கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளையதம்பி இராதாகிருஷ்ணன் (நினைவு மலர்)

Page 1
OJ (tiĝÖUKT&ötö 5) Ltd Sourcŝč east-siġasL-ROSS) Sitt Fa6c5b, it
ର୫୩i>ରାଞ୍ଜି ୫୦୭, ୫୭:୫୪, ରାrd ஒய்வுபெற்ற விசேட தற தொழி
 
 

| 移 பகுதி துன்னாலை மேற்கு 8லசியா மலாக்காவில் பிறந்து » Q)L5552 69rst (356) é5Diver, ல்நுEU உத்திழோகத்தர் அமரர் . இராதுர்கிருஷ்ணன் நினைவு அடு

Page 2
-
܉ܐ܂
-
-
ܘ
-
-
ை
-
உை
 
 
 
 

W XNS
எங்கள் குடும்பத்தலைவனாக இருந்து கண்ணை இமை காப்பது போல் எம்மைக்காத்து வளர்த்து உயர்வளித்து இறைவனடி சேர்ந்த
எங்கள் குலதெய்வத்தின் பாதக்கமலங்களில்
காணிக்கையாகச்

Page 3


Page 4

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 மஞசபுராணம திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை மிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
தேவாரம் நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலையில் லோம் ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோமல்லோ
மின்பமே யெந்நாளுந்துன் பமில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான
சங்கரனற் சங்கி வெண் குழையோர் காதில் கோமாற்கே நாமென்று மீளாவாளாய்க்
கொய்ம் மலர்ச் சேவடியிணையே குறுகினோமே
திருவாசகம் வேண்டத்தக்க அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்ட அயன்மாற் கரியோய் நீ
வேண்டி யென்னைப் பணி கொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்
யானுமதுவே வேண்டியல்லால் வேண்டும் பரிசொன்றுன் டென்னியும்
அதுவும் உந்தன் விருப்பன்றோ 令令令令令令令令令令令令[1]令令令令令令令令令令令令

Page 5
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 திருவிசைப்Uா
இடர்கெடுத் தென்னை யாண்டு கொண்டென்னு
ளிருட்பிழம் பறவெறிந் தெழுந்த சுடர்மணி விளக்கி னுள்ளொளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ யடல் விடைப் பாகா வம்பலக் கூத்தா வயனொடு மாலறியாமைப் படரொளி பரப்பிப் பரந்து நின்றாயைத்
தொண்டனே பணியுமா பணியே
திருப்Uல்லாணிடு மீண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடி குடி ஈசற்
குழாம் புகுந்து தண்டங் கடந்த பொருளை வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் என்றும் இன்றுமுள்ள பொருளன்றே
பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம் இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்பு உண்டேலுன்னை யென்றும் மறவாமை வேண்டு மின்னும்
வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ யாடும் போதுன்
அடியின் கீழிருக்க
令令令令令令令令令令令令[21令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 திருப்புகழ் பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணர் நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநி பாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்
令令令令令令令令令令令令[31令令令令令令令令令令令令

Page 6
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
ഞ്ഞ് ീഖ്യപ്പ 6) قمة والهم --
பியதம்பி e go "قلة
செல்வம் கொழிக்கும் மலேசியா நாட்டில் மலாக்கா என்னும் வளம் பொருந்திய ஊரில் சைவ வேளாண்குலத்தில் காலஞ்சென்ற மலேயன் பென்சனியர் திரு.வ. இளையதம்பி சரஸ்வதி தம்பதியினருக்கு ஏழாவது புத்திரனாக அமரர் 1944ம்ஆண்டு ஆனித்திங்கள் 17ந்திகதி பிறந்தார். இவரது அழகையும் வசீகரத்தையும் கண்ட பெற்றோர் ஆசையுடன் இராதாகிருஷ்ணன் எனப்பெயரிட்டு மகிழ்ந்தனர். உற்றார், உறவினர் இவரைச்செல்லமாக “கிட்டா” என்றும் “ராதா” என்றும் அழைத்து வந்தனர்.
இவர் சிவபாக்கியம், புவனேஸ்வரி, இராஜேஸ்வரி என்ற சகோதரிகளுடன் பரமசிவம் , செல்வராஜா, கனகரத்தினம்,பாலசுப்பிரமணியம் என்ற சகோதரர்களுடனும் மிகுந்த பாசத்துடன் வளர்ந்து வந்தார்.
ஆரம்பக் கல்வியை யா/தாமோதரா சைவ வித்தியாலயத்தில் கற்று பின் யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக சிரேஷ்டக் கல்வியை முடித்துக்கொண்டார். பாடசாலையில் சிறந்த சாரணனாக விளங்கி “இராணி சாரணன் (Queens Scout) சான்றிதழையும் பெற்றார். தந்தையைப் போலவே தொழில்நுட்பத் துறையினை பயின்று மேன்மையுற ஆர்வங்கொண்டு கட்டுப்பத்த தொழில் நுட்பக்கல்லூரியில் பயின்று படவரைஞர் பரீட்சையில் சித்தியடைந்து அரசசேவையில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் எம்பிலிப்பிட்டிய
令令令令令令令令令令令令I41令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 R.V.B. Du fì6ủ qEL60) LDu JT[ở mjì Lfì6ổi 60Iff QLDII 60IJ II đ66ò
உள்ளுராட்சி தரிணைக் களத் தரிலும் , L60) 6 உள்ளுராட்சித்திணைக்களத்திலும் கடமையாற்றினார். இக்காலகட்டத்தில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமண பதிவு செய்யப்பட்டிருந்த துன்னாலை மேற்கைச்சேர்ந்த திரு ஆசிதம்பிரப்பிள்ளை செல்லாச்சி தம்பதியினரின் ஏகப்புதல்வி கமலாவதியை 1971ம் ஆண்டு திருமாங்கல்யதாரணம் புரிந்து இல்லறவாழ்வில் ஈடுபட்டார். இவர்களுக்கு தம் தவப்பயனால் நிதானமும் அமைதியான சுபாவமும் கொண்ட கேசவன் மூத்த புதல்வனாக பிறந்தான். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனாக கல்வி பயின்று மருத்துவமானி சத்திரசிகிச்சைமாணி (M.B.B.S) பட்டம்பெற்று பதுளை பொதுவைத்தியசாலையில் பணிபுரிகின்றார். துடிப்பும் பணிவும் கொண்ட இரண்டாவது புத்திரனாக கடம்பன் உதித்தான். மொறட்டுவ பல கலைக் கழகத்தில் பொறியியல் (இரசாயனவியல்) பட்டம் பெற்று மேலும் கணணித்துறையில் விசேடமாக பயின்று தற்போது UKயில் தொழில்புரிகின்றார். மூன்றாவது சற்புத்திரன் தணாளன் தந்தையின் சிரிப்பையும் தன்னலமற்ற பொதுசேவை பண்பைய்ம் கொண்டவன். கணணித்துறையில் பயின்று கொழும்பில் சிலகாலம் பணிபுரிந்து இத்துறையில் சிறப்புத்தேர்ச்சி பெறும் பொருட்டு வெளிநாடு செல்லவுள்ளார். பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை தீர்க்க திருக்கேதீச்சரத்தான் கெளரியம்மை பேரருளினால் அருமருந்தன்ன புத்திரி உதயமானாள். ஆசையுடன் கெளரி என அம்பாளின் பெயரையே சூட்டி பெற்றோர் ஆனந்தித்தனர். “கடைக்குட்டி’ அப்பா அம்மாவின் செல் லக் குட் டியாகவும் அணி ணண் மாரின் அருமைத்தங்கையாகவும் திகழ்கின்றாள். உரிய காலத்தில் தன் மூத்த இரு புதல்வர்களுக்கும் திருமணம் செய்வித்து
பேரப்பிள்ளையையும் கண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்தார். 令令令令令令令令令令令令15]令令令令令令令令令令令令

Page 7
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
அன்னார் பளையிலிருந்து கல்கமுவ சேவைக்கால பயிற்சி கல்லூரியில் (I.T.) போதனாசிரியராகராக பணிபுரிந்துள்ளார். இக்காலகட்டத்தில் தெய்வபக்தியிற் சிறந்த அமரர் இராதாகிருஷ்ணன் அங்கே ஓர் பிள்ளையார் கோவில் திருப்பணி வேலைகளில் பங்குபற்றி அவ்வாலய கும்பாபிஷேக விழாவிலும் சிறப்பாக சேவையாற்றினார். பின்னர் மன்னார் உள்ளுராட்சி திணைக்களத்தில் சேவையாற்றுகையில் திருக்கேதீச்சர ஆலய மன்னார் மாவட்ட அரசஅதிபர் தலைமையில் அரச ஊழியர் அன்னதான குழுவில் பலகாலம் பொருளாளராக பொறுப்பேற்று சிவராத்திரி மடத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் பொறுப்புணர்ச்சியோடும் பக்தர்களுக்கு சேவையாற்றி சகல பொது மக்களின் அன்புக்கும் நல்லபிப்பிராயத்திற்கும் பாத்திரமானார். இறுதியாக யாழ் மாவட்ட உள்ளுராட்சி திணைக்களத்தில் விசேட தர படவரைஞராக பணி செய்து 2004ம் ஆண்டு அரசசேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
வளர்ந்த கிராமம் வாழ்ந்த கிராமம் முதலியவற்றின் அபிவிருத்திப்பணிகளிலும் சகல கோவில் பொது கட்டிட நிர்மாண வேலைகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் தன்னலமற்று இறுதி நேரம்வரை துடினமாக ஒடி ஒடி செயற்பட்டு சிறியோர், பெரியோர் என்றில்லாது சகலரது இதயங்களிலும் நீங்காத இடம்பெற்று கடந்த 21.01.2006 அன்று கொடுரமனம்படைத்த ஆயுதபாணிகளால் சுடப்பட்டு கணப்பொழுதில் வீட்டின் முகப்பு வாசலிலேயே வீழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
令令令令令令令令令令令令I6]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 கினது Aனைவரிை.ை...................
Zaarofaze/Zaraf
என்னத்தை நினைத்தாலும் என்னவர் கண்முன் வந்து என் மனதை எல்லாம் அவர் நினைவாக்கி சொல்லொண்ணா கண்ணிரலைகளை கொட்டி விடச்செய்கிறாரே! கூறவும் முடியவில்லை. புலம் பவுமுடியவில் .ை நிதானமாக நினைக்கின்றேன். திருமணம் செய்த நாள் முதலாய் என் மனம்நோக என் கணவர் என்றுமே நடந்ததில்லை. வேண்டிய வேண்டியதெல்லாம் அவ்வப்போது அன்பு காட்டி சீர் செய்து நெறிப்படுத்தி மனம் சலிக்காது செயல்பட்ட முறைகளை நினைக்கும் போதெல்லாம் மனம் உருகச்செய்கின்றது. வீட் நடவடிக்கையில் நான் வேறு அவர் வேறு என்ற தன்மை இல்லாமல் ஒரே மனநிலையில் நாம் எய்தியதை நினைத்தால் எம் உறவு ஒருமித்த உறவாகும்.
என் கணவர் எங்குற்றார் என்னானார் இப்போது! தேவைப்பட்டதெல்லாம் செய்து வந்தார். செயல்பட்டார். பிள்ளைகளை எல்லாம். படிப்பித்து நெறிப்படுத்தி தந்தை ஆற்றவேண்டிய கடமைகளை எல்லாம் செய்து வந்தார். ஏனோ அவள் அக்கடமைகளை முற்றாக முடிக்கும் முன்னே வேண்டாத கூற்றுவன் நாடினானே!
தெய்வ வழிபாடுகளுக்கெல்லாம் இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி உள்ள கோவில்களுக்கெல்லாம் என்னைக் கூட்டிச் சென்று தெய்வவழிபாடுகளில் ஈடேற்றிய ஒரு தெய்வப்பிறவி என் கணவர். என் கணவர் சந்தோஷமே என் சந்தோஷம் என்ற மனநிலையில் அவர் செய்யும் செயல்களில் எல்லாம் என் சாய்வைகாட்டி ஓய்வு பெற்ற பின்னும் தனது தொழில்நுட்ப வேலைகளை செய்து சேவை செய்தார். சிவபதமடைந்தார்.
令令令令令令令令令令令令I71令令令令令令令令令令令令

Page 8
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 மகன் கேசவனின் மனஅலைகளிலிருந்து,
கல்வியே செல்வம் எனச்சொல்லி கல்வியிலே சிறந்து மேன்மையுற வேண்டும் என்ற ஆசை வித்தை என்னுள் ஊன்றியவர் என் அன்புத்தந்தை. எனது மேம்பாட்டிற்கான எல்லாத்தேவைகளையும் கேட்கும் முன்பே பூர்த்தி செய்து என் முன்னேற்றங்கண்டு குதூகலித்த அப்பா இன்று இல்லை. அவர் சிரித்த முகம், எதனையும் இலகுவாக எடுக்கும் பாங்கும் உற்ற தோழன் போல் என்னை கருதி பேசி மகிழ்ந்த நினைவுகளை என் நெஞ்சம் மறக்குமா! “தந்தை மகற்கு ஆற்றும் உதவி அவையகத்து முந்தி இருப்பச்செயல்” என்பதற்கேற்ப கல்விதந்து வாழ்க்கையும் அமைத்துக் கொடுத்து பறந்திட்டீரே! என்ன பாவஞ் செய்தோம்! “அப்பா அப்பா” என்று கதறியழுதாலும் தீருமோ இச்சோகம் எதையும் எந்த மனப்பளுவையும் அமைதியாக தாங்கும் உங்கள் மனப்பக்குவம் முரணான கருத்து வேறுபாடுகளை நளினமாக கையாளும் விதம் யாவருக்கும் முடிந்தவரை உதவும் மனநிலை எனக்கு வழிகாட்டியாக என்றென்றும் இருக்கும் அவரது நிலையான நித்திய இன் பத்திற்காகவும் ஆத்ம சாந்திக் காகவும் இறைவனை கண் ணிரோடு இறைஞ்சுகின்றேன்.
கடம்பனின் மனக்கசிவு.
குறும்புத்தனமும் துறுதுறுப்பும் நிறைந்த எனது பால பருவத்திலேயே அப்பா என்னை அடித்ததில்லை. கோபம் வருவது போல் நடிப்பார். உடனேயே வாய்விட்டுச் சிரிப்பார். கணிதத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் புகுத்தி பொறியியலாளனாக பட்டம்பெற்றபோது கணணித்துறையில் மேலும் கற்றால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அத்துறையிலும் பயில
தூண்டினார். வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு கிட்டியபோது 令令令令令令令令令令令令[81令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 என்னை உற்சாகப்படுத்தி அனுப்பியவரும் அவரே. அருமை அப்பாவிடமிருந்து தான் நான் சமயப்பற்றுள்ளவனாக, பொதுநல சேவை ஆற்றவும், பிறருக்கு இரக்கங்காட்டி உதவி புரியவும் உறவுகளை மதிக்கவும் கற்றுக்கொண்டேன். இப்படியான அப்பா கிடைக்க அருளிய இறைவன் முழுமையாக அவர் அன்பில் வழிகாட்டலில் வாழவிடாது இடையில் அவரைப் பறித்துவிட்டானே! அப்பாவின் நிழலில் தென்றலில் இன்புற்ற நாம், அவரையும் அச்சுகத்தில் திளைத்து இன்புற்றிருக்க செய்வதற்கு எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஆண்டவன் தரவில்லையே என்று நினைக்கும் போது தாங்க முடியவில்லை.அவரின் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதால் நாமும் சாந்தி பெறுவோம்.
தனMணினர் இதயத்திவிருந்து.
எமது வாழ்வின் ஒளியாய் வழிகாட்டியாய் தோழனாய் திகழ்ந்த அன்புத்தந்தை இனி இல்லை என்று எண்ணும்போது தாங்க முடியாது தவிக்கின்றேன். மேற்படிப்பில் துலங்க முடியாது தவித்த எனக்கு ஏற்ற துறையில் கணணிப்பயிற்சி கற்க தூண்டி, என்னை ஒரு மனிதனாக்க சொந்த தொழில் வாய்ப்புக்கும் அஸ்திவாரமிட்ட அப்பா எனக்கு துணையாக இல்லையே என்று எண்ண என் நெஞ்சம் துயரத்தால் குமுறுகிறது. எங்கள் எல்லோருடனும் சேர்ந்து கதைபல பேசி சிரிப்பும் மகிழ்ச்சியும் பொங்க கலகலத்த வீடு இன்று வெறிச்சோடிப் போய் விட்டதே! வாழ்க்கையை எப்படி நெறிப்படுத்தி வாழ வேண்டும் என சொல்லாமல் சொல்லித்தந்த தந்தை வழி நாமும்வாழ்ந்து காட்டி அவர் ஆத்மாவின் ஆசியை பெற்றுக்கொள்வோம்.
令令令令令令令令令令令令I91令令令令令令令令令令令令

Page 9
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
ரகர்புதல்வி கிகாரினர்
உன்னத்தவிதத்து. “தாயினும் சாலப்பெரிது” கெளரி கெளரி “எனக்
குரல் கொடுக்கும் போதெல்லாம்” “என்னப்பா” என்று ஓடி வருவேனே! எங்குற்றாய்! ஏதுற்றாய்! என எண்ணும் போது உள்ளம் உருகுதப் பா! கண்ணிர் சொரியுதப் பா! பார்க்குமிடமெல்லாம் பரிதவிப்பாய் இருக்குதப்பா! ஒரு குறையும் விடாது கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்து பல வகையிலும் அறிவூட்டி அல்லல் என்பது என்னவென்றே தெரியாது அரவணைத்து வளர்த்த அப் பாவை நினைத்துப்பெருமைப்படுகிறேன். குடும்ப வாழ்க்கையில் எங்கள் எல்லோரையும் சமமாக நினைத்து அன்பு பாராட்டுவதில் பாராபட்சமில்லாது தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து நல்ல குணங்களை மேன்மையுறச் செய்ததை எண்ணும் போது உள்ளம் பூரிப்படைகின்றது.
“பிறந்தவர் இறப்பதுண்மை ஆனால் மறப்பதற்கில்லை”
மறவாது போற்றி போற்றி சாந்தியடைவோமாக.
令令令令令令令令令令令令[10]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 கொற்றாவத்தையில்
disoas Assors . . . . . . . . . . . . . . . . “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
சிறு பிராயம் தொட்டு திருமணம் செய்யும் வரைக்கும் கொற்றாவத்தையை தனது வசிப்பிடமாகக் கொண்ட அமரர் இளையதம்பி இராதாகிருஷ்ணன் அவர்கள் அன்று தொடக்கம் 21.01.2006ல் அமரத்துவம் அடையும் காலம்வரை தான் வாழ்ந்த மணி ணையும் அங்கு தன் னுடன் கூடி பழகியவர்களுக்குமல்லால் எல்லோருடனும் அறனும் அன்பும் உடையவராகவும், பண்பாளனாகவும் வாழ்ந்த ஓர் மாமனிதன் எனின் மிகையாகாது. பள்ளிப்பருவத்தில் மிகவும் பயனுள்ளவராக இருந்ததுமல்லாமல் தான் வாழ்ந்த கிராமத்தில் தன்னை நாடி வந்தோருக் கெல்லாம் முகங்கோணாது பண்பாகவும் பயனுள்ளவராகவும் நடந்து கொண்டதை கொற்றாவத்தை மக்கள் அவரின் இழப்பை ஈடு செய்வதறியாது தவிப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
தன்னடக்கம் உள்ளவன் தவறு செய்யமாட்டான். தாராள மனப் பாண்மையுள்ளவன் மற்றவர்களுக்கு உதவுவதற்கு தயங்கமாட்டான். பெரியோரைக் கனம் பண்ணுமிவர் அவையடக்கமுள்ளவர். இப்படியான நற்பண்புகளுடன் வாழ்ந்த அண்ணல் இ.இராதாகிருஷ்ணன் அரசசேவையிலிருந்து ஓய்வுபெற்றபின் மக்களுக்காக தன் சேவையை அயராது செயலாற்றிய பெரும்மனிதன் அமரர் இராதாகிருஷ்ணன் அவர்கள் திருமணம் செய்து வேறு கிராமத்தில் தனது இல்லற வாழ்க்கையை அன்பாகவும் பண்பாகவும் நடாத்தி வந்தபோதும் அவர்தான் வாழ்ந்து வந்த கொற்றாவத்தைக்கிராமத்தை என்றுமே மறந்ததில்லை. வேண்டிய வேண்டியாங்கு எய்தி செய்ய வேண்டிய செயல்களை எல்லாம் மீண்டும் மீண்டும் செய்து வந்துள்ளார். கொற்றாவத்தை கிராம மக்கள் அவரை திடீரென் இழந்தது ஓர் பேரிழப்பாகும்.
令令令令令令令令令令令令[111令令令令令令令令令令令令

Page 10
ぐ〉ぐ>ぐ>ぐ〉ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ〉ぐ>ぐ>ぐ>
பொது வேலைப்பணிகளிலும் தனிப்பட்டவர்களது அவரவர் வேலைப்பணிகளிலும் மிகுந்த அக்கறை காட்டி தன்னலமற்ற சேவைகளாற்றி எல்லோர் மனதிலும் தனியிடம் பிடித்து கிராம முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த மாமனிதன் அன்று 21.01.2006ல் மறைந்துவிட்டார். ஆனால் அமரர் இ.இராதாகிருஷ்ணன் அவர்கள் எல்லா கொற்றாவத்தை வாசிகள் உள்ளங்களிலும் நிறைந்துள்ளார்.
கொற்றாவத்தை கிராம முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சகலரும் அமரர் இராதாகிருஷ்ணனின் ஆலோசனைகளை நாடிச்செல்லாதவர்கள் இருக்கமுடியாதெனலாம். ஏனெனில் அவர் கேட்டபோது கேட்டபடி எவ்வித வெறுப்போ அல்லது மறுப்போ இல்லாது சேவைசெய்யும் மனப்பான்மை படைத்த ஒரு சேவையாளன் கொற்றாவத்தை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று உருவாகிய காலத்தில் அக்கட்டிட நிர்மாண வேலைகளுக்கு மக்கள் பங்களிப்பில் அமரர் இராதாகிருஷ்ணனின் பங்களிப்பு பெரிதும் போற்றப்பட்ட தொன் றாகவுள் ளது. அவரின் ஆலோசனைகள் வழிநடத்தல்கள் அளப்பற்றவை ஆகும். கொற்றாவத்தை மத்திய சனசமூகநிலைய முன்பள்ளிக்கட்டிட நிர்மாணத்தில் அமரர் இராதாகிருஷ்ணனின் தொழில்நுட்பப்பணியும் ஆல்ோசனைகளும் மற்றும் அக்கட்டிடத்தை பூர்த்தி செய்து திறந்து வைக்கும் சகல வேலைகளிலும் தனது வேலையாக எண்ணி சேவையாற்றியதை நினைக்கும் போது அவருக்கு தனது கிராம முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறை இருந்துள்ளது என்பதை அறியக்கூடியதாக இருந்தது.
அணி ன ல இராதாகிருஷ்ணன் அவர்கள் சமூகப்பணியில் மட்டுமின்றி கோவில் பணிகளிலும் தனது ஈடுபாட்டை மிகவும் துல்லியமாக வைத்துள்ளார். சமயப்பற்றுள்ள அமரர் கொற்றாவத்தை வடுவாக்கட்டை கோவில் புனரமைப்பில் தொழில்நுட்ப முறைகளிலும் அதனை கட்டி முடிப்பதற்கும ஈற்றில் மகாகும்பாபிஷேக கிரியைகளிலும் மிகுந்த அக்கறை காட்டி இனிது அக்கோவில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதைப் பார்க்கும் போது அவர் ஒரு பெரும்
令令令令令令令令令令令令121令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 தெய்வப்பற்றாளன் என்று கூறிவிடலாம். கொற்றாவத்தை கிராம கோவில் கைங்கரியங்களில் அமரர் ஒருபோதும் கலந்து கொள்ளத்தவறியதில்லை. எங்கிருந்தபோதும் மறக்காமல் அவ்வப் போது கோவில் களில நடைபெறுமு விழாக்களுக்கெல்லாம் தனது பங்கைச் செலுத்தி வந்த தன்மையை அலசிப்பார்க்கும் போது அவர் இக்கிராம தெய்வத்தில் ஊறிய ஓர் பேருயிராகும்.
கொற்றாவத்தையில் மாமனிதன் இராதாகிருஷ்ணன் அவர்களை அவரது காலஞ்சென்ற தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார், தம்பி மற்றும் மச்சான், மச்சாள்மார், மருமக்கள், உற்றார், உறவினர், ஊரவர்கள், எல்லோரும் அன்பாகவும் பண்பாகவும் “கிட்டா”என்று அழைப்பார்கள். அதன் பொருளை நான் பார் க் குமி போது எ ல லோருக்கும் கிட்டவுள்ளவரெனப்பொருள் கொண்டேன். ஆனால் இப்போது அதற்கு மறுபக்க பொருளுமுண்டு என்பதைப் பார்க்கும்போது அவர் ஒருவருக்கும் "கிட்டா” தவராக எட்டிவிட்டார் என நினைக்க வாய்விட்டலற வேண்டும் போல் தோன்றுகிறது.
இல்லறவியலிலும் அமரர் இராதாகிருஷ்ணன் அவர்கள் என்ன என்ன முறையுடன் வாழவேண்டும் என்ற இலக்கணத்துக்கமைய வாழ்ந்து மனைவி மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று அவ்வக்காலங்களில் என்னென்ன கடமைகளைச் சேவைகளை எல்லாம் செய்ய வேண்டுமோ அவ்வாறே செய்து முறைப்படி வாழ்ந்து வருங்கால் இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் முற்றும் பெறாதநிலையில் அவர் இன்னுயிரை துப்பாக்கி குண்டுகளினால் துளைத்தெடுத்ததை எல்லோரும் அறிவர். அறியாதார் அறிந்து கொள்க!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி! “எல்லாம் முன்பே தீர்மானிக்கப்பட்டவை”
-யோகசுவாமிகள்ஜண்னnஸ் லsNறnட்சி திறnS இன்லினற்றசந்த சxலிNனைத்தலைலம் 6.தந்தசாமி
令令令令令令令令令令令令[13]令令令令令令令令令令令令

Page 11
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 அமரர் இராதாகிரஷர்னர் அவர்கர்ை 7ம் மாதம்.
அமரர் இராதாகிருஷ்ணன் அவர்கள் எமது திணைக்களத்தில் 7 வருடங்கள் எம்முடன் இணைந்து செயலாற்றி வந்தவர். இக்காலப்பகுதியில் எமது அலுவலகம் மிகவும் கலகலப்பாக இருந்தது என்று சொல்வதிலும் இருக்க வைத்தவர் அமரர் அவர்கள். உடலால் மட்டும் உயரமானவர் அல்ல. உள்ளத்தாலும் உயர்ந்து மிளிர்ந்தார். அனைவரது சுகதுக்கங்களிலும் ஓடியோடிக்கலந்து கொள்வதோடு அமையாது ஒவ்வொரு அலுவலர்களின் துன்பத்திலும் இன்பத்திலும் ஒன்று பட்டு நின்றவர். அலுவலர்களிடையே அவ்வப்போது ஏற்படும் கருத்து முரண்பாடுகளைக் களைந்து எந்நேரமும் எல்லா அலுவலர்களும் சந்தோசமாக இருப்பதனைக் கண்டு சந்தோசப்படும் ஒரு நல்ல பிறவி. அலுவலகத்தில் நடாத்தப்படும் அனைத்து விழாக்களிலும் தானே முன்னின்று உழைத்ததோடு மற்றவர்களையும் முன்னிற்க வைத்தவர்.
இவரது இனிமையான இன்முகமும் சிலேடையான பேச்சுக் களும் இன்றும் எமது மனக் கணி களில் நிழலாடிக்கொண்டு தான் இருக்கின்றது. தான் எடுத்த பொறுப்பை முடிக்கும் வரை ஒயமாட்டார். மிகவும் இளமையான துடிதுடிப்பான இவரது செயல்திறன் மற்றவர்களிற்கு உந்துசக்தியாக மிளிர்ந்தது. அலுவலக வேலைகளைத் தனது சொந்த வேலைபோலச்செய்யும் இவரது மனநிலை கண்டு நான் ஏனைய அலுவலர்களுடன் பல நாட்கள் உரையாடியும் உள்ளேன். அலுவலகத்தினுள் நுழையும் போது காண்பவர்களுக்கெல்லாம் இவர் சொல்லும் காலை வணக்கம் இவர் அலுவலகத்திற்கு வந்து விட்டார் என்பதைப் பறைசாற்றும் அலுவலகத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை எந்தவிதமான பேதமுமின்றி பழகும் உத்தமகுணம் படைத்தவர். இவர் நீண்டகாலம் எமது
லன்பரிச்சங்கக்கில் செயலாளராகப் ப
毅 J
வி வகிச் ಘೇಜಿಜಿಜಿಜಿಜಿಜಿಜಛಿಣಿ&&&

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 சகஉத்தியோகத்தரின் நலன்களைய்ெலாம் ஒடியாடிக் கவனித் தும் வந்துள்ளார் . தன் னிலும் வயது குறைந்தவர்களைக்கூட அண்ணை என்றுதான் அன்போடு அழைப்பார். இதனாலோ என்னவோ இராதாகிருஷ்ணன் எடுக்கும் முடிவையே சகலரும் ஏற்றுக்கொள்வதைப் பலதடவை நான் கண்டிருக்கிறேன்.
எமக்குப்பல இக்கட்டான சூழ்நிலைகள், சிக்கல்கள் ஏற்பட்டபோதெல்லாம் இவற்றை உடைத்தெறிவதற்கு ஒன்றல்ல பல ஆலோசனைகளை வழங்கி எம்மை வழிநடாத்தி தனது திறமையை வெளிக்காட்டி நின்றமையை நாம் ஒருபோதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இறுதிக்காலத்திலும் தனது முழுத்திறமையையும் பயன்படுததி உழைத்துள்ள இவரது ஆன்மா நிச்சயம் இறைவனடி சேர்ந்திருக்கும் என்று மனதார நம்புகின்றேன்.
ரி.வி.கிருஷ்ணசாமி முனினாள் Uராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர்,
υπόυ υπ60οτώδ.
令令令令令令令令令令令令[15]令令令令令令令令令令令令

Page 12
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
'தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்”
என்ற பொய்யாமொழிப் புலவரின் பொன்மொழிக்கு அணிகலனாக அமைந்த வாழ்வில் அமரராகி விட்ட இராதாகிருஷ்ணன் இன்னும் எம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். கள்ளமில்லா வெள்ளை மனம் கொண்ட இராதா எம்முடன் பழகிய நாட்கள் எம்மால் மறக்கமுடியாத நாட்களே. இன்முகத்துடன் புன்சிரிப்புடன் இங்கிதமாக அவர் உரையாடும் போது தொடர்ந்து அவருடன் கதைத்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும். எமது அலுவலகத்தில் முன் மொழிப் புலமையும் கொண் டவராக இராதா இருந்தபடியால் எமது அலுவலகப்பணிகளில் முக்கிய கதாபாத்திரமாக திகழ்ந்தவர். இவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அவர் அதனை திறம்படி துள்ளுநடையுடன் ஆற்றி முடிக்கும் செயல்வீரர். எமது அலுவலகத்தில் உள்ள சகல உத்தியோகத்தர்களுக்கும் ஓர் நண்பனாய் ஓடி ஓடி உதவி புரிந்து வந்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத்தினரின அனுசரணையில் மகா சிவராத்திரி அன்று திருக்கேதீச்சர ஆலயத்தில் நடைபெறும் அன்னதானப் பணியில் தன்னை பூரணமாக அர்ப்பணித்து செயலாற்றி வந்துள்ளார். எமது வடமராட்சி மண்ணைச்சேர்ந்தவர் என்ற படியால் அவரது இல்லத்துக்கு அடிக்கடி நான் சென்றதுண்டு. இவ்வேளைகளில் எல்லாம் மனைவி பிள்ளைகள் எல்லோருடனும் மிகவும் அன்னியோன்னியமாக உரையாடி தனது சிலேடையான மொழி மூலம் சிரித்து மகிழ்வடைகின்றமை இன்றும் பசுமையாக எனது மனக்கண்முன் நிற்கின்றது.
திரு.இராதா அவர்கள் எல்லோரிடமும் மிகவும் அன்பாக பழகும் இயல்பினர் . ஆதலினால் இவர் கடமையாற்றிய இடங்களில் எல்லாம் நிறைய நண்பர்களை தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தவர். இவர்களுக்கெல்லாம்
令令令令令令令令令令令令16]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை நல்லதொரு மனிதனை இந்த மண் இடைவழியில் இழந்து விட்டது என்றே கருதுகின்றேன்.
“இன்துயில் போல் சாக்காடும் இனிதுயின்றெழுந்த பின்
பிறப்பும் என்பது இயற்கையன்றோ”
இந்நிலையில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்து அமைகின்றேன்.
ós. GMTnT6ODésa ULUMT Uராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர், աՈgծմՍՈ600Tփ.
令令令令令令令令令令令令[171令令令令令令令令令令令令

Page 13
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 49 ażał,45 zawZbał 4zZf 43łapazóźró7
இWதரகரஷனன் ......
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”
jge LD U fi இ.இராதா கருஷ னன் என்றும் எம்நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தூயமனிதன் எடுப்பான தோற்றம், நேரான சிந்தை, எவருக்கும் உதவி செய்யும் கருணை உள்ளம், கடமைகளை முன்வந்து பொறுப்பேற்று முனைப்புடன் செய்யும் சமூக நோக்குள்ளும் இவைகளை உடைய ஒரு உன்னத புருஷனை எமது கோவிற்கடவை வாழ் மக்கள் இழந்து தவிக்கின்றது.
கோவிற்கடவை ஆலய திருப்பணிச்சபையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட போது அமரர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு முன்னால் பல கடமைகள் விரிந்து கிடந்தன. கட்டடக்கலையின் நுட்பங்களை முறையே கற்றுத்தேர்ந்து வைத்திருந்த அவர் தனது வேளைப்பளுவின் மத்தியிலும் ஆலயத்திருப்பணிக்காக அயராது பாடுபட்டார் உழைத்தார்.
நிர்வாகத்தினர் அனைவருடனும் ஒத்துழைத்து இரவு பகல் பாராது ஒடித்திரிந்து பலருடனும் தொடர்பு கொண்டு ஆலயத்திருப்பணி வேலைகளுக்காகப் பாடுபட்டார். நேரங்கிடைக்கும் போதெல்லாம் திருப்பணி வேலைகளை நேரிற் சென்று பார்த்து திருத்தங்கூறி சிறப்பாக ஒத்துழைத்தார்.
அழகுற அமைத்திருக்கும் ஆலய முன்மண்டபம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் ஏனைய வாசலமைப்புக்கள் என்று ஆலயத்திருப்பணிச்சபையின் திட்டங்களின் முதுகென்பு அவர்தான். வெளிநாடுகளில் உள்ளவர்களோடு தனது சொந்தச்செலவில் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு நிதித் தேவைகளை நிறைவு செய்திருக்கின்றார். இவ்வாறு அவர் தலைவராயிருந்து
令令令令令令令令令令令令[181令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 முன்னெடுத்த திருப்பணிகள் முழுமையாக நிறைவு பெற முன்னர் காலனியில் கையில் காலத்தின் வலையில் அவர் கொல்லப்பட்டார்.
ஆலயத்திருப்பணிகளுக்கெல்லாம் அப்பால் எமது ஊர்மக்களின் இன்பதுன்ப நிகழ்வுகளில் தவறாது கலந்து கொண்டு பங்காற்றுவர். சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றுக் கொண்ட அவள் எல்லோருடனும் நட்பானவர்.அதிர்ந்த பேசாத இனிய உள்ளமும் கடின உழைப்பும் கொண்ட ஒருவரை எமது சமூகம் இழந்து தவிக்கிறது.
சமூகத் தொண்டு மட்டுமன்றி குடும்பப்பொறுப்பிலும், கடமையிலுங் கூட அவள் கண்ணாக இருந்தார். மனைவி பிள்ளைகளுடன் கூட நட்பாகவே இருந்து வாழ்ந்த அவரின் குடும்பம் சந்தோசமாகவே இருந்தது என்பதே அவரின் வாழ்வு ஆதாரம் அவருடைய பிள்ளைகளும் கல்வியால் சேவையால் உயர்ந்தே இருக்கிறார்கள். இந்நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கும் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாது ஆகும்.
வஞ்சகமாக கொல்லப்பட்ட அவரின் எண்ணங்கள் கற்பனைகள் ஏக்கங்கள் நிறைவேற எல்லாம் வல்ல கோவிற்கடமை விநாயகப்பெருமான் அருள் புரியவேண்டும். குடும்பத்தலைவனை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலைக்கொடுக்கவேண்டும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள்புரிவாராக. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
Usfu stepé0TéF6DU, திருப்பணிச்சபை, கோவிற்கடவை, சித்தி விநாயகர் ஆலயம்.
令令令令令令令令令令令令[191令令令令令令令令令令令令

Page 14
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் நமக்களித்த சிறந்த நூல்களே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், பந்தனந்தாதி முதலியனவாகும். ஒளவையார் கடைச்சங்க காலத்தவர். ஒளவையாரைப்பற்றி பல கதைகள் வழங்குகின்றன.
ஒளவையைப்பற்றி அறியாத தமிழரே இருக்கமாட்டார். அதற்குக் காரணம் கொன்றைவேந்தன் போன்ற அவரது நீதி நூல்களே ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே இவற்றை மனதில் இருத்திக்கொள்ளல் அவர்களின் வாழ்விற்கு பெரும்பயனை நல்குமென்பது சான்றோர் முடிவு.
ஆத்திசூடி
காப்பு
ஆத்திசூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே திருவாத்திப் பூமாலையை, தரிப்பவராகிய சிவபெருமான், விரும்பிய பிள்ளையாகிய விநாயகக்கடவுளை துதித்து வணங்குவோம்.
அறஞ்செய விரும்பு
தருமத்தை செய்வதற்கு ஆசைகொள்ளு. ஆறவது சினம்
தணிய வேண்டுவது கோபமே ஆம். 令令令令令令令令令令令令[20]令令令令令令令令令令令令
 

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
இயல்வது கரவேல்
உணர்னாலி கொடுக்கக் கூடிய பொருளை இரப்பவர்களுக்கு ஒளியாதே
ஈவது விலக்கேல்
தருமவழியில் ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதை நீ தடுக்காதே.
உடையது விளம்பேல்
உன்னிடம் உள்ள பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.
ஊக்கமத கைவிடேல்
செய்யும் தொழில் ஊக்கத்தைக் கைவிடாதே.
எண்ணெழுத் திகழேல்
எண்ணையும் எழுத்தையும் இகழாமல் கற்றுக்கொள்
ஏற்ப திகழ்ச்சி
பிறரிடம் எதையும் இரப்பது இழிவான செயலாகும்.
ஐய மிட்டுணர்
இரப்பவர்களுக்கு கொடுத்து நீயும் சாப்பிடு.
ஒப்புர வொழுகு
உலகத்தின் போக்கை அறிந்து நீ அந்த வழியில்
ABL .
ஒதவ தொழியேல்
அறிவு நூல்களைப் படிப்பதை கைவிடாதே.
ஒளவியம் பேசேல்
பொறாமை கொண்டு நீ பேசாதே.
அஃகஞ் சுருக்கேல்
நெல்முதலிய தானியங்களை அளவில் குறைத்து விற்காதே.
கண்டொன்று சொல்லேல்
கணினால் கண்டதற்கு மாறாக நீ காணாத ஒன்றைப்பற்றிப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
令令令令令令令令令令令令[211令令令令令令令令令令令令

Page 15
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
ங்ப்போல் வளை
ந* பரிரயோசனமுள்ளவனாயரிருந்து உன் இனத்தைத்தழுவு.
சனி நீராடு
சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீரில்
(Մ2(1Ք35.
ஞயமபடவுரை
இனிமை உண்டாக நீ பேசு.
இடம்மட வீடெடேல்
விசாலமாக வீட்டைக் கட்டாதே.
இணக்கமறிந் திணங்கு
நல்ல குணமும் நல்ல செயல்களுமுறை.
தந்தை தாய்பேண்
பிதாவையும் மாதாவையும் அன்புடன் உபசரித்துக் காப்பாற்று.
நன்றி மறவேல்
உனக்கு உதவி செய்தவர்களை உன் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கக்கூடாது.
பருவத்தே பயிர்செய்
விளையும் பருவ காலத்திலே பயிர்களைச் செய்.
மன்றபறித் தண்ணேல்
நீதிமன்றத்திலிருந்து கொண்டு நேர்மையாகச் செயற்படாமல் குடிமக்களின் செல்வத்தைக்கவர்ந்து வாழ்க்கை நடத்தாதே.
இயம்பலாதன செயேல்
தருமநூலுக்குப் பொருத்தமல்லாதவைகளை, நீ செய்யாதே.
அரவ மாட்டேல்
பாம்புகளை நீ பிடித்து ஆட்டாதே.
令令令令令令令令令令令令[221令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
இலவம்பஞ்சிற் றயில்
இலவம் பஞ்சு மெத்தையில் நீ நித்திரை கொள் வஞ்சகம் பேசேல்
கபட வார்த்தைகளை நீ பேசாதே. அழகலாதன செயேல்
இழிவுள்ள செயல்களை செய்யாதே. இளமையிற் கல்
இளமைப்பராயத்தில் கற்றுக்கொள். அறனை மறவேல்
தருமத்தை மறவேல். அனந்தலாடேல்
நித்திரையை நீ அதிகமாகச் செய்யாதே.
கடிவத மற
சினந்து பேசுவதை மற. காப்பத விரதம்
உயிர்களுக்குத் திங்கு செய்யாமல் அவைகளைக் காப்பாற்றுவதே விரதம். கிழமைப் படவாழ்
உன்னிடத்தில் உள்ள பொருட்கள் பிறருக்கும் உரிமைப்படும்படி வாழ். கீழ்மை யகற்று
கீழ்த்தனமான செயல்களை நீக்கிவிட வேண்டும். குணமது கைவிடேல்
நல்ல குணத்தை கைவிட்டு விடாதே. கூடிப் பிரியேல்
நல்ல நண்பருடன் பல நாள் பழகிய பின் சிறுகுறைகாரணமாக அவரைப்பிரிதல் கூடாது. 令令令令令令令令令令令令p3]令令令令令令令令令令令令

Page 16
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
கெடுப்பதொழி
பழிவாங்கும் எண்ணத்தை ஒழித்துவிடவேண்டும்.
கேள்வி முயல்
படித்த பெரியார்கள் சொல்லும் நூல் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
கைவினை கரவேல்
உனக்குத் தெரிந்த ஒரு கைத்தொழிலைச் தெரியாது என்று மற்றவர்களுக்கு ஒழியாதே.
கொள்ளை விரும்பேல்
கொள்ளையிடுவதற்கு நீ ஆசைப்படாதே.
கோதாட் டொழி
குற்றமுள்ள விளையாட்டை நீக்கு.
சக்கர நெறிநில்
மன்னனின் ஆணைக்கு மக்கள் அடங்க? வாழவேண்டும்.
சான்றோ ரினத்திரு
அறிவு நிறைந்தவர்களுடைய கூட்டத்திலே எந்தநாளும் சேர்ந்து இரு.
சித்திரம் பேசேல்
பொய்யான வார்த்தைகளைப் பேசாதே.
சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமாகிய செயலை மறந்து விடாதே.
சுளிக்கச் சொல்லேல்
கோபிக்கும்படியாக பேசாதே.
சூத விரும்பேல்
சூதாடலை விரும்பாதே.
செய்வன திருந்தச்செய்
நீ செய்யும் எந்தக்காரியத்தையும் திருத்தமாகச் Gefuj6/Tu JITab.
சேரிட மறிந்துசேர்.
சேரத்தகுந்த நல்ல இடத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அடைவாயாக.
令令令令令令令令令令令令[241令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
சையெனத் திரியேல்
மற்றவர்கள் உன்னை வெறுக்கும்படி வாழக்கூடாது. சொற்சோர்வு படேல்
சொல்ல வேண்டுவதை மறவாமற் சொல். சோம்பித்திரியேல்
சோம்பி திரியாதே. சோம்பேறியாகத் திரியாதே. தக்கோ னெனத்திரி
பெரியவர்கள் உன்னை உயர்ந்தவன் என்று புகழ்ந்து பாராட்டும்படி வாழு. தானமத விரும்பு
தானம் செய்தலை நீ விரும்பு திருமாலுக் கடிமை செய்
விஷ்ணுவுக்குத் தொண்டு செய். தீவினை யகற்று
பாவச் செயல்களை நீக்கு. தண்பத்திற் கிடங்கொடேல்
மனவருத்தத்திற்குச் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது. தாக்கி வினைசெய்
சீர்தூக்கி ஆராய்ந்த பிறகே ஒரு கருமத்தைச் செய். தெய்வமிகழேல்
கடவுளை இகழ்ந்து பேசாதே தேசத்தோடொத்த வாழ்
நாட்டு மக்களோடு ஒத்துப்போய் வழிநடப்பதுதான் நல்லது. தையல்சொற் கேளேல்
மனைவியுடைய சொல்லை நீ கேட்டு நடவாதே. தொண்மை மறவேல்
பழைய மரபுகளைப் புறக்கணித்தல் கூடாது. தோற்பன தொடரேல்
தோல்வியடையக்கூடிய செயல்களை ஆரம்பிக்காதே.
令令令令令令令令令令令令[25]令令令令令令令令令令令令

Page 17
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
நன்மை கடைப்பிடி
நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்.
நாடொப் பன செய்
நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவற்றை செய்க.
நிலையிற் பிரியேல்
நீ இருக்கின்ற உயர்ந்த நிலையிலிருந்து ஒரு போதும் நீங்காதே.
நீர் விளையாடேல்
ஆழம் உள்ள நீரிலே விளையாடாதே
நணர்மை நகரேல்
நோயைத்தரும் சிற்றுண்டிகளைக் கண்டபோதெல்லாம் சாப்பிடாதே.
நால்பல கல்
நூல்கள் பலவற்றையும் நீ கற்றுக்கொள்.
நெற்பயிர் விளை
நெல்லுப்பயிரை விளைவி
நேர்பட வொழுகு
நீ ஒழுக்கம் தவறாமல் செவ்வையான வழியில் ABL .
நைவினை நணுகேல்
கொடிய காரியங்களைச் செய்ய நினைக்கக்கூடாது.
நொய்யவுரையேல்
அற்ப வார்த்தைகளை நீ ஒருபோதும் சொல்லாதே.
நோய்க்கிடங்கொடேல்
உன் உடலில் நோய்களை உருவாவதற்கு நீ இடமளிக்காதே.
பழிப்பன பகரேல்
பழிக்கப்படும் இழிசொற்களை நீ பேசாதே.
பாம்போடு பழகேல்
நாம் நன்மை செய்தாலும் தீமையே செய்யும் பாம்பு போன்ற கொடியவர் கர்ை சிலரி உலகபிலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களோடு நீ" பழகிக்கூடாது.
令令令令令令令令令令令令[26]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
பிழைபடச் சொல்லேல்
நீ குற்றமின்றிப் பேசாதே.
பீடு பெறநில்
ந” பெருமையடைவதற்கான நல்ல வழியில் நடந்துசெல்.
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
புகழ் பெற்றவர்கள் காட்டிய நல வழியில் வாழ்வாயாக.
பூமி திருத்தியுணர்
நிலத்தை திருத்தி உண்ணு.
பெரியாரைத் தணைக்கொள்
அறிவிரும் வயதிலும் முதிர்ந்த பெரியவர்களின் துணையை அறிவுரைகளை விரும்பிப்பெறுவாயாக.
பேதமையகற்று
அஞ்ஞானத்தை அகற்று.
பையலோடிணங்கேல்
சிறுபிள்ளைத்தனம் உடையவர்களோடு அறிவற்ற சிறியவரோடு சேரவேண்டாம்.
பொருடனைப் போற்றிவாழ்
திரவியத்தை போற்றி (மேன்மேலும் உயரும்படி காத்து) வாழ்.
போர்த்தொழில் புரியேல்
மற்றவர்களோடு சண்டை சச்சரவுகளைச் செய்யாதே.
மனந்தடு மாறேல்
உன் சிந்தனையும் செயலும் உறுதி படைத்ததாகத் திகழ வேண்டும்.
மாற்றானுக் கிடங்கொடேல்
உங்கள் பகைவனுக்கு இடம் தராதீர்கள்
மிகைப்படச் சொல்லேல்
எதைப்பற்றிப் பேசினாலும் அளவோடு பேசுங்கள். மிகுதியாய்ப் பேசாதீர்கள்.
மீதாணர் விரும்பேல்
உணவையும் அளவோடு உண்ண வேண்டும்.
令令令令令令令令令令令令|271令令令令令令令令令令令●

Page 18
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
முனைமுகத்து நில்லேல்
வீண் சண்டையிடுவோரை வேடிக்கை பார்க்க அந்த இடத்திற்குப் போகாதே.
மூர்க்கரோ டிணங்கேல்
அறிவில்லாதவர்களுடனே, நீ சிநேகம் பண்ணாதே.
மெல்லினல்லா டோள் சேர்
பிறர் மனையை, பரத்தையர்களை ஒரு போதும் விரும்பாதே.
மேன்மக்கள் சொற்கேள்
பெரியோரின் அறிவுரைகளைக் கேட்டுநட.
மைவிழியார் மனையகல்
மயக்கும் விலைமாதர் வீட்டிற்குச்செல்லாதே.
மொழிவ தறமொழி
கூறும் விடயத்தை ஐயத்துக்கு இடமில்லாமல் திருத்தமாகக் கூறவேண்டும்.
மோகத்தை முனி
ஆசையை வெறுத்து ஒதுக்கு.
வல்லமை பேசேல்
உங்கள் திறமையைப்பற்றி நீங்களே புகழ்ந்து பேசாதீர்கள்.
வாதமுற் கூறேல்
பெரியவர்கள் விவாதிக்கும் போது சிறுவர்களான நீங்கள் குறுக்கே பேசக்கூடாது.
வித்தை விரும்பு
கல்விச்செல்வத்தையே நீ விரும்பித் தேடிக்கொள்
வீடு பெற நில்
மோட்சத்தை அடையும் படி அதற்குரிய ஞான வழியில் வாழ்.
உத்தம னாயிரு
உத்தமனாய் நற்குண நற்செய்கையினாலே மேலானவனாகி வாழ்ந்திடு
令令令令令令令令令令令令[281令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
ஊருடன் கூடிவாழ்
ஊரவர்களுடன் கூடி வாழ். வெட்டெனப் பேசேல்
ஒருவரோடும் கடினமாகப் பேசாதே. வேண்டி வினைசெயேல்
பயனை எதிர்பார்த்துப் பணிபுரியாதே. வைகறைத் தயிலெழு
விடியற்காலத்திலே நித்திரை விட்டு எழுந்திரு. ஒன்னாரைத் தேறேல்
எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக்கூடாது. ஒரஞ் சொல்லேல்
நடுநிலை நில்
கொண்றை வேந்தன்
கடவுள் வாழ்த்து கொண்றைவேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே கொன்றை மாலை அணிந்த சிவபெருமானின் தருக் குமாரரான விநாயகக் கடவுளின் இரு பாதங்களையும் வணங்குவோம்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
தாயும், தந்தையும் முன்னதாக அறியப்பட்ட தெய்வங்களாவர்.
ஆலயம்தொழுவது சாலவும் நன்று
கோயிலுக்குச்சென்று கடவுளை வணங்குவது மிகவும் நல்லது.
இல்லறமல்லது நல்லறமன்ற,
மனையாளோடு நடத்தும் இல்லறமே நல்லது.
ஈயார்தேட்டை தியார் கொள்வர்.
வறியவர்கட்கு கொடாதவர் செல்வத்தை, கள்வர் போன்ற தியோர் பறித்துச்சென்று விடுவர்.
令令令令令令令令令令令令[29]令令令令令令令令令令令令

Page 19
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
உணர்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
மிதமாக உண்பது பெண்களுக்கு அழகு தரும் ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
ஒருவன் தன் ஊர் மக்களைப் பகைத்துக்கொண்டால் குடும்பத்தோடு அழிந்துபோவான். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
கணிதமும் இலக்கணமும் மனிதர்க்கு இரு கண்கள் போன்றவை. ஏவா மக்கள் மூவா மருந்து
தாய், தந்தையர் கட்டளையிடுமுன், குறிப்பறிந்து செய்கிற பிள்ளைகள் அவர்கட்குத் தேவாமிர்தம் போன்றவர். ஐயம் டிகினும் செய்வன செய்.
பிச்சை எடுத்து வாழ்ந்தாலும், செய்யவேண்டிய நல்ல காரியங்களைச் செய். ஒருவனைப்பற்றி ஓரகத்திரு.
நற் குணமுடைய ஒருவரைத் துணையாகப் பற்றிக்கொண்டு வாழ்ந்திரு. ஒதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
அந்தணர்க்கு, வேதம் ஓதுவதைவிட ஒழுக்கமே சிறந்ததாகும். ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
ஒருவன் பொறாமை பேசினால், அதுவே அவனுடைய செல்வத்திற்கு அழிவைத்தரும். அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
தானியத்தையும் திரவியத்தையும் விரைந்து தேடிக்கொள். கற்பெனப்படுவது சொல் திறம்பாவை.
மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது, கணவர் வார்த்தைக்கு மிறி நடவாமை ஆகும். காவல் தானே பாவையர்க் கழகு
கற்வினின்று வழுவாமல் தம்மைக் காத்துக் கொள்வதுதான் பெண்களுக்கு அழகாகும்.
令令令令令令令令令令令令[30]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
கிட்ட தாயின் வெட்டென மற.
விரும்பிய பொருள் கிடைக்காவிட்டால் அப்பொருளை LPasig5/66. கீழோ ராயினுந் தாழவுரை
உனக்கு கீழ்ப்பட்டவரிடமும் மரியாதையுடன் பேசு. குற்றம் பார்க்கில் சுற்றமில்லை
குற்றமே இல்லாதவர் ஒருவருமில்லை என்பதாம். கூடர் அம்பாயினும் வீரியம் பேசேல்.
உன் கையில் கூரிய ஆயுதம் இருந்தாலும், உன் விரத்தை வியந்து பெருமை பேசாதே. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
ஒருவர் தீமை செய்தால், அவர் நட்பை விட்டு விடுவதுதான் நல்ல காரியமாகும். கேட்டில் உரதி கூட்டும் உடைமை.
பொருளை இழந்த காலத்தும் மனந்தளராது உறுதியுடனிரு. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி
கையரிலுள்ள பொருளை விட, கலவரியே உண்மைப்பயனைத்தரும். கொற்றவன் அறிதல் உற்றிடத்ததுதவி
துன்பம் நேர்ந்த போது உடன் மக்களுக்கு உதவுவது அரசின் கடமை ஆகும். கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
கோள் கேட்கிறவனிடம், சொன்ன கோள் வார்த்தை காற்றுடன் கலந்த நெருப்பு போல விரைவில் பரவும். கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
பிறர் மரீது பழி சொல்லிக் கொணர்டிருப்பவன் எல்லோருக்கும் தானே பகையாவான். சந்ததிக்கழகு வந்தி செய்யாமை.
குலத்திற்கு அழகு மனைவியோடு கூடி வாழ்ந்து மக்கட்பேறு அடைதலேயாகும்.
令令令令令令令令令令令令[31]令令令令令令令令令令令令

Page 20
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
சான்றோர் என்கை ஈன்றோட் கழகு.
தான் பெற்ற மக்களைச் சான்றோர் எனப்பிறர் சொல்லக்கேட்பது பெற்ற தாய்க்கு மகிழ்ச்சியாகும்.
சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு.
சிவபெருமானை வழிபடுவது தவத்திற்கு அழகாகும்.
சீரைத் தேடின் ஏரைத் தேடு.
சீர் பெற்று வாழ விரும்பினால், பயிர்த்தொழிலையே மேற்கொள்ளவேண்டும்.
சுற்றத்திற்கு கழகு சூழ விருத்தல்.
சுற்றத்தார்க்கு அழகாவது நன்மையிலும், தீமையிலும் நீங்காது சூழ்ந்திருந்து வாழ்வதே ஆகும்.
செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
ஒருவன் தவத்தை மறந்தால் அவரை அறியாமை அடிமை கொள்ளும்.
சேமம் டிகினும் யாமத்தறங்கு.
காவற் கூட்டத்த7ல 6L //Tuj Ꮬ fr6216uf வேலையிலிருந்தாலும் உறங்கவேண்டும் ஒரு ச7மம7வது.
சைஒத்த இருந்தால் ஐய மிட்டுண்.
பொருள் ஒத்திருந்தால் பிச்சையிட்டு உண்டு வாழ். பொருளையுடையவர் அறம், பொருள், ஆகிய மற்றவற்றையும் பெறுவர்.
சோம்ப ரெண்பவர் தேம்பித் திரிவர்.
சோம்பலுடையவர் வறுமையால் வருந்தி அலைவர்.
தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.
தந்தை சொல்லுக்கு மேம்பட்டதான அறிவுரை இல்லை.
தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை.
தாயைவிடச் சிறந்த கோயில் இல்லை.
திரைகடல் ஓடியந் திரவியம் தேடு.
கடல் கடந்து வெளிநாடு சென்றும் பொருளைத் தேடு
தீராக் கோபம் போராய் முடியும்.
அடங்காத கோபம் சண்டையாகவே முடியும்.
今令令令令令令令令令令令[321令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
தடியாப் பெண்டிம் மடியில் நெருப்பு.
கணவனுக்குத் துன்பம் வந்தபோது மனம் பதைக்காத மகளிர் மடியிலே கட்டிய நெருப்பை ஒப்பர். தாற்றும் பெண்டிம் கூடற்றெனத் தகும்.
அவதூறு சொல்லும் பெண்டிர் இயமனுக்கு ஒப்பிடத்தக்கவர். தெய்வஞ் சீறிற் கைதவம் மாளும்.
தெய்வத்தின் சினத்துக்கு ஆளானால் அவனுக்கு கைகூடிய தவமும் அழிந்துவிடும். தேடாதறிக்கின் பாடாய் முடியும்.
பொருளைச் சம்பாதரியாமல் செலவழித்துக் கொண்டிருந்தால் பின்பு துன்பமாக முடியும். தையும் மாசியம் வையகத் தறங்கு.
தை, மாசி மாதங்களாகிய பனிக்காலத்தில் பணி வருந்தந்தராத வைக்கோல் வேய்ந்த கூரை வீட்டில் நித்திரை செய். தெழுதாணி சுவையின் உழுதாணி இனிது
பிறருக்குச் சேவகஞ் செய்து உண்னும் உணவை விட உழுது பய7ர் செய்து உணர்னும் இன்பந்தருவதாகும். தோழனோடு ஏழைமை பேசேல்.
உன் வறுமையைப் பற்றி உன் நண்பனிடத்திலும் பேசாதே. நல்லிணக்கம் அல்லத அல்லற் படுத்தும்.
நல்சேர்க்கையல்லாத தீய சகவாசம் துன்பத்தையே தரும் நாடெங்கும் வாழக் கேடொன்றவில்லை.
நாடு முழுவதும் செழித்திருந்தால், யாருக்கும் ஒரு குறையுமில்லை. நிற்கக் கற்றல் சொல் தறம்பாமை.
நிலைபெறக் கற்றலாவது, சொல்லும் சொல் தவறாமையேயாகும்.
令令令令令令令令令令令令[331令令令令令令令令令令令令

Page 21
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
நிர்வளமுள்ள ஊரில்குடியிரு.
நண்ணிய கருமமும் எண்ணித்துணி
சிறு காரியத்தையும் நன்கு ஆலோசித்த பின்னர் செய்யத்துணி
நாண்முறை தெரிந்து சீலத்தொழுகு.
நீதி நூலில் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து அதன்படி நல்லொழுக்க வழியில் நட
நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகமில்லை.
தன் மனத்திற்குத் தெரியாத ஒரு வஞ்சகமும் கிடையாது.
நேரா நோண்பு சீராகாது.
மனம் ஒப்பச் செய்யாத தவமானது செவ்வையாக இருக்காது.
நேரா நோன்புநொய்ய வுரையேல்
கேட்பவர் நோகும்படியான அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
நொய்யவர் என்பவர் செய்யவ ராவர்.
உருவிற் சிறியவரானாலும் அவர் செய்கின்ற காரியத்தால் யாவரும் விரும்புந்தன்மையுடையவர் ஆவர்.
நோண்பு எண்மதவே கொண்ற தின்னாமை
விரதமர் என்று சொல்லப்படுவது ஒரு உயிரைக்கொன்று அதன் ஊனை எண்ணாமையாம்
மண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்.
ஒருவன் செய்த பயிரின் விளைவின் மூலம் அவன் செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும்.
பரலோடாயினும் காலம் அறிந்துண்.
மிகச் சிறந்த உணவாயினும், உண்ணத்தகும் காலமறிந்து உண்ணவேண்டும்.
@令令令令令令令令令令令B4]令令令令令令令令令@@@

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
பிறண்மனை புகாமை அறமெனத் தகும்.
பிறன் மனைவியை விரும்பாமையே சிறந்த தருமமாகும். பீரம் பேணில் பாரந் தாங்கும்.
தாய்ப்பாலைக் குறைவற உண்டு வளர்ந்தவன் பெரும்பாரத்தைச் சுமக்கக்கூடியவன் ஆவான். புலையுங் கொலையும் களவுந் தவிர்.
புலால் உண்ணல், பிற உயிரைக் கொல்லல் பிறர் பொருளைத் திருடுதல் ஆகியவற்றைச் செய்யாதே. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம்.
கழி மக்களிடதத?ல சரிறந்த ஒழுக்கம் காணப்படுவதில்லை. பெற்றோர்க்கில்லை சுற்றமுஞ் சினமும்.
மெய்ஞ்ஞானம் பெற்றோர்க்கு உறவுமில்லை. கோபமுமில்லை. பேதைமையென்பத மாதர்க்கணிகலம்.
அறிந்தும் அறியாதவர் போல் அடங்கியிருக்கும் குணம், பெண்களுக்கு ஆபரணம் போன்று அழகு செய்வதாகும். பையச்சென்றால் வையந்தாங்கும்.
ஒருவன் நிதானமான வழியிற் சென்றால் உலகத்தார் அவனைப் போற்றுவர். பொல்லாங் கெண்பவை எல்லாந் தவிர்.
தீங்குகள் என்று சொல்லப்பட்ட எல்லாக்காரியங் களையும் செய்யாது விலக்கிவிடு போனக மென்பது தானுழந் தண்டல்.
உணவு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது தான் வருந்திச் சம்ாபாதித்து உண்பதாகும். மருந்தே யாயினும் விருந்தோடுண்.
கிடைத்தற்கரிய தேவசமிர்தமாயினும் வந்த விருந்தினரோடு உண். மாசி அல்லது காரியமில்லை.
மழையில்லாமல் உலகத்தில் எக்காரியமுத் நடப்பதில்லை.
令令令令令令令令令令令令[35]令令令令令令令令令令令令

Page 22
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை
முன்னே மின்னுவதெல்லாம், பின்னே மழை பெய்தற்கு அடையாளம் மீகாம னில்லா மரக்கலம் ஓடாதது.
மாலுமியில்லாத கப்பல் ஓடாது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
ஒருவன் முற்பகலிலே பிறர் ஒருவருக்குத் திங்கு செய்தால் பிற்பகலிலே அத்தங்கு அவனுக்கே உண்டாகும். மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்.
பெரியோர்கள் சொன்ன வார்த்தையானது அமுதம் போன்று இன்பம் பயக்கும். மெத்தையிற் படுத்தல் நித்திரைக்கு அழகு.
மிருதுவான பஞ்சணையிற் படுத்தல் நித்திரைக்கு உகந்ததாகும். மேழிச்செல்வம் கோழை படாதது.
உழுது பயிர் செல்வதால் வரும் செல்வம் குறைவை
அடையாது. மைவிழியார் தம் மனையகன்று ஒழுகு.
மைதிட்டிய விழிகளையுடைய பரத்தையரது மனையை அணுகாது விலகிச்செல் மொழிவத மறக்கின் அழிவது கருமம்.
ஒருவன் பெரியோர் சொல்லை மற் நடந்தால், அவன் செய்யும் காரியம் பயன்படாமல் கெடும். மோனமென்பது ஞானவரம்பு.
மெளனம் என்பது ஞானத்திற்கு எல்லையாம். வளவன் ஆயினம் அளவறிந்த அழித்ததுணர்
சோழனைப்போன்று அளவற்ற செல்வத்தையுடைய வரானாலும் வரவுக்குத் தக்க செலவு செய்து வாழவேண்டும்.
令令令令令令令令令令令令[36j令令令令令令令令令令令令

ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ>ぐ〉ぐ〉ぐ>ぐ>ぐ〉
வானஞ் சுருங்கின் தானஞ் சுரக்கும்.
மழை பெய்வது குறைந்தால் தானம் செய்வது குறையும். வீரன் கேண்மை கூரம் பாகும்.
விரனுடைய நட்பு இருந்தால், அது ஒருவனுக்கு கூரிய அம்பு போல் பகையை வெல்ல உதவும். உரவோரென்கை யிரவா திருத்தல்.
வலியவர் என்று சொல்லப்படுவது (சிறுமை வந்தகாலத்தும்) பிறரிடம் இரவாதிருப்பதாம். ஊக்கமுடமை ஆக்கத்திற்கு அழகு.
செய்யுந் தொழிலில் மனச்சோர்வின்றி இருத்தல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவசியமாகும். வெள்ளைக்கில்லை கள்ளச் சிந்தை
களங்கமற்ற மனமுடையவனிடத்தில் வஞ்சக நினைப்பு இருக்காது. வேந்தன் சீறின் ஆந்தணை யில்லை.
அரசன் கோபித்தால் வேறு துணை இல்லை. வைகல் தோறம் தெய்வந் தொழு.
தினமும் கடவுளைத்_தொழுது வாழவேண்டும். ஒத்த விடத்த நித்திரை கொள்.
மேடு பள்ளமில்லாத சமமான இடத்தில் படுத்து நித்திரை செய். ஒதாதர்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
நல்ல நூல்களைக் கற்காதவர்களுக்கு அறிவும் நன்னடத்தையும் இல்லை.
令令令令令令令令令令令令[371令令令令令令令令令令令令

Page 23
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
மூதரை கடவுளர் வர்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.
பயன் கருதாது அறம் செய்க. நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்.
நல்லவர்க்குச் செய்த உதவி நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போற் காணுமே - அல்லாத ஈரமில்லா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்திற்கு நேர்.
இளமையில் வறுமை இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு
மேன்மக்கள் இயல்பு அட்டாலும் பால்சுவையிற் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
令令令令令令令令令令令令[381令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 காலமறிந்து நடத்தல் அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்களாகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயரமரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா
மானம் இழந்து வாழாமை உற்ற இடத்தல் உயிர் வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றுாண் பிளந்திறுவது அல்லால் பெரும்பாரந் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான்
அறிவு, செல்வம், குணம் நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத் தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்தளவே யாகும் குணம்
O d O நல்லார் தொடர்பின் நலம் நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி யிருப்பதுவும் நன்றே
தீயார் தொடர்பின் தீமை
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார் சொற் கேட்பதுவுந் தீதே - தியார் குணங்கள் உரைப்பதுவுந் தீதே அவரோடு இணங்கி இருப்பதுவுந் தீதே
令令令令令令令令令令令令[39]令令令令令令令令令令令令

Page 24
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 நல்லாரால் எல்லோருக்கும் நன்மை நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லா ரொருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
துணை வலிமை வேண்டும். பண்டு முளைப்பது அரிசியே யானாலும் விண்டுஉமி போனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்ற லுடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்ற கருமம் செயல்
உருவமும் குணமும் மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல் சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணிரும் ஆகாது அதனருகே சிற்றுாறல் உண்ணிரு மாகி விடும்.
அறிவற்றவனின் இழிவு கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நன் மரம்
போலியின் புன்மை கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் - தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி.
令令令令令令令令令令令令[40令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 தீயோர்க்கு உதவுதல் தீமை தரும். வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக்கு ஆகார மானாற் போல் - பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம்
அடக்கத்தின் சிறப்பு அடக்கம் உடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா -மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியி ருக்குமாம் கொக்கு
உண்மைச்சுற்றம் அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல் உற்றுமித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறவார் உறவு
தாழ்ந்தாலும் மேன் மக்களே சிறந்தவர்
சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கென்னாகும் - சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும் என்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால்
ஆசையால் பயனில்லை ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால்நாழி - தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம் விதியின் பயனே பயன்
令令令令令令令令令令令令[411令令令令令令令令令令令令

Page 25
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 மருந்தும் உடன்பிறப்பும் உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு
மனையாளில்லாத மனை இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலி கிடந்த தூறாய் விடும்.
ஊழின் வலி எழுதியவாறே காண் இரங்குமட் நெஞ்சே கருதிவாறு ஆமோ கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்திற் செய்த வினை
நல்லார் பொல்லாரது சினம் கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து நீர் கிழிய எய்த வடுப்போல் மாறுமே சீரோழுகு சான்றோர் சினம்
O 0. O G56COTG ԲԼՈ Ibւ -ւվԼՈ நற்றா மரைக்குளத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை உகக்கும் பிணம்
令令令令令令令令令令令令I421令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 கரவுடையார் மறைந்தொழுகுவர் நஞ்சுடமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்
அரசனும் புலவனும் மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் தன் தேசமல்லாமல் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
பல்வகைக் கூற்றங்கள் கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் அல்லாத மாந்தர்கறம் கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்தொழுகாப் பெண்
மனந்தளராமை சந்தன மென்குறடு தான்தோய்ந்த காலத்தும் கந்தம் குறைபடா தாதலால் - தம்தம் தனஞ்சிறிய ராயினும் தார்வேந்தர் கேட்டால் மனஞ்சிறியர் ஆவரோ மற்று
நிலையற்ற வாழ்வு மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை ஆம்போது அவளோடும் ஆகும் அவள்பிரிந்து போம்போது அவளோடு போம்
令令令令令令令令令令令令[431令令令令令令令令令令令令

Page 26
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 அறிவுடையோர் செயல் சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்
மேற்குலத்தார் எவர்? வையகம் காப்பவரேனும் - சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும் பொய், அகலத் தொழில் செய்தே - பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்
தவமும் யோகமும் பக்கத்து இருப்பவர் துன்பந் - தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் - நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி
யோகம் யாகம் ஞானம் ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் போருக்கு நின்றிடும் போதும் - உளம் பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்
பரம்பொருள் இன்பமும் ஒர்கணத் தோற்றம் - இங்கு இளமையும் செல்வமும் ஓர் கணத்தோற்றம் துன்பமும் ஓர்கணத் தோற்றம் - இங்கு தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்
令令令令令令令令令令令令I44]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
6
doll Duib உலகநீதி உலக நீதி புராணத்தை யுரைக்கவே கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு
ஒதாம லொருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ் சொல்லித் திரியவேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே யொருநாளும் பழகவேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டோம்
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம் தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் சினந்தேடி யல்லலையுந் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேரல் வேண்டாம் வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே 令令令令令令令令令令令令I451令令令令令令令令令令令令

Page 27
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம் கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோ டெதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம் மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்லவேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்
தாழ்ந்தவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடிணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிமறித்துத் திரிவாரோடிணங்க வேண்டாம் சேர்ந்தபுக ழாளனொரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே
令令令令令令令令令令令令[46]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
கருதாமற் கருமங்கள் முடிக்கவேண்டாம்
கணக்கழிவை யொருநாளும் பேசவேண்டாம் பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம்
பொதுநிலத்தி லொருநாளும் இருக்க வேண்டாம் இருதார மொருநாளும் தேடவேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம் ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டு துணைபோய்த் திரிய வேண்டாம் வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
மண்ணினின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம்
மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம் கண்ணழிவு செய்துதுயர்காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம் புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம் மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
令令令令令令令令令令令令I471令令令令令令令令令令令令

Page 28
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம் திறம்பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம்
தெய்வத்தை யொருநாளும் மறக்கவேண்டாம் இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏகலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய் தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி
சகலகலை ஒதுவித்த வாத்தியார் கூலி வஞ்சமற நஞ்சறுத்தமருத்துவிச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன்றன் கூலி இன்சொல்லுடன் இவர்குலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ எமன்றானே
கூற்றாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம் தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம் வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம் மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே 令令令令令令令令令令令令I481令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
ஆதரித்துப் பலவகையாற் பொருளுந் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஒதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி காதலித்துக் கற்றோருங் கேட்ட பேருங்
கருத்துடனே நாடோறுங் களிப்பி னோடு போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப்
பூலோக முள்ளளவும் வாழ்வார் தாமே
உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன உடல் மட்டுமே கறுப்பு - அவர் உதிரம் என்றுமே சிவப்பு!
令令令令令令令令令令令令[491令令令令令令令令令令令令

Page 29
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
24
25 26
Simple Proverbs in English A proverbs a day
A burnt child always comes back. A foolatforty is a fool indeed Afriend in need is a friend indeed A good name is better than riches A good example is the best sermon A noisy dog is not fit for hunting. Astitch intime saves nine. A wonder lasts nine days. After astorm comes a calm An earlybird catches the worm. As you sow so shall you reap. Better bend than break. Birds of a feather flock together. Blood is thicker than water. Courtesy costs nothing. Do not cast your pearls before a swine. Dumb dogs are dangerous. Eat to live but do not live to eat. Failures are pillars of Success. Follow the river and you will find the Sea. Forgive and forget. Great minds thinkalike. Goodwine needs no bush. Halfa loafis better than no bread. Honesty is the best policy. It takes two to make a quarrel.
令令令令令令令令令令令令150]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
If the sky falls we shall catch larks. Kindness begets kindness. Live and let live. Lost time is never found. Look before you leap. Masters two will not do. Murder will be out. Never hit a man when he's down. Newbrooms sweep well. Nogains without pains. One cannot die twice. Once bitten twice shy. Prevention is better than cure. Pride goes before a fall. Soft words break no bones. Sugar is sweet even in darkness. Strike while the ironishot. The earlybird catches the worm. Time is a great healer. To thine ownself be true. Two eyes see more than one. Whom the gods love die young. Wisementhinkalike. You cannot get blood out of a stone. United we stand divided we fall. Well begunishalf done. What is learnt in the cradle lasts to the tomb. What's done can't be undone. Where there is smoke, there is fire.
令令令令令令令令令令令令[511令令令令令令令令令令令令

Page 30
ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ〉ぐ> అ@అట్టఅతిఅ@@@@@@@ Spelling Rules
Introduction
Vowels are : a e i o u Consonants are : b Cd fghjk 1 m n p q r s tww.xyz A suffix is a group of letter added to the end of a word. E.g. Beauty - Beautiful; ful is the suffix
Doubling the consonant.
2. Words of one syllable having one vowel and ending in a single consonant double the consonant before a suffix beginning with a vowel.
Un + er - Unner
hit + ing = hitting
knit + ed = knited
but
Keep - keeping (two vowels) help - helped (two consonants) love - loved (ending in a vowel)
b Two - or three - syllable words ending in a single consonant following a single vowel double fhe final consonant when the stress falls on the last syllable. (The stressed syllable is italicized)
begin +er = beginner
deter +ed = deterred
recur +ing = recurring
令令令令令令令令令令令令[521令令令令令令令令令令令令

常。
ut
mumur ed = murmured
anSWer -- er F anSWerer orbit + ing = orbiting
C
The final consonant of kidnap, worship, handicap, bias, fuel, dial is also doubled
kidnapper blassed
Worshipping refuelling
handicapped dialled
d
Words ending in an following a single vowel usually double the I:
quarrel - quarrelling appal - appalled signal – signalied model - modelling distill - distiller repel - repellent
Note that for the purpose of the above rules qu is considered as one consonant:
acquit - acquitted
Omission of a finale
al Words endingine following a consonant drop the e before asuffix beginning with a vowel.
love + ing = loving
belleve -- er = believer
move + able - movable but likable can also be spelt likeable. Words ending in ceorge however sometimes retain the e.
令令令令令令令令令令令令1531令令令令令令令令令令令令

Page 31
宽。
A finale is retained before a suffix beginning with a conso/ገC፲}ገ፬
hope - hopeful
engage - engagement
immediate - immediately
fortunate - fortunafely
sincere - sincerely But the e in able / ibile is dropped in the adverb form
comfortable - comfortably
incredible - incredibly The finale is also dropped in the following words.
true - Truly
due - duly whole - wholly(notice also the double Ihere) arque - argument
judge - judgementorjudgment.
C
Words ending in ee do not drop an e before a suffix.
foresee - forseeing, foreseeable agree - agreed, agreeing, agreement
Words ending in Ce and ge
2 Words ending in ceorge retain the e before a suffix beginning with a, o, or u.
courage - courageous peace - Peaceable manage - manageable trace – traceable outrage - Outrageous replace - replaceable
This is done to avoid changes in pronunciation, because c and gare generally pronounced soft before eandi, but hard before d, O, Or lu.
令令令令令令令令令令令令154]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
b
Words ending in ce change the e to i before ous.
vice - vicious grace - gracious malice - malicious space - spacious
The suffix ful
When full is added to a word the second I is dropped
Beauty + fil= beautiful (but note adverbform: beautifully) Use + fill = Useful (but note adverbform: usefully)
If the word to which the suffix is added ends in ll the second ll is dropped here also :
skill + fill = skilful
fil -H- fil = fulfil
Words ending in y Words ending inly following a consonant change they to i before any suffix except ing :
carry + ed F carried
sunny + er = Sunnier
happy + y = happily but
carry + ing F carrying
y following a vowel does not change :
obey + ed = obeyed play + er = Player 令令令令令令令令令令令令155I令令令令令令令令令令令令

Page 32
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
ie and ei The normal rule is that i comes before e except after c :
believe sieve but
deceive receipt
There are however fhe following exceptions :
beige foreign inveigle skein weight counterfeit forfeit leisure sleigh weir deign fieight neigh sleight weird eiderdown heifer neighbour surfeit
eight height neither their
either heinous reign veil
feign heir rein vein
feint inveigh seize weigh
令令令令令令令令令令令令[561令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 உங்கள் பொழுது மோக்குக்கு
முயன்றவ பாருங்கள்! 01. The quick brown cunning fox jumped over the lazy dog. What is the missingletterinthe alphabet in the above sentence. 02 Canyou say why "SMILES” is a very, very long word in
English? The answerin within the word.
03 Pick out the hidden word or words in the following. Write
them within brackets. e.g. Box (Bo; ox) Brought ( ) Black ( ) Cheap ( ) Elephant ( ) Chair ( ) Glass ( ) Donkey ( ) Shape ( ) Electricity ( ) Suitcase ( ) Selfish ( ) Tailor ( )
04. A compound word is formed by joining one word with
another word.
how many compound words canyou make from these words?
e.g.: Post+Mark = Postmark
Home House Man Light Day Duty
Work Power Fly May Wheel Less
If you can make 15 or more compound words, you score is
“Excellent
5) The letters UC means “You see”. What words are de
noted by these letters and numbers?
a) O I C U R M T
b) U R A B C B
c) R U 2 O 1
d) U R 2 YS
令令令令令令令令令令令令[571令令令令令令令令令令令令

Page 33
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
06 Read these sentences aloud. Canyou pronounce the words in thick types correctly?
a) Canyou read English? b) I have read this book. c) I live with my parents. d) This is a live-wire. e) This pipe is made of lead. f) I lead and you follow me. g) Canyou hunt with a bow and arrow? h) Make a bow when you see and elder. i) A coldwind blew last night. j) Please wind the clock. k) Abad wound takes time to heal. i) I have wound the clock.
07. Makes as many four or more letter words as you can
а)
b)
c)
from the Word “OPPORTUNITES.” Do not use a letter more than once in a word unless you find it repeated in the word. If you can make 40 or more words, your score is "excel
lent Begin with the word, “Rose' and end with the word, "Sup
port ཉ
08. This game is called “BRICK-BUILDING” Rules to follow:
a)
Begin and end with the word “None” Keep on changing ONE LETTERata time. Do not repeat the same word. The word you form must be sensible. If you from 60 or more words, your score is “Excellent” E.g. Rain, pain, gain, lain, laid, said, paid, raid, Rain
令令令令令令令令令令令令1581令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 09. This is an unusual puzzle. You have to find words across,
down and diagonally upwards and downwards. Please try.
4. 5 6
1.
2
3
8
Clues Across Down Diagonal 1. Put 2 and 2 together 4.AMonkey 7.worries 2.To search into 5.Not wet 8. A numberofcattle
3.We see with this 6.To colour cloth
10 Words which sound the same are "Homonyms” e.g.rain, rein, reign. The spelling and meaning are different. Give another word that sounds like.
their : ......................... Week : ........................ right : ......................... site : ... die : ......................... here : ......................... IlCW . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . blue : .........................
meet : .........................
O 令令令令令令令令令令令令159]令令令令令令令令令令令令

Page 34
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
ea A எழுத்துக்களை ஒழுங்குபடுத்தி 3 ஆறு விலங்குகளைக் கண்டு
S^v பிடியுங்கள்.
புதிர் es 3 பசி என்ற சொல்லுக்கும் இங்குள்ள எணகள் ஒன்றிற்கும் சம்பந்தம் உள்ளது. அது என்ன?
(D
®"
令令令令令令令令令令令令I60]令令令令令令令令令令令令
 
 

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
கதிரிஅமுதி புதிர் - 4
இந்த எழுத்துக்களை ஒழுங்குபடுத்தினால் ஓர் அழகிய பழமொழி கிடைக்கும். பழமொழியைக் கண்டுபிடிக்க இந்த முகம் உதவும்.
6 ft 3 6; it i tij uj 600' as Gi தங்கள் வாகன தி தைச் Gċ# 66i 36o) t... u. 6), uġi, fit li 9 உதவுங்கள்.
வலப்புறம் 1-12 வரை எண்கள் கொடுக் கப் பட்டுள்ளன . இடப்புறம் கறுப்புச் செவ் வகத்திற்குள்ளே நான்கு வட்டங்களும், வெளியே எட்டு வட்டங்களும் கொடுக் கப் பட்டுள்ளன. ஆக இந்த 12 வட்டங்களுக் குள்ளு; இந்த 12 எண்க:ை நிரப்ப வேண்டும். செவ்வகத்தின் உள்ளே நிரப்பும் நான்கு எண்களும் வரிசை மாறாமல் அடுத் தடுத்த எண்ணாக இருக்கவேண்டும். உதாரணமாக 1, 2, 3, 4 அல்லது 2, 3, 4, 5 அல்லது 3, 4, 5, 6 இப்படி ஏதாவது ஒரு வரிசை, மீத முள்ள கட்டு எண்களைச் செவ்வகத்தின் வெளி வட்டங்களுக்குள் நிரப்ப வேண்டும். இந்த வெளி என்களின் கூட்டுத்தொகை, உள்வட்ட எண்களின் கூட்டுத்தொகையை விட இரண்டு மடங்காக இருக்க
TT00TtS S ttTTS S LmmmTTt TT YttTttC S0tStttLS
令令令令令令令令令令令令I611令令令令令令令令令令令令

Page 35
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
புதிர் - 7
こ*
இங்குள்ள தீக்குச்சிகள் முன்றை மட்டும் நகர்த்தி, ஐந்து சதுரங்கள் ニ* உருவாக்க வேண்டும். எங்கே 二 முயற்சி செய்யுங்கள் Jitiru(Bluso!
لے
இந்தப் படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?
令令令令令令令令令令令令I621令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
புதிர் - 9
இங்கு 13 சதுரங்கள் உள்ளன. இவை அனைத்தும் எத்தனை கோடுகளால் வரையப்பட்டுள்ளன.?
இந்த ஆங்கில வார்த்தை யிலிருந்து 35007 என்ற
வரிசை எணி களைக் கொண்டுவர முடியுமா உங்களால்?
uigim - lio Sir 234567899
90 இங்குள்ள எண்களுள் ஒர் எண் மட்டும், மற்ற
எண்களில் இருந்து வித்தியாசப்பட்டுள்ளது.
அந்த எண் எது? எப்படி? \ZN
புதிர் -11 令令令令令令令令令令令令I63]令令令令令令令令令令令令

Page 36
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 F6) உடலில் உள்ள ஓர் தனி பெரும் உறுப்பாக ஈரல் உள்ளது. இதன் தொழிற்பாடு உடல் தொழிற்பாடுகள் ஒழுங்காக இயங்க அவசியமாகின்றது. 9 இரத்தத்தைச் சுத்தப்படுத்தல்
உடலில் வரும் நஞ்சுப்பொருட்களான அற்ககோல், மருந்துகள், இரசாயனங்களை நடுநிலையாக்குவதன் மூலம் குடலிலிருந்து வரும் குருதியினை வடிகட்டுதல் மூலமும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். 9 உடலிற்கு தேவையான சக்தியினை ஒழுங்காக்குதல் குளுக்கோசினை உற்பத்தி செய்வதுவும் சேமித்து வைப்பது மற்றும் தேவையான சமயத்தில் விடுவிப்பதன் மூலம் கொழுப்பினை உருவாக்கி, சேமித்து மற்றைய கலங்களுக்கு அனுப்புவதன் மூலமும் உடலுக்கு தேவையான சக்தியினை ஒழுங்காக்குகின்றது.
9 சில முக்கிய புரதங்களை உற்பத்தி செய்தல்
குருதி உறைதலுக்குத் தேவையான புரதம், ஊட்ட பொருட்களை குருதியில் கடத்துவதற்கான “காவி’ புரதங்கள், சில நோய் எதிர்ப்பு பிறபொருட்கள் எதிரிகளை உற்பத்தி செய்கின்றது.
9 சில ஒமோன்களை சம அளவில் பேணுதல்
பாலியல் ஓமோன், ரைரோய்ட் ஓமோன் மற்றும் அதிரினலின் ஓமோன் ஈரலில் சம அளவில் பேணுகின்றன.
9 உடலின் கொலஸ் ரோல் அளவு உற்பத்தி அதன்
வெளியேற்றம்
9 சில அத்தியாவசிய விற்றமின்கள், கனியுப்புக்கள்
(இரும்பு, செப்பு) போன்றவற்றைப் பேணுதல்.
令令令令令令令令令令令令I64]令令令令令令令令令令令令

ぐ〉ぐ>ぐ〉ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ〉ぐ>ぐ>ぐ〉ぐ〉ぐ〉ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ〉ぐ〉ぐ>ぐ〉ぐ>
இவர் வாறு உடலுக்கு நன்மை செயது கொணர்டிருக்கும் ஈரலுக்கு பங்கர் விளைவிக்கும் சிலவற்றை பற்றியும் பார்ப்போமாயின்.
9 அற்ககோல் (சாராயம், பீர், வைன்)
அளவிற்கு மீறிய அற்ககோல் பாவனை ஈரல் நோய்களுக்கும், அதனால் ஏற்படும் இறப்புக்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அமெரிக்காவில் ஏற்படும் இறப்பு காரணங்களில் முதல் பத்து காரணங்களில் ஒன்றாக அற்ககோலினால் ஏற்படும் ஈரல் நோய் ஓர் காரணமாகும்.
உள்ளெடுக்கப்படும் அற்ககோல் உணவுக்கால்வாய் தொகுதிகளில் அகத்துறிஞ்சப்பட்டு ஈரலினை அடைத்து அங்கு அனுசேபதாக்கத்திற்கு உள்ளாகின்றது. அளவிற்கதிகமாக ஏற்படும் அற்ககோல் முதலில் ஈரலின் உடனடி நோயையும், Lfì6öĩ B 60öĩ L-35 T 6ò (Chronic) (Acute) (85 T60) uJu JLố ஏற்படுத்துவதுடன் மத்திய நரம்புத்தொகுதியினையும் பாதிப்படையச்செய்யும்.
அற்ககோலினால் ஈரல் கலங்கள் சிதைவடையும். அதனால் ஈரலின் தொழிற்பாடுகள் பாதிப்படையும்.அத்துடன் ஈரலில் அளவிற்கு மீறிய கொழுப்பு படிவடைந்து"கொழுப்பீரல் உருவாகுவதற்கும் அற்ககோல் காரணமாகின்றது.
9 வைரஸ்
மஞ்சள் காமாலையினை ஏற்படுத்தும் வைரசுகள் ஈதல் கலத்தினை சிதைவடையச்செய்யும். இவை A, B, Cஎன பலவகைப்படும். இவற்றில் A வைரஸ் பொதுவான உணவு, நீர் மூலம் பரவும். மஞ்சள் காமாலையினை ஏற்படுத்தும். இவை அபாயம் குறைந்தவை.
B வைரசினால் ஏற்படும் மஞ்சள் காமாலைகள் அபாயம் நிறைந்தவை. ஈரல் கலவிறைப்பினையும் தழும்பு நிலையும் அதாவது Cirrhosisஐ ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
令令令令令令令令令令令令I65]令令令令令令令令令令令令

Page 37
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
9 நஞ்சுப்பதார்த்தங்கள்
இவை நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் மருந்து பொருட்கள் மூலம் உடலினுள் செல்கின்றன. அவை நேடியாகவோ அன்றி மாற்று பொருட்களாகவோ ஈரலினை சேதப்படுத்துகின்றன.
ஈரலினை பாதிக்கும் பதார்த்தங்களினால் ஈரல் கல விறைப்பு அதனைத்தொடர்ந்து ஈரல் கல பெருப்பு தழம்பு நிலை(Cirrhosis)யினை நோக்குவோமாயின்
0 Cirrhosis
நச்சுப்பதார்த்தங்கள் அழற்சி தாக்கங்கள் (Inflamation)96035u lipp656it (Metabolic derangemnts) போன்றவற்றினால் Cirrhosis ஏற்படுகின்றது.
இதன் போது சில ஈரல் கலங்கள் இறந்து சிதைவடைந்து தழும் புகளை உருவாக்குகின்றன. அவற்றிடையே உள்ள சில உயிருள்ள கலங்களின் தொழிற்பாடு அதிகரிக்கப்படவேண்டிய கட்டாயத்திற் குள்ளாக்கப்படுகின்றன. அதனால் அவை பெருக்கின்றன. (Hyperdrophy) g56, BITU600TLDITE dou
1) ஈரலின் அழுகிய அழுத்தமான பளபளப்பான தோற்றங்களும் அவற்றின் அழகிய பகுதிகளும் (lobes) சிதைக்கப்பட்டு கோரமான அழுத்தமாற்ற மேற்பரப்புத்தழும்புகளும் உருவாகின்றது. 2) ஈரலுக்கான இரத்த ஓட்டம் குறைக்கப்படுகின்றது. அத்துடன் குடலிலிருந்து குருதியை ஈரலுக்குத் கொண்டு செல்லும் நாளங்களின் “Portalvein” அமுக்கமும் அதிகரிக்கும். Protalveinhypertension இதன் காரணமாக மண்ணிரல் பெருக்கும் இரத்த வாந்தி ஏற்படும் பசியின்மை ஏற்பட்டு வயிறு வீக்கமும் வயிற்றினுள் நீர் தேக்கமும் ஏற்படும். 3) பித்த சுரப்பு பாதிக்கப்படும். பித்த மூலப்பொருட்கள் குருதியினுள் கலப்பதினால் மஞ்சள் காமாலை ஏற்படலாம்.
令令令令令令令令令令令令I66]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
4) புரத உற்பத்தி பாதிப்படைவதனால் குருதியின் பாயத்தன்மை குறைவடைந்து வயிறு, கால் வீக்கம் ஏற்படும்.
5) ஆண்களின் ஈஸ்ரோஜ ஓமோன் செறிவு கூடுவதால் மார்பகங்கள் பெருக்கமடையும். கன்னத்தில் வீக்கம் ஏற்படும்.
6) குருதி உறைபொருட்களின் உற்பத் த
பாதிப்படைவதால் குருதி உறையா தன்மை 6JsbuLT6)LD.
7) இன்சுலின் தடை ஏற்படுவதால் நீரிழிவு ஏற்படலாம்.
8) இறுதியில் நச்சுப்பொருட்கள் மூளைப்பகுதியைத் தாக்குவதால் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும்.
9) நோய் எதிர்ப்பு சக்தி குன்றி இலகுவில் தோல்நோய்
சுவாசநோய்களுக்கு ஆளாகலாம். எனவே எமது ஈரலை காத்து உடலையும் உள்ளத்தையும் ஈரலிப்பாக வைத்திருப்போம்.
ஈரலைக் காத்தால் நீடுழி வாழ வழிகாட்டும்
令令令令令令令令令令令令I671令令令令令令令令令令令令

Page 38
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 இருதயக்குருதிக்குழாய் அடைப்பு
நோய்.
மனித உடல7ல உள்ள அனைத்து
உறுப்புக்களினதும் ஒழுங்கான செயற்பாடுகளுக்கு
இரத்த ஓட்டம் அவசியமானது. இதயத்திற்கான இரத்த
ஓட்டம் குறைவடைகையில் இருதயக் குருதிக்குழாய் அடைப்பு நோய் ஏற்படுகின்றது.
9 இருதயத்திற்கான இரத்த ஓட்டம் எவ்வாறு
தடைப்படுகின்றது.?
இருதயமானது இருதயக் குருதிக்குழாய்களின் மூலம் இரத்த ஓட்டத்தைப் பெறுகின்றது.
இவ்வாறான குருதிக் குழாய்களில் கொழுப்பு படிவடையும் போது அவற்றில் அடைப்பு ஏற்படத் தொடங்குகின்றது. இரத்த ஓட்டம் குறைவடையும் போது இருதயத்தில் அடைப்பு நோய் ஏற்படுகின்றது.
குருதிக் குழாயில் முழுமையான அடைப்பு ஏற்படும் போது இதயத்தசையில் ஒரு பகுதி இறப்படைகின்றது. இந்நிலை “மாரடைப்பு” எனப்படுகின்றது.
9 குருதிக்குழாய் அடைப்பு நோயின் அறிகுறிகள்
LIT60d6) ? 9 ஆரம்ப நிலை (Angina)
நடுநெஞ்சில் வலி - இவ்வலி வேலை செய்யும் போது அதிகரிக்கும் தன்மையானது. (உ-ம்) ஓடுதல், படியில் ஏறுதல்.
இவ்வலியானது தாடை, கழுத்து, இடது தோள்மூட்டு, இடது, வலது கைகளுக்கும் பரவலாம்.
இவ்வகை இதய வலியானது ஓய்வு எடுக்கும்போது குறைவடையும்.
令令令令令令令令令令令令[68]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
0 LDITU60LL (Heart attack)
இதன்போது ஏற்படும் வலியானது ஆரம்ப நிலையை ஒத்ததாக இருந்த போதிலும் , வலி கடுமையானதாகவும் நீண்ட நேரத்திற்கும் நீடிக்கின்றது. ( 15 -20 நிமிடங்களுக்கு மேலாக)
வலியுடன் அதிகளவு வியர்வை, மூச்சுத்திணறல், குமட்டல், வாந்தி என்பனவும் ஏற்படலாம். இவ்வலியானது ஓய்வெடுப்பதனால் குறைவடையாது.
9 இருதய நோய் அறிகுறிகள் தென்படின் நீங்கள் செய்ய
வேண்டியவை என்ன? 6 களைப்படையும் வேலையை உடனடியாக நிறுத்தவும். 8 BIT disasgör ap 606)lds(5lb (56sg0560)u (Glycenyl trinitrate) நாக்கின் கீழ் வைக்கவும். வலி குறையாவிடின் 2 - 3குளிகைகள் வரை பாவிக்கலாம். 2 - 3நிமிடங்களில் வலி குறைவடையும். 6 கடுமையான வலி ஏற்பட்டு, நாக்கின் கீழ் குளிகை வைத்த பின்பும் குறையாவிடின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும்.
9 குருதிக்குழாய் அடைப்பு நோய் ஏற்படுவதற்கு
உதவும் காரணிகள் யாவை?
6 புகை பிடித்தல் 6 கொழுப்பு அதிகளவுள்ள உணவுகள்
உ-ம் - மாட்டிறைச்சி ஆட்டிறைச்சி நண்டு,
இறால், முட்டை, நெய். உயர் குருதி அமுக்கம். குறைவான உடற்பயிற்சி நீரிழிவு நோய் உடற்பருமல் அதிகரித்தல். குடும்பத்தில் இதய நோய் காணப்படல்.
令令令令令令令令令令令令I69]令令令令令令令令令令令令

Page 39
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 நீரிழிவு நோய் பற்றிய அறிவுரைகள்
1. நீரிழிவு நோய் என்றால் என்ன?
சாதாரணமாக எமது இரத்தத் தரில் சீனி காணப்படுகின்றது. இது 80 - 120 மி.கி / டெசிலீற்றர் என்ற வரையறைகள் காண்பபடுகின்றது. இரத்தத்திலுள்ள சீனியின் அளவு இவ்வெல்லையை விட அதிகரிப்பால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
2. இரத்திலுள்ள சீனியின் அளவு எவ்வாறு
கட்டுப்படுத்தப்படுகிறது.
சாதாரணமாக இரத்தத்திலுள்ள சீனியின் அளவு இன்சுலின் எனும் பதார்த்தத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இன்சுலின் வயிற்றிலுள்ள சதையி எனும் உறுப்பினால் சுரக்கப்படுகின்றது.
3. நீரிழிவு நோய் எவ்வாறு ஏற்படுகிறது? நீரிழிவு நோய் இன்சுலின் குறைந்தளவில் சுரக்கப்படுவதால் அல்லது சுரக்கப்பட்ட இன்சுலின் உறுப்புகளில் தொழிற்பட முடியாமையால் ஏற்படுகின்றது.
4. நீரிழிவு நோயின் வகைகள் என்ன?
வகை1 : இது இன்சுலின் சுரக்கப்படும் அளவு குறைந்து இரத்தத்திலுள்ள சீனியின் அளவு அதரி கரிப்பதாலி ஏற்படுகிறது. பெரும்பான்மையாக இந்த வகை நீரிழிவு நோய் முப்பது வயதுக் குட் பட்ட நோயாளிகளில் ஏற்படுகிறது. இந்த வகை நீரிழிவு நோயுள்ளவாக்ள் கட்டாயமாக வாழ்நாள் முழுவதும் இன்சுலின் உடலில் எடுக்கவேண்டும்.
令令令令令令令令令令令令[701令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
வகை2 : இதில் சுரக்கப்பட்ட இன்சுலின் உடலில் தொழிற்பட முடியாமையால் இரத்தத்திலுள்ள சீனியரின் அளவு அதிகரிக் கிறது. பெரும்பான்மையாக இந்த வகை நீரிழிவு நோய், உடல் பருமன் அதிகமாக இருப்பவர் களிலும் , 40 வயதுக் கு மேற்பட்டவர்களிலும் காணப்படுகின்றது. இந்த 6J 600 35 UL sT 60 நீரிழிவு நோயை மாத்திரைகளினால் கட்டுப்படுத்த முடியும்.
5. நீரிழிவு நோயிற்குரிய அறிகுறிகள் என்ன?
அதிகளவு தாகம் N சிறுநீர் அதிகமாக வெளியேறுதல். W உடல்நிறை குறைதல். N உடலில் சக்தியில்லாத்தன்மை.
6. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தாவிடின் ஏற்படக்கூடிய
பாதகமான விளைவுகள் என்ன?
இரத்தத்திலுள்ள சீனியின் அளவு மிகக்கூடுதலான அளவுக்கு அதிகரிக்க முடியுமு. இந்நிலை சரியான சிகிச்சை எடுக்காமையினால் ஏற்படும். இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும். அறிகுறிகளாவன : வாந்தி, வயிற்று வலி, மூச்சு எடுப்பதில் கடினம், சுயநினைவு குறைதல்
7. இரத்தத்திலுள்ள சீனியின் அளவைக்கட்டுப் படுத்தாவிடின் ஏற்படக்கூடிய நீண்டகால பாதிப்புக்கள் என்ன? இதயக்கோளாறுகள்: மாரடைப்பு, நீரிழிவு நோயாளிகளில்
பெரும்பான்மையாக ஏற்படுகிறது.
令令令令令令令令令令令令[711令令令令令令令令令令令令

Page 40
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
நரம்புக்கோளாறுகள்: நரம் புகள் பாதரிப் படைவதால் விறைப் புத் தன் மை ஏற்படும் , உணர்ச்சியற்ற தன்மையால் பாதங்களில் 85 |T uLJ |bil 85 6íi கிருமித்தொற்றுக்கள், சிறுநீரகம் பழுதடைதல் ஆகியவற்றிற்கு பெரும்பான்மையாக உட்படுவர்.
நீரிழிவு நோயாளிகளில் தோல், அதிகளவில் பற்றீரியா, பங்கசு, கிருமிகளின் தொற்றுதலிற்கு உள்ளாகின்றனர்.
8. இரத்தத்திலுள்ள சீனியின் அளவு எவ்வாற மிகக் குறைவான அளவிற்கு குறைகிறது? அதற்குரிய அறிகுறிகள் என்ன?
இரத்தத்திலுள்ள சீனியின் அளவு, தேவையான அளவு உணவு, உண்ணாமையால் மிகக்குறைவான அளவிற்கு குறைவடைகின்றது. இந்நிலைத்குரிய அறிகுறிகளாவன.
W அதிகளவு வியர்த்தல் W தலைச்சுற்று
நெஞ்சு படபடப்பு W நடத்தையில் மாற்றம்
9. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாமா?
ஆம் ஆனால் துரதிஷ்டவசமாக இப்போது இந்நோயைக் குணப்படுத்த முடியாது. எனினும் சரியான உணவு, உடற்பயிற்சி, மருந்துகளை எடுப்பதால் நீரிழிவு நோயின் அபாயகரமான பாதிப்புக்களிலிருந்து விடுபட்டு சந்தோசமான வாழ்க்கை வாழலாம்.
令令令令令令令令令令令令[721令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 நீரிழிவு நே7/7ருக்கான ஆகார முறைகள். அதிகாலை :
ஒரு கோப்பை சீனி அல்லது வெல்லம் சேர்க்காத கோப்பி அல்லது தேனீர் அல்லது சீனி சேர்க்காத பழரசம் ஒரு கிளாஸ்.
காலை உணவு :
1/2” உள்ள பாண் துண்டுகள் இரண்டு அல்லது 4 பெரிய இடியப்பங்கள் அல்லது 6 சிறிய இடியப்பங்கள் அல்லது 2 பெரிய அப்பங்கள் அல்லது 3 சிறிய அப்பங்கள் அல்லது 2 அங்குல தடிப்பம் உள்ள பிட்டுக்கள் அல்லது 2 தோசைகள் 1 கோப்பை பாற்சோறு மேலே குறிப்பிடப்பட்டவைகள் சம்பலுடனோ
அல்லது ஒரு கறியுடனோ உட்கொள்ளப்படலாம்.
Ουρ. J. 1Ο. OO
1 கோப்பை சீனி கலக்காத தேநீர் அல்லது கோப்பி அல்லது ~~ சீனி சேர்க்காத பழரசம் 1 கிளாஸ்
மதிய உணவு
2கோப்பை சோறு, ஏதாவது கறிகளுடன் (மீன், கருவாடு, நெய்த்தலி, மரக்கறிகள்)
மதிய உணவிற்குப் பின்னதாக
30g பப்பாசி அல்லது 1/3 பங்கு நடுத்தர அளவிலான பப்பாசி அல்லது 1/2 யானை வாழைப்பழம் அல்லது ஏதாவது 1/2வாழைப்பழம் அல்லது 1 கதலி வாழைப்பழம் அல்லது 1கோப்பை சீனி சேர்க்காத தயிர்
令令令令令令令令令令令令T731令令令令令令令令令令令令

Page 41
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
மாலைத்தேனீர்
1 கோப்பை சீனி சேர்க்கப்படாத கோப்பி / தேனிர் சீனி சேர்க்காத பிஸ்கட் 2
இரவு உணவு
காலை உணவைப்போல
* இங்கு கோப்பையெனக் குறிப்பிடப்படுவது 250m
கோப்பையைக்குறிக்கும்.
ஒரு கோப்பை சோற்றிற்குப்பதிலாக பரின் வரும்
உணவுகளில் ஏதேனும் உட்கொள்ளலாம்.
1/2” (inches) தடிப்புள்ள பாண்துண்டு - 2 4” விட்டமுடைய பணிஸ் - 1 2 மிகை நிறைவான கோப்பை நூடில்ஸ் அல்லது மக்ரோணி 4 பெரிய அளவு / 6 சிறியளவு இடியப்பம் அல்லது 2” உயரமுள்ள பிட்டு - 2 அல்லது அவிக்கப்பட்ட உருளைக்கிழங்கு அல்லது ஏதாவது கிழங்கு
நீரிழிவு ஆகாரம் சம்பந்தமான பொதுவான விடயங்கள் சில * மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உண்ணக்கூடிய உணவு வகைகள்
தானியங்கள் : சோறு, அப்பம், இடியப்பம்,
பிட்டு முதலியன.
கோதுமை : பாண், றொட்டி, இடியப்பம்
குரக்கன் : பிட்டு, களி
உழுந்து தோசை, இட்லி, வடை
செளவரிசி
கிழங்கு ! உருளைக்கிழங்கு, வற்றாளைக்கிழங்கு,
மரவள்ளிக்கிழங்கு, கரட், பீற்றுாட், முள்ளங்கி
令令令令令令令令令令令令[741令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
பருப்பு : பாசிப்பயறு, கடலை, சோயா, உழுந்து
மாத்தன்மை உள்ள
பழங்களும்
மரக்கறிகளும்; கறிவாழை, பலா, பலாக்கொட்டை,
“தெல்”
Glāb (Q
அதிகமுள்ள
ஆகாரங்கள் : மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி
இறைச்சி, மற்றும் ஏனைய இறைச்சிவகைகள் முட்டை மஞ்சட்கரு, பட்டர் மாஜரின், எண்ணெய்.
சீனி
சேர்க்காத
பழரசம் : தேசி, தோடை, கொடித்தோடை பழங்கள் வாழைப்பழம்
ஏனையவை இறால், நண்டு, மட்டி, கணவாய். வைனும், மதுரசங்களும்
முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்
சகல வகை இனிப்பு, வெல்லம், கருப்பட்டி.
இனிப்புத் தன்மையுள்ள சகல உணவுகளும்
ரொபி இனிப்புச் சேர்த்த சுவிங்கம் ஜாம் வகை கேக்
ஜெலி இனிப்பு
எள்ளுருண்டை குளிர்பானம் (சீனி சேர்ந்த) மஸ்கட் குளுக்கோஸ்
புடிங் இனிப்பு பிஸ்கட் வட்டில் அப்பம் ஐஸ்கிறீம்
சாக்லேட் ரின்பால்
மோல்ரட்பால்
令令令令令令令令令令令令[75]令令令令令令令令令令令令

Page 42
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
பழங்கள் :
மாம்பழம், அன்னாசி, துாரியம், பலாப்பழம், பட்டர் பழம், கொடி முந்திரி, மங்குஸ்தான்
வரையறையின்றி உட்கொள்ளக்கூடிய உணவு வகைகள்
கீரை வகைகள் அவரை இனம்
போஞ்சி
July 3
சிறியவெங்காயம் பயற்றங்காய் சிறகவரை
கத்தரிக்காய் வெண்டிக்காய் சீனி சேர்க்காத கோப்பி, பெளறில்,மாமைற் முட்டை(வெள்ளைக்கரு) வாசனைச்சரக்கு
கண்டங்கத்தரி காளாண்வகை தக்காளி கோவா
லீக்ஸ் நோசோல் குருவித்தலைப்பாகற்காய் பீர்க்கங்காய் முருங்கை தேனீர் மீன்,கருவாடு, நெத்தலி
அசசாறு
நீரிழிவு நோயாளர்களிற்கான பொது அறிவுறுத்தல்கள்
W நார்த்தன்மையான பதார்த்தங்களை அதிகம் உண்ணல்
வேண்டும்.
கொண்டவை.
சிறந்தவை.
தவிட்டுப் பாண் சாதாரண பாணைவிடச் சிறந்தது. குரக்கனும், கீரையும் அதிகநார்த்தன்மையைக்
சிவப்பு அரிசியினால் செய்யப்பட்ட மாப்பாண்டங்கள்
சர்க்கரையும், வெல்லமும் சீனியைப்போல் கட்டாயம்
தவிர்க்கப்படவேண்டியவை.
令令令令令令令令令令令令T76]令令令令令令令令令令令令

ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>
N மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி என்பன
கட்டாயமாக மட்டுப்படுத்தப்பட வேண்டியவை. W பழரசங்களை பருகுவதிலும் பார்க்க பழங்களே
சிறந்ததாகும். W விலங்கு எண்ணெய்களிலும் பார்க்க தாவர
எண்ணெயே சிறந்தது. முன்பக்கத்தில் கூறப்பட்ட அறிவுரைகளை நீரிழிவு நோயாளர்களுக்கானது. ஆகவே இதய நோய், உயர் குருதி அமுக்கம், சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள் இருப்பவர்களிற்கு இந்த உணவுகள் மாற்றத்திற்கு உட்பட வேண்டியவையாகும்.
நோய் மாத்திரம் கொண்ட நோயாளர்களிற்காகும்.
令令令令令令令令令令令令T77]令令令令令令令令令令令令

Page 43
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 காய்ச்சலுடனான வலிப்பு சிறு குழந்தைகளுக்கு உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது வலிப்பு ஏற்படக்கூடும். பொதுவாக 6 மாதம் தொடக்கம் 6 வயது வரையிலான காலப்பகுதியில் காய்ச்சல் ஏற்படும் போது வலிப்பு ஏற்படுகின்றது. இதனை காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பு என்பர். சிறு பிராயத்தில் ஏற்படுகின்ற வலிப்பு வகைகளில் பொதுவானது இதுவாகும். சாதாரணமாக காயப் க் சலினால் ஏற்படுகின்ற வலிப்பினால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவ்வலிப்பு பிற்காலத்தில் காக்கை வலிப்பு நோய்க்கு இட்டுச்செல்லும் என்பதும் தவறான கருத்தாகும். ஆனால் சிறுபிராயத்தில் வேறு பல நோய்களும் காய்ச்சலுடன் வலிப்பை ஏற்படுத்தலாம். உதாரணமாக மூளைக் காய்ச்சல், மூளை மலேரியா இவை மூளை வளர்ச்சியை பாதிப்பதுடன் தகுந்த சிகிச்சை அளிக்காதுவிடின் மரணத்தையும் உருவாக்கலாம்.
9 சாதாரணமாக காய்ச்சலினால் ஏற்படுகின்ற
வலிப்பை கண்டறிவதற்கு. 1. குழந்தையின் வயது பொதுவாக 6மாதம் தொடக்கம்
6 வயது வரையான 2. பொதுவாக வலிப்பின் போது
உடல் முழுவதும் (வலதும் இடதும்) உதறல் ஏற்படும். கண்கள் மேல் செருகுதல். வாயில் நுரை தோன்றல் நினைவை இழத்தல் இது பெரும்பாலும் குறுகிய காலத்திற்கே நீடிக்கும்
(2 - 55ufLLb) 3. வலிப்பின் பின்னரான உறக்ககாய்ச்சலினால் ஏற்படுகின்ற வலிப்பில் காணப்படுவதில்லை. அல்லது
மிகக் குறைந்த நேரமே காணப்படும். 令令令令令令令令令令令令T781令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
4. பொதுவாக ஒரு முறை தோன்றும் காய்ச்சலின்போது வலிப்பு ஒரு முறையே தோன்றும். வலிப்பு மீண்டும் மீண்டும் தோன்றினால் அது சாதாரணமாக காய்ச்சலினால் ஏற்படுகின்ற வலிப்பல்ல.
5. பெரும்பாலும் காய்ச்சல் தோன்றி 24 - 48
மணித்தியாலயத்திலேயே வலிப்பு ஏற்படுகின்றது.
6. குழந்தையின் உணவுமுறையிலோ நடவடிக்கையிலோ எந்தவிதமான மாற்றமும் இருக்காது. அதாவது காய்ச்சல் குறைந்தவுடன் வழமைபோல் குழந்தை விளையாடி உணவருந்தி இருக்கும். தொடர்ந்து சோர்வான நிலையில் அல்லது உறக்கநிலையில் இருந்தால் அது காய்ச்சலினால் ஏற்பட்ட சாதாரண வலிப்பு அல்ல.
சில குழந்தைகளுக்கு இவ்வகையான காய்ச்சலுடனான வலிப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதரிகம்
9/66/L IIT6/67.
* காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படின் அவர்களில் 1/3 வீதமானவர்களுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்படும் போது வலிப்பு ஏற்படலாம். * குடும்பத்தில் தாய் தந்தை அல்லது சகோதரர்களுக்கு காய்ச்சலுடனான வலிப்பு சிறுவயதில் இருந்திருப்பின்
9 காய்ச்சல் ஏற்படும் போது வலிப்பு ஏற்படாது
தடுக்கும் வழிமுறைகள்.
காய்ச்சல் ஏற்பட்டு உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போதே பொதுவாக வலிப்பு ஏற்படுகின்றது. உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் தடுப்பதற்கான முறைகளை கையாள்வதன் மூலம் வலிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
96O)6)UT660.
令令令令令令令令令令令令T791令令令令令令令令令令令令

Page 44
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
* காய்ச்சல் தொடங்கிய முதல்நாள் முதல் இரு நாட்களுக்கு (48 மணித்தியாலயங்கள்) பரசிட்டமோல் (பனடோல்) உடல் நிறைக்கு தக்கபடி (10 - 15mg (kg உடல்நிறைக்கு) 6 மணித்தியாலயத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். * உடைகளை களைந்து காற்றோட்டமான இடத்தில்
குழந்தையை வைத்திருத்தல். * நீரினால் நனைத்த துணியினால் குழந்தையின்
கழுத்து கமக்கட்டுப்பகுதிகளை துடைத்தல். இம்முறைகளின் மூலம் வலிப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக்குறைக்கலாம். ஆனால் முற்றாக தடுக்க (Լpկ2ԱյՈ35/.
9 வலிப்பு ஏற்படின் கடைப்பிடிக்க வேண்டியவை.
1. அருகிலுள்ள பொருட்களை அகற்றி குழந்தையை
பாதுகாப்பான இடத்தில் படுக்க வைக்கவும். 2. குழந்தையின் வாயிலோ கையிலோ எதனையும்
கொடுக்கவேண்டாம். 3. குழந்தையை இடது பக்கமாக படுக்க வைக்கவும். இதன் மூலம் வாயில் இருந்து வெளியேறும் நுரை நுரையீரலினுள் செல்லாது தடுக்கலாம். 4. காய்ச்சலினால் ஏற்படும் வலிப்பினால் குழந்தையின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் வலிப்பின் போது ஏதாவது அருந்தக் கொடுப்பதனால் அது நுரையீரலினுள் சென்று பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். 5. பொதுவாக இவ்வகையான காய்ச்சலுடனான வலிப்பு குறுகிய காலத்திற்கே நீடிக்கும் ( 2 -10நிமிடம்) அவ்வாறின்றி நீண்ட நேரம் நீடிப்பின் குழந்தையை அருகிலுள்ள வைத்தியரிடம் தலையை உயர்த்தாதவாறு (குழந்தையின் தலையும் உடலும் ஒரே கிடைத்தளத்தில் இருக்கத்தக்கவாறு) தூக்கிச் செல்லவும். 令令令令令令令令令令令令{80令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
1. குழந்தை 6மாதத்திற்கு குறைவாக இருப்பின் அல்லது
6வயதிற்கு மேற்பட்டிருப்பின்
2. வலிப்பு ஒரு பக்கத்தில் ( இடது, வலது) மட்டும்
இருப்பின்,
3. வலிப்பு நீண்ட நேரம் நீடிப்பின்
4. வலிப்பின் பின் நீண்ட நேரம் உறக்கநிலையில் இருப்பின்.
5. குழந்தையின் நடவடிக்கையில் சோர்வுநிலை
உணவூட்டலில் மந்தநிலை இருப்பின் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள வைத் தரியரை நாடி தகுந்த அறிவுரையைப்பெற வேண்டும். ஏனெனில் இவை மூளைக் காய்ச்சலின் அறிகுறிகள் இருக்கலாம். உடனடியாக தகுந்த சிகிச்சை எடுக்காவிடின் இவை மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். அத்துடன் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.
令令令令令令令令令令令令[811令令令令令令令令令令令令

Page 45
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 பொது அறிவு 1. WWW 616örprisi) 6T66Or?
World Wide Web 2. அகண்ட தீ விபத்தில் லண்டன் தீக்கிரையா வருடம்.
666 3. பிரிட்டனிடமிருந்து அமெரிக்கசுதந்திரம் பெற்ற வருடம்
1783 4. இரவும் பகலும் மிக துல்லியமாக வரும் நாள்
Ln 2
5. கிரேட் விக்டோரியா என்பது என்ன?
ஆஸ்திரேலியாக்கண்டம் 6. மிக நீண்ட ஆயுள் கொண்ட உயிரினம் நீலத்திமிங்கிலம் 5oo ஆண்டுகள் 7. மரதம் ஓட்டம் பந்தயத்தின் மொத்த தூரம்
உ6 மைல் 8. “கன்காட் விமானத்தின் வேகம் என்ன?
9235OOL 9. I 9. அடை காப்பதற்குப் பதில் நின்று கொண்டு முட்டை
பொரிக்கும் பறவை எது? பென்குயின் 10. விமான விபத்தில் பலியான ஐ.நா.பொதுச்செயலாளர்.
டாக் ஹாமர்ஷோல்ட் 11. தனது பள்ளியரின் வாசலில் “கணக்கு தெரியாதவர்களுக்கு இங்கு இடமில்லை” என்று எழுதி வைத்த சிந்தனாவாதி ப்ளேட்டோ 12. ஜெர்மன் சர்வாதிகாரி அடோ.வப் ஹிட்லர் பிறந்த இடம்
ஆஸ்திரேலியா 13. Big C என்று கூறப்படுவது எது?
புற்று நோய் (கான்சர்)
令令令令令令令令令令令令[821令令令令令令令令令令令令

ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>ぐ>
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
ஒரு அழைப்புக் கடிதத்தில் RSVP என்று இருந்தால் அதன் கருத்து என்ன? தயது செய்து பதில் தாருங்கள். பென்சிலில் 1113 என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதன் பொருள்?
Hard Black ரஸ்யாவில் கிறிஷ்மஸ் என்று கொண்டாடப்படுகிறது? ஜனவரி 7 ஆசியாவில் ஒரே ரோமன் கத்தோலிக்க நாடு? பிலிப்பைன்ஸ் உடம்பில் வெட்டுக்காயம் ஏற்படும் போது ரத்தம் உறையாமல் ஒழுகிக்கொண்டேயிருக்கும் நோயின் பெயர் என்ன?
msC8 nm.v. feÚLUT மிக அதிகமான மொழிகளில் (சுமார் 320ற்கு மேல்) மொழிபெயர்க்கப்பட்ட நூல்?
பைபிள் நேரு சார்லி சாப்ளின், ஹிட்லர் இவர்களிற்கிடையே பொதுவான ஒரு அம்சம்?
பிறந்த வருடம் 1889 Dutch Courage 6T6örprisi) 6T66,607? போதைப்பொருட்களால் ஏற்படும் அசட்டுத்தைரியம் 1947 இல் காந்திஜி எலிசபெத் மகாராணிக்கு கொடுத்த திருமணப்பரிசு என்ன? காந்திஜி தான் சொந்தமாக நூற்ற நூல் கொண்டு உருவாக்கிய ஒரு கதர் மேசை விரிப்பு. முதன் முதலில் தபால் தலைகளை வெளியிட்ட மூன்று நாடுகள்?
பிரிட்டன், அமெரிக்கா, பெல்ஜியம் பூகம்பத்தை அளவிடப்பயன்படும் கருவியான “றிச்சர்ட்” அளவுகோலை கண்டுபிடித்தவர் யார்? சொல்ஸ் றிச்சர்
令令令令令令令令令令令令[83]令令令令令令令令令令令令

Page 46
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
25.
26.
27.
28.
29.
30.
செஞ்சிலுவைச் சின்னத்தை தனது தேசியக்கொடியில் கொண்டுள்ள நாடு?
சுவிட்ஷலாந்து
குரல் இல்லாத மிருகம் எது?
ஒட்டகச்சிவிங்கி குளோனிங் முறையில் செம்மறி ஆடொன்றை முதலில் உருவாக்கியவர் யார்?
இவான் ஸ்மித்
எக்ஸ்ரேயினைக் கண்டு பிடித்தவர்?
ரோன்ட்ஜன் உலகில் கருணைக்கொலையை முதன்முதல் அங்கீகரித்த நாடு எது?
நெதர்லாந்து போர் வீரனின் பாட்டை தேசிய கீதமாக கொண்டுள்ள நாடு எது?
அயர்லாந்து.
令令令令令令令令令令令令[84]令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 கைவைத்தியக் குடிநீர் வகைகள்
1.காய்ச்சல் (சுர) குடிநீர் பற்படாகம், சீந்தில், வெட்டிவேர், இலாமிச்சை, சுக்கு, மல்லி, கோரை, சந்தணம்
2.வாதக்குடிநீர்
1.சித்தரத்தை, சீந்தில், ஆமணக்கு, வேர், சாறணை, தேவதாரு, நெருஞ்சி கொன்றை.
2.பறங்கிக்கிழங்கு, அமுக்கிராய், பிரப்பங்கிழங்கு, திற்பலி,
சுககு.
3.செங்கண்மாரி சிற்றமட்டி, சிறுபயறு, செந்தாமரைக்கிழங்கு, மல்லி, சிறுநெருஞ்சிவேர், வில்வம் வேர், நற்சீரகம், நெற்பொரி
4.பொக்குளிப்பான், சின்னமுத்து, கூகைக்கட்டு
முதலான வெப்ப நோய்களுக்கான குடிநீர்
ஏலம் , எலுமிச்சை வேர்.கோரை, பற்படாகம், சந்தணம், இலாமிச்சை, சீந்தில்
5. சளிக்குடிநீர் கண்டங்கத்தரி, தூதுவளை, சிற்றமட்டி, பேரமட்டி, திற்பலி, அதிமதுரம், கடுக்காய்க்கோது
6.கரப்பான் குடிநீர்
மஞ்சிட்டி, கடுக்காய் கோது, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுகுரோகினி, மரமஞ்சள், வசம்பு, சீந்தில், கொடி, வேப்பம் பட்டை, கருஞ்சீரகம், கடுகு ரோகினி, வால்மிளகு, நீர்முள்ளி, சிறுநெருஞ்சி, மல்லி, செங்கத்தாரி வேர்
令令令令令令令令令令令令[851令令令令令令令令令令令令

Page 47
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
7.விக்கக்குடிநீர் நீர்முள்ளி, சீந்தில், வெள்ளைச் சாறணை வேர், பிரமி, சிறுநெருஞ்சி, வேர், மல்லி, திற்பலி
8.மலேரியாக்குடிநீர்
1.பேய்ப்புடோல், நிலவேம்பு, வேப்பம்பட்டை, மரமஞ்சள், கோரக்கிழங்கு.
2.வேப்பம் பட்டை, சிற்றம்பட்டி, பேரமட்டி, பற்படாகம், கோட்டம், சித்தரத்தை, சீந்தில்
9.இருமல் குடிநீர் சித்தரத்தை, அதிமதுரம், மிளகு, நற்சீரகம், கற்பூரவள்ளி, இலை, தூதுவளை இலை.
10.நீரிழிவுக் குடிநீர்
நாவற்பட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலழிஞ்சிப்பட்டை, சிறுகுறிஞ்சா இலை, நெல்லிக்காய்.
11.சிறுநீர் பெருக்கிக் குடிநீர்
ஏலம் , தற் பலி, அதம துரம் , வாலி மிளகு, தேங்காய்ப் பூக் கீரை, நெருஞ்சி, ஆமணக் குவேர், கொன்றைப்பட்டை.
12. சலக்கடுப்புக்குடிநீர்
நற்சிரகம், சந்தணம், நெல்லி வற்றல், தேற்றாவிதை, சிறுநெருஞ்சி, வால்மிளகு
13.வயிற்றோட்டக்குடிநீர்
அத்திப்பூவும் பிஞ்சும், விளாத்திப்பிஞ்சும், இலையும், மாதுளம் பிஞ்சும் பூவும், தென்னங்குரும்பை, களிப்பாக்கு, மாயாக்காய், ஓமம்
令令令令令令令令令令令令[861令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
14.கிருமிக்குடிநீர் மாதுளம்வேர், வாய்விடங்கம் கிருமி, சத்துரு வேப்பம் குருத்து, சூரத் தாமரை, இலை, றோசா மொட்டு, ஆடுதின்னாப்பாலை.
15.பேதிக்குடிநீர் சூரைத்தாமரை இலை, கடுக்காய் கோது, கடுகு ரோகினி, பிரமி றோசாப்பு, கற்றாளஞ்சருகு, நிலப்பாவல் இலை.
பிணிதீர்க்கும் இலைக்கஞ்சி
எமது மூதாதையர்களின் நாளாந்த வாழ்வில் கஞ்சி முக்கியத்துவம் மிக்க இடத்தினை வகித்தது. உப்புக் கஞ்சி, புளிக் கஞ்சி, நெற் பொரிக் கஞ்சி, சவ்வரிசிக்கஞ்சி, வறுத்த அரிசிக்கஞ்சி, பாற்கஞ்சி என்பன பலராலும் பயன்படுத்தப்படும் கஞ்சிவகையாகும். இது போலவே இலைக்கஞ்சியும் போஷாக்கு நிறைந்த உணவாகவும் , நோய் களைக் குணப் படுத்தும் ஒளஷதமாகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. கிராமமக்களின் காலை ஆகாரங்களில் ஒன்றாக விளங்கும் இலைக்கஞ்சி யுத்த காலத்தில் வன்னிப்பாடசாலைகளில் மாணவர்களுக்கு வழங்கப் பட்டு வந்தது. யாழ்ப் பாணத் தரிலும் பாடா சாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. மருத்துவப்பயன்பாடுடைய இவ்விலைக்கஞ்சியினை அனைவரும் அறியும் வண்ணம்
தருகின்றோம்.
令令令令令令令令令令令令Is71令令令令令令令令令令令令

Page 48
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
கோகலா தண்டு
வட்டத்துத்தி மூலரோகத்திற்கு நல்லது பெருங்காயம்
தூதுவளைக்கஞ்சி சளியை வெளியேற்றும் வட்டக்கத்தரி கஞ்சி
இலாமிச்சை வேர்க்கஞ்சி செங்கண்மாரிக்குப் கையாந்தகரைக்கஞ்சி Uuj6TUGLb
கீழ்காய் நெல்லிக்கஞ்சி சாத்தாவாரி இலைக்கஞ்
சிறுநீரக வியாதியில் சிறுநீர் வெளியேறப்பாவித்தல்
தேங்காய்பூ கீரைக்கஞ்சி நன்னாரி இலைக்கஞ்சி நீர்முள்ளிக் கஞ்சி
இரத்தப் பெருக்கு ஏற்படும் காலத்தில்
அரசம் பட்டைக்கஞ்சி
பொன்னாங்காணிக்கஞ்சி கண் வருத்தத்திற்கு நன்று
} மாதவிடாயில் அதிக கையாந்தகரைக்கஞ்சி }
கையாந்தகரைக்கஞ்சி மணித்தக்காளிக்கஞ்சி வாய ப புண னு க கு பாவித்தல் அகத்திஇலைக்கஞ்சி
முருங்கையிலைக்கஞ்சி
முள்ளுக்கீரையிலை நீரிழிவு நோய்க்கு நன்று அறக்கீரையிலை
கொவ்வையிலை
令令令令令令令令令令令令[881令令令令令令令令令令令令

令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令
வெந்தய இலை இரத்தவிருத்திக்கும் அகத்தியிலை குளிர்ச்சிக்கும்
முருங்கையிலை சிறுநீரக
முள்ளுக்கீரை எரிச்சலைக்குறைக்கும் மணித்தக்காளி
பண்ணைக்கீரை வயிற்றுப்புழுக்கள் குறையும்
முருங்கையிலை
தூதுவளை இலை சளித்தொல்லை குறையும் கொவ்வை இலை மொசுமொசுக்கை இலை
முடக்கொத்தான் மலச்சிக்கலைத்தவிர்க்கும் வல்லாரை பொடுத்தலை இலை
ஆவாரை
令令令令令令令令令令令令I891令令令令令令令令令令令令

Page 49
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 கைமருந்தங்கள் 1. சதைக்கரைச்சான் 1.தீ, வெந்நீர், சூடேறிய பொருள் ஆகியவற்றுள் யாதேனுமொன்றால் எரிகாயம் ஏற்படின் சதைக்கரைச்சான் இலையை அரைத்தெடுத்து அதனைப்பூசலாம்
2.சதைக்கரைச்சான் இலையை இரண்டாகக்கிழித்து அதன்மேற் தோலை அகற்றி அதனை நாவின் கீழே வைத்து அழுத்த அதன் சாற்றை உறிஞ்சுவதனால் சிளிக்கட்டியால் ஏற்படும் தொண்டை வலி அகன்றுவிடும்.
2. ஆடாதோடை 1.குருதிப்பெருக்குடைய காயம்
ஒரு பிடி ஆடாதோடை இலையை நீராவியில் அவித்தெடுத்து அதனைப்பிழிந்து சாற்றை எடுத்து அதனோடு தேன் கலந்து பருகவும்.
2.நாட்பட்ட இருமலுக்கு
ஆடாதோடைப்பூ, இலை, காம்பு, பட்டை, வேர் என்பவற்றை அவித்தெடுத்த அரைக்கோப்பை நீரில் சீனியை அல்லது தேலைக்கலந்து பருகவும்.
3.பெருந்தகரை 1.பூச்சிக்கடிக்கு பெருந்த கரை இலையை எலுமரிச்சம் புளியரில அரைத்துப்பூசவும்
2.தலையிடிக்கு
பெருந்த கரை விதையை வினாகிரியரிட்டு அரைத்தெடுத்து நெற்றியில் பிளாஸ்டர் போன்று ஒட்டிவிடவும்
4.கச்சோலாக்கிழங்கு 1.அஜீரணத்துக்கும், வாந்திக்கும்
ஒரு துண்டுக் கச்சோலாக் கிழங்கைக் கடித்து மெல்லவும்.
令令令令令令令令令令令令I901令令令令令令令令令令令令

& © & 8& © 8 & © & © & © & © 8 & © 8 & 8 & © & ©
2.விக்கலுக்கு
கச்சோலாக்கிழங்கை எரிக்கும் போது வெளியேறும் புகையை சுவாசிக்கவும்
8.நன்னாரி 1.உடல் எரிவுக்கு
நன்னாரி வேர் அவிக்கப்பட்ட நீரைப்பருகவும் 2.வீக்கமும் வலியுமுடைய கட்டிகளால் உண்டான புண்களுக்கு
நன்னாரியை மாத்திரம் அரைத்துப் பூசவும். 8. ஆமணக்கு
முட்டுக்களில் ஏற்படும் வீக்கத்துக்கும் வலிக்கும் ஆமணக்கு இலை, பூ, விதை, பட்டை வேர் ஆகியவற்றை இடித்துக்சுண்டல் செய்து கட்டவும்.
7. கண்டங்கத்தரி 1.தடிமன்காச்சல், இருமல்
கண்டங்கத்தரி, உலர் இஞ்சி, கொத்தமல்லி, மரமஞ்சள், என்பவற்றை அவித்தெடுத்து நீரில் சீனி கலந்து சாப்பிடலாம்.
2:பீனிசத்துக்கு
கண்டங்கத்தரி, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை நன்கு காயவைத்தெடுத்து ஒட்டில் வறுத்து தூளாக்கி அத்தூளை வெந்நீரில் இட்டு பருகவும்.
.ே கடுஹாற 1.மட்டத்தேள் கொட்டினால்
குடிநீரில் அரைத்து காயத்தின் மீது தடவுக 2.தேள்கொட்டினால்
செடியினைத் தீய்ந்த சோற்றுடன் அரைத்து தடவுக.
令令令令令令令令令令令令I911令令令令令令令令令令令令

Page 50
令令令令令令令令令令令令令令令令令令令令令令令令令 தேற்றம் இறந்திட பிறந்தீர் பிறந்திட இறந்திர்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்குமுகவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்று புதிதாய் பிறந்தோம் என்றுநீவிர் எண்ணமதைத்திண்னமுறஇசைத்துக்கொண்டு தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்! தீமையெலாம் அழிந்துபோம் திரும்பி வாரா
zmaMøllma’if உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு
திருவள்ளுவர்.
நன்றி நவிலல் 6Lysiu)Lif
எமது குடும்ப குலவிளக்கு இளையதம்பி இராதாகிருஷ்ணன் சுடப்பட்டதை அறிந்தவுடன் ஓடோடி வந்து உதவிகள புரிந்து ஆவன செய்ய உதவியவர்களுக்கும் மறைவை ஒட்டிய நிகழ்வில் கலந்து கொண்டு எம் துன்பத்தில் பங்கு கொண்டு ஆறுதல் கூறிய அனைவருக்கும் தந்தி, தொலைபேசி முலம்தங்கள் அனுதாபத்தை தெரிவித்த கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்த சகல அன்பு நெஞ்சங்களுக்கும் எமது பண்புடைய
நன்றிகளை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
*::::::: மவளவி, மக்கள்,
Ingináðir. 令令令令令令令令令令令令[921令令令令令令令令令令令令

go@0ĪŠ
之
III.19ŲıÍU TICIIII191@@gi 十十 Ųu9o0)1991191,9@ (3uq)ış9riqi-To 199R9Đoo) o JCI
之之^ †
திதியூசிலழ்ேம9யமுேடிகி 通谕旨己的臣四9qımų,09anúŲıņoQ91|n Ģitoloogiæ肾自净周的旨谕旨自由 que硕瑜49巨99
ųRoq1988)||ß@
IloilístoQ980)
ųRoq19109@19h
qiftssponín
(ųídio)qimişoșurist9|?
之
spęllosq990) # 11909ų9Țırıúnqī£ €Ģf(sq.90.9 + Çıqloĝrmı909@
|firo1|pqrs

Page 51


Page 52
QALxxx: SIDES, QABELTúdúfubolu ir šv Vrúš.
 
 

تE
盏 இதர்ன்டுவந்தரஞ்
இழப்பதற்கு பகுப்த்திருக்கிறாய் இ இ இ டுத்துக்கொளுர்டாயோ
ā[L
, Sao 1oo, SGSörup sffS, SFLreaksẽFGSF f.0602213517