கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய மாமணி அ. ஸ. அப்துஸ்ஸமது நினைவு மலர் 2001

Page 1


Page 2


Page 3
S,GJIT GJTGJIT
நினைவி
அரை நூற்றாண்டுகளு தமிழிலக்கிய, இஸ்லாம அருந்தொண்டாற்றிய
ufDritshöllib sŚb. Su... |
 

அப்துஸ்ஸமது
பு மலர்
க்குமேல் ய தமிழிலக்கிய வளர்ச்சிக்கு
நினைவாக

Page 4
ஆன எoான நினைவு மலர்
முதற்பதிப்பு : டிசெம்பர் 2001
அச்சுப்பதிப்பு: மல்ட்டி ஒப்செற் அச்சகம்,
அக்கரைப்பற்று

தொகுப்பும் வடிவமைப்பும்:
எம்.ஏ.யூலெப்பை கவிஞர் பாலமுனை பாறாக் கவிஞர் அன்புடீன் ஆனா ஸானா கியாஸ் றிபாஸ் ஏ. அஸிஸ்
வெளியீடு:
ஆனா ஸானா நினைவு மன்றம், 92, 2/3 பொது வீதி, அக்கரைப்பற்று - 3

Page 5


Page 6


Page 7

6ữ) 6mdLDL B.A. (Hons)

Page 8


Page 9
பேராசிரியர் கலாநிதி எம்.எம்.தீன்முகம்மட் அல்ஹாஜ்.T.இப்றாலெப்பை (slogrome.S.Momofurt
elerLDsoof
மருதார்க்கொத்தன் 6.fesa JILJasmresub கலாபூஷண ஏ.இக்பால் அஸ்.கியாஸ் கலாபூஷண எஸ்.முத்தமீரான் விரிவுரையாளர் றமிஸ்.ஏ.அப்துல்லா விரிவுரையாளர் றாஹிலா வழியாட் பிஷ்ர்-அல்-ஹாபி அஸ்.சித்தி றிஜா யெகின் கலாநிதி எம்.எம்.உவைஸ் கே.எஸ்.சிவகுமாரன்
முல்லைமணி
டாக்டர் நந்தி
அந்தனி ஜீவா பாவலர்திலகம் பட்டவர்த் எஸ்.எம்.ஸெய்னுத் ஞானரதன் செல்லையா இராசதுரை அஸ்.அப்துஸ்ஸமது
හිමlobt
 

12 ممه
15 عمه
27 محم
29 ممه
38 =aه
... 39
44 ممه
... 49
65 م
• 70
75 ممه
78
83 ممه
863 ممه
88 தீன் 90
91 می
95
கவிஞர் பாலமுனை பாறாக் . 6 கவிஞர் ஜின்னாஹற் . 14 கவிச்சுடர் அன்பு முகையதின் . 18
கவிஞர் அன்புடீன்
கவிஞர் சடாட்சரன் மணிப்புலவர் மருதார் ஏ. மஜீட் கவிஞர் ஏ.ஆர்.ஏ.ஜவாட் ட்கவி. அக்கரையூர் அப்துல் குத்தாஸ்
al
கவிஞர் ஈழக்குயில் இத்ரீஸ் . கலையன்பன் எம்.ஏ.அஸிஸ் .
26
35
A3
56
67
68
69

Page 10
இந்தப் பிரதேசத்தில் மரணித்த இலக்கியவாதி ஒருவருக்கு வெ ஆய்வுரீதியான முதலாவது நினைவு மலர் இது.
ஈழத்துத் தமிழிலக்கியத்துறையில் காத்திர சிறப்பாக, இஸ்லாமிய தமிழிலக்கியத்துறையில் பேராசிரியர் உவைஸ் அவர்களுக்கு அடு அ.எலதான்.
பேனாவில் வாழ்ந்துகொண்டிருப்போர் பலருக்கு g5/6o6zoILITá5 gólkigy LITL656letraj6llé6ls/TG சான்றோனாக்கிய இலக்கியப் பிதா இவர்
இரத்த பாச உணர்வுடன் எல்லோருக்கும் 'காக்கா’ ஆன உறவுமுறையாளர் இவர்.
01.07.2001 L Lu. 7.00 up6oofiluu6m76písað அஸ்.மரணித்தார்.
நெஞ்சில் ஈரமுள்ள இலக்கிய நேயர்கள் பாலமுனை பாறுாக், அன்புமண், முத்துமிரா இவர்களுடன் இணைந்து எம்.ஏ.யூ.லெப்டை அஸ்வின் முற்றத்து மாமர நிழலின் கீழ் திர்மானம் எடுத்தனர், நினைவு மலரொன்றை வெளியிடவேண்டுெ
அடுத்தநாள், அஸ்.நினைவு மன்றம் உருவானது இம்மன்றத்தார் அயர்ச்சி கொள்ளாது எடுத்த முயற்சியால் முடிவில் நினைவு மலர் ஆச்சு
(4)ལས་གསལ། -
 

ளியிடப்படும்
DrøT LIBætsaf
/ ggagé766uuTItif
மன.

Page 11
இந்த நினைவுமலர் தமிழ் மொழியில் ஆர்வமும் விருப்பமும் சிறப்பாக, அஸ்.வைப்பற்றிய தேடலுக்கு
மிக சிரமப்படாமலேயே இதனை சாதிக்க இதற்கு,
அஸ்.வின் இலக்கிய சாதனை, இஸ்லாம் முஸ்லிம் சமுக எழுச்சி பற்றிய சிந்தனை எழுத்தினால் கவரப்பட்டபிரியமானோரின் வெள்ளமெனக் கிடைத்ததும் ஒரு சாதகம்.
அஸ்.வின் மகன் கலைஞர் அஸ்கியான அஸ்.வின் ஒன்றுவிட்ட சகோதரனின் பே ஆகியோரின் துணை நெறிப்படுத்தலும்
இம்மலரை வெளியிடப் பெரிதும் உதவிற்
மலருக்கு வாசனை தந்த ஆக்க இலக்கி ஆய்வாளர்கள், பேனாவால் அஸ்.வைச்
ஆக்க இலக்கியவாதிகள் சமுகப் புனரை நிர்மாணிக்கின்றனர்; சமுகத்துக்குப் புனர் இவர்களே சமுக சிந்தனைப் புரட்சிக்கும்
இவர்களின் சிந்தனைகளை இனத்தேர்வு அடுத்து வரும் பரம்பரை மதிப்பீடு செய்ய சமகாலத்தவர் பங்களிப்புச் செய்தல் வே
இது வாழுங்காலத்துக் கடடாயக்கடமை அஸ்.வுடன் வாழந்தவர்கள் இந்நினைவு மலரை வெளியிட்டுள்ளோம்.
மல்ட்டி ஒப்செற் அச்சகத்தார்க்கும் நெஞ்
மறுமையில் அஸ்.வுக்கு 'பிர்தெளஸ் .ெ இறைவனைப் பிரார்த்திப்போமாக.
92 2/3 பொதுவீதி அக்கரைப்பற்று

உள்ளோருக்கு ஒரு வெளிச்சம்.
முடிந்தது.
பிய உணாவு,
,
துணை
ύ 7ன் கலைஞர் றிபாஸ் ஏ.அளபீஸ்
st).
யவாதிகள் செதுக்கித் தந்துள்ளனர்.
மப்புக்களை
வாழ்வு கொடுக்கின்றனர்.
வித்திடுகின்றனர்.
செய்து
பத்தக்கதாய்
ண்ைடும்.
யென்பதை உணர்ந்து
சார்ந்த நன்றிகள்.
சார்க்கம் கிடைக்க
- வெளியிட்டுக் குழுவினர்.

Page 12
یه " چ3 یا یه S یه " و یه چ۹ نه " &
). pu., DJ i du s Jbl 505
ខ្លី ហ្វ្រិយ៏ gú : பெற்றோர் : மு.அ.அப்துஸ்ஸலாம் 接 சே.இ.ஆஸியா உம்ப ஜ் பிறப்பு 07.09.1929 - அக்கை : கல்வி : 1942 மெ.மி.பாடசாை 1946 அரசினர் ஆன 음 1950 எஸ்.எஸ்.சி.சித் 1954 - 1955 ஆசிரி அட்ட 1972 1975 ULI பி.ஏ.
களன 岑 கொ
ஆசிரியபணி: 1952 - 1953 கொ
MIDL 装 1956 - 1958 வீரத் 1959 - 1960 ஆன 1961 - 1966 அக்க 1970 - 1971 அக்க 藻 1972 - 1975 கிரா 装 கொ S. 1979 - 1989 அட்ட 逻 தமிழ்
1989 செப்
1996 வரை
S. ஆசி * இலக்கியப்பணி முதல் கட்டுரை - S. முதல் சிறுகதை - 装 சிறுகதைகள் - 75
கட்டுரைகள் - 100 ※ வானொலிப்பேச்சு -
வானொலி நாடகம் - வானொலி சஞ்சிகை
விருதுகள் : தாஜல் அதீப் 1989
இலக்கிய திலகம் 19 葵 இலக்கியமாமணி 199
SLLLLLLLLLSLL LLSLLLLSLLLLSLSSL SLL SLLLL LL LLL LLLL LL L SLS L LLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLSLSLLYLLSLLLSLLSLLALSLSSLLSLYLLLLLLLJLSLLLLS
(6)
 
 
 

LLL L LS LAL L A q S SSL L LSSL L LSSSLLLL LL LLLLLLLLS L SLLLLLLSLLLLLSLLLL LLLLLLL
x & y days
y
L 00 L S S S00 S LLCS 0S0C L0 0 S S0L LL LL SLL S SC LLLLL S SYE 0 S LSSSY LSS Y L S SS
ரப்பற்று
Dல - அக்கரைப்பற்று ர்கள் பாடசாலை - அக்கரைப்பற்று தி யர் பயிற்சி - ாளைச்சேனை ஆசிரியகலாசாலை ն ւIIգնւ
சிறப்பு ரி வித்தியாலங்கார சர்வகலாசாலை ழும்பு.
ஸ்லந்தை கனிஷ்ட வித்தியாலயம்,
ബ്
திடல் அ.மு.பா., கல்முனை
டியகடவத்தை அ.மு.பா., கம்பளை கரைப்பற்று மு.ம.வி. கரைப்பற்று மு.ம.வி. ன்பாஸ் அல்-நஸார் வித்தியாலயம், ழும்பு .ாளைச்சேனை ஆசிரியர் கல்லூரி
விரிவுரையாளர்
ரெம்பர் ஓய்வு
பகுதி நேர விரிவுரையாளர், ரியர் கலாசாலை, அட்டாளைச்சேனை.
1947 பெப்ரவரி 12 - தினகரன்
1950 நூர் ஜஹான் - தினகரன்
உருவகக்கதை 17 மேடை நாடகம் 3
30 (1956 முதல்)
25
நிகழ்ச்சி 1982 இலக்கிய மஞ்சரி
(முஸ்லிம் கலாசார அமைச்சு)
90 (மலேசிய கவிதைமாலை இயக்கம்) 6(தேசிய கலைஞர் பேரவை-அக்கரைப்பற்று)
'•'!*!*!*!*!*l'*'l''' '' ! ooooooo !' LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLSLLLLLLSLLLYLLL LLLYLLL LLLLLL
Y & X > 1 > X > X > X is
K
る。
ax
KR
参
○
s
N.

Page 13
N A at W at A V
பரிசுகள் :
Ze3.3.
நூல்கள் இலக்கியும்
江
1.
R
நாவல்
0.
r
3.
சிறுகதை
தொகுப்பு
Z
:
ustLBTib856ir: 1
>
R
குரும்பம்
a
பிள்ளைகள்:
a
1
2
3
4
முகவரி
. . . . . . . . . . . . . . . . . LLLLLL SLLLLLLLL LL LLLLL L LSL LL LLLLLL SLL
LSL LLLL LL LLL LLL LLLLLL LL LLLLL S T S Sq S S S Sq S q S S qqqq S 0S LSLS L LSLS L LLSS
W 1 YA " W M T W I VA I MY VA | M | W | M . *。 ک?
5.
7.
9.
12.
14.
15.
16.
WYw i WYN MYW o WYW o WW y WYAY! Mae
a 4
1977 எனக்கு வயது ப சிறுகதைத் தொகுதிக்க 1982 ‘பனிமலர்' நாவலு வீரகேசரி பிரதேச நாவ 1984 'கனவுப்பூக்கள் ந கொழும்பு முஸ்லிம் எழு
. சீறா இன்பம் - 1957 . சுலைமான் - பல்கீஸ் இஸ்லாமிய இலக்கிய
பனிமலர் - 1982
கனவுப்பூக்கள் -1982 தர்மங்களாகும் தவறு (தினகரனில் பிரசுரம்)
எனக்கு வயது பதின்
. தீன்மாலை -1987
(கஹவத்தை முஹம்
முற்றத்து மல்லிகை (ஈழத்து முஸ்லிம் புலி
10.பிறைப்பூக்கள் - 1979
(ஈழத்து முஸ்லிம் எழு
தொகுப்பு - 4வது இ
1. இலக்கியப் பொய்ை இலக்கியப் பொய்ை இலக்கியப் பொய்ை
தமிழ் இலக்கிய வி இஸ்லாம் வழிகாட்டி
3.
1961 விவாகம் : மு.மீற
. சித்தி றிஜாஎகீன் (19 . அஹற்மத்கியாஸ் (196 . சித்தி மர்லியா றபீக் . அஹற்மத் பறாபி (197
‘அன்பகம், அககரைப்ப
ΚΣ
to r
d

1888
தின்மூன்று க சாகித்திய மண்டலப் பரிசு க்காக
ல் பரிசு
ாவலுக்காக ஒத்தாளர் பேரவை பரிசு
சென்னை
1959 சென்னை நோக்கு - 1996
புகள் - 1987
மூன்று - 1977
மதுலெப்பை ஆலிம்)
- 1964
0வர் 57பேரின் கவிதைத்தொகுப்பு நூல்)
ழத்தாளர் 27 பேரின் சிறுகதைத் ஸ்லாமிய இலக்கிய மகாநாடு,
5 VI - 1959
85 VII - 1959
as VIII- 1961
விளக்கத்துணை 1968
னாவிடை 1983 (க.பொ.த.சாதாரணம்)
1972 (க.பொ.த.சாதாரணம்)
6mů6OTIT » LibLDT
63) எழுத்தாளர்
4) பி.ஏ., கல்வி டிப்ளோமா
(1967)
1) சிலின்கோ - அம்பாரை
ற்று.
LLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLL SLLLLLS A SLSL SL SL SL L LS SS LS SS LS SS L L S S S L S SSS S SSLSL LS SS L SSLLLLS SSLS S L SS SS LLLL °°°o,
W Y A M M W - W - Y A. W. A. Y. A a COOO L Y K L S L S S S 0 YL LLLL LL L L L
X܂ 2 R ܠX - � ܟ ݂ ܬ ܵ ܠ . �ܿ  ̄ ܬܟ . �
f Y
0.
d
7
Z
A.
KX
கொழும்
X
S
o's
=C7)

Page 14
எழுபத்திரனிடே ஆண்டு இதற்குள்ளே நிறைவுபெற்ற இலக்கியச் செழுமை மிக்க இனியவர் அஸ்.எங்கள் இதயங்கள் கலங்கிநிற்க:இந்த உலகையே பிரிந்துவிட்டார்! அழகிய முகமும், அணினார்
அன்பான பேச்சும் எங்கே?
‘பனிமலர்” நாவல் தந்து Uாராட்டும் பரிசும் பெற்றார்! *கனவினில் பூக்கள்” கண்டு கனதியாய்க் கதைகள் தந்தார்! “எனக்கென்ன வயதா, இல்லை” என்றுமே பதின்மூனி வறண்று சிறுகதைத் தொகுதி தந்து சிறப்புகள் அதிகம் பெற்றார்!
விருதுகள் நிறையப் பெற்றார் வீரகேசரியில் அணினார் பிரதேச நாவலுக்காய் பரிசுகள் கிடைக்கப் பெற்றார். அரசினர் பரிசை அணினார் éFTajPjuy 6lfgonafsb6)UgÖgDTít! “தர்மங்களாகிவிட்ட தவறுகள்” நூலும் தந்தார்!
ஒருதுறையல்ல, அஸ். பலதுறை வேந்தனி! விரிவுரையாளனி அஸ்- நல்ல சிறுகதையாளன் கவிமழை பொழிவோன், அஸ். கட்டுரையாளனி விமர்சகன் நாவலாளனி நாடகாசிரியன் அ.ஸ்.
பாடநூல் அநேகம் தந்து படித்திட மாணவர்க்கு வழிசமைத் திட்ட ஆசானி
 
 
 

î obi | Iu jo). Li Jij,
U6DUustant u6qbtbussofor “Uறைப்பண்ணை’ வைத்திருந்து தொகுப்புக்கள் தந்த நல்ல தொகுப் பாசிரியர் அஸ்.
கலாநிதி உவைஸ் அளித்த கெளரவம் அறிந்து, ஏற்று “பிறைப்பூக்கள்” தொகுதி தந்து பெரும்பணிபுரிந்தார் அஸ்.
முற்றத்துமல்லிகைகள் முழு மதிப் பறிய வைத்து புத்தகமாக்கித் தந்த புரவலர் நம் அஸ்.
இஸ்லாமிய நெறிகள் சார்ந்த இலக்கியத்தோடு நல்ல பரிச்சயத் தோ டிருந்த படைப்பாளன் நமது அஸ்.
“கலை . கலைக்காக” என்ற கருத்துடனிருந்தபோதும் அழகொடும் ஆற்ற லோடும் அனுபவத் தோடும் அணினார் எழுதியே படைத்த தெல்லாம் எளிமையாய் இருந்ததாலே பலருமே பழக்கச் செய்து, சமூகம் பயனர்பெறச் செய்தார் அ.ஸ்.
கனிவான இதயங்கொண்ட கலைஞனே நமது அ.ஸ். இனியவர் செருக்கில்லாத இலக்கிய வாதி அ.ஸ். usofalsT60T suffetb 66/160rபணியாளர் நமது அஸ். இனிவயங்கு காண்போம்? அந்த இனியவர் பிரிந்துவிட்டார்!

Page 15
அன்று இரண்டாம் கலீபா உமர்(ரழி) அவர்கள் முன்னிலையில் ஒருவருக்கு ஆதரவாக சாட்சியம் வழங்க ஒரு தோழர் வந்தார். யாருக்காக சாட்சியம் கூற வந்திருக்கின்றீரோ அவரைப்பற்றி உமக்கு நன்றாக தெரியுமா என்று கேட்டார்கள் உமர்(ரழி) அவர்கள். ஆம், அவரை நன்றாகத் தெரியும் என்றார் அந்த சாட்சி. அப்படியென்றால் எவ்வாறு உங்களுக்கு அவரைத் தெரியும்? என்று கேட்ட உமர்டுரழி) அவர்கள் சாட்சியின் விடையை எதிர்பாராது நீங்கள் அவரோடு பிரயாணம் செய்திருக் கின்றீரா என்று கேட்டார். ‘இல்லை" என்று கூறினார் சாட்சி. நீங்கள் அவரோடு கொடுக்கல் வாங்கல் செய்திருக்கின்றீரா? என்று கேட்டார் உமர்(ரழி) அவர்கள். ‘இல்லை" என்று கூறினார் சாட்சி. அதுவும் இல்லை என்றால் நீங்கள் அவரை நன்றாகத் தெரிந்து கொள்வதற்கு இன்னும் ஒரே யொரு வழிதான் இருக்கிறது என்று கூறியவராக நீங்கள் அவரது பக்கத்து வீட்டானா? என்று கேட்டார் உமர்(ரழி) அவர்கள். இதற்கும் இல்லை என்றே கூறினார். அந்த சாட்சியம் அளிக்கவந்த தோழரைப் பார்த்து உடனே சென்று வாருங் கள் நீங்கள், என்று அவரது சாட்சியத்தை ஏற்கமறுத்து அவரைத் திருப்பி அனுப்பி வைத்தார் உமர்டுரழி) அவர்கள்.
மனிதர்களை உளமாற அறிந்து கொள்ள புரிந்துகொள்ள உண்மையான வழிகள் இவை மூன்றும். ஒரு மனிதனின் நிரந்தரமான சுபாவம் அன்றாட வாழ்க்கை யில் வவன் பிரதிபலிக்கும் பண்புகள்
 

கலாநிதி தின் முவுறம்மது
இணைப் பேராசிரியர் தத்துவ ஒப்பிட்டுத்துறை, சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், இஸ்லாமாபாத், பாகிஸ்தான்.
என்பன இம்மூன்றினாலும் அழகாக அறியப் படுகின்றன என்பதில் யாருக்கும் சந்தேக மிருக்கமுடியாது.
அப்படியென்றால் பக்கத்து வீட்டான் எங்களது அன்பிற்குரிய அ.ஸ்.அப்துஸ்ஸமது அவர்களைப் பற்றிய சில நினைவுப் பதிவு களை இங்கு குறிப்பது மிகவும் பொருந்த மானதாகும். அன்பு , பணிவு, மனித நேயம், என்பன அ.ஸ்.வின் ஆளுமையென்று அழுத்தமாக நான் கூறின் அதில் மிகை இருக்கமுடியாது. ஈழத்திருநாட்டில் எத்தனை யோ முஸ்லிம், தமிழ் எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள் தோன்றி மறைந்திருக் கின்றார்கள். எம்மத்தியில் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள். இவர்களி லெல்லாம் மிகவும் புனிதமான வேறுபட்ட தான தனக்கென்று ஏற்றுக் கொண்ட இலட்சியப் பாதையிலே சிறிதும் நழுவாது திசைமாறாது தனது தனித்து வத்தை நிலை நிறுத்தியவர் அ. ஸ. ஒரு முஸ்லிம் எழுத்தாளனாக இயங்குகின்ற பொழுதுதான் தான் தனது வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டிருக்கும் அதன் பாரம்பரியத்தை சார்ந்தவனாகவே தனது எழுத்துக்கள் அமைய வேண்டும் என்பதிலும், தான் வாழ்கின்ற சமூகத்தில் - விஷேடமாக பல மொழிகள் பேசப்படுகின்ற, பல சித்தாந் தங்கள் பின்பற்றப்படுகின்ற சமூகத்தில் புரிந்துணர்வுடனும் சகிப்புத்தன்மையுடனும் அதேவேளையில் தன் தனித்துவம் பறிபோ காமலும் வாழவேண்டும் என்பதிலும் அசை யாத நம்பிக்கை கொண்டு வாழ்ந்து காட்டி யவர் எங்கள் அன்புக்குரிய அ.ஸ்.
C9)

Page 16
இந்தச்சந்தர்ப்பத்தில் இன்றைய ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் என்னைப் பொறுத்தவரை ஒரு தாரகையாக விளங்கும் என் அன்பு நண்பர் பாவலர் பஸிஸ் காரியப்பர் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்
O O. O. பண்பாடு இருவிழியாம் ஒன்று இந்தப் பாரொப்ப வாழுவத மற்று சொந்தப் பண்பாடு இஸ்லாத்தின் பண்பாடாகும் பழுதற்று வாழுவெனில் இரண்டும் ஒன்றி இன்போடு வாழ்ந்த பிறர் வாழவிட்டு இணைந்த நலம்பேணுவதே மார்க்கமாகும்.
என்று பாடியதை இங்கு நினைவு கூருகின்றேன்.
1970 ஆம் ஆண்டு என்று நினைக் கின்றேன். 'கலைப்பிரியன்' என்ற பெயரில் பின்பு பல சிறுகதைகளையும் கவிதை களையும் பத்திரிகைகளிலே வெளியிட்ட கிண்ணியாவைச் சேர்ந்த மெளலவி பரீத் என்பவர்,அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபிக் கல்லூரியில் சிரேஷ்ட மாணவராக இருந்தவேளை சிறுகதைத் துறைக்குள் பிரவேசிக்க அவர் முயற்சித்தபோது ஒரு கதையை எழுதி, அதைப் பத்திரிகைக்கு அனுப்ப முயற்சித்தார். அன்று அ.ஸ.வின் சிபாரிசு தேவைப்பட்டது. அவரது பக்கத்து வீட்டான் என்ற காரணத்தினால் ‘கலைப் பிரியன்’ எனது உதவியை நாடினான். கலைப்பிரியனைக் கையில் பிடித்தவாறு அ.ஸ.வின் வீட்டை நோக்கிச் சென்றேன். மாலை 5.00 மணி இருக்கும் அ.ஸ.வின் வீடு வந்து விட்டது என்று நான் கூறியதும் கலைப் பிரியனுக்கு ஒரு தயக்கம் ஏற்பட்டது. அவரது கையில் இருப்பதோ சிறுகதையில் அவரது கன்னி முயற்சி. நான் வழியிலே நின்று கொள்கிறேன், நீங்கள் கதையுடன் சென்று வாருங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார். அப்பொழுது எனக்கு வயது 14. கலைப்பிரியனின் சிறுகதை கையெழுத்துப் பிரதியுடன் அ.ஸ்.வின் வளவிற்குள் நுழைந்தபொழுது வீட்டு வாசற்படியில் அருகில் மனைவியுடன் திறந்தமேனியாக
(而)

அமர்ந்திருந்தார் அ.ஸ. என்னைக் கண்ட மாத்திரத்திலே “என்ன தீன்முஹம்மத். வாருங்கள்” என்றார். அருகே சென்று விடயத்தைக் கூறியதும் ‘எங்கே அந்தக் கதை? என்று கேட்டார். இதோ என்று நான் கொடுக்க சற்று நேரம் அதனைப் பார்த்துவிட்டு "தீன் முஹம்மத், முஸ்லிம்கள் கதையெழுதும் பொழுது இஸ்லாமிய கருப் பொருட்களை மையமாக வைத்து எழுத வேண்டியது கடமை. அதுவும் இவரொரு மெளலவி மாணவனல்லவா? இவரின் முதல் முயற்சியே மரபுதவறி வருவது ஆரோக்கிய மல்ல. நல்ல கருக்களை வைத்து இஸ்லா மியப் பின்னணியில் இவரது சிறுகதைகளை எழுதச் சொல்லுங்கள். மீண்டும் வரும் பொழுது அவரையும் அழைத்து வாருங்கள்” என்று கூறி என்னை அனுப்பினார்.
இது ஒரு சிறிய நிகழ்வாக இருந்தா லும் அ.ஸ்.வின் இலக்கியப் போக்ைைக சித்தரித்துக் காட்டுவதற்கு ஓர் அழகிய உதாரணமாகும். சீறா இன்பம் முதல் அவரது பெரும்பாலான படைப்பு களில் இவ்வுயரிய இலட்சியம் பிரதிபலிப்பதைக் காணலாம்.
அ.ஸ.இலங்கை முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களுள் சிறுகதை மற்றும் நாவல் துறையில் தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்ட எழுத்தாளன் மட்டுமல்ல. மிகவும் சுவாரசியமான கேட்போரின் உள்ளங்களை ஆட்கொள்ளக்கூடிய நகைச்சுவை நிறைந்த ஒரு பேச்சாளருமாவார். மேடைகளில் மட்டு மல்ல தனிப்பட்ட முறையில் அவரோடு உரையாடுவதும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்
fGBuu.
1976ஆம் ஆண்டு முதல் வெளி நாட்டிலே இருந்தும் கூட கடந்த 10 ஆண்டு களாக வருடத்திற்கு ஒருமுறை இரண்டு மாத விடுமுறையில் தாயகம் வருகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவு வதை இன்று மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் நினைத்

Page 17
துப் பார்க்கும் பொழுது அன்னாரது இழப்பின் துயரம் கனதியாகத் தெரிகிறது.
எனது விடுமுறை கழிந்து பாகிஸ்தா னுக்குப் பயணமாகும் போதெல்லாம் அன்றோ அதற்கு முன்தினமோ அவரிடம் விடைபெற்று வருவது எனது வழக்கம். ஆனால் கடந்த 2 வருடங்களுக்கு முன் ஓர் வித்தியாசமான நிகழ்வு நிகழ்ந்தது.
அடுத்தநாள் நான் பாகிஸ்தானுக்குப் பயணமாக இருந்தேன். எனது அன்புத்தாய் மற்றும் சகோதரிகளுடன் நான் உரையாடிக் கொண்டிருந்த மாலைவேளையது. எங்கள் வீட்டிற்கும் அ.ஸ்.வின் வீட்டிற்கும் இடையே உள்ள உள்வழியால் திடீரென நுழைந்து தூரத்திலிருந்தே இரு கைகளையும் நீட்டிய வாறே என்னை நோக்கி விரைந்து வந்தார் அ.ஸ. ‘நீங்கள் நாளை பயணமாக இருப்பதாக அறிந்தேன். அடுத்தமுறை நீங்கள் வரும்போது நான் இருப்பேனோ இல்லையோ சலாம் கூறிக்கொள்வோம் என்று கூறி என் இரு கரங்களையும் பற்றினார். நான் அவரிடம் செல்வது தான் வழக்கம் . இம்முறை அவராகவே வந்து அதுவும் வழமையாக வருவதுபோல் வராது உள்வழியாக வந்து எனக்கு விடை கூறிய போது எனது எண்ணங்கள் பல திசை களிலும் ஓடியது. என்மனதில் ஒரு வகை யான பரபரப்பும் ஏற்பட்டது. அவரது பலவீன மான உடல் நிலையும் எண் மனதை பாதித்தது. அடுத்தநாள் பாகிஸ்தானுக்கு சென்ற நான் தொலைபேசியில் என் விட்டாரிடம் தொடர்பு கொள்ளும் போதெல் லாம் அவரையும் விசாரிக்கத் தவறிய தில்லை.
ஆனால் அல்லாஹற்வின் நாட்டம் நான் இப்போது விடுமுறையில் வந்து அட்டாளைச் சேனை எனது தற்போதைய வசிப்பிடமாக இருந்தும் அ.ஸ். வின் பக்கத்து வீடான என் தாய்மனையில் நான் இருந்தபொழுது

அ.ஸ்.வின் வீட்டிலிருந்து அழுகையொலி கேட்டது. விரைந்து அங்கே சென்றேன். அ.ஸ். என்ற அந்த இனிய மனிதர் இறை யடி சேர்ந்துவிட்டார். அவருக் காக பிரார்த் தனை செய்தவனாக நின்று கொண்டி ருந்த நான் புன்னகையோடு உறங்குவது போன்று அன்னாரின் முகத்தை அன்று கண்டதை இன்றும் இரை மீட்டுக் கொள்கின்றேன்.
பக்கத்து வீட்டானாக இருந்தும் வருடத்தில் 10 மாதங்கள் தூரமாக வாழ் கின்ற எனக்கு இறுதி நாட்களில் அன்னா ரைச் சந்தித்து கதைப்பதற்கும் அன்னாரின் ஜனாஸாவில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்புத்தந்த அல்லாஹற்வுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
அ. ஸ. அக்கரைப்பற்றிற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. இலங்கை முஸ்லீம் களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. தமிழ்பேசும் நல்லுலகெங்கும் வாழுகின்ற அனைவருக்கும் சொந்தமானவரே!
அன்னாரின் படைப்புக்களைத் தங்க ளது பல்கலைக்கழக ஆய்வுக்காக எடுத்து நிற்கும் பல்கலைக்கழக மாணவர்கள் எத்த னைபேர். அன்னாரின் அடிதழுவி எழுத்துத் துறையில் பிரவேசித்து பிரகாசித்துக் கொண் டிருப்பவர் என்பதனை பேர். அன்னாரைத் தேடிவந்த பாராட்டுக்களும் பதக்கங்களும் எத்தனை! எத்தனை! இவற்றில் அவர் பெற்றவை சில; சென்று பெறாமல் விட்டவை பல. இத்தனைக்கும் மத்தியில் தன் ஆளுமை மாறாமல் தன் உண்மை நிலை தளராமல் எளிமையாக இனிமையாக வாழ்ந்த இலக்கியப் பொக்கிஷம் இவர்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் அக்கரைப்பற்று அன்னையின் பெயரை முத்திரை பதித்த உத்தம புத்திரர்களில் ஒரு முத்தானவர் எமது அ.ஸ்.என்பதே உண்மை!
C1D

Page 18
‘தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்ற திருவள்ளுவரின் வாக்குக்கமைய புகழோடு வாழ்ந்து மறைந்த நண்பர் அஸ்.அப்துஸ்ஸமது அவர்களைப் பற்றி சில வரிகள் எழுதுவது எனது பேறாகக் கருதுகிறேன். அந்த நல்ல பண்பட்ட உள்ளம் படைத்த பண்பாளர் நமது மத்தியில் தற்போது இல்லையாயினும் அன்னாருடைய சாந்தமான தோற்றமும் பண்பான செயல்களும் நம்மனதில் இன்றும் பசுமையாகவே இருக்கின்றன.
தற்போது அக்கரைப்பற்று தேசிய பாடசாலையாகத் திகழும் கல்லூரியில் நான் அதிபராகக் கடமையாற்றும் பொழுது நமது மதிப்புக்குரிய அ.ஸ.அவர்கள் தமிழ்ப்பகுதிக்குப் பொறுப்பாயிருந்து பணியாற்றினார். முஸ்லிம் பிள்ளைகள் இஸ்லாமிய இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவினைப் பெறவேண்டுமென்ற அவா வினால் தமிழ் பாடத்திட்டத்தில் ‘ஆ” பகுதி என்னும் இஸ்லாமிய இலக்கியத்தை அறிமுகப்படுத்தி தனது கற்பித்தல் திறமை யினால் மாணவர்களைத் தன்பால் ஈர்த்து பகிரங்கப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு களைப் பெறச்செய்தார். கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்றத்திற்கு அவரே பொறுப்பாயிருந்து பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, விவாதப் போட்டி என்பவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தி தமிழ்மொழி, தமிழ்இலக்கியம், பொதுஅறிவு போன்ற வற்றில் புலமை பெறச்செய்தார். இவருடைய அயராத உழைப்பின் காரணமாய் மாணவர் மத்தியில் இஸ்லாமியப் பண்புகள் நடத்தைக் கோலங்கள் மிளிரத் தொடங்கின. மேலும் மாணவர்க்குரிய பாடப்புத்தகங்கள், கட்டு
C12)
 

அல்வறாஜ் T.இப்றாலெப்பை ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர்.
ரைகள், பொழிப்புரைகள் போன்ற வற்றை எழுதி மாணவர்களை இஸ்லாத் திலும் கல்வியிலும் ஆர்வம் பெறச்செய்து பல நூற்றுக்கணக்கான நல்மாணாக்கர்களை உருவாக்கியுள்ளார். அவர் வகுப்புகளில் இருந்து கற்பிக்கும் முறை மிகவும் அலாதி யானது. கதிரையில் இருகால்களையும் மடக்கியிருந்து முதியவர்கள் சிறு பிள்ளை களுக்குக் கதை சொல்வது போலி ருந்து கற்பிப்பார். இதனை மாணவர்கள் பெரிதும் விரும்பிக்கற்றனர்.
தனது கல்வி அறிவையும் ஆற்றல் களையும் பெருக்கிக்கொள்ள வேண்டு மென்ற நோக்குடன் தனது வயது முதிர்ந்த காலத்திலும் பல்கலைக் கழகம் சென்று தமிழ்மொழி, தமிழ்இலக்கியம் போன்ற துறைகளில் உயர்கல்வியைப் பெற்று சிறப்புப்பட்டத்தை (B.A.Hons)யும் பெற்றார். இக்காலத்தில் உயர்ந்த கல்விமான்களோடு தொடர்பு கொண்டு தனது பண்பாலும் ஆற்றலாலும் அவர்களின் நன் மதிப்பை பெற்றார். பின்பு அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் தமிழ் விரிவுரை யாளராகக் கடமையாற்றினார். இக்கால கட்டத்தில் அன்னாரது செயற்பாட்டினால் கலாசாலையின் மூலைமுடுக்கெல்லாம் தமிழ் மணம் பரவத்தொடங்கியது. இவரு டைய கற்பித்தல் காரணமாக அனேகமான மாணவர்கள் சுயமாகவே கவிதை, கட்டுரை களையும் படைக்கும் ஆற்றல் பெற்றனர். மாணவர்களுடைய திறமைகளை வெளிக் கொணரும் நோக்குடன் கலாசாலையில் வெளியாகும் வருடாந்த சஞ்சிகையான கலையமுதம்'மலருக்குப் பொறுப்பாசிரியரா யிருந்து அவர்களின் ஆக்கங்களை வெளிப்

Page 19
படுத்தினார்.தனது ஆற்றலினாலும்,ஆளுமை யினாலும் பல நூற்றுக்கணக்கான நல்லா சிரியர்களை உருவாக்கி தனது பேரும் புகழும் அகில இலங்கையில் எல்லாப் பாகங்களிலும் பரவச் செய்தார்.
ஆற்றல் மிகு ஆசிரியர், ஆளுமை நிறைந்த விரிவுரையாளர் என்பதை எல்லாம் விட சிறந்த இலக்கியவாதியாகவே மக்கள் மத்தியில் மிகவுமு பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றார். அவருடைய கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள் , நாவல்கள் சமுதாய மத்தியில் நீங்காத இடத்தினைப் பெற்றுள்ளன. நல்லதொரு சமூதா யத்தை உருவாக்க வேண்டுமென்ற நல்நோக் குடன் தனது பேனாவைப் பயன்படுத்தினார். இதன் காரணமாக இலங்கையில் மாத்திரமல்ல தமிழ் நாட்டிலும் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தனர். மேலும் பல நூற்றுக்கணக் கான இலக்கிய நண்பர்களைப் பெற்றார். அன்னாருக்கு அரசாங்கம் பல பட்டங்களை யும் பரிசில்களையும் கொடுத்ததோடு பொன்னாடைகளையும் போர்த்திக் கெளர வித்தது. இவற்றை விட பல இலக்கிய வட்டங்களும் அன்னாரைக் கெளரவித்துள் ளன. இவருடைய இலக்கிய படைப்புகளே அன்னாரை நிைைத்து நிற்கச் செய்யும் என்பது எனது துணிவான நம்பிக்கை யாகும்.
அ.ஸ.அவர்கள் இஸ்லாமிய பற்று மிக்கவராகக் காணப்பட்டார். இஸ்லாத்தை தெளிவாக அறிந்து அதனை மாணாக்கர் மத்தியிலும் சமுதாயத்தின் மத்தியிலும் பரப்பும் நோக்குடன் பல மன்றங்களை அமைத்து செயற்பட்டார். இஸ்லாத்தில் அவருக்கு நிறையப் பற்றுதல் இருந்தது. ஆனால் அதில் ஒரு வெறி இருக்கவில்லை. இஸ்லாத்தின் தூய்மையான நோக்கங்களை மக்கள் உணரவேண்டும் என்பதற் காக அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாச லில் 'இஸ்லாமிய கலை கலாசார நூல் நிலையம்ஒன்றை ஸ்தாபிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வெற்றியும் பெற்றார். மார்க்கத்தின்

பெயரால் பல மூடக்கொள்கைகளை வெறுத் தார். இஸ்லாத்தையே தனது வாழ்க்கை முறையாக அமைத்து அதன்படி நடந்தார்.
தனது அறிவாலும் இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறையாலும் தனது குடும்பப் பின்னணியாலும் நல்ல ஒழுக்க சீலராகவும் பண்பாளராவும் மற்றவர்களுக்கு முன்மாதிரி யாகவும் வாழ்ந்து காட்டினார்.
பேராசை, அகங்காரம், பொறாமை, வஞ்சகம், நம்பிக்கைத்துரோகம் போன்ற தீய பண்புகளை வெறுத்து நல்ல விழுமியங் களைப் பின்பற்றி நடந்தார். போதுமென்ற மனம், வருவாய்க்கு ஏற்ற செலவு செய்து பெருவாழ்வு வாழ்ந்து மற்றவர்களுக்கு எவ்வித இடைஞ்சலும் கொடுக்காமல் அமைதியான முறையில் தனது வாழ்க் கையை நடாத்தினார். அன்னவருடைய இறுதிக் காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. அப்போதெல்லாம் அவருடன் பல அறி வார்ந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக்கிடைத்ததை பெரும் பேறாகவே கருதுகிறேன். இரண்டொரு மாதங்கள் அவர் நடப்பதைக் குறைத்து அமைதியான வாழ்க் கையை மேற்கொண்டிருந்தார். தனது நோயைப் பெரிதுபடுத்தாமல் மற்றவர் களுக்கு துன்பத்தையும் கொடுக்காமல் காணவந்தவர்களோடு இன்முகத்தோடு பேசிக்கொண்டிருப்பார். எந்த நேரத்திலும் தனக்கு நோவு, நோயிருப்பதாகக் காட்டிக் கொள்ளமாட்டார். எல்லா நாட்களையும் போல் தனது மனைவியுடன் பேசிக் கொண் டிருந்த போதே அவரது ஆவி பிரிந்தது. எவ்வித மரண வேதனையையும் அனுபவிக் காமல் அன்னாரது உயிர் பிரிந்தது மிக அற்புதமான காட்சியாகும்.ஒரு நல்ல அடியா னின் மரணம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு அ.ஸ.வின் மரணம் தக்க சான்றாகி விட்டது. எல்லாம் வல்ல ஏகன் அன்னாருக்கு ஜென்னத்துன் பிர்தெளஸ் என்னும் சுவர்க் கத்தை கொடுக்க வேண்டுமென்று பிரார்த்திப் GuIILDITEs.
=டு3)

Page 20
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் மாணவர்களாயிருந்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பெரிதும் மதித்து, அன்புடன் பழகி நேசித்த ஒருவர் தான் அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள். அவர் பாடசாலைகளிலும் சரி, பயிற்சிக்கலா சாலைகளிலும் சரி ஆசிரியர், மாணவர்கள், ஏனைய விரிவுரையாளர்களுடன் நெருக்க மாகவே பழகினார். அவருக்கு விரோதமாக எவருமே பேசியதை நான் கேட்டதில்லை. அவரின் குணநலன்களைப் புகழ்ந்து பேசாத பயிற்சி மாணவர் எவரையுமே என்றும் நான் சந்தித்ததில்லை.
எனது உறவினர்கள் பலர் எனது ஊர் கல்ஹின்னையைச் சேர்ந்தவர் எத்தனையோ பேர் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை,நூற்றுக்கு மேற் பட்டதாகவே இருக்கும். பயிற்சிக்காலத்தில் அவர்கள் எல்லோருமே என்னுடன் ஊரில் லிவு காலங்களில் வந்திருந்தபோது பல விடயங்களைப் பற்றிக் கலந்தாலோசனை நடத்தியதுண்டு. அப்படியான சமயங்களில் இலக்கியம் தொடர்பான பேச்சுக்களே மேலோங்கி நிற்பது வழக்கம்.
பயிற்சிக்கலாசாலையின் இலக்கிய விரிவுரையாளர் பற்றி அவர்கள் என்னிடம் நிறையவும் கூறுவார்கள். “அவர் படிப்பித் தால் பாடம் அப்படியே மனதில் நின்றுவிடும். எங்களுக்கு நன்றாக விளங்கும்படி விவரிப் பார். அதனை மீளவும் கூறி மனதில் அப்படியே பசுமரத்தானிபோல் பதியச் செய்து விடுவார்” என்று என்னிடம் பலர் கூறியுள்ளனர்.
1950களின் இறுதிப்பகுதியில் நான் 'தினகரன்” பத்திரிகையில் உதவிப் பத்திரா திபராயிருந்த சமயம், அவர் முதன் முதலில் என்னை வீடு தேடிவந்து சந்தித்தார். அதற்கு
C14)=
 

சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எம்.வறணிபா (கல்வறின்னைத் தமிழ் மன்ற நிறுவனர்)
முன்னரே அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவரும் நான் கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் மூலம் வெளியிட்ட புத்த கங்களைப் பார்த்தும் நான் அப்பொழுது பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளைக் கண்டும் என்னைப் பற்றி அறிந்திருந்தார். ஐம்பதுகளின் மத்தியில் வானொலியில் நான் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தியதுண்டு. ஒரு சில சிறுநாடகங்கள் எழுதி நான் 1956, 1957ம் ஆண்டுகளில் படிப்பித்த பாடசாலை யின் மாணவ மாணவிகளைப் பங்கு பற்றச் செய்து ஒலிபரப்பியுள்ளேன். அவை பற்றி யெல்லாம் தனக்குத் தெரியும் என்று முதல் சந்திப்பில் என்னிடம் கூறினார். அது மாத்திர மல்ல , 1954ம் ஆண்டு அக்டோபர் மாதம் கீழைத்தேயங்களுக்கு முஸ்லிம்கள் வந்த வரலாறு பற்றி நான் வானொலியில் பேசிய தன் சுருக்கம் ஒரு கட்டுரையாக இலங்கை வானொலி இருவாரத்திற்கொருமுறையான பிரசுரத்தில் (இலங்கை வானொலி வெளியீடு ஒக்டோபர்18,ஒக்டோபர்32,1954) வெளியா னது. அதைதான் எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகவும் சொன்னார். நான் அக்கரைப்பற்றுக்கு 1983ம் ஆண்டில் சுமார் முப்பதாண்டுகளுக்குப் பின்னர் போனபோது அந்தக் கட்டுரையை எனக்கு அன்பளிப்புச் செய்தார். அது இன்றும் என்னிடமிருக்கிறது.
என்னை அவர் தேடிவந்தபோது தான் பிரசுரித்த அத்தனை நூல்களிலும் ஒவ்வொரு பிரதி கொண்டுவந்து தந்தார். அவைபற்றி பத்திரிகையில் விமர்சனம் எழுதவேண்டும் என்றும் என்னைக் கேட்டார். நான் அந்நாட்களில் நூல்கள், திரைப்படங்களுக்கு 'தினகரன்’ பத்திரிகையில் விமர்சனம் எழுதி னேன். அவரின் நூல்களுக்கும் அவ்வப் போது விமர்சனங்கள் எழுதினேன். முதல் சந்திப்பின் பிறகு இலங்கை வானொலி

Page 21
நிலையத்திலும் லேக்ஹவுஸ் எனும் பத்திரி கைக் காரியாலயத்திலும் பல சந்தர்ப்பங் களில் சந்தித்து, இலக்கியம் தொடர்பான ஆலோசனைகள் நடாத்தியுள்ளோம்.என்னை வீட்டிலும் அவர் பலமுறைகளில் சந்தித்தார். என்னால் அவர் வீட்டுக்கு அவ்வளவு கால மும் போக வாய்ப்போற்படவில்லை.
கடைசியாக 1983ம் ஆண்டில் அக்க ரைப்பற்று ‘அன்பகம்” செல்லும் சந்தர்ப் பம் அமைந்தது. அவருடைய 'கனவுப் பூக்கள்’ நாவல் கல்ஹின்னை தமிழ் மன் றத்தின் பதினைந்தாவது பிரசுரமாக வெளி வந்தது. அக்கரைப்பற்றில் விமரிசையாக வெளியீட்டுவிழா நடைபெற்றது. அதில் நானும் பங்குபற்ற வேண்டும் என்று என்னை வற்புறுத்திக்கேட்டார். என்னால் மறுக்க முடியவில்லை. அக்கரைப்பற்றுக்குச் சென்று மூன்று நான்கு நாட்கள் தங்கி, வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதுடன் என்னுடன் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் படித்த பழைய நண்பர்கள் சிலரையும் சந்தித்து விட்டு வந்தேன்.
1988ம் ஆண்டில் இலங்கை ஒளிபரப் புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவினர் அவரைப் பேட்டி காண்பதற்கு ஏற்பாடு செய் தார்கள். பேட்டி காண்பவராக நான் பங்கு பற்றினேன். அந்தப் பேட்டி அவருக்கு மன நிறைவைத் தந்தது. அது அவரின் அறுபதாண்டு வயது பூர்த்தியைக் குறிக்கும் நிகழ்ச்சியாகவும் அமைந்தது.
மனிதப் பண்பு நிறைந்த ஒரு நல்லா சானாக அவர் திகழ்ந்தார். மனிதனின் அன்பைப் பெற்றவர்களை இறைவனும் நேசிக்கிறான் எனும் வாக்கொன்றுண்டு. அவர் அத்தனையளவு ஏனையவரின் நல்லன்பைப் பெற்றிருந்ததனால் போலும் அவருக்கு அல்லாஹற் நல்ல ஆற்றல்களை வழங்கியிருந்தான். இலக்கியத் துறையில் அவர் எல்லா அம்சங்களிலும் கைவைத் துள்ளார். கட்டுரை,சிறுகதை, நாவல், நாடகம், பாடப்புத்தகம் வெளியிடல் என்று அவர் தொடாத துறையே இல்லை. அவர் எடுத்த முயற்சிகளில் வெற்றியே கண்டார். நல்லுள்ளம் உள்ள எவர்க்கும் தோல்வி

வருவதில்லை. அப்படியான நல்லவரில் ஒருவர்தான் அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள் அதனால்தான் அவர் வெற்றியின் தோழனாய் இருந்தார். நல்லவர்களைக் கண்டு தோல்வி பயந்து நடுங்கி ஓடிவிடும்.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத் தின் ‘இலக்கிய மஞ்சரி” நிகழ்ச்சியில் அவர் கொண்டுவந்த புதுமைகள் அவரின் வெற் றிக்கு ஓர் உதாரணம். அவர் அந்நிகழ்ச் சியை நடாத்திய காலத்தில் மிக்க ஆவலுடன் இலக்கியவாதிகள் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நாளை எதிர்பார்த்திருந்தனர். அரியபெரிய நூல்களிலிருந்து கவிதை களைத் தெரிந்து விளக்கம் கூறியதுடன் பல நல்லறிவுத் தகவல்களை அவர் தந்தார். முக்கியமான இலக்கியகர்த்தாக்களின் நேர் காணல், அவரின் நிகழ்ச்சிகளில் இடம் பெற்றன. அப்படியானவர்களின் கருத்துக்கள் வெளியாகவும் அவர்களின் பணிகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவும் அவர் வகை செய்தார். இத்தனைப் பணிகளைப் புரிந்த தனால் அவர் இலக்கிய உலகின் நல்லணி கலனாகத் திகழ்ந்தார். அவர் மறைந்த தனால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இலக்கிய உலகுக்கோ தாங்கொணாத்துயர் அவர் பிரிவால் வந்துள்ளது.
1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளி யான எனது “இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி” எனும் நூலின் 53ம் பக்கத்தில் அவரின் சிறுகதைப் பங்களிப்புப் பற்றி எழுதி யுள்ளேன். அதே நூலின் 63ம் பக்கத்தில் அவர் எனக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப் பட்டவை பதிவாகியுள்ளன. அவர் இவ்வாறு எழுதினார். “உங்களுடைய அமைதியான இலக்கியப்பணியை மதிப்பவன் நான். நீண்ட காலமாக நீங்கள் ஆற்றிவரும் பணி காத்திர மானது. உங்களுடைய தொடர்பு எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
கிழக்கிலங்கையில் உதித்த இலக்கி யக் கதிரவன் ‘ஆனாஸானா” என எல்லோ ராலும் அன்பாக அழைக்கப்பட்ட பெருமக னின் புகழ் என்றுமே நிலைத்திருக்கும் அவர் இலக்கிய உலகை அழகுபடுத்திய சிறந்த தோர் அணிகலன்.
C15)

Page 22
கிழக்கிலங்கை ஒரு தீபத்தை இழந்தது தமிழ்த் தாய்க்கும் பேரிழப்புத்தான்
அ.ஸ.என்றோர் அறிவுசால் மைந்தர்.
பிறப்பவரெல்லாம் படைப்பவராகார் படைப்பவரனைவரும் புகழ் 拍 od 60DL 55T(bLD606)T நீயோ, தமிழ் படைத்துப் புகழ்படைத்தாய்
ջgաG601 அ.ஸ.வே,
இலக்கிய வயலில் ஆழமாய் உன்றன் நாமவித்தை ஊன்றிச்சென்றவன்.
p
ஒரு தசாப்தத்தின்
விடிவெள்ளி நீ காட்டிய வெளிச்சத்துள் தங்கள் நிழல்களையும் நிச்சயப்படுத்திக்கொண்டவர்கள் எத்தனைபேர்.
இனத்தை இனங்காட்டி எழுத்துக்கு உயிர்தந்தாய். அதனால்தான்
எழுத்துலகும்
D 6T66 இனங்கண்டு போற்றுகின்றது.
 
 
 
 
 

கவிஞர் ஜின்னவற்
உன்
நிரந்தர மெளனம் ஒரு அஸ்த்தமனத்தின் இறுதி மூச்சல்ல ஒரு விடியலின் சிலிர்ப்புத்தான்
உன்
தோள்தாங்க நான் வளர்ந்தேன். அதனால் தானோ, என்னால் பேனாவைக்கொண்டு புகழ்வாங்க முடிந்தது.
உயர்பெரும், உனக்கும் எனக்கும் ஒருவரே குருவாம். எந்தை புலவர்மனியின் பெறாமகன் நீ. அவர்வழி, இலக்கியம் படைத்து ஏற்றமுங்கண்டாய்!
இருபதாம் நூற்றாண்டின் இலக்கியச் சரிதம் அ.ஸ.வுக் கென்றோர் அத்தியாயத்தை அவசியம் தாங்கும் அதுவே சத்தியம்!
6Molog LDTLDT, உங்கள் ஆசீர்வாதங்கள் என்றும் என்பேனாவுக்கு ஊட்டவில்லைகள். உங்கள் பணிகள் என்னாலும் தொடரும். சாந்தி பெறுக! சுவனம் உங்களுக்குச் செந்தமாகட்டும்.

Page 23
1. அ.ஸ்.வின் அறிமுகம்:
தை 1970ல் 'மலர்” என்ற இலக்கிய மாத ஏடு வெளிவந்தது. அதற்கு முன்னோடி யாக 1969ம் ஆண்டு முழுவதும் இச்சஞ்சிகை யைத் தரமான இலக்கிய சஞ்சிகையாக வெளியிடும் நோக்குடன் பல தீவிர முயற்சி களை மேற்கொண்டிருந்தேன். நா.பா.வின் ‘தீபம்” அப்போது எனக்கு ஆதர்ஸமாக இருந்தது.
அக்கால கட்டத்தில் இலங்கையில் வெளிவந்த பல்வேறு சஞ்சிகைகளையும் தேடிப்பரிசீலனை செய்யும் வேகம் என்னுள் இருந்தது. “பாரதி” (மண்டுர்) மரகதம் (இளங்கீரன்) “பாடும் மீன்” (நீலாவணன்) “கலைச்செல்வி (சிற்பி) 'பாவை’ (அ.ஸ) முதலிய ஏடுகள் என்பார்வையில் பட்டன. அவற்றுள் 'பாவை’ சஞ்சிகையில் ஒரு தனித்துவம் இருந்ததை அவதானித்தேன். பிரதேச மணங்கமழ அச்சஞ்சிகை உருவாகி யிருந்தது. (அதற்கு முன்பே அ.ஸ. என்ற எழுத்துக்கள் என் மனதில் பதிவாகி யிருந்தன.) அவர் பாடசாலைக்கான பல வழிகாட்டி நூல்களை எழுதியிருந்தார். “முற்றத்து மல்லிகை” என்ற தலைப்பில் நமது பிரதேசக் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பு நூல் ஒன்றையும் வெளியிட் டிருந்தார்.
என்னைப் பொறுத்தவரை திருகோண மலைக்கு ஒரு வ.அ.போல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அ.ஸ்.என்ற மனப்பதிவே அப்போது இருந்தது. (இப்போதும் தான்)
எனது 'மலர்” இதழுக்கு இந்த இருவரிடமும் சிறுகதை கோரிக்கடிதம் அனுப்பினேன். நான் சற்றும் எதிர்பாராத வகையில் இருவரிடமிருந்தும் சிறுகதைகள் வந்து சேர்ந்தன. வ.அ.வின் கதை
 

“காட்டுப்பூ”.அ.ஸ்.வின்கதை “வர்ணபேதம்” புதுமையின் வடிவமைப்பு.
2. வர்ணபேதம்:
இச்சிறுகதையின் வார்ப்பு இன்றுவரை வேறு எவரும் தொடாத புதமையாகவே இருக்கிறது. மனிதனிடமுள்ள 7 குணங்களை வானவில்லில் உள்ள 7 நிறங்களும் பிரதி பலிக்கின்றன."VIBGYOR” என்று அழைக் கப்படும் இந்த நிறங்கள் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு. சிவப்பு என்பனவாகும். இதன் அடிப்படையில் 7 குணசித்திரங்களைக் கொண்ட 7 பாத்திரங் களைப்படைத்து அ.ஸ.அந்த “வர்ணபேதம்” என்ற சிறுகதையை உருவாக்கியிருந்தார். எடுத்த எடுப்பிலேயே அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. 'மலர்” முதல் இதழில் (தை 1970) அக்கதை பிரசுரமானது.
அக்காலகட்டத்தில் ‘வேதாந்தி’ (மு.ஹ. சேகு இஸ்ஸதீன்) எனக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் இக்கதையை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் அஸ.‘வர்ணமயக்கம்” என்ற தலைப்பில் ஒரு விளக்கம் எழுதியிருந்தார். அதைப் படித்தபோது ஒரு சிறுகதையின் பாத்திர உருவாக்கத்தில் அ.ஸ்.எவ்வளவு நுட்பமாக ஈடுபடுகிறார் என்பதை அறிந்து மிகவும் பரவசப் பட்டேன்.
அதற்குப் பின் அவருடைய பல சிறுகதைகளை நான் படித்துள்ளேன். அவர் கதைகளில் ‘பாத்திரவார்ப்பு” எப்போதுமே மிகச்சிறப்பாக அமைந்திருக்கும். அவை உயிருள்ள பாத்திரமாக நடமாடும் - மனதில் பதிவாகும். பேச்சுத் தமிழ் அதிகம் இல்லா மலே பாத்திரங்களின் குணசித்திரங்களை அவர் வெளிப்படுத்துவார். “பேச்சுத் தமிழ்
-C17)

Page 24
இல்லாமலே தனது கதைகளில் மண் வாசனை வீசச்செய்வார். அது அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.
99
3. "மலர்” தொடர்புகள்:
இந்த நிகழ்வுக்குப் பின் அஸ"மலர்” சஞ்சிகையோடு மிக நெருக்கமான தொடர்பு களைக்கொண்டிருந்தார்.அடிக்கடி சந்திப்பார். ஆலோசனைகளைக் கூறுவார். துணுக்குகள் அனுப்புவார். (நகைச்சுவைத் துணுக்குள் உட்பட) அவர் தனது மனதை மிகவும் பாதித்த ஒரு விடயம் பற்றி ஒரு சிறு குறிப்பை 'மலர்' சஞ்சிகைக்கு அனுப் பியிருந்தார். அதையிட்டு இங்கு குறிப்பிட்டே யாக வேண்டும்.
இலங்கையின் மிகவும் மூத்த ஒரு கலைவாதி பிஷ்மபிதாமகர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஆவார். அவர் ஆங்கில கலாசார பின்னணியில் வளர்ந் திருந்தாலும் பிற்காலத்தில் இலங்கை எங்கும் கால் நடையாகச் சென்று இலங்கை யின் கலைப் பொக்கிஷங்கள் பற்றி மிகவும் காத்திரமான ஆய்வுகளைச் செய்து அவற்றை ஆங்கில நூல்களாக வெளியிட்டு ஈழத்தின் கலைப்பாரம்பரியத்தை மிகவும் பிரபல்யப்படுத்தியவர். ஆனாலும் இலங்கை மக்கள் அவரை மிக இலகுவாக மறந்து விட்டனர். அவரது நினைவு விழாக்களோ, அவரை மகிமைப்படுத்தும் நிகழ்வுகளோ எதுவும் நடைபெறுவதில்லை. ஆகஸ்ட் 17 அவரது நினைவு தினம். அதை நினைவூட்டி இலங்கை மக்களின் - குறிப்பாக இலங்கைத் தமிழரின் கும்பகர்ணத் தூக்கத்தையிட்டு அவர் கடுமையாக விமர்ச்சித்து ‘ஆகஸ்ட் 17” என்ற தலைப்பில் அக்குறிப்பை எழுதி யிருந்தார்.அது ஒரு சிறிய ஊசிதான். அத னால் கும்பகர்ணத்துக்கத்தைக் கலைத்து விடமுடியாது தான். ஆனாலும் அது அ.ஸ். வின் மனப்பதிவுகளுக்கு ஒரு சான்றாக அமைகிறது அல்லவா?
4.தேடல் முயற்சிகள்:
அ.ஸ்.வின் தேடல் முயற்சிகள் பற்றி
C18)

அவருடன் தொடர்புடையபலரும் நன்கறிவர். அவ்வாறே அவரது விடாமுயற்சியும் உழைப்பும் கனம் பண்ணவேண்டியவை ஆகும். சாதாரணமாக ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்த அவர், பின்னர் தனது சுயமுயற்சியால் பட்டதாரியாகிப் பின்னர் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை தமிழ்ப்பேராசானா கவும் பணியாற்றினார்.
அவர் கொழும்புப் பாடசாலை ஒன்றில் கடமை ஆற்றிக்கொண்டே தனது பட்டப் படிப்பையும் மேற்கொண்டிருந்தார். (இவ்வாறு வேறுபல முஸ்லிம் ஆசிரியர்களும் முயற்சி மேற்கொண்டனர்) இக்காலகட்டத்தில் இலங்கை வானொலியில் ஒரு தொடர் நிகழ்ச்சியையும் (இலக்கியமஞ்சரி) அவர் நடாத்திக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி கிழக்கிலங்கை கலை இலக்கிய முயற்சி களுக்கு அதிக அளவில் களம் அமைத்துக் கொடுத்தது.
இக்காலகட்டத்துக்குச் சற்று முன் பின்னாக எழுத்தாளர் எஸ்.பொ. இவருடன் உரசிக்கொண்டது நினைவுக்கு வருகிறது.
அப்போது எஸ்.பொ.“கொண்டோடிச் சுப்பர்” என்ற வக்கிரமான புனைபெயரில் புகுந்து கொண்டு மட்டக்களப்பு எழுத்தாளர் பலரையும் சகட்டு மேனிக்கு மட்டம் தட்டிக் கொண்டிருந்தார். (அப்போது அவருக்கு ‘வெள்ளங்காடு', 'வியாகேசதேசிகர் போன்ற பல புனைபெயர்கள் இருந்தன.) அவரது கண்டனக்கட்டுரைகள் வீரகேசரி வார இதழில் தொடர்ந்து வெளிவந்தன. யாரும் அதற்குப் பதில் எழுதுவதில்லை - எழுதத் துணிவதில்லை!
ஆனால் அ.ஸ்.மேல் அவரது அம்பு பட்டதும் அ.ஸ.சிலிர்த்தெழுந்தார். காரசார மான பதிலடி கொடுத்தார். அவர் தனது பதிலில் எஸ்.பொ. பற்றிக் கூறும் போது இவர் கொணி டோடிச்சுப் பர் அல்ல கொண்டிறக்கிச்சுப்பர்’ என்றும் குறிப்பிட்டிருந் தாா.

Page 25
5. அ.ஸ்.வும் விமர்சகர்களும்,
ஈழத்துத்தமிழ் இலக்கிய விமர்சகர்கள் பலர் அன்று முதல் இன்றுவரை மார்க்ஸிஸப் பண்ணையில் வளர்ந்தவர்களாக இருப்பதால் நடுநிலை அற்றவர்களாகவும் மார்க்ஸிஸப் பண்ணையைச் சேர்ந்தவர்களின் படைப்பு களைத் தூக்கிப் பிடிப்பவர்களாகவும் இருப்பது யாவரும் அறிந்த சங்கதி.
இத்தகைய போக்கினால் நீலாவணன், அ.ஸ, பாண்டியூரன் முதலியோர் இரண்டாம் படியிலேயே வைக்கப்பட்டனர். அந்த வகை யில் இளங்கீரனுக்குக் கொடுத்த முக்கியத்து வம் அ.ஸ்.வுக்கு கொடுக்கப்படவில்லை. இளங்கீரனுக்கு 'தினகரன் முழு ஆதரவு வழங்கியது. அவரது தொடர் கதைகள் அதில் தொடர்ந்து வெளிவந்தன.இத்தகைய ஒரு பின்னணியில் அஸ்.எதிர்நீச்சல் போட்டு அவர் தனக்கென ஒரு இடம் பிடித்துக் கொண்டார்.
ஏற்கனவே அவர் தொகுதத பிறைப் பூக்கள்’ சிறுகதைத் தொகுதி 1979ல் பாணந்துறை இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் வெளியீடாக வந்திருந்தது.
அதற்குமுன் அவர் தொகுத்த “முற்றத்து மல்லிகை” கவிதைத் தொகுப்பு 1964, அக்கரைப் பற்று பிறைப்பண்ணை வெளியீடாக வெளி வந்திருந்தது. (இது அஸ்.உருவாக்கியவெளியீட்டகம்) “எனக்கு வயது பதின்மூன்று’ என்னும் அவரது சிறுகதைத்தொகுதியும் இதே பிறைப் பண்ணை வெளியீடாக 1977ல் வெளிவந்தது. அவரது 'கனவுப் பூக்கள்’ 1983ல் கல்ஹின்னை தமிழ்மன்றத்தின் வெளியீடாக வெளிவந்திருந்தது.
எவ்வாறாயினும் சுமா 40 ஆண்டுக் காலம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் கணிசமான பங்களிப்புச் செய்த அ.ஸ்.வுக்கு விமர்சகர்கள் உரிய இடம் அளிக்கவில்லை என்பதே எனது கருத்தாகும். அதை ஈடு செய்யும் வகையில் இனிமேலாவது அவரது ஆக்கங்கள் தகுந்த முறையில் ஆய்வு செய்யப்பட்டு ஈழத்து இலக்கியப் பரப்பில்

அவரது தனித்தும் நிறுவப் படவேண்டும். 6. இறுதிச் சந்திப்பு:
என்றும் மறக்கமுடியாதபடி என் நெஞ்சில் ஆழப்பதிந்திருக்கிறது இச்சந்திப்பு. 1999ல் அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஒரு மீலாத் விழாவில் கலந்து கொள்வதற்காக நானும் மட்- மாவட்ட கலாசார உத்தி யோகத்தர் க.தங்கேஸ்வரியும் அக்கரைப் பற்றுக்கு வந்திருந்தோம்.
அப்போது அ.ஸ். சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஓரளவு தளர்ந்த நிலையில் சிலர் அவரை மேடையில் ஏற்றி விட்டனர். அவர் இறுதியாக வெளியிட்ட ஒரு நூலின் பிரதியுடன் வந்திருந்தார். மேடையில் ஏறியதும் நூலை என்னிடம் கையளித்து என்னைக் கட்டித்தழுவினார். என் கண்கள் பனித்தன. அவர் எனது தந்தையாக அப்போது எனக்குக் காட்சியளித்தார். ஒரு மூத்த எழுத்தாளர் பகிரங்கமாக இவ்வாறு எனக்கு மரியாதை செய்தது ஒரு அபூர்வ நிகழ்ச்சி. இதுதான் உண்மையான இலக்கிய உள்ளம். இலக்கிய வாதிகள் எப்போதும் உள்ளத்தால் உயர்ந்தவர்கள் என்பதற்கு அ.ஸ்.ஒரு சான்று.
இதில் ஒரு முக்கியமான விடயத்தை யும் குறிப்பிடவேண்டும். அச்சந்தர்ப்பத்தில் யாழ் ஆரிய சக்கரவர்த்திகள் மற்றும் மதிதுங்கன் தொடர்பாக அ.ஸ.தினகரனில் எழுதிய கட்டுரைக்கு தங்கேஸ்வரி ஒரு மறுப்புக்கட்டுரை எழுதியிருந்தார். ஆனாலும் தங்கேஸ்வரியை அவருக்கு அறிமுகம் செய்ததும் அகமும் முகமும் மலர அவரை வாழ்த்தினார். நிறையப் பேசினார். (துர திர்ஷ்டவசமாக அதுவே கடைசிச் சந்திப்பாக வும் அமைந்து விட்டது) அன்று மேடையில் நீண்டநேரம் அவரால் இருக்கமுடியவில்லை. இடையில் அவர் எழுந்து சென்றுவிட்டார். ஆனாலும் அவரது அந்தப் பெருந்தன்மை இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. உள்ளத்தால் உயர்ந்தவர் அ.ஸ். வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு (குறள்)
-- n =G19)

Page 26
கவிச்சுடர் அணி
ஆற்றல் உடையவரை அறிஞ போற்றத் தகுந்த புனிதபணி நெஞ்சிலே என்றும் நினைக்க கொஞ்சமும் அந்தக் குமரர்கt
எத்தனையோ மாந்தர்கள் எம அத்தனை பேர்களுமா அகங் வித்துவத்தால், தனிச்சிறப்பா6 புத்தகத்துக் குள்ளே புதைந்து வித்தகனாய் எமக்குள்ளே வி
சின்னவயதிலேயே செந்தமிை காதலித்த காரணத்தால் காத தன்னைப்போல் மற்றவரும் த எண்ணம் அவருக்குள் இருந்த உன்னி உழைத்தார் உயர்ச்சி
எல்லாத் துறைகளிலும் எங்க கைவைத்துப் பார்த்துள்ளார் கட்டுரை, நாவல், கவிதை, சி நாடகம் என்றெங்கள் நாயகம் கொஞ்சமா இங்கே கூறுவதற் சின்னவரும் இன்று சேவைசெ காலத்தில் எமக்கோர் காவிய
பாடநூல் எழுதி தமிழை படி காட்டினார் பாதை கரைசேர நாட்டில் புதிய நவயுகம் தோ வீட்டின் கதவுகளை விரியத்
இலங்கையில் மட்டுமல்ல இந் நாட்டின் புகழை நறுமணம் ெ படித்தவர்கள் ஆனாஸானா ப கண்டுமகிழ்ந்தார்கள் கரம்தட் வானொலியில் கூட வளர்த்தெ தேனாக வந்து தினமிங்கே ஒ
எல்லோரும் போல இருந்தவர வல்லவராய் இருந்து வரலாறு சொல்லாலும் என்றும் சுவைநீ எல்லோர் மனங்களிலும் எப்ே
பேராசான் ஆனாஸானா பேரிபூ தாங்குவதற்கு முடியாது தவி காலம் அவனை கடந்து விட காலத்தை வென்றந்த கவிமக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்பு முகையதின்
ர் மறப்பதில்லை செய்தவரை
மறப்பதில்லை! ர் இறப்பதில்லை!
க்குள்ளே பிறந்தார்கள் களை வென்றார்கள் ஸ், விவேகத்தால், ஆற்றலினால் து கிடந்தவர்தான் ளங்குமணி ஆனாஸானா.
ழக் காதலித்தார் லனாய் அவர் ஆனார் லைநிமிர வேண்டுமென்ற தனால் எப்பொழுதும் க்குப்பாடுபட்டார்.
ளது ஆனாளலானா கரம்சோர விடவில்லை! றுகதை,
செய்தவைகள் கு இடமில்லை! ய்தோம் எனச்சொல்லும் மாய் அவர்வாழ்ந்தார்.
டிப்பிக்க முயன்றவர்க்கும் வழிசெய்தார். ன்றுவதற்கும் திறந்து வைத்தார்.
தியாவில்கூட சய்யவைத்தார். டிப்பாற்றல் தனைப்பார்த்து டி ஆர்ப்பளித்தார்கள்
நடுத்த நாடகங்கள் டினது
ா ஆனாஸானா
படைத்தளித்தார் ைெறந்த பேச்சாலும் பாதும் ஆட்சிசெய்தார்
ஜப்பு உண்மையிலே க்கின்றோம் என்னசெய்வோம்! வில்லை!
கன் இனிவாழ்வான்.

Page 27
ஜனாப்.அ.ஸ்.அப்துஸ்ஸமதும் நானும் சமகாலத்தில் ஆசிரிய பயிற்சி பெற்றோம். அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலா சாலையில் தமிழ், சித்திரம் ஆகிய பாடங் களின் விரிவுரையாளராக இருந்த திருமிகு பி.வி.கணபதிப்பிள்ளை அவர்கள் சீறாப் புராணம் கடவுள் வாழ்த்து, நாட்டு, நகரப் படலச் செய்யுள்களை வகுப்பறையில் கற்பித்தார். கம்பராமாயணக் கவிச்சிறப்பை சீறாப் புராணமும் நிகர்த்திருப்பதை ஒப்புமை கூறி அவர் விளக்குவார். தமிழ்ப்பாடம் எங்களுக்குத் தித்தித்தது. பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும் நாங்கள் அரை யாண்டுப் பயிற்சி பெறவேண்டியிருந்தது. அங்கு பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளை அவர்கள் தமிழ் படிப்பித்தார். அவரும் சீறாப்புராணச் செய்யுள் களை நெஞ்சைக் கொள்ளை கொள்ளக் கற்பித்தார்.
சீறாப்புராணம் எங்களுக்குப் பாட நூலாக இருக்கவில்லை. கம்பர் கவிதைக் கோவைதான் பாடநூல். இருந்தும் அந்தத் தமிழ்ப்பெருமகன் உற்றவிடத்து உசிதம் அறிந்து சீறாப்புராணத்தை மேலதிகமாகக் கற்பித்தனர். பி.வி. கணபதிப்பிள்ளையும் பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளையும் மாணவர் மனதில் ஏற்றிவைத்த சீறாப்புராணச் சுடர்ஒளி அ.ஸ.அப்துஸ் ஸமது அவர்களின் உள்ளத்தில் பெரும் ஒளிப்பிரவாகத்தை பிரகாசிக்கச்செய்தது எனலாம். அற்றைவரை அ.ஸ. நகைச்சுவைக் கட்டுரைகளும் சிறுகதைகளும் தான் எழுதிவந்தார்.
 

மருதுர்க்கொத்தன்
சீறாப்புராணம் நாட்டுப்படலச் செய்யுள் களின் அழகை விதந்தோதி அவர் எழுதிய கட்டுரை யொன்று 1954ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஈழகேசரியில் பிரசுரமானது. அக்காலத்தில் தமிழகத்தில் விரும்பிப் படிக்கப்பட்ட ஈழத்து இதழ் ஈழகேசரியாகும். அ.ஸ்.வின் ஈழகேசரிக் கட்டுரையைப் படித்துச் சுவைத்த தமிழகத்து மணிவிளக்கு மாசிகையின் ஆசிரியர் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது அவர்கள் அ.ஸ்.அப்துஸ் ஸமது வுக்கு பாராட்டுக்கடிதம் எழுதினார். மணிவிளக்குக்கும் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அஸ்.வின் கட்டுரைகள் மணிவிளக்கை அலங்கரித்தன. ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன், மணி விளக்கு இதழ்களில் அ.ஸ்.வின் சீறாப் புராணக் கட்டுரைகள் வெளிவந்தன.
மணிவிளக்கு ஆசிரியர் ஆ.கா.அ. அப்துஸ்ஸமது 1957ல் அ.ஸ.வின் சீறாப் புராணக் கட்டுரைகளை நூலுரு வாக்கினார். “இந்நூல் வெளி வருவதற்கு இறைய ருளுக்கு அடுத்து இரண்டாவது காரணமாக நின்ற சென்னை மணிவிளக்கு ஆசிரியரும் எனது நண்பருமான ஆலிஜனாப் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது பி.ஏ.(ஆனாஸ்) அவர்க ளுக்கு நான் என்றென்றும் நன்றி யுடையேன். இக்கட்டுரைத் தொகுதியை வெளியிடுமாறு என்னை ஊக்குவித்து இலக்கியப் பண்ணை மூலம் வெளியிட ஏற்பாடுசெய்தார். அவருக்கு என் ஆழிய நன்றி.’ இவ்வாறு சீறா இன்பம் நூலின் ரிஷிமூலம் பற்றி
G2D

Page 28
ஜனாப் அ.ஸ.அப்துஸ் ஸமது நூலாசிரியரின் பின் குறிப்பு என்ற பின்னுரையில் கூறியுள்ளார்.
ஜனாப். அ.ஸ.அப்துஸ் ஸமது பி.ஏ. (ஆர்னஸ்) அவர்களின் இலக்கியப் பணி இரு துறைப்பட்டது. ஒன்று அவரது படைப்பிலக்கியத் துறை. மற்றது இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பங்களிப்பு.
உறுமப்புலவரின் சீறாப்புராணம், வண்ணக் களஞ்சியப் புலவரின் ராஜநாயகம், பத்துக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள். குணங்குடிமஸ்தான், தக்கலை பீர்சாகிப் ஒலியுல்லா ஆகியோரின் மெய்ஞானப் பாடல் களையும் புலவர்நாயகம் சேகனாப்புலவரின் பக்திப்பாடல்களையும் அறிமுகம் செய்தல், ஆய்வு செய்தல், நூற்பதிப்பு என்று அ.ஸ. வின் இஸ்லாமிய தமிழிலக்கியப் பங்களிப்பு அமைந்துள்ளது. இவரது இஸ்லாமிய தமிழிலக்கிய கட்டுரைகள், தமிழகத்து மணிவிளக்கு, பிறை சஞ்சிகைகளிலும் இலங்கையின் ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன், தினகரன் இதழ்களிலும் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை மலரான கலையமுதத்திலும் வெளி வந்துள்ளன. இலங்கை வானொலிச் சொற் பொழிவுக்காகவும் சில கட்டுரைகள் உருவா கியுள்ளன. நூலுருவாக்கத்தின் போது புதிதாகச் சில கட்டுரைகள் எழுதப்பட்ட தகவல் அவரது குறிப்பால் அறியக் கிடக்கிறது.
சீறா இன்பம் நூல் தமிழ்நாட்டில் அச்சிடப்பட்டாலும் அ.ஸ.அப்துஸ் ஸமதுவின் அக்கரைப்பற்று இலக்கியப்பண்ணையின் வெளியீடாகவே வெளிவந்தது. புலவர்மணி ஆ.மு.வடிரிபுத்தீன் அவர்களால் உரை யெழுதப்பட்ட சீறாப்பதுறுப் படலம் அ.ஸ. வின் முயற்சியால் அக்கரைப்பற்று இலக் கியப் பண்ணையால் வெளியீடு செய்யப் பட்டது.
ஜனாப்.அ.ஸ.அப்துஸ் ஸமதுவால்
C22)-

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கட்டுரைகள் சீறா இன்பம்’, ‘சுலைமான் பல்கீஸ்", 'இஸ்லாமிய இலக்கிய நோக்கு’ என்று மூன்று நூல்களாக வெளி வந்துள்ளன. இது இலங்கையில் தமிழ் எழுத்தாளர்களின் யதார்த்த நிலையில் ஆரோக்கியமான ஓர் அம்சமாகும். அ.ஸ.அப்துஸ் ஸமதுவின் இஸ்லாமிய தமிழிலக்கியப் பங்களிப்புப் பற்றி கற்கைக்கும் ஆய்வுக்கும் இலகு துணை யாகும். இந்நூல்கள் மூன்றும் அவரது வாழ்நாளிலேயே வெளிவந்தன என்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும். கலாநிதி அல்லாமா எம்.எம்.உவைஸ் ஹாஜியா ருக்கு அடுத்தபடியாக இத்துறையில் தடயம் பதித்துச் சாதனை புரிந்தவர் அ.ஸ.அப்துஸ் ஸமது ஆவார்.
சீறா இன்பம் சீறாப்புராணம் என்ற முதல் நூலுக்கு வழி நூலாக அமைந்த தொன்று. இது இருபது கட்டுரைகளால் இயன்றது. ‘சிறந்த மெய்ப் பொருள் என்பது முதலாவது கட்டுரை நூலின் தோற்று வாயாக அமைந்து சீறாப்புராணம் கடவுள் வாழ்த்துப் படலத்தைக் கோடிட்டுக் காட்டு கிறது. உறுமப்புலவர் இருபது செய்யுள் களால் கடவுள் வாழ்த்துப் படலத்தைப் பாடினார். அ.ஸ. திருவினுந் திருவாய் எனத் தொடங்கும் முதலாவது செய்யுளை யும் சிறந்த மெய்ப்பொருள் என ஆரம்பிக்கும் இரண்டாவது செய்யுளையும் எடுத்தாண்டு அவற்றுக்குப் பொருத்தமான விளக்க உரை தந்துள்ளார்.
‘வேற்றரசரை நிகர்த்த வெள்ளம்', ‘சிற்றிடை ஒசிந்து', 'புனலாடு பூவையர்', ‘அந்நாடு பொன்னாடே ஆகிய நான்கு கட்டுரைகளும் நாட்டுப் படலத்திலிருந்து பொறுக்கி எடுத்த கவினார்ந்த செய்யுள் களுக்கு நெஞ்சையள்ளும் விளக்கமாக அமைந்துள்ளன. சிறப்பினை வென்ற செல்வி “நானிலம் போற்றும் நபி பிறந்தனரே ‘முழுமலர்ச் செழுமுகம் ஆகிய மூன்று கட்டுரைகளும் நபி அவதாரப் படலத்துக்கு

Page 29
உரைகல்லாக அமைந்துள் ளன. பாலூட்டி வளர்த்த ஹலீமா, பாலன் முகம்மதுவின் மேல் பெற்ற குழந்தைக்கும் மேலாக அன்பும் பற்றும் கரிசனமும் கொண டவர். சிறுவர்களோடு காட்டுக்குச் சென்று முகம்மதுவை இனந்தெரியாத இருவர் கடத்திச் சென்றுவிட்டனர் என்றறிந்தபோது ஹலீமா பட்டதுயரம் சொல்லும் அளவின தன்று. இலாஞ்சனை தரித்த படலத்தில் வரும் இச்சேதியை ‘ஹலிமாவின் அன்பு ள்ளம்" என்ற கட்டுரை தத்ரூபமாக விளக்கு கின்றது.
சீறாப்புராணத்தில் பாதைபோந்த படலம் ஓர் அழகார்ந்த பகுதியாகும். இஸ் லாமிய வரையறை தவறாது தமிழ் அகத் துறை இலக்கணத்தைத் தழுவி படிப்போர் நெஞ்சை வாரி அள்ளும் கவித்துவம் நிறைந்த பாடல்களால் அமைந்தது. வாலிபர் முகம்மதுவுக்கும் அழகிலும் செல்வச்சீமாட்டி யுமான கதிஜாவுக் கும் இடையே மலரும் காதலை அமைவுறச் சித்திரிக்கும் படலம் அது. கதீஜாவின் மெய்க்காதல்’ என்ற கட்டு ரையில் அந்த அமைவின் அழகையும் அருமையையும் அ.ஸ்.சுருக்கமாக நேர்த்தி பெற விளக்கியுள்ளார். மணம் புரி படலத் தில் வரும் அழகு கொஞ்சும் கவிதைகள் சிலவற்றுக்கு விளக்க மாக மகோன்னத மணவிழா என்ற கட்டுரை அமைந்துள்ளது. பேரழகு பொங்கும் பெண்’ என்ற கட்டு ரையும் மணம்புரிபடலம், நபிப் பட்டம் பெற்ற படலங்களில் இருந்து தேர்ந்தெடுத்த செய்யுள்களால் கதிஜா நாயகியின் அழகை யும் குணத்தையும் நபிநாதருக்கு உற்ற துணையாய் இருந்து அரவணைத்த அருமை யையும் விளக்குகின்றன.
இஸ்லாமிய வரலாற்றில் உமர்(ரலி) அவர்களின் மனமாற்றம் திருப்புமுனையாய் அமைந்த நிகழ்வாகும். இந்நிகழ்வை உமறுகத்தாப் ஈமான் கொண்ட படலத்தில் விஸ்தாரமாகவும் விஞ்சும் அழகுடனும் உமறுப்புலவர் விளக்கியுள்ளார். உத்தமரான

உமர் (ரலி) என்ற கட்டுரை மூலமாக அ.ஸ. அச்சம்பவத்தை ஏற்றுக்கொண்ட றசூலுல்லா வின் குடும்பத்தவர் அல்லாத முதல் மனிதர் அபூபக்கர் சித்தீக் ஆவார். சோதனையாய் அமைந்த வேளைகளிலெல்லாம் துணை யிருந்து அறிவுரை கூறும் நல்லமைச்சனாய் அமைந்து உயிரைக் கொடுக்கவும் துணிந்த சிறப்புக்குரியவர். 'உயிரெனும் உரவோர்’ என்ற கட்டுரையில் யாத்திரைப்படலம், விடமிட்ட படலம், பதுறுப் படலங்களிலிருந்து தெரிவு செய்த செய்யுள்களின் மூலமாக அபூபக்கர் சித்தீகின் அருமை பெருமை பற்றி விளக்குகிறார் கட்டுரையாசிரியர்.
‘சீர்பொங்கு ஷாம் நகர்’, ‘மாண் பிலங்கு மதீனா ஆகிய கட்டுரைகள் இரண்டும் ஷாம் நகர் புக்கபடலம், மதீனா நகர் புக்கபடலங்களை அறிமுகம் செய் கின்றன. "வேடன் செய்த தவம் மானுக்குப் பிணைநின்ற படலத்தையும் அருள்நெஞ்சம்' சுறாக்கத்து தொடர்ந்த படலத்தை யும் அறிமுகம் செய்கின்றன.
நபிகளாரின் திருப்புதல்வி பாத்திமா நாயகி, நபிகளாரின் பேரன்பைப் பெற்றவர். அழகும் தவமும் கற்பும் புகழும் பெற்ற குலக்கொடி. அவரின் சிறப்பை எடுத்தோது கிறது சீறாப்புராணம் பாத்திமா திருமணப் படலம். இப்படலத்தின் சாரமாக அ.ஸ்.வின் ‘தவமும் கற்பும் புகழுஞ்செல்வி' என்ற கட் டுரை அமைந்துள்ளது. செய்னம்பு நாச்சியார் நபிகள் கோமானின் வாழ்வில் முக்கிய இடம் பெற்றவர். சீறாவில் வரும் செய்னம்பு நாச்சி யார் திருமணப்படலமானது கதிஜா நாயகி யின் மணவினை கூறும் மணம்புரி படலத் துக்கும், பாத்திமாவின் மணவினை கூறும் பாத்திமா திருமணப் படலத்துக்கும் நிகராக அழகும், பொருளும், அருமையும் வாய்ந்த தாகும். இந்த அழகிலும் பொருளிலும் அருமையிலும் நெஞ்சிழந்த அஸ:நாணமே பூணாய் நின்ற நங்கை' என்ற கட்டுரையை வடித்துள்ளார்.
=G23)

Page 30
சீறா இன்பம் நூலின் முத்தாய்ப்பாய் அமைந்த கட்டுரை நன்றியுள்ளம்" என்பது. கம்பன் சடையப்பவள்ளலைப் பாட்டிடை வைத்துப் பாடியது போல உமறுப்புலவரும் அபுல்காசிம் மரைக்காயரைப் பாட்டிடை வைத்துச் சீறாப்புராணத்தைப் பாடினார். உமறுப்புலவரின் நன்றியுள்ளத்தை அறி முகம் செய்கிறது நன்றியுள்ளம் என்ற கட்டுரை.
சீறா இன்பம் சீறாப்புராணத்தின் அடி தொட்டு முடிவுக்கு மிக அண்மையதான செய்னம்பு நாச்சியார் கலியாணப்படலம் வரை வந்து முடிகிறது. 92 படலங்களை யுடைய சீறாப்புராணத்தில் செய்னம்பு நாச்சியார் படலம் 85வது ஆகும். சீறா இன்பத்தை சீறாப்புராணச் சுருக்கம் என்றோ, சீறாப்புராணச் சாரம் என்றோ சொல்ல முடியாது. பதினெட்டுப் படலங்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில செய்யுள்களுக்கு விளக் கமாயமைந்த கட்டுரைகளின் தொகுப்பே இன்னுால். சீறாப்புராணத்தின் அழகையும் அருமையையும் பெருமானார் முகம்மது (ஸல்) அன்னையர் ஆமினா, ஹலீமா, மனைவியர் ஜதீஜாப் பிராட்டி, செய்னம்பு நாச்சியார்; தோழர்கள் அபூபக்கர் சித்திக் (ரலி) உமறுகத்தாப்(ரலி) ஆகியோரின் மகிமைகளையும் கூறுகின்ற சிறந்த வழிநூல் என்று இதை மனமாரப் போற்றலாம்.
அ.ஸ.அப்துஸ் ஸமதுவால் இஸ்லா மிய தமிழ் இலக்கியத்துறைக்கு ஆற்றப்பட்ட அருந் தொண்டாக சீறா இன்பம், சுலைமான் -பல்கீஸ் இரண்டும் அமைந்துள்ளன. நானறிந்தவரை சீறாப்புராணம்,இராஜநாயகம் ஆகிய பெருங் காவியங்களை இந்த அளவுக்கு அடக்கநூலாக யாரும் அறிமுகம் செய்யவில்லை. சீறாப்புராணம் சிலரால் படித்தும் பலரால் கேள்விப்பட்டும் அறிமுக மான ஒன்று. அந்த அளவுக்கு இராஜ நாயகத்தை அறிந்தவர் இல்லை. இதை அஸ.அவர்கள் “இஸ்லாமிய தமிழிலக்கியம் என்னும் போது சீறா ஒன்றுதான் உருப்
G24)

படியான நூல் என்பது பலரது எண்ணம. சீறா மட்டுமல்ல சிறப்பான இன்னும் பல நூல்களும் அறிவார் அற்று அஞ்ஞாத வாசம் செய்கின்றன என்பது பலரறியாத உண்மை. இங்ங்ணம் அஞ்ஞாத வாசம் செய்யும் அரும்பெரும் நூல்களுள் ஒன்றான இராஜ நாயத்தை இச்சிறு விளக்கநூல் வாயிலாக அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி யடைகிறேன் என்று ‘சுலைமான் பல்கீஸ முன்னுரையில் கூறியுள்ளார்.
ஹமீத் இப்றாகீம் என்னும் இயற்பெய ரையும் வண்ணக்களஞ்சியப்புலவர் என்ற சிறப்புப் பெயரையும் கொண்டவர் இராஜ நாயகம் ஆசிரியர். 'இராஜநாயகம் காவியம் நாற்பத்தாறு படலங்களையும் இரண்டா யிரத்து இருநூற்று நாற்பது செய்யுள் களையும் கொண்டது.தாவூத் நபி சுலைமான் நபி, யமன் தேசத்து சுறாயிக் மன்னன், அரசி பல்கீஸ் முதலான மனிதர் களையும் ஜின்களையும் பறவைகளையும் கதாபாத 'திரங்களாாக் கொண்டு சுலைமான் பல்கீஸ் காதல் உட்பட பல கிளைக் கதைகளையும் கொண்டு காவியம் இயங்குகிறது.
காவியத்தின் மையக்கதை அரசர் சுலைமான் நபியும் மந்திரி மகளாகப் பிறந்து துணிந்து எடுத்த வியத்தகு முடிவால் அரியணை ஏறிய அரசி அழகி பல்கீஸம் சம்பந்தப்பட்ட காதல் கதைதான். “இராஜ நாயத்தில்" இங்கு நான் விளக்கி நயங்கூற எடுத்துக்கொண்டது சுலைமான் பல்கீஸ் கதைப் பகுதியாகும். இதற்காக நூலின் கண்ணுள்ள எட்டுப் படலங்களிலிருந்து சில சுவையான கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். இதன் மூலம் இந்நூலை அறிமுகப் படுத்தி பொங்கும் தேனமுதின் இன்பச் சுவையை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்பது என் உள்ளக் கிடக்கை யாகும்.” என்று நூல் முன்னுரை யில் தனது முயற்சியும் நூற்பயனும் பற்றி அ.ஸ. கூறியிருப்பது பொருந்த அமைகிறது.

Page 31
அ.ஸ்.வின் கலா இரசனையையும் கலைத்துவ ஆற்றலையும் இந்நூலில் காணலாம். அவரின் விளக்கவுரை தங்கு தடையற்ற கதை நகர்வாய் அமைந்து நாவலின் பண்பையும் காவியத்தின் இனிமை யையும் கனியச்செய்கிறது. இது அ.ஸ். இஸ்லாமிய தமிழிலக்கியத்துக்குச் செய்த ஒரு முக்கிய பங்களிப்பாகும். மற்றெவரும் செய்யாதது மாகும்.
*மதியொளியோ எழில் வதனம்’, ‘ஏமாற்றம் ஏமாற்றம்’ என்ற முதலிரு கட்டுரைகளும் இராஜநாயகம் நாட்டுப்படலச் சிறப்பைச் சுருக்கிய விளக்கமாகக் கூறுகின்றன. 'நலனெவைக்கும் உயி ரெவைக்கும் அதிபதி' என்ற மூன்றாவது கட்டுரை தலைமுறைப் படலத்திலிருந்து சுலைமான் நபியின் பிறப்பையும் சிறப்பையும் உரைக்கிறது. கற்பினுக்கரசி பல்கீஸ் அரசுரிமை பெற்ற ஆரணங்கு ஆகிய கட்டுரைகள் பல்கீஸின் பிறப்பு, அழகு, குணநலன் என்பவற்றையும் அரியணை அமர்ந்த வரலாற்றையும் எடுத்துரைக் கின்றன. விடாததுாது, அதிசய அழைப்பு, அற்புதசோதனை, சாந்திநெறி கண்ட ஏந்திழை, மங்கள மணவிழா என்னும் ஐந்து கட்டுரைகளும் ராஜநாயகர் சுலைமானுக்கும் அழகரசி பல்கீஸுக்கும் இடையே காதல் தீயை மூட்டிவிட்ட துல்துல் - மரங்கொத்திப் பறவையின் தூதும் அதனால் இருவரிடையே யும் கனிந்து கனன்ற காதலும், காதல் ஈடேற்றத்துக்குத் தடையாய் இருந்த காரணி களும், தடைகழைய அமைந்த சோதனை நாடகமும் ஈற்றில் அரசர் சுலைமான் நபி யினால் பல்கீஸாக்கு விடுக்கப்பட்ட இஸ்லாத் தைத் தழுவும் அழைப்பும் காதலும் கைகூடி மங்கள மணவிழாவில் மணவினை நிறை வேறுதல் ஆனசம்பவங்களைக் கூறுகின்றன. இராஜ நாயகரும் அரசெழிற் செல்வியும் காதல் வயப்பட்டுக் கடிமணம் புரிந்த பாட் டிடை இட்ட வசனகாவியம் அரங்கேறுகிறது.
நூலின் சிறப்புப்பகுதிகள் என்ற

இரண்டாவது பிரிவில் இடம்பெறும் வாழ்வுத் தத்துவம் என்ற கட்டுரை வண்ணக் களஞ்சியப் புலவரின் கருத்தியல் சார்ந்த தான தத்துவ அம்சங்களையும் அறக் கருத்துக்களையும் விளக்குகின்றது. இன்பக் காட்சிகள் என்ற கட்டுரை காதல் உணர்வை தமிழ் இலக்கியக் காதல் மரபினுாடாக இஸ்லாமிய சமய ஒழுக்கநெறி என்னும் சல்லடையில் வடிகட்டி வண்ணக்களஞ்சியர் வழங்கிய பாங்கை விளக்குகிறது.
ஆக, அ.ஸ்.வின் சுலைமான்
பல்கீஸ்" வண்ணக்களஞ்சியப் புலவர் அளித்த எழிலார்ந்த இஸ்லாமிய தமிழிலக் கியக் காவியத்துக்கு அமைந்த வழிநூல் என்னும் சிறப்பைப் பெறுகிறது.
அ.ஸ.அப்துஸ் ஸமதுவின் “இஸ்லா மிய இலக்கிய நோக்கு விஷய கனம் மிக்க ஒரு நூலாகும். சீறாப் புராணம் இராஜ நாயகம், மஸ்தான் சாகிபு பாடல்கள், தக்கலை பீர்முகம்மது ஒலியுல்லாவின் நாகையந்தாதி, ஞானப் பாக்கள், ஈடேற்ற மாலை, ஞான ஆனந்தக் களிப்பு, செய்யிது அனபியாப் புலவரின் நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ், மீரான் சாகிபுப் புலவரின் றசூல் நாயகம் பிள்ளைத் தமிழ், காதிறு முகியத்தீன் புலவரின் நஸிஹத்துல் மு. மீன் மாலை, சேகனாப் புலவரின் சொர்க்க நீதி, காசிம்புலவரின் திருப்புகழ்,செய்யிது முகியித்தீன் கவிராஜரின் முகியித்தீன் ஆண்ட வர் பிள்ளைத்தமிழ், செவத்த மரைக்காயரின் மக்காக் கலம்பகம், பெரிய நூகுலெவ்வை ஆலிம்புலவரின் வேதபுராணம் ஆகிய இஸ் லாமிய தமிழிலக்கிய நூல்களின் செய்யுட் களை எடுத்தாண்டு எழுதப்பட்ட பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பாய் அமைந்தது இந்நூல்.
இப்பதினைந்து கட்டுரைகளும் கருத் தியல் ரீதியான ஆய்வுக்கட்டுரைகளாகும். பல ஒப்பியல் ஆய்வம்சம் கொண்டவை. 'இஸ்லாமிய இலக்கியநோக்கு' என்று நூற் பெயரைத் தனதாகக் கொண்டது முதலாவது
=25)

Page 32
கட்டுரை. இஸ்லாமிய இலக்கிய நோக்கு என்றால் என்ன? என்ற வினாவுக்கு விடை யாக இஸ்லாமிய தமிழிலக்கியங் களின் ஊடாக இஸ்லாமிய இலக்கிய நோக்கு எவ்வாறான கருத்தியல் அடித் தளத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டுரை விளக்குகிறது. இது அஸ். அப்துஸ் ஸமதுவின் இஸ்லாமிய இலக்கிய நோக்கு பற்றிய பிரகடனமாகவும் அமைந்துள்ளது. இதற்கு எதிர்மறையான கருத்துக் களும் இலக்கிய ஆய்வாளர்களிடம் உண்டு. அ.ஸ. வைப் பொறுத்தவரை அவரது கருத்துச் சரியானதே. சிறுகதைகள், நாவல்கள் கூட இஸ்லாமிய சமய ஒழுக்க நெறிகளைத் தழுவியே எழுதப்படவேண்டு மென்பது அவரது ஆசங்கை, கட்டுரை தமிழிலக்கியத் துக்கு இஸ்லாமிய தமிழிலக் கியங்களி னுாடாக முஸ்லிம் தமிழ்ப் புலவர் எத்தகைய பங்களிப்பைச் செய்தனர்; அரபு, பார்ஸி இலக்கிய மரபினால் தமிழிலக் கியத்தை எங்ங்ணம் அலங்கரித்தனர்; வளப்படுத்தினர் என்பதை வரலாற்று அணுகு முறையோடு அ.ஸ. விளக்கியுள்ளார். பல்லவர், சோழர், நாயக்ககால தமிழிலக்கியப் பண்புகளையும் பிரதிபலித்து ஐரோப்பியர் காலம் எனும் காலப்பகுதி என்பதன் பெரும் பாகம் இஸ் லாமிய தமிழ்ப்புலவ்ர்களின் காலம் என்ற உண்மையைஅ.ஸ். வலியுறுத்தியுள்ளார். கட்டுரை நூலின் முகவெற்றிலையாக அமைந்துள்ளது.
இற்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆலிப் புலவரால் இயற்றப்பட்ட மி’றாஜ் மாலை முதலாவதாக இயற்றப்பட்ட இஸ்லாமிய தமிழிலக்கியநூலாகும். முகம் மது நபி(ஸல்) அவர்களைப் பாட்டு டைத் தலைவராகக் கொண்டு ஐம்பது நூல்கள் முஸ்லிம் தமிழ்ப்புலவர்களால் இயற்றப்பட் டுள்ளன. இவை காப்பியங்கள், பிரபந்தங்கள் என்றமைந்துள்ளன.தற்கால முஸ்லிம் கவிஞர்களும் பெருமானாரைப் போற்றியும் பாட்டுடைத் தலைவராகக் கொண்டும் பாடி
26).

யுள்ளனர்.இந்த விபரங்களை இலக்கியம் கண்ட இறைதூதர்' என்ற கட்டுரையில் அ.ஸ்.விரிவாகவிளக்கியுள்ளார். பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகையும் தமிழில் பிரபல்யமானவை. இறைவனையும் அரசர் களையும் பிள்ளையாகப் பாவனை செய்து தமிழ்ப்புலவர் பாடியுள்ளனர். இந்த மரபை ஏற்று நபிகள் நாதரைப் பிள்ளையாகப் பாவித்து நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ், றசூல் நாயகம் பிள்ளைத்தமிழ் என்று ஐந்து நூல்களை முஸ்லிம் புலவர்கள் பாடியுள் ளனர். இவற்றை அறிமுகம் செய்தும் ஒப்பு நோக்கியும் ஆராய்ந்து எழுதுப்பட்ட கட்டுரை தான் 'பிள்ளைத் தமிழில் பெருமானார்’ என்பது.
‘ஆசைமயக்கும் அணையாத காத லும் புலவர்நாயகம் செய்கு அப்துல் காதிர் நெய்னார் லெப்பை ஆலிம் புலவரின் நாகை யந்தாதியை ஆய்வு செய்து எழுதப் பட்ட கட்டுரைகளாகும். நாகூரில் அடங்கப் பட்டுள்ள ஷாகுல் ஹமீது ஒலியுல்லா பேரில் பாடப்பட்டதுதான் நாகையந்தாதி. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை முதலாான மயக்கு வழிகளில் மனதை அலையவிடாது பெரியார் வாக்கை உறு பொருளாகக் கொண்டு வாழலே சிறப்பு. அதிதகைய பெரியாராகிய ஷாகுல் ஹமீதொலியின் நற்போதனைப்படி வாழ்வ தன் சிறப்பை 'ஆசைமயக்கு விளக்குகிறது. இறைவன் மீது கொண்ட பக்தியை நாயக நாயகி பாவனையில் பாடும் மரபு தமிழிலக் கியத்தில் உண்டு. நாகூரில் வாழும் இளம் பெண்கள் நாகூர் ஒலியுள்ளா மீது கொண்ட பக்தியை காதலாக வெளிப்படுத்தும் பாவ னையிலமைந்த செய்யுள்களும் நாகையந் தாதியில் உண்டு. அதையே அணையாத காதல் என்ற கட்டுரையாக அ.ஸ. தந்துள்ளார். ‘நாயகநாயகி பாவனை' என்ற கட்டுரை குணங்குடி மஸ்தானின் மனோன் மணிக்கண்ணியைக் கொண்டு எழுதப் பட்டுள்ளது.

Page 33
‘ஆரணமுகிலிவர்" இராஜநாயகம் செய்யுள்களைக் கொண்டு புனையப்பட் டுள்ளது. ‘திருப்புகழ்த் தீஞ்சுவை காசிம் புலவரின் திருப்புகழையும் ‘மாறாமல் ஊறும் மது நஸிஹத்துல் மூ.மீன் மாலையையும் ஆய்வுக்குட்படுத்துகிறது.
இரவல் நகை” சீறாப்புராண நிகழ் வொன்றைக் கூறுகிறது. உமறுப்புலவர் இறைவனைப் புகழ்ந்தோதிப் பரவும் பாங்கையும் இறை தத்துவத்தை வெளிப் படுத்தும் விதத்தையும் "சீறாப்புராணத்தில் இறைதத்துவம் என்ற கட்டுரையில் ஆனா ஸானா ஆராய்ந்து கூறியுள்ளார்.
இறைவனின் சூட்சுமத்தையும் படைப் பினங்கள் வாயிலாக அவன் வெளிப்பட்டு நிற்பதையும் பீர்சாகிப் ஒலியுல்லா ஆதியைக் கண்டு கொண்டேன் என்று பாடிக்களிக் கின்றார். ஆதியைக் கண்டுகொண்டேன்’ கட்டுரை அதனைப் பேசுகிறது. பீர்சாகிப் அவர்களின் பாடல்கள் இஸ்லாமிய மெய்ஞ்ஞானம் பற்றியது. சுல்தான் அப்துல் காதிர் ஆன குணங்கடி மஸ்தானும் செய்யிது முகியித்தீன் கவிராஜரும் கெளதுல் அட்லம் முகியித்தீன் அப்துஸ்காதிர் ஜிலானி அவர்களை மேலாம்பரப்படுத்திப் பாடியுள்ள
மக்களுடைய ஆர்வங்களையும் கவனங் வேண்டும். சோழர் காலம், அப்பாளமியா என்று குறிப்பிடுவோர்களே அக்கால தோற்றுவிக்கவேண்டும். நாடகம் சுவை ஆராதிக்கிறது. இலக்கியங்களை உ பிரச்சினைகளும் சோக உணர்வுகளும் மனிதனுக்கு ஏமாற்றத்தை அளிக் plGooTñ6256155é5 puï DSL6é'airspool.
உலக சமாதானம் தலை தாக்கும்.

மெய்ஞ்ஞானப் பாடல்கள் பற்றிப் பேசுகிறது. சித்தர்களும் ஸ"பிக்கவிஞர்களும் என்ற கட்டுரை இறுதியானது. தமிழ்ச் சித்தர்கள், சீனத்தாவோயிகள், முஸ்லிம் சூபிக்கவிஞர்கள் பற்றிப் பேசுகிறது. சித்தர் களையும் சூபிக் கவிஞர்களையும் ஒப்பு நோக்கி ஆராய்கிறது.
இந்நூல் மூலம் இஸ்லாமிய இலக் கியத்துக்கு அ.ஸ். தெளிவான வரை விலக்கணம் கூறியுள்ளார். இஸ்லாமிய இலக்கிய வரலாற்றைத் தமிழ் இலக்கிய வரலாற்றுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்து அறிமுகம் செய்துள்ளார். தமிழிலிலக் கியத்திலும் இஸ்லாமிய தமிழிலக்கியத்திலும் தனக்குள்ள புலமையை வெளிப்படுத்தியுள் ளார். பன்னிரண்டுக்கு மேற்பட்ட இஸ்லாமிய தமிழிலக்கிய நூல்களை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த மூன்று நூல்களும் அனைத் துலக இஸ்லாமிய தமிழிலக்கிய நெஞ்சங் களில் நிலைத்து நிற்கும். இஸ்லாமிய தமிழிலக்கியங்களை அறிய விரும்பும் தமிழர்களுக்கும் இவை வழிகாட்டும். இஸ் லாமிய தமிழிலக்கிய ஆய்வு நெறிக்கும் இவை துணைபோகும்.
களையும் கலைகளின் பால் ஈடுபடுத்த a5rsob, 6ůé53LITrfurt LoesTJmofo a5Tsub ங்களைப் போல காவிய காலங்களை உணர்ச்சியை வளர்க்கிறது. அழகை ஊடகமாகக் கொண்டு விளங்குகிறது. நிறைந்த வாழ்வின் வெறுமை நிலைகள் கா வண்ணம் கலைகள் வாழ்வின் 655 buÎr DsLGLb 56örcoLoui'cô 5TGöt
அஸ்.அப்துஸ்ஸமது (கனவுப்பூக்கள் நாவல் பக்88)
=G27)

Page 34
-
a
--
S.
பூத்திருந்தது உங்கள்முகம் மரணப்படுக்கையில்
அப்பொழுதுதான் பூத்த ஒரு பூவைப்போலவே. யார் பூசி வைத்தத உங்கள் முகத்தில் அப்பொழுது பூவுக்குமில்லாத ஒரு புன்னகையை..?
முற்றத்த மல்லிகை' யை முகர்வதற்குத் தந்ததாலா உங்கள் முகத்தில் அத்தனை புன்முறவல்கள்?
கனாக்கண்ட கதாசிரியன் நீங்கள் கனவிலையும் பூக்களையே அதனால்தானா எழுதி வைத்தீர்கள் கதை ’கனவுப்பூக்களென்ற?
பனியில் மலரை தோய்த்த
é
பனிமலர்' செய்த படைப்பாளியே பிறைக்குமல்லவா பூச்சூடி 'பிறைப்பூக்களென்று பெயர் வைத்தீர்கள் ஒரு கதை தொகுப்புக்கு
ஏனைய்யா அத்தனை பிடிப்பு பூக்கள் மீதுங்களுக்கு? உங்கள் மனசும் பூவென்பதாலா? இப்படிப் புனைந்தீர்கள் புனைகதை பூப்பூவாய் நீங்கள்?
'எனக்கு வயது பதின்மூன்றென்று எழுதி வைத்த எழுத்தாளரே,
பதின்மூன்று வயதப் பால்முகம்
உங்கள் ஒவ்வொரு
 
 
 
 

நீங்கள் இறுதிப் பயணம் செய்த சந்தாக்கியிலுமல்லவா பளிச்சிட்டத
உங்கள் பால்முகம்?
தவறுகளுக்கு தண்டனை வழங்கும் நீதிச்சாலையில் தவறுகளும் தர்மங்களாகும் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நீங்கள் அதனால் தானா 'கலாபூஷணமான’ உங்களுக்கு ‘இலக்கிய மாமணி’ என்று மகுடம் சூடி மகிழ்ந்தத கலையுலகம்?
மரணம் மனிதர்களை மறக்கடிக்க வைப்பத உண்மைதான் முடியுமா உங்களை
மறக்கடிக்க வைப்பதற்கு மரணத்தால்?
மரணத்தை வென்ற மனிதர்கள் வரிசைக்கு வரிசேர்த்த பெயரல்லவா அஸ். அப்தஸ்ஸமத என்று அழைக்கப்பட்ட உங்கள் பெயர் முடியுமா மறக்கடிக்க வைப்பதற்கு மரணத்தால் அந்தப் பெயரை?
மரணத்தை வென்ற மாமனிதரே, புதைக்கப்படவில்லை நீங்கள் மண்ணில் விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் அந்த விதைப்பு விருட்சமாகி வீரியமாகும்
நின்று நிலைக்கும்
XXX

Page 35
“கம்பன் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பது போல் அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூத்த பாவலர் முகமது ஹாஷிம் ஆலிம் பரம்பரைைையச்சேர்ந்தஅ.ஸ.அப்துஸ்ஸமது தனது பள்ளிப்பருவத்திலே கிராமிய பாடல் களை நகைச்சுவையுடன் கதைகளாக உரு வாக்கி 17 வயதிலே சுதந்திரன் பத்திரிகை யில் எழுதத்தொடங்கியவர். 72 வயதாகி இறக்கும்வரை கடதாசியும் பேனாவுமாக இருந்து இளம் எழுத்தாளர்கள் பலாை உருவாக்கியுள்ளார்.
அ.ஸ.அபதுஸ்ஸமது ஒரு நடமாடும் பல்கலைக்கழகமென்றுதான் சொல்லவேண் டும். வெளியில் செல்லும்போது எல்லாம் புத்தகமும் கையுமாகவே செல்லுவதை காணக்கூடியதாக இருந்தது. அந்த சமயங் களில் தன் முன் காணப்படும் இளம் எழுத் தாளர்களை எழுத்துத்துறையில் ஈடுபடுவ தற்கு உற்சாகமளிப்பவராகவே வாழ்நாள் பூராவும் காணக்கூடியதாக இருந்து.
அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக்கல்வியைக் கற்று அப்பாடசாலையில் இருந்து ஆசிரிய கலா சாலைக்குச் சென்று பயிற்றப்பட்ட ஆசிரிய ராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடமை யாற்றி சுயமுயற்சியினால் பல்கலைக்கழகத் தில் பட்டம் பெற்று தான் ஆசிரியராக பயிற்சி பெற்ற அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற் சிக்கல்லூரியில் தமிழ்மொழி விரிவுரையாள ராகசேவைசெய்து ஓய்வுபெற்றிருந்தார்.
அ.ஸ்.அப்துஸ்ஸமது ஆரம்பக் கல் வியை அக்கரைப்பற்று அஆபாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் நெருங்கிய நண்பர்
 

ஊடகவியலாளர் சாகித்தியசூரி வி.பி.சிவப்பிரகாசம்
களாக இருந்தவர்களில் நானும் ஒருவன். அவர் காலத்தில் கல்வி கற்ற நண்பர்கள் எல்லாம் அரசசேவையில் இருந்த போதிலும் நாடறிந்த எழுத்தாளர்களாகவே இருந்து காலமாகியுள்ளார்கள். நகைச்சுவை எழுத் துக்கு ரி.பாக்கியநாயகம், வரலாற்றுக்கு ஏ.ஆர்.எம்.சலிமும் செய்தித்துறைக்கு வி.பி. சிவப்பிரகாசம் இவர்கள் ஒன்றாகவே செயல் படுவார்கள்.
இவர்களில் வித்தியாசமானவர் அ.ஸ். அப்துஸ்ஸமது. கிராமிய இலக்கியம் முதல் நாடகம், சிறுகதை, நாவல் போன்ற துறை களில் முன்னணியில் நின்று சாகித்திய மண்டலபரிசும் பெற்றுள்ள இவர் “தமிழ் மொழி எங்கள் உயிருக்கு நேர்” என்று சிங்கள மொழிச்சட்டம் அமுல் செய்யப்பட்ட காலத்தில் அரச ஆசிரியராக இருந்த போதிலும் எதிர்த்து குரல் கொடுத்த ஒருவர் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. எப்போதும் சமூகங்கள் ஐக்கியமாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததோடு பாட சாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற காலத்தில் அதுபற்றி பெரிதும் விமர்சனம் செய்க ஒருவர் என்றால் மிகையாகாது.
சமீபகாலத்தில் என்னைச் சந்திக்கும் போது எல்லாம் “இன்றுள்ள கல்வி முறை களையும் ஆசிரியர்களின் அவலங்களையும் பற்றியே பேசுவார். அன்றுள்ள ஆசிரியர்கள் ஆசான்களாக இருந்தார்கள். மாணவர்கள் குருவை மதித்து கல்வி கற்றார்கள். இத னால்தான் எமது காலத்தில் சமூகங்களுக் குள் ஐக்கியம் புரிந்துணர்வுகள் இருந்தன. இப்போது அந்த நிலையில்லை”
C29)

Page 36
‘இன்றுள்ள சமூகத்தில் வாசிப்பு பழக் கம குறைந்துள்ளது. தமிழ்மொழியை முறை யாக கற்றுக்கொள்வதில்லை. எப்படியும் பரீட்சையில் சித்திபெறவேண்டுமென்ற கல்வி தான் இருக்கிறது. சமயக்கல்விகூட இன் றுள்ள இளம் சமூகத்தில் சீராக இல்லை. இதனால் எதிர்காலம் எந்த அளவுக்கு சீர் கேடுகளை சந்திக்கும் என்று சொல்ல முடியாது” என்று சொல்வார்.
அ.ஸ்.விடம் ஒரு சிறந்த குணம் சாப்பாடு இல்லாவிட்டாலும் தினசரி பத்திரி கைகள் படிக்காமல் இருக்கமாட்டார். எவர் என்ன எழுதியிருந்தாலும் அவருக்கும் அது பற்றி நல்ல விளக்கங்களைக் கொடுத்து மேலும் அவரை எழுதுவதற்கு தூண்டுவார். நான் அவருடன் பழகிய காலத்தில் அவரின் அறை ஒரு சிறந்த ஆய்வு நூலகமாகவே இருந்தது. சிலசமயம் சில விபரங்களை கேட்டால் உடனே ஒரு புத்தகத்தை எடுத்து இத்தனையாம் பக்கத்தைப்பார்க்குமாறு குறிப் பிடும் ஞாபகசக்தியுள்ள ஒருவர்.
இவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். ஏ.அபுபக்கர்(சீனத்துரை) இவரும் லேசிப் பட்டவர் அல்ல. ஒரு புரட்சிகரமான எழுத் தாளர். “எரிமலை’ என்ற ஒரு பத்திரிகை மூலம் ஒரு கலக்கு கலக்கிய ஒருவரான இவரும் எனது பாடசாலைத் தோழர். இவரையும் சந்திக்கும்போதெல்லாம் பத்திரி கைகள் , புத்தகங்களுடன்தான் காணக்கூடி யதாக இருக்கும்.
நூலைப்போல சீலை என்பார்கள். அதேபோல் அ.ஸ.வின் புதல்வர்கள், புதல்விகள் எழுத்தாளர்களாகவே காணப் படுவதும் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். இப்படி பல்வேறு துறைகளையும் பெரு மையை உருவாக்கிய அ.ஸ.அப்துஸ் ஸமதுவின் மறைவு எழுத்தாளர் சமூகத்திற்கு பெரும் இழப்பாகும்.
பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள் முதல் நாடகம் சிறுகதைகள்
G30)=

போன்ற நூல்களை எழுதி வெளியிட்டிருந் தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அக்கரைப்பற்றிலே ஆரம்பித்து அதன் தலை வராக செயல்பட்டுவந்தார். அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள தமிழ் முஸ்லிம் கலைஞர் களை ஒன்று சேர்த்து தேசிய கலைஞர் பேரவை ஒன்றை உருவாக்கி அதன் தலை வராக இருந்து செயல்பட்டு வந்தார். 1995ம் ஆண்டு வடகிழக்கு மாகாணசபையினால் “ஆளுநர்விருது’ வழங்கப்பட்டு சபையின் பிரதம செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி யினால் பாராட்டப்பட்ட ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அ.ஸ.அப்துஸ்ஸமது வரலாற்றை தென்கிழக்குப்பல்கலைக்கழகம் சிறந்த முறையில் பயன்படுத்தி வருகிறது. பல்கலைக்கழகத்தின் அரும்பொருட்சாலை யில் அவர்எழுதிய நூல்கள், பத்திரிகைகள், எழுதிய கட்டுரைகள், கிராமியப்பாடல்கள் தொடர்பான கட்டுரைகள், நாடகங்கள் முதலானவற்றைப் பெற்று பாதுகாப்பாக வைத்து எமது எதிர்காலச் சந்ததியினருக்கு அறிமுகம் செய்து வரும் தென்கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு இலக் கிய உலகம் நன்றி செலுத்த கடமைப்பட்டி ருக்கிறது.

Page 37
2.
4.
&566).Q.
அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள் 1929-( 07-01ந் திகதி அக்கரைப்பற்றிலேயே ராசாம்பிள்ளை குடி, மார்க்கக்கல்ல மு.அ.அப்துஸ்ஸலாம் ஆலிம். தாயா a LibLDIT.
1942இல் மெ.மி.பாடசாலை (சந்தைப் பற்று அரசினர் ஆண்கள் பாடசாலை எஸ்.எஸ்.சி.சித்தியடைந்தார். 1954-195 லையில் ஆசிரிய பயிற்சி பெற்றார்.
1972 - 1975 களில் களனி வித்தியா சிறப்புடன் பி.ஏ.பட்டம் பெற்றார்.
1952-1953 களில் கொஸ்லந்தை கனி 1956-1958 களில் கல்முனை வீரத்திட 1959-1960 களில் கம்பளை ஆண்டியகட
1961-1966 களிலும் is . . . 號辦蠶器 } அக்கரைப்பற்று
1972-1975 களில் கொழும்பு, கிரான்பா6 1979-1989 களில் அட்டாளைச்சேனை யாளராகப் பதவி பெற்றார். கற்பித்தல் துறையில் 1989 செம்டம் திகழ்ந்தார். ஒய்வுக்குப்பின்னும் பகுதிநேர விரிவுன
4.1 அ.ஸ.7ம் வகுப்பில் படிக்கும்டே கட்டு ரையை தினகரன் சிறுவர்
4.2 8ம் வகுப்பில் படிக்கும்போதே கெழுதிய கட்டுரையை 8ம் வ யாழ்ப் பாணத்திலிருந்து வரும்
 

9-07ந் திகதி அக்கரைப்பற்றில் பிறந்து 2001ப காலமாகிவிட்டார். அவரது தந்தைவழி வி அறிந்த நல்ல குடும்பம். தந்தையார் ரும் நற்கிளைதான். தாயார் சே.இ.ஆஸியா
பள்ளிக்கூடம்) சேர்ந்தார். 1946இல் அக்கரைப் யில் கல்வியைத் தொடர்ந்தார். 1950 இல் 5களில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசா
லங்கார சர்வகலாசாலையில் தமிழ்மொழிச்
ஷ்ட வித்தியாலயத்தில் கற்பித்தார். ல் அ.மு.பாடசாலையில் கற்பித்தார். வத்தை முஸ்லிம் பாடசாலையில் கற்பித்தார்.
மத்திய மகாவித்தியாலத்தில் கற்பித்தார்.
ாம் அல்-நாஸர் வித்தியாலயத்தில் கற்பித்தார். ஆசிரிய கலாசாலையின் தமிழ் விரிவுரை
பர் வரை மிகப்பயன் மிக்க ஆசானாகத்
ரையாளராகவே கடமை செய்தார்.
ாதே ‘எங்களூரில் திருநபி ஜெயந்தி’ எனும் உலகத்தில் எமகி எழுத்துலகில் புகுந்தார்.
சீறாப்புராணம் பற்றி அவர் பததாகைக குப்புத் தமிழ்ப் பாடநூலில் தொகுப்பதற்கு பூம்பொழில் என்னும் பாடநூலின் ஆசிரியர்
=3D

Page 38
ஆனாஸானாவைக் கேட்டெழு எழுதியவர் “ஆசிரியர் அ.ஸ. பு
ஆசிரியர்' என்று பதித்த
ஆனாஸானாவுக்கு விருப்பம் (
4.3. 1952 களில் கொஸ்லந்தைத் தமி கிடைத்த ஆனாஸானா விருப்பு மிக ஏழ்மையான மாணவனெ அம்மாண வன் உயர்வு பெற்று , மதம் கடந்து செய்த மனி மெய்சிலிர்க்கக் கூடியதே.
44. 'மறுமலர்ச்சி இறுதிக் காலகட்
எழுதத்தொடங்கிவிட்டார். 'நூர்ஜஹான்'. இக்கதையைப் கனுப்பினார். இவரது பிரார் பெயர்களாக்கி 'தினகரன் பிரசுரி இலங்கை எழுத்துள்ளும் புகுந் இலக்கியம் - எழுத்து எனும் கதைகள் அநேகம் இப்படி மாற் நின்றது. ‘பின்னல் ஊசி' எனு எனும் கட்டளையைக் கதாசிரிய வழக்கில் வெளியாகியது. அன்ன பெருமைக்கு ஆனாஸானா ஆய்வாளர்களுக்கு விளங்காம மாற்றிய பெருமைக்குரியவரா! பெறுகிறார்.
ஆனாஸானா அப்துஸ்ஸமது சிறுகை ஏறத்தாள 75 சிறுகதைகள் எழுதியி பிறந்த சூழலின் மக்களின் வாழ்க்கை கியத்தின் கொள்கையும் இதுதான். இக் இல்லையோ அவரையறியாமலே அ சிறுகதை இலக்கியத்தில் பேரெடுத்த எழுதத் தொடங்கினார். இலக்கியம்
கொள்கையுடன் எழுந்த ‘சரஸ்வதியே
இலக்கியமே புனைகதை என்ற தள ஜெயகாந்தன் வளர்ச்சியின் உச்சம் நோ வெறும் ஃபிராய்டிய எல்லைக்குள் கு
5.1. ஆனாஸானாவை எந்த இலக் வரவில்லை. ஆனால் தானாக

தினார். சம்மதம் கொடுத்தபின் கட்டுரை அப்துஸ்ஸமது” எனப் புத்தகாசிரியர் பதித்தார். காரணத் தால்தான் ஆசிரிய பதவியில் ஏற்பட்டது.
ழ் வித்தியாலயத்தில் பதில் ஆசிரிய நியமனம் பத்துடன் அங்கு சென்றிருக்கின்றார். அங்கே ாருவருக்கு அதிக உதவி செய்திருக்கிறார். மனிதனாக வந்து இவரது மனித நேயத்தையும் தார்த்தத்தையும் வியந்து நன்றி கூறியமை
டத்தில் 1950களில் ஆனாஸானா சிறுகதை ஆனாஸானாவின் முதலாவது சிறுகதை
பிராந்திய வழக்கோடு எழுதி 'தினகரனுக் திய ஊர் பெயர்களை தென்னிந்தியப் த்தது. அக்காலம் தென்னிந்தியச் செல்வாக்கே து நின்றது. அப்படி எழுதுவதும் படிப்பதுமே
மயக்கம் இழையோடி நின்றது. அவரது றப்பட்டே வந்தன. இந்த வழக்கே இயல்பாகி ம் சிறுகதையை எழுதி மாற்றக் கூடாது' ர் வரித்துக்கட்டி நின்றதால் அக்கதை பிரதேச றையப் படுபிற்போக்கான மரபொன்றை மாற்றிய ஆளாகின்றார். இது இன்றைய இலக்கிய லிருக்கலாம். பிழையான மரபு வழியொன்றை க ஆனாஸானா இந்த இடத்தில் மதிப்புப்
தையை 1950களில் எழுதத் தொடங்கினார். ருக்கிறார். அ.ஸ்.வின் சிறுகதைககள் அவர் யைக் காட்டுவதாகவே அமைகின்றன. இலக் கொள்கையை அவர் வரித்துக் கொண்டாரோ வருடன் அது பிணைந்து கொண்டதெனலாம். ஜெயகாந்தன் 1954களில் தான் சிறுகதை மக்களை மையமாகக் கொண்டது எனும் ஜெயகாந்தனைத் தந்தது. சாதாரண மக்களின் த்திற்கு தமிழ்க்கதையை வளர்த் தெடுத்த ாக்கி வந்த வேகத்தில் சரியவும் தொடங்கினார். றுகி மக்களை விட்டு விலகினார்.
கியப் பத்திரிகையும் வெளியே கொண்டு வே தமது பிராந்திய மக்களின் வாழ்க்கை

Page 39
முறையைச் சிறுகதையாக்கி எ6 சிறுகதை முயற்சியின் ஆழத் சிறுகதைகளைப் பிற்காலத்தில் அதிதீவிரவாதங்களால் மக்கள் சரிவுக்குள்ளான போதும் இ விடவில்லை. இதுதான் அவரது
5.2. வ.வே.சு.ஐயர் சிறுகதையை ஒ காரர்கள் சிறுகதையை கதை பொழுது போக்காக்கினார். இ நின்ற ஆஸா’ தனது கதை இணைத்து நின்றார். எந்த அத்திவாரமிடாத ஆனாஸானா முற்போக்கு எழுத்தாளர் சங்கத் எழுத்தாளர் சங்கக்கிளையை அவர் வளர்ச்சியடையும் நிலை வழிவகுத்தார்.
5.3 எனக்கு வயது பதின்மூன்று எனு
தூக்கிவிட்ட சிறுகதைகளை “கம்பளைப் பிச்சையப்பா”, ஆ அப்துஸ்லத்தீபின் மையத்து 1 சின்னப்பள்ளியின் கந்தூரி வை படம் பிடித்துக்காட்டும் அந்தக் சிறுகதைகளில் ‘அந்தக்கிழவன் தொகுதியிலுள்ள தங்கை எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள் ‘ஒப்ஸேவர் பத்திரிகையில் வெ6 பெறக்காரணகர்த்தா க.கைலா மிக எளிதாகக் கண்டுபிடிக்கும் பல சிறுகதை எழுத்தாளர்களை கோலியவர் க.கைலாசபதிதான்
புனைகதைத் துறையில் 'கனவுப்பூக்க ஆகிய நாவல்களையும், “எனக்கு வய யையும் அ.ஸ்.வெளியிட்டிருக்கிறார். வதற்கு இந்த இடம் சரியானதா? என் மிக ஆழமாக ஆய்வுசெய்தல் அவசி
நாட்டார் வழக்கானது முகிழ்ந்து மொட்ட உணாந்த ஆனாஸானா அதை ஒழு இம்முயற்சிக்கு ‘சுதந்திரன்’ பத்திரிகை

லாப் பத்திரிகைகளிலும் எழுதினார். அவரது தினால் எல்லாப்பத்திரிகைகளும் அவரது b எதிர்பார்த்து நின்றன. சந்தர்ப்பவாதம், இலக்கியம் பலம்பெறமுடியாமல் 80 களில் ச்சிக்கலுக்குள் ஆனாஸானா அகப்பட்டு இலக்கிய ஆளுமையின் ஆழம் எனலாம்.
இலக்கிய வடிவமாக்கினார். மணிக்கொடிக் பாக மட்டும் பார்த்து நின்றனர். கல்கியோ ந்தவரலாற்றை மிக நுணுக்கமாக நோக்கி ப்போக்கில் இம்மூன்று வல்லமைகளையும் இயக்கத்தையும் சார்ந்து எழுத்துக்கு எழுத்தைத் தன் வசப்படுத்திய பின்னே துடன் இணைந்து 'மட்.தெற்கு முற்போக்கு அக்கரைப்பற்றில் ஏற்படுத்தினார். இதனால் )க்கில்லை. ஏனையோரை வளர்ச்சியடைய
வம் அ.ஸாவின் சிறுகதைத் தொகுதி அவரைத் அடக்கவில்லை. எச்செம்பி முஹிதீனின் னாஸானாவின் ‘அந்தக்கிழவன் அபூதாலிப் பிரபல்யமான சிறுகதைகள். அக்கரைப்பற்று பவத்தின் கலாசாரப் பாரம்பரிய கதையைப் 5 கிழவன் ஓர் அற்புதப் படைப்பு. அவரது ’ ‘மாஸ்டர்பீஸ்' என்று கூறமுடியும். அவரது எனும் சிறுகதை உலகப்பிரசித்தி பெற்ற ளை அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு ரியானது. இந்த இடத்திற்கு இக்கதை ஏற்றம் சபதி அவர்கள்தான். இலக்கியக் காரனை மாமனிதர் க.கைலாசபதி, இந்த வழியில் ஆங்கில உலகிற்கு அறிமுகப்படுத்த வழி
ள்' , 'பனிமலர்', 'தர்மங்களாகும் தவறுகள் து பதின்மூன்று' எனும் சிறுகதைத் தொகுதி இவற்றின் தாரதம்மியங்களை ஆய்வு செய் பது கேள்வியே! ஆய்வாளர்கள் இவற்றை шLö.
விழ்த்து மண்ணில் வீழ்ந்தபடிதான் இருப்பதை ழங்கமைத்து வெளிக்கொணரமுயற்சித்தார். sயும், எஸ்.டி.சிவநாயகமும் மிகவும் உதவி
G33)

Page 40
10.
நின்றமை வரலாற்றுக் குறிப்பாகும். இ பிற்கு வாய்மொழி இலக்கியமே அத் உலகப் பல்கலைக்கழகங்களிலெல்லா ஆழ அகலத்தை ஆனாஸானா அறி முயற்சி முழுமையாக்கப்படவில்லை. அந்நெறிக்காகக் குரல்கொடுக்கவில்6 துறைக்கான வளர்ச்சிக்கே வழிகோல கதைகளின் தேவையை அ.ஸ்.உணர்
1955களில் ஈழகேசரியில் அ.ஸ. சறாப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தபோது ‘ப இவ்விதகட்டுரைகளை ‘மணிவிளக்குச் எழுதிய 21 கட்டுரைகளை இலக்கிய சீறா இன்பம்’ என்ற தலைப்பில் நூலா படுத்தியது. இந்நூல் 1957 ஜூலையில்
8.1 அக்கரைப்பற்றில் நானறிய நட
இன்பம் வெளியீடுதான். புல அக்கரைப் பற்று தெற்கு விதி இந்நூல் வெளியிட்டு விழா நடந் கெளரவித்தனர். புதுமை யும் மு நின்றமை கண்ணுக்குள் இன்று
8.2. தொடர்ந்து 'பிறை' இதழின்
காட்சிகளை அ.ஸ்.எழுதினார்
யுனிவர்ஸ்ஸல் பப்பிளிஷர்ஸ் தென்னிந்திய எழுத்தாளர்கள் மதிக்கப்பட்டார். பிந்திய காலத்தி இலக்கிய நோக்கு இலக்கியத் 'இஸ்லாமிய நூல் வெளியீட்டக
1963களில் ஆர்.பி.எம்.கனியினால் வெ one four size 304 usiassiss6061Tis GasTaoi முயற்சிகளை ஆர்பிஎம் கனி அஸ்.அப் கிறார். அவ்விதம் இவரிடம் பெறுவதற்கு கில் அஸ்.அப்துஸ்ஸமதின் பெறுமானம் நின்றமைதான் எனலாம்.
“இலங்கைத்தமிழ் மறைக்கழகம்’ அகி கட்டுரைப்போட்டியில் அஸ.அப்துஸ்6 பெறுகிறார். இதில் 14வது இடம் வரைட் கா.பொ.இரத்தினம் அவர்கள் 1959 ே

}ன்றைய உலகம் இலக்கியக் கணக்கெடுப் திவாரம் என்பதை நிலை நிறுத்துகின்றது. ம் இத்துறை பீடமமைத்து நிற்கின்றது. இந்த ய முற்படவில்லை. இவ்வழியில் அவரது
புலமைத்துவம் நிறைந்த ஆனாஸானா லை. மக்கள் இலக்கியமான புனைகதைத் லி நின்றார். மனித உறவை மேம்படுத்தும் ந்து நின்றார்.
புராணம் பற்றியும் அதனுள்ளே சுவைத்தவை மணிவிளக்கு ஆசிரியர் ஆ.கா.அப்துஸ்ஸமது க்கு எழுதுமாறு வேண்டினார். அன்றிலிருந்து பப் பண்ணை வெளியீடாக 'மணிவிளக்கு” க வெளியிட்டு ஆனாஸானாவை பெருமைப்
வெளிவந்தது.
டந்த மிக உன்னத நூல்வெளியீடு 'சிறா வர்மணி ஆ.மு.ஷரிபுத்தின் தலைமையில் uilsò (South Road) esorilasTyù lupi55rfisò தது. நூலாசிரியரைப் பொன்னாடை போற்றிக் )தன்மையும் நிறைந்த விழாவாக அமைந்து ம் காட்சி தருகின்றது.
வேண்டுகோளுக்கிணங்க 'இராஜநாயகம் ர். 'பிறை'யில் வந்த 10 கட்டுரைகள்
நூலாக 1959 மார்ச்சில் வெளியாகியது. மத்தியில் அஸ்.இந்நூல்களினால் மிகவும் ல் 1996 நவம்பர் களில் இவரது “இஸ்லாமிய திறனாய்வுக் கட்டுரை களைத் தொகுத்து ம் வெளியிட்டது.
ளியான “இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்
டது. இலங்கை இஸ்லாமியர்களது இலக்கிய துஸ்ஸமதிடம் இருந்து பெற்றதாகக் குறிப்பிடு கு தென்னிந்தியாவில் இஸ்லாமிய எழுத்துல ஏற்கனவே எழுதிய நூற்களினால் உயர்ந்து
கில உலகரீதியில் நடத்திய தமிழ் மறைக் ஸ்மது அவர்கள் நான்காவது இடத்தைப் பெற்ற கட்டுரைகளை வித்துவான் பண்டிதர் ம யில் ‘தமிழ் மறைக்கட்டுரைகள்' எனத்

Page 41
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
தொகுத்தார்கள். இத்தொகுப்பை ெ வெளியிட்டுள்ளது.
பிறைப்பண்ணை’ எனும் வெளியீட்ட எனும் தமிழ் பாடநூலை 6தொடக்க பெருமை ஆனா ஸானாவுக்குண்டு. இ தமிழ் மாணவர்களுக்கும உகந்தது” போற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது பிறைப்பண்ணை க.பொ.த.சாத சீறாப்புராணம் பத்ருப்படலத்துக்கு உரை எழுதி வெளியிட்டது. ஏ.இக்பா நூலொன்றை பயங்கர எழுத்துப் பிை எனும் பல கவிஞர்களின் கவிதைக இன்னும் பல நூல்களை வெளியிட்ட
உருவகக் கதைகள் நிறைய எழு எழுதியுள்ளார். மூன்று மேடை நா வானொலியில் பேச்சுக்கள் 30 பேசியி பாகியுள்ளன. 1982களில் வானொலி யை நடத்தியிருக்கிறார். 'பாவை Liği புனைபெயரில் கவிதைகள் எழுதிய பெற்றிருக்கிறார். பல் திறப்பட்ட வாழ்ந்திருக்கிறார். 1989 களில் மணி
இலக்கியவாதி, நல்லாசிரியன், தமிழற இலக்கியத் தொகுப்பாளர், உரையாசி புக்குட்பட்ட தகைமையுடையோராக
ஆனாஸானாவை இலக்கியக்கணக்ெ குவித்த உருப்படிகள் நோக்கியும் 3. கியும் 4. இயக்கம் சார்ந்த எழுச்சி நோக்கியும் 6. அவரது இலக்கியப்ப8 தலாம்.
இவ்வாய்வு இலக்கிய உலகிற்கு மிக செய்ய முன்வருதல் அவசியம்.
ஆசிரியத்தொழிலிலும் போதனாசிரி சேவைகள் ஆனாஸானா செய்திருக் அவரது இச்சேவை வரலாற்று முக்கி
1983களின் இறுதித் தவணையில் அ போதனாசிரியராக நான் சென்றபோது

Fன்னை மயிலாப்பூரிலுள்ள இன்ப நிலையம்
கத்தை உண்டாக்கி இலக்கியப் பொய்கை ம் 8ம் தரம் வரை தொகுத்து வெளியிட்ட இந்நூல்வரிசை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல
என பேராசிரியர் ஏ.வி.மயில்வாகனம் ஏற்றிப்
ாரண தர இலக்கியம் 'ஆபாடத்திட்டத்திற்குரிய புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனைக் கொண்டு லின் ‘கல்விச்சுடர்மணிகள்’ எனும் வரலாற்று ழகளுடன் வெள்யிட்டது. முற்றத்துமல்லிகை ளைத் தொகுத்து வெளியிட்டது. இவ்விதம் -gl.
தியுள்ளார். கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் ாடகங்கள் எழுதியிருக்கிறார். 1956 முதல் ருக்கிறார். 25 வானொலி நாடகங்கள் ஒலிபரப் சஞ்சிகை நிகழ்ச்சியாக ‘இலக்கிய மஞ்சரி ந்திரிகை நடத்தியிருக்கிறார். “உமர்கையாம்' பிருக்கிறார். விருதுகள், பரிசுகள் ஏராளம் இலக்கிய ஆளுமையின் பிம்பமாகவே விழாக்கண்ட எழுத்தாளராகினார்.
றிஞன் இஸ்லாமிய இலக்கியகர்த்தா, கிராமிய ரியர், தொகுப்பாசிரியர் இவ்விதம் பல தலைப் ஆனாஸானா தென்படுகிறார்.
கடுப்பிற்காக 1. காலம் நோக்கியும் 2. எழுதிக் பல்துறை எழுத்துக்களின் ஆளுமை நோக் நோக்கியும் 5. பதிப்பகத்தால் பெறும் இடம் லம், பலவீனம் நோக்கியும் ஆய்வுக்குட்படுத்
அத்தியாவசியம். ஆய்வாளர்கள் அதனைச்
யர் துறையிலும் மிகச் சிலாகிக்கக்கூடிய கிறார். கல்விசார் ஆய்வின் கணக்கெடுப்பில் யம் வாய்ந்ததெனலாம்.
ழுத்கம ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் அங்கே "பண்டிதர் டூப்’ விட்டுக்கொண்டிருந்த
G35)

Page 42
19.
20.
21.
22.
போதனாசிரியை எதையுமே கற்பித் மாணவர்கள் அவதிப்படுவார்கள் என் வின் உதவியை நாடினேன். அட்டாவை வாரங்கள் லிவு பெற்று வந்து பாடவித யாக முடித்து யாவரதும் பாராட்டை அந்த அனுபவத்தின் பிம்பம் அவர். ச உதவிநூல்களையும் அவர் நிறைய யியல் ஆய்வாளர்கள் ஆனாஸானா
இலங்கை இலக்கிய உலகில் முது முன்னேற்றத்தை விரும்புவதில்லை. இவர்களது உதவி நாடும் போது வரிசையில் ம.மு.உவைஸ், எஸ்.எட மானவர்கள். இந்தவழி ஆய்வு தனிப்
என்னைப் பெறுத்தளவில் அம்பாரை ம இரண்டாவது இடத்தை வகிக்கின்றேன் புதன் மலர்' சிறுகதைப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் இ ‘நான்காவது அனைத்துலக இஸ்லா மகாநாட்டு - ஈழத்துச் சிறுகதை மலை நின்று தொகுக்கிறார். அதில் எனது பஞ்சப் பட்டிருக்கிறார். அவர் தொகுத் இதிலிருந்து விளங்கும்.
இலக்கிய நீரோட்டத்தில் சிறுவனாயிரு நிற்பவன் நான். எழுத்துலகில் நான் ஆர்பிஎம் கனியின் “இஸ்லாமிய இல எழுத்தாளர்கள் குறிப்புகளை ஆனாஸ எனது பெயரையும் குறிப்பிட்டு எங்கள் திருக்கலாம். அவ்விதம் அவர் செய்ய
21.1 இவ்வித இலக்கியப் பலவீனம்
பாதிப்புள் அகப்படுகிறார். இவ ஆய்வு செய்தல் அவசியம்.
உண்மையில் ஆனாஸானா பற்றிய ஆ அவசியம். பல்கலைக்கழகமாவது வேண்டும்.

ததில்லை. இறுதிப் பரீட்சையில் ஆசிரிய பது வெட்டவெளிச்சம். உடனே ஆனாஸான ாச்சேனை ஆ.ப.கலாசாலையிலிருந்து இரண்டு ானத்தின் முக்கியமான பகுதிகளை முழுமை ப் பெற்ற கைங்கரியத்தை அவர் செய்தார். கல்விசார் நூல்களையும் மாணவர்களுக்கான எழுதி வெளியிட்டார். இந்த நோக்கில் கல்வி வை ஆய்வுசெய்தல் அவசியம்
|மையடைந்த எழுத்தாளர் சிலர் மற்றவரது மற்றவர்கள் தானாக முன்னேறிய போதும் தட்டிக் கழிப்பதை வரலாறு கூறும். இந்த ம்.கமால்தீன், அ.ஸ்.அப்துஸ்ஸமது முக்கிய படச்செய்யவேண்டிய தொன்று.
ாவட்டத்தில் சிறுகதை எழுத்தாளர் வரிசையில் . அஸ்.முதலாமவர். 24 ஜூன் 1958 'தினகரன் முதல்பரிசு பெற்று சிறுகதை எழுதுவதில் டத்தை வகிக்கின்றேன்; சிறுகதை எழுதுகிறேன். மிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி - இலங்கை ர அ.ஸ.அப்துஸ்ஸமதே தொகுப்பாசிரியராக து சிறுகதை ஒன்றைத் தெரிவு செய்வதில் த 'பிறைப்பூக்கள் பூர்த்தியானதல்ல என்பது
ந்த காலம் தொடக்கம் அவரோடு இணைந்து இனம் காட்டிக்கொண்டிருந்த காலம்தான் க்கியக் கருவூலத்திற்கு இலங்கை முஸ்லிம் ானா கொடுக்கிறார். அவர் நினைத்திருந்தால் ர் முன்னேற்றத்திற்கு அடியெடுத்துக் கொடுத் பவில்லை.
போல் வாழ்க்கையிலும் சில பலவீனங்களின் ற்றையெல்லாம் அவரது பலவீனப்பகுதியில்
ய்வு நிறைந்த ஒரு புத்தகமாக உருவெடுப்பது இந்தக் கைங்கரியத்தைச் செய்ய முற்பட

Page 43
2008 O's Oro-O.
»). ou .50))))) j, J, ɔso)),
தென்கிழக்கின் தீபம ஈழத்து இலக்கிய 6ெ ஏற்றி வைத்த முன்ே எமது முதுபெரும் எ( அன்பர் அ.ஸ.அப்துல் ஆற்றிய சேவைகள்
இஸ்லாமிய வாழ்விய மண்வளத்தோடு அழ அழியா இலக்கியங்க
உங்களின் கனிவான காந்தமாய் இழுக்கும் எல்லோரோடும் ஒட்டி இணைந்து வாழ்ந்த
என்றுமே இருக்கும் !
மென்மையாய் வளை மிடுக்காய் மொழிபே இலக்கியம் படைத்தீ என்றுமே உங்கள் த
எல்லோருடைய இதய இடம் பிடித்து விட்டீர் எழில் விளக்காய் இ
சிறுகதைகள் நாவல் செய்து தந்தீர்கள் சிகரங்களாக அவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL LLL L LLSLLLL LLLL LL LLLLL SS S S SSSSS SS SS SS SS SSS SSSLSLS
Uf GIIVfd 9
=ண கவிஞர்.மு.சடாட்சரன்
ாய்த் தொடர்ந்து வளிச்சம்
னாடி
ழத்தாளர் ஸ்ஸமது அளப்பரிதே!
606) குதமிழில் படம்பிடித்து ள் தந்தீர்கள்!
பேச்சும், அன்புமுகமும் D-D6hTig. பண்பும் இளமைப் பொலிவாக!
!፬Böl
கள் இறவாமல் மிழ் வாழும்!
பவிட்டிலும் கள் ருப்பீர்கள்!
கள் செந்தமிழ்க் கட்டுரைகள்
வாழும் சிறப்பாக!

Page 44
அ.ஸ்.அகமட்கிய
நெஞ்சு நிறைந்த வேதனை,மெல்லிய சந்தோசம் தடுமாற்றம் வந்த போதும் ஒருவித இதமான சுவாசம். ஒரு தனையனின் தந்தை பற்றிய கருத்துக் குவியல்கள். “சிவபூசையிலே கரடி புகுந்தாற்போல” ஆராய்ச்சி நோக்கிற்காக வெளியிடப்படும் இம்மலருக்கு மகனின் கிறுக்கல்கள் தேவைதானா?
எனது தந்தைக்காக நினைவுவிழா எடுக்கிறார்கள். மலர் வெளியிடுகிறார்கள். எனது தந்தையின் இழப்பினால் இன்று இலக்கிய உலகமே வேதனைப்படுகின்றது. அவருக்காகப் பிரார்த்திக்கின்றது என்பதை நினைக்கும் போதுதான் வேதனையிலும் மெல்லிய சந்தோசம்.
நெஞ்சிலே நினைவுகளைச் சுமந்து இரத்தத்துடன் கலந்து சுவாசமாக நான் உள்ளெடுக்கும் எனது அன்புத்தந்தையின் கட்டளையை நான் உதாசீனம் செய்ய லாமா? அதுதான் எனது இந்தப் பெரு மூச்சுக்கள்.
அ.ஸ. இது எனது ‘இன்னிசல்” மட்டுமல்ல இன்று நான் இந்த சமூகத்தின் கண் “சட்டைக் கொலரை” உயர்த்திக் கொள்ள காரணமான இரண்டு எழுத்துக் களும்தான் அவை.
எனது தந்தை மரணித்து சுமார் 100 நாட்கள் ஒடிமறைந்தும் அவரின் நினைவுகள் என்னை விட்டுப்பிரியவே இல்லை. ஏனெனில் அவர் என் உடம்பைப் படைக்க காரணமாக இருந்த இரத்தம் மட்டுமல்ல. என் உடம்பில் அவர் இரத்தமாக உலாவருகின்றார்.
38)-
 

IT6ù B.A.Dip in Ed.
ஒரு தந்தையாக மட்டும் அவர் என்னோடு உறவாடவில்லை. நண்பனாக, ஆசானாக, வைத்தி யனாக, ஆலோசகனாக எத்தனை வடிவமெடுத் திருக்கிறார்.
ஆரம்பகாலத்தில் என்னோடு அவர் பேசும் போது நான் கேட்டுக்கொண்டிருக்க அவரே பேசுவார் அதிகமதிகமாக. முதல் சிறுகதை, முதல் நாவல், இந்திய இலக்கிய உறவுகள், சாகித்திய மண்டலப்பரிசு, தங்கேஸ்வரியுடனான விவாதம் இப்படியாக எத்தனை எத்தனை விடயங்கள். ஒரு ஆசானாக அவர் எனக்கு கற்றுத்தந்த விடயங்கள் ஏராளம். மார்க்கக் கண்ணோட் டங்களையும் அவர் வித்தியாசமாகவே நோக்குவார். அதில் ஒரு ஆராய்ச்சி இருக்கும். அது கருத்தியலோடு ஒட்டியதாக இருக்கும். இன்றைய மார்க்க அறிஞர்களை அதிகம் குறைகூறுவார். அவர்களிடம் வாசிப்பு இல்லை. தேடுதல் இல்லை அதனால் அர்த்தமில்லை என்பார்.
இறுதி இரண்டு மாதங்கள் அவர் ஞாபக மறதியாக இருந்தார். நானே அதிகம் பேசுவேன். அவர் கேட்டுக்கொண்டிருப்பார். அரசியல் பேசுவேன்; ஆத்மீகம் பேசுவேன்; போராட்டம் பற்றிப் பேசுவேன்; தலையை மட்டும் அசைப்பார். ஆனால் சங்க கால இலக்கியம் பற்றிக் கேட்டால் போதும் சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்துவிடுவார். அதன் பிறகு நான் மெளனமாவேன் அவர் பேசிக் கொண்டே இருப்பார்.
இவருக்கு ஞாபகமறதி இருக்கிறது என்ற ஆங்கில மருத்துவர்களின் ஆராய்ச்சி

Page 45
இவரிடம் தோற்றுவிட்டது. ஏனெனில் இலக்கியம் பற்றி மட்டும் பேசும்போது அவருக்கு மறதி கிடையாது.
எனது தந்தை “நல்ல மனிதர்” என மற்றவர்கள் விமர்ச்சிப்பதுண்டு. அதற்குக் காத்திரமான காரணங்கள் பல உண்டு. அது அவருக்கு மட்டுமே உரிய சொத்து. பணப் பிரச்சினை, பொருளாதாரப்பிரச்சினை, குடும் பப்பிரச்சினை இப்படியாக எதுவும் அவரைச் சென்றடைவதில்லை. இவை அனைத்தையும் எனது தாய் வலிந்து சுமந்து கொள்வதால் அவர் மூளையும் இதயமும் வெறுமை யாகவே இருக்கும். இலக்கியம் அறிவியல், ஆத்மீகம் தவிர வேறு எதுவும் அவரைச் சென்றடைவதில்லை. சென்றடைய நாம் விடுவதுமில்லை. எனவேதான் அவர் துாயப் மையானவராக இருந்தார். ஒரு மனிதனுக்கு வெளித்தாக்கங்கள் உரசும் போதுதான் அவனிடம் தேவையற்ற குணங்கள், செயல்கள் தோன்றும். இவரை வெளித் தாக்கங்கள் சென்றடைவதில்லை. இதனால் தனது இறுதி மூச்சுவரை நல்லவராக, நல்ல இலக்கிய வாதியாக அவரால் திகழமுடிந்தது. எனவேதான், “எனது நிறைவான இலக்கியப்பணிக்கு எனது மனைவியே காரணம் என மனம் விட்டுச் சொல்லி யிருக்கிறார். எனது தந்தை யின் வளர்ச்சியில் எனது தாயின் பங்களிப்புப் பற்றி நான் வியந்ததுண்டு.
இதுவரை காலமும் அவர் பெற்ற புகழ், பெருமை, விருது, பாராட்டுக்கள் பற்றி நான் வியந்ததுண்டு.விருதுகள் பற்றி அவர் ஆசைப் பட்டதோ, அலட்டிக் கொண்டதோ கிடையாது. அவை அவரை நாடிவந்தன. வந்த விருதுகளைப் பெறுவதற்குக் கூட அவர் சென்றது கிடையாது. நாமே அதனைப் பெற்று வந்தோம். அவரது புகழில் நானே திருப்தி கொண்டேன். தந்தையை மீறி எதனைச் சாதிக்கலாம் என்ற

இயலாமையால் நான் தொடர்ந்து ரசிகனாக, வாசகனாக மட்டுமே நின்று விட்டேன்.
தந்தையின் துறையைவிட புதிய தொரு இலக்கிய வடிவத்தில் தன்னை ஈடுபடுத்த நான் விரும்பியதுண்டு. திரைப்படம் ஒன்றிற்கு கதை வசனம் எழுதும் வாய்ப்புக் கிட்டியது. சமய கலாசாரங்கள் இதற்குத் தடையாக இருந்த போதும் இலக்கியத்தில் அவர் கொண்டட காதலினால் என்னைத் தட்டிக்கொடுத்தார். ‘மக்களுக்கு நல்லதைச் சொல்வதே இலக்கியம். வடிவம் எதுவா யிருந்தாலும் கவலையில்லை.” என்ற அவரது பழமையான கோட்பாட்டை நினைத்து அத்துறையில் இறங்கி வெற்றியும் பெற்றேன். அவரும் உளம் மகிழ்ந்தார்.
ஆசிரியத் தொழிலிலும் தந்தை யையே பின்பற்ற வேண்டியவனானேன். அவரின் இலக்கிய இரத்தம் எனக்குள் பாய்ச்சப்பட்டதால் என்னை அறியாமலேயே அவற்றுள் நான் ஈடுபடுத்தப்பட்டேன். தமிழ் இலக்கியத்தில் திருப்தி கொண்டு கற்பித் தேன். அவரும் அதையே விரும்பினார். அதில் நான் வெற்றி கண்டேன். இவை மட்டும் நான் அவருக்குச் செய்யும் கைமாறா காது என்பதும் எனக்குப் புரியாமலில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவா இன்னும் அடங்கிவிட வில்லை.
அவரது படைப்புக்களை எனது விமர் சனத்துக்கு விடுவார். தற்கால இளைஞர் களின் கருத்தாக அதனை ஏற்றுக்கொண்டு திருத்தம் செய்வார். இப்படியாக எமக்குள் எத்தனை எத்தனை உறவுகள். நாங்கள் அதிகமாக நண்பர்கள் போலவே பழகு வோம். ஒரு நாளைக்கு வீட்டுக்குச் செல்லா விட்டால் நியாயமான காரணம் சொல்ல வேண்டும்.
புகழின் உச்சிக்கு சென்ற எந்த மனிதனும் இறுதிக்காலத்தில் தனிமையில்
ଔ୭

Page 46
வாடவேண்டியிருக்கும்.அதிகாரமும் பணமும் மனிதனை விட்டு விலகும் போது அவன் சமூகத்தில் இருந்து அப்பாற்படுத்தப்படுவான். இக்கருத்து இலக்கியவாதிக்குப் பொருந் தாது. எனது தந்தை மரணிக்கும் இறுதி நாட்கள் வரை நண்பர்களோடுதான் இருந்தார். இலக்கியம் தான் பேசினார்.
இஸ்லாமிய மார்க்க அறிஞர் பரம் பரையிலே பிறந்த அவர் தனது பரம்பரை யின் பாரம்பரியத்தை ஒரு படி மேலாகவே பாதுகாத்திருக்கிறார். “சமூகத்திற்கு நான் முடிந்தவரை செய்திருக்கிறேன். இனிமேல் செய்வதற்கு எதுவும் கிடையாது” என்ற நிம்மதியுடன் அவர் மரணித்திருக்கிறார். இந்த நிம்மதி எல்லோருக்கும் கிடைப்ப தில்லை. அதனால் அவர் கொடுத்து வைத்தவர் என்பதைத்தான் என்னால் சொல்லமுடிகிறது.
அ.ஸ்.வின் க
. பண்பாட்டு விருத்திப்பாடங்களில்
வேண்டும். மதபாடம் எனும்போது இ
கொள்கைகளையும், கோட்பாடுகளையும்
முதலானவற்றையும் எல்லா மாணவ
தப்பபிப்பிராயங்களையும் எதிரி மன
செங்குருதியுள்ள இன்பம் விளைய
உணரச்செய்யவேண்டும். ஐந்தாம் வகு
அறியும் பாடத்திட்டமும் ஐந்தாம் வ
இடம்பெறவேண்டும்.
(நமது தேசியக் கல்வி
(40)=

ல்விக்கொள்கை
இலங்கையிலுள்ள நான்கு மதங்களின்
ர்களும் அறியவேண்டும். இதன் மூலம்
பும் மனிதப் பிராணிகளே யென்பதை
குப்புக்கு மேல் எல்லா சமயங்களையும்
எப்படி இருக்கவேண்டுமென்ற தொடரில்
தனது இறுதிக்காலத்தில் அவரை மிகமிக நேசித்து அவரோடு உறவாடி அவரது சுக துக்கங்களில் பங்கு கொண்ட அவரது நண்பர்களான மதிப்புக்குரிய கல்விப் பணிப்பாளர் T.இப்றாலெப்பை, அன்புக்குரிய கொத்தணி அதிபர் M.A. உதுமாலெப்பை, நேசத்துக்குரிய பாலமுனை பாறுக், அன்புடின், றஊப் காரியப்பர் ஆகியோரை பெருமையுடனும் நன்றியுடனும் நினைவு கூருகிறேன்.
இப்படியான எனது தந்தை இன்று எம்முடன் இல்லை. ஆனாலும் நான் அவருடன் தான் இருக்கிறேன். அவர் இறக்க வில்லை. அவர் இலக்கியங்களினூடாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். என் இதயம் துடிக்கும் வரை அவர் எம்முடன் இருப்பார். அவர் இலக்கியங்கள் நிலைத் திருக்கும் அதனூடாக அவர் இவ்வுலகம் அழியும் வரை வாழ்ந்துகொண்டே இருப்பார்.
ஒன்றாக மதபாடம் இடம்பெறச் செய்ய
தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை - போதனை
ாப்பான்மையையும் ஒழித்து யாவரும்
குப்பிற்குக் கீழ் சுயமத பாடத்திட்டமும்
14.06.1969 - தினகரன் நாளேடு)

Page 47
இஸ்லாமிய நெறிமுறைகளிலிருந்து இம்மியும் நழுவாது எவருடைய விமர்சனப் பித்தலாட்டங்களுக்கும் அடிபணிந்து உமிழ் நீர் வடியாது மானமும் மனிதாபிமானமுள்ள இலக்கியப் படைப்பாளியாக இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் ஆழமாகத் தடம் பதித்து தனித்துவ மாக வாழ்ந்தவர் நண்பர் அ.ஸ.அப்துஸ் ஸமது . கிழக்கிலங்கையின் காத்திரமுள்ள படைப்பிலக்கிய வாதிகளில் முன்னணிவகிக்கும் இவருக்கு இஸ்லா மிய இலக்கிய வடிவங்களிலும் அவைபற்றிய திறனாய்வுகளிலும் ஆழ்ந்த புலமையும் ஆர்வமும் கூடதலாக இருந்தன.
கிழக்கிலங்கை முஸ்லிங்களின் தனித்து வமான மண்வளச் சொற்களையும் அவர்களின் பண்பாடு பழக்கவழக்கங்களை யும் அச்சுட்டாப் போல் தன்னுடைய இலக்கியப்படைப்புக்கள் மூலம் மணம் வீசச் செய்த பெருமைக்குரிய இவர் இலங்கையில் மட்டுமன்றி தென்இந்தியாவிலும் மதிக்கத் தக்க படைப்பாளியாக கெளரவிக்கப் பட்டார். தென் இந்தியாவிலிருந்து வெளிவந்த ‘மணிவிளக்கு', 'பிறை' ஆகிய இஸ்லாமிய சஞ்சிகைகளில் தமிழ் இலக்கியப் பரப்பில் ஆழமாக வேரூன்றி நிற்கும் இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை யும் சிறுகதைகளையும் எழுதிப் புகழ்பெற்ற இவர் சீறாப்புராணம், மஸ்தான் சாகிபு பாடல், இராஜநாயகம், நாகையந்தாதி, நஸிஹத்து மு.'மீனின் மாலை, பீரப்பா பாடல், சொர்க்க நீதி, நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ், காசீம் புலவர் திருப்புகழ் ஆகிய இஸ்லாமிய இலக் கியங்களில் சிறந்த புலமையும் பெற்றிருந்
 

எஸ்.முத்துமீரான்
தார். இஸ்லாமிய இலக்கியங்களில் தணி யாத காதல் கொண்டிருந்த நண்பர் அ.ஸ. அவர்கள் இவ்விலக்கியங்களிலிருந்து பல்வேறு பட்ட கோணங்களில் பல கட்டுரை களை இலங்கை இந்திய பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டார். இக்கட்டுரைகளி லிருந்து பதினைந்து கட்டுரைகளைத் தேர்ந் தெடுத்து கல்முனை, சாய்ந்தமருது, இஸ்லா மிய நூல் வெளியீட்டுப் பணியகம் தங்கள் 14வது பிரசுரமாக 'இஸ்லாமிய இலக்கிய நோக்கு' என்னும் மகுடத்தில் 1996ம் ஆண்டு வெளியிட்டு இலக்கியமாமணி அ.ஸ. அவர் களைக் கெளரவித்தது. இத்தமிழ் இலக்கியத் திறனாய்வுக்கட்டுரைகள் பழந்தமிழ் இஸ்லா மிய இலக்கியங்களில் ஆய்வுகள் மேற் கொள்ளும் சர்வகலாசாலை மாணவர்களுக் கும் இஸ்லாமிய இலக்கியங்களில் ஆர்வ முள்ள ஆர்வலர்களுக்கும் சிறந்த உசாத் துணை நூலாகும்.
தன்னுடைய வாழ்வின் அந்திம காலத்திலும்கூட இறைவனின் இல்லமாகிய பள்ளிவாசல்களிலிருந்து பாங்கொலி கேட்டால் மிகவும் கஷ்டப்பட்டு வல்லோ னைத் தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு நடந்து சென்றதை என் கண்களினால் கண்டு பலமுறை வியப்படைந்திருக்கிறேன். இஸ்லாமிய மார்க்க வழிமுறைகளில் அதிக பற்றுதல் உள்ள நண்பர் அ.ஸ.அவர்கள் அக்கரைப்பற்றில் கூடுதலாக மதிக்கப்பட்டவர் களில் ஒருவராவார். சமூதாயப்பற்றும், சாந்தகுணமும் மற்றவர்களை மனதார நேசிக்கும் பண்புமுள்ள இவர் அக்கரைப் பற்றிலுள்ள படித்த, படியாத எல்லாத் தர
GD

Page 48
மக்களாலும் அ.ஸ.மாஸ்ரர் என்று அன்பாக வும் கெளரவமாகவும் அழைக்கப்பட்டு வந்தார். இவரிடம் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் இன்று சர்வகலாசாலைகளில் விரிவுரையாளர்களாகவும் கல்விமான்களாக வும் கவிஞர்களாகவும் இப்பகுதியில் முன்னணியில் திகழ்வது குறிப்பிடத் தக்கது. விருந்தோம்பலிலும் இன்முகத்தோடு மற்றவர் களையும் நண்பர்களையும் இல்லத்தில் வரவேற்று உபசரிப்பதிலும் நண்பர் அ.ஸ். வுக்கு நிகர் அவரேதான்.
1950ம் ஆண்டிலிருந்து இலக்கியத் துறையில் கால் பதித்து 2000ம் ஆண்டு வரை சளையாது எழுதி வந்த நண்பர் அ.ஸ்.வின் முதலாவது இஸ்லாமிய இலக்கியக் கட்டுரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழகேசரி’ பத்திரிகையில் வெளிவந்தது. நண்பர் அ.ஸ். அவர்கள் தன்னுடைய இலக்கியப் பயணத்தில் தனக்கு ஊக்கமும் உதவியும் அளித்த தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் இந்நாள் இலங்கை சட்டக்கல்லூரி விரிவுரையாளருமான கலாசூரி சட்டத்தரணி ஆர்.சிவகுருநாதன் தென் இந்தியா 'மணிவிளக்கு ஆசிரியர் மர்ஹம் அறிஞா ஆ.கா.அ.அப்துஸ் ஸமது, 'பிறை' ஆசிரியர் மர்ஹம் அறிஞர் எம்.அப்துல் வஹற்ஹாப் ஆகியோர் களைத் தன்னுடைய அந்திம காலத்திலும் கூட நினைவு கூர்ந்து கெளரவமாகப் பேசித் தன்னுடைய நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்திய நிகழ்வினை இக்கட்டுரையில் எழுதுவதில் நான் மனநிறைவும் பெருமையம் அடைகின்றேன்
அவர் ஒரு நன்றியின் சின்னம்.
நாட்டாரியல்:
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் முதுசொமெனக் கூறப்படும் நாட்டாரிலக் கியத்தின் வடிவங்களில் ஒன்றான ‘கவிகள் என்னும் நாட்டார் பாடல்களைத் தேடி யெடுத்து அவைகளுக்கு எழுத்துருவம் கொடுத்து இவர் எழுதிய கட்டுரைகள் பலராலும் பாராட்டிப் பேசப்பட்டன. இவர்

எழுதிய நாட்டாரியல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது தினகரன், ஈழகேசரி, வீரகேசரி போன்ற பத்திரிகை களிலும் மாத, வார ஏடுகளிலும் வெளிவந்த போது பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் பலமுறை கடிதங்க் மூலமும் நேரடியாகவும் இம்முயற்சியில் மேலும் மேலும் ஈடுபட இவரைத் தூண்டியதாக இவர் என்னிடம் கூறினார். அ.ஸ்.அவர்கள் தன்னிடம் இலக்கியத்துறைகள் சம்பந்தமாக யாராவது உதவிகள் கேட்டு வரும்போ தெல்லாம் முகம் கோணாது தேவையான ஆலோசனைகளையும் நூல்களையும் அளித்துதவும் பண்புள்ளங்கொண்டவர். நாட் டாரியல் சம்பந்தமாக நான் எழுதி வெளி யிட்டுள்ள ஆய்வு நூல்களுக்காக இவரை அடிக்கடி அணுகித் தொல்லைகள் கொடுத்த போதெல்லாம் ‘முத்தால் எனக்கு ஒரே கஷ்டம்தான்” என்று புன்சிரிப்போடு கூறி “உடனே முத்துக்கு ரீ கொண்டு கொடுங்க” என்பார். என்னுடைய நாட்டா ரியல் களப் பணிகளுக்கு பல வழிகளிலும் உதவியும் ஒத்தாசையுமாக இருந்த நண்பர் அ.ஸ. தற்புகழ்ச்சியற்ற இலக்கியப் படைப்பாளி யாவார். இலக்கியப் படைப்பாளிகள் எவரை யும் இவர் தாழ்த்திப் பேசியது இல்லை. நக்கலாக எவருடைய ஆக்கங் களையும் விமர்சனம் செய்து இழிவு படுத்தியது மில்லை. வாழ்க்கையில் நிறை குடமாகத் திகழ்ந்த இவர் இலக்கியத்துறையிலும் நிறைகுடமாகவே இருந்தார்.
சிறுகதையாளன்:
இலங்கை சிறுகதையாளர்களில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த கே.எம்.ஷா (பித்தன்) வுக்கு அடுத்தபடியாக உள்ளவர் நண்பர் அ.ஸ. என்றால் அது மிகையாகாது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுடன் இணைந்து செயற்பட்ட இவர் சமுதாய சீரழிவுகளை இடித்துக்காட்டி அவற்றிற்குப் பரிகாரம் தேடும் கருவிகளாகத் தன்னுடைய சிறுகதைகளைப் படைத்தார். இவருடைய ‘அந்தக் கிழவன்' , 'அவளுக்கென்ன

Page 49
ராசாத்தி’, ‘ ஒருபிடி சோறு' , 'மசக்கை ஆகிய மனித நேயப் படைப்புக்கள் என்றும் இவரை சிறுகதை உலகில் உயர்த்திக் கொண்டிருக்கும். இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய “எனக்கு வயது பதின்மூன்று' என்னும் தொகுதி 1977ல் சாகித்தியமண்டலப் பரிசு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாவலாசிரியன்:
அ.ஸ.அவர்கள் படைத்தளித்த நாவல்களில் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்துள்ள பனிமலர்' என்னும் நாவல் குறிப்பிடத்தக்கது. வீரகேசரி நடாத்திய மட்டக்களப்பு பிரதேச நாவல் போட்டியில் பரிசுபெற்ற இந்நாவல் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களின் பேச்சு மொழியினையும், அவர்களின் தனித்துவமான ஆசாரங்களை யும்,சமயநம்பிக்கைகளையும் பண்பாடுகளை யும் துலாம்பரமாக எடுத்துக் காட்டுவதைக் காணலாம்.கிழக்கிலங்கை மண்ணின் மணம் இந்நாவலின் எல்லா அங்கங்களிலும் செழிப்புடன் மணக்கிறது. இஸ்லாமியத் தத்து வங்களும் சகோதரத்துவ உணர்வுகளும் உயிர்த்துடிப்புடன் இந்நாவலில் உலாவருவ தைக் காணலாம். ஈழத்து முஸ்லிம் நாவல் இலக்கியத் துறையில் அ.ஸ்.வின் இந்நாவல் தனியிடம் வகிக்கும் என்பதில் ஐயமில்லை.
கவிதையும் உருவகக்கதையும்
அ.ஸ.அவர்கள் நல்ல பல கவதை களையும் உருவகக்கதைகளையும் எழுதி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரால் எழுதப்பட்ட உருவகக்கதைகளும் கவிதை களும் தினகரன் , வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் சிற்றேடுகளிலும் வெளி வந்துள்ளன. தத்துவார்த்தமான உருவகக் கதைகளையும் இஸ்லாமிய ஒழுக்கநெறிக ளோடு பின்னிப் பிணைந்த கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். இவை நூலுருப் பெறாமல் போனது துர்ப்பாக்கியமே. அ.ஸ. அவர்கள் பிரதம ஆசிரியராக இருந்து கொண்டு அக்கரைப்பற்று மண்ணிலிருந்து

‘பாவை’ என்ற இலக்கிய பத்திரிகை யொன்றையும் நடாத்தி இப்பகுதியில் இலக்கியத்துறையில் ஆர்வமுள்ள இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தார்.
வெளியீட்டாளர்:
பிறைப்பண்ணை என்னும் வெளியீட் டகத்தின் மூலம் இப்பகுதியில் கவிதைத் துறையில் துளிர் விட்டுக்கொண்டிருந்த இளம் கவிஞர்களை இனங்கணர் டு அவர்களின் கவிதைகளை ‘முற்றத்து மல்லிகை” என்னும் மகுடத்தில் வெளியிட்டு சிறப்புச் செய்தார். இவரால் அன்று இனங்காணப்பட்ட இளங்கவிஞர்களில் சிலர் இன்று ஈழத்து கவிதைத்துறையை மிகச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் சிலர் நண்பர் அ.ஸ.வின் ஊக்கத்தி னாலும் உந்துதலினா லும், உதவியினாலும் உயர்ந்து வளர்ந்த வர்கள் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. நண்பர் அ.ஸ.அவர்கள் சீறா இன்பம்’ சுலைமான் பல்கீஸ் ஆகிய இரு இலக்கிய ஆய்வுக் கட்டுரை நூல்களையும் மாணவர் களுக் கான பாடநூல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார்.
மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்:
நண்பர் அ.ஸ்.அவர்கள் மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பல வருடங்கள் இருந்து அரும் பணியாற்றினார். இவருடைய வழிகாட்டலி னால் இப்பகுதியில் வாழ்ந்த பல இளை ஞர்கள் இலக்கியத்துறையில் ஆர்வ முற்று எழுதத் தொடங்கி இன்று காத்திரமான இலக்கியப் படைப் பாளிகளாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர். இது இவருடைய இலக்கியப் பணிக்கு மைல்கல் எனலாம். இவருடைய தலைமைத்துவத்தில் மட்டக் களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது 9வது ஆண்டுவிழாவையும்
G3)

Page 50
அறிஞர் சித்திலெவ்வை விழாவையும் 1963ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ம் திகதி அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தில் (தற்போது ஆயிஷா மகளிர் வித்தியாலயத் திற்குள் அடங்கியுள்ள ஆராதனை மண்டபம்) மிகச்சிறப்பாக நடாத்தியது. இவ் விழாவில் இலங்கை முற்போக்கு எழுத் தாளர்களில் பிதாமக்களாக கணிக்கப்படும் திரு.க.கைலாசபதி, திரு.கா.சிவத்தம்பி, திரு.சில்லையூர் செல்வராசன் (தான்தோன் றிக்கவிராயர்) திரு.முருகையன் , ஜனாப்.எம். முகம்மது ஸமீம் போன்றவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் கவிஞர் அண்ணல் அவர்களின் தலைமையில் “கணப்பொழு தும் உறங்குவதோ” என்னும் மகுடத்தில் நடைபெற்ற கவியரங்கம் மிகச்சிறப்பாக இருந்ததோடு அரங்கிலிருந்த எல்லோராலும் அது பாராட்டையும் பெற்றது. இன்னும் இவ்விழாவில் திரு.க.கைலாசபதி அவர்களு டைய தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நாடளாவிய இலக்கியப் போட்டி களில் பரிசில்கள் பெற்ற எஸ்.முத்துமீரான், எம்.ஏ.யூ.லெவ்வை, ஏ.ஆர்.எம்.சலிம் , அக்கரை மாணிக்கம் ஆகியோர்கள் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டமையும் குறிப் பிடத்தக்கதாகும்.
அன்று இவ்விலக்கிய விழாவிற்கு கொழும்பிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர்களும் கவிஞர்களும் நண்பர் அ.ஸ. வின் இல்லத்தில் உண்டு மகிழ்ந்து அவரையும் அவருடைய படைப்புகளையும் புகழந்து பேசிய பேச்சுக்களை இன்றும் நான் பெருமையுடன் நினைத்து மகிழ்கின்றேன். அன்று அவர் வீட்டில் கட்டித்தயிரும் காட்டுத் தேனும் கயல்மீன்களும் களிப்போடு உண்ணக்கிடைத்தன. அவர் மனைவியின் சமையலை பலமுறை சுவைத்தவன் நான்.
அன்று பலராலும் பாராட்டி வாழ்த்தப் பட்ட இவ்விலக்கியவிழாவுக்கு அச்சாணியாக இருந்து உழைத்த நண்பர் அ.ஸ.அவர்கள்
G4)

முற்போக்குச் சிந்தனையும் ஆழ்ந்த இஸ்லா மிய இலக்கியப் புலமையும் அசைக்க முடியாத இஸ்லாமியப் பற்றும் உள்ளவர். தூரத்தில் தெரியும் கானல்நீரைப் போன்ற கம்யூனிச சித்தாந்தக் கோட்பாடுகளுக்கு அடிமையாகி அது ஊட்டிய வெறியினான் தன் மதக்கோட்பாடுகளையும் ஒழுக்கநெ களையும் அடியோடு மறந்து அத பின்னால் அவர் செல்ல வில்லை. நாடி ஒரு முஸ்லிம் என்ற நிலையிலிருந்து அவர் அணுவும் அசையாது அந்திம காலம் வரை அல்லாஹற்வின் பள்ளிவாசலோடு தன்னை இறுக இணைத்துக்கொண்டு வாழ்ந்தார். “அ.ஸ். வீட்டில் இல்லையென்றால் அவர் அக்கரைப்பற்று டவுன் பள்ளிவாலில் இருப்பார்” என்று எல்லோரும் சொல்லுமள விற்கு அவர் ஒரு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்டினார்.
மானிடநேசத்தில் கூடிய பற்றுள்ள வராகவும் அதற்காக தன்னுடைய வாழ் நாளையும் எழுத்தையும் தியாகம் செய்த அ.ஸ.அவர்கள் எந்தச் சில்லறைகளின் விமர்சனத்திற்கும் அஞ்சித்தன் கொள்கை யிலிருந்து விடுபட்டவரில்லை. இவர் தன்னுடைய இஸ்லாமியக் கொள்கைகளை விட்டு விட்டு கம்யூனிச சித்தாந்த விமர்ச கர்கள் தன்னையும் தன்னுடைய படைப்புக் களையும், புகழ்ந்து எழுதவேண்டு மென்பதற் காக அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்களுக்கு என்றும் முதுகு சொறிந்தவரல்ல.அ.ஸ். என்னும் அன்புள்ளம் கொண்ட இலக்கியப் படைப் பாளி ஒரு தனித்துவமானவர். ஓர் உண்மை யான முஸ்லிமாக எந்தவொரு விமர்சன வெம்பல் களுக்கும் தலை வணங்காது வாழ்ந்தார். அவருடைய தனிப்பட்ட வாழ்வும் இலக்கிய வாழ்வும் புனிதமானது. அந்த ஒழுக்கம் நிறைந்த இலக்கியவாதியின் நீண்ட பயணத்தில் கறையுமில்லை, கழிவுமில்லை. அவை அவரது தனித்துவத்தை பறைசாற்றிக் கொண்டே இருக்கும்.

Page 51
MWXW *
%%%%%% **
அறுபதுகளில்
9.60.
9.óbíT.
இருவரில், யார் இலங்கையர்
6T60
தேடுதல் நடத்தினேன்
ՓԱ26), அ.ஸ்.நட்பானது.
Ο
9.60.
இலக்கிய உலகில்
அடக்கமானவர்.
திறந்தால் மட்டும் மணக்கின்ற
99
‘அத்தர்
Κ
9.60.
இலக்கிய உலகில்
U60drusiasts.
சேற்றில் சேர்ந்தாலும் பயன்தரவிளைகின்ற ic முளைநெல்"
 
 
 

மணிப்புலவர் L மருதூர்- ஏ. மஜீத்
9.6).
இலக்கிய உலகில் அற்புதமானவர், அவரின் எழுத்துக்கள் கன்னியா
‘வெந்நீர் ஊற்று.
々
96.O.
இலக்கிய உலகில்
Uயன்மிக்கவர்.
இளைஞர்கட்கு அவர் ஒரு
சுப்பர் மார்க்கட்
{X-
9.60.
இலக்கிய உலகில் எங்களுக்கெல்லாம் φ6οίβοΟττιρ ஆரோக்கியமிக்கவர், புதுமை விரும்பாத நோயாளர்கட்கு அவர் ஒரு ‘பட்டோலைக்கடை

Page 52
Sanat)
1995 என்று நினைக்கின்றேன். அப்பொழுது “நேசன்” எனும் ஒரு மாதப் பத்திரிகை வந்தது. அதில் கிழக்கிலங்கை யின் முஸ்லிம் எழுத்தாளர்கள் பற்றி “கீழ் வானில்” என்ற தொடர் ஒன்றை நான் எழுதி வந்தேன். அத்தொடரில் அ.ஸ.பற்றி வந்த கட்டுரையில், ‘பொதுவாக வெறும் இலக்கி யக்கர்த்தாவாக மட்டுமிருக்காது அக்கரை யூரின் கல்வி, சமய, சமூக வளர்ச்சியில் அமைதியான முறையில் பங்களிப்புச் செய்து வந்துள்ளார். இப்போது எல்லாவற்றிலும் அலுப்புக்கண்டவர்போல’க் காணப்படு கின்றார். உண்மையில் அ.ஸ்.இன்னும் இலக்கிய உலகில் வாழவேண்டியவர்” என் றொரு பகுதி வருகிறது. இந்தப் பகுதியை அ.ஸ்.வுக்கு ரொம்பப் பிடிப்பதாகச் சொன் னார். எல்லாவற்றிலும் அலுப்புக்கண்டவர் என்பதே அவருக்குப் பிடிப்பதாகச் சொன்னார் அலுப்புக்குக் காரணம் இருக்கிறது. ஏனென் றால் அவர் நிறையப் பணியாற்றியிருக் கின்றார்.
அ.ஸ்.தென்கிழக்குப்பிரதேச முஸ்லிம் களின் கலை இலக்கிய வளர்ச்சியிலே முக்கிய பங்காற்றியிருக்கிறார். புலவர்மணி ஆ.மு.வடிரிபுத்தீன்தான் அதன் முதல்வரான போதும் அந்தத்தொடர்ச்சியில் அ.ஸ. அப்துஸ்ஸமதுவுக்கு ஒரு பிரதான இடம் இருக்கிறது. அ.ஸ்.இப்பிரதேசத்தின் தமிழ் சிறப்புப் பட்டதாரியாக, தமிழாசிரியாராக, விரிவுரையாளராக,பாடப்புத்தகம் எழுதுபவ ராக இஸ்லாமிய இலக்கிய அம்சங்களை வெளிக்கொணர்பவராக, படைப்பாளியாக இவ்வாறு பல்வேறு ஆளுமைகளுடன் தொழிற்பட்டிருக்கின்றார். புனைகதைத் துறையில் பங்காற்றிய முஸ்லிம்களில் இளங்கீரன், பித்தனுக்குப் பிறகு அ.ஸ்.

றமீஸ் அப்துல்லா விரிவுரையாளர், மொழித்துறை தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
முக்கியம் பெறுகிறார். மூன்று நாவல்களை யும் பல்வேறு சிறுகதைகளையும் எழுதி ஈழத்துத் தமிழ்ப் புனைகதைத் துறையில் தன்னையும் சேர்த்துக்கொள்கிறார்.
அவர் எழுதிய சிறுகதைகள் ஊடாக வும் சிறுகதைகள் தொடர்பான கட்டுரை களுடாகவும் தான் சார்ந்த சமூகத்தின் தனித்துவம் பற்றியே அவர் நிறையச் சிந்தித் திருக்கிறார். அதனூடாகக் கதை எழுதி யிருக்கின்றார். அது தொடர்பான விவாதங் களை முன் வைத்திருக்கிறார். அந்த வகை யில் அஸ்.வுக்கு ஈழத்து சிறுகதைப் பாரம் பரியத்திலே ஒரு பதிவு இருக்கிறது. முன் கொண்டுவர தன்னுடைய கதைகளின் மூலம் துணிந்திருக்கின்றார் என்பது மட்டும் உண்மை என்பது தெரியவருகின்றது. இந்தக் காரணத்தினாலும் தென்கிழக்குப் பிரதேசத் தின் முதல் முஸ்லிம் சிறுகதையாளர் என் பதனாலுமே அ.ஸ்.முக்கியத்துவம் பெறு கிறார்.
'நூர்ஜஹான்’ அ.ஸ்.வின் முதற் சிறுகதையாக தினகரனில் வெளிவந்தது. (அப்போது அவருக்கு வயது 21) தத்துவ விசாரத்திலிருந்து எழுகிற ஒரு காதல் கதை யாக இது அமைந்திருந்தது. ‘உலகம் முழுதும் மாயை அது மனிதரை ஏமாற்றியே விடுகிறது. அடைவது ஒரு சிறு இன்பம். அதன் பிரதிபலனே பெருந்துன்பம். நினைப் பதெல்லாம் நிறைவேறுவதில்லை. நிறை வேறுவதெல்லாம் நிலைப்பதுமில்லை. ஆகவே நீ உன் வாழ்வில் மிக ஜாக்கி ரதை.” அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பக லைக் கழிப்பதற்காக ஒரு தத்துவார்த்த நூலுடன் கடற்கரைக்குச் சென்றேன். அங்கு ஏகாந்தமான ஒரு இடத்திலிருந்து மணற் குன்றில் தலைவைத்தக்கொண்டு நூலைப்

Page 53
புரட்டினேன். அதில் கொட்டை எழுத்துக் களால் பொறிக்கப்பட்டிருந்த மேற்குறித்த அறமொழி என்னை ஒரு உலுப்பு உலுக்கி விட்டது. உடனே என் சிந்தனா சக்தி வாழ் வில் எனக்கு ஏற்பட்ட ஒரு ஏமாற்றமான நிகழ்வினை நாடிச் சென்றது.
அப்பொழுது நான் செங்கல்பட்டியில் ஒரு ஆபீஸில் தலைமைக் குமாஸ்தாவாக இருந்தேன். நான் தினமும் காலையில் அந்தக் காலேஜ் வீதியால்தான் .” இது 'நூர்ஜஹான் கதையின் தொடக்கப்பகுதி. இந்தச் சிறுகதையின் தொடக்கம் தொடக்க கால சிறுகதைக்குரிய பண்பாகும். அத னோடு இந்தியப் பகைப்புலத்திலே கதை எழுதுகின்ற பழக்கமும் அ.ஸ.வுக்கிருந்திருக் கிறது. இதனை மறுப்பவர் பலர்; அவர் எழுதிய கதைகள் இந்தியச் சூழலுக்கு மாற்றிப் பிரசுரிக்கப்பட்டதென்பர். ஆனால் அவ்வாறான தகவல்களை அ.ஸ.வின் எழுத் துக்களில் காணக்கிடைக்கவில்லை. எனது எழுத்து நினைவுகள் என்று அ.ஸ.11-091988 தினகரனில் ஒரு குறிப்பெழுதியிருக் கின்றார். அதில் தனது கதைகளில் கல்முனை, கல்லோயச்சந்தி, திருகோண மலை என்பன செங்கல்பட்டுவாகவும் திருச்சி ஜங்சனாகவும் கோயம்புத்தூராகவும் மாற்றப் பட்டதென்று மேலோட்டமாகக் குறிப்பிடுகின் றார். ஒன்று மாத்திரம் உண்மை இஸ்லாமி யப் பகைப்புலத்தோடு அவர் கதை எழுதி னார். அதன் முன்னோடியாக ஈழத்தில் அவர் தொழிற்பட்டிருக்கிறார்.
அ.ஸ்.வின் கதைகளை ஆய்வுக் கெடுக்கிறபோது அவரது பதினொரு கதை களடங்கிய “எனக்கு வயது பதின்மூன்று” என்ற தொகுதி மாத்திரமே மொத்தமாகக் கிடைக்கின்ற ஒன்று. மற்றது சிதைந்துபோன பத்திரிகைகளிலிருந்து உதிரியாகக் கிடைக் கின்ற கதைகள் பலவற்றை கவனத்தில் எடுக்கவேண்டியிருக்கின்றது. அவற்றையும் கவனத்தில் கொண்டு பார்க்கின்போது அ.ஸ. தனிமனித உறவு நிலைகளைச் சித்திரிக் கின்ற கதைஞராகவே வெளிவருகின்றார். அவரிடம் மேற்கத்தைய இலக்கிய மரபுகளி லிருந்து தமிழில் வந்த சிறுகதைக்குரிய பண்புகளைவிட கதைக்குரிய பண்புகளே மேலோங்கியிருக்கினறன. அ.ஸ். எழுதிய

காலத்தில் அந்தக் கதைகள் முக்கியமாகக் கருதப்படவேண்டியவைதான். அந்தக் காலத் தின் முக்கியமான சிறுகதை ஆசிரியராக அ.ஸ்.கருதப்பட்டிருக்கின்றார். சுருக்கமாகச் சொன்னால் கதையையே பிரதானமாகக் கொண்ட சிறிய கதைகளை அவர் நிறைய எழுதியிருக்கின்றார்.
அ.ஸ. தினகரன், சிந்தாமணி, வீரகேசரி, சுதந்திரன் போன்ற பத்திரிகை களிலும் கலையமுதம், கலாமதி, மரகதம், சரஸ்வதி, இன்சானியா, மலர் போன்ற சஞ்சிகைகளிலும் நிறையக் கதைகள் எழுதி யுள்ளார். காதலால் சேருகின்ற, பிரிகின்ற, உள்ளங்களைப் பற்றிய கதைகளும் சமூகத் தின் அடிமட்ட பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கதைகளையும் இஸ்லாமிய ஷரிஆ பற்றிய கதைகளையும் இஸ்லாமிய வரலாற் றுச் சம்பவங்கள் பற்றிய கதைகளையும் சரித்திரம் தொடர்பான கதைகளையும் இலக் கியக் கதைகளையும் பணக்காரன் - ஏழை வேறுபாடுகள் பற்றிய கதைகளையும் வேறு சில கதைகளையும் அவர் எழுதியிருக்கின் pTi.
அவருடைய ‘தங்கை’ என்ற கதை 1961இலே வெளிவந்தது. இது Brother & Sister என ஆங்கிலத்திலும் சி.வி.வேலுப் பிள்ளையால் மொழி பெயர்க்கப்பட்டது. சந்தர்ப்பவசத்தால் ஒரே தாயிடம் பால் குடித்த இருவர் வாழ எண்ணி பிரிகின்ற செய்தி இக்கதை. பால் குடிமுறையால் ஒன்றுபட்டவர்கள் திருமணம் முடிக்க முடியாது என்ற கருத்தினை இஸ்லாமிய சட்டம் குறிப்பிடுகிறது. இந்த ஆழமான இஸ்லாமியத் தத்துவார்த்தக் கதையை அவர் எழுதியமை பலராலும் வியந்து பேசப் பட்டது. அதுபோல பல்வேறுபட்ட இஸ்லாமிய அம்சங்களையும் பிரதி பலிப்ப தாக பல கதைகளை அவர் எழுதியிருக் கிறார்.
1961இல் மரகதத்தில் வெளிவந்த அவருடைய கண்ணிறைந்தவள்’ என்ற கதையும் கூலித்தொழிலுக்காக வயலுக்குச் செல்கின்ற பெண்கள் மீதான பாலியல் சேஷ்டைகளை எதிர்க்கின்ற பெண்ணினை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்தக் கதையில் முஸ்லிம் சமூகத்தின் பள்ளிவாசல் நிருவாக முறை,அதன் சமூக முக்கியத்துவம்
(47 Y

Page 54
முஸ்லிம்களின் தண்டனை முறை (ஹத்தடித் தல்) முதலியவற்றையும் அறிய முடிகிறது. அதனோடு அவருடைய பல கதைகளில் அடிமட்ட பெண்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை கண்டு கொள்ளலாம். அந்த வகையில் இந்த வாழ்க்கை ஊரறியாச் செய்தி, நிழல் தவறிழைத்தவன் போன்ற கதைகள் குறிப்பிடத்தக்கன.
மசக்கை' என்பது வீரகேசரியில் 1962 இல் வெளிவந்த ஒரு கதை. அளிக்கம்பை என்ற இடத்தில் வாழுகின்ற குறப்பெண்களை ஆசிரியர் காணச்செல்வதும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளைக் குறிப்பிடுவதும் இக் கதையாகும். அக்குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு இக்கதை ஒரு நல்ல ஆவணமாகும். வெறும் கதை சொல்லும் பாங்கிலே இக்கதை அமைந் திருப்பதும் கவனிக்கத்தக்கது.
1967 இல் தினகரனில் வெளிவந்த ‘மூன்றேக்கர் நிலம்’ என்ற கதை அந்தக் காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் கரும்புச் செய்கைக்காக காணி சுவீகரிக்கப்பட்ட பிரச் சினையை மிகத் தத்ரூபமாகப் பிரதிபலிக் கின்ற கதையாகும். சமூகப் பிரச்சினையை எழுத்தாளுகிறது என்ற அடிப்படையில் இந்தக் கதை முக்கியமானதாகும்.
பணக்கார ஏழைகளின் வர்க்க முரண் பாடுகளை சித்திரிக்கின்ற பல கதைகளை அவர் எழுதியிருக்கின்றார். ‘அந்தக் காணி யின் சொந்தக்காரன்’, ‘திரும்பி வருவானோ' 'எனக்கு வயது பதின்மூன்று போன்ற கதைகள் இந்த வகையில் முக்கியமானவை. 1988 இல் சிந்தாமணியில் வெளிவந்த 'அவல் கஞ்சி' அன்றாடப் பிரச்சினைக்காக அவதிப்படுகின்ற ஒருவருடைய வாழ்க்கைப் பிரச்சினைகளையும் நம்பிக்கைகளையும் இழப்புக்களையும் சித்திரிக்கின்ற ஒரு நல்ல கதையாகும்.
1989இலே தினகரனில் வெளிவந்த அவருடைய பேரன் பிறந்தாச்சு என்ற கதை சிறுபிள்ளைகளுடைய அழுகை, தூக்க மின்மை, தொடர்பாக நாம் கொள்ளுகின்ற கவலைகள், அதற்காக நாம் செய்கின்ற மந்திர தந்திரங்களை அற்புதமாகச் சித்திரித் துக் கடைசியிலே அந்த நோய்க்கு மேற் கத்தைய வைத்தியத்தை நாடிச் செல்வதும்
G18)

குறிப்பிடப்படுகின்றது. உண்மையில் நமக்கு நல்ல அனுபவத்தினையும் அறிவுரையையும் கூறுகின்ற கதையாக இது அமைந்திருக் கின்றது.
1976இல் தினகரனில் வெளிவந்த *தாய்' என்ற கதையும் 1983 இல் வெளி வந்த ‘பரத்தையர் மோகம் தோற்றது என்ற கதையும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. அகநானூறின் பதி னாறாவது பாடலைக் கருவாகக் கொண்டு தாய்' என்ற கதையும் அதே நூலின் களிற் றுயானைநிரை ஆறாவது பாடலைக் கருவா கக் கொண்டு இரண்டாவது கதையும் வந்தது. இது அ.ஸ்.வுக்கு தமிழ் இலக்கியத் திலே இருக்கின்ற ஈடுபாட்டையும் ஆழமான அறிவையும் புலப்படுத்துகின்றது. அதேபோல இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ‘அந்தப் பிரயாணம்’, ‘ஈர்ப்பு முதலான கதைகளை அவர் எழுதியிருக்கிறார். "ஈர்ப்பு அவருக்கு பலத்த விமர்சனத்தையும் மதிப்பையும் தேடிக்கொடுத்த கதை. தமிழ் நாட்டின் ‘மில்லத்' சஞ்சிகையிலே அது மீளப்பிரசுரிக் கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ‘உறவின் பொருள்' என்பதும் ஒரு சரித்திரக் கதையே. மொகலாய இளவரசி ரஷியா பற்றிய கதை இது.
அவடைய 'அந்தக் கிழவன்' என்ற கதை 1969 இல் தினகரனில் வெளிவந்தது. இது பலரது பாராட்டைப் பெற்ற கதை. முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கைகள், செயற்பாடுகள், பற்றி பல்வேறு அம்சங்களை இந்தக் கதையினுடாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒரு இறைநேசருக்காக மினரா' வைக் கட்டிய சிற்பி அதே இடத்தில் நடை பெற்ற கந்தூரியில் ஒரு மிடறு தண்ணிருக் காக வழியின்றி உயிர் விடுகின்ற செய்தியை இந்தக் கதை பிரதிபலிக்கிறது. 1981 இலும் இந்தக் கதை தினகரனிலே மீள பிரசுரிக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.
‘சாணைக்கூறை', 'மசக்கை போன்ற கதைகள் கிழக்கு முஸ்லிம்களை அறிந்து கொள்ளுவதற்கு பெரிதும் உதவுகின்றன. பிள்ளை பிறந்ததும் முறைமாமியால் அனுப் பப்படுகின்ற சாணைக்கூறைப் பாரம்பரியம் இந்தக் கதையிலே பிரஸ்தாபிக்கப்படுகின்றது இப்பிரதேசத்தில் முக்கியம் பெறுகின்ற

Page 55
சமூகப் பிரச்சினையாக சீதனப்பிரச்சினை இக்கதையிலே பேசப்படுவதும் குறிப்பிடத் தக்கது. மசக்கை' என்ற கதை அவரது தொகுதியிலே வெளிவந்தது. அக்கதை தின கரனிலே வெளிவருகின்றபோது ‘மசக்கை என்றால் அப்படித்தான் என்ற தலைப்போடு வந்தது. இந்தக் கதை இங்கு வாழ்கின்ற பக்கிர் கூட்டத்தைப் பற்றியும் அவர்களது தொழில் முறைமைகள் பற்றியும் பிரஸ்தா பிக்கின்ற ஒரு முக்கியமான கதை.
1973இலே தினகரனிலே வெளிவந்த அவருடைய மனவடிவு' என்ற கதை பல்வேறு வழிகளில் முக்கியப்படுகிறது. இந்தப் பிரதேச மக்களின் பிரதான தொழில், பேச்சு, முறைமை போன்றவற்றை இந்தக் கதை பிரதிபலிக்கின்றது.
அதில்ல புள்ள! செங்காமம் வட்ட முழுவதும் பேமிற் பூமிதானே! அதயெல்லாம் விவசாயக் குடும்பங்கள் குடியேத்தவாம் எண்டு, மூண்டு மூண்டு ஏக்கராய் பிரிச்சி கல்போடுறாங்க. சில சிங்கள குடும்பங்கள் இப்பவே வந்து புரைகளில் இருந்து கொண் டாங்க. நம்முட பிச்சப்பொட்டியும் பெய்த்து. எங்க வாப்பா வெட்டி எனக்கி சீதனமாத் தந்த பூமி. இத இப்படி அடாத்தா எடுத்தா கேக்கப்பாக்க ஆள் இல்லையா? என்னத் தப்புள்ள கேக்கிற, அக்கரப்பத்தில சோல, வாங்காமம், வேலாமரத்துவெளி எண்ட நம்முட ஆக்கள்ற காணியயெல்லாம் கரும்புக் கெண்டும் குடியேத்தத்துக்கெண்டும் எடுத்தாங்களே என்ன நடந்தது? இப்ப பொத்துவிலுக்கும் வந்திற்றாங்க சிங்களக் காலி!”
மனவடிவு என்பது மனமடிவு என்பதன் திரிபாகும் என்பார் ஆசிரியர். அம்பாரை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலே மனத்துயரத்தினை மனமடிவு என்பார்களாம். அது பேச்சு வழக்கிலே மனவடிவாக வழங் குகிறது. அதனடிப்படையிலே அப்பிரதேசப் பிரச்சினை ஒன்றையும் கருவாக் கொண்டு மனவடிவு என்ற கதையினை அவர் எழுதி யிருப்பதாக அவருடைய பத்திரிகைக் குறிப் பொன்றிலே கூறியுள்ளார். மேலும் 1970 இல் இப்பிரதேசத்தில் நிகழ்ந்த குடியேற்றம் தொடர்பான பிரச்சினையொன்றையும் இந்தக் கதை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

அவருடைய கதைகளில் இந்தப் பிரதேசத்திற்குரிய பேச்சு வழக்கினையும் ஆராய நிறையஇடமுண்டு. ‘அந்தக்காணி யின் சொந்தக்காரன்’ என்ற கதையிலே வருகின்ற ஒரு பந்தியையும் இதற்கு ஆதார மாக்க காட்டமுடியும்.
‘மிச்ச அளிச்சாட்டியத்திற்கு நீங்க வந்திருக்கிங்க. அன்னா பாரு, அந்த நீலத் தாவணிப் பொட்டைகள் கட்டுல கதிர் இழுக் காளுகள். டேய்! நாகூர் தம்பி அவளுகள்ள மூஞ்சில அடிச்சி வரவைக்க நிக்காம வரம் புல ஏத்துடா!”
“போடியார் இருக்கயளா”
எனக்கு வயது பதின்மூன்று என்ற தொகுதியில் வருகின்ற வர்ணபேதம்’ என்ற கதை வித்தியாசமானது. நிறங்களின் தன்மைக்கேற்ப சமூகங்களின் வாழ்க்கை முறையும் அமைந்திருப்பதை இவர் இந்தக் கதையிலே பல்வேறு நிறத்தைச் சுட்டி கதை சொல்லியிருக்கிறார். இந்தக் கதையினை வெறுங் கதையாகச் சொல்வதானால் அதன் அழகு குறைந்து விடுகிறது. பொதுவாக அ.ஸ்.விடமிருக்கின்ற மிகப் பிரதானமான பிரச்சினையே அதுதான்.
அ.ஸ.முஸ்லிம் சமூகப் பின்புலத் தினை அடியாகக் கொண்டு சிறுகதை எழு தியதனாலும் இப்பிரதேசத்தின் முதல் முஸ்லிம் சிறுகதையாளர் என்ற வகையிலும் அவர் குறைத்து மதிப்பிடப்படவேண்டியவ ரல்லர். அதே நேரம் அவர் எழுதிய காலத் தில் அவர் சாதித்தவைகள் பெருமைப்படத் தக்கவையே.
“எனது கதைகள் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமையவேண்டும் என்பதில் நான் பெரிதும் கவனம் செலுத்தினேன். அந்த வகையில் முஸ்லிம் சிறுகதைகளின் முன்னோடி என்ற சிறப்பிடம் எனக்குக் கிடைத்தது. ஷரீஆ சம்பந்தமான பிரச்சினைகளையும் கதைக் கருவாகக் கொண்டு எழுதியதில் சில விமர் சகர்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. ('எனது எழுத்து நினைவுகள் - அ.ஸ. அப்துஸ்ஸமது , தினகரன்; 11-09-88) இது அவரே அவர் கதைகள் பற்றி குறிப்பிட்ட கருத்து.
G.9)

Page 56
ஓர் எழுத்தாளன் குறித்த ஒரு சமூகத்தில் பிறந்து வளர்கின்றான். ஆதலால் அச்சமூகத்தின் நாகரீக கலாசார பண்புகள் ஏனைய கலாசார தாக்கங்கள், மனோபாவங் கள், அதன் சிந்தனைப்போக்கு, பண்டைய மரபுகளின் செல்வாக்கு, அதிலிருந்து விடு படத்துடிக்கும் புதுமுயற்சிகள் போன்ற இன் னோரன்ன அனைத்து அம்சங்களும் அவனது எழுத்துக்களைப் பாதிக்கவே செய் கின்றன. இத்தகைய அம்சங்கள் எத்தகைய எழுத்தாளனுக்கும் பொதுவாகவே அமைந்து விடுகின்றன.
இவ்வாறே, அ.ஸ.அப்துஸ்ஸமதுவின் படைப்புக்கள் சிறுகதை, நாவல், இலக்கியக் கட்டுரைகள் என பன்முகத்தன்மை கொண்டு அமைந்தாலும் பொதுவாக இவரது படைப் புக்களில் இஸ்லாமிய பாரம்பரிய பண்பாட்டு தாக்கமே விரவிநிற்பதைக் காணலாம். மேலும் இவரது பெரும்பாலான படைப்புக் கள் தம் சொந்த மண்ணையே களங்களா கவும் கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்கள், மனோபாவங்கள் என் பனவற்றையே சித்திரிப்பனவாகவும் அமைந் துள்ளன.
ஆரம்ப காலங்களில் இவரது ஆக் கங்கள் ‘அன்பு இறைதாஸன்’ என்ற புனைப் பெயரிலேயே வெளியாயின. பின்னைய காலங்களில் தம் சொந்தப் பெயரிலேயே இலக்கிய ஆக்கங்களில் நிலை கொண்டவர். இவரது எழுத்துக்கள், சிறுகதை, நாவல், இலக்கியக்கட்டுரைகள், தொகுப்புக்கள், மாணவர்களுக்கான இலக்கியப் பாடநூல்கள்
(50)
 

எம்.எல்.எஸ்.றாவுறிலா வழியாட், விரிவுரையாளர், மொழித்துறை, தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
என்றமைந்ததாகையால் இத்துறையில் இவருக்கு பல பாராட்டுக்களும் பரிசில்களும் கிடைத்துள்ளன.
1977ஆம் ஆண்டில் 'எனக்கு வயது பதின்மூன்று என்ற சிறுகதைத் தொகுதிக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. 1982 இல் ‘பனிமலர்' என்னும் இவரது நாவல் மட்டக்களப்புப் பிரதேசத்தில் சிறந்த நாவலாகத் தெரிவு செய்யப்பட்டு வீரகேசரி பரிசு பெற்றது. 1982இல் தேசிய முஸ்லிம் எழுத்தாளர் பேரவை கனவுப்பூக்கள்' என்ற நாவலை சிறந்த நாவலாகத் தெரிவு செய்து ‘பொன்முடிப்பு வழங்கியது.
1989 ஆம் ஆண்டில் முஸ்லிம் கலா சார அமைச்சு அவருக்கு ‘தாஜுல் அதீப் என்ற விருதையும் 1990ஆம் ஆண்டில் மலோசிய கவிதை மாலை இயக்கம் ‘இலக்கியத்திலகம்' என்ற விருதையும் 1995 ஆம் ஆண்டில் அக்கரைப்பற்றில் தேசிய கலைஞர் பேரவை ‘இலக்கியமாமணி’ என்ற விருதையும் அளித்து கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ.ஸ்.அப்துஸ்ஸமதுவின் நாவல்கள்
தமிழ் நாவல் இலக்கியமானது ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைப் பெற்றிருக் கின்றது. அதனுடைய தோற்றமும் வளர்ச்சி யும் பல விதமான பரிமாணங்களை உள்ள டக்கியதாகவும் கூடுதலான எண்ணிக்கை யையும் கொண்டமைந்துள்ள அதே சமயத் தில் வித்தியாசமான அம்சங்களையும் கொண்டமைந்துள்ளது.

Page 57
சமுதாயம் அதனுடைய வளர்ச்சிப் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் போது அதன் பலவகையான கூறுகளும் நவீன தன்மையை ஏற்றுக்கொண்டு அதாவது தன்னுள் உள்வாங்கிக் கொண்டு வளர வேண்டி இருக்கின்றது. அதாவது மனித சமுதாயம் அதன் வளர்ச்சிப் போக்கில் கற்பனைகளுக்கு அதிகம் இடம் கொடுக்கா மல் வளரவேண்டி இருக்கிறது. அதாவது நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு நெருக் கமாக வரவேண்டியுள்ளது.
உலக இலக்கிய வரலாற்றில் எந்த ஒரு மொழியிலும் செய்யுள் நடையின் பின்னரே உரைநடை வளர்ச்சி அடைந் திருப்பதைக் காணலாம். அதன்படி தமிழிலும் மரபு மரபாகப் பேணப்பட்டு வந்த செய்யுள் நடை மாறி மேனாட்டார் தொடர்பு, சமயப் போட்டி, ஆங்கிலக்கல்வியின் வளர்ச்சி, அச்சுப்பொறியின் வருகை, இவைகளால் ஏற்பட்ட சமுதாயமாற்றம் போன்ற காரணங் களால் உரைநடை வளரத் தொடங்கியது. மட்டுமன்றி உரைநடை இலக்கிய வடிவங் களும் தோன்றலாயின. அவ்வாறு தோன்றிய இலக்கிய வடிவங்களுள் ஒன்றுதான் இன்று முழுவளர்ச்சி பெற்றுள்ள நாவல்.
தமிழிலும் இன்று வெளிவந்து கொண் டிருக்கும் இலக்கிய வடிவங்களுள் முதலிடம் பெறுவது நாவல்களாகும். நுழையா இடமே இல்லை என்றளவுக்கு சமுதாயத்தின் எல்லா நிலைகளையும் கருத்திற்கொண்டு தமிழ் நாவல்கள் உருவாகி வருகின்றன. மனித னின் அன்றாட வாழ்வில் நிறைந்து கிடக்கும் தேவைகள், தேவைமறுப்புகள் எல்லாம் பன்முக அனுபவங்களாகத் தொலை நோக்கோடு எளிதில் புலப்படுத்தும் ஆற்றல் மிக்க சாதனமாக நாவல் இன்று விளங்கு கிறது.
இந்தியாவில் போன்றே இலங்கை யிலும் நிலவுடமைச் சமூக அமைப்பின் தோற்றம், ஆங்கில கல்வி வளர்ச்சி, மேனாட்டு இலக்கியப் பரிச்சயம், முதலான

காரணங்களால், தமிழிலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் பிரதி பலிப்பாக 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியி லேயே ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் தோற்றம் பெற்று இன்று பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களையும் உள்ளடக்கியதாகக் காணப் படுகின்றது.
அ. ஸ.அப்துஸ் ஸமது அவர்கள் ஈழத்து நாவல் இலக்கிய உலகுக்கு மூன்று நாவல்களை மட்டுமே படைத்தளித்துள்ளார். இதில் இவரது முதலாவது நாவல் ‘பனிமலர்' என்ற நாவல் ஆகும். இந்நாவல் கிழக் கிலங்கையைக் களமாகவும் அப்பிரதேச மக்களின் மனோபாவங்கள், நாகரீக பண் பாட்டு விழுமியங்களையும் சித்திரித்துள்ள தோடு முஸ்லிம்களுக்கேயுரிய ஆசாரங் களையும் நம்பிக்கைகளையும் மிக மிக நுணுக்கமாக உண்மைக்குப் புறம்போகாத வகையில் சித்திரித்துள்ளார். மேலும் இந் நாவலின் கருவைப் பற்றி ஆசிரியர் அ.ஸ். அப்துஸ்ஸமது கூறும்போது,
நிலப்பிரபுத்துவ மனப்பாங்கிற்கும் கல்வி அறிவு வளர்ச்சியினால் ஏற்பட்ட மனப் பாங்கிற்கும் இடையில் நிகழும் போராட்ட மாகவே இந்நாவல் அமைகிறது எனக் குறிப்பிடுகின்றார்.
இந்நாவலில் வரும் இஸ்மாயீல் போடியார் மகள் மர்லியாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஷாபிதீன் என்பவருக்கும் ஒரே பாடசாலையில் படிப்பிக்கும்போது காதல் எற்படுகின்றது. ஆனால் அக்காதல் ஒரு சிறிய குடும்பத்தகராறு காரணமாகவும் ஷாபிதீனின் தாய் விரும்பாதபடியாலும் அது நிறைவேறாமல் போகின்றது. அதன் பின் ஷாபிதீன் கொழுத்த சீதனத்தோடு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்கின்றான். அத்தோடு அவனுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியும் கிடைக்கின்றது.
ஆனால் மர்லியாவோ திருமணமா காமல் கல்லூரி அதிபராக கடமையாற்றிக்
G5D

Page 58
கொண்டிருந்தாள். மர்லியாவின் தகப்பன் இஸ்மாயீல் போடியார் அவளுக்கு தமது தங்கை மகளான படிப்பறிவில் லாத முஸம்மில் என்ற முறைமச்சானை முடிக்கத் திட்டம் போடுகின்றார். இதனை மர்லியா, மர்லியாவின் தாய், சகோதரன் எல்லோரும் எதிர்க்கின்றனர். அத்தோடு மர்லியாவின் தாயும் சகோரனும் இஸ்மாயீல் போடியா ரிடம் கூலி வேலை பார்த்த அலியார் என்பவ ரின் மகன் நன்றாகப் படித்துவிட்டு விவசாயக் கந்தோரில் உத்தியோகம் பார்க்கும் றஹீம் என்பவரையே மர்லியாவுக்கு மாப்பிள்ளை யாக்கும் படி கேட்கின்றனர். அதற்கு ஹாஜியாரின் போடியார் கர்வம் இவ்வாறு பேசுவதாக காட்டுகின்றார்.
‘ஏண்டி பைத்தியக்காரி, நான் மானம் மரியாதையா இந்த ஊரிலே ஒரு பெரிய மனுஷனா வாழுறது உனக்கும் உன்ட பிள்ளைக்கும் புடிக்கலயா?. எனக்கிற்ற வெள்ளாம செஞ்சி என்ற ஊட்ட வேலி வெளச்சல் கட்டினவன்ற மகன எடுத்து என்ற புள்ளக்கி கல்யாணம் செய்வதா? ஒங்குட மூளை என்ன குழம்பிப்போச்சா? இல்ல என்ற மானம் மரியாதைய தொலைக்கிறதுக்கு வந்திருக்கயலா? புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுடி. என்ற உப்பத் திண்டு வளந்தவன் குடும்பத்தில் நான் மாப்பிள்ளை எடுக்கிறதென்டா ஊர் என்னப் பழிச்சுப் போடு
இவ்வாறு ஹாஜியார் தனது மகள் மர்லியாவின் கல்யாணத்திற்கு மறுப்புத் தெரி வித்து விட்டார். மர்லியாவை ஒரு அற்ப காரணத்திற்காக கைவிட்டுவிட்டு கல்யாணம் செய்த விரிவுரையாளர் ஷாபிதீனின் மனை விக்கு அவள் மலடாக இருந்தபடியால் பிள்ளை இல்லாமல் இருக்கின்றார். இந்நிலையில் மர்லியாவை மறக்க முடியாத ஷாபிதீன் தன்னுடைய பல்கலைக்கழகக் காதலை தன் மனைவியிடம் கூறி தான் மர்லியாவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய இருப்பதாக கூறுகின்றான். அதற்கு
(52)

அவனுடைய மனைவியும் சம்மதித்து அவளே, மர்லியாவிடம் சம்மதம் கேட்டு கடிதம் எழுதுகின்றாள். மர்லியா இதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு ஷாபிதீனும் மனைவியும் அனாதை இல்லம் ஒன்றை ஆரம்பித்து நடத்துகின்றனர்.
நாளடைவில் இஸ்மாயீல் ஹாஜி யாருக்கு பாரிசவாதம் நோய் முற்றி மரணப் படுக்கையில் கிடக்கும் போது அவருடைய போடியார் கெளரவமெல்லாம் அடங்கி மர்லியாவுக்கு றஹீமை திருமணம் செய்து வைக்கும்படி கூறுகின்றார். அதன் படியே திருமணம் நடைபெறுகின்றது.
இந்நாவலானது போடிமார்களின் வாழ்க்கை அவர்களுடைய மனோபாவங்கள் பழக்கவழக்கங்கள் என்பனவற்றையே முற்று முழுதாகச் சித்திரிக்கின்றது. அத்தோடு என்ன போடியாரின் மகளாக இருந்தாலும் படித்தபெண்ணுக்கு படித்தமாப்பிள்ளை யையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திச் செல்வதை காணலாம்.
இந்நாவலில் வரும் மர்லியாவின் சகோதரரான ஜெமீல் ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள பாத்திரமாக சிருஷ்டித்து அதன் மூலம் இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகளையும் கூறியுள்ளார். அடுத்து விரிவு ரையாளர் ஷாபிதீனின் மனைவி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று அறிந்து கணவன் காதலித்த பெண்ணையே அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்கிறாள். இங்கு பெண்மையின் பெருந்தன்மை காட்டப்படுகின்றது.
அ.ஸ்.அப்துஸ்ஸமது அவர்களினால் 1983இல் எழுதப்பட்டஇன்னொரு நாவல் 'கனவுப்பூக்கள்’ என்ற நாவலாகும். இதில் பிரதான பாத்திரங்களாக அன்வர் என்ற இளைஞனும் ராணி என்ற பெண் பாத்திர முமாகும். இந்த இருவரின் மனோபாவங்கள்

Page 59
உணர்வுகள், மன அவஸ்தைகள் என்பவற் றுக்கே ஆசிரியர் அதிக அழுத்தம் கொடுத்து கதையை நகர்த்திச் செல்கின்றார். ஆரம் பத்தில் இந்நாவலில் கிழக்கிழங்கை களமாக அமைந்தாலும் இதில் கண்டியும் பிரதான களமாக அமைவதைக் காணமுடியும்.
அக்கரைப்பற்றையே பிறப்பிடமாகக் கொண்ட அன்வர் படித்துவிட்டு உத்தியோ கம் தேடி அலைகின்றான். உத்தியோகம் கைகூடாது போகவே அவனும் நண்பனுமாக வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் ஒரு ஏஜென்ஸியில் தங்களது வீடு வளவை விற்று பணத்தைக் கட்டுகின்றனர். ஏஜன்ஸி யின் மோசடி காரணமாக வெளிநாட்டுப் பயணம் சரிவராது போகவே அன்வர் தன் சொந்த ஊரான அக்கரைப்பற்றுக்கு திரும்பி போக மனமில்லாது கண்டியில் ஒரு ஹோட் டலில் சாதாரண வெயிட்டராக வேலை செய் கின்றான். நாளடைவில் அவனுடைய நேர்மை, புத்திசாதுரியம் என்பவற்றால் ஹோட்டல் மனேஜராக பதவியுயர்வு பெறு கின்றான். அதேநேரம் கண்டியிலுள்ள நவகலா நாடக மன்றத்தில் நடிக்கும் வாய்ப்பும் ஏககாலத்தில் கிடைக்கின்றது. அவன் நடிப்புத்துறையில் முன்னேறி பேரும் புகழும் பெற்றிருந்தான். இந்த நவகலா நாடக மன்றத்தின் மூலம் "ராணி’ என்ற மலேசிய முஸ்லிம் பெண்ணின் நட்பு கிடைக் கின்றது. நாளடைவில் இருவரது நட்பும் காதலாக மாறுகின்றது. அதன் பின்னர் அன்வர் ராணியை திருமணம் செய்ய நினைக்கின்றான். ஆனால் அவளை கலை வாழ்விலிருந்து விலகச் சொல்லுகின்றான். கணவனா? கலையா? வாழ்க்கையா? நாடகமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு அவள் ஆளாகின்றாள்.
"நடிப்புத்துறையில் அவளுக்குள்ள ஆர்வம் , திறமை, புகழ் அனைத்தையும் ஒரு நொடியில் கைவிட்டு அவள் இல்வாழ் வுத் தேவதையாக மாறி குடத்தினுள் தீபமாக வாழ வேண்டி இருக்கிறது. வாழ்வை

ஆரம்பிக்கு முன் கலைத்துறையை விடு என்று கூறுகிறவர் நான்கு பிள்ளைகள் என்று வந்தவுடன் என்னுடைய தாதித்தொழிலையும் விடு என்று கூறினால் என்ன செய்வது. தன் வாழ்வு முழுமைக்கும் ஒரு ஆணையே தஞ்சமெனக் கிடந்து உழலவேண்டியது தானா? முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு சமயலறையில் வாழ்நாளில் ஒரு பெரும்பகுதியை கழிக்கும் ஒரு பெண் தன் வாழ்வில் காணும் நிறைவுதான் என்ன? அவனுக்கென்று பிள்ளைகளைப் பெற்றுக் கொடுத்து எஞ்சிய பொழுதையும் கழிக்கும் இந்த வாழ்க்கை ஒப்பந்தம் ஒரு பெண் ணுக்கு வழங்கும் இன்பம் என்ன? கடமை கள்தான் வாழ்வின் நிறைவா? இந்தக் கடமைகள் ஒரு பெண்ணுக்கு வழங்கும் சுயாதீனமென்ன? அவளுடைய ஆற்றல், அறிவு, ஆர்வம் அத்தனையும் மழுங்கச் செய்து எரியும் மெழுகுவர்த்தி மற்றவர் களுக்கு ஒளியைக் கொடுத்து தன்னை அழித்துக்கொள்ளும் ஒரு நிலையில் பெண் வாழவேண்டுமா? நான் என்னைக் கலைக் காக அர்ப்பணித்துவிட்டேன்.”
என ஒரு பெண்ணின் மனவுணர்வு களை பெண்ணியல்நோக்கில் விபரித்திருப் பது வரவேற்கத்தக்கதும் காலத்தின் தேவை யுமாகும். அத்தோடு இக்கதையில் வரும் ராணி தனது காதலையும் மீறி கலையை ஏற்றுக்கொண்டு தன்னை அதற்கு முழுமை யாக அர்ப்பணித்துவிட்டாள். இதில் ராணி ஒரு வித்தியாசமான பாத்திரமாகவே படைக் கப்பட்டுள்ளாள்.
கிழக்கிலங்கையை களமாகக் கொண்டு இலக்கிய ஆக்கங்களை எழுதி யுள்ள இவர் இந்நாவலில் கண்டிக்கும் அங்கு வாழும் மலே முஸ்லிம் பெண்ணை யும் கதைக்கு தேர்ந்தெடுத்துள்ளார். கிழக் கிலங்கை முஸ்லிம் பெண்கள் நடிப்புத் துறையில் ஈடுபாடில்லை என்பதற்காகவும் அவ்வாறு அவர்களை நடிப்புக் கலைக்குள் ஈடுபடுத்தி எழுதினால் சமூக நடப்பியலுக்கும்
-G53)

Page 60
யதார்த்தத்திற்கும் புறம்பாக அமைந்துவிடும் என்பதனால் இவர் கண்டியைப் பிறப்பிட மாகக் கொண்ட மலே முஸ்லிம் பெண்ணை கதாபாத்திரமாக்கியுள்ளார்.
இவர் இந்நாவல் பற்றிக் கூறும் போது
“இன்றைய உலகில் கல்வி, கலாசா ரம் , விஞ்ஞானம் போன்ற எல்லாத் துறை களிலும் பெண்கள் சிறப்புடன் பரிணமிக்க வேண்டும் என்று நாம் முழு மனதுடன் விரும்புகின்றோம். பெண்களுடைய எழுச் சியை நாம் எவ்வகையிலும் புறக்கணித்து விடுவது நியாயமில்லை. ஆனால் வாழ்வின் சரிபாதியான ஓர் இல்லத்தின் அரசியான பெண் தாரமாகி தாயாகி வாழ்வியலில் பங்கு கொண்டு நிற்க வேண்டியவள் தன்னைக் கலைத்துறைக்கே அர்ப்பணித்துக் கொண்டு அதுவே வாழ்வு, அதுவே இன்பம் என்று நிற்பதில் ஏதாவது நியாயம் உண்டா? அல்லது இல்லற தர்மங்களைப்பேணி நிற்பது சிறப்பா? இதனை இந்நாவலில் விளக்க முயல்கின்றேன்” என்று கூறுகின்றார்
இவரது இன்னொரு நாவல் “தர்மங் காளாகும் தவறுகள் இந்த நாவல் 1997இல் வெளிவந்தது. அ.ஸ.அப்துஸ் ஸமது அவர்கள் இந்நாவலுக்கான கருவை ஒரு வித்தியாசமான முறையில் கையாண் டுள்ளார். இதுவரை காலமும் இஸ்லாமிய சூழலையே நாவல், சிறுகதைகளுக்கு எடுத்துக்கொண்ட இவர் இந்நாவலில் சிங்கள, தமிழ் சமூக சூழலை சித்திரிக்கும் வகையிலேயே இந்நாவலை விபரித்துள்ளார். இவர் இந்நாவல் பற்றிக் கூறும் போது,
‘இன்றைய நாட்டு சூழ்நிலைகளும் நாட்டு நடப்புகளும் சமூகங்களுக்கிடையில் ஒன்றுமையும் சமாதானமும் நிலவுவதற்கு பதிலாக குரோதங்களை வளர்ப்பனவாகவே அமைந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் தமிழ் சிங்கள சூழலை பிரதிபலிக்கும் வகையில் இக்கதையின் அவசியம் உணர்ந்து எழுதுவதாக கூறுகிறார்.
G54)

இந்நாவலில் வரும் வசந்தாவும் மல்காந்தியும் இனவிரிசல்களையும் மீறி ஒருவரோடொருவர் நட்பியல்புடன் வாழ்வி லும் தாழ்விலும் நேசம் மாறாத உரிமை யுடன் வாழும் முறை, இந்நாட்டின் அரசியல் மோதல்களுக்கு ஒரு சவால் விடுவதாக அமைத்துள்ளார் ஆசிரியர்.
ராமநாதன், வசந்தா, மல்காந்தி, ஆகிய மூவரும் களனி வித்தியலங்கார சர்வகலாசாலையில் படிக்கின்றனர். ஆரம் பத்தில் இவர்கள் நண்பர்களாகவே பழகி னார்கள். நாளடைவில் ராமநாதனுக்கும் வசந்தாவுக்கும் காதல் ஏற்படுகின்றது. பல் கலைக்கழக படிப்பு முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர் களுடைய பத்து வருட தாம்பத்திய வாழ்வில் அவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்க வில்லை. பல வைத்திய முறைகளால் பயன் கிட்டவில்லை.
வைத்திய அறிக்கைகள் அவன் ஆண் மலடு என்ற முடிவையே காட்டின. இதனை வசந்தா, ராமநாதன் மீது கொண்டிருந்த ஆழமான அன்பின் காரண்மாக சொல்லாது விடுகின்றாள். அவளுடைய அபரிமிதமான குழந்தை ஆசையால் ராமநாதனின் நண்ப னோடு தவறான தொடர்புகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகின்றாள். கடைசி யில் அவள் தனது கணவனை விட்டுவிட்டு கணவனின் நண்பனோடு போகத் துணிகின் றாள். அவ்வாறு அவள் பிரியும்போது தான் செய்தது சரி என கணவனுக்கு இவ்வாறு கடிதம் எழுதுகின்றாள்.
‘பசித்த ஒருவன் களவெடுத்து உண்டான் என்பதற்காக எந்த நீதிவானும் அவனைத் தண்டிப்பதில்லை. அவனை அனுதாபத்தோடு மன்னித்து விடுவார். நான் செய்தது தவறு என்றால் நான் பெண்ணாய்ப் பிறந்தது தவறு. நான் பிள்ளை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டது தவறு. டாக்டரிடம் வைத்தியம் செய்தது தவறு. நீங்கள் ஆண்

Page 61
மலடாகப் பிறந்தது தவறு. ரகுபதியை நீங்கள் வீட்டுக்க கூட்டி வந்து பழக விட்டது தவறு. இப்படி எத்தனையோ தவறுகள் இருக்க நான் என் இயற்கை நியதியான மகப்பேற்றை அடையத் துடித்ததில் என்ன தவறு இருக்கமுடியும். அத்தான் உங்களால் இயலாமல் போன ஒரு பேற்றுக்காக நான் எவ்விதம் குற்றவாளியாகுவேன்” என தான் செய்ததில் குற்றமில்லை எனக் கூறுகின்றாள் ஆனால் ரகுநாதனால் இதனை தாங்கிக் கொள்ள முடியாது போகவே அவன் அவளை கொலை செய்ய முயற்சிக்கிறான். இதனால் சிறை செல்ல நேரிடுகின்றது.
இந்நாவலில் வரும் மல் காந்தி என்னும் சிங்களப் பெண் வாழ்க்கையில் தன் கணவனோடு பத்துவருடம் தாம்பத்தி யத்தை அனுபவித்தாலும் தன் கணவரையே நினைத்து அவருக்காக துறவு மேற்கெர்ண்டு வாழ்வதையும் காட்டுகின்றார்.
அ.ஸ.அப்துஸ்ஸமது என்ற படைப் பாளி உருவாவதற்கான பொதுவான சூழல் அவர்தம் வாழ்வை யொட்டிய அகப்புறச் சூழல்கள் இவற்றைவிட சமூதாயச் சூழலின் பாதிப்பும், பிறந்து வளர்ந்த சூழல் அமைவு களின் பாதிப்பும் படைப்பாளியின் படைப்பு வாழ்க்கையின் புறக்காரணிகளாக துணை செய்துள்ளன எனலாம். அத்தோடு தாம் பிறந்து வளர்ந்த இடமான அக்கரைப்பற்றின் இயற்கைச் சூழல், நிலவுடைமை அமைப்பு, நிலப்பிரபுக்களின் செழிப்பு, அதன் காரண மாக அவர்களிடம் காணப்பட்ட சீர்கேடுகள், அப்துஸ்ஸமத் அவர்களுக்கு நன்கு தெரிந்த பின்புலமாக அமைகின்றன. எனவேதான் அவருடைய படைப்புக்களில் அக்கரைப் பற்றின் மணம் , பேச்சு, மொழி என்பன சிறப்பிடம் பெறுவதை ‘பனிமலர்' என்ற நாவலின் ஊடாகக் காணலாம்.
களத்தேர்வு என்பது பாத்திரம் கதை இரண்டிற்கும் பொருந்தக்கூடியதாக அமைய வேண்டும். பாத்திரம் கதை நிகழ்ச்சியோடு இணையாது வெறும் வருணனையாக களம்

அமைந்தால் நாவல் இலக்கிய வடிவம் முழுமை பெறாது. எனவே களத்தெரிவு என்பது நாவலாசிரியனின் முழுக் கவனத் திற்கும் உட்பட்டதாக அமைகின்றது. இந்த வகையில் அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள் தமது நாவல்களில் களத்தெரிவினை பிறந்து வளர்ந்த இடத்தை மட்டுமல்லாது தாம் உயர்கல்வி கற்ற களனி வித்தியலங்கார சர்வகலாசாலையையும், கொழும்புச் சூழல் என்பவற்றையும் 'தர்மங்களாகும் தவறுகள் என்ற நாவலில் களத்தெரிவாகக் கொண்டுள் ளார் எனலாம். மேலும் நாவலாசிரியர் பொழுதுபோக்காகவோ தொழில்காரணமா கவோ பல வெளியிடங்களுக்குச் சென்று அங்கு பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இலக்கியங்கள் படைக்கும் பொழுது அவ் விடங்கள் களங்களாக அமைவதுண்டு. இவ்வகையில் அ.ஸ.அப்துஸ்ஸமது அவர் களும் ‘பனிமலர்' என்ற நாவலில் கண்டி யைக் களமாகக் கொண்டு எழுதியுள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளன் பெரும்பாலும் தான் கண்ட கேட்ட உற்று உணர்ந்தவற்றையே தன் படைப்பில் வெளிப்படுத்துவதுபோல பாத்திரங்களை தெரிவு செய்யும் போது தான் அறிந்த கண்ட பழகிய மக்களின் சாயலில் பாத்திரங்களைத் தெரிவு செய்யும் முறை யினைக் காணமுடியும்.நாவல் உருவா வதற்கும் அது நிலைபெறுவதற்கும் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. இவ்வாறு அப்துஸ்ஸமது அவர்களின் பாத்திர சிருஷ்டிப்பானது அவரது அனுபவத் தின் அடிப்படையில் கலையுணர்வோடு அவரது நாவல்களில் சிருஷ்டிக்கப்பட்டிருப் பதைக் காணமுடியும்.
“நாம் அன்றாடம் காணும் சாதாரண மக்களாகவோ, சிறுதொகையினரான செல் வர்களாகவோ இருப்பினும் அவகள் உண் மையான சதையும் எலும்புமுடைய மனிதர் களைப் போல் ஜீவனும் ஜீவசக்தியும் உள் ளவர்களாக இருக்கவேண்டும். கதாபாத்
(55)

Page 62
திரங்களின் பேச்சு செயல் சுற்றுப்புறநி லைமை இவைகளைப் பற்றிய ஒவ்வொரு சிறுவிபரமும் வாழ்க்கையில் நிகழ்வது போல வர்ணிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றார் கோதண்டராமன். இதனடிப்படையிலேயே அப்துஸ்ஸமது அவர்களின் நாவல்களில் பாத்திர வர்ணனைகள் மிகவும் திறம்பட உயிர்த் துடிப்புடன் அமைந்துள்ளன. அத்தோடு இவர் பனிமலர்', கனவுப்பூக்கள்’ என்ற இரண்டு நாவல்களில் தாமே பாத்திர அறி முகத்தை செய்கின்றார். ஆனால் 'தர்மங் களாகும் தவறுகள் என்ற நாவலில் சிறை யிலிருக்கும் ராமநாதனால் அவனது கடந்த கால நினைவுகள், சம்பவங்களை மற்றவர் களுக்கு கூறுமுகமாக பாத்திரவார்ப்பு அமை கிறது.அதாவது இவர் நேரடியாக கதை, பாத்திர அறிமுகம் செய்யாது ராமநா தன் என்பவரின் மூலம் வெளிப்படுத்து கின்றார்.
ஒர் ஆசிரியன் தன் எண்ணத்தை வெளியிடச் சொற்களைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படையில் அவனுடைய நடை அமை கின்றது. அந்நடையே ஆசிரியனின் தனித் தன்மையை உணர்த்த வல்லது. ஒரு நாவ லைப் படிக்கும் போது கதை கூறும் போக் கிலோ, மொழி நடையிலோ நம்மால் அந்த நாவலாசிரியனை இனங்கண்டு கொள்ள முடிவதுதான் நாவலாசிரியனின் தனித் தன்மையாக விளங்குகின்றது.
நாவல்களின் மொழிநடை ஒரே
நடிப்பு என்பது இயற்கையாக அமைய அங்க அசைவுகளும் பாவங்களும் இ சிறக்கும். நடிப்பு என்பது பாவனை செய்யமுடியாது.

மாதிரியாக அமைவதில்லை. அவற்றில் ஆசிரியரின் சொந்த நடையும் பாத்திரங்கள் வாயிலாக பேசும் நடையும் உள்ளடங்கிய தாகக் காணப்படுகின்றது. அப்துஸ்ஸமது அவர்களின் நாவல்களில் விளக்கப்ப குதிகள், வர்ணனைப் பகுதிகள் என்பவற்றில் பெரும் பாலும் தம் சொந்த நடையைக் கையாண்டுள்ளார். கதாபாத்திரங்கள் உரையாடும் போது அவர்களாகவே மாறிப்பேசும் வெவ்வேறு பேச்சு நடையையும் இவர் பயன்படுத்தியுள்ளார். அதாவது பாத்திரங் களின் இயல்புக்கும் சூழலுக்கும் ஏற்பபாத்திர உரையாடலைக் கையாண் டுள்ளார்.
நாவலில் வர்ணனை எனபது வேண் டாததாய் சலிப்பூட்டுவதாய் மிதமிஞ்சியதாய் அமையாமல் தனித்தன்மையும் கவர்ச்சியும் தோன்ற வர்ணிக்கப்படுதல் வேண்டும். இந்த வரையறைக்குள் நின்று கதையோட்டத்தில் கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் , இடங்கள், இயற்கை நிகழ்வுகள் என்பன படிப்போரின் மனங்களில் பதிந்துவிடக்கூடிய வகையிலும் அ.ஸ.அப்துஸ்ஸமது தன் நாவல்களில் வர்ணனையைப் பயன்படுத்தி யுள்ளார்.
இவ்வாறு நாவல்களின் கட்டமைப்பின் அடிப்படையில் இவரது நாவல்களை நோக்கும்போது சிறந்த நாவல்களுக்கான எல்லா அம்சங்களும் பொருந்தியே அமை கின்றன எனலாம்
ம் ஓர் அழகியற்கலை. பாத்திரங்களின் யற்கையாக அமையும் போதுதான் அது தான். பாவனையைச் செயற்கையாகச்
eleno.9156r)6OLD5 (கனவுப்பூக்கள் நாவல் பக்.98)

Page 63
தமிழ்க் கவிதையில் எய்திய பூப்பும்
சிறு
கதைகளில் காணும் முப்பும் பெரும் புதையல்கள் போன்றே தோன்றும். இச் சத்தியக்கவிஞன் எங்கே?
ஆனாஸானா என்று சொன்னால் எண்
திசைகளும் திரும்பிப்பார்க்கும் இக்
கலைமகன் பெயரைச்சொன்னால் தென்றலும் மெல்லவீசும்.
கலைமகள் தத்துப்பிள்ளை இவன்
ஈழத்தின் புதுமைப்பித்தன் இலக்கணக் கலையின் சித்தன் தலைக்கணமற்ற கலைச்சிங்கம்.
 
 
 
 

காலத்தைவென்ற கவிஞன்
பெரும் காதலைச்சொன்ன தலைவன் கவிதைப் பூப்பூக்கும் சோலை கம்பனின் மகனே இன்னும் ஏன் பெரும் தூக்கம்
மூன்றாம்கண் திறந்த ஆசான் முத்தமிழ் விருந்தை ஈந்தான் கற்றவர் அவைதனிலே தலைநிமிர்ந்த நெஞ்சுரமுடையான்.
எழுத்தினது தனியாற்றல் இதை
வழுத்தியே உலகுாைக்கும் தமிழ்ப் பழுத்தபழமொன்று இன்று
கிளைவிட்டு மறைந்ததேனே?
அண்ணலே உன்னை இன்று
மண்ணறை மூடியபோதும்
நாம கண்ணறைக்குள் காவல்கொண்டோம் என்றும்
வாழுவாய்ஏழுசொர்க்கம்!

Page 64
தமிழ் மொழியிலே உலகிலுள்ள சமயங்கள் அனைத்தையும் சார்ந்த இலக் கியங்கள் குவிந்துகிடக்கக் காணலாம். அதில் இஸ்லாம் சமயரீதியாக ஆராய் வதற்கு மிகுந்த எச்சரிக்கை வேண்டும். முட்கள் நிறைந்த ரோசாச்செடியைத் தொடுவது போலவே அதை தொடவேண்டும் இந்த எச்சரிக்கையோடு அ.ஸ.அவர்களது எழுத்தாற்றலை நாம் ஆராய்ந்தால் ஒரு உண்மை புலனாகும். அவரது தமிழின் இனிமையும் இலக்கியத்தின் நயமும் அனேக மான வேளைகளிலே இஸ்லாத்தின் பெருமை ஒருங்கே பொருந்தியதாக இருப் பதை அவதானிக்க முடிகிறது. பெரும் பான்மையான விடயதானங்களை அவர் அவ்வாறே தந்திருக்கிறார். தனிமனிதப் புகழ் பாடவோ முகஸ்துதியோ அல்ல இது. அவ் வாறான ஒரு தயக்கம் அ.ஸ.விடத்தில் எனக்கு ஏற்பட்டதுமல்ல. அவரது இலக்கியத் தொன்மையைத் தொட்டுக்காட்டவேண்டிய காலகட்டமிது.
ஈழத்தின் முன்னணி எழுத்தாளரான அஸ.1950களில் தனது படைப்பைத் தொடங் கினார். சமூகப்பற்று என்ற ஆர்வத்தோடு, பிரதேச மண்வாசனை ஆக்க ஆர்வத்தைத் குழைத்து ஊட்டும் ஓர் இஸ்லாமிய இலக்கிய ஆர்வலர் அவர். ஆரம்பகால கட்டங்களில் ஒரு சொற்பொழிவாளனாக, மேடைப்பேச்சாளனாக, இலக்கிய ஆய்வாள னாகத் தனது இளமைக் காலத்தை கடந்தி வந்தார். இதற்காக அவர் புதுமைப்பித்தன், மணிக்கொடிப் பர்பரையினர்; அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, ஆசைத்தம்பி, கல்கி, மு.வ, அகிலன், வ.வே.சு.ஐயர் போன்ற பழம்பெரும் எழுத்
G58)-
 

தாளர்களின் நூல்களால் கவரப்பட்டார். மேடைப் பேச்சுக்களையும் தி.மு.க.பாணியி லேயே அமைத்துக்கொண்டார். அக்கால கட்டத்திலே வை.எம்.எம்.ஏ.வாசிகசாலை ஒன்றை பியெஸ் மீரா, ஏயாரெம் சலீம், அசனார் போன்ற மறைந்த ஆசிரியர்க ளோடும் ஊடகவியலாளர் சிவப்பிரகாசம் அவர்களோடும் சேர்ந்து ஆரம்பித்து நடத் தினார். அவர்களது அறிவுத் தாகத்திற்கு அப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய நூல் களே தேறின. பொத்துவில் “யுவன்’ என்னும் அப்துல் கபூர் அவர்கள் பியெஸ் மிரா அவர்கள் துணையுடன் பல நாடகங்களை யும் இயற்றினார். மேடையேற்றினார். வானொலியைப் பவித்து வேறுபல நாடகங் களையும் மேடையேற்றினார்.
ஆரம்பக் காலங்களிலே பிற தமிழ் எழுத்தாளர்களின் மரபை ஒட்டி கதை எழுதத் தொடங்கினார். அக்கதைகளின் கதா பாத்திரங்களின் பெயர்கள் மட்டுமே இஸ் லாமியப் பெயராக இருந்தனவே தவிர கதை களின் கருவில் தமிழ்ப்பண்பாடே வீசியது. இது குறித்து அவரோடு நாம் கலந்துரை யாடியதுண்டு. அப்போது அவரது கருத்துக் கள் அவர்கூறிய செய்திகள் எம்மை வாய டைக்க வைத்தன. எமது உரையாடலின் போது “பிறசமயக் கதைகளில் ஏதாவது ஒரு புரட்சிக் கருத்து வரும்போது ஒரு தொலைபேசி மூலமோ, ஒரு மறுப்புக் கடி தத்தின் மூலமோ தனது மறுப்பைத் தெரி வித்து முடித்துக்கொள்வர்.இஸ்லாமியர் அப்படியல்ல. புரட்சி, ஹர்த்தால், ஊர்வலம், மேடைமுழக்கம்,அடிதடி அளவிற்கு வளர்ந்து விடும். எனவே இஸ்லாமிய கதைகள் எழுது வதை பலமுறை சிந்தித்தே எழுதுகிறேன்” என்று கூறுவார்.

Page 65
சுதந்திரன் , வீரகேசரி, தினகரன் நாளிதழ்களிலும் முல்லை, மல்லிகை, தேசாபிமானி போன்ற மாத இதழ்களிலும் தமது ஆக்கங்களை வெளியிடத் தொடங் கினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து மட்டக்களப்பு தெற்கு கிளை ஒன்றை நிறுவினார். இந்த இணைப் பால் நாடறிந்த பல எழுத்தாளர்களோடு தொடர்புகள் ஏற்பட்டன. அன்டனி ஜீவா, டொமினிக் ஜீவா, டானியல், எஸ்.பொன்னுத் துரை, அண்ணல் ஸாலி, இளங்கீரன் சுபைர், இளம்பிறை றஃமான், சாரணா கய்யூம், எம்.ஸி.எம்.ஸ"பைர், எச்.எம்.பி.முகையதின், போன்றோருடன் ஏற்பட்ட தொடர்பு அவரது எழுத்தாற்றலை மேலும் வளமாக்கியது. இதன் பின்புதான் இஸ்லாமிய கலாசார பின்னணியில் தமது ஆக்கங்களைப் படைக்க முற்பட்டார். இதன் மூலம் வசன நடையிலும் பொருளாழத்திலும் மாற்றங்கள் ஏற்பட லாயின.
இஸ்லாமிய இலக்கியம் என்னும் போது உண்மையிலேயே அது ஒரு விஷப் பரீட்சைதான். ஏனெனில் இஸ்லாமிய மரபு இறை மரபு. உருவ வணக்கம்; அவதாரக் கருத்துக்கள், மனிதவர்க்கத்தின் சாதிப் பிரச்சினை, பலதெய்வ புராணக்கருத்துக்கள் இறைமைப் பண்புவாய்ந்த காவியத்தலை வன் தலைவியின் அங்க வடிவ வருண னைகள், உயர்வு நவிர்ச்சி போன்றவை ஒரு சிறிதும் கலந்துவிடலாகாது. இஸ்லாமிய சமூகம் இதனைச் சகித்துக்கொள்ளாது; சீறிப்பாயும் இயல்புடையது. இத்தகைய சமுதாய மக்களிடையே இலக்கியம் புனை வது இலகுவான ஒரு காரியமல்ல. சிறிதளவு வரம்பு மீறினாலும் ஸ்லிமான்ருஸ்தி; தஸ்லிமா நஸ்ரீன் போன்றோரின் கதியே ஏற்படும். தலைக்கு விலை பேசப்பட்டு விடும்.
இவை அனைத்திலும் இருந்து அ.ஸ. வை காப்பாற்றியது அவரது பரம்பரை இஸ்லாமிய ஞானம். இலங்கையில் உள்ள எழுத்தாளர்களில் பல தலைமுறையினர்

இலக்கிய ஆர்வலராய் இருந்தது அ.ஸ. அவர்களது குடும்பத்தினரே என்ற கூற்று என்றும் மிகையானதல்ல.
குடும்பப்பின்னணி
18ம் 19ம் நூற்றாண்டுகளின் இலங் கையின் தென்கிழக்குப் பகுதியிலே மருத முன்ன, அட்டாளைச்சேனை, அக்கரைப் பற்றுப் பகுதியிலே கவிவாணர்கள் இருந் துள்ளனர். சுமார் எழுபது வீதமானவர்கள் அக்கரைப்பற்றிலே வாழ்ந்துள்ளனர். 20ம் நூற்றாண்டில் மத்திய பகுதியின் பின்புதான் அனேக கவிவாணர்கள், நாவலர்கள், பாவலர்களோடு நவீனங்களை எழுதும் எழுத்தாளர்களும் இங்கு தோன்றினர். இதில் மற்றுமொரு விஷேஷம் என்ன வென்றால் இவர்களில் அனேகர் அ.ஸ்.அவர்களது பரம்பரையினர் என்பதே.
20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஒரு முஸ்லிம்,தமிழை வழுவின்றிப் பேசினால் அல்லது எழுதினால் அது ஒரு வியப்பான நிகழ்வாக நினைத்தனர். இவ்வாறு வியப்படையக் காரணம், முஸ்லிம் களை தமிழ்மொழிக்கு அந்நியமானவர்களாகக் கருதும் மனப்பான்மையாகும். தமிழ்மொழி இலக்கிய இலக்கணங்களுக்கு அதன் வளர்ச்சிக்கு முஸ்லீங்கள் ஆற்றிய அரும்பணிகளை முஸ்லிம் அல்லாதோர் மத்தியில் எடுத்தியம்பாததும் அவர்கள் கருத் தில் பதியுமாறு ஏற்றுக் கொள்ளுமாறு கூறா ததும் ஒரு காரணமாகும். இத்தவறான கண் ணோட்டத்தைப் போக்கவென்று எம்முன்ன வர்களின் இலக்கிய இலக்கணப் படைப்புகள் தமிழ்கூறும் நல்லுலகின் முன் 1965ம் ஆண்டு வரை முன்கொண்டுவரப்படவில்லை.
இக்காலகட்டத்திலே இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடத்தி, இஸ் லாமியக் காவியங்கள், இலக்கியங்கள், இதிகாசங்கள் முன்வைக்கப்பட்டன. பெறுமதி மிக்க நல்லபல இலக்கியங்கள் எழுத, பதிப்பிக்கப்படாமல் அழிந்தொழிந்தன. இந்த

Page 66
வகையில் அ.ஸ.அவரது பரம்பரையினர் ஆக்கங்களும் அழிந்தொழிந்தன. சிலவற் றைப் பாதுகாத்த பலர் கைப்பட எழுதி வைத்தனர். அ.ஸ்.அவர்களது குடும்பத்தினர் பரம்பரையில் எவ்வளவு இலக்கிய-இலக்கண ஞானப் புலமை பெற்றிருந்தனர் என்பது பற்றிய அறிவு இங்கு நமக்கு அவசியமா கிறது.
அ.ஸ.அவர்களது பரம்பரை வரலாறு கள் ஸஹாபாக்களான அபூபக்கர்(ரலி) அப்பாஸ் (ரலி) அவர்கள் வரை சென்று முடிகிறது. நாம் இங்கு ஆராய இருப்பது அவரது பூட்டனார் முதல் தற்காலம் வரை யிலான சுமார் 250 வருட வரலாறுகளை மட்டுமே.
குத்பு-அவுவேடிய்க் யவற்யா மெள லானா வடயெமன் தேசத்தில் பெரும் நிலச் சுவாந்தர்களாக விளங்கினார். அஷ்ஷெய்கு இஸ்ஸதீன் மெளலானா அவர்கள் இவர் களது மைந்தர். மெளலானா அவர்ஷெய்கு இஸ்மாயீல் எமைனி அவர்கள் நிலப்பாகப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட சச்சரவு காரணமாக வட எமனைவிட்டும் இலங்கை நோக்கி வலசை கிழம்பினார்கள். வரும் போது தமது ஆப்த நண்பர் செய்யித் அப்துல்காதிர் மெளலானா என்பவரும் இணைந்து கொண்டார். இவர்களைத் தேசாந்தரம் செல்லவேண்டாம் எனப்பலரும் கேட்டுக்கொண்டனர். அவை பயனற்றுப் போனது. இது குறித்து வடஎமன் நாளிதழில் பின்வருமாறு கூறியிருந்தது.
“இரண்டு முத்துக்கள் வட எமனை விட்டுச் சென்று இலங்கையில் வாழப் போகிறார்கள். இதனால் எமன்தேசம் மிகவும் 660)purrasoll-gs.KASHF-UL-RAN-ANQALBILJAN- (QUTUBAS SHEIKH YAHYA MOULANA BY N.M.M. BISHRUL FAFI] அஷ்ஷேய்கு மெளலானா இஸ்மாயில் (வொலி) எமைனி அவர்களின் தந்தையின் பெயரால் மாத்தறை “இஸ்ஸதீன் டவுன்”
(60)

என்ற பெயருடன் ஓர் இடம் சிறப்புற்று விளங்குகிறது. அஷ்ஷெய்கு இஸ்மாயீல் (வொலி) எமைனி அவர்களது மூத்த மகன் மெளலானா அவர்ஷெய்க் யஹயா(வொலி) அவர்களாவர். அவர் பல நூல்கள் பாடல்களைப் பாடியுள்ளார்கள். அவர்களின் கீர்த்தியும் புகழும் தென்னிந்தியா எங்கும் பிரபல்யமானது.
பின்னூலாசிரியர் - எழுத்தாளர் அப்துற் றஹீம் அவர்கள் தங்களது வலிமார் வரலாறு 5ம் பாகத்தில் 362ம் பக்கத்தில் பின்வருமாறு கூறுகிறார். “ எமன் நாட்டில் தோன்றிய ஸைத்-யஹற்யா மெளலானா அவர்கள் ஸதகத் துல்லாஹி அப்பா அவர்களின் மாண்பினைப் பற்றிக் கேள்வி யுற்று அவர்களின் அடக்கஸ்தலத்தைத் தரிசிப்பதற்காக கிழக்கரை வந்தார்கள். ‘விலாயத்” எய்தப்பெற்று, பற்பல அற்புதங் களை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கானவர் களுக்குத் தீட்சை வழங்கிய அம்மகானை மாப்பிள்ளை லெப்பை அவர்கள் பெரிதும் உபசரித்து மரியாதை செய்தார்கள். அப்போது அவர் தம் மகனை (கல்வத்து நாயகம்(ரஹற்) நோக்கி உம் நோக்கத்திற் கிணங்க தீட்சை பெறுவதற்கான தகுதி பெற்றவர்கள் அவர்கள்.அவர்களிடம் தீட்சை பெற்றுக் கொள்ளும் எனக்கூறினர். அவ் விதமே மைந்தரும் அவர்களிடம் சென்று பற்பல ஆன்மீக விஷயங்களைப் பற்றி உரையாடியபின் ஒருநாள்(யஹற்யா மெள லானா) அவர்களை நோக்கி தமக்குத் தீட்சை தந்தருளுமாறும்; தமக்கு உள்ளம் திறந்து ஞானோதயம் உண்டாக இறைஞ்சு மாறும் வேண்டிக்கொண்டனர்”. குத்பு அஷஷேயப் க் யஹியா மெளலானா அவர்களது சகோதரர்தான் செய்யித் அப்துஸ்ஸமது(வொலி) மெளலானா,
அஸ் ஸெய்யித் அப்துஸ்ஸமது வொலி (ரவற்) அவர்கள் அக்கரைப்பற்று பட்டினப்பள்ளியில் அடங்கப்பட்டுள்ளார்கள்.

Page 67
முன்பு இப்பள்ளிவாசல் சின்னப்பள்ளி வாசல் என அழைக்கப்பட்டு வந்தது. அ.ஸ். அவர்களது பரம்பரைக் கல்வி ஞானம் இலக்கிய அறிவு, ஞானத்தெளிவு, மொழி வல்லமை போன்றவை அப்துஸ்ஸமது மெளலானாவில் இருந்து ஆதாரங்களோடு உள்ளன. செய்யித் அப்துஸ் ஸமது மெளலானா அவர்கள் 'விலாயத்' எய்தப் பெற்றவர்கள். பற்பல அற்புதங்களை நிகழ்த் தியவர்கள். கைத்தடியைக் கொண்டு பாலாத்தி வட்டையில் கொக்குச் சுட்டவர்கள். தண்ணிரால் விளக்கு எரியச் செய்தவர்கள். பல நூற்றுக்கணக்கான அற்புதங்களைச் செய்து காட்டியவர்கள். இந்நிகழ்வுகளை வரகவி ஷெய்கு மதார்ப்புலவர் அவர்கள்: கம்பு கொண்டு கொக்கை வீழ்த்தினவர் கெட்ட காலத்திலோர் நன்மை காட்டினவர் வம்புகள் மடமைகள் ஒட்டினவர் - நம்மள் வறுமையை மாறிடப் போக்கினவர் பாலகர் வயிற்றினில் வீழ்தென்குலை -யதனால் பாலகன் பழுது படாதகற்றி ஞாலம்புகழ் நற்காரணங்கள்-காட்டும் அப்துஸ்ஸமதொலி நாயகமே.
என்று பாடிப் பரவசமடைந்தார். அப்துஸ்ஸமது வொலி அவர்கள் இப்பிரதே சத்திலே முதன்முதல் ‘ஹாபிழ் ஆவார். பன்னூல் ஆசிரியர்.ஞானவித்தகர். ஓயாமல் எழுதும் ஆற்றல் படைத்தவர். திருமறையை மூன்றுமுறை பிரதிசெய்தவர். இதனால் “கிராமன்காத்தியின்” என்ற சிறப்புப்பட்டமும் பெற்றவர். அவர் எழுதிய நூல்கள் கைப் பிரதியாக இருந்தாலும் அவை பல பிரதி களாக்கப்பட்டு இன்றுவரை ஒரு பரம்பரைச் சொத்தாக பாவனையில் உள்ளன. ஆத்மீக ஞான பொக்கிஷங்களான அவரது நூல் களில் சில வருமாறு
(1) பைழுல் இலாஹி (2) கன்ஸால் ம.பிய்யா (3) அல்லபல் அலிப் (4) அஸ்ஸலூக் (S) அஸ்மாஉல் ஹஸ்னா விளக்கம்

(6) மெய்ஞ்ஞான போதம் (7) ஸ"பித்துவ சாரம் (8) தன்னை அறிதல் (9) யாகுத்துபா மாலை
என்பனவாகும்.
அரபு - அரபுத்தமிழ் - தமிழ் மொழிகளில் இந்நூற்கள் எழுதப்பட்டன. அல்லபல் அலிப் என்னும் அரபு அட்சரங் களுக்காக விளக்கம் ஒருமாபெரும் ஞானத் திரவியமாகும். யாகுத்துபா மாலை இன்று வரையும் மிகவும் பிரபல்யம் பெற்று இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பக்தி சிரத்தையோடு பாடப்பட்டு வருகின்றன.
பொத்துவில், அக்கரைபற்று, சாய்ந்த மருது, காத்தான்குடி (மீராமக்காம்) போன்ற இடங்களில் பள்ளி வாசல்களை அமைத்தும் குர்ஆன் மத்ரசாக்களை நிறுவியும் சமயப் பணி செய்தார்கள். தனது 79ம் வயதில் 14-4-1889ல் (ஹிஜ்ரி 1309 ஷவ்வால் பிறை 6ல்) உபாத்தாகி - பட்டினப்பள்ளி வாசலில் அடங்கப்பட்டார்கள்.
தமிழ்ப்புலவர்களும் பிறசமயத்தவர் களும் பரம்பரையாக தமிழிலே வழங்கிவரும் இலக்கிய வடிவங்களில் மட்டுமே தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தந்தனர். ஆனால் இஸ்லாமிய தமிழ்ப் புலவர்களோ வழக்கமான எல்லாவித இலக்கிய வடிவங்களோடு மட்டுமன்றி வேறு பல பிறமொழி இலக்கிய வடிவங்களையும் தமிழுக்குத் தந்து அழகூட்டினர். இவ்வாறான ஒரு சேவையை அப்துஸ்ஸமது வொலி அவர்களும் செய்துள்ளார்கள். இதுபோல் அப்துஸ்ஸமது வொலி அவர்களின் மருமக னும் அ.ஸ்.அவர்களின் பாட்டனுமான
ஒரு சிறந்த புலமையாளர்.
வறாபிழ் அபூபக்கர் லெவ்வை ஆலிம்:
அக்கைைரப்பற்றின் இரண்டாவது ஹாபிழான அபூபக்கர் லெவ்வை ஆலிம்

Page 68
அவர்கள் தனது மாமனாரைப் போன்று தமிழ் -அரபு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சிறந்த சொற்பொழிவாளர். பாடல் இயற்று வதில் வல்லமை பெற்றவர். அண்டைக் கிராமங்களில் இவரது பாடல்கள் மிக்கப் பிரசித்தி வாய்ந்ததாக இருந்தன.
திருநபி(ஸல்) அவர்களது சொர்க் கத்து வாழ்வில் திருக்கல்யாண நிகழ்ச்சியை வர்ணித்து அழகுறப் பல செய்யுள்கள் இயற்றினார். எடுத்துக்காட்டாக ஒரு பாடல் கீழ்வருவது:
வீசிட வெண்சாமரை விண்ணோர் கட்டியங்கூறவேதமும் முழங்கி எடுப்பார் தாசிபோல ஹறாணி மாதராட தக தகன்னத் தாங்கிப் பொன்னாலாத்தி எடுப்பார் பேசிடு முரசு துடி பேரிகை முழக்கமோடு நாமூசு வெள்ளானை யேற்றும் நாதராம் முஹம்மதுவை (ஸந்துஸ"ரிஸ்)
இவைபோன்று பன்னூற்றுக்கணக் கான பாடல்களை மணமங்கல மாலையாக மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் பாடி யுள்ளார். அனைத்துப் பாடல்களும் மெய்ஞ் ஞான பாடல்களாகவே உள்ளன. இவருக்கு 4 புத்திரர்களும் ஒரு புத்திரியும் இருந்தனர். அவர்களை வரிசைக் கிரமமாக கவனிப் போம்.
நாவலர் முவுறம்மது வுறாவம் ஆலிம் பாவலர்:
மூத்த ஆலிம் எனப்பெயர் பெற்ற இவர் ஒரு வரகவி. நினைத்தமாத்திரத்திலே பல பாடல்களைப் பாடவல்லவர். 1956ம் வருடம் ஒக்டோபர் 15ம் திகதி காலமானார் கள். இவரது ஒரே புதல்வன் ஸம்ஸால் மக்கீன் இத்துறையில் ஈடுபாடு காட்டவில்லை இவரைப்பற்றி அறிஞர் ஆர்.பி.எம்.கனி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். 'அக்கரைப்பற்று ஹாஷிம் ஆலிம் பாவலர் வண்ணமான பாடல்கள் பல யாத்துள்ளார். இவருடைய பாடல்கள் சுமார் ஆயிரம்
(62)=

உள்ளன. இவை கையேட்டுப்பிரதியாகவும் வாய்மொழியாகவும் உள்ளன.” (இஸ்லாமிய இலக்கியக்கருவூலம் 1963 பக் 184) சிறந்த பேச்சாற்றல் உள்ளவர். மேடைப் பிரசங்கத் தில் வல்லவர். இதனால் நாவலர்' எனப் போற்றப்பட்டார்.
நாவலர் ஹாஷிம் ஆலிம் பாவலர் அவர்களது பாடல்கள் மிகச் சிலதை அவரது சகோதரர் மகன் விஹாபுத்தின் ஆலிழ் அவர்கள் கோவை செய்து “பதிப் பித்துள்ளார்கள். தம்தந்தையை அடியொற்றி அவரும் திருக்கல்யாணப் பாடல்கள் பல தைப் படியுள்ளார்கள்.
எட்டுச் சுவனத்தோரும் ஒன்றித்து - நல்ல இதமாய் வாழும் சிங் காரத்தை கட்டழகுறுந் தமிழ்க் கோவையாய் - ஒரு காரணஞ்சொல்லுவேன் கேளுங்கோ.
அப்துஸ் ஸ்லாம் ஆலிம்:
இவரே அ.ஸ்.வின் தந்தையாவார். இவரது இலக்கியக் குறிப்புகள் எமக்குக் கிடைக்கவில்லை. இவரது பரம்பரையினரின் பேச்சுவன்மை இவரிடமும் காணப்பட்டது. 1982ம் வருடம் பிப்ரவரி 26ம் திகதி
ST6)LDIT60TTft.
அப்துஸ்ஸமது அப்துல்லலாம்:
அப்துஸஸமது என்பதன் சுருக்கத்தை அ.ஸ.அவர்கள் ஆரம்பகால கட்டங்களில் அ.ஸ். அவர்கள் அ.ஸ். என்றே எழுதி வந்தார். பண்டைய மரபுக்கு ஏற்ப பாட்டனின் பெயரையே பெற்றுக்கொண்டார். இவர் நமது கதாநாயகனாக இருப்பதினால் அவர் பற்றிய இலக்கிய சேவையை விட்டு அவரது வாரிசுகளில் இலக்கியத்துறையிலும் எழுத்துத் துறையிலும் ஈடுபாடுடைய இருவரைப் பற்றிப் பார்ப்போம்.
அகமட் கியாஸ்:
அ.ஸ்.வின் மூத்த மகனான இவர் ஒரு கலைப்பட்டதாரி. வளர்ந்துவரும் ஓர் எழுத் தாளர். நாடகக்கலையில் ஆர்வம் உள்ளவர்

Page 69
நாடக ஆசிரியர். திரைக்கதை வசனம் எழுதி யவர். திரைப்படத்தை நெறிப்படுத்தியவர். ஒரு விமர்சகர். அனேக விமரிசனக் கட்டுரை களை எழுதியவர். இலக்கியத்தை சுவை படக் கற்பிக்கும் ஆசிரியர். தனக்குள்ள ஆற்றல்களில் மிகக்குறைவாகவே செயல் படுகிறார். விரைவில் ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கும் நாட்டத்துடன் இருக்கிறார். தந்தையின் மறைவு அவரை எழுத்து இலக்கியத் துறைகளில் வீறுகொண்டு எழச் செய்யும் என்றே நினைக்கிறேன். திரைக் கதை, நடிப்பு என்பன இப்பிரதேச்திற்கு ஒரு புதுமுயற்சி. பெரும் பணச்செலவு. அலைச் சல்,மனச்சோர்வு போன்ற சவால்கள் நிரம்பிய துறையில் பிரவேசிக்க அசாத்தியத் துணிச்சல் தேவை. இது அவரிடம் நிரம்ப உள்ளன. எதிர்காலம் இளையவரான கியாஸ்"க்கு பிரகாசமாக அமையலாம். சித்திரிஜா எக்கின்
அ.ஸ்.வின் மூத்தமகள். திருமான மாகும் வரை சிறப்பான கதைகளை எழுதிய வர். இருபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதை கள் எழுதியவர். கதை புனைவதில் வல் லமை உள்ளவர்கள் கிழக்கிலங்கையில் மிகச் சிலர் . நாவல் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டுபவர்கள் கையடக்கமான எண்ணிக்கை யினராவர். அவ்வாறானவர்களில் சித்தி ரிஜா ஒருவர். இரண்டு நெடுநாவல்களை எழுதிப் பாராட்டுப்பெற்றவர். சித்தி ரிஜா அவர்கள் அ.ஸ்.வீட்டுக் கட்டுத்தறி. பத்திரிகைகளில் வந்த இவ்விரு நாவல்களும் விரைவில் நூலுருப்பெற இருப்பதாகச் சகோதரர் கியாஸ் கூறுகிறார்.
இந்த வேளையில் அ.ஸ்.அவர்களின் மனைவி பற்றியும் சில குறிப்புகள் கூற வேண்டியுள்ளது. அஸ்.வின் இலக்கிய பாரம் பரியத்தில் அவரது மனைவி வராவிட்டாலும் இத்துறையில் அ.ஸ்.வெற்றிநடை போடு வதில் துணைவியின் பங்கும் கணிசமான அளவு உள்ளது. அஸ்.எப்போதும் அமைதி

யான வாழ்வே வாழ்ந்தார்கள். இல்வாழ்வு பற்றி அ.ஸ்.கூறும்போது தனது மனைவி யைச் சிலாகித்தே பேசுவார். எழுத்துத் துறையில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதில் மிகவும் கவனமாகவும் கணிசமாகவும் ஒத்துழைப்பதாகக் கூறுவார். இத்தனைக்கும் அவரது துணைவியார் பெரும் படிப்புப் படித்தவரல்ல. தன் மனைவி எவ்வாறிருக்கவேண்டும் என விரும்பினாரோ அவ்வாறே அவர் இருப்பதாகப் பெருமைப் படுவார். குடும்பப்பொறுப்பு எதனையும் கணவன்மேல் சுமத்தாது சமத்தாக செட்டாகக் குடும்பம் நடைபெறுவதாகக் கூறுவார். வீட்டில் இருந்த அமைதியான சூழ்நிலையும் தன்னை அதிகமாக எழுதத் தூண்டியதாக அ.ஸ்.குறிப்பிடுவார்.
அ.ஸ்.அபூபக்கர் (சீனந்துரை) இவர் அ.ஸ.அப்துஸ்ஸமதுவின் உடன்பிறந்த சகோதரர். இவர் ஒரு மேடைப்பேச்சாளர். பத்திராதிபர். கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக ‘எரிமலை’ என்ற பத்திரிகையை வெளியிடுகிறார். அரசியல் சார்புள்ள இப் பத்திரிகை அவ்வப்போது வெளிவருவதுண்டு. வீரசாகச வசனங்களை எழுதுவதிலும் பேசு வதிலும் “எரிமலை" கவனம் செலுத்துவார். இவரை ‘எரிமலை’ என்றே அழைப்பர். றம்ஸி அப்துல் குத்துஸ்:
அ.ஸ.அவர்களது சகோதரியின் மகனான றம்ஸி வளர்ந்துவரும் ஓர் எழுத் தாளர். சில வருடகாலமாக எழுதிவரும் இவர் ஓர் ஊடகத்துறை சார்ந்தவர். சில கட்டுரைகள் - கவிதைகளை அவ்வப்போது எழுதுகிறார். அவரது எழுத்தின் வளர்ச்சி யைப் பார்த்தால் பிரகாசமான எதிர்காலம் அவருக்கு இருப்பது நிச்சயம்.
அப்துஸ்ஸமது ஆலிம் (மக்கத்தார்)
சிறியதந்தை. இவர் இலக்கியத் துறையில் ஈடுபாடு இல்லாதவர். இமாம் ஆகவும் பதிவாளராகவும் இருந்தார்.

Page 70
அப்துல் மஜீத் (மக்கத்தார்) சிறிய தந்தையின் ஏகபுதல்வன். அப்துல் மஜீத் அவர்கள் சிறந்த பாடகர். தமது பரம்பரை யின் மற்றுமொரு கலையான ஆத்மீகக் கலையில் அதிகம் ஈடுபாடுகாட்டுகிறார். கவிதை புனைவதிலும் இசையுடன் பாடு வதிலும் வல்லமையுள்ளவர். காதிரியாத் தரீக்காவின் கலீபாவான மஜீத் அவர்கள் இரண்டு நூல்களும் சில பிரசுரங்களும் வெளியிட்டுள்ளார். இறைமறை வசனங்கள், இறைநாமம் என்பவற்றின் அந்தரங்களைப் புரிந்து கொண்டு நக்ஸ் எழுதும் வல்லமை பெற்றவர். ஆத்மீக வைத்தியம் செய்வதில் திறமைசாலியாக இருக்கிறார்.
நாவலர் அப்துற் றவத் ஆலிம் பாவலர் (சீனி ஆலிம்)
சிறியதந்தை. ஹதீஸ் கலையில் மிக்கப்புலமையுள்ளவர். சிந்தைக் கினிய முறையில் சிறப்பாகச் சொற்பெருக் காற்றுபவர். இதனால் சீனி ஆலிம்’ எனச் சிறப்புப் பெயர் பெற்றார். பாடல்களை இயற் றுவதோடு பண்ணமைத்துப் பாடவும் வல்ல வர். ஆன்மீக வைத்தியம் செய்வதில் மிக்கப் பிரபல்யம் வாய்ந்தவர். அறப்போதம் செய் தவர். ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய வர். அவரது பாடல்களில் சில அச்சேறி உள்ளன. அறிஞர் ஆர்பிஎம் கனி அவர்கள் தமது நூலில் இவர்களைப் பற்றிப் பின்வரு மாறு கூறுகிறார். ". அப்துற்றவர்த் ஆலிமும் சிறந்த பாடல்களை எழுதியுள்ளார். இவர் களின் பாடல்களின் தொகுப்பு அடங்கிய "பஞ்சாமிர்தக் கீத்தனை” வெளிவந்துள்ளது. (இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் 194181. ஆர்.பி.எம்.கனி) மாதிரிக்காக இவர்களின் பாடல்களில் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன். சொர்க்க வாழ்வதனைக் குறிப்பிட்டுப் பாடும் ஒரு நீண்ட பாடலின் பின்வருவது இடைப்பட்ட பாடல் ஒன்று:
. ஆதியைப் பயந்தார்க் கருளிறை கொடுத்த
5Tiggs BITL93 அந்தயும் சந்தி அழுது தொழுதவர் நாடிது நாடிது
@=

கந்தங்கமழ் நபி சுந்தரரே. காத்திம் நபியிரகுலே காவல் கொள்ளும் கல்யாண வீடிதுவே
இவர்களின் எட்டு ஆண்மக்களில் நால்வர் இலக்கியப் புலமை உள்ளவர்கள். அவர்கள் விபரம் பின்வருமாறு:
வழிவுறாபுத்தின் ஆலிம்:
ஸலவாத்துப் பாடல்களை இயற்று வதிலும் இசைப்பதிலும் ஈடுபாடு கொண்டவர். நூற்றுக்குமேற்பட்ட ஸலவாத்துகளை அட்சிட்டு (1963-65) வெளியிடுள்ளார்கள். பாட்டன் அபூபக்கர் லெவ்வை ஆலிம் - ஹாஷிம் ஆலிம் , அப்துற்றவரீத் ஆலிம் போன் றோரின் ஆக்கங்களை தொகுத்து வெளி யிட்டுள்ளார்கள் ‘பைத்துஸ்ஸபா” என்ற இயக்கத்தினை ஏற்படுத்தி வருடாவருடம் மீலாத்விழாக்களை ஏற்பாடு செய்தார். இந்தி யாவைச் சேர்ந்த காயிதே மில்லத், இஸ்மாயில் ஸாஹிப், அ.கா. அப்துஸ்ஸமது, பேராசிரியர் கா.அப்துல் கபூர், சொற் கொண்டல் கஸ்ஸாலி போன்ற பிரபலஸ் தர்களை வரவழைத்து சிறந்த சொற் பெருக்கை இப்பிரதேச மக்கள் கேட்டு மகிழ உதவினார். அ.ஸ.அவர்களும் இம்மேடை களில் பேசி தம் நாவன்மையை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
ஏயாரெம் ஸ்லிம்:
ஈழத்து முஸ்லிம் புலவர்கள் (1963) அக்கரைப்பற்று (1993) வரலாறு ஆகிய இவரது இரண்டு நூல்கள் சாகித்திய பரிசுக் காகத் தெரிவாகின. ஆயிரக் கணக்கான கிராமிய கவிதைகளைச் சேகரம் செய்துள் ளார். நாவல் இலக்கியத்தில் நாட்டமில்லா தவர். சிறுகதை, கவிதை, கிராமிய இலக் கியங்கள், கலாசாரப் பாரம்பரியங்கள் போன் றவைகளும் வரலாறுகளுமாக எட்டு நூற் களைப் பதிப்பித்துள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமியக் கவிதைகள் இன்னும் நூலுருப் பெறாமலே இருக்கின்றன. மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், பேச்சு

Page 71
கள் என்பவற்றை எழுதி வெளியிட்டார். கதந்திரனின் பிரதேச செய்தியாளரான இவர் சமூகவிடயங்களிலும் அதிக அக்கறை காட் டியவர். தக்கியாநகர், அறுகம்பை (சின்ன உல்லை) அக்கரைப்பற்று அல் பாத்திமிய்யா ஆகிய இடங்களில் பாடசாலைகளை நிறுவி யவர். ஆன்மீக வாழ்வில் ஆர்வமுள்ளவராக மரிக்கும்வரை இருந்தார். அ.ஸ்.வைப் போலவே ஸலிம் இடமும் பலதுறை இலக் கிய உணர்வுகள் மேலோங்கியே இருந்தன.
பிஷ்ர்-அல்-வுறாபி
வாசிப்பதும் விமரிசனம் செய்வதும் மட்டுமே தனக்குப் போதுமானது என இருந் தவர். பலாத்காரமாக எழுத்துத்துறைக்கு இழுத்து வரப்பட்டவர். எழுத்துத் துறையில் எதிர் நீச்சல் போடுபவர். ஏற்கனவே பிறரால் எற்படுத்தப்பட்ட மார்க்க சம்பந்தமான சர்ச் சைகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் எழுத் துத்துறையில் பிரவேசித்தார். பத்திரிகை களில் எழுதுவது மட்டுமன்றி அவ்வப்போது துண்டுப் பிரசுரங்களையும் எழுதியுள்ளார். ஏற்கனவே இரண்டு வரலாற்றுப் பிரசுரங் களையும் இரண்டு ஆராய்ச்சிப் பிரசுரங்களை யும் வெளியிட்டுள்ளார். இவரது மிகச் சிறந்த படைப்பாகவும் சிறப்பான ஒரு ஆராய்ச்சி நூலாகவும் “முஸ்லிம்கள் மிருகவதை செய்வதில்லை” என்ற நூல் அமைந்துள்ளது சிங்களம் - தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே தினத்தில் வெளிவர இருக்கும் இந்நூல் அச்சேறி முடிந்தநிலையில் உள்ளது. முன்னோர்களின் மார்க்க காலாசார விடயங் களில் நவீன குழப்பவாதிகளால் ஏற்படும் குற்றச் சாட்டுகளுக்கு மறுக்க முடியாத ஆட்சேபனைகளை தக்க ஆதாரத்தோடு எடுத்துக்காண்பிப்பவர். உண்மையை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர்.
ஸிராஜ் மவடிவுறார்:
அப்துற றஷித் ஆலிம் அவர்களின்
ஐந்தாவது ஆண்மகன் மஷ்ஹ"ர். இவர் நூறுத்தின் என்ற பெயரால் அழைக்கப்
T

படுவார். சிறந்த சொற்பொழி வாளர். தீவின் பலபாகங்களுக்கும் சென்று சொற்பொழி வாற்றியவர். மிக்க இளம் வயதிலே (1975) மரணித்தவர். இவர் மகன் ஸிராஜ் தென் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் தமிழ்மொழியைப் பாட மாகக் கொண்டு கற்கின்றார். சிறந்த மேடைப் பேச்சாளர். மிகக்கடுமையாக நூல் வாசிப் பதில் ஆர்வமுடையவர். தமிழ் மொழி ஆராய்வாளர். சிறந்த அரசியல் விமர்சகர். அவரது அரசியல் விமர்சனக் கட்டுரைகள் சிந்தையைக் கவர்வன. மிகவும் துணிவுடன் கணல்தெறிக்கும் வசனங்களால் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதுகிறார். அவரது பத்திரிகை வெளியீடுகள் நூலுருப்பெறும் நடவடிக்கையில் உள்ளன.
அப்துல் ஜவாத்:
அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் வித்தியாபீடத்தின் தமிழ்த் துறைப் பொறுப்பாளராக இருக்கும் ஜவாத் ஆசிரியர் தமிழ்த்துறையில் இன்று மிக்கப் பிரபல்யம் வாய்ந்தவராக இருக்கிறார். தமிழையும் இலக்கியத்தையும் சிறப்புப்பாடமாகக் கற்பிக்கும் இவர் கவிதை புனைவதிலும், விமரிசனக் கலையிலும் சிறப்புப் பெற்று விளங்குகிறார். இலக்கணத்தில் மட்டுமின்றி யாப்பிலக்கணத்திலும் புலமை உள்ளவர். பேச்சாற்றல், கவிதை இயற்றும் ஆற்றல், எழுத்தாற்றல் உள்ள ஜவாத் அவர்கள் நாடகம் எழுதியும் அரங்கேற்றம் செய்தும் வருகிறார். எழுத்துத்துறையில் இவருக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு.
புவறாரி ஆலிம :
அபூபக்கர் லெவ்வை ஆலிம் அவர்களின் நான்கு மக்களின் பின் கடைசியானவர் உம்முக்குல்ஸம் மக்கத் தும்மா எனப்பெயர் பெற்றவர். இவர் பெண் ணான படியால் அக்காலத்தில் வசதிகளில் லாததால் ஆலிமாகவில்லை. இக்குறையை தீர்க்க தன் மூன்று ஆண்மக்களில் இரண்டை
SS Ꮹ65Ꭷ

Page 72
ஆலிம் ஆக்கினார். ஏழை எளியவர்களை வாஞ்ஞையோடு உபசரிப்பார். பெண்களி டையே சன்மார்க்க நெறிகளைப் பரப்புவார். இவரின் மூத்தமகனே புஹாரி ஆலிம் அவர்கள்.
தனது பாட்டனின் பெயரால் அபூபக் கர் என அழைக்கப்பட்டவர் புஹாரி ஆலிம். ஹதீஸ் கலை வல்லவர். அரபி மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளர். விவாத அரங்குகளில் கலந்து கொண்டு எதிரியை புறமுதுகு காட்டச் செய் பவர். கவிஞர், பாடவல்லவர், அவருக்கிருந்த அரபி மொழிப் புலமை ஆச்சரியப்படத்தக்கது அரபியில் கீதங்கள் -கவிதைகளை எழுதி இசையமைத்துப் பாடிப் புகழ்பெற்றவர். அவரது‘சின்ன ஜெமி.” என்ற பாடல் பிரதேசப் புகழ்வாய்ந்தது. கேட்போர் உடனே மனனஞ் செய்யக்கூடியவாறு இசையமைத்த வர். ஆன்மீகவாதி. அரபிச்சொல்லிலக்கணம் அணியிலக்கணம் என்பவற்றில் தேர்ச்சி உள்ளவர்.
அப்துஸ் குத்துள்ளில் மெளலவி
கொழும்பு மருதானை ஜ"ம் ஆ பள்ளியின் பிரதான கதீபாகக் கடமை யாற்றியவர். இராகத்தோடு ஹதீஸ் சொல்லக்கூடியவர். மேடைப்பேச்சாளர். அ.ஸ்.வின் சகோதரியை மணம் முடித்தவர். இவரது மகனே ஊடக வியலாளரான றம்ஸி குத்தூஸ் ஆவார்.
இவ்வளவு இலக்கியப் பின்னணியை யும் பார்க்கும்போது அ.ஸ்.அவர்களுக்கு இலக்கியப்புலமை மரபுரீதியாக வந்த ஒரு முதுசம் என்பதில் சந்தேகம் ஏற்பட இட மில்லை. இந்தியாவில் தென்மானிலத்தில் திறமையும் ஆற்றலும் வாய்ப்புகளும் வசதி களும் பெற்ற அனேக அறிஞர்கள் வாழ்ந்
(66) ges

துள்ளனர். 1957ம் வருடத்திலேதான் இவ் வசதிகளை அவர்கள் பயன்படுத்தத் தொடங் கினார்கள். இவ்வாண்டிலே புதுக்கல்லூரியில் சீறாப் புராணக்கருத்தரங்கு நடைபெற்றது. பல அறிஞர்கள் ஆய்வுக்கட்டுரை சமர்ப் பித்தனர். அதன் பிறகே “சிந்தைக்கினிய சீறா” வெளியானது. அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே எவ்விதமான வளங் களுமின்றி ஓர் அகராதி தானுமின்றி அ.ஸ். அவர்கள் சிறாவை ஆராய முற்பாட்டார்கள்.
நாயன்மார் நாவமுதும் நம்மாழ்வார் பாசுரமும்
மேயப்புகழ் மேகலையும் மேம்பாடு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும் மாண்புறு சீறாவும்.
என்ற பாடலுக்கேற்ற மாண்பான சீறா வை மிக்க இளம் வயதில் அ.ஸ. அவர்கள் ஆராய முற்பட்டார்கள். அந்தக் கஷ்டப் பிரவசமே சீறா இன்பம் ' என்ற இலக்கியக் கருவுலமாகும். இதற்குமுன் எவருமே சீறாவுக்கு விளக்கவுரை, விரிவுரை கண்டதில்லை.
அ.ஸ.அவர்களது இலக்கியப் பணி
நாடறிந்தது. நான் சொல்லவந்ததோ அவரது இலக்கிய - தமிழ் ஆற்றலுக்கு அவரது பரம்பரைச் செல்வாக்கு எவ்வளவு தூரம் துணைபுரிந்தது என்பதைத் தொட்டுக் காட்டுவது மட்டுமே. மிகவும் பரந்து விரிந்த ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தை முடிந்த அளவு சுருக்கியுள்ளேன. பெருமைப் படக்கூடிய ஒரு வரலாற்றுப் பின்னணி அஸ.வுக்கு உண்டு என்பதைப் புலப்படுத்து மாறு நான் கேட்கப்பட்டேன். அவர்களது நோக்கம் நிறைவேறியிருக்கும் என்ற நிறைவுடன் முடிக்கிறேன். இவ்வரலாற்றுப் பின்னணியில் எடுத்துக்காட்டிய அத்தனை நிகழ்வுகளுக்கும் தகுந்த சான்றுகள் எம்மிட முள்ளன. நன்றி.

Page 73
As
3.
- அருட்கவி அக்கரை
برXہ سمیع ؟؟
பேனா ஒன்றினது பேச்சு நின்றுவிட்டது ஆம், ஆனா சானாவின் மூச்சு நின்றுவிட்டது.
படைப்பாளியை ஒரு படைப்பாளி பறித்துக்கொண்டான் உடைப்பெடுத்துவிட்டது உறுதிமிக்க இலக்கிய அணை அமிழ்ந்து கொண்டிருக்கிறது ஆயிரமாய் நெஞ்சங்கள்
ஆனா சானா, உன்னால் ஆறுதசாப்தம் தீர்க்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தின் தாகம் உன் பிரிவால் இன்று பேனாப் பிடிப்போர்க்கெல்லாம் பெருத்த மனச் சோகம்
இலக்கியத் தாயின் இணைபிரியா புத்திரனே, பேனாக்கள் பல நூறின் பிரியமுள்ள மித்திரனே, மாணக்கர் பலபேரின் மனம் நிறைந்த வித்தகனே, உன் இறப்பு பெரும் இழப்பு.
சிறுகதை கவிதை முதல் நாடகம் நாவல்வரை
 
 
 
 
 
 
 
 
 

ܡܢ ܚܛܗܡ பூர் அப்துல்குத்துளில் -
விமர்சனம் ஈறாக விரிவுபட்டது உன் தொண்டு இங்கு இதில்
உன்னை மிஞ்சயாருண்டு?
அப்போது நீ தந்தாய் இலக்கியப் பொய்கை
அதை இப்போதும் மறக்கவில்லை மாணவர் வைகை
உனக்கு வயது ஐம்பத்து எட்டில் எனக்கு வயது பதின்மூன்றை எழுதியவன் நீ
உன் இஸ்லாமிய இலக்கிய நோக்கு-அதை வாசித்தால் விளங்கும் - உன் வளர்ச்சியின் போக்கு.
தவறுகளை தர்மங்களாக்கிவிட்டு இன்று
தவறியேவிட்டாய் நீ இலக்கியத்தை விட்டு
அக்கரைப்பற்றின் ஆரம்ப எழுத்தாளனே, ஆசான்கள் பலருக்கு ஆசானாய் இருந்தவனே, உன் எழுத்து தடம் பதித்திருப்பது தாய் நாட்டில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும்தான்

Page 74
உன் எழுத்து பத்திரிகை பலவற்றுக்கு பசி தீர்த்திருக்கிறது சஞ்சிகை மலர்களுக்கெல்லாம் ருசி சேர்த்திருக்கிறது.
இலக்கியவேந்தனாய் இலங்கிய மைந்தனே,
நீ
வாழும்போதே வாழ்த்தப்பட்டவன்! கலாபூஷண விருதை காலடிக்கு வரவழைத்தவன்! சாகித்திய விருதுமட்டும் - உன் சாதனைக்குப் போதுமானதா?
g
எழுதிக் குவித்திருக்கிறாய் எத்தனையோ சிறுகதை(கள்) பிராந்தியத்தில் உன்னைமேவ யாருக்குண்டு அருகதை,
மண்வாசம் மறக்காதவை உன் கதைகள் - அவை மனித வளவிருத்திக்கான பொன்விதைகள்
அப்போதைய உன் வானொலி நிகழ்ச்சி இப்போதும் கூட எதிரொலிக்கிறது என் செவிகளில்
இலக்கிய மஞ்சரியில் கலக்கியது காத்ரமானது உன் வழிகாட்டல்தான் பலரின் எழுத்துக்குப் பாத்திரமானது.
M1A SNA 68)

ஆனாசானாவே.
உன் பேனா பேர் தேடித் தந்திருப்பது பிறந்த மண்ணுக்கு மட்டுமல்ல இப்பிராந்தியத்துக்கும்தான்
நரைவிழுந்த காலத்தும் உன் பணியில் திரை விழுந்த சேதி செவிகளில் கேட்டதில்லை.
மூப்பால்கூட உன் எழுத்துக்கு ஆப்புவைக்க முடியாதமை அதிசயம்தான்
g
நோயுற்றிருந்தபோதும்கூட உன்பேனா வாய்விட்டுப் பேச வருத்தப்பட்டதே கிடையாது.
எழுதி எழுதி குவித்துள்ளது எண்ணிலாமல் உன்கை
இன்று ஏங்கி ஏங்கி தவிக்கிறது இலக்கியத்து வைகை.
卤
சமூகத்துக்காக எழுதினாய் சமூகம் இன்று உன்னை எழுதிக்கொண்டிருக்கிறது

Page 75
கவிஞர் ஈழக்
பூபாள ராகமோ புன்னகை பொழிகையில் கூவிடும் கோழி குயில்களுடன் - வானில் ஆதவன் தோன்றிட ஆயிரம் கோடி கமலம் மலரும் களிகொள்ளும் - இதயக் கமலம் மலர்ந்திடக் களியாகும்.
அக்கரைப்பற்றில் இலக்கியமாமணி தோன்றியதாலே தென்கிழக்கில் மிக்க புகழுடன் மாண்புகள் ஓங்க நிற்கின்றேன் அஞ்சலி வாழ்த்தடனே.
அக்கரைப்பற்று ஈந்த மகன் - நம் அப்தல் ஸ்மதென உதித்த மகன் மக்கள் மனதிலே மிக்க இடம் பெற்று இலக்கிய வானில் உயர்ந்த மகன். நன்றே இலக்கிய மாமணியான மகன்.
சிறுகதைத் தேரிலே ஊர்வலம் கண்ட இலக்கிய மாமணி அஸ்.நம் இலக்கிய மாமணி அஸ. நறுமணம் வீசிடும் உயரிய கதைகள் ஆக்கியே அளித்த முத்தமகன் - தென் கிழக்கிலே தோன்றிய முதல்வனவன்.
கோடிக் கணக்கானோர் வந்தே போகிறார் கோடுகள் பதித்தவர் ஒருசிலரே - நல்ல கோடுகள் பதித்தவர் ஒருசிலரே ஆடி அடங்கியே போனதன் பின்பும் நீடித் திருப்பவர் ஒரு சிலரே - நீண்ட சுவடுகள் பதித்தவர் ஒரு சிலரே.
 

குயில் இத்ரிஸ்
கல்வியில் கரைகாணத் தடித்தவரே - பல கல்லூரி வாசலைக் கடந்தவரே எள்ளி நகையாடும் குள்ளக் குணமுடைய மனிதரிடையே நீ முத்து எங்கள் இதயக் கிடங்கினில் நீ தங்கம்.
புழுதி படிந்தம் பழுதபடா - தினம்
பொற்கொல்லர் சுட்டும் மாறுபடா
நிலவின் ஒளியும் பின்னடையும் - என்றும் நிம்மதி கொடுக்கும் உயர்தங்கம்!
எங்கும் நிறைந்த வல்லவனே - நல்ல ஏக பெரியோனே தாயவனே தங்கு தடையின்றி உன்வழி வாழ்ந்த அப்தஸ் ஸமதவர் உயர்வுபெற ஏந்தினேன் இருகரம் சுவனபதியை வழங்கி யவர்தனை வாழ்த்தக்கள்கூறி ஏற்றிடு உயர்ந்த மனிதனாக - என் வேண்டுதல் ஏற்றிடு வல்லவனே.
(முதுபெரும் எழுத்தாளர் அ.ஸ.அப்துஸ் ஸமது அவர்களின் மறைவையொட்டி, சென்ற 25-08-2001 சனி காலை 9.00 மணிக்கு கல்முனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் பாடப்பட்ட அஞ்சலிப்பாவின் ஒரு பகுதி)

Page 76
జరిగి
கீ
8
ஆனாஸான எனும
அற்புத சிற்பியின் பேனாமுனை இனி பெற்றுவிட்டது ஓய்வு.
இலக்கிய வானில்
இலங்கிய நட்சத்திரம் இயக்கம் முடித்து இடம்விட் டகன்றது.
எழுத்துத் துறைஎனும் கடலுக்குள் மூழ்கியே முத்துக் குளித்த அ.ஸ. எடுத்த முத்துக்கள் ஏராளம் ஏராளம்.
s
*
--
*
ஆசானாய்த் திகழ்ந்து அரும்பணி யாற்றினார்
விரிவுரை யாளனாய்
w
விளக்கங்கள் அளித்தார்
நேசனாய் அன்புடன்
ج۔
நெஞ்சங்கள் கவர்ந்தார்
۔۔۔ــــــــ
ు
O
 
 
 

லயன்பன் அப்துஸ் அஸ்ஸ்
நகைச்சுவையோடு உரைகள் நிகழ்த்துவார் நாடி பிடித்து எழுத்தை நகர்த்துவார்
பகைமை உணர்வை
வெறுத்து ஒதுக்குவார் பட்டங்கள் கண்டும்
பணிவையே நாடுவார்.
சிறுபிள்ளை போல சிரித்துப் பேசும் சிந்தனை வாதி அ.ஸ. இறையடி எய்தினார் ஏந்தலன் அவர்க்கு
சுவர்க்கம் அளிக்கப்
பிரார்த்தனை செய்வோம்.

Page 77
pலதுஎழுதி
என் குடும்பத்தில் நான் மூத்தபிள்ளை. அன்று நான் A/LExam எடுத்துவிட்டு வீட்டில் இருந்த நேரம், ஒரு நாள் வாப்பா என்னிடம், “மகள் நீயும் கதை எழுதப் பழகு. என் நண்பர்களெல்லாம் உங்க பிள்ளைகள் கதை எழுதுவதில்லையா? என்று கேட்கி றாங்க” என்று சொன்னார். நான் சிரித்து விட்டுச் சென்றுவிட்டேன். ஏனென்றால் எனக்கு எழுத்தில் துளியும் அக்கறை கிடையாது.
என்றாலும் வாப்பா அடிக்கடி எழுது மகள், எழுது மகள் என்று சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார். வரவர எழுத வேணும் என்ற ஆவல் எனக்குள் மேலோங்கிக் கொண்டு வந்தது. ஆனாலும் எனக்கு எழுதத்தெரியாது. ‘எப்படி எழுதுவது என்ற வினா எனக்குள் எழுந்து கொண்டிருந் 53.
ஒரு நாள் என் இஷ்டப்படி ஒரு கதை எழுதி வாப்பாவிடம் காட்டினேன். அவர் அதைப் பார்த்ததும் முகத்தைச் சுழித்துவிட்டு ‘இந்தக் கதை சரியில்ல' பத்திரிகையில் வருகிற ஒவ்வொரு கதையையும் வாசித்துப் பார் என்றார். அன்றிலிருந்து பத்திரிகையில் வரும் கதைகளை வாசித்துக்கொண்டு வந்தேன்.
ஒரு நாள் ஒரு கதையின் அமைப் பைத் தழுவி என் கற்பனையில் ஒரு கதை எழுதி "சுமைதாங்கி’ என்ற தலைப்பிட்டு வாப்பாவிடம் காட்டாமலேயே தினகரனுக்கு அனுப்பினேன்.
சில மாதங்களில் கதை பததிரிகை யில் பிரசுரமானது. கதையைக் கண்டதும் என்னை விட என் தந்தையே அதிக மகிழ்ச்சி யடைந்தார்.
எனக்கோ தொடர்ந்து எழுது
 

| அ.வ.சித்தி நிஜா எகினர் அண்யகம்; அக்கரைப்பற்று
வேண்டும் என்ற ஆவல்! தொடர்ந்து எழுதினேன். ஆனால் ஒன்று கதை பத்திரிகையில் வந்த பிறகு தான் வாப்பா கதையை வாசித்துப்பார்ப்பார்.
ஆனால் ஊருக்குள் ஒரு கதை! வாப்பா கதை எழுதி என் பெயரில் போடு கிறார் என்று! இவர்களை நினைத்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் வாப்பா கதை எழுதும் நடைக்கும் நான் கதை எழுதும் நடைக்கும் வித்தியாசம் அதிகம். இந்த உண்மையை எழுத்தாளர்கள் மட்டுமே புரிந்து கொண்டார்கள். கதையைப் பற்றி விளங்காதவர்கள் தான் இப்படி பேசி யிருப்பார்கள்.
நாடகம் எழுத எண்ணினேன். 'நாடகம் எழுதுவது எப்படி?’ என்ற புத்தகம் ஒன்றை வாசித்துவிட்டு ‘நம்பிக்கைகள்' என்ற ஒரு நாடகத்தை எழுதி வாப்பாவிடம் காட்டினேன். அவர் அதில் சில திருத்தங்கள் செய்து தந்தார். உடனே வானொலிக்கு அனுப்பி னேன். என் நம்பிக்கைகள் வீண்போக வில்லை. நாடகம் ஒலிபரப்பானது. தொடர்ந்து நாடகங்கள் எழுதினேன். ஆனால் வாப்பாவிடம் காட்டுவதில்லை. றேடியோவில் நாடகத்தைக் கேட்டுவிட்டே அவர் அபிப்பிராயம் சொல்லுவார்.
என்னுடைய ஏராளமான நாடகங்கள் Radio வில் ஒலிபரப்பாகியுள்ளன. அதற்கு வானொலி நாடகத் தயாரிப்பாளர் அஷ்ரப் கானும் ஒரு கர்ரணம் தான். ஏனென்றால் அவர் வாப்பரிவுக்கு அடிக்கடி Telephone பண்ணி 'மகள எழுதச் சொல்லுங்கோ' என்பார். மட்டுமல்ல நாடகத்தில் ஏதும் பிழையிருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டி திருத்தவும் சொல்லுவார்.
இதற்கிடையில் எனக்கு விவாகமும் நடந்துவிட்டது. இப்போது ஊருக்குள் ஒரு
GD

Page 78
புதுப்பிரச்சினை எழ ஆரம்பித்தது. திருமண மான பெண் ஏன் புருஷன்ர பெயரைப் போடாமல் வாப்பாவின் இனிசலைப் போட்டு கதை எழுதுவது? என்பது தான் அது.
இதை நான் வாப்பாவிடம் சொன்னேன் அவரோ ‘நான் மெளத்தானாலும் நீ என் பெயரில் எழுதவேண்டும். ஆகவே பெயரை மாற்றவேணாம். பின்னால அவர்ர பெயரை யும் சேர்த்துக்கோ” என்றார். ஆகவே நான் அ.ஸ்.சித்தி றிஜா எகின் என்ற பெயரில் எழுதினேன்.
கால ஓட்டத்தில் எனது குடும்பமும் பெருகியது. எனக்கோ எழுத நேரம் கிடைப் பது மிக மிக அரிதாக இருந்தது. என்றாலும் கஷடப்பட்டு நேரத்தை எடுத்து மூன்று நாவல்களும் எழுதிவிட்டேன். என்னுடைய நாவல்கள் குடும்பக் கதையாக இருந்ததால் எல்லோரும் விரும்பிப் படித்தனர்.
இப்போது என்னிடம் எல்லோரும் கேட்கும் கேள்வி என்னவென்றால் “நீங்கள் ஒரு குடும்பப் பெண்ணாக இருந்து கொண்டு எத்தனையோ வேலைகளுக்கு மத்தியில் இந்த நாவலை எப்படி எழுதினிர்கள்? என்று அதுவும் நியாயமான கேள்விதான்.
வேலைகள் செய்யும் போதே கதைக்கு கற்பனை பண்ணுவேன். கொஞ்சம் Free கிடைக்கும் போது அதை எழுதுவேன். என் மகனை மடியில் வைத்துக்கொண்டு எழுதியதும் உண்டு. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட நாட்களுக்கு எழுது
ഖങ്ങി.
இன்னும் சிலரோ “கதை எழுதுவது நல்லதல்ல. கற்பனையை இஸ்லாம் விரும்ப வில்லை” என்று பேசிக்கொள்கின்றனர்.
என்னைப் பொறுத்தமட்டில் பேனா கத்தியைப் போன்றது. பழத்தையும் வெட்டும் உயிரையும் கொல்லும். என் பேனாவை நான் பழத்தை வெட்ட மட்டும்தான் பயன் படுத்தியதுண்டு. போராளியின் வாள் முனையை விட பேனாமுனை கூர்மை யானது. சமூகத்திற்கு பொருத்தமான இஸ்லாத்திற்கு ஏற்றமான, மனித உள்ளங்
G2)-

களை திருத்தக்கூடிய கதைகள் எழுதுவதை சமூகத்திற்கு புரியும் தொண்டாகவே நான் கருதுகிறேன்.
இன்னும் பலரோ ‘குடும் பப் பெண்ணுக்கு எதுக்கு இந்தக் கதை எழுதும் வேலையெல்லாம்? பிள்ளட புருஷன்ர வேலைகளைச் செய்து கொண்டு இருக்க வேண்டியது தானே” என்கிறார்கள்.
இப்படிச் பலா பேசுவதாலேயே பெண்கள் சமுதாயம் குட்டிச் சுவராகக் கிடக்கிறது. இஸ்லாமிய கட்டுப்பாடுகளை மீறாமல் பெண்கள் எத்துறையிலும் முன்னே றலாம். நம் வழிகாட்டியான நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார் யுத்தம் செய்வ தற்குக் கூட போயிருக்கிறாங்க!
பெண்களின் திறமை முடங்கிக் கிடப்பது மிகவும் கவலைக்குரிய விடய மாகும். அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று ஊக்குவிப்பார் இல்லை. அடுத்தது வீட்டு வேலைப் பளு கூடுதலாக இருப்பது. ஆகவே கணவன்மாரும் வீட்டு வேலைகளில் பங்கு கொண்டு அவர்களுக்கு சிறிது ஓய்வு கொடுத்து திறமையுள்ள பெண்களை ஊக்கு விக்கவேண்டும்.
இதில் இன்னுமொன்று என்ன வென்றால் ஒரு குடும்பப்பெண் சீதனப் பிரச்சினை, மாமி, மாமன் பிரச்சினை, கணவனின் பிரச்சினை, பிள்ளைகளின்ர பிரச்சினை என்றவாறு பல பிரச்சினைகளுக்கு
எழுத கரு எடுப்பதும் சற்று இலகுவாக இருக்கும் என்பதும் எனது கருத்து.
எனது எழுத்துலகம் பற்றிய சிறு அனுபவம் இது. என் தந்தை இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவரை இவ்வையகம் மறக்க நியாயமில்லை! என்றாலும் அவரின் பெயரை இன்னும் நிலைநாட்டுவது எனக்கு 5L60LDuurts SD 6itGITg5.
இம்மண்ணில் அவரின் பெயர் பிரகாசித்தது போல் கபுறெனும் அம்மண்ண றையில் அவரின் அமல்கள் ஒளியாய் பிரகாசிக்க நான் இறைவனிடம் கண்ணிருடன் இருகரமேந்துகிறேன்”

Page 79


Page 80
9ilਥ
பத்திரிகைப்

5LD 2
unrigoghlasor

Page 81


Page 82

agos»-un sē oqsor-mosus@oÐ

Page 83


Page 84
அட்டாளைச்சேனை பொதுநூலகம் சாகித்திய தலைமையின் கீழ் கொண்டாடியது. அவ்வண் பு ஆகியோர் விசேட பேச்சாளர்களாக கலந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அஸ்.அவர்கள் 60வது அகவை பூர்த்தி செய் கல்லூரி அன்னாருக்கு விழாவெடுத்து அவ எடுக்கப்பட்ட படம்
 
 
 
 
 
 
 

விழாவை விசேட ஆணையாளர் அவர்களது லவர்மணி ஆமூஷரிபுதீன், அஸ்.அப்துஸ்ஸமது கொண்டபோது கவிஞர் பாலமுனை பாறுக்
தமை குறித்து அட்டாளைச்சேனை ஆசிரியர் ரது ஆக்கங்களைக் காட்சிப்படுத்திய போது

Page 85
தென்கிழக்கு கலாசாரப் பேரவையின் ‘இலக்கி
மனிதன் பெளஸர், அன்புடீன், றமிஸ் அப்துல் அபிமானிகளும் சேர்ந்து இலக்கியமாமணி அள
அக்கரைப்பற்று கலை இலக்கியப் பேரவை போது வட கிழக்கு மாகாண பிரதம செயல அவர்களுக்கு இலக்கிய மாமணி’பட்டம் வழங்
 
 
 

யச் சந்திப்பு - 08 இன் நினைவாக 'மூன்றாவது ல்லா ஆகியோருடன் இன்னும் சில இலக்கிய 0.அய்துஸ்ஸமது அவர்களோடு எடுத்துக்கொண்ட
நடத்திய வருடாந்த கெளரவிப்பு நிகழ்ச்சியின் ாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அஸ். தி பதக்கம் அணிவித்தபோது எடுக்கப்பட்ட படம்

Page 86
வெளிவந்தவை:
(1)
(2)
(3) (4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
(13)
சீறா இன்பம் 1957, இலக்கியப் பண்ை சுலைமான் பல்கிஸ் 1959, யூனிவேர்ல இலக்கியப் பொய்கை, (6, 7, 8 தரங் தமிழ் இலக்கியம் - விளக்கத்துணை முற்றத்து மல்லிகை (கவிதைத்தொகுப் Q6ö6)mb - 6huglas|Ti9. 1972 LD600TLD5. எனக்கு வயது பதின்மூன்று (சிறுகதைத் பிறைப்பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு) பனிமலர் (நாவல்) 1982 வீரகேசரி பிர தமிழ் இலக்கிய வினாவிடை 1983 கனவுப்பூக்கள் (நாவல்) 1983 தர்மங்களாகும் தவறுகள் (நாவல்) 1 இஸ்லாமிய இலக்கிய நோக்கு (ஆய்
வெளிவரவேண்டிய6ை
அ.ஸ்.வின் கவிதைகள் அ.ஸ.வின் பேச்சுக்கள் அ.ஸ்.வின் வானொலி நாட அ.ஸ்.வின் உருவகக் கை அ.ஸ.வின் சிறுகதைகள் அ.ஸ்.வின் உரைநடைகள் அ.ஸ.வின் நகைச்சுவைகள் அ.ஸ்.வின் இலக்கியக் கட் அ.ஸ்.வின் கல்விப்பணி
(ஆய்வாளர் பார்வையில் (
 

ண, சென்னை-1
ஸ்ல் பப்பிஸர்ஸ், சென்னை-1
களுக்கான பாடநூல்) 1959 - 1964
1968
பு) 1964 (ஈழத்து முஸ்லிம் கவிதைகள்) ஸ் புத்தகசாலை, கல்முனை
ந்தொகுதி) 1977 - சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1979 ஈழத்து முஸ்லிம் சிறுகதைககள் தேச பரிசு பெற்றது.
987
வுக்கட்டுரை) 1996
கங்கள்
தகள்
டுரைகள்
தொடரட்டும்.)
=G8)

Page 87
m அல்வறாஜ் கலார
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்
நல்லவற்றையே எவரும் விரும்புவர். நல்லவை என்று கூறும்பொழுது தனக்கு மட்டுமன்றிப் பிறர்க்கும் நன்மை பயக்கக் கூடியவை. இவ்வாறு தனக்கும் பிறர்க்கும் இம்மையும் மறுமையும் பயக்கும் இனிய சொற்களையே நல்லவை என்று திரு வள்ளுவர் கூறியுள்ளார் என்பர் காளிங்கர்.
அறத்துக்குப் பகை பாவம், தவத்தின் முன் நில்லாதது பாவம். அறம் பெருகப் பெருகப் பாவங்கள் தேய்ந்து போகும். பாவங்கள் தேயத்தேய அறம் பெருகிக் கொண்டே இருக்கும். ‘ஒருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம்' என்கின்றது நாலாடியார்(51). இவ்வாறு அறம் பெருகிக் கொண்டே இருப்பதற்கும், பாவம் தேய்ந்து கொண்டே போவதற்கும் நாம் நல்லவற்றை நாடுதல் வேண்டும். பொருளால் பிறர்க்கு நன்மை பயப்பனவாக நல்லவை இருத்தல் வேண்டும். நன்மை பயக்கும் சொற்களைச் சொல்லுதல் வேண்டும். ஒரேயடியாக நன்மை பயக்கும் சொல்லைச் சொல்வது கடினம். அவ்வாறு சொல்வதற்கு முன்னர் அது பற்றிச் சற்று ஆராயவேண்டும். ஆராய்ந்த பின்னர் கூறும் சொற்களே நன்மை பயக்கும் சொற்களாக இருக்கும். அத்தகைய சொற்களே இனிய சொற்களாக இருக்கும். அச்சொற்களை இனியவாகக் கூறினால் மாத்திரமே நன்மை பயப்பனவாய் அவை அமையும். அத்தகைய இனிய சொற்களை இனியவாக ஒருவன் சொல்வா னானால் அவனது பாவங்கள் தேயும். அவனது பாவங்கள் தேய்வதனால் அறம் பெருகும்.
@
 

எழுத்தறிரோடு
தி ம.மு.உவைஸ்
இனிய கருத்துக்கள்
பொருளால் பிறர்க்கும் நன்மை பயக்கும் சொற்களை மனத்தால் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின் அவனுக்கு பாவங்கள் தேய அறம் வளரும் என்னும் கருத்தினையே மேலே எடுத்துக் காட்டப்பட்ட குறளில் திருவள்ளுவர் அமைத் துப் பாடியுள்ளார்.
இக்கருத்துக்கள் ஒரு சிறந்த எழுத் தாளனைப் பொறுத்தவரையிலும் மிகப் பொருத்தமானவையாகவே அமைகின்றன. எழுத்தாளன் தனது கருத்துக்களைத் தனக்குப் பயன்பட்டது போன்று மற்றவர்க்கும் பயன்படவேண்டும் என்றே கூறுகின்றான். அத்தகைய எழுத்தாளன் வீணே சொற்களை அடுக்கிக் கொண்டு போவதில்லை. ஒன் றைக் கூறும் பொழுது உள்ளத்தால் நன்கு சிந்தித்து ஆராய்ந்தே கூறுகின்றான். ஆராய்ந்து முடிவுக்கு வந்த பின்னரே அதற்கு எழுத்துருவம் கொடுக்கிறான். அந்த எழுத்தாளன் தனது கருத்துக்கள் சென்று அடையவேண்டியவர்களை அடைவதற்கான ஒரு குறிப்பிட்ட முறையையே பின்பற்று கின்றான். இனிமையான சொற்களில் மாத் திரம் கூறுவதுடன் அவன் நின்று விடுவ தில்லை. இனிமையான சொற்களை இனிய வாகவே கூறுகின்றான். உண்மையிலேயே இனியவாக ஓர் எழுத்தாளன் தனது கருத்துக் களை வெளியிட்டால்தான் அவை சென்ற டையும் பிறரும் அதனை வரவேற்பர். ஏற்றுக் கொள்வர் கடைப்பிடிப்பர். அவற்றினால் பயனடைவர். எழுத்தாளனும் பரமதிருப்தி அடைவான்.
எனவே எழுத்தாளன் தனக்கும் பிறருக்கும் இம்மை மறுமை பயக்கும்

Page 88
கருத்துக்களை இனிய சொற்களைப் பயன் படுத்தி அவற்றை இனியவாகச் சொன்னால் மாத்திரமே அவனுடைய பாவங்கள் அகன் றோடி விடும். அவனுடைய அறம் வளர்ந் தோங்கும்.
ஆற்றல் மிகு விமர்சகர்
இத்தகைய எழுத்தாளன் வரிசையில் வைத்துக் கணிக்கக்கூடிய ஒருவர் எம் மத்தியிலே வாழ்ந்துவருகிறார். அவர் ஒரு தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர். ஆற்றல் மிக்க விமர்சகர். திறமை மிக்க இலக்கிய கர்த்தா. பாடநூல் எழுதுவதில் கை தேர்ந்தவர். தீன் தமிழிலும் தீந் தமிழிலும் மிக்க ஈடுபாடு உடையவர்.
இறையருட் கவிமணி பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள் கூறியுள்ளது போல் அவர் இஸ்லாமிய இலக்கிய வானில் ஒரு தண்டமிழ் விண் மீன்.
சீறா இன்பம், சுலைமான் பஸ்கீஸ் ஆகிய நூல்களை எழுதி, இலக்கிய வானிலும் பள்ளி மாணவர் மனதிலும் இன்ப விளக்கேற்றத் தனக்கொரு விசேட இடம் அமைத்துக் கொண்ட பெருமை அவரைச் சாரும் என ஆசிரியத் தந்தை, மர்ஹாம் ஐ.எல்.எம்.மசூர் அவர்களால் புகழப்பட்டவர் அவர். தூய்மையான உள்ளங்களில் நேர்மையான கருத்துக்களை இனிமையான முறையில் ஊன்றி, வாய்மையான வாழ்வை வளர்த்து இம்மை மறுமை இரண்டிலும் பயன் பெறும் வகையில் தமது எழுதும் ஆற்றலை வழக்கமான பழக்கமாக்கிக் கொண்டவர் அவர்.
அவர் வேறு யாருமல்லர். 22 ஆண்டு களுக்கு முன்பிருந்தே அவருடன் நெருங்கிய தொடர்பு எனக்குண்டு. கால் நூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர்தான் அ.ஸ.அப்துஸ் ஸமது அவர்கள். எல்லோராலும் அ.ஸ. என்று அன்பாய் அழைக்கப்படுபவர்.
மேலே குறிப்பிட்ட குறளின் கருத்துக்

கிணங்க எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருபவர். தான் கூறவேண்டியவற்றை ஆராய்ந்து இனிய தமிழில் இனியனவாகக் கூறுகின்றவர். பயிற்றப்பட்ட ஆசிரியரான அ.ஸ. நெடுங்காலமாக உதவி ஆசிரிய ராகவே இருந்து வந்துள்ளார். அவர் தம் விடாமுயற்சியின் பயனாக அண்மையில் வித் தியாலங்காரப் பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழ் மொழியில் சிறப்புக்கலைமாணிப் ULLLb B.A.(Hons) GLippj616TTń.
சிறந்த சிறுகதைகள்
அ.ஸ. பழகுவதற்கு இனியவர். அண்டியவர்க்கு அன்பர். நாடியவர்க்கு நன்மை புரிபவர். விரும்பி வந்தவரை விருந்தோம்பும் பண்பாளர். தொடர்பு கொண்ட மாணவருக்கு மனப்பக்குவம் அளிப்பவர். தோழமை பூண்ட ஆசிரிய நண்பர்களுக்காக ஓயாது உழைப்பவர்.
சிறுகதைத் துறையில் சிறப்பாக அவர் ஆற்றிய சேவையைக் கருத்தில் கொண்டு அவரைப் பாராட்டும் முகமாக இன்று அக்டோபர் 2ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் பிறப்பகமாம் அக்கரைப்பற்றில் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. அவருடைய சிறுகதைத் தொகுதி வெளியி டப்படுகிறது. ‘எனக்கு வயது பதின்மூன்று என்னும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள சிறந்த சிறுகதையாகிய “எனக்கு வயது பதின்மூன்று' என்பதின் தலைப்பே இச்சிறுகதைத் தொகுதியின் தலைப்பாக அமைந்துள்ளது. இச்சிறுகதையின் முடிவு இவ்வாறு அமைந்துள்ளது
ஆமாம், நான் ஏழை வேலைக்காரி. அவங்க பணக்கார எஜமானர். ஏழை எண்டா தாழ்ந்தவர்கள் என்று தானே உலகம் கூறுகிறது. எங்களுக்கு நியாயம் வழங்க எந்த மகானும் இந்த உலகில் இதுவரை பிறக்கவில்லை. (தினகரன் 21.09.1975)
இங்கே இஸ்லாத்தின் சிறந்த குறிக்கோளுள் ஒன்றான சமத்துவமும் சகோ
=G75)

Page 89
தரத்துவமும் முஸ்லிம் மக்களிடையே பேணப்படவில்லை என்பதைச் சூசகமாக அ.ஸ். விளக்குகிறார். இதன் மூலம் அக்குறிக்கோள் கட்டாயம் பேணப்படல் வேண்டுவதொன்று என்பதை எடுத்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார்.
இஸ்லாமியப் பணி
இஸ்லாமிய வரம்பு மீறாது எழுதும் தகைமை வாய்ந்தவர் அ.ஸ. அதே போன்று இஸ்லாமிய மரபுக்கியைய எழுதும் ஆற்றல் மிக்கவர். இஸ்லாமியப் பணி அவருடன் கூடப்பிறந்த தொன்று.
அ.ஸ.வின் மூதாதையர் தென்னிலங் கையைச் சேர்ந்தவர்கள். அவருடைய பாட்டனார் அப்துஸ்ஸமது மெளலானா என்பவர். அவர் மாத்தறையைச் சேர்ந்த யெஹற்யா அப்பாவின் தம்பியார். அபூபக்கர் லெப்பை ஆலிம் அவர்களின் புதல்வரான அப்துல்ஸலாம் அ.ஸ.வின் தகப்பனார் ஆவார். அ.ஸ்.வின் பெரியப்பா அக்கரைப்
இந்த நாட்டில் இரண்டு மொழி பேசுவே மனம் வைத்தால் இரண்டு மொழிக காரியமல்ல. ஒருவரை ஒருவர் மதித்த நாம் நடந்து கொண்டால் இந்த மர அதுமட்டுமல்ல, நாலுசமயங்களே இங் இந்துவின் சகிப்புத்தன்மையும், இஸ்லா அன்பும் இங்கே பரிணமித்துக்கொணி மாபெரும் செல்வம். இவறறை நாம் 2
முனிவர்களும் சித்தர்களும் நமக்கு வா வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். நமக் அதன் உண்மைகள் புலனாகின்றன.

பற்று ஹாஷிம் ஆலிம் பாவலர் என அழைக் கப்பட்டார். அ.ஸ்.வின் தகப்பனாரோடு உடன் பிறந்த சகோதரர் நால்வரும் ஆலிம்களாவர். அறபு அறிஞராவர்.
எனவே இஸ்லாம், அதன் கலை, கலாசாரம், பண்பாடு முதலியன எல்லாம் ஊறிய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அ.ஸ். வின் மூதாதையர்.
அ. ஸ.அப்துஸ் ஸமது அவர்கள் “இஸ்லாம் எங்கள் நெறி; தமிழ் எங்கள் மொழி” என்னும் உயரிய குறிக்கோளுடன் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து இஸ்லாமியப் பணிபுரிய எல்லாம் வல்ல அல்லாகுத்தஅபூலா பேரருள் பாலிப்பானாக. ஆமீன். ஆமீன் யாறப்பில் ஆலமீன்.
(அஸ்.வின் வெள்ளி விழாவை முன்னிட்டு ஆசிரியரால் தினகரனில் எழுதப்பட்ட கட்டுரை
இது)
நன்றி - தினகரன்
ார் தான் இருக்கின்றோம் இருசாராரும் ளையும் கற்றுக் கொள்வது சிரமமான து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து கதத்தீவு சொர்க்கபூமியாக மாறிவிடும். கு உண்டு. பெளத்தத்தின் சாத்வீகமும், த்தின் சகோதரத்தவமும், கிறிஸ்தவத்தின் டிருக்கின்றன. இவையே இந்நாட்டின் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அஸ்.அப்துஸ்ஸமது தர்மங்களாகும் தவறுகள் நாவல் பக்.25
ழ்க்கையைப் பற்றி எவ்வளவோ சொல்லி கு நல்லனுபவங்கள் ஏற்படும்போதுதான்
அஸ்.அப்துஸ்ஸமது தர்மங்களாகும் தவறுகள் பக்: 63

Page 90
இலக்கிய நயஞ்செறிந்ததாக இலட்சி யத்தை நடைமுறையுடையதாய் எவ்விதம் இணைத்துக் காட்டலாம் என்பதை விளக்கு வதாக, கிழக்கிலங்கையின் இஸ்லாமிய மக்கள் எத்தகைய பண்பாட்டுக்கோலங் களைக் கொண்டுள்ளார்கள் என்பதைக் காட்டுவதாக மனிதப் பண்பாட்டுக் கூறுகளில் இஸ்லாமிய இந்து தர்மங்கள் எவ்விதம் இணைந்தும் பிரிந்தும் செயற்படுகின்றன என்பதைச் சொல்லாமற் சொல்லுவதாக, போடியார் வாழ்க்கை மரபில் நவீனத்துவமும் சமதர்மமும் தவிர்க்கமுடியாமற் செல்வாக் கைச் செலுத்தும் பொழுதே, பழையன கழிந்து புதியன புகுந்த முறைமையைக் கதை மூலமே காட்டுவதாக ஒரு நல்ல நாவலை அ.ஸ.அப்துஸ்ஸமது தந்துள்ளார்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங் களிலிருந்து இதுவரை வெளிவந்த நாவல் களில் சந்தேகமில்லாமல் இது தலைசிறந்த தொன்று. தவிரவும் கிழக்கிலங்கைப் பிராந் தியத்தின் ஆக்கப் படைப்புகளில் (நாவல், சிறுகதை, கவிதை, நாடகம்) விரல்விட்டு எண்ணக்கூடிய சிருஷ்டிகளில் இதுவுமொன்று பொதுவாக ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் நவீன முயற்சிகளில் உதாசீனம் செய்ய முடியாததொரு படைப்பாகவும் பனிமலர் விளங்குகிறது.
令
அந்த நாவலைப்படைத்த அ.ஸ். அப்துஸ்ஸமது நமது எழுத்தாளர்களில் மதிப்பிற்குரிய ஒருவர். கடந்த முப்பத்து மூன்று வருடங்களாக எழுதி வருகிறார். இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பெயர் பெற்ற இவர் பாடநூல்களையும் (இலக்கியப் பொய்கை வரிசை) கவிதைத் தொகுப்பு
 

கே.எஸ்.சிவகுமாரன்
(முற்றத்து மல்லிகை) மற்றும் நூல்களையும் (இலக்கிய விளக்கத்துணை, இஸ்லாம் வழிகாட்டி) சிறுகதைத் தொகுப்புகளையும் (எனக்கு வயது பதின்மூன்று, பிறைப்பூக்கள்) வெளியிட்டனர். இரண்டாண்டுகளுக்கு முன் *கண்ணிர்ப் புஷ்பங்கள் தினகரனில் வெளி வந்தது. இலங்கை வானொலியிலே ‘இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை முஸ்லிம் ஒலிபரப்பில் நடத்தினார். இவ்வாறு புகழ் பெற்ற அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். எழுத்தாளனிடம் காணப்பட வேண்டிய நிதானமும, நிச்சயத் தன்மையும் நேர்மையும் இவரிடமுண்டு. அதே சமயம் எந்தவித பெருமையும் இல்லாத யாவருட னும் இனிதாக, நட்பாக எளிமையாகப் பழகும் பண்பும் இவரை யாவரும் விரும்பக் காரணமாகின்றன.
சாகித்தியப்பரிசு பெற்றுள்ள அ.ஸ். அப்துஸ்ஸமது வீரகேசரி நடத்திய பிரதேச நாவல் போட்டியில் வெற்றி பெற்றவருமாவார் அந்தப் பரிசு நாவல்தான்
பனிமலர்.
இந்த நாவலில் அ.ஸ.அப்துஸ்ஸமது எதனைச் சிந்திக்க முற்படுகிறார்? இந்தக் கதையில் நிலப்பிரபுத்துவ மனப்பாங்குக்கும் கல்வி அறிவு வளர்ச்சியினால் ஏற்பட்ட மனப் பாங்கிற்கும் இடையே நிகழும் போராட்டத் தினை நான் சித்திரிக்க முயன்றேன்’ என்கிறார் ஆசிரியர். இதுசரியே. இவரது முயற்சி பலிதமளித்துள்ளது. இந் நாவலுக்கு ஆசிரியரே முன்னிடு எழுதியிருக்கிறார். நாவ லின் மையக்கருத்துக்களை அவர் பொழிப் பாக எழுதியிருக்கிறார். எனவே நாவலுக்குச் சுருங்கிய விமர்சனமாக அதுவே அமைந்து
=○

Page 91
விடுகிறது. வாசகர்கள் அதனைப் படித்து விட்டு நாவலைப் படிப்பீர்களாயின் நன்மை விளங்கும்.
令
பனிமலர் நாவலில் என்னைக் கவர்ந்த அம்சம், அதன் இலக்கிய பயன்பாடுதான். சமூகச் சித்திரிப்பையும் கவினுற சிருஷ்டித் தன்மை கொண்டதாக ஆக்கும் ஆற்றலை அஸ.அப்துஸ்ஸமதுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம் என்பது மிகையில்லை. கணேசலிங்கன், இளங்கீரன், செங்கை ஆழியான், திரு.ஞானசேகரன், பெனடிட் பாலன் போன்ற (எல்லா நாவலாசிரியர்களின் பெயர்களையும் இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமில்லை) நமது நாவலாசிரியர் களிடத்துக் காணப்படாத ஒரு பண்பை வ.அ.இராசரத்தினம், அ.ஸ்.அப்துஸ்ஸமது, அருள் சுப்பிரமணியம் போன்றவர்களிடம் காணக் கூடியதாக இருக்கிறது. முன்னைய வரிடத்து உள்ளடக்கம் நேரிடையாகவே சொல்லப்படுகிறது. பின்னையவரிடத்து கவித் துவமாகச் சொல்லப்படுகிறது. முன்னைய வரிடத்து கலைப்பண்பு இல்லை என்றில்லை. ஆனால் கவனம் அதிகம் செலுத்தப்படுவ தில்லை. அதே சமயம் பின்னையவரிடத்து உள்ளடக்கத்தை அலசி ஆராய்ந்து வெளிப் படுத்தும் பண்பு குறைவாகவே இருக்கும். இவற்றிற்கெல்லாம் காரணம் பூகோள, சுவாத்திய, சமூக அமைப்புகளே என்றும் கூறலாம்.
வடக்கே கஷ்டப்படும் வாழ்க்கை, கிழக்கே அதேயளவு கஷ்டம் தேவைப்படாத இயற்கையோடிணைந்த வாழ்க்கை. இது பற்றி ஆராய்வது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
பனிமலர் இலக்கிய நயஞ்செறிந்த நவீனம் என்று கூறும் பொழுது குறிப்பாக ஆசிரியர் மொழியைக் கையாளும் முறை யைத்தான் மனதிலிருத்தியுள்ளேன்.வட பகுதியின் வெவ்வேறு பிராந்தியங்களிலு முள்ள தமிழ் பிரயோகங்களை ஆக்க
(78)

இலக்கியப் படைப்புகள் மூலம் பார்த்திருக் கிறோம்.அதேபோன்று மலைநாடு, நீர்கொ ழும்பு, திக்குவல்லை, வன்னி, கொழும்பு போன்ற பகுதிகளிற் தமிழ் பேசப்படும் முறை பற்றியும் அறிந்திருக்கிறோம். கிழக்கிலே கன்னங்குடா, வாழைச்சேனை, திருகோண மலை, மூதூர் பகுதிகளில் தமிழ் பயிலும் முறைபற்றியும் அறிந்திருக்கிறோம். இப் பொழுது அக்கரைப்பற்றுப் பகுதியின் இஸ் லாமியத் தமிழ் தரும் சுவையை அறியக் கூடியதாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் அப்பகுதிக்குச் சென்ற பொழுது ஆசிரியர் ஸ்மது தரும் மொழி நடை அப் பகுதியின் இயல்பானதே என்பதை நேரிற் கேட்டறிய முடிந்தது. எனவேதான் பனிமலர் மூலம் ஆசிரியர் ஸமது ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை தரும் பங்களிப் பைச் செய்திருக்கிறார் எனக் கூறுகிறேன்.
ஆக்கத்திறன்
பனிமலர் நாவலில் வரும் ஆக்கத்
திறனுள்ள சில பகுதிகளை இனிப் பார்ப் GLITö.
இந்த நாவலில் வரும் கதாநாயகியின் பெயர் மர்லியா. இவள் படித்த இளம் முஸ்லிம் கன்னி. நாவலின் இறுதிக் கட்டத் திலே தனது அந்தஸ்துக்குக் குறைந்த ஆனால் படித்த பண்புள்ள ஓர் இளைஞனை விரும்பி மணம் முடிக்கிறாள். இவளுக்குக் காதல் அனுபவம் முன்னர் ஒருவன் மேல் ஏற்பட்டாலும் அனுபவ அறிவு வளர்ச்சிக் கேற்ப நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு இரண்டாமவனுடன் தனது வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்கிறாள். முதலாமவனான ஷாபிதீன் அற்பகாரணம் ஒன்றிற்காக இவளைக் கைவிட்டுப் பின்னர், தனது மனைவி மூலம் குழந்தைப்பேறு காண முடியாது என்று கண்டு மர்லியாவை இரண்டாந்தாரமாக (தனது மனைவியின் பூரண அனுமதியுடன்) மணம் முடிக்க முன் வந்தவன். ஆனால் மர்லியாவோ அவர்க ளுக்குப் புதுவாழ்வை அளிக்கப் பொதுச் சேவை உதவும் என்று ஆலோசனை கூறித்

Page 92
தட்டிக் கழித்து ரஹிம் என்பவனைத் தனது தந்தையாரான இஸ்மாயில் ஹாஜியாரின் பணிப்பின் பேரில் மணமுடிக்கிறாள். ஷாபிதீன் கிடைக்காமற் போகவே ரஹீமுடன் பழகிய போது மர்லியாவுக்குச் சிறிது சபலம் பின்னர் ஏற்பட்டது இயல்பானதே. எனவே புத்திசாலித் தனமாக இரண்டாவது எதிரியைத் தன்னுடை யதாக மர்லியா ஆக்கிக் கொண்டாள். ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னி யொருத்தி” என்று வாடாமல், புதுமைப் பெண்ணான மர்லியா, இஸ்லாமிய, நிலப் பிரபுத்துவ, கீழைத்தேயக் கட்டுக்களை மீறி இயல்பான சுருதியில் செல்வதை நாவலா சிரியர் இங்கு காட்டும்பொழுது மாகாணக் கட்டமைப்புகள் மீறப்படுவதைக் காட்டுகிறார். இது இந்த நாவலின் யாதார்த்தப் பண்பு களுள் ஒன்று.
Ο 0x8
பனிமலர் நாவலில் மர்லியாவே பனிமலர் எனக் காட்டப்படுகிறாள். “நீங்கள் புன்முறுவல் பூத்தபோது நீர்த்துளிகள் தேங்கி நின்ற உங்கள் முகம் பனிமலராகக் கட்சி தருகிறது மர்லியா” என்று கணவர் ரஹிம் விவரிக்கிறார். அவளுக்குத் தந்தை இறந்த துயரம் முதல் பழைய சோகங்கள் நினைவுக்கு வர முகம் மாறிற்று. அந்த நிலைமையை நாவலாசிரியர் “அவன் முகம் அனல்பட்ட மலர்போல மீண்டும் வாட்ட முற்றது” என்று எழுதும் போது காட்சிக்கு ஒளியும் நிழலுந்தந்து தமது கவினாற்றலை வெளிப்படுத்துகிறார்.
இவ்வாறு இலக்கிய இன்பம் அளிக் கும் பல பகுதிகளைச் சுட்டிக்காட்டலாம். உயர்ந்த அறிவார்ந்த கருத்துக்களை எல்லாம் பாத்திரங்கள் வாயிலாக (இப்பாத் திரங்கள் படித்த நவீன எண்ணங்கள் கொண்டவை) நாவலாசிரியர் தெரிவிக்கும் பொழுது மறைமுகமாகக் கதைக்காக மாத்திரம் வாசிக்கும் வாசகர்களுக்கும் நவீன சிந்தனைகளைப் புகட்டுகிறார். அவற்றிற் சில, ‘வாழ்க்கை என்பது புதிய புதிய சம்பவங்கள் நிறைந்தது. புதிய புதிய

சவால்கள் தோன்றுவது. இவைகளுக்கு முகங்கொடுக்கும் போதுதான் நாம் வாழ்க் கையை எதிர்நோக்கி வெற்றிபெற முடியும்” “நான் ஒரு பெண். வாழ்க்கையிலே நான் தோற்றுவிட்டதாக இன்னும் கருத வில்லை. சில நியதிகளும் சந்தர்ப்பங்களும் நம் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகின்றன. இதனை நமக்கு வெற்றி என்றோ தோல்வி என்றோ பாகுபடுத்திக் கொள்ளத் தேவையில்லை”.
மர்லியா முதற் காதலிலிருந்து விடு படத் துடிக்கவில்லை. ஆயினும் ரஹீம் அவளிடம் பழகிய விதத்தில் மையலுற்றாள். “மர்லியாவின் மனவெளியில் ஒரு நிழல் ஊசலாடியது. அதன் தாக்கம் அவளைக் கிறங்கச் செய்தது. ஐந்து வருடங்களின் முன் வேறொரு நிழல் ஊசலாடியதால் ஏற்பட்ட சுவடு இன்னும் அழியவில்லை. சுவடு என்று கூறுவதைவிட தழும்பு என்று அதைச் சொல்லலாம். (நாவலாசிரியர் வார்த்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பை அவதானியுங்கள்) ஆம் புரையோடி புண் ணாகி வழிந்தோடிய கண்ணிர்க் கதையாகிய அச்சுவடு அவள் மனதைவிட்டு இன்னும் அழியவில்லை. இப்பொழுது புதியதொரு நிழல் மற்றுமொரு சுவட்டைப் பதிக்கப் போகிறதா?”
உரைநடையில் கவித்துவத்தைத் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் இயல்பாகவே கொண்டு வருகிறார்கள். (லா.ச.ரா, மெளனி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், இப்படிப் பலர்) நமது நாட்டு எழுத்தாளர்களில் இலங்கையர்கோன், பால.மனோகரன், செ.யோகநாதன், குப்பிளான் சண்முகம் போன்றோர் ஓரிருவர். அ.ஸ்.அப்துஸ்ஸமது வின் நடையே கவித்துவமானதுதான். சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகளைப் படிக்கும் பொழுது பெறும் பரவசமே, ஸமது வின் உரைநடையைப் படிக்கும் பொழுது எனக்கு ஏற்படுகிறது. ஓர் உதாரணம், “இனம் புரியாத தாபம். இராகம் கூற முடி யாத இசை.கருத்துக் கூறமுடியாத கவிதை”
—G79)

Page 93
நவநாகரிகமறியா பானுவும் அவள் மச்சான் ஜெமீலும் (மர்லியாவின் தம்பி) பழகும் விதமும் பேசும் பேச்சும் சாதாரண கிராமியக் காட்சிதான். ஆனால் அந்த உறவு களைக் காவிய நயஞ் செறிந்ததாக நாவலா சிரியர் ஆக்கித் தருகிறார். பானுவின் இயல் பான பாத்திர வார்ப்பு அவளை உயிருள்ள வளாகக் காட்டுகிறது.அதேசமயம் ஜெமீ லைக் காதலிக்கும் றெஸினாவும் (இவள் படித்த உழைக்கும் பெண்) ஜெமீலும் இளை ஞர் பற்றி விவாதிக்கும் பாங்கு அறிவுப் பரிவர்த்தனை செய்கிறது. அதே ஜெமீல் வெகுளிப் பெண்ணான பானுவைத்தான் இரசிக்கிறான். நம் நாவலாசிரியர் தூண்டா மற் துண்டுகிறார். இந்த நாவலில் என்னைக் கவர்ந்த பெண் பாத்திரம் பானுதான்.
மர்லியாவின் முதற்காதலன் ஷாபிதி னும் அவன் மனைவி பரிதாவும் நமது கழிவிரக்கத்தை நாடி நிற்கும் அருமையான தம்பதி. அவர்களுடைய தாம்பத்திய உறவை வெளிப்படுத்தும் பொழுதும் நாவ லாசிரியர் ஸமது முதிர்ச்சியனுபவத்தை திரட்டித் தருகிறார். நிந்தவூர்க் கடற்கரையில் தம்பதி தனித்திருந்தபொழுது எழுந்த மன நிலையை (பக்கம்111) உவமேயமாகவே ஆசிரியர் காட்டுகிறார்.
பரிதாவும் மர்லியாவும் பரிமாறிக் கொள்ளும் கடிதங்கள் இன்றைய இஸ்லா மியப் பெண்களின் அறிவு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அதே சமய்ம் பானு, “ஒங்களோட வேலை செய் யிற2றஸினாவும் நீங்களும் ஆடின கூத்த அண்டு நான் பார்த்துக்குத்தானே இருந் தேன். ஜேர்மனிக்குப் போனா, போன வேலையைப்பார்த்துக்கு வாற. பொம்புள யோட நினிடுபடம் புடிச்சிக்கி வந்திரிக் கீங்களே வெக்கமில்லையா?” என ஜெமீலி டம் கூறுகிறாள். கல்வி கேள்வியறியா நங்கைகளுக்கும் படித்த பெண்களுக்கு மிடையில் உள்ள மனோபக்குவங்களை ஆசிரியர் தமது நாவலில் காட்டுகிறார்.
நிலவுடைமையாளர் குடும்பத்திலும்

மனமாற்றம் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டு புரட்சிகர மாற்றங்கள் ஏற்படுவதையும் வெளியே நின்று சுலோகங்களை உதிர்க் காமல் பாத்திரங்களின் இயல்பான பேச்சு மொழியிலேயே ஆசிரியர் சித்திரிக்கிறார்,
ஹாஜியார், மகள் மர்லியாவுக்கு வெள்ளாமைக்காரன் மகன் றஹீமை மணம் முடிக்க முதலில் சம்மதிக்கவில்லை. அவர் தமது மனைவி ஹாஜனாவிடம் கூறுகிறார். ‘ஹாஜனா, புலி பசித்தாலும் புல்லுத் தின்னாதடி, எண்ட உப்பத் திண்டு வளர்ந்த வன் குடும்பத்தில நான் மாப்பிள்ளை எடுக் கிறதெண்டா ஊர் என்னப் பழிச்சுப்போடும்டி" அதற்கு மகன் ஜெமீல் கூறுகிறார். “வாப்பா. உங்குட உப்ப அவங்க ஒண்டும் தின்னல்ல. புண்ணியத்தில நீங்க உப்புப் போடவுமில்ல. அவங்கட உழைப்புலதான் நாம் சோறு திண்டம்; நீங்க போடியார் ஆனிங்க. உலகம் மாறி வருகுது. ஒங்கட பழைய காலத்து முதலாளித்துவப் பெருமை யெல்லாம் எப்பவோ அழிஞ்சி போச்சி. நீங்க பெரிய போடியாராக பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளராக ஹாஜியாராக இருப்ப தனாலெல்லாம் ஒரு பெரிய அந்தஸ்தா நீங்களே பாவனை பண்ணிக்கொண்டு ஒரு வெறும் வெளியில உலவுகிறீர்கள்.?
Κ (X-
அ.ஸ.அப்துஸ்ஸமதுவின் பனிமலர் மட்டக்களப்புப் பகுதி இஸ்லாம் மதத்தினரின் பேச்சு மொழியைக் கையாள்கிறது. மொழி யாராய்ச்சி மாணவர்களுக்கும் பல்கலைக் கழக நவீன தமிழ் இலக்கிய மாணவர் களுக்கும் ஆய்வுக்குப் பயனப்படக் கூடிய தொரு நாவல் இது.
அடிக்குறிப்புகள்
இந்த நாவலில் வரும் சில பிரயோ கங்களுக்கு அடிக்குறிப்புகள் தேவைப்பட லாம். அக்குறிப்புகள் இல்லாமலே கதை யைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும் சில குறிப்புகள் ஆய்வாளருக்கு உதவு மென்பதால் நாவலாசிரியர் பின்னர் ஒரு

Page 94
இணைப்பை நாவலில் சேர்க்கலாம்.
மட்டக்களப்புப் பகுதிப் பழமொழிகள் பிரயோகங்கள் இந்நாவலில் நிறையக் காணப்படுகின்றன. பனிமலரில் இடம் பெற்றுள்ள இத்தகைய பதங்களில் சில.
சுமந்திரம், விசகளம், வெள்ளாமைக் காரன், முள்ளுமறியாம, பவுசு, அம்மி மிதக் குது அரசிலை தாழுதுடா, படிப்புல நிக்கு துகள், இரணம் திங்க, இரிக்கி, போற எடத்த போக்கிற்று, சுட்டியாவாங்க, தாங்கலாக வட்டா,மஞ்சள் அடித்துப்பார்க்க,உட்டுக் கட்ட லாம்,ான நடக்கிற, உழுவீங்க, எண்டுலுவா, திருமலை வெசறக் கிட்டுறாய், அதஉடு, உச்சாரக்கொப்புல, புடிவாத மிருக்கி, தேயி லையைக் குடியன், தெகப்புட்டி யில மிரிச் சாப்போல, கேக்கார், காலமும் ஒகுத்தும் வரக்க, களாக்காறன் வந்து கதவத் தட்டு வான் எண்டு, மனத்தாவத்த கிட்டா தங்க, காக்கா பொண்டி, முழுத்தச்சாப்பாடு, வாறன்கிளி, முகங்கள் வெள்ளையடித்து நின்றன. நடந்த புல் சாகாமல், இரிக்கிலுவா, குஞ்சிக்கோழி எண்டாலும் குனிஞ்சிதானே அறுக்கணும், நல்ல பறக்கத்தான நாள், வருத்தமும் வாதையுமான நேரம், வல்லான் விதியே ஆடுமவன் வலியில் கருவி மனிதர்களாம்.
Κ 0X
கதைப் பின்னல் பாத்திரவார்ப்பு, உரையாடல், வருணனை, கதை மூலம் உணர்த்தப்படும் செய்தி, சமுதாயச் சித்தி ரிப்பு, மொழிநடை, ஆசிரியரின் தத்துவம், நாவல் இலக்கிய பரப்பில் பனிமலர் இடம் போன்றவை பற்றி விரிவாகவும் தனித்தனி யாகவும் விமர்சனம் எழுதப்படவேண்டும். இங்கு எனது நோக்கம் நூல் மதிப்புரையைச் சில அவதானிப்புகளைப் போக்கோடு போக் காகக் கூறுவதாய் அமைந்துள்ளது. இறுதி யாய்வில் அ.ஸ்.அப்துஸ்ஸமதுவுக்கு இது ஒரு வெற்றிப்படைப்பு. நீங்களே படித்துப் பாருங்கள்.
நன்றி : தினகரன்

தனிமனித உணர்வுகள்
மதிக்கப்படத்தக்கன. அத்தகைய சுயாதீனங்களும்
உணர்வுகளும்
சமுதாயத்தினால்
அழிக்கப்படக்கூடாது என்பது
என் கருத்த.
சமுதாயம் என்பது
சிலவேளை அடிமைத்தனமான ஒரு நெறியில் மக்களை வழிநடாத்திச் செல்வதம்
உண்டு.
அவர்களுடைய முற்போக்கு நோக்கங்களையும்
செயல் முறைகளையும் அழித்து
எதேச்சாதிகாரம் தலைதாக்கும் சந்தர்ப்பங்களில் தான்
இந்த தனிமனித உந்தல்களும் அபிலாஷைகளும்
மதிக்கப்படவேண்டியனவாகும்.
இந்த ஏவுகணைகள் தான்
சரித்திரங்களை உருவாக்கி
சமுதாய மாற்றங்களை
ஏற்படுத்தம் ஏற்றல்
வாய்ந்தவை.
அஸ்.அப்துஸ்ஸமது
(எனக்குவயது பதின்மூன்று
என்னுரை)
=G8D

Page 95
3ialitiaigfilf
இஇஇiதுல்ஹமது
மட்டக்களப்பிலிருந்து 'மலர்' என்னும் இலக்கிய சஞ்சிகை வெளியாகி வந்த காலகட்டத்திலே அச்சஞ்சிகை மூலம் முஸ்லிம் எழுத்தாளர்களிலே மூத்தவரான அ.ஸ.அப்துஸ்ஸமது எனக்கு அறிமுகமா னார். 1970, தை மலரில் இவரது வர்ண பேதம் என்ற சிறுகதை பிரசுரமாகியிருந்தது. இக்கதையில் ஒவ்வோர் நிறம் குறிப்பிடப் பட்டிருந்தது. அன்பு- நீலம்,அபாயம்- சிவப்பு, சபலம்- மஞ்சள், துக்கம்- கறுப்பு; கதை மாந்தர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி பேதங்கள் இந்நிறங்களால் குறிக்கப்பட் டிருந்தன.மலரில் இடம்பெற்ற கதைகள் பற்றிய விமர்சனங்களும் மலரில் வெளியிடப் பட்டன. சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசில் களும் வழங்கப்பட்டன. வர்ணபேதம்' என்ற கதைக்கு ஜனாப். இஸ்ஸதீன் எழுதிய கருத்தழுத்தமான விமர்சனத்திற்கு மலர் பரிசளித்திருந்தது. இவ்விமர்சன பார்வையில் ஏற்பட்ட மயக்கம் ஒன்றினை அ.ஸ். அவர்கள் தெளிவுபடுத்தும் நோக்கில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். எனது உள்ளத்தைத் தொட்ட கதையும் அக்கதை தொடர்பான சர்ச்சையில் அ.ஸ்.எழுதிய கட்டுரையும் இவ்வெழுத்தாளரையும் அவரது படைப்புக்களையும் அறியத் தூண்டு கோலாக அமைந்தது.
தற்போது அட்டாளைச் சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரை யாளராகப் பணிபுரியும் அ.ஸ். ஐம்பது களிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாகச் சலியாது எழுதி வருகின்றார். எழுத்தாளர்கள் ஆசிரிய கலாசாலைகளை ஆக்கிரமிக்கிறார்கள் என
G82)
 
 

ஒஇதிர்த்திற்ஷ்திகுறி
= முல்லைமணி
’னும் குறறச்சாட்டிற்கு அ.ஸ்.வும் ஒரு உதாரணம். மட்டக்களப்பு ஆசிரிய கலா சாலை விரிவுரையாளராகத் திகழும் திமிலைத்துமிலன், தலவாக்கொல்லை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரை யாளராகவும் அதிபராகவும் பணிபுரியும் காரை செ.சுந்தரம்பிள்ளை, கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராகப் பணிபுரியும் இக்கட்டுரை ஆசிரியர். 'குற மகள்' ஆகியோரை மனத்திரையில் வைத் துக்கொண்டுதான் இக்குற்றச்சாட்டு வந்தி ருக்கவேண்டும்.
1955 ஆம் ஆண்டளவில் ஈழகேசரிப் பத்திரிகையில் ‘ஆடு கொடியானேன்' என்ற கவிதையும் அதைத் தொடர்ந்து இஸ்லாமிய இலக்கியமான சீறாப்புராணம் பற்றிய இரசனைக் குறிப்புத் தொடரையும் அ.ஸ். எழுதிவந்தார். ஈழகேசரியில் வெளியான ‘பாத்திமாவின் நுதல் அழகு" என்னும் கட்டுரை இந்தியாவில் ‘மணிவிளக்கில்" மறுபிரசுரஞ்செய்யப்பட்டது. 1957இல் "சீறா இன்பம்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு இலக்கியப் பண்ணை பிரசுரமாக வெளி வந்தது.
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, பாடநூல் ஆகிய பல்வேறு துறைகளில் இவர் தனது கைவண்ணத்தைக் காட்டி யுள்ளார். இஸ்லாமிய சமய பண்பாட்டம் சங்களை அறிமுகப்படுத்தும் இவரது கட்டுைைரகளே இந்தியாவில் இவரைப் பிரபல்யப்படுத்தின. சீறா இன்பத்தைத் தொடர்ந்து 1959 இல் சென்னை யூனி வேர்ஸல் பப்பிளிசேர்ஸ் * சுலைமான் பல்கீஸ்" என்னும் நூலை வெளியிட்டனர். இஸ்லாமிய இலக்கிய

Page 96
நோக்கு, நபிமணி கவிநயம் என்பவை இவரது விமர்சன நயப்பாற்றல் களை" வெளியிடும் நூல்களாகும். பொருள வருவாய் கருதி மட்டுமன்றித் தமது சமூகத் திற்கு ஆற்றும் தொண்டாகவே இவர் எழுதி வெளியிட்ட பாடநூல்களைக் கருதுகின்றார். 1959-66 காலப்பகுதியில் இலக்கியப் பொய்கை என்னும் தொடரில் மூன்று நூல் களும் 1968 இல் ‘தமிழ் இலக்கியம் விளக் கத்துணை நூலும்1984இல் ‘தமிழ் இலக்கிய வினாவிடை’யும் வெளியாகின.
புனைகதைத் துறையில் இவர் கணிசமான பங்களிப்பினைச் செய்துள்ளார். இவர் எழுதிய “எனக்கு வயது பதின்மூன்று 1977 இற்குரிய சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது. 27 இஸ்லாமிய எழுத் தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்றினைப் 'பிறைப்பூக்கள் (1979, என்னும் தலைப்பிட்டு வெளியிட்டார். இவரது ‘பனிமலர்' வீரகேசரி பிரதேச நாவல் போட்டியில் மட்டக்களப்புப் பிரதேசத்திற்குரிய பரிசைப் பெற்றது. 1982 இல் வீரகேசரிப் பிரசுரமாகவெளிவந்தது. 1983இல் கல்ஹின் னைத் தமிழ் மன்றம் இவரது கனவுப் பூக்கள்’ நாவலை வெளியிட்டது. முற்றத்து மல்லிகை (1964) ஈழத்து முஸ்லிம்களின் கவிதைகளடங்கிய தொகுப்பு 'பிறைப் பூக்கள் இவரது இன்னொரு சிறுகதைத் தொகுதியாகும். 1981 இல் அ.ஸ. வின் 'கண்ணிர்ப்புஷபங்கள்’ நாவல் தினகரனில் வெளியாகியது. இலங்கை வானொலியில் ‘இலக்கிய மஞ்சரி என்னும் நிகழ்ச்சியைச் சிலகாலம் வெற்றிகரமாக நடத்திவந்தார்.
1950 ஆம் ஆண்டு நுர்ஜகான் என்னும் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்த இவர் கிழக்கிலங்கையில் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்கின்றார். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் பல்கலைக்கழகத்தின் கலைமாணி’ சிறப்புப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அக்கரைப் பற்றில் வசித்து வருகிறார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையாகத் திகழும் மட்டக் களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகத் திகழ்ந்த அ.ஸ. 1963இல் அறிஞர் சித்திலெப்பைக்குப் பெருவிழா எடுத்தார். அக்கரைப்பற்றில் எடுக்கப்பட்ட இவ்விழாவிற்கு அகில இலங்கையிலிருந்தும் அறிஞர்கள் பங்கு பற்றினார்கள். முற்போக்கு அணியுடன் சில நோக்கங்களுக்காகத் தன்னைப் பிணைத் துக்கொண்டாலும் இவரது படைப்புக்கள் அவ்வணியைச் சேர்ந்தோரின் வாய்ப்பாட்டு ரீதியில் அமையவில்லை.
மண்வாசனை, யதார்த்தம் ஆகிய இரண்டு பண்புகளையும் வேண்டுமென்றால் முற்போக்கு அணியிலிருந்து பெற்றுக் கொண்டவை எனக் கொள்ளலாம். முற் போக்கு அணியைச் சேர்ந்த முஸ்லிம் எழுத்தாளர் களுக்கும் தமிழ் எழுத்தாளர் களுக்கு மிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. இவர்கள் எத்தகைய சூழல் மாற்றத்தின் மத்தியிலும் இஸ்லாத்தி னுாடாகவே புதிய சிந்தனைகளையும் பார்க்கின்றனர். மார்க்சிசம் கூட இஸ்லாத் தினூடாகவே இனங்காணக்கூடிய தன்மை முஸ்லிம் முற்போக்கு எழுத்தாளர்களில் காணக்கூடிய தாக இருக்கிறது. இந்த அடிப்படையிலேயே அ.ஸ்.வின் சிருஷ்டி களை நோக்கமுடியும்.
இவரது பிரதேச நாவலான பனிமலர்' மட்டக்களப்புப் பிரதேசத்திலுள்ள எல்லா மக்களதும் வாழ்க்கை முறைகளையும் பிரதி பலிக்கிறதா அல்லது முஸ்லிம் மக்களது வாழ்க்கை முறைகளை மட்டும் பிரதிபலிக் கிறதா என்கின்ற வினா எழுகிறது. இதில் வரும் பாத்திரங்கள் முஸ்லிம்களாகவே இருப்பதை மாத்திரம் கருத்திற்கொண்டு முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளை
C83)

Page 97
மாத்திரம் சித்திரிக்கின்றதென்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. சமய வழிபாடுகள், ஆசார சீலங்கள், நம்பிக்கைகள் என்பன இரு சமூகத்தவருக்கும் வெவ்வேறாகவே அமைந்திருக்கலாம். பண்பாடு பழக்க வழக்கங்கள், கலைகள் என்னும் போது மட்டக்களப்புப் பிரதேசத்திற்கே பொதுவான அம்சங்கள் இந்நாவலில் வெளிக் கொணரப் பட்டுள்ளன. இவ்வம்சங்களில் தமிழ் மக்களுக்குரியவை முஸ்லிம் மக்களுக் குரியவை என வேறுபடுத்திக் காட்டுவது சுலபமான காரியமல்ல. மட்டக்களப்புப் பகுதியில் தமிழரும் முஸ்லிம்களும் கலந்து வாழ்கின்றனர். இவர்கள் ஒரே குடிவழி மரபுடையவர்கள். கலை, பண்பாடு என்ப வற்றில் அதிகம் வேறுபாடில்லாதவர்கள். இந் நாவலில் மட்டக்களப்புத் தயிரும், மீனும், தேனும் வருகின்றன வென்றால் இவை பிரதேசத்திற்கே பொதுவானவை.
நாவலின் முன்னிட்டில் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இந்தக் கதையில் நிலப்பிரபுத்துவ மனப்பாங்கிற்கும் கல்வி அறிவு வளர்ச்சியினால் ஏற்பட்ட மனப் பாங்கிற்கும் இடையில் நிகழும் போராட் டத்தினை நான் சித்திரிக்கமுயன்றேன். இந்த நாவலை வாசிப்பவர்கள் மட்டக்களப்புப் பண்பாடுகளையும் முஸ்லிம்களின் தனித்துவ மான ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் நிறையக் காணலாம். அது சில இடங்களில் நகைச்சுவையாகவும் அமைந்துள்ளது.
தமிழர்களின் நடைமுறைகள் சில முஸ்லிம் மக்களின் வாழ்க்கையிலும் ஊடுருவி இருப்பதைக் காட்டும் நிகழ்ச்சிகள் இந்நாவலில் உள்ளன.
“நாள் பார்த்துத்தானே தாலிக்குத் தங்கம் உருக்கணும்” இதுக்கெல்லாம் நாள் காணுமா? தாலிகட்டுற நேரத்தையும் பார்த்துச் சொல்லிருங்களன். என்றாள் ஹாஜனா உம்மா. ஆலிமுக்குக் கொஞ்சம்
G84)-

கோபம் வந்தாப்போல. இஞ்ச தங்க முருக்கிற தாலிகட்டுற தெல்லாம் இஸ்லாத் தில் உள்ளதில்ல. வொலிகாறன் பெண்ணை இரண்டு ஷாஹிதுகளுக்கு முன்னால் ஒப்புக் கொடுக்கணும். மாப்பிள்ளை மஹர் பணத்தைக் காவின் கலரியிலே மாமனாரிடம் கொடுத்துப் பெண்ணை ஒப்பெடுக்கணும் இதுதான் இஸ்லாம். எனும் பகுதியிலே முஸ்லிம்கள் மத்தியிலே தாலிக்குப் பொன்னுருக்கல், தாலி கட்டல் ஆகிய நிகழ்ச்சிகள் உள்ளன என்பதை ஹாஜனா உம்மாவின் கூற்று மூலம் அறியலாம். மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு தந்தை யின் விருப்பத்துக்கிணங்க பிள்ளைகளின் திருமணங்கள் விரைவாகச் செய்து முடிக்கவேண்டி ஆலிம் இஸ்லாத்தின் முறையை நினைவு கூர்வதாக இவ் வுரையாடல் அமைகிறது.
'எனக்கு வயது பதின்மூன்று' என்னும் சிறுகதைத் தொகுதியில் அ.ஸ். அவர்கள் தமது இலக்கிய நோக்கை விளக்குகிறார். ‘சமுதாயத்தின் பிரத்தியட்சமான பிரதிபலிப் பாகத்தான் நான் இக்கதைகளைப் படைத் துள்ளேன். சமுதாய நடைமுறைகளின் போக்குகள் என்பவற்றிற்குக் கலைவடிவம் கொடுக்கும்போது தனிமனித சுயாதீனத்திற்கு ஏற்படும் தடைகளை மீறித் தன்னம்பிக்கை யோடு முன்னேறும் பாத்திரங்கள் பலவற்றை நீங்கள் இக்கதைகளில் சந்திக்கலாம். தனிமனித உணர்வுகள் மதிக்கப்படத் தக்கவை. அத்தகைய சுயாதீனங்களும் உணர்வுகளும் சமுதாயத்தினால் அழிக்கப் படக்கூடாது.
அ.ஸ.வுக்கு இந்தியாவிலும் புகழைத் தேடிக்கொடுத்த அவருடைய இஸ்லாமிய இலக்கிய கட்டுரைகள் என்றா லும் புனைகதை இலக்கியத் துறையில் இவரின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட
(Մ9lգեւ IT5l.
நன்றி : தினகரன்

Page 98
7- 9 - 1929ல் பிறந்த இந்த நாட்டில் மதிக்கப்படத்தக்க எழுத்தாளரான அப்துஸ் ஸ்மது அவர்களுக்கு இப்பொழுது ‘மணி விழா ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.
இந்த மணிவிழா ஆண்டில் அவரைப் பற்றிய இக்குறிப்புக்களை எழுதுவதில் பெரு மகிழ்ச்சி யடைகின்றேன்.
எழுத்தாளர் அப்துஸ் ஸலாம் ஆலிம் அப்துஸ் ஸமது எனது நட்பிற்குரிய பேனா நண்பர். உண்மையின் தரமான எழுத்தாளர். வாசகராகியோருடைய பேனா நண்பர் அவர். அவரை, அவர் படைப்புக்கள் மூலமே அறிந்து மதிப்பும் நட்பும் கொண்டுள்ளோம். என்னைப் பொறுத்தவரையில் பல கடிதப் போக்கு வரத்தும் உண்டு. இரு தரப்பிலும் உற்சாகமூட்டும் பாராட்டுக் கடிதங்கள்.
ஆனால் அந்த ஒரே ஒரு சந்திப்பு மறக்க முடியாதது. 1960 ஆம் ஆண்டு நானும் சொக்கன் அவர்களும் மட்டக் களப்புக்கு உல்லாசப் பிரயாணம் செய்தோம். அக்கரைப்பற்றில் ஒரு புத்தகக் கடையில் நின்றபோது சில இளைஞர்கள் எங்களை இனங்கண்டுகொண்டார்கள். சில நிமிடங் களில் நண்பர்கள் சலீம், அப்துஸ் ஸமது இருவரையும் அழைத்துவந்தார்கள். அன்று சலீம் வீட்டில் எனக்கு ஒரு திடீர் ‘விருந்து தயாரானது. சொக்கன் விரதநாள், அவர் ஆனா.சானா வீட்டில் கலரும் வாசமும் போட்ட இளநீர் உண்டார். அன்று இலக்கிய சம்பாஷணை நடந்தது. எனது ‘அருமைத் தங்கைக்கு தாய்மார் நூல்
 

நந்தி=
அப்போது உலவிய காலம். அதை முஸ்லிம் ஆசிரியர்கள் படித்து மற்றோருக்குக் கூற வேண்டும் என்ற கருத்தை அப்துஸ்ஸமது வெளியிட்டார். தர்கா டவுண் ஆசிரிய கலா சாலையில் விரிவுரையாளராக இருந்த செல்வி மொகிதீன் அவர்களுக்கு எழுதி ஒரு வாரத்தில் 25 பிரதிகள் வாங்கவும் வழி செய்தார். ஒரு எழுத்தாளன் மறக்க முடியாத ஆரம்பத் தொடர்பு இது.
அப்துஸ்ஸமது அவர்களின் இலக்கிய சேவை. இஸ்லாமிய இலக்கியம்,நவீன தமிழ் இலக்கியம், மட்டக்களப்புப் பிரதேசப் படைப் புக்கள் என்ற மூன்று பிரிவுகளாக விமர்ச்சிக் கப்படும். சமீபத்தில் மேமன்கவி, டொமினிக் ஜீவா ஆகியோருடன் கொழும்பில் இவரைப் பற்றி உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அப்துஸ் ஸமது இஸ்லாமிய இலக்கியத்தில் நூற்றுக்குமேற்பட்ட திறனாய் வுக் கட்டுரைகளை எழுதி பத்திரிகைகளில் பிரசுரித்துக் கணிசமான பங்களிப்புச் செய் திருப்பதாக மேமன்கவி கூறினார். இது பற்றி விபரமான ஒரு ஆய்வு செய்து மேமன்கவி வெளியிடுவாரானால் அது தமிழுக்கு ஒரு சேவை என்று கருதுகிறேன்.
அப்துஸ்ஸமது அவர்களின் எழுத்துக் களிலே ஒரு நல்ல அம்சம் அவருடைய நல்ல தமிழ் நடையும் பக்குவமான இலக் கணமுமாகும். முறையாகத் தமிழ் கற்ற ஒரு ஆசிரியரின் கவனத்தை அவருடைய கதைகளில் காணலாம். ஆனால் காவிய கற்பனைகளோ வர்ணனைகளோ இல்லாது சிறுகதைக்கும் நாவலுக்கும் ஏற்ற மொழி நடையிலே மட்டக்களப்பு மண்வாசனையின்
=(85)

Page 99
பின்னணியில் உபயோகிப்பார். 1982இல் வீரகேசரி மட்டக்களப்புப் பிரதேச பரிசில் பெற்ற அவருடைய நாவல் ‘பனிமலர்' மட்டக்களப்பு, முஸ்லிம் வாழ்வு, ஆசிரியத் தொழில் இந்த மூன்றையும் அவருடைய அனுபவத்தின் நிறைவுடன் பிரதிபலிப்பதாக உள்ளது. அப்துஸ் ஸமதுவின் ‘பனிமலர்' சொக்கனின் ‘செல்லும் வழி இருட்டு ஆகிய இரு நாவல்களும் ஆசிரியரின் வாழ்க் கையை நன்கு சித்திரிக்கும் நாவல்களாகும்.
இலட்சியப் பற்றுள்ள ஓர் எழுத்தாள னைப் பாதிக்கும் காரணிகளுள் முக்கியமாக அவனுக்கு வாய்க்கும் மனைவி அமைந்து விடுகின்றாள். அப்துஸ் ஸமதைப் பொறுத்த வரையில் இவ்விடயத்தில் மிகவும் அதிஸ்ட சாலியாகவே காணப்படுகின்றார். 1961ல் இவர் கைப்பிடித்த முஹம்மது மீரா சாகிபு றஸ்ரீனா உம்மா அவர்கள் இவரது எழுத்துலக வாழ்வுக்கும் உற்ற துணையாக இருந்து வருகின்றார். தனது நற்குண நற்செய்கைகள் மூலம் கணவரது படைப் பாற்றலை ஊக்குவிக்கும் றஸினா உம்மா தனது கணவர் எழுத்தாளனாக இருப்பது குறித்து மிகவும் பெருமை கொள்கின்றார்.
1977ம் ஆண்டு எனக்கு வயது பதின்மூன்று என்ற சிறுகத்ை தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டத்தின் பரிசிலைப் பெற்றுக் கொண்ட அப்துஸ்ஸமது இதுவரை எட்டு இலக்கியப் படைப்புக்களை இலக்கிய உலகுக்கு நூல் வடிவில் வழங்கியுள்ளார். வீரகேசரி பிரதேச நாவல் பரிசினைப் பெற்றுக்கொண்ட ‘பனிமலர்' உட்பட மூன்று நாவல்களும் இவற்றிலடங்கும். இவை தவிர இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பாடநூல்கள் சிலவற்றையும் எழுதியுள்ளார். இஸ்லாத்தின் தத்துவங்களை விளக்குவனவாகவே தனது படைப்புக்கள் அமையவேண்டும் எனக் கருதும் இவரது படைப்புக்கள் பெரும்பா லான வற்றில் அப்பண்பினைக் காணக் கூடியதாகவுள்ளது என்பதை ஆரம்பத்
(86

திலேயே குறிப்பிட்டேன்.
நீண்ட நெடும் வருடங்களாக ஆசிரிய ராகக் கடமையாற்றிய அப்துஸ் ஸ்மது தனது ஆசிரியத் தொழிலில் இறுதிப் பத்தாண்டுகளாக அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரை யாளராகப் பணிபுரிந்திருக்கின்றார். அத்துடன் வெளிநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கும் தமிழ்மொழி விரிவுரைகளை நடத்தி வந்திருக்கின்றார்.
தன்னிடம் கற்கும் இளம் மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு இலட்சியப் பற்றுள் ளவர்களாகத் திகழ வேண்டுமென அப்துஸ் ஸமது விரும்புகிறாரோ அவ்வாறே வளர்ந்து வரும் ஈழத்து இளம் எழுத்தாளர் களும் இலட்சியப் பிடிப்புடனும் சமூகப் பொறுப்புட னும் எழுதவேண்டும். அவர்களது எழுத் துக்கள் சமூகமாற்றத்துக்கான கருவியாகப் பயன்படவேண்டும் எனவும் விருப்பு கின்றார். மேலும் இலக்கியம் படைக்க முன் வருகின் றவர்கள் நல்ல மொழியாற்றலைப் பெற்றி ருக்கவேண்டும். வாசகர்களுக்கு மயக்கத் தைத் தராத நல்ல மொழி வளத்தினை யுடைய படைப்புக்களே சிறந்த இலக்கியங் களாக அமைய முடியுமென இவர் கூறுகின் pri.
தனது ஆதர்ஸ் எழுத்தாளர்களாகக் காண்டேகர்,தாகூர், ஜெயகாந்தன், வைக்கம் பவர் எனப் பெருமிதத்துடன் உரைக்கும் இவர் முற்போக்கு எழுத்தாளர் சங்க மட்டக் களப்புத் தலைவராகவும் செயலாற்றி வந்துள்ளார்.
விபுலாநந்த அடிகளுடன் தொடங்கிய மட்டக்களப்பு தமிழ்ப் பாரம்பரிய வரிசையில் அப்துஸ் ஸமது அவர்களுக்கும் ஒரு தனித்துவமான இடமுண்டு என நாம் திட மாக நம்பலாம்.
நன்றி; மல்லிகை.

Page 100
கண்டியில் நடைபெற்ற தமிழ்த்தின விழாப் போட்டிகளையொட்டி நடத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் ஆக்க முயற்சிகளான சிறுகதைகளைத் தேர்வு செய்யும் நடுவர்களில் ஒருவராக நானும் கடமையாற்றினேன்.
சிறுகதைகளை தெரிவு செய்த பின்னர் நானும் பேராதனைப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநதி அருணாசலம், திருமதி லலிதா நடராஜா ஆகிய மூவரும் சிறுகதை எழுதிய மாணவ மணிகளுடன் அவர்களின் படைப்புக்களைப் பற்றி உரையாடினோம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் சிறுகதை எழுதிய ஒரு மாணவனிடம் கலாநிதி அருணாசலம் “உங்களுக்குப் பிடித்த எழுத் தாளர் ஒருவரின் பெயரைக் கூறுங்கள்” என்றார்.
அந்த மாணவரோ அ.ஸ. அபதுஸ் ஸமது” என்றார். கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளரான அ.ஸ.அப்துஸ்ஸமதுவின் பெயரைக் கூறியவுடன் அந்தச் செய்தி எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.
இலக்கியப்பணி
தமிழகத்திலிருந்து வெளிவரும் மாத நாவல்களைப் படித்து நமது மாணவ
 

அந்தனி ஜிவா
மணிகள் சிவசங்கரி, சுஜாதா, புஷ்பா தங்கத்துரை போன்ற பெயர்களைத்தான் உருப்போட்டு வைத்துள்ளார்கள். ஆனால் அந்த மாணவனோ வித்தியாசமாக நம்மவர் ஒருவரின் பெயரைக் கூறியதும் அதுவும் நீண்டகாலமாக இலக்கிய உலகில் தனக் கென தனி இடத்தை ஏற்படுத்தி அமைதியாக இலக்கியப்பணிபுரியும் அப்துஸ்ஸமதுவைப் பற்றிய நினைவுகள் மலர்ந்தன.
கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாள ரான அ.ஸ.அப்துஸ்ஸமது கடந்த முப்பத் தைந்து வருடங்களாகத் தன் இலக்கியப் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக் கிறார்.
அட்டாளைச்சேனை ஆசிரியப் பயிற் சிக் கலாசாலையின் தமிழ் விரிவுரையாள ராகப் பணிபுரியும் அப்துஸ்ஸமது ஐம்பது களில் இலக்கிய உலகில் தனது காலடிச் சுவடுகளைப் பதித்தார்.
பல ஆக்கங்கள்
1955ம் ஆண்டளவில் திருவாளர் இராஜ அரியரத்தினத்துடன் கொண்டிருந்த தொடர்பால் ஈழகேசரியில் ‘ஆடுகொடியா னேன்” என்ற கிராமிய மணங்கமழும் கவிதை வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து “சீறாப்புராணம்" பற்றிய இலக்கிய ரசனைக் குறிப்புகள் போன்ற கட்டுரைகள் இஸ்லாமிய
@

Page 101
இலக்கியத்துக்கு வலுவும் பொலிவும் ഉബl'.gങ്ങ്.
ஈழகேசரியில் வெளியான “பாத்திமா வின் நுதல் அழகு" என்ற கட்டுரை தமிழ்
ஏ.கே.அப்துல்சமதுவின் மனதைத் தொட்டது. அததை அவர் மறுபிரசுரஞ்செய்தார். பின்னர் “சீறா இன்பம்” என்ற பெயரில் 1957ல் தமிழ் நாட்டில் அது நூலுருவில் வெளிவந்தது.
கவிதை,சிறுகதை, நாவல்,கட்டுரை, பாடநூல் ஆகிய பல்வேறு துறைகளில் இவர் தனது கைவண்ணத்தைக் காட்டியுள் ளார்.
1961ல் அ.ஸ.அ.வின் சிறுகதை ஒன்றை மலையக மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தினகரனின் சகோதரப் பத்திரிகை யான ஒப்சேவரில் வெளியிட்டார்.
மூத்த எழுத்தாளர்
இலக்கியத்துறையில் மூத்த எழுத்தா ளரான இவர் தனது இலக்கியக் கொள்கை பற்றி தனது சிறுகதைத் தொகுதியான 'எனக்கு வயது பதின்மூன்று" முன்னுரை யில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“இலக்கியம் ஒரு சமுதாயத்தின் பிரதி பலிப்பு. அதன் எழுச்சிக்குரல் அதன் எதிர் காலக் கனவுகளாகும். இந்த முறையில் என் சமுதாயத்தின் பிரத்தியட்சமான பிரதி பலிப்பாக நான் இக்கதைகளைப் படைத் துள்ளேன். சமுதாய நடைமுறைகள் போக்குகள் என்பனவற்றிற்குக் கலைவடிவம் கொடுக்கும்போது தனிமனித சுயாதீனத்துக்கு ஏற்படும் தடைகளை மீறித் தன்னம்பிக்கை யோடு முன்னேறும் பாத்திரங்கள் பலவற்றை நீங்கள் இக்கதைகளில் சந்திக்கலாம். தனி மனித உணர்வுகள் மதிக்கப்படத்தக்கவை.
G88).

அத்தகைய சுயாதீனங்களும் உணர்வுகளும் சமுதாயத்தினால் அழிக்கப்படக்கூடாது என் பது என் கருத்து. சமுதாயம் என்பது சில வேளை அடிமைத் தனமான ஒரு நெறியில் மக்களை வழிநடத்திச் செல்வதும் உண்டு. அவர்களுடைய முற்போக்கு நோக்கங்களை யும் செயல்முறைகளையும் அழித்து எதேச் சதிகாரம் தலைதூக்கும் சந்தர்ப்பங்களில் தான் இத்தனிமனித உந்துதல்களும் அபிலா ஷைகளும் மதிக்கப்பட வேண்டியனவாகும்” என்கிறார்.
கலைப்பட்டதாரி
ஐம்பது வயதைத் தாண்டி விடட அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்கள் ஒரு பயிற்றப் பட்ட ஆசிரியரும் கலைப் பட்டதாரியுமாவார். இவருடைய எழுத்துக்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி யுள்ளன. 1979ம் ஆண்டில் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.உவைஸ் தலைமையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின்போது வெளியான 27 இஸ்லாமிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய “பிறைப்பூக்கள்” தொகுதி அ.ஸ.அ.வின் முயற்சியால் தான் வெளிவந்தது. நான்கு பிள்ளைகளின் தந்தையான அ.ஸ.அ.வின் மூத்தமகள் சித்தி றிஜா சிறுகதைத் துறையில் ஆவர்வம் காட்டிவருகிறார். தினகரனிலும் இவரது படைப்புக்கள் வெளி வந்துள்ளன. அ.ஸ.அ.வின் இலக்கிய அடிச் சுவட்டில் இவரும் வளர்ந்து வருவார்.
எதிர்காலத்தில் அ.ஸ.அப்துஸ்ஸமது பின் இலக்கியப் பணிகளை ஆய்வு செய்து தனிநூல் வெளியிடப்படவேண்டும் என்க என் கருத்து.
நன்றி : தினகரன்

Page 102
A.A.S. Argat
துலக பற்று சீறா அள்ள தமிழ் (ԼՔԼԳԱ
G8 u Te அளிட் தொகு யின்
ருக்கு வெளி இடத்
ருடை பிரசுரி எழுதி இதழு இலக் யிலும்
LDT6) விருது
நம்பிக்கை”
LGaáfu Iðið 2 UéÞ. Gaí5UI
 

என்னோடு அணுக்கமான எழுத் த் தொடர்புக்கு வந்தவர் அக்கரைப் அ.ஸ.அப்துல் ஸமது. ஆசிரியரின் இன்பம்’ (1957) எனது சிந்தையை ரியது. இன்பச் சீறா பற்றிய முதல் ஆய்வு நூலாக அதுதான் இருக்க |ம். இதனை அடுத்து ‘சுலைமான் ஸ்” “இஸ்லாமிய இலக்கிய நோக்கு” ண் றவை இலக்கியச் சுவை பவை.நாவல், சிறுகதை, உரைநூல், நப்பு, பாடநூல்கள் இவை இலங்கை முத்த எழுத்தாளர்களில் ஒருவராகிய அப்துஸ் ஸமது தொட்டுக்கொண்டி ம் துறைகள். இஸ்லாமிய நூல் ரியீட்டுப் பணியகத்தில் முக்கிய தையும் வகிக்கின்றார்.
இலங்கை மல்லிகை’ இதழ் இவ ய புகைப்படத்தை முகப்பட்டையில் த்து வாழ்க்கை வரலாற்றையும் |யுள்ளது. ‘இலக்கியா’ என்னும் டன் இணைந்திருக்கும் இவர் கியவாதிகளைப் பாராட்டும் பணி ஈடுபட்டுள்ளார். தலைநகர் கவிதை ல இயக்கம் ‘இலக்கிய திலகம்’
வழங்கி மகிழ்ந்தது.
ய தமிழ் மாதஇதழ் மே-1999

Page 103
ஞானரதன
C90Ꭰ
கிழக்கிலங்கையி அவர்களை கெளரவி அவருடைய எழுத்தாற் மட்டும் முடக்கி இனங்
கொண்டு செல்லவும்
உழைப்பின் பின்னணி வருடங்களாகத் தொடர் ஈழத்தைவிடத் தமிழ்நா நூலகள மூலம நனக
இத்தனை வருட மூச்சானது சுயத்தைச் வந்துள்ளது எனக்க சமுதாயத்தில் கொ6 மனிதசமுதாயத்தை வேண்டுமென்ற தொ6 பெரும்பாலும் இயக்கி மிகுந்து காணப்படு 6 னிக்க முடிகிறது.
ஆக்கஇலக்கிய எனப் பல்வேறு துறை அ.ஸ. அவர்கள் பழகு படைப்புகள் மூலம் சா விளிம்பிலிருந்து வானத் போய் விட்டதாக என அ.ஸ்.அவர்கள் பற்றிய தலைமுறையினரின் யுள்ளது. அவருக்குரிய காகவோ அல்லது ே இவை தரப்படவில்6ை விளக்குவது அவசியம்
ஈழத்துத்தமிழ் இ முஸ்லிம் எழுத்தாள மறக்கமுடியாது. இவர் முக்கிய இடமுண்டு.
இஸ்லாமிய இல கொள்ளாமல் எல்லாே படையில் ஆக்க இலக் கூறுவோரும் உளர். இ சூழல் தாக்கத்தின் மத்த காணப்படுகின்றனர். 1 புறம்சார்ந்த லோகாய

பின் மூத்த எழுத்தாளரான அ.ஸ.அப்துஸ்ஸமது த்துள்ளது மிகவும் பொருத்தமான செயலே. றலை, சாதனைகளை, ஆக்க இலக்கியத்தோடு காண முற்படுவது தவறான மதிப்பீட்டுக்குக் கூடும். அவருடைய பணிகள் அயராத யில் உருவானவை. கடந்த முப்பத்தைந்து ாந்து எழுதிக் கொண்டிருக்கும் அ.ஸ. அவர்கள் ாட்டில் அவரின் படைப்புக்களான இஸ்லாமிய றியப்பட்டவர்.
ங்களாக எழுத்துலகில் அவரை இயக்கி வந்த (Ego) சாந்தப்படுத்தும் நோக்கோடு இயங்கி ருதுவது பொருத்தமாகாது. இயற்கைச் ண்டுள்ள அக்கறை, மனிதநேயம், இந்த ஆரோக்கியமாகக் கொண்டு செல்ல
லை நோக்கு ஆகியனவே கலைஞர்களை வந்துள்ளன. இந்தப் பிடிப்புகள் அ.ஸ்.விடம் வதை அவரின் படைப்புகளினுடாக அவதா
த்துறை, இஸ்லாமிய நூல்கள், பாடநூல்கள் )களில் அளப்பரிய சாதனைகள் புரிந்துள்ள தற்கு மிகவும் இனியவர் (ஏதோ இரண்டொரு தனை(?) புரிந்துவிட்டதாக எண்ணி உலகின் திற்கு வழுவிச்சென்று மிகவும் தொலைவுக்குப் ன்னும் இளம் எழுத் தாளர்கள் கவனிக்க). ப தகவற் குறிப்புகளை இன்றைய இளைய தகவலுக்காகவே இக்கட்டுரை உள்வாங்கி ப அந்தஸ்தைப் புனருத்தாரணம் செய்வதற் வறெந்தக் குறுகிய நோக்கங்களுக்காகவோ லயென்பதை வாசகநேயர்களுக்கு முதலில்
.
லக்கியத்துறைக்கு கணிசமான பங்களிப்பினை ர்கள் நல்கியுள்ளனர் என்பதை எவரும் களில் அ.ஸ.அப்துஸ் ஸமது அவர்களுக்கு
0க்கியம் என்ற உபபிரிவொன்றை வகுத்துக் மே தமிழ்இலக்கியங்கள் என்ற பரந்த அடிப் கியங்களை மதிப்பீடு செய்தல் வேண்டுமெனக் ருந்தபோதிலும் முஸ்லிம் மக்கள் எத்தனைய தி யிலும் இஸ்லாத்தினு டாகவே அடையாளம் மனிதனின் அகம் சார்ந்த ஆன்மீகத்துறை, தம் என்ற எல்லாக் கூறுகளையும் மதத்தைத்

Page 104
தவிர்ந்த வேறெந்த அறிவியல் சார்ந்த தத்துவ அளவு கோல்களால் அளந்து கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முஸ்லிம் மக்களால் முடிவது மில்லை; விரும்புவது மில்லை. இந்த அடித் தளத்திலிருந்து பெறப் படும் ஆக்க இலக் கியங்கள் பெரும்பாலும் அடிப்படையில் மதக்கோட்பாடுகளையே மேம்படுத்திக் காட்டுவது யதார்த்தமானதும் தவிர்க்க முடியாததுமாகும். மாக்சியத்தைக் கூட இஸ் லாத்தில் இனங்காண முயலும் படைப்புகள் இக்கூற்றை வலியுறுத்தியே நிற்கின்றன.
1963 இல் கிழக்கிலங்கையின் சரித் திரம் காணாத வகையில் அறிஞர் சித்தி லெப்பையைக் கெளரவிக்குமுகமாக இலங் கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கமாகச் செயற்பட்ட மட்டக்களப்பு (தெற்கு) முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (தலைவர் அ.ஸ்.அப்துஸ்ஸமது அவர்கள்) பிரமாண்டமான விழாவொன்றினை அக்க ரைப்பற்றிலே எடுத்தது. இலங்கையின் பல் வேறு பாகங்களிலிருந்து அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இலக்கியத்தில் எவ்வித கொள்கைத் தாக்கம் ஏற்படாத காலத்தில் அ.ஸ்.வும் அவருடைய இலக்கிய நண்பர் களான ரீபாக்கியநாயகம், ஏ.ஆர்.எம்.சலிம், யுவன், வி.பி.சிவப்பிரகாசம் போன்றவர்கள் அக்கரைப்பற்றில் 1950 ஆண்டளவில் ஒர் இலக்கிய அமைப்பாக இயங்கிவந்தனர். காலப் போக்கில் இந்த அமைப்பே மட். தெ. மு.எ.சங்கமாக பரிமாணம் பெற்றது. ஐம்பதுகளின் முற்பகுதியில் ஈழத்துப் பத்திரி கைகளில் வெளிவந்த படைப்புக்களில் தென்னிந்தியச் சூழ்நிலைகளே சித்திரிக்கப் பட்டன. அ.ஸ.வினால் எழுதப்பட்ட ‘கல் முனை கடற்கரை போன்ற பெயர்கள் ‘மெரீனா பீச் சென இந்தியப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் பிரசுரமானது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
பித்தன், அ.ஸ.வுக்கு முன்பே எழுத்து
லகிற்கு அறிமுகமாயிருந்தார். இருந்தபோ திலும் அவரின் புனைபெயர் மூலமாகவும்

'திருவிழா' போன்ற சிறுகதைகளை எழுதி யிருந்தமையாலும் அவரால் முஸ்லிம்களின் வாழ்க்கைப் பின்னணியை அ.ஸ்.வின் வரு கைக்கு முன் இலக்கிய உலகுக்கு முழுமையாக அறிமுகம் செய்துவைக்க முடியவில்லை. ஈழத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கைப் பின்னணியை அறிமுகம் செய்த வர்களில் எச்.எம்.பி.மொஹிதீனுக்கும் முக் கிய இடமுண்டு. 1964ம் ஆண்டளவில் ஏ.இக்பால், யுவன், அக்கரைமாணிக்கம், கு.தெய்வானப்பிள்ளை, எம்.ஐ.ஜூனைதீன், போன்றவர்களுடன் தெ.மட்-மு.எ.சங்கத்தை அ.ஸ்.அவர்கள் வளர்த்து வந்தார். 1964 இல் 57கவிஞர்களை உள்ளடக்கிய‘இலங் கை முஸ்லிம்களின் கவிதைத் தொகுப்பு முற்றத்து மல்லிகை யாக வெளி வந்தது.
அ.ஸ.அவர்கள் முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தோடு தன்னைத் தொடர்புபடுத் திக்கொண்டமைக்குரிய காரணங்களாக மண்வாசனைக் கொள்கை, யதார்த்தப் போக்கு என்பவற்றையே குறிப்பிடுகிறார்கள். அ.ஸ. அவர்கள் மு.எ.சங்கத்தோடு தொடர்பு படுத்திக் கொண்டமையால் அவரின் படைப் புகளுக்குப் பத்திரிகைகளில் (இளங்கீரனின் மரகதம்'. கைலாசபதியை ஆசிரியராகக் கொண்டிருந்த தினகரன்) பிரசுர வசதிகள் கிடைத்தன. அத்தோடு கொண்டோடிச்சுப்பர் மூலம் எஸ்.பொ. அவர்கள் அ.ஸ்.வை இடைக்கிடை பத்திரிகைகளில் தாக்கி வந்ததும் தற்செயலானவை அல்ல.
1961இல் இவருடைய சிறுகதை யொன்று காலஞ்சென்ற சி.வி.வேலுப்பிள்ளை அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஒப்ஸேவர் பத்திரிகையில் வெளியானது. அ.ஸ.அவர்கள் தனது இலக்கிய ஈடுபாடு குறித்துத் தனது சிறுகதைத்தொகுதியான எனக்கு வயது பதின்மூன்று முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘இலக்கியம் ஒரு சமுதாயத்தின் பிரதி பலிப்பு, அதன் எழுச்சிக்குரல் அதன் எதிர் காலக்கனவுகள் ஆகும். இந்த முறையில்

Page 105
என் சமுதாயத்தின் பிரத்தியட்சமான பிரதி பலிப்பாக நான் இக்கதைகளைப் படைத் துள்ளேன். சமுதாய நடைமுறைகள், போக் குகள் என்பவற்றிற்கு கலைவடிவம் கொடுக் கும் போது தனிமனித சுயாதீனத்துக்கு ஏற்ப டும் தடைகளை மீறி தன்னம்பிக்கையோடு முன்னேறும் பாத்திரங்கள் பலவற்றை நீங்கள் இக்கதைகளில் சந்திக்கலாம். தனி மனித உணர்வுகள் மதிக்கப்படத்தக்கவை. அத்தகைய சுயாதீனங்களும் உணர்வுகளும் சமுதாயத்தினால் அழிக்கப்படக்கூடாது என் பது என் கருத்து. சமுதாயம் என்பது சில வேளை அடிமைத்தனமான ஒரு நெறியில் மக்களை வழிநடத்திச் செல்வதும் உண்டு. அவர்களுடைய முற்போக்கு நோக்கங் களையும் செயல்முறைகளையும் அழித்து ஏதேச்சாதிகாரம் தலைதுாக்கும் சந்தர்பங் களில்தான் இத்தனிமனித உந்தல்களும் அபிலாஷைகளும் மதிக்கப்பட வேண்டியன வாகும்”
தனிமனித உணர்வுகள், செயற்பா டுகள், முக்கியம் பெறுதலோ அல்லது மீறல்களோ ஒரு சமுதாய அமைப்பை மாற்றும் இலக்குகளைக் கொண்டனவல்ல. இலக்கியம் மனிதனைத் தனது சமுதாயச் சூழலிலிருந்து தனிமைப்படுத்தும் அளவுக்கு முனைப்புப்பெறல் முற்போக்குச் சிந்தனை யாகாது. முரண்பாடுகளினூடாகச் சமூகத் தைப்பார்க்கும் தன்மையும், உலகம், நாடு, சமூகம், மனிதன் என்ற ஒழுங்கில் மனித னைப்பார்க்கும் தன்மையும் முற்போக்காளர் களுடைய அணுகுமுறைகளாகும். இதற்கு மாறாகத் தனிமனிதனிலிருந்து சமூகம்,நாடு என்ற திசையில் பார்ப்பது தனிமனிதவாதமே. ஜெயகாந்தன் தனது மாக்சியக் கொள்கை களிலிருந்து விலகிச் சென்றபோது எழுதிய ‘ஒரு மனிதன், ஒருவீடு, ஒரு உலகம்' என்ற நாவல் இதற்குச் சான்றாகும். அ.ஸ.வின் படைப்புக்கள் பல முற்போக்குச் சிந்தனை யோடு ஒத்துப்போகக்கூடியன. இருந்த போதிலும் மேற்குறிப்பிட்டுள்ள முரண்பாடு களைத் தாண்டி நிற்கின்றனவா என்பது
C92)

ஆய்வுக்குரியது. மு.எ.சங்கத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டிருந்தாலும் அ.ஸ்.அவர்கள் தனக்குரிய சில கோட்பாடுகளின் அடிப்படை யிலேயே எழுதிவருகிறார் என்பதே சரியான கூற்றாகும். அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக்கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அ.ஸ.அப்துஸ்ஸமது (55) அவர்கள் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியரும் (தமிழ் சிறப்பு) கலைப்பட்டதாரியுமாவார். அவருடைய எழுத்துப்பணியில் பெரும்பகுதி இஸ்லாமிய இலக்கியம் சார்ந்தாகும். அஸ். வுக்குத் தமிழ்நாட்டில் புகழ்தேடித் தந்தவை இப்படைப்புகளே.
1955 ஆணடளவல இராஜ அரியரத் தினத்துடன் கொண்டிருந்த தொடர்பால் ஈழகேசரியில் ‘ஆடு கொடியானேன்’ என்ற (கிராமியக்) கவிதை வெளிவந்தது. இத னைத் தொடர்ந்து சீறாப்புராணம் ரசனைக் குறிப்புகள் போன்ற கட்டுரைத்தொடர்கள் இஸ்லாமிய இலக்கியத்தை வலுவூட்டின. ‘ஈழகேசரியில் வெளியான ‘பாத்திமாவின் நுதல் அழகு என்ற கட்டுரையால் கவரப் பட்ட ஏ.கே.அப்துஸ் சமது (இந்தியா) அவர்கள் ‘மணிவிளக்கில் அவற்றை மறு பிரசுரம் செய்தார். பின்னர் சீறா இன்பம் என்ற பெயரில் இலக்கியப் பண்ணைப் பிர சுரமாக 1957இல் வெளிவந்தபோது மிகுந்த பாராட்டுதல்கள் பெற்றதை இஸ்லாமிய இலக்கியங்களில் பரிச்சயமுள்ளவர்கள் நன்கறிவர்.
1979இல் M.M உவைஸ் தலைமை யில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின்போது வெளியான 'பிறைப்பூக்கள்’ என்ற சிறுகதைத் தொகுதி (27 இஸ்லாமிய எழுத்தாளர்களின் படைப் புகள் அடங்கிய) அ.ஸ.அவர்களின் முயற் சியால்தான் வெளிவந்தது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான அஸ்.வின் மூத்தமகள் சித்திறிஜா சிறுகதைத் துறையில் ஆர்வம் காட்டுவதாகத்தெரிகிறது.
நன்றி : களம்.

Page 106
அப்துஸ்ஸமது பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் இராசதுரை
சிறந்த எழுத்தாளரும் - அறிஞருமான அ.ஸ.அப்துஸ்ஸமது அவர்களின் எழுத்துச் சேவையின் இருபத்தைந்து வருட கால நிறைவினையொட்டி கடந்த வாரம் அக்கரைப்பற்றில் நடைபெற்ற வெள்ளிவிழாவின்போது அ.ஸ.அவர்களைப் பாராட்டி மட்டுநகர் முதல்வரும் சொல்லின் செல்வருமான செ.இராசதுரை அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தபோது
எடுக்கப்பட்ட படம்
 
 

‘இன்று எம்மத்தியில் குறிப்பாக கிழக்கிலங்கையில் தலைசிறந்த எழுத் தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ஆக் கங்களுக்கு உற்சாக மூட்டும் ஒரு சமூக அமைப்பு இன்றும் எம்மத்தியில் உருவாக வில்லை.”
“அவர்களது ஆக்கங்கள் புத்தக ரூபமாக வரும் போது அதனை விலை கொடுத்து வாங்கி அவர்களுக்கு உற் சாக மூட்ட, தெம்பூட்ட முன்வருவோர் மிகவும் குறைவு.”
“இதன் விளைவு எழுத்தாளர் கள் சளைக்கின்றனர். வறுமை அவர் களை வாட்டுகின்றது. முடிவில் எழுத்து லகையே அவர்கள் மறந்துவிடுகின் றார்கள். இந்நிலை மாறவேண்டும். எழுத்தாளர்கள் உயிருடன் இருக்கும் போதே கெளரவிக்கப்படவேண்டும். இன்று நாம் எழுத்தாளர்கள் இறந்த பின்னர் தான் பாராட்டுகின்றோம். கெளரவிக்கின்றோம்.”
‘ஒரு எழுத்தாளன் தனது சமுதாய அமைப்பில் உள்ள குறைபாடு களை, தடைகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டும் திராணி உடைய வராக இருக்க வேண்டும் என்ற இலட் சியத்தைக் கொண்டு ஜனாப் அ.ஸ. கதைகள் புனைந்துள்ளார் என்பதை அவரது ஆக்கங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அந்த வகையில் எழுத்தாளர் அப்துஸ்ஸமது சமூகத் திற்கு அருந்தொண்டாற்றி வருகின் றார். அவரை நாம் மேலும் பாராட்டு கின்றோம்” என்றார்.
நன்றி : தினகரன் 14-10-1977
G93)

Page 107
C94)
ஸ்துலுே
அன்பும் அறிவும் அழியாப் அவனியில் மாந்தருக்கு இ ஆசை மோகம் அழித்திடு ஆதலின் இவைகளை அ இறைவனே யென்றும் ஏற்ற இன்னுயிரென்று போற்றிடு
ஈருலகிலும் இன்பமாய் வா ஈதல் ஒன்றே இதமான பா உண்மையில் துன்பம் என் உவப்பது யாவும் உனக்ெ ஊக்கம் என்பது உளத்தி: ஊது என்னும் உயர்வெணு எதற்கும் அஞ்சா விதயம்
எவர்க்கும் நன்மையே நாடி ஏர்பிடித்து இகத்தில் வாழ் ஏற்றம் என்பதை என்றும் ஐக்கியம் என்பது அகிம்ை ஐயமின்றி அதையே கடை ஒன்றே தெய்வம் என்று நி ஒழுகுவாய் நன்னெறி உை ஒதல் ஒன்றே ஒப்பிலாச்செ ஒரஞ்சார்ந்து நீதிமொழியே ஒளவியமென்பதை அதத்த ஒளடத மென்பது அரும்ெ அஃதும் இட்தும் அவனென் நின்னை அறிந்தால் அவன
நன்றி : சுதந்திரன் 10-1-1950
 

பொருளே வை (இ)ரண்டும் வேண்டும் ம் நன்மை 5ற்றிடின் நன்மை திடு பாதம் மாந்தரை
தை பது உலகமே கன நினையேல் ல் நின்றால் LD 9FsióO)85 வேண்டும் டல் நன்று
5)lgll மறவேல் சயின் அடிப்படை ப்பிடி னைத்து ாக்கே வெற்றி ல்வம்
ல்
நினின்(று) மறை பருங்கலையே ாறு அலையே ன யறிவாய்.
.ஏ.அப்துஸ் ஸ்மது (171) ரசினர் ஆண்பாடசாலை புக்கரைப்பற்று.

Page 108


Page 109
e58 எழுத்துப்

5b 3
பதிவுகள்

Page 110


Page 111
● ,● பயில் நிகழ்ந்த எழுத்தாளர் இம்மாநாட்டில் வித்துவான் கமலநாதன், வித்த @l.ണ്ഡഖങ് பேச்சை அவதானித்துக் கொண்டிரு
பாலமுனையில் நடந்தேறிய கலைஞர் கெளரவி தந்த அஸ்.அப்துஸ்ஸமது அவர்களோடு கெ கலைஞர் பாலமுனை ஆதம் ஆகியோர் அமர்
 
 
 
 
 

வான் வி.சி.கந்தையா ஆகியோர் உன்னிப்பாக நக்கின்றனர்.
iப்பு நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக வருகை ளரவம் பெற்ற கவிஞர் பாலமுனை பாறாக், ந்துள்ளனர்.

Page 112
அஸ்.வின் 60வது வயது பூர்த்தியையொட்டி அ ஓர் அங்கமாக இடம் பெற்ற அவரது புத் பார்வையிடுகின்றனர்.
(
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி விழாவிற்கு வருகை தந்த அஸ்.அவர்கை வரவேற்கும் காட்சி இவ்விழாவிலேயே இவருச்
حصريح صريح صريح صحفصيح صريح صرحصيح صريح صرح مصر
 
 

ட்டாளைச்சேனையில் நடைபெற்ற மணிவிழாவின் தகக் கண்காட்சியை அஸ்.வும் அதிதிகளும்
(தேசிய பாடசாலை) கொண்டாடிய சாகித்திய ா கல்லூரியின் சிரேஷ்ட மாணவ தலைவர் கு' இலக்கிய வேந்தர் பட்டம் வழங்கப்பட்டது.

Page 113
அக்கரைப்பற்று பொது நாலகத்தில் இல இதனையொட்டி அஸ்.அவர்கள் இல்லத்தில் நட ஆசிரியர் கல்லூரி அதிபர் ஜனாப்.எஸ்.எச்.எம் வழங்கிய போது எடுக்கப்பட்ட படம்
அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மத்திய விழாவில் இவ்வித்தியாலய அதிபர் ஜனாப்.எ மர்லை சூடி வரவேற்கும் காட்சி.
 
 
 
 
 
 
 
 

க்கிய கர்த்தாக்கள் கெளரவிக்கப்பட்டனர். ந்தேறிய நிகழ்ச்சியின் போது அட்டாளைச்சேனை ஜெமீல், கவிஞர் அன்பு முகையதினுக்கு நால்
மகா வித்தியாலயம் கொண்டாடிய சாகித்திய ம்.ஐ.ஜினைத்தீன் அவர்கள் அஸ்.அவர்களை

Page 114
கலைஞர் கெளரவிப்பு அக்கரைப்பற்று நாலக பக்கீர்தம்பி அவர்ளுக்கான கெளரவத்தினை அவ அதிபர் கால்தீன் வழங்கி வைக்கும் நிகழ்ச்சி ஜெமீல் காணப்படுகிறார்.
அக்கரைப்பற்று பொது மக்கள் ஒன்று சேர்ந் அப்துல் ஜவாட் அவர்களுக்கு வரவேற்பு நிகழ் அவர்களால் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டபோ
 
 
 
 
 
 
 

த்தில் நடந்தேறிய போது மர்ஹம் ஈழமேகம் ரது மகனுக்கு அக்கரைப்பற்று உதவி அரசாங்க அருகில்அஸ். அவர்களோடு எஸ்.எச்.எம்.
து சர்.ராசிக் பரீத் அவர்களின் மருமகனான ஈசி நடத்தினர். அப்போது அஸ்.அப்துஸ்ஸமது து பிடிக்கப்பட்ட படம்.

Page 115
அஸ.அப்துஸ்ஸமது
எனது முதல் கதை 1950ம் ஆண்டு ஜூலை மாதம் 02ம் திகதி தினகரனில் வெளியானது. அப்பொழுது நான் எஸ்.எஸ்.சி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். கதையின் பெயர் நூர்ஜஹான்.
ஆனால் நான் அதற்கு மூன்று வரு டங்களுக்கு முன்பே எழுதத்தொடங்கி விட்டேன். 1947 பெப்ரவரி 02ம்திகதி என் முதல் ஆக்கம் தினகரன் பாலர் பகுதியில் வெளியாயிற்று. தொடர்ந்து தினகரன், சுதந்திரன் பத்திரிகையில் சிறு சிறு இலக்கி யக் கட்டுரைகள் எழுதி வந்தேன்.
என் முதல் கதையான நூர்ஜஹானை நான் விசேடமாகக் குறிப்பிடுவதற்கு கார ணங்கள் உள்ளன. எனக்கு முன் பித்தன் ஒன்று இரண்டு கதைகள் எழுதி இருந்தாலும் அவர் ஒரு முஸ்லிம் என்று அறியப்பட வில்லை. என் கதையைப் பார்த்ததும் தின கரன் காரியாலயத்தில் ஒரு பரபரப்பு தோன் றியது. முஸ்லிம் பாத்திரங்களை வைத்து கதை எழுதும் இந்த முஸ்லிம் யார் என்பதே அப்பரபரப்புக்கு காரணமாகும். கதை பிரசு ரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அப்பொழுது கதைகள் இந்திய பின் புலத்தில் இந்திய தமிழ் மக்களது வாழ்க் கைப் பின்னணியில் எழுதுவதே வழக்காக இருந்தது. நான் இந்தக் கதை நிகழிடங்கள் கல்முனை, திருகோணமலை என்றும் நூர்ஜஹானின் தந்தை போடியார் இப்றாகீம் என்றும் மற்றும் காரியாலயம், லிகிதர், மாவட்டம் என்ற சொற்பிரயோகங்களும் கதையில் வந்தன. ஆனால் பிரசுரமான கதையில் நிகழிடங்கள் செங்கல்பட்டு, விந்தியமலை, என்றும் மற்றும் ஜமீன்தார் இப்றாகீம் என்றும் ஆபீஸ் குமாஸ்தா, ஜில்லா என்றும் சொற்பிரயோகங்கள் மாற்றப் பட்டன. இலங்கை கதைகளின் தன்மை அப்போது எவ்வாறு இருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்,
 
 

1956ம ஆனடு இலங்தை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்வைத்த தேசிய இலக்கியம், மண்வளம் இலங்கை மக்களது வாழ்வு முறைகள் நமது பிரச்சினைகள் என்பன முன் வைக்கப்பட்டன. இந்த கோஷத்துக்கு சோஸலிஸக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தம் இலக்கியக் கோட்பாடு களை முன்வைத்தமை காரணமாகும். அதற்கு அனுசரணையாக எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்களின் சுதந்திரக்கட்சி ஆட்சியில் எழுத்தாளர்களி டையே ஒரு புத்துணர்வை ஏற்படுத்தின. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் முக்கியத்தர்களான கலாநிதி.க. கைலாசபதி, நந்தி, எழுத்தாளர் எச்.எம்.பி. முகிதின், செயலாளர் பிரேம்ஜி ஆகியோர் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள்.
இதன் பிறகுதான் இலங்கை எழுத் தாளர்களின் சிறுகதை, நாவல்களில் சோஸலிசக் கருத்துக்களும் பிரதேச மண் வளமும் இலங்கை வாழ்க்கை முறையும் சுயபிரக்ஞையுடன் நோக்கப்பட்டன.
என் கதை ஒரு சாதாரணக் காதல் கதைதான். என் வயதுக்கும் உணர்வு களுக்கும் ஏற்ப அக்கதை அமைந்திருந்தது.
ஜெமின்தார் இப்றாகிமின் மகள் நூர்ஜஹான். செங்கல்பட்டு ஆபீஸ் ஒன்றில் குமாஸ்தாவாக இருக்கும் றஸாக் நூர்ஜ ஹானை விவாகம் செய்ய விரும்புகிறான். அதற்கு ஜெமின்தார் ஆபீஸ் குமாஸ்தாக் களுக்கெல்லாம் என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்கிறான். இந்தநிலையில் ஜெமின் தாருடைய மருமகன் ஹமீத் நூர்ஜஹானைக் கேட்கிறான். அதற்கும் மறுத்து விடுகிறார் ஜெமின்தார். இதனால் ஆத்திரப்பட்ட ஹமீத் தன் அறையில் படுத் துக்கொண்டிருந்த நூர்ஜஹானை வற்புறுத்தி வித்திய மலைக்குக் கடத்திச்செல்கிறான். இதில் வியப்பு என்ன என்றால் அந்த வாட கைக்காருக்கு சாரதியாக றசாக் வருகிறான். இடைவழியில் காரில் ஒரு பழுது ஏற்பட்டு விட்டது. காரைத் தள்ளுங்கள் என்று ஹமீதையும் உடன் வந்த உதவியாளனை யும் கீழே இறங்கச் சொல்லி நூர்ஜஹானை மற்றோர் கடத்தல் செய்கிறான் றசாக்.
C 95)

Page 116
பின்னர் கோர்ட் வழக்கு என்று வருகிறது. நூர்ஜஹான் நான் றசாக்கோடு வாழ விரும்புகிறேன். என்னை அனுமதியுங்கள் என்று கேட்கிறாள். அவள் ஒரு மேஜரான தால் நீதிபதி அனுமதிக்கிறார். சிறிது காலம் வாழ்ந்த பிறகு நூர்ஜஹான் நோயுற்றுக் காலமாகிறாள். அந்தத் துக்கத்தில் பின்வரு மாறு ஒரு தத்துவச் சிந்தனை அவனுக்கு ஏற்படுகிறது. “உலகம் மனிதனை ஏமாற்று கிறது. அது துன்பமும் துயரமும் நிறைந்தது. இன்பமோ மனிதனு டன் கண்ணாம் பூச்சி விளையாடுகிறது. ஆம் உலகம் மாயை. இப்படி முடிகிறது அந்தக் கதை.
இந்தக் கதையை நான் எழுதி 46 வருடங்கள் ஆகின்றன என்னும் போது வியப்பாக இருக்கிறது. நான் கதை எழுது வதற்கு யாரையும் ஆதர்ஸ் குருவாக வரிந்து கொண்டதில்லை. நான் அப்பொழுது கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் வரும் கதைகளைப் படிப்பேன். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீதும் கலை மகள் கி.வா.ஜெகந்நாதன் அவர்கள் மீதும் எனக்கு அபார மதிப்புண்டு. அவர்களுடைய கதைகளை மிக விரும்பிப் படிப்பேன். கல்கி யில் மலையாளம், ஒரியா, ஹிந்தி மொழிக் கதைகளை மொழிபெயர்த்துப் போடுவார்கள் கே.ஏ.அப்பாஸ், வி.ச.காண்டேகர், வைக்கம் முஹம்மத் பவுரீர் ஆகியோருடைய கதை களை எல்லாம் ரா.விழிநாதன் அழகாக மொழிபெயர்த்துத் தருவார். அவற்றில் சில இன்னும் எனது நினைவில் இருக்கின்றன.
நான் இஸ்லாமியக் கதைகள் எழுது வதற்கு காரணமே கல்கியும் கலைமகளும் தான். கல்கியில் தமிழர் வாழ்வு, நம்பிக்கை கள் சம்பிரதாயங்கள் பற்றிய கதைகளும் கலைமகளில் வெளியான அக்ரகாரத்து பிராமணர் வாழ்க்கை பற்றிய கதைகளும் என்னை முஸ்லிம்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் பற்றியும் நாம் ஏன் கதைகள் எழுதக்கூடாது என்று தோன்ற வைத்தன. இந்த எண்ணத்தின் பயனாக என் முதற்கதையில் முஸ்லிம் பாத்திரங்களை வைத்து எழுதினேன். பிற்காலத்தில் ‘தங்கை போன்ற ஸரிஆ கதைகளையும் மற்றும் 'ஒளி' ‘ஈர்ப்பு அந்தப் பிரயாணம் போன்ற
(96)

இஸ்லாமிய மத சார்பான கதைகளையும் எழுதி உள்ளேன்.
நான் இஸ்லாமியக் கதைகள் என்று ஒரு பிரிவை தோற்றுவித்ததில் நண்பர் சண்முகம் சிவலிங்கம் போன்ற விமர்சகர் களுக்கு கருத்துவேறுபாடு உண்டு. தமிழ் கதைகள் என்ற முறையில் முஸ்லிம்களை யும் தமிழர்கள் என்று கணித்து ஏன் எழுதக் கூடாது என்று கேட்கிறார். அவர் அநுத்தமா, குமுதினி, கரிச்சான்குஞ்சு போன்றவர்கள் கலைமகளில் எழுதிய கதைகளை படித்த பின்புதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் இஸ்லாமிய பகைப் புலத்தில் கதை கள் எழுதினாலும் உண்மையில் மனித உணர்வுகளின் வியத்தகு பண்புகளை கதை களாகப் படைப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். எனது கதைகளில் “வர்ணபேதம்” ‘நெருஞ்சிமுள்' ‘அவளுக்கென்ன ராஜாத்தி போன்ற கதைகள் மனித உணர்வுக் கோலங்களைச் சித்திரிப்பனவாகும்.
நான் தமிழ்மொழியில் மிகுதியும் பற்று டையவன். தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடுள்ளவன். எனது பட்டப்படிப்புக்கு தமிழையே சிறப்புப் பாடமாக எடுத்தேன். என் எழுத்தின் வடிவங்கள் அதனைப் பிரதி பலித்து நிற்பனவாகும். அகநானூற்றுப் பாடல்கள் சில கதைகள் எழுதுவதற்கு சிறப்பானதாக எனக்குப்பட்டபோது தாய் பரத்தையர் மோகம் என்ற இரண்டு சிறுகதை களை எழுதினேன். விபுலாநந்த அடிகள் மீது அபாரபற்றுடையவன். அவர் கிழக்கின் சொத்து. காரைதீவின் முத்து. அவருடைய நூற்றாண்டு காலத்தின்போது அடிகளின் வாழ்வை வைத்து துறவியின் காதலி என்று ஒரு அருமையான உருவகக்கதையை எழுதினேன். அது நாடகப் பாங்காக அமைந் ததால் கல்முனை வெஸ்லி ஹை ஸ்கூல் விபுலாநந்த நூற்றாண்டு விழா கொண்டாடிய போது இக்கதையை நாடகமாக நடித்தனர். இவையெல்லாம் என் எழுத்துத்துறையில் எனக்கு கணிசமான மதிப்பையும் ஆத்மதிருப் தியையும் தந்தன.
நன்றி : களம் 1996 ஜூலை.

Page 117
நான் திடுதிடுப்பென்று எழுத்துலகிற்கு வந்தவனல்லன். 1947ம் ஆண்டு நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது பத்திரிகை படிக் கும் பழக்கமுடையவனாக இருந்தேன். பாட சாலை விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டதும் பத்திரிகைக் கடைக்குப் போய் ஐந்து சதம் கொடுத்து தினகரன் ஒன்றை வாங்கி வரு வேன். அதனைப்படித்து முடித்துவிட்டே மறு வேலைக்குத் திரும்புவேன். அப்பொழுது ஒவ் வொரு புதனும் தினகரனில் பாலர் பகுதி வெளிவரும். அதில் வெளிவரும் மாணவர் களின் ஆக்கங்கள் என்னைப் பெரிதும் ஈர்த் தன.அம்மாணவர்களைப் போல நானும் எழுத வேண்டுமென்று தூண்டப்பட்டேன். என்ன விசயத்தைப்பற்றி எழுதலாம் என்று யோசனையில் ஆழ்ந்தேன்.
அது ஒரு மீலாத் விழாக் காலம். அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலையில் சேர் றாசீக் பரீட் தலைமை யின் கீழ் மீலாத்விழா ஒன்று சிறப்பாக நடை பெற்றது. அது என் மனதை வெகுவாகக் கவர்ந்தது. எல்லாவற்றையும் சேர்ந்து “எங்கள் ஊரில் திரு நபி ஜெயந்தி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். எனது முதல் ஆக்கம் தினகரனில் பிரசுரமாயிற்று. இவ்வாறு குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி இட்டுந்தொட்டும் நான் எழுத்துலகிற்கு அடி யெடுத்து வைத்தேன்.
சிறுகதைகள்
1950ம்ஆண்டு எனது முதல் சிறுகதை யான “நூர்ஜஹான்” தினகரன் ஞாயிறு
 

வெளியீட்டில் பிரசுரமாயிற்று. 50ம் ஆண்டு என்பது ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு யுகசந்தி. அது சம்பந்தமான ஒரு குறிப்பை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்.
அப்பொழுது இலங்கையில் சிறுகதை எழுத்தாளர்கள் சம்பந்தன், சி.வைத்திய லிங்கம், இலங்கையர்கோன் ஆகியோர்களே பிரபலமானவர்கள். அவர்களைத் தொடர்ந்து வரதர், பித்தன், சு.வேலுப்பிள்ளை, எச்.எம்.பி. முகிதன், வா.சு.ராசரத்தினம் முதலியோர் எழுதிக்கொண்டிருந்தனர். இக்கால கட்டத் தில் நானும் எழுதத் தொடங்கினேன். அப்போதைய கதைகள் இந்திய எழுத்தாளர் களின் கதைகளை வாசித்து அரட்டுணர்வில் எழுதப்பட்டவையாகவே இருந்தன. மண் வளம், பேச்சோசைப்பாங்கு என்பவை யெல்லாம் இந்திய வடிவமைப்பிலேயே இருந்தன. என்னுடைய கதை இஸ்லாமியப் பாத்திரங்களை வைத்துப் பின்னப்பட்டவை யாகவும் கதையின் இடப்பெயர்கள் கல் முனை, கல்லோயாச்சந்தி, திருக்கோண மலை என்றிருந்ததாலும் கதை சற்று வித்தி யாசமாக இருந்தது. நான் யாருடைய வாழ்விலோ நடந்த ஒரு கதையை அப்பட்ட மாக எழுதிவிட்டேன் என்று எண்ணினார்கள். எனவே கதையின் இடப்பெயர்கள் மட்டும் செங்கல்பட்டு, திருச்சி ஜங்சன், கோயம்புத் தூர் என்ற பெயர்களாக மாற்றி கதையைப் பிரசுரித்திருந்தார்கள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டு தேசிய தனித்துவம், மண்வாசனை, பேச்சோசைப்
=C92)

Page 118
பாங்கு, என்ற கருத்துக்கள் எழுகின்றவரை இலங்கையின் தமிழ் இலக்கியப் போக்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு இந்தச் சிறு கதை உதாரணமாகும் என்று கூற விரும்பு கிறேன்.
நான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் மட்டக்களப்புக் கிளையின் பொதுச் செயலாளராக இன்றுவரை இருந்து வருகின் றேன். அவர்களுடைய இலக்கியக் கருத்துக் களினால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். ஆதலால் என்னுடைய கதைகள் யதார்த்த மும் மண்வாசனையும் பெற்று விளங்கு வதற்கு அவர்களுடைய இலக்கியக் கருத் துக்கள் பெரிதும் காரணமாக இருந்தன எனலாம். 1964ம் ஆண்டு அக்கரைப்பற்றில் நிகழ்ந்த எமது கிளைச்சங்க ஆண்டுவிழா ஒன்றில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் நிகழ்த்திய தேசிய இலக்கியம் எனும் சொற் பொழிவு இன்றும் என் நினைவில் நிற்கிறது. நண்பர் பிரேம்ஜி ஞானசுந்தரம், நண்பர் எச்.எம்.பி.முகிதின் ஆகியோர் அடிக்கடி எங்கள் சங்கத்திற்கு வந்து இலக்கியக் கோட்பாடுகள் பற்றி நிகழ்த்திய கருத்துரை களும் இங்கு குறிப்பிடத்தக்கன.
எனது கதைகள் கிழக்கிலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கைப் பின்னணியில் அமையவேண்டும் என்பதில் நான் பெரிதும் கவனம் செலுத்தினேன். அந்த வகையில் முஸ்லிம் சிறுகதைகளின் முன்னோடி என்ற சிறப்பிடம் எனக்குக் கிடைத்தது. ஷரீஆ சம்பந்தமான பிரச்சினைகளையும் கதைக் கருவாகக் கொண்டு எழுதியதில் சில விமர் சகர்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு.
எனது கதைகளுள் அந்தக் கிழவன், தங்கை, கலீர்கலிர், மூன்றேக்கர் நிலம் முதலாம் பல கதைகள் சிறப்பானது என்பது விமர்சகர்கள் கருத்து. எனது கதைகள் மனித உணர்வுகளை துல்லியமாக எடுத் துக்காட்டுவதிலும் யதார்த்த பூர்வமான கற்பனைகளை கதைக்கருவாகக் கொள்வ திலும் நான் பெரிதும் கவனம் செலுத்து வேன். 1957ல் கிழக்கிலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தினை வைத்து எழுதிய “திரும்பி

வருவானா" என்ற கதை மற்றும் வர்ண பேதம், மசக்கை என்ற கதைகள் உண்மை யில் நிகழ்ந்தனவா என்று பலர் என்னிடம் கேட்டு எழுதினர். சிறுகதைகள் நிஜவாழ்க் கையின் பிரதிபலிப்பாக அமைய வேண்டு மேயன்றி யாருடைய சொந்த வாழ்க்கையை யும் வைத்து கதை எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை என்று அவர்களுக்கு நான் பதில் எழுதினேன்.
அன்னை ஆயிஷா நாயகியை வைத்து “அந்தப் பயணம்” என்னும் ஒரு கதையையும் அன்னை செய்னம்பு நாயகி அவர்களை வைத்து ஈர்ப்பு எனும் கதையை யும் முகலாய இளவரசி றஸியாவைப் பற்றி “உறவின் பொருள்” என்ற கதையையும் சரித்திரக் கதைகளாக எழுதியுள்ளேன். சரித்திரம் எனும் போது அரசர்கள், அரசிகள் பற்றி கற்பனைக்கு இடம் கொடுத்து எவ் வளவும் எழுதலாம். ஆனால் ஈர்ப்பு எனும் சரித்திரக்கதை பெருமானார் மகளான செய்னம்பு நாயகியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதில் பெருமானார் வருகி றார்கள். பெருமானர் வரும் இடங்களை மிக விழிப்போடும் அச்சத்தோடும் எழுதி னேன். கதை 1969ல் சிந்தாமணியில் வெளி வந்தபோது பெருந்தொகையான பாராட்டுக் கடிதங்கள் அப்பத்திரிகைக்கு வந்தன. ஒரு மதிப்பு மிக்க மெளலவி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது பாராட்டல்ல; கண்ட னம். பெருமானாரையும் பரிசுத்த அன்னை யையும் வைத்து சிறுகதைகள் எழுதி இப்படி மெலினப்படுத்தலாமா? உங்கள் கதையில் அவர்களும் சரக்கா என்ன? என்று கேட்டு எழுதியிருந்தார். அவருக்கு நான் எழுதிய பதிலில் சிறுகதை என்பது கவிதையைப் போன்று மற்றோர் இலக்கிய வடிவம். அரபு மொழியிலும் தமிழிலும் பெருமானாரைப் பற்றி இலக்கிய நயம்படும் எவ்வளவோ கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றனவே. நான் சிறுகதை என்னும் இலக்கிய வடிவில் பெருமானாரின் மகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கலை வடிவ மாக்கியபோது உங்களுக்கு கோபம் வந்தது ஏன்? என்று அவரைக் கேட்டெழுதினேன்.

Page 119
சிந்தாமணியில் வெளிவந்த ‘ஈர்ப்பு என்ற அந்தக் கதையை மில்லத் என்ற இந்திய மாசிகை மறுபிரசுரம் செய்து கதை யைப் பாராட்டி எனக்கொரு கடிதமும் எழுதி யிருந்தது.
இதுவரை எழுபத்தைந்து சிறுகதை கள் வரை எழுதியுள்ளேன். என் சிறுகதைத் தொகுதியான 'எனக்கு வயது பதின்மூன்று 1977ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது. பாராட்டுப் பெற்ற இன்னும் பல கதைகள் நூலுருப்பெற வேண் டியுள்ளன.
இஸ்லாமிய இலக்கியம்
எனது இலக்கியப் பணியில் இஸ்லா மிய இலக்கிய ஆய்வுகள் 33 முக்கிய இடத் தைப் பெறுகிறது. 1955 முதல் நான் பிரபல இலக்கிய மாசிகையான ஈழகேசரியில் கிழக் கிலங்கை கிராமிய நயம் பற்றியும் சீறாப் புராண கவிநயம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வந்தேன். சீறாப்புராணம் பற்றிய கட்டு ரையில் “பாத்திமா நுதலழகு" என்பது ஒன்று. இக்கட்டுரையை ஈழகேசரியில் வாசித்த மணிவிளக்காசிரியர் ஆ.கா.அ. அப்துல்ஸமது அவர்கள் அதனைத் தன் பத்திரிகையில் மறுபிரசுரம் செய்து மணி விளக்கில் தொடர்ந்து எழுதுமாறு எனக்கு கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளின் படி உமர் காட்டும் உத்தமிகள். உமர் காட்டும் உத்தமர்கள் என்னும் இரு தொடர் களில் சீறாப்புராணத்தில் வரும் பரிசுத்த அன்னையர், உத்தமதோழர்கள் பற்றி எழுதி னேன். பத்துக்கட்டுரைகள் பிரசுரமான போது ஜனாப் அப்துல் ஸ்மது அவர்கள் அவற்றை மிகவும் பாராட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதி யிருந்தார். அக்கடிதத்தில் சீறாப்புராணத் திற்கு விளக்க நூல்கள் எதுவும் இன்றுவரை இல்லாததால் ஈழகேசரியிலும் மனிவிளக்கி லும் வெளிவந்த கட்டுரைகளை எல்லாம் தனக்கு அனுப்புமாறும் அதை ஒரு புத்தக மாக வெளியிடலாம் என்றும் எழுதியிருந்தார். சில மாதங்களின் பின்னர் சீறா இன்பம் என்ற தலைப்பில் 1957ம் ஆண்டு எனது நூல் வெளியாயிற்று. இளம் பருவத்தில்

உபாத்தான என் அன்பின் அன்னைக்கு இந்நூலைப் சமர்ப்பணம் செய்திருந்தமை எனக்கு இன்னும் மனநிறைவைத் தருகிறது. இதனைத் தொடர்ந்து பிறை ஆரிரியர் மதிப் புக்குரிய எம்.அப்துல்வஹாப் சாஹிப் அவர்களின் வேண்டுகோளின்படி இஸ்லாமிய கட்டுரைகளை பிறை இதழிலும் எழுதி வந்தேன். பிறையில் வண்ணக்களஞ்சியப் புலவரின் இராஜநாயகம் பற்றி எழுதலா னேன். அதுவும் வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இக்கட்டுரையின் தொகுப் பொன்றை யூனிவர்சல் பப்பளிசர்ஸ் அல்ஹாஜ் எம்.ஆர்.எம்.அப்துல் றஹீம் அவர்கள் "ஸ"லைமான் பல்கீஸ்” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். எனது இரண்டாவது நூலும் இந்தியாவில் வெளி வந்தது மட்டுமல்ல மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் குறிப்பிட விரும்புகிறேன்.
ஜனாப் அப்துர் ரஹீம் அவர்கள் கேட்டுக் கொண்டதன்படி ஸ"லைமான் பல்கீஸ் நூலை எழுதி அனுப்பி ஒரு மாதம் ஆயிற்று. ஒருநாள் கொழும்பில் ஒரு பிடவைக் கடையில் இருந்து எனக்கொரு பதிவுத்தபால் வந்தது. அதில் அப்துர் றஹீம் அவர்கள் இந்த தொகையை உங்களுக்கு அனுப்பும்படி எழுதியிருந்தார் என்ற கடிதத் துடன் ஐந்நூறு ரூபாவுக்கான ஒரு செக்கும் இருந்தது. அன்று ஒரு பெருந்தொகையை சன்மானமாகப் பெற்ற அந்த சந்தோசம் மறக்க முடியாதது.
இதனைத் தொடர்ந்து மலேசியா “நண்பன்” இதழிலும் சில கட்டுரைகள் எழுதினேன். பல்வேறு இஸ்லாமிய இலக்கிங் களையும் ஆராய்ந்து நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதினேன். அதில் ஒரு தொகுப்பு இஸ்லாமிய இலக்கிய நோக்கு எனும் தலைப்பில் இந்தியாவில் இருந்து வெளிவர இருக்கிறது. சிறுகதை ஆசிரியர் நாவல் ஆசிரியர் என்ற முறையில் இலங்கை யில் எனக்கு எவ்வளவு பிரபலம் உண்டோ இஸ்லாமிய இலக்கிய ஆய்வு சம்பந்தமாக தென்னிந்தியாவில் அவ்வளவு அறிமுகம் எனக்குண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

Page 120
மணிவிளக்காசிரியர் ஆ.கா.அ.அப்துல் சமத் அவர்களது பெயரோடு என் பெயரை மாறி விளங்கிக் கொள்பவர்களும் உண்டு. அவர் பற்றிய செய்திகள் இலங்கைப் பத்திரி கைகளில் வெளிவரும் போது அ.ஸ்.அப்துஸ் ஸமது என்று குறப்பிடுவதும் உண்டு. அவர் லோக் சபைக்கு உறுப்பினராக தெரிவு செய் யப்பட்ட போது கூட இந்தப் பெயர் மாறாட் டம் நிகழ்ந்தது. இது பற்றி நான் அவரது கவனத்திற்கு அறிவித்தபோது நான் லோக் சபை எம்.பி.யாக இருக்கலாம். யூ.என்.ஒ. செயலாளராக இருந்தாலும் உங்கள் நாட்டில் உங்களுக்கு அடுத்த அறிமுகம் தானே எனக்குண்டு என்று நகைச்சுவை யாகக் குறிப் பிட்டார். அவருடைய உறவும் தொடர்பும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வு களை செய்வதற்கு எனக்கு பெரிதும் உதவி யது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
பாடநூல்கள்
எனது இலக்கியப்பணியில் என் சமுதா யத்துக்கான சிறப்பான ஒரு பங்களிப்பை செய்துள்ளேன் என்பதை பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கை சோனக இஸ்லா மிய கலாசார நிலையம் முஸ்லிம் மாணவர் களின் நலன் கருதி முஸ்லிம் பாலர் வாசகம் எனும் ஒரு பாடல் நூல் தொடரை வெளி யிட்டு இருந்தது. பல வருடங்களாகியும் ஐந்தாம் வகுப்புக்கு மேல் அது வளர வில்லை. இதனை அவதானித்த நான் அப் பணியை 1959ம் ஆண்டில் இலக்கியப் பொய்கை எனும் பாடநூல் தொடரை ஆறாம், ஏழாம், எட்டாம் வகுப்புக்கென எழுதி வெளியிட்டேன். இஸ்லாமிய இலக் கியங்களும் தமிழ் இலக்கியங்களும் சமமான அளவில் இடம் பெற்ற அந்நூல் தொடர் இலங்கையெங்கும் முஸ்லீம் பாட சாலைகளில் பேராதரவுடன் உபயோகிக் கப்பட்டது.
இந்நூல் தொகுதிக்கு தினகரனில் மதிப்புரை வழங்கிய தினகரன் உதவி ஆசிரியர் மர்ஹம் எம்.கே.எம்.அபூபக்கர் பின்வருமாறு குறிப்பிட்டார். பாடசாலைகளில் பயிலும் முஸ்லீம் மாணவர்களுக்கு இது
100

காலம் வரை இஸ்லாமிய இலக்கியம் என்று ஒன்று இருப்பதே தெரியாதிருந்தது. இதனை எடுத்துக்கூறும் பாடநூல் இல்லாமையே இதன் காரணமாகும். அந்தக்குறைகளை நீக்கிய பெருமை இளம் எழுத்தாளர் அ.ஸ். அப்துஸ்ஸமது அவர்களுக்கு உரியதாகும். இலக்கியப்பொய்கையின் மூன்று தொகுதி களையும் கண்ணுற்ற எனக்கேற்பட்ட இன்பப் பெருக்கு என்னை அறியாமலே என் கண் களிலிருந்து நீர் முத்துக்களாக வெளி வந்தன.
இதனைத்தொடர்ந்து கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களின் முயற்சியால் க.பொ.த வகுப்புகளுக்கும் இஸ்லாமிய இலக்கியங்கள் பாடநூற்களாக்கப்பட்டன. அது தமிழ் இலக்கியம் ‘ஆ” பாடத்திட்டம் என அழைக்கப்பட்டது. அந்த "ஆ" பாடத் திட்டத்திற்கு விளக்கத்துணை என்ற ஒரு நூலையும் நான் எழுதினேன். இதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய வினாவிடை என்ற நூலையும் எழுதினேன்.
1972ல் நான் எழுதி வெளியிட்ட க.பொ.த. (சா) வகுப்புக்கான “இஸ்லாம் வழிகாட்டி' என்ற நூல் இன்றளவும் மாணவ ரிடையே பெரும் நம்பிக்கையுடன் பயன் படுத்தப்படுகிறது. சில கிறிஸ்தவ, இந்துப் பாடசாலைகளில் படித்த முஸ்லிம் மாணவர் கள் இப்புத்தகத்தை மட்டும் துணைகொண்டு படித்துத் திறமைச் சித்தி பெற்றனர் என்று எனக்கு நன்றிகூறி எழுதியுள்ளனர். இதனை யும் ‘இலக்கிய விளக்கத்துணை' என்ற நூலையும் கல்முனை மணமகள் புத்தக சாலையினர் வெளியிட்டனர்.
நாவல்கள்
எனது எழுத்துப்பணியின் பிற்பகுதியில் தான் நாவலைப் பற்றி நான் கவனம் செலுத் தினேன். நான் வி.ஸ்.காண்டேகர், கே. அப்பாஸ், வைக்கம் முஹம்மது பசீர், ஜெய காந்தன், ரவீந்திரநாத் தாகூர் ஆகியோ ருடைய நாவல்களை விரும்பிப் படிப்பவன். காண்டேகரின் இலக்கிய ஒட்டம், அப்பாஸின் கதைக்கோப்பு, முஹம்மது பசீரின் சமூகப்

Page 121
பார்வை, ஜெயகாந்தனின் எதிர்ச்சிந்தனை, தாகூரின் விடுதலை வேட்கை என்பவை என்னை வெகுவாகக் கவர்ந்தன. எனவே நானும் நாவல் துறையில் ஈடுபட வேண்டும் என்ற எனது ஆர்வம் 1979ம் ஆண்டு வீரகேசரி பிரதேச நாவல் போட்டியில் பங்கு பெறச்செய்தது. அப்போட்டியில் மட்டக்களப்பு பிராந்தியத்தின் சிறந்த நாவலாக எனது ‘பனிமலர் தெரிவாயிற்று. 1982ல் அந்நாவல் வெளியாயிற்று. ஒரு போடியாரின் படித்த மகளை அவருடைய வேளாண்மைக்கூலி யின் மகன் விவாகம் செய்வதில் ஏற்படும் வர்க்கமுரண்பாடு கதையின் கரு. இந்த நாவலை வெகுவாகப் பாராட்டி ‘முதல் நாவலிலேயே வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று எழுதியிருந்தார் வைத்தியக் கலாநிதி நந்தி சிவஞானசுந்தரம்.
அடுத்து 1989ல் 'கனவுப் பூக்கள் என்னும நாவலை (தினகரனில் கண்ணிர்ப் புஷ்பங்கள் என்ற பெயரில் வெளிவந்தது.) கல்ஹின்னை தமிழ் மன்றம் வெளியிட்டது. இதில் கலைத்துறையில் தன்னை முதன்மை யாக ஈடுபடுத்திக் கொண்ட நிஹாறா என்ற பெண் குடும்ப வாழ்வை இரண்டாவதாக மதித்து நிற்பதால் ஏற்படும் சிக்கல்களை விளக்குகிறது நாவல். ஒரு முஸ்லிம் பெண் கணவனுக்கேற்ற ஒரு மனைவியாக இஸ்லாமியப் பாங்கோடு வாழ்வதை விட்டு கலையை இன்பமெனத் தன்னை அர்ப் பணித்து நிற்பது சரியா எனப் பலர் என்னிடம் கேட்டெழுதினர். ‘அதில் சரி பிழை கூற நான் வரவில்லை. நான் யதார்த்தத்தை நேரில் கண்டதை எழுதுகின்றேன். வேண்டுமானால் நீங்கள் மேடையிலும் டி.வியிலும் நடித்தும் பாடியும் நாடகக் கலை யைத் தம்மோடு இணைத்துக் கொண்ட முஸ்லிம் பெண்களிடம் அதைக் கேளுங்கள் அல்லது அவர்கள் இத்துறையில் ஈடுபடாமல் தடுங்கள்” என்று அவர்களுக்குப் பதில் கூறினேன். இஸ்லாமிய பாத்திரங்களை வைத்துக் கதை பின்னும் போது இப்படியான சிக்கல்கள் ஏற்படுவது ஒரு பிரச்சினையாகும்.
இந்து, பெளத்த, கிறிஸ்தவ சமயக்

கோட்பாடுகளையும் தத்துவங்களையும் அறிந்து கொள்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வமுண்டு. அத்துறை சம்பந்தமாக வாசிக்கும் பழக்கமும் எனக்குண்டு. ஆதலால் இந்து, பெளத்த சமயப் பண் பாட்டுக்கூறுகளை வைத்து ஒரு நாவல் எழுத விரும்பினேன். அதுதான் 1987ல் தினகரனில் தொடர்கதையாக வெளியான தர்மங்களாகும் தவறுகள்’ என்ற நாவல். குழந்தைப் பேற்றுக்காகத் தவிக்கும் வசந்தா என்னும் பெண், அதனைத் தனது கணவன் மூலமாககப் பெறமுடியாது என்று அறிந் ததும் வேறெரு நண்பன் மூலம் இரு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். இத்தவறை நிவர்த்தி செய்யப் பின்னர் அவனையே தன் கணவனாக வரித்துகொண்டு செல்கிறாள். இதுதான் கதைக்கரு. தான் செய்தது தனது நிலைமையில் சரியென்று அவள் விவாதிக் கிறாள். இக்கதை வெகுவாகப் பாராட்டுக் களைப் பெற்றது. வாழ்க்கையின் நியதி களோடு போராடி தோற்று அதனை வெற்றி யாக்க நினைக்கும் வசந்தாவின் நிலைப்பாடு சரியோ, பிழையோ என்பது ஒரு புறமிருக்க தன் கணவன் இறந்தபோது தனக்கு வந்த மறுவிவாகக் கோரிக்கைகளையும் மறுத்து பிக்குணியாகச் சென்ற மல்காந்தி என்ற பெண் என்னை வெகுவாகக் கவர்ந்த பாத்திரமாக இக்கதையில் அமைந்து விடு கிறாள்
உருவகக்கதைகள்
ஈழகேசரியிலும் கலைமகளிலும் அப்போது உருவகக் கதைகள் அடிக்கடி வெளிவரும். அவற்றை நான் விரும்பிப் படிப்பேன். வி.ச.காண்டேகரின் ‘அரும்பு மூலம் உருவகக் கதைகளின் அமைப்பை நன்கு தெரிந்து கொண்டேன். உருவகக் கதைகள் சில எழுதவேண்டுமென்ற உணர்வு எனக்கேற்பட்டது. 1959ம் ஆண்டு தினகரன் ஞாயிறு வெளியீட்டில் பசி, கோடரி, மேகத்தின் கண்ணீர் முதலாம் உருவகக் கதைகளை எழுதினேன். இதன் பிறகு இன்றைய தலைமுறையினர் பல்வேறு ஏடு களிலும் உருவகக் கதைகளை எழுதத்
101

Page 122
தொடங்கினர் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. இன்று பிரபல்யம் வாய்ந்து நிற்கும் உருவகக் கதை எழுதும் எழுத்தாளர்கள் பலர் என்னிடமே உருவகக் கதையின் அமைப்புப்பற்றி விளக்கங்களைப் பெற்றனர். இவ்வாறு பெற்ற ஓர் எழுத்தாளர் என்னிடம் விளக்கம் பெற்ற சில வாரங்களுக்குப் பின் ஒரு வாரஏட்டில் “உருவகக் கதை வளர்ச்சி என்று ஒரு கட்டுரையையே எழுதினார். அதில் அ.ஸ. அவர்களும் குறிப்பிடத்தக் களவு உருவகக்கதைகளை எழுதி வருகி றார் என்று குறிப்பிட்டார். நாற்பது உருவகக் கதைகள் வரை எழுதிய நான் அவருடைய அவசர விமர்சனத்தைக் கண்டு அவர்மீது கழிவிரக்கம் கொண்டேன்.
இஸ்லாமியப் பகைப்புலம்
இஸ்லாமிய பண்பாட்டுக் கூறுகளை விளக்குமுகமாக சுமார் 75 சிறுகதைகளை யும் 19 வானொலி நாடகங்களையும் நான் எழுதியுள்ளேன். தமிழிலக்கியத்தில் இஸ்லா மிய என்ற ஒரு பிரிவை ஏற்படுத்துவது சரியா என்று ஒருசாரார் முகத்தைச் சுளித்துக் கொள்வது எனக்குத் தெரியும். மொழி ஒன்றாக இருப்பினும் நம்பிக்கைகள், ஆசாரங்கள், ஒழுக்கசீலங்கள், வாழ்க்கை நடைமுறைகளில் இஸ்லாமியர் வேறுபடு கின்றனர். தமிழர் வரலாறு இவர்களுக்குத் தம் வரலாறு ஆகாது. தமிழர் பாரம்பரியம் முஸ்லிம்களுக்கும் அதுவாகாது. இஸ்லாமி யர் இந்தியாவினை ஆண்டபோது இந்தியா வின் பல்வேறு இனத்தவர்களும் இஸ் லாத்தைத் தழுவினர். அவர்களிடையே அராபியக் கலப்புமுண்டு. எனவே எந்த மொழி அல்லது இனத்தவராக இருந்த போதிலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட போது அவர்கள் எல்லோருமே ஒரு தனி இனமாகின்றனர். எனவேதான் அரசியலில் கூட நாம் தனி இனமென்று நிலைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதுபோல இஸ்லாமிய பண்பாட்டியலுக்கேற்ப நாம் தனி இலக்கிய மொன்றை உருவாக்க வேண்டிய நிலையி லுள்ளோம்.
102)

இஸ்லாமிய இலக்கியம் படைப்பது என்பது கயிற்றில் குடை பிடித்துக் கொண்டு நடக்கும் சர்க்கஸ் பெண்ணின் சாகசத்தைப் போன்றதாகும். இஸ்லாத்தையும் அதன் ஷரீஆ நடைமுறையையும் இஸ்லாமிய வாழ்க்கை அமைப்பையும் நன்கு தெரிந்து கொண்ட பின்னரே இம்முயற்சியில் ஈடுபட லாம். ஈழத்து எழுத்துக்களை எங்களால் விளங்கிக் கொள்ளவில்லை என்று அன்று பகீரதன் கூறியது போல “உங்களது அரபுச் சொற்களையும் சம்பவச் சுருக்கங்களையும் எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சில பத்திரிகை ஆசிரியர்கள் என்னிடம் கூறியிருக்கின்றனர். சொற்களை வைத்துப் பொருள் விளங்க வசனமாக்குவது போல இஸ்லாமிய வாழ்வு முறைகள் கருத்துக் களைத் தமிழ் வாசகரும் புரிந்து கொள்ளும் படி கதை அமைப்பதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். முஸ்லிம்களின் பேச்சு மொழியில் சில சிதைவான வழக்குகளுமுண்டு. திக்கு வல்லை, காலி, அக்குறணை, காத்தான்குடி, பொத்துவில் இன்னோரன்ன ஊர்களில் பலவிதமான மொழிநடைகளையும் முஸ் லிம்கள் கையாளுகின்றனர். இதுவும் தமிழ் வாசகர்களுக்கு ஒரு பிரச்சினையாகும். பொத்துவிலில் ஒரு பெண் மனத்துயரத்துக்கு மனவடிவு' என்ற ஒரு சொல்லைக் கை யாண்டாள். மனம் மடிவு என்பதன் வழக்கு மொழியே அதுவாகும். இவ்வளவு அருமை யான சொல் இவளுக்கு எப்படிக் கிடைத்தது என்று நான் வியந்துபோனேன். அந்தச் சொல்லைக் கையாளவேண்டும் என்ற அவாவினால் அவளது வாழ்க்கை அனுபவம் ஒன்றைக் கருவாகக் கொண்டு மனவடிவு என்ற சிறுகதையொன்றையும் நான் எழுதி யுள்ளேன்.
முஸ்லிம்கள் மதக்கட்டுப்பாடு மீது தளராத நம்பிக்கையுடையவர்கள்.அவர்களு டைய வாழ்க்கை முறைகள் சமுதாய அமைப்பு எல்லாமே ஷரீஆ சட்டங்களினால் அமைக்கப்பட்டது. எனவே ஒரு மதக்கோட் பாட்டைத் தவறாகப்புரிந்து கொண்டு அல்லது சுயேச்சையான முடிவுகளோடு கதை எழுத முடியாது. மதக் கோட்பாடு

Page 123
களைக்கிண்டல் செய்வது, சமுதாய அமைப் பினை எதிர்த்துப்பேசுவது, மதக்கோட் பாடுகளை விமர்சிப்பது இதெல்லாம் இய லாது. பிரபல எழுத்தாளர் ஜே.எம்.சாலி சாயல்' என்ற ஒரு சிறுகதைத் தொகுதியை எழுதியுள்ளார். அத்தனை கதைகளும் ஒவ்வொரு ஹதீஸ் வசனத்தைக் கருப்பொரு ளாகக் கொண்டவை. இது இஸ்லாமியக் கதைகளை எழுதுவதற்கு இலகுவான ஒரு வழியாகும்.
முஸ்லிம்களின் மத்தியில் எத்த னையோ பிரச்சினைகள் உண்டு. சமூகக் குறைபாடுகள் உண்டு. ஒர் இலட்சத்தைச் சீதனமாகப்பெற்றுக்கொண்டு பத்தாயிரம் மஹர் கொடுப்பதில் அர்த்தமென்ன? முறிது கொடுக்கும் மெளலானாமார் சோறு கரைத் துப் பெண்களுக்கு ஊட்டுவதன் சமய நோக்கம் என்ன? மக்கத்துக்குப் போன ஹாஜிமார் அதன் பிறகும் கறுப்பு மார்க்கட் தொழிலை விடவில்லை என்றால் அதன் பொருளென்ன? மிம்பரில் ஏறிக் குத்பா ஒதும் கதீப்மார் வட்டிக்கு கொடுப்பது முறையா னதா? இப்படி எவ்வளவோ குறைபாடுகள் உண்டு. எழுதிவிட்டால் அவன் சமூகத்தின் எதிரியாகி விடுவான். இந்த நிலையில் இஸ்லாமியக் கதைகளை எழுதுவோர் கருப் பொருள்களுக்காகப் பெரிதும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. சீதனக் கொடுமை மோசடி வியாபாரம், கடலில் மீன் பிடிக்கச் சென்ற காதர் அல்லாஹற்வின் திருநாமத்தைச் சொல்லி உயிர்தப்பி வந்த விந்தை.இவற்றை வைத்து எத்தனை நாளைக்கு எழுதுவது. இதனிடையேயும் மருதூர்க்கொத்தன், திக்கு வல்லை கமால், எம்.எல்.எம்.மன்சூர், எஸ்.ஐ. நாகூர்கனி போன்றோர் காத்திரமான சில நல்ல கதைகளை எழுதிவருவது பாராட்டத் தக்கது.
இத்தனை சிரமத்தின் மத்தியில் நான் எனது நாற்பது வருட கால பல்வேறு பணி களிடையே இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த முஸ்லிம்களுடைய வாழ்க்கை நெறி சார்ந்த சிறுகதைகளையும் நாவல் களையும் நாடகங்களையும் எழுதி வருகின்

றேன் என்பதை நினைக்கும்போது ஒரு மன நிறைவு ஏற்படுகின்றது. இஸ்லாமிய சிறுக தைகளின் முன்னோடி என்றும் என்னை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். எனது நீண்ட காலப் பணியைப் பாராட்டிப் பின்வரு புவர்களுடைய நற்கருத்துக்களையும் நான் பெற்றுள்ளேன் என்பதைவிட இந்த நிறை வயதில் என்னால் வேறெதுவும் கூறமுடிய வில்லை.
“அ.ஸ. தீன் தமிழிலும் தீந்தமிழிலும் ஆற்றல் மிக்கவர்” - எம்.எம்.உவைஸ் (தினகரன்)
‘அ.ஸ்.அவர்கள் தனக்குரிய சில கோட்பாடுகளின் அடிப்படையில் எழுதி வருகிறார்.” - ஞானரதன் (களம்)
“நாற்பது ஆண்டு காலமாக இஸ்லா மிய தமிழிலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய மூத்த எழுத்தாளர்” - எஸ்.ஐ.நாகூர்கனி (சிந்தாமணி)
கதைகளில் இஸ்லாமிய வாழ் பண்பாட்டுக்கூறுகளின் விளக்கம் தருபவர்’ - கே.எஸ்.சிவகுமாரன் (தினகரன்)
“இஸ்லாமிய பண்பாட்டினை இலக் கியத்தில் வடிக்கும் அ.ஸ. - முல்லைமணி (Fլք(լpՄՑ)
“ஈழத்து முஸ்லிம்களின் வாழ்க்கை யைப் பின்னணியாக வைத்து முதன் முதலில் சிறுகதை எழுதியவர்” - எஸ்.எம். ஹனிபா (தினகரன்)
‘அ.ஸ.அப்துஸ்ஸமதுவின் இலக் கியப் பணி சிறப்புடையது. கடந்தகால இஸ்லாமிய இலக்கியங்களின் மணத்தை இக்காலத்துக்கேற்ற முறையில் பரப்ப இவர் பெரிதும் பாடுபடுகிறார். - ஆர்.பி.எம்.கனி (இஸ்லாமிய இலக்கிய கருவூலம்)
“அ.ஸ்.தான் படைக்கும் கதைகளில் இஸ்லாமிய வாழ்வும் வளமும் பேணப்பட வேண்டும் என்று முயற்சிப்பதை அவருடைய பலகதைகளின் தொனிப் பொருள்களின் மூலம் அறிய முடிகின்றது. - வை.அஹமத்
(பிறைக்கொழுந்து)
(நன்றி : தினகரன் 18.09.88)
-G103)

Page 124
1வது பூவிழி இதழில் ‘அஸவும் இஸ்லாமிய இலக்கியக் கோட்பாடும் எனும் தலைப்பில் சண்முகம் சிவலிங்கம் எழுதிய கட்டுரைக்கு எழுதிய கருத்துக்கள்
பூவிழி 11ம் இதழில் என் மதிப்புக்குரிய நண்பர் சண்முகம் சிவலிங்கம் அ.ஸ்.வும் இஸ்லாமிய இலக்கிய கோட்பாடும் என்ற ஒரு விமர்சனக்கட்டுரையை எழுதி இருந் தார். என் எழுத்தைக் கருத்திற் கொண்டு தன் எண்ணத்தை எடுத்துக்கூறி விமர்சித்த அவருக்கு என் மதிப்பும் மரியாதையும் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1950ம்ஆண்டு என் 21வது வயதில் என் முதல் கதையான நூர்ஜஹானை எழுதினேன். தொடர்ந்து 59ம் ஆண்டு வரை இஸ்லாமிய வாழ்வியற் கோட்பாடுகளைத் தழுவி முஸ்லிம் பாத்திரங்களை வைத்து நான்எழுதிய கதைகளை விஷயமறியாமல் தான் எழுதியதாக நண்பர் குறிப்பிடுகிறார். இந்திய பத்திரிகைகளில் அப்பொழுது வெளி வந்த பிராமணியக் கதைகளையும, திராவிட சீர்திருத்தக்கதைகளையும் தமிழர் வாழ்வியற் கூறுகளை பிரதிபலிக்கும் கதைகளையும் படித்த உணர்வினால் உந்தப்பட்டே நாம் ஏன் இஸ்லாமிய பாங்கான கதைகளை எழுதக்கூடாது என்று எண்ணி இக்கதை களை எழுதினேன். அப்படியானால் இந்திய எழுத்தாளர்களும் விஷயமறியாமல் எழுதி னார்களா? இன்றுவரை முஸ்லிம் எழுத் தாளர்கள் இஸ்லாமிய பாத்திரங்களை வைத்து இஸ்லாமிய வாழ்வியற் கோட்பாடு கள் தழுவி கதைகள் எழுதுகின்றனர். இரு பத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகு திகளையும் வெளியிட்டுள்ளனர். இவர்களும் இன்னும் விஷயமறியாமல்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்களா?
C104
 

1960ம்ஆண்டுக்குப் பிறகு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோற்றத்தின் காரணமாக மண்வா சனை, யதார்த்தம் முற்போக்கு கண்ணோட்டம் என்ற கருத்துக் களை தழுவி நாம் மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே இந்தக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு சுயபிரக்ஞை யுடன் எழுதத் தொடங்கினார்கள்.
தமிழ் எழுத்தாளர்கள் சரி , அரசியல் வாதிகள் சரி, எப்பொழுதுமே அவர்களைத் தழுவி நாம் எழுதவேண்டும் அவர்களை மையமாகக் கொண்டு நாம் நம் கோட்பாடு களை இயல்பாக்கிக்கொள்ளவேண்டும் என்று கருதுகிறார்கள். மாணிக்ககங்கை புனிதமானது மகாவலிகங்கை வளமானது. இரண்டும் கடலில் கலந்தால் அதன் புனித மெங்கே? வளம் எங்கே? அப்படி நாமும் கலந்துவிடவேண்டும் என்று அவர்கள் விரும்புவதில் எவ்வளவுக்கு நியாயம் உண்டு?
எங்களது சமயக்கோட்பாடுகளும் பண்பாடும் சர்வதேசியமானவை, எங்களது நாகரிகமும் கலாசாரமும் குர்ஆன், ஹதீஸி லிருந்தும் ஷரீஆ சட்டங்களிலிருந்தும் பிறந்தவை. இவற்றை எம்மால் மீறமுடியாது. இந்தத் தனித்துவம் உலகெங்கும் வாழும் முஸ்லிம்களிடையே நாடும் மொழியும் கடந்து நிற்பவை.
இஸ்லாமிய சமுதாயத்திலும் குறை பாடுகள் உண்டு. மிம்பரில் குத்பா ஒதும் மெளலவி வட்டிக்குப் பணம் கொடுக்கிறார். முரீது கொடுக்க வந்த மெளலானா பெண் களுக்கச் சோறுகரைத்துப் பருக்குகிறார். என்பது போன்ற சில குறைபாடுகள் சமூ கத்தில் உண்டுதானே என்று கேட்கிறார் நண்பர் சசி. இக்குறைபாடுகளை வைத்து ஏன் கதைகள் எழுதமுடியாது என்றால் இவை சமயக்கோட்பாடுகளில் அல்லது கோட்பாட்டு மூலகங்களில் உள்ள தவறல்ல தனிமனித குறைபாடுகளே. இவற்றைப்பற்றி எழுதும் எழுத்தாளர்களும் நம்மத்தியில்

Page 125
நிறைய உள்ளனர். எம்.எஸ்.எம்.மன்சூர், எஸ்.ஐ.நாகூர்கனி போன்றோருடைய கதை களை இங்கு குறிப்பிடலாம். ‘அந்தக் கிழவன்’ என்ற எனது கதையிலும் மினரா கட்டிய சிற்பி ஒரு மிடர் தண்ணிருக்காக தவித்து இறந்துபோக அங்கே பிரமாண்ட மான கந்தூரி நடைபெற்றுக் கொண்டிருக் கிறது என்று என் கதையை முடித்தேன். எங்களது சமயக் கட்டுப்பாட்டின் இறுக்கத் தைக் குறிக்கவே நான் அவ்வாறு குறிப்
(SL61.
மாமியிடம் பால் குடித்த ஒரு ஆண் குழந்தை பருவ வயதானதும் மாமி வயிற் றில் பிறந்த பெண்ணை விவாகம் செய்ய முடியாமல் இருப்பது பற்றிய ஷரீஆ கோட் பாடொன்றை வைத்து தங்கை என்னும் ஒரு கதையை எழுதி இருக்கிறேன். இது ஒப்சவர் பத்திரிகையிலும் ஆங்கிலத்தில் பிரசுரமானது இதுபோன்று நான் எழுதிய பல கதைகளை சசி அவர்கள் வாசித்திருந்தால் எமது தனித்துவம் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியம்.
இந்தியாவில் தமிழ்பண்பாடு என்னும் ஆழியில் கலந்து நின்று இலக்கியம் படைக் கும் தூயவன், தமிழினியன், மும்தாஜ் பேகம், போன்ற எழுத்தாளர்கள் விகடன், குமுதம் போன்றவற்றில் பரிசுக்கதைகள் பலவற்றை எழுதி தம்மைத்தாமே அழித்துக் கொள்வது போன்றில்லாமல் வைக்கம் முஹம்மது பஷீர், தோப்பில் மீரான், ஜே.எம்.சாலி போன்றவர்களைப் போல சுய உணர்வுடன் எழுத நான் விரும்புகிறேன்.
இன்று உலகெங்கும் மொழி,இனம் சமயம் என்ற பெயரால் பல அனர்த்தங்கள் பெருகி வருவதை நாம் வருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மையாகும். இதில் எழுத்தாளனின் கடமை பெரிதும் வேண்டப்படுவதாகும்.சமயங்களின் ஒருமைப் பாட்டையும் கலாசாரம், பண்பாடு ஆகிய வற்றின் பொறுமையான உணர்வுகளையும் வலியுறுத்தி நாம் எழுதவேண்டும். எல்லா வீடுகளிலும் கிணறுகள் உண்டு. ஆனால்

தாகம் தீர்க்கும் தண்ணிர் ஒன்றுதான். சமயங்கள் போதிக்கும் தர்மங்கள், தத்துவங் கள் ஆகியனவும் அப்படியே.இந்த உண்மை களை உலகிற்கு எடுத்துக்கூறவேண்டியது அவசியமாகும். அதுபோல பண்பாடு கலாசாரம் என்பனவும் வெவ்வேறு அழகு பொருந்தியவை. ஆனால் ஒரே உணர்வின் வெளிப்பாடுகள் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். இந்த சமரச மனப்பான்மை இன்று பெரிதும் வேண்டப்படுவதாகும். இதைவிட்டு நீங்கள் எங்கள் இனம், நீங்கள் எங்கள் மொழியைப் பேசுகின்றீர்கள் உங்களுக் கென்று ஒரு தனித்துவம் ஆகாது என்று எங்களுக்குப் புத்திசொல்வது குரங்கு அப்பம் நிறுத்த கதையாகத்தான் முடியும்.
இஸ்லாமிய கதைகள் எழுதுவோர் கருப்பொருளுக்காகப் பெரிதும் சிரமப்பட வேண்டிஇருக்கிறது என்று நான் குறிப்பிட்ட தற்குக் காரணம் முஸ்லிம் எழுத்தாளர்களின் கற்பனை, ஆற்றல் குறைபாடே. சமூகம் இயங்கு மட்டும் கதை எழுதமுடியும். மனிதன் வாழுமட்டும் கதைகள் பிறந்து கொண்டே இருக்கும். முஸ்லிம் எழுத்தாளர் களின் கதைத் தொகுதிகளைப் பார்த்தால் சீதனம் ஒன்றுதான் அவர்களுக்குத் தீராத பிரச்சினையாக இருக்கிறது. இதைவைத்து எத்தனை நாட்களுக்கு எழுதுவது. மருதூர்க் கொத்தனின் ‘வெட்டுமுகம் கதை போன்று நீங்களும் ஏன் சிந்தித்து எழுதக்கூடாது என்று எழுத்தாளர்களை நான் கேட்கிறேன். சண்முகம் சிவலிங்கம் என்னை மதிப் பீடு செய்ய முயன்றதற்கு நான் அவருக்கு பெரிதும் நன்றியுடையேன்.அவருடைய கருத் தும் நோக்கும் தமிழ் எழுத்தாளர்கள் என் னைப்பற்றிக் கொண்டுள்ள எண்ண அலைக ளாகும். அவர்களுக் கெல்லாம் என்கட்டுரை ஓரளவு பதிலாக அமையும் என்று நம்புகிறேன். ‘பூவிழி’ இதழ் என்பதிலையும் பிரசுரித்து நல்லதொரு இலக்கியப்பணியைச் செய்தால் நான் பெரிதும் நன்றியுடையேன்
நன்றி : பூவிழி 12
105

Page 126
இலக்கிய உருவகம்
அவள் அழகி, நெஞ்சை அள்ளும் பேரழகி. கலை வளமே தன் அணிகலனாகக் கொண்டவள். காண்போர் உள்ளங்களைக் கவர்ந்து கொள்ளும் இலாவகம் வாய்ந்த ഖണ്.
அவனோ காளைப்பருவம் கழிந்து முதிர்ந்த வாலிபப் பருவம் எய்தியவன். கட்டுறுதி தளராத உடல், பார்ப்போரைக் கவரும் தீட்சண்யமான கண்கள். கம்பீரமாக ஒலிக்கும் குரல், கனிவு நிறைந்த பேச்சு, எவரையும் கவரும் இனிய சுபாவம்
அவள் பெயர் சிலம்பி. அவன் பெயர் ஆனந்தர்
அவள் முத்தமிழ் அழகி. நடன சுந்தரி, கற்பின் நிறைதவறாத காரிகை. இவள் பிறந்த பலனோ என்னவோ இவள் அழகு பற்றியோ கலைத் திறன்பற்றியோ யாரும் அறியார். 1700 வருடங்களாக யாருமறியா மல் யார் யார் வீட்டிலோ முடங்கிக் கிடந் தாள் அவள்.
இவளைப் பற்றி கேள்விப்பட்டார் ஐயர் ஒருவர்.அவர் பரோபகாரி.இவ்வாறு அநாதை யாகக் கிடக்கும் கன்னியர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு வாழ்வளிப்பது இவர் பணி. அவர்களது மங்கள வாழ்வில் இவருக் கொரு மனநிறைவு.
இந்தப் பரோபகாரியான ஐயர் இவ ளைக் கண்டார். மரவுரி தரித்து அஞ்ஞாத வாசம் செய்யப் போன சீதையின் கோலத் தில் இவள் கரந்துறையும் வாழ்வை எண் ணிக் கலங்கினார்.
நடையே மறந்து இத்தனை வருடங் கள் உறங்கிக் கிடந்த அவளுக்கு நடை பயிற்றினார். ஆடையணி பூண்டார். வாகனம் ஒன்றும் வாங்கிக் கொடுத்து 'மகனே உன் பூர்வ பூமியான தமிழகம் இப்பொழுது
C106)
 
 
 

எவ்வாறு மாறி இருக்கிறது தெரியுமா இனி நீ இவ்வாகனத்தில் ஏறி தமிழ் நாடு மட்டு மல்ல.தமிழ் பேசும் உலகெங்கும் சுற்றி வா என்று அனுப்பினார்.
கலாவல்லியான சிலம்பி ஆனந்த உலா புறப்பட்டாள். எல்லோரும் அவள் அழகைக் கண்டு வியந்தனர். அவள் கலை வளத்தைப் பார்த்து மூக்கின்மேல் விரலை வைத்தனர். சிலம்பிக்கு பெருமை தாங்க வில்லை.
தன் அழகையும் நடனபாவங்களை யும் இசைச்சிறப்பையும் தமிழ் இனிமை யையும் தனதாக்கிக் கொண்டு அனுபவிக்க is v & & a 8 8 இவ்வளவும் தனக்கிருந்தும் பயன் என்ன? இந்தக் கவலை அவளை வாட்டியது.
அமளியிற் புரள ஓர் ஆணழகன். கொஞ்சி விளையாட ஒரு குழந்தைச் செல்வம். இந்த இரண்டும் தானே ஒரு பெண்ணின் இன்பவாழ்வு
O
மாலை 5.00 மணி இருக்கும் சிலு சிலு வென்று வீசிய கடற்காற்று உடல் முழுவதையும் தழுவ அக்கட்டழகன் மெரினாக் கடற்கரையில் ஓரிடத்தில் தனியே வீற்றிருந்தான். அவன் வாய்,
பூவார் சோலை மயிலாடப் புரிந்து குயில்கள் இசைபாட காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி,
இந்தப் பாட்டை கம்பீரமாகவும் இராக தாளத் தோடும் இசைத்துக்கொண்டிருந்தது. ஆம் ஆனந்தர் அதனை அழகாகப் பாடிக் கொண்டிருந்தார். அவர்தம் இசைக்கு கடல் அலைகள் தாளம் போட்டுக்கொண்டிருந்தன.
‘சுவாமி’ என்னை அழைத்தீர்களா?

Page 127
இங்கிதமான மெல்லிய குரல் ஒன்று கேட்டுத் திரும்பிப் பார்த்தார் ஆனந்தர்.
காலிற் சிலம்பொலிக்க, கையில் வளை குலுங்க ஆடல் பாவனையொடு ஒரு அழகி ஆனந்தரை நோக்கிச் சிரித்தபடி நின்றாள்.
ஆனந்தர் புன்முறுவல் பூத்தவராக ‘ஆம் உன்னை அழைத்தேன். எனக்கு அடிக்கடி உன் வரவு தேவைப்படுகிறது. ஒரு கட்டழகியை நான் நினைத்த போதெல் லாம் அழைக்கலாமா? என்று யோசிக்கி றேன்.
என்னை நீங்களே மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் போது உங்களிடம் வர எனக்கு தடை ஏது சுவாமி.
அதற்கில்லை நீ மயக்கும் படியான கட்டழகும், செந்நிறமும, ஆடை அலங்கார மும் என்னிடம் இல்லையே. நான் ஒரு துறவி. பார்த்தாலே தெரிகிறதே. தெரிந்து தானே நீங்கள் அழைத்தபோது வந்தேன். காதலிப்பவளுக்கு உண்மை அழகு எது வென்று தெரியும்,நீங்கள் தானே பாடினிகள்.
வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது.
இந்த உள்ளக் கமலத்தையே நான் விரும்புகிறேன் சுவாமி.
சிலம்பி நீ கலா வல்லி அல்லவா? அதனை என்னிடமேகாட்டுகிறாய் அல்லவா? நீ ஒரு துறவியின் மகள். உனக்கேற்ற கணவனும் ஒரு துறவியாக இருக்கவேண்டு மென்று தெரிவு செய்து கொண்டாயா?
அது மட்டுமல்ல சுவாமி நான் புனர் ஜென்மம் எடுத்துப் புறப்பட்ட ஆண்டிலேயே (1892) நீங்களும் ஈழத்துக் கிழக்கே காரை தீவிலே பிறந்தீர்கள் என்பதையும் நான் அறிவேன்.
நான் பூம்புகார் நீங்கள் காரைதீவு. இரண்டும் கடற்கரைப் பட்டினங்களல்லவா? இப்படி எத்தனை ஒற்றுமைகள் நமக்குள்ளே உண்டு.
பெண்கள் நினைத்தால் எப்படியும்

ஆண்களைத் தம் வழிக்கிழுத்து விடுவார்கள் சிலம்பி. சரி நான் இன்று சந்தியா வணக் கத்திற்குச் செல்லவேண்டும்.நான் அழைக் கும் போதெல்லாம் நீ வரவேண்டும் வரட் (6LDIT?
()
ஆனந்தருக்கு கிடைத்த துணை அவரைத் தனியோர் உலகில் சஞ்சரிக்க வைத்தது. வாசிப்பு அறை, பூங்காவனம், பிரார்த்தனை மண்டபம், கடற்கரை, ‘நீ எங்கேயோ நான் அங்கே என்று சிலம்பியும் அவர் நிழலைத் தொடர்ந்தாள்.
ஒரு நாள் ஆனந்தர் தபோவனப் பூங்காவில் உட்கார்ந்திருந்தார். அவ்வளவு தான் சிலம்பி அவர் முன்னே நின்றாள்.
சுவாமி! எனக்கொரு சந்தேகம்.
உன்னைப் பற்றி ஆயிரம் சந்தேகம் எனக்குண்டு. விளங்காமை ஆயிரம் பேறு. இதை யெல்லாம் உன்னிடம் இருந்து தெரிந்து கொள்ள சுவாமி நிற்கிறேன். பெண்களே ஒரு புதிர் என்பார்கள். நீயோ ஆயிரம் புதிர். சரி உன் சந்தேகத்தை முதலில் கேள்.
சுவாமி என தந்தை செங்குட்டுவன் தம்பி இளங்கோ ஒரு துறவி. எனக்கு வழிகாட்டியான கவுந்தியடிகள் ஒரு துறவி. என்கதையின் முடிவில் வரும் மணிமேகலை ஒரு துறவி. என் காதலராகிய நீங்களும் ஒரு துறவி. நான் மட்டும் துறவு பூணாமல் நடனமாடிக்கொண்டிருந்தால் இது அழகா?
ஏன், நீயும் 1700 வருடகாலம் துறவி யாகத் தானே இருந்தாய். அது போதாதா இப்போது உன் நடனமும், நாடகமும், இசையும் இன்பத் தமிழும் எனக்குத் தேவைப்படுகிறது சிலம்பி.அதனை உன்னிட மிருந்து பெற்று என் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகின்றேன்.
சுவாமி! நான் நேற்று உங்கள் அறைப் புக்கம் வந்தேன். அப்போது நீங்கள் என்னை முற்றாகவே கவனிக்கவில்லை. யாழ், வீணை, குழல், கின்னரி, கொக்கரி. என்று தேவாரத்திலுள்ள இசைக் கருவிகள்
C 107

Page 128
பற்றிப்பேசிக் கொண்டிருந்தீர்கள். எனக்குக் கோபம் வந்துவிட்டது. தேவார இசைக் கருவிகள் பிந்தியன. அதுவும் இருபது கருவிகளின் பெயர்கள்தான் உண்டு. நானோ முந்தியவள்.
ஆம், பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை யென முப்பத்தொரு கருவிகள் உன்னிடமுண்டு. இருவேறு காலங்களிலும் உபயோகிக்கப்பட்ட பொதுக்கருவிகள் எவை எவை யென ஆராய்ந்து கொண்டிருந்தேன். சித்திரக்காரன் தீட்டுகிற பெண்களின் படங் களையெல்லாம் பார்த்துச் சிவனுக்கு இத்தனை காதலிகளா என்று எண்ணலாமா?
சுவாமி என்னை மன்னியுங்கள்! என் கருவில் உருவாகி வரும் யாழ் நங்கை இப்புவியில் பிறந்ததும் இசைக்கலை பற்றிய நுட்பங்கள் எல்லாம் வெளிவரும் அவளை இத்தமிழகத்திற்கு அளித்துவிடும் பணி யொன்றே நாம் இருவரும் பிறவி எடுத்ததற் காய பயனாகும்.
சிலம்பி! உண்மையை அறிந்து கொண்டாயா? நல்லது போய்வா.
0
ஒரு நாள் (1937ம் வருடம்) வட இந்தியப் பிரயாணத்திற்காக பெட்டிகள் கட்டிக் கொண்டிருந்தார் ஆனந்தர்.
சிலம்பி வந்தாள். ஆனந்தர் பிரயாண அவசரத்தில் மூழ்கிக் கிடந்தார். அவரைச் சுற்றிப் பெருங் கூட்டமொன்று நின்றது. பிரிவு, மகிழ்வு, அறிவெல்லாம் கலந்த உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
சிலம்பியை அவர் கவனிக்கவேயில் லை. வெகுநேரமாக அவளும் காத்திருந் தாள். இரவு மணி பத்தாயிற்று. மறுநாட் காலை புறப்படும் அவரை எப்படியும் சந்திக் கவேண்டுமென்ற ஆவேசத்தோடு அவள் இருந்தாள்.
ஒருவாறு எல்லோரும் கலைந்து சென்றனர். ஆனந்தர் அப்போதுதான் சாப்பிட ஆயத்தமானார்.
சிலம்பி அவர் அறையினுட் பிரவே சித்து ஒரு மூலையில் ஒதுங்கி நின்றாள்.
108

அவள் கண்கள் பொலபொலவென நீர் சிந்தின. எதுவும் பேசாமல் ஊமையாக நின்றாள்.
சிலம்பி! என்ன இந்த நேரம். ஏன் அழுகிறாய். பரிவுடன் கேட்டார் ஆனந்தர்.
ஒன்றுமில்லை சுவாமி! ஆண்கள் சந்தர்ப் வாதிகள். அவர்களுடைய சகவாசம் வேண்டா மென்று தான் இத்தனை வருடங் களாக ஒரு மூலையில் முடங்கிக்கிடந்தேன். நீங்களோ ஆன்ம ஈடுபாடும் திட சித்தமும் உடையவர். என் கலையழகில் மனம் கொண்டவர். என்னை ஒரு போதும் கைவிடமாட்டீர்கள் என்றுதான் நானும் நம்பி யிருந்தேன்.
உன் நம்பிக்கைக்கு என்ன ஊறு ஏற் பட்டு விட்டது? உன்னை நான் கைவிட்டால் என் வாழ்வின் இலட்சியமே பாழ்பட்டு விடுமே. என் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற உன்னை நான் எவ்வாறு கைவிடலாம்?
அப்போ! உங்களுடைய வடநாட்டுப் பிரயாணம் பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூறப்படாதா?
இராமன் முடிசூடுவது பற்றி கைகேகி க்கு ஒன்றும் தெரியாது மட்டுமல்ல சுபத்திரைக்கும் ஒன்றும் தெரியாது. அதெல் லாம் அரசியல் விவகாரம். முடிசூட்டு வைப வத்திற்கு அனைவரையும் அழைத்துப் போகிற தென்று தசதரன் நினைத்திருந்தான். அதுபோல் நான் உன்னையும்.
போங்கள் சுவாமி எல்லாவற்றையும் உங்களிஷ்டப்படி செய்துவிட்டு எனக்கு உதாரணம் காட்டிச் சமாளிக்கிறீர்கள். ஒரு வார்த்தை என்னிடமும் சொல்லியிருந்தால் என்னவாம்? அதுசரி வட இந்தியாவக்க என் போகிறீர்களாம்!
அது மிக முக்கியமான காரியம் சிலம்பி! இங்கே சென்னையில் இருக்கும் மடம்போல இமாலய சிகரத்திலும் மாயாவதி என்னும் ஒரு மடமிருக்கிறது. அங்கே ‘பிரபுத்த பாரதம்' என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகை நடைபெற்று வருகிறது. அதன் ஆசிரியப்பணியை ஏற்க நான் செல்கின்றேன்.

Page 129
அப்போ நான்.
நீயும் என்கூடவே வரவேண்டியது தான். நீ தான் தேவ கன்னிகையாச்சே. நான் நினைக்கும் நேரத்தில் என்பக்கம் நிற்கும் உனக்கு பிரயாணம் என்ன? ஒழுங் கென்ன? பிரயாணச் செலவோ ஒன்றோ.
நன்றி சுவாமி நேரமாகிறது. நான் வருகின்றேன்.
0
மாலை நான்கு மணி. இமாலய சிகரத்தின் குளிர்காற்று உடலிற்புகுந்து எலும்பையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனந்தர் அதனிற் புலன்படாத வராகப் பாடிக்கொண்டிருந்தார்.
நீல வானிலே நிலவு வீசவே மலை வேளையே மலைவு தீருவோம் சால நாடியே சலதி நீருளே பாலை பாடியே பலரோ டாடுவோம் சுவாமி
சிலம்பி!
என்ன பாடிக்கொண்டிருக்கிறீர்கள். சலதி நீருளே யாரோடு ஆடிக்கொண்டிருக் கிறீர்கள்?
ஓர் ஆணிடம் இந்த இரகசிங்களை யெல்லாம் ஒரு பெண் கேட்கக்கூடாதே சிலம்பி. இந்த விஷயங்களிலெல்லாம் பெண் மடமைக் குணம் உள்ளவளாக இருக்க வேண்டும். அறிவாற்றல் துறைகளில்தான் அவள் ஆண்களோடு போட்டியிடவேண்டும்.
ஆமாம்! ஆண்களுடைய நியாயங் களே இப்படித்தான். மருத நிலத்து ஆடவர் பரத்தையிடம் சேரலாம். அதனால் கணவன் மனைவியரிடையே எழும் பூசல்கள் ஊடல் என்று இலக்கணம் வகுத்தவர்கள் அல்லவா ஆண்கள். நீங்களும் ஒரு பண்டிதர்தானே! உங்கள் நியாயமும் அவ்வாறு தானிருக்கும். என் கருவில் உருவாகும் உங்கள் குழந்தை யைப் பெற்றுத் தருமட்டும் பொறுமையாக

இருக்கிறேன் சுவாமி.
சிலம்பி! கானல் வரியிலே மாதவி யாரை நினைத்துப் பாடினாள்.
அவள் யாரையும் நினைத்திலள். அவளுக்கும் நிகழ்ந்தது அநியாயம். அவர் நம்மையவில் மனம் விட்டுப் போனார் அல்லர்’ என்று கோவலனுக்குப் பதில் பாட்டுத்தான் அவள் பாடினாள். உடனே கோவலன் அவள் தாசி குலத்தவளாயிருந்த காரணத்தினால் அவளைச் சந்தேகித்து 'கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம் வைத்து மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்” பாடினாள் என்று கோவலனே பிரிந்தான்.
அந்தக் கோவலனைவிட நீ அவசரக் காரி மட்டக்களப்பிலே நீரர மகளிர் என இசையெழுப்பும் மீனினம் ஒன்றுண்டு. அந்த இசையில் யாழிசைக் கருவியின் ஐந்தாம் நரம்பின் நிஷாதம் எழுகிறது. அதுபற்றிய பாடல் அது. அதாவது உன் கருவில் உருவாகும் மழலைச் செல்வத்தின் ஒரு தோற்ற வடிவமே அது.
அப்படியா சுவாமி! இன்னுமொரு முறை அதனைப் பாடிக் காட்டுங்கள். நீலவானிலே நிலவு வீசவே. ஆஹா. என்ன லாவகமான இசை.
சிலம்பி உன் முதற்குழந்தையாகிய 'மதங்க சூழாமணி’யைப் பற்றி நீ எப்போதாவது நினைத்திருக்கிறாயா? என்மீது குறை காணுவதொன்றையே எப்பொழுதும் கருத்தில் கொண்டுள்ளாய்.
சுவாமி தனஞ்செயளின் தசரூபம், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் என மற்றிரு தாய்மார் அவளுக்கிருக்கின்றனர். என்னை யும் சேர்ந்து மூவர். அவளுக்கென்ன செல்லப்பிள்ளை. எங்கும் வளர்வாள்.
என்றாலும் உனது சாயலை வெளிப் படுத்தவே மற்றிருவரையும் நான் சேர்த்துக் கொண்டேன். தசரூபம் நாடக இலக்கணம், ஷேக்ஸ்பியர் நாடகம் இவ்விரண்டும் சிலப் பதிகார நாடக உத்திகளுக்கு இயைந்தன என்பதே நூலின் முடிவான பொருள்.
109

Page 130
சுவாமி தமிழ் நாட்டுக்கு அந்நியர் வருகையால் ஏற்பட்ட நஷ்டம் அதிகம். அகத்தியம் பரதம் என்று நாடக நூல்களை யெல்லாம் சமணர்கள் அழித்தனர். இதன் பயன் நீங்களே வடமொழி தசரூபத்தை நாடக இலக்கணமாக ஏற்க வேண்டியுள்ளது. தமிழ் நடனங்களும் அவ்வாறே.
ஆம சுலம்பி! இத்தமிழ்ப் பணிகளை யெல்லாம் செய்து முடிப்பதே நம் வாழ்வின் இலட்சியம். ஆன்மா என்பது தெய்வீக சம்பத்து உடையது. தெய்வம் நமக்குத் தந்த ஆற்றல்களை நாம் சமுதாயதிற்கு அர்ப்பணம் செய்யவேண்டும். சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்.
என்ன சுவாமி! துர்க்காதேவி வணக் கமா? நானும் உங்களோடு சேர்ந்துகொள் ளட்டுமா?
சிலம்பி வா வா! உன்னைத்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேசவேண்டி யன அநேகம் உள.
பேசுங்கள் சுவாமி பேசுங்கள்!
பத்துவருடகாலமாக உருவாகி வரும் நம் செல்வம். யாழ் நங்கையை (யாழ்நூல்) பிரசவிக்கும் காலம் வந்துவிட்டது. கரந்தைத் தமிழ் சங்கத்தார். அதன் பிரசவவிழா' வைச் செய்ய ஆயத்தங்கள் செய்கின்றனர். நாம் விரைவில் அங்கு செல்ல வேண்டும்.
நீங்கள் இந்த அடிமையினை எங்கு எப்போது அழைக்கிறீர்களோ அங்கு அப் போது நான் வருவேன் சுவாமி!
அதுமட்டுமல்ல, என் தாய்த் திருநாட் லிருந்தும் அங்கு வருமாறு எனக்கு அழைப்புக்கள் வருகின்றன. யாழ் நங்கை யைக் கையில் எடுத்துக் கொண்டு நான் தாயகத்திற்குச் செல்லவேண்டும்.
உங்கள் தாயகத்திற்கும் என்னை அழைத்துச் செல்வீர்களா சுவாமி! அங்கு சிங்களவர்கள்தானே அதிகம் வாழ்கின்றனர். அவர்கள் என்னைப் பார்த்து இவள் யார்?

என்று மிரள மிரள விழிப்பார்களே!
என்ன சிலம்பி! வெகுளித்தனமாகப் பேசுகிறாய். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டித் திருவிழா நடாத்திபோது இலங்கை அரசன் கயவாகு அவ்விழாவிற்கு வந்ததாக நீதானே கூறினாய் பின்னர் அவன் இலங்கையிலும் 'பத்தினி தெய்யோ' வுக்கு விழா எடுத்ததாக வரலாறுகள் கூறுகின் றனவே.
அது கண்ணகிக்குத் தானே. நான் கண்ணகி வரலாறு கூறுபவள் தானே.
இன்னும் கேள்! எனது கிராமமான காரைதீவில் கண்ணகியம்முன் கோயில் ஒன்றுண்டு. அங்கே கண்ணகையம்மன் குளுத்தி என்ற வழிபாடு நடைபெறுகிறது.
அப்படியா! நான் அவசியம் ஈழம் வந்து இதையெல்லாம் கண்டுகளிக்க வேண்டும் சுவாமி
நீயோ எடுத்ததற்கெல்லாம் கோபிப் பவள். கண்ணகி கதை கூறுபவள் அல்லவா? அங்கே எனக்கொரு சக்களத்தி இருக்கிறாள். அவள் எனது மற்றொரு காதலி. நீ போய் அவளோடு சண்டை பிடித்துக்கொள்வாயோ என்று பயமாக இருக்கிறது.
சக் களத்தியா? என் கதையே கண்ணகி - மாதவி சக்களத்திக்கதை. இந்த வரலாற்றுக் காவிய வடிவம் செய்யும் எனக்கும் ஒரு சக்களத்தியா சுவாமி! பரவாயில்லை அவள் பெயர்?
“கண்ணகி வழக்குரை" என்பது கோயில் குளுத்தி விழாவின் போது இதைப் படிப்பர். மிக அழகாக இருக்கும்.
அப்போ அவள் மீது உங்களுக் குள்ளது முதலாவது காதல்! என்மீது இரண்டாவது காதல். பரவாயில்லை சுவாமி. நாங்கள் இருவரும் அக்கா தங்கைகளாக ஒற்றுமையாக இருப்போம் நீங்கள் கவலைப்படாதீர்கள்.
சிலம்பியின் கம்பீரமான இவ்வொலி கேட்டு ஆனந்தர் சிரித்தார்
நன்றி - தினகரன் 16.02.1992

Page 131
A Tamil Story transla
SULAIHA sat on the sand strewn compound in front of their house weaving a mat. Her Fingers played deftly among the red, blue, and green reeds. The vermillion of the evening sky creamed her face and enhanced her loveliness.
She resembled a celestial maiden floating on a diamond carpet in a moon milked sea.
Abbas who chanced to pass that way saw Sulaihacaught in the arabesque of the twilight and stood breathless. He could not control his surprise.
Sulaiha was his aunt's daughter. Tillyesterday so to say. Sheran after him calling him - " Machan” They had played together at "kicking at mango seeds”, “catch and run” and other games. They grew up and with them grew.youth
like a curtain separating them.
Unconsciously Abbas walked towards her.
Sulaihasaw him approach and got up suddenly; she drew the saree overher head and adjusted it across her breast.
From where did she acquire all
 

)USSAMAD
ted by: C.V.Velupillai.
this coyness? That sinuous movementin that turn and twist - gave so much to her looks. This was the reward bestowed upon her by youth. Abbas who looked ather with large eyes of wonder thought she had just emerged from one of the caves of Ajanta.
"Sulaiha, you are weaving a mat? Where is grandmother?
She has gone next door
“Young lady. You seem to be alone. All by yourself?
“What does it matter! Surely evil spirits won't catch me'
“You have not only grown up like a creeper but you have also grow bold'
Holding her end of her saree above her nose she laughed. Abbas bent down to look at the mat.
“What a pretty mat! You have woven flowers into it. Who is the lucky fellow that would sleep on it?”
“Any one who pays for it. You could take one free and sleep on it”
“Only me... alone?”
111

Page 132
He winked to himself as he walked away thoughtfully.
Sulaiha felt warm all over. She was sweating. “Cha, what have I done? Why this bantering with a male? Grandmother would give me a telling off if she saw me.”
She reproached herself as she got up form her work.
- UNAWARE -
Sulaiha was in the fullness of her youth, quite unaware of its ache and yearnings for a mate. It had not come to her yet.
Her mother died on the seventh day of her birth. Since then her grandmother brought her up. If her mother were alive she would not have reared her with such tender care and affection. In fact her life was in Sulaiha and she was every thing to the old woman. She taught her whatever little arts and crafts she knew. And Sulaiha's chief occupation at home was weaving mats and baskets...
When Sulaiha went out for a bath, grandmother would follow her to the well.
"Come near child. Let me rub the dirt.'
She would take hold of her, rub the dirt, apply soap and bathe her.
Till grandmother filled her plate with rice and curry and called her in to
ഠ12>-

eat. She would not know what happened in the kitchen.
One day grandmother was in a hurry to go somewhere. “Sulaiha the curry is on the hearth. Temperit please” she said as she walked out.
Suliah sliced a quarter pound of red onions, a handful of green chillies, poured quarterbottle of oil and tempered the curry. That day the third creature in the house, namely the dog, ate it. With all that Suliah was eighteen.
From the day Abbas came to the house her heart was in a flutter. Grand mother's endearments did not go well with her. She was a little disgusted with mat weaving too.
One day when she was dyeing the reeds, first she used green and then forgetfully poured in the red. The whole thing turned into jet black. That had never happened before.....
After three days Abbas came again.
"Grandmother', he called as he came in.
She was his father's mother.
“Come in, myson. Nowyou're all big people - have started to work and earn. You have forgotten grandmother's house.'
"Hereafter, I'll come to see you every day. Father chided me for not coming to see you'

Page 133
After all he's my child' she said with pride and then called out-Sulaiha prepare tea for Machan”
From the kitchen came a half laugh like the broken call of a young fawn. It was like honey to Abbas.
- A SUITOR
Grandmother began to sleeve the whole of Akkaraipattu for a suitor for Suliah. Whatever proposals that came were rejected with the comment - "He's a lazy fellow. He's a bad tempered chap”
Like the prince charming who went in quest of the dream girl the old woman searched for a suitable young man all over. But she never for a moment thought of her grandson, Abbas. Really what was wrong with him. He was a paddy trader and owned a lorry too. A hard working handsome fellow with an equally fine temperament. What better suitor than he? Grandmother's activities made Sulaiha cross. Would people who have butter in the palm go to the market for ghee. It was dotage she thought.
“Umma” said Sulaiha one day“ I don't want marriage or kanthuri. You had better keep quiet”
The old woman did not advise nor retort. "Once upon a time I too said that' she said and walked out of the house.
That was Sulaiha's constant headache.
A similar bother was afoot in

Abbas house.
They were looking out for a bride. "Sister's daughter. Amotherless girl. We must take her for our son'. Such thoughts never occurred to his father. As for Abbas he was determined to marry his aunt's daughter. He had even announced it to his friends. but his father and mother were looking for another bride.
That was Abba's "head - achel'
It was only natural that young men's eyes fall on a pretty girl. Tobacco shop Senithambi, vegetable market Carder, and such others were hovering round Sulaiha. She was frightened that grandmother might give her away to one of them. She had called Abbas her Machan with the same tongue she would not call anyother"Machan'. She had no two faiths but one 'eeman
On an evening Abbas came to his grandmother's place. Luckily Suliah was alone. The sun was setting in the west. In a little while the skies would be over cast with shadows of night. Sulaiha was on the verandah oiling the tin lamps and adjusting their wicks.
"Come' she said in a trembling voice and got up.
"No, you carry on with your work” he said and sat on the swing. He began to speak
"Sulaiha, I know what's going on
113

Page 134
My life depends on you. Tell me what's your wish?”
“Why do you speak so, Machan? Do you think that I have no concern in it? It's fate. That's making this dancel Grandmother is an old woman. But your father; he's my maternal uncle. Yes, like my own father. What has happened to him?'
She began to sob pitifully.
“Suliah you must not cry like a
child. Waittill tomorrow. I'll find away out of it.'
The night came gathering round,
Suliah. She brought the box of matches and tried to light the lamp. Her heart throbbed. Her hands shivered. She could
not even light the lamp.
"I'll come” said Abbas and walked out into the night.
- GROWN BOLD -
Next day Abbas had grown bold. He went to his grandmother.
"Come my son” she greeted faintly.
Before she could spread the mat he sat on the swing.
"Grandmother” he began.
Sulaiha was then by the well. On seeing him her heart began to tremble. She held the barrenpalm by the well and listened to their conversation.
“Why my son have you come like
114

this?'
"Grandmother, there's no need to play hide and seek. I know all that's going on here and at home. Your running round for a suitor for Suliah and their
hunting for a bride is not unknown to me. I don't understand all this?'
The old mother spoke with some
reServe.
“Yes, my son, you must get married and she too must settle down in life.
“Grandmother there's no need to go round and round. Suliah belongs to me and you must give her in marriage to me. The way you look for suitors for Suliah appears that with old age. You have lost your balance of mind.”
Tears came to her eyes.
"I knew long ago such a day as this would come, my son. Allah did not allow us to keep you together and look at you with our eyes.
She began to cry
“Grandmother I don't understand you. What's the matter?
"No, my son. All these days.........
contd.....
Exract from:
The Ceylon Obseber, Wednesday evening December 27, 1961

Page 135
சரித்திர நாடகம்
(கி.பி.712 ஹிஜ்ரி 93ல் சிந்து நாட்டில் ராஜ இலங்கையில் அரசர் அக்ரபோதியும் ஆண் வாழ்ந்த அராபிய வணிகர் ஸைத் இறைய குழந்தைகளையும் இன்னும் சில விதவைக யுடனும் கப்பலேற்றி பஸ்ரா கவர்னர் ஹ அனுப்பிவைக்கிறார். செல்லும் வழியில் சிந்து சூறையாடி அப்பெண்களையும் பிள்ளைக வருகின்றனர். அதன்பின். )
பாத்தி
அராபியப்பெண் ஸல்மா (க சிரியா மன்னர் 1ம் வலித் சிந்து மன்னன் ராஜா உத தளபதி முஹம்மத் பின் கா பஸ்ரா தேசாதிபதி ஹஜ்ஜ மதீனா தேசாதிபதி உமர் இந்தியத் தளபதி அராபிய வீரன் குறுநில மன்னர் இருவ
காட்சி 1
பாத்திரங்கள் : 1. மன்னர் தாஹர். 2. தளபதி.
(மன்னர் தாஹர் சிம்மாசனத்தில் உட்காந்திரு னால் குத்த அது அலறுகிறது. மன்னன் சிரித்த தளபதி அரபுப் பெண்ணுடனும் அவள் கூட் இந்தளபதி அரசே, வணக்கம்!
மன்னன் : (உடன் வருபவர்களை
பிற நாட்டவர்கள் போல்
இந்தளபதி : அரசே! இவர்கள் யவ வருகிறார்கள். நமது நா முகாமிட்டிருந்தனர். நமது செய்தனர். ஈழத்திலிருந் கொண்டு வந்தனர். அத் (கொட்டுகிறான்)
 

ா உதயவீரனும், சிரியாவில் 1ஆம் வலிதும், டு வருகின்றனர். அப்பொழுது இலங்கையில் டியெய்துகிறார். அவருடைய மனைவியையும் ளையும் அரசர் அக்ரபோதி தக்க மரியாதை ஜ்ஜாஜ் பின் யூசூபிக்கு அன்பளிப்புகளுடன்
நாட்டுக் கொள்ளைக் கூட்டத்தினர் கப்பலைச் களையும் நாட்டு மன்னர் முன் கொண்டு
ரங்கள்
கூட்டத்தினருடன்)
பின் அப்துல் மலிக்
ய வீரன் (தாஹர்)
ாஸிம்
ாஜ் பின் யூசுப்
பின் அஸிஸ்
இடம்: தேயல் நகர அரச சபை
3. ஸல்மா (அராபியப்பெண்) கூட்டத்தினருடன்.
நந்தபடி பொம்மைப் புலி ஒன்றை தடியொன்றி படி அதனை இரசித்துக் கொண்டிருக்கிறான். டத்தினருடனும் வருகிறான்)
வியப்போடு நோக்கியபடி) யார் இவர்கள்?
தெரிகிறதே! என்ன விஷேஷம்?
|ன நாட்டவர்களாம்! இலங்கையிலிருந்து ாட்டு தேயல் துறைமுகத்தில் அனுமதியின்றி பாதுகாப்புப் படையினர் இவர்களைக் கைது து நிறைய முத்துக்களும், இரத்தினங்களும் நனையும் பெறுமதியானவை. அரசே! இதோ!
115

Page 136
மன்னன் :
இந்தளபதி:
6m)6OLDIT :
மன்னன்:
தளபதி:
6m)6OLDIT:
மன்னன் :
6m)6OLDIT :
மன்னர் .
6m)6)LDIT:
(உற்சாகமாக நிமிர்ந்து) ஏ அதிர்ஷ்டநாள் சிவப்பு இர அத்தனையும் ஈழத்துச் செல்: காாணமாக முகாமிட்டனர்?
அதைத்தான் நாமும் சந்தேகித்ே காரணமில்லாமல் முகாமிட்டிரு வீணான கற்பனைகள் ஏன், இலங்கையிலிருந்து மக்காவுக்கு கொள்ளைக்காரர்களால் வழி கைம்பெண்தான் நான் (விசும்
என்ன தளபதி இவள் பலே ை கொங்கணத்தில் இவள் கணவ
அரசே, சென்றவருடம் புயலில் இவ்வாறு கூறுகிறாள்! சரித்திர இருக்கிறாள்
(விசும்பலுடன்) சாகசம் செய் கணவரின் துயர் இன்னும் ம இவர்களையும் இலங்கை அர நாடான பஸ்ராவுக்கு அனுப்பி எங்களை விட்டுவிடுங்கள் அ
ஈழத்து மண்ணுக்கு வந்து E ஈழத்து முத்துக்களையும் இர அல்லவா? ஆமாம் அக்ரபோதி ஹாஹற்ஹா! (சிரிக்கிறான்)
அக்ரபோதியின் தயாளத்திற்கு அரசே! அரசர் 1ஆம் வலீதின் ஹஜ்ஜாஜ் இப்னு யூசூபிற்கு தந்தார். இவை ஒன்றும் எம்மு அப்படியா செய்தி அக்ரபோ வளர்த்துக் கொள்கிறானா? ந விஷயம் வேறு பக்கம் திரும் இருமுறை எம் நாட்டின் மீது அவனோடு இந்த ஈழத்து மன் ஈழத்தரசனுக்கு இதுபற்றி எச்சரி பெண்ணே! இப்போது நான் நாட்டவர்களும் வெட்கித் தலை
அரசே! இரு பேரரசுகளின் அனாதைக் கூட்டத்தாரையும் ! கொடுத்து வாங்கும் செயல்
(16)

றாஹற்ஹா! ஹா! இன்று நமக்கு நல்ல தினம், பச்சை மாணிக்கம், வெண்முத்து பங்கள். அதுசரி! இவர்கள் தேபலில் என்ன
தாம். யவன நாட்டவர் நமது எதிரிகளல்லவா? க்கமாட்டார்கள் அரசே!
மன்னவா! என் கணவர் சென்ற வருடம் ஹஜ்ஜுக்காகச் சென்றபோது கொங்கணத்தில் பறி செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது பி அழுகிறாள்)
கக்காரிபோல் அளக்கிறாள்? சென்ற வருடம் ன் கொள்ளைக் காரரால் கொல்லப்பட்டானா?
சிக்குண்ட கப்பலைப் பற்றிய கதையைத்தான் த்தையே மாற்றும் அளவுக்கு சாகசக்கரியாக
ய எதுவுமில்லை. அரசே! இறந்துவிட்ட என் ாறாதிருக்கிறேன். என்னையும் என் போன்ற சர் அக்ரபோதி கப்பலில் ஏற்றி எங்கள் தாய்
வைத்தார். இதுவே உண்மை! தயைகூர்ந்து (βσ!
கணவனை இழந்துவிட்டாலும் பெறுமதியான த்தினங்களையும் ஈடாகப் பெற்றுச் சென்றாய் ரொம்பத் தாராளமானவன் அல்லவா? ஹாஹற்
தம் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, ர் இராசப்பிரதிநிதியாக பஸ்ராவில் இருக்கும்
அன்பளிப்பாக மன்னர் இவற்றை எம்மிடம் pடையதல்ல.
தி உங்கள் மூலம் ராஜரீக உறவைக்கூட ன்று! நன்று! (தளபதியை நோக்கி) தளபதி புகிறது! ஹஜ்ஜாஜ் நம் பரம வைரி முன்னர் படை எடுக்கக் காலாக இருந்தவன் அவன்! னனுக்கு என்ன உறவு வேண்டிக்கிடக்கிறது? க்கை செய்து அறிவியும் (பெண்ணை நோக்கி) உனக்குத் தரும் சன்மானத்தால் இந்த இரு குனிய வேண்டும் தெரியுமா? பேடிப் பயல்கள்
போட்டிக்கு இக்கைம்பெண்ணையும் இந்த லிகொள்ளாதீர்கள்! இது பழிபாவத்தை விலை
LD6irGOTIT?

Page 137
மன்னன் :
6m)6OLDIT
மன்னன் :
ஸல்மா:
தளபதி:
6m)6OLDIT:
மன்னன்:
தளபதி:
காட்சி: 2
பாத்திரங்கள் :
பழியும் பாவமும் பற்றிய இலக்க நீ அதை எனக்கு உணர்த்த
இல்லை, மன்னா! இது வீணா
ஆமாம்! நீ கறபுக்கரசி உனது என்கிறாயோ! அதையும் நான் உன் கூட்டத்தினரையும் எமக் வைக்கப்போகிறேன். அராபியர் கொண்ட நிலை கண்டு உன் இந்திய உபகண்டத்தை அடி இத்தோடு அழியட்டும்! பாரம் கூட்டத்திற்கு 103 வருடங்களில் பணியாது!
ஒரு அபலைப் பெண்ணுடன் வி( அரசே! உங்களை மிகவும் ெ செய்துவிடுங்கள் அரசே!
அரசே! இவர்கள் நம்மிடமிருந் யுத்தத்திற்கு அடிகோலிவிட்டோ
அல்லாஹற் மீது சத்தியமாகக்
ஏற்படாது. எங்கள் தூதர் முஹ எம்மை சிறை செய்வதால் ந அழுகிறாள்)
இந்த நாடோடிக் கற்புச்கரசியின் வேண்டும். அப்போருக்காக நா இவர்களை சிறையில் அடையு
சரி. அரசே! இதன் எதிரொலி செய்வோம்.
1 அரசர் 1ஆம் வலீத். 3 தளபதி முஹம்மது பி
(அரசர் வலீத் கையில் காகிதச் சுருள் ஒன்று ஹஜ்ஜாஜ் நிலைகொள்ளாமல் கைவா6 ஆத்திரமேலிட்டால் அரசரையே பார்த்து நிற்
ஹஜ்ஜாஜ்:
அரசே! இனிமேல் என்னால் பொ மறுக்கின்றன. இந்தச் சீரிய சாம் கிடுகிடுக்கச் செய்த மாமன்னர் பெருவீரத்தையும் அவமதித்துவி. காத்திருக்கிறேன். மன்னா!

ணம் எனக்குத் தெரியும் ஒரு நாடோடியாகிய வந்திருக்கிறாயோ! (எழுந்து அறைகிறான்)
ன பெண்பாவம் (அழுகிறாள்)
தெய்வக் கற்பு என்னைச் சுட்டெரித்துவிடும் பார்க்கத்தான் போகிறேன். உன்னையும் குக் குற்றேவல் செய்யும் அடிமைகளாக களை இந்தியர் குற்றேவலுக்காக அடிமை தேசாதிபதி ஹஜ்ஜாஜ் தலை குனியட்டும்! மைகொள்ள நினைத்த அவன் ஆணவம் பரியப் புகழ்மிகு இந்தியா ஒரு நாடோடிக் உருவான ஒரு சமுதாயத்திற்கு ஒரு போதும்
டுக்கும் இச்சவால் காற்றோடு புலம்புவதாகும். கஞ்சிக் கேட்கிறேன். எங்களை விடுதலை
து தப்பிச் சென்றால் நிச்சயமாக நாம் ஒரு ாம் என்பதை மறக்கக்கூடாது.
கூறுகிறேன். எம்மால் நிச்சயமாக ஒரு போர் ம்மது நபி பேரில் சத்தியமாக கூறுகிறேன். நிச்சயமாக ஒரு போர் வரலாம் (விம்மி
சத்தியம் பலிப்பதையும் நாம் பார்க்கத்தான் மும் ஆவலுடன் காத்திருக்கிறோம்! முதலில்
ങ്കണ.
மியைக் கவனித்து மேற்கொண்டு ஆவன
இடம்; டமஸ்கஸ் அரச சபை
2. தேசாதிபதி ஹஜ்ஜாஜ்
ன் காஸிம்.
டன் மிக்க சந்தோஷமாகக் காணப்படுகிறார். ளை உருவுவதும் உறையிலிடுவதுமாக ]கிறார்)
றுக்கமுடியாது. என் கண்கள் துயில் கொள்ள ]ராஜ்யத்தையும் மேற்குலகம் முழுவதையும் 1ஆம் வலிதையும் புகழ்மிகு அராபியருடைய ட்டான் உதயவீரன். தங்கள் கட்டளைக்காகக்
117

Page 138
மன்னர்:
ஹஜ்ஜாஜ்:
மன்னர் :
ஹஜ்ஜாஜ்:
மன்னர்:
ஹஜ்ஜாஜ்:
மன்னர்:
ஹஜ்ஜாஜ்:
ஹஜ்ஜாஜ்:
LD616OTf:
ஆம்! சிந்து மன்னன் உதயவீர் விளையாடுகிறான். அவன் நட அளவுக்கதிகம் சோதிக்கிறது.
ஆம், அரசே! ஈழத்திலிருந்து கையாட்களான கடற்கொள்ை வருவதைக் கவனிக்கும்படி நாம் கூடக் கவனிக்காமல், அதே 8 நிற்கிறான். அவனுக்குத் தக்க ராஜ்யத்தைக் கட்டியாள்வதில்
சென்ற வருடம் ஈழத்திலிருந் என்ற வணிகரையும் ஏனையோ கொலையும் செய்துவிட்டு அச் கதை கட்டினான். இன்றே மற்றையோரையும் சிறைப்பி விடுகிறான்! இந்த அயோக்கிய
ஆம், அரசே! நம்மைச் கோ6 நமக்கு அன்பளிப்புகள் அனு எச்சரித்திருக்கிறானாம் மடைய
ஹஜ்ஜாஜ் இறுதியாக நடந்து துயரத்தோடிருக்கிறேன்.
என்ன மன்னவா! சொல்லுங்கள் குமுறுகிறது. எனது இரத்தம்
ஸல்மாவையும் அவள் கூட்டத்தி தலைமையில் ஒரு கூட்டத்தை
மன்னன் உதயவீரன் உபைத்து கொன்றுவிட்டு இச்சவாலை அ
(பிரித்துப் படிக்கிறார்) சிரியா படை எடுத்து நன்றாகக் கை உளவு பெற பெண்கள் கூட புத்திசாலித்தனம்தான் என்ன? அ செய்து அனுப்பும் படி கோரி
கட்டும் சிற்றரசர் என்ற நினை குற்றேவல் செய்ய வைத்துள்ே உங்கள் முரட்டுச் செயல்களால் நிறுவக்கனவு கொண்டிருக்கும் ப பிடித்த உமது தேசாதிபதி
சிறைப்பட்டிருக்கும் பெண்களை சவால் விடுகிறேன் - ராஜா உ
என்ன ஆணவம்! என்ன ஏளன
118

ன் நம்மைப் பூனைகள் என்றெண்ணிச் சீண்டி ந்து கொள்ளும் முறை நம் பொறுமையை எதற்கும் ஒரு எல்லையுண்டு. வரும் நம் அராபிய வணிகர்களை அவன் ளக் கூட்டத்தினர் அடிக்கடி கொள்ளையிட்டு கேட்டபோது அவன் நம்மை ஒரு தூசியென்று ாரியம் இன்னும் நடைபெற ஆதரவு செய்து பாடம் கற்பிக்காவிட்டால் நாம் இந்தப் பெரும்
என்ன பெருமை இருக்கிறது?
து மக்காவுக்கு ஹஜ் செய்யவந்த ஸைத் ரையும் கொங்கணத்தில் கொள்ளையடித்துக் கப்பல் புயலால் அடிபட்டு மூழ்கிவிட்டதாக ா அதே ஸைதின் கைம் பெண்ணையும் டித்து வைத்துக்கொண்டு நமக்கு சவால் பனை சும்மாவிடக்கூடாது.
ழைகள் என்றெண்ணி விட்டான் உதயவீரன். |ப்பிவைத்த ஈழத்தரசன் அக்ரபோதியையும் ன்.
துள்ள சம்பவம் தெரியுமா? நான் மிகவும்
ஸ்; எனது தோள் புல்லரிக்கிறது. எனது வாள் கொதிக்கிறது.
னரையும் விடுதலை செய்யும்படி உபைதுல்லா
தூதாக அனுப்பினோமல்லாவா!
1ல்லாவையும் குழுவினரையும் ஒரேயடியாகக் னுப்பி இருக்கிறான். இதை நீரே படியும்!
நாட்டுச் செம்மலே இருமுறை சிந்துமீது ளத்துவிட்டீர் போலும். ஆதலால், மேலும் ட்டம் ஒன்றை ஏவி அனுப்பியுள்ளிர். உம் அதுவும் போதாதென்று அவர்களை விடுதலை கட்டளையிட்டுள்ளிர். நாம் உமக்குக் கப்பம் வோ! உமது நாட்டு அழகிகளை எனக்குக் ளேன். இரு நூற்றாண்டு கால வளர்ச்சியில் ஒரு மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ாவிரனே! உமது நெஞ்சில் அல்லது ஆணவம்
ஹஜ்ஜாஜின் நெஞ்சில் வலுவிருந்தால் ா நீங்களே வந்து மீட்டுச் செல்லலாம் என்று .தயவீரன்.
ம்! உதயவீரன் தனக்குத்தானே தீ மூட்டிக்

Page 139
ஹஜ்ஜாஜ்:
மன்னர்:
ஹஜ்ஜாஜ்:
தளபதி:
ஹஜ்ஜாஜ்:
தளபதி:
காட்சி:3
கொள்கிறான். ஹஜ்ஜாஜ்!
மறக்குலப் பெண்கள் அங்கே இங்கே நாடாண்டு கொண்டி விளையாடுகிறான். நமது வீரத் இனியும் தாமதிக்கமுடியாது யுத்தப்பிரகடனம் செய்யுங்கள்
ஆம்! நமது அரபு நாட்டுட் சிந்திக்கொண்டிருக்கின்றனர். { கலந்துவிட்டது. அந்நீர் சிந்தி தாமதிப்பதற்கும் யோசிப்பதற் வீரனுடைய வாளுக்கு இரைய அப்பூமியிலே இந்திய வீரர்கள் செய்யட்டும் தேசாதிபதி அவர்க
இப்பெரும் காரியத்தை நிறைவு எனது அருமைச் சகோதரரின் ஒப்படைக்கலாம் என்று கருது
தலைவ! புதிதாகப் பதவி ஏற்ற பணியை நிறைவேற்றப் பணி கட்டளையிட்டால் அது எனக்கு போர் அல்ல. மானப்போர். இ நிலைநாட்டுவதை என் கடமை
ஆம் ஸ்பெயினைத் தன் புத் நுஸைர். சமர்க்கந்தை தன் விட பின் முஸ்லிமா. ரோமானிய ச பணியவைத்தார் முஸ்லிம் பின் நம்மை எதிர்கொண்டு அழைக பின் காஸிம் தன் வீரத்தால் நம்பிக்கை எனக்குண்டு. முதலி 4000 வீரர்களை ஆயத்தம அனுப்பிவைப்பேன் . நீங்கள் :
சரி தலைவ! அல்லாஹற் நாடி வெற்றியை அருள்வான். ந
அல்லாஹற்!
பாத்திரங்கள்: 1. தளபதி முஹம்மத் பி
2. மதீனா தேசாதிபதி உ
(படை ஆரவாரத்துடன் அல்லாஹ" அக்பர் ஒருவன் ஓடி வருகிறான்)
Ross

குற்றேவல் செய்ய - மானமுள்ள நாம் நப்பதா? சிந்து மன்னன் நம்மைச் சீண்டி திற்கும் தன்மானத்திற்கும் சவால் விடுகிறான்.
அரசே! தாமதிக்கமுடியாது! உடனே என வேண்டுகிறேன்.
பெண்கள் சிந்து நாட்டிலே கண்ணிர் இந்திய மண்ணிலே அரபு நாட்டு உவர் நீர் ய பூமி அக்கணமே நமக்குரியது. இதில் கும் எதுவுமில்லை. உதயவீரன் நம்நாட்டு ாகும் வரை அப்பெண்கள் கண்ணிர் சிந்திய ரின் இரத்தம் ஆறாக ஓடிப் பிராயச்சித்தம் களே, ஆவன செய்யும்படி ஆணையிடுகிறேன்.
பு செய்யும் பொறுப்பை நமது தேசாதிபதியும் மகனுமாகிய முஹம்மத் பின் காஸிமிடம் கிறேன். அரசே!
பதினேழே வயது நிரம்பிய என்னை இப்பெரும் க்கிறீர்கள். எனினும் மன்னரும் தாங்களும் எளிய காரியமே! இது நாடு பிடிக்கும் ஒரு தை நிறைவேற்றி அராபியரின் கெளவத்தை யாகக் கொள்கிறேன்.
த்தி சாதுரியத்தால் வென்றார் மூஸா பின் ா முயற்சியால் அடிமை கொண்டார் குதையா க்கராதிபத்தியத்தை தன் வைராக்கியத்தால் அப்துல் மலிக். இப்பொழுது கிழக்குலகம் க்கிறது. அவ்வரிசையில் தளபதி முஹம்மத்
சிந்து நாட்டை வென்று வருவார் என்ற ல் 6000 வீரர்களுடன் புறப்படுங்கள். இன்னும் ாக வைத்திருக்கிறேன். தேவையானபோது உடனே புறப்படலாம்.
டினால் இந்த மானபங்கப் போரில் நமக்கு நான் நாளையே புறப்படுகிறேன், இன்ஷா
இடம்: டமஸ்கஸ் இராணுவ முகாம். lன் காஸிம் -மர்பின் அஸிஸ். 3. அராபிய வீரன் ஒருவன்
என்ற வீர ஒலியுடன் புறப்படும்போது வீரன்
119

Page 140
வீரன் :
தளபதி:
ршої:
தளபதி:
உமர்:
தளபதி:
LDf:
வீரர்கள் :
முஹம்மத்:
உமர்:
காட்சி : 4
பாத்திரங்கள் :
தலைவ! அதோ மதீனா தேச நோக்கியே வந்து கொண்டிரு கேட்கிறது)
என்ன விஷேசம்? ஏதும முக்
அஸ்ஸலாமுஅலைக்கும், தள
வ அலைக்குமுஸ்ஸலாம் தே நாடிவரக் காரணம் யாதோ?
விசேடம் ஒன்றுமில்லை. நீங்க நல்வாழ்த்துக்களைத் தெரிவி
உங்கள் நல்வாழ்த்துக்கும் பெ ஹஸ்ரத்
நீங்கள் ஜிகாத் செய்யப் பு வெட்டிக் குவிப்பதல்ல! பயன்படுத்தப்படவேண்டும். உரி கொள்ளப்பட்ட மக்கள் இஸ்ல ஆதரவு, சகிப்புத்தன்மை ஆ கிடைக்கும். சிந்து நாட்டு குழந்தைகளுக்கும் இழைத் உணர்ச்சிவசப்பட்டுள்ள இை அவர்களும் அத்தகைய த விரோதிகள் இஸ்லாத்தை மார்புறத்தழுவி ஏற்றுக்கொள்ளு யில் சிகிச்சை செய்யுங்கள்! பொன்போரோ அல்ல. ஆன்ம மண்ணில் காட்டவேண்டும். இ
அல்லாஹ" அக்பர்! அலலாஹி
இம் மணிமொழிகளைப் பொ உறுதி கூறுகிறேன். ஹஜரத்.
இறைவன் உங்களுக்கு வெற்
1 தளபதி முஹம்மத் 3. சிந்துமன்னன்
(குதிரைகளின் குளம்பொலி, படைட ஆ குறைந்து கேட்கிறது)
முஹம்மத்:
வீரர்களே! நாம் இப்போது நிற்கிறோம். இதே மண்ணி குழந்தைகளும் கண்ணிர் சிந்
120

ாதிபதி உமர் பின் அஸிஸ் வருகிறார். நம்மை க்கிறார். (வேமாக குதிரையின் குளம்பொலி
க்கிய தகவல்களாக இருக்கலாமோ?
ாபதி அவர்களே!
சாதிபதி அவர்களே! இச்சிறுவனை தாங்கள்
ள் புறப்படுமுன் எனது ஆசாங்கை நிறைந்த க்கவே மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்தேன்.
ான்மொழிகளுக்குமாக நான் காத்திருக்கிறேன்.
றப்படுகிறீர்கள். ஜிஹாத் என்பது மாறறாரை
வாள் போர்க் களத்தில் மட்டுமே ங்கள் உன்னத நடத்தை களின் மூலம் வெற்றி ஸ்ாத்தின் பால் ஈர்க்கப்படவேண்டும். அன்பு , கியவற்றின் மூலமே உண்மையான வெற்றி ஆட்சியாளர் முஸ்லிம் விதவைகளுக்கும் துள்ள கொடுமையால் கொதிப்படைந்து )ளஞர் பலர் உங்களோடு வருகிறார்கள். வறுகளைச் செய்துவிடக்கூடாது. உங்கள் ஏற்க முன்வந்தால் அவர்களை மன்னித்து நங்கள். காயமுற்ற எதிரிகளுக்கும் நன்முறை நீங்கள் நிகழ்த்தப்போவது மண்போரோ! ப் போர்! அறப்போர்! இதனை நீங்கள் இந்திய துவே என் அவா.
ற அக்பர்!
ன்னேபோல காப்பேன் என்று உங்களுக்கு
றியை அளிக்க பிரார்த்திக்கிறேன்.
இடம்: தேயல் நகர் எல்லை
2. இந்தியத் தளபதி, அராபிய வீரன்.
ரவாரம், அல்லாஹு அக்பர் ஒலி, வரவரக்
சிந்து நாட்டின் தேபல் பட்டின எல்லையில்
ரில்தான் நம் நாட்டுக் கைம்பெண்களும் திக்கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல.

Page 141
நம்முடைய இரத்தமும் சிந்தப்பே என்று நமது கலீபா கூறினா இஸ்லாத்தின் தூய நெறிகளை ஆயத்தமாவோம். இந்த த வெற்றிதருவான்!
எல்லோரும் : அல்லாஹ" அக்பர்! அல்லா
அ.வீரன் ; அதோ! எதிரிப்படை வருகிற
(யானைகளின் பிளிறல், குதிரைகளின் குளம் நிற்கிறது)
இந்தளபதி: இந்தியாவை யவனர்க்குக் கொ
(வாட்கள் மோதல், படை ஆரவாரம், ஐயோ! வாள்மோதல்)
அ.வீரன்: விடாதீர்கள்! தாக்குங்கள்!! யா
வெட்டுங்கள். (யானைகள் பிளிறுகின்றன. ஒரே அல்லோ
இந்தளபதி ஐயோ! மன்னவா! சரிந்தாயா!
அ.வீரன்: தலைவ! அதோ சிந்து மன்ன
வாளுக்கு இரையாகிவிட்டான்.
முஹம்மத் : விடாதீர்கள் ! தாக்குங்கள்!!
தைரியமாக தாக்குங்கள்!
அ.வீரன்: தலைவ! இந்திய வீரர்கள் பின
முஹம்மத் வேண்டாம், கோட்டையுள் பிரே
காட்சி: 5
பாத்திரங்கள்: 1. தளபதி முஹம்மத் பி
3. அராபிய வீரன்
(அராபிய இசை ஒன்று மங்கலமாகக கேட் கின்றனர். சிறிய ஆரவாரம் தளபதி குதிரை
தளபதி: வெற்றிப் பெருமிதத்தில் திளை எனக்குப் பெருமையாக இரு பூண்டிருக்கும் என்று எண்ண எ சிறைமீட்க வந்த நாம் ஒரு ந காதையை சரித்திரம் ஒரு ே ஆண்டுகளாக மேற்குலகை அ பத்தியத்தை வெற்றி கொண்டு நடந்துகொண்டிருக்கும் இவ்வே தொரு சகுனமாகும்.

ாகிறது. ஆதலால் தான் இம்மண் நமக்குரியது ர், மதீனா கவர்னர் கூறியதுபோல நாம்
ாப் பாதுகாத்து இந்த ஜிஹாத் யுத்தத்திற்கு ன்மானப் போரில் இறைவன் நிச்சயம்
ஹ" அக்பர்!
து!
)பொலி கேட்கிறது. புழுதிப்படலம் வானளாவ
டோம். இம்மண்ணுக்காக உயிர் துறப்போம்!
அம்மா. ம் ம் ம் முனகல், யாஅல்லாஹற்!
னைக்கு மிரளாதீர்கள். அதன் துதிக்கையை
ல கல்லோலம்)
பாவிகளா கொன்று விட்டீர்களே!
னன் ராஜா உதயவீரன் நமது படைவீரன்
அவர்கள் மேலும் பின் வாங்கும் மட்டும்
வாங்கி ஓடுகின்றனர். நாமும் தொடரவா?
வேசியுங்கள்!
இடம்: தேயல் கோட்டை
lன காஸிம் 2. சிற்றரசர் இருவர்
ட்கிறது. வீரர்கள் உற்சாகமாகக் காணப்படு ரயொன்றில் இருந்தபடி பேசுகிறார்.)
த்து நிற்கும் வீரர்களே! உங்களைக் காண நக்கிறது. சிரியா இன்று விழாக்கோலம் ன் மனம் பூரிக்கிறது! சில கைம்பெண்களைச் ாட்டையே அடிமையாக்கிக் கொண்ட வீரக் பொழுதும் மறைத்துவிடமுடியாது. ஆயிரம் டிமை கொண்டிருந்த ரோமானிய சக்கராதி பிரான்சு நாட்டை நோக்கிப் படை எடுப்புகள் ளை நாம் பெற்றுள்ள இந்த வெற்றி நல்ல

Page 142
அ.வீரன்:
தளபதி:
சிற்றரசர் 1:
சிற்றரசர் 2:
தளபதி:
இரு சிற்றரசர்களாம்! உங்கள் லாமா? தலைவ!
தாராளமாக வரச்சொல் நாட காத்திருக்கின்றோம். தளபதி அவர்களே வணக்க சமரசம் செய்து திறை செலு:
நான் சஹற்வான் என்னும் ந விசுவாசத்தைத் தெரிவித்து க மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி! வரவில்லை. இஸ்லாத்தின் தூ எங்களொடு சமாதானமாக எங்கள் வாட்கள் சரணாகதி
(தளபதி குதிரையிலிருந்து இறங்கி, இருவை தைத் தெரிவிக்கிறார்.)
சிற்றரசர் 1:
தளபதி
சிற்றரசர் 2:
தளபதி:
அரா.வீரன்:
தளபதி:
காட்சி : 6
மிக்க நன்றி,தலைவ! உங்களி தையும் நாம் எதிர்பார்க்கவே அடிமைகள் என்றே எண்ணி
தவறு! இஸ்லாத்தில் ஆணை என்பவர், ஆணையிடும் அரச பிரஜையும் இறைவனின் அடி பிறப்பிப்பவர் அல்லர்.
தலைவ! எங்கள் உள்ளம் உ புளகாங்கிதம் கொள்கிறது! இே உங்களுக்காகக் 6) பெற்றுக்கொள்ளவேண்டும். உங்கள் அன்புக்கு மிக்க ஆசனமொன்றில் வைத்தபடி
தலைவ! நம் நாட்டு மாது அம்மையாரும் மற்றையோரு
நாம் அவர்களைக் காண மண்டபத்திற்கே அழைத்துச் ெ செல்கின்றனர்.)
பாத்திரங்கள்: 1. தளபதி முஹம்மத்
2. அராபியப்பெண் ஸ
(தளபதி சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிற
122

ளக் கான வந்திருக்கிறாாகள். அனுமதிகக
புதிய புதிய இந்திய நண்பர்களுக்காகக்
! நான் சரீப்தான் சிற்றரசன். உங்களுடன் ந்த வந்துள்ளேன். ாட்டின் குறுநிலமன்னன். உங்களுக்கு என் ப்பம் கட்ட உடன் பட்டு வந்துள்ளேன். நாம் நிலப்பரப்பை அடிமை கொள்ள இங்கு பநெறிகளை எடுத்துக்கூறவந்தவர்கள். நீங்கள் வாழும் பட்சத்தில் உங்கள் அன்பின் முன் Ֆ|60ւպլb.
ரயும் நெஞ்கோடு அணைத்துத் தன் விசுவாசத்
டம் இவ்வளவு வாத்ஸல்யத்தையும், சமத்துவத் இல்லை. உங்கள் ஆணைக்கு உட்படும் வந்தோம்.
ன இடுபவன் அல்லாஹற் ஒருவனே. கலிபா ரே இல்லை. கலிபாவும் தளபதியும் சாதாரண மைகளே யன்றி ஒருவருக்கொருவர் ஆணை
ங்கள் மார்க்கத்தின் உயர் பண்புகளை அறிந்து தா! மலைநாட்டுத் தேனும், குறிஞ்சிப் பூக்களும் கயுறையாகக் கொண்டுவந்தோம் .
நன்றி. (பொருட்களை சிற்றரசன் முன் வணங்குகிறான்.)
சிரோன்மணி சிறைவைக்கப்படட எUலயா ம் வருகிறார்கள்.
ஆசையோடிருக்கிறோம். அவரை அரச சல்லுங்கள். (அனைவரும் மண்டபம் நோக்கிச்
இடம்: தேயல் அரச மண்டபம்
பின் காஸிம் ல்மா, மற்றும் கூட்டத்தினர் 3. சபையோர்.
ார்.அங்கிருந்த பொம்மைப்புலி அகற்றப்பட்டு

Page 143
பூங்கொத்து ஒன்று சிறிய பச்சிளம் பிறை இருக்கிறது.அரபுப் பெண் வருகிறார். அ6ை
தளபதி:
ஸல்மா:
தளபதி:
ஸல்மா:
தளபதி:
அ.வீரன்
தளபதி:
அ.வீரன்:
தளபதி:
அ.வீரன்:
வருக! வருக! அரபு நாடடுச் ெ
அஸ்ஸலாமு அலைக்கும் தை
வஅலைக்குமுஸ்ஸலாம், அ தாய்மார்களே! (இரு குழந்தைக வைத்துக் கொள்கிறார்) உங் சொரிகின்றன!
மதிப்பிற்குரிய தளபதி அவர்கே புதல்வர்களைப் பெற்றேன். உ நாட்டு வீரர்களைக் காணும் தென்படுகிறீர்கள். தாய்மார்களை நாங்கள் கண்ணிர் சிந்திய இச் ஆக்கிய தளபதி அவர்களே கூலிதரக்கடவன். உங்களது திற பெருமிதம் கொள்ள வைத் அல்ஹம்துலில்லாஹற்! எங்கள் வஸித்துக்கும் நன்றி கூறுகிறே
யாரங்கே அம்மையாரைத் த செய்யுங்கள்.
தலைவ! நமது படைவராகள் கின்றனர்.சிந்து நதியின் தீரத்தி குளுகுளு தென்றற் காற்றிலே கொள்ள வேண்டிய படைப்பல
நண்பனே! கடமை இத்தோடு மு போர் சிந்து மன்னன் தாஹரின் நாம் இஸ்லாத்தின் தூதுவர்க களையும் நாம் கைப்பற்றும் பன இதுவரை இருந்துவரும் கொள்ை யும் நாம் இல்லாமற் செய்ய
தலைவ! உங்கள் திட்டங்க6ை
நமது முதல் வெறறியின் ந நடாத்துவதற்காகவும் முதலில் பணையைச்செய்வோம். அதற்
ஆகட்டும். தலைவ! (சபையே அல்லாஹ அக்பர். அல்லாஹ
தில்

க் கொடிக்கம்பமொன்றுடன் வாஸ் ஒன்றில் ாவரும் எழுந்து மரியாதை செய்கின்றனர்)
சல்வியர்களே! உங்கள் வரவு நல்வரவாகுக!
6)6.
ம்மையாரே! (சைகையால்) அமருங்கள்,
ளை எடுத்து தளபதி நம்மிரு தொடைகளிலும் களைக் காண எம் கண்கள் ஆனந்த நீர்
ள! என் அருமைப் புதல்வர்களே! நான் இரு உண்மையில் நான் இங்கே காணும் அரபு
போது அனைவருமே என் மக்களாகத் ாச் சிறைமீட்க வந்த என் தன்மான வீரர்களே! சிந்துப் பிரதேசத்து மண்ணைத் தம் வசம் ! உங்களது தியாகத்திற்கு இறைவனே மையையும் வெற்றியையும் கண்ணாரக்கண்டு த அல்லாஹவுக்கே நன்றியனைத்தும்! அனைவர் சார்பாகவும் உங்களுக்கும் மன்னர்
60.
க்க முறையில் தாய்நாடு சேர்க்க ஆவன
தாயகம் செல்லவே மனம் கொள்ளா திருக் லே சிறு வீடு கட்டி வாழ்நாளெல்லாம் அதன் இருக்கலாம் என்கின்றனர்.நாம் வைத்துக் ம் என்ன என்பதைத் தெரிவிக்கவேண்டும்.
ழடிந்துவிட்டதாகக் கருதி விட்டீர்! (நம் வாட்ப் தலை கொய்யப்பட்டதுடன் முடிந்தது. இனி $ள் தொடர்ந்து முல்தான், பஞ்சாப் பகுதி வி காத்திருக்கிறது. அத்தோடு இந்த நாட்டில் ளை, கொலை, சாதிப்பாகுபாடு முதலியவற்றை வழி செய்யவேண்டும்.
ள மனமார வரவேற்கிறோம்.
நினைவாகவும், நம் வீரர்கள் தொழுகை தேபலில் ஒரு பள்ளிவாசலைக் கட்டும் கு ஆவன செய்யுங்கள்.
ார்) அல்லாஹ அக்பர், அல்லாஹ" அக்பர், ர அக்பர்!
ரை
நன்றி : மனிவிளக்கு 1973
123

Page 144
(1)
அந்தப் பள்ளி வாச லில் யாரோ அவ்லியா ஒருவர் அடக்கப்பட்டி ருந்தார். அவர் மலை யாளப் பகுதியிலிருந்து வந்தவராம். மவுத்தா கிச் சுமார் நூறு வரு ஷங்களுக்கு மேலா கிறது. அவர் பெரும் கராமாத்துகள் (அற்புதங் கள்) செய்து காட்டினாராம் என்று அக்கிராம மக்கள் பேசிக் கொள்வார்கள். பெயர் பத்றுதீன் அல் கைரி மெள லானா. இந்த மெளலா னா வைப் பற்றி வேறு விபரங்கள் எதுவுமே யாருக்கும் தெரியாது.
அன்று வெள்ளிக ’கிழமை ஜும்ஆ வுக்குப்
பிறகு மரைக்காயமாரின் கூட்ட மொன்று நடைபெற்றது. இதுவரை அவ்லியா அவர்களின் கப்று ஒலைக்குடிசை ஒன்றுக் குள் தான் இருந்தது. கப்றுஸ்தலத்தை வைத்து அழகான முறையில் மக்காம் ஒன்று கட்டவேண்டும் என்பது கூட்டத்தினரின் கருத்து.
சீப் மரைக்காயர் தெளபீக் ஹாஜியார் இது பற்றி விளக்கமொன்று கொடுத்தார். ‘என் உடன்பிறந்தார்களே! நம்முடைய ஆபாக்கள் செஞ்ச இபாதத்தால, இந்த அவ்லியா அவுங்க, நம்முட பள்ளியில் அடக்கப்பட்டிருக்கிறாங்க. கப்றுஸ்தலம் ஒலைக்குடிலுக்குள்ள இருக்கிறதால், மழை யினாலும் வெயிலினாலும் அல்லசல் படுகுது. இவங்கட முனிவு நம்முட ஊருக்கு வராமப் பார்த்துக்கணும். இப்ப நல்லபடியாக ஒரு மக்காம் கட்ட நீங்கெல்லாம் ஒத்து வரக் கேட்டுக்கிறன்."
மரைக்காரின் பேச்சுக்குப் பலத்த ஆதரவு இருந்தது. எல்லோரும் ஒரே குரலில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

‘கட்டாயம் நல்லாச் செய்யனும்” என்று கூறினர். பள்ளிக் காசில் ரூபா இருபத்தையாயிரம் ஒதுக்கப் பட்டு, ஊரிலும் ரூபா இருபத்தையா யிரம் சேர்த்துக் கட்டு வது என்று தீமானமா யிற்று. பள்ளி வாசல் கள், மக்காம்கள் கட்டுவதில் பேர் பெற்ற அக்கரைப்பற்று குலாம் முஹற்பிதீனைக் கொண்டே மக்காம் கட்டுவது என்று ஏற்பாடாயிற்று.
(2)
மறுவாரமே % :ع கட்டடவேலைகள் தொடங்கப்பட்டன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக மக்காம் வளர்ந்து வந்தது. மாதம் மூன்று. ஆறு. அழகான கலைக்கோயிலொன்று அப்பள்ளி வாசலின் பக்கத்தே உருவாயிற்று. குலாம் முஹயிதீன் தனது திறமை அத்தனையையும் உபயோகிக்கு இதைக் கட்டினான்.
இந்தச் சின்னஞ்சிறு இலங்கையிலே குலாம் முஹற்பயிதீன்தான் எத்தனை பள்ளி வாசலையும் மினாராக்களையும் மக்காம் களையும் கட்டிவிட்டான்! அவனுடைய கட்டடங்களைப் பார்த்தால் ஆக்ராவும் கர்டோவாவும் இங்கேயே வந்து விட்டனவோ என்று நினைக்கத்தோன்றும்! இஸ்லாமியக கட்டடக் கலையில் அவனுக்கு அவனே நிகர். நுட்பமான வேலைப்பாடுகள் - அறபு எழுத்துக்களைக் கொண்டு பலவித அலங்கார ரூபங்கள் அமைத்தல் என்பன அவனுக்கு தண்ணிர் பட்டயாடு!
ஆனால் யா னைப் பாகனுக்கு யானை யால தான் சாவு என்பார்கள். கலைஞனுக்கும் கலைதான் அவன்

Page 145
வாழ்வின் எதிரி. கலை என்பது அழகு நிரம்பியதாக மடடுமல்ல, வறுமையும் துன்பமும் நிரம்பி யதாகவும் கலைஞனை வந்தடைகிறது. குலாம் முஹற்பிதீனையும் இக்கலை வஞ்சி யாமல் விடவில்லை. மக்காம் வேலை முழுவதும் பூர்த்தியாயிற்று. மகாமின் முகப்பு உச்சியில் “அல்லாஹ" அக்பர்” என்ற அறபு எழுத்துச் சித்திர மொன்றை சீமந்தியில் செய்து பதிக்கவேண்டி யிருந்தது. ஒவியங்களுக்குக் கடைசியிலே தான் கண் வைப்பார் களாம். அது போல இந்த அலங்கார எழுத்துக்கள் இந்தக் கட்டடத்திற்கே முடிவைப்பது போல.
உயரமான ஏணி ஒன்றிலேறி இவ்வெ ழுத்துக்களை மிகநுட்பமாகப் பொருத்தி மை பூசிக்கொண்டிருந்தான் குலாம். இன்னும் அரை நொடியில் வேலைகள் பூர்த்தி. அதனிடையே ஏணி தவறி குலாம் முஹற்பயிதீன் தலைகீழாகப் பூமியில் விழுந் தான். உயிர்ச்சேதம் இல்லாவிடினும் அவனுடைய உயிர்போன்ற வலது கை முறிந்துவிட்டது. யா அல்லாஹற்! என்றபடி எல்லோரும் வந்து தூக்கினர். ஆஸ்பத் திரிக்கு எடுத்துச்சென்றனர். முடிவு - குலாம் காதிர் வலது கையை இழந்தான். தனது இருபது வருடக் கட்டடக்கலை வாழ்வுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.
தாஜ்மஹாலைக் கட்டிய சிற்பிகள் இது போன்ற பிறிதொரு கட்டடத்தை இனிமேலும் கட்டிவிடக்கூடாது என்பதற்காக மன்னர் ஷாஜஹான் அவர்களுடைய கரங்களை வெட்டிவிட்டதாக சரித்திரத்தில் பொய்க்கதைகளை எழுதிவைத்திருக்கும் புரட்டர்கள் இதையும் அறிந்தால் அப்படித் தான் எழுதியிருப்பார்கள்.
(3)
அஷ்ஷெய்க் பதுறுதீன் அல்கைரி மெளலானாவின் மகத்தவத்தைப் பற்றி இதற்கு முன்னர் எத்தனை பேர் அறிந்திருப் பாங்களோ தெரியாது. இப்போதென்றால் சியாறத்துக்கு வரும் பக்தர்கள் தொகை கண்டி பெரஹராவுக்குப் போவோரையும் மிஞ்சி விட்டது. பிள்ளை கேட்டு நேர்ச்சை

செய்து வருவோர், நோய் நொடிகளுக்கு நேர்ச்சை செய்வோர், தமது விருப்பங்கள் நிறைவேற நேர்ச்சை செய்வோர், இந்தியாதி! பள்ளி நிர்வாகிகள் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி வருடமொரு முறை கந்துளி நடத்த வும் ஆரம்பித்துவிட்டனர். கந்தூரி காலங் களில் தனிப் பஸ்சேவை கூட நடைபெறும். அவ்லியாவின் மகத்துவம் ஊரவர்களுக்குத் தெரிந்தால்தானே நமக்குத் தெரியும். ஆனால் கலைமணம் கமழும் அந்த மக்காம் கட்டடத்தின் மகத்துவம் தான் இத்தனைக்கும் காரணம் என்பது மட்டும் முழு உண்மை.
(4)
அன்று பத்றுதீன் அல்கைரி மெளலா னாவின் ஸியாரத்தில் வருடாந்தக் கந்தூரி. நூற்றுக்கணக்கான கோழிகளும் ஆடுகளும் வெட்டப்பட்டுக் கறி சமைக்கப்பட்டது. மக்காமைச் சுற்றிப் பாதை எங்கும் பலவித கடைகள் எங்கும் சனத்திரள். எள் போட்டால் எண்ணெயாகி விடும். அவ்வளவு கூட்டம். கிராமமக்களுக்கு அன்றுதான் பெருநாள். எங்கும் மகிழ்ச்சிக்குரல். எங்கும் ‘ஓ’ என்ற ஒசை! இப்படி அமர்க்களமாக இருந்தது கந்தூரி விழா.
ஒரு கிழவன். வயது சுமார் எழுபது இருக்கும். மக்காமின் முகப்பில் ஒரு மர நிழலின் கீழ் உட்கார்ந்திருந்தான். வெள்ளை வெளேர் என்று நீண்டு வளர்ந்த தாடி. கூனிக்குறுகிய உடம்பு! புருவக்குழியி னுள்ளே இருந்து மின்னும் சிறிய கண்கள்! இத்தனையும் அவனை, “உலகை நன்கு தெரிந்து கொண்டவன்’ என்று எடுத்துக் காட்டிற்று. அடிக்கடி தன் மங்கிய கண்களை அகல விரித்து மக்காமைப் பார்த்து இரசிப் பான். மறுபுறம் சனங்களைப் பார்ப்பான்! சிறிது நேரத்தின் பின் அவனுடைய கண் களிலிருந்து மளமளவென்று நீர் கொட்டிக் கீழே விழும். மரைக்காயர் ஒருவர் ஓடி வந்து “ஏ, கிழவா! இங்கே இரிக்காத சன நெருக்கத்தில் நசுங்கிப் போவாய்! வேறெங் காவது போ!” என்றார் கிழவன். “பசிக்குது வாப்பா ஏதாச்சும் தா” என்றான். “போ! போ! இந்தப் பசிய எல்லாம் அள்ளிக்கித் தான் இஞ்ச வந்தியா, எழும்பு” என்று கூறி
125

Page 146
விட்டு மற்ற வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டார்.
கிழவன் அங்கு வந்த இன்னுஞ் சிலரிடமும் கேட்டான். யாருக்குமே அவன் குரல் கேட்பதாக இல்லை. வயிற்றைக் கிள்ளும் பசியினுடே சமைக்கப்படும் ஆட்டுக்கறியின் மணம் கம்' எனக் கிழவன் மூக்கில் வந்தடிக்கும் . சோறு சமைக்கப் படும் இடத்துக்குப் போனால் ஏதும் கிடைக் கும் என்ற எண்ணத்தில் ஒரு முறை எழும் பினான். பசிக்களைப்பில் எழவும் முடிய வில்லை. சிறிது நேரத்தில் பசியைச் சற்று மறந்து அந்த அழகிய மக்காமைப் பார்த்து ஒரு முறை தலையை ஆட்டினான். மீண்டும் அவனது.கண்களிலிருந்து நீர் சொட்டியது. உஷ்ணமான பெருமூச்சொன்று நெஞ்சின் ஆழத்திலிருந்து வெளியேறி அதன் பொருள் யாருக்கும் தெரியாதபடி காற்றோடு காற்றாகக் கலந்தது. சிறிது நேரத்தில் தண்ணிர் விடாய் எடுத்தது.
(5)
பின்னேரம் மூன்று மணி. கந்தூரி சோறு எல்லோருக்கும் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்சலைப் பெற்றுக்கொண்டிருந்தார். பொட்டலத்துள்ளி ருக்கும் நெய்ச்சோறு ஆட்டுக்கறி! கோழிக் கால்! இவற்றோடு அத்தனை பேரின் உள் ளங்களும் ஒன்றிவிட்டன.
கிழவன் “வாப்பா! தண்ணி கொஞ்சம் தாங்க வாப்பா” என்றான். யாருக்குமே அவனைப்பற்றி அக்கறை இல்லை
‘வாப்பா தண்ணி”
“தண்ணி”
‘யா அல்லாஹற்!”
கந்தூரி நடந்து கொண்டிருந்தது. இது ஆண்டவனுக்காகவா? அவுலியாக்களுக் காகவா? செல்வந்தர்களின் ஒரு நேரத் தோட்ட விருந்துக்காகவா? பசியால் வாடும் ஏழைகளுக்காகவா? வித்தியாசமின்றி அனைவருக்கும் பங்கிடப்பட்டதா? ஆண்டவ
126

னும், பத்றுதீன் அல்கைரி மெளலானாவும் நல்லபடி மக்காக உடுத்து வந்திருந்தால் நிச்சயமாக இரு பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு போயிருக்கலாம். அந்தோ ஆண்ட வன் அரூபியாகி விட்டான். மெளலானா மறுமையடைந்துவிட்டார். ஏழைகள் சமூகத்தின் பார்வையில் செல்வாக்கிழந்து விட்டார்கள். மிஞ்சியோர்.
கூட்டத்தின் மத்தியில் ஒரு பரபரப்பு. “அந்தக் மரத்தடியில் ஒரு கிழவன் மவுத்தாகிக் கிடக்கிறான். எங்கும் இதே குரல் நிர்வாகிகளுக்குப் பெரும் கோபத்தை மூட்டிவிட்டது. இச்சம்பவம் ‘போயும் போயும் கிழவன் சாவதற்கு இங்கயா வரணும்” என்று அலுத்துக்கொண்டார் ஒரு மரைக்காயர்.
சிலர் கிழவனை அடக்கஞ் செய்யும் பணியில் ஈடுபட்டனர். வருஷத்தில் ஒரு கந்தூரி விழா! அதிலும் ஒரு மவுத்தா? எல்லோருக்குமே கிழவன் மீது கோபந்தான். இடையிடையே கொஞ்சம் உயிர் வருமென் றால் இரண்டு உதையாவது கொடுத்துக் கோபத்தைத் தீர்த்திருப்பார்கள்! பாவம்!
கிழவனின் கையொன்று சொத்தியாக இருந்தது. இதைக்கூட அவர்கள் கவனிக்க வில்லை. எப்படியும் கிழவனைக் கொண்டு போய் அடக்கம் செய்துவிட்டு இரவில் நடக்க விருக்கும் வாணக்காட்சிகளுக்கு வந்துவிட வேண்டும் என்று அவர்கள் மனம் அங்க லாய்த்தது.
புகழ்பெற்ற இந்த மக்காமைக்கட்டி, இலட்சக்கணக்கான மக்களை இங்கு கூடச் செய்து இந்தக் கந்தூரியே நடைபெறு வதற்குக் காரணமாக இருந்த சிற்பி குலாம் முஹற்பயிதீன் - இதே மக்காமுக்கு முன்னால் ஒரு கவளம் சோத்துக்காக கெஞ்சிக் கெஞ்சித் தண்ணிருமின்றி உயிர் நீத்தார் என்பது அவர்கள் யாருக்குமே தெரியாது!
(யாவும கறபனை)
நன்றி : தினகரன் 05-02-1967

Page 147
(O1)
(02)
(03)
(04)
(05)
(06)
(07)
*ஆனாஸானா’ வபாத்தாகி மறுநா கலாசாரப்பேரவை கவிஞர் பாலமுை கொண்ட பண்பாளன் அஸ்.” என்னும் அஞ்சலி செலுத்தியது.
ஆனாஸானா மரணித்து 7ஆம் நாள் கல்வி, ஆசிரியர் பணி, இலக்கிய கட்டுரையொன்றை பிரசுரித்து தமது தன்னையே அர்ப்பணித்த அ.ஸ.அப் அக்கட்டுரையை கவிஞர் அன்புடின் கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் 100 நூலில் நன்றியுடன் மறுபிரசுரம் செய்
ஆனாலானா மரணமாகி 20 நாட்களு அவர்களால் ஆதவன்’பத்திரிகை விரிவுரையாளர் ராஹிலா அவர்கள கட்டுரைகள் எழுதப்பட்டன. நவமன அ.ஸ்.தொடர்பான நினைவுக்கட்டு ‘சமாதானம்' சஞ்சிகையிலும் அ.ஸ.6
இலங்கை வானொலி தேசிய சேவை ‘ஆனாஸானா’ வின் ஆசிரியர் பயிற வானொலி பகுதிநேர அறிவிப்பாளரு குறிப்புகள் வழங்கப் பட்டு அஞ்சலி
ரூபவாஹினி கூட்டுத்தாபனம் நடத்து ஆனாஸானா நினைவு கூரப்பட்டதே வெளியிடப்பட்ட நினைவுக்கவிதையில்
இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ் அவர் எழுதிய 'கைதிக் கூண்டிலே உ முறையாக மறுஒலிபரப்புச் செய்தது.
மூன்றாவது மனிதன்' சஞ்சிகை ஆசிரி எழுத்தாளர் ஆர்வலர்களின் ஒன்றுக ளுப்பிட்டி ‘குருகெதர மண்டபத்தில் பேராசிரியர் சி.மெளனகுரு தலைமை நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.
 

ள் (02-07-2001) இலங்கை தென்கிழக்கு னை பாறுக் எழுதிய ‘பணிவான சுபாவம் கவிதையை பிரசுரமாக வெளியிட்டு கண்ணிர்
தினகரன் வாரமஞ்சரி (07-07-2001) அ.ஸ்.வின் ம், பொது வாழ்க்கை தொடர்பான நீண்ட அஞ்சலியை வெளிப்படுத்தியது. “தமிழுக்குத் துஸ்ஸமது' என்ற தலைப்பில் வெளிவந்த
எழுதி இருந்தார். பின்னர் அதே கட்டுரை வது வெளியீடாக வெளிவந்த ‘மலை ஒளி' யப்பட்டது.
நக்குள் பத்திரிகையாளர் வி.பி.சிவப் பிரகாசம் யிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ால் 'தினகரன்' பத்திரிகையிலும் இரங்கற் வி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் ரைகள் வெளிவந்தன. மருதூர்வாணரின் வுக் கான இரங்கல் இடம்பெற்றிருந்தது.
பயின் “நாள் மகள் அரங்கம்” நிகழ்ச்சியில் ற்சிக் கலாசாலை மாணவரும் , இலங்கை நமான ஒருவரால் அ.ஸ்.பற்றிய நினைவுக் செலுத்தப்பட்டது.
ம் 'உதயதாசனம நகழசசியில் (14-07-2001) ாடு தென்கிழக்கு கலாசாரப் பேரவையினால் ன் ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.
ச்சி ‘ஆனாஸானா' வை நினவு கூர்ந்ததோடு மறுப் புலவர் என்னும் நாடகத்தை மூன்றாவது
(2001-07-03)
யர் எம்.பெளஸர் நடத்திய ‘ஈழத்து இலக்கிய வடல் 2001-08-28, 29ம் திகதிகளில் கொள்
நடைபெற்ற ஒரு இலக்கிய கருத்தரங்குக்கு வகித்தார். கவிஞர் ஏ.இக்பால் ‘ஆனாஸானா'
127

Page 148
(08)
(09)
(10)
(11)
(12)
128
"இலங்கை தெனகிழககு ஆய்வுமையம் பேருரை 2001-08-04 ஆம் திகதி நிலையத்தில் நடைபெற்றது.பேராதனை விரிவுரையாளர் பி.எம்.ஜமாஹிர் தலை தென்கிழக்கு பல் கலைக்கழக பீடாதிப பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் வி.அமீர்தீன் தென் கிழக்கு கலாசார அன்புடீன், சிரேஷ்ட பத்திரிகையா ஆய்வமையத்தலைவர் கவிஞர் இக்ப கவிஞர் பாலமுனை பாறூக் இரங்கல்
அட்டாளைச்சேனை பிரதேச கலை
சங்கம் (04) 2001-08-12 ஆம் நாள் ஒ அஸ்ரஃப் மண்டபத்தில் நடைபெற்றது. “இலக்கிய மாமணி அஸ.அப்துஸ்ஸப எம்.ஏ. உதுமாலெவ்வை அவர்களால் பொருளில் மோகரை நிகழ்த்தப்பட்டது.
கல்முனை பிரதேச செயலக, கலாசார அ.ஸ்.அப்துஸ்ஸமது அவர்களின் மறை கேட்போர் கூட மண்டபத்தில் 2001-08-25, எ.எல்.எம்.பளிஸ் தலைமையில் நடை சிவலிங்கம், கலாநிதி கே.எம்.எச்.கா அலிகான், எஸ்.சிவஜோதி ஆகியோ பாறுாக், ஈழக்குயில் இத்ரீஸ் ஆகியே
அகில இலங்கை முஸ்லிம் லீக் வ சம்மேளன 22 வது ஆண்டு நிறைவு ஆசிரிய தின நிகழ்வில் (13.10.2001) நிகழ்ச்சி இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாண சபையி அ.ஸ்.அப்துஸ்ஸமது நினைவரங்காக அறியவருகிறது.
 

) நடத்திய அஸ். அப்துஸ்ஸமது நினைவுப் அட்டாளைச்சேனை இஸ்லாமிய கலாசார பல்கலைக்கழக மெய்யியல்துறை முதுநிலை மையில் நடைபெற்ற மேற்படி நினைவரங்கில் தி கலாநிதி கே.எம்.எச்.காலிதீன், பேராதனை துறை மெய்யியல் முதுநிலை விரிவுரையாளர் ப் பேரவை இணைச்செயலாளர் கவிஞர் ாளர் வி.பி.சிவப்பிரகாசம், தென்கிழக்கு ால் அலி ஆகியோர் கருத்துரை நிகழ்த்த
கவிதை வாசித்தார்.
இலக்கியப் பேரவை நடத்தும் இலக்கியச் லுவில் அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தில் கவிஞர் அன்புடின் தலைமையில் நடைபெற்ற து நினைவுக் கருத்தரங்கில் வித்தியாஜோதி ஆனாஸானா சில மனப்பதிவுகள் என்ற
ப்பேரவை நடத்திய ‘முதுபெரும் எழுத்தாளர் வையொட்டி இரங்கற்கூட்டம் பிரதேச செயலக ஆம் நாள் நடைபெற்றது. பிரதேச செயலாளர் பெற்ற அக்கூட்டத்தில் கவிஞர் சண்முகம் லிதீன், டாக்டர் எஸ்.நஜாமுதீன், மருதூர் ர் கருத்துரைக்க கவிஞர்கள் பாலமுனை ார் அஞ்சலிக் கவிதைகள் வாசித்தனர்.
ாலிப முன்னணிகளின் அம்பாரை மாவட்ட விழாவின் ஓரங்கமாக நிகழ்ந்தேறிய உலக அ.ஸ.அப்துஸ்ஸமது பற்றிய நினைவு கூரல்
பின் சாஹித்திய விழா 2000 இன்போது ஒரு கருத்தரங்கும் நடைபெறவுள்ளதாக

Page 149
இலங்
அக் / அக்கரைப்பற்று முஸ்லிம்
அக் / அக்கரைப்பற்று முள
அக் / அஸ் ஸிராஜ்
அக் / ஆயிஷா மகளிர் மத்திய
அக் / பள்ளிக்குடியிருப்பு

உதவி:
கலாநிதி.எம்.எம்.தீன்முகம்மட்
வைத்திய கலாநிதி. எஸ்.எம்.ஏ.ஜப்பார்
அல்ஹாஜ்.எஸ்.எல்.எம்.ஹனிபா
ஏ.ஆர்.காரியப்பர்
எம்.ஐ.எம்.றபீக்
வைத்தியகலாநிதி ஜேநவ்பல்
வைத்தியகலாநிதி எம்.எம்.பைஸல்
வைத்தியகலாநிதி ஐ.எல்.சித்தீக்
வத்தியகலாநிதி பீ.அருணகுலசிங்கம்
எம்.எம்.முகமட் தையார்
சட்டத்தரணி எஸ்.எம்.முகையதின்
சட்டத்தரணி ஏ.ஏ.லத்தீப்
வைத்தியகலாநிதி எம்.ஐ.எம்.இக்பால்
வைத்தியகலாநிதி ஏ.எம்.ஜவ்பர்
வைத்தியகலாநிதி எம்.ஏ.எம்யஷிர்
பிறின்ஸ்கோனர்.எஸ்.எம்.முகம்மட்
ஏ.எல்.முபீஸ்
புக்டிபோ எம்.ஏயாறாக்
கை வங்கி, அக்கரைப்பற்றுக் கிளை
மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
ல்லிம் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவு
மகாவித்தியாலயம், அக்கரைப்பற்று
மகாவித்தியாலயம், அக்கரைப்பற்று
அல் - பாயிஷா மகா வித்தியாலயம்
129

Page 150


Page 151


Page 152
இலக்கிய மாமணி அ. ஸ. அப்துஸ்ஸமதுவின் நூ
1. சீறா இன்பம்
2. சுலைமான் பல்கீஸ்
3. கனவுப் பூக்கள் 4. தீன் மாலை 5. முற்றத்து மல்லிகை 6. பிறைப் பூக்கள் 1. இலக்கியப் பொய்கை 8. தமிழ் இலக்கியம் 9. தமிழ் இலக்கிய வினாவிடை 10. எனக்கு வயது பதின் மூன் 11. தர்மங்களாகும் தவறுகள் 12. இஸ்லாம் வழிகாட்டி
இஸ்லாமிய இலக்கிய நோ