கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சின்னத்தம்பி முருகேசு (நினைவு மலர்)

Page 1
உயர்திரு சின்ன அவர்க
 

D6 yjr
பி முருகேசு
ததம்

Page 2

: :
:
s
SLeLLMSS SSLL0LLMS SMLe0LMSi SeLLeLSi SLLLeLM SeeeeeLS
இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட
ஓய்வுபெற்ற கூட்டுறவுப் பரிசோதகர்
திரு. சின்னத்தம்பி முருகேசு
அவர்களின்
மறைவு குறித்து
வெளியிடப்படும்
நி
ᎧᏑᎧ
@!
Ls)
(6)
13.12.2001
으
SLL0LMS SSLLeLLeLMS SSLLLeeeLLLLLLLL S SLLeLeeLLLLLLS SLeLeeLLLLLLS SeeeeeLS

Page 3
ਕਵਲ ਵਲਵਲਵਲ
மெழுகுவர்த்தியாக இருந்து தன்னையே உருக்கி ஒளியூட்டிய
6IIhlaisaffeoI ஆருயிர் தெய்வத்தின்
இனிய நினைவுகளை
di LnIbg5 6.) IGOOI6OOILO r இம்மலரை -2" அவர்தம் தாள்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்./
 
 
 
 
 
 
 
 

defağgöl (yağbörf :
மலர்வு: 09.0619
13,11,200
வாழும் விஷ ஜப் பசியிருபத் தேழபரஞ் குழுந் சதுர்த்தசி சேர்நன்னாள் ஈழத் துரைசா லினுவை யுயர்முரு கேசர் பரராசன் தாளடைந்தார் பற்றி,

Page 4

திருச்சிற்றம்பலம்
ஒதவினையகலும் ஓங்கு புகழ் பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும்- சீதப் பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப் போர் தீட்டும் தனிக் கோட்டு வாரணத்தின் தாள்.
வைரவக் கடவுள் தேவாரம்
பரமனை மதித்திடாப் பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியுமகந்தையும் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
QØker QØer QYokaler QØer QSOISST
- 01 -

Page 5
Q0.leG` Q0.leG` Qz0-leC` QZ0-leC` QZ0.les6` QZ2. R:
சம்மந்தர் தேவாரம்
:
பண் :- கொல்லி தலம் :- கழுமலம்
திருச்சிற்றம்பலம்
மண்ணின் நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலக் கண்ணில் நல் லஃறுங் கழுமல வளநகள்ப் பெண்ணிநல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
திருவாசகம்
பால் நினைந்துாட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீபாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங் கெழுந் தருளுவதினியே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்குந் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்து கந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே
SMeeLLLLL LL0L L L0LL LLLS LLeLeeLL SSeLLeL - 02 -

-----
திருப்பல்லாண்கு
மன்னுகதில்லை வளர்க்க நம்
பக்தர்கள் வஞ்சகர் போய் அகல பொன்னின் செய் மண்டலத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்ன நடை மடவாள் உமை கோன்
அடியோ முக்கருள் புரிந்து பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
ğtFÜJLqJJTItaRJIth
ஆதியாய் நடுவுமாகியாவிலா வளவுமாகிச் சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேகமாகிப் பெண்ணுமா யானு மாகிப் போதியா நிற்குந் தில்லை பொது நடம் போற்றி போற்றி.
9ങ്ങr്ളir திருப்புகழ்
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ் பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வில் முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமாதானசற் குணர்நேயா ஒப்பிலா மாமணிக் கிரி வாசா வித்தகா ஞான சத்தினி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமானே.
:
SLeL0LLMS SSLeLALLMS SSLeLS SeL0LLLLL S SLL0LLSLLS SLLL0LLSSS - 03 -

Page 6
gear gear 32-eg 2-e 32-eg 32
s
முருகன் துணை
றி கந்த சஷ்டி கவசம்
SA8
a.
காப்பு
அமரர் இடர்திர அமரம் புரிந்த
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்துே) ஓங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டிக் கவசந்தனை.
சஷ்டியை நோக்கச் சரஹண பவனார் சிஷடருக் குதவும் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வா கணனார் கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக! வருக! வருக! மயிலோன் வருக! இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக! வருக! வாசவன் மருகா வருக வருக! நேசக் குறமகள் நினைவோன் வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா வருக! நீறிடும் வேலவன் நித்தம் வருக!
:
SI-es Ser Ser SD-er SI-es S.à.
- 04 -
 

13łeg
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக! ரவண பவச ரரரர ரரர ரிவண பவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நமோ நம நிபவ சரவண நிறநிற நிறென வசர வணப வருக!வருக! அசுரர் குடிகெடுத்த ஐயா வருக! என்னை யாளுமிளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளிஜயும் நிலைபெற் றென்முன் நித்தமும் மொளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக! ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்தின மாலையும் முப்புரி நுாலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி நுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண்

Page 7
-----
JJJJ JJ JJJ JJJJ JJJ JJ
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுருடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்திருவடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விரிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க
വാബ് വായ്പ വാഷ വാഷ ( വട, - 06 -
 

SaLeLLLLLLS SeLeLeLMS SMeeLLMS SSLeLeLLM SLLLeLeLS SLeeeLeLS
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஜவிர லடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவிற் சரஸ்வதி நற்றுனை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அணையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வாலாஷடிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படுமு அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக்காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகளென்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
:
:
- 07 -
SMeLeLM MLM MLM eLLM S Leee0LeLLLLLLLL LS0LS

Page 8
స్థాజC2252.262
பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒது மஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைப் கண்டாற் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதுா தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடல் அங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடிவேலால் பற்று பற்று பகலவன் தணலெரி
à :
:
t
(
விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சத்தியம் வலிப்பும் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரீதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோடநீ யெனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் மெனக்கா
Y
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர் காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப்பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யானுனைப் பாடளனைத் தொடர்ந் திருக்கும் எந்தைமுருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் ரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவஜம் வாழ்க வாழ்களன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்யினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
JS-Dee, JS-DC Jo-SC do-eg doo-ego o.
హీరారారారారా

Page 9
YYLeLM MeeL SLeLeeLeLM eLeLM MMLSLeM SMMeLS
(
'
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் கஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே ஜெபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் மீரெட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க்கான மெய்யாய் விளங்கும் விழியாற்கான வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தெனதுள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை அதனால் இருபத் தேழ்வர்க் உவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள்ள என்றனதுள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனாபதியே போற்றி
- 10 -
SLeeLeLeLLLLL LLLLLLLeLeLeALLL SMeeLeLS Le0LLMS 0e0eLLLLL LLLLLLLA

10 leg
Oleg
TRØST
QØker
QØer
1ab
குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேவா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர்கிரி கனக சபைகோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவனும் சரணம் சரணம் சண்முகா சரணம்
*நல்ல குரு அமைந்தால் ஆண்டவன் கொடை” 养 兼 来 *நல்ல மனைவி அமைந்தால் ஆண்டவன் அருள்”
SSSeeeLLLLSS SLLLeLeeLLLLLLS SLLLeLMS SSLLeLM SLLeeeLLLLLLS SSeeeLLLLS
- 11 -

Page 10
f8.
23C323C3-C2–C32
இரங்கலுரை
“தோன்றில் புகழொடு தோன்றுக” என்ற மூதுரைக்கு இணங்க எம்மூரில் திரு. முருகேசு அவர்கள் மிக்க புகழோடும் அறிவோடும் பண்போடும் ஒழுக்கத்தோடும் ஒரு நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து மறைந்தார். அவர் வாழ்ந்த வாழ்வு இன்றும் நெஞ்சை விட்டு நீங்கா நினைவுகளாக உள்ளத்தில் நிறைந்து இருக்கிறது. எந்நேரமும் புன்முறுவல் மலர்ந்த முகத்தில் கோபத்தின் சாயலை காணமுடியாது. ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தவர். மிக்க இறைபக்தி உடையவராயும் இருந்தார். ஆலயங்களில் நடை பெறும் பூஜை உற்சவங்களில் தவறாது வந்து தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டு இருந்தார். மேலும் எங்கள் ஹி பரராஜ சேகரப் பிள்ளையார் கோயில் திருப்பணி வளர்ச்சியில் மிக்க ஆர்வமாக இருந்தார். முன்பு தFருப் பணிகள் செயப் வதற்கு நிதி ഖ ബ്ഥ குன்றியிருந்தகாலத்தில் அவர் கூட்டுறவுச் சங்கப் பரிசோதகராக இருந்து சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக்கிளையொன்றினை ஆலய வளாகத்தில் திறந்து வைத்து கோயிலுக்கு ஒரு நிரந்தரமான நிதி வரவினைப் பெறுவதற்கு ஆவன செய்து வைத்தார். அந்த நிதி இன்றும் என்றும் கிடைக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறு பல இறைவன் காரியங்கள் செய்த அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
சிவறி. வை. சோமாஸ்கந்தக் குருக்கள். பிரதமகுரு, பூரி பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில்.
Q-Q-Teller QYD-er Q40-er Q40-er Q42-es QØ
- 12 -

BIS-DO S-DO IS-DO IS-DO IS-DE FSB
அண்ணலவர் முருகேசு நல்லாத்மா அரனடியாம் சிவபதத்தில்
பெறுக சாந்தி
1. நல்லினுவைப் பரராஜசேகரன்தாள்
நாளுமே போற்றிசெய்து ததிக்கும் அண்ணல் கல்லுமே கசிந்துருகக் கணபதியைக்
கானமும் பாடியே கரங்கள் கூப்பி அல்லும்ப கலிலுமே அழகார் கோயில்
அணிவாசல் நின்றுருகித்ததிக்கும் ஐயன் தொல்லுலகில் இணுவையூர் முருகேசுத்
தாயவனின் நல்லாத்மா பெறுக சாந்தி.
கல்விமிளிர் கவினழுகு முகத்தில் தோன்றும்
கண்ணியமும் கனிந்தன்பு முறவல் தோன்றும் நல்விதஞ்சேர் நட்புரிமை தழுவி அன்பால்
நயந்தழகு மொழியினிமை வாயில் தோன்றும் வல்லவனாம் கணிதவியல் தறையில் தேர்ந்தே
வளமார்ந்த கணிதபரிசோதகராய் நல்லநல்ல சேவைமுருகேசு செய்தார்
நல்லாத்மா சிவபதத்தில் பெறக சாந்தி
3. எல்லோர்க்கும் நல்லவராய் வாழ்ந்த செம்மல் எழிலான ஆண்மைமிகும் கட்டழகன் பல்லோரும் ஏத்திடவே சமூக சேவை
பார்புகழச் செய்தபெரும் தொண்டனாவன் சொல்லோடு செயல்வீரம் கொண்ட நல்லான்
சோபிக்கும் தெய்வப்பணி செய்த தொண்டன் வல்லானாம் முருகேசு சிவப தத்தில்
வளம் சேர்ந்தார் அவராத்மா பெறுக சாந்தி
2.
s
SMLeMLMS SeLMLM MLMLMS MMLLLLSS SLMeLeLMS SLMLeL
- 13 -

Page 11
RQ2-e S2-e G2-e Q3er G3le So.
4. தெய்வபக்தி தேசபக்தி குருவின் பக்தி
தெய்வீக சிந்தனையில் திளைத்த செம்மல்
உய்யுநெறி அறிந்தசைவம் வாழ வேண்டி
ஒப்பரிய பக்திப்பணிபுரிந்த வந்தார்
செய்யுநெறி செம்மையுறச்செய்து நாட்டில்
சீலவழி வாழ்ந்தபெரும் சாந்த குணன்
அய்யனவன் முருகேசு ஆத்மா என்றும்
அரனவனாம் சிவபதத்தில் பெறுக சாந்தி
5. விண்ணிருந்து மனவிையவள் கனகம் மாவும்
விரும்பியுன் முகம்காண அழைத்தாள் தானோ?
கண்ணனைய சோதரனாம் ஐயாத்தரை
ககனத்தில் வந்தன்னை அழைத்தான் தானோ?
மண்ணைவிட்டுச் சென்றநின் பாசபுத் திரன்
மாதாவுடன்பிதாவை அழைத்தான் தானோ?
எண்ணரிய பாசம்நிறை பிள்ளை களை
ஏங்கவிட்டு எங்குதான் போயினையோ?
6. மலர்முகத்தில் மலர்ந்திடும் மகிழ்ச்சி பொங்கும்
மயக்திடும் புன்னகையை இனிக்காண்போமோ?
புலர்வதன்முன் நீராடி நீற்றின் குறி
பூசியபொன் திருவுடலை இனிக்காண் போமோ?
கலகலென நகைத்தினிமைக் குறும்பு மொழி
கனிந்திடும் மதுரகுரல் இனிக்கேட்போமோ?
உலகமித வெறும் மாயை என்று ணர்த்தும்
உத்தமரே சிவபதத்தில் பெறுக சாந்தி
7. புத்திரரும் புத்திரிகளும் தடிதடிக்க
பூவிதய மருகரும் பிரிவால் நோக எத்தினமும் நினைத்தழுவும் பெளத்திரர்கள் எழிலான பெளத்திரிகள் கதறி அழ இத்தரையை விட்டு நீ ஏகினையே!
எங்குதான் சென்றனையோ? நின்முகத்தை புத்தம்பு தியநற் புன்சிரிப்பைப்
பூவுலகில் காண்போமோ? பெறுக சாந்தி
SMLeLeeLM ML0LL L LLSLLeLM SMMeLS MMeLeLM S SeLeL
- 14 -
 

SS-OL“ SS-OL“ I-2-SL 2-2-SL SS-OL SS
8. உற்றார்க்கும் உறவினர்க்கும் மற்றா ருக்கும்
உறுதுணையாய் உதவிபல செய்தீர் ஐயா
கற்றாரும் போற்றுகின்ற கவின்நிறைந்த
காரியங்கள் தொண்டுகளும் செய்து வைத்தீர்
பொற்றாமரைக்கரத்தால் அள்ளி அள்ளி
பூவுலகில் தானம்பல செய்தீர் ஐயா!
இற்றர ணிவிட்டு இறைய வனாம்
இனியசிவ பதத்தினிலே பெறுக சாந்தி
9. ஊரினுவை உத்தமனாய் வாழ்ந்தீர் ஐயா
உண்மைவழி நேர்மையும் அஞ்சா நெஞ்சம்
காரியங்கள் சித்திபெற ஊர வர்க்குக்
கச்சிதம்சேர் ஆலோசனை தந்தீர் ஐயா!
நேரியநல் வழியினிலே வாழ்ந்தீர் ஐயா!
நொந்திடுவார் தயர்கண்டு தடைப்பீர் ஐயா!
பாரினிலே நின் ஆத்மா சிவப தத்தில்
பேரின்ப நிலைப்பேறு பெறுக சாந்தி
ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
கவிமாமணி “மஹா வித்துவான்”
யாழ்ப்பாணம் (இணுைவில்) பிரம்மழீரீந.வீரமணி ஐயர். M.A.J.P
*நல்ல பிள்ளை அமைந்தால் ஆண்டவன் அருள்”
SLeeLS SeLeeLeLLLLSS SLLLeLLLLSS SLLLeLMS SSLeLALLSLeLLLLSS SLLeeLS
- 15 -
s

Page 12
SLLLLSS SLLLeLeLLLLLLS SLLL0LLS SLLLLLLM SLL0LMS SSLLeLLLLS
அமரர் முருகேசரின் ஊரின் சிறப்பும், வாழ்வின் சிறப்பும்
2
சாலிவயற் குளமொருபால்
சார்மருத மொருபால் தங்குமலர்ச் சோலைகள் சூழ்
தனிமுல்லையொருபால் வாலிதென அடியார் தொழும்
வான்தொருகோபுரஞ்சேர் வல்லபல கோயில்களில்
நல்லவொரு கோயில் நூலில் வல்ல புலவர்களும்
அரசர்களுந்தொழுத நுவலரிய பரராச
சேகரனைத் தொழுதே ஏறும் வகை நோற்றதிரு முருகேசர் வாழ்வில் ஏற்றமெல்லா மொன்றிரண்டோ
இணுவைமக் காள் சொல்லிர்.
தந்தை சின்னத் தம்பியுநல்
தாயாரும் பெற்ற தனிமூவராண்களுடன்
சற்புத்திரியொருவர் அந்த மூவராண்களிலும்
இரண்டாம்மகனாகி அரியதமிழாங்கிலமும்
கற்றுயர்ந்து பெரிய சிந்தையாராம் முருகேசர்
ஆசிரியராகிச் சிறந்தபணிசெய்ததன் பின்
கூட்டுறவிற்சேர்ந்து சந்ததமும் பணிசெய்து
அறுபதிலேயோய்ந்து சார்ந்துமக்களோடணைந்து சதுரராக வாழ்ந்தார்.
SLLLLLSLLLMSS SSLLLeLLLLSS SLLLeLeLLLLSS SLLeLSi SeeLeLSLS SLLLeLS
- 16 -

SLeLS LeLLMS SSLeLLLLSS SLLLLSi SLLeLeLLLLSS SLLeeeLS
மக்கள்தமைப்படிப்பித்தும் மணமுடித்துவைத்தும் மருமக்கள் சிறுவருடன் பாராட்ட வாழ்ந்தும் மிக்கவர்வளர்ந்துயர
மேலும் வழிசெய்தும் மெச்சுநல்ல குரும்பமெனத்
தக்கவர்கள் சொல்ல பக்குவமாய் மூத்தமகள்
மருகனாரிடத்தில் பாங்காகத் தொண்ணுற்றின்
மேலாக வாழ்ந்து ஒக்கலுடனுலகத்தார்
போற்றிடவே வாழ்ந்தே ஒப்பில்லார் இறைவன்தாள் ஒன்றானார் சாந்தி
முதுபெரும்புலவர் ஆசிரியர்வைகசிற்றம்பலம்
Hill IIII *அன்னையின் ஆசியிலே ஆண்டவனைக் காணலாம்”
*வாழ்க்கை என்பது பெயர் தெரியாத ஊருக்கு
வழி தெரியாத பயணம்”
*தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வம்”
SLeLeLLLLSS SLLLeLeLLLLLLS SLLLeLLLLSS SLLLeLMS SSLLeLMS SSLeeeLS
- 17 -

Page 13
BIS-SC SS-OL“ SS-OL SS-SC SS-SL- I-2.
மனித நேயப் பண்பாளர்
இரு வெவ்வேறு கிராமங்களாக இருந்தாலும் கோண்டாவிலும் இணுைவிலும் பல வழிகளாலும் ஒன்றாகவே கருதப்படுபவை. கோண்டாவில் மக்களுக்குச் சொந்தங்கள் பல இணுைவிலில் உண்டு. அதுபோலவே இணுைவில் வாசிகளுக்கும் உரித்துக்கள் பல கோண்டாவிலில் அதிகம். பரம்பரை பரம்பரையாக இவ்விரு கிராமங்களையும் இணைத்து நிற்கும் உறவு முறைகள் என்றும் பிரிக்க முடியாதவை.
அமரர் முருகேசர் இணுைவில் கிராமத்தவராக இருந்தாலும் அவர் கோண்டாவிலுக்கே உரித்தானவர் எனவும் கொள்ளலாம். முருகேசரின் தந்தையார் சின்னத்தம்பி இணுைவில் தெற்கைச் சேர்ந்தவர். அவர் கோண்டாவிலில் நெட்டிலைப்பாய் கோவில் பற்றில் இராமாசி எனும் அம்மையாரைத் திருமணம் செய்தவர். இவர்கள் மிக நீண்ட காலமாக வசித்த வளவு இராமாசி வளவென்றே இன்றும் அழைக்கப்பெறுகின்றது.
சின்னத்தம்பி இராமாசி தம்பதிகளுக்கு ஓேன்றாவது பிள்ளையாக உதித்தவர் அமரர் முருகேசர். இளவயதில் கல்வியில் நாட்டம் அதிகமுள்ளவராக விளங்கி அதில் மேன்மையடைந்தார். இதன் காரணமாக அந்தக் காலத்தில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுtல் ஆசிரியர் உதவி இவரைத் தேடிவந்தது. இப்பதவியில் சிறப்பாகப் பணியாற்றிய இவர் பின்னர் கூட்டுறவுத்துரையில் நாட்டம் கொண்டார். இணுைவிலில் கூட்டுறவுச் சங்கக் கிளையொன்றைத் தாபித்த பெருமை அமரர் முருகேசர் அவர்களுக்கே உரியது. அக்கிளை இன்று வரை நிலைத்து நின்று மக்களுக்குச் சேவை செய்து வருகின்றது. கூட்டுறவுத் துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றி கிராமத்துக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டுமக்களுக்கும் அரிய சேவைகள் பல செய்தவர் அமரர் முருகேசர் எனின் அது
மிகையான கூற்றாக இருக்க முடியாது. இவரின் சிறப்பான பண்புகளில் ஒன்று நலிந்த மக்களைக் கைதுக்கி
 

VI2-DD IS-DO IS-DO IS-DO IS-DO IS, V.
விட வேணி டும் எனும் மனப் பாங் காகும் . கோண்டாவிலைச் சேர்ந்த சேதர் சின்னத்தம்பி கணபதிப்பிளளை முருகேசரின் தாய்மாமனார் ஆவர். இவர்கள் எல்லோரும் நெட்டிலைப்பாய் விநாயகப் பெருமானைத் தங்கள் குல தெய்வமாகக் கொண்டவர்கள். முருகேசர் அவர்கள் தமது பிற்காலத்திலும் நெட்டிலைப்பாயானை அடிக்கடி வழிபட்டுச் செல்வது வழக்கம். கடவுள் வழிபாடு என்பது அவர்தம் இரத்தத்தில் ஊறிய ஒரு ஆழமான விடயம் எனலாம். முருகேசர் அவர்கள் மறைந்தாலும் அவர் கூட்டுறவு மூலம் காட்டிய மனித நேயப்பண்பை மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
நெட்டிலைப்பாய் சி.க.இரத்தினசிங்கம் 01.12.2001 இ  ைள பட் பா ற ய
来来来来来来来来来来米来来来来米来米来来来来来来来来
லேசர் தொழில்நுட்பம்
சாதாரண ஒளி பல அலைநீளங்களை கொண்டது. பல திசைகளிலும் பாய்கின்றது. லேசர் ஒளிக்கிற்றில் ஒரே அலை நீளமான ஒரே திசையில் சீராகப் பாயும் ஒளியலைகள் பிறப்பிக்கப்படுகின்றன. எனவே நிறத்திலும் வலுவிலும் அவை தூய்மையானவை.
சாதாரண ஒளிப்பிறப்பாக்கியும் லேசர் ஒளி பிறப்பாக்கியும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
எனவே இவை சாதாரண ஒளியைவிடத் துல்லியமான அவதானிப்புக்கள், அளத்தல், வீடியோ, கணனி, மற்றும் மருத் துவ சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
SLeeLeLL SL0eLeLLS Le0eLLS Le0eLeLLL 0e0LeL Le0LS - 19 -

Page 14
Tల్కి خذهبحدع< " يع. வள்ளுவன் குரலாக வாழ்ந்தவர்
"இனிய வைகூறல்” எனும் அதிகாரத்தில்
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந் தற்று" எனப் பொய்யாமொழிப் புலவர் கூறி அருளினார். இக்குறளின் பொருள் இனிய சொற்கள் நிறைய இருக்கும் போது அதைவிடுத்துத் தீய சொற்களைப் பேசுவது கனிகள் நிறைந்திருக்கக் காய்களைப் பறித்துண்ைபது போல் என்பதாகும். அமரர் சின்னத்தம்பி முருகேசு அவர்களுடன் உரையாடும் பொழுதெல்லாம் நான் இனிமையை உணருவதுண்டு. அவர் இன்சொற்களைப் பகர்பவர். அவற்றிலும் அன்பு நிறைய இருக்கும். அன்பின் வெளிப்பாட்டை முகம் பிரதிபலித்து நிற்கும். முகம் பிரதிபலிப்பதோ அன்னார் தம் உள்ளத்தை எனலாம். தனக்கு இளையவர்கள் அனைவரையும் தம்பி என்றே அமரர் அழைப்பதுண்டு. அவர் அன்பைச் சற்றுக் கூடுதலாக வெளிப்படுத்தும் சமயங்களில் ஒரு “டா ஓசையைச் சேர்த்துக்கொள்வார். 'தம்பி நேற்றிரவு பி.பி.சி என்னடா சொல்லியது" என்று அவர் வினாவும் பொழுது தம்பி எனும் சொல் இன்சொல்லாக அன்பைப் பொழிகையில் என்னடா எனும் வார்த்தை பற்று, பாசம், நேசம், உரிமை உண்மை எல்லாவற்றினதும் கூட்டாகவே அது அமைந்து விடுவதுண்டு.
இனிய சொற்களைப பேசுவதென்பது சிறந்ததோர் பண்பாடு. இது குடும்ப பாரம்பரியத்தால், கற்பிக்கும் ஆசிரியர்களால் படித்த பாடசாலையால், பெற்றுக் கொள்ளும் கல்வியால், பக்திநெறியுள்ள சுற்றம் சூழலால் கைவரப் பெறுவது. அமரரது அன்பின் வெளிப்பாடு அவர்தம் குடும்பச் சொத்தென்பேன். அந்தச் சொத்தை அன்னார் தம் பிள்ளைகள் மருமக்களிடத்திலும் யான் என்றும் காண்பதுண்டு.
"தள்ளாவிளையுளும் தக்காரும்
தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு”
u'
SLeASAeLSLsS SeSeSLSLSLSLS S S SSS S JS SS e SeLSLSLSsS SS SeS SeMeSeMS S SeeS
- 20 -
R
 
 

||7లో-రికా లోల గతిరిగా గతిఒరి తిరిగా గతి
என்றார் வள்ளுவர். ஒரு நாடு பரிபூரணமானதாக அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் விளைச்சலை மேம்படுத்துகின்ற உழவர்களும் தாழ்வற்ற வளமுடைய செல்வர்களும், தக்காரும் நிறைந்திருக்க வேண்டும். இணையிலில் தள்ளா விளையுளும், தாழ்விலாச் செல்வர்களும் நிறைய உள்ளனர். தக்காரும் பெருமளவில் உள்ளனரா என்பது கேள்வி. இணையில் என்பது அதனால்தானே. தக்கார் எனப்படுவோருக்கான விளக்கம் என்ன? அவர்கள் எவ்வாறிருப்பர்? அதற்கான விடை விரிவானது. சுருக்கமாக கூறின் 'தக் கார்" என்பார் அறவழி உடையவர்கள் என்றும் பொருள் உண்டு. இவ்விடத்தில் அமரர் முருகேசு அவர்கள் வள்ளுவன் கண்ட தக்கார் வரிசைக்குள் வந்து எம் கண்முன்னே பளிச்சென நிற்கின்றார். அவரின் மாண்புகளை விளக்க இருபது அல்ல இரு திருக்குறள்கள் போதுமானவை. அன்னார் கோண்டாவில் நெட்டிலைப்பாய் விநாயகரின் வடபால் உள்ள இராமாசி வளவில் பிறந்து அங்கு இளவயதில் தாய் தந்தையுடன் வாழ்ந்தவர்.
அவள் எனது உறவினர் என்பதில் என்றுமே எனக்குப் பெருமை. அமரர் அவர்கள் நெட்டிலைப்பாய் விநாயகர்பால் பெரும் பக்தி பூண்டவர். கடந்த வருட கொடியேற்ற உற்சவத்திலன்றும் வருகை தந்து எம்பெருமானை வழிபாடு செய்தவர். அவரது ஆத்மா நெட்டிலைப்பாய் விநாயகரின் செந்தாமரைமலர்ப் பாதங்களை அடைந்து சாந்தி பெறப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி: சாந்தி:
பைண் சென்ம்ைபா நடராசா (தினகரன் நாளிதழ் அலுவலக எழுத்தாளராக விளங்கியவரும், பாராளுமன்ற ஓய்வு பெற்ற சிரேஷ்ட ஹன்சாட் அறிக்கையாளரும்)
గల్కిళిegగా గత్కిegT గతిశegగా గతిజశST గతి
一 21 -

Page 15
பழுத்தபழம்
தீபாவளி நன்னாளில், அதிகாலையில் முற்றிப் பழுத்த கனி உதிர்வது போல இயற்கை யெய்தினார் இணுைவை சின்னத்தம்பி மகனார் முருகேசனார். தொண்ணனூறு ஆண்டுகள் நல்ல வண்ணம் வாழ்ந்து நிறைமொழி மாந்தராக மிளிர்ந்தார். பராராசசேகரப்பிள்ளைய்ார், இணுைவில் கந்தசாமி கோயில் பூசைகளில் தினமும் காலையில் அவரைக் காணலாம். இன்முகம், கமுகமாகப் பலருடன் பழகும் பண்பு, இன்னோரன்ன நற்குணங்கள் அவரை அணி செய்தன. ஆகவே அவருக்குப் பல வயதினரிடையேயும் நட்பு மிகவும் நெருக்கமாக இருந்தது.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்து ‘கேம்பிறிஜ் சீனியர்” சிறப்பாகச் சித்தி பெற்றதைக் கண்டு இணுைவில் கிராமம் பூரித்தது. ஆங்கிலம் தெரிந்த ஒருவர் ஊருக்கு நல்லதை எழுதும் கெளரவத் தொடர்பாளராக செயல்பட்டார். அவர் கற்ற கணிதம், விஞ்ஞானம் முதலிய பாடங்கள் அவரைப் பல துறைகளில் ஊருக்கு இலவச சேவையாற்றும் பணிக்கு உறுதுணை செய்தன. காணி அளக்க வேண்டுமானால் “அருளம்பல உபாத்தியாயர்’ என்னும் முருகேசனார் கட்டாயம் பங்கு கொள்வார். வியாபாரிகள் சிட்டை முடிப்பதற்கு இவரை நாடுவார்கள். பிணக்குகள் ஊரில் வந்தால், உத்தியோகப் பற்றற்ற நீதவான் அவர்தாம் வேண்டுமென்பார்கள்.
ஆரம்பக் காலத்தில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும், பின் தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும் கல்வி கற்பித்தார். அதனால் ஊரில் உபாத்தியார் என்னும் பெயர் நிலை நாட்டப்பட்டு விட்டது. இவரிடம் படித்தவர்கள் இன்று பேரன் பேர்த்திகளைக் கண்டு, பீட்டப்பிள்ளைகளையும் கண்டு விட்டார்கள். அப்படியிருந்தும் இன்றும் தாம் கல்வி கற்ற ஆசிரியர் இவர் என்று கூறி, ஆயிரம் கதைகள் பெருமையுடன் கூறுவார்கள்.
ஐக்கிய நாணய சங்கங்களில் வரவு செலவு எழுதுவதற்கு இவரின் சேவையை மக்கள் இலவசமாகப் பெற்றார்கள். இவரின் கணக்கெழுதும் திறமையைக் கண்ட

 ́Q19€Sg`
eles
RSDOegr
QØer
P-де-ego
109:-
யாழ் பிரப்பங்குளத்தை சார்ந்த கூட்டுறவு ஆணையாளர் திரு நடராசா இவரைக் கூட்டுறவுத் துறையில் பணிக்கு ஈடுபடுத்தினார். கூட்டுறவுத் துறையில் பலருக்கும் தெரிந்தவரானார். தமிழ் பிரதேசங்களில் அவர் வேலை செய்யாத இடம் எதுவுமே இல்லை என்லாம். மக்கள் பலரையும் அறிந்திருந்தார். எல்லோருக்கும் நல்லதைக் காட்டும் இனியவராக செயல்பட்டார்.
இராம இலட்சுமணர் இராமாயணக் காவிய நாயகர்கள், நாம் கண்ட நாயகர்கள் இவரும் இவர் தம்பி ஐயாத்துரையுமே. ஒருவருக் கொருவர் மிகவும் பாசமும் மரியாதையும். திரு.ஐயாத்துரை வைத்தியசாலைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு முன் காலமாகி விட்டார். இவர்கள் இணைவும் செயல் பாடுகளும் சகோதரர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நாம் பின்பற்ற வேண்டிய இலக்கணங்கள்.
அவருடைய அன்புக்குரிய முத்த மகள் திருமதி சோமேஸ்வரி கைலாசநாதன், இராமநாதன் கல்லூரி அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். முத்த மகன் சோமசேகரம் அரச சேவையிலிருந்த போது அமரத்துவம் அடைந்து விட்டார். அவருடைய மகன் நிமலன்முருகேசரின் பேரன்- கணக்காளராக “மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள்” நிறுவனத்தில் பணிபுரிகின்றார். இரண்டாவது மகன் திரு விஸ்வநாதன் அரச சேவையில் ஓய்வு பெற்று, ஓமானில் பணி புரிகின்றார். கடைசி மகன் திரு சோமாஸ்கந்த முர்த்தி ஜேர்மனியில் பணிபுரிகின்றார். அவருக்கொரு புதல்வர், அருணன், ஜேர்மனியில் படிக்கிறார். இரண்டாவது புதல்வி திருமதி ரேனுகா விவேகானந்தன் இலண்டனில் கணவருடன் வாழ்கின்றார். இவர்களுக்கு கெளசிகா மகள். நிசாகரன், ஹரிகரன் புதல்வர்கள். லண்டனில் படிக்கிறார்கள்.
திரு முருகேசனார் கரம் பற்றிய மனையாள் கனகம்மா முன்பே இறைவனடி சேர்ந்து விட்டார். இறையடி கண்ட இருவரும் தமக்கென்ற பரம்பரையை விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் தம் ஆசிகள் என்றும் தழைக்கும் குடும்பத்தினருக்கு உதவட்டும். உறவினர் ஓம் சாந்தி சாந்தி சாந்தி SLeeLeLMS SeeLeLMS SLLeLeeLLMS SLLeLeeLMS SLLeLeLLLLLLS SLSLLeLS
- 2 -

Page 16
Reles eeles eles eles 29-eg ego.
பிராந்திய இணைப்பாளா - பிராந்தியம் 9 (மாவட்டம் : 30டீே - இலங்கை) சர்வதேச லயன்ஸ் கழகங்கள் லயன் எஸ்.எஸ். தங்கராஜா அவர்களின்
() இரங்கல் செய்தி
எனது மரியாதைக்கும் அன்புக்குமுரிய பெரியார் திரு.சின்னத்தம்பி முருகேசு அவர்கள் எங்களை விட்டு மறைந்த செய்தி கேட்டு உண்மையில் மிகவும் துயருக்குள்ளாகினேன். சமயப்பற்றுள்ள பண்பான இப் பெரியார் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவர். இப்பெரியாரிடம் பழகும் சநீதர்ப்பம் சொற்ப காலத் தற்கு முன்னரே கிடைக்கப்பெற்றாலும் அவருடன் நட்புடனும் பெரிதும் மதிப்புடனும் பழகி வந்தேன். சிலகாலம் முன் அவரின் தொண்ணுைாறாவது பிறந்த தினத்தில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பமும் கிட்டியது. இணுைவில் லயன்ஸ் கழகத்தை ஸ்தாபிப்பதற்குக் கடும் முயற்சி மேற்கொண்டபோது இணுைவில் பகுதியில் தனக்குத் தெரிந்த பல பிரமுகர்களின் பிள்ளைகளை ஞாபகப்படுத்தி அவர்களையும் சந்திக்க ஆலோசனை வழங்கினார்.
அவர் ஒரு நாட்டுப்பற்றாளர். அத்துடன் இளகிய மனம் படைத்தவர் வயோதியகாலத்திலும் போர்க்கால சூழ்நிலையில் மக்கள்படும் அவலம் கண்டு மன வேதனை அடைவார். இப் பிரச்சினைக்கு எப்போ விடிவு கிடைக்குமென்று தன்னிடம் வரும் நண்பர்களிடம் வினவியபடியே இருந்தார். அவர் துய்மையான சைவப்பெரியார். தனது பிற்காலத்தை அமைதியாக இறைவழிபாட்டிலே கழித்து வந்தார். இயன்றவரை அண்மையிலுள்ள ஆலயங்களுக்கு சென்று வருவார். அவருக்கு உண்மையில் தெய்வத்தின் அருள் இறுதி நேரத்திலும் கிடைத்தது. ஏனெனில் இங்கிலாந்தில் வசித்து வந்த இளைய மகள் இவர் நோய்வாய்ப்பட்டுள்ளார் என
R
SLeLeLLLLSS SLeeLeLLLLSS SLLLeLLMS SLLeLeeLLLLLLS SLeAeLMS SSLLe0LS
一 24一
SF

அறிந்து இங்கு அவரைப் பார்க்க வர எண்ணியபோது வழமையாக பிரயாணங்களில் எத்தனையோ தடைகள் இருக்கின்ற இக்காலகட்டத்தில் மிகக்குறுகிய இரண்டு நாட்களில் வந்து சேர்ந்தது அவருக்கு ஆறுத்லாக இருந்தது.
இப்பெரியாரை இழந்து கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு இறைவன் மனஅறுதலை அளிப்பாராக. அவரின் ஆன்மா முத்திபெற ஆண்டவரைப் பிரார்த்திக் கின்றேன்.
*மருதமகால்" லயன் எஸ். எஸ். தங்கராஜா மானிப்பாய்.
LL LLL LLLL LL LLLLLLLLSLL LLLL LSL LLSLLLLLSLL LLLLSLLLSLSLLLLLSLLLLLSLL LSL SLSLS LLLLLLLLSS LS Y SLS0 S LSLS LS S LY TCLSSSLLLLSL SLLLLLLL YS EL BBSSSSS LLL LLL LLLL LSLLS LSLLLLL SMSLLSLS LSL LLLLL LLLLLLLLMLL LL LLL LLLLLLLLSL LLSLLLLLSLL LLLLSLLSSLSLLS
發黎豪拳 羲梁馨 濠殺崇 潑肇彰 拳嶺緣親
பிரபல்யம் வாய்ந்த நூல்கள் நூல்கள் ஆசிரியர்கள்
燃
பிக்மலியன். செயின்ற்ஜோன் ஜோர்ஜ் பேனாட்ஷோ ! பிரான்சியப் புரட்சி - தோமஸ் கார்லை கன்ரபெறி கதைகள் ஜியோபிறே சோசர் : றொபின்சன் குருசோ - டானியல் டிபோ டாஸ் கப்பிற்றல் - கார்ல் மார்க்ஸ் அர்த்த சாஸ்திரம் - கெளடிலிய சற்ரலி அம்மையாரின் காதலன் - D.H. லோறன்ஸ் :றுபியாற் - ஒமார் காயம்
சமூக உடன்படிக்கை - றுசோ கலிவரின் பயணங்கள் - யொநாதன் சுவிப்ற் : ; குடியரசு - பிளேற்ரோ
கீதாஞ்சலி - இரவீந்திரநாத் தாகூர் பஞ்சதந்திரக்கதைகள் - விஷ்ணுசர்மா சமூகத்தில் விஞ்ஞானத்தின் - பேற்ரன்ட் றசல் பிரபு :
தாக்கம்
1sbee.
 ́Q><9~~€SeG`
19-eg
re-ester
QØer
10. R.
M

Page 17
RIS-SC QS-OC, IS-SC IS-OC SS-O-O IS.
R
எமது கிராமத்தை அலங்களித்த மூதறிஞர்
உண்மை, சத்தியம், வாய்மை, மென்மை என்பன ஒரு பொருட் சொற்கள். வாய்மை என்பது மெய்யினது தன்மை என்றாகும். பிறவிப்பயன் மெய்யுணர்தல். மெய்யுணர்வதற்குக் காரணமாயிருப்பது மனத்துய்மை தனக்கும் பிறர்க்கும் தீங்கிழையாத தூய தன்மையுடைய ம னரி தர் க ளே மா னரி ட மி என ற துT ய இலக்கணத்துக்குரியவர்கள். இந் நெறியில் நின்று அகவை தொண்ணுாறு கண்டு அமைதி பெற்றவர் அமரர் பூரீ மான். முருகேசு ஐயா அவர்கள். வரலாற்றுத் திருவூர் இணுவில் கிராமம் இத்திருவூரில் மூத்த கல்விமானாக விளங்கியவர் அமரர் அவர்கள். நூற்றாண்டுச் சிறப்புடன் மிளிரும் தமிழர் தலைநிமிர் கலைக்கழகமாகிய யாழ் இந்துக்கல்லூரியின் வெள்ளி விழாக் காலத்து மாணவனாகக் கற்கும் பேறு பெற்றவர் இவர் இணுவில் கிராமத்திலிருந்து கால்நடையாக இந்துக் கல்லூரியில் கற்கச் சென்ற மாணவர்களுக்கு முதன்மை வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் இவர். ஆசிரியராக, கூட்டுறவு அதிகாரியாக, கல்வியால் உயர்ந்து சிறப்புப் பெற்ற இப்பெருந்தகை சிறந்த சேவையாளனாக விளங்கினார். கடவுள் பக்தியும் கருணையுள்ளமும் கொண்ட கர்மவீரர். தன்னை நாடிவருபவர்களுக்கு எல்லாம் அன்பும், அறிவுரையும், ஆறுதலும் வழங்கி ஆற்றுப்படுத்துவார். அன்று எழுத்தறிவு, ஆங்கில அறிவு நிறைந்தவர்கள் கிராமங்களில் மிகவும் குறைவாக விளங்கினார்கள். அவ்வேளையில் பலருக்கு கடிதம் எழுதுபவராக, மொழி பெயர்த்து விளக்குபவராக இவர் செய்த உதவிகளை இன்றும் மூத்தோர் வியந்து வாழ்த்துவதை யான் கேட்டிருக்கிறேன்.
அமரரின் குடும்பம் கல்விக் குடும்பம். தலை
மகனாக நின்று வழிகாட்டியதனால் அவரது சகோதரரும்
நல்நிலையில் வாழ்ந்து அமரத்துவம் பெற்றார். அமரரின் தலைமகள் புகழ்பூத்த இராமநாதன் கல்லூரியில் சிறந்த ஆசிரியராக, பிரதி அதிபராக, அதிபராக பதவி வகித்து இளைப்பாறியமை அமரரின் குடும்பச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். அவரது கணவன் திரு கைலாயநாதன் சிறந்த கடமை வீரன். சிறந்த சமூக சேவையாளன்.
SLeeLS SLeeeLMS SSLeeLLLLLLS SLLLeLeeLLLLLLS SLLLeLMS SSLLeLS
- 26 -
s

32-ec QOS-e8S Qe2-e4 e2-e4 QD2-se D2. R] அன்னாரின் தலைமகனின் திடீர் மறைவால் மிகவும் வருந்தியவர் இயற்கையின் முடிவை யார் வெல்ல முடியும் என அடிக்கடி மற்றவர்களுக்கு இதனை உதாரணம் கூறி ஆறுதல் செய்வார். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவரின் சிறப்பையும் கண்டு மிகுந்த திருப்பியுடன் இறுதிக் காலத்தைக் கழித்தார். எவரையும் இன்முகத்தோடு உபசரிக்கும் முருகேசு Igu u sT அவர்களுக்கு அருளம்பல வாத்தியார் என்ற நாமமே எம் ஊர் அழைக்கும் திருநாமம். எனது சிறிய பிராயம் முதல் எமது குடும்பத்தின் உறவு வழியைச் சொல்லி முதுகைத் தடவி உரையாடுவார். எனது வளர்ச்சிகளைக் கண்டு எவ்வேளையும் வாழ்த்திய வண்ணமிருந்தார். அவரிடம் பழைய வரலாறுகளைக் கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொள்வேன். மிகுந்த சுவையுடன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய வரலாறு, எமது கிராமத்து நிகழ்வுகளைச் சொல்வார். அவரிடம் இறக்கும் வரை ஞாபகசக்தி குறைவின்றியிருந்தது. அவரது பிள்ளைகள் போல் மருமக்களும் சிறந்த நற்பண்பாளர்கள். இவரது இளைய மருகர் திரு. க. விவேகானந்தன் இலண்டன் மாநகரில் இணுவில் திருவூர் ஒன்றியத்தின் தலைவராக விளங்கி இணுவில் பாடசாலைகள், கோயில்கள் அனைத்துக்கும் அரும்பணியாற்றி வருகிறார். முதல் முதலாக இணுவில் திருவூருக்கு சிறப்புச் செய்யும் வகை யரி ல "இணுவில தருவு, ர்" 6 6i B இணையத்தளத்தினை உருவாக்கி உலகளாவிய ரீதியில் இணுவில் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியவர்கள் விவேகானந்தன் ரேணுகா தம்பதிகளின் புதல்வர்கள். பேரப்பிள்ளைகளின் இப்பெருமைகளை இலண்டனில் நேரில் தரிசித்து ஒவ்வொரு தடவையும் இவ்விடம் ஐயா அவர்களுக்குச் சொல்லி மகிழ்ந்தேன். பெரிதும் உவகை கொண்டு விசாரணைகளைத் தொடுத்து யாவும் கேட்டு மகிழ்வார்.
பரராசேகரப்பிள்ளையாரின் மணிஓசை காதில் கேட்க வேண்டும் என்ற அவரது பேராவல் குறைவின்றி நிறைவு பெற மருகர் திரு.கைலாயநாதன் அவர்கள் ஏற் பாடுகள் செயப் து நிறைவாக அவரை வழியனுப்பிவைத்தார்கள். பழுத்த பழமாக எங்கள் கிராமத்தின் மூத்த g560)6OLD&E60Ts 85 விளங்கிய
SLe0L0 LLe0L0 L0eLLeLLLLLLS SLLLLLLL0 L0eeLLeLLL 00LL
- 27 -

Page 18
Roeg tea gas-e Zoeg 2-ea or
இப்பெருந்தகை இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற்றது மிகுந்த துயரை எமக்குத் தந்தது. என் செய்வோம் வாழ்வில் நிட்சயமான ஒன்று நிகழ்வது இயற்கை. அன்னாரின் பசுமையான நினைவுகளுடன் அவரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.
அத்திமுகவனை நித்தம் நினைப்பவர் சித்தி மகிழ்வோடு முத்தி பெறுவரே.
"LII6)T6” மருதனார்மடம், ஆறு. திருமுருகன் இணுவில்.
பூமியின் ஒரேயொரு துணைக்கோள் சந்திரனாகும்.இதன் ஈர்ப்பு விசை பூமியிலுள்ள ஈர்ப்புவிசையின்
1/6 பங்காகும்.
 

32-ear 32-ear 32-e6 32.ec. 32.ec. 32. ஆயிரம் பிறைகண்ட பெருமகன்
நெடிய உருவம், சிவந்த மேனி, சிரித்த முகம், நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லாருடனும் அன்பாகப் பழகும் பண்பு இவை யாவும் ஒருங்கே அமையப்பெற்று இணுவில் தெற்கு வன்னியசிங்கம் வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் அய்லவர் மெச்ச வாழ்ந்தவா திரு.சி. முருகேசு அவர்கள்.
இவரது தந்தையார் சின்னத்தம்பி அவர்கள் உருவத்தில் இவருக்கு நேர்மாறான உயரமும் பருத்த தேகமும் உள்ளவர். வஞ்சகம் என்பது அவர் நெஞ்சை ஒருபோதும் எட்டிப்பார்த்ததில்லை. திரு. சின்னத்தம்பி அவர்களின் தமையன் சுப்பிரமணியம் (சுப்பர்) அவர்களும் தம்பியார் அளவு தோற்றத்தையே ஒத்தவர். அதனாலோ என்னவோ இளையவரானசின்னத்தம்பிக்குச் “சின்னவர்” என்ற பெயர் ஊரிலே நிலைத்து விட்டது.
தந்தையாரின் பதிவுப் பெயர் ஒன்றிருக்க மற்றொரு பெயர் ஊரில் வழங்கியது போல் திரு.முருகேசு அவர்களின் பதிவுப் ஒன்றிருக்கப் பெற்றோர் அன்பாய் அழைத்த அருளம்பலம் என்ற பெயரே எல்லாருக்கும் தெரிந்த பெயராயிற்று. திரு.முருகேசு அவர்களது தொடக்கக் கல்வி இணுவில் அம்பிகைபாகர் வித்தியாசாலையில் ஆரம்பிக்கப் பெற்றது. பின்னர் ஆங்கிலக் கல்வியின் பொருட்டு யாழ் இந்துக் கல்லூரியில் தமது கல்வியை ஆங்கில மொழி மூலம் தொடர்ந்தார். அங்கு கேம்பிறிஜ் சீனியர் வகுப்பு வரை கற்று. அதில் தேர்ச்சி பெற்றர். பிரயாண வசதி குறைந்த அக்காலத்தில் இணுவிலிலிருந்து யாழ் இந்து வரை கால் நடையாகச் சென்று கற்றார் என்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒருவியப்பான செய்தியாகும்.
கல்வியில் ஊக்கம் காட்டாத அன்றைய காலகட்டத்தில் தூரத்தையும் பணச் செலவையும் பொருட்படுத்தாது கல்விகற்ற போதிலும் வேலை வாய்ப்பு மிகக் குறைந்தே இருந்தது.
எனினும் திரு.முருகேசு அவர்கள் படிப்பை நிறைவு
uuSYLLLLLk LLLk LLLLL LLLLLLLLM LLLLLL LLLLS Y
ar - E -

Page 19
KzL0LeLL SLeeeLeLLL SLLLLLLS LSLLLLLL SLLLLLS SLLLS
纳
செய்த பின், நண்பர் ஒருவரின் விதப்புரையின் பேரில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து தாவடி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையிற் சேர்ந்து சிலகாலம் ஆசிரியப்பணி ஆற்றினார். அவரது முதல் நியமனம் ஆசிரியப் பணியாக இருந்ததாலும் சொந்த இடத்தில் அவரது பெயர் அருளம்பலம் என்று வழங்கியதாலும் ஊரிலுள்ளார் அனைவரும் அவரை அருளம்பல உபாத்தியார் என்றே இறுதிக் காலம் வரை அழைத்தனர். ஆனால், அவரது நீண்டகாலப் பணியைக் கூட்டுறவுக்கே அர்ப்பணித் திருந்தார்.
இவர் கூட்டுறவுத் துறையில் அதன் பரிசோதகர் பதவி வகித்து, நாட்டின் பல பாகங்களிலும் முறைசெய்து நெறி நின்று பணியாற்றியதை எவரும் மறுக்க முடியாது. அயலவர், அறிந்தவர் என்ற வகையில் நோக்காது எவரையும் ஊக்குவித்து உயர்வடைதற்கு ஆலோசனை கூறிய உத்தமர் திரு. முருகேசு அவர்களாவர்.
உண்மை வழிநின்று ஒழுகுவோரை மனக் கோட்டமின்றிப் போற்றிப் புகழும் நற்பண்பு அவருடன் ஒட்டிப் பிறந்த குணம். இத்தகைய குணவான் இம்மண்ணில் தொண்ணுறு ஆண்டுகள் வாழ்ந்து, ஆயிரம் பிறை கண்ட பெருமகன். இவர் முதுமையுற்ற கள்லத்தும் சொல்தளர்ந்து, கோலூன்றி, முதுகு கூனித் திரியாது, நிமிர்ந்த நடையுடன் உலாவியதைக் கண்டோர்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவிற்கு அணியல்ல மற்றுப் பிற.
என்ற வள்ளுவர் வாய் மொழியை நினைவுகூர்ந்து இவருக்கு மரியாதை செலுத்தத் தவறுவதில்லை. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்த இப்பெரியாரது ஆன்மா பூரீ பரராஜசேகரப்பிள்ளையார் திருவடிகளில் அமைதிபெறப் பிரார்த்திப்போமாக.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
(83FT. ug DagFATLó ஒய்வுபெற்றபட்டதாரி மொழி பெயர்ப்பாளர். இணுவில் தெற்கு
O6.12.2001
SLeeLeLLeLLeLMS SeeLLeLeeLS SLeeLeLLMS SMe0LMS SSLL0eLeLLLLLLS SLLL0LLS
- 30؟ -
s

SlöGMTidLUGuo LDIITLIDIT
செய்தியை அறிந்ததும் அதிர்ச்சி, எதிர்பாராதது. அவரது வாழ்க்கை தூயது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்வதற்கு உரியது.
இளவயதில் மகன் சோமசேகரத்தின் மறைவு,தம்பி ஐயாத்துரை (பொன்னுத்துரை), அன்பு மனைவி கனகம்மாவின் இறப்புகள், சமீபத்தில் ஐயாத்துரையின் துணைவியின் இயற்கைஎய்தல் என்பன, அவரது இதயத்தைக் “கான்சர்” போன்று அரித்து வந்திருக்கிறது.
பிள்ளைகள் ரேணுகா, முர்த்தி, அண்மையில் ஒமான் சென்ற விசுவநாதன் குடும்பங்களின் பிறநாட்டு வாழ்க்கை, அவரது உளக் கலக்கத்திற்குத் தூபமிட்டிருக்கலாம்) அமரராகிவிட்டார்.
நான் ஆங்கிலம் கணிதம் பயிலக் குருவாயிருந்தவர். திருவாளர்கள் க.இரத்தினசிங்கம் (தபாலதிபர்) வ.சண்முக ராசா (கல்வி அதிகாரி), Dr. பொ.பாலசுப்பிரமணியம் (மலேசியா) இன்னும் பலர் எனக்கு முன்னமே அவர் வீட்டில் பயின்று வந்தனர், இந்த ரியூசன் தசாப்தங்களில் அவரின் தொண்டு தியாகத்தை மெச்ச வார்த்தைகள் பற்றா. முக்கியமாக ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமானது.
ஆசிரியராகப் பின் கூட்டுறவுப் பரிசோதகராகக் கடமையாற்றியவர். சாதாரண மக்களுக்கு வழங்கிய கூட்டுறவைப்பற்றிய விளக்கங்கள், செயல்முறை, அறிவுரைகள் அவர்களால் நினைவு கூரப்படுகின்றன. சிறுகைத்தொழில் மற்றும் கடைமுதலாளிகளுக்கு கணக்கு வைப்பு, கடிதத் தொடர்பு, ஒழுங்கமைப்பு, ஆலோசனைகள் வழங்கி அவர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர். பல விஷயங்களில் வழிகாட்டியாக இருந்தவர். சிறுசம்பவம் போதும் *கணேசன் ரேடிங் கொம்பனி உரிமையாளரின் தாயின் மரணத்துக்குப் பிந்திய இரு நாட்கள்
SMLeLeLeeLM ML0LLM MLLLLL MeeeLeLM MLeLeeLTS SMLLL0L
- 31 -

Page 20
f
SLLeLS SeLeeLMS SSLLeLLLLSS SLLLeeLeLM SLeeLSi SLLLeLeLS
நீர் போக வில்லையா? *இல்லை” எனது பதில் “இப்படியான சம்பவங்களுக்குப் போக வேணும். கவலையில் ஆழ்ந்தவர்களுக்கு ஆறுதல் தநம். கணேசன் உமக்கு துடக்கு உரித்தவராயிற்றோ?
தொடர்ந்து தெரியாத உறவுகள் பற்றிய கதை.
என்னைப் பொறுத்த வரையில் பெற்றோரின் மறைவுக்குப் பின், பாதித்தது மாமாவின் மறைவு. நாம் அன்பாக அழைப்பது ‘அருளம்பல மாமா” என்று, பின் தெரிந்த அவரின் சான்றிதழ்ப் பெயர் முருகேசு.
மனத்தாக்கத்துக்கு எமது கிட்டிய சொந்தமும் காரணமாகும். எனது சோதரன் கைலாசநாதனின் துணைவி சோமேஸ்வரி அவரது முத்தமகள்.
எனது பெரிய தகப்பனார் வல்லிபுரத்தின் மனைவி முத்துப்பிளைஅவரின் முத்த அக்கா. எனது ஐயா கயிலாயர் தம்பையாவின் மைத்துனர் என்ற உரிமையை பிறக்கும் பொழுதே பெற்றவர். எனது ஐயாவின் தாய் சின்னப்பிள்ளையின் தம்பி சின்னத்தம்பி அவர்கள், மாமாவின் தந்தையாவார். இளவயதிலேயே இறைசிந்தனையில் ஈர்க்கப்பட்டவர். பிந்திய காலத்தில் தினமும் ஆலயங்களைச் சரணடைந்தார்.
உயர்ந்த ஆன்மா என்ற நினைவு, சொந்தம் என்ற பாசம், விரும்பாத செய்தி. இதயப் பிழிவைத் தவிர்க்க முடியவில்லை. இதயத்தில் படரும் இரு குறள்கள்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்” (14-1) *வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.” (5-10)
தம்பையா கயிலாயர்
(குமாரசாமி)
:
D00LeL eLLeeeLeL eLL eLLeLeeLeLk eL0L0L L L0L
- 32 -

YLeeeLLLLLLS S SeLeLeLMS SLLLS SeLeeLM SLLLeeLLLLLLS SLLL0LLS
அன்பிற்கு மறுபெயர் அருளம்பம்ை
என்றும் சிரித்தமுகம் நடையில் கம்பீரம், பேச்சில் கனிவு, பார்வையில் பரிவு; இவர் தான் நான் சந்தித்துப் பழகிய அமரர் அருளம்பலம் அவர்கள். எனது மனைவியின் சிறிய தந்தையாராக அறிமுகமாகும் முன்பே இப் பெருந்தகையை கூட்டுறவு இயக்கம் முலம் அறியலானேன். கடமையில் கண்ணாய், எல்லோருடனும் பழகும் பண்பாளர் இவர்.
சிறந்த ஆசிரியராக, பண்பட்ட கூட்டுறவுப்
பரிசோதகராக, பின்பு திறம்மிக்க நிர்வாக செயலாளராக் இணுைவில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தமது மக்கள், மனையாளுடன் வாழ்ந்து வந்த இவர் தமது இறுதி நாட்களில் தமது முத்த மகளுடன் எமக்கு அருகாமையில் வசித்து வந்த காலத்தில் அவரது அன்பையும் ஆசியையும் பெறும் பாக்கியம் எமக்குக் கிட்டியது. தினந்தோறும் மாலை வேளையில் எமது இல்லம் வந்து எம்முடன் உரையாடுவார். அவருடன் கதைப்பது எமக்கு மிகவும் ஆனந்தம். குறிப்பாக எமது மக்களுக்கோ மிக மிக ஆனந்தம்.
சாந்தமே உருவான இப்பெருந்தகை துேபித்ததை நான் கண்டதே இல்லை. கோபமே தெரியா கிாமான் இவர்.
இவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நிற்கும்
-ததேவராஜா. இளைய்பாறிய பிரதிஅதிபர் றிசாலினி காங்கேசன்துறை வீதி, இணுைவில்.
05.12.2001.

Page 21
Teleg
QØSegr
Teleg
QØSer
*><3-Sé, “Qče.
உள்ளம் நிறைந்தவர்
அன்பினைப் பெய்து அகத்தினை வளர்த்த அன்பு மாமாஇன்றெம்முடன் இல்லையே! இன்ப துன்பங்கள் இரண்டையும் ஏற்று அமைதியில் வாழ்ந்த நல்லுள்ளமும், தன்னலம் இன்றிப் பிறர் நலம் பேனும் தகைமையால் நிறைவுற்ற வாழ்வும் அன்னவர் வடிவாய் உளங்களில் ஒளிர அவர் எமைப் பரிந்து சென்றாரே!
செப்புயர் சிறப்புகள் சேர் முருகேசராம் *அருளம்பலம்" எங்கள் மாமா, ஒப்பிலா அன்பும், தந்தையின் பண்பும் உறுதியும் கொண்டெமைப் போற்றித் தப்ய்ாது இணுைவைப் பரராஜசேகரப் பிள்ளையார் திருப்பதம் நாடி அப்பனாம் ஈசன் அடியிணை சேர்ந்தார் அவரை நாம் வணங்குவோம்.
ஆன்மா சாந்திபெறுக!
தர்மலிங்கம், சுசீலா பிள்ளைகள் (சென்னை)
హీరారారారాంశీ - 84 -

:
அன்பும் அரவணைப்பும்
*அன்பு" என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் செல்லித்தந்த என்னுடைய அப்பப்பா இன்று பாரினில் இல்லை. மிகச்சிறுவயதில் அப்பாவை இழந்த எனக்கு பேரனாய், தகப்பனாய், குருவாக இருந்தவர் என்னுடைய அப்பப்பா. அன்பாலும் அரவணைப்பாலும் இவர் எனக்கு எத்தனையோ முறை வழி காட்டியுள்ளார். என் நெஞ்சை விட்டகலா என் அப்பப்பா என்னை மட்டுமன்றி இன்னும் எத்தனையோபேரைத் தன் அன்பாலும், அரவணைப்பாலும் உயர் நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட மனிதநேயம் உள்ள மாமனிதர், நம்மை விட்டுப் பிரிந்தது, எனக்குத் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
பேரன்-சோ. நிமலன்
SSLL0LL LLLLL SL0LL SLL0LL SLL0LLLL L0L0S
:
హీరారాజారారా

Page 22
rolleg QS-Ser DSB-SS QSS QSD-Ser NSD
ஜயா உன்போல் இனியார் வருவார்:
வேரில்லா மரம் போலானோம். வேதனைத்தியில் வெந்தோம். சூரியன் கதிர்போல் அன்புச் சுடரொளி தந்த ஐயா! காரிருள் போகத் துன்பம் கவ்வுதுன் பிரிவால் இன்று பாரினில் இனி எமக்குப் பாசத்தைப் பொழிவார் யாரோ?
மருமகள்
५
மக்களைப் போல என்னை மாண்புற அணைத்த மாமா இக்கணம் உனையிழந்து இதயமும் விம்முதையோ? தக்கதோர் துணையாய் நின்று தந்தையாய் எமை நீகாத்தாய்.
(எக்) கணமும், நாம் மறவோம் உம்மை எவர் இனி வருவார் உம்போல்?
Inöbir
பிள்ளை என் நலனை வேண்டிப் பிரிந்து தாயகம் நீ சென்றாய் - என் பிள்ளைகள் நலனை நாடிப் பிரிந்துநான் இலண்டன் வந்தேன் எல்லைகள் கடந்து இன்று உனைக் காண வந்தபோது சொல்லொணாத்துயரிலாழ்த்திச் சொர்க்கம் நீ சென்றாய் ஐயா!
 

LLYLLLSLLLLLLM MLLeLeeLeLk TLLLLLLL LLLLLLLLeL LeeSLeLLLLLLL k LLLLLLLLS
சின்னவள் என்மேல் நீயும் சிந்திய பாசம் எண்ணிக் கண்களில் குருதி சிந்தும் கருத்திலே கொண்ட அன்பு உண்மை யென்றுணர்த்தத் தானோ உயிர்விடத் தண்ணீர் விட்டேன் மண்ணிலே சாய்ந்தாய். ஐயோ மனமெல்லாம் சாய்ந்ததையா!
பேரப்பிள்ளைகள்
பக்கத்தில் நீ இருந்து புத்திகள் சொல்லக் கேட்கும் பக்குவம் இன்றிநாமும் பதரென வாழ்ந்தோம், . இன்று பக்குவம் வந்தபோதோ. பாரினில் நீயும் இல்லை. இக்கரை வாடுகின்றோம். இனி எமக்கு ஐயா யாரோ?
நிலமிசை இனிமேல் வாழின் நீள் துயர் என்று. நீயும் அலகில் சோதியன் திருத்தாள் அணுகினாய் எம்மை விட்டு கலங்கரை விளக்காய் நின்று கருணையால் வளர்த்த ஐயா? உளமிசை உனையிருத்தி உலகில் நாம் வாழ்வோம் ஆணை.
ஆன்மா சாந்தியடையப்பிரார்த்திக்கும் அன்புமகள், மருமகன்,பேரப்பிள்ளைகள்.
ܚ 7 -
SMLeeLeLM MLLLLLL LLLLL SMeeLM SLLLeeLeLL SMee0L

Page 23
32.ec. 32.ec. 32-ear 32 leg 2-ear 32
எம் இனிய வழிகாட்டி
எமது பகுதியில் நல்லதை நினைப்பவர்கள் பலர். அவர்களுள் ஒருவராக விளங்கியவர் ஐயா என எல்லோராலும் அழைக்கப்படும் அமரர் சி. முருகேசு (அருளம்பலம்) அவர்கள். முன்று தலை முறையினர்க்கு அவர் வழிகாட்டியாக வாழ்ந்தவர். ஊரில் அவரை அறியாதவர்கள் யாருமிலர். சகல விடயங்களிலும் ஆழ்ந்த அறிவும் புலமையும் பெற்ற இவரிடம் பலரும் தமது சந்தேகங்களையும் குறைகளையும் கூறி ஆலோசனை கேட்பதை கண்டிருக்கிறேன். யாவருக்கும் தன்னாலான அறிவுரைகளை அன்புடன் கூறி வழிப்படுத்தி விடுவார்.
அமரத்துவமடைந்த ஐயா அவர்கள் கடவுள் பக்தரியுடையவர். நாள் தவறாமல் பரராஜ சேகரப்பிள்ளையாரையும் கந்தனையும் வழிபட்டு விட்டே தன் கருமங்களை ஆற்றத் தொடங்குவார். தன் குடும்பத்தினர்க்கும் அயலவர்க்கும் தன் கிராமத்திற்கும் தன்னாலான உதவிகளையும் அறிவுரைகளையும் வழங்கிய வழிகாட்டியை இழந்தமை எம் அனைவருக்கும் பேரிழப்பாகும்.
அவர் நினைவு என்றென்றும் எம்
:
ச.சிவனேஸ்வரன் அதிபர், யா சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி
ற Աք6! 盎郎
Y
SLL0LeLL S SLLLL0LLLLLL SLLLLLL SLLLLLLLL S0LLLLLLLLM SL0D
- 38 -
 

32.ec. 32.ec. 32.ec. 32.ec. 32.
இரங்கற் செய்தி
இணுைவில் அரிமாக் கழகத் தலைவர்லயன் T. கைலாசநாதன் மாமனாரும் லயன் சீமாட்டி சோமேஸ்வரி கைலாசநாதனின் தந்தையாருமாகிய அமரர் சின்னத்தம்பி முருகேசுவின் நினைவு மலரில், அவர் இறை பதம் அடைந்த செய்திக்கு அனுதாபம் தெரிவித்தும் அவர்தம் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல பரிபூரணனை இறைஞ்சுகிறோம்.
அமரர் அரிமாக்களின் தன்னலமற்ற சேவையில் மிகவும் அக்கறையும், விசாரணையும் ஊக்குவிப்பும் உடையவர். இனியவர். பண்பாளர் நல்லவர் வல்லவர். அனுபவத்திலும் வயது முதிர்ச்சியிலும் பழுத்த பழம். எங்களுக்கும் ஊருக்கும் சிறந்த வழிகாட்டி. கூட்டுறவாளர். ஆசிரியத் தொழிலுக்கு இலக்கணம். அவர்தம் இழப்பு எங்களுக்கு நட்டம். ஆயினும் முக்திப்பயணத்தில் அவர் தம் ஆத்மா சாந்தி பெறுகிறது.
சாந்தி சாந்தி சாந்தி!!!
கலாநிதி. தா. அமிர்தலிங்கம். செயலாளர், லயன்ஸ் கழகம், இணுைவில்.
நல்ல நாளை அமைய இன்று சேவையாற்றுகிறோம்" "We serve today for a better tomorrow
:
SLLeLLLLSS S SLLeLLMS SeeLeLLLLSS SLLeeeLLM SLLLeLeLLLLSS SLLALLS
- 39 -

Page 24
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி சுகவாழ்வு பெறுவோம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான ஆலோசனைகளும் நடவடிக்கைகளும்.
நீரிழிவு நோயைக் குணப்படுத்தவோ அல்லது வராமல் தடுக்கவோ முடியாது. இதனால் நோயைக் கட்டுப் பாட்டின் கீழ் வைத்திருப்பதி லேயே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
எப்போதும் இரத்தச் சீனி மட்டத்தை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது முக்கியமாகும். கண், சிறுநீரகம், நரம்பு கள். மூளை என்பவற்றிற்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான ஒரே வழி இரத்தச் சீனி மட்டத்தை கட்டுப் படுத் துவதாகும் . இதை அடைவதற்கான சிறந்த வழி கட்டுப்படுத்திய உணவை உண்ணுதலாகும்.
சிலர்கட்டுப்படுத்திய உணவை உண்பதன் மூலம் LDL (6LĎ தங்களது நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். வேறு சிலருக்கு மருந்துகளும் இன்சுலினும் தேவைப்படலாம்.
கட்டுப்படுத்திய உணவை உண்பதன் மூல காரணம் குருதிச் சீனிமட்டம். குருதியில் உள்ள கொலஸ்ரோல் அளவு, அவரின் உயரத்திற்கேற்ற நிறை என்பவற்றை சரியான அளவில் பேணுவதாகும்.
இதனைப் பின்பற்றுவதன்மூலம் அவர் பட்டினியாக மாட்டார். அவரிற்குச் சரியானஅளவில் உணவுச் சத்துக்கள், விற்றமின்கள், கணிப்பொருள் என்பவை நாள் முழுவதும் கிடைக்கும்.
சிபாரிசு செய்யப்பட்ட உணவு கட்டுப்பாட்டு திட்டத்தின் முக்கியமான அங்கங்கள். அ) சீனியுள்ள உணவை உட்கொள்ளாதிருத்தல் ஆ)அதிகளவுநார்ச்சத்து உள்ள மாப்பொருள்
உணவுகளை உட்கொள்ளல். இ)குறைந்தளவு சத்துள்ள, குறைந்தளவு
கொழுப்புள்ளஉணவை உட்கொள்ளல்.
SLLLeSeeLSLLL SLLeLeeLeeeLLLLLL L0LLeeeLLLLL LLLeeLeLeLeeLLLM SLeeeLeLLYLeeeLS
- 40 -
 
 

அ) சீனியுள்ள உணவை உட்கொள்ளாதிருத்தல்.
இங்கு சீனியென்று குறிப்பிடுவது குளுக்கோசு சாதாரணமாகபாவிக்கும் சீனி, சர்க்கரை, UT600s என்பனவாகும் . இவ் வகையான உணவுகளை உட்கொள்ளின் அவை இலகுவாக குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தச் சீனி அளவை அதிகரிக்கும். இவற்றை சிறிதளவில் எடுப்பதும் நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டிற்கு நல்லதல்ல. ஆகவே நீங்கள் இவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
பலருக்குச் சீனியில்லாமல் தேநீர், கோப்பி என்பவற்றை அருந்துவது கடினமாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இவர்களுக்கு செயற்கை முறையில் செய்யப்பட்ட இரசாயனப் பொருட்கள் கடைகளில் உண்டு. இவை நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
சொக்லேட், ஐக்கிறீம்,கேக் என்பவற்றைத் தயார் செய்யும் போது சீனி சேர்க்கப்படுகிறது. எனவே இவ்வகையான உணவுகளைத் தவிர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். கடைகளில் செயற்கையாக செய்யப் பட்ட இனிப்பூட்டும் இரசாயனப் பொருட்கள் கொண்ட உணவுகள் உள்ளன. இவைகுளுக்கோசைக் கொண்டிரா. இவை நீரிழிவு நோயாளிகளிற்கென்று செய்யப்பட்டவை யாகும். இவை இரத்தச்சீனி மட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் போது உட்கொள்ளப்படக் கூடியவை என்பதால் இவை பெரிதளவும் நீரிழிவுநோயாளிகளால் விரும்பப்படுகிறது.
மதுபானத்தில் அதிகளவு சக்தி (கலரி) உள்ளது. இதில் எதுவிதமான உணவுச்சத்துகளும் இல்லை. ஆனால் இதில் அதிகளவு கலரி (சக்தி) இருப்பதால் இது உங்களது நிறையை அதிகரிக்கச் செய்யும். சில வகையான பியர், கசிப்பு, சாராயம், திராட்சைரசம் என்பவற்றில் சீனி உண்டு. இதனால் மதுபானம் அருந்துதல் நீரிழிவு நோய்க்குப் பாதகமானது. மதுபானம் உங்களது பசியைக் கூட்டுவதால் உங்கள் உணவை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். இதனால்

Page 25
Roeg Yabeg Yable aeg able gap.
மதுபானத்தை தவிர்த்தல் நல்லதாகும்.
ஆ) அதிகளவு நார்ச் சத்து உள்ள மாப்பொருள் உணவை
உட்கொள்ளவும்.
முன்னர் சிறிதளவு மாப்பொருள் மட்டுமே உணவில் அனுமதிக்கப்பட்டது. நார்ச்சத்து அதிக மாப்பொருள் உண்ணுவதானால் அதிகளவு உணவு உட்கொள்ளலாம். நார்ச்சத்துக்களின் பயன்களாவன.
1. நார்ச்சத்துக்கள் மாப்பொருளிலிருந்து உருவாகிய குளுக்கோசை மெதுவாகவும் ஒரே சீரான அளவிலும் உணவுத் தொகுதியிலிருந்து இரத்தச் சுற்றோட்டத்தினுள் உறிஞ்ச உதவும்.
2. நார்ச்சத்துக்கள் உங்கள் உணவின் பாரத்தைக் கூட்டுவதால் இலகுவாக சிறிதளவு உணவுடனேயே பசியைத் தீர்ப்பதுடன், மலச்சிக்கலையும் தடுக்கும். உங்களுக்கு மீண்டும் பசி ஏற்பட நீண்ட நேரம் எடுக்கும்.
நார்ச்சத்துக்களுடைய மாப்பொருள் கொண்ட உணவுகளிற்கு சில உதாரணங்கள்.
சிவத்த அரிசி, சிவத்த அரிசிமா, குரக்கன்மா, உளுத்துமா, பயறு, கடலை, சோயா தானியங்கள், சிவத்த அரிசிமா, குரக்கன்மா என்பவற்றினால் செய்யப்பட்ட அப்பம், பிட்டு, இடியப்பம், ரொட்டி
தீட்டிய அரிசியும் தீட்டரிசிமாவும் தவிர்க்கப்பட வேண்டும். நார்ச்சத்துடைய மரக்கறி வகைகளை போதியளவு உண்ணுதல் நல்லது.
இ) குறைந்த சத்துள்ள குறைந்தளவு கொழுப்புள்ள
உணவை உட்கொள்ளல்.
சாதாரணமாக நீரிழிவு நோயுடையவர்கள் அதிக பாரம் உடையவர்களாக இருப்பதால் குறைந்தளவு
ܕ ` ̄ ؟
SLLALLLLLLLS SLLLeLLLLSS SLLLeLeeLMS SSLLeLMS SSLesALMS SSLeLeeLS
- 42 -

சத்துள்ள உணவை உட்கொள்ளவேண்டும். இதனை கொழுப்பைக் குறைவாக உண்பதன் மூலம் சாதிக்கலாம். இரண்டு வகையான கொழுப்பு வகைகள் உண்டு. இவை விலங்குக் கொழுப்பு(மாமிசம்), தாவரக் கொழுப்பு என்பவையாகும். விலக்குக் கொழுப்பும் தேங்காய் எண்ணயில் உள்ள கொழுப்பும் உங்கள் குருதியில் உள்ள கொலஸ்திரோல் அளவைக் கூட்டுவதன் மூலம் மாரடைப்பை ஏற்படுத்துவதால் அது உங்களுக்கு நல்லதல்ல. எண்ணெயில் பொரித்த அல்லது எண்ணையில் பிரட்டிய உணவுகளைத் தவிர்க்கவும்.
எனவே ஆடை நீக்காத பால், சீஸ், பட்டர், முட்டை மஞ்சள் கரு, பன்றி இறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் என்பவற்றை உட்கொள்ளாமல், ஆடைநீக்கியபால் என்பவற்றை உட்கொள்ளவும்.
நீரிழிவு நோயாளிகள் ஒரு வாரத்திற்கு மூன்று முட்டைகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். முட்டை வெள்ளைக் கரு எவ்வளவு வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.
கோழி இறைச்சி, மீன் என்பவற்றை உடகொள்வதன் (p6)b நீங்கள் உங்களுக்குத் தேவையான விலங்குக்கொழுப்பைப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றை உட்கொள்வதன் மூலம் தேவையற்ற கொழுப்பு உடம்பில் அதிகளவில் சேர்வதைத் தடுக்கலாம்.
மேற்குறிப்பிட்டவாறு தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு விலங்குக் கொழுப்பைப்போன்றது. எனவே தேங்காய் எண்ணெயைப் பாவிப்பதை குறைத்துக் கொள்ளவும். தேய்காய் எண்ணெயைப் பாவிப்பதை விட நல்லெண்ணையை அல்லது சோள எண்ணையைப் பாவிப்பது சிறந்தது.

Page 26
gear goeg 2-eg gear goeg or
பழங்கள்
எல்லாப் பழங்களும் தேவைக்கேற்ற அளவில் உண்ணலாம். பழங்களில் உள்ள பிரக்ரோசு இலகுவாக குளுக்கோசாக மாற்றப்படமாட்டா என்பதனால் இவை நீரிழிவு நோயாளிகளிற்கு பாதகமானவை அல்ல.
பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் குளுக்கோசு உணவுத் தொகுதியிலிருந்து குருதிச் சுற்றோட்டத்தினுள் உறிஞ்சப்படுவதைக் குறைக்கும். எனவே போதியளவு பழங்களை எந்த உணவுடனும். நீங்கள் உட்கொள்ளலாம்.
மரக்கறி
மரக்கறி வகைகளில் பழங்களைவிட அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் அவற்றைப் போதியளவில் உட்கொள்ளவேண்டும். பீட்றுட், சீனி உருளைக்கிழங்கு, பூசனிக்காய். கரட் என்பனவற்றைக் கூட சிறிதளவில் உட்கொள்ளலாம். ஏனெனில் இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் குளுக்கோசு உறிஞ்சப்படுவதை வெகுவாகக் குறைக்கும்.
சோற்றிற்குப் பதிலாக நார்ச்சத்துக்கூடிய மரவள்ளி. கிழங்குவகை பலா என்பவற்றை உண்ணவும். உங்களுக்குப் பொருத்தமான உணவு உங்களுடைய வைத்தியருடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானிக்கப் பட வேண்டும்.
 ́Q13eèg` 1Q9eSeg`  ́Q19eg`  ́Q89eSeg`  ́Q19-eèg`  ́Q19
- 44 -

இலங்கை தொடர்பான முக்கிய தகவல்கள்
தேசியப்பறவை - காட்டுக்கோழி தேசிய மலர் - நீலோற்பலம் புனித மரம் - வெள்ளரசு தேசிய விளையாட்டுக்கள் - எல்லே, கரப்பந்தாட்டம் தேசிய கீதம் இயற்றியவர் - ஆனந்த சமரக்கோன் மிகப்பெரிய ஏரி - சேனநாயக்க சமுத்திரம் பிரதமரின் வதிவிடம் - அலரிமாளிகை சபாநாயகரின் வதிவிடம் - மும்தாஜ்மகால் ஜனாதிபதியின் வதிவிடம் - ஜனாதிபதி மாளிகை இலவசக்கல்வியை அறிமுகப்படுத்தியவர் - கன்னங்கரா இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது - 1945ல் முதன்முதலாக அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது - 1857 குறுகிய காலம்பிரதமராக பதவி வகித்தவர் -
சந்திரிக்கா குமாரணதுங்கா குறுகிய காலம் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் - விஜயதுங்க பல்கலைக்கழகத்தின் முதல்துணைவேந்தர் - சேர் ஜவர் ஜெனிவ்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றிய முதல் இலங்கையர் - சேர் நிக்கலஸ் ஆட்டிக்கல மிகநீளமான பாலம் - புங்குடுதீவு வேலணைப்பாலம் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி - ஜெயவத்தன முதல் ஜனாதிபதி - வில்லியம் கோபல்லாவ தனிச்சிங்களம் சட்டபூர்வமாக்கப்பட்டது -05.06.1956 இலங்கை குடியரசானது - 22.05.1972
حتھ عوSھڑ &کھچNaبھیخوجی پیم۔
படகு தண்ணிரில் இருக்கலாம். ஆனால் தண்ணிர் படகுக்குள் நுழையக்கூடாது. மனிதன் உலகத்திலே வாழலாம் ஆனால் உலக ஆசை அவனிடத்தில் இருக்கக்கூடாது.
حسندھ عبڑھ &کھچیNéبھی چھپی۔
ஒருவன் எப்போதும் உண்மையிலேயே பேசுகின்றவனாக இருந்தால் அல்லாமல் உண்மையே உருவான இறைவனைக்

Page 27
நற்சிந்தனைகள் நாடெல்லாம் செந்நெல் விளையினும் நதியெல்லாம் நவமணிதரினும் காடெல்லாம் (காய்திடலும்) விளையினும் மேகம் கனகமே பொழிந்து இடினும் ஆடலே புரியும் அம்பலவாணன் அவர் அவர்க்கு அமைத்ததே அல்லால் வீடெல்லாம் கிடந்து புரண் டழிந்திடும் விதியல்லால் வேறு மென்று உளதோ,
*Brðfryid
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். டென்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு. எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நீ கொடுத்தாயோ, இது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று டென்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
Ripetsst 2265
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல - உற்றப் பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டிற் சதமல்ல பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்தின் யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி ஏகம்பனே.
- 46 -
 


Page 28
எமது குடும்ப T உயிருக்கு முருகேசு அவர்க
បញ ម៉ែត្រូព៌ា) சடங்கில் கலந்து பங்குகொண்டோரு
பத்திரிகை மூலம் செலுத்தியோர்க்குப் ៣៣តថាលត្តា ចុះញ៉
மற்றும் அந்தியே முதலான ஆத் பங்குகொண்ட 5600TLJT 567, 9. இவ் இதழை குறு அச்சீட்டுத் தந்த நிறுவனத்தினருக்கு
Printed By Ha 424A, K.K.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தின் ஆணிவேராக ரான திரு சின்னத்தம்பி ளின் இறுதிச்சடங்கின் பருகைதந்து, இறுதிச்
கொண்டு துயரமதில் க்கும் துண்டுப்பிரசுரம், கண்ணிர் அஞ்சலி
மலர் வளையங்கள், அஞ்சலித்தோருக்கும், ட்டி சபிண்டீகரணம் sollhéé éffsDIUSßfab உற்றார், உறவினர், லவர் ஆகியோருக்கும் கிய காலத்தில் அழகாக றரிகனன் பிறிண்டேர்ஸ் ம் எமது இதயங் கலந்த
rikanan Printers, S. Road, Jaffna.