கள். விளையாட்டு என்பது வினையாக மாறுவதோ கோபத்தின் வடிகாலாக அமைவதோ அனுமதிக்கக் ஜ் கூடியதில்லை. ஒருவரையொருவர் கடித்துக் குதறிக் கொண்டு சண்டையிடுவது போட்டி என்று அல்லது விளையாட்டு என்று அழைக்கப்படத் தக்கதல்ல.
缀
- அஷ்ரஃப் சிஹாப்தின் -
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
க. சதாசிவம் ஞாபகார்த்தச் தல் பரிசு பெற்ற சிறுகதை
கடந்த காலங்களில் போட்டி விதிகள் எதுவும் இருக்கவில்லை. எப்படியும் மோதிக் கொள்ளலாம். யாரும் யாரையும் எந்த வகையிலும் தாக்கலாம். சண்டைதான் முக்கியமாக இருந்ததே தவிர விதிகள் எவையும் அமுலில் இருக்கவில்லை. அதைப் பற்றி யாரும் அக்கறை செலுத்தவுமில்லை.
எனவே 2010ல் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டபோது ஆளையாள் கடிப்பது தவிர்க்கப்படல் வேண்டும் என்ற விதி மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்தது. இவ்விளையாட்டு விதியை வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ - எந்த விதத்தில் மீறினாலும் மீறுபவர் தோல்வி யாளராக அறிவிக்கப்பட்டு விடுவார் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
எழுபதுகளின் முற்பகுதியிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் நடந்த போட்டிகளில் போட்டியிட்ட வர்கள் அசட்டுத் தைரியத்துடன் மோதிக் கொண்டார்கள். அந்தப் போட்டிகள் யாருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடியனவாக அமைய வில்லை. வெல்வதற்குக் குறுக்கு வழிகளை நாடும் ! முறை அந்தக் காலங்களில் யாருடைய சிந்தனை யிலும் எழவில்லை. கடந்த காலங்களில் வாழ்ந்த வர்கள் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தித் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பி யிருக்க வில்லை. எல்லாவற்றிலும் நேர்மையும் நியாயமும் இருக்க வேண்டும் என்பது இரத்தத்தில் ஊறிக் கிடந்தது. நாகரிகத்தின் வளர்ச்சியானது தீராத ஆசை களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பது. பெருமை, பொறாமை, தம்பட்டம் ஆகியன ஆதிக்கம் செலுத்தும் சிந்தனை வளர்ச்சியின் காரணமாக ஏதோ ஒரு வகையில் வெல்வது முக்கியம் என்ற மனோநிலை ஏற்பட்டு விட்டது. வெல்வதற்காக யாருடைய தாலியறுந் தாலும் கவலைப்படாத நிலை ஏற்பட்ட போதுதான் ஏற்பாட்டுக்
Page 10
போட்டி என்பது வெல்வதையும் தோற்பதையும் உள்ளடக்கியது. ஒருவர் வென்றால் மற்றவர் தோற்றேயாக வேண்டும். வெல்வதற் காக எதையும் செய்யலாம் என்றால் அது ஒரு போட்டி யாக இருக்க முடியாது என்பது ஏற்பாட்டுக் குழு தாம் அறிவித்த விளையாட்டு விதிக்குக் கொடுத்த விளக்கம்.
உலக அதிபாரக் குத்துச் சண்டையைப் போல நடைபெறும் இந்தப் போட்டியை இம்முறை நான்கே நான்கு பிரிவுகளில் நடத்த முடிவு செய்தது ஏற்பாட்டுக் குழு. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சம்பியன் தெரிவாவார். எனவே இம்முறை எண்மரைத் தெரிவு செய்வதில் காலம் சற்று நீண்டுதான் போய்விட்டது. 2009 பிற்பகுதியில் ஆரம்பமான பல்வேறு தகுதிகாணர் சுற்றுக்களில் போட்டிக்கேற்ற உடல்வாகு, வேகம், நீச்சல் நளினம், டைவ் செய்வதில் உள்ள லாவண்யம், உடல் சக்தி ஆகியன அளவிடப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
இலங்கை சார்பில் போட்டியிட என்றுமில்லாத வகையில் இம்முறை நாற்பத்தெட்டுப் பேர் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அரசியல் ஆதிக்கம் செலுத்தாத முறையில் இவர்களில் தகுதிகாண் பரீட்சைகளில் அதிகம் புள்ளிகள் பெற்ற நால்வர் தெரிவு செய்யப் பட்டனர். இவர்களோடு போட்டியிட வெளிப்பிரதேசங்களி லிருந்து வந்தவர்கள் இருபத்து மூன்று பேர் மாத்திரமே. புதிய விதியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி வெளிப்பிரதேச - அதாவது வெளிநாட்டுப் போட்டியாளர்கள் நால்வர் தாமாகப் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள். மீதிப் பேரில் நால்வர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த சமுத்திரத்தின் முத்தை வெல்லும்
f6 mes அகில உலக மூன்றாவது சண்டைப் போட்டி - 2010 இலங்கைக் கடற்பரப்பைச் சேர்ந்த மீன்களுக்கும் சர்வதேசக் கடற்பரப்பைச் சேர்ந்த சுறாக்களுக்குமிடையிலான பலப் பரீட்சை
என்ற பிரம்மாண்டப் பதாதைகள் ஏற்பாட்டுக் குழுவால் போட்டி நடைபெறும் இடத்தின் நான்கு திசைகளிலும் போடப்பட்டிருந்தது.
வெல்லமுடிந்தால் வெல்லுங்கள்! - இலங்கை நெத்தலிகள் சங்கம் இப்படை தோற்பின் எப்படை வெல்லும்? - அகில இலங்கைக் கூனி இறால்களின்
கூட்டமைப்பு இலங்கை வீரர்கள் வாழ்க! - முநீலங்காக் கடற்கெழுத்திகளின் மாற்றுக் குழு தோல்வி என்பது எப்படியிருக்கும்? - ஒல் சிலோன் கொடுவாக்கள் கூட்டுறவுச் சங்கம் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! - முரீலங்கா கீரிமீன்கள் காங்கிர்ஸ் இன மற்றும் பிரதேச வேறுபாட்டை ஒழிப்போம்!
ஐக்கிய உலகை அமைப்போம்! - தேசிய ஐக்கிய அறுக்குளா அசெம்பிளி
ஆகியன இலங்கை அனுசரணையாளர்கள் போட்டிருந்த பலநூறு பதாதைகளில் சற்றுத்துக்கலாகத் தெரிந்தவை. முரீலங்கா முள்ளுவாளை முன்னணி, ஆற்றோர இறால்கள் முற்போக்குச் சங்கம், இலங்கை ஐக்கிய கரையோர நண்டுகள் அமைப்பு என்று பலநூறு அமைப்புகளும் தமது பதாதைகளை தத்தமது வசதிகளுக்கேற்ப வைத்திருந்தன. இலங்கைக் கடற்பகுதிச் சுறாக்கள் இலங்கையின் தேசியக் கொடியைப் போர்த்தியபடி வலம் வந்து கொண்டிருந்தன.
இந்து சமுத்திரத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி சர்வதேச அளவில் பிரபலம் பெற்றிருந்தது. உலகம் தோன்றிய நாள் முதல் கடல்வாழ் உயிரினங் களுக்கிடையிலான போட்டிகள் எப்போதும் நடந்திருக்க் வில்லை. அப்படி நடந்திருந்தாலும் அவை பற்றிய எந்தக் குறிப்புக்களோ வீரம் செறிந்த வாய் மொழிப் பாடல்கள் நிலவியதற்கான சுவடுகளோ கிடைக்க வில்லை. முதன் முதலாக 1970களில் உடல் தினவெடுத்த இலங்கை மீன்கள் பசுபிக் சமுத்திரத்தின் ஒரு சுறாவை வம்புக்கிழுத்துத் தோல்வியடையச் செய்ததுடன் இவ்வாறான ஒரு போட்டி நடைபெற ஆரம்பித்தது.
இதன் பிறகு நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டிகளில் வெளிநாட்டில் இருந்து வந்து போட்டியிட்ட எந்தவொரு சுறாவும் வெற்றியுடன் திரும்பியதில்லை. சுறாக்களால் இலங்கை மீன்கள் கடித்துக் குதறப்பட்ட போதும் அவை வெற்றியைத் தமதாக்கிக் கொண்டே வந்திருந்தன. இதனால் பசுபிக், அத்லாந்திக் சமுத்திரங்களில் விசேட பயிற்சி முகாம்கள் அமைக்கப் பட்டுத் துறைசார் சுறாக்களால் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு முறையும் இலங்கை வீரர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று கடும் பயிற்சி மேற்கொண்டு அவை வந்த போதும் வெறுங்கையுடன் தான் திரும்பிச் சென்றிருக்கின்றன.
இம்முறை கடந்த எல்லாப் போட்டிகளையும் விடச் சிறப்பாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மத்தியஸ்தர்களாக மத்திய தரைக் கடலிலிருந்து ஐந்து டொல்ஃபின்களும் நேர்முக வர்ணனையாளர்களாகத் தென் துருவத்திலிருந்து பெயர் தெரியாத அழகான மூன்று மீன்களும் வரவழைக்கப்பட்டிருந்தன. ஆர்ட்டிக் கடலிலிருந்து நுாறு திமிங்கிலங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பொய் என்.என். பீ.பி.சி. ரூமர் பிரஸ் ஆகிய வெளிநாட்டு ஊடகங்களும் லங்கா பொறு, சத்தி நிறுவனம், வாந்தி வானொலி உட்படப் பல உள்ளூர் ஊடகங்களும் நிகழ்ச்சி பற்றிய தகவல் களை உலகுக்கு வழங்கின.
போட்டி ஆரம்பமான போது உற்சாகம் கரை புரண்டோடியது. சிறு மீன் குழுக்கள் ஆரவாரித்துக் 6a5t6oo (B utilio uruLLDT85 se jei6oub (3uTulso. ‘ழுநீலங்கா ஜெயவேவா!' என்ற ஆர்வக் கோஷம் கடலைப் பிளந்து கொண்டு வெளிவந்தது. டீ பிரிவு. சி பிரிவு ஆகிய இரண்டு போட்டிகளும் சட்டென முடிவுக்கு வந்து விட்டன. இலங்கை சார்பில் இரண்டு கொடுவா மீன்கள் அப்போட்டிகளில் கலந்து கொண்டன. பீபிரிவுப் போட்டி அரை மணி நேரம் நடைபெற்றது. இப்போட்டி யில் இலங்கை சார்பில் அறுக்குளா மீன் பங்கு கொண்டது. அறுக்குளாவின் தாக்குதலில் இடுப்பு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 11
முறிந்ததால் அதை எதிர்த்துச் சண்டை செய்த சுறாமீன் செந்தூண்டில் சங்கத்தால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஏ பிரிவு போட்டி நாற்பத்தெட்டு நிமிடங்கள் நடைபெற்று. இலங்கை சார்பில் கலந்து கொண்ட தளப்பத் மீன் காட்டிய வால் சாகசம் அனைவரையும் பரவசத்துக்குள்ளாக்கிற்று. முகம்மத் அலியின் வண்ணத்துப் பூச்சி வட்டமிடும் வகைத் தாக்குதல் அழகோடு சுறாவைத் தாக்கியது. எதிராளியை முன்னர் போலக் கடிக்க முடியாது என்பதால் வெளிநாட்டுச் சுறாக்கள் கடுங் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் மோதின. ஆனால் இலங்கை மீன்களின் உடல் வலு மெச்சத்தக்கதாகவும் ஆச்சரியப்படத் தக்கதாகவும் இருந்தது.
போட்டியின் போது இலங்கைத் தளப்பத் மீன் சட்டென மேலெழுந்து சுறாவின் நடு முதுகில் குதித்துத் தாக்கிய போது நேர்முக வர்ணனையாளர் தன்னை மறந்து கூவினார். அந்தக் காட்சி பார்வையாளர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
முடிவு வழமை போலவே அமைந்தது. சகல பிரிவுகளிலும் சண்டியர் பட்டத்தை இலங்கை மீன்கள் தட்டிக் கொண்டன. ஒவ்வொரு போட்டி முடிவின் போதும் இலங்கை மீன்களின் சந்தோஷ ஆரவாரத்தைப் பார்ப்பதாயின் ஆயிரம் கண்கள் வேண்டும்.
米米米
அமெரிக்க உளவுச் சுறாக்கள் இலங்கையின் வெற்றியின் ரகசியம் குறித்துத் தனிப்படை அமைத்து ஆராய்ந்து வந்தன. அவர்களது பார்வையில் எல்லா அம்சங்களிலும் பின் தங்கிப் போன ஒரு பிச்சைக்காரச் சுண்டைக்காய் நாடு இலங்கை, இந்தப் போட்டியில் மட்டும் எப்படி ஆட்டங்காணாத நிலையைத் தக்க வைத்திருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பதற்காகத் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தன. உண்மையில் தங்களது பிரதேசத்து வீரர் களின் தோல்வியில் உண்பான தொடர் அவமானமே அவை களை இதில் ஈடுபட வைத்தது என்பதுதான் பொருத்தம். ஆய்வின் பின்னணியில் ருசிகரமான பல சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. வங்காள விரிகுடாவில் கற்பாறைகளில் படிந்திருக்கும் பாசியைத் திண்பதால்தான் இலங்கை மீன்களுக்கு இத்தனை பலம் வந்திருக்க வேண்டும் என்று போகிற போக்கில் ஓர் பிரிட்டிஷ் விஞ்ஞானி உளறிவிட்டுப் போக வங்காள விரிகுடாவில் உள்ள கற்கள் அனைத்தும் சுத்தமாகி விட்டன. அது பிழையான கருதுகோள் என்பது பின்னர் தெரிய வந்தது. எனினும் எதிலும் ஆழ்ந்து முழுமை யான முடிவுக்கு வந்து விடும் நோக்கில் இரகசியமாகவும் சுற்றுலா என்ற போர்வையிலும் முகத்துவாரங்களூடாக இலங்கையின் ஆறுகளில் உள்ள சேற்றையம் பாசியையும் அள்ளிக் கொண்டு வெளிநாட்டுச் சுறாக்கள் சென்றுமிருக்கின்றன. களவில் அல்லது ஏதாவதொரு நொண்டிச் சாட்டில் இன்னொரு நாட்டுக்குள் புகுந்து நியாயம் பேசுவதற்குப் பழக்கப்பட்ட மேலை நாட்டா ருக்கு அவ்வாறு கொள்ளையடித்துச் செல்வது ஒன்றும் சிரமமானது அல்லவே. காலம் காலமாக அவை இதைத்தானே செய்து வருகின்றன.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
ஐம்பது வருடகால இரகசியம் அது. இந்த இரகசியத்தை அறிவதற்கு கிட்டத்தட்ட இருபது வருட காலமாக அமெரிக்கச் சுறாக்கள் அலையாய் அலைந்து திரிந்தன. அந்த அலைச்சலெல்லாம் வெற்று வேலை என்பதை இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் அவை தெரிந்து கொண்டன. அந்த இரகசியம் இவ்வளவு சுலபமாக வெளிவரும் என்று கனவில் கூட அவை எண்ணியிருக்கவில்லை. இரகசியம் வெளியான ஆச்சரியத்தை விட அந்த இரகசியத்தின் பின்னணிதாம் அவற்றைப் பெரிதும் திகைப்புக்குள்ளாக்கிற்று.
தனக்கு இந்தப் பரிசுகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிற தினுசில் சண்டியர் தனது விருதைப் பெற்றுக் கொண்டார். உலகில் எந்தக் கொம்பன் வந்தாலும் உதைப்பேன் என்பது போல நின்றிருந்த அவரிடம் அறிவிப்பாளர் சம்பிரதாயமாக உரையா டினார். அவரது பதில்களைக் கேட்பதற்காக அத்தனை கடல்வாழ் உயிரினங்களும் அமைதிகாத்துக் காது தாழ்த்தி நின்றிருந்தன.
“வாழ்த்துக்கள். சண்டியரே..." அறிவிப்பாளர். “நன்றி!” "இன்றைய போட்டி நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நீண்டு விட்டதே.?”
"பதினைந்து நிமிடங்களிலேயே என்னால் வெற்றியைப் பெற்றிருக்க முடியும். ஆனால் இது ஒரு சர்வதேசப் போட்டி, இங்கு ஆயிரக் கணக்கில் பார்வை யாளர்கள் கூடியிருக்கிறார்கள். தொலைக்காட்சி களில் கோடிக்கணக்கான ஆர்வலர்கள் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். நான் அவர்களை ஏமாற்ற முடியாது”
“ஒவ்வொரு முறையும் இலங்கையரே வெற்றி கொள்கிறார்கள். சர்வதேச அளவில் இது ஒரு சந்தேகத்தைக் கூட ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். இந்த வெற்றியின் இரகசியம்தான் என்ன?” “வெற்றியில் எந்த இரகசியமும் இல்லை. உங்கள் கண்முன்தானே போட்டி நடைபெற்றது? நேரடியாகப் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள்? ஆசிய நாட்டவர் வெற்றி பெற்றாலே மேலை நாட்டவருக்குச் சந்தேகம் வந்து விடுகிறது. இது கவலைக்குரியது.”
"அப்படியாயின் உங்கள் நாட்டவரின் உடல் வலுவின் இரகசியம் என்ன என்று சொல்லுங்களேன். நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்!”
அறிவிப்பாளர், சண்டியருக்கு விளங்காத வகையில் போட்ட வார்த்தைத் தூண்டிலில் தற்பெருமை பொங்க நின்ற சண்டியர் சொன்னார்:-
“இந்தப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் காலப்பகுதிகளில் எங்களது நிலப்பரப்பில் என்ன நடந்தது என்பதை அவதானித்திருந்தீர்களானால் இந்தக் கேள்விக்கு அவசியமே இருந்திருக்காது. உங்களுக்குத் தெரியுமா... ஏனைய நாடுகளின் நிலப்பரப்பில் நியாயங்களுக்கப்பால் கொல்லப்படும் மனிதர்களை ஒன்றில் புதைத்து விடுகிறார்கள். அல்லது எரித்து விடுகிறார்கள். எங்கள் நாட்டில் கடலில் அல்லது ஆறுகளில் வீசி விடுகிறார்கள். உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். நன்றி!
Page 12
நாம் காலைக் ஆதிரவினையும் இழந்தோம்!
நாம் நடந்தோம் பல்லாண்டுகள் இழந்தோம் பன்னாட்கள் இழந்தோம் பல்லிரவுகள் பாதைகள் பல இழந்தோம்
மென்மையான தண்டுகள் தாங்கி நிற்கும் பச்சை நெற்கதிர்கள் நிரம்பிய கழனிகள் இழந்தோம்
களைப்படைந்து சோர்வுற்ற வயோதிபர்கள் போலும் எமதூர்ப் புகையிலைகள் சுருங்கிப் போய்க் குனிந்து கிடந்தன
'பதம்' என்னுஞ் சுருட்டையும் அதன் வாசனையையும் தரும் புகையிலைகள் நாம் இழந்தோம்
கடற்கரைகள் இழந்தோம் படகுகள் இழந்தோம் வலைகள் இழந்தோம்
இவை காலைப் பொழுதிற் கொண்டுவந்த மீன்கள் இழந்தோம் காலைக் கதிரவனையும் இழந்தோம்
எமது வீடு எமது கிணறு எமது கோயில் நாமிழந்தோம் எமது அகதி முகாம்களும் இழந்தோம்
நாம் எமக்குச் சொந்தமான எல்லா மிழந்தோம் உயிர் பிரிந்த உடலைப் புதைக்கக் கூட உரிமை இழந்தோம்
பல்லாண்டுகள் நாம் நடந்தோம்
பல பாதைகள் நாம் இழந்தோம்
பல்லாண்டுகள் நாம் இழந்தோம் பல பாதைகள் நாம் நடந்தோம்
ஆங்கில மூலம் :- அமிர்தாஞ்சலி சிவபாலன் தமிழில் :- கிண்ணியா ஏ.எம்.எம்.அலி நூல் :-(Srilankan poetry in English)
5Tயப்பட்ட புல்வெளியில் ஒரு இளம்பெண்ணின் அத்தனை படிமங்களும் உடைந்து நொறுங்கின; பத்து துப்பாக்கிகள் இரத்தம் படிந்த காற்சட்டையை உடுத்தவாறு வெளியாகின.
அறுவைச் சிகிச்சை அறையான இந்த புல்வெளியில் பச்சை படுகொலைகளுக்கு எண்ணிக்கை இல்லை என்றாயிற்று.
போர்த் தெய்வமான காளி குடியிருந்ததும் மனித சதை, கொழுப்பு ஆகியவற்றால் பேய்களுக்கான கூழ் ஆக்கப்பட்டதும் இந்த புல்வெளியில்தான்.
疆
囊
難
囊
பைத்தியக்கார வைத்தியனின்
鲁
幕
繼
響
உணமை படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டதும் இந்த புல்வெளியில்தான்!
முப்பது வருடமாய் நிகழ்ந்த ஊழி நின்று விட்டதாய் முகிலெழுதிய சேதியால் மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள் மலைபோல் புதைந்த நிலத்திலிருந்து புற்கள் துளிர்க்கத் துவங்கின.
நேற்று ஒரு அரசியல் தலைவனின் பாதம் பட்டதும் புல்வெளி மீண்டும் ஊழியால் காயமானது
ஊழிகளின் மூலம்
அரசியல் தலைகள்
என்ற பிரக்ஞை இல்லா
புல்வெளி என்செய்யும்?
L L L
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 13
960) uur LDTLDT des விண்ணன். அவரைச் சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தரும். அவரைப் போன்று 'அச்சொட்டாக விவசாயம் சம்பந்தப்பட்ட சங்கதிகளைப் பேச நான் வேறு ஆளைக் கண்டதில்லை.
மாமா ஊரில் வாழ்ந்த காலத்தில் வயல் தோட்டம் துரவு என வசதியாக வாழ்ந்தவர். "அரைவாசி ஊரே அவருக்குச் சொந்தமாக இருந்தது' என்று விண்ணாணம் பேசுபவர்கள் சொல்வார்கள். எப்படி இது சாத்தியமானதென ஒரு தடவை பாட்டியைக் கேட்டேன். இங்கிலீசுக்காரர் இலங்கையை ஆண்டகாலத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை இலகுவாக்க, மணியகாரன், உடையார், விதானையார் என்ற பதவிகளை உருவாக்கியதாகவும், பதவிக்கு வந்தவர்கள் தமது ஆட்சி அதிகாரங்களைப் பாவித்து ஊரில் உள்ள ‘அடுகாணி-படுகாணிகளை தம் வசமாக்கியதாகவும் பாட்டி சொன்னார். உடையார் மாமா வீடுகட்டியிருக்கும்
நாவலடி வள்வு’ எங்கள் பாட்டனாருக்குச் சொந்தமானதென்று அம்மா சொல்லி வருத்தப்பட்டார். அவர் எங்களுக்கு நெருங்கிய சொந்தமென்று சொல்லமுடியாது. ஆனாலும் மரியாதையின் நிமித்தமாக மாமா என்று அழைத்துப் பழகிவிட்டேன். ஊரில் பிரளி குழப்படி இல்லாத பெடியன் என்று என்மீது எப்போதும் அன்பு பாராட்டியவர். எது எப்படி இருந்தாலும், மாமாவின் விவசாய அறிவும் அக்கறையும் என்னை வியப்பில் ஆழ்த்தும். இந்த வியப்பு காலப்போக்கில் ஆரோக்கியமான உறவாக வளர்ந்திருந்தது.
உடையார் மாமா என்னைப் போலவே மாம்பழப்பிரியரும். ஊரில் உள்ள அவர் வளவில் பலவகை மாமரங்களை நட்டுப் பராமரித்தவர். சும்மா சொல்லப்படாது. அந்த மாமரங்கள் காய்த்துக் குலுங்குவது ஒரு கண்கொள்ளாக்காட்சிதான். அவர் வீட்டுக் கறுத்தக் கொழும்பான் மாம்பழம் ஊரில் மட்டுமல்ல அயல் அண்டைக் கிராமங்களிலும் பெயர் எடுத்திருந்தது.
சிட்னி வாழ்க்கையில் அவர் இழந்தவற்றில் கறுத்தக் கொழும்பான் மாம்பழச்சுவை முக்கியமான தென்பதை அறிந்து கொண்டேன்.
'இதென்னடா தம்பி இங்கத்தைய மாம்பழம், மணமும் இல்லை ருசியும் இல்லை. பால்மணம்தான் மனக்குது' என்பார். ‘பால்" என்பது மாங்காய்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
ஆசி கந்தராஜா - அவுஸ்திரேலியா
பறிக்கும்போது ஒரு வெள்ளைநிறத் திரவம் வழியுதே, அதுதான்! ஒருவகை lateX. பழத்தில் அது அதிகமிருந்தால் மாம்பழம் சுவைக்காது என்பதை யாழ்ப்பாணத்தான், வெள்ளைக்காரன் அறியமுன்னரே தெரிந்திருந்தான்.
உடையார் மாமா ஊரிலும் விவசாயத்தில் பல புதுமைகளை முன்னின்று செய்தவர். பட்டை துலா கொண்டு தோட்டத்துக்கு நீர் இறைத்த காலங்களிலே, அவர் தோட்டத்தில் வாட்டர் பம்ப்" நீர் இறைக்கும். வெள்ளைக்காரன்ரை மரக்கறிகளென்று சொல்லப்பட்ட் கோவா, கரட், பீற்றுாட், முள்ளங்கி வகைகளை அறுபதுகளிலேயே தனது கமத்தில் விளைவித்து உள்ளூர் விவசாய இலகாவை மூக்கிலே விரல் வைக்க வைத்தவர். தோலகட்டி வையின் தயாரிப்புக்கு அவர் தோட்டத்திலிருந்து பெருமளவு திராட்சைப் பழங்கள் சென்றதை இன்றும் தனது சாதனைகளுள் ஒன்றாக நினைவுபடுத்திக்கொள்வார். இது நியாயமான பெருமை என்பதை மறுப்பதற்கும் இல்லை.
ஆடினகால் ஓயாது என்பார்கள்! சிட்னிக்குப் புலம் பெயர்ந்த பின்பும் அவர் சும்மா இருக்கவில்லை. அவர் வசித்த மகளின் வீட்டின் பின்வளவையே சோலையாக்கி இருந்தார். மட்டுவில் முட்டிக் கத்தரிக்காய் தொடக்கம் யாழ்ப்பான மொந்தன் கறி வாழைவரை பின்வளவில் கோடைகாலத்தில் காய்த்துக் குலுங்கும். அவர் உண்டாக்கியிருந்த உலாந்தா முருங்கையும் 'கியாதி பெற்றதே. இந்த விவசாய முயற்சிகளின் பரிணாமமாக, கறுத்துக் கொழும்பான் மாம்பழம் சிட்னியில் தனது பின்வளவில் காய்க்க வேண்டுமென்ற ஆசை அவருக்கு சடைத்து வளர்ந்தது. அது அவருள் ஒரு ஆவேசமாக வளர்ந்திருந்தது என்றுகூடச் சொல்லலாம்.
தம்பி, கறுத்தக் கொழும்பான் மாமரத்தை சிட்னிக்கு கொண்டுவர ஒழுங்கு செய்யமாட்டியோ? என்று இயல்பைப் புறந்தள்ளி நச்சரிக்கத் துவங்கினார். &66m) 51C3 g65u Quarantine Lislas 6Lib கடுமையானது. வெளிநாடுகளிலிருந்து இலகுவாக தாவரங்கள், விலங்குகள், பறவைகளை அவுஸ்தி ரேலியாவுக்குக் கொண்டுவர அனுமதிக்க மாட்டார்கள். வெளிநாடுகளிலுள்ள வைரஸ் கிருமிகள் அவுஸ்திரேலிய தாவரங்கள் விலங்குகளை பாதிக்காத வண்ணம் எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கையே இது. விவசாய பல்கலைக்கழகத்தில் நான் பணிபுரி
11
Page 14
வதால், ஏதோ ஒருவகையில் கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தை இங்கு இறக்குமதி செய்வதற்கு ஏதாவது ஒட்டையைக் கண்டுபிடித்துச் செயல்படுவேன் என்கிற ஆசையை அவர் சுயாதீனமாக வளர்த்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தின் பெருமையைப் பறைசாற்றிய கறுத்தக் கொழும்பானும், தேன்பலாவும், கப்பல் வாழையும், தேன் கதலியும் "சிங்கள அறுவான்களால் முற்றாக அழிந்துவிடப்போகிறது என்று அவர் சிலவேளைகளிலே அவரையும் மீறிப் புலம்புவதுண்டு. யாழ்ப்பாணத்துக் கப்பல் வாழைப்பழத்தில் ஒருவகை வைரஸ் நோய் தொற்றிவிட்டதாகவும், ஒருபக்கம் நீட்டுக்குப் பழம் மரத்துப் போய் "தெறுக்கணித்து இருப்பதாகவும் மாமா சொல்லி வருத்தப்பட்டார். யாழ்ப்பாணத்துக்கு 'கியாதியைக் கொண்டுவந்த பல தாவர இனங்களின் பரம்பரை அலகுகள் கலப்படைந்து வருவதாகவும் யாரோ ஒருவரின் பின்வளவில் இன்றும் இருக்கக்கூடிய கலப்பற்ற இனங்களைக் கண்டுபிடித்து பாதுகாக்க வேணுமடா என்று எனக்கு அடிக்கடி அறிவுரை கூறும் மாமா, அதன் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக தனது பெறுமதியான கச்சேரியடி காணியை விற்று காசு தருவதாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். உடையார் மாமா விறுக்கரல்ல. சொன்னதைச் செய்யும் நிதானம் உள்ளவர்.
காலாதிகாலமாக நாட்டுக்கும் இனத்துக்கும் உரித்தான தாவரங்களின் பரம்பரை மூலங்களை urgiitiis "Genetic Resource Centre 6f 60fp நிலையத்தை மம்வேறு நாடுகளிலும் நிறுவியிருக் கின்றார்கள் இங்கு, அசல் தாவரங்களின் ‘Germplasm எனப்படும் கலப்பற்ற தாவர அலகுகளை விதைகளா கவோ, இளையமாகவோ (tissue), கலங்களாகவோ (cells), பாதுகாக்கப்படும். ஆண்டாண்டு காலமாக இவற்றின் இயல்பு மாற்றமடையாது பாதுகாக்க இப்படிப் பல தொழில் நுட்பங்களை விஞ்ஞானவளர்ச்சி கற்பித்துத் தந்துள்ளது.
இந்துக் கோவில்களின் கோபுரங்களின் உச்சியில் பதின்மூன்று கலசங்கள் உண்டு. அந்த கலசங்களில் பல்வேறுவகை தானியங்களை சேமிக்கும் பழக்கத்தை நம்முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள். பதினாறு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகத் தின்போது கலசங்களில் உள்ள தானியங்கள் மாற்றப்படும். கலசங்கள் செய்யப்பட்ட உலோகக் கலவை, பதினாறு வருடங்களும் தானியங்களின் முளைக்கும் திறனை பாதுகாக்கும் என்று நம்பப்ப்ட்டது. ஆனாலும் பெரும்பாலான விதைகளின் முளைக்கும் திறன் ஆகக்கூடுதலாக மூன்றுவருடங்களாக கணிக் கப்பட்டுள்ளது. மாங்கொட்டையின் முளைக்கும் திறன் மூன்று மாதங்கள் மட்டுமே. வெள்ளப்பெருக்கு, சுனாமி, போர் அல்லது நோய்வந்து தாவரங்கள் அழிந்தாலும் சேமித்துப் பாதுகாக்கப்பட்ட Germplasm புதிய தாவரங்களை உருவாக்கப் பயன்படுத்தப் படும்.
இலங்கையிலும், கண்டியிலுள்ள கன்னொறுவ 6T6örglub &L 556 Plant genetic resources centre என்ற பெயருடன் ஒரு நிலையமுண்டு. இது 1988ஆம்
12
ஆண்டு யப்பான் அரச உதவியுடன் நிறுவப்பட்டது. அங்கு ஈழப்பிரதேசத்தில் காணப்படும் மருந்துக்கு உபயோகிக்கப்படும் அரிய இனங்களான பிரண்டை, கார்த்திகைப்பூ, காத்தோட்டி, ஆடாதோடை, மஞ்சநூணா போன்ற தாவரங்களினதும், கறுத்தக் கொழும்பான், கொடிகாமத்து தேன்பலா போன்ற பழமரங்களின் Germplasm பாதுகாக்கப்படவில்லை என்பதை மாமா எப்படியோ அறந்திருந்தார்.
“சிங்களவங்கள் இப்படித்தான். மரங்களிலும் சிங்களம்-தமிழ் பார்க்கிறான்கள்' என்ற எரிச்சலுடன் புறுபுறுப்பார்.
நான் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவன் என்பதும், நான் இத்துறை சார்ந்த ஒரு தொழில் நுட்ப வல்லாளன் என்று கணிக்கப்படுவதும் அவர் அறிந்தவை. என் நிபுணத்துவத்தில் அவர் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் அவர் தமது கச்சேரியடி காணியை விற்று. Gemplasm Conservation ஆராய்ச்சிக்கு பண உதவி செய்ய முன்வந்தார் என்பதை நான் அறிவேன். அவர் என் ஆற்றலை இந்தளவுக்கு மதித்தமை குறித்து நான் பெருமையும் அடைந்தேன். அது மட்டுமல்லாமல் உடையார் மாமாவின் ஆசை வெறும் மண்பற்றுக்கு அப்பாற்பட்டதாகவும், நியாயமானதாகவும் எனக்குத் தோன்றியது. எனவே இது பற்றிய தகவல் சேகரிப்பில் இறங்கினேன்.
யாழப்பானத்தில் கறுத்தக் கொழும்பான், வெள்ளைக் கொழும்பான், செம்பாட்டான்,’கிளிமூக்கு, விலாட்டு, அம்பலவி ஆகிய மாமரங்கள் உண்டு. இவற்றுள் கறுத்தக் கொழும்பானும், செம்பாட்டானுமே பெருமளவில் சந்தைக்குவரும். யாழ்ப்பான மாமரங்களின் காய்க்கும்திறன், பிறநாட்டுமரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானது. அதற்கான காரணிகள் பல. பராமரிப்பின்மை அவற்றுள் முக்கியமானது. இதுபற்றி மாமா என்னுடன் பலதடவை பேசியுள்ளார். மாமர பராமரிப்புபற்றிய விபரக்கொத் தொன்றை அடித்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் மாமா மனதில் கொண்டிருப்பதை நான் அறிவேன்.
அவுஸ்திரேலியாவில் பருவகாலம் முழுவதும் asstilágyi LDITLDJria,6ir Kensington Pride, R2E2, Calypso, Honey gold &éluGod6). 66 poeir tim முதன்முதலில் குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் Bowen என்னுமிடத்தில் பயிரிடப்பட்டதால் இதை BOWen மாம்பழம் எனவும் அழைப்பார்கள். இது நியூசவுத் வேல்ஸ் மாநிலம் உட்பட உபஉலர்வலய மற்றும் உலர்வலய பிரதேசங்களில் காய்க்கக்கூடியது. இந்த மாம்பழமும் R2B2 எனப்படும் கலப்பின (Hybride) மாம்பழமும் பெருமளவில் பருவகாலத்தில் சந்தைக்கு வரும்.
அவுஸ்திரேலியாவில் பயிரிடப்படும் மாமரங்களுள் 6Tupug 6 lupi,5ITG Kensington Pride Vdgglk; BOWen மாம்பழமே. ஊரிலுள்ள செம்பாட்டான் மாம்பழத்தை இது ஒத்தது என்பது எனது கணிப்பு.
ஞானம் - αυσαυαρ βδαυδαβιu σώθάloωα - ஜூலை 2011
Page 15
ஆனால் உடையார் மாமா இதை ஒத்துக்கொண்டது கிடையாது. இது பால் மாங்காய் என்று யாழ்ப் பாணத்துக் கமக்காரருக்குரிய கெப்பருடன் கூறுவார்.
ug56)85T6o556ös islajTug55uil6ö Palmer, Keitt, Kent, Pearl, Brooks &bilu LDITLibug &6OTriselBub சிறிதளவு அவுஸ்திரேலியச் சந்தைக்கு வருவதுண்டு.
சமீபகாலங்களில் Tomy Adkins எனப்படும் மாமரம் Florida - USA இல் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த தகவலை உடையார் மாமா எப்படி அறிந்திருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடைய அக்கறையின் தீவிரத்தை இது மெய்பிக்கவும் செய்தது.
"Tomy Adkins LDITLDJö605 6ńLL6)ró1867 g6ót கறுத்தக் கொழும்பான் மாமரத்தை விட ஏலாது? என்று நான் தான் அதற்கு அனுமதியளித்தவன் என்பது போல என்னுடன் சண்டைக்கு வந்தார். இதேபோன்ற கவலை என்னுடன் பணிபுரிந்த கலாநிதி சுந்தரத் துக்கும் இருந்தது. அவர் இந்தியாவின் சேலம் மாவட்டத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவர். இந்திய இனங்களான மல்கோவா, Alfonso ஆகியவைதான் உலகிலேயே சுவையுடைய மாம்பழங்கள் என்று அவர் தனது மண்பற்றுடன் கூறத் தவறுவதில்லை. இதன் காரணமாக அந்த மாமரங்களை ஏன் இங்கு பயிரிடக்கூடாது? என்று பல விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடங்களில் வாதிட்டவர். அவருக்கும் உடையார் மாமாவின் வயதுதான் இருக்கும். பல்கலைக் கழகத்தில் பணிபுரிவதற்கு வயதெல்லை ஒரு தடையல்ல என்பதால் டாக்டர் சுந்தரம் இன்னமும் பணியில் உழைக்கிறார். மல்கோவா மாம்பழம்பற்றி டாக்டர் சுந்தரம் எனக்கு சொல்லும் போதெல்லாம், சுவைகளிலேகூட மண் பற்றும், மரபுசார்ந்த நெறிகளும் புகுந்துவிடுதலை இனங்கண்டு என்னுள் சிரிப்பதுண்டு.
அவுஸ்திரேலியா உட்பட பல அபிவிருத்தியடைந்த நாடுகளில், புதிதாக இனவிருத்தி செய்யப்பட்ட தாவரத்தையோ அல்லது வெளிநாடுகளிலிருந்து அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தாவரத்தையோ வணிக ரீதியாக பயிரிடுவதற்கு முன்பு அவற்றின் இயல்புகள் பற்றி ஆராய்வார்கள். சுவை, மணம், பழத்தின் நிறம், Shelf Life எனப்படும் அறுவடைக்குப்பின் வைத்திருக்கக்சுகூடிய காலம், பெட்டிகளில் பொதி செய்வதற்கு ஏற்ற இயல்பு என்பவற்றை கவனத்தில் எடுத்து ஆராய்வு செய்வார்கள். இவை எல்லாமே சந்தைப்படுத்தலுக்கு மிக முக்கிய இயல்புகளாக அடையாளப் படுத்தப் பட்டுள்ளன. பழத்தின் சுவை மட்டும் முக்கியமானதல்ல. கண்ணுக்கு அழகாக இருக்கிறதா எனவும் பார்ப்பார்கள். தோடம்பழத்தில் இலகுவாக தோல் உரிக்கும் இயல்பு வரவேற்கப்படும். இவை விவசாயத்துடன் சம்பந்தப் படாத பொருளாதாரத்துடன் அதிக உறவு வைத்துள்ள சந்தைப்படுத்தல் என்னும் துறையுடன் தொடர்பு 60Lugii.
ஞானம் - hooao SSaoősful EhfG0085 - ஜூலை 2O1
உடையார் மாமாவின் அம்ோக ஆதரவைப் பெற்றுள்ள கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் சுவையை வேறு எந்த மாம்பழத்தின் சுவையாலும் வெல்ல முடியாது என்பது உண்மை. ஆனாலும் அவுஸ்திரேலிய அதிகாரிகளின் நிலைப்பாட்டையும் நாம் நடுநிலை தவறாது அறிதல் வேண்டும். கறுத்தக் கொழும்பான் மாம்பழத்தின் தோலின் நிறம் பச்சை கலந்த மஞ்சள் நிறம். 'கறுத்த என்பது, அதன் கடும் பச்சை நிறத்தால் உருவான பெயரே. அதன் வடிவமும் நீள் வட்டம். அதாவது உருண்டு திரண்ட ‘Polish தோற்றம் அதற்கு கிடையாது. இது வாங்குபவர்களின் கண்ணுக்கும் பொதி செய்பவதற்கு ஏற்றவையல்ல என்பது அவுஸ்திரேலிய சந்தைப்படுத்தும் நிபுணர் களின் அபிப்பிராயம். அத்துடன் கனிந்த பழங்களை அதிக நாட்கள் வைத்திருக்க முடியாதென்றும், பழச்சதையின் திடத்தன்மை நீண்டகால சேமிப்புக்கு உகந்ததல்லவென்றும், உடையார் மாமா உச்சிமேற் கொண்டு கூத்தாடும் கறுத்தக் கொழும்பானுக்குப் பாதகமான குணங்களாகப் பட்டியலிட்டார்கள்.
இந்தவகையில் கறுத்தக் கொழும்பானை அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்த நான் எடுத்த முயற்சி தோல்வி யடைந்ததில், என்னைவிட உடை யார் மாமா மிகுந்த கவலைப் பட்டார். அமெரிக்கா அல்லது தென் ஆபிரிக்காவில் இந்த மாமரம் நின்றிருந்தால், திறமான பழம் எனச்சொல்லி மரத்தை இங்கு இறக்கியிருப்பாங்கள் என்று டாக்டர் சுந்தரமும் மாமாவுடன் சேர்ந்து, இது வெள்ளைக்காரன் பாராட்டும் நிறத்துவேசம் சார்ந்தது எனச் சாதித்தார்கள்.
ஒருநாள் கடுகதி அறிவித்தல் தந்து உடையார் மாமா தமது கூட்டாளி ஒருவர்ை எனக்கு அறிமுகம் செய்து வைக்க அழைத்து வந்தார். அவர் ஒரு பறங்கி இனத்தவர் என்றும், இலங்கையிலே புகையிரத என்ஜின் டிரைவராக பணியாற்றியவர் என்றும், ஆஸ்தி ரேலியாவில் 'வெள்ளையர்கள் மட்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் இங்கு புலம் பெயர்ந்த தாகவும் சொன்னார்.
அந்தப் பறங்கி நண்பர் சற்றே சிவப்பு நிறமுள்ள யாழ்ப்பாணத்து மனுஷர் போன்று தோன்றினார். அவரின் மூததையர் டச்சுக்காரர் என்று அவர் சொன்னார். அவர் தன் தந்தையைப் பின்பற்றி இலங்கை புகையிரத சேவையில் என்ஜின் டிரைவராக வேலை பார்த்தவராம். ரயிலில் யாழ்ப்பாணம் திருக்கோணமலை ஆகிய இடங்களுக்கு சென்று வந்தவராம். கொழும்பில் பிறந்து வளர்ந்த அவர் காலப்போக்கில் திருக்கோணமலையில் காணிவாங்கி குடும்பமாக குடியேறி விட்டதாகவும் சொன்னார். அவருடைய அந்த புலப்பெயர்வுக்கு கலப்புத்திருமணம் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த வர்த்தமானம் இந்த படைப்பியல்புக் கட்டுரைக்கு முக்கியமில்லாததால் நான் நோண்டிக்கேட்கவில்லை. ஆனால் அவர் யாழ்ப்பாணத்தமிழிலே பேசி என்னை மகிழ்வித்தார் என்பது கொசுறு செய்தி.
13
Page 16
வழமையான உபசரிப்பின் பின் உடையார் மாமா என்னை அவசரமாகச் சந்திக்க வந்த கதையை மெல்லத் துவங்கினார். பறங்கி நண்பரின் மகனது பிறிஸ்பேன் வீட்டில் ஒரு கறுத்தக் கொழும்பான் மாமரம் வளர்கிறதாம். இந்த வருடம் அந்த மரத்தில் மூன்று காய்கள் காய்த்திருப்பதை சமீபத்தில் பிறிஸ்பேன் போன நேரத்தில் பார்த்த பரவசத்திலேதான் என்னைச் சந்திக்க உடையார் மாமா வந்திருந்தார். சென்ற வருடம் ஒரு பழம் காய்த்ததாகவும் அது அசல் கறுத்தக் கொழும்பான் சுவையை அச்சொட்டாக ஒத்திருப்பதாகவும் உடையார் மாமா மேலும் விபரங்களை அடுக்கு வதன் மூலம் என்னால் சாதிக்க முடியாததை தனது பறங்கி நண்பர் சாதித்து விட்டதை என் மனம் நோகாத பக்குவத்தில் சுட்டிக்காட்டினார்.
இந்த மரம் எப்படி அவுஸ்திரேலி யாவுக்கு வந்ததென ஆவலை அடக்கமுடியாமலும் என்தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமலும் கேட்டேன். கூடவந்த பறங்கி நண்பர் என் கேள்விக்கு பதில் சொல்வதை சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டார்.
அவுஸ் தரிரேலியாவுக் கு இலகுவில் தாவரங்களையோ விதைகளையோ இறக்குமதி செய்துவிடமுடியாது. தனிப்பட்ட முறையில் ஒருவர் தான் விரும்பிய தாவரத்தை இறக்குமதி செய்வ தாயின், அவற்றை Quarantine House இல் இரண்டு மூன்று வருடங்கள் வைத்து அந்த தாவரத் துக்கு ஏதாவது வைரஸ் நோய் இருக்கிறதா அல்லது இத்தாவரம் அவுஸ்திரேலியாவுக்குள் வளர்ந் தால் நாட்டின் சுற்றுச் சுழல் பாதிக்கப்படுமா என்பவற்றை ஆராய்ந்தபின்பே அனுமதிப் பார்கள். அதற்குப் பெரும் பணம் செலவாகும். ஈற்றில் அனுமதி கிடைக்குமோ என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது.
உடையார் மாமாவின் பறங்கி நண்பர் இந்த நடைமுறையை பின்பற்றி இருக்க வாய்ப்பில்லை. வெள்ளையர்கள் மட்டும் புலம் பெயர அனுமதிக்கப்பட்ட காலத்தில், இலங்கையில் சிங்களம் மட்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆங்கிலம்பேசும் இனமாக அறியப்பட்ட பறங்கியர்கள் குடியேற அனுமதிக்கப்பட்ட அந்தக் காலத்திலே, அவுஸ்திரேலி யாவுக்கு புலம் பெயர்ந்தவர் அவர். அந்தக் காலத்தில் அவுஸ்திரேலிய Quarantine நடைமுறைகளில் இப்போதைய கெடுபிடிகள் இல்லாமல் இருந்திருக்கலாம். இதிலுள்ள ஓட்டை ஒறுவாய்களைப் பாவித்து இவர் மாங்கொட்டையினை கடத்திவந்து நாட்டியிருத்தலே சாத்தியம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
14
எது எப்படியோ கறுத்துக் கொழும்பான் மாமரம் அவுஸ்திரேலியாவில் வளர்வதை, உடையார் மாமாவின் அழுங்குப்பிடியான அக்கறை காரணமாக, பிறிஸ்பேனுக்கு போன நேரத்தில் நேரில் பார்த்து உறுதி செய்து கொண்டேன். சில மாதங்களின் பின் அந்த மரத்தில் காய்த்த மூன்று பழங்களில் ஒன்றை எனக்கு கொண்டுவந்திருந்தார். சும்மா சொல்லப்படாது அசல் கறுத்தக் கொழும்பான் மாம்பழம்தான். சந்தேகமே இல்லை.
அவுஸ்திரேலிய மண்ணிலே யாழ்ப்பாணச் சுவை, திருகோணமலையில் வாழ்ந்த பறங்கியின் மூலம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டது
D 6oouurrit LDT LDT6l6or e6Odaf eius fiat56l6ò6oo6o. வருடத்தில் ஒரு மரம் மூன்று காய்களல்ல, முந்நூறு மாங்காய் கள் காய்க்க வேண்டும். இவ்வாறு கறுத்தக் கொழும் பானின் சுவையை அவுஸ்திரேலியாவில் சர்வ வியாபார மாக்குவதன் மூலம், கறுத்தக் கொழும்பான் விடயத்தில் இங்குள்ள அரசின் கொள்கைக்கு இறுதி ஆப்பு அடிக்கவேண்டு மென்று உள்மன தில் கள்விக் கொண்டார்.
மாமரங்கள் உலர் வலயத்துக் கே உரித்தான பயிர். அவை குளிர் பிரதேசத்தில் நல்ல விளைவைக் கொடுக்கமாட்டா. இதனால் சிட்னியில் வசிக்கும் உடையார் மாமா பிறிஸ்பேனில் வளரும் கறுத்தக் கொழும்பானை சிட்னி சுவாத்தியத்துக்கு ஏற்ற வகையில் இனவிருத்தி செய்ய உதவவேண்டும் என்ற கோரிக்கை யுடன் என்னை நச்சரிக்கத் துவங்கினார்.
விஞ்ஞானரீதியாக பழமரங் களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை குறைகுளிர் 66035 (Low Chill), Éloodpg56sit 6)6Odas (High Chill) g56iff (35606JubD 6.60d85 (No Chill). தாவர உடற்கூறு இயல்பின்படி பீச், பிளம்ஸ், அப்பிள் போன்ற தாவரங்கள் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் குளிர் தேவை.
ஆனால், மாமரம் பூப்பதற்கு குறிக்கப்பட்டளவு வெப்பம் தேவை.
ஐரோப்பாவின் குளிர் சுவாத்தியத்தில் வளர்ந்த அப்பிளையோ பீச்சையோ சிட்னி சுவாத்தியத்தில் வளர்த்தால் அவை நல்ல விளைவைக் கொடுக்க மாட்டாது. இதே போல, நுவரேலியாவில் வளரும் பிளம்ஸ் மரத்தை யாழ்ப்பாணத்தில் வளர்த்தால் அந்த மரம் பூக்காது. இதேபோன்றுதான் யாழ்ப்பாண மாமர
ஞானம் - αυσαυαο 6δαυδάθμμ σώάΠαρα - ஜூலை 2011
Page 17
இனங்கள் இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில் நன்கு காய்ப்பதில்லை. இவையே பழமரங்கள் காய்ப்பதிலுள்ள சுட்சுமங்கள்! சிட்னி உபஉலர்வலயப் பிரதேசத்தில் உள்ளது. இதன் சுவாத்தியம் இலங்கையின் மலையக சுவாத்தியத்தை ஒத்தது. சிட்னி நகரம் அமைந்துள்ள நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் நல்ல விளைவைக் கொடுக்கும் அப்பிள், பீச், பிளம்ஸ் போன்ற தாவரங்கள் குறைகுளிர் (low chill) இனங்களாக இருக்கவேண்டும். ஆனால் வெள்ளையர்கள் ஐரோப்பாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த காலங்களில், ஐரோப்பாவில் இருந்து நிறைகுளிர் (high chi) இன தாவரங்களையே சிட்னிக்கு கொண்டு வந்தார்கள். சிட்னிக் குளிரின் அளவும் காலமும் இத்தாவர இனங்களுக்கு போதாமையால் இவை பூப்பதற்கும் காய்ப்பதற்கும் சிரமப்பட்டன. இதனால் சிட்னி நகரம் அமைந்துள்ள நியுசவுத்வேல்ஸ் மாநில சுவாத்தி யத்துக்கு ஏற்றவகையில் வெள்ளையர்களால் கொண்டு வந்து நடப்பட்ட தாவர இனங்களை இனவிருத்தி செய்யவேண்டிய கட்டாயத்துக்கு விவசாய விஞ்ஞானிகள் ஆளாக்கப்பட்டிருந்தார்கள். இந்த ஆராச்சியின் நீட்சியில் எனக்கும் தொடர்புண்டு.
இந்த ஆராச்சியில் நான் ஈடுபடுவதும் இது விடயமாக சிட்னி சுவாத்தியத்தை அச்சொட்டாக ஒத்த
2O 11 ggooIII *ஞானம் ? புதி உள்நாடு தனிப்பிரதி : e5LIT 65/= ஆண்டுச் சந்தா : egöLT 1000/= ஆறு ஆண்டுச்சந்தா : ரூபா 5000/- ஆயுள் சந்தா : e5t mr 20000=
சந்தா காசோலை மூலமாகவோ, மணியோடர் மூலமாக அனுப்பலாம். மணியோடர் 7ேவன்னவத்தை தபால் நிலையத் மாற்றக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இலகுவாகமேலதிகச்செலவின்றிசந்தாஅனுப்பும்வழிஉங்கள் பகுதியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் T. Gnanasekaran, Hatton National Bank - Wellaw நடைமுறைக்கணக்கு இலக்கம்-009010344631என்ற கண வைப்புசெய்துவங்கிரசீதை எமக்கு அனுப்புதல் வேண்டும்.
ബ് ஓராண்டு Australia (AUS) 40 Europe (e) 30 India (Indian Rs.) 500 Malaysia (RM) 60 Canada (S) 40 UK (£) . 25 Other (US $) 35
மூன்று சந்தாதாரர்களைச் சேர்த்துத் தருபவர்களுக்கு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
தென்சீனா மற்றும் தென் ஆபிரிக்காவுக்கு சென்று வருவதும் உடையார் மாமாவுக்கு தெரியும்.
பிறிதொரு நாள் அவசரகதியில் தன் மகள் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்த உடையார், தென் ஆபிரிக்க டேர்பன் நகரில் கறுத்தக் கொழும்பான் மாமரத்தை ஒத்த ஒருமரம் நன்கு காய்ப்பதாகவும், அதன் ஒரு இளையத்தை (tissue) அல்லது கொப்பை சிட்னிக்கு கொண்டுவந்து பறங்கி நண்பண் வீட்டில் உள்ள மரத்துடன் கலப்பதன் மூலம் அல்லது ஒட்டுவதன் மூலம் நியூசவுத்வேல்ஸ் மாநில சுவாத்தியத்துக்கு இனவிருத்தி செய்யலாம் என்ற ஆலோசனையை முன்மொழிந்தார். அத்தோடு நிற்காது. அடுத்தமுறை ஆராச்சி வேலை நிமித்தம் நான் தென் ஆபிரிக்காவுக்கு செலலும்போது தானும் தனது சொந்த செலவில் என்னுடன் வருவதாகச் சொன்னார். உடையார் மாமா விடாக் கண்டன் வம்சத்தை சேர்ந்தவர் என்று ஏலவே சொல்லியிருந் தேன். அவர் தமது வாழ்க்கைப் பயனையும் கறுத்தக் கொழும்பானின் வெற்றியையும் முடிச்சுப் போட்டுள்ளதை நான் அறிவேன். கூட்டிக் கழித்துப் பார்த்தபொழுது அவருடைய கறுத்தக் கொழும்பான் பற்று மண்பற்றின் இன்னொரு நிலை என்பதை புரிந்து கொண்டேன். அதனை மதித்ததனால் அவருடைய கோரிக்கைக்கு சம்மதித்தேன்.
(மிகுதி அடுத்த இதழில்)
வரி முதல் ய சந்தா விபரம்
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்ப:
Swift Code HBLILKLX
அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran Gnanam Branch Office
வோ 3-B, 46 Lane, Wellawatte. த்தில்
ஞானம் விளம்பர விகிதம் பின் அட்டை : eBLIT 10000s: முன் உள் அட்டை : ரூபா 8000/= ate பின் உள் அட்டை : ரூபா 8000/- é60 உள் முழுப்பக்கம் : ரூபா 5000/- உள் அரைப்பக்கம் : ரூபா 3000/-
இரண்டு ஆண்டு மூன்று ஆண்டு
80 110 60 8O 950 1 400 12O 170 80 110 50 70 70 1 OO
ஒரு வருடம் ஞானம் இனாமாக அனுப்பப்படும்.
5
Page 18
16
ேெஉத Ferréal TT அங்கு r=>Ir> !
சொந்த மண்ணையும் வீட்டையும் விட்டுநாம் சோபை யற்றிடர் பட்டு வருந்திடும் இந்தக் கீழ்நிலை நீங்கத் திரும்பவும் எங்கள் ஊர்செல்லும் நாளெந்த நாளோ?
தனங்கி ளப்பிலே தண்ணென நீர்நிறை தாம ரைக்குளம் தன்னில் குளித்துநாம் மனங்கு விரிர்ந்து பொலிந்து மகிழ்ந்திட வாழ்ந் திருக்கின்ற நாளெந்த நாளோ?
இச்சை யோடு விதைத்த வயல்வெளி ஈர முற்ற தலைப்பெயல் வேளையில் பச்சைக் கம்பளம் போல்விரி காட்சியைப் பார்த்து வந்திடும் நாளெந்த நாளோ?
வயலி லேவெள்ளம் வந்து நிறைந்திட மகளி ராடவ ரோடு நெருங்கியே மயலி லேகளை கட்டி உளம்மிக மகிழு நாள்,அந்த நாளெந்த நாளோ?
நீண்ட நன்செய் நிலங்களில் சாலவும் நெய்பயிர் கதிர் முற்றி விளைந்திட ஆண்டு நாமுளம் ஆனந்தம் பொங்கவே அனுப விக்கின்ற் நாளெந்த நாளோ?
உச்சி வேளையில், அறுவடைக் காலத்தில் உடற் களைப்புடன், தண்மர நீழலில் பச்சை ஓலையில் தட்டுவம்" கோலியே பகிர்ந்து சோறுண்ணும் நாளெந்த நாளோ?
நல்லு ழைப்பினில் ஈட்டிய செல்வமாய் நாங்கொணர்ந்தில்லில் கட்டி அடுக்கிய நெல்லு மூட்டையின் மேலிருந் தின்கதை நிறையப் பேசுமந் நாளெந்த நாளோ?
நெற்றி வேர்வை நிலத்தில் விழவிழ நெடிதுழைத்தளம் நெல்லு விளைச்சலை விற்ற காசெண்ணி உள்ளம் குளிர்ந்துநாம் மேன்மை எய்திடும் நாளெந்த நாளோ?
காங்குல் ஆகுமுன், கட்டிய "கூட்டிலே” கருக்கல் நேரத்தில் வந்து குவிந்திடும் எங்கள் ஊர்க்கடல் றால்வளம் கண்டுநாம் இதயம் பூரிக்கும் நாளெந்த நாளோ?
தனாங்கிளப்பு வ.சின்னப்பா
தென்னந் தோப்புக்கள் முன்னரைப் போலவே திரும்ப வும்எழ உள்ளே புகுந்துநாம் இன்ன ரும் "வழுக் கல்" இளநீர்சுவைத் இன்புறும் அந்த நாளெந்த நாளோ?
உயர்ந்த டர்பனந் தோப்புக்கள் மீண்டெழ “ஒலைக் கடகத்தில்” நுங்கு பொறுக்கியே நயந்த ருந்திப்பின் "கோம்பை"யை மாட்டுக்கு நாம ஸ்ரித்திடும் நாளெந்த நாளோ?
பண்டை உண்டிக ளாய்மக்கள் போற்றிய பனங்கி ழங்கொடி யற்பிட்டுக் கூழிவை உண்டு டற்பலம் கொள்ளத் திரும்பவும் ஊர்ப்ப னைதோன்றும் நாளெந்த நாளோ?
எறிக்கும் வெய்யிலில், கடற்கரை ஓரத்தில் இயல்பில் தோன்றிடும் ஈச்சம் பழங்களைப் பறிக்கும் மங்கையர் கைப்பட வாங்கியே பரிவி னோடுண்ணும் நாளெந்த நாளோ?
கந்தன் "சுட்டதாய்” ஒளவைக்குச் சொல்லிய காட்டு நாவற் பழங்களை அள்ளியே சந்தை யில்விற்று வேறு பொருள்கொளத் தைய லர்செல்லும் நாளெந்த நாளோ?
இயற்கை யாய்வளர் கொவ்வை முசுட்டையும் இங்ங்ண் மாரியில், "குடிட்டில்”ஆம் கீரையும் நயப்பு டன்பற்றி, நாம்கறி ஆக்கவே நமது மண்செல்லும் நாளெந்த நாளோ?
"கடகம்” பெட்டியில் வேம்பின்புக் கொய்ததில் கடுகு சீரகம் உழுந்தென்ப கூட்டியே "வடகம்” செய்து பொரித்துச் சுவைத்துநம் மண்ம ணம்துய்க்கும் நாளெந்த நாளோ?
நாயின் மீதிலமர்ந் தெங்களைக் காத்தருள நம்”ம தாவிற் குளப்பதி" வைரவர் கோயிற் சர்க்கரைப் புக்கையை வாங்கியே கூடி உண்கின்ற நாளெந்த நாளோ?
கண்டு பண்டித மாமணி போற்றிய “காரைத் தூப்பதி" ஐங்கரன் கோவிலில்
பண்டு போல்அபிடேக விழாவரப்
பந்திச் சோறுண்ணும் நாளெந்த நாளோ?
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 19
அம்மன் கோவிலில் “பொங்கல்” இரவிலே அருகி லேயுள்ள கும்பிப் புழுதியில் கும்ப கர்ணனாய் நித்திரை கொண்டுபின் கோயில் பார்க்கின்ற நாளெந்த நாளோ?
அந்தக் கோவிலில் “சித்திரைக் கஞ்சியை” அள்ளி ஒலைப் "பிழாக்களில்” நல்கவே வந்த யாவரும் மண்ணிலொன் றாகவே மகிழ்ந்திருந்துண்ணும் நாளெந்த நாளோ?
கன்று டன்சென்று மாலை திரும்பிய கறவைப் “பட்டியில்" நெல்வயற் காட்டிலே சென்று காலையில் பால்கறந் தேவந்து சேர்ந்த ருந்திடும் நாளெந்த நாளோ?
பெண்டிர் ஆடவர் கன்னியர் காளையர் பேத மின்றியே நீர்விளை யாட்டுறும்
தண்ட டாகத்தில் நாம்விளை யாடவே தனங்கி ளப்புறும் நாளெந்த நாளோ?
அடர்ந்த கொம்பரில் கேகயம் கூவ, நம் அகல் நிலத்தெழில் வெண்ணிலாக் காயவே தொடரும் எங்களூர்ச் சோளக் காற்றிலே சுகத்தி லேமாந்தும் நாளெந்த நாளோ?
தனங் கிளப்புக்கு மீளவும் சென்று நாம் சகல மும்பெற்று முன்னரைப் போலவே மனங்க ளிக்கின்ற நாளெந்த நாளெங்கள் மண்மணம் துய்க்கும் நாளெந்த நாளோ?
பதினொ ராண்டுகள் நித்திய சஞ்சலப் பஞ்ச வாழ்வுக்கு விடிவொன்று கிட்டுமோ? அதியு யர்பாது காப்பு வலையமற் றந்தோ, ஊர்மீளும் நாளெந்த நாளோ?
(காரைத்து விநாயகர், பண்டிதமணி
சி.கணபதிப்பிள்ளை அவர்களின் குலதெய்வம்.)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
- கொட்டகலை -
உன்னை என் மனதுள் எண்ணிக்கொள்ளும் போதெல்லாம்
ஓர் ஆனந்தம் உன் நினைவுகளை மனதில் சுமக்கும் போதெல்லாம் பேரானந்தம்
இங்குநான்
தனிமையிலே சுதந்திரப் பறவையென நரகத்தில் வாழ்வது விடவும் நிலம் கடந்து - உன்
மனமெனும்
சுவர்க்க சிறைக்குள் ஆயுள் கைதியாகி விடுகிறேன். உன்னை நேசித்த பின்புதான் உலகை நேசிக்க தொடங்கினேன் உன்னோடு பேசிய பின்புதான் மனதோடு உறவாட மிதமாய் கற்றுக்கொண்டேன் உன்னோடு பழகிய பின்புதான் காதலை உணர்ந்து கொண்டேன் - உன் மனதில் விழுந்த பின்புதான் காதலின் ஆழமறிந்தேன் - இன்று உன்னை பிரிந்திருக்கிற போதுதான் காத்திருப்பின் சுகத்தையும் காதலின் வலியையும் அனுபவிக்கிறேன்..!
17
Page 20
š出I6饥GN
- மா. பாலசிங்கம் -
தேசிய ஒருத்துவம் ஏற்படுத்துவதற்கான எத்தனிப்புக்கள், இன்று இலங்கையின் இலக்கிய முகாம்களில் பெருமெடுப்பில் முன்னேறிவருவதைக் காண முடிகின்றது. ஏலவே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இவ்விடயத்தில் காட்டிய அக்கறையையும் இது விஞ்சிவிடு வோமென அதிசயிக்க வைக்கின்றது. ஈழத் தமிழெழுத்தாளர்களது படைப்புகள் சிங்களத்தில் மொழி மாற்றம் செய்யப்படுகின்றன. சிங்களப்படைப்புகள் தமிழில் வெளியிடப்படுகின்றன. இதே வழிமுறைமைகள் நாடகத் துறையிலும் செயல்படுத்தப்படுவதோடு, இதன் தாக்கத்தைச் சினிமாவிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. மனிதாபிமானச் சிந்தனையாளர்கள் நிச்சயமாக இத்திட்டத்தை வாழ்த்தி வரவேற்பர். தேசிய ஒருத்துவத்தைச் செழிப்பாக்கும் இலக்கோடு தற்போது வெளியிடப்பட்டிருப்பதே பிரபல முற்போக்கு எழுத்தாளர் தெணியானின் தவறிப் போனவன் கதை' என்ற நாவல். இலங்கையின் முன்னணிப் புத்தக வியாபாரிகளான எஸ்.கொடகே சகோதரர்கள் இந்நாவலை வெளியிட்டுத் தமது இன ஒருத்துவ நிலைப்பாட்டைப் பிரசித்தப்படுத்தியுள்ளனர்.
தடம் பதித்த முற்போக்கு எழுத்தாளரான தெணியான் தமிழ் நவீன இலக்கியத்துக்கு வீச்சை உபகரித்துக் கொண்டிருப்பவர். கடல் கடந்தும் இவரது படைப்பிலக்கிய ஆளுமை பேசப்பட்டு வருகிறது. தனது கெட்டித்த சமுதாய, இலக்கியக் கோட்பாட்டினுடாக பஞ்சமர் இலக்கியத்தின் பிதாமகர் கே.டானியலுக்கு மிக நெருக்கமானவர். இதுவரை எட்டு நாவல்களையும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் தமிழுக்குத் தந்துள்ளார். சிறுகதைகளூடாகவும் பெருத்த அபிமானத்தைச் சம்பாதித்துள்ள தெணியானுக்கு அவரது நாவல்களே நாடளாவிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்திருப்பதைத் தவறிப் போனவன் கதை நாவல் மூலமாக அறிய முடிகின்றது. இந்நாவல் அவரது ஒன்பதாவது நாவலாகும். சிங்கள வெளியீட்டகமொன்றின் அதீத கவன ஈர்ப்பைப் பெறுவதுக்கு இந்நாவலுக்கு எப்படிச் சாத்தியமான தென்பதை அறிய வாசகரின் மனம் உந்தும்! எனவே நாவலின் தொனிப் பொருளைத் தேடலிடுவது பொருத்தமானதாகும்.
தணிகாசலம் பாடசாலை உப அதிபர். வயதில் ஐம்பத்தைந்தைத் தாண்டியவர். காலை துயிலெழுந்து
18
கடமைகசூச் செல்ல ஆயத்தமாகியபோது உடலை வியர்வை நனைத்துக் கொண்டிருந்தது. பொருட்படுத் தாது பாடசாலைக்குச் சென்றவருக்கு அங்கும் வியர்வை பெருக்கெடுத்தது. ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது இரத்த அழுத்தம் கூடிவிட்டதாக டாக்டர் கூறினார். சிகிச்சை புரிந்து வீட்டுக்கு அனுப்பினார். வீட்டிலும் மனைவி, பிள்ளைகளை வியர்வை கலக்க வைத்தது. மூக்கிலிருந்தும் இரத்தம் ஒடத்தொடங்கியது. மந்திகை ஆஸ்பத்திரியில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்குக் கொணர்டு போகும்படி ஆலோசனை கூறினர். இரவு நேரம் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்தது. இராணுவக் கெடுபிடிகளும் இருந்தன. சிங்கள மொழியில் சரளமாகப் பேசவல்ல, அநீதி என்ற ஒருவனின் உதவியோடு யாழ். ஆஸ்பத்திரிக்குச் சில இராணுவக் காவல் அரண்களைத் தாண்டிக் கொண்டு செல்லப்பட்டார். பத்து நாட்களாகப் புகழ் பெற்ற டாக்டர்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். சொற்ப அளவில் மூக்கால் இரத்தம் கொட்டுதல் தணிந்தது. வீடு சென்றார். ஆபத்தான நேரத்தில் தனக்கு உதவிய அநீதியைக் கண்டு நன்றிகூற விரும்பினார். தேடிச் சென்றார். சுட்டுக் கொன்று விட்டதாக அறிவிக்கப்பட்டது. கண்ணிர் கசிய தணிகாசலம் மாஸ்டர் வீடு திரும்பினார். நாவலின் தொனிப் பொருளை உள்ளடக்கியுள்ள கதையிதுவே. கட்டிளமைப் பருவத்தில் தணிகாசலம் மையல் கொண்டிருந்த வனிதையரின் "கிளு, கிளுப்பான விபரங்களும் இக்கதைக்குள் வருகின்றன. வாலிபக் குருத்துப் பருவத்தில் தணிகாசலத்துக்கு இடது கழுத்து நரம்பில் வலி ஏற்பட்டது. சம்பந்தர் என்ற டாக்டரின் பணிகளால் அக்காலத்தில் மூளாய் ஆஸ்பத்திரி வட இலங்கையில் மிகவும் பிரபலமாக விளங்கியது. தாபகர், தணிகாசலத்தை அங்கு கொண்டு சென்று வைத்தியம் செய்வித்தார். நிர்மலா என்ற தாதி தணிகாசலததுக்குப் பணிபுரிவதுக்காக வைத்தியசாலையால் அமர்த்தப்பட்டாள். புத்தகப் பிரியரான தணிகாசலத்தின் புத்தகங்களை அடிக்கடி கிளறிப் பார்த்தாள். இது தொடர்ந்து நடைபெற்று. அவள்மீது தணிகாசலத்தை மோகம் கொள்ளவைத்தது.
தணிகாசலத்தின் பிஞ்சு மனதில் மணிமேகலை யோடு ஏற்பட்ட காதல்; சரத் சந்தர் படைத்த தேவதாஸ்பார்வதி காதலுக்கு ஈடாக இந்நாவல் கதைக்குள் சொல்லப்படுகிறது. இந்நாவலின் கதை நிகழும்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 21
காலத்தில், தமிழீழத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையிலிருந்ததை நாவல் பதிவாக்கி யிருக்கிறது. பொருளாதாரத் தடை, போக்குவரத்து அசெளகரியங்கள் என்பவைகள் உணர்வுபூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளன. தேசிய வாகனமாக ஈருளி இருந்துள்ளது. யாழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரிய ரொருவர் இருபது கிலோமீற்றர் ஈருளி மிதித்து வடமராட்சியிலிருந்து யாழ். பல்கலைக்கழகத்துக்குக் கடமைக்குச் சென்றுள்ளார். முல்லைத்தீவுக்குச் செல்வதாகில் கடல் மார்க்கமாகக் கப்பலில் தான் செல்ல வேண்டும்! மின்சாரமில்லை! சிக்கன விளக்குப் பாவனையில் இரவில் நாய் குரைத்தால் வீட்டு விளக்கு அணைக்கப்பட்டுவிடும்! ஆற்றல் மிக்க நிபுணர்கள் பெயர்ச்சி இருபத்தைந்து டாக்டர்கள் கடமை புரிந்த ஆஸ்பத்திரியில் மூன்று டாக்டர்கள் கடமையில்
தவறிப் போனவன் கதை' என்னும் இந்தப் படைப்பினுள் நான் மறைந்திருக்கவில்லை. எனது வாழ்வில் 1996ல் சம்பவித்த மிக நெருக்கடியான சம்பவம் ஒன்றினை மையமாகக் கொண்டே இந்நாவல் நகருகின்றது” என இந்நாவலாசிரியர் தெணியான் இந்நாவல் கதை கற்பனையானதல்ல என்பதைச் சுட்டியுள்ளார். இது அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பொதுவானதெனலாம். குறிப்பாக இலங்கைப் படைப்புகளுக்கு நூற்றுக்கு நூறுவிகிதம் பொருந்தும்! இலங்கைப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் யாவும் கற்பனை எனப் படைப்புகளுக்கு அடிக்குறிப்பிடாததும் இதை எண் பிக்கும். தெணியானின் இலக்கிய நண்பர்கள் யாரென்பதை நன்கறிந்தவர்கள், இந்நாவலில் வரும் ஆனந்தண் டாக்டர் யார்? என்பதையும்; இதய நோய்களுக்காக அடிக்கடி சிகிச்சை பெறும் நோயாளர்கள் டாக்டர் மகிழ்ராசா யாரென்பதையும் கண்டுபிடிக்க அதிக நேரமெடுக்காது! இருவரும் இன்றும் எம்மத்தியல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடன் நடமாடும் நிஜ டாக்டர்களே! இந்த நிஜங்களை ஒரு சுவாரஸ்யமான நாவலுக்குள் கொண்டு வந்திருப்பது தெணியானின் ஆளுமை மிக்க படைப் பாற்றாலுக்குத் தக்க சான்றாகும்.
லேக் ஹவுஸ் பத்திரிகையான தினகரன்' வார மஞ்சரியில், தவறிப் போனவன் கதை என்ற இந்நாவல் தொடராக வெளியிடப்பட்டது. அப்பொழுது முற்போக்கு சிந்தனையாளர் சிவாசுப்பிரமணியம் இப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். இத்தேசியப் பத்திரிகை மார்க்சிய எழுத்தாளருக்கும் களம் கொடுத்ததை இதன் தொடர் வாசகர்கள் நன்கறிவர். நாடறிந்த முற்போக்கு நாவலாசிரியர் இளங்கீரன் இப்பத்திரிகையால் நன்கு பயன்படுத்தப் பட்டவர். அதே நேசக் கரந்தான் தெணியானுக்கு நீட்டப்பட்டுள்ளது.
அச்சிதழொன்றின் ஜனரஞ்சகத்தைப் பெருக்க வைக்கத் தொடர் அம்சங்கள் உதவும். விறுவிறுப்பு, திருப்பங்கள் மட்டுமல்லாது எடுகோளை அளிக்கை
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
செய்வதிலும் இரசனை இருக்க வேண்டும். நாவலுக்குரிய இத்தகைய பண்புகள் தவறிப் போனவன் கதை நாவலிலும் மிகச் செறிவாகவுள்ளன. தொய்வோ கருத்து மயக்கமோ இன்றி நகர்ந்து செல்கிறது கதை. இதையே பத்திரிகைகளும் வியாபார சஞ்சிகைகளும் எதிர்பார்ப்பதுண்டு! இராணுவத்தோடு தொடர்பு கொள்பவர்களை, முகாம்களுக்குச் சென்று வருபவர்களை இயக்கமும் தண்டித்துள்ளது. அதேநேரம் சந்தேகத்தின் நிமித்தம் இராணுவமும் சிலரைத் தீர்த்துக்கட்டியிருக்கிறது. இதை இந்நாவல் நிகழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோர் நன்கறிந்திருப்பர்! எனவே அநீதியின் கொலைஞன் யாரென்பதைக் கண்டறிவதை நாவலாசிரியர் வாசகரிடமே விடுத்துத் தனது தேசிய இலக்கியக் கோட்பாட்டுக்குள் இருந்துகொண்டார். "கத்தி முனையில் நடப்பதுபோல மிகுந்த நிதானத்துடன் சிலவற்றை எழுத்தில் சொல்லியிருக்கிறேன்! எனவும் என்னுரையில் தனது அன்றைய நிலையைத் தெளிவுபடுத்தியு முள்ளார்.
சிங்களப் பதிப்பகத்தால் வெளியிடப்படும் நூல்களில் எழுத்துப் பிழைகள் காணப்பட்டால், அது தமிழ் வெளியீட்டகங்களுக்கு அவலாகிவிடும்! இந்நாவலில் எழுத்துப் பிழைகளும், உடைந்த நிலையில் சொற்களும் விரவிக் கிடக்கின்றன. இதில் நூலாசிரியர் கவனமெடுத்துச் செம்மைப் படுத்தி இருக்கவேண்டும். நூல் வெளிவந்திட வேண்டுமென்பதற்காக, அவசரங் கொண்டு இத்தவறுகளைக் கண்டு கொள்ளாது விடுவது நாவலின் இரசனையைப் பாதிப்பது மட்டுமன்றி, நூலை வெளியிட்ட சிங்களப் பதிப்பகத்தின் பெயருக்கும் குந்தகமேற்படுத்து மல்லவா!
ஆக, சொந்த வாழ்க்கையிலேற்பட்ட சம்பவ மொன்றை நாவலாக்கும் இலக்கில், ஒரு காலகட்டத்து வட இலங்கை வாழ்வை, அதில் கோலமிட்ட அவலங்களை, சினிமாப் படமொன்றில் சித்திரிப்பது போன்ற எழுத்தோவியமாக வெளிவந்திருக்கும் இந்நாவல், அடுத்த சந்ததியையும் சென்றடையக்கூடிய வரலாற்றுப்பதிவாக ஏற்கத்தக்கதாகும். இடதுசாரியம், பஞ்சமர் இலக்கியம் என்பவற்றின் குறியீடே எழுத்தாளர் தெணியான், என்ற மயக்கத்தைத் துறந்து, தவறிப் போனவன் கதை என்ற இந்நாவலை வாசிக்கக் கையிலெடுக்கும் ஒரு வாசகன் நிச்சயமாக இதன் 160 பக்கம் வரை வாசித்தே இதைக் கீழே வைப்பானென் பதை மிக அழுத்தமாகக் கூற முடியும்,
தொடர்புகளுக்கு:
கலையருவி, கரணவாய் வடக்கு, வல்வெட்டித்துறை.
19
Page 22
இ. சக மனிதர்களைப் பற்றிய
கதையே அல்ல. கரப்பான்களையும் என்னையும் பற்றிய கதை, கரப்பானர் என்ற பெயரைக் கேட்டாலோ அல்லது பார்த்தாலே அருவருப்புக் கொள்ளும் யாரும் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். காரணம் இதனைப் படிக்க இருக்கும் எவரும் ஒரு நாள் நித்திரையைத் தொலைக்கப் போகின்றார்கள் என்பது உறுதி ஏற்கனவே கரப்பான்கள் மீது அருவருப்பு உடையவர்கள் எதற்காக ஒருநாள் நித்திரையை வேறு தொலைக்க வேண்டும்?
நான் எனது மனைவி, இரண்டு மகள்களுடன் வசிப்பது டென்மார்க்கில். உலக அளவில் பார்க்கும் பொழுது மனிதாபினத்தை பேணுவதிலும், சமூக உதவிகளை வழங்குவதிலும், மனவிரக்தியால் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையிலும் முன்னிலையில் நிற்கும் ஒரு நாடு இது. மற்றும்படி வாழ்க்கைப் போராட்டம் என்பது இங்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் போராட்டங்கள் இரு இனங்களுக்கிடையில். இங்குள்ள போராட்டங்கள் நான்கு சுவர்களுக்குள்ளே. இதைவிட பெரிதாகச்
Instify J
கரிப்பான்கள்
சொல்லவோ பெருமைப்படவோ இது ஒன்றும் சொர்க்கபூமி அல்ல.
இனி ஜேர்மன் கரப்பான்களிடம் செல்வோம். இதனை டெனிஸ் மொழியில் ருஸ்க்க கக்கலாக்கள் என்றுதான் சொல்வார்கள். நான்தான் இலங்கை இந்திய மற்றைய தமிழ் வாசகர்களுக்காக அதனை தமிழ்ப்படுத்தியுள்ளேன். இவை ஜேர்மனியில் இருந்து வந்தவையா அப்படியா இப்படியா என பலபேரிடம் விசாரித்துப் பார்த்தேன். ஆனால் சரியான பதில் யாரிடமும் கிடைக்கவில்லை - முள்ளிவாய்க்காய்கால் இறுதிநாள் யுத்தம் போல. அதன் பெயர் மட்டும் ஜேர்மனிய கரப்பான்கள் என இங்கு வழங்கப்படுகிறது. அந்த பெயரின் நதிமூலம் ரிஷிமூலம் கூட இந்தக் கதைக்கு அவசியமில்லை. இது தோற்றத்தில் இலங்கை இந்தியாவில் மலசல கூடங்களிலும், பழைய மரப்பெட்டிகளுக் குள்ளும், பெரிய பாத்திரங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் இடங்களிலும் ஒடித்திரியும் கரப்பான்கள்
20
போன்றவை. ஆனால் நிறத்தில் கருமையும் தோலில் தடிப்பும் குறைந்து மெல்லி மண்ணிறமாயும் அளவில் மிகச் சிறிதாயும் இருக்கும். இதில் ஒரு ஐம்பதைப்பிடித்து அடுக்கிப் பார்த்தால் உங்களுக்கு தெரிந்த கரப்பானின் வடிவில் வரும். அவ்வளவு சின்னது. ஆனால் அருவருப்பு என்பது ஐம்பது மடங்காகத்தான் இருக்கும்.
இலங்கையில் உள்ளவரை கரப்பான்களைப் பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவைகளுடன் சேர்ந்ததுதான் எங்கள் வாழ்வு என எடுத்துக் கொண்டு அந்த வாழ்வுக்கு இசைவாக்கப் பட்டிருந்தேன். கதிரை இடுக்கில் இருக்கும் மூட்டைப் பூச்சி-அதைப் பிடித்து நசுக்கும் பொழுது எழும் துர்நாற்றம் காலில் அல்லது சைக்கிள் ரையரில்
நசியும் அட்டைகள்-தங்கை கூட்டிக் கழுவி விட்ட நடுவீட்டிற்குள் ஓடி வந்து பீச்சி விட்டு ஓடும் கோழிகள்- மரநிழலில் உள்ள தேநீர் கடைகளில் நின்று தேநீர் குடித்துக் கொண்டு இருக்கும் பொழுது காகங்கள் சேட்டின் மீது போடும எச்சங்கள் எல்லாவற்றுடனும் தானே இருபத் தைந்து வருடத்துக்கு முன் வாழ்ந்திருந்தோம்.
வி.ஜிவகுமாரன் டென்மார்க்
ஏன் அதிகம் பேசுவான்? பேண்கள் ??. இப்பொழுதும் ஞாபகம் இருக்கின்றது. பின்னேரத் தில் நாங்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது எங்கள் அம்மா, சின்னம்மா, சின்ன மாமி, பெரியமாமி எல்லோரும் ஆளுக்காள் பேன் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். போதாததிற்கு எங்களையும் கூப்பிட்டு இருத்தி வைத்துப் பார்த்து விட்டு அனுப்புவார்கள். அங்கு அதிகமான ஆண்களுக்கு பேன் பிடிப்பதே திருமணத்திற்குப் பின்புதான். இங்கு டென்மார்க்கில் பாலர் பாடசாலையில் என்றாலும் சரி, பள்ளிக்கூடத்தில் என்றாலும் சரி ஒரு பிள்ளைக்கு பேன் வந்தால் அது முற்றாக நீங்கும் வரை அங்கு போக முடியாது. அதற்குரிய மருந்துகளின் விலை நினைத்துப் பார்க்க முடியாதவை. ரீ. வி.யில் போட்டே காட்டுவார்கள் எப்படி பேன்சீப்பால் தலை வாருவது என்று. நான் உதட்டினுள் புன்னகைத்தபடி சென்று கொண்டிருப்பேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 23
இந்த கரப்பான்கள் எப்படி மற்றவர்களை குறிப்பாக வெளிநாட்டவர்களை அருவருப்புக் கொள்ள வைக் கின்றது என கண்டது கனடாவில்தான்.
அப்பொழுது எனக்கு இருபத்தியொரு வயது. நானும் எனது நண்பனும் கடற்கப்பலில் வேலை செய்திருந்த காலம். ஜப்பானில் இருந்து கிட்டத்தட்ட பதினான்கு நாட்கள் பிரயாணம் செய்து கனடாவில் உள்ள வன்கூவர். பி. சி. க்கு வந்திருந்தோம்.
இந்தக் கடல்காற்றில் காயும் எம் சக மாலுமிகளுக்கு கரைவந்ததும் சொர்க்கம் தான். காந்தி இங்கிலாந்திற்கு செல்லும்போது பெற்றோருக்கு செய்து கொடுத்த சத்தியங்கள் போல நானும் பல சத்தியங்களை பல பேருக்கு செய்து வந்ததால் டர்பானிலும், மெல் பேர்னிலும், டோக்கியோவிலும் என் கற்புக் காப்பாற்றுப்பட்டு வந்தது. இதற்கு மேல் அந்தப் பகுதிக்குள் போகவிரும்பவில்லை.
வன்கூவரில் எனது நண்பரின் உறவினரைச் சந்தித்தோம். அவர் பி.எச்.டி. முடித்து ஓர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். இள வயது வேறு. ஆனாலும் அதிகம் படித்தவர்கள் சிலருக்கு இருக்கும் சில கிறுக்குத்தனங்கள் அவருக்கும் இருந்தன போல எனக்குப்பட்டது. ஆனாலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு பின் எனக்கும் எனது நண்பருக்கும் தமிழில் கதைக்கவும் மாலை நேரங்களில் வீட்டை கூட்டிச் சென்று சோறும் பருப்புக் கறியும் தரவும் ஒருவர் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சியே.
ஒரு நாள் மாலை எங்களை கனடாவின் ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்லப்போவதாய் சொல்லிருந்தார். எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவ்வாறே அடுத்த நாள் மாலை கப்பலடிக்கு வந்து அங்கு எங்களுடன் கிறீக் உணவும் (அன்று மாட்டின் வாலில் செய்த சூப் என நினைக்கின்றேன்) சீனி போடாத கடும் கோப்பியும் அருந்தி விட்டு தன்னுடன் கூட்டிச் சென்றார். அது மேடையில் நடனம் நடைபெறும் மண்டபம். வட்ட வடிவிலான மேடை. அதனைச் சுற்றி பார்வையாளர்கள் பலர் குவிந்திருந்தார்கள், பொதுவாக அதிகம் பேர் தம்பதிகளாயும் வந்திருந்தார்கள். நாங்களும் போய் இரண்டாவதோ அல்லது மூன்றவது வரிசையில் உட்கார்ந்திருந்தோம்.
நடனம் ஆரம்பிக்க மண்டபத்தின் விளக்குகள் அணைந்து மேடையின் விளக்குகள் பிரகாசமாகத் தொடங்கின. தம் கணவன்மாருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த சில பெண்கள் தனித் தனியாக மேடையில் தோன்றத் தொடங்கினார்கள். அவர்களின் ஆடைகள் மெல்லியதாயும் கொஞ்சம் கவர்ச்சியாயும் இருந்தன. W
“அவர்கள் நல்ல குடும்ப பெண்கள். இது அவர்களின் தொழில் மட்டுமே. நடனம் முடிய கணவன்மாருடன் வீட்டிற்கு போய்விடுவார்கள்" பி.எச்.டி. சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு என்னவோ அன்று பி.எச்.டி.ஐ பிடிக்கவில்லை. அவர்கள் ஆடியபடியே தங்கள் ஒவ்வோர் ஆடையையும் மெதுமெதுவாக கழற்றத் தொடங்கி உள்ளாடைகளுடன்
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - g6) sensu 2011
மட்டும் ஆடும் நிலைக்கு வந்திருந்தார்கள். உண்மையில் அது என்னை பெரிதாக கவர்ந்திருக்கவில்லை. அதனை விட சுஜாத்தாவின் கதைகளுக்கு ஜெயராஜ் வரையும் ஒவியங்களில் அதிக கவர்ச்சி இருப்பதாக நினைத்துக் கொள்வேன். அந்த நினைப்பு மறைய முதல் அவள் தனது மார்புக்கச்சையைக் கழற்றி வீசினாள். மண்டபத்தில் கரகோசம் கிளர்ந்தது. பி.எச்.டி.யை முறைத்துப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்க வில்லை. சிறிது நேரம் தான். கடைசியாக உடலில் ஒட்டியிருந்ததும் மறைந்தது. எனக்கு வாந்தி வருமாப் போல இருக்க எழுந்து ரொயிலற் பக்கம் சென்றேன்.
“ஐ வில் கிவ் தவுசன்ைட் பக்ஸ் ரு கில் ஈச் ஒவ் தெம்” (ஒவ்வொருத்தரையும் கொல்லுபவருக்கு நான் ஆயிரம் டாலர்கள் கொடுப்பேன்) என அந்த மண்டபத்தை நட்ாத்துபவன் ரொயிலற்றுள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான்.
அந்தப் பெண்களை வைத்துத்தானே இவன் பிழைப்பு நடாத்துகின்றான். பின்பு ஏன் அவர்களைக் கொல்ல வேண்டும் என புரியாமல் பார்த்தேன். அவனின் கால் இடைகளுக்கிடையால் இரண்டொரு பெரிய கரப்பான் பூச்சிகள் ஓடிக்கொண்டு இருந்தன. அவன் அவற்றைத் துரத்திச் சென்றுகொண்டிருந்தான். பிறந்த மேனியுடன் மேடையில் ஆடும் பெண்கள் எனக்கு அருவருப்பு. அவனுக்கோ கரப்பான் பூச்சிகள். எனது நண்பனும் அந்த பி.எச்.டி.யும் மிக இயல்பாக இருந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எனக்குத்தான் பக்குவம் வரவில்லையோ என எண்ணிக் கொண்டேன். ஆனால் ஒரு கரப்பான் பூச்சியைக் கண்டு இந்தளவு தூரம் ஆக்ரோசித்த ஒரு மனிதனை அன்றுதான் கண்டேன்.
ஆனால் அவனது ஆக்ரோசத்தில் இருந்த நியாயத்தை முப்பது வருடங்களுக்கு பிறகு இப்போது தான் நான் உணர்கின்றேன்.
டென்டார்க்கில் செஞ்சிலுவைச் சங்கத்தின் கட்டடங்களில் அகதி வாழ்வை ஆரம்பித்த அதிகமானோரின் முதல் கனவு யாதெனில் டென்மார்காரர்கள் அரை அவியலும் கால் அவியலும் ஆக ஆக்கிக் கொடுப்பதை உண்ணாமல் தாமே எண்ணெய்யில் வதக்கி உப்பும் தூளும் தூக்காலாகப் போட்டு சமைத்துச்சாப்பிட்டக் கூடிய ஒரு தனியிடத்துக்கு போகவேண்டும் என்பதுதான்.
அவ்வாறு போவதற்று டென்மார்ககில் என்ன தனித்தனி வீடுகளாகட்டி வைத்திருக்கிறார்கள்? எனவே 2-3 குடும்பங்களை அல்லது தனியாக வந்தவர்களை ஒரே வீடுகளில் இருத்தினார்கள். கிடுகுவேலிக் கலாசாரத்துள் வளர்ந்த எங்களால் எப்படி ஒரே குசினியில் நின்று சமைக்க முடியும். சிலருக்கு வியாழக்கிழமை பாவித்த கரண்டி வெள்ளி அன்று கையில் படக்கூடாது. சிலருக்கு வெள்ளி இரவு தான் தண்ணியும் தொட்டுக் கொள்ள சைற் டிஸ்ஸும் கேட்கும். பின்பென்ன? வெள்ளி இரவு தொடங்கும் சண்டை திங்கள் காலை அகதிநிலைய வாசலில் போய் நிற்கும். இவ்வாறாக அசைந்து அசைந்து
21
Page 24
அனேகமானோருக்கு வாடகைக்கு ஒரு பிளாட் அல்லது வீடு கிடைக்கும். அடுத்த கனவுகள் மெதுமெதுவாக விரியத் தொடங்கும். பாவித்த ஒரு பழைய கார். பின் ஒரு புதுக் கார். பின் பக்கத்து வீட்டானின் காரை விட விலை கூடிய கார். இவ்வாறு இவ்வாறு வளர்ந்து இறுதியில் வீடு வேண்டுவதில் தொடங்கி பின் காணி வேண்டி அதில் புது வீடு கட்டும் கனவு. அதுவும் நிறைவேறியபின் கடைசியாக நடந்த நிகழ்ச்சியின் றைக்கோட்டை யாரும் இது வரை உடைக்கவில்லை. அதுதான் எங்கள் தங்கமணி அக்கா தனது வீட்டிற்கு அத்திவாரம் போடுவதற்கு நோர்வேயில் இருந்து ஒரு ஐயரை அழைத்து வந்தது தான். என்னத்தைத்தான் எங்கள் குறோன்களால் செய்ய முடியாது? அத்தனையையும் செய்தோம். நாமும் எங்கள் தகுதிக்கு தக்கவாறு ஐந்து வருடத்திற்கு முன் பத்துவருட ஒரு பழைய வீட்டை இருபது வருடக் கடனில் வேண்டி குடும்பமாக குடிபுகுந்தோம்.
மிக நல்ல காற்றோட்ட மான வெளிச்சமான வீடு. முதலில் இருந்த டெனிஸ்காரர் நிச்சயமாக நல்லாய் அந்த வீட்டைக் கவனித்துப் பேணி இருக்க வேண்டும். மேலாக அழகிய பூந்தோட்டம். வருடத் தின் வெவ்வேறு காலங்களில் பூக்கும் பூக்களை வேறு நட்டு வைத்திருந்தார்கள். பணி பெய்யும் மார்கழி-தை-மாசி மாதத்தைத் தவிர ஏதோ ஒரு பு, வீட்டின் ஏதோ ஒரு மூலையில் புத்தபடிதான் இருக்கும்.
டேனிஸ்காரர் தங்கள் சனி அல்லது ஞாயிறை முழுக்க முழுக்க வீட்டுப் பராமரிப்புக்கு என்று ஒதுக்கி வைப்பது போல எங்கள் வீட்டில் செய்யாவிட்டாலும் மனைவிக்காரி வெள்ளிக் கிழமைகளில் வீட்டை வடிவாக கூட்டிப் பெருக்கி கவனித்தே வந்தாள். நான் புல்லை வெட்டுவதிலும் வேலையை சரிப்பண்ணுவதிலும், வீட்டின் குப்பைகளை எட்டு கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள குப்பைகள் போடும் இடங்களுக்கு கொண்டு சென்று கொட்டும் இத்தியாதி வேலைகளில் ஈடுபட்டிருப்பேன். ஏதாவது பண வருவானமுள்ள வேலைகள் குறிப்பாக மொழி பெயர்பு வேலைகள் வந்தால் ஓடிவிடுவேன். வீட்டின் வேலைகள் தங்கிவிடும். மனைவி எப்பவும் நேர்ந்து கொண்டு இருப்பாள் சனி, ஞாயிறுகளில் ஊரில் உள்ள புருசன் பெண்டாட்டிகள் சண்டை பிடித்துக்
22
கொண்டு பொலிஸ் ஸ்ரேசனுக்கு போகக்கூடாது என்று. அல்லது ஏதோ ஒரு சீட்டுக்காரனின் சீட்டு முறிந்து கை கலப்பு வந்துவிடக்கூடாது என்று. இப்படி இத்தியாதி இத்தியாதி வேலைகள் வந்தபொழுதும் எங்கள் வீடு அழகாய்த் தான் இருந்தது - அழையாத ஒரு விருந்தாளி ஒருவர் எங்கள் வீட்டுக்குள் வரும் வரை.
ஆம் ஒரு நாள் இரவு அல்பிரட் கிச்சொக்கின் பேர்ட்ஸ் படம் ரி. வி.யில் போய்க் கொண்டு இருந்தது. மிக இளவயதில் பார்த்த படம். ஒரு கிராமத்தினுள் வரும் பறவைக் கூட்டமொன்று அந்த ஊரின் மக்களைக் கொத்தி கொத்தியே ஊரைவிட்டுத் துரத்தும் பயங்கரமும் வேதனையும் மிக்க படம். எனது மகள் மாருக்கு அது நல்ல படம் எனக் கூறி என்னுட்னேயே அவர்களை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தோம். அது முடிய கிட்டத்தட்ட இரவு ஒரு மணியாய் போய் விட்டது. அவர்களுக்கு கற்பனை தொடங்கி விட்டது. அந்த இரவில் அப்படி இரண்டு பறவைகள் வந்து யன்னலைக் கொத்த தொடங்கினால் என்ன செய்வது என்று.
ஒருவள் மற்றவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு படுக்கையறைக்குப் போக நான் குசினியுள் தண்ணிர் குடிக்கப் போனோன்.
குசினி லைற்றைப் போட எனக்குதிக் என்றது. சின்ன ஒரு கரப்பான் பூச்சி ஒன்று குடுகுடு என்று ஓடியது.
ஓடிப்போய் அடிக்கமுன் அது மறைந்து விட்டுது.
எனக்கு அப்படி ஒரு ஐந்து
வீட்டிற்குள் வந்தது நல்ல சகுனமாகப்படவில்லை
அது கரப்பான் போலவும் இருந்தது. கரப்பான் இல்லாது போலவும் இருந்தது.
நேராய் கம்பியுட்டரின முன் போய் இருந்து அவை பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன்.
எனது ஊகம் சரியாகத்தான் இருந்தது. அது கரப்பானின் இனம்தான். ஆனால் சிறியது. கரப்பானை விட ஒன்று பத்தாகவும் பத்து நூறாகவும் நூறு ஆயிரமாகமும் எங்கள் நாட்டில் வதந்திகள் பெருகும் விதம்போல் இருந்தது. அவற்றின் பெயர் ருஸ்க்க கக்கலாக்கள்' என இருந்தது - ஜேர்மன் கரப்பான் பூச்சிகள்.
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 25
எனக்குப் பயம் வந்தது - கிட் கொச்சின் பறவைகள் போல இவையும் எங்களை வீட்டை விட்டுத் துரத்தப் போகின்றனவா என்று.
அடுத்தநாள் இரவு வரை காத்திருந்தேன். இருட்டினுள் தான் அவை உலாவரும் என வாசித்திருந்ததால் அனைவரும் வேளையோடு உணவு அருந்திவிட்டு குசினி விளக்குகளை அணைத்து விட்டு ஓரிரண்டு மணித்தியாலம் கோலில் உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டிடம் ஐரோப்பியா தோற்றுக் கொண்டு இருந்தது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் என் மனம் எல்லாம் ஜேர்மனிய கரப்பான்களிடம் தான்.
குசினியுள் சென்று திடீரென விளக்குகளைப் போட்டேன்.
இன்று இருவர் ஒருவர் பின்னால் ஒருவர் ஓடிக் கொண்டு இருந்தார்கள். ஒடிச் சென்று ஒன்றை காலால் மிதித்தேன். அது நிலத்துடன் படிந்து விட்டது. மற்றையது மறைந்து விட்டது.
இனியும் பொறுக்க முடியாது என்று விட்டு அடுத்தநாள் சுகாதார அமைச்சுடன் தொட்ர்பு கொண்டேன்.
இறந்திருந்த ஒன்றை சின்ன பிளாஸ்ரிக் பையினுள் போட்டு அனுப்பச் சொன்னார்கள்.
அனுப்பினேன். இது ஜேர்மனிய கரப்பான்கள் என்றும் பொருந்தொகையாக உணவுப் பொருட்களை வேண்டும் பொழுது களஞ்சியச் சாக்கில் இருந்து குறிப்பாக ஆசிய ஆபிரிக்க நாட்டில் இருந்து வந்திருக் கலாம் எனவும் அபிப்பிராயப் பட்டார்கள். அதனை ஒழிப்பதற்கு பல நிறுவனங்கள் இருக்கின்றனவென்றும் அவற்றின் விலாசப்பட்டியல்களையும் அனுப்பி வைத்தார்கள். மாதமொன்றிற்கு ஆயிரம் குறோன்கள் இருபதினாயிரம் ரூப்ாய்) விகிதம் 12 தடவை வந்து அவர்கள் மருந்து விசிறினால் அதனை அழித்து விடுலாம் எனவும் ஆலோசனை கூறினார்கள். நான் மனைவியைப் பார்த்தேன். வழமைபோல அவள் எதுவும் சொல்வில்லை.
கொஞ்சம் பெருகினால் பார்ப்போம் என ஒரு கிழமை பொறுத்திருந்தேன். ஆனால் அவற்றின் பெருகல் பயம் கொள்ள வைத்தது. இனியும் பொறுப்பது உத்தேசம் இல்லை என்றுவிட்டு அந்த நிறுவனத்தை அழைத்தேன்.
வந்தார்கள். மருந்து விசிறத்தொடங்கினார்கள். ஆனால் இவற்றின் வருகையும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
முற்றாக அழிக்க முடியவில்லை. இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி யிருந்தது. மாதம் ஒருதரம் அவர்கள் வீசும் மருந்தால் எப்படி அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று எனக்குள்ளும் சந்தேகம்.
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஜூலை 2011
எனக்கு கோபம் கோபம் ஆக வந்தது. அவற்றின் மீதும், அந்தக் கம்பனி மீதும்.
இடையில் சம்மர் விடுமுறைககு என் தங்கையின் மகள் வந்தபோது அவள் அவற்றைக் கண்டு விட்டு அலறிய அலறல் இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. இனிமேல் பூச்சி வீட்டை வரமாட்டேன் என்று இப்பொழுதும் தொலைபேசியில் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
அந்த சம்மர் எல்லோர் மனதிலும் ஒரு காயத்தை ஏற்படுத்திய சம்மர் விடுமுறை. முள்ளிவாய்க்கால் சமர் முடிந்திருந்த நேரம். எல்லோரையும் பெருமெளனம் மூடியிருந்த நேரம். அரசியல் மெளனம் சூழ அப்பாவி மக்களின் கதறல்கள் வெளியுலகுக்கு கேட்கத் தொடங்கிய நேரம். ஊர்ஜிதப்படுத்தப்படாத உண்மைகள் வெளி வரத் தொடங்கிய நேரம்.
அதே சம்மர்லீவு காரணமாக மருந்து அடிக்கும் கம்பனிக்காரரும் மூன்று மாத லீவில் சென்றிருந்ததால் இந்த கரப்பானின் தொகையும் எங்கள் குசினியுள் அதிகரிக்க தொடங்கியது. மனைவி எல்லாத்தையும் சமாளித்தாலும் இங்கு பிறந்த மகள் மார் மிகவும் அருவருப்புபட்டார்கள்.
அப்பா வேறு வீடு வேண்டுவோம் என ஆக்கினை கொடுக்க தொடங்கியிருந்தார்கள்.
பொறுங்கள் பொறுங்கள் என்று விட்டு ஒரு நாள் இரவு நன்கு காத்திருந்து விட்டு மெதுவாய் போய் குசினி விளக்கைப் போட்டேன்.
நிலம் முழுக்க சின்னதும் பெரியதாயுமாய் அவற்றின் அளவுகளுக்கு ஏற்ப நிறைந்திருந்தன.
லைற் வெளிச்சத்திதையும் நான் வந்த அசைவை ஊகித்துக் கொண்டவைகளாக அவை அசைந்தோடத் தொடங்க இரு கைகளலும் அவற்றை அடிக்கத் தொடங்கினேன். என்ன பரிதாபம்!
அவைக்கு எங்கு ஓடுகின்றோம் எனத் தெரிய வில்லை.
வலது கையில் இருந்து தப்பியவை இடது கைக்குள் போய் இறந்தன.
இடது கைக்குள் இருந்து தப்பியவை வலது கைக்குள் போய் இறந்தன.
இரண்டு கைகளுக்குள்ளும் தப்பியவை ஓடும் திசை அறியாயது மீண்டும் என் கைக்குள் வந்து அடிபட்டு இறந்தன.
திடீரென முள்ளிவாய்க்கால் நினைவு வர எழுந்து போய் கைகளைக் கழுவிவிட்டு சோபா வில் போய் அமர்ந்தேன்.
அன்றிரவு நித்திரை கொள்ளவே இல்லை.
23
Page 26
விக்கிப்பீடியா - ஓர் ஆ
இ. ஒரு தகவல் தொழிநுட்ப யுகம். இந்தயுகத்தில் கல்வி, தொழில், நடைமுறை வாழ்வு ஆகியவற்றுக்கு தகவல்கள் &lguéollust 5 அமைகின்றன. இத்தகைய நிலையில் தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழ் மொழியிலே தகவல்களைப் பகிர்ந்து கொள்வது இன்றியமையாதது. மரபு வழி வருகின்ற நமது கலாசார விழுமியங்களைப் பேணும் வகையில் நமது பண்பாட்டுச் சுழலில், நமது கவனங்களுக்கு முன்னுரிமை தந்து தகவல்கள் பகிரப்படவேண்டும். இன்றைய காலத்தில் தகவல்களை குறைந்த செலவில் இலகுவாக எங்கும் பரிமாறிக் கொள்ள உதவும் ஊடகமாக இணையம் விளங்குகிறது. இணையத்தில் தன்னார்வலர்களான பயனர்களால் ஆக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் ஒரு கட்டற்ற, கட்டணமற்ற தமிழ்க் கலைக்களஞ்சியமாக தமிழ் விக்கிபீடியா உள்ளது. இது எளிய தமிழில் பல்துறை சார் தகவல்களை வகைவாரியாகவும், அகரவரிசை யிலும் தொகுத்து, வகுத்துத் தருகிறது. விக்கிப்பீடியாக உலகளாவிய ரீதியில் 281 மொழிகளில் சுமார் 1 கோடி 88 இலட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு இணைய வசதியுள்ளவர்களால் நினைத்த நேரத்தில் தேவைப்படும் விடயங்களை இலகுவாகவும், இலவச மாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது.
இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா பொது உள்வாங்கியாக காணப்படுவதினால் புத்தி ஜீவிகளுக்கும், கற்றவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தாம் தெரிந்தவற்றை தரவேற்றம் செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கி வருகின்றது. மொழி ரீதியாக ஒன்றுபட்டாலும்கூட பல்வேறுபட்ட கலை, கலாசார, பாரம்பரிய மரபுகள் சமூக ரீதியில் வித்தியாச்ப்படலாம். அவற்றையும் திரட்டி எதிர்கால சந்ததியினருக்கு தம் முன்னைய தலைமுறையினரின் வரலாறுகளைப் பற்றியும், கலாசார பாரம்பரியங்களின் மான்மியங்கள் பற்றியும் தம் மொழியினூடே அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதில் விக்கிப்பீடியா இன்றைய காலகட்டத்தில் முன்நிற்கின்றது. கலைக்களஞ்சியங்கள் என்றால் என்ன?
மனிதனின் அறிவியல் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இயந்திர மயமான இத்தகைய யுகத்தில் ஒரு மனிதனால் சகல அறிவியல் விடயங்களையும் தெரிந்து வைத்திருக்க
24
காைபூசணம்
Ldraiwi II far
முடியாது. இருப்பினும், தனது தேவைகளுக்கேற்ப அவசியப்படக்கூடிய தகவல்களை எவ்வாறு, எங்கே பெறலாம் என்ற விபரத்தினை தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாகின்றது. இவ்வாறாக மனிதனின் அறிவுப் பசிக்கு தீனி போடக்கூடிய விடயங்களில் ஒன்றாகவே கலைக்களஞ்சியங்கள் விளங்குகின்றன.
கலைக்களஞ்சியம் என்றால் "எழுத்துருவிலான அறிவுத்தொகுப்பு” என வரைவிலக்கணப்படுத்தலாம். உலக அறிவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் அக்ரவரிசைப்பட தொகுக்கப்பட்டதாகவுமுள்ள நூல் தொகுதிகளையே பொதுவாகக் கலைக்களஞ்சியங்கள் என்கிறோம். இவை ஆங்கிலத்தில் என்சைக்ளோபீடியா (Encyclopedia) என அழைக்கப்படுகின்றன. EnkykloS Paideia என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தே இப்பெயர் உருவாகியுள்ளது. இதன் பொருள் "சகலவற்றையும் உள்ளடக்கிய கல்வி" என்பதாகும்.
கலைக்களஞ்சியங்கள் வரலாற்றுச் சுருக்கம்.
கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டோட்டில் (Aristote) பல்வேறு அறிவுத்துறைகளைப் பற்றித் தனது நூலில்களில் எழுதிவைத்திருந்தார். அத்தோடு அன்றைய உலகிலிருந்த அறிவையெல்லாம் சுருக்கித் தொகுத்துவைக்க அவர் முயற்சிஎடுத்திருந்தார். இதன் காரணமாக 'கலைக்களஞ்சியங்களின் தந்தை” என அவர் அழைக்கப்படுகிறார். எனினும், முதலாவது கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் எனக் கருதப்படுபவர் கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானியான Speusippus என்ப வராவார். இவர் பிளேட்டோவின் மாணவர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
முதலாவது கலைக்களஞ்சியத் தொகுதியொன்றை 2.56.JPräseáluLu6uj uDITğaB6rò 6.GJIT (Marcus Terentius Varro) என்பவரே. இலத்தீன் மொழியில் Disciplinae என அழைக்கப்பட்ட இத்தொகுதி இவரால் கி.மு. 30ம் ஆண்டளவில் எழுதப்பட்டது. இத்தொகுதியில் 9 புத்தகங்கள் இருந்தன. எனினும், இவற்றில் ஒன்றுகூட இப்போது இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்நிலையில் தற்போதும் முழுமையாகப் பேணப்பட்டிருக்கும் மிகப் பழைய கலைக்களஞ்சியம் Historia Naturalis (இயற்கை வரலாறு) என்பதாகும். &56060T eup;55 Sassof (Piliny the Elder) 6T6trusily கி.பி. 79ம் ஆண்டளவில் தொகுத்தார். இந்தக்
ஞானம் - கலை கைகிய சஞ்சிகை - gbleMa 2011
Page 27
கலைக்களஞ்சியத் தொகுப்பில் 37 நூல்களும், 2493 அத்தியாயங்களும் இருக்கின்றன. 1500 ஆண்டு களுக்கு மேலாக இது மிகப் பிரபல்யம் பெற்று விளங்கியது.
நவீன கலைக்களஞ்சியங்கள் தற்போது பயன் பாட்டிலுள்ள கலைக்களஞ்சியாங் களுள் நீண்ட வரலாறு கொண்டது Encyclopeadia Britannica எனும் பிரித்தானியக் கலைக்களஞ்சிய LDT.g. b. 8s. 17686). Andrew Bell, Colin Mac Farquhar, William Smellie ebaáluu 3 6ò6a5ITŮ லாந்தியர்களால் உருவாக்கப் பட்டது. 1929ல் இது முற்றாகத் திருத்தியமைக்கப்பட்டு 24 பாகங்களாக வெளியிடப்பட்டது. பின்னர் 1974ல் முற்றிலும் புதிய ugluurias 3O urasstiabel5L60, New Encyclopeadia Britannica என்ற பெயரில் வெளிவந்தது. இதன் திருத்திய பதிப்பு 32 பாகங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்தத் தொகுதி தற்போது ஐக்கிய அமெரிக்காவிலிருந்தே வெளியிடப்படுகின்றது. இதே போல சிறுவர்களுக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கலைக் கலைக்களஞ்சியத் தொகுப்புகள் பல தற்போது இருக்கின்றன.
நூலுருப்பெறாத கலைக் கலைக்களஞ்சியங்கள் 1980களில் இலத்திரோனிக் முறைகளில் CDகளில் பதிவு செய்யப்பட்ட கலைக் கலைக்களஞ்சியங்கள் வெளிவரத் தொடங்கின. இவற்றைக் கணினிகளில் உள்ள CD Drive களைப் பயன்படுத்தி இயக்க முடியும். இந்த CD தட்டுக்களில் எழுத்துக்கள் மட்டுமன்றி சித்திரங்கள், போட்டோக்கள், வீடியோக்கள், ஒலிகள் என்பனவும் பதிவு செய்யப்பட்டிருக்கும். எழுத்துக் களையும், படங்களையும் கணினித்திரையில் பார்க்கும் அதேவேளை ஒலிகளை ஒலிபெருக்கி மூலம் கேட்கலாம். இவ்வாறான கலைக் கலைக்களஞ்சியங்கள் எழுத்து, படங்கள், வீடியோ, ஒலி போன்ற பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக Multi-Media Encyclopeadia 6T60T elecogdis sil படுகின்றன. நூலுருவிலுள்ள கலைக் கலைக் களஞ்சியங்களை விட அதிக தகவல்களை வழங்கக் கூடியனவாக இவை இருக்கின்றன.
கலைக்களஞ்சிய தளங்கள் கலைக்களஞ்சிய தளங்கள் என்பன நவீன இலத்திரனியல் தொழிநுட்பத்தின் வளர்ச்சியில் பெறப்பட்ட ஆவணமாக்கல் பொக்கிசங்களாகும். இன்று கலைக்களஞ்சிய தளங்கள் என்ற அடிப்படையில் விக்கிபீடியா, மைக்ரோசொஃப்ட் என் கார்ட்டா, பிரிட்டானிக்கா, என்சைக்ளோபீடியா டொட் கொம் போன்ற சில தளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் விக்கிபீடியா கலைக்களஞ்சிய தளம் முதன்மை நிலையைப் பெற்று விளங்குகின்றது. விக்கி என்றால் என்ன? விக்கி (Wiki) என்னும் சொல், 'வாய் மொழியில் வழங்கப்படும் 'விரைவு என்னும் பொருளைத் தரும் சொல்லாகும். இந்த இணையத்தளத்துக்கு வரும் பார்வையாளர்களால் தளத்தின் உள்ளடக்கத்தை
ஞானம் - soooo 6006fu ogbdotoab - ஜூலை 2011
திருத்தவோ, கூட்டவோ குறைக்கவோ மாற்றியமைக்கக் கூடியதாகவோ இருக்கும். நடைமுறைக்கும் தொடர் பாடல்களுக்கும் இது எளிமையானதாக இருப்பதால், விக்கிகள் கூட்டு எழுத்தாக்க முயற்சிகளுக்கு சிறந்த கருவியாகத் திகழ்கின்றன. விக்கி என்ற சொல், இது போன்ற இணையத்தளங்களை இயக்க உதவும் விக்கி மென்பொருளைக் குறிக்கும். விக்கிவெப்" என்ற மென்பொருள் தான் விக்கி முறையில் அமைந்த முதல் மென்பொருளாகும். விக்கிவெப் என்ற பெயரை 'வார்ட் கன்னிங்"ாம்” என்பவர் முதன்முதலில் இட்டார். விக்கி இணையத்தளங்களுக்கு எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியா, விக்சனரி ஆகிய இணையத்தளங்களை குறிப்பிடலாம். 63d. (Wiki)+ 6T6örGodsidG6IIITipur (Encyclopedia) என்னும் இரு சொற்கள் இணைந்தே விக்கிபீடியா (Wikipedia) என்ற சொல் உருவானது.
விக்கிபீடியா உருவாக்கமும், வளர்ச்சியும் விக்கிப்பீடியா என்பது இணையத்தில் இயங்குவதும், கூட்டுமுயற்சியால் உருவாக்கப் படுவதுமான கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டம் ஆகும். புதிய மிலேனியத்தின் ஆரம்பத்தில் நுட்பீடியா” என்ற இலவச இணைய கலைக் களஞ்சியப் பணியைப் புரிந்தவரும், தற்போது விக்கிப்பீடியாத் திட்டங்களை முன்னின்று நடத்தும் விக்கிமீடியா அமைப்பின் தாபகரும், வேறுபல விக்கிதிட்டங்களை நடத்துபவருமான அமெரிக்க "ஜிம்மி வேல்ஸ்" (ஜிம்மி டொனால்ட் ஜிம்போ வேல்ஸ் - பிறப்பு ஆகஸ்ட் 7, 1966), மற்றும் அமெரிக்க மெய்யியலாளரும், விக்கிப்பீடியா வினை கூட்டாக நிறுவியவரும் இலவச தகவல் களஞ்சியமர்ன சிடிசென்டியம் (குடிமக்கள் தொகுப்பு) உருவாக்குன ருமான லாரன்சு மார்க் லாரி சாங்கர்’ (பிறப்பு ஜ/லை 16, 1968) ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பித்தது தான் விக்கிப்பீடியா. அனைவரும் பங்களிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட கலைக்களஞ்சியம் உருவாக்கும் இலக்குகளை வேல்ஸ் தீர்மானிக்க, சாங்கர் அந்த இலக்கினை அடைய, விக்கி மென்பொருளை பயன்படுத்தும் திட்டத்தை வழிவகுத்தார். இவ்விதமாக ஜனவரி 15, 2001 இல் ஆங்கில மொழியில் மட்டும் பதிப்பித்த விக்கிப்பீடியா பிறந்தது. அதன் நடுநாயகமான நடுநிலைநோக்கு கொள்கை மற்றும் பிற கொள்கை வழிகாட்டல்கள், நுபிடியாவில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளை யொட்டி உருவாக்கப்பட்டன.
விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் இறுதியில் 18 6LDIT glas6ife) or LDT 20, OOO as G6Odys60d6IT உள்ளடக்கியிருந்தது. 2011 ஜூன் 05ம் திகதி 281 மொழிகள் என பல மொழிகளில் இது ஓர் இயக்கமாக வியாபித்துள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் ஜூன் 5, 2011 இல் 3,651,105 கட்டுரைகளும், 281 மொழிகளிலு முள்ள விக்கிப்பீடியாக்களில் 18867626 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஆங்கில விக்கிபீடியாவில் ஜூன் 5, 2011 இல் 14,680,558 பயனர்களும், 281 மொழிகளிலுமுள்ள விக்கிப்பீடியாக்களில் 29 309 457 பயனர்களும் பங்களித்துள்ளனர்.
25
Page 28
விளம்பரங்களும், வணிக நோக்கங்களும் விக்கிப்பீடியாவின் இலக்குகளை கட்டுப்படுத்தாது இருக்கும் வகையில் வேல்ஸ் 2002ஆம் ஆண்டு விக்கிப்பீடியா ஒர்க் என்ற தளத்திற்கு நகர்த்தி விளம்பரங்கள் எதுவும் இன்றி இயங்க வழிவகுத்தார். இணையாக வளர்ந்த நுபிடியாவின் வழங்கிகள் 2003ஆம் ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டு, முழுவதுமாக விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டது. விக்கிப்பீடியாவின் கொள்கை தடைவிதிக்கும் முதல் ஆய்வுகளை தடங்கல்களாக கருதிய சிலர் விக்கி இன்ஃ போ தளத்தை ஆரம்பித்தனர். இதே போன்று வணிக காரணங்களுக்காக சிடிசெண்டியம், ஸ்காலர்பீடியா, கன்சர்வபீடியா, கூகிளின் நால் (Knol) போன்றவையும் உருவாக்கம் பெற்றன.
விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டம். பல மொழிகளில் இயங்கும் இதில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்களிப்புச் செய்து வருகின்றனர். இங்கு எவரும் கட்டுரைகளைப் புதிதாக எழுதவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும், திருத்தவும் முடியும். இதற்காகப் பதிவு செய்து கொள்வது கூட அவசியம் இல்லை. இது முற்றிலும் இலவசமாக இருப்பதினால் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதனைப் பயன்படுத்த முடியும். எவரும் இதனைத் தம்மோடு வைத்துக்கொள்ள முடியும். கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் கட்டுரை களை விட அதிகமான தகவல்கள் தமக்கு தெரிந்திருந தால் அத்தகவல்களை எவரும் இக்கலைக்களஞ்சியத்தில் சேர்த்துவிடமுடியும். தகவற்பிழைகள் ஏதுமிருந்தால் எந்த கட்டுப்பாடுகளுமின்றி அவற்றை திருத்திவிட முடியும். எவரும் தமக்கு தெரிந்த விடயங்கள் தொடர்பாக எந்த அளவிலாயினும் கட்டுரைகளை இந்த கலைக்களஞ்சியத்தில் புதிதாக உருவாக்க முடியும். அங்கே இருக்கும் பிற கட்டுரைகளை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தமுடியும். அப்படியே நகலெடுத்து தன்னுடைய புத்தகம் ஒன்றில் சேர்த்துக்கொள்ள முடியும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். எந்தக் காப்புரிமைச் சிக்கலும் எழாது. கலைக்களஞ்சியத்தில் புதிதாக செய்யப்படும் திறந்த நிலை மாற்றங்களைக் கண்காணித்து தகாதனவற்றை எவரும் நீக்கிவிடவும் முடியும். தமிழ் விக்கிப்பீடியா
எளிய தமிழில், தரமான, கட்டற்ற கலைக் களஞ்சியத்தை உருவாக்குவதே தமிழ் விக்கிப்பீடியாவின் முதன்மைக் குறிக்கோளாகும். தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஓர் இடம் ஒதுக்க்ப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப் பீடியா உருவானது. தமிழ் விக்கிப்பீடியா தளம் ஆங்கில இடைமுகத்துடன் காணப்பட்ட நிலையில் தமிழ்
26
விக்கிப்பீடியாவின் முன்னோடியாகக் கருதப்படும் இ. மயூரநாதன் நவம்பர் 2003 இல் தளத்தின் இடைமுகத்தின் பெரும்பகுதியைத் தமிழாக்கினார். ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் கட்டிடக் கலைஞராகப் பணியாற்றிவரும் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ. மயூரநாதன், யாழ்ப்பாணம் வைதீஸ்வரா கல்லூரியில் பழைய மாணவராவார். செப்டம்பர் 19, 2003 இல் இவரின் முதல் கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்தும் இவர் பணியாற்றி அக்டோபர் O3, 2005ல் 5 Ο Ο கட்டுரைகளையும், நவம்பர் 16, 2010ல் 3289 கட்டுரைகளையும் உள்ளிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாக ஏழாண்டுகளுக்கு மேல் சேவையாற்றிவரும் இவரின் பணி இன்றுவரை தொடர்கிறது. இவர் நாளொன்றுக்கு 1.26 கட்டுரைகளை எழுதுகின்றார் என புள்ளிவிபரங்களிலிருந்து கண்டுகொள்ளலாம்.
ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்த அமல்சிங் என்ற பயனர் ஆங்கில தலைப்புடன் நவம்பர் 12, 2003 இல் முதல் தமிழ் கட்டுரையை வெளியிலிருந்து உள்ளிட்டார். ஜூன் 5, 2011 வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 32,648 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் மிகவும் மெதுவாகவே தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்தாலும், எவ்வித தொய்வும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சியடைந்து கொண்டே வருகின்றது. பிறமொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒப்பிடுகையில் கட்டுரைகள் உள்ளாக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா 65வது இடத்தில் இருக்கின்றது. ஜூன் 5, 2011 வரை 27,819 க்கு மேற்பட்டவர்கள் தம்மைப் பயனர்களாகப் பதிவு செய்துகொண்டுள்ளனர். எனினும் தொடர்ச்சியாக பங்களித்து வருபவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாகும். உலகளவில் எடுத்துக் கொள்ளும்போது தமிழ் நாட்டிலே அதிக பயனர்கள் இருப்பதை அவதானிக்கலாம். உலகில் பல நாடுகளிலும் விக்கி பயனர்கள் தம் பங்களிப்பினைச் செலுத்தி வருகின்றனர். இங்கு பயனர்கள் அதிகமாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் விக்கியில் பல தரமான கட்டுரைகள் உள்வாங்கப்படுமென எதிர்பார்க்கலாம்.
தமிழ் விக்கிப்பீடியா குறிக்கோளும், கொள்கை களும்.
விக்கிப்பீடியா பல மொழிகளில் அமையப்பெற்றிருந் தாலும்கூட, குறித்த மொழியின் குறித்த மொழிசார் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றது. இவ்வடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இலகு தமிழில், தரமான, கட்டற்ற கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முதன்மைக் குறிக்கோளைக் கொண்டுள்ளமையால் இது நடுநிலை நோக்கு, பதிப்புரிமைகளை மீறாமை, மெய்யறி தன்மை, இணக்க முடிவு, பாதுகாப்புக் கொள்கை, தனி நபர் விமர்சனங்களைத் தவிர்த்தல், பங்காற்றும் பயனர்களின் பங்களிப்புக்களுக்கு மதிப்பளித்தல் போன்ற கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 29
இதன் பணிகள் தூரநோக்குடன் செயற்படுத்தப் படுகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா இயங்குகின்ற அடிப்படைக் கொள்கைகளைத் தொகுப்பாளர்கள் ஐந்து தூண்கள் என்று சுருக்கி வரையறுத்துள்ளனர்.
1) கலைக் களஞ்சியம் வடிவில் அமைதல், 2) கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு அமைதல், 3) கட்டற்ற உள்ளடக்கம், 4) அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், 5) இறுக்கமான சட்ட திட்டங்கள் இல்லாமை. இதில் முதலாவது கொள்கையில் தமிழ் விக்கிப்பீடியாவை கலைக்களஞ்சியமாக வார்த்தல் கொள்ளப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கம் நம்பகமான மூலங்களை மேற்கோள்களிட்டு சரிபார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். எனவும் தொகுப்பாளர்களின் ஆய்வுகள், கருத்துக்கள் குறித்து கருத்துமுரண்பாடுகள் இடம் பெறக் கூடாது எனவும் இதனை ஒரு விவாதமேடையாகவோ, விளம்பர தளமாகவோ, சுய தன் பாராட்டு அரங்காகவோ பயன்படுத்தக்கூடாது எனவும் இதனூடாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இரண்டாவதாக தமிழ் விக்கிப்பீடியா நடுநிலை நோக்குக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றது. எந்தவொரு கட்டுரையிலும் தனி நபர் சார்புள்ள அல்லது ஒரு குழுசார்புள்ள கருத்துநிலையைத் தவிர்க்கின்றது. கட்டுரையின் நடுநிலை நோக்குக் குறித்து விவாதங்கள் எழும்போது, அவற்றை பேச்சுப் பக்கத்தில் விவரமாக விவாதிக்க அனுமதிக்கின்றது.
மூன்றாவது கொள்கையில் விக்கிப்பீடியா உள்ளடக்கம் கட்டற்றதாக அமையவேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனை யாராலும் தொகுக்கவும், பகிரவும் முடியும். அதேநேரம், காப்புரிமை சட்டங்களை மதித்து அனைவரதும் பங்களிப்புக்கும் பொதுப்பரப்பில் கட்டற்ற உரிமம் வழங்கப்படுவதால், எந்தத் தொகுப்பாளரும் எந்த உள்ளடக்கத்திற்கும் உரிமை கோர முடியாது.
நான்காவது கொள்கையாக விக்கிப்பீடியர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும் என எதிர்ப்பார்க் கப்படுகின்றது. சக விக்கிப்பீடியரை மதிக்கவும், பண்புடன் நடந்து கொள்ளவும் வேண்டப்படுகின்றனர். புதிய பயனர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் பண்பு
விவாதங்கள், வாசகர் ச விவாதங்கள் 500 சொற்களுக்கு மேற்படாமல் இரு கடிதங்கள் 200 சொற்களுக்குள் அடங்குதல் வே பிரசுரிக்கப்பட மாட்டாது. ஒவ்வொரு மாதமும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்ந்துவரும் இதழ் சொந்தப் பெயர் முகவரியை வேறாக இணைத்த கொள்ளப்படின் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கப்படு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 201:
விக்கிப்பீடியாவில் பயனர்களிடத்தில் காணப்படுவது இக்கொள்கையின் வெளிப்பாடாகும்.
ஐந்தாவதாக விக்கிப்பீடியாவில் இறுக்கமான விதிமுறைகள் காணப்படாதிருக்க வேண்டுமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேற்படி ஐந்து பொதுக் கொள்கைகளைத் தவிர வேறு கட்டுப்பாடுகள் விக்கியில் இல்லை. துணிவுடன் எந்தக் கட்டுரையை வேண்டுமானாலும் இற்றைப் படுத்தவும், தவறுகள், பிழைகளைத் திருத்தவும் முடியும். ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளில் புதிய பகுதிகளைச் சேர்க்கலாம், தேவையானால் மாற்றங் களையும் செய்யலாம் என்பதே இத் திட்டத்தின் சிறப்பு ஆகும். இதனால், ஒவ்வொரு நாளும் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதப்படுவதுடன், அவற்றிலுள்ள விடயங்கள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டும் வருகின்றன.
தமிழ் விக்கிப்பீடியாவில் பிரதான உள்ளடக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் பிரதான உள்ளடக்கமாக பின்வரும் பிரதான தலைப்புகள் அமைகின்றன. தமிழ், பனபாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள். இவை மேல்விக்கயில் எல்லாமொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய மூல கட்டுரை அமைப்புகள் என பரிந்துரை செய்யப் பட்டவையாகும். மேற்படி ஒன்பது பிரதான தலைப்புகளுக்கமைய விக்கிப்பீடியாவில் காணப்படக் கூடிய கட்டுரைகள் பல துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைப்படுத்தலின் கீழ் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. விக்கியின் மென்பொருள் தொழில்நுட்பம் மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் காணப்படுவதினால் தமிழ் விக்கிப்பீடியா விலுள்ள கட்டுரை களில் பயணிப்பது இலகு. மேலும் குறித்த விடயம் தொடர்பாக தேடல் மேற்கொள்ள வேண்டுமெனில் தேடல் கட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்து உரிய தலைப்பைத் தேடலாம். ஒரு தகவல் களஞ்சியம் என்ற வகையில் விக்கிப் பீடியாவில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் தரமான வை. ஆதாரபூர்வமானவை. மேலும் உரிய கட்டுரைகள் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் வெளியிணைப்புகளை தேர்ந்து அதனைச் சொடுக்கு வதன் மூலம் விரிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். வெளியிணைப் புக்கள் தமிழ் மொழியிலேயே இருக்குமெனக் கருத முடியாது.
(மிகுதி அடுத்த இதழில்)
டிதங்கள், படைப்புக்கள் த்தல் வேண்டும். வாசகர் பேசுகிறார்? பகுதிக்கான *ண்டும். இவ்வரையறைகளுக்கு மேற்படின் அவை 20ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கும் ல் இடம்பெறும். புனைபெயரில் எழுதுபவர்கள், தமது ல் வேண்டும். படைப்புக்கள் பிரசுரத்துக்கு ஏற்றுக் - ஆசிரியர்
27
Page 30
st ثم هل سمكة ولا
மண்ணிலிருந்து வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரம் தன் பசிய இலைகள் ஊடாக வியர்வை சிந்திக் கருகுவதைப் போல மனித உயிர்கள் அடாவடித்தனமாக பறிக்கப்படுவதைக் கண்டும் மனம் கலங்காத கல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உயிரைப் பறிப்பது மட்டுமல்ல தன் மண்ணி லிருந்து தூக்கி எறியப்படுவதும் அத்தகையதே. ஒருவர் காலாகாலமாக வாழ்ந்த பூமியை மற்றொருவர் அடாவடித்தனமாக பிடித்து அமுக்கித் தமதாக்கி, அதன் பூர்வீக உரிமையாளர்களை அடக்கி ஒடுக்கி இரண்டாந்தரப் பிரஜைகளாக்குவது அநியாயமான செயல்பாடு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டும் என்றில்லை. தான் மாத்திரமல்ல தனது பெற்றோர், பேரன், பீட்டிகள் எனப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை இழப்பதன் சோகத்தை வார்த்தை சிறைகளுக்குள் அடக்க முடியாது.
பாலஸ்தீனர்கள் தமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். மிகுதி மண்ணில் அடையாள அட்டை, வேலை செய்வதற்குப் பாஸ், இஸ்ரேலியர்களை எதிர்த்துப் பேசினால் கடும் தண்டனை எனக் கடுமையான அடக்கு முறைகளுக்கு ஆளானார்கள். இந்த நிலையை அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். பாலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றியும், இனவெறி பிடித்த
28
இஸ்ரேலிய அரசின் வெறித்தனமான செயற் பாடுகளையும், அதற்குத் துணை போகும் மேலைத் தேச அரசுகள் எனப் பலதையும் அறிந்து வைத்திருக் கிறோம்.
ஆயினும் றீமிக்சிங் செய்யும் ஊடக ஒலிகளுக்கு அப்பால், அங்கு வாழும் சாதாரண மக்களின் குரலை இயல்பாகக் கேட்டது அரிது. நான்கு பெண்களின் வாழ்வின் நாதமாக, போரினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களின் குரல் இத் திரைப்படத்தில் ஒலிக்கிறது. ஆனால் அந்த நான்கு குரல்களும் ஒரே லயமானவை அல்ல. சுரதிபேதம் கொண்டவை. அவர்களது பார்வைகள் ஒரே விதமான பார்வைகள் அல்ல. வெவ்வேறு கோணங்களில் தெறிக்கும் பார்வைகள். ஒரே அடிப்படைப் பிரச்சனையை, வஞ்சிக்கப்பட்ட அந்த ஒரே வாழ்வை நால்வரும் அனுபவித்தாலும் அவர்களது எண்ணம், எதிர்பார்ப்புகள், எல்லாம் பல்வேறு விதங்களாக இருக்கின்றன.
மிரால் என்ற இச் சினிமா அமெரிக்க தயாரிப் பாளரால், அமெரிக்க நெறியாளர் ஊடாக அமெரிக்க சமுதாயத்திற்காக எடுக்கப்பட்டது. இருந்தபோதும் ரூலா ஜெப்ரியல் என்ற பெண்ணினது சுயசரிதை நூலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் பாலாஸ்தீனக் குரல் அடிநாதமாக ஒலித்தபடியிருப்பதைத் தடுக்க முடியவில்லை எனலாம். ஆங்கிலப்படம். ஆயினும் இடையிடையே அரபி மொழி கலந்திருக்கிறது. முக்கியமாக அவர்களின் கலை, பண்பாட்டு அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும்போது. இதனால் ஆங்கில உபதலைப்பின்றியும் புரிவதில் சிரமமிருக்கவில்லை.
படத்தின் பிரதான பாத்திரம் மிரால் என்ற இன்றைய பெண். இவள் வாழ்வே படத்தின் முக்கிய பகுதி. இவளது வாழ்க்கைப் பாதையைச் செதுக்குவதில் ஏதொவொரு வழியில் உதவியவர்கள் ஏனைய மூவருமாவர். பிரதான பாத்திரம் திரையில் வருவதற்கு முன்னர் கிட்டத்தட்ட படத்தின் மூன்றில் ஒரு பகுதி ஓடி முடிந்துவிடுகிறது. பாலஸ்தீனியப் பிரச்சனையை ஓரளவு புரிந்து கொள்ள இது அவசியம்தான். ஆனாலும் கருவின் மையத்துள் நுழைவதற்கு இவ்வளவு நேரம் எடுப்பது சற்றுச் சோர்வு அளிக்கிறது. அத்துடன் ஆரம்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வதில் சற்று சிக்கல்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 31
இருந்தது. வேறு விதமாக எடிட் பண்ணியிருக்க முடியாதா என எண்ணத் தோன்றுகிறது.
முதல் பெண் ஹின்ட் ஹிசெனி. இவள் முதலாமவள். பாலஸ்தீனத்திலிருந்து ஒரு பகுதியைப் பிய்த்தெடுத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அறிமுகமாகிறாள். இஸ்ரேல் உருவானபோது ஏற்பட்ட போரில் அநாதைகளான, வாழ வழியில்லாத மக்களின் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி, வளர்த்து, கல்வியுட்டி நல்ல பிரஜைகளாக்குவதற்காக தனது சொந்த வீட்டையே பள்ளியாக்குகிறாள். அது Tit AlArabi Institute 6T6öryp 6NuuUGBUITGB éĐgáfuu6ö FTuu6ö Lupulungö மனிதாபிமான கல்வி நிறுவனமாகத் தொண்டாற் றுகிறது.
இரண்டாமவள் நடியா. இவள் தான் மிராலின் தாய் ஆவாள். பாலியல் 2 ரீதியாக வஞ்சிக்கப்பட்டவள். ஒரு இஸ்ரேலியப் பெண்னை பஸ்சில் வைத்து அடித்ததற்காகச் சிறை செல்கிறாள். அங்கு மூன்றாமவளான பற்றிமாவைச் சந்திக்கிறாள். பற்றிமா இஸ்ரேலியரின் & 6)gigold 60T நடவடிக்கைளில்
தாய் நாட்டில் பற்றும், கொண்ட \ பெண். தீவிர வாதி எனலாம். இஸ்ரேலியர்கள் சினிமா பார்க்கும் அரங்கில் வெடி குண்டு வைத்த தால் அகப்பட்டுச் சிறை செல்கி றாள். சிறையில் இருவரும் அறிமுகமாகிறார்கள்.
நான்கு பெண்களின் கதையாக இருந்தபோதும் ஹின்ட் ஹிசெனி, அவளது பள்ளிக்கூடம், அவளது நம்பிக்கைகள் என்ற அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட மாளிகையாக சினிமா அமைகிறது. மாளிகையாக இருப்பது முக்கிய கதாபாத்திரமான மிராலின் வாழ்க்கை.
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினரின் மூர்க்கத்தனமும், எதேச்சிகார நடவடிக்கைகளும், அடாவடித்தனங்களும் கோபப்பட வைக்கின்றன. தமது வீட்டில் வாழ்ந்தவர்களை ஒரு சிலநிமிட அறிவித்தலுடன் வெளியேற்றி வீதியில் கலைத்துவிட்டு அவர்களது வீட்டை பாரிய இயந்திரங்களால் நிர்மூலமாக்கும் காட்சி மனதைக் குடைகிறது. மனதில் இயலாமையும் கோபமும் கொப்பளிக்க எதுவும் செய்ய முடியாது ஏக்கத்திடன் பார்த்திருக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. வீதியில் நின்று கல்லெறிந்து தமது
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
எதிர்ப்பைக் காட்டும் சாமானியர்கள் துப்பாக்கி குண்டுகளால் தண்டிக்கப்படுகின்றனர்.
மற்றொரு காட்சியில் பற்றிமாவுக்கு ஆயுற்காலச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. குண்டு வைத்ததற்காக இரண்டு, இஸ்ரேலிய நீதிபதிக்கு முன் எழுந்து நின்று மரியாதை செய்யாததற்காக மூன்றாவது. சட்டமும், நீதியும் கூட எதேச்சிகார ஆட்சிகளுக்கு முண்டு கொடுப்பதற்காக பாகுபாடு காட்டுகின்றன. ஈவிரக்கமின்றியும் தான்தோன்றித் தனமாகவும் நடந்து கொள்கின்றன. இவை வெறுக்க வைத்தாலும், நாம் அறியாதது அல்ல.
மிராலின் அன்புக்குரியவன் பாதையால் செல்லும்போது சடு தரியாக பாதுகாப்புச் சாவடி யு ள இழுத்து ஒசை
முடிக்கிறார்கள். அவன் குற்ற வாளியாக . இருக்கலாம். இல்லாமலும் இருந்திருக் கலாம். ஆனால்
விசாரணை, நீதிமன்றம், வழக்கு என எதுவும் இல்லாது மறைவாகக் கொன்று தடயமின்றி அழிக்கப்படுகிறான். பல வருடங் களின் பின் புதைகுழியிலிருந்து மீட்கப்படக் கூடிய இனங்காணப் படாத உடலின் எச்சங்களில் இவனதும் அடங்கியிருக் கலாம்.
இனவாத அரசுகள் இவ்வாறுதான் தமது இராணுவங்களுக்கு புனிதக் கடமையெனப் பெயர் சூட்டி அளப்பற்ற அதிகாரங்களை வழங்குகின்றன. தட்டிக்கேட்க யாருமில்லை.
ஆனால் அதே நேரம் விடுதலை இயக்கங்கள் இனவிடுதலை என்ற பெயரில் தமது மக்கள் மனங்களை மூளைச்சலவை செய்கின்றன. பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லுதல் ஆட்கடத்தல் என பயங்கரச் செயல்களில் ஈடுபடுகின்றன. தாம் செய்யும் ஜனநாயக விரோத, தனிமனித சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் சரியானவை என நம்ப வைக்கும் செயற்பாடுகளில் முனைகின்றன.
முரணான இந்தஇருபக்கங்களையும் இத்திரைப்படம் காட்சிப்படுத்த முனைகின்றது. அதனால் இஸ்ரேல் சார்பான அமெரிக்க மற்றும் மேற்குலக மக்கள் இது பாலஸ்தீனக் குரலாக மட்டுமே ஒலிக்கிறது. பக்க சார்பானது எனக்
29
Page 32
கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் பாலஸ்தீன பக்கம் சார்பானவர்கள் இது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது என கோபப்படுகின்றனர்.
அன்பு, அமைதி, விட்டுகொடுத்தல், கல்வியால் சமுதாயத்தை முன்னேற்றலாம் என்ற நம்பிக்கைளின் சின்னமாக ஹின்ட் ஹீசெனி இருக்கிறாள். நடியா பாதிக்கப்பட்ட அபலையாக இருக்கிறாள். பற்றீமா விட்டுக் கொடுக்காத முரட்டுப் போராட்டத்தை நாடுகிறாள். இவர்களுக்கிடையே வந்த புதிய பரம்பரையின் சின்னமான மிரால் வருகிறாள். அவள் தேர்ந்தெடுக்கும் பாதை என்ன? அதைத்தான் இப்படம் பேசுகிறது.
பாலஸ்தீனியப் போராளியான ஹனி, மிராலின் மனத்தில் இடம் பிடிக்கிறான். ஹனி மீதான ஈர்ப்பும், பாலஸ்தீனியப் விடுதலை இயக்கம் மீதான பற்று ஒரு புறமும் கல்வி, சச்சரவற்ற எதிர்காலம், தகப்பன் மேலோன அன்பு ஆகியவை மறுபுறமும் அலைக்கழிக்கின்றன. போதாக்குறைக்கு சந்தேகத்தின் மேல் கைது செய்யப்பட்டு கடுமையான விசாரணைக்கு ஆட்படுகிறாள். மிருதுவான அவளது முதுகுப்புறம் புண்படுமாறு அடிவாங்குகிறாள்.
ஒருவாறு விடுபட்டு வெளிவந்தபோது அவளது அன்புக்குரியவனே அவள் மீது சந்தேகப்படகிறான். காட்டிக் கொடுத்தவள் எனக் குற்றம் சாட்டுகிறான். குற்றம் செய்யாத அவள் மனம் துய்ந்து போகிறது. விடுதலை இயக்கம் மீதான முரட்டுப் பற்றுதலால் தமது அன்புக்குரியவர்களையே சந்தேகிக்கும், கொலையும் செய்யத் துணிந்த மனிதர்களைக் கண்ட எமக்கு இது ஆச்சரியமானதல்ல, ஆயினும் மனம் நோகிறது.
மிராலின் தகப்பனாக வரும் ஜமால் அற்புதமான பாத்திரம். Siddig கின் மிகையில்லாத நடிப்பில் சாதாரண அப்பனின் மனநிலையை உணரமுடிகிறது. தீவிரவாத இயக்கங்களிலிருந்து தனது மகளை காப்பாற்றி நல்ல நிலையில் வாழ வைக்க வேண்டும் என்ற தந்தையின் பாத்திரத்தை அழகாகச் செய்கிறார். மனத்தில் நிலைக்கிறார்.
படத்தை நெறியாழ்கை செய்திருப்பவர் Julian Schnabel &6Ingir. gp856OIG6 Before Night Falls, The Diving Bell and the Butterfly (Suncorp சினிமாக்கள் மூலமாகக் கவனிப்பைப் பெற்றவராவார். Slumdog Millonaire Gfo; Fredia Pinto Mugm60I பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நன்றாக நடித்திருக் கிறார். ஆயினும் அவரது உருவம் அரபுப் பெண்கள் போலாக இல்லை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். கமெரா Eric Gautier பல காட்சிகள் மனதை அப்பிக் கொள்கின்றன.
படம் டிவிடியில் கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள். எமது வாழ்வுடனான ஒற்றுமை வேற்றுமைகளை அசைபோட்டுப் பார்க்கலாம்.
30
gbrTı‘ asFrTuue6Oof
னெது காதலைப் புதைத்த இடத்தில் ஒரு பெரு விருட்சம் வளர்ந்துளது.
அந்தப் பெரு விருட்சம் ஒரு விதையில் எழுந்து, சிறு கன்றாய் வளர்ந்து. 6|LId5 LDULDTuů வளர்ச்சி கண்டதுதான்!
வளர்ச்சிப் போக்கினிலே 2 அது துளிர்வித்த துளிர்கள். ஆ இலைகள், பூக்களென. பலவற்றை உற்பவித்துப் பகட்டாக நின்றது காண்!
கடைசியிலே. பூத்த அந்தப் பூக்கள் பிஞ்சாகி, காயாகி கணிதருமென்றிருக்கையிலே விளைந்த கணிகளெல்லாம் நச்சுக் கணியாகக் கண்டேன்..!
எனது காதல் புதைந்த இடம் இப்படி என்னைப் பழி வாங்கும் என்று ஒரு காலும் நினைத்திலேன்!
இன்றோ, நச்சுக் கனியுண்டு, உடல் நீலம் பூத்து. பேச்சற்றுக் கிடக்கின்றேன்! நெடிய பெருமூச்சில் என் ஆயுள் கரைகிறது!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 33
KXXXXXXXXXX ୪୬୪୬୪ ୯୬୪୪୪୬୪
IMPORTERS, EXPORTER STATIONE
பூபாசிைங்கம்
புத்தக விற்பன்ையாளர்கள், ஏற்றுமதி, இறக் தலை
§೧.202 செட்டியார் தெரு,கொழும்பு 1,இலங்கை.தொ.பே.
கிளைகள்: 340,செட்டியார்தெரு, இல,309A-2/3,கா6 கொழும்பு 1,இலங்கை.தொ.பே.2395665 கொழும்பு06,இலங்
புத்தகத்தின் பெயர் எழுத்தாளர்
ேவாலி வதைப்படலம் αβαστούπασουί, θα 9 தேர்ந்த செய்யுட் கோவை கிருஷ்ணபிள்ை O GLIITyfoör LigúnílovoGoras6ir ஜோன்றிச்சார்ட் 9 சங்க காலமும் சங்க இலக்கியங்களும் சு. சிறீகந்தராசா O LILLIGOOTriasofloo க. சண்முகரத்தி O (205 குடம் brഞ്ഞ് அஷ்ரஃப் சிஹ 0 தேடலே வாழ்க்கையாய் என். செல்வரா: 0 கடவுளின் நிலம் இளைய அப்து 0ே இப்படிக்கு அன்புள்ள அம்மா ஜீவாகுமாரன் O BLITyfodiör LuginooGOTES6ir 2 ஜோன்றிச்சார் 9 முதிசம் ஸக்கியா ஸத்தீ
O LILIGooflatsoir isoloris Sibg நெடுந்தீவு முகி 9 மனித தர்மம் கலைச்செல்வ6 0 ஆண்மை தலைமை
ஆட்சி என்றால் என்ன? hoo Tafoör 9 முத்துக்களை வீசுதல் மாலதி டி அல்வி
குமாரி ஜயவர்த் 9 சமஷ்டி முறையும்
சுயநிர்ணய உரிமையும்
9 டாக்டர் மேரிரட்ணம் குமாரி ஜெயவர்
ஆண்நிலை இயல்பு பற்றிய
ஆழமான தேடல் சமீலா பஹாசின் 9 அதிகாரப் பகிர்வின் ஏ. எம். நவரத்தி
இருபத்திரெண்டு ஆண்டுகள் 9 சமாதானத்தின் மகிமை ஜயதேவ உயன்
அனுஷா கல்பா
O ញាយតំ56 வி. ஜீவகுமாரன் O Göygono6oa:66f6ör $l6ör6Orir கமீலா சமரசிங் O fi Lól,5LOIras pTgör LóloasuIITös இவள் பாரதி 9 நான் சொல்வதெல்லாம் இவள் பாரதி
பணி நிலவு SyIT. 2-BULIGODOTC 0 உயிர்க்காற்று SÈJIT. 20.-öuu6OOT
&&ක්රීක්ෂිර්ක්රීලංමශුක්රීලී
ஞானம் - solo 6b DéfiduLI (biflotD5 - ஜூலை 2O1
XXO 姿○姿○*○姿○。
& 93&
S, SELLERS&PUBLISHERS OF BOOKS, ERS ANDNEWSAGENTS.
புத்தகசாலை
குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
2422321.தொ.நகல் 2337313,மின்னஞ்சல்:pbdhoடுsltnet.lk
வீெதி, இல,4A,ஆஸ்பத்திரிவீதி, கை.தொ.பே.4-515175,2504266 பஸ்நிலையம்,யாழ்ப்பாணம்.
வெளியீடு/விற்பனையாளர் ിബ
ண்முகதாஸ் I பூபாலசிங்கம் பதிப்பகம் 3OOOO ளநடராஜா பூபாலசிங்கம் பதிப்பகம் 325.00 Fr சமூகவிஞ்ஞானிகள் சங்கம் 15O.OO மணிமேகலைப் பிரசுரம் 262,50 'GOrth Ku 200.00 ாப்தீன் r 300,00 gIT 200.00 ல்லாஹ் "300.00 م
Ya 350.00 ட்சன் சமூகவிஞ்ஞானிகள் சங்கம் 150,00 க் பரீத் 36DiGoals &oio6OIT,
முற்போக்கு மன்றம் 275.OO லன் காயத்திரி பப்ளிகேஷன் 200.00 ir இலக்கிய முற்றம் 300.OO
w 150.00 1ιοίο
தன 200,00
சமூக விஞ்ஞானிகள் சங்கம் OO,OO த்தனா 50.00
öT சமூக விஞ்ஞானிகள் சங்கம் 150,00 SOT LIGdorury || &IgëluJOOOOLOtillë
கற்கைகளுக்கான நிறுவனம் 400.00 réhaBITL நீலன் திருச்செல்வம் rooloo இனத்துவ ஆய்வுக்கான
சர்வதேச நிறுவனம் 100.00 450,00 சமூக விஞ்ஞானிகள் சங்கம் 850.00
250.00
250,00 னின் அருணா வெளியீட்டகம் 200.00 னின் 200,00
KXXXXXXXXXXXXXXXXXXXXXXXX &
Page 34
அப்பாவை அப்பிடி நான் சினந்து பேசியிருக்கக் கூடாது. நான், அப்பாவை சினந்து பேசும்போது அம்மா தனக்குள் அழுது போட்டார். அம்மா, தனக்குள் அழுதாரே தவிர “டேய் கொப்பாவை அப்பிடிப் பேசாதையாட! கொப்பா பாவமடா!” என்று ஒரு வார்த்தைகூட அம்மா எனக்குச் சொல்லவில்லை. ஆனாலும், அப்பாவிற்கான அம்மாவின் அனுதாப அந்தரிப்புக்கள் அவவின் முகத்தில் பளிச்சென்று அப்பியிருந்தன.
எனக்கு இரண்டு தம்பி. இரண்டு தங்கச்சியும் உண்டு அப்பா, எங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு கொழும்பு சென்று விட்டார். அப்ப, எனக்கு பத்து வயது. ஸ்கொலசிப் சோதனை எடுக்க இருந்த நேரம். அப்பா, கொழும்பு சென்று அங்கொரு கல்யாணம் செய்துவிட்டார் என்று அம்மா எனக்கு அப்ப சொல்லவில்லை. என்ர வகுப்புப் பொடியன் "டேய் மதன்ர அப்பா கொழும்பில் ஒரு கல்யாணம் கட்டிப் போட்டாராமடா!” என்று கிண்டல் அடித்த போதுதான் தெரியும். அப்பா இன்னொரு கல்யாணம் செய்து போட்டார என்று.
என்ர வகுப்புப் பொடியள் நக்கலடிச்சது பற்றி வீட்டில் அம்மாவுக்குச் சொல்லி அழுதேன். அம்மாவின் கண்கள் கலங்கின. நான் இனி பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்றும் அடம் பிடித்தேன். அந்த நேரம் பார்த்து, அம்மம்மா வந்து என்னைத் தன்னுடன் சந்தைக்குக் கூட்டிப் போனார்.
எங்களை வளக்கிறதுக்கு அம்மா எத்தனை கஷ்டங்கள் அனுபவித்திருப்பார். அம்மா நித்திரை முளிச்சுப் பெட்டி, பாய் இளைப்பார். இளைச்சு முடிச்ச பெட்டி, பாய்களை அம்மம்மா சந்தைக்கு கொண்டு போய் விற்பார். அம்மம்மாவோடு வல்வெட்டித் துறைச் சந்தைக்குப் போனால் பெரிய உருண்டை எள்ளுப்பாகு அல்லது பொரிமாவு வாங்கித் தருவார். அவை நல்ல ருசியான உணவுகள். அதை நினைத்துத்தான், நான் எண் அழுகையை நிறுத்திவிட்டு அம்மம்மாவின் பின்னே வலு புழுகத்தோடு ஓடிப் போனனான். அங்கே, அம்மம்மா என்னைக் கண்ணும் கருத்துமாக பார்த்து நிற்பார்.
ஆமி, பொலிஸ் கண்டபடி திரிவாங்கள். ஆமிக்காரர்கள் உடுப்பையும், துவக்கையும் பார்த்து நான் பயப்பட்டிருக்கிறேன். சந்தை ரோட்டு வழியாக கணக்க ஆமிக்காரர்கள் ரோந்து போவார்கள். அவர்களை நான் விடுப்புப் பார்ப்பது போல் பார்த்து நிற்பேன். அதில ஒரு ஆமி என்னைப் பார்த்து தன்ர விழிகளால் முளிசி, நாக்கினை மடிச்சுக் கடிச்சு என்னை வெருட்டுவான். நானும் பயந்து போய் அம்மம்மாவுக்குப் பின்னால் ஒளிவேன். அம்மம்மாவின் தோள் மூட்டின் மேலாக கண்களைக் கூசி அந்த ஆமியை பார்ப்பேன். அந்த
32
öU :- 鹅 F. lugínnri
ஆமிசிரிச்சுக் கொண்டு யோவான். அந்த நேரம் எனக்கு இருந்த பயமும் ஓடிவிடும். பிறகு, அம்மம்மா எனக்கு மாம்பழம், பலாப்பழம் என்று அதை, இதை வாங்கித்தருவார். அவற்றை வாங்கிச் சாப்பிடும்போது அம்மம்மா மீதுள்ள பாசம். அதிகரித்துக் கொண்டே இருக்கும். அம்மம்மா என்றால் எங்களுக்குச் சரியான um5-Lö. SILöLDLibLDm, 6Trfü85SIBé6labffCB Süum LDrgßlf). அப்பா மாதிரியான அம்மம்மா சந்தையில் இருந்து வரும்போது கிறுதி தூக்கி எறிந்து பிடரி அடிபட விழுந்து இறந்து போனார்.
அம்மம்மாவின் இழப்பு என்பது எங்களுக்கொரு பேரிழப்பாகவே இருந்தது. அந்த நேரம் நான் அழுத அழுகை சொல்லி மாளாது. அம்மம்மாவின் உடல் கடலை நோக்கிக் கொண்டு போக வெளிக்கிடும்போது என்னை யாராலுமே கட்டுப்படுத்த முடியாமல் போனது, இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்குது. அம்மம்மா என்றால் உயிர்.
அம்மம்மா இறந்து கொஞ்ச நாளிலேயே கூலி வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டேன். அப்ப எனக்கு பன்னிரண்டு வயதிருக்கும்.
கற்பூரம் மேத்ஸ்திரியோடு மேசன் வேலைக்குப் போய் வந்தேன். சீமெந்து வாளி தூக்கித் தூக்கி என் கைகள் புண்ணாகி சிவந்திருந்தன. அன்று வேலை முடிச்சு இரவு ஏழு மணி போல வந்து சேர்ந்தேன். வேலையாலை வந்த என்னை கண்ட அம்மா கண்கலங்கி அழுது போட்டார். அம்மா கண்கலங்கு வதைக் கண்ட எனக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
கிணத்தடி போய், தோய்ஞ்சு உடை மாத்தி வந்தேன். சுவாமிக் கொட்டிலுக்கை போய், சுவாமி கும்பிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வந்து அம்மாவுக்கு முன்னால் இருந்தேன்.
நான் வரும் வரை அம்மா, மத்தியானம் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். எனக்குச் சாப்பாடு கிள்ளித் தந்தார். சாப்பாட்டைக் குழைத்துச் சாப்பிட்டேன். உள்ளங் கையிலுள்ள புண்ணில் தூள்க்கறி பட்டபோது கை எரியத் தொடங்கியது. "ஆ.1 ஆ. ஊ. ஊ.!" என்று உழைந்த போதுதான், என் கையை அம்மா பார்த்தார். சிவந்து போயிருந்த என். கைக்காயம் பார்த்த 69łublDT 6haftecteorj.
“என்ர கடவுள். நாங்கள் பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. என்ர ராசா இனி நீங்கள் வேலைக்குப் போவேண்டாம்” என்றபோது அம்மாவின் கண்கள் மறுபடியும் பனித்து நின்றன.
"அம்மா! என்ன கதை கதைக்கிறியள். முதல்ல உப்பிடித்தான் இருக்குமாம். பழகப் பழக எல்லாம் சரியாகிப்
போடுமாம்." என்று நான் சொன்னபோது,
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 35
“இல்லையடி, உனக்கு வயது காணாது. நான் பெட்டி, பாய் இழைச்சு வித்து உங்களைக் காப்பத்துவன். நீங்கள் இனி உழைக்கப் போக வேண்டாம்” என்று அம்மா எனக்கு பரிந்துரை சொன்னார்.
நான் நல்லாகப் படிப்பேன். என்ர வகுப்பில் நான், எப்பிடியும் முதல் ஐந்து பிள்ளைகளுக்குள் ஒருவனாகவே வருவேன். நான் பள்ளிக் கூடம் போகாமல் நிப்பதை அறிந்து அமிர்தலிங்கம் சேர் வீடு தேடி வந்து விசாரித்தார். நான் அவரைக் கண்டு ஓடி ஒளிஞ்சு போட்டேன். அமிர்தலிங்கம் சேர் என்றால் எங்கள் எல்லோருக்கும் பயம். அது தெரிஞ்சு அம்மாவும் என்னை வீட்டில் இல்லை என்று சொல்லிப் போட்டார். *மதன் ஏன் வகுப்புக்கு வாறFல்லை” என்று சேர் கேட்டார்.
“சேர்! அவன் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். பொடியளும் கிண்டல் பண்றாங்களாம். அதுதான் வர வெக்கப்படுகிறான் போல” அம்மா படார் என்று உண்மை சொல்லிப் போட்டார்.
*மதன், சந்தனம் மேஸ்த்திரியோடு வேலைக்குப் போறவன் என்றெல்லோ பள்ளிக்கூடத்தில் ஒரே கதை. என்று சேர் கதை சொல்லி முடிப்பதற்குள்,
“ஓம் சேர்! அவன் இடையிடை அவரோடு போய் வாறவன். நான் சொன்னாலும் கேட்க மாட்டான்.” அம்மா கெட்டியாகப் பதில் சொன்னார்.
"நான் போட்டு வாறேன்" என்று சொல்லி சேர் போட்டார்.
அமிர்தலிங்கம் சேர் எண்ணில் வலு அக்கறை. நான் படிச்சு முன்னுக்கு வருவேன் என்று நல்ல நம்பிக்கை என்னில் இருந்தது. அவர் என் நன்மைக்காக எத்தனை தடவை ஒடித் திரிஞ்சிருப்பார். அவரை என்னால எண்டைக்கும் மறக்க முடியாது.
எங்கட வகுப்பில் நிறையக் கெட்டிக்கார பொடியள் இருந்தனாங்கள். அந்த நேரம் மூன்றாம் வகுப்புத் தொடக்கத்திலை தான் ஆங்கில பாடம் அறிமுகமாகும். அப்ப, ஏ.பீ.சீ. டீ. என்று ஆங்கில எழுத்துக்களை நாங்கள் மனப் பாடம் செய்துவிட்டு எங்கடை சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லிக் கொண்டு திரிஞ்சனாங்கள்.
"இஞ்சருங்க எனக்கு ஏ.பீ.சி.டீ.! பாராமல் சொல்லத் தெரியும்.” என்று சொன்னால்,
“எங்கை சொல்லு பாப்பம்” என்று கேட்பார்கள். நானும் புழுகிப் புழுகி இருபத்தாறு எழுத்துக் களையும் வடிவாகச் சொல்லிப் போடுவேன். நான் ஏ.பீ.சீ.டீ. சொல்லத் தொடங்கும்போது, சொந்தக்காரர் சிலர் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பினம். அந்த நேரம் எவருக்காவது, ஏ.பீ.சீ.டி. சொல்லத் தெரிஞ்சால் அவர்களுக்கு நல்ல மரியாதை மூன்றாம் வகுப்புப் படிக்கிற நான் சொன்னால் எப்பிடி இருக்கும்!
"கெட்டிக்காரன்! பெரியவனாக வளந்து டொக்டராக வரவேணும்" என்று பாராட்டுவார்கள்.
சிலர், எண் சொக்கினைக் கிள்ளுவர்கள். சிலர் கொஞ்சுவார்கள். அந்த நேரம் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை என்னவென்று என்னாலேயே சொல்ல (UPPTS.
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - gSams) 2011
ஏ.பீ.சீ.டீ. பாடமாக்கி இரண்டு மூன்று நாட்களுக்குள் எங்கட பெயர் ஆங்கிலத்தில் எப்பிடி எழுதுவது என்றும் வடிவாகச் சொல்லித் தந்தார். நான் ஓரளவு பெயர் எழுதப் பழகிவிட்டேன்.
எங்கட வீட்டை போய் அப்பா, அம்மா, என்ர சகோதரங்கள் எல்லாருடைய பெயர்களையும் ஆங்கிலத்தில் எழுதி அம்மாவிடம் காட்டினேன். அதில ஒன்று, இரண்டு பிழைகள் இருந்தன. அதை, திருத்தி அம்மா சரியாகச் சொல்லித் தந்தார்.
அதுதான், அமிர்தலிங்கம் சேரினை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது, என்று நான் இப்பவும்" கதைக்கிறனான்.
நான், படிப்புக் குழப்பினாலும் தம்பி, தங்கச்சியவையை நல்லபடியாகப் படிப்பிக்கலாம், என்று நினைச்சுத்தான் நான் சின்ன வயசில உழைக்கப் போனனான்.
படிக்கிறதெண்டால் முதலில பசியிருக்கக் கூடாது. பசியிருந்தால் படிப்பில் பெரிசாக நாட்டம் வராது. படிப்பிக்கிற படிப்பும் மனதுக்குள் ஏறாது. நான் எத்தனை நாள் வெறும் வயித்தோடு பாடசாலைக்குப் போயிருப்பேன். அப்பிடிப் போனால், பாடசாலை முடியும் நேரம் வரை பசி தாங்கியிருக்க வேண்டியதுதான்.
உந்த உபத்திரங்களை நினைச்சுப் போட்டுத்தான் நான் வேலைக்குப் போக வெளிக்கிட்டனான். தங்கச்சியாக்கள் ஒரளவு படிப்புக் குறைவென்றாலும், தம்பியவை அசுர கெட்டிக்காரர். அவங்களை எப்பிடியும் டொக்டர், எஞ்சினியராக ஆக்குவதே என்ர கடமை. அதை எப்பிடியும் நான் செய்து முடிப்பேன்.
உப்பிடி, நானும், என்ர சகோதரங்களும் அம்மாவோடு சந்தேசமாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதை அப்பா, இஞ்சையிருந்து போறாக்களை விசாரிச்சு அறிவாராம். அப்பாவுக்கு எங்களைக் கண்டால் ஆசையாகத்தான் இருக்கும்.
"உன்ர மூத்தவன் சரியான கெட்டிக்காரன், சரியான விசயகாரன்." அப்பாவிற்கு முன்னால் இஞ்சத்தை ஆக்கள் கதைப்பினமாம்.
அப்பா கொழும்பில் கல்யாணம் செய்து மூன்று பிள்ளையளாம். மூண்டு பேரும் சின்னாக்கள். அதோடு அங்கை, அப்பா சரியான கஷ்டமாம். எங்கட ஊரிலுள்ள வெளிநாட்டுக்காரர் அப்பாவைக் கண்டு ஓடி ஒளிப்பின மாம். அவையளைக் கண்டால் ஆயிரம், இரண்டாயிரம் எண்டு காசு கேப்பாராம். அதுதான் எங்கட ஊராக்கள் அப்பாவின்ர கண்ணில் படாமல் திரியுறவையாம்.
அப்பாவிற்குக் கடனாக ஒரு தரம், இரண்டு தரம் கொடுத்து ஏமாந்தவர்கள்தான் அப்பிடி ஓடி ஒளிப்பார் களாம். அப்பாவைக் கல்யாணம் செய்தவவும் அய்யாவை வைச்சுப் பாக்கிற தில்லையாம். அப்பா, அவவுக்குச் சரியான பயமாம். அவ, அப்பாவுக்கு அடிக்கிறவ என்றும் சனங்கள் அம்மாவுக்கு வந்து சொல்லுவினம்.
உந்தமாதிரியான கதை கேட்டால், அப்பாவை நினைக்க கவலையும், எங்கட ஆக்களை நினைக்க ஆத்திரமும் வரும், "அம்மாவுக்கும். எங்களுக்கும் செய்த துரோகாங் களுக்குத்தான் அப்பா, உப்பிடி அனுபவிக்கிறார்." என்று சொல்லி, தம்பி நக்கலடிப்பான்,
33
Page 36
இந்த மாதிரி யான நேரங்களி 66o6b6Om Lib SLibLDT, அப்பா வை விட்டுக் கொ டு க கா து அப்பாவின் பக்கம் நின்று கதைப்பார். அப் பாவுக் காக ஒன்றும் தெரியாத அம்மாவை எப்பிடி மறக்க முடியும். எங்கள் மீது அம்மா வுக்கு பாசம் எவ்வள வோ, அவ்வளவுக்கு அப்பா மீதும் அம்மா a flurrgot unsub!
உப் பிடியான எங்கட அம்மாவுக்கு துரோகம் செய்ய, அப்பாவுக்கு எப்பிடி மனம் வந்தது. பத்து வருசம் கழிச்சு அப்பா, அம்மா வையும் எங்களையும் தேடி வந்திருக் கிறார். அம்மாவுடன் மன்னிப்புக் கேக்கப் போறன் என்று அடம் பிடிச்சவ்ர். நான் அம்மாவை வெளியிலும் விடாமல் மறிச்சு வைச்சிருந்தன்.
"கொம்மாவோடு ஒருக்கால் கதைக்க விடு தம்பி.” என்றார் அப்பா.
தம்பி என்று அப்பா சொல்லும் போது என் இதயம் இதமாய்க் குளிர்ந்தது. அவ்வார்த்தை நெஞ்சை நெருடியது. எத்தனையோ வருசம் கழிச்சு வந்து என்னைத் தம்பி என்கிறார் அப்பா! நெஞ்சு வரண்டு அழுகை வந்தது. அப்பாவை நினைக்கப் பாவமாகவும் இருந்தது. அப்பா வந்த கோலகத்தைப் பார்த்தாலே, அவரைக் கட்டிப் புடிச்சு அழ வேண்டும் போல் இருந்தது. அப்பா, எங்களை இடைநடுவில் விட்டுவிட்டுப் போயிருக்கிறார். இப்ப, எங்களைத் தேடி வந்திருக் கிறார். யார் என்ன கதைச்சாலும்! எப்பிடி விமர்சனம் செய்தாலும்! எங்கட அப்பா எங்களுக்கு அப்பா தானே! அப்பா. அப்பாதான்!
இருந்தும், எதையும் அவருக்கு நான் காட்டிக் குடுக்கவில்லை.
நாங்கள் வளந்து விட்டோம் அய்யா இல்லாமல், சின்ன வயசில நாங்கள் பட்ட துன்பங்கள் எமக்கெல்லோ தெரியும். கொழும்பில் இருக்கிற அப்பாவின் பிள்ளைகள், ஒருவகையில் எங்களுக்கும் சகோதரங்கள்தானே! நாம் பட்ட துயர்கள் அதுகளுக்குமா?
சீ. சீ. அப்பா இனி, முறைப்படி அதுகளோடு தான் வாழவேண்டும். அப்பிடி வாழ்வதுதான் அப்பாவுக்கும்'நல்லது.
அதுகள் சின்னஞ்சிறுசுகள்! விபரம் தெரியாத பருவங்கள்! அப்பாவின் அன்புப் பிணைப்பு அந்தப் பிள்ளைகளுக்காவது நல்லபடி கிடைக்கட்டும் என்றபடி உள்ளே நான் போய்க் கொண்டிருந்தேன்.
அப்பாவைக் கொண்டு வந்த ஆட்டோவில் அப்பா ஏறி அமர்கிறார். வந்த வழியே ஆட்டோ போய்க் கொண்டிருந்தது.
34
( மண்ணில் மணக்க)
மலேசிய மாநாடு
-கவிஞர் பதியத்தளாவ பாறுக்
மலைநாடாம் மலேசியத் திருவாம் மண்ணில்
LD600g5551661 இஸ்லாமியத் தமிழ் மாநாடு அலைகடலில் அகழ்ந் தெடுத்த முத்துக்களை அழகு தமிழ் இலக்கியத்தால் எடுத்தோத நிலைகுலையா உள்ளங்கள் நின்று ழைத்து
நீண்டதொரு வரலாற்றை சமைத்து வைக்க கலைநதியை ஓடவிட்டு அழகு பார்த்த
காதலிடை மாநாட்டை போற்றி போற்றி!
கடல் இணைத்துக் களிப்படைந்த தமிழ்த்தாயின்
கன்னத்தில் முத்தமிட்டு அழகு பார்த்து மடல் வாய்கள் சொல்லிவைத்த இலக்கியத்தில் மணக்கின்ற இஸ்லாமும் தமிழும் சேர்ந்து உடல் சுமக்கும் உயிராக ஒம்பங் கண்டு
உள்ளங்கள் சேர்ந்தே உறவு தொட்டு தடம்பதித்த வரலாற்றுத் தலை விதிக்குள்
தலைநிமிர்ந்த தகைகளோ கோடி கோடி!
மூத்தபல இலக்கியத்தைச் சுமந்து வந்து
முன்னெடுத்து அவைகளை மாலை யாக்கிப்
பார்த்தவர்கள் கழுத்துக்கு சூடி நின்று
பண்பாடு வளர்த்துப் பெருமை கண்டு
கோர்த்த கவி கட்டுரை ஆய்வு எல்லாம்
கொண்டு நின்ற கோலழகைப் பார்த்தபோது
வேர்த்த துளிகூடக் கணமே நின்று
விழி வைத்துப் பார்த்ததென்பேன் ஐயமில்லை!
அன்னையெனும் தமிழ் மகளோ அரங்கி லேறி
அழகு மயில் தோகையிலே தமிழ் சுமந்து தென்னையெனும் பாளையது தரும் மதுவில்
தேன் தமிழோ குடிப்பாகி மயக்கந் தந்து கண்ணின்வழி கண்டபெருங் கலைக ளெல்லாம்
கானூன்றிக் காலமெல்லாம் வாழ்ந்து நிற்க மண்ணிலே மலைநிறுத்தி மனிதங் கண்ட
மாநாடே உந்தன் பணி வாழுமாமே!
ஈரினத்தை இன்மொழியால் இணைத்து வைத்து
இரு கணினாய் அவையிரண்டும் விழித்துப் பார்க்க
பேரினத்தின் முன்நின்று பெருமை பேசும் பேறான எங்கள் இலங்கைத் தீவில்
வேராக ஒடிநிதம் புகழ் படைக்கும்
விற்பன்னர் எழுத்தாளர் விளக்கங் கண்டு
கூறாகப் பிரிக்காது கூடு கட்டிக்
\U குணங் கொண்ட மாநாடே நீவாழி ノ
ஞானம் - கலை இறக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 37
gei மிகவும் பிரயாசைل6D உள்ள மனிதர். ஒரு டொலரேனும் வீணாகச் செலவழிக்க மாட்டார். வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு குசினிக்குள் சென்றார். அப்பொழுதுதான் மனைவி வாணி "ஷொப்பிங்" முடித்து வந்திருந்தாள். வாங்கி வந்த பொருட்களை அடுக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
“பில்லை ஒருக்கால் தாரும் பார்ப்பம்!” "சரி. இனி அக்கவுண்டன் வந்திட்டார்”. வரன் பில்லைப் பார்த்தார். முகம் அஸ்ட திக்கிற்கு கோணலாகியது.
"ஐஞ்சு கிலோ உருளைக்கிழங்கை இரண்டு டொலர் எண்டு எங்கையோ கிடந்தது. நீர் என்னடா வெண்டால் ஐஞ்சு டொலருக்கு வாங்கியந்திருக்கிறீர்!" "கிடந்ததுதான். அது நல்ல சிவத்தக்கிழங்கு. கழுவித் துடைச்சு விட்டது மாதிரி பளிங்கு போல இருந்தது. உருளைக்கிழங்கு மண்ணுக்கை விளையுறது, மண்ணோடை இருக்க வேணும். அதுதான் நல்ல கிழங்கு. இஞ்சை பாருங்கோ, நான் வாங்கி வந்ததை. மண்னோடை இருக்கு. உங்களுக்கு ஆராவது கழுவித்துடைச்சு இரண்டு டொலருக்கு தாறாண்களே! சிவத்தக்கிழங்கு உரம் போட்டு வளர்த்தது. உடம்புக்கு ஆகாது.”
மறுபுறத்தில் சத்தமில்லை. “காசு கூடினாலும் நான் நல்லதுதான் வாங்குவன்.” வரன் தொடர்ந்து பில்லைப் பார்த்தார். எங்கையாவது பிழை பிடித்தாகவேனுமே!
"இதென்ன? இரண்டு பிடி சில்வர்பீற் இரண்டு டொலர் எண்டிருந்தது. நீர் ஒரு பிடி இரண்டு டொலருக்கு வாங்கியந்திருக்கிறீர்.”
ക്രിസ്ത്ര ബിഗ് ബീബ് ര
ஞாபகார்த்தச் சிறுகதைப்
போட்டி முடிவு திகதி 3
பின் போடப்பட்டுள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
"இருந்ததுதான். ஆனா முழுக்க மண். அது கழுவ நாலு வாளி தண்ணி வேணும்.”
"அப்ப உருளைக் கிழங்கு கழுவ எத்தினை 6T6lf?"
"நீங்கள் உங்கடை அலுவலைப் பாருங்கோ. நான் என்னுடையதைப் பாக்கிறன்.
“எனக்கு குவாலிற்றிதான் முக்கியம் குவான்ரிற்றி யில்ல."
"அதுவும் சரிதான்” நக்கலுடன் ஆமாம் போட்டார் வரன்.
ரெலிபோன் அடிக்கின்றது. றிசீவரைத் தூக்கு கின்றார் வரன்.
"ஹலோ ஆர் கதைக்கிறது? சிவமோ? டண்டினோங்கிலையிருந்தோ கதைக்கிறியள்? சரி விஷயத்தைச் சொல்லும்!
“என்ன சீட்டோ? சீட்டுக் கவிண்டு போச்சோ? ஐயையோ ஐயையோ” "படிச்சுப் படிச்சு சொன்னனான். காசை "பாங்" கிலை போடுங்கோ "பாங்"கிலை போடுங்கோ எண்டு. வட்டி குறைவெண்டாலும் பத்திரமா இருக்கும். இதுக்கு பொலிஸ் கிலிசெண்டும் போகேலாது. சீட்டெண்டால் என்னண்டு கேட்பான். எங்களைத்தான் உள்ளுக்கை போடுவான். ஒரு டொலர் இரண்டு டொலரிலை கஞ்சத்தனம் காட்டுங்கோ. நாப்பதாயிரம் ஐம்பதாயிரத் திலை கோட்டை விட்டிடுங்கோ. என்ன நான் சொல்லுறன் சொல்லுறன் கல்லுளிமங்கன் மாதிரி இருக்கிறயள்”
"நாக்குப் புரண்டு போச்சுதடி பிள்ளை." "ஆர் உங்களுக்கோ, அல்லது அவங்களுக்கோ?”
多 இராஜகோUான்) Bavarca 2oIV
0.07.2011 க்கு
1ளது.
Page 38
5டந்த மே மாதத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல நாடுகளையும் சேர்ந்தோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தியாவைவிட இலங்கையைச் சேர்ந்த பேராளர்களே அதிகமாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில், இலங்கையிலிருந்து கலந்துகொண்டோரில் ஏறத்தாழ இருப்பத்தைந்து வீதமானோரே கலை, இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். பெரும்பாலானோர் வர்தக நோக்குக் கொண்டவர்களாகவே தென்பட்டனர்.
இம் மாநாடு தொடர்பாக இலங்கைக்கென ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இலங்கைக் குழுவின் தலைவருக்கும் செயலாளருக்கும் முதுகெலும்பு என்பது இல்லை என்பதுதான். எதிர்காலத்திலாவது இவர்கள் இருவரும் முதுகெலும்புகளைத் தங்களுக்குப் பொருத்திக்கொள்வது நல்லது. இப்படியொரு இலங்கைக் குழு இருந்ததைவிட இல்லாமல் இருந்திருக்கலாம். எந்த விடயமும் உருப்படியாக நடக்கவில்லை. மாநாட்டு மலரில் இலங்கை ஆய்வாளர்கள் சிலரது கட்டுரைகள் பிரசுரிக்கப்படவில்லை. தலைவரும், செயலாளரும் தத்தம் குடும்பத்தினரோடு மலேசியாவுக்கு உல்லாசப் பயனம் செய்து தமது "இலக்கியப் பணியை" நிறைவேற்றிக் கொண்டனர்.
இவர்கள் இருவரோடும், குழுவில் இடம் பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சேர்ந்து பகற்கொள்ளைக்காரர் ஒருவரைப் பயண முகவராக ஏற்பாடு செய்திருந்தனர். அந்தப் பயண முகவர், மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் செய்த அநியாயங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இப்படியொரு மோசடிக்கார பயணமுகவரை, இலங்கைக் குழுவைச் சேர்ந்த மேற்கண்ட மூவரும் பேராளர்களுக்கு அறிமுகம் செய்து தாங்கள் சுயலாபம் பெற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட பயணமுகவரைத்திட்டாத இலங்கைப் பேராளர்கள் யாரும் இல்லை எனலாம்.
மாநாட்டு இலங்கைக் குழுவின் முயற்சிகள் மோசமாக இருந்தாலும், மலேசியா எம்மை அன்புடன் வரவேற்றது. இலங்கையில் இருந்து சென்ற எமக்கு, மலேசியா ஒரு கனவுலகம்போலத் தென்பட்டது. கோலாலம்பூர் ஓர் அழகான நகரம். வானளாவிய கட்டடங்களும், ஒழுங்கான வீதியமைப்பும், சிறந்த போக்குவரத்து வசதிகளும் மகிழ்ச்சியைத் தந்தன. மலேசியாவில் இருந்தபோது, "இலங்கையை ஆசியாவில் சிறந்த நாடாக்குவோம்" என்று எமது அரசியல்வாதிகள் பேசிவருவது சிரிப்பை வரவழைத்தது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் சென்றாலும்
36
மலேசியாவை இலங்கை எட்டிப்பிடிக்க முடியாது என்ற
நாட்டின் அரசியல்வாதிகளே முழுமுதற் காரணகர்த்தர்கள். எல்லாம்வெறும் வாய்பேச்சுத்தான். மலேசியாவைப்பார்த்து, எங்களல் பொறாமைப் படத்தான் முடிந்தது.
மலாயாப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தபோது, முதல்நாள் இரவு உணவின் பின், அருமையான கலைநிகழ்ச்சிகளைமேடையேற்றினார்கள். இரண்டு மூன்று பாடகள்களும் ஒரு பாடகியும் அழகாகப் பாடினார்கள். அவர்களில் ஒருவர் அப்படியே நாகூர் ஹனீபாவைப் போல் பாடினார். குறிப்பிட்ட பாடகி கே.ராணிபோலப் பாடினார். செவிகளுக்கு அப்படியொரு விருந்து கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் மலேசிய முஸ்லிம் மாணவிகள் அழகாக உடையணிந்து மேடையில் அற்புதமாகப் பாடினார்கள். அந்த மாணவிகளும், சில மாணவர்களும் இணைந்து சிறு நாடகம் ஒன்றையும் மேடையேற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறப்பம்சம், காத்தான் குடியைச் சேர்ந்த இலங்கைப் பாடகள் கே.எல்.கமர்தீனும் பாடியமையாகும். பாடகள், நடிகர், எழுத்தாளர் எனப் பல்திறமைகள் கொண்ட கமர்தீன், அந்நிகழ்ச்சியில் அழகாகப் பாடி, இலங்கைக்குப் புகழ் சேர்த்தார்.
ஆய்வரங்கின் தொடக்கவிழாக் கலைநிகழ்ச்சியின் போது பலரும் பேசினர். அந்த நிகழ்ச்சியின்போது ஒரு கோமாளித்தனம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்துவந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பேசினார். அவரது பேச்சு மாநாடு தொடர்பாகப் பொருத்தமானதாக இருந்தது. அதேமேடையில் இலங்கையில் இந்துவந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வரும் பேசினார். மாநாட்டில் பேசிய அனைவரும் மாநாடு தொடர்பாகப் பேச, அஸ்வர் மாத்திரம் அரசியல் மேடையில் பேசும் ஓர் அசல் அரசியல் வாதியைப் போன்று பேசினார். பேசியவர், தமது சொந்தச் சிந்தனைகளைப் பற்றிப் பேசாமல் பிறரின் “சிந்தனை”யைப் பற்றியே வாயார, மனமாரப் புகழ்ந்து பேசினார். தாம் பங்குபற்றுவது ஓர் இலக்கிய மாநாடு என்ற விவஸ்தையே இல்லாமல், பிறர் ஒருவருடைய பெருமையையும், சிந்தனையையும் தமது விசுவாசத்திற்கு உரியவர்கள் "தமிழுக்கு ஆற்றும் தொண்டினையும்” விலாவாரியாகப் பேசினார். அஸ்வர் தமது அரசியல் கோமாளித்தனத்தை இலக்கிய மேடையில் காட்டியது சிறிதும் பொருத்தமாக இல்லை. அவர் எதிர்காலத்திலாவது தமது சொந்த சிந்தனைகளைப் பற்றிப் பேசவேண்டும். அஸ்வரின் பேச்சை, மாநாட்டில் கலந்துகொண்ட பார்வையாளர் எவருமே ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
மாநாட்டின் ஆய்வரங்குகள் இயன்றவரை நன்றாகவே இடம் பெற்றன. சில ஆய்வாளர்கள்
ஞானம் - கலை வகைகிய சதவிகை - ஜூலை 2011
Page 39
பழக்கதோஷத்தால், சொல்லவந்த விடயத்தைவிட்டு அலட்டிக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. சில அரங்குகளுக்குத் தலைமை தாங்கியவர்கள், அதற்குத் தாங்கள் சிறிதும் பொருத்தமற்றவர்கள் என்பதைத் தாமகவே இனம்காட்டிக் கொண்டனர்.
ஆய்வரங்கொன்றில் முக்கிய பிரச்சினையொன்று அலசப்பட்டது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் இஸ்லாத்துக்கு மாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளனவே என்று கேள்வியொன்று எழுப்பப்பட்டது. அதற்கு இந்திய G&ugrafgfujit மு.அப்துல்சமது பதிலளித்தார். இலக்கியங்களில் அழகியல் அம்சங்கள் இடம்பெறுவது இயல்பானது தேவையானது. அழகியல் அம்சங்கள் இடம்பெறாமல் விட்டால் அது இலக்கியமாகாது. மதரீதியான கண்ணோட்டத்தோடு இலக்கியங்களை நோக்குவது அவசியமற்றது என்று அவர் கருத்துத் தெரிவித்தார். இந்திய இஸ்லாமிய தமிழ் இலக்கிய அறிஞர்கள் மிகவும் பரந்த மனப்பாங்குடன் செயல்படுகின்றனர் என்பதை அவரது பதில் உணர்த்தியது.
மாநாட்டின் இரவு நிகழ்ச்சியொன்றின் போது, “இஸ்லாம் காட்டும் இலட்சிய வாழ்வும் எதிர்நோக்கும் சவால்களும்” என்ற தலைப்பில் உரை அரங்கம் நடைபெற்றது. அதில் பங்குபற்றிய அனைவரும் சுவாரசியமாகவும், சிறப்பாகவும் பேசினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாத்திமா முஸாபர் பேசும்போது, உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளில் மலேசியாவும், துருக்கியுமே உண்மையான முஸ்லிம் நாடுகள் என்று குறிப்பிட்டார். அவரது அக்கருத்துக்குச் சபையில் பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா (தமிழ்நாடு) பெண்கள் தொடர்பான ஆண்களின் நோக்குநிலையை அக்குவேறு ஆணிவேறாக அலசினார். சபையினரின் பாராட்டையும் பெற்றார்.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெர்டானா சிஸ்வா மண்டபத்தில் கவியரங்கம் இடம்பெற்றது. இது ଦ୍ବିit அழகான கலையரங்கம். கவிக்கோ அப்துல் ரகுமானின் தலைமையில் “அண்ணல் நபியின் அழகிய பண்புகள்” என்னும் பொதுத்தலைப்பில் ஒன்பது கவிஞர்கள் பங்குபற்றினர். கவியரங்கம் சிறப்பாக இருந்தது. பங்குபற்றியவர்களில் மிக இளயவரான இலங்கையைச் சேர்ந்த பொத்துவில் முகம்மது அஸ்மின் மிக நன்றாகச் செய்தார். எதிர்காலத்தில் சிறந்தவொரு கவிஞனாக அவர் புகழ்பெறுவார்.
மாநாட்டில் பெயரிடப்பட்டிருந்த பல அரங்கங்களில் மூன்று அரங்குகள் இலங்கை அறிஞர்களின் பெயர்களில் அமைந்திருந்தன. கலாநிதி டாக்டர் ம.மு. உவைஸ் அரங்கம் (கலாநிதியும் டாக்டரும் ஒன்றுதான்), சித்திலெப்பை அரங்கம், புலவர்மணி ஷர்புதீன் அரங்கம் ஆகியவை இவ்வாறு இலங்கை அறிஞர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டவையாக விளங்கின.
மாநாடு முடிவடைந்த பின்னர், பேராளர்களுக்குச் சுற்றுலா வசதியும் செய்யப்பட்டிருந்தது. மலேசிய மாநாட்டு பொறுப்பாளர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டனர். இலங்கை மாநாட்டுக் குழு, அவர்களிடம் கற்கவேண்டிய பாடங்கள் பல.
ஞானம் - sanoo 6oäidiu työeflois - ஜூலை 2O1
காட்சி மாற்றம்
தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றம் உலகத் தமிழர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோதிலும், உலகத் தமிழரின் வரவேற்பை அவர் பெற்றிருக்கவில்லை. ஆனால் மூன்றாம் தடவையாக அவர் தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்றப்பின்னர், அவரின் செயற்பாடுகள் தமிழ்நாட்டிலும், உலக அரங்கிலும் தமிழர் மத்தியில் அவரது செல்வாக்கை உயர்த்தியுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் பேரினவாதிகளுக்கும், அவர்களது அடிவருடிகளுக்கும் ஜெயலலிதா சிம்மசொப்பனமாகத் திகழ்கிறார். தமிழ்நாட்டிலும், உலக அரங்கிலும் புதிய காட்சிமாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
ஆனால், ஜெயலலிதாவின் இத்தகைய துணிகரமான முயற்சிகள் வெறும் நடிப்பாக இருக்கக்கூடாது என்பதே உலகத் தமிழர்களின் பிரார்த்தனை. அவர் தமது கொள்கைகளில் உறுதியாக இருப்பதையே எல்லோரும் விரும்புகின்றனர். அவர் உலகத் தமிழர் விவகாரங்களில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பாராயின், அவர்களின் மனத்தில் ஓர் உயர்ந்த இடத்தைப் பெறுவார். ஆனால், வழமைப்போலவே அகில இந்திய அரசியல் கோமாளியான சுப்பிரமணிய சுவாமி உலகத் தமிழர் தொடர்பான ஜெயலலிதாவின் முயற்சிகளை கண்டித்து, தனது கோமாளித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இம்முறை பதவியேற்றபின்னர், கருணாநிதி எதிர்ப்பு என்ற தமது இயல்பான போக்கின் காரணமாகத் த்ேவையற்ற வீண் செலவுகளில் அவர் ஈடுபட்டிருப்பது உண்மையே. சட்டசபைக் கட்டடமாற்றம், சமச்சீர்க் கல்வி போன்றவற்றில் கருணாநிதி எதிர்ப்பு என்ற ஆயுதத்தைத் தேவையின்றி அவர் பிரயோகித்துள்ளார். கருணாநிதிதமிழ்நாட்டில் செயற்படுத்தியவை எல்லாமே தவறானவை என்பதை, நியாய சிந்தையுள்ளவர்கள் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டுக்காக நல்லவற்றையும் கருணாநிதி செய்துள்ளார். அதேவேளை ஊழலும் செய்துள்ளார். அவர் செய்த நல்லவற்றை மறைப்பதும், மறுப்பதும் நல்லதல்ல. ஜெயலலிதாவிடம் இந்த ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. இந்தக் குறையையும் அவர் நிவர்த்தி செய்தால், நல்ல பெயரை அரசியல் உலகில் பெறுவார். ஆனால், முன்னரைவிட ஜெயலலிதாவிடம் நிதானம் ஓரளவு குடிபுகத் தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா உலகத் தமிழர் தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கியதும், கருணாநிதி புலம்பத் தொடங்கியுள்ளார். நான் முன்னர் இப்பந்தியில் குறிப்பிட்டது போல, தமது உடன்பிறப்புகளுக்கு அவர் உருக்கமாகக் கடிதங்களை எழுதிவருகிறார். உலகச் கரியன் மறைந்தாலும், மீண்டும் உதிப்பான் என்று அவர் கூறியுள்ளார். உலகச் சூரியன் மறைந்தாலும் மீண்டும் உதிப்பான். ஆனால், கருணாநிதியின் உதய கரியன் மீண்டும் உதிக்கப்போவதில்லை. ஜெயலலி தாவுக்குப் பின்னர், விஜயகாந்துக்கு ஆட்சி கைமாறலாம். உலகத் தமிழர்களின் சர்பம், கருணாநிதியை உய்யவிடாது.
37
Page 40
இஒற்ணுறித்தி ہو۔ یعے دیتے | وlpla560pھی
சிறுகதை SzDSF-L fif
13ஆம் நம்மர் பத்து ரோட்டிலுள்ள கடையின் மூன்றாவது மாடி. கீழே ஒரு பஞ்சாயின் துணிக்கடை மேலே மூன்று மாடிகளில் அறை அறையாகத் தடுத்து வாடகைக்கு விட்டிருந்தார்கள். அத்தா இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்திருந்தார். மூன்று அறைகளில் வெற்றிலைக்கடை அமீது லாரிக்கார பாகிஸ்தானியர் தனது மலாய்க்கார மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்தார். அவரைப்பார்ப்பதே அபூர்வம். எப்பொழுதும் சிங்கப்பூருக்கு சரக்குகள் ஏற்றிக் கொண்டு பறந்து கொண்டே இருப்பார். அப்படிப் போகும் பொழுதுதான் அந்த மலாய்கார மாதுவை காதல் செய்து திருமணம் புரிந்து கொண்டதாக அம்மாவிடம் அந்த அமீனா அடிக்கடி கதையளப்பாள். அவளின் காதல் மூன்று வருடங்கள் தொடர்ந்ததாம். ஒவ்வொரு நாள் கதையையும் 24 மணியாகப் பிரித்து அம்மாவிடம் காதல் கதையைச் சொல்லுவாள்.
எங்கள் இரண்டு அறைகளுக்குப் பக்கத்து அறையில் இருந்தவர் வயதான பாகிஸ்தானியர். தனி ஆள். யாரிடமும் பேசமாட்டார். அந்தமாடியை விட்டு அவள் கீழே இறங்குவது அபூர்வம். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மட்டும் மலாய் ஸ்ரீட்டில் உள்ள இந்தியப் பள்ளிவாசலுக்குப் போய் தொழுதுவிட்டு ஒரு வாரத்திற்கான சமையல் சாமான்களை வாங்கி வருவார். அவரின் பெயர் கூட எங்களுக்குத் தெரியாது.
"தாடிக்காரா தாத்தா” என்று நானே அவருக்கு பெயர் வைத்துள்ளேன்.
ஐந்து அறைகளில் வசிப்பவர்களுக்காகப் பின்புறம் \ ஒரு சமையல் கூடமும் இரண்டு குளியல் அறைகளும் உண்டு. கழிப்பறைக்கு கீழே கடையின் பின்புற வழி பக்கமாக இருக்கும் இடத்திற்கு மாடியிலிருந்து இறங்கி வரவேண்டும். அது எடுப்பு கழிவறை, காலையில் கொங்கம்மாவும் அவள் கணவரும் மலக்கூடத்தை சுத்தம்செய்வர்கள். கெங்கம்மாசுருட்டின் நெருப்புப் பகுதியை வாய்க்குள் வைத்து சுருட்டுக் குடித்தவாறு மலத்தொட்டியை வெளியே இழுத்து சுத்தம் செய்வாள்.
"ஏன்பாட்டிசுருட்டைதலைகீழாக குடிக்கிறே? என்று கேட்டபொழுது, "உன்னோட பீதாண்டா ரொம்ப நாறுது! அதை எடுக்கும் பொழுது 1 நாத்தத்தை மூக்கு இழுக்காமல் இருக்க இப்படி சுருட்டை குடிக்க வேண்டியிருக்கு!" என்று " சொல்லி சிரிப்பாள். கொங்கம்மாப் பாட்டிக்கு அழகிய பற்கள்.
“நெருப்பு நாக்கை சுடாதா?” "இந்த கட்டைத் தாங்கிக்கிள்ளாம். உன் பீ வாடையைத் தாங்க முடியாது"
எனக்கு வெட்கமாக இருக்கும். என் மலம் மட்டுமே அவளுக்கு நாறுமா? மாடியில் உள்ள
38
முகம்மது (மலேசியா)
இருபது பேருடைய மலத்தில் எனதை மட்டும் எப்படிப் பிரித்துப் பார்க்கிறாள்?
உண்மையில் ரொம்ப நாறுமோ? தாடிக்கார தாத்தா கீழே மலம் கழிக்க வரும் பொழுது அனேகமாக மலக்கூடம் சுத்தமாக இருக்கும். அவர் பமிகவும் சுத்தக்காரர்.
பின்புறம் எல்லா அறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட சமையல் கூடத்தில் சமைக்க மாட்டார். அவரின் அறை படிக்கட்டு ஓரத்தில் இருந்தது. அங்கே சிறிது இடமும் இருந்தது. அங்கேதான் கீழே மணலைக் கொட்டி அதற்குமேல் ஒரு மண்ணெண்ணெய் டின்னை வெட்டி சப்பட்டையாக்கி அதற்கு மேல் மணலைக்கொட்டி கரி அடுப்பில் சப்பாத்தி சுட்டு அடுக்குவார். ரோபின்சன், ஜொன்லிட்டல், ஜி.இ.சி. கம்பெனிகளிலும் மற்ற வெள்ளைக்காரக் கம்பெனிகளிலும் 'ஜாகா வேலை பார்ப்பவர்களுக்கு மதியமும் இரவும் சப்பாத்தி செய்து கறி சமைத்துக் கொடுப்பதுதான் அவரின் வேலை. மாதத்தவணையில் அவரிடம் வந்து இருபது பாகிஸ்தானியர்கள் சாப்பிடுவார்கள். அதுதான் அவருடைய வருமானம்.
எப்பொழுதும் யானைசாப் கைலியும் கோபுர மார்க் அரைக்கை வெள்ளை பனியனும் அணிந்திருப்பார். சுத்தமாக பளிச்சென்றிருப்பார்.
அவரிடம் சாப்பிட வருபவர்களுக்கு எழுதப்படாத கால அட்டவணை அவரிடம் உண்டு. அந்தந்த நேரத்தில் வந்துதான் சாப்பிட வேண்டும். எதிலும் ஒரு கட்டொழுங்கு வேண்டுமென்பது அவரின் கொள்கையாய் இருக்கலாம். எல்லோரும் ஒரே நேரத்தில் வந்தால் அவரின் அறை போதுமானதாக இருக்காது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அம்மா கோழி, ஆடு ஆக்கும் பொழுது அவருக்குக் கொஞ்சம் மங்கில் கொடுத்தனுப் புவாள். அதைக் கொடுக்கும்பொழுது அதன் பலாபலன்களை நானதான் அனுபவித்துள்ளேன். என்னை அடிக்காத குறையாக கையை ஓங்கி விரட்டி அந்த அன்பளிப்பை நிராகரித்து
விடுவார்.
“சனிக்கிழம் எப்போ சாகுமோ? அம்மா பதிலுக்கு சாபமிடுவாள்.
தாடிக்காரத் தாத்தா எப்பொழுதும் அறைக்குள் அடைந்து கிடப்பார். அப்படி ஒருவர் இருக்கிறார் என்பது வெளியே வந்து சமைக்கும் பொழுதுதான் மற்றவர்களுக்குத்
தெரியும்.
ஒரு நாள் இலேசாகத் திறந்திருந்த கதவு வழியாக அவரின் அறைக்குள் எட்டிப்பார்த் தேன். திருக்குர்ஆனை விரித்து வைத்து
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 41
படித்துக்கொண்டிருந்தார். ஒருவர் படுக்கும் கட்டில், சிறிதாக ஒரு அலமாரி, அதில் அவரின் உடுப்புகள். ஒரு பெட்டி. சமையல் பாத்திரங்கள் பொருட்கள் சுவரில் ஒரு இந்திய தேசப்படம் அவ்வளவுதான் அவரின் உடமைகள்.
சப்பாத்தி சாப்பிட வருபவர்கள் மிக மரியாதையுடன் அவரிடம் நடந்து கொள்வார்கள். சாப்பிட வந்ததும் அவரிடம் "சலாம் செய்வார்கள். போகும் பொழுதும் கை கொடுத்து "சலாம்" செய்து கைகளை நெஞ்சோடு வைத்துக் கொள்வார்கள்.
தாடிக்காரதாத்தாவிடம்தான் நெஞ்சார சலாம் செய்யும் முறையை ஏகலைவன் போல் கற்றுக் கொண்டேன்.
அவர் சப்பாத்தி சுடும் பொழுது பக்கத்தில் இருந்து அதன் வாசனையை நுகர்வது தனி இன்பம். அதுவும் சப்பாத்தி நன்றாக பொங்கி உப்பி வரும்பொழுது அதை கையால் தட்டி பேசாமல் கிட உப்பாதே என்பது போல் முதுகில் நாலு வைப்பார். பிறகு சாப்பாத்தியை அடித்தமைக்காக அதன்மேல் நெய்யைத் தடவி விடுவார். சப்பாத்தி சமாதானம் அடைந்ததற்கு அடையாளமாக 'abLDEELD’ 66J6örgDJ LD60OTäöBLbl
யாரிடமும் 'ஒசியில் வாங்கிச் சாப்பிடக் கூடாது. யார் எது கொடுத்தாலும் வாங்கக் கூடாது என்பதில் அம்மாவும் அத்தாவும் என்னிடம் பிடிவாதமாக நடந்து கொள்வார்கள். அப்படிப் பழகிய அந்தப் பழக்கம் எனக்கு வாழ்நாள் பழக்கமாகிவிட்டது. தாடிகாரத் தாத்தா கொடுத்த சப்பாத்தியை ஒரு முறை வாங்க நான் மறுத்ததால் பிறகு அவர் எப்பொழுதும் எனக்கு சப்பாத்தி தருவதில்லை. வாசனையை உணர்வதோடு சரி! நல்ல வேளையாக அம்மாவும் அத்தாவும் மற்றவர்கள் சமைக்கும் பொழுது வாசனையை நுகரக்கூடாது என்று தடைவிதிக்க வில்லை.
Ar yr hir அன்று காலை மலாய் ஸ்ரீட் பரபரப்பாக இருந்தது இந்திய முஸ்லீம் பள்ளிவாசலின் வெளியே பெரிய கூட்டம் கசமுசா வென்று எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள் எல்லாமே வழக்கத்திற்கு மாறாக இருப்பதுபோல் எனக்குட் -التقــلالا
போஸ் வருகிறார், டில்லி சலோ, ஜெய் ஹிந்த என்ற வார்த்தைகள் அதிகமாகக் கேட்டன. élubLDT fjögöUi மாமாவிடம் தேங்காய்ப்பால் ஆப்பம் வாங்கிவர என்னை அனுப்பி இருந்தார்.
பள்ளிவாசலுக்குப் பின்புறம் ஒரு பொதுகக்கூஸ் இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஜப்பானியர்கள் கூடாரப் போட்டு அதில் அரிசி, சீனி போன்றவற்றை அடுக்க வைத்திருந்தார்கள். கூடாரத்துக்கு வெளியே இரண்டு ஜப்பானிய ராணுவ வீரர்கள் இடுப்பில் நீண்ட வாளுடன விறைப்பாக நின்று கொண்டிருந்தார்கள். பள்ளிவாகலி புறாக்கள் பட பட வென்று சிறகு விரித்து அமைதியா பறந்து வட்டமிட்ட வண்ணமிருந்தன.
என்னைப் பார்த்ததும் கூப்பிட்டு இரண்( மிட்டாய்களை நீட்டும் ஜப்பான்காரரை அங்:ே காணவில்லை.
ஒரு நாள் கூட அந்த மிட்டாய்களை நான வாங்கியதில்லை. அத்தாவும் அம்மாவும் அந் மிட்டாய்களின் உள்ளே இருந்து என்னை எச்சரித்தப இருப்பார்கள். ஒரே ஓட்டமாக ஓடி வீடு வந்து சேர்ந்துவிடுவேன்.
ஞானம் - கலை இலக்கிய சஞ்சின்கை - ஜூலை 291
:
அன்றும் அப்படித்தான் ஓடி வந்தேன். பின்பக்க வழியாக உள்ளே நுழைய நான் முயன்றபொழுது கெங்கம்மாவும் அவளின் கணவனும் மலம் அள்ளுவதை விட்டு விட்டு தெலுங்கில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந் தார்கள். மற்றவர்களுடன் தமிழிலும் மலாயிலும் பேசும் அவர்களிருவரும் தங்களுக்குள் பேசும் பொழுது தெலுங்கில்தான் பேசுவார்கள். அது அவர்களின் தாய் மொழியாக இருக்கலாம்!
அப்பொழுது வழக்கத்திற்கு மாறாக கீழே வந்த தாடிக்காரத் தாத்தா நேராக கொங்கம்மாவின் கணவரிடம் மலாய் மொழியில் "போஸ் வருகிறார். இன்னைக்கு சாயுங்காலம் சிலாங்கூர் கிளப்பில் பேசுகிறார். நீ வருகிறாயா? டில்லி சலோ, ஜெய்ஹிந்த்" என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
கொங்கம்மா கணவனை முந்திக்கொண்டு "ஜெய் ஹிந்த் என்று விறைப்பாகக் கூறினாள்.
மூவரும் போட்டது போட்டபடி சிலாங்கூர் கிளப் திடல் பக்கம் வேகமாக நடந்தார்கள். அது தான் நான் அங்கே அவர்களைப் பார்த்தது.
சப்பாத்தி சுடவும் ஆளில்லை. மலம் அள்ளவும் நாதியில்லை.
女女女 அத்தாவுக்கு சிகாம்புட்டில் வெற்றிலைத் தோட்டம் இருந்தது. அவருடைய ஹேர்குலிஸ் சைக்களில் சிகாம்புட் போய் வெற்றிலைகளை ஏற்றி வருவார். அத்தா பலசாலி. மூன்று பேர் தூக்கக்கூடிய அளவு வெற்றிலை முட்டிகளை பின்புற கேரியரில் கட்டி எடுத்து வந்து மலாய் ஸ்ரீட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு கொடுப்பார். மதியம் மீண்டும் ஒரு தடவை வெற்றிலைகளை ஏற்றி வந்து கோலாலம்பூர் பெரிய ரயில்வே ஸ்டேசனில் இரவு சிங்கப்பூர் மெயில் வண்டியில் ஏற்றிவிடுவார். சிரம்பான், சிங்கப்பூர் இரண்டு ஊர்களும் அத்தாவின் வெற்றிலையை நம்பியே இருந்தன.
அத்தா வெற்றிலை போட்டு நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் 222 பீடிதான் வாயில் புகையும்.
அன்னைக்கு அத்தா அம்மாவிடம் கொங்கம்மா அவள் கணவன், தாடிக்காரத் தாத்தா மூவரையும் ஈப்போ ரோட்டு இந்திய தேசிய ராணுவ முகாமில் பார்த்ததாகக் கூறினார். "அவுங்க "INA யில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். கொங்கம்மா ஜான்சிராணி படையில் சேர்ந்து விட்டதுபோல் தெரிகிறது" என்று கூறினார்.
சப்பாத்தி சுட்டுத்தரவும் ஆளில்லை. கீழே மலம் அள்ளவும் ஆளில்லை. மூன்று வாரங்கள் மலக்கூடம் நாறிவிட்டது. போகவும் முடியவில்லை. போகாமல் இருக்கவும் முடியவில்லை. பிறகு மாற்று ஏற்பாடு செய்து வேறு ஆள் வந்து மலக்கூடத்ைைத சுத்தம் செய்தார்.
புதிய ஆள் என் மலம் மட்டுமே அதிக நாற்ற மடிக்கிறது என்று சொல்லவில்லை. சுருட்டையும் தலை கீழாகப் பிடிக்கவில்லை.
INA படை பர்மாவுக்குப் போய் விட்டதாகவும் அங்கே கடுமையான போர் நடைபெறுவதாகவும் அத்தா அடிக்கடி அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எங்கே பார்த்தாலும் “ஜெய்ஹிந்த், டில்லி சலோ" கோஷங்கள் கேட்டுக கொண்டிருந்தன.
சிகாம்புட்டில் மாடுகள் வைத்து பால்கறந்து விற்றுக் கொண்டிருந்த அஜிட் சிங், அம்பாங் ஸ்ரீட்டில் மளிகைக்
39
Page 42
கடை வைத்திருந்த சினா தானா மலாய் ஸ்ரீட்ல் கடை வைத்திருந்த அக்பர் பாய் எல்லோருமே கடையை மூடா மல்கூட அப்படியே போட்டுவிட்டு INA படையில் சேர்ந்து பர்மா வுக்கு போய்விட்டார்கள்.
அம்மா கழுத்தில் போட்டிருந்த பெரிய சங்கிலியையும் கையில் போட்டிருந்த காப்புகளையும் அத்தாவிடம் கழற்றிக் கொடுத்து சுபாஸ் சந்திரபோசிடம் கொடுத்துவிடச் சொன்னாள்!
மலாய் ஸ்ரீட் சிலோன் ரெஸ்டராண்டில் காலையில் கூட்டம் அலைமோதும். உள்ளே இருப்பவர்களைக் காட்டிலும் வெளியே திருவிழாக் கூட்டம்! முதலாளி ரேடியோவை உச்ச சத்தத்தில் வைப்பார்.
“ஆகாஸ்ஸவாணி செய்திகள் வாசிப்பது தர்மாம்பாள். முக்கியச் செய்திகள்." என்று வரும் பொழுது வெளியே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அமைதி வந்து விடும்.
யாருடைய வீட்டிலும் ரேடியோ இருக்காது. இப்படி பொதுவான இடத்தில்தான் செய்தி கேட்பார்கள்.
அன்று அத்தா என்னை சிலோன் ரெஸ்டாரண்டிற்கு அழைத்துப் போனார். அந்த அதிகாலை மிக சோகமானதாக இருந்தது. ஜப்பானியர்களின் நாட்டில் அணுகுண்டு போடப்பட்டு ஜப்பான் சரணாகதி அடைந்து விட்ட செய்தி ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. இன்று விமான விபத்தில் சுபாஸ்சந்திர போஸ் காலமாகிவிட்ட செய்தியை தர்மாம்பாள் வாசிக்கும் பொழுது ரேடியோ கதறி அழுவது போல் எனக்குப்பட்டது. ரேடியோ அழுததா இல்லை, தர்மாம்பாள் அழுதாரா என்று எனக்குத் தெரிய வில்லை.
கூட்டம் கூச்சல் போட்டது. "இது வெள்ளைக் காரனின் சதி பொய் செய்தி போஸ் சாவதாவது? நம்பாதீர்கள். ஜெய் ஹிந்த் டில்லி சலோ!" உணர்ச்சி மேலிட கூட்டம் கதறியது. ரோபின்சனுக்குப்பின்னே சரணாகதி அடைந்த ஜப்பானியர்கள் கூடாரம் போட்டுத் தங்கியிருந்தார்கள். அவர்கள் எந்த அளவு இடுப்பில் வாளுடன் இருந்தார்களே, அந்த அளவு கூனிக் குறுகி நின்றார்கள். அவர்களின் ஆயுதங்கள் பறி முதல் செய்யப்பட்டிருந்தன. எப்பொழுதும் எனக்கு மிட்டாய் களை நீட்டும் அந்த ஜப்பானிய அதிகாரி பரிதாபகரமாக என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் அப்பொழுது மிட்டாய்கள் இல்லாமலிருந் திருக்கலாம்.
மறுநாள் காலை கோ. சாராங் பாணி தோளில் பத்திரிகைகளை சுமந்து வந்துகடைகடையாக விற்றுக் கொண்டிருந்தார். "சுபாஸ் சந்தரபோஸ் விமான விபத்தில் காலமாகிவிட்டார்!" என்ற செய்தியை முதல் பக்கத்தில் போட்டிருந்ததாக அத்தா கூறிய துடன் இவர்தான் கோ. சாரங்க பாணி. திருவாரூர் காரர் - பத்திரிகை நடத்துகிறார். பாவம் 6 pJITLíbu öfagJLDÜı LuLl"G66 «é946)JC3g ‘ அச்சிட்டு அவரே தோளில் சுமந்து அதை விற்கிறார். உயர்ந்து சிவப்பாக பாகவதர் கிராப்புடன்
40
அவர் “கூவி கூவி" பத்திரிகை விற்றுக் கொண்டிருந்தார். இரண்டு காசோ மூன்று காசோ விலைகொடுத்து பத்திரிகைகளைப் பலர் முண்டியடித்துக்கொண்டு வாங்கியதுடன் "செய்தி உண்மையா?" என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உண்மைதான் என்றார். அப்போதும் பலர் அந்தச் செய்தியை நம்பவில்லை!
அத்தா மூன்று நான்கு நாட்கள் வெற்றிலை கிள்ளப் போகவில்ல்ை. அத்தாவின் சைக்கிள் சோகமாக சுவர். ஒரத்தில் சாய்ந்து படுத்திருந்தது, அம்மா அழுது கொண்டேயிருந்தார்.
கொங்கம்மா, அவளின் கணவர், தாடிக்காரத் தாத்தா எல்லாம் என்னவாகியிருப்பார்கள்? பர்மா எல்லையில் வெள்ளைக்காரனின் பீரங்கிக்குப் பலியாகியிருப் பார்களா? தலை கீழாகச் சுருட்டுப் பிடிக்கும் தங்கம்மா அவள் கணவனிடம் பேசும் சுந்தரத் தெலுங்கு, "உன் பீ தான்டா ரொம்ப நாறுது என்று அவள் கூறியது. சிரிக்கும் பொழுது பளிச்சென்று தெரியும் அவளுடைய பற்கள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை எப்பொழுதும் ஜோடியாகத் திரியும் அவர்கள் ஜோடியாகவே இறந்திருக்கலாம்.
★女★ எனக்கு இப்போ ஒன்பது வயது. சுபாஸ் சந்திர போஸ் இறந்து இரண்டு வருடமாகிவிட்டது. அத்தா காலையில் சிலோன் ரெஸ்டாரண்டிற்கு என்னைக் கூட்டிப் போனார். அன்று சிலோன் ரெஸ்டாரண்டிற்கு முன்பே சாலையில் ஒரு சிறிய கூடாரம் தெரிந்தது. தோளில் ஒரு விறகுக்கட்டையை வைத்துக்கொண்டு லெப்ட் ரைட் என்று ஒரு ராணுவ வீரனைபபோல் முன்னும் பின்னுமாக நடந்து கலாத்து செய்து கொண்டிருந்தார் தாடிக்கார தாத்தா கிழிந்துபோன இந்திய தேசிய ராணுவத்தின் உடையை அவர் அணிந்திருந்தார். கூடாரத்தின் ஒரு மூலையில் இந்திய தேசியக் கொடியை நட்டு வைத்திருந்தார்.
"சுபாஸ் சந்திரபோஸ் சாகவில்லை உயிரோடு இருக்கிறார். இமயமலையில் இருக்கிறார் வெளியே வந்து இந்த வெள்ளையனை வெளியேற்றுவார் டில்லி சலோ, ஜெய் ஹந்தி லெப்ட் ரைட், லெப்ட் ரைட்"
சல்யூட் அடித்து உருது மொழியில் அதைத் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தார்.
"இவர் பெயரு முஜிபுர் ரஹற்மான், பாகிஸ்தான்காரர். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் பிரிந்ததுகூட இவருக்குத் தெரியவில்லை. பர்மாவில் போர் முனையில் இருந்தபொழுது போஸ் இறந்துவிட்ட செய்தி கிடைத்த பொழுது மனம் பேதலித்து விட்டது. இன்னும் போஸ் உயிரோடு இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று அத்தாவிடம் கூறியவாறு சிலோன் ரெஸ்டரண்ட் முதலாளி 4 தேநீரையும் தோசைகளையும் தாடிக்காரத் தாத்தாவிடம் கொண்டு போய்க் கொடுத்தார். "ஜெய்ஹிந்த்டில்லசலோlதும் அப்கா ஆத்மி ஹே!” என்று கூறியவாறு அவரிடமிருந்து தேநீரையும் தோசை களையும் வாங்கிக் கொண்டார்.
“ஆம் நான் உன் நண்பன் தான்” என்றார் சிலோன் ரெஸ்டாரண்ட் முதலாளி
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 43
தமிழ்ச்சிறுகதை ஒரு நூறு
தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறு என்ன கூறுகிறது? இதன் ஆரம்பம், இடைக்காலம், இன்றைய நிலைப்பாடுகள் எதனை வெளிக்காட்டுகிறது அல்லது வழிநடத்துகிறது? இது மட்டுமல்ல; புதிய பரிமானங் களில் சிறுகதைகள், மரபு வழி சிறுகதைகள், மற்றும் தமிழ் இலக்கிய மாற்றம் குறித்து வெளிச்சம் காட்டும் அறிவு பூர்வமான கருத்தரங்கு சென்னை கன்னிமாரா நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற போது இதில் கலந்து கொண்டவர்களின் கருத்துப் பரிமாற்றம், ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டியது. காரணம், தலைப்பே தமிழ்ச் சிறுகதைகள் ஒரு நூற்றாண்டு.
கருத்தாய்வில் கலந்துகொண்ட சாகித்திய அகாடமி செயலாளர் அக்ரஹாரம் கிருஷ்ணமூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் ராம. குருநாதன, சிற்பி பாலசுப்பிரமணியம், பிரபஞ்சன் போன்றோர் அரிய தகவல்களை வெளியிட்டதுடன் வார ஏடுகளில் கதை எழுதுபவர்கள், வெகுஜன எழுத்தாளர்கள், பிரச்சார வாடையுடன் எழுதுபவர்கள், சமுதாய அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் எழுத்தாளர்கள், கிராமிய சிந்தனைகளை வெளிப்படுத்துபவர்கள் என்று தரவரிசையில் பட்டியலிட்டு; ஆரம்பகாலத்தில் நாடகப் பாணியில் எழுதப்பட்ட சிறுகதைகள், பின்னர் கவிதை நடையிலும், அதனைத் தொடர்ந்து வாய்மொழி மரபுகளை மையமாகக் கொண்டும் படைக்கப்பட்டன என்றும், தமிழ்ச் சிறுகதை வரலாறு பல திறமையான எழுத்தாளர்களையும், நல்ல கருத்துப் பரிமாற்றங் களையும் தந்துள்ளது என்றும் பெருமிதப்பட்டனர்.
தமிழ்ச் சிறுகதைகளின் மூன்று முன்னோடிகள்
வரவேற்புரை நிகழ்த்திய “அக்ரஹாரம் கிருஷ்ண மூர்த்தி, செய்தித்தாள்களில் வருவதெல்லாம் கூட அரிய கதைகள்தான். அந்தக் கதைகளில், தேடப்படும் பல தகவல்கள் புதைந்து கிடக்கும்” என்று முன்னுரை வழங்க: "தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகள் என்றால், வ.வே.சு., மாதவய்யா, பாரதியார் மூவர்தான் என்றாலும், தொடக்க சிறுகதையை எழுதியது வ.வே.சு. வா அல்லது பாரதியாரா என்ற விவாதம் இன்றும்தான் நீடிக்கிறது. ஆனாலும், இந்த மூவருக்கும் முன்னரே சுந்தரேச முதலியார் சிறுகதைகளை எழுதினாலும் நாடகப் பாணியிலான சிறுகதைகளே முதலில் தமிழில் வெளிவந்தன. இவர்களுக்குப் பின்னர் வந்த புதுமைப்பித்தனை - அவரது இடத்தை எவராலும் எட்ட முடியவில்லை. கற்பனை வளம், காந்திய சிந்தனைகளை தனது
ஞானம் - 5oo.ooo GoođSafu og heffloods - ஜூலை 2011
தகளுக்கு வயது
ஆண்டு
- கே.ஜி.மகாதேவா -
கதைகளில் கொண்ட 'கல்கி வெகுஜன எழுத்தாளரா கவும், இவர் பின்னர் வந்த அகிலன். நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜெகசிற்பியன் போன்ற எழுத்தாளர்கள் தனித்தனி பாணிகளிலும் நடைபோட்டனர். இக்கால கட்டத்துக்குப் பின்னர் அண்ணா, கருணாநிதி, டி.கே.சீனிவாசன் நிந்தன், ஜெயகாந்தன், தொ.மு.சி.
ரகுநாதன், மேலாண்மை பொன்னுச்சாமி போன்ற வர்கள் சமுதாய அவலங்களை கிராமிய சிந்தனை களுடன் தங்களது சிறுகதைகளில் பதிவு செய்தனர். இவர்களை அடுத்து பொழுது போக்குக் கதைகளில் கு.அழகிரிசாமி, பி.எஸ்.ராமையா, வல்லிக் கண்ணன். தி.ஜனாகிராமன் போன்ற படைப்பாளிகளும், இவர் களைத் தொடர்ந்து பிரபஞ்சன், பாலகுமாரன் போன்றவர்களும் சிறுகதைகளுக்கு புதிய வடிவம் கொடுத்தனர். 1960க்குப் பின்னர் சிறுகதைகளில் ஏற்பட்ட யுக்திகள், மாற்றங்கள் பலனாக அசோகமித் திரன், கண்ணதாசன் போன்றோர் கவிதை நடையில் சிறுகதைகளைப் படைத்தனர். நாவலைக் காட்டிலும் சிறுகதை வளர்ச்சி வேகமாக இருக்கிறது. இளைஞர்கள் புதிய பரிமாணங்களில் சிறுகதைகளை எழுதுவது பெருமையாக இருக்கிறது” என்று ராம குருநாதன் மகுடமிட்டார்.
வாய்மொழி மரபு வழியின் கானப்படும் சிறுகதைகள்
கருத்தரங்குக்கு தலைமை வகித்த சிற்பி பாலசுப்பிரமணியன், "தமிழ்ச் சிறுகதைகள் இன்று புதிய யுக்திகளோடு வெளிவருகின்றன. இளைஞர்கள் படையெடுக்கின்றனர். வாய்மொழி மரபுகளை எடுத்துக் கொண்டு சிறுகதை எழுதுபவர்கள் நிறைய காணப்படுகின்றனர். இது ஒரு நல்ல இலக்கிய மாற்றம். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஏதோ ஒன்றை அடைமொழி கூறலாம். ஆனால் எந்தத் தர்க்கத்துக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவர் புதுமைப்பித்தன், ல.ச.ரா. தனது சொந்தப் பாணியில் ஒரு மொழி நடையை சிறுகதைகளில் புகுத்தியவர். எளிய மனிதர்களின் உள்ளக்குமுறல்கள் ஜெயகாந்தன் கதைகளில் காணலாம். சாதாரண மொழியில் அசாதாரணமாக கதை கூறுபவர் அசோகமித்திரன். சிறுகதைகளுக்கு புதிய வனப்பை தந்தவர் சுந்தர ராமசாமி." என்று நீண்ட பட்டியலிட்டார்.
கருத்தரங்கு பதிவுகளிலிருந்து மீண்டுவந்து, ஈழத்தின் மண்ணை நோக்கிப் பார்க்கின்றேன். இலங்கை தமிழ்ச் சிறுகதைகள் ஆரம்ப கால வரலாறு எப்படி இருந்திருக்கும்? வைத்திலிங்கம், இலங்கை (தொடர்ச்சி 47ஆம் பக்கம்)
41
Page 44
3.1.2.1 படைப்பாக்க நிலையில் வளர்ச்சி, மாற்றம் என்பனவும் பொருளிலக்கண இயங்குநிலை * களும் - (தொடர்ச்சி)
தமிழரின் இலக்கியப் படைப்பாளுமையானது இளங்கோ, மணிவாசகர் ஆகியோரூடாக கம்பர் வரை எய்திய வளர்ச்சிநிலையையும் அவ்வளர்ச்சி அம்சங்களை அன்றைய கால பொருளிலக்கண மரபு புரிந்துகொள்ள முற்படவில்லை என்பதையும் முன்னைய கட்டுரைகளில் நோக்கினோம். புரிந்து கொள்ளவில்லை என்பதோடு மட்டுமன்றி, அப்படைப் பாளுமையைக் கண்காணிக்கும் ஒரு அதிகார மையமாகவும் அம்மரபு திகழ்ந்துளது என்பதும் கடந்த கட்டுரையில் அங்கு நோக்கப்பட்டது. இதற்குச் சான்றாக மணிவாசகர் திருக்கோவையார் என்ற மரபுசார் இலக்கிய ஆக்கத்தைத் தரவேண்டி யிருந்த சூழ்நிலை அங்கு சுட்டப்பட்டது.
இதனை நோக்கும்போது கம்பர் காலம்வரை படிப்படியாக நிகழ்ந்துவந்த படைப்பாளுமை வளர்ச்சிச் செல்நெறிக்குச் சமாந்தரமான ஒரு வழித்தடத்தில் தனியான அதிகார மையமாக அம் மரபு இயங்கி வந்துள்ளமை தெளிவாகும். இவ்வாறு சமாந்தர நிலையில் இயங்கிவந்த மரபானது கம்பர்காலத்தின் பின்னர் படைப்பிலக்கியச் செல்நெறியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன் மீது முழுமையான அதிகாரம் செலுத்துவதாக எழுச்சி பெற்றது என்பதே வரலாறு உணர்த்தும் செய்தியாகும். இந்நிலையில் குறிப்பாக, பண்டைய அகப்பொருள் மரபும் புறப்பொருள் மரபும் சார்ந்து புதுப்புது இலக்கிய வகைமைகள் தோற்றம் பெறலாயின. புறப்பொருள் மரபுசார்ந்தவையான தலைவன்(அல்லது இறைவன்) புகழ்பாடும் நோக்கும் அவற்றுடன் சமகால சமூக நிலைகளை ஒட்டிய சமய - தத்துவ போதனை அம்சங்களும் பல்வேறு பரிமாணங்களில் மேற்படி இலக்கிய வகைகளின் பாடற் பொருண்மைகளாக இடம்பிடித்துக்கொண்டன. பண்டைய அகப்பொருள் மரபானது தனித்தும், புறப்பொருள் மரபு மற்றும் சமய மரபு எனபவற்றோடு இணைந்தும் பல இலக்கிய வகைகளைத் தோற்றுவித்தது.
இவ்வாறு பெருகிய இலக்கிய வகைகளுக்கு இலக்கணங்கூறும் கல்விசார் முயற்சிகளாக பாட்டியல் நூல்கள் பல உருவாயின. இவை இலக்கியவகை
42
ஒவ்வொன்றையும் இலக்கண வரையறைகளுக்கு உட்படுத்தி, "இன்ன இலக்கிய வகை, இன்ன யாப்பில், இப்படித்தான் படைக்கப்படவேண்டும்” என்பதான விதிமுறைகளை முன்வைத்தன. நாளடைவில், இலக்கணம் கூறியவாறு இலக்கியம் செய்வதான இயந்திரப்பாங்கான இலக்கிய உற்பத்தி முறைமை" உருவாகியது. உற்பத்தி நிறுவனமொன்று தனது தயாரிப்புத்திறனை விளம்பரப்படுத்துவதுபோல காளமேகப் புலவர் முதலியோர் தமது ‘இலக்கியத் தயாரிப்பு ஆற்றலை(முற்சுட்டியவாறு தூதைந்து நாழிகையில்.என்பது போல) எடுத்துப்பேச முற்பட்ட வரலாற்றின் பொருளிலக்கண மரபு சார்ந்த பின்புலம் இதுதான்.
இக்காலப்பகுதியில் நாடகப்பாங்கான எடுத்துரைப்பு முறைமைகளுடன் புதிய புதியவாழ்வியல்களைப் பேச முற்பட்டவையான குறவஞ்சி, பள்ளு முதலிய வகைகள் சார் இலக்கிய ஆக்கங்கள் கூட சமகால இலக்கிய மரபுசாரந்த விதிமுறைகளைத் தழுவியே வடிவம்பெறவேண்டிய நிலையே நிலவியது. குறிப்பாக, தலைவன் அல்லது இறைவன் புகழ்பாடும் மரபு மற்றும் அகப்பொருள்மரபு என்பவற்றுள் ஒன்றையாவது அவை உள்ளடக்கத்தில் இடம்பெறச் செய்யவேண்டியிருந் தமையை அவ்வகை ஆக்கங்களை வாசிப்போர் உணர்ந்துகொள்ளமுடியும்.
கம்பருக்குப் பின் பாரதி காலம் வரை நிலவிய தேக்கநிலைக்கான இலக்கிய நிலைப் பட்ட - குறிப்பாக மரபு நிலைப்பட்ட - சுருக்கமான பின்புல விளக்கம் இதுதான்.
மேற்சுட்டியவாறான மரபின் பிடியிலிருந்து தமிழின் படைப்பாளுமையை விடுவித்ததான ஒரு யுகமாற்ற த்தை ஏற்படுத்திய வகையிலேயே மகாகவி பாரதி தமிழுக்குப் புதுநெறிகாட்டிய புலவனாக அறிமுக மாகிறான் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு பாரதி படைப்பாளுமை வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்திய காலத்தை ஒட்டியே தமிழில் இலக்கியத் திறனாய்வியலானது "பொருளிலக்கண மரபுசார் பார்வை' என்ற கட்டத்தைத் தாண்டி, ஒரு தனியான "இலக்கிய ஆய்வுத்துறை என்ற வகையில் உருப் பெறத் தொடங்குகிறது. பாரதியின் சமகாலத்தவர்களான திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (18641920மற்றும் வ. வே. சுப்பிரமணிய ஐயர்(1881-1925) ஆகியோரே தமிழில் இப்புதிய ‘இலக்கிய ஆய்வுத் துறைக்கு அதாவது "இலக்கியத் திறனாய்வியல் துறைக்கு வித்திட்டவர்களாவர். இவ்வாறு இவர்கள்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 45
தொடக்கிவைத்த ‘இலக்கியத் திறனாய்வியல்’ வரலாற்றை நோக்குவதற்கு முன்பாக செயன் முறைத் திறனாய்வு' என்றவகையில் தமிழில் மரபாக நிலவிவந்துள்ள சிந்தனைகள் மற்றும் பதிவுபெற்ற சான்றாதாரங்கள் ஆகியன பற்றிய சில முக்கிய செய்திகளை இங்கு பதிவுசெய்ய வேண்டியது அவசியமாகிறது.
இவ்வகையில், குறிப்பாக இலக்கியப் படைபபாளி (இலக்கிய ஆசிரியர்) தொடர்பாக நிலவிவந்துள்ள கருத்தாக்கங்கள், இலக்கிய ஆக்கத்தைச் சமூக வெளிக்கு அறிமுகம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வையான பாயிரம், அரங்கேற்றம் ஆகியசெயன் முறைகள் சார் சிந்தனைகள் மற்றும் படைப்புகளின் தரம் காண்பது (அதாவது குணம் குற்றம் நாடுவது) தொடர்பாக நிலவிவந்த எண்ணப்பாங்குகள் என்பன முதற்கவனத்துக்குரியன. இவற்றையடுத்து செயன்முறைத் திறனாய்வுசார் முக்கியசான்றுகளாக அமையும் "உரைகள் மற்றும் திருவள்ளுவமாலை என்பன கவனத்திற் கொள்ளப்படவேண்டியனவாகின்றன. இவற்றுள் முதலில் இலக்கியப் படைப்பாளி(இலக்கிய ஆசிரியர்) தொடர்பாக நிலவிவந்துள்ள கருத்தாக் கங்களை நோக்குவோம்
தமிழ்மரபில் இலக்கியப்படைப்பாளி தொடர்பாக நிலவிவந்துள் கருத்தாக்கங்கள்
செயன்முறைத் திறனாய்விலே படைப்பாளிக்கு உரிய முக்கியத்துவம் எத்தகையது?
என்பது தொடர்பாக நமது காலப்பகுதியில் இருவேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
இவற்றில் முதலாவது கருத்துநிலையானது u6Odlumsifloodu Ju 5 & 6)d b60dlu u60dlt 60duuLib இணைத்து நோக்கும் முறைமை சார்ந்ததாகும். 'படைப்பினர் தொனிப்பொருள்', அது மையப்படுத் தியமையும் பிரச்சினை அம்சங்கள் மற்றும் அதன் கட்டமைப்புக் கூறுகள் ஆகியவற்றை படைப்பாளியின் ஆளுமையுடன் தொடர்புபடுத்தி, காரண காரிய நிலையில் விளக்கிப் பேசும் திறனாய்வுச் செயன் முறையாக இது அமையும். படைப்பொன்றை அதனைப் படைத்தவரின் ஆளுமையின் வெளிப்பாடாகக் காணும் எண்ணப்பாங்கு சார்ந்தது, இது.
இரண்டாவது கருத்துநிலையானது, படைப் பாளியிடமிருந்து படைப்பை வேறுபடுத்தி நோக்கும் முறைமையாகும். “படைப்பைப் பார். படைப்பாளியைப் பாராதே" என்ற கோஷமாக வெளிப்பட்டுள்ள இக் கருத்தாக்கமானது சமகால வாசகர் நிலைசார் அணுகுமுறையின் குரலாகும். இலக்கியப் படைப் பொன்றை வாசகர் சுவைக்கவும் பொருள்கொள்ளவும் முற்படும்போது, படைப்பாளியினுடைய ஆளுமைக் கூறுகள் தொடர்பான பின்புல அம்சங்கள்மீது கவனம் செலுத்தவேணர்டிய அவசியமில்லை" என்பதும், 'அப்படைப்பே தன்னை முழுவதுமாக இனங்காட்டிக் கொள்ளக் கூடியது' என்பதுமான பின் அமைப்பியல் எண்ணப்பாங்கினடியாக உருவான கருத்தாக்கம், இது. படைப்பை, வாசகரை மையப்படுத்திய ஒன்றாகக் காட்டும் இந்த இரண்டாவது நிலைசார் எண்ணப்
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
பாங்கானது ஆசிரியர் இறந்துவிட்டார்டுபடைப்பாளியின் மரணம்) என்பதான எல்லைவரை சென்றுவிட்ட மையை இன்றைய விமர்சன உலகம் அறியும். வாசகரது முதன்மையை வலியுறுத்தும் நோக்கில் அமைந்த மிகைப்படுத்தப்பட்ட கருத்தாக்கமே இது என்பது வெளிப்படை '6քd5 Լյ6Օւմ ւ այÛftՈա வாசிப்பில்லே, படைப்பாளியின் நோக்கு மற்றும் ‘விருப்பு-வெறுப்பு' என்பவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை" என்ற அளவில்மட்டுமே மேற்படி கருத்தை நாம் ஏற்கலாம். அதாவது, 'வாசகருடைய இலக்கிய ஆளுமைக்கேற்பப் படைப்பின் உணர்வுத் தளமும் அதன் பொருட்பண்பும் வேறுபடுவன என்பதை ஒப்புக் கொள்வதில் தடையில்லை. ஆனால் ஒட்டு மொத்தமான திறனாய்வுச் செயன்முறையில் படைப் பாளியின் ஆளுமைக்குரிய முக்கியத்துவத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஒரு இலக்கியப் படைப்பானது அதைப் படைத்தவனுடைய உலக நோக்கு, அனுபவங்கள் மற்றும் அறிவாற்றல்கள் ஆகிய ஆளுமைக்கூறுகளின் திரட்சியாகவே எழுத்து நிலையில் வடிவங்கொள்கின்றது என்பது வெளிப்படை இந்த அடிப்படையிலேயே தமிழ் மரபில் படைப் பாளியின் ஆளுமை தொடர்பாக நிலவிவந்த சிந்தனைகள் இங்கு கவனத்துட் கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவ முடையனவாகின்றன.
புலவரும் ஆசிரியரும்
படைப்பாளியைக் குறிப்பிடுவதற்குத் தமிழ்மரபிலே சங்ககாலம்முதல் வழக்கிலிருந்துவரும் சொல், புலவர் என்பதாகும். இச்சொல்லானது படைப்பாளியை மட்டுமன்றி இலக்கிய - இலக்கண அறிவுடைய அனைவரையும் சுட்டும் பொருள்விரிவுகொண்டதாக வழக்கிலிருந்துவருகிறது என்பதும் இங்கு நமது கவனத்துக்குரியதாகும்.
புலவர் என்பதற்கு புலமையுடையவர்கள் என்பது பொருள். புலமை என்பது அறிவாற்றல் எனப் பொருள் தருவது. அறிவாற்றல் மிக்க ஒருவரைப் புலத்துறை முற்றியவர்" எனக்குறிப்பிடுவது மரபாகும். சங்கப் புலவர்களுள் ஒருவாரன கூடலூர்க்கிழார் என்பார் (8ங்குறு நூறு என்ற சங்கப் பாடல் தொகுப்பைத் தந்தவர்) "புலத்துறை முற்றிய என்ற அடைமொழியுடன் சுட்டப்பட்டார் என்பது இத் தொடர்பில் குறிப்பிடப் படவேண்டிய செய்தியாகும். இத்தகு புலமையுடை யோரைச் சான்றோர் எனக்குறிப்பிடும் வழக்கும் தமிழ் மரபில் நிலவிவருகிறது. பொதுவாகவே சங்கப் புலவர்களைச் சான்றோர் எனச் சுட்டுவதும் அவர்தம் பாடல்களைச் சான்றோர் செய்யுள்' எனச் சுட்டுவதுமான வழக்காறுகளைத் தமிழ் உரைமரபில் தெரிந்து கொள்ளமுடியும். சான்றோர் என்பதற்கு சால்புகள் - அதாவது உயர்பண்புகள் -உடையவர்கள் என்பதே பொருளாகும்.
இவற்றை நோக்கும்போது கல்விகேள்விகளில் மிக்கிருந்தோரும் சமூகத்தின் பண்பாட்டுநிலையில் உயர்கனிப்புக்குரியோராகத் திகழ்ந்தவர்களுமே இலக்கியம் படைப்பதற்கான தகுதியுடையோராகக் கணிக்கப்பட்டுப் போற்றப்பட்ட சமூகச் சூழலையே
43
Page 46
மேற்படி புலவர் என்ற சொற்பயிற்சி உணர்த்திநிற் கின்றமை தெளிவாகிறது. இன்னொரு வகையிற் கூறுவதானால் மேற்படி சால்புடையவர்களின் ஆக்கங்களையே இலக்கியமாக மதித்துப் பேணிக் கொள்கின்ற நிலையே பண்டைக்காலத்தில் நிலவி வந்தது என்றும் கொள்ளலாம்.
மேற்படி புலவர் என்ற சொல்லுக்கு மாற்றீடாக "ஆசிரியர் என்றசொல்லும் பண்டைக்காலம் முதலே தமிழில் வழங்கிவருகின்றது. இச்சொல் 'கல்வி போதிப்பவர்'எனப் பொருள்தரும் 'ஆசார்ய என்ற சம்ஸ்கிருத சொல்லின் தமிழ்வடிவமாகும். புலவர்களே பண்டைக்காலத்தில் கல்வி போதிப்பவர்களாகவும் திகழ்ந்தமையால் இச்சொல்லாலும் அவர்கள் அழைக்கப்பட்டனர் எனத் தெரிகிறது. சங்க இலக்கியத் தில் மிகுதியாகப் பயின்றுள்ள அகவல் என்ற பாடல்வடிவமானது யாப்பிலக்கண மரபில் 'ஆசிரியம்’ (ஆசிரியப்பா) எனப் பெயர் பெற்றுள்ளமையை அறிவோம். இதற்கு, அவ்வடிவமானது ஆசிரியர்களால் பெருவழக்காகப் பயன்படுத்தப் பட்டமையே காரணம் என்பதே யாப்பியல் ஆய்வாளர்களது கருத்தாகும்.
இவ்வாறு சான்றோர்களாகவும் ஆசிரியர்களாகவும் திகழ்ந்த புலவர்களின் ஆளுமை அம்சங்கள் தொடர்பான பண்டைக்காலத்தில் நிலவிவந்துள்ள முக்கிய சில கருத்தாக்கங்களை சிலப்பதிகாரத்தின் (கி.பி. 4-5ஆம்நூ.ஆ) அரங்கேற்றுகாதை, சேந்தன் திவாகரம், பிங்கலம் ஆகிய நிகண்டுநூல்கள் (கி.பி.9ஆம்.நூ.ஆ.) மற்றும் யாப்பருங்கலம் என்ற யாப்பிலக்கண நூல் (கி.பி.11ஆம்நூ.ஆ.) என்பன அறியத்தருகின்றன. ‘அரங்கேற்றுகாதை"யிலே மாதவியின் ஆடலுக்குரிய பாடல்களை இயற்றியளிக்கும் பாடலாசிரியர் ஒருவர் இளங்கோவடிகளால் நமது கவனத்துக்கு இட்டுவரப்படுகிறார்.
அரங்கேற்றுகாதை குறிப்பிடும் பாடலாசிரியர்
"இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ் முழுதரிந்த தன்மையனாகி
நாத் தொலைவில்லா நன்னூற்புலவனும்." எனவரும் அடிகளில் (அரங் 37-44) அப்பாடலா சிரியரின் ஆளுமை அம்சங்கள் பதிவாகியுள்ளன. இங்கு, இப்பாடலாசிரியன் புலவன் என்றே சுட்டப்படுவதை நோக்கலாம். நாத்தொலைவில்ாை நன்னுற்புவைனர்' என்பது நாக்கு வன்மையும் நூலறிவும் மிக்கவர் அவர் என்பதை உணர்த்து வதாகும். அவர், அன்றைய தமிழகச் சூழலின் தமிழ்மொழியின் பயில்நிலை அம்சங்கள் அனைத்தையும் அறிந்தவராகவும் குற்றமற்றவகையிற் சொற்களைத் தேர்ந்து பாடல் புனையவல்லவராகவும் திகழ்ந்தவர் என்பதும் மேற்படி அடிகள் மூலம் தெரியவருகின்றது. இசை மற்றும் ஆடல் தொடர்பான - பாடல்களைப் புனையும் பாடலாசிரியர் ஒருவரின் ஆளுமைத்திறன் என்றவகையில் தமிழ் மரபினுடாக எமக்குக்கிடைக்கும் வரைவிலக்கணப் பண்பு கொண்ட தொண்மையான தகவற் குறிப்பு இதுவே எனலாம்.
மேற்படி நன்னூற் புலவனைக் 'கவி எனச் சுட்டும் வழக்கும் அக்காலப்பகுதியில் நிலவியதை மேற்படி 'அரங்கேற்றுகாதையில் அமைந்த கவியது குறிப்பு' (அடி:33) என்ற பிறிதொரு தொடர்மூலம் தெரிந்து கொள்ளமுடிகின்றது. இத்தொடருக்கமைந்த அரும்பதவுரை யானது, ‘இயற்புலவன் நினைத்த கோட்பாடு' எனப் பொருள் தருகிறது. 'கவி என்ற வடசொல்லானது கவிதை (காவியம்உட்பட) புனைபவர் எனப் பொருள் தருவதாகும். கவி என்பதோடு "ஞர் என்ற விகுதியும் சேர்த்து 'கவிஞர் என்ற சொல்லால் இவரைச் சுட்டும் மரபும் நாளடைவில் தமிழில் உருவாகிவிட்டது. கவி என்பதற்கு கவிதை என்ற பொருளும் வழக்கிலுள்ள மையை அறிவோம்.
(மேலே நோக்கியவாறு புலவர், கவி(கவிஞர்) ஆகிய சொற்கள் ஒரே பொருண்மையில் - அதாவது படைப்பாளியைக் குறிப்பனவாக - வழங்கி வந்துள்ளன எனினும் நமது சமகால வழக்கிலே இரண்டும் பொருள்நிலையில் வேறுபடுகின்றன என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியம். புலவர் என்பவர் மரபு ரீதியான யாப்பிலக் கன முறைமைகளைச் சார்ந்து நின்று செய்யுள் இயற்றுபவர் என்பதும் கவிஞர் என்பவர் உணர்வின்(அல்லது உணர்ச்சியின்) வெளிப்பாடாகக் கவிதைகளைப்புனைபவர்’ என்பதுமே சமகாலத்தின் பொதுவானகருத்துநிலையாகும். மேலும் "புலவர்' என்பது பண்டிதர் என்பது போல ஒரு கல்விசார் சிறப்புத் தகைமையாக - பட்டமாக - வும் நமது காலத்தில் வழக்கிலிருந்துவருகிறது.)
மேலே நாம் நோக்கிய சிலப்பதிகாரத்தின் பாடலாசிரியர் ஆளுமை பற்றிய செய்திகளின் பின்னர் படைப்பாளியின் ஆளுமைக் கூறுகள் தொடர்பான விரிந்த நிலையிலான தகவல்களை மேற்சுட்டிய திவாகரம், பிங்கலம் ஆகிய நிகண்டு நூல்களிலும் யாப்பருங்கலம் மற்றும் அதன் விருத்தியுரை ஆகியவற்றிலும் பெற்றுக்கொள்கிறோம். இவ்வகையில் இந்நூல்கள் தரும் தகவல்களில் முக்கியமாக முதலிற் குறிப்பிடக் கூடியது கவிஞர்களை 'ஆசுகவி, மதுரகவி சித்திரகவி வித்தாரக்கவி என நால்வகையினராக வேறுபடுத்திநோக்கும் சிந்தனை முறைமை ஆகும். இம்முறைமை தொடர்பான தொண்மையான சான்று என்ற வகையில் திவாகரம் சுட்டும் மேற்படி பகுப்பு முறைமை இங்கு நமது கவனத்துக்கு வருகிறது.
நால்வகைக் கவிகள் - திவாகர நிகண்டு தரும் செய்திகள்
இந் நிகண்டு நூல் தனது 12வதுபிரிவான பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி என்ற பகுதியிலே மேற்படி'ஆசுகவி, மதுரகவி சித்திரகவி வித்தாரக்கவி ஆகியோரைப்பற்றிய விளக்கங்களைத் தருகிறது.
"கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தில் அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி "
"பொருளின் பொலிவும் சொல்லின் செல்வமும்
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து உருவகம் முதலா அலங்காரம் உட்கொண்டு
ஞானம் -- αυσωαο ΦδαρδαθιΙΙ σώάloωα - ஜூலை 2011
Page 47
ஒசைபொலி வுடைத்தாய் உய்த்துணர்வோர் உளங்கட்கு
மாகடல் அமிழ்தம்போல் பாடுதல் மதுரகவி ”
"மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்
தெரித்துப் பாடுவது சித்திர கவியே"
“மும்மணிக் கோவையும் பண்மணி மாலையும் மறமும் கலிவெண்பாவும் மட லூர்ச்சியும் கிரீடையும் கூத்தும் பாடாண்டத் துறையும் விருத்தக் கவிதையும் இயலிசை நாடகத்தொடு விரித்துப் பாடுவது வித்தாரக் கவியே " (gólsumæplb :Öfgðum: 2334-2337) மேற்படி சித்திரக்கவி பற்றிய நூற்பாவில் 22 சித்திரக்கவிவகைகள் சுட்டப்பட்டுள்ளன.
மேலே நோக்கியவாறு திவாகரத்தில் இடம் பெற்றுள்ள நூற்பாக்களே சிற்றில பாடவேறுபாடுகளுடன் பிங்கலத்திலும் (366-369) இடம்பெற்றுள்ளன. யாப்பருங்க ைநூலின் இறுதி(96ஆம்) நூற்பாவின் விருத்தியுரை தரும் விளக்கங்களும் மேற்படி நூற்பாக்களின் பொழிப்புரை போலவே அமைந்துள்ளன. இத்தொடர்பில் முக்கியமானஒருவேறுபாடு இங்கு குறிப்பிடப்படவேண்டியதாகிறது. நிகண்டு நூல்களிரண்டும் மேற்படி வகைப்பாட்டைக் 'கவிதையின் வகைமை’ களாகவே சுட்டுவனவாகும். ஆனால் யாப்பருங்கலம் மற்றும் அதன் விருத்தியுரை என்பன இவ்வகைப் பாட்டை 'கவிஞர்களின் வகைமை யாக அடையாளப் படுத்திநிற்கின்றன. இதுவே அவ்வேறுபாடாகும்
மேற்படி திவாகரம் முதலியன தரும் விளக்கங் களினடிப்படையில் நோக்கும்போது நால்வகைக் கவிதைச் செயற்பாடுகளும் பொதுவாக மொழிப் புலமையுடன் கூடிய புனைவுகள் என்பது தெளிவா கின்றது. இவற்றைப் புனைபவர்களுள் முதலாமவரான ஆசுகவி எனப்படுபவர் சந்தர்ப்பச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப உடனுக்குடன் கவிதைக்ளை வெளிப்படுத்தகூடியவர் என்பதையும், அடுத்துவரும் இருவரும் கவிதைப் படைப்பை குறித்த சில நோக்கங்களுடனும் ஆர்வங்களுடனும் மேற்கொள்ப வர்களாவர் என்பதையும் எம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது. இவர்களுள் மதுரகவி எனப்படுபவர் பல்வகைச் சுவைகளுக்கும் கற்பனையம் சங்களுக்கும் முதன்மை தருவதை நோக்காகக் கொண்ட படைப்பாளி என்பதும் சித்திரகவி எனப்படுபவர் (மேலே முற்சுட்டியமைபோல) எழுத்து களையும் சொற்களையும் மாற்றிமாற்றிக் கையாண்டு "மொழிக் கோலப் புலமைத்திறனை வெளிப்படுத்தும் ஆர்வலர் என்பதும் மேற்படி விளக்கங்களில் தெரிய வருகின்றன.
நான்காமவரான வித்தாரக்கவி எனப்படுபவர் சிற்றிலக்கியம், பேரிலக்கியம் ஆகிய பல்வகை ஆக்கங்களையும் திட்டப்பாங்கான முறையில் கட்டமைப்பதில் வல்லமைபெற்ற ஒருவர் என்பதை அவரைப் பற்றிய மேற்படி விளக்கங்கள் உணர்த்தி நிற்கின்றன. வித்தாரமாக (விஸ்தராரமாக - அகலமாக)
ஞானம் - கைை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
அமைப்புத் திட்டங்களுடன் பாடுபவர் என்பதே வித்தாரக்கவி என்பதன் பொருளாகும்.)
சித்திரகவியை மிறைக்கவி எனச் சுட்டும் வழக்கும் உளது என்பதையும் மேற்படி நிகண்டுநூல்களிலும் யாப்பருங்கலவிருத்தியுரை யிலும் காண முடிகின்றது. மேற்படி நால்வரையும் முறையே கடுங்கவி, இன்கவி, அருங்கவி, பெருங்கவி என்று சுட்டும் மரபும் நிலவிவந்துள்ளதென்பதையும் மேற்படி விருத்தியுரை குறிப்பிடுகிறது. வித்தாரக்கவியை அகலக்கவி எனச் சுட்டும் வழக்கும் பின்னாளில் பாட்டியல் மரபில் உருவாகிவிட்டது.
இவ்வாறாக கவிதைகளை(கவிஞர்களையும்) நால்வகைப்படுத்துவதான சிந்தனையானது அக்காலப் பகுதியில் (கி.பி.9-11ஆம்நூற்றாண்டுக் காலப்பகுதியில்) தமிழ்க்கவிதை எய்தியிருந்த பல்தளப்பரிமாணங்களின் விளைபொருளே என்பது வெளிப்படை சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன தொடக்கிவைத்த பேரிலக்கிய மரபின் தொடர்ச்சியும் நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலியவர்களின் திருமுறை - திவ்ய பிரபந்த ஆக்கங்கள் மூலம் உருவான பல்வகைச் சிற்றிலக்கியப் புனைவு முறைகளும் மேற்படி 9-11ஆம் நூற்றாண்டு கள் காலப்பகுதியில் தமிழ்க்கவிதையைப் புதிய தளங்களுக்கு இட்டுவந்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையே கவிதைகளின் பண்புநிலைகளை முன்வைத்தும், கவிஞர்களின் நோக்கம் செயன்முறை என்பவற்றைக் கருத்துட்கொண்டும் மேற்கண்டவாறு நால்வகைப்படுத்தும் எண்ணங்களைத் தோற்று வித்தது என்பதை ஊகித்துணரமுடிகின்றது.
மேற்குறித்த வகைப்பாட்டின்படி அக்காலப் பகுதியில், இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர் மற்றும் கோவை உலா முதலான சிற்றிக்கியங்களைப் படைத்த பலரும் வித்தாரக்கவி என்ற கணிப்புக்குள் வந்திருப்பர். இத்தகையவர்களில் சிலரும் வேறு பலரும் தம் கவிதைகளில் சுவை அம்சங்களுக்கு முதன்மை நல்கிய வகையில் மதுர கவி என்ற கணிப்பைப் பெற்றிருக்கக்கூடும். அக்காலப்பகுதி ஆழ்வார்களில் ஒருவர்(திவ்யப்பிரபந்தத்தில் 'கண்ணிநுணர் சிறுத் தாம்பு. எனத் தொடங்கும் பாடற்பகுதியைத் தந்தவர்) 'மதுரகவியாழ்வார்' என்ற பெயருடன் திகழ்ந்தவர் என்பது இங்கு நம் நினைவுக்கு வருகிறது. மொழிக் கோலப் புலமைத்திறனான மாலைமாற்று, எழுகூற்றிருக்கை, கோமூத்ரி முதலிய சித்திர கவித்துவ ஆக்கங்களுக்கான தொண்மையான சான்றுகளை கி.பி 7ஆம்நூற்றாண்டினரான திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகங்களில் காணமுடிகின்றது. திருமங்கையாழ்வாரும் எழுகூற்றிருக்கை பாடியுள்ளார். இவையும் இவைபோன்று வேறுபலரால் இயற்றப் பட்டிருக்கக்கூடிய பல்வேறு ஆக்கங்களும் சித்திரகவி என்ற வகைமைக்கான சிந்தனை மூலங்களாக அமைந்திருக்கும் என்பது உய்த்துணரக்கூடியதாகும். மேற்படி காலப்பகுதியில் வாழ்ந்த கவிஞர்களில் ஆசுகவி என யாரும் வழங்கப்பட்டனரா என்பது தெரியவில்லை. பின்னாளில் 15ஆம்நூற்றாண்டைச் சார்ந்தவராக அறியப்படும்(முன்னர் நாம் நோக்கிய)
45
Page 48
காளமேகப்புலவருக்கு ஆசுகவி என்ற சிறப்பு விருது அமைந்திருந்தது என்பது தனிப்பாடல் மரபுகளூடாகத் தெரியவரும் செய்தியாகும். ஈழத்தில் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த கல்லடி வேலுப்பிள்ளை(8601944) என்ற தமிழறிஞரும் உடனுக்குடன் கவிதை பாடும்திறனால் ஆசுகவி என்ற சிறப்பு அடைசுட்டி அழைக்கப்பட்டார் என்பதையும் இங்கு நாம் நினைவில் மீட்கலாம்.
மேற்படி நாற்கவிக் கோட்பாட்டைஅடுத்து இங்கு நம்கவனத்துக்குரிய அம்சம் மேற்சுட்டிய யாப்பருங்கல நூலின் மேற்சுட்டிய இறுதிநுாற்பாவிலமைந்த அந்தமில் கேள்வி ஆசிரியன் பற்றிய குறிப்பாகும். 29 அடிகளிலமைந்த இந்நூற்பாவானது படைப் பாளியை இப்பெயரால் சுட்டி, அவனுக்கு அமைந்திருக்கவேண்டிய தகைமைகள் பற்றிய விளக்கங்களை முன்வைத்துள்ளது.
"அந்தமில் கேள்வி ஆசிரியன் "
அந்தமில் கேள்வி ஆசிரியன் என்ற தொடரானது 'முடிவற்ற கேள்விஞானத்தைக் கொண்டஆசிரியன் என்ற பொருளைத்ருவதாகும். இலக்கிய ஆசிரியராகத் திகழ்பவர் எப்பொழுதும் தனது கேள்விஞானத்தை வளர்த்துக்கொள்பவராகத் திகழ வேண்டும் என்பதான அன்றைய காலகட்ட எதிர்பார்ப்பை இத் தொடர் உணர்த்திநிற்கின்றமை தெளிவு. மேற்சுட்டியவாறான கவித்துவ ஆளுமைகளுடன் அமையாமல் இசை, நடனம், தருக்கம், தந்திர உத்திகள் முதலான பல்துறைசார் அறிவும் கொண்டவனாக அவ்வாசிரியர் திகழவேண்டும் என்பது முதலான பல செய்திகள் இந்நூற்பாவில் எடுத்துரைக்கப்படுகின்றன. இவற்றுடன், “மொழிசார்ந்த பல்வகைப் புலமையாளர்களின் தன்மைகள் பற்றிய அறிவையும் அவர் பெற்றிருக்க வேண்டும்" என்பதும் சமகால இலக்கிய அவையி னுடைய இயல்புகளை அறியுந்திறன் பெற்றவராகவும் அவர் திகழவேண்டுமென்பதுமான செய்திகளும் இந்நூற்பாவில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு தொடரும் இவ்வாளுமைக் கூறுகள் பற்றிய விவரணத்தை நோக்கும்போது இலக்கியப் படைப்புத்துறையில் ஈடுபடுபவரை மொழிசார் பல்வகை அறிவாற்றல்களும் கொண்ட ஒரு பேரறிஞராகக் கருதி மதித்துப் போற்ற விழைந்துநின்ற சமூகப் பின்புலம் நமது அகக்காட்சிக்கு வருகின்றது.
மேலே இதுவரை படைப்பாளியின் ஆளுமைக் கூறுகள் தொடர்பான பண்டைய சிந்தனைகளை நோக்கினோம். அடுத்து இலக்கிய ஆக்கமொன்று சமூகவெளியை நோக்கி இட்டுவரப்படும் முறைமை தொடர்பான பண்டைய கால நடைமுறைகள் இங்கு நமது கவனத்துக்கு வருகின்றன. இவற்றுள் ஒன்று, 'பாயிரம்'. மற்றொன்று அரங்கேற்றம் ஆகும். முதலில் பாயிர மரபை நோக்கலாம.
unամlp uppվ
பாயிரம் என்பதை இன்று நாம் முன்னுரை, அணிந்துரை முதலிய பெயர்களால் வழங்குகிறோம். ஒரு நூலாக்கமானது கட்டமைக்கப்பட்ட பின்னர், அதனைச் சமூகமட்டத்துக்கு இட்டுவருவதற்கான
46
செயற்பாட்டின் முதற்படியாக மேற்சுட்டிய முன்னுரை, அணிந்துரை முதலிய பெயர்களிலான எழுத்தாக் கங்கள் அமைகின்றன. இவ்வகையில், இவை நுாற்கட்டமைப்பில் நுழைவாயிலாக அமைவன என்பதையம் அறிவோம். இவ்வாறான எழுத்தாக் கங்களில் நூலின் நோக்கம், அதில் உள்ளடங்கிய அம்சங்கள் மற்றும் அதன் பயன்பாட்டுநிலை முதலியவை பற்றிய அறிமுகக் குறிப்புகள் இடம்பெறுவது பொதுநிலை. இவ்வாறான அறிமுக நிலைக் குறிப்பு களை நூலாசிரியர் தாமே முன்னுரை என்ற பெயரிலோ அல்லது "என்னுரை' நூலாசிரியருரை முதலிய தலைப்புகளிலோ எழுதும் வழக்கம் இன்று உளது. ஆயினும் இவ்வாறான அறிமுகச் செயன் முறையை ஆசிரியர் தாமே மேற்கொள்வதுடன் மேலதிகாக தமது மதிப்புக்குரியவரும் மேற்படி நூற்பொருண்மை பற்றிய அறிவுடையவருமான சமூகமனிதரொருவரிடம் பெற்று இணைத்துக் கொள்வதும் இன்று பெருவழக்கான நடைமுறையாகும். இவ்வாறு இணைத்துக் கொள்ளும் உரையையே நாம் பொதுவாக அணிந்ததுரை என வழங்கிவருகிறோம். நூலுக்கு அணிசெய்வதாக அமையும் உரை என்பதே இதன் பொருள். இவ்வுரையே குறித்த அவ்வாக்கத் துக்குச் சமூகவெளியினின்று கிடைக்கும் முதலாவது விமர்சனப் பதிவுமாகும்.
இவ்வாறான அணிந்துரை முறைமையே பண்டைத் தமிழ்மரபில் பாயிரம் என்ற பெயருடன் வழக்கிலிருந்துவந்துள்ளது. பண்டைக் காலத்தில் இவ்வாறான பாயிரமுறைமையானது குறிப்பாக பெரிதும் இலக்கண ஆக்கங்கள் சார்ந்ததாகவே வழக்கிலிருந்து வந்துள்ளமை தெரிகிறது. இவ்வகையில் முதற்சான்றாக அமைவது தமிழின் தொல்லிலக் கனமான தொல்காப்பியத்துக்கு பனம்பாரனார் என்பார் வழங்கியுள்ளதான, "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுகைத்து. எனத்தொடங்கித் தொடரும் சிறப்புப் பாயிரம் ஆகும். தொல்காப்பிய நூலுக்குரிய புவியெல்லை, நூலின் உள்ளடக்கக் கூறுகள் அதன் ஆசிரியரின் (தொல்காப்பியர் என அறியப்படுபவரின்) தகைமை முதலிய பலவற்றைப்பற்றிய அறிமுகக்குறிப்பாக அப்பாயிரம் அமைந்துள்ளது.
தமிழிலே பாயிரமுறைமை தொடர்பான விரிவான தகவல்களை முதன்முதலில் கி.பி. 7-8 ஆம்நூற்றாண்டு களைச் சார்ந்த களவியலுரை (இறையனார் அகப்பொருள் உரை)மற்றும் 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததான நன்னூல் ஆகியவற்றிலேயே பெற்றுக் கொள்கிறோம். களவியலின் முதல்நூற்பாவுரையிலே பாயிரம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. நன்னூலின் முதலாவது இயல் 'பாயிரவியல்"என்ற தலைப்புடனேயே அமைந்துளது.
ஒரு நூலாக்கத்துக்குப் பாயிரம் இன்றியமை யாமையாத ஒன்று என்பது களவியலுரை யிலே அழுத்தமாகப் சுட்டப்பட்டுள்ளது. இதனை அவ்வுரை யிலிடம்பெறும்,
"ஆயிரம் முகத்தானர் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்று " என்ற நூற்பா உணர்த்தும். எவ்வளவு பாரிய ஆக்கமாயினும் அதிலே
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 49
பாயிரம் இடம்பெறாதிருப்பின் அது நூல்" என்பதற்கான கணிப்பைப் பெறுவதில்லை" என்பதே இதன் பொருளாகும்.
களவியனுரை பாயிரத்தை பொதுப்பாயிரம் மற்றும் சிறப்பப் பாயிரம் என்பனவாக இருவகைப் படுத்துகிறது. பொதுப்பாயிரம் என்பது நூலா சிரியனின் ஆளுமை, நூல், மாணாக்கன் டுாலைக் கற்போன்) நிலை மற்றும் அவன் அதனைப் பொருள் கொள்ளும் முறைமை ஆகிய விடயங்களை மையப்படுத்தி அமைவதாகும். சிறப்புப் பாயிரமானது ஆசிரியர் பற்றிய குறிப்போடு நூல்வந்த வழி, அது வழங்கும் பிரதேச எல்லை ,அந்நூற்பெயர் அமைந்த வகை , அதன் யாப்பு மற்றும் உள்ளடக்க அம்சம் கேட்போர் ,காலம் களம் காரணம் ஆகிய பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி விரிவுபெற்றதொரு செயற்பாடாகும். இன்னொருவகையிற் கூறுவதானால் பொதுப்பாயிரமானது குறித்த ஆக்கம் பற்றிய பொதுநிலை அறிமுகமாகமட்டும் அமைய, சிறப்பப்பாயிர மானது அந்நூல் உருவாக்கத்தின் பின்புல அம்சங்கள் மற்றும் பயன்பாட்டம் சங்கள் ஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி ஆய்வுப் பார்வையாக விரிவுபெற்றுள்ளமை தெரிகிறது. இன்றைய மொழியிற் கூறுவதானால் சில நூல்களுக்கு அமையும் ஆராய்ச்சி முன்னுரையின் மூலவடிவமாக மேற்படிசிறப்பப்பாயிர முறைமை கணிக்கத்தக்கது.
நன்னூல் மேற்படி களவியனுரை தரும் பாயிரச் செய்திகளை வழிமொழிவதோடு சில மேலதிக குறிப்புகளையும் முன்வைத்துள்ளது. இதன் முதல்நூற்பா, முகவுரை பதிக மணிந்துரை நூாண்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் என, பாயிரத்துக்குரிய ஏழு பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் முகவுரை மற்றும் நூாண்முகம் என்பன நூலின் தொடக்கத்தில் இடம்பெறுவன என்ற வகையிலமைந்த காரனப் பெயர்களாகும். அணிந்துரை. புனைந்துரை என்பன நுாலின் சிறப்பம்சங்களை அழகுபெற எடுத்துரைக்கும் செயன்முறைகள் என்ற பொருள் தருவனவாகும். புறவுரை, தந்துரை என்ப்ன நூலிலே சொல்லப் பட்டவற்றுக்குப் புறம்பான அம்சங்களைக் கவனத்துட் கொண்ட உரைகள் என்பதை அவற்றின் உரைப்பகுதி மூலம் உய்த்துணரவேண்டியுளது. இவைபற்றிய மேலதிக விளக்கங்களை அவ்வுரைப்பகுதியில் இல்லை. மேற்குறித்தவை தவிர இங்கு முக்கிய கவனத்துக் குரிய பெயர் பதிகம் என்பதாகும். பதிகம்' என்றசொல் பொதுவாக 1Oஅல்லது 11 பாடல்கள் கொண்ட கட்டமைப்பைக் குறிப்பதாகும். இது ஒரு சிற்றிலக்கிய வகையாகும். திருமுறைப் பாடற் பரப்பில் இச்சிற்றி லக்கிய வகை மிகுதியாகப் பயின்றுளது. இங்கே மேற்சுட்டிய நன்னூல் நூற்பாவில் பதிகம் என்ற சொல்லானது மேறகுறித்தவாறான பொருளிலன்றி பாயிரத்தின் ஒரு வகைமைக்குரிய பெயராகச் சிறப்புப் பொருளில் வழங்கப்பட்டுள்ளமையை நோக்கமுடிகின்றது. (தொடரும்)
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
(41ஆம் பக்கத் தொடர்ச்சி.)
யர்கோன், சோ.சிவபாதசுந்தரம், அ.செ.முருகானந்தம், சோ.நடராசா, வ. அ.இராசரத்தினம், கே.எம்.ஷா (ழித்தன்). என்று முத்திரை பதித்தவர்களின் எழுத்துக்கள், முகங்கள் பளிச்சிடுகிறது. ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகளான இவர்கள் முறையாக ஆவணப் படுத்தப்பட வேண்டாமா? தமிழ்ச் சிறுகதைகள் கருத்தரங்கில் கலந்து கொண்ட ஒருவர்; என்னிடம், "ஈழத்து தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளின் படைப்புகள் பற்றிய ஒரு ஆய்வை சென்னையில் நடத்தினால் என்ன? என்று கேட்டார். இவர், தமிழக பிரபல படைப்பாளி. ஈழத்து சிறுகதைள் முன்னோடிகள் பற்றிய கலந்தாய்வு பல தடவைகள் ஈழத்தில் நடந்திருக்கலாம். ஆனால், சிறுகதைகளில் ஈழம் அன்றும் சரி, இன்றும் சரி சளைத்ததா என்பது தமிழக வட்டத்திலும் எதிரொலிக்க வேண்டாமா என்ன? இந்த இடைவெளியை நிரப்ப வேண்டியவர்கள் தமிழகத் திலுள்ள ஈழத்து படைப்பாளிகள்தான். பட்டியலிடுங்கள், பட்டை தீட்டுங்கள். புலம்பெயர்ந்த நமது படைப் பாளிகளின் காதுகளுக்கும் இச்செய்தி போய்ச் சேரட்டும்! இப்படியும் நடக்கிறது * மேடையிலிருக்கும் பேச்சாளர், தலைவரைப் பார்த்து. “அறிவில்லாத தலைவர் அவர்களே...” என்று ஆரம்பித்து சபையில் சலசலப்பை ஏற்படுத்தி பின்னர், “சபையோரே, அறிவில் ஆதவனைப் போன்ற தலைவர் என்று பேச வந்தேன்.” என்பார். அது ஒரு காலம். கலைஞர் கருணாநிதி வாக்காளருக்கு நன்றி தெரிவிக்க திருவாரூர் வந்தார். நிறைந்த கூட்டம். பேச்சின் முடிவில் கலைஞர் சற்றுத் தளதளத்த குரலில். “விடை பெறுகின்றேன்." என்றதும் கூட்டத்தில் நிசப்தம். மேடையிலிருந்தவர்கள் புருவத்தை உயர்த்திக் கொண்டனர். கலைஞர் சொன்னார். "...திராவிட இயக்கத்தை காப்பதற்கு, அழிக்க நினைப்பவர்களை வெற்றி கொள்வதற்கான விடையினை உங்களிட மிருந்து பெறவிரும்புகின்றேன். அதைத்தான் விடைபெறுகின்றேன்." என்று விளக்கியதும், ஆரவாரம் அடங்க நீண்ட நேரமாயிற்று. * கானா ஸ்டைலில் பாட்டுப்பாடி ஆடு. மாடு மேய்த்தவர் கருப்பசாமி. இன்று, கால்நடைத்துறை அமைச்சர். பெரிய குளத்தில் டீ கடை நடத்தி காசாளர் மேசையில் இருப்பவர் ஒ.பன்னிர்ச்செல்வம். நிதி அமைச்சர். தந்தை மேஸ்திரி, தாய் துப்புரவுத் தொழிலாளி. சைக்கிள் கடை நடத்தி, வேலையும் செய்பவர் நல்லதம்பி. எழும்பூர் சட்ட மன்ற உறுப்பினர். * ‘அம்மா இருக்குமிடம் கோயில். அந்தப்புனிதம் நடமாடும் தலைமைக் கழகத்துக்கு செருப்பு அணிந்து வரமாட்டேன் என்று அடம்பிடித்தவர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உணர்வுகளை அம்மா மதித்து, அன்புக் கட்டளையிடவே, பிடி தளர்ந்துவிட்டது. இவர் இப்படி என்றால் செங்கல்பட்டு எம்.எல்.ஏ.அனகை முருகேசன், விஜயகாந்த் பணித்தும் செருப்பு அணிய மறுக்கிறார். இவரது விபரம்; விஜயகாந்த் முதல் அமைச்சரான பின்னர்தான் காலுக்கு செருப்பு. அதுவரை கல்லும் முள்ளும் பஞ்சுமெத்தை போலும்!
47
Page 50
22guages 251OjaysV G
28. விமர்சனப் பணி
இலக்கிய விமர்சனம் என்றால் என்ன? அது எவ்வாறு அமையவேண்டும்? அதன் நோக்கம் என்ன? இலக்கியத்துக்கு அது இன்றியமையாததா? விமர்சனம் இல்லாவிட்டால் இலக்கியம் வளர்ச்சியடையாதா? இலக்கிய விமர்சகர்களுக்குரிய தகுதிகள் யாவை? இலக்கிய விமர்சனம் தமிழுக்கு புதியதா?
தமிழிலக்கிய உலகில் இத்தகைய கேள்விகள் பல எழுப்பப்பட்டு பல்வேறு விடைகளும் விளக்கங்களும் அளிக்கப்பட்டு வருவதைக் கடந்த பல ஆண்டுகளாக நாம் அவதானித்து வருகின்றோம்.
தமிழிலுள்ள மிகப் பழைய இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படுகின்றன. முதற் சங்கம், இடைச்சங்கம் கடைச்சங்கம் என மூன்று, சங்கங்கள் இருந்தன என்றும் தமிழ் மொழிப் புலமையும் பன்முக அறிவாற்றலும் கூர்ந்த மதியும் அனுபவ முதிர்ச்சியுமுடைய புலவர்கள் ஒவ்வொரு சங்கத்திலும் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும் தமிழிலக்கிய வரலாற்று நூல்கள் கூறுகின்றன. சங்கத்தின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, சங்க உறுப்பினர் களான புலவர்களாற் காய்தல் உவத்தலின்றி ஆராயப்பட்டு, எல்லோராலும் ஒரே மனதாக அங்கீகரிக்கப்பெற்ற இலக்கிய ஆக்கங்களே "சங்க இலக்கியங்கள் எனக் கொண்டால் விமர்சனம் செய்கின்ற தரநிர்ணயம் செய்கின்ற ஒரு முறை அந்தக் காலத்திலேயே இருந்தது எனக் கருதலாம்” என்று சிலர் கூறுகின்றார்கள். "நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” எனச் சொன்ன நக்கீரனை, மிகப் பழைய காலத்திலிருந்த துணிச்சல் மிக்க விமர்சகனாகச் சிலர் கொள்கின்றனர். இலக்கிய விமர்சனம் என்பது தமிழுக்குப் புதியது. அது மேனாட்டிலிருந்தே இங்கு வந்தது என்பது வேறு பலருடைய கருத்து. இலக்கிய விமர்சனம் சம்பந்தமாக இத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நவீன தமிழ் இலக்கியத்தில் அது ஒரு தனித்துறையாக வளர்ந்து வருகின்ற தென்பதையும் நமது நாட்டைச்சேர்ந்த கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா. சிவத்தம்பி, மு. தளையசிங்கம் முதலியோரின் விமர்சனக் கருத்துக்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாசிரியர்கள் போன்றோரின் கருத்தையும் கவனத்தையும் கவர்ந்தவை என்பதையும் மறுக்க முடியாது.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும், புதிய எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும், நமது நாட்டிற்குரிய தனித்தன்மையுடன் இந்நாட்டிலக்கியம் வளர்ச்சியடைய வழி செய்ய வேண்டும் என்ற நோக்கங்களையும் கொண்டிருந்த “கலைச்செல்வி அவற்றை அடைவதற்கு
48
sess 2Dgస్తాక
இலக்கிய விமர்சனத்தையும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தியது. இந்நாட்டில் வெளிவந்த நூல்கள் சஞ்சிகைகள் பற்றிய சரியான கருத்துக்களை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கும், இலக்கியப் பிரக்ஞையுடைய வாசகர்களுக்கும் பயன்படும் வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
1930 ஆண்டு தொடக்கம் வெளியாகிதரம் வாய்ந்த வெள்ளி விழா மலரை வெளியிட்டதுடன் தன் அரசியல், சமூக இலக்கியச் சேவையை நிறைவு செய்து கொண்ட “ஈழகேசரி’ வார இதழில் "நமது வாசிகசாலை" என்ற தலைப்பில் அடிக்கடி இடம்பெற்ற நூல் விமர்சனங்கள் அக்காலத்து இலக்கியகாரர்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருந்தன. தம்முடைய ஆக்கங்கள் பற்றி “ஈழகேசரி" என்ன கூறுகின்றது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் அன்றைய ஈழத்து இந்திய எழுத்தாளர் பலரிடம் மேலோங்கி இருந்ததை "ஈழகேசரி ஆசிரியர் பீடத்துடன் தொடர்புகொண்டிருந்த சிலர் என்னிடம் கூறியுள்ளனர். விமர்சனத்துக்கென அனுப்பப்பட்ட நூல்களை, அவற்றின் உள்ளடக்கம் பற்றி நன்கு பரிச்சயமுடைய அறிஞர்களே நடுநிலையில் நின்று விமர்சனம் செய்தது இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது. எனினும், "ஈழகேசரிப் பத்திரிகையும் ஈழத்து நவீன இலக்கித்தின் தோற்றமும்" என்ற தன் கட்டுரையில் (சுவடு - தினக்குரல் 15 ஆவது அகவை விசேட மலர்) “ ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் "ஈழகேசரி" பெறுகின்ற முக்கியத்துவம் பற்றி இன்றுவரை ஈழத்து ஆய்வாளர்கள் சரியாகவோ முழுமையாகவோ எடுத்துக்காட்டியிருப்பதாகக் கூற முடியாதுள்ளது.” எனக் குறிப்பிட்ட பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் கூட, நவீன கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு இலக்கியம், பற்றி (சுருக்கமாக)க் குறிப்பிட்டுள்ளாரே தவிர, "ஈழகேசரி" யின் இலக்கிய விமர்சனங்களைப் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை. "ஈழகேசரி" யின் விமர்சனப் பாங்கையும் , விமர்சனம், கலைகளுக்கு ஒரு மினண்டி போன்றது. நல்ல முறையில் பயன்படுத்தினால் பத்து வருட வளர்ச்சியை ஐந்து வருடத்திற்குச் சுருக்கி விடல்ாம் விமர்சகன் நிதான புத்தியுடையவனாக இருக்க வேண்டும். தன் சொந்தக் குரோதங்களை விமர்சனத்தில் நுழையவிடக் Enlil. . . . . . விமர்சனம் அழிக்கும் தன்மை இல்லாமல், ஆக்குந் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நையாண்டியாக எழுதினால், எந்த எழுத்தாளனுக்கும் மனம் நொந்து போகும். தமிழில் வெளிவந்த நூல்கள் சிலவற்றைப் பற்றி, காலஞ் சென்ற கு. ப. ரா முதல் தரமான விமர்சனங்கள் எழுதியிருந்தார்."என மறு மலர்ச்சியின் முதலாவது இதழில் தமிழின் மறுமலர்ச்சி " என்ற தலைப்பில் "இலங்கையர்கோன்” வலியுறுத்திய
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 51
கருத்துக்களையும் வழிகாட்டிகளாகக் கொண்டவை யாகவே “கலைச் செல்வி" யில் இடம் பெற்ற பெரும்பாலான விமர்சனங்கள் அமைந்திருந்தன.
“கலைச்செல்வி”யின் முதலாவது இதழில் “புத்தக விமர்சனம்” என்ற தலைப்பில், "ஈழத்துச் சிறுகதைகள்” முதலாவது தொகுதி பற்றி "தேவன் - யாழ்ப்பாணம்” எழுதியிருந்தார். "ராஜாஜியும் வ.வே.சு. ஐயரும் தமிழிலக்கிய உலகிற் பயிரிட்ட சிறுகதைச் செடி வளர்ந்து, பரந்து, தாவி ஈழத்துச் சிறு கதைகள் என்ற மலர்க் கொத்தை அளித்திருக்கிறது. இவை ஈழத்துக் கதைகளில் தலை சிறந்தவை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் முன்னுரை எழுதிய பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை சொல்லியிருப்பதைப் போல், உலகத்தின் சிறந்த கதைகளுக்கு இணையானவை இந்த நூலில் இல்லை யென்று எவரும் சொல்லத் துணியார். சிறுகதை ஆராய்ச்சியாளர் இனி, ஈழத்தை வரண்ட பிரதேசம் என்று கூறிக் கொண்டிருக்க முடியாது. - ஆகியவை அவர் குறிப்பிட்ட கருத்துக்களும் சில.
1958 - புரட்டாதி - பாரதி மலர் தொடக்கம் 1962 - ஆடி மாதம் வரை “வளருந் தமிழ்” என்ற தலைப்பில் இடம் பெற்ற விமர்சனங்களுள் சொக்கனின் வீரத்தாய்” (கன. செந்திநாதன்) கி. இலக்குமணனின் "கம்பனது கதாபாத்திரங்கள் (சு. வே) மு.க. கரியனின்” கதிரேசன் பாமாலை (ஆதவன்) சமூகத் தொண்டன் பத்தாண்டு நினைவு விழாமலர் மாமல்லன், அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் 16 ஆவது ஆண்டு விழா மலர் (நம்பி), கனக செந்திநாதனின் “மூன்றாவது கண்”, (நம்பி) கச்சாயில் இரத்தினத்தின் “பாட்டாளி வாழ்க்கையிலே (சரா) கி. இலக்குமணின்” பாரதத் தூதுவர்” (வ. நடராஜன்), தமிழோவியனின் “எழுத்தாளன் காதலி" (சஞ்சீவி), இலங்கை கலைச் சங்கச் சஞ்சிகை - 196O (ஆதவன்) செ. கணேசலிங்கனின் "ஒரே இனம்” (சிற்பி), பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் 12ஆவது “இளங்கதிர்” (கோவை மகேசன்) வரதரின் கயமை மயக்கம்” (சிற்பி) இளம் எழுத்தாளர் சங்க ஆண்டு மலரான "மலர்” (சி.ச) தணிகை உலக நாதனின் “பாடும் பாப்பா” (சி.ச), சொக்கனின் “சிலம்பு பிறந்தது" (வ.நி) ஆகியவற்றின் விமர்சனங்களும் அடங்கும்.
இந்நூலாற் பெற்ற வெற்றி மகத்தானதாக இல்லா விடினும், "சோடை" போகவில்லை. கவிதையிலும் அவர் எதிர்காலம் பிரகாசிக்கக் கூடியதே என்பதற்குச் கசகங்கள் அங்காங்கே புதைந்து கிடக்கின்றன.” (வீரத்தாய்-கனக செந்திநாதன்); "ஒவ்வொருவரின் ஒவ்வொரு குணங்களையும் கலந்து குழப்பாது, தனித்தனியாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டிருப்பது பாராட்டத் தக்கது. வானொலிக் கல்வி ஒலிபரப்புக்காகத் தயார் செய்யப்பட்ட இச் சொற்பொழிவுகள் நேரவறையாலும, மாணாக்கர் உளங்கொளல் வேண்டும் என்னும் நோக்காலும் போலும் ஆழமான வேள் விடவில்லை. மேல்வகுப்பு மாணவர் திறனாய்வுக் கலையில் ஈடுபடுவதற்கு இந்நூல் ஒரு படிக்கல்லாக விளங்கும்" (கி. இலக்குமணனின் "கம்பனது கதாபாத்திரங்கள் - சு.வே). தொழிலாளர்களின் அவல வாழ்க்கையை வர்ணித்து, அதன் மூலம் வாசகர்களின்
ஞானம் - கலை லைக்கிய சஞ்சிகை - ஜூலை 21
அனுதாபத்தைச் சம்பாதித்து, பலராலும் புறக்கணிக்கப்பட்டிருக்கும் ஏழைகளின் உலகைப் பற்றி வாசகர்களைச் சிந்திக்க வைப்பதில் ஆசிரியர் அடைந்துள்ள வெற்றியை "விளம்பரம் காவிகள், ஒரே இனம், சீக்கிரமாய் வந்துவிடு ஆகிய கதைகள் காட்டுகின்றன. “வாழ்வதற்காக அவர்கள் சாவதற்குத் தயாராகின்றார்கள்; நாம் அவர்களை வாழவிடாது சாகடித்துக் கொண்டிருக்கிறோம்" என்ற அருமையான ஒரு தொடர், ஒரு கதையில் மட்டும் இடம் பெற்றிருந்தாலும், அதன் கருத்து வேறு கதைகளிலும் இழையோடி நிற்கின்றது”. (செ. கணேசலிங்கனின் “ஒரே இனம் - சிற்பி) - “கலைச் செல்வி" யின் விமர்சனப் பார்வை எவ்வாறு இருந்தது என்பதை இவை காட்டுகின்றன. தமிழோவியனின் "எழுத்தாளன் காதலி" க்குரிய விமர்சனம் கவிதையாகவே எழுதப் பட்டிருந்ததைச் சென்ற மாதம் குறிப்பிட்டிருந்தேன்.
“வளருந்தமிழ்" என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த விமர்சனங்கள் நூல்களின் பொதுவான போக்கைத் தொட்டுக்காட்டி நாகக் காகக் குறிப்பிட்டு, அவற்றை நீக்கும் வகைகளையும் விளக்குகின்ற சுருக்கமான விமர்சனங்களாகும்.
ஆனால் 1963 ஆம் ஆண்டு பொங்கல் மலரிலிருந்து “இலக்கிய மணிமண்டபம்” என்ற தலைப்பில் இடம் பெற்றவை ஆழமான, J600TLDIT60T விமர்சனங்களாகும். ஒரு தடவையில் ஒரே ஒரு நூல் மட்டுமே விமர்சிக்கப்பட்டிருந்தது.
நாடக நூல்கள் அச்சில் வெளிவருவது அரிதாக இருந்த அந்தக் காலத்தில், பேச்சுத் தமிழில் அமைந்த எட்டு நாடகங்களையும், ஒரு புரான நாடகத்தையும், இலக்கிய நாடகமொன்றையும் கொண்டு வெளியான “ஐயன்னா" அவர்களின் நாடகமாலை” சம்பந்தமான ஆக்கபூர்வமான விமர்சனமொன்றை 1963 பொங்கல் இதழில் ஏ.ரி. பொன்னுத்துரை எழுதினார். “சிறுகுறைகள் இடைக்கிடை தென்பட்டாலும் ஆசிரியர் பல நாடகங்களில் அபரிமித வெற்றியீட்டியுள்ளார்” என்பது விமர்சகரின் முடிவு. வ. அ. இராசரத் தினத்தினத்தின் “தோணி"யில் இடம்பெற்ற ஒவ்வொரு சிறுகதையையும் நுட்பமாக நோக்கிய செங்கை ஆழியான், ஈழத்துச் சிறுகதைகளின் ஒரு காலகட்ட வளர்ச்சியை அத்தொகுப்பு வெள்யுலகிற்கு நிச்சயமாக எடுத்துக் காட்டும்; ஆசிரியரின் படாடோப மற்ற தெளிவான நடையின் இனிமைக்காகவும், சமூகத்தைத் தக்க விதத்திற் படம் பிடித்துக் காட்டும் திறமைக் காகவும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார். பொதுவாகப் புரட்சி என்ற போர்வையில் சமயத்தை மறந்து, அதைத் தாக்கி, அதை ஒழித்துவிட்டே மறுகாரியம் பார்ப்போம் எனப் பாடிவரும் இக்காலக் கவிஞர் சிலரைப் போலில்லாமல், சமய அடிநாதத்திலே அதிலே ஒட்டியிருக்கும் சில ஒட்டறைகளைத் தட்டித் தூய்மை செய்யும் போக்கில் புரட்சிக் கமாலின் கவிதை நூல் அமைந்திருக்கின்றது. புரட்சிக் கமாலின இந்தக் கவிதைத் தொகுதி வாழும் என்பது நிச்சயம் “எனப் புரட்சிக் கமால் கவிதைகள்
49
Page 52
பற்றிய தன் கருத்தைக் கனக செந்திநாதன், தன் விமர்சனத்தின் சாரமாக்கினார்.
"பாத்திரப் படைப்பைப் புனிதப் பணியாகப் புரிந்துள்ளமை பாராட்டுக்குரியது. பிரதான பாத்திரங் களன காசியப்பனும் அல்லியும்ஆசிரியரின் கைவண்ணத் தால் முழுமை பெற்றுவிடுகின்றனர். பாத்திரங்களின் குண இயல்பு வளர்சிகள் படிப்படியாகப் பக்குவமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு காட்சிகளிலும் நாடகப் பண்பிலும் பார்க்க, நாவல் பண்பே மேலோங்கி நிற்கிறது. கதை, நிகழ்ச்சிகளால் வளராது சொல்லால் வளர்கிறது. குறைகள் சில இருக்கின்ற போதிலும், நாடகப் பிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல், சொக்கனின் “சிங்ககிரிக் காவலன்" நாடக நூலில் குழந்தை ம. சண்முகலிங்கம் கண்ட குறை, நிறைகளுள் இவை சில.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நன்கறிந்த தமிழக எழுத்தாளர்களுள் அமரர் வல்லிக்கண்ணனுக்குச் சிறப்பிடமுண்டு கனக. செந்திநாதனின் "ஈழத்து இலக்கிய வளர்ச்சி" பற்றிய விமர்சனத்தை "இலக்கிய மணி மண்டபத்தில் அவரே எழுதினார். "தமிழகத்திலுள்ள எழுத்தாளர்களுட் பலர் கனக, செந்திநாதனின் படிப்பார்வத்தையும் விமர்சன ஆற்றலையும் ஒருவாறு உணர்ந்திருக்கிறார்கள். "ஈழத்துப் பேனா மன்னர்கள்" பற்றிக் கரவை கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் அவர்கள் "ஈழ கேசரி" இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவந்த அறிமுக விமர்சனங்கள் பலரது கவனத்தையும் கவர்ந்தன அவரது நேர்மையான கணிப்புக்கும் விசாலப் பார்வைக்கும் அகண்ட அனுபவத்துக்கும் ஆழ்ந்த கல்வி அறிவுக்கும் நற் சான்றுகளாக விளங்கின.
உன் வீட்டிலிருந்து
என்ன கொண்டுவந்தாய்" . . . . . அக்காவிடம் கேட்டார் அத்தான்
கோபித்துக்கொண்டு பிறந்தகம் வந்தாள் அக்கா
50
பெரியதோர் இலக்கியப் பரப்பினை விரிவாக எழுதவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஈழத்து இலக்கிய முயற்சிகள், அவற்றின் பின்னணி, எழுத்தாளர்களுடைய படைப்புக்களைப் பற்றிய சிறு விமர்சனம் ஆகியவை இங்கு கவனிக்கப்படுகின்றன. பொதுவான குறிப்புக்களிலும், பத்துப் பத்து வருஷங்களாகக் கால அளவு வகுத்துக் கொண்டு முயற்சிகளை எடைபோடும் சந்தர்ப்பத்தில் ஆரம்ப மதிப்பீடுகளிலும் ஆசிரியரது நேர்மையான, துணிவான சுவையான கருத்துக்களை அறிய வாய்ப்புக் கிட்டுகிறது" போன்ற தன் கருத்துக்களை வல்லிக்கண்ணன் வெளியிட்டிருந்தார். நூல்களிலுள்ள என்னுரை-முன்னுரைஅணிந்துரை-போன்றவற்றை மட்டும் வாசித்துவிட்டு நுனிப்புல் மேயாத நீண்ட ஓர் இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் மண்ணில் விளைந்த இலக்கிய அறுவடை பற்றி, அந்தப் பாரம்பரியத்தை நன்குணர்ந்த, அதே வேளை, காலத்துக்கேற்ற இயல்பான சில மாற்றங்களை வரவேற்கும் மனப்பாங்கு கொண்டவர்களின் கருத்துக்களே இடம் பெற்றன என்பதைத் தெளிவாக்கு வதற்காகவே அவை இங்கே எடுத்தாளப்பட்டிருக் கின்றன என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். “கலைச்செல்வி" 1963- மாசி, 1963 சித்திரை இதழ்கள் எண்ணிடம் இல்லை என்பதைச் சென்ற கட்டுரையில் நான் தெரிவித்திருந்தேன். அவற்றை வைத்திருப்பவர்களை ஞானம்” ஆசிரியருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இனி, அடுத்த இதழில்
மற்றவை பிறகு கதைக்கலாம்" அக்காவிடம் சொன்னாள் அம்மா
"என் வீடு எது தாரணி?" இன்னும் தன்வீடு எதுவெனத் தெரியாமல் 绯、
என்னிடம் கேட்டாள் அக்கா
滋
LLLLLL LLL LLLLLLLLZ LLLLLL LLLL LLLZZ Y
靈
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 53
ஒரு குடம் கண் பிரபல எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் எழுதிய "ஓ விழா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டப தி. ஞானசேகரன் தலைமையில் புரவலர் ஹாசிம் உப பிரதம அதிதியாக திருமதி பேரியல் அஷ்ரப் கலந்து அமீர் அலி கலந்து கொண்டார்.
தமிழ்மொழி வாழ்த்தினை ப. க. மகாதேவா நிகழ்த்தினார். நூல் பற்றிய கருத்துரைகளை என். ே மர்ஸ்லிம் மெளலானா ஆகியோர் வழங்கினார்கள்,
பெருந்திரளான கலை இலக்கியவாதிகள் மற்றும் இ சட்டத்தரணி திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா மிகவும்
கொழும்புப் பல்கலைக்கழகத் கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் வருடாந்த அமர்வாக வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் ம விரிவுரையாளருமான திருமதி சாந்தி சேகராஜசிங்கம் மிக கோலாகலமாக நடத்தியது.
முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக வைத்திய உறுப்பினரும், முன்னாள் கொழும்புப் பல்கலைக்கழக ப வட, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளி இரண்டாம் நாள் நிகழ்வில் முன்னாள் பிரதம நீதி அதிதிகளாக பா. உள. ஜெ. முநீரெங்கா, மனிதநேயமாமன் நீதிபதி எம். இளஞ்செழியன் ஆகியோர் கலந்து சிற மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்வுகள் சபையோை பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ழுநீரெங்கா, 8 மனிதநேயமாமணி வி. கயிலாசபிள்ளை, மருத்துவகலா ஆ. இராஜ்மோகன், மல்லிகை சி. குமார், மற்றும் பலர் "இளந்தென்றல்" என்ற நூலும் வெளியிடப்பட்டது. செய்தார்கள்.
நிகழ்விற்கெல்லாம் சிகரம் தொட்டாற்போல் தமிழக சபையோரின் பாராட்டைப் பெற்றது.
சிலப்பதிகாரம் - செய்பு கொழும்புத் தமிழ்ச் சங்கம் இலக்கிய களம் நி சிலப்பதிகாரம்- செய்யுள் மரபும், பொருள்மரபும் என்ற த கொ.த.சங்க ஆட்சிகுழு உறுப்பினர் சி. கந்தமசாமி தன
6SerbG3p656gbir D -56numru எழுத்தாளர் ஞா. சிறிமனோகரன் எழுதிய “இஸ் கலாநிதி சி.சிவசேகரம் தலைமையில் தேசிய கலை (O5.06.2011) B60DL6Lubpg).
வந்தவர்களை வரவேற்று நூலினையும் அறிமுகம் ஆய்வுரையை சட்டத்தரணி இ. தம்பையாவும், க நிகழ்த்தினார்கள், நூலின் முதற்பிரதியை திருமதி சர்வ ஏற்புரையை நூலாசிரியர் ஞா.சிறிமனோகரன் நிக
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
கே. பொன்னுத்துரை
னிர் வெளியீடு ரு குடம் கண்ணிர்" (உண்மைக் கதைகள்) வெளியீட்டு த்தில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் மருத்துவகலாநிதி >ர் முன்னிலையில் நடைபெற்றது. கொள்ள, சிறப்பு அதிதியாக சட்டத்தரணி எம். எஸ்.எஸ்.
பாட, வரவேற்புரையை செல்வி அஷ்ஃபா அஷ்ரஃப் க. அஷோக்பரன், சட்டத்தரணி எஸ்.எம். என்.எஸ். ஏ.
லக்கிய ஆர்வலர்களும் கலந்துக் கொண்ட இந்நிகழ்வை
சுவைபட தொகுத்து வழங்கினார்
தமிழ்ச் சங்க முத்தமிழ் விழா
நம் நடத்தும் முத்தமிழ் விழாவை இம்முறை இரண்டுநாள் ண்டபத்தில் பெரும் பொருளாளரும், சட்ட்பீட சிரேஷ்ட மேற்பார்வையில், தலைவர் தி. சுஜந்தன் தலைமையில்
நிபுணர் கணேசராஜாவும் சிறப்பு அதிதியாக பாராளுமன்ற )ாணவருமான ஜே. ருநீரெங்காவும் கலந்து சிறப்பித்தனர். லிருந்தும் பல கலைநிகழ்ச்சிகள் மேடை ஏற்றப்பட்டன. யெரசர் சி. வி. விக்னேஸ்வரன் கலந்து சிறப்பிக்க சிறப்பு 0ணி வி. கயிலாசப்பிள்ளை தம்பதிகள், கல்முனை மாவட்ட ப்புச் செய்தனர். பல்கலைக்கழக பீடங்களின் மாணவ ர மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. 5ல்முனை மாவட்ட நீதிபதி எம். இளஞ்செழியன், நிதி எம்.கே. முருகானந்தம், சக்தி.எப்.எம். தாயாரிப்பாளர்
பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். இதனை திருமதி ஒளவை விக்னேஸ்வரன் நூலாய்வு
வித்தக கவிஞர் பா.விஜய் தலைமையிலான கவிரங்கம்
ள்மரபும், பொருள்மரபும். கழ்வில் ஊடகவியல் விரிவுரையாளர் எஸ். மோசேஸ் லைப்பில் (O3.06.201)உரையாற்றினார் இந்நிகழ்விற்கு லைமை தாங்கினார்.
க்கம் நூல் வெளியீடு ரேலின் உருவாக்கம்" என்ற ஆய்வு நூலின் வெளியீடு இலக்கிய பேரவை கைலாசபதி கேட்போர் கூடத்தில்
) செய்து வைத்தார் சட்டத்தரணி சோ.தேவராஜா, நூலின் ருத்துரையை சட்டத்தரணி மர்கம் மெளலானாவும் வமங்களம் கைலாசபதி பெற்றுக் கொண்டார்.
ழ்த்த, சபா. தனுஜன் அனைவருக்கும் நன்றி நவின்றார்.
51
Page 54
அற்றை மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில் கொழும் நிகழ்வான “அற்றைத்திங்கள்” நிகழ்வு (15.06.2010 த இதில் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி இராஜேஸ்வரி ஜெக பகிர்ந்துக் கொண்டார்.
நினைவு கொழும்புத் தமிழ்ச் சங்க முன்னாள் பொதுச் செயல நினைவுப் பேருரை கொழும்புத் தமிழச் சங்க சங்கரப்பி கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்வி அமரர் தமிழ்வேள் க.இ.க. கந்தசாமி அவர்களின் உருவ ச.இலகுப்பிள்ளை மாலை அணிவித்தார். வரவேற்புல நிகழ்த்தினார். "யாழ்ப்பாணத்திலே பண்டிதப் பாரம்ப தமிழ்த்துறை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா நினைவு அமைப்புக் குழு செயலாளர் மா.சடாட்சரண் நன்றிய தமிழ்வாழ்த்தினை பாடினார்.
கரவை விக்னேஸ்வரா வழி
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் ஆக்கங் அறுவடை என்ற நூலின் வெளியீட்டு விழா கொழும்புத் யாழ், கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழையமா தலைமையில் நடைபெற்றது. மங்கல விளக்கேற்ற வரவேற்புரையை சங்க உதவிச் செயலாளர் திருமதி ச சட்டத்தரணி ஜீ. இராஜகுலேந்திரா நிகழ்த்தினார். நூலி திருமதி ஷாந்தி பாலசுப்ரமணியம் ஆகியோர் பெற்றுச்
சங்கச் செயலாளர் வீ. ஏ. திருஞானசுந்தரம் அவர்கள் என்ற விருதைப் பெற்றதையிட்டு சங்கத்தின் கெளரவிப்
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களைப் பற்றி பேரா திருமதி எம்.எஸ். தேவகெளரி, எஸ். செல்வரட்ணம், அம்பிகைபரன் ஆகியோர் உரையாற்றினார்கள், ஏ கார்த்திகேயன் வழங்கினார், நன்றியுரையை எஸ்.ஜெ.
18.06.2011 கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற “கரவை விக்னேஸ்வரா வழிவந்த ஒரு தமிழ் அறுவடை" நூலின் வெளியீட்டு விழாவின்போது பேராசிரியர் கா. சிவத்தம்பியின் குடும்பத்தினர் அவையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
52
த்திங்கள்
த் தமிழ்ச் சங்கம் வழங்கும் தனித்துவமிக்க இலக்கிய லைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. னந்தகுரு கலந்து தனது வாழ்வியல் அனுபவங்களைப்
பேருரை ாளர் அமரர் தமிழ்வேள் க.இ.க. கந்தசுவாமி அவர்களின் ர்ளை மண்டபத்தில் (17.06.2010 சங்கத் தலைவர் மு. ாழ்த்தினை திருமதி சுவர்ணலதா பிரதாபன் பாடினார். படத்திற்கு கொ.த. சங்க துணைத்தலைவர் "சமூகஜோதி” ரயை பொதுச் செயலாளர் ஆ. இரகுபதி பாலழுநீதரன் ரியம்” என்ற தலைப்பில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேருரை ஆற்றினார். கொழும்புத் தமிழ்ச் சங்க நிலைய ரை நிகழ்த்தினார். நிறைவாக செல்வி செ. ஆரணி
வந்த ஒரு தமிழ் அறுவடை கள், செயற்பாடுகள், பற்றிய ஒரு பதிகையாக ஒருதமிழ் நமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் (18.06.2010 ணவர் சங்கக் கொழும்புத் தலைவர் வே, விமலராஜா ல், கல்லூரி கீதம் தமிழ்தாய் வாழ்த்து என்பதோடு, ந்திரகாந்தா முருகானந்தன் வழங்க, நூல் அறிமுகத்தை ன் முதற்பிரதிகளை சங்க காப்பாளர்கள் கே. கனகசபை, சிறப்பு செய்தனர். ா கொழும்புக் கம்பன் கழகத்தினால் "ஊடகத்துப் பேராளன் பும் நடைப் பெற்றது, சிரியர் எம்.ஏ. நுஃமான், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, மற்றும் கனடா கரவெட்டி ஒன்றியத்தின் தலைவர் சி. ற்புரையை பேராசிரியரின் மகள் திருமதி வர்த்தனி
ஜெயக்குமார் நிகழ்த்தினார்.
s
zá
o
24.06.2011 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க மூன்றாம் மாடியில் அமைக்கப்பட்ட ‘விருந்தினரகம்’ திறப்பு விழாவின்போது வெளியிடப்பட்ட கோபுரம் LD6pfloodson சங்கத் தலைவர் திரு. மு. கதிர்காமநாதன் சங்க நம்பிக்கை பொறுப்பாளர் சபைத்தலைவர் திரு. ஏ. எம். சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்குவதை காணலாம்.
ஞானம் - கலை லைக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 55
நூலுரையும், தலைமையுரையும் படும்பாடு
"10 கி.மீற்றர் தொலைவிலிருந்து வந்து கும்ப கர்ணவதைப் படலத்தை கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது."
தலைக்கேசத்தை பிய்த்துக் கொள்ளாத குறையாக ஒரு சிரேஷ்ட பெண் எழுத்தாளர் அலுத்துக்கொண்டார். “அடக்கடவுளே! கம்பன் விழாவிற்குப் போனால் எல்லா காண்டத்தையும் கேட்டுத்தானே ஆகனும்” என்று அடித்துச் சொல்லப்போகிறீர்களா என்ன. அப்படி என்றால் சரி. ஆனால் விசயம் அதுவல்லவே. கம்பராமாயணத்திற்கும் அன்று வெளியிடப் படுகின்ற நூலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. நூலுரை செய்ய வந்தவர் எடுத்த எடுப்பிலே இராமாயணத்திற்குத் தாவி ஆரண்ய காண்டத்திலிருந்து யுத்த காண்டத்திற்கு தாவி விட்டார். எழுத்தாளர் பத்திரிகையாளராகவும் இருந்ததால் இலக்கிய பக்கத்தில் நூலைப் பற்றிய ஏதேனும் குறிப்புகள் எழுதலாம் என்ற எண்ணத்தோடு எழுதுகோலையும் தயாராக விரல்களில் இடுக்கிக் கொண்டு தான் இருந்தார். ஹசீம். நம்ம நூல் நயவுரையாளர் கம்பனை விட்டு கழன்று வந்த பாட்டைக் கானோம்.
நம் நூல் வெளியீடுகளில் சம்பந்தப்பட்ட நூலை விடுத்து பொருத்தமற்ற வேறு வேறு சமாச்சாரங்கள் குறித்து மணிக்கணக்காக விளாசித் தள்ளுவது மரபாகிவிட்டது. தலைமையுரைகளும் அவ்வாறே இருக்கின்றன. ஆளைப் பிடித்து இழுத்து இரண்டு அடியைப் போட்டால் தான் ஆசனத்தில் உட்காருவாரோ என்ற நிலைதான்.
அமரர் சிவகுருநாதன் ஐயா தலைமை வகிக்க சில மேடை உரைகள் நிகழ்த்திய அநுபவங்கள் சுவையானவை. தமது தலைமை உரையில் மிகவும் பொருத்தமான விசயங்களை நகைச் சுவையுடன் சொல்லி அன்று உரை நிகழ்த்த இருப்பவர்களையும் தைரியமாகப் பேசுவதற்கு ஊட்டமளித்திடுவார்.
மலேசிய எழுத்தாளர் சைபீர்முகம்மது 2002ஆம் ஆண்டில் இலங்கை வந்திருந்தார். அவ்வருடம் டிசெம்பர் 1ஆம் திகதி அவருடைய மூன்று நூல்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டன. வேரும் வாழ்வும் 3- பாகங்கள், மண்ணும் மனிதர்களும், வாழ்வும் இலக்கியமும் ஆகிய நூல்களே அவை. இந்நிகழ்வினை வீரகேசரி பத்தியில் பதிவு செய்திருக்கிறேன். மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்பது பொய் அது உயிர்த்தெழும் யுகம் இது - மலேசிய எழுத்தாளர் பீர்முகம்மது எனும் தலைப்பில் அந்நிகழ்வினை எழுதியிருந்தேன். அதில் சிவகுரு
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
நாதன் ஐயாவின் தலைமை உரையினை வழங்கி யிருக்கிறேன்.
“பீர்முகம்மது மலேசியக்காரர். அதிலும் இஸ்லாமியர். இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் கலந்துகொண்டு அதன் சூடு தணியும் முன்னரே புத்தக வெளியீட்டில் இறங்கி விட்டார். நமது இஸ்லாமிய எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் மண்டபத் தில் நிரம்பி வழியப் பேகிறார்கள் என்று எனக்கு எண்ணம் உண்டாகவே, அட நாமும் ஒருக்கா டிப்டொப்பாகத்தான் போகவேனும் என்று பொன்சையும் முகத்தில்ே அப்பி, அரை மணித்தியாலும் தலைமுடியோடு ஆட்டம் போட்டு, கக்குலுக்குள்ள சென்றடிச்சி, ஒரு டையையும் பொக்கட்டிற்குள்ளே சொறுக்கிக் கொண்டு வந்தனான். இலக்கியக்காரர் நடுவிலே சோம்பி நிற்கலாமோ என்ன?
அதை ஏன் கேட்கிறீர்கள். ஆலாய் பறந்து வருவார்கள் என்று நான் நினைச்ச இந்த பெரிய இஸ்லாமிய குஞ்சுகள் ஒன்றையும் காணேல்ல.
என்னதான் அச்சமில்லை! அச்சமில்லை என்று எங்கள் படைப்பாளிகள் வீறாப்பு பேசினாலும் பயந்தாங்கொள்ளிகள், ஊரடங்குச் சட்டம்தான். அது 10 மணிக்கு இவங்கள் கோழிகள் மாதிரி 6 மணிக்கு ஊரடங்கி விடுகிறார்கள்.
கிராண்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டக் கொடை ஆகிய பிரதேசங்களில் இஸ்லாமியர் அதிகமாக வசிக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களாக அங்கே கொஞ்சம் இராணுவ, பொலிஸ் கெடுபிடியாக இருந்தது. ஆதனால் அவர்கள் வரவில்லையோ என்னவோ இலக்கிய சாதனைக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களுமா கூடுகளுக்குள் கோழிகளாகிப் போனார்கள். ஒரு கொம்பனையும் காணவில்லை...!
இவ்வாறானதொரு தலைமையுரையை பதிவு செய்வது எவ்வளவு அர்த்தபுஷ்டியானது.
1.12.2002 அன்று நாட்டின் நிலையினை ஒரு நூல் வெளியீட்டின் தலைமையுரை எவ்வளவு அழகாக சித்தரித்துக் காட்டிவிடுகிறது.
(2) எஸ்.பொ. தீ எனும் ஒரு நாவலை எழுதினாரோ இல்லையோ இன்றுவரை நம்மவர்கள் அவர் மண்டையைப் போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாவலின் ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டி"என்னதான் என்றாலும் மனுஷன் பெ.உறுப்புகளை இப்படி எல்லாம் வாந்தி எடுக்க வைக்கும் வகையில் வருணிக்கலாமோ” பெரும்பாலானவர்களின் கடுமையான குற்றச் சாட்டு. இப்படி இருந்தது.
53
Page 56
இதில் விசேஷம் என்னவென்றால் எனது இலக்கிய நண்பரான பல நூல்களின் ஒரு கர்த்தா மாணவன் ஆசிரியர் முன்பு பாடம் ஒப்புவிப்பது போல அந்த வரிகளை கொட்டித் தள்ளினார்.
'அடிசக்கை என்னதான் என்றாலும் வாந்தி எடுக்க வைக்கும் வரிகளை விழுந்து விழுந்து படித்து மனனம் செய்யலாமோ? பாவி மனுஷா தோடுடைய செவி யனை துதித்து மனத்தில் பதித்து வைத்திருந்தாலும் புண்ணியமாகி விட்டிருக்கும்.
எஸ்.பொ.விற்குப் பின்னர் நம்மவர்கள் எவரும் இத்தகைய பாலியல் வருணனைகளை துணிந்து எழுதவில்லை. ஆனால் ஒரு சாகித்திய பரிசுக்காரர் தனது ஒரு கதையில் பெ.உ.குறித்த வருணனையில் எஸ்.பொ.வுடன் கடுமையான போட்டி நடத்தியிருக் கிறார். அடச்சாமி ஏண்டாப்பா இப்படி..? என்று நாக்கு சுழன்றாலும் கேட்கவில்லை. காரணம் ஆயிரம் இருக்கும் கேட்டுத் தொலைக்கவில்லை. ஒரு வேளை அவரின் துணிவு ஒர் இரசனைக் காய்ச்சலாக இருக்கலாம். இல்லை இதுதான் யதார்த்தக் காய்ச்சலாக இருக்கலாம். அப்படியம் இல்லை என்றால் ஒரு காப்பியடிப்பு துணிவாகவும் இருக்கலாம். இதை நான் சொல்லவில்லை. நம்மிடையே பல சிண்டு முடிச்சுக் காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் போட்டுக் கொடுத்ததுதான். w
“அது சரி, சோழியன் குடுமிசும்மா ஆடாதே எதுக்கு இந்த பீடிகை எல்லாம்.” உங்கள் முணுமுணுப்பு காதில் விழுகிறது.
எதையும் சும்மா புகழ்ந்து தள்ளுவதைத் தவிர ஆரோக்கியமான இலக்கிய உரையாடல்கள் நம்மிடையே ஏற்படவேண்டும் என்பதற்கான சீண்டுதலே இது. இந்த சீண்டுதலால் என்னை பதம் பார்ப்பார்கள் என்பது உண்மைதான். என்ன செய்வது ஒட்டுண்ணியாகி விட்ட இயல்புத் தன்மை ஆயிற்றே!
தமிழகத்தின் இலக்கிய வெளிப்பாடுகளை சீ சீ குப்பைகள் என ஒதுக்குவதைத் தவிர ஆரோக்கியமான விசயங்களை நாம் உள்வாங்குவதாகத் தெரிய வில்லை. இலக்கியச் சமர் தமிழகத்தில் சகல மட்டத்திலும் ஆரோக்கியமாகவே இடம்பெற்று வருகிறது. கன்னா பின்னா வென ஆளுக்கு ஆள் சொல்லடிகளை பகிர்ந்து கொண்டாலும் ஆளை ஆள் கீழ்மைப்படுத்தாமல் கருத்துகள் குறித்தே அமர்க்கள மாகவே வாதிடுகிறார்கள். இந்நிலைமை சில குதர்க்க வாதப் பேராசிரியர்கள் முதல் சாதாரண இலக்கிய ஆர்வலன் வரை இதோ இந்த முரண்பாடு இப்படி இருக்கிறதே என்று துணிவாக கொஞ்சம் சாதாரண ஆர்வலனும் வாசித்து புரிந்து கொள்ளட்டுமே என்று கிளர்த்திவிட்டால் ஆகா! இது நல்லதொரு இலக்கியச் சமாச்சாரமாக இருக்கிறதே என்று நமது கருத்துக்களைச் சொல்ல முன் வராமல் ஏதோ தமது இமேஜை கெடுத்துவிட்டான் என்று லட்சுமிகாந்தனோடு ஒப்பிட்டு தமிழ் தெரியாதவன், திரிபு வாதி, குடிகாரன்
54
வயிற்றெரிச்சல்காரன், இப்படி என்னென்னவோ கலாபூஷண பட்டங்களை வழங்கி தொழில் புரியும் இடங்களிலும் ஆப்பு வைத்துவிடுகிறார்கள். அது கிடக்கட்டும் இது நம்ம ஆளு குணம் என்று தீர்ப்புச் சொல்லி விட்டு தமிழகத்தில் இத்தகைய ஆபாசம் குறித்து என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் எட்டிப் ujü3ub.
குட்டி ரேவதி, சல்மா, மால்கி மைத்ரி, சுகிர்தாரணி இப்படி சில பெண் கவிஞர்கள் பயன்படுத்துகின்ற சில பதங்கள் சில ஆண் கவிஞர்களை தலையை பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறது. அவ்வளவிற்கு அம்மணமாக ஆண்பெண் பாலியல் உறுப்புக்களை கவிதைகளில் பயன்படுத்துகிறார்கள். எழுத்தில் உறுப்புகளின் பெயர் களை குறிப்பிட்டால் அது ஆபாசம் என்றாகி விடுமா? இது வாதத்திற்குரிய விசயம்தான். பெண்களே துணிந்து எழுதுகிறார்கள். அட பேசினால் என்னப்பா என்பவர்களும் உண்டு.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறைந்த ஒரு பூமியில் பெண்மை கொதித்தெழுதுவதில் என்ன தவறு இருக்கிறது.
இந்தியாவின் நொய்டா நகரில் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரமும், படுகொலைகளும் நெஞ்சை துகள் துகளாக்குபவை. ஒரு கால்வாய்க்குள் 38 சிறுமிகளின் சிதைந்த சடலங்கள் கிடைத்தன. அரசு இதனை கிட்னி களவு வியாபாரமாக்க முனைந்தது. இல்லை! இல்லை! மொணிந்தர் சிங், சுரேந்திரா கோவி என்ற இரு காமப்பேய்களின் உடல் பசியே முதல் காரணம் குமுறிப் பாய்ந்து சீற்றமுடன் அக்கிரமத்திற்கு எதிரான பல பத்திகளை அச்சமின்றி எழுதினார் குட்டி ரேவதி .இந்த கொடூரம் குறித்த எதுவும் எழுதாத ஒரு சினிமா பாடலாசிரியர் இந்த பெண் கவிஞர்கள் மீது சாடி விழுந்தார். நீதிமன்றம் வரை போயிருக்கிறார்.
குட்டி ரேவதி தனது கவிதை நூலுக்கு முலைகள் என்று தலைப்பிட்டிருக்கிறார்.
அடி செருப்பாலே! என்று சினிமா பாடலாசிரியர் பாய்ச்சல் போட்டுவிட்டார். ஆகா! நல்ல பண்பான கவிஞன் என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால் அவர் எழுதிய ஒரு பாடல் எப்படி இருக்கிறது தெரியுமா?
'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? ஆமாம் இந்த பாடலுக்கு என்ன நல்லா தானே இருக்கு என்ற கேள்வி நமக்குள் எழும். ஆனால் தெருவில் இளைஞர்கள் வயது வித்தியாசமே பார்க்காமல் பெண்களை நோக்கி இப்படி பாடும்போது அதன் சமுதாய சீரழிவு தெரியும்.
கவிதை மூலம் வன்முறைக்குள்ளாகும் பெண்ணுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ள உத்தி ஒன்றினை சொல்லிக் கொடுக்கிறார் மாலதி மைத்ரி.
"நீங்கள் வன்முறையைச் சந்திக்கும்போது வலுக்கொண்ட மட்டும்
அவன் விதைகளை பிடித்து இழுங்கள்” அம்மாடி! இது கராட்டே கறுப்பு பெல்ட் டெக்னிக் கையும் மிஞ்சிவிடுகிறதே!
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 57
நூற்றாண்டு விழா
ஞானம் 132 ஆம் இதழில் (45 ஆம் பக்கம்) உரு மனோகரன் எழுதிய மேற்குறிப்பிடப்பட்ட பத்தி என்னைச் நினைக்கும் விடயத்திற்கு வரமுன், பேராதனைப் பல்கை ஞானம் சஞ்சிகை தொடங்கிய காலம் (2000) தொட்டு, தெ ஞானம் வாசகரை வழிப்படுத்தி வருகின்ற சேவை மகத் உரும்பிராய் இந்து மாதாவின் இன்னொரு மைந்தன் கலை இலக்கியச் சஞ்சிகை "ஞானத்தின்” ஆசிரியர் தை (1980), “புதிய சுவடுகள்” (1977) நாவலும் இலங்கை "அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும்" (1998) எ6 பல்கலைக்கழகத்தில் பாடப்புத்தகமாக விளங்குகிறது ஞானசேகரனைப் பற்றிக் குறிப்பிடாது ஈழத் தமிழ் இலக் குருதிமலை நாவலை நான் இரண்டு முறை வாசித்து கொண்டு 1981 இல் கொழும்பில் தகவம் இலக்கிய வட்டம் (1974 - 1982) நான் தகவம் பொதுச் செயலராகக் கடபை மூச்சாக்க் கொண்டு இயங்கிய தகவம் குருதிமலை நாவ எனத்தனது குறிக்கோளை விசாலித்துக் கொண்டது.
உரும்பிராய் இந்துக் கல்லூரியின் அதிபர் வரிசையில் கடமையாற்றியவர் திரு. சி. பாலசுப்பிரமணியம் அவர்கள். நடந்தன (நூற்றாண்டு மலர். 20ஆம் பக்கம்) நான் கடமையாற்றியவன் (1992-1994) என்னை ஒரு நல்ல : கல்லூரியின் கலை இலக்கிய நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஆசிரியர் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியராக அன் பொறுப்பாசிரியரதும் ஒத்தாசையுடன் நாம் ஆற்றிய மகத்
1. கலை இலக்கியச் சொற்பொழிவுகள் உரையாற்றிே கலாநிதி நா. சுப்பிரமணியன், கலைப்பேரரசு. ஏ.ரி. பொன் வித்தகள் அநு. வை. நாகராஜன், எழுத்தாளர் வேல் அழு கலைஞன் க. வை. தனேஸ்வரன், அதிபர் ஆ. சி. நடராச கந்தையா ருரீ கந்தவேள் முதலியோர். 2. நூல் அறிமுகம் இலக்கிய வித்தகர் அநு. வை. பெரியவன்”, “தேடலும் பதித்தலும்” ஆகிய நூல்கள். 3. சமூக நாடகங்கள் மேடையேற்றம் வேல் அமுதன் நாட்கள்", ஆங்கில தனிநடிப்பு - “Peter the Great படிந்த நாட்கள் 4 இடங்களில் மேடையேறியது. 30.10.9 கறை படிந்த நாட்களும் மேடையேற்றப்பட்டு, கல்லூரி சு! 4. பட்டறைகள் 1994 ஆம் ஆண்டு சுமார் 2 வாரங்க வில்லிசைப் பட்டறை கவிமணி அன்னைதாசனால் கல்லூ வழி மிகுந்த கரகோஷத்தோடு மேடையேற்றப்பட்டது. கி தமிழகத்தில் பட்டறை போட்டு பயிற்றிக்கப்பட்டது அதுவே
ஞானம் - கலை வகைகிய சஞ்சிகை - ஜூலை 2011
க் கண்ட கல்லூரி
ம்பிராய் இந்து மாதாவின் மைந்தன் - கலாநிதி துரை சில குறிப்புக்கள் எழுதத் தூண்டியுள்ளது. நான் சொல்ல லக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் துரை மனோகரன் ாடர்ந்து காத்திரமான தனது கருத்துக்களைத் தெரிவித்து, தானது; பாராட்டப்பட வேண்டியது; பாராட்டுக்கள்: - வைத்தியக் கலாநிதிதி. ஞானசேகரன், இவர் உன்னத ல சிறந்த படைப்பாளி. இவரின் “குருதிமலை’ நாவலும் சாகித்திய மண்டல தேசிய விருதினைப் பெற்றவை; ண்ற சிறுகதைத் தொகுதி இலங்கை சப்பிரகமுவப் . வேறு விதமாகச் சொல்லுவதானால், எழுத்தாளர் கிய வரலாறு எழுத முடியாது. து மகிழ்ந்தவன். அதனுடைய சமூகப் பயனைக் கருத்தில் பாராட்டு விழா எடுக்கச் செய்தவன். அன்றைய நாட்களில் Dயாற்றியவன். அதுவரை சிறுகதை ஊக்குவிப்பை உயிர் பல் வருகையோடு "சிறுகதையும் நாவல் இலக்கியமும்”
ல் 1991-1995 ஆண்டுவரை (பதினேழாவது) அதிபராகக் அவரது காலத்தில் பல கலை நிகழ்வுகள் பெரிய அளவில் அந்நாளில் உரும்பிராய் இந்துவில் ஆசிரியராகக் கலை இலக்கிய உழைப்பாளியாக இனம் கண்ட அதிபர் நியமித்தார். இணுவில் ஊரைச் சேர்ந்த திரு. சிவகுமார் று கடமையாற்றினார். அதிபரதும், தமிழ்த்துறைப் தான சேவை ஆவணப்படுத்த வேண்டியவையே.
னார்: இணுவையூர் இயலிசைவாரித வீரமணி ஐயர், ானுத்துரை, எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், இலக்கிய pதன், கலை விமர்சகர் நவாலியூர் நா. சச்சிதானந்தன், ா, கவிமணி அன்னைதாசன் க. ஆனந்தராசா, கலைஞர்
நாகராஜன் எழுதிய “காட்டில் ஒரு வாரம்”, “அவன்
ரின் "வாழும் வழி”, வேல் அமுதனின் "கறை படிந்த , வாழும் வழி 3 இடங்களில் மேடையேறியது. கறை 3 இல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற “கலை விழாவில்" Dார் ஒரு இலட்சம் ரூபாவை வகலிக்க முடிந்தது. ர் கல்லூரி மண்டபத்தில் நாடகப்பட்டறை நடைபெற்றது. யில் நடத்தப்பட்டது. வில்லிசையில் சமூக நாடகம் வாழும் ாமிய கலையாம் வில்லிசையைப் பொறுத்தவரை ஈழத்
முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
-வேல் அமுதன்
55
Page 58
பிரபல எழுத்தாளர் மடுல்கிரிய விஜேரத்ன அவர்கை ஞானம் இதழின் மகுடம் என்பேன். இன உறவுப் பா6 ஆசிரியரை வாழ்த்தும் இந்நேரம் மடுலுகிரிய விஜேரத்ன இலக்கங்களையும் தந்திருக்கலாம் தருவாரா? மேலும் மிகச் சிறப்பாக இருந்தது. அதே நேரம் ஒசையில்லா விளம்பரங்கள் பத்தி எழுத்துக்களை கெடுத்துவிடக் கூட
கலாநிதி துரைமனோகரன் அவர்கள் தனது பத்த சொல்லியிருந்தார். நல்லதொரு கண்ணோட்டம் என்றா அலைகள் இன்னும் ஓயவில்லை என்பதை மறந்து விட் பற்றியும் எழுதியிருந்தார். வானொலி எல்லா அலை எ தொல்லை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அது நிகழ்ச்சிகளிலும் பழைய திரைப்பட வரலாறு அறியாமல் ஜோக்காகவும் இருக்கின்றன. வானொலி, தொலைக் கா ன. ல, ள, ழ, ர,ற பேதங்களை உச்சரிப்பில் புரிய வைத்த வெல்ல ஆங்கில மொழியை, இடையில் பேசுவது பெருை டமில், தமில, எனக் கூறினாலும் ஆச்சிரிய மில்லை.
கவிஞர்களான ஏ. இக்பால், டொக்டர் ஜின்னா சரீபுதி படித்தேன் இரசித்தேன். மணல் ஏற்றிவந்த பழைய போன்றிருந்தது.
ஜூன் மாத ஞானம் கிடைக்கப் பெற்றேன். ஒரே மூச்சில் அட்டைப்பட அதிதி மடுலுகிரிய விஜயரத்ன அவள் மடுலுவை பற்றிய முழுமையான விபரங்களை சுருக்கL நம் திறனாய்வாளர்கள் அவரை ஓரங்கட்டி ஒதுக்கி வரு கட்டாயமாக மடுலுவின் மொழி பெயர்ப்புகளை வாசிக்க
ஞானம் முதலாவது இதழிலிருந்து இன்று வரை 6 செய்தவன் என்ற வகையில் ஞானத்தின் படிப்படி ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக (எ ஏனோ தானோ என்ற வகையில் அமைந்திருக்கிறது. இருக்கிறது. ஏதோ ஒரு வட்டத்துள் சிக்கி விட்ட உணர்வு இப்போது குன்றி, வருவதாய் ஒரு நெருடல். முன்பெல்6 மனம் உருவாகும். ஆனால் இப்போதெல்லாம் வாசிப்பி
தொடர்ச்சியாக வரும் சில அலுப்புகளை நிறுத்தி, வாருங்களேன் ! ஞானப்
128 வது இதழில் எம். கே. முருகாந்தனின் "புரியா ஒன்றைத்தொடுகிறது. சங்க இலக்கிய பாணியில், ஐந்து பிரகாசிக்கிறது. சாதாரணபழங்கதைதானே என்று ஆ அகப்பாட்டுகளின் நினைவை உண்டாக்கியது. (தொல்க
அளவெட்டி பொ. கைலாசபதியின் சிந்தனைகள் குறிப்பறிதல் (பரிபாஷை)
"நானால் சொல்லாள்". அவன் குறிப்பு அறிய வேை அறிவது அன்று.) இவை பண்டிதமணி சி. கணபதிப்பிe பொ. கை. கருத்துப்படி சங்க அகப்பொருள், த வரிசையிலுள்ளவை. உலகெங்கும் தொல்இலக்கிய மர புலவர்களால் முன் எடுத்துச் செல்லப்பட்டன. (ErOS "வள்ளிக்கணவன் பேரை" (பழைய இசைத்தட்டுவரை) ப முருகானந்தன் இந்த மரபை உணர்ந்தோ உை செல்கின்றார். நான் கவிஞர் மரபில் தான், பழைய இலக்கி சிறுகதை மரபிலும் இது வரும் என நான் நினைக்கவி முருகானந்தன் இதை சிறுகதையின் கதைப்பொருள குறை சொல்லாமல் வெற்றிபெற்றது எமக்குப் பெருமகிழ் உயர் இலக்கியங்கள், சாத்திரங்களில், 2 இருப்பதைக்காணவைத்தமைக்கு நன்றி
56
1ளப் பற்றி கே. விஜயன் எழுதிய கட்டுரை 133ம் இலக்க மொன்றை அழகிய தமிழில் திறந்து வைத்த கட்டுரை. அவர்களின் கொஸ்கம விலாசத்தை அல்லது தொலைபேசி கே. விஜயன் அவர்களின் பத்தி எழுத்துப் பகுதியும் மிக, ஒசைப் பகுதியும் நன்றாக இருந்தது. என்றாலும் சுய ாது. மூத்த எழுத்தாளர் சிந்தித்தால் சிறப்புப் பெறுவார்.
எழுத்தில் தமிழ் நாட்டின் புதிய மாற்றத்தை சரியாக லும் தமிழ் நாட்டில் - எம். ஜி. ஆர் என்ற சமுத்திரத்தின் டார். அவர் இலங்கை வானொலியின் காட்டுக்கூச்சலைப் பரிசைகளிலும். . தொலை காட்சி நிகழ்ச்சிகளிலும் இத் மட்டுமல்ல நெஞ்சம் மறப்பதில்லை போன்ற தரமான பிதற்றுகின்றனர். சில நேரங்களில் சில நிகழ்ச்சிகள் கடி ட்சிகளில் பங்கு பற்றும் சில அறிவிப்பாளர்களுக்கு, ந, ன, ால் நலம் என நம்புகிறேன். தமிழ் பேசுவோர் மனங்களை மயாக நினைக்கின்றனர். இன்னும் கொஞ்சம் காலத்தில்
ன் ஆகியோரின் இரண்டு கவிதைகளும் ஒரே பக்கத்தில் லொறி இரண்டு முகத்துக்கு முகம் மோதிக் கொள்வது
பாணந்துறை எம். பி. எம். நிஸ்வான்.
வாசித்து முடிந்த பின் எழுதுகின்றேன். களை பற்றிய கே. விஜயன் சாரின் குறிப்பு மிக அருமை. pாக மிக அழகாக வாசகன் முன் வைக்கிறார். அத்தோடு வதனை நாசுக்காக உறைய வைக்கின்றார். வாசகர்கள் வேண்டும். வாசிப்பிலும், இடையிடையே படைப்புகளாலும் பங்களிப்பு யான வளர்ச்சி எப்போதும் என்னை மகிழ்ச்சியில் ழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் உட்பட) ஞானத்தின் போக்கு அதன் உள்ளடக்கத்தின் தரம் கேள்விக் குறியதாகவே பு: தொடர்ச்சியாக ஞானத்துள் இருந்த வீச்சும், எழுச்சியும் 0ாம் ஞானத்தை வாசித்தபின் உற்சாகமாக, ஒரு படைப்பு ன் பின் ஒரு சலிப்பை தருகிறது. புதிய புதிய விடயங்களை, புதியவர்களூடாக கொண்டு ), வாழ்க, வளர்க’ - சுதர்மமகாராஜன்
த பார்வைகள்” தமிழிலக்கியமரபின் மிக உயர்ந்த சிகரம் பக்க கதையில் பத்துவரியில் உரிப்பொருள் வெளிப்பட்டுப் ரம்பித்த எனக்கு இறுதிக் கட்டம் தொல்காப்பியம், சங்க Tüílu ub, களவியல்96, 97)
யாழ். பல்கழைக்கழக வெளியீடு, 1994), பக்கம் 14/
*டும். சம்பந்தப்பட்டவள் கூறாமல் அறிவான் (கள்ளத்தால் ர்ளையால் 10.5.1951 எழுதி வைக்கப்பட்டவை ருக்குறள் காமத்துப்பால், திருக்கோவையார், ஒரே பில் உலகியற்காதலும், ஞானக்காதலும் சமாந்தரமாகவே and agape). காவடிச்சிந்து அண்ணாமலைரெட்டியார் ரதியின் 'கண்ணன் என் காதலன் ஊடாக அது செல்கிறது. ாராமலோ தனது சிறுகதை என்ற படைப்பை நடத்திச் ய வடிவங்களில்தான் இது வருகிறது என்று நினைத்தேன் ல்லை க்கி, நவீனகதை வடிவத்தை வற்புறுத்தும் விமர்சகர்களும் வைத் தருகிறது. உலாவும் மனம், சிறுகதையிலும் உயர் ரஸம் &b. FLITJ556OT b
ஞானம் - கலை இலக்கிய சஞ்சிகை - ஜூலை 2011
Page 59
15 வருடத் திருமணசேவை நிை Ꮳ6ᎧIᏍ அமுதன் பாரிய சேவை
0 விவரம்
விவரங்களுக்குத் தனிம மூத்த, புகழ்பூத்த, சர்வி ஆற்றுப்படுத்துநர் குரும் புதன், வெள்ளி மாலை தொடர்பு கொள்ளலாம் !
0 தொலைபேசி 4873929/2360694/23 0 சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்கு 0 முகவரி 8-3-3 மெற்றோ மாடி எதிராகவுள்ள 33 ஆம் ஒ சுலப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனே! சுல
"ஞானம்" சஞ்சி
இட
* பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, ! * கா. தவபாலச்சந்திரன் - பேராதனை * பூபாலசிங்கம் புத்தகசாலை - 309A * பூபாலசிங்கம் புத்தகசாலை - 4, ஆ * புக் லாப் - யாழ். பல்கலைக்கழக வ * துர்க்கா - சுன்னாகம்.
* ப. நோ. கூ. சங்கம் - கரவெட்டி, ெ * லங்கா சென்றல் புத்தகசாலை - 84
* மாரிமுத்து சிவகுமார் - பூரீகிருஷ்ண
ܢܠ
மறவினை முன்னிட்டு
னித நிறுவநர், “சுய தெரிவுமுறை முன்னோடி" தேச சகலருக்குமான திருமண ஆலோசகர்/ பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் திங்கள், பிலோ, சனி, ஞாயிறு நண்பகலிலோ தயங்காது
க் கட்டணக் குறைப்பு
s }
6O488
முறை
மனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு so ழுங்கை ஊடாக) 55ஆம் ஒழுங்கை, கொழும்பு 06. ရွှံ့၍
முறையே மகோன்னத மணவாழ்வுக்குக் ப மணமக்கள் தெரிவுக்குச் சுயதெரிவு முறையே
ཛོད༽
கை கிடைக்கும்
நீங்கள்
340, செட்டியார் தெரு, கொழும்பு - 11 ா. தொலைபேசி: 077 9268808 , 2/3 காலி வீதி, வெள்ளவத்தை,
ஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
பளாக அருகாமை, யாழ்ப்பாணம்.
நல்லியடி , கொழும்பு வீதி, கண்டி ாாஸ், இல 86, சைட் வீதி, ஹட்டன்.
لبرسے
Page 60
GNANAM - Registered in the Department of
NATTARANPOTHA, KU TEL: 0.094-081-2420574, 242 Email: luckyll
LLLTTT M LLYT TM GLLLLLLL LL LLLLLT LLLLTT mTLTTS 00LLLLLT TTTLLTTLTT T k Sk L MMLT
LLGLLLLL LLLLLLLLS LLLLLL00SLLLSLL00LLSS
NDASALE, SRI LANKA. 217, FAX: 0094-081 -242.0740 and (asltnet.lk
e aange eeue Angelaa aaa angeslag og