கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் ஈழம்: நாட்டு எல்லைகள்

Page 1
,
|- ~~~ |-
 
 


Page 2
தமிழ் மும்
- நாட்டு எல்லைகள்
菲
ஜே. ஆர். சின்னத்தம்பி
நில அளவையாளர் தினைக்களம்
தமிழாக்கம் :
திருமதி இரா. சச்சிதானந்தன்
விற்பனை உரிமை: ஜீ காந்தா அச்சகம் - புத்தகசாலை
23. காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
 

() が .
This a my Persenal * ජ්”, if ඝණූ අණූ tais * *雲 ↔議掌畫e護 چیخچہ کچلنيَخ :۔ss; Thale year.
N.
தேசிய நூலகப் பிரிவு கிறகர நூலக சேவை யாழ்ப்பானந்து
8 23 OS

Page 3
உள்ளடக்கம்
is
* நிலம் என்னும் நல்லாள்
தாயான நிலமகள்-நிலத்தி
* _ நிலமும் நாடும்-நாட்டினங் 2. முன்னுேர் வழி வழி வாழ் - திராவிடச் சின்னங்கள்-எல்ல
戟 தாலமியும் தமிழர் வாழ்விட சோழர் காலம்-சோழர் கால 3. மேலேநாட்டவரும் தமிழ் ஈ போர்த்துக்கேயர் காலம்-ஒல் ரேலன்ட் குறிப்புக்கள்-சுவை ஒல்லாந்தரின் ஆட்சிப் பிரிவு அரோசிமித்தின் வரைபடம்கண்டி அரசின் வீழ்ச்சி-அெ கோல்புறுக் ஆணைக்குழு-சி 4. தமிழ் ஈழம்-நாட்டின்
5-5 எல்லேகள்-நாட்டின் 6 LI IL FÈeġssir
ஒன்று தாலமியின் இலங்
இரண்டு ருெபெட் நொக்வலி
b) மூன்று ஒல்லாந்தர்கால ஆ
影V நான்கு அரோசிமித்தின் இ
ஒ? ஐந்து ஒல்லாந்தரின் கரை 伤 - -ֆԱl கோல்புறுக் வரைப 9 (Լք அலெக்ஸான்டர் ஜிே
எட்டு தமிழ் ஈழம் கடல் ஒன்பது தமிழ் ஈழம் நாட்டி
நூல் : தமிழ் ஈழ ஆக்கியோன் : திரு. ஜே. தமிழாக்கம் : திருமதி. ε, ήφωμα : திரு. ஜே. முதற்பதிப்பு : 8 - 9 - 1 அச்சுப்பதிவு : நியு லீலா
- 62, பண் விற்பனை உரின்ம ஜீ காந்த 213, d.
5 - O
Title : Thami
(Boundar. Author : Mr. J. R. Tamil Script: Mrs. R. Copyright : Mr. J. R. First Edition : 18. Septς Printers : Ney Lee 62, Band Distributors: Sri. Kant 2 3, Kan
Price : 5 - {
 

ன் உரிமை-நிலத்தின் சூழல்கள் நாடுகள்-தமிழ் ஈழ நாட்டினம் ற்விடம்
மும் - சைவ நாயன்மார் காலம் - த்துக்குப்பின்-ஆரியச் சக்கரவர்த்திகள்.
ழ நிலங்களும் லாந்தர் காலம் - ருெபெட் நொக்ஸ்பட்சர் குறிப்புக்கள் . கள்-பிரிட்டிஷார் காலம்கிளெக்கோர்ண் குறிப்பு
லக்ஸான்டர் ஜோன்ஸ்டனின் குறிப்பு
ங்களப் பெரும்பான்மை ஆட்சி.
கைப்படம் (கி. பி. 140) ன் இலங்கைப்படம்
$360s. LD யோரப் பகுதிகளும் கண்டி அரசும் Lo ஜான்ஸ்டனின் கையெழுத்துக் குறிப்பு
66i5:56i
}ன் எல்லைகள்
ம் - நாட்டு எல்லைகள்
ஆர். சின்னத்தம்பி பி. எஸ்ஸி இரா. சச்சிதானந்தன் பி. ஏ.
ஆர். சின்னத்தம்பி பி. எஸ்ஸி. 977
அச்சகம் டாரநாயக்க மாவத்தை கொழும்பு.
அச்சகம், புத்தகசாலை
ாங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
Elezham - Nattu Elaikal. ties of Tamil Eezham).
Sinnatamby B. Sc. (Lond.) Sachit hanantian B. A.
Sinn atau by B. Sc. (Lond.) imber 1977. la Press aranayake Mawatha, Colombo. ha Press & Book Depot kes anthurai Road, Jaffna.

Page 4
முன்னுரை.
இலங்கைத் தீவில் உள்ள தமிழரின் நிலப்பகுதி க்களப்பற்றியும் தமிழ் மக்கள் பற்றியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்துக் கூறுகின்ற வரலாற்று விபரங்களையும் புவியியல் விபரங்களையும் இந்த நூலில் எடுத்து நோக்குகின்றேன். -
霹
பிரிட்டிஷாரின் பழைய குறிப்புகளிலும், ஆட்சி அறிக்கைகளிலும் மலபாரிகள் மாவட்டம் ள்னக் குறிப் பிடப்பட்டுள்ள இப்பகுதிதான் தமிழர் நாடாகும். மலபாரிகள் என்ற சொல்"தமிழரைக் குறிக்கிறது.
தென் இந்தியா மட்டுமல்ல வட இந்தியாவும் திராவிடர்களின் நிலப்பகுதி என எல்லாருக்கும் தெரிவதில்லை. நகர்சார் நாகரீகம் தெரியா நாடோடி மக்களான ஆரியர்கள் கி.மு. 1500 அளவில் வட இந் தியாவிற்குப் படையெடுத்து வந்தனர். அக்காலத்தில் மிக முன்னேறிய நகர்சார் நாகரிகம் உடைய மக்க ளாகத் திராவிடர்கள் இருந்தனர். திராவிடர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரந்திருந்தார்கள். இப்பொழுது திராவிடக் கிளே மொழிகள் இந்தியா முழுவதும் இல்லையெனிலும், எஸ். கே. சட்டர்ஜி குறிப் பிடுவதுபோல் இந்தியப் பண்பாடு நூற்றுக்கு நூறு விதம் ஆரியப் பண்பு அற்ற கலாச்சாரமாகும்.
கி. மு. 1500 அளவில் ஆரியர்களின் குடியேற்றத் தினுல், க்ங்கை யமுனே, பஞ்சாப் சமவெளிகளில், ஆரிய மொழிகள் திராவிடர்கள் மீது திணிக்கப்
af.
இலங்கைக்கும் தென் இந்தியாவிற்கும் நெருங் கிய, கலாச்சார, சமய, சமூக, மானிட உறவுகள் உண்டு என, ஜி. சி. மெண்டிஸ், ஜி. பி. மலலசேகரா, எஸ். பரணவிதான, ரால்ப் பிரீஸ், வில்கெலிம் கெயி கர் ஆகியோர் கூறியுள்ளனர். வடமொழி, பாளி, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள இலக்கியங்க்ளில் 25 == ar சான்றுகளைக் காணலாம், கி. பி. நூற்குண்டில் மேலைநாட்டார் இந்தியாவிற்கும் இலங் கைக்கும் வந்த பின்புதான் இந்த நெருங்கிய தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நெருங்கிய உறவால், இலங் கையில் சமகாலத்தில் அயலவர்களாக வாழ்ந்து <罢岛 ரவுபெற்ற இந்து சமயத்துக்கும் புத்த சமய்த்துக்
வளமான ஆக்கங்கள் கிடைத்துள்ளன.
இலங்கையைப்பற்றிச் சிறப்பாகவும் இந்தியா வப்பற்றிப் பொதுவாகவும், நான் வரலாற்றையும், புவியியலேயும் படிப்பதற்குக் காரணம், இலங்கையின் só es uit î5 51T6N) LÉ) (Ptolemy) ஆக்கியவற்றை ஆராய்ந்தமையே. கி. பி. 140ல் அப்பொழுது அறி யப்பட்டிருந்த உலகின் வரைபடத்தைக் கிரேக்கஎகிப்திய புவியியலாளரான தாலமி வரைந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

二" * **裏電*蠻 ******-
Thank yon. ஏ
Selvaraja
இதைப்பற்றிய ஆராய்ச்சியின் விளைவாகத் தாலமியின் புவியியலில் இலங்கை என நூலைத் தயாரித்து ஆங்கி லத்தில் வெளியிட்டேன். அதிலுள்ள சில கருத்துக் களே இந்த நூலிலும் தந்துள்ளேன்.
தாலமி இலங்கைப் புவியியலைத் தயாரிக்கையில் தமிழ் மொழியைப் பயன்படுத்தியுள்ளார் என நான் கண்டேன். கி. பி. 100ல் தமிழ் மொழியில் உள்ள கருத்துக்கள், இத்தாலியை வந்தடைந்தன எனப் பிரஞ்சுக் கல்லுரியில், இந்திய மொழியியல் பேராசிரி பரான ஜீன் பிலியோசா கூறியுள்ளமை எனது இக் கருத்துக்கு வலுவூட்டுகிறது.
தாலமியின் புவியியலில் இலங்கை என்ற நூலைத் தயாரிப்பதற்குப் பிரிட்டிஷ் நூதனசாலை, அமெரிக்க நூலகக் காங்கிரஸ் வாஷிங்டன், லேடன் பல்கலைக் கழகம் என்பன உதவின. பிரிட்டிஷ் ருேயல் ஏஷியாட் டிக் கழகத்தாரின் வெளியீடுகளும் எனக்கு உதவின.
பிரிட்டிஷ் ருேயல் ஏஷியாட்டிக் கழகத்தின் இலங்கைக் கிளையைத் தொடங்கச் சர். அலெக்சாண் , டர் ஜோன்ஸ்டனும், சர் வில்லியம் ஜோன்ஸ், வங்கா ளத்தில் ஆசிய ஆராய்ச்சிகளைத் தொடங்க்வும் முன் னின்று உழைத்தமையை இங்கு குறிப்பிட வேண்டும். இந்தப் பெருமக்கள் இருவரின் முயற்சி இன்றேல், எங்களின் பாரம்பரியப் பண்பாட்டின் வளத்தையும், எங்கள் வரலாற்றுக் காலங்களையும் அறிந்து கொள்ள முடிந்திராது. இப் பெருமக்களின் தீர்க்கதரிசனம் போற்றுதற்குரியது.
இந்த நூலில் நோக்கம், இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள், தமது சிறப்பான இயல்புகளையும் 5Log5! மொழி, பண்பாடு பற்றியும், அறிந்துகொள்வ துடன், இலங்கையில் உள்ள தமது தாயகத்தின், தனி யான நிலப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புடைய எல்லை களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே. இந்த எல்லைகள் சிங்கள நாட்டுடன் ஒரு புறமும் தமிழகத் துடன் மறு புறமும் உள. -
இந்த நூலைத் தமிழாக்கம் செய்த திருமதி இரா. சச்சிதானந்தன், இந்நூலாக்கத்திலும் கருத் துக்கள் கூறிப் பேருதவி செய்துள்ளமைக்கு எனது நன்றியைத் தெரிவித்து முடிக்கிறேன்.
ஜே. ஆர். சின்னத்தம்பி இளைப்பாறிய பிரதி மாஅதிபர் நில அளவைத் திணைக்களம்

Page 5
Drείαce... .
In this Publication, I deal with historical and geographical matters that pertain directly or indirectly with the Tamil country of Sri Lanka (Ceylon) and her people.
In early British records and administrative reports they have been referred to as Malabar Districts which is actually Tamil country, as the word Malabar has actually been used to mean the Tamils.
It is generally not known that not only South India, now Dravidian, but North India also was Dravidian, where the Aryans, a semi-civilised race with no city culture invaded the North West of India in about 1500 B. C. In fact, the Dravidian race with a highly advanced city culture at the time of Aryan invasions was widely spread over India, though now all do not speak Dravidian dialeets, and as S. K. Chatterjee has pointed out, the culture of India is twelve annas in the rupee, non-aryan.
The Indo-Aryan languages in this part of Asia are therefore composed on the Dravidian and other peeples following the invasion of the Punjab, i Ganges and Jamuna areas about 500 B. C. by
the Indo-Aryans.
Ceylon (Sri Lanka) has according to the writtings of G. C. Mendis, G. P. Malalasekara, S. Paranavithana, Ralph Peries and Wilhelm Geiger, had close cultural, religious, social and ethnical contacts over the centuries with South India. This intimate contact to which may be traced our littrature Sanskrit, Pali and Tamil, was broken only after the arrival of the European powers in India and Ceylon commencing early 16th century,
They have made substantial contributions not only to Hinduism but also Buddhism, two religions which have co-existed and equally supported in Ceylon for centuries. .
My interest in the historical and geographical matters pertaining to Ceylon in particular and India in general, arose from some studies carried out by me in connection with the Geography of Ceylon by Ptolemy, the Egyptian-Greek geographer

who prepared a geography (140 A. D.) of the then known world which included India and Ceylon, for the publication of my work Ceylon in Ptolemy's Geography referred to in this work, where I found that Tamil language had been used by him in his preparation of Ceylon's Geography. The observation. made by Filiozat, Professor for Indian Phylology
in the College of France, that information had reached Italy as early as about 100 A. D. in the Tamil language, confirms what I have stated above.
In the preparation of the above work l had valuable assistance from the British Museum, Library of Congress, Washinton and the University of Leiden. I was also greatly indebted to the publications of the Royal Asiatic Society of Great Britian.
Special mention must be made of Sir William Jones of India and Sir Alexander Johnston of Ceylon who were the originators and founders of the Asiatic Researches Bengal and the Ceylon Branch of the Royal Asiatic Society of Great Britian respectively. I am referring to them only to illustrate what a void there would have been in the knowledge of our rich cultural heritage and historical past, were it not for the foresight of these two men to originate such historical studies.
The main purpose of this work is to focus attention of the Tamils of Ceylon to the distinct position, their language and religion holds in Ceylon, and to their motherland in this island and to its historical boundaries with the Sinhala country on one side and the Tamil Nad on the other,
Before I conclude, I must a knowledge my debt to the very substantial assistance given to me to render this in Tamil by Mrs. R. Sachithananthan, and in contributing to the substance of this work.
J. (12. 3ianataníg Deputy Surveyor General 18th September 1977. (Retired)

Page 6
e 鑫
ളൂ. ஆர். சின்னத்தம்பி
1905 செப்டெம்பர் 18 - ல் பிறந்தார். கல்கிசை, பு னி த தோ ம ஸ் க ல் லூ ரி யிலும், கொழும்பு பல்கலைக் கழகக் கல்லூரி யிலும் பயின் ருர், பி. எஸ்ஸி, லண்டன் பட்டதாரியாகி, நில அளவை பற்றிய பயிற் சியில் புலமைப்பரிசில் பெற்று கேம்பிறிட் ஜ-கு 1929-30-ல் பயணமானுர் பின்னர் நில அளவைத் திணைக்களத்தில் சேர்ந்தார். சில ஆண்டுகளாக, நில அளவைத் திணைக்கள செய்தி இதழாசிரியராக இருந்தார்.
1965-ல் நில அளவைத் திணைக்களப் பிரதி மாஅதிபராக இளைப்பாறிஞர். கிரேக்க காலங் களின் எழுத்துக்கள்பற்றிப் பொதுவாக ஆரா Již zmi. Ceylon in Ptolemys Geogrophy என்ற நூலை 1968-ல் வெளியீட்டார். வரலாறு, புவியியல் தொடர்பான கட்டுரைகள் பல வெளியிட்டு வருகின்றர். Tamil Nad of Ceylon and her people, “Ceylon in Retros. pect", "Tamil Nad of Ceylon” egy 8. u. 5. டுரைகளை வெளியிட்டு உள்ளார். *Ceylon in Ptolemy's Geographytu96šT 605j6u u6)Ľj பும் வெளியிட்டுள்ளார். இவை தட்டெழுத் துப் பிரதியாகவே வெளியிடப்பட்டன. பொது நூலகங்கள் சிலவற்றில் இவை கிடைக்கும்.
1968 சென்னையில் நடைபெற்ற இரண் டாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டி லும், 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட் டிலும் கலந்து கொண்டு கட்டுரைகள் படித் தார். மலையாளமும் கேரளப் பண்பாடும் பற்றி 1977 இறுதியில் நடைபெறும் உலக மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படிக்க 二=丁G丁行于。
தேசிய *曆變
 

J. R. SINNATAMBY
Born 18-9-1905. Educated at St. Thomas' College, Mt. Lavinia and University College Colombo. Passed B.Sc. London and proceeded ίΟ Cambridge on a Survey Scholarship, , 1929-30, and later joined the Survey Department. Was editor of the Survey Department News Letter for Some years.
On retirement in 1965, as Deputy Surveyor General engaged on Research Studies pertaining mainly to the writings of the Hellenic period and published a book “Ceylon in Ptolemy's Geogrophy' in 1968, since then written various historical - geographical articles which have been published in journals and the press and written a monograph “Tamil Nad of Ceylon and her people, “Ceylon in Retrospect, “Tamil Nad of Ceylon' (which contains articles written from time to time), and a revised edition of *Ceylon in Ptolemy's Geography. Only typescript copies have been made available to some libraries as they have not been published.
Attended and read papers at the Inter- - national Seminars on Tamil Studies at Madras 1968, Jaffna 1974. Will be attending and reading a paper at the World Conference on Malayalam and Kerala Culture at Trivandrum at the end of the year, 1977.
TGyes இலக சேனு

Page 7


Page 8
முதலாவது
Ν
உலகம் உருண்டையானது. உலகின் மொத் தப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு: மூன் றில் இரண்டு பங்கும் நீர்ப்பரப்பே;"நிலப்பரப்பையும் நீர்ப்பரப்பையும் சுற்றி, வானம் வெளியாக உள்ளது. வானவெளியிலோ, நீர்ப்பரப்பிலோ, நீருக் குள்ளோ மனிதன் வாழ்வதில்லே நிலப்பரப்பில் மட்டு மே மனிதன் வாழ்கிருன் நிலமே மனிதனின் வாழ் விடம். உலகின் மொத்தப் பரப்பளவில், மூன்றில் ஒரு
பங்குப் பரப்பளவில் மட்டும்ே மனிதன் வாழலாம்.
நிலப்பரப்பு எங்கும், எப்பொழுதும் ஒரே சீரா னதாக அமைவதில்லை. மாற்றமுடையதாக அமை> வதே இயற்கை நிலமும் மாற்றமுடையதே, மேடாக மிதந்தும், பள்ளமாகப் பாய்ந்தும், மலையாக உயர்ந் தும், குன்ருக நிமிர்ந்தும், குகையாகக் குடைந்தும், காடாக அடர்ந்தும், களனியாகப் பரவியும், கடும் பாலேயாக விரிந்தும், சமவெளியாகத் தெரிந்தும், மண்ணும் நீரும் மயங்கிய சகதியாகப் புதைந்தும் நிலம் அமைகின்றது
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்கின்ற மக்களுள் தமிழ் மக்கள் தலையானவர்கள். நிலத்தின் தன்மைகளேயும், இயல்புகளையும் பிரித்தறியக்கூடிய வர்கள். நிலத்தை ஐந்து வகையாகத் தமிழர்கள் வகைப்படுத்தினர்கள்.
மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி காடும் காடு சார்ந்த நிலமும் முல்ல்ை; வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம், கடற்கரையும் அதைச் சார்ந்த நில மும் நெய்தல்; இந்நால்வகை நிலமும் ஒன்றுடன் ஒன்று மயங்கிய போதும், கடும் வெய்யிற் கானமாய் அமைகின்ற போதும் உள்ள நிலம் பாலே.
அமைப்பில் மட்டுமல்ல; தட்பவெப்பத்தாலும் நிலம் வேறுபடுகின்றது. உறைபனிக் குளிரான பனி படர்ந்தன வடதுருவ-தென்துருவ வலையங்கிள்; 蚤á

வங்களை அடுத்துள்ளன குளிர்வலைய நிலப்பகுதிகள் : உலகின் நடுக்கோட்டின் அருகில் உள்ளன. உலர் வலைய நிலப்பகுதிகள் வடதுருவத்தில் உறைபனிக் குளிர்; தெற்கே வரவரக் குளிர் குறைகின்றது. உலகின் தடுக் கோட்டுக்கு அண்மையில் வெம்மையாக உள்ளது தெற்கே செல்லச்செல்ல மீண்டும் குளிர்; தென்துரு வத்திலோ உறைபனிக் குளிர் உறைபனிக் குளிரில் வாழும் எக்ஸிமோ மக்கள், கடும் பாலையில் வாழும் அரேபிய மக்கள் ; குளிர் வலையத்தில் வாழும் ஐரோப் பிய மக்கள் உலர் வலையத்தில் வாழும் ஆசிய-ஆபி ரிக்க மக்கள் தட்பவெப்ப வேறுபாடுகளேக் கடந்து மக்கள் வாழ்கின்ற மைக்கு இவை சான்று.
மழை மிகுந்து பெய்யும் நிலம், காய்ந்து வரட் சியான நிலத்தில் இருந்து வேறுபடுகின்றது. காற்று வேகமாக வீசிப் புயற்காற்ருக மாறுசின்ற, நிலநடுக் கம் ஏற்படுகின்ற எரிமலை வெடிக்கின்ற நிலப்பகுதி களும் உண்டு.
இவ்வ்ாருக நிலம் வேறுபட்டு மாறுபட்டு மயங்கி அ  ைம ந் தா லு ம், உலகின் நிலப் பகுதி எங்கும் மனிதன் வாழ்கிருன் மனிதன் வாழா நிலப்பரப்பு இல்லை எனலாம்.
சில நூற்ருண்டுகளுக்கு முன்புவரை மனிதனின் கண்படாத நிலப்பரப்புகள் பலவாக இருந்தன . இன்ருே மனிதனின் ஆட்சிக்கு உட்படாத நிலப்பரப்பு இல்லை. -
தாயான நில மகள்
மனிதனை உலகுக்குத் தந்தவள் நிலமகள், மண் னிலிருந்து தோன்றி மண்ணுக்காய் ஆவது மனித உடல், மனிதன் நிலமகளின் குழந்தை, நிலமகள் மணி தனின் தாய். மனிதனின் வாழ்வுக்கும் வளத்துக்கும் நிலமே அடிப்படை எண்ணங்கட்கும் செயற்பாட்டுக் கும் நிலமே வழிகாட்டி,

Page 9
மனிதனின் உள்ளத்தில் எழும் எண்ணங்களும் சிந்தனைகளும் அவன் வாழும் நிலத்தின் சூழலை அடிப் படையாகக் கொண்டவை. இதையொட்டித்தான் வாழ்வின் பல்வேறு இயல்புகளும், பல்வேறு நிலம் சார்ந்த திணைகளாக, வகைகளாக வகுக்க்ப்பட்டன. மனிதனின் அகவாழ்வும் புறவாழ்வும் நிலத்தின் தன் மையதாக அமைகின்றது.
நிலத்தில் இருந்து வாழ்வு கிடைக்கின்றது. துன் பம் எழுகின்றது. இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன. இடர்ப்பாடு போக்கும் தீர்வுகளும் எழுகின்றன, எண் ணங்கள் கருவுற்றுச் செயலாக உருப்பெற்று முழுமை பெறும் வாழ்விடம் நிலம்.
வெவ்வேறுபட்ட நிலங்களில் வாழும் மக்கள்
வெவ்வேறு இயல்பினராக உள்ளனர். அகன்ற நிலப் பரப்புக்களில் வாழ்வோர்க்கும், சிறிய தீவுகளில் வாழ்வோர்க்கும் வேறுபாடு உண்டு. கொடிய கான கத்தில் வாழ்வோர்க்கும், பசுஞ்சோலே சூழ் நிலத்தில் வாழ்வோர்க்கும் வேறுபாடுகள் உண்டு. குறிஞ்சி நில மக்கள், மருதநில மக்களைப்போலல்லர் வாழ் வில் பொருள் தேடும் முயற்சியிலும், உணர்வு வளர்ச்சி முயற்சியிலும் அக வாழ்வு இயல்புகளிலும், ஒருவர்க் கொருவர் மாறுபட்டவர்களாக, இவர்கள் உளர்.
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு நிலத் துண்டு வேண்டும் என விழைகிருன், அதனைப் பெற்றுத் தனது வாழ்விடமாக்கிக் கொள்கி முன், அந்த நிலத்தின் அடிப்படையில் அந்த வாழ் விடத்தின் செம்மையில் அவன் வாழ்வும் வளம்பெறு கிறது. அண்மைக்கால மனிதனின் நாகரீக வளர்ச்சி நகர் சாந்த நாகரீகமாக எழுகின்றது. நகர் சார்ந்த நாக கரீத்தின் எழுச்சி, நிலத்தின் நகர் தவிர்ந்த ஏனைய நிலத்தின் வளத்தில் வளத்தின் பயன்பாட் டில் எழுகின்றது. நாகரிக வளர்ச்சி பெருகப் பெருக நிலத்தின் தேவையும் அதிகரிக்கின்றது. நிலத்தில் உரிமை
இன்றைய உலகில், மனிதன் சொந்தம் பாராட் டாத, உரிமை கொண்டாடாத நிலமே இல்லை. பூமி யின் நிலப்பரப்பின் வரைபடத்தை எடுத்து நோக்கி ல்ை இந்த நிலை நன்கு விளங்கும். உலகில் உள்ள நிலப்பகுதிகள் அனேத்தையும் மனிதன் தெரிந்து வைத்துள்ளான். அந்த நிலப்பகுதி அனைத்தையும் பங்குபோட்டு வைத்துள்ளான். பெரும்பாலான நி ல ப் பகு தி க ள் தனி மனிதனின் உரிமைச் சொத்தாகவுள்ளன, தனி மனிதனின் உரிமைச் சொத் தாக இல்லாத நிலப்பகுதிகள், மக்கள் குழுக்களுக்குச் சொந்தமாக் உள்ளன. மக்களின் குழுக்கள் அமைத் துள்ள அரசுகட்குச் சொந்தமாக உள்ளன.
இந்தச் சொந்தம், இந்தப் பந்தம், இந்த உரிமை, இவற்றின் அடிப்படையில் உலகின் நிலம் முழுவதும் பங்கு போடப்பட்டுள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுள் ளன. ஆட்சி எல்லேகள் வகுக்கப்பட்டுள்ளன.
 

ஆட்சி எ ல் லை க் கு ஸ், அந்த நி ல ப் பகு திக்குள் வாழகின்ற மக்கள், அந்த நிலப்பகுதியின் உரி மையாளர். அதன் பாதுகாப்பாளர், நிலத்தைப் பேணுபவர். நிலத்தின் வளத்தைப் பயன்படுத்துபவர். நிலத்தின் பயனைப் பெறுபவர். அந்த எல்லைக்குட் பட்ட திலமே அவர்களின் நாடு.
ஒரு நாடு அமைய வேண்டுமானல், அதற்கெனத் தனியானதும், எல்லை வகுத்து அறியக்கூடியதுமான நிலப்பகுதி வேண்டும். அந்த நிலத்தில் வாழுகின்ற மக்கள், அந்த நிலப்பகுதியைப் பயன்படுத்தி, அங்கு வாழ்கிற ஒவ்வொருவரும் வளமாக, நிறைவாக, வாழ் வின் நோக்கங்களை அமைத்து அந்த நோக்கங்களை எய்து மாற்றல் அமையவேண்டும்.
காலங்கட்கூடாகப் பார்ப்போமானுல், உலகின் நிலப்பகுதி பல்வேறு முறைகளில் பங்கு போடப்பட்டு வத்துள்ளது. நாட்டின் எல்லைகள் அடிக்கடி மாற்றம் அடைந்து வந்துள்ளன. சிறிய நாடுகள் பெரிய நாடு களாகின. பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடுகள் சிறிய நாடுகள் ஆயின. நாட்டின் நிலப்பரப்பு எல்லை கள் நிலையானவை அல்ல. மாறிக்கொண்டிருப்பவை. இயற்கைக் காரணங்களால் மாறுகின்றன. அரசியல் காரணங்களால் மாறுகின்றன. பொருளாதாரக் காரணங்களால் மாறுகின்றன. மனிதனின் இடம் பெயர் இயல்பினுல் மாற்றம் அடைகின்றன. நாட் டின் எல்லேகள் மட்டுமல்ல, நாட்டின் மக்களின் தொகுப்பு, அரசியல் அமைப்பு, ஆட்சி இயல்பு என்பன வும் பிறவும் வரலாற்றின் ஊடாக, காலத்தின் ஊடாக அடிக்க்டி மாறிக் கொண்டே வந்துள்ளன.
நிலத்தின் சூழல்
மனிதனின் உடலியல்புகள், உணர்வு இயல்புகள் வாழ்வு இயல்புகள் அனைத்தின் அடிப்படையும் அவன் வாழும் நிலத்தைச் சார்ந்ததாக உள்ளது. மனிதன் பேசும் மொழி, மனிதன் மேற்கொள்ளும் தொழில், மனிதனின் அகவாழ்வு, புறவாழ்வு, அறநெறி என்பன அவன் வாழும் நிலம் தரும் சூழலே அடிப்படையாகக் கொண்டு எழுகின்றது. - 三
ஆபிரிக்கக் கண்டத்தில் வாழும் கறுப்புநிறக் காப் பிலி மக்கள், ஐரோப்பாவில் வாழும் வெள்ளை நிறத் தவர்கள், கிழக்கு ஆசியாவில் வாழும் சின்ன அமைப் புடைய சீனர்கள், இந்திய உபகண்டத்தில் வாழும் திராவிட மக்கள், அரேபியப் பாலைவனத்தைத் தாக்கிய அரேபிய மக்கள், தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மலாய் மக்கள், இவர்கள் அன்ேவரும் அந்த அந்த நிலப்பகுதிக்குரியவர்க்ள், நிலம் தரும் சூழலுக் கேற்ப எழுந்தவர்கள், வளர்ந்தவர்கள், வாழ்கின்றவர் கள். உடலமைப்பு, உள்ள அமைப்பு, உணர்வு அமைப்பு, வாழ்வு, மொழி, பண்பாடு, அறநெறி, தொழில் முறை என்பன அவர்கள் வாழும் நிலத்துக்கு ஏற்றதாய் எழுந்தன. காலங்கட்கூடாக இவர்கள்

Page 10
அந்தந்த நிலத்துக்குரியவர்களாய் இருந்திருப்பினும் மனித வரலாற்றில் அவ்வப்போது நடைபெற்ற மாபெரும் மனித இடம் பெயர் முயற்சிகள், போர்ப் படையெடுப்புகள், வர்த்தகத் தொடர்புகள் இக் குழுக்களுக்கிடையே ஓரளவு கலவையையும் நாகரீக இணைப்பையும் தந்துள்ளன.
கடந்த சில நூற்ருண்டுகளில் நடைபெற்ற இடம் பெயர் முயற்சிகள், குடியேற்ற நடவடிக்கைகள், ஆட்சி வெறிப் போர்கள் என்பன, ஐரோப்பியக் கண்டத்தில் வாழ்ந்த வெள்ளை நிற மக்கள், உலகின் பல்வேறு நிலப் பகுதிகட்குச் செல்லவும் குடியேறவும் புதிய நாடு களே அமைக்கவும் வழிகோலியுள்ளன.
நிலமும் நாடும்
நிலங்கட்கேற்ப மக்கள் வேறுபடுவதால்தான் நாடுகள் பலவாக உள. ஆகக் குறைந்த வேறுபாடுகள், ஆகக் கூடிய இணைப்பு, ஒற்றுமை, இவை தமக்குள்ளே பெற்ற மக்கள் ஒரு நாட்டில் வாழ்கின்ருர்கள். அந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வியல் நோக்கங்களை அமைக்கவும், அந்தோக்கங் களே நிறைவு செய்யும் வழிவகைகளைக் கையாளவும்
அதஞல் அம்மனிதனின் ஆளுமை முழுமை பெறவும்,
அம்மனிதனுடன் கூடி வாழும் மக்கள் பயன்பெறவும் நாடு அமைகின்றது. மொழி, மதம், பண்பாடு, வாழ்வு முறை, தொழில் முயற்சி வாழ்வியல் நோக்கங்கள் என்பனவற்றில் ஒருமித்த, ஒருமைப்பாடுடைய மக் களே நாடு கொண்டுள்ளது. இவ்வியல்புகளில், ஒரு நாட்டில் வாழும் மக்களிடையே வேறுபாடுகள் இருப் பின், அவ்வேறுபாடுக்ளை மாறுபாடின்றிப் பேணவும் பாதுகாக்கவும் கூடிய வகையில் ஆட்சி, அரசு அமைத் துள்ள நாடுள்ளும் உண்டு. நாட்டின்ங்கள், நாடுகள்
கடந்த நான்கைந்து நூற்ருண்டுகளில் உலகெங் கும் நடைபெற்ற அரசியல் பரிணும வளர்ச்சியின் a pւն էր այն GL நாட்டினங்களின் எழுச்சியாகும். மக்க ளாட்சித் தத்துவம் உருப்பெற்று நடைமுறைப் படுத்து வதற்கு ஏதுவாக அமைந்தது நாட்டினங்களின் எழுச்சியே.
மன்னராட்சிக் காலத்தில் மக்கள், குழுக்களாக வாழ்ந்து தொடர்பற்றிருந்தனர்; மக்களாட்சியின் பரிணும வளர்ச்சிக் காலத்தில் இக்குழுக்க்ள் ஒன்ருே டொன்று தொடர்புகொண்டன. இயைபுடைய குழுக்கள் இணேந்தன. நாட்டினமாக எழுந்தன. அறி வியல் வளர்ச்சி, தொழிற் புரட்சி, பொருளாதார முன்னேற்றம், தத்துவார்த்த வளர்ச்சி என்பன நாட்டி னங்கள் எழுவதற்குப் பெரிதும் வழிவகுத்தன.
நாட்டினங்கள் நாடுகளாக எழுந்தன. வரையறுக் கப்பட்ட எல்லைகள் கொண்ட, நிலப் பகுதியைக் கொண்ட நாடுகளாக் எழுந்தன. இன்றைய உலகில்
 

உள்ள நாடுகளின் பரிணும வளர்ச்சியை நோக்குவோர் நாட்டின எழுச்சியை விளங்கிக்கொள்வர்,
ஒரு மொழி பேசி, ஒரு மதம் பேணி, ஒரு உண்பாடு போற்றி, வாழ்வியல் நோக்கங்களில் ஒற்றுமை கொண்ட மக்கள் ஒருவர்க்கொருவர் அயலாக வாழக் கூடிய, வரையறுக்கப்பட்ட எல்லைகளுடைய நிலப்பகுதி யைக் கொண்டு அமைகின்ற மக்களின் தொகுப்பே நாட்னடிமாகும்.
யப்பான் என நாம் இன்று அழைக்கும் நாடு, சில நூற்ருண்டுகட்கு முன்புவரை பல குழுக்களாய் பிரிந்து பல சோகுன்களால் ஆட்சி செய்யப்பட்டது. மக்களாட் சிக் கருத்துக்கள் வலுவடைய, யப்பானிய மொழி, யப் பானியப் பண்பாடு, யப்பானிய வாழ்வுமுறை என்பன பரிணமித்தது. இதஞல் இன்றைய யப்பானிய |5rr(5) எழுந்தது. பல குழுக்கள் ஒன்றிணைந்து, பல தீவுகள் ஒன்றிணைந்து, பல அரசுகள் ஒன்றிணைந்து, ஒரே நாடாக, ஒரே இனமாக, ஒரே ஆட்சி, ஒரே அரசு பெற்றுள்ளன. யப்பானிய நாட்டினமாகப் பரிணமித் துள்ளனர்.
பிரஞ்சுப் புரட்சிக்கு முன்பு, பிரஞ்சு மக்கள் நாட் டினமாக எழுச்சியடையவில்லை. பிரஞ்சு மக்களுக் குள்ளே குழுக்கள் இருந்தன. அரசுகள் பல இருந்தன. பிரஞ்சுப் புரட்சியின் விளைவாகப் பிரஞ்சு நாட்டினம் எழுந்தது. வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட நாடு எழுந்தது.
அரேபியர்கள் மொழியால் ஒற்றுமைப்பட்ட வர்கள். அரேபிய மொழி அவர்கள் தாய்மொழி. அரேபியர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். பண்பாடு வாழ்வியல் நோக்கங்க்ள் என்பனவற்றில் ஒருமைப் பாடு உடையவர்கள். எனினும் ஒரே நாடாக அவர் கள் எழுச்சியடையவில்லை. பல்வேறு நாடுகளாகவே இருக்கின்றர்கள். அரேபியர்கள் வாழும் நிலப்பகுதி, குழுக்களுக்குரிய நாடுகளாகவே உள்ளது. ஒரே நாட் டினமான அரேபியர்கள், பல நாடுகளாக வாழ்வதை யும் காண்கின்ருேம்.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வெள்ளை நிறத்தவர்கள், கறுப்பு நிறத்தவர்கள் ஆகிய இரு நாட்டினங்கள் வாழ்கின்ருர்கள். பண்பாடு, வாழ்வு முறை ஆகியவற்றல் பிரித்தறியக்கூடிய இவ் விரு நாட்டினத்தவர்கள், பிரித்தறியக்கூடிய நிலப் பகுதியைத் தமதாகக் கொள்ளவில்லே, சொரியலாக நாடு முழுவதும் இவ்விரு நாட்டினத்தவர்களும் வாழ் வதால், ஒரே நாடாக ஒரே நாட்டில் இருவேறு நாட்டினங்களாக வாழ்கின்றனர்.
பிரிட்டன் அல்லது ஐக்கிய அரசு என அழைக்கப்படும் நாட்டில் நான்கு வெவ்வேறு நாட்டி னங்கள் முன்பு வாழ்ந்தன. ஆங்கில நாட்டினம், இங் கிலாந்து என்ற நிலப்பகுதியிலும், ஸ்கொட்டிஷ் நாட்
三、

Page 11
டினம் ஸ்கொட்லாந்து என்ற நிலப்பகுதியிலும், வெல்ஷ் நாட்டினம் வேல்ஸ் என்ற நிலப்பகுதியிலும், ஐரிஷ் நாட்டினம் அயர்லாந்து என்ற நிலப்பகுதியிலும் வாழ் ந்தன. இவை நான்கும் ஒரே நாடாக இணைந்த ஆட் சிக்குட்பட்டிருந்தன. சில காலத்துக்கு முன்பு ஐரிஷ் நாட்டினம் அயர்லாந்துக் குடியரசு எனத் தனி நாடாகப் பிரிந்தது. இப்பொழுது ஸ்கொட்டிஷ் நாட்டினமும், வேல்ஸ் நாட்டினமும் தங்களின் தனித் தனி நிலப்பகுதியைத் தாமே ஆட்சிசெய்யும் நாடுக ளாக வேண்டும் எனப் போராடிக்கொண்டு வரு கின்றன.
சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், ஈழத்தவர் எனப் பிரிந்திருந்த தமிழ் மக்கள், மேலைநாட்டவர் வரு கையால் தம்மிடையே தொடர்பு பெருக்கினர். "நாம் தமிழர் என்ற உணர்வுடன் செயற்பட்டு வருகின்றனர். மொழி, பண்பாடு, வாழ்வியல் நோக்கங்களால் தமி ழர் தனியான நாட்டினமாக் எழுச்சி அடைந்துள்ள னர். வரையறுக்கப்பட்ட எல்லைகளையுடைய நிலப் பகுதிகளைக் தமதாகக் கொண்டிருப்பினும் தமிழ் நாட்டினம் தனி நாடு அற்ற நாட்டினமாக உள்ளது. வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம், தமிழ் நாட்டினமாகப் பரிணமித்த னரும், பரந்த இந்திய அரசின் மாநிலங்களுள் ஒன் ருகவே அமைந்துள்ளது.
தமிழ் ஈழ நாட்டினம்
இலங்கைத் தீவில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பகுதிகள் பிரித்தறியக்கூடிய எல்லேகளைக்கொண் டுள்ளன. இந்நிலப்பகுதிகளில் தமிழர்கள் இருபது நூற்ருண்டுகட்கு மேலாக வாழ்கின்ருர்கள், ஆட்சி செய்தார்கள், அரசு அமைத்தார்கள் என்பதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் உண்டு. எனினும் இன்று, தமிழ் ஈழ நாட்டினமாகப் பரிணமித்துள்ள தமிழ் ஈழ மக்கள், தமக்குரிய தனியான நிலப்பகுதியின் உரிமையாளர்களாக இல்லை. தமிழ் ஈழ நாட்டினத் தின் நிலப்பகுதியான 'தமிழ் ஈழம்" இலங்கைத் தீவின் பொதுவான ஆட்சியின்கீழ், சிங்கள நாட்டினத்தின் பெரும்பான்மை ஆட்சியின்கீழ் உள்ளது.
உலகில் உள்ள நிலப்பகுதியின் அளவு மாரு மல் இருக்கின்றது. உலகின் நிலப்பகுதிகள் அனைத் தும் மனிதனின் ஆட்சிக்குட்பட்டுள்ளன. மக்கள் தொகை பெருகவும், மாருத அளவு நிலப்பகுதி அமைய வும், இதனல் வாழக்கூடிய நிலப்பகுதி கிடைப்பது அரிதாகிக்கொண்டே போகின்றது. எவ்வளவு நிலப் பகுதியைப் பெற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவை

யும் பெற்றுவிடவேண்டும் என நாட்டினங்கள் கருதும் காலம் தொலைவில் இல்லை. இது மனிதனுக்குப் புதிய வாழ்வு முறையைத் தரப்போகின்றது.
இலங்கைத் தீவில் இரு வேறு நாட்டினங்கள் வாழ்கின்றன. தமிழ் ஈழ நாட்டினம் ஒன்று சிங்கள நாட்டினம் மற்றென்று. இலங்கைத் தீவின் வாழ் விட நிலப்பரப்பு மாருமல் உள்ளது. வாழ்விட நிலப்பரப்புத் தேடும் மக்கள் தொகை பெருகுகின்றது.
பெரும்பான்மை ஆட்சி அதிகாரத்தின் துணை யுடன் சிங்கள நாட்டினம் தமிழ் ஈழ நாட்டினத்தின் நிலப்பகுதியைச் சிறிது சிறி த க க் கைப்பற்றிக் கொண்டு வருகின்றது. தமிழ் நாட்டினமோ, ஆட்சி யுரிமை இல்லாத நிலையில் தனது பராம்பரிய நிலப் பகுதிகளைப் பறிகொடுத்து வருகின்றது.
தமிழ் ஈழ நாட்டினத்தினர் பலர் த ம து நிலப்பகுதிகள் எவை எனச் சரியாகத் தெரியாத வர்களாக உளர். த மி ழ் ஈழ நாட்டினத்திற்கு இலங்கைத் தீவில் தனியான நிலப்பகுதி உண்டு. தமிழ் ஈழ நாட்டினம் இந்தத் தனியான, பராம்பரிய வழி பெற்ற நிலப்பகுதியையும் பறிகொடுத்து விட் டால், உலகில் வேறெந்த நிலப்பகுதியையும் உரிமை கோரிப் பெறமுடியாது, சொந்தம் கொண்டாட முடியாது.
உலகில் நாடுகள், நாட்டினங்கள் அமைதி யாக வாழ வேண்டுமானுல், அவை தத்தம் பாரம் பரிய நிலப்பகுதிகளைப் பேணப், பயன்படுத்த, பாது காக்க, ஆட்சி செய்ய உரித்து உடையவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டினத்தினதும் அடிப்படை உரிமை இதுவாகும். முன்பு விரித்துக் கூரியதுபோல, நில மகள் மனிதனின் தாயாவாள். நிலத்தின் உரிமையின் அடிப்படையில் மனிதனின் வாழ்வு முகிழ்க்கிறது.
தமிழ் ஈழ நாட்டினம், தனக்குரிய நிலப்பகுதி எது என்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொள்ள வேண்டும். அத்த நிலப்பகுதி சிங்கள நாட்டினத் தாலோ, உல கி ன் வேறெந்த நாட்டினத்தாலோ பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அப் பொழுதுதான், எந்த நிலம் தமிழ் ஈழக் குடிமகனுக்கு வாழ்வைத் தருகின்றதோ அந்த நிலத்தில் அவன் வாழவும், பழகவும் பண்பாடு பேணவும் வாழ்வியல் நோக்கங்களே நிலத்தின் உரிமையின் அடிப்படையில் நிறைவு செய்யவும் முடியும். -

Page 12
மூன்றுவது
3to
போர்த்துக்கேயர் காலம் கி.பி. 1619-1638
போர்த்துக்கேய நாட்டைச் சேர்ந்த வாஸ் கொடகாமா கி பி. 1495 ம் ஆண்டில் இந்திய துணைக் கண்டத்துக்கு வந்தார். இந்தியாவிற்குக் கடல் வழி வருகின்ற பாதையை இவர் தொடக்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து மேலைநாட்டவர்கள் இந்தியத் துணைக்கண்டத்திற்குப் பெருமளவில் வந்தனர்.
முதலில் போர்த்துக்கேயர்கள் வந்தனர். வாணி பத்தை நோக்கமாகக்கொண்டு வந்த இவர்கள் பின் னர் ஆட்சியுரிமைகளில் தலையிடத் தொடங்கினர். சிறிது காலத்தின் பின் நாடுகளின் அரசுரிமைகளையும் தமதாக்கிக் கொண்டனர்.
இலங்கைத் தீவுக்குப் போர்த்துக்கேயர் வந்த பொழுது, மூன்று அரசுகள் ஆட்சி செய்துகொண்டி ருந்தன. யாழ் ப்பாணத்து நல்லுரைத் தலைநகர: கொண்ட தமிழ் ஈழ அரசு கோட்டையைத் த2),
ராகக்கொண்ட கீழ்நாட்டுச் சிங்கள அரசு கண்டி" யைத் தலைநகரர்கக்கொண்ட மலைநாட்டுச் சிங்கள
- ----
அரசு என்பன அம் முனறு அரசுகளாகும்.
போர்த்துக்கேயர் முதலில் கோட்டையைத் தலைநகராகக்கொண்ட கீழ்நாட்டுச் சிங்கள அரசைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். பின் னர் இ. பி. 16 1 g ஆனி மாதத்தில், தமிழ் ஈழ அர சின் இறைமை போர்த்துக்கேயரைச் சென்றடைந் தது. தமிழ் ஈழ அரசின் கடைசி மன்னனன சங்கிலி மன்னன் போர்த்துக்கேயரால் சிறைப்பிடிக்கப்பட்டு நஈடுகடத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான்.
ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்தி லேயே கிழக்குக் கரையோரத்தில் உள்ள மூன்று வன்னி மைகட்கான ஆட்சித் தலைவர்கள், ஆரியச் சக்கரவர்த்
 

லநாட்டவரும்
தமிழ் ஈழ நிலங்களும்
அரசனின் மேலாணையை ஏற்றிருந்தனர். நல்லூர் அரசு வீழ்ச்சியடைந்ததும், முள்ளியவளைப் பகுதியில் ஆட்சிசெய்த அடங்காப்பற்று வன்னிமை போர்த்துக் கேய ஆட்சியை ஏற்றுக்கொள்ள மறுக் து எந்த அரசின் மே லா ணே  ைய யு ம் ஏற்றுக்கொள்ளாத, ஆட்சிப்பிரிவாக் அமைந்தது. நல்லூர் அரசின் வீழ்ச்சியால், யாழ்ப்பாணக் குடாநாடும், மன் ஞரையொட்டிய மேற்குக் கரையோரப் பகுதி களும் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சியின்கீழ் வந்த நிலப்பகுதிகளாக அமைந்தன.
போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கைத் தீவில் உள்ள நிலப்பகுதி ப ல் வே று ஆட்சிகளின் கீழ் அமைந்தது. வடக்கே, குடாநாட்டையும், மேற்குக் கரையோரத்தையும் போர்த்துக்கேயர் ஆட்சிபுரிந் தனர். இதற்கெனத் தனியான ஆட்சி அமைப்பை நிறுவினர். கொழும்பில் உள்ள ஆட்சித் தலைவரை மேலாக ஏற்றுக் கொண்டாலும், யாழ் ப் பா ன அரசை ஆட்சி செய்த போர்த்துக்கேயத் தளபதி, நீதி முறைகளையும், ஆட்சி முறைகளையும் தமிழ் ஈழ அரசர்களான ஆரியச்ச்க்கரவர்த்திகளின் வழமைக்
கேற்ப நடாத்தினர்.
குடாநாட்டுக்குத் தெற்கேயுள்ள வன்னிப்பகுதி கள் போர்த்துக்கேயரின் மேலாணயை ஏ ற் று க் கொள் ள வில் லை. போர்த்துக்கேயருக்குத் திறை கொடுக்கவில்லை கண்டி அரசனின் மேலாணையை ஏற்றுக் கொள்ளவில்லை. கண்டி அரசனுக்குத் திறை கொடுக்கவில்லை. எந்த அரசின் பாதுகாப்பையும் நாடவில்லை. தன்னுட்சியுடைய வன்னிமைகளாக, அத்தலைவர்கள் ஆட்சி செய்தனர்.
கிழக்குக் கரையோரத்தில் உளள கொட்டி யாற்றுப் பற்று வன்னிமை, பழுகாம வ ன் னி  ைம பாணமை வன்னிமை ஆகிய மூன்றும் கண்டி அரச னின் மேலாணையை ஏற்றிருந்தன; பாதுகாப்பைக் கோரியிருந்தன; எனினும், தன்னுட்சியுரிமையுள்ள தமிழ் ஆட்சிப் பிரிவுகளாகச் செயற்பட்டன.

Page 13
மாவலி கங்கைக்குக் கிழக்கேயுள்ள நிலப்பகுதி கள், கும்புக்கன் ஆற்றுக்கு வடக்கேயுள்ள நிலப்பகுதி கள், இவ்வன்னிமைகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. இவ்வன்னிமைகள், க ண் டி அரசனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தன.
பல்வேறு ஆட்சிகளின் கீழ் ஆளப்பட்டிருப் பினும், தமிழ் ஈழ நிலப்பகுதியின் தமிழ்த் தன்மை மாரு திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒல்லாந்தர் காலம் கி. பி. 1638-1795
ஒல்லாந்தரும் மேலைநாட்டவரே ஏலம் கறுவா போன்ற வாசனைத் திரவியங்களை வாங்க வந்தவர் கள் நாடுகளின் ஆட்சியுரிமையில் தலையிட்டார்கள். கி. பி. 1638 ல் மட்டக்க்ளப்பைத் தாக்கி, அங்கு முதன் முதலில் கோட்டை அமைத்தார்க்ள். கி. பி. 1656-ல் கொழும்மைத் தாக்கி வெற்றி பெற்ருர்கள். கி. பி. 1658-ல் யாழ்ப்பாணத்தைத் தாக்கி வெற்றி பெற்ருர்கள். படிப்படியாகப் போர்த்துகேயரை, இலங்கையில் இருந்து ஒல்லாந்தர் விரட்டினர்கள். தீவின் கரையோரப்பகுதிகளைத் தமது ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்தார்கள்.
றெபெட் நொக்ஸ்
கி. பி. 1660-ம் ஆண்டில் ருெபேட் நொக்ஸ் (ROBERT KNOX) என்ற ஆங்கிலேயர், திருகோண மலையில் வைத்துக் கண்டி அரசனின் படைத்தளபதி களால் சிறைப்பிடிக்கப்பட்டார். அ ப் பொழு து கொட்டியாற்றுப் பற்று வன்னிமை கண்டியரசனின் மேலாணயை ஏற்றிருந்தது கி. பி. 1679-ம் ஆண்டு வரை, ருெபெட் நொக்ஸ் கண்டியரசனின் கைதி யாக, வாழ்ந்தார். வாரியப்பொலைக்கு அண்மையில் உள்ள பண்டார கொஸ்வத்தையில் சிலகாலம் வாழ்ந்தார்.
1679-ல் ருெபெட் நொக்ஸ் கண்டியரசனின் ஆணையில் இருந்து தப்பியோடினர். தப்பியோடிய பின், தனது சிறை வாழ்வுபற்றி விரிவான நூல் ஒன்றை எழுதினர்.
ருெபேட் நொக்ஸ் தனது நூலில் இலங்கைத் தீவில் தமிழர்கள் தனியான நாட்டினமாக வாழ் வதைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள நாட்டினத்தின ரை விடச் சிறிது நாகரீகமுடையவர்களாகத் தமி ழர்கள் வாழ்ந்தமையையும் குறிப்பிட்டுள்ளார்.
தப்பியோடும் வழியில் அனுராதபுரத்தை அடைந்த ருெ பெட் நொக்ஸ், அங்கு சிங்கள மொழி தெரிந்தவர்கள் இல்லாமையைக் குறிப்பிட்டுத் சந் தைகளிலும் கடைத் தெரு வி லு ம் ஊர்களிலும் தமிழர்கள் வாழ்ந்தமை பற்றிக் கூறியுள்ளார். அனுராதபுரம் கண்டி அரசனின் ஆட்சிக்குட்பட்
 

டிருந்தது. அனுராதபுரப் பகுதியின் ஆட்சித் தலை வராக இருந்தவர் சிங்கள மொழியைத் தெரிந்திராத தமிழர். ருெபெட் நொக்ஸ் அவருடன் 2-60TuT4u. டிய பொழுது, மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியை நாடினர்.
அனுராதபுரத்தில் இருந்து அருவி ஆற்றின் கரையோரமாகக் காட்டுக்குள்ளாக நடந்து அரிப்புக்கு வந்துசேர்ந்தார். அனுராதபுரத்தில் இருந்து மன்னர் செல்லும் நெடுஞ்சாலையில் சென்றல் தமிழரைக் சந்திக்கநேரிடும் என ருெபேட் நொக்ஸ் அஞ்சினுர்,
மேலும் அக்காலத்தில் வன்னிப் பகுதியைக் கைலாய வன்னியன் ஆட்சி செய்தமையை நொக்ஸ் குறிப்பிடுகின்றர். இந்த ஆட்சித் தலைவன் தமிழனுக இருந்தமை, வன்னியில் உள்ள தமிழ் நிலப்பகுதியை ஆட்சி செய்தமை, ஒல்லாந்தருக்கோ, கண்டி அரச னுக்கோ திறை செலுத்தாத ஆட்சியைச் செலுத்திய விபரங்கள் ருெபேட் நொக்ஸின் பயணக் கட்டுரை யில் உண்டு.
கைலாய வன்னியன் கண்டியரசனுடன் நட்புப் பூண்டிருந்தான். எனினும் திறை செலுத்தவில் ஆல. ஒல்லாந்தருடன் பகைமை பூண்டிருந்தான். தன்னுட் சியுள்ள, சுதந்திரமுள்ள அரசை அமைத்து ஆட்சி செய்த ஆட்சித் தலைவன், இளவரசன் என இவனை ருெபேட் நொக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தீவின் படத்தையும் ருெ பே நொக்ஸ் வரைந்துள்ளார். அப்படத்திலே கைலாய வன்னியனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைத் தெளிவா 35độ 55Tr "Liqui, Git GTnTrĩ. COYLET WANNEA என்ற எழுத் துடன் குடாநாட்டுக்குத் தெற்கேயுள்ள வன்னிப் பகுதியும், கிழக்குக் கரையோரமாக உள்ள வன்னிமை களும் தமிழ் ஆட்சித் தலைவனை கைலாய வன்னி யனின் ஆட்சியின் கீழ் இருந்தமையை ருெ பே ட் நொக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ரேலன்ட் குறிப்புகள்
ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தீவிற்கு வந்து, இத்தீவின் தன்மைகளைப்பற்றி எழுதி யவர்களுள் அட்றியன் ரேலன்ட் (ADREANRELAND) என்பவரும் ஒருவர். இவர் ஒரு கீழைத்தேயப் பண் பாடு பற்றிக் கற்ற ஒல்வாந்து தேச அறிஞர். பல மொழிகளைப் பயின்றவர். தமிழ், சிங்களம், மலாய் மொழிகள் பற்றி இவர் எழுதியுள்ளார். 17-ம் நூற் முண்டின் இறுதியில் இவர் இலங்கைக்கு வந்திருந்தார். இவரின் குறிப்புக்களாவன:
"இந்தத் கீவை விட்டுப் புறப்படுமுன் நான் தமிழ்மொழி பற்றியும் சிறிது கூற வேண்டும். இந்தத் தீவின் பெரும்பகுதி தமி

Page 14
* ) 劑*#*
劑 會*劑試
**「黯 书)*4
和
シ。 km
s.s. ) 毛*玖*\
km配料**
**
每)
卷
so saevaeraeaeae,
*
守海”A )
* 33:5 **** : ***
劑| 9환
*
wä
**혁
ருெபேட் நொக்வ
இரண்டு
L JILL D
葛*瑟,祖y的) 歌 Ë , , ; ) 禽,每。
舞蹟。 脚吧 真雨粤响 ¡ ¿ † ‡ 即陷瘫• 福鼎邬励 % m % ダO鹰班 # 。邬丽 鄭融 *需é 融、延。甚”。衢 蛋斑皿 G 逊盆 り 也叫“旺 翻g预 配廳師z 朗胜门 g C
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No a)Kingdomof
CoAN ÞY ŴŴŶA. in the stand of
戀
**
:
* _隱。 ! €ggraetz, 每器W) *
- g&シg& 、 哆.* 획 "패· シン、 o.„o
-sae sa,·|-|- |-*}o.·환寇*蠅_**2}so:-3 | |-
Logro aĝosaerosesse, sae*
···********¿¿.**韃鹦鹉警 シ
&& yɛɛ ɛsɛ sɛɛrå
• Płacz; *rocoso, ave&e
**)
1679 )
தனது இ
hiը}
(@
蠶@。棗麗醬鹽。
ទ្រឹស
தியாக இருந்த ருெபேட் நொ
6
ளைப் படத்தில் வன்னிப்பகுதி
ஆதிக்க எல்லேக
தொடங்கும் அந்த எல்லே, எனிமைகளையும் உள்ளடக்குகின்றது. (COYLOT WANNES
கைலாய வன்னிமையின் ஆ
றிக்கப்பட்டுள்ளது.
gif
曇_蕊
శ్రీ!

Page 15
ழர்களின் வாழ்விடமாக உள்ளது. இந்தப்
பகுதி கைலாய வன்னியனல் (COILATWANBA)
ஆட்சி செய்யப்படுவதுடன், அவனின் நாடு
எனவும் அழைக்கப்படுகின்றது. இத்துடன் இணைந்துள்ள படத்தில் கைலாய வன்னிய னின் ஆட்சிப் பிரதேசத்தைக் காணலாம். இவர்கள் சிங்களவர்களின் ஆட்சிக்குட்பட்ட குடிமக்கள் அல்லர்; எங்கள் (ஒல்லாந்தர்) ஆட்சிக்குட்பட்ட வருமல்லர். கரையோர மாக உள்ள நிலம் அனைத்தும் இந்த இளவர சனுக்கே (கைலாய வன்னியன்) உரியது. கரை யோரப் பகுதிகளில் உள்ள மக்களுட் பெரும் பான்மையினர் தமிழ்மொழியைப் பேசுகின்ற னர். நீர்கொழும்பு நகரத்திலிருந்து தெற்கே தேவேந்திரமுனை வரை உள்ள கரையோரப் பகுதிகளில் சிங்கள மொழி பேசப்படுகின்றது. யாழ்ப்பாணப் பகுதி மாவட்டத்திலும், கரை யோரத்திலுள்ள துணைக்கண்டத்துக்கு அண் மையில் உள்ள ஏனைய மாவட்டங்களிலும் தமிழ்மொழி பேச்சு வழக்கில் உள்ளது.'
சுவைட்சர் குறிப்புகள்
ஒல்லாந்தர் காலத்தில் இலங்கைத் தீவுக்கு
வந்து சென்ற வர் க ளு ள் கிரிஸ்ரோபர் சுவைட்சர்
(CHRISTOPHER SCHEWITZER) stair asi 62 gg சென்ற குறிப்புகளும் முக்கியமானவை. அவர் கூறுவ
5f7 63 jij :
**இந்தத் தீவின் மற்றக் குடிகளான தமி ழர்கள் காலி, மட்டக்களப்பு, திருகோண மலை, மன்னுர், யாழ்ப்பாணம், அரிப்பு, கற் பிட்டியிலிருந்து நீர் கொழும்பு வ  ைர யு ம் வாழ்கிருர்கள். வன்னி நாட்டிலுள்ள தமி ழர்களைத் தவிர ஏனைய தமிழர்கள் ஒல்லாந் தரின் ஆட்சியின் கீழ் உள்ளார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழர்கள் தமக்கென ஒர் அரசைக் கொண்டுள்ளார்கள். -
ஒல்லாந்தரின் ஆட்சிப் பிரிவுகள்
கைலாய வன்னியன் அடங்கா அரசுரிமை கொண்டு ஒல்லாந்தரின் வலேகளில் விழாமல் வன் னிப்பகுதியை ஆட்சிசெய்தான். வன் னி ப் பகுதி தவிர்ந்த ஏனேய கரையோரப் பகுதிகள் ஒல்லாந் தரின் ஆட்சியின் கீழ் இருந்தன.
இலங்கைத் தீவில் இரு இன வழி நாட்டினங்க்ள் இருந்தன. சிங்கள நாட்டினம் இருந்தது. தமிழ் நாட் டிமை இருந்தது மொழிவழியில் மட்டுமல்ல மதம்,
డా. * #

L4 一
வாழ்வு முறை பண்பாடு, நீதி, அரசு ஆட்சி முறை முதலிய எல்லா வழிகளிலும் இந்த நாட்டினங்கள் வேறுபட்டிருந்தன. சிறப்பாக இந்த இரு நாட் டினங்களும் பிரித்தறியக் கூடியதும், வேறு வேருக் கப் படக் கூடியதுமான தனித்துவம் உடைய நிலப் பகுதிகளைத் கொண்டிருந்தன.
கண்டி அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட நிலப் பகுதிக்ளிலும், வடமத்திய, தெற்கு, தென்மேற்குப் பகுதிகளிலும் சிங்கள நாட்டினத்திர் வாழ்ந்தனர்.
தமிழ் நாட்டினத்தினர், ஒல் லாந் த ரின் ஆட்சிக் குஉட்பட்ட நிலப்பகுதிகளிலும், கைலாய வன்னியன் என்ற ஆட்சித்தலைவனின் ஆட்சிக்கு உப பட்ட நிலப்பகுதிகளிலும் வாழ்ந்தனர், தீவின் வட மேற்கு, வடச்கு, கிழக்குக் கரையோர நிலப்பகுதி களில் தமிழர்கள் வாழ்ந்தனர்.
சிங்கள நாட்டினத்துக்கும் தமிழ் நாட்டினத் துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளையும், தனித்துவமான நிலப்பகுதிகளேயும்  ெத ரி ந் து கொண்ட ஒல்லாந்தர் நீதி, ஆட்சி முறை என்பன தனித்தனியாக நிர்வாகிக்கப்பட ஏற்ற வகையில் ஆட்சியமைத்தனர்.
இலங்கைத் தீவின் கரையோர நிலப்பகுதிகள் ஒல்லாந்தரால் ஆறு ஆட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆட்சிப் பிரிவுக்கும் ஒவ்வொரு ஆட்சித்தலைவர் நியமிக்கப்பட்டார்.
பெந்தோட்டை ஆறு தொடக்கம் வடக்கே தெதுறு ஒயாவரை உள்ள கொழு ம் பு ஆட்சி
தெ துறு ஒயா தொடக்கம் மோதரகம் ஆறு வரையுள்ள புத்தளம் - கற்பிட்டி ஆட்சி மாவட்டம்,
மோதரகம் ஆறு தொடக்கம் வடக்கே யாழ்ப் பாணக் குடாநாடு, வன்னிப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கிக் கிழக்கே கொக்கிளாய் வரையில் உள்ள பரந்த நிலப்பகுதி யாழ்ப்பாண மாவட்டம்,
கொக்கிளாய் தொடக்க்ம் கிழக்குக் கரை யோரமாகத் தெற்கே வெரு கல் ஆறு வரையும் உள்ள திருகோணமலை ஆட்சி மாவட்டம்,
வெருகல் ஆற்றில் இருந்து கரையோரமாகத் தெற்கே கும்புக்கன் ஆறு வரையுமுள்ள மட்டக் களப்பு ஆட்சி மாவட்டம்,
கும்புக்கன் ஆற்றில் இருந்து தெற்கேயும் உரோகனமும் பெந்தோட்டை =#6ושu6עתי" பரந்த து மான காலி ஆட்சி மாவட்டம்.

Page 16
| JAFFNA
42
కె
༦༽
አAANNÆኔጅቅ
#ậoš{}ằ
CCC-A80
9K AU jfARA
படம் மூன்று : ஒல்லாந்தர் க ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணம், மூன்று ஆட்சி மாவட்டங்களும் தமிழர் நீதிமாவட்டமாக நிர்வகிக்கப்பட்டது. ஜே. பேராசிரியர் நடராஜா வரைந்த படத்தி
 
 

C E YON
showing the "Judicial Districts" of the Dutch settlements about 7 go (The boundary between the Dutch territory and the Kandyan kingdom is os shown on J. du Perrons nap of 1789),
Râ Jt_{-3}T\/U
*RİN) 3.
ால ஆட்சி மாவட்டங்கள் திருகோணமலே, மட்டக்களப்பு ஆகிய நிலப்பகுதிகளாகக் கருதப்பட்டு ஒரே டியு. பெரோனின் படத்தைத் தழுவிப்

Page 17
இந்த ஆறு ஆட்சி மாவட்டங்களில் ஒல்வொன் றுக்கும் ஒவவொரு ஆட்சித் தலைவர் இருந்தனர். இந்த ஆறு ஆட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள ஒல்லாந்த ஆளுநரினுல் இணைத்து ஆட்சி செய்யப்பட்டனர். சாவகத்தில், ஜ க ர் த் தா வி ல் ஒல்லாந்தரின் கிழக்கிந்தியக் கம்பனியின் தலைமை நிலையம் இருந்தது. அவர்கள் அங்கிருந்து ஆளுநரைக் கொழும்புக்கு அனுப்பினுர்கள்.
நீதியை நெறிப்படுத்துவதற்காக், மூ ன் று நீதிப்பிரிவுகளை ஒல்லாந்தர் ஏற்படுத்தினுர்,
கொழும்பு ஆட்சி மாவட்டம் புத்தளம் ஆட்சி மாவட்டம் இரண்டும் ஒரே நீதிப்பிரிவாக இணைக்கப் பட்டன, பெந்தோட்டை ஆற்றில் இருந்து மோதர கம் ஆறுவரையுள்ள கரையோர நிலப்பகுதிக்ள், அங்கு வாழ்ந்த மக்கள் இந்நீதிப்பிரிவுக்குள் அடங் கினர். கொழும்பு இதன் தலைமை நிலையம்,
யாழ்ப்பாண ஆட்சி மாவட்டம் திருகோண மலை ஆட்சி மாவட்டம், மட்டக்களப்பு ஆ ட் சி மாவட்டம் ஆகிய மூன்றும் ஒரே நீதிப்பிரிவுக்குள் இணைக்கப்பட்டன. மோதரகம் ஆற்றில் இருந்து கும்புக்கன் ஆறு வரையுள்ள வடக்குக் கிழக்குப் பகுதியே இந்த நீதிப்பிரிவு, யாழ்ப்பாணம் இதன் தலைமை நிலையம்.
காலி ஆட்சி மாவட்டம் தனியான நீதிப்பிரிவு: கும்புக்கன் ஆற்றில் இருந்து பெந்தோட்டை ஆறு வரையுள்ள பகுதியே இந்த நீதிப்பிரிவு. காலி இதன் தலைமை நிலையம்,
சிங்களவர்கட்கெனத் தனியான நீதிப்பிரிவு கள் ஏற்பட்டன. தமிழர்கட்கெனத் தனியான நீதிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. ஜோகீன்ஸ் சைமன்ஸ் எ ன் ற ஒல்லாந்த ஆளு ந f (கி. பி. 1703-1707) யாழ்ப்பாணத்து மக்களின் வழமைகள், நீதி முறை கள் தனியானவை என்பதை அறிந்து அவற்றைத் தொகுப்பித்தார். தே ச வ ழ  ைம என்ற பெயரில் வெளியிட்டார். அதற்கமைய நீதி செலுத்தினுர்,
ஆட்சி மாவட்டங்களில் கூட யாழ்ப்பாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம்-கற்பிட்டி என்பன ஒரே மாதிரியாகத் தமிழரின் ஆட்சி முறைக் கேற்ப ஆட்சி செய்யப்பட்டன்,
இலங்கைத் தீவில் இருவேறு நாட்டினங்கள் இருந்தன. இவை தனித்தனி அரசுகளால் ஆட்சி கெய்யட்பட்டன. வெவ்வேருண ஆட்சி முறையைப் பின்பற்றின. வெவ்வேருண நீதிமுறையைப் பின்பற் றின. வெவ்வேருண வாழ்வு முறைகளைக் கொண் டிருந்தன. மொழி, பண்பாடு, சமயம் என்பவைற் றில் வேறுபட்டிருத்தன.

இவற்றை ஒல்லாந்தர் கவனத்தில் எடுத்துக் கொண்டார்கள். எனவே அந்த இரு நாட்டினங்களும் தனித்தனியாக ஆட்சி செய்யப்பட வே எண் டு ம். எனக் கருதிஞர்கள். ஆட்சி முறையின் தனித்துவத் தைப் பேணிஞர்கள் நீதி முறையின் தனித்துவத் தைப் பேணினர்கள்.
இதனுல் ஒல்லாந்தர் காலத்தில் (1638-1795) தமிழ் ஈழ நிலப்பகுதிகள் தனியான அமைந்திருந் தமை ஏற்றுக் கொள்ளப்பட்டது. புத் தள த்தில் இருந்து கும்புக்கன் ஆறுவரை பரந்திருந்த நிலப் பகுதி தமிழரின் நிலப்பகுதி என்பதும் ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
ஒல்லாந்தர் ஆட்சியைத் தொடர்ந்து, இலங் கைத் தீவின் கரையோரப் பகுதிகள் கி. பி. 1796-ல் பிரிட்டிஷாரின் ஆட்சியின் கீழ் வந்தது. 1619-ல் போர்த்துகேய அரசைக் சென்றடைந்த தமிழ் ஈழ இறைமை 1658-ல் ஒல்லாந்தரிடம் சென்றடைந்த 1795-ல் பிரிட்டி ஷாரிடம் சென்றடைந்தது.
பிரிட்டிஷார், திருகோணமலைத் துறைமுகத் தினைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என எண் னம் கொண்டார்கள். இந் தி ய துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய நாடுகளில் தமது வர்த்த கத்தைப் பெருக்கவும், தமது ஆட்சியை நிலைநாட் டவும் திருகோணமலைத் துறைமுகம் சிறந்த அடித் தளமாக அமையும் எனக் கருதினுர்கள். இலங்தை தீவின் ஏ ளே ய பகுதிகளிலோ, வர்த்தகத்திலோ அவர்கள் அதிகம் நாட்டம் கொள்ளவில்லை.
கி. பி. 1795-ல் திருகோணமலையைத் தாக் கி வெற்றிபெற்ற பிரிட்டிஷார் படிப்படியாக, மட்டக் களப்பு, காலி, மாத்தறை, பருத்தித்துறை யாழ்ப் பாணம், ம ன் னு ர் அரிப்பு க ல் பி ட் டி ஆகிய கோட்டைகளே ஒல்லாந்தரிடமிருத்து கைப்பற்றி ஞர்கள். 1796 பெப்ருவரியில் கொழும்புக் கோட் டையைத் தாக்கி வெற்றி பெற்ருர்க்ள். இலங்கை யின் கரையோரப்பகுதி முழுவதும் ஒல்லாந்தரின் ஆட்சியில் இருந்து பிரிட்டிஷாருக்குக் கைமாறியது.
கண்டி அரசு தவிர்ந்த ஏளைய பகுதி க ள் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டன. அரோசிமித்தின் வரைபடம்
கி. பி. 1796-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கிய பொழுது, சென்னையில் உள்ள செயின்ற். ஜார்ஜ் கோட்டையிள் ஆளுநர் மூலமாக, ஆட்சி நடாத்தப்பட்டது. இந்தியா பற்றிய அலுவலகள் தொடர்பான பிரிட்டிஷ் ஆணேயாளரிடம் இருந்த வரைபடம்தான், இலங்கையின் படம்தான் இன்று அரோசிமித்தின் (ARROWSMITH) இலங்கைப்படம் எனப் புகழ் பெற்றுள்ளது.

Page 18
警 头
šs
棗義馨濟
*美爵讀幫該a蛭。
সৃষ্টিগুয়শঃsংখ্রঃদ্রঃ
ఫ్రీక్ష్క్వాజాః
படம் ஐந்து ஒல்லாந்தரின் கரையோரப்
தமிழீழ அரசு என நாம் கருதும் யாழ்ப்பான அரசு சிங்கள அரசான கண்டி அரசு ஆகியவற்றின் எல்லைகள் 8 1815-ல் பிரிட்டிஷாரைச் சென்றடைந்த கண்டி அரசின் எ குன்றிய இறுதிக்காலத்தில் கிழக்குத் தமிழ் நிலப்பகுதி ை
 

籌戀靜
鑫 鰭靈戲誕豔、毯寶議
స్ట్రీజ్జ స్త్రీ 影蠶醫鬍離器霍露蠶
義擬發 - 實能盜 經證實A黑醬鬱鬱響 鑿蝠競鬣景鬣 懿 میخی
ஜிே & ஐ ஜூ
జ-శశీeూజ
露露F靈醬轉鬱整
DT ASA AAAA AM T Aq S LLLe eeukmeemeB Z ZL mluLuuu kkmkeTuDS
if đồš Fisi-tšifressiệå Ġefấy
Berg ਵ as site *ഞുബ
fereige: či the šesťgse Riggsfer
鬣*鲁夔
குதிகளும் கண்டிஅரசும்(கி.பி. 1796-1815) , கீழ்நாட்டுச் சிங்கள அரசான கோட்டை அரசு, iDzapir (63. நாட்டப்பட்டுள்ளன. ஒல்லாந்தரின் கரையோர நிலப்பகுதியும், ல்லைகளும் காட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாண அரசின் அன்னிமைகள் கண்டி அரசின் மேலானையை ஏற்றிருந்தன.

Page 19
ஒல்லாத்தரின் ஆட்சியில் இருந்த பகு தி க் ள் அரோசிமித்தின் படத்தில் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளது.
இந்த வரைபடத்துக்கமைய இங்க்ளவரின் கரையோர நிலப்பகுதிகள், நீர் கொழும்பில் இருந்து தெற்குக் கிழக்காகக், கும்புக்கன் ஆறுவரை பரந் திருக்கின்ற நிலப்பரப்பு ஆகும். ஏளேய கரையோர நிலப்பகுதிகள் தமிழர் வாழ்விடங்களாகும். தீவின் நடுப்பகுதி கண்டி அரசனின் ஆட்சிக்குட்பட்டிருப் பதும் இந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
1802-ம் ஆண்டின் அமெயின்ஸ் ஒப்பந்தத்துக்கு (Treaty of Ameins) egy 60) LD (li, g) ig a 63 g. Li L-55) Gi) காட்டப்பட்ட பகுதிகள்தான் ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டன.
1796-ல் இருந்து 1801 வரை, இந்தியாவில் உள்ள கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில் இருந்த இலங்கைத் தீவின் கரையோரப் பகுதிகள் 1802 தை முதலாம் நாள் தொடக்கம், பிரிட்டிஷாரின், முடிக் குரிய ஆதிக்க நாடாகப் பிரிட்டிஷ் அரசரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. முதலாவது ஆளுநராக நோர்த் என்பவர் கடமை புரிந்தார்.
இளெக்கோர்ண் குறிப்பு
பிரிட்டிஷார் ஆட்சி தொடங்கிய காலங்களில் எழுதப்பட்ட குறிப்புக்கள், தமிழ் ஈழ நிலப்பரப்புத் தனியான நிலப்பரப்பு எனக் கூறுகின்றன. இலங்கை யின் முதல் பிரிட்டிஷ் ஆளுநரான நோர்த் அவர் களின் செயலாளாராக இருந்தவர் பேராசிரியர் ஹியு கிளேக்கோர்ண், அவர் 1799 ஜூன் முதலாம் நாள் பின் வரும் குறிப்பை எழுதியுள்ளார்.
தீவின் குடிகள்
* இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந் தொட்டே இரு வெவ்வேறு நாட்டினங்களால் வெவ்வேறு பகுதிகளாக உடைமை கொண் டாடப்பட்டது. இத்தீவின் நடுப்பகுதியும், தெற்குப் பகுதியும் வளவை ஆற்றில் இருந்து சிலாபம் வரையுமுள்ள மேற்குப் பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சிசெய்யப்பட்ட பகுதியாகும். இத்தீவின் வடக்குத் கிழக்கு நிலப்பகுதிகள் தமிழர்களால் ஆட்சி செய்யப் பட்ட பகுதியாகும். இந்த இரு நாட்டினங் களும் மதத்தாமும் மொழியாலும் வாழ்க் கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டன.
தமிழர்கள் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து குடிபெயர்ந்தார்கள் போலும், ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி,

அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்.'
இந்தக் குறிப்பு மிக் முக்கியமான குறிப்பு பேராசிரியர் கிளெக்கோர்ண் ஒரு ஸ்கொட்டிஷ்காரர். கலோனியல் செகரட்டரியாக இலங்கையில் கடம்ை புரிந்தவர். இலங்கையைப்பற்றிய விபரங்களே நன்கு அறிந்திருந்தவர், ஒல்லாந்தர் கலத்தில், கிழக் குக் கரைப்பகுதி ஆட்சிப்பிரிவுகள், கும்புக்கன் ஆற் றைத் தெற்கெல்லையாகக் கொண்டிருந்ததை நன்கு அறிந்திருந்தவர். எனினும், தமிழர் நிலப்பகுதி, குமணயோடு நிற்காமல், கிரிந்தை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்கட்கும் பரந்திருந்ததாகவும், வளவை கங்கை வரை ச்கும் பரந்திருந்ததாகவும் கூறுகின் ருர், நீர்கொழும்புக்கு வடக்கே தமிழர்கள் வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்ததை இவரின் குறிப்புக்கள் உறுதிப் படுகித்துகின்றன.
கண்டி அரசின் வீழ்ச்சி
கி. பி. 1815ம் ஆண்டில் கண்டி அரசு பிரிட்டிஷ் மன்னரின் ஆதிக்கத்துக்குக் கீழ் வந்தது. கண்டியின் கடைசி அரசனன, பூரீ விக்கிரமராஜசிங்கன், சிறை பிடிக்கப்பட்டுக் குடும்பத்துடன் தமிழ் நாட்டில் உள்ள வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.
1796ல் ஒல்லாந்தரிடமிருந்து, பிரிட்டிஷார் பெற்ற தீவின் கரையோர நிலப்பகுதிகள் பற்றிய விப ரங்களையும், 1815ம் ஆண்டில், கண்டி அரசனிடமிருந்து பிரிட்டிஷார் பெற்ற ஆள் புலங்களே யும் குறிக்கும் வரை படம் ஒன்று இலங்கை நில அளவைத் தினேக் களத்தினுல் 1946ல் வெளியிடப்பட்டது. இந்த வரை படத்தில், போர்த்துக்கேயர் வருகையின் போது இலங் கைத் தீவை ஆட்சி செய்த மூன்று வெவ்வேறு அரசு க்ளான, தமிழ் ஈழ அரசு (யாழ்ப்பான அரசு கீழ்நாட் டுச் சிங்கள அரசு (கோட்டை அரசு) மலேதாட்டுச் சிங் கள அரசு (கண்டி அரசு) என்பனவற்றின் எல்லேகளும் காட்டப்பட்டுள்ளன. கிழக்குக் கரையோரத்தில் தமிழ் நிலப்பகுதிகளாக இருந்த வன்னிமைகள் கண்டி அரச னின் மேலானையை அப்பொழுது ஏற்றிருந்தமையால் கண்டி அரசின் எல்லேக்குள் காட்டப்பட்டுள்ளன. அலெக்ஸான் டர் ஜோன் ஸ்டனின் குறிப்பு
அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் (ALEXANDER 0HNSTON) சிறுவனக் இருக்கையில் தனது தந்தையா ருடன் மதுரைக்கு வந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளைப் பயின்ருர் சட்டமா அதிபராக இலங்கைக்கு வந்தார், கி. பி. 1806ல் உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவிபெற்ருர், நீதித்துறையில் பல நல்ல முறைகளே அறிமுகப்படுத்திய இந்த ஆங்கிலே யர், சமூகத்துறையிலும் பல நன்மைகளைச் செய்தார். இலங்கையில் உள்ள ருேயல் ஏஷியாடிக் கழகக் கிளை யைத் தொடங்கி வைத்தவர் இவரே,

Page 20
படம் நான்கு அரோசிமித்தின்
ஒல்லாந்தரின் ஆட்சியில் இருந்த பகு கரையோரப் பகுதிகளைக் கண்டி அரசிடம் இ பட்டுள்ளது.
 

توزي.Bg .
تملأت "كنت سم. $ 5. ANR o "EY. (2 N. å«#za Zorasore
iaఇr p్వeja:ఇస్ %'%';
sests:ezs - G & ry:r rase: A.
------ 367 حساس مصمم -
ایری . '' .. کيم بم كې , ب () ?് ്%
雷、二
** - v r: %. അ..... - 懿
இலங்கைப் படம்
குதிகள் கரையோரமாகக் காட்டப்பட்டுள்ளன. ருந்து வேறுபடுத்தும் எல்லேக்கோடு காட்டப்

Page 21
- 2
கி. பி. 1807 நவம்பர் கீம் நாள், அலெக்ஸாண் டர் ஜோன்ஸ்டன், அக்கால ஆளுனராகிய, சர் தாமஸ் மெயிட்லாந்துக்கு எழுதிய குறிப்பு ஒன்றில்,
"நான் சேகரித்த உள்நாட்டு வழக்கத்தில் உள்ள சில சட்டங்கள், புத்தளம், யாழ்ப்பா ணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு மாகாணங்களிலும் வழமையில் S-6rr.'
இவ்வாறு குறிப்பிட்ட இவர், இந்த நான்கு மாகாணங்களையும் தமிழ் மாகாணங்கள் எனக் குறிப் பிடுகின்ருர்,
மேற்கூறிய குறிப்புத் தவிரக் கொழும்பு நூதன சாலையில், இவர் எழுதிய கையெழுத்துக் குறிப்புகள் சில உண்டு. இக்கையெழுத்துக் குறிப்புகளில் ஒரு குறிப்பு தமிழரின் வாழ்விடங்களைக் குறிப்பிடுகின்றது. அக்குறிப்பில்,
* வடமேற்கில் உள்ள புத்தளத்தில் இருந்து, தென் கிழக்கே உள்ள குமண ஆறு வரை உள்ள நிலப்பகுதி, தமிழர்களின் குடி யிருப்பு ஆகும். மேற்கே சிலாபம் ஆற்றில் இருந்து, தென் கிழக்கேயுள்ள குமண ஆறு வரையுள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடி யிருப்பு ஆகும்'.
சிலாபம் ஆறு என்பது, தெதுறு ஒயாவையும், குமனே ஆறு என்பது கும்புக்கன் ஆற்றையும் குறிக் கின்றது .
அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டனின் காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் தமிழர் நெருங்கி வாழ்ந்தார் கள் என்பது தெளிவு,
மேலும், ஒல்லாந்தர் ஆட்சியில் கடைப்பிடிக்கப் பட்டு வந்த நீதி நிர்வாக முறைகளே. பிரிட்டிஷாரும் தொடர்ந்து கடைப்பிடித்தார்கள். தமிழரின் நிலப் பகுதிகளில் தேசவழமைச் சட்டத்துக்கமைய நீதி வழங் கப்பட்டது. தமிழர் நிலப்பகுதிகட்குத் தனியான நீதிப்பிரிவு இருந்தது.
கோல்புறுக் ஆணைக்குழு கி. பி. 1829
நாட்டின் கரையோரப் பகுதிகளில் மட்டும் ஆட்சிசெய்த பிரிட்டிஷார் க்ண்டி அரசு கைப்பற்றப் பட்ட பின், தீவு முழுவதையும் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்தனர். கண்டி அரசின் ஆட்சி முறை வேறு, யாழ்ப்பாண அரசின் ஆட்சி முறை வேறு, கோட்டை அரசின் ஆட்சி முறை வேறு. வெவ்வெறு முறைகளால் ஆட்சி செய்வதில் உள்ள குறைபாடு களால் பிரிட்டிஷார் துன்பப்பட்டனர். கண்டி அரசின் கீழிருந்த ஆட்சித் தலைவர்களின் உரிமை நீக்கப் படாததால் அவர்கள் தன்னிச்சையாக ஆட்சி செய் யவும் தொடங்கினர். கண்டியில் நடைபெற்ற புரட்
Ag** پ3 تھی جسمجھی

சியும் (கி. பி. 1818) பிரிட்டிஷாருக்கு மன நிறைவைத் தரவில்லே. எனவே ஆட்சி முறையைச் சீர் செய்வதற் கான ஆணை க் குழு 1829-ல் நியமிக்கப்பட்டது. கோல்புறுக் ஆனைக்குழு எனப் பெயர் பெற்ற இந்த ஆணைக்குழுவின் விதப்புரைகள் 1832-ல் அறிக்கையா க்க் சமர்ப்பிக்கப்பட்டன.
கோல்புறுக் ஆணைக்குழுவின் அறிக்கையுடன் இணைக்கப்பட்ட இலங்கையின் வரைபடம் முக்கிய மானது. தீவு, ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது, கிழக்கு, வடக்கு மேற்குத் தெற்கு, மத்திய மாகாணங்கள் என்ற ஐத்தும் வரைபடமா கக் காட்டப்பட்டுள்ளன, எல்லேயிட்டுக் காட்டப்
!.!!" (ତ ଖାଁT କ୍ଳା ଶଙ୍ଖ, இ
ఫ్రో
கிழக்கு மா கா ண த் தி ன் மேற்கெல்லையாக மாவலி கங்கை காட்டப்பட்டுள்ளது. தெற்கெல்லே பாக்க் கும்புக்கன் ஆறு காட்டப்பட்டுள்ளது. வேடர் களின் வாழ்விடமாகிய விந்தனேப் பகுதி கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
கோல்புறுக் ஆணைக்குழுவின் விதிப்புரைகள் தமிழ் ஈழ நாட்டினத்துக்குப் பாதகமாக அமைந்தன வெவவேறு ஆட்சி மாவட்டங்களாக, நீதிப்பிரிவு களாக நிர்வகிக்கப்பட்ட இலங்கைத் தீவு, ஒரே ஆட்சியின் கீழ், ஒரே முறையான நீதி வழங்கல் முறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோல்புறுக் ஆஃணக்குழு விதந்துரைந்தது. 1883 வரை தமிழ் நிலப்பகுதிகன் தனியாகவும் சிங்கள நிலப் பகுதிகள் தனியாகவும் ஆட்சி செய்யப்பட்டன கோல்புறுக் ஆனே க் குழு வி ன் விதப்புரைகளைத் தொடர்ந்து இந்த இரு நிலப்பகுதிகளின் ஆட்சி பும் நீதி வழங்கலும் ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தன.
1619 ஜூனில் தமிழ் ஈழ அரசின் இறைமை போர்த்துக்கேயரைச் சென்றடைந்தது. 1833-ல் தமிழ் ஈழ நிலப்பகுதிகள் சிங்கள நிலப்பகுதிகளுடன் பலவந்த மாக ஒன்றிகணக்கப்பட்டன.
சிங்களப் பெரும்பான்மை ஆட்சி
1833-ல் இருந்து 1948 பிப்புருவரி 3 வரை இந்த நடைமுறை தொடர்ந்தது. 1948 பிப்புருவரி 4-ம் நான் இலங்கைத் தீவு ஒற்றையாட்சி முறை யின் கீழ் முழுமையான ஆட்சி ப் பொறுப்பைப் பெற்றது. 1948 க்குப் பி ன் ன ர் ஒற்றையாட்சி அமைப்பில், சிங்களப் பெரும் பான்மை ஆட்சி, தமிழ் நிலப்பகுதிகளைச் சிங்கள குடியேற்றங்கள் மூலம் சிங்கள நிலப் பகுதிகளாக்க முயல்கின்றது. கிழக்கு மாகாணத்தின் எல்லைகள் கூட, ம | வலிகங் கையில் இருந்து கிழக்குப்பக்கமாக நகர்த்தப்பட்டன.

Page 22
�)
iÒ t్య
Carn k Fishery
খ্রিস্তত্ব
f ༽ ། *
چینی ”&چھ
N oż శ
7み容さ
:
Pf*リ 浅んAVだぶ
7ie Feszt Fr#ery s čia →
感
7
(%ޗ، - عزز لأفيفي y
படம் ஆறு : கோல்புறுக் ஆன இணைக்கப்பட்ட இ இந்தப் படத்தில் கிழக்கு மாகாணத்தின் தெ gTsirungs மாவலிகங்கையும் குறிப்பிடப்பட்டு, மாகாண நிலப்பகுதிக்கு உரியதாகக் காட்டப்ப
 
 
 
 
 
 
 
 
 

总博
AWA A :P
ರಾಜ್ orž
SLAND of CEY LON
tం అభిరempఆy the AEAOR7's or L* concavel Col. EBaooke, One of His Maesys Commissioners of hurry
星8穹一@
ع جاع جة S A。3。eん。s % 。リrée下。
بسلـ+سمٰنس
ہے۔ gچي پig
உருவாரூஐ
○ 2c2. Joඊ Geographie G/ &hlies && te a Loegræ
4Oهـ 3cm לרר 7:3
s لاوہ బోస్ట్రా? .9 عرہ "ہم" &
Fr Arrek Arத்துச *ஓடி ஆர்ஜ:ஜ:இகனை எத் rேஅாமேஸ்ரர் Ararr;
4ኮዪ }
శ్వోత్తిళ్ల Pryళతో 'ൈ
Ażහි දී (ස් කෟෂුණීෂ්, ෆි, ෆුකූ® ඇණිxt æ ه.ش در محمد *
}-*'ನ್ತಿ? *ళ జిల్స్లో####ట్టభu'***&g
- فتخلیقضی
爵莒离筠r颂、
勘
னக் குழுவின் அறிக்கையுடன் லங்கைப்படம் (கி பி 1832) ற்கெல்லையாகக் கும்புக்கன் ஆறும் மேற்கு வேடர்கள் வதியும் விந்தனைக் காடு கிழக்கு ட்டுள்ளது.
Ω Ώ 2 ρ

Page 23
கிழக்கு மாகாணத்தின் நிலப்பகுதிகளில் பெருமளவு சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. அதேபோல வடக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதி களிலும் அபரிதமான சிங்களம் குடியேற்றம் நடை பெற்று வருகின்றது.
ഗ്ഗ. بحیرہ سے ہے ویسے محض مجبر 2کے
ഗ്ഗ് ( ഗ്ദലം ഭ بحیرہ 2.ތ ޙަހކޯ ހި ޒުޙަހނި .4 ހަޙަޗ ޗިބަ ޗިށ މި މހމ ހުހަ/ ,ރޠަޙީ ރަޙުށަށަ/ / د ورورو
-ూకా"
ޖީ// .s 2്വ ത്രം ീര , , " /() &ޙަރ
ബ منނޗަ-/ޗކ /ހ ކަހަ/ى" ഗ്ഗ, ഗ്ല് ്, 2. ഭ /に /ރަށައިގިޑޭޗުޗަދަޗިރޓީހޯޗީ ޗިޗަޗަ 墨 ފަހަ/ ނަގާހަކީ /< ހه هހމީގކ
رکھے 2 <--( ތށހންކިޑަހށިމހަ/
ޓށަޙަހިހހ イン ހޗަހި ޙަޙާހل
s' From Putflann on the North Western to the Riye. country is inhabited principally by Malabars. Fr. Koemana on the South Eastern side of the island the with circles in red ink are the six villages of the Mahanodr proposed to have established Chur படம் ஏழு கொழும்பு நூதனசாலையில் உள்ள கையெ 19-ம் நூற்றண்டின் முற்பகுதியில் சட்டமா அதிபராகவும்
கவும் இருந்த சர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டனுக்குரியது
 
 
 

22 - ২
இதனுல் தமிழ் நிலப்பகுதிகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. காலத்துக்கூடாக வரலாற்றுப் பெருமையுடன் பேணப்பட்ட தமிழ் நிலப் பகுதிகளை இந்தச் சந்ததியிலோ, அடுத்துவரும் சந்ததிகளிலோ தமிழ் ஈழ நாட்டினம் இழந்து விடக்கூடாது.
% / މ.ތ.މ >2 ޠީކޙަހ "މަށަހވބށ/ހ ; , , ല്ല് ഗ് ޗްޢަހ ,ލޙަހ /ޖޯރިހި .
’参 - - 4/ ހށް ޑީރ ޢަޖަރބތހ سمیں مجھے މިމަހހހހރތޯ ذجية
تاریخ عي . محور سرورقہ ھے گئے ہونے کے بھی کی محرم بھی
ፈ
مي
്ല. .5 ބޔމޙަހޗުޙައިޠަމަހ ޢަރި އިވަނީ ޕްރަވި مر میر کسی برسر స్ట్రో ബ مصر ފާއިޗާ ބކަރާ/ ނަޢާހ ކަ ޏހޙށހަޗަށާހ ރަކީ
کے رکھ )( xسمصنصبر گھ ޔ ޗީހޖ ޑް 7 ކޯޘް ޙަޤީ ހިޙާވޏވށ ކްޓަ/ * ށހނީ ޗަހޖއޙަހތިޕާޔހުކަ/ ނޭޗަޙަހހިތި
ቻ 2 ستے ല്ലജ്ജ്< ޗީރޖް&<ޘާރީކްއި gކީ 9ރީ سےسر چھ جریر
്യല്പ്
ހަރުލހޏޔމޏރޔަތކަޖިއީ
2.
Keomana on the South East side of the island, the in the Chilaw River on the Western side to the River country is inhabited by the Singalese. The six places le Chaleas or people of the Cinnamon Department where h missionary associations. 2த்துப்பிரதி ஒன்றின் படம். இக்கையெழுத்து, இலங்கையில் பின்னர் கி. பி. 1806 தொடக்கம் உயர் நீதிமன்ற நீதியரசரா
(நன்றி கொழும்பு நூதனசாலை)

Page 24
நான்காவது
உலகில் நாடுகள் பல உள. நாட்டினங்கள் பல உள. ஒரே நாட்டில் பல நாட்டினங்கள் வாழ்கின் றன. இந்தியா ஒரு நாடு. அங்கு பல நாட்டினங்கள் இணைந்து வாழ்கின்றன. சுவிட்சலாந்து ஒரு நாடு. அங்கு பல நாட்டினங்கள் வாழ்கின்றன. சோவியத் ரஷ்யா ஒரு நாடு. அங்கு பல நாட்டினங்கள் வாழ் கின்றன.
ஒரு நாட்டினம் பல நாடுகளில் வாழ்வதும் உண்டு. அரேபியர்கள் ஒரே நாட்டினத்தவர். ஆனல் பல நாடுகளாக வாழ்கின் ருர்கள். ஆங்கிலேயர்கள் ஒரே நாட்டினத்தினர். பல நாடுகளாக வாழ்கின்ருர் கள் ஸ்பானியர் ஒரே நாட்டினம். ஆணுலும் பல நாடுகளாக வாழ்கின்றர்கள்.
ஒரே நாட்டில் ஒரே நாட்டினம் வாழ்வதும் உண்டு. யப்பானிய நாட்டினம் யப்பானில் மட்டும் வாழ்கிருர்கள். பிற நாடுகளில் யப்பானியர்கள் வாழ்ந்தாலும், கணிசமான தொகையாக வாழவில்லை. பிரஞ்சு நாட்டினம் பிரஞ்சு நாட்டில் வாழ்கின்ருர் கள். சீய தாட்டினம், சீயத்தில் மட்டுமே வாழ்கின் ருர்கள் பர்மிய நாட்டினம் பர்மாவில் மட்டுமே வாழ்கின் ருர்கள்.
ஒரே நாட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டி னங்கள், வாழ்வதும் இவற்றுள் சிறுபான் ைபயினராக உள்ள நாட்டினம் பெரும்பான்மை நாட்டினத்தால் ஆஎப்படுவதும் உண்டு. இலங்கைத் தீவு ஒரே நாடாக இருப்பதும் சிங்களப் பெரும்பான்மை நாட்டினத்தின் ஆட்சி தமிழ் ஈழ நாட்டினத்தின் மீது நடாத்தப்படுவ தும் கண் கூடு. கனடாவில் ஆங்கில நாட்டினம் பெரும் பா ன்  ைம யாகவும், பிரஞ்சு நாட்டினம் சிறுபான்மை யாகவும், சிரஞ்சு நா ட டினம் பாதிப்புக்கு உள்ளா வ தும் தெளிவு, மலேஷியாவில் மலாய் நாட்டினம் மே பரும பான்மை யாகவும், சீன நாட்டினமும், தமிழ் நாட்டி னமும் சிறு என்மையாகவும் இருப்பதும் மலாய் நாட்டினத்தில பெரும்ப ன்மை ஆட்சி நடப்பதும்

தமிழ் ஈழம்நாட்டின் எல்லேகள்
வெளிப்படை, சிறுபான்மை நாட்டினங்களாக நாடு களில் வாழ்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை பற்றி உலக நாடுகள் சபை கவனத்துக்கு எடுத்து வருகின்றது.
பெரும்பான்மை நாட்டினம், ஒரு நாட்டில் சிறு பான்மை நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்டு வரு வதும் உலகில் நடைபெறுகின்றது. தென் ஆபிரிக்கா, தெற்கு ரொடிவியா ஆகிய நாடுகளில் நடைபெறும் வெள்ளையர் ஆட்சி இதற்குச் சான்று.
இவற்றையெல்லாம் இங்கு எடுத்து நோக்கு வதன் காரணம், ஒரே நாட்டினம், தனி ஒரு நாடா கவோ, பல நாடுகளாகவோ, பல நாட்டினங்களுடன் ஒரு நாடாகவோ, வாழ்ந்தாலும் அந்த நாட்டினத் துக்குத் தனியான நிலப்பகுதி இருக்குமேயானுல், அந்த நாட்டினம், தொல்லைக்குள்ளாகும் கிா லங்களில் தனக்குரிய உரிமைகளை நிலைநாட்ட முடி Ավւհ.
பாகிஸ்தான் என்ற நாட்டில், வங்காள நாட்டி னம் துன்பப்பட்டபோது, தனியாகப் பிரிந்து சென்று தன்னுட்சியும் இறைமையும் உள்ள நாடாக ப் பரின மித்தமைக்குக் காரணம், அந்த நாட்டினம் தனியா ன நிலப்பகுதியைக் கொண்டிருந்தமையே.
கனடாவில் உள்ள கியுபெக் மாகாணம், சிறு பான்மையினரான பிரஞ்சு நாட்டினத்தவரின் நீலப் பகுதியாக இருக்கின்றமையால் அவர்கள் நிலப்பகுதி யின் அடிப்படையிலும் தம் உரிமைக் கோரிக்கைக3 அமைத்துள்ளனர்.
பிரிட்டனில் உள் ஸ்கொட்டிஷ் நாட்டினம், ஸ்கொட்லாந்து என்ற தனியான நிலப்பகுதிக்கு ഉ th மையுடையவர்கள் ஆதலால் பிரிந்து தனி, வாழ விழைகின்ருர்கள். ஐரிஷ் நாட்டினம், அயர்லாந்து என்ற தனியான நிலப்பகுதியைக் கெ 1ண்டிருந்தமை uLJ m 6i), பிரிட்டனிடமிருந்து பிரிந்து தனி நாட்டை ஆமை கிதார்கள் .

Page 25
மலேசிய நாட்டில் உள்ள சீன நாட்டினமும், தமிழ் நாட்டினமும் சிறுபான்மை நாட்டினங்களாக இருந்தும் தனிதனித் நிலப்பகுதிகளைக் கொண்டிரா மையால் பெரும்பான் ைD நாட்டினமான மலாய் நாட்டினத்துடன் இணைந்து வாழவும், பிரிந்து போக் முடியாமலிருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
உலகின் நாடுகள், நாட்டினங்கள் அமைதியாகச் சமாதானமாக வாழ வேண்டுமானல், ஒவ்வொரு நாட் டினமும் தனக்குரிய தனியான நிலப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். அந்த நிலப்பகுதி வரை யறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆட்சி எல்லேகள் அரசு எல்லகள் மாறி ணு,லும், நாட்டினத்துக்குரிய நில பகுதியின் எல்லைகள் மாரு திருக்கவேண்டும்.
முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல, உலகின் நிலப்பரப்பின் அளவு மாரு 1 லிருக்கவும், மக் கள் தொகை பெருகிக் கொண்டு போகவும் எவ் வளவு நிலப்பகுதியைப் பெற்றுவிட முடியுமோ, அவ்வளவையும் பெற்றுவிட வேண்டும், என நாட்டி ன ங்கள் கருதும் காலம் வெகு தொலைவில் இல்லை. மனிதனுக்கு இந் தச் சிந்தனை புதிய வாழ்வு முறை யைத்தரப் போகின்றது
ஏற்கனவே கூறியது போலத் தமிழ் ஈழ நாட்டினத்துக்கு இலங்கைத் தீவில் தனியான நிலப் பகுதிகள் உண்டு. தமிழ் ஈழ நாட்டினத்தினர் இந்த நிலப்பகுதியைப் பிறிதொரு நாட்டினத்திடமிருந்து கைப்பற்றியவர்கள் அல்லர். வழிமுறை வழிமுறை யாகப் பரப பரை பரம்பரையாகப் பல ஆயி ர ம் ஆண்டுகளாக இந்த நிலப்பகுதியைச் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலப்பகுதியைக் கைவிட்டால், பறிகொடுத்தால், தமிழ் ஈழ நாட் டினம் உலகின் வேறெந்த நிலப்பரப்புக்கும் செல்ல முடியாது. உரிமை கோர முடியாது.
கடல் எல்லைகள்
தமிழ் ஈழ நாட்டினத்தின் நிலப்பகுதியின் ஒரு பக்க எல்லை க்டலால் சூழப்பட்டுள்ளது: வங்களவிரிகுடாவின் அலைகள் தமிழ் ஈழ நிலப்பகு தியின் கிழக்கு, வடக்குக் கரையோரமெங்கும் வந்து மோதுகின்றன.
தென்கடல் எனப்படும் மன்னர் வளைகுடாவும் பாக்குத் தொடுவாய்க் கடலும், தமிழ் ஈழ நிலப்பகுதி யின் மேற்கு எல்லைகள், தென்கடலும் பாக்குத் தொடுவாயும் தமிழ் ஈழப் பகுதியைத் தமிழ்நாட்டு நிலப்பகுதியில் இருந்து பிரிக்கின்றன.
தமிழ் ஈழ நாட்டையும் தமிழ் நாட்டையும் கடல் வேருக்கினலும், கடல் வளத்தைப் பயன்படுத் துவதில் எல்லைகள் அமைய வேண்டுமல்லவா? இந்த எல்லைகள் வர் லாற்றுப் புகழ்பெற்றவை. முத்துக்

குளிப்பு உரிமைகள் தொடர்பாகத் தென்கடல், தமிழ் நாட்டுக்கும் தமிழ் ஈழத்துக்குமிடையே பங்கிடப்பட் டது. இருநாட்டு நில எல்லைகட்கிடையே உள்ள தூரத்தின் இடைநடுவணுக் உள்ள கோட்டின் அடிப் படையில், கடல் எல்லைகள் அமைந்துள்ளன.
இதே முறைப்படி பாக்குத் தொடுவாயிலும் கடல் எல்லைகள் உண்டு. தமிழ் ஈழ நாட்டையொட்டி அமைந்துள்ள தீவுக் கூட்டங்கள் தமிழ் ஈழ நாட்டுக் குரியவையே. மண்டைதீவு, வேலணை, காரைதீவு, எழுவைதீவு, அனலைதீவு, நயினுதீவு, நெடுந்தீவு, பாலை தீவு, கச்சதீவு என்பன தமிழ் ஈழ நாட்டுக்குரிய நிலப் பகுதிகளே. -
கடல் எல்லைகளைப் பொறுத்தவரையில் அனைத் துலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி முறை கள் உண்டு. ஒரு நாட்டின் கரையில் இருந்து முதல் மூன்று மைல் தொலைவும் நாட்டுக்குரிய கடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாட்டின் சட்டங்களும் விதிகளும் இக்கடலெல்லைக்குள்ளும் செல்லுபடியாகும். இந்த எல்லை பன்னிரண்டு மைல்களாக நீடிக்கப்பட்டு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அண்மைக் காலங்களில், நாடுகள், தம் நிலத் தில் உள்ள வளம் பயன்படுத்தப்படுவதுடன் தமது நிலத்தைச் சுற்றியுள்ள கடலின் வளத்தைப் பயன் படுத்தும் உரிமை, தமக்காக இருக்கவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளன. ஒரு நாட்டின் கடற்கரை யில் இருந்து இருநூறு மைல் தொலைவு வரையிலும், உள்ள கடல்பகுதி பின் வளங்கள் அந்த நாட்டுக்கே உரியவை என்ற எண்ணம் வேரூன்றி வருகின்றது.
தமிழ் ஈழ நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் எல்லைகள் தொடர்பாக, அண்மை யில், இலங்கை அரசும் இந்திய அரசும் மேற் கொண்ட உடன்படிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே. தமிழ் நாட்டில் உள்ளோர் கச்சதீவு தமிழ் நாட்டுக் குச் சொந்தமான நிலப்பகுதி என உரிமை கோரியதை யும், அதனல், தமிழ் நாட்டவர்கள் கச்சதீவுக்கு வழி மையான பிரயாணக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வந்து போவதற்கு வழி செய்யப்பட்டமையையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தமிழ் ஈழ நாட்டினத்தின் நிலப்பகுதியை ஒட் டிய கடலைப் பெறுத்தவரையில், தமிழ் ஈழ நாட்டுக் கும் தமிழ் நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் எல்லைகளை அமைத் துள்ளமையால், தென் கடல் எனப்படும் மன் ணுர் வளைகுடாவிலோ, பாக்குத் தொடுவாயிலோ, நாட்டுக்குரிய கடல், கடல்வள எல்லைகள் என்பன &l tք வில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகள்தான் அறுதி யானவை. எனினும் வங்காள விரிகுடாவில், தமிழ் ஈழ நிலப்பகுதியின் கடற்கரையில் இருந்து இருநூறு மைல் தொலைவு வரை உள்ள கடல் வளங்கள் தமிழ் ஈழ மக்களுக்கு உரியவை என்பதில் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. தமிழ் ஈழ நிலப்பகுதியின் கிழக்குக்

Page 26
羅こ力 క్రై వీక్షFg)*
期
3.
鬍6
I இாலி
தமிழ் ஈழம்
அளவு 1:3500000 容 Q
步
L
つ
بسيط
படம் எட்டு தமிழ் ஈழம் - கடல் எல்லே
தமிழ் நாட்டுக்கும் தமிழ் ஈழத்துக்கும் உள்ள கடல் உரிமை எல்லேகள், வங்காளவிரிகுடாவில் உள்ள கடல்வள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வங்ஜரள
இன மலே
மட்டக்களப்பு
இத்துப் பெருங்கடல்
i, தமிழ் ஈழத்தின் பாரம்பரிய உரிமையான முத்துக்குளிப்பு லேய எல்லைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
தேசிய நூலகப் பிரிவு
_エ一。。 リーリ

Page 27
கரையோரப் பகுதிகளில் இருந்து கடலுள் இருநூறு மைல் வரை உள்ள கடலின் வளத்தை, மீன் வளமா யிருந்தாலென், பெற்ருேவிய வளமாயிருந்தாலென், கணிப் பொருள் வளமாயிருந்தாலென், பயன்படுத்தும் உரிமை தமிழ் ஈழ மக்களுடையதாகும். தமிழ் ஈழ மக்களின் ஒப்பு தலின்றி இந்த வளத்தை வேறு எந்த நாடோ, நாட்டினமோ, கொள்ளக்கூடாது.
நாட்டின் எல்லேகள்
இலங்கைத் தீவின் நிலப்பரப்பில், ஆண்டாண்டு காலமாகத், தமிழர் எங்கெங்கு வாழ்ந்தார்கள் எனக் கூறுவது எளிது. தமிழர்கள்தான் இந்தத் தீவின் ஆதி குடிகள் என்பதையும், சிங்களவர்களின் முன்னுேர் களான விஜயனும் கூட்டாளிகளும் இத்தீவின் வந் தேறு குடிகள் என்பதையும், இரண்டாவது அத்தியா யத்தில் நோக்கினுேம்,
படிப்படியாகித் தமிழர்கள் தங்கள் வாழ்விடங் களேக் கரையோர நிலப்பகுதிகட்கு உரியதாக்கிக் கொண்டார்கள் - சிங்களவர்கள் தீவின் நடுப்பகுதியை யும் தெற்குப் பகுதியையும் தமதாக்கிக் கொண்டார் இள்.
இவ்வாறு வெவ்வேறு நிலப்பகுதியைத் தமதாக் கிக்கொண்ட இருநாட்டினங்களின் நிலப்பகுதிகளின் எல்லைகள் எவையாக இருக்கும்? நிலப்பரப்பில் எல்லே களை வகுக்கும்பொழுது, மலே, ஆறு, கடற்கரை போன்ற நில அமைப்புகளே எல்லேயாகக் கொள்வது, இன்றைய மரபு மட்டுமல்ல பண்டைய மரபும் கூட. வடவேங்கட மலைதான் தமிழ் கூறும் நல்லுலகின் வடக்கெல்லை எனவும், கடலேத் தொட்டு நிற்கும் குமரி முனைக் கடற்கரை தான் தெற்கெல்லை எனவும், இரண் டாயிரத்துக்கும் மே ற் பட் ட ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தொல்காப்பியனுர் கூறிஞர் நிலப்பரப்பைப் பகிர்ந்துகொள்ளும் நாடுக்ள் இன்றும்கூட, இயற்கை அமைப்புகளை முதலில் தேடுகின்றன. பின்னர்தான் வேறு காரணிகளைத் தேடுகின்றன.
இலங்கைத் தீவில் தமிழர்களின் வாழ்விடங் களில், குறிஞ்சி நிலம் மிகக் குறைவு. சமவெளிப் பாங்கான நிலமே அதிகம் சமவெளிப் பாங்கான நிலத்தில் ஆறுகள் குளங்கள் இஸ்ளன. கடற்கரை உண்டு. கடற்கரைகள் எல்லே யாக அமைகிறதை ஏற் கனவே பார்த்தோம். கிழக்குக் கரையோரம், வடக் குக் கரையோரம், மேற்குக் கரையோரம் என மூன்று திசைகளிலும் உள்ள கரையோரங்களையும், கடலுக் குள் உள்ள ஆதிக்க எல்லே, கடல்வள எல்லே என்பன வற்றையும் நோக்கினுேம்,
நிலப்பகுதியில் உள்ள இயற்கை எல்லைகளான, ஆறுகளும் குளங்களும்தான், தமிழர் வாழ்விடங்களைச் சிங்களவர்களின் வாழ்விடங்களில் இருந்து பிரிக்க முடியும். மேலைநாட்டவர்கள் பலர், மேலெழுந்த வாரியாகத் தமிழர் வாழ்விட எல்லைகளைக் குறிப்பிடும்

பொழுது ஆறுகளையே எல்லேகளாகக் குறிப்பிட்டுள் ளார்கள் என்பதை முந்திய அத்தியாயத்தில் பார்த்தோம்.
தமிழர் வாழ்விடங்களும் சிங்களவர்களின் வாழ் விடங்களும் ஆறுகளே அடிப்படையாகக்கொண்டே எல்லே வகுக்கப்பட்டன. இந்த எல்லைகள் இன்று நேற்றல்ல, மிகப் பழங்காலந்தொட்டு இருந்து வந் துள்ளன. சில காலங்களில் இந்த எல்லேகளிற் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். சோழர் காலத் தின் தலைநகரம் பொலன்னறுவையில் அமைந்திருந் தது. மாகனின் தலைநகரமும் பொலன்னறுவையே. இந்த மாற்றங்கள் பாரம்பரிய தமிழ் நிலப்பகுதிக ளில், அவற்றின் எல்லைகளில் அடிப்படை மாற்றங்க ளேக் கொண்டுவரவில்லை.
கும்புக்கன் ஆறுதான் தமிழ்ப்பகுதியின் தெற் கெல்லையாக அமைகின்றது ஆங்கிலேய ஆட்சியில் கிளெக்கோர்ண் என்பவர் , இளவை கங்கை வன் ர தமி ழர்க்ள் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மாணிக்க கங்கைக் கரையில் தமிழரின் வழிபாட்டிடமான கதிர் காமம் உள்ள்து. ஆதிக்க எல்லையாகக்கொண்டால், கும்புக்கன் ஆற்றையே தமிழ் ஈழ நிலப்பகுதியின் தெற்கெல்லையாகக் கொள்ள வேண்டும். கும்புக்கன். ஆற்றின் வடக்குக்கிளே அதன் தொடக்க நிலேயில் இருந்து, ஏனேய கிளேகளுடன் கடலில் சேரும் வரை, தமிழர் வாழ்விடத்தின் தெற்கெல்லையாக அமை கின்றது.
கல்லோயா ஆற்றின் தொடக்கத்தில் உள்ள கிளைகளில், தமிழ் ஈழத்தின் எல்லேக்கோடு தொடர் கின்றது .
கிழக்குக்கரையோரத்தில் உள்ள தமிழர் வாழ் விடங்களின் மேற்கு எல்லையாக மாவலி கங்கை ஆறு அமைந்துள்ளது. தமிழ் ஈழ நிலப் பகுதியின் எல்லைக்கோடு கும்புக்கன் ஆற்றில் தொடங்கிக் கல் லோய ஆற்றின் தொடக்கக் கிளைகளினூடாக வந்து, மாவ்லி கங்கையின் கிழக்குக் கிளே யின் தொடக் கத்தை அடைந்து, மாவலி கங்கையினருகாக, வடக்கு நோக்கிச் செல்கின்றது.
இன்றைய கிழக்கு மாகாண எல்லைகள், நிர்வாக வசதிக்காக, ஆட்சியின் எளிமை கருதி எழுந்தவை யாகும், பழுகாம வன்னிமையின் ஆட்சிக்காலத்தில் விந்தனைப்பகுதி, தமிழர் வாழ்விடமாக இருந்தது, அங்கு வாழ்ந்த வேடர்களின் தலைவர்கள் பழுகாம் வன்னிமைக்குத் திறை செலுத்தி வந்தனர். வேடர்கள் தமிழ்மொழி பேசக்கூடியவர்களாக இருந்தனர். இன்றைய கிழக்கு மாகாண எல்லைகள் விந்தனைப் பகுதியைக் கிழக்கு மாகாணத்துக்குள் உள்ளடக்க வில்லை. தமிழர் நிலப்பகுதியின் இயற்கையான எல்லே மா வலி கங்கையே,
1833-ல் எழுந்த கோல்புறுக் ஆனேக்குழுவின் விதப்புரைகளை நோக்குவோர், கோல்புறுக் வரை

Page 28
g
引
VA
స్థి?
سنگینامه 

Page 29
படத்தில், மாவலி கங்கையைக் கிழக்கு மாகாண எல்லையாக விதந்துரைக்கப்பட்டதைக் காணலாம்.
மாவலி கங்கையானது தெற்கே, கல்லோயா ஆற்றில் இருந்து தொடரும் தமிழ் ஈழ எல்லைக் கோட்டை எடுத்து, கந்தளாய்க் குளம் வரை கொண்டு செல்கின்றது. மாவலி கங்கை விடுகின்ற எல்லேக் கோடு கந்தளாய் ஆற்றில் தொடர்ந்து சென்று, யான் ஒயாவினச் சென்றடைகின்றது. யான்ஒயாவின் கிழ க்குக் கிளே ஆறு வழியாகத் தொடர்கின்ற எல்லைத் கோடு, கிழக்குக் கிளேயும் மேற்குக் கிளையும் சந்திக் கும் இடத்தில் திரும்பி, மேற்குக் கிளை வழியாகத் தொடர்கின்றது:
யான் ஒயாவில் இருந்து பாவற் குளம் வரை, ஆற் றுப்படுக்கை இல்லாத எல்லே அமைகின்றது. யான் ஒயாவின் மேற்குக் கிளை தொடங்கும் இடத்தில் இருந்து பாவற்குளத்தையொட்டிய அருவி ஆற்றுக் கிளே வரையுள்ள நேர்கோடு தமிழ் ஈழ எல்லையா கும். வவனியாவிற்கும் மதவாச்சிக்கும் இடைப்பட்ட இந்த எல்லை, இன்றுள்ள, வடமாகாண, வடமத் திய மாகாண எல்லையாகும். வரலாற்றுச் சிறப்பு டைய இந்த எல்லே ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
பரவற்குளத்தில் இருந்து அருவி ஆற்றின் கிளை களின் சந்திப்பில் உள்ள குளக்கரைக்குச் செல்லும் நேர்கோடு, அங்கிருந்து மோதரகம் ஆற்றின், தென் கிளையும் வட கிளேயும் சந்திப்புக்குச் செல்லும் நேர் கோடு என்பன, தமிழ் ஈழ எல்லேக்கோட்டைத் தாங்கிச் செல்கின்றன.
மோதரகம் ஆற்றின் தென்கிளேபிள் வழியா கத் தொடரும் எல்லேக்கோடு, கலாஒயாவின் கிளே ஆறுகள் ஒன்றினுடாகத் தொடர்கிறது.
புத்தளம் மாவட்டத்தின் இன்றைய எல்லைக் கோடு, தமிழ் ஈழ நிலப்பகுதியின் மேற்குக் கரையோர நிலப்பகுதியினைச் சிங்கள நாட்டின் நிலப்பகுதியில் இருந்து பிரிப்பதாகக் கருதலாம். வாய்க்கால் ஆறு எனப்படும் மா ஒயா வரை தமிழ் ஈழ நிலப்பகுதி பரந் துள்ளதை இந்த எல்லேக்கோடு காட்டுகின்றது. புத்த ளம் மாவட்டத்தில் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்த மையும், அங்கு தமிழரின் நீதிமுறை வழமையில் இருந் தமையும் வரலாற்றுச் சான்றுகள் பலவால் முந்திய இரு அத்தியாயங்களில் வி வ ரி க் கப்பட்டுள்ளன. எனவே இன்றைய புத்தளம் மாவட்டக் கிழக்கு எல்லை களைத் தமிழ் ஈழத் தொடர் எல்லைகளாகக் கொள்ள
o} |ffff},
கும்புக்கன் ஒயாவில் இருந்து தொடங்கி, கல் லோயா, மாவலி கங்கை, கந்தளாய் ஆறு, யான் ஒயா, அருவி ஆறு, மோதரகம் ஆறு. இலாஒயா ஆகிய ஆற் றங்கரை கரையோமாக வரும் தமிழ் ஈழ எல்லைக் கோடு புத்தளம் மாவட்ட எல்லைக்கோட்டுடன் தொடர்ந்து மர ஒயா ஆற்றின் கரையோரமாகச் சென்று இறைவுபுெறுகின்றது.
ميمية "

சிங்களவர்களின் வாழ்விடங்களில் இருந்து தமி ழர் வாழ்விடங்களைப் பிரிக்கின்ற நிலப்பகுதி எல்லைக் கோடு, இயற்கையான எல்லைகளே க் கொண்டதாகும். வரலாற்று எல்லைகளே க் குறிப்பதாகும். 1833ம் ஆண் டுக்குப் பின்னரும், சிறப்பாக 1948ம் ஆண்டுக்குப் பின்னரும், தமிழர் வாழ்விடங்களின் தனித்தன்மை மறைந்துகொண்டு வருகின்றது. 1948க்குப் பின்னர் தமிழரின் நிலப்பகுதிகளில் சிங் தள மக்கள் பரவலாகக் குடியேறி வருகின்றர்கள். குடியேற்றப்பட்டு வரு கின்ருர்கள்.
தமிழர்களாயிருந்த பல குடியிருப்புகள் சிங்கள மயமாக்கப்பட்டு விட்டன. ஒரு சந்ததிக்கு முன்பு வ்ரை தமிழ்ப்பேசிய பல குடும்பங்கள், சிறப்பாக எல் லேக் கோட்டின் அருகாமையில் உள்ள தமிழர்கள் இன்று கலப்பு மணத்தாலும், சிங்களமய மயக்கத் தாலும் சிங்களவராகியுள்ளனர். சிங்களப் பெரும் பான்மை ஆட்சியும் அரசியல் ஆதிக்க் மும் இதற்கு உடந்தையும் காரணமாகும்.
இதனுல் அருமருந்தன்ன தமிழரின் நிலப்பகுதி களைத் தாரை வார்த்துக் கொடுத்துவிடமுடியாது. வர லாற்றினூடாகத் தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகள் தமிழ் ஈழ நாட்டினத்தின் உரிமைச் சொத்து. இந்த நிலப்பகுதிகளில் அண்மைக்கால அரசியல் ஆதிக்கத்தி ஞல் ஏற்பட்ட இடைக்கால மாறுதல்கள், தமிழர் களின் பாரம்பரிய உரிமைகளை, உரிமைச் சொத்துக் களே, முன்ஞேர் வழி வழி வாழ்விடங்களைப் பறி கொடுக்க வகை செய்யக் கூடாது.
தமிழ் ஈழ நிலப்பகுதி தமிழ் ஈழ நாட்டினத்தின் உரிமைச் சொத்து உலகின் வேறெந்த நிலப்பகுதி யிலும் தமிழ் ஈழ நாட்டினம் உரிமை கொண்டா டச் சொந்தம் பாராட்ட முடியாது. அதுபோலத்தான், தமிழ் ஈழ நாட்டினத்தின் நிலப்பகுதியில் வேறெந்த நாட்டினமும், சொந்தம் பாராட்ட முடியாது.
a
உலகின் மொத் க நிலப்பரப்பு por Cappaio இருக் இன்றது. மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகின்றது. நில நெருக்கடிதான், மனிதனின் முக் கிய பிரச்சனையாகப் போகின்றது. இந்த நிலையில் தமி ழர் வாழ்விடங்கள் பேணப்படவேண்டும், பாதுகாக் அப்படவேண்டும்.
தமிழ் ஈழ நாட்டினம், தனது நிலப்பகுதியைப் பேணவேண்டும். பயனுறுத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும். இதற்கெல்லாம், வழி செய்யும் ஆட்சி யுரிமை தமிழ் ஈழ நாட்டினத்திடம் இன்று இல்லை. ஆட்சியுரிமை உண்டெனின், இல்லையெனின், தமிழர் இலங்கைத் தீவில் தமக்கென உரிய நிலப்பகுதியைச் சரியாகத் தெரிந்து, பேணப் பயன்படுத்தப் பாது காக்க, அதன் மூலம் தம் வாழ்வியல் நோக்கங்களே நிறைவுசெய்ய இடையரு முயற்சி செய்யவேண்டும்.

Page 30
உசாத்துணை
சங்க இலக்கியம் - பாட்டும் தொகுப்பும் ப்திப்பாசிரியர்
பாரி நிலையம் சென்னை. சத்தியநாதய்யர் ஆர்;டி பாலசுப்பிரமணியம் (1960) இ பக்கம் 1-538, அண்ணுமலைப் பல்க திருவள்ளுவர், திருக்குறள் - தெளிவுரை, டாக்டர் மு.
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமி தொல்காப்பியர், தொல்காப்பியம் புலியூர்க்கேசின் தெ திருச்செல்வம் மு. (1977) ஈழத் தமிழர் இறைமை ப Bechert, H. (1963) Ceylon Journal of Historical and Brohier, R. L. (1929) Ancient irrigation Part 3 ( De Silva, K. M. (1960) Ceylon Historical Journal Dharmaratna Thero, Buddhism in South India. Ellawala, H. (1969) Social History of Ceylon, Dep Frike C. & C. Schewitzer (1700) A relation of tw
D. Brown and others. Gieger, W. (1960) Culture of Ceylon - Mediaeval Ti Harichandra, Sacred City, Anu radii apura. Husain Mahdi (1953) The Rehla of Ibn Battuta, Fr Knox, Robert. A Historical Relation of Ceylon. Malalasekara G. P. Pali Literature. Mendis G. C. (1948). The Early History of Ceyloa Mendis G. C. (1956) The Colebrooke Cameron Pa Vol I & II pp 1-393 & pp 1-406 Oxf Mendis G. C. Ceylon - Today and Yesterday pp. 1Nadarajah T. (1972) The Legal Systems of Ceylon
Netherlands. Nell (1892) Ethnology of Ceylon J. R. A. S. C. B. V Nilakanta Sastri K. A. ( 195 ) Orient Longmans M Parana vita na S. Á f t (ind Culture of the Sinhalese. Pathmanathan, Dr. S. (1977) Personal Communicati Percra B.J. (1963) Ports of Ancient Ceylon, Histor Perera S. G. A History for Ceylon Schools pt. d: Pieries P. E. (1919) R. A. S. C. B Vol 28 (72) Colon Pieries R. (1956) is inhalese Social Organisation The Pieries R. (1954) Administration of Justice and Rever
Clegorn Viante" J. R. A. S. New Se Ragavan M. D. (1964) india in Ceylonese History Soci Sinnatamby J. R. (1968) Ceylon in Piolemy's Geogra (1972) Ceylon in Retrospect, Typescr. (1975) Tamil Nadu of Ceylon Mono (1972) Kolkie, Institute of Tamil (1973) Pandyans Ibid Vol. 3 (1965) An Elymological Study bid Stavrianos L. S. (1962) A Global history of Man pp. 1 Tennent J. E. (1859) Ces i on An account of the Isla Turner L. J. B. (1923) Collected Papers on the Hist
Ceylon Co. Ltd. Colombo. Velupillai A. (1971) Ceylon Tamil Inscriptions, Colo Wolpert S. (1965) India, Englel wood Cliffs W. J. Pre

எஸ். வையாபுரிப்பிள்ளை 1967 பதிப்பு, பக்கம் 1-808
திய வரலாறு, 2ம் பாகம்-இடைக்கால இந்தியா (1200-1707) லக் கழகம் சிதம்பரம்.
பரதராசன் (1949) பக்கம் 1-291 தென் இந்திய சைவ ட்டுடட் டு முன்னே, ரிவுரை (1961) பக்கம் 1-461. பாரி நிலையம் சென்&ன. கம் 1-95 கொழும்பு. Social Studies Colombo. Vol. 6. eylon Govt. Press Colombo.
Vól. 10.
of Cultural Affairs, Govt. Printing Press, Colombo. O several voyages ಇಂಟರೆಕ್ಕಿ into the East Indies. London.
mes Ed. Heinz Berchert, Veisbaden Otto Hanas soivitz.
anslation and Commentary; Oriental Institute Baroda.
YMCA Publishing House, Calcutta. pers; Documents on British Colonial Policy of Ceylon rod Uniy Press London. 146, Associated News Papers of Ceylon Ltd. Colombo.
in its Historical Setting pp. 1-306, E. J. Brill, Leiden
ol. 12 (4) Colombo. adras.
. ical Journal Vol. 1 Colombo,
Associated News papers of Ceylon Ltd. Colombo. θο.
Ceylon University Press Board Colombo. e in the Island of Ceylon under the Dutch Govt. "The 'ies Vol. I pt. Ipp. 125-151. ety and Culture, Asia Publishing House Bombay. phy - Publication Colombo.
pt, Available in Public Library, Jaffna.
raph, Available in Public Libraries in Jaffna & Batticaloa. tudies Madras Vol. 2
να 1, 6.
-776. Allyn & Bocan Inc. Boston. d; Longman Green - Britain. ry of Maritime Provinces of Ceylon 1795-1805 Times of
"150 . tice Hall.
2308.

Page 31
சுட்டி
அக்நாநூறு 5 அகவாழ்வு 2, 6 அபய கிரிவிகாரம் 6 அமெய்ன்ஸ் ஒப்பந்தம் 18 அயர்லாத்து 4 அரேபியர்கள் 2, 3, 6, 23 அரோசிமித் 16, 18, 19 ஆரியச் சக்கரவர்த்திகள் 9 இங்கிலாந்து 3 இந்தியா 23 இபன்பற்றுற்று 9 இராஜ இராஜ சோழன் 8 இராஜேந்திரசோழன் 8 இலிங்க வழிபாடு 5, 6 ஈழத்துப் பூதந் தேவனுர் 5
ஒல்லாந்தர் 12 ஒற்றையாட்சி 20 கறுப்புநிற மக்கள் 2, 3 函霹L厅 2寻 கால்டுவெல் 8 கியூபெக் 23
குறிஞ்சி 1, 2 குறுந்தொகை 5
கோல்புறுரக் ஆஃணக்குழு 20 தந்திவி மன்னன் 11 சந்திரபானு 9 - சந்திர மெளலீஸ்வரர் கோவில் 6, 7 சாலியூர், சாலிகே 6 சிவனுெளிபாத மலை 6, 7, 8 இயூம் 23 ஒனர், சீனம் 2, 6, 23, 24 சுவிட்சர்லாந்து 23 சேரர் 4 சோ குன் 3 சோழர் 4, 8, 9 தாமிரபரணி 6 தாமிரீகே 6 திராவிடர்கள் 5, 6 தேசவழமை 1, 5 தேவாரங்கள் 8 தேவேந்திரமுனே 5, 7 தகர்சார் நாகரீகம் 2, 5 நடராஜா, பேராசிரியர் 15

SMSqS SMeSTqS TSq qMMMSMSMS MSMS TS MSMS SqSqS MS SMS MSMSMSMMSqSMSMSMSMSMSMSMSMS STeMkMMMSeS
நற்றிணை 5 நாகர்கள் 5 நாட்டினங்கள் 3 நாம் தமிழர் 4 நாயன்மார்கள் 8 நிக்காய சங்கிரகம் 9 நெய்தல் 1 நோர்த், ஆளுநர் 18 பரதகுலம் 9 பாகிஸ்தான் 23 பாண்டியர் 4, 5, 6
Lifrža)
பிரஞ்சுப்புரட்சி 3
பிரிட்டிஷார் 16, 17, 18, 20 புறவாழ்வு 2 பெரொன், ஜே. டியு. 15 போர்த்துக்கேயர் 11 மருதம் 1, 2 மலஸ் சேகர 6 மலாய் மக்கள் 3, 22, 24
LIDT 55 Gör 9
மாதோட்டம் 5, 6, 7 முல்லை 1 மெயிட்லாந்து, தாமஸ் 18 மொகஞ்சதாரோ 5 யப்பான் 3, 23 வங்காளம் 23 Gurrah).Gar, T. La; rr. LDrr 1 1
விஜயன் 5, 6 வெள்ளைநிற மக்கள் 2, 3
றேலண்ட், அட்றியன் 12 ருெபெட், நொக்ஸ் 12 13 ருேயல் ஏஷியாடிக் கழகம் 6, 7 ஜயங்கொண்டசோழமூவேந்த
G23a u arriji 8 ஜோகன்ஸ் சைமன்ஸ் 16 ஜோன்ஸ்டன், அலெக்ஸாண்டர்
18, 20
ஸ்கொட்லாந்து 4, 23 sňrr Go) jTř 23 ஸ்வைட்சர், கிறிஸ்டோபர் 14 ஹரிச்சந்திரா 6 ஹரப்பா 5 பூரீ விக்கிரமராஜசிங்கன் 18

Page 32


Page 33