கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995

Page 1


Page 2
to N.
CULF
PRR
POATWA
おふ島喜S
' ' . M N. RINN
мм. \ sAAAAR yayuniya
Manchehiukkade Yrr
†፥ A ነ
t Ꭿ ↑
leis, rhair ... *s N G A
JAFF NA'd)8y Ald T
•
4. Milwroyw
Www Yulsivw
AWATTWu Tric Y ۶ رش^
t تیره - --
Ít viNóE
o oerfecT .
l
)
tu P RovIN
Andy D
*、
OOTNICY •
-$ot
1, EASTERN" PR
سمیہ
Sι , A NKA
PROWNCas And STRCTS
N
f 2 ... A /* AMPARAI osv ni Y
Mrgva i Mashad by Anna Apament Vir Mai
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை மனித உரிமைகள் நிலை 1995
சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் 3, கிண்சி ரெறஸ் கொழும்பு 8 இலங்கை

Page 3
( சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலை
31 மார்கழி 1996
ISBN 955 - 9062 - 43 - 3

விடயங்கள் சமர்ப்பித்தோர்
சுருக்கநோக்கு எலிஸபெத் நிசான்
நபரின் நன்மதிப்பு எலிஸபெத் நிசான்
அவசரகால ஆட்ச சூரியா விக்கிரமசிங்க
தொடர்பு சாதன மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தீபிகா உடகம
மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு சுமுது அத்தபத்து / மெனிக் அமரசிங்க
தொழிலாளர் உரிமைகள்
தொழிலாளர் பட்டயம் பிராங்கிளின் அமரசிங்க
தொழிற் சங்கங்கள் ரமணி முத்தட்டுவேகம
பெருந்தோட்டத் தொழிலாளர் பி. மாணிக்கம்
சிறுபான்மையினர் உரிமைகள் கன்யா சாம்பியன் ܚ
சிறுவர்களின் உரிமைகள் ரமணி முத்தட்டுவேகம
சுகாதாரத்துக்கான உரிமை ஹெமமால் ஜெயவர்த்தன
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மாறியோ கோமஸ்

Page 4
பதிப்பு மேற்பார்வை எஸ். அன்ரனி நோபேட்
நிர்வாகி டமாறிஸ் விக்கிரமசேகர
ஒப்பு நோக்குனர் தர்ஷினி சிவநாதன்
முலாதார உதவி
திலகா பெர்னாண்டோ: சுமுது அத்தபத்து சங்கீதா நேசையா மெனிக் அமரசிங்க: தர்வழினி சிவநாதன், மஞ்சுளா சொய்சா; தேவாம்பிகா கருணசேகர மத்தியூ ஸ்ரான்ஸ், நிமல்கா பெர்னாண்டோ என்.ஜி.ஓ. கொன்சோட்டியம் என்.ஜி.ஓ. போரம், எஸ்.ஈ.டி.ஈ.சி. ஐ.சி.ஆர்.சி, சர்வதேச மன்னிப்புச் சபை, யு.என்.எச்.சி.ஆர்: யுரி.எச்.ஆர்; சி.ஆர்.எம். எச்.ஆர்.ரி.எவ். ஐ.எச்.ஆர். இன்போர்ம், எச்.எச்.ஆர். சி.எஸ்.எச்.ஆர். நடேசன் நிலையம்.
அட்டை கேகாலை பாலிகா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த வை.ஏ. நிரஷா டீப்தி சுரேஷினி என்பவரினால் வரையப்பெற்ற இச் சித்திரம் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையத்தினால் "மனித உரிமைகளைப் பாதுகாத்தல்" என்ற பொருளில் நாடளாவியரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பரிசைப் பெற்றுக்கொண்டது.
அச்சுப்பதிவு யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
 


Page 5
·s-ışırıņoog)sesség) Ệo1@rnŲ@$±ųTI QosnőIĘılırī£)||1$$ự Tīriņ@@@TI@ığıốì)& Qoyo@un.oņņ91ĝo, GÜÇ919 „Q9$ $ Los@ırı Çılı909930109ųI-ā ĢĒĻ9qI, “Qolsnīgo so sposòqoqoqo llae—ılın QQ909ĝi-Ido@ ₪ 119ų9-ā qisĒĢĒRođùđĩ)g)īgi‘Q91||09ĢĒĢĒTnQ909 ĝisŪG 1991.GI@ąos@@qofi) o qi@@@@TIÐ qī£1$$ự ș@ InŲs@spieļrı GÜÇİrle) sırms@919 Q91||Gog|floriņ919 Q196||gogio ĢqÎ111$ 1.09 0199 og oso Togo sąsųog) çmgolyısēņog søslēs@quoĝis? 'Q9191 In


Page 6
off-ı Zırısı@@@@@@@g) $ouổrnųo) pogri Qognós Tung) sıús ĝis — Zīriņ@@@rī£) (giốī)&Q9ųı9@ Ufilo) Tīļoloto) sūış919 „Q9$$1o1@ırı sılı909&oldog, såsoon, qeųn-ige ogs)grecoup-uri [109 go los (I do sēj119 119 Tổợn sẽ gắng đù đì) @ ugiQ9 u 109 gỗ sẽ troo ɗo ngũ sĩ Kỳ 1991/01@offosofi) e qi@@@@-ızıp qıños qặp gỡ rng@ppgiri{īgŪTiso) sarnúcoorte Q91||Gog|f(origolo Us@s19 loĝoj 199f@ @ąjįog) çmuo yısēņos sesso sẽạloĝigo aelom

பொருளடக்கம்
முன்னுரை
1. சுருக்க நோக்கு 1 - ܗܝ
1. அறிமுகம் 2. 1995 இல் அறிமுகப் படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் 3. 1995 இல் பின்னுறுதிப் படுத்தப்பட்ட
2.
3.
4.
சர்வதேச மனித உரிமை நியமங்கள் அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான முன்மொழிவுகள் இவ் அறிக்கையில் முன்வைக்கப்படும் ஏனைய விடயங்கள்
ஒரு நபரின் நன்மதிப்பைக் கெளரவித்தல் -- 13
அறிமுகம் வாழ்வதற்கான உரிமையின் மீறல்கள் காணாமல் போனோர் கட்டுப்பாடற்ற கைதுகளும் தடுத்து வைத்தலும் சித்திரவதை மனித உரிமைகள் குழுவின் கருத்துக்களும் பரிந்துரைகளும்
அவசரகால ஆட்சி -- - 25
கைது செய்தலும் தடுத்து வைத்தலும் ஏனைய புதிய ஒழுங்கு விதிகள் ஏனைய ஒழுங்கு விதிகளும் அறிவித்தல்களும் செய்தித்தணிக்கை பிணக்குகளை அறிக்கைப்படுத்தல் செய்தித்தணிக்கை பற்றி ஒழுங்கு விதிகளிலுள்ள விநோதங்களும் குதர்க்கங்களும் அவசரகால ஒழுங்கு விதிகளைச் சகலரும் அறியச் செய்வதில் தோல்வி
பின்னிணைப்பு "அ"
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும்
தொடர்புசாதனச் சுதந்திரமும் - 40
1. அறிமுகம் 2. சட்டவரைவமைப்பு 3. இலங்கையில் பொதுசன தொடர்புசாதனத்தின் இயல்பு
... O
6() - ܝ
- ()7
. ()8
()
- 3
6
- 18
---. 9
- 22
- 23
- 26
- 30
- 34
- 34
- 36
37
38
- 39
40
- 40
- 43

Page 7
5.
7.
நடைமுறையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தொடர்புசாதன சீர்திருத்தங்களின அமுலாக்கம் தொடர்புசாதன ஆளணியினரின் முனைப்புக்கள் முடிவுரை
மனித உரிமைகளின் நீதிமுறைப்பாதுகாப்பு -- 56
அரசியல் யாப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் --
. 57
வழக்குச் சட்டம்
இழப்பீடுகள் முன்மொழியப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தில் அதன் தாக்கமும் முடிவுரை
தொழிலாளர் உரிமைகள் 634 - س
i
தேசிய தொழிலாளர் பட்டயம் தொழிற்சங்க உரிமைகள் இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளரும் மனித உரிமைகளும்
சிறுபான்மையினர் உரிமைகள் -- 78
i.
2.
8
அறிமுகம்
எல்.ரி.ரி.ஈ உடன் தோல்வியடைந்த அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்தின் அதிகாரப் பரவலாக்க முன்மொழிவுகள் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதிக்கும் ஏனைய முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் அரச கரும மொழிகள் ஆணைக்குழு பன்மைத்துவத்திற்கான அரசாங்கத்தின் கடப்பாடு கல்வி
முடிவுரை
8. சிறுவர்களின் உரிமைகள் -- 84
அறிமுகம் போர்ச்சூழலில் சிறுவர்கள் Ft. L. Frá(|bgi,Stö
- 4.4
56
6
62
- 62
- 64
- 67
7
- 78
- 79
- 79
- 8
- 81
- 82
8
2
- S4
- 84
- 88
சிறுவர்களின் உரிமைகள் பற்றிய குழுவின் கருத்துக்கள் -
முடிவுரை
சுகாதாரத்துக்கான உரிமை -- 9:5
.
2
அறிமுகம் பொதுவான பிரச்சினைகள்
9
93
95
96

3. விசேட பிரச்சினைகள் 4. முடிவுரையும் பரிந்துரைகளும்
10. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்
அறிமுகம் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்திலிருந்து மக்களின் வெளியேற்றம் நிவாரண நடவடிக்கைகள் சுதந்திரமான நடமாடலும் தங்கியிருப்பதற்கான உரிமையும் 6. சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டுக்கும்
தகவல்களுக்குமான உரிமைகள் 7. ஒன்றிணைதல் சுதந்திரம் 8. உள்நாட்டில் இடம்பெயர்ந்த பெண்கள்
(Upigongo0U
உசாத்துணைகள்
--11
-- 117
- 05
- 1)
- 2
- 3
- 4
- 4
- 5
- 5
6

Page 8
முன்னுரை
இவ் அறிக்கை இலங்கையில் மனித உரிமைகளின் நடைமுறை நிலைமையை விளக்குவதாக இருப்பதுடன் இலங்கை தனது பிரசைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கடமையினை நிறைவு செய்வதில் சர்வதேசக் கடப்பாடுகளுடன் எந்தளவிற்கு இணங்கிச் சென்றுள்ளது என்பதையும் மதிப்பிடுகின்றது. எனவே இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாகச் சில முக்கிய அம்சங்களை இவ் அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்கள், சட்ட ஆக்கங்கள். அடிப்படை உரிமைகளின் செயற்பாடு, நடைமுறையில் அவற்றின் அமுலாக்கம் பற்றிப் பரிசீலனை செய்யப்படுவதுடன் அவைகள் கொண்டுள்ள வரையறைகளின் தாக்கங்களும் ஆராயப்படுகின்றன. இவ் அறிக்கை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைக் கவனத்திற் கொண்டு நபரின் நன்மதிப்பு. கருத்து வெளிபாட்டுச் சுதந்திரம், மனித உரிமைகளின் நீதி முறைப் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமைகளின் செயற்பாடுகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகின்றது. சமுக, பொருளாதார உரிமைகள் பற்றிய விடயத்தில் தேசிய தொழிலாளர் பட்டயத்தினைக் கோடிட்டுக் காட்டும் தொழிலாளர் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள். பெருந்தோட்டத் தொழிலாளரின் உரிமைகள், சுகாதார மற்றும் மனித உரிமைகள் போன்றன இவ் அறிக்கையில் ஆராயப்படுகின்றன. மேலும், சிறுபான்மையினர் உரிமைகள், இடம்பெயர்ந்த நபர்களின் நெருக்கடி நிலைமைகள். சிறுவர்களின் உரிமைகள் என்பவற்றுக்கு தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவ் அறிக்கையின் உருவாக்கம் சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையத்தினாலேயே ஒருங்கிணைக்கப்பட்டது. பொருத்தமான விடயங்களில் விசேட தகைமையைக் கொண்ட தனி நபர்களுக்குத் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவற்றின் செம்மை, நோக்கு விடயத்தெளிவு என்பவற்றைப் பரிசீலிப்பதற்காக மீள்பார்வை செய்யப்பட்டது. அதன் பின்னர் முடிந்தளவிற்கு அணுகுமுறையிலும், மொழி நடையிலும் ஒரே சீரான போக்கு அமைய வேண்டுமென்பதைக் கருத்திற்கொண்டு வரைவுகள் ஒன்று சேர்க்கப்பட்டு விரிவாகத் திருத்தம் செய்யப்பட்டன. எனினும் அத்தியாயங்களுக்கு இடையில் கூறியது கூறலும், சில தலைப்புக்கள் ஏனைய தலைப்புக்களை விட மிக விரிவாக ஆராயப்பட்டுமிருப்பது தவிர்க்க முடியாதது. மேலும் முக்கியமான வெளியீடுகளின் நூற்பட்டியலையும் இணைத்துள்ளோம்.
இலங்கையில் மனித உரிமைகளைப் பயனுறுதிவாய்ந்த முறையில் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்கு இவ் அறிக்கை குடியியல் சமூக நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்ச்சியான ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.

”அரசாங்கத்தின் எல்லா அமைப்புக்களும், அரசியலமைப்பில் பிரகடனம் செய்யப்பட்டும், அங்கீகரிக்கப்பட்டும் உள்ள அடிப்படை உரிமைகளை மதித்தும், பாதுகாத்தும் முன்னெடுக்கும் என” இலங்கை அரசியலமைப்பு ஆணையிடுகின்றது. இலங்கை பல சர்வதேச மனித உரிமைச் சாதனங்களின் ஒப்பந்ததாரியாக இருப்பதுடன் அதனது உள்நாட்டுச் சட்டங்களும், கொள்கைகளும், செயற்பாடுகளும் அதனது சர்வதேசக் கடப்பாடுகளை உறுதி செய்வதாகவும் இருக்கவேண்டும். இவ்வறிக்கை (இவ்வறிக்கையில் உண்மையான பரிசீலனைக்கு உட்பட்டுள்ள அரசு சார்பற்ற பங்காளிகளும்) மனித உரிமைகளை மதித்தும், பாதுகாத்தும் நடப்பதற்கான தமது சர்வதேச மற்றும் அரசியலமைப்பின் கடப்பாடுகளை உயர்வாகப் பேணி நடப்பதை அரசு உறுதி செய்யும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஒரு பணிவுடைமையான நடவடிக்கையே.
சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம் கொழும்பு LD fast, 1996.

Page 9

சுருக்க நோக்கு
1. அறிமுகம்
மனித உரிமைகள் நோக்கில் 1995 பல சவால்களை எதிர்நோக்கியது.
இதன் மத்திய விடயமாக தேசிய பாதுகாப்பு என்பது எந்தளவிற்குக் கவனத்திற்குரியது என்பதை மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நிலைநிறுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் கடப்பாடுகளுடனேயே இணைத்துப் பார்க்கமுடியும். 1995 சித் திரையில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஆயுதப் பிணக்கு ஆரம்பித்தபோது தீவு முழுவதற்குமான கடுமையான பாதுகாப்பு முறைகள் வழங்கப்பட்ட ஒரு சூழ்நிலையின் விளைவாக மனித உரிமைகள் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களிடையே ஒர் உடன்பாடு ஏற்பட்டது. தடுத்துவைத்தல் மற்றும் எழுந்தமானமான கைதுகளிலிருந்து சுதந்திரம், சித்திரவதை மற்றும் காணாமல் போதலிலிருந்து சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியனவற்றை உள்ளடக்கிய பல்வேறு மனித உரிமை விடயங்களில் அறிவிக்கப்பட்ட மீறல்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டது. அதேவேளை 1994 இல் ஆரம்பிக்கப்பட்ட ஆலோசனைச் செயல்முறைகள் (அரசாங்கத்தில் மக்கள் முன்னணி புதிதாக ஆட்சியில் இருந்தபோது) அரசியலமைப்பு மற்றும் தொடர்புசாதனச் சீர் திருத்தங்களுக்குரிய இப்பகுதிகளிற் தொடர்ந்தும் இடம்பெற்றன. புதிய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான அரசியல் சட்ட நகல் பற்றிய பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. அதேவேளை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாடுகள் இவ்வருடத்தில் பல விடயங்களில் மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்டதுடன் கொள்கை விருத்திச் செயன்முறை தொடர்ந்து நிகழ்ந்தாலும் அதன் உண்மையான மனித உரிமைகள் நடைமுறை மோசமாகியது.

Page 10
2 இலங்கை: மவித உரிமைகள் நிலை 1995
மனித உரிமைகள் பாதுகாப்பை வலுப் படுத்தவும், சனநாயகத்தை மேம்படுத்தவும் கூடிய சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதற்கான, வலியுறுத்திக் கூறப்பட்ட கடப்பாடுகளுடன் 1994 ஆவணியில் பொதுசன முன்னணி ஆட்சிக்கு வந்திருந்தது. பரந்தளவில் அதிகளவான மனித உரிமை மீறல்களுக்கான சூழ்நிலைக்குக் காரணமான பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் அழிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்பை ஏற்படுத்திய பிணக்கிற்கு நீதியானதும், நீடித்ததுமான இணக்கத்தீர்வுக்கு இட்டுச் செல்லும் எனப் பலர் நம்பிக்கை கொண்டிருந்த எல்.ரி.ரி.ஈ. உடனான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தது. 1995 இல் இவ்விடயங்களின் தீர்வுக்கு ஒர் அடிப்படையை இடவேண்டுமென்பதில் நம்பிக்கை காணப்பட்டது. ஆனால் பிணக்குகளைத் திர்ப்பதற்கான வாய்ப்புகளும், மனித உரிமைகளுக்கு அதிகளவான அரசியற் சட்டரீதியான பாதுகாப்பினை அளித்தலும் வருட இறுதியில் நிச்சயமற்றுக் காணப்பட்டது.
அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. க்குமிடையில் தாக்குதல் நிறுத்தம் பற்றிய உடன்பாடு தையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றத்துக்கான வலுவை அளித்தது. எனினும் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இடம் பெறாததினால் சித்திரை மத்தியில் இச் செயன்முறை பயனற்றதாகியது. யுத்த நிறுத்த அமுலாக்கத்தை அவதானிப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேசக் குழுக்கள் எல்.ரி.ரி.ஈ. கட்டுப்பாட்டுப் பகுதிகளிற் செயற்படுவதிலிருந்து தடுக்கப்பட்டன. 4ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பின் சித்திரையில் இச் செயன்முறைகளில் இருந்து விலகிக் கொள்வதாக எல்.ரி.ரி.ஈ அறிவித்து திருகோணமலைத் துறைமுகத்தல் தரித்து நின்ற இரு கடற் படைக் கப் பல களைத் தகர்த்தெறிந்தது.
இதன்பின்பு வடக்கு கிழக்கில் மீண்டும் தொடங்கிய ஆயுதப்பிணக்கும் தெற்கில் அரசியல் மற்றும் பொருளாதார இலக்குகள் மீது எல்.ரி.ரி.ஈ. ஊடுருவல் மற்றும் தாக்குதல்கள் பற்றிய பயமும் இணைந்து அரசியற் போக்குகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. மனித உரிமைகள் நிலைமையில் மோசமான சூழ்நிலைகள் காணப்பட்டதுடன் வடக்கு கிழக்கில் மனிதாபிமானம் தொடர்பான கவலைகள் அதிகரித்தன. வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சார்பாகவே எல்.ரி.ரி.ஈ. க்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் உரிமைகோரல் - இராணுவத் தாக்குதல் முனைப் பின் காரணமாக பெருமளவிலான குடிமக் கள் அவர் களது வீடுகளிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டதனால் சொல்லொணாக் கஷ்டங்களை எதிர்நோக்கினர். வருட இறுதியில் 1990 இல் இருந்து எல்.ரி.ரி.ஈ. இன் பூரண கட்டுபாட்டின் கீழ் இருந்த யாழ்ப்பாண நகரத்தினை அரசாங்கப் படைகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இராணுவத்தினர் நகரத்திற்குள்

சுடுக்க நோக்கு 3
நுழையும் போது மக்களைத் தத்தமது இடங்களை விட்டு வெளியேறுமாறு எல்.ரி.ரி.ஈ. விடுத்த உத்தரவினால் நகரம் முற்றாக வெறிச்சோடிக் கிடந்தது.
இடம் பெயர்ந்த மக்களின் சுதந்திரமான நடமாட்டம். அரசாங்கத்தினாலும், எல்.ரி.ரி.ஈ. யினாலும் கட்டுப்படுத்தப்பட்டது. எல்.ரி.ரி.ஈ தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளைவிட்டு மக்கள் வெளியேறிச் செல்வதைத் தடுத்த அதே வேளையில் பாதுகாப்புப் படைகளும் தமக்குத் திருப்தி தரக் கூடிய ஆதாரங்களை நிரூபிக்கும் வரைக்கும் வவுனியாவுக்குத் தெற்காகப் பிரயாணம் செய்யவிரும்பும் மக்களைத் தடுத்து வைத்திருந்தது. அதேவேளை அடிப்படை வளங்கள் மற்றும் சேவைகளுக்கான இம் மக்களின் அடைகையும் பெருமளவிற்குக் குறைக்கப்பட்டது.
தெற்கில் அதிகரித்த எண்ணிக்கையிலான தமிழ்மக்கள் திரும்பத் திரும்ப அடையாளப் பரிசோதனைக்கு உள்ளாக நேர்ந்ததுடன் குறுகிய கால எழுந்தமானமான கைதுகளுக்கும், தடுப்புக் காவலுக்கும் உட்பட்டனர். தொடர்பு சாதனங்களின் சுதந்திரம் அதிகரித்துவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதுடன் 1995 புரட்டாதியில் எல்லாவகையான இராணுவ விடயங்களை அறிவிப்பது பற்றிய மூன்று மாத காலத்துக்கான தணிக்கையை அமுல்படுத்துவதற்கான அவசரகால ஒழுங்குவிதிகளைப் பயன்படுத்தியதன் மூலம் அச்சுறுத்தல் மேலும் உச்சநிலையை அடைந்தது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்து இறந்த முப்பதுக்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் கொழும்பைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்பிலிருக்கும் பொழுது காணாமற் போனவர்கள் பற்றிய அறிக்கைகளினால் பிரச்சினை மீண்டும் தலைதுாக்கியது. அறிவிக்கப்பட்ட காணாமற் போனவர்கள் பற்றிய எண்ணிக்கை 1988 - 90 காலத்தில் தெற்கில் இடம்பெற்ற ஜனதா விமுக்திப் பெரமுனவுக்கு (ஜே.வி.பி) எதிரான எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் போதும் 1990 இன் முதல் மாதங்களில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இரண்டாவது ஈழப்போரின் பொழுதும் நிகழ்ந்த பல ஆயிரக் கணக்கான மக்களின் பரந்தளவிலான காணாமற் போனமை போன்று இல்லாவிட்டாலும் அது பற்றிய போக்கு கவலை தருவதாகவே இருந்தது. 1995 சித்திரையில் இருந்து அவ்வாண்டின் இறுதிவரை ஆகக் குறைந்தது 55 பேர் காணாமற் போயிருந்ததுடன் முன்னைய வருடத்துடன் ஒப்பிடும் பொழுது குறிப்பிடத்தக்க அதிகரிப்புடையதாகவும் காணப்பட்டது. கைது மற்றும், தடுத்து வைத்தல் பற்றிப் போதுமான பாதுகாப்புக்கள் இன்னமும் அவசியமென்பதை இது விளக்குவதாக உள்ளது.

Page 11
4 இலங்கை: 19வித உரிமைகள் நிலை 1995
அரசாங்கப் படைகளின் செயற்பாடுகளில் தனியாள் பாதுகாப்பு மட்டும் ஆபத்துக்குள்ளாகியதாகக் காணப்படவில்லை. மாறாக வைகாசியில் கல்லாரவா சிங்களக் கிராமத்தின் மீது மேற்கெள்ளப்பட்ட தாக்குதல்களினால் 42 மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் குடிமக்கள் மீது இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதலுக்கு எல்.ரி.ரி.ஈ. பொறுப்பாக இருந்தது. இதனைத் தொடர்ந்து ஐப்பசி பிற்பகுதியிலும் கார்த்திகை ஆரம்பத்திலும் எல்லைக் கிராமங்களில் மேலும் நான்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதியில் வாழும் மக்களுக்குப் போதுமான பாதுகாப்பை எவ்வாறு வழங்க முடியும் என்ற பிரச்சினை மீண்டும் தலைதுாக்கியது. கொழும்பில் ஐப்பசி மாதத்தில் இரு எண்ணெய்த் தாங்கி நிலையங்கள் மற்றும் கார்த்திகையில் இரானுவத் தலைமையகம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலும் பொதுமக்கள் இறந்தனர்.
விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பிரதான தாக்குதல்களைத் தொடர்ந்து இனரீதியான பதட்டநிலை தெற்கில் அதிகரித்தபோதும் பரந்தளவிலான வன்முறைகள் நிகழவில்லை. இருப்பினும் ஆனி மாதத்தில் தெற்கில் உள்ள நகரமான காலியில் இடம்பெற்ற இனரீதியான, உள்நோக்கம் கொண்ட தாக்குதல்களினால் 28 கடைகள் தீ வைத்து அழிக்கப்பட்டன. அழிக் கப் பட்ட கடைகளிற் பெரும் பாலானவை தமிழர் களுக்குச் சொந்தமானவையாக இருந்ததுடன் அவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு அல்லது தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையை எடுப்பதற்குப் பொலிசார் தவறிவிட்டனர். இத்தாக்குதல் எல்.ரி.ரி.ஈ. யினால் கொலை செய்யப்பட்ட பிரபல பெளத்த பிக்குவின் இறுதி மரணச்சடங்கு நாளன்று இடம் பெற்றது. சில நாட்களின் பின் காலிக்கு அருகிலுள்ள பெருந்தோட்ட அடுக்கு அறைக் குடியிருப்பாளர்கள் பலர் தாக்கப்பட்டதுடன் எட்டு வயதுப் பெண்ணொருவர் கொல்லப்பட்டு நான்கு பேர் காயமடைந்தனர்.
மனித உரிமை விடயங்கள் பற்றிய அரசாங்கத்தின் அக்கறையுடனான வெளிப்பாடுகள் பற்றிய அதன் செயலாற்றத்தினை மதிப்பிடுதல் மிகவும் முக்கியமானது. 1995 காலத்தில் செய்திகள் குழப்பமானவையாகக் காணப்பட்டன. சில விடயங்களில் குறிப்பான உதாரணமாக, சிறையில் வைக் கப் பட்டிருந்தவர் களின் உடல் களர் கொழும் பைச் சுற்றிக் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்ததுடன் இறப்புகள் பற்றிப் புலன் விசாரணை செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சுடுக்க நோக்கு 5
வேறுசில விடயங்களில் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான கடப்பாடு தெளிவற்றதாக இருந்தது. உதாரணமாக ஆனியில் மனித உரிமைகள் செயலனிப் பிரிவு (HRTF) அவசரகால ஒழுங்கு விதியின் கீழ் ஏற்படுத்தப்பட்டமை வரவேற்கத்தக்கதொரு விருத்தியாக இருந்தது. ஒருநபர் கைதுசெய்யப்படும் பொழுது வழங்கப்படுகின்ற, பின்பற்றப்படவேண்டிய சிறந்த பாதுகாப்பு முறைகளைக் கொண்ட நடைமுறைகளைப் பற்றிய பணிகள் புதிய ஏற்பாட்டின் கீழ் சனாதிபதியால் வழங்கப்பட்டது. எனினும் இப் பணிப்புரைகள் பொதுவாகப் பின்பற்றப்படவில்லை. அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான உண்மையான முயற்சி எதுவும் மேற் கொள்ளப்படவில்லை. மீண்டும் புரட்டாதி மாதத்தில் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படும் மக்களினைப் பாதுகாப்பதற்காக புதிய அறிவித்தல் கோரிக்கைகளை அறிமுகப் படுத்துவதற்கு அவசரகால ஒழுங்குவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும் ஒழுங்குவிதி தெளிவற்றதாக இருந்ததுடன் செயற்படுத்தவும் முடியவில்லை. மிகமுக்கியமான மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற இப்பகுதியில் சீர்திருத்தத்தைச் செய்வதற்கு அரசாங்கம் உணி மையாகவே மனம் கொணி டிருந்தால் அச் சீர் திருதி தங்களை நிறைவேற்றுவோர் இம் மாற்றங்களை முக்கியமானவையாகக் கருதுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இம் மாற்றங்கள் மற்றொரு மக்கட் பிரிவினரைத் திருப்திப்படுத்துவதற்கான மேலோட்டமான, மெருகூட்டும் மாற்றங்களாக அவற்றைக் கருதக்கூடாது.
அரசாங்கத்துக்குள்ளேயே மனித உரிமைகள் பாதுகாப்பு பற்றிய விடயம் மட்டுமே இருமனப்போக்குகளை வெளிக்காட்டும் கருத்து வெளிபாட்டுச் சுதந்திரமாக உள்ளது. பத்திரிகை ஆசிரியர்களை இம்சித்தல், தொடர்பு சாதனங்களின்மீது அரசாங்கத்தின் கடுங்சொற் தாக்குதல்கள், சட்டரீதியான தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான, இராணுவ விடயங்கள் பற்றிய அறிக்கைகள் சகலவற்றின் மீதான தணிக்கை போன்றவற்றினால் 1995 காலத்தில் இவ்வுரிமைக்கான அச்சுறுத்தல் அதிகரித்தது. அதற்கு மேலாக, பத்திரிகையாளர்கள் வடக்குக் குச் செல்வது தடுக் கப்பட்டதனால் முரண்பாட்டின் நிகழ்வு பற்றிய அல்லது அங்கு இடம் பெயர்ந்து வாழ்கின்ற இலட்சக் கணக் கானவர்களின் நிலைமைகள் பற்றிய உண்மையான தகவல்களைப் பெறமுடியவில்லை. தணிக்கை விலக்கப்பட்ட பின்பும் இச் செய்திகளைப் பெறுவதற்கான தடை தொடர்ந்தும் காணப்பட்டது. மனிதாபிமான, மனித உரிமைகள் அக்கறை தொடர்பான விடயங்கள் பற்றிச் சுதந்திரமான, பக்கச்சார்பற்ற தகவல்களைப் பெறுவதற்கு இத்தடை பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. குடிமக்களின் மீது பிணக்குகளின் தாக்கம் பற்றியதான செய்திகளைத் தடுப் பதிலேயே அரசாங்கம் கவனமாக இருந்ததாகத் தோன்றியதுடன் "தவறில் லாத ஒரு யுத்தம்" என்ற எண்ணப்பதிவினை வெளிப்படுத்துவதே நோக்கமாகவும் இருந்தது.

Page 12
6 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
பரந்தளவிலான மனித உரிமைகள் பற்றிய சிறப்பான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு பயனுறுதிவாய்ந்த நடவடிக்கை அரசாங்கத்தினால் எடுக்கப்படுவதற்கான தொடர்ச்சியான தேவையை இவ் அறிக்கை மீண்டும் விளக்கி நிற்கின்றது. சட்டம் மற்றும் அதன் நடைமுறையைப் பொறுத்தவரை குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளின் பாதுகாப்பு பற்றாக்குறையாகவே உள்ளது. சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கட் பிரிவுகள் (உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர், பெருந்தோட்டத் தொழிலாளர், பிணக்குகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்) தமது வளங்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவும், புறக் கணிக்கப்பட்டவர்களாகவுமே காணப்படுகின்றனர். அவர்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேணி டும். அவர்களுட் பெரும்பான்மையானவர்கள் கட்டுப்பாடற்ற கைதுகள் மற்றும் தடுத்து வைத்தலினால் பாதிக்கப்படுகின்ற சிறுபான்மைச் சமூகத்தவர்கள். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தினையும் பல்வேறு மனித உரிமைகளுக்கு இடையிலான இணைப்பையும் இது முனைப்ப்ாக்குகின்றது.
மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கைகளுக்கு வழங்ப்படுகின்ற ஒரு "நியாயப்படுத்தலாக" ஆயுத முரண்பாட்டிற்குள் திரும்புதல் அனுமதிக்கப் படமுடியாதது. இம் முரண்பாடு மனித உரிமைகள் மீது மிகத் தெளிவான செயல் விளைவுகளைக் கொண்டுள்ளது. ஆனால் மனித உரிமைகள் சீர்திருத்தம், பிணக்குத் தீர்வுக்கான இரண்டாம் நிலை விடயமாக இருக்கக்கூடாது. மேலும் மனித உரிமைகள் சீர்திருத்தம் (பாரபட்சமற்ற தன்மையையும் சமூகத்தில் எல்லாப் பிரிவினரின் ஒப்புரவான சமூக, பொருளாதாரப் பங்களிப்பையும் நோக்காகக் கொண்ட சீர்திருத்தங்களை உள்ளடக்கிய) பிணக்குத் தீர்வுக்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்குவதில் உதவுவதாக இருத்தல் வேண்டும்
2. 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள்
1995இல் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சில செயன் முறைகள் தேசிய பாதுகாப்புடன் எவ்வித தொடர்புமற்ற விடயங்களாகவே இருந்தன. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய தொழிலாளர் பட்டயம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இறுதியாக புரட்டாதி மாதத்தில் சனாதிபதி குமாரதுங்கவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. பொருளாதாரத்தின் அதிகரித்துவரும் தாராளமயப்படுத்தலுடன் தொழிலாளரின் உரிமைகள் பற்றிய பாதுகாப்பும் மிகவும் பிரச்சினைக்குரியதாக மாறியது. இப்பட்டயம் தொழிற்சங்கங்கள் தொழில்வழங்குநர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைச்

சுடுக்க நோக்கு 7
செயன்முறைகளின் மூலமாக உருவாக்கப்பட்டதுடன் இரு பகுதியினராலும் கவனத்திற் கொள்ளப்படக் கூடிய பல விடயங்களையும் அறிமுகம் செய்தது. எனினும் அதன் உறுப்புரைகளை அமுல்படுத்துவதற்கான ஒர் ஆவணமாகவும் சட்டமாகவும் இது காணப்படாவிட்டாலும் சட்டமாக்கப்படவிருக்கிறது. பாலியல் குற்றங்கள் தொடர்பான ஒரு பகுதியிலேயே சட்டமுறைச் சீர்திருத்தம் அமுலாக்கப்பட்டது. சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான மாற்றங்கள் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய அத்தியாயத்தில் ஆராயப்படுகின்றது.
3. 1995 இல் பின்னுறுதிப் பருத்தப்பட்ட
சர்வதேச மனித உரிமை நியமங்கள்
1995 இல் அரசாங்கம் இரு முக்கியமான சர்வதேச மகாநாட்டுடன்
படிக்கைகளைப் பின்னுறுதிப்படுத்தியது. முதலாவது ஒழுங்குபடுத்துவதற்கான உரிமை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக ஒன்றிணைதலும் பற்றிய சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் 87 ஆவது இலக்க மகாநாட்டுடன்படிக்கை, இரண்டாவது, இடம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர் மற்றும் குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் பற்றிய ஐக்கிய நாடுகளின் சர்வதேச மகாநாட்டுடன்படிக்கை. சித்திரை மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் வீட்டுப் பராமரிப்பு பெண்ணாகத் தொழில்புரியும் 20 வயதுடைய இலங்கைப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, இலங்கையிலிருந்து சென்று வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்கள் எதிர் நோக்கக்கூடிய துயர்மிக்க சூழ்நிலையை வெளிப்படுத்தும் ஒரு சம்பவமாகக் காணப்பட்டது. இப் பெண் ஒரு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப் பட்டாள். இப்பெண்ணின் சார்பாக வெளிநாட்டு அமைச்சு தலையிட்டு எடுத்த முயற்சிகள், பொதுவாக வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான சந்தேகங்களை இப் பெண்ணின் இறப்பு தூண்டிவிட்டது."
1949 ஆவணி 12 ஆம் திகதியின் ஜெனிவா மகாநாட்டுடன் படிக்கை களுக்கான மேலதிக விருப்புரிமைப் பின்னேட்டினை உள்ளடக்கிய முக்கிய சர்வதேச நியமங்களையே அரசாங்கம் பின்னுறுதிப்படுத்த வேண்டியுள்ளது. குடிமக்களின் பாதுகாப்புக்கான முக்கிய ஏற்பாடுகளை இது கொண்டிருக்கிறது.
See Civil Rights Movement of Sri Lanka, "Execution in U.A.E of 20 year old Sri La n kan H ou se maid", E 03 / 5 / 95, (Colombo, May 1995).

Page 13
8 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
அரசாங்கத்தினால் பின்னுறுதிப்படுத்தப்பட்டால் பிணக்கிலீடுபட்டுள்ள எல்லாப் பிரிவினரையும் தன்னியல்பாகக் கட்டுப்படுத்திவிடும். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்துக்கான தெரிவுக்குரிய விருப்புரிமைப் பின்னேடு உள்ளுர் இழப்பீடுகள் முடிவடைந்த பின்னும் மனித உரிமைகள் குழுவிற்கு? மனுச் செய்வதற்கான உரிமையை ஒவ்வொரு தனியாட்களுக்கும் வழங்குகிறது.
4. அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்துக்கான
முன்மொழிவுகள்
4.1 பரவலாக்கத்திற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகள்
அரசாங்கம் ஆவணி மாதத்தில் பிரிவினையைத் தீர்ப்பதற்கான தனது
உத்தேசிக்கப்பட்ட "தீர்வு யோசனைப் பொதியை" வெளியிட்டது. இம் முன் மொழிவுகள் ஆலோசனைக் குரியனவாக வெளியிடப்பட்டு, பல குழுக்களினாலும், தனிப்பட்டவர்களினாலும் அவற்றின் மீது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட பின்னர் 1996 இன் அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தத்திற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவிடம் சமர்ப்பிக்கப் படுவதற்கு முன்னர் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டன. ஆவணியில் வெளியாகிய இத்தீர்வு யோசனைகள் இதுவரையில் நிர்ணயம் செய்யப்படாத எட்டுப் பிரதேச அலகுகளில் விரிவான அதிகாரப் பரவலாக்கத்துடன் கூடிய “பிரதேசங்களின் ஒன்றிணை"வாக இலங்கை வரையறை செய்யப்படவேண்டும் என விதந்துரைத்தன. தீர்வினையும் விட மேலாக பிரிவினையின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு கூடிய இடமளித்து முன்னோக் கிச் சென்ற இம் முன்மொழிவுகள் சிறுபான்மையோர் உரிமைகள் என்ற அத்தியாயத்தின் கீழ் ஆராயப்படுகின்றன.
4.2 அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் தொடர்பாக
விதந்துரைக்கப்பட்ட மாற்றங்கள்
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் தொடர்பான மாற்றங்களுக்கான முன்மொழிவுகளையும் அரசாங்கம் வெளியிட்டது. தை மாதத்தில் வழங்கப்பட்ட "முதலாவது திருத்தியமைக்கப்பட்ட நகல்” ஏமாற்றம் தருவதாக இருந்ததுடன் 1994 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஏற்கனவே
2 ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழ் அதன் முன்னேற்பாடுகளைப் பின்பற்றுதல் பற்றிக்
கண்காணிப்பதற்கு உருவாக்கப்பட்ட பிரிவே இக் குழுவாகும்.

சுடுக்க நோக்கு 9
நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட நகல் முன்மொழிவுகளை நலிவுபடச் செய்தவொன்றாகவும் இருந்தது. மேலதிக ஆலோசனைகளைத் தொடர்ந்து தை மாதத்தில் நகல் திட்டத்தில் குறிப்பிடத்தக்க திருத்தங்களை உள்ளடக்கியிருந்த இரண்டாவது நகலை அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தத்திற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு வைகாசி மாதத்தில் வெளியிட்டது. வைகாசி மாதத்தில் விதந்துரைக்கப்பட்ட மாற்றங்களின் அடிப்படை அம்சங்கள் இந்த அதிகாரத்தின் பல அத்தியாயங்களில் விபரிக்கப்படுகின்றன.
முன்மொழியப்பட்ட இந்த அத்தியாயத்தின் சாதகமான, பாதகமான அம்சங்களை மனித உரிமைகள் அமைப்புக்கள் கருத்திற் கொண்டுள்ளன. சாதகமான அம்சங்களுள் கைது செய்யப்படும் போதான பாதுகாப்பும் நீதியான விசாரணைகளும் , தகவலி களையும் கருத்துக் களையும் பெறுவதற்கான உரிமை என்பன உள்ளடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்படாத வாழ்வதற்கான உரிமை இம் முன்மொழிவுகளின் அங்கீகாரத்தைப் பெற்றது. ஆனால் இத்துடன் தேவையற்ற கருத்து ஒன்றும் உள்ளடங்கியிருந்தது. சகலவிதமான உரிமைகளையும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்ட கடப்பாடுகள் தற்பொழுது இருப்பதனைவிட மிகவும் கடினமான முறையில் நகல் உருவம் பெற்றிருந்தன. ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழ் வேண்டுகோள் விடுக்கப்பட்டது போன்று "தேவை” என்பதனையும் இது கொண்டிருந்தது. ஒரு விடயத்தில் இம் முன்மொழிவுகள் ஐ.சி.சி.பி.ஆர். இன் வேண்டுகோளைக் கடந்து நின்றன. நீதியான விசாரணையைத் தவிர்க்கமுடியாத உரிமையாக அங்கீகரிக்கும் உரிமையே அதுவாகும். ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழ் உள்ளடக்கப்பட்ட சகல உரிமைகளும் முன்மொழிவைக் கொண்ட இந்த அத்தியாயத்தில் உள்ளடக்கப்படவில்லை. எனினும் வரையறுக்கப்பட்ட வடிவத்தில் உள்ளடக்கப்பட்டன. உதாரணமாக நபரொருவரின் சுதந்திரம், பாதுகாப்பு என்பனவற்றிற்கான உரிமை ஏலவே இருந்தது போன்று உள்ளடக்கப் படவில்லை. அடிமை நிலையிலிருந்து விடுதலைபெறும் உரிமை எதுவும் உள்ளடக்கப்படவில்லை. இம் முன்மொழிவுகள் நிர்வாகரீதியான தடுப்புக் காவல் என்பதனைச் சட்டரீதியாக ஏற்றுக் கொண்டதுடன் அதன் மீது எந்தவொரு காலக்கெடுவையும் விதிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுடன் தொடர்பில்லாத எந்தவொரு
3 See "Constitution al Reform and Fundam en tal Rights : Som e C o m m en ts" in Law & Society Trust, Fortnightly Review. Vol VI, Issue 94 (Colombo, August
1995).

Page 14
10 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1997
விடயத்தையும் கருத்திற் கொள்ளாமல் தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத எந்தவொரு சட்டத்தையும் தொடர்ந்து பேணுவதற்கும் அவை முனைந்து நின்றன.
5. தேசிய மனித உரிமைகள்
ஆணைக்குழுவிற்கான முன்மொழிவுகள்
அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினை உருவாக்குவது பற்றி அறிவித்திருந்தது. மனித உரிமைகளுடன் நடைமுறைத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புக்கள் கவலை தெரிவித்திருந்ததுடன் வன்முறைகளுக்கு எதிரான அடிப்படைப் பாதுகாப்பினை வலுப்படுத்தவும் முன்பிருந்தே சிறப்பாகச் செயலாற்றி வரும், சகல வளங்களையும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும் நிறுவனங்களைப் பாதுகாக்கவும் முன்னுரிமை அளித்தல் வேண்டுமென வற்புறுத்தியது. மசோதா வெளிவிடப்பட்டபோது இவ்விடயங்கள் மீண்டும் கூறப் பட்டன. எனினும் ஆணைக் குழு வரிற் கும் தறி போதுள்ள நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றாகக் கவனத்திற் கொள்ளப்படவில்லை. மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்புப் பற்றிய அத்தியாயத்தில் இது ஆராயப்படுகின்றது.
ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன. அடிப்படை உரிமைகளுடன் தொடர்பான நிர்வாக மற்றும் நிறைவேற்று நடைமுறைகளைக் கண்காணித்தல், அடிப்படை உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்தலும் சமரச இணக்கத்தின் மூலம் தீர்மானமெடுத்தலும், சட்ட நிர்வாகரீதியான விடயங்களில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கல், சர்வதேச மனிதஉரிமைகள் நியமத்திற்கு இசைவுடையதாக தேசிய சட்டங்களையும், நடைமுறைகளையும் உறுதி செய்வதற்கான முறைகள் பற்றிய பரிந்துரைகளை மேற்கொள்ளல், அரசாங்கம் பின்னுறுதிப் படுத்தப்பட வேணி டிய சர்வதேச சாதனங்கள் பற்றிப் பரிந்துரைகளை மேற்கொள்ளல், அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தல், புகார் செய்யப்பட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தல், புகார் செய்யப்பட்ட மீறல்களை விசாரணை செய்வதற்கு ஆணைக் குழுவிற்கு முழு அதிகாரத்தையும் அளித்தல்,
See Deepika Udagama, "Human Rights Commission Bill (1995)" in Law & Society Trust, Fortnightly Review, Vol VI, Issue No. 96 (Colombo, October 1995).

சுநீக்க நோக்கு 1 1
நீதிமன்றின் அனுமதியுடன் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான நடைமுறைகளில் தலையீடு, தடுத்து வைக்கப்பட்டவர்களின் சுகநலனைக் கண்காணித்தல், உயர் நீதிமன்றத்தினால் குறிப்பிடப்படும் விடயங்களில் உறுதியாகச் செயற்படல், அடிப்படை உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு பற்றி ஆய்வு செய்தலும் மேம்படுத்தலும் , இச் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஏனைய விடயங்களையும் மேற்கொள்ளல்
நகல்உறுப்புரை (t))
உறுப்புரை 13 இன் மசோதாவின் கீழ் நிறைவேற்று அல்லது நிருவாக
நடவடிக்கை காரணமாக இடம் பெற்ற அடிப்படை உரிமைகள் மீறல்கள் பற்றிய புகார்களை விசாரணை செய்வதற்கான அதிகாரத்தினை ஆணைக்குழு கொண்டிருக்கும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (PTA) குற்றமாகக் கருதப்பட்ட ஒரு செயற்பாட்டின் விளைவால் ஏற்பட்ட மீறல்களும் இதிலடங்கும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முதன்மையான பொறுப்பு அரசினைச் சாருமே ஒழிய தனியார் நபர்களை அல்ல என்பதனால் இதன் இறுதி ஏற்பாடு பற்றி விசனம் தெரிவிக்கப்பட்டது. எச் சந்தர்ப்பத்திலும் அத்தகைய செயல்களுக்கு எதிராகச் சட்டம் செயற்படுவதுடன் அவற்றுக்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனையும் அளிக்கின்றது.
ஆணைக் குழுவின் சார்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுதந்திரமான விசாரணைப் பிரிவு ஒன்றிற்கான ஏற்பாடு இல்லாதது பற்றியும் குறைபாடு தெரிவிக்கப்பட்டது. ஆணைக்குழு அங்கத்தவர்களை நியமிப்பதும் நீக்குவதும் தொடர்பான நடைமுறைகள் அரசியல்யாப்புக் கவுன்சில் இல்லாத நிலையில் ஆணைக்குழுவின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட மாட்டாது. அரசியல் யாப்புக் கவுன் சிலில் அங்கததவர் கள் சபாநாயகரின் ஆலோசனையின்பேரில் பிரதம மந்திரியின் பரிந்துரையுடன் சனாதிபதியினால் நியமிக்கப்படுகிறார்கள்.
s அரசியல் யாப்புக் கவுன்சில் தற்பொழுது இல்லை. அரசியல் யாப்புச் சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் பரிந்துரைகளில் இதன் உருவாக்கம் பற்றி உள்ளடக்கப்பட்டுள்ளது. இம் முன்மொழிவுக்கு என்ன நடந்தது என்பது தெளிவற்றதாகவே உள்ளது.

Page 15
12 இலங்கை: மத உரிமைகள் நி ை1995
6. இவ் அறிக்கையில் முன்வைக்கப்படும் ஏனைய
விடயங்கள்
சுகாதாரத்துக்கான உரிமை முன்னைய தொகுதிகளில் ஆராயப்பட விலி லையெனினும் அதி தியாயம் 9 இல் பல விடயங்கள் பற்றி நோக்கப்படுகின்றது. அடிப்படைச் சமூக - பொருளாதார உரிமையாக இது அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் இலங்கையின் அரசியல் சட்டத்தினால் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் மீறல்களினால் சுகாதாரத்துக்கான உரிமையும் பாதிக்கப்பட்டு வருவதைக் காணலாம். கொள்கைரீதியான தோற்றப்பாட்டிலிருந்து நோக்கும்பொழுது பல்வேறு விடயங்களில் மிகமுக்கிய கவனமானது சுகப்படுத்தக்கூடிய சுகாதார உபாயங்கள் மீது கவனம் செலுத்துதல், இலங்கையின் பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்தல், சுகாதாரத்துக்கான "மனித உரிமைகள் அணுகுமுறையின்” விருத்தி ஆகியவற்றில் பிரதான கவனம் செலுத்தப்பட வேண்டுமென விவாதிக்கப்பட்டு வருகின்றது. தெற்கில் ஜே.வி.பி. கிளர்ச்சி, வடக்கு கழக கல ஆயுத முரணி பாடுளின் தாக் கங் களினால் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதாரத்தில் மிகக் கடுமையான மற்றும் நீண்ட காலத் தாக்கங்களைக் கொண்டிருந்தன. சிறுவர்களின் உரிமைகள் பற்றி முன்னைய தொகுதிகளில் ஆராயப்பட்டிருந்தாலும் வடக்கு கிழக்கு பிணக்கு சிறுவர்களில் கொண்டிருக்கக்கூடிய தாக்கத்தினை விரிவாகக் கூறவில்லை. அத்தியாயம் 8 இல் பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் சிறுவர்களின் நிலைமைகள், இடம் பெயர்தல் பற்றிய கலந்துரையாடலின் மூலம் இக்குறைபாடு தீர்க்கப்படுகின்றது. சிறுவர்களின் உரிமைகளைப் பாதிக்கும் சட்டரீதியான சீர்திருத்தங்கள், இளம் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய குழுவின் கருத்துரைகள் என்பன 1995 இல் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய மகாநாட்டுடன்படிக்கையின் கீழ் இலங்கையின் செயலாற்றுகை பற்றிய மதிப்பீட்டினை விபரிக்கின்றது.
இலங்கையில் மனித உரிமைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் விடயங்கள் ஒரு சாதகமான பங்களிப்பை வழங்க முடியும் என்பதுடன் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய சீர்திருத்தங்களுக்கான ஒர் ஊக்கியாகவும் இவை செயற்படும் எனவும் கூறலாம்.

2
ஒரு நபரின் நன்மதிப்பைக் கெளரவித்தல்
1. அறிமுகம்
1995 ஆம் ஆண்டுகாலத்தில் ஒரு நபரின் நன்மதிப்பைக் கெளரவித்தல் தொடர்பான சில முக்கியமான மனித உரிமைகள் எந்தளவுக்குக் கெளரவிக்கப்பட்டன என்பதை இவ் அத் தியாயம் ஆராயப் கின்றது. வாழ்வதற்கான உரிமைகள், சுதந்திரம், சித்திரவதையிலிருந்து விடுதலை, காணாமல்போதல் பற்றி இவ் அத்தியாயம் கவனம் செலுத்துவதுடன் அவ் வருட காலத்தில் இழைக்கப்பட்ட உரிமை மீறல்களையும், இம் மீறல்களைத் தடுப் பதறி கு அலலது அவற்றுக் கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் விபரிக்கின்றது. முன்னைய தொகுதிகளில் இவ் விடயங்கள் தொடர்பான உள்நாட்டுச் சட்டங்கள், அவற்றுக்குப் பொருத்தமான சர்வதேச மனித உரிமை நியமங்கள் என்பன விபரிக்கப்பட்டுள்ளதனால் அவை மீண்டும் இங்கு குறிப்பிடப்பட மாட்டாது. இந்நியமங்கள் தொடர்பான மாற்றங்கள் ஏதும் நிழ்ந்திருப்பின் முக்கியமான சில விடயங்களில் அவை கவனத்திற் கொள்ளப்படுகின்றது. ஒரு நபரின் மதிப்பைக் கெளரவித்தல் தொடர்பான மனித உரிமைகள் பற்றி மனித உரிமைகள் குழுவினால் சிபார்சு செய்யப்பட்ட பரிந்துரைகளின் சுருக்கத்தினையும் இவ்வத்தியாயம் கொண்டுள்ளது.
பார்க்க, சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், இலங்கை : மனித உரிமைகள் நிலை 1993 (கொழும்பு, 1994) அத்தியாயம் 111 பக். 27 - 82: மற்றும் சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், இலங்கை : மனித உரிமைகள் நிலை 1994 (கொழும்பு, 1995) அத்தியாயம் IV பக். 61 - 88.

Page 16
4 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
1995 சித்திரையில் அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. க்கும் இடையில் ஆயுதப் பரிணக்கு மீணி டும் ஆரம் பரிதி த பரிணி னர் மனித உரிமைகளில மிகப்பரந்தளவிலான சீர்குலைவு ஏற்பட்டது. குடிமக்கள் மீதான திட்டமிட்ட எல்.ரி.ரி.ஈ. யின் தாக்குதல்களும், பிணக்கின் மீள் ஆரம்பமும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், அடிப்படையான மனிதாபிமான சட்டங்களை உறுதியாகக் கடைப்பிடிப்பதென்ற அரசினால் தெரிவிக்கப்பட்ட கடப்பாட்டுக்கு ஒரு பரீட்சையாக அமைந்தது. சித்திரையிலிருந்து கொழும்புப் பகுதியில் தமிழர்களைப் பரந்தளவில் கட்டுப்பாடற்ற முறையில் தடுத்துவைத்தல், காணமல்போதல், சித்திரவதை மற்றும் சட்டத்துக்கு முரணான கொலைகள் யாவும் அதிகரித்த வீதத்தில் இடம்பெற்றன. பிணக்கின் முக்கிய நிகழ்வுப் பகுதி வடக்கு கிழக்கில் காணப்பட்டாலும் பிணக்கின் நேரடித் தாக்கங்கள் மிகக் கடுமையானதாக அப்பகுதிகளில் காணப்பட்டாலும், தீவின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுவகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானார்கள். எல்லைப் பகுதிகளில் வாழும் சிங்களக் குடிமக்கள் எல்.ரி.ரி.ஈ. யினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இலக்காகிய அதேவேளை கொழும்புப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மீண்டும் பொலிசாரினால் எழுநீதமானமாகத் தடுத்து வைத் தல மற்றும் துன்புறுத்தல்களுக்குப் பரந்தளவில் ஆளாயினர். வருட முடிவில் பிணக்கின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணத்தில் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து சென்றபின்னர் வவுனியாவில் தமிழ்மக்கள் அதிக எண்ணிக்கையில் கட்டுபாடற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டனர். வடக்கில் எல்.ரி.ரி.ஈ. யின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தென்பகுதி நோக்கி வருபவர்கள் இராணுவத்துக்குத் தமது உண்மையான பிரயாண நோக்கத்தினை நிரூபிக்கும் வரையில் நெரிசல்மிக்க தற்காலிக நிலையங்களில் (Transit Centres) தங்கவைக்கப்பட்டார்கள்.
முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத் தல வைகாசி இறுதியிலிருந்து புரட்டாதி மாதம் வரை கொழும்பைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் முப்பதுக்கு மேற்பட்ட மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கைதியாக முன்பு வைக்கப்பட்டிருந்ததுடன் இறப்பதற்கு முன்பு சித்திரவதைக்கு உட்பட்டிருந்தமையும் தெளிவாகியது. இவற்றுக்குக் காரணமாக இருந்த கொலைக் குழுவின் நடவடிக்கை பற்றிய நினைவுகள் இம்மக்களைக் கவலை கொள்ளச் செய்தன. சிவில் உடையில் வந்த இனந்தெரியாதோரினால் தமிழ் இளைஞர் பலர் கடத்தப்பட்டனர் என்று செய்தி வெளியாகிய காலங்களிலேயே இறந்த உடல்கள் கண்டு
பார்க்க, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றிய அத்தியாயம் 10.

ஒரு நபரின் தன்மதிப்பைக் கெளரவித்தல் 15
பிடிக்கப்பட்டன. இவற்றுட் பல தமிழ் இளைஞர்கள் என்பது பின்னர் அடையாளம் காணப்பட்டது.
முன்னைய காலங்களில் நிகழ்ந்தவற்றுக்கும் இக் கொலைகளுக்கு மிடையிலான முக்கிய வேறுபாடு என்னவெனில் அரசாங்கமே இவர்கள் பற்றிய புலன் விசாரணையை முன்னெடுக்க ஊக்குவித்ததுடன் வருட இறுதியில் இது தொடர்பாகப் பல பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். எனினும் இவ்விடயங்களைப் பொறுத்தவரையில் குற்றத்தீர்ப்புகள் உறுதியாக வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
1995 இல் எல்.ரி.ரி.ஈ. மனிதாபிமான சட்டத்தினைச் தொடர்ச்சியாக மீறிவந்தது. அதிகளவில் குடிமக்களைத் தாக்கிக் கொலை செய்ததுடன் "துரோகிகள்" எனக் குற்றத்தீர்ப்பு வழங்கி மரணதண்டனை விதித்தது. சிறைகளில் கைதிகளாகவைத்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் மக்களின் அசைவைத் தொடர்ந்து கட்டுப்படுத்தியது.
வருட பிற்பகுதியில் பிணக்குத் தீவிரமடைந்தபோது கொழும்பில் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ இலக்குகள் மீது எல்.ரி.ரி.ஈ. யினால் பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் அதிகரித்ததினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தலைநகரில் வாழும் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியது. பொலிசாரினால் சோதனைகள் மேற்கொள்ளப்படும் பொழுது கட்டுப்பாடற்ற முறையில் தடுத்து வைத்தலுக்கு உட்படுவது மாத்திரமின்றி ஆனியில் அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்பட்ட ஊர்காவல் படை (CDF) அங்கத்தவர்களினால் தமிழ்மக்கள் பற்றிப் பொலிசாருக்குத் தகவல் கொடுக்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்தன.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களுக்கு, அவசரகால விதிகளில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களும் பங்களித்திருந்தன. புரட்டாதியில் அறிமுகம்செய்யப்பட்ட ஒழுங்குவிதியின் படி வீட்டுடைமையாளர் தமது வீடுகளில் குடியிருப்பவர் பற்றிய விபரங்களைப் பொலிசில் பதிய வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை தெளிவற்ற நிலைமைகளைச் சில சூழ்நிலைகளில் ஏற்படுத்தியது. பொலிசில் எல்லாத் தமிழர்களும் பதிவு செய்யப்படவேண்டும் என்று இதற்குத் தவறாக விளக்கம் அளிக்கப்பட்டதனால்
3 பார்க்க, அவசரகால ஒழுங்குவிதி பற்றிய அத்தியாயம் 3.

Page 17
16 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
பொலிஸ் தடைச் சோதனைகளில் துன்புறுத்தல்களும், கட்டுப்பாடற்ற முறையில் தடுத்துவைத்தல்களும் நிகழ்வதற்கான மேலும் ஒரு சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டது. அவசரகால ஒழுங்குவிதிகள் அல்லது பயங்கரவாதச் தடுப்புச் சட்டம் என்பதன் கீழ் குற்றம் செய்தவராகக் கருதப்படக்கூடிய மக்களுக்குப் புகலிடமளித்த குற்றத்திற்கான புதிய ஒழங்குவிதிகள் ஐப்பசி மாதத்தில் வெளியிடப்பட்டதினால் கொழும்பில் தங்குமிட வசதிகளைத் தமிழ்மக்கள் பெற்றுக் கொள்வது மேலும் கடினமாகியது.
இச் சூழ்நிலையில் கொலன்னாவ, ஊறுகொடவத்த எண்ணெய் குதங்களின் மீது ஐப்பசியில் எல்.ரி.ரி.ஈ. யினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் கொழும்பில் சில தமிழர்கள் வன்முறைத் தாக்குதல்களுக்கு உட்பட்டனர். பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கொழும்பின் வனாத்தமுல்ல பகுதிப் பொலிசாரினால் ஏற்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அங்கத்தவர்களினால் ஐப்பசியில் கொல்லப்பட்டனர்.
2. வாழ்வதற்கான உரிமை மீறல்கள்
2.1 சட்டத்துக்கு முரணான மரண தண்டனைகள்
அரசாங்க பாதுகாப்புப் படைகளினால் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்கு முரணான கொலைகள் பற்றிய அறிக் கைகள் மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. முதலாவது கிழக்கில் இடம்பெறும் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளினால் கொல்லப்படுபவர்கள் பற்றிய தகவல்கள். இரண்டாவது குடிமக்களை இலக்காகக் கொண்ட வான் மூலமான குண்டுத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள். மூன்றாவது கொழும்பில் முப்பதுக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளின் கொலையும் பல்வேறு இடங்களில் காணப்பட்ட அவர்களது உடல்கள் பற்றிய தகவல்களும்.
சர்வதேச மன்னிப்புச் சபை 1995 இல் 40 தமிழ்க்குடிமக்கள் சட்டத்துக்கு முரணாகக் கிழக்கில் கொலை செய்யப்பட்டனர் என மதிப்பிட்டுள்ளது. ஆடி
Amnesty International Report 1996 (London) Uds. 281. 1995 60618s fluis) 6 Ló55 கிழக்கில் கொல்லப்பட்ட 19 தனிநபர்களுடன் தொடர்பான ஒன்பது வழக்குகள் சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை: 1995 வைகாசி மாத சட்டத்துக்கு முரணான கொலைகளின் gili560)óujab aniuTLDTas 2 67angi Ai Index ASA 37/10/95 (London, June 1995) 3U பாதிக்கப் பட்டவர்களில் 6 பேர் முஸ்லீம்கள், 13 பேர் தமிழர்கள்.

ஓடு தபரின் தன்மதிப்பைக் கெளரவித்தல் 17
மாதத்தில் வடக்கில் அரசாங்க விமானங்களினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் முற்றுகையினால் கொல்லப்பட்ட குடிமக் களில் யாழ்ப்பாணத்தில் நவாலியில் அமைந்துள்ள சென். பீற்றர் மற்றும் சென். போல் தேவாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்த 65 மக்களும் அடங்குவர். ஆனி மாதத்தில் கொழும்பிலும், கொழும்பைச் சுற்றியும் முப்பதுக்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டபின்பு புலன்விசாரணைத் திணைக் களத்தினால் (C1D) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொழும்பில் பல மாதங்களாகக் கடத்தப்பட்டுக் காணாமல் போன தமிழ் இளைஞர்கள் சிலருக்கு நடந்த கொடுமைகள் தெரியவந்தன. சிவில் உடையரில் வந்த ஆணி களினால் விடுதிகள், வீதரிகள் அலி லது பஸ்தரிப்பிடங்களில் வைத்தே இத் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.
பல பாதுகாப்புப் படையினரையும் வேறு சிலரையும் சி.ஐ.டி துருவி விசாரணை செய்தபின் இக் கடத்தப்பட்டவர்கள் கொழும்பு புல்லர்ஸ் வீதியிலுள்ள விசேட அதிரடிப்படைத் தலைமையகத்தில் வைக் கப் பட்டிருந்தனர் எனக் கண்டுபிடித்தனர். பயன்படுத்தாத கழிவறை ஒன்றினுள் வைத்தே இவர்கள் மூச்சுத்திணறக் கொலை செய்யப்பட்டனர். விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 18 பேர் உட்பட சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப் பட்டனர் . அத்துடன் எஸ் .ரி.எவி . இன் இரகசிய புலன் விசாரணைக் கிளையின் (Inte11igence Branch) செயற்பாடு இரத்துச் செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
2.2 எல். ரி. ரி. ஈ. யின் கொலைகள்
1995 இல் குடிமக்கள் மீதான தாக்குதல்களை எல்.ரி.ரி.ஈ. மீண்டும் ஆரம்பித்ததுடன் வைகாசியில் கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கல்லாரவா சிங்கள மீன்பிடிக் கிராமத்தைத் தாக்கிப் பெண்கள், குழந்தைகள் உட்பட 42 பேரைக் கொலை செய்தது. சித்திரையில் மீண்டும் பிணக்கு ஆரம்பித்த பின் குடிமக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதலாக இது அமைந்தது. அதன் பின் திம்புலாகல கோயிலைச் சேர்ந்த பிரதம விகாராதிபதி, பிரபல்யம் வாய்ந்த பெளத்த பிக்கு எல்.ரி.ரி.ஈ. யினால் கொல்லப்பட்டார். இவர் எல்.ரி.ரி.ஈ இனர் பற்றி வெளிப்படையாகவே
s INFORM, Situation Report July 1995 (Colombo), p. 6.
"Disappearances and Abductions and the Surfacing of Bodies in and around Colombo in 1995, "International Document prepared for the Law & Society Trust by M en i que A m e ras in g h e (Colom bo, 1995).

Page 18
18 இலங்கை 9வித உரிமைகள் நிலை 1995
விமர்சித்து வந்திருந்ததுடன் அப்பகுதி சிங்களக் குடியேற்றங்களுக்கு ஆதரவாக வாதாடியும் வந்துள்ளார். ஐப்பசியில் அநுராதபுரம், பொலன்நறுவை, அம்பாறை, மொனராகலை மாவட்டங்களில்? சிங்களவர்கள் மீது எல்.ரி.ரி.ஈ. யினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மேலும் 90 குடிமக்கள் இறந்தனர். தமிழர்களிடையே எல்.ரி.ரி.ஈ. யினால் கொல்லப்பட்டவர்கள் "துரோகிகள்", தகவல் கொடுப்பவர்களாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர்.
3. காணாமல் போனோர்
1995 ஆம் ஆண்டு சித்திரைக்கும் வருட இறுதிக்குமிடையில் கொழும்பு மற்றும் கிழக்கு ஆகிய இருபகுதிகளில் இருந்தும் காணாமல் போன 55 சம்பவங்கள் சர்வதேச மன்னிப்புச் சபையினால் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அரசாங்கப்படைகளே அவற்றுக்குக் காரணம் எனவும் நம்பப்படுகின்றது". பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் தமிழர்கள். எல்.ரி.ரி.ஈ. யினருக்கு எதிராக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிவரும் ஆயுதந்தரித்த தமிழ்க் குழுக்கள் அதாவது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT), தமிழீழ விடுதலைக் கழகம் (TELo) என்பன சில சம்பவங்களுக்குப் பொறுப்பாக இருந்தன.
கொழும்பில் காணப்பட்ட இறந்த உடல்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டபின்பு கொழும்புப் பகுதிகளில் கடத்தல்களின் எனினிக் கை பெரிதும் குறைவடையத் தொடங் கரியது, ஆனால அறிவிக்கப்படாத குறுகியக்காலத் தடுத்துவைத்தல்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.
19949 கார்த்திகையில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்கான மூன்று ஆணைக்குழுக்களை அரசாங்கம் நியமித்ததுடன் 1995 தையில் அதன் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இவை மூன்று மாத காலத்துக்கே நியமிக்கப்பட்டாலும் அவர்களது அதிகாரம் மேலும் ஆறு மாத காலங்களுக்கு இருமுறை நீடிக்கப்பட்டது. அவர்கள் விசாரணைக்கென 30,000 க்கு மேற்பட்ட புகார்களைப் பெற்றனர். ஐப்பசியில் தமது கண்டுபிடிப்புக்கள் பற்றிய இரு இடைக் கால அறிக்கைகளை ஒவ்வொரு ஆணைக் குழுவும் சனாதிபதி குமாரதுங்காவுக்குச் சமர்பித்தது. இவ் அறிக்கையின் உள்ளடக்கம்
7 INFORM, Situation Report October 1995 (Colom bo), p. 6.
$ Supra n 4 at p. 28 .
See, Law & Society Trust, Sri Lanka: State of Human Rights 1994, Chapter 6 (Colombo, 1995) pp. 1 02 - 1 05.

ஓடு நபரின் நன்மதிப்பைக் கெளரவித்தல் 9
வெளியிடப்படவில்லை. 1991 தையில் சனாதிபதி பிரேமதாசவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அதிகாரம் - நபர்கள் தன் விருப்பற்ற முறையில் அகற்றப்படுதல் பற்றிய சனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஐப்பசியில் முடிவடைந்ததுடன் புலன் விசாரணை செய்யாமலிருக்கும் விடயங்களைப் புதிய ஆணைக் குழுக்களுக்குக் கையளிக் குமாறும் அறிவுறுத்தப்பட்டது. சனாதிபதிக்கு கார்த்திகையில் தனது இறுதி அறிக்கையைச் சமர்பிக்கும் என அறிவிக்கப்பட்டது. இவற்றுள் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
1990 இல் பொலிஸ் உதவிப் பொறுப்பதிகாரி காணாமல் போயிருந்ததாகக் கருதப்படும் பட்ட லந்த உரக் கூட்டுத்தாபன வீடமைப்புத் திட்டத்தில் அமைந்திருந்த "சித் திரவதை வீடு" பற்றிய புகார்கள் தொடர்பாக விசாரிப் பதறி கு சனாத பத விசேட விசாரணை ஆணைக் குழு நியமிக்கப்பட்டதன் பின்பு ஐப்பசியில் கடந்த காலத்தில் காணமல் போனவர்கள் பற்றி மேலும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பாரிய புதைகுழிகள் பற்றிய தடைய விசாரணைகள் 19941 இல் முடுக்கிவிடப்பட்டன. இவ்விசாரணைகள் மூலம் ஜே.வி.பி. கிளர்ச்சியின் பொழுது காணமல் போன பெருந்தொகையானோர் பற்றிய தடயங்களைத் தேடிப்பிடித்திருக்க முடியும். ஆனால் 1995 காலத்தில் இது தொடர்பான எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
4. கட்டுப்பாடற்ற கைதுகளும் தருத்துவைத்தலும்
தெற் கல குறிப்பாக கொழும் பரிலும் , கரிழக கலிலும் வாழ் கண் ற ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் 1995 காலத்தில் கட்டுப்பாடற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டனர். தாக்குதல் நிறுத்தத்திலிருந்து எல்.ரி.ரி.ஈ. பின் வாங் கரியதனாலும், வடக்கு கிழக்கில ஆயுதப் பரிணக்கு மீள ஆரம்பித்ததினாலும் சித்திரையிலிருந்து கொழும்பிலும், கொழும்பைச் சுற்றியும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன. கொழும்பில் பெருமளவான சோதனை மையங்கள் உருவாக்கப்பட்டதுடன் பெருந்தொகையான தமிழ் மக்களை அவர்களது அடையாள சோதனைக்காகப் பொலிசாரினால் தடுத்து வைக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்தன. வருட இறுதியில் குடிமக்கள்
" INFORM, Situation Report October 1995 (Colombo), pp. 9-10. " Lumi iš 35, Law & Society Trust, Sri Lanka: State of Human Rights 1994,
Chapter 6 (Colom bo, 1995) pp, 1 02 - 105,

Page 19
20 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
அல்லது அரச இலக்குகள் மீது எல்.ரி.ரி.ஈ. யினால் மேற்கொள்ளப்பட்ட பிரதான தாக்குதல்களுக்குப் பின்பும், சித்திரையில் வடக்கு, கிழக்கில் தாக்குதல்கள் மீள ஆரம்பித்த பின்னரும் மிகப் பெரிய அளவிலான தடுத்துவைத்தல்கள் தென்பகுதியில் இடம்பெற்றன.
வடக்கு கிழக்கிலிருந்து கொழும்புக்கு அண்மையில் வந்த தமிழ் மக்களும், வேலைதேடி மலையகத்திலிருந்து வந்த மலைநாட்டுத் தமிழர்களுமே இக் கைதுகளுக்குப் பெரிதும் இலக்காகினர். இப்பரந்தளவிலான கைதுகள் பற்றி தேசிய நீரோட்டத்தினைச் சேர்ந்த சிங்கள மக்கள் மற்றும் ஆங்கில மொழி தொடர்பு சாதனங்களின் செய் தரிகளில் அதரிக முக கரியத் துவம் கொடுக்கப்படவில்லையெனினும் எல்.ரி.ரி.ஈ. தீவிரவாத சந்தேக நபர்கள் பற்றிய கைதுகள் பற்றி ஓரளவு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் விடுவிக்கப்பட்டனர். இத்தடுத்து வைத்தல்களின்போது சித் தரிரவதையோ, உடலியல் ரீதரியான கொடுமைப் படுத் தல களோ காணப்படவில்லை. எனினும் பெருந்தொகையான மக்கள் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு எவ வித குறி றச் சாட் டுக் களர் அலி லது விசாரணைகளுமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் 12.
தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் மூலம், பரந்தளவிலான கட்டுப்பாடற்ற தடுத்து வைத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள், தடுத்துவைக் கப்பட்டோருக்கான பாதுகாப்பின் மை பற்றிக் கூறப்பட்ட பரந்தளவிலான புகார்களின் விளைவாகவே மனித உரிமைகள் செயலணிப் பிரிவை (HRTF) மீண்டும் ஸ்தாபிப்பதற்கான அவசரகால ஒழுங்குவிதிகள் ஆனியில் வெளியிடப்பட்டன.
எச்.ஆர்.ரி.எவ். தனது பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக பணிப்புரைகளை வழங்குவதற்கான அதிகாரத்தை இவ் ஒழுங்குவிதிகள் சனாதிபதிக்கு வழங்கியது. பணிப்புரைகள் ஆனியில் வழங்கப்பட்டதுடன் கைதுகள் பற்றிய அறிவித்தல் கைதுசெய்யப்படும் போது "கைதுக்கான பற்றுச்சீட்டு" வழங்கல், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் பற்றிய கோரிக்கைகளை உள்ளடக்கும் வகையில் ஆடியில் திருத்தத்துக்கு உட்பட்டது. உண்மையில் இது நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் துஷ் பிரயோகங்களுக்கு எதிரான சிறந்த பாதுகாப்புக் களை இது வழங்கியிருக்கும். ஆனால் பணிப் புரைகள் பெருமளவு கவனத்திற்
o Institute of Human Rights, "Case Newsletter" Nos. 1-5 (Colombo).

ஓடு நாளின் நன்மதிப்பைக் கெளரவித்தல் 2
கொள்ளப்படவில்லை. தடுத்துவைத்தல்கள் தொடர்ந்து அதிகரித்ததினால் ஏற்பட்ட தொடர்ச்சியான கண்டனங்கள் காரணமாகக் கைதுசெய்யப்பட்ட 24 மணித்தியாலத்தினுள் அறிவிக்கத் தவறின் அதனை ஒரு குற்றமாகக் கருதுவதற்கான அவசரகால ஒழுங்குவிதிகள் புரட்டாதியில் மேலும் திருத்தத்துக்கு உட்பட்டது. இவ் ஏற்பாடும் பெரிதும் மதிக்கப்படவில்லை. கைதுசெய்யப்பட்ட ஒருவர் பற்றி அறிவிக்கத் தவறும் பாதுகாப்புப்படை அங்கத்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கான சம்பவங்கள் எதுவும் காணப்படவில்லை. அவசரகாலவிதி பற்றிய அத்தியாயத்தில் மேலும் இது தொடர்பான விதிகள் மற்றும் பணிப்புரைகள் பற்றி ஆராயப்படுகின்றன.
மனித உரிமை அமைப்புக்கள் அடிக்கடி கட்டுப்பாடற்ற கைதுகள், சித்திரவதை மற்றும் காணாமல் போதல் என்பவற்றிற்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதற்கு அவசரகால ஒழுங்குவிதிகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பதைத் திருத்தியமைப்பதற்கான கோரிக்கைகளை விடுத்திருந்தன. 1995 இல் அவசரகால ஒழுங்குவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் பற்றிய அனுபவத்திலிருந்து பாதுகாப்பு என்பது எழுத்தில் மட்டுமே உள்ளதுடன் நடைமுறைரீதியாக பயனற்றதாகவே தெரிகின்றது.
4.1 எல். ரி. ரி. ஈ யினால் மேற்கொள்ளப்பட்ட தடுத்துவைத்தல்
1995 இல் எண்ணிக்கை தெரியாதோர் எல்.ரி.ரி.ஈ. யினால் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். 1993இல் இருந்து எல்.ரி.ரி.ஈ. யின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான மாத்தையா கைதியாக வைக்கப்பட்டிருந்ததுடன் பின்பு ஐப்பசியில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எல்.ரி.ரி.ஈ. தமக்குக் கீழ் கைதியாக வைத்திருக்கும் அரசாங்கப் பாதுகாப்புப் படைகள் மற்றும் சிங்கள மீன்பிடிப்போர்களை ஐ.சி.ஆர்.சி. சென்று பார்வையிடுவதற்குப் பொதுவாக அனுமதி வழங்கியிருந்தாலும் தமிழ்க்கைதிகளைப் பார்க்க எவரையும் அனுமதிக்கவில்லை. ஆவணியில் திருகோணமலையிலிருந்து வடக்கு நோக்கிச் சென்ற கப்பலை எல்.ரி.ரி.ஈ. கடத்திச் சென்று அதிலுள்ள பிரயாணிகளையும், கப்பல் சிப்பந்திகளையும் தடுத்துவைத்தது. புரட்டாதியில் 121 பயணிகள் விடுவிக்கப்பட்டு ஐ.சி.ஆர்.சி. யிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் கப்பல் சிப்பந்திகளில் 8 பேரை மட்டும் இன்னமும் தடுத்து வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. அவர்களுட் சிலர் எதிராளிக் குழுவான ஈழம் மக்கள் சனநாயகக் கட்சி (EPDP) யைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுவதுடன் வருடத்தின் எஞ்சியகாலப் பகுதிமுழுவதிலும் தடுத்தே வைக்கப்பட்டிருந்தனர்.

Page 20
22 இலங்கை: வித உரிமைகள் நிலை 1995
4.2 வடக்கிலிருந்து தென்பகுதி வரும் பயணிகளைத் தடுத்து வைத்தலும்
சுதந்திரமான நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகளும்
எல்.ரி.ரி.ஈ. யின் கட்டுபாட்டிலுள்ள பகுதிகளில் இருந்து தென்பகுதிக்கு வரும் பெருமளவான மக்கள், கட்டுபாடற்ற முறையில் தடுத்துவைக்கப்படும் புதியதொரு வடிவத்திலான அனுபவத்தைப் பெற்றனர். தென்பகுதி நோக்கிய மக்களின் நகர்வுமிது எல்.ரி.ரி.ஈ. குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. புரட்டாதியில் இராணுவத் தாக்குதல்கள் தீவிரமாக்கப் பட்டதுடன் வடக்கில் தமது வீடுகளைவிட்டு இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதன் பின்பே தென் பகுதி நோக்கி மக்கள் வரத் தொடங்கினர்".
தென் பகுதி நோக்கி வந்த மக்களை அரசாங்கமும் கட்டுப்படுத்தியது. எல்.ரி.ரி.ஈ. யின் ஊடுருவல் இடம்பெறலாம் என்ற அச்சமே இதற்குக் காரணமாக இருந்தது. கார்த்திகையில் இராணுவம் முன்னேறி வரலாம் என்ற அச்சத்தினால் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டதன் பின்பு வவுனியாவிலிருந்து தென் பகுதி வரும் மக்கள் யாவரும் தாண்டிக் குளத்திலுள்ள தற்காலிக முகாமில் ஆகக்குறைந்தது மூன்று நாட்களாவது, தொடர்ந்து பிரயாணம் செய்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதத்தினைப் பெறுவதற்குத் தங்கியிருக்க வேண்டியிருந்தது. இவ் உத்தரவாதத்தினைப் பெறுவதற்கு அவர்கள் தெற்கிலுள்ள தமது வதிவிடத்தை நிரூபிக்க வேண்டும்'. மார்கழி 2 ஆம் திகதி வவுனியாவிலிருந்து தென்பகுதி வரவிரும்பும் குடிமக்களுக்குப் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் குறிப்பிடத்தக்க காலதாமதங்கள் உருவாக்கப்பட்டதுடன் விரைவான அனுமதிக் கான தேவைகளைத் திருப்தி செய்யும் வரையில் தங்கியிருப்பதற்கு மூன்று தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.
5. சித்திரவதை
வருடம் முழுவதும் சித் திரவதையும், கொடுமைகளும் தொடர்ந்து
இடம்பெற்றன. தீவு முழுவதிலும் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களில் வழக்கமாக இடம்பெறும் ஒழுங்கு நடவடிக்கைகளிலும் வடக்கு கிழக்கு
19 பார்க்க, உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் பற்றிய அத்தியாயம் 10. '' INFORM, Situation Report November 1995 (Colombo), p. 7,

ஓடு நபரின் நன்மதிப்பைக் கெளரவித்தல் 23
பிணக்கு தொடர்பாக இராணுவம், எஸ். ரி. எவ். பொலிஸ் அல்லது இரகசியப் பொலிசாரினால் மேற்கொள்ளப்படும் புலன் விசாரணைகள் என்ற முறையிலும் இவை மேற்கொள்ளப்பட்டன. இடம்பெற்ற பலசம்பவங்களுள் பொலிசினாலும் இராணுவத்தினராலும் மூன்று தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவங்களும், தாக்கப்பட்ட சம்பவங்களும் அடங்கியிருந்தன. தடுப்புக் காவலில் இருக்கும் பொழுது சித் திரவதையினால் மரணமடைந்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
1995 ஆம் ஆண்டுக்கான மாதாந்த நிலவரம் பற்றிய அதன் அறிக்கைகளில் "இன்போம்” ஆறு அடிப்படை உரிமைமீறல் சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. அவற்றுள் சித்திரவதை அல்லது கொடுமைப் படுத்தலுக்காக மனுதாரர்களுக்கு நீதிமன்றம் நட்டஈட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐந்து வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதுடன் அதில் சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் பற்றி இனிமேல்தான் தீர்மானிக்கப் படவிருக்கின்றன. இவ் எல்லாச் சம்பவங்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளே பொறுப்பாக இருந்தனர். இராணுவத்தினர் எவரும் இதில் ஈடுபட்டிருக்கவில்லை.
6. மனித உரிமைகள் குழுவின் கருத்துக்களும்
பரிந்துரைகளும்
1995 ஆடியில் ஐ.சி.சி.பி.ஆர். ஏற்பாடுகளின் அமுலாக்கம் பற்றிய இலங்கையின் மூன்றாவது பருவகால அறிக்கையை மனித உரிமைகள் குழு ஆராய் நீதது. அரசாங்கத் தனி அறிக் கை தருப்தரிகரமானதாகக் காணப்படவில்லை எனவும், கட்டுறுத்து ஏற்பாடுகளை நடைமுறையில் உண்மையாக அமுல்படுத்துவது பற்றிய விரிவான தகவல்களை அளிக்கத் தவறிவிட்டதையும் குழு சுட்டிக் காட்டியது. அரசாங்கத் தரினால் மேற்கொள்ளப்பட்ட பல வேறு முயற்சிகளை குழு வரவேற்றதுடன் பல்வேறுவிடயங்களில் தனது திருப்தியின்மையையும் வெளிக்காட்டியது. இவ் அத்தியாயத்துடன் தொடர்பான முக்கிய அவதானிப்புக்கள் பின்வருமாறு.
0 கட்டுறுத்தில் (Convenant) தெரிவிக்கப்பட்டதற்கு இணங்க எல்லா உரிமைகளையையும் உள்நாட்டுச் சட்ட முறைமை உள்ளடக்க வில்லை. கட்டுறுத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லைகளை மீறிய கட்டுப்பாடுகளைத் தடுப்பதற்கான போதுமான பாதுகாப்பு ஏறி பாடுகளையும் இது கொணி டிருக்க வில லை. மேலும் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் யாப்புக்கான சீர்திருத்தங்கள் இவ் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படவில்லை.

Page 21
24 இலங்கை வித உரிமைகள் நிலை 1995
9 அவசரகால ஒழங்குவிதிகளின் கீழ் உரிமைகளிலிருந்து விலகி நிற்றல் ஐ.சி.சி.பி.ஆர். இன் உறுப்புரை 4(2) உடன் முழுமையாக உடன்படவில்லை.
9 மிகப்பாரதூரமான குற்றங்கள் அல்லாத குற்றங்களுக்கும் கூட மரண
தண்டனை விதிக்கப்படமுடியும்.
9 குடிமக்களின் மரணம், காணாமற் போதல்கள், சித் திரவதை, மரணதணி டனைகள் , கட்டுப் பாடற்ற தடுத்து வைத தலி போன்றவற்றிற்குப் பிணக்கில் ஈடுபட்டுள்ள இருபிரிவினரும் காரணமாக இருந்தாலும் இத்தகைய மீறல்களைத் தடுப்பதற்கும் தணி டிப்பதற்குமான பயனுறுதி வாய்ந்த முறைமை ஏதும் காணப்படவில்லை. பொலிசாரினால் மேற்கொள்ளப்படும் மீறல்கள் ஒரு சுதந்திரமான குழுவினால் விசாரிக்கப் படுவதில்லை. குற்றமிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதும் அரிது.
9 அசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் காலவரையறையற்ற முறையில் தடுத்து வைத்தலுக்கான சந்தர்ப்பங்கள் கட்டுறுத்தை மீறுவதாக அமைகின்றது.
குழுவின் பரிந்துரை பின்வருமாறு:
9 கட்டுறுத்துடன் இலங்கையின் உள்நாட்டுச் சட்டம் முழுமையான உடன்பாட்டைக் கொண்டிருப்பதனை உறுதிசெய்வதற்கான மிக அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
9 இடம்பெற்ற எல்லா மீறல்களும் சுதந்திரமாக விசாரணை செய்யப்பட வேண்டும், குற்றமிழைத்தவர்கள் தண்டிக் கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும், அத்துடன் அரசின் அவசரகால நிலைமையின் கீழ் பிரகடனம் செய்யப்பட்ட விடயங்களில் கட்டுறுத்தின் ஏற்பாடுகள் முற்றாக மதிக்கப்பட வேண்டும்.
குழுவினால மேற் கொள் ளப் பட்ட அதி த கைய கருத்துக் களும் பரிந்துரைகளும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புக் களினால் முன் வைக் கப் பட்ட அதே வரி யங் களைத் தானி வலுவூட் டுவதாக அமைந்துள்ளது. அத்துடன் உண்மையான சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதற்கான அவசரத் தேவையைக் குழு மேலும் கோடிட்டுக் காட்டுகின்றது. அத்தகைய நடவடிக்கைகள்தான் இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறையைச் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுடன் ஒத்துச் செல்வதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும்.

3.
அவசரகால ஆட்சி
1995 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும், எல்லைப் பிரதேசங்களிலும், கொழும்பிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் அவசரகால ஆட்சி தொடர்ந்திருந்தது. இப்பிரதேசங்களில் 1994 இறுதிவரை இவ்வாட்சி அமுலில் இருந்ததெனினும் ஆனி,புரட்டாதி, மார்கழி மாதங்களில் அவசரகாலச்சட்டம் அமுலிலிருக்கும் பிரதேசங்கள் மேலும் விரிவாக்கப்பட்டன. இம்மாற்றங்கள் பற்றி எவ்வித காரணங்களும் கூறப்படவில்லை. பின்னிணைப்பு "அ" இல், அவசரகாலச்சட்டம் அமுலிலிருந்த பிரதேசங்களும் பின்னர் செய்யப்பட்ட மாற்றங்களும் தரப்பட்டுள்ளன.
அவசரகால ஆட்சி இலங்கையில், பொதுசன பாதுகாப்புக் கட்டளைச்
சட்டத்தின் கீழ் அமுல் நடத்தப்படுகின்றது. இதைப் பற்றிய விபரங்கள் இலங்கை: மனித உரிமைகள் நிலை 1993 இல் அவசரகால ஒழுங்கு விதிகள் பற்றிய அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளன. 1995ஆம் ஆண்டின் ஆரம்பத் தரில் , 1994 இறுதியிலிருந்த அவசரகால ஒழுங் குவிதகள் தொடந்துமிருந்ததுடன் இவ் ஒழுங்கு விதிகளின் உள்ளடக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 1995 இல் புதிய ஒழுங்கு விதிகள் சேர்க்கப்பட்டன.
அவசரகால (நானாவித) ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்கு விதிகள் இலக்கம் 4, 1994 ஆம் ஆண்டு முழுவதும் நடைமுறையிலிருந்தன?. இவைதான்
Law & Society Trust ( C o lo m bo, 1994) Chapter II, pp. 12 - 26. 2 See Law & Society Trust, Sri Lanka State of Human Rights 1994 (Colombo,
í 995), Chap te r l l I for details,

Page 22
26 இலங்கை: மவித உரிமைகள் நிலை 1995
கைதுசெய்து தடுத்துவைப்பதற்கான "பிரதான" அவசரகால ஒழுங்கு விதிகளாக இருந்தன. 1995இல் இரு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் ஒன்று கைது செய்து தடுத்துவைத்தல், மற்றது குடியிருப்பாளர் பொலிசாருக்குச் சில தகவல்களை வழங்குதல் தொடர்பானது.
1. கைது செய்தலும் தருத்துவைத்தலும்
1.1 கைதுசெய்தல் பற்றி அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவித்தல்
1995 புரட்டாதியில் சில குறிப்பிட்ட கைதுகளை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிப்பது பற்றிய திருத்தம் கொண்டு வரப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ஒருநபர் கைது செய்யப்படும் பொழுது ("ஒழுங்கு விதி 18 கைது") அவர் விடுவிக்கப்படவேண்டுமா அல்லது விசாரணைக்கு தடுத்து வைக்கப்படவேண்டுமா என்பது பற்றி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் (வடக்கு கிழக்கில் 7 நாட்கள். ஏனைய இடங்களில் 48 மணித்தியாலங்கள்) முடிவு செய்யப்பட வேண்டும். சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட வேண்டுமெனில் ஒரு தடுப்பு ஆணை மேற்கொள்ளப் படவேண்டும். (இதனை 17 ஆம் ஒழுங்குவிதியின் கீழான தடுப்புக்காவலுடன் தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாது). இந்தச் சந்தர்ப்பங்களில் தான் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும் என்பது கொண்டுவரப்பட்டது. திருத்தத்தின் படி, ஒரு நபரின் கைது பற்றி அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் 48 மணித்தியாலத்துக்குள் அறிவிக்கப்பட்டால் மாத்திரமே தடுப்பு ஆணை விடுவிக்கப்பட முடியும். இதன்படி "கைது பற்றி அறிவிக்காத ஒருநபர் குற்றம் செய்தவராவார்" என விதிக்கப்பட்ட பொழுதிலும் கைதுபற்றி அறிவிக்கவேண்டிய பொறுப்புள்ளவர் யார் எனக் குறிப்பிட இத்திருத்தம் தவறிவிட்டது.
இத்திருத்தம் தொடர்பான நோக்கம் தெளிவற்றதாக உள்ளது. கைது பற்றி அணி மையிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட விடயங்களிலும் கூட தடுப்பு ஆணைகள் விடுக்கும் அதிகாரத்தை வரையறைப் படுத்துவதுதான் இதன் நோக்கம் எனக் கொள்ளலாம். மறுதலையாக சகல கைதுகளையும் ஒழுங்கு விதி 18 இன் கீழ் அறிவிக்கச் செய்வதைக்
1994, 4 ஆவது இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் இப்புதிய பந்தி அறிமுகப்படுத்தப்பட்டு 1995 ஆனி 7 ஆம் திகதிய 874/8 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.

óእጪdjhla éኳLd 27
கட்டாயமாக்குவதுதான் நோக்கம் எனவும் விளங்கிக் கொள்ளலாம். இவ்விளக்கத்தின்படி அறிவிக்காமலிருப்பது ஒரு குற்றமாகும். அத்துடன் அறிவிக்கும் கடமை கைது செய்யப்படும் சந்தர்ப்பத்திலேயே எழுகின்றது. தடுப்பு ஆணை விடுவிக்கப்படும் கட்டத்தில் அல்ல. நோக்கம் சந்தேகமாக இருக்கின்ற காரணத்தினால ஒழுங்குவிதிகளிலுள்ள தெளிவின் மை தொடர்ந்தும் பிரச்சினையாகவே உள்ளது.
1.2 மனித உரிமைகள் செயலணிப் பிரிவு (HRTF)
அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்கு
விதிகளிலுள்ள கைது செய்தலும் தடுத்துவைத்தலும் தொடர்பான ஏற்பாடுகள் 1995 ஆனி மாதத்தில் இன்னுமொரு ஒழுங்கு விதிகள் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மாற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளது. இம்மாற்றங்களே 1995ஆம் ஆண்டு 1ஆம் இலக்க அவசரகால (மனித உரிமைகள் செயலணிப் பிரிவை ஸ்தாபித்தல்) ஒழுங்கு விதிகள் ஆகும். 1994 இன் நடுப்பகுதியில் மனித உரிமைகள் செயலணிப் பிரிவிடம் கைதுகள் பற்றி அறிவிப்பது காரணமின்றிக் கைவிடப்பட்டது. இதன் காரணமாக எச். ஆர்.ரி.எவ். இன் அந்தஸ்து பற்றிய சந்தேகம் எழுந்தது. ஓராண்டு காலம் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழான கைதுகளும் தடுத்து வைத்தலும் நீடித்தன. விரும்பத்தகாத இந்த நிலைமை இப்புதிய ஒழுங்குவிதிகளின் பிரகடனத்தின் மூலம் ஈடு செய்யப்பட்டது.
விளக்கப்படாத காரணங்களினால் பழைய எச்.ஆர்.ரி.எவி . மீள உயிர்ப்பிக்கப்படவில்லை. மாறாக 1995 ஆனியில் வித்தியாசமான சட்ட அந்தஸ்தினைக் கொண்ட ஒரு புதிய எச்.ரி.ஆர்.எவ். உருவாக்கப்பட்டது. அதனுடைய கட்டமைப்பு முற்றாக மாற்றப்பட்டிருந்தது. ஆனால் முன்னைய பணியாளர்கள் தொடர்ந்தும் புதிய அமைப்பில் பணிபுரிந்தனர்.
புதிய எச்.ஆர்.ரி.எவ். சட்ட அந்தஸ்து 1973இன் இலங்கை மன்றச் சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின் ஒன்றிணைப்பினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. புதிய எச்.ஆர்.ரி.எவ். இலங்கை மன்றத்துடன் எவ்வித இணைப்பையும் கொண்டிருக்கவில்லை. இது முழுக்கவும் அவசரகால ஒழுங்குவிதிகளினால் உருவாக்கப்பட்டதன் காரணமாக அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்படும் பொழுது இதுவும் இல்லாமற் போகும்.
1995 ஆம் ஆண்டு ஆனி 7 ஆம் திகதி 874/8 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
s See Law & Society Trust, Sri Lanka . State of Human Rights 1994 (Colombo,
1995), pp. 53-54.

Page 23
28 இங்கை: 19வித உரிமைகள் நிலை 1995
புதிய ஒழுங்குவிதிகளின்படி எச்.ஆர்.ரி.எவ். அமைப்பின் ஏற்பாடுகளும் அதன்
அங்கத்தவரது பதவி எதிர்காலமும் முன்னேற்றகரமானதன்று. பழைய ஒழுங்குவிதிகளின் படி சட்டம், நிருவாகம், மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல், வங்கியியல் அல்லது சமூக விஞ்ஞானம் ஆகியவற்றில் தேர் ச் சரியும் அனுபவமும் கொணி டவர் களர் அங்கத தவர் களாக நியமிக்கப்படலாம். புதிய விதிகளில் அங்கத்துவம் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. பழைய ஒழுங்குவிதிகளின் படி அங்கத்தவர்கள் சனாதிபதியால் நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் பதவி வகித்தனர். அவர்கள் பெரும்பாலான அங்கத்தவர்களின் அல்லது தலைவரின் வேண்டுகோளின் பேரில் மாதி திரமே பதவி நீக்கம் செய்யப்படலாம். (தலைவரும் சனாதிபதியினால் நியமிக்கப்படவும் பதவி நீக்கப்படவும் உரித்துடையவர்). புதிய ஒழுங்குவிதிகளின் பதவிக்காலம் பற்றியோ அல்லது பதவி நீக்கல் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. இது விரும்பத்தக்கதன்று. ஏனெனில் அங்கத்தவர்கள் எக்காரணத்துக்காகவும் எந்த நேரத்திலும் பதவிநீக்கம் செய்யப்படலாம்.
பலமிக்கதும், காத்திரமானதும் சுதந்திரமானதுமான எச்.ஆர்.ரி.எவ். ஒன்றினை உருவாக்கும் வாய்ப்பு தவறவிடப்பட்டபோது புதிய ஒழுங்குவிதிகள் வேறு சில நன்மைகளைக் கொண்டிருந்தன. இவற்றில் ஒன்று தேசிய ஆலோசனைக் குழுவையும் பிரதேச ஆலோசனைக் குழுவையும் எச்.ஆர்.ரி.எவி.க்கு ஆலோசனை கூறுவதற்காக உருவாக்குதல். இதன் மூலம் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்புக்களின் அனுபவங்களைப் பெறமுடியும். அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகளும் சேர்த்துக் கொள்ளப்படமுடியும். இதனால் கட்சி அரசியலுக்கு அப்பால் மனித உரிமைகளைப் பாதுகாக்கலாம்.
எச்.ஆர்.ரி.எவி . இனி செயற்பாடுகளும் , அதகாரங்களும் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. எனினும் புதிய ஒழுங்குவிதிகள் மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காக சனாதிபதியின் பணிப்புரைகளை வழங்க ஏற்பாடு செய்கின்றன". இதன்படி கைது செய்யப்படும் பொழுது பாதுகாப்பு
6 1991 தடுப்புக் காவலில் உள்ளோரின் அடிப்படை உரிமைகளின் கண்காணிப்பு பற்றிய ஒழுங்குவிதிகள் 1991 ஆவணி 10 ஆம் திகதி 674/17 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.
7 பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளின் தலைவர்களுக்கு இத்தகைய பணிப்புரைகளைச் சனாதிபதி விடுக்கலாம். ஒருநபரின் கைது அல்லது தடுத்துவைத்தல் தொடர்பான அடிப்படை உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதற்கும் எச்.ஆர்.ரி.எவ் தனது அதிகாரங்களையும், செயற்பாடுகளையும், கடமைகளையும் செயற்படுத்தவும் பிரயோகிக்கவும் இத்தகைய பணிப்புரைகள் அவசியமானவை. (1995 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க அவசரகால ஒழுங்குவிதிகளின் (மனித உரிமைகள் செயலணிப் பிரிவின் ஸ்தாபிதம்) 8 (1) இன் ஒழுங்குவிதி.

ᏧᏂᎽᏧᎫᏜIᎸ: Obj.Ꮷ] 2 9
மற்றும் அது தொடர்பான விடயங்கள் தொடர்பான சில பணிப்புரைகளை 1995 இல் சனாதிபதி வழங்கினார். இத்தகைய பணிப்புரைகள் அவசரகால ஒழுங்குவிதிகளைப் போன்றே சட்ட வலிமை கொண்டவை.
புதிய ஒழுங்குவிதிகளும், பணிப்புரைகளும் பின் வரும் அம்சங்கள் தொடர்பான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தன: கைது செய்யும் அதிகாரிகள் தமது அடையாளத்தை வெளிப்படுத்தல், கைதுகளை எச்.ஆர்.ரி.எவ். க்கு அறிவித்தல், கைது செய்யும் அதிகாரியின் பெயர், தரம், கைது செய்த நேரம், கைது செய்யப்பட்டவர், அவர் வைக்கப்பட்டுள்ள இடம், அவர் தனது குடும்பத்தவருடன் தொடர்புகொள்ள நியாயமான வசதிகள், பெண்கள் மற்றும் 12 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைக் கைது செய்தல் தொடர்பான விசேட ஏற்பாடுகள்.
பொதுவாக நோக்கும் பொழுது கைது செய்தல், தடுத்துவைத்தல், தொடர்பான ஏற்பாடுகள் (ஆகக் குறைந்தது எழுத்திலாவது) குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருந்தன. இவை இரு அடிப்படையில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. முதலாவது, இவை மூன்று சட்ட ஏற்பாடுகளுடன் தொடர் புள்ள காரணத்தினால் எவ் ஒழுங்குவித சம்பந்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தல் மிகவும் கடினம். இவை 1994 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகள், 1995 ஆணியில் எச்.ஆர்.ரி.எவ். என்பதினை உருவாக்கிய ஒழுங்குவிதிகள், பின்னர் வெளியிடப்பட்ட சனாதிபதியின் பணிப்புரைகள்". இறுதியாக வெளியிடப்பட்ட சனாதிபதியின் பணிப்புரைகள் பிரசுரிக்கப்படாத காரணத்தினால் அவற்றைப் பெறுவது கடினம். எனவே இவை யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கைநூலைத் தயாரிப்பது மிகவும் முக்கியமானது. இக் கைநூல் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கும் ஏனைய பொருத்தமான நபர்களுக்கும் வழிகாட்டக் கூடியதாக விளங்கும்.
校 ஆனால் பணிப்புரைகள் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. அரசாங்க வெளியீடுகள் பணியகத்திலும், நூல்நிலையங்களிலும் பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய வகையில் ஓர் அரசாங்க வெளியீடாகவும் கொடுக்கப்படவில்லை. பொதுமக்களுக்கு இலகுவாகக் கிடைக்கக்கூடிய நிலையிலும் காணப்படவில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளினால் பணிப்புரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மிகக் குறைவான கவனத்திற்கு இது ஒரு பங்களிக்கும் காரணியாக விளங்குகின்றது.
9 மனித உரிமைகள் குழுக்கள், சட்டவல்லுனர்களுக்கு இப்பணியில் உதவுவதற்கு
நடைமுறை அவசரகால ஒழுங்கு விதிகளின் கழான கைதுசெய்தலும்
தடுத்துவைத்தலும் (கொழும்பு) என்ற சட்டச்சுருக்கத்தினை 1995 புரட்டாதியில்
நடேசன் நிலையம் புதிய பதிப்பாக வெளிக்கொணர்ந்தது.

Page 24
30 இலங்கை: 19வித உரிமைகள் நிலை 1995
இரண்டாவது விமர்சனம் சற்றுப் பாரதூரமானது, அதாவது நடைமுறையில் இவ் ஒழுங்கு விதிகளோ அல்லது சனாதிபதியின் பணிப்புரைகளோ கடைப்பிடிக்கப்படுவதில்லை. சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் இவற்றை வெறுமனே "காட்சிப் பொருளாகக்" கருதுகின்றார்களே தவிர தமக்குள்ள சட்டக் கடமைகளாக அவற்றைக் கணக்கெடுப்பதில்லை. இவ்வாறு கூறுவதில் தவறு ஏதுமில்லை. ஏனெனில் இதுவரை எந்தவொரு சட்ட அமுலாக்கல் அதிகாரியும் இவ் ஏற்பாடுகளைக் கவனத்தில் எடுக்காததன் காரணமாக சட்டத்திற்கு முன் கொண்டுவரப்படவில்லை.
1.3 கைது செய்தல், தடுத்துவைத்தல் தொடர்பான ஒழுங்கு விதிகளிலுள்ள ஏற்றுக்
கொள்ளப்படமுடியாத அம்சங்கள்
கைது செய்தல், தடுத்துவைத்தல், தொடர்பான ஒழுங்கு விதிகளிலுள்ள ஏற்றுக்கொள்ளப்படமுடியாத அம்சங்களை நீக்கிவிடுமாறு இலங்கை மற்றும் சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் பல வருடங்களாக வற்புறுத்திய போதிலும் 1995 இல் இவை மாற்றப்படாமலேயே நீடித்தன. இவற்றில் மிக மோசமானவை பின்வருவனவற்றிற்கு வசதியளிக்கும் ஏற்பாடுகளாகும். வரையறையற்ற காலத்திற்கு தடுப்புக்காவலில் தடுத்துவைத்தல், கட்டாயத் தடுத் துவைத்தலுக்கான அடிப் படை நிபந்தனைகள் இல் லாமை, பாதுகாப்பிலுள்ள ஒருநபர் மரணமடைந்தால் நடாத்தப்படும் மரணவிசாரணை தொடர்பான சாதாரண சட்டங்களை இரத்துச் செய்தல் 10. கைதுசெய்தல், தடுத்துவைத்தல் தொடர்பான ஏற்பாடுகளிலுள்ள தெளிவின்மை, நெளிவுகள், தவறுகள், ஒழுங்கின் மை ஆகியவை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2. ஏனைய புதிய ஒழுங்குவிதிகள்
1995 இல ஏனைய பல புதரிய அவசரகால ஒழுங் குவிதகள் அறிமுகப்படுத்தப் பட்டன.
2.1 வீட்டுடைமையாளர் தகவல்களை வழங்குதல்
1995 புரட்டாதியில் 1994ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளுக்கு இரண்டாவது திருத்தம்
* சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம், இலங்கை, மனித உரிமைகள் நிலை 1994 (கொழும்பு, 1995) அத்தியாயம் 3 இல் குறைபாடுகள் மென்மேலும் ஆராயப்படுகின்றன.

dAGKð JđSTA) cî) 3 1
கொண்டு வரப்பட்டது. இதன்படி வீட்டுச் சொந்தக்காரர் பொலிசாருக்கு சில தகவல்களை வழங்கவேண்டுமென விதிக்கப்பட்டது. (அண்மைக்காலத்தில் இத்தகைய ஒழுங்கு விதி நீக்கப்பட்டுள்ளது). இத்திருத்தத்தின்படி கொழும்பு மாநகர எல்லைக்குள்ளும், கொழும்பு மாவட்டத்தின் ஏனைய சில பிரதேசங்களிலும் வசிக்கும் எந்தவொரு வீட்டுடைமையாளரும் உதவி பொலிஸ் மாஅதிபரின் தரத்துக்குக் குறையாத ஒரு பொலிஸ் அதிகாரி கேட் குமிடத்து தமது வீட்டில் குடியிருக்கும் சகல நபர்களதும் பெயர்ப்பட்டியலை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்க வேண்டுமென விதிக்கப்பட்டது. பட்டியலில் குடும்ப அங்கத்தவர், வேலைக்காரர், வேறு நபர்கள் வேறுபடுத்திக்காட்டப்பட வேண்டும். அத்துடன் தேவையானபோது வீட்டுக் குடியிருப்பாளர் பட்டியலில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுப்பதிகாரிக்கு அறிவிப்பதோடு பொறுப்பதிகாரிக்கு அறிவிக்காமல் ஓர் அந்நிய நபரைத் தனது வீட்டில் வைத் திருக்கவும் கூடாது எனவும் விதிக்கப்பட்டது.
இவ் ஒழுங்குவிதி பல குழப்பங்களைத் தோற்றுவித்தது. அத்துடன் சகல தமிழர்களும் தம்மைப் பொலிசில் "பதிவு" செய்துகொள்ள வேண்டுமென்ற ஒரு பொதுவான அபிப்பிராயம் ஏற்பட்டது. பாதுகாப்புத் தடை நிலையங்களில் தமிழ்ப் பெயர்களைக் கொணி டோர் தம்மைப் பொலிசில பதிவு செய்துள்ளனரா என அடிக் கடி வினாவப் பட்டனர். எனினும் இவ் ஒழுங்குவிதிகள் கூறுவதன்படி ஓர் உதவிப் பொலிஸ் மாஅதிபர் தரத்திற்குக் குறையாத பொலிஸ் அதிகாரி கட்டளையிடும்போது மாத்திரமே அவ்விதிகள் வலுவுடையது என்பது தெளிவானது. எனினும் அத்தகைய கட்டளைகள் எவ்வாறு இடப்படவேண்டும் என்றோ அல்லது அத்தகைய கட்டளை பொதுவாக இடப்படுமிடத்து விளம்பரப்படுத்தப்படவேண்டுமா என்பது பற்றியோ இவ் ஒழுங்குவிதிகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
2.2 குற்றவாளிகளுக்கு தஞ்சமளித்தல், விடுவளவுகள், வாகனங்களைப்
பறிமுதல் செய்தல்
ஐப்பசியில் கொண்டுவரப்பட்ட இரு ஒழுங்குவிதிகள் கடுமையான தண்டனைகளுடன் கூடிய புதிய குற்றங்களை அறிமுகம் செய்தன. இவற்றில் ஒன்றின்படி பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவசரகால (நானாவித
1 1994 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளுக்கு 20 A என்ற புதிய பந்தி ஒன்றைச் சேர்த்துக் கொண்டதன் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஒழுங்குவிதி 1995 ஆம் ஆண்டு புரட்டாதி 21 ஆம் திகதிய 895/15 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

Page 25
32 இலங்கை; மனித உரிமைகள் நிலை 1995
ஏற்பாடுகளும் அதிகாரங்களும்) ஒழுங்குவிதிகளின் பகுதி 3 இன் கீழ் இழைக்கப்பட்ட குற்றத்திற்காகத் தேடப்படும் ஒரு நபரைத் தமது வளவில் தஞ்சமளித்தலை 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாக்கியது2. மேலும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டபின் அத்தகைய குற்றத்தினைப் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட வீடுவளவு அரசாங்கத்தினால் பறிமுதலி செய்யப் படும் . இவ் வfடு வளவுகளின் சொந்தக் காரர் சம்பந்தப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அவருக்கு இக் குற்றம் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும் அவர் இத்தண்டனைக்கு உட்படுவார். இத்தகைய தஞ்சமளித்தல் வாடகைக்கு குடியிருப்பவர் செய்தாலும் அல்லது அவ்வளவுக்கு உரிமையற்றவர் செய்தாலும் வீட்டுரிமையாளர் தனது சொத்தினை இழந்துவிடுவார். இதிலுள்ள ஒரேயொரு நன்மை என்னவெனில் சொத்தினை அரசு பொறுப்பேற்பதற்குமுன் பத்திரிகையில் பிரசுரிக்கப்படும். அதன்பின்னர் இச் சொத்தின் மீது உரிமை அல்லது ஈடுபாடு உள்ளவர் (குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் தவிர) தமது கோரிக்கையை முன்வைக்கலாம். இங்கும் கூட பறிமுதலை நீதிமன்றம் தடுக்கவோ அல்லது சொத்தினை மீட்டளிக்கவோ முடியாது. தான் நியாயமானது எனக் கருதும் ஒரு தொகையினைச் சொத்துக்கான நட்டஈடாக வழங்குமாறு அரசாங்கத்தை நீதிமன்றம் பணிக்கலாம். இந்த ஏற்பாட்டின் காரணமாகத் தென் பகுதியிலுள்ள தமிழ்மக்கள் தங்குமிடத்தையோ அல்லது வாடகை வீடுகளையோ பெறுவதில் மிகுந்த கஷடங்களை எதிர் நோக்கினர். அதேநாளில் 19 கொண்டுவரப்பட்ட மற்ற ஒழுங்குவிதி வாகனம் சம்பந்தமானதுடன் இதுவும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அல்லது அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் போக்குவரத்து வழங்கிய மைக் காக முதலாவது ஒழுங்குவிதியின் ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது.
2.3 தடை செய்யப்பட்ட வலயங்கள் மற்றும் பொருட்களைக்
கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகள்
இவ் ஒழுங்குவிதிகள் முன்னைய வருடத்திலிருந்து தொடர்ந்தன. 1995 இல் அவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஒரு கட்டத்தில் முன்னைய ஒழுங்கு விதிகள் இரத்துச் செய்யப்பட்டு புதிய ஒழுங்கு விதிகள்
12 1995 ஆம் ஆண்டு ஐப்பசி 30 ஆம் திகதிய 895/4 இலக்க விசேட வர்த்தமானியில் 1995 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க அவசரகால (குற்றவாளிகளுக்குப் புகலிடமளித்தல்) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டன.
s 1995 ஆம் ஆண்டு 1ஆம் இலக்க அவசரகால (மோட்டார் வாகனங்களைப்
பறிமுதல் செய்தல்) ஒழுங்குவிதிகள், 1995 ஐப்பசி 30 ஆம் திகதிய 895/5 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளிடப்பட்டது.

dođJћTa čiđ 33
கொண்டுவரப்பட்டன". இம் மாற்றங்கள் அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. க்குமிடையிலான போர்நிறுத்தம் சித்திரையில் முடிவடைந்ததன் பின்னர் இராணுவ நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களுடன் தொடர்புபட்டிருந்தன.
2.4 Td — GUIT (Jack - Pots)
அவசரகாலச் சட்டத்தை தேசிய பாதுகாப்பிற்குப் பெரிதும் பொருத்தமற்ற விடயத்தில் பயன்படுத்தல் விரும்பத்தகாத நிகழ்வாகும். அரசாங்கத்தின் இத்தகைய அவசரகால துஷ்பிரயோகம் முன்னைய அரசாங்கங்களில் மிகச் சாதாரணமாக இடம்பெற்றது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அத்தகைய நடைமுறைகளைத் தகர்த்தே வந்துள்ளதெனினும் 1995ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க அவசரகால (அதஷட விளையாட்டுக் கள் ) (ஜாக் -பொட்) ஒழுங்குவிதிகளானது 1991 இல் சனாதிபதி பிரேமதாச அவர்களினால் கொண்டுவரப்பட்ட ஒழுங்குவிதிகளை நினைவூட்டின.
1995 ஆம் ஆண்டு ஒழுங்குவிதிகளின்படி எந்தவொரு இடத்திலும் "அதிஷ்ட விளையாட்டுக்களை "(ஜாக்பொட்) விளையாடுவது" குற்றமாகக் கருதப்படும். அத்துடன் "எத்தகைய எழுதப்பட்ட சட்டத்தினால் அல்லது அனுமதிப் பத்திரத்தினால் அல்லது அதிகாரத்தினால் அனுமதிக்கப் பட்டிருந்தாலும் இது குற்றமாக்கப்பட்டது. இத்தகைய விளையாட்டுக்கள் நடைபெறும் எந்தவொரு இடத்திலும் நுழைந்து அங்குள்ள பொருட்களைக் (பணம் உட்பட) கைப்பற்றி அவற்றை அரசுடைமையாக்குவதற்கு இவ் ஒழுங்குவிதிகள்
组救 பார்க்க 1995 ஆம் ஆண்டு 1ஆம் இலக்க அவசரகால (பொருட்களை கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள்) ஒழுங்குவிதிகள், 1995 பங்குனி 10 ஆம் திகதிய 861/17 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. 1995 ஆம் ஆண்டு 3ஆம் இலக்க அவசரகால (தடைசெய்யப்பட்ட வலயத்தை ஸ்தாபித்தல்) ஒழுங்குவிதிகள், 1995 ஆம் ஆண்டு சித்திரை 20 ஆம் திகதிய 867/10 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளிடப்பட்டன. பின்னையதில் “3 ஆம் இலக்க” என்பது தவறாக இருந்ததினால் இதனை "1 ஆம் இலக்க” என வாசிக்க வேண்டும். கொண்டுசெல்லக் கூடிய பொருட்களில் எவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டதென்பது பற்றிய பட்டியல் 1995 சித்திரை 14 ஆம் திகதிய 866/13 விசேட வர்த்தமானியில் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 1995 சித்திரை 20 ஆம் திகதிய 867/12 ஆம் இலக்க விசேட வர்த்தமானியிலும் மீண்டும் வெளியிடப்பட்டது.
s 1995 ஆம் ஆண்டு ஆடி 26 ஆம் திகதிய 881/10 ஆம் இலக்க பிரத்தியேக
வர்த்தமானி

Page 26
34 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
பொலிசாருக்கு அதிகாரத்தை அளித்தன. ஆனால் இவ் ஒழுங்குவிதிகளின் அவசியம் பற்றி விளக்குவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது.
3. ஏனைய ஒழுங்குவிதிகளும் அறிவித்தல்களும்
முகத்துவாரத்திற்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையிலுள்ள கடற்பகுதியைத் தடைசெய்யப்பட்ட வலயமாக்குதல், இது பின்னர் வெள்ளவத்தை வரை (1995 ஐப்பசி) விஸ்தரிக்கப்பட்டமை, வாகனங்களைப் பொறுப்பேற்றல் (1995 ஆடி), சொத்துக்களைப் பொறுப்பேற்றல் (1995 ஐப்பசி), யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு முதலிய நிருவாகப் பிரதேசங்களிலுள்ள சில உள்ளுராட்சிச் சபைகளின் பதவிக் காலத்தை நீடித்தமை போன்ற ஒழுங்குவிதிகளும், அறிவுறுத்தல்களும் 1995 இல் ஏற்படுத்தப்பட்டன. 1995 புரட்டாதி முதல் மார்கழி வரை அவசரகால ஒழுங்குவிதிகளின்படி தணிக்கை அமுல் படுத்தப்பட்டது. இதைப் பற்றிப் பின்னர் தனியாக விளக்கப்படுகின்றது. கொலன்னாவ எண்ணெய் தாங்கி நிலையத்தின்மீது நடத்தப்பெற்ற எல்.ரி.ரி.ஈ. யினது தாக்குதல்களைத் தொடர்ந்து ஐப்பசி 21, 22 ஆம் திகதி இரவுகளில் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அமுலிலிருந்தது.
4. செய்தித் தணிக்கை
1995 இல் கொணி டுவரப் பட்ட பிரச்சினைக் குரிய அவசரகால ஒழுங்குவிதிகளில் முக்கியமானது செய்தித்தணிக்கையே. புரட்டாதி 21 இல் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் ஒரு பரவலான செய்தித்தணிக்கை அறிமுகப்படுத்தப் பட்டதுடன் 17 புரட்டாதி 28 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு
18 1996 ஆம் ஆண்டின் ஒழுங்குவிதிகளில் "அதிஷ்ட விளையாட்டு" க்கள் பற்றிய வரையறை ஒன்று காணப்பட்டது. 1995 ஆம் ஆண்டின் ஒழுங்குவிதிகளில் அத்தகைய வரையறை எதுவும் காணப்படவில்லை. இதனால் அரசாங்க லொத்தர்களின் நிலைமை பற்றிய ஒரு முக்கிய கேள்வி எழுந்தது. ஏனெனில் 1991 வரையறையிலிருந்து இந்த லொத்தர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 1991 ஆம் ஆண்டில் ஒழுங்குவிதிகள் பொதுமக்கள் பாதுகாப்புடன் முரண்படும் சந்தர்ப்பங்களில் அவ்வொழுங்கு விதிகளையிட்டு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டது. (டி. சி. அபயவர்த்தன எதிர் ஏர்னஸ்ட் பெரேராவும் மற்றவர்களும் விண்ணப்ப எண் 92/91). ஆயினும் இவ் வழக்கு தோவியுற்றது. நீதிமன்றம் இச்சந்தர்ப்பத்தில் சில சூழ்நிலைகள் காணப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சமர்பித்த சத்திய மனுவின் அடிப்படையில் அத்தீர்ப்பை வழங்கியிருந்தது.
17 1995 ஆம் ஆண்டு புரட்டாதி 21 ஆம் திகதி 889/16 ஆம் இலக்க விசேட வர்த்தமானி.

child J3's ca) 35
திருத்தம் 18 நிலைமையை மேலும் மோசமாக்கியதினால் 1995 மார்கழி 20 இல் அது நீக்கப்பட்டது".
இவ் ஒழுங்குவிதிகள் குறிப்பிட்ட சில வகையான செய்திகளைப் பிரசுரிப்பதை முற்றாகத் தடைசெய்தது. தடைசெய்யப்பட்ட விடயங்களை ஆய்வு செய்யும் போது மிகவும் பரவலான முறையில் அவை தெரிவு செய்யப்பட்டமை விளங்கும். பின்வரும் அம்சங்கள் தொடர்பான எந்தவொரு விடயமும் பிரசுக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
O பாதுகாப்புப் படையினால் அல்லது பொலிசாரினால் (விசேட அதர டிப் படை உட்பட) மேறி கொளர் ளப் பட்ட அல லது மேற்கொள்ளப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கை.
0 மேற்படி யாதேனும் படையினால் கொள்வனவு செய்யப்பட்ட அல்லது கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அல்லது யுத்த தளபாடங்கள்.
9 படையணியை அல்லது ஆளணியினரை நடவடிக்கைகளில்
ஈடுபடுத்தல்.
O படையினரின் நடவடிக்கை அல்லது விமானம், கப்பல், உள்ளிட்ட
உபகரணங்களின் பயன்பாடு.
0 ஆயுதப் படையினரின் அல்லது பொலிஸ் படையின் தலைவர்கள் அல்லது அங்கத்தவர்களின் உத்தியோகரீதியான நடத்தைகள் அல்லது செயற்பாடுகள் பற்றிய யாதேனும் ஒரு கூற்று.
மேற்படி தணிக்கைக்கு உட்பட்ட விடயங்கள் மிகவும் பரவலானவை. அத்துடன் சட்டரீதியான தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கு அப்பாற்பட்டவை. உதாரணமாக ஆயுதங்கள் அல்லது தளபாடங்களைக் கொள்வனவு செய்வதில் ஊழல் இடம்பெற்றிருப்பின் அது தேசிய பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்காவிட்டாலும்கூட தேசிய நலன் கருதி அதனை வெளிப்படுத்த முடியாது.
18 1995 ஆம் ஆண்டு ஐப்பசி 2 ஆம் திகதி 891/3 ஆம் இலக்க விசேட வர்த்தமானி.
19 1995 ஆம் ஆண்டு மார்கழி 21 ஆம் திகதி 902/13 ஆம் இலக்க விசேட
வர்த்தமானி.

Page 27
36 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
மேலே கூறப்பட்டவற்றில் இறுதியான தடை, புரட்டாதி 28 இல் கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் ஒழுங்குவிதிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனைச் சிறிதும் நியாயப்படுத்த முடியாது. இதன்படி ஒர் ஆயுதப்படை உத்தியோகத்தருக்கு அல்லது பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விமர்சனம் செய்யமுடியாது. அது மாத்திரமின்றி அவரது சாதனைகளைப் பற்றிப் புகழ்ந்துரைக்கவும் முடியாது. கருத்துவெளிப்பாட்டுச் சீர்திருத்தத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இத்தடைகள் பத்திரிகைகள், மனித உரிமை அமைப்புக்கள் என்பவற்றின் அவதானிக்கும் பங்கின் மீதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தலையீடாகும். இவை அதிகாரத்தில் உள்ளோரின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் துர்நடத்தைகள் பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் பொறுப்பு உள்ளவைகளாகும்.
செய்தித் தணிக்கை தொடர்பான அவசரகால ஒழுங்குவிதிகள் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் பத்திரிகைகளினால் உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாயின. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீது சட்டரீதியாக மேற்கொள்ளப்படக்கூடிய கட்டுப்பாடுகள் குறித த சர்வதேச நியமங்கள் குறித்து அரசாங் கம் பெரிதும் கவலைப் படவரிலி லை. இத்தகைய நியமங்களின் படி எத்தகைய கட்டுப்பாடுகளும் அனுமதிக்கப்பட்ட நோக்கத்தை அடையத் "தேவையானதாக" இருத்தல் வேண்டும். அத்துடன் தேசிய அவசரகால நிலைமைகளில் அடிப்படை உரிமைகளிலிருந்து விலகுதல் "அவசரகால சூழ்நிலைகளுக்கு மிகவும் அத்தியாவசியமான அளவுக்கு மாத்திரமே” இருக்கவேண்டும். இவை புறவயமானவையே தவிர அவசரகாலம் பற்றிய ஓர் அரசாங்கத்தின் உணர்வுகளுடன் தொடர்புபட்டவையன்று. இத்தேவைகள் ஐ.சி.சி.பி.ஆர். இனால் விதிக்கப்பட்டுள்ளன. 1980 இல் கட்டுறுத்தினைப் பின்னுறுதிப் படுத்தியதன் மூலம் இலங்கை அவற்றைத் தனது உள்நாட்டுச் சட்டத்திலும் நடைமுறையரிலும் பரிணி பற்றுவதற்குச் சர்வதேச சட்டத தரினால கட்டுப்படுத்தப்பட்டுள்ளது".
5. பிணக்குகளை அறிக்கைப்படுத்தல்
பத்திரிகையாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் மோதல் நடக்கும் பகுதிகளுக்குள் செல்ல அரசு அனுமதி மறுத்தமை, மனித
*" குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்து, உறுப்புரை 19.3, உறுப்புரை 4. இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பு இந்த சர்வதேச தராதரங்களை எட்டவில்லை. ஆயினும் அடிப்படை உரிமைகள் பற்றிய புதிய அரசியல்யாப்பு வரைவில் கட்டுறுத்தின் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

dAd)ಹT೩ ಕ್ಷೌà: 37
உரிமைகள் மற்றும் மனித நியமங்களைப் பாதுகாப்பதைப் பாதிக்கக்கூடியது. குடியியல் உரிமைகள் இயக்கம் (சி.ஆ.எம்.) கூறியதைப் போன்று இராணுவ முன்னரங்கத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய சரியான தகவல்களை வழங்க மறுப்பது அரசியலில் பெறுப்பான முடிவுகளை எடுப்பதற்கு பிரசைகளின் தகைமைகளைத் தடைசெய்யும். அத்துடன் மனித உரிமைகள் மற்றும் மனித நேயமுள்ள சட்டங்களின் நோக்கங்களையும் தோல்வியடையச் Q8Fu’ıuqub.
6. செய்தித்தணிக்கை பற்றி ஒழுங்குவிதிகளிலுள்ள
விநோதங்களும் குதர்க்கங்களும்
அவசரகால ஒழுங்குவிதிகள் தம்மளவில் பலவிடங்களில் மிகவும்
விநோதமானவை. அவற்றின் நடைமுறை இன்னும் வினோதமானவை. இவ் ஒழுங்குவிதிகள் சில வகையான செய்திகளைப் பிரசுரிப்பதில் முற்றுமுழுதான தடைகளை விதித்தன. தகுதிவாய்ந்த அதிகாரியினால் அனுமதிக்கப்படின் அவற்றைப் பரிரசுரிக்க முடியும் என்பதற் கணங்க எவ் வகையான ஏற்பாடுகளையும் இவ் விதிகள் கொண்டிருக்கவில்லை. எனினும் கூட அரசாங்கம் ஒரு தகுதிவாய்ந்த அதிகாரியை நியமித்தது. நடைமுறையில் செயப் தரிகள் பரிரசுரிக் கப் படுவதற்கு முனி னதாக "அனுமதக் காக இவ் வதிகாரியிடம் சமர்ப்பிக் கப்பட்டன. இவ் அதிகாரி அடிக் கடி மாற்றங்களையும் வெட்டுக்களையும் செய்தார். இச் செயன்முறையின் காரணமாக ஏற்பட்ட காலதாமதம் குறித்தும், சில முடிவுகளில் காணப்பட்ட ஒருமைப்பாடின்மை, பொருத்தமின்மை குறித்தும் பல முறைப்பாடுகள் எழுந்தன. சி.ஆர்.எம். குறிப்பிட்டது போன்று மக்களின் கவனத்தை ஈர்க்காத அம்சம் என்னவெனின் பிரசுரிக்கப்பட்ட சகல தடைக்குரிய விடயங்களும் (அரசாங்கத் தின் செய்தி அறிக் கைகள் உட்பட) தகுதிவாயம் நீத அதிகாரியினால் அனுமதிக்கப் பட்டபோதும்கூட சட்ட விரோதமானவையே. ஏனெனில் "அனுமதி" செயன்முறை பற்றி அவசரகால ஒழுங்கு விதிகளில் எத்தகைய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை. (ஒரு தகுதிவாய்ந்த அதிகாரியின் நியமனம் பற்றிய ஏற்பாடு இருந்த போதிலும் அது வேறொரு செயற்பாடு தொடர்பானதாகும்). இக்காலகட்டத்தில் ஒரு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மற்றும் சில பெயர் குறிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் நடத்தை பற்றிப் பத்திரிகைகளில் வாதப்பிரதிவாதங்கள் இடம் பெற்றன. இவை உணி மையில் அவசரகால ஒழுங்குவிதகளின் படி தடை செய்யப் பட்ட விடயங்களாகும். உணர் மையரில் இவை யாவும் சட்டவிரோதமானவை என்பது நகைப்புக்கிடமானது. ஆனால் அவசரகால ஒழுங்கு வரி தரிகளை மீறியமைக் கான எவ வரித வழக்குகளும் தொடுக்கப்படவில்லை.

Page 28
38 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
செய் தரித தணிக கை தொடர்பான ஏனைய அம் சங் களர் ஒரு தலைப்பட்சமானவை. குழப்பமும், தெளிவின்மையும் கொண்டவை. தணிக்கை உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கே அமுல்படுத்தப்பட்டது. வெளிநாட்டு நிருபர்களுக்கு நிருவாகரீதியாக விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளுர்ப் பத்திரிகையாளர்களைப் பொறுத்தமட்டிலும் கூட அவசரகால ஒழுங்குவிதிகள் அமுல் படுத் தப் பட்ட பரிரதேசங்களுக்கு மாதி தரமே தணிக்கை செல்லுபடியானதாகும். இதன் காரணமாக, அவசரகாலச் சட்டம், அமுலில் இல்லாத கண்டி, மாத்தறை முதலிய பிரதேசங்களில் வசிப்போரின் உரிமைகளும் பொறுப்புக்களும் பற்றிச் சந்தேகமும் தெளிவின்மையுமே நிலவின.
இவ்வாறான அறிவீனங்களும், குதர்க்கங்களும் ஒருமைப்பாடின்மைகளும் தெளிவான, விளங்கக்கூடிய அறிவார்ந்த சட்டங்களால் ஆளப்படக்கூடிய மக்களின் உரிமையைப் பாதித்தது மட்டுமல்ல, சட்டத்துறையை அவை மதிப்பற்றதாக்கின. இது ஒர் உறுதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியன. இவ் ஒழுங்குவிதிகள் அவசர அவசரமாக வரையறுக்கப் பட்டவைகளாகத் தோன்றுகின்றன. அவற்றை அமுல் செயப்யும் விதிமுறைகள் நன்கு சிந்திக்கப்படவில்லை. ஒரு சனநாயகத்தில் கருத்து வெளிப்பாட்டு உரிமை மிகவும் அடிப்பட்ையானது. அதில் கைவைக்கவேண்டுமெனின் சீரிய கவனம் எடுக்கவேண்டியது அவசியம். பிரசுரித்தல் மற்றும் தகவல் உரிமைகளில் மிகக் குறைந்த பட்சத் தலையீட்டையே செய்தல் வேண்டும். அத்துடன் தொடர்பு சாதனங்களின் ஆளணியினர், தொழில்நுட்பம் மற்றும் ஏனைய வளங்கள் ஆகியவற்றையும் கவனத்திற் கொள்ளவேண்டும் 21.
7. அவசரகால ஒழுங்குவிதிகளைச் சகலரும் அறியச்
செய்வதில் தோல்வி
அவசரகால ஒழுங்குவிதிகளை அறிந்து கொள்வதில் முன்னேற்றம் காணப்படவில்லை. அவை பற்றிய விடயங்கள் அரசாங்க வர்த்தமானியில் மட்டுமே பிரசுரிக்கப்பட்டன. அரசாங்க வர்த்தமானி எப்பொழுதும் காலதாமதமாகி வருவதோடு பிரதிகளைப் பெறுவதும் மிகக் கடினம்.
21 குடியியல் உரிமைகள் இயக்கம் பத்திரிகைத் தணிக்கை நீக்கம் (கொழும்பு, 22 சனவரி 1996), CRM ref E01/1/96 பத்திரிகைத் தணிக்கை பற்றிய பணிகளின் ஏனைய அம்சங்களுக்கு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிய 4 ஆம் அத்தியாயத்தினைப் பார்க்க.

d೧fyiTA: ಲೈf 39
ஒழுங்குவிதிகளை விளக்கி அறிவிக்கும் அரசாங்க அறிக்கைகள் மிகவும் அரிதாகவே வெளியரிடப் பட்டன. நடைமுறையரிலிருக் குமி சகல ஒழுங் குவிதிகளினதும் உத்தியோகரீதியான பட்டியலி இன்னமும் வெளியிடப்படவில்லை.
656f 66 "go'
1995 இன் ஆரம்பத்தில் அவசரகால ஒழுங்குவிதிகள் பின்வரும் பிரதேசங்களில் நடைமுறையில் இருந்தன?:
கொழும்பு மாநகர எல்லை, தெகிவளை-கல்கிசை, கொழும்பு மாவட்டத்தில் நுகேகொட, கொலன்னாவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள், கம்பகா மாவட்டத்தில் வத்தளை, ஜாஎல, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவுகள், வட மாகாணம், கிழக்கு மாகாணம், புத் தளம் மாவட்டத் தரில் கறி பரிட்டி, வனாத் தவரிலி லுவ, கருவலகஸ்வேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள், அனுராதபுரம் மாவட்டத்தில் நொச்சியாகம, நுவரகம்பலாத்த (மத்தி), மதவாச்சி, கெப்பிட்டிக்கொல்லாவ, பதவியா, ஹொரவப் பொத்தான முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகள், பொலநறுவை மாவட்டத்தில் திம்புலாகல, லங்காபுர ஆகிய செயலாளர் பிரிவுகள்.
1995 ஆணியில்? பின்வரும் பிரிவை உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது: கம்பகா மாவட்டத்தில் கட்டான பிரதேச செயலாளர் பிரிவு.
1995 புரட்டாதியில்* பின்வரும் பிரிவை உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது:
கம்பகா மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளும்.
1995 மார்கழியில்* பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கி விரிவாக்கப்பட்டது: மொனராகலை மாவட்டத்திலுள்ள பிபிலை, மடுல்ல, மெதகம, மொனராகலை, கதிர்காமம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் மகாகலுகொல்ல, எதிமல, கொட்டியாகல முதலிய சியாம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமசேவகர் பிரிவுகளும்.
* 1995 சனவரி 4 ஆம் திகதிய 852/22 ஆம் இலக்க விசேட வர்த்தமானி. ** 1995 ஆனி 4 ஆம் திகதிய 874/1 ஆம் இலக்க விசேட வர்த்தமானி.
2号 1995 புரட்டாதி 4 ஆம் திகதிய 887/1 ஆம் இலக்க விசேட வர்த்தமானி. 25 1995 மார்கழி 4 ஆம் திகதிய 900/1 ஆம் இலக்க விசேட வர்த்தமானி.

Page 29
4
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் பத்திரிகைச் சுதந்திரமும்
1. அறிமுகம்
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1994 ஆவணி மாதம் பதவியேற்ற போது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை, குறிப்பாக தொடர்பு சாதன சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக உறுதி கூறியது. எனினும் 1994இல் புதிய அரசாங்கம் தொடர்புசாதனத் தணிக்கையைக் கொண்டு வந்ததுடன் இத்தணிக்கை 1995 இலும் தொடர்ந்து நீடித்தது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பான சட்ட வரையறைகள், நடைமுறையில் எந்தளவுக்கு இந்த உரிமை அனுமதிக்கப்படுகின்றது, எந்தளவிற்கு அரசாங்கத்தின் தொடர்புசாதனக் கொள்கை (அரசாங்கம் நியாயமான நிறுவன சட்டச் சீர் தரிருத்தங்களை ஏற்படுத்தப் போவதாக உறுதியளித் திருந்தது) அமுலி படுத்தப்பட்டு வருகின்றது என்பவற்றை இவ் அத்தியாயம் ஆராய்கின்றது.
2. சட்ட வரைவமைப்பு
2.1 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு
"இலங்கை: மனித உரிமைகள் நிலை 1994” இல் இது தொடர்பான அரசியல் யாப்பு ஏறி பாடுகள் ஆயர் வு செய்யப் பட்டன. அரசியலி யாப் பு
ustrass, சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், இலங்கை மனித உரிமைகள் நிலை 1994 (கொழும்பு, 1995) அத்தியாயம் 8.

rrTT TLLLLLLLS S SrTTL TT LEtLt S ETT S S0
உத்தரவாதத்திலுள்ள கட்டுப்படுத்தும் தன்மையானது உயர் நீதிமன்றத்தில் இவ் ஏற்பாடுகள் குறித்த முற்போக்கான வியாக்கியானம் காரணமாக ஓரளவுக்கு நெகிழ்த்தப்பட்டுள்ளது. இதன்படி கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது தகவல்களைப் பெறுவதற்குள்ள உரிமையையும் பிரசுரங்களை விநியோ கரிப்பதற்கான உரிமையையும் உள்ளடக் கரியுள்ளது என ஏற்றுக்கொள்ளப்பட்டது. கருத்துவெளிப்பாடு எவ்வகையான சாதனங்களின் மூலமாகவும் வெளிப்படுத்தப்படலாம் எனவும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது அரசாங்கத்தின் சனநாயக வாழ்க்கை முறையின் அடிப்படையாக விளங்குவதினால் இச் சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகள் மிகக் கவனமாக ஆராயப்படவேண்டும் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2.2 இது தொடர்பான சட்டவாக்கம்
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்கள் பின்வருமாறு:
0 1953 ஆம் ஆண்டு 21ஆம் இலக்கப் பாராளுமன்றச் (அதிகாரங்களும் சலுகைகளும்) சட்டம் (திருத்தப்பட்டது). இது பாராளுமன்றத்துக்கு உரிய சலுகைகளைப் பரந்தளவில் வரையறை செய்கின்றது. அத்துடன் பாராளுமன்றத்திற்கு குற்றவாளிகளை விசாரித்துத் தண்டிக்கும் உரிமையையும் வழங்குகின்றது.
9 தண்டனைச் சட்டக்கோவை (குற்றவியல் மானநஷ்டம் அவதூறு
அரசுத்தலைவரை அவமதித்தல் தொடர்பான சட்ட ஏற்பாடுகள்).
K) 1927 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஆபாசப் பிரசுரக் கட்டளைச்
சட்டம்.
9 1912 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பொதுக்காட்சி நிகழ்ச்சிகள்
35L6061T6 & Lub.
9 1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ
இரகசியங்கள் பற்றிய சட்டம்.
O 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம்.
2 Joseph Perera v. The Attorney General et al. (1992) Sri L. R. 99 at 223.

Page 30
42 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
இதற்கு மேலாக செய்திப் பத்திரிகை கட்டளைச்சட்டம் (அத், 379), இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டம் ஆகியவை பத்திரிகைகளையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம் (அத். 365), 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனச் சட்டம், 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைதொடர்புகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் கோரப்படும் அனுமதி வழங்கல் மூலம் இலத்திரனியல் சாதனங்களும் (Electronic media) கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
2.3 அவசரகாலச்சட்டங்கள்
இலங்கை அல்லது அதன் சில பகுதிகள் - ஒரு கால் நூற்றாண்டு காலமாக அவசரகாலச்சட்டத்தின் கீழ் ஆட்சி செய்யப்படுகின்றது. இப் பகுதிகளில் கருத்து வெளிபாட்டுச் சுதந்திரம் விசேடமாகப் பத்திரிகைச் சுதந்திரம் சிலவேளைகளில் மிகவும் மோசமாகக் கட்டுப்படுத்தப் படுகின்றது. அவசரகால ஆட்சியின் ஆரம்ப காலங்களில் நீதிமன்றங்கள் நிருவாகத் தலைவருக்கு" இசைந்து நடத்தன. ஆனால் அண்மைக்காலமாக கருத்துவெளிப்பாட்டைப் பாதிக்கக்கூடிய அவசரகால ஒழுங்கு விதிகளை ஆய்வு செய்வதில் மிக இறுக்கமான நியமங்களைப் பின்பற்றத் தொடங்குகின்றன. 1987 இல் ஜோசப் பெரேரா எதிர் சட்டமாதிபர் முதலியோர் 5 வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அவசரகாலத்தின் போது கூட அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய எவ்வகையான ஒழுங்குவிதியும் அது அடைந்து கொள்ள இருப்பதற்கான நோக்கத்துடன் நியாயபூர்வமாகத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. இவ்வழக்கில் போஸ்டர், துண்டுப் பிரசுரம் ஆகியவற்றை வெளியிட முன்னதாகவே பொலிஸ் அனுமதி பெறவேண்டும் என்னும் ஓர் அவசரகால ஒழுங்குவிதியை நீதிமன்றம் செல்லுபடி அற்றதாக்கியது.
1995 ஆம் ஆண்டு காலத்தில் பத்திரிகைத் தணிக்கை, நாட்டின் சில பகுதிகளில் பிரயோகிக்கப்பட்ட அவசரகால நிலை உட்பட்ட அமுலிலிருந்த அவசரகால ஒழுங்கு விதிகளை அவசர கால ஆட்சி பற்றி அத்தியாயம் 3 விளக்குகின்றது.
உதாரணமாக சிறிவர்த்தன எதிர் வியனகே (2) எப்.ஆர்.டி. 310 மற்றும் விஸ்வலிங்கம் எதிர் லியனகே (2) எவ்.ஆர்.டி. 529 வழக்குகளின் போது உயர் நீதிமன்றம் தனது அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கத்தைப் பயன்படுத்தி, அவசரகால நிலைமைகளின் போது நிறைவேற்று அதிகாரபீடம் விரிவான முறையில் தன்விருப்பு அதிகாரங்களைக் (discretionary powers) கொண்டிருப்பது அவசியமானது என அங்கீகரித்தது.
s எம். ஜோசப் பெரேரா மற்றும் ஏனையோர் எதிர் சட்டமா அதிபர், எஸ்.சி.விண். goisasiasi 107 - 109/86, 1987 nirlih 25 Sei ituDT6Tid56i. (per Sharwananda C. J.).

கடுத்துச் வெளிப்பாட்டுச் சுதந்திரடும் பத்திரிகைச் சுதந்திரம் 43
2.4 சர்வதேச சட்டரீதியான கடப்பாடுகள்
ஐ.சி.சி.பி.ஆர். இன் 19 ஆவது உறுப்புரைக்கு தேசிய சட்டங்கள் அமைவானதாக இருப்பதற்கு அரசாங்கமானது சட்டரீதியான கடப்பாட்டினைக் கொண்டுள்ளது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பான இலங்கையின் தற்போதைய சட்டங்கள் ஐ.சி.சி.பி.ஆர். இன் தேவைகளை ஈடுசெய்யக் கூடியனவாக இல்லை. சர்வதேச நியமங்களுக்கு இலங்கைக்குள்ள கடப்பாட்டினைக் குறைந்தபட்சமாவது ஈடுசெய்யக்கூடிய அளவுக்கேனும் இவை சீர்திருத்தப்பட வேண்டும்.
3. இலங்கையில் பொதுசன தொடர்புசாதனத்தின்
இயல்பு
3.1 பத்திரிகைகள்
பத்திரிகைப் பேரவையில் பெறப்பட்ட புள்ளிவிபரங்களின்படி இலங்கையில் 198 பிரசுரங்கள் செய்திப் பத்திரிகைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 144 சிங்கள மொழியிலும், 24 தமிழிலும், 30 ஆங்கிலத்திலும் பிரசுரிக்கப்படுகின்றன. வடக்கில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் எல்.ரி.ரி.ஈ. இனர் தமது பத்திரிகைகளை வெளியிடுகின்றனர். ஏனைய செய்தி மூலங்களுக்கு அவர்கள் கடுமையான தணிக்கையை விதித்துள்ளனர்.
3.2 இலத்திரனியல் தொடர்பு சாதனம்
ஒவ வொரு வருடமும் தனியார் வானொலி, தொலைக் காட்சி அலைவரிசைகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. தொடர்புசாதன அமைச்சின்படி நான்கு சுதந்திரமான வானொலி நிலையங்களும், நான்கு தொலைக் காட்சி நிலையங்களும் உள்ளன. வானொலி நிலையங்கள் பொதுவாக சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புகின்றன. தொலைக் காட்சி நிலையங்கள் ஆங்கில (பொதுவாக வெளிநாட்டு நிகழ்ச்சிகளின் மறுஒளிபரப்பு), தமிழ், சிங்கள நிகழ்ச்சிகளைக் கலந்து ஒளிபரப்புகின்றன. அரசாங்க வானொலியும், தொலைக்காட்சியும், ஐ.ரி.என். உட்பட சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அலைவரிசைகளைக் கொண்டுள்ளன.
இலத்திரனியல் செய்தி ஒலிபரப்பில் முன்னர் அரசாங்கம் கொண்டிருந்த தனியுரிமையை இன்று சுதந்திரமாகச் செய்தி ஒலிபரப்பும் பலதனியார் அலை

Page 31
44 இலங்கை மனித உரிமைகள் நிலை 1995
வரிசைகள் உடைத்து விட்டன என்பது குறிப்பிடக்கூடிய விடயமாகும். அத்துடன் தனியார் ஒலிபரப்பு நிலையங்கள் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC), அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC) உட்பட வெளிநாட்டுச் செய்தி ஒலிபரப்புக்களைக் கேட்க பொதுமக்களுக்கு உதவுகின்றன.
4. நடைமுறையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவி ஏற்றபின்னர் தகவல் சாதனங்கள் விருத்தியடைந்தன. அரசாங்கக் கொள்கைகள் உட்பட தனிப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் சனாதிபதி குமாரதுங்க ஆகியோர் சாதனங்களின் வெளிப்படையான விமர்சனங்களுக்கு உட்பட்டனர். எனினும் இப்புதிய தகவல் சாதனச் சுதந்திரம் தொடரவில்லை. 1995 இல சாதனங்களுக்கும் அரசாங்கத்துக்குமிருந்த உறவு விரிசல் கண்டது. சிலவேளை சில பத்திரிகைகள் சனாதிபதியின் தனிப்பட்ட வாழ்க்கைக் குத் தமது பத்திரிகைகளின் அரசியல் "குசுகுசு” பகுதிகளில் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக இருக்கலாம். மாசி மாதத்தில் பத்திரிகையாளருக்கு ஓர் ஒழுக்கக் கோவையை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென சனாதிபதி கோரினார்.
பல பத்திரிகையாளர்கள் மீது அரசாங்கம் அழுத்தத்தைப் பிரயோகித்தது. பல பத்திரிகையாசிரியர்களும் பத்திரிகையாளர்களும் அவர்களின் செய்திகளின் மூலம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டனர். சனாதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளைப் பிரசுரித்தார்கள் என்னும் குற்றச்சாட்டின் பேரில் இரு பத்திரிகை ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டனர். ஆனால் தாக்கியோர் அடையாளம் காணப்படவில்லை. அரசாங்கக் கட்டுப்பாட்டிலுள்ள தகவல் சாதனங்களில் பணியாற்றிய பல செய்தியாளர்கள் சுதந்திரமாக நடக்க முற்பட்ட காரணத்தினால் தமது பதவிகளை இழந்தனர். ஆளுங் கட்சிக்கு ஆதரவு தராதவர்கள் எனக் கருதப்பட்ட பலரும் கூட தமது பதவிகளை இழந்தனர்.
6 பத்திரிகையாளர்களுக்கான ஒழுக்கக் கோவை 1981 ஆம் ஆண்டின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. (வர்த்தமானி இல. 162/5A, 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 14 ஆம் திகதி) இவ் ஒழுக்கக் கோவை பத்திரிகை ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு பத்திரிகைப் பேரவையினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டம் வழங்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பேரவை இவ் ஒழுக்கவிதிகளை வகுத்தது. ஆயினும் இத்தகைய ஓர் ஒழுக்கக் கோவை இருப்பது பற்றி அநேகருக்குத் தெரியாது.

கடுத்துச் வெளிப்பாட்டுச் சுதந்திரடும் பத்திரிகைச் சுதந்திரம் 45
புரட்டாதி மாதத்தில் வடக்கில எல்.ரி.ரி.ஈ. க்கு எதிராகப் புதிய தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயுதப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான செய்திகளுக்குத் தணிக்கை விதிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இத்தகைய போக்கு எதிர்கால தகவல் சாதனங்களின் சுதந்திரத்திற்கோ அல்லது பொதுவான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கோ வாய்ப்பானதாக இருக்கவில்லை. எனினும் நம்பமுடியாத வகையில் அரசாங்கம் தனது தகவல் கொள்கை அமுல்படுத்தப்படும் எனத் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருந்தது. இத்தகைய கொள்கைரீதியான கூற்றுக்கள் கீழே ஆய்வு செய்யப்படுகின்றன.
4.1 சட்டரீதியான நடவடிக்கை ஊடாகத் துன்புறுத்தல்
சண்டே ரைம்ஸ்", லக் பிம°, ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களும், உபாலிகுரூப் பத்திரிகைகள், ஹிரு', யுகய ஜனஹண்ட ஆகியவற்றின் செய்தியாளர்களும், ஈ.ரி.வி. தொலைக்காட்சி நிலையத்தின் தலைவர் 12 ஆகியோர் 1995 இல் சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்தப் பட்டனர். சண்டே ரைம்ஸ், லக்பிம, சண்டே லீடர் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மீது சனாதிபதயை அவதுTறு செயப் த மைக் காக அவதுTறு வழக் குதி தொடுக்கப்பட்டது.
வடக்கில் கார்த்திகையில் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது அசோசியேட்டட் பத்திரிகை நிறுவனத்துக்காகப் பணிபுரிந்த ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டதோடு அவரது வீடியோ நாடாக்கள் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டன. ஆடி மாதத்தில் ஓர் அமெரிக்க இறையியல் மாணவர் வடக்கில் இராணுவ நடவடிக்கைகளினால் குடிமக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டுமெனக் கோரும் துணி டுப் பிரசுரங்களைத் தாமே வடிவமைத்துத் தம் வசம் வைத்திருந்தமைக்காகக் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இத்தகைய சம்பவங்கள் அரசாங்கம் தகவல் சாதனங்களுக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகளின் மூலம் (முன்னைய அரசாங்கம் சட்டத்துக்கு
The Island, 23 605 1995.
断 The Island, 9 usi (560f 1995.
9 Ibid.
INFORM Situation Report, Litig560f 1995.
' INFORM Situation Report, Luftlfast 1995. ' INFORM Situation Report, agóof 1995.

Page 32
46 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
முரணான நடவடிக்கைகளைக் கையாண்டது) அவைகளைத் தொந்தரவு செய்ய முனைவதாகக் காட்டியது. இதன் காரணமாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந் தரிரத் தைப் பிரயோகரிக்கக் கூடிய ஒரு காத் தரமான சூழலி காணப்படவில்லை. எனினும் இந் நிகழ்வுகள் தொடர்பான பொதுசன விமர்சனம் பரவலாக வெளிவரத் தொடங்கியது. இதன் காரணமாகக் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் எல்லைகள், குற்றவியலி அவதுTறு தொடரவேண்டுமா, பெண் தலைவர்களைத் தகவல் சாதனங்கள் நடத்தும் விதம், பத்திரிகைகளின் பொறுப்புக்கள் முதலியவை தொடர்பான பகிரங்க விவாதம் தொடங்கியது.
4.2 பத்திரிகையாளர்கள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள்
1995 இல் பத்திரிகையாளர்கள் மீதான பல தாக்குதல்கள் இடம்பெற்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது 'சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவும், அவரது மனைவியும் பத்திரிகையாளருமாகிய "றெய்னும்" இனம் தெரியாதோரால் தை மாதத்தில் தாக்கப்பட்டனர். லீடர் பத்திரிகை பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தது. இத்தாக்குதல்கள் பற்றிப் பூரண விசாரணை நடாத்துவதற்காக அரசாங்கம் உறுதியளித்தபோதும் பொலிஸ் விசாரணைகள் குற்றவாளிகளை இனங்காணத் தவறிவிட்டன.
இன்னொரு சம்பவத்தில் யுக்திய பத்திரிகை ஆசிரியரும் வேறுபல பத்திரிகையாளர்களும் இலங்கை "அரசுசார்பற்ற நிறுவன அவை" என்னும் அமைப்பினால் நடாத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பொழுது ஒரு கூட்டத்தினால் தாக்கப்பட்டனர். இந்த அரசுசார்பற்ற அமைப்பானது இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் தொடர்பாகப் பணியாற்றும் ஐரோப்பிய, உள்ளூர் அரசுசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒரு வலையமைப்பாகும். பத்திரிகையாளர்களைத் தாக்கிய கூட்டத்தினர் இவ் அமைப்பின் கூட்டத்திற்குத் தமது எதிர்ப்புக்களைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஏனெனில் இக் கூட்டமானது எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கு ஆதரவாக நடாத்தப்படுவதாக அரசாங்கப் பத்திரிகைகளும், தனியார் பத்திரிகைகளும் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இதனை இந்த அவை மறுத்திருந்தது.
இந்த அரசுசார்பற்ற நிறுவன அவை (NGO Forum) அரசாங்கத்தின் நன்மதிப்பைக் கெடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகப் பத்திரிகைகள் பிரசாரத் தில் இறங்கியிருந்தன. இப் பிரசாரத்தின் காரணமாகவே இக்கூட்டத்திற்கு எதிரான வன்முறை பிரயோகிக்கப் பட்டதுடன் கூட்டமும் கைவிடப்பட்டது. சனாதிபதியின் மாமியாரான கிளாரா குமாரதுங்கவின் மரணச்சடங்கன்று உபாலி குறுாப்பைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இதுவும் பத்திரிகையாளர் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மிக முக்கியமானது.

கடுத்துச் வெளிப்பாட்டுச் சுதந்திரடும் பத்திரிகைச் சுதந்திரம் 47
இந் நிகழ்வுகள் குறித்து பொதுமக்கள் பரவலாகத் தமது கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். திரும்பவும் ஒரு வன்முறை நிறைந்த காலம் வந்துவிடுமோ எனப் பயந்த பொதுமக்கள் இந்த நிகழ்வுகள் தொடர்பாக அரசாங்கம் பெறுப்பேற்க வேண்டுமெனவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வற்புறுத்தினர்.
4.3 பத்திரிகை உரிமையாளர்களினால் பத்திரிகையாளருக்கு இழைக்கப்பட்ட
துன்புறுத்தல்கள்
அரச பத் திரிகை நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பத் தரிரிகையாளர்கள் அவர் களின் தொழில் வழங்குநர் களினால் துன்புறுத்தப்பட்ட அம்சங்களும் வெளிவந்தன. இவற்றுக்கு உதாரணமாக விஜய குறுாப்பின் சிங்கள நாளிதழான "லங்காதீப"வில் பணியாற்றிய ஒரு சிரேஷ்ட பத்திரிகையாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டதைக் கூறலாம். இப்பத்திரிகையாளர் இப்பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்களின் தொழிற் சங்கத்தில் செயலாளராகவும் பணிபுரிந்தார். இதேபோன்று அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் நிறுவனத்தின் ஆங்கிலப் பத்திரிகையான "டெய்லி நியூஸ்” ஆசிரியர் தமது பதவியிலிருந்து விலக்கப்பட்டதையும் குறிப்பிடலாம்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கல்விச்சேவையின் முறைசாரா கல்வி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தில் கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் 1994 இல் தொடங்கி அடுத்த ஆண்டிலும் நீடித்திருந்ததுடன் இறுதியில் கல்விச் சேவைக் கட்டுப்பாட்டாளரான திலக் ஜயரட்னவின் தற்காலிக பதவி நீக்கத்துடன் முடிவடைந்தது. அத்துடன் அரசாங்கத்தினால் நியமிக் கப்பட்ட மேலிடத்தின் பணிப்புரைகளுக்கு இசைவாகச் செயற்படக் கூடிய வகையில் கல விச் சேவைப் பிரிவு மீளமைக்கப்பட்டது".
4.4 உத்தியோகபூர்வ தணிக்கை
புரட்டாதி மாதம் 21ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ. யின் கட்டுப்பாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தை விடுவிப்பதற்கு இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களைத் தொடர்ந்து சனாதிபதியினால் அவசரகால அதிகாரங்களின் கீழ" இராணுவச் செய்திகள் மீதான தணிக்கை கொண்டு வரப்பட்டது.
INFORM Situation Report, LDité 1995
1995 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க அவசரகால (மிக முக்கியமான இராணுவ தகவல்களை வெளியிடுதலும் பரிமாறலும் பற்றிய கட்டுப்பாடுகள்) ஒழுங்கு விதிகள். (1995 ஆம் ஆண்டு புரட்டாதி 21 ஆம் 889/16 ஆம் இலக்க வர்த்தமானி).

Page 33
48 இலங்கை: மத உரிமைகள் நிலை 1995
இத்தணிக்கை மூன்று மாதங்கள் அமுலில் இருந்தது. இத்தணிக்கையை நியாயப்படுத்தும் வகையில் இராணுவச் செய்திகளை அறிவிப்பதில் தகவல் சாதனங்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்தன எனக் கூறியது. ஆனால் அவ்வாறு தகவல் சாதனங்கள் செயற்பட்டமைக்கான எந்தவொரு குறிப்பான நிகழ்வையும் சுட்டிக் காட்டவில்லை. அத்துடன் பிரச்சினைக்குரிய பிரதேசங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பத்திரிகையாளர் செல்வதும் தடுக்கப்பட்டது. தணிக்கை நீக்கப்பட்ட பின்னரும் கூட பத்திரிகையாளர்களின் மீதான தடை நீக்கப்படவில்லை. இதன் காரணமாக வடக்கு நிகழ்வுகளைப் பற்றிச் சுதந்திரமான தகல்களை அறியவோ அல்லது அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. யும் எதிரும் புதிருமாகத் தெரிவிக்கும் விபரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய வழிவகைகளோ முற்றிலும் இல்லாமற் போய்விட்டது.
தணிக்கையானது முதலில் உள்ளூர்ப் பத்திரிகைகளுக்கும், வெளியூர்ப் பத்திரிகைகளுக்கும் சேர்ந்தே விதிக்கப்பட்டபோதிலும் புரட்டாதி 26 ஆம் திகதி வெளியூர்ப் பத்திரிகை மீதான தடை நீக்கப்பட்டதெனினும் வெளியூர்ப் பத்தரிகையாளர்கள் வடபிரதேசத் திற்குச் செல்வது தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டது. உள்ளூர் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் இலங்கை தொடர்பான வெளிநாட்டுச் செய்திகளை ஒளிபரப்புவதை நிறுத்திக்கொண்டன. ஏனெனில் இவற்றை ஒளிபரப்புவதற்கு முன்னராக அச் செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவில்லை. இதனால் வழக்குகளுக்கு முகம் கொடுக்கவேண்டியேற்படும் என அவை பயந்தன.
இத் தணிக்கை தகவல் சாதனங்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இத் தணிக்கை பரந்ததாகவும் தேவையற்றதொன்று எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. பொதுமக்கள் தகவல்களைப் பெறுவதற்கு உள்ள உரிமையை மறுப்பதாகவும் தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதற்கே சட்டரீதியான உரிமைகள் மீறப் படுவதாகவும் கட்டுப் பாடற்ற முறையில் அமுல் செய்யப்படுவதாகவும் மேலும் விமர்சிக்கப்பட்டது.
விமால் விக்கிரமசிங்க எதிர் எட்மண்ட் ஜயசிங்க முதலியோர் என்னும் வழக்கில் மனுதாரர் முன்னைய யு.என்.பி மந்திரி சபையின் அமைச்சரும் தற்போது ஜனஜய பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் பிரசுரகர்த்தாவாகவும் விளங்குகிறார். இத்தணிக்கை அரசியல் யாப்பின் உறுப்புரை 14(1) (அ) இன் கீழ் உத்தரவாதப் படுத்தப் பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு உரிமையையும் பிரசுர உரிமையையும் மீறுகின்றது என விவாதிக்கப்பட்டது.
1* அவசரகால ஆட்சி பற்றிய அத்தியாயம் 3 இனைப் பார்க்க.

கடுத்துச் வெளிப்பாட்டுச் சுதந்திரடும் பத்திரிகைச் சுதந்திரம் 49
அத்துடன் தணிக்கை பாரபட்சமாக அமுல் நடாத்தப்படுவதாகவும் அதாவது அரசுப் பத்திரிகைகளும் வெளிநாட்டுப் பத்திரிகைகளும் தமது செய்திகளைத் தணிக்கையாளரிடம் சமர்ப்பிக்க அவசியமில்லாத அதேவேளையில் தனியார் தகவல் சாதனங்கள் மாத்திரம் தமது செய்திகளைத் தகுதி வாய்ந்த தணிக்கை அதிகாரிக்குச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது எனவும் வாதிடப்பட்டது. எனினும் உயர்நீதிமன்றம் எதிர்பாராத வகையில் முதற் தோற்றத்திலேயே இவ்வழக்கைக் கொண்டு நடத்துவதற்கான அனுமதியை மறுத்துவிட்டது.
4.5 உத்தியோகபூர்வமற்ற தணிக்கை
அரசாங்க அதிகாரிகளினால் கட்டுபாடற்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் உத்தியோகபூர்வமற்ற தணிக்கை அமுலாக்கப்பட்டது. இதற்குச் சான்றாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கல்விச் சேவையினர் நடாத்தப்பட்ட விதமும், கட்டுப்பாட்டாளர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட முறையும் , சுதந் தரமான முறை சாரா நிகழ்ச் சரிகள் முடிவுக் குக் கொண்டுவரப்பட்டதையும் கூறலாம்.
சுங்க அதிகாரிகள் தணிக்கை அதிகாரிகளாகச் செயற்பட்டு வெளிநாட்டுப் பிரசுரங்களைப் பறிமுதல் செய்த இரு சம்பவங்களும் நிகழ்ந்தன. "இந்தியா டுடே" பத்திரிகையின் ஒரு தமிழ்ப் பதிப்பும் "பார் ஈஸ்ரேர்ன் எக்கொணோமிக் ரிவியூ" இன் பதிப்பும் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டது.18.
5. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட
தொடர்புசாதன சீர்திருத்தங்களின் அமுலாக்கம்
1994 இன் இறுதியில் தகவல் தொடர்பு உல்லாசப் பயண விமான சேவை அமைச்சர் அரசாங்கக் கொள்கையின் அமுலாக்கம் பற்றிய விதந்துரைகளைச் செய்வதற்காக நான்கு குழுக்களை நியமித்தார்". இக் குழுக்கள் தமது அறிக்கைகளை 1995 இல் சமர்ப்பித்தன. ஆனால் குறிப்பிடக் கூடிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் அரசாங்கமானது பத்திரிகையாளருக்கு அதிக வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொண்டது. மாசி மாதத்தில் ஏரிக்கரை
' The Island, 3 Ustig56f 1995 17 பார்க்க, சட்டத்துக்கு சமூகத்துக்குமான அறநிலையம், இலங்கை, மனித உரிமைகள்
நிலை 1994 (கொழும்பு, 1995), பக்கங்கள் 122 - 124.

Page 34
50 இலங்கை: )ணித உரிமைகள் நிலை 1995
பத்திரிகைத் துறை பயிற்சி மற்றும் ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டது. வைகாசியில் தேசிய தகவல் மையம் சனாதிபதியரினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிலையம் தொடர்பு சாதன ஆளணியினருக்கு" ஆய்வு, தொடர்பாடல் மற்றும் கணணி வசதிகளை வழங்கக்கூடிய ஒரு "பொது இல்லமாக” தொழிற்பட்டது. இந்நிலையங்கள் சிறப்பாகத் தொழிற்படின் நீண்ட காலமாக நிறைவேறாதிருந்த பத்திரிகையாளருக்கான சிறந்த வசதிகளும் பயிற்சி வாய்ப்புக்களும் பூர்த்தி செய்யப்படமுடியும்.
5.1 அரசியல் யாப்புச் சீர்திருத்தம்
அரசாங்கம் தனது தொடர்புசாதனக் கொள்கையின்படி தொடர்புசாதனச் சுதந்திரத்தைப் பாதிக்கும் அரசியல் யாப்பு ஏற்பாடுகளைச் சீர்திருத்துவதற்கு உறுதியளித்தது. 1995 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நீதி அரசியல்யாப்பு விவகார அமைச்சு அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்குத் தனது முதலாவது அரசியல் யாப்புச் சீர்திருத்த நகல் திட்டத்தைச் சமர்ப்பித்தது. இதில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் உறுப்புரை 14 (1) (அ)] கழ் குறிப் பரிடப் பட்ட விடயங்களை விட மேலதிகமாக எதுவும் சேர்க்கப்படவில்லை. எனினும் இதில் தகவல் சுதந்திரம் பற்றித் திட்ட வட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நகல் உண்மையில் பராட்டப்படக்கூடியதாக அமையவில்லை. 1994 கார்த்திகை 22 ஆம் திகதி நிதி மற்றும் அரசியல் அமைப்பு விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட உறுதிமொழிக்கேற்ப இது அமையவில்லை. அமைச்சரின் கூற்றுப் படி "ஒவ்வொரு நபருக்கும்" பேச்சு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உத்தரவாதப் படுத்தப்பட்டதுடன் ஐ.சி.சி.பி.ஆர். இனால குறிப் பரிடப் பட்ட தகவலுக கான உரிமையும் அதல் உள்ளடக் கப்பட்டுள்ளது. கருத்து வெளிப்பாட்டினை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிவகைகளுக்கு எதிரான பாதுகாப்பையும் இது அளித்ததுடன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான வரையறைகளையும் கட்டுப்படுத்தியது. கார்த் திகையில் வெளியிடப்பட்ட நகலில் இருந்த முன்னேற்றகரமான அம்சங்கள் எதுவுமே 1995 இல் வெளியிடப்பட்ட முதலாவது நகலில் இருக்கவில்லை.
' Ceylon Daily News, 16 LDIT di 1995. ' Ceylon Daily News, 5 9,60f 1995. INFORM Situation Report, May 1995.

கடுத்துச் வெளிப்பாட்டுச் சுதந்திரடும் பத்திரிகைச் சுதந்திரம் 5
மனித உரிமைகள் அமைப்பின் நெருக்குதல்கள் காரணமாக 1995 வைகாசி மாதத்தில் அரசாங்கம் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் இரண்டாவது நகல் திட்டத்தை வெளியிட்டது. இது ஐ.சி.சி.பி.ஆர். இன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பான பகுதியைக் கொண்டிருந்தது. எனினும் "தகவலைத் தேடும்” உரிமையும் "எல்லைகளைக் கருத்திற்கொள்ளாத" தகவல் உரிமையும் இதில் உள்ளடங்கவில்லை. ஒரு சனநாயக சமூகத்திற்குத் தேவையான வரையறைகளை மட்டுமே அனுமதித்தமை இதில் பாராட்டக்கூடிய ஒர் அம்சமாகக் காணப்பட்டது. அதே நேரத்தில் வியப்புக்குரிய வகையில் “பாராளுமன்றத்தின் மேலாண்மையைப்" பேணும் வரையறைகள் இதில் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும் இம் முன்மொழிவுகளின் எதிர்காலம் கேள்விக்குரியதாகக் காணப்படுகின்றது.
5.2 தொடர்பு சாதனச் சீர்திருத்தங்களை ஆய்வு செய்யும் குழுக்களின்
முன்மொழிவுகள்
தொடர்புசாதனச் சீர்திருத்தம் தொடர்பாக நியமிக்கப்பட்ட நான்கு குழுக்களும் தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகளை 1995 இல் சமர்ப்பித்தன. சட்டச் சீர்திருத்தம் தொடர்பான குழுவின் அறிக்கை ஓர் இடைக்கால அறிக்கையாகும். இக்குழுவின் இரண்டாவது அறிக்கை வருட இறுதிவரை பூர்த்திசெய்யப்படவில்லை.
5.2.1 ஏ.என்.சி.எல் இனைப் பரவலாக்குவதற்கான குழு
இக் குழு ஏ.என்.சி.எல் (ANCL) இன் உரிமையுடைமையை எவ்வாறு பரவலாக்குவது என்பது பற்றி ஆய்வு செய்தது. இலங்கையின் மிகப் பெரிய செய்திப்பத்திரிகைப் பிரசுரநிலையமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒவி சிலோனி லிமிட் டட் இதுவரை காலமும் அரசாங் கதி தின் தனியுரிமையாகவே இயங்கி வந்துள்ளது. இக்குழுவின் அறிக்கை அரச கட்டுப்பாட்டை ஒரு முடிவுக் குக் கொணி டு வருவதற்காக இப் பிரசுர நிலையத்தின் உரிமையைப் பரவலாக்க வேண்டும் என்பதை மாத்திரம் அழுத்தி உரைக் காது உயர்ந்த பத்திரிகைத் தரத்தை அடைவதற்காக நிர்வாகத்தில் பொது மக்களின் குறிப்பாகத் தொழிலாளரின் பங்குபற்றலை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறியது.
உரிமைப் பங் கட்டைப் பரின் வருமாறு அமைப்பதற்கு சட்டத்தை திருத்துவதற்கு அக்குழு பரிந்துரை செய்தது. ஏ.என்.சி.எல் ஊழியர்களுக்காக 20 சத வீதப் பங்குகளை ஒதுக்குதல், 15 சத வீதப் பங்குகளை ஒரு நம்பிக்கை நிதியத்துக்கு ஒதுக்குதல். இச் சபையானது பொது நம்பிக்கைப்

Page 35
52 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
பொறுப்பாளர் தேசிய பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களின் பிரதிநிதிகள், தொழில்சார் மன்றங்களின் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், பத்திரிகையாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் யாப்புப் பேரவையின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்டிருக்கும்20. தற்பொழுது உள்ள தனிப்பட்ட நபர்களின் பங்குகள் தொடர்ந்தும் பேணப்படுவதுடன் எஞ்சியிருக்கும் பங்குகள் பொதுமக்களுக்கு விற்கப்படும்.
அத்துடன் இக்குழுவின் முன்மொழிவுகளின்படி தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ 25,000 பங்குகளுக்கு மேல கொணி டிருக க அனுமதிக்கப்படமாட்டா. இலங்கைப் பிரசைகளும், இலங்கைப் பிரசைகள் பெரும்பாலான பங்குகளைக் கொண்டிருக்கும் கம்பனிகளுமே பங்குகளை வாங்குவதற்குத் தகுதி பெறுவார்கள். பங்குகளின் விலை கூடிய வரையில் பொதுமக்களின் பங்கு பற்றுதலை உறுதிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டே நிர்ணயிக்கப்படும்.
இந்நிறுவனம் 11 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு பணிப்பாளர் சபையைக் கொணி டிருக்கும் . கம்பனியரின் இயக்கத் தல பங்குபற்றுதலைப் பரவலாக்குவதையும் செய்தித்துறைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டே இந்தப் 11 அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
இப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டபொழுது சில வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. பங்குகளை பங்குச்சந்தை ஊடாக விற்பனை செய்யும் பரிந்துரை விமர்சிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார மட்டத்தினருக்கே இது வாய்ப்பாக அமையும் எனக் கூறப்பட்டாலும் வருட முடிவுக்குள் பரிந்துரைகளை முன் எடுத்துச் செல்லும் தனது நோக்கத்தைப் பற்றி அரசாங்கம் எதனையும் குறிப்பிடவில்லை.
5.2.2 தேசிய தொடர்புசாதன நிறுவகம் பற்றிய குழு
இக்குழு தொடர்புசாதனங்களின் ஆளணியினரின் திறன் விருத்தி, பயிற்சி வசதிகள், தொழில் சார் கல வி ஆகிய தேவைகளை ஆராய் நீ து இத்தேவைகளை நிறைவு செய்வதில் தேசிய தொடர்புசாதன நிறுவகம் (என்.எம்.ஐ.) எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம் என்பதையும் ஆராயுமாறு பணிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்நிறுவனம் ஒரு தன்னாதிக்கமுள்ள அமைப்பாக இயங்குவதற்கு அதன் அமைப்பு, நிருவாகம், நிதி முதலியவை தொடர்பாகப் பரிந்துரைகளைச் செய்யுமாறு இக் குழு பணிக்கப்பட்டிருந்தது.
笼娜 பார்க்க Supra அத்தியாயம் 1, n 6

கடுத்துச் வெளிப்பாட்டுச் சுதந்திரடும் பத்திரிகைச் சுதந்திரம் 53
என்.எம்.ஐ ஆனது பத்திரிகைகளினதும் ஏனைய தொடர் புசாதன ஆளணியினரதும் தொழிலாண்மை மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கு பயிற்சி வழங்கவேண்டுமென விதந்துரைக்கப்பட்டது. இந்நிறுவனம் ஒரு பாராளுமன்றச் சட்டத்தின்மூலம் ஸ்தாபிக்கப்படவேண்டுமெனவும், இது ஒரு தன்னாதிக்கமுள்ள நிறுவனமாக இருந்த போதிலும் இதனை அமைப்பதற்கு அரசாங்கம் போதிய அளவு நிதி உதவி வழங்க வேண்டுமெனவும் பரிந்துரைகள் செய்யப்பட்டன.
5.2.3 பத்திரிகையாளரின் தொழில் நிலமைகள் பற்றிய குழு
பத்திரிகைகளிலும் ஏனைய தொடர்புசாதனங்களிலும் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பற்றி ஆய்வு செய்வதற்கு இக்குழு பணிக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்களின் சம்பளத்தில் உடனடியாக 15 சத வீத உயர்வு, ஒரு புதிய சம்பளத் திட்டம் மற்றும் ஏனைய பல நன்மைகளை இக்குழு பரிந்துரை செய்தது.
5.2.4 கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பான
சட்டச் சீர்திருத்தம் பற்றிய குழு
1995 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் இக்குழு தனது முதலாவது அறிக் கையை தொடர்புசாதன உல்லாசப் பயண மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் கையளித்ததாகக் கூறப்பட்டது. ஐ.சி.சி.பி.ஆர் இன் உறுப்புரை 19 இன் கீழ் இலங்கைக்கு இருக்கக்கூடிய கடப்பாட்டின்படி தற்போதைய யாப்பிலுள்ள கருத்து வெளிபாட்டுச் சுதந்திர உத்தரவாதத்தை வலுப்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்தது. அத்துடன் தற்போதைய அரசியலமைப்பின் அடிப்படையில் ஆயுதப்படையினர் மற்றும் பொலிஸாரின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரையறைகள் நீக்கப்படவேண்டுமென மேலும் பரிந்துரை செய்தது.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிய தற்போதைய சட்டங்களில் பரவலான சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டுமென குழு பரிந்துரைசெய்தது. நீக்கப்படவேண்டிய சட்டங்களையும் திருத்தப்படவேண்டிய சட்டங்களையும் குழு பட்டியல்படுத்தியதுடன் பாராளுமன்றம் உரிமைகளில் தலையீடு செய்யும்போது அரசியல் யாப்பு வழியாகப் பாதுகாப்பு வழங்குவதற்கு சட்டவாக்கத்தின் நீதித்துறை மீளாய்வு பரிந்துரைக்கப்பட்டது. மறுதலையாக ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தைப் பரிந்துரைசெய்தது.
இக் குழு ஒரு குறிப்பான நீதிமன்ற அவதூறு பற்றிய சட்டமொன்று இயற்றப்படல் வேண்டுமெனப் பரிந்துரைத்தது. நீதிமன்றம் கருத்து

Page 36
54 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீது எவ்வித கட்டுப்பாட்டையும் விதிப்பதைத் தவிர்க்கும் வகையில் நீதிமன்ற அவதூறுபற்றிய கோட்பாடும் நீதிமன்றத்திற்கு முன்னுள்ள விவகாரம் தொடர்பான விதியும் மாற்றியமைக்கப்படும் வகையில் இச்சட்டம் அமையவேண்டுமென்பது இக்குழுவின் கருத்தாகும். குழு தனது இரண்டாவது அறிக்கையானது தகவல் சுதந்திர சட்டத்தின் தேவை, தகவல் சாதனப் பேரவைச் சட்டத்தினை பத்திரிகைப் பேரவைச் சட்டத்துக்குப் பதிலாகக் கொண்டுவருதல், இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பாகப் பதில்கூறும் சட்ட உரிமை ஆகியவை தொடர்பாக அமையும் என தெரிவித்தது. 1995ஆம் ஆண்டின் இறுதிவரை இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. பூர்வாங்க அறிக்கையிலிருந்து பரிந்துரைகளுக்கான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகள் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
6. தொடர்புசாதன ஆளணியினரின் முனைப்புக்கள்
1995 இல் வெளிநாட்டு தொடர்புசாதனப் பத்திரிகையாளர் அமைப்பு, பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், இலங்கை செய்திப் பத்திரிகை சங்கம் ஆகிய மூன்று புதிய தொடர்புசாதன அமைப்புக்கள் நிறுவப்பட்டன. சுதந்திர பத்திரிகையாளர் சங்கத்தைப் போலவே தொடர்புசாதன சுதந்திரத்தில் தலையீடு ஏற்படுவதை கவனிக்கத் தலைப்பட்டுள்ளனர்.
சித் திரை மாதத்தில் ஒரு சுதந்திரமான தொடர்புசாதனப் பயிற்சி நிறுவகத்தை ஸ்தாபிப்பது பற்றி பத்திரிகை நிறுவனங்கள் கருத்திற் கொண்டிருந்தன எனக் கூறப்பட்டது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால பரிந்துரை செய்யப்பட்டதன் படி இம் முனைப் புக்கள் முன்மொழியப்பட்டுள்ள தொடர்புசாதன நிறுவகத்தினால் ஒழுங்குபடுத்தப்படுமா என்பது தெரியவில்லை.
7. முடிவுரை
1995 இல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பாக குறிப்பாக தொடர்புசாதன சுதந்திரம் பற்றிய நிலமை கேள்விக்குரியதாகவே இருந்தது. பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் ஓர் உறுதியான பத்திரிகைத்துறை வளர்ச்சி பெறத்தொடங்கியது. அத்துடன் அரசாங்கம் தனது தேர்தல் உறுதிமொழிக்கு ஏற்றவிதத்தில் ஒரு சுதந்திரமான சீர்திருத்தம் நிறைந்த ஒரு தொடர்புசாதனக் கொள்கையை வெளியிட்டது. அதேநேரத்தில் இன்னொரு புறத்தில் தொடர்புசாதனச் சுதந்திரத்தின் மீது அரசாங்கம்

கடுத்துச் வெளிப்பாட்டுச் சுதந்திரபிப் பத்திரிகைச் சுதந்தரம் 55
கொண்டிருந்த ஈடுபாடு பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது. பத்திரிகையாளர் மீது குற்றப்புலனாய்வுத் திணைக் களத்தினர் அடிக்கடி விசாரணைகளை முடுக்கிவிட்டனர். பத்திரிகையாளர்கள் மீது சனாதிபதியைப் பற்றி அவதூறு எழுதியதாகக் கூறி அவசர அவசரமாகக் குற்றம் சுமத்தப்பட்டமை, அவசரகாலச் சட்டத்தின் கீழ் இராணுவ விடயங்கள் தொடர்பாகக் கடுமையான தணிக்கை விதிக்கப்பட்டமை மற்றும் ஏனைய உத்தியோக பூர்வமற்ற தணிக்கை முறைகள் போன்ற நிகழ்சிகள் அரசின் ஈடுபாடு குறித்து சந்தேகத்தை எழுப்பின. 1994 தேர்தல் பிரசாரத்தின் போது பத தாரி கைச் சுதநீ தர ம பறி றரி பொதுசன ஐ கி கரிய முனி னணி உறுதியளித்திருந்தமையைக் கருத்திற்கொள்ளும் பொழுது இந்நிலைமை நம்பிக்கை தருவதாக அமையவில்லை.
தாராளவாத விழுமியங்களின் உள்ளடக்கம் பற்றி முழுமையாக
விளங்கிக் கொள்ளல், அவற்றைப் பிரசாரம் செய்வதன் விளைவுதான் இவ்வாறான இரட்டை நிலையை ஏற்படுத்துகின்றது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமென்பது சகல விதமான கருத்துக்களையும் தகவல்களையும் பாதுகாக்கின்றது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அத்துடன் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளோர் விமர்சனங்களை மற்றவர்களைவிட வெகுவாகப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது. அத்துடன் பத்திரிகையாளரிடம் ஓர் உயர்ந்த தொழில் வாண்மையையும் சமூகப் பொறுப்பினையும் வளர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. புதிய பயிற்சி முனைப்புக்கள் இவ்வாறான தேவைகளை ஈடு செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பாரிய சவால்கள் எம்முன்னே உள் ளன. தொடர் புசா தனக் குழுக் கள் கருத்து வெளிப் பாட்டுச் சுதந்திரத்தையும் தொடர்புசாதனச் சுதந்திரத்தையும் வலுப்படுத்துவதற்காக முன் வைத்த பரிந்துரைகள் இப்பொழுது அரசாங்கத்திடம் உள்ளன. அரசாங்கம் தனது சொல்லைச் செயலாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனினும் இது ஒர் அர்த்தமுள்ள வழியில் நிகழவேண்டுமெனின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கெளரவிப்பதில் சகலரும் அக்கறை கொள்ள (36.607(6Lb.

Page 37
மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு
நாடு முழுவதற்கும் நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும் உயர்நீதிமன்றமே அடிப்படை உரிமை மீறலுக்கு எதிரான முதன்மையான பாதுகாப்புப் பொறிமுறையாகும். மனித உரிமை தொடர்பான வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு முன்னராக உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படல் வேண்டும்.
1. அரசியல் யாப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்
அரசியல் யாப் பரிற் கு முனி மொழியப் பட்டுள்ள தரிருதி தங்கள் ! ஏற்றுக் கொள்ளப்பட்டால் அரசியல் யாப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் இடம்பெற முடியும். இவற்றில் குறிப்பிடக்கூடியது வாழ்வதற்கான உரிமையை ஏற்றுக் கொள்வதாகும். இன்னுமொரு முக்கியமான மாற்றம் "நிறைவேற்று நிர்வாக நடவடிக்கைகளை" "அரசு நடவடிக்கைகள்" என மாற்றுவதினால் அதன் மூலம் அடிப்படை உரிமை
1995 ஆம் ஆண்டு வைகாசி மாதம் அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் வெளியிடப்பட்ட, முன்மொழியப்பட்ட திருத்தங்களை இங்கு ஆராயப்படுகின்றது.

வித உரிமைகளின் நீதிற்றைப் பாதுகாப்பு 57
மீறல்களுக்கான பரிகாரங்களை விரிவுபடுத்திக் கொள்ளமுடியும். அத்துடன் உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கும் காலத்தை ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களாக மாற்றுவது அவசியம். தற்பொழுது நடைமுறையிலிருக்கும் ஒரு மாத காலக்கெடு காரணமாக பல விண்ணப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன. தனிமைக் கான உரிமை (நகல உறுப் புரை 14), சொத் தரினைக் கொண்டிருப்பதற்கான உரிமை (நகல் உறுப்புரை 21), கைது செய்யப்படும் பொழுது ஒரு உறவினருடனோ அல்லது நணி பருடனோ தொடர்பு கொள்வதற்கான உரிமை நகல் உறுப்புரை 10 (4), பிணை அளவுக்கதிகமாக இல்லாதிருத்தலும் அநாவசியமான தாமதமில்லாமல் ஒரு நபர் மீது குற்றம் சுமத்துதல் அல்லது விடுவிப்பதற்கான உரிமை நகல் உறுப்புரை 10(7) மற்றும் (8)) ஆகிய முன்மொழிவுகளும் வரவேற்கப்படக் கூடியவையாக உள்ளன.
எனினும் முன்மொழியப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அத்தியாயம் இன்னும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. அரசியல் யாப்பினை மக்களின் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கான இன்னும் உறுதியான, காத்திரமான கருவியாக மாற்றுவதற்கும் ஐ.சி.சி.பி.ஆர். மற்றும் ஐ.சி.ஈ.எஸ் .சி.ஆர் ஆகியவற்றின் கீழ் இலங்கைக் குள்ள கடப்பாடுகளுடன் ஒத்துச் செல்வதற்கும் இக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும்.
2. வழக்குச் சட்டம்
அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முதன்மையான கருவி உயர் நீதிமன்றமே. 1995 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்குகளைப் பகுப்பாய்வு செய்யும் போது இரண்டு பிரதான பிரிவுகளைக் காணமுடிகின்றது. இவற்றில் ஒன்று உறுப்புரை 112, 13(1), 13(2) ஆகியவற்றை மீறல். மற்றது 12 ஆம் உறுப்புரைக்கு எதிரான மீறல்கள். பெரும்பாலான வழக்குகள் முதலாவது வகை மீறல்களாகவே காணப்பட்டன. உறுப்புரைகள் 11, 13(1) மற்றும் 13(2) என்பவற்றை மீறியமைக் காகப் பெரும் பாலான வழக்குகள் பொலஸ் படை
சித்திரவதை, கொடுமையான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் நடத்துகை அல்லது தண்டித்தல் என்பவற்றிலிருந்து சுதந்திரம். * கட்டுப்பாடற்ற கைதுகள், தடுத்துவைத்தலிலிருந்து சுதந்திரம்.
சட்டத்தின் முன் சமத்துவமும் பாரபட்சத்திலிருந்து சுதந்திரமும்,

Page 38
58 இலங்கை: 1)தை உரிமைகள் நிடிை 1995
அங்கத்தவர்களுக்கெதிராகவே தொடுக்கப்பட்டன. ஏனைய வழக்குகள் 12 ஆம் உறுப்புரையை மீறியமை தொடர்பானவை. பேச்சு, ஒன்று கூடுதல், கருத்துவெளிபாட்டுச் சுதந்திரம் தொடர்பான 14 ஆம் உறுப்புரையை மீறியமைக்காக இரு வழக்குகள் மாத்திரமே தொடுக்கப்பட்டன.
2. 1 11ஆம் உறுப்புரையின் கீழான வழக்குகள்: சித்திரவதை, கொடுமையான
மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் விதமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிலிருந்து சுதந்திரம்
பொலிசாருக்கும், வேறு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் எதிராகக் கொண்டுவரப்படும் வழக்குகளுக்கிடையில் ஒரு தெளிவான வேறுபாடு உள்ளது. ஆனால் பொலிஸ்படை அங்கத்தவர் ஒருவரைப் பொதுவாகப் பிரதிவாதியாகக் குறிப்பிட்டு 11 ஆம் உறுப்புரையின் கீழ் வழக்கமாகத் தாக்கல் செய்யப்படும் வழக்குகளிலிருந்து அவ்வுறுப்புரையின் கீழ் பதிவு செய்யப்பட்ட பராக்கிரமகே டக்ளஸ் பண்டார எதிர் விக்கிரம சிங்க முதலியோர் என்னும் வழக்கில் வழமைக்கு மாறான அம்சம் காணப்பட்டது. அதாவது ஒரு பொலிஸ் அதிகாரியைப் பிரதிவாதியாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக ஒரு பாடசாலையின் பிரதி அதிபர், உப அதிபர், ஒர் ஆசிரியர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர். வழக்கைத் தொடுத்திருந்த 17 வயதான மாணவன் தான் இவர்களால் தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகத் தனக்கு உடல், உளத்தாக்கம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இவ் வழக்கில் வாதிக்கு நஷடஈடாகவும், செலவுத் தொகையாகவும் 60,000 ரூபாவை வழங்குமாறு உத்தரவிட்டுத் தீர்ப்பு வழங்கிய நீதிவான் குலதுங்க "உத்தியோகரீதியானது" என்ற அடிப்படையிலேயே அத்தகைய அடிப்படை உரிமை மீறல்கள் நடந்ததாகவும் அச் செயல்கள் கொடுமையானதுடன், இழிவுபடுத்துவதுமாகும் எனக் குறிப்பிட்டார்.
11ஆம் உறுப்புரையை மீறும் வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இவ்வாறான மீறல்கள் தொடர்ச்சியாக நிகழ்வதைப் பற்றியும் அதைத் தடுப்பதற்கான காத் திரமான நடவடிக் கைகளை எடுப்பதற்கு அரசு தவறியமைக்காகவும் தமது விரக்தியை வெளிப்படுத்தினர்.
எதிர்காலத்தில் சித்திரவதை நடைபெறாமல் தடுப்பதற்காகக் குற்றம் இழைத்தவர்கள் நீதிமன்றம் வழங்கிய நஷ்டஈட்டுத் தொகையில் தமது பங்கினை வழங்க வேண்டும் என்பதிலுள்ள காத்திரமான தன்மை பற்றி நீதிவான் அமரசிங்க தமது தீர்ப்பு ஒன்றில் கேள்வி எழுப்பினார். அடிப்படை
5. எஸ்.சி. மனு இலக்கம் 190/94.

19வித உரிமைகளின் நீதிற்ேறைப் பாதுகாப்பு 59
உரிமைகளை மீறும் குற்றங்களை நீதிபதிகள் கண்டிப்பதினால் எத்தகைய பலனும் ஏற்படப்போவதில்லை எனவும் அரசு சித்திரவதைகளைத் தடுப்பதில் ஒரு முழுமையான அணுகுமுறையை ஏற்றுக் கொண்டாலன்றி எந்தவித பயனும் ஏற்படமாட்டாது எனவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
2.2 உறுப்புரை 13 (1), (2) இன் கீழான வழக்குகள்:
கட்டுப்பாடற்ற கைது மற்றும் தடுத்து வைத்தலிலிருந்து சுதந்திரம்
அரசியல் யாப்பின் உறுப்புரை 13(1), (2) இன் கீழ் எந்தவொரு நபரும் சட்டத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ள செயன்முறைக்கு மாறாக கைது செய்யப்படக்கூடாது எனவும் அவ்வாறு கைது செய்யப்படும் நபர்களுக்கு அதற்கான காரணம் சொல்லப்பட வேண்டுமெனவும், சட்ட நடைமுறைகளின் படி கைது செய்யப்பட்ட நபர் ஒரு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டுமெனவும், ஒரு பொறுப்பு வாய்ந்த நபரின் ஆணை இல்லாது அவர் மேலும் தடுத்து வைக்கப்படக்கூடாது எனவும் விதிக்கின்றது.
சேனரத்தின எதிர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையோர்? என்னும் வழக்கில் பின்வரும் மூன்று பிரதான விடயங்களைப் பற்றி நீதிமன்றம் கவனத்தில் எடுக்க வேண்டியிருந்தது. கைது செய்யப்படுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தனவா? கைதுக்கான காரணங்கள் வெளியிடப்பட்டனவா? தடுத்துவைக்கப்பட்டது நியாயமற்றதா? முதலாவது விடயத்தைப் பொறுத்தவரையில் கைது செய்யப்படுவதற்குக் குற்றம் ஒன்றினை இழைத் திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்படலாம். ஆனால் *சந்தேகமானது உடன்பாடானதாகவும் நிச்சயமானதாகவும் சம்பந்தப்பட்டவர் குற்றங்களை இழைப்பதில் ஈடுபட்டவர்" என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இரண்டாவது விடயத்தைப் பொறுத்தவரையில் கைது செய்வதற்கு நியாயமான அடிப்படை இருந்தால் மாத்திரமே அதற்கான நியாயமான காரணத்தையும் கூறமுடியும் எனவும் வேறு எவ்வித விளக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனவும் நீதிமன்றம் தீர்மானித்தது.
இறுதியாக மனுதாரரைத் தடுத்து வைத்தல் நியாயமற்றதா என்பதைப் பொறுத்தமட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்பால் அல்லது நியாயமான காலத்துக்கு அப்பால் ஒரு நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர் சட்ட
岳 அபாசின் பண்டா எதிர் பொலிஸ் உதவிப் பொறுப்பதிகாரி, ஹரிங்குராங்கெட்ட.
எஸ்.சி. மனு இலக்கம் 109/95. எஸ்.சி. மனு இலக்கம் 18/95.

Page 39
60 இலங்கை: Bவித உரிமைகள் தி ை1995
ரீதியாகக் கைது செய்யப்பட்டவர் எனக் கூறமுடியாது எனவும் அத்தகைய கைது 13(1) ஆவது உறுப்புரையை மீறுகின்றது எனவும் தீர்மானித்தது.
2.3 உறுப்புரை 12இன் கீழான வழக்குகள்: சட்டத்துக்கு முன் சமத்துவத்திற்கான
உரிமையும், பாரபட்சத்திலிருந்து சுதந்திரமும்
12 ஆம் உறுப்புரையை மீறிய பெருந் தொகையான ஆனால் வேறுபட்ட வழக்குகள் பல உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உறுப்புரை 12(1) என்பதுடன் தொடர்பான மீறல் வழக்குகளாகும். சில உறுப்புரை 12(2) உடனும், சில 12(1), 12(2) ஆகிய இரு உறுப்புரைகளுடனும் தொடர்பானவை.
அரசாங்க நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தியமையானது அடிப்படை உரிமை மீறல்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினூடாகப் பரிகாரம் தேட முற்படும் ஊழியர்களின் முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்தியது. உயர் நீதிமன்றமானது "நிறைவேற்று அல்லது நிருவாக நடவடிக்கை"களினால் ஏற்படுகின்ற வரம்பு மீறல்களுக்கான நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ளது. இராஜரட்ண எதிர் எயார் லங்கா வழக்கில் மேற்படி நடவடிக்கைகளின் பொருள் அரசாங்கத்தில் அல்லது அரசாங்க முகவரகங்களின் நடவடிக்கைகள் எனத் தீர்மானிக்கப்பட்டது. டொன் சுனில் டயா பட்டுகாககே எதிர் இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி? என்னும் வழக்கில் தனியார் மயப்படுத்தப்பட்ட வங்கியின் நடவடிக்கை தொடர்பாகத் தனக்கு நியாயாதிக்கம் உள்ளதா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இராஜரட்ண எதிர் எயார் லங்கா வழக்கின் தீர்ப்பினை ஆதாரம் காட்டி, வங்கி 1992 இல் தனியார் மயப்படுத்தப்பட்டதன் பின்னர் அது ஒர் அரசாங்க நிறுவனம் இல்லை என்ற காரணத்தினால் அதனுடைய நடவடிக்கைகளை நிறைவேற்று அல்லது நிருவாக நடவடிக்கைகள் எனக் கூறுவதற்கில்லை எனத் தீர்மானிக்கப்பட்டது.
உபாலிரட்ன முதலியோர் எதிர் கேர்ணல் ரத்வத்தை அவர்களின் இணைப்புச் செயலாளரும் ஏனைய 21 பேரும் 10 என்னும் வழக்கு, உறுப்புரை 12(2) இன் கீழ் அரசியல் அடிப்படையில் பாரபட்சம் எனக் கூறித் தொடுக்கப்பட்டது. இதன் படி கண்டியிலுள்ள சில "நேரக் கண்காணிப்பாளர்கள் 11 தாம்
* 2 சிறி.எல்.ஆர். 128, (1987).
எஸ்.சி. மனு 138/95.
1" எஸ்.சி. (எவ். ஆர்) மனு இலக்கம் 86/85.
1 தனியார் பேரூந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மாகாண சபையின் போக்குவரத்து அமைச்சுக்கு உதவுவதற்காக, வெளிக்களத்திலிருந்து தரவுகளைச் செகரிக்கும் நபர்கள் “நேரக் கண்காணிப்பாளர்" ஆவர்.

1%த உ)ைகளின் நீதியிற்றைப் பாதுகாப்பு 6 1
பதவியிலிருந்து நீக்கப்பட்டு தமது இடத்தில் ஆளும் கட்சியான பொதுசன ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டியிருந்தனர். மனுதாரருக்கு ஆதரவான தீர்ப்பில் நீதிமன்றம் பொலிசாரின் நடவடிக்கைகளைக் குறை கூறியது. அவர்கள் பாரபட்சமற்ற முறையில் நடப்பதற்குக் கடமைப்பட்டுள்ளனர் என நீதிமன்றம் வலியுறுத்தியது.
2.4 உறுப்புரை 14 இன் கீழான மனுக்கள்: கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
இவ்வழக்கின் மனுதாரராகிய கலாநிதி விமல் விக்கிரமசிங்க அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரும் தமது மனுவில் "ஜனஜய" பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் அரசியல் யாப் பரிணி உறுப் புரைகள் 12(1), 12 (2), 14 (1) ஆக யவற் றரினால உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள தமக்குள்ள உரிமையானது 1995 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, இராணுவம் மற்றும் பொலிசாரின் நடவடிக் கைகளை வெளியிடுதல் மீது தணிக்கையை விதிக்கும் அதிகாரம் கொண்ட அவசர கால ஒழுங்கு விதிகளின் (முக்கியமான இராணுவத் தகவல்களைப் பிரசுரிப்பதற்கும் , பரிமாற்றம் செய்வதற்குமான கட்டுப் பாடுகள் ) பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். இவ்வழக்கினைத் தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. ஏனெனில் தணிக்கை விதிக்கப்பட்ட சந்தர்ப்பமும் விதமும் ஒருதலைப்பட்சமானதல்ல எனவும் இதைப் போனிற ஒரு போர் ச் சூழலில் மனுதாரர் எலி லா விதமான கட்டுப்பாடுகளுமின் ரிச் சகல விதமான செய்திகளையும் பிரசுரிக்கும் சுதந்திரத்தைக் கோரமுடியாது எனவும் நீதிமன்றம் முடிவு செய்தது?.
3. இழப்பீடுகள்
உரிமை மீறல் நடந்துள்ளது என உயர் நீதிமன்றம் திருப்திப்படும் பட்சத்தில் வழங்கக்கூடிய இழப்பீடுகள் சாதாரண ஒரு பிரகடனத்திலிருந்து செலவுத் தொகையுடனான நஷ்டஈடு வழங்கல் வரை வேறுபடலாம். உரிமை மீறலின் தாக்கம், சூழ்நிலை) ஆகியவற்றைப் பொறுத்து இழப்பீட்டு நடவடிக்கை சாத்தியமா அல்லது அரசாங்கம் இன்னும் வேறு நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது பற்றித் தீர்மாமணிக்கப்படும். நஷடஈடு வழங்கப்படும் பொழுது அது அரசாங் கத தரினா லா அலலது தனிப் பட்ட பிரதரிவா தரிகளினாலா கொடுக்கப்படவேண்டும் என்பதில் நீதிமன்றம் ஆணையிடும்.
* இவ் வழக்குப் பற்றி விரிவான விபரங்களுக்கு கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரமும்
தொடர்புசாதன சுதந்திரமும் பற்றிய அத்தியாயம் 4 இனைப் பார்க்க.

Page 40
62 இலங்கை: )வித உரிமைகள் நி ை ))s
4. முன்மொழியப்பட்டுள்ள மனித உரிமைகள்
ஆணைக்குழுவும் உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தில் அதன் தாக்கமும்
1995 ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவை அமைக்கும் நோக்கமாக மசோதா ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இத்தகைய ஒரு நிறுவனம், உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் தொடர்பான நியாயாதிக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்துப் போதிய கவனம் செலுத்தவில்லை என மனித உரிமைகள் அமைப்புக்கள் கருத்துத் தெரிவித்தன. தற்பொழுது அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்கள் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் அத த கைய உரிமை மீறல களி நடநீது ஒரு மாத தி தறி குளி உயர்நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசியல் யாப்பின் உறுப்புரை 126(2) விதிக்கின்றது. நீதிகோரி ஆணைக்குழுவிடம் ஒருவர் செல்லும்பட்சத்தில் அங்கு ஏற்படும் தாமதம் காரணமாக அவர் பின்னர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்யமுடியாமல் தடை ஏற்படுகின்றது.
5. முடிவுரை
1995 இல் அடிப்படை உரிமைகள் தொடர்பாகப் புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தும் அல்லது சட்டத்தைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் வழக்குகள் எதுவும் தொடுக்கப்படவில்லை. எனினும் உயர் நீதிமன்றமானது அடிப்படை உரிமை மீறல்களுக்கு இழப்பீடு வழங்கும் முதன்மை நிறுவனம் என்ற தனது நிலைக்கு ஏற்ப தனது பணிகளைத் தொடர்ந்தது. பொலிஸ் அதிகாரத்தின் கைது செய்தல் துஷ்பிரயோகத்துக்கு எதிரான பொருத்தமான நடவடிக் கைகளை எடுக்குமாறு திரும்பத்திரும்ப அது அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது. நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்கும் தருணம் வந்துவிட்டது.
அரசாங்கம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவை அமைக்கும் தனது திட்டத்தைத் தொடருமானால் முதலில் அது செய்ய வேண்டியது - முன்மொழியப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்திற்கும் இடையில் இருக்கக்கூடிய உறவு பற்றிய பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும். அத்துடன் உயர் நீதிமன்றத்தின் நியாயா தரிக் கமி எவி வகையரிலும் பாதிக் கப் படமாட் டாது எண் பது உறுதிப் படுத்தப்படவேண்டும் ஏற்படக் கூடிய குழப்ப நிலைமையைத்

மனித உரிமைகளின் நீதிமுறைப் பதுகாப்பு 63
தவிர்ப்பதற்காக ஒவ்வொரு நிறுவனத்தினதும் நியாயாதிக்கம் மிகத் தெளிவாக வரையறை செயப் யப் படல வேணி டும் . எனினும் - நதரிமன்றமே சுட்டிக் காட்டியதைப் போன்று - நிறைவேற் று, நிருவாகத் துறை நடவடிக்கைகளினால் ஏற்படும் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு ஒரு முழுமையான கொள்கையை உருவாக்கக்கூடிய அரசியல் உறுதிப்பாடு அரசாங்கத்துக்கு இல்லையெனில் , ஒரு பலம் மிக் க, சுதந்திரமான நீதித்துறையும் கூட பயனுறுதியுடன் இயங்க முடியாது. இன்று தேவையானது பல நூறு மனித உரிமை நிறுவனங்களை அமைப்பதன்று. இருக்கின்ற நிறுவனங்களை வலுப் படுத் தி அவற்றிற் கரிடையே இணைப் பாக்கம் செய்வதற்கான அரசியல் உறுதிப்பாடே அவசியமானது. இன்றுள்ள நிலையில் அடிப்படை உரிமை மீறல்களை அவதானித்து நிவாரணம் வழங்குவதற்கு ஒரு சுதந்திரமான நீதித்துறை இருக்க வேண்டியதன் அவசியம் பற்றிக் குறைத்து மதிப்பிட முடியாது.

Page 41
6
தொழிலாளர் உரிமைகள்
தேசிய தொழிலாளர் பட்டயத்தினை ஏற்றுக்கொள்வதன் காரணமாக தொழிலாளர் உரிமைகள் முன் கொணரப்பட்டன. இந்த அத்தியாயம் பட்டயத்தின் பிரதான அம்சங்களை ஆராயப்வதுடன் பெருந்தோட்டத் தொழிலாளரின் உரிமைகள், தொழிற்சங்கங்கள் என்பன தொடர்பான இரண்டு தனிப்பட்ட பிரிவுகளையும் கொண்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு ஆடி மாதம், அரசாங்கம் உரிமைப் பாதுகாப்பு, சங்கங்களின் சுயாதீனம் என்பவற்றை ஒழுங்குபடுத்துவது பற்றிய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 87ஆம் இலக்க மகாநாட்டு உடன்படிக்கையைப் பின்னுறுதிப் படுத்தியது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். எனினும் இந்த மகாநாட்டுடன்படிக்கைக்கு பயன்தரும் விளைவு ஒன்றினை வழங்கக்கூடிய தொழிற்சங்கக் கட்டளைச் சட்டங்கள் மீதான திருத்தங்கள் ஆண்டின் இறுதிவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
1. தேசிய தொழிலாளர் பட்டயம்
1994 இல் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவு செய்து 1995 புரட்டாதி 22 ஆம் திகதி புதிய தேசிய தொழிலாளர் பட்டயம் சனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. இந்தப்பட்டயம் சட்டரீதியாக தொகுக்கப்படாவிடினும் தொழிலாளர் கொள்கை தொடர்பான அரசாங்கத்தின் எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. அரசின் வாக்குறுதி சட்டரீதியான சீர்திருத்தம் மூலம் நிறைவேற்றப்பட்டது. ஆயினும் வருட இறுதிவரையில் அதன் அமுலாக்கத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை.

தொழிலாளர் உரிமைகள் 65
மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனத்திலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் எண்ணங்களைத் தேசிய தொழிலாளர் பட்டயத்தின் முன்பகுதி வலியுறுத்தியுள்ளது.
O தொழில்புரிவதற்கான உரிமை, வேலைவாய்ப்பில் சுயாதீனமான தெரிவு, தொழில் தொடர்பான நிபந்தனைகளும் மறைமுக வேலையின்மைக்கு எதிரான பாதுகாப்பும்.
9 சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்னும் கோட்பாட்டினைப்
பிரயோகம் செய்வதில் பாரபட்சமின்மை.
9 தேவையான பொழுது ஏனைய சமூகப்பாதுகாப்பு வடிவங்களின் மூலம்
குறை நிரப்பப்பட்ட ஊதியம்.
0 தொழிற்சங்கங்களில் சேர்வதற்கும் அவற்றை உருவாக்குவதற்குமான
S.-flood.
வேலைவாய்ப்பின் வித்தியாசமான அம்சங்களுடன் தொடர்புபடுகின்ற எட்டுப் பகுதிகளை உள்ளடக்கியதாகப் பட்டயம் வகுக் கப்பட்டது. இருக்கும் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் அல்லது புதய சட்டங்களை உருவாக்குவதன் மூலம் பட்டயத்தின் பயன்தரு அமுலாக்கலை அரசு உறுதி செய்யும் என்பதனை அறிவிப்பதாக ஒன்பதாவது பகுதி அமைந்துள்ளது.
இந்தப் பட்டயம் இலங்கையில் உள்ள சகல தொழிலாளர்களையும் உள்ளடக்கும் நோக்கம் கொண்டதாக இருப்பதுடன் பாரபட்சத்திலிருந்து பாதுகாப்பு வழங்குவதனையும் சமத் துவமான அநீ த ஸ் தனை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.
பகுதி 1
"அடிப்படை மனித உரிமைகள் சுயாதீன சங்கமும் கூட்டுப்பேரமும் ஒழுங்கமைப்பதற்கான உரிமையும்" - அரசாங்கமானது தொழில் வழங்குநர்கள்
எட்டுப் பகுதிகளாவன: கூட்டுப்பேரம், ஒழுங்கமைப்பதற்கான உரிமையும் சங்கத்தின் சுயாதீனமும்; வேலைவாய்ப்புச் சேவைகள்; ஊதியம், வேலைவாய்ப்பின் ஒழுங்கு விதிகளும் நிபந்தனைகளும்; தொழில் நிர்வாகம்; தொழில் உறவுகள் சமூகப்பாதுகாப்பு: பெண்கள், சிறுவர், இளைஞர்கள் என்போரின் வேலைவாய்ப்பு: தொழிலாளர்களின் சமூக நலன்கள். ஒன்பதாவது பகுதி "சட்டவாக்கம்” என தலையங்கமிடப்பட்டுள்ளது.

Page 42
66 இலங்கைடி 10வித உரிகைள் நிலை 1995
தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதனையும் அதன் அங்கத்தவர்களுடன் தொடர்புபட்ட பிரச்சினைகளை கருத்தில் எடுப்பதனையும் உறுதிப்படுத்தும் என்பதனை எடுத் துக் கூறுகின்றது. தொழில் வழங்குநர் களினால் மேற்கொள்ளப்படும் எதிர் தொழிற்சங்கப் பாரபட்சமானது நேர்மையற்ற தொழிற்சங்க நடைமுறையாகக் கொள்ளப்படும். மேலும் பகுதி 1 ஏனைய வேலைவாய்ப்புத் துறைகளில் தமது சக பணியாட்கள் அனுபவிக்கும் ஒன்றுசேர்வதற்கான உரிமைகளை அனுபவிக்கமுடியாத நிலையில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலிறுப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ள அரசினால் உறுதிப்படுத்தப்பட்ட "சந்தர்ப்பங்களின் சமத்துவத்திற்கான பொருத்தமான அளவைகளும் தொழிலாளர் பரிகாரமும்” என்பதனையும் உறுதி செய்கின்றது.
பகுதி 2
வேலைவாய்ப்புச் சேவைகள் பற்றி ஆராய்வதுடன் மனித வள அபிவிருத்தி இடப்பெயர்வாளர்கள் அங்கவீனர்கள் என்பவர்கள் பற்றிய நலன்களையும் முக்கியப்படுத்துகின்றது.
பகுதி 3
வேலைவாய்ப்பின் ஒழுங்கு விதிகளும் நிபந்தனைகளும் என்பதனுடன் ஊதியத்துடனும் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொள்கிறது. பெரும்பாலும் இந்த அத்தியாயம் 1971 ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பின் இடைநிறுத்தச் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஊடாக இடம் பெற்ற மாற்றங்களையும் பலவருடங்களாக ஏற்பட்ட நீதித்துறை பொருள் விளக்கங்களையும் எடுத்துக்காட்டுவதற்கு முயற்சித்து வருகின்றது. பயிற்சியாளன் என்று கருதப்படக்கூடியவர் யார், ஒப்பந்த தொழிலாளி (நிலையான தவணை முறைத் தொழிலாளி), தற்காலிக வேலையாள் என்பவர்களைப் பட்டயம் தெளிவாக வரையறை செய்கின்றது.
பகுதி 4
தொழில் நிருவாகம் என்பதனுடன் சம்பந்தப்படுவதுடன், தொழில் நிர்வாகத்தைப் பலப்படுத்தும் முகமாகத் தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபை என்பதன் மூலம் முக்கூட்டுச் செயன்முறை ஒன்றின் உருவாக்கத்தையும் தொழிற்சட்டங்களின் பயன்பாட்டிற்கு உதவும் முகமாகப் "போதுமான தொழிலாளர் பரிசோதனை சேவை" ஒன்றினையும் உறுதி செய்கின்றது.

தொழிலாளர் உரிமைகள் 67
பகுதி 5
தொழில் உறவு என்பதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்வதுடன் தொழில் மன்றங்களினால் மேற் கொள்ளப் பட்ட செயன் முறைகளை வரைவுபடுத்துவதனையும், தொழிற்தகராறுகளைத் தீர்ப்பதற்கான நல்லிணக்கம் இடையீட்டுச் செயன்முறைகளைப் பலப்படுத்துவதனையும், மேம்படுத்து வதனையும் உறுதி செய்வதாகவும் உள்ளது. இது மேலும் சகல முக்கியமான தொழில் தகராறு சட்டங்களின் மீள் பரிசீலனையை உறுதி செய்வதுடன் தொழில் இணக்கச் சட்டக்கோவை ஒன்றினை அறிமுகப்படுத்துவதனையும் நோக்காகக் கொண்டுள்ளது.
பகுதிகள் 6 மற்றும் 7
சமூக நீதி, குடும்பப் பொறுப்பு, பொது நலன் என்பனவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் அக்கறை செலுத்துகின்றது. "தொழிலாளர் நலன்” என தலையங்கம் இடப்பட்ட 8 ஆவது பகுதி தொழிலாளர்களின் தொழில் வசதிகளாகிய மருத்துவ வசதி, வீட்டுவசதி, போக்குவரத்து வசதி என்பன போன்ற வசதிகளைத் தொழிலாளர்களுக்கு அரசு வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றது.
2. தொழிற்சங்க உரிமைகள்
1995 ஆம் ஆண்டின் போது தொழிற்சங்க உரிமைகள் தொடர்பான அபிவிருதி தரிகளைக் கருதி தரிற் கொள் கையரில் , இப் பகுதியானது தொழிற் சங்கங்கள் தொடர்பான தேசிய தொழிலாளர் பட்டயத்தின் அம்சங்களையும் அரசியலமைப்புச் சட்டத்தினது அடிப்படை உரிமைகளின் மாற்றங்களுக்காக 1995ஆம் ஆண்டு வைகாசி மாதம் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளையும் பெரிதும் வலியுறுத் தி எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி 1995ஆம் ஆண்டின் தொழிற் சங்க நடவடிக்கைகளையும் சுருக்கமாக மீள்பார்வை செய்கின்றது.
2.1 தேசிய தொழிலாளர் பட்டயம்
பட்டயத்திற்கு எழுதப்பட்ட முன்னுரைப் பகுதி தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக தொழிற் சங்கங்களில் சேருவதற்கும் , அவற்றை உருவாக்குவதற்குமான உரிமையினை ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றனர் என்பதனை உறுதிப்படுத்துகின்றது. தொழிற் சங்கம் ஒன்றினை உருவாக்குதல்.

Page 43
68 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
அதில் சேருதல் தொடர்பான உரிமை தொழில் வழங்குநர்கள் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் தேவை என்பன ஏற்கனவே இலங்கைச் சட்டங்களில் ஒரளவு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. பட்டயத்தின் முதலாவது பகுதியில் உள்ள இலங்கைக்கான புதிய செயன்முறை என்பது தொழிற்சங்கத்திற்கு எதிரான பாரபட்சமான சாதகமற்றதொரு தொழிலாளர் நடைமுறையை உருவாக்கும் என்ற பிரகடனமாகவுள்ளது. பகுதி 4 தொழிற்சங்கச் சட்டங்களை அமுலாக்குவதில் தொழில் வழங்குநர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவுவதற்குப் போதுமான சோதனைச் சேவைகளை உறுதி செய்கின்றது. தொழில் உறவுகள் தொடர்பான பட்டயத்தின் 5 ஆவது பகுதி தேசிய மட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கான விசேட வசதிகளை வழங்குவதற்கான அரசின் தேவைகளை உள்ளடக்குகின்றது.
தொழிற் சங்கவாதிகளின் கலந்தாலோசனைகளுடன் இந்தப்பட்டயம் வடிவமைக்கப்பட்டதினால் இது பிரசவ நன்மைகள் ஏனைய நலன்புரி நன்மைகள், சமசந்தர்ப்பங்களை வழங்குதல் சபையினூடாக இருக்கின்ற தொழிலாளர் நியமங்களை அமுலாக்குதல் , தொழிலாளர்களுக்கான சமூகப்பாதுகாப்பு ஒழுங்குகள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட), உடைமை தொடர்பான பாதுகாப்பு என்பன உட்பட பெரும்பான்மையான தொழிலாளர் அபிலாஷைகளுக்கு அதரிக இடம் வழங்கியுள்ளது. இப் பட்டயம் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் ஒரு மிகப் பெரிய வெற்றியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இது பொதுத்துறை, தனியார் துறை ஆகிய இரு துறைகளிலும் அங்கீகரிக்கப்படக் கூடியது.
2.2. தொழிலாளர் உரிமைகளைப் பாதிக்கின்ற மாற்றங்கள்
பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணித்தாய்மார் போன்றோருக்கான விசேட முன்னேற்பாடுகளுடன் கூடிய, சிறப்பாக பெண்களுக்கான சில மாற்றங்களைப் பொதுச்சேவைச் சங்கமானது அதன் அங்கத்தவர்களுக்காகப் பெற்றுக் கொண்டது. இந்த மாற்றங்கள் சுற்றுநிரூபங்கள் ஊடாகப் பொது நிருவாக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் முன்னேற்பாடுகள் எந்த நேரத்திலும் மாற்றப்படக்கூடியது. ஒரு நாளுக்கு 8 மணித்தியாலயங்கள் வேலை செய்யும் அரசாங்க சேவையிலுள்ள பெண்கள் தமது ஐந்தாவது மாத கர்ப்பத்தின் பின்பு தமது ஒழுங்கான நேரத்தில் அரை மணித்தியாலம் பிந்தி வரவும், அரை மணித்தியாலம் முன்னராகச் செல்லவும் சுற்று நிருபங்கள் அனுமதி அளிக்கின்றன. குழந்தைக்குப் பாலூட்டும் காலங்களில், தமது குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்கு வேலை நேரத்தில் ஒரு மணித்தியாலம் வழங்கப்படுகின்றது.

ßyIIQUISrst 9 kNDhst 69
2.3 அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள்
அத்தியாயத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்
1995ஆம் ஆண்டு வைகாசி மாதம் பாராளுமன்ற அங்கத்தவர்களினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள் தொழிற்சங்கங்கள் மீது வேறுபட்ட தாக்கங்களைக் கொண்டிருக்கும். தற்பொழுது தனியே இலங்கைப் பிரசைகளுக்கு மாத்திரம் பொருத்தமான உரிமைகளில் பல, சகலருக்கும் பொருந்தக்கூடிய முறையில் விரிவாக்கம் செய்யப்படும். தற்பொழுதுள்ள அரசியலமைப்பின் கீழ், உரிமைகளின் மீதான பல கட்டுப்பாடுகள் மறுசீரமைக்கப்படும். கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒவ்வொரு உரிமைகளும் தனித்தனிப்பிரிவுகளாக கருத்திற் கொள்ளப்பட்டு மறுசீரை இடம்பெறும்.
சமாதான முறையில் ஒன்று கூடலுக்கான சுதந்திரம் ஒன்றிணைவுக்கான சுதந்திரம் , தொழிற் சங்கம் ஒன்றை அமைத்தல் , அதில் சேருதல் ஆகியவற்றிற்கான சுதந்திரம் என்பனவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் ஐ.சி.சி.பி.ஆர். இன் கோட்பாடுகளுக்கு அமையக் கொண்டு வரப்படும். இவை தற்போதுள்ளது போன்று "பொதுநலன் தேவைகள் போல்" இருப்பதனைவிட "சனநாயக சமூகத்தில் உள்ள தேவையைப்" போல் அமையக் கூடிய விதத்தில் கொண்டு வரப்படும். 1995ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் கொண்டு வரப்பட்ட முன்மொழிவில் உள்ள ஒரே ஒரு குறைபாடு என்னவெனில் தொழிற்சங்கம் ஒன்றில் சேருவதற்கும் அதனை அமைப்பதற்கும் தனியே பிரசைகள் மாத்திரம் உரிமை கொண்டவர்களாக இருப்பார்கள் எனக் கூறப்பட்டிருத்தல் ஆகும்.
தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு தொழிற்சங்கம் அதன் அங்கத்தவர்கள் சார்பில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டின் சாதாரண தொழிற் சட்டங்களின் கீழ் மாத்திரம் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அங்கீகரிக்கப்படும் அந்தஸ்து மீதான இந்தக் கட்டுப்பாடுகள் குழு நடவடிக்கைகளின் முயற்சிகளைத் தடை செய்கின்றது. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கும். ஏதாவது நியாயமான காரணத்திற்காக அல்லது பெளதீக, சமூக, பொருளாதார இயலாமை காரணமாகத் தாமாகவே விண்ணப் பிக்க முடியாதவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் சார்பாகவே இந்த விண்ணப் பங்கள் விண்ணப் பிக்கப் படுவதற்குரிய தகுதியினை இக்கட்டுப்பாடுகளின் நீக்கம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இத்தகைய மூன்றாம் நிலை நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நபரின் நண்பன் அல்லது உறவினன் மூலம் கொண்டு வரப்பட முடியும். அத்துடன் பொது ஆர்வத்தில் குழு நடவடிக் கைகளுக்கான செயல்களை இந்தப் பகுதி வழங்குகின்றது.

Page 44
70 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
2.4 1995இல் தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்றிய மீள்பார்வை
1994, 1995 ஆகிய ஆண்டுகள் இரண்டும் நன்கு தாபிக் கப்பட்ட வெற்றிகரமான தொழிற்சங்க நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஒன்றினைக் காட்டி நின்றது. 1980களில் அனுபவித்த பலத்த இருநிலைத் தாக்கங்களிலிருந்து இறுதியில் மீட்சி பெறும் ஒரு நிலையில் தொழிலாளர் இயக்கங்கள் காணப்பட்டன. 1980 இல் இடம்பெற்ற பொது வேலைநிறுத்தத்தின் பிரதிபலிப்பு 1980களின் இறுதியில் தெற்கில் ஏற்பட்ட புரட்சி ஆகியன காரணமாகப் பல தொழிற்சங்கத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.
தொழிற்சங்கங்கள் தொழிலாளர் பட்டயத்தை விருத்தி செய்வதில் மிகவும் ஊக்கமாக இருக்க பொதுச்சேவைத்துறைச் சங்கம் பெண்களின் அங்கத்துவம் தொடர்பாக சிறப்பாக பிரசவ உரிமைகள், கர்ப்பிணிப் பெண்களின் உரிமைகள் தொடர்பாக முக்கியமான முன்னேற்றங்களை அடைந்திருந்தன. சங்கங்கள் தாங்களாகத் தொழிற்படுவதற்குரிய சுயாதீனத்தைக் கொண்டிருக்கவில்லை. எனினும் 1995 இல் சில சமாதானப் பேரணிகள் பொலிசாரினால் கலைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், நியாயமான வேலை நிலைமைகளுக்கான கோரிக்கையில் தொழிலாளர்களின் அதிகரித்த நடவடிக்கையானது 1980களின் இறுதியில் இடர்தரும் பக்கவிளைவினை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. தொழிலாளரின் கோரிக்கைகள் தொடர்பான வாய்மூலப் போராட்டங்கள், ஆட்கடத்தல் போன்ற குற்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்ததுடன் இலங்கையில் தொழிலாளர் உறவுகளைக் கடுமையாகப் பாதிப்பதாகவும் அமைந்திருந்தன.
பெணி களின் உரிமைகளை அங்கீகரிப் பதில குறிப் பரிடத் தக்க முன்னேற்றங்களைப் பல தொழிற்சங்கங்கள் அடைந்ததுடன் 50 சத வீதம் பெண் அங்கத்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த போதிலும் தீர்மானம் செய்யும் மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றுவரையிலும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் பகுதிநேர வேலையாட்கள் வீட்டு வேலையாட்கள் பெயர்வுக்குட்படும் தொழிலாளர்கள், தொழில் புரியும் சிறுவர்கள், விவசாய உள்ளுர்த் தொழிலாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கியுள்ள தொழிற்படையின் எல்லை நிலைத் துறைகள் பலவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்வைப்பதில் தொழிற் சங்கங்கள் இதுவரையில் முடியாததொரு நிலையிலேயே காணப்படுகின்றன.

தொழிலாளர் உரிமைகள் 7 1
2.5. முடிவுரை
தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பான பல விடயங்கள் எடுத்துக் காட்டப்படவேண்டியவையாக உள்ளன. தற்போதைய நிலையில் பிரதான சவால் கள் சட்டரீதியான அரசியலமைப்புச் சீர் திருத்தங்களிலேயே தங்கியுள்ளன. முதலில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இலங்கையின் கடமைப்பாடுகளுடன் இணைந்து தொழிலாளர் உரிமைகளின் முழுப்பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடியவகையில் தொழிலாளர் பட்டயம் நிறைவேற்றப்படவேண்டிய அவசியமான ஒன்றாகும். அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஒன்று சேருவதற்கான சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கும் அதில் சேருவதற்கான உரிமை என்பனவற்றைப் பாதுகாப்பதனை உறுதிப்படுத்த வேண்டும். ஐ.சி.சி.பி.ஆர். சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் என்பனவற்றின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் மீது எந்தவித கட்டுப்பாடும் ஏற்பட இடமளிக்கலாகாது. அடிப்படை உரிமைகள் வழக்குகளில் மூன்றாம் நிலை விண்ணப்பங்கள் மேல் நீதிமன்றங்களில் விண்ணப்பம் செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
3. இலங்கையின் பெருந்தோட்டத்தொழிலாளர்களும்
மனித உரிமைகளும்
3.1 அறிமுகம்
எந்த ஒரு நாட்டிலும் சமூகத்தின் கீழ்நிலை மட்டத்தில் உள்ளவர்களின் உரிமைகளே பெரும்பாலும் மீறப்படுகின்றன. இலங்கையில் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அத்தகையதொரு சமூதாயத்தினைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். 1948 இல் சுதந்திரத்தின் பின்னர் திடீரென வாக்குரிமையற்றவர்களாக்கப்பட்டதன் மூலம் தீவிரமாக்கப்பட்ட நீண்ட கால சமூக, பொருளாதார நலிவின் விளைவுகள் மூலம் இணைக்கப்பட்ட குடியியல் அரசியல் உரிமைகளின் மீறல்களினால் அவர்கள் பெரிதும் பாதிப்புறுகின்றனர். நாட்டின் ஏனைய சனத்தொகையுடன் பார்க்கும் பொழுது நச்சு வட்டம் ஒன்று இந்தச் சமூகத்தின் குறைவுபட்ட நிலைக்குப் பொறுப்பாக உள்ளது. வாக்குரிமை பறிக்கப்பட்டதன் மூலம் மறுக்கப்பட்ட அவர்களது குடியியல், அரசியல் உரிமைகள் அவர்களது சமூக, பொருளாதார உரிமைகள் பறிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெருந்தோட்டத்துறை சமூகத்தின் கல்வி நிலைக்கும் அவர்களது குறைவிருத்தி நிலைக்குமிடையே நேரடியானதொரு தொடர்பு இருக்கின்ற காரணத்தால் இந்தப் பிரிவு பெருந்தோட்டப் பகுதியில்

Page 45
72 இலங்கை: 19வித உரிமைகள் நிலை 1995
உள்ள தமிழ் சிறுவர்களின் கல்வி நிலை பற்றி ஆராய்கின்றது. 1995ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட தனியார் மயமாக்கம் வடக்கு கிழக்குப் பிரிவினை யுத்தத்தின் விளைவாக மனித உரிமைகள் மீதான தாக்கம் என்பனவற்றுடன் பெருந்தோட்டத்துறை வீடமைப்பு என்பது பற்றியும் இங்கு ஆராயப்படுகின்றது.
3.2 மனித உரிமை மீறல்கள் - ஆரம்ப நிலைகள்
3.2.1 ஆரம்ப வரலாறு - ஒரு சுருக்க நோக்கு
இறுதியான குடிசனக் கணிப்பீட்டின் அடிப்படையில் (1981) மலையகத் தமிழர்கள் நாட்டின் மொத்தக் குடித்தொகையில் 5.7 சத வீதத்தைக் கொண்டிருந்தனர். இக்குடித்தொகையில் 80-87 சத வீதத்தினர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். காலனித்துவ காலத்தின் போது அரசியல் உரிமைகள் சம்பந்தமாக இந்தச் சமூகத்தினருக்கு எதிராக எந்த ஒரு பாரபட்சமும் இடம் பெறவில்லை. 1930களில் பெரும்பாலும் இடது சாரிக் கட்சிகளுடன் இணைந்திருந்த அரசியல் நடவடிக் கைகளிலும், தொழிற்சங்கங்களிலும் அதிகளவிலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஈர்க்கப்பட்டார்கள். இந்நிலை 1947இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அவர்கள் சமூகத்தைச் சார்ந்த 7 பேரைச் சட்ட சபைக்கு தெரிவு செய்ய உதவியதுடன் ஏனைய 20 தொகுதிகளில் உள்ள வாக்குகளின் வெளிப்பாட்டில் செல்வாக்குச் செலுத்துவதற்கும் உதவியது. இந்தச் சமூகம் குடியேற்ற கால ஆட்சியின் போது பெருந்தோட்டங்களில் கட்டுப்பட்டிருந்த “சிறைப்பட்ட தொழிலாளர் நிலை" என்ற நிலைமையிலிருந்து படிப்படியாக வெளியேறத்தொடங்கியது. எனினும் 1948, 1949ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய பிரசாவுரிமைச் சட்டத்தின் மூலம் இவர்களது குடியியல், அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டன. இச்சட்டம் இச் செயன்முறைக்கு ஒரு முடிவினைக் கொண்டு வந்ததுடன் மீண்டும் இவர்களைப் பெருந்தோட்டத் துறைக்குள் வாழும் கட்டுப்பாட்டு நிலையையும் ஏற்படுத்தியது.
3.2.2 பிரசாவுரிமை உரிமைகள்
பிரசாவுரிமை பறிக்கப்பட்டமை தேசிய இனம் ஒன்று என்ற முறையில் மலையகத் தமிழர்களின் உரிமைகளை மீறியது எனலாம். அதேநேரம் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டமை அவர்களது சமூக பொருளாதார உரிமைகளின் மறுப்புக்கு வழி வகுத்தது. இத்தகைய பாரியதொரு பின்னடைவிலிருந்து அவர்கள் இன்னும் மீளப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.

தொழிலாளர் S).)).h5i 73
பெருமளவு பெருந்தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கியிருந்த நாடற்றவர்கள் என்ற நிலை 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்க்கப்படாமல் இருந்ததுடன் அதனுடன் இணைந்த ஏனைய பல பிரச்சினைகளும் கவனிக்கப்படாமல் இருந்தன. நாடற்றவர் என்ற பிரச்சினை பெருமளவு தீர்க்கப்பட்ட 1988 ஆம் ஆண்டு வரையில் கூட சிறப்பாக அரசாங்கத்துடனான தங்களுடைய விவகாரங்களைப் பொறுத்தமட்டில் தாங்கள் நாடற்றவர்களாக இருந்த பொழுது தங்களுடைய நாளாந்த வாழ்க்கையில் காணப்பட்ட பல இயலாமைகளைப் பற்றிக் குறைபட்டு முறைப்பாடு செய்த வண்ணமே இருந்தனர்.
அரசியல் உரிமைகளின்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நாட்டின் அரசாங்கத்தில் பங்குபற்றக்கூடிய வழிகளின்றிப் பல தசாப்தங்களாக இருந்தனர். இதன் விளைவாக அவர்கள் தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் கொள் கைகளில் சிறியளவு செல் வாக்கினையே கொண்டிருந்தனர். மக்களின் பிரதிநிதிகளைக் கொணி டிருந்த இவ் அரசாங் கங்கள் அதனால பெரும் பாண் மைச் சமுதாயத்தினரிலிருந்து வந்த வாக்காளர்களின் தேவைகளுக்குப் பெரும்பாலும் செவிசாய்க்க வேண்டியனவாக இருந்தன. ஆகவே அரசின் தனியுரிமைகளாக இருந்த கல்வி, சுகாதாரம் வீடமைப்பு, ஏனைய சேவைகளில் தமக்குரிய பங் கினை அடையப் பெறுவதற்கு பெருந் தோட் டத் தமிழர்கள் மறுக்கப்பட்டார்கள். இத்தகைய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் என்ற அடிப்படையில் போட்டிக் கோரிக்கைகளும் காணப்பட்டன.
எவ்வாறாயினும், 1980ஆம் ஆண்டில் சமமான வேலைக்கு சமமான சம்பளம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டமை உட்பட சிறப்பாக 1980 களிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் என்பனவற்றில் சீர்திருத்தம் செய்யப்படுவதற்கு பல அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நிய நிதியுதவியுடன் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தோட்டத்தொழிலாளரின் சுகாதாரம், நீர் விநியோகம் வீடமைப்பு, கல்வி வசதிகள் என்பன சீர்திருத்தம் பெறுவதற்கு உதவிகளை வழங்கின. ஆனால் கிடைக்கப்பெறும் இவ்வளங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் இச் சமுதாயத்தினரின் வாழ்க்கை நிலைமைகள் தேசிய மட்டத்துடன் இணைந்த வகையில் உயர்வதற்குப் பல தசாப்தங்கள் எடுக்கும் எனலாம்.

Page 46
74 இலங்கை: I)வித உரிமைகள் நி ை1995
3.2.3 கல்வி
நாட்டின் ஏனைய சமூகங்களுடன் பார்க்கும் பொழுது மலையகத் தமிழ்ச்
சமுதாயத்தின் பின்னடைந்த நிலை பெரும்பாலும் கல்வித் துறையில் குறித்துக் காட்டப்படுகிறது. பெருந்தோட்டச் சமுதாயத்திற்கு கல்வியைப் பெறுவதற்கான சமமான சந்தர்ப்பங்கள் பெரும்பாலும் மறுக்கப்பட்டன. கல்வியுடன் கூடிய வேலைப்படை ஒன்று தேவையில்லை என்ற நோக்கம் கொண்டிருந்த தோட்டத்துறை முகாமைத்துவம் குடியேற்ற கால ஆட்சியின் போதும் அதன் பின்னர் ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கும் அத்துறையின் கல்விக்குப் பொறுப்பாக இருந்தது. இதன் கரீரணமாகத் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதற்கு மிகக் குறைந்த முன்னுரிமையே வழங்கப்பட்டது. இறுதியில் 1975ஆம் ஆண்டில் தோட்டப் பாடசாலைகள் அரசாங் கதி தினால் கையேற் கப்பட்டன. ஆனால பாடசாலைகளின் தரம் இன்று வரையில் குறைவாகவே உள்ளது.
அதிகளவு பெருந்தோட்டத் தொழிலாளர்களைச் செறிவாகக் கொண்டுள்ள
நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டத்துறையில் தமிழ் பாடசாலைகளின் கவனிப்பாரற்ற நிலை நன்கு வெளிப்படுத்தப்படுகிறது. மிகவும் அண்மைக் காலப்பகுதிக்குரிய தரவு கிடைக்கக்கூடிய 1992 இல் 851 சிங்கள மக்களுக்கு ஒரு பாடசாலையும் 1231 தமிழ் மக்களுக்கு ஒரு பாடசாலையும் காணப்பட்டதுடன் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை விடச் சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் கூடியளவில் உயர் தராதரங்களையும் கொண்டு காணப்பட்டன. பெருந்தோட்டத் துறையிலிருந்த தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் தராதரம் கொண்ட ஆசிரியர்களின் பற்றாக்குறையும் காணப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் பெருந்தோட்டத்துறையில் எழுத்தறிவு வீதம் 66.1% ஆகவும் இந்நிலை ஒப்பீட்டு ரீதியாக கிராமியத்துறைகளில் 87.1% ஆகவும் நகர்ப்புறங்களில் 92.3% ஆகவும் காணப்பட்டது.
பெருந்தோட்டத்துறை இளைஞர்களுக்கான கல்வித்துறை வசதிகளின் பற்றாக் குறையான நிலை அவர்களைப் பின்னடைந்த ஒரு நிலையில் வைத்திருப்பதற்குக் காரணமாகியதுடன் பொதுத்துறைச் சேவைகளில் இந்தச் சமுதாயத்தினர் அறவே பிரதிநிதித்துவம் செய்ய முடியாததொரு நிலை ஏற்படுவதற்கும் வழிவகுத்தது. இவர்களுட் பொதுத்துறையில் உள்ளவர்களில் மிகச் சிலரே உயர் நிலைகளை வகித்து வருகின்றனர். பொதுத்துறையில் மலையகத் தமிழர்களின் மிகக்குறைந்த பிரதிநிதித்துவம் நச்சு வட்டத்தின்
2 குடிசனக் கணிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், தொழிற்படை மற்றும்
சமூக - பொருளாதார அளவீடுகள் (1992).

தொழிாளர் உரிமைகள் 75
ஒரு பகுதியாக விளங்குவதுடன் அனுகூலமற்ற தன்மையை வெளிப் படுத்துவதாகவும் இருக்கின்றது. இச் சமுதாயத்தினரின் நன் மைக்காக மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் உள்ளார்ந்த நோக்கங்களை அடைந்துகொள்ளக் கூடியவகையில் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதில்லை.
3.2.4 வீடமைப்பு
வசதிகளுடன் கூடிய வாழ்க்கைத் தரம் ஒன்றினை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு சுகாதார வசதிகள், நீர் விநியோகம் என்பனவற்றுடன் கூடிய போதுமான தங்குமிட வசதி அடிப்படையான தேவையாக உள்ள பொழுதும் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்நிலை பெரும்பாலும் மறுக் கப்பட்டே வருகின்றது. பெருந் தொகையான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றுவரையில் 100 வருடங்கள் பழமையானதும் மிகவும் நெருக்கமானதும் பாழடைந்ததுமான அடுக்கு அறை வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். பெரும்பான்மையான வீடுகள் போதுமான அளவு வெளிச்சமற்ற நிலை, காற்றோட்ட வசதியற்ற நிலை, மின்சாரப் பற்றாக்குறை, வீட்டை அடைவதற்குரிய பொருத்தமான பாதைகளற்ற நிலை, வீட்டிலிருந்து 100 மீற்றர் சுற்றளவில் நீரைப் பெறுவதற்குப் பொருத்தமான வசதிகள் காணப்படாமை போன்ற பல குறைபாடுகளைக் கொண்டனவாகக் காணப்பட்டன. 1950 களின் நடுப்பகுதியிலிருந்து ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினால் வீடமைப்புக்கு உயர்ந்த முன்னுரிமை தேசிய அடிப்படையில் வழங்கப்பட்ட போதும் இத்தகைய பாரிய அரசாங்கத் திட்டங்களிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக் கொண்ட நன்மைகள் மிகவும் குறைவாகவே இருந்தன.
பரி ரசா வுரிமையரின் றரி பெருநீ தோட் ட த தொழிலாளர் கள் நலம் வாங்குவதிலிருந்து தடுக்கப்பட்டதுடன் அவர்களுக்குச் சொந்தமாகத் தனியார் வீடுகளையும் வைத்திருக்க முடியாதிருந்தது. குடித்தொகையின் ஏனைய துறையினருக்கு நன்மைகளை வழங்கிய, 1930களிலிருந்து நிறைவேற்றப்பட்ட அதிக எண்ணிக்கையிலான நிலக் குடியேற்றங்களினதும், குடியேற்றத் திட்டங்களிலுமிருந்து பெருந்தோட்ட மக்கள் புறக் கணிக்கப்பட்டனர். பிரசாவுரிமை என்ற பிரச்சினை இன்று பெருமளவு தீர்க்கப்பட்ட போதிலும் அவர்கள் கொண்டுள்ள சமூக, பொருளாதார நிலையில் போதுமான அளவு வீட்டு வசதிகளையும், நிலத்தையும் கொண்டிருத்தல் என்பது இப்பொழுதும் இச் சமுதாயத்தினருக்குப் பெரியதொரு பிரச்சினையாகவே உள்ளது.

Page 47
76 இலங்கை: )வித உரிமைகள் நி4ை 1995
3.3 பெருந்தோட்டச் சமூகத்தினரைப் பாதித்த 1995இன் பிரதான நிகழ்வுகள்
3.3.1 தாக்குதல்கள் மீள ஆரம்பித்தலும் கொழும்பில் கட்டுப்பாடற்ற கைதுகளும்
தாக்குதல்கள் மீள ஆரம்பித்ததையடுத்து கொழும்பில் தடுப்புக் காவலுக்கும், கட்டுப்பாடற்ற கைதுகளுக்கும் உட்பட்ட பெருமளவிலான தமிழர்களில் அதிக எண்ணிக்கையான பெருந்தோட்ட இளைஞர்களும் காணப்பட்டனர்.
3.3.2 தனியார் மயமாக்கத்தின் தாக்கம்
பெருந்தோட்டங்களின் இரண்டாம் கட்ட தனியார் மயமாக்கம் 1995 இல் ஆரம்பமானது. ஏற்கனவே 1992 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தோட்டங்களை முகாமைத்துவம் செய்து வருகின்ற கம்பனிகளுக்கு 50 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கின்ற நீண்ட காலச் செயன்முறை இந்நிலையில் இடம்பெற்றது. தனியார் துறையில் தமது வேலை நிலைமைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும் என அஞ்சிய பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாகத் தனியார் மயமாக்கத்தை எதிர்த்தார்கள். பெருந்தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கியிருந்த சகல தொழிற் சங்கங்களும் , தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்குக் கையளிக்கப்படுவதற்கு முன்னர், தனியார் கம்பனிகளுக்கும் தொழிற் சங்கங்களுக்கு மிடையே சிலவகையான பாதுகாப்புகளை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தம் ஒன்று முடிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தன. எனினும் தனியார் துறை முகாமைத்துவம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே இருந்ததை விடப் பாதகமான வேலை நிபந்தனைகளையும், ஒழுங்கு நியதிகளையும் வழங்கியதுடன் முகாமைத் துவத் தரிற்கும் தொழிற் சங்கங்களுக்குமிடையே எந்தவிதமான கூட்டு ஒப்பந்தங்களுமின்றித் தனியார் மயமாக்கம் தொடர்ந்து இடம்பெற்றது.
தனியார் மயமாக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு தனியார் துறை முகாமைத்துவத்தின் கீழ் வேலை நிலைமைகள் மிகவும் மோசமடைந்தமை தொழிலாளர்களிடையே பரந்தளவில் அதிருப்தியை உருவாக்கியது. இந்நிலை 1995ஆம் ஆணி டின் இறுதியில் மஸ் கெலியாப் பகுதியில் 35,000 தொழிலாளர்களை உள்ளடக்கிய நீண்ட கால வேலை நிறுத்தத்திற்கு வழி சமைத்தது.

தொழிலாளர் உ0ைகள் 77
3.4 முடிவுரை
இலங்கையில் மனித உரிமைகள் விவாதத்தில் குடியியல், அரசியல் உரிமைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எந்த ஒரு நாட்டிலும் பொருளாதார சமூக, கலாசார உரிமைகள் மறுக் கப்பட்டதனால் பாதிக் கப்பட்டவர்கள் அந்நாட்டின் சலுகை குறைந்த சமூகமாகவே காணப்படுகிறது. இவர்களது வாழ்க்கை நிலைமைகளை உயர்வான நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதனை நிச்சயப்படுத்துவதற்கு மேலதிக கவனம் செலுத்தப்படவேண்டும். இலங்கையில் ஒவ்வொரு சமுதாயத்திற்குள்ளும் சலுகை குறைந்தவர்கள் காணப்படுகின்ற அதேநேரத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக நலன் குறைந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருக்கின்றனர். இந்தத் தேவைகள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், வீடமைப்பு ஆகிய துறைகளில் அச் சேவைகளை அடைந்து கொள்வதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.

Page 48
7
சிறுபான்மையினர் உரிமைகள்
1. அறிமுகம்
1995 ஆம் ஆண்டு காலத்தின் பல முக்கிய விருத்திகள் சிறுபான்மையினர் உரிமைகளுக்குப் பெரும் பாதிப்புகளாக அமைந்தன. ஆயுதப் போராட்டங்கள் மீண்டும் சித் திரையில் தொடங்கியதால் அரசாங்கமும் அரசியல் தந்திரோபாயங்களுடன் இணைந்த வகையில் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. அத்துடன் ஆவணியில் எட்டு விடயங்களில் அதிகாரப் பரவலாக் கத்திற்கான அதன் ஆலோசனைகளைப் பொதுமக்களின் கருத்துக் களை அறிவதற்காக முன் வைத்தது. அரசியலமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள ஏனைய மாற்றங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் சிறுபான்மையினர் உரிமைகளின் சில பகுதிகளை அவை மேலும் பலப்படுத்தும். இதனுள் அரச கரும மொழிகள் பற்றிய ஆலோசனைகளும் அடங்குகின்றன.
இந்த அத்தியாயம், தமிழ்ச் சிறுபான்மையினரின் மனக்குறைகளுக்கான நீண்ட காலத் தீர்வுக்கு வழியாக அமையக் கூடிய பரவலாக் கல் ஆலோசனைகளையும், சிறுபான்மையினர் மனக் குறைகளைத் தீர்க்க விஷேடமாக உருவாக்கப்பட்ட சில நிறுவனங்களின் வினைத்திறனையும், ஒரு பன்மைச் சமுதாயத்திலே சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அரசாங்கம் எவ்வளவு தூரம் ஈடுபடுகிறது என்பது பற்றிய விடயங்களையும் பரிசீலனை செய்கின்றது. சிறுபான்மைக் குழுக்களின் உறுப்பினர்களைப் பாதித்த ஏனைய மனித உரிமைப் பிரச்சினைகள் (கொழும்புப் பிரதேசத்தில் தமிழ் மக்களைக் கட்டுப்பாடற்ற முறையில் கைது

IIII|i)ll) ) ))))).fb6 7 9
செய்தலும் தடுத்து வைத்தலும் மற்றும் குடிமக்களில் போர் ஏற்படுத்தும் தாக்கங்கள்) ஏனைய அத்தியாயங்களில் ஆராயப்படுகின்றது.
2. எல்.ரி.ரி.ஈ. உடன் தோல்வியடைந்த அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள்
1995 தை மாதம் 6 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. க்கும் இடையே தாக்குதலை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நான்கு சுற்றுவட்டப் பேச்சுவார்த்தையின் பின்னர் சித்திரையில் முடிவடைந்தது. அரசியல் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடப்படுவதற்கு முன்னர் சமாதானத்திற்கான ஏனைய பல நிபந்தனைகள் உருவாக்கப்படவேண்டுமென எல்.ரி.ரி.ஈ. வலியுறுத்தியது. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போது இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கை கொண்டதுடன் சமாதானம் பற்றிப் பேசுகையில் போருக்கான ஆயத்தங்களிலும் ஈடுபட்டனர்.
நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் பின் சமரசப் பேச்சுவார்த்தைகள் முற்றாகத் தோல் வியில் முடிந்தது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மீன் பிடித்தலுக்கான தடையைத் தளர்த் துவதாக அரசாங்கம் முன்பு அறிவித்திருந்ததுடன் சித்திரை 14 ஆம் திகதி இராணுவ நோக்கங்களுக்குப் பயன்படாத பொருட்களைக் கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இருப்பினும் எல்.ரி.ரி.ஈ. தாக்குதல் நிறுத்தத்தில் இருந்து விலகிக் கொள்கின்றது என அறிவித்ததுடன் ஒரு சில மணித்தியாலங்களின் பின் சித்திரை 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற இரு கடற்படைக் கப்பல்களை மூழ்கடித்தது. அரசாங்கம் வடக்கு மீதான பொருளாதாரத் தடையை மீண்டும் அமுலுக்குக் கொண்டுவந்ததுடன் ஆயுதப் போராட்டமும் மீள ஆரம்பித்தது.
3. அரசாங்கத்தின் அதிகாரப் பரவலாக்க
முன்மொழிவுகள
ஆயுதப் போராட்டம் மீண்டும் ஆரம்பித்தமைக்கு தென் பகுதியிலிருந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தையின் அடிப்படையிலான தீர்வொன்றை அடைவதில் ஈடுபாடுகாட்டி வந்ததுடன் 1995 ஆவணியில் அதிகாரப் பரவலாக்கல் ஆலோசனையைப் பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக வெளியிட்டும் வைத்தது. பரவலாக்கல்

Page 49
80 இலங்கை: 19ணித உரிமைகள் நி4ை 1995
ஆலோசனையின் திருத்தப்பட்ட வடிவமொன்று 1996 தை மாதத்தில் வெளியிடப்பட்டதுடன் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக் கு அதனைச் சமர் ப் பரித தது. ஆலோசனைகள் பின்பற்றப்படவேண்டுமானால், பாராளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டும். அதன் பின்னர் தேசியமட்டத்திலான சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்படவேண்டும். இத்தகைய ஆலோசனைகளின் எதர் காலம் நரிச் சயமறி ற நிலை மை யைக கொண்டிருக்கின்றது.
1995 ஆவணியில் வெளிவந்த ஆலோசனைகள் முன்னர் கூறப்பட்டவற்றிலும் பார்க்கக் கூடிய அதிகாரப் பரவலாக் கலைக் கணிசமான அளவில் கொண்டிருந்தது. இது தமிழ் மக்களின் நீண்டகால மனக் குறைகளைக் கருத்துள்ளவகையில் தீர்த்து வைக்க முயன்றது. ஆயினும் ஆலோசனையின் ஒவ்வொரு அம்சமும் எடுத்துக் கூறப்படவில்லை. இவை முக்கியமான சட்ட மற்றும் நிதிசார்ந்த அதிகாரங்களை எட்டுப் பிராந்திய சபைகளுக்குப் பரவலாக்கம் செய்வதன் மூலம் (இத்தகைய அலகுகள் வரையறை செய்யப்படாத வேளையிலும்) சிறுபான்மையினரின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்தியில் பெரும்பான்மைச் சிங்களவரின் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனத் தெரிவித்தது. இந்த ஆலோசனைகள், பிரதேசத்துக்குள் அமையும் நிலம், கைத் தொழில் அபிவிருத்தி, நேரடி வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏனையோரிடையேயுள்ள கல்வி என்பவற்றின் அதிகாரப் பரவலாக்கலையும் உள்ளடக்கும். அத்துடன் பிராந்திய சபைகள் வெளிநாட்டு முதலீடுகள், சர்வதேச நன்கொடைகள் மற்றும் அபிவிருத்தி உதவிகள் பற்றிப் பேசவும் அதிகாரமுடையன என எடுத்துக் கூறின. இத்தகைய முக்கியமான விடயங்களிலேயே தமிழ்ச் சமுதாயத்தினர் தமக்குக் கடுமையான பாகுபாடுகள் காட்டப்பட்டன எனக் கருதினர். இத்தகைய ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பிராந்தியங்கள் தமது சுய அபிவிருத்தி பற்றிக் கணிசமான அளவில் தீர்மானிக்கலாம் என்பதுடன் பாகுபாடுகாட்டும் நடைமுறைகளுக்கு உட்படவேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கக் கொள்கைகள் சிறுபான்மையினர் விருப்பங்களுக்கு மாறானவை எனக் கருதவும் இடமில்லை. ஆயினும் 1996 தை மாதத்தில் முன் வைக் கப்பட்ட தருத்தியமைக் கப் பட்ட வடிவம் , பொதுமக்கள் கருத்தரின் பரின் னர் ஆலோசனைகளைக் குறிப்பிடத்தக்களவில் மலினப்படுத்தியதுடன் மத்திக்கே கூடிய அதிகாரங்களை வழங்கியது.

l'i)19ì ).ì)|bbi 8
4. சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதிக்கும்
ஏனைய முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தங்கள
அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறையின் போது வரவேற்கத்தக்க முறையில் முன்வைக்கப்பட்ட ஆலோசனை, மொழி பற்றிய உரிமைகளில் இடம்பெறுகின்றது. தமிழ்மொழிக்கு அரசகரும மொழி அந்தஸ்து, சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் மொழி பற்றிய அத்தியாயம் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவினால் 1995 ஆணியில் அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கையின் பன்மைத்தன்மையை அங்கீகரித்து சகல சமூகங்கள் மற்றும் மதங்களின் சமத்துவமான பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கிய 1995 ஆனியில் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அரசியலமைப்பு ஏற்பாடுகள் பற்றிய வரைவு பெளத்த மதத்திற்கு அதிமுக்கிய ஸ்தானத்தை வழங்கியதுடன், இது வலிதான கூற்று வடிவிலும் இடம்பெற்றது. உத்தேச அரசியலமைப்பில் பெளத்த மதம் பற்றிய அதிகாரம் பாகுபாட்டினை மேலும் ஆழமாக்குவதுடன் இலங்கையிலுள்ள ஏனைய சமயங்களையும் சமூகங்களையும் துணைநிலை அந்தஸ்துக்கு இட்டுச் செல்வதுடன் சமத்துவமான பாதுகாப்பு என்ற கூற்றுடன் நேரடியான முரண்பாட்டையும் கொண்டிருக்கின்றது.
5. அரசகரும மொழிகள் ஆணைக்குழு
அரசகரும மொழி ஆணைக்குழு புதிய வடிவிலான செயன்முறைகளில் ஈடுபடுவதாக உறுதி கூறியிருந்தாலும், அது ஒரு வினைத்திறனுடைய அமைப்பாக விளங்கவில்லை. 1995 ஆனி 9ஆம் திகதி ஏதாவதொரு சமூகத் தனி மொழியுரிமைகள் அதரிகாரமுடைய அமைப்புகளால் மறுக்கப்பட்டால். அதற்கும் தகுந்த நடவடிக்கையை எடுக்க ஆணைக்குழு முடிவு செய்திருந்தது. அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் எந்தவொரு தனிநபரின் மொழியுரிமையை வேண்டுமென்று மறுக்கக்கூடாது.
நீதி மற்றும் அரசியல் யாப்பு விவகார அமைச்சு, அதிகாரப் பரவலாக்கத்துடன் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுகளைக் கொணர்டிருக்கும் அரசியல் யாப்பு முன்னேற்பாடுகளின் நகல். அத்தியாயம் II (1995) p, 11.

Page 50
82 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
6. பன்மைவாதத்திற்கான அரசாங்கத்தின் கடப்பாடு
1995 இல் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சில நடைமுறைகள் இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் அரசாங்கம் பிரதிநிதித்துவம் செய்கின்றதா என்ற சந்தேகங்களை எழுப்பியது. முதலாவதாக, போரின் காரணமாகத் தமிழ்க் குடிமக்கள் கொல்லப்படும் சம்பவங்களை மறைத்தும், மறுத்தும் வந்ததுடன் எல்.ரி.ரி.ஈ. இனால் சிங்கள மக்கள் கொல்லப்படுவதற்குக் கண்டனத்தையும் தெரிவித்தது. அரசாங்கத்தின் இத்தகைய போக்குகள் அது சிங் கள மக்களின் நலன்களிலேயே அதிகளவான கவனத்தைக் கொண்டிருக்கின்றது என்ற செய்தியை தமிழ்ச் சமூகத்துக்கு தெரிவிப்பதாக அமைந்தது. அவசர கால ஒழங்குவிதிகளின் கீழ் 1995 புரட்டாதி தொடக்கம் மார்கழி வரை அமுலாக்கப்பட்ட செய்தித் தணிக்கையினால் பொதுவாக இலங்கை மக்கள் தமது நாட்டில் குடிமக்கள் கொல்லப்படுவது மற்றும் வடக்கில் நிகழ்ந்த பெருமளவு இடம்பெயர்தல் என்பவற்றை அறியாமற் தடுக்கப்பட்டனர்.
அரசாங்கத் தரின் ஈடுபாட் டில சுட் டிக் காட்டப் படக் கூடிய ஏனைய பிரச்சினைகளாக சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் அவர்கள் கைது செய்யப்படும் போதும், தடுப்புக்காவலில் வைக்கும் போதும் பாதுகாப்பை வழங்குவதில் தோல்வி கண்டமை உள்ளடக்கப்படுகின்றன. இவை 1995 இல் வெளியிடப்பட்ட சனாதிபதியின் பணிப்புரைகளில் சேர்க்கப்பட்டிருந்தன.
7. கல்வி
வடக்கு கிழக்கின் கல்வி நிலைமைகள், போரின் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போரினால் இடம்பெயர்ந்த சிறுவர்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். போரும் பாடசாலைப் பொருட்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தின. மேலும் சில பாடசாலைகள் மூடப்பட்டமையால் ஏனையவை அளவுக்கதிகமாக மாணவர்களைக் கொண்டிருந்தன.
8. முடிவுரை
அரசாங்கத்தினால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், காத்திரமான வழிகளில் சிறுபான்மையினரின் மனக்குறைகளை அர்த்தமுள்ள வகையில் தீர்ப்பதற்கான விருப்பத்தை வெளிக்காட்டியிருந்தாலும், இலங்கையில் வாழும்

சிறுபான்மையிர் உரிமைகள் 83
தமிழ் மக்கள் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக வருடம் முழுவதும் தொடர்ச்சியான துன்பங்களை அனுபவித்து வந்தனர். தெற் கில் கட்டுப்பாடற்றமுறையில் கைது செய்யப்படுதல், தடுத்து வைத்தல் என்பவற்றுக்கு உள்ளாகியதுடன் சிலர் நீதிக்கு முரணாகவும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் காணமாற் போயினர். அதேவேளை வடக்கில் குண்டுவீச்சுக்களினாலும் எறிகணைத் தாக்குதல்களினாலும் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்தலுக்கும் துயரங்களுக்கும் ஆளாயினர். அரசாங்கம் உண்மையிலேயே அதிகாரப் பரவலாக்கத்திற்கான கடப்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது என்பதையும் தீவில் வாழும் சகல சமூக அங்கத்தவர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்குகிறது என்பதையும் உறுதிசெய்தல் வேண்டும். இல்லாவிட்டால் இனப்பிரச்சினைக்கான நீடித்து நிலைக்கக்கூடி' தீர்வொன்றைக் காணமுடியாது.

Page 51
8
சிறுவர்களின் உரிமைகள்
1. அறிமுகம்
இந்த அத்தியாயம் போர்ச்சூழலில் சிறுவர்களின் நிலைமை, சிறுவர்களில் விஷேட கவனம் செலுத்தும் சட்டச் சீர்த்திருத்தங்கள், சிறுவர்களின் உரிமைகள் பற்றிய மகாநாட்டு உடன்படிக்கையின் (சி.ஆர்.சி) பின்னர் சிறுவர் உரிமைக்குழு தெரிவித்த குறிப்புகளும் முடிவுகளும் பற்றிய விடயங்களைப் பரிசீலனை செய்கிறது.
2. போர்ச்சூழலில் சிறுவர்கள்
போர்ச்சூழலில் உள்ள சிறுவர்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.
(1) பிரச்சினைக்குரிய பிரதேசங்களில் வாழும் சிறுவர்கள். (2) போர் காரணமாக இடம் பெயர்ந்த சிறுவர்கள். (3) போரில் ஈடுபடும் சிறுவர்கள்.
இப்பகுதியானது போர்ச்சூழலில் உள்ள சிறுவர்கள் பற்றிய ஜெனிவா மகாநாட்டுடன்படிக்கையின் ஏற்பாடுகளையும், சிறுவர்களின் உரிமை பற்றிய மகாநாட்டுடன் படிக்கையையும் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறது. பிரச்சினைக்குரிய பிரதேசங்களில் வாழும் சிறுவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளையும் போர் காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்கள் பற்றியும் இப்பிரிவில் அழுத்திக் கூறப்படுவதுடன், போரில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் பற்றி அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

சிறுவர்களின் உரிமைகள் 85
2.1 போர்ச்சூழலில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பான சர்வதேச
நியமங்கள்
போர்ச்சூழலிலுள்ள சிறுவர்களின் பாதுகாப்புக்கான முக்கிய சர்வதேச நியமங்கள் 1949இன் நான்கு ஜெனிவா மகாநாட்டுடன்படிக்கைகள், 1977 இன் ஜெனிவா மகாநாட்டுடன்படிக்கைக்கான இரண்டு மேலதிக விருப்புரிமைப் பின்னேடு ஆகிய ஏற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன. மேலும் சிறுவர்களின் உரிமை பற்றிய மகாநாட்டுடன்படிக்கைகள் அதன் 38 ஆவது உறுப்புரை ஜெனிவா மகாநாட்டுடன் படிக் கைகளில் எடுத்துக் காட்டப் பட்ட சில பாதுகாப்புக்களைப் பற்றி மீண்டும் கூறியுள்ளன. இச் சாதனங்களில் ஜெனிவா மகாநாட்டு உடன்படிக்கைகளையும், சிறுவர்களின் உரிமைகள் பற்றிய மகாநாட் டு உடனி படிக் கைகளையும் , ஜெனிவா மகாநாட் டு டனி படிக்கைகளுக்கான மேலதிக விருப்புரிமைப் பின்னேடுகளையும் இலங்கை பின்னுறுதிப்படுத்தியுள்ளது.
பொது உறுப்புரை 3 இன் ஏற்பாடுகளும் விருப்புரிமைப் பின்னேடு 11 ஆவதும் ஓர் அரசினால் அது தொடர்பான சாதனங்கள் ஒருமுறை பின்னுறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முரண்பாட்டுக்குரிய எல்லாப் பிரிவினரையும் அது கட்டுப்படுத்தும். இலங்கை அரசாங்கம் சகல மக்களதும் பாதுகாப்பை (எல்.ரி.ரி.ஈ யினால் தாக்கப்படுதல் மற்றும் சிறுவயதில் ஆட்சேர்ப்புக் குள்ளாவதால் பாதிக்கப்படுவோர் உட்பட) சகல மக்களினதும் பாதுகாப்பை விருப்புரிமைப் பின்னேடு II இனை பின்னுறுதிப்படுத்துவதன் மூலம் விரைவாக மேற்கொள்ளவேண்டும்.
உள்நாட்டில் பிணக்குகள் நிலவும் பொழுது தாக்குதல்களில் முக்கிய பங்கினை ஏற்காதவர்களைப் போலவே உறுப்புரை 3 இன்கீழ் சிறுவர்கள் பாதுகாக் கப்படுகிறார் கள் . அவர்கள் மனிதாபரிமான ரீதியாகவும் வன்முறையினால் உயிருக்கு அல்லது கெளரவத்துக்கு இடையூறு இன்றி நடாத்தப்படவேண்டும். சிறுவர்கள் கோரும் பாதுகாப்பு மற்றும் உதவிகள் வழங்கப்படவேண்டும என்பது உட்பட, சிறுவர்கள் தொடர்பான விஷேட ஏற்பாடுகளை விருப்புரிமைப் பின்னேடு I உள்ளடக்குகிறது. அத்துடன் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஆயுதந்தாங்கிய படைப்பிரிவில் அல்லது ஆயுதந்தாங்கிய குழுவில் சேர்க் கப்படுவதையும் மற்றும் போரில் மறைமுகமாகப் (உதாரணமாக- தகவல் சேகரித்தல், ஆயுதங்களைக் கொணி டுசெல்லல் , கட்டளைகளைக் கொண் டு செல்லல அல்லது நாசகாரவேலைகளில் ஈடுபடல்) பங்கு பற்றுதலையும் தடுக்கிறது. 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் போரில் நேரடியாகப் பங்கேற்கும்போது அவர்கள் கைது செய்யப்பட்டு விஷேட ஏற்பாடுகளின் கீழ் பாதுகாக்கப்படலாம். சிறுவர்களின்

Page 52
86 இலங்கை: மவித உரிமைகள் நிலை 1995
கல்வியிலும் விஷேட கவனஞ் செலுத்தப்பட வேணி டும். மீண்டும் குடும்பத்தினரோடு சேருதல் - தேவையேற்படுமிடத்து சாதக நிலைமை உள்ளவிடத்து பெற்றோரின் விருப்பத்தின்பேரில் அல்லது அவர்களுக்குப் பொறுப்பாக உள்ளவரின் விருப்பத்தின் பேரில் சிறுவர்களை நாட்டின் பாதுகாப்பான பிரதேசத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யலாம்.
2.2 பிணக்கு நிலவும் பிரதேசங்களில் வாழும் சிறுவர்கள்
பிணக்கு நிலவும் பிரதேசங்களில் வாழும் சிறுவர்களின் உண்மையான தொகை தெரியாது. அடிப் படைவசதிகள் போதாமை, தொடர்ச்சியான பாதுகாப் பரிணி மை, பாதுகாப்பான இடமினி மை, உடற் காயங்கள் , உளவியற் பாதிப் புக் கள் என்பன சிறுவர்களால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளாகும். 1995 இல் அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ யும் மேற்கொண்ட பாரபட்சமற்ற தாக்குதல்களால் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி சிறுவர்களுக்கான பாதுகாப்பு இலங்கையில் இருசாராராலும் வழங்கப்படவில்லை.
2.3 இடம்பெயர்ந்த சிறுவர்கள்
முகாம்களில் வாழும் சிறுவர்கள் தொகையும் அவர்களுடைய தேவைகளும் 1995 இன் இறுதியில் கணிப்பீடு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இடம் பெயர்ந்த சிறுவர்கள் பல்வேறு அதிர்ச்சியான அநுபவங்களினாலும் உணர்வுபூர்வமான தாக்கங்களினாலும் பாதிக்கப்படுகின்றனர். அதிர்ச்சியால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும் சாதாரண பல நடவடிக்கைகளை யுனிசெப் மேற்கொண்டபோது இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசினால் தொடர்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான அறிவித்தல் ஏதும் காணப்படவில்லை.
இடம் பெயர்ந்த சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அடிப்படை வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வழங்க வேண்டிய தேவையுண்டு. அரசாங்கக் கட்டுபாட்டிலுள்ள பிரதேசங்களில் வாழ்வோரின் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றதெனினும் எல்.ரி.ரி.ஈ. யினரின் கட்டுப்பாட்டிலுள்ள பரிரதேசத தல வாழ் வோரின் நிலைமைகள் மிக மோசமானவை. அங்கவீனமடைந்த சிறுவர்களின் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்
"A Profite of the Sri Lanka Child in Cris is and Conflict", UNICEF, (Colombo, October 1990), p. 5.

சிறுவர்களின் உரிமைகள் 87
2.4 போராளிகளாகச் சிறுவர்கள்
ஜெனிவா மகாநாட்டுடன்படிக்கைக்கான மேலதிக விருப்புரிமைப் பின்னேடு 11. உறுப்புரை 4(3) இன் படி, 15 வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் போரில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. சிறுவர்களின் உரிமைக்கான மகாநாட்டுடன்படிக்கையின் உறுப்புரை 35 இல் 15 வயதுக்குக் கீழ்ப்பட்டோரிலிருந்து ஆயுதமேந்திய படைகளுக்கு அல்லது குழுக்களுக்கு ஆட்சேர்க்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் 1992 ஆம் ஆண்டின் இலங்கைச் சிறுவர்கள் பட்டயத்தின் கீழ், கொள்கையளவில் அரசாங்க இராணுவத்தில் பங்கேற்கும் வயதெல்லையை அரசாங்கம் 18 வயதாக அதிகரித்துள்ளது.
ஆயுதப்படைக்கு அரசு சிறுவர்களை ஆட்சேர்ப்புச் செய்யாமலிருக்கும் போது எல்.ரி.ரி.ஈ பத்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களைத் தமது அமைப்பில் போராளிகளாகவும், பொதுவாக 15 வயதுக்குக் குறைந்தவர்களைத் தமது ஆயுதப்படையிலும் சோர்த்துக் கொள்கிறது. தற்போது எல்.ரி.ரி.ஈ. யிலுள்ள சிறுவர்களின் தொகையும் போராட்டத்தில் இறந்த சிறுவர்களின் தொகையும் தெரியாது. 1995 இல் எல்.ரி.ரி.ஈ. யில் பல போராளிச் சிறுவர்கள் இருப்பதாகவும், சிறுவர்களை மேலும் சேர்த்துக் கொள்ளல் அதிகரித்து வருவதாகவும் பல தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு மகாணத்திலே எல்.ரி.ரி.ஈ. இனர் சிறுவர்களைப் பலவந்தமாகச் சேர்த்ததற்கு ஆதாரங்கள் உண்டு.? 1995ஆனியில் எதிர்பாராத ஒரு நடவடிக்கையை எல்.ரி.ரி.ஈ. மேற்கொண்டபோது அதனை ஆசிரியரும் பெற்றோரும் எதிர்க்கமுற்பட்ட வேளையில் அவர்களின் முயற்சிகள் பல அச்சுறுத்தல்களுக்கும் எதிர் நடவடிக் கைகளுக்கும் உள்ளாயின.
போரின் காரணமாகச் சிறுவர்கள் கைதாகும் பொழுது அவர்களைக் கவனிக்க விஷேட கவனம் எடுக்கப்பட வேண்டும். யு.ரி.எச்.ஆர் (யாழ்ப்பாணம்) இராணுவத்திடம் வந்து சேரும் முன்னைய போராளிச் சிறுவர்களின் பாதுகாப்பு பற்றிய பல நிகழ்வுகளை 1995 இல் பதிவு செய்துள்ளது. அவை சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கோட்பாடுகளுக்கு இணங்க இடம்பெற்றுள்ளன. போராளிச் சிறுவர்கள் எல்.ரி.ரி.ஈ இனரால் பயன்படுத்தப்படும் பொழுது நீண்டகாலத்தில் அவர்கள் எவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் என அறியவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உண்டு. எல்.ரி.ரி.ஈ இனரால் பயன்படுத்தப்படும் போராளிகளைப்பற்றிய விடயம் நீண்ட காலத்தில் மிகக்
2 University Teache rs for Human Rights (Jaffna) Brie fing No.2. (1995).
"Children in the north - East War : 1985-1995."

Page 53
88 இலங்கை: 19வித உரிமைகள் நிலை, 1995
கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சிறுவர்களுடன் பணிபுரிவதற்குப் பயிற்றப்பட்ட ஆளணியினரைத் தயார் செய்வது உட்படப் பல முக்கிய பிரச்சினைகளை முன்கொணர்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் முயலவேணி டும். சிறுவர்களுடன் நேரடியாகக் தொடர்பு கொள்ளக்கூடிய பிரிவினரான சமூகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசனை வழங்குவோரை இதில் உள்ளடக்கவேண்டும்.
3. சட்டச் சீர்திருத்தம்
1995ஆவணியில் தண்டனைச் சட்டக்கோவை, திருமணக் (பொது) கட்டளைச் சட்டங்கள், திருமணமும் விவாகரத்துச் (கணி டிய) சட்டம் ஆகியன திருத்தியமைக்கப்பட்டன.
3.1 தண்டனைச்சட்டக்கோவை
3.1.1 உள்ளடக்கம்
பாலியல் குற்றங்கள் பற்றிய பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சிறுவர்கள்மீது குறிப்பிடத்தக்க கவனத்தைச் செலுத்தியுள்ளன. சிறுவர்கள் தொடர்பான புதிய குற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்டவர் சிறுவராக இருந்தால் நடைமுறையிலுள்ள குற்றங்கள் பல வற்றுக்கு தண்டனையும் அறிமுகம் செய்யப்பட்டது. சில விடயங்களில் ஆகக் குறைந்த சிறைத் தணி டனை விதிப்பதற்குத் திருத்தங்கள் செய்யப்பட்டன.
புதிய குற்றங்களாகப் பின்வருவன அறிமுகம் செய்யப்பட்டன:
O சிறுவர்களை அவதூறு செய்யும் பிரசுரங்கள் சிறுவர்களுக்கு இழைக்கும் கொடுரங்கள் - இவையிரண்டிற்கும் 2-10 வருடங்களுக்கு
இடைப்பட்ட சிறைத்தண்டனை.
9 பாலியல் துஷ்பிரயோகம். இதற்கு 5-20 வருட சிறைத்தண்டனை.
{0
தத்தெடுக்கும் நோக்கில் சிறுவர்களை விற்பனை செய்தலுக்கு 220 வருட சிறைத்தண்டனை.
9 16 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையைக் கற்பழித்தல், குழுவாகக்
கற்பழித்தல் 15-20 வருட சிறைத் தண்டனை.

சிறுவர்களின் உரிமைகள் 89
O இரத்த உறவினரைக் கற்பழித்தல் 7-20 வருட சிறைத்தண்டனை.
9 பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர் பற்றிய விபரத்தை வெளியிடல் - சில விஷேட நிலைமைகளின் கீழ் அன்றி 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனை.
கற்பழிப்பு குற்றத்திற்கான சட்டபூர்வ வயது 12 இல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டது. கடுங்காயங்கள் என்பதற்குரிய வரைவிலக்கணம் வெட்டு அல்லது முறிவு, எலும்பு, மூட்டு அல்லது பல் விலகுதல் அல்லது சிறுபெயர்வு ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இயற்கைக்கு முரணான உடற்புணர்ச்சி பற்றிய பிரிவுகளும் மிகவும் கெளரவமான நடத்தை பற்றிய பிரிவுகளும் குற்றம் புரிந்தவர்களில் வயது கூடியவருக்கு அதிக தண்டனை வழங்கும் வகையில் திருத்தப்பட்டன.
3.1.2 சிறுவர்கள் தொடர்பான சட்டங்களின் தன்மையை மாற்றுதல்
இத்திருத்தங்கள் தண்டனைச் சட்டக் கோவையின் சில பிரிவுகளை
சிறுவர்களின் தேவைகளையும் நலன்களையும் கவனிக்கத்தக்க வகையில் மிகவும் பொறுப்புடையதாக்க முயன்றுள்ளன. பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்பட்டவரின் விபரங்களை வெளியிடுதல் மீது கட்டுப்பாடுகள் இருத்தல் வரவேற்கத்தக்கது. அண்மைக் காலத்தில் பாலியல் குற்றங்கள் பற்றிய செய்திகளுக்கு தொடர்புச் சாதனங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ள சந்தர்ப்பத்தில் இக்கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டமை சிறப்பானதாகும்.
இதீ தருதி தங்களின் படி பாதரிக் கப் பட் டவர்கள் சிறுபிள்ளையாக இருக்குமிடத்து தண்டனைகள் அதிகளவில் வழங்கப்படும். இதனால் இப்பொழுது அக் குற்றங்கள் பாரதூரமானவை எனக் கருதப்படுகின்றன. அத்துடன் இவை ஒத் தி வைக் கப்பட்ட தணி டனைகள் தொடர்பான பிரச்சினைகளையும் தீர்த்து வைத்துள்ளன.
ஆபாச பிரசாரங்கள், ஆபாசக்காட்சிகள் தொடர்பான குற்றங்கள் பற்றிய 286 A பிரிவில் கையாளப்பட்ட சொற்கள் பற்றி விசேஷடமாகக் குறிப்பிடவேண்டும். இத்தகைய பிரசுரங்கள் வாசகர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைவிடுத்து சிறுவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவர் என்பதற்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குற்றம் புரிவோரை இலகுவாகத் தண்டிக்க முடியும். அத்துடன் பிள்ளையினுடைய நலன் என்னும் விடயத்தை இப் பிரிவு உள்ளடக்கியதாகவும் சி.ஆ.சி. இன் கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் முறையிலும் இப்பிரிவு அமைந்துள்ளது.

Page 54
90 இலங்கை: 19வித உரி9ைகள் நிலை 1995
3.1.3 சீர்திருத்தங்களில் உள்ள பிரச்சினைகள்
குற்றவியல் ஒழுக்கக்கோவைச் சட்டம், சான்றுகள் கட்டளைச் சட்டம்
சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டம் (CYPO) என்பவற்றுடன் தண்டனைச் சட்டக் கோவையை இணைத்து நோக்கும்போது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஐயப்பாடுகளையும் சீர்திருத்தங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சில திருத்தங்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சி சிக்கலை உருவாக்கலாம். கவனத்திற் கொள்ள வேண்டிய பிரிவுகளாவன: தண்டனைச் சட்டக் கோவையின் 365, 365 A (இயல்புக்கு முரணான இச்சையினால் உண்டாகும் சேர்க்கை மற்றும் ஒழுக்கமின்மை), தண்டனைச் சட்டக் கோவையின் 365B பிரிவு (பாலியல் துஷபிரயோகம்), தண்டனைச் சட்டக்கோவை 363 வது பிரிவு (கற்பழிப்பு).
3.2 திருமணம் பற்றிய சட்டங்களின் சீர்திருத்தங்கள்
திருமண (பொது) கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணத்துக் கான ஆகக் குறைந்த வயதெல்லை இருபாலாருக்கும் 18 வயதாக இருத்தல் வேண்டும் எனச் சீர்திருத்தத்தின் மூலம் கூறப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்துச் (கண்டிய) சட்டம் இவ்வாறான சட்டங்களைச் சிறுவர்களின் உரிமைக்கான மகாநாட்டுடன்படிக்கையுடன் இணைத்து நோக்குகின்றன. மற்றும் பாதுகாவலரினால் தெரிவிக்கப்படும் சம்மதம் பற்றிய சகல குறிப்புக்களையும் நீக்கியுள்ளன. அதனால் திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயது திருமணத்திற்குரிய குறிப்பிட்ட வயதுடன் பொருந்துகின்றது. திருமணம் மற்றும் விவாகரத்துச் (இஸ்லாமிய) சட்டம் திருத்தப்படவில்லை. இச்சட்டம் இருபாலாரினதும் ஆகக்குறைந்த திருமண வயதை வலியுறுத்தவில்லை. எனினும் 12 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணஞ் செய்யும் சாத்தியக் கூறுகளை அங்கீகரிக்கிறது.
3.3 திருமணம் பற்றிய சட்டங்களின் சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகள்
திருமணச் சட்டத்திலுள்ள பல ஏற்பாடுகள் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய மகாநாட்டுடன்படிக்கைகளுக்கு எதிரானவையாகக் காணப்படுகின்றன. குறிப்பாகத் திருமண வயது பற்றிய வித்தியாசமான ஏற்பாடுகள் மற்றும் முஸ்லீம்களுக்கான அனுமதி என்பன பாரபட்சமானவை. தண்டனைச் சட்டக் கோவையின்படி பாதிக்கப்பட்டவரின் திருமண அந்தஸ்திலேயே கற்பழிப்பின் ஆகக் குறைந்த வயது வேறுபாடுகள் தங்கியுள்ளன. இவை சிறுவர்கள் பற்றிய மகாநாட்டுடன்படிக்கையின் உறுப்புரை 2 இனை மீறுவதாயுள்ளது.

சிறுவர்களின் உரிமைகள் 9
மத அல்லது இனரீதியில் "எந்தவகையான பாரபட்சத்தையும்” தடைசெய்கிறது. பாரபட்சம் காட்டும் ஏற்பாடுகள் குறிப்பாக பொதுத்திருமணக் கட்டளைச் சட்டத்திலிருந்து முஸ்லீம்கள் தவிர்க்கப்படவேண்டும். முஸ்லீம்களுக்கான ஆகக் குறைந்த திருமண வயது இல்லாமை, திருமணஞ் செய்யும் முஸ்லீம் பெண்கள் பாதுகாவலரின் சம்மதம் பெறுதல் , திருமணப்பதிவின்போது முஸ்லீம்களுக்கு வித்தியாசமான நிபந்தனைகள் (முஸ்லீமாக இருந்தால் பெண்ணின் கையொப்பம் தேவையில்லை, ஆயினும் பாதுகாவலர் கையொப்பம் இடுமாறு கோரப்படுவர்) போன்றவை நீக்கப்படுவது அவசியம்.
தண்டனைச் சட்டக் கோவையின் 363 (E) ஆவது பிரிவு, திருமணம்செய்த,
திருமணம்செய்யாத பெண்களின் வயது வேறுபாட்டினை எடுத்துக்காட்டுவதுடன் உரிமை பற்றிய மகாநாட்டுடன்படிக்கைக்கு எதிராகவும் காணப்படுகின்றது. இதுபற்றி மேலே விபரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர் உரிமை பற்றிய மகாநாட்டுடன் படிக் கை 19 ஆவது உறுப் புரையின் கீழ் பாலியல் துஷ பிரயோகத்துக்குள்ளாகும் சிறுவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கத் தவறிவிடுகின்றது. இது திருத்தியமைக்கப்பட வேண்டும். முஸ்லீம் பெண்களின் திருமணத்துக்கான ஆகக்குறைந்த வயது இன்மையால் பெண்பிள்ளைகள் அவரது கணவன்மாரால் திருமணத்திற்கு முன் துஷபிரயோகம் மற்றும் கற்பழிப்புக்கு உட்படலாம். ஏனைய இனப்பிரிவுகளிலுள்ள பெண்பிள்ளைகளும் அனுமதிவயதிற்கு முன்னர் திருமணம் செய்தால், 18 வயதாக திருமண வயது உயர்த்தப்படும்போது அதனையொத்த துஷ பிரயோகங்களினால் துன்பத்துக்கு உள்ளாக்கப்படும் நிலை தொடரலாம்.
4. சிறுவர்களின் உரிமை பற்றிய குழுவின் கருத்துக்கள்
சிறுவர்களின் உரிமைக்கான மகாநாட்டுடன் படிக்கையை அமுலாக்கம் செய்வதில் காணப்படும் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கையை இலங்கை 1994 இல் சிறுவர்களின் உரிமை பற்றிய குழுவுக்குச் சமர்ப்பித்தது. சட்டரீதியான சீர்திருத்தங்களை வரைவதற்கு முன்னரே இது நிகழ்ந்து விட்டது. குழு இவ்வறிக்கையைக் கருத்திற்கொண்டதுடன் 1995 ஆனியில் தனது அவதானிப்புப் பற்றியும் குறிப்பிட்டது.
அரசாங்கம் தனது அறிக்கையைக் குழுவுக்குச் சமர்ப்பிக்க மார்கா நிறுவகத்தை நியமித்து ஏனைய அதிகாரபூர்வமானவர்களையும் மார்கா
3 அரசு சார்பற்ற அமைப்புக்களின் மையமும் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய
ஒர் அறிக்கையைக் குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது.

Page 55
92 இலங்கை: 19வித உரிமைகள் நிலை 1995
நிறுவனத்திக்கு உதவுமாறு பணித்தது. அரசு சார்பற்ற நிறுவனங்களின் அமையம் சுட்டிக்காட்டியது போன்று அவ்வறிக்கை சட்ட ஏற்பாடுகளையும் இலங்கையில் அவற்றை அமுல் செய்வதிலும் உள்ள இடைவெளியை எடுத்துக் காட்டத் தவறிவிட்டது. ஆயினும் இப் பிரச்சினைகளின் சில விடயங்கள் கூட்டத்தில் எடுத்துக் காட்டப்பட்டன.
சில துறைகளில் குறிப்பாக அரசுசார்பற்ற துறைகளில் அதன் ஒத்துழைப்பு உட்பட அரசாங்கத்தின் செயலாற்றங்களைக் குழு பாராட்டியது. அவையாவன: சிறுவர் உரிமையைக் கண்காணிக்கும் தேசியக்குழு', 1992 - 1996 க்கான அரசாங்கத்தின் செயன்முறைத் திட்டம் என்பன மகாநாட்டுடன் படிக்கையில் உள்ளடக் கப் பட்டுள்ள உரிமைகளை நடைமுறைப் படுத் தச் சகல முயற்சிகளையும் மேற்கொண்டது. அரசின் கடமை என வலியுறுத்தும் சிறுவர்களின் உரிமைக்கான மகாநாட்டுடன்படிக்கையின் உறுப்புரை 4 பற்றி அரசாங்கம் போதிய கவனமெடுக்கத் தவறியமை பற்றியும் குறிப்பிட்டது. பட்டயம் சிறுவர் களின் உரிமையுடன் இணைந்து செல்லாததன்மை சிறுவர்களின் நிலைமையைக் கண்காணிக்கும் பயனுறுதிமிக்க ஒரு முறையின்மை மற்றும் பல்வேறு அரச திணைக் களங்களுக்கு இடையிலும் மத்திய மற்றும் மாகாண அதிகாரங்களுக்குமிடையே ஒழுங்கிணைப்பு இன்மை என்பவற்றையும் எடுத்துக்காட்டியது.
4.1 குழுவினால் இனங்காணப்பட்ட பிரச்சினைக்குரிய பகுதிகள்
கவனத்திற் கொள்ளப்பட்ட கணிசமான பிரச்சினைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும். சிறுவர்களிடையே நிலவும் அதிகளவிலான போஷாக்கின்மை இடம்பெயர்ந்தோருக்கான சுகாதார மற்றும் கல்வி வாய்ப்புக்கள் குறைவு. சிறுவர்களிடையே நிலவும் உயர் வான தற்கொலைவீதம் *, கிராமியச் சிறுவர்களுக்கான பற்றாக்குறையான கல்விவசதிகள், கடும் தண்டனை வழங்கல் . திருமணத்துக் குரிய சட்ட ஏற்பாடுகள் (அவற்றுட் சில திருத்தியமைக்கப்பட்டுள்ளன.) குற்றவியல் பொறுப்புக்கான வயது மற்றும் 16-18 வயதுக்கு இடைப்பட்ட குற்றவாளிகளின் தெளிவற்றநிலை மற்றும் தேசிய ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒழுங்குவிதிகள் ஆகியன பற்றிக் குழு தனது விசனத்தைத் தெரிவித்தது.
முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க ஆட்சியின் கீழேயே இக்குழு ஸ்தாபிக்கப்பட்டது
s சுகாதாரத்துக்கான உரிமை பற்றிய அத்தியாயம் 9 ஐப் பார்க்க.
fí Se e Law & Society Trust, Sri Lanka: State of Human Rights 1994 (Colombo,
1995) pp. 272-282 on children in breach of criminal law.

lj9135Tki omol)33i 93
குழுவானது விஷேட கவனம் செலுத்த வேண்டிய சிறுவர்களில் குறிப்பிட்ட
வகையினரையும் இனங் காட்டியது. பொதுவாகப் பெண் பிள்ளைகள் திருமணமகாதவர்களுக்குப் பிறந்த குழந்தைகள், குறைந்த வருமானக் குழுக்கள் மற்றும் கிராமப்புறங்களில் பிறந்த குழந்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவர்கள், வெளிநாட்டில் வேலைசெய்யும் பெண்களின் பிள்ளைகள், இடம்பெயர்ந்த சிறுவர்கள், சட்டம் தொடர்பான பிணக்கில் உள்ள சிறுவர்கள் வீட்டு வேலைசெய்யும் சிறுவர்கள், போராளிச் சிறுவர்கள், இராணுவப் பாதுகாப்பிலுள்ள சிறுவர்கள் என்ற வகையில் இதில் அடங்குவர்.
4.2 குழுவின் பரிந்துரைகள்
அரசாங்கமானது கொள்கை, சட்டச் சீர்திருத்தம் மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் சிறுவர்களின் உரிமைகளுக்கான மகாநாட்டுடன்படிக்கையின் அமுலாக்கத்தை மேம்படுத்தும் வகையில் எடுக்கவேண்டிய நடவடிக் கைகளுக்குப் பல பரிந்துரைகளை குழு முன்வைத்தது.
தேசிய மட்டத்திலான சட்டவாக்கம் சிறுவர்களின் உரிமைகளுக்கான மகாநாட்டுடன்படிக்கையின் ஏற்பாடுகளுடன் இசைவு பெறவேண்டும் என்பதுடன் சிறுவர்களின் உரிமைப்பட்டயம் நடைமுறையில் பின்பற்றப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.
4.3 குழுவினால் எடுத்துக் கூறப்படாத சிறுவர்களின் உரிமைகள்:
தேசியத்துவத்துக்கான உரிமை
குடியுரிமைச் சட்டம் தொடர்பாக இலங்கைப் பெண்கள் பாரபட்சத்திற்கு உட்படுகிறார்கள். இது அவர்களுடைய பிள்ளைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. வெளிநாட்டுப் பெண்களுக்கும் இலங்கை ஆண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் இலங்கைப் பிரசையாவதற்கு உரித்துடையவர்கள். வெளிநாட்டு ஆண்கள் இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்திருந்தால் இது பொருந்துவதில்லை. பின்பு கூறப்பட்ட விடயத்தில் வெளிநாட்டுக் கணவரோ அல்லது பரிள்ளைகளோ இலங்கைப் பிரசையாவதற்கு உரித்தானவரல்லர்.
5. முடிவுரை
இலங்கையரில் சிறுவர் களின் நிலைமை 1995 இல் சிறிதளவு மாற்றம் பெற்றுள் ளது. சிறுவர் களின் உரிமைக் கான மகாநாட் டு உடன்படிக்கையினால் வரையறை செய்யப்பட்ட சிறுவர்களின் உரிமைகளை

Page 56
94 இலங்கை: 19ணித உரி0ைகள் நிலை 1995
உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கணிசமான பணியை ஆற்ற வேண்டும். இவ்வுரிமைகளுக்கு நன்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் அறிமுகம் செய்யப்பட்ட சிறுவர்கள் தொடர்பான சட்டச் சீர்திருத்தங்கள் பெருமளவுக்கு வரவேற்கக்கூடியவை. எனினும் சிறுவர்களின் உரிமைகள் என்ற துறையில் ஒரு சில பகுதிகளே கவனத்திற்குட்பட்டுள்ளன. தொழில் புரியும் சிறுவர்கள் பற்றிய பிரச்சினைகள் (வீட்டுவேலை உட்பட) அவர்களுடைய அந்தஸ்து மற்றும் சட்டரீதியான பிணக்கில் உள்ள சிறுவர்கள் மீதான கவனிப்பு என்பன கடந்த வருட அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளன. போராளிகளின் அந்தஸ்து பற்றிய விளக்கம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சிறுவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் அதனை உறுதிசெய்வதற்கும் மிக அதிகளவிலான வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் சிறுவர்களின் உரிமை பற்றிய குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமுல் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய அரசாங்கமும் தன்னாலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

9)
சுகாதாரத்துக்கான உரிமைகள்
1. அறிமுகம்
சுகாதாரமும் மனித உரிமைகளும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. குடியியல் மற்றும் அரசியல் உரிமை மீறல்கள் உடல், உள சுகாதாரத்தைப் பாதிக்கின்றன. மேலும், இன்று சுகாதாரம் ஓர் அடிப்படைச் சமூக பொருளாதார உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மரபு ரீதியாக முக்கிய துறைகளாக இருந்து வரும் சட்டம், சமூகவியல் மற்றும் பொருளியல் போன்ற துறைகளுடன் மாத்திரமின்றி இன்னும் பல துறைகளோடும் சுகாதாரம் தொடர்பு கொணி டுள்ளது. சுகாதாரத் துறையிலே மனித உரிமைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் மக்களுடைய நலன்களையும் சமூக விருத்தியையும் பெருமளவில் முன்னேற்றுவதற்கான உள்ளார்ந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ளமுடியும்.
சர்வதேசரீதியாக, சுகாதாரமும் மனித உரிமைகளும் பற்றிய நோக்கு மாற்றமடைந்து வருகிறது. பொதுச் சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கும் போதும் மதிப்பிடும் போதும் "மனித உரிமைகளின் தாக்க மதிப்பீடுகளின்" (Impact Assessment) 6íì([5ặồ gốì (3|5|Tđồ đốluJ 6u6ủì60)LDuff 60I &ul đi đ6(Jp tổ பாதுகாக்கக் கூடிய சட்டங்களின் மீதான புதிய வலியுறுத்தல்களும் காணப்படுகின்றன. ஏனெனில் சுகாதார நிருவாகிகளுக்கு மனித உரிமைகள் அல்லது பொருளாதாரம் பற்றிய பின்னணி குறைவு. சுகாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படும் போது அவை தமது இலக்குகளை அடைந்து கொள்ளுமா? எதிர்பார்க்கப்படும் சுகாதார நன்மைகள் நிதிசார் மற்றும் மனித உரிமைகள்
Nahid F Toubia, "From lie alth or llum an Rights to Health and IIuman Rights; where do We go from here?", Harvard Health and Human Rights Journal, Voll, No 2, (1995).

Page 57
96 இலங்கை; மனித உரிமைகள் நிலை 1995
சார்ந்த சுமைகளை விட உயர்ந்து காணப்படுமா என்பது பற்றிக் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
இந்த அத்தியாயம் இரு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பிரிவு, மனித உரிமைகளும் சுகாதாரமும் பற்றிய பொதுவான பிரச்சினைகளை அறிமுகம் செய்வதுடன் சுகாதாரம் ஒரு பொருளாதார மற்றும் சமூக உரிமை என்ற வகையில் முக்கிய கவனத்தைச் செலுத்துகிறது. இதற்கான புள்ளிவிபரத் தரவுகள் 1995இன் இறுதியில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வருடாந்த சுகாதார சஞ்சிகையிலிருந்து பெருமளவுக்கு பெறப்பட்டுள்ளன. இரண்டாவது பிரிவு சுகாதாரமும் மனித உரிமைகளும் பற்றிய விசேஷட பிரச்சினைகளை எடுத்துக் கூறுகிறதுடன் எச். ஐ. வி/எயிட்ஸ் தடுப்புக்காவலில் இருக்கும் பொழுது அடித்துத்துன்புறுத்தல், பெண்கள், சிறுவர்களுக்கெதிரான மீறல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உளச்சுகாதாரம் மற்றும் மருத்துவ ரீதியான விடயங்கள் பற்றி அதிக கவனம் செலுத்துகின்றது.
2. பொதுவான பிரச்சினைகள்
2.1 மருத்துவ முறைகளும் சுகாதார சேவை அமைப்பும்
இலங்கையிலே எதிர்முறை (a11opathic) மருத்துவம் அல்லது மேலைத்தேய மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் உட்படப் பல மருத்துவமுறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் அரச மற்றும் தனியார் துறை மூலமாக வழங்கப்படுகின்றன. அரசாங்கம் கொள்கையளவில் இலவச சுகாதார பராமரிப்புச் சேவையை நாட்டின் ஒவ்வொரு பிரசைக்கும் வழங்கி வருகிறது. ஆயினும் நடைமுறையில், பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட மருந்து வகைகளை அவை வைத்தியசாலைகளில் இருப்பில் இல்லாத காரணத்தினால் தனியார் மருந்தகங்களில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. தனியார் துறை வெளிநோயாளர் தொகையில் ஏறக்குறைய 55 வீதத்தினரைப் பராமரித்து வருகிறது.
3 Annual Health Bulletin of Sri Lanka, Ministry of Iealth (1994), p. 68.
Lawrence Gostin of Jonathan Mann, "Toward the Development of a Human Rights Impact Assessment for the Formulation and Evaluation of Public I ealth Polices", Harvard Health and Human Rights Journal, Vol 1, No I. (1994) pp 59-60.

சுகாதாரத்துக்கான உரிமைகள் 97
பொதுச் சுகாதார சேவையில் பெரும்பாலும் மேலைத்தேய மருத்துவத்தின் ஆதிக்கமே உள்ளது. மக்களில் அதிகமானோர் ஆயுள் வேதம், அக்கியூபஞ்சர், ஹோமியோபதி போன்ற மாற்று முறைகளையும் நாடுகின்றனர். அரசாங்கம் வைத்தியசாலைகளில் வலையமைப்பு முறைமையினூடாக மேலைத்தேய மற்றும் ஆயுர்வேத முறையினுக்கே உதவி வழங்குகின்றது. சுகாதார அமைச்சின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் 1.3 வீதத்திலும் குறைந்த அளவே மாற்றுச் சுகாதார முறைகளுக்கு செலவழிக்கப்படுகின்றது.
அரசாங்கம் மலிவான மாற்று மருத்துவ முறைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். விஷேடமாக உடல்நிலைக் கோளாறுகளுக்கு மாற்று மருத்துவ முறை பயனுடையதாக இருக்குமானால் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இத்துறையைப் பொறுத்தளவில் ஒப்பீட்டாய்வுகள் பல நடத்தப்படவேண்டும்.
2.2 சுகாதாரத்துக்கான தனது மக்களின் உரிமைகளை
உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகள்
இலங்கை அரசாங்கம் தனது மக்களின் சுகாதாரத்துக்கான உரிமைகளை உறுதி செய்வதற்கு சர்வதேசக் கடப்பாடுகள் பலவற்றுக்குக் கட்டுப்பட்டுள்ளது. இவை தொடர்பான சாதனங்கள் ஐ.சி.சி.பி.ஆர்; ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர்; சி.ஆர்.சி; எல்லாவகையான பாரபட்சங்களையும் நீக்குதல் பற்றிய மகாநாட்டு உடன்படிக்கை; பெண்களுக்கெதிரான எல்லாவகையான பாரபட்சங்களையும் அகற்றுதல் (CEDAW) ஆகியவற்றை உள்ளடக்குகின்றது. பின்வரும் பகுதிகளில் தனது கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கையின் செயலாற்றுகை எத்தகையது என்பதைக் குறிப்பிட்ட சில தகுதிவிதிகளைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2.2.1 பிரசவ மரண வீதம், சிசு மரண வீதம் ஆகியவற்றின் குறைப்பிற்கான
ஏற்பாடுகள்
வருடாந்த சுகாதார சஞ்சிகையில் (1994) குறிப்பிடப்பட்டதன்படி பிரசவ மரண வீதமானது ஆஸ்பத்திரியில் பிறக்கும் ஒவ்வொரு 1000 பேருக்கும் 0.4 ஆகக் காணப்படுகின்றது. சிசு மரண வீதம் 14 - 18.44 ஆக இருந்ததுடன் நாட்டின் சமூக பொருளாதார நிலைமையைக் கவனத்தில் கொள்ளும் போது இத்தகைய வீதங்கள் ஓரளவுக்குத் திருப்திகரமானவை.
The lower figure is from Asia week, 2 February 1996; The higher from Annual Health Bulletin, Ministry of Health, (Colombo, 1994).

Page 58
98 இலங்கை மனித உரிமைகள் நிலை 1995
2.2.2 சிறுவரின் ஆரோக்கிய வளர்ச்சிக்கான ஏற்பாடு
பிள்ளையின் ஆரோக்கியமான வளர்ச்சியானது கல்வி, போஷாக்கு, பிள்ளையின் வீட்டுச் சூழல், நோய்த்தடுப்பு மற்றும் வாந்திபேதி நோய்க் கட்டுப்பாடு போன்ற நேரடிச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளின் ஏற்பாடு ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது.
கயரோகம், தொண்டை அழற்சி, இருமல் மற்றும் ஏற்பு, போலியோ, அம்மை போன்றவற்றிற்கு எதிரான நோய்த்தடுப்பு ஊசி ஏற்றிய சிறுவர்களின் சத வீதம் பற்றிய புள்ளிவிபரங்கள் 1994 இல் நன்றாக இருந்ததுடன் சராசரியாக 80 சத வீதமானோர் தடுப்பூசிகளை ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிணக்குகளால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட முயற்சிகள் மெச்சத்தக்கன. இது யாழ்ப்பாணத்தில் 60% - 70% ஆகவும், மட்டக்களப்பில் 70% - 90% ஆகவும் காணப்பட்டது.
வாந்திபேதி நோய் பிரதானமாக சிறுவர்களைப் பாதிக்கிறது. வாய்வழியாக நீர்த்தனிமச் சேர்வைக் கரைசலை ஊட்டும் சிகிச்சை பற்றித் தாய்மாருக்கு வழங்கப்பட்ட கல்வியினால் வாந்தி பேதியினால் இறப்போர் தொகை வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. வாந்திபேதி நோயினால் இறப்போர் தொகை 1994இல் 1000 க்கு 1.8 ஆக இருந்தது. முன்னய ஆண்டிலும் பார்க்க 0.2 சதவீதம் குறைவாகக் காணப்பட்டது. ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஏறக்குறைய 23% நீண்டகால போஷாக்கின்மையாலும், 15% கடுமையான போஷாக்கின்மையாலும் பாதிக்கப்படுகின்றனர்.
பிறப்புக்கு முன்னருள்ள ஏற்புக் கட்டுப்பாடும் திருப்திகரமானது. 1000 பிறப்புகளுக்கு 0.04 சத வீதம் என்ற குறைந்த மட்டத்திலுள்ளது.
2.2.3. கைத்தொழில்ரீதியான சுகநலன் மேம்பாடும் தொழில்சார் சுகாதாரமும்
கைத்தொழில் சம்பந்தமான விபத்துகள், நோய்கள் குறைந்தளவில் இடம் பெற்றுள்ளன. விபத்துக் களிலிருந்து தப்பித்துக் கொள்வது பற்றிய அறிவின்மையே விபத்து ஏற்பட முக்கிய காரணமாகும். தொழில் அமைச்சின் தொழிற்துறை சுகாதாரப் பிரிவு, சகாதாரத் துறை ஆளணியினருக்குக் இத்தகைய அறிவைப் புகட்டுவதற்கு கருத்தரங்குகளையும் விரிவுரைகளையும் நடாத்திவருகிறது.
s "Childre n S u m m i G o als b e ing A e hie v e d, UN I C E F R e po r t h ais L a n k a 's
Performance" Sunday Times (Colombo, 17 December 1995).

சுகாதாரத்துக்கான உரிகைள் 99
2.2.4 முக்கிய சுகாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துதல்
இலங்கையின் பிரதான சுகாதாரப் பிரச்சினைகளின் பாங்குகள் மாற்றமடைந்து வருகின்றன. இத்தகைய பிரச்சினைகளைக் கவனிக்கக்கூடிய புதிய தேவைகள் அல்லது புதிய விஷேட பிரசாரங்கள் என்பவை நோக்கிய போதியளவான வளங்கள் திருப்பி விடப்படவில்லை. ஒரு செலவு - நன்மைப் பகுப்பாய்வின் பின்னர் தற்போதுள்ள செயற்பாடுகள் மீள் பரிசீலனைக்கு உட்படவேண்டும். புதிய பிரச்சினைகளைக் கவனிப்பதற்கு புதிய முயற்சிகள் ஆரம்பித்து வைக்கப்படவேண்டும்.
தற்கொலை அதிக கவனத்தை வேண்டி நிற்கின்றது. உலகிலே மிகக் கூடுதலான தற்கொலை வீதத்தைக் (100,000: 47) கொண்ட நாடாக இலங்கை விளங் குகன் றதுடன் “ இப் பரிரச் சினையைக் கவனிப் பதறி கு ஒர் ஒழங்கமைக்கப்பட்ட ஆலோசனைச் சேவை எதுவும் இல்லை. 15 - 24 வயதுக்கு இடைப்பட்ட மக்களிடையே காணப்படும் விபத்து மரணத்துக்கு வீதி விபத்துக்களே முக்கிய காரணமாக விளங்குகிறது. இருந்தும் விபத்து மற்றும் அவசரகாலச் சேவைகள் ஒரளவுக்குப் போதியனவாக உள்ளன. சுகாதார அமைச்சு இவ் விடயங்களை முக்கிய பிரச்சினைகளாக அங்கீகரித் துள்ளதெனினும் அதற்கான உளச் சிகிச்சைக்கான உதவிகள் பொதுவாக நோக்கும் பொழுது பற்றாக் குறையாகவே உள்ளது.
2.2.5 மருத்துவ சேவைகள், மருத்துவக் கவனங்களுக்கான வாய்ப்புகளை உறுதி
செய்யக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல்
தீவின் பெரும்பாலான பகுதிகளில் அடிப்படைச் சுகாதார பராமரிப்புக்குரிய வாய்ப்புகள் திருப்திகரமாக இருக்கிறது. ஆனால் இந்நிலைமையைச் சரிவர அறிந்துகொள்ள உதவும் தரவுகள் பிரச்சினைக்குரிய வடக்கு கிழக்கில் இருந்து கிடைக்காமையால் இப் பிரதேசங்களின் சுகாதாரப் பராமரிப்பு வாய்ப்புகளுக்கான மக்கள் உரிமையைச் சரியாகப் பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. நாடுமுழுவதிலும் அரசாங்க வைத்தியசாலைகள் இலவச சுகாதார சேவையை வழங்கி வருகின்ற போதிலும், விலை கூடிய மருந்துகளை நோயாளர்கள் தனிப்பட்ட முறையிலேயே கொள்வனவு செய்ய வேண்டும். மேலும் சில நோயாளிகள் அரசாங் கதி தரினால் நியமிக்கப் பட்ட மருத்துவர்களுக்குப் பணம் கொடுத்தே அரசாங்க வைத்தியசாலைக்கு வருகின்றனர். இம் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் தொழில் புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
f Arthur Cleinman et al., World Mental Health: Problems and priorities in low income countries, Department of Social Medicine, Harvard Medical School, Oxford University Press (1995).

Page 59
100 இலங்கை; மனித உரிமைகள் நிலை 1995
2.2.6 நோய்த்தடுப்பு, சுத்தமான நீர், சுகநலன் மற்றும் குடும்பத் திட்டமிடல்
போன்ற பாதுகாப்பு மிக்க சுகாதார விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்
சுகாதார அமைச்சு, வைத்தியசாலைகள் மற்றும் பொதுச் சுகாதார அலுவலர்கள் மூலமாக, நோய்த்தடுப்புப் பற்றிய பொதுக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள் இதற்கெனப் போதியளவில் பயன்படுத்தப் படுவதில்லை. மேலே எடுத்துக் காட்டப்பட்ட நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் இலங்கையில் அதிகம் வெற்றியளித்துள்ளதுடன் பொதுவாக 80% பகுதி இத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சுத்தமான நீரைப் பெறும் வாய்ப்பு சுகாதாரத்தின் ஒர் உள்ளார்ந்த அம்சமாக இருப்பதுடன் அதனை ஒர் அடிப்படை மனித உரிமையாகக் கருத வேண்டும்?. சுத்தமான நீர் வசதிகளைக் கொண்டிராத சமூகங்களில் தொற்றுநோய்களின் நிகழ்வுகள் மிக உயர்வாகக் காணப்படுகின்றன. இரப்பை, குடல் சார்ந்த நோய்கள், சிரங்கு போன்ற தோல் சம்பந்தமான இந்நோய்கள் குத வழியூடாகக் கடத்தப்படுவதுடன் அவை முக்கியமாகக் குழந்தைகளையே பெரிதும் பாதிக்கின்றன.
மிக அண்மையில் பெறப்பட்ட நாடு முழுவதற்குமான புள்ளிவிபரங்களின்படி (1981) ஏறக்குறைய 73% மான இலங்கை மக்கள் குடிநீருக்குக் கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர்; குழாய் நீரைப் பயன்படுத்துவோர் 18% ஆகவும், ஆறு மற்றும் குள நீரைப் பயன்படுத்துவோர் 7% ஆகவும் உள்ளனர் எனத் தெரிய வந்தது. நகரம் மற்றும் பெருந்தோட்டங்களில் உள்ள மக்கள் குழாய் நீரையே பயன்படுத்துகின்றனர். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையினால் வழங்கப்பட்ட அண்மைக்காலத் தரவுகளின்படி கிராமப்புற வீடுகளில் 74% மும், நகர்ப்புறவீடுகளில் 84% மும் தற்பொழுது மலசல கூட வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
குடும்பத்திட்டமிடல், கருத்தடை என்பன பற்றிய பொதுமக்களின் அறிவு திருப்திகரமானது. 15 - 49 வயதுக்கு இடைப்பட்ட திருமணமான பெண்களில் கருத் தடை முறைகளைப் பயன்படுத்துவோர் 66% ஆக உள்ளனர். இப்பயன்பாட்டின் விளைவின் ஒரு பகுதியாக, இலங்கை அதன் சனத்தொகை வளர்ச்சி வீதத்தை 1.4 ஆகக் குறைத்துக் கொண்டமைக்கு இப்பயன்பாட்டினால் ஏற்பட்ட விளைவும் ஒரு காரணமாகும்.
Hatim Kanaaneh, et al., "A Human Rights approach to access to clean Drinking Water; A Case Study", Harvard Health and Human Rights Journal, Vol. 1. No 2 (1995).
Annual Health Bulletin (1994).

சுகாதாரத்துக்கான உரிமைகள் 10 1
2.2.7 சுகாதார மனிதவளப் பயிற்சி
இந்நாட்டில் மருந்துவக்கல்லூரிகள்? மற்றும் பயிற்றப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது. சட்டம் போன்ற ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது இவ் அதிகரிப்பு வீதம் கூடுதலாகவுள்ளது".
ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகளில், பட்டம் பெறுவதற்கும் ஆட் சேர் ப் பதறி கும் இடையே ஏற க குறைய ஒரு வருட கால இடைவெளியுள்ளமை மற்றும் பட்டப் பின்படிப்பு மாணவர்கள் ஒரு சிலரே பயிற்றப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை. தாதிகளையும் துணை நிலை மருத்துவசேவைகளையும் பயிற்றுவிப்பதில் கூடிய கவனம் செலுத்தப்ப வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் நபர்களின் தரத்தை உறுதிப்படுத்தும் தேவையும் உண்டு. இவர்களில் பலர் அனுபவமூலமான பயிற்சியைப் பெற்றுள்ள போதிலும் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்புக்கள் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2.2.8 பெண்கள், பிள்ளைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பிரிவினர்க்கு
முன்னுரிமை கொடுத்தல்
பிள்ளைகள் தொடர்பான குற்றங்களைக் கையாள இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை திருப்திகரமாக உள்ளது. (பிரிவு 3.4 பார்க்க) தாய்மார் சுகாதாரக் குறிகாட்டிகளும் நன்று. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் குற்றவியல் சட்டங்கள் 1995 இல் சேர்க்கப்பட்டுள்ளன. பாலியல் இம்சை ஒரு குற்றமாக்கப்பட்டுள்ளது. ஆயினும் பெண்களின் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் இனப்பெருக்க விடயங்களில் தீர்மானம் மேற்கொள்ளும் உரிமை போன்ற விடயங்களில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.
(அ) இனப்பெருக்க சுகாதாரத்தைப் பேணுவதற்கான பெண்களின் உரிமை
இனப்பெருக்க சுகாதாரத்தைப் பேணுவதற்கான பெண்களின் உரிமைக்கு அபாயகரமான முறையில் கருச் சிதைவை மேற் கொள்ளல் பிரதான
9 கொழும்பு, பேராதனை, யாழ்ப்பாணம், றுகுண, Uஜயவர்த்தனபுர, களனி ஆகிய
பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்கள் உள்ளன.
" சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் புதிய சட்டத் தொழில்முறைக் கல்லூரிகள் உருவாக்கப்படவில்லை. இலங்கையில் ஒரு தொழில்முறைச் சட்டக் கல்லூரி மாத்திரமே உள்ளது.
1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவைத் திருத்தச் சட்டம் சிறுவர்களின் உரிமைகள் பற்றிய 8 ஆம் அத்தியாயத்தினைப் பார்க்க.

Page 60
O2 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சுகாதாரமற்ற நிலைமைகளில் செய்யப்படுகின்ற கருச்சிதைவினாலேயே மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இலங்கையில் ஒரு பெண் கருச்சிதைவை, அது தனது உயிரைப் பாதுகாக்கும் என்று கருதினாலன்றி சட்டரீதியாக அதனைச் செய்யமுடியாது?. குற்றவியல்
கருச்சிதைவின் காரணமாக எழும் பிரச்சினைகளுக்காக நாளாந்தம் சராசரியாக மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். மகப்பேற்று மருத்துவப் பிரிவில் 20% படுக் கைகள் இத்தகைய பெண்களால பயன்படுத்தப்படுகின்றன9. 1995 இல் கருச்சிதைவை ஒழங்குபடுத்தும் சட்ட வரைவுகள் மசோதா நிலை வரை கொண்டு செல்லப்பட்டாலும் அவை சடுதியாகத் திரும்பப் பெறப்பட்டன.
2.2.9 உடல், உளக் குறைபாட்டினால் இன்னலுறுவோருக்கு முன்னுரிமை
வழங்குதல்
(அ) பொது உளச் சுகாதாரச் சேவைகள்
நீணி ட காலமாக உளச் சுகாதாரம் போதயளவு கவனத தைப் பெறி றிருகி க வரில் லை 14. மனநோய் களர் இகழ்ச் சக குரியதாக கி காணப்படுகின்றதுடன் சமத்துவமான கல்வியியல் நிகழ்ச்சித்திட்டங்கள் இருந்தபோதிலும் உளப் பாதிப்புக் குட்பட்ட நோயாளிகள் தொடர்ந்து பாரபட்சத்துக்கு உட்படுகின்றனர். நாட்டில் மனநோய்க்குரிய சுகாதார வசதிகள் மிகக் குறைவாக உள்ளன. உளரீதியாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பொதுவாகத் தமது உரிமைகளைக் கோருவதில் லை. அத்துடன் சுகாதாரத்துக்கான வரவுசெலவுத்திட்டத்தில் உளநோய்க்குக் குறைவான முன்னுரிமையே கொடுக்கப்படுகிறது. இதனை ஒரு விசேட பிரச்சினையாகக் கருதி மேலும் ஆராயப்படுகின்றது.
(ஆ) அங்கவீனமுற்ற நபர்களைப் பாதுகாத்தல்
உலகளாவிய ரீதியில் மரபுரீதியான சுகாதாரச் சுட்டிகளில் (எம்.எம்.ஆர்,
ஐ.எம்.ஆர் போன்றன) ஏற்பட்ட விருத்தியினைத் தொடர்ந்து அங்கவீனர்கள் போன்ற ஒதுக் கப்பட்ட பிரிவினருக்கான வசதிகளில் அதிக கவனம்
12 பிரிவு 303, தண்டனைச் சட்டக்கோவை.
Wilfred S.E. Perera, "Changing trends in maternity care in Sri Lanka", Ceylon Medical Journal, 1993 Vol.38, No.2 (June 1993) pp. 64 - 71, Jayawardena H, "Social, Legal and Ethical Aspects of Mental Health", paper de liv ered at the World M en tal Health Conference, Rajiv Gandhi Foundation, India, (April 1995).

சுகாதாரத்துக்க உரிமைகள் 103
செலுத்தப்படுகின்றதுடன் அவை சமூக நீதி மற்றும் விருத்திக் கான சுட்டிகளாகக் கொள்ளப்படுகின்றன. வடக்குக் கிழக்கில் நிகழும் ஆயுத முரண்பாடு காரணமாக இலங்கையில் நாளாந்தம் பெருமளவான மக்கள் அங்கவீனர்களாக மாறுகின்றனர். ஆயினும் இவர்களின் தேவையைக் கவனிப்பதற்கான புதிய சுகாதார அல்லது சட்ட ரீதியான ஏற்பாடுகள் எவையும் காணப்படவில்லை. அங்கவீனமடைந்த நபர்களின் புனர் வாழ்வுக்கு சமூகசேவைகள் திணைக்களம் பொறுப்பாக இருக்கின்றது. இத்திணைக்களம் கேட்டற் சாதனங்கள், சக்கர நாற்காலிகள், மூக்குக் கணிணாடிகள், ஊன்றுதடிகள் சாதனங்களையும், தொழில் முறைச் சிகிச்சை; கேட்டற் குறைபாடுடைய குழந்தைகளுக்கு முன்னாரம்பக் கல்வி மற்றும் புனர் வாழ்வு நிலையங்கள் என்பவற்றையும் வழங்குகின்றது. சீதுவ, கட்ட வல, அங்குனாங்கொலபாலச, வத்தேகம, வத்துரகம, ராகம ஆகிய இடங்களில் தொழிற்முறைச் சிகிச்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆயினும் சமூக அடிப்படையிலான புனருத் தாரணமே நடைமுறை உலகின் பாங்காக இருப்பதினால் சமத்துவமான சந்தர்ப்பங்களின் மூலம் அங்கவீனர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்து, மேம்படுத்தவும் முயற்சிக்கின்றதுடன் சேவைகளை வழங்கவும் உத்தரவாதமளிக்கின்றது".
2.2.10 சுகாதாரம் மற்றும் அதன் விநியோகம் மீதான அரசாங்கச்
செலவிட்டின் பங்கு
அரசாங்கம் மொத்தத் தேசிய உற்பத்தியில் 8,272 மில்லியன் ரூபாவினை அல்லது 1.6% வீதத்தைச் சுகாதாரத்துக்காகச் செலவிடுகின்றது. அரசாங்க மொத்தச் செலவீட்டில் இத்தொகை 4.2% ஆக இருப்பதுடன் இத்தொகையில் ரூபா 5,049 மில்லியன் ரூபாவினைச் சுகாதார அமைச்சும் மிகுதியை மாகாண சுகாதார அமைச்சுக்களும் செலவிடுகின்றன. மாகாண சபைகள் இப்பணத்தை எவ்வாறு ஒதுக்கீடு செய்கின்றன என்பதை வருடாந்த சுகாதார சஞ்சிகை விபரமாக் குறிப்பிடவில்லை.
Report of Activities for 1993 - 95, Disability Studies Unit, Faculty of Medicine, University of Kelaniya (1995).

Page 61
104 இலங்கை: )வித உரி)ைகள் நி ை1995
சுகாதார அமைச்சின் 1994 ஆம் ஆண்டுக்கான செலவீடுகள்
( ᏣᏧᎦᏡᏛll வரவுசெலவுத்
Ꮷ Ꮫ50]
(ரூபாவில்) திட்டத்தில் சத விதம்
நிருவாக மற்றும் அலுவலர் 1,244, 122,000 24.6
சேவைகள்
நோயாளர் பராமரிப்புச் 3, 130,280,000 61.9
சேவைகள்
(குணப்படுத்தக்கூடிய)
சமூக சுகாதார சேவைகள் 606,534,000 12.0
(தடுப்பு)
உள்ளுர் மருந்துகள் 68,850,000 13
அங்குபஞ்சர் ஹோமியோபதி குறிப்பிடப்பட
தேசியமருந்து முதலியன வில்லை
ஆதாரம்: வருடாந்த சுகாதார சஞ்சிகை, 1994 சுகாதார அமைச்சு.
வடக்குக் கிழக்கில் நிகழும் பிணக்குகளினால் உருவாக்கப்பட்ட நிதிக் கட்டுப்பாடுகளைக் கவனத்திற் கொள்ளும் போது சுகாதாரத்தின் மீதான செலவீடு மிகக் குறைந்த சத வீதமாக உள்ளதெனச் சிலர் கருதுகின்றனர். ஆயினும், சுகாதாரம் பற்றிய ஆய்வாளர் பலர் சுகாதார வரவுசெலவுத் திட்டத்தின் ஒதுக்கீடு மொத்தத்தில் செலவு - திறனின்மையைக் கொண்டதாக உள்ளது எனறே கருதுகின்றனர். சமூகச் சுகாதாரத்தில் வரும் முதலீட்டு அதிகரிப்பு நோயாளர் பராமரிப்பு சேவைகள் மீதான செலவீட்டினைப் பெருமளவில் குறைப்பதினால் சமூக சுகாதாரத்துக்கு மிகக் கூடிய முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
உள்ளுர் முறையிலான சிகிச்சைகளுக்கு உண்டாகும் சராசரிச் செலவு மேலைத்தேய மருத்துவச் சிகிச்சை முறையின் செலவிலும் பார்க்க மிகவும் குறைந்ததாக இருப்பினும் அவற்றுக்கு மிகக் குறைந்த கவனமே செலுத்தப்படுகிறது. மொத்தச் சுகாதாரச் செலவீட்டில் 1.5 வீதத்திலும் குறைந்தளவே உள்ளூர் மருத்துவ முறைக்கான அக்குபஞ்சர், ஹோமியோபதி மற்றும் தேசிய மருத்துவம் என்பவற்றுக்குச் செலவிடப்படுகிறது. குறிப்பான மேலைநாட் டு மருத் துவ சிகரிச்சை தொடர்பான நிலைமைகளை

சுகாதாரத்துக்கான உரிமைகள் 105
இனங்காணுவதற்குத் தேவையான அடிப்படைப் பயிற்சியை உள்நாட்டு மருத்துவர்களுக்கு வழங்குதல் வேண்டும் . இன்று சுகாதாரத் தைப் பேணுவதற்கான உரிமையை நிலைநாட்டுவதில் காணப்படுகின்ற போட்டி நிலைமை செலவுகளை அதிகரித்து வருகின்றது. இதனைச் சிக்கனமான முறையில் செய்துகொள்ள ஒரு பன்முக அணுகுமுறை தேவைப்படுகின்றது. அத்தகைய அணுகுமுறை பலரது ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கின்றது.
3. விசேட பிரச்சினைகள்
3.1 எச்.ஐ.வி/எயிட்ஸ் மற்றும் மனித உரிமைகள்
இலங்கையில் எயிட்ஸ் நோய் பற்றிய முதலாவது விபரம் 1986 இல் அறிவிக்கப்பட்டது. இன்று இந்நோய் உள்ளூரில் பரவத் தொடங்கியுள்ளதால், முக்கியமான ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது. 1995 இன் முடிவில் இலங்கையில் 50 பேருக்கு மேல் எயிட்ஸ் நோயினால் இறந்தனர். பதிவு செய்யப்பட்டவர்களில் 60 பேருக்கு மேல் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 160 பேரில் எச்.ஐ.வி சாதகமாகக் காணப்பட்டது. ஆயினும் 6000 பேருக்கு மேற்பட்டவர்களில் இந்நோயின் தாக்கம் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
எயிட் ஸ் நோயாளரும் சமூகத்தில் ஒதுக் கி வைத் தல மற்றும் பாரபட்சத்தினால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் தீராத நோயினால் பீடிக்கப்பட்டவர்களிலிருந்து இவர்கள் பிரித்து வைக்கப்படுவதனாலும் துன்பப்படுகின்றனர். இது பொதுச் சுகாதாரத்தில் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், நோயாளர்கள் நிலக்கீழ் அறைகளில் ஏனைய பொதுச் சுகாதார ஆளணியரினருடன் எ வி வித தொடர்புமற் றுதி தடுக்கப்படுகின்றனர். எய்ட்ஸ் நோய் நோயாளரின் உரிமைப் பிரச்சினைகளைத் தெளிவாக வெளிக்காட்டியுள்ளது. அரசாங்கம் எச்.ஐ.வி/ எயிட்ஸ் தொடர்பான காத்திரமான விசேட சட்டங்களை இயற்ற வேண்டியுள்ளது. இச்சட்டங்களை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு எயிட்ஸ் கூட்டங்கள் மற்றும் கொள்கை என்பவற்றுடன் தொடர்பான மனித உரிமைகளின் தாக்கம் பற்றிய மதிப்பீட்டை மேற் கொள்ளவேண்டும். பாரபட்சமற்ற தன்மை, மனிதாபிமானமற்ற நடத்துகையிலிருந்து சுதந்திரம், தண்டனை, அந்தரங்கம் பேணுவதற்கான உரிமை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமை, சுதந்திரமான, நடமாடலுக்கான உரிமை, குடும்ப வாழ்விற்கான உரிமை, வேலை மற்றும் கல்விக்கான உரிமை, சுகாதாரம் மற்றும் சுகநலனுக்கான உரிமை, சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான உரிமை ஆகியவற்றை உள்ளடக்கக் கூடியதாக விடயங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.

Page 62
106 இலங்கை: பவித உரிமைகள் நிலை 1995
3.2 சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் தாக்குதல்கள்
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பொதுவான சித்திரவதை முறையாக இருப்பதுடன் உடல் மற்றும் உளச் சுகாதாரத்தில் முக்கிய பாதிப்பையும் கொண்டிருக்கின்றது. பாதிக் கப்பட்டவர் உயிருடன் இருக்கும் பொழுது தகவல்களைப் பெறுவதற்காகச் சார்பளவில் அமைதியாக இருக்கும் காலங்களிலும் தாக் கப் படுகின்றனர் . அமைதயரின் மை அல்லது முரணி பாடுகள் நிகழுங்காலங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தகவல்களைப் பெறும் நோக கமாக இருப் பரினும் பாதக கப் பட்ட வரை தி "தணி டிக் க” வேண்டுமென்பதற்காகவும் கிளர்ச்சிக் குழுக்களின் அனுதாபிகளுக்கு ஒரு பாடமி படிப் பரிக் க வேணி டு மென பதறி காகவும் இத தாக குதல் பயன்படுத்தப்படுகின்றது.
3.3 உளச் சுகாதாரம்
அரச துறையில் மனநோயாளிகளுக்கென ஏறக்குறைய 3200 படுக்கை வசதிகள் உள்ளது. 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உளநோய் மருத்துவர் ஒருவர் கூட இல்லை. வருடாந்த சுகாதார சஞ்சிகையின்படி, மாத்தறையில் உள்ள மாகாண வைத்தியசாலையில் உளமருத்துவர் ஒருவர் இருந்தாலும் நோயாளரைப் பார்வையிடுவதற்கான வசதிகள் காணப்படவில்லை.
உலகில் தற்கொலை வீதம் உயர்வாக உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. தற்கொலை மற்றும் தனக்குத் தானே ஏற்படுத்தும் காயங்கள் 15 - 24 க்கு இடைப்பட்ட வயதுப் பிரிவினரிடையே நிகழும் இறப்பிற்கான இரண்டாவது பொதுக் காரணியாக உள்ளது. இக்காரணி 25 - 49 வயதுக்கு இடைப்பட்டோரின் மரணத்துக்கு மூன்றாவதான பொதுக் காரணமாகவும் விளங்குகின்றது.
இலங்கையில் சிறப்புத்தேர்ச்சிபெற்ற உளமருத்துவர் இன்மை இன்னொரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. அரச சுகாதாரத்துறையில் 1994 இல் 35 இற்குக் குறைந்தளவான உளமருத்துவர்களே 17 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு இருந்தனர். இவர் களில் 16 பேர் கொழும் பு மாவட்டத்துக்குள் பணிபுரிந்தனர்.

fகாதரத்துக்கான உரிமைகள் 07
3.3.1 உள்நாட்டு யுத்தமும் உளச் சுகாதாரமும்
வடக்குக் கிழக்கு பிணக்குக் காரணமாக, நாடு உண்மையில் இரண்டு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் நிகழ்ந்த பிணக்குகளின் கொடூரத்தன்மை காரணமாக, சிறுவர்களும் வயதுவந்த இளைஞர்களும் உளரீதியான தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவை உடனடியாகக் கவனிக்கப்படவேண்டியவை. தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக, நம்பத்தகுந்த, உறுதிப்படுத்தக் கூடிய மருத்துவத் தரவுகள் இப்பிரதேசங்களிலிருந்து கிடைக்கவில்லை. ஆயினும் ஜே.வி.பி. கிளர்ச்சிகள் தெற்கில் நிகழ்ந்த காலத்தில் உயிர் தப்பி வாழும் குடும்பங்களினால் எதிர் கொள்ளப் பட்ட பரிரச் சினைகளில் பல சிறந்த முறையரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை வடக்குக் கிழக்கிலுள்ள குடும் பங்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் போன்றவை.
3.3.2 முதியோர் சனத்தொகை, தலைமுறைகளுக்கிடையிலான போட்டியும்
உளச் சுகாதாரமும்
சனத்தொகையின் பல வருட காலங்களுக்குரிய வயதமைப்பைப் பகுப்பாய்வு செய்த பொழுது பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் 6UTÞ6) எதிர்பார்ப்புக் காலத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாகச் சனத்தொகைக் கூம்பு நீள்சதுர வடிவாகக் காணப்படுகின்றது. மூப்படைவோரைப் பராமரிக்கும் வசதிகளில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வயது கூடிய பிரிவினர்களிடையே உளச் சுகாதாரப் பிரச்சினைகள் தோன்ற இடமுண்டு.
மூப்படையும் சனத்தொகையுடன் இணைந்த இன்னொரு முக்கிய பிரச்சினை தலைமுறைகளுக் கிடையிலான போட்டியாகும் 18. இத் தோற்றப்பாட்டின் காரணமாகத் தான் இளம் தலைமுறையினரைப் பொறுத்தவரையிலான வேலையின்மைப் பிரச்சினை இருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட நிலைமையின் காரணமாக இளைப் பாறுகின்ற வயதை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் வயது முதிர்ந்தோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் இன்று வயது முதிர்ந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து அதிகாரபீடமேறும் நிலைமையும் காணப்படுகிறது. மக்களின் வயது அதிகரித்து முதுமை நோக்கிச் செல்லும் பொழுது அவர்களின் உடல், உளச் சுகாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது. வயது முதிர்ந்தவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுதலோ
6 Il en am al Jayaw ardena, "Social and L egal Issues related to M ental Health in Sri
Lanka", Rajiv Gandhi Foundation (April 1994).

Page 63
108 இலங்கை: 19வித உரிமைகள் நிலை 1995
ஒதுக்கல்களோ காட்டப்படக்கூடாது. இன்று பாரம்பரிய கூட்டுக்குடும்ப அமைப்பு மறைந்து வருகின்ற நிலையில் அரசாங்கமே வயது முதிர்ந்தோரைப் பராமரிக்க வேண்டியுள்ளது. வயது முதிர்ந்தோர் குணமான பின்னரும் தொடர்ந்து வைத்தியசாலைகளில் தங்கியிருக்கின்றனர். ஏனெனில் அவர்களுடைய உறவினர்கள் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதில்லை. மேலும் அவர்களுக்கு வேறு வாழ்க்கை வசதிகள் வழங்கப்படுவதுமில்லை.
3.3.3 இடம்பெயர்ந்த தொழிலாளரும் உளச் சுகாதாரமும்
வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்கள், குறிப்பாக மத்திய கிழக்குக்குச் செல்வோர் தமது சிறுவர்களையும் கணவர்மாரையும் விட்டுப் பிரிந்து செல்வதினால் உளப் பிரச்சினைகளில் மேலும் அதிகரிப்பை ஏற்படுத்துகின்றனர். அத்துடன் இளம் சிறுவர்களிடையே குற்றவியல் நடத்தைகளும் தூண்டப்படுகின்றன.
3.3.4 சட்டரீதியான பிரச்சினைகள்
இலங்கையில் உளச் சுகாதாரம் தொடர்பான சட்டங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. 1873ஆம் ஆண்டின் உளநோய்க் கட்டளைச் சட்டம் (எம்.டி.ஒ) இது தொடர்பான மிகப் பிரதான சட்டமாக இருந்தாலும் 1956 ஆம் ஆண்டிலேயே கடைசியாகத் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு மேலாக 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்கக் குற்றவியல் நடைமுறைக்கோவைச் சட்டமும், அனாதைகள் கட்டளைச் சட்டமும் (1842), தடுப்புக்காவல் இல்ல கட்டளைச் சட்டமும் (1907) உளச் சுகாதாரப் பராமரிப்புடன் தொடர்புபட்டன.
உளநோய் கட்டளைச் சட்டம் உளநோயைத் தெளிவாக வரையறை செய்யவில்லை என்பதுடன் துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கின்றது. இது முழுவதினையும் மீளமைப்பதற்கான தேவை அவசியம். மருத்துவ மற்றும் சட்ட ரீதியான தொழில்கள் இப்பிரச்சினையைக் கோடிட்டுக் காட்டியுள்ளன47. ஆயினும், இவ் ஏற்பாடுகளை மாற்றுவதற்கான தனது விருப்பத்தினை அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இலங்கையின் தெருக்களில் அநாதைகளாகக் கையேந்தும் மக்களில் பலர் அவர்களின் உளச் சுகாதார நிலைமைகளின் காரணமாக வேலை செய்ய முடியாதவர்கள். இத்தகைய மக்கள் அநாதைகளாகத் திரிதல் பற்றிய சட்ட
' Law, Psychiatry and Mental Health Care in Sri Lanka, Workshop papers of Law &
Society Trust, Sri Lanka Foundation Institute (i 6 November 1985).

சுகாதாரத்துக்கான உரி1ை}கள் 09
ரீதியான ஏற்பாடுகளினால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பதுடன் நீதிவான் மூலம் 15 நாட்கள் வரை அவர்களைத் தடுத்து வைக்கவும் முடியும்.
3.4 சிறுவர்களுக்கு எதிரான வன்செயல்கள்
அண்மைக்காலங்களில், சிறுபிள்ளைகளின் மீதான துஷபிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. புறக்கணிப்பு, தாக்குதல்கள், பாலியல் துஷபிரயோகம் மற்றும் உளவியல் துஷ பிரயோகம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்துவடிபிரயோகங்கள் காணப்படுகின்றன.
இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தினைக் கருத்திற் கொண்டே 1995 இல் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையில் சிறுவர்களின் மீதான கொடுரங்கள் மற்றும் ஏனைய வடிவிலான சிறுபிள்ளைத் துஷபிரயோகங்கள் தொடர்பான புதிய ஏற்பாடுகளை உள்ளடக்குவதற்கு திருத்தத்தினை மேற்கொண்டது".
3.5 பெண்களுக்கு எதிரான வன்செயல்கள்
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளும் வன்செயல்களும் உலகின் பல பாகங்களிலும் நிகழ்ந்து வருகின்றன. இலங்கையில் இவை பொதுவானவையாக இருந்தாலும் பரவலாக அறிவிக்கப்படுவதில்லை.
இலங்கையில் தாக்குதல்களுக்குட்பட்ட பெண்கள் பலர் பணத்துக்காகத் தமது குடிகாரக் கணவன்மாரில் பெரிதும் தங்கியுள்ளதுடன் சமூகத்தின் மிகக் குறைந்த சமூக, பொருளாதார நிலைகளிலேயே காணப்படுகின்றனர். உள் வீட்டு வன்செயல் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டவர்களின் கவனமின்மையினால் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட அதிகரிப்பதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுபிள்ளைகளைத் துஷபிரயோகம் செயப்தல் போன்றவற்றைத் தடுப்பதற்கு பிரதான பொலீஸ் தலைமை அலுவலகங்களில் விஷேட பிரிவுகளை அறிமுகம் செய்வதற்கு 1993இல் எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது?. ஆயினும் நடைமுறையில் இதன் அமுலாக்கம் மிக மெதுவாகவே காணப்படுகின்றது. 1995 புரட்டாதியில் தண்டனைச் சட்டக் கோவையானது?" "பாலியல் துன்புறுத்தல்” என்னும் புதிய குற்றத்தை உருவாக்கவெனத் திருத்தி அமைக்கப்பட்டது.
" Penal Code Amendment Act No 22 of 1995,
See Law & Society Trust, Sri Lanka: State of Human Rights 1994. (Colombo, 1995.)
p. 320. *" 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்கச் சட்டம்.

Page 64
O &2}q.:5i))3: I)ssiljb 2».iTl„))1) bʻsi blʻi))i? 1995
4. முடிவுரையும் பரிந்துரைகளும்
இலங்கை அதன் மக்களுக்கு சுகாதாரத்துக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதில், இப்பிரதேசத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் பொதுவான செலாற்றுகை திருப்திகரமானதாகக் காணப்படுகின்றது. ஆயினும் பரந்தளவிலான முன்னேற்றத்திற்கு இன்னும் இடமுண்டு. சுகாதார வளங்களின் ஒதுக்கீடு தொடர்பான மீள்நோக்கு அவசியமானதுடன் புதிய தேவைகளைக் கவனிக் குமி புதரிய நிகழ்ச்சித தட் டங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். சுகாதார வரவு செலவுத் திட்டத்தில் உயர் சத வீதம் சமூக சுகாதாரம் மற்றும் உள்ளூர் மருத்துவத்தில் முதலீடு செயப் பப் பட வேண் டும் . இவை சுகாதாரத் துக் கான பல் -முறைமை அணுகுமுறைக்கான உண்மையான கடப்பாட்டின் அடிப்படையில் இடம்பெற வேண்டும். அதேவேளையில் பிரசவ மற்றும் சிறுபிள்ளைகளின் சுகாதாரம் என்பவற்றை மேம்படுத்துவதில் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படத்தக்கது. பெண்களின் இனப்பெருக்க சுகாதாரத்தில் அதிக கவனம் எடுக்கப்படுவது அவசியம். கருச்சிதைவைச் சட்டபூர்வமாக்குவதற்கு சட்டங்கள் மாற்றப்படவேண்டியது அவசியம்.
மருத் துவக் கல்வியில் பட்டப் பின் படிப்பு பற்றிய சீர் திருத்தங்கள் அவசியமானவை; அவை பன்முகப்படுத்தப்படவேண்டும். உளச் சுகாதாரச் சேவைகளுக்கும் அங்கவீனர்களின் புனர்நிர்மாணத்துக்கும் பாதுகாப்புக்கும் கூடிய கவனமெடுக்க வேண்டும். உளச்சுகாதாரம் சம்பந்தமான சட்டங்கள் முற்றாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும். புதிய சட்டவாக்கங்கள் அங்கவீனர்களின் உரிமைகளைப் பாதுகாப்பனவாக இருத்தல் வேண்டும். உயிர் வாழ்வதற்கான உரிமையும், சுகாதாரத்திற்கான உரிமையும் உள்ளூர்ச் சட்டங்களில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
மனித உரிமைகளின் தாக்க விளைவு மதிப்பீடுகளுக்கான (Human Rights Impact Assessment) 9(5 பிரிவை சுகாதார அமைச்சில் உருவாக்குவதன் ம் சுகாதாரக் கொள்கைக்கான மனித உரிமைகள் அணுகுமுறை
முகப்படுத்தப்பட வேண்டும்.

O)
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்
1. அறிமுகம்
1995 இல் இலங்கையின் இடம் பெயர்தலில் காணப்பட்ட ஓரளவு உறுதியான நிலைமைகள் வடக கல அரசாங் கப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட "ரிவிரெஸ" நடவடிக்கையினால் குழப்பநிலையை அடைந்தன. மார்கழி மாதத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கட்டுப்பாட்டை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதும் இது முடிவுக்கு வந்தது. இத்தாக்குதலின் விளைவாக அரை மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்களிற் சிலர் அரசாங்கப் படைகளின் முன்னேற்றத்தினால் பயந்து ஒடியவர்களாகக் காணப்பட்டாலும் எல்.ரி.ரி.ஈ. யின் கட்டளைப்படியே பெரும்பாலும் இடம்பெயர்ந்தோராக இருந்தனர்.
இவ் அத்தியாயம் பிரயோகிக்கப்படக் கூடிய மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நியமங்களின் அடிப்படையில் , ஐப்பசி மாதத் தரில் முரண்பாட்டினால் இடம்பெயர்க்கப்பட்ட இம்மக்களின் நிலைமைகளிலேயே கவனம் செலுத்துகின்றது. முரண்பாட்டிற்குரிய பகுதிகளிலிருந்து தகவல்கள் வெளிவருவதை அரசாங்கம் மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தியதினால் இங்கு தரப்பட்டிருக்கும் விடயங்களிலும் நிச்சயமாக முழுமைத்தன்மையைக்
i. For a discussion of the standards applicable, dra w m from In ternation al h um an rights an d h u m an i tar i an s L a w , as w ell as th e r e lia n t dom estic norms, se e ła w o f s o ciety trust, Sri Lanka : State o f H u m an rights 1994 ( Co i om bo, 1995)., Chapter XIII

Page 65
| 12 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
காணமுடியாது?. இடம் பெயர்ந்தோரின் அந்தஸ்து பற்றிப் பக்கச் சார்பற்ற, சுதந்திரமான விபரங்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்தாலும் அப்பகுதிகளில் பணிபுரியும் புனர்வாழ்வு முகவர்களிடம் இருந்து முதல் தரமான தகவல்களைப் பெறக்கூடியதாக இருக்கின்றது. எனினும் அவற்றினைப் பயன்படுத்துவதிலும் அவதானமாக இருக்கவேண்டியுள்ளது.
2. இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை
இடம்பெயர்ந்தோரின் இனச் சேர்க்கை பற்றிய நுணுக்கமான தரவுகள் இல்லையெனினும் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருந்தனர். இலங்கையில் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் அரசிடமிருந்து நிவாரண அட்டைகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே கணிப்பிடப்படுகின்றது. 1995 ஐப்பசியிலிருந்து மார்கழி மாதம் வரை இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 650,000 இல் இருந்து ஒரு மில்லியனுக்கு மேலாக அதிகரித்தது.
ஐப்பசியில் தாக்குதல் ஆரம்பித்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிற் பெரும்பாலானோர் யுத்தம் பற்றியே பேசிக் கொண்டனர். சர்வதேச மற்றும் உள்ளுர் அமைப்புக்களின் மதிப்பீட்டின்படி இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 500,000 ஆகக் காணப்பட்டாலும் அரசாங்கம் 200,000 மக்களே பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனக் கருதியது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையை அடுத்து எந்தப் பக்கச் சார்பு மற்ற புனர் வாழ்வு நடவடிக் கைகளும் நாட்டில் இடம்பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது, எல்லா நிவாரணங்களும் அரசின் ஊடாகவே ஒழுங்குபடுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது. அரசின் நரிவாரணக் கொள் கையில் இது ஒரு பாரிய மாற்றத் தரினைப் பிரதிபலிக் காவிட்டாலும் சர்வதேச பொது அபிப் பிராயத் தரினைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் உணர்வு அதிமுக்கியத்துவத்தினைப் பெற்றுக் கொண்டது.
* கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அவசரகால ஆட்சி பற்றிய முறையே அத்தியாயம் 3 மற்றும் 4 ஆகியவற்றில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து இடம் பெயர்ந்து சென்று தங்கியிருக்கும் வன்னிப் பிரதேசத்தில் இருந்தும், முரண்பாட்டுப் பகுதிகளிலிருந்தும் வரும் தகவல்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் தணிக்கை பற்றிய மேலதிக விபரங்களைக் காணலாம்

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் 3
3. யாழ்ப்பாணத்திலிருந்து மக்களின் வெளியேற்றம்
அரச இராணுவம் நகரை அடைவதற்கு முன்னர், 1995 ஐப்பசி மாத இறுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு விலகத் தொடங்கினர். குண்டுத் தாக்குதல்கள், எறிகணை தாக்குதல்களினால் ஒரளவு மக்கள் விட்டுச் சென்றாலும் பெரும்பாலானவர்கள் எல்.ரி.ரி.ஈ. யினால் அவ்வாறு செய்யுமாறு பலவந்தப் படுத்தப்பட்டார்கள். மார்கழியின் ஆரம்பத்தில் நகரின் மத்திய பகுதியை இராணுவம் கட்டுப்பாட்டின்கீழ் கொணர்ந்தபோது அவர்கள் வெறிச்சோடிய நகரையே கண்டனர்.
இடம்பெயர்ந்து தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆரம்பத்தில் சாவகச்சேரி மற்றும் தென்மராட்சிக்கும் சென்று அதன் பின் அங்கிருந்து எல்.ரி.ரி.ஈ. யினால் நடாத்தப்படும் படகுச் சேவையின் துணையுடன் வன்னிப் பிரதேசத்துக்குச் சென்றனர். 1995 மார்கழி நடுப்பகுதியில் ஏறக்குறைய 221,000 இடம் பெயர்ந்தவர்கள் இன்னமும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறிப்பாக எல்.ரி.ரி.ஈ. கட்டுப்பாட்டிலுள்ள கிழக்குப் பகுதியில் உள்ளனர் என உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் மதிப்பிட்டன. மிகுதியான 232,000 பேர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் வடபகுதிகளில் பரவலாகக் காணப்பட்டனர்.
4. நிவாரண நடவடிக்கைகள்
இன விவகார அமைச்சின் கீழ் ஒருங்கிணைப்பு நிலையம் ஒன்றை ஐப்பசி மாத இடப்பெயர்வின் பின் அரசாங்கம் ஸ்தாபித்து நிவாரண நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தியது. புனருத்தாரண புனர்நிர்மாண அமைச் சும் இடம் பெயர்ந்தோர் தொடர்பான பணிகளை மேற்பார்வை செய்தது. நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்காக சிறுவர்களுக்கான பாதுகாப்பு நிதியம் (UK), றெட்பானா, போரூட், கெயர், எம்.எஸ்.எவ். - ஹொலன்ட், எம்.எஸ்.எவ்பிரான்ஸ், செடெக், ஒக்ஸ்பாம் (UK) ஆகிய அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒரு பிரிவினர் "அரச சார்பற்ற அவசரகாலக்குழு" (NGO Emergency Group) ஒன்றை உருவாக்கினர்
ஐப்பசி மாதத் தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வடக்கே அனுப்பவேண்டிய உணவு மற்றும் ஏனைய உதவிகளில் குறிப்பிடத்தக்க குறைப்பினை அரசாங்கம் மேற்கொண்டிருந்ததுடன் பணவிநியோகத்தையும் குறைத் தது. கார்த் திகை மாத இறுதியில் உணவு விநியோகம் திருப்திகரமானது எனக் கூறப்பட்டது. ஐப்பசி மாத இடம் பெயர்தலின்

Page 66
14 இலங்கை: 19வித உரிமைகள் நிலை 1995
விளைவாக கிளிநெச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாவட்டங்களில் அடிப்படைச் சுகாதார வசதிகளில் பாரிய தேவை ஏற்பட்டது. ஐ.சி.ஆர்.சி. யினால் நடாத்தப்பெற்ற யாழ்ப்பாண வைத்தியசாலை மூடப்பட்டதுடன் அங்கிருந்த வசதிகள் யாவும் பருத்தித்துறைக்கு இடமாற்றப்பட்டது. வடக்கில் சத்திர சிகிச்சை வசதிகளில் தட்டுப்பாடுகள் நிலவியதாகக் கார்த்திகையில் அறிவிக்கப்பட்டது.
ஐப்பசி தாக்குதலினால் வடக்கின் கல்வி நிலைமை மோசமடைந்தது. அவ்வருட இறுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லமுடியவில்லை. 1995 இன் இறுதியில் உறைவிடங்கள் ஒரு பிரதான பிரச்சினையாக மாறின. இடம் பெயர்ந்தோரில் பெரும்பாலானவர்கள் அதிக நெரிசல் கொண்ட மோசமான நிலைமைகளில் குறிப்பாகத் தனியொரு வீட்டில் ஐந்து அல்லது ஆறு குடும் பங்கள் தங்கியிருக்க வேண்டிய நிலையில் காணப்பட்டனர்.
5. சுதந்திரமான நடமாடலும் தங்கியிருப்பதற்கான
உரிமையும்
அரசாங்கத்தாலும், எல்.ரி.ரி.ஈ. யினாலும் சுதந்திரமான நடமாடல் மீது விதிக்கப்பட்ட தடைகள் இடம் பெயர்ந்தவர்களைப் பாதித்தன. இடம் பெயந்த வர் கள் பயனுறுதயுள்ள முறையில் தமது சுதநீ தரமான நடமாட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனின் அவர்களின் சொந்த வாழிடப் பகுதிகள் அல்லது அவர்கள் செல்வதற்கு விரும்புகின்ற ஏனைய பகுதிகள் பற்றிய தெளிவான தகவல்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பிச் செல்ல விரும்பும் பகுதிகளில் காணப்படும் பாதுகாப்பு நிலைமைகள், சுகநலன், கட்டுமான வசதிகள் பற்றிய தகவல்களும் இதில் உள்ளடக்கப்பட்வேண்டும்.
6. சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டுக்கும்
தகவல்களுக்குமான உரிமைகள்
1995 இல் முரண்பாடு காணப்படும் பகுதிகளில் இருந்து வரும் செய்திகளில் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இப்பகுதிகளில் இருந்து தகவல்கள் வெளிவராமல் அரசாங்கம் கவனமாகக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டது போன்று எல்.ரி.ரி.ஈ. யும் தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்குத் தகவல்கள் வராமலும் அல்லது வெளிசெல்வதனைத் தடுப்பதற்குமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் 1 15
7. ஒன்றிணைதல் சுதந்திரம்
1995 ஆம் ஆண்டில் மனிதாபிமான அமைப்புக்களின் சுதந்திரமான ஒன்றிணைதலுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதுடன் இடம் பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமானரீதியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான சூழலில் ஒரு சாதகமற்ற நிலைமை தோற்றுவிக்கப்பட்டது. மனிதாபிமான அமைப்புக்கள் தாம் மேற்கொள்கின்ற எந்த நடவடிக்கைகளிலும் (தகவல்களைப் பரிமாறிக் கொள்ளல் உட்பட) மிக அவதானமாக இருந்ததுடன் தமது பணிகளை அவை பாதிக்கக்கூடும் எனவும் கருதினர். 1995 ஆம் ஆண்டு காலத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு மனிதாபிமான அமைப்புக்கள் பலவற்றின் பணிகளுக்குப் பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலை உருவாகியது.
இடம் பெயர்ந்தவர்கள் தமக் கிடையே சுதந்திரமாக இணைந்து கொள்வதற்கான உரிமையும் குறிப்பாக எல்.ரி.ரி.ஈ இனால் 1995 இல் மறுக்கப்பட்டது. இடம் பெயர்ந்தவர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிப் பிரசாரம் செய்யவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ சந்தர்ப்பம் காணப்படவில்லை. எல்.ரி.ரி.ஈ. யும் கருத்துக்களை வெளியிடுவதற்கு அனுமதிக்காத அதேவேளை அதற்கெதிரான நடவடிக்கைகளையும் நடாத்தி வநதது.
8. உள்நாட்டில் இடம் பெயர்ந்த பெண்கள்
இடம் பெயர்ந்தவர்களில் ஆண்களிலும் பெண்களே அதிகம். கூட்டுக் குடும்ப ஆதரவு உட்பட குடும்ப அமைப்புக்கள் நன்கு தெரிந்த சமூகத்தின் உடைவினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களின் இடப் பெயர்வினால் அவர்களின் பொருளாதார மற்றும் பெளதீக பாதுகாப்பின்மை அதிகரித்தது". பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமற் போயிருந்ததினால் குடும்ப வாழ்வின் முழுவிடயங்களிலும் இடம் பெயர்ந்த பெண்கள் பொறுப்புக்குரியவர்களாக இருந்தனர். அகதி முகாம்களில் வாழ்க்கையுடன் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளலில் பங்குபற்றுவதற்கான போதுமான சந்தர்ப்பங்கள் இவ் இடம்பெயர்ந்த பெண்களுக்கு குறைவாகவே இருந்தது. அவர்கள் தமது தேவைகளையும்
s Gomez, M., People In Bet we en : Sri Lankans Face Long Term Displacement as Conflict Escalates, US Committee for refuge es (March 1996) pp 12 - 13.
See Robert Cohen Refugee and Internally Displaced Women, The Brooking & Institution - Refugee Policy Group Project (1995)

Page 67
16 இலங்கை: மனித உரிமைகள் நிலை 1995
விருப்புக் களையும் பயனுடைய முறையரில் முனி வைப் பதறி கும் , ஒழுங்குபடுத்துவதற்குமான இயலளவை அவர்களுக்கு அளிப்பது மிக அவசியம்.
9. முடிவுரை
1995 இன் இறுதியில் 18 மில லியண் கொண்ட இலங்கையின் சனத்தொகையில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்தனர் என மதிப்பிடப்பட்டது. 1996 இன் ஆரம்பத்தில் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த வாழிடப் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்வார்கள் என்பதினை உறுதியாகக் கூறமுடியாதிருந்தது. இம்மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக அரசாங்கத்தினாலும் எல்.ரி.ரி.ஈ யினாலும் மீறப்பட்டன. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடியியல், கலாசார, பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உரிமைகள் ஒவ்வொன்றையும் இடப்பெயர்வு பாதித்தது. இடம்பெயர்ந்த தனிநபர்கள், குழு ஆகிய இரு வகையினரின் உரிமைகளும் மீறப்பட்டன.
தனிநபர் என்ற முறையில் அவர்களின் சுதந்திர நடமாட்டத்துக்கான
உரிமைகள் மறுக் கப்பட்டதுடன் அவர் களின் பாதுகாப்புக் கான அதிகரித்துவரும் அச்சுறுத்தலை அவர்களே ஏற்கவேண்டும். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட குறுக்கீடுகள், சுதந்திரமான கருத்துவெளிப்பாடு, தகவல் மற்றும் சுதந்திரமாக ஒன்றிணைதலுக்கான உரிமைகள் அடிக் கடி மீறலுக்குட்பட்டன. பொதுவிடயங்களில் பங்கேற்றலுக்கான உரிமை தமது சொந்தக் கலாசாரத்தை அனுபவிக்கும் உரிமை என்பன மிகக் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது. வேலை செய்வதற்கான அவர்களது சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்டதுடன் சிலரைப் பொறுத்தவரை முடியாமலும் இருந்தது. சுகநலன் மற்றும் வீட்டுவசதிகளும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. சிலருக்கு கல்விக்கான உரிமை மறுக்கப்பட்டது. வேறு சிலர் தொடர்ச்சியான அச்சுறுத்தலின் கீழ்க் காணப்பட்டனர். இவர்களின் குடும்ப வாழ்வு சீர்குலைந்ததுடன் முன்பு சமூகத்துடன் கொண்டிருந்த பிணைப்புக்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் பெளதீகரீதியாக இடம்பெயர்ந்து வாழும் நிலைமையினால் தொடர்ச்சியான பாரபட்சத்துக்குட்பட்டனர். இத்தகைய பிரச்சினைகள் மேலும் அடையாளம் செய்யப்பட வேண்டியுள்ளது.

உசாத்துணைகள்
Amnesty International. "Proposed Standards for National Human Rights Commissions", Al Index: IOR 40/01/93 (London, January 1993).
t nns de "Sri Lanka: The Human Rights Commission Bill", Al Index: ASA 37/25/95 (London, December 1995).
• u , ma u "Sri Lanka: Reports of Extrajudicial Executions During May 1995", Al Index: ASA 37/10/95 (London, June 1995).
- - - - - - Amnesty International Report 1996 (London, 1996).
Amarasinghe, M, "Disappearances and Abductions and the Surfacing of Bodies in and around Colom bo in 1995", linternal document prepared for the Law & Society Trust (Colombo, September 1995).
Article 19, Silent War. Censorship and the Conflict in Sri Lanka (London, March 1995).
- - - - "Words into Action: Censorship and Media Reform in Sri Lanka", Issue 39 (London, March 1995)
m a m u - va "Principle 19, Access to Restricted Areas of the Johannesburg Principles" (South Africa, October 1995).
Asiaweek, 2 February 1996.
Baron, N, "Empowering War Widows," Torture, Vol 4, No 1 (1994).

Page 68
118 இலங்கை : மனித உரி9ைகள் நிலை 1995
Caspersz, P; Wanninayake, H; and Vijesandiran, S, The Privatisation of the Plantations, Satyodaya Centre (Kandy, 1995).
Central Bank of Sri Lanka, Sri Lanka Socio-Economic Data 1995 (Colombo, 1995)
Civil Rights Movement of Sri Lanka, "The Lifting of the Censorship", CRM ref. E01/1/96 (Colombo, January 1996).
- - - - - - "Execution in U.A.E. of 20 year old Sri Lankan Housemaid", CRM ref. E03/5/95 (Colombo, May 1995).
a u s s a um "A National Human rights Commission for Sri Lanka? A Question of Needs and Priorities", CRM ref. E01/2/96 (Colombo, February 1996).
- - - - - - "Civil Liberties and Constitutional Reform: A Memorandum by CRM for Persons Concerned with the Current Select Committee Process", CRM ref. E02/7/95 (Colombo, February/March 1995).
Clain man, A et al, "World Mental Health: Problems and Priorities in Low Income Countries", Department of Social Medicine, Harvard Medical School (1995).
Cohen, R, "Refugee and Internally Displaced Women", Refugee Policy Group Project, The Brookings Institution (1995).
Copeland, A.R., "Childhood Suicide: A Report of Forensic Cases", Journal of Forensic Sciences, Vol 30, No 3 (July 1985).
Cohns, II; and Goodwin-Gill, G, "Child Soldiers", Henry Dunant Institute (August 1993).
Deng, F, "Report of the Special Representative of the UN Secretary General on Internally Displaced Persons", 52nd Session of the Commission on Human Rights, E/CN.4/1996/52 (February 1996).

உசாத்துவைகள் 1 19
Department of Census and Statistics, "Labor Force and Socio Economic Surveys," (1992).
- - "Census of Public Sector and Corporation Sector Employment 1990", (1992).
de Preus, J, "Special Protection of W om en and Children", International Review of the Red Cross, No 248 (Geneva, September 1984).
Dulti, M, "Captured Child Combatants," International Review of the Red Cross, No. 278 (September 1990).
Goodwin-Gill, G, "The Right to Leave, Right to Return and the Question of a Right to Remain," Paper Presented for the Colloquium The problems of refugees in the light of contemporary international law issues organised by the Graduate Institute of Internal Studies and the UN High Commissioner for Refugees (Geneva, May 1994).
Gomez, M, "The People in Between: Sri Lankans Face Long Term Displacement as Conflict Escalates," US Committee for Refugees (March 1996).
Goonesekere, S, "Presentation on Socio-Legal Aspects of Abortion", Scientific Session on Reproductive Health, 125th Anniversary Sessions of the Colombo Medical School (Colombo, 29 July 1995).
Gostin, IL; and Mann, J, "Towards the Development of a Human Rights Impact Assessment of the Formulation and Evaluation of Public Health Policies", Harvard Health and Human Rights Journal, Vol 1, No 1 (1994).
Hendricks, A, "Disabled Persons and their Right to Equal Treatment: Allowing Differentiation While Ending Discrimination", Harvard Health and Human Rights Journal, Vol 1, No 2 (1995)

Page 69
120 இலங்கை : வித உரிமைகள் நிலை 1995
Marasinghe, M, "Presentation on Health Implications on Reproductive Health", Scientific Sessions on Reproductive Health, 125th Anniversary Sessions of Colombo Medical School (29 July 1995).
Marga Institute, "Report on the Implementation of the Conventic in of Rights of the Child", (Colombo, January 1994).
Medecins sans Frontiers, "Activity Report" (Paris, September 1995).
Ministry of Education, "Survey on Estates Housing Conditions", School Census Report 1992 (April 1994).
Ministry of Justice & Constitutional Affairs, Draft Provisions of the Constitution Containing the Proposals of the Government of Sri Lanka Relating to Devolution of Power, Chapter 2 (Colombo, 1995).
Ministry of Health, Annual Health Bulletin of Sri Lanka (1994).
Nadesan Centre, "Arrest and Detention Under the Current Emergency Regulation" (Colombo, September 1995).
NGO Forum on Sri Lanka, "Key Issues with Regard to the Human Rights Situation in Sri Lanka" (March 1996).
Perera, W.S.E., "Changing Trends in Maternity Care in Sri Lanka", Ceylon Medical Journal, Vol 38, No 2 (June 1993).
Plattner, D, "Protection of Children in International Humanitarian Law," International Review of the Red Cross, No 240 (Geneva, May 1984).
Steavropoulou, M, "The Right Not to be Displaced," The American University Journal of International Law and Policy, Vol 9, No. 3 (1994).

உசாத்துணைகள் 121
Stone, A.A, "Post Traumatic Stress Disorder" in Anxiety Disorders, Harvard Law School.
Sirisena, J.; and Fernando, S, "Criminal Abortion", Annual Scientific Sessions of the Medico Legal Society of Sri Lanka (Colombo 1994).
Toubia, N.F., "From Health or Human Rights to Health and Human Rights: Where Do We Go from Here?" Harvard Health and Human Rights Journal, Vol 1, No 2 (1995).
UNICEF, A Profile of the Sri Lankan child in crisis and Conflict (Colombo, October 1990).
University Teachers for Human Rights, "Briefing Paper," No 2 (Jaffna, June 1995).
University of Kelaniya, "Report of Activities for 1993 - 95," Disability Studies Unit, Faculty of Medicine (1995).
Udagama, D, "Human Rights Commission Bill (1995)," Law & Society Trust, Fortnightly Review, Vol VI, Issue 96 (Colombo, October 1995).
World Health Organisation, "Constitution", Basic Documents, 36th edition (Geneva, 1986).
The Ceylon Daily News, 16 February 1995.
The Ceylon Daily News, 5 June 1995.
The Ceylon Daily News, 9 June 1995.
The Ceylon Daily News, 9 August 1995.
INFORM, Situation Report January 1995 (Colombo).

Page 70
122 இலங்கை : 1)வித உரிமைகள் நிலை 1995
S S S S S S LS LS S S S S S S LSSS S Situation Report February 1995 (Colombo).
S S S S S S LS LS LS S LS S S LS LSSS S Situation Report March 1995 (Colombo).
S S S LLSLLSLS LS S SLLS S S LS S S S S LSSS Situation Report April 1995 (Colombo).
S S S LSL S SLSLLS LS S LSC LSLSSS LSS LCSLS Situation Report May 1995 (Colombo).
CS LS S CSLLS LSLS LS S LSLS SSLSL LS S LS LS LS Situation Report June 1995 (Colombo).
S SS LS LS LSSLLS LSSS LSS S SSS SL LSS LSSSS S LSSS S Situation Report July 1995 (Colombo).
S SS LS LS LS S S S S S S S S S LSSS S Situation Report September 1995 (Colombo)
S S S LS S S S LS S S SL LS S S LSSS S Situation Report October 1995 (Colombo)
S LS S LS LS S S SS LS SS LS SS LS LS S Situation Report November 1995 (Colombo)
S S S S S S S S S S LSSSS LSS LSS S S Situation Report December 1995 (Colombo).
Institute of Human Rights, "Case Newsletter," Nos 1-5 (Colombo).
Institute of Medicine, "Future of Public Health" (Washington D.C., 1998).
Jayasuriya, D.C; and Jayasuriya, S, "The Health Legislation System of Sri Lanka," Institute of Comparative Health Policy and Law (Sri Lanka, 1992).
Jayewardena, H, "Social Legal and Ethical Aspects of Mental Health, "Paper delivered at the World Mental Health Conference, Rajiv Gandhi Foundation (April 1995).
S SS SS LLS SSSS SS SS SSLSSS SS SS SS SS "Conflict of ethics and Human Rights," LAW ASIA International Law Conference, Bar Association of Sri Lanka, BMICH (Colombo, 1995).

உர்த்துணைகள் 123
SSS LS SS qSCSS S SSLSLSS SSS SS CSSS SSSLS SSL S S SLLS LLS LS Forensic Medicine and Medical Law (1995) Siddhartha Press.
S GLCL LSLS S LSS LS LS LSS SLS LLS LSL LSSSS LSS LSS The Case of a Battered Domestic Child Servant, Bar Association of Sri Lanka Law Journal, Vol 5, Part 2 (1994).
Kanaaneh, Hetel, "A Human Rights Approach to Access to Clean Drinking Water: A Case Study", Harvard Health and Human Rights Journal, Vol 1, No 2 (1995).
Law & Society Trust, Sri Lanka. State of Human Rights 1993 (Colombo, 1994).
S LS LS LS LS LS LS S LS S S LSS LSS LS CS Sri Lanka. State of Human Rights 1994 (Colombo, 1995).
S LS CS LS S CS S S S S S S LSS LS S rS SSSSS "Constitutional Reform and Fundam ental Rights: Som e Comments", Fortnightly Review, Vol VII, Issue 94 (Colombo, August 1995).
SCS LS CS LS S S S S CS S S LSSS Law, Psychiatry and Mental Health Care in Sri Lanka (Workshop Papers) November 1998).
Lawyers Committee for Human Rights, "African Exodus: Refugee Crisis, Human Rights and the 1969 OAU Convention" (1995).
Levinson, R. M.; Briggs, R.P; and Ratnar C.H., "The Impact of a Change in Commitment Procedure on the Character of Involuntary Psychiatric Patients," Journal of Forensic Sciences, Vol 29, No 2 (April 1984).
The Ceylon Daily News, 26 September 1995.
The Ceylon Daily News, 13 October 1995.

Page 71
124 இலங்கை : 19வித உரிமைகள் நிலை 1995
The Ceylon Daily News, 18 October 1995.
The Ceylon Daily News, 28 October 1995.
The Ceylon Daily News, 18 November 1995.
The Island, 14 January 1996.
The Island, 8 February 1995.
The Island, 10 February 1995.
The Island, 11 February 1995.
The Island, 16 February 1995.
The Island, 23 February 1995.
The Island, 3 March 1995.
The Island, 9 March 1995.
The Island, 20 March 1995.
The Island, 22 June 1995.
The Sunday Island, 19 November 1995.
The Sunday Island, 1 October 1995.
The Observer, 21 June 1995.
The Sunday Observer, 4 June 1995.
The Sunday Observer, 21 May 1995.
The Sunday Times, 17 December 1995.


Page 72


Page 73
ഉ Doig 5 2 Lf60DLIADA
இவ் அறிக்கை 1995 இல் இ தொடர்பான நிகழ்வுகளை விபரமாக அ சுருக்கமாக உள்ளது
இவ் அறிக்கையில் மனித உ கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் .ெ மதிப்பு தொடர்பான குடியியல் அரசியல் தொழிலாளர் பட்டயம் தொழிற்சங்கள் தொழிலாளர் உரிமைகள்
விடயங்களும் ஆராயப்படுகின்றன. இதன் மனித உரிமை இயக்கத்தின் ஒரு முக்
சட்டத்துக்கும் சமூகத்
Telephone o 228, 6.8
Printed by Unie
 

@)୫୫
ள் நிலை 1995
லங்கையில் இடம்பெற்ற மனித உரிமை க்கியுள்ள ஆங்கில மூல அறிக்கையின்
மைகளுக்கான நீதிமுறைப் பாதுகாப்பு தாடர்புசாதன சுதந்திரமும் நபரின் நன் உரிமைகள் ஆராயப்படுகின்றன. மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர் உள்ளிட் 5JG5, G5IT GOT 9 foÕDUD effigBILIT GöIGODLADLUNGOTT நபர்களின் உரிமைகள் தொடர்பான ால் இவ் அறிக்கை இலங்கையிலுள்ள கிய மைல்கல்லாக விளங்குகின்றது.
க்குமான அறநிலையம்
கொழும்பு- 8
6035
845。Teles@x 68684子
SBN 955- 906. - 43 = 3
Arts Pvt Ltd.