கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர் 1949-1974

Page 1


Page 2


Page 3


Page 4
வெளியீ தமிழர் விடுதை
இலண்ட
22- O
 

ட்டாளர்
லைக் கூட்டணி
O ன் கிளை
-2OOO

Page 5
இந்திய விை
நூல் தயாரிப்பு ம மணிே
தபால் பெ 7, cu. 6tair தியாகராய
தொலை ே தொலை ந
ódär 9S5sdo : E-mail : Ma
 

லை ரூ. 300 /=
மற்றும் வடிவமைப்பு
U) O மகலைப் பிரசுரம் ட்டி எண் : 1447, 4), தணிகாசலம் சாலை, நகர், சென்னை - 600 017. Lાઠી : 4342926
5g) : 0091 044 - 434 6082
nimekalai Goeth.net

Page 6
இலங்கைத் தமி
வெள்ளி
முதல் 8-2
DOL
223-O
LANKA TAMIL
SiVer Jubi

ழ் அரசுக் கட்சி
விழா மலர்
ARASU KAD CHI
lee Volume

Page 7


Page 8
உயர்திரு. அ திரு. வி திரு. மு திரு. ே திரு. இ کے) .5])lن
க(
வெளிuபீட்டாளர்
கட்சிப் பொ
சிந்தனைச்சி
தலைமைச்
238, பிர யாழ்ப்
இல
மறுபதிப்பு
தமிழர் விடுத
18, TRYFAN CL{ LFORD
G4
LOND
OO44-2O:

1. அமிர்தலிங்கம்
1. தர்மலிங்கம், பா.உ. , ஆலாலசுந்தரம், பி.ஏ.
காவை மகேசன்
பேரின்ப நாயகம்
ஆவரங்கால் கே. சின்னத்துரை
ருணாநிதி
துச்செயலாளர் :
ற்பி சி. கதிரவேலுப்பிள்ளை, பா. உ.
9o 35o
செயலகம்,
தான வீதி,
பாணம்.
ங்கை)
லைக் கூட்டணி
OSE RED BRIDGE ), ESSEX,
, 5JX
ON, U.K. B-5513808

Page 9


Page 10
(f
புனிதத் தி
தாழ்வுற்று வறு தவறிக்கெட்டுப் பா பழந்தமிழ் ஈழந்தன் தோன்றி - வரலாற் கூறுற்று நின்ற த இணைத்துவைத்து - கொண்டிங்கு வரி நோக்கி - நாம் தமிழ இம்ை, நமது மண் தமி தமிழ்த் தேசிய உ குருதியிலேற்றி - த ஈடிணையற்ற தியாக கட்சியைக் கட்டியெழு கலங்கா நெஞ்சுடன் முப்பதாண்டுகளாக மூச் - "சுதந்திரத் தமிழ் இலட்சியத்தையும், கூ அமைப்பையும் உ முதுபெரும் ஞானி எழுஞாயிறு - தமிழ் செல்வா அவர்களின் இந்த மலரைச் சமர்ப்
 
 

நவடிகளில்.
மை மிஞ்சி விடுதலை ழ்பட்டு நின்றதாமோர் னை வாழ்விக்க வந்து றை எடுத்துக்கூறி - மிழர் குலத்தையே நாமமது தமிழரெனக் ழ்ந்தோரின் நலிவு ர், நமது இனம் தமிழ் ழ் ஈழத் திருமண் என்ற ணர்வைத் தமிழனின் ன்லை மறுப்பினாலும் த்தினாலும் தமிழரசுக் }ப்பி - காந்தீய வழியில் களம்பல கண்டு - சு விடாமற் பணியாற்றி ஈழம்" என்ற புனித ட்டணி என்ற ஒற்றுமை ருவாக்கித் தந்துள்ள " வாராது வந்துதித்த }ர் தந்தை முதறிஞர் புனிதத் திருவடிகளில் பிக்கிறோம்.
ழுவின
RNy

Page 11


Page 12
உள்ளே புகுமு5
எமது இனிய ஈழத் தமிழினமே!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வர பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட 6ே மாக்களாகத் தமிழினம் செயற்படுத்தப்பட் சமுதாயத்தின் ஒளிமிகு தாரகையாக கி தமிழினத்தின் விடிவெள்ளியாக முளைத் சொல்லடியும் பொல்லடியும் பெற்று, செங் யாழ்ப்பாணத்தான் மலையகத்தான் எ உயர்சாதித் தமிழன் தாழ்ந்த ஜாதித் த ஒருங்கிணைத்து மதத்தால் மூவரானா செல்வாவின் வாய்மொழிக்கேற்ப இந்: கொடியின்கீழ் ஒற்றுமைப்படுத்தி தியாகத் வைக்க உயிர்கொடுத்து உணர்வு கொடுத்
இக்கட்சியின் தியாகத்தீயில் புடம்டே விடுதலைப் போராட்டத்திற்காக உயிர் ெ லிருந்து குட்டிமணி, தங்கத்துரை, உமாம தந்தை செல்வா கண்ட கனவான தமி இன்று போராடிக் கொண்டிருக்கும் தம்பி புலிகளுமாகும்.
இப்படியான வரலாறு படைத்த இல மலரை மறுபதிப்பு செய்வதில் தமிழர் கிளையினராகிய நாம் மிகவும் உவகை
இவ்வ
பொ. சிவசுப்பிரமணியன் சி.
செயலாளர்

* உங்களுடன்
"லாறு தமிழினத்தின் அரசியல் வரலாற்றில் பண்டியதொன்றாகும். அரசியல் மதிகெட்டு டிருந்த வேளையிலே இருண்ட ஈழத்தமிழர் ளர்ந்தெழுந்து விடுதலை தவறிக் கெட்ட ததுதான் இந்தப் பேரியக்கம். கல்லடியும் குருதி சிந்தி சிறை நிரப்பி மட்டக்களப்பான் ன்கின்ற பேதங்களைக் களைந்தெறிந்து மிழன் என்று பிளவுபட்டிருந்த தமிழரை லும் இனத்தால் ஒருவர் என்ற தந்தை து கிறிஸ்தவ முஸ்லிம் மக்களை ஒரே தழும்பேற்று தமிழரை வாழ்வாங்கு வாழ த பேரியக்கம் இலங்கைத் தமிழரசுக்கட்சி.
பாட்டு எடுக்கப்பட்ட தங்கங்கள்தான் எமது கொடுத்த தியாகிகள், தியாகி சிவகுமாரனி கேஸ்வரன் ஆகியோரும் இன்று. அன்று eழத் தாயகத்தை நனவாக்கக் களத்தில் பிரபாகரனும் அவரது தமிழீழ விடுதலைப்
ங்கைத் தமிழரசுக் கட்சியின் வெள்ளிவிழா விடுதலை முன்னணியின் இலண்டன்
கொள்கின்றோம்.
ண்ணம்
ழரீநிவாசன் யோகராஜா தலைவர் பொருளாளர்
மற்றும் கிளை உறுப்பினர்

Page 13
இரண்டாவது பதிப்பு - அக்டோபர் 20
鑫 முை
தமிழ் அரசுக் கட்சியின் வெள்ளிவிழா வேண்டியதன் தேவை சொல்லப்படுதல் அவ லிருந்து, தமிழ் மக்களை அரசியல் விடுத வழிநடத்திச் செல்லப்பட்ட வரலாறு இந்: செய்யப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் மறைக்கப்பட்டு அல்லது திரிபுபடுத்தப்பட்டுத் இனங்காண இந்த மலர் உதவும்.
தமிழரசுத் தலைவர்கள் என்ன செய்தார் தலைவர்கள் போராட்டக் களத்தில் முன்னண நடாத்திய போராட்டங்கள், அவ்வேளை பல மரணித்த சம்பவங்கள், சிறைக்கூடங்களில் வைக்கப்பட்ட கொடுமைகள், தலைவர்களோ நடராசனின் வரலாறு, போராட்ட வேளை காதை சிங்கள அரசு ஏவிவிட்ட காடை நையப்புடைத்த சரித்திரம், தாழ்த்தப்பட்ே செயற்பாடுகள் தமது பூர்வீகச் சொத்துக் ஒட்டாண்டியாகிய தலைவர்கள் கதைகள், போராடிய வரலாறு - இன்னோரன்ன பல பதிவு செய்யப்பட்டுள்ளன. சாத்வீக வழிய இம்மலரைப் பார்த்தால் நியாயத்தின் வழி தீர் இன்னும், பல அரசியல் ஆர்வலர்கள், இ வேண்டுதல் செய்தமையும் இந்த இரண்டாவது
இருள் சூழ்ந்த ஆரம்ப காலமும் பணிகளு
தமிழ் அரசுக் கட்சியின் முதற்பணியா ஆளுக்கு வாக்களிப்பது மட்டுமே அரசியலெ எழுப்பி அவர்களுக்கு அரசியல் சொல்லிக் முடங்கிக் கிடந்த அரசியலை வடகிழக்கு நகரங் கட்சியின் பணியை ஆரம்பித்து வைத்தவர் கு. வன்னியசிங்கம், டாக்டர் எம். திருவிள இராசவரோதையம், இ.மு.வி. நாகநாதன், செ.இராசதுரை, ஈபிள்யூ.ஐ.ஏ. அரியநாயகம், வி (பட்டண சபைத் தலைவர்) என்போர் முக்கி

) OO
னுரை
மலரின் இரண்டாவது பதிப்பை வெளியிட சியமெனக் கருதுகிறேன். அரசியல் சூனியத்தி லையை நோக்கி 1949ஆம் ஆண்டிலிருந்து த மலரில் காய்ப்பு உவப்பு இன்றிப் பதிவு போராட்டத்தின் ஆரம்ப கால சரித்திரம் தவறான செய்திகள் பதிவு செய்யப்படுவதை
கள் என்பது புதிய தலைமுறைக்குத் தெரியாது. ரியில் நின்று மக்களை பின் களத்தில் வைத்து டைகளின் தாக்குதலால் பின்னர் தலைவர்கள் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக அடைத்து டு மக்கள் சிறை சென்ற வரலாறுகள், தியாகி காலிமுகத்திடலில் தமிழரசுத் தொண்டனின் -யன் கடித்தெடுத்ததோடு தலைவர்களை டோருக்காகக் கட்சி எடுத்த நடைமுறைச் களையெல்லாம் கட்சிக்காகச் செலவிட்டு சிங்கள அரசோடு தொடர்ந்து விடாமல் வரலாற்றுச் செய்திகளில் பல இந்த மலரில் பில் போராடும் எம்மை விமர்சிப்பவர்கள் ப்புச் சொல்ல உதவும். ந்நூலை மீழ் பதிப்புச் செய்யவேண்டும் என்று து பதிப்பு மலரக் காரணமாகும்.
ரும் க இருந்தது, அரசியல் சூனியத்தில் வாழ்ந்து, ன மயங்கி இருந்த மக்களை, தூக்கத்திலிருந்து கொடுக்கவேண்டிய பணியே. கொழும்பில் ங்களுக்கும் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று கள் வரிசையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ங்கம், டாக்டர் வி. பரமநாயகம், என்.ஆர். அ. அமிர்தலிங்கம், ஆர்.பி. கதிர்காமர், ஏ. அழகக்கோன், வவுனியா ச. சுப்பிரமணியம் கியமானவர்கள். இக்கால கட்டத்தில் வடகீழ்

Page 14
இலங்கையின் பட்டிதொட்டி எல்லாம் த மக்களுக்கு விடுதலை உணர்ச்சி ஊட தூண்களாகவிருந்து உள்ளூர்களில் அரசிய தலைவர்களின் பட்டியல் ஒன்று 3வது பின்
ஆரம்ப கட்டத்தில் தமிழ் அரசுக் கட் அச்சமான அடாவடிச் சூழ்நிலை யாழ்ப்பான முன் எடுத்துச் செல்ல ஒரு கட்சியை ஆரம் 1949 செப்ரெம்பர் 3ந் திகதி நல்லூரில் வி. முத்துக்குமாரு எம்.ஏ. தலைமையில் ஒழுங் நந்திக்கொடி தாங்கிய 250 பேர்வரை கொ ஆரம்பித்து கூட்ட மைதானத்தை அடைந்த அக்கால மாற்றுக் கட்சிப் பாராளுமன்ற அக்கூட்டமேடையைச் சூழ்ந்து அடாவடித்த தொடர்ந்து நவாலியில் பண்டிதர் இளமு சண்முகநாத குருக்கள் தலைமையிலும் சிறி அதன் பின்னர் கு. வன்னியசிங்கம் அவர்கள் ஆசிரியர் பொ. சிவகுரு தலைமையில் ஒழுங்கு வீதியில் நடந்த அக்கூட்டத்தில் 1000க்கு கு. வன்னியசிங்கம் அவர்கள் இந்திய பி கொண்டிருந்த வேளை கோப்பாய் டிஆ குண்டர்கள் கூட்டத்தைக் குழப்ப எடுத்த மு வெற்றி பெறவில்லை. இந்த நிகழ்வின் பின் முடிந்தது.
எனினும் 1952ஆம் ஆண்டு வரை த பத்திரிகைகளில் இரண்டொரு வரிகளில் வரு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ் அ இருட்டடிப்புச் செய்வித்தனர். இதன் காரண உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சுதந்திரன் வார ஏட்டை ஆரம்பித்தார்.
சுதந்திரன் வார ஏடு விடுதலைப் போ அத்தோடு சுதந்திரன் பண்ணையில் வளர் எழுத்தாளர்களாகினர்.
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கை இருந்தது. ஆரம்பகால கட்டத்திலே யாழ்ப் மலைநாட்டவன் என்ற பிரதேச வேறுபாடு ெ குறிப்பாக வடகீழ் தமிழ் மக்களை ஒன்றாக இ அரிய சாதனையாகும். அதுவே பிற்கால முன்னெடுப்புக்கு அத்திபாரமாக அமைந்தது
தமிழர் உரிமைப் பிரச்சனையை இலக் எடுத்துச் செல்லவேண்டிய பணியையும் செய் கட்சியை எதிர்நோக்கியது. தந்தை செல்வா க

மிழ் அரசுக் கட்சிக் கிளைகள் நிறுவப்பட்டு டப்பட்டது. இவ்வகையிலே கட்சியின் ல் விடுதலை உணர்ச்சியை வளர்த்த ஏனைய ரினைப்பாக சேர்க்கப்பட்டுள்ளது.
சியை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியாத எத்தில் நிலவியது. விடுதலைப் போராட்டத்தை பிப்பதுபற்றி ஆலோசனை செய்ய ஒரு கூட்டம்
கைலாசப்பிள்ளையார் கோவில் வீதியில் கு செய்யப்பட்டது. அக்கூட்ட மைதானத்துக்கு ண்ட ஒர் ஊர்வலம் கல்வியங்காட்டிலிருந்து து. அரசியல் விடுதலை முயற்சியை விரும்பாத உறுப்பினர்களும் அவர்களது அடியாட்களும் னம் செய்ததால் அக்கூட்டம் நடைபெறவில்லை. மருகனார் தலைமையில், மாவிட்டபுரத்தில் ய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஆவரங்காலில் ஒர் ஆலோசனைக் கூட்டத்தை செய்தார். ஆவரங்கால் சிவன் கோவில் கிழக்கு நம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ரசா உரிமைச் சட்டம்பற்றி உரையாற்றிக் ர்.ஒ. முருகேசம்பிள்ளை தலைமையில் வந்த பற்சி ஊரவர்கள் குண்டர்களைத் தாக்கியதால் னர்தான் பயமில்லாமல் கூட்டங்களை நடத்த
மிழ் அரசுக் கட்சியின் முயற்சிகள் புதினம் வதும் அபூர்வமாக இருந்தது. தமிழ் மந்திரிகள் ரசுக்கட்சியின் செயற்பாடுகளை வெற்றியோடு ணமாகவே தந்தை செல்வா அவர்கள் தமிழர்
செல்வதற்காகத் தமது சொந்தப் பணத்தில்
ராட்ட உணர்ச்சியை கச்சிதமாக வளர்த்தது. த எழுத்தாளர்கள் பிற்காலத்தில் நாடறிந்த
ள இன்னொரு முக்கிய பணி எதிர்பார்த்து பாணத்தான், மட்டக்களப்பான், வன்னியான், 1றுப்பையும் கசப்பையும் நிரம்ப வைத்திருந்தது. ணைத்த கைங்கரியம் தமிழ் அரசுக் கட்சியின் த்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட
கைத்தீவைச் சுற்றிய ஆழ் கடல்களுக்கப்பால் பவேண்டிய அரசியல் சூழ்நிலை தமிழ் அரசுக் லத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை இந்தியாவில்

Page 15
நன்கு வேரூன்றிவிட்டது. பின்னர் அமிர்தலிங் கால கட்டத்தில் அவர் தனது பதவிவழித் தனி தமிழர் பிரச்சினையை அறியவைத்தார். கனிந் இந்திரா காந்தி 1984ல் வன்முறைக்குப் பலியா அவ்வாண்டே அவரால் தீர்க்கப்பட்டிருக்கும்
ஜனநாயகமும் சாத்வீகமும்
இன்று தமிழர் விடுதலைக் கூட்டணி ச இறுக்கமான பிடிப்புடன் கருமமாற்றுவதற்கு கட்சியை வளர்த்த கண்டிப்பான பாங்கே கா உண்டு.
1957 சிங்கள யூரி எதிர்ப்புப் போராட்ட நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கள பூரீ எழுத் ஒன்று தமிழரசுக் கட்சி வாலிப முன்னண அரசரத்தினம் ஆசிரியர், பழனி, பஸ் நடத்து ஆகியோரால் குண்டு வைத்துத் தகர்க்க போராட்டத்தில் வெடித்த முதலாவது குண்ட எதிர்ப்புக் காட்டியபொழுது அரசரத்தி காயப்படுத்தினார்.
தொடர்ந்து சிங்கள அரசு சிங்கள அனுராதபுரம் எடுத்துச் சென்று அங்கிருந்து தகடு தாங்கிய பஸ்வண்டி, நண்பகல் யாழ் நச அனுராதபுரம் செல்லத் தொடங்கியது. அ நிலையத்தில் வைத்து மண்டைதீவு பாலசி வைத்துச் சேதமாக்கப்பட்டது.
இதனை அறிந்த எஸ்ஜேவி. செல்வநா விளக்கம் கொடுத்தார். அப்பொழுது நான் வ தமிழ் அரசுக் கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்ை எதிர்ப்பதாகவும், உரிமைகளைப் பெறச் சாத்வி வன்முறையின் விளைவு தமிழ் மக்களுக்கு நல் கொண்டு வந்த கதையாக மாறிவிடும்" எ இல்லாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறு பின்னர் வாலிப முன்னணி வன்முறையில் ஈ
வன்முறை மூலம் இழந்த உரிமைகளை யாருக்கும் ஆணை கொடுக்கவில்லை என் தீர்மானத்தில் தனித் தமிழ் ஈழமே முடிந்த மு ஆனால் வன்முறை பற்றிக் கூறவில்லை. 1978 தமிழ் ஈழம்' என்ற வட்டுக்கோட்டைத் தீர்ம
ஆவரங்கால மகாநாடு நடந்துகொண்ட முன்னணியைச் சேர்ந்தவர்கள் சிலர் கூச்சல் நாடிய சமயம் பொதுமக்கள் அவர்கை

ம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த புரிமைகளைப் பயன்படுத்தி அனைத்துலகமும் திருந்த அந்தச் சூழ்நிலையில், பாரதப் பிரதமர் ாமல் இருந்திருந்தால் ஈழத் தமிழர் பிரச்சினை
கொடுத்து வைக்கவில்லை.
த்வீகத்தில் மட்டுமல்லாமல் ஜனநாயகத்திலும் ாஸ்ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் ரணமாகும். இதற்கு வலுவான உதாரணங்கள்
த்தின் பொழுது, கந்தர்மட பஸ் டிப்போவில் து இலக்கத்தகடுடைய அரசாங்க பஸ் வண்டி 1யைச் சேர்ந்த கொக்குவில் அருணாசலம், ார் கார்த்திகேசு சந்திரகாசன், க. சின்னதுரை பட்டது. இதுவே தமிழ் ஈழ விடுதலைப் ாகும். இவ்வேளை காவலுக்கு நின்ற காவலாளர் தினம் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்
ரீ இலக்கத்தகடு எழுதிய பஸ்வண்டிகளை காலையில் புறப்படும் சிங்கள பூரீ இலக்கத் ர் வந்து ஒரு மணி நேரத்தின் பின்னர் திரும்பி ந்த பஸ்வண்டி நண்பகல் யாழ் பஸ்தரிப்பு ங்கத்தாலும் க. சின்னத்துரையாலும் குண்டு
பகம் வாலிப முன்னணியினரை அழைத்து ஒரு ாலிப முன்னணியின் செயலாளராக இருந்தேன். க உடைய கட்சியென்றும், அது வன்முறையை கத்திலேயே நம்பிக்கையுடையதாகவும் கூறினார். லது கொண்டுவரப் புறப்பட்ட நாங்கள், நாசம் ன்று கூறியதோடு, சாத்வீகத்தில் நம்பிக்கை வதே பொருத்தமானதென்றும் கூறினார். அதன் டுபடவில்லை. ப் பெறவேண்டும் என்று மக்கள் எக்காலமும் தே எமது கருத்து. 1977 வட்டுக்கோட்டைத் 2டிபு என்று கூறப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ல் ஆவரங்காலில் நடந்த மகாநாட்டில் தனித் ானம் ஒத்திவைக்கப்பட்டது. ருந்த சமயம், வன்முறையை விரும்பிய வாலிப போட்டபடி கூட்டத்தின் மையப் பகுதியை ள இழுத்துச் சென்று நையப் புடைத்து

Page 16
அனுப்பினார்கள். இது மக்கள் வன்மு என்பதைக்காட்டும்.
தனித் தமிழ் ஈழம்' என்பது பற்றி ஆர. இனக்கலவர சூழ்நிலை காரணமாக நடைபெ
இந்த வரலாற்று நிகழ்வுகள் நாம் வன் வழியிலேயே தமிழர் இன்னல்களைத் வெளிச்சமிடுகின்றன.
தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற (யாழ்ப்பாணம்), எம். பாலசுந்தரம் (கோப்பாய் (ஊர்காவற்றுறை) ஆகியோர் கட்சியின் தத்துவ குரலெழுப்பியபொழுது, அவர்கள் கட்சியிலிரு தேர்தலில் அவர்கள் தமிழரசுக் கட்சியை அவர்களை மக்கள் அந்தகாரத்துள் தூக்கி வீ8 செயற்பாடுகளுக்கு வழங்கிய அங்கீகாரம் மட் புதிய அரசியல் எதனையும் அவர்கள் வி பகிரங்கப்படுத்துகிறது.
வேள்வியில் பலியான தலைவர்கள்
தமிழரசுக் கட்சி பின்னர் தமிழர் விடுதலை போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து பலியாகிய எமது தலைவர்களை நாம் பதிவுசெ மட்டுமல்லாமல் இரண்டாம் மட்டத் தலைவர்க சாத்வீகவழியில் தமிழர் உரிமைகளை மீட்டெ அரசியற் படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்ட
அவர்கள் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த
உப தலைவர் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 14-03-2000

றையை எப்பொழுதும் விரும்பவில்லை
ாய 1983ல் மன்னாரில் கூட்டப்பட்ட கூட்டம் றவில்லை.
முறை வழியில் செல்லாமல் என்றும் சாத்வீக தீர்க்கப் போராடவேண்டும் என்பதை
உறுப்பினர்களாகிய எவ்.எக்ஸ், மாட்டின் ), ஏ.சிவசுந்தரம் (கிளிநொச்சி), வி. நவரத்தினம் ங்களையும் செயற்பாடுகளையும் புறக்கணித்துக் நந்து வெளியேற்றப்பட்டார்கள். அடுத்து வந்த எதிர்த்துப் போட்டியிட்டார்கள். ஆனால் சினார்கள். இது மக்கள் தமிழ் அரசுக்கட்சியின் டுமல்ல, ஈழத் தமிழர் சார்பில் வைக்கப்படும் பரவேற்க விரும்பவில்லை என்பதனையே
க் கூட்டணியாக மிளிர்ந்து தமிழ் ஈழ விடுதலைப் நடாத்திய காலத்தில் வன்முறை அரசியலுக்குப் ய்வது கடமையாகும். முதல் மட்டத் தலைவர்கள் ளும், ஜனநயாக நீரோட்டத்தில் நிலைத்து நின்று டுக்க உறுதிபூண்டு செயற்பட்டதன் காரணமாக ார்கள்.
அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.
ஆவரங்கால் க. சின்னத்துரை

Page 17
பின்னிணைப்பு 3
அக்டே
ஆரம்ப காலத்தில் தமிழர் அரசுக் கட் விடுதலைப் போராட்டத்துக்கு மக்களை வழி தலைவர்களின் பெயர்கள் இங்கு தரப்படுகின் தயாரிக்கப்பட்டுள்ளதால், எவர் பெயராவது கொண்டு, பெயர் விபரத்தை அறியத்தந்தால்
மட்டக்களப்பு
மேயர் அம்பலவாணர், செல்வநாய செ. இராசதுரை, சீமு. இராசமாணிக்கம், பி நொத்தாரிசு கந்தையா, ஆசிரியர் கனகசை சிவஞானம், சாம் தம்பிமுத்து, பட்டிருப்பு பூ நாகலிங்கம், இரா பத்மநாதன், வி. பாலசிங் செனேற்றர் மு. மாணிக்கம், பொ. மானிக் வேல்முருகு,
திருகோணமலை
திருமதி அருந்ததி கனகசபை, இராம கணேஷ், கட்டையறிச்சான் ஆ. குணநாயக திரு. வீரசுப்பிரமணியம், அ. தங்கத்துரை பா. மாணிக்கராசா, மூதூர் டாக்டர் வாஸ் ஆ விநாயகமூர்த்தி, றோச் டி வாஸ்,
வன்னி
மன்னார் கே.எஸ்.ஏகபூர், வவுனினக்கு
முல்லைத்தீவு சிவசுந்தரம், வவுனியா மொடன் செம. செல்லத்தம்பு பாஉ, கிளிநொச்சி மணி
யாழ்ப்பாணம்
வல்லுவெட்டித்துறை அத்தன்னா, திருட சுந்தரம்பிள்ளை அழகம்மா, சங்குவேலி, சி. அருணாசலம், சாவகச்சேரி திருமதி அருணாச
அருமைநாதன், மு. ஆலாலசுந்தரம் பாஉ, பத்த அருணாசலம், யாழ்ப்பாணம் இராசரத்தி

nLu 2000
சியிலிருந்து, வடகீழ் மாகாணங்களில் தமிழர் நடத்திச் சென்று, சாத்வீக வழியில் போராடிய றன. எனது ஞாபகசக்திக்கு எட்டியளவில் இது விடப்பட்டிருந்தால் அதனைப் பொறுத்துக் அடுத்த பதிப்பில் சேர்க்க முடியும்.
கி அமரசிங்கம், கவிஞர் காசி. ஆனந்தன், இராசன் செல்வநாயகம், ஆர்.பி. கதிர்காமர், ப, கல்குடா சம்பந்தமூர்த்தி, சாகுல் ஹமீது, செல்லத்துரை, ஜே. திசவீரசிங்கம், சித்தாண்டி கம், சீஎஸ். பூபாலரத்தினம், கலா மாணிக்கம் கவாசகர் பா. மசூர் மெளலானா, கல்முனை
நாதன், க. ஏகாம்பரம் பாஉ, ஈச்சிலம்பத்தை ம், எஸ்டி சிவநாயகம், எஸ். சோமசுந்தரம், உ, தியாகி நடராசன், பா. நேமிநாதன் பாஉ, அந்தோனி, பா. விஜயநாதன், கிளிவெட்டி
ளம் குலசேகரம், மன்னார் கைலாசபிள்ளை, வர்த்தகதாபன சிற்றம்பலம், இ. சுப்பிரமணியம், யம், முல்லைத்தீவு வின்சன்ற் மாஸ்டர்.
மதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், கட்டுவன்
அரசரத்தினம் ஆசிரியர், கொக்குவில் என். லம், சிறுப்பிட்டி க. அருணாசலம், நாரந்தனை மேனி ந. இரத்தினம், சாவகச்சேரி இராசபூபதி னம் செட்டியார், இடைக்காடு பண்டிதர்

Page 18
க. இராமசாமி, தும்பளை இராமநாதபிள் வல்லுவெட்டித்துறை இராமசாமி (RWG), அ பருத்தித்துறை இராமநாதபிள்ளை, மட்டுவி சி. கதிரவேலுப்பிள்ளை பாஉ, கோப்பாய் க. கதி கொக்குவில் வித்துவான் கந்தையா, கொடிகாப உப தலைவர் ஆ. ஹென்றி, ப. கிங்ஸ்பரி, செல் அ. குமரகுரு, ஏ.வி. குலசிங்கம், திருமதி ( சச்சிதானந்தம், மாவிட்டபுரம் பண்டிதர் ச குருக்கள் கல்வியங்காடு க. சண்முகநாதன் ஏவி சதாசிவம், திருமதி சமாதானம் சோமசுந்: காவல் பொ.சிவகுரு ஆசிரியர், பத்தமேனி காங்கேசன்துறை ஆ. சிவனடியார், அளவெ சின்னத்துரை, டாக்டர் சீனிவாசகம், அல்வாய் யாழ். என்.ரி. செல்லத்துரை, கைதடி க. ெ நா. செல்லையா, க. ஜெயக்கொடி பாஉ, இணு வல்லுவெட்டித்துறை பட்டினசபைத் த எஸ்.ஏ. தர்மலிங்கம், வி. தர்மலிங்கம் பாஉ, எஸ். தியாகராசா (எஸ்ரிஆர்) புங்குடுதீவுக, தி நொத்தாரிசு க. துரைசிங்கம், க. துரைரத்தினம் ஜி. நல்லையா, எஸ். நவரத்தினம் (கரிகால வி. நவரத்தினம் பாஉகோப்பாய் சு. நாகலிங்கப் பத்மாவதி வேலுப்பிள்ளை, திருநெல்வேலி ஆசிரியர், வண்ணார்பண்ணை க. பரமசாமி, க அழகரத்தினம், திண்ணைவேலி பிவி பொன் மாவிட்டபுரம் மாப்பாணர், வி. முத்துக்குமா ச. முத்துலிங்கம், சித்தங்கேணி க. முத்தையா, அ மோகனதாஸ், பருத்தித்துறை ரியூரறி ஆ. வேலு
ό ό

ளை அதிபர், ஊரிக்காடு இராமச்சந்திரன், ச்சுவேலி இவே, இராமசாமி விதானையார், ஏ.கே. இராமலிங்கம், கொடிகாமம் ஐயா, ரேசு, யாழ். விகே கந்தசாமி (புதுமைலோலன்), ம் கனகசபை புறக்ரர், சுன்னாகம் பட்டனசபை வி மங்களா கிறிஸ்தோப்பர், காங்கேசன்துறை காமதி வன்னியசிங்கம், கொழும்புத்துறை *சிதானந்தம், மாவிட்டபுரம் சண்முகநாதக் (மணி), காங்கேசன்துறை சட்டத்தரணி ரம், குருநகர் சிக்மனசிங்கம் ஆசிரியர் ஆவறங்
ந. சிவபாதம், மூளாய் சிவலோகநாதன், ட்டி சிறீமுருகன், பலாலி போஸ்ற் மாஸ்ரர் எஸ். சுந்தரம், கோப்பாய் இ. சுப்பிரமணியம், சல்லத்துரை, துன்னாலை தாமரைக்குளம் வில் சோமசுந்தரம், புங்குடுதீவு சோமசுந்தரம், லைவர் எஸ். ஞானமூர்த்தி, டாக்டர் துன்னாலை தாமு ஆசிரியர், யாழ்ப்பாணம் நநாவுக்கரசு, தா. திருநாவுக்கரசு, கல்வியங்காடு பாஉ, உரும்பிராய் நடேசலிங்கம், செனற்றர் ன்) வி.என். நவரத்தினம் பா.உ, காவலூர் , பாக்டர் நிக்கிளாஸ்பிள்ளை, பருத்தித்துறை க. பத்மநாதன், சாவகச்சேரி பரராசசிங்கம் ல்வியங்காடு மு. பழனி, திருமதி பொன்னம்மா னுத்துரை, யாழ். மேயர் சி. பொன்னம்பலம், ரு எம்.ஏ, உடுவில் பட்டினசபைத் தலைவர் அல்வாய் க. முருகேசு ஆசிரியர், கொடிகாமம் லுப்பிள்ளை.
ό

Page 19
jnovi
இலங்கைவாழ் தமிழ்பேசும் பெருங்குட இணைப்பாட்சியின்கீழ் ஒர் தனியரசை அ; உள்ளத்தோடு, உயர்ந்த நோக்கோடு, நிறைந்த இலட்சியத்தை முன்னெடுத்து இற்றைக்கு இரு வாழ்விக்கத் தமிழகத்திலே பேரறிஞர் அண்ண ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் - அ பதினெட்டாம் நாளில் தந்தை செல்வநாயக என்னும் பேரியக்கத்தைத் தாபித்தார்.
ஆல்போல் தழைத்து, அறுகுபோல் இதயக்கோவில் ஆகிவிட்ட இக்கட்சியின் கr எடுத்து விளக்கும் இவ்வெள்ளிவிழா மலர் இ
கட்சியின் வெள்ளிவிழாவை யொட்டி
இதனைப் படிக்க விழையும் நீங்கள் பய உள்ளடக்கி, அவசியமெனக் கண்டவற்றை ஆங்கிலத்திலும் இணைத்து, தித்திக்கும் C தெள்ளமுதெனப் படைத்திருக்கிறோம்.
தண்ணொளி வீசும் தங்கள் கண்களு
மலரொன்றுக்கு உரிய தகுதி சிறிதேனும் குன் அருங்கருத்துப் பிறக்கிறது என்பதே எம் எண்
சிரமம் சிறிதேனுமின்றிக் கருத்துக்கள் இதனுள் அடங்கும் ஒவ்வோர் விடயத்திற் தனி விளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன.
இதன் முதற் பகுதியென அழைக்கப்படு இன்றைய தலைவர் நாவலர் அ. அமிர்தலிங் கோவை விடுபடாத கட்சியின் தியாக வரல கட்சியை வழிநடத்திய நன்றியுடைத் தலைவர் தலைசிறந்த தலைமைப் பேருரைகள் கட்சி கொண்ட அதிமுக்கிய இறுக்கமான தீர்ம நம்மவரினதும் நன்மை கருதி அவ்வப்போது உடன்படிக்கைகள்; நல்வாழ்வுக்கான கோரிக் ஒர் புதிய அரசியல் யாப்பை உருவாக்க அர சமஷ்டிக் குடியரசுக்கு வாய்ப்பாகத் தர யறிக்கையுடனான மாதிரி அரசியலமைப்புத்

வாயில்
டி மக்களின் இணையற்ற இன்ப வாழ்விற்காக துவும் தமிழரசை நிறுவுவதற்காகத் தெளிந்த த கருத்தோடு, பரந்த கொள்கையோடு, சிறந்த நபத்தைந்தாண்டுகள் முன்னே - திராவிடத்தை ாவின் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாவது 1949ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் ம் அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
வேரூன்றிவிட்ட - இலங்கைத் தமிழர் தம் ால்நூற்றாண்டுகால வீர வரலாற்றை விரிவாக இன்று உங்கள் ஆதரவுக் கரங்களில்,
முகையவிழ்ந்து நகை செய்கிறது.
ன்பெறும் வண்ணம் அரிய பல கருத்துக்களை மாற்றாரும் அறியவேண்டுமென்பதற்காக தேன் தமிழின் சுவை கலந்து தெவிட்டாத
jக்கும் கருத்துக்கும் விருந்தாகும் வண்ணம், ாறாத வண்ணம் இதில் அழகு ஜொலிக்கிறது. T60öTLb.
ளைக் கிரகித்துக் கொள்வதற்கு வாய்ப்பாக, கும் தனித்தனியான வண்ணத் தலைப்புகளும்
ம் கருமணம் வீசும் மலர் என்பதனுள் கட்சியின் கம் அவர்கள் தீட்டிய இரத்தினச் சுருக்கமான, ாறு; காலத்துக்குக் காலம் தலைமைதாங்கிக் களின் திருவுருவ வண்ணப் படங்களுடனான, கண்ட தேசிய - மாநில மாநாடுகளில் அது ானங்கள்; ஆளவந்தாரோடு நாட்டினதும், நம் தந்தையவர்கள் செய்துகொண்ட நயமான கைகள்; 1972ஆம் ஆண்டில் இலங்கைக்கென சு முனைந்தகாலை, ஓர் செங்கோலாட்சிக்கு - தை செல்வா சமர்ப்பித்த பொதுநிலை திட்டம் ஆகியன அடங்கும்.

Page 20
இரண்டாம் பகுதியெனப் பெயர் ெ என்பதனுள், கட்சியின் இதுகால வரையி சேவைகளையும் சித்தரிக்கும் பல்வேறுபட முன்னணித் தலைவர்கள், தொண்டர்கள் சில திருவுருவப்படங்கள் இணைக்கப்பட்ட சி பதினான்கு அடங்கும்.
எனினும், கட்சி வாலிபமுன்னணி வர6 என்பதனால் அது - தனி நூலாக நாட்டிலே அடங்கா.
மலர், மகரந்தம் இரண்டினதும் ஆர கீதங்களும்; சாதனைகட்கு ஆதாரமான ெ இனத்தின் இதயங் கவர்ந்த குறிப்பிடத்தக்க அமைப்பிலான தரிசனத்திற்குரிய புகைப்படங் இடம்பெற்று, இம்மலரின் மகிமைக்கு மெருல் தரத்தை மேலும் உயர்த்துகின்றன.
மேற்காட்டிய இத்துணை பல்சுவையுங் கட்சி மலரிதை இதன் நறுமணமதை நீவி பண்புள்ளங்களோ பற்பலர்; அன்னவர் - அ பெருவெள்ளமெனப் பணத்தை வாரி வழ புளொக்குகள் சிற்சிலவற்றையும் அன்பளித்ே பற்பல புளொக்குகளை ஆக்கியருளியோர்; அ வரைந்தளித்தோர்; சிரமங்கள் நடுவே கட் பிரதிபண்ணியோர்; சில பகுதிகளை ஆங் துதவியோர்; அச்சுப்பிழைகள் திருத்தி, அ தமிழ் இலக்கண இலக்கிய மரபு பிறழ் அரும்பணி புரிந்தோர்; அழகாகவும் சிற ஆர்வத்துடன் உழைத்தோர் - இப்படிப் பல்
இவர்கள் அத்தனை பேரையும் தனித் நம் நெஞ்சத்து ஆசைகள் அலைகடலென மு இன்றி நம் நெஞ்சத்து அன்பு என்ற ஒன்றாே துணைக்கழைத்து நன்றி என்ற மூன்றெ( வணங்குகிறோம்.
இறுதியாக, "சில கற்றார் பல ச எனும் புரட்சிக்கவிக்கேற்பக் கட்சித்தலை பணியேற்க, பைந்தமிழ்த் தொண்டேற்க பெருமையும், எண்ணறு மகிழ்வும் எய்துகில்

காள்ளும் கருத்துமணம் வீசும் மகரந்தம் லான முக்கிய அதிதீரச் செயல்களையும், -ட தலைப்புக்கள் கொண்ட - கட்சியின் ால் தீட்டப்பட்ட - முடிந்தவரை அவர்கள்தம் றப்பான எழுச்சிக் கட்டுரையோவியங்கள்
ாறு கட்சி வரலாற்றில் ஒரு நீண்ட வரலாறு படையலாக வேண்டுமென்பதனால் இதனுள்
ம்பத்திலும் முடிவிலும் கட்சியில் விளங்கும் நஞ்சுருக்கும் காட்சி விளக்கப் படங்களும்;
சில முன்னணித் தலைவர்களின் பல்வேறு களும் முடிந்தளவு வரலாற்றுக் கோவைப் படி கையும், மதிப்பிற்கு உயர்வையும் ஊட்டி இதன்
கலந்திட்ட தமிழர் வரலாற்றுப் பொக்கிசமான ர் நுகர்ந்து களித்திட நாமளித்திடவுழைத்த அன்பளிப்பகாவும் விளம்பரமாகவும் சிறுதுளி ங்கியோர் வேண்டிய புகைப்படங்களையும் தோர்; குறுகிய காலத்தில் குறைந்த செலவில் வசியமெனக்கண்ட சில படங்களை அழகாக டுரைகள் நல்கியோர்; சில கட்டுரைகளைப் கிலம் தமிழ் இரண்டிலும் மொழிபெயர்த் ரசியற் சட்ட நுணுக்கங்களை அநுசரித்து pாதிருக்க ஆலோசனைகள் நல்கியோர்; ப்பாகவும் மலரை அச்சுப்பதிவு செய்வதில் வேறு துறையினர்.
தனியே அழைத்து இங்கே நன்றி நவின்றிட pட்டி மோதிடினும், விரிவு அஞ்சி அவகாசம் ல பங்காளர் என்ற ஐந்தெழுத்துச் சொல்லைத் ழத்துச் சொல்லெடுத்து வாழ்த்துகிறோம்,
ற்க விரும்பும்வகை செயல் வேண்டும்"
மை இம்மலரை உருவாக்க, அரும்பெரும் எமைப் பணித்தமை கண்டு எல்லையறு
எறோம்; கூடவே இருகரங் கூப்புகின்றோம்.

Page 21
இனி, மலர் மனத்தை துகரும் ஆவலில்
gib sõyrab (soft" 66är
"இருந்தமிழே உன்னால் இருந்தே வேண்டேன்” என்ற தமிழ்விடு தூதுக் கவியும்
"தன்கையே தனக்குதவி தமிழரசே தமி
என்ற தாரக மந்திரமும் கூட்டாகக் கெ
நன்றி -
இ. த. அ. க., தலைமைச் செயலகம், 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், 18- 12 - 1974.
率率

திளைக்கும் தங்கள் நெஞ்சங்களை,
புறநானூற்று அடியும்,
* தூயவர்தம் விருந்தமிழ் தென்றாலும்
ழர்க் குதவி"
ாள்ளை கொள்ளட்டும்.
வணக்கம்
மலர்க்குழு
K率

Page 22
LJJJ 0
வாழிய ஈழச் "செல்வர்” மணிவிழாப் பலவும் கண்டு! வாழிய ஈழத் தந்தை, மாத்தமிழரசு கண்டு! வாழிய ஈழக் காந்தி, வையகம் புகழ வாழ்ந்து! வாழிய ஈழ நற்றாய்த் தமிழகம் வாழ்க! வெல்க!
“சேர்ந்து செயல்பட வாரும்” எ செப்பிய நாயகமே - கை தேர்ந்த தமிழ்த்தலை வோனென செல்வ(நந்) நாயகமே சோர்ந்து கிடந்தவர் தோள்களி, சொற்பொழி வன்மையிலே - 6 நேர்ந்திடினும்தமிழ் ஈழ நிலத்தி நின்று நிலைபெறுமே.
5
ஈழத்தின் அரசியலை எண்ணிப் எந்தமிழர்க் கோர்தந்தை ஈழக் க கோலத்தை நினைவினிலே கெr கொஞ்சம்போற் சிந்தனையிற் ( ஆழத்தை நான்கண்டேன் அடட ஆயிரமாய்க் கூடுவது தமிழென் தாலிக்குப் பழம்பெருமை தருதற் தமிழரசே உன்கூட்டம் வெல்க!
கலங்கி நிற்கும் தமிழர்க்கின்று கலங்கரை விளக்க மாய்த் துலங்கு கின்ற தூய மூர்த்தி தந்தை செல்வ நாயகம் மெல்ல மெல்லப் பணி புரியும் மேதை செல்வநாயகம் சொல்லுகின்ற பாதையிலே செல்லுகின்ற வீரர் நாம்

T60)6)
பைந்தமிழ்க் கவி பரமஹம்ஸதாஸன்
air Gp6)congp
ாப் பேர்பெறும்
த் தார்.அவர்
து '6ნfმ6ნს
ன்னித்தமிழ்க் கவியரசு கண்ணதாசன்
(JITf33) ாந்தி ாண்டு வந்து குளிக்கப் போனேன். .ா மக்கள் T Usefir | ásni Gon? வெல்க!
" உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
- கலைச்செல்வி புனிதம்

Page 23
ഗ
 

■

Page 24


Page 25
மலரித
தொகுதி
தமிழ் ஈழ நாட்டு வணக்கப் பண்
1. ஆரம்பவிருந்து: தீர்க்கதரிசனமிகு தலைமைப்பேருரை - தந்ை
2. தியாக வரலாறு: இலட்சியப் பாதை - திரு. அ. அமிர்தலிங்கம்
3. தலைமைப் பேருரைகள்: (அநுபந்தம் - அ
முதலாம் மாநாட்டுரை - உயர்திரு மூன்றாம் மாநாட்டுரை - தமிழறிஞ நாலாம் மாநாட்டுரை - தமிழறிஞ ஐந்தாம் மாநாட்டுரை - தமிழறிஞ ஆறாம் மாநாட்டுரை - திரு.என் ஏழாம் மாநாட்டுரை - திரு. சி. எட்டாம் மாநாட்டுரை - திரு. சி. ஒன்பதாம் மாநாட்டுரை " உயர்திரு பத்தாம் மாநாட்டுரை - டாக்டர் பதினோராம் மாநாட்டுரை - திரு.சி.மூ சிறப்பு மாநாட்டுரை - திரு.சி.மூ பன்னிரண்டாம் மாநாட்டுரை - நாவலர்
4. தீர்மானங்கள் : (அநுபந்தம் - ஆ)
முதலாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - ஆ நாலாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - ஆா ஐந்தாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - ஆ ஆறாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - ஆா எட்டாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - ஆ பத்தாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - ஆ பதினோராவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - சிறப்பு மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - ஆங்கி பன்னிரண்டாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ்
5. உடன்படிக்கைகள் - கோரிக்கைகள்: (அ பண்டா - செல்வா உடன்படிக்கை தமிழ் - அ செல்வா கோரிக்கைகள் - பூரீமாவோ, டட்லி ( டட்லி - செல்வா உடன்படிக்கை (தமிழ் - ஆ

நழகள
- ஒன்று - הפכה
பக்கம்
த செல்வா 17 32
33 88
}) 1. சா.ஜே.வே. செல்வநாயகம் 95 102 நர் கு. வன்னியசங்கம் 103 116 நர் கு. வன்னியசங்கம் 117 130 நர் கு. வன்னியசிங்கம் 131 136 ஆர். இராஜவரோதயம் 137 - 146 மூ. இராசமாணிக்கம் 147 158 மூ. இராசமாணிக்கம் 159 168 . எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 169 178 இ.மு.வி. நாகநாதன் 179 194 ). இராசமாணிக்கம் 195 202 . இராசமாணிக்கம் 2O3 210 அ. அமிர்தலிங்கம் 211 226 -ه
ங்கிலம்) 227 - 240 நீங்கிலம்) 24 246
iéleoub) 247 250
ங்கிலம்) 251 258
šáGob) 259 263
šáleob) 264 268 ஆங்கிலம், 269 271 Gob) 272 276 - ஆங்கிலம்) 277 - 286
நுபந்தம் - இ) ஆங்கிலம்) 287 - 294 தமிழ் - ஆங்கிலம்) 295 - 298 riélaoib) 299 304

Page 26
தொகுதி
ஏழாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் - ஆா ஒன்பதாவது மாநாட்டுத் தீர்மானம் (தமிழ் -
6. பொதுநிலையறிக்கை - மாதிரி அரசியல (அநுபந்தம் - ஈ)
பொதுநிலையறிக்கையும் மாதிரி அரசியலமைப்புத் திட்டமும் தமிழ் ” இ. த. அ. கட்சியின் இலட்சியப் பண் இ. த. அ. க. இளைஞர் சுதந்திரப் போர்ட்
7. கட்டுரைகள்
செம்மை உளங்கொண்ட செல்வா - தமிழே கிழக்கில் கட்சி வளர்ந்த கதை - சொல்லின் சோசலிச சுவடுகளில் தமிழரசுக்கட்சி - புரட் கட்சியும், தொழிலாளர் வர்க்கமும் - திரு. 4 விடுதலைக்குப் போராடும் இனங்கள் - முத்தமிழ்ச் காவலர் பண்டிதர் வித்துவான் - கா. பொ. இரத்தினம், எம்.ஏ. பா. உ. தனியரசு - சிந்தனைச்சிற்பி சி கதிரவேலுப்ட் தமிழ் ஈழம் மலர - செந்தமிழ் விரன் மாவை தமிழ் ஈழ ஒன்றியம் - திரு. மு. மாணிக்கம் இலங்கையில் மொழிப்புரட்சி - கடமைவீரர் திருமலை யாத்திரை - நற்றமிழ்ச் செல்வர் சு சிங்கள சிறீ للابواتنامي சினத்தீ - தமிழர் காவல் பகிர்கின்ற செந்தமிழின் பழிநீக்குவோம் - மாதர்திலகம் திருமதி அ. மங்யைர்க்கரசி பூக்கும் தமிழ் ஈழத்தில் பொன்விழா எடுப்டே - உணர்ச்சி எழுத்தாளர் கோவை மகேசன் அறப்போர் - 1961 - எழுச்சி எழுத்தாளர் கா பின்னிணைப்பு
தமிழ் ஈழத்தாய் வணக்கப் பண்

O تک = 55 so
பக்கம்
ங்கிலம்) 305 310 ஆங்கிலம்) 311 314
மைப்புத் திட்டம் :
ஆங்கிலம்) 315 - 342
342
U6óT 345
தன் ஈழவேந்தன் 349 - 351 செல்வர் செ இராசதுரை, பா.உ. 352 358 சி எழுத்தாளர் கரிகாலன் 359 - 374 இ பேரின்டநாயகம் 375 380
381 382
olafazp6m, ur. D. 383 - 388
4. GeFor GeF62729/07/72/7 389 - 395
396 403
வ. ந. நவரத்தினம், பா.உ. 404 411
* p4-774-7 412 - 420 2ர் வி தர்மலிங்கம், பா.உ. 421 - 429
430 436
Th
437 - 440
ங்கேசன் 441 - 4.46
447 448
449

Page 27
7ー
வாழ்க
ஈழத் தமிழகம்
தாய்நாட்டு வ
" பரமஹம்
GT
வாழ்க ஈழத் தட
வாழ்க இனி மலைநிகர்த்திவ்
தலை நிமிர்ர்
(Plaqஅமிழ்தை வெ6 அருள் கனிர் அரிய பண்பு நி அவனி மெச் மமதை கொண் வணங்கும் அ வளரும் இருபத் மக்கள் கொ
வானம் பாடி ே கானம் பாடு மலர்க் கனி குலு எழில் மிகுந் தேனும் பாலும்
செந்நெல் ெ தெய்வ கற்பகத் உய்வ விக்கு
பட்டிப் பளை, ! பயில் அருவி பல வளங்கள் ( எழில் நடஞ் மட்டக் களப்பு,
மாந்தை, வ6 மகிழ்வொடு ம6
மலரடி தொ

பணக்கப் பண்
ஸதாசன் -
வாழ்க இனிது வாழ்கவே டுப்பு
மிழகம், து வாழ்கவே,
வுலகில் என்றும் து வாழ்கவே.
ப்புகள் ன்ற மொழியினள் த விழியினள் தியினள் சும் மதியினள் ட பகைவரும் அன்பு விதியினள் தைந்துலட்சம் ண்ட பதியினள்.
- வாழ்க பாலமீன் ம் வாவிகள் லுங்கிலுடம் த சோலைகள்
பாய்ந்திடச் பாலியும் கழனிகள்
தருக்கள் ம் மாநிலம்.
- வாழ்க. மகாவலி, பிமுத் தாறுகள் பொலியவே செய் துலவிடும் யாழ்நகர், ன்னி, திருமலை லைத் தமிழர்கள் ழும் இனியவள்.
* வாழ்க
N
ク

Page 28
தாபக த
செல்ல
தநதை
(17-32 u


Page 29


Page 30
மிழினத்தின்
ஈழத் த
鱷
மாண்புமிகு மூதறிஞர் சா.
 

இணையற்ற தந்தை
செல்வநாயகம் அவர்கள்

Page 31


Page 32
உயர்திரு. சா.ஜே.வே. செல்வநாய
தீர்க்கதரிசனமிகு
Go) ரவேற்புக் கழகத் தலைவருக்கும் - இலங்கையின் பற்பல பகுதிகளிலுமிருந்து இங்குவந்து குழுமியிருக்கும் பிரதிநிதி
களுக்கும் - எனது அன்பான வணக்கம்.
இன்றைய நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிக்கும்படி என்னைத் தேர்ந் தெடுத்துக் கெளரவித்ததற்காக எனது மனப்பூர்வமான நன்றியறிதலை உங்க ளுக்குத்தெரிவித்துக் கொள்ளுகிறேன். நீங்கள் எனக்கு அளித்திருக்கின்ற பெரும் பொறுப்பினை நோக்கும் போது, அவற்றையெல்லாம் கொண்டு நடத்து வதற்குப் போது / மான வன்மை இலங்கைத் தமிழ் 9Jid என்னிட மிருக்கு மருதானையிலுள்ள அரசாங் மே 1ா எ ன் று மண்டபத்தில் 18-12-49 அ6 ஐயுறுகின்றேன். ஸ்தாபக தலைவர் உயர்திரு எனினும், நீங்கள் கியூஸி. அவர்கள் அத எல்லோருமாகச் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரி சேர்ந்து எனக் அவ்வாரம்ப மாநாட்டில், எ கெனக் குறிக்கும் b G இ
, அருமபருரையை
அளிக்கிறோம்.
ܢܠ
ஏற்று, எங்கள் நோக்கத்துக்காக யான் தொண்டு செய்யக் கடமைப்பட் டிருக்கின்றேன். என்னைத் தலைவராகத் தெரிவு செய்ததில் - நல்ல நியாயம் - ஒன்று மாத்திரம் இருக்கின்றது. அது, இலங்கையில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்கள் அடைந்திருக்கும் பரிதாப நிலைமையினையும், அவர்கள் அதிணின்று நீங்கி விடுதலை பெறுவதற்காக ஒரு இயக்கம் அவசியமாகும் என்பதையும் நீங்கள், உணரும் அளவுக்கு யானும் உணர்கின்றேன் என்பதே யாகும்.
இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள், விடுதலை பெறுவதற்காக உழைக்கும் ஒரு ஸ்தாபனத்தை அமைக்க வேண்டும் என்னும் தனிநோக்கத்துடன்,

கம், கியூஸி. எம்.பி. அவர்களது
தலைமைப்பேருரை
யாங்கள் எல்லோரும் இன்று கூடியிருக் கின்றோம். இப்போதிருக்கும் நிலை மையில், யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமை யாதது என்பது எமது திடமான நம்பிக்கையாகும். பழைய காலச் சரித்திரத் தைத் தெளிவாக நன்றாக ஆராய்ந்து பார்த்தால், தமிழ்பேசும் மக்கள் இந்த நாட்டிலே இப்போது எப்படியான நிலைமைகளுக்கிடையே வாழ்ந்துகொண் டிருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து நோக்கினால், இதுதான் ஒரேயொரு வழி- வே று எந்த விதமான ப ரி கா ர மும் கிடையாது - என்பது நன்கு விளங்கும்.
க் கட்சியின் ஆரம்ப மாநாடு வ்க குமாஸ்தா சேவைச் சங்க *று நடந்த போது, கட்சியின் . சா.ஜே.வே. செல்வநாயகம், ன் முதல் தலைவராகத் 影 த்திர முக்கியத்துவம் வாய்ந்த και 1 ό rub sissuuaussi huu JAPAP"oo"49-Soo'ol ri : ம்ப வி ಫ್ಲಿ? ஐரோப்பியர்கள் இலங்கை க்கு Uவ ரு வ த ற் கு மு ன் ன த ரா க இந்நாட்டு மக்களே தங்களுக்கென அரசாங்கங்களை அமைத்திருந்தனர். ஆயின், யாங்கள் ஒரு விஷயத்தை மாத்திரம் ஊன்றிப் பரிசீலனை செய்தல் வேண்டும். அதாவது, போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் இங்கு வசித்த மக்கள் பல நூற்றாண்டுகளாகச் சிங்களம் பேசும் இனம், தமிழ் பேசும் இனம் என இரு தேசிய இனங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். விஜயன் காலந்தொடங்கிப் பல நூற்றாண்டு களாகச் சிங்களம் பேசும் தேசிய இனத்தைப் பற்றி மாத்திரம் பேசப் படுகிறது. இவர்களைச் சில காலங்களில் தமிழ் மன்னர்களும் அரசு புரிந்தார்கள்.

Page 33
2
எனவே, தமிழ் மக்கள் அவர்களிடையே எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருந் தார்கள் என்பது புலனாகின்றது. ஆயினும், அது சிங்களத் தேசிய இனமும் சிங்கள அரசாங்கமுமேயாகும். பூமிசாத்திர சம்பந்தமான காரணங்களாலும் வேறுபல நியாயங்களாலும் இலங்கையின் வட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் நெடுங் காலமாகத் தமிழர்களாகவே திகழ்ந் திருத்தல் வேண்டும். அதனால், பெரும் பாலும் தமிழ் மக்களையே கொண்ட வட பகுதிகளைத் தென் பகுதியிலிருந்த சிங்கள இராச்சியங்கள் ஆட்சி புரிவது வரவரக் கடினமாக இருந்திருத்தல் வேண்டும். இறுதியாக, இயற்கையாயமைந்த ஒரு பரிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 9ஆம், 10ஆம் நூற்றாண்டளவிலே, வடபகுதித் தமிழ்ப் பிரதேசங்கள் பிரிந்து தனியரசாயின. இலங்கையின் தென்பகுதி, gau வேளைகளில் 2, 3 இராச்சியங்களாகப் பிரிந்திருந்தாலும் சிங்களப் பிரதேச மாகவே இருப்பதாயிற்று.
சில காலங்களில் இந் நிலைமை மாறியிருந்தாலும், ஐரோப்பியர் வரும் வரை, இச் சிங்கள - தமிழ் இனப் Lu Int@g5 LJ TG6) 6) நூற்றாண்டுகளாக நிலைபெற்றிருந்தது. முதலிலே தமிழ் இராச்சியத்தை அழித்த ஐரோப்பியர், படிப்படியாகச் சிங்கள இராச்சியங் களையும் ஒழித்துவிட்டார்கள். இதிலி ருந்து யாம் பெறக்கூடிய பெரும் படிப்பினை, மக்களின் வாழ்க்கையிலும் அரசியலிலும் மொழி மிக முக்கியமான தென்பதேயாகும். சிங்களத் தேசிய இனமாகவும் தமிழ்த் தேசிய இனமாகவும் இலங்கை பிரிக்கப்பட்டிருந்தபோது கூட, சிங்களச் சாகியத்தினரிடையே தமிழ் மக்களும், தமிழ்ச் சாகியத்தினரிடையே சிங்கள மக்களும் வாழ்ந்திருத்தல் வேண்டும். மக்கள் இப்படியாக நாடெங்கும் பரவிக் கலந்து வாழ்ந்து கொண்டிருந்த போதிலும், அரசியல் விஷயங்களுக்காக, வடபகுதியிற் பெரும் பான்மையினராய்த் திகழ்ந்த தமிழர்

2
தென்பகுதியிற் பெரும்பான்மையினராய்த் திகழ்ந்த சிங்களவர் - என இரு பிரிவினராகப் பகுக்கப்பட்டார்கள். தமது ஆட்சிச் செளகரியத்தை மட்டுமே கருதிய பிரிட்டிஷார், சிந்தனைக்குறைவான முறையில், நாடு முழுவதையும் ஒரே குடியேற்ற நாட்டு அரசாங்கத்தின்கீழ்க் கொண்டு வந்து, பல நூற்றாண்டுகளாக இரு தேசிய இனங்களாக இருந்த பாகுபாட்டினை ஒழித்துவிட்டார்கள். ஆயினும், இவ்விரு தேசிய இனங்களும் இயற்கையாகக் கலந்து ஒன்றாகி விடவில்லை. ஆயினும், மக்களுட் பெரும் பகுதியினர் வெவ்வேறான இரண்டு மொழிகளையே பேசுபவராய், வெவ்வேறு நிலப் பகுதிகளுள் வாழ்ந்து கொண்டி ருந்தார்கள். ஆயினும், இரு இனங்களிலி ருந்தும் ஆங்கிலம் பேசுகின்ற ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் தோன்றி னார்கள். ஆனால், நாட்டு மொழிகள் பொது வாழ்விலே தமக்குரிய ஸ்தா னத்தைப் பெற்றவுடன், தொகையிற் குறைந்தவர்களாகிய இவ்வாங்கிலம் பேசும் சமூகத்தினர் அருகி வருகிறார்கள். நாளடைவில், குடியேற்ற நாட்டு ஆட்சி முறை மாறி, மக்களாட்சி படிப்படியாக நிலைபெறத் தொடங்கிய காலத்தில், புதிய அரசியற்றிட்டங்களை வகுத்தவர்கள், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு ஆட்சி முறையினைப் பின்பற்றி, ஒற்றையாட்சி அமைப்பு அடிப்படையிலேயே தமது திட்டங்களை வகுத்தனர். இதற்குப் பல காரணங்களுள்ளன. வெளித் தோற்றத் தளவில், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு ஆட்சியின் கீழ், இலங்கை மக்கள் ஒரே தேசிய இனமெனும்படி ஆகிவிட்டார்கள். அன்றியும், நமது அரசியற் சீர்திருத்த வாதிகள் அரசியலமைப்புப் பிரச்சினை களைத் தீர்ப்பதில் அனுபவமற்றவர் களாயிருந்தார்கள். அல்லாமலும், ஆங்கிலேயரும் ஸ்கொச்சுக்காரரும் உவெல்சுக்காரரும் ஒரு அரசின் கீழ்ச் சேர்ந்து கொண்டதுபோல, அதையே முன் மாதிரியாக வைத்து, இலங்கையிலும் அரசியலமைக்கலாம் என எல்லோரும்

Page 34
2.
ஏமாறினார்கள்; அதிலும் பார்க்கச் சிறந்த தொரு மாதிரி கிடையாதென்றும் நம்பி யிருந்தார்கள்.பெரிய பிரித்தானியாவிலே, ஸ்கொச்சு மொழியும் உவெல்சு மொழியும் முற்றாக இல்லையெனும்படி அழிந் தொழிந்து, பிரித்தானிய மக்கள் எல்லோரும் ஆங்கில மொழியையே பேசுபவர்களாக மாறிவிட்டார்கள் என்பதைச் சிந்தித்து, எவராவது எடுத்துக் காட்டினாரல்லர். ஆனால், இருபது நூற்றாண்டுகள்வரை கூடி வாழ்ந்திருந்தும், சிங்கள மொழியோ, தமிழ் மொழியோ அழிந்தொழியவில்லை. ஒவ்வொரு சாராரிலும், அம் மொழிகள் அழிந்தொழி யாதபடி காக்கும் இயற்கைச் சக்திகளும் நோக்குகளும் அமைந்துள்ளன.
பிரிட்டனிலும் இலங்கையிலு மிருந்து எமது நாட்டின் அரசிய லமைப்பினை வகுப்பதில் பங்கு பற்றினோர், பிரிட்டிஷாரின் ஒற்றையாட்சி அமைப்பினை மாதிரியாகக் கொண்டு, அதையே எமது நாட்டிலும் தழுவிக் கொள்ள முயன்றார்கள். சென்ற முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற அரசியற் சீர்திருத்த இயக்கத்தின் வரலாற்றை நோக்கு வோமாயின், நமது சீர்திருத்த வாதிகள் பிரிட்டிஷ் ஆட்சிமுறையைத் தழுவுவதிற் கவனஞ் செலுத்தினார் களேயன்றி, எமது நாட்டிற்கு எவ் வகையான அரசாங்கம் பொருத்த மானதென்று ஆராய்ந்ததாகத் தெரிய வில்லை. தமது அரசியலமைப்பே யல்லாமல் வேறு எதனையும் இலங்கைக்கு மாதிரியாகக் கொள்ளலாமென்று பிரிட்டிஷார் கருதவில்லை. பிரிட்டிஷ் அரசியலமைப்பானது, சிங்கள மக்களுக்கு
விசேஷ திருப்தியளிப்பதாயிற்று. ஏனெனில், சிங்கள மக்கள் பெரும் Lumt Gör Goo Guluntíř. எனவே, வெறும்
எண்ணிக்கையினாலேயே அவர்கள் பூரணமான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லாமலும், பழைய காலத்திலிருந்தது போல ஒரே சிங்கள இராச்சியத்தை அமைத்துக் கொள்ள

3}
லாமென்றும் கனவு கண்டார்கள். சென்ற பத்து நூற்றாண்டுகளாக ஏற்பட்டிருந்த மாற்றங்களையெல்லாம், ஒரு சிறிதாவது அவர்கள் கருத்திற்கொள்ளவில்லை. பல இன மக்கள் கூடி வாழும் நாட்டிலே, ஒற்றையாட்சி அமைப்பை நிறுவுவதனால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தமிழ் பேசும் மக்கள் தெளிவாகக் கண்டார்கள். அவர்கள் தங்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தை என்றும் உணர்ந்திருந்தது போற்றத்தக்கதாகும். தலைவர்களென் போர் இந்த ஆபத்தைக் குறைப்பதிற் கவனஞ் செலுத்தினார்களேயன்றி, அதை நீக்க முயற்சிக்கவில்லை. சிறுபான் மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித் துவம் பெற்றுக்கொண்டாற் போது மென்று அவர்கள் நம்பினார்கள். அவர்களுக்குத் தோன்றிய ஒரே பரிகாரம் அதுதான். அவர்கள் வருங்காலத்தைப் பற்றிப் போதிய முன்யோசனையுடனும் பரந்த நோக்கத்துடனும் நடந்து கொள்ளாதது வருத்தத்திற்குரியதாகும். இங்ங்ணம் தவறியதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. தமிழ் பேசும் மக்கள் - முஸ்லிம்கள், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழரென Typ G7.gp : பிரிவினராய் இருந்தனர். இந் நாட்டிலே முஸ்லிம்களும் இலங்கைத் தமிழர்களும் வாழும் பிரதேசங்கள், பிரிட்டிஷார் ஆட்சியின்கீழ் விருத்திசெய்யப்படாதனவாய், கீழ்நிலை எய்திக் கிடந்தன. இதனால், அப்பிர தேசங்களின் பொருளாதார நிலை சீரழிந்திருந்தது. அப்பிரதேசங்களிலேயே வாழ்ந்துகொண்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டுழைக்கப் போதுமான அவகாசம் படைத்தோர், அவ்விடங்களிலே தோன்ற வில்லை. இந்தியத் தமிழரென்ற பிரிவினர், அரசியலமைப்பு ஆலோசனைகளிற் பங்குபற்ற இயலாதவர்களாயிருந்தனர். அவர்கள், எங்கள் நாட்டுக்கு ஏனை யோரிலும் பார்க்கப் பிந்திய காலத்தில் வந்தவராவர். அவர்கள், தமிழ் பேசும் பிரதேசங்களுக்குப் புறம்பான சிங்கள மொழி பேசப்படும் பிரதேசங்களிற் குடியேறியிருந்தார்கள். இலங்கையில்

Page 35
L
நிரந்தரமாகக் குடியேறியிருந்த போதிலும் அவர்கள், தொழிலாளர்களாகிய தங்களது வாழ்க்கையைப் பாதிக்கக் dallu பிரச்சினைகளிற் கவனம் செலுத்தினார் களேயன்றி, அரசியலமைப்புச் சிக்கல் களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இந் நிலைமையின் பயனாக அரசியலமைப்பில் ஈடுபட்டோர், பிரிட்டிஷ் ஒற்றையாட்சி அமைப்பினையே அடிப்படையாகக் கொண்டனர். சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்ப தானது, ஜனநாயகத்துக்கு மாறான தென்று சிங்கள மக்கள் எதிர்த்தனர். சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிப்பதனாலேனும், அதிகாரம் முழுவதையும் தம் கையிலேயே வைத்திருக்கக்கூடிய ஒற்றையாட்சி அமைப் பினை நிலைபெறச் செய்யலாமென்று அவர்களுக்குத் தென்படவில்லை. நீதி செய்வார்களென்று எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டிஷ் எஜமானர்கள், தம் கடமையில் முற்றாகத் தவறிவிட்டார்கள். அரசியலதி காரம் சிங்களவரின் கையிலேயே இருப்பதை அவர்கள் கண்டார்கள். எனவே, தமிழ் பேசும் மக்களுக்கு நீதி வழங்குவதிலும் Lunrtřešesář சிங்கள மக்களைத் திருப்தி செய்வதே உசித மென்று கருதினர். அது ஆண்மையற்ற செயல் எனினும், அதையே விரும்பினர். இதன் பயனாக, இந் நாட்டின் அரசியற் பிரச்சினைக்கு ஒரு பரிகாரமென, சிறுபான்மையோருக்குக் கூடுதலான பிரதி நிதித்துவம் அளிக்காத ஒரு ஒற்றையாட்சி அமைப்பு, சோல்பரி - பிரிட்டிஷ் அரசியற்சட்டம் தமிழ்பேசும் மக்களின் மீது திணிக்கப்படுவதாயிற்று. வாக்கா ளர்கள் அளித்த உத்தரவாதத்தை மறந்து எம் பிரதிநிதிகள் சோல்பரித் திட்டத்தை ஏற்றமையால், இப் பிரச்சினை மேலும் சிக்கலடைந்தது. இதனால், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களது அரசியல் வாழ்வுக்கு அந்தியக் கிரியைகள் செய்யப்பட்டு விட்டனவென்று பலரும் கருதியிருக்கக் கூடும். ஆனால், பொதுமக்கள் சரணடைய மறுத்தனர். 1945ஆம் ஆண்டு வெள்ளை

24 H
அறிக்கையை ஏற்ற அப்போதைய அரசாங்கசபைத் தமிழ் அங்கத்தவருள், ஒருவர் தவிர்ந்த பிறரெல்லாம் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிற் படுதோல்வி அடைந்தனர். தமிழ்ப் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதா அன்றேல் சரண டைவதா என்ற ஒரே கேள்வியை அடிப்படையாகக் கொண்டே தமிழ்த் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் தெளிவான முடிவு போராட் டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டு மென்பதேயாகும்.
ஆனால், முஸ்லிம் தொகுதிகளில் இதற்கு வேறான கொள்கையுடன் தேர்தல் நடைபெற்றது. 1945ஆம் ஆண்டுவரை சிறுபான்மையினருக்குக் கூடுதலான பிரதி நிதித்துவம் வேண்டும் என்ற கொள்கைக் காகத் தமிழரும் முஸ்லிம்களும் சேர்ந்துழைத்தனர். சோல்பரித் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டபின், வேறு வழியின்றி முஸ்லிம்கள் தயங்கினர். இப்போது யாங்கள் கைக்கொண்டி ருக்கும் கொள்கையைப் போன்ற திட்டங் களெவையும் அவர்களுக்குச் சமர்ப்பிக்கப் படவில்லை; அவர்கள் வாழ்ந்துகொண்டி ருக்கும் பிரதேசங்கள், தனிச் சுயாட்சி அரசாக அமைக்க முடியாதனவாய் இருந்தன. வடபகுதியிலும் திரிகோன மலையிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, இப்பிரதிகூலமில்லாதபடியால் அவர்க ளிடையே ஒரு விடுதலை உணர்ச்சி நிலவியது.
இவ்விடுதலை உணர்ச்சியே உருவெடுத்தாற்போல் விளங்கிய தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தொகுதிகள் எல்லாவற்றிலும் பூரண வெற்றி பெற்றது. தங்களுடைய அரசியல் எதிர்காலத்தைப் பற்றிய தமிழ் மக்களின் கருத்தினை, அத் தேர்தல் தெளிவாகக் காட்டியது. தமிழ்க் காங்கிரசினை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகர்கள், அதிகாரத்துக்கு வரக் கூடியவர்களான சிங்களப் பெரும் பான்மையோருடன் ஒத்துழைப்பதால்,

Page 36
2
தமிழ்ப் பிரதேசங்களுக்குப் பொருள பிவிருத்தி ஏற்படுமென்று வாக்களித் தார்கள். ஆனால், தமிழ் காங்கிரஸ் அபேட்சகர்கள் அரசாங்கத்திடமிருந்து பொருள் நலம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கவில்லை; தமிழரின் உரிமையைப் பறிக்க நடக்கும் முயற்சி களை எதிர்ப்போமென்றே கூறினர். அதிகப்படியான வாக்குகளால் தமிழ்க் காங்கிரஸ் அபேட்சகர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆனால் அடுத்த வருஷம் - 1948ஆம் ஆண்டில் என்றும் எதிர்பார்த்திராத சம்பவம் நடைபெறுவ தாயிற்று. தேர்தலிலே தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பையும் தமிழ்க் காங்கி ரசையும் கவனியாது, ஐக்கியதேசியக் கட்சி தனிப்பட்ட முறையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டது. அதன்பின், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் மனந்தளர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியிடம் சரண் புகுந்தார். தமிழ் மக்கட்கு அளித்த உத்தரவாதத்தையும் இதனால் மீறினார். ஆனால் அநேகர், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் பூரணமாகச் சரணாகதி அடைய வில்லையென்றும், தாம் சேர்ந்திருக்கும் அரசாங்கம் தமிழ்க் காங்கிரசின் கொள்கைகளுக்கு மாறான சட்டங்களைக் கொண்டுவரும் பொழுது அவற்றை எதிர்ப்பதற்கான உரிமையை வைத்துக் கொண்டாரென்றும் நம்பியிருந்தனர். 1948ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில், அரசாங்கம் இந்தியப் பிரஜாஉரிமைச் சட்டமொன்றைப் பிரதிநிதிகள் சபையிற் கொண்டுவந்தது. இச்சட்டத்தை இலங்கை, இந்தியக் காங்கிரசும் புதுடெல்லியிலுள்ள இந்திய அரசாங்கமும் எதிர்த்து வந்தன. இது, தமிழ்க் காங்கிரசின் அமைப்பு விதிகளிலும் அதன் மகாநாடுகள் பலவற்றிலும் வற்புறுத்தப்பட்ட - அடிப் படையான கொள்கைகளுக்கு முரண் பட்டதாயிருந்தது. அன்றியும், ஐந்து வருஷங்கள் இலங்கையில் வசித்த இந்தியர்களுக்குப் பிரஜாவுரிமை பெறு வதற்காகவும், அவர்களுடைய பிறவுரிமை களை நிலைநாட்டுவதற்காகவும் உழைப்

5.
السيخ
பதற்காக, இலங்கை, இந்தியக் காங்கிரஸ்"க்குத் தமிழ்க்காங்கிரஸ்
தலைவர் கைச்சாத்திட்டுத் தேர்தற் காலத்தில் வாக்களித்திருந்தார். எதைப் பெறுவதற்கு உழைப்பதாக இவர் வாக் களித்திருந்தாரோ, அதைப் பாராளு மன்றத்திற் கொண்டுவரப்பட்ட இச் சட்டம் மறுத்தது. அவரும் தமிழ்க் காங்கிரஸ் பிரதிநிதிகள் சிலரும் இதனை ஆதரித்தனர். இதிலிருந்து, தமிழ்க் காங்கிரஸ் தலைவரும் பிரதிநிதிகள் சிலரும் உரிமைப் போரைக் கைவிட்டு விட்டன ரென்பது தெட்டத்தெளிவாக விளங்கிவிட்டது. இதன் பயனாக, தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற அங்கத்தவர்கள், இரு கட்சியினராகப் பிரிந்தனர், முன்கூறியபடி, ஒரு பகுதியினர் - தங்கள் தேர்தற்காலக் கொள்கையைக் கைவிட்டு விட்டனர். மற்றப் பகுதியினராய் - உங்கள் முன் நிற்கும் நாங்கள் - தேர்தற்காலக் கொள்கையைக் கடைப்பிடித்து, உரிமைப் போரைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித் திருக்கின்றோம்.
இப்போதைய அரசியற்றிட்டத்தின் கீழ், சிங்கள மக்கள், தமிழ்ப் பிரதிநிதிகள் எல்லோரையும் உதாசீனஞ் செய்து, அவர்களது உதவியில்லாமல் அரசாங் கத்தை நடத்தவும், அவர்களது விருப்பத் துக்கும் உணர்ச்சிக்கும் மாறாகச் சட்டங் களை ஒன்றன்மேலொன்றாய் நிறை வேற்றவும் முடியுமென்பது, 1947ஆம், 1948ஆம் ஆண்டுகளிலே தெளிவாகியபின், தமிழ்பேசும் மக்களுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, நிபந்தனையற்ற சரணாகதி; மற்றையது. தமிழ் பேசும் மக்களை, அரசியலுரிமையற்றவர்களாகச் செய்யும் இப்போதைய அரசியலமைப்பிலி ருந்து மீட்பதற்காக, ஒரு இயக்கத்தை ஆரம்பிப்பதாகும். பிந்திக் கூறிய வழி கடினமானது; ஆனால் வீரர்களுக்குரிய வழி அதுவேயாகும். அதுவுமல்லாமல், தேர்தற் காலத்திலே தமிழ் மக்கள் காட்டிய வழியும் அதுவே. தமிழ்க் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்குள்ளே, "தலை

Page 37
, , * ۔۔۔بی۔... es WS-Sees l
வணங்கோம்" என்று நின்றவர்கள், இவ்வழியையே கைக்கொண்டு, அதனையே பின்பற்றும்படி, நாடெங் குமுள்ள தமிழ் பேசும் மக்களிடையே பிரசாரஞ் செய்து வருகின்றனர்.
1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதியன்று. தமிழ்க்காங்கிரஸ் தலைவரே குடியேற்ற நாட்டு மந்திரிக்குப் பின் வரும் தந்தியை அனுப்பினார்.
“இல: 181 - சென்ற பொதுத் தேர்தலிலே ஐக்கிய தேசியக் கட்சித் தமிழ் அபேட்ச கருள் ஒருவராவது தெரிவு செய்யப்படாததிலிருந்தும்; 1945ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை ஆதரித்த பழைய அரசாங்க சபை அங்கத்தவர் களுள், ஒருவர் தவிர ஏனையோர் தோற்கடிக்கப்பட்டதிலி ருந்தும்; இலங்கைத் தமிழ்மக்கள் சோல்பரி அரசியற்றிட்டத்தை நிராகரித்து விட்டார்கள் என்பது தெளிவு."
“இலங்கையிலுள்ள சமூகங்கள் எல்லாவற்றுக்கும் சம உரிமை அளிக்கும் சுதந்திர அரசியற்றிட்டமொன்றை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கோருகிறது. இலங்கை மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அரசியற்றிட்டத்தை
வகுப்பதற்கு, அரசியல் ji 60Tu சபையொன்று வேண்டும். இப்பொழுது இருப்பதைப்போன்ற, சட்டசபை ܫ
மந்திரிசபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தைத் தமிழர்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தகுந்த மாற்றுமுறை இல்லாதபடியால், நாங்கள் தமிழ் மக்களுக்குச் சுய நிர்ணய உரிமை கோருகிறோம்.”
1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலே, தமது நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த தலைவர் சரணடைந் ததும், தமிழ்க் காங்கிரஸிற் பிளவு ஏற்பட்டபோது, தமிழ் பேசும் மக்கள் திக்கற்றவர்களாய்த் தவிக்கலாயினர். அரசியல் வாழ்விலே, தமது நிலையை யிட்டுத் திருப்தி கொள்ளாதவர்களாய் இருந்தபோதிலும், இந்நிலையை மாற்ற

வழி காணாதவர்களாய்த் திகைத்தனர். தமிழ் பேசும் மக்களுக்கென ஒரு சுதந்திர அரசினை நிறுவுவதன் (paulb, இப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற புது எண்ணம் மக்களின் மனதைப் பெரிதும் கவரவில்லை. இப்படியான இயக்கத்துக்கு நாட்டிலே எவ்வளவு ஆதரவு இருக்கு மென அவர்கள் திடமாக அறிந்து கொள்ளவில்லை. ஆனால், அவர்க ளிடையே இவ்விதமாக இப் பிரச்சினை யைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நம்பிய வீரர்களும் தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள். இந்த வீரர்கள் இடைவிடாது தமது நம்பிக்கையூட்டும் கொள்கையைப் பிரசாரஞ்செய்துகொண்டு வந்தபடியால், இன்று, தமிழ்பேசும் மக்கள் எல்லோருக்குமே சுதந்திரத் தமிழ் அரசு ஒன்றிணை நிறுவவேண்டும் என்னும் கொள்கையில் நம்பிக்கை ஏற்பட்டிருக் கிறது. பெருந்தொகையினராக நீங்கள் இங்குவந்து இன்று குழுமியிருப்பதே இதற்குப் போதிய சான்றாகும்.
இப்படியான எண்ணத்தில் நம்பிக்கை மாத்திரம் இருந்தாற் போதாது; அதை நடைமுறையிற் கொண்டுவர வேண்டும். எமது கனவை நனவாக்குவதே எமது இயக்கத்தின் அடுத்த திட்டமாகும். இவ் விஷயத்திலே பலரும் சந்தேக முறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, எமது சமீப காலத்திய அரசியல் வரலாறு இச் சந்தேகத்துக்கு இடமளிப்பதாயிருக் கின்றது. பல முறைகளில் தலைவ ரென்போர் எங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். வீரர்களாகக் காட்சியளித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள், ஒருநாள் நிமிர்ந்து நின்று போராடி, மறுநாள் களத்தையே விட்டு ஓடினர். 1934ஆம் ஆண்டு தொடக்கமாக சோ மகாதேவா அவர்கள் தமிழ்ப்படையின் முன்னணியில் நின்றார்; அவருடைய உற்சாகம் படிப்படியாகக் குறைந்து, ஈற்றில் அவர் எதிரிகளின் கட்சியிற் சேர்ந்தார். இப்படியே திருவாளர்கள் நடேசன், தியாராசா

Page 38
2
ஆதியானோரும் தமிழர்களின் உரிமைக் காக உழைப்பவர்களாயிருந்து, கடைசியில் 1945ஆம் ஆண்டிலே தமிழ் மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வந்த உரிமைகளை மறுக்கும் அரசியற் றிட்டத்துக்குச் சார்பாக வாக்களித் தார்கள். அண்மையிலே, நம் உரிமை களுக்காக விட்டுக்கொடுக்காது போராடி வந்த திரு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள் இப்பொழுது போராட்டத்தைக் கைவிட்டது மாத்திரமன்றி, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எவ்வித குறையுமில்லை என்று எங்கும் பறைசாற்றி வருகிறார்! இப்படியான குட்டிக் கரணங்களின் பலனாக, தமிழ் இனத்தின் பண்புக்கே பழுது வந்தடைந்ததுடன், இப்போதுள்ள தமிழ்த் தலைவர்களிலும், எதிர் காலத்திலே தோன்றக்கூடிய தலைவர் களிலும் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமற் போய்விட்டது. இப்போது சுதந்திரத் தமிழ் அரசு வேண்டுமென்று கோரும் தலைவர்களை, நாம் எப்படி நம்புவது என்று மக்கள் கேட்கின்றார்கள். முந்திய தலைவர்கள் செய்ததைப் போல, இத் தலைவர்களும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு என்று வினவுகின்றார்கள்; இவை சரியான கேள்விகளேயாகும்.
தமிழ்த் தலைவர்களது மனவருத்தத் தைத் தரும் நிலையற்ற போக்குடன், எம் பொதுமக்கள் அரசியல் விஷயங்களிற் காட்டிய விடாப்பிடியான உறுதியை ஒப்பிட்டுப் பார்த்தால், எவ்வளவு வித்தியாசம் தென்படுகிறது? மக்களின் மனவுறுதி சாந்தி அளிப்பதாயிருக்கின்றது. இதனைத் தெளிவாக உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் எல்லாப், பிரிவினருள்ளும் தமிழ் விடுதலைக்காக உழைக்கக்கூடிய வசதி வடமாகாண மக்களுக்கே இருந்தது. அவர்கள், இலகுவாகப் பிரிக்கப் படக்கூடிய பிரதேசத்தில் பெருந்தொகை யினராக வாழ்ந்திருந்தது மாத்திரமன்றி,

7
அவர்களிடையே சிங்கள மக்கள் கலந்து வாழ்வதும் குறைவாக இருந்தது. அவர்களே ஆங்கிலக் கல்வியினாலும் அதிக பயன் பெற்றிருந்தனர். ஆனபடி யால், இலங்கை வாழ் தமிழ் இனத்துக் காகத் தொண்டு செய்யும் பொறுப்பு, பெரும்பாலும் அவர்களையே சார்ந் திருந்தது. தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்காக நடைபெற்ற அரசியற் கிளர்ச்சிகள், பெரிதும் வடமாகா ணத்திலேயே ஆரம்பித்தன. வடமாகாணத் தினருக்குக் கூடுதலான வசதிகளிருந் தமையால், இக்கடமை அவர்களையே சார்ந்தது. யான் இனிக் கூறப்போகும் அரசியற் கிளர்ச்சிகள், பெரும்பாலும் அவர்களாலேயே நடத்தப் பட்டன. ஆயினும், தமிழ்பேசும் Lbák s git எல்லோரினதும் சுதந்திர உணர்ச்சிக்கு அவை எடுத்துக்காட்டாகும். சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பேயில்லாது, இந்நாட்டுக்கு ஓரளவு சுயாட்சி வழங்கிய முதல் அரசியற்றிட்டம் டொனமூர்த் திட்டமேயாகும். டொனமூர் அரசியற் றிட்டத்தின் கீழ் நடைபெற்ற முதற் பொதுத் தேர்தலை யாழ்ப்பாண மக்கள் பகிஷ்கரித்து விட்டனர். ஏறக்குறைய நான்கு ஆண்டு களுக்கு, அரசாங்க சபையில் யாழ்ப்பாணப் பிரதிநிதிகள் எவருமே இருக்கவில்லை. இப்பகிஷ்காரம் அந்த அரசியற்றிட்டத்துக் குள்ள எதிர்ப்பையே பிரதிபலித்தது. இந்த நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே இது ஒப்பற்றதொரு சம்பவமாகும். அந்த அரசாங்க சபைக்கு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலிலே அந்த அரசியற்றிட்டத்தை மாற்றி, சிறுபான்மை யோருக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்ற ஒரே கொள்கையுடைய பிரதிநிதிகளே வடமாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். அடுத்த பொதுத் தேர்தல் இப்போதைய Ggfmt6ib Lurifi அரசியற்றிட்டத்தின் கீழ், 1947ஆம் ஆண்டிலேயே நடைபெற்றது. இத்திட்டம் சிறுபான்மையினருக்குச் சாதகமாகத் திருத்தியமைக்கப்பட மாட்டாது என்றே

Page 39
L
தோன்றியது. இச்சந்தர்ப்பத்திலே தமிழ் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே அரசியல் விஷயங்களை நுணுகி நோக்குவோர் பலர் எதிர்பார்த்தனர். ஆனால், என்னுடைய பேச்சின் முற்பகுதியில் யான் குறிப்பிட்ட தைப் போல, தமிழ்பேசும் மக்களின் விடுதலைப் போரினைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென்ற தீர்ப்பே தமிழ்த் தொகுதிகளிலிருந்து கிடைத்தது. இத் தருணத்திலே திருகோணமலையும் வடமாகாணத்துடன் சேர்ந்துகொண்டது. இதிலிருந்து, இவ்விஷயத்தையிட்டு தமிழ் மக்களுடைய அப்பிராயம் கோரப்பட்ட நேரத்திலெல்லாம், உரிமைப் போரைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்றே அவர்கள் தீர்ப்பளித்தார்கள் என்பது தெளிவாகின்றது. தமிழ்ப் பொதுமக்கள் என்றுமே தமது இலக்கினின்றும் பிறழ வில்லை. வருங்காலத்திலும் அவர்கள் தமது இலக்கினின்றும் தவறமாட்டார்கள் என்ற பெரிய நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இவ்விஷயத்தில் மட்டக் களப்பில் வாழும் தமிழ்பேசும் மக்களின் கருத்தும், திருகோணமலையிலும் வடமாகாணத் திலுமுள்ள நம் சகோதரர்களின் கருத்தை ஆதரிப்பதாகவே இருக்கின்றதென்பது பல
குறிகளிலிருந்து தெளிவாகின்றது. இங்ங்னமாக, இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களுக்கெல்லாம் தங்களுடைய
இன்றைய அரசியல் நிலையைப்பற்றியும் எதிர்கால நிலையைப்பற்றியும் CU5 நிலையான கொள்கை உண்டு என்று விளங்குகின்றது. அவர்களுக்கு ஒரு நிலையான குறிக்கோள் உண்டு. சுருக்க மாகக் கூறினால் அவர்களுக்குத் தாங்கள் ஒரு தனித் தேசிய இனம் என்ற உணர்ச்சி உண்டு. இம் மக்களின் நலத்துக்காக உழைக்க விரும்புவோர், உற்சாக மூட்டக் கூடிய இவ்வுணர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது மக்களின் அரசியல் இலட்சியத்தை அடைவதற்கு, கட்டுப்

8 - 9
பாடான முறையில் வேலை செய்வது அத்தியாவசியமாகும். ஆனபடியால், தமிழ்பேசும் மக்களின் விடுதலையைக் காண்பதற்கு விரும்புபவர்களாய், நமது மக்களின் எதிர்காலத்தில் நம்பிக்கை உள்ளவர்களாய் உள்ள உண்மை ஊழியர்களை ஒன்று சேர்த்து ஒரு ஸ்தாபனம் நிறுவுதல் வேண்டும்.
இனி, தமிழ்பேசும் மக்கள் சென்ற காலங்களில் அரசியல் உலகிலே தங்களை ஆபத்து எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக எண்ணியது சரியாவென்று கவனிப்போம். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட இன்றைய அரசியற்றிட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குமேற் சிறிது காலந்தான் ஆகிறது. இதற்கிடையில், அரசாங்கமோ - இங்கே எடுத்துச்சொல்ல முடியாத தொகையினவாய் நமக்குப் பாதகமான சட்டங்களை ஒன்றன் மேலொன்றாய் நிறைவேற்றியும், பரிபாலனத் துறையில் நம்மைப் பாதிக்கக் கூடிய கருமங்களை ஆற்றியும் கொண்டு வருகின்றது. தெளிவாகப் புலப்படுகின்ற சில உதாரணங்களை மாத்திரம் இங்கே எடுத்துக் காட்டினாற் போதுமென்று கருதுகின்றேன். இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களில், அரைப் பங்கினரைப் பிரஜாவுரிமை அற்றோராகச் செய்யும் ஒரே நோக்குடன், அரசாங்கம் பிரஜா வுரிமைச் சட்டங்களை நிறைவேற்றி யிருக்கின்றது. அந்நியர்களுக்கு எதிராகவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக் கின்றனவென்று வெளிக்குக் கூறிக்கொள் கின்றனர். இது ஒரு போலி நியாயமாகும். இலங்கையின் மத்திய பாகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழு லட்சம் தமிழ்த் தொழிலாளர்களுடைய பிரஜா வுரிமை யைப் பறிப்பதே இச் சட்டங்களின் உண்மை நோக்கமாகும். இவர்களுள்ளே பெரும்பாலானோர் வேறு நாட்டையே அறியமாட்டார்கள். அவர்களெல்லோரும் இந்தியர்களல்லர்; இலங்கையர்களே. தமிழ்பேசும் மக்களாக இருப்பதே அவர்களுடைய ஒரே ஒரு குற்றம்.

Page 40
2
அரசியல் அதிகாரம் எண்ணுத் தொகை யினையே பொறுத்திருக்கின்றது. இந்த மலைநாட்டுத் தமிழர்களைச் சேர்த்து எண்ணினாலும், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் அரசியலதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்களுள் மலைநாட்டுப் பிரதேசத் தில் வசிக்கும் தமிழ் மக்களை நீக்கி விட்டால், எஞ்சியிருக்கும் தமிழ் பேசும் மக்கள், தொகையில் மிகவும் குறைந்த அரசியல் அநாதைகளாய் விடுவார்கள். இது போதாதென்று, இந்த மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர்களின் வாக்கு ரிமையைப் பறிப்பதற்குச் சட்டம் இயற்றிவிட்டார்கள். இது கொடுமையிற் கொடுமையாகும். அரசாங்கத்தின் நோக்கம், இந் நாட்டில் வசிப்பதற்குப் பூரண உரிமையுடைய இம் மக்களை, இந்நாட்டைவிட்டுத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகத் துரத்துவது; அல்லது அவர்களைப் பலவந்தமாகச் சிங்களம் பேசும் மக்களாக மாற்று வதுதான் என்பது எவருக்கும் எளிதிற் புலனாகும்.
தேசியக்கொடி விஷயத்தில் அரசாங்கம் நடந்துகொண்ட விதம், தமிழ்பேசும் மக்களுடைய உணர்ச்சி களையும் உரிமைகளையும் உதாசீனம் செய்வதாக இருக்கின்றது. சிங்கக் கொடி - சிங்கள மன்னரின் கொடியேயாகும். இன்று, அது சிங்களவருடைய அதிகா ரத்தின் சின்னமாக விளங்குகின்றது. அந்தக் கொடியே நடைமுறையில் இலங்கையின் தேசியக் கொடி எனக் கொள்ளப் படுகின்றது. பல்வேறு இனங்கள் வாழும் நாட்டின் தேசியக் கொடியாக ஒரு இனத்தவரின் கொடியைக் கொண்ட நாடு வேறு எதுவும் உலகிலில்லை. தேசியக் கொடி விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கை, தமிழ்பேசும் மக்களிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. அரசாங் கம், அவர்கள் இங்கு வசிப்பதைச் சகித்துக் கொண்டிருக்கின்றது; அவ்வளவுதான்.

9
அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையானது, இவையெல்லா வற்றிலும் பார்க்கத் தமிழ்பேசும் மக்களுக்குக் கூடிய ஆபத்து விளை விக்கக் கூடியதாய் இருக்கின்றது. இக் கொள்கையின் ஆரம்பத்தைத்தான் கல்லோயாவிற் காண்கின்றோம்; கல்லோயாத் திட்டத்தின்கீழ் நீர்ப்பாய்ச்சப் படும் பிரதேசம், தமிழ் பேசும் பகுதியாகிய கிழக்கு மாகாணமேயாகும். தமிழ் பேசும் இப் பிரதேசத்திலே, அரசாங்கம், சிங்கள மக்களைக் குடியேற்றத் திட்டமிட்டுள்ளது. என்பதற்குச் சான்றுகளுள. இது உண்மை யாயிருந்தால், இன்றைய தமிழ் பேசும் பிரதேசத்தைக் குறைப்பதற்கே அரசாங்கம் அநீதியான முறையில் தன் அதிகாரத்தை உபயோகிக்கின்றதென்பது தெளிவு. தடுப்பாரின்றி இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால், சில வருடங்களுக்கிடையில் இந்நாட்டிலே தமிழ்ப் பிரதேசமே இல்லா தொழியும்.
நிதி மந்திரியவர்கள் விளக்கியபடி, அரசியல் மொழி விஷயத்திலே தமிழ் பேசும் மாகாணங்களைப் பரிபாலன முறையிற் பிரித்து விடுவதும்; மற்றைய ஏழு மாகாணங்களிலும் சிங்களத்தையே அரசாங்க மொழியாகச் செய்வதும்தான் அரசாங்கத்தின் கொள்கையாகும். இவ்வேழு மாகாணங்களிலே, குறைந்தது இரண்டு மாகாணங்களிலாவது, தமிழர்கள் செறிந்து பெரும்பான்மை யோராக வாழும் பிரதேசங்கள் இருக்கின்றன. இவர்களிடம் அரசாங்கம் நீதியாக நடந்துகொள்ள விரும்பினால், அவர் களுடைய பிரதேசத்தின் பரிபாலன விஷயங்களில் அவர்களுடைய மொழி யையே உபயோகிக்க வேண்டும். ஆனால், இது நடைபெறப்போவதில்லை. இப்படி யான செயல்களினால் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை ஆளுவதற்கு, இன்றைய அரசாங்கம் தர்ம நீதிப்படி அருகதை அற்றதாகிவிட்டது. அவர்கள் அப்படி ஆளுவதற்கு அதிகார வலி மையொன்றே உரிமையளிக்கின்றது.

Page 41
3
இரண்டேயிரண்டு வருடச் சுயாட்சியில், தமது சொந்த நாட்டிலேயே இவ்வளவு கீழ்நிலை யடைந்துவிட்டர்கள்! இன்றைய அரசாங்கம் தங்களுடையதென்று தமிழ் பேசும் மக்கள் கருதவில்லை. இந்தச் சூழ்நிலையில் யாம் செய்யவேண்டுவ தென்ன? நடந்தது நடக்கட்டுமென்று வாளாவிருப்பதா? அவ்விதம் இருத்தல் நமக்கோ - நமது நாட்டுக்கோ நன்ற்ன்று. நாம் ஆண்மையுடன் முயன்று இப் பிரச்சினையைத் தீர்க்க ஒருவழி காணுதல் வேண்டும். அவ்வழிதானென்ன? கூடு தலான பிரதிநித்துவம் கோரினோம். அது கிட்டவில்லை. வேறோர் பரிகாரம் தேடியாக வேண்டும். இதற்காக, பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழுகின்ற பிறநாடுகளைப் பார்ப்போம். இலங்கையில் இருப்பது போலவே, அந்நாடுகளிலும் பல்வேறு மொழிகளைப் பேசும் இனம் ஒவ்வொன்றும் தத்தம் உரிமைகளைக் கவனமாகப் பேணி வந்தன. சிறிய மொழிவாரி இனங்கள் பெரிய மொழி வாரி இனங்களால் விழுங்கப்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொண்டன. இவ்விதம், மொழிவாரி இனங்களுக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் பல தடவைகளில் யுத்தத்தில் முடிந்து, பெரிய தேசிய இனங்களும் மோதிக்கொள்ள நேரிட்ட துண்டு. இவ்வித சச்சரவுகளை நீக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பூரண சுதந்திர அரசுகளை அமைப்பது; இதிலும் பார்க்கத் தீவிரங் குறைந்ததான மற்றைய வழி, மொழிவாரிச் சுயாட்சி மாகாணங் களை அமைத்து, அவற்றை இணைக்கும் ஒரு மத்திய அரசாங்கத்தையுடைய சமஷ்டி அரசை ஏற்படுத்துவதே. இவ்விரு முறைகளையும் கையாளுவதற்கு, வெவ்வேறு மொழி பேசும் இனங்கள் பிரிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வாழுதல் வேண்டும். சமஷ்டி அரசிய லானது. உலகிற் பல பாகங்களிலும் இவ்வித பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்திருக்கிறது. பிரெஞ்சு - ஆங்கில மொழிகளைப் பேசும் மக்களைக்

O
கொண்ட கனடா தேசமும்; பலவாய, ஜெர்மன், பிரெஞ்சு - இத்தாலிய சுயாட்சி மாகாணங்களைக் கொண்ட சுவிற்சலாந்து தேசமும் இதற்கு நல்ல உதாரணங்களாகும். ரஷ்யா தேசத்திலும் சுயாட்சி கொண்ட மொழிவாரி மாகாணங்களே அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே ஒரு தனியான பிரதேசத்தில் வாழும் ஒவ்வொரு மொழிபேசும் மக்களும், ஒரு தனித் தேசிய இனத்தினராகக் கருதப்படு கின்றனர். இந்தியாவிலும், இந்திய தேசியக் காங்கிரசும் இந்திய அரசாங்கமும் மொழிவாரி மாகாணங்களை அமைக்க வேண்டுமென்ற கொள்கையை ஏற்றுக் கொண்டு, அப்படியே அமைத்தும் வருகின்றார்கள். தனி ஆந்திர மாகாண மொன்று உருவாகின்றது. கன்னடர் தமக்கொரு மாகாணம் வேண்டுமென்று கிளர்ச்சி செய்கின்றனர். இவையெல்லாம் ஒவ்வொரு மொழிவாரி இனமும் தன்னைத் தானே பாதுகாக்க விரும்பும் இயற்கை யுணர்ச்சியின் பயனாக ஏற்பட்டவையே UT (göt.
யாம் கோருவதும் இதுதான். ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும் ஒரு சுயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து, இரண்டுக்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள - சமஷ்டி அரசு - இலங்கையில் ஏற்படவேண்டும். தமிழ் பேசும் தேசிய இனம். பெரிய தேசிய இனத்தால் விழுங்கப்பட்டு அழியாதிருக்க வேண்டுமேயானால், இவ்வித சமஷ்டி ஏற்படுவது அவசியமாயிருக்கிறது. தமிழ்பேசும் பிரதேசங்களை இலகுவாகப் பிரித்துவிடலாம். இடையிடையே இரு மொழிகளைப் பேசும் மக்களும் கலந்துவாழும் பிரதேசங்களும் உண்டு. ஆனால், இதைக் காரணமாகக் கொண்டு, ஒவ்வொரு மொழியைப் பேசும் மக்களும் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங் களை, சுயாட்சி மாகாணங்களாக வகுப்பதற்குத் தடை ஏற்படக்கூடாது. சமஷ்டி அரசியலால் ஒருவரும் நஷ்டமடையப் போவதில்லை. நிச்சய

Page 42
3
மாகச் சிங்கள மக்கள் நஷ்டமடையவே மாட்டார்கள். ஏனென்றால், இது பெரும்பான்மையோருடைய பிரதிநி தித்துவத்தைக் குறைத்து, சிறுபான்மை யோருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிக்கும் திட்டத்தைப் போன்றதன்று. ஆதலால், சமஷ்டி அரசியல் எல்லோரும் விரும்பவேண்டிய ஓர் இலட்சியமாகும்.
சுயாட்சித் தமிழரசை நிறுவவேண்டு மென்று யாம் கோருவதற்குப் பல காரணங்களுண்டு. முஸ்லிம்கள், தமிழர் களாகிய தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் இப்பொழுதே, தாங்கள் - தாழ்ந்தவர்கள் - என்ற மனப் பான்மையைப் பெற்று வருகிறார்கள். ஒரு மனிதனின் பூரணமான மனோ விருத்திக்கு, அவன், "தானிருக்கும் நாடு தன்னுடையதே' என்றும், "நாட்டின் அரசாங்கமும் தனதே’ என்றும் கருத வேண்டியது அவசியமாகும். இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களிடையே இன்று இவ்வுணர்ச்சி இல்லாதிருக்கின்றது. அவர்கள், தங்கள் பிரதேசங்களைத் தாங்களே ஆளுவதன்மூலம், அவ்வர சாங்கம் தங்களுடையதே என்று கருதுவதற்கு உரிமை இருக்கவேண்டும். இன்றுகூட, தமிழ்ப் பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும்; சிங்களப் பகுதிகளில் வசிக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமிடையே, இவ் வுணர்ச்சியைப் பொறுத்தவரையில் ஒரு வேற்றுமை இருப்பதைக் காணலாம். சிங்களப் பகுதிகளில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள், தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையற்றவர்களாக இருக்கின் றார்கள். ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் வசிப்பவரிடையே "சுதந்திர உணர்ச்சி, இன்னும் நிலவுகிறது. தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சுதந்திர அரசுவேண்டு மென்ற இந்த இயக்கங்கூட, தமிழ் பேசும் பகுதிகளில் வசிக்கும் மக்களாலும், அப்பகுதிகளுடன் இன்னும் தொடர்புடை யவர்களாலுமே ஆரம்பிக்கப்பட்டி ருக்கிறது. கிழக்கு மாகாணத் தமிழர்கள் இத்திட்டத்தை ஆதரிக்கும் அளவுக்கு,

H
அங்குள்ள முஸ்லிம் மக்களும் இதை வரவேற்கின்றனர். கிழக்கு மாகாணம் முழுவதையும் தமிழ் அரசின் பகுதியாக்க வேண்டுமென்றால், தமிழ்பேசும் அவ்விரு சாகியத்தாரும் ஒன்றுசேர வேண்டும். ஆனால், எங்களுடைய இயக்கம் முஸ் லிம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப் பிரதேசத்துடன் இ  ைண ந் திருக்க வேண்டுமா? அல்லது சிங்களம் பேசும் பிரதேசத்துடன் இ  ைண ந் திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்கு, முஸ்லிம்களுக்கே பூரண சுதந்திரம் இருக்கவேண்டும் என்ற அடிப்படை யிலேயே நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். தமிழ் மாகாணங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகள், இந்நாட்டில் மிகவும் குறைவாக அபிவிருத்தி செய்யப்பட்ட பகுதிகளாக இருக்கின்றன. இலங்கையின் பரப்பில் முப்பது விகிதத்தையும்; மொத்தச் சனத் தொகையிற் பத்து விகிதத்தையும் இம் மாகாணங்கள் கொண்டிருக்கின்றன. இவை நன்றாக அபிவிருத்தி செய்யப்படக் கூடியன. போதிய நீர்ப்பாசன வசதிகளுடன் - சமதரையுள்ள இப் பிரதேசங்கள், தமிழ் பேசும் மக்களுடைய அரசாங்கத்தினாலன்றிச் சீரிய முறையில் அபிவிருத்தி செய்யப்பட மாட்டா. சிங்கள அரசாங்கத்தினால் இப்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டால், அங்கு சிங்களமக்கள் குடியேற்றப்படு வார்கள் என்பதும் எதிர்பார்க்கப்பட வேண்டி யதே கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தின்கீழ், கிழக்கு மாகாணத்தில் என்ன நடைபெற்று வருகின்றதென்பதை, அங்குள்ள Loji 95 Gir இப்பொழுதே உணர்ந்து விட்டார்கள்.
எங்களுடைய ஒரேயொரு நோக்கம்; ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் அங்கமாக, ஒரு சுதந்திர அரசை நிறுவுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் விடுதலையைப் பெறுவதே யாகும். செய்யவேண்டிய வேலை எவ்வளவு கஷ்டமானதென்பதை யாம் உணர்ந்தே யிருக்கின்றோம். ஆயினும், அப்பணியைச்

Page 43
3
செய்துமுடிக்க எம்மால் இயலும். அதைச் செய்தே தீரவேண்டும். எமக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் பல விஷயங்கள் உள்ளன. யான் முன் குறிப்பிட்டதைப்போல, எமது மக்கள் தம் எதிர்காலத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் 'உறுதியான அரசியற் கொள்கையே எமக்குச் சாதகமான பெரிய சக்தியாகும். யாம் சிறந்த முறையில் - நம்பிக்கைக்குரிய ஊழியர் களுடன் ஒரு கட்சியை அமைப்போமானால், எமது மக்கள் எம்மைக் கட்டாயம் ஆதரிப்பார்கள். சென்ற காலங்களில் தலைவர்களின் உறுதியற்றநிலையே, எமது பலவீனத்துக்குக் காரணமாயிருந்தது. இக்குறையை நிவர்த்தி செய்தாலன்றி, எமது கட்சியும் தோல்வி யுறும். ஐரிஷ் தேசிய வாதிகளைப்போல, சுதந்திரத் தமிழ் அரசு நிறுவப்படும் வரை, “பதவி ஏற்கவே மாட்டோம்" என்று வாக்குறுதி அளிக்கும் உண்மை ஊழியர்களே எமது கட்சியில் இருத்தல் வேண்டும். உள்ளத்தில் ஒரு நோக்கமும் பேச்சில் ஒரு நோக்கமும் இருத்தலாகாது.
செல்வத்திற் குறைந்த எங்களுக்கு, வலிமை பொருந்திய நண்பர்களும் இல்லை. நேர்மையையும் - மன உறுதியையும் - இலட்சியத்தூய்மையையுமே LU ITIÉlassir ஆயுதங்களாகக் கொள்ளவேண்டும். இந்திய விடுதலை - இப்படியான தார்மீக சக்தி களினாலேயே பெறப்பட்டது. எமது விடுதலை - வெளிச்சக்திகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. யாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமானால், நமது சமூகத்திலிருக்கும் குறைகளைக் களைந்து, அதைத் தூய்மை பெறச் செய்யவேண்டும். தமிழ் மக்களிடையே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இருக் கின்றனர். அவர்கள், தாங்கள் மற்றவர்களால் ஒடுக்கப்படுவதாகக் கருதுகின்றனர். யாம் ஒருவருக்குக் கொடுமை செய்தால், தர்ம நீதியின்படி எமக்கும் பிறரொருவர் அதையே செய்வார். தமிழ் மக்கள் அரசியற் சுதந்திரம் பெறவேண்டுமேயானால், தம் சமுதாயத்திலே உரிமையற்றவர்களாய்

2.
இருக்கும் மக்களுக்கு, அவ்வுரிமைகளை வழங்கவேண்டும்.
மலைநாட்டில் வாழும் தமிழ்த் தொழிலாளர்களுடைய நிலைமையானது. இங்கு கூறிய தாழ்த்தப்பட்டோருடைய நிலையிலும் பார்க்கக் கேவலமானதாய் இருக் கின்றது. அவர்கள், அரசியலில் தீண்டாதவர் களாய் பூ விட்டார்கள். அவர்களுக்குப் பிரஜாவுரிமை இல்லாமலிருப்பது மாத்திர மன்றி, தமக்கென ஒரு நாடுமற்ற அகதிகளாவுமிருக்கின்றார்கள். ஏனைய தமிழ்பேசும் மக்கள் இவர்களுக்கு வந்திருக்கும் இன்னலைத் தங்களுக்கு வந்ததாகவே கருதுதல் வேண்டும். அவர்கள் உதவிக்கு எதிர்பார்ப்பது இந்தியாவையல்ல; சுதந்திரம் விரும்பும் இலங்கை வாழ் மக்களிடமிருந்தே அவ்வுதவி வருதல் வேண்டும். இவ்விரண்டு விஷயங்களும் - நீங்கள் ஆரம்பிக்க வந்திருக்கும் இக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் இடம்பெறுதல் வேண்டும்.
இறுதியாக, என்னுடைய பேச்சினைப் பொறுமையுடனும் ஆதரவுடனும் கேட்டுக் கொண்டிருந்தமைக்காக, உங்களுக்கு யான் நன்றி கூறுகிறேன். உங்களுக்குள்ளே எத்தனையோ பேருடைய வீரத்தை யான் நேர்முகமாக அறிவேன். அவ்வீரமானது - என்னகத்தும் செறிந்து, எனக்கும் உற்சாகம் அளிக்கின்றது. குற்றங்களிருந்தால் மன்னித்து, எங்கள் தொண்டின் ஒரு பகுதியாக என் முயற்சியையும் ஏற்றுக் கொள்ளும்படி, உங்கள் எல்லோரையும் பணிவுடன் வேண்டிக்கொள்ளுகின்றேன்.
வணக்கம்.
業

Page 44

கை(த்)
க் கட்சியின்
5ள் மிகுந்த
வரலாறு
O O O க்கங்கள்)
ཟ༽
monum

Page 45


Page 46
இலட்சி
திரு. அ. அ (தலைவர், !
LDன்னராட்சி நிலவிய காலங்களில், ஒரு நாட்டின் சரித்திரம் அந்நாட்டை ஆண்ட மன்னர்களின் வரலாறாகவே எழுதப்படும். மக்களாட்சி மலர்ந்தபின், மக்கள் சக்தியைத் திரட்டிச் செயற்பட்ட அரசியல் இயக்கங்களின் வரலாறே நாட்டின் சரித்திரமாக அமைகிறது. அக் கண்ணோட்டத்தில் அரசியற் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி, சமுதாயத்தில் அவற்றின் தாக்கம் அவற்றின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், சாதனைகள் ஆகியன அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை.
"இலங்கையில் வாழு கின்ற தமிழ் பேசும் மக்கள் : விடுதலை பெறுவதற்காக உழைக்கும் ஒரு ஸ்தா பனத்தை அமைக்க வேண்டு | மெனும் தனி நோக்கத்துடன் | யாங்கள் எல்லோரும் இன்று கூடியிருக்கின்றோம். இப்போ திருக்கும் நிலைமையில் யாம் விடுதலை பெறுவதற்கு ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாத தென்பது எமது திடமான நம்பிக்கையாகும்"
1949ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆந் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சி தோன்றிய நேரத்தில், அதன் தாபகரும் வழிகாட்டியும் ஆரம்பத் தலைவருமான உயர்திரு. சாஜே.வே. செல்வநாயகம், கியூ ஸி.
வர்கள் தம லைமைப் பே தி?ே? వసీపీ ேே இலங்கைத் தமிழரசுக் d5 gueir அடிப்படைக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாகத் தந்தையவர்கள் இங்கு கூறியிருக்கின்றார். இந்த இலக்கை நோக்கி, மக்களைத் திரட்டி, இயக்கம் வளர்ந்த வரலாறே கீழே தரப்படுகின்றது.
 

யப் பாதை ജ|ികേകൾ இ. த. அ. க)
இலங்கையில் தமிழன் தொன்மை:
சரித்திரத்திற்கு முற்பட்ட காலந் தொடக்கம், இலங்கையில் தமிழன் வாழ்ந்தான் என்பது-நடுவுநிலையில் நின்Աl - இந்நாட்டின் வரலாற்றை ஆராய்ந்தோர் எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மை யாகும். காலத்துக்குக் காலம், சிங்கள மன்னரும் தமிழ் மன்னரும் இந்நாட்டை ஆண்டனர். எனினும், பதின்மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியர் இந்நாட்டைக் கைப்பற்றும்வரை, வட இலங்கையில் ஓர் நிலையான தமிழ் அரசும் கிழக்கிலங்கை உட்பட - வடகீழ் பிரதேசத் தில் தமிழ் வன்னிய குறுநில மன்னரின் ஆட்சியும் நிலவின. 169ஆம் ஆண்டு போர்த்துக் கேயர் வடஇலங்கைத் தமிழ் அரசைக் கைப்பற்றிய போதும், அவர்களுக்கோ அடுத்து வந்த ஒல்லாந்தருக் கோ அடங்க மறுத்து, கைலை வன்னியன், பண்டார வன்னியன் போன்ற குறுநில மன்னர் தமிழ் ஆட்சியைக் காத்து நின்றனர். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஆங்கில ஆட்சியே வன்னியர் ஆட்சியையும் அழித்து இலங்கை முழுவதையும் கைப்பற்றியதோடு, 1833ஆம் ஆண்டு முழு நாட்டையும் ஒரே நிருவாகத்தின் கீழ்க் கொண்டுவந்தது. தமிழ் இனத்தின் சுயாதீனமும் தனிப் பிரதேசமும் ஐக்கிய இலங்கை என்ற ஒரே அமைப்பின் கீழ்ப் பறிக்கப்பட்டன.
ஆங்கில ஆட்சியிலிருந்து Լ1ւգ-ւն படியாக மக்கள் கைக்கு அதிகாரம் மாற்றப்

Page 47
L
பட்ட போது, தமிழ் இனத்தின் உரிமைகள் சிங்களப் பெரும்பான்மை என்ற வெள்ளத் தில் அமிழ்ந்தி அழிந்துவிடாது காக்கப்பட வேண்டுமென்பதைத் தமிழ்த் தலைவர்கள் உணர்ந்தனர். 1918ஆம் ஆண்டு இலங்கைத் தேசிய காங்கிரசை ஆரம்பித்த சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களே, 1924ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ் லீக்கை ஆரம்பித்துத் தமிழ் இனத்தின் தனித்துவம் காப்பதற்குத் தனிநாடு வேண்டுமென்று கூறினார். டொனமூர் அரசியல் திட்டத்தைச் "சிறுபான்மையோரின் மரணவோலை" என்று கூறி எதிர்த்தார் சேர் பொன்னம்பலம் இராம நாதன் அவர்கள். ஆயினும், இத் தலைவர்களின் முயற்சிகள் வெற்றிபெற வில்லை. சோல்பரி ஆணைக்குழு
இலங்கை மக்களின் கைக்கு அரசியல் அதிகாரத்தைப் பெருமளவிற்கு மாற்று வதற்கு ஓர் அரசியல் அமைப்பை ஆக்கும் பொருட்டு, சோல்பரிப் பிரபுவின் தலைமையில் ஒர் ஆணைக்குழு பிரித்தானிய குடியேற்ற நாட்டு மந்திரியால் நியமிக்கப் பெற்றது. அக் குழுவின் முன் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை ஒரே குரலில் எடுத்துக்கூறும் பொருட்டு 1944ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழ்ச் காங்கிரஸ் நிறுவப்பட்டது. அதன் தலைவர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் பாராளுமன்றத்தில் எந்த ஒரு சமூகத்திற்குப் ஏனைய சமூகங்களை நசுக்குவதற்கு வாய்ப்பற்ற வகையில், "பெரும்பான்மை சமூகத்திற்ரும் சிறுபான்மைச் சமூகங்களுக்குமிடையே சமபலப் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்ற கொள்கையை வெகு சிறப்புடன் எடுத்து விளக்கினார். டொனமூர் அரசியல் அமைப்பின்கீழ், தமிழ் இனத்திற்குச் சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த இன்ன? களை எடுத்து விவரித்தார். சோல்ப ஆணைக்குழுவினர் இவற்றின் உண்மைை ஏற்றுக்கொண்டபோதிலும், சிங்கள மந்தி சபையின் கோரிக்கைக்கே இணங்கினர். பிரி தானியப் பாராளுமன்ற ஆட்சி முறைை அப்படியே இங்கும் புகுத்தும் அரசிய அமைப்பை ஏற்படுத்தினர். அவ்வமைப்பில்

6
29ஆம் பிரிவில் - எந்த ஒரு சமூகத்திற்கும் மதத்திற்கும் விரோதமான சட்டமியற்று வதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பைத் தவிர, சிங்களப் பெரும்பான்மைக்குக் கட்டுப் பாடற்ற அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்குக் கைம்மாறாகக் கட்டு நாயக்கா விமானத் தளத்தையும் திருக்கோணமலைக் கடல் தளத்தையும் உபயோகிக்கும் உரிமை யைப் பெற்றனர் ஆங்கிலேயர்.
இந்த ஒருதலைப்பட்சமான அரசியல் அமைப்பை எதிர்த்து வாதாட இங்கிலாந்து சென்றார் திரு. பொன்னம்பலம் அவர்கள். அவர் அங்கு நிற்க, தமிழ்க் காங்கிரஸ் அரசாங்க சபை அங்கத்தலைவர்களும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் "கிட்டா தாயின் வெட்டென மற” என்று கூறி, சோல்பரி வெள்ளை அறிக்கையை ஏற்கும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். மலைநாட்டுத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக அன்று இருந்த திரு.நடேசஐயர் அவர்களும் நியமனப் பிரதிநிதியாக இருந்த திரு. ஐ. எக்ஸ். பெரேரா அவர்களுமே வெள்ளை அறிக்கை யை எதிர்த்து வாக்களித்த தமிழ்ப் பிரதிநிதி களாவர். (எதிர்த்து வாக்களித்த ஒரேயொரு சிங்கள உறுப்பினர் காலிப் பிரதிநிதி திரு. டபிள்யு. தமநாயக்கா ஆவார்) தமிழ்க் காங்கிரஸின் வெற்றியும்; அதன் பிளவும்:
சோல்பரி அரசியல் திட்டத்தின்கீழ், முதல் தேர்தல் 1947ஆம் ஆண்டு நடை பெற்றது. அரசியல் அமைப்பில் பாதுகாப்புத் தேடத் தலைவர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தபோதிலும், "தமிழன் அடிமையாக வாழ ஆயத்தமில்லை" என்ற கொள்கையைத் தமிழ் மக்கள் முன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வைத்தது. "தமிழன் என்று சொல்லபா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற கோஷம் தமிழீழம் எங்கும் ஒலித்தது. அடிமை அரசியல் அமைப்பை ஆதரித்த தமிழ் உறுப்பினர்களில், ஒருவர் தவிர அத்தனைபேரும் தோற்கடிக்கப்பட்டனர். வடக்கிலும் திருக்கோணமலையிலும் தமிழ்க் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

Page 48
3.
தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாபெரும் வரவேற்பில், திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்கள் முதன் முதலாக “ஒற்றையாட்சியில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காவிட்டால், பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய இணைப்பாட்சி முறை யைத் தமிழ் மக்கள் கோர வேண்டிவரும்" என்று பல்லாயிரம் மக்கள் முன் பிரகடனம் செய்தார். இரண்டு ஆண்டுகளின்பின் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அடிப்படைக் கொள்கை அன்றே கருக்கொள்ளத் தொடங்கியது. தமிழ் மக்களுக்குச் சுய நிர்ணய உரிமை கோரி, தமிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள் பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா அவர்களுக்கும் குடியேற்ற நாட்டு மந்திரிக்கும் 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஒரு தந்தி அனுப்பினார்.
இதற்கிடையில், தமிழ்க் காங்கிரசைச் சாராத சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரை அமைச்சராக்கி, திரு. டி. எஸ். சேனநாயக்கா மந்திரி சபையை அமைத் திருந்தார். அவர்களின் ஆதரவோடு, பூரண சுதந்திரங் கோரி அவர் விடுத்த வேண்டு கோள், சகல சமூகங்களின் சம்மதத்தையும் பெற்றதாக ஆங்கில ஆட்சியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. பிரித்தானிய ஆட்சியினாலோ அல்லது வேறு வெளியாரின் தலையீட்டினாலோ தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறலாம் என்ற நிலை முடிவடைந்தது.
எதிர்ப்பு வழியைக் கைவிட்டு, சிங்கள ஆட்சியோடு ஒத்துழைப்பு வழியை மேற் கொள்ளத் தீர்மானித்தார் தமிழ்க் காங்கிரஸ் தலைவர். தமிழ்க் காங்கிரஸ் தலைமைப் பீடத்தில் பாரதூரமான கருத்து வேற்றுமை தலைதூக்கியது. திரு. செல்வநாயகம் அவர்களும் டாக்டர் இ. மு. வி. நாகநாதன் அவர்களும் அரசுடன் சேரும் யோசனையை எதிர்த்தனர். எனினும், கட்சியின்

7
ஒற்றுமையைக் கருதித் திரு. செல்வநாயகம் அவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பைக் காட்ட வில்லை. டாக்டர் நாகநாதன் அவர்கள் வெளிப்படையாக எதிர்த்துத் தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறினார்.
தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேருவதற்கு முன்பே, டிஎஸ். சேனநாயக்கா அரசாங்கம் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. தமிழ்க் காங்கிரஸ் சார்பில் திரு. ஜீஜீபொன்னம்பலம் அவர்களும் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களும் அச்சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். 1948ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. திரு. செல்வநாயகம் அவர்கள் இச்சட்டத்தை மிகவுந் தீவிரமாக எதிர்த்துப் பேசும்போது கீழ்க்கண்டவாறு கூறினார்.
"இன்று இந்தியத் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. நாளை மொழிப்பிரச்சினை வரும்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இதே கதி நேரிடும். எனவே, இன்றே நாமெல்லாம் ஒன்று சேர்ந்து இவ்வநிதியை எதிர்க்கவேண்டும்." (பாராளுமன்ற நடவடிக்கை 1012.1948) எட்டு ஆண்டுகளின் பின் - 1956ஆம் ஆண்டு சிங்களம் மாத்திரம் சட்டம் வந்தபோது, திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இவ்வாக்கியங்களின் தீர்க்கதரிசனத்தைத் தமிழ்மக்கள் உணர்ந்தனர். இந்திய - பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்ட வாக்கெடுப்பின்போது, அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தது. திருவாளர்கள் பொன்னம்பலம், கனகரத் தினம், இராமலிங்கம் ஆகியோர் சட்டத்தை ஆதரித்தும்; திருவாளர்கள் செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் சட்டத்தை எதிர்த்தும் வாக்களித்தனர். அன்று ஏற்பட்ட பிளவு 24 ஆண்டுகளின் பின், தமிழர் கூட்டணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரகம் ஒன்று சேர்ந்தபோதே மறைந்தது. இக் கட்சிகள்

Page 49
t S
இரண்டும் ஒன்று சேர்ந்திருக்கும் இந்த நேரத்தில், துரதிர்ஷ்டம் மிகுந்த இப்பிளவைப்பற்றிக் குறிப்பிடுவது வேதனை தருவதாக இருந்தாலும், வரலாற்றின் கோவை விடுபடா திருப்பதற்காகக் கூற வேண்டியவனா யிருக்கிறேன்.
இணைப்பாட்சி:
காங்கிரஸில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, இரு சாராரும் தத்தம் கருத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்து விளக்க முற்பட்டனர். தொடர்ந்து அரசை எதிர்த்துப் போராடி, இணைப்பாட்சியின் கீழ் தமிழ் இனத்தின் உரிமையைப் பெறுவதே எமக்குள்ள ஒரே வழி என்று திரு. செல்வநாயகம் அவர்கள் பிரச்சாரம் செய்யத்தொடங்கினார். இந்த இயக்கத்தின் கால்கோள் விழா 13.2.1949 அன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் முன்றிலில், பூரீலழறி துரைச்சாமிக்குருக்கள் அவர்கள் ஆசி கூறித் திரு. செல்வநாயகம் அவர்களைத் தலைமை வகிக்கும்படி அழைக்க ஆரம்பமாயிற்று. கோப்பாய்ப் பிரதிநிதி திரு. கு. வன்னியசிங்கம் அவர்களும் மூதவை உறுப்பினர் டாக்டர் இ. மு. வி. நாகநாதன் அவர்களும் பேசிய இக் கூட்டத்தில் இளைஞர்களின் சார்பில் பேசும் வாய்ப்பு, அப்போது ஓர் சட்டமாணவனாக இருந்த எனக்குக் கிடைத்தது. அன்றிலிருந்து தமிழ்மக்களின் அரசியலில் ஒர் புதிய சிந்தனை - ஈழத்தமிழன் ஓர் தனித்தேசிய இனம்; அவனுக்கு ஒர் தனிப் பிரதேச்ம் உண்டு; அதை அவன் ஆளவேண்டும்; அதன் பொருளாதாரத்தை விருத்தி செய்து தமிழன் வாழமுடியும்; தென்னிலங்கையை நம்பி வாழ முடியாது; வாழத் தேவையுமில்லை; இப் புதுமையான கருத்துக்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பட்டி தொட்டிகளிலும் பட்டினங்களிலும் எதிரொலிக்கத் தொடங் கின. கருத்துக்குக் கருத்து மாத்திரமல்ல, கல்மாரியும் கிடைத்தது பல இடங்களில், தமிழ் இனம் செல்லவேண்டிய பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது; விஷ ஜந்துக்கள் நெளிவது; இரத்தமும் கண்ணிரும்

8.
சிந்தவேண்டியது என்பதை அந்த ஆரம்பக் கட்டத்தில் அனுபவத்திற் கண்டோம். ஆயினும், சளைக்காது பிரசாரம் வேகமாக நடைபெற்றது, வருங்காலத் திட்டங்களைத் தெளிவுபடுத்துவதற்கு, கொழும்பில் ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் ஒவ்வோர் அன்பர் வீட்டிற் கருத்துப் Luthorps peoLGuppy..."Thursday nights are Federal Nights" 6T6irl gy LtdLif pnaspirg667 அவர்களின் சுலோகம். டாக்டர் வி.வே. பரமநாயகம், டாக்டர் எம். திருவிளங்கம், திருவாளர்கள் பி.என். திருநாவுக்கரசு, பி. நல்லசிவம்பிள்ளை, வி.பொ.சி. முத்துக் குமாரசாமி, எஸ்.பி. வேலாயுதபிள்ளை, வி. நவரத்தினம், எஸ்டி சிவநாயகம், அருள். தியாகராசா முதலிய பலர் இவற்றில் கலந்து வந்தனர். பிரசாத் திட்டங்களும் அங்கு கூறவேண்டிய அரசியற் கருத்துக்களும் எம் உள்ளங்களிற் தெளிவு பெற்றன. ஒரே சிந்தனையுள்ள ஒரு குழு மெல்ல மெல்ல விரிவடைந்து வளர்ந்து வந்தது. நந்திக்கொடி :
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும்
கூட்டங்களும் கருத்தரங்குகளும் நடை பெற்றன. திருகோணமலையில் 8-10-49இல் சக்தி நிலைய ஆதரவில், முதற் கூட்டம் நடை பெற்றது. திரு. இராஜவரோதயம், திரு. இராமநாதன், திரு. பா. விஜயநாதன் முதலிய பலர் அங்கு இயக்கத்தில் உழைக்க மு ன் வந்த னர் . மட்டக் களப் பில் திரு. ஆர்.பி.கதிர்காமர் தலைமையில் அடுத்த மாதம் - முதற் பிரசாரக் கூட்டம் நடை பெற்றது. திருவாள்ர்கள் ஈஎல். தம்பி முத்து, சாகுல் ஹமீது, செ. இராசதுரை, இரா. பத்மநாதன், பாலசுப்பிரமணியம், சித்தாண்டி நாகலிங்கம், சிவஞானம், ஆசிரியர் கனகசபை போன்ற பலரின் ஒத்துழைப்புடன் இயக்கம் அங்கு வளர்ச்சி பெறத்தொடங்கியது.
சங்கிலி மன்னனின் ஆட்சி 1ள9ஆம் ஆண்டு அழிக்கப்பட்டபோது இறக்கப்பட்ட நந்திக்கொடி, 3-9-49ல் - 330ஆண்டுகளின் பின் மீண்டும் நல்லூர் சங்கிலித் தோப்பில்

Page 50
உயர்த்தப்பட்டது. அங்கிருந்து நூற்றுக் கணக்கான தொண்டர்கள் அணிவகுத்து நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் வீதிக்குச் சென்றனர். வாலிபர்களின் கைகளில் நந்திக்கொடிகள் பறந்து கொண்டிருந்தன. திரு. வி. முத்துக்குமாரு எம்.ஏ. அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், கூட்டமேடை மாற்றுக் கட்சியினரால் ஆக்கிரமிக்கப் பட்டது. கூட்டம் பொலீசாரின் தலையீட்டி னால் தடைசெய்யப்பட்டதாயினும், பழந்தமிழ் இராசதானியில் மறைந்த தமிழ் அரசின் கொடி ஏற்றப்பட்ட அச்சம்பவம் இளைஞர்களின் உள்ளங்களில் ஓர் புதுக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழரசு இயக்கத்தில் அது ஒர் முக்கிய படிக்கல்லாக அமைந்தது. அடுத்தநாள், நவாலியில் பண்டிதர் இளமுருகனார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆக்ரோஷத்தோடு ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றினர். கட்சியின் ஆரம்பம்
பிளவுபட்ட தமிழ்க் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களும், புதிய கருத்தினால் கவரப்பட்டு அரசியல் எழுச்சி பெற்ற இளைஞர் பலரும் 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆந் திகதி காலை 9-30 மணிக்கு மருதானை அரசாங்க லிகிதர் சேவைச் சங்கக் கட்டிடத்தில் கூடினர். கூட்டத்தின் அழைப்பாளர்களாக டாக்டர் இ.மு.வி. நாகநாதன் அவர்களும் திரு.கு. வன்னியசிங்கம் அவர்களும் பத்திரிகை மூலம் அழைப்பு விட்டிருந்தனர். டாக்டர் எம். திருவிளங்கம் அவர்கள் வரவேற்புக்குழுத் தலைவராகப் பணி யாற்றினார். திரு. செல்வநாயகம் அவர்கள் கூட்டத்தின் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நமது தலைமைப் பேருரையை நிகழ்த்தினார். தலைவர் அவர்களே கீழ்க்காணும் தீர்மானத்தை முன் மொழிந்தார் :
"இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக உழைக்கும் தொண்டர்கள் 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆந்

9.
திகதி மருதானை அரசாங்க விகிதர் சேவைச் சங்கக்கட்டிடத்தில் கூடிய இக் கூட்டம், நியாயமற்றதும் - பலமொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டிற்கு ஏற்காதது மான இன்றைய ஒற்றையாட்சி அமைப்பின் கீழ், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் மேன்மேலும் கீழான நிலைக்குத் தாழ்த்தப் படுவதை உணர்ந்து, தமிழ் பேசும் மக்கள் இந்நாட்டில் சுதந்திரமும் சுயமரியாதையு முள்ள பிரஜைகளாக வருங்காலத்தில் வாழ்வதற்குப் பாதகமான சட்டங்கள் ஆக்குவதையும்; நிர்வாக நடவடிக்கைகள் ஆற்றுவதையும் மேற்கொண்டிருக்கும் இன்றைய அரசாங்கத்தின் கொள்கையின் நோக்கத்தையும் ஆபத்தையுமறிந்து, நாட்டின் ஒற்றுமைக்குப் பாதகமற்ற முறையில் - இந்த அடிப்படைப் பிரச்சினைகளை நீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் தீர்ப்பதற்கு ஒரே வழி - ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் ஓர் அங்கமாக இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சி அரசை நிறுவுவதே என்பதைத் தெளிவாகக் கண்டு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியாக அமைந்து, இந்நாட்டுத் தமிழ் பேசும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் "சுயாட்சி" என்ற இலக்கை அடைவதற்கு இடையறாது உழைக்க உறுதிபூண்ட, தமிழ் பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்குவதென்று தீர்மானிக்கிறது.
கூடியிருந்த பிரதிநிதிகள் அத்தனை பேரும் ஏகமனதாக ஆர்ப்பரித்து ஆதரித்த இத் தீர்மானமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றமாகும்.
சோஷலிசமும் - தீண்டாமை ஒழிப்பும்
கட்சி நிறுவப்பட்டதைத் தொடர்ந்து அதன் நோக்கத்தையும் அடிப்படைக் கொள்கைகளையும் அமைப்பு விதிகளையும் மகாநாடு ஏற்றுக்கொண்டது; கட்சியின் வருங்காலப் போக்கை நிர்ணயிக்கும் வகையில் கட்சியின் "பொருளாதாரக் கொள்கை பற்றி ஆரம்ப மகாநாட்டிலேயே காரசாரமான விவாதம் நடைபெற்றது. சோஷலிச - பொருளாதார முறையைக்

Page 51
- Z கட்சிக் கைக்கொள்ள வேண்டுமென்று இளைஞர்கள் வற்புறுத்தினர். பெரியவர்கள் பலர் அதை எதிர்த்தனர். கடுமையான வாக்கு வாதத்தின்பின் சோஷலிச - பொருளாதார முறை என்பதை ஏற்பதா? விடுவதா? என்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, இரு பக்கத்திற்கும் சமமான வாக்குகள் கிடைத்தன. எப்போதும் இளைஞர்களின் போக்கிற்கு மதிப்பளிக்கும் தந்தை செல்வநாயகம் அவர்கள் தமது வாக்கைச் சோஷலிசத்தின் பக்கம் கொடுத்த காரணத்தினால் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக :
"சாதி, சமயம், இனம், ஆண்-பெண் என்ற அடிப்படையில் வேற்றுமை பாராட் டாது - கல்வி, தொழில் முதலிய துறைகளில் சமசந்தர்ப்பமளிக்கும் சோஷலிஸ்ட் பொருளாதார முறையினை ஏற்படுத்தல்” என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமூக உயர்வு-தாழ்வுகளையும் தீண்டாமையையும் ஒழிப்பதும், சோஷலிஸ்ட் பொருளாதார முறையினை அமைப்பதும் என்ற அடிப்படைக் கொள்கைகள் - பழமை விரும்பிகள் பலரைக் கட்சியிலிருந்து விலகிப் போகச் செய்தன. ஆரம்பத்தில் எம்மோடு ஒத்துழைத்த சிலர், இவற்றைக் கண்டதும் ஒதுங்கிக்கொண்டனர். சமுதாயத்தில் புரையோடிய புண்ணான சாதியை ஒழித்து, ஒரு புத்துயிர் பெற்ற - ஒன்றுபட்ட தமிழ் இனத்தை உருவாக்கி, அவர்களுக்கு ஒரு தாயகத்தையும்; அத் தாயகத்தில் தம்மைத் தாம் ஆளும் உரிமையையும் நிலை நாட்டி, அங்கு சுரண்டல் ஒழிந்த சோஷலிச பொருளாதார அமைப்பை ஏற்படுத்தி, எல்லாத் தமிழ் பேசும் மக்களும் இன்ப வாழ்வு வாழ வழி வகுப்பதே - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குறிக்கோளென்று அன்றே உறுதியாகத் தீர்மானிக்கப்பெற்றது. சோல்பரி யாழ்ப்பாண வருகை
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்து ஒரு மாதத்தில் களத்தில் குதிக்கும் வாய்ப்புக் கட்சி ஆதரவாளர்
களுக்குக் கிடைத்தது. அநீதியான அரசியல் அமைப்பைச் சிபாரிசு செய்து தமிழ்

O
இனத்தை அடிமைகளாக்கிய சோல்பரி ஆணைக்குழுவின் தலைவர் சோல்பரிப்பிரபு - இலங்கையின் மகாதேசாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். அவர், 1950ஆம் ஆண்டு தை மாதம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். "தமிழினத்தின் வைரியை வரவேற்காதீர்” என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, அவருடைய வருகையைப் பகிஷ்கரிக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரியது. பகிஷ்கார நோக்கத்தை விளக்கும் பொருட்டு, யாழ் நகர மண்டபத்தில் 22-1-50ஆந் திகதி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆட்சியாள ரினதும் வேறு அரசியற் சக்திகளினதும் தலையீட்டினால் நகர மண்டபத்திற் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. கட்டணம் செலுத்தி வாடகைக்கு அமர்த்தப்பட்ட மண்டபம் கூட்டத்தன்று இரட்டைப் பூட்டுகள் போட்டுப் பூட்டப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள், பூட்டப் பட்ட கதவுகளையும் - அணிவகுத்து ஆயுத பாணிகளாக நின்ற பொலீசாரையும் கண்டு திகைத்தனர். திடீரென்று, கட்சித் தொண்டர் கள் அங்கு தோன்றிக் கூட்டம் தனியாருக்குச் சொந்தமான ஒரு 'கராஜ் காணியில் நடை பெறும் என்ற துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். அக்காணியில் திரண்ட மக்கள் மத்தியில் ஒரு மேசை மீது நின்று தலைவர்கள் பேசினர். யாழ்ப்பாணம் முன் எப்போதும் காணாத புரட்சிகரமான சூழ்நிலையில் கூட்டம் நடைபெற்றது. புதிதாகப் பிறந்த கட்சி என்ற குழந்தை தவழுவதற்கு முன்பே, ஆட்சியாளருக்குப் பெருந்தலையிடி கொடுக்கும் இயக்கமாக வளர்வதற்கான அறிகுறிகள் தோன்றின.
சிங்கக் கொடி :
1950ஆம் ஆண்டு மாசி மாதத்தில் - இரண்டு வருடங்களுக்கு மேலாகத் தீர்வு பெறாதிருந்த தேசியக் கொடிப் பிரச்சினையில், பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு ஒரு முடிவுக்கு வந்தது. சிங்கக் கொடியின் கம்பப்பக்கத்தில் சிறுபான்மைச் சமூகங்களைக் குறிப்பதற்குப் பச்சை - காவி

Page 52
4
நிறங்களில் இரு கோடுகள் சேர்க்கப்பட்டன. "தமிழ் பேசும் சமூகம் புறக்கணிக்கப்பட்ட இரண்டாந்தரப் பிரஜைகளாக இந்நாட்டில் வாழுகின்றனர் என்பதைப் பிரகடனப் படுத்தும் ஒட்டுக்கொடி" என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி அக் கொடிக்கு எதிராகத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. "இலங்கைவாழ் தமிழ் பேசும் இனம் இக் கொடியை முற்று முழுதாக நிராகரிக்கின்றது" என்று கட்சி தீர்மானித்தது. உணர்ச்சியுள்ள தமிழ்மக்கள் - இன்றும் அக் கொடியை ஏற்க மறுக்கும் நிலை இருப்பதற்குக் காரணம் - எமது இயக்கமேயாகும். கட்சியின் வளர்ச்சி :
இவ்வாரம்பக் கட்டத்தில் மலை நாட்டுத் தொழிற்சங்கங்களில் பலகாலம் பெரும்பங்கு கொண்டு உழைத்து வந்த திரு. தெ. செ. வைத்தீஸ்வரன் அவர்களைக் கட்சி தன் நிருவாகச் செயலாளராகப் பெற்றது. கட்சியின் அமைப்பு வேலையும் பிரசார இயக்கமும் வேகம் பெற்றன. மட்டக் களப்பு, திருக்கோணமலை, வவுனியா, மன்னார், ய்ாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் மூலை முடுக்குகளெல்லாம் கட்சிப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. கட்சிக் கிளைகள் கிராமந்தோறும் நிறுவப்பட்டு மாவட்டக் கிளைகளும் அமைக்கப்பெற்றன. கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான டாக்டர் விகே பரமநாயகம் அவர்கள் இப்பணியில் பெரும் பங்கு கொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் :
இந்தக் காலத்தில் 'பட்டிப்பளை ஆறு என்ற பாரம்பரியத் தமிழ்ப் பெயர் 'கல்லோயாவாக மாற்றப்பெற்று, அங்கு சேனநாயக்கா சமுத்திரத்தைக் கட்டிஅப்பள்ளத்தாக்கை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத் திட்டம் கிழக்கு மாகாணத்துக்குப் பெரும் வரப் பிரசாதம் என்று பிரச்சாரம் செய்தனர் ஆட்சியாளர். ஆனால், அரசின் உண்மை யான நோக்கத்தை அன்றே உணர்ந்து அப்

H
பகுதி மக்களைத் தட்டியெழுப்பும் பொருட்டுத் தீவிர பிரச்சாரத்தை மேற் கொண்டது தமிழரசுக்கட்சி. கல்முனை, சம்மாந்துறை போன்ற அப் பகுதிகளில் மக்கள் நெருங்கி வாழும் கிராமங்கள் எல்லாம் சென்று, சிங்களக் குடியேற்றத்தின் ஆபத்தை விளக்கி 1950ஆம் ஆண்டு தொடக்கமே கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
கட்சியின் முதலாவது தேசிய மாநாடு :
1951ஆம் ஆண்டு ஏப்ரல் 13, 14, 15ஆந் திகதிகளில் திருக்கோணமலையில் கட்சியின் முதலாவது மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் தலைவர் திரு. செல்வநாயகம் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரையும் அங்கு நிறைவேற்றப்பட்ட சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த தீர்மானங்களும் கட்டுரையின் இறுதியில் வரும் அநுபந்தத்தில் முறையே (அ), (ஆ) பிரிவுகளில் கொடுக்கப்படுகின்றன. தமிழ் இனத்தின் வாழ்வைப் பாதிக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, மக்களின் கண்களைத் திறந்து பணி புரிந்த ஒரே இயக்கம் இலங்கைத் தமிழரசுக்கட்சி என்பதை அம் மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட ஏழு தீர்மானங்களும் எடுத்துக் காட்டுகின்றன. (பிரிவு ஆ)
பிரதமர் டீ.எஸ். சேனநாயகா யாழ். வருகை :
இந்த ஆண்டின் இறுதியில் பிரதமர் டீ.எஸ். சேனநாயகா யாழ்ப்பாணத்தில் வெற்றிப் பவனி வருவதற்கு ஆயத்தங்கள் தொடங்கின. தமிழ் இனத்திற்கு அவருடைய அரசு செய்துவந்த பாரதூரமான தீமைகளை மக்களுக்கு விளக்கும் பொருட்டு அவரது வருகையைப் பகிஷ்கரிக்குமாறு கட்சி - பிரச்சாரத்தை மேற்கொண்டது. பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களும் குறிப்பாகத் திரு.டீ.எஸ். சேனநாயகா அரசாங்கமும் மேற்கொண்ட திட்டங்கள், மேலாழ்ந்த வாரியாகப் பார்ப்பவர்கட்குத் தமிழ் இனத்திற்கு விரோதமானவையாகத் தோன்றவில்லை. தமிழ் பேசும் தலைவர்களிற்

Page 53
4.
பலருடைய ஒத்துழைப்போடு இக் கருமங்கள் நிறைவேற்றப்பட்டன. சிங்கக் கொடி நம்மீது திணிக்கப்பட்டது. நமது தலைவர்களிற் பெரும்பாலோர் அதை ஏற்றுக் கொண்டனர். இந் நாட்டில் வாழும் அரைப்பங்கு தமிழரின் குடியுரிமை, வாக்குரி மை பறிக்கப்பட்டுத் தமிழினத்தின் அரசியற் பலம் அழிக்கப்பட்டது. அது இந்தியருக்கு எதிரானதேயன்றி இலங்கைத் தமிழருக்குப் பாதகமானதல்ல என்று நம் மக்களை நம்பச் செய்தனர் ஆட்சியாளர். தமிழ்ப் பிரதேசத் தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. கிழக்குமாகாணத் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் நன்மை தரும் திட்டமென்று காட்டிக் கொண்டது அரசாங்கம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோலச் சிங்களத்திற்கு முதலிடம் கொடுத்துத் தமிழ் மொழியை ஒதுக்கத் தொடங்கியது. நோகாமற் றொடங்கிய இந் நடவடிக்கையைத் தமிழ் மக்கள் கண்டு கொள்ளவில்லை. பிரதமரின் யாழ்ப்பான வருகையைப் பயன்படுத்தி இவற்றை யெல்லாம் மக்களுக்கு விளக்கினோம். கஷ்டம்ற்ற பாதையையே விரும்பும் மக்கள் தனிச்சிங்களச் சூறாவளி எழுந்து வெளிப் படையாகவே மோதும்வரை, ஆபத்தை அறியாது பெரும்பாலும் உறங்கிக் கிடந்தனர். தன் தலையை மணலில் புதைத்து விட்டு வந்த ஆபத்து நீங்கிவிட்டதாக நம்பும் தீக்கோழி போன்றே வாழ்ந்தனர். அன்றும் இன்றும் கேள்போற் பகைவராக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசுகளிலும் பார்க்க, வாள்போற் பகைவரான பண்டார நாயக்காக் களின் அரசாங்கமே தமிழ் இனத்தின் உறக்கத்தைக் கலைத்து - உரிமைகோரி - உத்வேகத்தோடு இயங்கச் செய்தன.
1952ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல்
பிரதமர் டீ.எஸ். சேனநாயகாவின் திடீர்மறைவுக்குப்பின் பதவியேற்ற டட்லி சேனநாயகா பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத்தேர்தலை நடத்தினார். நிறுவி இரண்டரை ஆண்டுகளுக்கிடையில் கட்சி ஒரு பொதுத் தேர்தலிற் குதிக்க வேண்டிய

2
சூழ்நிலை ஏற்பட்டது. வடக்குக் கிழக்கு மகாகாணங்களில் ஏழு தொகுதிகளிற் கட்சி உத்தியோக பூர்வமாக வேட்பாளர்களை நிறுத்தியது. கோப்பாய் தொகுதியில் திரு. வன்னியசிங்கம் அவர்களும் திருக்கோணமலையில் திரு இராசவரோதயம் அவர்களும் வெற்றி பெற்றனர். தந்தை செல்வநாயகம், டாக்டர் நாகநாதன் உட்பட ஏனைய வேட்பாளர்கள் தோல்வி கண்டனர். ஏழு தொகுதிகளிலுமாக - மொத்தம் 45,331 வாக்குகள் கட்சிக்குக் கிடைத்தன. கட்சி அனுதாபிகளாக - மட்டக்களப்புத் தொகுதியில் திருஆர்பி கதிராமர்அவர்களும் கல்குடாவில் திரு. சிவஞானம் அவர்களும் போட்டியிட்டனர். திரு. கதிராமர் வெற்றி பெற்றாராயினும், அடுத்த நாளே தந்தி மூலம் ஆளுங்கட்சியில் சேர்ந்தார். அப்போது - தமிழ் மக்களின் மனோ நிலைக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும். அமைப்பு வேலைகளும் பிரசாரமும் மேலும் தீவிரப் படுத்தப்பட வேண்டுமென்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தின. இரண்டாவது தேசிய மாநாடு
யாழ்ப்பாணத்தில் திரு. செல்வநாயகம் அவர்களைத் தலைவராகக் கொண்டு நடைபெற்ற இரண்டாவது மாநாடு - தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட சோர்வைப் போக்கி மீண்டும் இயக்க வேலைகளில் சுறுசுறுப்புடன் இயங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதற்குமுன், 1953ஆம் ஆண்டு தை மாதம் முதலாந் திகதி பொங்கல் தினத்தன்று - தமிழரசு வாலிப முன்னணி அமைக்கப்பெற்றது. கொக்குவில் திரு. ந. அருணாசலம் அவர்கள் வாலிப முன்னணியை அமைப்பதற்குப் பெருமுயற்சி மேற்கொண்டார். வாலிப முன்னணியின் முதல் தலைவராக என்னைத் தெரிவு செய் தனர். அதே ஆண்டில் நடைபெற்ற மாநில மாநாட்டில் இளைஞர்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டது மாத்திரமன்றி, நல்லூர் வாலிபர்கள் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியன் வரலாற்றை நாடகமாக - அதே மாநாட்டில் மேடையேற்றினர்.

Page 54
ஆகஸ்ட் 12 ஹர்த்தாலில் கட்சியின் பங்கு
பிரதமர் டட்லி சேனநாயகாவின் அரசாங்கம் அரிசியின் விலையை அதிகரித்ததை எதிர்த்து, நாடெல்லாம் எதிர்க்கட்சிகள் ஹர்த்தாலையும் தீவிர எதிர்ப்பியக்கத்தையும் நடத்தின. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலை வெற்றிகரமாக நடத்துவதிற் கட்சி பெரும் பங்கு கொண்டது. இடதுசாரிகளோடு எந்த இயக்கத்திலும் நாம் பங்கு கொண்டது கிடையாது எனத் தம்மை முற்போக்குவாதி கள்' என்று அழைத்துக் கொள்வோர் அடிக்கடி கூறுவதுண்டு. இந்த நாட்டில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியை ஆட்டங்கொள்ளச் செய்து 1956இல் இடது சாரி வெற்றிக்கு வழி வகுத்த - ஆவணி 12ஆந் திகதி ஹர்த்தாலில் - நாம் கொண்ட பங்கை மறைக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர். தமிழ் இனத்தின் உரிமை கோரி நாம் நடத்திய இயக்கங்களில் இடது சாரிகள் ஒத்துழைக்க மறுத்தனரேயன்றி, நாட்டுப் பொது மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் மேற்கொண்ட நியாயமான இயக்கங்களில் நாம் கலந்துகொள்ளத் தவறவில்லை. கொத்தலாவலைக்குக் கறுப்புக்கொடி
ஹர்த்தாலைத் தொடர்ந்து நாட்டின் பிரதமர் டட்லி சேனநாயகா இராஜினாமா செய்ய, சேர் ஜெர்ன் கொத்தலாவலை பிரதம ரானார்.1954ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எலி சபெத் மகாராணி இலங்கைக்கு வருகை தந்தார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொத்தலாவலை அரசாங்கத்தின் நிதி அமைச்சரும் சபை முதல்வருமான திரு. ஜே.ஆர். ஜயவர்த்தனா ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசினார். அப்பேச்சின் தமிழ் மொழி பெயர்ப்புத்தானும் இடம் பெறவில்லை. மகாராணி முன் பேசுவதற்குத் தமிழ் - தகுதியற்ற மொழி - என்று திரு. ஜயவர்த்தனாவும் அன்றைய ஆட்சியும் கருதினர் போலும். இவ் வரவேற்பில் தமிழைப் புறக்கணித்துத் தமிழரை

3.
அவமதித்தபின், பிரதமர் கொத்தலாவலை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வமாக வருகைதந்தார். தமிழ் மொழியைப் புறக்கணித்ததற்காகவும், அநீதியான குடியுரி மைச் சட்டங்களை மேலும் அநியாயமாக அமுல் நடத்தித் தமிழ்த் தொழிலாளிகளை நாடு கடத்தி நம் பலத்தைக் குறைக்க அரசு முனைந்திருப்பதாலும், தமிழ்ப் பிரதேசத்தில் திட்டமிட்டுச் சிங்களக் குடியேற்றம் நடத்து வதாலும், திரிசிங்கள ஜாதிக பெரமுனை யைக் கொத்தலாவலை ஆட்சி மறைமுகமாக ஆதரித்து வருவதாலும் பிரதமர் கொத்தலாவலையின் யாழ்ப்பாண வருகையைப் பகிஷ்கரிக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. தமிழரசு வாலிப முன்னணி கட்சியின் அனுமதியுடன் ஒருபடி மேலே சென்று, பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பைத் தெரிவிக்கத் தீர்மானித்தது. யாழ்நகர மண்டப முன்றிலில் கோலாகலமாக வரவேற்பு நடைபெற்றது. அலங்கார இரதத்திற் பவனி வந்த பிரதமர் மேடையில் ஏறியதும், ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாயிருந்த அரசாங்க அதிபரை ஆனந்தத்தோடு கட்டித் தழுவினார். ஏற்கெனவே, இருநூறுக்கு மேற்பட்ட தமிழரசுத் தொண்டர்கள் மேடைக்குச் சமீபத்திற் சென்று, சட்டைப் பைகளில் கறுப்புக் கொடிகளுடன் அமர்ந் திருந்தனர். மேடையில் பிரதமர் ஏறியதும், வாலிப முன்னணித் தலைவர் எழுந்து கறுப்புக்கொடியை வீசிப் "பிரதமரே திரும்பிப்போ" என்று கோஷமிட்டவுடன், அத்தனை தொண்டர்களும் எழுந்து ஆர்ப் பரித்துக் கோஷமிட்டனர். பிரதமர் திகைப் படைந்தார். பார்வையாளராக வந்த பலரும் இளைஞர்களோடு சேர்ந்துகொண்டனர். உதவிப் பொலிஸ் அதிபரின் கட்டளைப்படி, குண்டாந்தடி தாங்கி பொலிஸ்படை ஆர்ப்பரித்த இளைஞர்மீது பாய்ந்து தாக்கியது. பொதுமக்களிற் பலரும் தாக்கப் பட்டனர். பலர் இரத்தம் சிந்தினர். தமிழைப் புறக்கணித்த ஆட்சியின் தலைவருக்குத் தம் எதிர்ப்பைத் தெளிவாகக் காட்டிவிட்டனர்

Page 55
4.
தமிழ் வாலிபர்கள். இலங்கையின் சரித்திரத் தில் நடைபெற்ற முதற் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இதுவாகும். சிங்கள வெறியாட்டம் ஆரம்பம்
பிரதமர் கொத்தலாவலையின் யாழ்ப்பாண வருகையின்போது, தமிழ் மொழி உரிமை பற்றித் தமிழ் மக்கள் கொண்டிருந்த பயம் - பல இடங்களில் எடுத்துக் கூறப்பட்டது. கொக்குவிலில் அளிக்கப்பட்ட வரவேற்பில் திரு. ஹன்டி பேரின்ப நாயகம் அவர்கள் விடுத்த வேண்டு கோளுக்குப் பதிலளித்த பிரதமர், உடனடி யாகச் சிங்களமும் தமிழும் சம அந்தஸ் துள்ள உத்தியோக மொழிகள் என்பதை அரசியல் அமைப்பிலேயே தான் இடம் பெறச் செய்வதாக உறுதியளித்தார். அவர் கொழும்பு திரும்புமுன், இவ் வாக்குறுதிக்குத் தென்னிலங்கையில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. கொழும்பு திரும்பிய அடுத்த நாளே தான் கொடுத்த வாக்குறுதியை மறுத்துக் கொத்தலாவலை அறிக்கை வெளி யிட்டார். இவருக்குப் பின்பு வந்த ஒவ்வாரு சிங்களப் பிரதமரும் தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை சிங்கள மக் களுடைய எதிர்ப்புக்கு அஞ்சி மறுதலித்திருக் கிறார்கள் என்பதை மேலும் காண்போம்.
கொத்தலாவலையின் மறுப்பை சிங்கள மக்கள் நம்பவில்லை. திரிசிங்களப் பெரமுனைகளும், பாஷா பெரமுனைகளும், பெளத்த பிக்கு மண்டலங்களும் நாடெல்லாம் மொழி வெறியைக் கிளப்பின. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தொடக்கம் பத்து வருடங்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்த மொழிக் கொள்கை மாற்றப் பட்டு, சிங்களம் மாத்திரமே நாட்டின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டுமென்ற குரல் பெரிதாகக் கிளம்பியது. இந்தச் சூழ்நிலையில் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாடு திருகோண மலையில் 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம், 17ஆம் திகதிகளில் கூடியது.
மூன்றாவது தேசிய மகாநாடு :
தனி மனிதர்களைச் சுற்றிக் கட்டி எழுப்பப்பட்ட அரசியல் கட்சிகளே

4
இலங்கையில் இன்றும் பெரும்பான்மையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. மார்க்சீயக் கட்சிகளைத் தவிர, ஏனைய அரசியற் கட்சிகள் அவற்றை நிறுவிய தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கையே மூலதனமாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. அவர்களின் மறைவுக்குப்பின், அத்தலைவர்களின் மனைவியோ - மகனோ தலைமை தாங்க வேண்டிய நிலையிலுள்ளன. தமிழ் இனத்தின் விடுதலை இயக்கமாக அமைக்கப் பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி - தனி ஒருவரின் நிரந்தரத் தலைமையின்கீழ் இயங்கு வதைத் தந்தை செல்வநாயகம் விரும்ப வில்லை. கொள்கையை முன்வைத்து அதற் காக உழைக்கும் தொண்டர்களால் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட தலைமையின்கீழ், கட்சி வளரவேண்டு மென்பதே அவர் கருத்து. இக்கருத்துக்கமைய 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம், 17ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் மூன்றாவது மாநில மாநாட்டிற்குக் கொள்கையில் ஆழ்ந்த பற்றும் மதி நுட்பமும் தியாக சிந்தையுங் கொண்ட கோப் பாய்க் கோமான் திரு. கு. வன்னிய சிங்கம் அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப் பட்டார். 6 ஆண்டுகள் கட்சியின் தலைவராகப் பணிபுரிந்த திரு. செல்வநாயகம் அவர்களே பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இத்தலைமையில், கட்சி தமிழ்பேசும் மக்களின் பூரண நம்பிக்கை யைப் பெற்ற ஒரே இயக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழ் இனத்தின் வரலாற்றில் நெருக்கடி நிறைந்த காலத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மகா நாடுகளுக்குத் தொடர்ந்து தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு இனத்தை வழிநடத்திய வர் திரு. கு. வன்னியசிங்கம் அவர்களே. ஐ.தே. கட்சியின் களனி மகாநாடு :
ஏற்கனவே குறிப்பிட்டது போலவே 1954ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து சிங்களம் மாத்திரமே இந்நாட்டின் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. அந்நாளில்

Page 56
4.
உண்மை மார்க்சீய வழியில் இயங்கி வந்த லங்கா சமசமாஜக் கட்சி - கொழும்பு நகர மண்டபத்தில் சிங்கள - தமிழ் மொழிகளின் சம அந்தஸ்தை வலியுறுத்தி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அதே கட்சியிலிருந்து பிரிந்து சென்று புரட்சிவாத சமசமாஜக் கட்சியை வகுப்புவாத அடிப்படையில் இயக்கிக்கொண்டிருந்தார். திரு. பிலிப் குண வர்த்தனா. அவரது கட்சியினர் சம சமாஜக் கட்சியின் மொழிச் சமத்துவம் பற்றிய கூட்டத்திற் பெரும் அமளியை ஏற்படுத்தினர். பலர் காயமுறும் அளவுக்குப் பலாத்காரம் இடம்பெற்றது. கூட்டம் கைவிடப்பட்டது. மொழிப்பிரச்சினை பலாத்கார வெறியாட் டத்திற்கு வழிவகுக்கப் போகிறது என்பதற்கு ஆரம்ப அறிகுறிகள் அப்போதே தோன்றின.
1955ஆம் ஆண்டு மொழிச் சமத்துவத் தை வலியுறுத்திப் பாராளுமன்றத்தில் பாக்டர் என்.எம். பெரேரா ஒரு தீர்மானத் தைக் கொண்டுவந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன் அரசாங்க சபையில் தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும் என்று வாதிட்ட திரு. பண்டாரநாயக்கா, தமது கொள்கையில் ஏற்பட்டு வந்த மாற்றத்தை இந்த விவாதத் தின் போது வெளியிட்டார். "பட்டினங் களிலும் கிராமங்களிலும் வியாபார நிலையங்களிலும் சிறு கடைகளிலும் பெரும்பகுதி வேலை தமிழ் பேசும் மக்களின் கையில் இருப்பதால், தவிர்க்க முடியாத வகையில் சிங்கள மொழி சுருங்கி - அருகி விடுமென்ற நியாயமான பயம் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது" என்று பாராளுமன்றத்திற் பேசினார் திரு. பண்டார நாயக்கா. இதைத் தொடர்ந்து, மார்க்சீயக் கட்சிகள் தவிர்ந்த - சிங்கள அரசியற் கட்சி களின் மொழிக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. 1956ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி களனியிற் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆறாம் மகாநாட்டில் சிங்களம் மாத்திரமே இந்நாட்டின் ஆட்சி மொழியாக வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கட்சியில் ஐக்கியமும் இல்லை - தேசியமும் இல்லை என்பதைக் கண்ட தமிழ் உறுப்பினர்கள் அக்

5
கட்சியை விட்டு வெளியேறினர். அக்கட்சி அரசில் - அங்கம் வகித்த தமிழ் அமைச்சர் கள், துணை அமைச்சர்கள் அனைவரும் பதவிகளை இராஜினாமாச் செய்தனர். 1948ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்ட விவாதத்தின்போது, தந்தை செல்வநாயகம் கூறிய வார்த்தைகளின் தீர்க்கதரிசனத்தைத் தமிழ்மக்கள் உணர்ந்தனர். தமிழ் ஈழத்தில் ஹர்த்தால்
ஐக்கிய தேசியக் st Suhair துரோகத்தாற் கொதிப்படைந்தனர் தமிழ் மக்கள். 1956ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆந் திகதி தமிழ்ப் பிரதேசம் எங்கும் தமிழரசுக் கட்சியன் கேள்விப்படி - பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. ஹர்த்தாலின் பூரண வெற்றி - தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் தலைமையை ஏற்றுக் கொண்டனர் என்பதைத் தெளிவாகக் காட்டியது.
தமிழர் ஐக்கிய முன்னணிப் பேச்சு
நெருக்கடியான இச் சூழ்நிலையில், தமிழ் மக்கள் தம் மத்தியில் ஒற்றுமையையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. தமிழ் அரசியற் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய பிரமுகர்களும் சேர்ந்த ஐக்கிய முன்னணியை அமைப்பதற்குப் பலர் முயற்சிகள் மேற்கொண்டனர். இதை யொட்டி ஒரு முடிவுக்கு வரவேண்டிய பொறுப்பு - கட்சியின்மேற் சாய்ந்தது. ஒற்றுமையை வரவேற்கும் அதே நேரத்தில், அவ்வொற்றுமை ஒரு குறிக்கோளின் அடிப்படையில் - சனநாயக ரீதியில் அமையவேண்டுமென்று கட்சி தீர்மானித் தது. 14555இல் கூடிய கட்சியின் செயற்குழு கீழ்க்கண்டவாறு தீர்மானித்தது :
"கட்சியின், இறுதி இலட்சியமான ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் ஓர் அங்கமாகப் பூரண சுயாட்சி பெற்ற தமிழ் அரசைக்கான உழைக்கக் கட்சி பூண்டிருக் கும் உறுதியை மீண்டும் வலியுறுத்தும் அதே நேரத்தில், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளையொட்டி வேறு

Page 57
- கட்சிகளோடும் தனி மனிதர்களோடும் கூட்டு நடவடிக்கைகளில் இரு பகுதியினரும் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளுக்கமைவாக ஈடுபடத் தீர்மானித்து;
"செயற்குழுவின் கட்டளைகளுக்கு இணங்க ஏனையோருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தவும் கூட்டு நடவடிக்கை களுக்கான பொதுத் திட்டங்களை வகுக்க வும் திருவாளர்கள் : கு. வன்னியசிங்கம், டாக்டர் இமு.வி. நாகநாதன், நஇ. இராசவ ரோதயம், அ. அமிர்தலிங்கம், சா.ஜே.வே. செல்வநாயகம் ஆகியோரை நியமிக்கிறது"
அடுத்த 6) மாதங்களாகத் தமிழாசிரியர் சங்கம் போன்ற அமைப்புகளும் நீதியரசர் நாகலிங்கம் போன்ற பல பிரமுகர்களும். ஐக்கிய முன்னணி ஒன்றைத் தோற்றுவிக்க முயற்சிகளை மேற்கொண்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. கடந்தகால அரசியலில் ஆடித் தோற்றுவிட்ட பலரும் மீண்டும் பாராளுமன்றம் செல்லச் சுலபமான ஒரு வழியாக - ஐக்கிய முன்னணி அமை வதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை. இச் சூழ்நிலையில் கட்சி தனித்துத் தன் கொள்கை யைத் தமிழ் மக்கள் முன்வைத்து, அவர்களின் கட்டளைப்படி களத்திற் குதிக்க வேண்டிய கட்டம் வந்தது. 1956ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இக் கட்டளையைப் பெறும் பொருட்டுத் தமிழரசுக் கட்சி வடக்குக் கிழக்கு மாகாணமெங்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. 1956ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் :
1956ஆம் ஆண்டு ஏப்ரல் 5, 7, 10 ஆம் திகதிகளில் நடந்த பொதுத்தேர்தல் இந்நாட்டின் சரித்திரத்தில் மாத்திரமன்றி, இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் சரித்திரத்திலும் ஓர் திருப்பு முனையாக அமைந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் ஓர் புது அத்தியாயம் ஆரம்ப மாகியது.1952ஆம் ஆண்டுத் தேர்தலில் 45331 வாக்குகளைப் பெற்று 2 தொகுதிகளில் வெற்றியீட்டிய கட்சி, 1956ஆம் ஆண்டில்

6
142036 வாக்குகளைப் பெற்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 10 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாராளுமன்றத்தினுள் மாத்திரம் இயங்கும் ஏனைய அரசியற் கட்சி களைப்போலன்றி, பாராளுமன்றத்தினுள்ளும் வெளியிலும் தமிழ் இனத்தின் உரிமைக்காகப் போராடுவதற்கு மக்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சியாக அமைந்தது வடக்கையும் கிழக்கையும் இணைத்து - தமிழ் பேசும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் மிகப் பெரும்பாலான ஆதரவைப் பெற்ற இயக்கம் என்று நிலைநாட்டப் பெற்றது. ஆனி ஐந்தும்; தனிச்சிங்களச் சட்டமும்
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, போராட்டத்தில் உடனடியாக இறங்க வேண்டிய நிலையைப் பண்டாரநாயக்கா அரசாங்கம் ஏற்படுத்தியது. தாம் சிங்கள மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சிங்களத்தைத் தனி அரசகரும மொழியாக்குவதற்கு ஆனி 5ஆம் திகதி பண்டார நாயக்கா பாராளுமன்றத்திற் சட்டம் கொண்டுவந்தார். அச்சட்டத்திற்குத் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பைச் சாத்வீக முறையிற் காட்டும்பொருட்டுப் பாராளு மன்றப் படிக்கட்டுகளில் சத்தியாக்கிரகம் செய்யப்போவதாகக் கட்சி அறிவித்தது. இரவோடிரவாகப் பாராளுமன்றத்தைச் சுற்றி - முள்வேலிகள் - அரசாங்கத்தால் அமைக்கப்பட்டன. முள்வேலியோடு, மனிதவேலியாக ஆயுதந்தாங்கிய பொலிசார் நிறுத்தப்பட்டனர். சிங்கள வகுப்பு வெறியர்கள் "எல்லாள - துட்ட கைமுனு யுத்தம்" என்ற கோஷத்தோடு திரட்டிக் காலி முகத்திடலுக்குக் கொண்டு வரப்பட்டனர். சத்தியாக்கிரகத்தின் நோக்கத்தை விளக்கும் துண்டுப் பிரசுரத்தைச் சிங்கள மொழியிற் கட்சி வெளியிட்டிருந்தது. அப்பிரசுரங்களை விநியோகிக்கச் சென்ற தொண்டர்கள் - சிங்களக் காடையர்களால் நையப் புடைக்கப் பட்டனர். தாக்குதலைப் பொருட்படுத்தாது, சத்தியாக்கிரகத் தொண்டர்களும் தலைவர் களும் காலிமுகத்திடலின் தென்பகுதியி லிருந்து பாராளுமன்றத்தை நோக்கி நடக்கத்

Page 58
தொடங்கினர். அவர்கள் சிறிது தூரம் செல்வதற்கிடையில், சிங்கக்கொடி தாங்கிய சிங்கள வெறியர் கூட்டம் அவர்கள்மீது பாய்ந்து, தடிகளாலும் கைகளாலும் கால் களாலும் தாக்கத் தொடங்கியது. தலைவர் வன்னியசிங்கத்தின் சட்டை கிழிக்கப்பட்டு, மூக்கிலிருந்து இரத்தம் வடியத் தாக்கப் பட்டார். டாக்டர் நாகநாதனின் உடைகள் கிழித்தெறியப்பட்டு, அவர் மிருகத்தனமாக அடிக்கப்பட்டார். தந்தை செல்வநாயகம் அவர்களின் இரு புதல்வர்கள் அவர் கண் முன்னால் உருட்டி உதைக்கப்பட்டனர். தொண்டர் நா. செல்லையாவின் காதைக் காடையர்கள் கடித்துப் பிய்த்தெடுத்தனர். தாக்குதலின் பயனாகப் பல தொண்டர்களும் தலைவர்களும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இத்தனையையும், பண்டாரநாயக்கா அரசின் பொலீசார் பார்த்துக்கொண்டு நின்றனர். சத்தியாக் கிரகிகள் உண்மைக் காந்தீயநெறி நின்று, இவற்றையெல்லாம் தாங்கித் தொடர்ந்தும் பாராளுமன்றம் நோக்கி நடந்தனர். திடீ ரென்று பெருமழை பொழிந்தது. காடையர் கூட்டம் கலைந்தோடியது. திருமலை, மட்டக்களப்பிலிருந்து இக் கூட்டத்தில் வந்து சேர்ந்த தொண்டர்களும் சேர்ந்து, தொடர்ந்து சென்றனர். பொலீசாரால் ஒரு கட்டத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சத்தியாக் கிரகிகள், அந்த இடத்திலேயே ஈரப் புற்றரை யில் அமர்ந்தனர். வெறியர் கூட்டம் பல்லாயிரமாக அதிகரித்துச் சத்தியாக் கிரகிகளைச் சுற்றி வளைத்துக் கல் வீசத் தொடங்கியது. திரு. வந. நவரத்தினம் காய முற்று வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப் பட்டார். காடையர் வீசிய கல்லினால் எனது நெற்றி பிளந்தது. எத்தனையோ தொண்டர் கள் காயமுற்றனர். பகல் ஒரு மணிக்குத் தலைவர்கள் எல்லோரும் ஆலோசித்துச் சத்தியாக்கிரகத்தை நிறுத்தித் தொண்டர் களைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தனர். காலிமுகத் திடலில் மாத்திரமன்றிக் கொழும்பு நகரின் பல இடங்களிலும் தமிழ் மக்கள் சிங்கள வகுப்பு வெறியரின் தாக்கு தலுக்கு ஆளாகினர். சட்டத்தையும் ஒழுங்கை

7.
யும் நிலைநாட்டவேண்டிய பொலீசார், தமிழ் மக்கள் தாக்கப்படுவதை, அரசாங்கத் தின் கட்டளைப்படி, செயலற்றுப் பார்த்து நின்றனர்.
அம்பாறைக் கலவரம்
பிரதமர் பண்டாரநாயக்காவின் இச்செயலினால் உற்சாகமுற்ற சிங்களக் காடையரின் தமிழ் மக்களுக்கு விரோதமான அட்டூழியங்கள், கொழும்புக்கு வெளியிலும் பரவின. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழ்ப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தும், அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால், சிங்கள ஆதிக்கப் பிரதேசமாக மாற்றப்பட்ட அம்பாறையும் ஒன்றாகும். கல்லோயா அபிவிருத்திச் சபையின்கீழ் பணியாற்றிய தமிழ் ஊழியர்களும் அவர்கள் குடும்பங் களும், திட்டமிட்டு முற்றுகையிடப்பட்டுத் தாக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் உடமைகளையெல்லாம் விட்டுத் தலைவிரி கோலமாக ஓடினர். அடுத்து, அந்தச் சுற்றாட லில் உள்ள துறைநீலாவனை போன்ற பழத் தமிழ்க் கிராமங்களைத் தாக்கத் திட்டமிட்டுச் சென்றனர் சிங்கள வகுப்பு வெறியர். தம் தாயகத்தைக் காக்கத் துப்பாக்கி ஏந்திப் புறப்பட்ட துறை நீலாவனை வீரர்கள் முன் நிற்க முடியாது. அலறித் துடித்துத் தலைவிரி கோலமாக அவர்கள் ஓடினார்கள். தமிழ் ஊழியரும் கிராம வாசிகளும் தாக்கப்பட்ட போது, செயலற்றிருந்த சிங்கள ஆட்சியின் காவல் துறையினரும் இராணுவத்தினரும், சிங்கள வெறியர் திருப்பித் தாக்கப்பட்ட வுடன் தலையிட்டனர். ஆனால், துறை நீலாவணை வீரர்களின் உறுதியான தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாது, ஜீப் வண்டியையும் கைவிட்டு - இராணுவத்தினர் ஒடித் தப்பினர். ஜீப்வண்டி தீக்கிரையாக்கப் பட்டது. பண்டாரநாயகா அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து, காலந் தாழ்த்தியாவது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தனிச் சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் புகுத்தப்பட்ட

Page 59
4.
அன்றே, தமிழரசுக்கட்சி மேற்கொண்ட சத்தியாக்கிரகமும், அதற்கெதிராக ஆட்சி யாளரின் ஆதரவுடன் நடந்த வெறி யாட்டமும், தமிழ் மக்களின் தற்பாதுகாப்பு நடவடிக்கையும் அவசர காலச் சட்டத்திற்கு வழிவகுத்தன. இதன் பின்பு பல தடவை எமது போராட்டங்களைச் சமாளிக்க, அவசர காலச் சட்டத்தையும் இராணுவ ஆட்சியையும் ஆட்சியாளர் நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டதைப் பின்பு காணலாம்.
திருமலை யாத்திரை
தமிழ் மக்களின் எதிர்ப்பையும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரினதும், இடது சாரிக் கட்சிகளினதும் நியாய பூர்வமான வாதங்களையும் பொருட்படுத்தாமல், ஜூன் மாதம் 15ஆந் திகதி அதிகாலை தனிச் சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தைத் தமிழினம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது' என்று தமிழரசுக் கட்சி விடுத்த சூளுரைக்கேற்ப, மக்கள் சக்தியைத் திரட்டும் பொருட்டுத் தமிழ்ப் பிரதேசத்தின் வடக்கெல்லையில் ஊர்காவற்றுறை, பருத்தித் துறையிலிருந்தும்; மேற்கே மன்னாரி லிருந்தும்; தெற்கே திருக்கோவிலில் இருந்தும் தலைவர்களும், தொண்டர்களும் கால் நடையாகத் திருமலை நோக்கிச் செல்வதென்று தீர்மானிக்கப் பெற்றது. பிரதமர் பண்டாரநாயகாவிற்கு இம்முடிவு அறிவிக்கப்பட்டபோது, நடைபவனியையும் அதைத் தொடர்ந்து நடக்கும் மகாநாட்டை யும் தடை செய்யப்போவதாக அறிவித்தார். தடையை மீறி நடக்கத் தயாரென்றது.கட்சி பணிந்தார் பிரதமர். பாதுகாப்புக்கென்று கூறிக் காவற்படையினரையும் உடன் நடக்கச் செய்தார். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கட்சியின் மூவர்ணக் கொடிகளைத் தாங்கிய வண்ணம்,
"திருமலைக்குச் செல்லுவோம் சிறுமை அடிமை வெல்லுவோம்"
என்று தொடங்கும் பண்டிதர் இள முருகனாரின் திருமலை யாத்திரைப் பாட

8
லை இசைத்தபடி, வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலுமிருந்து திருக்கோணமலையை நோக்கி நடந்தனர். பத்து நாட்கள் நடந்து, ஆவணி மாதம் 16ஆந் திகதி திருமலை போய்ச் சேர்ந்தனர். சென்ற வழியெல்லாம், மக்கள் வெள்ளமெனத் திரண்டு, தொண்டர் களை வரவேற்றனர். உணவும் தங்கும் வசதி களும் வழி நெடுகிலுமுள்ள தமிழ்க் கிராமங் கள் ஒன்றோபொன்று போட்டி போட்டுக் கொண்டு கொடுத்தன. தங்கிய ஒவ்வொரு இடத்திலும், புதிதாக மேலும் பல தொண்டர்கள் சேர்ந்தனர். திருக்கோண மலை மடத்தடிச் சந்தியில் 16-8-1956 பிற்பகல், வடக்கிலும் தெற்கிலுமிருந்து, இரு கடல்கள் பொங்கி வந்து ஒன்று சேர்வது போல - வந்து சேர்ந்த ତ୍ରି) ଓ ஊர்வலங்களையும் திரு.இராஜவரோதயம் அவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றார். திருமலை முற்ற வெளியில் தமிழரசுக் கட்சியின் நாலாவது மாநில மாநாட்டரங்கை நடைபவனி சென்று சேர்ந்தது. நான்காவது மாநாடு - 17, 18, 19-8-56
கட்சியின் அதி முக்கியத்துவம் வாய்ந்த இம் மாநாட்டிற்கு, மீண்டும் திரு. வன்னிய சிங்கம் அவர்களே ஏகமனதாகத் தலை வராகத் தெரிவு செய்யப்பட்டார். அவருடைய தலைமையின் கீழ் 30,000க்கு மேற்பட்ட மக்கள் கூடிய இம் மாநாட்டில் அரசுக்கு ஒருவருடக் காலக் கெடு கொடுத்து: 1. தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலாக வசிக்கும் தொடர்பான பிரதேசங்களை - சமஷ்டி அரசுக்கு உட்பட்ட ஒன்றோ, அதற்கு மேற்பட்டதோ தமிழ் மொழிவாரி அரசு அல்லது அரசுகளாக அமைக்கவும்.
2. சிங்களத்தோடு பரிபூரண சம அந்தஸ்துள்ள ஆட்சிமொழியாகத் தமிழுக்கு உரிய இடத்தை மீண்டும் அளிக்கவும்.
3. இன்றைய குடியுரிமைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, இந்நாட்டைத் தமது தாயக மாகக் கொண்ட எல்லோருக்கும் ஒரு சிறிய வாசகால யோக்கியதையின் அடிப்படையில்,

Page 60
திரைகடலோடியும் தி
இ
கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு கான பொன்னாலையிலிருந்து திருமலை வரை விரைந்திடும் தன்மானத் தமிழர் கூட்டம்
இன்னல்கள் நடுவே
 
 

திரவியம் தேடுவோம்!
ாவேண்டி மூவர்ணக்கொடி தாங்கி, யாழ். காடு, மேடு, பள்ளம், ஆறு, குளம் தாண்டி இங்கே காணிர்
இலட்சியப் பயனற்!

Page 61
திருமலை ஏகும் திருப்பாதங்
மக்கள் வெள்ளம் முட்டி மே திருமலை மாநாட்டரங்கு
 
 

sa,6i
கட்சியின் 4ஆவது திருமலை மாநாடு காணவேண்டி, யாத்திரையாக விரைந்திடும் தியாகத் தலைவர் திரு.கு.வன்னியசிங்கம், பா.உ. திரு.அ. அமிர்தலிங்கம் பா.உ. மற்றும் கட்சிக் கண்மணிகளைக் கைதடிக்கு அண்மையில் எதிர்கொண்டு அழைத்துச் செல்கின்றார் கடமைவீரர் திரு.வ.ந. நவரத்தினம், பா.உ. அவர்கள்.
கட்சியின்
4ஆவது திருமலை மாநாட்டில் தியாகமாமலை
வன்னியசிங்கம் அவர்கள்
தலைமைப் பேருரை
நிகழ்த்துகிறார்.

Page 62
s
பூரண பிரஜாவுரிமையை அங்கீகரிக்கும் குடியுரிமைச் சட்டங்களை ஆக்கவும்.
4. பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை உடன் நிறுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியும்,
1957ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20ஆந் திகதிக்கிடையில், பிரதம மந்திரியும், இலங்கைப் பாராளுமன்றமும், இலங்கைச் சமஷ்டி அரசை நிறுவத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறின், அவ்விலட்சியத்தை அடைவதற்குச் சாத்விக வழியிற் கட்சி நேரடி நடவடிக்கையில் இறங்கும் என்று தீர்மானிக்கப் பெற்றது.
கட்சியின் நாலு அம்சக் கோரிக்கை இம்மாநாட்டில் திட்டவட்டமான உருப் பெற்றது. மாநாட்டில் கலந்துகொண்ட கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்களுடைய கேள்விக்குக் கட்சி இணங்கி, இதுகாறும் "ஓர் சுயாட்சித் தமிழரசு” என்றிருந்த கட்சியின் நோக்கத்தை, "கயாட்சித் தமிழரகம் முஸ்லிம் அரசும்” என்று மாற்றியது. தமிழ் பேசும் மக்கள் கோரும் சுயநிர்ணய உரிமை - அவர் களின் ஓர் அங்கமான முஸ்லீம் மக்களுக்கும் உண்டு என்ற உன்னத சனநாயகத் தத்துவத் தின் அடிப்படையில் இம் முடிவு எடுக்கப் பட்டது. தலைவர் வன்னியசிங்கத்தினால் தலைமைப் பீடத்திலிருந்து முன்மொழியப் பட்ட இத் தீர்மானம், 19-8-56 அன்று திரு மலை முற்றவெளியில் நடந்த மாநாட்டின் இறுதி நாட் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு, பிரசித்தி பெற்ற "திருமலைத் தீர்மானம்"ஆ, ஆக அமைந்தது. சிங்கள பூரீ எதிர்ப்புப் போராட்டம்
திருமலைத் தீர்மானத்தைத் தொடர்ந்து, தொண்டர்களைத் திரட்டி ஆகஸ்ட் போராட்டத்திற்கு ஆயத்தஞ் செய்து கொண்டிருந்த நேரத்தில், அரசாங்கம் தமிழ் மக்களின் நொந்த உள்ளங் களில் வேலைப் பாய்ச்சுவது போன்ற ஒரு காரியத்தைச் செய்தது. மோட்டார் வண்டிகளின் இலக்கத்

தகடுகளில் இதுகாறும் இருந்த ஆங்கில எழுத்துகளுக்குப்பதிலாக, சிங்கள பூரீ என்ற எழுத்தைப் புகுத்தியது. தமிழ் மக்களின் கட்சிகள் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தும், அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. எனவே, மோட்டார் இலக்கத் தகடுகள் பற்றிய சட்டத்தை மீறி, ஒரு சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பிப்ப தென்றும் அரசாங்கத்தின் தனிச் சிங்களக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தின் ஓர் அங்கமாக, இவ்வியக்கத்தை நடத்துவ தென்றும் தீர்மானிக்கப் பெற்றது. யாழ்ப் பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக் களப்பு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங் களிலும் 1957ஆம் ஆண்டு சனவரி மாதம் 19ஆந் திகதி சிங்கள பூநீ எதிர்ப்புச் சட்ட மறுப்பியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இயக்கத்தில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவரும், உறுப்பினர்கள் பலரும் சேர்ந்தனர். ஆயினும், அதன் பின் த்ொடர்ந்து நடந்த இயக்கத்தில் ஏனையோர் ஈடுபடாது கைவிட, கட்சி மாத்திரமே தொடர்ந்து இயக்கத்தை நடத்தவேண்டிய நிலை ஏற் பட்டது. முதற் கட்டமாக, ஒரு நாட் சட்ட மறுப்பாக - ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாகத் தமிழ் எழுத்துக்களை இலக்கத் தகடு களிற் பொறித்து, மோட்டார் வண்டிகளைச் செலுத்திய தொண்டர்கள், இரண்டாவது கட்டமாக - நிரந்தரமாகவே தமிழ் எழுத்துக் களோடு வண்டிகளைச் செலுத்தினர். மூன்றாவது கட்டமாக - கட்சித் தொண்டர் கள் வீதிகளில் திரண்டு, எல்லா மோட்டார் வண்டிச் சொந்தக்காரர்களையும் தமிழ் எழுத்துப் பொறித்து ஒட்டும்படி வேண்டியது மாத்திரமன்றி, தாமே தமிழ் எழுத்துப் பொறித்த தகடுகளை மாட்டியும் விட்டனர். மூலை முடுக்குகளிலெல்லாம் வேகமாகப் பரவிய இவ்வியக்கத்திற்கு எதிராக, அரசாங் зith எவ்வித நடவடிக்கையும் எடுக்காது நிலைமையைக் கவனித்துக் கொண்டிருந்தது.

Page 63
- 5
பெப்ரவரி 4ம்: 1957இல் தியாகி நடராசன் கொலையும்
சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆந் திகதியை - கடைகளை அடைத்துக் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டுத்துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு கட்சி வேண்டுகோள் விடுத்தது. பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட தமிழ் பேசும் வாலிபர் முன்னணி யும், தீவிரமாக இதில் ஈடுபட்டது. ஆனால், மாற்றுக் கட்சியினர் கடைகளைத் திறக்கு மாறு யாழ்ப்பாணத்திற் கோரினர். அவர் களது ஆதரவாளர்கள் சிலர், தம் கடை களைத் திறந்தனர். கட்சியின் பெண் தொண்டர்கள் களத்தில் குதித்தனர். திறக்கப் பட்ட கடைகளின்முன், திருமதி, கோமதி வன்னியசிங்கம் அவர்கள் தலைமையில் சத்தியாக்கிரகம் செய்தனர். காரைநகரில், பஸ் வண்டிகளின் முன் படுத்தும் திருமதி. நாகம்மா வேலுப்பிள்ளை தலைமையில் பெண் தொண்டர்கள் சத்தியாக்கிரகம் செய்தனர். இவற்றினால், கடையடைப்பும் ஹர்த்தாலும் பூரண வெற்றி பெற்றது மாத்திரமன்றி, மக்களின் போராட்ட உணர்ச்சியும் வேகம் பெற்றது.
திருகோணமலையில் மரக்கறிக்கடை - சிங்களவரின் ஆதிக்கத்திலிருந்தது, அதன் அருகாமையில் இருந்த மணிக்கூட்டுக் கோபுரத்தில், கறுப்புக் கொடியைக் கட்டு வதற்குத் தீரன் நடராசன் என்ற வாலிபர் ஏறினார். மறைந்து நின்ற சிங்களவெறியன் ஒருவன் துப்பாக்கியால் சுடவே, அவ் விளைஞன் துடிதுடித்து வீழ்ந்திறந்தான்!. தமிழினத்தின் உரிமைப்போரிற் களப்பலியான இத் தியாகியின் பெயர் - எம் வரலாற் றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படுவது மாத்திரமன்றி, அவ்விடத்தில் - சுதந்திரத் தமிழ் ஈழத்தில், அவனுக்குச் சிலை அமைக்க வேண்டியதும் எம் கடமையாகும்.
அமைச்சர்கள் வருகையும் பகிஷ்காரமும்
தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்
பட்ட நாள் முதல், சிங்கள அரசாங்கத்தின்
அமைச்சர்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்குச்

2.
செல்லத் தயங்கினர். துணை அமைச்சர் எம்.பி. டி சொய்சா, சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வருடாந்தர மகா நாட்டிற்காக யாழ்ப்பாணம் வருகைதர ஆயத்தமானார். தனிச் சிங்களக் கொள்கையை - தமிழ் மக்களுக்கு விளக்கப் போவதாக அறிக்கை விட்டார். அவர் யாழ், புகையிரத நிலையத் தில் வந்திறங்கியபோது, அவருடைய மோட்டார்வண்டியை நகர விடாது, தொண்டர்கள் அவருடைய வண்டிமுன் படுத்தனர். பொலீசார் - தொண்டர்களைத் தாக்கியும் தூக்கியும் அப்புறப்படுத்தினர். மகாநாடு நடைபெற இருந்த நகர மண்டபம் - உதவி அமைச்சரின் வரவை எதிர்க்கும் மக் களால் நிரம்பியது. அவர் மகாநாட்டிற் பேசமாட்டார் என்ற உறுதியின் பின்பே, மண்டபத்தை விட்டு மக்கள் வெளியேறினர். காலை வந்த துணை அமைச்சர் - நண்பகல் புகைவண்டியில் கொழும்புக்குத் திரும்பி னார். மக்களின் எதிர்ப்பு - பூரண வெற்றி பெற்றது.
கிழக்கு மாகாணம் சென்ற கல்வி
அமைச்சர் தகநாயகாவுக்கும் - பலத்த எதிர்ப்புக் கிடைத்தது. அமைச்சரின் கார் மீது, மருதமுனையில் மிதியடி வீசப்பட்டது. மந்திரி மரைக்காரும், கறுப்புக் கொடிகளுக்கு மத்தியிலேயே கிழக்கு மாகாணம் செல்ல முடிந்தது. நிதி மந்திரி ஸ்டான்லி டி சொய்சா உட்பட, ஆறு அமைச்சர்கள் மன்னார் சென்றனர். சென்றவிடமெல்லாம் தொண்டர்களும் தலைவர்களும் திரண்டு நின்று, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் பேசும் மக்களின் போராட்ட உணர்ச்சி - பொங்கி எழுந்து குமுறத் தொடங்கியது. பண்டாரநாயகா " செல்வநாயகம் ஒப்பந்தம்
தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரட்டப்படுவதையும், மக்களின் எதிர்ப் புணர்ச்சி புயலாக உருக்கொண்டு வருவதையும் அவதானித்த பிரதமர் பண்டார நாயகா, திரு. செல்வநாயகத்திடம் சமா தானத் தூதர்களை அனுப்பினார். தமிழ் மக்களின்

Page 64
-
LS
எதிர்ப்பை - மன்னாரில் நேரிற் கண்ட நிதி அமைச்சர் ஸ்டான்லி டி சொய்சா இதில் முக்கிய பங்கெடுத்தார். காந்தீய நெறியில் - எப்போதும் பேச்சு வார்த்தை மூலம் சமரசத் தீர்வுகாணத் தயாராக இருந்த கட்சி - பேச்சு வார்த்தைக்கு இணங்கியது. பல இரவுகள் பிரதமர் பண்டாரநாயகா தலைமையில் அமைச்சர் களுக்கும் தந்தை செல்வநாயகம் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு மிடையில் பேச்சு நடைபெற்றது. இறுதியில், 1957ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ஆந் திகதி பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தம் நள்ளிரவில் கையொப்பமானது. கட்சி தனது அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடாது. ஓர் இடைக்காலத் தீர்வாக ஏற்றுக்கொண்ட இவ்வொப்பந்தத்தின் ஆங்கில மூலமும் தமிழாக்கமும், இக் கட்டுரையின் இறுதியில் வரும் அநுபந்தம் "இ" இல் இடம் பெறுகின்றன. மட்டக்களப்பில் - சிறப்பு மகாநாடு
திருமலைத் தீர்மானத்தின்படி போராட்டத்திற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்த நேரத்தில், இறுதிப் பிரகடனத்தை விடுப்பதற்காக - கட்சியின் சிறப்பு மாநாடு - மட்டக்களப்பில் 1957ஆம் ஆண்டு யூலை மாதம் 27, 28ஆந் திகதிகளில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மகாநாடு ஆரம்பிப்பதற்கு முதல் நாளிரவு 26-7-57இல், பண்டாரநாயகா - செல்வ நாயகம் ஒப்பந்தம் கைச்சாத்தானதைத் தொடர்ந்து, போர்ப் பிரகடனம் செய்வதற் கென்று அழைக்கப்பட்ட மாநாடும் - சமாதான உடன்படிக்கையைப் பரிசீலனை செய்து அங்கீகரிக்கும் மாநாடாக மாறியது. தலைவர் வன்னியசிங்கம் அவர்களின் தலை மைப் பேருரையும் முற்றாக மாற்றியமைக்கப் பட்டு, அச்சிடப்பெறாது மாநாட்டில் நிகழ்த்தப்பட்டது. ஒப்பந்தத்தையொட்டி மாநாட்டிற் காரசாரமான விவாதம் நடைபெற்ற போதிலும், இறுதியில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - அநுபந்தம் 'ஆ 3 இல் தரப்படும்.

3.
அத்தீர்மானத்தில் ஒப்பந்தத்தை ஓர் இடைக்கால ஏற்பாடாக ஏற்றுக்கொண்டு, 1957ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்த சத்தியாக்கிரகத்தைக் கைவிடும் முடிவைக் கீழ்க்காணும் காரணங்களுக்காக அங்கீகரிப்பதாக முடிவாகியது :
(அ) வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அரசாங்க உதவியுடன் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம், ஒப்பந்தத்தினால் உடனடியாக நிறுத்தப்படும்.
(ஆ) தேசிய சிறுபான்மையோரின் மொழி யாக - தமிழ் உத்தியோக அங்கீகாரம் பெறும்.
(இ) தமிழே வடக்குக் கிழக்கு மாகாண
நிருவாக மொழியாக இருக்கும்.
(ஈ) நாட்டின் எப்பாகத்திலும், தமிழ் மக்கள் தம் கருமங்களை, அரசாங்கத்தோடு தமிழில் ஆற்றவும், தம் பிள்ளை களுக்குத் தமிழிற் கல்வியூட்டித் தமிழ்ப் பண்பாட்டில் வளர்க்கவும் உரிமை பாதுகாக்கப்படும்.
(உ) பிரதேச சபைகள் சட்டத்தின்மூலம், பெருமளவு 'பிரதேச சுயாட்சி’ மக்களுக்கு வழங்கப்படும்.
மேற்கூறிய காரணங்களுக்காக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அதே நேரத்தில், இணைப்பாட்சிக்கு உட்பட்ட மொழிவாரிச் சுயாட்சித் தமிழ் அரசையோ, அரசுகளையோ நிறுவுவதும்; நாடு முழுவதும் சிங்களத்தாடு தமிழுக்கும் சம அந்தஸ்தை நிலைநாட்டுவதும்; குடியுரிமைச் சட்டங்களைத் திருத்தி, இந்நாட்டைத் தமது தாயகமாகக் கொண்ட தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் பூரண குடியுரிமையை நிலைநாட்டுவதுமாகிய கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை - மாநாடு மீண்டும் வலியுறுத்தியது. அன்றைய சூழ்நிலையில் சத்தியாக்கிரகத்தைக் கைவிடுவதற்கு, கட்சி ஏற்றுக்கொண்ட ஒர் இடைக்கால ஏற்பாடே - பசெ ஒப்பந்தம்

Page 65
-5
என்பது, இதிலிருந்து தெளிவாகும். அவ்வொப்பந்தம் சிங்கள - தமிழ்ப் பிரச்சி னைக்கு ஓர் இறுதித் தீர்வாக, ஒரு போதும் கட்சியினால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு
1956ஆம் ஆண்டுத் தேர்தலில் தென்னிலங்கையில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, சிங்கள வகுப்பு வெறியைக் கிளப்புவதற்கு ஒப்பந்தத்தைப் பயன்படுத்த முற்பட்டது. முதல் அடி (First Step) என்று பல பிரசுரங்களை வெளியிட்டு, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரம் சதுரமைல் பூமியை, பண்டார நாயகா - சிங்கள மக்களுக்கு இல்லாமல் தமிழருக்கு விற்றுவிட்டாரென்று கூறினர். இன்றைய ஐதே. கட்சித் தலைவர் ஜேஆர். ஜயவர்த்த்னா தலைமையில், கண்டி தலதா மாளிகைக்குக் கால்நடை யாத்திரையை மேற்கொண்டனர். இம்புல் கொடையில், எஸ்.டி. பண்டாராநாயகா தலைமையில் எழுந்த எதிர்ப்பினால் யாத்திரையை ஜயவர்த்தனா கைவிடவேண்டியேற்பட்ட போதிலும், அவர்களின் வகுப்பு வெறிப் பிரசாரம் தொடர்ந்தது, ஆளும் கட்சியிலும் - பெளத்த பிக்குகளும் சிங்களத் தீவிர வாதிகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கத் தொடங்கினர். தமிழ்ப் பிரதேசத்திலும் - முன்னாள் யூ.என்.பி. ஆதரவாளர்கள் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பைக் கிளப்பினர். திரு. செல்வநாயகம் தமிழ் மக்களின் உரிமைகளை, ஒப்பந்தத்தின் மூலம் சிங்களவருக்கு விற்று விட்டார் என்று கூக்குரலிட்டனர். இவர் களின் கண்டனங் களுக்கு நாம் கொடுத்த விளக்கங்கள், வெறும் வாயை மென்ற சிங்கள வகுப்பு வெறியருக்கு அவலாகின. சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்துவந்த எதிர்ப்பைக் கண்ட பிரதமர், ஒப்பந்தத்தை அமுல் நடத்த எட்டு மாதங்களாக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியின் செயற்குழு, ஒப்பந்தத்தை அமுலாக்குவதற்கு வேண்டிய சட்டங்களை ஆக்குமாறு விடுத்த வேண்டு கோள்கள், உதாசீனம் செய்யப்பட்டன.

திருகோணமலை கடற்படைத் தளம்
நாடு சுதந்திரம் பெற்ற நேரத்தில் ஆங்கில அரசுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, திருகோணமலைத் துறை முகம் ஆங்கிலேயரின் கடற்படைத் தளமாக இருந்து வந்தது. அங்கு பல்லாயிரம் தமிழ்த் தொழிலாளர் வேலைக்கமர்த்தப் பட்டிருந்தனர். திருகோணமலை நகரத் தமிழ் மக்களிற் பெரும்பாலோர், கடற்படைத் தளத்தையே தம்வேலைவாய்ப்புக்கு நம்பி யிருந்தனர். ஆங்கிலேயரை அங்கிருந்து அகற்றி, திருகோணமலையைத் தம் ஆதிக்கத் தில் எடுத்துக்கொள்ளப் பண்டாரநாயகா அரசாங்கம் தீர்மானித்தது. தமிழ் மக்களின் பாரம்பரியப் பூமியிலுள்ள துறைமுகத்தின் தலைவிதியை, தமிழ் மக்களைப் பிரதிநிதித் துவப்படுத்தாத அரசாங்கம் தீர்மானிப்பதைக் கட்சி எதிர்த்தது. தமிழ் மக்களைக் கலந்தா லோசிக்காது இம் முடிவு செய்யப்படு வதற்குக் கட்சி ஆட்சேபனை தெரிவித்தது. வேலையிழக்கும் பல்லாயிரம் தமிழருக்கும், மாற்று வேலை அல்லது போதிய நஷ்டஈடு கோரியது. எமது கோரிக்கைகளை வேண்டு மென்றே திரித்து, இன்றும் சில இடது சாரிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆங்கிலக் கடற்கரை அகற்றப்பட்டதை நாம் எதிர்க்கவில்லை. தமிழ் மக்களின் கேந்திரத் துறைமுகத்தின் தலைவிதி - தமிழ் மக்களைக் கலந்து கொள்ளாமல் தீர்மானிக்கப் பட்டதையே நாம் எதிர்த்தோம்.
மூதவைத் தேர்தல்
1957ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில், மூதவை உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்யும் வாய்ப்புக் கட்சிக்குக் கிடைத்தது. தமிழினத்திற் புரையோடிய புண்ணாகிய தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்ற கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கேற்ப, உரிமை குறைந்த தமிழ் மக்களின் குரல் - ஆட்சி மன்றத்தில் ஒலிக்க வேண்டுமென்று கட்சி தீர்மானித்தது. அதன்படி, திரு. ஜி. நல்லையா அவர்கள் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின்

Page 66
5.
வாக்குகளினால், மூதவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார் மீண்டும் சிங்கள பூரீ
ஒப்பந்தத்தை நிறைவேற்றாது காலங் கடத்திவந்த அரசாங்கம், தமிழ் மக்களுக்கு வேதனை தரும் செயல்களில் மீண்டும் இறங்கியது. சிங்கள பூரீ இலக்கத் தகடு பொறித்த பஸ் வண்டிகளை, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. 16-3-58இல் கட்சியின் செயற்குழு கொழும்பு சரஸ்வதி மண்டபத்திற் கூடி, "சிங்கள சிறி பொறித்த பஸ் வண்டிகளைத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்புவதென்றும், அந்த இலக்கத் தகடுகளிற் கைவைத்தாற் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்றும் அரசாங்கம் விடுத்திருக்கும் அறிவித்தல் - தமிழ்பேசும் மக்களை அவமதிப்பதாகவும், அவர்களுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் இருக்கின்றது" என்று கருதி, 29-3-58 அன்று மீண்டும் "சிறி எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பிப்பதென்றும் தீர்மானித்தது. அதன்படி, குறிப்பிட்ட தேதியில் வடக்குக் கிழக்கு மாகாணங்களி லுள்ள பஸ் வண்டிகளின் இலக்கத் தகடுகள், தொண்டர்களால் தமிழ் பூரீயாக மாற்றப் பட்டன. முதல் இலக்கத் தகட்டை - தந்தை செல்வ நாயகம் அவர்களே தன் கையால் மாற்றினார். அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ப-செ ஒப்பந்த நாள் தொடக்கம் வெறியூட்டி வந்த சிங்களத் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள், மீண்டும் தொடங்கின. தமிழ் வர்த்தகர்களின் வியாபார நிலையங்கள் போன்ற இடங்களில், தமிழ் எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டன. மலைநாட்டில் பிரான்சிஸ், ஐயாவு வீரமரணம் தமிழ்ப் பிரதேசத்தில் சாத்வீகச் சட்ட மறுப்பு ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் தென்னிலங்கையில் இனவெறி வெடித்துக் கிளம்பியது. இவ்வெறியாட்டத்தைத் தன்மானமுள்ள தமிழ் மக்கள் எதிர்த்த இடங்களிற் சில

5
அசம்பாவிதங்களும் ஏற்பட்டன. சிலர் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. மலை நாட்டில் சிங்கள இனவெறியர்கள் தமிழை அழித்ததை - தமிழ் தொழிலாளர்கள் ஆட்சேபித்தனர். பொலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில், வீரத்தமிழ் வாலிபர்கள் பிரான்சிசும், ஐயாவும் பொகவந்தலாவையில் தமிழன்னைக்காகத் தம் உயிரையே அர்ப்பணித்தார். கட்சியின் கோரிக்கைப்படி வடக்குக் கிழக்கு மாகாணமெங்கும் இந்தத் தியாகிகள் இருவருக்கும் அநுதாபந் தெரிவிக் கும் பொருட்டுப் பூரண ஹர்த்தால் 5-4-58 சனிக்கிழமையன்று அனுஷ்டிக்கப்பட்டது. பண்டாரநாயகா ஒப்பந்தத்தைக் கிழித்தார்
ஆரம்பகாலந் தொடக்கம், ப-செ ஒப்பந்தத்தைப் பெளத்தமத குருமாரும் - சிங்களத் தீவிரவாதிகளும் எதிர்த்து வந்தனர். யூஎன்.பிக் கட்சியினரும் தீவிரப் பிரசாரம் செய்து, எதிர்ப்புக்குத் தூபம் போட்டு வளர்த்துவந்தனர். இவற்றுக்கு அஞ்சிய பிரதமர், முன் குறிப்பிட்டதைப்போல ஒப்பந்தத்தை அமுல்நடத்தாது கடத்தி வந்தார். தமிழ் மக்களுக்குப் பாதகமான பல காரியங்களையும் அரசாங்கம் தொடர்ந்து செய்து வந்தது. 1958 ஏப்ரல் 8 ஆந் திகதி பிரதமர் பண்டாரநாயகாவின் றோஸ்மிட் பிளேசில் உள்ள இல்லத்தின்முன் அவரது கட்சியைச் சேர்ந்த புத்தபிக்குகள் வழிநடத்த - பெளத்த பெரமுனையினர் சத்தியாக்கிரகம் செய்தனர். சுகாதார மந்திரி விமலா விஜயவர்த்தனா சென்று அவர் களுக்கு உபசரணை செய்தார். இறுதியில் அவர்களது கோரிக்கைக்குப் பணிந்த பிரதமர் பண்டாரநாயகா - தாம் கையொப்ப மிட்ட ஒப்பந்தத்தைத் தானே தனிப்பட ரத்துச் செய்துவிட்டதாக அறிவித்தார் தன்னோடு ஒப்பந்தம் செய்த திரு. செல்வ நாயகம் அவர்களோடு ஒரு வார்த்தை தானும் பேசாது, ஒருதலைப் பட்சமாக ஒப்பந்தத் தைக் கிழித்தார். அன்றே பாராளுமன்றத் திலும் அதை அறிவித்து, சிங்கள 'சிறி பொறித்த பஸ் வண்டிகள் மீண்டும் தமிழ்

Page 67
L
பிரதேசத்தில் ஒடுமென்றும், அவற்றை மாற்ற முற்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவித்தார்.
தொண்டர்கள் கைது
இவ்வறிவித்தலைத் தொடர்ந்து, ஏப்ரல் 10ஆந் திகதி மீண்டும் சிங்கள சிறி பொறித்த பஸ் வண்டிகள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஓடத் தொடங்கின. அன்றே எமது தொண்டர்கள் களத்திற் குதித்தனா. பொலீசாருக்கு அறிவித்த யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நானும், மூதவை உறுப்பினர் நல்லையா அவர்களும், பூரீதரன் என்ற இளைஞரும் சிங்கள பூரீயை அழித்துத் தமிழ் பூரீயை எழுதியபோது, பொலீசாரால் கைது செய்யப்பட்டோம். எமது விடுதலை இயக்கத்தில் ஒர் புதிய கட்டம் அன்று ஆரம்பமாகியது. பெண்கள் உட்படப் பல நூறுபேர் இச் சட்டமறுப்பில் இறங்கினர்; கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். வவுனியா மாநாடும், இனக்கலவரமும் :
ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதும், சட்ட மறுப்பில் ஈடுபட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதும், சிங்கள மொழி வெறியரின் தமிழ் அழிப்பு இயக்கமும், அதன் பலனாக ஏற்பட்ட பலாத்காரச் சம்பவங்களும் நாட்டில் ஒரு கொந்தளிப் பான சூழ்நிலையை உருவாக்கின. இச் சூழ்நிலையில், நம்பிக்கைமோசம் செய்யப் பட்ட தமிழ் இனம் - ஒப்பந்தத்தினால் கைவிட்ட போராட்டத்தை மீண்டும் ஆரம் பிக்க வேண்டிய நிலையில் இருந்தது. இந்நிலையை ஆராய்வதற்குக் கட்சியின் ஆறாவது மாநில மாநாடு வவுனியாவிற் கூட்டப்பெற்றது. ஆழ்ந்த கொள்கைப்பற்றும் அமைதியான போக்குங்கொண்டு, ஆரம்ப காலந் தொடக்கம் கிழக்கிலங்கையில் கட்சியைக் கட்டி வளர்த்தவரும், திருகோண மலைப் பிரதிநிதியுமான திரு.என்.ஆர். இராசவரோதயம் மாநாட்டின் தலைவராக - ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

6
அவருடைய தலைமையில் 1958ஆம் ஆண்டு மே மாதம் 23, 24, 25 ஆந் திகதிகளில் வவுனியாவில் மாநாடு நடைபெற்றது. மட்டக்களப்பிலிருந்து - மாநாட்டிற்குப் புறப்பட்ட பிரதிநிதிகளில், முன்னரே வந்து சேர்ந்த ஒரு சிலரைத் தவிர, ஏனையோர் வந்துசேர முடியாத அளவிற்குப் பொல நறுவையில் சிங்களக் குண்டர்களின் வெறி யாட்டம் நடைபெற்றது. அதுமாத்திரமன்றி, மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட புகை வண்டியும் சதியினால் தடம் புரண்டு, ஓர் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரும் இன்னொருவரும் உயிரிழக்க, இன்னும் பலர் காயமுற்றனர்.
மாநாட்டின் மத்தியில் பலத்த பொலீஸ் பாதுகாப்போடு, வவுனியாவுக் கூடாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப் பட்ட தமிழ்ப் பொலீஸ் சார்ஜன்டின் பிரேதம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தனை கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும், மாநாடு முன் எப்பொழுதும் இல்லாத சிறப் புடன் நடைபெற்றது. மூதவை உறுப்பினர் நல்லையாவும் நானும் அணிவகுப்பைப் பார்வையிட திரு. வ.அ. டாரமநாயகம் தலைமையில் சீருடை அணிந்த ஆயிரக்கணக் கான தொண்டர்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி - இயக்கம் மீண்டும் போராட்டத்தில் இறங்குவதற்கு ஆயத்தமாக, தொண்டர் படை தயாராகிவிட்டது என்பதை எடுத்துக் காட்டியது. ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக ரத்துச்செய்யப்பட்டதைக் கண்டித்தும்; நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக வன் முறைச் சம்பவங்கள் நடைபெறுவதையும், அதையொட்டி அரசாங்கம் பராமுகமாக இருப்பதையும் வன்மையாக எதிர்த்தும்; திருமலைத் தீர்மானத்தின் அடிப்படையில் 1958ஆம் ஆண்டு ஆவணி மாதம் 20ஆந் திகதிக்குப் பிந்தாது, மறுபடியும் சாத்வீக விடுதலைப் போரை ஆரம்பிப்பதென்றும் மாநாடு தீர்மானித்தது. போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருக்கும் கட்சி, அரசியல் அமைப்புப் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்குபற்றுவதில்லை என்றும்

Page 68
LS
முடிவு செய்து, போராட்டத்தை வழி நடத்தும் பூரண அதிகாரமுள்ள போராட்டக் குழுவாக - தலைவர் இராச வரோதயத்தோடு, திருவாளர்கள்; சாஜேவே. செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், செ.இராசதுரை ஆகியோரையும், என்னை யும் நியமித்தது. தமிழ் இனத்தின் விடுதலைக் காகப் போர்ப் பிரகடனம் செய்த மாநாடு முடிந்து, பிரதிநிதிகள் தம் பகுதிகளுக்குத் திரும்பிச் செல்லு முன்பே, சிங்கள நாடெங்கும் தமிழ் மக்களுக்கு எதிரான பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொலை, கொள்ளை, தீ வைத்தல், கற்பழிப்பு, உயிரோடு தீயிடப்படுதல் போன்ற பல படுபாதகச் செயல்களுக்குத் தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டனர். தமது வீடுகளையும் உடைமைகளையும் விட்டுத் தமிழ்ப் பிரதேசத்தை நோக்கி ஓடினர். அகதிகள் முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் புகுந்தனர். கப்பல்களிலும், இராணுவப் பாதுகாப்போடு சென்ற பஸ் வண்டிகளிலும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் வருகை, வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்மக்கள் மத்தியில் ஒர் மனக்கொதிப்பை ஏற்படுத்தி யது. இங்கு வாழ்ந்த சிங்கள மக்கள் சிலர், கொதிப்படைந்த தமிழ் மக்களின் தாக்கு தலுக்கு ஆளாகினர். காலங்கடந்து அவசர காலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து, இராணுவத்தைச் சேவைக்கழைகத்தார் பிரதமர் பண்டாரநாயகா. தமிழ மக்கள் மறக்கமுடியாத ஒர் பாடத்தை, இக்கலவரம் அவர்களுக்குப் படிப்பித்தது. தென்னிலங் கையில் எவ்வளவு செல்வச் சிறப்போடு வாழ்ந்தாலும், கடைசியில் தமது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பளிப்பது "தமிழ்ப் பிரதேசமே” என்பதை அவர்கள் உணரச் செய்தது. கட்சிக்குத் தடை, தலைவர்கட்குத் தடுப்புக்காவல்
அரசாங்க ஆதரவாளர்களாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வகுப்புவெறிப் பிரசாரத்தாலும் உருவான இனக் கலவரத்

7
தினால், மிக மோசமாகப் பாதிக்கப் பட்டவர்கள் தமிழ்மக்களே! அதோடு ஒப்பிடும்போது, தமிழ்ப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களின் எண்ணிக் கை மிகச் சொற்பம். ஆயினும், பிரதமர் பண்டாரநாயகா “ஆனைக்குப் பானை" சரி என்ற அடிப்படையில், சிங்கள வகுப்பு வெறி இயக்கமான திரு. கே.எம்.பி. இராஜரத்தினா வின் இயக்கத்தை ஒரு கண் துடைப்பாகத் தடைசெய்து விட்டு, தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காகச் சாத்வீக வழியிற் போராடிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியையும் தடைசெய்தார். 1958ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆந் திகதி தமிழரசுக் கட்சித் தலைவர்களும் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டனர். பெரும்பாலோர் வீட்டுக் காவலில் வைக்கப் பட திருவாளர்கள் : கு. வன்னியசிங்கம், என்ஆர். இராஜவரோதயம், செ.இராசதுரை, வ.ந. நவரத்தினம், வ. நவரத்தினம், செனெட்டர் நல்லையா ஆகியோரும், நானும் கொழும்பில் ஸ்டான் மோர் கிறெசென்ரில் ஒரு வீட்டில் காவலில் வைக்கப்பட்டோம். தமிழ்மொழி உபயோகச் சட்டம்
தமிழ் மக்களின் கட்சியைத் தடை செய்து, தலைவர்களையும் காவலில் வைத்த பிரதமர், தம் மனச்சாட்சியைத் திருப்தி செய்வதற்கோ - உலக அபிப்பிராயத்தைத் திருப்திப்படுத்தவோ - பாராளுமன்றத்தில் தமிழ் மொழி (விசேட உபயோக) சட்டத்தை சமர்ப்பித்தார். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லாத சபையில் இச்சட்டத்தைக் கொண்டுவருவது, கேலிக் கூத்தாகுமென்று கருதிக் காவலிலிருந்து தமிழ்ப் பிரதிநிதி களையும் பொலீஸ் காவலோடு பாராளுமன்றம் வருமாறு அழைத்தனர். அதன் பொருட்டு தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் எல்லோரும் தந்தை செல்வநாயகம் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காவலிற் சென்று பாராளு மன்ற விவாதத்திற் கலந்து கொள்வது, இனத்திற்கு இழுக்கு என்று நாம் தீர்மானித்

Page 69
- 5
தோம்; செல்ல மறுத்தோம். சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இல் லாது நடைபெறும் விவாதத்தில், தாமும் கலந்துகொள்ளமாட்டோமென்று, ஏனைய எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் வெளியேறினர். ஆளுங்கட்சிப் பிரதிநிதிகள் மாத்திரமிருந்து, தமிழ்மொழி நியாயமான உபயோகம் என்ற சட்டத்தை நிறைவேற்றினர்.
சுதந்திரனுக்கும் தடை
கட்சி தடை செய்யப்பட்ட அதே நேரத்தில், கட்சிக் கருத்துக்களைத் தாங்கி வரும் ஏடான "சுதந்திரனும் தடைசெய்யப் பட்டது. சுதந்திரன் அச்சகம் பூட்டிச் "சீல்" வைக்கப்பட்டது. மூன்று மாதங்களின் பின், தலைவர்கள் தடுப்புக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டனராயினும், கட்சித் தடையும் "சுதந்திரன் தடையும் நீங்க, மேலும் சில மாதங்கள் சென்றன. கட்சித் தடை நீங்கியபின், முதற் செயற்குழுக்கூட்டம் 2-11-58ல் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இனத்தின் விடுதலையைக்கான - சாத்வீக வழியிற் போராட மீண்டும் உறுதிபூண்ட அதேநேரத்தில், கட்சியின் இலட்சியமான தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபடுவ தெனத் தீர்மானிக்கப்பட்டது.
தேநீர்க்கடைப் பிரவேசம்
யாழ்ப்பாணத்திலுள்ள தேநீர்க் கடைகளில் சாதி அடிப்படையில் பார பட்சம் காட்டுவதை ஒழிக்கும்பொருட்டு, யாழ் நகரத் தேநீர்ச்சாலை உரிமையாள்ர் களின் மாநாடொன்றை நடத்துவதென்றும்; 24-11-58 தொடக்கம் - ஒரு வாரம் தீண்டாமை ஒழிப்பு' өoипттрпталs அனுடிப்பதென்றும் தீர்மானிக்கப்பெற்றது. திரு. கு. வன்னியசிங்கம் அவர்களும் திரு. சு. நடராசா அவர்களும் நானும் இவ் வேலைக்குப் பொறுப்பாக நியமிக்கப் பட்டோம். திரு. வன்னியசிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் யாழ் நகரமண்டபத்தில் கூடிய தேநீர்ச்சாலை, உணவுச்சாலை உரிமை யாளர்கள் - சாதிபேதம் பாராட்டுவதைக் கைவிடுவதென ஏகமன்தாகத் தீர்மானித்தனர்.

8 H
யாழ்நகர உணவு விடுதிகளில் தீண்டாமை நீங்குவதற்கு - அன்றே அத்திவாரம் இடப் பட்டது. தீண்டாமை ஒழிப்பு வாரத்தில் - சாதி ஒழிப்புப் பற்றிய தீவிர பிரசாரம், சமபந்திப் போசனம் போன்ற பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மலைநாட்டுக் குழந்தைகளின் கல்வி
உயர்கல்விக்கு வாய்ப்பும் வசதியும் அற்ற, மலைநாட்டுத் தமிழ்ப்பிள்ளைகளின் கல்விக்கு உபகாரச் சம்பளம் பெற்றுக் கொடுப்பதில், இக்காலத்திற் கட்சி விசேட கவனம் எடுத்தது. யாழ்ப்பாணத்திலுள்ள பெரிய கல்லூரிகள் ஒவ்வொன்றிலும், விடுதி வசதியும் இலவசப் புத்தகங்களும் வழங்கப் பெற்ற இவ்விரண்டு மாணவர்களுக்கு, திரு. வன்னியசிங்கம் அவர்களின் முயற்சி யால் இடம் கிடைத்தது. சுமார் 25 மாண வர்கள், இத் திட்டத்தின் கீழ் - உயர்கல்வி பெற வாய்ப்புக் கிடைத்தது. 1960ஆம் ஆண்டின் இறுதியில் - அரசாங்கம் உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளைப் பொறுப்பேற்று, எல்லாம் அரசாங்கப் பாடசாலைகளாக்கப் படும் வரை இத்திட்டம் செயற்பட்டு வந்தது. மலைநாட்டுத் தமிழ்மக்களின் கல்வி வளர்ச்சி யின் பொருட்டும், தமிழ் இனத்தில் ஒற்றுமை யை வளர்க்கும் பொருட்டும் கட்சி மேற் கொண்ட ஆக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். தலைவர் வன்னியசிங்கம் மறைவு
தீண்டாமை ஒழிப்பு, இன ஒற்றுமை வளர்ப்பு ஆகிய ஆக்க வேலைகளோடு, பல மாதங்களாகத் தடைசெய்யப்பட்டிருந்த காரணத்தினால் சீர்குலைந்திருந்த கட்சி அமைப்பைச் சீர்செய்து, மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதற்கு 1959ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கட்சி ஆயத்தஞ் செய்துகொண்டிருந்தது. 1956ஆம் ஆண்டு பெருவெற்றி பெற்று வந்த ஆளும் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியில், பெரும் பிளவு ஏற்பட்டது. இடது சாரி அமைச்சர்களான பிலிப் குணவர்த்தனாவும் உவில்லியம்

Page 70
نسا
சில்வாவும் அமைச்சர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்து, பல உறுப்பினர் களோடு எதிர்கட்சிக்கு மாறினர். இந்த மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழினத்திற்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஓர் பேரிடி விழுந்தது. 1958ஆம் ஆண்டு தடுப்புக்காவலிலிருந்து நேரத்தில் இரத்தக் கொதிப்பினால் பீடிக்கப்பட்ட திரு. வன்னியசிங்கம், திடீரென்று 1959ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ஆந் திகதி யன்று எம்மை விட்டுப் பிரிந்தார்! மதி நுட்பத்தாலும், அப்பழுக்கற்ற தியாகத் தாலும், மெய்வருத்தம் பாரா உழைப்பாலும் இயக்கத்தை வழிநடத்தி வந்த வன்னிய சிங்கத்தின் மறைவு, கட்சிக்கு ஈடு செய்யமுடியாத நஷ்டமாகும். அவர் மறைந்து ஒரு வாரத்தில், பிரதமர் பண்டாரநாயகாவும் சுட்டுக் கொல்லப்பட்டு, நாடு மீண்டும் ஓர் பொதுத் தேர்தலை எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டது. 1960 பங்குனிப் பொதுத்தேர்தல்
1959ஆம் ஆண்டு புதிதாகத் தொகுதிகள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 101இல் இருந்து 157ஆக அதிகரித்த அங்கத்துவத்தைக் கொண்ட பாராளுமன்றத் தேர்தல், 1960ஆம் ஆண்டு பங்குனி மாதம் நடைபெற்றது. அத்தேர்தலில், கட்சி மீண்டும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றியீட்டியது. 19 தொகுதிகளில் போட்டி யிட்ட கட்சி - 176, 492 வாக்குகளைப் பெற்று, 15 தொகுதிகளில் வெற்றியிட்டியது. கட்சிப் பாராளுமன்றக் குழுவோடு ஒத்துழைக்க உறுதி அளித்து, கட்சியின் ஆதரவைப் பெற்ற இரு சுயேச்சை வேட்பாளர்கள் - நிந்தாவூர், பொத்துவில் தொகுதிகளில் வெற்றி யீட்டினர். ஐக்கிய தேசியக் கட்சி 50 ஸ்தானங் களையும், சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 46 ஸ்தானங்களையும் கைப்பற்றின. தமிழரசுக்கட்சி - பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அமைந்தது. போதிய பெரும்பான்மையில்லாது, ஐதேக தலைவர் திரு. டட்லி சேனநாயகா பிரதமராகி ஆட்சியை அமைத்தார். தம் நிலையை

9.
உறுதிப்படுத்துவதற்குத் தமிழரசுக்கட்சியின் ஆதரவை நாடினார். மந்திரிப் பதவிகளைக் கொடுத்துக் கட்சியின் ஒத்துழைப்பைப் பெறலாமென்று எதிர்பார்த்த பிரதமருக்கு, இனத்தின் உரிமைபற்றிய திட்டவட்டமான கோரிக்கைகளைத் தந்தை செல்வநாயகம் சமர்ப்பித்தார். டட்லி பெரும்பான்மைப் பலம் பெறத் தவறினால், தாம் ஆட்சிக்கு வரக் காத்திருந்த பூணூரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும் எமது ஆதரவைக் கோரினர். பிரதமர் டட்லி சேனநாயகாவுக்குச் சமர்ப்பித்த அதே கோரிக்கைகள், பூரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களுக்கும் விடுக்கப் பட்டன. அக்கோரிக்கைகளின் ஆங்கில மூலமும், அதன் தமிழாக்கமும் இக் கட்டுரையின் இறுதியில் - அனுபந்தத்தில் இடம்பெறுகின்றன.
இரு பெரும் கட்சிகளும்; எம் கோரிக்கைளும்
பாராளுமன்றத்தில் எமது கட்சியின் ஆதரவு வேண்டுமானால், கீழ்க்கண்டநான்கு குறைந்தபட்சக் கோரிக்கைகளை அளிக்கு மாறு, இரு கட்சித் தலைவர்களிடமும் நாம் கேட்டோம்.
அவையாவன :
1. பண்டாரநாயகா - செல்வநாயகம் உடன்படிக்கையிற் கூறப்பட்ட பிரகாரம், பிரதேச சபைகள் நிறுவப்படவேண்டும். அதற்கிடையில், தமிழ்ப் பிரதேசத்தில் குடியேற்றம் நிறுத்தப்படவேண்டும்.
2. ப-செ ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்ட உரிமைகள் யாவும், தமிழ் மொழிக்குச் சட்ட பூர்வமாக வழங்கப் பட வேண்டும்.
3. இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தில் குறிப்பிட்ட திகதி என்பது நீக்கப்பட்டு, இரண்டு தலைமுறைக்கு இந்நாட்டில் பிறந்தோர் எவருக்கும் குடியுரிமை வழங்குவதன் மூலம், நாடற்ற தமிழர் என்ற நிலை’ நாளடைவில் மாற வேண்டும்.

Page 71
-6
4. குடியுரிமைப் பிரச்சினை தீரும்வரை. 6 நியமனப் பிரதிநிதிகளில் 4 பேர், மலைநாட்டுத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஸ்தாபனமான - இலங்கை ஜனநாயக காங்கிரசினால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இவற்றையொட்டிய விபரங்கள் - ஆளுங் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டு மென்றும், ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டுமென்றும் கோரினோம். ஏற்க மறுத்த அரசு இறக்கப்பட்டது
கோரிக்கைகளை எழுத்திற் பெற்ற பிரதமர் டட்லி சேனநாயகா, அவற்றை நிராகரித்தது மாத்திரமன்றி, அவற்றை எதிர்க்குமுகமாக - "சிங்கள இன உணர்ச் சியை’, அவரும் அவரது கட்சியினரும் தூண்ட முற்பட்டனர். அதே கோரிக்கை களை முன்வைத்து, பூரிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களோடும் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது பாராளுமன்றத்தில் இருக்காவிட்டாலும், இன்றைய பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா அவர்களும் அதிற் கலந்து கொண்டார். அவர். பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தத்தின் மூலப் பிரதியைத் தன் கணவரின் பத்திரங்களிடை யே இருந்து எடுத்துக் கொடுத்தார். அக்கட்சி சார்பில், திருவாளர்கள் : சி.பி.டி. சில்வா, ஏ.பி, ஜயசூரியா, மைத்திரிபால சேனநாயகா, பீலிக்ஸ். ஆர். டயஸ் பண்டாரநாயகா ஆகியோர் இப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர். பண்டார நாயகாவின் கொள்கைகளை முன்வைத்துத் தேர்தலிற் போட்டியிட்ட தம் கட்சி, அவர் செய்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய கோரிக்கைகளை ஏற்பதில் எவ்வித கஷ்டமுமில்லை என்றும்; எமது கோரிக்கைகளைப் பெரும்பாலும் தாம் ஏற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறினர்.

0
பிரதமர் டட்லி சேனநாயகாவும் ஐக்கிய தேசியக் கட்சியும் எம் கோரிக்கைகளை ஏற்க மறுத்த காரணத்தினால், 1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆந் திகதி சிம்மாசனப் பிரசங்க விவாதத்தில், அரசுக்கு எதிராக வாக்களித்து அரசைத் தோற்கடித்தோம். பூரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குக் கைகொடுத்தோம்
டட்லி சேனநாயகாவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த பெரிய கட்சியான பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அன்றைய தலைவர் திரு. சி.பி.டி. சில்வா தலைமையில் ஓர் அரசாங்கத்தை அமைக்க, எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொண்டன. எமது கோரிக்கை களிற் பெரும்பாலானவற்றைத் தாம் ஏற்றுக் கொள்வதாக, ஏற்கனவே பூரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் உறுதியளித்திருந்த காரணத்தினால் - சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றோடு சேர்ந்து, பூரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் அமைக்க - தமிழரசுக்கட்சியும் தனது ஆதரவைக் கொடுக்க முன்வந்தது. தந்தை செல்வநாயகம், கலாநிதி என்.எம். பெரேரோ, கலாநிதி எஸ்.ஏ. விக்கிரமசிங்கா, திரு. சிபிடி சில்வா ஆகியோர் கையொப்ப மிட்டு, மகாதேசாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினர். தமிழரசுக்கட்சி முதலாளித்துவக் கட்சி என்றும், எச்சந்தர்ப்பத்திலும் இடது சாரிக் கட்சிகளை ஆதரிக்கவில்லை என்றும் கூறுவோர், இச் சரித்திர உண்மையை மறைக்க முயலுகின்றனர்; அது அவர்களால் முடியாது. எமது ஆதர வோடு, பெரும் பான்மைப் பலம் பெற்ற அரசாங்கத்தைத் தாம் அமைக்க முடியு மென்று எதிர்க் கட்சிகள் காட்டிய போதிலும், தோற்கடிக்கப்பட்ட பிரதமர் டட்லி சேனநாயகாவின் கேள்விப்படி - தேசாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத் தார். அவர் எதிர்க்கட்சிகளின் கேள்விக்குச் செவிசாய்த்திருந்தால், இந் நாட்டின் சரித்திரமே வேறுவிதமாக இருந் திருக்கலாம்.

Page 72
-6 1960 ஆடிப் பொதுத்தேர்தல்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு மாதங்களில் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் கோரிக்கைகளுக்குத் தான் இணங்க மறுத்த காரணத்தினால், தமிழர்கள் தன்னைத் தோற்கடித்துவிட்டதாகக் கூறி, சிங்கள இன உணர்ச்சியைத் தூண்டி வெற்றி பெற முயற்சித்தார் டட்லி சேனநாயகா. இம்முயற்சியில், ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி கண்டது. பங்குனித் தேர்தலில் 50 ஸ்தானங்களைப் பெற்ற ஐதே. கட்சி, ஆடித் தேர்தலில் 30 ஸ்தானங்களையே பெற்றது. திருமதி சிறிமாவோ பண்டார நாயகா தலைமையில் புத்துயிர் பெற்ற பூணூரீலங்கா சுதந்திரக்கட்சி - 75 ஸ்தானங் களைப் பெற்றுத் தனி ஆட்சி அமைக்கக் கூடிய பலத்தைப்பெற்றது. 21 தொகுதிகளிற் போட்டியிட்ட தமிழரசுக்கட்சி - 218,753 வாக்குகளைப் பெற்று 16 ஸ்தானங்களைக் கைப்பற்றியது. தமிழ்பேசும் மக்களின் ஆதர வைப் பெற்ற ஒரேகட்சியிது என்ற நிலை - மூன்றாவது தடவையாக உறுதிப்படுத்தப் பட்டது.
சிறிமாவோவின் முதல் அரசு
தேர்தல் முடிவைத் தொடர்ந்து, திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா தலைமையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் அமைக்கப்பெற்றது. எம்மோடு முந்திய பாராளுமன்றத்தில் ஏற்பட்ட உடன் பாட்டை, நிறைவேற்றுவதாகக் காட்டிக் கொண்டனர். மலைநாட்டுத் தமிழர்களின் சார்பில், இலங்கை ஜனநாயக காங்கிரஸ் தலைவர் திரு. எஸ். தொண்டமான் பாராளு மன்ற நியமனப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டார். சிம்மாசனப் பிரசங்கத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு உடன் வாசிக்கப் பெற்றது. 1957ஆம் ஆண்டு தனிச் சிங்களத்தில் சிம்மாசனப் பிரசங்கம் வாசிக்கத் தொடங்கிய போது வெளிநடப்புச் செய்ததிலிருந்து, சிம்மாசன உரைகளைப் பகிஷ் கரித்து வந்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், 6)

ஆண்டுகளின் பின் - பாராளுமன்றத் திறப்பு விழாவிற் கலந்து கொண்டனர். முதலாவது சிம்மாசனப் பிரசங்க விவாதத் தில், கட்சி எதிர்த்து வாக்களியாது நடுவு நிலை வகித்தது. எம்மோடு பேசிய விடயங் களை அமுல் நடத்துவதுபற்றி, பிரதமர் தலைமையில் அமைச்சர் குழுவுக்கும் கட்சித் தலைவர்களுக்கு மிடையில் அலரிமாளிகையில் பேச்சு வார்த்தை ஆரம்ப மாகியது. இவ்வாரம்ப காலத்தில், அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையில் நல்லுறவு நிலவியது.
நீதிமன்ற மொழிச் சட்டம்
கட்சித் தலைவர்களோடு பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், எமக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றி, "சிங்களத்தை நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்கும் சட்டத்தை - நீதியமைச்சர் திரு. சாம்.பி.சி. பெர்னாண்டோ சமர்ப்பித்தார். அரசுக்கும் கட்சிக்குமிடையில் நிலவிய நல்லுறவு - இச் சட்டத்தினால் தகர்க்கப்பட்டது. இச் சட்டத்தை - கட்சி தன் முழுப் பலத்தோடும் எதிர்த்தது. ஆயினும், சட்டம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்மொழி உபயோகச் சட்டத்தின் கீழ் - மிகக்குறைந்த உரிமைகள் வழங்கும் சட்ட விதிகளையும் இதே அமைச்சர் சமர்ப்பித்தார். ஆனால் கட்சியின் எதிர்ப்பினால், அவற்றை அரசாங்கம் கைவிட்டது. இரண்டாவது முறையாகக் கொடுத்த வாக்கை - அரசு காப்பாற்றத் தவறி விட்ட நிலையில், தமிழ்மக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. "1961ஆம் ஆண்டு ஜனவரி 1ஆந் திகதி தொடக்கம் - வடக்குக் கிழக்கு மாகாணம் உட்பட, நாடுமுழுவதும் தனிச் சிங்களச் சட்டம் பூரணமாக அமுல் நடத்தப் படு மென்று அரசாங்கம் அறிவித்தது. அதன் பொருட்டு, சிங்கள உத்தியோகத்தர்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பப் பட்டனர். போராட்டத்தைத் தொடங்கு வதற்கு முதற்படியாக - தந்தை செல்வ நாயகம் தலைமையில் கட்சித் தொண்டர்கள்

Page 73
6
A4
- மாபெரும் உணர்வலமாக யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அணிவகுத்துச் சென்று, தமிழில் நிர்வாகம் நடைபெற வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். தமிழ்ப் பிரதேசத்தில் ‘உரிமை உணர்ச்சி மறுபடியும் பொங்கி எழுந்தது.
ஏழாவது மாநில மாநாடு
கட்சியின் ஏழாவது மாநில மகாநாடு
- யாழ்ப்பாணத்தில் வன்னியசிங்கம்
அரங்கில், 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆந் திகதி ஆரம்பமாகியது. கல்வியறிவு, நேர்மை, உறுதியான இனப்பற்று இவற்றால், தமிழ் பேசும் மக்களின் தனி மதிப்பைப் பெற்றிருந்தவரும், பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சிமூ, இராசமாணிக்கம் இம் மகா நாட்டின் தலை வராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அவருடைய தலைமையில் அடுத்து மூன்று
ஆண்டுகளாக - கட்சி மிகப் பெரிய
போராட்டங்களை நடாத்தியது. "தனிச் சிங்களத் திணிப்பை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்குவதென்று மகாநாடு தீர்மான்ரித்து, பெப்ரவரி 20ஆந் திகதி யாழ்ப் பாணத்தில் சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பிப்பதென்றும், மற்றைய மாவட்டங் களுக்குப் பின்னர் விஸ்தரிப்பதென்றும் முடிவெடுத்தது. கத்தியின்றி, இரத்தமின்றி நாட்டின் ‘ஆட்சி இயந்திரத்தை - ஐந்து மாவட்டங்களில் ஐம்பது நாட்களுக்கு மேல் ஸ்தம்பிக்கச் செய்த போராட்டத்திற்குத் திட்டந் தீட்டிய பெருமை - இந்த ஏழாவது மகாநாட்டிற்கே உரியது.
சரித்திரம் சமைத்த சத்தியாக்கிரகம்
1961ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆந் திகதி காலை 7-30 மணிக்குத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில், யாழ்ப்பாணம் அரசாங்க செயலக வாயில் களின் ஊடாக யாரும் கச்சேரிக்குள் செல்ல விடாது தடுத்து, தொண்டர்கள் அமைதியாக அமர்ந்து சத்தியாக்கிரகம் ஆரம்பித்தனர். மறியலில் ஈடுபட்ட தொண்டர்களை
அரசாங்கம் கைது செய்யும் என்று

2H
எதிர்பார்க்கப்பட்டது. அதனால், ஒரு நாளுக்கு ஒரு தொகுதித் தொண்டர்கள். அத் தொகுதி உறுப்பினர் தலைமையில் சத்தியாக் கிரகம் செய்வதென்று தீர்மானிக்கப் பட்டிருந்தது. முதல் நாள் காங்கேசன்துறைத் தொகுதியின் நாளாகையால், திரு. செல்வ நாயகம் தலைமையில் அத்தொகுதித் தொண்டர்கள் சத்தியாக்கிரகம் செய்ய, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும் வெளியில் உதவியாக நிற்ப தென்பதே ஏற்பாடு. ஆனால், பிரதான வாயிலினுடாக அரசாங்க ஊழியர்கள் செல்வதற்குப் பாதை ஏற்படுத்தப் பொலீசார் முற்பட்டபோது, எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும் அந்த இடத்திற்குச் சென்று, பாதைக்குக் குறுக்கே படுத்தனர். பொலீசார் - தொண்டர்களைப் பலாத்காரமாகத் தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். மிருகத்தனமாகத் தொண்டர் களைத் தூக்கி நிலத்தில் வீசித் துன்புறுத்தி யதைப் பார்த்த பொது மக்கள் - நூற்றுக் கணக்கில் சத்தியாக் கிரகிகளோடு சேர்ந்து கொண்டனர். இதனால், பொலீசாரின் முயற்சி தோல்வி கண்டது.
அன்று பகல் 11 மணிக்கு உயர்நீதி மன்றத் திறப்புவிழா இடம்பெற்றது. அதற் குரிய ஆணையை - அரசாங்கத்தின் சார்பில், அரசாங்க அதிபர் நீதியரசரிடம் கொடுப் பதற்குச் செல்லவேண்டியிருந்தது. அரசாங்க அதிபரின் "வாசஸ்தலம் அமைந்திருந்த பழைய பூங்கா வாயிலிலும், சத்தியாக் கிரகி களினால் மறியல் செய்யப்பட்டிருந்தது. குண்டாந்தடியினால் தொண்டர்களைத் தாக்கி, அவர்களுக்கு ஊடாக அரசாங்க அதிபரின் வண்டியைக் கொண்டு செல்லப் பொலீசார் முற்பட்டனர். இதனால் டாக்டர் நாகநாதன் உட்பட, பல பாராளுமன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும் கடுமை யாகத் தாக்கப்பட்டு, பலர் இரத்தக் காயங் களுக்கும் ஆளாகினர். இதற்கிடையில் பல்லாயிரமாகப் பெருகிவிட்ட பொது மக்கள் மத்தியில், பொலீசாரின் மிருகத்தனம் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.

Page 74
-- 6
அரசாங்க அதிபரின் ஜீப் வண்டியை வெளியே கொண்டு செல்வதில் பொலீசார் வெற்றி பெற்றனராயினும், மக்கள் மத்தியில் அவர்களின் தாக்குதல் ஏற்படுத்திய உணர்ச்சி - சத்தியாக்கிரக இயக்கத்தின் வெற்றிக்கு வழி வகுத்து விட்டது.
இரண்டாம் நாள் சத்தியாக்கிரகம் - எனது தலைமையில் வட்டுக்கோட்டைத் தொகுதித் தொண்டர்களால் நடாத்தப் பட்டது. பொதுமக்களும், ஆயிரக் கணக்கில் திரண்டு நின்றனர். முதல் நாள் பொலீஸ் அட்டூழியத்திற்கு எதிராக - நாடு முழுவதும் கிளப்பிய கண்டனங்களால் வெட்கமடைந்த பொலீசார், தம் பலாத்காரத்தைச் சற்றுக் குறைத்தனர். ஆயினும், அரசாங்க ஊழியரைச் சத்தியாக்கிரகிகளின் அணிக்கு ஊடாக, அலுவலகத்தினுள் அழைத்துச் செல்ல அவர்கள் முயன்றனர். மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்புக்கு மத்தியில் உள்ளே செல்ல, பெரும்பாலான அரசாங்க ஊழியர் மறுத்தனர்.
மூன்றாம் நாள் - திருவி.ஏ. கந்தையா பா.உ. தலைமையில் ஊர்காவற்றுறைத் தொகுதித் தொண்டர்களும்; நான்காம் நாள் திரு. வந. நவரத்தினம் பா.உ தலைமையில் சாவகச்சேரித் தொண்டர்களுமாக - இப்படியே இயக்கம் தொடர்ந்து வெற்றி கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயி கள், வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள் எல்லோ ரும் போராட்டத்தில் குதித்தனர். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க நிர்வாகம் ஸ்தம்பித்தது. சத்தியாக்கிரக விஸ்தரிப்பு
பெப்ரவரி மாதம் 27ஆந் திகதி மட்டக் களப்பு மாவட்டமெங்கும், யாழ்ப்பாணத்தில் பொலீசாரின் தாக்குதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில், ஹர்த்தால் நடை பெற்றது. அடுத்த நாள், மட்டக் களப்பு கச்சேரி வாயிலிலும் தொண்டர்களின் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது.
மார்ச் 4ஆந் திகதி திருகோணமலைக் கச்சேரிக்கும்; அதன்பின்பு மன்னார்,

3.
வவுனியாக் கச்சேரிகளுக்கும் சத்தியாக்கிரக இயக்கம் விஸ்தரிக்கப்பட்டது. திருகோண மலைக் கச்சேரி வாயிலில் மறியல் செய்த சத்தியாக்கிரகிகள், பொலீசாரின் தடியடிப் பிரயோகத்திற்கு ஆளாகினர். 10 பேர் காய மடைந்து, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். கடுமையான காய மடைந்த நால்வரில், மூதூர் முதல்வர் திரு. ஏகாம்பரமும் ஒருவராவர். மூதூர் முதல்வர் ஏகாம்பரம் அகால மரணம்
சத்தியாக்கிரகப் போராட்டம், ஐந்து மாவட்டங்களிலும் மக்களின் உணர்ச்சிப் பெருக்கின் மத்தியில், வெற்றிகரமாக நடை பெற்றது. “இரண்டு மாகாணங்களில் அரசாங்கமே இல்லை’ என்று, நாட்டின் பிரதமரே மூதவையில் கூறினார். இராணுவத்தையும் கடற்படையையும் பயன் படுத்தியும், மக்களின் உணர்ச்சியை அடக்க முடியவில்லை. இப்போராட்டத்தின் மத்தியில், தமிழினத்திற்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டது. 4ஆந் திகதி திருகோணமலைச் சத்தியாக்கிரக ஆரம்பதினத்தன்று, பொலீசாரின் தடியடியினால் படுகாயமுற்ற திரு. ஏகாம்பரம், அதிலிருந்து முற்றாகக் குணமடையவில்லை. 22-3-61இல் யாரும் எதிர்பாராத வகையில், அவர் திடீரென மரணமானார், உறுதியும் செயல் திறனும் கொண்டு, மூதூர் மக்களின் முதல் உறுப்பின ராக - இருமுறை தெரிவு செய்யப்பட்ட திரு. ஏகாம்பரம் அவர்களின் மறைவு, கிழக்கிலங் கை அரசியலில் ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது. தந்தையை அணுகிய மந்திரி
சத்தியாக்கிரகத்தை முறியடிக்கவென அரசாங்கம் கையாண்ட தந்திரோபாயங்கள் எல்லாம் தோல்வி கண்டு, மக்கள் இயக்கம் - சாதி, சமய, பிரதேச பேதமற்று, மிக ஒற்றுமையாகவும் கட்டுப்பாடாகவும் அகிம்சை நெறியிலிருந்து ஒரு சிறிதும் வழுவாது நடைபெற்றுக் கொண்டிருந்தது. உலக அபிப்பிராயத்திற்கும், நல்லெண்ணம் கொண்ட சிங்களப் பிரமுகர்கள் l 6 (5 sol -u

Page 75
-
கோரிக்கைக்கும் பணிந்த பிரதமர், தந்தை செல்வநாயகத்தோடு பேச்சு வார்த்தை நடத்துமாறு, நீதியமைச்சர் தி. சாம். பி.சி. பெர்னாண்டோ அவர்களைப் பணித்தார். உண்மைச் சத்தியாக்கிரகிகளின் மனப் பண்புக் கேற்ப, எப்போதும் சமரசப் பேச்சின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க ஆயத்தமாயிருந்த தந்தை செல்வநாயகம் - பேச்சுவார்த்தைக்கு இணங்கினார். முன்பு சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவரும், பின்பு கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இயங்கிவருமான திரு. மு. திருச் செல்வம் அவர்களது கொழும்பு இல்லத்தில், 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆந் திகதி இரவு இச் சந்திப்பு நடைபெற்றது. மொழியுரிமை பற்றிய மிகக் குறைந்த கோரிக்கை களில் தானும், ஒற்றுமை ஏற்பட முடிய வில்லை. பேச்சு வார்த்தை தோல்வியடைய வே, போராட்டம் தொடர்ந்து மிக வேகத் தோடு நடைபெற்றது. தமிழ் அரசு தபால் சேவை
ஆங்கில ஆட்சியில், காந்தியடிகள் சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடாத்திய நேரத்தில், ஆட்சியாளர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தோ - நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வழங்கியோ - சட்டத்தை நிலை நாட்டினர். எமது சத்தியாக்கிரகத்தைப், பொலீஸ் பலாத்காரத்தினாற் கலைக்க முயன்ற அரசாங்கத்தின் முயற்சி தோல்வி யடையவே, பங்கீட்டு உணவு வழங்காது - மக்களைப் பணிய வைக்க அரசு முற்பட்டது. இதனால், போராட்டத்தை வேறு துறை களிலும் விரிவாக்கித் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டுத் தயாராக இருந்த அடுத்த நட வடிக்கை, ஏப்ரல் மாதம் 14ஆந் திகதி பகல் 12 மணிக்குத் தந்தை செல்வநாயகம் அவர் களால்
ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் தபால் சேவைச் சட்டத்தை மீறி "தமிழ் அரசு தபால் சேவை'
ஆரம்பிக்கப்பட்டது. தமிழரசுத் தபால் தலை களை - திரு. செல்வநாயகம் விற்பனை செய்து

4.
தொடக்கிவைக்க, பல தொண்டர்கள் - சட்ட மறுப்பாக எழுதப்பட்டு, தமிழரசு தபால் தலைகளைத் தாங்கிய கடிதங்களை விநியோகிக்கச் சென்றனர். திரு. அ. சிவசுந்தரம் பா.உ. அவர்கள் எழுதிய கடிதத்தை, நான் வடபகுதித் தபால் அதிபருக்கு விநியோகித்தேன். அதே போன்ற ஒரு கடிதத்தை, திரு. மு. சிவசிதம்பரம் பா.உ. பொலீஸ் அதிபரிடம் சேர்ப்பித்தார். திருமதி. ம. அமிர்தலிங்கம் எழுதிய ஒரு கடிதத்தை, திரு. வி. தர்மலிங்கம் பா.உ. அரசாங்க அதிபரிடம் கொடுத்தார். ஏறத்தாழ 10,000 மக்கள் வரிசையில் நின்று, 'தமிழரசு முத்திரைகளை வாங்கினர். தமிழரசுத் தபால் சேவை மா அதிபராக - கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திரு.க. நடராசா வழக்கறிஞர் நியமிக்கப் பட்டார். "தமிழரசு தபால் பெட்டி"கள் பல இடங்களிலும் வைக்கப்பட்டன. ஆயிரக் கணக்கான கடிதங்கள் இப்பெட்டிகளில் போடப் பட்டன. சட்ட மறுப்பாக ஆரம்பித்த தபால் சேவையின் வெற்றியும், மக்களின் உற்சாகமும் அரசாங்கத்தைத் திகைக்கச் செய்தன. இராணுவ ஆட்சி மூலம், இச் சாத்விக இயக்கத்தை முறியடிக்க - அரசாங்கம் ஆயத்தமானது. அவசரகால, ஊரடங்குச் சட்டம் பிறந்தது
1961 ஏப்ரல் 17ஆந் திகதி நள்ளிரவு 12 மணிக்கு அவசர காலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. அதிலிருந்து 48 மணித்தி யாலங்களுக்கு ஊரடங்குச் சட்டமும் அமுலாக்கப்பட்டது. அன்றிரவே, தலைவர் கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு, பொலீஸ் நிலையங்களுக்கும், இராணுவ முகாம்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். கச்சேரிகளின் முன் அமைதியாக இருந்த தொண்டர்கள், இராணுவத்தினரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். பலர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினர். பழனியப்பன் என்ற இளைஞரது தொடை துளைக்கப்பட்டு, அவர் பிரக்ஞை அற்ற நிலையில் விடப்பட்டார். பெண் தொண்டர் கள் - இராணுவத்தினரால்

Page 76
வலுக்கட்டாய மாக ஏற்றப்பட்டு, பல மைல்களுக் கப்பால் தனிமையான இடத்தில் விடப்பட்டனர். பொது மக்களுக்கும், தலைவர்களுக்கும் சொந்தமான மோட்டார் வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டன. இராணுவ கவர்னர்களின் ஆட்சியில், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் வைக்கப்பட்டன.
இராணுவத்தின் சிறையில் இனத்தின் தலைவர்கள்
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து நகரங்களிலும் கைது செய்யப்பட்ட தலைவர்கள் - 18ஆந் திகதி விமான மூலம் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டு, பனாகொடையிலுள்ள இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டனர். ஒரு பெண் - திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் உட்பட, தலைவர்களும், பிரதான தொண்டர் களுமாக - вотi எழுபத்துநால்வர் இங்கே அடைக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டது. "சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டு, அதன் அச்சகத்திற்கு முத்திரை வைக்கப் பெற்றது. மிகக் கண்டிப் பான பத்திரிகைத் தணிக்கையும் அமுலுாக்கப் பட்டது. 'சத்தியாக்கிரக', 'தமிழன் கண்ணீர் ஏடுகள் பிறந்தன!
நாட்டின் நாளேடுகள் - தணிக்கைச் சட்டங்களினால் தமிழ் மக்களின் நிலை பற்றிய செய்திகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. அச் சூழ்நிலையிலும், ஆங்கிலத்தில் 'சத்தியாக்கிரக' என்ற ஓர் (மாதமிருமுறை) ஏடு - தட்டச்சேற்றி வெளியிடப்பட்டது. அரசாங்க உளவுப் படையினரால், அப் பத்திரிகை வெளியிட் டோரையோ - தட்டச்சிடப்பட்ட இடத்தையோ கண்டு பிடிக்க முடியாது போயிற்று. அதற்குப் பொறுப்பாயிருந்தோரின் பெயரை வெளியிடும் நாள், இன்னும் வரவில்லை. எனினும் அவர்களின் ஆற்றலும் அறிவும், மக்களுக்குச் சோர்வை அகற்றி உற்சாகம் அளிக்கும் மருந்துகளாகப் பயன்பட்டன. அதேபோல,

5
தமிழில் "தமிழன் கண்ணீர்" என்ற ஏடும் - தொடர்பாக இல்லா விட்டாலும், காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்டது. கூட்டங்கள் வைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த தாயினும், ஆலயங்களில் மக்கள் கூடிக் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். அவற்றின் இறுதியில், கைது செய்யப்படாதிருந்த தலைவர்கள் உரையாற்றி மக்களை உற்சாகப்படுத்தினர். சத்தியாக்கிரகத்தின் போதும், கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்த இக்காலத்திலும் திரு. மு. சிவ சிதம்பரம் அவர்கள் ஆற்றிய அளப்பரிய சேவை - போற்றற்குரியது.
மலையக மக்கள் தொடுத்த போர்
சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்கு முன்பு தொடக்கமே, மலைநாட்டுத் தமிழ் மக்களின் தலைவர்கள், கட்சித் தலைவர் களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந் தனர். போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. செள. தொண்டைமான் சத்தியாக்கிரகம் நடந்த இடங்களுக்குச் சென்று, மக்களுக்கும் தலைவர்களுக்கும் உற்சாகம் ஊட்டினார். வவுனியா, மன்னார்ப்பகுதிகளில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் இயக்கத்தில் நேரடியாக ஈடுபட்டனர். தலைவர்கள் ஏப்ரல் 17ஆந் திகதி இரவு கைது செய்யப்பட்ட நேரத்தில், வவுனியா இதொ.கா. பிரதிநிதி திரு. நடேச பிள்ளையும் கைது செய்யப்பட்ட்ார். தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டு, சத்தியாக் கிரகம் இராணுவத்தினால் முறியடிக்கப் பட்ட போது, மலைநாட்டுத் தொழிலாளர் போராட்டத்தில் குதிக்கத் தயாராகினர். ஏப்ரல் 24-ஆந் திகதி தோட்டத் தொழிலை அத்தியா வசிய சேவையாக்கும் சட்ட விதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்தது. ஆயினும் 25ஆந் திகதி - மலைநாட்டுத் தோட்டங்களில் ஐந்து இலட்சம் தமிழ்த் தொழிலாளர்கள் பரிபூரண வேலை நிறுத்தத்தை மேற் கொண்டனர். அன்று இ.தொ. காங்கிரஸ்,

Page 77
霍互
தமிழரசுக்கட்சி அரசுக்குச் சமர்ப்பித்த அதே கோரிக்கைகள் அடங்கிய நாலு அம்சக் கோரிக்கையை, அரசுக்குச் சமர்ப்பித்தது. தோட்டப் பகுதி களுக்கும் இராணுவப் பிரிவுகள் அனுப்பப்பட்டன. தமிழ் உரிமையை வென்றெடுப்பதில் தமிழ் இனத்தின் ஒற்றுமை, உலகம் முழுவதற்கும் தெளிவாகக் காட்டப்பெற்றது.
சிறை மீண்ட செம்மல்கள்
பகுதி பகுதியாகத் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டு, இறுதியில் 1961 ஐப்பசி மாதத்தில் - ஆறு மாதத் தடுப்புக் காவலின்பின், பாராளுமன்ற உறுப்பினர் களும் மற்றும் முக்கிய தலைவர்களும் விடுதலையடைந்தனர். ஆயினும், கட்சியின் தடை நீங்கப் பின்னும் சில மாதங்கள் சென்றன. இதற்கிடையில், மூதவை உறுப்பினர் ஒருவரை மீண்டும் தெரிவு செய்யும் வாய்ப்புக் கட்சிக்குக் கிட்டியது. மூதவைக்கு ஒர் உறுப்பினரை அதுகாறும் தெரிவு செய்யச் சந்தர்ப்பம் அற்றிருந்த கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் பிரதி நிதியாக் - திரு. மு. மாணிக்கம் அவர்கள் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டார். இத்தெரிவு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் சிலருக்குத் திருப்தி அளிக் காத காரணத்தினால், இரண்டொருவர் கட்சியிலிருந்து வெளியேறினர். ஆயினும், பெரும்பாலான கிழக்கு மாகாண உறுப்பினர் கள் திரு. மாணிக்கம் அவர்களின் தெரிவை வரவேற்றனர். மீண்டும் சிங்கள சிறீ பஸ்வண்டி
தலைவர்களை விடுதலை செய்த சில வாரங்களுக்கிடையில், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஆத்திர மூட்டும் இன்னொரு செயலையும் செய்தது. 1958ஆம் ஆண்டுச் "சிறீ எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, சிங்கள "சிறீ பொறித்த பஸ் வண்டிகள் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடவிடப்படவில்லை. இச்சந்தர்ப் பத்தில் தலைவர்களை விடுவித்தவுடன், தமிழ் மக்களுக்கு ஓர் சவாலாக - மீண்டும்

5
சிங்கள "சிறீ பொறித்த பஸ் வண்டிகள் சில யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டன. அடுத்த நாளிரவே, வேகம் கொண்ட இளைஞர் சிலர் பஸ் நிலையத்தில் நுழைந்து, காவலாளியையும் சுட்டுக் காயப் படுத்தி, பஸ்வண்டியையும் தீக்கிரை யாக்கினர். தலைவர்களின் சாத்வீக உபதேசத்தையும் இளைஞரின் தீவிரம் மீறி விட்டதைக் கண்ட ஆட்சியாளர் - அடுத்த நாளே, எஞ்சிய சிங்கள சிறீ பொறித்த பஸ் வண்டிகளைத் திரும்பப் பெற்றுவிட்டனர். அரசுக்கு எதிராக -
அரச படைகளே சதி
எமது போராட்டத்தை நசுக்குவதற்கு அவசரகாலச் சட்டத்தையும் இராணுவத்தின் துணையையும் அரசாங்கம் நாடியது. தமது தயவின்றி ஆட்சி நடைபெறாதென்ற எண்ணம், பொலீஸ் தலைமைப் பீடத்திலும் ஆயுதப் படைகளிலும் உள்ள பலருக்கு ஏற்பட்டதுபோலும், ஆட்சியைக் கைப்பற்றச் சதி செய்தார்கள் என்று கூறி, மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த திரு. லியனகே உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால், அரசியல் அடக்கு முறைகள் மேலும் பல மாதங்களுக்குத் தளர்த்தப் படாதிருந்தன. கட்சியை மீண்டும் புனரமைப்புச் செய்து, இயக்க வேலைகளை ஆரம்பிப்பது தாமதப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாயிருந்தது. அரசியல் நிலை ஒரளவு சீரடைந்த பின் கட்சிக் கிளைகள் புதுப்பிக்கப்பட்டு, மாநில மாநாட்டை மீண்டும் கூட்டி அடுத்த நடவடிக்கை பற்றி ஆராய முடிவு செய்யப்பட்டது. எட்டாவது மாநில மாநாடு :
கட்சியின் எட்டாவது மாநில மாநாடு - மன்னாரில் 31-8-62, 1-9-62, 2-9-62 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. திரு. சிமூ. இராச மாணிக்கம் அவர்கள் மீண்டும் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அரசாங்க எழுது வினைஞர் சங்கத் தலை வராயிருந்த திரு. க. சிவானந்தசுந்தரம் அவர்கள், இம் மாநாட்டுத் திகதியிலிருந்து

Page 78
. . . . . . . . . . . . . . .
சாதிகள் இல்ை
தீண்டாமைப் பிசாசைத் தீர்த்துக்கட்டும் அங்கமான சமபந்திப் போசனத்தில் ஈடு ஒடுக் கப்பட்ட உடன்பிறப்புகளுட6
செந்தமிழர் சொல்லை
சோதனைகள் மிகுந்த ஆரம்ப கால @guນດ່ງດັງ)
VN
 
 
 
 
 

NA
லயடி பாப்பா !
E.
தீரம்மிகுந்த சீர்திருத்தப் போரின் ஓர் இபடும் தந்தையும் தமிழறிஞர் கு.வ.வம் ன் இரண்டறக் கலந்திட்ட காட்சி.
ச் செயலாக்கியோர் !
in . . . . . . . . . . . . . . . . . . . . . . . /

Page 79
r- நீண்டு திற
சிங்கள பூநீயை எதிர்த்துப் போரிட்டதற்காகச் சிை பூரீமுருகன் ஆகியோர் யாழ், சிறைச்சாலையிலிருந் தந்தை, தளபதி, திருமலைஜோதி ஆகியோர் மலர்ம தாங்கிய கைக்குழந்தைதான் சமீபத்தில் அரசின் சர்
நாடாள வந்தவர்க்கு
உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் வந்த பிரதம கட்சியின் முதுபெருந்தலைவர் திரு. சு. நடராசா ஆர்ப்பாட்டம் செய்திடும் வீரக் காளையர் கூட்ட
sse
 
 

றயிலடைக்கப்பட்ட கோப்பாய்க் கோமான் கு.வ, து விடுதலையாகி வெளிவந்தபோது, தலைவர்கள் ாலை சூடி வரவேற்கும் காட்சி, தளபதியின் கரங்கள் ச்சைக்குரித்தான அவர் தலைமைந்தன் காண்டீபன்
க் கறுப்புக் கொடி !
ர் உயர்திரு. சேர் ஜோன் கொத்தலாவலைக்குக் (மத்தியில் தலைமையில் கறுப்புக்கொடி காட்டி ம் இதோ! . لم

Page 80
.
கட்சியின் நிர்வாகச் செயலாளராகப் பெறுப் பேற்றார். மன்னார் மாநாடு போராட்டத்தின் விளைவுகளையெல்லாம் ஆராய்ந்தபின், "1963ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17ஆந் திகதிக்குப் பிந்தாமல், மீண்டும் நேரடி நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக, இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கிடையில் கட்சியை விரிவாக அமைத்துத் தயாராக்க வேண்டும்" என்று தீர் மானித்தது. அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட இன்னொரு முக்கியமான முடிவு, "வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் பேசும் மக்களுக்கும் - மலைநாட்டுத் தமிழ் மக்களுக்குமிடையில் ஸ்தாபன ரீதியான ஒற்றுமையையும் - சமூகக் கட்டுக்கோப்பையும் - அரசியல் பொருளா தார ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என்பதாகும். போராட்டத்தைத் தொடர்ந்து இராணுவ அட்டூழியங்களினால் சோர்வுற் றிருந்த மக்கள், தன்னம்பிக்கையோடு மீண்டும் இயக்கத்தில் ஈடுபடவும், மலை நாட்டிலும் கட்சியின் மூவர்ணக் கொடி பறக்கவும் மன்னார் மாநாடு வழி வகுத்தது. இலங்கைத் தொழிலாளர் கழகம் உதயம்
மன்னார் மாநாட்டுத் தீர்மானத்திற் கிணங்க, மலைநாட்டுத் தமிழ் மக்களை - வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் மக்களோடு ஸ்தாபன ரீதியாக ஒன்றிணைப் பதற்கு ஒரே வழி - கட்சியின் தலைமையில் மலைநாட்டில் ஓர் தொழிற் சங்கத்தை நிறுவுவதே என்ற முடிவுக்குக் கட்சி வந்தது அதன்படி, ஹட்டன் நகரத்தில் 22-12-62 சன்னிக்கிழமை காலை 10 மணிக்கு, 'இலங்கைத் தொழிலாளர் கழகம்' என்ற ஒரு புதிய தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஹட்டன் தலவாக் கொல்லை முதலிய மலை நாட்டு நகரங்களில் - கட்சிக் கிளைகளும் அமைக்கப்பட்டன. மலைநாடெங்கும் - கட்சியின் கொள்கைகள் எடுத்து விளக்கட் பட்டன. உணர்ச்சியுள்ள இளைஞர் பலர் தொழிற் சங்கத்திலும் கட்சியிலும் சேர்ந் தனர். பலம் வாய்ந்த தொழிற் சங்கங்களோடு போட்டிபோடுவதில், புதிய தொழிற்சங்கம்

69
t
பல கஷ்டங்களை எதிர்நோக்கவேண்டி யிருந்தாலும், வெறுந் தொழிற்சங்கமாக இல்லாமல், இனப்பற்றையும் அரசியல் உரிமை வேட்கையையும் தொழிற் சங்கச் சேவையோடு சேர்த்து ஊட்டும் இயக்கமாக - இன்றும் இயங்கி வருகிறது. இந்தியாவின் உண்மை நண்பர்கள்
1962ஆம் ஆண்டின் இறுதியில், சீனா - இந்தியாமீது படை எடுத்தது. இலங்கை அரசு இந்த ஆக்கிரமிப்பைக் கண்டிக்கத் தயங்கியது. அந்த நேரத்தில், இந்தியாவுக்குச் சார்பாக முதற் கிளம்பிய குரல் - இலங்கைத் தமிழரசுக் கட்சியினதாகும். 18-11-62இல் கட்சியின் மத்திய செயற்குழு - கீழ்க்கண்ட வாறு தீர்மானித்தது :
"சர்வதேசக் கண்ணியத்தையும் கெளரவமான நடத்தையையும் மீறியும்; உலகத்திற்குத் தானும் பிரகடனப்படுத்திய பஞ்சசீலக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டும்; கம்யூனிஸ்ட் சீனா - இந்திய மீது நடத்தும் ஆக்கிரமிப்பை, இலங்கைத் தமிழரசுக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், கம்யூனிஸ்ட் சீன ஏகாதிபத்தியத்தை எதிர்த்து " ஆசியாக் கண்டத்தில் சனநாயகம் நிலைபெறவும், தனது நாட்டையும் தேசிய கெளரவத்தையும் காப்பாற்றுவதற்கும் நடாத்தப்படும் இப்போரில், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் சார்பில் - இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய மக்களுக்கும் தனது ஆதரவை அளிப்பதுடன், இந்திய மக்களுடன் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கிருக்கும் ஐக்கியத்தையும் காட்ட - இக்கட்சி விரும்புகிறது.
"ஏகாதிபத்திய சீனாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும்; தனது சுதந்திரத்திற்காகவும் சநைாயகத்திற்காகவும் போராடும் இந்தியாவிற்கு - ஆதரவு நல்க வேண்டு மென்றும்; இலங்கை அரசாங்கத்தை இக்கட்சி கேட்டுக் கொள்கிறது.
"ததுை பாதுகாப்பிற்குப் போதிய ஆட்பலம் இந்தியாவிடம் இருப்பினும், மாண்புமிக்க கொள்கைகளுக்காகவே இந்தியா

Page 81
-
போரிடுவதால், மனித சுதந்திரத்திற்காக நடத்தப்படும் இப்புனிதப்போரில், ஒரு சிறிதளவேனும் பங்கெடுக்க விரும்புவதனால், இப்போரில் பங்கெடுப்பதற்காக - இலங்கை வாழ் தமிழ் பேசும் இளைஞர்களைத் தொண்டர்களாகச் சேரும்படி - இக்கட்சி அழைக்கிறது"
இந்தியாவின் சரித்திரத்தில், நெருக்கடி மிகுந்த கட்டத்தில், இலங்கை அரசு இந்தியா விற்கு ஆதரவுதர முன் வராத நேரத்தில், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பில் தனது தார்மீக ஆதரவை - இந்தியாவிற்கு அளிக்க முன்வந்தது இலங்கைத் தமிழரசுக் கட்சி. சமீபத்தில், தமிழ்நாடு திமுகழக ஆட்சி நீக்கத்தையடுத்து, அங்குள்ள தி.மு.கவையும் இங்குள்ள தமிழர் கூட்டணியையும் தொடர்புபடுத்தி, இங்குள்ள Sou அமைச்சர்கள் மூலம் வெளிவந்த விஷமத்தன மான செய்திகளையொட்டி, கட்சியின் நிலையைத் தெளிவுபடுத்துவதற்காகவே இத் தீர்மானத்தை முழுதாகத் தந்திருக்கிறேன். இலங்கையில் இந்தியாவின் நண்பர்கள் யாரென்பதை - இந்திய அரசும் மற்றை யோரும் இதிலிருந்து தெரிந்து கொள் வார்கள். மறைந்த பாரதப் பிரதமர் உயர்திரு. பண்டிட் பூரீ ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்நிலையை எப்போதும் நன்கு தெரிந்திருந் தார்; அதை எமக்குத் தெரிவித்துமிருந்தார். மந்திரிமார் வருகைக்கு எதிர்ப்பு
கட்சியை மீண்டும் போராட்டத்திற்குத் தயார்படுத்தும் வகையில், கட்சியின் செயற் குழு 24-2-63இல் பின் கண்டவாறு தீர்மானித்தது: "மந்திரிகளும் பாராளுமன்றக் காரியதரிசிகளும் கிழக்கு, வடக்கு மாகாணங் களுக்குக் கோலாகல விஜயங்கள் செய்யும் போது, கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யவேண்டும்; சாதாரண உத்தியோக விஜயங்களின்போது அவற்றில் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் பங்கு பற்றுவதைப் பற்றிப் பாராளுமன்றக்குழு அவ்வப்போது முடிவு செய்யவேண்டும்" இத் தீர்மானத்திற் கமைய, யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்

70
துறைக்கும் வருகை தந்த அமைச்சர் திரு. ரி.பி. இலங்கரத்தினாவிற்குக் கறுப்புக் கொடி காட்டி, ஆர்ப்பாட்டஞ் செய்வதென்று கட்சி தீர்மானித்தது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் - பருத்தித்துறைக் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் திறப்பு விழாவிலும், யாழ்ப்பாணம் மக்கள் வங்கித் திறப்பு விழாவிலும் அணி வகுத்து நின்று - அமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்டினர். யாழ்ப்பாணத்தில் தலைவர்களும் தொண்டர் களும் பொலீசாரால் தாக்கப்பட்டனர். அப்படித் தாக்குதலுக்கு ஆளானவர்களில், ஊர்காவற் றுறைப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வே.அ. கந்தையா அவர்களும் ஒருவராவார்.
திரு.வீ.ஏ. கந்தையாவை இழந்தோம்
அன்று ஏற்பட்ட தாக்குதல், என்னைப் போன்ற இளம் வயதினரைப் பாதிக்க வில்லை. ஆனால் திரு. வி.ஏ. கந்தையாவைப் பாதித்துவிட்டது. அவருடைய உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து, அவர் மீளவேயில்லை. திடீரென்று இருதய நோயி னால் பாதிக்கப்பட்ட திரு. கந்தையா 4-6-63 இல் எம்மை விட்டுப் பிரிந்தார்! பெரு வருவாய் தந்த சட்டத் தொழிலிலிருந்து, தமிழ் இனத்திற்குச் சேவை செய்ய முன்வந்து, 1956ஆம் ஆண்டு முதல் கட்சியின் மிகுந்த விசுவாசமும் கண்ணியமும் நிறைந்த தலைவ ராக விளங்கிய திரு. கந்தையா அவர்களின் மறைவினால், ஓர் அறிவாளியை - உண்மைத் தொண்டரைத் தமிழ் இனம் இழந்தது. அவரு டைய மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட இடைத்தேர்தலில், திரு. வ. நவரத்தினம் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு, அமோக வெற்றி பெற்றார். எல்லாம் தமிழ் இயக்கம்
சிங்களத் திணிப்பை எதிர்ப்பதற்கும், தமிழ் மக்களை அரசுடனான தம் கருமங் களைத் தமிழில் ஆற்றத் தூண்டுவதற்குமான - எல்லாம் தமிழ் இயக்கத்தை மேற்கொள்ளக் கட்சி தீர்மானித்தது. 8-4-63 முதல் இவ் வியக்கத்தை மிகத் தீவிரமாக நடத்தக் கட்சி முடிவு செய்தது. அதன்படி, தமிழ்ப்

Page 82
பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்கள், வேறு அரசாங்க அலுவலகங்கள் ஆகிய வற்றின் முன் கட்சித் தொண்டர்கள் நின்று - விண்ணப்பங்கள், தந்திகள், முகவரிகள் ஆகியவற்றைத் தமிழில் எழுதுமாறு மக்களைத் தூண்டியும்; தேவையானவர் களுக்குத் தாமே தமிழில் எழுதிக் கொடுத்தும் இயக்கத்தில் ஈடுபட்டனர். பல வாரங்களாக - தொடர்ந்து தலைவர்களும் ஆண், பெண் தொண்டர்களுமாக - இவ்வியக்கத்தை நடத்தினர். அதே நேரத்தில், விரிவான சட்டமறுப்பியக்கத்தில் ஈடுபடும் பொருட்டு, கிராமந்தோறும் கட்சிக் கிளைகள் நிறுவப்பட்டுத் தொண்டர்களும் திரட்டப்பட்டனர். 1964ஆம் ஆண்டு ஜனவரி 1ஆந் திகதி முதல், தனிச் சிங்களத்தை மீண்டும் தமிழ்ப் பிரதேசங்களில் அமுல் நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. 1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகத்தாற் கைவிடப்பட்ட சிங்களத் திணிப்புத் திட்டம், மீண்டும் தலைதூக்கும் ஆபத்து ஏற்பட்டது. 30.693இல் கொழும்பில் கூடிய கட்சியின் மத்திய செயற்குழு, தமிழ் பேசும் மக்களின் மீது சிங்களத்தைத் திணிக்கும் முயற்சியை, அம் மக்களின் முழுச் சக்தியையும் திரட்டி எதிர்ப்பது" என்று தீர்மானித்தது. தலைவர் இராஜவரோதயம் மறைவும்: திருமலையின் இடைவெளியும்
திரு. கந்தையா மறைந்து இரண்டு மாதங்களில், கட்சி மீண்டும் ஒர் பேரிழப் பைத் தாங்கவேண்டியநிலை ஏற்பட்டது. 1952ஆம் ஆண்டு முதல் திருகோணமலைப் பிரதிநிதியாக விளங்கியவரும், கட்சியின் ஸ்தாபக உறுப்பினரும், நெருக்கடி மிகுந்த 1958ஆம் ஆண்டு - கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடத்தியவருமான திரு. ந.இ. இராஜவரோதயம் அவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு, யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 27-8-63இல் எம்மை விட்டுப் பிரிந்தார்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றின் உறைவிடமாக விளங்கி, தன் உழைப்பு முழுவதையும் தமிழ் மக்களுக்காகவும் - சிறப்பாகத் திருகோண மலைத் தமிழ் மக்களுக்காகவும் அர்ப்பணித்த

இப் பெரியாரின் இடம் - இன்றும் நிரப்ப முடியாததாகவே இருக்கிறது. பாராளு மன்றத்தில் அவருடைய மறைவினால் ஏற்பட்ட இடத்திற்கு, முதுபெருந் தலை வரான திரு. மாணிக்கராசா கட்சி வேட்பாள ராக நிறுத்தப்பட்டு, அமோக வெற்றி பெற்றார். சிங்கள ஆசிரியர், ஊழியர் படையெடுப்பும், செந்தமிழர் சீற்றமும்
1964 ஜனவரி 1ஆந் திகதி முதல் சிங்கள நிர்வாகத்தைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்த அரசாங்கம், அதை நிறைவேற்றுவதற்குச் சிங்கள அரசாங்க ஊழியர்களையும், சிங்களத்தில் வேலை செய்யக்கூடிய ஊழியர் களையும் வடக்குக் கிழக்கு மாகாணங் களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது. சிங்களத் திணிப்பிற்குத் தமிழ் மக்களின் எதிர்ப்பின் ஓர் அம்சமாக - சிங்களத் தேர்ச்சி பெற மறுத்த தமிழ் ஊழியர்கள் - பதவி இழக்கும் ஆபத்து ஏற்பட்டது. சிங்களத் தேர்ச்சி பெற்ற ஒரு சில தமிழ் ஊழியர்கள், அத்தகுதி காரணமாகத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறும் உரிமையைப் பெற்றனர். தமிழ்ப் பாடசாலைகளிலும் சிங்களத்தைத் திணிக்கும் பொருட்டு, 2000 சிங்கள ஆசிரியர்களை வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பாடசால்ைகளுக்கு நியமிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. சிங்கள ஊழியரும் - சிங்கள ஆசிரியரும் ஆயிரக் கணக்கில் தமிழ்ப் பிரதேசங்களுக்குப் படை யெடுக்கும் நிலை எழுந்தது. இவ்வபாயத்தை எதிர்ப்பதற்குப் பூரண சட்ட மறுப்பை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக, வடக்குக் கிழக்கு மாகாணங்களிற் சிங்களச் சட்டத்தை அமுல் நடத்தக் கருவியாயிருக்கும் அரசாங்க ஊழியர்களையும், உடந்தையாயிருக்கும் மற்றையோரையும் பகிஷ்கரிப்பதெனக் கட்சி தீர்மானித்தது. சிங்கள ஆசிரியர்களையும் - அதே போலப் பெற்றோரும் பிள்ளைகளும் பகிஷ்கரிக்க வேண்டுமென்றும் கட்சி கோரியது. இவ் வியக்கத்தின் பலனாக, பெரும்பாலான சிங்கள ஆசிரியர்களும் ஊழியர்களும் தமிழ்ப் பிரதேசங்களுக்கு வர மறுத்தனர். சிங்களத் தேர்ச்சியின்மையால் வேலை நீக்கம்

Page 83
.
செய்யப்படும் ஆபத்திலிருந்த ஊழியர்களின் நிலை பற்றியும், அரசுடன் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. பாதயாத்திரையும்; கணடன ஊாவலமும
தமிழ் மக்களிடையே - சாதி பேதத்தை ஒழித்து, ஒற்றுமையை வளர்க்கவும்; கட்சியின் இலட்சியங்களை மக்கள் மத்தியில் விரிவாக விளக்கவும்; தொண்டர்கள் காங்கேசன்துறைத் தொகுதியிலிருந்து தந்தை செல்வநாயகம் தலைமையிற் புறப்பட்டு - கிராமம் கிராமமாகப் பாதயாத்திரை செல்லும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பல வாரங்களாக நடைபெற்ற இவ்வியக்கத்தில், கிராமந்தோறும் மக்கள் திரண்டு, தலைவர் களையும் பாதயாத்திரைத் தொண்டர் களையும் வரவேற்றது மாத்திரமன்றி, உணவும் - தங்க வசதிகளும் செய்து கொடுத்து உபசரித்தனர். சாதி பேதமற்று, சமபந்தி போசனம் பரவலாக நடைபெற்றது. திரண்ட மக்கள் மத்தியில் தீண்டாமை ஒழிப்பின் அவசியம் பற்றியும் - தமிழ் மக்களின் அரசியல் நிலைபற்றியும் கருத்தரங்குகள் நடாத்தப் பெற்றன.
இப்படிப் பல விதமான இயக்கங் களினால் - மக்களைப் போராட்டத்திற்குத் தயார்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத் தில், அரசாங்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாக - யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய கச்சேரிகளுக்கு 1-1-64ல் மாபெரும் கண்டன ஊர்வலங்கள் - கட்சித் தலைவர்களின் தலைமையிற் சென்றன. கச்சேரி முன்றில் களில், தனிச் சிங்களச் சட்டப் பிரதிகள் எரிக்கப்பட்டன. 1964 பெப்ரவரி 17ஆந் திகதிக்குப் பிந்தாமல், நேரடி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவேண்டுமென்றும் முடிவா கியது.
மீண்டும் ஒரு சமரசப்பேச்சு
இச் சூழ்நிலையில், அரசாங்கம் தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாகப் பேச்சு வார்த்தைக்குக் கட்சியை

江下
لشكس
அழைத்தது. தொழிற் சங்கங்கள் 21 கோரிக்கைகளைச் சமர்ப்பித்து, பெரிய போராட்டத்திற்கு ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தன. "இடதுசாரி ஐக்கிய முன்னணி இதற்குத் தலைமை தாங்கியது. அரசாங்கத்திற்குள்ளும் பல கருத்து வேற்று மைகள் தலைதுாக்கியிருந்தன. பின் நடந்த சம்பவங்களைக் கொண்டு பார்க்கும்போது, தேவை ஏற்பட்டால்பாராளுமன்றத்தில்
கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவைப்
பெறலாம்' என்ற எண்ணத்திலேயே இப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டனவென்று இப்போது தெரிகின்றது. ஆயினும் அன்றிருந்த நிலையில், காந்திய நெறிக் கேற்ப - சமரசப் பேச்சு வார்த்தைக்கு நாம் இணங்கினோம். ஒருபுறம் எம்மோடு நடந்த பேச்சு வார்த்தைகள் பூர்த்தியாவதற் கிடையில், மறுபுறம் சமசமாஜக் கட்சியோடு பேச்சு வார்த்தை நடைபெற்று, அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வசிக்கும் கட்சியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சிறுபான்மை யோரின் உரிமைகளை வற்புறுத்திவந்த சம சமாஜக்கட்சி - அரசாங்கத்தில் சேர்ந்தமை யால், எமது பிரச்சினை தீர வழியிறக்கு மென்று எதிர் பார்த்தோம். ஆனால், தொழிலாளரின் 21 அம்சக் கோரிக்கைகளும் காற்றிற் பறக்க விடப்பட்டது போலவே, எமது கோரிக்கைகளும் கைவிடப்பட்டன. பேச்சு வார்த்தை மூலம் பலன் கிடைக்கு மென்று நம்பினோர், 'இலவுகாத்த கிளி களாயினர். தமக்குத் தேவை நேரும் போது எம்மை அழைத்துப் பேசுவதும்; தேவை தீர்ந்தால் எமது பிரச்சினைகளை மறந்து, சிங்கள மக்களின் உணர்ச்சிக்கேற்பத் தாளம் போடுவதுமே - சிங்கள அரசியல்வாதிகளின் தன்மை என்பது மீண்டும் தெளிவாகியது.
ஒன்பதாவது மாநில மாநாடு
1964ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21, 22, 23 ஆந் திகதிகளில் - கட்சியின் ஒன்பதா வது மாநில மாநாடு திருகோணமலையில் நடைபெற்றது. சிக்கலான அரசியற் சூழ்நிலை யில் சரியான வழியை இனத்திற்குக் காட்டக் கூடிய, ஒரே தலைவரான தந்தை செல்வ

Page 84
L
நாயகம் மீண்டும் கட்சியின் தலைவராக - ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். முதல் நாள் விடயாலோசனைக்குழுக் கூட்டம் நிலாவெளியிலும், மாநாட்டின் ஏனைய நிகழ்ச்சிகள் திருகோணமலையிலும் நடை பெற்றன. மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு களைச் செயற்படுத்துவதற்கு முன்பே, நாட்டில் இரண்டு அதிமுக்கிய அரசியற் சம்பவங்கள் நிகழ்ந்தன.
மனித உரிமைகளை மறுத்த சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்
மலைநாட்டுத் தமிழரின் எதிர் காலம் பற்றி, இந்திய - இலங்கைப் பிரதமர் களிடையே பல தடவை பேச்சு வார்த்தைகள் நடைபெற்றனவாயினும், பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பத்தைக் கவனியாததுடன், அவர்களைப் பண்டங்கள் போலப் பரிவர்த் தனை செய்யவும் எந்த இந்தியப் பிரதமரும் இணங்கவில்லை. இப் பிரச்சினையைச் சுதந்திரத்திற்கு முன்பு தொடக்கம் நன்கு தெரிந்த பிரதமர் நேரு அவர்கள், சில தெளி வான கெர்ள்கைகளின் அடிப்படையில் இவ்விடயத்தை அணுகினார். அவரின் பின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் - சம்பந்தப்பட்ட மக்களையோ, தமிழ்நாட்டு அரசாங்கத்தையோ கலந்து யோசிக்காது. திருமதி பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத் திற்கு வந்தார். மனித உரிமைகளைப் புறக்கணித்து, இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கட்டாயத்தின்பேரில் நாடுகடத்த வழிவகுத்த இவ் வொப்பந்தத்தை எதிர்த்து முதற் குரல் எழுப்பியது இலங்கைத் தமிழரசுக் கட்சியே, கட்சியின் இத் தீர்மானத் தை, இக் கட்டுரையில் இறுதியில் - அநுபந்தத்திற் காணலாம்.
கட்சியால் கவிழ்ந்த அரசாங்கம்
எந்தப் பிரதம்ராலும் தீர்க்க முடியாத பிரச்சினையைத் தீர்த்துவிட்ட பெருமிதத் தோடு திரும்பி வந்த பிரதமர், அரசாங்கத் திற்கு ஏற்பட்ட மிகப் பெரும் சோதனையைச் சந்திக்கவேண்டியிருந்தது. அரசாங்கம் தயாரித்த பத்திரிகை மசோதாவுக்கு,

3.
ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. சபை முதல்வர் திரு. சி.பி.டி. சில்வா தலைமையில் பல உறுப்பினர்கள் எதிர்க் கட்சிக்கு மாறினர். 1964 டிசம்பர் 23ஆந் திகதி சிம்மாசனப் பிரசங்க வாக்கெடுப்புக்கு முன், அமைச்சர்கள் பலர் அரசுக்குக் கைகொடுத்து உதவும்படி, எமது கட்சிப் பாராளுமன்றக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தனர். சிறிமாவோ அரசாங்கம் தமிழ் இனத்தின் உரிமைகளை முற்றாகப் புறக்கணித்து, இராணுவ ஆட்சியைத் தமிழப் பிரதேசத்தில் கட்டவிழ்த்து விட்டதைக் கட்சி மறக்க வில்லை. 1960இல் எமக்குக் கொடுத்த வாக்கைக் காற்றிற் பறக்கவிட்ட ஆட்சியின் வேண்டுகோளைக் கட்சி நிராகரித்து, அரசுக்கு விரோதமாக வாக்களித்தது. அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோல்வி யைத் தழுவியது. இதைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பெற்று, 1965 மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1965 மார்ச் பொதுத் தேர்தல்
இந்தப் பொதுத் தேர்தல் முடிவு, தமிழ் மக்களின் பூரண நம்பிக்கையைப் பெற்ற ஒரே ஸ்தாபனம் - இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதை மீண்டும் நிலைநாட்டியது. இருபது தொகுதிகளிற் போட்டியிட்ட கட்சி - 217,986 வாக்குகளைப் பெற்றுப் 14 ஸ்தானங்களைக் கைப்பற்றி, பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கியது. ஐ.தே. கட்சி 66 ஸ்தானங்களிலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி 41 ஸ்தானங்களிலும் வெற்றி பெற்றன. 1960 பங்குனித் தேர்தல் முடிவு போலவே, எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அரசாங்கத்தை யார் அமைப்பதென்பது, தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெறுவதிலேயே தங்கியிருந்தது. "எமது ஆதரவு கிடைக்கக் கூடும்' என்று நினைத்து, திருமதி சிறிமாவோ பண்டார நாயகாவின் 'காபந்து அரசாங்கம் தேர்தல் முடிவுகள் தெரிந்தும், இராஜினாமாச் செய்யாது தாமதித்தது. திகிலடைந்த ஐதே. கட்சியினர், எமது ஆதரவை நாடினர். திரு. டட்லி சேனநாயகாவுக்கும் தந்தை

Page 85
7
செல்வநாயகத்துக்குமிடையில் - 24-3-65இல் ஒப்பந்தம் கைச்சாத்தானது. “திரு. டட்லி சேனநாயகாவின் தலைமையிலான அரசாங்கத்தைத் தமிழரசுக் கட்சி ஆதரிக்கும்” என்று, திரு. செல்வநாயகம் கடிதம் கொடுத் தார். அக் கடிதம் மகாதேசாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டட்லி சேனநாயகா பிரதமரானார். ஒப்பந்தத்தின் ஆங்கில மூலமும் மொழி பெயர்ப்பும் - அனுபந்தம் "இ" இல் தரப்படுகின்றன. அதிகாரத் தைப் பரவலாக்கி, ‘மாவட்ட சபைகள் நிறுவு வதற்குப் பொறுப்பான அமைச்சை - கட்சி உறுப்பினர் ஒருவர் ஏற்கவேண்டுமென்று தீர்மானிக்கப் பெற்றது. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், “உரிமை கிடைக்கும் வரை பதவி ஏற்பதில்லை" என்ற உறுதி மொழிப்படி, அமைச்சர்ப்பதவி ஏற்க மறுத்தனர். அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில், முக்கிய பங்கு வகித்த திரு. மு. திருச்செல்வம் அவர்களே அப்பொறுப்பை ஏற்கவேண்டு மென்று கட்சி தீர்மானித்ததற்கிணங்க, திருமு.திருச்செல்வம் மூதவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு, உள்ளூராட்சி அமைச்ச ராகப் பதவி ஏற்றார். ஆரம்பம் முதல் இதுகாறும் எதிர்க் கட்சியாகப் பாராளு மன்றத்தில் இயங்கி வந்த கட்சி - ஆளுங்கட்சியின் ஓர் அங்கமாக இயங்கும் நிலை ஏற்பட்டது. நாடாளும் பொறுப்பில் நம் தமிழரசுக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியோடு நாம் உறவுபூண்டிருந்த நான்கு ஆண்டுகளும், கட்சியின் இலட்சியப் பாதையில் - இடர்மிகுந்த காலமாகவே இருந்தது. ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் இனத் துவேஷத்தைக் கிளப்பின. அதேநேரத்தில், அமைச்சரவையிற் பலர் பதவிக்குவர - எம் ஆதரவைப் பெற்ற போதிலும், சிங்கள வகுப்புவாதப் பாதையிலி ருந்து விலகாதவர் களாவே இருந்தனர். குறிப்பாகக் கல்வி அமைச்சின் போக்கும். அரச ஊழியருக்குப் பொறுப்பான நிதி அமைச்சின் போக்கும் எமது கடும்

4.
எதிர்ப்புக்கு இடமளித்தன. பிரதமர் திரு. டட்லி சேனநாயகாவுடன் இவ்வமைச்சு களின் இனவெறிப் போக்கைப் பற்றிப் பல மகாநாடுகள் நடத்தியும் பலன் ஏற்பட வில்லை. எனினும் எமது வற்புறுத்தலினால், பதவிநீக்கத்தை எதிர்நோக்கி நின்ற சிங்களம் கற்காத தமிழ் அரசாங்க ஊழியருக்கு - பெருமளவு ஆறுதல் அளிக்கும் திறைசேரிச் சுற்றறிக்கைகள் 700ம், 701ம் வெளியிடப் பட்டன. பழைய ஊழியர் - எவ்வித சிங்களத் தேர்ச்சியுமின்றிச் சம்பள உயர்வு, பதவி உயர்வுகளைப் பெற வழிவகுக்கப்பட்டது. புதிய ஊழியர் - சிங்களத் தேர்ச்சி பெறுவதற்கு மேலும் மூன்று வருட அவகாசம் அளிக்கப்பட்டதோடு, பரீட்சையின் தரமும் எட்டாவது தரமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் திறை சேரியிலிருந்த வகுப்பு வெறியர்கள், ஒன்பதா வது தரச் சோதனையையே எட்டாவது தரம் என்று பெயர் ழாற்றி, இச் சலுகையை முறியடித் தனர். பிரதமரோடு நாம் நடத்திய மகா நாட்டில், நிதி அமைச்சர் திரு. வன்னிநாய காவே இவ்வுண்மையை ஒப்புக் கொண்டார். சில வகுப்பு ஊழியருக்குச் சிங்களத் தேர்ச்சியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டும், வெவ்வேறு வியாக்கியானங் களினால் அவர்கள் தொடர்ந்தும் இடர்ப் பட்டனர். ‘சிங்கள ஊழியருக்கும் தமிழ்த் தேர்ச்சி கோருவது தம் கொள்கை’யென்று பேச்சு வார்த்தையின் போது கூறிய ஐக்கிய தேசியக் கட்சியினர், அக் கொள்கையை அமுல் நடத்தத் தைரியமின்றிக் கை விட்டனர்.
தமிழரசுக் கட்சியால் உருவான " தமிழ்மொழி உபயோகச் சட்ட விதிகள்
1958ஆம் ஆண்டு பிரதமர் பண்டார நாயகா நிறைவேற்றிய தமிழ் மொழி (விசேட உபயோகிப்பு) சட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், அதன்கீழ் முழுமையான சட்ட விதிகளை ஆக்கி நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம், தமிழ் மக்களின் மொழி உரிமையில் ஒரு பகுதியாவது கிடைக்கும்" என்று கருதினோம். வடக்குக் கிழக்கு மாகாணங்களில்

Page 86
தமிழையும் நிர்வாக மொழியாகவும், நாடு முழுவதிலும் தமிழ் பேகம் மக்கள் தமிழில் அரசாங்கத்தோடு கரும மாற்றவும் ஏற்ற ஒழுங்கு செய்வதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டிருந்தது. எமது வற்புறுத்தலுக் கிணங்க, 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆந் திகதி தமிழ் மொழி உபயோகச் சட்ட விதிகள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப் பட்டன. எதிர்க் கட்சிகள் தமிழ் இனத்தின் மீது துவேஷத்தைக் கிளப்பியதோடு, அரச துறைத் தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தத்தையும் நடாத்தின. அன்றைய தினம் அவர்கள் நடாத்திய கண்டன ஊர்வலம் கட்டுக் கடங்காமல் போகவே, பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவேண்டி நேரிட்டது. இரத்தினசார தேரோ என்ற பெளத்த பிக்கு உயிர்துறந்தார். இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட சட்ட விதிகள், மூலச் சட்டத்தின் எல்லையை மீறியவை என்று எதிர்க்கட்சிகள் அன்று வாதிட்டன. இன்று ஆட்சியில் இருக்கும் போதும் அப்படியே கூறி, அச் சட்ட விதி களை அமுல் நடத்த மறுத்து வருகின்றன.
ஆயினும், அவ்விதிகள் இன்றும் ரத்து செய்யப்படாது, நாட்டின் சட்டத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இவ் விதிகளினால், வடக்குக் கிழக்கு மாகாணங் களில் பதிவேடுகள் உட்பட, எல்லா நிர்வாக வேலைகளுக்கும் - தமிழும் உபயோகிக்கப்பட வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருக் கிறது. நாட்டின் எப்பாகத்திலும் - அரசாங்க நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் முதலிய எல்லாவற்றோடும் - தமிழிற் கடிதத் தொடர்பு கொள்ள, தமிழிற் பதில்பெற, தமிழிற் கல்வி கற்க எவருக்கும் Φ ήςω ιο உண்டென்று விதிக்கப்பட்டதோடு, அதன் பொருட்டு - அரசாங்க பிரசுரங்கள், வர்த்த மானிகள், பெயர்ப்பலகைகள், படிவங்கள் யாவும் தமிழிலும் அச்சிடப்பட வேண்டுமென்றும் விதிக்கப்பட்டது. இச் சட்ட விதிகள் நிறைவேற்றப்பட்டுப் பத்து ஆண்டுகளா கியும், பெரும் பகுதி நடைமுறைப்படுத்தப் படாதிருக்கின்றது.

5F
பத்தாவது மாநில மாநாடு
அரசாங்கத்தின் ஒர் அங்கமாகக் கட்சி
இயங்கிய இக் காலத்தில், கட்சியின் 10-ஆவது மாநில மாநாடு - கிழக்கிலங்கை யின் தென் பகுதித் தலைநகரான கல் முனையில் 1966 ஜூன் 23, 24, 25ஆந் திகதி களில் நடைபெற்றது. தன்னுடைய தியாகத்தி னாலும், விரத்தினாலும், நெஞ்சுறுதியி னாலும் தமிழ் பேசும் மக்களின் இதயங்களி லெல்லாம் தனியிடத்தைப் பெற்ற டாக்டர் இ.மு.வி. நாகநாதன் அவர்கள் இம் மாநாட்டின் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். கட்சியின் வரலாற்றில் ஒரேயொரு தடவையாக - நாட்டின் பிரதமர் டட்லி சேனநாயகாவும் இம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். "இலகுவில் வாக்குக் கொடுக்க மாட்டேன்; கொடுத்தால் நிறை வேற்றத் தவறமாட்டேன்” என்று, பல்லாயிரம் மக்கள்முன் உறுதிமொழி பகர்ந்தார். ஆயினும், இரண்டாண்டுகளுக் கிடையில் அவரது நிலைமை மாறியது!
சிறிமா - சாஸ்திரி
ஒப்பந்த அமுல் சட்டம்
கட்சியின் கண்டனத்துக்குள்ளான
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை அமுலாக்கு வதற்குச் சட்டமியற்ற முற்பட்டது டட்லி சேனநாயகா அரசாங்கம் :தமிழரசுக் கட்சியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. தொண்டமானும் சேர்ந்து எடுத்த முயற்சியினால், ஆட்சேபத்துக்குரிய அம்சங்கள் நீக்கப்பட்ட சட்டமே நிறைவேற்றப் பட்டது. விருப்பத்திற்கு மாறாக யாரையும் இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்யும் வற்புறுத்தலும், இந்தியா திரும்பியோரின் வீதத்திற்கே இலங்கைப் பிரஜைகளாகப் பதிவு செய்யும் திட்டமும் இலங்கை பிரஜைகளாகப் பதிவு செய்தோரைத் தனி வாக்காளர் இடாப்பில் வைக்கும் அம்சமும் நீக்கப்பட்ட சட்டமே நிறைவேற்றப்பட்டது. (1970 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமாவோ அரசாங்கம் அச் சட்டத்தைத் திருத்தி,

Page 87
7
ஆட்சேபகரமான பகுதிகளை மீண்டும் புகுத்தியது). இதே விதமாக, ஆட்களைப் பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான சட்டமும் - தமிழரசுக் கட்சியும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் காட்டிய எதிர்ப்பினால் மாற்றப்பட்டது. பிரஜை, நாடற்றவர் என்ற பேதமின்றி, இந்நாட்டில் சட்ட பூர்வமாக வாழும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோர் எல்லோரையும் பதிந்து, அடையாள அட்டை வழங்குவதற்குச் சட்டமியற்றப் பட்டது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, ஊர்காவற்றுறைப் பிரதிநிதி திரு. வ, நவரத்தினம் அச் சட்டத்தை எதிர்த்தார். 24-4-68இல் கூடிய கட்சியின் பொதுச்சபை - திரு. நவரத்தினம் அவர்களைக் கட்சியிலிருந்து ஏகமனதாக வெளியேற்றியது. கட்சியின் ஆரம்பகாலம் முதல் உறுப்பினராக இருந்து - பல்வேறு பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த திரு. நவரத்தினத்தின் மீது, கட்டுப்பாட்டைக் காப்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்பட்டது, துக்ககரமான ஒரு சம்பவமாகும். கித்துல் ஊற்றுக் குடியேற்றமும்; கட்சியின் சாதனையும
இக்காலத்தில், திருகோணமலை மாவட்டத்தில் கித்துல் ஊற்று என்ற ஓர் சிறு குளம் கட்டப்பட்டு, அங்கே சிங்களக் குடியேற்றத்திற்கு ஆயத்தம் நடைபெற்றது. கட்சி வாலிப முன்னணியைச் சேர்ந்த இளைஞர்கள் அங்கு சென்று, அத்து மீறிக் குடியேறினார்கள். பல்லாயிரம் ரூபா செலவில் அவர்களை அங்கு வைத்துப் போஷித்து வந்தது கட்சி. அப் பகுதிச் சிங்களக் காரியாதிகாரி - அவர்களின் விடுகளுக்குத் தீ வைத்து அவர்களைக் கைது செய்தார். இறுதியில், கட்சி - காணி அமைச்ச ரோடு செய்த ஏற்பாட்டின்படி, அக் குடியேற்றத்தில் அத்து மீறிக் குடியேறிய வாலிபர் உட்படப் பெரும்பாலோர் தமிழ் பேசும் மக்களாக இடம் பெறச் செய்தது - கட்சியின் சாதனையாகும்.

6
மாவட்ட சபைகள்
அரசாங்கத்தோடு செய்துகொண்ட எமது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் - நாடு முழுவதும் மாவட்ட சபைகளை நிறுவி, அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம் - தமிழ்ப் பிரதேசத்தில் ஓரளவு அதிகாரம் தமிழ் மக்களின் கைக்கு மாறவேண்டும் என்பதே. இதற்கான சட்டமூலம் திரு. மு. திருச்செல்வம் அவர்களால் தயாரிக்கப்பட்டு, 6 மாதங்களாகப் பிரதமராலும், அமைச்சர் களாலும், கட்சித் தலைவர்களாலும் ஆராய்ப்பட்டது. இறுதியில் ஒரு வெள்ளை அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது. இதற்கிடையில், அரசாங்க ஆதரவுப் பத்திரிகைகளும் அரசாங்கக் கட்சி உறுப்பினர் பலரும் இதற்கு விரோதமான பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினர். வழமை போலப் பெளத்த பிக்குகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சிங்கள மக்களின் எதிர்ப்புக் கஞ்சிய பிரதமர் டட்லி சேனநாயகா, “மாவட்டசபை மசோதாவைத் தாம் பாராளு மன்றத்தில் கொண்டுவர இயலாது” என்று கூறினார். மூன்றாவது தடவையாக, ஒரு சிங்களப் பிரதமர் எமக்கு அளித்த வாக்கைக் காப்பாற்றத் தவறினார். இந்தச் சூழ்நிலையிலும் பொறுமையைக் கைக் கொண்ட தந்தை செல்வநாயகம், தமிழ் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான திருகோணமலைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உடன் நிறுவ அரசு நடவடிக்கை எடுத்தால், தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு தருவதாகக் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட பிரதமர், சில மாதங்களுக்குப் பல சாக்குப் போக்குச் சொல்லி இழுத்த பின், அதிலும் தம் வாக்கை நிறைவேற்றத் தவறினார். அமைச்சர் மு. திருச்செல்வம் பதவி துறப்பு
இந்நாட்டு இந்துக்களின் புனித தலங்களில் புராதனமானது கோணேசர் கோவிலாகும். கோணேசர் கோவிலைச்சார்ந்த பூமியைப் புனித பிரதேசமாகப் பிரகடனஞ் செய்து பாதுகாக்க வேண்டுமென்பது, இந்துக்களின் நீண்ட நாளைய கோரிக்கை

Page 88
I-7
யாகும். இவ்விடயத்திற்குப் பொறுப்பான உள்ளுராட்சி அமைச்சர் திரு.மு. திருச்செல்வம், புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வேண்டிய பூமியின் எல்லைகளை நிர்ணயிக்க, மூவர் கொண்ட ஒரு குழுவை நியமித்தார். இம் மூவரில் ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பறங்கிக்காரர் என்போர் இடம் பெற்றனர். திருகோண மலையைப் பெளத்த நாடாக்கு வதற்குத் திட்டமிட்டு இயங்கி வரும் சேருவில பெளத்த ஆலய விகாராதிபதி, இக்குழு நியமிக்கப்பட்டதற்கு ஆட்சேபனை கிளப்பினார். திரு. திருச்செல்வத்தோடு கலந்து யோசிக்காமலே, பெளத்த பிக்குவின் சொல்லைச் சிரமேற் கொண்ட பிரதமர் டட்லி சேனநாயகா, இக்குழுவை நிறுத்தி வைத்தார். தன்மானத்திற்கும். தமிழ் இனத்தின் மானத் திற்கும் பங்கம் ஏற்படுத்திய இச் செயலுக்குப் பதிலாக திரு. திருச்செல்வம் தம் அமைச்சர் பதவியை 16-9-68இல் இராஜினாமாச் செய்தார். அமைச்சரவையிலிருந்து கட்சி வெளியேறிய போதும், அரசாங்கப் பாராளுமன்றக் கட்சியில் மேலும் சில காலம் தொடர்ந்து இருந்தது.
பதினோராவது மாநில மாநாடு
தமிழ் மக்கள் அரசின் நடவடிக்கை களில் மிகவும் அதிருப்தி அடைந்திருந்த நேரத்தில், கட்சியின் 11ஆவது மாநில மாநாடு உடுவிலில் நடைபெற்றது. 1969ஆம் ஆண்டு ஏப்ரல் 7, 8, 9 ஆந் திகதிகளில் நடைபெற்ற இம் மாநாட்டின் தலைவராகத் திரு. சிமூ, இராச மாணிக்கம் அவர்கள் மூன்றாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டார். இம் மாநாட்டில், தமிழ் நாடு தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் மபொ.சிவஞான கிராமணியார் அவர்கள் எமது சிறப்பு விருந்தினராக வருகை தந்து உரையாற்றி மகிழ்வித்தார். அரசியல் מb60) Lוזו6 நிலையையும்; அரசாங்கம் - கொடுத்த வாக்கை நிறைவேற்றாது விட்டது மாத்திர மன்றித் தமிழ் மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் கவனத்திலெடுத்து, "அரசாங்கத்தோடு கட்சி கொண்ட உறவை முற்றாகத் துண்டித்து,

7.
எதிர்க்கட்சியாக இயங்க வேண்டும்” என்று இம் மாநாடு தீர்மானித்தது. கட்சியின் வரலாற்றில், ஒரு அரசாங்கத்தின் அங்கமாக இருந்த நிலை, நாலு ஆண்டுகளோடு முடிவுக்கு வந்தது. இக்காலத்தில், எம் உரிமைகள் சிலவற்றைச் சட்டபூர்வமாக நிலைநாட்டவும் - குடியேற்றம் முதலியவற்றி னால் இருந்த ஆபத்தைக் குறைக்கவும் - சிறிமா - சாஸ்திரி ஒப்பந்த அமுல் சட்டம், அடையாள அட்டை மசோதா போன்றவற்றில் ஆட்சேபனைக்குரிய அம்சங்களை நீக்கவும் - தமிழ் அரசாங்க ஊழியரின் பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்க்கவும் முடிந்ததாயினும்; ‘சிங்கள அரசியல்வாதிகளும் கட்சிகளும் எமது அடிப்படை உரிமைகளை அளிக்க - மனமொப்பிச் சம்மதிக்க மாட்டார்கள்' என்பது இந்த நான்கு வருட அனுபவத்தில் உறுதியானது. தமிழ் மக்களின் கண்ணோட்டமும், இக் காலத்தில் உரிமைப் போரைப் பற்றிச் சிந்தியாது. தனிப்பட்ட சலுகைகளைப் பெறுவதில் நாட்டங் கொண்டது. இதனால், மீண்டும் போராட்டப் பாதையில் மக்களைச் செலுத்துவதற்குச் சிரமப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. பைந்தமிழ் மண்ணில் பெளத்த - சிங்களப்
TLF6)G).56
மாநில மாநாட்டைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியில் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த காலத்தில், அரசாங்கத்தின் கல்விக் கொள்கை பற்றிக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய நிலை எழுந்தது. யாழ்ப்பாணத்தில் θου ஆண்டுகளுக்கு முன், உரிமை குறைந்த தமிழ் மக்கள் மத்தியில் பெளத்த பாடசாலைகள் நான்கு - புத்தூர், அச்சுவேலி, அல்வாய், கரவெட்டி ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப் பட்டிருந்தன. கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறியவுடன், இவை பெளத்த - சிங்களப் பாடசாலைகளாகக் கல்வி அமைச் சினால் அங்கீகரிக்கப்பட்டன. தமிழ்ப் பிள்ளைகளின் போதனா மொழியைச் சிங்களமாக மாற்றும் திட்டம், இப் பாட

Page 89
-7
சாலைகள் மூலம் வெளிப்பட்டது. கட்சியின் தீவிர எதிர்ப்புக் கஞ்சி, பெளத்த - சிங்களப் பாடசாலைகள் என்று அழைக்கப் பட்டாலும், தமிழே - அங்கு தொடர்ந்தும் போதனா மொழியாக இருந்தது. 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல்
1956ஆம் ஆண்டு தொடக்கம் நான்கு பொதுத் தேர்தல்களிலும், தமிழ் மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற ஒரே கட்சியாக - இலங்கைத் தமிழரசுக் கட்சி நிலைநாட்டப் பெற்றது. 1970ஆம் ஆண்டுத் தேர்தலிலும் - வடமாகாணத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும், கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் எமக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தபோதிலும், கட்சி 2,43,747 வாக்குகளைப் பெற்றுப் பதின்மூன்று ஸ்தானங்களைக் கைப்பற்றியது. இடது சாரி ஐக்கிய முன்னணி மிகப் பெரும்பான்மை யைப் பெற்று ஆளுங் கட்சியாக அமர, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க் கட்சியாக இருந்தது. தமிழரசுக் கட்சி எதிர்க் கட்சியில் சுதந்திரமாக இயங்கி, முற்போக்கு சமதர்மக் கொள்கைகளை ஆதரித்தும், தமிழ்ச் சமூகத்திற்குப் பாதகமானவற்றை எதிர்த்தும் நிற்பதென்று தீர்மானித்தது. மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை யைப் பெற்ற ஆளுங்கட்சி - ஏனைய கட்சி உறுப்பினர்களின் உரிமைகளை மதிக்காது, எதேச்சாதிகாரப் போக்கில் செல்லத் தொடங்கியது.
அரசியல் நிர்ணய சபைமுன் - கட்சியின் அரசியலமைப்புத் திட்ட ஆலோசனை
நாட்டின் அரசியற் சட்டத்திற்கு முரணாக, பாராளுமன்றத்தை ஓர் அரசியல் நிர்ணய சபையாக மாற்றி, முற்றிலும் புதிதான ஓர் அரசியல் அமைப்பைத் தயாரிக்க அரசாங்கம் முடிவு செய்தது. "மக்கள் கட்டளையே தமக்கு அதிகாரம்" என்று கூறினர். இந்த அரசியல் நிர்ணய சபையில், கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கள் கலந்து கொள்வதா? - இல்லையா?

8
என்பதைப் பற்றி, நாம் ஒர் முடிவு செய்ய வேண்டியிருந்தது. 1-7-70இல் வவுனியாவில் கூடிய கட்சியின் செயற்குழு - இவ்விடயத் தைக் கட்சிக்கு அப்பாற்பட்டதாகக் கணித்து, பல தமிழ்ப் பெரியோர்களையும் அழைத்துக் கலந்தாலோசித்த பின், கட்சிப் பாராளு மன்றக் குழு ஒரு முடிவுக்கு வரவேண்டு மென்று தீர்மானித்தது. கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் பல முதியோர்களும் கூறிய ஆலோசனையின் பேரில், கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நிர்ணய சபையில் கலந்து கொண்டனர். அரசியல் நிர்ணய சபைக்கு - சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பையும், எமது சமூக, பொருளாதாரக் கொள்கை களையும் உள்ளடக்கிய ஒர் யாப்பைத் தயாரித்துச் சமர்ப்பிக்கும் பொறுப்பு - திரு. வி. தர்மலிங்கம், பா.உ. அவர்களை அழைப்பாளராகக் கொண்ட ஓர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. திரு. தர்ம லிங்க்b அவர்களின் முயற்சியால், ஒரு முழுமையான அரசியலமைப்புத் தயாரிக்கப் பெற்று, அரசியல் நிர்ணய சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. பூரண சோஷலிச பொருளாதாரத்தையும், சாதி - சமய பேதமற்ற சமூக அமைப்பையும், சுயாட்சி பெற்ற ஐந்து மாநிலங்களையும் கொண்ட ஒரு சமதர்ம சமஷ்டிக் குடியரசு'க்கு உன்னதமான Pi 'அரசியல் திட்டம்' - திரு. தர்மலிங்கம் பா.உ. அவர்களால் தயாரிக்கப்பெற்றது. அதில் முக்கியமான சில பகுதிகளை அநுபந்தம் 'ஈ' இல் சேர்த்திருக்கிறேன். நாம் சமர்ப்பித்த விரிவான திட்டத்தில் ஒரு அம்சத்தைத் தானும் - அரசியல் நிர்ணய சபை ஆலோசிக்க ஆயத்தமா யிருக்கவில்லை.
புதுப்பாதை அமைத்த " வல்வெட்டித்துறை ஒற்றுமை மாநாடு
இச் சந்தர்ப்பத்தில் - தமிழ் அரசியற் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, ஏகோபித்த கோரிக்கைகளை அரசியல் நிர்ணய சபைக்குச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த பெரியோர்கள் சிலர் - மாறுபட்டு நின்ற கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Page 90
குறிப்பாகத் திருவாளர்கள் : ஞானமூர்த்தி, சபா ரத்தினம், வேற்பிள்ளை ஆகியோரது இடையறா உழைப்பினால், வல்வெட்டித் துறையில் 1971ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி - இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகிய கட்சிகளின் பிரதி நிதிகள் - திரு. சி. நாகராஜா அவர்கள் தலைமையில் கூடினர். அங்கு ஏற்பட்ட உடன்பாட்டின் பலனாக, தமிழ் இனத்தின் ஏகோபித்த, குறைந்தபட்சக் கோரிக்கைகளாக - ஒன்பது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டன. 17-2-71இல் கூடிய கட்சியின் செயற்குழு, வல்வெட்டித்துறை ஒற்றுமை மாகாநாட்டின் முடிவுகளை அங்கீகரித்தது.
இனத்தின் நலன்பேண நாட்டின் தலைவியுடன் மாநாடு
தமிழ் இனத்தின் அடிப்படை உரிமைகள் சிலவற்றையாவது அரசியல் அமைப்பில் இடம்பெறச் செய்யவேண்டு மென்ற ஆவலில், தந்தை செல்வநாயகம் தலைமையில் கட்சி உறுப்பினர்களின் தூதுக் கோஷ்டி ஒன்று 1971 மார்ச் மாதம் 6ஆந் திகதி பிரதமர் திருமதி. சிறிமாவோ பண்டார நாயகாவையும், அரசியல் விவகார அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வாவையும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியது. தமிழ் மொழி உரிமை பற்றிய சில பகுதிகளையாவது இடம் பெறச் செய்யும்படி, கட்சி - பிரதமரிடம் வற்புறுத்தியது. பயங்கரவாத நடவடிக்கை களினால், இதன்பின் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பின்றிப் போயிற்று. பிரதமரின் யோசனைப்படி, ஏனைய அமைச்சர்கள் பலரைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் எவ்வித பலனும் கிட்டவில்லை. அரசியல் நிர்ணய சபைக்கு மொழி உரிமை பற்றி நாம் கொடுத்த திருத்தங்கள் நிராகரிக்கப் பட்டதைத் தொடர்ந்து, கட்சி உறுப்பினர் கள் அரசியல் நிர்ணய சபையிலிருந்து வெளியேறினர். இத் தீர்மானத்திற்கிணங்க,
அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்கரிக்க

9 H.
மறுத்த திரு. சி.சே. மார்டின் பா.உ. - 15-7-71ல் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இரும்பு மனிதனை இழந்தோம்
தமிழ் இனத்தின் வாழ்வில் சோதனை மிகுந்த இக் கட்டத்தில், தன் தலையைக் கொடுத்தும் தமிழ் இனத்தைக் காக்கத் தயங்காத தானைத் தளபதியை இழந்தோம். தந்தை செல்வநாயகம் அவர்களின் விவேகமான போக்கிற்கு வேகத்தைக் கொடுத்தவர் டாக்டர். இ.மு.வி. நாகநாதனே! நெருக்கடியான நேரங்களில் எல்லோரும் தேடுவது - அவருடைய துணிகரமான வழி நடத்தலையே! 1961ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆந் திகதி அரசாங்க அதிபரின் ஜீப்வண்டியின் முன் நடந்த மறியல் போராட்டத்தில், பொலீசார் குண்டாந்தடி கொண்டு தாக்கினர். டாக்டர் நாகநாதனின் உடலில்பட்ட குண்டாந்தடி முறிந்தது. முறிந்த பாதியைக் கையிலேந்திப் புன்முறுவல் பூத்தார் இரும்பு மனிதன்! தன் பெரும் செல்வத்தையும், ஆயிரக்கணக்கான ரூபா வருமானத்தையும் இனத்துக்காக அர்ப் பணித்து, விடுதலை இயக்கத்தைக் கட்டி வளர்த்த இத்தியாகச் செம்மல் -16-8-1971இல் காலன் வாய்ப்பட்டார். தந்தை செல்வ நாயகம் தன் வலது கரத்தை இழந்தார். தமிழ் இனத்தின் விடுதலை விரர் வரிசையில், முதலிடம் டாக்டர் நாகநாதன் அவர்கட்கு எப்போதும் உண்டு.
உணர்ச்சிப் பெருக்கில் சிறப்பு மாநாடு
அரசியல் நிர்ணய சபையிலிருந்து வெளியேறியபின், 'சிங்கள அரசியற்கட்சிகள் எமது உரிமைகளை எக்காலத்திலும் மனமொப்பி வழங்கமாட்டா என்ற கருத்துத் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டது. சிங்கள மக்களின் விருப்பமின்றி, எமது இலட்சியமான - இணைப்பாட்சி சாத்தியமல்ல என்பது தெளிவு. எனவே, கட்சியின் அடிப்படை இலட்சியத்தைப் புனரா லோசனை செய்யவேண்டிய கட்டம் ஏற்பட்டது. இச் சூழ்நிலையில் கட்சியின் சிறப்பு மாநாடொன்று திரு. இராச மாணிக்கம்

Page 91
8
அவர்கள் தலைமையில் யாழ்ப் பாணத்தில் கூட்டப்பெற்றது. 30-1-72இல் இளைஞர் களின் உணர்ச்சிப் பெருக்கின் மத்தியில் நடைபெற்ற இம் மாநாடு, அரசியல் நிர்ணய சபையினால் தயாரிக்கப்பட்ட - "தமிழ் இனத்தின் அடிமைச் சாசனமான அரசியல் அமைப்பை, தமிழ்த் தேசிய இனம் பூரணமாக நிராகரிக்கின்றது,' என்று பிரகடனம் செய்ததோடு, "தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருப்போர் எவரும் இதற்குச் சாதகமாக வாக்களிக்கக் கூடாதென்றும்; அப்படி எவரும் வாக்களியாத வாறு, அவ்வத் தொகுதி வாக்காளர் தம் எதிர்ப்பைக்காட்ட வேண்டு மென்றும்” மாநாடு தன்மானத் தமிழ் மக்களைக் கோரியது.
மேலும், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் யாவும் புறக்கணிக்கப்பட்டு, தமிழ் இனம் அரசாங்கத்தினால் பிரிவினைப் பாதையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இந் நேரத்தில் :
(அ) சிங்கள மொழிக்கு அளிக்கப் பட்டிருக்கும் அதே அந்தஸ்து - தமிழ் மொழிக்கும் சட்ட பூர்வமாக அளிக்கப்பட வேண்டுமென்றும்;
(ஆ) இந்நாட்டு அரசாங்கம் - மதச் சார்பற்றதாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டுமென்றும்;
(இ) இந்நாட்டைத் தமது தாயகமாகக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரதும் முழுமையான குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப் பட வேண்டுமென்றும்;
(ஈ) தமிழ் மக்களின் பாரம்பரியமான தாயகத்தில், தமிழ்த் தேசிய இனத்தின் சுயாட்சி உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றும்”
மாநாடு கோரி, இழந்துவிட்ட இவ்வுரிமை களை மீண்டும் பெறுவதற்கு எவ்வித தியாகத் திற்கும் தயாராக நடவடிக்கை எடுக்குமாறும், தென்னிலங்கையில் ஆட்சியாளரின் செயலினால் தம் தொழில் - கல்வி வசதி களை

O
இழந்து வரும் தமிழ் மக்கள் தம் உடமைகளையெல்லாம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாற்றி, தமக்கும் தமிழ் இனத்திற்கும், தமது சொந்தத் தாயகத்தில் வளமான வாழ்வை அமைக்க உடன் முயற்சி ஆரம்பிக்குமாறும் சிறப்பு மாநாடு வேண்டுகோள் விடுத்தது.
ஆட்சியாளரின் நியாயமற்ற போக் கிற்குத் தம் ஆட்சேபனையைத் தெரிவிக்கும் வகையில், திரு. சு. நடராசா அவர்கள் தமக்கு ஆட்சியாளர் அளித்த - சமாதான நீதிபதியும் உத்தியோகப் பற்றற்ற நீதவானும் என்ற, பட்டத்தை மாநாட்டிலேயே துறப்பதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து, வேறு பலர் அவ்வாறே செய்தனர், "அக்கிரம ஆட்சி அளித்த பட்டம் - அடிமை விலங்கேயன்றி ஆபரணமல்ல' என்று, உரிமை வேட்கை கொண்ட தமிழ் மக்கள் பலர் சிந்திக்கத் தொடங்கினர். தார்மீக ஆதரவுகோரி - தமிழ் நாட்டில் சுறறுபபயணம
தமிழ்த் தேசிய இனத்தின் சுயாட்சி
உரிமையை நிலைநாட்டத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, எம்நிலையை - உலக அரங்கில் விளக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இனத்தால், மொழியால், பண்பாட்டால், மதத்தால் எம்மோடு பிணைக்கப்பட்ட தமிழ் நாட்டுச் சகோதரர்களின் அனுதாபத்தைப் பெற, முதலில் முடிவு செய்தோம். அதன் பிரகாரம், தமிழினத்தின் உரிமைப் போரில் எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருந்த திரு ஆ. இராசரத்தினம் அவர்கள் தமிழ்நாடு சென்று, எல்லா ஒழுங்குகளையும் செய்தார். அவரும், உலகத் தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் டாக்டர் இரா. சனார்த்தனமும் தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அத்தனை பேரையும் சந்திக்க ஏற்பாடு செய்தனர். தந்தை செல்வநாயகம் அவர்களும், கட்சிப் பொதுச்செயலாளர் என்ற முறையில் நானும், என் மனைவியும், சுதந்திரன் ஆசிரியர் திரு.கோவை மகேசனும், வேறு சில நண்பர்களும் 1972 பெப்ரவரியில்

Page 92
L
தமிழ்நாடு சென்றோம். தமிழக ஆளுநர் உயர்திரு. கே.கே. ஷா, முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. பொதுச் செயலாளர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், தமிழக அமைச்சர்கள், தமிழரசுக் கழகத் தலைவர் திரு. ம.பொ.சி., திராவிடர் கழகத் தலைவர் உயர்திரு. பெரியார் ஈ.வே. இராமசாமி, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், முன்னாள் முதலமைச்சர் திரு. மு. பக்தவத்சலம், முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத், ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் உயர்திரு. கே. காமராஜ், இன்று அண்ணா தி.மு.க. தலைவராக இருக்கும் - புரட்சி நடிகர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன், இந்திரா காங்கிரசைச் சேர்ந்த - நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன், பிரபல சினிமா நடிகர் திரு. எஸ்.ஏ. அசோகன், இன்னும் சில முக்கியமான தொழில் அதிபர்கள், சட்ட வல்லுநர்கள், கல்விமான்கள், மாணவர் இயக்கங்கள், பத்திரிகையாளர்கள் முதலிய பலரைத் தமிழ் நாட்டில் சந்தித்தோம்; எமது நிலையை விளக்கினோம். அத்தனை பேரும், இனப் பற்றோடு - உருக்கமான அனுதாபந் தெரிவித்தனர். மத்திய அரசோடும், குறிப்பாகப் பாரதப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியோடும், வெளியுலகிலும் எம் பிரச்சினையை விளக்கத் தம் உதவியை அளிப்பதாக உறுதி கூறினர். சென்னை மாநகராட்சி - மேயர் திருமதி காமாட்சி ஜெயராமன் தலைமையில் தந்தை செல்வ நாயகத்திற்குப் பொது வரவேற்பு வழங்கிக் கெளரவித்தது. கோகலே மண்டபத்தில் டாக்டர் இரா. சனார்த்தனம் தலைமையில், உலகத் தமிழ் இளைஞர் பேரவை தந்தைக்கு ஒரு வரவேற்பளித்தது. அனைத்துக்கட்சிப் பிரமுகர்களும் அவ் வரவேற்பில் உரையாற்றினர். எந்த ஒரு தனிக் கட்சியோடும் நாம் பிரத்தியேகத் தொடர்பு கொள்ளவில்லை. இரத்த பாசத்தினால் பிணைக்கப்பட்ட ஒரே இனம் என்ற முறையில் - தமிழ் நாட்டு மக்களினதும், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகள் அனைத்தினதும், அவர்கள் மூலம் இந்திய அரசினதும் தார்மீக ஆதரவை - மனித உரிமை

H
கோரி ஈழத் தமிழ்த் தேசிய இனம் ஆரம்பிக்க இருக்கும் தர்மப் போருக்கெனக் கோரி நின்றோம். இதில் ஒளிப்பு மறைப்போ, இரகசியமோ எதுவுமில்லை.
ஒற்றுமையின் உருவகமான - தமிழர் கூட்டணி உதயம்
தமிழ் மக்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாம்ல், குடியரசு அரசியல் அமைப்பை 1972 மே 22இல் பிரகடனம் செய்ய, அரசாங்கம் ஆயத்தமானது. இதை ஒன்றுபட்டு எதிர்க்கவென, ஆயத்தப்படுத்த வேண்டிய கட்டம் வந்தது. தந்தை செல்வநாயகம் அவர்களின் அழைப்பின் பேரில் - தமிழ் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், கட்சிச் சார்பற்ற பெரியோர்கள் எல்லோரும் திருகோணமலை நகரமண்டபத்தில் 14-5-72இல் கூடினர். வல்வெட்டித்துறையில் 7-2-71இல் கருவில் உருவான தமிழின ஒற்றுமை - திருகோணமலையில் சுகப் பிரசவமானது. தமது வேற்றுமைகளை மறந்து "தமிழர் கூட்டணி" என்ற ஒரே அமைப்பில், அத்தனை பேரும் இணைந்து செயலாற்றத் தீர்மானித்தனர். தந்தை செல்வநாயகம் தலைவராகவும், திரு. எஸ். ஞானமூர்த்தி அவர்களும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் இணைச் செயலாளர்களாகவும், திரு. சி. கதிரவேலுப் பிள்ளை பா.உ., திரு. தா. திருநாவுக்கரசு, திரு. அ. குமரகுரு ஆகியோர் பொருளாள ராகவும் பணிபுரிய நியமிக்கப்பட்டனர். ஒரு நிரந்தரமான நடவடிக்கைக்குழு - எல்லாக் கட்சிகளுக்கும், ஸ்தாபனங்களுக்கும் பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக நிறுவப் பெற்றது. மே 22இல் - தமிழ் ஈழம் புரட்சிக் கோலம்
தமிழ் இனத்தின் அடிமைச் சாசனமான 'குடியரசு அரசியல் அமைப்பை முற்று முழுதாக நிராகரித்த தமிழர் கூட்டணி, அத்திட்டம் சம்பிரதாய பூர்வமாக நிறைவேற்றப்படும் - அரசியல் நிர்ணய

Page 93
-8.
சபையின் இறுதிக் கூட்டத்தைப் பகிஷ்கரிக்கு மாறு, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் களுக்குக் கோரிக்கை விடுத்தது. குடியரசு தினமான மே 22ஆந்திகதிக் கொண்டாட்டங் களைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டு மென்றும், அன்றைய தினத்தைத் தமிழ் இனத்தின் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இத் தீர்மானப்படி, அரசியல் நிர்ணய சபை நிகழ்ச்சிகளை மக்களால் தெரிவுசெய்யப் பட்ட 19 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் பதினைந்து பேர் பகிஷ்கரித்தனர். மே 22 இல் - தமிழ் ஈழம் முழுவதும் புரட்சிக்கோலம் பூண்டு நின்றது. பாடசாலைப் பகிஷ்காரம், கடையடைப்பு, கண்டனக் கூட்டங்கள், சிங்கக் கொடிகள் தீக்கிரை முதலிய பல சம்பவங்கள் நடைபெற்றன. வண்ணார்பண்ணை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் பல்லாயிரம் மக்கள் மத்தியில் - குடியரசு அரசியல் திட்டம் தலைவர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இச் சம்பவங்களைத் தொடர்ந்து எழுபதுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு புறத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கள் தம் பதவிகளைத் துறக்க வேண்டுமென்ற குரல் எழுந்தது. மறு புறத்தில் பதவி துறத் தலை எதிர்த்து, சிறையில் இருந்த இளைஞர் உட்படப் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
ஆறு அம்சக் கோரிக்கையும்; மூன்று மாத அவகாசமும
1972 ஜூன் 25ஆந் திகதி கோப்பாயில் கூடிய தமிழர் கூட்டணி நடவடிக்கைக் குழு இவ்விடயத்தை ஆராய்ந்து, 'பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பதால் பலன் இல்லை' என்ற தீர்மானித்தது. அத்துடன் அரசாங்கத்துக்கு ஆறு அம்சக் கோரிக்கைகளை விடுத்து, அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்பைத் திருத்த மூன்று மாத அவகாசமும் அளித்தது. மேலும், 'அக்கால கட்டத்தில் அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இணங்கா விட்டால், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் இனத்தின் விடுதலையைக்

2
காணச் சாத்வீகப் போராட்டத்தில் இறங்குவது என்றும் தீர்மானித்தது. கூட்டணி விடுத்த ஆறு அம்சக் கோரிக்கைகளாவன :
1. அரசியல் அமைப்பில் சிங்கள மொழிக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதே இடம் - தமிழ் மொழிக்கும் அளிக்கப்பட வேண்டும்.
2. இலங்கை மதச் சார்பற்ற அரசாகப் பிரகடனம் செய்யப்பட்டு, எல்லா மதங்களையும் சமமாகப் பேணி வளர்க்க வேண்டும்.
3. இந் நாட்டைத் தம் தாயகமாகக் கருதும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும் பூரண குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டங்கள் - அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டும்.
4. நீதிமன்றம் மூலம் நிலை நாட்டப்படக் கூடிய அடிப்படை உரிமைகள் - அரசியல் அமைப்பில் அளிக்கப்பட வேண்டும்.
5. சாதியையும் - பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பதையும் அரசியல் சட்ட மூலம் ஒழிக்க வேண்டும்.
6. அதிகாரம் பரவலாக்கப்பட்டு, மக்கள் பங்கு கொள்ளும் சனநாயக ஆட்சி அமைப்பு ஏற்பட வேண்டும்.
இக் கோரிக்கைகளைத் தந்தை செல்வ நாயகம் பிரதமருக்கு அனுப்பியபோது, எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. செல்வாவின் நினைவூட்டல் கடிதத்தின்பின், "எமது தீர்மானம் கிடைத்தது" என்ற ஒரு சொற் பதிலைத் தவிர, வேறு எவ்வித நடவடிக்கையும் எம் கோரிக்கைகளை ஒட்டி அரசாங்கம் எடுக்கவில்லை.
அரசுக்கு சவால் விடுத்து - தந்தை பதவி துறப்பு
"தமிழ் மக்களில் கணிசமான தொகையினர் அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்கின்றனர்” என்று பிரதமர் உட்படப் பல அமைச்சர்கள் கூறினர். இக் கூற்றுக்கு

Page 94
முற்றுப்புள்ளி வைக்கவும், நாம் ஆரம்பிக்கத் திட்டமிட்ட போராட்டத்திற்குத் தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறவும், குடியரசு அரசியல் அமைப்பைத் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள்' என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்கும் ஓர் இடைத் தேர்தலை ஏற்படுத்தும் பொருட்டு, தந்தை செல்வநாயகம் காங்கேசன் துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். அரசாங்கம் தங்கள் கொள்கைகள்ை முன் வைத்துத் தன்னுடன் போட்டியிட வேண்டுமென்று அரசுக்கு அழைப்பு விடுத்தார். இடைத் தேர்தலை நடாத்தி, மக்கள் கருத்தை அறியத் தைரியமற்ற அரசாங்கம், இரண்டு வருடங்களுக்கு மேலாக இடைத் தேர்தலை நடத்தாது அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி, நியமன தினத்தைப் பின் போட்டுக் கொண்டு வந்தது. இதற்கிடையில் கவிஞர் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராசா, இ.போ.ச.சுப்பிரமணியம் முதலிய இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் பலர் கைதாகிச் சிறைகளில் அடைக்கப் பட்டனர். மே 22இல் கைது செய்யப்பட்ட வாலிபரில் பலர் விடுதலை செய்யப்பட்டாலும் - 42க்கு மேற்பட்ட வாலிபர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைகளிற் சொல்ல வொணாத் துன்பங்களை அனுபவித்தனர். அவர்களை விடுதலை செய்யக் கோரிப் பல கிளர்ச்சிகள், ஊர்வலங்கள், உண்ணா விரதங்கள் நடத்தப்பட்டன. 1973 தை 1ஆம் நாள் வேலணைக்கு வருகைதந்த - அமைச்சர் குமாரதுரியருக்கு எதிராகக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்துச் சுகாதார அமைச்சருக்கு எதிராகப் பலாலி விமான நிலையத்திலும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதி அமைச்சர் டாக்டர் என்.எம். பெரேரா யாழ்ப்பாணம் வந்தபோது, யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. தலைவர்களின் உண்ணாவிரதமும், மாணவர்கள் பாடசாலைப் பகிஷ்காரமும் அன்று நடைபெற்றன. கிளிநொச்சி சென்ற நிதி அமைச்சருக்கு, அங்கு கறுப்புக் கொடி

3.
காட்டப்பட்டது. அமைச்சர் குமார சூரியருக்கு எதிராக மட்டக்களப்பிலும் திரு. மு.இராசமாணிக்கம் அவர்கள் தலைமையில் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. இப்படியே பல்வேறு வகைகளில் அரசியல் அமைப்புக்கும், அரசின் அடக்கு முறைக்கும், இளைஞர்களை விசாரணையின்றிச் சிறைகளில் அடைத்தமைக்கும் எதிராக மக்கள் தம் எதிர்ப்பைக் காட்டினர். சட்டத்தை மீறினோம்; ஆபத்தைத் தடுத்தோம்
யாழ்ப்பாணத்தில் புத்தூர், அச்சுவேலி
அல்வாய், கரவெட்டி ஆகிய நாலு கிராமங் களில் - நாம் ஐதே. கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியவுடன் அங்கீகாரம் பெற்ற பெளத்த - சிங்கள பாடசாலைகளைப் பற்றி மேலே குறிப்பிட்டேன். எமது எதிர்ப்புக்கு அஞ்சி, அவை தொடர்ந்தும் தமிழ்ப் பாடசாலைகளாகவே இயங்கி வந்ததையும் கூறினேன். 1973ஆம் ஆண்டின் முற்பகுதியில் புத்தூர் பெளத்த சிங்களப் பாடசாலைக்குச் சிங்களத் தலைமை ஆசிரியரையும் உதவி ஆசிரியரையும் அனுப்பி, பாலர் வகுப்பில் தமிழ்க் குழந்தை களுக்கு சிங்களத்திற் கல்விபுகட்ட - அரசாங்கம் முற்பட்டது. அப் பகுதி மக்களின் ஒத்துழைப்போடு, "யாரும் பாட சாலைகள் நிறுவக்கூடாது, என்ற சட்டத்தை மீறி - தமிழ்ப் பாடசாலை ஒன்றை - அச் சிங்களப் பாடசாலையின் அருகில் நிறுவத் தமிழர் கூட்டணி தீர்மானித்தது. 1973 ஏப்ரல் 6ஆந் திகதி JFl'L மறுப்புப் i Isrl-F st Sodsd திறக்கப்பட்டது. அதன் பொறுப்பாளர் களாகத் தந்தை செல்வநாயகம் அவர்கள், திரு. மு. சிவசிதம்பரம், திரு. வி. தர்மலிங்கம், பா.உ, புத்தூர் ஆனந்தன் இவர்களோடு, நானுமாக ஐவர் நியமிக்கப்பட்டோம். சட்ட விரோதமாகப் பாடசாலை நிறுவப்பட்டதை யும், அதன் பொறுப்பாளர்களது விபரங்களையும் திரு. சி. கதிரவேலுப் பிள்ளை, பா.உ. கல்வி அமைச்சுக்கு அறிவித்தார். அரசாங்கம் எம்மீது எவ்வித

Page 95
-8
சட்ட நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை. பாடசாலை வெற்றிகரமாக நடைபெற்றது. சிங்களப் பாலர் வகுப்பில் இரண்டு பிள்ளைகளே இருக்க, ஏனைய பிள்ளைகள் எல்லோரும் எம் தமிழ்ப் பாட சாலைக்கு வந்து சேர்ந்தனர். ஓராண்டின் பின், தமிழ்க் குழந்தைகளின் தொண்டைக்குள் சிங்களத்தைத் திணிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட்டது. புத்தூரில் நாம் மேற் கொண்ட நடவடிக்கை பரிபூரண வெற்றி கண்டது.
கட்சியின் பன்னிரண்டாவது மாநில மாநாட்டில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள்
தமிழரசுக் கட்சி தமிழர் கூட்டணியில் ஓர் அங்கமாகச் சேர்ந்தபின், கட்சியின் 12ஆவது மாநாடு - முதன் முறையாக மல்லாகத்தில் 1973 செப்டெம்பர் 7, 8, 9ஆந் திகதிகளில் நடைபெற்றது. இம் மாநாட்டின் தலைவராக நான் தெரிவு செய்யப்பெற்றேன். இம் மாநாடு - கட்சியின் வரலாற்றில் முக்கிய மான ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஏனைய கட்சிகளோடு சேர்ந்து, தமிழர் கூட்டணியின் ஓர் அங்கமாகக் கட்சி இயங்கு வதை, மாநாடு அங்கீகரித்தது. மேலும் "இந்நாட்டுப் பெரும்பான்மைத் தேசிய இனத்தின் ஒத்துழைப்போடோ, சம்மதத்தோ டோ தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியமில்லை என்று கருதி, தமிழ்த் தேசிய இனம் தம் பாரம்பரியமான தாயகத்தில், தமது சுயாட்சி உரிமையை நிலை நாட்டுவதே ஒரே வழி என்று தமிழர் கூட்டணி தீர்மானித்து, அதன் அங்கமான பல்வேறு கட்சிகளின் பரிசீலனைக்கு அக் கருத்தைச் சமர்ப்பித்திருப்பதாலும்;
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பன்னிரண்டாவது மாநில மாநாடு - மொழியால், கலாசாரத்தால், வரலாற்றால், பிரதேசத்தால், ஒரு தனி இனமாக வாழ வேண்டுமென்ற உணர்ச்சியால், ஒரு தனித் தேசிய இனமாகக் கணிக்கப்படுவதற்குப் பூரண தகுதிபெற்ற இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள்; சர்வதேச நீதிக்கிணங்க

4
ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை'யென்ற அடிப்படைத் தத்துவத்தின்படி, தமது பாரம்பரியமான தாயகத்தில் இலங்கைத் தமிழ்த் தேசிய இனம் தன்னாட்சி காண்பதே எமக்குள்ள ஒரே வழியென்று இத்தால் தீர்மானிக்கிறது" என்று பிரகடனம் செய்தது. அன்றியும் இந்தப் புதிய குறிக்கோளுக்கு ஏற்ப,
"தமிழ்த் தேசிய இனத்தின் நியாய பூர்வமான இக் கோரிக்கைக்கு - உலக நாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெறும் வகையில், பிரசாரத்தை மேற் கொள்ளுவதென்றும்” தீர்மானிக்கப் பெற்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத் தீர்மானத்தைக் கட்சியின் முன்னாள் தலைவர் திரு. சிமூ, இராசமாணிக்கம் முன் மொழிந்தார். இம் மாநாட்டின் இன்னொரு சிறப்பு அம்சம் - தோழமைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் முதன் முதலாகக் கட்சி மாநாட்டு மேடையில் தோன்றி உரையாற்றியமையாகும்.
முத்திரைச் சட்ட மீறலும், உண்ணா நோன்பும்
ஒரு வருடமாகக் காங்கேசந்துறை இடைத் தேர்தலை நடத்தத் தவறிய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில், 1973 ஒக்டோபர் 2ஆந் திகதி மாவிட்டபுரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். அன்றைய தினமே - நாட்டின் முத்திரைச் சட்டத்தை மீறி, வெட்டிச் சிதைக்கப்பட்ட முத்திரைகளை ஒட்டிப் பிரதமருக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் - கடிதங்களைத் தபாலில் சேர்த்தனர். ஆனால், இந்தச் சட்டமறுப்பை ஒட்டி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அரசு வாழா இருந்தது. முதுபெருந் தலைவர் அழகக்கோன் மறைநதாா
1973 நவம்பா 25ஆந் திகதி கட்சிக்கு மாபெரும் இழப்பொன்று ஏற்பட்டது. கட்சியின் முதுபெருந் தலைவரும், 1956ஆம்

Page 96
-
ஆண்டு முதல் மன்னார்த் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றி, அப்பழுக்கற்ற விசுவாசத்தினால் மக்கள் மத்தியில் தனி மதிப்புப் பெற்றிருந்தவருமான திரு.வி.அ. அழகக்கோன் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தார். மன்னாரில் ஏற்பட்ட இடைத் தேர்தலிற் கட்சி தோல்வியடைய, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஜனாப் றகீம் சில வாக்குகளால் வெற்றி பெற்றார். திரு. அழகக்கோனின் மறைவால் - ஒரு மாவட்டத்தையே தற்காலிகமாக இழந்தது கட்சி.
தன்னாட்சிக்கு வித்திட்ட - தை பத்து
அரசியல் கலப்பற்ற வகையில், யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஜனவரி முதல் வாரத்தில் வெகு சிறப்பாக - மக்களின் கரை காணாத உணர்ச்சிப் பெருக்கின் மத்தியில் நடைபெற்றது. அரசாங்கம் எவ்வளவோ இடையூறுகளை ஏற்படுத்தியும், மிக வெற்றிகரமாக மாநாட்டை நடத்தி, இறுதி நாளான 10ஆந் திகதியன்று 50,000க்கு மேற்பட்ட மக்கள் உலகத் தமிழ் அறிஞர்கள் தமிழின் பெருமையை எடுத்து விளக்கு வதைக் கேட்கக்கூடிய கூட்டத்தின் மீது, பொலீசார் எவ்வித காரணமுமின்றித் தாக்கு தல் நடத்திய காரணத்தினால், ஒன்பதுபேர் மின்சாரம் தாக்கி இறந்தனர். பொலீசாரின் நடத்தை பற்றி விசாரணை நடத்துமாறு, அரசாங்க ஆதரவாளர் உட்பட, தமிழ்மக்கள் ஏகோபித்துக் கோரியும் அரசாங்கம் மறுத்து விட்டது. மக்கள் நிறுவிய இரண்டு முன்னாள் நீதியரசர்களையும் ஒரு முன்னாள் மேற்றிராணியாரையும் கொண்ட விசாராணைக்குழு, பொலீசாரின் செயலே - அம் மரணங்களுக்குக் காரணம் என்று தீர்ப்பு வழங்கியது. இச் சம்பவமும், அதை யொட்டி அரசாங்கத்தின் உதாசீனமும் 'தமிழன் தன்னாட்சி பெற்றாலன்றி வாழ முடியாது' என்ற உறுதியை - இதுகாறும் அந்தக் கொள்கையை ஏற்காதிருந்த பல்லாயிரம் தமிழ் மக்களுக்கும் ஏற்படுத்தியது.

5
S.
உத்தம தலைவர் இராசமாணிக்கனார் உயிர் துறநதாா
அடுத்தடுத்து உத்தம தலைவர்கள்
பலரை இழந்துகொண்டு வந்த எம் மியக்கத் திற்கு, கிழக்கிலங்கையில் இன்னொரு பேரிடி 8-10-74இல் விழுந்தது. மூன்று தடவை கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப் பட்டு, மிகப்பெரிய போராட்டங்களின் மத்தியில் கட்சியை வழி நடத்திச் சென்ற உத்தமத்தலைவர் திரு. சிமூ, இராசமாணிக்கத் தின் மறைவு - கட்சிக்கும் தமிழ் இனத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் நஷ்டமாகும். யாழ்நகர் வந்த பிரதமரை - தமிழர்தம் மனக்கொதிப்பு வரவேற்றது
1974ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், பல்கலைக்கழக வளாகம் ஒன்றைத் திறப்பதற்கென்று கூறி, பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா அவர்கள் முதன்முதலாக யாழ்ப்பாணம் வருகை தந்தார். தமிழர் கூட்டணியும், தமிழரசுக் கட்சியும் அவர் யாழ்ப்பாணம் வரும் நாளைப் பூரண ஹர்த்தால் தினமாக அனுஷ்டிக்குமாறு கோரின. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரிபூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுவதை எதிர்த்து, யாழ்ப் பாணம் வீரமாகாளி அம்மன் கோவில் முன்றிலில் பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். தமிழ் மக்களின் மனக் கொதிப்பை - பிரதமர் நேரில் கண்டார்.
வெள்ளி விழா :
இந்த விதமான போராட்டங்களுக்கும், தலைவர்களின் மறைவினால் ஏற்பட்ட பேரிழப்புகளுக்கும் மத்தியில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தியாகம் நிறைந்த வரலாற் றில் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைந்தன. கட்சியின் வெள்ளி விழா கொழும்பு இராம கிருஷ்ணமிஷன் மண்டபத்தில் 1974 டிசம்பர் 18ஆந் திகதி பல்லாயிரம் மக்கள் திரண்ட மாபெரும் விழாவாகக் கொண்டாடப் பெற்றது. தந்தை செல்வநாயகத்திற்கு "மூதறிஞர்" என்று பட்டஞ் சூட்டி மகிழ்ந்தனர்

Page 97
- மக்கள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. தொண்டமான், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு. மு. சிவசிதம்பரம் முதலிய தோழமைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் வாழ்த்துரை வழங்க நடந்த இவ் விழாவில் தலைமை தாங்கும், பேறு எனக்குக் கிடைத்தது. இவ்விழா, கட்சியின் வெள்ளி விழாவாக மாத்திரமன்றி, காங்கேசந்துறை இடைத் தேர்தலின் கால்கோள் விழா வாகவும் அமைந்தது. ஏனெனில், இச் சந்தர்ப்பத்தில் இடைத் தேர்தல் நியமன தினத்தையும் ஆட்சியாளர் அறிவித்தனர். இடைத் தேர்தல் இயம்பிய தீர்ப்பு
காலங்கழித்து நடைபெற்ற இடைத் தேர்தல், எம் இலட்சியப் பாதையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாக அமைந்து விட்டது. 1970ஆம் ஆண்டிற் பெற்றதிலும் மூன்று மடங்கு அதிகப் படியான வாக்குகளையும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் முக்கால் பங்கு வாக்குகளையும் தந்தை செல்வநாயகம் பெற்றதல்ல இம் முக்கியத்துவத்திற்குக் காரணம். ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர் இந்நாட்டு மண்ணில் காலடிவைத்தபோது, தமிழன் தன் சொந்த நாடாகத் தன்னாட்சி நடாத்திய பூமியை மீண்டும் பெற்று, இழந்த இறைமையை மீண்டும் நிலை நாட்டுவதற்கு உழைக்கத் தமிழ் மக்களின் உத்தரவை நாடினார் தந்தை செல்வநாயகம். அந்த உத்தரவை - அமோகமான பெரும்பான்மை யால் அளித்தனர் மக்கள். ஆண்ட தமிழன் மீண்டும் ஆள வேண்டும்; தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும்; தமிழ் ஈழம் மீண்டும் மலரவேண்டும். இதுவே காங்கேசந்துறை இடைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு இருபத்தைந்து ஆண்டு களாக நாம் நடந்து வந்த இலட்சியப் பாதையில் - ஒரு திருப்பு முனையைத் தாண்டிவிட்டோம். எம்முன்னே நாம் சென்றடையும் இலக்குத் தெளிவாகத் தெரி கின்றது. எம் பின்னே தமிழ் மக்களில் மிகப் பெரும்பாலோர் திரண்டு விட்டார்கள்!

இனத்தின் சுதந்திரம் என்ற இலக்கை நோக்கித் தமிழரசுக் கட்சியும், கடந்த காலத்தில் வெவ்வேறு பாதைகளில் நடந்த தோழமைக் கட்சிகளும் கைகோத்து வீறுநடை போட ஆயத்தமாகிவிட்டன!
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே."
என்ற புரட்சிக் கவிஞர் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக - ஈழத் தமிழ் மக்கள் திகழ்கின்றனர். ஒத்துழைத்துப் பலனில்லை " தியாக வரலாறு தரும் பாடம்
இந்த நிலையை உருவாக்கியதே - தந்தை செல்வநாயகத்தின் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இருபத் தைந்து வருட சாதனையாகும். பாராளு மன்றத்திற்கு உள்ளும் வெளியும், தென்னிலங் கை அரசியற் கட்சிகள் ஒவ்வொன்றோடும் ஒத்துழைத்துப் பார்த்தோம். இடதுசாரிக் கட்சிகளோடு - 1953ஆம் ஆண்டு நாட்டை அதிர வைத்த ஹர்த்தாலில் ஒத்துழைத்தோம். பிரதமர் பண்டாரநாயகாவோடு - 1957இல் ஒப்பந்தம் செய்தோம். பூநீலங்கா சுதந்திரக் கட்சியோடு - 1960ஆம் ஆண்டில் உடன் படிக்கை செய்து, அவர்களோடு சேர்ந்து ஐ.தே. கட்சி ஆட்சியைத் தோற்கடித்து, பூநீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்க, ஆதரவு கொடுக்கச் சம்மதித்தோம். 1965ஆம் ஆண்டு திரு. டட்லி சேனநாயகா வோடு ஒப்பந்தம் செய்து, அவரை ஆட்சிப் பீடம் ஏறச் செய்தோம். அத்தனை சிங்கள அரசியற் கட்சிகளும் தலைவர்களும் எமக்குத் தந்த பாடம் - "அவர்கள் யாரும் என் உரிமைகளை வழங்கத் தயாரில்லை; அவர்களை நம்பிப் பயனில்லை' என்பதேயாகும். தாம் அதிகார பீடம் ஏறுவதற்கு எம்மை ஏணி யாகப் பயன்படுத்திய பின், எம்மை உதைத்துத் தள்ளுவார்களேயன்றி - தமிழ் இனத்தையும் சிங்கள இனத்தின் நிலைக்கு உயர்த்தவே மாட்டார்கள்.
"தன்கையே தனக்குதவி
தமிழரசே தமிழர்க் குதவி"

Page 98
என்ற தாரக மந்திரத்தை, அனுபவத்தால் படித்தோம். இருபத்தைந்து ஆண்டுகளில் எதைச் சாதித்தோம்?
சாதியினால் சமயத்தினால், பிரதேசத் தினால் பிளவுபட்டுக் கிடந்த தமிழனை ஒன்று படுத்தினோம்!
அரசியல் கட்சிகளாகப் பிரிந்து அல்லற்பட்ட தமிழினத்தை, ஒரே அணியில் - தமிழர் கூட்டணியாகச் சேர வழி வகுத்தோம்! 1956ஆம் ஆண்டு, "24 மணித்தியாலத் தில் நாடு முழுவதும் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவோம்" என்று கூறிய ஆட்சியாளரை, இருபது வருடங்களின் பின்னரும் - மொழிப்பிரச்சினை தீரவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு, “அரசியல் அமைப்பில் தமிழ் மொழி உரிமையை அளிக்க நாம் ஆயத்தம்” என்று கூற வைத்திருக்கி றோம்!
தமிழனுக்கு ஒரு தனிப் பிரதேசம் உண்டு; அதைப் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமை மாத்திரமல்ல, உரிமையும் கூட என்று, தமிழ் மக்கள் மத்தியில் இடது சாரிக் கம்யூனிஸ்ட் தலைவர்கள்தானும் ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறோம்!
தமிழ்ச் தேசிய இனத்திற்குப் பிரதேச சுயாட்சி வழங்க வேண்டுமென்று நாம் ஆரம்பத்தில் கோரியபோது, "தமிழ்ப் பிரதேசம் என்று ஒன்றில்லை என்றும், நாடு முழுவதும் எல்லோருக்கும் சொந்தம்” என்றும் பிதற்றிய இடதுசாரிகளை - இன்று, “தமிழ்ப் பிரதேசமுண்டு; தமிழ்த் தேசிய இனத்திற்குப் பிரதேச சுயாட்சி வழங்கப்பட வேண்டு மென்றும், அதற்காகத் தாங்களும் போராடத் தயாரென்றும்" ஏற்றுக்கொள்ள வைத்திருக்கி றோம்!
தமிழன் தான் ஒரு தனித் தேசிய இனம் என்பதை, உணரச் செய்திருக்கிறோம்!
தமிழ்த் தேசிய இனத்திற்கு, தன்னாட்சி பிறப்புரிமை' என்பதைத் தெரிய வைத் திருக்கிறோம்!

7
தமிழ் மக்களின் எதிர்ப்புச் சக்தியைத் திரட்டி, சிங்களத் திணிப்பை - ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து வந்திருக்கிறோம்.
இதனால் நீர் கொழும்பு, சிலாபம் போன்ற பகுதிகளில், இனமாற்றத்தினால் தமிழ்க் குலமே - சிங்கள இனமாக மாறியநிலை ஏனைய இடங்களிலும் ஏற்படாது - தடுத்து நிறுத்தியிருக்கிறோம்!
எமது எதிர்ப்பியக்கம் இல்லையேல், தமிழ்ப் பிரதேசங்களிற் கூடச் சகல நிர்வாகமும் தனிச் சிங்களமாகியிருக்கும்!
அப்படி மாற்ற முற்பட்டபோது, 1961ஆம் ஆண்டுச் சத்தியாக்கிரகத்தினால், அதை முறியடித்தோம்!
1964இல் மீண்டும் அதே முயற்சியை மேற் கொண்ட போது, அதை எதிர்த்து நிறுத்தினோம்!
1966ஆம் ஆண்டு தமிழ்மொழியை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சகல நிர்வாக அலுவல்களுக்கும் உபயோகிக்கச் செய்யும் தமிழ்மொழி சட்ட விதிகளை ஆக்கச் செய்தோம்!
1961இல் நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழிக்கு எந்த இடமும் அளிக்காத - நீதிமன்ற மொழிச் சட்டத்தை, எம் எதிர்ப்பினால் - புகுத்த முடியாது செய்தோம்.
தமிழின் உரிமையை - அரைகுறையாக வாவது வழக்கவேண்டுமென்றெண்ணி, அரசியற் சட்டத்தில் ஆட்சியாளர் சில பகுதிகளைப் புகுத்தச் செய்தது, எம் எதிர்ப்பு; என்பதை எவரும் மறுக்கமாட்டார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்றேல்.?
அரசியற் சட்டத்தை ஆக்கி நான்கு ஆண்டுகளுக்கிடையில், "அதைத் திருத்தி, தமிழ்மொழி உரிமைகளை அளிக்க ஆயத்தம், பிரிவினை கோராதீர்!" என்று இலங்கரத்தினா போன்ற அமைச்சர்களை அலற வைத்தது எம்மியக்கம்!

Page 99
سا
தமிழரசுக்கட்சி இருந்திருக்காவிட்டால் - தனிச்சிங்களம் நாடு முழுவதிலும் எப்பொழுதோ முடிந்த காரியமாகி யிருக்கும்!
'தமிழ்ப் பிரதேசம்’ என்பது ஒன்று உண்டென்பதையே மக்கள் மறந்திருப்பார் கள்!
தமிழ் இனம் - சிங்களக் கட்சி களிடையே கூறு போடப்பட்டுச் சிதறிப் போயிருக்கும்!
சிங்களத் திணிப்பினால் இளஞ் சந்ததியின் கல்வி மொழி, பேச்சு மொழி எல்லாமே சிங்களமாக மாற்றப்பட்டுத் தமிழ் இனம் அழிவுப் பாதையில் அதி வேகமாகப் போயிருக்கும்!
இத்தனையையும் தடுத்து நிறுத்தி, தமிழனைத் தன் தனித்துவத்தைக் காக்க வேண்டுமென்பதை உணரச்செய்து, தனித்துவத்தைக் காப்பதற்குத் தமிழனுக்கு ஒரு நாடு வேண்டு மென்பதை அறிவுறுத்தி, எரம் முன்னோர் ‘தம் சொந்த நாட்டோடு வாழ்ந்தனர்' என்பதை நினைவுறுத்தி, நாம் வாழ வேண்டுமானால் எம் நாட்டை நாமே ஆளவேண்டும்' என்பதை ஆளப் பதிய வைத்து அந்த இலட்சியத்தின் அடிப்படை யில் அத்தனை தமிழ் அரசியற் கட்சிகளையும் ஒன்றுபடுத்தி, தமிழனுடைய இந்தக் கோரிக்கையின் நியாயத்தை 26)
动
1AN உறவுக்குக் ை །། Fஉரிமைக்குக் (0)

38H
அரங்கிலும் ஓரளவு உணரச் செய்து, வீறு கொண்டெழுந்த இளந் தமிழ்ச் சந்ததியை - தன்மானத்தோடு தமிழ் மானங்காக்கவும், தமிழன் ஆட்சியை நாட்டவும் தியாக மார்க்கத்தில் - விடுதலைப் போர் வழியில் நடக்கச் செய்திருப்பது எம்மியக்கமே!
இருபத்தைந்து வருடங்களாக நாம் நடந்த இலட்சியப் பாதையில், நாம் நடத்திய சாதனைகள் இவை! ஆனால், எம் இறுதிச் சாதனையே மகத்தானதாக இருக்கவேண்டும். அதுதான் ஓர் சுதந்திர, சமத்துவம் மிளிர்கின்ற, சமதர்மம் நிலைநாட்டப்பெற்ற தமிழ் ஈழத்தைக் காண்பது.
சேறுகள், சகதிகளைத் தாண்டி - அந்த இலக்கை நோக்கிச் செல்லும் நேரிய பாதையில் தமிழ் இனத்தைக் கொண்டு வந்து விட்டிருக்கின்றோம். சுதந்திர சூரியனின் இளங்கதிர்கள் மெல்லக் கீழ் வானத்தை வெளுக்கச் செய்யத் தொடங்கிவிட்டன! தியாகி சிவகுமாரன் போன்ற விடி வெள்ளிகள் தோன்றி விட்டார்கள்! தொடர்ந்தும் செல்வோம்; நாம் நிச்சயம் வெல்வோம்!
வாழ்க தமிழ் வளர்க தமிழின ஒற்றுமை! வருக தமிழ் ஈழம்!
) {
கொடுப்போம் Ak 6) கொடுப்பேம்'S

Page 100
கட்சிக்குக் கிடைத்
திரு. மு. திருச்செல்வம், கியூ. சி. (முன்னாள் உள்ளூராட்சி அமைச்சர்)
திரு. வி. ஏ (முன்னாள் ஊ பாராளுமன்
திரு. ஆர். டபிள்யூ
(அறப்போர் முன்ன
m
திரு. பொ. மாணிக்கவாசகர் (முன்னாள் கல்குடாப் பாராளுமன்ற உறுப்பினர்)
ܢܠ
 
 
 
 
 
 
 

த மாணிக்கங்கள்
திரு. வி. ஏ. அழகக்கோன் (முன்னாள் மன்னார்ப் பாராளு மன்ற உறுப்பினர்)
ா. கந்தையா Iர்காவற்றுறைப் ற உறுப்பினர்)
வி. அரியநாயகம் ணித் தலைவர்)
திரு. க. ஏகாம்பரம் (முன்னாள் மூதூர் முதற் பாராளுமன்ற உறுப்பினர்)

Page 101


Page 102
(தேசிய-மாநில-சிறப்பு மார
(91-115

கை(த்) க் கட்சியின் வர்கள்
மைந்த பேருரைகள்=
ாடுகளில் இடம் பெற்றவை)
O O O பக்கங்கள்)
"9ے' - [ll6کا
لم

Page 103
L
3


Page 104
கட்சியின் தாபக தலைவ
18-12-49
公
22-8-64
உயர்திரு. சா. ஜே. வே
s99HG)
 
 

ர் - 1ஆவது தலைவர்
- 16-4-55
- 23-6-66
செல்வநாயகம், கே.சி. it is ଗit

Page 105


Page 106
உயர்திரு. சா. ஜே.வே. செ ஆற்றிய
(1ஆவது மகாநாடு 14-4-
ரெவேற்புக் கழகத் தலைவருக்கும், அக்கழக அங்கத்தினருக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அங்கத்தவர்களுக்கும், இங்கு கூடியிருக்கும் மற்றெல்லோருக்கும் என் தாழ்மையான வணக்கம்.
இன்னும் ஒர் ஆண்டிற்கு இக்கட்சியின் தலைமைப் பாரத்தைப் பொறுப்பேற்கும் படி, எமது நிர்வாக சபை என்னை நியமித் திருக்கின்றது! தலைவரை மாற்றி வைக்கும் படி நான் வேண்டியிருந்தேன். ஏனெனில், திரும்பவும் ஒருவரையே தலைமைப் பதவியில் வைப்பது எங்கள் இயக்கத்துக்கு இணங்காதது. இன்னும், எங்கள் ஊழியர் களுக்குள் தலைமைப் பொறுப்பை எடுத்து நடத்துவதற்குத் தகுதியுள்ள பெரியார் பலர் உளர். எனினும், கட்சியின் பராயம் இளமைப் பராயமானதாலும், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் நிலை மிக மோசமாக இருப்பதினாலும், இன்னுமோர் தடவை இப் பொறுப்பை எடுத்து நடத்தும்படியான தீர்மானத்திற்கு மறுப்புச் சொல்ல அறியாதவனாக உங்கள்முன் நிற்கின்றேன். என் தராதரத்தையோ அல்லது பலத்தையோ நம்பி நான் நிற்கவில்லை. எங்கள் கோரிக்கையின் நீதியையும், எம் மக்களின் ஆர்வத்தையும், உண்மையான கொள்கைப் பற்றுதலையும், எம் இனம் தன் உரிமையைப் பறிகொடாது உழைக்கும் என்ற நம்பிக்கை யையுங் கொண்டே இப்பணியை ஆற்ற எத்தனிக்கிறேன். என்மேல் வைத்த நம்பிக்கைக்காக நன்றி கூறுகின்றேன். அதன்படி தவறாமல் நடக்க இறைவன் அருள்புரிவானாக!
சரித்திரச் சிறப்பு மிகுந்த திரிகோன மலையில் இம்மகாநாடு நடப்பது, தமிழ் பேசும் இனம் மகிழ்வதற்கு ஒரு காரண மாகும். நீர்வளம், நிலவளம் எல்லாம் நிறைந்த இப்பூமியில், தமிழ் பேசும் இனம் பல

ல்வநாயகம், கேஸி.எம்.பி. பேருரை
1951 - திருகோணமலை.)
நூற்றாண்டுகளாகச் செழிப்பாக வாழ்ந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதேசத்தில், தமிழ் பேசும் இனத்தின் உரிமைகளை மீட்கும் இயக்கம் நடைபெறுவது மிகத்தகும். எல்லா வளங்களும் இருந்தும், மக்கள் தமக்குரிய மனுவீகப் பெருமையுடன் மக்களாய் வாழாவிடின், என்ன நலம்? திரிகோண மலையிலிருக்கும் தமிழ் பேசும் மக்களே, எங்கள் முன்னோரின் மகிமையைக் காப்பாற்றுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்பதைப் பெருமையுடன் கூறுகின்றேன். தமிழ் இனத்தைக் காப்பதற்கு, இங்கிருக்கும் ஆர்வத்தை நான் மெச்சுகின்றேன். திரிகோணமலை வாலிபரின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நான் வணக்கம் செலுத்து கின்றேன். இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள், அரசியலில் பூரண உரிமை பெற்று வாழ்வதற்கு இருக்கும் ஒரேயொரு வழியாகிய - தமிழரசு கோரும் இயக்கம் இலங்கையில் எப்பகுதியிலும் வேரூன்றி இருப்பதிலும் பார்க்க, ஆழமாகவும் ஸ்திரமாகவும், மூலவேரும் பக்கவேரும் விட்டெறிந்து, நிலையாக இத் திரிகோண மலையிற்றான் நிலைத்திருக்கிறது. ஆகவே, இம்மகாநாடு இங்கே நடப்பது தகும்.
இன்னும், இம்மகாநாடு இங்கே நடப் பதற்குப் பல காரணங்கள் உள. தமிழ் பேசும் இலங்கையினர் வாழும் இலங்கைப் படத்தைப் பார்க்கும்போது, அப் பிரதேசத்தின் சரிமத்தியான இடம் இத் திரிகோணமலையாக இருப்பதைக் கிர்ணலாம். மேலும், இப்பட்டணம் அமைந் *திருக்கும் கிழக்கு மாகாணம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. தமிழ் பேசும் மக் களின் சொந்த நாடாக இருந்துவந்த இம் மாகாணத்தை, இப்போது நடக்கும் அரசாங்கம் தமிழ் மாகாணம் அல்லாமல் ஆக்கிவிட நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகின்றது. நம்மை எதிர்நோக்கும்

Page 107
இம் மோசத்திலிருந்து மீளுவதற்கு, கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்கள் எழுச்சியுற வேண்டும். அவர்களுடன், இலங்கையின் ஏனைய தமிழ்மக்கள் ஒன்று சேரவேண்டும். அம்முயற்சியில் ஒன்றே - இன்று நடக்கும் வைபவமாகும்.
சுயாட்சித் தமிழ் மாகாணம் இலங்கையில் நிறுவுவதே, தமிழினத்தின் விமோசனத்திற்கான ஒரே வழி என்ற காட்சியைக் கண்டவர்கள் பலர். இறந்த, காலத்தில், இத் தீர்க்கதரிசிகள் தோன்றி மறைந்தனர். அவர்கள் ஒன்றுகூடினது மில்லை; அன்றி ஒரு இயக்கத்தைத் தோற்று வித்ததுமில்லை. அதனால், அரசியலில் நாம் இன்று இந்த நிலைபரத்தில் இருக்கின்றோம். இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன் இக்கேள்வி எழும்பியிருந்தால், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுப் போகின்ற காலத் திலேயே "சுயாட்சியுள்ள தமிழ்நாடு” இலங்கையிலே உண்டாகியிருக்கும் என்பதை, மக்களிற்பலர் இன்று ஒப்புக்கொள்கிறார்கள். ‘சுயாட்சித் தமிழ்நாட்டை உண்டாக்கும் கோரிக்கை ஒரு இயக்கமாகத் தொடங்கி, இப்போது இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதைத் தன் கொள்கையும் இலக்குமாக எமது கட்சி தொடங்கி, மாதங்கள் பதினாறு. இச்சிறிய காலத்தில், மக்களின் மனதில் அதிசயமான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இனி மேல் எம் இனத்திற்கு வழி ஒன்றுமே இல்லையென்ற தோல்வி மனமும், தூங்கு முகமுமாயும் இருந் தோர் - விடுதலை வழியொன்றைக் கண்டோ மென்று விழித்துப் பார்க்கிறார்கள். எம் கோரிக்கைதானோ உண்மையான வழி யென்று ஐயுற்றவர்கள் பலரின் சந்தேகம் மாறி வருகின்றது. சுயநலம் கருதி எங்கள் கட்சியையும் இயக்கத்தையும் அழிக்கவென்று தோன்றியவர்கள், தோல்வி கண்டு திகைத்து நிற்கிறார்கள். நாடெங்கும் எங்களுக்கு ஆதரவு நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வருகின்றது.
இதுநிற்க, கொழும்பிலே இருக்கும் சிங்கள அரசாங்கத்தின் நாளாந்த நடவடிக்கைகள், தமிழ்பேசும் இனத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழிக்கும் முகமாகவே நடைபெற்றுவருகின்றன.

6
பூர்வீக காலம் தொடங்கி, இந்நாட்டில் தமிழ் இனமும் சிங்கள இனமும் வாழ்ந்து வருகின்றன. ஆகவே, இலங்கையின் உரிமைக் காரர்கள் - இரண்டு இனத்தவர்களுமாவர். பல தருணங்களில், வெளியே இருந்து வந்து இலங்கையிற் குடியேறிய வேறு வேறு குழுவினர் - சிங்கள இனத்தோடு சேர்ந்து சிங்களவராயினர். அம்பலாங்கொடை, பலப் பிட்டியாப் பகுதியில் வசிக்கும் சலாகம வகுப்பினர் - ஒல்லாந்தர் காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்கள்.இவர்கள் நிரந்தரச் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தனர். இதிற் பிழையொன்றுமில்லை.ஒரு தேசத்தின் நிரந்தர வகுப்பினரோடு, வந்தேறுகுடிகள் சேர்ந்து - நிரந்தர மக்களின் தொகையைப் பெருக்குவது சகஜம். அதுபோல, இலங்கையில் வந்து குடியேறும் மறு குழுவினர்கள், இங்கே நிரந்தரமாய் வாழும் தமிழ் - முஸ்லிம் ம க் க ளே டு சேர் ந் து , அ வர் க ள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதும் நியாயமானதே. அதற்குத் தடையாக விருப்பது, இங்கு வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குப் பாதகமானது. இலங்கைக்கு வந்து குடியேறும் குழுவினர், இங்கிருக்கும் தமிழ் பேசும் மக்களோடு ஒன்றாவதற்கு, அரசாங்கம் எதிராயிருக்கும் பட்சத்தில், இலங்கைவாழ் நிரந்தரத் தமிழ் பேசும் இனத்திற்கு இலங்கை உரிமையற்றது என்பது கருத்து.
இவ்விஷயத்தில், நடப்பது என்ன வென்று ஆராய்வோம். கடந்த ஒரு நூற்றாண்டில், இலங்கையில் சுமார் 7, 8 லட்சம் தமிழ் மக்கள் வந்து குடியேறினார் கள். சர்வதேச அரசியல் நீதியின்படி, இந்த 7, 8 லட்சம் தமிழ் மக்கள், இங்கு நிரந்தரமாய் இருக்கும் தமிழ் மக்களோடு ஒன்றுகூடி வாழ் வதற்கு உரிமையுண்டு. சிங்கள அரசாங்கம் - இதற்கு முழு விரோதமான சட்டங்களையும் நடைமுறைகளையும் நடாத்தி வருகிறது. சிங்கள ஆட்சி உற்பத்தியான 1947ஆம் ஆண்டின்பின், இந்த 7, 8 இலட்சம் மலை நாட்டுத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிபோகச் சட்டங்கள் ஏற்பட்டன. இச்சட்டங்களில் முதலாவதை, ஜனப்பிரதி

Page 108
நிதிகள் சபையில் விவாதிக்கும் நேரத்தில் நான் கூறினேன் : “குடியேறிய இந்தியத் தமிழ்மக்களுக்கல்ல, நிரந்தரமாய் வாழும் இலங்கைத் தமிழ் மக்களாகிய எங்களுக்கே இந்த அடி. இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு”.
இப்படிப்பட்ட எத்தனையோ எச்சரிக்கைகளைக் கவனியாது, பல தமிழ்ப் பிரதிநிதிகளும் முஸ்லிம் பிரதிநிதிகளும், மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமை களைப் பறித்த, சிங்கள அரசாங்கத்தின் கொடிய சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார் கள். நாம் கூறிய தீர்க்கதரிசன வாக்குப்போல, இன்று கல்லோயாவின் கீழ் - கல்முனைப் பகுதியில் - முஸ்லிம். தமிழ் மக்களுக்கு அடி விழுகின்றது. இது நிற்க, இந்த ஏழு, எட்டு லட்சம் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிபோனதுடன் நிற்கவில்லை. இன்று அவர் களின் வாக்குரிமையும் பறிபோய் விட்டது. மத்திய, ஊவா மாகாணங்களில் தற்போது தயாரித்த வாக்குரிமை இடாப்புகளில், மலைநாட்டுத் தமிழ் - முஸ்லிம் மக்களின் பெயர்களெல்லாம் அகற்றப்பட்டுள்ளன. வரப்போகும் தேர்தலில், தற்போது மத்திய - ஊவா மாகாணங்களிலிருந்து ஜனப்பிரநிதி கள் சபைக்கு வந்திருக்கும் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகள் எட்டுப்பேரில், ஒருவரும் தெரிந்தெடுக்கப் படமாட்டார்கள். இதுவா ஜனநாயகம்? இதுவாக அரசாங்க நீதி?
ஏழு எட்டு லட்சம் தமிழ் பேசும் மக்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கு வழியில்லை. இதுவுமின்றி, இப்பிரிவின ருக்குக் கல்வி வசதியில்லை. தம்மைச் சுற்றிலுமிருக்கும் கிராமத்திற் குடியேறு வதற்கு உரிமையில்லை. இன்னும் பல இடையூறுகளுக்குட்பட்டு வாழும் இம் மக்கள், உண்மையாய் அரசியல் அனாதை கள். இவர்களில் ஒருவர் சிங்களப் பெயர் பூண்டு, சிங்களம் படித்து, அவ்வினத்தோடு சேரக் கூடுமானால்; அவருக்குப் பிரஜா உரிமை, வாக்குரிமை, குடியேறும் உரிமை யோடு சேர்ந்த - பூரண உரிமைகளெல்லாம் கிடைக்கும். இதன் கருத்தை ஆராய்ந்து பாருங்கள்! நம்மை ஆளும் சிங்கள

7.
அரசாங்கத்தில் இந்நாட்டுத் தமிழ்பேசும் மக்களுக்கு உரிமையில்லை. அவ்வுரிமை இருந்தால், வந்தேறு குடிகள் அவர்களோடு ஒன்றுகூட முடியும். எதற்காக இப்படி யெல்லாம் அரசாங்கம் செய்கிறது? தமிழ் இனத்தின் அரசியற் பலத்தைக் குறைப்பதற் காகவல்லவா? அவர்களின் எண்ணிக்கையை அருகச் செய்வதற்காக வல்லவா? எம்மினம் இப்படி அழிந்து போவதற்கு மாற்று மருந்து உண்டா? இல்லையா? அதுதான் கேள்வி. மருந்து இருந்தால் அதை எடுத்துக் கையாளாமல் விடுவோமா?
அரசியற்றுறையில் ஓர் இனம் அழியாமலி ருப்பதற்குப் பல ஏதுக்கள் தேவை. இவற்றுள் ஒன்று, அந்த இனத்தின் எண்ணுத் தொகை குன்றாமலிருப்பது. இன்னுமொன்று, அந்த இனம் வசிக்கும் பிரதேசம் பறிபோகமாலி ருப்பது. தமிழினத்தின் எண்ணிக்கையை அரசாங்கம் எவ்விதம் தாக்குகிறதென்று பார்த்தீர்கள். அத்துடன் நிற்காது, இவ்வரசாங்கம் தமிழ் பேசும் இனத்தின் உரிமைப் பிரதேசத்திலும் கைவைக்கின்றது. கல்லோயாவின் கீழ் நீர்ப்பாய்ச்சும் நிலம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் - பரம்பரை பரம்பரையாய் வாழ்ந்த பிரதேசம்.
இப் பிரதேசத்தில், அரசாங்கம் தன் பணத்தையும், பலத்தையும், ஆதிக்கத்தையும் உபயோகித்துச் சிங்கள மக்களைக் குடியேற்றுகின்றது. தற்சமயம், முஸ்லிம் தொகுதியாயிருக்கும் கல்முனைத் தொகுதி - சீக்கிரத்தில் "முஸ்லிம் தொகுதியல்லாது சிங்களத் தொகுதியாக மாறிப்போகுமோ” என்று முஸ்லிம் பிரதிநிதிகளே பயப்படு கிறார்கள். மத்திய பகுதித் தமிழர்களைத் தாக்கும்போது அரசாங்கத்துக்கு உதவியாய் நின்ற கிழக்கு மாகாணத்துப் பிரதிநிதிகள், அதே அரசாங்கத்துக்குத் தம் மக்கள் இரை யாவதைப் பார்த்து நிற்கும் நாள் - இவ்வளவு சீக்கிரத்தில் வந்து விட்டது!
இவ்விதம் நடப்பது சரித்திரத்திற் புதிதல்ல. 1938ஆம் ஆண்டில் ஹிட்லர் - செக்கோ சிலவாக்கியா மேற் படையெடுத்த போது, போலந்து தேசம் பக்கத்தில் நின்று

Page 109
9
தவியது. அடுத்தாண்டில், அதே ஹிட்லருக்குப் போலந்து இரையானது. கல்லோயாவில் நடக்கும் இவ்வநிதியை எதிர்ப்பவர் யார்? தமிழ் அரசுக் கட்சி ஒன்றே இவ்வாபத்தை மக்களுக்கு விளக்கிக் காட்டி, அரசாங்கத்தின் தப்பான செயலை எதிர்த்து நிற்கின்றது. தமிழ் அரசுக் கட்சியின் கூக் குரலைக் கேட்டு, கிருஷிக மந்திரி காரியாலயத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கொடுத்த மறுமொழி விசித்திரமானது. முதற் குடியேற்றிய முந்நூறு குடிகளும், சிங்களக் குடிகள் என்று ஒத்துக் கொண்டார். இக் குடிகள், குளங்கட்டினதால், முதற்குடி எழும்பியவர்களாம். இன்னும், அங்கு குடியேற்ற இருக்கும் 25,000 குடிகளும் 7500 குடிகளே கிழக்கு மாகாணத்து மக்கள் ஆவார்கள் என்று கூறினார். கல்லோயாப் பிரதேசத்தில், சுமார் 30 வீததிலம் மாத்திரந் தான் கிழக்கு மாகாண மக்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள தாம். அந்த 30 வீதமும், கிழக்கு மாகாணத்தவர் உபயோகப்படுத்துவார்களோ என்பது ஐமிச்சமாம். இப்படி நடந்தால் கல்முனைப் பகுதி - சிங்களப் பிரதேசமாய் மாறு மென்பதற்கு என்ன ஐயுறவு? இந்த அரசாங்கத்தோடு கிழக்கு மாகாணத்துப் பிரதிநிதிகள் எல்லோரும் ஒத்துழைக் கின்றார்களாம்; எதற்காக? எம் இனத்தை அழிப்பதற்காகவே. இப்படிப்பட்ட குடியேற்றத்தை நிற்பாட்டுவதற்கு வழி யுண்டா? இல்லையா? இருந்தால் அதைத் Ggil TLDGib allGGairtuom?
இது நிற்க, கொடிப்பிரச்சினை - மொழிப் பிரச்சினையில் என்ன நடந்த தென்று சிந்தியுங்கள். தேசியக் கொடி என்று ஒன்று உண்டாக்கியிருக்கிறார்கள். அதில், முஸ்லிம் - தமிழராகிய 20 லட்சம் தமிழ்ப் பேசும் இனத்தவர்க்கு, வீட்டிற்கு வெளியே - கோடியிலே இடங்கொடுத்திருக்கிறார்கள்.
கொடிதான் ஒருபுறமிருக்கட்டும். எமது மொழியின் நிலை ஆபத்தானது. பேச்சளவில் தமிழும் சிங்களமும் அரசாங்க பாஷைகள் என்று சொல்லிக் கொள்ளுவார் கள். நடை முறையிலோ, வரவரச் சிங்களமே அரசாங்க பாஷையாகின்றது.

8
மேற்கூறியபடியும், இன்னும் வேறு பலவிதங்களிலும் எமது உரிமைகள் அழிந்து போவதற்கு அடிப்படையான காரணம் யாது? நம் நாட்டிற்கு வகுத்திருக்கும் அரசியற்றிட்டந்தான்.
ஒரு நாட்டில் வசிக்கும் மக்கள் எல்லோரும் ஓர் இனத்தைச் சேர்ந்தவர் களாயின், அந்நாட்டை ஆளுவதற்கு வகுப்பது ஒற்றை ஆட்சி அரசாங்கம். பிரான்ஸ், இத்தாலி, போர்த்துக்கல், இஸ்பானியா முதலிய தேசங்களுக்கு ஒற்றை ஆட்சி அரசியல் ஒத்தது. அங்கங்கிருக்கும் மக்கள் ஒவ்வோர் தனியினத்தைச் சேர்ந்தவர் கள். ஆனால், எல்லாத் தேசங்களும் தனி ஓரின மக்கள் மாத்திரம் அடங்கியதாய் இருப்பதில்லை. எத்தனையோ தேசங்களில், ஒன்றின் மேல் பல இனங்கள் வசிக்கின்றன. இப்படிப்பட்ட நாடுகளுக்கு ஒற்றை ஆட்சி அரசாங்கம் ஏற்றதன்று. இவற்றிற்கு அரசியல் அனுபவத்தில் கண்ட சிறந்த முறை, இணைப்பு அல்லது சமஷ்டி அரசாங்கமே. உலக சரித்திரத்திற் கைகண்ட முறையிது.
சுவிற்சலாந்து தேசத்தில், மூன்று மொழிவாரியினங்கள் இருக்கின்றன. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியம், சுவிற்சலாந்து இலங்கையிலும் சிறிய நாடு. இலங்கை 25,000 சதுர மைல்; சுவிற்சலாந்து 16,000 சதுர மைல். அங்கே நிலவுவது சமஷ்டி அரசாங்கம். அதனால், ஒவ்வொரு இனமும் தான் வாழும் பிரதேசத்தை, உள்நாட்டுச் சுயாட்சியில் நடத்துகின்றது. அங்கே, நூற்றுக்கு அறுபதுக்கு மேற்பட்டோர் ஜெர்மன் பேசும் மக்கள். அவ்விடத்து இலங்கையைப்போல் ஒற்றை ஆட்சி நிலவு மாயின், அது அங்கிருக்கும் பெரும்பான்மை யினராகிய ஜெர்மனியரின் ஆட்சியாகிவிடும். இப்படிப்பட்ட ஜெர்மன் ஆதிக்கத்துக்கு - அங்கு வசிக்கும் பிரெஞ்சு, இத்தாலிய மக்கள் ஒத்துக்கொடுக்காததாலேயே, பின் கூறிய இனத்தின் சுயாதீனத்தைக் காப்பதற்காகச் சமஷ்டி அரசாங்கம் வகுக்கப் பட்டிருக்கிறது. நம் நாட்டிலும் தமிழ் - முஸ்லிம் மக்கள் சுயாதீனமாய் வாழ

Page 110
-9
வேண்டுமானால், இப்போது நடக்கும் ஒற்றை ஆட்சி ஒழியவேண்டும். சமஷ்டி ஏற்படவேண்டும்.
அடுத்தது, கனடாவை எடுத்துப் பார்ப்போம். அங்கு இரண்டு மொழிவாரி இனங்கள் வசிக்கின்றன. ஆங்கிலேயரும் பிரெஞ்சு பேசுபவர்களும், 1840ஆம் ஆண்டில் கனடா தேசத்துக்குச் சுயாதீனம் கொடுத்தபோது, முழுத் தேசத்தையும்ஒரு ஒற்றை ஆட்சியின் கீழ் அமைத்தார்கள். சிறுபான்மையானோராய் அங்கிருந்த பிரெஞ்சு மக்களின் சுயாதீனத்தை இவ்வாட்சி பாதித்தது. அவர்கள் கிளர்ச்சி பண்ணினார்கள். 1867ஆம் ஆண்டு ஒற்றை ஆட்சி - சமஷ்டியாக மாறியது. அதன் பேறாக, பிரெஞ்சு மக்கள் தாம் வாழும் மாகாணத்தில், உள்நாட்டுச் சுயாதீன மடைந்தார்கள்.
ஒன்றிற்கு மேற்பட்ட பல இனங்கள் வாழும் நாடுகளுக்குச் சமஷ்டியே முறையான அரசாங்கமென்று அநேக உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். நம் அயல்நாடாகிய இந்தியாவில் - சமஷ்டியே நிறுவியிருக் கின்றார்கள். அதிருக்க, சமஷ்டியில்லாத சில நாடுகளில், சிறுபான்மைக் குழுவினர்கள் - தம் இனத்தின் சுயாதீனத்துக்காகக் கிளர்ச்சி பண்ணுகிறார்கள். பெரிய பிரித்தானியாவில், ஆங்கிலேயரும் ஸ்கொச் மக்களும் ஒற்றை ஆட்சியின் கீழ் மூன்று நூற்றாண்டுகளாக வாழ்ந்தும், இன்று ஸ்கொச் மக்கள் தம் சுாயதீனத்துக்காகப் பெரும் கிளர்ச்சி நடத்துகிறார்கள். ஸ்கொத்லாந்து தேசத்துக்கு மாகாண சுயாட்சி கேட்டு நிற்கிறார்கள். ஸ்கொச் மக்கள் தம் மொழி யை இழந்து பின்னும், தம் மாகாண சுயாட்சியைக் கோரி நிற்கிறார்கள். நாமாவது - எங்கள் மொழி அழியுமுன், நம்மைப் பாதுகாத்துக் கொள்வோமாக!
ஒற்றையாட்சியால் நம் இனத்திற்கு வரும் அழிவைப் பார்த்தீர்கள். இன்னும், ஒன்றின் மேற் பல இனங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் அரசாங்க முறையைப்

பற்றிக் கேட்டீர்கள். இனி, எம் இனம் தப்பிப் பிழைப்பதற்கு வழி சுட்டிக் காட்டவா வேண்டும்?
வழி இரண்டு உண்டு. ஒன்று தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் பிரதேசம் முற்றாய்ப் பிரிந்து. தனி அரசாங்கம் நடை பெறுவது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் பிரிந்தது போல, இலங்கை இரண்டாகப் பிளக்கப் படும். இது கடும் மருந்து; இதை நாம் கேட்கவில்லை.
அடுத்தது, சமஷ்டி அமைப்பில் - தமிழ் பேசும் பிரதேசம் - மாகாண சுயாட்சி கொண்டு வாழுவது. இதையே நாம் நாடி நிற்கிறோம். நம் கேள்வி அரசியல் நீதிக்குச் சம்பூரணமாய் இயைந்தது. இதுவே நிறைவான ஜனநாயக முறை. ஜனநாயக மென்றால் - பொது மக்களின் ஆளுகை, மக்களின் ஒவ்வொரு குழுவினருக்கும் ஆளுகையிற் சரிபங்கு இருக்கவேண்டும். இரு மொழிவாரி இனங்கள் வசிக்கும் இந்நாட்டில், இரு இனங்களுக்கும் சம உரிமை உண்டாக வேண்டுமானால், ஒவ்வொரு இனத்திற்கும் மாகாண சுயாட்சி கிடைக்கவேண்டும். அப்போது, பெரிய இனம் - சிறிய இனத்தைத் தீண்டமுடியாது. சமஷ்டி அரசியல் நடக்கும் முறைகளைப்பற்றி. அரசியல் நூல்கள் துலாம்பரமாய்க் காட்டுகின்றன. தமிழ் மாகாண அரசாங்கத்திற்கு, தன் உள்நாட்டு விஷயங்களில் முழு ஆதிக்கம் இருக்கும். சுய ஆட்சி மாகாணங்களை இணைப்பதற்கு ஒரு மத்திய அரசாங்கமிருக்கும். பொதுவாய் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் அமைக்கப்படும் விஷயங்களாவன பாதுகாப்பு, போக்குவரத்து, அன்னிய தேச விவகாரங்கள், நாணயம் உண்டாக்குதல் முதலியவை. சுய ஆட்சி மாகாணங்களுக் குரியவை : கிருஷிகம், நீர்ப்பாய்ச்சல், குளங்கள், சுகாதாரம், கல்வி ஆகியன. இவ்வமைப்பின்படி, வட-கிழக்கு மாகாணங்களில் கட்டும் குளங்கள், கல்லோயாத்திட்டம், அங்கு நடக்கும்

Page 111
10
Li Vʼ
குடியேற்றத் திட்டம் முதலியவை தமிழரசினால் நடத்தப்படும். அப்போது யாரை அங்கே குடியேற்றுவோமென்று சொல்லிக்காட்டத் தேவையேயில்லை. அல்லது தமிழ் மாகாணத்தில் அரசாங்க பாஷை என்னவாயிருக்குமென்பதற்கு யார் மனதிலும் ஐயத்திற்கிடமில்லை.
பிரஜா உரிமையைப் பற்றிப் பலர் கேட் கிறார்கள். அமெரிக்க ஐக்கிய மாகாணங் களில் நடப்பது சமஷ்டி அரசு. அங்கே ஒருவனைப் பிரஜையோ அல்லவோ என்று நியமிப்பது மாகாண அரசாங்கத்தின் ஆதிக்கத்தில் அடங்கியது. ஆனதினால், பிரஜா உரிமைச் சட்டங்கள் மாகாணத்திற்கு மாகாணம் வித்தியாசமாயிருக்கின்றன. சில மாகாணங்களில் காப்பிரிகளுக்குப் பிரஜா உரிமை இல்லாமலும், வேறு சில மாகாணங்களில்அவ்வினத்தினர்க்குப் பிரஜா உரிமை உள்ளதாயும் மாகாண சட்டங்கள் பிறந்திருக்கின்றன. சிங்கள மாகாணத்தில் என்னவாயிருந்த போதிலும், நம் தமிழ் மாகாணத்திலோ, இங்கு வந்து குடியேறி எங்களோடு ஒன்றாயிருக்கும் முஸ்லிம் தமிழ் மக்களெல்லோர்க்கும் பிரஜா உரிமையும் வாக்குரிமையும் இருந்தே தீரும்.
எம் மாகாணத்தின் பொருளாதார நிலைபரம் எப்படியிருக்கும் என்ற கேள்வி கிளம்பியிருக்கின்றது! தனி மாகாணமாக நாம் சீவிக்க முடியாதென்று தலைவர்கள் சிலர் பயமுறுத்துகிறார்கள். தேயிலை, இரப்பர், தென்னை எங்கள் நாட்டில் இல்லையாம். இலங்கையிலே தமிழ் அரசாங்கமொன்று பல நூற்றாண்டாக நிலவியிருந்ததென்பதை அவர்கள் மறந்து போனார்கள். அக்காலத்தில், பிரஜைகள் நிறைவாக வாழ்ந்ததுமன்றி, தமிழரசர்கள் பிற நாட்டின் மேற் படையெடுத்தும் சென்றார்கள். இவையெல்லாம், நாட்டில் போதிய பொருளாதார பலமின்றேல் நடந்திருக்குமா? ஐரோப்பியராட்சியின் கீழ், அவர்களின் பாராமுகத்தால், தமிழ் மாகாணங்களின் பொருளாதார நிலை குன்றியதென்பது ஓர் அளவிற்கு உண்மை. எதிர்காலத்தில் அதிகமான விருத்திக்கு வசதியானதும்;

0
நிலவளம், நீர்வளம், நிறைந்ததுமான பூமி இம் மாகாணங்களிற்றான் உண்டு. பெரும் பாலான நிலம் தேடுவாரற்றுக் கிடக்கின்றன. தற்கால கிருஷிகத்துக்குத் தேவையானது நீர்வளம் உள்ள சமதரை. இதிற்றான் இயந்திரங்கள் உபயோகிக்க முடியும். இந்த இரகசியத்தை அறிந்த சிங்கள அரசாங்கம், கல்லோயா முதலிய திட்டங்களைத் தொடங்கியிருக்கிறது. கல்லோயாவின் பின் கந்தளாய், அதன்பின் மன்னார்ப் பகுதியில் அருவியாற்றுத் திட்டம், இப்படி இன்னும் அநேக திட்டங்களுக்கு இடமுண்டு. இவை நிறைவேறுங்காலத்தில், எம் தமிழ் மாகாணங் களே தம் தேவைக்கு மேலதிகமான பொருளாதாரமுடையனவாக விருக்கும். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அபிவிருத்திக் காக வகுத்திருக்கும் கொழும்புத்திட்டத்தின் 59-ம் பக்கத்தில் எழுதியிருப்பதைப் பாருங்கள். "இலங்கையின் குடிசனத்தின் மூன்றில் இரண்டு பகுதியினர் இத்தீவின் மூன்றிலொரு பகுதியிலும் குறைந்த - விஸ்தாரமுள்ள மேற்குப் பாகத்திலேயே வசிக்கிறார்கள். இந்தக் குடிசன நெருக்கத்தைக் குறைப்பதற்கு வழி, இலங்கையின் கிழக்கு- வடமத்திய மாகாணங்களுக்கு அவர் களைக் கொண்டு போய்க் குடியேற்றுவது. மேற்கூறிய இடங்களிலேயே அரசாங்கத்தின் பிரதானமான நில அபிவிருத்தித் திட்டங்கள் கையாளப்படுகின்றன.
இன்னும், சமஷ்டி அரசாங்கங்களின் வரவு - செலவுகளை நடத்தும் ஒழுங்கு களைக் கவனிக்கவேண்டும். உலகமெங்கும் நடக்கும் சமஷ்டிகள் - ஒரு குடும்பத்துக் கொப்பானவை. ஒரு குடும்பத்தில் ஒரு சகோதரன் உழைப்பாளியாக விருப்பான்; இன்னொருவன் நோயாளியாயிருப்பான். இன்னுமோர் பிள்ளை படித்துக் கொண்டிருப்பான். ஐக்கியமான குடும்ப மாயிருக்குங்கால், எல்லா வருமானத்தையும் ஒன்று சேர்த்துக் கூடிய செலவு தேவையான பிள்ளைக்கு - கூடியதாய்ச் செலவு செய்வது. நோயாளிக்கு வருவாய் ஒன்றும் இல்லாதிருந்தபோதும், அவன் சிகிச்சைக்குக் குடும்பப் பணம் அதிகமாகச் செலவழியும். உழைப்பாளியினுடைய உழைப்பை -

Page 112
குடும்பம் உழைப்பாளிக்கே மட்டும் செலவிடுவதாயின், அதைக் குடும்பமென்று சொல்லமுடியாது.
சரி, இதுபோலவே சமஷ்டியில் மத்திய அரசாங்கமும் ம்ாகான் அரசாங்கங்களும் நடந்து கொள்கின்றன. மிகுதியான சமஷ்டியில், வருமானம் குறைந்த மாகாணங்கள் உண்டு. அதாவது, தங்கள் செலவிற்குப் போதுமான வருமானமில்லாத மாகாணங்கள். இவ்விதப் பற்றாக்குறை மாகாணங்கள் ஆஸ்திரேலிய சமஷ்டி, கனடாவின் சமஷ்டி முதலிய வேறு சமஷ்டி களிலும் இருந்துவந்தன. 1947ஆம் ஆண்டிற்கு முன் நடந்த இந்திய அரசாங்கத்தில், சிந்து மாகாணமும் வடமேற்கு எல்லைப்புற மாகாணமும் பற்றாக்குறை மாகாணங்களாக இருந்தன. அம் மாகாணங்களுக்கு மத்திய அரசு பண உதவிபுரிந்து வந்தது. இதுபோலவே, மற்றச் சமஷ்டிகளிலும் உள்ள பற்றாக்குறை மாகாணங்களுக்கு, அந்த அந்த மத்திய அரசாங்கம் பண உதவி புரிந்து வந்தது. இப்படிப் பண உதவி மத்திய அரசாங்கம் புரியாவிடில், தன் செலவைக் கொண்டு நடத்த முடியாத மாகாணத்தை - நாட்டிற்கு வெளியே போடுவதுபோலாகும். அப்படிப்போட ஒரு தேசமும் விரும்பாது.
இலங்கையில் உதிக்கவிருக்கும் தமிழ் மாகாணம் - தன் செலவைக் கொண்டு நடத்தப் போதிய வருவாய் இருக்குமென்பது எனது அபிப்பிராயம். அப்படிப் போதிய வருவாய் இல்லாவிடினும், சமஷ்டி முறையில் - மத்திய அரசாங்கம் பண உதவி கொடுத்து இயங்க வேண்டும். இல்லாவிடில், நாடு இரண்டாகப் பிளவுபடும். அப்படிப் பிளவுபடுவதைச் சிங்கள மக்கள் ஒரு போதும் விரும்பார்கள். ஓர் உள் நாட்டுச் சுயாட்சி மாகாணமாகப் பிரிவதற்கே இவ்வளவு வெறுப்புக் காட்டுபவர்கள், இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு, எம் நாடு சுதந்திரத் தனியரசாவதற்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்வார்களா?
பொருளாதாரத்தைப் பற்றியோ, தமிழ் மாகாணத்தின் வருவாயைப்பற்றியோ நாம் பயப்படத் தேவையில்லை. பயத்துக்கிட மிருந்தாலும், இனமழிவதிலும் பார்க்கச் சுருங்கச் சீவிப்பதே மிக நலம்.

Of
சுயாட்சி மாகாணத்தை நல்லதென்று வைத்துக்கொண்டாலும், அதைப் பெறுவ தெப்படி என்று கேட்கிறார்கள் சிலர். நாம் பலமற்ற இனமென்றும், மூன்றாம் பெயரான ஆங்கிலேயரும் போய்விட்டார்கள் என்றும், சிங்களவர்கள் ஒருக்காலும் இணங்கிவர மாட்டார்கள் என்றும் சொல்லுகிறார்கள். ஒருகாலம் வீரனுக்கு வேஷம் போட்டவர் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம். என்ன வீரம்! என்ன ஞானம்! என்ன தூரதிருஷ்டி
சுதந்திரம் வேறொருவர் கொடுக்க, நாம் பெற்றுக்கொள்ளும் பொருளல்ல. அது சுக்குமல்ல; மிளகுமல்ல. மக்களின் விரத்தாலும் தியாகத்தாலும் விடா முயற்சியாலும், மக்கள் அடையும் ஓர் உன்னத நிலைதான் சுதந்திரம். உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால், சுதந்திரப் போராட்டம் நடத்திய எவ்வினமும் பலவீனமான இனமாகவே இருந்தது என்பது புலப்படும். பலங்குறைந்த நேரத்திற்றானே ஓர் இனம் தன் சுதந்திரத்தை இழப்பது? அவ்விதம் இழந்த இனம், தன் பலவின நிலையைப் பாராட்டிக்கொண்டு, சுயாதீனப் போரில் இறங்காமல் நிற்குமானால், விடுதலை எப்போ அடையும்? விடுதலையடைந்த ஒவ்வொரு இனத்தின் சரித்திரத்தையும் ஆராய்ந்தால், அவ்வவ்வினம் தம் மனோடத்தினாலேயே வெற்றியடைந்தது.
ஐரிஷ் மக்கள், தம்மிலும் பன்மடங்கு பலம் மிகுந்த ஆங்கில ஏகாதிபத்தியத்திட மிருந்து தம் சுதந்திரத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள். அம்பும் வில்லுங்கூட ஆயுதமாக இல்லாத இந்தியர். அதே ஆங்கில ஏகாதிபத்தியத்திட மிருந்து தம் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இந்த இரு தேசங்களின் தலைவர்களும், திரு. பொன்னம்பலம் போலப் பேசியிருந்தால், இவ்வினங்கள் தம் சுதந்திரத்தைப் பெற்றிருக்க முடியுமா?
அடிமைத்தனத்திலிருக்கும் மக்கள் சுதந்திரத்தை அடைவதற்கு, இரு அம்சங்கள் ஒன்றாக அமையவேண்டும். ஒன்று, அம் மக்களின் சுயாதீன வேட்கைப் பெருக்கமும் அதற்காகச் செய்யும் முயற்சியும். மற்றது, உலக நடவடிக்கைகளால் வந்தேற்படும் சந்தர்ப்பம். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகச் சுதந்திரப்

Page 113
போர் புரிந்து கொண்டிருந்த இந்தியாவிற்கு, இரண்டாவது மகாயுத்தம் முடிவுடையங்காலமே சுதந்திரத்தைப் பெறுவதற்கு ஏற்ற சந்தர்ப்ப மானது. எமக்கும் சுயாதீனமடைவதற்குச் சந்தர்ப்பம் வந்து சேரும். அச்சமயத்தை வெற்றித்தினமாக்குவதற்கு நாம் முழு ஆயத்தமாயிருக்கவேண்டும். சுதந்திரம் வேறொருவர் கொடுப்பார். அல்லது வானத்திலிருந்து விழும் என்று காத்திருப்பது தவறு. நாம் அதற்காக உழைப்பவர்களாக விருக்க வேண்டும்.
முன்னேற்றமும் ஜனநாயகமுமான நடவடிக்கை என்ன? மக்கள் தங்கள் அரசியல் விருப்பங்களை எடுத்துக் காட்டும் தருணம் - பொதுத் தேர்தல் காலம். அது கிட்டடியில் வரும். திரும்பவும் ஒவ்வொரு ஐந்து வருஷங்களுக்கோர்முறை வரும். அதில், உங்கள் சுயாட்சிக்காகத் தளராது நின்று போர்புரிபவர்களைத் தெரியுங்கள். எங்கள் கட்சி, வடக்கு கிழக்கு மாகாணங் களின் தொகுதிகள் ஒவ்வொன்றிலும், இக்கொள்கைக்காகச் சேவிக்க ஆயத்தமான அபேட்சர்களை நிறுத்திப் போட்டியிடும். அந்நேரம், இவ்விரு மாகாணங்களின் தேர்தல் வட்டாரங்கள் எல்லாம், எம் கட்சி அபேட்சகர்களையே தெரிந்து அனுப்பி னால், அதுவே இக்கொள்கைக்கு முதல் வெற்றியாகும்.
இம்மாதிரித் தெரிந்து அனுப்பப்படும் இக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டம் - பாராளுமன்றத்திலும் சர்வதேச மன்றங்களிலும், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுக்குச் சுயாட்சி மாகாணம் உண்டாக வேண்டுமென்று கிளர்ச்சி செய்து கொண்டேயிருக்கும். இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் எல்லோரும்
N தமிழுக்குத் துெالم 4ر NYZ- 9೧೧ಿ

2
சுயாட்சி கேட்டதை, ஜனநாயகம் ஜனநாயக மென்று சொல்லும் அரசாங்கம் மறுக்க (ԼՔւգ-Այո5l.
வரப்போகும் ஆண்டில், எங்கள்
கட்சியின் கிளைகள் கிராமங்கள்தோறும் பரவ வேண்டும். நமது கொள்கைக்குப் பணி செய்யத் தியாகிகள் பலர் எழும்பவேண்டும்; கட்சியின் அங்கத்தினர் பெருக வேண்டும். எமது கொள்கையைப் பரப்பவேண்டும்.
ஒவ்வொரு தமிழ் பேசுபவனும், தன் இனத்தின் விடுதலைக்காகச் சேவை செய்ய வேண்டும். அப்போது வெற்றி எங்கள் முன் வந்து நிற்கும்.
இவ்வியக்கத்திற் பணிசெய்யும் ஊழியர்
களாகிய நாம், நம் தலைமுறையிலேயே நமது கோரிக்கை கைகூடுமென்று விசுவாசிக் கிறோம். எம் தலைமுறையிற் கைகூடா விடினும், நாம் இப்போரை நடத்தி, எமக்குப் பின் வரும் சந்ததியாரின் கையிற் கொடுப்பது எமது கடன். எம்பின்னே அரும்பெரும் விரர்களை எம்மினம் பெறக்கூடும். குறைந்த பட்சத்தில், அவர்களுக்கு அணிவகுப்பவர் களாகவாகிலும் இருப்போமாக.
இன்று இங்கே கூடியிருக்கும் இப்பெருந்திரள், எம்மினம் புத்துயிர் கொண்டு எழும்புகின்றதென்பதற்கு அறிகுறி. சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்தைக் கவருவதற்கு, இத் திரள் - எம்மினத்தின் எதிர்ப்பைக் காட்டுகிறது.
உங்களெல்லோர்க்கும் என் நன்றி. விசேஷமாக வெளியூரிலிருந்து திருகோண மலைக்கு வந்தவர்களுக்கு என் நன்றி. அவ்விதம் வந்தவர்களை, எங்கள் மரபின் கெளரவத்திற்கேற்ப அன்புடன் அனுசரித்த திருகோணமலை வாசிகளுக்கு என் விசேஷ நன்றி,
வாழ்க தமிழரசு'
ண்டு செய்வோன் الم الم۔N ல்லை N r

Page 114
தமிழ
கு. வன்னியசிங்க
17-4-1955 -
 

வது தலைவர்
றிஞர்
LD, L-T. 2 ... -96), Iños cir
- 24-5-1958

Page 115


Page 116
தமிழர் நாம் ஒன்றுசே என்று தீ அதைத் தடுக்க
திரு. கு. வன்னியசிங்க
(3 ஆவது தேசிய மாநாடு
வரவேற்புக் கழகத் தலைவரே! கழக உறுப்பினர்களே! தமிழரசுக்கட்சியின் பல்வேறு கிளைகளின்
பிரதிநிதிகளாய் இலங்கையின் பல பாகங் களிலிருந்தும் வந்திருக்கும் நண்பர்களே! மற்றும் கட்சி அங்கத்தவர்களே! நமது கட்சியின் அழைப்பையேற்று இங்கு
வந்துள்ள விருந்தினர்களே! சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பு
வணக்கம் உரியதாகுக.
"கொடிதெனக் கதறும் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமும் நித்திலஞ் சுமந்து குடிதனைநெருங்கிப் பெருக்கமாய்த் தோன்று
கோணமாமலை"
"தெழித்து முன் அரற்றுஞ்
செழுங்கடல் தரளஞ் செம்பொனும் இப்பியுஞ் சுமந்து கொழித்துவன் திரைகள்
கரையிடைச் சேர்க்கும் கோணமாமலை" எனவு
Iெறக்குறைய 1300 வருடங்களுக் முன்னதாகவே திருஞானசம்பந்த மூர்த் நாயானாரால் தேவாரத்திலே சிறப்பிக்க பட்ட - தமிழ் மக்களின் சீருஞ் செல்வமுட சிறப்பும் மிக்க பழம் பதியாகிய திருக்கோன மலையில் இன்னும் ஒரு முறை நம: மகாநாடு கூடுகிறோம். இலங்கை வாழ் தமி பேசும் மக்களின் விடுதலைப் போரி இந்நகர் முக்கிய ஸ்தானம் வகித் வந்திருக்கிறது. சென்ற பொதுத் தேர்தலிலு நமது கட்சிக்கு முதல் வெற்றியைத் தந்த இந்நகரமே. தமிழரசு பெற்ற பின்னரும் நமது முக்கிய நகர்களில் சிறந்ததாக இந்நக

ர்ந்து தமிழரசு பெறுவோம்' ர்மானித்தால்
எவராலும் முடியாது!
O ம், பா.உ. ஆற்றிய பேருரை
- 17-4-1955 - திருகோணமலை)
:
b
AY
திகழுமென எதிர்பார்க்கலாம். அத்தகைய நகரில் நாம் கூடுவது நம் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. அதுவும் இந்நகருக்கு விருந்தினராக வந்திருக்கும் அனைவரும், வரவேற்புக் கழகத்தார் நமது செளகரியத்துக்காகச் செய்துள்ள ஏற்பாடு களனைத்தையும் பார்த்தும் அனுபவித்தும் மேலும் மேலும் மகிழ்ச்சியுறுகிறோம். கழகத்தாருக்கும், நம்மை உபசரிப்பதற்குப் பல விதங்களிலும் உதவி புரிந்த நகரப் பெரு மக்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றி.
தமிழரசுக் கட்சி சென்ற ஆறு வருடங்களாகத் தமிழ் பேசும் மக்களுக்குத் தன்னாலியன்ற அளவில் சேவை செய்திருக் கிறது. ஆரம்ப காலமுதல் நமது தலைவராக திரு S.J.V. செல்வநாயகம் .ெC. அவர்கள் கடமையாற்றி வந்திருக்கிறார். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் - ஐம்பதுக் கைம்பது' என்ற சமப்பிரதிநிதித்துவக் கொள்கை தோற்றுப்போய், சோல்பரி அரசியல் திட்டத்தின்படி ஒற்றையாட்சி நிறுவப்பட்டு அரசியல் அனாதைகளாக்கப் பட்டபோது - "நமக்கு விமோசனம் உண்டு; தமிழரசு பெற்றால் நமது துன்பங்கள் நீங்கும்" என அவர்களுக்கு ஒளி காட்டி வழி காட்டிய பெருமை - அவரது “தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு, பாழ்பட்டு நின்ற தமிழ் பேசும் இனத்தை - அவர்கள் தெறிகெட்டு, நாலாபுறமும் ஓடாது தடுத்து வாழ்வித்த மகான்" என அவரை நமது சரித்திரம் போற்றும் என்பதில் ஐயமில்லை. இதுகாறும் நமது கட்சியையும், தமிழரசு இயக்கத்தையும் வளர்ப்பதற்கு அவர் செய்த

Page 117
-
சேவைகள், தியாகங்கள் அளப்பில. கட்சி வேலைகளிலும் தலைமைப் பதவியிலுங்கூட, வேறு வேறு மக்களையும் பயிற்றுதல் அவசியம் என்ற ஒரே நோக்கத்துக்காக இம்முறை தலைமைப் பதவியேற்பதில்லையென அவர் முடிவு செய்த போதும், தொடர்ந்து நமது கட்சியைக் "கண்ணை இமை காப்பதுபோல்' என்றும் காத்து நிற்பார் என்பது திண்ணம். பல்வேறு விதங்களில், பல்வேறு துறைகளில் கட்சிக்கும் தமிழ் பேசும் இனத்துக்கும் அரிய சேவைகள் புரிய அவர்க அவாவுகிறார் என்பது எனக்குத் தெரியும்.
இத்தகைய அரும் பெரும் தலைவருக் கும் அடுத்தபடியாக என்னைக் கட்சியின் தலைவராகத் தெரிந்து கெளரவித்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன். அதே சமயத்தில், தமிழ் பேசும் மக்களின் நிலை வரவர மோசமாகிக் கொண்டு வரும் இந்தக் கட்டத்தில், இப் பதவியின் பொறுப்பையும் - அதனால் ஏற்படும் வேலைச் சிரமத்தையும் நன்றாக உணருகின்றேன். இவ்வித பொறுப்புக்கும் வேலைக்கும் சிறிதும் தகுதியற்றவன் என்பதை உணர்ந்த போதும், கட்சியிலுள்ள பல உழைப்பாளிகளின் இடைவிடா ஊக்கமும் ஒத்துழைப்பும், அத்துடன் நம் அரும் பெருந்தலைவர் திரு. S.J.V. செல்வ நாயகம் அவர்களின் ஆசியும் புத்திமதியும் கட்சியின் வேலைகளிலும் - அவரின் கூடிய சேவையும் என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையினாலேயே தலைமைப் பதவியை ஏற்கச் சம்மதித்தேன்.
நமது இரண்டாவது மகாநாட்டிற்குப் பின் நிகழ்ந்த அரசியல் சம்பவங்கள் பற்றியும், அவற்றால் தமிழ் பேசும் இனம் எவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், நாம் இனி மேற்கொண்டு செய்ய வேண்டியன இவையிவை - கையாள வேண்டிய வழிவகை, உபாயங்களிவையென இங்கு குறிப்பிடுவது அவசியம்.
பிரஜாவுரிமை
இலங்கை வாழ் தமிழ் பேசுமினத்தின் வலிமையைக் குறைப்பதற்குச் செய்யப்பட்ட

06
சதிகளில் அதிமுக்கியமானது, தமிழ் பேசும் மக்களில் ஏறக்குறைய அரைவாசிப் பகுதியினரை பிரஜாவுரிமையும், வாக்குரிமையும் பறித்து அரசியல் அனாதை களாக்கி, அவர்களை நாடு கடத்த முயற்சிப்பதேயாகும். இம் முயற்சியில் முதற்படி - இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டம் இயற்றப்பட்டபோது அமைக்கப் பட்டது. இரண்டாவதுபடி குடியேற்ற, வெளியேற்றச் சட்டத்தால் அமைக்கப் பட்டது. மூன்றாவதுபடி இந்திய - பாகிஸ் தானிய வாசிகள் பிரஜா பதிவுச் சட்டமாகும். இந்தக் கட்டத்தில் தான் - முன்னைநாள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு, 'ஒத்துழைப்பாளர்கள்' அன்றைய ஆட்சியாளரின் திட்டங்களை ஆதரிக்க, தமிழினத்தின் விடுதலையை விரும்பினோர் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினர். இதிலிருந்து தமிழரசுக்கட்சி ஸ்தாபிதமானது யாவருமறிந்ததே! அடுத்தபடி பிரஜாவுரிமையற்றோர் - வாக்குரிமையற்றோராக்கப்பட்டனர்.
இந்திய-பாகிஸ்தானிய பிரஜா பதிவுச் சட்டம் நடைமுறையில் வெகு மோசமாக அமுல் நடத்தப்பட்டு வந்தது. மனுக்களை நிராகரிக்கும் ஒரு நோக்கமே பதிவுக் கமிஷனருக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. அல்லாவிடில், சமாதான நீதிவான் தெளிவாகக் கையொப்பமிடவில்லை; எந்தப் பகுதிக்குச் சமாதான நீதிவான் என்பதைக் குறிக்கவில்லை; சமாதான நீதிவான் விசுவாசப் பிரமாணம் செய்யவில்லை; மனுதார் ஓர் இடத்தில் "றாமசாமி” என்றும், சில காலத்தின் பின் "ராமசாமி” என்றும் ஒப்ப மிட்டார். மனுச் செய்யும்போது கையொப்பமிடாது விரலடையாளமிட்ட வர், இப்போது கையொப்பமிடத் தெரிந்து கொண்டாரே! என்ற இவை போன்ற போலிக் காரணங்களுக்காக மனுக்கள் நிராகரிக்கப்படலாமா?
இதுமட்டுமல்ல, பிரஜா பதிவு
மசோதாவில் - ஒரு கூடிரத்தின் கருத்தை யொட்டி ஆட்சேபம் எழுந்தது. மனுதார்

Page 118
1. ஒருவர் தன் குடும்பத்தினர் உரிமை கொடுக்கும் வாசகால முழுவதும் (Residence during qualifying period) gaoilet) sugai) வசித்திரா விட்டாலும், விண்ணப்ப காலத்தில் இவ்விடம் வசித்தால் தாம் பிரஜா வுரிமை பெறுவதற்கு சட்டம் இடம் தருகின்றதென வாதாடினார். அவர் கட்சி சரியானதென்று சுப்பிரீம் கோர்ட்டில் தீர்ப் பானது. பதிவுக் கமிஷனரின் அப்பீல் காரணமாக, மேற்படி தீர்ப்புப் பிரிவுக் கவுன்சிலிலும் ஊர்ஜிதமாயிற்று. உடனே அரசினர் சட்டத்தையே திருத்திக் கொண்ட னர்! அதுவும் பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட காலமுதல் - திருத்தச் சட்டம் அமுலி லிருந்ததாகச் சட்டம்
5LDSI உறவினருக்குப் Lu 60Tb அனுப்புவதற்காகத் (வேறு வழியில்லை என்ற நிர்ப்பந்தத்தால்) தாம் இலங்கையில் தற்காலிக வாசி என மனுதார் குறிப்பிட்டிருந் தால், அதற்காக மனுவை நிராகரித்துவிடக் கூடாதென்று சுப்பிரீம் கோர்ட்டுத் தீர்ப்புக் கூறிய பின்னும், இக்காரணத்துக்காக மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன. சமீபத்தில், இரண்டு நீதியரசர்கள் சுப்பிரீம் கோர்ட்டின் முன்னைய தீர்ப்பை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள், இத்தீர்ப்புக் கெதிராகவும் சீமைக்கு அப்பீல் செய்யக் கமிஷனர் முயற்சிகள் செய்து வருவதாகவும், பிரிவுக் கவுன்சில் தீர்ப்பு சுப்பிரீம் கோர்ட்டுத் தீர்ப்பை ஆதரித்தால், இன்னும் ஓர் முறை சட்டம் திருத்தப்படும் என்றும் பத்திரிக்கை யில் படித்திருப்பீர்கள். இதனாலும் பதிவு பெற உரிமையுள்ளவர்களைப் பதிவு செய்வதில் இலங்கை அரசாங்கம் அக்கறை கொள் ள வி ல்  ைல யெ ன் பதும் , கூடுமானவரையில் பதிவு செய்வதாகப் பாசாங்கு செய்து கொண்டு, மனுக்கள் அனைத்தும் நிராகரிப்பதே அரசாங்கத்தின் முழுநோக்கம் என்பதும் தெளிவாகின்றது.
பிரஜா பதிவு பற்றி அதிசயமான விஷயம் என்னவென்றால், மனுதார்கள் தாம் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் (Proof of indian Origin) என்பதை ருஸ”ப் படுத்தவில்லை என்ற காரணத்தைச் சொல்லி, அநேக மனுக்களை நிராகரித்தார்கள். அதே மூச்சில்,

7
நிராகரிக்கப்பட்ட மனுக்களை அனுப்பியவர் கள் அனைவரும் இந்தியர்கள் என்றும், அவர்கள் இந்தியர்களாகப் பதிவுபெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்கள். இந்தியாவிலிருந்து வந்தேறு குடிகள் என்பது ருஸ்" வாகவில்லையென்று நிராகரிக்கும் நீங்கள், எப்படி அவர்களை இந்தியர்களாகப் பதிவு செய்யும்படி கேட்கலாம் என்று இந்திய ஹைக்கமிஷனர் கேட்டதும், இப்போது பதிவுக் கமிஷனர் இந்தக் காரணத்துக்காக மனுக்களை நிராகரிக்கும் வேலையை நிறுத்திக் கொண்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைப் பற்றிச் சில வார்த்தை கள் கூறவிரும்புகிறேன். பிரஜாவுரிமை முதலிய விஷயங்களில் முதன் முதலாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.18-1-1954இல் தான். காலஞ்சென்ற D.S.சேனநாயகாவுக்கும் பண்டித நேருவுக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளிலும் கடிதப் போக்குவரத்திலும் உடன்படிக்கை ஏற்படாததும்; இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் விருப்பத்திற்கு மாறாகவும், இங்கு வாழும் எட்டு இலட்சம் மலை நாட்டுத் தமிழர் விருப்பத்திற்கு மாறாகவும் பிரஜாவுரிமைச் சட்டங்கள் இயற்றியதும் யாவருமறிந்ததே. பின்னர் திரு. டட்லி சேனநாயகாவுக்கும் பண்டித நேருவுக்கு மிடையில் நடந்த பேச்சுவார்த்தைகளும் முறிந்து போயின. ஆகவே 1954இல் உடன் படிக்கையேற்பட்டு, ஒப்பந்தமும் கைச்சாத் திடப்பட்டது சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறவேண்டியதாகும்.
இவ்வொப்பந்தத்தின் முக்கிய அமசங்களாவன :
1. g76irafluff girl gift (Aliens Register) - பிரஜாவுரிமையற்றவர்களாய், இருபத் தொரு வயதிற்கு மேற்பட்டவர்களாய் இலங்கையில் வசிக்கும் எல்லோருடைய பெயரையும் ஓர் இடாப்பில் பதிவு செய்ய இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொண்டது. அரசினர் இந்த ஜாபிதா தயாரிக்க எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

Page 119
- 1
2. அவ்வித ஜாபிதாவில் பெயர் இல்லாமலும், வாக்காளர்கள் இடாப்பில் பெயர் இல்லாமலும் இலங்கையில் காணப்படும் இந்தியமொழி பேசும் எவரையும் - (தமிழும் ஓர் இந்தியமொழி
இலங்கை மொழியல்ல!!) சட்ட விரோதமாகக் குடியேறியதாகக் குற்றஞ் சாட்டலாம் சாதாரண வழக்கில்.
("கள்ளத்தோணி" ) எதிரியே தான் நிரபராதியென இவ்வழக்கில் நிரூபிக்க வேண்டும். இதைப் பற்றி விளக்கம் தருகையில் - பாராளுமன்றத்தில் நமது பிரதமர் ஸர் ஜோன் கொத்தலாவலை பின் வருமாறு கூறினார். "என் பெயர் வாக்காளர் இடாப்பு எதிலும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னைப் பிடித்து உன் பெயரென்ன? என்று கேட்பார்கள். நான் கொத்தலாவலை என்று பதிலளிப்பேன்! (பிரதமர் பதில் சிங்களத்திலோ ஆங்கிலத்தி லோ என்று குறிப்பிடவில்லை. இலங்கை மொழியாகிய சிங்களத்தில் தான் இந்தச் சம்பாஷணை நிகழும் என்று நாம் எதிர்பார்க்கலாம்) உடனே என் பெயரை வாக்காளர் இடாப்பில் சேர்க்க ஏற்பாடு செய்வார்கள். ஆனால் இராமசாமியைப் பிடித்தால் அவனில் வழக்குத் தொடருவார் கள். இதற்குக் காரணம், நமது பிரதமர் கூறாவிட்டாலும் இராமசாமி தமிழன் - இந்தியமொழியொன்றைப் பேசுபவன் என்ற குற்றத்துக்காகவே இவ்வித பாகுபாடு ஏற்படு கின்றதென்பதை எவரும் மறுக்கமுடியாது. தமிழராகிய நாம் மறக்கவும் கூடாது. ஒருவனைக் "கள்ளத்தோணி" என்று குற்றஞ்சாட்டிக் கோர்ட்டில் விழக்குத் தொடர முன், அவனைப் பற்றிய தகவல்களை இந்திய ஹைக்கமிஷனருக்குக் காண்பிக்கவேண்டும். ஒப்பந்தத்தில் இது எதற்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்பதற்கும் நமது பிரதமர் விளக்கம் தந்தார். ஒருமுறை யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரையும் "கள்ளத் தோணி" என்று குற்றஞ்சாட்டி நாடு கடத்திவிட்டார்களாம்! பிரதமர் கூறிய அதே வார்த்தைகளைக் கூறுகிறேன்."Thatarangement is necessary because we once deported a Jafna Tamil.“ 5-3-1954 Lim um ElöLosárp நடவடிக்கை 3274ஆம் பத்தி (Hansard5-3-1954

8
Column 3274) 60 ut'i பார்க்கவும். அன்னியர்கள் இடாப்புத் தயாரிக்க ஒருவித முயற்சியும் செய்யாதிருந்தாலும், குடியேற்றச் சட்டத்திருத்த மசோதாவானது - கள்ள மாகக் குடியேறியதாகக் குற்றஞ்சாட்டப் பட்டவர்களே - தாம் நிரபராதியென நிரூபிக்கவேண்டும் என்ற ஷரத்துடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிவிட்டது!
3.பிரஜா பதிவு பெறுவோரை விசேஷ தொகுதியில் புகுத்தி, அவர்களுக்குப் பொதுத் தொகுதிகளில் வாக்குரிமையில்லாது - தனித் தொகுதி மூலமே பிரதிநிதிகளைத் தெரியும் உரிமை கொடுப்பதென்றும், இவ்வித ஒழுங்கு பத்து வருஷங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் ஒப்பந்தத்தில் கண்டிருக் கிறது. பிரதேச மொழியைப் பற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது தவறென்று டில்லியிலிருந்தே முணுமுணுத்தார் ஸர் கந்தையா வைத்தியநாதன் மந்திரியார். அதற்கப்புறம் இவ்விஷயத்ேைய அவர் மறந்துவிட்டார். அவர் வேறு என்னதான் செய்யமுடியும்?
சிறுபான்மையினர் ժռւգ-Ամ பிரதிநிதித்துவம் கோரினால் - தமிழ் பேசும் மக்கள் தமிழரசு கோரினால் - அது வகுப்புவாதம் என்ற வரட்டுக் கூச்சல் எழுப்பும் ஆட்சியாளர். தாமே தனித் தொகுதி அமைக்க முன் வந்தது வகுப்புவாத மல்லவா? பதிவுப் பிரஜைகள் ஏன் பொதுத் தொகுதிகளில் வாக்களிக்கலாகாது? அன்றியும் பதிவுப் பிரஜைகள் சிங்களம் பயிலவேண்டுமென ஆட்சியாளர் விதிப்பது எதற்காக? தமிழ் பேசும் இனம் இன்றைய ஆட்சியாளர் விரும்பாத ஒர் இனம். அவர் களைத் தங்கள் தொகுதிகளில், தங்களுடன் சம உரிமையும் அந்தஸ்தும் உடைய வாக்காளராகக் கூட வைத்துக் கொள்ளு வதற்கு இன்றைய ஆட்சியாளர் விரும்ப வில்லை. தமிழ் பேசும் மக்களை ஒதுக்கித் தள்ளுவதே ஆட்சியாளரின் நோக்கம் என்பது தெளிவு.
பதிவுப் பிரஜைகளுக்கெனத் தனித் தொகுதி அமைப்பதற்கும், அவர்கள் பாராளுமன்றத்திற்கு நாலு பிரதிநிதிகளைத்

Page 120
(
தெரிந்தனுப்புவதற்கும் அரசியற் சட்டமும் திருத்தப்பட்டது; வேறு சில சட்டங்களும் இயற்றப்பட்டன. அந்தச் சட்டங்களின்படி அரசாங்கம் இன்றே தெரிவு நடத்தி, இப் போதைய பிரதிநிதிகள் சபையிலேயே - பதிவுப் பிரஜைகள் நாலு பிரதிநிதிகளையும் வைத்துப் பாராளுமன்றத்தை நடத்தச் சட்டம் இடந் தருகிறது. ஆனால் இந்தச் சட்டத்தை - வேண்டுமென்றே அரசாங்கம் நடைமுறையிற் கொண்டு வராமலிருக்கிறது.
4. இந்திய அரசாங்கம் இலங்கையில் வசிக்கும் இந்திய மக்களை, இந்திய அரசியற் சட்டத்தின் 8 ஆவது கூடிரத்துக்கமைய இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்து கொள்ள, இந்திய ஹைக்கமிஷனர் காரியாலயத்தில் சந்தர்ப்பம் அளிக்கும். இரண்டாவது டில்லி மகாநாடு
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டுச் சில மாதங்களில் எல்லாம், இந்திய ஹைக் கமிஷனர் இந்தியர்களைப் பதிவு செய்யாது விடுகிறார் என்ற புகார்கள் பலமாக அரசாங்கக் கட்சியிலும் அரசியல் வட்டாரங்களிலும் அடிபட்டது. இரண்டாம் முறையாக டில்லியில் மகாநாடு கூடியது. இந்த மகாநாட்டில், இலங்கை அரசாங்கம் பிரஜா பதிவு விஷயமாக நடந்துகொண்ட கபட நாடகம் வெட்ட வெளிச்சமாக்கப் பட்டது. பதிவுக் கமிஷனர் விடுத்த இரகசிய சுற்றறிக்கைகள் புகைப்பட மூலம் வெளிப் படுத்தப்பட்டன. வேறு இரகசியங்கள் வெட்ட வெளியானது கண்டு, அவ்வித சுற்றறிக்கைகளை வாபஸ் பெறுவதென்றும், நுணுக்கம் பிடித்து நிராகரித்த மனுக்களைத் திரும்பவும் பரிசீலனை செய்வதென்றும் இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இதே மகாநாட்டில், இலங்கையின் சார்பில் சென்ற கோஷ்டி - "பிரஜா பதிவு கிடைக்காத அத்தனை பெயரையும் இந்தியப் பிரஜைகளென இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தது. இந்திய அரசாங்கமோ - தம் அரசியற் சட்டத்தின் 8 ஆவது கூடிரத்துக்கமைய இந்தியப் பிரஜைகளைப் பதிய முடியுமே யன்றி, இலங்கைப் பிரஜைகளாக

9
ஏற்றுக்கொள்ளப்படாத எவரையும் இந்தியப் பிரஜையாக ஏற்றுக் கொள்ள முடியாதெனக் கண்டிப்பாகக் கூறிவிட்டது. இதனால், இலங்கைப் பிரஜைகளுமில்லாமல் இந்தியப் பிரஜைகளுமில்லாமல் - இடையே நாடற்றோர் என்னும் பாகுபாடு ஏற்படும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாடற் றோர் தொகையைக் குறைப்பதற்காக, கூடுமான தொகையினரை இந்தியப் பிரஜை களாகப் பதிவு செய்யும்படி தூண்டுதல் செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு உரிமையுண்டென்று ஒப்புக்கொள்ளப் பட்டது.
இரண்டாவது மகாநாட்டின் பின்
இரண்டாவது மகாநாட்டின் பின்னும், அர்த்தமற்ற நுணுக்கங்களுக்காக மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. முன்னையைவிட, அதிகப்படியான மனுக்கள் நிராகரிக்கப் பட்டிருக்கின்றன. பதிவுக் கமிஷனர் அங்கீகரிக்கத் தயாராயிருக்கும் ஒரு சில மனுக்களுக்குக்கூட, திரிசிங்கள பெரமுனை யார் சார்பில் - பெரமுனையைச் சேர்ந்த ஒரு சிலரால் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது. நிராகரிக்கப்பட்ட மனுதார்களை இந்தியர் களாகப் பதிவு செய்யவும் தூண்டுதல் செய்யப்படுகிறது. நுணுக்கங்களுக்காக நிராகரிக்கப்பட்ட மனுக்களைப் புனராலோசனைக்கு எடுப்பதற்குச் சட்டம் திருத்த வேண்டும். "இம்மனுக்களைத் திரும்பவும் விசாரணைக் கெடுப்பதற்காக என்ன செய்திருக்கிறீர்கள்"? என்று நான் கேட்ட பொழுது, பிரதமர் பதிலாகச் சொன்னது: "மனுதார்களே, புனராலோசனை செய்ய வேண்டுமென்று கமிஷனருக்கு மனுச் செய்ய வேண்டியதென்றும், கமிஷனர் மறுத்தால் சுப்பிரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்து கொள்ளலாமென்றும், அரசாங்கம் இதையொட்டி ஒன்றும் செய்வதற்கில்லை” என்றும் கூறினார். இதனால் தங்கள் கபடங்கள் எல்லாம் வெளியான பின்னும், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைச் சரியான முறையில் நடத்த இலங்கை அரசாங்கம் இன்னும் விரும்பவில்லை என்பது வெளிப்படை கொத்தலாவலை மந்திரிசபை யின் போக்கை வெகு அழகாகத் தமிழ்

Page 121
-1 நாட்டின் சிறந்த வாரப்பத்திரிக்கைகளில் ஒன்றான கல்கி - ஓர் அரசியல் (காட்டூன்) கேலிச் சித்திரத்திற் சித்திரித்திருந்தது. பிரதமர் கொத்தலாவலை இரண்டு தலைகளுடன் காட்சி அளிக்கிறார். ஒருதலை - பண்டித நேருவைப் பார்த்து, "இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நேர்மையாக அமுல் நடத்துகிறோம்" என்று
சொல்லுகிறது. மற்றத்தலை - பதிவுக் கமிஷனரைப்பார்த்து, “கூடிய மட்டில் மனுக்களை நிராகரித்துவிடு” என்று
கட்டளையிடுகிறது. கேலிச் சித்திரமாயிருந் தாலும், "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேகம்” தன்மையை எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டுகின்றது! போதாக் குறைக்கு இலங்கைப் பிரஜாவுரி மைச் சட்டம் திருத்தப் பட்டிருக்கிறது. திருத்திய சட்டத்தின்படி, பதிவுப் பிரஜையின் பதிவை ரத்துச் செய்வதற்குப் பிரதம மந்திரிக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. ஏமாற்றிப் பதிவு பெற்றது போன்ற காரணங் களைக் கூறி, பிரதம மந்திரி பிரஜாவுரிமை யைப் பறிக்கலாம். இவ்வித சட்டங்களினால் பதிவுப் பிரஜைகளைப் பயமுறுத்தி - அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிவாக இருக்கச் செய்யலாம் என்பது அரசாங்கத்தின் கருத்து.
நாடற்றோர் பிரச்சினை
பெருவாரியான மனுக்கள் நிராகரிக்கப் பட்டு வருவதால், நாடற்றோர் தொகை அதிகரிக்கும் என்பது வெளிப்படை. இவர்கள் அனைவரையும் இந்தியர்களாகப் பதிவு செய்யும்படி, நயமாகவோ அன்றி மிரட்டிப் பயமுறுத்தியோ தூண்டுதல் செய்ய அரசாங்கம் முனைந்துள்ளது. இதற் கென விசேஷ உத்தியோகஸ்தர் ஒருவரையும் (Liason Officer) - grfsilson GLIUCup606TuSci) முக்கியஸ்தர் ஒருவராகப் பார்த்துத் தெரிந்து நியமித்துள்ளது. தமிழ் பேசும் மக்களை இந்தியர்களாகப் பதிவு செய்வித்து, அவர் களை நாட்டிலிருந்து விரட்டுவதற்கு அரசாங்க இலாக்காக்கள் பலவற்றுக்குக் கட்டளைகள்! - இவ்வேலைகள் துரிதமாக நடைபெறச் செய்யப் பொதுப் பணத்தில் திரி சங்கள பெரமுனையைச் சேர்ந்த ஒருவருக்கு அரசாங்க உத்தியோகம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசும் பொழுது

O
நமது பிரதமர் ஸர் ஜோன் கொத்தலாவலை GoFnTGTGGTnTrir : "We have got about a Million indians in this country and we cannot afford to have them. We must therefore by love and affection send them away." (Hansard) 5-3-54 coloumn 3271. “ஏறக்குறையப் பத்து லட்சம் இந்தியர்கள் இந்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை நாம் இங்கு வைத்திருக்கமுடியாது. ஆன படியால், அவர்களை அன்பாகவும் - ஆதரவாகவும் அனுப்பிவைக்க வேண்டியது தான்” அரசாங்கத்தின் உண்மை நோக்கத்தை இவ்வளவு தெளிவாகப் பிரதமரே சொல்லி வைத்திருக்கும்போது, அரசாங்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கோ அல்லது மிரட்டல் களுக்கு மசிந்தோ இந்தியர்களாகப் பதிவு செய்வோர், கூடிய சீக்கிரத்தில் இந்த நாட்டி லிருந்து வெளியேற்றப்படுவர். அன்றியும் நாடற்றோர் தொகை அதிகமாயிருந்தால் இது ஒர் பிரச்சினையாகவே இருக்கும். நாடற் றோர் விஷயத்தில் பலரும் அக்கறை கொள் வர். பிரஜாவுரிமைச் சட்டங்கள் திருத்தி யமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எந்த நாட்டுக்கும் நாடற்றோர் தொகை அதிகரிப்பது நல்லதல்ல. இதனால் நாடற் றோர் விஷயம் அடிக்கடி பரிசீலனைக்கு வரும். ஆகவே, கூடுமானவரை எவருமே இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்ய மனுச் செய்ய வேண்டாமென்று - பகிரங்கமாக இந் நாட்டில் வசிக்கும் தமிழ்பேசும் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளுகிறேன். அவ்விதம் பதிவு செய்யாது, "எவ்வித கஷ்ட மேற்பட்டாலும் இந்நாட்டிலேயே இருப்பது என்று பிடிவாதமாக இருந்தாற்றான், சிறிதும் நீதியற்ற பிரஜாவுரிமைச் சட்டங்களை - என்றோ நமக்குச் சாதகமான முறையில் மாற்றுவிக்க முடியும். ஆகவே தமிழ் பேசும் மக்கள் எவரும் இந்தியப் பிரஜையாகப் பதிவு செய்யக் கூடாதென்பதை நமது கட்சியும் பிரசாரம் செய்யவேண்டும். இதில் இலங்கை ஜனநாயக காங்கிரஸ"ம் ஈடுபடுமானால், இரு ஸ்தாபனங்களும் சேர்ந்து பிரசாரத்தை நாடு முழுவதும் - முக்கியமாக மலை நாட்டில் செய்யவேண்டும். இதற்கான வழிவகைகளை நமது அடுத்து ஆண்டு வேலைத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Page 122
1. தமிழ்நாட்டில் சிங்களக் குடியேற்றம்
தமிழ் பேசும் இனத்தின் அரசியற் பலத்தைக் குறைப்பதற்கு ஆட்சியாளர் கையாளும் மற்றத் தந்திரம். தமிழ்நாட்டில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் செய்வதே. இம் முறையைத் தொடர்ந்து நடத்துவதால், தமிழ் பேசும் மக்களை அவர்கள் பெரும்பான்மையாகத் தலைமுறை தலை முறையாக வசித்து வந்த பிரதேசங்களிற் கூடச் சிறுபான்மையனிராக்கி விடமுடியும். தமது தாயகத்திலேயே சிறுபான்மையினராகி விட்டால். பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறையும். எந்தப் பிரதேசத்திலாவது தமிழ்மொழி பெரும்பான்மை மொழியாக இருக்காது. தமிழ்நாட்டில் சிங்களக் குடியேற்றத்தை ஆரம்ப முதலிலிருந்து தமிழரசுக் கட்சி தான் கண்டித்து வந்திருக்கிறது. சமீபத்தில் அரசாங்கத்தை ஆதரிக்கும் சில தமிழ் பேசும் பாராளுமன்ற அங்கத்தவர்களும் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களுள் மூதூர்ப் பிரதிநிதி ஜனாப் முகம்மது அலி அவர்கள் அதிக சிரத்தை காட்டியுள்ளார். மூதூர்த் தொகுதியிலுள்ள அல்லை திட்டத்திலும் கந்தளாய் திட்டத் திலும் - சிங்களக் குடியேற்றம் நடைபெறாது தடுப்பதற்கு அவர் பிரயத்தனம் செய்திருக் கிறார். ஆயினும் சென்ற வருடத்தில் கொடு பட்ட காணித் துண்டுகளில்?, பங்கு சிங்கள மக்களுக்கும் "I, பங்கு மாத்திரமே தமிழ் பேசும் மக்களுக்கும் கொடுக்கப்பட்டது. திருகோணமலை அரசாங்க உப பகுதியில் (Trincomalee District) giLisbdi (519 Gupp உத்தியோகஸ்தர்களேயில்லை. தமிழ்நாட்டில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவதைக் கண்டித்து, இதுவரை சிங்களர்களுள் எந்த இடது சாரித் தலைவராவது பேசியதில்லை. அரசாங்கத்தை ஆதரிக்கும் எந்தச் சிங்களப் பிரதிநிதியும் பேசியதில்லை. தமிழரசுக் கட்சியும், அரசாங்கத்தை ஆதரிக்கும் இரண்டொரு தமிழ் பேசும் பிரதிநிதிகளும் மட்டுமே கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள். இதை, ('ஒற்றையாட்சி

11
முறையிலேயே எங்களுக்கு இன்னும் நம்பிக்கையுண்டு" என்று கூறும் தலைவர்கள் சிந்திப்பார்களா?) "தோழர்கள் ஆட்சி வந்தால் தமிழ் பேசும் இனம் கதி மோட்சமடையும்" என்று பிரசாரம் செய்யும் ஒரு சிலரின் நம்பிக்கை வெறும் பகற்கனவாகவே முடிந்துவிடும். தமிழ்ப் பிரதேசங்களைத் தமிழர் ஆட்சி செய்தால் சிங்களக் குடியேற்றம் என்ற பேச்சே எழுதற்கு இடமுண்டா? என்பதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
நமது 'ஒத்துழைப்புப் பிரதிநிதிகள் தாம் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, நமது பிரதேசத்தை வளம்படுத்த வழி தேடுகிறோம் என்கிறார்கள். கட்டுடைந்த பழைய குளங் களைப் புதுப்பித்துக் கட்டுகிறார்கள். அணித் தாக உள்ள காடு கெடுத்து நாடாக்கு கிறார்கள். இதனால் தமிழ் நாட்டை ஒரளவு சீர்படுத்துகிறார்கள் என்று ஒத்துக் கொள் வோம். ஆனால் அதே மூச்சில் சிங்களக் குடி யேற்றம் நடந்து, நாடே பறிபோய் விட்டால்? - ஓர் பகுதியில் தபால்கந்தோர், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் முதலியன அமைக்கிறார்கள். ஆனால் இவற்றைச் சிங்களக் குடியேற்றத் தின் பயனாக அனுபவிப்பது சிங்கள மக்களாக இருந்தால்?
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை பூக்கார் அறிவுடை யார்.
என்பது திருவள்ளுவர் வாக்கு. நமது 'ஒத்துழைப்பாளர் சிறுசிறு நன்மைகளுக்காக நாட்டையே பறிகொடுக்கும் வேலையில் - நமது புராதனமான தொழில், கலாசாரம், பண்பாடு ஆகிய முதலுக்கே ஆபத்து வரும் பாதையில் செல்லுகிறார்கள். இவர்கள் கண்கள் எப்பொழுது தான் திறக்குமோ! தமிழ் நாட்டில் சிங்களக் குடியேயேற்றத் தைத் தொடர்ந்து நடைபெற விட்டால், ஈற்றில் தமிழரசு பெறுவதே இயலாது போகலாம். ஆகவே தமிழ்நாட்டில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதற்குத் தீவிர முயற்சி கள் செய்ய வேண்டியது அவசியம். தமிழ் மக்கள் நெருக்கமாக வசிக்கு பிரதேங்களிலிருந்து - பெருந்தொகையாகக் குடியேற்றத் திட்டங்கள் அமைந்துள்ள சன நெருக்கமில்லாத பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இதற்குத் தமிழ் பேசும் மக்களிடையே பிரசாரம் அவசியம்.

Page 123
ーI
இன்னுமோர் விஷயம் அடிக்கடி கூட்டங்களில் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் இன்றையவரை நமது கட்சி ஊழியர் கள் இவ்விஷயத்தில் ஒரு சிரத்தையும் காட்டியதாகத் தெரியவில்லை. நமது கட்சி ஊழியர்கள் வெறும் பேச்சு வீரர்களா..? செயலில் இறங்க மாட்டார்களா..? என்று எத்தனையோ முறை நான் சிந்தித்து ஏங்கியிருக்கிறேன். மீண்டும் என் யோசனை யை இதோ கூறுகிறேன். அவற்றை நடை முறைக்குக் கொண்டுவர ஊக்கமுள்ள ஊழியர்கள் தோள்கொடுத்து உதவுங்கள்! கிராமம் கிராமமாகத் திரிந்து, தமிழ் நாட்டில் நிலமில்லாத - அல்லது சீவியத்திற்குப் போதியஅளவு நிலப்பரப்பு இல்லாதவர் களின் பெயர், வயது, தொழில், அவர்கள் குடும்பத்தினர் தொகை, எந்த இடத்தில் குடியேற விரும்புகிறார்கள் என்னும் புள்ளிவிபரங்களைச் சேகரியுங்கள். இவ்விதம் வீடுவீடாகப் போய் மக்களுடன் பேசும் பொழுது, அவர்கள் ஏன் இந்த விபரங்கள் தேவை? என்று கண்டிப்பாக விசாரிப்பார் கள். தமிழரசுப் பிரசாரம், தமிழ்நாட்டில் நெருக்கமில்லாத பாகங்களில் குடியேறு வதன் அவசியம் முதலியவற்றைப் பற்றியும் பிரசாரம் செய்யவும் முடியும். விருப்ப மானவர்களை நமது கட்சி அங்கத்தவர் களாகவும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கிராமம் ஒவ்வொன்றிலும் கட்சிக் கிளை யொன்றும் தோன்றும் கட்சிக் கிளையில் ஊழியர்கள் காலத்துக்குக்காலம் தங்களிட முள்ள புள்ளி விபரங்களைக் கொண்டு, குடியேற்றத் திட்டங்களில் தங்கள் கிராமத்தவர்கட்கு இடம் தேவையென்று கிளர்ச்சி செய்யவும், மக்களுக்கு இடம் பெற்றுக் கொடுக்கவும் முடியும். இத் திட்டத்தை இவ்வாண்டிலாவது நிறைவேற்று வோமாக! அவ்விதம் நிறைவேற்றுவோம் என்று, இங்குள்ள ஒவ்வொருவரும் பிரதிக்ஞை செய்யுங்கள்! அதன்படி நடவுங்கள்!
மொழிப் பிரச்சினை
பல்வேறு மொழிபேசும் இனங்கள் வாழும் நாட்டில் "சமஷ்டி அரசியல்' ஏற்படுவதுதான் முறை. அன்றியும்,

2
ஒற்றையாட்சியும் ஒரு அரசகரும மொழியும் இருந்துவரும் நாடுகளில், அரசகரும மொழியல்லாத மொழிகள் காலகதியில் இறந்தொழிந்தது கண்கூடு. உதாரணமாக ஸ்கொற்ச் மொழியை எடுத்துக் கொள்ளலாம். என்று ஒற்றையாட்சியின்கீழ் ஸ்கொற்லாந்து தேசம் வந்ததோ - அன்று ஸ்கொற்ச் மொழிக்கு அழிவு தொடங்கியது. பல மொழிவாரி இனங்கள் வாழும் இந்தியா, பாகிஸ்தான், ருஷ்யா, கனடா, தென் ஆப்பிரிக்கா, சுவிற்சர்லாந்து முதலிய நாடுகளில் எல்லாம் சமஷ்டி அரசியல் முறையே அமைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நமது பிரதமர், இலங்கையைச் சுவிற்சர்லாந்துக்கு ஒப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டது. இலங்கை (பாதுகாப்பு விஷயத்தில்) சிறிய தேசமாக விருப்பதால் படைபலம் திரட்ட முடியாதென்றும் - சிறிய தேசமாகிய சுவிற்சர்லாந்து எவ்வித படைபலமுமின்றியும் யுத்த முஸ்தீபுகளில் ஈடுபடாமலும் இருப்பதுபோல் - மற்ற நாடுகளும் சுவிற்சர்லாந்தின் சுதந்திரத்திற்குப் பங்கம் விளையாது நடப்பதுபோல் - அவ்வித ஏற்பாடு இலங்கையிலும் அமையவேண்டும் என்ற கருத்துடன் கூறினார். ஆனால் சுவிற்சர்லாந்து தேசத்திலுள்ளது போன்று, இலங்கைக்கும் சமஷ்டி அரசியல் முறை அமைக்க முன் வருவாரா?
நம் நாட்டில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக வேண்டுமென்று சில பிற் போக்கு வாதிகள் கருதுகிறார்கள். இது சிறிதும் விரும்பத்தக்கதல்ல. நாட்டு மக்கள் பேசும் மொழிகளே - ஆட்சி மொழியாகும் உரிமையுடையன. இதுவே நம் கட்சியின் திடமான கருத்துமாகும்.
நமது நாட்டுக்கு ஒரு ஆட்சிமொழியா? இரு ஆட்சி மொழியா? என்ற பிரச்சினையும் அடிபட்டு வருகின்றது. “ஒரு ஆட்சி மொழிக்குமேல் சின்னஞ்சிறு இலங்கைக்கு வேண்டியதில்லை” என்று சிலர் வாதிக் கிறார்கள். 'ஒரு ஆட்சி மொழி அமைவ தானால் அது சிங்களமாகவேண்டும்’ என்பதே பெரும்பான்மையோராகிய சிங்கள சகோதரர்களின் கருத்தாகும். ஆனால்

Page 124
[正
இதனைத் தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒருசில "ஒத்துழைப் பாளர்கள்', 'ஆங்கிலத்தை நாம் ஆட்சி மொழியாக ஏற்கவில்லையா? அது போல் சிங்களத்தையே ஆட்சி மொழியாக ஏற்போம். எப்படி ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தோமா - அதுபோல் இன்று சிங்கள சகோதரர்கட்கும் அடிமை செய்வோம்" என்று கூறக்கூடும். ஆனால், இதைத் தன்மானமுள்ள தமிழ் மகன் எவனும் ஏற்க மாட்டான்! பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யான் மறத்தமிழன்!
"இலங்கையில் தமிழும் சிங்களமும் சரிசம அந்தஸ்துள்ள ஆட்சி மொழிகளாக நமது அரசாங்கம் ஒப்புக்கொண்டு விட்டது” என்று தமிழ்ப் பிரதேசங்களில் 'ஒத்துழைப் புத் தம்பிரான்கள் தம்பட்ட மடித்துத் திரிகிறார்கள். ஆனால் இன்றைய ஆட்சியாளரும் அவர்களின் 'ஒத்துக் குழல்களும்’ மறைமுகமாகச் சிங்களத்தையே ஆட்சி மொழியாக்க முயல்வதைச் சில காரணங்கள் காட்டி விளக்க விரும்புகிறேன்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றிப் பேசியபொழுது, தமிழை இந்திய மொழி யாகக் குறிப்பிட்டதையும், பிரதேச மொழி பற்றி ஒப்பந்தத்தில் கூறப்பட்டதையும் குறிப் பிட்டேன். தமிழும் சிங்களமும் சம அந்தஸ் துடன் விளங்கும் ஆட்சி மொழிகளானால், தமிழை இந்தியமொழியாகக் குறிப்பிடவோ - பதிவுப் பிரஜைகள் தமிழ் மட்டும் தெரிந்தவர்களாய் இருத்தலால், அவர்களைத் தனித்தொகுதியில் பிடித்துத் தள்ளவோ நியாயமில்லை.
தமிழும் சிங்களமும் சரிசம அந்தஸ்துப் பெற்றால், இருமொழிகளையும் எல்லோரும் கற்றல்வேண்டும் என விதியேற்பட வேண்டும். அப்படியும் விதியேற்படவில்லை. சுயபாஷைத் திட்டத்தின்படி, தாய்மொழி மூலம் கல்வி பயிற்றப்படும் சிங்களர் - சிங்களத்திலும், தமிழர் - தமிழ் மூலமும் கல்வி கற்பர். ஆங்கிலம் இரண்டாவது கட்டாய மொழியாகிறது. சிங்களர் தமிழை விரும்பினால் கற்கலாம்;தமிழர் சிங்களத்தை

3.
விரும்பினால் கற்கலாம். இத்தனைக்கும், பொறுப்புள்ள சிங்களத் தலைவர் எவராவது - இதுவரை சிங்கள மக்களைத் தமிழ் கற்கும்படி கூறியதில்லை. இதனால், தமிழ் - தமிழ்ப்பிரதேசத்தில் மட்டுமே ஒருவேளை நடைமுறையில் ஆட்சி மொழியாக இருக்கலாம். சிங்களம் - சிங்களப் பிரதேசத்தில் ஆட்சிமொழியாக இருக்கும். இப்பொழுது நடைமுறையிலிருக்கும் திட்டத்தின்மூலம், தமிழ் பேசும் மக்கள் தமிழ்ப் பிரதேசங்களில் ஒதுக்கப்பட்டு, ஒற்றையாட்சி முறையால் அதிகாரமற்ற அனாதைகளாகத் தவிப்பர். நமது 'ஒத்துழைப்புத் தமிழர் இவ்வளவில் நின்று விடவில்லை. தமிழ் மக்கள் சிங்களம் கற்கவேண்டும். அவ்விதம் கற்றால்தான் சிங்களப் பிரதேசங்களில் உத்தியோகம் பார்க்க முடியும். ஆதலினால் சிங்களர் தமிழ் கற்றாலென்ன கல்லாதொழிந்தாலென்ன - "ஆர்குடி கெட்டாலும் நீ குடி மிளகுசாறு" என்பது போல, ஆர் கெட்டாலென்ன நீங்கள் சிங்களம் படியுங்கள் என்று போதித்து வருகிறார்கள். இதிலிருக்கும் -9|ւմn աւb என்னவென்றால், 5Rєu வருஷங்களுக்குப்பின் சிங்கள அரசியல் வாதிகள் பின்வருமாறு சொல்லுவர். "எங்களுக்கோ தமிழ் தெரியாது. உங்களுக்கோ சிங்களம் தெரியும். சிறிய இலங்கையில் இரண்டு ஆட்சி மொழிகளை வைத்து இடர்ப்படுவதிலும் பார்க்க, எல்லோருக்கும் தெரிந்த சிங்களம் ஒன்றையே ஆட்சிமொழியாக்குவோம்”. இவ்விதம் - சிங்களமே ஆட்சி மொழியாக வருவதற்கு நாம் வித்திடுவதாகின்றது.
சிங்களம் கற்கும் தமிழ் பேசும் மக்கள், சிங்களப் பிரதேசங்களில் உத்தியோகம் பெறுவது முடியாத காரியம். ஏற்கெனவே, பெரிய பதவிகள் வகித்து வந்த உத்தியோகஸ் தர் பலர் ஒழித்துக் கட்டப்பட்டனர். அவர்களுக்கு இழைத்த அநீதிகள் கண்டும், சுதந்திரம் அடைந்தபின் நம்நாட்டில் அரசாங்க உத்தியோகம் வகிப்பவருள் தமிழ் பேசும் மக்களின் விகிதாசாரம் தொடர்ச்சி யாகக் குறைந்து கொண்டே வருவது கண்டும் நாம் என்ன அறியக் கிடக்கிறது? இவற்றைக்

Page 125
கண்டுமா. சிங்களம் படித்தால் சிங்களப் பிரதேசத்தில் உத்தியோகம் கிட்டும் என்ற வீணாசை.? பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது, "தமிழும் சிங்களமும் ஆட்சி மொழிகளாக அரசியற் சட்டத்தைத் திருத்திப் பிரகடனம் செய்வேன்" என்று கூறினார். இந்த உறுதிமொழி கூறி ஆறு மாதத்திற்கு மேலாகியும், வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்பதற்கு ஒரு அறி குறியும் காணப்படவில்லை. தமிழும் சிங்கள மும் ஆட்சி மொழிகளாக இருப்பதனால், 'தாய் மொழி மூலம் கல்வி என்ற கொள்கையும் இருப்பதினால் இலங்கையில் தமிழ்ச் சர்வகலாசாலை - சிங்களச் சர்வகலாசாலை என இரு பல்கலைக் கழகங்கள் நிறுவுவது அவசியம் அன்றோ? தமிழ்ச் சர்வகலாசாலை நிறுவ ஏதாவது ஏற்பாடு உண்டா?
இன்றைய அரசாங்கம் உண்மையில் சுயமொழிகட்கு உயர்ந்த அந்தஸ்துக் கொடுப்பதாயுமில்லை. சுயபாஷை ஆசிரியர்கட்கு அளிக்கப்படும் வேதனமே இதற்குச் சான்று. அதுவும் பல்கலைக்கழகத் திற் பயின்று பட்டதாரிகளான வித்துவான் கட்கும் பண்டிதர்கட்கும் அளிக்கப்படும் வேதனம் - அவர்களை நிந்திப்பது போலவே அமைந்திருக்கிறது. இந்தநிலை மாற வேண்டும். இப்போது தேர்தல் தந்திரமாக வெளியிடப்பட்ட புதிய சம்பளத் திட்டத்திற் கூட, தலைமை ஆசிரியர்கட்குச் சிறு சலுகை காட்டப்பட்டிருக்கிறதேயன்றி - வித்துவான் கள், பண்டிதர்கள், சுயபாஷை ஆசிரியர்கள் போதிய சன்மானம் பெறவில்லை.
இதுகாறும் தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளைக் கூறி, எவ்விதம் இவற்றில் அரசாங்கத்தின் போக்குத் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் மோசமாகி வருகிற தென்பதைக் கூறினேன். இதர பிரச்சினைகளைப் பற்றியும் கூறி உங்களைத் தாமதிக்க நான் விரும்பவில்லை வரவர மோசமாகி வரும் நிலைமையைச் சமாளிக்க - நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை மட்டும் கூறி என் பேச்சை முடித்துக் கொள்வேன்.

4.
ஒன்று சேருங்கள்
தமிழ் பேசும் மக்களிடையே ஒற்றுமையில்லை - என்று பலரும் கூறுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டால்தான் அவர்களுக்கு விமோசனம் என்பது - எவரும் மறுக்க முடியாத உண்மை. ஒர் இலட்சியத் தை நாம் அடையவேண்டும் என்னும் குறிக்கோளை வைத்தே இவ்வொற்றுமை ஏற்பட வேண்டும். பலர் ஒரு கப்பலில் ஏறிக் கொள்ளலாம்; எல்லோரும் sus56) இருக்கிறார்கள் என்ற அளவில் ஒருவித ஒற்றுமை இருக்கிறதென்று கூறலாமா? கப்பலி லிருக்கும் மக்கள், கப்பலை வெவ்வேறு திக்குகளில் ஓட்ட முயற்சிக்க - வேறு சிலர் கப்பலில் துவாரங்கள் செய்ய ஆரம்பித்தால்..! கப்பலின் கதி என்னாகும்? எல்லோரும் ஒரு துறைமுகத்தை நோக்கிக் கப்பலை ஒட்டுவதென்றும், அதுவரை கப்பலுக்கு வரும் இடையூறு எளிலிருந்து கப்பலைக் காப்பாற்றுவ தென்றும் திடவுறுதி யுடன் உழைத்தால் - கப்பல் சுகமாகத் துறைமுகம் சேரும்.
சமீபத்தில் ஆந்திர மாகாணம் ஏற்பட வேண்டுமென்ற இலட்சியத்துக்காக - காங்கிரஸ்காரர், கம்யூனிஸ்ட் கட்சியினர், பிரஜா சோஸலிஸ்ட் கட்சியினர், இன்னும் இதர கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து - “ஆந்திர மாகாணம் வேண்டும்" என்று கிளர்ச்சி செய்தனர். அவர்கள் கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியாமல் ஆந்திர மாகாணம் அமைத்தாயிற்று. இந்த இலட்சியத்தை அடைந்ததும், திரும்பவும் கட்சிக்குள் தங்களுள் யார் ஆதிக்கத்துக்கு வருவது என்ற போட்டியில் இறங்கியிருக் கிறார்கள். ஆயினும், ஆந்திர மாகாணம் அமைத்தது அமைத்ததுதான். இந்த நல்ல உதாரணத்தை இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களும் பின்பற்றுவார்களா?
ஒற்றையாட்சி முறையின் கீழ் ஆட்சிபீடத்தில் அமரும் சிங்களத் தலைவர் தயவில் என்றென்றைக்கும் ஓர் இனம் வாழ முடியாது. யார் ஆட்சி பீடத்தில் அமர்ந் தாலும் சில அடிப்படையான பிரச்சினை களில் நமக்கு நீதி கிடைக்காது. உதாரணமாக,

Page 126
நமது மத்தியில் சிங்களக் குடியேற்றம் நடப்பதை எந்த அரசியற் கட்சியிலுள்ள சிங்களத் தலைவரும் கண்டித்தது கிடையாது என்று ஏற்கெனவே சொன்னேன். அவர்கள் கண்டிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. ஆகவே, தமிழ்ப் பிரதேசங்களில் மாகாண சுயாட்சி ஏற்பட வேண்டும்; அல்லது நாம் முற்றாகப் பிரிந்து போக்வேண்டும். எங்கள் குறைந்த பட்சக் கோரிக்கை - சமஷ்டியரசில் அமைத்து, மாகாண சுயாட்சி பெறவேண்டும் என்பதே.
இதன்மூலம் நாட்டைப் பிளவு படுத்துவதனால் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்கலாம் என்பது நமது எண்ணம். சமஷ்டி அரசியல் என்பது - சில அம்சங்களில் ஒற்றுமையும், வேறு பல அம்சங்களில் வேற்றுமையும் பிரதேசங்களுக் கிடையே இருப்பதனால் தான் ஏற்பட்டது. தமிழ் பேசும் மக்களின் குறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, மனக் கசப்பு வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த மனக்கசப்பு வளர்ந்தால் சமஷ்டியில் ஏற்படக்கூடிய ஒற்றுமை தானும் சாத்தியமாகாது போகலாம். இந்தக் கசப்பு வளராமல் பார்ப்பது இருதரப்பாருக்கும் நல்லது சமஷ்டி அரசியல் அமைத்து, தமிழ் பேசும் மக்கள் தம்மைத் தாமே ஆளவிட்டுவிட்டால், சிங்கள மக்களுக்கும் பல பிரச்சினைகள் - தலைவலிகள் தீரும்.
ஆகவே தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் நமது குறைந்த பட்சக் கோரிக்கையாகிய - ஐக்கிய இலங்கையின் ஓர் அங்கமாக விளங்கும் தமிழரசு கோருவதில் ஒன்றுபட்டு உழைப்போமாக! கடந்த காலத்தில் கட்சிப் பூசல்கள் இருந்திருக்க லாம். சிலர்தங்கள் கொள்கைகளைக் காற்று வாக்கில் விட்டுச் சுயநலமிகளாக மாறியிருக்கலாம்; அல்லது ஏமாந்து, தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை தரும் பாதையென நினைத்துப் பிழையான பாதையில் இறங்கியிருக்கலாம். இவற்றைப் பற்றி இனி ஆராய்ச்சி செய்து, கடந்த காலச் சண்டைகளைத் தொடர்ந்து வளர்ப்பதிற் பயனில்லை. நமது நிலை வரவர மோசமாகி வருவதை உணர்ந்து, தமிழரசு பெறுவதற்கு

5
ஒன்று சேருவோமாக! எமது கட்சியைப் பொறுத்த வரையில், கட்சி இலட்சியத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் நமது கட்சியில் இடமுண்டு. கெளரவமான இடமுண்டு என்று துணிந்து கூறுவேன். எவ்வளவுக் கெவ்வளவு இலட்சியத் துக்கு உழைக்கிறார்களோ - அவ்வளவுக்குத் தான் கட்சிக்குள் அங்கத்தவர்கள் மதிப்பும். தமிழரசு பெறுவதற்காகத் தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேர வேண்டுமென்றும், முன்னைய வித்தியாசங்களை மறந்து, நமது கட்சியில் எல்லோரையும் சேர்த்து உழைக்கு மாறும் அதிக தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். நமது கட்சி எவ்வளவு பலமடை கிறதோ - அவ்வளவு சீக்கிரத்தில் தமிழரசு கிட்டும்.
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்."
என்பது வள்ளுவர் வாக்கு. நாம் ஒன்று சேர்ந்து தமிழரசு பெறுவோம் என்று தீர்மானித்தால் - அதைத்
தடுக்க எவராலும் முடியாது. நாம் தமிழரசு பெற்றே ஆகவேண்டும்.
"பல்லுயிரும் பலஉலகும்
படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே
ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக்
கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே." என்று தமிழ்த் தாயை வணங்கி, வாழ்க தமிழரசு வெல்க தமிழினம்! என்று வாழ்த்தி உங்களிடம்
விடைபெறுகிறேன்.

Page 127


Page 128
அஹிம்சைப்போர் ஆக்கத்திட்டமு திரு.கு. வன்னியசிங்கம், (4ஆவது தேசியமாநாடு - 1
வரவேற்புக்கழகத் தலைவரே!
தமிழரசுக் கட்சி உறுப்பினர்களாகிய
எனது தோழர்களே!
கட்சியினழைப்பை யேற்று விருந்தாளிகளாக
வந்து மகாநாட்டைச் சிறப்பித்த பெரியோர்களே!
சகோதர சகோதரிகளே!
தமிழ்த் தாயின் இன்னல் துடைக்க
முன்வந்த வீரர்களே!
வீராங்கனைகளே!
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
தற்கு முன் இதே நகரில் நடந்த மகாநாட்டில் பேசிய பொழுது, திருகோண மலையின் தொன்மைபற்றியும் 1300 வருடங் களுக்கு முன் தேவாரப் பாடல் பெற்ற பெருமை பற்றியும் கூறினேன். சமீபத்தில் அலைகடல் நடுவுள் போர்த்துக்கேசரால் தகர்க்கப்பட்ட கோணேசர் திருக்கோயிலின் பெரும்பாகமும் லிங்கமும் கண்டுபிடிக்கப் பட்டமை - இந்நகரின் புராதனச் சிறப்பை நமக்கு ஞாபகமூட்டுகிறது. ஜடாவர்மன் - சுந்தரபாண்டியன் காலத்தில் உடன் அரசாண்ட சகோதரன் வீரபாண்டியன் கோணமலை வரை பாடங்கழித்த சரித்திரத் தை, குடுமியமலை சிலாசாசனம் கூறுகிறது. இன்னும் கோட்டை வாயிலிற் காணப்படும் கயல்மீன் பொறித்த் தூண்கள் பாண்டி நாட்டுத் தொடர்பை வலியுறுத்தும்.
இந்நகர் பற்றிய சரித்திர சம்பந்தமான சில குறிப்புகள் கூறினேன். இந்த மகாநாடும் பல வகைகளில் சரித்திரப் பிரசித்தி பெறும் என்பதில் ஐயமில்லை. எதிர்காலத்தில் நாம்

மட்டும் போதாது! ம் வேண்டும்! பா.உ. அவர்களின் பேருரை
-8-1956 - திருக்கோணமலை
தொடங்கும் புதிய அத்தியாயத்தைத் தமிழ் பேசும் மக்கள் மகிழ்ச்சியுடன் நினைவு கூறுவார்கள் என நம்புகின்றேன்.
நெருக்கடி நிறைந்த இந்நேரத்தில் மீண்டும் என்னைக் கட்சித் தலைவனாகத் தெரிந்து கெளரவித்தீர்கள். தமிழ் பேசும் இனத்தின் வாழ்வில் இப்போது ஏற் பட்டுள்ள இன்னல்கள் போல் வேறெப் பொழுதும் நேர்ந்ததில்லை. இந்நிலையைச் சமாளிக்கும் பொறுப்போ மிகப்பெரிது. எங்கள் கட்சி ஊழியர்களில் சிறந்த ஒருவரைத் தலைமைப் பதவியேற்றி, அவரின் கீழ்த் தொண்டாற்ற என்னைப் பணித்திருந் தால் மிகவும் மகிழக் கூடியதாக விருக்கும். எனினும் தங்கள் அனைவரின் இடைவிடா உழைப்பினாலும், அனுபவஞானிகள் காட்டும் வழியிலே - அவர்கள் அடிச்சு வட்டைப் பின்பற்றிச் செல்வதாலும் நாம் வெற்றிகாண முடியும். அரசகருமமொழி
சென்ற ஆண்டில் இங்கு நாம் மகாநாடு கூடியதன் பின் நிகழ்ந்த சில சம்பவங்கள் பற்றி இங்கு குறிப்பிடல் அவசிய மாகும். அரசகரும மொழி சம்பந்தமாக சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக வேண்டும் என்றும் அதே சமயத்தில் தமிழை நியாயமான அளவுக்கு உபயோகிக்க அனுமதிப்பதென்றும் பூரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது. "தமிழை நியாயமான அளவுக்கு உபயோகிக்க அனுமதித்தல்", "தமிழுக்குப் போதிய அந்தஸ்து அளித்தல்” என்ற சொற்றொடர்களுக்கு விரிவான விளக்கமும் திரு. பண்டாரநாயகா அவர்களே தந்திருக்கிறார் - அது பின்வருமாறு :

Page 129
(1) சட்டசபைகளில் (பிரதிநிதி சபையிலும், செனட் சபையிலும்) தமிழும் - சிங்களமும் சரிநிகர் சமமான இடம் பெற்று, இரு மொழிகளிலும் சட்டம் இயற்றப்படும்.
(2) நிர்வாகம் - நாட்டின் நிர்வாக அலுவல்கள் சிங்களத்திலே நடக்கும். ஆனால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிர்வாகம் தமிழிலே நடக்கும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்களிலும் தமிழ் கருமமொழியாகும்.
(3) கல்வித்துறையில் - தாய்மொழி மூலம் கல்வி பயிற்றப்படும். கட்டாயப் படுத்தாமல் ஒவ்வொரு மாணவர்க்கும் மற்றைய மொழி (அதாவது சிங்களர்கட்குத் தமிழும், தமிழர்கட்குச் சிங்களமும்) கற்பதற்கு உற்சாகமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் 100க்கு 33 வீத மாணவர்கள் கேட்டால், பள்ளிக்கூட நிர்வாகிகள் மற்ற மொழிகள் கற்பதற்கு வசதியேற்படுத்தக் கடமைப்பட்டவராவார். 66 வீதமான மாணவர்கள் விரும்பினால் மற்ற மொழியையே போதனா மொழியாகவும் கொள்ளலாம். அவ்விதம் ஏற்பட்டால் பெரும்பான்மையான மாணவர்களின் தாய்மொழி கட்டாய பாடமாக எல்லா மாணவர்களுக்கும் கற்பித்தல் வேண்டும். இந்தத் திட்டம் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற பூரீலங்கா சுதந்திரக் கட்சி மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தில் தமிழ் மொழிக்கு அரசகரும மொழியென்ற அந்தஸ்துக் கொடு படவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, இக் கட்சியின் தமிழ் அங்கத்தவர்கள் அனை வரும் கட்சியிலிருந்து வெளியேறியதும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். இலங்கை முழுவதும் தமிழும் சிங்களமும் சரிநிகர் சம அந்தஸ்துள்ள அரசகரும மொழிகளாக இருக்கவேண்டும் என்ற நியதி இதுவரை எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதொரு முடியாகும்.1952ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து அளிப்பதென்ற திட்டத்திலேயே திரு பண்டாரநாயகா அவர்கள் கட்சியுட்பட

8.
எல்லாக் கட்சிகளும் போட்டியிட்டன. ஆகவே சரிசம அந்தஸ்துக் கொள்கைக்கு மாறுபட்டுத் தீர்மானம் ஒன்று முதன் முதலாக ஏற்பட்டது - 1955ஆம் ஆண்டு பூரீலங்கா சுதந்திரக் கட்சி மகாநாட்டிலே tLIITyth.
சிங்களப் பிரதேசங்களில் இதைத் தொடர்ந்து ஒரு மொழிக் கிளர்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இது காரணமாக அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும் தன் மொழிக் கொள்கை யை மாற்றுவதாக இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நடந்த மகாநாட்டில் தீர்மானித்தது. சிங்களம் மட்டுமே அரசகரும் மொழியாதல் வேண்டும் என்ற தீர்மானம் (தமிழுக்கு நியாயமான இடமளித்தல் போன்ற நிபந்தனைகள்கூட இல்லாமல்) களனியில் நிறைவேற்றப்பட்டதும் பாராளு மன்றம் கலைக்கப்பட்டது. குறிப்பிட்ட தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியின் காரிய சபையில் நிறைவேறியதும், மகாநாட்டில் வரும்வரை காத்திராமல் அக்கட்சியில் அங்கத்துவம் வகித்த தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரும் கட்சியிலிருந்து விலகினர். பொதுத் தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இவ்விரண்டும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஒரு தொகுதியிலும் போட்டியிடத் துணியவே இல்லை என்பது கவனிக்கத் தக்கது. சம அந்தஸ்து என்ற பதத்துக்குத் தங்கள் சொந்த அர்த்தம் கொடுத்த போதிலும் - சமசமாஜக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அரச கரும மொழியாகும் உரிமை பெற வேண்டும் என்ற கொள்கையுடனேயே தேர்தலில் போட்டி யிட்டனவென்றும்; தேர்தற்கால வாக்குறுதி களைப் பேணி, தனிச் சிங்கள மசோதாவை எதிர்த்து இக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தார்கள் என் பதையும் மகிழ்ச்சி யுடன் குறிப்பிடுகிறேன்.
தட்சிணபிரதேசம் வேண்டாம்
சிங்களம் மட்டுமே அரசாங்க மொழியாக வேண்டும் என்ற கிளர்ச்சிக்கு எதிர்ப்புக் காட்டும் முகமாக, தமிழ் பேசும்

Page 130
-
பிரதேசங்களில் சுதந்திர தினமாகிய 4-2-56 திகதியைத் துக்கதினமாகக் கொண்டாடி னோம். இதனைத் தொடர்ந்து 20-2-56 அன்று கடைகள், பள்ளிக்கூடங்கள் முதலி யவற்றை மூடி, ஹர்த்தால் நடத்த வேண்டுமென்று நமது கட்சி தீர்மானித்தது. சென்னை மாகாணத்துத் தமிழ் மக்களும், தட்சிண பிரதேசம் வேண்டாம் என்ற கிளர்ச்சியில் - இரு நாடுகளுக்குமிடையில் சிறிதும் முன்னேற்பாடின்றி - அதே தினத்தில் ஹர்த்தால் அனுட்டிக்க நேர்ந்தது. 20-2-56இல் நாங்கள் நடத்திய ஹர்த்தால் பலாத்காரம் சிறிதுமின்றிப் பரிபூரணமான வெற்றியளித்தது மிக மகிழ்ச்சிக்குரிய தொன்றாகும்.
இதற்கடுத்து வந்த பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு, 10 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இன்று, பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் ஸ்தானங்களில் பெரும்பான்மையான ஸ்தானங்கள் பெற்றதும் - இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற மத பேதமின்றியும்; மாகாணப்பூசல், சாதிப்பிளவு முதலி யவற்றைத் தவிர்த்தும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்றதும் - நம்பிக்கைக்குப் பாத்திரமானதுமான ஒரேயொரு கட்சியாக நமது கட்சி விளங்குகிறது.
ஒப்புக்கொண்டேயாக வேண்டும்
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தவிர மற்ற ஏழு மாகாணங்களிலும், தமிழ் பேசும் வாக்காளர் - இடதுசாரி அபேட்சகர்கள் இருந்தால் அவர்களுக்கும், இடதுசாரி அபேட்சர்கள் இல்லாத விடத்து மக்கள் முன்னணி அபேட்சகருக்குமே வாக்களித்தனர். தங்கள் புதிய திட்டத்தில் தமிழ் மொழிக்குச் சிறிதும் இடமளிக்காத ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதிலும் பார்க்க, நியாயமான அளவுக்கு அரசியல் விவகாரங்களில் தமிழை உபயோகிக்க இடம் தருவோம் என்று வாக்குறுதி தந்த மக்கள் முன்னணியை - குறைந்த தீமையை

9.
ஏற்குமுகமாக ஆதரித்தது இயல்பு தானே? இவ்விதம் தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த திரு. பண்டாரநாயகா அவர்கள் சிங்களம் மட்டும் அரசாங்க மொழியாகும் வகை செய்து, 1-1-61க்குப் பின் தமிழுக்கு ஒரு சிறிதும் இடமில்லாதபடி சட்டமியற்றியிருக் கிறார். இவ்வித சட்டத்தினால் தேர்தல் காலத்தில் மக்களுக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறாராம்! தமிழ் மொழியின் நியாயமான உபயோகம் என்பதற்குச் சட்டத்தில் வரைவிலக்கணம் கூறுவது கஷ்டமாம்! ஆனால் பிரமாணங்களில் அதற்கிடமளிப்பாராம்! 1-1-1961க்குப் பின் சிங்களம் தவிர வேறெந்த மொழியையும் அரசகரும மொழியாக்கிக் கொள்ள முடியாதே எனச் சுட்டிக் காட்டியதற்கு - "வேண்டுமானால் சட்டத்தை அப்புறம் திருத்தலாமே" என்கிறார். பிழையான முறையில் சட்டமியற்றி, அதனை அப்புறம் திருத்தலாமென்பது ஏற்கக் கூடியதன்று.
தனது கட்சிக்குச் சமர்ப்பித்த அறிக்கை யிலும், கட்சித் தீர்மானத்திலும் எவ்வளவு தூரம் தமிழ் மொழியை - சட்டமியற்று வதிலும் நிர்வாகத்துறையிலும் கல்வியிலும் உபயோகத்துக்குக் கொண்டு வரலாம் என்று திட்டவட்டமாகக் கூறிய பிரதமருக்கு - இப் பொழுது சட்டத்தில் வரையறுத்துக் கூறுவதில் என்ன கஷ்டம் இருக்கமுடியும்? சட்டத்தில் வரையறுத்துக் கூறமுடியாததைப் பிரமாணங்களில் மட்டும் கூறமுடியுமா? சிங்களப் பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிய்ை நிறைவேற்ற வேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் பிரதமர், தனது மொழிக் கொள்கையைப் பூரணமாக நிறை வேற்றாததேன்? தமிழைப் பற்றிய வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விட்டதேன்?
"மொழிவிஷயத்தில் தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி விட்டார்’ என்று பிரதமரைக் குற்றம் சாட்டுகிறேன். சிங்களத்தோடு சமமாக - தமிழும் அரசகரும மொழியாகும் உரிமை கொடுக்காத எந்தச் சட்டத்தையும் - தமிழ் பேசும் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது பிறிதொரு விஷயம்.

Page 131
-
மொழியுரிமையை நாம் அடிப்படை உரிமையாகக் கருதுகிறோம். அடிப்படை உரிமைகளைப் பொறுத்த வரையில் அவற்றை விட்டுக் கொடுப்பதில்லை. மொழியுரிமை விஷயத்தில் நாம் சிறு சலுகை கள் தரவேண்டும் என்று கோரவில்லை. எங்கள் அடிப்படை உரிமையை ஒப்புக் கொண்டேயாக வேண்டும் என்று சொல்லு கிறோம்.
சிங்களம் மட்டுமே அரசகரும மொழியெனப் பிரகடனஞ் செய்யும் சட்டம் , போல - தமிழ் பேசும் இனத்தைப் பாதிக்கக் கூடிய மசோதா எப்பொழுதாவது இதுவரை வந்ததில்லை. இதனை எதிர்த்துப் பாராளுமன்றத்துள்ளும், வெளியிலும் தொடர்ந்து போராட வேண்டியது அவசியம்.
உரிமைப் போரின் முதற்படி
தனிச் சிங்கள மசோதாவுக்குத் தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பைக் காட்டும் முகமாக - 5-6-56 அன்று நமது கட்சி அங்கத்தவர்கள் சத்தியாக்கிரகம் செய்தனர். ஓர் இனத்தின் மொழியுரிமையைப் பறிப்பது அதன் உயிரையே பறிப்பதாகும். சத்தியாக் கிரக மூலம், எங்களுக்கிழைக்கப்படும் அநீதியை வெளியுலகுக் கெடுத்துக் கூறி னோம். இலங்கை மொழிப் பிரச்சினையைப் பற்றி உலகமறியச் செய்தது சத்தியாக்கிரகம். சத்தியாக்கிரகத்தினால் - நம் உயிரைக் கொடுத்தும் சிங்களம் நம்மீது திணிக்கப் படுவதை எதிர்ப்போம் என்றதையும், தமிழ் பேசும் இனம் தன் மொழியுரிமை காக்க எவ்வித தியாகத்துக்கும் தயாராகி விட்டது என்பதையும் நிரூபித்தோம். தம்மைத் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எவ்விதம் நடந்து கொண்டாலும், தமிழ் பேசும் பொதுமக்களிடையே பூரணமான ஒற்றுமை ஏற்பட்டது. புத்தபகவானின் போதனைகளிலே அதிமுக்கியமானது அஹிம்சை, அல்லது இன்னா செய்யாமை. புத்தர் மதத்தைத் தழுவிய நமது சிங்கள சகோதரர்கள் - அன்பு, அஹிம்சை, சகோதரத்துவம், மைத்திரியம் என்னும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டு - சத்தியாக்

20
கிரகிகளைத் தாக்கினர். பெளத்தரல்லாத (இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த) தமிழ் பேசும் சத்தியாக்கிரகிகள் இவற்றையெல்லாம் அமைதியாகச் சகித்ததன் மூலம் - தங்களைத் தாக்கியவர்களும், அவர்களை ஏவி விட்டவர்களும் அவர்கள் செய்கைக்கு வெட்கப்படும்படி செய்து விட்டனர். நேர்மை, நியாய உணர்ச்சியுள்ள சிங்கள சகோதரர்களே - அந்த அட்டூழியங் களைக் கண்டிக்க நேர்ந்தது. சத்தியாக் கிரகிகள் தாக்கப்பட்டதையும், சத்தியாக் கிரகிகள் அப்பொழுது நடந்துகொண்ட விதத்தையும் அவதானித்தவர்கள், ! 'காந்தியடிகள் இன்று உயிருடன் இருந்தால் சத்தியாக்கிரகிகளுக்கு 100க்கு 100 புள்ளி போட்டிருப்பார்” என்றும் “காந்தியடிகளின் நாட்கள் திரும்பவும் எங்கள் ஞாபகத்திற்கு வருகிறது" என்றும் சிலாசித்துப் பேசினார் கள். பல விதங்களிலும் சத்தியாக்கிரகம் பரிபூரண வெற்றியடைந்தது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் சத்தியாக் கிரகம் நமதுரிமைப் போராட்டத்தின் முதற்படி யென்றும்; இந்தப் படியில் தடுக்கி விழாது, முன்னேறிச் செல்வதில் திருப்தி கூறுவதை விட, மேலதிகமாக மகிழக் கூடிய தான வெற்றியெதுவும் கிட்டவில்லை யென்றுமே கூறுவேன். இடுக்கண் போக்குவோம்
சிங்களம் என்ற சட்டமூலம், தமிழ்
புறக்கணிக்கப் படுவதையும், சிங்களம் நம் மீது திணிக்கப் படுவதையும் - வரகவி சுப்பிரமணிய பாரதியவர்கள் பாடல்களில் மூன்றை உபயோகித்து, அவற்றுள் ஒன்றைச் சிறிது திருத்தியமைத்துக் கூறுவேன். தமிழ்த்தாய் இன்று தன் மக்களுக்குப் பின்வருமாறு கூறுகிறாள்.
"இன்னொரு சொல்லினைக் கேட்டேன்! - இனி ஏதுசெய்வேன்?என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்”.
தனிச் சிங்களச் சட்டம் - இலங்கையில்
தமிழை ஒழித்துக் கட்டுவதற்கன்றி, வேறெந்த நோக்கத்துடனும் உருவாக்கப்படவில்லை

Page 132
丘 யென்பது தெளிவு. ஆகவே இச்சட்டத்தைக் "கொன்றிடல் போலொரு வார்த்தை" என்று கூறுதல் மிகவும் பொருந்தும். கூறத் தகாதவன் என்று குறிப்பிட்டது - தமிழின் அருமை பெருமை தெரியாத நம் நாட்டுப் பிரதமர் பண்டாரநாயகாவை. அவர் பாராளு மன்றத்தில் அன்றொரு நாள் தமிழை - "இந்திய மொழிகளில் மிகவும் கீழ்த்தரமான மொழி - It is one of the lowest of the Indian languages' 6Tsing வைததைத் தமிழ்த் தாயும், அவளின் புதல்வரான நாமும் மறந்துவிட மாட்டோம். இனி, கூறத் தகாதவன் கூறிய வார்த்தைதான் எவையென்று பார்ப்போம்; இவ்விடத்தில் தான் பாரதியாரின் அடிகளைச் சிறிது மாற்றி என் சொந்தச் சரக்கைப் புகுத்தியிருக்கிறேன்.
"சொல்லுந் திறனிருந் தாலும் - அதை சொல்லத் தமிழில்விட மாட்டோம் மெல்லத் தமிழினிச் சாகும் - இங்கு சிங்களமிப் புவிமீசை யோங்கும்"
தமிழுக்கு அரசகரும மொழியாகும் திறன் இல்லையென்று யாரும் சொல்ல முடியாது. இந்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் 25 லட்சம் பேர் இருக்கிறோம். உலகில் எங்களிலும் பார்க்கத் தொகையில் விகிதாசாரப்படி குறைந்த சிறுபான்மையின ருக்கு மொழி யுரிமை கிடைத்திருக்கிறது. ஆனால் எங்களையோ - "சொல்லத் தமிழில் விட மாட்டோம்" என்று பிடிவாதம் செய் கிறார்கள். இதனால் தமிழை ஒழித்துக்கட்டிச் சிங்களத்தையே இலங்கையில் ஒரே மொழியாக நிலைநாட்டலாம் என்று கனவு காண்கிறார்கள் இன்றைய ஆட்சியாளர். "எண்ணமெலாம் நெய்யாக எமதுயிரினுள் வளர்ந்த வண்ணவிளக்காகிய தமிழ் மொழியை வளர்த்து மேலும் பிரகாசமுள்ள சோதியாக ஒளிவிடச் செய்வோம்.
தமிழ் அரசகரும மொழியாகி அரியணை விற்றிருக்கும் வரை - தமிழ் பேசும் மக்களாகிய நாம் ஒயமாட்டோம். நமது மொழியுரிமைக்குத் தொடர்ந்து இடை விடாது சாத்வீகப் போராட்டம் நடத்து மின்றி எந்த விஷயத்திலும் கடாது. ஆகவே நாம்
 

அறப்போரில் ஏற்படும் கஷ்டங் களனைத்தையும் மனமார வரவேற்போம்.
எங்கள் முயற்சியைப் பார்த்து : "தந்தை யருள்வலி யாலும் - இன்று சார்ந்த புதல்வர் தவவலி யாலும் இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் ஏறிப் புவிமீசை யென்றும் இருப்பேன்" என்று தமிழ்த்தாய் கூறி மகிழக் கூடியதாக - எங்கள் தாயின் இடுக்கண் போக்குவோம்; இன்னல் துடைப்போம் எனச் சபதம் ஏற்போமாக!
அரசை எச்சரிக்கிறேன்
ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் பேசும் மக்கள் ஒதுக்கப்பட்டு, ஈற்றில் அழிக்கப் படுவார்கள் என்பதை எங்களுக்கு மிகவும் தெளிவாக - மொழிப்பிரச்சினை எடுத்துக் காட்டுகிறது. இவ்வித அபாயம் தமிழ் பேசும் மக்களை எதிர்நோக்கியிருக்கிறதென்பதை எங்கள் கட்சி நீண்ட காலமாக எடுத்துக் காட்டி வந்திருக்கிறது. நாங்கள் கூறியதை வலியுறுத்துமாப்போல் மொழிச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஒற்றையாட்சி முறையில் இன்னமும் தங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும், தனிச் சிங்களச் சட்டத்தை மட்டும் எதிர்த்தாலோ - அன்றித் தனிச்சிங்களச் சட்டத்தையும், தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றத்தையும் எதிர்த்தாலோ போதுமானது என்றும் கூறும் ஒருசில தமிழ் பேசும் சகோதரர்களுக்கு இதைக் கூறுகிறேன். எமது எதிர்ப்புக் கண்டு இன்று தனிச்சிங்கள சட்டத்தை இரத்துச் செய்யலாம். சிங்களக் குடியேற்றத்தை நிற்பாட்டலாம். ஆனால் இவை திரும்பவும் நிகழமாட்டா வெனச் சொல்லி விட முடியுமா? இன்றைய ஒற்றையாட்சி முறையில், பெரும்பான்மையான சிங்கள மக்கள் கையில் அரசியல் அதிகாரம் முற்றாக இருக்கும் வரையில் இது தவிர்க்க முடியாத தொன்றாகும்.
வெவ்வேறு பிரதேசங்களில், பல மொழி வாரியினங்கள் வாழும் நாடுகளில் எல்லாம் சமஷ்டிஆட்சி அல்லது கூட்டாட்சி எனப்படும் முறையைக் கையாண்டு, அரசியல்

Page 133
1.
அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை நாங்கள் காணக் கூடியதாக இருக்கிறது. அவ்விதமே சமஷ்டி அமைப்பைக் கொண்டு, ஐக்கிய இலங்கை யின் ஓரங்கமாக விளங்கக்கூடிய மொழிவாரி மாகாணங்களமைத்து, தமிழரசு நிறுவினால் மட்டுமே தமிழ் பேசும் மக்கள் தங்கள் மொழியுரிமை, நாட்டுரிமை, குடியுரிமை முதலி யவற்றை நிரந்தரமாகப் பாதுகாக்க முடியும்.
தமிழரசுக் கட்சியார் கோரும் சமஷ்டிக்குப் பதிலாக, மாவட்ட சபைகள் - அல்லது மண்டல சபைகள் மூலம் சமஷ்டிக் கோரிக்கையைத் தட்டிக் கழிக்கலாம் என நினைக்கிறார் திரு. பண்டாரநாயகா. குடி யேற்றத் திட்டங்களைக்கூட மாவட்ட சபையிலிருந்து அப்பாற்படுத்தியதிலிருந்தே - இந்தச் சபைகளுக்கு என்ன அதிகாரமுண்டு என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இச் சபைகளுக்குச் சட்டமியற்ற அதிகாரமில்லை. தங்கள் அதிகாரத்துக்கென விடப்பட்ட விஷயங்களில் தானும் - மற்றவர்கள் தலையீடின்றிப் பிரமாணம் அமைக்கவோ, வரிகள் விதிக்கவோ அதிகாரம் இருக்கும் என்று கூடச் சொல்ல முடியாது. மாவட்ட சபைகள் அல்லது மண்டல சபைகள் நாம் பாவைக் கூத்தில் பார்ப்பது போன்று - சூத்திரதாரர் ஆட்டி வைக்க எப்படிப் பாவைகள் ஆடுகின்றனவோ - அதேபோல் மத்திய அரசாங்கமோ, இச்சபைகளைக் கண் காணிக்கும் பொறுப்பு வாய்ந்த மந்திரியோ ஆட்டி வைக்க ஆடக்கூடிய பொம்மை களாகவேயிருக்கும். தமிழ் பேகம் மக்கள் வேண்டுவது, தமது பிரதேசத்தை மற்றவர்கள் தலையீடின்றித் தாமே யாளக்கூடிய மாகாண சுயாட்சி. தமிழரசுக்கடுத்த படியாகவோ, பதிலாகவோ ஏற்கக்கூடிய தொன்றுண் டானால், அது சுதந்திரத்தமிழரசு. ஆனால் மாகாண சுயாட்சி பெற்ற, சமஷ்டிக்குட் பட்ட தமிழ் அரசே நமது இலட்சியம். மாவட்ட சபைகள் அல்லது மண்டல சபைகள் அமைக்கும் விஷயத்தில் திருகோண மலைப் பகுதியை - பொலநறுவை எனப்படும்

22
புலஸ்தி நகருக்கும், மட்டக் களப்புப் பகுதியை - பதுளைப் பிரதேசத்துக்கும் இணைக்கத் திட்டங்கள் இருப்பதாக நான் அறிகிறேன். ஏற்கெனவே உதவி ஸ்தலஸ்தா பனக் கமிஷனர் காரியாலயத்தைத் திருகோணமலையிலிருந்து பொலநறு வைக்கும், பொலீஸ் அதிகாரியின் காரியாலயத்தைத் திருகோணமலையிலிருந்து அநுராதபுரத்துக்கும் மாற்ற நடக்கும் முயற்சி
யைக் கண்டித்து, திருகோணமலை நகர சங்கம் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறது. உதவி ஸ்தலஸ்தாபனக் கமிஷனர் காரியாலய மும், பொலீஸ் அதிகாரி காரியாலயமும் தொடர்ந்து திருகோணமலையிலேயே இருக்கவேண்டும். மாவட்ட சபைகள் அமைப்பதன் மூலம் கிழக்கு மாகாணத்தைத் துண்டுபோட்டு - வெவ்வேறு சிங்களப் பகுதி களுடன் சேர்க்க முயற்சித்தால் - அந்த முயற்சியை எல்லா வழிகளிலும் எதிர்த்து இறுதிவரை போராடுவோம் என்றும், இவ் விஷயத்தில் கொஞ்சமும் வீட்டுக் கொடுப் பதற்கில்லையென்றும் அரசாங்கத்தை எச்சரிக்கிறேன்.
நன்றுந் தீதும் பிறர்தர வாரா
எமது பிரச்சினைகளுக்கு நாமே பரிகாரம் தேடவேண்டும். எமது தியாகமும் எமது முயற்சியுமே எமக்கு வெற்றி தரவல்லன. "நன்றுந் தீதும் பிறர்தர வாரா", என்று பழந்தமிழ் இலக்கியமாகிய புறநானூறு கற்பிக்கிறது. இந்த அடிப்படையி லேயே நாம் எமது திட்டங்களை வகுப் போம். அதே சமயத்தில் வெளிநாட்டவரும் நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை உணரக் கூடிய வகையில், பிற நாடுகளிலும் நமது கொள்கையை எடுத்துரைப்பது அவசியம். ஏனெனில், உலக அபிப்பிராயமானது - பெருமளவுக்கு எந்த நாட்டின் போக்கையும் தணிக்கைசெய்ய வல்லது. சமீபத்திலே நான் சென்னை சென்று, எங்கள் கட்சி சார்பில் இலங்கை மொழிப் பிரச்சினை சம்பந்தமாகப் பிரசாரம் செய்ததை, எனது நண்பராகிய பிரதமர் கண்டித்து, மொழிப் பிரச்சினை உள் நாட்டுப் பிரச்சினையென்றும், அதில் இந்தியா அல்லது சென்னை அக்கறை

Page 134
1. செலுத்தினால் இரு நாடுகளுக்குமிடையி லுள்ள நல்லுறவைப் பாதிக்கும் என்றும் எச்சரித்தார்.
தமிழ் பேசும் மக்கள் உட்படப் பொது மக்கள் அனைவரும் செலுத்தும் வளிப் பணத்தை உபயோகித்து வெளிநாடு செல்லும் பிரதமரும் இதர மந்திரிகளும், வெளிநாடு சென்று மொழிப் பிரச்சினை சம்பந்தமாகவும், இதர உள்நாட்டுப் பிரச் சினைகள் சம்பந்தமாகவும் தங்கள் கருத்துக் களைத் தாராள்மாக வெளியிடுகிறார் கள். தங்கள் கட்சியை எடுத்துரைக்கிறார்கள். நாமோ - எமது சொந்தச் செலவில் சென்று, எங்கள் குறைகளைச் சொல்லுகிறோம். எங்கள் கட்சியை விளக்கிக் கூறுகிறோம். இது எங்கள் உரிமை. இலங்கை ஜனநாயக நாடாக இருந்தால், உள்நாட்டிலாகட்டும் - வெளிநாடு களிலா கட்டும் தமிழ் பேசும் இனத்தின் போக்குவரத்தைத் தடை பண்ணவோ, இதர முறைகளில் வாய்ப்பூட்டுப் போடவோ முயற்சிப்பது தவறு.
மொழிப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினையென்கிறார் பிரதமர். மலை நாட்டுத் தமிழர் குடியுரிமைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினையல்லவா? அவர்கள் குடியுரிமையைப் பறித்து, அவர்களை நாடற்றவர்கள் என்று சொல்லக்கூடிய அரசியல் அனாதைகளாக்கியாயிற்று. அதனால் அவர்களது மொழியுரிமையையும் பறித்துவிடுதல் நியாயமாகுமா? இவர்களைப் பற்றி மீண்டும் இந்தியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறாராம் இலங்கைப் பிரதமர். அவ்வித பேச்சு வார்த்தைகள் நடத்தும்போது, அவர்கள் மொழியுரிமைப்பற்றி ஒன்றும் பேசக்கூடா தெனப் பாரதப்பிரதமருக்கோ, சென்னை அரசாங்கத்துக்கோ தடை விதிக்க முடியுமா?
ஒரு சாதாரண குடும்பத்தை யெடுத்துக் கொள்வோம்; கணவன் - மனைவி, குழந்தை களுடன் சீராகச் சிறப்பாக ஒற்றுமையாக வாழும் வரை, அவர்கள் குடும்ப விஷயங்களில் பிறர் தலையீடு செய்வது தவறு என்று எவரும் சொல்வர். இந்த நிலை பிறழ்ந்து, கணவன் - மனைவியை அடித்து, உதைத்து, விதியில்

3.
தள்ளிவிட்டு, குழந்தைகளையும் இம்சிக்கத் தலைப்பட்டால் - அப்புறம் அது குடும்ப விஷயமாக மட்டும் இருப்பதில்லை. சமூக விஷயமாக மாறிவிடுகிறது. சமூகமும், அரசாங்கமும் தலையிடக்கூடிய விஷய மாகிறது. கோர்ட்டிலே நீதி வழங்கும்படி கோருவதற்கு மனைவிக்கு உரிமையுண்டு. இதே நிலைதான் நாட்டு விவகாரங்களிலும். உலகம் கண்டிக்கும்
நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு நீதி வழங்கும்வரை பிரச்சினையெதுவு மில்லை. அவர்களுக்கு நீதி வழங்காது கொடுமைப்படுத்தி அவர்களை அழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டால் - அது இன ஒழிப்பு (Genocied) என்னும் சர்வதேச சட்டங்களுக்கு மாறுபட்ட பெரியதோர் குற்றம். - மாலனும், ஸ்றிடமும் தென்னாபிரிக் காவின் இன ஒதுக்கல் (Apartheid) கொள் கையை உள்நாட்டுப் பிரச்சினையெனப் பூசிமெழுக முயற்சிக்கலாம். ஆனால் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அக்கொள்கையைக் கண்டிக்காது விடவில்லை. ஹிட்லர் யூதர்களை அழித்த பொழுதும், உள்நாட்டுப் பிரச்சினையென்று கூறியிருக்கலாம். ஆனால் அச்செய்கையை வெளிநாடுகள் கண்டிக்காம லில்லை. மனித உரிமைகள் என்று கூறப்படும் உரிமைகளைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை. எமது மொழியுரிமையைப் பறிக்க எந்த அரசாங்கத்துக்கும் உரித்தில்லை. இலங்கையும் தமிழ் பேசும் இனத்துக்கு நீதி வழங்காது, தமிழ் இனத்தை அழித்து - ஒரு GILDIT, Pb, C35fAu , @ISOTứd -- One language - One Nation என்பதே தங்கள் இலக்கு என்று செயலாற்றும் வரை, மற்ற நாடுகளின் கண்டனத்துக்கு இலக்காக நேரிடும் என்பதை நான் வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு இங்கு நடக்கும் அநீதியை வெளியுலகுக்குக் கூறி, உலக அபிப்பிராயத்தை ஒன்று திரட்டுவதும் எங்கள் கட்சி வேலைகளில் முக்கிய இடம் பெறும்.
கிருஷிகம் செழிக்குமா?
இந்தச் சந்தர்ப்பத்தில், கொழும்புத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவி புரியும்

Page 135
நாடுகள் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில நீர்ப்பாய்ச்சல் திட்டங்களுக்கென உதவப் படும் பணத்தைக் கொண்டு, தமிழ்ப் பிரதேசங்களில் நீர்ப்பாசன வசதி அமைக் கிறார்கள். ஆனால் அரசாங்கமோ இத்திட்டங்களில் பெருவாரியான சிங்கள மக்களைக் கொணர்ந்து குடியேற்றி, தமிழ் பேசும் மக்களின் நிலத்தைப் பறித்து, அவர்கள் பொருளாதாரத்தையும் பாதிக்கச் செய்து, காலகதியில் அரசியல் பலத்தையும் குறைத்து, மொழி - கலாச்சாரம் - பண்பாடு இவையனைத்தையும் அழிக்க முற்படுகிற தென்பதை, உதவியளிக்கும் நாடுகள் அவதானித்திருக்கின்றனவோ இல்லையோ! குடியேற்ற விஷயத்தில் அரசாங்கம் அனுஷ்டித்து வந்த கொள்கையின் பயனாகச் சமீபத்தில் நடந்த கலவரங்களிலே, பாரம் பரியமாகத் தமிழ் பேசும் பிரதேசமாகவிருந்த கல்லோயாத் திட்டத்தின் கீழுள்ள நிலங்களிலும், அணித்தாக உள்ள தமிழ்க் கிராமங்களிலும்கூடத் தமிழ்பேசும் மக்கள் தம் உயிரிழந்தும், மானமிழந்தும், பொருட் களைப் பறிகொடுத்தும், மிருகத்தனமாகத் தாக்கப்பட்டும் பலவிதங்களில் அவதியுற நேரிட்டது. சமீபத்தில் கல்லோயாவில் நிகழ்ந்த கலவரம் - மூன்றாவது கலவரமாகும் என்பதும் அவதானிக்கத் தக்கது. சங்கைக் குரிய கொழும்பு மாநாகர ஆச் டீக்கன் (Arch Deacon of Colombo) அவர்கள் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் பேசியபொழுது, கலவரத் தைச் சிங்கள வெறியர் தான் ஆரம்பித்து - மனிதப் பண்பாட்டுக்கு மாறான கேவலமான செய்கைகளைச் செய்துவிட்டார்களெனக் கூறித் துக்கப்பட்டார். இந்தச் சிங்களக் கனவான் ஒரு மத குரு - இவ்விதம் கூறினார். ஆனால் கலவரம் ஏற்பட்ட பிரதேசங் களுக்குச் சென்று திரும்பிய பிரதமர், அவ்விடத்தில் சிங்கள மக்களிடம் அவர்கள் கூறிய முறையீடுகளைக் கேட்டாரே யல்லாமல் தமிழ் பேசும் மக்களிடம் கேட்க வில்லை. அன்றியும் கொழும்பு திரும்பியதும் சிங்கள மக்களுக்குச் சலுகைகள், பாதுகாப்பு கள் பற்றியே பேசினார். தமிழ்பேசும் மக்கள் பட்ட இன்னல்கள்பற்றி ஒரு வார்த்தைகூடக்

24
கூறவில்லை. குடியேற்ற விஷயத்தில் - ஐக்கிய தேசியக் கட்சியிலும் பார்க்க மோசமாகவே தற்போதைய அரசாங்கம் நடந்துகொள்ளும் என்பதற்கு அறிகுறிகள் இருக்கின்றன. தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் முற்றாகத் தடுக்கப்பட்டாலன்றித் தமிழ் பேசும் மக்களுக்கு எதுவித விமோசனமும் ஏற்படாது. அது ம ட் டு ம ல் ல , கு டி யேற்ற த் திட்டங்களினால் நாடு பயனடைய வேண்டு மானால் விவசாயத்தில் அக்கறையுள்ள விவசாயிகளை - ஊக்கமுள்ள கமக்காரரைக் குடியேற்றுவதுதான் முறை. இதனால்தான் அதிக பலன் கிட்டும். இந்த முறையைக் கையாண்டால், தமிழ் பேசும் மக்களையே (தமிழ் பேசும் பிரதேசங்களிலாவது) முற்றாகக் குடியேற்ற வேண்டும். தமிழ் பேசும் விவசாயிகளைப்போல ஊக்கமுள்ள, அக்கறை யெடுத்து விவசாயம் செய்யக்கூடிய கமக்காரன் கிடையாது. ஆனால் இப்படியான கமக்காரரைக் குடியேற்றாது, சிங்களரைக் குடியேற்றுவதுதான் இலட்சியமாகக் கருதி, கமச்செய்கை சிறிதும் தெரியாத தொழிலாளிகளையோ, Lu 60ptu குற்றவாளிகளையோ எடுத்துக் குடியேற்றி னால், அவர்கள் கலகஞ் செய்கிறார்கள் என்று அவர்களைக் குறை கூறுவதில் என்ன பயன்? கிராமங்களில் அமைதியாக வாழ்க்கை நடத்தக்கூடிய சூழ்நிலையில்தான் கமக்காரனின் முயற்சிகள் சிறக்கும். பழைய குற்றவாளிகளின் குடியேற்றத்தினால் கிராமங்களில் அமைதியே குலைந்து விட்டால் - கிராமங்களில் கிருஷிகம் செழிக்குமா?
யாத்திரையின் சிறப்பென்ன?
பிரஜா உரிமை விஷயத்திலும் நிலைமை சிறிதளவேனும் அபிவிருத்தி யேற்படவில்லை. முன்போலவே பிரஜா மனுக்கள் தள்ளுபடியாகிக் கொண்டிருக் கின்றன. இன்னும் கொஞ்சம் அதிகப்படி யாகவே தள்ளுபடியாகின்றன என்றுகூடச் சொல்லலாம். பதிவுப் பிரஜைகளுக்குப் பாராளுமன்றத்தில் 4 பிரதிநிதிகள் தெரிவு செய்யும் உரிமை சட்டமூலம் கொடுக்கப் பட்டிருந்தும், நாளிதுவரையும் அவர்கள்

Page 136
1.
வாக்குரிமையை உபயோகிக்கவோ, தங்கள் உரிமைகள் குறித்துத் தங்கள் பிரதிநிதிகள் மூலம் பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறவோ வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. போதாக் குறைக்கு மலைநாட்டுத் தமிழரின் மொழியுரி மையும் பறிக்கப்பட்டு விட்டது.
இந்த மகாநாட்டுக்கு நம்முள் பலர் கால் நடையாக வந்து சேர்ந்திருக்கிறோம். ஏன் இவ்விதம் நாட்கள் பல நடந்தோம்? ஏன் கஷ்டமுற்றோம்? உல்லாசமாகப் புகை வண்டியிலோ, மோட்டார் வண்டியிலோ வந்து சேர்ந்திருக்கலாமே! இந்த யாத்திரை எதைக் குறிக்கிறது? இக்கேள்விகள் பலர் மனதிலும் எழுந்திருக்கலாம். முக்கியமாகச் சிலர் திருமலை யாத்திரைக்கு மாறாகப் பிரசாரம் செய்யத் தலைப்பட்ட காலத்திலி ருந்தாவது இச்சந்தேகம் பலர் மனதிலும் கட்டாயம் எழுந்திருக்கும். ஆகவே யாத்திரை பற்றியும் சில வார்த்தைகள் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
முதலாவது - எமது இலட்சியத்தை அடைவதற்கு எவ்வித கஷ்டங்களையும் ஏற்று, எவ்வித தியாகத்துக்கும் தயார் என்று நமது மனத்தைத் திடப்படுத்தி, இடைவிடா துழைத்து, இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்பதற்கறிகுறி. இரண்டாவது - தமிழ் பேசும் பிரதேசங்களின் மூலை முடுக்குகள் எல்லாம், நாற்றிசையிலும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் தமிழரசு இயக்கத்தையும் - அதன் புனித இலட்சியங்களையும் அறியும்படி செய்யும் இந்த யாத்திரை. மூன்றாவது- தென்கிழக்குக் கோடியாகிய பொத்துவில், அக்கரைப் பற்றிலிருந்து - வடக்கு பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, காங்கேசந்துறையிலிருந்து - மேற்கே மன்னாரிலிருந்து - இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் எல்லோரும் ஒரே மனதுடன், இலங்கையில் தமிழ்ப் பிரதேசத்தின் கேந்திர ஸ்தானமாகிய திருகோணமலையை நோக்கி வருகிறோம். சாதி, மதபேதமின்றித் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நமது இலட்சியப் பாதையிலே செல்வோம் என்பதற்கறிகுறி

25
இந்த யாத்திரை. நான்காவது - எதிரே வரப் போகும் அஹிம்சைப் போராட்டத்திலே சேரக்கூடிய போர்வீரருக்குப் பயிற்சியளித்து அவர்களைக் கட்டுப்பாடு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, சாத்வீகப் போரில் தலைமை தாங்கும் ஒருவருக்கு அமைந்து நடக்கும் பண்பாடு முதலிய பல விஷயங்களில் பயிற்சி தரும் யாத்திரை இது. ஐந்தாவது - நாட்டில் பல்வேறு பாகங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களனைவரையும் ஒன்று சேர்க்கும் யாத்திரை இது.
இந்தப் புனிதமான யாத்திரையில் பங்கு பெற்ற முடியாதவர்கள், வேறு மார்க்க மாகவும் இந்த மகாநாட்டுக்கு வந்திருக் கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கின்றேன். இடங்கள் தோறும் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்த பல நண்பர்களுக்கும் கட்சி சார்பாக நன்றி கூறுகிறேன். அவர்கள் உதவியின்றி, இந்த யாத்திரையை நாம் நடத்தி யிருக்க முடியாது.
தமிழ்ப் பல்கலைக்கழகம் அவசியம்
இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருக் கின்றன. தமிழரசு அமைப்பதற்கு - அஹிம் சைப் போராட்டம் மட்டும் நடத்தினால் போதாது. ஆக்கத் திட்டங்களிலும் (Constructive Programme) கவனம் செலுத்த வேண்டும். இவற்றில் முதன்மை வகிப்பது, எமக்கென ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பது. மொழியுரிமையைப் பறிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சமயத்தில், எங்கள் மொழியைப் பாதுகாப் பதற்கும், வளர்ப்பதற்கும் - எங்கள் மாணவர் களைக் கிருஷிகம், விஞ்ஞானம், வைத்தியம், பொறியியல் முதலிய துறைகளில் முன்னேற்றி, நம் பொருளாதாரத்தைப் பெருக்குவதற்கும் உதவக்கூடிய ஒரேயொரு சாதனம் - தமிழ்ப் பல்கலைக் கழகமாகும். கட்சித் தொடர்பற்ற முறையில் பல்கலைக் கழக இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. அதனை வளர்த்துப் பலன் பெறுவது தமிழ் பேசும்

Page 137
மக்களின் பெருங் கடமையாகும். இந்நாட் டிலிருந்து வெளியே சென்று பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் தமிழ் மாணவர் தொகையே - ஒரு பல்கலைக் கழகத்துக்குப் போதியது. 'தமிழுக்கு அரசகரும மொழி யாகும் அந்தஸ்துக் கொடாவிட்டாலும் தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கைகள் எடுப்போம்" என்று கூறும் அரசாங்கம் - தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவது பற்றி இதுவரை என்ன செய்திருக்கிறது? ஒன்று ல்லை. அவர்கள் தமிழை வளர்ப்பதில் றிதும் அக்கறையற்றவர்கள். ஆனால் வீண் வாய்வேதாந்தம் பேசி, தமிழையும் வளர்ப் போம் என்று ஆசை வார்த்தை கூறு கிறார்கள் என்பது தெளிவு.
இதுகாலவரை தமிழ் பேசும் மக்களே அரசாங்க சேவைகளில் நிறைந்து கிடக்கிறார்கள் என்றும், சேவையில் 60 சதவீதத்தினர் தமிழர் என்றும், 80 சதவீதத்தினர் தமிழர் என்றும் தப்பான பிரசாரங்கள் செய்து வந்தார்கள். இப்பொழுது புள்ளி விபரங்களைச் சரியாக ஆராய்ந்து பார்த்ததில், சில துறைகளில் 35 சதவீதம் என்றும், எல்ல்ாத்துறைகளிலும் சராசரி கணக்குப் பார்க்கும்போது - தமிழ் பேசும் மக்களின் விகிதாசாரம் 30க்குக் குறைகிற தென்றும் தெரிகிறது. இவ்விதம் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் தொகை - மொத்தத் தமிழ் பேசும் மக்களின் தொகையில் 1 சதவீதத் துக்கும் குறைவாகவே காணப்படுகின்றது.
ஒவ்வொரு அரசாங்க ஊழியனும் தனது சீவனத்துக்கும், தன்னுடைய உழைப்பில் தங்கியிருக்கும் வேறு 4 பேருக்கும் பொறுப்பாளியென்று கணக் கிட்டால் - தமிழ் பேசும் இனத்தின் 5 வீதம் மட்டுமே அரசாங்க சேவையில் தன் சீவனத் துக்குத் தங்கியிருக்கிற தென்பது தெளிவு. அரசாங்க நன்கொடைப் பணம் பெறும் பள்ளிக்கூடங்கள் போன்ற ஸ்தாபனங்களில் வேலை செய்பவர்களையும் சேர்த்துக் கணக் கிட்டாலும்கூட, நமது மக்களின் மொத்தத் தொகையில் 10 சதவீதத்துக்குட்பட்டோரே - அரசாங்க சேவையிலோ, பண உதவியிலோ தங்கியிருப்பவர் ஆவார்.

26
சிங்களம் கற்கக்கூடாது
சிங்களம் தனி அரசகரும மொழியான பின், சிங்களம் படிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு உத்தியோகம் கிட்டுமென்பதற் கில்லை. மொழி விஷயத்தில் அநீதியாக நடப்பவர்கள், உத்தியோகம் கொடுக்கும் விஷயத்தில் நீதியாக நடப்பார்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்? அன்றியும் சிங்களம் மட்டும் என்ற திட்டத்தில் - தமிழ் பேகம் மக்களை அரசாங்க சேவையிலிருந்து ஒழித்துக்கட்டி, அவர்களின் இடங்களைச் சிங்களவர்களுக்குக் கொடுக்கலாம் என்ற நோக்கமும் சேர்ந்திருக்கின்றது. அல்லா விடில் மொழியுரிமை பற்றிப் பேசும்போது, பெருந்தொகையான தமிழர்கள் அரசாங்க சேவையிலிருக்கிறார்கள் என்ற வீண் கூச்சல் எழுந்திருக்கத் தேவையில்லை. அன்றியும், சமீபத்தில் திரு. மேத்தானந்தா அவர்கள் அந்த வேலைக்கு ஒரு கத்தோலிக்கரை ஏன் நியமிப்பான்? - மற்ற வேலையை ஒரு பெளத்த மதத்தினருக்கு ஏன் கொடுக்க வில்லை? என்ற கிளர்ச்சியை ஆரம்பித்திருக் கிறார். மற்றச் சமயங்களுக்குப் பங்கம் விளையாமல், பெளத்தக் கமிஷன் அறிக்கை வழிநடப்பதுதான் அரசாங்கத்தின் நோக்கம் என்று பிரதமர் கூறியிருக்கிறார். மொழிச் சட்டத்தில் எவ்வளவு "நியாயமான இடம்" தமிழுக்குக் கிடைத்ததோ - அவ்விதமே மற்றச் சமயங்களுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. தீவிர வாதிகளின் முயற்சிகள் இந்த முடிவைத் தான் கொண்டுவரும். மொழிவழி ஒடுக்கப் படுவது மட்டுமல்லாமல், மதவழியாலும் தமிழ் பேசும் மக்கள் ஒடுக்கப்படுவர். ஆகவே, நம்மீது சிங்களம் திணிக்கப்படுவதை எதிர்த்து, நமது பாடசாலைகளில் சிங்களம் படிப்பிப்பதை நிறுத்துவதால் எங்களுக்குப் பெருநன்மையேயன்றி, ஒரு நஷ்டமும் ஏற்பட்டுவிடாது. சிங்களம் படிப்பதை நிறுத்துவது - நம் சுயமரியாதையைப் பேணவும், தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்க்கவும் நாம் அவசியம் மேற்கொள்ள

Page 138
வேண்டிய நடவடிக்கையாகும். ஆகவே, அரசாங்க உத்தியோகஸ்தர்கள், கடைச் சிப்பந்திகள், மாணவர்கள், பொதுவாக அனைவருமே சிங்களம் கற்க மறுக்க வேண்டும். நமது பள்ளிக்கூடங்களில் சிங்களம் கற்பிக்க ஆரம்பித்தால், உடனடியாக ஏற்காவிட்டாலும், காலகதியில் சிங்களம் மட்டுமே அரசாங்க மொழியா வதை நாம் சகித்துக் கொள்ளத் தயாராகிறோம் என்று ஏற்படும். ஆகவே தமிழ் பேசும் மக்கள் தமிழரசு கிட்டும் விரையாகுதல் என்ன காரணத்தைக் கொண்டும் சிங்களம் படியாதிருத்தல் அவசியம். பிரித்தழிக்கும் கொள்கை
- ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நடத்தியபோது, இந்நாட்டிலுள்ள சிறு பான்மை யினங்களைப் பொறுத்தவரையில் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டார்கள். "பிரித்தாளும்" என்று கூறுவதற்குப் பதிலாகப் "பிரித்தழிக்கும்" உபாயம் என்று சொல்லுவதே பொருத்தமாகவிருக்கும். மலைநாட்டுத் தமிழரை (ஆதிகாலத்திலிருந்து குடிபதிகளாகிய) இலங்கைத் தமிழரிலிருந்து பிரித்து, அவர்கள் குடியுரிமை வாக்குரிமையைப் பறித்து, அரசியலுரிமை எதுவு மற்றவர்களாக்கி விட்டார்கள். இலங்கைத் தமிழருள்ளே மட்டக்களப்புத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர், திருக் கோணமலைத் தமிழர் என்னும் பிளவுகளை யேற்படுத்தி, அவ்வித பிளவுகளின் உதவியைக்கொண்டு சிங்களக் குடியேற்றம் ஆரம்பித்தார்கள். அதேபோல, முஸ்லிம் மக்களிடையே சோனகர் சங்கம், முஸ்லிம் 'கம் என்ற கட்சிப் பிரிவினையைத் தூபம் போட்டு வளர்த்தார்கள். இதே வழியை இன்றைய அரசாங்கமும் கையாள முயற்சிக்கிறது. முஸ்லிம் மக்களை ஏனைய தமிழ் பேசும் இனத்தவர்களிலிருந்தும் பிரித்து, அவர்களை அழிப்பதற்கு முயற்சி தீவிரமாக நடக்கிறது. அவர்களின் மாய வலைக்குள் முஸ்லிம் மக்கள் விழுந்தார் களாயின், தாம் அழிக்கப்படுகிறோம் என்பதை உணரு முன்பே, அழிக்கப்பட்டு விடுவார்கள். இது எவ்விதம் என்பதைச் சற்று விளக்கிக் கூறுவேன்.

27
இஸ்லாமியரை வேண்டுகிறேன்
முஸ்லிம் பாடசாலைகள் பல இடங் களிலும் ஏறக்குறைய 25 வருஷங்களுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்டதன் பலனாக, இன்று இஸ்லாமிய மக்களிடையே கல்வி நன்றாக வளர்ந்திருக்கிறது. இப்பொழுது முஸ்லிம் பாடசாலைகளுக்கு வேண்டிய ஆசிரியர்கள், இஸ்லாமிய மக்களிடையே கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. ஆகவே, தங்கள் பாடசாலைகளில் தங்கள் மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களே கல்வி பயிற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புவது இயல்பே. இதனைப் பயன்படுத்தி, "இஸ்லாமிய ஆசிரியர்களை நீங்கள் விரும்பியபடியே நியமிக்க ஏற்பாடு செய்கிறேன். இதற்குப் பதிலுபகாரமாக நீங்கள் சிங்களத்தை ஏற்றுக் சொள்ளுங்கள்” என்கிறார் கல்வி மந்திரி. இந்த வலையில் சிக்கினால், இதுகாறும் தமிழ் மொழி மூலம் கல்வி பயின்ற இஸ்லாமியருக்கு உத்தியோகம் கிடைப்ப தரிதாகி விடும். சிங்களத்தை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தமிழ் மொழி மூலம் கல்வி பயில்வோர் சிங்கள மூலமே எல்லாப் பாடங்களையும் கற்று வருபவர்களுடன் போட்டியிட (up Lq?-ULI FTğ5I போகும். சிங்களத்தையே போதனா மொழியாகக் கொண்டு போட்டியிடுவதென்று யோசித் தாலோ, இப்பொழுது தமிழ் ஆசிரியத் தொழிலில் இருக்கும் முஸ்லிம்கள் அத்தனை பேரும் உடனடியாக வேலையிழக்க நேரும். அன்றியும், இப்பொழுது சிங்களத்தில் கல்வி ஆரம்பித்து, சிங்களருக்குச் சமதையாகப் போட்டியிடக்கூடியதாக வரக்குறைந்தது 20 அல்லது 25 வருடங்கள் செல்லும். இதற் கிடையில் மத அடிப்படையில் அரசாங்கத் தை நடத்த விரும்பும் தீவிரவாதிகளின் முயற்சிகள் பலிதமானால், இஸ்லாமியர் என்ற காரணத்தால் மீண்டும் ஒதுக்கப்படுவர். ஆகவே அரசாங்கம் கொடுக்கும் உபகாரங்கள் எவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள், ஆனால் இவ்வுபகாரங்களுக்கு விலையாகச் - சிங்களத்தையேற்று - உங்களையே கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எனது இஸ்லாமிய சகோதரர்களைத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன்.

Page 139
-1
அரசாங்க சேவையை அறவே மறப்போம்
தனிச் சிங்களச் சட்டம் காரணமாக, அரசாங்க சேவையை நாம் அறவே மறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வேறு துறைகளில் நம் இளைஞர் கட்கு உழைப்புத் தேட வேண்டும். கவனமாக நாம் திட்டமிட்டால், இப்போதிருப்பதிலும் பார்க்க நமது பொருளாதார நிலை அபிவிருத்தியடையச் செய்யலாம். இந்த நோக்கத்துடனேயே எங்கள் காரியசபை, உத்தியோகங்களில் இருப்பவர்களின் புள்ளி விபரங்கள் முதலியவற்றைச் சேகரிக்கத் திட்டமிட்டது. எந்த அரசியல் கட்சியும் கட்சி ரீதியாக வியாபாரம், கிருஷிகம், கைத் தொழில் முதலிய துறைகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கு இந்தத்துறைகளில் ஊக்கமளிப்பது அவசியம். விஷயமறிந்த நிபுணர்களின் உதவிகொண்டு - எத்துறைகள் முதலிடம் பெறவேண்டும் என்றும், என்ன விதமான ஆரம்ப முறைகள் கையாளப்பட வேண்டும் என்றும், முயற்சி பலிதமாவதற்கு இவையிவை செய்யப்பட வேண்டும். மூலப்பொருள் எவை வேண்டும், மூலதனம் எவ்வளவுவேண்டும் என்று - இன்னோரன்ன விஷயங்களில் ஆலோசனை கூறி மக்களை ஊக்குவிக்கலாம். இவ்விதமான ஆக்கத் திட்டங்களை மனதில் வைத்தே - இந்த ஆண்டு மகாநாட்டில் கலாசார, பொருளாதாரத் துறை என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். மறந்த கதையாக வேண்டும்
நமது விடுதலைப்போரில் வெற்றி காண்பதற்கு, நமது சமூகத்தில் காணப்படும் தீண்டாமையென்னும் தீயவழக்கம் ஒழிய வேண்டும். நம்முன் ஒரு சாராரைத் தீண்டாதார் என இழிநிலையில் வைத்துக் கொண்டு, சிங்கள சகோதரர் நம்மையும் நமது மொழியையும் இழிவுபடுத்துகிறார்கள் என்று கதறுவது எவ்வளவு அர்த்தமற்றது என்பது, விஷயத்தைச் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்ப்போர்க்குப் புலனாகும்.

28
ஹரிசனர் உட்சென்று வணங்கக் கூடியதாக முயற்சிசெய்து பல ஆலயங்களையும் திறப்பித்து வைத்த G)Luff Guurt fr அனைவருக்கும், இவர்கள் வேண்டுகோளுக் கிணங்கிக் கோவில்களைத் திறந்துவிட்ட தர்மகர்த்தாக்களுக்கும் தமிழ் பேசும் இனத்தின் நன்றியுரித்தாகும். இவ்விஷயத்தில் கிழக்கு மாகாணம் வழிகாட்டியாக நிற்பது பற்றி மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். மட்டக்களப்புப் பகுதியில் ஆலயப் பிரவேசம் 4 அல்லது 5 வருடங்களுக்கு முன்னாகவே நடந்து விட்டதாக அறிகிறேன். இந்நகரிலுள்ள எல்லாக் கோவில்களையும் ஒரே நாளில் திறந்து வைத்த பெருமை - இந்த நகரத்தில் வசிக்கும் எல்லா இந்துக்களையும் சாரும். வெகு விரைவில், தீண்டாமை என்பது - பழங்கதையாகக்கூட இராமல், முற்றாக மறந்துவிட்ட கதையாக வேண்டும்.
சமஷ்டியே வழி
சமஷ்டியாட்சி மூலமே - தமிழ் பேசும் மக்கள் தம் மொழியையும் பாரம்பரியமாகத் தமக்குரிமையான பிரதேசத்தையும் பாதுகாக்க முடியும் என்று ஏற்கெனவே கூறினேன். சமஷ்டி முறையில் - அரசியல் அதிகாரத்தை மாகாண அரசுகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் பங்கிடவேண்டி யிருப்பதால், ஒன்றின் அதிகாரத்தை மற்றது பறித்துக்கொள்ளாமல் பாதுகாப்பதற்கு விதிகள் அமைக்கப்படும். அன்றியும் சமஷ்டிக்குட்பட்ட ஒவ்வொரு அரசும் யதேச்சாதிகாரமாக நடக்கமுடியாது. அத்துடன் சமஷ்டித் திட்டங்கள் அனைத் திலும் அடிப்படை உரிமைகள் அரசியல் சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் இருக்கும். மொழி யுரிமை, மத உரிமை ஆகிய இவ்விரண்டும் இவ்வாறு பாதுகாக்கப்படுவதால் மதத்தினா லோ, மொழியினாலோ சிறுபான்மையாக இருப்பவர்கள் ஒற்றையாட்சி முறையில் போலல்லாது, சமஷ்டியின்கீழ்ப் போதியளவு பாதுகாக்கப்படுவர். சமஷ்டியாட்சி முறைதான் - சிங்கள சகோதரர்களின் பாதுகாப்புக்குப் பங்கமின்றி, நியாயமான முறையில் தமிழ் பேகம் மக்கள் நலவுரிமைகளையும் பேணு வதற்கு வழி.

Page 140
1. L. தயாராகுங்கள்
சிங்களம் மட்டும் சட்டம் இயற்றப் பட்டதால், வெகு விரைவில் சமஷ்டியேற் படுத்தவேண்டும். இன்றேல் தமிழ் பேசும் மக்கள் முற்றாக அழிந்தொழிய நேரிடும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. தனிச் சிங்களச் சட்டத்தை ஏற்றோ, அல்லது சிங்களக் குடியேற்றம் தொடர்ந்து நடைபெறுவதைச் சகித்துக்கொண்டோ இருப்போமாகில் நாம் தற்கொலை புரிந்தவர்களாவோம். இலங்கையில் தமிழ் பேசும் இனம் இல்லா தொழிந்துபோகும். இவற்றை எதிர்த்துச் சாத்வீக முறையில் போராட்டம் நடத்தினால், நாம் வெற்றிபெற்று வாழமுடியும். வெற்றிபெற்று வாழ்வது நிச்சயம் என்று கூறுவேன். ஆனால் சாத்விகப் போராட்டம் எதையும் ஆரம்பிக்கு முன்னர், சுமுகமான முறையில் எங்கள் கோரிக்கையை மறுதரப்பினர் ஏற்றுக் கொள்ளப் போதிய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். ஆகவே ஒரு கால எல்லை குறித்து, அந்தக் கால எல்லைக்குள் தமிழரசு நிறுவப்படா விட்டால் - நாம் சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கவேண்டும். இந்த எல்லையானது - மிகவும் குறுகிய எல்லை யாக இருக்கக்கூடாது. அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்குப் போதிய அவகாசம் அளிக்கும் எல்லையாகவே இருக்கவேண்டும். அதே சமயத்தில், இந்த எல்லையை அதிக காலம் தள்ளிப் போடவும் முடியாது. இந்த
ܓܵ
فره فیوزیلاوه உழவுக்கும் ܥܠ ام
།། உண்டுகளித் திருப்போரை

9
எல்லையைக் கட்சியின் செயற்குழு பல் விஷயங்களையும் ஆராய்ந்து தீர்மானிக்கும். எங்கள் சாத்விகப் போராட்டம் எவ்விதம் நடைபெறும் என்று இப்பொழுதே சொல்லிவிட முடியாது. ஆனால் தமிழ் பேசும் மக்கள் தங்களைத் தியாகத்திற்கும், கடினமான வேலைகளுக்கும் தயார் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ் பேசும் மக்கள் எதிரே வரும் சாத்வீக உரிமைப் போராட்டத்தில் தைரியத்துடனும் - ஒற்றுமையுடனும் - தியாக சிந்தனையுடனும் பங்குபற்றி, தமிழரசு நிறுவ - எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக! தமிழ்த் தாயை வாழ்த்தி, எனது உரையை முற்றுவிக்கிறேன். "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே வான மளந்த தைைத்து மளந்திடும்
வண்மொழி வாழியவே வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழியே எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே"
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றிமீழர்
வாழ்க தமிழரசு
s 结
வந்தனை செய்வோம் ܥܠܐ ام - GSGod) r
நிந்தனை செய்வோம் N

Page 141


Page 142
சமஷ்டியமைப் சிங்கள சரிசம அந்தஸ்தை - ெ
தமிழறிஞர் திரு. கு. வன்னிய சி (5ஆவது தேசிய மாநாடு -
வரவேற்புக்கழகத் தலைவரே! இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
வட்ட, மாவட்டக் கிளைகளின் பிரதிநிதிகளே! கட்சி உறுப்பினர்களே! அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள
விருந்தினர்களே! பெரியோரே! தாய்மாரே! சகோதர, சகோதரியரே! மழலைச் செல்வங்களே! என் இனிய நண்பர்களே! தமிழரசு நிறுவப் போகும்
தன்மான இளைஞர்களே! உங்கள் அனைவர்க்கும் முதற்கண்
எனது அன்பு வணக்கம்!
d'Fairp ஆண்டு திருகோணமலை மகாநாட்டிலே - நான்கு அம்சக் கோரிக்கை கள் அடங்கிய ஒரேயொரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அந்தக் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால், ஒரு ஆண்டின் இறுதியில் நேரடி நடவடிக்கையில் இறங்குவதெனவும் தீர்மானித்தோம்.
பல மாதங்களாக, அரசாங்கம் இத் தீர்மானத்தில் கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, தனிச் சிங்களச் சட்டம் நிறை வேற்றிய காலத்தில் - தமிழின் நியாயமான அளவு உபயோகத்தை அனுமதித்துச் சட்டமியற்றப் போவதாகக் கூறிய வாக்குறுதியைத் தானும் நிறைவேற்றிவைக்க

O M. () O பு மட்டுந்தான் த்தோடு சந்தமிழுக்கு வழங்கும்!
ங்கம், எம்.பி. அவர்கள் பேருரை 28-7-1957 - மட்டக்களிப்பு)
முயற்சிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், நாம் திருமலைத் தீர்மானத்தில் கூறிய கோரிக்கைகளைப் பெறுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளுக்குத் தயார் செய்யுமுகமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதியன்று தொண்டர்படை திரட்ட ஆயத்தம் செய்தோம். இதற்குப் பின்னரே - அரசாங்கம் சிறிது சுறுசுறுப்புக் காட்டியது.
பிரதமர் கூற்று
பிரதமர் திரு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா அவர்கள் 25-4-57 அன்று பாராளுமன்றத்தில் தமிழுக்கு நியாயமான அளவு உபயோகம் பற்றிய தனது நான்கு அம்சத் திட்டத்தை வெளியிட்டது மல்லாமல், அரசியற் சட்டத்தைத் திருத்துவதற்கு ஒரு கூட்டுக்கமிட்டி நியமிக்கப்போவதாகவும், இந்தக் கூட்டுக்கமிட்டி சமஷ்டிக் கோரிக்கை பற்றி ஆராயமுடியும் என்றும் கூறியதுடன், பிரதேச சபைகள் மூலம் அரசியல் அதிகாரங் களைப் பிரதேசங்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம் ஓரளவுக்கு மாகாண சுயாட்சிக் கோரிக்கை நிறைவேறும் என்றும்
கூறினார். பேச்சுவார்த்தைக்கு அதிகாரம்
தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், தொண்டர்படை திரட்டுவதிலும் - சத்தியாக்கிரகத்திற்கு ஆயத்தஞ் செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு நாம் வேலைசெய்து வந்தோம். சத்தியாக் கிரகத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், உண்மைச் சத்தியாக் கிரகிகள் என்னும் முறையில் - நியாயமான

Page 143
- 1
சமரசத்திற்கு நாம் எப்பொழுதும் தயார் என்பதையும் பல பிரசாரக் கூட்டங்களிற் கூறி வந்தோம். எங்கள் காரியசபையும், அவ்வித பேச்சு வார்த்தைகளுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டால் - கட்சித் தலைவரும், பொதுக் காரியதரிசியும், தனாதிகாரிகளில் ஒருவராகிய திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களும் சேர்ந்த உபகுழு ஒன்றுக்குப் பேச்சுவார்த்தைகள் நடத்த அதிகாரம் அளித்தது.
சமரச உடன்பாடு
இதன் பின்னர், சில நண்பர்களின் முயற்சியால் ஜூன் 26ஆந் திகதி முதலாவது சந்திப்பு பிரதமரின் வாசஸ்தலத்தில் நடந்தது. அதன் பின்னர் பல தடவைகள் சந்தித்து, இறுதியாக 25-7-57 நள்ளிரவில் சமரச உடன்பாடு ஏற்பட்டது.
இந்த உடன்பாட்டைப் பலர் வரவேற்றிருக்கிறார்கள். ஆனால், அதில் அதிருப்தி தெரிவித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளியில் எவ்விதம் அபிப்பிராய பேதம் இருக்கிறதோ - அதே அபிப்பிராய பேதம் ஓரளவு கட்சியிலும் பிரதிபலிக்கிறதைக் காண்கிறோம்.
காந்தி - இர்வின் ஒப்பந்தம் நல்ல உதாரணம்
இன்றைய சூழ்நிலை, உப்புச் சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதற்கு மகாத்மா காந்தியும் இர்வின் பிரபுவும் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஞாபகமூட்டுகிறது. பறிமுதலான நிலங்கள் பற்றிய ஒப்பந்தம் திருப்திகரமாக இல்லை யென - சர்தார் படேல் முணுமுணுத்தார். பூரண சுதந்திர அடிப்படையிலேயேயன்றி, வேறெந்த அடிப்படையிலும் பேச்சு வார்த்தை நடத்த முடியாதென்பதை வலியுறுத்தவில்லையென - ஜவஹர்லால் நேரு முழங்கினார். அரசியற் கைதிகள் விடுதலை பற்றி ஒப்பந்தம் தாராளமாயில்லையென விளாசினர் பலர். காந்தியடிகள் - “கைதிகள் விஷயத்திற்காக ஒப்பந்தம் செய்யாது விடுவதா? நிலங்கள் விஷயத்தில் கோபித்து

32
முறித்துக் கொள்வதா? அல்லது வேறு எதற்கு முறிப்பது?" என்று கேட்டார். ஒப் பந்தம் அவ்வளவு திருப்திகரமாக இல்லாத போதிலும் - காங்கிரஸ் அவ்வித ஒப்பந்தத் தை ஏற்கத்தான் செய்தது. அதே சூழ்நிலையில்தான் நாமும் இருக்கிறோம் என்பது வெளிப்படை கொள்கையை விடவில்லை
இந்த உடன்பாட்டினைச் சிறிது ஆராய்வோம். மொழி விஷயத்திலென்றா லென்ன சமஷ்டிக் கொள்கையிலென்றால் என்ன - குடியுரிமைப் பிரச்சினையி லென்றால் என்ன - நாங்கள் எவ்விதமேனும், எங்கள் கொள்கையைச் சிறிதளவேனும் விட்டுக் கொடுக்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதனைப் பிரதமரும் உணர்ந்துதான் உடன்படிக்கை செய்துள்ளார். அதனாலேயே இவ்விஷயம் கூட்டறிக்கையிலும் இடம் பெற்றிருக்கிறது.
எங்கள் கொள்கைகள், கோரிக்கை களை நிறைவேற்றுவதற்குத் தொடர்ந்து கிளர்ச்சி செய்யவோ அல்லது உரிய பிறிதொரு காலத்திலே ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கும் உரிமையையோ நாம் இழந்து விடவில்லை. இன்றைய ஆட்சியாளர் தானும் இதனை ஒரு நிரந்தரமான சமரச முடிவாகக் கருதவில்லை. ஏனெனில், இந்த உடன்பாடு தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கு மிடையே ஏற்பட்டுள்ள ஜாதிய, கலாச்சார, அரசியல், பொருளாதாரத் தகராறுகள் அனைத்திற்கும் முடிவு காணவில்லை என்பது வெளிப்படை
வாபஸ் மட்டும்
ஆகஸ்ட் 20ஆந் திகதி தொடங்க விருந்த சத்தியாக்கிரகத்தை நிறுத்த நாம் சம்மதித்து, ஏற்றுக்கொண்ட உடன்பாடே இது. உடன்பாட்டைக் கவனமாக வாசிப் பவர்களுக்கு, தமிழரசுக் கட்சியார் சத்தியாக் கிரகத்தை நிறுத்த ஒப்புக் கொண்டதைத் தவிர, வேறெதுவும் செய்வதென்றோ அல்லது செய்வதில்லையென்றோ ஒப்புக் கொள்ள வில் லையெ ன்பது வெளிப்படை யாகும்.

Page 144
1.
மகாத்மா காந்தியடிகள், தான் இர்வின் பிரபுவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பற்றித் தெளிவுபடுத்திக் கூறும் பொழுது - They ought to understand that we have entered into no peace treaty. It is a provisional temporary settlement we have arrived at. I beseach you not to bid goodbye to common sense to cool courage, to patience and to reason"6Taipi diglugog அவதானிக்கும்படி கேட்டு, அதனையே நானும் இப்பொழுது உங்களுக்குக் கூறுகிறேன்.
எங்கள் பகுத்தறிவையோ, அமைதியான தைரியத்தையோ, எதனையும் நுணுகி ஆராயும் அறிவையோ நாம் இழந்துவிடக் கூடாது.
இதனை மனதில் வைத்து, உடன்படிக் கையைச் சிறிது ஆராய்வோம்.
எமது பிறப்புரிமை
உடன்படிக்கையின் சாதனைகளைப் பற்றிப் பின்னர் கூறுவேன். வேறெதனைச் சாதித்தாலென்ன சாதியாது விட்டாலென்ன - எங்கள் அடிப்படைக் கொள்கை எதனையும் நாங்கள் தாரைவார்த்து விட வில்லையென்பது வெளிப்படை ஒப்பந்தத் தில் அந்த வார்த்தைகள் உபயோகிக்கப் படவில்லை; மற்ற வார்த்தைகள் காணப்பட வில்லை என்று அக்கறைப்படுபவர்கள் பலர், infiguuga,6ir Jagu - "In the agreement nothing vital had been lost and no surrender of principle made". (He then referred to the missing of the enchancing word purna Swaraj in the agreement and observed.) "Independence is lindia's birth right and India cannot be satisfied with anything less" என்ற கருத்தினைக் கவனிப்பார்
956ITIT5
மொழிச் சமத்துவம் பெறுதல், தமிழ் அரசு அமைத்தல், குடியுரிமை பெறுதல் முதலியன எமது பிறப்புரிமைகள். இன்று பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லையென்றால், என்றோ ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதால், நாம் இவ்வுரிமைகளை விட்டுவிட்டோம் என்று அர்த்தம் செய்துவிட முடியாது.

33
ஆதரவு கிடைக்கும்
இன்று, சத்தியாக்கிரகம் நிறுத்தப் படுவதால் போராட்ட மனப்பான்மை நிரந்தரமாகவே போய்விடும் என்று அஞ்சுகிறார்கள் சிலர். ஆனால் பாரத நாட்டின் சுதந்திரப் போரின் சரித்திரத்தை உற்று நோக்கினால், எத்தனையோ முறை போராட்டம் நிறுத்தித் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது என்பதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் ஒன்றுண்டு. சுதந்திர வாஞ்சை கொண்ட மக்களின் தாகம் - சுதந்திரத்தின் மூலம் தான் தணியுமேயன்றி, வேறெதனாலும் தணியாது. மீண்டும் போராட்டம் ஆரம்பிக்க நேரிட்டால், அதற்கு ஆதரவு தமிழ் பேசும் மக்களிடம் கிடைக்கவே செய்யும் என்பது எனது திடமான நம்பிக்கை. இதனையே snfiguig digit "if therefore we are conscious of our strength and our ability io resume civil disobedience, whenever it becomes necessary we shall find no difficulty” 6 TGör gp ngólu Gir GMTnTř. அந்தவித ஆற்றல் நமக்கு இல்லாது போனால், சுதந்திரத்திற்கு நாம் அருகதை யற்றவர்கள் ஆவோம். ஆகவே, சத்தியாக் கிரகம் நிறுத்தப்படுவதால் ஒன்றும் குடி மூழ்கிப் போகவில்லை. போகவும் முடியாது என்று வற்புறுத்துகிறேன். உடன்படிக்கையின் சாதனை
இனி, தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரையில் உடன்படிக்கையின் சாதனைகள் எவையெவை எனக் கவனிப்போம்.
1. பிரதேச பாதுகாப்பு
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மை யாக இருக்கும் பிரதேசங்களில் எல்லாம் அரசாங்கம் திட்டமிட்டுச் செய்துவரும் சிங்களக் குடியேற்றத்தின் மூலம், பாரம் பரியமாகத் தமிழ்பேசும் பிரதேசங்களை யெல்லாம் சிங்களப் பிரதேசங்களாக்கி விடுவதற்கு ஒரு சதி நடந்துகொண்டிருந்தது. இதனை எதிர்த்து எங்கள் கட்சி ஆரம்ப காலம் தொட்டுக் கிளர்ச்சிசெய்து வந்திருக் கிறது. திருகோணமலைத் தீர்மானத்திற்

Page 145
1: LS
குறிப்பிட்ட நான்கு விஷயங்களில் இதுவு மொன்று. இந்த உடன்படிக்கையினால் எல்லாம் இழந்துவிட்டோம். குடி முழுகி விட்டது என்று கதறும் தமிழ்த் தலைவர்கள் சிலர் - இந்தக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் அரசாங்கத்தில் முழு மந்திரிப்பதவி, அரை மந்திரிப்பதவி முதலியன வகித்தும்; வேறு விதங்களில் அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சியில் இருந்தும் வருகிறார்கள் என்பதை இந்தச் சந்தர்ப்பத்திற் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த உடன்படிக்கையின் மூலம் - அரசாங்க உதவியுடன் நடைபெறும் சிங்களக் குடி யேற்றம் முற்றாகத் தவிர்க்கப்பட்டுத் தமிழ்ப் பிரதேசம் பாதுகாக்கப்படுகிறது என்பது வெள்ளிடைமலை. இதனை எவரும் மறுக்க முடியாத வகையில் உடன்படிக்கை அமைந்திருக்கிறது. 2. () சிங்களச் சட்டத்தைத் தடுத்திருக்கிறோம்
இன்று அமுலில் இருப்பது தனிச் சிங்களச் சட்டம். பிரதமர் ஏப்ரல் 25ஆந் திகதியன்று 'தமிழின் நியாயமான உபயோகம் பற்றிய நாலு அம்சத் திட்டத்தை வெளியிட்டார். தனிச் சிங்களச் சட்டம் அமுல் நடத்தப்படுவதாலோ அன்றிப் பிரதமரின் நாலு அம்சத் திட்டத்தின்கீழ் தமிழுக்கு நியாயமான அளவு பாவிப்புக் கிடைப்பதாலோ - வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள எல்லா அலுவலகங் களிலும் நிர்வாகம் தமிழிலேயே நடைபெற வேண்டுமென்ற நியதி ஏற்பட்டுவிடாது. சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தி, எவ்விதம் தமிழ்ப் பிரதேசம் பாதுகாக்கப் பட்டதோ, அவ்விதமே வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள எல்லா அலுவலகங் களிலும் தமிழிலேயே வேலைகள் செய்யவேண்டுமென்ற நியதியின் மூலம் - காரியாம்சத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தனிச் சிங்களச் சட்டத்தை நடைமுறைக்கு வராது தடுத்திருக்கிறோம்.

4.
(i) தமிழரசுக்கு அத்திவாரம்
ஒப்பந்தத்தில் - அரசாங்கமொழிச் சட்டத்தைப் பாதிக்காத முறையில், தமிழ் மொழி வடக்குக் கிழக்கு மாகாணங் களிலுள்ள எல்லா அலுவலகங்களிலும் நடைமுறையில் உபயோகிக்கப்படும் என்பதை நான் மறைக்கவோ, பூசி மெழுகவோ விரும்பவில்லை. சட்டப்படி இதன் கருத்து எதுவாகவிருக்கும் என்ற சர்ச்சையிலும் நான் இப்பொழுது இறங்க விரும்பவில்லை. நாளாந்த நடைமுறையில் - தமிழ் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் எல்லா அலுவலகங்களிலும் எல்லா வேலைகளுக்கும் உபயோகிக்கப்படுவதனா லும், தமிழ்ப் பிரதேசம் சிங்களக் குடியேற்றத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டத னாலும் தமிழரசு நிறுவுவதற்கு அடிகோலி யிருக்கிறோம் என்று கூற விரும்புகிறேன். 3. தேசிய சிறுபான்மையினர் மொழி
தமிழ்மொழி - இந்நாட்டிலுள்ள தேசிய சிறுபான்மையினரின் மொழியென ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு தேசிய சிறுபான்மை இனத்திற்கும் - அதன் மொழிக்கும் சர்வதேசச் சட்டங்களில் வரையறுக்கப்பட்ட உரிமைகள் உண்டு.
வெறும் பாசாங்கு
தனிச் சுதந்திரமுள்ள தமிழ்நாடு அமைத்துவிட்டால், இலங்கை முழுவதும் தமிழுக்கும் - சிங்களத்துக்கும் சரிசம அந்தஸ்துக் கிடைத்துவிடாது என்பது எவரும் வற்புறுத்தாமலே தெரியும். ஒற்றையாட்சித் திட்டத்தில் இப்பொழுது எப்படி மொழியுரிமை பறிக்கப்பட்டதோ - அதேபோல் சரிசம அந்தஸ்துக் கிடைத் தாலுங்கூட, அந்த அந்தஸ்து நிலையற்ற தாகவே இருக்கும். சமஷ்டி ஆட்சி மூலம் மட்டுமே - தமிழுக்கும், சிங்களத்துக்கும் சரிசம அந்தஸ்து என்பது நிரந்தரமாக நிலைநாட்ட முடியும். ஒற்றையாட்சியின் கீழ் சரிசம அந்தஸ்துப் பெறவேண்டும் என்பது வெறும் பாசாங்கே தவிர வேறொன்றில்லை.

Page 146
13
சமஷ்டியில் தமிழரசு
இதுவரை கிடைத்ததை அத்திவாரமாக வைத்துக்கொண்டு, தமிழுக்கும் சிங்களத் திற்கும் சரிசம அந்தஸ்து நிலையாகக் கிடைக்கவும் தமிழ்பேசும் மக்கள் உரிமையுடன் இந்த நாட்டில் வாழவும், நிலையான பொருளாதார சுபீட்சத்தை அடையவும், தம் வாழ்க்கை முறையைத் தாம் விரும்பியவாறே அமைக்கவும் வல்ல - சமஷ்டி ஆட்சியின் அங்கமான ஒரு தமிழரசை அமைப்பதற்கு நாம் முயல வேண்டும்.
முதலாவதுபடி தாண்டிவிட்டோம்
திருகோணமலைத் தீர்மானம் - நம் பொதுச் சபையின் தீர்மானம். அந்தத் தீர்மானத்திற் கண்டபடி, நாலு அம்சக் கோரிக்கைகளையும் அரசாங்கம் ஒப்புக் கொள்ளாத விடத்து, சத்தியாகக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் முடிவு. அதனை ரத்துச் செய்து போராட்டத்தை நிறுத்துவதற்கு - கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியவர்களுக்கோ, உங்கள் காரிய சபைக்கோ அதிகாரமில்லை. உங்கள் சார்பில் அவர்கள் செய்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதோ அன்றி ரத்துச்செய் வதோ உங்கள் மகத்தான பொறுப்பு இர்வின் பிரபுவுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகையில் Jinfigulig dair - "It is open to you to press for a different programme and different policy at Karachi. Butlet it not be said that we are a people incapable of maintaining discipline. Swaraj was not won by this agreement, but the second door to Swaraj was opened" 6Taipi Gdf Tairaorrrri. இந்த உடன்படிக்கையின் கீழ், தமிழ் அரசுக்குச் செல்லும் நீண்ட பாதையில் - முதலாவது படியைத் தாண்டியுள்ளோம் என்று கூற விரும்புகிறேன்.
கொள்கையளவில் உடன்படிக்கை
மேலும் இந்த உடன்படிக்கையைக்
கூர்ந்து கவனியுங்கள்! மொழி விஷயத்தில் -
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த

5
மற்ற ஏழு மாகாணங்களிலும் பிரதமரின் நாலு அம்சத் திட்டம் நடைமுறையிலி ருக்கும். இந்த நாலு அம்சத் திட்டத்தைப் பற்றிய எத்தனையோ விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியிருக்கின்றன. பொதுப்படையான கொள்கைகளையே உடன்படிக்கை குறிப்பிடுகிறது. அது போலவே, பிரதேச சபைகள் விஷயத்திலும் பல விஷயங்கள் தெளிபடுத்தப்பட வேண்டியிருக்கின்றன. இவையெல்லாம் தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே, உடன் படிக்கையின் முழுப் பலாபலன்களையும் நிதானமாகச் சொல்லமுடியும். பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பொறுத்த வரையில் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவிழ் பதம் பார்ப்பதுபோல், குடியேற்ற விஷயத்தில் அதிகாரம் வழங்கப்பட்டது போல் தாராளமான அதிகாரங்கள் வழங்கப்படும் என்ற எண்ணத்திலேயே, கொள்கையளவில் உடன்படிக்கை செய்தோம்.
கொள்ளலாம் அல்லது தள்ளலாம்
மீண்டும், காந்தியடிகள் கூறியதைக் GauGolf'uGunTib. "The settlement is obviously provisional. But is necessitates a change in our method of work. Whilst civil disobedience and jail going direct action was the method to be followed before the settlement, the way of the argument and negotiation takes its place. Butlet no one forget that the settlement is provisional and the negotiation may break down at any stage. Let us therefore keep our power ever bright. Failure should not find us napping, but ready to mobilize at the first command. In the meanwhile let us carry on the process of self, purification with greater vigour and greater faith. So that we may grow in strength day by day.
மேலும் தெளிவுபடுத்தப்பட வேண்டிய விஷயங்கள் தெளிவுபடுத்தப் பட்டு, தமிழ் மொழி மசோதாவும் - பிரதேச சபை மசோதாவும் பாராளுமன்றத்திற்கு வரும் போது, அவை திருப்தியளிக்கா விட்டால் நாம் அவற்றை ஏற்காது விடலாம்;

Page 147
-1 எமது அடுத்த முயற்சி எதுவாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கலாம். அதுவரைக்கும், சமரசமான பேச்சு வார்த்தைகள் மூலம் - எங்கள் கோரிக்கைகள் வெற்றிபெறும் வகையில் முயற்சி செய்வதே எங்கள் 3s 60). அவ்வித முயற்சி தோல்வியுற்றால், எதற்கும் நாம் தயாராக இருக்கவேண்டும் எதற்கும் தயாராக இருக்கும் மனோநிலையை எம்முன் அமைக்கவேண்டும் என்பதையே இங்கு குறிப்பிடுகின்றேன். ஆனால், உத்தேச ஆகஸ்ட் போராட்ட முஸ்தீபுகளை மட்டும் தளர்ச்சி விடுவது நமது கடமை.
அரசாங்கம் உணரவேண்டும் :
நமது கட்சியின் பிரதிநிதிகளும் - பிரதமரும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு உதவியாயிருந்த சில நண்பர்கள் - தெளிவுபடுத்தவேண்டிய விஷயங்கள் தெளிவுபெறும்வரை, சத்தியாக்கிரகத்தை ஒத்திவைப்பதாக அறிவிக்கும்படி யோசனை கூறினார்கள். ஆனால், நாம் சத்தியாக் கிரகத்தைக் காலவரையறையின்றி நிறுத்தி வைத்திருக்கிறோம். இதன் நோக்கம் - இருதரப்பினர்க்கிடையிலும் பரஸ்பர நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும், சகல விஷயங்களும் தாராள மனதுடன் தீர்மானிக்கப்படுவதற்கும் ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துவதே. இந்த நல்ல எண்ணத்தை உணர்ந்து, அரசாங்கமும் நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
ஆக்கவேலைகள்
நான் கூறுவது முரண்பாடாகத் தோன்றினாலுங்கூட, மொழி விஷயத்திலும்
AAk ஜதிகள் မြွ၍)၈ရ)။

6.
- பிரதேச சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்குவதிலும் அரசாங்கம் வெகு தாராளமாக நடந்துகொண்டால், நிலைமை ஸ்தம்பிதம் அடையக்கூடும். கிடைத்திருக்கும் மொழியுரிமையும் - அரசியல் உரிமைகளும் போதுமென்று நம் மக்கள் இருந்துவிட்டால், நாம் - தமிழுக்குச் சம அந்தஸ்துப் பெறுவதோ, தமிழரசு பெறுவதோ கஷ்டமாகும். இந்நிலை வராது பாதுகாக்க
வேண்டும். முன்கூறியபடி, சுதந்திரதாகத்தைச் சுதந்திரத்தினாலேயே தணியச் செய்ய வேண்டும். இப்பொழுது ஏற்பட்டுள்ள இடைக்கால உடன்பாட்டின்கீழ் - விவரிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் விவாதிக்கப் பட்டுத் தெளிவாக்கப்படும் வரை, கட்சி செய்யவேண்டிய ஆக்கவேலைகள் பல உள. இதில் முதலிடம் பெறவேண்டியது தீண்டாமை ஒழிப்பு, அதற்கடுத்தபடியாகத் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் - யாழ்ப் பாணத் தமிழர், திருகோணமலைத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், மலைநாட்டுத் தமிழர் :- இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று பாராட்டாது. தமிழ்த் தாயின் புதல்வர்கள் என்ற முறையில் தமிழ்பேசும் இனத்தை ஒன்று சேர்த்து, எங்கள் உரிமைகளைப் பெறத் தோளோடு தோள் நின்று உழைப்போமாக!
வாழ்க தமிழ் வாழ்க தமிழ் பேசும் இனம் வாழ்க தமிழரசு!
公
SR
டி பப்ப " குலத் الم 4رN சொலல் பாவம் ད།

Page 148

வது தலைவர்
1958
1961
Go Gag T5
5 uu Lb, L I IT- 2 - 9G) u rit 95 GiT

Page 149


Page 150
தீண்டாமை ஒழிந்தால் திரு. என்.ஆர். இராஜவரோதய
6 ஆவது தேசிய மாநாடு
வரவேற்புச்சபைத் தலைவர் அவர்களே! தாய்மார்களே!
பெரியோர்களே! நண்பர்களே!
3. தமிழ் பேசும்
மக்களின் நீண்டகால சரித்திரத்திலே, அதி முக்கியமான ஒரு கட்டத்தில் அடங்காத் தமிழ்ப் பற்று' என்ற சிறப்புப் பெயர் வாய்ந்த வன்னி நாட்டின் தலைப் பட்டினத்திலே நாம் இன்று கூடியிருக்கின்றோம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இந்தத் தேசிய மாநாட்டிலிருந்து, இவ்வாண்டுத் தலைவராக என்னைத் தேர்ந்திருக்கின்றீர்கள். நான் தலைவராகப் பதவி வகிக்கப் போகும் காலம் - நமது மக்களுடைய வாழ்விலே பற்பல நெருக்கடிகள் சூழ்ந்ததாக இருக்கப் போகின்றது. இந்த உண்மையையும், தலைவன் என்ற உயர்ந்த பதவி தாங்கி நிற்கும் உத்தரவாதங்களையும் எண்ணிப் பார்க்கும் போது, இவற்றிற்கு ஈடாக என் திறமை எம் மாத்திரம் என்பதை நான் மிகுந்த பணிவோடு உணர்ந்திருக்கிறேன். எனவே தான், தலைவன் என்ற எண்ணமே என் உள்ளத்தில் எழாதிருக்க எல்லாம் வல்ல இறைவன் என்பால் அருள் சுரப்பானாக என்று பிரார்த்திக்கின்றேன்!
கெளரவம் எனக்கல்ல
என் ஆற்றலும் திறமைகளும் வரையறுக்கப்பட்டனவாயிருந்த போதிலும், இன்று நான் வகிக்கும் உயர்ந்த பதவியினை எனக்கு முன்பு வகித்த உத்தமர்களின் அடிச்சு வட்டைப் பின்பற்றி, இப்பதவியில் அத்திறமைசாலிகள் சிருஷ்டித்த உன்னத மான பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் எல்லோரும் திருப்தியடையும்

- விடுதலை திண்ணம் பம், பா.உ. அவர்கள் பேருரை
- 25-5-1958 - வவுனியா)
வண்ணம் என் கடமைகளைச் செவ்வனே செய்து முடிக்கலாம் என்ற திட சித்தமும், மன உறுதியும் என்பால் உண்டு.
நீங்கள் எனக்களித்திருக்கும் கெளரவத்துக்காக நான் பெரிதும் நன்றி பாராட்டுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு அளிக்கப்பட்ட ஒரு கெளரவமாக இதை நான் கருதவில்லை. நமது கட்சி இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் யாவற் றிலும் தனி நிகரான ஒரு ஸ்தானத்தைப் பெற்றிருக்கிறது. அதாவது, இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் பல்வுேறு பிரிவினரையும் ஒன்றுபடுத்திய ஒரேயொரு அரசியல் கட்சி - இலங்கைத் தமிழரசுக் கட்சி தான். இக்கட்சியின் தலைவராகக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை, முதன் முறையாகத் தேர்ந்தெடுத்திருப்பது கட்சியின் வரலாற்றில் ஒரு முக்கிய சம்பவமாகும். எனவே, என்னைத் தேர்ந்ததன் மூலம் என்னையல்ல - தமிழ் பேசும் இனத்தின் சுதந்திர இயக்கத்தில், தமிழரசுக் கட்சியின் மூவர்ணக் கொடியின் கீழ் முன்னணியில் நின்று என்றென்றும் போராடி வரும் கிழக்கு மாகாணத்து மக்களையே நீங்கள் கெளரவித்திருக்கிறீர்கள்.
நேற்று வவுனியா மைதானத்திலே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இலட்சியங்களையுடைய நமது தொண்டர் களின் பிரமாதமான அணிவகுப்பைப் பார்வையிடும் சந்தர்ப்பமும், கொடியரங்கில் நின்று அவர் தம் மரியாதையை ஏற்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தன. அவர்கள் அனைவரும் மக்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தங்களை அர்ப்பணித் துள்ளவர்கள்; நெறிமுறை தவறாத சாத்வீகச் சத்தியாக்கிரகிகள்,

Page 151
-1 செயல்தான் வேண்டும்
இங்கு கூடியிருக்கும் ஜனசமுத்திரத்தில் உள்ள ஒவ்வொருவருடைய கண்களிலும் 'செயல் வேண்டும்' என்ற வாஞ்சை காணப்படுவது போலவே, நேற்று அந்த உண்மைச் சத்தியாக்கிரகிகளின் கண்களிலும் செயல் தாகம் மண்டிக் கிடந்ததை நான் கண்டேன். பிரசங்க மாரி பொழிவதற்கும், வாதப் பிரதிவாதங்கள் நடத்துவதற்கும், வற்புறுத்தல் தீர்மானங்கள் நிறைவேற்று வதற்கும் இது சமயமல்ல என்பதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். இப்போது வேண்டுவது செயல் ஒன்றேதான்.
மலைநாட்டுத் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமைகள் பறிபோய் விட்டன; எங்கள் மொழி உரிமை பிடுங்கப் பட்டு விட்டது; அரசாங்க பதவிகள் பெறுவதில் சம சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், நமது ஜீவாதார உரிமைகளையும், தன்மானத்தையும், அரசியல் சுதந்திரத்தையும் மீட்டுத்தரக்கூடிய செயல்தான் இன்று நமக்கு வேண்டப் படுகிறது.
நீங்கள் இங்கு பெருந்திரளாக வந்து கூடியிருப்பதற்குக் காரணம் என்ன வென்பதை நான் நன்கறிவேன். சொற் பொழிவுகளைச் செவிமடுத்து மட்டும் திருப்தியடைவதற்காக நீங்கள் இங்கு வரவில்லை. செயலில் இறங்குவதற்கு, போராட்டத்தில் குதிப்பதற்கு நீங்கள் தயார் என்பதை எடுத்துரைப்பதற்காகவே இங்கு வந்துள்ளீர்கள்.
ஆயினும், இப்படியான சந்தர்ப் பங்களில் அனுஷ்டிக்கப்படும் சம்பிரதாயத் தின்படி நான் மிகச் சுருக்கமாகச் சில வார்த் தைகள் கூறுவது அவசியமாகிறது. அடுத்து வரும் சில மாதங்களில், ஏன் - சில வருடங்களில் என்று கூடச் சொல்லலாம்; நாம் எப்படியான நிலைமைகளை யெல்லாம், கஷ்ட நஷ்டங்களை யெல்லாம் எதிர்பார்க்க வேண்டும் என்று எச்சரித்து - தக்க முன்னேற்பாடுகள் செய்து கொள்ளும்படி

உங்களுக்கு ஆலோசனை கூறுவது தவிர்க்க முடியாததாகும்.
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்துவிட்டது. இந்தப் போராட்டத்தில் நாம் கண்ணிரையும் கம்பலையையும் தான் எதிர்பார்க்க வேண்டும். சகல விதமான தியாகங்களைச் செய்யவும்; அவசியம் ஏற்பட்டால் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்கவும் நாம் சித்தமாயிருக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களின் விரோதிகள் பற்பல சதிகளைச் செய்வார்கள். நம் மக்களை அவர்கள் பட்டினி போட்டுக் கொல்லப் பார்ப்பார்கள். அப்படியான நிர்ப்பந்தங்களை யெல்லாம் சமாளிக்க நாம் தயாராய் இருக்க வேண்டும்.
உண்மைச் சத்தியாக்கிரகி - ஒரு போதும் முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டான். துன்பத்தைக் கண்டு தொடை நடுங்க மாட்டான். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் - அவன் ஏறு போன்ற விரத்தோடு, வீறு கொண்டு முன் நிற்பான்.
ஏன் கால எல்லை
எந்த ஒரு அரசியல் போராட்டமும் நாட்டில் ஒரளவு குழப்பத்தையும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் சற்றுத் தடுமாற்றத் தையும் விளைவிக்கத்தான் செய்யும். பற்பல கஷ்ட நஷ்டங்கள் மக்களுக்கு ஏற்படவுங் கூடும். இப்படியான ஒரு சீர்கேட்டை ஏற்படுத்துவதில், பொறுப்பு வாய்ந்த எந்த ஒரு அரசியல் கட்சியும் மகிழ்ச்சியடைய முடியாது. போராட்டத்தைக் கூடுமான வரை தடுக்க முடியுமானால், மக்கள் நலனில் நாட்டமுள்ள எந்த அரசியல் கட்சியும் அப்படித்தான் செய்ய முற்படும்.
ஆனால் அதே சமயத்தில் நாம் இன்னொரு உண்மையை மறந்து விடலா காது. ஒரு அரசியல் கட்சி - எந்த மக்கள் சமுதாயத்தின் பிரதிநிதியாக விளங்குகிறதோ - அந்த மக்கள் சமுதாயத்தின் ஜீவாதார உரிமைகள் யாவும் அபகரிக்கப்பட்டு, அந்தச் சமுதாயத்தையே பூண்டோடு அழித்து விடுவதாக ஒரு பகிரங்கச் சவால் விடப்படும் போது - அதை எதிர்த்துப் போரிடாமல்,

Page 152
12
செயலற்றுச் சோம்பிக் கிடப்பதானால் - அந்த அரசியல் sda இருப்பதைவிட WM அழிந்தொழிவது மேலானது.
எந்தச் சிக்கலான பிரச்சினையையும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம், நட்புறவான கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்து வைக்கலாம் என்பதில் - நமது கட்சி அன்றும், இன்றும் நம்பிக்கை கொண்ட தாகத்தானிருக்கிறது. மக்களுக்கும் மக்களுக் கும் இடையிலாயினும் சரி - மக்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலாயினும் சரி ஏற்படும் தகராறுகளையும், பேதங்களையும் கூட - இந்த வழியில் தீர்த்து வைக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. சமாதானப் பேச்சு வார்த்தை என்ற வழியைக் கடைப்பிடித்து, கெளரவமான முறையில் பிரச்சினையைத் தீர்க்க முடியுமானால் - அந்த வழியையே முதலில் நாட வேண்டும். அந்தச் சமாதான வழி பயன் தரவில்லை என்று கண்டால்தான் - நேரடி நடவடிக்கை, சத்தியாக்கிரகம் போன்ற இதர வழிகளைக் கையாள வேண்டும். இந்த நம்பிக்கையில் நமக்கு உள்ள பற்றுதலின் காரணமாகவே, 1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாம் நிறைவேற்றிய திருமலைத் தீர்மானத்தில் காணப்பட்ட கோரிக்கைகளைப் பெறு வதற்கு ஒராண்டு எல்லை குறிப்பிட்டோம்.
திருமலைத் தீர்மானத்தின் பிரகாரம் நாங்கள் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆந் திகதி நமது சத்தியாக்கிரக, சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆயினும் சமாதான மார்க்கத்தில் நமக்கு உள்ள குன்றாத பற்றும் குலையாத நம்பிக்கையுமே - கடந்த ஆண்டு இதே காலத்தில் எங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் பிரதமர் காட்டிய ஆவலை நாம் ஏற்றுக் கொள்ளும்படி செய்தன. அதனாலேயே இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு நாம் சம்மதித்தோம்.
உடன்படிக்கை ஒரு எடுத்துக்காட்டு
பேச்சுவார்த்தைகள் ஒரு சமாதான
உடன்படிக்கையில் முடிவுற்றன. அந்த உடன்படிக்கையின் வாசகங்கள் என்ன

வென்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அது மட்டுமல்ல, அந்த உடன்படிக்கையை எவ்வளவு வெட்கக் கேடான முறையில் ஒருதலைப்பட்சமாக அரசாங்கம் நிராகரித்தது என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே.
பிரஸ்தாப உடன்படிக்கை எங் களுடைய அபிலாஷைகளையெல்லாம் முற்றாகத் திருப்திப்படுத்தவில்லை. ஓர் இடைக்கால ஏற்பாடாகவே அந்த உடன் படிக்கையை நாம் மதித்தோம். ஆயினும் கெளரவம் குன்றாத பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதில் எங்களுக் குள்ள ஆர்வத்துக்கும், விருப்பத்துக்கும் அந்த உடன்படிக்கை ஒரு சின்னமாக விளங்கியது எனலாம். நாட்டில் குழப்பமும் கலவரமும் இல்லாத முறையில் எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு மார்க்கமுண்டானால் = அதற்கு நாம் மாறுபட்டவர்கள் அல்லர் என்பதற்கு மேற்படி சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டாகும். நண்பர்கள் கூறும் ஆலோசனை
இந்த விஷயத்தை இங்கு நான் ஏன் பிரஸ்தாபிக்கிறேன் என்றால், அதற்கும் காரணம் உண்டு. உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் சில நண்பர்களும் அன்பர்களும் எங்களுக்குப் புத்தி சொல்ல வருகிறார்கள். ரசாங்கத்துடன் எங்களுக்குள்ள தகராறுகளை நாங்கள் சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறு கிறார்கள். இந்த முறைகளையெல்லாம் நாம் கடைப்பிடித்துக் களைத்துப்போய் விட்டோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவது மிகமிக அவசியம்.
1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆந் திகதி நமது கட்சியின் திருமலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வரும் நான்கு கோரிக்கைகளைக் கொண்டதாகும் :
1.இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும்

Page 153
Լ
இடையேயுள்ள இனப்பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான முடிவு காணுவதற்காக - சமஷ்டி ஆட்சிக்குட்பட்ட இலங்கையுள் மொழிவாரியாக ஒரு சுயாதீனத் தமிழ் ராஜ்யத்தை அல்லது ராஜ்யங்களை நிறுவுதல் வேண்டும்.
2. தமிழ் மொழி அதன் பழைய ஸ்தானத்துக்கு உயர்த்தப்பட்டு, நாடு முழுவதிலும் சிங்களத்துடன் சம அந்தஸ்துப் பெற்ற அரசகரும மொழியாக்கப்பட வேண்டும். 3. தற்போதைய பிரஜா உரிமைச் சட்டம் உடனடியாக ரத்துச் செய்யப்பட்டு, மலைநாட்டுத் தமிழ் மக்களுக்குகெல்லாம் பிரஜா உரிமையும் வாக்குரிமையும் பழையபடி வழங்கப்பட வேண்டும்.
4. பரம்பரை பரம்பரையாகத் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் - சிங்கள மக்களைக் குடியேற்றுவது உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும்.
மேற்படி கோரிக்கைகளை நாம் விடுத்ததோடு மேலும் பல விஷயங்களைச் சுட்டிக் காட்டினோம்.
* அரசாங்கத்தின் மொழிக் கொள்கையானது - தமிழ் பேசும் மக்களை அழித்தொழிக்கப்போகின்றது.
* பிரஜாவுரிமைச் சட்டங்கள் - தமிழ் பேசும் மக்களில் ஒரு சாராரை வாக்குரிமை அற்றவர்களாகவும், நாடற்ற அனாதை களாவும் செய்திருக்கிறது; இன்னொரு சாராரை அவர்களின் சொந்த நாட்டிலேயே சந்தேகப் பிரஜைகளாகவும், இரண்டாந்தரக் குடிமக்களாகவும் ஆக்கியிருக்கிறது.
* அரசாங்கத்தின் ஆதரவில் தமிழ்ட பிரதேசங்களில் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றம் - திட்டமிட்டுச் செய்யப்படும் ஒரு சூழ்ச்சியாகும். இதன் மூலம், தமிழ் பேசும் மக்களுக்கு இப்போது இருந்து வரும் அற்ப சொற்பமான பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் காலவரையில் பறிக்கப்பட்டுவிடும்.
மேற்கண்ட நடவடிக்கைகள் யாவும் ஒரு துக்ககரமான முடிவையே நாடிச் செல்

42
கின்றன என்பதை நாம் அனுபவ வாயிலாக அறிவோம். அந்த முடிவு - இலங்கை நாட்டிலிருந்து தமிழ் இனத்தையே பூண்டோடு அழித்து விடும் முடிவாகத்தான் இருக்கும்.
இத்தகைய ஒரு பயங்கரமான நிலை
பற்றி நாம் அதிர்ச்சியடைவது இயற்கையே. எனவேதான் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு உடன்படிக்கை உருவாகிக் கைச்
சாத்தானதும் இந்த ஆபத்து ஓரளவு தடைப்படும் என்று நாம் நம்பினோம்.
ஆனால் உடன்படிக்கை - இன்று
இருந்த இடந் தெரியாமல் குமைந்து போய் விட்டது. அது இந்த நாட்டுத் தமிழ் மக்களுக்கு எதுவித பலனையும் அளிக்க வில்லை என்று சிலர் கூறலாம். ஆயினும் ஒரு பெரிய பலாபலன் அதனால் ஏற்பட்டிருக் கிறது. எங்களுடைய கோரிக்கைகள் எவ்வளவு நியாயமானவை என்பதை அது நிலைநாட்டியிருக்கிறது. நமது கோரிக்கை கள் நியாயமானவைதாம் என்பது பற்றி இனிமேல் கருத்து வேற்றுமைகளுக்கு இட மில்லை. தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப் பட்டு வந்த அநீதிகளை - பிரதம மந்திரியும் அவர் அரசாங்கத்தினரும் மேற்படி உடன்படிக்கை கைச்சாத்தானதன் மூலம் ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
பிரதமர் பதில் சொல்லவேண்டும்
உடன்படிக்கையை அமுல் செய்யப் பிரதமர் தவறிவிட்டார் என்பதும், உடன் படிக்கையை அவர் ஒருதலைப் பட்சமாக நிராகரித்து விட்டார் என்பதும் வேறு விஷய மாகும். இந்தக் கண்ணியமற்ற செயலுக்கு அவர் உலக அபிப்பிராயத்தின் முன்னே பதில் இறுக்கவேண்டியவராவார். எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் குற்ற மற்றவர்களாக - நிரபராதிகளாக உலகம் என்ற நீதிமன்றத்தின் முன்பு தலை நிமிர்ந்து நிற்கிறோம்.
கடந்த ஆண்டு நாம் பிரதம மந்திரியுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த போது, மலைநாட்டுத் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமைகள்

Page 154
Z
பற்றிய பிரச்சினையையே முதன் முதலாகக் கிளப்பினோம். பிரதம மந்திரி - எங்களோடு மட்டும் பேசித் தீர்த்துக்கொள்ளும் ஒரு பிரச்சினை அல்ல அது என்றும், அப்படியான பேச்சில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் வேறு பலரும் இருக்கிறார்கள் என்றும் எங்களுக்குத் தெரிவித்தார்.
இப்பிரச்சினை சம்பந்தமாகத் தாம் பாரதப் பிரதமர் திரு. நேருவுடன் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாகவும், அடுத்த வருட முடிவுக்குள் - அதாவது 1957ஆம் ஆண்டு முடிவதற்குள் மலைநாட்டுத் தமிழர் பிரச்சினையைத் தாம் தீர்த்து விடுவதாகவும் பிரதமர் கூறினார்.
மலைநாட்டுத் தமிழர் பிரச்சினை விவாதிக்கப்படும் இடத்தில் திருவாளர்கள், தொண்டமானும், அஸிஸும் சமுகமாயிருக்க வேண்டும் என்ற நிபந்தனை சரியானதாகவே எங்களுக்குத் தோன்றியது. எனவே, வருடம் முடிவதற்குள் இப் பிரச்சினையைத் தீர்ப்பதாகப் பிரதமர் கூறிய உறுதி மொழியை நாம் ஏற்றுக்கொண்டோம். உடன்படிக் கையைப் போலவே இந்த உறுதி மொழியும் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
சுமார் பத்து லட்சம் மலைநாட்டுத் தமிழர்களுடைய பிரச்சினை - சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து சிங்களவர் - தமிழருக்கிடையே தோன்றியுள்ள அகன்ற இனப் பிரச்சினையின் ஒரு அங்கம்தான் என்றும், அதனால் இந்தப் பிரச்சினைக்குள் இந்தியப் பிரதமர் திரு. நேரு இழுத்து வரப்படுவது கூடாது என்றும் நமது கட்சி எப்பொழுதும் வற்புறுத்திக் கூறிவந்திருக் கிறது. இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. அந்த ரீதியிலேயே இது பேசித் தீர்க்கப்படவேண்டும். ஆனால் அரசாங்கமும் பிரதமரும் இந்தப் பிரச்சினையைக் காலவரையின்றிக் கட்டுப்பெட்டிக்குள் மூடி வைத்து விட்டார்கள். உடன்படிக்கை, உறுதி மொழிகள் எல்லாம் பயனற்றுப் போய் விட்டன. ஆகவே கட்சி இப்போது நிலைமை யை ஆராயவேண்டும். எங்களைப் பொறுத்த

3.
வரையில் திருமலை மாநாட்டில் கொண்டு வரப்பட்ட நான்கு கோரிக்கைகளும் நிறைவேறும்வரை நாம் திருப்தியுடன் ஒய்ந்திருக்கப்போவதில்லை என்பதை இங்கு கூற விரும்புகிறேன்.
தீண்டாமை ஒழிய -
விடுதலை உதயமாகும்
நண்பர்களே! நாம் இந்த நாட்டில் சரிசம அந்தஸ்துடைய பிரஜைகள் என்பதை நிலைநாட்டுவதற்காக - ஒரு கடினமான போராட்டத்தைத் தொடங்கும் தறுவாயில் இன்று இருக்கிறோம். சிங்களவரோடு தமிழருக்குச் சம அந்தஸ்து என்று பேசும்போது, நமது தமிழ்ச் சமூகத்திலேயே புரையோடியிருக்கும் ஒரு கொடிய 'புண்ணைப் பற்றிய நினைவு என் மனதை வருத்துகின்றது. நமக்குள் இருக்கும் தீண்டாமை என்ற புண்ணைத்தான் இங்கு குறிப்பிடுகின்றேன். இதைப்பற்றி நாம் எவ்வளவோ எழுதிவிட்டோம். அழகாகப் பேசி விட்டோம். பயபக்தியோடு தீர்மானங்களும் நிறைவேற்றிவிட்டோம். ஆயினும் இந்தச் சாபத்தீட்டை அடியோடு ஒழித்துக்கட்ட நாம் உருப்படியாக எதைத் தான் செய்திருக்கிறோம்? தீண்டாமை என்ற கொடிய வழக்கத்தை நாம் எவ்வளவு விரைவில் குழிதோண்டிப் புதைக்கிறோமோ, அடுத்த கணம் - இரவைத் தொடர்ந்து பகல் வருவதுபோல, நமது மக்கள் அனைவருக்கும் விடுதலை உதயமாகும் என்பது திண்ணம்.இதற்காக நாம் முயற்சி செய்யவேண்டும். கட்சியின் உத்தேச சத்தியாக்கிரக இயக்கத்தில் பங்குகொண்டு பணியாற்றப் புறப்பட்டிருக்கும் ஆயிரக்கணக் கான தொண்டர்கள், தங்களுடைய வேலை அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவது ஒன்றுதான் என்று எண்ணிவிடக்கூடாது. உண்மையான சத்தியாக்கிரகி என்பவன் - அரசியல், சமூகம், பொருளாதாரம், மற்றுமுள்ள எல்லாத் துறைகளிலுமே பணியாற்றத் தயாராக இருக்கவேண்டும்.
இன்னொரு விஷயத்தை நான் இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமாகும். தமிழ் பேசும் மக்களை இன்று ஒரு வித சஞ்சலம்

Page 155
-
பீடித்திருக்கிறது. நாட்டில் நடை பெற்றுவரும் சிற்சில சம்பவங்களைக் குறித்து அவர்கள் கவலைகொண்டுள்ளார்கள். இன்றைய அரசாங்கம் தங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக இல்லை என்ற உணர்ச்சி - அவர்தம் உள்ளத்தில் அலை மோதுகிறது. நாட்டில் கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கும் நட்டாமுட்டித் தனத்தையும், காடையர்களின் திட்டமிட்ட ஆர்ப் பாட்டத்தையும் தான் குறிப்பிடுகிறேன்.
அலையலையாகக் கிளப்பப்படும் இந்த வகுப்புவாத வெறி - தமிழ் மக்களை இரை கொள்ளப் பார்க்கிறது. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ்ப் பொதுமக்களுக்கும், தமிழ் வியாபாரிகளும், அரசாங்க ஊழியர்களும் - ஏற்கனவே திட்டமிடப்பட்ட பலாத்காரச் செயல்களுக்கும் பயங்கரச் சம்பவங்களுக்கும் பலியாக்கப்பட்டு வருகிறார்கள். கடைகளும் வீடுகளும் சுட்டெரிக்கப்படுகின்றன. உடைமைகள் யாவற்றையும் ஆங்காங்கே விட்டுவிட்டுத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓடிவிடும்படி அவர்கள் துரத்தி யடிக்கப் படுகிற்ார்கள். தமிழருக்குப் பாதுகாப்பு இல்லை
தமிழரின் வியாபார நிலையங்களின் முன்னால் காடையர்களும் கைக்கூலிகளும் நின்று, வாடிக்கைக்காரரை அங்கு போக விடாமல் மறியல் செய்கிறார்கள். பிரதமரின் சொந்தத் தொகுதியிலேயே - தமிழரின் கடைகள் முன்னால் மாதக் கணக்காக மறியல் நடந்துகொண்டிருக்கிறது. அங்கு பாதுகாப்புக்கேட்ட தமிழருக்கு அது மறுக்கப்பட்டு விட்டது. மொரட்டுவை, பாணந்துறை, கழுத்துறை, கஹாவத்தை, வியாங்கொடை, தெரனியகலை, இங்கும் (வவுனியா) - இன்னும் இவை போன்ற சிங்களப் பெரும்பான்மைப் பட்டினங் களிலும் தமிழர்கள் இந்தப் புதுத் தொல்லை யால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விஷமம் நடக்கும்போது சட்டத்தை யும், ஒழுங்கையும் பாதுகாக்கவேண்டிய

4.
அரசாங்க ஆட்கள் (பொலீஸசார்) பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். இந்த இடங்களில் எல்லாம் தமிழரின் உயிருக்கும் உடைமைக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். பல இன மக்களும் கலப்பட மாக வாழும் கொழும்பு நகரத்திலும் கூடக் காடையர்கள் தமிழர் வீடுகளுக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்று, அங்குள்ளவர்களை மூட்டை முடிச்சுகளுடன் நடையைக் கட்டுமாறு கோரும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்களே - அப்போதும் பொலீஸார் காடையர்களுடன் ஜீப்பில் கூடவே சென்று அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தார்கள். நாகரீகமடைந்த சமுதாயத் தில் பிரஜைகளுக்குக் கிடைக்கக் கூடிய சாதாரண பாதுகாப்புக் கூடத் தமிழருக்கு மறுக்கப்படுகிறது. இந்தப் பயமுறுத்தல் சம்பந்தமாக அரசாங்கம் என்ன சொல்ல இருக்கிறது என்று அறிய விழைகின்றேன்.
நாட்டில் ஒற்றுமையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறார்கள். அப்படிப் பேசுகிறவர்கள், இந்தப் பயமுறுத்தலின் பாரதூரமான விளைவு என்ன என்பதை உணர்ந்துள்ளார்களா? நாட்டின் ஒற்றுமை யைக் காக்கவேண்டும் என்ற ஆர்வத்தில், நாங்களும் சிங்களவர்களோடு ஒருமித்த கருத்துடையவர்களாகத்தான் இருந்தோம். ஏறக்குறையப் பத்து வருஷங்களுக்கு முன்னர் நமது கட்சியின் அடிப்படை இலட்சியத்தை ஆராய்ந்து உருவாக்கியபோது, சமஷ்டி ஆட்சி முறையையே நாம் தெரிவு செய்தோம். அதன் மூலமே இலங்கையில் ஒற்றுமையைப் பாதுகாக்கலாம் என்பதற்காக. தற்போதைய நிதி மந்திரியும், பிரதம மந்திரியும் கூடத் தமது சிந்தனையை - இந்தச் சமஷ்டி வழியிலேயே செலுத்திய காலம் ஒன்று இருந்தது. இத்தகைய ஒற்றுமையை நாம் பாடுபட்டேனும் அடையக் கூடுமானால் அது வரவேற்கக் கூடியதே. பகட்டுப் பேச்சு
எங்களால் காலத்தைப் பின்னோக்கி மாற்றியமைக்க முடியாது என்பதை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

Page 156
சுமார் முந்நூறு, நானூறு வருடங்களுக்கு முன்னர் - சிங்களவர்களும், தமிழர்களுக்கு தனித்தனி இரண்டு இராச்சியங்களில் - தொடர்பற்றவர்களாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடந்த நூற்றாண்டுகளில், குறிப்பாகப் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இரு சாராரிலும் பெருந் தொகையினர் தத்தமது இடங்களை விட்டு அடுத்தவர் இடங்களுக்கு - தொழில் துறை, வியாபார நோக்கங்களுக்காகச் சென்று குடியேறி விட்டார்கள். இந்த உண்மையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இலங்கைக்குச் சமஷ்டி ஆட்சி முறை வேண்டுமென்பதை நாம் நமது கட்சியின் இலட்சியமாகக் கொண்டதற்கு உரிய முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. நாட்டின் ஒரு பகுதி - தமிழர் பெரும்பான்மைப் பகுதியாக வும், மற்றப் பகுதி - சிங்களவர் பெரும் பான்மைப் பகுதியாகவும் இருக்கிறது. ஆனால் இரண்டிலும் குறிப்பிடத் தக்க தொகையினர் இடம் மாறிச் சென்று குடியேறியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் தான் இன்றைய இலங்கை அமைந்திருக் கிறது. இந்த அமைப்பை மாற்றித் தமிழர் களைச் சிங்களப் பிரதேசங்களிலிருந்து விரட்டிக் கலைத்துவிட்ட பின்னும், நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுவதெல்லாம் வெறும் பகட்டுப் பேச்சேயல்லவா?
இன்றுள்ள இலங்கையில், சிங்கள வகுப்புவாத சக்திகள் - தேசியம், தேசாபி மானம் என்ற போர்வைக்குள் தமிழ் மக்களைச் சிங்களப் பிரதேசங்களிலிருந்து அடித்துத் துரத்தி, விரட்டி விட முயற்சித்து வருகின்றன. பெரும்பான்மை மக்கள் தமிழ் மக்களை அடக்கி யொடுக்குவதைத் திரை போட்டு மறைப்பதற்காகவே - "ஒற்றுமை, ஐக்கியம்' என்றெல்லாம் வெளி வேஷக் கூச்சல் போடுகிறார்கள். அரசாங்கமும் ஆட்சியிலுள்ள கட்சியும் சிங்கள வகுப்பு வெறியர்களைத் தூண்டிவிடுகிறார்கள்; அல்லது இவர்கள் விஷயத்தில் கண்டும் காணாதவர் போல் பாவனை செய்து வருகிறார்கள்.

45
பிரிவினை
இந்தச் சூழ்நிலையில் நாடு அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரிய வேண்டியது தவிர்க்க முடியாததாகும். இப்படி எண்ணு பவர்களும், நம்பிக்கை கொண்டுள்ளவர் களும் தமிழ் பேசும் மக்களிடையே இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அப்படிப்பட்டவர்களுடைய பிரிவினைக் கோரிக்கை ஆதார பூர்வமானதா - அல்லவா? என்பதைக் கவனித்து, காலங் கடந்து விட முன்னர் பிழைகளைச் சரிப்படுத்தி, ஆவன செய்ய வேண்டிய கடமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களைச் சார்ந்ததாகும். பெரும் பான்மை மக்களுடைய அதி தீவிர வகுப்பு வாதம் - இந்தியாவில் பாகிஸ்தான் என்று ஒரு தனி நாடு உதயமாவதற்கு எப்படிக் காலாயிருந்தது என்பதை ஆட்சியாளர் மறந்துவிடக்கூடாது.
நமது மாநாடு, அன்னியர்களுக்கு அடிபணியாத வன்னியர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் நடைபெறுவது சாலவும் பொருத்த முடையதாகும். அஞ்சா நெஞ்சும், அமர் புரியும் ஆற்றலும் பெற்ற திருவாளர் சுந்தரலிங்கம் இத்தொகுதியின் திறமை வாய்ந்த பிரதிநிதியாகப் பாராளுமன்றத்தில் விளங்கு கின்றார். அப்படிப்பட்ட ஒருவரிடமிருந்து வரும் எந்த ஆலோசனையும், உரிய மரியாதையுடன் ஆராயப்பட வேண்டியதொன்றாகும். கடந்த வாரம் அவர் தமிழரசுக் கட்சியை நோக்கி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை இரண்டு பகுதிகளையுடையது.
ஒன்று - எங்கள் போராட்டத்தின் ஆயுதங்களாக r சாத்வீகத்தையும், சத்தியாக்கிரகத்தையும் விட்டொழித்து விட்டு, வேறு வழிகளில் நாங்கள் இறங்க வேண்டும் என்பதாகும்.
இரண்டு - எங்கள் இலட்சியமான சமஷ்டி ஆட்சிக் கோரிக்கையைக் கைவிட்டு, தனித்தமிழ் ராஜ்யத்தைப் பிரித்தெடுத்து அமைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, நாம் போராட வேண்டும் என்பதாகும்.

Page 157
12
முதலாவது கோரிக்கையைப் பற்றி நான் இப்போதே அழுத்தந் திருத்தமாக ஒன்று கூற விரும்புகிறேன். சாத்விகம், சத்தியாக்கிரகம் என்பன வெல்லாம் - எங்களைப் பொறுத்த வரையில் வெறும் கட்சிக் கொள்கைகள் மட்டுமல்ல; அவை எங்களுடைய ஆத்மார்த்தமான நம்பிக்கை களாகும். பலாத்காரம் பலன் தராதென்பதும், சத்தியத்தின் பாற்பட்ட சாத்விக நெறியே எங்களுக்கு விமோசனமளிக்க வல்லது என்பதும் எங்களது புனித கோட்பாடுகளாகி விட்டன. எனவே, அவற்றிலிருந்து நாங்கள் அணுவளவும் அசைய முடியாது; விட்டுக் கொடுக்க முடியாது.
இன்றுவாள் வென்றதனை இன்னொருவாள்
வெல்லுவதே என்றுமிம் மண்ஆள் இயல்பு' என்ற "யோகசித்தி’க் குறளில் எமக்கு உள்ள விசுவாசம் - என்றென்றும் நிலையானது. அவர்கள் தவறான பாதையில்
இரண்டாவது கோரிக்கையைப் பற்றி ஆராயுங்கால், எங்கள் அடிப்படை இலட்சியங்கள் ஏன் மாறவேண்டும் என்பதற்கு - இது வரை போதிய ஆதாரங்கள் தோன்றவில்லை. இன்று நாட்டில் நடைபெறும் 6agu துர்ப்பாக்கிய சம்பவங்களும் உருவாகி வரும் அமைதியற்ற சூழ்நிலையும் - பெரும்பான்மை மக்கள் மீது எங்களுக்குள்ள நல்லெண்ணத்தைப் பாதிப் பனவாக இருக்கலாம். நல்லெண்ணமும் நல்லுறவும் இல்லாமல், சமஷ்டி ஆட்சியின் கீழ்த் தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சுமுகமான அரசியற் பங்காளிகளாக ஒன்றி வாழ்வது அசாத்தியம்தான். ஆயினும், சிங்களப் பெருமக்களின் கண்ணியத்திலும், பெருந்தன்மையிலும் - நாங்கள் முற்றாக
-4AM- anOLð Qune NYZ- LGOLD கன்

回一
இன்னும் நம்பிக்கை இழந்து விடவில்லை. அவர்கள் தவறான பாதையில் இட்டுச் செல்லப்படுகிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. எனினும், தீர்க்கமான அறிவும் ஆற்றலும் வாய்ந்த தலைவர்களுக்கு - அவர்களிடம் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது என்ற கூற்றை, என்னால் நம்ப முடியவில்லை.
காந்தி வழியில் நிற்போம்
ஒரேயொரு வாக்கியத்துடன் முடித்துச் கொள்ளுகிறேன். உங்கள் அனைவருக்கும் - குறிப்பாகச் சத்தியாக்கிரகத் தொண்டர் களுக்கு நான் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கிறது. போராட்டத்தின் போது, மறுமுகாமிலிருந்து உங்கள் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்படக்கூடும். எங்கள் சாத்விக இயக்கத்தை முறியடித்து விடும் ஒரே நோக்கத்துடன் - உங்களுக்குப் பாரதூரமான வகையில் கோபமூட்டப்படக்கூடும். அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் நீங்கள் உறுதிப்பாட்டுடன், காந்தி மகாத்மா வகுத்த - அஹிம்ஸா தத்துவத்திலேயே நிலைத்து நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஆத்ம சக்தியே மகத்தான ஆயுதம். 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்
என்றார் திருவள்ளுவர். திண்மையாக,
திடமாக, உறுதியாக, நிலையாக நின்றோமானால் - வெற்றி முக்காலும் திண்ணமாகும்.
வாழ்க தமிழ் வாழ்க தமிழ்மக்கள் வாழ்க தமிழ்க் கொற்றம் வாழ்க தமிழரசு வணக்கம்,
போன்றது A போன்றது NY/-

Page 158
கட்சியின் 4ஆ
Y
2YSt
>
+}
KK||
+》
>
SA GAOL *-és சி. மூ. இராக பி. ஏ. (பொருளியல்)
LT. D.
21ー1ー1961 ー
8-4-1969
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வது தலைவர்
பி.எஸ்சி. (லண்டன்), அவர்கள்
21-8-1964
- 6-9-1973

Page 159


Page 160
அரசின் அக்கிரமம் அ அறப்போர் 6 திரு சிமூ, இராசமாணிக்கம், E
(7ஆவது தேசிய மாநாடு
வரவேற்புக்குழுத் தலைவர் அவர்களே! சகோதர சகோதரிகளே! வன்னியர் ஆத்மா வழி காட்டட்டும்!
ժF ரித்திரப் பிரசித்திபெற்ற யாழ்ப் பாண நகரத்திலே, தமிழ் மக்கள் தமது மானத்தையும் பாரம்பரியத்தையும் உயிரினும் இனிய சுதந்திரத்தையும் காப்பதற்காக - மாற்றார் படைகளையும் உள்நாட்டு விரோதிகளையும் எதிர்த்துப் போராடி வெற்றிக் கொடி உயர்த்திய இப்புனித நகரிலே அமைந்திருக்கும் இவ் வரங்கிலே இன்று நிற்பதை இட்டுப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த நகரின் தோற்றம் தொன்மையில் மறைந்து கிடக்கின்றது. தமிழினத்தின் உரிமைப் போரிலே தன் உயிரை அர்ப்பணித்த உண்மைத் தியாகி எமது மறைந்த தலைவர் திரு. வன்னியசிங்கம் அவர்களுடைய பெயரை இவ்வரங்கு தாங்கி நிற்பது சாலப் பொருத்தமே. அவர் தமது உயிரினும் மேலாக மதித்த இலட்சியத்துக்காக - நாமும் அவர் செய்தது போன்ற தியாகங்களைச் செய்ய அவரது ஆத்மா வழிகாட்டுமாக நாம் ஒரு தேசிய இனம்
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தின் தெற்கு முனையாகிய மட்டக் களப்பு மாவட்டத்திலிருந்து நான் வந்திருக் கிறேன். அப்பகுதியில் அரசாங்கம் திட்ட மிட்டு நடத்தும் குடியேற்றத்தினால் நமது நாடு நாளுக்குநாள் பறிபோகின்றது. தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியமான பிரதேசத் தில் சிங்களப் பிரதிநிதி தெரிவு செய்யப்படக் கூடிய ஒரு தனித் தொகுதியே இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

|ளவை மிஞ்சிவிட்டது தாடரட்டும்!
A (Econ) பா.உ. அவர்கள் பேருரை
· 21-1-1961 - unglufleMó)
எனவே, யாழ்ப்பாணத்திலுள்ள உங்களிலும் பார்க்க, சிங்களத் தாக்குதலின் வேகத்தை நன்கறிந்தவன் நான். எமது ஆற்றலுக்கு இயன்றவரை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் இத்தாக்கு தலை எதிர்த்து வந்திருக்கிறோம். ஆண்டவன் அருளோடு வருங்காலத்திலும் எதிர்த்து வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். இனத்தின் விடுதலை இயக்கத்தில் மட்டக் களப்பு மக்கள் கொண்ட பங்கை மதித்தே, என்னை உங்கள் தலைவராகத் தெரிவு செய்து கெளரவித்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அன்றியும் இலங்கை வாழ் தமிழ் பேசும் தேசிய இனத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையின் எடுத்துக் காட்டாகவும் இத்தெரிவு விளங்குகிறது. தேசிய இனம் என்ற சொல்லை நான் வேண்டுமென்றே உபயோகித்தேன். ஏனெனில், எவ்வகையி லாகப் பார்த்தாலும் நாம் ஒரு தேசிய இனம் என்பதற்கு ஐயமில்லை. நாம் ஒரு திட்டவட்டமான எல்லையுள்ள பிரதேசத் தைத் தாயகமாகக் கொண்டிருக்கிறோம்; ஒரு பொதுமொழியைப் பேசுகிறோம்; கல்தோன்றி மண் தோன்றாக்காலம் தொட்டு வளர்ந்துவந்த ஒரு தனிப்பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எமது சொந்தமாகக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாவற்றிற் கும் மேலாக ஒரு தேசிய இனத்திற்கு இன்றியமையாத - நாம் ஒன்றென்னும் உணர்ச்சியைத் தமிழ் பேசும் மக்களாகிய நாமெல்லோரும் பெற்றிருக்கிறோம். இந்நாட்டின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் என்னையும் உங்களையும் - எங்கள் எல்லோரையும் ஒன்றாகப் பிணைப்பது இவ்வுணர்ச்சியேயாகும். வர்ணிக்கமுடியாத இவ்வுணர்ச்சியைப் பிரபல பிரஞ்சு எழுத்தாளர் ரெனா பின் வருமாறு விளக்குகிறார்.

Page 161
1. தேசிய இனத்தின் ஆணிவேர்
'ஒரு தேசிய இனத்திற்குத் தனி உயிருண்டு. அது ஒரு ஆத்மீகத் தத்துவம். பிரிக்க முடியாத இரண்டு அம்சங்கள் ஒன்று சேர்ந்ததே இவ்வுயிர். சென்ற காலத்திலிருந்து வந்த பாரம்பரியத்தின் பெருமை பற்றிய நினைவுகளைப் பொதுச் செல்வமாகப் பெற்றிருப்பது ஒரு அம்சம். மற்றது, முன்னோர் தந்த பொதுச் செல்வத்தை அழியாது காப்பதற்காக ஒன்றாய் வாழ விழைதலும் அதற்கான திட சித்தமுமாகும். தனிமனிதனைப் போலவே, ஒரு தேசிய இனமும் - நீண்ட போராட்டங்கள், தியாகங்கள், கய அர்ப்பணங்கள் முதலியவற்றின் வினைவே. எம்மை ஆக்கியவர்கள் எமது முன்னோர்களே. இதனால் முன்னோர் வணக்கத்திற்கு இடமுண்டு. ஒரு தேசிய இனத்தின் அத்திவாரம் - விரம் பெற்ற வரலாறு, தீரம் மிக்க மகான்களின் வாழ்க்கை, உண்மையான சிறப்பு இவையேயாகும். பழைமை பற்றிப் பொதுப் GL (56) truit, இன்றைய ஒன்றுபட்ட உள்ளமும், அறுகீர்த்திமிக்க காரியங்களை ஒன்று சேர்ந்து செய்வோம் என்ற உணர்ச்சியும், இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்ற யாவும் செய்வோம் என்ற எழுச்சியும், இவையே ஒரு தேசிய இனத்தின் ஆணிவேராகும்." பாதையில் ஒரு முன்னேற்றம்
எழுத்தாளர் ரெனா கூறிய இந்த ஆத்மீகத் தத்துவம் - இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை ஒன்றாகப் பிணைக்கிறது என்பதை, ஒரே வரலாற்றை அவர்கள் பொதுச் செல்வமாகப் பெற்றிருக்கிறார்கள் என்பதை எவராவது மறுக்கமுடியுமா? இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதும், அதே போலத் தென்னிலங்கை வாழ் சிங்கள சகோதரர்களும் ஒரு தனித் தேசிய இனம் என்பதும் - எண்ணுந்தோறும் என் உள்ளத்தில் தெளிவாகத் தோன்றும் ஒரு கருத்தாகும். நாம் இரு தேசிய இனங்கள் என்று கூறுவது எமது சிங்கள நண்பர் களுக்குக் கசப்பாக இருக்கலாம். உண்மை

50
சிலவேளை கசப்பாக இருந்தாலும் அதை மறைக்கமுடியாது. சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் ஒன்று சேர்ந்து பெருமை பாராட்டக்கூடிய சரித்திரச் செய்திகள் உண்டென்று எவராவது கூறமுடியுமா? இதற்குமாறாக, மகாவம்சம் தொடக்கம் எம் இரு இனத்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற தீராத போராட்டத்தையே வரலாறு குறிக்கிறது. சமீபத்தில் நாடு முழுவதிலும் சிங்களம் நிர்வாக மொழியாகப் புகுத்தப்பட்டதைக் கொண்டாடும் முகமாகச் கிங்கள மக்கள் கூடிய கூட்டத்தில் பேசிய நீதி அமைச்சர் என் நண்பர் சாம் பி.ஸி. பெர்னாண்டோ அவர்கள், சிங்கள மக்களுடைய பரம்பரை விரோதிகள் சிங்களத்தைப் புகுத்துவதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார். ஆகவே தமிழ் பேகம் தேசிய இனத்தின் பிரிக்கமுடியாத ஒற்றுமையை நிலைநாட்ட எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எமது இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு முன்னேற்றமாகும்.
சிங்கள சகோதரர்களுக்கு.
ஆகையினால், "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் நாயன்மார் வாக்கிற்கமைய நான் தொண்டு செய்வதற்குத் தருணம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். முன்னொரு பொழுதும் இல்லாத தியாகங்களையும் கஷ்ட நஷ்டங் களையும் உடையதான ஒரு போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் இந்த மகாநாடு கூடியுள்ளது.
எம்மை எதிர்நோக்கியிருக்கும் அதி முக்கியமான இவ்வாண்டிலே - இரத்தம், வியர்வை, கண்ணிர் இவற்றைத்தவிர வேறு எதுவும் கிடைக்கும் என்று நான் உறுதி கூறமுடியாது. எமது மாகாணங்களிற் கூடச் சிங்களத்தைத் திணிக்கும் ஆட்சியாளரின் அக்கிரமத்தை எதிர்த்துச் சாத்வீக ஒத்துழையாமையையும், சட்டமறுப் பியக்கத்தையும் மேற்கொள்ள எமது கட்சியின் நடவடிக்கைக்குழு தீர்மானித் திருப்பதை நீங்கள் அறிவீர்கள். எமது

Page 162
பிற்சந்ததியினருக்கு, இன்னும் பிறவாத பைந்தமிழ்ச் சிசுக்களுக்கு நாம் செய்ய வேண்டிய புனிதமான கடமை - இவ்வட்டூழியத்தைத் தடுத்து நிறுத்துவது. இந்நாட்டில் சுதந்திர புருஷர்களாக, தன்மானமுள்ள மக்களாக, சிங்கள மக்களோடு சரிநிகர் சமானமாக வாழு வோம்; அல்லது அதற்காகப் போராடி மாழுவோம். எமது தாய்நாட்டில் நாம் இரண்டாந்தரப் பிரசைகளாக வாழ மாட்டோம் என்ப்தை எங்கள் சிங்களச் சகோதரர்களுக்குத் தெளிவாகக்கூற விரும்புகிறேன்.
இனக் கொலையன்றி வேறென்ன?
வவுனியாவில் எமது கட்சியின் தேசிய மகாநாடு நடைபெற்று இரண்டாண்டு களுக்கு மேலாகிறது. மகாநாட்டோடு கட்டவிழ்த்து விடப்பட்ட நிஷ்டுரங்களை நீங்கள் அறிவீர்கள். மகாநாட்டைத் தொடர்ந்து நடந்து சம்பவங்கள், இந் நாட்டின் அரசியலில் தமிழ் பேசும் மக்கள் அடைந்திருக்கும் அவலநிலையைச் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்தன. அநீதியை எதிர்த்துக் குரலெழுப்பக்கூட உரிமையற்றவர் களாக, மனிதஉரிமைச் சாஸனத்திலே அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும் - கூட்டம் கூடும் உரிமைகூட மறுக்கப்பட்ட நிலையில் நாம் வாழுகிறோம் என்பதை அவை காட்டின. மகாநாட்டிற்குப் பிரதிநிதிகள் பிரயாணம் செய்த புகை வண்டிகள் தாக்கப்பட்டன; தடம்புரளச் செய்யப்பட்டன. சிறுவர்கள் விளையாடுவது போலக் காடையர் கூட்டங்கள் கொலை, கொள்ளை, தீயிடுதல் ஆகியவற்றை வேடிக்கையாகச் செய்து திரிந்தன. தெருவில் நடமாடிய மனிதர்கள் மீது பெற்றோலை விசி நெருப்புவைக்கும் நூதனமான முறையொன்று கையாளப்பட்டது. வெறிகொண்ட கூட்டத்தினர் பரிசுத்தமான ஆலயத்தினுள் நுழைந்து, பிராமண அர்ச்சகரை உயிருடன் தீயிட்டுப் பொசுக்கினார்கள். இவ்வளவும் சிங்களப் பிரதேசத்தில் சிதறி வாழ்ந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுபாதகங்களாகும்.

51
இச்சம்பவங்கள் நடந்த முறையிலிருந்து, ஒரே மத்திய நிலையத்திலிருந்து இவை இயக்கப்பட்டன என்பது தெளிவு. இது இனக்கொலையைத் தவிர வேறென்ன என்று கேட்கவிரும்புகிறேன். 1958இல் தலைவிரித் Ֆուգ-Ամ இவ்வட்டுழியங்களிலிருந்து, மானசீகத்திற்கு மாறான கொடிய அக்கிரமங்களிலிருந்து, இதே நிலையில் வேறு நாடுகளில் வாழ்ந்து அழிந்த இனங்களின் வரலாற்றிலிருந்து - சிங்கள அரசாங்கம் இந்நாட்டில் வாழும் இன, மொழி, மத சிறுபான்மையோரைப் பூண்டோடு அழிக்கத் திட்டமிடுகிறார்களென்று எமது மக்களுக்கு முன்னெச்சரிக்கையாகக் கூறவேண்டியது என் கடமையென்று கருதுகிறேன்.
உலக மக்களின் மனச்சான்றுக்கு.
1946 டிசம்பர் 11ஆந் திகதி, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச்சபை தனது 96 ஆவது தீர்மானத்தின் முதற்பகுதியில் கீழ்க் கண்டவாறு பிரகடனப் படுத்தியிருக்கிறது.
"தனிமனிதன் வாழும் உரிமையை மறுப்பதைக் கொலையென்று கூறுவதைப் போல, ஒரு மனித சமூகம் முழுவதற்கும் " வாழும் உரிமையை மறுப்பது இனக் கொலை யாகும். மானிட சமுதாயத்தின் மனச்சாட்சி யையே கலக்கும் இவ்வினக் கொலை அச்சமூ கங்கங்கள் மனித சமுதாயத்திற்கு அளிக்கும் கலாசார வளர்ச்சிகளை இழக்கச் செய்வதோடு, தார்மீக நெறிக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கத்திற்கும் மாறானதாகும்."
1948 டிசம்பர் 9ஆந் திகதி, ஐ.நா. பொதுச் சபையின் இனக் கொலைபற்றிய மகாநாட்டில், கீழ்க்கண்ட விஷயங்கள் இனக் கொலையாகக் கருதப்படும் எனத் தீர்மானிக் கப்பெற்றது :
1. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களைக்
கொல்லுதல்
2. ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களின்
உடலுக்கு அல்லது உள்ளத்திற்குப் பாரதூரமான ஊனம் விளைவித்தல்.

Page 163
-1
3. ஒரு சமூகத்தை முழுமையாகவோ, ஒரு பகுதியாகவோ அழிக்கக்கூடிய வாழ்க் கைச் சூழ்நிலையைத் திட்டமிட்டு ஏற்படுத்துதல்.
4 ஒரு சமூகத்தில் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் திட்டங்களை அமுல் நடத்துதல்.
5. ஒரு சமூகத்தின் குழந்தைகளை வேறொரு
சமூகத்திற்குப் பலாத்காரமாகக் கையளித்தல்.
இனக்கொலை செய்வதற்குக்
கையாளப்படும் எல்லா வழிவகைகளும் இப்பட்டியலில் அடங்காவிடினும், எமது நாட்டில் நடைபெறுவது இனக்கொலை தான் என்று நிர்ணயிக்க இது போதுமானது. இலங்கையில் உருவாகும் நிலைமையைக் கவனத்திற் கெடுக்கும்படி, உலக மக்களின் மனச்சான்றுக்கு, வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வேண்டுகோளை - உணர்ச்சி வசப்பட்ட கூச்சலாகவோ, அரசியல் நோக்கத்திற்காக வெளியிடப்படுவதாகவோ கருதிப் புறக் கணிப்பது பிரச்சினையைத் தீர்க்க உதவ மாட்டாது. தமது உயிரைக் காப்பாற்ற வேறு மார்க்கமின்றி, 20,000 மக்கள் அகதிகள் முகாமாக மாற்றப்பட்ட ஒரு ஆரம்பப் பாடசாலையில் அடைக்கலம் புகவேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றால், இம்மக்கள் தமது சொந்த நாட்டிலேயே ஒரே இரவில் நிர்க்கதியான அகதிகளாக யுத்தகாலமல்லாத நேரத்திலேயே ஆக்கப்பட்டார்களென்றால், அப்படியான சூழ்நிலையை எடுத்துக்காட்டு வதை உணர்ச்சிவசப்பட்ட கூச்சலென்று ஒதுக்கிவிட முடியாது. இப்பிரச்சினை ஒரு அரசியல் பிரச்சினை என்பதை நாம் மறுக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு காண எடுக்கும் நடவடிக்கைகளும் அரசியல் நடவடிக்கைகளாகவே இருக்கும். விசுவாசத்தைப் பெறமுடியுமா?
தமிழ் பேசும் மக்கள் மிகப் பெரும் பான்மையினராக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களிற் கூட, அரசாங்கக் காரியாலயங்களிலும், நீதிமன்றங்களிலும்

தமிழை உபயோகிக்கும் உரிமையை மறுத்துச் சட்டம் இயற்றியிருக்கின்றார்கள். சிங்களத் தை ஏற்றுக்கொண்டாலன்றி உத்தியோகம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு வருகின்றது. இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சாணியாக விளங்கும் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் பாடுபட்டுழைக்கும் எமது சகோதரர்களுடைய பிரஜா உரிமை' வாக்குரிமைகள் பிடுங்கப்பட்டுவிட்டன. பலத்திலும் பொருளாதார வளத்திலும் குறைந்தவர்கள் என்ற காரணத்துக்காவே, இத்தோட்டத் தொழிலாளர்கள் முதல் தாக்குதலுக்கு ஆளானார்கள். அவர்கள் இந்தியர்களென்ற போலிச்சாட்டை வைத்துக் கொண்டு, தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுடைய அரசியல் உரிமைகள் அபகரிக்கப்பட்டன. அடுத்த தாக்குதல் தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்தில் - அவர்கள் எண்ணிக்கையில் குறைந்து வாழும் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் நடத்தப் பட்டது. அரசியலில் நமது பலத்தைக் குறைப்பதற்காகத் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியமான தாயகத்தில் ஆயிரக்கணக் கான சிங்கள மக்கள் குடியேற்றப் பட்டிருக்கிறார்கள். சிறுபான்மை மதங் களுக்கு எதிராக இப்பொழுது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. எமது பிள்ளை களை நாம் விரும்பிய பாடசாலைகளில் நமது மதக் கோட்பாடுகளுக்கு ஏற்பக் கல்விகற்பிக்கும் உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இன அடிப்படையில் சிங்களப் பெரும்பான்மையினரால் மாத்திரமே தெரிவு செய்யப்பட்ட இவ்வரசாங்கம், அவர்களிலும் அரைப் பங்கிற்குக் குறையாத எண்ணிக்கை யுள்ள ஒரு சிறுபான்மை இனத்தை இவ்வாறு நடத்திக்கொண்டு, அச்சிறு பான்மை மக்களுடைய ஒத்துழைப்பையும் விசுவாசத்தையும் பெறமுடியுமா?
ஒரே அரசியலமைப்பு இதுவே
இந்நாட்டுச் சிங்களர் - தமிழர்
பிரச்சினை வெறும் மொழிப் பிரச்சினை
யல்லவென்று எமது கட்சி எப்போதும்

Page 164
15
கூறிவந்திருக்கிறது. இந்நாட்டில் நாம் ஒரு தனிச் சமுதாயமாக வாழப் போகின்றோமா, அல்லவா என்பதே பிரச்சினை. இந்திய முஸ்லிம்களின் பாகிஸ்தான் கோரிக்கையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கீழ்க்கண்டவாறு எழுதினார் :
ஒரே இன மக்களை உள்ளடக்கிய நிர்வாகப் பிரிவுகளை அமைக்கும்படி முஸ்லிம்கள் கோருகின்றார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நிர்வாகப் பிரிவுகளைத் தனி மாகாணங்களாக அமைக்கும்படி கோரு கிறார்கள். ஏனெனில்,
முதலாவது : ஒரு தனித் தேசிய இனமாக இருக்கும் முஸ்லிம்கள், தமது இனத்துக்கு ஒரு தாயகத்தை அமைப்பதற்கு விரும்பு கிறார்கள்;
இரண்டாவது : ஹிந்துக்கள் தமது பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு, முஸ்லிம்களை ஒர் அன்னிய நாட்டில் வாழும் இரண்டாந்தரப் பிரஜைகளைப் போல நடத்த விரும்புகிறார்கள் என்பது அனுபவ வாயிலாகத் தெரிகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் பாகிஸ்தான் கோருவதற்கு டாக்டர் அம்பேத்கர் இவ்வாறு கூறிய காரணங்கள், இலங்கையில் சிங்களவர் - தமிழர் பிரச்சினைக்குப் பன்மடங்கு பொருந்தும். இந்நாட்டில் பரிபூரண சுதந்திரம் பெற்ற தனித் தமிழ்நாடு நிறுவ வேண்டும் என்று கோருவதற்குப் போதிய நியாயங்கள் உண்டு. தமிழ் மக்களிற் பலர் இப்போது அப்படியான கோரிக்கையை யிட்டுச் சிந்திக்கிறார்கள். ஆனால் ஆழ்ந்த யோசனையின்பின், எமது கட்சி சமஷ்டி அரசியலமைப்புக்கு உட்பட - மொழி அடிப் படையில் சுயாட்சிபெற்ற தமிழ் பேசும் அரசையோ, அரசுகளையோ நிறுவுவதையே தமது கோரிக்கையாகக் கொண்டிருக்கிறது. இலங்கையின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாத

3}
வகையில், பெரும்பான்மை இனத்தவரும் சிறுபான்மை இனத்தவரும் தத்தம் உரிமை யோடு ஒத்து வாழக்கூடிய ஒரே அரசியலமைப்பு இதுவேயாகும்.
சமாதானமின்றி - முன்னேற்றமில்லை
புகழும் பெருமையும் வாய்ந்த ஒரு ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு எமது சிங்கள சகோதரர்கள் விரும்பினால், இந்த ஐக்கியத்தை உருவாக்குவதற்கு இரு இனங்களின் பரஸ்பர நல்லெண்ணமும் உள்ளப்பிணைப்புமே தவிர - படைபலமும் மிருகத் தாக்குதலும் உதவா என்பதை உணர்வார்களானால், இந்தப் பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு ஒரு கணமேனும் தாமதம் செய்யமாட்டார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் வரையில், அவர்களுடைய பொருளாதாரத் திட்டங்கள் யாவும் வெறும் பகற்கனவாகவே முடியுமென்று நான் துணிந்து கூறுவேன். நாட்டில் சமாதான மின்றி, முன்னேற்றப் பாதையில் ஒரு அடிகூட நகரமுடியாதென்பது முற்றும் முடிந்த உண்மை.
நிராகரித்தது பண்டா அரசே!
அது எவ்வாறாகவாயினும் இருக் கட்டும். எமது எதிர்காலம் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. அரசாங்கம் நீதி, நியாயமான முறையில் நடக்கவேண்டு மென்று உணர வைப்பதற்கு எமது கட்சி ஆன மட்டும் முயன்றுவிட்டது. நீட்டிய நேசக்கரத்தைத் தட்டிவிட்டோமென்றோ - பேச்சுவார்த்தைகளுக்கு மறுத்துவிட்டோ மென்றோ எவரும் எம்மீது குற்றஞ்சாட்ட முடியாது. 1957இல் தமிழரசுக் கட்சி தனது கொள்கையையும் இலட்சியங்களையும் கைவிடாது, ஏதாவது ஒரு சமரசம் காண வழிவகை உண்டாவென்று கலந்து பேச - காலஞ்சென்ற பிரதமர் திரு. பண்டாரநாயகா எமது கட்சியை அழைத்தார். பேச்சு வார்த்தைகளின் பின், ஆடி மாதம் 26ஆம் திகதி எமது கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் மிடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

Page 165
15.
முதலாவது ே தமிழ்மொழியை இலங்கையின் ஒரு சிறுப்பான்மைத் தேசிய இனத்தின் மொழியாக ஏற்றுக் கொள்வதற்கும்; இரண்டாவது : வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழையே அரசகரும மொழியாக்குவதற்கும்;
மூன்றாவது: சுயாட்சி உரிமை கொண்ட பிராந்திய சபைகளை நிறுவி, அவற்றுக்குக் குடியேற்ற நிர்வாக முட்படக் குறிப்பிட்ட விஷயங்களில் நிர்வாக உரிமைகளைப் பாராளுமன்றமே வழங்கி, பிரதேச சுயாட்சி அளிப்பதற்கும் சட்ட மியற்றுவதென்று பிரதமர் ஒப்புக் கொண்டார்.
அன்றியும், இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமை, பிரஜாவுரிமைச் சட்டத் திருத்தம் ஆகிய பிரச்சினைகள் மீது அதி விரைவில் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் ஒப்புக் கொண்டார்.
இவை எங்கள் அபிலாஷைகளுக்கு எவ்வளவோ குறைந்தவையே. எனினும் இரு இனத்தவரும் சமாதானமாக ஒருங்கே வாழ்ந்து, நாளடைவில் ஒரு நிரந்தரத் தீர்வு காணக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இவை தற்காலிக ஒழுங்காக ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆனால் ஒப்பந்தத்தை அமுல் நடத்துவதெனப் பலமுறை உறுதி கூறி, இழுபறிப்பட்டுப் பல மாசங்கள் கழிந்தன. பின்னர், பண்டார நாயகா அரசாங்கம் ஒப்பந்தத்தைத் தானாகவே நிராகரித்தது. தலைவர் மகஜர்
1960 பங்குனியில் நடந்த பொதுத் தேர்தலின்பின், இன்றைய பிரதமராகிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயகாவைத் தலைவராகக் கொண்ட பூரீலங்கா சுதந்திரக் கட்சி - தன்னை அரசாங்க பீடத்தில் அமர்த்தினால் காலஞ்சென்ற பிரதமரின்

4.
கொள்கைகளைத் தாம் கடைப்பிடிக்கப் போவதாகவும், இந்த ஒப்பந்த ஷரத்துக்கள் தமிழ்பேசும் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்ற தமது நோக்கத்திற்கு உகந்தனவாய் உள்ளனவென்றும் நான் அறியக்கூடியதாக நடந்து கொண்டனர். இதை வரவேற்று அவர்களோடு ஒத்து ழைத்து - எமது கோரிக்கைகளுக்கு இம்மியளவேனும் விட்டுக்கொடுக்க மறுத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தோற்கடித்தோம்.
ஆடி மாசம் நடந்த பொதுத் தேர்தலின் பின், எவருடைய உதவியும் தேவைப்படாத பெரும்பான்மைப் பலத்தோடு பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. இந்நிகழ்ச்சி - சுமுகமான சமரசநிலையை ஏற்படுத்து மெனப் பலர் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வாக்குறுதிகளையெல்லாம் காற்றிற் பறக்க விட்டு, அரசகரும மொழிச் சட்டத்தை முழு நிஷ்டூரத்துடன் அமுல் நடத்த அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்தது. இதனால் தமிழ் அரசாங்க ஊழியர்களைக் குறித்த சிக்கலான ஒரு பிரச்சினை கிளம்பியது. இவர்கள் தொடர்ந்தும் உத்தியோகத்தில் இருப்பது சந்தேகத்துக்கு இடமாகியது. தங்கள் கொள்கைகளை யெல்லாம் மாற்றி, இலங்கை முழுவதிலும் - அதாவது வடக்குக் கிழக்கு மாகாணங் களிலும் கூட, அரசாங்க அலுவலகங்களிலும் நீதி மன்றங்களிலும் சிங்களம் மாத்திரமே ஆட்சி மொழியாகச் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர், என்பது தெளிவா கின்றது. அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிந்த போதிலும், சமரசப் பேச்சுவார்த்தை மார்க்கத்தை இன்னுமோர் முறை கையாண்டு பார்க்கும் நோக்கத்துடன், எமது பாராளுமன்றக்குழுத் தலைவர் திரு. செல்வநாயகம் அவர்கள் பிரதமருக்கு ஒரு மகஜரைச் சமர்ப்பித்துப் பேச்சுவார்த்தை களுக்குச் சந்தர்ப்பம் கோரினார்.

Page 166
t LS
இந்த மகஜரையும், சம்பந்தமான மற்றும் பத்திரங்களையும் பொதுமக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கும் விஷயம் கட்சியில் ஆலோசிக்கப்படுகின்றது. ஆயினும் இந்த மகஜரில் குறிப்பிட்ட விஷயங்களில் சிலவற்றை உங்களுக்குச் சொல்ல வேண்டியது அவசியம். சமஷ்டி முறையிலே தமிழரசு அல்லது அரசுகள் நிறுவுவ தொன்றே நிரந்தரமான சமரஸத்திற்கு வழி யென்பதை வற்புறுத்தி, உடனடியாகத் தீர்க்கவேண்டிய சில பிரச்சினைகளை எடுத்துக்காட்டினோம். இப்பிரச்சினைகள் இருபிரிவுகளில் அடங்கும். ஒன்று - தமிழ் பேசும் மக்களின் மொழி, அரசியல், உரிமைகளைப் பொறுத்தது.
பிரதேச சபைகள் உடனடியாக நிறுவப்படவேண்டுமென்றும்; தமிழ்மொழி உபயோகக் கொள்கையை அமுல் நடத்த வேண்டுமென்றும்; அதில் தமிழ்மொழி இலங்கைவாழ் தேசிய இனமொன்றின் மொழியாகச் சட்ட மூலம் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டுமென்றும்; வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அரசாங்க கருமங்கள் யாவும் தமிழிலேயே நடத்தச் சட்டமியற்றி அமுல் நடத்த வேண்டுமென்றும்; ஏனைய மாகாணங்களில் வசிக்கும் தமிழ்பேசும் மக்கள் தமிழ் மொழியிலேயே அரசாங்கத் துடன் கருமம் ஆற்றும் உரிமையளிக்கும் சட்டங்கள் இயற்ற வேண்டுமென்றும் முதலாம் பகுதியில் சொல்லியிருந்தோம்.
தமிழ் அரசாங்க ஊழியர் இருவகைப் படுவர். 1956ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 24ஆந் திகதிக்கு முன் அரசாங்க சேவையில் சேர்ந்தவர்கள் “முன் சேர்ந்தவர்கள்” என்று கருதப்படுவார்கள். அத் திகதிக்குப் பின்னால் சேர்ந்தவர்கள் "பின் சேர்ந்தவர்கள்” “என்று அழைக்கப்படுவார்கள். முன் சேர்ந்தவர்களைப் பற்றி மகஜரில்.
தமிழ் அரசாங்க ஊழியர்களை ஆயிரக்கணக்காக - அவர்கள் இளைப்பாற வேண்டிய காலத்துக்கு முன்னதாகவே கட்டாயமாக இளைப்பாற வேண்டுமென்று நிர்ப்பந்திப்பது அநீதியாகும். ஆகையால்

5
336ஆம் இலக்கத் திறைசேரிச் சுற்று நிருபத்தில் சொல்லியபடி உரிமை வழங்க வேண்டும். அதாவது இதுவரையும் கருமமாற்றி வந்தமாதிரித் தொடர்ந்தும் கருமமாற்றக்கூடிய தொழிலில் அமர்த்துவது. அன்றியும் அதனால் உத்தியோக உயர்வு போன்ற உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. இவர்களைச் சேவையில் சேர்த்த மொழியிலேயே - அரசாங்க இலாகாக்கள் யாவும் இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் சேர்ந்தவர்களைப்பற்றி மகஜரில்.
பின் சேர்ந்தவர்கள் விஷயத்தில், மகஜரில் சொல்லிய பிரகாரம் மொழிப் பிரச்சினை முழுமைக்கும் தீர்வுகாண வேண்டும். அந்நிலையில் மட்டுமே - இந்த அரசாங்க ஊழியர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும். அப்படித் தீர்க்கப் படுமாயின், அவர்களின் உத்தியோகங்களை உறுதிப்படுத்தல் - சிங்களத் திறமைப் பரீட்சையில் தங்கியிருக்கக் கூடாது. ஆனால் மிக இலகுவான பரீட்சையில் சித்தியைப் பார்த்துச் சம்பள உயர்வை நிர்ணயிக்கலாம்.
நேர்மையற்ற வஞ்சனையன்றோ?
இவ்வாறெல்லாம் பிரதமருக்குச் சொல்லியிருந்தோம். ஆனால் எங்கள் முயற்சிகளெல்லாம் வீணாயின வென்று வருத்தத்தோடு கூறவேண்டியிருக்கிறது. அரசாங்கத்தினரை இருமுறை சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினோம். பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதில், ஆர்வம் காட்டினார்கள் என்று சொல்வதற்கில்லை. அதற்கு மாறாக, ஒரு பக்கத்தில் எம்மோடு பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள்; மறுபக்கம், அதே நேரத்தில் தமிழ்மொழிக்கு எந்தவிதமான உரிமையும் அளிக்காமல், சிங்களம் மாத்திரம் சட்டத்தை அமுல் செய்வதற்குரிய நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அதுவுமின்றி, தமிழ் மொழி உபயோகத்துக்குக் கொஞ்சமேனும் இடங்கொடாது, நாடுமுழுவதிலும் நீதி மன்றங்களில் சிங்களத்தை உபயோகிக்கும்

Page 167
1. சட்ட மசோதாவை ஆக்கி, பாராளுமன்றத் தில் சமர்ப்பித்தனர். இதை நேர்மையற்ற வஞ்சனை என்று சொல்லாமல் வேறென்ன வென்று சொல்வது?
விடுதலை காண்போம்
நிலைமை தாங்க முடியாததாகி விட்டது. தன்மானமுள்ள எந்தத் தமிழ் மகனும் இந்நிலையைக் கண்டு உள்ளம் குமுறாமல் இருக்கமுடியாது. ஆனால் பரிகாரம் என்ன? இப்படியான நிலையில் அகப்பட்ட வேறு தேசங்கள், எதிர்ப்புப் புரட்சியையோ அன்றி உள்நாட்டுப் போரையோ வழியாகக் கொண்டார்கள் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை. அது தான் சம்பிரதாய வழியாகவும் இருந்து வந்தது. ஆனால் நிச்சயமாகச் சொல்லுவேன்; ஆயுதப்போர் எந்தவிதமான பிரச்சினைக்கும் தீர்வுகாண மாட்டாது. அவை மேலும் புதிய புதிய பிரச்சினைகளை உண்டாக்கும். பலாத்காரம் - பலாத்காரத்தையே வளர்ப்ப தாகும். இதை உபயோகித்தோர், பாதிக்கப் பட்டோரிலும் பார்க்க எந்த விதமான பலனையும் கண்டது கிடையாது. இது காந்தீய யுகம். அவர் சாதனையாலும் போதனை யாலும் காட்டிய புதிய வழி சத்தியாக்கிரகம். சத்தியாக்கிரகம் - ஆத்மீக சக்தி ஒன்றினாலேயே பலமும் பலனும் தரக் கூடியது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோரும் - எதிராக அமைந்தோரும் - போராட்டத்தின் பின்பு ஒருவரை ஒருவர் எதிரிகளாக எண்ணவோ, மனதில் அதயைப்படவோ வேண்டி நேரிடாது. இதற்கு இந்தியாவில் நடைபெற்று வெற்றிகண்ட சத்தியாக்கிரக சுதந்திரப் போராட்டமே எடுத்துக் காட்டாகும். இன்று பிரிட்டிஷ் மக்களும் - இந்திய மக்களும் ஒரே குடும்பத்தினர் போலத் திகழவில்லையா? உள்நாட்டு வளர்ச்சியிலும் 2-6Ud விவகாரங்களிலும் இன்று இரு பகுதியினரும் ஒத்துழைக்கவில்லையா, இன்னும் இந்தியா - சாம்ராஜ்ய நாடுகளின் கூட்டுறவில் ஒன்று பட்டுச் செயலாற்றவில்லையா?
இவற்றை நோக்கும்போதெல்லாம், நசுக்கப்பட்ட மக்கள் கையாண்டு விடுதலை

6
பெற இந்தச் சிறந்த ஆயுதத்தைக் கண்டளித்த அந்தப் பெரிய மகாத்மாவை வாயார வாழ்த்தாது இருக்கமுடியாது.
தமிழரசுத் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களும் - மகாத்மா காட்டிய பாதையையே காட்டியுள்ளார். அப்பாதையில் செல்லும்பொழுது எத்தகைய ஆத்திர மூட்டும் நிகழ்ச்சி நிகழ்ந்தாலும் கூட, இம்மியளவும் பலாத்காரத்தை உபயோகி யாது, சாத்வீகத்தில் என்றும் தளராது. உறுதியோடு நின்று விடுதலை காண்போமாக!
என் எண்ணம் என்ன?
இறுதியாகச் சிலகாலம் என் உள்ளத்தி லிருந்துவரும் எண்ணமொன்றையும் குறிப்பிடவிரும்புகிறேன். உலக மகாயுத்தத் தின் பின் அத்திலாந்திச் சாசனம் அமைக்கப் பட்டபோது, போரினால் தாக்குண்ட மனித சமுதாயத்திற்குப் பெரியதோர் நம்பிக்கை பிறந்தது. அது உலகநாடுகளிடையே சமாதானம் நிலவச் செய்வதற்கு மாத்திர மன்றி, இனங்களிடையே ஏற்படுத்தும் சச்சரவுகளையும் தீர்த்துச் சமரசப்படுத்தும் உலகதாபனமாகவும் தோன்றியதைக் கண்டுணர்ந்தோம். இற்றைவரையில், ஐக்கிய நாடுகள் சபை தேசங்களின் பிரச்சினை களைத் தீர்க்கும் நிலையிலேயே நின்றுள்ளது. அதிலும் கஷ்டமான சோதனைக் குள்ளாகியது. எனினும் சுயநிர்ணய உரிமை யைப் பிரகடனம் செய்யும் மக்கள், தம் சேவையைப் பெறக்கூடியதான ஒழுங்கு முறைகளைத் தானே ஆக்கித்தருவதும் அதன் சக்திக்குட்பட்டதே. பாராளுமன்ற உறுப்பினர் போன்ற மக்களின் பிரதிநிதிகள் - மத்திய சபையிலோ அன்றி, ஐ.நா. தாபனங்களின் வேறு அங்கங்கள் மூலமோ தங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கேற்ற வசதியளிக்கும் ஒழுங்கு விதிகளை வகுத்தல் வேண்டும்.
அரசியலுரிமை பற்றிய கூட்டுச் சாசனமும் (Convenant),பொருளாதார, Flyph கலாச்சார உரிமைகள் பற்றிய கூட்டுச் சாசனமும் அமைத்த நிலையிலேயே

Page 168
کلا
இருக்கின்றன. இவ்விரு கூட்டுச் சாசனங் களையும் ஏற்றுக்கொள்ளச் செய்து, நான் குறிப்பிட்ட முறையில் ஒழுங்கு முறைகளை அமைத்துத்தரல் வேண்டும். அப்படிச் செய்யின், இலங்கையிலுள்ள 30 லட்சம் தமிழ் பேசும் மக்களுடைய அபிலாஷை களை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, உலகம் முழுவதிலும் நசுக்கப்பட்ட மக்களுடைய நம்பிக்கையையும் வெளிப்படுத்து பவனாவேன்.
சலியாது உழையுங்கள்
ஒவ்வொரு இனத்தவரதும் தேசிய பிரச்சினைகள், அவர்களுடைய இன்னல்கள், துன்பங்கள், அவர்களுடைய தனிவாழ்வின் வேரையே அழிக்கின்ற அக்கிரமங்கள் - இவையெல்லாம் உலகநாடுகளின் சிந்தையிலே இடம்பெறவேண்டிய கவனத் தைக் கவருகிற விஷயங்கள். ஆனபடியால் தான் இத்துறையில் என் கவனத்தை இவ்வளவு நேரம் செலுத்தினேன். தற்கால உலகில் எந்த இனமும் கூடமைத்துத் தனியே வாழ முடியாது. ஒவ்வொரு இனத்தினதும் கிளர்ச்சியும் விடுதலை இயக்கமும் - உலக சமாதானத்தைப் பாதிக்கவே செய்கின்றது. இதை நான் கூறியவுடன் உங்கள் விடுதலை, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பிறப்புரிமை யாகிய சுதந்திரம் வெளியி லிருந்து எமக்குக் கிடைக்கப்போகிறதென்று எவரும் எண்ணிவிடாதீர்கள்."மற்றவர் எவரும் தரக் கையேந்திப் பெறுவதல்லச் சுதந்திரம். விடுதலை வானத்திலிருந்து விழமாட்டாது. உங்கள் உரிமை - உங்கள் கையிலேயே தங்கியிருக்கிறது. நீங்கள் உழைக்கவேண்டும். கஷ்டப்படவேண்டும்; தியாகங்கள் செய்ய வேண்டும்; உயிரையும் அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். அதுவே சீவ
அச்சம் என்பது அஞ்சாமை திராவி
'. வங்கொடுமைச் சாக்
எங்கள் வெற்
V 7 என் தமிழே தாே உனை நான்

7
சுதந்திரம் பெறும் மார்க்கம். இன்றைய பிரச்சினை மொழியைப் பற்றியதோ, உத்தியோகங்களைப் பற்றியதோ அன்று. உங்கள் தாய்மொழிக்குப் பேராபத்து ஏற்பட்டிருப்பது உண்மை. உங்கள் உத்தியோகங்களுக்கு ஊதியத்தைத்தேடும் மார்க்கங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதும் உண்மையே. ஆனால் இவற்றோடும், நீங்கள் தமிழராக வாழும் உரிமைக்கு - பன்னெடுங் காலமாக எமது முன்னோர் கட்டிக் காத்துக் கையளித்த பாரம்பரியத்துக்கு - ஐயாயிரம் ஆண்டுகளாகப் பேணி வளர்த்த எம் தனிப்பெரும் பண்பாட்டிற்கே பேராபத்து வந்திருக்கிறது. உங்களுக்கு அரசியற் சுதந்திரம் இருந்தாலன்றி, இவைகளைக் காக்கமுடியாது. இவ் வாபத்தை இன்றே - இப்போதே தடுத்து நிறுத்தவேண்டும். தவறுவிர்களானால், வருங்காலச் சந்ததியினரின் சாபத்திற்கு - சரித்திர ஆசிரியர்களின் வசைமொழிக்கு ஆளாவிர்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன் எமது நடவடிக்கைக் குழு விடுத்த அறிக்கையை நீங்கள் அறிவீர்கள். அதிற் கூறப்பட்ட செயல் திட்டத்தை உங்கள்முன் சமர்ப்பிக்கின்றேன். சுதந்திரத்துக்குக் குறுக்கு வழி கிடையாது. வீரத்தோடு, கட்டுப்பாட்டோடு, சத்தியம் எமது பக்கம் இருக்கிறதென்ற நம்பிக்கை யோடு, விடுதலை பெற்றே தீருவோம் என்ற திடசித்தத்தோடு எமது இலக்கை நாம் நிச்சயம் சென்றடைவோம். சுவாமி விவேகானந்தரின் சொற்களில் உங்களை அழைக்கிறேன்; விழியுங்கள்!. எழுங்கள்!! இலக்கை அடையுமட்டும் சலியாது உழையுங்கள்!
வெல்க தமிழரசு
LO6tleoLOuln - 2-601-60Louilln. காட்டில் விளையாடும்
- தோள் றித் தோள்கள்
ய எனை ஈந்தும்
காப்பேன்!

Page 169


Page 170
மலையகத் தமிழரின்
தமிழரசுக்கட்சி த திரு. சி.மூ. இராசமாணிக்கம், B.A. (8ஆவது தேசிய மாநாடு
வரவேற்புக்குழுத் தலைவர் அவர்களே! மகாநாட்டுப் பிரதிநிதிகளே! சகோதர சகோதரிகளே!
ரசாங்கத்தையேஅதிரவைத்த அறப்போரை இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தி முடித்து, இராணுவ ஆட்சியையும், கட்சித்தடைகளையும், தொண்டர்கள் சிறைவாசத்தையும் தாண்டி, மீண்டும் ஒருபோராட்டத்தின் வாசற்படியில் நிற்கின்ற எமது கட்சியின் எட்டாவது தேசிய மகாநாட்டிற்கு, மறுபடியும் என்னைத் தலைவராகத் தெரிவு செய்த கட்சி உறுப்பினர்களுக்கு விசேஷமாகவும், தமிழ் பேசும் பெருங்குடி மக்கள் அத்தனை பேருக்கும் பொதுவாகவும் எனது மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மன்னாரின் மாண்பு
நாம் இன்று கூடிநிற்கின்ற மன்னார் நகரம் - தமிழ் பேசும் மக்களின் பழம் பெரும்பகுதி என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
சிங்கள பெளத்த கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்களை எல்லாம் தேடித் தேடி அகழ்ந்து ஆராய்ந்து பாதுகாத்து வருகின்ற அரசாங்கம், சரித்திரத்திற்கு முற்பட்ட காலந் தொடக்கம் கடல் வாணிபத்தில் முன்னணியில் நின்ற மாதோட்டத்தையும், தேவாரப் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரத்தையும், இவற்றைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் ஆராய்ந்து - எமது பண்பாட்டின் சின்னங்களை வெளிப் படுத்தத் தவறிவிட்டது. ஆயினும் அரைகுறையாக நடைபெற்ற புதைபொருள்

அவலநிலை போக்க
யாராகி விட்டது
(Econ) பா.உ. அவர்கள் பேருரை
- 1-9-1962 - மன்னர்)
ஆராய்ச்சிகளும், பிறநாட்டு வர்த்தகர்கள், யாத்திரீகர்கள் விட்டுச் சென்ற குறிப்புக் களும், தேவாரங்கள் - புராணங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களும் இம் மன்னார்ப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன.
இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் புனிதமும் புராதனமும் வாய்ந்த தலங்களான திருக்கேதீஸ்வரமும், மடுமாதா ஆலயமும் ஈழத் தமிழ் நாட்டின்இரு விழிகளென விளங்கிக்கொண்டிருப்பது இம்மன்னார்ப்
பதியிலேயே!
உலகப் பிரசித்திபெற்ற கடல் வணிகர் களான அராபியர்களோடும், இஸ்லாம் மார்க்கத்தியரோடும் தொன்று தொட்ட தொடர்பு மன்னாருக்கு உண்டு. எனவே கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து மார்க்கங் களைச்சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் நீண்டகால ஒற்றுமைக்கு இப்பிரதேசம் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
கட்டுக்கரைக் குளத்திலிருந்து நீரைப் பெறும் செழிப்புமிக்க வயல்களும், கடல்படு செல்வங்களான முத்தும், பவளமும், சிற்பியும், சங்கும் - நமது பொருளாதாரத்தின் முது கெலும்பாக விளங்கப்போகும் மீன்பிடித் தொழிலும் - ஒருங்கே இம்மன்னார்ப் பிரதேசத்திற்கு வளத்தைக் கொடுக்கின்றன. வற்றாத நீருடைய அருவியாற்றைச் சரியாகப் பயன்படுத்து வதன் மூலமும், மீன்பிடித் தொழிலை நவீன விஞ்ஞான முறையில் விருத்தி செய்வதன் மூலமும் வருங்காலத் தமிழகத்தின் பொருட் களஞ்சியமான மன்னார் விளங்குமென்பதில் ஐயமில்லை.
பாண " உய பெருமையும், இன்றைய சிறப்பும், வருங்கால வளமும் ஒருங்கே பெற்ற

Page 171
L
மன்னாரில் இம் மகாநாடு நடைபெறுவது - தமிழ் பேசும் இனத்தின் விடிவுநாள் வெகுதூரத்தில் இல்லையென்றதென்பதை எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்துகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னாரின் பட்டினசபைத் தலைவரும், அங்கத்தவர் களும் எமக்குப் பொது வரவேற்பளித்து எம்மையும், எமது இயக்கத்தையும் கெளரவித்ததோடு - தமிழ்பேசும் மக்களின் ஒன்றுபட்ட ஆர்வத்தை எடுத்துக் காட்டியதற்காக எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். ஏழாவது மகாநாட்டிலே.
சென்ற ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எமது ஏழாவது மகாநாடு சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த சில தீர்மானங்களைச் செய்தது.
அம் மகாநாட்டில் நான் நிகழ்த்திய தலைமைப் பேருரையில், பூரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் எமக்களித்த துரோகத்தையும், நாட்டில் நமது நிலைமையையும் எடுத்து விளக்கிவிட்டுப் பின்வரும் குறிப்புக்களைக் கூறினேன். அவ் வார்த்தைகளை அடுத்து நாம் எடுத்த நடவடிக்கைகளின் தன்மையும், நோக்கமும் அவற்றைத் தெளிவுபடுத்துவனவாகையினால் அப்படியே எடுத்துக்கூற விரும்புகின்றேன்.
"நிலைமை தாங்கமுடியாததாகி விட்டது. தன்மானமுள்ள எந்தத் தமிழ் மகனும் இந் நிலையைக் கண்டு உள்ளங் குமுறாமலிருக்க முடியாது. ஆனாற் பரிகாரமென்ன?”
"இப்படியான நிலையில் அகப்பட்ட வேறு தேசங்கள் எதிர்ப்புப் புரட்சியையோ அன்றி உள்நாட்டுப் போரையோ வழியாகக் கொண்டார்கள் என்பதுதான் சரித்திரம் கூறும் உண்மை.அதுதான் சம்பிரதாய வழியாகவும் இருந்து வந்தது. ஆனால் நிச்சயமாகச் சொல்லுவேன்; ஆயுதப் போர் எந்தவிதமான பிரச்சினைக்கும் தீர்வுகாண மாட்டாது. அவை மேலும் புதிய பிரச்சினை களை உண்டாக்கும். பலாத்காரம்

60
பலாத்காரத்தையே வளர்ப்பதாகும். தமிழரசுத் தந்தை திரு.எஸ்.ஜே.வி. செல்வ நாயகம் அவர்களும் மகாத்மா காட்டிய பாதையே காட்டியுள்ளார். அப்பாதையிற் செல்லும்போது, எத்தகைய ஆத்திரமூட்டும் நிகழ்ச்சி நிகழ்ந்தாலும் இம்மியளவும் பலாத்காரத்தை உபயோகியாது, சாத்வீகத் தில் என்றும் தளராது, உறுதியோடு நின்று விடுதலை காண்போமாக!" -
நான் அன்று கூறிய வார்த்தைகளைச் சென்ற ஆண்டு நடந்த நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். அறப்போர்
மகாநாட்டைத்தொடர்ந்து, மாசி மாதம் 20ஆந் திகதி யாழ்ப்பாணக்கச்சேரி வாசலில் எமது அறப்போர் ஆரம்பமானது. தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலோராக வாழும் வடக்குக் கிழக்குமாகாணங்களில் கூடச் சிங்களத்தை நிர்வாக மொழியாக்கும் முயற்சியையும், சிங்கள உத்தியோக முத்திரைகள், பத்திரங்கள் முதலியன எமது பிரதேசத்திலும் உபயோகிக்கப்படுவதையும் எதிர்த்தே - அரசாங்கத்தின் தலைமை நிலையமாகிய கச்சேரி வாசலில் சாத்வீக மறியலை மேற்கொண்டோம்.
முதல்நாள் போராட்டத்திலேயே பொலீஸார் கையாண்ட மிருகத்தனமான தாக்குதலும், அதை எமது தொண்டர்கள் சகிப்புத் தன்மையோடு ஏற்றுக்கொண்ட பொறுமையும் -இப் போராட்டத்தில் அக்கறையற்றிருந்த மக்களைக்கூடப் புத்துணர்ச்சி கொள்ளச்செய்து, தமிழ் பேசும் மக்கள் அத்தனை பேரையும் ஒன்றுபடச் செய்தது.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் - மட்டக்களப்புக்கும், திருகோணமலைக்கும், மன்னாருக்கும், வவுனியாவிற்கும் விஸ்தரிக்கப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆண்களும், பெண்களும், வாலிபர்களும், குமரிகளும், வயோதிபர்களும், அணியணியாகக் களத்திற் குதித்தனர்.

Page 172
L
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்க நிர்வாக இயந்திரம் சுமார் இரண்டு மாதங்களாக ஸ்தம்பித்து நின்றது. படையைக் காட்டி மிரட்டியும், பங்கீட்டரிசி யை நிறுத்தியும் எம்மைப் பணிய வைக்க அரசாங்கம் முயற்சித்தது. தமிழ்பேசும் மக்களுடைய உரிமை வேட்கையின் முன் - இம் முயற்சிகள் பலனற்றுப் போயின. ஆயினும் அரசாங்கம் தொண்டர்களைக் கைது செய்யவோ, வேறு சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவோ தயங்கியது. மாறாக, கீழ்த்தரமாக வயிற்றிலடித்துக் களைக்க வைத்து எமது போராட்டத்தை முறியடிக்க எண்ணியது. தமிழ் தபால் சேவை
இக் கட்டத்தில் தான் எமது போராட்டத்தின் இரண்டாவது அங்கமாகத் தமிழரசுத் தபாற்சேவை ஆரம்பிக்கப்பட்டது. சட்டமறுப்பின் அடிப்படையில் தபால் விநியோகம் அரசாங்கத்தின் ஏகபோக உரிமை' என்ற சட்டத்தை மீறி, எம்மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கச் செய்வதே - தபால்சேவை ஆரம்பித்ததன் நோக்கம். இதைத் திரித்து, "நாம் தனியரசு அமைக்கும் நோக்கத்தோடு தபால் சேவையை ஆரம்பித்தோம்" என்று அன்று தொடக்கம் அரசாங்கமும், சிங்கள வகுப்புவாத அரசியல் தலைவர்களும் உலகம் முழுவதற்கும் பிரசாரம் செய்து வருகின்றார்கள். இக்கூற்று உண்மைக்கு முரணானது என்பதைப் பகிரங்கமாக இம் மகாநாட்டில் நான் கூற விரும்புகின்றேன்.
சாத்வீக சத்தியாக்கிரகத்தை - மிருகத்தனமான இராணுவ ஆட்சியின்மூலம் முறியடிக்க வேண்டியேற்பட்ட வெட்கத்தை மறைப்பதற்காக வெளி உலகத்தின் முன்னிலையில் தமது அநியாயமான கொலை நியாயபூர்வமானது என்று காட்டு வதற்காகவே அரசாங்கம் இப்பொய்யைக் கூறிவருகின்றது. சென்ற மகாநாட்டில் நான் கூறியதுபோல,
எத்தகைய ஆத்திரமூட்டும் நிகழ்ச்சி களைஅரசாங்கமும், இராணுவத்தினரும்

கைக்கொண்டபோதிலும், சாத்வீகத்தில் தளராத உறுதியோடு நின்ற எம்மக்களை நான்பாராட்டக் கடமைப்பட்டவனாக
இருக்கின்றேன். உலகத் தமிழரின் அனுதாபம்
இலங்கையில் நாம் நடத்திய போராட்டத்தின் எதிரொலிப்பாக, எமது போராட்டத்தை அலட்சியம் செய்து லண்டன் நகர் சென்ற பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகாவின் முன், அவரை அதிர்ச்சியடையச் செய்யக்கூடிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி, எமது குறையை உலகறியச்செய்த லண்டன்வாழ் தமிழருக்கும் எமது பாராட்டு உரியது. அயர்லாந்து நடத்திய விடுதலைப்போருக்கு - அமெரிக்கா வில் வாழ்ந்துகொண்டிருந்த ஐரிஸ் மக்கள் ஊக்கமும் அனுதாபமும் அளித்ததுபோல, இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போருக்கும் - உலகத் தமிழரின் அனுதாபம் இருப்பதுஇயல்பே. இதற்கேற்ப, சென்ற ஆண்டு எமது சாத்வீகத் தொண்டர் கள் சிறையில் அடைக்கப்பட்ட பொதுமக்கள் இராணுவ ஆட்சியில் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்,தமது அனுதாபத்தைக் காட்டும்பொருட்டுப் பல லட்சம் மக்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங் 6)6. நடத்திய தென்னகத்தமிழ் மக்களுக்கும்; அரசாங்க இருட்டடிப்பையும் பொருட் படுத்தாது உண்மையை உலகுக்கு எடுத்துக்கூறிய வெளிநாட்டுப் பத்திரிகை களுக்கும் நமது நன்றி. மலைநாட்டுத் தமிழர்
இப்போராட்டத்தில் மறக்கமுடியாத ஓர் அம்சமாக - மலைநாட்டிலிருந்து கூட்டங்கூட்டமாக வந்து சத்தியாக்கிரகத்திற் பங்குபற்றிய தொண்டர்களையும், கட்டுப் பாடபான அடையாள வேலைநிறுத்தத்தின் மூலம் தமது இனப்பற்றைக் காட்டிய தமிழ்த் தொழிலாளர்களையும் நான் பாராட்டாமல் விட முடியாது. இவ்வொற்றுமை வருங் காலத்துக்கு ஒரு நல்ல அறிகுறி என்றே கருது கின்றேன்.

Page 173
1.
எமது சத்தியாக்கிரகப் போராட்டத் தின் பலாபலன்களை அறியுமுன், அப் போராட்டத்தை முறியடிக்க மக்கள் அரசாங்கம்' என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இவ்வரசாங்கம் கைக்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றிச் சில வார்த்தை கள் கூறாமலிருக்க முடியாது. இரண்டு மாதங்களாகப் போராட்டம் நடந்த போதிலும், இம்மியளவும் பலாத்காரம் தலை தூக்கவில்லை. பொலீசாரும் இராணுவத் தினரும், சில சிங்களக் காடையர்களும்கூட - யாழ்ப்பாணக் கச்சேரியில் மக்களுக்கு ஆத்திரமூட்டக்கூடிய விதமாகவும், தொண்டர்களைத் துன்புறுத்தக்கூடிய விதமாகவும் நடந்துகொண்ட பொழுதிலும், மக்கள்ஒரு சிறிதும் அமைதியை இழக்காது உண்மைச் சத்தியாக்கிரகிகளாக நடந்து கொண்டனர். மக்களின் மனப்பான்மையை அனுசரித்து நடத்தும் ஆட்சியாக இருந்தால், அவர்களுடைய கோரிக்கைளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் - மனிதத் தன்மையுடனாவது நடந்திருக்கலாம். வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட படைவீரர்கள் - ஒரு அந்நிய நாட்டை வெற்றிகொண்ட வீரர்களாக நடந்தார்கள். தலைவர்களைக் கைது செய்தபின், ஒரு பாவமும் அறியாத ஏழை மக்களைக் கண்ட கண்டஇடங்களி லெல்லாம் அடித்துத் துன்புறுத்தி, பெண் களைக் கூடக் கற்பழித்து இம்சை செய்தனர். இவற்றை நான் குறிப்பிடுவது - முறையிடும் நோக்கத்தோடு அல்ல. ஆனால், இவ் வரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் நாம் ஓர் அந்நிய இனத்தவர்களாகவே கருதப்படு கின்றோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்கே,
இத்தனை அக்கிரமங்களையும் செய்தபடை வீரர்களுக்கு, அரசாங்கத்தின் தலைவியிடமிருந்து கிடைத்தது - "சரியாகச் செய்தீர்கள்' என்ற பாராட்டுரையே! இவ்வரசாங்கம் எமது அரசாங்கமல்ல என்பதும், தமிழ்பேசும் மக்களை இராணுவ பலத்தினால் அடக்கியாளும் எதேச்சாதிகார அரசாங்கம் என்பதும் இப் போராட்டத்தின் மூலம் நிதர்சனமாகியது.

S2
ராஜாஜி கூறினார்
முன்னாள் இந்திய கவர்னர் ஜெனரலும், அரசியல் ஞானியுமாகிய உயர்திரு. சி. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், சென்ற ஆண்டு இலங்கையில் நடந்த சம்பவங்களை யொட்டிச் "சுயராஜ்ய'ப் பத்திரிகையில் எழுதிய கீழ்க்காணும் வசனங்கள் எமது உண்மை நிலையைக் காட்டுகின்றன.
"The Language issue is merely an outer symbol of the competition between the two nationalities. It is a battle between communities, not at all a battle of cultures or languages....The question is whether the Tamil speaking people are to be treated as equals? or not?"
அவருடைய கூற்றின் மொழி பெயர்ப்புப் பின்வருமாறு :
“இரண்டு இனங்களுக்கிடையில் நடைபெறும் போட்டியின் வெளி அறிகுறியே இம் மொழிப் பிரச்சினை. இது மொழிகளுக்கிடையிலோ, பண்பாடுகளுக் கிடையிலோ நடைபெறும் போராட்டமல்ல. இரண்டு சமூகங்களுக்கு இடையிலே நடைபெறும் போராட்டமாகும். தமிழ் பேசும் மக்கள் சமத்துவமாக நடத்தப்படப் போகிறார்களா? அல்லவா? என்பதே
கேள்வி"
இப் பெரியார் கூறியதைப் போல, சென்ற ஆண்டு நமது நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் - இன்றைய ஒற்றையாட்சியில் தமிழ்பேசும் மக்கள் சமத்துவமாக நடத்தப்பட மாட்டார்கள் என்பதை வெள்ளிடைமலைபோல் புலப்படச் செய்தன. நமது போராட்டம் மொழி யுரிமைக்காக மாத்திரம் நடைபெறும் போராட்டமல்ல. எமது இனத்தின் சுதந்திரத்திற் காக - சமத்துவத்திற்காக நடைபெறும் போராட்டமாகும்.
சிங்களச் சட்டமே கண்களைத் திறந்தது
1956ஆம் ஆண்டிற்கு முன்னர் எமது மக்களிற் பெரும்பாலோர் இவ்வுண்மையை
உணராதிருந்தனர். மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளருடைய பிரஜாவுரிமையைப்

Page 174
பிடுங்கிய பிரஜாவுரிமைச் சட்டங்களும், வாக்குரிமையைப் பறித்த தேர்தல் சட்டத் திருத்த மசோதாவும், அல்லையிலும், கந்தளாயிலும், கல்லோயாவிலும் நடத்தப் பெற்ற சிங்களக் குடியேற்றமும் - இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களைச் சமத்துவ நிலையில் இருந்து தாழ்த்தி, அடிமைகளாக்கும் திட்டங்கள் என்பதை - அன்று எமது மக்களும், அரசியல் தலைவர் கள் பலரும் உணரவில்லை. 1956இல் புகுத்தப்பட்ட 'சிங்களம் மட்டும் சட்டமே என் கண்களைத் திறந்தது. ஆயினும் இன்று கூடச் சில அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் இவ்வுண்மையை மறைத்து, இப் போராட்டத்தை வெறும் மொழிப் போராட்டம் என்று கூறிவருவது ஆச்சரியமே! இனியும், தமிழ் பேசும் மக்கள் இக்கூற்றுக்களினால் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்பது எம் நம்பிக்கை.
இன்றைய இவ்வினப் போராட்டம் தீருவதற்கு, 1956ஆம் ஆண்டு ஆவணி மாதம் திருமலையில் நடைபெற்ற 6T LD5 மகாநாட்டில் தமிழ் பேசும் மக்களின் நான்கு கோரிக்கைகளை நாம் வெளியிட்டு இருக்கின்றோம். அவற்றைச் சுருக்கிக் கூறுவதாயிருந்தால் : 1. இன்றைய ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய ஒரு சமஷ்டி அரசியல்முறை ஏற்படுத்தப்பட வேண்டும்.
2. சிங்களத்தோடு தமிழும் சம உரிமை பெற்ற ஆட்சிமொழியாக வேண்டும். 3. இலங்கையைத் தாம் வாழும் நாடாகக் கொண்ட இந்திய வம்சாவழியினரான தமிழ் பேசும் மக்களுக்குப் பிரஜாவுரிமைஅளிக்கப்பட வேண்டும். 4. பாரம்பரியமான தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.
1956ஆம் ஆண்டு தொடக்கம் நாம் நடத்திய பேராட்டங்களும், இடையிடையே

3.
நடத்திய பேச்சு வார்த்தைகளும், ஒப்பந்தங் களும் இந்த அடிப்படையிலேயே நடாத்தப் பட்டன. தற்காலிகமாக உடன்பாட்டின் பொருட்டுச் சில கோரிக்கைகளை நாம் தளர்த்திய பொழுதிலும், தமிழ் பேசும் மக்கள் இந்நாட்டில் சமத்துவம் பெற்று வாழ்வதற்கு இந்நான்கு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டேயாக வேண்டும்.
கடந்த காலங்களில் நாம் நடாத்திய போராட்டங்கள் - குறிப்பாக நாம் சென்ற ஆண்டு நடாத்திய சத்தியாக்கிரக இயக்கத் தைப் பொதுவாகப் பார்த்தால் - பலனளிக்க வில்லைப் போலத் தோன்றினாலும், உண்மையில் எமது சுதந்திரத்தின் அசைக்க முடியாத அத்திவாரத்தை அமைத்துவிட்டது என்றே நான் கூறுவேன்.
சுதந்திரத்தின் முதல் அடிப்படை ஒற்றுமை. வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒரே இனம்' என்ற ஒற்றுமையோடு, ஒரே போராட்டத் தில் முதன்முறையாகக் கலந்துகொண்ட சென்ற ஆண்டு - சரித்திரத்தில்பொன் எழுத்துக்களாற் பொறிக்கப்படவேண்டிய வோர் ஆண்டாகும். எந்தத் தமிழ் உத்தியோகத்தரையோ - தமிழ்ப் பொலீஸ் அதிகாரியையோ "எமது உரிமைப் போரை நசுக்கும் விஷயத்தில் நம்பமுடியாது என்று அரசாங்கம் நினைக்குமளவிற்கு - நாம் உள்ளத்தால் ஒன்றுபட்டிருந்தோம். இக்காரணத்தினாலேயே, தமிழ்ப் பிரதேசங்களில் கடமையைச் செய்த தமிழ் உத்தியோகத்தர்களை மாற்றி, சிங்கள உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசங்காத்திற்கு ஏற்பட்டது.
ஒரு இனம் விடுதலைபெற வேண்டுமா னால், அவ்வினத்தவர் 'தாம் அடிமைகளாக வாழமாட்டோம் என்ற உறுதியை - அவர்கள் உள்ளத்தில் முதற்கண் பெறவேண்டும். சென்ற ஆண்டு நடந்த அறப்போரில், இராணுவத் தின் மிருகபலத்தினாலன்றி - எமது சம்மதத்தோடு எம்மை ஆளமுடியா தென்பது - சந்தேகத்திற்கிடமின்றிக் காட்டப்பட்டது. இந்த ஒற்றுமையையும்

Page 175
1.
சுதந்திர மனப்பாங்கையும் சிதையவிடாது வளர்ப்போமானால், எமது இலட்சியத்தை நாம் அடைவது உறுதி
அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரம்:
எமது சுதந்திர தாகத்தை அடக்கு வதற்கு அரசாங்கம் பல தந்திரங்களைக் கையாளுகின்றது. சிங்களம் மட்டும் சட்டம் புகுத்தப்பட்ட நாள் முதல், எமது எதிர்ப்பின் ஒரு அம்சமாகத் தமிழ் பேசும் மக்கள் சிங்களம் கற்பதில்லையென்றும், தமிழ் பேசும் அரசாங்க ஊழியர் சிங்களத்தைக் கற்கவோ, அம்மொழியில் வேலை செய்ய வோ மாட்டார்கள் என்றும் தீர்மானித் தோம். அதன் பிரகாரம், இது வரை ஓரளவு உறுதியாக இருந்து வந்தோம். இன்று சிங்களம் கற்காத அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தியும், பதவி உயர் வைத் தடுத்தும், அரசாங்க ஊழியர் களுக்குப்பலவித சிறுமைகளை ஏற்படுத்தியும் அவர்களைச் சிங்களம் கற்கும்படி அரசாங்கம் நிர்ப்பந்திக்கிறது. "சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நேரத் தில்,காலஞ் சென்ற பிரதமர் இவ்வூழியர் களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, 1963ஆம்ஆண்டு இறுதியில் சிங்களத்தில் கருமமாற்ற (Լpւգ-ԱIn 5 அரசாங்க ஊழியர்களை வேலைநீக்கம் செய்யப் போவதாகவும் மிரட்டுகின்றது. இம் மிரட்டல்களுக்கு அஞ்சாது. "சிங்களம் கற்க மாட்டோம்" என்று உறுதியாக மறுத்துவரும் அரசாங்க ஊழியர்களை, தவறான புள்ளி விபரங்களைக் கொடுத்து அரசாங்கம் ஏமாற்றப் பார்க்கின்றது. அத்தனைபேரும் தமிழர்களெனத் தோற்றக்கூடிய விதத்தில் 18,000 பேர் சிங்களப் பரீட்சை எடுத்ததாக விளம்பரம் செய்தார்கள். உண்மையில் ஏறக்குறைய 3000 தமிழ் உத்தியோகத்தர்களே இப்பரீட்சைக்குத் தோற்றியதாக இப்பொழுது தெரிகின்றது.
சம்பள உயர்வு, பதவி உயர்வு கருதிச் சிங்களத்தைக் கற்றாலும் தம்பதவிகளில் நிலைக்கமுடியாதென்பதை, சிங்களம் கற்க முயலும் இச்சில ஊழியர்கள் கூட உணரும்

$4.
நாள் வெகுதூரத்திலில்லை. எமது எதிர்ப்பை ஒடுக்குவதற்காக, சிங்களம் கற்ற சிலருக்கு இப்போது சில சலுகைகள் வழங்கப் பட்டாலும், பெளத்த சிங்களவரல்லாதோர் எவ்வித நிரந்தரமான உயர்வையும் பெறமுடியாதென்பது திண்ணம். இவ் வுண்மையை உணர்ந்து, பெரும்பாலான தமிழ் அரசாங்க ஊழியர்கள் சிங்களம் கற்க மறுத்து நிற்பதுபோல - இனத்தின் உரிமையைக் காத்து நடக்குமாறு எல்லா ஊழியர்களையும் வேண்டுகின்றேன்.
ஆங்கில ஆட்சியில் தமிழ் ஆசிரியர் களோ, தமிழ்மூலம் உத்தியோகத்திற்குத் தெரிவு பெற்றவர்களோ ஆங்கிலம் கற்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருந்ததில்லை. இன்றைய சிங்கள ஆட்சியில், தமிழ் பேசும் பிள்ளைகளுக்குத் தமிழிற் கல்வி புகட்டும் தமிழ், இஸ்லாமிய ஆசிரியர்கள் கூடச் சிங்களம் கற்க வேண்டுமென்று கட்டாயப் படுத்துகின்றார்கள். உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதன் உடனடியான விளைவாக இது நடைபெறுகின்றது.
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது 'முற்போக்கு நடவடிக்கை யெனக் கருதியவர்களும், இன்று சம்பள உயர்வு பெறாது தவிக்கின்றார்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தையும் ஒருபடி மிஞ்சி - தமிழ்பேசும் இனத்தை நசுக்குவதில் சிங்கள ஏகாதிபத்தியம் முனைந்து நிற்கின்றது. இவற்றைத் தீர்க்கும் மருந்து - அற்பநன்மை கருதி அடிபணிவதல்ல; தியாகப்பாதையில் எதிர்த்துப் போராடுவதுதான் - என்பதை யான் மீண்டும் நினைவுபடுத்த விரும்பு கின்றேன். மூதூர் அளித்த தீர்ப்பு
தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கவும் பல சதி நடவடிக்கைகள் கையாளப்பட்டுவருகின்றன. சமீபத்தில் மூதூரில் நடந்த இடைத் தேர்தலில் இச்சதி அம்பலமாகியது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சியில் - அரசாங்கக் கட்சி மாத்திரமல்ல, தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் ஈடுபட்டுள்ளனர்.

Page 176
-1 ஆனால் மூதூர்த் தொகுதித் தமிழ் பேசும் வாக்காளர்கள் - தமது ஒற்றுமையை, தமிழரசுக்கட்சியின் தலைமையில் தாம் அமைத்த கூட்டணியை எவராலும் சிதைக்க முடியாதென்பதைத் தெளிவாகக் காட்டினர். சாதி அடிப்படையில் 'சிறுபான்மைத் தமிழ் மக்கள் என்றிருப்போரை - ஏனைய தமிழ் மக்களில் இருந்து பிரித்தெடுக்க முயற்சி நடக்கின்றது. ஒரு சில அரசியற் கட்சிகளும் ஸ்தாபனங்களும் இம்முயற்சிக்கு உடந்தை யாக இருந்தாலும், சிறுபான்மைத் தமிழ் மக்களிற் பெரும்பாலோர் - தாம் தமிழ் பேசும் சமுதாயத்தின் பிரிக்கமுடியாத அங்கமென்று தெளிவாகக் காட்டிவருவது பாராட்டுக் குரியது. ஆயினும், எமது சமுதாயத்திலிருந்து இச் சாபத்தீட்டை நாம் களைந்தே ஆகவேண்டும்.
சமீபத்தில் சாதி ஒழிப்பை நோக்க மாகக் கொண்டு, எமது கட்சியினால் ஒரு சர்வகட்சி மகாநாடு யாழ்ப்பாணத்தில் கூட்டப்பெற்றது. எல்லாக் கட்சிகளின் பிரதிநிதிகளும், அரசியலில் ஈடுபடாத பல பிரமுகர்களும் அடங்கிய ஒரு செயற்குழு இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க நியமிக்கப்பட்டிருக்கின்றது. அவர்களோடு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைத்து, தமிழ்பேசும் சமுதாயத்திலிருந்து தீண்டாமை யைக் களைவது அத்தியாவசியமாகும்.
தி.மு.க. தடை!
உள்ளத்தால் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ் பேசும் மக்களோடு ஒன்றுபட்டிருந்தாலும் பிரதேசத்தினால் பிரிந்திருக்கும் காரணத்தினால், எம்மோடு ஸ்தாபன ரீதியாக மலைநாட்டுத் தமிழ் மக்கள் இன்னும் ஒன்றுபடவில்லை. சென்ற ஆண்டின் பிற்பகுதியில் நாம் மலைநாட்டுத் தமிழ் மக்களோடு நேரடித் தொடர்பு கொள்ள முனைந்தோம். அவர்கள்மத்தியில் இயங்கி வந்த இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகம் எமக்கு உறுதுணையாக இருந்தது. மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்ச்சியைக் கண்ட அரசாங்கம்

55
இவ்வியக்கத்தைச் சட்டவிரோதமாக்கியது. தமிழ் பேசும் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இன்னுமொரு அடியே - இத்தடையுத்தரவு. ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் இதைக் கண்டிக்காது விடமுடியாது. மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர்கள் இன்று பல்வேறு தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கிறார்கள். சில-பெரிய தொழிற்சங்கங்களாகவும், சில - சிறியனவாக வும், இன்னும் சில சிங்களக் கட்சிகளின் ஆதிக்கத்தில் உள்ளனவாகவும் இருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில், இத்தொழிற் சங்கங்களுக்குப் போட்டியாகத் தமிழ்த் தொழிலாளர் மத்தியில் தொழிற் சங்கம் அமைக்கும் எண்ணம் எமக்கில்லை. தேவையேற்படின் பின்னர் அதையிட்டு யோசிப்போம். ஆனால், மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளரைப் பாதிக்கும் அரசியற் பிரச்சினைகள் நாளுக்குநாள் வளர்ந்து வருகின்றன.
மலையகத் தமிழரின் அவலநிலை
குடியுரிமை வாக்குரிமை பறிக்கப்பட்டதோடு அவர்களுடைய ஜீவனோபாயத்திற்கே ஆபத்து ஏற்பட்டிருக் கின்றது. தோட்டங்களைத் தவிர வேறு வாழ்க்கை வழி அறியாத இத் தமிழ்த் தொழிலாளர்கள். 'இலங்கையர்களுக்கு வேலை வழங்கும் சட்டத்தின் பேரில் இத் தோட்டங்களிலிருந்தும் துரத்தப்படப் போகின்றார்கள். அவர்களுடைய பிள்ளை கள் தமது தாய் மொழி மூலம் கல்வி கற்பதற்குக்கூட உரிமை மறுக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. தோட்டப் பாடசாலைகளில், நாடற்றவர்களின் பிள்ளைகளுக்குச் சிங்களமே போதனா மொழியாக இருக்கவேண்டுமென்று தேசிய கல்விக்குழு சிபார்சு செய்திருக்கின்றது. இந்நிலையில், இவர்கள் இழந்த உரிமை களைப் பெறுவதற்கும், பயமுறுத்தப்படும் தொழிலுரிமை, மொழியுரிமைகளைக் காப் பதற்கும் - இலங்கையில் வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களோடு ஸ்தாபன ரீதியாக ஒன்றுபட்டுப் போராட வேண்டியது அத்தியா வசியமென்று நான் கருதுகிறேன்.

Page 177
வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்களின் ஒரே ஸ்தாபனம் - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆகவே, இதஅ. கட்சிக் கிளைகளை மலைநாட்டுத் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்பித்து, மலை நாட்டுத் தமிழ்பேசும் மக்களையும் - வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்களையும் ஸ்தாபன ரீதியாக ஒன்று சேர்க்கத் தீர்மானித்து விட்டோம் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளு கின்றேன்.
மலைநாட்டுத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் ஸ்தாபனங்களோடு போட்டியிடும் நோக்கம் எமக்கில்லை என்பதை முன்னே கூறினேன். ஆகவே, அங்கு இயங்கும் ஸ்தாபனங்களின் தலைவர்களையும் இவ்வொற்றுமை முயற்சிக்கு ஆதரவளிக்கும் படி வேண்டுகின்றேன்.
பொருளாதார நெருக்கடி
இலங்கை ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே போக, அதைச் சமாளிக்க முடியாது தத்தளிக்கும் மக்களை வரிகளினால் மேலும் வாட்டி வதைக்கின்றது அரசாங்கம். வகுப்புவாதத்தால் திளைத்த இவ் வரசாங்கம் - பொருளாதார நெருக்கடி யின் பழுவையும் எம்மீது அதிகமாகச் சுமத்த முற்படலாம்!
ஆயத்தமாகுங்கள்
சிங்களமக்களின் கவனத்தை இப்
பிரச்சினைகளில் இருந்து திருப்ப, அரசு இனவெறிக் கொள்கையைத் தீவிரமாக அமுல்படுத்த முன்வரும். எனவே எதிர் வரும்
-AS நாடும் ே -NWZ- ploĝo

6-—
ஆண்டில், நாம் இன்னும் கூடிய இன்னல்களைத் தாங்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
சென்ற ஆண்டு நாம் ஆரம்பித்த அறப்போர் இன்னும் முடியவில்லை. இராணுவ ஆட்சியினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. வளர்ந்திருக்கின்ற இன்றைய நிலைக்கு ஏற்ற ஓர் அமைப்புத் திட்டத்தைக் கட்சி நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அவ்வமைப்பு விதிகளின்கீழ், வடக்குக் கிழக்கு மாகாணங் களிலும், மலைநாட்டிலும் கட்சியின் கிளைகளைச் சில மாதங்களுக்கிடையில் நிறுவுவோம். நாடெங்கும் தொண்டர்களை மீண்டும் திரட்டுவோம். உரிய நேரத்தில் செயற்குழுவின் ஆணையை எதிர் நோக்கி, மீண்டும் அறப் போரில் குதிக்க ஆயத்த மாகுங்கள் என்று கேட்டுக் கொள்ளு கின்றேன்.
நாட்டின் விடுதலைக்காக - சிறையில் மரித்த ஐரிஸ் தேசபக்தன் டெறன்ஸ் மக்ஸ் esif (Terence Macswiney)' 5.gsu 6aa வார்த்தைகளை ஞாபகமூட்ட விரும்பு கின்றேன்.
"This contest is one of endurance and it is not they who can suffer most, who will conquer."
இப்போராட்டம் - தாங்கிக்கொள்ளும் சக்தியில் தங்கியிருக்கின்றது. கூடிய துன்பம் விளைவிப்பவர்களல்ல -கூடிய துன்பத்தைத் தாங்குபவர்களே இறுதியில் வெற்றி பெறுவர்.
வெல்க தமிழரசு வணக்கம்.
மாழியும் ہلماالمرام கண்கள் NY/-

Page 178
;X حي مسZiے^Nx4f..يتي مص_؟گھ\VA Nx محہ
Ns. لس - ক্ৰন্থ N --> >3چەتE N A 조
、鲇*、 翼 مجموعہ
1990 ஆம் ஆண்டு ஈழம் வந் பண்டித ஜவஹர்லால் நேரு அ
மாண்புமிகு மூதறிஞர் சா.
அவர்களும் கொழும்பில் உள் மிகவும் சுவாரஸ்யமாக உரை
 
 

த பாரதப்பிரதமர் மாண்புமிகு வர்களும் தமிழரசுத் தலைவர் ஜே. வே. செல்வநாயகம் ள காலிமுக ஒட்டலிற் சந்தித்து யாடும் காட்சி.

Page 179


Page 180
முஸ்லிம்களும் எம்மோடு ே தவறினால் அனைவருமே உயர்திரு. S.J.V. ச்ெல்வநாயக
(9ஆவது தேசிய மாநாடு -
வரவேற்புக் குழுத் தலைவர் அவர்களே! இலங்கைத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களே! தமிழ் பேசும் பெருங்குடி மக்களே!
இலட்சியூத்தைக் காட்டிக் கொடேன்!
ம் மாநாட்டின் தலைவராக என்ன்ை வரவேற்றுக் கூறிய அன்பு வார்த்தை களுக்காக, நான் வரவேற்புக் குழுவினருக்கும் அவர்கள் தலைவருக்கும் முதன் முதலில் நன்றி கூறுகிறேன்.
பாராட்டு வார்த்தைகளைப் பெருமளவு என்மீது சொரிந்தீர்கள். இவ்வார்த்தைகளுக்கு நான் எவ்வளவு தூரம் அருகதையற்றவன் என்பதை நான் அறிவேன். இருந்தும் என்மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு காரணமாகவே அவ்வாறு கூறினிர்கள்.
என்னிடம் கெட்டித்தனம் நிரம்ப உண்டு என்று நான் ஏதும் உரிமை பாராட்டவில்லை. ஆனால் ஆணித்தரமான வாக்குறுதி ஒன்றை - நான் என்றும் காப்பாற்றுவேன் என்பதை மட்டும் இங்கே உறுதியிட்டுக் கூறமுடியும்.
தமிழ் பேசும் மக்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நான் என்றாவது துரோகம் செய்யவும் மாட்டேன்; நாம் கொண்ட இலட்சியத்தையும் என்றாவது காட்டிக் கொடுக்கவும் மாட்டேன்.
சைவசமயிகளின் புனிதத்தலம்:
தமிழினத்தின் சரித்திரத்தில், இந்தத் திருகோணமலைப் ப்ட்டினத்துக்கு ஒரு மதிப்பான இடமுண்டு. புராதன காலத் தேவாரங்களில் இடம்பெற்றது திருகோண மலை. கோணேசர் கோவில்கொண்டிருக்கும்

சர்ந்து போராட வேண்டும்! அநாதைகளாகிவிடுவோம்! ம், .ெC.M.P அவர்கள் பேருரை
2-8-1964 - திருகோணமலை
பெருமையும் திருகோணமலையினதே. இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் ஒரு பகுதியினரான சைவ சமயிகளுக்குத் திருகோணமலை ஒரு புனித தலமாகும்.
வன்னியர் மரணம் தந்த வறுமை
திருகோணமலையில் நாம் மகாநாடு நடத்துவது இதுவல்ல முதல் தடவை. 1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17, 18, 19ஆந் திகதிகளில் தமிழரசுக்கட்சியின் நாலாவது தேசிய மாநாடு இங்கேதான் கூடிற்று. அப்போது எமது தலைவராக இருந்தவர் திருவாளர் கு. வன்னியசிங்கம், இவர் ஒரு தமிழ் அறிஞர்; தமிழ் பேசும் மக்கள் சுதந்திர இலட்சியத்தில் ஒரு தீவிர தொண்டன்; ஆழ்ந்த பண்பாளன்; வைதீக இந்துக் குடும்பத்தில் தோன்றி, எம்மினத்தின் ஒரு பகுதியினரிடையே நிலவிவரும் தீண்டா மையை ஒழிக்கப் பெரும்பணி புரிந்தவர். திருவாளர் வன்னியசிங்கம் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரப் போரில் ஆற்றிய பங்கு தனி விசேடமானது. இந்த வீரனின் மரணத்தால் ஏற்பட்ட வறுமையை நாம் ஈடுசெய்ய முடியாது. மேலும் பலவீனரானோம்
நம்பிக்கையும் பணிவும் கொண்ட வேறும் பல தலைவர்களின் மறைவால் நாம் மேலும் வறியவரானோம். திருமலை உள்ளுராட்சி மன்றத்தில் தலைவராயிருந்து தமிழ் பேசும் மக்களுக்கு அளப்பரிய சேவை செய்த திருவாளர் ஏகாம்பரம், 1961 சக்தியாக் கிரக இயக்கத்தின்போது போர்முனையில் காலமானார்! இதையடுத்துத் திருவாளர் வேஅ. கந்தையா எம்மை விட்டுப்பிரிந்தார்! பாராளுமன்ற விவாதத்திலும், பொதுக்

Page 181
17
கணக்குக் குழுவிலும் அவர் அளப்பரிய தொண்டாற்றினார்.
திருவாளர் இராஜவரோதயத்தின் பணி வேறொரு தன்மையதாயிருந்தது. 1952இல் எமது கட்சியில் சேர்ந்த இவர், தமது குண வன்மையால் எமது கட்சிப் போராட்டங் களுக்குப் பாதுகாப்பாகத் திருகோணமலைத் தொகுதியைப் பிடித்து வைத்துக்கொண்டார். அக்காலத்தில் ஏற்பட்ட இவரின் மரணத்தால் நாம் மேலும் பலவீனரானோம் திரு. வன்னியசிங்கத்தையடுத்துத் தலை வராகிய திரு.இராஜவரோதயம், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எமக்குத் தலைமை தாங்கினார்.
கஷ்டமான காலங்கள்
மீண்டும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டதற்காக நான் மன்னிப்பு வார்த்தை யொன்று கூறக் கடமைப்பட்டுள்ளேன். கஷ்டமான காலங்கள் எம்முன்னே நிற்கின்றன. இளமைக்கும் திறமைக்கும் பதிலாக - வயதுக்கும் அனுபவத்திற்கும் சவால் விடப்படும் கட்டம் இது. எனவே கடமையின் அழைப்பையேற்று, நான் மீண்டும் தலைமையை ஏற்றுக் கொண்டேன். தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் பாதையில், ஆண்டவனும் எம்மோடு வழி நடக்கவேண்டுமென்பதே என் பிரார்த்தனை.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் என்றுமில்லாத அளவு இருள் அடைந்துள்ளது. இனஒழிப்பு என்ற அபாயம் நம்மை நாற்புறமும் சூழ்ந்து நிற்கிறது.இந்தக் கட்டத்தில் ஏதும் தவறான அடி எடுத்து வைப்போமானால், எம்மை ஒழித்துக் கட்டக் கங்கணங் கட்டிக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு நாமே உதவி புரிந்தவர்களாவோம்.
1948லேயே.
ஒரு இனமோ, தேசிய இனமோ தொடர்ந்து தன் தனித்தன்மையைப் பேணி வாழ்வதற்குச் சில அடித்தளங்கள் தேவை. அவற்றுள் முதலாவது மொழி. இரண்டா வது ஒரு தனிப் பிரதேசம். இலங்கைத் தமிழ்

0.
பேசும் மக்களின் பொதுமொழி தமிழ். "இலங்கையில் தமிழ் வாழ்வதை முறியடிப் போம்” எனப் பல சக்திகள் பயமுறுத்து கின்றன. இவற்றுள் முன்னிற்பது காலஞ் சென்ற பண்டாரநாயக்காவினால் 1956இல் இயற்றப்பட்ட 'சிங்களம் மாத்திரமே அரச மொழி என்ற சட்டம். ஆனால் இலங்கையின் இனவாரிப் போராட்டத்தின் சரித்திரத்தை நுணுக்கமாக ஆராய்பவர்கள், தமிழ் பேகம் மக்களுக்கு எதிரான தாக்குதல் 1948லேயே ஆரம்பமாகிவிட்டது என்பதைச் சுலபத்தில் உணரமுடியும். அந்த ஆண்டில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் ஆரம்ப மாயின - சிங்கள அரசாங்கங்களின்
இனவொழிப்புத் திட்டங்கள். 1947இல் முதல் பாராளுமன்றம்
1947இல் சோல்பரிஅரசமைப்புத் திட்டத்தின் கீழ்த் தெரிவு செய்யப்பட்ட முதலாம் பாராளுமன்றத்தில் - 95 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரும் 6 நியமன உறுப்பினருமாக 101 உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த 101 உறுப்பினருள், கிழக்கு, வடக்கு மாகாணங்களிலுள்ள மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினரும், மலைநாட்டுத் தோட்டத் தொழிலாளரினால் தெரிவுசெய்யப்பட்ட 8 தமிழ் உறுப்பினருமாக 20 தமிழ் உறுப்பினர் 1947ஆம் ஆண்டுப் பாராளுமன்றத்தில் இருந்தார்கள். இவர்களைவிட, தமிழ் பேசும் சமுதாயத்தைச் சேர்ந்த 6 முஸ்லிம் உறுப்பினரும் இருந்தார்கள்.அத்துடன் மலைநாட்டுத் தொழிலாளர்களின் வாக்கு களைக் கொண்டு தெரிவுபெற்ற பல சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். அன்று திரு.டி.எஸ். சேனநாயகா நிறுவிய அரசாங்கத்தைத் தமிழ் உறுப்பினர் சிலரும், முஸ்லிம் உறுப்பினர் அனைவரும் ஆதரித்தார் கள். வடக்குக் கிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவுபெற்ற தமிழ் உறுப்பினருள் 7 பேரும், மலைநாட்டுத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர் களினால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரும் (8 பேரும்) இடது சாரி உறுப்பினர்களோடு எதிர்க்கட்சியில் இருந்தார்கள்.

Page 182
- 1
இவ்வாறு அமைந்த பாராளுமன்றத்தில் - தமிழ் பேசும் மக்களை நேரடியாகத் தாக்கும் எந்த நடவடிக்கை யையும் அரசாங்கம் நிறைவேற்றுவது கஷ்டமாயிருந்தது. ஏனெனில், அவ்வாறு ஏதும் நடவடிக்கை எடுத்தால் - அரசாங்கத்தை ஆதரித்த தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களே அரசாங்கத்திற்கு எதிராகக் கொதித்தெழுந்திருப்பார்கள்.
எனவே, பாராளுமன்றத்துக்குத் தமது பிரதிநிதிகளை அனுப்பும் உரிமையை மலை நாட்டுத் தமிழரிடமிருந்து பிடுங்குவதற்கு டி.எஸ். சேனநாயகா அரசாங்கம் ஓர் உபாயத்தைக் கையாண்டது. பிரஜா உரிமையைப் பிடுங்கினார்கள்!
அன்றிருந்த சட்டப்படி, பிரிட்டிஷ் பிரஜைகள் அனைவருக்கும் வாக்குரிமை இருந்தது. எனவே பிரிட்டிஷ் பிரஜைகள் என்ற உரிமை காரணமாக மலைநாட்டுத் தமிழருக்கும் வாக்குரிமை இருந்தது. குடியுரிமை பெற்றவர்களுக்கு மாத்திரமே வாக்குரிமை வழங்கவும், அதே நேரத்தில் மலைநாட்டுத் தமிழர்கட்குக் குடியுரிமை கிடையாத வகையில் குடியுரிமைச் சட்டம் இயற்றவும் உபாயம் வகுத்தார் திருடிஎஸ். சேனநாயகா.
குடியுரிமைச் சட்டங்கள் இரண்டு பகுதிகள் கொண்டனவாய் இருந்தன. இலங்கைக் குடியுரிமைச் சட்டம்' என்ற முதற் பகுதி விதிகளின்படி, தானும் - தனது தந்தையும் இலங்கையில் பிறந்திருந்தால், அல்லது தான் இலங்கையிற் பிறக்கா விட்டால், தனது தந்தையும் - தந்தையின் தந்தையும் இலங்கையிற் பிறந்திருந்தால் ஒருவர் இலங்கைப் பிரஜையாகலாம். சாதாரணமாக இலங்கையில் ஒருவர் பிறந்திருந்தால் அவருக்குக் குடியுரிமை உண்டு. ஆனால் இந்த இரு தலைமுறைப் பிறப்பு’க் கோரிக்கை - மலைநாட்டுத் தமிழர்கட்கு எதிராகத் திட்டமிட்ட ஒரு பாணம். இச்சட்டத்தின் பிரகாரம், இவர்களுட் பெரும் பகுதியினர் இலங்கைக் குடிவாசிகளாயிருந்தும், இரு தலைமுறைப் பதிவை நிலைநாட்ட இயலவில்லை. தானோ

五]
- தனது தந்தையோ இலங்கையிற்றான் பிறந்திருந்தாலும், தனது தந்தை இலங்கையிலேதான் பிறந்தார் என்பதை ஒருவர் நிரூபிப்பது துர்லபம். ஏனெனில், தந்தை பிறந்த தலைமுறையில் - இலங்கையில் சரியான பிறப்புப் பதிவு ஆவணங்கள் கிடையா. பிறப்புப் பதிவு ஆவணங்கள் கிடைக்கலாமென்றாலும், அவற்றைத்தேடிப் பிடிப்பது மிகமிகத் துர்லபம். ஏனெனில், இத் தொழிலாளர்கள் - ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்துக்கு வேலைக்காக இடம் மாறிக் கொண்டிருந்தவர்கள்.
அன்று 8 இலட்சமாயிருந்து - இன்று 10 இலட்சத்துக்கும் மேற்பட்டிருக்கும் ஒரு முழுச் சமுதாயத்தையே குடியுரிமையற்றவர் கள் ஆக்கும் திருப்பணி நிறைவேறியதும், டிஎஸ். சேனநாயகா அரசாங்கம் இந்திய - பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் என ஒரு சட்டம் இயற்றியது. இச்சட்டத்தின் பிரகாரம், ஒரே தொடர்பாக விவாகமாகாத ஒருவர் 7 வருடமும், விவாகமானவர் 10 வருடமும் வாசகாலத் தகைமை காட்டினால், இவர்களை மீண்டும் பிரஜைகளாகப் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவுக் குடியுரிமை கோரியவர்களின் மனுக்கள், மிகப் பெருந்தொகையில் நிர்வாக வழிகள் மூலம் நிராகரிக்கப்பட்டன. இதன் விளை வாக, மனுப்பண்ணியவர்களில் வெறும் 10 சத விகிதத்தினரே குடியுரிமைபெற முடிந்தது 90சத விகிதமான மனுக்களும் நிராகரிக்கப் பட்டதற்கான காரணம் - அம்மனுப்பத்திரங் களில் தெரிவித்த தகைமை விபரங்கள் சரியற்றவை அல்லது போதாதவை என்பது அல்ல; எழுத்து வாசனை அறிவற்ற தோட்டத்தொழிலாளிகள், அவ்விபரங் களை மனுப்பத்திரங்களில் நிரப்பிய நுண்முறைகள் சரியற்றவை என்ற விதண்டா வாதமேயாகும்.
இலங்கைக் குடியுரிமைச் சட்டம், இந்திய - பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டம் ஆகிய இரு சட்டங்களையும் நிறைவேற்றி மலை நாட்டுத் தமிழர்களின் குடியுரிமையைப் பிடுங்கிய பின், அரசாங்கம் வாக்குரிமைச் சட்டத்தை மாற்றியமைத்தது! குடியுரிமை உள்ளவர்களுக்கு மாத்திரமே வாக்குரிமை என்று கையை விரித்தது!

Page 183
இந்தத் தந்திரத்தின் விளைவாக மலைநாட்டுத் தமிழர் வாக்குரிமை இழந்தார்கள்! சுதந்திரத்தின் பின் கூடிய முதற் பாராளுமன்றத்துக்கு 8 பிரதிநிதிகளை அனுப்பிய மலைநாட்டுத் தமிழ் மக்கள் - 1952இல் நிகழ்ந்த இரண்டாம் பொதுத் தேர்தலி லும், பின்னர் 1956லும், அதன் பின்னர் 1960லும் 10 இலட்சம் எண்ணிக்கை கொண்ட தமக்கு - ஒரு தமிழ்ப் பிரதி நிதியைத் தானும் தெரிந்தனுப்ப முடியவில்லை.
சிங்களவர்களுக்கு மேலதிப் பிரதிநிதித்துவம்
இந்தவிதத்தில் பாராளுமன்றத்தி லிருந்த மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யிலே, தமிழ்ப் பிரதிநிதிகளின் வீதம் வீழ்ந்தது! அதாவது சிங்களப் பிரதிநிதிகளின் வீதம் அதிகரித்தது!
தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை யைக் குறைக்கும் மறைமுகமான வழியில் சிங்களப் பிரதிநிதிகளின் வீதத்தை அதிகரிக்கச்செய்த அரசாங்கம், ஒருகொடிய உபாயத்தால் சிங்களப் பிரதிநிதிகளின் வீதத்தை நேர்முக வழியொன்றின் மூலமும் மேலும் அதிகரிக்கச் செய்தது. அதாவது ஒவ்வொரு மாகாணத்துக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பதை - வாக்காளர் எண்ணிக்கை என்ற நியாயமான அடிப்படையில் நிர்ணயிக்காது, அவ்வவ் மாகாணங்களிலுள்ள (வாக்குரிமை பிடுங்கப் பட்டவர்களும் உட்பட்ட) மக்கள் எண்ணிக் கை என்ற அடிப்படையில் நிர்ணயித்தது!
முதலாவது பராளுமன்றத்தில் இருந்த தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் எத்தஏனயைப் பிடுங்கினார்களோ - அத்தனை தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக் கையையும் சிங்களவர்கட்குக் கிடைக்க வழி அமைத்தார்கள். இவ்விதமாகப் பாராளு மன்றத்திலிருந்த முழு அங்கத்துவத்திலும், தமிழ்ப் பிரதிநிதிகளின் விகிதம் இரட்டித்த முறையில் வீழ்ச்சியடைந்தது!
தமிழ் பேசும் மக்களின் பலம் ஒடிந்தது
மத்திய மாகாணத்தில் இதற்கு ஓர் உதாரணம் பார்ப்போம். கடைசியாக நிகழ்ந்த

72
குடிசன மதிப்பீட்டின்படி, இம்மாகாணத் தில் 15,22,600 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 5,21,900 மக்கள் குடியுரிமை பிடுங்கப்பட்டவர் கள். எனவே அவர்கள் வாக்குரிமை அற்றவர்கள். வாக்குரிமை (அதாவது குடியுரிமை) உள்ளவர்களின் எண்ணிக்கை 10,00,700.
75,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி வீதம் 21 பிரதிநிதிகளும், ஒவ்வொரு தொகுதியின் பரப்பு அடிப்படையில் வழங்கப்படும் பிரதிநிதித் துவக் கனதி காரணமாக மேலும் 2 பிரதிநிதி களாக மொத்தம் 23 பிரதிநிதிகள் இருந்தார்கள். ஆனால் 75,000 மக்கள் என்பதற்குப் பதிலாக 75,000 வாக்காளர் களுக்கே ஒரு பிரதிநிதி என்று விதித்திருந்தால், மத்திய மாகாணத்துக்கு 10,00,70 + 75,000=13 பிரதிநிதிகளும், தொகுதிப்பரப்பு அடிப்படையில் 2 பிரதிநிதி களுமாக மொத்தம் 15 பிரதிநிதிகள் கிடைத் திருப்பார்கள்.
ஆனால் 5,21,900 (வாக்குரிமை பிடுங்கப் பட்ட) தமிழ் மக்களையும் எண்ணிக்கையிற் சேர்த்துக் கொண்ட மோசடியின் விளைவாக, மத்திய மாகாணத்துக்கு 8 மேலதிகப் பிரதிநிதிகள் கிடைத்தார்கள்!
இதே போல் ஊவா மாகாணமும், சப்பிரகமுவா மாகாணமும் ஒவ்வொன்றும் இரண்டு பிரதிநிதிகள் விதம் 4மேலதிகச் சிங்களப் பிரதிநிதிகளைப் பெற்றன.
மத்திய, ஊவா, சப்பிரகமுவா மாகாணங்களிலுள்ள இலட்சக்கணக்கான மலைநாட்டுத் தமிழர்களின் வாக்குரிமை யைப் பிடுங்கிய போதிலும், சிங்களப் பிரதிநிதிகளின் தொகை நிர்ணயிப்பதில் - தமிழ் பேசும் இனத்துக்குப் படுபாதகமாக - மலைநாட்டுத் தமிழர்களின் எண்ணிக் கையைக் கணக்கிற் சேர்த்துக் கொண்டதால், 12 சிங்களப் பிரதிநிதிகள் மேலதிகமாகப் பாராளுமன்றத்துக்கு வரமுடிந்தது!
இம் மலைநாட்டு மாகாணங் களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் வாக்குரிமை அபகரிக்கப்படாதிருந்தால் - அவர்கள் தம் பிரதிநிதிகள் 12 பேரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருப்பார்கள். அதுதானில்லாது, அவர்களுக்கு வாக்குரிமை

Page 184
- யுமில்லாது பிரதிநிதிகளையும் தெரிந்தெடுக்க முடியாவிட்டாலுங்கூட இந்த 12 மேலதிகத் தொகுதிகளையும் - சிங்களப் பிரதிநிதி களையே தெரிவு செய்யும் இம் மாகாணங்களுக்கு ஒதுக்கியது பெரும் அநியாயம்!
குடியுரிமை, வாக்குரிமை, சிங்கள தமிழ்ப் பிரதிநிதிகளிடையே பாராளுமன்றத் திலுள்ள விகிதாசார மாற்றங்கள் ஆகியவைபற்றி நான் இங்கு வற்புறுத்திக் கூறியதற்குக் காரணம் ஒன்றுண்டு. மொழித் தகராறு, இந்நாட்டில் ஏற்பட்ட இனவாரித் தொல்லைகள் ஆகிய எல்லாவற்றிற்கும் இக் குடியுரிமைச் சட்டங்களே மூல காரணமாய் அமைந்தன. 1948இல் மலைநாட்டுத் தமிழ் மக்களின் வாக்குரிமை அபகரிக்கப்படா திருந்தால், 1956இல் திரு. பண்டாரநாயக்கா தமது ‘ஆட்சி மொழிச் சட்டத்தை ஆதரிக்கப் பாராளுமன்றத்தில் தேவையான சிங்கள ஆதரவாளர்களைத் திரட்டியிருக்க முடியாது.
மேலே விபரித்த வகையில், வகுப்புவாதப் பெரும்பான்மை ஆதரவால் துணிவு பெற்ற திரு. பண்டாரநாயக்கா, 30% தமிழ் பேசும் மக்களைக் கொண்ட இலங்கைத் திருநாட்டில் - சிங்களத்தை மாத்திரமே ஆட்சி மொழியாக்கும் தீவிர வகுப்புவாதச் சட்டத்தை இயற்றினார்! வருடம் 1956. டி. எஸ். சேனநாயக்காவின் திட்டம் தொடருகிறது
சிங்களம் மாத்திரமே என்ற கொள்கை
தமிழின் குரல்வளையை நசித்து
அழித்துவிடப் போகின்றது! இக்கொள்கை யின் கோரப்பிடிகளின் அழுத்தத்தை நாம் நன்றாக உணரத் தொடங்கியுள்ளோம்.
ஒரு வருட இறுதி எச்சரிக்கை முடிவில், எமது கட்சி 1957ஆம் ஆண்டு ஒரு சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பிக்குமெனத் தீர்மானித்த போது, அந்நாட் பிரதமர் திரு. பண்டாரநாயக்கா எம்மைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து, 1957 ஜூலை 26இல் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். மொழியைப் பற்றிய அவ்வொப்பந்தம் பின்வருமாறு கூறிற்று:

'தமிழை ஒரு தேசிய சிறுபான்மை யினரது மொழியென்று ஒத்துக் கொள்ளும் வகையில், உத்தேச சட்டம் அமைய வேண்டுமெனப் பேச்சு வார்த்தையின்போது ஒப்புக் கொள்ளப்பட்டது.
அத்தோடு பிரதமரின் நாலு அம்சத் திட்டத்தின் கீழ், ஆட்சிமொழி அந்தஸ்தைப் பாதிக்காத வகையில், தமிழை - வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிர்வாகமொழி யாகக் கொள்ளும் ஏற்பாடுகளும் இருக்கவேண்டும். இம் மாகாணங்களில் இருக்கக்கூடிய தமிழ் தெரியாத சிறுபான்மையினருக்குத் தகுந்த ஏற்பாடுகளையும் செய்துகொள்ளலாம்.
ஒப்பந்தம் கிழிந்தது
1958 மார்ச் மாதம், பெளத்த பிக்கு கால் தம் வீட்டில் சுற்றி வளைக்கப் பட்டபிரதமர் பண்டாரநாயக்கா இவ் வொப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார்! இதையடுத்து 1958 மே மாத முடிவில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே கலவரங்கள் ஏற்பட்டன. சிங்களப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் இக்கலகத்தில் பெருமளவில் பலியானார்கள்! பிரதமர் பண்டாரநாயக்கா நாட்டில் அந்தரநிலை இருப்பதாகப் பிரகடனம் செய்தார். எமது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களையும், கட்சிப் பிரமுகர்களையும் தடுப்புக் காவலில் வைத்தார்! இத்தகைய கடின நடவடிக்கை எம்மீது எடுப்பதற்கு - நாம் யாரையும் ஆத்திர மூட்டவுமில்லை; இந்நடவடிக்கைக்கு எதுவித நியாயமிருக்கவு மில்லை. இருந்தும், இந்த நடவடிக்கையை யிட்டு நாம் அன்றும் ஓலமிடவில்லை; இன்று தானும் ஓலமிடவில்லை. எம்மைத் தடுப்புக் காவலில் வைத்த அதே வருடத்தில், பிரதமர் பண்டாரநாயக்கா - மனச் சாட்சியின் அமைதியின்மை காரணமாய் இருந்திருக்கலாம் - 'தமிழ் மொழி ? விசேட சரத்துக்கள்’ மசோதாவை ஆக்கினார். இச்சட்டத்தின்கீழ் இயற்றப்படும் பிரமாணங்கள் மூலமாகக் குறிப்பிட்ட நோக்கங்களுக்கு மாத்திரம் - வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிர்வாகத்தைத் தமிழில் நடத்தலாம் என வகுத்துக் கொண்டார். ஆனால் இன்றுவரை,

Page 185
- இச் சட்டத்தின் கீழ் ஒருபிரமாணம்தானும் ஆக்கப்படவில்லை! திரு. பண்டாரநாயக்கா தமது மனச்சாட்சியின் உந்தலின்படி நடக்கத் துணிவற்றிருந்தாலும்; சிறுபான்மையினரின் உரிமைகளைப்பற்றித் தமது அறிவில் மிக உணர்ந்திருந்தார். தமிழ் பேசும் மக்களின் சம்மதத்துடனேயே அவர்களை ஆளவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார். இந்த அரசியல் பின்னணியில் 1960 மார்ச் மாதம் பொதுத் தேர்தல் வந்தது.
1960 10ाां
எந்த ஒரு கட்சிக்கும் தானாகவே அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழ்பேசும் மாகாணங்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்களை ஒரு முகமாகத் தேர்ந்தனுப்பியிருந்தன. இவர்களோடு, எமது கட்சிமீது அனுதாபங் கொண்டுள்ளவர்களும், அநேகமாகப் பாராளுமன்றத்தில் எம்மோடு சேர்ந்து வாக்களிப்பவர்களுமான வேறு நால்வரும் இருந்தார்கள். எந்தக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது என்பதைத் தீர்மானிப்பது - எமது பத்தொன்பது வாக்குகளையுமே பொறுத்திருந்தது. பூரண பெரும்பான்மை யற்றிருந்தாலும் - ஐக்கிய தேசியக் கட்சி ஆகக் கூடிய உறுப்பினர்களைக் கொண்டி ருந்ததால் அரசாங்கம் அமைக்கும்படி - மகாதேசாதிபதி அக்கட்சியின் தலைவரான திரு. டட்லி சேனநாயக்காவைக் கேட்டுக் கொண்டார். எமது கட்சியின் ஆதரவைச் சம்பாதித்திருக்க முடியுமானால், திருவாளர் டட்லி சேனநாயக்கா தாம் அமைத்த அரசாங்கத்தை நீண்டகாலம் கொண்டு நடத்தியிருக்க முடியும்.
எங்களோடு பேச்சுவார்த்தை நிகழ்த்தினார்: "எந்த மக்கள் எம்மைத் தமது பிரதிநிதிகளாய் நம்பித் தெரிந்தனுப்பினார் களோ - அந்த மக்களின் அரசியலுரிமை களுக்கு அடுத்தடுத்து வந்த சிங்கள அரசாங்கங்கள் தீங்கிழைத்து வந்துள்ளன. அத்தீங்குகள் அகற்றப்படுவதைப் பொறுத்தே -

4.
நாம் எந்த அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்க முடியும்" என்று கூறி, எமதுநாலு கோரிக்கை கள் கொண்ட ஒரு ஆவணத்தை அவரிடம் (டட்லி சேன நாயக்காவிடம்) சமர்ப்பித் தோம். ஆனால், திரு. டட்லி சேனநாயக் காவின் அரசாங்கத்தை நாம் ஆதரிக்கக்கூடிய வகையில் எவ்வித உடன்பாடும் ஏற்பட வில்லை. 1947ஆம் 48ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் காலஞ்சென்ற திரு.டி.எஸ்.சேனநாயக்கா சாதுரியமாகக் கண்ட வெற்றிபோல, 1960இலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய ஆதரவாளர்கள் சிலர், தமிழ்ப் பிரதிநிதிகளை வெற்றி கொள்ள முயற்சித்தார்கள். திருவாளர் டட்லி சேனநாயக்காவை நாம் ஆதரிக்க இசைந் திருந்தால், எம்மில் சிலருக்குப் பதவிகள் கிட்டலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் நம்மவர்கள் அனைவரும் பட்டம் - பதவி வகிப்பதைத் துச்சமாய் மதித்து, நசுக்கப்பட்ட எமது மக்களின் உரிமைகளை மீட்பது ஒன்றில் மாத்திரமே மும்முரமாக, முழு மூச்சுடன் நின்றார்கள் என்பதுபற்றி நாம் அனைவருமே பெருமைப்பட முடியும்.
திரு. டட்லி சேனநாயக்காவுக்கும் எமக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்து கொண்டிருந்தபொழுது, பூறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பிலும், தற்சமயம் அமைச்சர்களாய் இருக்கும் நாலு உறுப்பினர்களான திரு.சி.பி.டி. சில்வா, திரு. மைத்திரிபால சேனநாயக்கா, திரு. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா, திரு. ஏ. பி. ஜயசூரியா ஆகியோர் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் விளைவாக, இரு சாராருக்குமிடையில் ஒருவிதமான கருத்தொருமைப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, மொழி விஷயத்தில் நாம் எழுத்தில் கொடுத்த கோரிக்கைகளின் தாற்பரியத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தது. எமது கோரிக்கை பின்வருமாறு அமைந்தது:
அரசியற் சட்டப்படியும், நிர்வாகத் துறையிலும் தமிழ் மொழி - இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் தேசிய மொழியென ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

Page 186
1
1. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
2. அதேநேரம், இப்பகுதிகளில் வாழும் தமிழ் பேசாதோருக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
இலங்கையெங்கும் வதியும் தமிழ் பேசும் மக்கள் - தமது ஆரம்பக் கல்வி தொட்டுப் பல்கலைக்கழகக் கல்விவரை - தமிழிலேயே கற்கும் உரிமை, தமிழில் நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலம் அரசாங்க ஊழியத்துள் புகும் உரிமை ஆகியன சட்டப்படி அங்கீகரிக்கப்பட வேண்டும்.
1. இலங்கையின் சகல பகுதிகளிலும் தமிழர் - அரசாங்கத்துடன் தமது அலுவல்கள், தொடர்புகள் ஆகியவற்றைத் தமிழிலேயே வைத்துக் கொள்ள, சட்டப்படி அதிகாரம் வழங்கப்படவேண்டும்.
2. சட்டங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள், அரசாங்கப் பிரசுரங்கள், அறிவித்தல்கள், பத்திரங்கள் எல்லாம் தமிழிலும் இருக்கவேண்டும்.
இதைவிட, 1957இல் எம்மோடு பண்டாரநாயக்கா ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தில் - அவர் கருத்திற் கொண்டிருந்த பிரதேச சபைகளைப் போன்றதான மாவட்ட சபைகளை நிறுவுவதாகவும் - சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய இந் நால்வரும் மேலும் ஒப்புக் கொண்டனர்.
பூரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஏற்பட்ட கருத்தொருமைப்பாட்டின் விளை வாகவும், திரு. டட்லி சேனநாயக்காவுடன் எவ்வித ஒப்பந்தமும் ஏற்பட முடியாமல் போனது காரணமாகவும் திரு. சேனநாயக்கா வின் அரசாங்கத்துக்கு எதிராக - சிம்மாசனப் பிரசங்க விவாதத்தின்போது நாம் சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து வாக்களிதோம். அடுத்தநாள், பிரதமர் திரு. டட்லி சேனநாயக்காவின் ஆலோசனைப்படி,

75
மகாதேசாபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.1960 ஜுலை மாதம் மீண்டும் ஒரு தேர்தல் நடந்தது. அப் பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு இரண்டு விஷயங்கள் காரணமாய் அமைந்தன. அவற்றுள் ஒன்று ழநீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்குமிடையே ஏற்பட்ட தேர்தல் ஒப்பந்தம். இரண்டாவது - தமிழரசுக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி கருத்தொற்றுமை கொண்டுள்ளதெனக் கூறி, ஐக்கிய தேசியக்கட்சி கார்சாரமாக வகுப்புவாதம் கக்கித் திரிந்தமை. வெற்றி இந்தப் பக்கமோ - அந்தப் பக்கமோ என்பதை நிர்ணயிக்கக் கூடியளவு தொகையில் தமிழ் வாக்காளர்கள் மலைநாட்டுத் தொகுதியில் இருக்கும்போது - ஐக்கிய தேசியக் கட்சி இத்தகைய பிரசாரத்தில் ஈடுபட்டது பெரும் சாதுரியத் தவறாகி விட்டது.
1960 -ஜூலை 20
மேலும் சுதந்திரக் கட்சியோடு எமக்கு ஏற்பட்ட கருத்தொற்றுமையை முன்னிட்டு - தமிழ் வாக்காளர் சுதந்திரக் கட்சி அபேட்சகர்களுக்கே தமது வாக்குகளை அளித்தார்கள், இதன் விளைவாக, 1960 ஜூலைத் தேர்தலில் 75 தொகுதிகளில் சுதந்திரக்கட்சி தீர்க்கமான வெற்றி பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி 30 ஸ்தானங்களையே பெற முடிந்தது.
எதிர்பாராத வகையில் இந்தப் பிரமிப்பான வெற்றியைக் கண்டதும், பூரிலங்கா சுதந்திரக் கட்சித்தலைவர்கள் தமது வாக்குறுதிகளை முற்றாக மறந்தார்கள்! இதையொட்டி எமக்கு அவர்கள் செலுத்த வேண்டிய கடமையை நினைவூட்டி, நான் மீண்டும் மீண்டும் எழுதிய பல கடிதங் களுக்குக் குறைந்தபட்சமாக ஒருபதில் தானும் கிடைக்கவில்லை! சுதந்திரக் கட்சி யினர் தமது இந்த நடவடிக்கையின் மூலம், எம்மோடு ஏற்பட்ட கருத்தொற்றுமையை - வெட்கித் தலைகுனியும் வகையில் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். 1960 மார்ச் மாதம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் வாக்களிக்கும்படி இறுதி

Page 187
است நேரத்தில் எம்மீது நிர்ப்பந்தம் பிரயோகிக்கப் பட்ட போதிலும், நாம் எமது வாக்குறுதி யைக் காப்பாற்றத் தவறக் கூடாது என்பதற் காக - ஏற்கெனவே ஒத்துக்கொண்டபடி சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து வாக்களிக்கத் தவறவில்லை. ஆனால் ஜூலை 1960இல், ழநீலங்கா சுதந்திரக் கட்சியோ எதிர்பாராத வகையில் அதிகாரத்துக்கு வந்ததும் - அதுவும் எமது ஒத்துழைப்பால் அதிகாரத் துக்கு வந்ததும் - எமக்களித்த வாக்குறுதி யையும், அதன் மூலம் தனது நாணயத்தையும் காப்பாற்றத் தவறிவிட்டது. சுதந்திரக் கட்சி அரசாங்கம் இவ்வாறு எம்மை நடத்தியதும், அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்களா னோம்.
சிங்கள ஆட்சி சிதைந்தது
மூன்று வழிகள் எம்முன்னே தோன்றின. முதலாவது - என்றென்றுமே எமது மொழியுரிமை, 666T u உரிமைகள் அனைத்தையும் கைவிட்டுச் சரணாகதி யடைவது. இதை நாம் நினைத்துப் பார்ப்பதற்கும் இல்லை. நாம் சரணாகதி யடைந்திருந்தால், தமிழ் பேகம் மக்களுக்குத் தீராத "வடு இழைத்தவர்கள் ஆவோம். இரண்டாவது - நாம் பலாத்கார வழிகளில் எமது போராட்டத்தைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இவ்வழி, முதலிலே - தார்மீக மற்றது; எமது பண்புக்குப் புறம்பானது. இரண்டாவதாக - இது நடைமுறைக்குச் சாத்தியமானதுமல்ல. எனவே எம்முன்னே இருந்த மூன்றாவது வழி - சாத்விக முறையிற் சத்தியாக்கிரகம் செய்வதேயாகும்.
இந்தக் காந்தீய வழியைப் பின்பற்றிப் போராட்டத்தைத் தொடருவதென நாம் தீர்மானித்தோம். போராட்டத் திட்டத்தின் படி, ஒவ்வொரு தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஒவ்வொரு நாளைக்கும் - அவ்வவ் தொகுதியிலிருந்து திரட்டப்பட்ட தொண்டர்கள் கச்சேரி வாயில்களின் முன்உட்கார்ந்திருந்து, அரசாங்க உத்தியோகத்தர் எவரும் உள்ளே போக முடியாதபடி தடுப்பதெனத்

தீர்மானித்தோம். 1961 பெப்ரவரி 20ஆந் திகதி எனது தொகுதித் தொண்டர்களுடன் சென்று நான் இயக்கத்தை ஆரம்பித்தேன். அன்று, ஒரு வாயிலிலிருந்து பலாத்காரமாகத் தொண்டர்களை அப்புறப்படுத்த, பொலீசார் வெறுமனேஉட்கார்ந்திருந்த சத்தியாக் கிரகிகள்மீது, வெட்கக் கேடான முறையில் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தார்கள். இது, எமது இயக்கத்துக்குப் பலத்த பிரசித்தம் அளிப்பதாய் இருந்தது; எமது தொண்டர்களின் திட வைராக்கியத்தை மேலும் அதிகரிப்பதாய் முடிந்தது. இதைக் கண்ட அரசாங்கம், சத்தியாக்கிரக இயக்கத்தில் தலையிடாதிருப்பதன் மூலம் இயக்கத்தைப் புகடிசுக்கச் செய்யலாமெனக் கனவுகண்டது. ஆனால் தமிழ் பேசும் மக்கள், இயக்கத்தைத் தளர விடுவதற்குப் பதிலாக - மேலும் மேலும் தீவிரமாக்கினார்கள்:
பெப்ரவரி 20ஆந் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த இயக்கம் - மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்குப் பரவிற்று. சாதி, சமய வேறுபாடு மாத்திரமல்ல - அரசியல் வேறுபாடுகளைக்கூட மறந்து, தமிழ் பேகம் மக்கள் - இயக்கத்தைப் பிரமிக்கத்தக்க வகையில் - வெகுஜனக் கிளர்ச்சியாக மாற்றிவிட்டார்கள்! 1961 ஏப்ரல் மாதம் 17ஆந் திகதி நள்ளிரவில், அரசாங்கம் அந்தரநிலைப் பிரகடனம் செய்து நிராயுதபாணிகளான சத்தியாக்கிரகிகளுக்கு எதிராக இராணுவத் தை ஏவி விடும்வரை - 56 நீண்ட நாட்களாகத் தீவிரமாகத் தொடர்ந்தது இயக்கம்!
சத்தியாக்கிரகிகள்மீது இராணுவத்தின் பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலி டப்பட்டனர். இருந்தும் சத்தியாக்கிரக இயக்கம் ஒரு முக்கிய உண்மையைத் திட்டவட்டமாகத் தெளிவாக்கிவிட்டது. தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தங்கள் மொழியுரிமையைப் பாதுகாப்பதில் ஏகோபித்து எழுந்து விட்டனர் என்பதையும், அரசாங்கத் தின் மொழிக் கொள்கையை அதே வண்ணம் எதிர்க்கவும் திடங்கொண்டு விட்டனர்

Page 188
என்பதையும் அந்த மகத்தான இயக்கம் நிரு பித்தது. அத்தோடு, அரசாங்கம் தமிழ் பேசும் மக்களை அவர்களின் சம்மதமின்றியே ஆளுகின்றது என்பதையும் மிகத் தெளி வாக்கிவிட்டது சத்தியாக்கிரக இயக்கம்.
"வட, கீழ் மாகாணங்களில் சிங்கள அரசாங்கத்தின் அதிகாரம் சிதறுண்டு விட்டது" எனப் பகிரங்கமாகவே தெரிவித்தார் - பிரதமர் திருமதி சிறிமாவோ மூதவையில்
சிங்களமே போதனாமெர்ழி
இப்பொழுது அரசாங்கம் தமிழ்பேசும் மக்களின் தொண்டைக்குள் சிங்களத்தை இடித்துத் திணிக்க முயல்கிறது. மலை நாட்டுத் தமிழர்களைப் பொறுத்த வரையில் தனது எண்ணத்தை அது பகிரங்கமாகக் கூறிவிட்டது. அதாவது மலைநாட்டுக் குழந்தைகளின் கல்வி - அவர்களது தாய் மொழி மூலம் போதிக்கப்படுவதற்கில்லை. இத்தமிழ்க் குழந்தைகளின் போதனாமொழி சிங்களமே என்பதை நெஞ்சழுத்தத்துடன் அறிவித்திருக்கிறது! இந்தக் கொள்கையை வகுத்தவர்கள் - தமிழும் இந்நாட்டுக்கு அன்னிய மொழியல்ல என்பதை மறந்து விட்டார்கள். தமிழ் இந்நாட்டுத் தேசிய சிறுபான்மையினரின் மொழி என்பதை - திரு. பண்டாரநாயக்கா நம்மோடு செய்துகொண்ட ஒப்பந்தத்திலேயே ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
மலைநாட்டுத் தமிழ்க் குழந்தைகளின் நிலைமை இவ்வாறிருக்க, வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்க் குழந்தை களுக்குச் சிங்களம் போதிப்பதற்கு அரசாங்கம் 2,000 சிங்கள ஆசிரியர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சிங்களம் படிக்க விரும்பும் குழந்தைகளின் ஆவலை முன்னிட்டே இவ்வாறு செய்கின்றனராம்! தற்பொழுது அரசாங்கத்தின் உத்தேசம் இது. அடுத்த வருடம் சிங்களம் எல்லா மாணவர் களுக்கும் கட்டாய பாடமாக்கப்படும்! அதையடுத்து ஐந்து வருட காலத்துக்குள் எல்லாத் தமிழ்க் குழந்தைகளுக்கும் சிங்களமே கட்டாய போதனாமொழி! அந்த நிலைபரத்தில் இலங்கை அனைத்தும் ஒரே சிங்களமயமாகி விடும்! அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகார

ZH
நடவடிக்கையைத் தமிழ் பேசும் மக்கள் முற்றாக எதிர்த்தே ஆகவேண்டும்; முளையிலேயே கிள்ளி எறிந்து விடவும் வேண்டும்!
இனமும் - நாடும்:
ஒரு இனம் நீடித்து வாழ்வதற்குத் தேவையான அடியத்திவாரங்களில் - அவ்வினத்திற்கெனச் சொந்தமான ஒருபிரதேசமும் ஒன்றாகும். இலங்கையிலே இதுவரை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நாமும் வாழ்ந்து, நமது மொழியையும், நம் முன்னோரளித்த பாரம்பரியத்தையும் வளர்ந்து வந்தோம். இவ்வளர்ச்சியை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் - அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு, அரசாங்கப் பணத்தைத் செலவழித்துப் பெருமளவில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களைக் கொண்டுபோய்க் குடியேற்றினார் கள். இக் குடியேற்றத்தின் விளைவாக மாத்திரமே - இன்று கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியான அம்பாறைத் தொகுதி - ஒரு சிங்களப் பிரதிநிதியைத் தெரிந்தெடுக்க முடிந்தது.
குடியுரிமைச் சட்டங்கள் இயற்றப் பட்டபோது, நாம் அவற்றைப் பலமாக எதிர்த்தோம். ஆனால் முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த எதிர்ப்பில் பங்குபற்றத் தவறி விட்டார்கள்.இச்சட்டத்தின் விளைவாகச் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றுமொரு சட்டத்தின் மூலம், முஸ்லிம்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். இலங்கைப் பிரஜையல்லாத ஒருவர் காணி வாங்கும் பொழுது, அந்தக் காணியின் பெறுமதியளவு தொகையை - தண்டனையாக அவர் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும்! அல்லாவிடில் காணி உறுதியைப் பதிவு செய்யமுடியாது. இதன் விளைவாக - இலங்கை முஸ்லிம்களாயிருக்கும் எத்தனையோபேர், காணி வாங்க முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்டே சட்டத்தின் பிரகாரம், முஸ்லிம்கள் வாங்கிய காணிகளின் உறுதிகள் நூற்றுக்கணக்கிற் பதிவு செய்யப்படாது - நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள காணிப்பதிவுக்

Page 189
கந்தோர்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இப்பொழுது இப் பிரச்சினைபற்றிச் சிந்திக்கத் தொடங்கி யுள்ளார்கள். முஸ்லிம் பிரதிநிதிகள் இப்பொழுதுதான் பாராளுமன்றத்தில் குரல் கிளப்பவும் ஆரம்பித்துள்ளார்கள். குடியுரிமைச் சட்டங்களும், அரசாங்கப் பணவுதவியுடன் நிகழும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் இன்று கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களுக்கு நேரடியான ஆபத்தைத் தோற்றுவித்துள்ளன. ஒரேதொடர்பான பிரதேசத்தில் - தம்மக்கள் மத்தியிலே பெருந்தொகையாக வாழ்ந்து, அந்த முஸ்லிம் சூழலிலே தமது மதத்தையும் மொழியையும் வளர்த்து, பெருமையுடன் பெரும்பான்மையினராகத் தலைநிமிர்ந்து வாழும் முஸ்லிம் மக்கள்- இன்று தமது சொந்தப் பிரதேசத்திலேயே சிறுபான்மை யினராகி வருகிறார்கள்!
இந்தப் பயங்கர நிலையைத் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். இந்த ஆபத்துக்கு எதிராகத் திடங்கொண்ட எதிர்ப்புக் காட்டுவதில் - முஸ்லிம் சகோதரர்கள் எம்மோடு சேர்ந்து போராட வேண்டும். தவறினால், எமது பிரதேசத்திலேயே சிறுபான்மையினராகி, அனாதைகளாகி விடுவோம்.
இறுதி மூச்சு இதுவாக இருக்கட்டும்!
இதுவரை, எமக்குப் பாதகமான சூழ்நிலைகளைப்பற்றிக் குறிப்பிட்டேன். ஆனால் எமக்குச் சாதகமான அம்சங்களும் இல்லாமலில்லை. சூழ்ந்துவரும் ஆபத்தைத் தமிழ் பேசும் மக்கள் நன்றாக உணர்ந் துள்ளார்கள். தமது இனம் நிர்மூலமாக்கப் படுவதை எதிர்க்கும் போராட்டத்தில்
1Aa.
வாய்மையே །།

78
வெற்றிபெற வேண்டுமானால், ஒருமுகப் பட்ட வழியே நடக்கவேண்டுமென்று உணர்ந்துள்ளார்கள்; இலங்கைத் தமிழரசுக் கட்சியைச்சேர்ந்த ஒரே நோக்கங்கொண்ட உறுப்பினர்களைப் பாராளுமன்றத்துக்குத் தெரிந்தனுப்பியுள்ளார்கள்.
இந்த இருள் சூழ்ந்த கட்டத்திலே, எமக்கு எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதல்களை நாம் எதிர்த்து நிற்பதற்கு முதல் முதல் எமக்குத் தேவை - தமிழ் பேசும் மக்கள் ஒன்று திரண்டு நிற்பதேயாகும். இரண்டாவதாக, இனத்தைக் காப்பாற்றும் இலட்சியத்தை விசுவாசமாகவும், கெளரவமாகவும் காப்பாற்றக்கூடிய ஒரு கட்சியில் நாம் எல்லோரும் ஒன்று சேரவேண்டும். இன்றைய அரசியலில், தமிழ் பேசும் மக்களின் வாழ்விற்காகப் போராடும் ஒரேயொரு கட்சி -இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே.
மனிதர்கள் என்ற வகையில் நாம் எல்லோரும் தவறிழைப்பவர்களே! எனவே இலட்சியம் தெளிவாக இருந்தால், அதைநோக்கி முன்னேறுவதில் நாம் பலவிதபாதைகளைப் பின்பற்றலாம். ஆனால், நாம் என்றும் இலட்சிய விசுவாசத்துடன் பணியாற்றத் தவறமாட்டோம்.
ஒரு கட்சியென்ற கட்டுக்கோப்பில் மிகத் தாழ்மையுடன், பெருமை நிறைந்த ஒரு இனத்திற்குச் சேவை செய்ய-நாம் எங்களை உங்கள் முன் மீண்டும் அர்ப்பணிக்கிறோம். என்றுமே எமது இறுதி மூச்சு இதுவாக இருக்கட்டும்!
வாழ்க இலங்கைத் தமிழ் பேசும் இம்ை
வெல்லும்
三

Page 190
இரும்பு வைத்திய கலாநிதி இ.
L. T. 32 ... ,
24一6一1966
 

நவது தலைவர்
மு. வி. நாகநாதன்,
அவர்கள்
ー 7ー4ー1969

Page 191


Page 192
இலங்கை முன் தேசிய பொருளா தமிழுரிமைக்குப் போர
நாட்டுக்காகவும் பா
டாக்டர் இ.மு.வி. நாக (10-ஆவது தேசிய மாநாடு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இந்தப் பத்தாவது தேசிய மகாநாட்டிற் றிரண்டு நிற்கும் எம் கட்சிப் போராளர்களுக்கும்! ஏனைய தமிழரசுக் கட்சி உறுப்பினர்க்கும் எம்மை ஆதரித்து என்றும் எம்முடன் அணிதிரண்டு நிற்கும் எமது நலன் விரும்பிகளுக்கும்!
எமது அன்பழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் கெளரவம் மிக்க விருந்தினர்க்கும்!
எமது கட்சியின் சார்பில் நான் முதற்கண் எனது நெஞ்சார்ந்த நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ந்தப் பெரிய மாநாட்டிற்குத் தலைமை வகிக்க என்னை ஒருமனதாகத் தெரிவு செய்ததன்மூலம், கட்சி எனக்களித்த கெளரவத்தை நான் நன்றாக உணருகிறேன். ஆனால் எமது சரித்திரத்தில் மிகவும் மலைப்பும் மனத் துடிப்புங் கொண்ட இக் கட்டத்தில், எமது தேசிய நிறுவனத்தை வழிகாட்டி நடத்தும் பெரும் பொறுப்பு என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கிறதென்பதை அதனிலும் மேலும் நான் உணருகிறேன்.
நம்பிக்கையைக் காப்பாற்றி - இலட்சியத்தைப் பேணினோம்
பதினேழு நீள்வருடங்களாக - இலங்கைக்குச் சுதந்திரங் கிடைத்த நாட்டொடக்கம் - எம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவரும் எமது தனாதீனத்தையும் அடிப்படை உரிமைகளையும் மீண்டும்

SOIGTIGT S96IFJL60of தார நிர்மாணமே
ாடும் அதேவேளையில் டுபடுவோம் வாரீர்!
நாதன் பா.உ. பேருரை
- 24-6-1966-கல்முனை)
பெறுவதற்கும், எமது தேசியத்தின் மதிப்பைப் பேணிக் கொள்வதற்கும் நாம் எமதனைத்தையும் அர்ப்பணித்து ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டோம். இந்த நீடித்த போராட்டத்தில் உடலூறு பட்டவர்களும் பொருளுறு பட்டவர்களும் மிகப் பலர். எமது தோழர்களுட் சிலர். தமது இலட்சியப்பற்றின் காணிக்கையாகத் தமது இன்னுயிரையும் அர்ப்பணித்தனர்! திருவாளர் வன்னியசிங்கத்துடன் தொடர் பான ஒரு சம்பவம் எனக்கு இக்கட்டத்தில் நினைவு வருகிறது. அவர் பிரிவுக்கு ஒரு மாதத்திற்கு முன் உடல்நிலையைப் பரிசோதித்த பின், அவரைக் குறைந்தது நாலு மாதங்கட்காவது நிறைவான ஒய்வு பெற்றுக் கொள்ளும்படி எச்சரித்தேன். கண்களில் நீர் மல்க அவர் என் கரம் பிடித்துக் கூறிய அந்தப் பதில் - "எவ்வித ஒய்வையும் நான் பெறுவதெப்படி? நீங்கள்தானும் ஓய்ந்திருப் பதுதான் எப்படி? செய்ய வேண்டியது மலைபோன்றிருக்கின்றது; செய்து முடித்ததோ சொல்லக்கூடியதாயில்லை. எம்பணியிற்றம்மை அர்ப்பணித்தோர் தொகையும் மிக அற்பம். இல்லை வைத்தியரே! பெருந்தொகையில் எமது இளைஞர்களும் இளம் பெண்களும் முழு இதயத்தோடு எமது இயக்கத்திற் சேரும் வரை, அல்லது இறைவன் தன் கருணையில் எமக்கு நிரந்தர ஓய்வு அளிக்கும்வரை நம்முள் எவரும் ஒய முடியாது; ஓய்வுபெறவும் மாட்டோம்."

Page 193
திரு. வன்னியசிங்கத்தைத் தொடர்ந்து திரு. ஏகாம்பரம், திரு. இராஜவரோதயம், திரு. கந்தையா ஆகியோர் இன்று நிரந்தர ஒய்வு பெற்றுவிட்டனர்.
எம்மைத் துன்புறுத்தியவர்களின் வெறியாட்டம் உச்சக் கட்டத்தை அடைந்த போதும், எமது தேசியப் போராட்டத்தின் போதும் நாம் எமது பரம அரசியல் எதிரிகள்மீது மனக்கசப்போ, பகைமையோ காட்டியதில்லையென்பதையும்; அதற்கு எமது பண்புயர்ந்த தலைமையே காரணம் என்பதையும் நான் இங்கு தவறற்ற பெருமையுடன் பொறித்துவைக்க விரும்பு கிறேன். இதற்கு மாறாக, எமது பெரும் கொள்கைகளிலிருந்து மயிரிழை தானும் பிசகாது நடந்துகொண்டும்; அதே சமயம் கட்சி அடிப்படையிலும் மக்கள் அடிப்படையிலும் - நாம் எம்மோடு உடனுறையும் சிங்களச் சகோதரர்களுடன் நட்புரிமையும், உடன்பாடும் தேடி என்றும் அயராது உழைத்தும் வந்துள்ளோம்.
இவ்வாறு எமது நெஞ்சுறுதியாலும், உயர்வுள்ளத்தாலும் நாம் காலஞ்சென்ற பிரதமர் திரு. பண்டாரநாயக்காவுடனும், அவரது அரசாங்கத்துடனும்1957லும்; பின்னர் திருமதி. சிறிமாவோ பண்டார நாயக்காவுடனும், அவரது கட்சியுடனும் ஏப்பிரல் 1960லும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முடிந்தது. ஆனால் இவ்விரு சந்தர்ப்பங்களிலும் எமக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதென்பது இப்பொழுது சரித்திரம். இத் துரோகத்தின் விளைவாக நாம் அனுபவித்த சோதனைக்கும் வேதனைக்கும் அளவில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை நாம் கடைசிவரை காப்பாற்றி, இலட்சியத் தை உறுதியுடன் பேணி நின்றோம்.
நீதிநிறைந்த - நிலையான சமாதானமே எமது குறிக்கோள்!
இன்று நிலைபரம் வேறு. நீதியிலும் நேர்மையிலும் உள்ளார்ந்த பற்றுள்ள திரு. டட்லி சேனநாயகாவின் தென்பூட்டும் தலைமையில் நாம் ஒரு தேசிய அரசாங்கத்தை

32
நிறுவுவதிற் பங்குகொண்டு, பெருமளவில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளோம். இவருடைய பிரதம தளபதியான திரு. ஜே. ஆர். ஜயவர்த்தனா கடந்த ஒரு வருடமாகத் தாம் உரமும், உண்மையுங் கொண்ட ஒரு நண்பனென நிரூபித்துவிட்டார். இவருடைய ஆற்றலும், அறிவுத் திறனும் தேசிய அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரு பெருமுதலாகும். இருந்தும் உடன் காலத்தைப் பற்றி நான் மிகு சொகுசாக வர்ணிப்பதோ, எதிர்காலத்தைப் பற்றிக் கற்பனைச் கனவைத் தூண்டி விடுதோ முற்றிலும் சரியாயிருக்க முடியாது. அவ்வாறு நான் செய்வது எனதுகடமையில் தவறுவதாகும் நெஞ்சுறுதியுடனும், கட்டுப்பாட்டுடனும் நாம் ஆற்ற வேண்டிய நொய்மையான பணிகளும் - தாங்க வேண்டிய கஷ்டங்களும் மிகப்பல. நாம் தவிர்க்க வேண்டிய பொறிக்கிடங்குகளும் பல. அதன் பின்னர் தான் - நாம் சிங்கள மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கு மிடையே அறிவார்ந்த கருத்திணக்கத்தின் அடிப்படையில் - நீதிநிறைந்த, நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் எமது குறிக்கோளை அடைய முடியும். இதன் மீதுதான் முற்றான பொருளாதார வளர்ச்சியையும், தேசியத் தன்நிறைவையும் நாம் காணமுடியும். இது வொன்றின் மீதுதான் இலங்கை மக்கள் அனைவரினதும் செழிப்பையும், செல்வத்தை யும், மனநிறை வையும் நாம் ஒரு பத்து வருட காலத்துள் உறுதிப்படுத்த முடியும்.
தாய்நாட்டை மீட்கவேண்டும்!
அரசியல் வனாந்தரத்திலும், நாட்டு மன்றத்து எதிர்க்கட்சிகளிடையேயும் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த நாம் - இன்றைய தேசிய அரசாங்கத்தை நிறுவ உதவிய பொழுது இரண்டு எண்ணங்கள் எமது மனத்தில் மேலோங்கி நின்றன.
ஒரு கெளரவம் நிறைந்த கனவானுட னும் அவரது கட்சியுடனும் ஒரு கெளரவம் நிறைந்த கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தி - சிங்கள மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்குமிடையே ஒரு கெளரவ மான சமாதானத்தை நிறுவுவோம் என்பது ஒரு நோக்கம்.

Page 194
இரண்டாவதாக, அடுத்தடுத்து வந்த மூன்று முன்னாள் அரசாங்கங்கள் தள்ளி வீழ்த்திவிட்ட நிர்க்கதியிலிருந்தும் பொருளாதாரப் படுகுழியிலிருந்தும் - விவசாயத்துறையிலும் அதோடணைந்த சிறு கைத்தொழில்களிலும் குடிசைக் கைத் தொழில்களிலும் - திட்டமிட்ட, தன்னலமற்ற, பணித்திறன் மூலம் - இன்னுயிராம் எமது தாய் நாட்டை மீட்கவேண்டும் என்பது மற்றொன்றாகும். ஹிட்லர் போல் இங்கேயும் சிலர்!
அமைச்சர்ப் பதவிகளை நாம் தேடி நிற்கவில்லை. அரசாங்கத்தில் நாம் தொடர்பு கொண்டுள்ளோம். என்பதற்கு அடையாள மாகக் குறைந்தபட்சம் ஒரு அமைச்சை யாவது ஏற்றுக்கொள்ள வேண்டு மென்பதைத் தவிர திரு. டட்லி சேனநாயகா எமக்களித்த அமைச்சரவைப் பதவிகளை நாம் ஏற்க மறுத்துவிட்டோம்.
அமைச்சரவைப் பொறுப்புகளை நாம் ஏற்க மறுத்தமை குறித்துப் பலதரப்பட்ட கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. எமது இம் முடிவின் விளைவாக, தம்மை அர்ப்பணித்துக்கொண்ட திறமைசாலிகளின் இயக்கவாற்றல் நிறைந்த சேவை - நாடாளும் அரசாங்கத்திற்கு மறுக்கப்பட்டு விட்டது என்பது, இக் கண்டனங்களுள் சில சமயம் மிக முக்கியமானதாகவிருக்கலாம். ஆனால் அந்தக் கட்டத்தில் நாம் அமைச்சர் பதவிகளை ஏற்றிருந்தால், பொது மக்கள் அதைத் தப்பர்த்தம் செய்திருப்பார்கள். உயர்ந்த கொள்கைகளை அடித்தளமாக வைத்து நீண்ட காலமாக எதிர்ப்புக் காட்டி வந்தவர்களை - திரு. டட்லி சேனநாயகா பதவி கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டார் என்று Lu Gurt கருதியிருப்பார்கள். இவ்விடயத்தில் நாம் நடந்து கொண்ட விதம் காரணமாகச் சிங்கள மக்களுள் மிகப் பெரும் பகுதியினர் - எம்மை மேலும் மதிக்கத் தெரிந்து கொண்டார்கள் என்றே நான் நம்புகிறேன்.
உடனெதிர் காலத்தைப்பற்றி மிகுசொகுசாக வர்ணிக்க முடியாது என்று நான் கூறியிருந்தேன். தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையே

3}
இருக்கும் நிலைமையைத் தெளிவாகப் புரிந்து கொள்வதனால், அதன்பின்னணியை நாம் நேர்மையுடன் அலசிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்துகொண்டு வருவது ஒன்றே சிங்கள இனத்தின் பொருளாதாரத்திற்கும், மதத்திற்கும், கலாச்சாரத்திற்கும், அதனது பாதுகாப்பிற்கும் ஆபத்தானது என்று பல வருடங்களாகச் சிங்கள மக்களுக்கு - குறிப்பாகச் சிங்களக் குழந்தைகளுக்கு - நாடகங்கள், புத்தகங்கள், பிரசுரங்கள் மூலம் போதிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
போதிய கல்விவாசனையற்ற, வஞ்சக மற்ற பெருந்தொகையான சிங்கள மக்கள் மனத்தில் சூழ்ச்சி வகுக்கும் அரசியற் சந்தர்ப்பவாதிகள் - இந்தப் பொய்யான, உண்மையிலேயே நஞ்சுத் தனமான படத்தைப் பொறித்துவிட்டிருக்கிறார்கள். ஜேர்மனியைச் சுற்றிலும் பகைவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள் என்றும் - ஜேர்மனியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதானால், இப்பகைவர்களனைவருடனும் போரிட்டு, சாத்தியமானால் அவர்களைத் தனித்தனியே தோற்கடிக்க வேண்டும் என்றும் கணக்கிட்ட பிரசாரத்தின் மூலம் - ஹிட்லர் ஜேர்மன் மக்கள் மனத்தில் வலுச்சண்டைச் சிந்தனையையும், போர்க்கோலத்தீயையும் வளர்த்து விட்டான். அதேபோல, எம் நாட்டிலும் தீவினை அஞ்சாத சில அரசியல் வாதிகள் மக்கள் மனத்தில் நஞ்சூட்டி வந்திருக்கிறார்கள். வடக்கே - வட இலங்கையிலும் தென் இந்தியாவிலும்; கிழக்கே - மலேசியாவிலும்; மேற்கே - மோரிசுத்தீவிலும் சான்சிபாரிலும் கிழக்காபிரிக்காவிலும் தமிழர் வாழ்வதினால் - நாற்புறமும் சூழப்பட்ட சிங்கள இனத்திற்கும், பெளத்த மதத்திற்குமே ஆபத்து ஏற்பட்டுவிட்டதென்று - நாளும் பொழுதும் சிங்கள மக்கள் மனத்தில் வெறியேற்றி வந்திருக்கிறார்கள்! வஞ்சகமற்ற எழை மக்கள் - தமது மதத்திற்கும், நாகரீகத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்ட தென்று உண்மையிலேயே நம்புகிறார்கள். திரு. பண்டாரநாயக்கா, திருமதி பண்டாரநாயக்கா ஆகியோரினதும்,

Page 195
- அவர்களது பழிகேடான நண்பர்களினதும் ஆட்சிக் காலத்தில், இந்தத் தந்திரோ பாயங்கள் - சந்தேகத்தையும், வெறுப் புணர்ச்சியையும், பகைமையையும் வளர்த்து - இனக் கலவரங்களைக் கிளறிவிட்டன!
நாட்டின் துரோகிகள்
ஒரே நாட்டில் வாழும் பல்வேறு மக்களிடையே சந்தேகம், ஒற்றுமையின்மை, குழப்பங்கள், மோதல்கள் இருந்தால் - அந்நாடு பலதுறைகளிலும் சீர்குலைந்து, சிதைந் தொழிந்து போய்விடும். இதற்குப் புறநடை எதுவுமேயில்லை என்பது - காலந்தோன்றிய காலமுதல் வாழ்ந்த நாடு ஒவ்வொன்றினதும் சரித்திரமும் கூறும். பொருளாதாரத்துறை அழிந்துவிடும் கலாச்சாரத்துறையில் - பொதுவாழ்வும், நன்னெறியும் இழிநிலை அடையும். இலங்கைத் திருநாட்டின் சரித்திரமும் - கடந்த சில வருடங்களாக இதே மாதிரித்தானாயிற்று. பொருளாதாரத் துறையில்நாம் அழிவின் விளிம்புக்கு வந்திருந்தோம்: கலாச்சாரத்துறையில் சோம்பலும், தேக்கநிலையும் ஏற்பட்டது. பாடசாலைக்கல்வியில் ஏற்பட்டிருக்கும் பெருங் குழப்பத்தையும், பல்கலைக் கழகங்களின் வீழ்ச்சியையும் திரும்பிப் பாருங்கள்! பொதுவாழ்வில், எமது நாடும் - மக்களும் இவ்வளவு கடை நிலைக்குள் ஒருபோதும் வீழ்ந்ததில்லை! அற்பத்தனமான அரசியல் இலாபத்துக்காக - அநீதிக்கும், மனக்கசப்புக்கும், இனக்கலவரத்துக்கும்
தூபமிடத் தயாராயிருந்த நாட்டுத் துரோகிகளே இந்த நிலைமைக்குக் காரணமாயிருந்தார்கள்.
நாட்டிலொரு சோக நாடகம்
தமது கயமைத்தனமான நோக்கங்களுக் காக - மதத்தைக் காட்டிக் கபடக் கூக்குரல் எழுப்பி, அப்பாவி மக்களை ஏமாற்றி மோசடி செய்வதில் - எமது நாட்டுக்கும் நாட்டின் எதிர் காலத்துக்கும் துரோகிகளா யிருக்கும் இவர்கள் - இம்மியும் வெட்கமடை கிறார்களில்லையே என்பதை நினைக்க மனம் பெரிதும் வேதனையடைகிறது!

4H
நாடெங்கணும் வெறுப்புணர்ச்சியை விற்பனை செய்துவரும் இந்தப் போலித் தீர்க்கதரிசிகள் - நாட்டு மக்களுக்கு இன்னுமொரு படுபாதகம் இழைத்து வந்திருக்கிறார்கள். முதலாளியாயிருப்பவர் கள் அரசாங்கமாயிருந்தாலும் சரி, தனியார்துறையாயிருந்தாலும் Frf இவர்களைக் கண்டிப்பாகத் தொழிலாளிகள் - தமது விரோதிகளாகக் கருத வேண்டும்; அவர்களின் வீழ்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தைத் தொழிலாள வர்க்கத்தினரிடையே பரப்பிவிட்டிருக் கிறார்கள் இவர்கள்!
இரண்டு விடயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, இலங்கையிலே தொழிற்சங்கத் தலைவர் களாயிருப்பவர்கள் - தம்மிலே தொழிலாளர் களல்லர். இரண்டு, தொழிற் சங்கங்கள் தடைசெய்யப்பட்டு வேலை நிறுத்தம் செய்ய முயல்பவர்கள் - இராஜத்துரோகிகளாகக் கருதப்பட்டுத் தூக்கிலிடப்படும் உருசிய, சீன வாழ்க்கை முறையின் சீடர்களாயும், பிரசாரகர்களாயும் இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். இந்த நிலையைக் காணும்போது எவர்க்கும் உடனே சிரிப்புத் தான் தோன்றும். ஆனால் சிரிப்பதற்கான ஒரு விடயமல்ல இது நாட்டில் நிகழ்ந்து வரும் ஒரு சோக நாடகம் இது. இலங்கையின் பொருளாதாரச் சீர்குலைவும்: தேசவிரோத சக்திகளும்
இன்று இலங்கையில் ஓர் அவசர நிலை இருக்கிறது. ஆனால் இந்த அவசர நிலை பொருளாதாரத் துறையிலேயன்றி - அரசியற்றுறையிலல்ல. வங்குரோத்து நிலை, பணவீக்கம், அதிகரித்துவரும் வேலை யின்மை, அவசியப் பொருட்களிற் பற்றாக்குறை ஆகியவை எம்மை நாற்புறமும் சுற்றி வளைத்து நிற்கும் இக்கட்டத்தில் - உடலுழைப்பாளிகள், வெண்ணுடை ஊழியர்கள், நிர்வாகிகள், ஆட்சித் துறையினர், திட்ட வல்லுநர்கள், கொள்கை வகுப்பவர்கள் ஆகியோர் அனைவரும் அணி திரண்டு ஒருமித்துப் பணியாற்றுவது இப்போது
பெருந்தேவையாகிவிட்டது.

Page 196
பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து நாட்டை மீட்டுக் குறுகிய காலத்தில் தேசிய வளர்ச்சியிலும் - சுபீட்சத்திலும் துரிதமான மாற்றங் காண வேண்டுமாயின், நாமனை வரும் எம்மை இப் பெரும் பணியில் அர்ப்பணித்து, நெற்றி வியர்வை நிலத்தைக் குளமாக்க உழைக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற தொழிலாளிகளும் சாதாரண தொழிலாளிகளும் உட்பட, அனைவரும் இந்த ஒன்றுபட்ட உழைப்பின் இலாபத்தில் தத்தமக்குரிய நியாயமான பங்கைப் பெறவேண்டும்.
வேலையில் சிரத்தையின்மைக்கோ, தொழிலாளர்களின் மந்தகெதித் தந்திரங்களுக்கோ, கவனமின்மைக்கோ, தகுதியின்மைக்கோ, ஒன்றிணைப்பின்மைக் கோ, கூட்டுப்பணியின்மைக்கோ எமது இந்தப் போர்முனையில் இடமளிக்க Cplg-till gil.
தேசிய வளர்ச்சியையும், செல்வச் செழிப்பையும் நோக்கி முன்னேறும் இம் முயற்சியை வியர்த்தமாக்கும் எந்த ஆட்கூட்டத்தையோ, நிறுவனத்தையோ - அவர்களது தேசத் துரோகச் செயலுக்காக - ஈவிரக்கமின்றி நசுக்கியெறியவேண்டும். அதேபோல, வெறுப்பையும் இனக் குழப்பத்தையும் ஊக்குவிக்கும் கூட்டத் தினரையும் வேரோடு களைந்தெறியவேண்டும்.
எமது தேச நலனுக்கு அத்தியாவசிய மாயிருக்கும் இன ஒற்றுமைக்கும், தொழிலாளர் உற்சாகத்திற்கும் தீங்கு விளைக்கும் தற்போதைய கூட்டு எதிர்க்கட்சியினரோ, குறைந்தது அவர்களின் தலைவர்களோ தாம் செய்யும் பெருந் துரோகத்தை நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். தேசப்பணியில் சோம்பேறிகளுக்கு இடமில்லை!
எமது மக்கள் - அடிப்படையில் நற்குணம் கொண்டவர்கள் என்பதிலும்; சமாதானத்திலும், நல்லெண்ணத்திலும் பற்றுடையவர்களென்பதிலும்; துரிதமான முன்னேற்றத்திலும் சுபீட்சத்திலும்

35
பெருவிருப்பம் கொண்டவர்கள் என்பதிலும் எனக்குப் பூரண நம்பிக்கையுண்டு. அப்பொழுதுதான் அவர்கள் சாந்தமும் செழிப்புங் கொண்ட ஒரு நாட்டை - தமது குழந்தைகளுக்கும், குழந்தைகளின் குழந்தைகளுக்குமாகப் பின் விட்டுச் செல்ல Փւգ-պւb.
தெளிவாகவும் துணிவாகவும் - நாம் கூறுவதை எமது மக்களுக்குப் புரியவைத் தோமானால், அவர்கள் பெருந்தன்மையுடன் எமது கூற்றுக்குச் செவிசாய்க்கத் தவற மாட்டார்கள். அரசாங்க நிருவாகத்திலும் தொழிற்றுறையிலும் உயர் தரத்திலுள்ள ஊழியர்கள் - தமது சேவையில் ஊக்கமும் உணர்ச்சியும் காட்டுவார்களானால் - எமது மக்கள் வயிற்றை இறுகக் கட்டி மனமுவந்து உழைக்க என்றுந் தயாராயிருப்பார்கள்.
இன்று உயர்நிலையிலுள்ள அதிகாரிகளிற் சிலருக்கு - அவர்களது தரத்திற்கு ஏற்ற குணாதிசயமும் வன்மையுமில்லாவிட்டால் அவர்களை அகற்றிவிடவேண்டும். எமது தேசப்பணியில் முக்கிய கேந்திரங்களில் - சோம்பேறிகளுக்கும் அரைத் திறமைசாலி களுக்கும் இடமிருக்க முடியாது. இவ்வாறான தலைமையின்கீழ் அணி வகுத்துப் பணி புரியத் தொழிலாளர்கள் உற்சாகத்துடன் ஓடிவருவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. தொழிலாளர்களுக்குக் கிடைத்த சட்டபூர்வமான உரிமைகளும் பாதுகாப்புகளும் - தொழில் வளர்ச்சிக்கும் தேசிய முன்னேற்றத்திற்குமென்றே - அதுவும் 6քՓ சனநாயக அமைப்பிற்றான் றிரட்டப்பட்டவை என்பதையும்; அவற்றைத் தம் தொழிலை அழிக்கவோ, அரசாங்கத்தை வீழ்த்தவோ பயன்படுத்தக்கூடாது என்பதையும் தொழிலாளர்கள் அப்போது விரைவில் உணர்வார்கள். குழப்பங்கள் ஏற்பட்டு, எதேச்சதிகார அரசாங்கம் ஒன்று தோன்றுமானால், தொழிற்சங்க இயக்கம் தடைசெய்யப்படும். அப்பொழுது தொழிலாளர் தலைவர்கள் வேலை நிறுத்தத்திலோ, நேரடி நடவடிக்கையிலோ ஈடுபட முயன்றால், ஒன்று சிறையிலி டப்படுவார்கள் அல்லது தூக்கிலி டப்படுவார்கள்.

Page 197
எமது குறிக்கோளும்; பிரார்த்தனையும்:
இந்தப் பின்னணியில் GTLDS) கட்சியினதும் மக்களினதும் கடமைதான் என்ன?
முதலாவதாக - தமக்கோ, பிறர்க்கோ அநியாயம் இழைக்கப்படும்போது, அதை ஒருபோதும் பார்த்துக்கொண்டு நிற்காதிருக் கக்கூடிய - கட்டுப்பாடும், ஒற்றுமையும் கொண்ட மக்களை நாம் உருவாக்க, வேண்டும். ஊருக்குபதேசம் செய்யு முன்னர், எமது வீட்டை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எமது சொந்தச் சகோதரர்களுள் ஒரு பகுதியினருக்கு - எமது மூதாதையோரும் நாமும் சாதியின் பேரில் இழைத்துவந்த நீதியீனத்தையும் அவமரியாதையையும் கைவிட்டுவிடுவதுடன், தீண்டாமை என்ற சாபக்கேட்டையும் அவசரத்தில் நாம் அகற்றிவிட வேண்டும். தமிழ் பேகம் மக்கள் மத்தியில் உரிமை குறைந்த ஒரு பிரிவினர் இருக்க விட்டு வைப்பது - எமக்கு ஒரு பலவீனமும்; எமது கலாசாரத்துக்கு ஒர் ஆபத்துமாகும். தனது கலாச்சார, ஆத்மீக வாழ்விலுள்ள இந்தக்கறையை அகற்றி - எமது இனம் தன்னைத்தானே தூய்மைப் படுத்திக்கொள்ள - எனது தலைமைப் பதவிக்காலத்தில் நான் நெஞ்சார்ந்த முயற்சி எடுப்பேன்.
இரண்டாவதாக - தமிழ் பேசும் மக்களின் சாதி, மதம், இனம், வாழ்விடம் எதுவாயிருந்தாலும் - இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று எப்போதுமே வற்புறுத்தி நின்ற கட்சி - இலங்கைத் தமிழரசுக் கட்சிதான் என்று நாம் பெருமையுடன் கூற முடியும். இந்த ஒற்றுமை யினால் ஏற்பட்ட பலத்தைக் கொண்டு, எம்மோடு பொதுத் தாயகத்தில் வாழும் சிங்களச் சகோதரர்களுடன் நிறைவான ஒற்றுமை யையும், கருத்திணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே - எமது குறிக்கோள்களும், பிரார்த்தனையுமாகும்.
அடிமைகளாய் வாழப்போவதில்லை!
எம்மிடையே சாதி, மத, பிரதேச அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி,

86
அவ்வழியில் பிரதேசத் தலைவர்களாகவோ, உள்ளூர்த் தலைவர்களாகவோ, அல்லது ஒரு பிரிவின் தலைவர்களாகவோ அரசியற் பிரபல்யத்தைப் பெற்றுவிடலாம் என்று நம்பி உழைக்கும் சில தவறான வழிச் செல்லும் தன்னலம் பேணிகள் - எமது மத்தியில் இருக்கிறார்களென்பது வேதனைக் குரிய விடயம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு! தமிழ் பேசும் மக்களிடையே சாதி, மதம், பிரதேசம் என்ற அடிப்படையில் பிளவுகளுக்குத் தூபமிட்டு, நமக்குள் நம்மை மோத விடுவதன் மூலம் - எம்மனைவரையும் அழித்தொழித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயலாற்றி வரும் ஒரு சில சிங்கள வகுப்புத் துவேஷத் தலைவர்களின் தீவிர முயற்சிகளை முறியடித்து, தமிழ் பேசும் மக்களும் மனிதர்களாய் இங்கு வாழ்வதானால் - ஒன்று திரண்டு ஒருகொடியின் கீழ்ப்பலம் பெற்று நிற்கும் தமிழினம்தான் அதைச் சாதிக்க முடியும். அத்துடன், நாட்டின் சோதனை மிக்க இக்கட்டத்தில் ஒரு கொடியின் கீழ் திரண்டு ஒன்றுபட்டு நிற்கும் தமிழினம்தான் - திரு. டட்லி சேனநாயக்காவுக்கும் அவரது தலைமைக்கும் நிறைந்த ஆதரவும் உரமும் அளிக்கமுடியும்.
எமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி எம்மை அழிக்க முயல்பவர்களுக்கும், தமிழினம் முற்றாக அழிந்தொழியக் கூடியதான பிளவுகளை ஏற்படுத்தி, அப்பிளவுகள் மூலம் பிரிவுத் தலைவர் களாகப் பெயரீட்டி விடலாம் என்று கற்பனை செய்பவர்களுக்கும் நான் நிறைந்த விசுவாசத்துடனும் பொறுப்புணர்ச்சி யுடனும் ஒரு உறுதி கூறி வைக்க விரும்புகிறேன். எம்மை அழிக்க முயல்பவர்களும் - எம்மிடையே பிரிவுத் தலைமைக்காக உழைப்பவர்களுமான தீவினை அஞ்சாத இந்தச் சிங்கள, தமிழ்ப் பேர் வழிகள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும். தமிழ் பேகம் இனத்தின் ஒற்றுமைத் திண்மையை ஒரு போதும் முறிக்கவும் முடியாது; தமிழ் பேசும் மக்கள் தமது பொதுத் தாயகத்தில் அடிமைகளாய் வாழப் போவதுமில்லை. எமது மாபெரும் கட்சியையும், அதன் குறிக்கோளையும் நாம்

Page 198
-1
என்றும் உரமும், ஊக்கமுங் கொண்ட இயக்க நிலையில் பேணிவந்தால் - எம்மைச் சின்னாபின்னப்படுத்தி, அடிமைகளாக்கி, சிறுமைப்படுத்தும் முயற்சி நிச்சயம் தோல்வியுற்றே தீரும். இளைஞர்களை எதிர்கொள்ளும் மூன்று சவால்கள்
எமது கட்சி திடமாக மேற்கொள்ள விருக்கும் மூன்றாவது விடயம் - இளைஞர் இயக்கத்தைப் புனருத்தாரணம் செய்து உரப்படுத்துவதாகும். எமது தேசியத்தின் மரியாதைக்கும், அடிப்படை உரிமைகளுக்கு மான போராட்டத்தில் - கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் - குறிப்பாகப் படித்த வாலிபர்கள் போதிய பங்காற்ற வில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது எங்கள் தலைவர்களின் தவறாக இருக்கலாம். சிந்தனையும் கற்பனையும் நிறைந்த தலைமையே - இளைஞர்களின் தேவை. அதைத்தான் அவர்களும் கேட்டு நிற்கிறார்கள். தம் முன் வைக்கப்படும் எந்தச் சவாலுக்கும் பதிலளிக்கக்கூடியவர்கள் இளைஞர்கள். இன்று நாட்டின் முன்னிற்கும் சவால் - பொருளாதார அவசர நிலையேயாம். இளைஞர்களின் இதயபூர்வமான பங்கைப் பெற்று, பொருளாதார அபிவிருத்தியின் மூலம் இந்த அவசர நிலையை நாம் தாண்ட வேண்டும். எமது இளைஞர்களின் முன் விரைவில் நாம் ஒரு திட்டத்தை வைத்து, முதலாவது சவால் ஒன்றையும் அளிப்போம். அதன் மூலம், அவர்கள் தமது சுபீட்சத்துக் கும் தாய் நாட்டின் பொருளாதார விடுதலைக்கும் முக்கிய பொறுப்பேற்பார்கள். இனம், மதம் என்ற போர்வையில் எமது தேசிய ஒற்றுமையைச் சிதைக்க முயலும் துரோகக் கூட்டத்தினரின் சவாலுக்கு - நிதானமும் கட்டுப்பாடும் கொண்ட எதிர்ப்புக் காட்டி அதில் லெ றிகான வேண்டியது - இளைஞர் எனுள்ள இரண்டாவது சவாலாகும்.
எமது இளைஞர்கள் பதிலளிக்க வேண்டிய இன்னுமொரு சவாலுமுண்டு. 6 TLD go தொழிற் சங்கங்களினதும், தொழிலாளர்களினதும் நோக்கங்களையும்,

ZH
குறிக்கோள்களையும் திசை திருப்பி, தொழிலாளிகளின் மனத்திலும் இதயத்திலும் ஒரு புதிய கண்ணோட்டத்தையும், நம்பிக்கை யும் ஏற்படுத்த வேண்டும்.
தேசிய புனரமைப்பிலும், ஆத்மீகப் பரிணாமத்திலும் இளைஞர்கள் உற்சாக மாகப் பங்கு பற்றாவிட்டால் - எந்த ஒரு நாட்டுக்கும் - நிச்சயமாக எந்த ஒரு கட்சிக்கும் எதிர்காலம் இருக்க முடியாது என்று நான் கருதி வந்துள்ளேன். அரசியல், சமூக, பொருளாதாரத்துறைகளில் - தேசப் புனரமைப்பு முனைகளில் இளைஞர்களைக் கொண்டுவந்து நிறுத்துவது - கட்சித் தலைவர் என்ற முறையில் எனது கடமையென நம்புகிறேன். நீதியற்ற சாதிமுறைக்கும், சாதியடிப்படையிலான அவமரியாதைக்கும் எதிரான எம்மைத் தூய்மைப்படுத்தும் போராட்டத்தில் - இளைஞர்கள் தலைமை தாங்கவேண்டும். கூட்டுணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வழி
தொழிற்சங்கத்துறையில் - மொழி விடயத்தால் ஏற்படும் கஷ்டங்கள் காரணங்களின் விளைவாக மாத்திரம் நாம் தமிழ் பேசும் தொழிலாளர்களின் சம்மேளனம் ஒன்றை நிறுவுவது அவசியமாகி விட்டது. இந்தச் சம்மேளனத் தை நிறுவியதும், தேசிய அரசாங்கத் தலைவர்கள் வழிகாட்டி எழுப்பிவரும் சனநாயக - தொழிற்சங்க முன்னணியுடன் இதயப் பூர்வமாக ஒத்துழைத்து, அம்முன்னணியின் இயக்க சக்தியாக விளங்க வேண்டியது எமது கடமை. கம்யூனிஸ்ட் தலைவர்களினால் நடத்தப்பட்டு, கம்யூனிஸ்ட் திசை சாய்ந்து இயங்கும் தொழிற்சங்கங்களின் சீர்குலைக்கும் ஆபத்தை எதிர்த்து நிற்கும் வண்ணம் - நான் சனநாயகத் தொழிற் சங்கத் தலைவர்களுக்கு அறை கூவல் விடுக்கிறேன். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் பொதுவான தொழிலை முன்னேற்றுவதில் தொழிலாளர்கள் பங்காளிகளல்லவென்றும் - அவர்கள் முதலாளிகளை வெறுக்க வேண்டியவர் களென்றும் தவறாகப் போதனையூட்டப் பட்டு வந்திருக்கிறார்கள். முதலாளிகளும் தமது இலாபத்தில் ஒரு நியாயமான பங்கைத்

Page 199
-1
தொழிலாளர்களுடன் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அவர்களை உடன் ஊழியர் களாகக் கருதவும் வேண்டும். அதன் மூலம் தமது சொந்த நலனுக்கும், நாட்டின் பொருள்வள முன்னேற்றத்திற்கும் தேவைப்படும் சரியான கூட்டுணர்ச்சியைக் தட்டியெழுப்ப முடியும். தாய்க்குலத்தை அழைக்கிறேன்!
கடைசியாகப் பெருமையுடன் நாம் பிரகடனப்படுத்தும் விடயம் ஒன்று. தமிழ்ப் பெண்கள்தான் என்றும் எமது கட்சியின் நம்பிக்கையான, உறுதிமிக்க ஆதரவாளர் களாக இருந்து வந்திருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் தாய்மார்களே பெண்கள். நாட்டினத்தைப் பெற்றெடுத்து உணவூட்டுபவர்கள் பெண்கள். தாம் பெற்றெடுத்தவர்களுக்கு எப்போ ஆபத்து ஏற்படுகிறது; எப்போ உதவியும் பாதுகாப்பும் தேவை என்பவற்றை உள்ளுணர்வில் அறியக்கூடியவர்கள் பெண்கள். முன்னாள் அரசாங்கங்கள் எம்மைத் துன்புறுத்திய இருள் சூழ்ந்த காலத்தில் - மற்றெவர்களிலும் பார்க்க - எம்மோடு மேடு, பள்ள மனைத்திலும் அணிதிரண்டு நின்றவர்கள் தமிழ்ப் பெண்களே! தமது குழந்தை களுக்கோ, நாட்டினத்துக்கோ கடமை புரிய வேண்டிய சந்தர்ப்பங்களில் தவறான அடியெடுத்து வைக்கவோ, கைலஞ்சம் ஏற்கவோ, பதவி - சினேகம் ஆகியவற்றால் விலைக்கு வாங்கப்படவோ முடியாதவர்கள் பெண்கள் என்பது எமது அனுபவம்.
எமது தாய்க்குலம் இதுவரை ஆற்றிய பெரும் பணிக்கு - பத்தாவது தேசிய மாநாடு கூடுமிந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எனது தாழ்மையான அஞ்சலியைத் தெரிவித்து வைக்க விரும்புகிறேன. மனத்துடிப்பு மிகுந்த இந்தக் கட்டத்தில் வெறுப்புணர்ச்சியையும், இனக் குழப்பத்தை யும் எதிர்த்து நிற்பதில் எமக்கு உதவியளித்து, ஒன்றுபட்ட இலங்கையை மீட்க முன்வரும்படி நான் அவர்களை அறைகூவி அழைக்கிறேன். தற்போதைய இடதுசாரித் தொழிற்சங்கத் தலைவர்களின் தேசாபி மானமற்ற பிரசாரத்தையும் தலைமையையும்

8.
எதிர்த்து நின்று அம்பலப்படுத்தும்படி கூவி அழைக்கிறேன். அதே நேரத்தில், ஒன்றுபட்ட இலங்கைத் திருநாட்டின் முன்னுள்ள மிக அவசர பணியான தேசிய பொருளாதார நிர்மாணத்தில் - தமது வீரத்தையும் நம்பிக்கையையும் கொண்டு தீவிரப்பங் காற்றும்படி - எமது பிள்ளைகள், சகோதரிகள், தாய்மார்கள் அனைவரையும் வற்புறுத்தி வேண்டிக்கொள்கிறேன்.
நாட்டு நிர்வாகத்தில்
மக்கள்மொழியின் அவசியம்
மொழிப் பிரச்சினை மீது சில வார்த்தைகள் கூறுவது அவசியம். முன்பு கூறியது போல, இன்று எம்முன் பொருளா தாரத் துறையில் அவசரநிலை ஏற்பட்டிருக் கிறது. மிகத் திறம்படத் திட்டமிட்ட துரிதமான அபிவிருத்தி முயற்சிகளெல்லாம் தாமதப்பட்டுத் தோல்வியடைவதற்கு முக்கிய காரணம் - வருத்தப்படவேண்டிய அளவிற்குத் திறமையும் துரிதமும் கொண்ட நிர்வாகம் இல்லாதிருப்பதேயாகும். திறமையும் துரிதமும் கொண்ட நிர்வாகத்திலும் பார்க்க - மொழி முக்கிய மானது என்று நினைக்கும் வெறியர்கள் இருதரப்பிலும் இருக்கிறார்கள். "மனிதனுக் காக ஓய்வு நாள் உண்டாக்கப்பட்டதே அன்றி, ஓய்வு நாளுக்காக மனிதன் படைக்கப் படவில்லை" என்று கிறிஸ்து சொல்லி வைத்தார். அதேவாறு மனிதனுக்காக மொழியேயல்லாது - மொழிக்காக - ஆட்சி மொழிக்காக மனிதனல்ல. ஒரு பிரதேசத்தில் வதியும் மக்களின் மொழியில் நிர்வாகம் நடந்தாற்றான் - பொது நிர்வாகம் துரிதமாகவும் திறமையாகவும் இருக்கும். எனவே, விசேடமாக வேலைக்குத் தெரிவு செய்யப்பட்டு, அவ்வேலையில் பாதுகாக்கப் பட்டுப் பொது மக்களிடமிருந்து ஊதியம் பெறும் அரசாங்க ஊழியர்கள் - நாட்டு மக்களனைவருக்கும் திறம்படவும் துரித மாகவும் பணிபுரியச்சாதனம் பெற்றிருக்க வேண்டும். அவ்வப் பிரதேசத்து மக்களின் மொழியில் நிர்வாகம் நடைபெற்றாற்றான் அத்தகைய பணி சாத்தியமாகும். இலங்கை யில் அரசாங்க ஊழியர்கள் இடமாற்றத்துக் குரியவர்கள், எனவே இவ்வூழியர்கள்

Page 200
也
தமிழராகவோ, சிங்களவராகவோ, பறங்கியவராகவோ, முஸ்லீம்களாகவோ இருந்தாலும் - தாம் பணிபுரியும் பிரதேசத்து மொழியை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
ம்க்களுக்காக - மக்களால் நடைபெறும். மக்களாட்சிதான் சனநாயகமானால் - அத்தகைய ஒரு ஆட்சி - மக்களின் மொழியில் மாத்திரந்தான் நடக்க முடியும். சனநாயகத்தில் - மக்கள்தான் ஆளுபவர்கள். அரசாங்க ஊழியர்கள் எந்த உச்சப்படியிலிருந்தாலும் அவர்கள் மக்களின் பணியாளர்களே யாவர். சனநாயகத்தில் - அமைச்சர் களும் மக்கள் விருப்பத்திற்கமையப் LUGOf புரியும் ஊழியர்களேயன்றி - எசமானரல்லர். எனவே ஒரு அரசாங்க ஊழியன், தனது எசமானர்களான மக்களுக்கு ஊழியம் புரிவதானால் - அவ்வூழியம் அந்த மக்களின் மொழியிற்றான் இருக்க முடியும்.
அரசாங்க ஊழியரனைவரும் தமிழும் - சிங்களமும் தெரிந்திருக்க வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகக் கூறியிருக் கிறது. அரசாங்க ஊழியர்கள் அனைவரும் இரு மொழிகளையும் தெரிந்திருக்காத வரை - நிர்வாகம் திறமையாகவும் துரிதமாகவும் பயன் பயப்பதாயும் இருக்க மாட்டாது. இந்த அளவில், தேசிய அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்குமான எங்கள் அவசர இயக்கம் தாமதமாகும்; வியர்த்தடையும்.
எனவே தான், சனவரி 8ஆந் திகதி (1966) நாட்டு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுச் சட்டமாகிய தமிழ் மொழி விசேட வசதிகள் சட்டம் பெரிதும் தேவைப்பட்ட ஒரு − சட்டமாயிருந்தது. சிங்களம் மாத்திரமென்ற சட்டத்தின் காலடியில் நகக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் தன்மானத்தை - பெருமளவில் இச்சட்டம் மீட்டுக் கொடுத்திருந்தது என்பது உண்மையே. ஆயினும், இது அரசாங்கப் பொதுவிவகார நிர்வாகத்தைத் துரிதப்படுத்தவும் திறமை யாக்கவும் முடியும் என்ற வகையில் - தமிழ் பேசும் மக்களது நலவுரிமைகளை மாத்திரம் பேணும் ஒன்றல்ல; நாட்டு மக்களனைவரதும் நலனுக்குமே உகந்த ஒன்றாகும்.

9.
(1) மன்னர், குடியேற்ற ஆட்சியாளர் காலத்திலேயே.
இலங்கையிலோ, உலகத்தின் எந்தப் பகுதியிலோ உள்ள ஆட்சி மொழியின் சரித்திரத்தைக் கவனிப்போம். எமது பழங்கால நிலப் பிரபுத்துவ மன்னர்களின் கிழ் ஆளும் மன்னனின் தாய்மொழியே - அரசவை மொழியாயிற்று. அரசவை மொழியைத்தான் நாம் இன்று உத்தியோக மொழி என்கின்றோம். உதாரணமாகக் கண்டியிலிருந்த நாயக்க வம்சத்தின் கடைசி 350 வருட காலத்திலும், கோட்டே காலத்தில் ஒரு குறுகிய பொழுதிலும் அரசர்கள் தமிழ் பேசுபவர்களா யிருந்தபடியால் - அரசவை மொழி தமிழாயிருந்தது அரசவையிலிருந்த பிரதானிகள், நிலப் பிரபுக்கள் ஆகியோர் அரசவை மொழியை - உத்தியோக மொழியை அறிந்திருந்தார்கள். இவ்வாறு, கண்டி உடன்படிக்கையில் கையொப்பங்கள் பெருமளவு தமிழிலே இருக்கின்றன. ஆனால் இதற்கு மாறாக ஓர் உண்மை , - ஒரு காத்திரமான உண்மை இருக்கின்றது. அதாவது அந்தக்காலத்துச் சிங்களப் பொதுமக்கள் அரசவை மொழியை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அவர்கள் தமது தாய்மொழியான சிங்கள மொழியில் தொடர்ந்து வாழ்ந்தார்கள். அந்தக்காலத்தில் சனநாயகம் இருக்கவில்லை. ஆட்சிமக்கள் கையிலிருக்கவில்லை. மன்னராலும், அவரது நிலப்பிரபுக்களினாலும் மக்கள் நேரடியாக ஆளப்பட்டு வந்தார்கள். ஆகையால் அரசாங்கத்தில் மக்களுக்குப் பங்கிருக்க வில்லை; எனவே உத்தியோக மொழியான அரசவை மொழிக்கும் - மக்களுக்கும் சங்காத்தம் இருக்கவில்லை.ஆனால் இந்த நிலைமை மீண்டும் காத்திரமாகியது. ஏனெனில், மன்னனோ, நிலப் பிரபுக்களோ மக்களுக்கு எதையாவது தெரிவிக்க வேண்டி யிருந்தால் - அவர்கள் தலைமைக்காரர் மூலம் மக்களது மொழியிலேதான் தொடர்பு கொண்டார்கள்; உத்தியோக மொழியிலோ, அரசவை மொழியிலோ அல்ல.
பிரித்தானியர் உட்படக் குடியேற்ற ஆட்சியாளர் அனைவரது காலத்திலும் இதே நிலைமைதான் நீடித்தது. அவ்வக்காலத்துப்

Page 201
-19
போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கில மொழிகளே உத்தியோக மொழிகளாக இருந்தன. ஆனால் இந்த உத்தியோக மொழிகள் உத்தியோக வட்டாரத்திற்குள் மாத்திரமே நின்றன. மக்கள் - ஏகாதிபத்திய முறையில் தேசாதிபதியாலும், அவரது உத்தியோகத்தராலும் ஆளப்பட்டு வந்தார்கள். மக்களுக்கு ஆட்சியில் பங்கிருக்க வில்லை. இருந்தும், மக்கள் மத்தியில் ஒரு சட்டத்தைச் செயற்படுத்தும் போதோ - மக்களுக்கு ஏதாவதொரு செய்தி வழங்கும்போதோ தமிழ்ப் பகுதிகளில் தமிழ்த் தலைமைக்காரர் மூலமும், சிங்களப் பகுதிகளில் சிங்களத் தலைமைக்காரர் மூலமும் முஸ்லிம் பகுதியில் முஸ்லிம் தலைமைக்காரர் மூலமும் அவ்வப் பிரதேசத்து மொழிகளிலேயே இவை நிகழ்ந்தன. எனவே, அரசாங்க நிர்வாகம் திறமையும் துரிதமும் பயன் விளைவிப்பதாயும் இருப்பதாயின், அது மக்களைத்தொடும் பொழுது - மக்கள் மொழியிலேயே அது நிகழ வேண்டு மென்பது தெளிவு.
(2) மக்கள் துன்புறுத்தப்படுவர்; நாட்டு முன்னேற்றம் தடைப்படும்!
இன்று இலங்கையில் நாம் சனநாயக அரசாங்கத்தைப் பெற்றுள்ளோம். மக்களுக்கு அரசாங்கத்திற் பங்கிருக்கிறது. எனவே நிர்வாகம் அனைத்தும் தலைமைக் காரருக்கு ஊடாக இல்லாது, மக்களுடன் நேரடியாகவே நிகழுகிறது. எனவே நிர்வாகம் துரிதமாயும் திறமையாயும் It air விளைவிப்பதாயும் இருப்பதாயின், அது அவ்வப் பகுதி மக்களது மொழியிற்றான் நடக்கவேண்டும். •
சேமநலவரசு என்று வர்ணிக்கப்படும் தற்கால ஆட்சி ஒன்றின் கீழ், நிர்வாகம் அவ்வப் பிரதேசத்து மக்கள் மொழியில் நடக்க வேண்டியது - முற்காலத்திலும் பார்க்க அவசியமாகிறது; தேவையாகிறது. பாடசாலைப் புத்தகங்கள், உடுபுடைவை, அரிசிக்கூப்பன்போன்ற அன்றாடக் கொடுக்கல், வாங்கல்களிலெல்லாம் - ஒன்றில் குடிமக்கள் அரசாங்கத்தில் தங்கி நிற்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள்; அல்லது அரசாங்கம் குடிமக்கள் வாழ்க்கையில் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இறப்பு,

H
பிறப்பு, விவாகப்பதிவுப் பத்திரங்கள், வருமானவரிப் பத்திரங்கள், ஏற்றுமதி - இறக்குமதி, அன்னியச் செலாவணி அனுமதிச் சீட்டுக்கள், வீட்டிற்கும் - பிள்ளைகளைச் சேர்ப்பிக்கும் பாடசாலைக் கும் இடையிலான தூரம் போன்ற நூற்றுக் கணக்கான விபரங்களை ஒரு குடிமகன் அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கவேண்டியோ, அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியோ இருக்கிறது. இதற்காக எத்தனையோ பத்திரங்கள், படிவங்களைக் குடிமக்கள் நிரப்பத் தெரிய வேண்டும். இத்தனை விடயங்களும் மக்கள் மொழியில் நடத்தப்பட்டு - இத்தனை பல திறப்பட்ட பத்திரங்களும் விபரங்களும் மக்களுக்குத் தெரிந்த மொழியில் இல்லாவிட்டால், நிர்வாகம் திறம்பட இருக்க முடியாது; துரிதமாயுமிருக்க முடியாது. இதற்கு மாறாக, நாட்டு மக்களனைவரும் ஒன்றுபட்டு எல்லாத் திசையிலும் தீவிர வேகத்தில் முன்னேற வேண்டிய இக்கட்டத்தில் - மக்கள் துன்புறுத்தப்பட்டு, நாட்டு முன்னேற்றமும் தடைபட்டுவிடும்.
நான் மீண்டும் கூறிவைக்க விரும்புகிறேன்; மனிதரின் தேவைகளுக்காக ஆட்சி மொழி உண்டாக்கப்படுவதேயன்றி - ஆட்சிமொழியின் தேவைகளுக்காக் மனிதர் உண்டாக்கப்படுவதில்லை. நிர்வாகத்தில் துரிதமும் திறமையும் இருப்பதாயின், அது அவ்வப் பிரதேச மொழிகளிற்றான் நடக்க வேண்டும்.
அரசாங்கத் தலைவர்களுக்கு அறைகூவல்
இந்தத் தமிழ் மொழி விசேட வசதிகள் சட்டம் - எமது தேசிய அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் வார்த்தெடுத்த ஓர் அதிசயக் கருவியாகும்! ஆனால் நிச்சயமாகத் தேசிய நலனுக்கு விரோதமாக இயங்கும் எதிர்க்கட்சி நாசவேலைக்காரருக்குப் பயந்து - இதை நடைமுறைக்குக் கொண்டுவருவது காத்திரமாகவோ, பயன் பயக்கக் கூடியதாகவோ மேற்கொள்ளப்படவில்லை என்பதை உணரும்போது துக்கமாக இருக்கிறது!

Page 202
தேசாபிமானமற்ற நாசகாரரைச் சாந்திப்படுத்தும் கொள்கை நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய வகையில் - தாம் பயமுறுத்தப்பட்ட அரசாங்கமும், பிரதமரும் இடமளிக்க வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். மக்களின் உள்ளார்ந்த நற்குணத்திலும், தமது கொள்கையின் உறுதிப்பாட்டிலும் - பிரதமரும், அரசாங்கமும் தைரியத்துடன் நம்பிக்கை வைக்கவேண்டும். அரசாங்கத்தின் செயல்கள் பலவும், சமீபத்திய நியமனங்கள், கொள்கைகள் சிலவும் - அதனது நண்பர்களினதும், ஆதரவாளர்களினதும் மனத்திலோ - தொழில்நுட்ப உதவியும், நிதி உதவியும் தருவதாக உறுதி கூறியிருக்கும் அந்நிய சினேக நிறுவனங்களினதும் மனத்திலோ நம்பிக்கை ஏற்படுத்த முடியாது என்பதை நாம் வருத்தத்துடன் கூறவேண்டி யிருக்கிறது.
தம்மிலும் தமது மக்களிலும் நம்பிக்கை வைக்கும்படி - நான் மீண்டும் அரசாங்கத் தலைவர்களை அறைகூவி அழைக்கிறேன். அவ்வாறு தைரியத்துடனும் திடசிந்தை யுடனும் முன்னேறிப் போனால் - அரசாங்கத்துக்குத் தனது சொந்த மக்களின் நீடித்த ஆதரவு கிடைப்பதுடன், எதிராளி களின் நன்மதிப்பும் கிட்டும். தொழில் நுட்பக் கல்வி - பிராந்திய வாரியாகப்படவேண்டும்!
இறுதியாகத் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு செய்தி. ஆரம்ப, உயர்தர பாடசாலை களிலும், அடிப்படை உயர்தரத் தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகத்திலும் எமது குழந்தைகளின் கல்விபற்றி இன்னும் இறுதியாக முடி வெடுக்கப்படவில்லை. இவ்விடயமாக எமது கல்விமான்களும், சிந்தனையாளர்களும் ஆழ்ந்து அலசிப் படித்துத் திட்டம் வகுக்க வேண்டும். இலங்கையிலுள்ள குழந்தை களனைவரினதும் தொழில் நுட்பக் கல்வி பற்றியும் இன்னும் முடிவாக்கப்படவில்லை. மாணவர்களும், அவர்களுக்கு வளர்ச்சி யூட்டிய பிரதேசமும் பயனடையக் கூடிய தாகவும்; அவ்வப்பகுதிகளை அபிவிருத்தி செய்ய இம்மாணவர்களை எதிர்பார்த்து

1.
நிற்கும் நாடு வளர்ச்சி பெறுவதற்காகவும்; தொழில் நுட்பக் கல்வி - பிராந்திய வாரியாக்கப்பட வேண்டும். தோட்டப் பாடசாலை முறை நீடிக்கப்போகிறது
கல்வி மசோதா என்ற திரைக்குப் பின்னிருந்து, எந்தவகையினதுமான குள்ளத்தனச் சூழ்ச்சிகளினால் தமக்குத் தனிச் சலுகையோ - அதிகாரமோ தேட முயலும் அற்ப மனிதரின் முயற்சிகளையும் நாம் தீவிரமாக எதிர்த்தே தீருவோம்!
தமிழ்க் குழந்தைகள் - குறிப்பாக ஏழு மாகாணங்களிலுமுள்ளவர்கள் - பண்டார நாயக்கா சகாப்தத்தில் - கல்வி அமைச் சினாலும், கல்வித் திணைக்களத்தினாலும் "ஏழை உறவினர்கள்” போல நடத்தப்பட்டு வந்திருக்கின்றனர். தேசிய அரசாங்கத்தின் கீழும், அதே பழைய அதிகாரிகளைக் கொண்டு - கல்வியமைச்சும், கல்வித் திணைக்களமும் அதே நெறியற்ற முறையைப் பின்பற்றி வருகின்றன. நேர்மையும், நியாய மனோபாவமும் கொண்ட திரு. டட்லி சேன நாயகாவும் இதை ஒத்துக்கொண்டிருக்கிறார்! இனிமேல் பாரபட்சமும், நீதியின்மையும் காட்டப்படமாட்டாது என்று எமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிதியின்மை காரணமாக - திறமையற்றதும், போவடி போக்கானதுமான தோட்டப் பாட சாலை முறை - இன்னும் நீடிக்கப் போகின்றதென்பது ஒரு துக்கமான உண்மை. தாய்மொழியே - போதனாமொழியாக வேண்டும்
எனினும் தோட்டப் பாடசாலைக் கல்வித் தரத்தைத் தேசிய பாடசாலைகளின் கல்வித் தரத்திற்கு உயர்த்துவதற்கும், பாடசாலை விடும் வகுப்பை ஐந்தாம் தரத்திலிருந்து எட்டாம் தரத்திற்கு உயர்த்துவதற்கும் ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டுமென்ற எமது திருத்தத்தை அரசாங்கக் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது.
மேற்கூறிய நோக்கங்களை முன்னிட்டு ஒரு தோட்டப் பாடசாலைச் சபை நிறுவி, அதற்கு நியாயமான ஒரு வருடாந்தர

Page 203
-
நன்கொடையை வழங்கவும், அப் பாடசாலைகளின் வேலையை மேற்பார்வை செய்வதற்குப் போதிய பரிசோதகர்களை நியமிக்கவும் வேண்டும் என்ற எமது மேலுமொரு ஆலோசனை நிராகரிக்கப் படவில்லை; கவனிக்கப்பட்டிருக்கிறது.
"போதனா மொழி தாய்மொழியாகவே இருக்கவேண்டும்” என்றதும் - "வீட்டிற் பேசப்படும் மொழியே தாய்மொழி என்பதன் வரைவிலக்கணம்" என்றதுமான பிரதமரின் விவேகம் நிறைந்த பரிகாரத்தை, நாம் போதனா மொழி விடயத்தில் ஏற்றுக் கொண்டுள்ளோம். -
தமிழ்ப் பிள்ளைகளுக்கும் சிங்களப் பிள்ளைகளுக்கும் தாய் மொழியே போதனா மொழியாக இருக்கவேண்டும் என்றும், ஏனையோரைப் பொறுத்தவரை போதனா மொழி பெற்றோரின் விருப்பத்திற்கே விடப்படவேண்டும் என்றும் தேவை ஏற்படின் நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறோம். இருக்க முடியாது!
இந்தக் கட்டத்தில் பொருத்தமான ஒரு விடயத்தை இங்கே குறிப்பிடவேண்டும். தொழில்நுட்ப, விஞ்ஞான உட்திறனும் - பாரிய கலாசார சரித்திரமுங் கொண்ட தமிழ் பேசும் மக்களுக்குத் தமக்கென்ற ஒரு பல்கலைக் கழகம் இருக்கவேண்டும். ஏனைய பெரிய பல்கலைக் கழகங்கள் போல, இலங்கையின் ஏனைய பாகங்களில் இருந்தும் உலக நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்வது வரவேற்கப்படும். கலாசாரத்திற்கும் நவீன விஞ்ஞானத்திற்கும் இடமளிக்காத ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் இலங்கையிலிருக்க முடியாது என்பது எமது ஆழ்ந்த கருத்து. அத்துடன், இந்துமத மெய்விளக்கத் துறைக்கும், நெறி முறைக்கும், கலாசாரத் திற்கும் ஒரு பிரிவும் - இஸ்லாமிய கலாசாரத்துக்கும், போதனைக்கும் இன்னொரு பிரிவும் அமைக்கப்படாத ஒரு தமிழ்ப்பல்கலைக் கழகம் இலங்கையில் இருக்க முடியாது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி' tunt (5 lb. கிறித்தவ மதப்பாண்டித்தியத்துக்குக் கத்தோலிக்க,

92
புரட்டஸ்தாந்த மதக்கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே போதிய அளவு இருப்பதினால், கிறித்தவ மதத்துறைக்கு ஒரு தனிப்பிரிவு தேவையிருக்காது. இறுதியாக, தமிழ் பேசும் மக்களுக்கும் இலங்கை நாட்டிற்கும் பெரு நிதியமாய் விளங்கக்கூடிய - நடைமுறை வண்ணமும் பண்பாடும் நாட்டுப் பற்றும் தூர நோக்குங் கொண்ட இளைஞர்களை உருவாக்க முடியாத ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமும் இலங்கையில் இருக்க முடியாது. நாட்டின் அபிவிருத்திக்கு" நாம் ஆற்றவேண்டிய பங்கு
கல்வி - விவசாய விருத்தி ஆகியவற்றோடு, குடிசைக் கைத்தொழில் - சிறு கைத்தொழில் ஏற்பாடுகளோடு தொடர்புடைய எமது அறிஞர்களின் ஒத்துழைப்பை - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற முறையில், அவ்வத் துறைகளில் பயன்படுத்த நான் முயற்சியெடுப் பேன். இவர்களுடன், ஆழ்கடல் மீன்பிடிப் பிரச்சினைகள், உள்நாட்டு நீர் நிலையங்களில் மீன் வளர்த்தல், மீன் பெருக்குதல் ஆகிய துறைகளிலும் - விஞ்ஞானிகளினதும் அனுபவசாலி களினதும் ஆலோசனையைப் பெற முயற்சி எடுப்பேன்.
குறிப்பாகக் கடந்த பதினேழு வருடங்களாகத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப் பட்டு, அடுத்தடுத்து வந்த அரசாங்கங் களினால் பட்டினி போடப்பட்ட தமிழ்ப்
பிரதேசங்களுக்கும் - பொதுவாக நாடனைத்திற்கும் அவசரமாகத் தேவைப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும் மக்களுக்கும்
அரசாங்கத்துக்கும் ஆலோசனை கூறக்கூடிய எமது பயிற்சி பெற்ற இளைஞர்களும், அறிஞர்களும் கொண்ட உப குழுக்களை நிறுவுவதும் எமது கடமையாயிருக்கும்.
எமது அபிவிருத்தித் திட்டம் - விவசாயத்தின் மீதோ, கைத்தொழிலின் மீதோ நிர்மாணிக்கப்படவேண்டும் என்பது பற்றி உயர்தர அதிகாரிகள், திட்டமிடு பவர்கள், கொள்கை வகுப்பவர்கள் ஆகியோரிடையே பெருமளவு விவாதமும் - தீர்மானமின்மையும் நிலவுகிறது! அபி விருத்தித் திட்டங்களில் - ஆரம்பக்கற்களாக

Page 204
1.
விவசாயமும், அதோடியைந்த சிறு தொழில்களும், குடிசைத் தொழில்களும் விளங்கவேண்டுமென்று கூறுவதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
எமது தேசியப் பிரச்சினைகள்
எமது தேசியப் பிரச்சனைகள் மூன்று வகைப்படும். அவை வருமாறு:
(1) உணவு, உடை ஆகியவற்றிற்கு வருடா வருடம் பெருந்தொகைப் பணம் செலவாவதினால், அந்நியச் செலாவணியி லேற்படும் பற்றாக்குறை. எமது கைத்தொழில் விஸ்தரிப்பிற்கும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பணம் சேமிப்பதானால், இந்தப் பண விரயத்தை நாம் நிறுத்த வேண்டும்.
(2) அதிகரித்துவரும் வேலையின்மை யும், மக்கட் பெருக்கமும், இவ்விரண்டினதும் விளைவாக, நாம் இயந்திர சாதனங்களை ஒரு முனைப்பாக உபயோகிக்கும் ஏற்பாடு களிலும் பார்க்கத் தொழிலாளர்களை ஒரு முனைப்பாக உபயோகிக்கும் ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே அவசியமாகிறது.
(3) தகுந்த வகையிற்றிட்டமிடப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட விவசாய மீன்பிடித் திட்டங்ளுக்கும் - அவற்றோடு உடன் செல்லும் சிறிய கைத்தொழிற்றிட்டங்களுக்கும் - கிராமத் திட்டங்களுக்கும் அந்நியத் தொழில்நுட்ப உதவியோ, பெருந்தொகை அந்நியச் செலாவணியோ தேவையில்லை. இத்துறையில் - அனுபவமும் திறமையுங்கொண்ட எமது ஆலோசகர்களைக் கொண்டு நாம் விரிவான திட்டமொன்றை உருவாக்கி வருகிறோம். அதை நாம் விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிப்போம். மூன்று நாலு வருடத்தில், நாட்டுக்குத் தேவையான உப உணவுப் பொருட்களில் பெரும் பகுதியையும் - பருத்தி, பருத்தி நூல், பருத்தி நூல் புடைவையையும் - கரும்புத்தடியையும் - சிறிய தொழிலாலைகளிலி ருந்து நாட்டைத் தன்நிறைவாக்கக்கூடிய தொகையில் சீனியையும். - ஏற்றுமதிக்கும் போதியஅளவு கொடி முந்திரியையும் - வேர்க்கடலை யையும் உற்பத்தி செய்ய முடியும்

3.
என்று நாம் நம்புகிறோம். அத்துடன், உள்ளூர்த் தேவைக்கும், ஏற்றுமதிக்குமென கடலிலும், நீர்நிலைய மீன் வளர்ப்புத் திட்டங்களிலும் இருந்து போதிய மீன் - ஏற்றுமதிக்கு உப்பும் - பற்றாக்குறையைப் பெருமளவிற் சமாளிக்க மேலதிக நெல்லும் உற்பத்திசெய்ய முடியும். அதே நேரத்தில், அபிவிருத்தி குறைந்த எமது பகுதிகளில் விவசாய, மீன்பிடி அபிவிருத்திக் காகப் பாதை போடுதல் - நீர்வள ஆராய்ச்சிகள் - சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அவசரவேகத் திட்டமொன்றை மேற் கொள்ள நாம் காத்திருக்கிறோம்; இவற்றையடுத்து, திட்டமிட்ட இளைஞர் குடியேற்ற ஏற்பாடுகளையும் நடை முறையாக்க வேண்டும். சந்தர்ப்பம் அளியுங்கள்
பதினேழு நீண்ட வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்டு வயிறொட்டிப் போயிருக்கும் தமிழ் பேசும் பகுதிகளுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் - நமது ஆற்றலையும், கடும் உழைப்பிற்கென நம்மிடத்தே இயல்பாக இருக்கும் உட்திறனையும் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார மீட்சியிலும், முன்னேற்றத் திலும் எமது பங்கையாற்ற எமக்குச் சந்தர்ப்பம் அளியுங்களென்று மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நாம் கூறுகிறோம். நாட்டு நிர்மாணத்திற்கு " சில ஆலோசனைகள்
எதிர்காலத்துக் கைத்தொழிற்றிட்டங் களுக்குத் தேவையான முதலீட்டைத் திரட்டுவதற்கு - தன்நிறைவு பெற்ற ஒரு விவசாய அடித்தளமும், அதோடிணைந்த சிறு தொழில்களும், குடிசைத் தொழில்களும் உறுதி வாய்ந்தவையாய் இருக்க முடியும் என்று கூறுவதில் எமக்குத் தயக்க மெதுவும் இல்லை.
பெரிய கைத்தொழில்களைக் கட்டியெழுப்புவதற்கு - பெரிய உள்ளூர்ச் சந்தைகள் இருக்கவேண்டும். ஆனால் பெரிய கைத்தொழில் நிலையக் கோவைகளைத் தாங்குவதற்கு முடியாத அளவிற்கு, மக்களின் கொள்முதற் சக்தி பெலமற்றிருக்கிறது.

Page 205
-1
திடமான உள்ளூர்ச் சந்தை என்ற காப்புறுதியின் பேரிற்றான் - உற்பத்தியாளர் வெற்றியளிக்கக்கூடிய ஒரு ஏற்றுமதிச் சந்தையைப்பற்றிச் சிந்திக்கமுடியும்.
திட்டமிட்டு ஒன்றிணைக்கப்பட்ட விவசாயத்தின் மீதும் - அத்தோடு சேர்ந்து சிறு தொழில், குடிசைத் தொழில் மீதும்தான் - இன்றெமது நாட்டு நிர்மாணம் அமைக்கப்பட வேண்டும். V
உலகமே எமது காடியில்
எமது தாய்நாட்டை நிர்மாணிக்கும் இப்பெரும் பணியில் - எம்மோடு ஒன்றிணைந்து பணியாற்ற வாருங்களென்று உங்களுக்கும், எதிர்பாராத காரணங்களினால் இங்கு வர முடியாது போனவர்களுக்கும் அழைப்பு விடுகிறேன். நாட்டை நிர்மாணித்தல் என்பது- வீதிகள், பாலங்கள், பாடசாலைகள், வைத்திய மனைகள், குடியேற்றத் திட்டங்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்புவது மாத்திரமல்ல. நாட்டின் நிர்மாணம் என்பது - மனித நோக்கத்தையும், குணாதிசயத்தையும் நிர்மாணிப்பதேயாகும். மக்களின் மனித அம்சம் உயர்வாக்கப்பட்டால் - சிந்தனையிலும், செயலி லும் அது விசுவாசமும், நேர்மையுமுற்றிருந்தால் அதுவே உண்மையான நாட்டு நிர்மாணமாகும். அத்தகைய ஆடவரையும், பெண்களையும் கொண்ட ஒரு நாட்டினத்தை நாம் உருவாக்கிவிட்டால் - அதன் பின்னர் வேண்டிய அனைத்தும் தாமே வரும். உலகமே எமது காலடியிற் கிடக்கும்.
என்ன வளம் இல்லை
ஏன் கையை ஏந்தவே எல்லாரும் எல்லாமும் (
།། இல்லாமை இல்லா

4H
நான் கருதும் நாட்டு நிர்மாணம்:
நூற்றாண்டு காலமான அந்நிய ஆட்சியிலும், அதற்கு முன்னர் நமது சொந்த நிலப்பிரபுத்துவ மன்னர்களின் கீழும் அடிமைப்பட்டிருந்தும் - கடந்த பதினெட்டு வருடகாலங்களாகத் தற்போதைய அரசமைப்பின் கீழ்ப்பாரபட்சங் காட்டப் பட்டும், எதிர்காலத்தைப் பற்றிப் பயந்து கொண்டேயிருந்த தமிழ் பேசும் மக்களுக்குப் புத்துயிரளித்து - உயர்ந்தவர்களாயும், பெரியவர்களாயும் அவர்கள் ஆக்கப்பட வேண்டியது அவசியம். அதுதான் நான் கருதும் உண்மையான நாட்டு நிர்மானம் ஆகும்.
தமிழ் பேசும் மக்களில் விசுவாசமும் நம்பிக்கையும் வைத்து - என் இதயம் நிறைந்த பிரார்த்தனையுடன் நான் ஒரு கவிஞனின் வார்த்தைகளை இங்கு கூறி முடிக்கிறேன்.
எய்தும் இவைகள்
இனிஆம் இனமொன்று வையம் இந்த
வரையும் அறியாத வண்ணம் எழுந்து
வளரும் அறிவொளிரும் கண்ணும் சுதந்திரத்தைக்
காதலிக்கும் ஆவியுமாய்
இந்தத் திருநாட்டில்? ܥܐ ண்டும் வெளிநாட்டில்?
பெறவேண்டும் - இங்கு
நிலை வேண்டும் N

Page 206
நீதி கோருபவன்
ஆயத்தமாக திரு. சி. மூ. இராசமாணிக் (1ஆவது மாநில மாநா(
வரவேற்புக் குழுத் தலைவர் அவர்களே! மாநாட்டுப் பிரதிநிதிகளே! சகோதர சகோதரிகளே!
Tெமது கட்சியின் சரித்திரத்தில் அதிமுக்கியமான ፴GUj கட்டத்தில் நடைபெறும் இப் பதினோராவது மாநில மாநாட்டின் தலைவராக - என்னை மீண்டும் தெரிவு செய்தமைக்குக் கட்சி உறுப்பினர்க் கும் தமிழ்பேசும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1961இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 7ஆவது மாநாட்டிற்கும், 1962இல் மன்னாரில் நடைபெற்ற 8ஆவது மாநாட்டிற்கும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு இரு முறை பணியாற்றிய என்னை, மூன்றாவது முறையாக இப் பொறுப்பைத் தாங்கும் வண்ணம் தெரிவுசெய்து, என்னையும் கிழக்கு மாகாணத் தமிழ் பேசும் மக்களையும் கெளரவித்தமைக்கு நான் விசேஷமாக நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
கட்சி ஆரம்பித்த காலம் தொடக்கம் கட்டுப்பாடாகக் கட்சிக்கு ஆதரவளித்த உடுவில் தொகுதியில் இம்மாநாடு நடை பெறுவது எல்லா வகையிலும் பொருத்தமானதே.
இலங்கையில் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாகத் தமிழரசு நடைபெற்ற சிறப்பு - யாழ்ப்பாணத்திற்கே உண்டு. அன்றியும், தமிழ் மக்கள் செறிந்து - தமிழ் மொழியையும் பண்பாட்டையும் சிறப்பாகக் காத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் 1961ஆம்ஆண்டு
நடைபெற்ற 7ஆவது மாநில மாநாட்டின் பின் நடந்த சம்பவங்களை இக்கட்டத்தில்

தான் நீதி வழங்க ருக்கவேண்டும் 5s), B.S.C. (Lond.) M.P. Gu560J
- 8-4-1969 - உடுவில்)
நினைவுகூருவது பொருத்தமாகும். மாநாடு முடித்த ஒருசில நாட்களின்பின் நாம் ஆரம்பித்த அறப்போர்- அரசாங்கத்தையே அயர்ச்சி கொள்ளச் செய்தது. இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தனிச்சிங்களத் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய சாத்வீகப் போராட்டம் அவசர கால சட்டத்தினால் அடக்கப்பட்டாலும், அன்றைய அரசாங்கமோ அதன் பின்பு வந்த அரசாங்கமோ திட்டமிட்டபடி தனிச் சிங்களத் திணிப்பை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடத்த முடியாமல் போனமைக்கு - நாம் நடத்திய போராட்டமே காரணமாகும்.
இவ்விருபதாம் நூற்றாண்டில் தமிழ் உலகு முழுவதும் மதிக்கும் முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளைப் பெற்றெடுத்த கிழக்கு மாகாணத்திலிருந்து வரும் நான் - 19ஆம் நூற்றாண்டில் தோன்றித் தமிழையும் சைவத்தையும் இலங்கையில் மாத்திரமல்ல - தமிழ் நாட்டிலும் வளர்த்த றுமுகநாவலர் அவதரித்த யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மாநாட்டில் தலைமை தாங்குவது - வடக்கிலங்கையிலும், கிழக்கிலங்கையிலும் வாழ் தமிழ் மக்களின் ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது என்றே நான் கருதுகிறேன். அன்றும் " இன்றும்
சென்ற மாநில மாநாடு கல்முனையில் நடைபெற்றபோதிருந்த அரசியல் சூழ்நிலைக்கும், இன்றிருக்கும் சூழ்நிலைக்கும் பாரதூரமான வித்தியாசம் உண்டு. கல்முனை மாநாட்டில் நாட்டின் முதலமைச்சர் கெளரவ டட்லி சேனநாயகா அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றியதும்; இன்றைய மாநாட்டில் ஆளும் கட்சியைச்

Page 207
1S
சேர்ந்த எவரையும் அழைக்காது எமது கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரம் தனித்துக் கலந்துகொள்வதும் குறிப்பிடத் தக்கது. 1965ஆம் ஆண்டு தொடக்கம் ஆளும் கட்சிக்கும் எமக்குமிடையில் உண்டாகிய உறவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் எடுத்துக்காட்டே இதுவாகும்.
10ஆவது மாநாட்டை அரசாங்கத்தின் ஒர் அங்கமாக நாம் இருந்து நடத்தினோம். இன்று அரசாங்கக் கட்சியிலிருந்து வெளியேறித் தனித்தியங்கும் கட்சியாக எமது மாநாடு நடைபெறுகிறது. அன்று - எமக்களித்த வாக்குறுதிப்படி தமிழ் மொழி சட்டவிதிகள் நிறைவேற்றப்பட்ட சூழ்நிலை யில், ஏனைய வாக்குறுதிகளும் அதிவிரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு கல்முனையில் கூடினோம். இன்று - இவ்வரசாங்கம் எம் பிரச்சினைகளைத் தீர்க்க இனி எதுவும் செய்யமாட்டாது என்ற நிச்சயத்தோடு கூடியிருக்கிறோம். எனவே, எமது கட்சியின் வரலாற்றில் மீண்டும் ஒரு திருப்பு முனையில் நிற்கும் இந்நேரத்தில், இனத்திற்குச் yFrful T60T வழியைக் காட்டவேண்டிய பெரும் பொறுப்பு இப்பதினோராவது மாநாட்டினதே. மூன்று கோரிக்கைகள்
எமது சென்ற மாநில மாநாட்டில் தேசிய அரசாங்கத்திடம் மூன்று முக்கியமான கோரிக்கைகள் விடுக்கப் பட்டன: 1966ஆம் ஆண்டு ஜனவரி 8ஆந் திகதி நிறைவேற்றப்பட்ட தமிழ் மொழி விசேட ஏற்பாடு" சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தவும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிர்வாகத்தைத் தமிழில் நடத்தவும் தக்க ஒழுங்குகள் செய்யப் படாமை குறித்துக் கவலை தெரிவித்து, தமிழ் பேசும் மக்கள் திருப்தியடையக் கூடியதாக அந்தச் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்து வதற்கு வேண்டிய நிர்வாக அமைப்பினை உடனே நிறுவும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டோம். ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் கழிந்தும், அண்மையில் வெளியிடப்பட்ட திறைசேரிச் சுற்றறிக்கை யொன்றைத் தவிர - அச்சட்டவிதிகளை அமுல் செய்வதற்கு நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லை.

6
இச் சட்டவிதிகளைப் பூரணமாக நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு - தமிழ் தெரிந்த அரசாங்க ஊழியர் பல்வேறு துறைகளில் பணிபுரியவேண்டியது அவசிய மாகும். ஐக்கிய தேசியக் கட்சியால் 1964ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் - சிங்கள, தமிழ் அரசாங்க ஊழியர் மற்ற மொழியிலும் தேர்ச்சிபெற வேண்டுமென்பதே எமது கொள்கையென்று பிரகடனப்படுத்தினார்கள். தமிழ் மொழிச் சட்டவிதிகள் அமுல் நடத்தப்பட வேண்டுமானால், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைப் பிரகடனத்திற் கூறப்பட்ட பிரகாரம் அரசாங்க ஊழியர் தமிழும் கற்கச் செய்யவேண்டியது அத்தியாவசியம். ஆனால், சிங்கள ஊழியர்களைப் பொறுத்த வரையில் தமது கொள்கையை அமுல் நடத்துவதற்கே இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி துணியவில்லை! புதிய தமிழ் ஊழியர்கள் சிங்களத்தில் தேர்ச்சிபெற வேண்டுமென்ற பண்டாரநாயக்கா அரசாங்கக்கொள்கையை அதிதீவிரமாக அமுல்நடத்தி, பல தமிழ் ஊழியர்களுக்கு வேலை நீக்க உத்தரவு கொடுத்திருக்கும் இந்த அரசாங்கம் - இவ்விடயத்தில் 1965 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மந்திரி சபைத் தீர்மானத்தை உள்ளடக்கிய திறைசேரிச் சுற்றறிக்கைகள் 700, 701 இரண்டையும் தானும் நியாயமாக அமுல் செய்யத் தவறி விட்டது. சிங்களத் தேர்ச்சிப் பரீட்சைகளின் தரத்தை உயர்த்தியும், சிங்களத் தேர்ச்சித் தேவையற்ற சிற்றுாழியர்களுக்கும் சமீபத்தில் சிங்களத் தேர்ச்சி நிபந்தனையை விதித்தும் - 1965இல் ஏற்கப்பட்ட மந்திரிசபை முடிவில் இருந்து இந்த அரசாங்கம் விலகிவிட்டது என்பதை நான் பகிரங்கமாகக் கூற விரும்புகிறேன்.
நடவடிக்கை இல்லை!
எமது கல்முனை மாநாட்டில், கிழக்கு மாகாணத்தில் சகல துறைகளிலும் நிறைவு பெற்ற ஒரு பல்கலைக்கழகமும் தமிழ் பேசும் மக்களுக்காக நிறுவப்பட வேண்டுமென்று நாம் கோரினோம். கெளரவ பிரதம மந்திரியும் கல்வி அமைச்சரும் திருகோண மலையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படு

Page 208
1s
மென்று எமக்கு உறுதியளித்தும், இதுவரை ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இத்தேசிய அரசாங்கத்தின் முதலாவது சிம்மாசனப் பிரசங்கத்திலிருந்து, மாவட்ட சபைகளை நிறுவி அதிகாரத்தைப் பரவலாக்குவது தமது கொள்கையென்று - ஒவ்வாரு சிம்மாசனப் பிரசங்கத்திலும் பிரகடனம் செய்துவந்தனர். இவ்வரசாங்கத் தை அமைக்க ஆதரவு கொடுப்பதற்கு எமது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது - இந்த மாவட்ட சபைக் கோரிக்கையாகும். மாவட்டசபை நிறுவுவதுபற்றிய தமது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குக் கெளரவ பிரதம மந்திரி அவர்களும், அரசாங்கமும் தம்மாலான நடவடிக்கை களை எடுத்தார்கள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆயினும், அவர்கள் இம்மசோதாவைத் தயாரிப்பதில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி, எதிர்ப்புச் சக்தி கள் திரண்டு மசோதாவை முறியடிப்பதற்கு வாய்ப்பளித்தனர் என்றே கூறவேண்டும். எதிர்க்கட்சிகளின் கொள்கையற்ற போக்கு
இந்தக்கட்டத்தில், எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட கொள்கையற்ற வாதத் தைப்பற்றி ஒரு வார்த்தை கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். பிரதேச சபைகள் அமைப்பதை - அரசியல் அரங்கில் தனது கொள்கையாக முதலில் பிரகடனப் படுத்தியவர் - காலம் சென்ற பிரதமர் பண்டாரநாயக்கா அவர்களே. அவருடைய கொள்கையை ஏற்று நடப்பதாகக் கூறும் பூனரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும், தமது ஆட்சிக்காலத்தில் இக்கொள்கையைத் தமது சிம்மாசனப் பிரசங்கத்தில் வெளியிட்டு - மாவட்டசபை மசோதாவைத் தயாரிப்பதற்கு ஒர் உத்தியோகத்தர் குழுவினையும் நியமித்தனர்: பூரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு, லங்கா சமசமாசக் கட்சியும் சேர்ந்து கூட்டாட்சி அமைத்தபின், முன்குறிப்பிட்ட உத்தியோகஸ்தர் தயாரித்த மசோதாவைப் பாராளுமன்றத்திற் சமர்ப்பிக்கப்போவதாகச் சிம்மாசனப் பிரசங்கத்திற் கூறினர்.

7
“1967ஆம் ஆண்டு ஆடி மாதத்தில், மாவட்டசபை மசோதாவைச் சமர்ப்பிப் பதில் தாமதம் ஏன்?" என்று கேட்ட லங்கா சமசமாசக் கட்சித் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா அவர்கள் - தாம் மாவட்டசபை அமைப்பதை நூற்றுக்கு நூறுவீதம் ஆதரிப்பதாகப் பாராளு மன்றத்திற் குறிப்பிட்டார். ஆனால் 1968ஆம் ஆண்டு மசோதா தயாரான நேரத்தில் - தமது கொள்கைகளை எல்லாம் காற்றிற் பறக்கவிட்டுச் சிங்கள மக்களின் வகுப்புவெறி உணர்ச்சியைத் தூண்டி, அம் மசோதாவைச் சமர்ப்பிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்களின் போக்கை - அரசியலிற் கண்ணியத்தை விரும்பும் எவரும் கண்டிக்கவே செய்வர். இவ்விடயத்தில், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் மற்றக்கட்சியான - அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் நடந்து கொண்டவிதம் வேதனை தருவதாகும். தமிழ் மக்களைச் சிங்கள ஆட்சியின் பிடியிலிருந்து ஒரு சிறிதாவது விடுவிக்கக்கூடிய மாவட்ட சபை மசோதாவை - ஒரு தமிழ்க் கட்சியே எதிர்த்த விபரீதமான செயலை - நாடும், நாமும் கண்டு பிரமித்தோம்!
இதுவரை நான் கூறியதிலிருந்து, அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் நமக்கு நன்மை தரும் காரியங்களைச் செய்யத் தயங்குவதையும்; சிங்கள மக்களை ஒரு சிறிதுதானும் பாதிக்கக்கூடிய எந்தக் காரியத்தையும் செய்யப் பின் நிற்பதையும் கண்டோம். அதே நேரத்தில் சிங்கள ஊழியர்களின் தொழிற்சங்கங்களும், தீவிர மனப்பான்மைகொண்ட புத்த பிக்குமார் களும், வகுப்பு வெறி கொண்ட சிங்கள அரசியல்வாதிகளும் வற்புறுத்தியவுடன் - தமிழ் மக்களுக்கு இன்னல் விளைவிக்கக் கூடிய எந்தக் காரியத்தையும் தடையின்றிச் செய்வதையும் காண்கின்றோம்.
இதற்குக் காரணம், இந் நாட்டில் சிங்களமக்களை ஆளும் இனமாகவும் - தமிழ்பேசும் இனத்தை ஆளப்படும் இனமாகவும் ஆக்கிவைத்திருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் அமைப்பே என்பது எமது கட்சியின் தீர்க்கமான முடிவாகும்.

Page 209
ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் எந்த நாட்டிலும், இனவாரிப் பெரும்பான்மையின் கையில் அரசியல் அதிகாரத்தை ஒப்படைப்பது - சிறுபான்மை யினத்தின் அழிவிற்கே வழிவகுக்கும். கடந்த 21 ஆண்டுகளாக இலங்கையில் நடந்த சம்பவங்கள் இவ்வுண்மையை ஊர்ஜிதம் செய்கின்றன.
சமீப காலத்தில், மக்களுடைய கலாச்சாரத் தனித்தன்மையைக்கூட அழிப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன! சில வாரங்களின் முன் காலம் சென்ற மகாநாயக்க தேரோ அவர்கள் - தமிழ் மக்களையெல்லாம் தமது பெயர் களைச் சிங்களப் பெயர்களாக மாற்றும்படி கேட்டுக் கொண்டார். இன்னோர் பிக்குமார் சங்கத் தலைவர், வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களைக் கொண்டுசென்று குடியேற்ற வேண்டுமென்று கூறினார். நவின கலாசார சாதனங்களில் - திரைப்படங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அண்மையில் அரசாங்கம் மேற்கொண்டதமிழ்ப்படப் பிரதிகுறைப்பு நடவடிக்கை - தமிழ் மக்களுடைய கலாசாரத் தனித்துவத்தை அழிக்கும் திட்டத்தின் ஓர் அம்சமாகவே எனக்கு தோற்றுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கைவாழ் தமிழினம் ஒரு தனித் தேசிய இனம் என்பதையும், எமது தனித்துவத்தை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டுமென்பதை யும் நான் கூறிவைக்க விரும்புகிறேன். இது சம்பந்தமாக 1961ஆம்ஆண்டு யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற 7ஆவது மாநில மாநாட்டில் நான் குறிப்பிட்டதை நினைவு கூருவது பொருத்தமாகும். "எவ்வகையில் பார்த்தாலும் நாம் ஒருதேசிய இனம் என்பதற்கு ஐயம் இல்லை. நாம் ஒரு திட்டவட்டமான எல்லையுள்ள பிரதேசத் தைத் தாயகமாகக் கொண்டிருக்கிறோம். ஒரு பொது மொழியைப் பேசுகிறோம். கல்தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டு வளர்ந்துவந்த ஒரு தனிப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எமது சொந்தமாகக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாவற்றுக்

98.
கும் மேலாக ஒரு தேசிய இனத்திற்கு இன்றியமையாத நாமொன்று' என்னும் உணர்ச்சியைத் தமிழ்ப்பேசும் மக்களாகிய நாம் எல்லோரும் பெற்றிருக்கிறோம். இந்நாட்டின் எப்பக்கத்தில் வாழ்ந்தாலும், என்னையும் உங்கள் எல்லோரையும் ஒன்றாகப் பிணைப்பது இவ்வுணர்ச்சியே யாகும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதும், அதேபோலத் தென்னிலங்கைவாழ் சிங்கள
சகோதரர்களும் ஒரு தனித் தேசிய இனம் என்பதும் என் உள்ளத்திற் தோன்றும் ஒரு தெளிவான கருத்தாகும்." இலங்கையின் சரித்திரத்தில், மகாவம்ச காலம் தொடக்கம் இவ்விரு தேசிய இனங்களின் போராட்டம் முக்கிய இடத்தைப் பெற்று வந்திருக்கிறது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக அழிக்க முடியாத எமது தனித்துவத்தை " இன்று தாம் அழித்துவிடலாம் என்று சிங்கள சகோதரர்கள் நினைப்பது வெறும் பகற் கனவாகவே முடியும்.
அன்றே சொன்னார் தந்தை
ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் நாடுகளில், அவ்வினங்களுக்கிடையே மோதல் ஏற்படுவது இயற்கை. தொகையில் கூடிய இனம் குறைந்த இனத்தை விழுங்க முற்பட்டால், அச்சிறிய இனம் தன்னைக் காத்துக் கொள்ளத்தவறினால் அழிந்தொழிய வேண்டிய நிலையேற்படும். பல நூற்றாண்டு களாகப் பெரும்பான்மை ஆங்கில மக்களுடைய ஆட்சியை ஏற்று வாழ்ந்த ஸ்கொச், உவெல்ஸ் மக்கள்கூட - சமீப காலத்தில் சுயாட்சி கோரி இயக்கங்களை ஆரம்பித்து, அவை வலுப்பெற்று வருவதை நாம் காண்கின்றோம். பல இனங்கள் வாழும் நாட்டில் இனப்பூசலைத் தடுக்கவேண்டு மாயின், ஒவ்வொரு இனத்திற்கும் சுயாதீனம் வழங்கக்கூடிய ஒரு அரசியல் அமைப்பு ஏற்பட வேண்டும்.
பிரதேச ரீதியாகப் பிரிக்கக்கூடிய வகையில் சிறுபான்மையினம் வாழுமாயின், அப்பிரதேசங்களுக்குச் சுயாட்சி வழங்கக் கூடிய சமஷ்டி அமைப்பின் மூலமே - உலகிலுள்ள மற்ற நாடுகளில் இவ்வினப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கிறது. இந்த

Page 210
-1
அரசியல் பரிகாரம் கையாளப்படாத நாடுகளில், சிறுபான்மையினம் பெரும் பான்மையினத் தினால் விழுங்கப்பட்டு அழியும்; அல்லது அந்நாடு பிளவுபடும். சமீபத்திற்கூட, செக்கோசிலவாக்கிய நாட்டில் சமஷ்டி அரசியல் அமைப்பை ஏற்று, அங்கு வாழும் இரு இனங்களும் சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழி வகுத்திருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், இருபது ஆண்டுகளுக்கு முன் எமது கட்சியின் ஆரம்ப் மாநாட்டில் தந்தை செல்வ நாயகம் ஆற்றிய தலைமைப் பேருரையிலிருந்து ஒரு கருத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
"நாம் கோருவதும் இதுதான். ஒரு சுயாட்சித் தமிழ் மாகாணமும் கயாட்சிச் சிங்கள மாகாணமும் அமைத்து, இரண்டிற்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கமுள்ள சமஷ்டி அரசியல் இலங்கை யில் ஏற்பட வேண்டும். தமிழ் பேசும் தேசிய இனம் - பெரிய தேசிய இனத்தால் விழுங்கப் பட்டு அழியாதிருக்கவேண்டுமேயானால், இவ்விரு சமஷ்டி ஏற்படுவது அவசியமா யிருக்கிறது.
"சமஷ்டி ஆட்சியில் ஒருவரும் நஷ்ட மடையப் போவதில்லை. நிச்சயமாகச் சிங்கள மக்கள் B si l-D Sol-ul மாட்டார்கள். ஏனென்றால், இது பெரும்பான்மை யோருடைய பிரதி நிதித்துவத்தைக் குறைத்து - சிறுபான்மையோருக்குக் கூடுதலான பிரதிநிதித்துவம் அளிக்கும் திட்டத்தைப் போன்றதன்று. ஆதலால், சமஷ்டி அரசியல் எல்லோரும் விரும்பவேண்டிய (p(5 இலட்சியமாகும்.”
1949ஆம் ஆண்டு தந்தை செல்வ நாயகம் அவர்கள் கூறிய வார்த்தைகள் - சொல்லுக்குச் சொல் இன்றும் சரியாக இருப்பதை நாம் காணலாம். இந்த ஒற்றை ஆட்சியின் கீழ் நமது உரிமைகள் பாதிக்கப்படுவது மாத்திரமன்றி - பொருளாதாரத் துறையிலும், கல்வித் துறையிலும், கலாசாரத் துறையிலும் நாம் பின்தள்ளப்பட்டு வருகின்றோம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

99.
பொருளாதாரரீதியில் புறக்கணிப்பு
வெளிநாட்டு உதவியுடனும், உலக வங்கிபோன்ற சர்வதேச நிறுவனங்களின் உதவியுடனும் மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் சமீபகாலத்தில் மேற்கொள்ளப் பட்டன. இவற்றில் ஒன்றுதானும் வடக்குக் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யவோ - தமிழ் பேசும் மக்களுக்கு நன்மைதரக்கூடிய வகையாகவோ அமையவில்லை.
நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிக் கொண்டிருப்பது கிழக்கு மாகாணம். உணவு உற்பத்தித்திட்டத்தின் கீழ்ப் பல கோடி ரூபாவைச் செலவு செய்யும் இந்த அரசாங்கம் - கிழக்கு மாகாணப் போக்கு வரத்து வசதிகளையும் அபிவிருத்திசெய்து, தமிழ் பேசும் விவசாயிகள் இவ்வுண வுற்பத்தித் திட்டத்தில் பூரண வசதியோடு பங்குபெற வாய்ப்பளிக்கத் தவறிவிட்டது. எமது பிரதேசங்களின் நீர்ப்பாசனத் திட்டங்கள் போதிய கவனிப்பின்றிக் கிடக்கின்றன. தமிழ் பேசும்மக்கள் குடியேற்றப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் கூட அரைகுறையாக அனாதரவாகக் கிடக்கின்றன. வடக்கே - காங்கேசன்துறைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுமென்று ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுவரும் உறுதிமொழி - ஏட்டுச்சுரைக்காயாகவே இருக்கின்றது. தென்னிலங்கையில் அரசாங்கம் பல கைத்தொழிற்சாலைகளை ஆரம்பித்ததாயினும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஒன்றுதானும் நிறுவப்பட வில்லை.
பொருளாதாரத் துறையில் நான் மேலே குறிப்பிட்ட அதே புறக்கணிப்பு கல்வித் துறையில் இன்னும் மோசமாகக் கையாளப்பட்டு வருகிறது. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டபின், முந்திய அரசாங்கத்தினால் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகள் நீக்கப்படுமென்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பெளத்த சிங்களப் பெரும்பான்மையோரின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய அஞ்சும் அரசாங்கம் - சிறுபான்மை மக்களின் நம்பிக்கையில் மண்ணைப் போட்டுவிட்டது என்றே கூறவேண்டும்.

Page 211
-2 மாற்றாந்தாய் மனப்பான்மை
தமிழ் பேசும் மக்களின் பல்கலைக்கழகக் கோரிக்கை தட்டிக் கழிக்கப்பட்டதை ஏற்கெனவே குறிப் பிட்டேன். அதே மனப்பான்மை பாட சாலைக் கட்டிடங்கள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், தொழில்நுட்பக் கல்வி வசதிகள், நுண்கலைக் கல்வி ஆகிய சகல துறை களிலும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றதை நாம் காண்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கனிஷ்ட பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டுமென்ற உயர்கல்விச் சபையின் சிபார்சு - கல்வி அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டிருப்ப தையும், அங்கு ஒர் கனிஷ்ட தொழில்நுட்பக் கல்லூரி நிறுவுவதாக அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை யும் நான் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி வசதிகள் - மாற்றாந்தாய் மனப்பான்மையோடு உதாசீனம் செய்யப்பட்டுவருகின்றது.
தமிழ்க் கலாசார வளர்ச்சிக்கு அத்தியா வசியம் தேவையான வானொலி நிலையத் திற்குப் பரந்தனில் போடப்பட்ட அத்திவாரக்கல் - இன்னும் கல்லாகவே கிடக் கின்றது! சுருங்கக்கூறின், அரசாங்கத்திடம் பாகுபாடற்ற ஒரு அபிவிருத்தித் திட்டம் இல்லையென்பதுதான் உண்மை. இவையெல்லாம், இன்றைய ஒற்றையாட்சி அமைப்பின்கீழ் நாம் எப்படியெல்லாம் உரிமைகளையும் இழந்து அழிவுப்பாதையில் தள்ளப்படுகிறோம் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. இதை நாம் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும். இந்த அரசியல் அமைப்பை மாற்றியே தீரவேண்டும். எம்மை நாம் ஆளக்கூடிய நிலையேற் பட்டாலன்றி - எமக்கு விமோசனம் இல்லை. இந்த இலக்கையடைவதற்கு வழியென்ன என்பதை ஆராய்ந்து தமிழினத்திற்குக் காட்ட வேண்டியது - இம்மாநாட்டின் கடமையாகும்.
நாம்பெற்ற நன்மைகள்!
எமது கட்சியின் சரித்திரத்தில், இனத்தின் விடுதலையைக் காண்பதற்குப்

0.
பல்வேறு வழிளைக் கையாண்டோம். ஆரம்பகாலம் தொடக்கம் எதிர்க்கட்சியிலி ருந்து அரசாங்கத்தை எதிர்த்து வாதாடியும் போராடியும் வந்த நாம் - 1965ஆம்ஆண்டு தேர்தலின் பின்பு, அரசாங்கத்தில் ஓர் அங்கமாகச் சேர்ந்தோம். முன்பு கையாண்ட போராட்ட வழிகளினால் சிங்களத் திணிப்புப் போன்ற சில ஆபத்துக்களை ஒரளவுக்குத் தடுத்தோம். கடந்த நாலு ஆண்டுகளாக நாம் கையாண்ட ஒத்துழைப்பு வழியினால் நாம் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தையும் பெறாவிட்டாலும், ஒருசில உரிமைகளை நிலைநாட்டியிருக்கின்றோம் என்பதை இங்கு குறிப்பிடாமல் விடமுடியாது.
வடக்குக் கிழக்கில் - சம அந்தஸ்து
சென்ற மாதம் வெளியிடப்பட்ட உத்தியோகமொழி பற்றிய திறைசேரிச் சுற்றறிக்கை - சட்டத்தின்கீழ் இன்றுள்ள உத்தியோக மொழிக் கொள்கையைத் தெளிவுபடுத்துகின்றது: 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிங்களம் மாத்திரம் சட்டத்தில் இருந்து, இன்றைய கொள்கை எவ்வளவோ மாற்றங்களைக் கண்டுவிட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இத்திறைசேரிச் சுற்றறிக்கையின் படி, வடக்குக்கிழக்கு மாகாணங்களில் சகல
நிர்வாக வேலைகளுக்கும் தமிழும் கட்டாயமாக உபயோகிக்கப்படவேண்டும். இம் மாகாணங்களில் அரசாங்க
அலுவலகங்களில் வைக்கப்படும் பதிவுகள், குறிப்புக்கள் அனைத்தும் தமிழிலும் வைக்கப்படவேண்டும். சுருங்கக் கூறுவதாக இருந்தால், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சிங்களத்திற்கும், தமிழுக்கும் ஒரு சமமான அந்தஸ்து - சட்ட பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது, நாடு முழுவதிலும் தமிழ் பேசும் மக்களோடு அரசாங்கம் நடத்தும் கடிதப் போக்குவரத்து - தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று விதிக்கப் பட்டிருக்கின்றது. அரசாங்கப்பிரசுரங்கள், விளம்பரங்கள், பத்திரங்கள், பெயர்ப்பலகை கள் எல்லாம் நாடு முழுவதும் தமிழிலும் இடம்பெற வேண்டுமென்று - இன்று சட்டம் கூறுகின்றது. நமது கோரிக்கையான

Page 212
2
- 'சிங்களத்திற்கும் தமிழுக்கும் நாடு முழுவதும் அந்தஸ்து' என்பது இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், தமிழினுடைய அந்தஸ்து - நான் மேலே குறிப்பிட்ட விதத்தில் பெருமளவு முன்னேறியிருக் கின்றது என்பதில் சந்தேகமில்லை. நான்கு ஆண்டுகளில் - நாம் கண்ட வெற்றி
நாம் எதிர்பார்த்ததுபோல் மாவட்ட சபைகளை நிறுவுவதிலும் வெற்றி கண்டிருப்போமானால் - தமிழினத்தின் நிலை எவ்வளவோ உயர்ந்திருக்கும். இதை எதிர்க்கட்சிகளும், தமிழ்க் காங்கிரசும் நிறைவேற்றாது தடுத்து விட்டாலும் - நாம் எமது இலக்கை நோக்கி இடையறாது முயன்றுகொண்டே இருக்கவேண்டும்.
இந்தச் சிறிய அளவிலாவது எமது உரிமையை நிலைநாட்டுவதிலும்; எமது பிரதேசத்தைப் பாதுகாப்பதிலும்; எமது இனத்தைப் பாதிக்கும் பல ஆபத்தான சட்டங்களை விலக்குவதிலும்; கடந்த நான்கு ஆண்டுகளிலும் நாம் வெற்றி கண்டோம். ஆனால், தேசிய அரசாங்கத்தை அமைத்த ஆரம்பகாலத்தில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை மதித்து நடந்து வந்த அரசாங்கம் - சமீப காலத்தில் அவற்றை மோசமாகப் புறக்கணிக்கத் தலைப்பட்டு விட்டது.
புனித நகர்ப் பிரச்சினை
இந்நாட்டின் இந்து மக்களின் நீண்ட நாட் கோரிக்கை - கோணேஸ்வரர் ஆலயப் பகுதி புனித நகராகப்பிரகடனம் செய்யப்படவேண்டுமென்பது. அதை நிறைவேற்ற, தமிழ் அமைச்சர் திரு.எம். திருச்செல்வம் சில நடவடிக்கைகள் எடுத்தார். புத்தகுரு ஒருவர் ஆட்சேபித்த வுடன், பிரதமர் தலையிட்டு அவற்றை நிறுத்தினார். அதனால் திரு. திருச்செல்வம் அமைச்சரவையில் இருந்தும் - நமது கட்சி அரசாங்கக் கட்சிப் பாராளுமன்றக் குழுவி லிருந்தும் வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. நான் முன்பு குறிப்பிட்ட பொருளாதார, கல்வி,கலாசாரத் துறைகளில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளிலும் -

1.
இதே மனப்பான்மையே மேலோங்கி
நிற்பதைக்காண்கிறோம்.
ஆட்சியைமாற்றவேண்டிய கட்டம் நெருங்குகிறது
த மி ழ் ந |ா ட் டி ல் தி ர |ா வி ட முன்னேற்றக்கழகம் அடைந்த வெற்றியை ஒரு பூச்சாண்டியாகக் காட்டி, சிங்கள மக்கள் மத்தியில் தீவிர வகுப்பு வெறியைத் தூண்டும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.தமிழ்ப் படங்களைக் குறைத்தும், தமிழ்க்கலாச்சார வளர்ச்சியை இன்னும் பல வழிகளில் நசுக்கியும், தமிழினத்தை அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. எந்தக் கட்சி அரசாங்கத்தில் இருந்தாலும், இதே போக்கும் இதே நிலையுமே நிலவுவதை நாம் கடந்த இருபத்தொரு ஆண்டுகளாகக் கண்டுகொண்டு வருகிறோம். அதற்குக் காரணம், இன்றைய அரசியல் அமைப்பில் ஆட்சி பீடத்தில் அமரும் எந்த அரசாங்கமும் - பெரும்பான்மைச் சிங்கள மக்களுடைய அரசாங்கமாகவே இருக்கும். அந்நிலையை மாற்ற, நாம் தீவிரமாகப் போராடவேண்டிய கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்றே நான் கருதுகிறேன்.
தீண்டாமையை ஒழியுங்கள்!
'இந்த அரசாங்கம் எமக்களித்த வாக்குறுதிகளை இனி நிறைவேற்ற மாட்டாது என்பது நிச்சயமென்று எனது உரையின் ஆரம்பக் கட்டத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். இந்தச் சூழ்நிலையில், நாம் தொடர்ந்து இவ்வரசாங்கத்தை ஆதரிப்பதா - அல்லது கடந்த காலத்தில் இயங்கியது போல எதிர்ப்பியக்கமாக மீண்டும் மாறுவதா என்பதை - நாளை எமது அரசியல் மாநாடுதான் தீர்மானிக்க வேண்டும்.
தனது உரிமைக்காகப் போராடும் எந்த இனமும், தமக்குள் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமைப்பட வேண்டியது அவசியம் பிரதேசம், மதம், சாதி ஆகியவற்றையிட்டுத் தமிழ்ப்பேகம் மக்கள் மத்தியில் உள்ள வேற்றுமைகளைக்களைந்து,

Page 213
一{2
இனத்தை ஒன்றுபடுத்துவது எமது கட்சியின் அடிப்படைக்கொள்கையாகும். பெரும்பான் மை இனத்திடமிருந்து நீதி கோரியிருக்கும் நாம் - எமது சகோதரர்களில் ஒரு பகுதியினரைச் சாதியின் பெயரால் ஒதுக்கிவைத்து, அவர்களுக்கு நீதி வழங்க மறுப்பதாயின் - நாம் எமது உரிமையை ஒருபோதும் பெற முடியாது. நீதி கோருபவன் - தான் நீதி வழங்க ஆயத்தமாக இருக்கவேண்டும்.
தீண்டாமையென்ற நோய் இன்று தமிழினத்தை மிகவும் பலவீனப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திச் சில தீய சக்திகள் தமிழ்மக்களிடையே புகுந்து, பலாத்காரத் தைத் தூண்டி, இரத்தக்களரியை ஏற்டுத்த முனைந்து நிற்கின்றன. தீண்டாமையின் கோரப்பிடியிலிருந்து பெருமளவில் தப்பி நிற்கின்ற கிழக்கு மாகாணத்திலிருந்து வருபவன் என்ற முறையில், வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன். எமது ஒற்றுமையைக் குலைக்கின்ற இந்தத் தீண்டாமையைக் களைந்து, எல்லாப் பொதுத்தாபனங் களிலும், உணவு விடுதிகள், ஆலயங்கள் ஆகியவற்றிலும் தமிழ் மக்கள் எல்லோரும் BPLD DITS, நிற்கக்கூடிய நிலையை அதிவிரைவில் ஏற்படுத்தி, தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தி, மீண்டும் உரிமைப் பாதையிற் செல்லக்கூடிய இனமாகப் பக்குவப்படுத்துமாறு வேண்டுகிறேன்.
ஆண்களுக்கு மட்டுந்தான் அரசியலா?
எனது உரையை முடிக்குமுன், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்பகிறேன்.
நாடென்ன செய்தது நமக்கு - 6ெ ܥܐ ام நீயென்ன செய்தாய் அதற்கு? இல் ΝΥ --

2
எப்பிரச்சினையை எடுத்தாலும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று எம்மைக் கேள்வி கேட்பவர் பலர். 'ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைவர்களுமே தமிழினத்தின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் தீர்க்க வேண்டியவர்கள்’ என்ற தவறான மனப்பான்மையை இது காட்டுகிறது. "நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்குமுன், "நான் என்ன செய்தேன்?" என்று ஒவ்வொருவரும் தன் மனச்சாட்சியைக் கேட்கவேண்டும். இனத்தின் உரிமையைப் பெறுவதற்கு, ஒவ்வொரு தமிழ் பேசும் மகனையும் - மகளையும் தன் பங்கைச் செய்ய வரும்படி அழைக்கின்றேன். கடந்த காலங்களில் நாம் நடத்திய இயக்கங்களிலும் போராட்டங்களிலும் - ஆண்களோடு பெண்களும் ஆயிரமாயிரம் கலந்து கொண்டார்கள். ஆண்களுக்கு மட்டுந்தான் அரசியல் என்று கருதாது - அண்ணல் காந்தி கூறிய நெறியில், தம் பிள்ளைகளின் விடுதலைக்கு உழைக்கப் பெண்களையும் பங்கு கொள்ளுமாறு அழைக்கின்றேன். கஷ்டம் மிகுந்த எதிர்காலம்
கஷ்டம் மிகுந்த காலம் எம்மை எதிர்நோக்கியிருக்கின்றது. இந்த நேரத்தில், நாம் கட்டி வளர்த்த ஒற்றுமையைச் சிதைய விடாது மேலும் பலப்படுத்தி, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற வகையில் இனத்தை வளம்படுத்தி, ஒரு புத்துயிர் பெற்ற தமிழினத்தை - உரிமை பெற்றதமிழகத்தைக் காண்போம்வாரீர் என்று அழைத்து, விடைபெற்றுக் கொள்கின்றேன்.
வாழ்க தமிழ் வெல்க தமிழ் அரசு!
க் கேள்விகள் கேட்பது தெற்கு? ܥܐ 4ر த உணர்ந்தால் நன்மை உனக்கு
NYr

Page 214
சிங்களவர் முழுமைய செந்தமிழர் முழுமைய திரு. சி. மூ. இராசமாணிக்கம் சிறப்பு மாநாடு - 30
வரவேற்புக் குழுத் தலைவர் அவர்களே! மாநாட்டுப் பிரதிநிதிகளே! சகோதர சகோதரிகளே!
ந் நாட்டை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்வதற்கு எல்லா ஏற்பாடு களும் பூர்த்தியாகி, g2(5 புதிய அரசியற்றிட்டமும் தயாரிக்கப்பட்டிருக் கின்ற சூழ்நிலையில், உங்களை ஓர் சிறப்பு மாகாநாட்டிற்கு அழைத்திருக்கின்றோம். ஏனைய மாநில மகாநாடுகளைப் போலன்றி, இச்சிறப்பு மகாநாடு இப்புதிய அரசியலமைப்பையும் அதன்கீழ்த் தமிழ் மக்களுடைய நிலையையும் ஆராய்ந்து, தமிழினம் தன்மானத்தோடு வாழ்வதற்கு ஒரு வழியைக் காட்டுமாறு அழைக்கப் பட்டிருக்கிறது. வழிகாட்டும் தீர்மானத்தை எடுப்பீர்!
1961ஆம் ஆண்டில் இதே மண்டபத்தில், எமது கட்சியின் 7ஆவது மாநில மகாநாட்டிற்குத் தலைமை தாங்கும் பேறு எனக்குக் கிடைத்திருந்தது. தனிச் சிங்களத் திணிப்பை எதிர் நோக்கியிருந்த தமிழினத்திற்கு- சத்தியாக்கிரகப் போராட்டப் பாதையை அதே மகாநாடு காட்டியது. அம்மகாநாட்டைத் தொடர்ந்து, வடக்குக் கிழக்கு மாகாணங்களின் ஐந்து தலை நகரங்களிலும் நாம் ஆரம்பித்த அறப்போர் AW ஆட்சியாளரைத் திணறவைத்ததென்பது சரித்திரத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவமாகும். அதன்பின்பு, கடந்த 11 ஆண்டுகளாக எமதியக்கம் பல்வேறு ஒத்துழைப்பு முறை

ாகத் தமதுரிமை பெற
அடிமையாவதா?
அவர்கள் ஆற்றிய பேருரை
1-72 - யாழ்ப்பாணம்)
களையும் கையாண்டு, நாம் இழந்த உரிமைகளைப்பெற முயன்றது. இன்று, 1961இல் நாம் எதிர்நோக்கிய ஆபத்திலும் பார்க்கப் பன்மடங்கு பாரதூரமான மாற்றங்கள் நம்மை எதிர் நோக்கியிருக்கும் கட்டத்தில், நாம் இங்கு கூடியிருக்கின்றோம். எனவே இச்சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை மனதிற் கொண்டு, வரப்போகும் சந்ததிக் கெல்லாம் வழிகாட்டக்கூடிய ஒரு தீர்மானத்தை நீங்கள் எடுப்பீர்களென்று நம்புகிறேன்.
புதிய அரசியலமைப்பு எவ்வாறிருக்கவேண்டும்?
1947ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இன்றைய சோல்பரி ஒற்றையாட்சித் திட்டத்தை, எமது கட்சி ஆரம்பத்தி லிருந்தே நாம் நிராகரித்தது. இவ்வரசிய லமைப்பை மாற்றவேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு எழுந்த இயக்கமே - இலங்கைத் தமிழரசுக் கட்சி. எனவே, இன்றைய அரசியலமைப்பு முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி நாம் சிறிதும் கவலைகொள்ளத் தேவையில்லை.
1970ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மக்கள் தமக்களித்த கட்டளைப் பிரகாரமே - ஒரு சோஷலிஸக் குடியரசை அமைப்பதற்கு அரசியல் நிர்ணயசபையை அமைத்திருப்பதாக ஆட்சியாளர் கூறினர்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தமக்கு ஓர் அரசியற்றிட்டத்தை ஆக்கும் அதிகாரத்தை - அவர்கள் இவ்வரசாங்கத் திற்கு அளிக்கவில்லை என்பதை நான் திடமாகக் கூறவிரும்புகிறேன்.

Page 215
2
கடந்த பொதுத் தேர்தலில், தமிழ்த் தொகுதிகளில் ஐக்கிய முன்னணி வேட்பாளர் எவரும் வெற்றி பெறாதது மாத்திரமன்றி, இரண்டொருவரைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் தமது கட்டுப்பணத்தை இழக்கும் வகையில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். எனவே சிங்கள மக்களால் அளிக்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டே - ஆட்சியாளர் புதிய அரசிய லமைப்பைத் தயாரிக்க முற்பட்டனர் என்பது தெளிவாகின்றது.
இவ்வரசாங்கத்திற்கு ஒரேயொரு தேர்தலி ல் சிங்கள மக்கள் அளித்த அதிகாரத்திற்கு மாறாக - 1956ஆம் ஆண்டு தொடக்கம் அடுத்து 5 பொதுத் தேர்தல்களில், இவ்வொற்றையாட்சி அமைப்பை மாற்றி - ஓர் இணைப்பாட்சி அரசியலமைப்பை ஏற்படுத்துமாறு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். இவ்வைந்து பொதுத் தேர்தல்களிலும், "ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் ஓர் அங்கமாக - ஓர் சுயாட்சித் தமிழரசு நிறுவப்படவேண்டு மென்பதே" தமிழ் மக்கள் அளித்த தீர்ப்பாகும். இவ்வைந்து தேர்தல்களிலும் மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட தமிழ்த் தொகுதிகளில் - இக் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். புதிய அரசியலமைப்பு இந்நாட்டு மக்கள் எல்லோருடைய அபிலாஷையையும் பூர்த்திசெய்வதாயிருந்தால் 15 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் இடையறாது விடுத்துவரும் இக்கோரிக்கையை உள்ளடக்கியதாகவே இருக்கவேண்டும்.
சமஷ்டியில் சுயாதீனம்
சமஷ்டிக் கோரிக்கை உட்பட்ட அரசியலமைப்புப் பற்றிய எல்லாக் கருத்துக்களும் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படுமென்ற உறுதிமொழியின் பேரில், அரசியல் நிர்ணய சபையிற் கலந்து கொள்ளுமாறு பிரதமர் விடுத்த அழைப்பை யேற்று எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் நிர்ணய சபையின் ஆரம்பக் கூட்டங்களிற் கலந்து

04H
கொண்டனர். இக்கட்டத்தில், அரசியல் நிர்ணய சபைக்கு நாம் சமர்ப்பித்த கோரிக்கையையும், அரசியற்றிட்டத்தையும் சிறிது ஆராய்வது அவசியமாகிறது.
அ.நி. சபைக்குச் சமர்ப்பித்த பொதுநிலை அறிக்கையின் சாராம்சம்
ஐரோப்பியர் 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்நாட்டு மண்ணிற் காலடி வைத்தபோது, தமிழ் மக்கள் தமக்கென ஒரு அரசு உடையோராய் உரிமையோடு வாழ்ந்தனர். போர்த்துக்கேயரும், ஒல்லாந் தரும், ஆங்கிலேயரும் படைவலிமையால் தமிழ்ப்பிரதேசங்களை வெற்றி கொண்ட உரிமைபற்றியே எம்மை ஆண்டு வந்தனர். இலங்கையை ஒரு குடியரசாக்கி, அந்நிய ஏகாதிபத்தியத்தின் இறுதிச் சின்னமும் அகற்றப்படுகின்ற இந்நேரத்தில், நாம் மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் போரிலே இழந்துவிட்ட இறைமை மிக்க சுதந்திரத்தை மீள அளிக்குமாறு கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு, பிரித்தானிய ஆட்சியாளர், நிர்வாக வசதிக்காகத் தமிழ் இராச்சியத்தின் பிரதேசங்களைச் சிங்கள இராச்சியங்களின் பிரதேசங்களோடு இணைத்து விட்ட காரணத்தினால், தமிழ் இறைமையை அழித்துவிட முடியாது. தமிழர்கள் - தமது சுதந்திரமான இறைமையுள்ள தமிழரசை மீள நிறுவுமாறு கோருதற்கு உரித்துடையர் ஆயினும், இலங்கையில் வாழும் சிங்களவர்களுடனும் ஏனைய மக்களுடனும் முழுமையான சமத்துவ அடிப்படையில் ஒரு சமஷ்டிக் கூட்டரசின் கீழ் ஐக்கியப்படுவதற்கான தமது தீர்மானத்தை - ஜனநாயக ரீதியில் தமிழ் மக்கள் காட்டியுள்ளார்கள். வெளிநாட்டார் கைப்பற்றுதற்கு முன்பிருந்த நிலைக்கு - அதாவது தமிழ் மக்களின் முழுமையான சுதந்திர இறைமைக்கு மாற்றுத் திட்டமான ஒரு சமரச இணக்கமாகத் தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய குறைந்த பட்சமான ஒரு திட்டம் - சமஷ்டி அரசியலமைப்பின் கீழ்த் தமது சுயாதீனத்தை நிலைநிறுத்துவதே ஆகும்;

Page 216
-2
பூரண சமதர்ம பொருளாதார அமைப்பு வேண்டும்
அரசியல் நிர்ணய சபைக்கு நாம் சமர்ப்பித்த பொதுநிலை அறிக்கையின் சாரத்தையே மேலே கொடுத்திருக்கின்றேன். இப்பொதுநிலை அறிக்கையோடு, ஒரு மாதிரி அரசியல் திட்டத்தையும் நாம் சமர்ப்பித்தோம். நாம் சமர்ப்பித்த மாதிரி அரசியற்றிட்டத்தின் &M UITLO&Ls):
இந்நாட்டில்,
தமிழ் மக்களின் ஒரு சாரார் நாடற்றவர்களாகவும், ஏனையோர் சந்தேகப் பிரஜைகளாகவும் ஆக்கப்பட்டிருக்கும் இன்றைய குடியுரிமைச் சட்டங்களுக்குப் பதிலாக - குடியுரிமைக்குரிய யோக்கியாம் சங்கள் அரசியல் திட்டத்திலேயே இடம்பெற வேண்டுமென்றும்;
தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழே கட்டாய போதனா மொழியாக இருக்க வேண்டுமென்றும்;
சிங்களமும், தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாதல் வேண்டுமென்றும்;
மத்திய அரசாங்கத்தினது நிர்வாக மொழியும், பதிவேட்டு மொழியும் சிங்களமும் D தமிழும் ஆதல் வேண்டுமென்றும்;
நாட்டின் எப்பாகத்திலும் அரசாங்கத் திணைக்களங்களுடனும், ஏனைய நிறுவனங்களுடனும் தன் தாய்மொழியில் தொடர்பு கொள்ளும் உரிமை ஒவ்வொரு வருக்கும் இருக்கவேண்டு மென்றும் நாம் கோரினோம்.
அத்துடன்,
நீதிமன்றங்கள் மூலம் நிலைநாட்டப் படக்கூடிய அடிப்படை உரிமைகள்
அரசியல் திட்டத்தில் இடம்பெற வேண்டு மென்றும் நாம் கோரினோம்:

5
பூரண சமதர்ம பொருளாதார அமைப்புக்கு வழிவகுக்கக்கூடிய பொருளியற் குறிக்கோள்களையும் நாம் சமர்ப்பித்த அரசியல் திட்டம் உள்ளடக்கியிருந்தது.
உண்மைச் சமதர்மவாதிகள் நாமே!
இலங்கைத் தமிழரசுக் கட்சியை முதலாளித்துவக் கட்சியென்று வர்ணிப்பது - இந்நாட்டில் முற்போக்கு வாதிகளென்று தம்மை அழைத்துக் கொள்வோரின் வழக்கமாகும். நாம் அரசியல் நிர்ணய சபைக்குச் சமர்ப்பித்த பொருளியற் கொள்கை பற்றிய திட்டமும், நில - செல்வ உச்சவரம்புத் திட்டங்களும் உண்மைச் சமதர்ம வாதிகள் நாமே என்பதை - நடுவு நிலையில் நின்று பார்ப்போர் எவருக்கும் நிதர்சனமாகக் காட்டும். அன்றியும், உலகெங்கும் சமதர்மத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் எல்லாவற்றிலும், அங்கு வாழும் பல்வேறு இன மக்களிடையே ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சமஷ்டி அரசியல் முறையைய்ே ஏற்றிருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆயினும், இனவாத அடிப்படையில் இயங்கிவரும் இந்நாட்டுப் போலிச் சோஷலிச அரசாங்கமும், ஏனைய சிங்கள அரசியற் கட்சிகளும் எமது கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தன. தமிழ் மக்களின் உரிமைகளைப் பூரணமாகப் பெறுவதற்கு இவ்வரசியல் நிர்ணய சபையில் சாத்தியமாகாது என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும், எமது இனத்தின் ஜீவாதாரமான உரிமைகளில் ஒரு சிலவற்றையாவது நிலைநாட்டலாம் என்ற எண்ணத்தில், நாம் அரசியல் நிர்ணய சபையில் தொடர்ந்தும் இயங்கி வந்தோம்.
அரசியல் அமைப்புக்கு வழிகாட்டி 38 அடிப்படைத் தீர்மானங்கள் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டின் சட்டவாக்கம், நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றில் தமிழின் உரிமை யை நிலைநாட்டுவதற்கும்; இந்நாட்டில் பெளத்த மதத்திற்குத் தனியிடம் அளித்து, ஏனைய மதங்களைப் புறக்கணிக்கும் திட்டங்களை மாற்றி, நாட்டை மதச்

Page 217
4. சார்பற்ற குடியரசாக்குவதற்கும்; மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டு வதற்கும் நாம் திருத்தங்களைச் சமர்ப்பித் தோம்.
குறைக்கமுடியாத கோரிக்கைகள்
இச்சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி, தமிழினத்தின் சார்பில் ஏகோபித்த குறைந்தபட்சக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க, வல்வையில் சில பெரியார்கள் எடுத்த முயற்சியை நான் குறிப்பிட விரும்புகிறேன். சென்ற ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வல்வெட்டித் துறையிற் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நாலு கட்சிகளின் உறுப்பினர்கள் ஏகோபித்து, தமிழினத்தின் சார்பில் அரசியல் நிர்ணய சபைக்குக் கீழ்க்கண்ட குறைந்தபட்சக் கோரிக்கைகளை விடுப்பதென்றும்; இவையே இலங்கைவாழ் தமிழினத்தின் குறைக்க முடியாத கோரிக்கைகள் என்று பிரகடனப் படுத்துவ தென்றும் தீர்மானித்தனர். அக்கோரிக்கை களாவன வருமாறு:-
1. சிங்களமும், தமிழும் இந்நாட்டின் அரசாங்க மொழிகளாக இருக்கவேண்டும். அவற்றின் திட்டவட்டமான உபயோகம் பற்றிய விபரங்கள், அரசியற் சாசனத்தில் இடம்பெற வேண்டும்.
2. சிங்களமும், தமிழும் இந்நாட்டின் நீதி நிர்வாக மொழிகளாக இருக்கவேண்டும். பதிவேடுகள் முதலியவற்றில், அவ்விரு மொழிகளின் உபயோகம் பற்றிய விதிகள், அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்.
3. இலங்கையின் எப்பாகத்திலும். வாழும் சிங்களவரோ, தமிழரோ தங்கள் தாய்மொழியில் அரசாங்கத்துடன் கரும மாற்றும் உரிமை இருத்தல்வேண்டும்.
4. ஒவ்வொரு பிள்ளைக்கும் சிங்களமோ, தமிழோ; அவரவர்

06)
தாய்மொழியே போதனா மொழியாய் இருத்தல் வேண்டும். திறமையின் அடிப்படையில், இலவசமாக அக்கல்விக்கு வசதி செய்யவேண்டியது அரசின் கடமை uITejub.
5. உயர்தரக் கல்விநிலையங்களில் சேருவதற்கோ, அரசாங்க சேவையில் சேருவதற்கோ தன் தாய்மொழியில் பரீட்சை எடுத்துத் தன் தகுதிக்கேற்பச் சேரும் உரிமை ஒவ்வொருவர்க்கும் உண்டு,
6. அடிப்படை உரிமைகளுக்கு முரணான சட்டங்களை ஒட்டியோ, நிர்வாக ஒழுங்கீனங்களைப் பற்றியோ நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கும் உரிமை, அரசியல் சாசனத்தில் அமையவேண்டும். நீதி நிர்வாகத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இருத்தல் ஆகாது.
7. இந்நாட்டு மக்களிடையே நிலவும் சாதிபற்றியும், சமயம்பற்றியும் இந்திய அரசியலமைப்புத் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகள் - இங்கும் ஏற்கப்படவேண்டும்.
8. இலங்கைக் குடியரசு- சமயச் சார்பற்ற அரசாக இருத்தல் வேண்டும். ஆனால், பெளத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைப் பாதுகாத்துப் பேணவேண்டும்.
9. (அ) இலங்கையில் பிறந்த ஒவ்வொரு வரும் - அவரது தந்தை, அல்லது தாய் இலங்கையில் பிறந்தவராய் இருப்பின்,
(ஆ) இலங்கைக்கு வெளியில் பிறந்தவராயின், அவரது பெற்றோர்
இலங்கைக் குடியுரிமைக்குத் தகுதியுடைய வராயின்,
(இ) 15-11-48க்கு முன்னிருந்து தொடர்பாக இலங்கையில் வசிப்பவராயும், இலங்கைப் பிரஜையாக இருப்பதற்கு விரும்புபவராயும் இருப்பின்,
அவர்கள் எல்லோரையும் இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் - அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டும். வம்சாவளிப் பிரஜைக்கும், எவ்வித

Page 218
一{2
பாகுபாடும் இருத்தல் ஆகாது. எக்காரணங் கொண்டும், எவருடைய பிரஜா உரிமையும் பறிக்கப்படலாகாது.
துரியோதனன் அளித்த பதிலே - எமக்குக் கிடைத்த பதில்
எமது திருத்தங்களோ, தமிழ் மக்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளோ முற்றாக நிராகரிக்கப் பட்டன! இந்நாட்டைஎதிர் நோக்கியிருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு சமரசத் தீர்வு காண வேண்டுமென்ற ஆர்வத்தில், மேற் கண்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததோடு அமையாது, அரசியல் நிர்ணய சபையில் விவாதித்ததோடு நில்லாது, பிரதம மந்திரியையும், ஏனைய முக்கியமான அமைச்சர்கள் சிலரையும் சந்தித்து, பேச்சுவார்த்தை மூலமும் ஒரு தீர்வு காண முயன்றோம். இதையொட்டி நாம் எடுத்த முயற்சிகள் - பாரதக் கதையில், கிருஷ்ணன் தூதை எனக்கு நினைவூட்டுகின்றன. நாம் சமர்ப்பித்த மகஜரில், எமக்குரிய பாகத்தை - ஆட்சியுரிமையைக்கோரினோம். அது மறுக்கப்பட்டது. எமது மொழியுரிமை, குடியுரிமை, அடிப்படை உரிமை - இவற்றையாவது அளிக்குமாறு திருத்தங்கள் மூலம் கோரினோம். "ஈயிருக்க இடங் கொடேன்” என்று துரியோதனன் அளித்த பதிலே - எமக்குக் கிடைத்தது.
தந்தை எடுத்த முடிவு
இந்தச் சூழ்நிலையில், அரசியல் நிர்ணய சபையில் நாம் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதால் தமிழினத்திற்கு எவ்வித நன்மையும் விளையமாட்டாது என்பது உறுதியாகியது. 28-6-71 அன்று மொழியுரிமை பற்றி நாம் கொண்டுவந்த திருத்தங்கள் தோல்வியடைந்ததன்பின், தந்தை செல்வநாயகம் அவர்கள் - "எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நிர்ணய சபை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்குபற்ற மாட்டார்கள்” என அறிவித்தார். அதன் பின், அரசியல் நிர்ணய சபை தமிழினத்தின் பெரும்பான்மைப் பிரதிநிதிகளால் பகிஷ்கரிக்கப்பட்டு,

7
தமிழினத்தின் சார்பில் அரசியற் சட்டத்தை ஆக்குவதற்கு எவ்வித உரிமையும் அற்றதாகிவிட்டது என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
நண்பர்களே!
இந்த அரசாங்கத்தினால் தயாரிக்கப் பட்டு, அரசியல் நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியல் திட்டம் - எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர் பார்க்கலாம்.
அரசியலமைப்பில் தமிழர் நிலை
இந்த அரசியல் அமைப்பின்கீழ்த் தமிழ் மக்களுடைய நிலையென்ன வென்பதை நான் சுருக்கமாக ஆராய விரும்புகிறேன். இன்றைய ஒற்றையாட்சி அமைப்பு - குடியரசுத் திட்டத்தின்கீழும் நிலைநாட்டப் பட்டிருக்கிறது. பெரும்பான்மைச் சிங்கள ஆட்சியில் - தமிழினத்தின் அடிமைத்தனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதே, இதன் கருத்தாகும். பெளத்தமதம் - அரசாங்கத்தினால் பேணிப் பாதுகாக்கப் பட்ட மதமாகவும், ஏனைய மதங்கள் - புறக்கணித்து ஒதுக்கப்பட்ட மதங்களாகவும் இருக்கும். பெளத்தம் அல்லாத ஏனைய மதத்தைச் சேர்ந்தோர் - இந்நாட்டின் இரண்டாந்தரப் பிரஜைகள் என்பது ஊர்ஜிதமாகும். தனிச்சிங்களச் சட்டம் - அரசியலமைப்பில் ஓர் அங்கமாகும்.
1956ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களினால் ஏகோபித்து எதிர்க்கப்பட்ட இச்சட்டம் - வருங்காலத்தில் எவ்வித மாற்றமும் பெறுவதற்கு இடமில்லாத வகையில், அரசியற் சட்டத்தில் இடம் பெறப்போகின்றது! 1958ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்மொழி உபயோகச் சட்டம் - அதன்கீழ்ச் சட்டவிதிகள் ஆக்கப்படாவிட்டால், நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சட்டமாகும். 1966ஆம் ஆண்டு 6TLogji வற்புறுத்தலினால் ஆக்கப்பட்ட சட்டவிதிகளையும் - செல்லாக் காசாக்கி, இவ்வரசாங்கம் உதாசீனம் செய்துவருகின்றது. இதிலிருந்து, தமிழ்

Page 219
一{2
மொழி உபயோகச் சட்டத்தையிட்டு அரசியற் சட்டத்திற் கூறப்பட்டிருப்பது - தமிழ்மக்களை ஏமாற்றும் முயற்சியேயன்றி, எவ்வித உரிமையையும் அளிக்கமாட்டாது என்பது உறுதி
இலங்கை முழுவதிலும், சிங்களமே - நீதி நிர்வாக மொழியாக விதிக்கப் பட்டிருக்கிறது. வடக்குக் கிழக்கு மாகாணங்களில், புதிய தேசிய சபை விரும்பினால் வேறு ஒழுங்குகள் செய்யலாம் என்று கூறுவதைத் தவிர, பதிவேடுகள் முதலி யவற்றைத் தமிழில் வைப்பதற்கு எவ்வித இடமும் அளிக்கப்படவில்லை. தேசிய சபை விரும்பி, வேறு சட்டத்தை இயற்றா விட்டால், வடக்குக் கிழக்குமாகாணங்களில் தானும் சிங்களமே நீதிமன்றங்களின் பதிவு மொழியாக இருக்கும்! வருங்காலத்தில், அரசாங்கங்களோடு பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ்மொழி உரிமையைப் பெறுவதாயிருந் தாலும் 2/3 - பெரும்பான்மையின்றி அதைநிறை வேற்ற முடியாத வகையில் - வருங்கால அரசாங்கங்களின் கைகளும் கட்டப் பட்டிருக்கும்!
எந்த நாட்டின் அரசியல் திட்டத்திலும் - குடியுரிமைபற்றிய பகுதி முக்கிய இடத்தைப் பெறும். 'இன்று நடைமுறையிலி ருக்கும் குடியுரிமைச் சட்டங்கள் - தமிழினத்திற்குப் பாதகமானவை' என்று, இன்றைய அரசின் அங்கமாயிருக்கின்ற இடதுசாரிக் கட்சிகளே ஒப்புக்கொண்டிருக் கின்றன. இக் குடியுரிமைச் சட்டங்கள் நடைமுறையில் ஏற்படுத்தும் கஷ்டங்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று - அரசாங்கம் நியமித்த குழுவே சிபார்சு செய்திருக்கின்றது!
இக் குறைபாடுக்ளையெல்லாம் அறிந்தும், புதிய அரசியல் திட்டத்தில் குடியுரிமை பற்றி எதுவும் கூறப்படவில்லை. இதன் ஒரே காரணம் - இன்றைய அநீதியான குடியுரிமைச் சட்டத்தின்கீழ், தொடர்ந்தும் தமிழ்மக்களை நாடற்றவர்களாகவும், சந்தேகப் பிரஜைகளாகவும் அல்லலுறச் செய்வதே, புதிய அரசியல் திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை

08
உரிமைகள் - அதே விதியின் இரண்டாவது பாகத்தினால் பயனற்றவையாக்கப் பட்டுள்ளன. அன்றியும், இந்நாட்டில் பாரம்பரியமாக அநீதிக்கு ஆளாக்கப் பட்டிருக்கும் - சாதியினால் உரிமை குறைந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய எவ்வகைச் சட்டமும் - அரசியற்றிட்டத்தில் இடம் பெறவில்லை. பிரஜைகளுக்கு மாத்திரமே உரியவையாக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் - இந்த நாட்டின் சந்தேகப் பிரஜைகளாக வாழும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமா என்பதும் சந்தேகமே.
இரும்பு விலங்கு
இன்று நடைமுறையிலிருக்கும் சோல்பரி அரசியல் திட்டம், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்பதை அன்று தொடக்கம் நாம் கூறிவந்தோம். புதிதாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் அரசியல் திட்டம் - இன்றைய திட்டத்திலுள்ள அற்ப சொற்ப பாதுகாப்புக்களையும் அகற்றி விடுகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஓர் இனத்தவருக்கு, அல்லது ஒரு மதத்தவருக்குப் பாதகமாகவோ - ஓர் இனத்தவர், அல்லது மதத்தவருக்கு விசேஷ சலுகைகள் அளிக்கக்கூடிய வகையிலோ எச் சட்டமும் இயற்றக் கூடாது என்று - இன்றைய சோல்பரி அரசியல் திட்டத்தின் 29ஆவது விதி கூறுகின்றது. புதிய அரசியல் திட்டத்தில் இப் பாதுகாப்பு நீக்கப் பட்டிருப்பது மாத்திரமின்றி -பெளத்த மதத்திற்கும், சிங்கள மொழிக்கும் விசேஷ உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஏற்கெனவே நான் விளக்கியிருக் கின்றேன். இவற்றிலிருந்து, புதிய அரசியல் திட்டம் - தமிழினத்தின் அடிமைத்தளையை மேலும் இறுக்கிப் பிணைக்கின்ற 'இரும்பு விலங்கு' என்பது புலனாகின்றது. அடிமை நிலையை ஏற்க முடியாது
சிங்கள மக்கள், தாம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து பூரணமாக விடுதலை பெறும் வைபவத்தை - தங்கள் புராதன இராஜதானியா கிய கண் டி யில் கொண்டாடப் போகின்றார்கள்: 1815ஆம்

Page 220
2 ஆண்டு மார்ச் மாதம் 2ஆந் திகதி கண்டியில் இறக்கப்பட்ட சிங்கள இறைமையின் சின்னமாகிய சிங்கக் கொடி - இவ்வாண்டு (1972) மார்ச் 2ஆந் திகதி மீண்டும். அங்கு ஏற்றப்படப்போகின்றது. சிங்கள மக்கள் - தம் இழந்த உரிமையை மீண்டும் பெறுவதை நாம் ஆட்சேபிக்கவில்லை; அதை வரவேற்கின்றோம். ஆனால், அவர்கள், தம் உரிமையை முழுமையாகப் பெறுகின்ற அதே செயலினால், - தமிழினம் முழுமையாக அடிமையாக்கப் படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது!
கண்ணினுமினிய சுதந்திரம்
தமிழ் மன்னர்கள் ஆட்சிசெய்த இராஜதானியாகிய யாழ்ப்பாணத்தில் கூடிநிற்கும் உங்கனிளப்பார்த்து - நான் கேட்க விரும்புவது ஒரேயொரு கேள்விதான். சிங்கள மக்கள், தாம் இழந்த இறைமையை மீண்டும் பெற்றதுபோல - தமிழ்மக்களும், தம் இறைமையையும் உரிமையையும் பெறப்போகின்றார்களா? அன்றேல், தம் வருங்காலச் சந்ததிகளை L6errrr அடிமைகளாக அழியவிடப்போகின்றார் களா? "எந்த விலைகொடுத்தும் எம் சுதந்திரத்தைப் பெற்றே தீருவோம்" என்றே நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.
தமிழினத்தை அடிமையாக்கும் இவ்வரசியல் திட்டத்தை முற்றாக நிராகரிப்பதைத் தவிர, தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை. 'கண்ணினுமினிய சுதந்திரம்' காணும் இம் முயற்சியில், கட்சி பேதங்களை
கட்டிய நாய்க ܥܠ لصـ N 『て எட்டிய மட்டு

9.
மறந்து - சாதி, சமய, பிரதேச வித்தியாசங்களை ஒதுக்கி - ஒன்றுபட்டுச் செயலாற்ற வருமாறு, தமிழினத்தின் ஆண், பெண், இளைஞர், முதியோர் அனைவரை யும் அழைக்கின்றேன். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் எவரும் - இவ்வடிமைச் சாசனத்திற் கையொப்பமிடாது தடுத்து நிறுத்த வேண்டியது - எமது இனத்தின் கடமையாகும்.
மனித இனத்திற்கு வேறு மார்க்கமில்லை!
நண்பர்களே!
எம்முன் இரண்டு மார்க்கங்களே உள்ளன. ஒன்று - நாம் இதுகாறும் கோரி வந்திருக்கும் சமஷ்டி அமைப்புக் குட்பட்ட சுயாட்சித் தமிழரசாகும். அதையே நாம் மீண்டும் மீண்டும் கோரி நிற்கின்றோம். அதைச் சிங்களத் தலைவர்களும், அரசாங்கமும் தொடர்ந்து நிராகரித்து வருவார்களானால், எமது சுதந்திரத்தை நிலைநாட்ட - தன்மானத்தைக் காக்க - எம்மினத்தை அழிவிலி ருந்து பாதுகாக்க - ஒரு சுதந்திரத் தமிழரசைக் கோரும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை - ஆட்சியாளருக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன். இது, நாம் கையாளக்கூடிய இரண்டாவது மார்க்கமாகும். மனிதர்களாக வாழ விரும்பும் இனத்திற்கு - வேறு மார்க்கமில்லை.
வணக்கம்.
h அல்ல நாம்; ܥܐ لم ம் பாய்வதற்கு ༄། 序ー

Page 221


Page 222
7-9-1973 -
 

4வது தலைவர்
u Guo rit Ցs LԻ, ւ Գ. ar. அவர்கள் இன்று வரை

Page 223


Page 224
ஈழத் தமிழகமே இத்தாலிய இளைஞரைக் இங்குள்ள இளைஞரைக் க
நாவலர் அ. அமிர்தலிங்கம்
(12ஆவது தேசிய மாநாடு
வரவேற்புக் குழுத் தலைவர் அவர்களே! தமிழினத்தின் தந்தை அவர்களே! தோழமைக் கட்சிகளின் தலைவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! தம்பிமார்துளே! தங்கைமார்களே!
ந்நாடு ஒரு திருப்பு முனையில் நிற்கிறது. அந்நிய ஏகாதிபத்தியங்களோடு இருந்த இறுதி அரசியல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. நாடு குடியர சாகப் பிரகடனஞ் செய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகிவிட்டது. அந்நியர் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பதற்கென்று ஆக்கப்பட்ட அரசியலமைப்பு, இந்த நாட்டில் வாழும் தமிழினத்தின் அடிமைத் தளையை முன் எப்பொழுதும் இல்லாத வகையில் இறுகப் பிணைத்திருக்கின்றது. அதே நேரத்தில் நாட்டுமக்கள் எல்லோரினதும் பேச்சுரிமை, எழுத்துரிமை முதலிய அடிப்படை சனநாயக உரிமைகள் அத்தனையும் பறிக்கப்படுவதற்கு ஆரம்ப் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன. எதேச்சாதிகார இருள் பயங்கர மாகப் பரந்து வருகின்ற சூழ்நிலையில், இம்மாநில மாநாடு ஆரம்பமாகிறது.
இன்னல் - அவம் போகாது
இந்நாட்டின் அரசியல் வாழ்வில் முக்கியமான இடம்பெற்று விளங்கிய தலைவர்களைப் பிரதிநிதியாகப் பெற்றிருந்த தும்; தன்னகத்தே பெற்றெடுத்ததும் காங்கேசன்துறைத் தொகுதியாகும். சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களைச் சட்ட நிரூபண சபையில் வீற்றிருக்கச் செய்ததும்; திரு. செல்வநாயகம் அவர்களைப்

இறுதிப்பரிகாரம்
ரிபால்டி அழைத்ததுபோல், ரங்கூப்பி அழைக்கின்றேன்!
, B.A. அவர்கள் பேருரை
- 7-9-1973 - Lodi GOn95)
பாராளுமன்றத்தில் பல்லாண்டு காலமாகப் பிரதிநிதித்துவம் வகிக்கச் செய்ததும், அமரர் வன்னியசிங்கம் அவர்களைப் பெற்றெடுத்துத் தந்ததும் இத்தொகுதி என்றால் - அதற்குத் தமிழினத்தின் வரலாற்றில் அதி உன்னதமான ஒரு இடம் உண்டு என்பது உறுதி அன்றியும் பண்டைத் தமிழரசின் நுழைவாயிலாக விளங்கிய துறைமுகமும், புராதனப் பெருமை வாய்ந்த மாவிட்டபுரம் முருகன் ஆலயமும், புகழ் பெற்ற புனிதம் வாய்ந்த நகுலேஸ்வரமும், கீரிமலைத் தீர்த்தமும் தன் னகத்தே கொண்டு விளங்கும் இத் தொகுதியில் நடைபெறும் எமது கட்சியின் 12ஆவது மாநில மாநாட்டிற்குத் தலைமை தாங்கும் பெரும் பேற்றை எனக்கு அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
தளர்ந்த நிலையிலும் உறுதி குலையாது - சத்திய நெறியில் தமிழினத்தை வழி நடத்திச் செல்லும் தந்தை செல்வ நாயகம் அவர்களும் - தியாகச் செம்மல் அமரர் வன்னியசிங்கம் அவர்களும் - திருமலை ஜோதி திரு. இராஜவரோதயம் அவர்களும் - மட்டக்களப்புத் தந்த மாணிக்கம் திரு. இராசமாணிக்கம் அவர்களும் - உள்ளத்தாலும் உடலாலும் இரும்பு மனிதனாக விளங்கிய தீரர் நாகநாதன் அவர்களும் அலங்கரித்த இத்தலைமைப் பீடத்தில் அமரும் வாய்ப்பை எனக்கு அளித்திருக்கின்றீர்கள்! அவர்கள் வழியில் சிறப்புக் குன்றாது பணிபுரிய என்னால் முடியுமோ என்ற எண்ணம் - என் உள்ளத்திற் பெரும் பீதியை ஏற்படுத்து

Page 225
-2
கின்றது. ஆயினும் என்னை வழிநடத்திச் செல்லத் தந்தை அவர்களும் ஏனைய தலைவர்களும் இருக்கின்றார்கள் என்ற துணிவில், இப் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன்.
எமது கட்சியின் முந்திய மாநில மாநாடுகளைவிட, இம் மாநாடு ஒரு வகையில் சிறப்புப் பெற்றிருக்கின்றது. கடந்த காலத்தில் பல்வேறு கட்சிகளாகப் பிளவுபட்டிருந்த தமிழினம், இன்று தன் உரிமையைப் பெறும் உறுதியோடு ஒன்றுபட்டு விட்டது என்பதை இம் மேடைமீது வீற்றிருக்கும் எம் தோழமைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒற்றுமையைச் சிதறவிடாது கட்டிக்காக்கும் உறுதியோடு இம்மாநில மாநாடு நடைபெறுகிறது என்பதையும்; அதே ஆவலோடு அதன் தலைமைப் பதவியை நான் ஏற்றிருக்கின்றேன் என்பதையும் முதற்கண் கூறிவைக்க விரும்புகின்றேன்.
இவ்வரங்கில் உரை நிகழ்த்திக் கொண்டு நிற்கும்பொழுது - என் உள்ளம் வெலிக்கடைச் சிறையிலும், நீர்கொழும்புச் சிறையிலும், யாழ்ப்பாணக் கோட்டைச் சிறையிலும் தமிழுக்காகத் தவம் செய்து கொண்டிருக்கின்ற என் தம்பிகளை நாடிச் செல்லுகின்றது. அவர்களைப் பிரிந்து வாடிவதங்கும் பெற்றோருக்கும், உற்றோருக் கும் நாம் என்ன ஆறுதல் கூறமுடியும்? அவர்கள் உடலிற்பட்ட அடிகள் - ஒவ்வொரு தமிழன் மீதும் பட்டதாகக் கருதப்பட வேண்டும். அவர்கள் படும் இன்னல் அவம் போகாது. அவர்களுடைய துன்பத்திலிருந்து தமிழினத்தின் விடுதலை விளையும் என்றே உறுதியாக நம்புகின்றேன்.
தமிழினத்தைக் காக்கவே -
தமிழர் கூட்டணி
நண்பர்களே! ஆங்கில ஆட்சியில்
இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற 1948ஆம்
ஆண்டு தொடக்கம், தமிழினத்துக்குப்
பல்வேறு தலைவர்கள் வெவ்வேறு
பாதைகளைக் காட்டிவந்தார்கள். சோல்பரி

4.
அரசியல் திட்டம் இந் நாட்டில் புகுத்தப் பட்ட நேரத்தில், அதையொட்டி அரசாங்க சபையில் வெள்ளை அறிக்கை மீது 1945ஆம் ஆண்டு நடந்த வாக்களிப்பில் கலந்து கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ்ப் பிரதிநிதிகள் அத்தனை பேரும் அவ் வெள்ளை அறிக்கையை ஏற்று வாக்களித் தார்கள். சிங்கள மக்களோடு ஒத்துழைப் பதன் மூலம், தமிழ் மக்களின் நல உரிமை பாதுகாக்கப்படுமென்று அவர்கள் நம்பியிருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் அக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற முதற் பாராளுமன்றத் தேர்தலில், அப்படி ஒத்துழைத்த தமிழ்ப் பிரதிநிதிகளில் ஒருவர் தவிர - ஏனையோர் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். ஆயினும் அப்பாராளுமன்றத்திலும் - அடுத்து 1952ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்திலும் தமிழ்ப் பிரதிநிதிகளிற் பெரும்பாலோர் சிங்கள ஆட்சியாளருக்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர். இதன் சரி, பிழை பற்றிய சர்ச்சைக்கு இது நேரமல்ல. 1956ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தனிச் சிங்களக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சியும் - பூறி லங்கா சுதந்திரக் கட்சியும் - அக்கட்சியின் தலைவர் அமைத்த மக்கள் ஐக்கிய முன்னணியும் ஏற்றுக்கொண்ட பின்பு, அக்கட்சிகளில் இருந்த தமிழ் உறுப்பினர் வெளியேறினர். அக்கட்சிகள் பெயரளவில் தேசியக்கட்சி களாக இருந்த போதிலும், உண்மையில் சிங்கள வகுப்புவாதக் கட்சிகளாகவே இயங்கிவருகின்றன.1960ஆம் ஆண்டின் பின், இடதுசாரிக் கட்சிகளான சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனிச் சிங்களக் கொள்கைகளை ஏற்றுச் சிங்கள வகுப்பு வாதத்திடம் சரணாகதி அடைந்தன!1971ஆம் ஆண்டு புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முற்பட்ட இடதுசாரி இயக்கங்களும் - சிங்கள இனவாத அடிப்படையில் இருந்து எழுந்தனவேயன்றி, இலங்கைத் தேசியத்தைக் கருத்திற் கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்களுடன் தொடர்பற்ற, எவ்வகையிலும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக்

Page 226
-2 கருதமுடியாத செயற்கைத் தலைவர்கள் சிலரையும் - தாம் சார்ந்திருந்த கட்சிகளிலி ருந்து விலக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர் ஒருசிலரையும் இன்றைய ஆளுங் கட்சி தன்னகத்தே கொண்டிருந்தாலும் - அது சிங்களக் கட்சிகளின் கூட்டணி என்பதும்; அதன் ஆட்சி சிங்கள ஆட்சி என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும். இச் சிங்களக் கூட்டணியின் ஆதிக்கத்திலிருந்து தமிழினத்தை விடுவிக்கவும் - அதன் தாக்குதலில் இருந்து தமிழினத்தைக் காக்கவும் எழுந்ததே - தமிழர் கூட்டணி.
நாட்டின தேசிய இனங்கள் பிரிந்தன!
தமக்குள் அரசியல் பொருளாதாரக் கருத்துக்களில் வேறுபாடு கொண்டிருந் தாலும், தென்இலங்கை அரசியல் கட்சிகள் அத்தனையும் தமிழினத்தின் உரிமைகளை மறுப்பதில் ஒன்றுபட்டு நிற்பதைக் காண்கிறோம். அரசியற் கட்சிகளின் அமைப்பைப் பொறுத்தவரையிலும், அவற்றிற்கு மக்களின் ஆதரவைப் பொறுத்த வரையிலும் இந்நாட்டின் இரு தேசிய இனங்களும் பிரிந்தே நிற்கின்றன. தமிழரசுக் கட்சியோ, தமிழர் கூட்டணியோ நாட்டைப் பிரிக்க முனைவதாகக் குரலெழுப்புபவர்கள் - 1948ஆம் ஆண்டு இந்நாடு சுதந்திரம் பெற்ற பின் ஏற்பட்ட இந்த அடிப்படைப் பிளவை உணராாதோ - உணர்ந்தும் அதை மறைத்தோ பேசி வருகின்றனர். அரசாங்க சபையில் வாக்களித்த வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவரும், சோல்பரி அரசியல் திட்டத்தை ஆதரித்ததை முன்பு குறிப்பிட்டேன். ஆனால் 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆந் திகதி நிறைவேற்றப்பட்டகுடியரசு அரசியல் அமைப்பில் தமிழ்ப் பிரதிநிதிகள் எப்படி வாக்களித்தனர்? தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாணப் பிரதிநிதியும் - தமிழ்க்காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட நல்லூர், வட்டுக் கோட்டைப் பிரதிநிதிகளும் - சுயேச்சை

5
யாகத் தெரிவுசெய்யப்பட்டு பூஞரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறிய மட்டக்களப்பு இரண்டாவது உறுப்பினர்கள் தவிர்ந்த - ஏனைய தமிழ் உறுப்பினர்கள் இவ்வரசியல் அமைப்பை நிராகரித்து, அரசியல் நிர்ணய சபையின் இறுதிக்கட்டத்தையே பகிஷ்கரித் தமை - சரித்திரத்தில் இடம்பெற்ற சம்பவ மாகும். 25வருடச் சுதந்திர அரசியல் சரித்திரத்தில் தமிழினம் படித்த பாடமே 7 குடியரசு அரசியலமைப்பை அவர்களை நிராகரிக்கச் செய்தது. இலங்கை குடியரசாக் கப்பட்ட 1972 மே 22ஆந் திகதி தமிழ் ஈழம் முழுவதும் துக்க தினமாக அனுஷ்டிக்கப் பட்டது. அரசியலமைப்புத் தீயிலிடப் பட்டது. மக்கள் தாமாகக் கிளர்ந்தெழுந் தனர்! குறிப்பாக வாலிபர்கள் கொதித் தெழுந்தனர்! பல வாலிபர்கள் கைது செய்யப்பட்டு, மாதக் கணக்கில் அடைத்து வைக்கப்பட்டனர்! அரசியலமைப்பை ஆதரித்து வாக்களித்த தமிழ்ப் பிரதிநிதிகள் - தமிழ்ப் பிரதேசங்களுக்கே செல்லமுடியாது, தென்னிலங்கையில் பதுங்கி வாழ்ந்தனர்! அரசியல்கட்சி ரீதியாக மாத்திரமன்றி உள்ளத்தாலும் உணர்ச்சியாலும் இந் நாட்டின் இருதேசிய இனங்களும் பிரிந்துவிட்டன என்பதை இது எடுத்துக்காட்டியது.
இருபது மைலுக்கப்பால் " நாலுகோடி தமிழர்
ஒன்றுபட்ட தமிழினத்தின் ஒரே அமைப்பானதமிழர் கூட்டணி அரசாங்கத்திற்கும், சிங்கள இனத்திற்கும் இந்நாட்டின் ஒற்றுமையைக் காப்பதற்கு ஒரு இறுதிச் சந்தர்ப்பம் அளித்தது. அரசிய லமைப்பைத் திருத்துவதற்கான ஆறு அம்சக் கோரிக்கை, 1972ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆந் திகதி அரசாங்கத்திற்கு விடுக்கப் பட்டது. அதை அரசாங்கம் முற்றாக உதாசீனஞ் செய்து, தமிழினத்தையே அவமதித்தது. ஆளுங்கட்சிகளுக்கு வெளியில் இருக்கும் எந்தச் சிங்களத்தலைவரோ, அரசியலியக்கமோ - சிங்கள மக்களின் கருத்தைத் திருத்தி, இன ஒற்றுமையை

Page 227
-2 ஏற்படுத்தும் சக்தியோ - நாட்டமோ உடையவராக இருக்கவில்லை. சிங்களத் தலைவர்களின் அரசியல் ஞானத்திற்கும், தொலை நோக்கிற்கும் விடுக்கப்பட்ட சவாலில் - அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.
ஆதி பலத்தாலும், அடக்கு முறையாலும் தமிழினத்தின் எதிர்ப்பை நசுக்கி தமிழினத்தின் மத்தியில் உள்ள எட்டப்பர் ஒரு சிலர் மூலம், அவர்களுடைய கையாட்கள் சிலருக்கு அற்ப சலுகைகளை வழங்கித் தமிழினத்தை அடக்கி ஆண்டு இறுதியில் சிங்கள மயமாக்கி அழித்து விடலாமென்று ஆட்சியாளர் கனவு காண்கின்றனர். 2,500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந் நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொள்ளாத அறியாமையிலிருந்து எழுவதே இக்கனவாகும். சரித்திரத்துக்கு முற்பட்ட காலம் தொடக்கம் இந் நாட்டில் தமிழ் மக்களும், சிங்களமக்களும் வாழ்ந்திருக்கின்றார்கள். சிங்கள மக்கள் பெரும்பாலோராக வாழ்ந்த பிரதேசங்களிற் சிதறி வாழ்ந்த தமிழர்கள் சிலர் - நாளடைவில் சிங்களவர்களாக மாறி விட்டனர் என்பது சரித்திர உண்மை. ஆனால் தமிழகத்துக்கு அண்மிய வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் - பெருகிப் பலம்பெற்று, சிங்கள அரசர்கள் தமது இராசதானிகளை மாற்றி Ldrsi polj: செல்லக்கூடியதாகத் துரத்தினார்கள் என்பதும் சரித்திர உண்மை. 14ஆம் நூற்றாண்டில் கோட்டையை ஆண்ட சிங்கள மன்னனை வென்று, அவனிடம் கப்பம் பெறும் அளவிற்கு யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் பராக்கிரமம் பெற்றிருந்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இருபது மைல்களுக்கப்பால் நாலுகோடி தமிழர்கள் உரிமையோடும், உயிர்த்துடிப்போடும் வாழும் வரைக்கும் - தமிழினத்தைப்பலவந்தமாக அழிக்கும் எண்ணம் பகற் கனவாகவே முடியும்.
தமிழ்நாடும் - ஈழத் தமிழரும்
தமிழினத்தின் இந்தப் பலத்தைச் சிதைக்க ஆட்சியாளர்கள் எடுக்கும்

6.
நடவடிக்கைகளை யொட்டியே நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். நவீன விஞ்ஞான உலகில் நம் மொழிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மொழி ஆக்கத் துறையிற் பணிபுரிந்து வருகின்ற சில தமிழ்த் துரோகிகளின் உதவியுடன், ஈழத்தில் தமிழ்மொழி ஆக்கம் தமிழகத்துக்கு வேறுபட்டதாகச் செய்வதற்கு முயற்சி நடக்கின்றது. அதேநேரத்தில் தமிழகச் செய்தித் தாள்களும், சஞ்சிகைகளும் இங்கு வருவதைக் கட்டுப்படுத்தி, குறைத்து, இறுதியில் முற்றாக நிறுத்தி அத்தொடர்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இத்துறை களில் ஆட்சியாளரின் கருவிகளாகப் பணிபுரியும் தமிழமைச்சரும், தமிழ்க் கல்விமான்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் ஒரு சிலரும் தமிழினத்துக்கு மிகப்பெரும் தீங்கை விளைவிக்கின்றனர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டிற்கும், ஈழத் தமிழகத்துக்கும் இடையில் இருந்துவந்த இலக்கிய, கலை, கலாச்சாரப் பரிவர்த்தனை தங்குதடையின்றி நடைபெற நாம் வழிகாண வேண்டும். ஈழத்துப் பூதந்தேவனார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருந்து தமிழாராய்ந்தார். 9ஆம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலரும், 20ஆம் நூற்றாண்டில் விபுலானந்த அடிகளும் தமிழகத்தில் மதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர்களாக விளங்கினர். இதே நிலை இன்னும் ஆயிரம் ஆண்டுகளின் பின்னும் இருக்கக்கூடிய வகையில், நாம் கையாளுந் தமிழும் - தமிழகத்துத் தமிழும் ஒன்றாக இருக்க நாம் வழிகாண வேண்டும். சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் தந்தை செல்வநாயகம் அவர்கள் தமிழ் நாடு சென்றபோது அங்குள்ள அரசியல் தலைவர் களைச் சந்தித்ததும், இங்குள்ள தமிழ் மக்களின் நிலைபற்றிச் செய்தித் தாள்களுக்கு அறிக்கை விடுத்ததும் பெரிதுபடுத்திக் கூறப்படுகின்றன. தென் வியட்நாமில் பெளத்தர்கள் நசுக்கப்பட்டபோது, அவர்களின் தலைவர்கள் இலங்கைப் பெளத்தர்களின் ஆதரவை நாட முடியுமானால் - கிழக்கு வங்காளப் பெளத்த மக்களின் தலைவர், தமது

Page 228
2
மக்களின் நிலையை விளக்க இலங்கை வருவது முறை என்றால் - ஈழத் தமிழ் மக்களின் தலைவர் - மொழியால், மதத்தால், கலாசாரத்தால், இரத்தத்தால் ஒன்றுபட்ட தென்னகத் தமிழர்களுக்கோ மதத்தாலும், பாரம்பரியத்தாலும் ஒன்றுபட்ட இந்திய நாட்டு மக்களுக்கோ இங்குள்ள தமிழரின் நிலையை எடுத்து விளக்குவதில் என்ன தவறுண்டு? ஆளும் இனமான பெளத்த சிங்களவர் எதுவுஞ் செய்யலாம்; அடிமைத் தமிழன் - மூச்சு விடுவதற்கும் அனுமதி பெறவேண்டும் என்ற மமதையையே இக் கண்டனம் காட்டுகின்றது. அநீதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் நாம் - எமது நிலையை உலகின்முன் எடுத்து விளக்க விரும்புகிறோம். அதற்கு முதற்படியாகத் தமிழகத்துத் தமிழ்ச் சகோதரர்களின் அனுதாபத்தைப் பெற வேண்டியது அத்தியாவசியம். ஐரிஷ்ட்விடுதலைப் போரில் - அமெரிக்க ஐரிஷ் மக்களின் அனுதாபமும், ஆதரவும் அதி முக்கியமான பங்கைப் பெற்றிருந்தன. இஸ்ரேலின் சுதந்திரத்துக்கு - வெளி நாடுகளில் வாழ்ந்த யூதர் மிகப்பெருமளவில் காரணமாயிருந்தனர். பங்களாதேஷ் விடுதலைக் கிளர்ச்சிக்கு முதல் அனுதாபம் காட்டியவர்கள் - மேற்கு வங்காளத்தில் வாழும் வங்காளிகளே, இது இயற்கை, இந்த இயற்கை விதியைச் சிங்களத் தலைவர்களின் கோபமோ, மிரட்டலோ மாற்ற முடியாது. சிங்களத் தலைவர்களுக்கு அரசியல் ஞானம் இருக்குமாயின் - அர்த்தமற்ற ஆத்திரங்களை விட்டு, நிலைமையை மேலும் மோசமாக்கும் அடக்குமுறைகளைக் கைவிட்டு, நீதியின் அடிப்படையில் இப் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும். சமாதானப் பேச்சு வார்த்தை மூலம் இப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளத் தமிழ்த் தலைவர்கள் எப்போதும் தயராகவே இருக்கிறார்கள்.
எமது நிலையின் நியாயத்தை - சிங்களத் தலைவர்கள் ஏற்றனர்.
எமது கோரிக்கைகள் நியாயமானவை என்பதை உணர்ந்து, தமக்குத் தேவையேற் பட்ட நேரத்தில் அவற்றை ஏற்றுக்

7
கொள்ளாத சிங்கள அரசியல் கட்சிகள் இல்லை; முக்கியமான அரசியல் சிங்களத் தலைவர்கள் இல்லை. 1956ஆம் ஆண்டு வரைக்கும் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்தோடு, இந் நாட்டின் ஆட்சி மொழிகளாக - தென் இலங்கை அரசியல் கட்சிகள் அத்தனையும் ஏற்றுக் கொண்டன. இக் கட்சிகள் ஒவ்வொன்றாகப் பெரும் பான்மை இனத்தின் மொழிவெறிக்குத் தலைவணங்கி, தனிச் சிங்களக் கொள்கையை ஏற்றுக்கொண்டதை ஏற்கெனவே எடுத்துக் காட்டினேன். ஆனால் சிங்கள மொழிவெறி உச்சக்கட்டத்திலிருந்த 1957ஆம் ஆண்டிலும் - காலஞ் சென்ற திரு. பண்டாரநாயகா அவர்கள் தமிழினத்தின் நியாயமான உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து, திரு. செல்வநாயகத்தோடு ஒரு ஒப்பந்தம் எழுதினார். ep67 (p7 முக்கியமான விடயங்களில், தமிழினத்தின் நிலையில் முன்னேற்றங் காண அவ்வொப்பந்தம் வழிவகுக்கும். அதே விடயங்களை, 1960ஆம் ஆண்டு இன்றைய யூநிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். அந்த ஆண்டில் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த மறைந்த முன்னாள் பிரதமர் திரு. டட்லி சேனநாயக்காவும், 1965ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டார். இம் மூன்று விடயங்களும் என்ன?
1. மொழியுரிமை
இவற்றுள் முதலானது தமிழ் மொழியின் நிலை. சிங்கள மக்களுக்குச் சிங்களம் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டிருக் கிறது. அது நியாயமானது. சுதந்திரத்தின் மறுக்கமுடியாத விளைவுகளில் அது ஒன்று. அதேபோலத் தமிழ் மக்களுக்குத் தமிழ் ஆட்சிமொழியாக வேண்டுமென்பதே தமிழ் மக்களின் கோரிக்கை. தமிழ் மக்களும் இந்நாட்டில் சுதந்திரம் பெற்ற மக்களாயின், அவர்களுடைய ஆட்சிமொழி தமிழாக இருக்கவேண்டும் என்பதை எவரும் மறுக்கமாட்டார். 1956ஆம் ஆண்டு முதல் இந்த நிலை இல்லை என்பதை - ஆளுங்கட்சி ஆதரவாளர் எவரும் மறுக்கமுடியாது. 1956ஆம் ஆண்டு சாதாரண சட்டத்தின்

Page 229
மூலம் ஆக்கப்பட்ட இந்நிலை - 1972ஆம் ஆண்டு குடியரசு அரசியல் அமைப்பின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. தனிச் சிங்களச்சட்டத்தை எதிர்த்து வாதாடினோம்; வழக்காடினோம். வாதுகள், வழக்குகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைக்கு - இன்று அச்சட்டம் அரசியலமைப்பினால் உயர்த்தப் பட்டுவிட்டது! பிரதமர் பண்டாரநாயக்கா 1957ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் ஒப்புக்கொண்டமொழி உரிமைகள் எவை?
தமிழ் ஒரு தேசிய சிறுபான்மை யோரின் மொழி என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுமென்று ஏற்றுக்கொண் டார். தமிழ் மூலம் கல்வி கற்கும் உரிமை - தமிழில் அரசாங்கத்தோடு கருமமாற்றும் உரிமை - உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் உபயோகம் - வட, கிழக்கு மாகாண நிர்வாகத்தில் தமிழ் உபயோகம் ஆகியவை பற்றிய தமது நாலு அம்சங்களில் - "வட, கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழி தமிழ் என்பதும் - இம் மாகாணங்களில் வாழும் தமிழ் பேசுவோர் அல்லாத சிறுபான்மையோருக்கு ஏற்ற ஒழுங்கு செய்வதும்" சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் ஒப்புக் கொண்டார்.ஐக்கிய தேசியக் கட்சியும், தமது கொள்கையிலுள்ள தீவிர இன வெறியர்களும் ஏற்படுத்திய சூழ்நிலையி னால் - அவர் 1958ஆம் ஆண்டு இவ்வொப் பந்தத்தை இரத்துச் செய்தாராயினும், தம் மனச்சான்றின்படி - தமிழ் மொழிக்கு இக் குறைந்த பட்ச உரிமைகள் அளிக்கப்பட வேண்டுமென்பதை உணர்ந்திருந்தார். இதே அடிப்படையை, 1960ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியின் உதவியை நாடிய பூரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். 1960 ஏப்பிரலில் இதுபற்றி எமக்கும், பூநீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளின்போது, பண்டாரநாயக்கா - செல்வ நாயகம் ஒப்பந்தத்தின் மூலத்தை - தமது கணவரின் பத்திரங்களிடையே இருந்து திருமதி பண்டாரநாயகாவே தேடி எடுத்துத் தந்தார் என்பதும் குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

8
இந்த ஒப்பந்தம் - திரு. டட்லி சேனநாயகா அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகிய போதிலும், மொழி பற்றிய பகுதியைத் தான் எதிர்க்கவில்லை என்று 1960ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அவர் பகிரங்கமாகக் கூறினார். 24-3-65இல் திரு. டட்லி சேனநாயகா அவர்களுக்கும், திரு. செல்வ நாயகத்திற்கும் இடையில் ஒர் உடன்படிக்கை கைச்சாத்தானது என்பது நாடறிந்த விடயம். அந்த உடன்படிக்கையில் வடக்குக் கிழக்கு மாகாண நிர்வாக மொழியாகவும், பதிவேட்டுமொழியாகவும் தமிழ் அங்கீகரிக்கப்படுமென்று ஏற்றுக் கொண்டார். அன்றியும் "இலங்கை முழுவதிலும் தமிழ் பேசும் மகன் ஒருவன் தமிழில் கருமமாற்றும் உரிமை இருக்க வேண்டும் என்பது தமது கட்சியின் கொள்கை என்று திரு. சேனநாயகா விளக்கினார்” என்று அவ்வுடன்படிக்கை கூறுகிறது.
"Mr. Senanayake also explained that it was the policy of his party that a Tamil Speaking person should be entitled to transact business in Tamil throughout the Island"
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்ட நடவடிக்கைகள் தமிழில் நடத்தப் பட்டுத் தமிழிலேயே பதியப்படுவதற்கு - நீதிமன்ற மொழிச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது தமது கட்சிக் கொள்கை என்றும் திரு. டட்லி சேனநாயக்கா குறிப்பிட்டார்.
"Mr. Senanyake stated that it was the policy of his party to amend the language of the Court's Act to provide for legal proceedings in the Northern and Eastern Proivnces to be conducted and recorded in Tamil"
இன்றைய ஆளுங்கட்சியின் மானசீகத் தலைவரும், ஏனைய தலைவர்களும், இன்றைய பிரதமரும் - ஐக்கிய தேசியக் கட்சியின் மானசீகத் தலைவரும், இன்றைய தலைவரும் ஏற்றுக்கொண்ட இக் குறைந்தபட்ச உரிமைகள் தானும் தமிழ்மொழிக்கு அரசியல் அமைப்பில் வழங்கப்படவில்லை என்பது - பச்சைக்
குழந்தைக்கும் புலனாகும். தமிழினத்தின்

Page 230
-2 மொழி உரிமை கோரிக் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் யாவும் நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையில், தமிழ்ப்பிரதிநிதிகள் அரசியல் நிர்ணய சபையில் தொடர்ந்து பங்குபற்ற மறுத்ததை - நியாயமற்றது என்று கூற (Լpւգ-պւDո? 2. வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பும்; குடியேற்றமும்
பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தத்தில் இரண்டாவது முக்கிய விடயம், தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பும், குடியேற்றமும்,
1957ஆம் ஆண்டு ஜூலை 26ஆந் திகதி கையெழுத்தான ஒப்பந்தத்தில் கீழ்க்கானும் பந்தி இடம் பெற்றது:-
"It was agreed that in the matter of colonisation schemes the powers of the Regional Councils shall include the power to select allottees to whom lands within their area of authority shall be alienated and also power to select personnel to be employed for work on such schemes. The position regarding the area at present administered by the Gal-Oya Board in this matter requires consideration"
குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்த வரையில், தமது அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில், குடியேற்றத்துக்குக் காணி பெறுபவரைத் தெரிவு செய்வதும், அத்திட்டங்களில் வேலை செய்வோரைத் தெரிவு செய்வதும் பிரதேச சபைகளின் அதிகாரத்துக்குட்பட்டதாக இருக்கும் என்றும் கல்லோயா அபிவிருத்திச் சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியின் நிலை ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் திரு. பண்டாரநாயக்கா ஏற்றுக்கொண்டார். இவ்விடயம் பற்றி ஏற்பட்ட எதிர்ப்பினால், ஒப்பந்தத்தின் இப்பகுதி சிறிது மாற்றப்பட்ட போதிலும், 16-8-1957இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் திரு. பண்டார நாயக்கா பின்வரும் கொள்கையை உறுதிப் படுத்தினார்:- W
"The instrument of colonisatic n should not be used to convert the Northern and Eastern Prov

9.
SZ
inces into Sinhalese majority areas orin any other manner to the detriment of the Tamil speaking
people of those areas"
‘வடக்குக் கிழக்கு மாகாணங்களை சிங்களப் பெரும்பான்மை மாகாணங்களாக மாற்றுவதற்கோ - அல்லது அப் பிரதேசங்களில் வாழும் தமிழ்பேசும் மக்களின் நலனுக்குப் பாதகமான முறையிலோ குடியேற்றம்' என்ற கருவி உபயோகிக்கப் படக்கூடாது" தமிழர் தாயகத்தின் பாதுகாப்பிற்கு - திரு. பண்டார நாயக்கா தந்த உத்தரவாதம் இதுவாகும்.
மிஞ்சியவர் - கெஞ்சினார்
ஒப்பந்தத்தின் இப்பகுதியை மையமாக வைத்தே - ஐக்கிய தேசியக் கட்சியினர் அதற்கு விரோதமாகத் தீவிர பிரசாரம் செய்தனர். தமிழ்ப் பிரதேசங்களைக் குறிப்பிட்டுக் காட்டும் இலங்கைப் படத்தையும் பெரிதாக்கி, தம்முடன் கொண்டு, கண்டி நோக்கி யாத்திரை செய்யப் புறப்பட்டனர். அவ்வளவு தீவிரமாக இக் கொள்கையை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் திரு. டட்லி சேனநாயகா, 24-3-1965இல் திரு. செல்வநாயகத்தோடு செய்த உடன்படிக்கையில் கீழ்க் கண்ட சமரசத்துக்கு வந்தார்:-
"Mr. Senanayake further agreed that in the granting of land under colonisation schemes and
following priorities to be observed in the Northern and Eastern Provinces:-
(a) Firstly, Lands in the Northern and Eastern Provinces should in the first instance be granted to landless persons in the District.
(b) Secondly to Tamil speaking persons resident in the Northern and Eastern Provinces and,
(c) Thirdly to other citizens of Ceylon preference being given to Tamil citizens in the rest of the island."
"குடியேற்றத் திட்டங்களில் காணிகள் வழங்கப்படும்போது, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கீழ்க்காணும் ஒழுங்குமுறை கவனிக்கப்படும் எனவும், திரு. சேனநாயகா ஏற்றுக்கொண்டார்:-

Page 231
2
(அ) முதலாவதாக, வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் - அம் மாவட்டத்திலுள்ள நிலமற்ற வருக்கே முதலில் வழங்கப்பட வேண்டும்.
(ஆ) இரண்டாவதாக, வட, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். (இ) மூன்றாவதாக, இலங்கையின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் தமிழ்ப் பிரஜைகளுக்கு முதலிடங் கொடுத்து, ஏனைய பிரஜை களுக்கும் வழங்கப்படும்" இவற்றிலிருந்து, வடக்குக் கிழக்கு மாகாணங்கள் - தமிழ் இனத்துக்குச் சிறப்பான உரிமையுடைய பிரதேசங்க ளென்பதையும்; அங்கு குடியேற்றத்தின் மூலம் மாற்று இனத்தவர் நுழைக்கப்படுவது தவறென்றும் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளினதும் மானசீகத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
ஆனால் நடைமுறையில் நாம் காண்பதென்ன? கிழக்கு மாகாணத்தில் கல்லோயா, கந்தளாய், அல்லை, பதவியா போன்ற பல குடியேற்றத் திட்டங்களில் ஆயிரக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டன. திருகோணமலை மாவட்டத்தில் பல்லாயிரம் சிங்களமக்கள் அத்துமீறிக் குடியேறினர். சட்டத்தை மீறிக் குடியேறிய இம்மக்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக - அந்நிலங்களை அவர்களுக்கே சொந்த மாக்கியது தீகலாபி, சேருவல, திரியாய் போன்ற இடங்களில் பெளத்த ஆலயங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மணியோசை கேட்கும் இடமெல்லாம் பெளத்தமக்கள் வாழ வேண்டுமென்ற அடிப்படையில், பெளத்த சிங்கள மக்கள் குடியேற்றப் படுகின்றனர். தமிழ்ப் பிரதேச ஆக்கிர மிப்புக்குப் பெளத்த மதத்தையும் ஒரு கருவியாக்கி, இன்று சரித்திரத்துக்கு முற்பட்ட திருக்கோணேஸ்வர சிவாலயமும் பெளத்த ஆதிக்கத்துக்குக் கையளிக்கப்பட வேண்டும்

20
என்று கோரும் அளவுக்கு - நிலைமை மோசமடைந்து விட்டது சிங்களப் பெளத்தக் குடியேற்றத்துக்குக் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊக்கமும், ஆக்கமும் அளிக்கப்படும்போது - தம் சொந்த முயற்சியினால் காடுவெட்டி நாடாக்கி வாழ முற்படும் தமிழருக்கு என்ன நடைபெறுகின்றது?
காட்டை நாடாக்கிய மலைவாழ் தமிழனுக்கு நடப்பதென்ன?
மலைநாட்டில் வேலை வாய்ப்பிழந்த தமிழ்த் தொழிலாளர் பலர், தமிழ்ப் பிரதேசமான கல்குடாத் தொகுதியில் புனாணை போன்ற பகுதிகளில் சென்று குடியேறினர். காடுகளை அழித்து உணவுஉற்பத்தியில் ஈடுபட்டனர். உணவு பயிரிடுமாறு உரக்கக் கூறும் ஆட்சியாளர் - அவசரகாலச் சட்டத்தைக் கல்குடாத் தொகுதியில் கையாளத் தொடக்கி யிருக்கின்றனர். உணவு உற்பத்தி எப்படிப் போனாலும், தமிழர் குடியேற்றத்தைத் தடுக்கவேண்டும் என்று முனைந்து நிற்கின்றனர். பொருளாதார அபிவிருத்தித் துறையிலும் இனவாதம் எவ்வளவு தூரம் இன்றைய ஆட்சியாளரை ஆட்டிவைக்கிறது என்பதற்கு, வேறு எடுத்துக்காட்டு வேண்டுமா? காலஞ்சென்ற தலைவர்கள் பண்டார நாயகாவும், டட்லி சேன நாயகாவும் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை ஏற்று நடக்க ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் ஒத்து வருவார்களா? அவ்விரு தலைவர்களும் திரு. செல்வநாயத்தோடு செய்த ஒப்பந்தங்களில் ஏற்றுக் கொண்டவாறு - தமிழர் தாயகத்தின் தன்மை மாற்றப்பட மாட்டாது என்ற உத்தரவாதத் தையே தமிழ் மக்கள் நாடி நிற்கின்றார்கள். யூத - அராபிய எல்லைப் பிரச்சனை போல - புரையோடிய புண்ணாக இப் பிரச்சினை மாறாது இருக்கவேண்டுமானால் - நியாயத்தின் அடிப்படையில் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையின் எப்பாகத்திலும் வாழும் தமிழ் மக்கள் - தமிழ்ப் பிரதேசங்களில் நிலம் பெறுவதில் முதலிடம் பெறவேண்டும். கண்டிப் பிரதேசச்

Page 232
2.
சிங்கள மக்கள் - தமிழர் குடியுரிமை, வாக்குறுதி பெறுவதால் தம் பிரதேசத்தின் தனித்தன்மை பாதிக்கப்டுகிறது என்று குரலெழுப்புகின்றனர். அப் பிரதேசங்களில் வேலையற்று, வடக்குக் கிழக்கு மாகாணங் களில் குடியேற விரும்பும் மலைநாட்டுத் தமிழர்களுக்கு - அங்கு காணி வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும். கண்டிச் சிங்கள மக்களது பயமும் நீங்கும்; நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும், உணவுப் பிரச்சினையும் ஒருசில ஆண்டுகளில் மறைந்தும் விடும். உண்மை உழைப்பாளி களான மலைநாட்டுத் தமிழ் மக்களுக்கு - அவர்கள் சொந்த நிலத்தில் உணவு உற்பத்தி செய்ய வாய்ப்பு அளிப்பதே - நாட்டின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்க வழியாகும்.
ஆ வந்தார்க்கும் - எதிர்க்க வந்தார்க்கும் ஓர் சவால்
ஆட்சியாளர் இன்று புதைந்திருக்கும் இனவெறி என்ற சேற்றிலிருந்து கரையேறி, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை யும், இனப்போராட்டப் பிரச்சினையையும் ஒருங்கு தீர்க்க முன்வருவார்களா? இன்றைய ஆட்சியாளருக்கு மாத்திரமல்ல எதிர்க்கட்சிச் சிங்களத் தலைவர்களின் அரசியல் ஞானத்திற்கும், தொலை நோக்கிற்கும் இம் மாநில மாநாடு விடும் சவால் இதுவாகும்.
3. பிரதேச சுயாட்சி
பண்டாரநாயகா - செல்வநாயகம் ஒப்பந்தத்தில் முக்கிய இடம்பெற்ற மூன்றாவது விடயம், பிரதேச சுயாட்சியாகும். வடக்கு மாகாணத்தை ஒரு பிரதேச சபையாகவும் - கிழக்கு மாகாணத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேச சபை களாகவும் வகுத்து - இப் பிரதேச சபைகள் தம் இச்சையாக ஒன்று சேர்ந்து, ஒரே அமைப்பாக இயங்கவும் சட்டபூர்வமாக வழிவகுக்க - திரு. பண்டாரநாயகா ஒப்புக்கொண்டார். இவற்றுக்குப் பரந்த அதிகாரங்களை அளிக்கவும் - அவர் சம்மதித்தார். திரு. டட்லி சேனநாயகா - தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாவட்ட சபைகளை அமைக்க உடன்பட்டார். அதற்கான

21
சட்டமூலமும், வெள்ளை அறிக்கையும் தயாரிக்கப்பட்டன. செயற்கையாகச் சில பத்திரிகைகளாலும், அந்தந்த நேரத்தில் எதிர்க்கட்சியிலிருந்த தலைவர்களாலும் தூண்டிவிடப்பட்ட சிங்கள மக்களின் எதிர்ப்புக்குத் தலைவணங்கி, இவ்விரு தலைவர்களும் இவ்வொப்பந்தங்களிலிருந்து பின்வாங்கினார்கள். மக்களை வழிநடத்த வேண்டிய தலைவர்கள் - தவறாகத் தூண்டிவிடப்பட்ட மக்களின் எதிர்ப்பு என்ற போலிப் பிரசாரத்துக்குப் பணிந்து - கொடுத்த வாக்கைக் காற்றிற் பறக்கவிட்டனர். தாம் நியாயம் என்று கண்டதைத்தானும் தமிழ் மக்களுக்கு அளிக்கமுடியாது பின்வாங்கி மறுதலித்த சிங்களப் பெருந்தலைவர்களின் செயல் தமிழ் மக்களுடைய சிந்தனையிலும் பெரும்மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அரசியல் நிர்ணய சபையில் நாம் கோரிய மொழியுரிமை, மதச்சமத்துவம், குடியுரிமை அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது மாத்திரமன்றி, ஓர் இணைப்பாட்சியில் தமிழ் இனத்தின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொண்டு - நாட்டின் ஒற்றுமையைக் காப்போ மென்ற எமது கோரிக்கையும், எவ்வித காரணமுமின்றி, ஆராயப்படாமலே நிராகரிக்கப் பட்டது சிங்கள இனத்தின் சம்மதத்தோடு, எமது உரிமைகளை நிலைநாட்ட எவ்வித மார்க்கமுமில்லை என்ற எண்ணம் - தமிழ் மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இன்று தமிழினத்தின் முன் உள்ள வழி என்ன? தமிழனுக்குளள வழிகள்
1 ச்ெசில் வாழ்க்கை ஒன்று - இன்றைய நிலையை ஏற்றுக் கொண்டு, சிங்களமொழியைக் கற்று, மதத்துக்குத் தலைவணங்கி, தனிப்பட்ட ஒரு சிலருக்குத் தரப்படும் அற்ப சலுகைகளுக்காக ஆட்சியாளருக்கு ஆலவட்டம் பிடித்து, ஏற்றமின்றி வாழும் எச்சில் வாழ்க்கை. "கெட்ட நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு" என்று பாரதி கூறிய வாழ்க்கை. இந்த வாழ்க்கை ஒரு சிலருக்குப் பதவி பெறவும்,

Page 233
-2 அற்ப நன்மைகளைப் பெறவும் உதவினாலும்; இனத்திற்கு நலிவையும் அழிவையும் தரும். பொருளாதார நெருக்கடி மோசமாக - அதன் பழு - அடிமை இனத்தையே அதிகமாகத் தாக்கும். மூலதனம் இல்லை என்று ஆட்சியாளர் முதலில் நிறுத்தியது தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களையே. காங்கேசன் துறைத் துறைமுக அபிவிருத்தித் திட்டமும், கச்சாய் உப்பளத்திட்டமும், அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அடைந்த கதி இதற்கு நல்ல எடுத்துக்காட்டு அரசாங்கத் தின் தேசிய மயக் கொள்கை - வேலை வாய்ப்பைப் பொறுத்தவரையில் சிங்களமயக் கொள்கையாகவே நடைபெற்று வருகிறது என்பதற்குத் துறைமுகத் தேசியமயம், போக்குவரத்துச்சபை, அரசாங்கம் பொறுப் பேற்ற தோட்டங்கள் போன்றவற்றில் தமிழருக்கு வேலைவாய்ப்பு அருகிவருவது போன்றன சான்றுபகருகிறது. அரசாங்கத்தின் கைப்பாவை ஆக்கப்பட்டிருக்கும் கூட்டுறவு இயக்கமும், வர்த்தக தேசிய மயமும் தென் இலங்கையில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருக்கும் தமிழரை - அங்கிருந்து அகற்றும் வழியாகவே மாறிவருகின்றன. தனியார் கைத்தொழில் ஆரம்பிப்பதற்கும் - அரசாங்க அனுமதியும், மூலப்பொருட் கோட்டாவும் தமிழ்ப் பிரதேசங்களுக்குக் கிடைப்பதில்லை. தேசியமயக் கொள்கையால் வேலை இழந்த தமிழ்த் தொழிலாளர் காடுவெட்டி விவசாயம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது! அரசாங்கத் துறையில் வேலை வாய்ப்பு - எம் வாலிபருக்கு முயற் கொம்பு, உயர்கல்வி பெறுவதற்குத்தானும், தகுதியின் படி வாய்ப்பின்றித் தரப்படுத்தல் என்ற கொடுவாள் - குறுக்கே வந்து நிற்கின்றது. எமது மொழி அழிக்கப்படுவது மாத்திரமில்லை; எமது தொழில், கல்வி வசதிகளும் பொருளாதார வாழ்வுமே - இன்றைய ஆட்சி முறையை ஏற்று வாழ்வதினால் சிதைந்து போகின்றன. விரக்தி மனப்பான்மைக்கு இடங்கொடுத்து நாட்டை விட்டு ஓடுகின்றனர் சிலர்! நிலவிற்கு ஒளித்துப்

2
பரதேசம் போவதா? என்பது மது நாட்டுப் பழமொழி. இவ்வழி எம்நோய்க்கு மருந்தாகாது.
2. தன்னாட்சியே வழி நண்பர்களே!
நம்முன் ஒரேஒரு வழிதான் உண்டு. வீரசமுதாயத்திற்கு ஏற்ற வழி மாத்திரமல்ல - பூச்சி புழுக்களாக வாழாது, மனிதராக வாழ விரும்பும் எந்தச் சமுதாயத்திற்கும் ஏற்ற வழி அதுதான்! தன் கொள்கைக்காக ஒன்றேகால் ஆண்டுகளாக வெலிக்கடைச் சிறையில் வாடும் தமிழ்க் கவிஞன் காசி ஆனந்தன் பாடியது போல, "ஆண்ட தமிழ்ப் பரம்பரை மீண்டும் ஓர்முறை ஆள நினைப்பது" தான் அந்த வழி முன் பல்வேறு பாதைகளிற் சென்ற தமிழ்த் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டுத் தமிழர் கூட்டணி மூலம் காட்டும் வழி அதுதான் சிங்களச் சமுதாயத்தின் சம்மதத்தோடு எமது உரிமைகளை நிலைநாட்ட முடியாதென்பது தெரிந்துவிட்ட பின்பு, ஒரு தனித் தேசிய இனத்தின் மறுக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் - தன் பாரம்பரியத் தாயகத்தில் தமிழினம் தன் ஆட்சி காண்பதுதான் அந்த வழி! ஐரோப்பியர் இந் நாட்டில் கால்வைக்குமுன், எம் முன்னோர் தம் உரிமையை நிலைநாட்ட - தமிழில் ஆட்சி செய்ய - தமது மதத்தை வளர்க்க - தமது வைத்திய முறையை வளர்க்க - தம் கலை, கலாசாரத்தைக் கட்டிக்காக்க - தம் பொருள் வளத்தைச் பெருக்கச் சிங்கள மக்களின் சம்மதத்தை நாடி நிற்கவில்லை; தம் காலில் நின்றார்கள்; தம் உழைப்பில் வாழ்ந்தார்கள்; தம்மைத் தாமே ஆண்டார்கள்; அதே வழியில் எமது உரிமையை நிலைநாட்ட எமக்குள்ள மார்க்கமென்ன?
அடையும் மார்க்கம்
இன்றைய ஆட்சியில் எமக்கு நீதி வழங்கப்படவில்லை என்பதை, இனத்திற்குப் பாரதூரமான அநீதி இழைக்கப்படுகிறது என்பதை எம் மக்களிற் பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளுகின்றனர். ஆனால்

Page 234
-2 இந்நிலையை மாற்ற எம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றனர்! நாம் கைக்கொள்ள வேண்டிய முதல் ஆயுதம் - அநியாயத்தோடு ஒத்துழைக்க மறுத்தல், அண்ணல் காந்தி இந்திய சுதந்திரப் போரில் ஒத்துழையாமை, சாத்வீக சட்டமறுப்பு என்ற இரண்டு ஆயுதங்களையே கையாண்டார். ஏறத்தாழ நானூறு ஆண்டு அந்நிய ஆட்சியின்கீழ் நிராயுதபாணி களாக்கப்பட்டு, அரசாங்கத்தின் படை பலத்தை எதிர்க்கும் வழி என்ன?என்று ஏங்கும் மக்களுக்கு இவ் விருபதாம் நூற்றாண்டில் காந்தியடிகள் கொடுத்த ஆயுதம் அகிம்சையே வங்காள தேச விடுதலைப் போரின் ஆரம்பத்தில் வங்கத்தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், ஆட்சியாளரோடு ஒத்துழையாமை என்ற ஆயுதத்தையே உபயோகிக்கும்படி வங்கமக்களைக்கேட்டார். சாதாரண மக்கள் முதல் - நாட்டின் பிரதம நீதிபதிவரை அவர் கேள்விக்கியைந்து, யாகியாகான் ஆட்சி யோடு ஒத்துழைக்க மறுத்தனர். புதிய ஆளுநர்திக்காகானைச் சத்தியப் பிரமாணஞ் செய்ய மறுத்தார் வங்கப் பிரதம நீதிபதி! வங்க மக்களின் ஒற்றுமையான ஒத்துழை யாமையே - வங்க விடுதலையின் அத்திவாரம். அதன்பின் வந்தவையே இந்திய உதவியும், வெளிநாடுகளின் அனுதாபமும். அதே வழியில் இன்றைய ஆட்சியாளரோடு ஒத்துழைக்க மறுத்து; பவனிவரும் அமைச்சர்களுக்கு ஆலவட்டம் பிடித்து, மாலைபோட்டு மடிப்பிச்சை எடுக்கும் மனப்பான்மையை விட்டொழித்து, எம்மக்கள் - ஏகோபித்து எதிர்க்கும் எண்ணத்தை வளர்க்கவேண்டும். எம் மத்தியில் உள்ள துரோகிகளைப் பகிஷ் கரித்து ஒதுக்கவேண்டும். தெரிவு செய்யப்பட்ட சட்டங்களைக் கட்டுப்பாடாக மீறி, அகிம்சை நெறியில் இருந்து வழுவாது, ஆயிரக்கணக்கில் சிறை செல்வோம். எமக்கு இன்று தேவை - புரட்சி மனப்பான்மை. ஆயுத பலமற்ற மக்கள், ஆட்சியாளரின் படைபலத்தை எதிர்க்க வழி - அகிம்சைப்
புரட்சியே ஆயுதப் புரட்சி என்பது ஒரு

23
சிலரின் இயக்கமாக - ஒரு சிலரை அதிகாரத்தில் அமர்த்தும் வழியாக உலகெங்கும் பயன்பட்டிருக்கிறது. எல்லா மக்களும் பங்குபற்றும் புரட்சி - ஒதுக்கப்பட்ட மக்களின் புரட்சி - சாத்வீகப் புரட்சியே என்று "ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி" என்றநூலி ல் பிரேசில் நாட்டுப் பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். இக் கூற்று எமது நிலைக்கு மிகவும் பொருத்தமானது. இன்றைய சூழ்நிலையில் எமக்கு வேறு வழி இல்லை என்பதை இளைஞர் நன்கு உணர வேண்டும். அண்ணா கூறியபடி கடமை, கண்ணியம், கட்டுப்படு காத்து - அண்ணல் காந்தியின் வழியில் ஒத்துழையாமை, சட்ட மறுப்பு என்றஆயுதங்களைத் தாங்கி - வங்கத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஏற்படுத்தியது போன்ற ஒற்றுமையையும் ஏற்படுத்து வோமானால், வங்கம் விடுதலை பெற்றது போன்று இங்கும் உரிமைபெற முடியும் என்பது உறுதி.
சாதிப் பிரிவினை!
இதற்கு முதற்தேவை இனஒற்றுமை. ஒருசில சுயநலமிகளைத் தவிர, அரசியற் கட்சிகளில் இன்று ஒற்றுமை ஏற்பட்டு விட்டது. அது பெரிய முன்னேற்றமாகும். அந்த ஒற்றுமை, மக்கள் முழுப்பேரையும் ஆட்கொள்ள வேண்டும். சாதிப்பிரிவினை தமிழினத்தின் சாபக்கேடாக இன்னும் இருக்கின்றது. சாதியினால் உயர்வு தாழ்வு காட்டும் நிலை - இன்னும் சில துறைகளில் நிலவுகின்றது. வழிபடும் இடங்கள், பொது நிலையங்கள், உணவுச் சாலைகள் ஆகியவற்றில் வேற்றுமை பாராட்டும் நிலை மறையவேண்டும். சாதியின் பேரால் தமிழனைத் தமிழன் தாக்கும் நிலை - கொலைசெய்யும் நிலைகூட ஏற்படுவதைக் கண்டோம்! சாதி என்ற பெயரையே அறியாத ஓர் இளஞ்சந்ததியை நாம் உருவாக்க வேண்டும். தமிழினம் என்ற உணர்வைத் தவிர - வேறு எந்தப் பிரிவினைக்கும் இடமளிக்காத இளைஞர் சமுதாயம் ஒன்று உருவாகி வருகிறது! அந்த இளைஞர் சமுதாயம் எம்மினத்தை வாழவைக்கும் என்பதே, என் நம்பிக்கை.

Page 235
区
உத்தியோக மோகம்
தனிப்பட்ட எம் வாழ்வை அமைப் பதிலும், ஒரு புதிய கண்ணோட்டம் எமக்கு ஏற்படவேண்டும். ஆங்கில ஏகாபதிபத்தியம் எம் மத்தியில் பரப்பிய ஒரு வியாதி - அரசாங்க உத்தியோக மோகம். இன்று பல இளைஞர்கள் அதிலிருந்து விடுபட்டு விவசாயத்தை நாடி நின்றாலும், இன்னும் அதை நிலையான வாழ்க்கை முறையாக, வகுத்துக் கொள்ளும் மனப்பாங்கு ஏற்படவில்லை. உத்தியோகங்களுக்கு மனுப்பண்ணிக் கிடைக்காத பட்சத்தில், விரக்தியோடு விவசாயத்தில் ஈடுபடும் நிலை முற்றாக மறையவேண்டும். விட்டிலிருந்து பணம் பெற்றுக்கொழும்பில் உத்தியோகம் பார்ப்பவரிலும் - விலை மடுவின் விவசாயம் செய்பவரை விவாகம் செய்ய எம் பெண்கள் விரும்பும் நிலை வந்து விட்டது! அது எம் சமுதாயத்தின் நிலையான வாழ்க்கை வழியாக வேண்டும். அந்த நிலை ஏற்பட்டால், ஆளுங்கட்சிகளின் அடிவருடிகள் பின்சென்று ஆயிரக்கணக் கான ரூபா பணத்தைக் கொடுத்து, அற்ப உத்தியோகத்துக்காக நூறு தடவை கொழும்பு சென்று வரும் நிலையும் மறையும்; சுயாதீனமாகத் தன் மனச்சான்றின் வழினிற்று இன விடுதலைக்கு உழைக்கும் இளஞ் சமுதாயம் உருவாகும்.
AN நாம் நிற்பது இ 4ر །། சுனையில் அல்ல;

4
என் அருந் தம்பிகளுக்கு.
என் அருந் தம்பிகளுக்கு ஒரு வார்த்தை கூறி நான் விடைபெற விரும்புகிறேன். தமிழினம் வாழ்வதா? தாழ்வுற்று அழிவதா? என்பது உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது. நீங்கள் கிளர்ந்தெழாவிட்டால் எங்களுக்கு விடிவில்லை. இத்தாலிய நாட்டு இளைஞர்களைக் கரிபால்டி அழைத்தது போலவே உங்களை நாம் அழைக்கின்றோம். உடனடியாக நாம் தரக்கூடியது பொலி சாரின் அடி, பட்டாளத்தினரின் இடி, சிறை வாழ்க்கை, துன்பம், சில சமயம் வீர மரணமாகவும் இருக்கலாம். இவற்றைத் தாண்டிச் சென்றால் விடுதலை பெற்ற தமிழ் ஈழம் - சாதிபேதம் ஒழிந்த தமிழர் சமுதாயம் - உண்மையான சமதர்மம் மிளிரும் ஈழத் தமிழகம் - ஆட்சிபீடத்தில் வீற்றிருக்கும் தமிழ் அன்னை - நெளியும் புழுப்போல வாழும் நிலை மாறி, வேலும், வாளும் தாங்கிப் பாராண்ட பழந் தமிழ் மறவர்போல - நவீன விஞ்ஞான வளர்ச்சியெல்லாம் பெற்றுநிமிர்ந்து நிற்கும் இஸ்ரேல் நாட்டு இளைஞர் போன்ற ஓர் இளந் தமிழர் சமுதாயத்தைக் காணலாம். அந்த நாளை நோக்கிநடப்போம் வாருங்கள் என்று கேட்டு விடைபெற்றுக் கொள்கின்றேன்.
வாழ்க ஈழத் தமிழகம் வெல்க தமிழ் ஆட்சி அடைவோம் வீர சுதந்திரம்!
Ls)
ன்பந் தேங்கும் ܢܠ 4ر
சரிவு முனையில்
goele-NY

Page 236
திரு. மு.
(FLL
திரு. க. துரைரத்தினம் (பருத்தித்துறைப் பாராளு மன்ற உறுப்பினர்)
ܢܬ
திரு. செ. ம. செல்லத்தம்பு (வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினர்)
திரு. பா. (திருகோணமை
உறுப்
 
 
 
 
 
 
 

செயல்வீரர்கள் சிலர்
ஆலாலசுந்தரம் த்தரணி)
திரு. க. ஜெயக்கொடி (உடுப்பிட்டிப் பாராளு மன்ற உறுப்பினர்)
நேமிநாதன்
ப் பாராளுமன்ற பினர்)
திரு. அ. தங்கத்துரை (மூதூர் 2ஆவது பாராளு
மன்ற உறுப்பினர்)

Page 237


Page 238
அதிமு தீர்மான
(தேசிய - மாநில சிறப்பு 1
(227-286

கை(த்) க் கட்சியின்
ழக்கிய
O O Ti50
மாநாடுகளில் முகிழ்த்தவை)
O O O பக்கங்கள்)
Sfog - 'a.

Page 239


Page 240
仁
ଈ, ୬. திருகோண
1951ஆம் ஆண் 13ஆம் 14ஆம் 15ஆம்
முதலாவது C நிறைே
H தீர்மான

• • •9Iت
flosnauslá
டு ஏப்ரல் திங்கள் ம் திகதிகளில் நடத்திய
தசிய மாநாடு வற்றிய
O O TSG)

Page 241
r
I.T.A
RESOL
PASSED
FIRST NATIONA
Held on the 13th, 14 at Trinc
ܢܠ

A.K.
를
UTIONS
) AT THE
L CONVENTION
th 15th of April 1951 Omalee محمح۔
أصـ

Page 242
2
தீர்மானம் -
தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனமெனக் கணிக்கப் பெறுதற்கு அவர்களுக் குள்ள மறுக்கவொண்ணா உரித்துவத்தை எடுத்துரைப்பதுடன், அரசியல் சுயாதீனம் பெறுதற்கு அவர்களுக்குள்ள உரிமையையும், சிங்களவர்களுடன் சமஷ்டியமைப்பு முறையில் இணைவதற்கு அவர்களுக்குள்ள விருப்பையும் இம்மாநாடு பிரகடனப் படுத்துகிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"பரிபூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு ஒவ்வோர் இனத்திற்கும் பிரிக்கவொண்ணாத உரிமை உண்டென்ப தாலும்; அவ்வுரிமையின்றி அவ்வினத்தின் ஆன்மீக, கலாசார, தார்மீகப் பொலிவு சீரழிந்து விடுமென்பதாலும்; இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனமென்று கணிப்பதற்கான ஒவ்வோர் அடிப்படைத் தகுதிகளிலும் (அதாவது, முதலாவதாக,குறைந்தபட்சம் சிங்கள மக்களையொத்த அளவுக்காவது புராதனமானதும் புகழ் செறித்துமாக இத்தீவில் தனியொரு வரலாற்றாலும்; இரண்டாவதாக, ஒப்பற்றவோர் இலக்கியப் பாரம்பரியத்துடனும், இக்காலத் தேவைகள் அனைத்துக்குமே போதுமானதாகத் தமிழ் மொழியை இலங்கச் செய்யும் நவீன வளர்ச்சியுடனும் விளங்குவதான - சிங்களவர்களின் மொழியினின்றும் முற்றாக வேறுபட்ட தனியொரு மொழிவாரி மக்கள் என்ற உண்மையாலும்; இறுதியாக, இத்தீவின் மூன்றிலொரு பாகத்தை மேவிச் செறிந்துள்ளதான குறிப்பிடத்தக்க நிச்சயமான நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் அவர்கள் என்ற காரணத்தாலும்); சிங்களவர் களினின்றும் வேறுபட்ட ஒரு தனியினமாக அவர்கள் விளங்குகிறார்கள் என்பதாலும்; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழ் பேசும் இனத்திற்கென - பிரிக்க முடியாத அவர்களின் அரசியல் சுயாதீன உரிமையைக் கோருவதுடன், அடிப்படை யானதும், மறுக்கவொண்ணாததுமான சுயநிர்ணயக் கோட்பாட்டுக்கிசைய,

3.
மொழிவாரி அரசுகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கான ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடாத்துமாறு கேட்டுக் கொள்கிறது.
"மேலும், பல நாடுகளில் - உதாரணமாகக் கனடா, இந்தியக் குடியரசு, கவிற்சர்லாந்து, சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் ஒரு சமஷ்டியமைப்பு அரசினை நிறுவியதன் மூலமே - பல்லினமுடைய பன்மொழி பேசும் அந்நாடுகளின் பல்வேறு சிக்கலான பிரச்சினைகள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளன என்பதாலும்; அந்நாடுகளில், தேசிய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இச் சமஷ்டியமைப்பு அரசு உண்மையான ஐக்கியத்தையும், சமாதானத் தையும், முன்னேற்றத்தையும் உறுதி செய்துள்ளது என்பதாலும்; இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு, இவ்விரண்டு இனங்களுக்கும் பொதுவான தாயகமாகிய இந்நாட்டில், இவ்வினங்களுக்கிடையே பன்னூற்றாண்டு காலமாக நிலவிய நெருங்கிய உறவின் அறிவு பூர்வமானதும், இயல்பானதுமான முற்றுப்போறாகவும்; சிங்கள மக்களுடன் தேசிய நல்லெண்ணத் தையும், நெருங்கிய ஒத்துழைப்பையும், மேம்படுத்திப் பேணும் நோக்குடனும், இலங்கைச் சமஷ்டியமைப் புக்குள் சுயாதீனமான ஒரு தமிழ் அரசினை அமைப்பதே செயற்பாலது எனவும், செம்மையானது எனவும் தமிழ் பேசும் மக்களுக்கு விதந்துரைக்கின்றது"
தீர்மானம் - 2
சோல்பரி அரசியலமைப்புத் திட்டம் அறிவுக்கொவ்வாததெனவும், தமிழ்பேசும் மக்களை அடிமை கொள்வதற்கேதுவான தெனவும் இம்மாநாடு கண்டிக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
“ஒற்றையாட்சி அமைப்புமுறைப் பாராளுமன்ற முறை அரசு - தனியொரு இனத்தைக் கொண்ட நாட்டில் நிறுவப்படும் போது மட்டுமே சனநாயக ரீதியிலும், அறிவு ரீதியிலும் இயங்கவல்லது என்பதால்,

Page 243
ー{2 ஒற்றையாட்சிமுறை அரசமைப்பின் கீழ், இருபது இலட்சம் தமிழ் பேசும் மக்களும் - ஐம்பது இலட்சம் சிங்களம் பேசும் மக்களின் நல்லெண்ணத்திலும், சலுகையிலுமே எப்போதும் தங்கியிருப்பதுடன், அவர்களின் அரசியல், கலாசார, பொருளாதார நலன்கள் - சிங்கள இனத்தவர்களின் அத்தகைய நலன்களுடன் மாறுபடும் அல்லது முரண்படும் வேளைகளில் (அவர்கள் ஏற்கெனவே மோசமாகப் பாதிக்கப்பட்டாற் போன்று) கட்டாயம் பாதிக்கப்படுவார் களாதலால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு, (இரண்டு தனித்தனி இனங்கள் வசிக்கும்) இலங்கையில் ஒர் ஒற்றையாட்சிமுறை அமைப்பினைத் திணிக்கின்றதான சோல்பரி அரசியலமைப் பினை அறிவுக்கொள்வதாகும். அநீதியானதும் எனக் கண்டிக்கிறது.
"அத்துடன், இலங்கையில் தமிழ் இனம் அங்ங்ணம் தொடர்ந்து சிங்கள இனத்தின் மீது தங்கியிருப்பது - காலப் போக்கில் அவர்களின் அரசியல் அடிமைத் தனத்திலும், இன அழிவிலும் முடியும் என்பதால், இலங்கைச் சமஷ்டிக் கூட்டாட்சி அமைப்பு ஒன்றின் கீழ், ஒரு சுயாதீன மொழிவாரித் தமிழ் அரசை நிறுவுவதன் மூலம் தமது சுதந்திரத்தைக் கோருமாறும், அச் சுதந்திரத்தை ஈட்டுவதற்குத் தளராது உழைக்குமாறும் இம்மாநாடு, இத்தீவகத்தி லுள்ள தமிழ் பேசும் மக்களை - அவர்களின் இனத்தினுடைய மானத்தின் பெயராலும், அவர்களதும் - அவர்களது குழந்தை களினதும் தன்மானத்தின் பெயராலும் அழைக்கிறது" தீர்மானம் - 3
தற்போதைய அரசியலமைப்பின் கீழ் தமிழ் பேசும் மக்களுறும் அரசியல் அவமதிப்பை யும், குடியுரிமைச் சட்டங்களின் கீழ் அவர்களும் அவமானத்தையும் இம்மாநாடு குறிப்பெடுத்துக் கொள்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"இலங்கையிலுள்ள மாட்சிமை தங்கிய மகாராணியாரின் குடிமக்கள்எல்லோருக்கும் வழங்கப்பட்ட சுதந்திரம் எனக்

32
கூறப்பட்டதான - அன்றைய அரசியல் திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களது அரசியல் அந்தஸ்தைப் பெருக்கிக் கொள்வதற்கு மாறாக, ஒரபட்சமான சட்ட வாக்கங்களின் பலனாகவும், திட்டமிட்ட நிர்வாக நடவடிக்கைகளினாலும் அரசியல் ரீதியாக இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறார்கள். அத்துடன், அவர்களில் - இலங்கைத் தமிழர்களும் இலங்கை முஸ்லிம் களுமான தமிழ் பேசும் மக்களில் ஒருபிரிவினர் - தற்போதைய அரசியல் திட்டம் வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் தமது சகதேசிகளான சிங்கள மக்களுடன் சமமாக அனுபவித்த சந்தேக மற்ற குடியுரிமையும், வாக்குரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டதன் மூலம் சந்தேகப் பிரஜைகளாக ஆக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், மலைநாட்டில் நிரந்தரமாக வாழுகின்றவர்களான - ஏறக்குறைய 800,000 தமிழ்த் தொழிலாளர் களைக் (அவர்களில் பெரும்பான்மையோர் இலங்கையில் பிறந்தவர்களும், ஏறக்குறைய எல்லோருமே இலங்கையைத் தவிர வேறு தாயகமற்றவர்களுமாவர்.) கொண்ட இன்னொரு பிரிவினரிடமிருந்து, அவர்கள் இருபதாண்டுகளாகத் துய்த்திட்ட அடிப்படை உரிமையான வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதுடன், மேலும், அவர்கள் கொடூரமான முறையில் நாடற்றவர்கள் என்ற நிர்க்கதியான நிலைக்கு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் சுதந்திரம் கொண்ட இழிவான அர்த்தத்தினால் - இவர்கள் மீது பூட்டப்பட்ட அடிமைத் தளையிலிருந்து, இலங்கையில் பிறந்தவர்களான இவர்களின் சந்ததியினராவது விடுபடுவார்கள் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இல்லை. எனவே, இம் முதலாவது தேசிய மாநாடு. இலங்கைச் சமஷ்டியமைப்புக்குள் சுயாதீனமான, மொழிவாரியான ஒரு தமிழ் அரசைக் காலதாமதமின்றி நிறுவுவதற்கு இடையறாது உழைப்பதன் மூலம், இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ்பேசும் இனத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ள இந்த அவமானத்தையும்,

Page 244
2
அவமதிப்பையும் அகற்றுவதற்கு அது எடுத்துள்ள உறுதியான, அசைக்கமுடியாத தீர்மானத்தைப் பிரகடனப்படுத்துகிறது"
தீர்மானம் - 4
தற்போதைய அரசியலமைப்புத் திட்டத்தின் கீழும், தற்போதைய அரசாங்கத் தின் கீழும் தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் எதிர் நோக்கியிருக்கும் பேராபத்தை இம் மாநாடு சுட்டிக்காட்டுகிறது எனக் கூறிடும் தீர்மான்ம்.
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது மாநாடு, இன்றைய அரசிய லமைப்பின் கீழ் இலங்கையில் தமிழ் மொழியின் அந்தஸ்தினை எதிர் நோக்கி யிருக்கும் பேராபத்திற்கு, எல்லாத் தமிழ் பேசும் மக்களினதும் கவனத்தை ஈர்க்கிறது. செல்வாக்குள்ள சிங்கள அரசியல், கலாச்சார அமைப்புக்கள் - சிங்களம் மட்டுமே இந்நாட்டின் உத்தியோகமொழியாக இருக்க வேண்டுமெனப் பிரகடனப் படுத்தியுள்ள அதே வேளையில், இலங்கை அரசாங்கம் வெளித் தோற்றத்தில் பாரபட்சமின்றி நடப்பதாகப் பாசாங்கு செய்தாலும், திட்டமிடப்பட்ட நிர்வாக நடவடிக்கை மூலம், பெரும்பான்மையான அரசாங்க வெளியீடுகளிலும், உத்தியோக பூர்வமான படிவங்களிலும் வேண்டுமென்றே தமிழைப் புறக்கணித்துள்ளது.
"இன்றைய விரோதமான அரசியலமைப்புப் பின்னணியில், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மட்டுமே தமிழ் மொழியை உத்தியோக மொழியாக்குவதும், நாட்டின் ஏனைய பாகங்களில் சிங்களத்தை உத்தியோக மொழியாக்குவதுமான அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட கொள்கை யானது - இறுதியில் இத்தீவிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கலாசார அடிமைத் தனத்தில் முடிவடையும் என்பதுடன், காலப் போக்கில். இத்தீவின் தொடர்ந்து சுருங்கி வரும் ஓர் இடப்பரப்பினுள், தமிழ் மொழி ஓர் இரண்டாந்தர மொழியாக ஒதுக்கப் படுவதற்கே வழிவகுக்கும் என இம்மாநாடு நம்புகிறது.

33
'எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு. இலங்கை சமஷ்டியமைப்புக்குள் சுயாதீன மான, மொழிவாரியான ஒரு தமிழ் அரசைக் காலதாமதமின்றி நிறுவினாலன்றி, இத்தீவில் தமிழ் பேசும் மக்களுக்கோ, அவர்களது மொழிக்கோ அல்லது கலாசாரத்திற்கோ கெளரவமான எதிர்கால மொன்றை உறுதிசெய்ய முடியாது என்பதை உணரும்படி, தமிழ் பேசும் மக்களை அழைக்கிறது"
தீர்மானம் - 5
அரசாங்கத்தின் காணி அபிவிருத்திக் கொள்கையும், குடியேற்றத் திட்டக் கொள்கையும் இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் நிலைபேறான வாழ்வுக்கே ஓர் அச்சுறுத்தலாகும் என இம் மாநாடு கண்டிக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"தமிழ் பேசும் மக்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் பிரதேசங் களுக்கு அவர்கள் பிரிக்கமுடியாத உரிமையுடையவர்களாதலால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது மாநாடு, கல்லோயா நீர்த்தேக்கத்துக்குட் பட்ட காணியிலும், அத்தகைய வேறு நிலப்பரப்புகளிலும் தனிச் சிங்கள மக்களை மட்டுமே குடியேற்றுவதான அரசாங்கத்தின் வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட கொள்கையையும் நடவடிக்கையையும் - மேற்கூறப்பட்ட இந்த அடிப்படை உரிமையை மீறும் தன்மையது எனவும், இலங்கையில் தமிழ் பேசும் இனத்தின் நிலைபேறான வாழ்வையே நிர்மூலம் செய்வதான திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் எனவும் கண்டிக்கிறது.
"இன்றைய அரசியலமைப்புத் திட்டத்தின் கீழும், தவிர்க்க முடியாத அழிவு இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களை எதிர்நோக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து, இம் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடியின் கீழ் அணி திரளுமாறும், இலங்கையில் ஒரு சமஷ்டிமுறை அரசியலமைப்பினைக் காலதாமதமின்றி

Page 245
2.
நிறுவுவதன்மூலம், இத்தீவில் அவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்குமென - சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் வென்றெடுக்குமாறும் இலங்கையிலுள்ள எல்லாத் தமிழ் பேசும் மக்களையும் அழைக்கிறது"
தீர்மானம் - 6
இலங்கையின் அதிகார பூர்வமான கொடி " தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அவமானச் சின்னம் என - இம்மாநாடு அக் கொடியை நிராகரிக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"இலங்கையின் அதிகார பூர்வமான கொடியில், சிங்களச் சிங்கச் சின்னமானது அக்கொடியின் முக்கியமான பாகமாக முழுமையாகப் புனிதமுடன் பேணப் பட்டிருக்க - தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கக் கொடிக்குப் புறத்தே ஒரு புறவொட்டுகளாக அமைந்துள்ள இரண்டு குறுகிய கோடுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளமையால், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு, இலங்கையின் அதிகார பூர்வமான கொடியை - இத்தீவிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட வேண்டாத ஒரு நிந்தனையெனக் கணித்து நிராகரிக்கிறது. இலங்கையின் இந்த அதிகார பூர்வமான கொடி - இந்நாட்டின் அரசியல் சமுதாயத் தில் தீண்டாதவர்களாக ஒதுக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் இன்றைய அவமானகரமான அந்தஸ்தினைச் சரியாகப் பிரதிபலி க்கின்றதென இம் மாநாடு சுட்டிக் காட்டுகிறது.
“இம் மாநாடு, சுதந்திரத்தை வென்றெடுக்கவும், தமிழ் பேசும் மக்களின் தன்மானத்தை மீட்கவும் அது கொண்டுள்ள தீர்மானத்தை வலியுறுத்துவதுடன், சமஷ்டி இலங்கையின் தேசியக் கொடி - இன பேதமற்ற கோட்பாடுகளின்மீது உருவாக்கப் படுமெனவும், இன்றைய காலகட்டத்திற்கேற்ற உயர்ந்த இலட்சியங்களிற்கிசைய அமைக்கப்படு மெனவும் பிரகடனப் படுத்துகிறது"

34
தீர்மானம் - 7
மொழிவாரித் தமிழ் அரசினை, அனைவர்க்கும் சுதந்திரம் - அனைவர்க்கும் சமத்துவம் - அனைவர்க்கும் நீதி என்ற உயர்ந்த இலட்சியங்களின் மீது நிறுவுவதற்கு இம் மாநாடு உறுதியளிக்கின்றது எனக் கூறிடும் தீர்மானம்.
“கொடிய அரசியலமைப்புத் திட்டத்தின் தளையினின்றும் விடுதலை பெறப்போராடுகிற இலங்கையிலுள்ள தமிழ் பேசும் மக்களின் இத் தேசிய மாநாடு, அவர்கள் தமது விடுதலையைப் பெறும் வேளையில், மக்களில் ஏதேனும் ஒரு பிரிவிற்கு அல்லது பிரிவுகளுக்கு - மற்றவர்களைக் காட்டிலும் மேலான மாகாணரீதியான, மதரீதியான, சமூகரீதி யான அல்லது பொருளாதார ரீதியான அனுகூலம் அல்லது வாய்ப்பு எதுவும் கிடைக்காதவாறு, சுயாதீனமான மொழிவாரித் தமிழ் அரசின் அரசியல மைப்புத் திட்டத்தில், (எப்பிரிவினரினதும்) ஆதிக்கமின்மை என்ற கோட்பாட்டைத் தமிழ் பேகம் மக்கள் போற்றிப் பேணுவர் என்ற உறுதிமொழியை இத்தாள் அளிக்கிறது.
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம் முதலாவது தேசிய மாநாடு, எல்லா மக்களுக்கும் உண்மையான சுதந்திரத்தை அல்லது நியாயத்தைப் பெறுவதற்கு இன்றியமையாதனவான இந்த இலட்சியங் 356) GT முதலாவதாக, ஏறக்குறைய சுவிற்சர்லாந்து நாட்டின் அரசியல் திட்டத்தின் மாகாண அமைப்பு முறையில், திட்டமிடப்பட்ட பிரதேச ரீதியிலான ‘சுயாட்சி மாவட்டங்களைக் கொண்ட ஒரு பரந்த அடிப்படையிலான அமைப்பினை நிறுவுவதன் மூலமும்; இரண்டாவதாக, கண்டிப்பாக மதச்சார்பற்ற ஓர் அரசு என்ற அடிப்படையிலும்; மூன்றாவதாக, மக்களுக்கான ஒரு பூரணமான சோஸலிஸப் பொருளாதாரம்' என்ற கோட்பாட்டின் மீதும்; இறுதியாக மொழிவாரியான சுயாதீனத் தமிழ் அரசின் அரசியலமைப்புத் திட்டத்தில் - ஜனநாயக நெறிகளை எழுத்திலும், கருத்திலும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதன் மூலமுமே எய்த முடியுமெனப் பிரகடனப்படுத்துகிறது."

Page 246
2
Resolution - No. 1
The Convention enunciates the Tamilspeaking people's unchallengeable title to nationhood, and proclaims their right to political autonomy and desire for federal union with the Sinhalese.
"Inasmuch as it is the inalienable right of every nation to enjoyfull political freedom without which its spiritual cultural and moral stature must degenerate, and inasmuch as the Tamil-speaking people in Ceylon constitute a nation distinct from that of the Sinhalese by every fundamental test of nationhood, firstly that of a separate historical past in this island atleast as ancient and as glorious as that of the Sinhalese, secondly by the fact of their being a linguistic entity entirely different from that of the Sinhalese, with an unsurpassed classical heritage and a modern development of language which makes Tamil fully adequate for all present day needs, and finally, by reason of their territorial habitation of definite areas which constitute over one-third of this island, this first National Convention of the I.T.A.K. demands for the Tamil-speaking nation in Ceylon their inalienable right to political autonomy and calls for a plebiscite to determine the boundaries of the linguistic states in consonance with the fundamental and unchallengeable principle of self-determination.
"Further, inasmuch as the various complex problems of multi-national and multi-linguistic states have been successfully solved by the establishment of a federal system of government in many countries, as for example in the Dominion of Cananda and in the Republic of India, Switzerland and the U.S.S.R.; and inasmuch as the federal system of government has ensured for those countries true unity, Peace

35
and Progress in all spheres of national life, this First National Convention of the .T.A.K. recommends to the Tamil-speaking people the feasibility and desirability of establishing the autonomous Tamil linguistic state within the framework of a Federal union of Ceylon, as the rational and natural culmination of centuries of close association be
tween these two nations in this their common motherland and with a view to promoting and maintaining national goodwill and close co-operation with the Sinhalese people."
Resolution - No. 2
The Convention con demns the Soulbury Constitution as irrational and conducive to the subjection of the TamilSpeaking people.
"Whereas the unitary system of Parliamentary Government can function demoCratically and nationally only when established in a uni-national country this First National Convention of the l.T.A.K., condemns the Soulbury Constitution, which imposes a unitary system of Government of Ceylon (which is peopled by two distinct nations) as being both irrational and unjustinasmuch as under this system of government the twomillion Tamil-speaking people in Ceylon will be perpetually dependent on the goodwill and the good grace of the Five-million Sinhalese people and must inevitably suffer (as indeed they have already grievously suffered Whenevertheir political,cultural and economic interests are at variance or in conflict with those of the Sinhalese nation, and whereas such continued dependence of the Tamil nation in Ceylon on the other nation must eventually result in their political subjection and national deterioration, this convention calls upon the Tamil-speaking people in this

Page 247
2
island in the name of their national honour and self-respect and that of their children to demand and work unceasingly for the early realisation of their freedom by the establishment of an autonomous Tamil linguistic state within the framework of a Federal Union of Ceylon."
Resolution - No. 3
The Convention records the political degradation of the Tamil-speaking people under the present constitution and their humiliation under the Citizenship Acts.
This first National Convention of the I.T.A.K. places on record the starting fact that since inauguration of the present constitution which was heralded as "The grant of freedom for all his majesty's subjects in Ceylon".TheTamil-speaking people in Ceylon far from attaining any addition to their political stature have as a result of discriminatory legislation and deliberate administrative action been politically degraded in status and whilst one section of the Tamil-speaking people (The ceylon Tamils and Ceylon Muslims) have been made doubtful citizens by the denial to them of their right to unduestioned citizenship and the vote which they had enjoyed in equal measure with their Sinhalese compatriots prior to the grant of the present constitution, the other section composed of nearly 800,000 Tamil workers permanently settle in the Up-country most of whom have been born in Ceylon and nearly all of whom have no other home but Ceylon have been deprived of their fundamental right to vote which they had enjoyed for twenty years, and further, cruelly condemned to statelessness for all time without hope even for their descendants born in Ceylon to shake off the bondage in to which they have thrust by an ignoble conception of Ceylon's independence.This first National Convention

36
therefore declares its firm and unshakable determination to remove this humiliation and dishonour imposed on the whole Tamilspeaking nation in Ceylon by Working unceasingly for the early establishment of an autonomousTamillinguistic state within the framework of a Federal Union of Ceylon.
Resolution - No. 4
The Convention points out the grave danger that awaits the Tamili language and culture under the present Constitution and under the present government.
This first National Convention of the I.T.A.K. calls the attention of all Tamil-speaking people to the grave danger facing the status of the Tamil language in Ceylon, under the present political set-up.The government of Ceylon though outwardly professing neutrality has by planned administrative action deliberately ignored Tamil in most government publications and official forms, even whilst influential Sinhalese political and cultural organisations have declared that Sinhalese alone should be the official language of this country.
This convention in convinced that in the present adverse constitutional context, the avowed policy of government to make Tamil the official language only in the Northernand Eastern provinces, and Sinhalese in the rest of the country, would ultimately resuit in the cultural oppression of the Tamilspeaking people in this lsland and eventually lead to the Segregation of Tamil as a subordinate language in a steadily contracting area of the lsland.
This first National Convention to the l.T.A.K. therefore calls upon all Tamil-speaking people to realise that no honourable future for the Tamil-speaking people, their lan

Page 248
guage or their culture can be assured in this island, except by the early establishment of an autonomousTamil Linguistic state within the framework of a Federal Union of Ceylon.
Resolution - No. 5
The Convention condemns the government's land development and colonisation policy, as a threat to the Very existence of the Tamil-Speaking Nation in
Ceylon.
Inasmuch as the Tamil-Speaking people have an inalienable right to the territories which they have been traditionally occupying, this First National Convention of the l.T.A.K. condemns the deliberately planned policy and action of the Government in Colonising the land under the Gall-oya, reservoir and other such areas with purely Sinhalese people as an infringement of this fundemental right and as a calculated blow aimed at the very existence of the TamilSpeaking nation in Ceylon.
Realising that underthe present constitution and under the present government, inevitable liquidation awaits them, this, First Nation Convention calls upon allTamil-speaking people in Ceylon to rally under the banner of the I.T.A.K. and win freedom and selfrespect for themselves and their decendants in this island by the early establishment of a Federal Constitution in Ceylon.
Resolution - No. 6
The Convention rejects the official flag of Ceylon as an insult to the Tamil-speaking people.
This First National Convention of the I.T.A.K. rejects the official flag of Ceylon as constituting a gratuitous insult to the Tamilspeaking people in this lsland, inasmuch as, they are assigned two narrow stripes which are placed as extraneous accretions outside the inner vertical border of the Sinhalese Lion

7
flag which is sacrosanctly preserved in its entirety as the all important part of the flag. This convention points out that this official flag of Ceylon correctly symbolises the present humiliating status of the Tamil-speaking people in Ceylon, who are placed in the position of out castes in the body - politic.
This convention reiterates its resolve to win freedom and redeem the self-respect of the Tamil-speaking people; and declares that the union flag of Federal Ceylon will be framed on non-communal principles and designed on the highest ideals of the present age.
Resolution - No. 7
The Convention pledges itself to establish the Tamil Linguistic state on the highest principles of freedom, equality and justice for all.
This National Convention of the Tamilspeaking people in Ceylon struggling for freedom from the yoke of an oppressive constitution, hereby pledges that when they have obtained their freedom, the Tamil-speaking people will so enshrine the principle of nondomination in the constitution of the autonomous Tamil Linguistic state that no provincial, religious, social or economic advantage or opportunity would be available to any section or sections of the people over that of the others.
This First national convention of the I.T.A.K. declares that these ideals without which there can be no true freedom or justice for all the people - can be attained firstly, by the establishment of broad - based system of regional self-governing districts planned somewhat on the canton structure of the Swiss Constitution, secondly on the basis of a strictly secular state, thirdly on the principle of full socialist economy for the people and finally by strictly adhering to the tenets of democracy both in the letter and in the spirit of the constitution of the autonomous Tamillinguistic state.

Page 249


Page 250
வெட்டிவா எனில் - கட்
வவுனியா மாநாட்டு அணிவகு
வன்னி நாட்டில் 6
பைந்தமிழ் மன்னன் பண்டார வன்னியன் கொடிகL 6ஆவது தேசிய மாநாடு வெற்றிவாகைசூடத் துை இவர்களே!
 
 

--------------- །
டிவரும் தொண்டர்கள்!
E.
ப்பிற்கெனக் காத்திருக்கின்றனர்
வனிதையர் அணி
ட்டி ஆண்ட வவுனியாவில் நிகழ்ந்த கட்சியின் ணபோன இ. த. அ. க. மாதர் முன்னணியினர்
أكد - - - - - - - - - - - - - - -

Page 251
/ー
கர்மவீரரைச் சந்தித்த வெற்றி
இ. த. அ. க. சார்பாகத் தமிழகத்தில் அவர்களைச் சந்தித்து அளவளாவினார் : அவர்கள். இச் சந்திப்பின்போது திரு. இரா
இளைஞர்க்கென :
சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயர்நீதிமன்ற முன்பு தலைவர்கள் ஒருநா இடமிருந்து வலம்: திருமதி அ. மங்கைய
திரு. வி. தர்மலிங்கம், திரு. வீ ஆனந்தசங்க
 
 

Y க்களிப்பில் தமிழர் காவலர்!
பெருந்தலைவர், கர்மவீரர் கு. காமராஜ் தமிழர் காவலர் வி. தர்மலிங்கம், பா. உ.
1. ஜனார்த்தனமும் உடனிருந்தார்.
உண்ணா நோன்பு
களை உடன் விடுவிக்கக் கோரி யாழ். ள் உண்ணாநோன்பு இருந்த காட்சி.
க்கரசி, திரு. அ. அமிர்தலிங்கம்
பா. உ. திரு. அ. குமரகுரு,
, Lunt. D.

Page 252
公
SSSSSSSSSSSSSSSSSLS
1956 ஆவணித் | 9
இத.
4ஆவது மாநில மாந
தீர்ம
RESOLU
Passed at the 4th Ann
held at Trinco
on 19th Augus
A.
ZZ
ZZZZZZZZZZZZZZZZZZZZZaZZZZZZZZZCZrZZZZZZ.
徐
 
 

ހަޗަ/2
திங்கள் 19ஆம் நாள்
ல் நடைபெற்ற
அ. க. வின்
ாட்டில் நிறைவேற்றப்பட்ட
om6ori
須
Lal Convention
ZZZ7 44ZZZZZZZZZZZ777

Page 253
2.
தீர்மானம்
இந்நாட்டில் இணைப்பாட்சி ஒன்றியம் ஒன்றினை உருவாக்க இலங்கை அரசாங்கம் தவறுமாயின், இலங்கைத் தமிழரசுக் கட்சி நேரடி நடவடிக்கையில் இறங்குமென இம்மாநாடு பிரகடனம் செய்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"இருமொழி பேசும் மக்களைக் கொண்ட ஈழநாட்டில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத முறையில் அநீதியாக இன்றைய ஒற்றையாட்சிமுறை திணிக்கப்பட்டிருப்ப தாலும்;
தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மை யினராக வாழும் தேர்தல் தொகுதிகளில் ஒன்றிற்கூடப் போட்டியிடாமலேயே, தமிழரை அடக்கியாளக்கூடிய பெரும் பான்மையைப் பெறக்கூடிய பூதாகரமான தேர்தல் தொகுதி அமைப்பு மூலமும், இலங்கை முழுவதும் சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்குவோம் என்ற கூக்குரல் மூலம் பதவிக்கு வந்துள்ள மக்கள் ஐக்கிய முன்னணி அரசைப் போன்ற சிங்களப் பெரும்பான்மை அரசைத் தேர்ந்தெடுக்கும் 60 இலட்சம் சிங்கள மக்களின் நல்லெண்ணத்திலே தங்கியிருக்க வேண்டிய பரிதாபநிலை காரணமாக, 25 இலட்சம் தமிழ்பேசும் மக்களின் சனநாயக உரிமைகளும், சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு வருவதாலும்;
தமிழ் பேசும் மக்கள் வாழும் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒருமித்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாது பாராளுமன்றத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றிய தும், சிங்களத்தைப் பூரணமாக நிராகரிக்கும் தமிழ் மக்கள் மீது அதனைத் திணிக்க முயல்வதும், செம்மை சான்ற பேரிலக்கியச் செல்வத்தையும் நவீன வளர்ச்சியையும்
கொண்டதும் - கீழைத் தேசத்து மொழிகளில் முன்னேற்ற மடைந்ததும் - முற்போக்குடையதுமான தமிழை
அழித்தொழிப்பதும், சிங்கள மக்களின் வரலாற்றையொத்த பழைமையும் பெருமையும் மிக்க வரலாற்றை உடையவர் களான தமிழர்களை - இனக் கொலைக்குட்

42
படுத்துவதுமே அரசின் நோக்கம் என்பதை ஐயத்துக்கிடமின்றித் தெளிவுபடுத்து வதாலும்;
பாராளுமன்றத்தில் இனவாரிப் பெரும்பான்மை பெற்றுள்ள சிங்கள இனம், கொடிய சட்டங்களுக்கெல்லாம் தனி உதாரணமாக இருக்கும் குடியுரிமை, வாக்குரிமைச் சட்டங்களை நிறைவேற்றி, இந்த நாட்டையே தமது தாயகமாகக் கொண்ட மலைநாட்டுத் தமிழ் மக்களுள் ஒரு பகுதியினரைத் தமது குடியுரிமையை நிரூபிக்க முடியாத காரணத்தால் - ஐயத்துக் கிடமான குடிமக்களாக மாற்றியுள்ளதோடு அங்கு நிலையாகக் குடியமர்ந்துள்ளவர்களும் - இந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளிகளாயுள்ளவர்களுமான 8 இலட்சம் தொழிலாளர்களின் குடியுரிமைகளையும், வாக்குரிமைகளையும் பறித்துள்ளதாலும்:
1947ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சிப்பீடமேறிய அரசுகள் தமிழரின் மரபுவழித் தாயகப் பகுதிகளில் திட்டமிட்டு நடாத்திவரும் சிங்களக் குடியேற்றம் மூலம் - தமிழரை அவர்களது மரபு வழித்தாயகத் திலேயே சிறுபான்மையினராக்கி அழித்தொழிக்க முயன்று வருவதாலும்:
ஒன்றன்பின் ஒன்றாக ஆட்சிக்கு வந்தவர்கள் நிறைவேற்றிய பாகுபாடு காட்டும் சட்டங்களும், மேற்கொண்ட நிர்வாக ஏற்பாடுகளும் - நாகரிக அரசுகளின் அடிப்படைத் தத்துவங்களுக்கு மாறானவை யாகவும், சுதந்திரத்தின் அடிப்படைக் கருத்துணர்வுகளை மீறுபவைகளாகவும் உள்ளன. இவை, இன்று நாட்டில் நடை முறையிலுள்ள இந்த ஒற்றையாட்சி அரசுமுறை - ஜனநாயகத்தின் மூலக் கோட்பாடுகளை உறுதி செய்யத் தவறிய தனை நிரூபிப்பதுடன், இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களைத் திட்டமிட்டு அழிப் பதற்கான சட்டரீதியான அமைப்பாகத் தொழிற்படுவதாகவும் - தமிழ் பேசும் மக்களின் சார்பில் 1956ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் நாள் திருமலையிற் கூடியிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநில மாநாடு பிரகடனம் செய்கிறது.

Page 254
எனவே,
1. "தீங்கிழைப்பதாக அமைந்துள்ள இன்றைய ஒற்றையாட்சிமுறை அகற்றப் பட்டு, தமிழ் மக்கள் பெரும்பான்மை யினராக வாழும் பிரதேசங்கள் அனைத்தை யும் உள்ளடக்கியதாகவும், ஒன்று அல்லது மேற்பட்ட பிரிவுகளைக் கொண்டதும் - நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதும் - வெளியார் தலையீட்டிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதும் - சுயநிர்ணய உரிமையும், தன்னாதிக்கமும் உள்ளதும் - பகுத்தறிவுக் கேற்றதுமான - இணைப்பாட்சி முறையில் ஜனநாயக யாப்பு முறைக்குட்பட்ட ஒன்று அல்லது மேற்பட்ட மொழிவழி அரசுகளை உருவாக்க வேண்டும் என்றும்:
2. சிங்களத்தைப் போன்று - தமிழ் மொழியும் சமநிலையிலுள்ள ஆட்சி மொழியாக்கப்பட்டு, அதன் இழந்த உரிமைகளைப் பெற வழிவகுக்கப்பட வேண்டும் என்றும்;
磅
The Resolution:
This Convention further declares that unless the Government of Ceylon, take the necessary steps to constitute of a Federal Union of Ceylon, the Ceylon Federal Party will launch Direct Action.
"Whereas the present unitary system of Parliamentary Government has been imposed most irrationally and unfairly on a bilingual country like Ceylon
And whereas the democratic rights and liberties of 2% million Tamil-speaking people have been gravely undermined by reason of their helpless dependence on the

13
3. இன்றைய குடியுரிமைச் சட்டங்களுக்குப் பதிலாக - இந்த நாட்டைத் தாயகமாகக் கொண்டு இங்கு நிலையாக வாழ்ந்துவரும் மக்கள் அனைவரையும் இந்நாட்டின் பூரண குடிமக்களாக ஏற்றுக் கொள்ளும் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும்;
4. தமிழ்பேசும் மக்கள் மரபு வழியாக வாழ்ந்து வரும் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும்;
இம் மாநாடு கோருகிறது.
"1957ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 20ஆம் நாளுக்கு முன் இந்நாட்டில் இணைப்பாட்சி ஒன்றியம் ஒன்றை உருவாக்கப் பிரதம அமைச்சரும் பாராளு மன்றமும் தவறுமிடத்து, இவ்விலட்சியத்தை அடையக் F TT 5 6f35 முறையில் நேரடி நடவடிக்கையில் இறங்குவதெனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.”
goodwill of 6 million Sinhalese people who return a perpetual racial majority into parliament as exemplified by the present M.E.P. Government party, which without contesting a single constituency in the Tamil-speaking areas was yet be able to obtain an absolute majority in Parliament by reason, firstly, of a monstrous electoral device which enables the majority Sinhalese people to secure overwhelming weightage in Parliamentary representation and, secondly by means of aggressively racial election cry for the establishment of Sinhalese as the only official language over the whole of Ceylon:
And whereas the promulgation of the Sinhalese only Act in the teeth of the unanimous opposition of all members of Parlia

Page 255
2.
ment representing Tamill-speaking constituencies and its imposition on a totally unwilling people indicate clearly that the policy of the Government is to perpetrate the genocide of a people whose history in this country is as ancient and a glorious as that of the Sinhalese and whose language having a rich classical heritage and a modern development is one of the most advanced and progressive of Eastern languages.
And whereas the racial majority in Parliament had enacted citizenship and franchise laws which have no parallel in their Machiavellian conception and under which one section of the Tamil-speaking people have been rendered doubtful citizens in their own homelands by reason of their inability to prove their citizenship if called upon to do so and the other section Consisting 800,000 workers permanently settled in the plantation areas and constituting the backbone of the island's economy (most of whom have been in Ceylon, and all of whom have no other home but Ceylon.) has been deprived of civic and franchise rights which it earlier enjoyed:
And whereas the colonization policy pursued by successive Governments since 1947 of planting Sinhalese population in the traditional homelands of the Tamil-speaking people is calculated to overwhelm and crush the Tamil-speaking people in their own national areas.
The ANNUAL CONVENTION OF THE LANKA TAMIL ARASU KADCHlassembled at Trincomalee on the 19th day of August 1956, solemnly declares in the name of the Tamil-speaking people of Ceylon, that the discriminatory legislative and administrative measures of the successive Governments of Ceylon, which are in direct violation of the basic concepts of freedom and the funda

4
mental principles of civilized governments, have proved conclusively that the present unitary system of Parliamentary Government has failed to ensure the elements of democracy and has become the constitutional instruments for the planned liquidation of all the Tamil-speaking peoples in Ceylon.
This convention, therefore, demonds:
(1) "The replacement of the present pernicious constitution by a rational and democratic constitution based on the federal principle and the establishment of one or more Tamil linguistic state or states incorparating all geographically contiguous areas in which the Tamil-speaking people are numerically in a majority as federating unit or units enjoying the widestautonomous and residuary powers consistent with the unity and external security of Ceylon;
(2) The restoration of the Tamil language to its rightful place enjoying absolute parity of status with Sinhalese as an official language of the country;
(3) The repeal of the present citizenship laws and the enactment on their place of laws recognising the right to full citizenship on the basis of a simple residential test of all persons who have made this country their home; and,
(4) The immediate cessation of colonizing the traditionally Tamil-speaking areas with Sinhalese people.
"This convention further declares that unless the Prime Minister and the parliament of Ceylon take the necessary steps to constitute of a Federal Union for Ceylon by the TWENTIETH DAY OF AUGUST ONE THOUSAND NINE HUNDRED AND FIFTY SEVEN, the Kadchi will LAUNCHDIRECT ACTION by Non-violent means for the achievement of this objective."

Page 256
தமிழ்மண்ணில் நகர்ந்திட்ட அரசு பேருந்துகள் சிறீயை அமர்த்தியபோது கைதான நிலைய நிலையம் கொண்டு செல்லப்பட்ட திரு. வி. தர்ம அமிர்தலிங்கம், திருமதி கோமதி வன்னியசி கைதாகிச் சென்றனர்.
அரச காவலில் அருந்
சிறீப் போராட்டத்தையடுத்துக் கொழும்பு ஸ்ரா தமிழ்த் தலைவர்கள் திருவாளர்கள் வ. ந. ந6 ந. இ. இராஜவரோதயம், அ. அமிர்தலிங்கம்,
 
 

ரிற் தென்பட்ட சிங்கள சிறீயை அழித்து தமிழ் பில் சுன்னாகம் (பொலிஸ் நிலையம்) காவல் லிங்கம், பா. உ. வுடன், திருமதி மங்கையர்க்கரசி ங்கம், செல்வி கிறிஸ்தோப்பர் ஆகியோரும்
தமிழ்த் தலைவர்கள்!
ன்மோர் கிறெசென்ரில் தடுப்புகாவலுக்குள்ளான பரத்தினம், ஜி. நல்லையா, கு. வன்னியசிங்கம், வ, நவரத்தினம், செ. இராசதுரை ജുമ്പേt

Page 257
g9| J 55 66) L 60) LD வண்டியிலேயே தமிழரசுக் கொடி நாட்டி வவுனியா மாநாடு நோக்கி விரைந்திட்ட தமிழர் படை இது.
புதிய புறநானூறு ப ஊர்வல
வவுனியா மாநாடு நோக்கி, ஆயிரக்கணக்கான திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், திரு தலைமையில் விரைந்திடும் காட்சி.
 
 
 

னர் சொத்து மக்கள் சொத்தே!
to Lgryf fi!
தமிழரசுப் பெண் தொண்டர்கள், தலைவியர் மதி இராசபூபதி அருணாசலம் ஆகியோர்

Page 258
III
28-7ー மட்டக்களப்பு நகரப
இத. அ
5ஆவது தேசிய சிறப்பு
ŠňLDT
TA
Resolu
Passed
5th Special Natio
held on 2:
at the Town Ha

IIIIIIIIIIII
1957இல் மண்டபத்தில் நிகழ்ந்த
அ. க. வின்
மாநாட்டில் நிறைவேறிய
O O
.K.
tions
at the
nal Convention
8-7-1957
ull, Batticaloa

Page 259
T4
தீர்மானம் - 1
பிரதமருக்கும் கட்சிக்கும் இடையில் உருவான ஒப்பந்தத்தை உடன் அமுல் நடத்துமாறு, இச் சிறப்பு மாநாடு அரசைக் கோருகிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"1957ஆம் ஆண்டு ஆடித் திங்கள் 28ஆந் திகதி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இத் தேசிய சிறப்பு மாநாடு, தமிழரசுக் கட்சிப் பிரதிநிதி களுக்கும், பிரதம அமைச்சருக்கும் இடையில் நிகழ்ந்த சமரசப் பேச்சு வார்த்தை களின்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பெறு பேறுகளை ஆராய்ந்து பரிசீலித்து, தனது கோரிக்கைகளைப் பெறுவதில் அது கொண்டுள்ள மாற்ற முடியாத உறுதிப் பாட்டை மீண்டும் வலியுறுத்தி,
1. இலங்கை சமஷ்டி அரசியலமைப்பின் கீழ் தன்னாதிக்கமுள்ள சுதந்திரத் தமிழ்அரசு அல்லது அரசுகளை அமைத்தல் வேண்டும் என்றும்;
2. இலங்கை முழுவதிலும் சிங்களத்துடன் தமிழுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும்;
3. இலங்கையைத் தனது தாயகமாகக் கொண்ட ஒவ்வொரு தமிழ் பேசும் மகனுக்கும் குடியுரிமை வழங்குவதோடு, தற்போது நடைமுறையிலுள்ள - இயற்கைக்கு மாறானதும், சனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணானதுமான குடியுரிமைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து திருத்தியமைக்க வேண்டும் என்றும்; கோருகிறது.
மேலும்,
"இவ்வொப்பந்தத்தின் உண்மைப் L ItL 620 TIT95,
(அ) வடக்குக் கிழக்கு மாகாணங்களில் அரசின் ஆதரவோடு நடைபெறும் சிங்களக்
குடியேற்றம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும்,

巫}一
(ஆ) தமிழ்மொழி தேசிய சிறுபான்மையினரின் மொழியாக - உத்தியோக ரீதியில் அங்கீகாரம் பெற வேண்டும் எனவும்,
(இ) வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகத் தமிழ்மொழி அமைய வேண்டும் எனவும்,
(FF) இலங்கையின் எல்லாப் பாகத்திலும் வாழும் ஒவ்வொரு தமிழ்பேசும் மகனும், தனது அலுவல்கள் எல்லாவற்றை யும் - அரசாங்க திணைக்களங்களுடன் தமிழிலேயே வைத்துக் கொள்வதற்கும், தனது பிள்ளைக்குத் தமிழ்மொழி மூலம் கல்வி கற்பிப்பதற்கும், தமிழ்க் கலாசாரப் பாரம்பரியத்துடன் அப்பிள்ளை வாழ் வதற்கும் உறுதிப்பாடு கிடைக்கவேண்டும் எனவும்,
(உ) முன்மொழியப்பட்டுள்ள பிரதேச சபைகள் மசோதா மூலம், மக்களுக்கு மாவட்ட சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனவும்,
இம்மாநாடு கோருகிறது.
"மேலும், இவ்வொப்பந்தம் ஓர் இடைக்கால ஒப்பந்தமே என்றும், இந்த ஒப்பந்தத்தின் படி, 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 20ஆந் திகதி ஆரம்பிக்கவிருந்த உத்தேச சத்தியாக்கிரகப் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
எனவே,
"இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், பிரதம அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தைக் காலதாமதமின்றித் துரித கெதியில் அமுல் நடத்தவேண்டும் எனவும், ஒப்பந்தம் உருவாகும் போது தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் பிரதம அமைச்சருக்கும் இடையில் எத்தகைய நல்லெண்ணம் நிலவியதோ - அதே
நல்லெண்ணத்துடன் குறிப்பிட்ட ஒப்பந்தத்தைத் துரிதமாக அமுல் நடத்த வேண்டுமெனவும் இம்மாநாடு
அரசாங்கத்தை வேண்டுகிறது"

Page 260
2
தீர்மானம் - 2
இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் கலாசார விடுதலையை அடையவேண்டுமாயின், உடனே சமூகத்தில் நிலவும் தீண்டாமையை முற்றாக ஒழிக்க முன் வர வேண்டுமென இம் மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"தமிழ் பேசும் மக்களில் ஒரு பகுதியினரிடையே இன்றளவும் நிலவிவரும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும், அநீதிகளையும் - குறிப்பாகத் தீண்டாமையை ஒழிப்பதற்கு, அகிம்சை நெறி வழுவாது, சத்தியாக்கிரக வழியைக் கைக்கொண்டு, அதற்கென ஓர் இயக்கத்தை ஆரம்பித்து, உடனடி நடவடிக்கை எடுப்பதன்மூலம், வருங்காலச் சந்ததியினர் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி ஓர் புதிய சமுதாயத்தை உருவாக்க வரும்படி, தமது பூரண சுதந்திரத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடுகின்ற தமிழ் பேசும் மக்களுக்கு - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இத்தேசிய சிறப்பு மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வேண்டு கோளை யேற்று இலங்கைத் தமிழ்பேசும் இனம் இதை நடைமுறையிற் கொண்டுவரத் தயாரில்லையென்றால், தமது அடிப்படை இலட்சியமான - இலங்கை சமஷ்டி அரசியலமைப்பின் கீழ், மொழிவாரியான ஒரு சுதந்திரத் தமிழ் அரசை அல்லது அரசுகளை அமைத்து, நிரந்தரமாகத் தமது அரசியல் விடுதலையையும், கலாசார விடுதலையையும் எக்காலத்திலும் ஒருபோதும் அடைய முடியாது என இம்மாநாடு உறுதியாக நம்புகிறது"
Y4
ሯ(%ያ)x

9.
Resolution - No. 1
This Convention further calls upon the Government to implement expeditiously the terms of the agreement reached be tWeen the P.M. and the F.P.
"This special sessions of the National Convention of the lankai Tamil Arasu Kadchi assembled at theTown Hal Batticaloa on the 28th of July 1957 having considered the agreement reached between the representatives of the Federal Party on the one hand and the Prime Minister on the other hand having reviewed the report of the negotiations submitted to it by its representatives reiterates its unalterable determination to achieve.
1. An autonomous Tamil Linguistic state or states Within the frameWork of a Federal Union of Ceylon,
2. Parity of status for the Tamil Language with Sinhalese through out Ceylon and,
3.The revision and reorientation of the present unnatural and undemocratic citizenship laws of Ceylon to ensure the recognition of the right of every Tamil speaking individual who has made Ceylon his home to full citizenship.
"This convention having regard to the fact that by the agreement inter alia,
(a) state -aided Sinhalese colonisation of the Northern and Eastern provinces will be effectively stopped forthwith,
(b) that the Tamil language is given official recognition as the language of a National Minority,

Page 261
2
(c) that Tamil shall be the language of administration of the Northern and Eastern provinces,
(d) that the right of every Tamil speaking person in every part of the country td transact all affairs with government in Tamil and to educate and nurture his children in the Tamil language and culture is secured,
(e) and further in consideration of the large measure of regional self government granted to the people under the proposed Regional Council's Act,
"Resolves to accept the agreement as an interim adjustment and hereby ractifies the decision to withdraw the Satyagraha which was scheduled to commence on the 20th August 1957.
"This convention further calls upon the Government to implement expeditiously the terms of the agreement reached between the Prime Minister and the Federal Party expeditiously in good faith and in the spirit in which it was entered into."
யொருத்தி த مصفى حا ام ༄། மாத்தமிழுக் கீடில்ை

50
Resolution - No. 2
This Convention calls upon the Tamil speaking people to take immediate action to eradicate the existing untouchability which is prevalent in the community, to achieve Political and Cultural freedom.
This special session of the National Convention of the lankai Tamil Arasu Kadchi calls upon the Tamil speaking people who are struggling for the attainment of full freedom and self-respect solemnly to resolve to work for the regeneration and unification of the Tamil speaking people by undertaking immediate action for the removal of all forms of social inequalities and injustices, in particular that of untouchability which still exists among a section of the people and towards this end to organise a campaign of self purification if necessary by Ahimsa and Satyagraha for the achievement of this goal without which the Tamil speaking Nation in Ceylon cannot and never will realise its fundemental object of attaining Political and Cultural freedom for the Tamil speaking people of Ceylon by the establishment of a Tamil Linguistic state or states within the framework of the Federal Union of Ceylon.
嶽
நம் சுகமும் - எங்கள் ܥܠܐ 4ر ல என்றுரைப்போம்.
g NY/-

Page 262
இ. த.
1958-0 வன்னிநாட் 6ஆவது தேசிய
O தீர்ம
I.T.
Reso
Passe 6th Nation held at
On 19
 
 
 
 
 
 

9, 5.
5-25இல்
டிற் கூட்டிய மாநாடு முடிவாக்கி
ானம்
★
A. K.
lution
ed at the
al Convention
Vavuniya
58-05-25.

Page 263
-2
1956ஆம் ஆண்டுத் தேசிய
மகாநாட்டுப் பிரகடனம்
இலங்கையில் தொடர்ந்து ஆட்சிபுரியும் அரசுகள் நிறைவேற்றிய பாரபட்சமான சட்டங்களும் மேற்கொண்ட நிர்வாக நடவடிக்கைகளும் - சுதந்திரத்தின் அடிப்படைக் கருத்துணர்வுகளையும் நாகரிகமடைந்த அரசுகளின் அடிப்படைக் கோட்பாடுகளையும் முற்றாக மீறுபவையாக உள்ளதாகவும், நாட்டில் நிலவும் ஒற்றையாட்சிப் பாராளுமன்ற அரசுமுறை சனநாயக உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மாறாகத் தமிழ்பேசும் மக்களைத் திட்டமிட்டு அழித்தொழிக்கும் சட்ட பூர்வமான கருவியாக அமைந்துள்ளதாகவும் ஈழம்வாழ் தமிழ் பேசும் மக்களின் சார்பில் 1956ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 19ஆம் நாள் திருமலையிற் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாடு பிரகடனம் செய்தது.
இதற்கு அமைவாக அம் மகாநாடு பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றியது:
1. மொழிவழி அமைந்த தன்னாதிக்கத் தமிழரசு அல்லது அரசுகளைக் கொண்ட இலங்கைக் கூட்டாட்சி ஒன்றியம் நிறுவப்படவேண்டும்.
2. தமிழ்மொழி அதன் பழைய நிலைக்கு உயர்த்தப்பட்டுச் சிங்களத்துக்கு இணையான சம உரிமையோடு ஆட்சி மொழியாக்கப்படவேண்டும்.
3. மலையகத் தமிழர் இழந்த குடியுரிமை, வாக்குரிமைகளை மீண்டும்
பெறும்வகையில் இன்று நடைமுறை யிலுள்ள குடியுரிமைச் சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
4. தமிழரின் மரபுவழித் தாயகத்திற் சிங்கள மக்களைக் குடியேற்றும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
1957, ஒகத்து 20ஆம் நாளுக்குமுன் இந் நாட்டின் பிரதம அமைச்சரும் அரசும்

2
கூட்டாட்சி ஒன்றியத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளத் தவறுமிடத்துக் கட்சி காந்தீய முறையில்,வன்முறை கலவாது நேரடி நடவடிக்கையில் இறங்குமெனவும் அம் மகாநாடு வலியுறுத்தியது.
பண்டா - செல்வா ஒப்பந்தம்
இது தொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. திருமலைத் தீர்மானத்துக் கமையத் தமிழ் பேசும் மக்கள் நாடு தழுவிய போராட்டம் ஒன்றுக்குத் தீவிரமாக ஏற்பாடு செய்தனர். இதனால் எழுந்த நிலைமையை ஒட்டிப் பிரதமர் 1957ஆம் ஆண்டு யூன் மாத இறுதியில் தமிழரசுக் கட்சியினருடன் பேச்சு நடத்த முற்பட்டார். இதன் விளைவாகப் பிரதமருக்கும் கட்சிக்குமிடையே ஓர் ஒப்பந்தம் உருவானது.
மட்டுநகரில் 1957, யூலை 28ஆம் நாள் நடைபெற்ற கட்சியின் சிறப்பு மாநாடு, திருமலை மாநாட்டுத் தீர்மானங்களைப் பெறுவதற்கான மாற்றமுடியாத உறுதியை வலியுறுத்தியதோடு, இடைக்கால ஏற்பாடாக அவ்வொப்பந்தத்தை ஏற்பதாகவும் தீர்மானித்தது.
(அ) அரசின் துணையோடு வட, கிழக்கு மாநிலங்களில் நடைபெறும் சிங்களக் குடியேற்றத்தை முற்றாக, உடனடியாக நிறுத்துதல்.
(ஆ) தமிழ் மொழிக்குத் தேசிய சிறுபான்மையினரின் மொழி என்ற சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்குதல்.
(இ) வட, கிழக்கு மாநிலங்களில் தமிழை ஆட்சிமொழியாக்குதல்.
(ஈ) நாடெங்கும் பரந்து வாழும் தமிழர் அரசோடு தமிழில் தொடர்பு கொள்ளவும் கல்வி பயிலவும் உரிமை வழங்கப்படுவதோடு, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கவும் உரிமை வழங்குதல்.
(உ) முன்மொழியப் பட்டுள்ள பிரதேச சபைச் சட்டத்திற்கேற்பத் தமிழ் மக்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்குதல்.

Page 264
2
ஆகிய உடன்பாடுகள் ஒப்பந்தத்தின் பேறாக ஏற்பட்ட காரணத்தால், சத்தியாக் கிரக இயக்கம் நடத்துவதை நிறுத்தி வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஒப்பந்தம் கிழிக்கப்பட்டதன் விளைவுகள்
ஒப்பந்தம் கையெழுத்தான ஆறு மாதங்களுக்குள் அதிலுள்ள விடயங்களை நடைமுறைப் படுத்துவதாகப் பிரதமர் உறுதியளித்தார். ஒப்பந்தத்தின் உள்ளடக்கங் களுக்கு முரணாகவும் நட்புரிமைக்குக் குந்தகமாகவும் நடந்துகொண்ட பிரதம அமைச்சர் ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதைத் தாமதப்படுத்தி, இறுதியில் அதனை ஒருதலைப்பட்சமாக முறித்தும் விட்டார். ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட கண்ணியமற்ற செயல் - கிழித்தெறியப்படக் காரணமாயமைந்த சூழல் - காடைத்தனமும் பயங்கரவாதமும் தூண்டிவிடப்பட்டமை - என்பவை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவையாகும். இதனாற் சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழரின் உயிர்களுக்கும் உடைமை களுக்கும் ஆபத்தான நிலை உருவானதையும் நாம் உணர்ந்து கொண்டோம்.
பொலநறுவையிற் கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனம் காரணமாக, மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்பேசும் மக்கள் நெடுஞ்சாலை வழியாகவோ, புகை வண்டி மூலமாகவோ இம் மகாநாட்டுக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் பரந்து வாழும் தமிழர்களும், அங்கு பயணஞ் செய்வோரும் ஆயுதந் தாங்கிய காடையர் களால் துன்புறுத்தப்படுகின்றனர்: தமிழரின் வணிக நிலையங்களை ஒன்றியொதுங்கல் (பகிஷ்காரம்) செய்யவும் மறியல் செய்யவும் தூண்டும் வன்முறை இயக்கங்கள் நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள் ளன. அமைதியாக வாழும் மக்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டிய காவற் றுறையினர் (பொலீசார்) - தமிழருக்குத் தீங்கிழைத்தல், பயமுறுத்தல், அவர்களுடைய

53
வீடுகளுக்குள்ளும் கடைகளுக்குள்ளும் அத்துமீறிப் புகுதல் போன்றவற்றில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர் . நா க ரி க ம  ைட ந் த சமுதாயங்களிலும் அரசுகளிலும் மக்களுக்கு வழங்கப்படும் சாதாரண பாதுகாப்பைக் கூடச் சிறுபான்மையினரான தமிழருக்கு வழங்க அரசு முன்வரவில்லை. இது, அரசு தமிழருக்குப் பாதுகாப்பு வழங்க விரும்பவில்லை என்பதையோ அல்லது அரசின் செயலாற்றும் சக்தியற்ற நிலையையோ தான் காட்டுகின்றது.
தீர்மானம்
ஒப்பந்தம் செய்தல் - பாராளுமன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளல் - என்பவற்றை நிறுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கவேண்டும் எனக் கூறிடும் தீர்மானம்.
"தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அநுபவங்கள் - அரசுடன் ஒப்பந்தம் செய்வதாலோ, பாராளுமன்ற நடவடிக்கை களில் தொடர்ந்து பங்குகொள்வதாலோ, அரசியலமைப்புத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதாலோ எவ்வித பயனும் விளையப் போவதில்லை - என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளது. எனவே, திருமலைத் தீர்மானத்திற் குறிப்பிட்டபடி, விடுதலை பெற அகிம்சை வழியிற் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற தீர்க்கமான முடிவுக்குத் தமிழ்பேசும் மக்கள் வந்துள்ளனர்.
எனவே,
1. ஈழம்வாழ் தமிழ்பேசும் மக்கள், என்றும் தமது விடுதலை - சுயகெளரவம் - பாதுகாப்பு - ஆகியவற்றைப் பெற்று நிலை நிறுத்தும் பொருட்டு, இம்சை கலவாத சட்டமறுப்புப் போராட்டத்தை ஆரம்பிப்பது என்று 1958, மே 25ஆம் நாள் வவுனியாவில் நடைபெறும் தேசிய மகாநாட்டிற் குழுமியுள்ள தமிழ்பேசும் மக்கள் தீர்மானிக்கின்றனர்.

Page 265
2
2. "திருவாளர்கள்: சா.ஜே.வே. செல்வநாயகம், கு. வன்னியசிங்கம், அ. அமிர்தலிங்கம், செ. இராசதுரை, தலைவர் (திரு.ந.இ. இராசவரோதயம்) ஆகியோரைக் கொண்ட நடவடிக்கைக் குழுவை நியமிப்ப தென்றும், போராட்ட இயக்கங்களை நெறிப்படுத்தவும் - நடத்தவும் - அவர்களுக்குப் பூரண அதிகாரம் வழங்குவ தென்றும், வேண்டும்போது தமக்குப் பதிலானவர்களை நியமிக்கும் அதிகாரத்தை - அவர்களுக்கு அளிப்பதென்றும் இம் மகாநாடு தீர்மானிக்கிறது:
3. "1958, ஒகத்து 20ஆம் நாளுக்கு முன்பாக நேரடி நடவடிக்கை ஆரம்பிக்கப் பட வேண்டுமென இம் மகாநாடு பணிக்கிறது.
Declaration by the National Convention of 1956
The llankai famil Arasu Kadchi at its National Convention held at Trincomalee on the 19th day of August 1956 declared in the name of the Tamil speaking people of Ceylon that the discriminatory legislative and administrative measures of the successive Governments of Ceylon were in direct violation of the basic concepts of freedom and the fundamental principles of civilised government and had proved conclusively that the present unitary system of parliamentary government had failed to ensure the elements of democracy to this country but had become the con

தீண்டாமையை ஒழித்துச் சமஉரிமை வழங்க வேண்டும்.
4. "சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் அகற்றி - பிளவுபட்டு நிற்கும் தமிழ் மக்களை ஒன்று திரட்டல் - என்ற கட்சியின் அடிப்படை இலட்சியங் களுக்கேற்ப - எமது மக்களில் ஒரு பகுதியினரைச் சிறப்புரிமை யற்றவர்களாக ஒதுக்கி வைத்திருப்பதை அகற்றி, அவர்களுக்கும் சமஉரிமை வழங்க மக்களைத் தூண்டும் போராட்டத்தை நடத்துவ தென்றும்; அதற்கான தெரிவுக்குழுவுக்கு மக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுவதென்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தீர்மானிக்கிறது"
stitutional instrument for the planned liquidation of all the Tamil speaking people in Ceylon.
The Convention therefore demanded:
1. The establishment of an autonomous Tamil state or states on a linguisti basis within federal union of Ceylon.
2.The restoration of the Tamil language to its rightful place enjoying absolute parity of status with Sinhalese as an official language of this country.
3.Therestoration of the citizenship and franchise rights to the Tamil workers in the plantation districts by the repeal of the present citizenship laws and

Page 266
2
4.The immediate cessation of the policies of colonising the traditionally Tamil speaking areas with Sinhalese people.
The convention also laid down that unless the Prime Minister and the Government of Ceylon took the necessary steps to constitute a Federal Union of Ceylon by the 20th day of August 1957 the Kadchi would launch Direct action by non-violent means for the achievement of the above objectives.
BCndo - ChelVO PCCf
The Government took no steps in this regard but made note of the earnest preparations for a national struggle made by the Tamil Speaking people in pursuance of the Trinco resolution. The Prime Minister in the latterpart of June 1957 initiated negotiations with the Party which culminated in the signing of a pact between the Prime Minister and the Party.
The special convention of the Party held at Batticaloa on the 28th July 1957 whilst reiterating its unalterable determination to achieve the objectives laid down in the Trincomalee Resolution accepted the Pact as an interim adjustment and ratified the decision to withdraw the Satyagraha in view of the fact that by the agreement interalia.
(a) State-aided Simhalese colonisation of the Northern and Eastern Provinces would effectively stopped forthwith.
(b) That the Tamil Language would be given statutory recognition as the language of a national minority.
(c) That Tamil would be the language of administration in the Northern and Eastern Provinces.
(d) That the right of every Tamil speaking person in every part of the country to

5
transact all affairs with Government in Tamil as also the right to educate and nurture his
children in the Tamil language and culture would be secured and
(e) That a large measure of regional self-government would be granted to the people under the proposed Regional Councils Act.
Result of Poict been torn
The Prime Minister undertook to enact necessary legislation to implement the terms of the Pact within six months from the date of the pact. But, after violating the letter and spirit of the agreement and unduly delaying the implementation of the pact he unilatorally abrogated it. The dishonourable abrogation of the Pact, the circumstances in which the abrogation took place and the forces of hooliganism and terrorism that has been engineered and unleashed call for an emphatic condemnation and we are also compelled to take note of the fact that it has created conditions which have placed the lives and properties of the Tamils in the Sinhalese majority areas in jeopardy. The open and naked terrorism practised at Polonnaruwa which has prevented the Tamil people of Batticaloa District from using the Highway and the Railway to reach this place of our convention, the manner in which Tamil residents and travellers in other areas have been subjected to violence by armed bands of hooligans, the violence with which Tamil business houses have been subjected to a provocative campaign of boycott and picketting, the affording of Police protection to miscreants committing mischief trespass and intimidation of Tamil Citizens, have all demonstrated that the Government is either unable or unwilling to afford to the Tamil

Page 267
-2.
speaking minorities in this country the normal protection to which any citizen in a civilised society and government is entitled.
Resolution:
Resolution embodying - No further pacts - keep out of Parliamentary affairs - Launch Freedom Struggle.
This experience of the Tamil Speaking
people of Ceylon has therfore compelled them to come to the conclusion that negotiations with the Government or continued participation in the proceedings or membership of the parliamentary Joint Select Committee for the revision of the Constitution can serve no useful purpose and that the Tamil speaking people are left with no alternative but to launch the non-violent struggle for their liberation as stipulated in the Tricomalee resolution.
(i)Therefore the Tamil speaking people here assembled in Nation Convention at Vavuniya on the 25th Day of May, 1958, resolve to enter into a non-violent campaign of civil disobedience for, the achievement of freedom, self-respect and security for the Tamil speaking people in Ceylon for all times.
வல்லன் பெருள்குவி \الم 4ر
NYZ- வரவேண்டும் திருநாட்

6H
(ii) This convention hereby appoints a council of Action consisting of Messrs: S.J.V. Chel vanayagam, C. Vannia singham, A. Amirthalingam, C. Rajadurai and the President (Mr. N. R. Rajavarothayam) with plenary powers to direct and conduct the campaign and also with power to appoint successors to any one or more of themselves whenever necessary.
(iii) This Convention directs that the Campaign be commenced not later than the 20th of August 1958.
Get Rid of untouchability to grant equal rights.
(iv) This National Convention of the llankai Tamil Arasu Kadchi in consonance with one of the Fundamental aims of the Party to work for the unification and regeneration of our people by the removal of all forms of Social Disabilities and injustices, resolves immediately to launch a campaign for the restoration of equal rights and liberties to the under-priviledged sections of our people and calls upon the people to cooperate whole heartedly with the select committee entrusted with the task.
øo
éé5 2.e49-90-7AM
- நீங்கி
டில் பொதுவுடைமை ༄།

Page 268
d
கட்சியின் அம் மாநாட்டில் 'தமிழன் கதை' அடலேறு மு. ஆலாலசுந்தரம், பி.ஏ. க. பர இயக்கிய எஸ். ரி. அரசுவும் உள்ளனர்.
ܢܠ
 
 

கட்சியின் 11ஆவது மாநாட்டில், அதன் வரலாற்றை விளக்கிடும் புகைப்படக் கண்காட்சியைக் கடமைவீரர் வ. ந. நவரத்தினம், பா. உ. ஆரம்பித்து வைத்த காட்சி. பா. உக்களான திரு.வி.ஏ. அழகக்கோன், இரும்பு மனிதன் டாக்டர் இ. மு. வி. நாகநாதன் ஆகியோருடன் அடலேறு மு. ஆலாலசுந்தரம், ஏ. அருணா சலம், க. பரமசாமி ஆகியோர் காணப்படுகின்றனர்.
நம் தமிழன்
யை நாடகத்தில் காட்டிய கதாபாத்திரங்கள் சாமி மற்றும் கலைஞர்களுடன் நாடகத்தை
ノ

Page 269
சமாதான சிற்பியை வரே
ஆசியாவில் சமாதானத்தை நிலைநாட்டிய பண்டித
காலை) தளபதி அமிர், கடமைவீரர் நவம் சகிதம் 6 நிலைநாட்ட விரும்பும் தந்தை செல்வா! அதனை வேறு யாருமல்ல; சாட்சாத் நேருவின் புத்திரியும், ! இராச்சியத்தை உருவாக்கித் தந்தவருமான பெயர்பெ அவர்களே!
இந்திய சனாதிபதியுடன்
வயோதிப உள்ளங்கள் சந்தித்தால் வழக்கமாகச் ச சம்பாஷணை - ஊரை வாழவைக்கும் வழிவை சம்பாஷணையில் இலங்கை வந்தபோது திளைத்து ஈழ ராஷ்டிரபதி மேதகு சா. ஜே. வே. செல்வநாயக திருமதி செல்வநாயகம் அவர்களும் கலந்துகொண்
 
 
 

es
வற்கும் சமத்துவ சிற்பி
& 醚 ஜவஹர்லால் நேரு அவர்களைத் (இலங்கை வந்த கைகுலுக்கி வரவேற்கிறார் ஈழத்தில் சமாதானத்தை அடக்கத்தோடு கூர்ந்து கவனித்துப் பிரமிப்பவர் இன்று பாரதநாட்டை ஆள்வதோடு, பங்களாதேஷ் ற்ற வீராங்கனை திருமதி இந்திராகாந்தி அம்மையார்
ன் தமிழ்ஈழ சனாதிபதி
ம்பாஷிக்கும் ஊர்வம்பு அல்ல இவ்வுள்ளங்களின் கை பற்றிய சம்பாஷணையே இது. அத்தகைய |ள்ள பாரத ராஷ்டிரபதி மேதகு வி. வி. கிரி, தமிழ் ம் மத்தியிலே, செல்வாவின் இல்லக்கிழத்தி தாயார் டுள்ளார் காண்க!

Page 270
8ஆவது ம கெ
1-9-196296)
இ. த. அ
TG
On 1
Passe
8th Annua held at
RESOL
 

மன்னர் கண்ட
க. வின் ாநில மாநாடு
600L
0 0 T50
大 A. K.
UTIONS
Cd at the
Convention Mannar
9- 1962

Page 271
தீர்மானம் - 1
இலங்கை , சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களின் செயல்களால் தமிழ் பேசும் மக்களுக்கு என்னென்ன விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன எனக் கூறிடும் தீர்மானம்.
1948ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வந்த சிங்கள அரசாங்கங்களின் செயல்களால் - கீழ்க்காணும் விளைவுகள் ஏற்பட்டிருக் கின்றன.
1. அடிப்படை மனித உரிமைகளுக்கு மாறாக, இந்நாட்டில் வாழும் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் பிரஜாவுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டு, நாடற்றவர் ஆக்கப்பட்டிருக் கிறார்கள்.
2. சரித்திரத்திற்கு முற்பட்ட காலந்தொடக்கம் தமது தாயகமாகக் கொண்டிருக்கும் இந்நாட்டில், தமது தாய் மொழியைப் பூரணமாக உபயோகிக்கும் உரிமை மறுக்கப்பட்டு, சிங்களமே இந் நாட்டின் ஒரே ஆட்சி மொழியாகத் திணிக்கப்பட்ட காரணத்தால், இந்நாட்டுத் தமிழ்பேசும் தேசிய இனத்தவர் எல்லோரும் கீழான இரண்டாந்தர மக்களாக ஆக்கப் பட்டிருக்கிறார்கள்.
3. தமிழ் பேசும் இனத்தவர் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பிரதேசங்கள், ~ 92] Jodo உதவியுடன் நடத்தப்படும் திட்டமிட்ட குடியேற்றங் களால் பறிக்கப்பட்டு வருகின்றன.
4. தமிழ் பேசும் மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் வெளிப்படை யாகவும், அநியாயமான முறையிலும் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருவதன்

0
மூலம் - கல்வியிலும், தொழிலிலும் சம சந்தர்ப்பம் பூரணமாக மறுக்கப்பட்டிருக் கிறார்கள். உதாரணமாக;-
(அ) அநேக தமிழ்ப்பாடசாலைகளும், கலப்புப் பாடசாலைகளில் உள்ள தமிழ்ப் பிரிவுகளும் மூடப்பட்டு வருகின்றன!
(ஆ) தேசிய கல்விக் குழுவின் அறிக்கையில் - சர்வகலாசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது பற்றியும், உபகாரச் சம்பளங்கள் வழங்குவது பற்றியும், தோட்டப் பாடசாலைகளில் போதனா மொழி பற்றியும் செய்யப்பட்டிருக்கும் மோசமான சிபார்சுகள்!
(இ) தமிழ் பேசும் அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்கவேண்டிய சம்பள உயர்வுகளை நிறுத்தியும்; பதவி உயர்ச்சியை மறுத்தும், வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று பயமுறுத்தியும் அவர்கள் வேலை களிற் சேர்ந்த நேரத்திற் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை மீறி அரசாங்கம் எடுத்துவரும் நியாயமற்ற நடவடிக்கைகள்!
(ஈ) தோட்டங்களில் இலங்கையரை வேலைக்கமர்த்தும் போர்வையில், இத்தோட்டங்களில் பல தலைமுறைகளாகப் பாடுபட்டு உழைத்து - இந்நாட்டின் பொருளாதார விருத்திக்கு மற்றெல் லோரிலும் கூடிய சேவை செய்துவரும் - இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இன்றும் விளங்கிவரும் -தமிழ்த் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகளுக்கு, அத்தோட்டங்களில் வேலை கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஒழித்து - அவர்களுடைய பொருளாதார வாழ்வை அழிக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்படும் மசோதா - ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வக்கிரம நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் - தாம்

Page 272
-2
தொடர்ந்து சுதந்திரமும், தன்மானமும் உள்ள மக்களாக வாழ்வதற்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணர்ந்து, 1961, மாசி 20ஆந் திகதி சாத்வீக நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.
தமது உரிமைகளைப் பெறுவதற்குத் தம்மை அர்ப்பணித்த தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஏகோபித்து ஆர்வத்தோடு இச்சத்தியாக்கிரக இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்த காரணத்தினால், ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிர்வாகம் ஸ்தம்பிதம் அடைந்தது.
எமது மக்களின் நியாய பூர்வமான சாத்வீகப் போராட்டத்தை, அக்கிரமமான இராணுவ நடவடிக்கைமூலம் கடுமையாக நசுக்கியதோடு, அரசாங்கம் எமது மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக - இராணுவ பலத்தைக் கொண்டு எம்மீது தொடர்ந்து ஆட்சி செலுத்தி வருகின்றது.
“ஆகவே, ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பேணும் அதே நேரத்தில், இலங்கைத் தமிழ்பேசும் தேசிய இனம் தங்கள் அடிப்படை உரிமைகளைக் காக்கவும், சுதந்திரத்தை நிலைநாட்டவும் தமது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தப் பூண்டுள்ள அசைக்கமுடியாத உறுதியை - மன்னாரில் 1962ஆம் ஆண்டு புரட்டாதி 2ஆம் நாள் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 8ஆவது தேசிய மாநாடு மீண்டும் பிரகடனப்படுத்துகிறது"
“எனவே, 1963, சித்திரை 17ஆந் திகதிக்குப் பிந்தாமல் மீண்டும் நேரடி நடவ்டிக்கையை ஆரம்பிப்பதற்கு ஏற்ற ஓர் கருவியாக, இன்றிலிருந்து 3 மாதங்களுக் கிடையில் கட்சியை விரிவாக அமைத்துத் தயாராக்க வேண்டுமென்று, இம்மாநாடு கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு ஆணையிடுகின்றது."

தீர்மானம் - 2
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் அனைத்து உரிமைகளையும் பெறுவதற்கு ஒரே மார்க்கம் - அம்மக் களனைவரினதும் ஏகோபித்த போராட்டமே " என்பதனை உணர்ந்து, அதற்கு முதற்படியாக, வட-கீழ் மாநில மக்களையும் - மலைவாழ் மக்களையும் ஸ்தாபன ரீதியாக ஒற்றுமைப்படுத்தி, அவர்கள் மத்தியில் சமூகக் கட்டுக் கோப்பை, அரசியல் - பொருளாதார ஒற்றுமையை ஏற்படுத்திட ஏற்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, இம்மாநாடு, கட்சியின் மத்திய செயற் குழுவைப் பணிக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"அரசாங்கம் மலைநாட்டுத் தமிழ்பேசும் மக்களிற் பெரும்பாலோரை நாடற்றவர்களாக்கியதோடு அமையாது, அவர்களுக்கு மேன்மேலும் அநீதிகளை இழைத்து, அவர்களுக்கு எஞ்சியிருக்கின்ற பொருளாதார, கல்வி சமூக உரிமைகளையும் பிடுங்கி வருகின்றது. இந்நடவடிக்கைகள், அம்மக்களை ஒரு தனிச் சமுதாயமாக வாழாது அழித்தொழிக்கும் நோக்கத் துடனேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
"இவற்றை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டிய அவசியத்தையும், இவர்களது இவ்வுரிமைகளையும், இலங்கைத் தமிழ்பேசும் இனத்தவர் அனைவரினதும் உரிமைகளையும் பெறுவதற்கு ஒரே மார்க்கம் - தமிழ்பேசும் மக்களின் எல்லாப் பகுதியினரதும் ஏகோபித்த போராட்டமே - என்பதையும் உணர்ந்து, மன்னாரில் 1962, புரட்டாதி 2ஆம் நாள் கூடிய இத.அ. கட்சியின் 8ஆவது தேசிய மாநாடு, வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்களுக்கும் - மலைநாட்டுத் தமிழ்மக்களுக்குமிடையில் ஸ்தாபன ரீதியான ஒற்றுமையையும், சமூகக் கட்டுக்கோப்பையும்,
அரசியல் - பொருளாதார ஒத்துழைப்பையும்

Page 273
-2
ஏற்படுத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைககளை மேற்கொள்ளு மாறு, கட்சியின் மத்திய செயற்குழுவிற்குப் பணிக்கிறது"
தீர்மானம் - 3
தமிழ் பேசும் மக்களது இரத்தச் சகோதரர்களில் ஒரு பகுதியினருக்குச் சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட கொடுமைகளை முற்றாக ஒழிக்கக் கட்சி உறுதி பூண்டு, அதற்கென முயற்சி எடுத்து நிறுவப்பெற்ற சர்வகட்சிச் செயற்குழு மேற் கொள்ளவுள்ள சகல நடவடிக்கைகளுக்கும் இம்மாநாடு, தனது முழு ஆதரவையும் அளிக்கும் எனக் கூறிடும் தீர்மானம்.
“எதேச்சாதிகாரப் பெரும்பான்மை ஆட்சியினால் தமக்குச் செய்யப்பட்ட அநியாயங்களை எதிர்த்து இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்கள் போராடிக் கொண்டி ருக்கும் இந்நேரத்தில், காலங் கடந்துபோன ஒரு சமுதாய அமைப்பின்கீழ் - தமது இரத்த சகோதரர்களில் ஒர் பகுதியினருக்கு இழைக்கப்படும் அநியாயங்களை இனியும் விட்டு வைத்தல் முடியாது எமது மக்களில் ஒரு பகுதியினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முற்றாக அகற்ற - இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுதி பூண்டிருக்கிறது! si fu îi முயற்சியினால் , [(ن ف) 35 94ے தீண்டாமையை ஒழிப்பதற்கு நிறுவப்பட்ட சர்வ கட்சிச் செயற்குழு இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, மன்னாரில் 1962, புரட்டாதி 2ஆம் நாள் கூடிய இ. த. அ. கட்சியின் 8ஆவது தேசியமாநாடு, தனது (UP(g ஆதரவையும் அளிக்கும் என்று உறுதி கூறுகிறது"

2.
தீர்மானம் - 4
இலங்கைத் தமிழ் பேசுமினத்தினதும் அவர்களது பிரதேசத்தினதும் மீட்சி - அவர்களது சொந்த, ஒருமித்த, கட்டுப் பாடான முயற்சியிலும் - சொந்தக் கையிலும் - சொந்தத் தியாகத்திலுமே - தங்கியிருக் கின்றதெனப் பிரகடனப்படுத்துவதோடு, தொழிலின் மகத்துவத்திற்காகப் படித்த தமிழ் வாலிபர்களது வெளிப் பார்வையை - நம் நாட்டுத் தேவைக்கேற்ப மாற்றவேண்டு மென்றும்; அவர்களைச் சேர்ந்த வய தாளிகள், தம் முதலீடுகளைத் தமது சொந்த நலன் கருதி, வட-கீழ் மாநிலங்கட்கு மாற்றவேண்டுமென்றும் - புதிய முதலீடு புரிய வேண்டுமென்றும் வேண்டுவதோடு, மக்களை எதிர் நோக்கியுள்ள ஆபத்துக் களையும், அவசியத் தேவைகளையும் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வரவும், எம் வாலிபர்களுக்கென ஒரு தேசியத் தொழில் - தொழிற் பயிற்சி இயக்கங்கள் ஏற்படுத்தவும் வேண்டுமென, இம் மாநாடு கட்சிச் செயற்குழுவை வேண்டுகிறது எனக் கூறிடும் தீர்மானம்,
"அரசாங்க உத்தியோகத்திற்காக ஆசைப்படும் கோலம் - இன்னும் எமது இளைஞர்கள் பலர் மத்தியில் உரம் பெற்றிருப்பதையும், அப்படிப்பட்ட ஒரு வெளிநோக்கை ஊக்கப்படுத்தி உதவி அளிக்கும் வகையில் இந்நாட்டுக் கல்வித் திட்டம் அமைந்திருப்பதையும், அத்தோடு இப்படிப் பட்ட உத்தியோகம் கிடைக்கும் சந்தர்ப்பம் மிகவும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதோடு, அப்படித்தான் சிலவேளை அதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமானாலும், வளர்ந்து கொண்டுவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தொழிலின்றி இருக்கும் படித்த தமிழ் வாலிபர்கட்கு அது மறுக்கப்படுகின்ற தென்பதையும், பாஷைக் கொள்கையினாலும் - அரசாங்கத்தின் Lu r7 jJ Lu LʻdgF LDnT 6207 கொள்கையினாலும் பெரும்பாலான தமிழர்கள் பதவியிலிருந்து

Page 274
2 ஓய்வு பெறுவதற்கு உந்தப்படுகிறார்கள் என்பதையும் நன்கு தெரிந்தும், இன்னும் எல்லாவிதமான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களிலும் தமிழ்பேசும் மக்கள் வதியும் பிரதேசம் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளதையும் அவதானத்திற் கொண்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 8ஆவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழ் பேகம் மக்களினதும், அவர்களது பிரதேசத்தினதும் மீட்சி - தமிழ் பேசும் மக்களது சொந்த, ஒரு மித்த, கட்டுப்பாடான முயற்சியிலும் - தமது சொந்தக் கையிலும் - தமது சொந்தத் தியாகத்திலும் தான் தங்கியிருக்கிற தென்பதைப் பிரகடனப்படுத்துகிறது.
"ஆகவே, தொழிலின் மகத்துவம் சம்பந்தமாக, படித்த தமிழ் வாலிபர்கள் கொண்டுள்ள வெளிப் பார்வையை - திரும்பவும் நமது நாட்டுத் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டு மென்றும்;
புதியதோர் உலகம் ெ ܥܠ ام ད། பேரிடும் وميوهه

$3
அவர்களைச் சேர்ந்த வயது வந்தோர் - தமது முதலீடுகளை, தமது சொந்த நலத்திற்காக - வடக்குக் கிழக்கு மாகாணங் களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும், புதிதாக முதலீடு செய்துகொள்ள வேண்டுமென்றும்;
இந்தத் தேசிய மாநாடு வேண்டிக்கொள்கிறது.
அத்தோடு,
"(அ) மக்களை எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்களையும், அவசியத் தேவை களையும் அவர்களது கவனத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்றும்;
(ஆ) எமது வாலிபர்களுக்காக - ஒரு தேசியத் தொழில், தொழிற் பயிற்சி இயக்கங் களை ஏற்படுத்த வேண்டுமென்றும்;
இ. த. அ. கட்சியின் செயற்குழுவை - இந்தத் தேசிய சிறப்பு மாநாடு வேண்டிக் கொள்கிறது."
சய்வோம் - கெட்ட ܥܠܐ ام வேருடன் சய்ப்பேமிS

Page 275
*。NとNとNとNとNとNとN
25-6-19
10ஆவது தேசிய ம
எடு
7. 〜 71 Z 71 〜 71 〜 71 〜 71 〜 71
 

长žŠĖŠĖŠĖŠĖŠĖŠĖŠĖŠĖ ŠĶķ彙 Lと- (
**
{岛
尚饰
〜
尚ཕྱི་
火警。 -狐 尚BSBS 71甜甜
->}}@仍喻乐之-圆 と3위리に0川5s=

Page 276
சிங்களச் சட்டம் ெ
=
சத்தியாக் கிரகத்திற்குக் கால் கோளாக அ பிரதியொன்றினைச் செந்தமிழ்த் தலைவர்க தீயிட்டுக் கொளுத்தும் கண்கொள்ளாக் காட்சி வநவரத்தினம், அ. அமிர்தலிங்கம், சு. நடர போருக்குத் தலைமை தாங்கிய தானைத் தை
தமிழர் திருநகராம் யா
S
சத்தியப்போருக்கு அணிவகுத்து யாழ் கச்சேரி சிங்கத் தமிழினம் இங்கு காணிர்
 
 

சந்தணற் சாம்பல்!
O
அமைந்த 'சிங்களம் மட்டும்' சட்டந கற் ள் போரின் ஆரம்பமாக யாழ்ப்பாணத்தில் 1. படத்தில் திருவாளர்கள்: மு. சிவசிதம்பரம், ாசா மற்றும் பிரமுகர்கள், தொண்டர்களுடன் லவன் தந்தை செல்வாவைக் காண்கிறீர்கள்.
ழ்நகர் போர்க்கோலம்!
E
நோக்கி விரைந்திடும் சங்கத் தமிழ் காக்கும்

Page 277
பல்கலைக்கழகத் தமிழ்ப்பை
தமிழ் மானங்காக்கும் இப்புனிதப்போரில் தா வைரநெஞ்சுடை மாணவிகள் கூட்டம் இது. தி கொண்டிருக்கிறார்.
 

பாராண்ட தமிழர் படு குழியில் வீழ வோ? ঢেT 60া && கர்ஜித் து வருகின்றனர். பல்கலைக் கழக மாணவர் போர்க்களம் நோக்கி.
ழம் பங்கேற்க வேண்டுமென்று திரண்டுவரும் நமதி அமிர்தலிங்கம் பக்கத் துணையாக வந்து

Page 278
ーE
தீர்மானம் - 1
தேசிய அரசுடன் இ. த. அ. க. இணைய வேண்டுமென்ற கட்சியின் செயற்குழுத் தீர்மானத்தை உறுதிப்படுத்தி யும், சமஷ்டியே இந் நாட்டுக்கு வேண்டுமென்பதை மீண்டும் வலியுறுத்தியும் கூறிடும் தீர்மானம்.
"கல்முனையில் 25-6-66இல் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10ஆவது தேசிய மாநாடு, தேசிய ஒற்றுமைக்காகவும், ஜனநாயக வாழ்க்கை முறையைக் காப்பாற்றுவதற்காகவும் தேசிய அரசாங்கத்திற் பங்குபற்ற வேண்டுமெனச் செயற்குழு செய்த தீர்மானத்தை ஆலோ சித்து உறுதிப்படுத்துவதுடன், இலங்கை யைப் போன்ற பல சாகியத்தார் வாழும் ஒரு நாட்டில், தீர்வுகாணச் சமஷ்டி அரசியல் முறை ஒன்றுதான் வழி என்ற நிலையான நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறது"
தீர்மானம் - 2
தமிழ்மொழி விசேட ஏற்பாடு ஒழுங்கு விதிகளும், வடகீழ் மாநிலங்களில் தமிழ் நிர்வாகமும் இதுவரை அரசினால் நடைமுறைப்படுத்தப்படாதது கண்டு கவலை கொண்டு, அவ்வொழுங்கு விதிகட்கான நிர்வாக அமைப்பினை உடன் நிறுவுக எனக் கூறிடும் தீர்மானம்.
"கல்முனையில் 25-6-66இல் நடைபெற்ற தேசிய மாநாடு. தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டமாக்கப்பட்டுச் சில மாதங்கள் கழிந்தும், அந்த விதிகளை நடைமுறைப் படுத்தவும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிர்வாகத்தைத் தமிழிலே நடத்தவும் தக்க ஒழுங்குகள் இன்னும் செய்யப்படாபை குறித்துக் கவலை கொண்டு, தமிழ் பேசுப மக்கள் திருப்தியடையக் கூடியதாக அந் ஒழுங்கு விதிகளை நன்கு நடைமுறைப்படுத் வேண்டிய நிர்வாக அமைப்பினை உடே நிறுவும்படி, அரசாங்கத்தைக் கேட் கொள்கிறது"

辽H
தீர்மானம் - 3
தமிழ்பேசும் மக்களுக்கெனக் கிழக்கு மாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக் வேண்டுமென்றும், தேசிய ஒற்றுமையைக் கட்டி வளர்ப்பதற்காக இலங்கையிலுள்ள இருமொழிப் பல்கலைகக் கழகம் தொடர்ந்தும் இயங்க வேண்டுமென்றும் கூறிடும் தீர்மானம்.
"பலமொழி பேசும் நாடுகளில், தேசிய ஒற்றுமைக்காகப் பன்மொழித் தேசிய பல்கலைக் கழகங்களுடன் - வேறு மொழி பேசும் சமுதாயத்தினரின் நன்மைக்காக அந்தந்த மொழியில் ஒருமொழிப் பல்கலைக் கழகங்களையும் நிறுவுவதே - பல்கலைக் கழகக் கல்வியின் அமைவாக இருப்பதால், கல்முனையில் 25-6-66இல் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10ஆவது தேசிய மாநாடு, தமிழ் பேசும் மக்களுக்காகக் கிழக்கு மாகாணத்தில் - வடக்கு மாகாண மக்கள் இலகுவாகச் செல்லக் கூடியதாக - சகல துறைகளிலும் நிறைவு பெற்ற ஒரு பல்கலைக் கழகம் நிறுவவேண்டிய காலம் வந்துவிட்டது என்ற பிரகடனப்படுத்துகிறது. இன்னும் இந்த மாநாடு, அத்தகைய பல்கலைக் கழகமொன்று தமிழ் பேசும் மக்களின் பல சாகியத்தாரின் சமயப் பாரம் பரியங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாக்கவும் வளர்க்கவும் தக்க ஏற்பாடு களைச் செய்ய வேண்டுமென்றும் தீர்மானிக் கிறது. மேலும் இந்த மாநாடு, இலங்கைப் பல்கலைக் கழகம் - தேசிய ஒற்றுமையின் நோக்கத்திற்காக இரு மொழிப் பல்கலைக் கழகமாகத் தொடர்ந்தும் இயங்கவேண்டு மென்று தீர்மானிக்கிறது"
தீர்மானம் - 4
மாவட்ட சபைகள் நிறுவப்படுமென்ற தேசிய அரசின் அறிவிப்பை வரவேற்ப துடன், அவற்றை நிறுவுவதற்கான சட்டங் 85 6) GT அரசு கூடிய விரைவில் இயற்றவேண்டுமெனக் கூறிடும் தீர்மானம்.
"கல்முனையில் 25-6-66இல் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

Page 279
-2
10ஆவது தேசிய மாநாடு, தேசிய அரசாங்கத் தின் முதல் சிம்மாசனப் பிரசங்கத்தில், மாவட்ட சபைகள் நிறுவுவது பற்றிய அறிவித்தலை வரவேற்று - அம் மாவட்ட சபைகளை நிறுவுவதற்கான சட்டங்கள் கூடிய விரைவில் இயற்றப்படவேண்டுமென்று தீர்மானிக்கிறது."
தீர்மானம் - 5
சாதியை ஒழிப்பதற்காகச் சகல பொது இடங்களையும் சகலர்க்கும் பொதுவாக மக்கள் திறந்துவிட வேண்டுமென்றும், சமூக ஏற்றத்தாழ்வுகள் தடைச்சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டுமென்றும் கூறிடும்
தீர்மானம்.
"சாதிப் பிரச்சினையையொட்டித் தமிழ் பேசும் மக்கள் கொண்டுள்ள பொதுக் கருத்தில் வரவேற்கத்தக்க சிறுமாறுதல்கள் ஏற்பட்டிருப்பினும், தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை - சாதிப் பிரச்சினையொட்டி இன்னும் தீவிர நடவடிக்கை எடுத்து, இந்நோயை முற்றாகக் களையவேண்டும் என்று கருதுகிறது. இச்சாதி வெறியை முற்றாக ஒழித்துக்கட்டினாலன்றி, தமிழ் பேசும் மக்கள் - பொருளாதாரத் துறை, சமூகத்துறை, அரசியல்துறை ஆகிய துறைகளில் முன்னேற முடியாததுடன் - மக்கட்பண்பைக் காத்து, எமக்கு நீதி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் விட (plgllingil.
ஆதலால், தமிழரசுக் கட்சியின் இந்த 10ஆவது தேசிய மாநாடு, கோயில்கள் - கிணறுகள் - உணவு விடுதிகள் - சவச் சாலைகள் - கடலைகள் - மற்றும் ஏனைய பொது மக்கள் கூடும் இடங்களை - எதுவித வேற்றுமையுமின்றி எல்லோருக்கும் திறந்துவிட்டு, தமிழ் பேசும் மக்களின் உண்மையான மனமாற்றத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுமாறு, தமிழ் பேசும் மக்களுக்கு வேண்டுகோள் விடுகின்றது.
மேலும், சாதி வேற்றுமையை இலங்கையில் இருந்தே முற்றாக ஒழிப்பதற்கு முதற்படியாக - சமூக ஏற்றத் தாழ்வுகளைத் தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டுவரும் படி, அரசாங்கத்தை இம்மாநாடு கேட்கிறது"

58
தீர்மானம் - 6
உணவுற்பத்தியிலும், இதர நுகர்வுப் பொருட்கள் உற்பத்தியிலும் நாடு தன்னிறைவு அடையவும், பெரும் பிரச்சினை யான வேலையில்லாப் பிரச்சினையை ஒழிக்கவும் அரசுக்குச் சில ஆலோசனைகள் வழங்கிடும் தீர்மானம்.
"இந்தநேரத்தில், உணவு உற்பத்தியைப் பெருக்கி - அதில் தன் தேவையை நிறைவு செய்யவும், மற்றைய நுகர்வுப் பொருட் களிலும் வேண்டியளவு நிறைவுநிலையை அடையவும், குறிப்பாகப் படித்த இளைஞரிடையே பெருமளவு பிரச்சினை யாகக் காணப்படும் வேலையில்லாப் பிரச்சினையை ஒழிக்கவும் ஆகவேண்டிய திட்டங்களையும் செயற்படுத்தவேண்டி யுள்ளது.
(அ) எனவே, இந்த மாநாடு, இவ்வரசாங்கம் கடந்த காலத்தைப்போல் இனம், சமயம், வாழுமிடம் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது, தனது பொருளாதாரக் கொள்கையைத் திருத்தி அமைத்து, முதலை - பயன் கொடுக்கும் முறையில் முதலீடு செய்து - இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு வாய்ப்புக் கொடுக்கும்போது, தாராளமான கொள்கையைக் கடைப்பிடிக்கும் எனவும் நம்புகிறது.
(ஆ) "மேலும், நிலையான பயனளிக்கும் முறையில் நிலங்களைப் பயன்படுத்தும் திட்டங்களை வகுத்து, வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர்களை இத்திட்டங்களுக்கு அமர்த்தி, அதற்கு ஊக்கம்தர - வேண்டிய வசதிகளையும், உதவி களையும் - பெரிய அரசாங்க உதவியுடன் இயங்கும் குடியேற்றத் திட்டங்களின் கீழ் அளிக்கவும் வேண்டும்.
(இ) "மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் மக்களில், கடலில் தாராளமாகக் கிடைக்கும் மீனைப் பெறுவதில் பயிற்சியும் திறமையுமுடைய மீன்பிடித் தொழி லாளருக்கு வேண்டிய நிதி உதவியையும், மற்றைய இயந்திர வசதிகளையும் அளிக்கவும் வேண்டும்." . .

Page 280
长
1ஆவது மாநில ம DTS
y
l.T.
Resol
Passed
11th Annual
held at Uduvil o

マ★★★★★
சித்திரைத் திங்கள் நாளில்
பிலில்
} }
„qMU
ாநாட்டில் உருவான
O O T50
l A. K.
utions
at the
Convention
in 8th, April 1969

Page 281
தீர்மானம் - 1
தேசிய அரசை இனியும் ஆதரித்தால், தமிழ்பேசும் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியாதெனக் கருதி, இ. த. அ.க.வின் பாராளுமன்றக்குழு - இனிச் சுதந்திரமாக இயங்கும் ஓர் எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டுமெனக் கூறிடும் தீர்மானம்.
"திரு. டட்லி சேனநாயக்காவின் தலைம்ையில் இயங்கும் இன்றைய அரசாங்கத்தோடு - இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உள்ள உறவைக் கட்சியின் 1ஆவது மாநில மாநாடு பரிசீலனை செய்து,
1. மாவட்டசபைகள் அமைக்கப்படு மென்று அளிக்கப்பட்ட வாக்குறுதியும், திருக்கோணமலையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படுமென்ற உறுதிமொழியும் நிறைவேற்றப்படாமையாலும்;
2. கைத்தொழிற்சாலைகள் நிறுவு வதிலும், மீன்பிடித்தொழிலை அபிவிருத்தி செய்வதிலும், தமிழ்ப் பேசும் பிரதேசங்களில் - விசேடமாகக் கிழக்கு மாகாணத்தில் போதிய போக்குவரவு வசதிகள் ஏற்படுத்து வதிலும் அரசாங்கம் கைக்கொள்ளும் மோசமான பாரபட்சக் கொள்கையாலும்;
3. தமிழ்ப் பேசும் மக்களுடைய கல்வி, கலாசாரத் தேவைகளைப் பூரணமாகப் புறக்கணிப்பதோடு, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கும் - தென் இந்தியாவுக்கும் இடையிலுள்ள கலாசாரத் தொடர்புகளைத் துண்டிக்கத் திட்டமிட்டுச் செய்யப்படும் முயற்சிகளாலும்;
4. தமிழ் மொழி சட்டவிதிகளை அமுலாக்குவதை அரசாங்கம் காரணமின்றித் தாமதப்படுத்துவதாலும்;
5. திறைசேரிச் சுற்றறிக்கைகள் 700, 70ஐ - எமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழி களுக்கு முரணாக, பாரபட்சமான முறையில் - தமிழ்ப் பேசும் அரசாங்க ஊழியரிற் பல பகுதியினருக்குக் கஷ்டத்தையும் ஏமாற்றத் தையும் அளிக்கக்கூடிய வகையில் அமுல், நடத்தி வருவதாலும்;
இந்த அரசாங்கத்தை இனியும் ஆதரிப்பதால் தமிழ் பேசும் மக்களுக்கு

70
எவ்வித நன்மையும் செய்ய முடியாதென்று இம்மாநாடு கருதுவதால், இலங்கைத் தமிழரசுக் கட்சிக் குழு பாராளுமன்றத்திற் சுதந்திரமாக இயங்கும் ஓர் எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டுமென்று இம்மாநாடு பணிக்கின்றது"
தீர்மானம் - 2
தமிழரது உரிமைகளை மீட்கவெனக் கட்சி எடுக்கவுள்ள நடவடிக்கைகள் யாவற்றிற்கும் - கட்டுப்பாடாகத் தமது பூரண ஆதரவை அளிக்கத் தயாராகுமாறு, தமிழ் பேசும் மக்களை இம்மாநாடு அழைக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"எமது மக்களுடைய இழந்த உரிமைகளை மீட்பதற்குக் கட்சி எடுக்க விருக்கும் நடவடிக்கைகள் எதிலும் - பூரண ஆதரவளிப்பதற்குத் தம்மைக் கட்டுப்பாடாகத் தயாராக்கிக் கொள்வதற்கு, இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களை இம்மாநாடு அழைக்கின்றது" தீர்மானம் - 3
சமஷ்டி ஆட்சி என்ற தனது அடிப்படைக் கொள்கையிற் கட்சி மேலும் உறுதி கொள்வதோடு, அதன்மூலமன்றித் தமிழ் பேசும் மக்களது சுதந்திரம் - தன்மானம் - சமத்துவம் - கிட்டாதென, இம்மாநாடு பிரகடனப் படுத்துகிறது எனக் கூறிடும் தீர்மானம்.
"இன்றைய ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் இயங்கும் அரசாங்கத்தில், 4 ஆண்டு களாக அங்கம் வகித்த பின் கூடியிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 1ஆவது மாநில மாநாடு, இவ்வனுபவத்தின் பின், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களை எதிர் நோக்கியிருக்கும் அரசியற் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரே வழி - இந்நாட்டில் ஓர் சமஷ்டி ஆட்சி அமைப்பை ஏற்படுத்துவது தான் - என்ற தனது அடிப்படைக் கொள்கையில் மேலும் உறுதி கொண்டிருப்பதோடு, சமஷ்டி அமைப்பின்கீழ் அன்றித் தமிழ்பேசும் மக்கள் சுதந்திரம் - தன்மானம் - சமத்துவம் - இவற்றோடு வாழ முடியாதென்றும் இம் மாநில மாநாடு பிரகடனப்படுத்துகிறது"

Page 282
Resolution - No. 1
Feel that they cannot serve the interests of the Tamil speaking people by continuing to support the government any longer and directs the Parliamentary group of the F.P. to function as an independent opposition party.
This 11th National Convention of the F.P. examined its relations with the present government of Ceylon under the leadership of Mr. Dudley Senanayake in the light of:
1.The solemn promise given:To establish District Councils in Ceylon and the assurance To establish a University at Trincomalee which have not been fulfilled;
2. The gross discrimination practised by the government in regard to the establishment of industries, the acceleration of the fence of development of the fishing industry, and provision of proper means of communication in the Tamil speaking areas and especially the Eastern Province;
3. The total neglect and disregard of the cultural and educational needs of the Tamil speaking people and the deliberate attempt to serve the cultural links between Tamil speaking people of Ceylon and South India;
4.The inordinate delay by the government to put into effect the Tamil language regulations;
5. The discriminatory implementation of Treasury circulars 700 & 701 against the spirit of assurances given the reby causing hardship and frustration to large section of Tamil speaking public servants.

丞
Feel that they cannot serve the interests of theTamilspeaking people by continuing to support the government any longer and directs the Parliamentary group of the F.P. to Function as an independent opposition party in Parliament.
Resolution - No. 2
Calls upon the Tamil speaking people of Ceylon to organise themselves to Support measures the party may take to regain lost rights.
The Convention now calls upon the Tamil speaking people of Ceylon to organise and discipline themselves to support whatever measure the party may take to regain the lost rights of our people.
Resolution - No. 3
The party is convinced strongly of its fundamental policy of a Federal form of Government. This Conference declares that it is the only road leading the Tamils to independence, self-respect and equality.
Having been a member of the present unitary form of Government, for four years thel.T.A.K. realises that all political problems facing the Tamil Speaking people could be solved only through a federal form of Government. The eleventh convention of the l.T.A.K. affirms its fundamental policy and declare that the Tamil speaking people could never achieve their Independence, self-respect and equality unless there is a federal form of Government.
少

Page 283
ဒွို
激 இத.
சிறப்பு
சிருஷ் தீர்ம
30-1-1972,
KO
O
l.T.
ReSO
PASSED Special C
30-1-72,
ひ
S0
SOOOOOOOOOOOOOOOOOOOOooON COSoልSoለSoÖSoልSo()SoለSo፩So

SQsAQøOQøOQøOQøOQøOQøOQe o6SO(SO(SOOSO(SO(SOOS4
OS
s
&
5
S
மாநாடு る。
KC சிடித்தி 3.
3.
KC
ானம்
பாழ்ப்பாணம் KC
A. K.
UtiOn
AT THE
2ntzenation AFFNA
ဆွီဒွို8

Page 284
ー区
தீர்மானம்
இலங்கையின் புதிய அரசியற்றிட்டம் - இந்நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்தை மெல்ல மெல்ல இனக்கொலைக்கு ஆளாக்க வழிகோலியிருப்பதால், இவ்வடிமைச் சாசனத்தை இலங்கைத் தமிழ்த் தேசிய இனம் முற்றாக நிராகரிக்கின்றதெனப் பிரகடனம் செய்வதோடு, அவ்வினத்தின் பிரதிநிதி களாகப் பாராளுமன்றத்திலுள்ளோர் எவரும் அதற்குச் சாதகமாக வாக்களிக்கக் கூடாதென்றும்; அப்படி யாராவது வாக்களிக்க முயன்றால், அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிவாழ் மக்கள் அதற்கு எதிர்ப்புக்காட்டி அவரை வாக்களியாதவாறு தடுக்கவேண்டுமென்றும் இ. த. அ.க.வின் இத் தேசிய சிறப்பு மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
இந்நாட்டை ஓர் குடியரசாகப் பிரகடனம் செய்து அந்நிய ஏகாதிபத்தியங் களோடு எமக்குள்ள கடைசித் தொடர்பைத் துண்டிக்க ஒரு புதியஅரசியல் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், 1972ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆந் திகதி யாழ்ப்பாணம் நகர மண்டபத்தில் கூடியிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இச் சிறப்பு மாநாடு, இவ்வரசியல் திட்டத்தை நன்கு ஆராய்ந்து, கீழ்க்காணும் காரணங்களுக்காக இவ்வரசியல் திட்டத்தை முற்றாக நிராகரிக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது;-
17970ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் சிங்களமக்கள் அளித்த கட்டளையை நிறைவேற்றுவதாகக் கூறும் அதே நேரத்தில், 1956ஆம் ஆண்டு தொடக்கம் அடுத்த ஐந்து பொதுத் தேர்தல்களில் தமிழ் மக்கள் மிகப் பெரும்பான்மையான வாக்குகள் மூலம், இந்நாட்டில் தமிழ் மக்கள் தம்மைத்தாம் ஆளக்கூடிய ஓர் சுயாட்சித் தமிழரசை - ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் ஓர் அங்கமாக நிறுவவேண்டுமென்று விடுத்துவந்த கோரிக்கை முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுத் தமிழ்த் தேசிய இனத்தின் அடிமைத்தளை இறுக்கப்பட்டிருக்கிறது.

2. சோல்பரி அரசியல் திட்டத்தில் சிறுபான்மை சமுதாயங்களுக்குப் பார பட்சமான சட்டங்கள் நிறைவேற்றப் படுவதைத் தடுப்பதற்காக ஏற்றுக்கொள்ளப் பட்ட 29ஆவது விதி - முற்றாக நீக்கப்பட்டு, சாதாரண பெரும்பான்மை வாக்கினால் எச்சட்டத்தையும் ஆக்கிச் சிறுபான்மை சமுதாயங்களை நிர்மூலமாக்க வழி வகுக்கப்பட்டிருக்கிறது.
3. தமிழ் மக்களால் 1956ஆம் ஆண்டு தொடக்கம் ஏகோபித்து நிராகரிக்கப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் அரசியல் சட்ட அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு, வருங் காலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்துவது மிகக் கடினமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது. 4. தமிழ் மொழிக்குச் சட்டபூர்வமான எவ்வித அந்தஸ்தும் அளிக்காது, விரும்பினால் ~ சட்ட விதிகளை நிறைவேற்றவோ அன்றேல் உதாசீனம் செய்யவோ கூடிய - 1958ஆம் ஆண்டுத் தமிழ்மொழி உபயோகச் சட்டத்தை மாத்திரம் குறிப்பிடுவதுமூலம், தமிழினதும் - தமிழ் இனத்தினதும் சிறுமைக்கு இவ்வரசியல் திட்டத்தில் முத்திரையிடப்பட்டிருக்கிறது.
5. நாடு முழுவதும் சிங்களமே நீதி நிர்வாக, பதிவு மொழியாக நிலை நாட்டப்பட்டிருக்கும். நேரத்தில், வடக்குக் கிழக்கு மாகாணத்தில்தானும் - தமிழ் நீதி நிர்வாக, பதிவு மொழியாக ஏற்றுக்கொள்ளப் படாது, வருங்காலத் தேசியசபை விரும்பினால் இவ்விரு மாகாணங்களிலும் வேறு ஒழுங்கு செய்யலாம் என்று விதித்திருப்பதன் மூலம், அரசியல் சட்டத்தில் தமிழுக்கு ஒரு சிறிதும் இடம் அளிக்கக்கூடாது என்ற ஆட்சியாளரின் கொள்கை உறுதிப்படுத்தப் பெற்றிருக்கிறது. 6. பெளத்த மதத்திற்கு அரசியல் சட்டம் மூலம் தனி அந்தஸ்து அளித்து - ஏனைய மதங்களும் - அவற்றை அனுஷ்டிப்போரும் பிரஜைகளென்பது நிலைநாட்டப் பட்டிருக்கிறது.
7. இந்நாட்டுத் தமிழ் மக்களில் ஒரு சாராரை நாடற்றவர்களாகவும், ஏனை யோரைச் சந்தேகப் பிரஜைகளாகவும் ஆக்கி யிருக்கும் குடியுரிமைச் சட்டங்களுக்குப் பதிலாக - அரசியல் சட்டத்தில் குடியுரிமை

Page 285
-2
பற்றிய யோக்கியதாம்சங்கள் வரையறுக்கப் பட வேண்டுமென்ற தமிழினத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இன்றைய அநீதியான குடியுரிமைச் சட்டங்களின்கீழ்த் தொடர்ந்தும் இடர்ப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
8. புதிய அரசியல் சட்டத்தின் 18ஆவது விதியின் 1ஆம் பகுதியால் அளிக்கப்பட்ட முழுமையற்ற அடிப்படை உரிமைகள் தானும் - அதே விதியின் 2ஆம் பகுதியினால் பறிக்கப் பட்டிருக்கின்றன.
9. இந்நாட்டில் சாதியை அழித்து, சாதியின் பேரால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தக்க எவ்வித பாதுகாப்பும் இவ்வரசியல் திட்டத்தில் இடம்பெறவில்லை.
10. தமிழ் மக்கள்-அரசாங்க நிறுவனங்களோடும், நீதிமன்றங்களோடும் நாட்டின் எப்பாகத்திலும் தமிழில் தொடர்புகொண்டு, தமிழில் பதில்பெற்று, தமிழில் கருமமாற்றி, தமிழில் நீதிபெறும் மறுக்கமுடியாத மனித உரிமை தானும் - இவ்வரசியல் திட்டத்தினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
1. இந்நாட்டில் தனியரசு செலுத்திய தமிழ் இனம் - எவ்வித அரசியல், மொழி, மத, பொருளாதார உரிமைகளும் அற்றவர்களாக ஆக்கப்பட்டு, அவர்களுடைய இன, கலாசாரத் தனித்துவத்தை அழித்து - பொருளாதார வாழ்வைப் பறித்து -
மெல்லமெல்ல இனக் கொலைக்கு இவ்வரசியல் திட்டம் வழி வகுக்கிறது.
எனவே,
இலங்கைத்தமிழ்த் தேசிய இனம் இவ் அடிமைச் சாசனத்தைப் பூரணமாக நிராகரிக் கின்றது என்பதை இம்மாநாடு பிரகடனஞ் செய்யும் அதே நேரத்தில்,
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருப்போர் எவரும் இதற்குச் சாதகமாக வாக்களிக்கக் கூடாதென்றும்; அப்படி எவரும் வாக்களியாது அவ்வத் தொகுதி வாக்காளர் தம் எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்றும் இம் மாநாடு, தன்மானத் தமிழ் மக்களைக் கோருகின்றது.

74.
இழந்துவிட்ட உரிமைகளை மீட்க எத்தகைய தியாகத்திற்கும் தமிழினம் தயாராகவேண்டும்.
女 女
தெற்கே வாழும் தமிழர் - தம் உடைமைகளைத் தம் சொந்தத் தாயகத்திற்கு மாற்றவேண்டும்.
மேலும்,
"தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள் யாவும் புறக்கணிக்கப்பட்டு, தமிழ் இனம் அரசாங்கத்தினால் பிரிவினைப் பாதையில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில்,
(அ) சிங்கள மொழிக்கு அளிக்கப் பட்டிருக்கும் அதே அந்தஸ்து - தமிழ் மொழிக்கும் சட்ட பூர்வமாக அளிக்கப்பட வேண்டுமென்றும்
(ஆ) இந்நாட்டு அரசாங்கம் மதச் சார்பற்றதாகப் பிரகடனஞ் செய்யப்பட வேண்டுமென்றும்;
(இ) இந்நாட்டைத் தமது தாயகமாகக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரதும் முழுமையான குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டுமென்றும்;
(ஈ) தமிழ் மக்களின் பாரம்பரியமான தாயகத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் சுயாட்சி உரிமை அங்கீகரிக்கப்படவேண்டுமென்றும் இம்மாநாடு கோருகின்றது.
இழந்துவிட்ட இவ்வுரிமைகளை மீண்டும் பெறுவதற்கு எவ்வித தியாகத் திற்கும் தயாராக நடவடிக்கை எடுக்குமாறும், தென்னிலங்கையில் ஆட்சியாளரின் செயலினால் தம் தொழில், கல்வி வசதிகளை இழந்து வரும் தமிழ் மக்கள் - தம் உடமைகளையெல்லாம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மாற்றி, தமக்கும் - தமிழ் இனத்திற்கும் - தம் சொந்தத் தாயகத்தில் வளமான வாழ்வை அமைக்க, உடன் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும் இம்மாநாடு வேண்டுகின்றது”

Page 286
7 4
Resolution:
The new constitution of Sri Lanka gradually leads the Tamil masses to racial genocide, and hence this convention completely discards it and further requests the representatives of the Tamils in Parliament not to vote for it. If any one of them dares to vote for it, it requests the voters whom the M.P. represents to persuade him through agitation and protest to desist from such a step.
At a time when a new constitution has been drafted to proclaim Ceylon a Republic and thereby remove the last vestige of colonialism the Ilankai Tamil Arasu Kadchi assembled at a special convention held at Jaffna Town Hall on the 30th, day of January 1972 after having examined the Draft Constitution in all its aspect resolves - totally reject it on the following grounds:-
1. Whilst purporting to fulfil the mandate given by the Sinhalese people at the General Election of 1970, the demand of the Tamil people for the establishment of an autonomous Tamil State within Federal Union given expression to from 1956 at five successive elections by an overwhelming majority of the Tamil people has been totally disregarded and their bonds of slavery further tightened.
2.The safeguard to the minorities given under the present Soulbury Constitution in section 29, preventing discriminatory legislation against the minorities, has been removed and an occasion has been created to enact discriminatory legislation against the minorities and thereby destroy them.
3. Sinhala Only Act which had been consistently and unanimously opposed by the Tamil people since 1956 has now been

75
entrenched into the Constitution thereby making any amendment to it extremely difficult in the future.
4. In regard to the Tamil Language no provision has been made in the Constitution except to include the Language (Special Provisions) Act of 1958 which is only an enabling Act and does not become operative unless regulations are framed thereunder. This treatment of the Tamil Language in the Constitution has placed upon thetamil people a permanent stamp of inferiority.
5. Sinhala has been made the Language of Administration and of record in the Courts throughout the island. Tamil has not been given any such place even in the Northern and Eastern provinces; but to provide that the future National Assembly may provide otherwise only makes clear the intention of the Government not to give any place to Tamil in the Constitution.
6. The provision giving Buddhism a special place in the Constitution to the exclusion of the other Religions makes the followers of other religions second class citizens in this country.
7. The rejection of the demand of the Tamil people to incorporate in the Constitution the qualifications relating to citizenship, in place of the present laws which have made a part of the Tamil people stateless and the other part doubtful citizens, perpetuates the hardships which they are subjected to at present.
8. Under the new Constitution the incomplete fundamental rights confered by the 18th law, clause 1 is being taken away by the clause 2 of the same law.
9. This Constitution does not contain any clause to do away with caste system and all the injustices perpetrated in its name.

Page 287
2.
10. The fundamental human right by which atamil can transact his business with the Government in Tamil, carry on proceedings in courts in Tamil and to write and get a reply in Tamil from any part of the country, has not found a place in the Constituti(
11. There Was a time When the Tamils
of this country ruled themselves All political, linguistic and religious rights have been confiscated.Their Cultural identity has been demolished. Their economic life has
been ruined. All these steps gradually lead to the racial genocide of the Tamils under the Constitution.
This Convention once and for all, rejects the Constitution, which the Tamils consider to be a document purporting to subject the Tamils to slavery.
At the same time, calls upon all the members representing Tamil areas to desist from voting in its favour and also requests the Self-respecting Tamil populace to demonstrate their protest in their electorates.

元1
All the reasonable demands of the Tamils have been rejected and hence the Tamil race has been driven to the path of separatism by the Government. At this juncture, the Convention demands the following:
(a) The status accorded to the Sinhala language be accorded to Tamil legally;
(b) This country be declared a secular state;
(c) Whoever considers this country to be his or her home be given citizenship rights;
(d) The Tamils be allowed to rule themselves in their traditional homelands of this country.
In order to secure these, the Tamil people should be prepared for any form of sacrifice. The Tamils in the South have lost their employment and educational opportunities, owing to the acts of the Government and hence the Tamils should lose no time intransferring their possessions to North and South, thereby ensuring a comfortable and secure life for them and their people. This is a strong request by our Convention.
f 2

Page 288
பன்னிரண் மாநாட்டி இயற்றப்
தீர்ம
y
l.T. A. K.
Resolutions
Passed at the Twelfth Annual Cor
held on the
7th, 8th, 9th of Sept. at
MALLAKAMI

"ಹಾ
N
த்தில்
வருடம் செப்ரெம்பர் மாதம் ஆம், 9ஆம் திகதிகளில் டந்த
அ. க. வின்
னடாவது மாநில ii) பட்ட
O O TGT60.
Vention
1973

Page 289
பிரதான தீர்மானம்:
த.கூ. வின் அங்கமாக இத.அ.க. இயங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளை அங்கீகரிப் பதோடு, தொடர்ந்தும் இவ்வழியில் அது செயற்பட வேண்டுமென்றும் தமது பாரம்பரியத் தாயகத்தில் தன்னாட்சி காண்பதே - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்கால வாழ்வுக்காய வழி என்றும் இ. த. அ.க. வின் இப்பன்னிரண்டாவது மாநில மாநாடு பிரகடனஞ் செய்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
தமிழ்த் தேசிய இனத்தின் சுயாதீனத் திற்கும், சுயமரியாதைக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் பாதகமான வகையில் ஒரு புதிய அரசியல் திட்டம் தயாரிக்கப் பட்டு, இந்நாடு குடியரசாகப் பிரகடனம் செய்யப்பட்ட நேரத்தில், இனத்திற்கு ஏற் பட்ட பேராபத்தை ஒன்றுபட்டு எதிர்க்கும் நோக்கத்தோடு 1972 மே 14ஆந் திகதி திருகோணமலையில் உருவாக்கப்பட்ட தமிழர் கூட்டணியின் ஓர் அங்கமாக இலங் கைத் தமிழரசுக்கட்சி இயங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளை 1973ஆம் ஆண்டு செப்ரெம்பர் 9ஆந் திகதி மல்லாகத்தில் கூடியிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 12வது மாநில மாநாடு அங்கீகரிப்பதோடு, இவ்வொற்றுமையை மேலும் வளர்க்கும் வகையில் கட்சி தொடர்ந்தும் செயல்படவேண்டுமென்றும் தீர்மானிக்கிறது.
மேலும்,
தமிழ்பேசும் மக்களின் மொழி உரிமையும், இந்நாட்டைத் தமது தாயகமாகக் கொண்ட தமிழ்பேசும் மக்களின் பூரண குடி உரிமையையும், மத சமத்துவத்தையும், நீதிமன்றம் மூலம் நிலைநாட்டப்படக்கூடிய அடிப்படை உரிமைகளையும், சாதி, தீண்டாமை ஆகியவற்றைச் சட்டமூலம் ஒழிப்பதையும், உண்மை மக்களாட்சி மலரும் வகையில் அதிகாரத்தைப் பரவலாக்கு வதையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்புத் திருத்தப்பட வேண்டு மென்றும், மூன்று மாத காலத்திற்குள் அரசியலமைப்பைத் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறுமானால், தமிழினத்தின் சுதந்திரத்தையும், உரிமை

8
களையும் பெறுவதற்குச் சாத்வீகப் போராட் டத்தில் இறங்குவதென்று தமிழர் கூட்டணி தீர்மானித்து அரசாங்கத்திற்கு அளித்த அவகாசத்தை அரசாங்கம் முற்றாகப் புறக்கணித்து உதாசீனம் செய்துவிட்ட படியாலும்;
ஜனநாயகரீதியில் இவ்வரசியலமைப் பைத் தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை உலகுக்குக் காட்டும்பொருட்டும், இவ்வரசி ய ல  ைம ப் புக் குத் தமிழ் மக்களிடையே ஆதரவுண்டு என்ற தமது கூற்றைப் பரீட்சிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கத் திற்கு அளிக்கும் பொருட்டும், தமது தேசியப் பேரவை உறுப்பினர் பதவியைத் திரு. செல்வநாயகம் துறந்து ஓராண்டாகியும், காங்கேசன்துறைத் தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்தாது அத்தொகுதித் தமிழ் வாக்காளர்களுடைய அடிப்படை அரசிய லுரிமையை அரசு மறுத்து விட்டதாலும்;
இந்நாட்டுப் பெரும்பான்மைத் தேசிய இனத்தின் ஒத்துழைப்போடோ, சம்மதத்தோ டோ தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியமில்லை என்று கருதித் தமிழ்த் தேசிய இனம் பாரம்பரியமான தாயகத்தில் தமது சுய ஆட்சி உரிமையை நிலைநாட்டுவதே ஒரே வழியென்று தமிழர் கூட்டணி தீர்மானித்து, அதன் அங்கமான பல்வேறு கட்சிகளின் பரிசீலனைக்கு அக்கருத்தைச் சமர்ப்பித் திருப்பதாலும்;
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 12வது மாநில மாநாடு, மொழியால், கலாசாரத்தால், வரலாற்றால், பிரதேசத்தால், ஒரு தனி இனமாக வாழவேண்டுமென்ற உணர்ச்சியால் ஓர் தனித் தேசிய இனமாகக் கணிக்கப்படுவதற்குப் பூரண தகுதிபெற்ற இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் சர்வதேச நீதிக்கிணங்க ஏற்றுக்கொள்ளப் பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையென்ற அடிப்படைத் தத்துவத்தின் படி, தமது பாரம்பரியமான தாயகத்தில் இலங்கைத் தமிழ்த் தேசிய இனம் தன்னாட்சி காண்பதே எமக்குள்ள ஒரே வழியென்று இத்தாள் தீர்மானிக்கிறதி.
தமிழ்த் தேசிய இனத்தின் நியாயபூர்வமான இக்கோரிக்கைக்கு உலக

Page 290
2
நாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெறும் வகையிற் பிரசாரத்தை மேற்கொள் ளுவதென்றும், இவ்விலட்சியத்தை அடைவதற்குத் தமிழர் கூட்டணி மேற்கொள்ளும் சாத்வீகஅடிப்படையிலான நேரடி நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை அளிப்பதென்றும் இம்மாநில மாநாடு தீர்மானிக்கின்றது.
தீர்மானம் - 1
மனிதனை மனிதன் சுரண்டி வாழும் நிலையை ஒழித்து - ஒவ்வொரு உழைப் பாளியும் தன்னுழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெற்று வாழும் பூரண சோஷலிச அமைப்பு நிலைநாட்டப்பட வேண்டுமென்ற தனது அடிப்படைக் கொள்கையை இ. த. அ. க. மீண்டும் வலியுறுத்துவதோடு, மிகப் பயங்கரமாக எம்மை எதிர்நோக்கும் உணவு நெருக்கடியிலிருந்து தப்பி, தமிழர் - தமது தாயகத்தைப் பொருளாதாரத் தன்னிறை வுப்பிரதேசமாக மாற்றி, இலங்கை முழுவதும் வாழும் தமிழர் - தமது வாழ்வைச் சிறப்புடையதாகத் தம் தாயகத்திலேயே அமைக்கத் தொலைநோக்கோடு செயற்பட வேண்டுமென்று, இம்மாநாடு தமிழ்பேசு மினத்தை அழைக்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
இந்நாட்டுத் தொழிலாள வர்க்கத்தில் பெரும்பான்மையோராக இருந்து, நாட்டின் வெளிநாட்டுச் செலாவணியில் மூன்றில் இரண்டு பங்கை உழைத்துக் கொடுக்கும் பாட்டாளிகளையும், இந்த நாட்டிற்கு வேண்டிய உணவுப் பொருட்களிற் கணிசமான பங்கை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும், கடற்றொழிலாளர்களையும், கைத்தொழிலாளர்களையும் - தம் மூளை உழைப்பின் மூலமே வாழ்க்கை நடத்தும் நடுத்தர வகுப்பினரையே மிகப் பெரும்பான்மை யினராகக் கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அமைப்பான இலங்கைத் தமிழரசுக்கட்சி - மனிதனை மனிதன் சுரண்டி வாழும் நிலையை ஒழித்து ஒவ்வொரு உழைப்பாளியுைம் தன் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற்று வாழும் பூரண சோசலிச அமைப்பு நிலைநாட்டப்

79
படவேண்டுமென்ற தன் அடிப்படைக் கொள்கையை, 12ஆவது மாநில மாநாடு மூலம் மீண்டும் உறுதிப்படுத்தும் அதே நேரத்தில்:
1. சோசலிச அரசென்று தன்னைப் பிரகடனம் செய்யும் இன்றைய அரசு - இந்நாட்டு ஏழை மக்கள்மீதும் நடுத்தர வகுப்பினர்மீதும் தாங்க (ւpւգ-աn 5 வாழ்க்கைச் செலவென்ற பழுவை - திடீர் திடீர் என்று வர்த்தமானிமூலம் அறிவிக்கும் விலை உயர்வால் சுமத்திவருவதையும்;
2. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்ப்பதற்குப் பதிலாக - அதைமேலும் மோசமாக்கும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களைக் கைவிட்டும், தனியார் துறைத்தொழில்களுக்கு மூலப்பொருள் வழங்குவதைக் குறைத்தும் வருவதையும்;
3. உற்பத்திச் சாதனங்களைத் தேசியமய மாக்குதல் என்ற உன்னதமான சோசலிசக் கொள்கையை - இனவெறிக் கொள்கைக்குப் பயன்படுத்தி, தமிழ்பேசும் தோட்ட உரிமையாளர்களையும், அங்கு பணிபுரியும் தமிழ் ஊழியரையும், தொழிலாளர்களையும் பாதிக்கும் வகையில் அமுல்நடத்தி வருவதையும்;
4. தமிழ்ப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப் பட்ட காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தி, கச்சாய் உப்பளம், மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி போன்ற பல திட்டங்களைப் பாரபட்சமான முறையிற் கைவிட்டுவருவதையும்;
இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு, மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க வழிகாணவேண்டும் என்றும், எவ்வகையிலும் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுத்து, மக்களை வெடிக்கும் எரிமலையாக மாற்ற வேண்டாமென்றும் - ஆட்சியாளருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது.
மேலும், நாட்டில் வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும்,

Page 291
-2 உணவுத் தட்டுப்பாட்டிலிருந்தும் தம்மைக் காத்துக்கொள்ளும் வகையில் - பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கு மாறும் தமிழ்பேசும் மக்களை இம்மாநில மாநாடு வேண்டுகின்றது.
1. அரசாங்க உத்தியோகம் என்ற கானல் நீரை எதிர்பார்த்து ஏமாறாது, உணவிலும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் தன்னிறைவு காணும் வகையில் - சிறப்பாக விவசாயத் துறையில் புது உத்வேகத்தோடு தமிழ் பேசும் மக்களும் - குறிப்பாக இளைஞர் சமுதாயமும் ஈடுபடவேண்டும்.
2. உணவு உற்பத்தியைப் பெருக்கும் அதே நேரத்தில், தமிழர் தாயகத்தைக் காக்கும் வகையில், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள தரிசு நிலங்களில் - தமிழ்பேசும் மக்கள் நெருங்கி வாழும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் வேலைவாய்ப்பு அருகிவரும் மலைநாட்டு பகுதிகளிலும் வாழும் தமிழ்பேசும் மக்கள் சென்று குடியேறி விவசாயத்துறையில் உடனடியாகத் தீவிரமாக ஈடுபடவேண்டும்.
3. வடக்குக் கிழக்கு மாகாணங்களிற் குடியேறி வாழ்வுதேட வரும் மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளிகளுக்கு - அவ்வப் பகுதிப் பொதுமக்களும், நிலச் சொந்தக் காரரும் சகல உதவிகளும் அளித்து, அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இந் நடவடிக்கைகளினால், எம்மைப் பயங்கரமாக எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கும் உணவு நெருக்கடியிலிருந்து எம்மினத்தைக் காப்பதோடு, தமிழர் தாயகத்தைப் பொருளாதாரத்துறையில் தன்னிறைவுள்ள பிரதேசமாக மாற்றி,இலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் பேசும் மக்கள் - தம்வாழ்வைச் சிறப்புடன் தம் தாயகத்தில் அமைத்துக்கொள்வதற்கான தொலைநோக் கோடு செயலாற்றுமாறு, தமிழ்பேசும் மக்கள் எல்லோரையும் இம் மாநிலமாநாடு வேண்டுகின்றது.

0
தீர்மானம் - 2
சாதியை ஒழிப்பதற்குப் புதிய அரசமைப்பில் சட்டங் கொண்டுவர அரசு மறுத்தபோதிலும், தமிழினம் இதனை ஒழிப் பதற்குத் தொடர்ந்து போராடவேண்டுமென இம்மாநாடு தீர்மானித்து, சாதிபேதத்தை அனுஷ்டிக்கும் பொதுநிறுவனங்கட்கு வழங்கப்படும் அனுமதியை இரத்துச்செய்யும் அதிகாரத்தை " உள்ளூராட்சி மன்றுகளுக்கு வழங்கும் சட்டத்தை ஆக்க - உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி கட்சியின் தே.அ.பே. உறுப்பினர்களை இம்மாநாடு பணிப்பதோடு, இச் சாதியெனும் சாபக் கேட்டை அடியோடு ஒழிப்பதில் - த.கூவின் அங்கத்துவக் கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோருவதென்றும் இம்மாநாடு தீர்மானஞ் செய்கிறது எனக் கூறிடும் தீர்மானம்.
சிங்கள ஆதிக்கத்திலிருந்து தமிழ் இனத்தின் விடுதலையைக் காண - எமது இயக்கம் தமிழினத்தில் நிலவும் தீண்டாமை ஒழித்தலைத் தனது அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டு, சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை இயற்ற ஆட்சியாளரை வற்புறுத்தி, அதை நிறை வேற்றச் செய்தும்; மக்கள் மத்தியில் பிரசாரத்தினால் - வழிபடும் இடங்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் சமத்துவத் தை நிலைநாட்ட உழைத்தும்; தீண்டாமை யை எவ்விதத்திலும் அனுஷ்டிப்போருக் கெதிராக நீதிமன்றங்களில் வழக்குகளை நடாத்தியும், சாதியில்லாச் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் - சாதி ஒழிப்பு அரசியலமைப்பில் சட்டமாக வேண்டுமென்று சிங்கள ஆட்சியாளரை வற்புறுத்தியும் இதுகாறும் இயங்கிவந்த எமதியக்கம் - ஆட்சியாளர் அரசியலமைப்பில் சாதி ஒழிப்புக்குச் சட்டமியற்ற மறுத்தபோதிலும், தமிழ் இனம் தானாகவே இச்சாபக் கேட்டைத் தம்மத்தியிலிருந்து களைய உறுதிபூண்டு, தொடர்ந்து செயல்பட வேண்டுமென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 12வது மாநில மாநாடு தீர்மானித்து, சாதிபேதத்தை எவ்விதத்திலும் அனுஷ்டிக்கும் உணவு விடுதிகளுக்கும்,

Page 292
2. பொதுநிறுவனங்களுக்கும் வழங்கப்படும் அனுமதியை ரத்துச்செய்யும் அதிகாரத்தை - உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கும் சட்டத்தை ஆக்க நடவடிக்கை எடுக்குமாறு, கட்சியின் தேசியப்பேரவை உறுப்பினர்களை இம் மாநிலமாநாடு பணிக்கும் அதே நேரத்தில், தமிழினத்திலிருந்து இச்சாபக் கேட்டைக் களைவதில் - தமிழர் கூட்டணியின் அங்கத்துவக்கட்சிகள் எல்லா வற்றினதும் ஏகோபித்த ஒத்துழைப்பைக் கோருவதென்றும், இம்மாநாடு தீர்மானிக் கின்றது.
தீர்மானம் - 3
நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களைக் காரணமின்றிக் கைது செய்து அடைத்து வைத்திருக்கும் அரசின் கொடூர அடக்குமுறையை வன்மையாக இம்மாநாடு கண்டிப்பதோடு, காலதாமத மின்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது நீதிமன்ற விசாரணைக் குட்படுத்த வேண்டும் என அரசைக் கோரும் அதே நேரத்தில், இக்கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க மறுப்பின் - இதன் மீது பொதுசனக் கிளர்ச்சி ஒன்றினை உருவாக்க நேரும் என்று இம்மாநாடு அரசை எச்சரிக்கிறது எனக்கூறிடும் தீர்மானம்.
தமிழர் கூட்டணியின் இணைச் செயலாளர்களுள் ஒருவராக இருந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், தமிழரசு வாலிப முன்னணிச் செயலாளர் திரு. சேனாதிராசா போன்ற நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ்க் கைதுசெய்து, நீதிவிசாரணை ஏதுமின்றி, ஆண்டுக்கணக்காகவும், மாதக்கணக்காவும் சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் கொடுர அடக்குமுறையை இந்த மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த இளைஞர்களைத் தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும்; அன்றேல் இவர்கள்மீது உடனடியாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டுமென்று இந்த மாநாடு அரசாங்கத்தைக் கோருவதுடன், இதற்கு

அரசு செவிசாய்க்கத் தவறினால் - இப்பிரச்சினை மீது பொதுஜனக் கிளர்ச்சி ஒன்றை நடத்தவேண்டி ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றது.
தீர்மானம் - 4
புதிய அரசியலமைப்பைத் தமிழ்பேசும் மக்கள் ஏற்கவில்லை என்பதை நிரூபிப்பதற்கு வசதியாக ஓர் இடைத் தேர்தலை ஏற்படுத்த நாம் வாய்ப்பளித்தும் - இது வரை அரசு அதனை நடாத்தாது தெற்கே ஐந்து இடைத் தேர்தல்களை நடத்தியதன் மூலம் - தமிழரது அடிப்படை ஜனநாயக உரிமை களை அரசு மறுதலித்து வருவதை இம்மா நாடு மிகக் கடுமையாகக் கண்டிப்பதோடு, மேலும் நொண்டிச் சாட்டுகளைச் சொல்லாது உடன் காங்கேசன் துறை இடைத் தேர்தலை நடத்துமாறு, இம்மாநாடு அரசைக் கோருகிறது எனக் கூறிடும் தீர்மானம்.
புதிய அரசியல் சட்டத்தைத் தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக்கொண்டிருக் கிறார்களென்ற அரசாங்கக் கட்சிகளின் வாதத்தை எதிர்த்தும், அச்சட்டத்தைத் தமிழ்பேசும் மக்களிற் பெரும்பான்மையோர் ஏற்க மறுக்கிறார்கள் என்ற தமிழர் கூட்டணியின் நிலையை ஜனநாயகரீதியில் நிலைநாட்டும் பொருட்டும் தமது பாராளுமன்ற உறுப்பினர்ப் பதவியைத் தமிழர் கூட்டணித் தலைவர் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்கள் 31072இல் துறந்து, ஒர் இடைத்தேர்தலை நடத்தி இது சம்பந்தமாகத் தமிழ்மக்களின் தீர்ப்பை அறிவதற்கு அரசுக்கு வாய்ப்பை அளித்தும் - கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நொண்டிச் சாட்டுக்கள் கூறி, தமிழ்ப் பகுதியில் உள்ள தொகுதி என்பதற்காகக் காங்கேசன்துறை இடைத்தேர்தலை நடத்தாமலும், அதேவேளையில் சிங்களப் பகுதிகளில் ஐந்து இடைத்தேர்தல்களை நடத்தியதன்மூலம் - தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை அரசாங்கம் மறுதலித்து வருவதை இந்த மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், மேலும் நொண்டிச்சாட்டுக்களைக் கூறி இடைத்தேர் தலைக் காலதாமதப்படுத்தாமல், உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்தைக் கோருகிறது.

Page 293
2.
Main Resolution:
The I.T.A.K. which is a member of the T.U.F. resolves while approving all the actions taken by the Party along with the T.U.F. to vindicate the rights of the Tamil Nation, to continue to give its unstinted support to the T.U.F. This convention declares SELF-RULE for the Tamil nation as its objective.
The 12th National Convention of the
lankai Tamil Arasu Kadchi assembled at Mallakam this 9th Day of September, 1973 fully approves the actions taken by the Party as a constituent member of the Tamil United
Front formed at Trincomalee on the 14th of May, 1972 in order to foster unity in theTamil Nation in the face of the grave threat to its existence presented by the proclamation of this country as a Republic under the new Constitution in violation of fundamental human rights and the nations's self-respect and integrity, and the Convention further resolves that the Party should continue to function in such a way as to strengthen this Unity in the ranks of the Tamil Nation.
And whereas the Tamil United Front put forward a demand for the amendment of the Constitution in such a way is to include the language rights of thetamil Speaking People, the full Citizenship right of all Tamil speaking persons who have made this country their home, the equality of all religions, justiciable fundamental rights, the abolition of untouchability and caste by law, and decentralisation of power in order to ensure a genuine Peoples' Government, and whereas the government has ignored and

2
totally disregarded the opportunity given to it to take steps to amend the Constitution within a period of 3 months at the end of which the Tamil United Front decided to
launch non-violent direct action in order to win the freedom and rights of the Tamil Nation.
And whereas Mr. Chelvanayakam resigned his membership of the National State Assembly in order to demonstrate to the world the total rejection of the New Constitution by the Tamil People and to give an opportunity to the government to put to the test its claim that there was support for the Constitution among the Tamil people and though almost a year has elapsed since his resignation the government has failed to hold the bye-election in the Kankesanthurai Electorate in violation of the elementary political rights of the Tamil Voters of Kankesanthurai.
And whereas it has been amply demonstrated that it is not possible to establish the rights of the Tamil Nation the co-operation or consent of the majority Nation and as such the Tamil United Front has resolved that the only way open to the Tamil Nation is to establish its right of self-rule in their traditional homeland and has submitted this resolution to the consideration of Constituent Members of the
Tamil United Front.
The 12th National Convention of the llankai Tamil Arasu Kadchi hereby resolves that the Tamil speaking people in Ceylon are in every way fully qualified to be regarded as

Page 294
2.
a separate National by virtue of their language, culture, history, territory and the in nate and intense desire to live as a separate Nation, and that the only path for them to follow is the establishment of their right to self-rule in their legitimate homeland based on the internationally recognised principle of the right to self-determination of every nation.
ܘ ఎnఎLG ܥܠ لصـ
சுமை உங்கள்
།། Z துயர்போக்கல்

The Convention further resolves to
carry out on its propaganda in such a way as to win the sympathy and support of the Nations of the world to this legitimate aspiration of the Tamil Nation and to give its full co-operation to all non-violent direct action campaigns the T.U.F. may launch in order to achieve this objective.
னிதையரே' ܥܐ 4ر
தலைமீதில்
உங்கள் கடன்

Page 295
BEST)
Of Licence á
இலங்கை இந்தி உடனுக்குடனான இ மீன், நண்( இலங்கைப் ட இந்திய வார ம அத்துடன் மேல் நாட் இலங்கை பியர், சா
நாட வேண்
259 - 261 L. West C Surrey ( Te: 020 Fax: 020

FOOD
& News Agent
பப் பொருள்கள், இலங்கை மரக்கறிகள், டு, இறால், ாத்திரிகைகள், ாத சஞ்சிகைகள், டுக் குடிவகைகளுடன் ராய வகைகளுக்கும்
ாடிய இடம்.
Ondon Road roydon, CRO 2RL 8684 (6269 866.55299

Page 296
திருமலையில்
ஏககாலத்தில் தமிழரின் தன்மானப்போர் தமிழ் பாடல்பெற்ற திருகோணமலைக் கச்சேரியில் தமிழ்ச்சேனையின் தளபதி அ. அமிர்தலிங் போராட்டத்தில் கலந்து கொள்வதை மேற்பட கடமை வீரர் கருந்தாடி நவம், மன்னார் ே குழாமுடனும் போராட்டத்தில் கலந்து கொள்
மன்னாரில் த
s
 
 
 

அறப் போர்!
ஈழமெங்கும் விஸ்தரிக்கப்பட்டதன் சாட்சியாகப் அறப்போர் புரியும் பல்லாயிரவர் மத்தியில் கம், துணைவியார் மங்கையர்க்கரசியாருடன் உத்திலும், மாதோட்ட நன்னகராம் மன்னாரில் காமான் அழகக் கோனுடனும் தொண்டர் வதைக் கீழ்ப்படத்திலும் காணுங்கள்.
ன்மானப் போர்!

Page 297
வெங்கொடுமைச் சாக்காட்டில் வெற்றித்
இறுமி வந்த ரும்பு மனிதனின்
 
 

விளையாடும் தோள் - எங்கள் தோள்கள்!
அறப்போராளிகளை ஆயுதப் பொலிசார் அப்புறப்படுத்த முயல்கின்றனர்; அதை முறியடிக் கின்றனர் தந்தை செல்வாவும், வீரத் தளபதி பகதூர் அமிர்தலிங்கமும் தொண்டர் பலருடன்.
mmmmmmmmmmmmm
ஜீப் வண்டி இரு கைப்பிடியில்!
கச்சேரியின் முன்புற வாயிலால் வெளிவரத் துணிவின்றிப் பின்புற வாயிலால் (பழைய பூங்கா வாயில் ஜீப் வண்டியில் அமர்ந்து வெளிவர முயன்ற அரசாங்க அதிபரை வண்டியுடன் சேர்த்து இரும்பு மனிதன் டாக்டர் இ.மு.வி. நாகநாதன், பா. உ. வின் இரு கைகளும் தடுத்து விட்டது போங்கள். அவரையும் மிஞ்சி ஜீப்வண்டி நகர முயன்றால் அதைத் தடுத்து நிறுத்திடத் தரையில் புரண்டிடும் தீரர்கள் பாரீர்

Page 298
క్లః ○ V六7 לע
82338
SS ီ| ဧ၅us• >4※%A)淤§§§密密兹いにYA
%
&
やメ DY S A
No
NA a
4A
マ 4A
マ
3. \
マ 4\
AA
ઠી
姿
|୩fiରy = '&'
ခြုံဒွို
やスー7
\
t
ל\ Y
} 參靈JYKA %[
曲
ဒွို
לW \
8T8b 8b
i
O
O)560.
ଽ
கை(
\
த்த
\
/>

Page 299


Page 300
CE இலங்கை
o a uită S.W. R. Dح
பா. உ. அர் இலங்கைத் த 85 plug, S.J.V. G. LUIT. god. 96 இை 1957ஆம் வருடம் ஜூன் கைச்ச சரித்திரப் பிர 98.
O g8 L 6 OUTLIT -
நீ உடன்ப
98.
Bandaranayake · Agree 26th Jü
O - O O Ο O O
82 982 93 SB S32 §
 

கியம் கருதி ப் பிரதமர் 8
பண்டாரநாயக்கா, பர்களுக்கும்,
மிழர் தலைவர் () சல்வநாயகம், கியூ சி, வர்களுக்கும் OMS டயே லை மாதம் 26ஆந் திகதி 8. ாத்தான 的 சித்தி பெற்ற
O Asal செல்வா இ
O
டிககை ஐ Ә 8. 8.
• Chelvanayakam ||
Snent f BQ ly 1957.
ಕ್ಲಿಕ್ಟೆ

Page 301
2.
பகுதி - அ
“வளர்ந்து நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்திவந்த கருத்து வேற்றுமைகளைத் தீர்க்கும் முயற்சியாக, இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமரோடு தொடர் பான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
"உரையாடலின் தொடக்கத்திலேயே தமிழரசுக் கட்சியின் சில கோரிக்கைகளைப் பிரதமர் ஏற்பது சாத்தியமற்றதென்பது தெளிவாகியது.
"சமஷ்டி அரசியல் அமைப்பையோ, பிரதேச சுயாட்சியையோ ஏற்படுத்துவது பற்றிப்பேசவோ, அல்லது உத்தியோக மொழிச் சட்டத்தை அழிப்பதற்கு நடவடிக் கை எடுக்கவோ அரசாங்கத்தின் நிலையில் தன்னால் இயலாது என்று பிரதமர் கூறினார்.
"இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் எவற்றையும் கைவிடாத வகையில் ஓர் இடைக்கால ஒழுங்குக்கு வர இயலுமா என்பதை ஆராயும் கேள்வி பின் எழுந்தது.
"அரசாங்கத்தின் பிரதேசசபைகள் மசோதாவை ஆராய்ந்து, அதன் கீழ் இலங்கைத் தமிழரசுக்கட்சி கருத்திற் கொண்டிருக்கும் சில விடங்களை நியாய மாக உள்ளடக்கக் கூடியதாக ஏற்பாடுகள் செய்ய இயலுமா என்று பார்க்குமாறு பிரதமர் ஆலோசனை கூறினார்.
"அங்கு ஏற்பட்ட உடன்படிக்கை ஒர் தனியான பத்திரத்தில் தரப்படுகிறது.
இடைக்கால ஒழுங்கு “மொழி விடயத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சமஅந்தஸ்துக் கோரிக் கையை வலியுறுத்தியது. ஆனால் இவ் விடயத்தில் பிரதமரின் நிலையை உத்தேசித்து இடைக்கால ஏற்பாடாக ஓர் உடன்படிக்கைக்கு வந்தனர். தமிழ் ஒரு தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படுவதும், வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக

90
அலுவல்கள் தமிழில் நடைபெறுவதும் முக்கியமானவை என்று அவர்கள் சுட்டிக் காட்டினர்.
"தான் முன் குறிப்பிட்டது போல, உத்தியோகமொழிச் சட்டத்தை அழிக்கக் கூடிய எந்த நடவடிக்கையும் எடுப்பது சாத்தியமற்றதென்று பிரதமர் கூறினார்.
"கருத்துப் பரிமாறலின் பின், இயற்ற உத்தேசிக்கப்படும் சட்டத்தில் - இலங்கை யின் தேசிய சிறுபான்மையோரின் மொழி யாகத் தமிழை அங்கீகரிக்க வேண்டு மென்றும், உத்தியோக மொழியின் நிலையைப் பாதிக்காத வகையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாகத் தமிழே இருக்கும் வகையில் பிரதமரின் நாலு அம்சத் திட்டத்தில் ஏற்பாடு இருக்க வேண்டு மென்றும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டு மென்றும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
"இந்திய வம்சாவழியினருக்கு இலங் கைக் குடியுரிமை வழங்குவது பற்றியும், குடியுரிமைச் சட்டம் பற்றியும் தமது கருத்துக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமருக்கு எடுத்துவிளக்கி, விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினர்.
"இப்பிரச்சினை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் படுமென்று பிரதமர் அறிவித்தார்.
"இம் முடிவுகளின் காரணமாகத் தமது உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையைக் கைவிடுவதாகத் தமிழரசுக்கட்சி அறிவித்தது.
பகுதி " ஆ 1. பிரதேச சபைகளின் எல்லைகள் -
சட்டத்திலேயே அட்டவணையாகச் சேர்க் கப்பட்டு வரையறுக்கப்படவேண்டும்.

Page 302
-2
2. வடமாகாணம் ஒரு பிரதேச சிபையர்க்வும் - கிழக்குமாகாணம் இரண்டு அல்லது கூடிய பிரதேச சபைகளாகவும் Փ|6ուճպւb,
3. மாகாண எல்லைகளையும் தாண்டி இரண்டு அல்லது மேற்பட்ட பிரதேச சபை க்ள் இணைவதற்குச் சட்டத்தில் விதி இடம் பெறும்; பார்ாளுமின்ற்த்தின் அங்கீகாரத் துக்கு அமைவாக, ஒரு பிரதேச சபை தன் னைப் பிரித்துக்கொள்ளவும் இடம் இருக்கும். இரண்டு அல்லது மேற்பட்ட பிரதேச சபைகளுக்குப் பொதுவான குறிப் பிட்ட நோக்கங்க்ளுக்கு, அவை சேர்ந்து செயல்படச் சட்டத்தில் இடம் இருக்கும்.
4. பிரதேச சபை உறுப்பினர் நேரடி யாகத் தெரிவு செய்யப்படுவர். அதற்கான தொகுதிகளை வகுப்பதற்குத் தொகுதி நிர்ணயக் குழுவோ, குழுக்களோ அமைப் பதற்கு ஏற்பாடு செய்யப்படும். பிரதேச சபை யின் எல்லைக்குள் அமைந்த மாவட்டங் களின் பாராளுமன்ற உறுப்பினர் - பிரதேச சபைத் தலைவராவதற்குத் தகுதி பெறுவது பற்றி ஆலோசிக்கப்படும். அரசாங்க அதிபர் கிள் பிரதேச ஆணையாளர்களாக நியமிக்கப் படுவது ஆலோசிக்கப்படும். பெரிய பட்டினங்கள், கேந்திர நகரங்கள், மாநகர சபைகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்யும் அதிகாரங்கள் ஆராயப்படும்.
5. அதிகாரங்கள் பாராளுமன்றத் தினால் வழங்கப் பெற்றுச் சட்டத்தில் வரை யறுக்கப்படவேண்டும். விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும், குடி
米

யேற்றம், கல்வி, சுகாதாரம் கைத்தொழில், மீன்பிடித்துறை, வீடமைப்பு, சமூகசேவை, மின்சாரம் தண்ணிர்த்திட்டங்கள், நெடுஞ் dfroneuser ஆகியவை உள்ளடங்கக் குறிப் பிட்ட விடயங்கள் - பிரதேச சபைகளின் அதிகாரத்திற்குட்பட்டிருக்க வேண்டு மென்று ஒப்புக்கொள்ளப்பட்டது. வேண் டிய அதிகார எல்லைகள் சட்டத்திலேயே வரையறுக்கப்படும்.
6. குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, தமது அதிகார எல்லைக்குட் பட்ட காணிகள் வழங்கப்படவேண்டிய குடியேற்ற வாசிகளைத் தெரிவு செய்வதும், அத் திட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும். ஆட்களைத் தெரிவு செய்வதும் பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இப்போது கல்லோயா அபிவிருத்திச் சபை யினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தின்நிலை ஆராயப்படவேண்டும்.
7. சட்டமூலத்தில் பிரதேச சபைகளை யொட்டி உள்ளுராட்சி அமைச்சருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை மாற்றித் தேவையான இடத்தில் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு அவ்விதிகள் திருத்தப்படும்.
8. பிரதேச மக்களுக்கு மத்திய அரசாங்கம் மொத்தமாக நிதி வழங்கும். அத்தொகை கணக்கிடப்படவேண்டிய கொள்கைகள் - பின் ஆராயப்படும். பிரதேச சபைகளுக்கு வரி விதிக்கவும், கடன் வாங்கவும் அதிகாரம் இருக்கும்.

Page 303
Al DeJUS'
PART - A
"Representatives of the Federal Party have had a Series of discussions with the Prime
Minister in an effort to resolve the differences of opinion that had been growing and creating tension.
"At an early stage of these conversations it became evident that it was not possible for the Prime Minister to accede to some of the demands of the Federal Party.
"The Prime Minister stated that, from the point of view of the Government, he was not in a position to discuss the setting up of a Federal Constitution, or regional autonomy, or take any step that would abrogate the Official Language Act.
"The question then arose whether it was possible to explore the possibility of an adjustment without the Federal Party abandoning or Surrendering any of its fundamental principles or objectives.
"At this stage the Prime Minister Suggested an examination of the Government's draft Regional Councils Bill to see whether provision could be made under it to meet, reasonably, some of the matters in this regard which the Federal party had in view.
"The agreements so reached are embodied in a separate document.
"Regarding the language issue, the Federal Party reiterated its stand for parity, but

TMEN
in view of the position of the Prime Minister in this matter they came to an agreement by way of adjustment. They pointed out that it was important for them that there should be a recognition of Tamil as a national language, and that the administrative work of the Northern and Eastern Provinces should be done in Tamil.
"The Prime Minister Stated that as mentioned by him earlier it was not possible for him to take any steps that would abrogate the Offical Language Act.
"After discussion, it was agreed that the proposed legislation should contain recognition of Tamil as the language of a national minority of Ceylon, and that the four points mentioned by the Prime Minister should include provision that, without infringing on the position of the Official language as Such, the language of administration of the Northern and Eastern Provinces belamil, and that any necessary provision be made for the non-Tamil speaking minorities in the Northern and Eastern Provinces.
"Regarding the question of Ceylon citizenship for people of Indian descent and the revision of the Citizenship Act, the representatives of the Federal Party put forward their views to the Prime Minister and pressed for an early settlement.
"The Prime Minister indicated that the problem would receive early consideration.
"In view of these conclusions the Federal Party stated that they were withdrawing their proposed Satyagraha"

Page 304
-2
PART - B
1. REGIONAL areas to be defined in the Bill itself by embodying them in a schedule thereto.
2.THAT the Northern Province is to form one regional area whilst the Eastern Province is to be divided into two or more regional areas.
3. PROVISION is to be made in the Bill to enable two or more regions to amalgamate even beyond provincial limit; and for one region to divide itself subject to ratification by Parliament. Further provision is to be made in the Bill for two or more regions to collaborate for specific purposes of common interests.
4. PROVISION is to be made for direct election of regional councillors. Provision is to be made for a delimitation Commission Or Commissions for carving out electorates. The question of M.P.s representing districts falling within regional areas to be eligible to function as chairmen is to be considered. The question of Government Agents being regional Commissioners is to be considered. The question of supervisory functions over larger towns, strategic towns and municipalities is to be looked into.
AW
AN வாய்ப்பளிக்க 4ر மிழர் ஆ -NYr po

33
5. PARLIAMENT is to delegate powers and to specify them in the Act. It was agreed that regional Councils should have powers over specified subjects including agriculture, cooperatives, lands and land development, Colonisation, education, health, industries, and fisheries, housing, and Social services, electricity, water schemes and roads. Requisite definition of powers will be made in the Bill.
6. IT was agreed that in the matter of Colonisation schemes the powers of the regional councils shall include the power to select allottees to whom lands within their area of authority shall be alienated and also power to select personnel to be employed for work on such schemes. The position regarding the area at present administered by the Gal Oya Board in this matter requires consideration.
7. THE powers in regard to the regional Council vested in the Minister of Local Government in the draft bill to be revised with a view to vesting control in Parliament wherever necessary.
8. THE Central Government will provide block grants to the regional councils. The principles on which the grants will be computed will be gone into. The regional councils shall have powers of taxation and borrowing.
A. さ
முந்திடுவோர் 4Ak அன்றோ? NY/-

Page 305


Page 306
திருமதி பூரீமாவோ பண்டார ஐ. தே. க. திரு. டட்லி சேனநாயக்
இ. த. அ. திரு. சா. ஜே. வே. :ெ
அவாகள
சிறப்
கோரிக்
ܓܓ
ኁዐ
The Leade MR. S.J.V. CHET
Submitt
DEN/MA
The Leader of Mrs. SrimaVO Ban
2 The Leader
Mr. Dudley Ser
露
 

ஜீ
லன் கருதி க. தலைவி நாயக்கா, எம்.பி. அவர்கட்கும்
தலைவர் ா, எம். பி. அவர்கட்கும் க. தலைவர் , Fல்வ்நாயகம், எம். பி. கையளித்த புமிகு
கைகள் W
މރ ミ
M
Of the F.P. WANAYAKAM, M.P.
\NDS
the S. L. F. P.
daranayake, M. P d of the U.N.P.
hanayake, M. P.
懿
8

Page 307
2
30ー3ー1960@命 @l i( அரசமைத்தற்குரிய பெரும்பான்மை தயவை நாடித் தந்தை செல்வாவுக் தே.க. ஆகியவற்றின் தலைவர்களுக் தந்தை செல்வநாயம் விடுத்த குறை
பொதுத் தேர்தல் முடிவுகள் - இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மையாக எமது கட்சியின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் அங்கீகரித்திருக்கின்றார்கள் - என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுருக்கமாகக் கூறின் அவையாவன:-
1. இன்றைய ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குப் பதிலாகத் தமிழ்பேசும் மக்களின் பிரதேச சுயாட்சியை ஏற்றுக் கொள்ளும் இணைப்பாட்சி முறை ஏற்படுத்தப் படவேண்டும்.
2. இந்நாட்டு ஆட்சி மொழியாகச் சிங்களத்துடன் சம அந்தஸ்து - தமிழ் மொழிக்கு மீண்டும் அளிக்கப்பட வேண்டும்.
3. இந்நாட்டிற் குடியேறியிருக்கும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படவேண்டும்.
4. தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசத்தில் திட்டமிட்டுச் சிங்கள மக்களைக் குடியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும்.
ஆயினும், தங்கள் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு எமது கட்சிப் பாராளு மன்றக்குழு ஆதரவு அளிக்கக்கூடியதாக - எமக்கிடையே உடன்பாடு ஏற்படக்கூடிய குறைந்தபட்சக் கோரிக்கைகளைக் கூறுமாறு எம்மைக் கேட்டதற்கிணங்கத் தாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாயிருக்குமென்று நாம் கருதும் நான்கு அம்சங்களை இங்கு சுருக்கமாகத் தருகிறேன். இவற்றை நாம்

36
பற்ற பொதுத்தேர்தலின் இறுதியில், பலம் இல்லாததால், இ. த. அ. க. வின் நேசக்கரம் நீட்டிய பூநீ. ல. சு. க. ஐ. த, இ. த. அ. க. சார்பில் அதன் தலைவர் ந்தபட்சக் கோரிக்கைகளே இவை.
சமர்ப்பிப்பதனால், எமது அடிப்படைக் கொள்கைகள் எதையும் கைவிட்டு விட்டதாகக் கருதப்படக்கூடாது.
எமக்கிடையில் உடன்பாடு ஏற்படும் விடயங்கள் - அரியணை உரையில் குறிப் பிடப்பெற்ற சட்ட நடவடிக்கை மூலம் மூன்று மாதங்களில் நிறைவேற்றப்பட வேண்டும்:-
1. வடமாகாணத்திற்கு ஒரு பிரதேச சபையும், கிழக்கு மாகாணத்திற்கு இரண்டு அல்லது கூடிய பிரதேச சபைகளும் தமக்குள் இணைந்து கொள்ளும் உரிமையுடன் நிறுவுவதன் மூலம் - வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கல், விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும், நிலப் பங்கீடும் குடியேற்றமும், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில்களும் மீன்பிடித் துறையும், வீடமைப்பும் சமூகசேவையும், மின்சாரம், தண்ணிர்த் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை உள்ளடங்கக் குறிப்பிட்ட விடயங்களையொட்டி - அதிகாரங்கள் சட்ட மூலம் வழங்கப்பட வேண்டும். பிரதேச அமைப்புக்கள் ஏற்படுத்தப்படும்வரை - மேற்குறிப்பிட்ட அரசாங்க உதவியுடனான குடியேற்றத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படவேண்டும்.
2. இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் தேசிய மொழியாகச் சட்டரீதி யாகவும் நிர்வாக ரீதியாகவும் தமிழ் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். வடக்குக் கிழக்கு

Page 308
-2
மாகாணங்களின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழ் ஆக்கப்பட வேண்டும். இப்பகுதிகளில் வாழும் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு - வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பல்கலைக்கழகக் கல்வி உட்பட எல்லாக் கட்டங்களிலும் - தமிழ் மூலம் கல்வி கற்கும் இலங்கை முழுவதும் வாழும் தமிழ்பேசும் மக்களின் உரிமையும - தமிழில் நடத்தப்படும் போட்டிப் பரீட்சைகளின் மூலம் அரசாங்க சேவையில் சேரும் உரிமையும் - சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படவேண்டும். இலங்கையின் எப்பாகத்திலும் - எந்தத் தமிழ்பேசும் மகனும் - தமிழில் அரசாங்கத்துடன் கருமமாற்றவும், கடிதத் தொடர்புகொண்டு பதில் பெறவுமான உரிமை - சட்ட பூர்வமானதாக்கப்படவேண்டும். எல்லாச்சட்டங்களும், வர்த்தமானி அறிவித் தல்களும், அரசாங்க பிரசுரங்களும், அறிவிப்புகளும், படிவங்களும் தமிழிலும் இருத்தல் வேண்டும்.
3. 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தின் விதி
A Statement contain, mitted to the Leaders of the 1960 by Mr. S.J. W. Chelvan Tamil Arasu Kadchi when , get an absolute majority in General Election and sough a Government.
The results of the General Election have demonstrated emphatically that the Tamil speaking people of Ceylon have endorsed in overwhelming numbers their acceptance of the policy and objectives of my party, which can be briefly stated as follows:-

7
4(1) இல் - "நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்" என்பதும், விதி 5 (1)ம் நீக்கப்பட்டு, அதைத்தொடர்ந்து செய்யவேண்டிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.
4. தோட்டத் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமைப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை - பாராளுமன்றத்திற்கான ஆறு நியமன ஸ்தானங்களில் - நான்கிற்கு நியமிப்பதன் மூலம் - இம் மக்களுக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்குவதுடன், அப்படி நியமிக்கப்படுவோர் un இம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் நிறுவனமான இலங்கை ஜனநாயக காங்கிரசினால் தெரிவுசெய்யப் படுவோராக இருக்கவேண்டுமென்ற சம்பிரதாயம் ஏற்கப்படவேண்டும்.
மேற்கண்டபந்திகளிற் குறிப்பிடப் படாத விபரங்களும் ஏனைய அம்சங்களும் - அரசாங்கத்துக்கும் கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டும்.
ng the minimum demands subU.N.P., and the S.L.F.P. on 30-3- ayakam on behalf of the Ilankai both the above parties failed to
Parliament after the 1960 March t the support of the Party to form
(1) The replacement of the present unitary Constitution by a Federal Constitution which recognizes the autonomy of the Tamil speaking area.S.
(2) The restoration of the Tamil language to its rightful place enjoying parity with Sinhala as an official language of the country.

Page 309
2.
(3) The granting of Citizenship rights to Tamil persons of Indian origin who are settled in Ceylon.
(4) The cessation of planned colonization of the traditionally Tamil areas with Sinhalese people.
However, since We have been asked for an indication of the minimum points on which agreement can be effected between ourselves with a view to my Parliamentary Group supporting your party to form the Government we are setting down briefly four points which I think should be acceptable, but making these suggestions we should not be understood to be surrendering or abandoning any of our fundamental objectives.
Acceptance of the matters on which agreement is effected between ourselves should be indicated by reference in the Throne Speech and thereafter implemented by legislative action which should be completed within a period of three months.
(1) Granting of regional autonomy for the Northern and Eastern Provinces by the creation of one regional body for the Northern Province and one or more regional bodies for the Eastern Province with the right of these bodies amalgamate. Powers to be delegated or Conferred on such regional bodies for specific subjects including agriculture, co-operatives, land and land development, land alienation and colonization, irrigation, education health, industries and fisheries, housing and Social service, electricity, waterschemes and roads.
Pending the establishment of the regional bodies state aided colonization referred to above is to be suspended.

98.
(2) Tamil to be recognized statutorily and administratively as the national language of the Tamil Speaking peoples in Ceylon. Tamil is to be made the language of administration and of the Courts of law in the Northern and Eastern Provinces, necessary provision, however, to be made for the non Tamil speaking minorities in these areas. The right of the Tamil speaking peoples throughout Ceylon to be educated in the Tamil language in all stages up to and including the University and the right to entry into the public services by Competitive examinations in Tamil to be statutorily recognized. Every Tamil person should be entitled in law to transact business and correspondence with the Government in all parts of Ceylon in Tamil. Allegislation, Gazette notifications, Governmental publications, notices and forms should be in Tamil also.
(3) The Ceylon Citizenship Act No. 18 of 1948 to be amended by deleting the words "before the appointed day" in Section 4 (1) of the Act and deleting of Section 5 (1) of the Act and by making Such Consequential amendments as may be necessary.
(4) Till such time as the question of Citizenship and the Franchise for the Estate Tamil population is settled representation in Parliament for these people to be provided by way of nomination to 4 out of the 6 appointed seats in Parliament and that a convention be created whereby the persons nominated will be the nominees of the political body which represents that population, namely the Ceylon Democratic CongreSS.
Details and other points not covered by the foregoing paragraphs will be settled by negotiation between the Government and the party.

Page 310
隧 MMMMMMM
7, NayorArayayayayi 3. தேசிய ஒருை ஐ. தே. க. திருவாளர் டட்லி *)>K-(; Lلlf. 8, 9 3. 9. 8 و 3. திருவார் ஜே MYN ., LUIT. 2 1965ஆம் வருடம் மார் *米 கையொப்பமிட்டு 3. அரசியல் முக்கிய
LL"cð) -
உடன்ப 杀 3.
Agre
gree -) BetW 3. Mr. Dudley Ser 3. Leader of 3. Mr. S. J. V. CHELV 3. Leader3. 24th Mar

'(
மப்பாடு கருதி
தலைவர்
சேனநாயக்கா |வர்களும்
5. தலைவர்
வி. செல்வநாயகம், . அவர்களும் * மாதம் 24ஆந் திகதி
ஏற்றுக்கொண்ட த்துவம் வாய்ந்த செல்வா டிக்கை
冬
>1l€11
hanayake, M. P. the U.N.P.
d NAYAKAM. Q.C. M.P.
The F. P.
ch 1965.

Page 311
-3
திரு. டட்லி சேனநாயகா அவர்களும், திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களும் 2431965ஆந் திகதி சந்தித்துத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக நடாத்திய பேச்சுவார்த்தைகளுக்கமைய, ஒரு நிரந்தர அரசாங்கத்தை அமைக்கும் நிமித்தம் - கீழ் க் குறிப்பிடப்பட்டுள்ள வற்றிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று - திரு. சேனநாயக்கா ஒப்புக்கொள்கின்றார்.
1. வட, கிழக்கு மாகாணங்களில் தமிழில் நிர்வாகம் நடப்பதற்கும், அவற்றைத் தமிழிலே யே பதிவதற்கும் தமிழ்மொழி விஷேட விதிகளுக்கமைய - உடனே நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தமிழ் பேசும் குடிமகன் - நாடு முழுவதிலும் தமிழிலேயே காரியமாற்ற உரிமையுள்ளவன் என்பதே - தன் கட்சியின் கொள்கை என்பதையும் திரு. சேனநாயக்கா விளக்கினார்.
2. வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள சட்டபூர்வமான நடவடிக்கைகளை நடாத்த வும், அவற்றைப் பதிவதற்குத் தமிழே நீதிமன்ற மொழியாக இருப்பதுதான் - தன் கட்சியின் கொள்கை என்று திரு. சேனநாயக்கா ஏற்றுக் கொள்கிறார்.
3. இரண்டு தலைவர்களின் பரஸ்பர சம்மதத்தின் பேரில், மக்கள்பாலுள்ள அதிகாரங்களுக்கேற்ப - இலங்கையில் மாவட்டசபைகள் அமைக்க நடவடிக்கைகள்
எடுக்கப்படும். எனினும் தேசிய நன்மை கருதி,

0}
சட்டங்களுக்கமைய - மாவட்டசபைகளுக்கு மேலான அதிகாரங்கள் அரசாங்கத்துக் குண்டென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4. இலங்கைப் பிரஜைகள் காணிப் பங்கீடுகளில் காணி பெறும் வண்ணம் - காணி அபிவிருத்தி விதிகள் திருத்தியமைக்கப் படும்.
குடியேற்றத் திட்டங்களில் காணிகள் வழங்கப்படும்போது - வட, கிழக்கு மாகாணங்களில் கீழ்காணும் விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படும் எனவும் திரு. சேனநாயக்கா ஏற்றுக்கொண்டார்.
(அ) வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் - அம்மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கே முதலில் வழங்கப் படல் வேண்டும்.
(ஆ) இரண்டாவதாக - வட, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ்பேசும் மக்க ளுக்கே வழங்கப்படல் வேண்டும்.
(இ) மூன்றாவதாக - இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ்பேசும் இனத்தவர்களுக்கே முதலிடங்கொடுத்து - ஏனையவர்களுக்கும் வழங்கலாம்.
(ஒப்பம்) டட்லி சேனநாயகா 24-3-1965 (ஒப்பம்) எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 24-3-1965

Page 312
3.
Mr. Dudley Senanayake and Mr. S.J.V. Chelvanayakam met on the 24.3.1965 and discussed matters relating to some problems over which the Tamil-speaking people were concerned, and Mr. Senanayake agreed that action on the following lines would be taken by him to ensure a stable Government:
1. Action will be taken early under the Tamil Language Special Provisions Act to make provision of the Tamil language of administration and of record in the Northern and Eastern provinces.
Mr. Senanayake also explained that it was the policy of his Party that a Tamil-speaking person should be entitled to transact business in Tamil throughout the lsland.
2. Mr. Senanayake stated that it was the policy of his Party to amend the Language of the Courts Act to provide for legal proceedings in the Northern and Eastern Provinces to be conducted and recorded in Tamil.
3. Action will be taken to establish District Councils in Ceylon, vested with powers over subjects to be mutually agreed upon betweenTwo leaders. it was agreed, however,
V
AN சேர்ந்து angeلم NYZ- சேவித்து

that the Government should have power under the law to give directions to such Councils in the national interest.
4. The Land Development Ordinance will be amended to provide that citizens of Ceylon be entitled to the allotment of land under the Ordinance. Mr. Senanayake further agreed that in the granting of land under colonisation schemes the following priorities be observed in the Northern and Eastern Provinces.
(a) Land in the Northern and Eastern Provinces should in the first instance be granted to landless persons in the District.
(b) Secondly - to Tamil - speaking persons resident in the Northern and Eastern Provinces, and
(c)Thirdly - to other citizens in Ceylon. Preference being giver to Tamil citizens in the rest of the island.
Sgd/ Dudley Senanayake 24.3.1965 Sgd/S.J.V. Chelvanayakam 24.3.1965
வாம்; ஆனால் ܥܠ م۔ வாழோம் NY/-

Page 313


Page 314
முஸ்லிம்களின்
சத்தியாக்கிரகத்திற்கென படையெடுத்து
சைவமத குருமாரும்
சத்தியாக்கிரகப் போருக்குச் சைவ இங்கே அவர்கள் போராட ம
 
 

படையெடுப்பு!
முஸ்லிம் பெருமக்களும்
வருகின்றனர்.
மார்தட்டுகின்றனர்!
மத குருமாரும் பின்நிற்கவில்லை. ார்தட்டி வரும் காட்சி பாரீர்

Page 315
/ தமிழ் இருள் போக்கி த
இருள் சூழ்ந்த தமிழர் வாழ்வில் ஒளி நாட்டியே இருள் அகற்றத் தீவட்டிதாங்கித் தொண்டர்கை தர்மர் தம்பதியர் உடன் அவர்களது ஒரே மைந் தீவட்டி தாங்கிச் செல்கிறான்.
விலங்கொடிக்கப் புறப்ப
அநீதியை அழிக்க மைந்தரை அனுப்பியது மைந்தரொடு தாமுமாக அணி திரண்டது இ6 அரைத்திடும் வெள்ளம்போல் அறபோர்க்களட
 
 

மிழ் ஒளி நாட்டுவோம்! ཡོད
தீருவோம் என்ற திடசங்கற்பத்துடன், காலத்தின் ள வழிநடத்திச் செல்கின்றனர் தமிழர் காவலர் தன் (இன்று கட்டிளங்காளை த. சித்தார்த்தனும்
பட்ட வீரத் தாய்க்குலம்
அன்றைய தாய்க்குலம் அதையே அழிக்க ாறைய தாய்க்குலம்! இதோ பள்ளம் நோக்கி
நோக்கி விரைந்திடுகிறது அத் ಏಕೆ ಅಟ)

Page 316
3.
வரலாற்று முத
- SửLDI
1961 - 1 - 21
ಓವ್ರೊವೆ;
 

5.
W W/ W7 W WI/ Wilf VM/
ō?Kō?ဇ်ချီဖါရီ?ဇ်ချီ?ဇ်ချီ) |கைத் க் கட்சியின்
fவது
LDITDTG
த்த
நன்மை பெற்ற
TGOT
, யாழ்ப்பாணம்,
封封封辩封封洋到辩辩封辩
V/ V/ WI7 VM/ W/ WI7 WI/
గగగగగగ

Page 317
3.
தீர்மானம்.
சுதந்திர இலங்கையை ஆண்டுவரும் அரசுகளின் திட்டமிட்ட இனவொழிப்பு நடவடிக்கைகளினாலும், நம்பிக்கை மோசடி களினாலும் தமிழ்பேசுமினத்தின் மொத்த வாழ்வே சீரழிந்துவிட்டது என்பதை உரிய விளக்கங்களோடு சுட்டிக்காட்டி,
தமிழ்பேசுமினம் புதுவாழ்வு பெற்றிட, அஹிம்சை என்ற ஆயுதங்கொண்டு நேரடி நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்றும்;
இப் புது வாழ்வு நிலைத்திடப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒவ்வொரு தமிழ் பேசும் மகனும் தன்னை அர்ப்பணஞ் செய்து உழைத்திடவேண்டும் என்றும்;
அதற்கான திட்டங்களைச் செயற் படுத்த வெனத் 'தமிழ்பேசும் பகுதிகளின் பொருளாதார விவகாரக்குழு' வென ஒரு குழுவை நிறுவ, இம்மாநாடு தீர்மானிக்கிறது எனறும.
மேலும், எல்லாம் தமிழியக்கத்தைத் தீவிரப்படுத்தும் படியும், தீண்டாமை ஒழிப்புக்கெனச் சகல பொது இடங்களையும் அனைவர்க்குமாகத் திறந்துவிடும்படியும் மக்களை இம்மாநாடு வேண்டுகிறது என்றும்; விளக்கிக் கூறிடும் தீர்மானம்.
ஒற்றையாட்சியின்கீழ் நிரந்தர இனவாரிப் பெரும்பான்மையினரின் காலடியில் நசுக்குண்டு, தமிழ்பேசும் இனம் அவமானமடைந்து அடிமைப்பட்டுப்போய் விட்டதுதான் இலங்கைக்குக் கிடைத்த சுதந்திரத்தின் பலன். 1951ஆம் ஆண்டில் திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் பிரகடனப்படுத்திய இந்தக் கருத்தையே கட்சி இன்று இந்த 7ஆவது மாநாட்டில் மீண்டும் வலியுறுத்துகிறது.
சிங்கள மக்களின் தலைவர்கள் மீண்டும் மீண்டும் பற்பல வாக்குறுதிகளை அளித்து வந்தார்கள். "தமிழ் மொழிக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் ஏனைய மக்களுடனும் மொழியுடனும் சம அந்தஸ்து

6
அளிப்போம்" என உறுதி கூறினார்கள். ஆனால் 1948ஆம் ஆண்டு தொடக்கம் அதிகாரத்திலிருந்த, அடுத்தடுத்து வந்த சிங்கள அரசாங்கங்கள் பிரஸ்தாப வாக்குறுதிகளைத் துரசாய் மதித்து, சட்டமியற்று துறையிலும் நிர்வாகத் துறையிலும் மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழ்பேசும் மக்களின் அரசியல், பொருளா தார, சமுதாய வாழ்க்கையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டன. மலை நாட்டில் வாழும் 10 இலட்சம் தமிழ் பேசும் மக்களின் வாக்குரிமையைப் பறித்து, அவர் களின் குடியுரிமையையும் அபகரித்து விட்டன, இந்நாட்டின் குடியுரிமைச் சட்டங்கள். 2000 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர மக்களாக இந்நாட்டில் வாழ்ந்து வந்த ஏனைய தமிழ்பேசும் மக்களை, இச் சட்டங்கள் அவர்கள்தம் சொந்த மண்ணிலே யே சந்தேகப் பிரஜைகளாக்கிவிட்டன.
பாரம்பரியமாகத் தமிழ்பேசும் பகுதிகளாயிருந்த பிரதேசங்களில் படிப்படி யாக விரிந்துகொண்டே செல்லும் அரசாங்கம் வகுத்த திட்டமிட்ட சதிகாரக் குடியேற்றங்களினால் தமிழ்பேசும் பிரதேசங்களின் சனத்தொகை விகிதாசாரம் மாற்றமடைந்திருக்கிறது. இப்பகுதிகளில் தமிழ்பேசும் மக்கள் ஒர் இனமாகத் தொடர்ந்து சீவிப்பதற்கு ஆபத்து ஏற்பட்டு விட்டது.
ஜனவரி 1, 1961இல் "சிங்களம் மாத்திரம்' என்ற சட்டம் முற்றாக இயங்க ஆரம்பித்த தனால், பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங் களிலும் சிங்களம் இன்று திணிக்கப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கிலுள்ள அரசாங்கப் பணிமனைகளில் ஒரு புறமாகவும், இப்பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் இன்னொரு புறமாகவும் சிங்களம் திணிக்கப் பட்டு வருகிறது. இவ்விரு மாகாணங்களிலும் வதியும் மக்கள், ஏறத்தாழ அனைவரும் தமிழ் பேசுவோராக இருந்தும் இவ்வட்டூழியம் நிகழ்கிறது.

Page 318
LS
தமிழ்பேசும் மக்களினதும், ஏனைய சிங்கள அறிவற்ற சிறுபான்மையோரினதும் மொழி உரிமைகளைத் துச்சமாய் மதித்து, இலங்கை அனைத்திலும் சிங்கள மொழிக்கு மாற்றம் நிகழ்கிறது. தமிழ்மொழி மூலம் பாடசாலைகளில் சிங்களப் போதனை திணிக்கப்பட்டு வருகிறது.
ஆங்கிலம் eup6 lb அரசாங்க சேவைக்குத் திரட்டப்பட்ட தமிழ் ஊழியர் கள் அந்நிய மொழியான சிங்களத்தில் தேர்ச்சி பெறாவிடில், நஷ்டஈடு எதுவு மின்றிச் சேவையிலிருந்து ஓய்வுபெற நிர்ப் பந்திக்கப்படுகின்றனர். பிரதிநிதிகள் சபையிலும், பல்வேறு திறைசேரிச் சுற்று நிருபங்களிலும் கூறப்பட்ட உறுதி மொழிகளையும் மீறி, இவ்வூழியர்கள் வேலைக்குத் திரட்டப்பட்ட ஒப்பந்த ஷரத்துக்களையும் மீறி இந்த நிர்ப்பந்தம் நடக்கிறது.
அடுத்தடுத்து வந்த சிங்கள அரசாங்கங்கள் மேற்கொண்டு வந்த நிர்வாக, சட்டமியற்று நடவடிக்கைகளின் அந்தரங்க நோக்கம் இலங்கைத் தமிழ் பேகமினத்தை அடியோடு நிர்மூலமாக்குவதே என்பது, 1958ஆம் ஆண்டில் முற்றாகத் தெளிவாகிவிட்டது. அவ்வாண்டு, மே, ஜூன் மாதங்களில் சிங்களப் பெரும்பான்மைப் பகுதிகளில் தமிழ்ப்பேசும் மக்களுக் கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட குண்டர்களின் காடைத்தனமும், அட்டூழியங் களும் சிங்கள அரசாங்கங்களின் தீர்க்கமான எண்ணத்தை ஐயமறத் தெளிவாக்கிவிட்டன.
அரசியற்றுறையில், பொருளாதார அரங்கில், கலாச்சார விவகாரங்களில் தமிழ்பேசுமினத்தை அழிப்பதுடன், தனிப்பட்ட பேர்வழிகளையும் அழித் தொழித்து வரும் இந்தச் செய்கைகள் - இந்த இன ஒழிப்பு மூலம் இலங்கையில் ஒரு சிங்கள பெளத்தயதேச் சாதிகார சாம்ராச்சியத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம் என்பதைத் துலக்கமாக்கி விட்டன.

7
56, ஆகஸ்ட் தீர்மானம்:
தமிழரசுக் கட்சியின் இந்த ஏழாவது மாநாடு, 1956ஆம் ஆண்டு ஆகஸ்டு, 19ஆந் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்ட திருகோண மலைத் தீர்மானத்தைக் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறது. அத்தீர்மானத் திலடங்கிய கோரிக்கைகைளாவன:-
(அ) ஒரே பூகோளத் தொடர்பான தமிழ் பேசும்பகுதிகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தமிழ்மொழி அரசுகளை ஏற்படுத்தி, இன்றைய விஷம் நிறைந்த அரசமைப்புத் திட்டத்தை மாற்றி, இணைப் பாட்சி அடிப்படையில் இலங்கையில் ஒரு ஜனநாயக அரசமைப்பை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தல்.
(அ) சிங்களத்தோடு தமிழுக்கும் சம அந்தஸ்து மீளவும் கிடைக்கச்செய்தல்.
(இ) இன்றைய குடியுரிமைச் சட்டங்களை அகற்றிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக இந்த நாட்டைத் தாயகமாக்கிக் கொண்டவர்கள் அனைவருக்கும் சாதாரண வாசகாலத் தகைமை அடிப்படையில், பூரண குடியுரிமை வழங்குதல்.
(ஈ) பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங் களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை உடனே நிறுத்தி வைத்தல்.
மேலும், திருமலைத் தீர்மானம் தொடர்ந்து கோரியதாவது:
இலங்கைப் பிரதமரும் பாராளு மன்றமும் இந்நாட்டில் 1957 ஆகஸ்டு 20 வரையில் இணைப்பாட்சி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், இலங்கைத் தமிழரசுக்கட்சி அந்த இலட்சியத்தை அடையும்பொருட்டு அஹிம்சை வழிப்பட்ட நேரடி நடவடிக்கையை மேற்கொள்ளும்.
கட்சியின் இந்த ஏழாவதுமாநாடு, மீண்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நினை வூட்ட விரும்புவதாவது:-

Page 319
3.
தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பு வேகம் துரிதமடைந்து வருவதைக் கண்ட காலஞ்சென்ற பிரதமர், 1957ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆந் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டார். கட்சி தனது அடிப்படைக் கொள்கைகளையோ, இலட்சியங்களையோ கைவிடாமலும் அடகு வைக்காமலும் இருக்க, வேறு பல விஷயங்களுடன், பின்வரும் துறைகளிலும் சட்டமியற்று வதாகப் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
அவையாவன:”
(அ) தமிழ் தேசிய சிறுபான்மை யினரின் மொழி என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
(ஆ) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாகம் தமிழில் நடைபெறுதலும், இலங்கை அனைத்துமுள்ள தமிழ்பேசும் மக்கள் அரசாங்கத்துடன் தமிழில் கடிதப் போக்குவரத்து நிகழ்த்துதலும், தமிழ்பேசும் மக்கள்ன் குழந்தைகள் தமிழ்மொழி மூலம் கல்விபயிலவும், பகிரங்கப் பாடசாலைகளில் பங்குபற்றவும் வழிசெய்தல்,
(இ) குடியேற்றம் D-L'-LLபாராளுமன்றம் தீர்மானிக்கும் குறிப்பிட்ட துறைகளில் - பிராந்திய அதிகாரம் பெற்ற சுயாதீன பிரதேச சபைகள் ஏற்படுத்தி, அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்குதல்.
இவற்றைவிட, குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றியும், குடியுரிமையை யொட்டிய பிரச்சினைகள் பற்றியும் தான் கூடிய கெதியில் கவனிப்பதாகவும் பிரதமர் வாக்களித்திருந்தார்.
திருமலைத் தீர்மானத்தில் நாம் குறிப்பிட்டிருந்த எமது அபிலாஷைகளிலி ருந்து, மேற்கண்ட ஷரத்துக்கள் எவ்வளவோ குறைந்த படிகளிலுள்ளவை. இருந்தும், ஈரின மக்களிடையே மீண்டும் சுமுக நிலையை ஏற்படுத்த உதவும் ஒரு முயற்சியாக -

இவற்றை ஓர் இடைக்கால ஏற்பாடெனக் கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால் தனது கட்சியிலேயிருந்த தீவிரவாதிகளின் நெருக்கடிகாரணமாக, பிரதமர் பண்டார நாயக்கா, விஸ்வாசத்துடன் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தை ፴፰GUj தலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தார். இந்த நடவடிக்கை பின்னால் தமிழ்பேசும் மக்களுக்கெதிராக வரவிருந்த கொலை, கொள்ளை, தீவைத்தல் ஆகிய சம்பவங்களுக்கு முன்னோடியாய் அமைந்தது. ஆளவந்தாரின் நம்பிக்கை மோசடி
1958ஆம் ஆண்டின் இந்த அடக்கு முறைக்கும், பங்கரவாதத்திற்கும் அஞ்சி அடிபணியாத தமிழ்பேசும் மக்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளிலும், இலட்சியங் களிலும் மீண்டும் நம்பிக்கை தெரிவித்து வடக்கு,கிழக்கு மாகாணங்களிலிருந்து பெரு வாரியாகத் தமிழரசுக் கட்சிப்பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்துப் பாராளுமன்றம் அனுப்பி னார்கள்.
1960ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலில், ஐக்கியதேசியக்கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஏறத்தாழ ஒரேயளவு ஸ்தானங் களைப் பெற்றிருந்ததால், ஸ்திரமான அரசாங்கம் அமைப்பதில் தமிழரசுக் கட்சியின் ஆதரவைத் தேடவேண்டிய நிர்ப்பந்திர்ஏற்பட்டது. ஒரு சிறுபான்மை அரசாங்க்த்தை அமைத்துக்கொண்ட ஐக்கியதேசியக்கட்சி எமது நிபந்தனையற்ற ஆதரவைத் தேடி நின்றது. ஆனால், சுதந்திரக் கட்சி வேறுவிதமாகக் கூறிற்று. நல்லாட்சி என்பது பற்றிய தமதுகொள்கைகளுக்கு -9 soidul I, 'சிறுபான்மையினரிடத்தில் நீதி, நேர்மையுடன் தாம் நடந்துகொள்வோம்’ என்றும், “தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், காலஞ்சென்ற
பிரதமரின் கொள்கைகளை நடைமுறையிற் கொண்டுவருவதே நமது நோக்கம்" என்றும் சுதந்திரக் கட்சி குறிப்பாகக் காட்டியது.

Page 320
3.
இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. இதை அடுத்து நடந்த ஜூலை மாதத் தேர்தலில், சிங்களப் பகுதிகளிலுள்ள தமிழ் பேகம் மக்கள் - தமது பூரண ஆதரவையும் சுதந்திரக் கட்சிக்கே கொடுத்தனர். சுதந்திரக் கட்சி அதிகாரத்கைக் கைப்பற்றியது.
ஆனால் சிறுபான்மையினருக்குக் காண்பிக்கப் போவதாகக் குறிப்பிட்ட நீதி, நியாயத்திற்கு மாறாகச் சுதந்திரக்கட்சி அரசாங்கம், "சிங்களம் மாத்திரம் சட்டத்தைப் பூரண கொடூரத்துடன் நடைமுறையில் இயக்கிற்று. சமாதான வழிகளில் பிரச்சினைக்குப் பரிகாரம் தேடும்வண்ணம், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு, அந்த நிலையிற்கூடப் பிரதமருக்கு ஒரு மகஜர் சமர்ப்பித்தது. மகஜரைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை களும் நிகழ்ந்தன.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டு இருந்த பொழுதுகூட, அரசாங்கம் சிங்களம் மாத்திரம்' என்ற சட்டத்தைத் தீவிரமாக நடைமுறையில் இயக்க எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் - தமது வாக்குறுதிகளுக்கே இவர்கள் எவ்வளவு கெளரவம் அளிக்கத் தயாராக இரு ந்தார்கள் என்பதைக் காட்டிற்று. அத்துடன், இந் நடத்தை மூலம் அவர்களது நயவஞ்சகத்தையும் 6 (Մդ ந்தது.
மீண்டும் மீண்டும் நடந்துவந்த இந்த நம்பிக்கை மோசடிச் சரித்திரத்தை - இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநாடு கவனத்திற் கொண்டு, இன்றைய சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகள் மூலமோ, பாராளுமன்றப் போராட்டங்கள் மூலமோ எவ்வித பயனும்
கிடைக்கப் போவதில்லை என்று கருதுகிறது.

9.
தமிழ்பேசும் மக்களின் தேசிய கெளரவத்தை நிலைநாட்டவும், சுதந்திரத்தை மீட்கவும் இருக்கக்கூடிய ஒரேயொரு வழி அஹிம்சை அடிப்படையில் நேரடி நடவடிக் கை எடுப்பதேயென இம்மாநாடு ஏற்றுக் கொண்டு, கட்சியின் நடவடிக்கைக்குழு வெளியிட்ட முடிவுகளுக்கிணங்க - நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று தீர்மானிக்கிறது.
தமிழ்பேசும் மக்களின் நிலை, வர வர மிக மோசமடைந்துகொண்டு போவதை இம்மாநாடு ஆழ்ந்த கன்னத்திற் கொள்ளு கிறது.
தொடர்ந்து இந்த நாட்டில் நாம் ஓர் இனமாக வாழ்வதற்குப் போராபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே எமது தேசிய வாழ்வு தொடர்ந்து நிலைபெறுவதற்கு அதி அத்தியாவசியமான பொருளாதார அபிவிருத்தி யில், ஒவ்வொரு தமிழ்ப்பேகம் மகனும் ஏகோபித்து ஒரே நிர்ணயமாகத் தம் டங்கைச் செலுத்தி, ஒத்துழைக்க வேண்டுமெனத் தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநாடு அறைகூவி வேண்டுகோள் விடுக்கிறது.
இந்தக் குறிக்கோளை அடைவதற்கு, பின்வரும் பொருளாதாரத் திட்டத்தை இயக்கும் வண்ணம் -'தமிழ்ப்பேசும் பகுதி களின் பொருளாதார விவகாரக்குழு' என்ற ஓர் இணைப்புக் கமிட்டியை இம் மாாநாடு நிறுவத் தீர்மானிக்கிறது.
அப்பொருளாதாரத் திட்டங்
956 TT66T
(அ) சிக்கனம் நிறைந்த எளிய வாழ்க்கைமூலம் சேமித்து, தமிழ்ப்பிர தேசங்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொண்டு புரிதல்,
(ஆ) தெற்கில் மேலும் பணமுதலீடு செய்வதைத் தவிர்ப்பதுடன், அங்குள்ள மூலதனங்களை மீட்டு, வடக்கு, கிழக்கு

Page 321
மாகாணங்களில் முதலீடு செய்தல்; அரசாங்க தபாற்கந்தோர், சேமிப்பு வங்கிகளிலுள்ள பணத்தை மீட்டுத் தாயகப் பகுதிகளில் உற்பத்திச் சாதனங்களைப் பெருக்கக் கூடிய துறைகளில் மூலதனத்தை வளர்த்தல்.
(இ) கூட்டுறவு அடிப்படையில் பலரக உற்பத்தி ஸ்தாபனங்களை ஏற்படுத்தி, பொருளாதார வளம் காணும் முயற்சியில் தமிழ்பேசும் மக்கள் தம்மை அர்ப்பணஞ், செய்தல்:
(ஈ) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உற்பத்தியாகும் பொருட்களை ஆதரித்து, எமது தாயகப் பகுதியிலுள்ள முதலீடுகளுக்கு உற்சாகமூட்டல்,
(உ) வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தாயகமாகக் கொண்டவர்கள் - எந்நேரத் திலும் தம் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடியதான ஏனைய மாகாண வாழ்க்கையை - தீர்க்கமான ஒரு முயற்சிமூலம் அதிகபட்ச அளவில்
3.

O
V
குறைப்பதும்; இம் முயற்சியின் விளைவாக, எமது தாயகப் பகுதிகளின் பொருள் வளத்திற்கு ஆக்கம் அளிப்பதும்.
எல்லாம் எமது இனிமைத் தமிழில்
எல்லாம் தமிழ் இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்தும்படியும், சிங்களத்தில் கிடைக்கும் கடிதங்கள் அனைத்தையும் திறந்தே பார்க்காமல் அப்படியே நீதி மந்திரிக்குத் திருப்பி அனுப்பிவிடும்படியும் மானமுள்ள தமிழ் மக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.
தீண்டாமை ஒழியட்டும்!
தீண்டாமையை அறவே ஒழிக்கும் பணியில் ஆலயங்கள், போசன சாலைகள் ஆகிய பொது ஸ்தாபனங்கள் அனைத்தும் - ஹரிஜனங்களுக்கு அகலத் திறந்து விட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

Page 322

இல் கூடியபோது
5T600TL

Page 323
-3
தீர்மானம்
ஆளவந்தார் கையாளும் சிங்கள இனவெறி எவ்வளவு தூரம் தமிழ் உரிமைகளை நசுக்கத் துடிக்கிறது என்பதை ஆதார பூர்வமாக எடுத்துக்காட்டி,
இப்பேராபத்திலிருந்து தமிழ் பேசுமினத்தை மீட்டெடுக்க இலங்கையில் கூட்டாட்சி அரசமைப்புக் குட்பட்டதாக ஓர் சுயாட்சித் தமிழரசும் ஓர் சுயாட்சி முஸ்லிம் அரசும் நிறுவவேண்டுமென இம்மாநாடு கோருகிறது என்றும்;
மலையகத் தமிழர் பிரச்சினைகள் அனைத்தையும், இங்குள்ள தமிழ்பேசும் மக்களுடன் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, வேறு எந்த நாட்டுடனும் பேசித் தீர்க்க முடியாதென இம் மாநாடு திட்டவட்ட மாகத் தெரிவிக்க விரும்புகிறது என்றும்;
தமிழ் பேசும் தொழிலாளர் அனை வரையும் மொழிவழி பிரித்து, அவர் களுக்கெனத் தனித் தொழிற்சங்கங்கள் அமைக்க உழைக்கும் இயக்கத்திற்குக் கட்சி வேண்டிய ஒத்தாசைகள் நல்கி, அவற்றைக் கட்சியுட்ன் இணைக்கப்பட்ட தொழிற் சங்கச் சம்மேளனம் ஒன்றின் கீழ்க் கொண்டு வரத் தீவிரநடவடிக்கை எடுக்க வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது என்றும்;
திட்டம் பல தீட்டியும், தீண்டாமை அகலாததையிட்டு வருந்தி, அதை அகற்றப் புது முயற்சிகளை மேற்கொள்கவென மக்களை இம்மாநாடு வேண்டுகிறது என்றும்;
விளக்கமாகக் கூறிடும் தீர்மானம்.
இலங்கையில் இன்று நிலவிவரும் உறுதியற்ற அரசியல் நிலைமைகளிலே தமிழ்பேசும் மக்கள் மிக விழிப்போடு இருக்கவேண்டியதும், அவர்கள் தலைவர்கள் சிறந்த இராஜதந்திரத்தைக் கையாளும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டியதும் மிக அவசியமாகும். இந்த நாட்டிலே சமதர்மம் என்னும் போர்வையிலே உலவும் பெளத்த சிங்கள வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதே அரசாங்கத்தின் இலட்சியம்

2.
என்பதை, இன்று ஏற்பட்டிருக்கும் கூட்டரசாங்கமும், எமது பாராளுமன்றப் பிரதிநிதிகள் தமது பதவிகளைத் துறக்க வேண்டுமென்று திருமலையில் நிறை வேற்றிய தீர்மானத்தின்பின் நிகழ்ந்த சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.
1956ஆம் ஆண்டுக்குமுன் சேவையிற் சேர்ந்த தமிழ்பேசம் அரசாங்க ஊழியரின் வேலைநீக்கம் இன்னுமோர் ஆண்டுக்குத் தற்காலிகமாக நடாத்தப்படாமல் வைத்திருக் கும் அதே நேரத்தில், 1956ஆம் ஆண்டிற்குப் பின்சேர்ந்த அதே ஊழியர் சிங்களம் தெரியாத காரணம் ஒன்றுக்காக இவ்வாண்டு இறுதியில் சேவையில் இருந்து நீக்கப்பட விருக்கிறார்கள்.
வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு ஈராயிரம் சிங்கள ஆசிரியர்களை அனுப்பித் தமிழ்பேசும் குழந்தைகள் மீது சிங்களத்தைத் திணிக்கும் திட்டமும், தோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ்க் குழந்தைகள் மீது சிங்களத்தைப்போதனா மொழியாகத் திணிக்கும் திட்டமும் கைவிடப்படவில்லை. இலங்கை விமானப் படைக்குச் சேவையாளர்கள் சிங்களம் மூலம் மாத்திரமே தெரியப்படுவார்கள் என்னும் அரசாங்கத்தின் திட்டமும் இலங்கைப் பாதுகாப்புப்படைச் சேவையில், நியமன மெல்லாம் சிங்களவருக்கு மாத்திரமே உரியது என்பதை நிரூபிக்கிறது.
திருக்கோணமலை நகராண்மைக் கழகத்தைப் பயமுறுத்தியிருப்பதுபோல, சிங்களத்தில் எழுதப்பட்டுவருங் காசோலை களை ஏற்க மறுத்தால், தமிழ்பேசும் பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு விடும் எனப் பயமுறுத்தி யிருப்பது - அரசாங்கத்தின் சிங்கள இன வெறி எவ்வளவு தூரம் தமிழ் உரிமைகளை நசுக்கத் தயாராக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. பிறநாட்டார் இலங்கையிற் காணிவாங்குவதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்று வெளிக்காரணம் சொல்லிச் சட்டமியற்றி, தமிழ்பேசும் மக்கள் - தாம் இலங்கைப் பிரஜைகள் என்பதை நிரூபிக்காமல் காணி வாங்க முடியாது செய்துள்ளார்கள்.

Page 324
அரசாங்கம் புதினப்பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தி, அல்லது கைப்பற்றித்தன் வசமாக்க வகுத்திருக்கும் திட்டம் - இலங்கை யில் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுப்பது மன்றி, மக்களின் பேச்சுச் சுதந்திரம், சிந்திக்கும் உரிமை ஆகியவற்றைப் பறித்து, இலங்கைத் தமிழ்பேசும் இனத்தின் கலாச்சார வறட்சியையும் உண்டாக்கும் என்பது நிச்சயம். அதுவுமல்லாமல், இலங்கைத் தமிழர் அண்மையிலுள்ள தென்னகத்துடன் எந்தவிதமான கலாச்சாரத் தொடர்புகூட வைத்துக்கொள்ளக் கூடாது எனச் செய்து, அதே நேரத்தில் இலங்கைக் கும் இதர பெளத்த நாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை வளர்ச்சியுறச் செய்ய எடுத்துவரும் பாரபட்சமான நடவடிக்கை களையும் ஒத்துப்பார்த்தால் - தமிழ்பேசும் மக்களைக் கலாச்சாரப் பாலைவனத்துள் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்ற அரசாங்கத் தின் நோக்கம் புலனாகின்றது. இவற்றை எதிர்த்துத் தமிழ்பேசும் இனத்தைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு முனையிலும் செயலாற்ற வேண்டியது அவசியம்.
இச்சூழ்நிலை, வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தை அரசாங்கம் உபயோகிப்பதும், அங்கு அவர்கள் நிராயுத பாணிகளான உதவியற்ற மக்களுக்கு இழைக்கும் அட்டூழியங்களும் தமிழ்பேசும் மக்களை மிருக பலத்தின் மூலம் அடிபணிய வைக்க ஒரு நாட்டைக் கைப்பற்றிய இராணுவம் போல - சிங்கள ஏகாதிபத்தியம் தனது இராணுவத்தைப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
இவையும் இவைபோன்ற இன வொழிப்பு நடவடிக்கைகளும் ஒற்றையாட்சி யால் விளையும் விளைவுகளேயன்றிப் பிறிதல்ல என்றும், இலங்கைவாழ் தமிழ் பேசும் இனத்தின் மறுக்கமுடியாத சுய நிர்ணயத்தின் அடிப்படையில் இலங்கையில் ஒரு கூட்டாட்சியின் கீழ் ஒரு சுயாட்சித் தமிழ் அரசும், ஒரு சுயாட்சி முஸ்லிம் அரசும் அமையவேண்டும் என்ற கோரிக்கையை 1964ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ஆம் நாள் திருமலையிற் கூடியுள்ள இ.த.அ கட்சியின் 9ஆவது மாநாடு தீர்மானிக்கிறது.

மேலும் கூடிய விரைவில் சுதந்திரம் அடைவதற்கான போராட்டம் தீவிரப் படுத்தப்படவேண்டிய சகல நடவடிக்கை களையும் எடுக்கும்படி மத்திய தேசிய குழுவை இந்த மாநாடு பணிப்பதோடு, இந் நெருக்கடியான நிலையில் தமிழ்பேசும் இனத்தினதும், அவர் தம் போராட்டத் தினதும் நலனையும் முன்னிட்டுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களை இழப்பது உசிதமல்ல என்று தீர்மானிக்கிறது.
இலங்கை இந்தியர் பிரச்சினை
சர்வதேச நியதிப்படி, சிங்களம் அடைந்திருக்கும் அதே அந்தஸ்திற்கு உரித்துடைய ஒரு தேசிய சிறுபான்மையரின் மொழியே தமிழ் என்பதைப் புறக்கணித்து, இந்நாட்டில் வாழும் நாடற்றவர்கள் என்று கருதப்படும் மக்களின் போதனா மொழியாகச் சிங்களமே இருக்கவேண்டும் என்று அரசாங்கம் செய்திருக்கும் முடிவிலிருந்தும்,
இந்நாட்டின் தோட்டப் பகுதிகளிலும் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் வதியும் தமிழ்பேசும் மக்களில் ஒரு பகுதியினரைக் கள்ளத்தனமாகக் குடியேறியவர்கள் என்று துன்புறுத்தி, அவர்களுக்குச் சொல் லொணாக் கஷ்டங்களைக் கொடுப்பதன் மூலமும்,
அவர்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்புகளை மறுப்பதன் மூலமும்,
இந்நாட்டைவிட்டு வெளியேறினால் சலுகைகளும் பணமும் அளிக்கப்படும் என்று ஆசைகாட்டி அவர்களை வெளி யேற்றுவதன் மூலமும்,
தமிழ் பேசும் மக்களில் ஒர் கணிசமான எண்ணிக்கையினரை இந்தியாவில் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு இந்திய அரசாங்கத் துடன் ஒழுங்குசெய்வதன் மூலமும்
இந்நாட்டின் தமிழ்ப்பேசும் மக்களின் ஒரு பகுதியினரை நாட்டைவிட்டு வெளி யேற்ற நடக்கும் முயற்சிகளிலிருந்தும்,

Page 325
3
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் அந்நியர்களென்றும் -தமிழ்மொழி அந்நிய மொழி என்றும் சிங்கள அரசாங்கம் கருத முனைவதைத் திருகோணமலையில் 1964ஆம் ஆண்டு ஆவணி மாதம் 23ஆந் திகதி கூடிய இ. த. அ. கட்சியின் 9ஆவது தேசிய மாநாடு திகிலுடன் கவனிக்கின்றது.
மலைநாட்டுத் தமிழ்மக்கள் இந்நாட்டுத் தமிழ்பேசும் தேசிய இனத்தின் பிரிக்கமுடியாத ஒர் அங்கம் என்றும்; அவர்களுடைய அரசியல் உரிமைகள், ஏனைய உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் எல்லாம் அரசாங்கத்திற்கும் இந்நாட்டுத் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டு மேயன்றி, அது வேறெந்த நாட்டுடனும் பேசவேண்டிய பிரச்சினை அல்ல வென்றும் - இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறது.
மொழிவழித் தொழிற் சங்கம்
இலங்கைவாழ் தமிழ்பேசும் தொழிலாளர்களை இடதுசாரித் தொழிற் சங்கங்கள் காட்டிக்கொடுத்து விட்டமை யினாலும் தொழிலாளர் ஒற்றுமை' எனும் சுலோகம் - தமிழ் இனத்தின் அழிவினை உண்டாக்கும் சதித்திட்டமாக இவர்களாற் கையாளப்பட்டு விடுவதாலும் இலங்கைவாழ் தமிழ்பேசும் தொழிலாளர் மொழிவழி பிரிந்து, தம் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் தமக்கெனத் தனியான தொழிற் சங்கங்கள் அமைத்து வரும் இயக்கத்திற்கு இத. அ. க. ஆக்கமும், ஊக்கமும் கொடுத்துக் கட்சிச்சார்புடைய தொழிற்சங்கங்களைக் கட்சியுடன் இணைக்கப்பட்ட ஒரு தொழிற் சங்கச் சம்மேளனத்தின்கீழ்க் கொண்டு வருவதுடன், ஏனைய தமிழ் பேசும் தொழிலாளர்களையும் மொழிவழித்
&

14
தொழிற்சங்கங்களின் கீழ்க் கொண்டுவந்து இயக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இ. த. அ. கட்சியின் இந்த 9ஆவது தேசிய மாநாடு தீர்மானிக்கிறது.
தீண்டாமை ஒழிய
இலங்கைவாழ் தமிழ்பேசும் சமுதாயத்தின் ஒரு பகுதியில் இன்றும் நிலவி வரும் தீண்டாமை ஒரு சாபக்கேடு என்று கண்டும், தம் மக்களிடையே பழந்தமிழர் பண்பாட்டுக்கு மாறாகச் சாதிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் கற்பித்து, அதனால் சுதந்திரம், சமத்துவம், தன்மானம், சமயம், கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம் முதலிய பலதுறைகளில் ஒரு சில மக்களைப் பங்கப்படுத்தும் இச் சமூகப் பழக்கம் - வள்ளுவர் முதல், அப்பர் சுவாமிகளுமாக - பாரதிவரை நம் சமூக சிற்பிகளால் கண்டிக்கப்பட்டதைக் கண்டும், சாதி வித்தியாச ஏற்றத்தாழ்வுகளை வைத்திருத்தல் நம் சமுதாயத்தின் சமூக, சமய, தார்மீக, அரசியல், பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக விருப்பதாகக் கண்டு சாதி வித்தி யாச ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் கொள்கை யை நாம் பூரணமாக ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் இத்துறையில் நாம் சில முன்னேற்றம் கண்டிருந்தும், அடைய வேண்டியதும் அடையக் கூடியதுமான முன்னேற்றத்தை அடையாதிருப்பதைத் திருமலையில் 23-8-64ல் கூடியுள்ள இ. த. அ. கட்சியின் 9ஆவது தேசிய மாநாடு வருத்தத்துடன் கண்டித்து, நம் சமுதாயத்தில் நிலவும் இச்சாதி வித்தியாச ஏற்றத்தாழ்வு களை அறவே ஒழிக்க மேலும் பல புது முயற்சிகளைத் தீவிரமாக எடுக்கவேண்டும் என்று தமிழ்பேசும் மக்களை வேண்டிக் கொள்கிறது.

Page 326
QASQASQASSASS)
இலங் தமிழ் அ
அரசியல் நிர்
சமர்ட்
அரசியலமை
பொதுநிலை
இலங்கைச் சமெ
IDT அரசியல திட்ட
(முக்கிய
!!!!!!!!!!!!!!!!!!!
OOOOOOOΟΟOOOOKDΟOO

No கைத் சுக் கட்சி
ாணய சபைமுன் பித்த ப்பின் மீதான
யறிக்கையும்
டிடிக் குடியரசின்
f
மைப்புத் மும்
பகுதிகள்)
SSSSS

Page 327


Page 328
C அநுபந் தம்
这
ŠNoŽý }ॐ
烹杀
இ
ରD
sh
这猫
M
Z
豹
曲
LÓ
90تک
69r
ଷ୍ଟି
系
海
场
3.
பொதுநிை
W终
NO22N
స
M
Na
乡
经
>
K
裂
勿
2N
ଽ
மாதிரி அரசியல6
ଖୁଁଉଁ (317-328i
NožŅžŅžŅžŅžŅžŅž
 
 
 
 

ŅžŅžŅžŅžŅžNožNož ఊషిడిపిపిపిపిపిల్ష్య
ÈŠK
ܐܠ92
Х கை(த்) 3.
க் கட்சியின்
லயறிக்கை இ
மைப்புத் திட்டம்

Page 329
3
பொதுநிலையறிக்கை
நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து. இலங்கையானது - சிங்களவர்களினதும் தமிழர்களினதும் தாயகமாக விளங்கி வருகின்றது. இராவணன்,விஜயன் என்போர் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகளை அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளைச் சான்று காட்டி, யார் இந்நாட்டில் முதல் முதலில் வசித்தார்கள் என்பது பற்றிய விவாதம் எதிலும் ஈடுபடுவது பயனற்றதாகும். இந் நாட்டில் பன்னூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், மலேயர், பறங்கியர் என் போரும் - சிங்களவருடனும் தமிழருடனும் சமவுரிமை களையும் வாய்ப்புக்களையும் பெறுவதற்கு உரிமையுடைய சுதேச மக்களாகக் கருதப்படுவதற்கு உரித்துடையோராவர். போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும்:
இந்நாட்டு மக்களின் வரலாற்று வளர்ச்சியும் வாழ்க்கை முறையும் - ஐரோப்பியக் காலனி ஆதிபத்திய நாடுகளின் இலங்கை வருகையால் மிகவும் கொடுரமான முறையில் நிலைகுலைந்தன. போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரப் பகுதியில் ஒரு சுதந்திர இராச்சியத்தையும் தமக்கெனத் தனி அரசொன்றையும் உடையராய் இருந்தனர். போர்த்துக்கேயரின் மிகுந்த படைவலியால் தமிழ் இராச்சியம் போரில் வீழ்த்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டது.
போர்த்துக்கேயரைப் பின்தொடர்ந்து வந்த ஒல்லாந்தருக்கும், ஒல்லாந்தரின் பின் வந்த பிரித்தானியருக்கும் தமிழ் இராச்சியத் தின் பிரதேசங்களைப் போரில் வெற்றி கொண்டு கைப்பற்றிய ஒரேயொரு உரிமை யைத் தவிர அப் பிரதேசங்களின்மீது ஆட்சி செலுத்துவதற்கு வேறு எவ்வித உரிமையும் இருக்கவில்லை. இப்போது இலங்கையை ஒரு குடியரசாக்குவதன் மூலம் குடியேற்ற நாட்டுக் காலனித்துவ ஆட்சியின் இறுதிச் சின்னமும் அகற்றப்படுகின்றமையால், இந் நேரத்தில் தாம் மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கேயருக்குப் போரிலே இழந்துவிட்ட

8
இறைமைமிக்க சுதந்திரத்தை மீள அளிக்குமாறு கோருவதற்குத் தமிழ் மக்களுக்குச் சட்டபூர்வமான உரிமையுண்டு. பிரித்தானிய ஆட்சியாளர், தமிழ் இராச்சியத் தின் பிரதேசங்களைத் தம்மால் அவ்வாறே அடிமைப்படுத்தப்பட்ட சிங்கள இராச்சியத் தின் பிரதேசங்களுடன் நிர்வாக வசதிக்காக இணைத்தார்கள் என்ற நிகழ்வு - வெளி நாட்டால் கைப்பற்றுவதற்கு முன்னிருந்த அந்தஸ்தை மன்னிக்குமாறு கோருவதற்குத் தமிழர்க்குள்ள உரிமையை மறுதலிப்பதாகாது. தமிழ்ப் பிரதேசங்களைச் சிங்களப் பிரதேசங் களுடன் இணைத்த பிரித்தானியரின் செயலானது. தமிழ் இறைமையை அழித்த தெனவும், பெரும்பான்மைச் சமூகத்தவர் என்ற முறையில் சிங்களவர் பிரித்தானி யரைப் பின்பற்றி அவர்களமர்ந்த பீடங்களில் தமிழர்களை ஆளுவோராக அமர்ந்து கொண்டனர் எனவும் தேவையற்றதோர் ஊகம் இன்று இருப்பதாகத் தோற்றுகிறது. இலங்கையில் சோஷலிசப் பாதையின் மூலம் ஐக்கியமும் முன்னேற்றமும் தோற்றுவிக்கப் பட வேண்டுமாயின், இவ்வூகம் முற்றாக நிராகரிக்கப்படல் வேண்டும்.
தமிழர்கள் தமது சுதந்திரமான இறைமையுள்ள தமிழ் அரசை மீள நிறுவு மாறு கோருதற்கு உரித்துடையராயினும், இலங்கையில் வாழும் சிங்களவர்களுடனும் ஏனைய மக்களுடனும் முழுமையான சமத்துவ அடிப்படையில் ஒரு சமஷ்டிக் கூட்டரசின்கீழ் ஐக்கியப்படுவதற்கான தமது தீர்மானத்தை அவர்கள் ஜனநாயக ரீதியில் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த தேர்தலில் ஐக்கிய முன்னணியினர் பெருந்தொகை யினராகப் பெற்ற வெற்றியானது - அரசியலமைப்பைப் புரட்சிகரமாக மாற்றுவதற்குச் சிங்கள மக்கள் அளித்த ஒரு பொறுப்பாணை என வியாக்யானம் செய்யப் படுவதாயின், தமிழ் மக்களும் தற்போதைய ஒற்றையாட்சியமைப்பை நிராகரிக்கவும் ஒரு சமஷ்டியாட்சி அமைப்பின் அடிப்படையில் நாட்டின் ஏனைய மக்களுடன் இணையவும் நாடாளுமன்றத்திலுள்ள தமது பிரதிநிதி களுக்குப் பொறுப்பாணை அளித்துள்ளனர்.

Page 330
1956-ம் ஆண்டு தொட்டு நடந்தேறிய ஐந்து தொடர்ச்சியான பொதுத் தேர்தல்களினதும் முடிவுகள் - தமிழ் மக்கள் சமஷ்டிக் கூட்டரசிலிணைந்த ஒரு தமிழரசை நிறுவுவதன் மூலம் தமது தனித்தன்மையைக் காத்துக் கொள்ள உறுதிகொண்டுள்ளதை வெளியிட்டிருக்கின்றன, வெளிநாட்டார் கைப்பற்றுதற்கு முன்னிருந்த நிலைக்கு - அதாவது தமிழ் மக்களின் முழுமையான சுதந்திர இறை மைக்கு மாற்றுத் திட்டமான ஒரு சமரச இணக்கமாகத் தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய குறைந்தபட்சமான திட்டம் - ஒரு சமஷ்டி அரசியலமைப்பின் கீழ்த் தமது சுயாதீனத்தை மீண்டும் நிலைநிறுத்துவதே யாகும்.
உலகின் எல்லாச் சோசலிச நாடுகளிலும், சிறிய தேசிய இனங்களினது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தலும் சமஷ்டி முறை அரசாங்கங்களை அமைத்தலுமே - சோஷலி சத்திற்கு அடிப்படையாக விளங்குகின்றன. அல்லாவிடின், இட்லரின் நாஸி முறையிலான தேசிய சோஷலிசமாகவும் அரசின் முதலாளித்துவமாகவும் சோஷலிசம் சீரழிந்து விடும்.
இப்போது நிலையறிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும் வரைவு அரசிய லமைப்புத் திட்டத்தை - இலங்கைக்கென ஒரு சமஷ்டி அரசியலமைப்பை வரையும் போது கருத்துக் கெடுப்பதற்கான ஒரு மாதிரி அமைப்பாகக் கொள்ளவேண்டும் என்பதே எமது எண்ணம். வடமாகாணமும் கிழக்கு மாகாணத்துத் திருகோணமலை, மட்டக் களப்பு மாவட்டங்களும் ஒரு கூறை ஆக்குவனவாக அமையும். இது தமிழர் பெரும்பான்மையாகவுள்ள ஓர் அரசாக அமையும். அம்பாறை மாவட்டம் முஸ்லிம் கள் பெரும்பான்மையாகவுள்ள ஓர் அரசாக அமையும்.
ஏனைய பகுதிகளில் மூன்று அரசுகள்
இலங்கையின் ஏனைய பகுதிகளில்
மூன்று அரசுகளை நிறுவுவதற்கான யோசனை - வரலாற்று, பொருளியல் வாத அடிப்படையிலானதும் ஜனநாயகரீதி

யிலான அதிகாரப் பன்முகப்படுத்தலின் பயன்களை மக்களில் எல்லாப் பிரிவினரும் துய்த்திடவேண்டுமெனக் கணிக்கப்பட்டது மாகும். பண்டைய இராசரட்டையின் கேந்திரப் பிரதேசங்களானவையும், நெல், தெங்கு உற்பத்தியில் மேம்பட்டிருப்பவையு மான வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் ஒரு கூறாக அமைவன. கண்டியச் சிங்கள மக்களின் பொதுவான பாரம்பரியங் களுடனும் இடர்ப்பாடுகளுடனும் கூடிய, தேயிலை, இறப்பர்ச் செய்கைகளில் மேம்பட்டு விளங்கும் ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் என்பன இன்னொரு கூறாக அமைவன.அரசியற்றுறையிலும் பொருளாதாரத்துறையிலும் முன்னேறி யுள்ள தென் மாகாணமும் மேல்மாகாணமும் இன்னுமொரு கூறாக அமைவன. புதுடில்லி, கன்பரா போன்ற மாநகரங்களின் முன்மாதிரியைப் பின்பற்றிக் கொழும்பு மாநகரமும் அதன் சுற்றுப்புறங்களும் குடியரசின் தலைநகரமென்ற முறையில் மத்திய அரசினால் நிருவகிக்கப்படும். தமிழ் அரசையும் முஸ்லிம் அரசையும் தவிர்ந்த ஏனைய பகுதியில், வேறு ஏதேனும் அடிப் படையில் தமது அரசையோ, அரசுகளை யோ நிறுவிக் கொள்ள உரிமையுடையவர் களான சிங்கள மக்களின் பிரதிநிதிகள் கருத்துக்கெடுத்துக் கொள்வதற்கான தேர்வு முறையான யோசனையே இது என்பதைக் கூறவிரும்புகிறோம்.
இந்நாடு சோஷலிசப் பாதையில் முன்னேற வேண்டுமானால் - குடியுரிமை, மொழிப் பிரச்னைகள் முற்றாகத் தீர்க்கப்பட வேண்டியதும் மிகவும் அவசியமாகும். ஒரு சோஷலிச நாட்டில் நாடற்றவர்களோ, இரண்டாந்தரக் குடிமக்களோ இருக்க முடியாது. அதே போன்று, தமிழ் மக்களுடைய மொழியின் சட்டபூர்வமான அந்தஸ்தை மறுத்ததன் மூலம் அவர்கள்மீது பொறிக்கப்பட்டுள்ள இழிவுச்சின்னம் - அகற்றப்படுதல்வேண்டும். சோஷலிச வாழ்க்கை முறையை நடைமுறைப் படுத்தற் பொருட்டு - எல்லா ஏற்றத் தாழ்வுகளும், குறிப்பாகச் சாதிவேறுபாடுகள் ஒழிக்கிய்டல் வேண்டும். பொருளாதாரக் குறிக்கோள்

Page 331
3.
களைப் பற்றி நாம் குறிப்பிட்டுள்ள அத்தியாயம் - முழுமையான சோஷலிசச் சமுதாயம் எவ்வாறு நிறுவப்படல்வேண்டும் என்பதைக் காட்டும்.
இந்நாட்டில் வதியும் வெவ்வேறு இனங்களின் ஐக்கியத்தை நிலைநாட்டி, அவற்றின் ஒருமைப்பாட்டை உருவாக்கு வதுடன், அதே நேரத்தில் அவற்றுள் ஒவ்வொரு குழுவின் பண்பாட்டினதும் மொழியினதும் தனித்துவத்தையும் பேணவேண்டுமென்ற உண்மையான பெரு விருப்பினாலேயே - இப்பொதுநிலையறிக் கையும், அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வரைவு அரசியலமைப்புத் திட்டமும் சமர்ப்பிக்கப்படுகின்றன. சிறுபான்மை யினரைப் பெரும்பான்மையினத்தினருடன் இரண்டறக்கலந்து - அதனால் சிறுபான்மை யினரின் தனித்தன்மையை அழித்து விடுவதற்கான ஏதேனும் முயற்சி இந்நாட்டைப் பிரிப்பதற்கே வழிவகுக்கும். எல்லாக் குறுகிய வெறுப்புணர்வுகளையும், முன்னூறு தப்பெண்ணங்களையும் புறத்தே ஒதுக்கிவிட்டு - சந்தேகத்தையும் அவநம்பிக் கையையும் விலக்கி விட்டு - உண்மையான சோஷலிச உணர்வுடன் ஓர் அரசியலமைப்பை உருவாக்கும் பணியை மேற்கொள்ளுமாறு குறிப்பாக நாடாளுமன்றத்திலிருக்கும் சோஷலிச வாதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
முக்கிய ஏற்பாடுகள்
இலங்கை சமஷ்டிக் குடியரசின் மாதிரி | அரசியலமைப்புத் திட்டம்
முன்னீடு:
இலங்கை மக்களாகிய நாம், ஒரு சோஷலிஸ் ஜனநாயக நாட்டின் குறிக்கோள் களை உறுதிப்படுத்தும் ஒரு சுயாதீனமான, இறைமையுள்ள சுதந்திரக் குடியரசாக இலங்கையை அமைக்கப் பயபக்தியுடன் தீர்மானித்து, அத்துடன் எல்லா இனவாரி யான, மொழிவாரியான, மதவாரியான குழுவினரும், அவர்களுடைய முன்னாள் இந்நாள் நிலை எவ்வாறாயினும், அவர் களுடைய வலிமையும் பலவீனமும்

R 20
எவ்வாறாயினும் எமது சமுதாயத்தின் பொருளியல், சமூகவியல், அரசியல், பண் பாட்டியல், வாழ்வியல் எல்லாத்துறை களிலும் சமவுரிமைகளைத் துய்க்கின்றனர் என்ற நிலைக்களனினின்றும் தலைப்பட்டு - மக்கள் மத்தியில் நட்புறவு, சகோதரத்துவப் பிணைப்புகளைப் பலப்படுத்தி - எமது நாட்டு மக்களின் ஐக்கியத்தையும், வலிமையையும், மாண்பையும் பேணி வளர்ப்பதுடன், இலங்கைச் சமஷ்டிக் குடியரசில் ஒரு சோஷலிஸ் சமுதாயத்தை உருவாக்குவதுமான நோக்கத்துடன், எமது அரசியலமைப்பு நிர்ணய சபையில் இவ்வரசியலமைப்பை இத்தால் ஏற்று நிறைவேற்றி அளிக்கிறோம்.
பகுதி - 1 அரசியற் கட்டமைப்பு:
1. இலங்கைச் சமஷ்டிக் குடியரசானது: அெ) குடியரசின் தெற்கு மேற்குப் பிரதேசங்
களைக் கொண்ட மாநிலம்.
(ஆ) குடியரசின் வடமத்திய, வடமேல்
பிரதேசங்களைக் கொண்ட மாநிலம்.
(இ) குடியரசின் மத்திய பிரதேசங்களைக்
கொண்ட மாநிலம்.
(ஈ) குடியரசின் வட, வடகிழக்குப் பிரதேசங்
களைக் கொண்ட மாநிலம்.
(உ) குடியரசின் தென்கிழக்குப் பிரதேசங்
களைக் கொண்ட மாநிலம்.
(ஊ) (குடியரசின் தலைநகரமென்ற முறையில் மத்திய அரசினால் நிருவகிக்கப்படுவன வாகிய) கொழும்பு மாநகரமும் அதன் சுற்றுப்புறங்களும் என்பனவற்றைக் கொண்டிருக்கும்.
2. ஒர் எல்லை வகுக்கும் ஆணைக்குழு வானது. இம்மாநிலங்களினதும் கொழும்பு மாநகரத்தினதும் அதன் சுற்றுப்புறத்தினதும் எல்லைகளை வகுத்தல்வேண்டும். எல்லை களை வகுப்பதில், ஆணைக்குழுவானது பழைய வரலாற்றுப் பாரம்பரியங்கள்,

Page 332
3
பூகோள, பண்பாட்டு, மொழிவாரி, சமூகச் சூழல்கள், குடிசனத் தேக்கம் என்பன வற்றுடன், அத்தகைய வேறு காரணக் கூறுகளையும் கருத்திற்கெடுத்துக்கொள்ள வேண்டும்.
3. மாநில அரசுகளானவை - அவையிடம் ஒப்படைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தமது பிரதேசங்களை நிருவகிப்பதில் பூரண அதிகாரமுடையதாதல் வேண்டும்.
4. மாநில அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரம் - மாநில ஆட்சிமன்றங்களுக்கு உரித்தாக்கப்படல் வேண்டும். இம்மன்றங் கள், இவ்வரசியலமைப்புத் திட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஒவ்வொரு மாநிலத்தினதும் பிரதேச எல்லைகளுக்குட் செயற்படத்தக்க சட்டங்களை ஆக்க அதிகாரமுடைத்தாதல் வேண்டும்.
5. மாநிலங்களின் அரசியலமைப்பு களாவன - வேறு விடயங்களுடன், குடிசனத் தொகையும் நிலப்பரப்பும் இணைத்துக் கணிக்கப்பெற்ற அடிப்படையில், மக்களால் தெரிவு செய்யப்பட்டவோர் ஆட்சி மன்றத்தையும் கொண்டிருக்க ஏற்பாடுடைய தாதல் வேண்டும்.
6. ஒவ்வொரு பொதுத் தேர்தலையும் அடுத்துவரும் தமது முதலாவது கட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சிமன்ற உறுப்பினர்களும் தம்மைக் குழுக்களாகப் பகுத்துக்கொள்வதுடன், ஒவ்வொரு குழுவும் ஒரு தலைவரைத் தெரிவு செய்தலும் வேண்டும்.
7.மாநில அரசுகளின் நிறைவேற்றுப் பணிகள் தலைவருக்கும் மேற்கூறப்பட்ட குழுக்களுக்கும் உரியன.
8. பரஸ்பர நலன் பயக்கும் கருமங்கள் தொடர்பில், மாநில அரசுகளானவை தமக்குள் உடன்படிக்கைகள் செய்து கொள்ளலாம். ஆயினும் அத்தகைய உடன் படிக்கைகளை, அவை மத்திய அரசாங்கத் தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்

21
என்பதுடன், அவ்வுடன்படிக்கைகள் குடியரசினது உரிமைகளுக்கும் நலன் களுக்கும் அல்லது மற்றைய மாநிலங்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் முரண் பட்ட எதனையும் உள்ளடக்கியிருப்பின் - மத்திய அரசாங்கம் அவற்றை நிறை வேற்றலைத் தடுப்பதற்கு உரித்துடையது.
9. மத்திய அரசாங்கத்தின் முகவ ராண்மைக்கூடாகவன்றி மாநில அரசு களுக்கும், ஏதேனும் வெளிநாட்டு அரசாங்கத் துக்கு மிடையில் அல்லது அதன் பிரதிநிதி களுக்குமிடையில் எதுவித தொடர்பும் இருத்தலாகாது.
10. மாநிலங்களுக்கிடையிலான எல்லாப் பிணக்குகளும் - நடுத்தீர்ப்புக் கெனவும் தீர்வைக்கெனவும் மத்திய அரசாங்கத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். இப்பிணக்குகளில், மத்திய அரசாங்கத்தின் விதிப்பு முற்றானதாக வேண்டும். எந்தவொரு மாநிலவரசும் - வேறெந்தமாநில வரசுக்கெதிராகவும் ஒருதலைச் சார்பான நடவடிக்கை எதனையும் எடுத்தல் ஆகாது.
1. மாநில அரசுகளுக்கும் மத்திய அரசாங்கத்திற்கு மிடையிலான எல்லாப் பிணக்குகளும் - நீதித்தீர்வைக்கென அரசியலமைப்பின்கீழ் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு ஆற்றுப் படுத்தப்படல் வேண்டும்.
12. மாநிலங்களானவை தம் அதிகாரத்தை முழுமையாகப் பிரயோகிப் பதற்குக் குடியரசு அவைக்கு எல்லா உதவிகளையும் அளித்தல் வேண்டும்.
13. சட்டப்படி தமக்கான கடமை களையும் பணிகளையும் நிறைவேற்று வதற்குத் தவறுகின்ற மாநில அரசுகளுக் கெதிராக - மத்திய அரசாங்கமானது ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தல்வேண்டும்.
14, இலங்கைக் குடியரசின் நிலப்பரப்புப் பிரிக்க முடியாததும் மாநிலங் களின் நிலப்பரப்பை உள்ளடக்கியதுமாகும்.

Page 333
32
15. பதினாறாம் உறுப்புரையில் ஏற்பாடு செய்யப்பட்டவை தவிர்ந்த ஏனைய எல்லா விடயங்களிலும், ஒவ்வொரு மாநில அரசும் முழு அதிகாரத்தைப் பிரயோகிக்க உரிமையுடையது.
16. அரசாண்மையுடைய அதன் உயர்ந்த உறுப்புக்களாலும் அரசாங்க அமைப்புக்களாலும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டவாறான இலங்கைக் குடியரசின் நியாயாதிக்கமானது - பின் வருவனவற்றை மேவியதாகும்:
(1) சர்வதேசத் தொடர்பில் குடியரசைப் பிரதிநிதித்துவப்படுத்தலும், வெளிநாட்டு அரசுகளுடனும் சர்வதேச நிறுவனங் களுடனும் உடன்படிக்கைகளை முடித்தலும் உறுதியாக்கலும்;
(ii) போரும் சமாதானமும் பற்றிய பிரச்சினைகள்;
(ii) குடியரசின் காப்பரண்களை அமைத்தலும், குடியரசினைப் பாதுகாக் கின்ற எல்லா ஆயுதப் படைகளையும் பணித்தலும்;
(iv) குடியரசின் நிலப்பரப்பில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல்;
(v) பொலிஸ்படையைப் பேணலும் பணித்தலும்;
(wi) குடியுரிமைச் சட்டங்களும், இந்நாட்டில் வதிகின்ற பிரஜையல்லாதோர், வெளிநாட்டார் என்போரின் உரிமைகள் தொடர்பிலான சட்டங்களும்;
(wi) குடிவரவும், குடியகல்வும் பற்றியநிர்வாகம்;
(vi) சுங்கம், இறக்குமதி, ஏற்றுமதி, முத்திரைகள், மரணச் சொத்துவரி இவைகளை நிருவகித்தல்;
(ix) பொதுக்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, உயர் கல்வித்துறைகளில் அடிப்படைக் கொள்கைகளை வகுத்தல், தொழில் நுட்ப, தொழிற்றுறை உயர்கல்விக்கெனச் சிங்கள, தமிழ்ப் பிரிவுகளைக் கொண்ட தேசியத்

2
தன்மையுள்ள பல்கலைக் கழகங்களை நிறுவுதல், மாநில அரசுகளும் அரசுக்குட் பட்ட பல்கலைக் கழகங்களை நிறுவும் அதிகாரமுடைத்தாதல் வேண்டும்.
(x) தொழிற் சட்டத்துக்கான அடிப்படைக் கொள்கைகளை வகுத்தல்;
(x) பொதுநலச் சுகாதாரத்துறைத் தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளை வகுத்தல்;
(xi) குடியரசிலிருந்தும். மாநில அரசுகளிலொ வ்வொன்றிலிருந்தும் பெறப்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட நிதி ஆணைக்குழு வொன்றின் பரிவுரையின் பேரில் - மாநிலங்களுக்கு இறைவரி, வருவாய், மூலவளங்கள் என்பனவற்றைப் பங்கீடு செய்தல் நீதி ஆணைக்குழுவின் அறிக்கையையும் ஏனைய நடைமுறை களையும் எதிர்நோக்கி, மானியம் எதையும் முன்னதாகவே வழங்குவதற்கான தத்துவம். மாநிலங்களினால் விதிக்கப்பட்ட வரிகளை அங்கீகரிக்கும் தத்துவம்;
(xi) நாணயமுறை, கடன்முறை என்பவற்றை நெறிப்படுத்தல்;
(xiv) குடியரசுக்குட் கடன் எடுக்க மாநில அரசுகளுக்குள்ள உரிமைகளுக்குப் பங்கமிழையாதவாறு, கடனெடுத்தலும் கடன் கொடுத்தலும்;
(XV) நாடு முழுவதற்குமான அடிப் படையில் வங்கிகளையும் - கைத்தொழில், தோட்டத்தொழில், கமத்தொழில், வணிகத் தொழில் என்பனவான முயற்சிகளையும் நிறுவுதலும் நிருவகித்தலும்;
(xvi) தபால், தந்தித் தொடர்புச் சேவைகளை நிருவகித்தல்;
(xvil) நீராக்க சக்தி, ஆறுகள், இயற்கை வளங்கள் என்பனவற்றின் மீதான ஆதிக்கமும் அவற்றைப் பயன்படுத்தலும்;
(xvi) துறைமுகங்கள், விமான நிலையங்கள், கடற்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, புகைவண்டிப் போக்குவரத்து இவற்றை நிருவகித்தல்;

Page 334
(xix) மாநில அரசுகளின் ஆலோசனை யுடன் - நிலமட்டத்து, சுரங்கத்து நீர்கெட வண்ணமும், பாழாகிவிடா வண்ணமுப் பாதுகாக்கச் சட்டமாக்கல்;
(xx) நீர்வாய் மின்சக்தியை உண்டாக்க லும் பாய்ச்சுதலும்;
(xxi) மாநிலங்களிடையே செறிந்த வீதிகளையும், மூல வீதிகளையும் அமைத்த லும் பேணலும்;
(xxi) பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்தலும் பேணலும்;
(xxi) வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும், தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச் சின்னங்களையும் கொள்ளலும் பேணுதலும் பாதுகாத்தலும்;
(xxiv) வெடிப்பொருட்கள், ஆயுதங்கள், வெடிமருந்து இவற்றை ஆக்கலும் விற்றலும்; (XXV) விலங்குகள், கடல்வாழ் தாவர உயிரினங்கள் என்பனவற்றைப் பாதுகாப் பதற்குச் சட்டமாக்கல்;
(XXVI) ஒத்தமுறையிலானவொரு பொருளியற்றுறை, சமூகவியற்றுறைப் புள்ளி விபரங்களை உருவாக்கலும் நிருவகித்தலும்;
(XXVi) நிறைகளையும் அளவுகளையும் துணிதல்;
(XXVi) மாநில அரசுகளுடன் உடன் பாடுள்ள வேறேதேனும் விடயங்கள்.
பகுதி - I
குடியுரிமை:
17. இலங்கைச் சமஷ்டிக் குடியரசின் எல்லாக் குடிமக்களுக்கும் - ஒரே தன்மையான குடியரசுக் குடியுரிமை நிறுவப்படுகிறது.
18. எல்லா நோக்கங்களுக்கும் - எல்லாக் குடிமக்களினதும் அந்தஸ்துச் சமமானதாதல் வேண்டும்.
19. எக்குடிமகனுக்கும் - இரு நாட்டுக் குடியுரிமை இருத்தலாகாது.

20. இலங்கைச் சமஷ்டிக் குடியரசின் குடிமக்களானவர்:
(அ) அவருடைய தந்தை இந்நாட்டில் பிறந்தவராயுள்ள, அல்லது சட்டப்படி யல்லாத குழந்தைகள் விடயத்தில் அவரு டைய தாய் இந்நாட்டில் பிறந்தவராயுள்ள ஒவ்வொரு ஆளையும்;
(ஆ) 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தின் முதலாம் பகுதியின் கீழ் இலங்கையின் ஒரு வம்சாவழிக் குடிமகன் என்ற அந்தஸ்தை உடையவரும், உடைத்தாகக் கூடியவருமான ஒவ்வொரு ஆளையும்;
(இ) 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தின் இரண்டாம் பகுதியின்கீழ், ஓர் இலங்கைக் குடிமகனாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற வரும், பதிவுசெய்யப்படக் கூடியவருமான ஒவ்வொரு ஆளையும்;
(ஈ) 1949ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க இந்திய - பாகிஸ்தானிய வாசிகள் (குடியுரிமை) சட்டத்தின் கீழ்ப் பதியப்பட்ட தினால், இலங்க்ை குடிமகனென்ற அந்தஸ்து வழங்கப்பட்ட ஒவ்வொரு ஆளையும்;
(உ) அவர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காத விடத்தும், 1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்கக் குடிவரவு, குடியகல்வுச் சட்டம் நடைமுறைக்கு வருமுன்னர் இந்நாட்டில் அவர் வசித்தார் என்ற நிகழ்வை அவர் நிறுவுமிடத்தும், 1967ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க இந்திய - இலங்கை உடன்படிக்கைச் (செயற்படுத்தல்) சட்டம் அவருக்கு ஏற்புடைத்தாயுள்ள ஒவ்வொரு ஆளையும்;
(ஊ) இலங்கைச் சமஷ்டிக் குடியரசின் கீழ் நிறைவேற்றப்பட்ட, அல்லது நிறைவேற்றப்படவிருக்கின்ற வேறேதேனும் சட்டத்தின் கீழ்க் குடியுரிமை பெறவிருக்கும் ஒவ்வொரு ஆளையும் உள்ளடக்குவர்.
21. இலங்கைச் சமஷ்டிக் குடியரசின் குடிமகன் எவரையும் - தமது குடியுரிமையை இழக்கச் செய்தல் அல்லது நாடுகடத்தல் ஆகாது.

Page 335
32
22. அவராக அதைத் துறக்கும் போது, அல்லது தமது சொந்த விருப்பத்தின் பேரில் அவர் வேறொரு நாட்டில் வதியுமொரு வராகி - அந்நாட்டின் சட்டத்தின் நடைமுறையால் அந்நாட்டுக் குடிமகனொரு வனாக வரும்போதும் இந்நாட்டுக் குடிமகனொருவன் தன் குடியுரிமையை
இழப்பார்.
பகுதி - l
அடிப்படை உரிமைகள் :
23. இருபத்து நான்காம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, இலங்கைச் சமஷ்டிக் குடியரசில் - தனது இடம், பிறப்பு, செல் வாக்கு அல்லது குடும்பம் காரணமாக எக்குடிமகனும் ஏதேனும் சிறப்புரிமையைத் துய்த்தல் ஆகாது.
24. சாதிக் குறைபாடுகளுக்கு உள்ளான ஆட்கள் - குறிப்பிட்டதோர் காலவளவிற்குக் காணிப்பங்கீடு, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு, கல்வி வசதிகள் என்பனவற்றி லும்; உள்ளூராட்சி மன்றங்கள், மாநில அரசினதும் மத்திய அரசினதும் சட்ட மன்றங்கள் என்பனவற்றின் பிரதிநிதித்து வத்திலும் சிறப்புச் சலுகைகள் பெறவேண்டு மென்ற ஏற்ாடுகளுக்கமைய - எல்லாச் சாதிகளும் ஒழிக்கப் பட்டுள்ளன வென்பதுடன், எவ்வகையிலேனும் சாதி பாராட்டுதல் - சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியதொரு குற்றமாதல் வேண்டும்.
25. இருபத்து நான்காம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய - பொருளியல், ஆட்சியியல், பண்பாட்டியல், சமூகவியல், அரசியல் வாழ்வின் எல்லாத்துறைகளிலும் - இனம், மொழி அல்லது மதம் என்பன வற்றைக் கருத்திற் கொள்ளாது, இலங்கைக் குடிமக்களினது உரிமைகள் சமத்துவ மானவை என்பது அழிக்கமுடியாத சட்டமாகும்.
26. இருபத்து நான்காம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய - குடிமக்களின் இனம்,

ה
மதம் அல்லது மொழி காரணமாக, அவர்களின் உரிமைகள்மீது ஏதேனும் நேரடியான அல்லது மறைமுகமான கட்டுப்பாடுகளை விதித்தல், அல்லது அதற்கு எதிர்மாறாக அவர்களுக்கு ஏதேனும் நேரடியான அல்லது மறைமுகமான சிறப்புரிமைகளை வழங்குதல் - சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாதல் வேண்டும்.
27. ஒவ்வொரு குடிமகனுக்கும்: (அ) பேச்சுச் சுதந்திரம், பத்திரிகைச்
சுதந்திரம் உட்படக் கருத்தை வெளியிடும் சுதந்திரம் என்பவற்றிற்கான உரிமை;
(ஆ) சமாதானமாகவும் ஆயுத மின்றியும் கூடும் உரிமை;
(இ) சங்கங்கள், சமாசங்கள், அரசியற் கட்சிகள் அமைப்பதற்கான உரிமை;
(ஈ) தமது மாநிலத்தினது அல்லது குடியரசினது அரசாங்கங்களில் - நேரடியாக, அல்லது சட்டத்தின் கீழ்ச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பங்குபற்றும் உரிமை;
( Φ -) மாநில அரசுகளினதும் குடியரசினதும் அரசாங்க சேவையிற் பாரபட்சமின்றிச் சேர்வதற்கான உரிமை;
(ஊ) குடியரசின் நிலப்பரப்பெங்கணும் சுதந்திரமாக நடமாடுவதற்குள்ள உரிமை யுடன், குடியரசைவிட்டு வெளியேறவும் - குடியரசுக்குள் திரும்பி வரவுமுள்ள உரிமை;
(எ) குடியரசின் எப்பகுதியிலும் வதிவதற்கும் - தங்கி வாழ்வதற்குமுள்ள உரிமை;
(ஏ) குடியரசின் எப்பகுதியிலாயினும், சட்டத்தினால் விதித்துரைக்கப்பட்ட வரையறைக்குள் - ஆதனம் கொள்ளவும், வைத்திருக்கவும், கையளிக்கவுமுள்ள உரிமை; (ஐ) சட்டத்தினால் விதித்துரைக்கப் பட்ட வரையறைகளுக்கு மேற்படாதவாறாக, ஆதனத்திற்கு மரபுரிமை பெறவுள்ள உரிமை; (ஒ) 59ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின்கீழ் ஒருவரின் உடைமையான

Page 336
தும், குடியரசின் அல்லது மாநில அரசுகளின் அரசாங்கத்தினால் ஒரு பொது நோக்கத்திற் காகக் கட்டாயமாகக் கொள்ளப்பட்டது மான ஏதேனும் ஆதனத்துக்காக - நியாயமான நட்டஈடு பெறும் உரிமை;
(ஒ) குடியரசின் எப்பகுதியிலாயினும், இவ்வரசியலமைப்பின் ஏற்பாடுகளுள் எதற்கேனும் முரண்படாதவாறு - ஏதேனும் உயர்தொழிலைச் செய்ய அல்லது ஏதேனும் செய்தொழிலை, வியாபாரத்தை, தொழிலை நடத்தவுள்ள உரிமை;
என்பனவற்றிற்கு உத்தரவாதமளிக்கப் பட்டுள்ளது.
27 (அ) அமைதி, ஒழுங்கு, நல்லாட்சி என்பனவற்றிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய ஏதேனும் விதத்தில் - அத்தகைய சுதந்திரத் தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, 27ஆம் உறுப்புரையின் கீழ் உத்தரவாத மளிக்கப்பட்ட சுதந்திரமும் உரிமைகளும் - மத்திய அரசாங்கத்தினால் ஓர் அவசரகால நிலைமையில் ஆக்கப்படும் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படலாம்.
28. ஒவ்வொரு ஆளுக்கும் - வேலை செய்வதற்கும், தம் தொழிலைச் சுதந்திரமாகத் தேர்வதற்கும், நியாயமானதும் இசைவானது மான வேலை நிபந்தனைகளைப் பெறு வதற்கும், வேலையின்மைக் கெதிராகப் பாதுகாப்புப் பெறுவதற்கும் உரிமை உண்டு.
29. (அ) ஒவ்வொரு தொழிலாளியும் - பாரபட்சமின்றி ஒத்தவேலைக்கு ஒத்த சம்பளம் பெறுதற்கு உரிமையுடையவர்.
(ஆ) மனித மாண்புக்கு ஏற்றதான வாழ்வைத் தனக்கும் தன்குடும்பத்திற்கும் நிச்சயமாக்கக்கூடிய - நியாயமானதும், இசைவானதுமான ஊதியத்தைப் பெறவும்: அவசியமானால், வேறு சமூகக் காப்புக் களால் அவ்வூதியத்தின் குறை நிரப்பப் பெறவும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் உரிமையுண்டு.
(இ) தனது நலன்களைக் காப்பதற் கெனத் தொழிற்சங்கங்களை அமைக்கவும், தொழிற்சங்கங்களிற் சேரவும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் உரிமையுண்டு.

25
(ஈ) நியாயமான முறையில் மட்டுப் படுத்தப்பட்ட வேலைநேரம், சம்பளத்துடன் கூடிய காலாந்தர விடுமுறை, என்பவை யுட்பட - ஓய்வு வேளை பெறுதற்கு ஒவ்வொரு தொழிலாளிக்கும் உரிமையுண்டு.
30. குழந்தைப் பருவத்தினரும், பிள்ளைப்பேற்று நிலையினரும் விசேட கவனத்திற்கும் உதவிக்கும் உரித்துடை யோராவர். மணவினையாலோ, அன்றிவேறு விதத்திலோ பிறந்த எல்லாக் குழந்தைகளும் - ஒத்த சமூகக் காப்புகளைத் துய்த்தல் வேண்டும்.
31. இலங்கைச் சமஷ்டிக் குடியரசானது - எல்லாக் குடிமக்களுக்கும் மதச் சுதந்திரத் துக்கு உத்தரவாதமளிக்கும் அதே நேரத்தில், மதச்சார்பற்றவோர் நாடாக இருக்கவேண்டு மென்பதுடன் - எல்லா மத நிறுவனங்களிலி ருந்தும், ஏதேனும் மதத்தை அல்லது மதச் செயற்பாடுகளை மேம்படுத்தும் நிறுவகங் களிலிருந்தும் வேறாகப் பிரிந்து இயங்கலும் வேண்டும்.
32. தமது அந்தரங்கத்தில், குடும்ப விடயத்தில், கடிதத் தொடர்பில் அல்லது வேறு தொடர்புகளில் எதேச்சதிகாரமான தலையீட்டுக்கும், அவரது மதிப்பும் கெளரவமும் தாக்கப்படுவதற்கும் எவரும் ஆளாக்கப்படலாகாது. அத்தகைய தலையீட்டினின்றும் தாக்குதல்களினின்றும் சட்டத்தினால் பாதுகாக்கப்படுவதற்கு - ஒவ்வொரு ஆளுக்கும் உரிமையுண்டு.
33. சட்டத்தின் முன்னர் எல்லா ஆட்களும் சமமானவர்கள் என்பதுடன், சட்டத்தின் பாதுகாப்பைப் பாரபட்சமின்றிச் சமமாகப் பெறுவதற்கும் உரித்துடையோ ராவர்.
34. அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் துணியும் விடயத்திலும், அவர்களுக்கெதிரான ஏதேனும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளிலும் சுதந்திரமான பாரபட்சமற்றவோர் நீதிமன்றத்தினால் - நீதியாகவும் பகிரங்கமாகவும் விசாரிக்கப் படுவதற்கு - எல்லோரும் முழுச் சமத்துவ அடிப்படையில் உரித்துடையோராவர்.

Page 337
L
35. குற்றமென்று சாட்டப்பட்ட
செயலைச் செய்தநேரத்தில், வலுவிலிருந்த
சட்டத்தை மீறிய காரணம் தவிர்ந்த
வேறேதேனும் குற்றத்திற்கு எவரும் தண்டிக்கப்படலாகாது.
36. ஒரே குற்றத்திற்காக எவரும் இருமுறை குற்றஞ் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படலாகாது.
37. சட்டத்தினால் நிறுவப்பட்ட நடைமுறையினாலன்றி, எவரையும் அவரது உயிரை அல்லது தற்சுதந்திரத்தை அல்லது ஆதனத்தை இழக்கச் செய்தல் ஆகாது.
38. கைதுசெய்யப்பட்ட எவரும், அத்தகைய கைதுக்கான காரணங்கள் அவருக்குத் தெரியப்படுத்தப்படாது காவலில் தடுத்து வைக்கப்படலாகாது என்பதுடன் - தாம் தேர்ந்த சட்டவறிஞரை உசாவுதற்கும், அச்சட்டவறிஞரைக் கொண்டு தம் சார்பில் வாதாடவும் அவருக்குள்ள உரிமை மறுக்கப்படலுமாகாது.
39. ஒரு சட்ட நீதிமன்றத்தின் முடிவான தீர்ப்பினால், அங்ங்ணம் எண்பிக்கப் பட்டால்ன்றி எவரும்ஒரு குற்றத்தைப் புரிந்த குற்றவாளியாக ஊகிக்கப்படல் ஆகாது.
40. இவ்வரசியலமைப்பினால், அல்லது குடியரசின் அல்லது மாநில அரசுகளின் வேறு ஏதேனும் சட்டத்தினால் அவருக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரத்தையும் உரிமைகளையும் மீறுகின்ற செயல் களினின்றும் - தகுதிவாய்ந்த நீதிமன்ற மொன்றன் மூலம் வலுவுள்ள பரிகாரம் பெறுவதற்கு, ஒவ்வொரு ஆளும் உரிமையுடையவர் ஆவார்.
பகுதி - IV
மொழி :
41. சிங்களமும் - தமிழும் இலங்கையின் தேசியமொழிகளாதல் வேண்டும்.
42. குடியரசினதும் மாநிலங்களினதும் அரசாங்கத் திணைக்களம் ஒவ்வொன்றுட

6
னும் - குடியரசினது அல்லது மாநிலங் களினது ஏதேனும் சட்டத்தின் கீழ், அல்லது ஒழுங்குவிதியின் கீழ் நிறுவப்பட்ட ஒவ்வொரு கூட்டுத்ததாபனத்துடனும்
நிறுவகத்துடனும் - இலங்கையின் ஒவ்வொரு ஆளும், தான் கல்விகற்ற மொழியில் u- அதாவது தனது
தாய்மொழியில் தொடர்பு கொள்ள உரிமையுடையவராதல் வேண்டும்.
43. 42ஆம் உறுப்புரையின் ஏற்பாடு களுக்கமைய - வட, கிழக்குப் பிரதேசங் களையும் தென்கிழக்குப் பிரதேசங்களையும் கொண்ட இரு மாநிலங்களினதும் நிர்வாக மொழியும் பதிவேட்டு மொழியும் - தமிழ் மொழியாதல் வேண்டும்.
44. 42ஆம் உறுப்புரையின் ஏற்பாடு களுக்கமைய - ஏனைய மூன்று மாநிலங் களினதும் நிர்வாக மொழியும் பதிவேட்டு மொழியும் - சிங்கள மொழியாதல் வேண்டும்.
45. மத்திய அரசாங்கத்தினது நிர்வாக மொழியும் பதிவேட்டு மொழியும் - சிங்களமும் தமிழுமாதல் வேண்டும்.
46. மத்திய அல்லது மாநில அரசாங்க சேவையில், அல்லது மத்திய அரசாங்கம் அல்லது மாநில அரசின் ஏதேனும் சட்டத் தின் அல்லது ஒழுங்குவிதியின்கீழ் நிறுவப் பட்ட கூட்டுத்தாபனத்தின் அல்லது நிறுவகத்தின் சேவையில் சேர்வதற்காக, அல்லது அத்தகைய சேவையில் பதவி உயர்வு பெறுவதற்காக, அல்லது ஏதேனும் புலமைப் பரிசில் அல்லது கல்வி வசதி பெறுவதற்காக நடைபெறும் ஏதேனும் பகிரங்கப் பரீட் சைக்கு அல்லது நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும் ஒவ்வொரு பரீட்சார்த்தியும் - தாம் கல்விகற்ற மொழியை, அதாவது தாய் மொழியைப் பயன்படுத்தவுள்ள உரிமைக்கு உத்தரவாதமளிக்கப்படுதல் வேண்டும்.
47. ஒவ்வொரு சிறுபான்மையினமும் - தமது சொந்த மொழியையும், வரிவடிவை பும், பண்பாட்டையும் பேணிக்காக்கவுள்ள் உரிமைகளை - மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் பாதுகாத்தல் வேண்டும்.

Page 338
-3
Leś -V
கல்வி :
48. ஒவ்வொரு பிள்ளையும் கல்வி கற்பதற்கான உரிமைக்கு
(அ) பிள்ளையின் 14ஆம் வயதுவரை கட்டாயக்கல்வி பெறல் மூலமும்:
(ஆ) உயர்கல்வி, உயர் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வியுட்பட எல்லாக் கல்வியும் - இலவசமாக வழங்கப்படல் மூலமும், 24ஆம் உறுப்புரையின் ஏற்பாடு களுக்கமையத் திறமையின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி கிடைக்கக் கூடியதாகவும், அத்துடன் அனைவரும் கல்வி பெறக்கூடியதாகவும் செய்வதன் மூலமும்;
(இ) பாடசாலைகளிலும், கல்லூரி களிலும், பல்கலைக் கழகங்களிலும் பாட போதனை - பிள்ளையின் தாய்மொழியில் அளிக்கப்படுதல் மூலமும்;
உத்தரவாதமளிக்கப்படுகிறது.
49. (அ) ஒவ்வொரு கல்விக்கூடத்திலும், ஒவ்வொரு சிங்களப்பிள்ளைக்கும் சிங்களமே போதனாமொழியாதல் வேண்டும்.
(ஆ) ஒவ்வொரு கல்விக்கூடத்திலும், ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைக்கும் தமிழே போதனாமொழியாதல் வேண்டும்.
(இ) கலப்பினப் பிள்ளைகளுக்கு அல்லது முஸ்லிம் பிள்ளைகளுக்கு அல்லது ஏனையோருக்குச் சிங்களம் அல்லது தமிழ் போதனா மொழியாதல் வேண்டும்.
50, 31ஆம் உறுப்புரையிற் கூறப் பட்டவை எப்படியிருப்பினும், எல்லாப் பாடசாலைகளிலும் ஒவ்வொரு பிள்ளைக் கும், அப்பிள்ளையின் சமயத்தை அனுட்டிக் கும் ஆசிரியரால், அதன் 14ஆம் வயது வரைக்கும் அப்பிள்ளையின் சமயம் போதிக்கப்படல் வேண்டும்.

பகுதி -W
பொருளியற் குறிக்கோள்
51. குடியரசினதும் மாநிலங்களினதும் பொருளாதாரம் தொடர்பிலான முறைகளும் சட்டங்களும்:-
(அ) மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழிப்பதற்கும்;
(ஆ) முதலாளித்துவச் சுரண்டலையும் ஏகபோகத்தையும் ஒழிப்பதற்கும்;
(g)) குடியரசினது அல்லது மாநிலங்களினது அரசாங்கத்தால் - அல்லது கூட்டுறவு, கூட்டாக்க நிறுவகங்களால் -
உற்பத்தி, பங்கீடு, போக்குவரத்து என்பவற்றின் சாதனங்களையும் கருவிப்
பொருட்களையும் கொள்ளல், கட்டுப்படுத்தல் என்பனவற்றுடன் - சட்டத்தால் விதித்துரைக்கப்பட்ட
வரைவுக்குள், இத்துறைகளில் தனியார்
முயற்சிகளை அனுமதித்தும்;
(ஈ) நாட்டின் உற்பத்திச் சக்திகளை
இடையறாது வளர்க்கவும்;
(உ) மக்களின் வாழ்க்கைத் தரத்தினைத் தொடர்ச்சியாக உயர்த்தவும் நேரடியாக நெறிப்படுத்துவனவாகும்.
52. குடியரசினதும் மாநிலங்களினதும், அனுமதிக்கப்பட்ட தனியார் முயற்சி களினதும் பொருளியல் வாழ்வும் இயக்கமும் - மத்திய அரசாங்கத்தினதும் ஒவ்வொரு மாநிலத்து அரசாங்கத்தினதும் அனுமதிக்கப் பட்ட தனியார் துறைக் கழகத்தினதும் பிரதிநிதிகளைக் கொண்டு, ஜனாதிபதியி னால் நியமிக்கப்பட்ட ஓர் ஆணைக் குழுவினால் - காலத்திற்கு காலம் தீட்டப் பட்ட தேசியப் பொருளாதாரத் திட்ட மொன்றினால் துணியப்பெறும்.
53. இத்திட்டமானது, 86ஆம் உறுப்புரையின் கீழ் நடாத்தப்பெற்ற மத்திய அரசாங்கத்தின் இருசபைகளினதும் இணைப்புக் கூட்டமொன்றினால் -

Page 339
-32
திருத்தத்துடனோ அன்றியோ அங்கீகரிக்கப் பட்டதன்மேல் சட்டத்தின் வலுவுடைத்தாதல் வேண்டும்.
54. தேசிய பொருளாதாரத் திட்டமானது - தேசியச் செல்வத்தைப் பெருக்குவதையும், மக்களின் வாழ்க்கை வளங்களின் தரத்தை உயர்த்துவதையும் இலக்காகக் கொள்ள வேண்டுமென்பதுடன், மாநிலங்களிலுள்ள வேலைவாய்ப்புக்கள், மாநிலங்களின் பொருளாதாரப் பின் னடைவு, பொருளாதார விருத்தித் தேவைகள், மூலப்பொருட்கள், மூலவளங் களின் கிடைக்குநிலை, தொலைத் தொடர்பு கள், போக்குவரத்து வசதிகள் என்பன வற்றைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட வேண்டியதுமாகும்.
55. குடியரசினதும், மாநிலங்களினதும் அதிகாரத்திலுள்ளோர் - தமது முகவராண் மைகளினூடாக, அத்திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.
56. கமத்தொழில் தொடர்பிலான கொள்கையானது - இத் தொழிலுக்குக் காணிக்கொள்வனவிலும், பங்கீட்டிலும், ஒதுக்கீட்டிலும், மற்றும் கடன் வசதி, கமத்தொழிற் கருவி வசதி, பசளை வசதி முதலியனவற்றிலும் விசேட சிரத்தை காட்டுவதன் மூலமும் - சலுகைகள் வழங்கு வதன் மூலமும் - கூட்டுறவு, கூட்டாக்க நிறுவனங்களை உருவாக்கலையும் நிறுவலை யும் ஊக்குதற்கு நெறிப்படுத்தப்படல் வேண்டும்.
57. அரசாங்கத்தின் உடைமையாயுள்ள நிறுவனங்கள் தொடர்பிலான கொள்கை
புதியதோர் உலகம் போரிடும் உலகத்தை
எல்லாரும் எல்லாமும்
།། இல்லாமை இல்லா

யானது - அந் நிறுவனங்களின் முகாமை யைத் தொழிலாளர்களிடம் அல்லது தொழிலாளர்களால் தெரியப்பட்ட குழுமங் களிடம் காலப்போக்கில் கையளிக்கும் இறுதிக் குறிக்கோளுடன், அந் நிறுவனங் களின் தொழிலாளர்களை - அந் நிறுவனங் களின் முகாமையில் மென்மேலும் பங்கேற்கச் செய்தற்கு நெறிப்படுத்தப்படல் வேண்டும்.
58. உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பிலான கொள்கையானது - கூட்டுறவு இயக்கங்களை ஊக்குதல் மூலமும், அவைக்கு உதவுதல் மூலமும் தனியார் வியாபாரத் தாப்னங்களின் ஏகபோக ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு நெறிப்படுத்தப் படல் வேண்டும்.
59. தனியார் சொத்துடைமை எல்லைகளும், தனியாளின் வருமான எல்லை களும் சட்டத்தினால் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
பகுதி -WI
சர்வதேச விவகாரங்கள்
60. சர்வதேச விவகாரங்களில், இலங்கைச் சமஷ்டிக் குடியரசானது - உலக நாடுகளிடையே சமாதான ஒத்துழைப்பையும் சக வாழ்வையும் பெருக்கவேண்டு மென்பதுடன், உலக சமாதானத்தைப் பேணிக் காத்தற்கு நேரடியான ஒரு சக்தியாக - நடுநிலைமைக் கொள் கையொன்றைப் பின்பற்றலும் வேண்டும்.
செய்வோம் - கெட்ட வேரொடு சாய்ப்போம்
★
பெறவேண்டும் இங்கு த நிலைவேண்டும் N

Page 340
2S
MEMOR
ON THE CO
MODEL CON
C
THE FEDERAL REP
(MAIN PRO
SUBMI
TO THE STEERING C
CONSTITUEN
B
THE ILANKAI THAM
స్క్రీ
 

స్క్రిస్ట్రీ
ZANDUM
\STITUTION
NSTITUTION
F
UBLIC OF CEYLON
OVISIONS)
TTED
OMMITTEE OF THE
TASSEMBLY
IL ARASU KAD CHI
స్క్రీ
ஜ
ஜ

Page 341
ZAANA
\ KUMARANS
VAJZ7 IMPO உங்களுக்கு தேவையான லீல மொத்த விற்ப தொகையாக 6
பணத்தைச்
42 FO Waltho LOndO Te: O208 faአ : 0208
லீலா தயா! அங்கீகார விநியோ
KUMA

மரன்ஸ் RTS & EXPORTS
அன்றாடம் ா தயாரிப்புகளை னை விலைக்கு
வாங்கி உங்கள்
சேமியுங்கள்.
e Street MSOW In El
52 4955 52 9482
ரிப்புகளின் ம் பெற்ற கஸ்தர்கள்
||RANS

Page 342
தமிழுரிமைப் போரில்
தமிழுக்கு நேர்ந்துற்ற இன்னல் களைய நாமும் இஸ்லாமியப் பெருமக்கள்? இங்கே அவர்களுடன் உடுவில் பா. உ. தர்ம
தாய்க்குலம் ே
நாம் பெற்றெடுத்த கண்மணிகள் நல்வாழ்வில் போராடுகின்ற தாய்க்குலத்தின் ஓர் பகுதி இங்
 
 
 

எமக்கும் பங்குண்டு
களத்திற் குதித்துள்ளோம் எனக் கூறுகின்றனரா
ரும் உள்ளார் (முன்வரிசை மத்தியில்).
பார்க்களத்தில்!
இருள் சூழவிடோம் என வெஞ்சினம் பூண்டு கே.
لم

Page 343
பள்ளி மாணவிக
சத்தியப் போருக்குச் சின்ன படையெடு
கண்ணகி அன்று!
பாண்டியவரசின் அநீதிகண்டு கிளர்ந்தெழுந்த யுகத்தில் நேரிழையாள் கண்ணகி அன்று சிங்களவரசின் அநீதி கண்டு அதிர்ந்தெழு முரசறைந்திட - செல்வநாயக யுகத்தில் ஆய அதனை விளக்கிட இந்தக் காட்சி
 
 

ள் படையெடுப்பு!
ாஞ்சிறு பள்ளி மாணவிகளே த்த காட்சி.
கன்னியர் இன்று!
ாள் - நீதி கேட்டு முரசறைந்தாள் - சிலப்பதிகார
ந்தனர் - விரைந்து சென்றனர் - நீதிகேட்டு பிரம் கன்னியர் இன்று!

Page 344
3.
MEMORANDUM
Ceylon has been the home of the Sinhalese and the Tamils from times immemorial. It is futile to enter into any argument as to who were in this country first by reference to the Ravana and Vijaya Legends or to other historical data.The Muslims, the Malays and the Burghers who have lived in this country for centuries are also entitled to be considered as the indigenous peoples of this country entitled to equal Rights and privileges with the Sinhalese and the Tamils.
The historical development and way of life of the people of this country were rudely shaken by the advent of the European Colonial Powers into Ceylon. At the time the Portuguese conquered the Maritime Areas of Ceylon the Tamils had an independent Kingdom and a state of their own in the North of Ceylon. The Tamil Kingdom was overthrown in war by the superior arms of the Portuguese and subjugated.
The Dutch who succeeded the Portuguese and the British who followed the Dutch had no other right to rule over the Territories of the Tamil Kingdom except the right of conquest. Now that the last vestige of Colonial rule is being removed by making Ceylon a Republic it is quite legitimate for the Tamils to demand the restoration of the sovereignty which they lost to the Portuguese in war about 3/2 centuries back. The fact that the British Rulers joined, for administrative convenience, the Territories of the Tamil Kingdom with the Territories of the Sinhalese Kingdom similarly subjugated does not take away the rights of the Tamils to demand that the status quo anteforeign conquest should be restored. There seems to be an unwarranted presumption today that the act of the British in merging the Tamil Territories with

33
the SinhaleseTerritories has destroyed Tamil sovereignty and the Sinhalese as the majority community have stepped into the shoes of the British as the Rulers of the Tamils.This presumption must be totally rejected if an era of unity and progress through socialism is to be ushered into Ceylon.
Though the Tamils are entitled to demand the restoration of their independent sovereign Tamil State, they have democratically signified their resolve to unite, on a basis of absolute equality, with the Sinhalese and other Peoples of Ceylon but in a Federal Union of Ceylon. If the return of the United Front in overwhelming numbers in the last Geiteral Election is to be interpreted as a mandate by the Sinhalese people for a radical change of the Constitution, the Tamil people also have given a mandate to their representatives in Parliament to reject the present unitary form of Government and to unite with the rest of the country on the basis of a Federal form of Government. The determination of the Tamil people to preserve their integrity by the establishment of a Tamil state Within a Federa Union has been demonstrated by the results of the five successive General Elections since 1956. The minimum that the Tamil people can accept is the restoration of their autonomy under a Federal Constitution as a compromise alternative to the status quo ante foreign conquest i.e. the full independent sovereignty of the Tamil people.
The basis of Socialism in all Socialist Countries of the world has been the recognition of the Right of Self-determination of the smaller Nationalities and the establishment of Federal forms of Government. otherwise Socialism will degenerate into Nation Socialism of the Nazi pattern and State Capitalism.

Page 345
The Draft Constitution which is an nexed to this Memorandum is only intended as a Model to be considered in drafting a Federal Constitution for Ceylon. The Northern Province and the Trincomalee and Batticaloa Districts of the Eastern Province will form one Unit.This will be atamil majority State. The Amparai District will form a Muslim majority State.
The suggestion to establish in the rest of Ceylon three states is made on Historical and Economic grounds and is calculated to enable the fruits of Democratic Decentralization to be enjoyed by all sections of the people. The predominantly Rice and Coconutgrowing North-Central and North-Western Provinces which are the Key Territories of the ancient Raja-Rata is to be one Unit. The predominantly Tea and Rubber growing Uva, Sabaragamuwa and Central provinces with the common traditions. And travails of the Kandyan Sinhalese are to be one unit. The Economically and Politically advanced South and West to be one Unit. The City of Colombo and the Suburbs as the Capital of the Republic will be administered by the Central Government following the precedents of New Delhi and Canberra. We wish to state that this is only a tentative suggestion for the Consideration of the representatives of the Sinhalese people who are free to establish their State or States, other than the Muslim and Tamil states, on any other basis.
if the country is to progress on Socialist Lines it is also absolutely necessary that the question of Citizenship and Language should be settled finally. There can be no Stateless Persons or Second Class Citizens in a Socialist Country. Similarly the stamp of inferiority that is placed on the Tamil people by denying legitimate position of their language should be removed. In furtherance of the Socialist Way of Life all inequalities and

34
particularly Caste distinctions should be abolished. Our Chapter on Economic Objectives will show the manner in which a fully Socialist Society should be established.
The Memorandum and the Draft Constitution annexed hereto are submitted in the genuine desire to establish Unity and to effect the integration of the various nationalities inhabiting this country while at the same time preserving the Cultural and Linguistic identity of each Group. Any attempt to assimilate and thereby destroy the Separate existence of the Minorities will only lead to a division of the country. We appeal particularly to the Socialists in Parliament to set aside all narrow prejudices and preconceptions, to eschew suspicion and distrust and set about the task of formulating a Constitution in the spirit of True Socialism.
MAIN PROVISIONS
MODEL CONSTITUTION
PREAMBLE:
We the People of Ceylon, having solemnly resolved to constitute Ceylon into a Free, Sovereign and an independent Republic, pledged to realize the objectives of a Socialist Democracy, and proceeding from the proposition that all racial linguistic and religious groups, irrespective of their past and present position, irrespective of their strength or weakness, enjoy equal rights in all spheres of the economic, social, political and cultural life of our society, in our Constituent Assembly, do hereby adopt, enact and give unto ourselves this Constitution with the intent of strengthening the bonds of Friendship and Fraternity amongst the peoples and of maintaining and furthering the unity, strength and honour of our Nation and of creating a Socialist Society in the Federal Republic of Ceylon.

Page 346
33
PART - 1
POLITICAL STRUCTURE
1. The Federal Republic of Ceylon
consist of:
(a) The State consisting of the Southern and Western Regions of the Republic.
(b) The State consisting of the NorthCentral and the North-Western Regions of the Republic.
(c) The State consisting of the Central
Regions of the Republic.
(d) The State consisting of the Northern and North-Eastern Regions of the Republic.
(e) The State consisting of the South
Eastern Regions of the Republic.
(f) The City of Colombo and the suburbs (being the Capital of the Republic shall be administered by the Central Government.)
2. A Boundaries Commission shall demarcate the boundaries of these States and of the city of Colombo and the suburbs. in demarcating the boundaries, the Commission shall take into consideration the traditions of past history, geographical, cultural, linguistic and social environments, population concentration and other similar factors.
3. The States shall have full authority in the administration of their Territories in regard to the subjects entrusted to them
4. The Legislative Authority of the States shall be vested in the State Assemblies which shall have power to make laws operative within the territorial limits of each State subject to the provisions of this Constitution.

10.
11.
12.
3.
The Constitutions of the States shall provide, among other things, for a State AsSembly elected by the people on a population - cum - territorial basis.
The Members of each State Assembly at their first meeting after each General Election shall divide themselves into Committees and each Committee shall elect a Chairman.
The executive functions of the States shall vest in the Chairman and their Conmittees.
The States may conclude agreements amongst themselves in regard to matters of mutual interest, provided they bring such agreements to the notice of the Central Government which is entitled to prevent their execution if they contain anything contrary to the Rights and interests of the Republic or to the Rights and Interests of the other States.
No communications between and States and any foreign Government or their Representatives shall take place except through the Agency of the Central Government.
All disputes amongst the States shall be referred to the Central Government for arbitration and settlement. The ruling of the Central Government on these disputes shall be final. No State shall take any unilateral action against another State.
All disputes between the States and the Central Government shall be referred for adjudication to the Constitutional Court set up under this Constitution.
The Republic shall give all help to States to exercise their authority in full.
The Central Government shall take appropriate measures against the States which fail to fulfil their duties and functions under the law.

Page 347
14. The territory of the Republic of Ceylon is indivisible and consists of the territorries of the States.
15. Each State shall exercise full authority in respect of all other matters except those provided for in Article 16.
16. The jurisdiction of the Republic of Ceylon as represented by its highest organs of state authority and organs of Government COVerS:
(vii) Administration of immigration and
Emigration.
(i) Representation of the Republic in International relations, conclusion and ratification of Treaties With for eign states and with lnternational bodies.
(ii) Questions of War and Peace.
(iii) Organization of the Defence of the Republic and direction of all Armed Forces safeguarding the security of the Republic.
(iv) Maintenance of Law and Order in
the Territory of the Republic.
(v) Maintenance and direction of the
Police Force.
(vi) Citizenship laws and laws relating to the rights of non-citizens and foreigners resident in the Country.
(vii) Administration of immigration and
Emigration.
(viii) Administration of Customs, ilmport, Export, Stamps and Estate Duties.
(ix) Establishment of the basic principles in the spheres of general, technical and higher education. Establishment of Universities of a National character containing Sinhala and Tamil streams for technical, professional and higher education. (The States shall also have authority to establish State Universities.)

6
(x)
(χ)
(xii)
(xiii)
(xiv)
(хv)
(χνί)
(Xνii)
(χνiii)
(xix)
(XX)
(xxi)
The establishment of the basic principle of labour legislation.
The establishment of the basic principles in the sphere of public health.
Establishment of the basic principles in the sphere of Co-operation and Collectivisation.
Apportioning of taxes, revenues and resources to the states on the recommendation of a Finance Commission consisting of members from the Republic and from each of the States and appointed from time to time by the President. Power to make any grant in advance pending the Finance Commissions Report and other procedure. Power to approve taxes created by the States.
Direction of the Monetary and Credit Systems.
Raising of loans and the granting of loans subsidies without prejudice to the Rights of the States to raise loans within the Republic.
Organization and administration of Banks, of industrial, Plantation. Agricultural and Trading Enterprises of an allsland nature.
Administration of Postal and Telecommunication Services.
Control and exploitation of Water Power, Rivers and natural deposits.
Administration of Sea Ports, Air
Ports, SeaTransport, AirTransport and Rail Transport.
Legislation to protect surface and undergroundwater against pollution and wastage in consultation with the States.
Generation and transmission of Hydro-Electric Power.

Page 348
3. (xxii) Construction and maintenance of
inter State and Trunk Highways.
(xxiii) Construction and maintenance of
major irrigation projects.
(xxiv) Acquisition, conservation and preservation of historical sites and monuments of national importance.
(xxv) Manufacture and sale of explo
sives, arms and ammunitions.
(xxvi) Legislation to protect animal, Sea
and Vegetable life.
(xxvii), Organization and administration of a uniform system of economic and social statistics.
(xxviii) Determination of weights and mea
SeS.
(xxix) Any other subjects in agreement with
the States.
PART II
CITIZENSHIP
17. A single Republican Citizenship is established for all citizens of the Federal Republic of Ceylon.
18.The status of all citizens for all purposes
shall be equal.
19. No citizen shall possess dual citizenship.
20. Citizens of the Federal Republic of Ceylon
include:
(a) Every persons born in Ceylon provided his father was born in Ceylon,
or in the case of illegitimate children if the mother was born in Ceylon.
(b) Every person who has and will have the status of a citizen of Ceylon by

(c)
(d)
(e)
(f)
descent under Part I of the Ceylon Citizenship Act No. 18 of 1948.
Every person who has been registered and who may be registered as a citizen of Ceylon under Part II of the Ceylon Citizenship Act No. 18 of 1948.
Every person who had been granted the status of a citizen of Ceylon by registration under the Indian & Pakistani Residents (Citi
zenship) Act No. 3 of 1949.
Every person to whom the IndoCeylon Agreement (implementation) Act No. 14 of 1967 applies, provided he has not applied for citizenship of India and provided he establishes the fact that he was resident in this country before the Immigrants & Emigrants Act No. 20 of 1948 came into operation.
Every person who will acquire citizenship under any other law enacted or to be enacted by the Federal Republic of Ceylon.
21. No citizen of the Federal Republic of Ceylon shall be deprived of his citizenship or be deported.
22.
A citizen will lose his citizenship when he renounces it or when he becomes a resident of any other country of his own free will and if by operation of law of that Country he becomes a citizen of that Country.
PART -
FUNDAMENTAL RIGHTS
23. In the Federal Republic of Ceylon no citi
zen shall enjoy any privilege by virtue of his place, birth, person or family subject to the provisions of Article 24.
4. All castes are abolished and caste obser
vance in any form shall be an offence

Page 349
33
25.
26.
27
punishable by law; subject to the provisions that persons who are subjected to caste disabilities shall be granted concessions in land alienation, employment, housing and educational facilities and representation in local bodies and in the State and Central Legislature for a stipulated period.
Subject to the provisions in Article 24 equality of Rights of the Citizens of Ceylon, irrespective of the race, language or religion in all spheres of economic, state, cultural, social and political life is indefeasible law.
Subject to the provisions in Article 24 any director indirect restrictions of the rights or conversely, any establishment of direct or indirect privileges for citizens on account of their race, religion or language shall be punished under law.
. Every citizen is guaranteed:
(a) he right to freedom of speech and expression, including the freedom of the press:
(b) The right to assemble peaceably and
Without arms.
(c) The right to form associations.
unions and political parties.
(d) The right to take part in the Governments of the State and of the Republic, directly or through freely chosen representatives under the law.
(e) The right of equal access to the service of the states and of the Republic.
(f) The right to move freely throughout the Territory of the Republic; and the
right to leave and to return to the Republic.
(g) The right to reside and settle in any
part of the Republic.

H
27
28.
29.
(h) The right to acquire, hold and dispose property within the limits prescribed by law in any part of the Republic.
(i) The right to inherit property, provided the inherited property does not exceed the limits prescribed by law.
(i) The right to reasonable compensation for any property, owned under the provisions of Article 59, and compulsorily acquired for a public purpose by the Government of the Republic or of the States.
(k) The right to practise any profession or carry on any occupation, trade or business, without prejudice to any of the provisions of this Constitution, in any part of the Republic.
..(i) The freedom and rights guaranteed under Article 27 may be curtailed by central legislation in an emergency so as to prevent the use of such freedoms in any manner that will endanger peace, order and good Government.
Every person has the right to work, to free choice of employment, to just and favourable conditions of work and to protection against unemployment.
(a) Every worker, without discrimination, has the right to equal pay for equal work.
(b) Every worker has the right to just and
favourable remuneration insuring for himself and his family and existence worthy of human dignity, and supplemented, if necessary, by other social protection.
(c) Every worker has the right to form and
to join Trade Unions for the protection of his interests.
(d) Every worker has the right to rest and lei
sure, including reasonable limitation of working hours and periodic holidays with рау.

Page 350
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
3.
Motherhood and childhood are entitled to special care and assistance. All children, whether born in or out of wedlock shall enjoy the same social protection.
The Federal Republic of Ceylon, whilst guaranteeing religious freedom to all citizens, shall be a secular State and shall be separated from all religious institutions and from institutions that promote any religion or religious activity.
No person shall be subjected to arbitrary interference with his privacy, family, home, correspondence or communication, nor to attacks upon his honour and reputation. Every one has a right to protection of the law against such interference or attacks.
All persons are equal before the law and are entitled without discrimination to equal protection of the law.
All persons are entitled in full equality to a fair and public hearing by an independent and an impartial Tribunal in the determination of the rights and obligations and of any criminal charge against him.
No person shall be convicted of any of fence except for violation of law in force at the time of the commission of the act charged as an offence.
No person shall be prosecuted and punished for the same offence twice.
No person shall be deprived of his life or personal liberty or property except acCording to procedure established by law.
No person who is arrested shall be detained in custody without being informed of the grounds of such arrest, nor shall he be denied the right to consult and to be defended by a Legal Practitioner of his choice.

9.
39.
40.
No one shall be presumed to be guilty of an offence until so proved by a final judgement of a Court of Law.
Every person has the right to an effective remedy by a competent Court for acts violating the freedoms and rights guaranteed him by this Constitution or by any other law of the Republic or of the States.
PART IV
LANGUAGE
41.
42.
43.
44.
45.
46.
Sinhala and Tamil shall be the Nation Languages of Ceylon.
Every person in Ceylon shall have the right to transact business with every Department of the Government of the Republic and of the States and with every Corporation and every institution established under any Law or Regulation of the Republic or of the States in the Language in which he received his education viz: his mother- tongue.
The Language of Administration and of Records in the two States consisting of the Northern and the North-Eastern Regions and of the South-Eastern Regions shall be the Tamil language subject to the provisions in Article 42.
The Language of Administration and of Records in all the other three States shall be the Sinhala Language subject to the provisions in Article 42.
The Language of Administration and of Records of the Central Government shall be Sinhala and Tamil.
The right of every candidate, who appears for any public examination or for any vive voce test for recruitment to the Central or State Service or to service of any Corporation or Institution established under any Central or State law or

Page 351
-3
regulation or for promotion in such Service or for award of any scholarship or educational facility, to use the language in which he received his education viz., the mother-tongue, is guaranteed.
47. The Centra Government and State Governments shall safeguard the rights of every minority to conserve its own language, script and culture.
PART V
EDUCATION
48. The right to education of every child is
guaranteed:
(a) By compulsory education upto the
child's 14th year.
(b) By Education, including higher, professional, and technical education, being free of charge and being made available and equally accessible to all on the basis of merit, subject to the provisions of Article 24.
(c) By instruction in schools, colleges and Universities being conducted in the mother-tongue of the child.
49. (a) Sinhala shall be the medium of instruction for every Sinhala child in every educational institution.
(b) Tamil shall be the medium of instruction for every Tamil child in every educational institution.
(c) Sinhala or Tamil shall be the medium of instruction for children of mixed parentage or of Muslim parents or of others.
50. Notwithstanding anything in Article 31 every child shall be taught his or her religion upto the age of 14 by teachers professing that religion in all schools.

PART V
ECONOMIC OBJECTIVES
51
. The systems and laws in regard to the economy of the Republic and of the States shall give positive direction to:
(a) The abolition of exploitation of man
by man.
(b) The abolition of capitalistic exploita
tion and monopolies.
(c) The acquisition and control of the means and instruments of production, distribution and transport by the Government of the Republic or of the States or by co-operative and collective institutions, provided that within limits prescribed by law private enterprises in these branches may be allowed.
(d) The constant development of the pro
ductive forces of the country.
(e) The continuous raising of the stan
dards of the Living of the people.
52. The economic activity and life of the Re
53.
54.
public, of the States and of the permitted private enterprises shall be determined by a national economic plan drawn up from time to time by a commission consisting of representatives from the Central Government, from every State Government and from the Chamber of the permitted private enterprises appointed by the President. ܖ
The plan when approved, with or without amendments, by the two chambers of the Central Legislature at a joint meeting held under Article 86 shall have the force of law.
The national Economic plan shall aim at increasing the national wealth and im

Page 352
55.
56.
57.
-34
proving the material standards of the people and shall be prepared by taking into consideration the employment potentialities of the State, economic backwardness and economic development needs of the States, availability of raw materials and resources, communication and transport facilities etc., etc.
The authorities of the Republic and of the States shall take all necessary steps to enforce the fulfilment of the planthrough their agencies.
Policy in regard to agriculture shall be directed to encourage the formation and establishment of co-operative and collective enterprises by giving these enterprises special consideration and concessions in regard to land acquisition and alienation and allocation, loans, equipment facilities, manure subsidies, etc., etc.
Policy in regard to State owned enterprises shall be directed to bring the work

58.
59.
ers in the enterprises more and more into the management of the enterprises with the ultimate objectives of handing over the management to the workers or to bodies of management elected by them.
Policy in regard to Internal and Externa Trade shall be directed to the abolition of monopolies by encouraging and assisting co-operative institutions to take the place of private Trading Institutions.
Limits of ownership of private property and limits of income per person shall be defined by law.
PART - VII
NTERNATIONAL AFFAIRS
60. In linternational Affairs the Federal Re
public of Ceylon shall promote peaceful co-operation and co-existence amongst the nations of the world and also follow a policy of nonalignment as a positive force for the maintenance of world peace.
w

Page 353
34
இத. அ. I 6
தமிழ் நாடு
ஈழத் தமிழ் நாடு இசை வாழும் பொன்ன இயல் இசை நாடகம் இலங்கும் எம் தமிழ் ந
இமயத் தலையில் தமி ஈழத்து அரசன் இசை இன்னமு திசையால் ய முன்னவன் ஒருவன் பு இசையினைப் போலே இலை அதைத் தொகு
இசையாலே தோன்றி !
இசையோடு உயிர் ஓம்
மீன்மகள் பாடும் மணி நகர்வலம் மேவி கொ தீஞ்சுவை எனவெந் நீ திருமலை தனிலே திக திருமலை போலே துை தேயங்க ளுளதோ இய திகழ்கின்ற குன்றின் இ திரைவந்து மோதும் த
வன்னி நாட்டின் வளம் வண்டமிழ் வீரர் ஏர்பிய மன்னார்க் கடலின் முத் மானத் தமிழர் வடமை மலைகளின் மேலே வ மலைவாழ் தமிழர் வா மறங்கொண்ட நெஞ்சி புறங்கொண்டு வாழும்
யாழ்நகர் பிறந்து தமிழ் நாவலன் இறவாப் புகழ் ஞானத் திறலின் மொழி ஞானப் பிரகாசன் தமிழ் கலைக்குயில் போலே
கவிகளில் கன்னித் தமி கலையாத சொத்து இை விபுலானந்தன் தந்த பு
அறப்போர் முன்னணித் தலைவர்

2
ன் இலட்சியப் பண்
ππΘ அறம் பொருள் இன்பம் ாடு - எங்கள் (ஈழத்)
பொன்னாடு
ழ் ஒலித்தான் ” எங்கள் அமைத்தே ாழ் மீட்டி - எங்கள் கழ் சமைத்தான்
உலகினில் வேறே த்தான் ஒருபுலவன் இசையாலே வாழ்ந்து பும் தாய்நாடு -எங்கள் (ஈழத்)
வாவி மட்டு லு இருப்பாள் ரூற்று - எங்கள் ழுகிறாள் றைமுகம் வேறே பல்பாலே ரைகின்ற சங்கின் ாய்நாடு - எங்கள் (ஈழத்)
கொழிக்க - எங்கள் turf ந்தெடுத்து - எங்கள் மப்பார் ளர்பயி ராலே ழ்வளிப்பார் ல் அறங்கண்டு விஞ்சி
தாய்நாடு - எங்கள் (ஈழத்)
காத்தான் - எங்கள் p போர்த்தான்
ஆய்ந்தே - எங்கள் ழ் வளர்த்தான் இஸ்லாமிய மாதர் ழ் இசைத்தார் சையாழ்நூல் வித்து கழ் ஏடு - எங்கள் (ஈழத்)
ஆர். டபிள்யூ. வி. அரியநாயகம்

Page 354
MAZA Z .ം.ം
 
 
 

魏
ணம்

Page 355


Page 356
345
இ. த. அ. க. இளைஞர் சு
முத்திரைப் பல்
அமுதத் தமிழர் நாட்டிலே
தமிழ் ராட்சி நாட்டவே
திமுதி மென்ன தீரர்காள்
திரண்டு வாரீர் ஓட்டம
வீறு பெற்ற தமிழராய்
வீர இளைஞர் கூடினோ
கூறு நூறு செய்யினும்
குலையு மோநம் லட்சிய
தந்தை வாழ்ந்த நாட்டிலே
தாயும் வாழ்ந்த நாட்டிே
சொந்த மற்ற பிரசையாய் - நிந்தை யுற்று வாழ்வதா'
ஆதிஉலகத் தாய்மொழி
அமுத மனைய தமிழ்ெ
நீதி யற்ற சூழ்ச்சியால்
நீர்மை குன்றிப் போவத
வடக்கும் தெற்கும் பரந்திட வளரி லங்கை ஆண்டந
இடர்ப்பட் டயலார் காலிலே ஈன முற்று வீழ்வதா?
எங்கள் உரிமை கேட்கிறோ என்ன நாங்கள் ஊமைய
தங்கள் நாட்டில் தங்களரசு
தமிழர் நாட்டல் தீமைய
சூழும் அடிமை போக்கவே சொந்த ஆட்சி பூக்கே தோழர் பணிகள் ஆற்றுவே சுதந்தி ரப்போர் தோற்

தந்திரப் போர்ப் பண்
லவி
Ll
ாய் (அமுத
th
L? அெமுத
நம்
ᎧᏓ)
நாம் p அெமுத
DIT
H? (அமுத
TLfb
)
அெமுதல்
ம்
H?
I? (அமுத)
G
TLň
றுவோம். (அமுத)
- தியாகி

Page 357
விடுதலை இயக்கத்தார் சி மூதறிஞர்
"சிறைக்கு உடல் செல்வதால் மட்டும் ! செல்வதை நன்மை என்று இருதயம் ஏற்றுக்
'சிறைக்குச் செல்வது தேசபக்தர்கள் சிறைக்குச் செல்வதால் நன்மை உண்டாகாது
"அடிமைநாட்டில் சிறைக்கு வெளியே காரணமாகச் சிறைக்குச் சென்றால்தான் சிறை
'ஏதோ ஒரு பலனை உத்தேசித்துச்
உண்டாகாது."
விடுதலை இயக்கத்திற்குத்
பேரறிஞர்
'தம்பி விடுதலை இயக்கத்திற்குத் தே கொடுக்கத்தக்க செல்வவான் அல்ல! - 6 வேளைக்கு ஒரு வேடமிடும், அரசியல் கழை இலட்சியத்திற்கு வலவு தரத்தக்கதாக அை அவர்கள் குடிசை வாழ்வோராக இருக்கலாம்; இருக்கவேண்டும்! - தேர்தலில் ஈடுபடலாம் கூடாநட்பும் - கொள்கை இழப்பும் தேடிக்ெ

6
றைச்சாலை செல்வது பற்றி
ராஜாஜி!
நன்மை உண்டாகிவிட மாட்டாது. சிறைக்குச்
கொள்ளவும் வேண்டும்."
செய்யும் காரியம் என்று எண்ணி மட்டும் ."
இருப்பதனால் உண்டாகும் மனவேதனையின் வாசம் மூலம் சுதந்திரத்தைப் பெற முடியும்."
சிறையை நிரப்புவதால் எவ்வித பலனும்
தேவைப்படுவோர் பற்றிப் அண்ணா!
வைப்படுபவன் - எட்டு இலட்சம் கொட்டிக் ாதிர்ப்புக்கு அஞ்சாத ஏறுகள் வேண்டும்! க்கூத்தாடிகள் அல்ல! - எந்தச் செயலையும், மத்துக்கொள்ளுத்தக்கவர்கள் வேண்டும்! " ஆனால் கொள்கைத் தங்கம் தொண்டோராக ; ஆனால், வெற்றிக்காக ஏக்கங்கொண்டு, காள்ளக்கூடாது"

Page 358
NAVNZVNVSZVVYNVMVVVhVYAVaNYAV
தலைவர்கள்
தீட்
வரலாற்றுக்
(347-409


Page 359
(U) T
G


Page 360
O O g) GTIG85 IT6 தமிழேந்தல்
நடுநடுங்கும் மேனி நடுங்காக் கொள்கை; "நடுநடுங்கும் கைகால்கள் நடுங்காக் கொள்கை நாவெடுத்துப் பேச முடியா விட்டாலும் சிடுசிடுப்பு இல்லாது சீராய் நேராய்ச்) செந்தமிழர் வாழவிற்கே சேர்த்த சொற்கள் அடுத்தடுத்து வருவதனை அழகு ஈழம் ஆர்வத்தோ டெதிர்பார்த்து அதனைக் கேட்கும்! நடுநிலைமை தவறாத
நல்ல நோக்கு நம்தமிழர் மூதறிஞர்
செல்வா நாக்கு பஞ்சடைந்த இருகண்கள்,
ஆனால் அந்தப் பார்வைதான் தமிழ்மகனைப்
பலவானாக்கும்! வெஞ்சிறையுள் புகுதற்கும்
விறலை ஈனும் வேகத்தைத் தீவிரத்தை
மேலும் கூட்டும்! அஞ்சாமை மந்திரத்தை அகத்தில்
ஒதும்! ஆயிரமாய்த் தியாகிகளை ஆக்கப்போகும்! நஞ்சுகளை அமுதாக்கி நமக்கு நல்கும்! நாற்பதுலட்சம் தமிழர் நாட்டை மீட்கும்!" என்று, எளிய - இனிய - ஏற்றமிக்க தமிழ்ச் சொற்கள் கொண்டு, எம் தந்தை செல்வாவின் சிறப்பினை - சீரினை - தமிழ் ஈழத்தின் கிழக்கு மாகாணக் கவிஞன் "அக்கரைச் சக்தி” வாழ்த்தும் வாழ்த்துரை - பொருள் பொதிந்த பொன்னுரையாகும்.
கவிஞர் கூறுவதுபோல், நடுநடுங்கும் கைகால்களோடு, ஒல்லிய குச்சி வடிவம் தாங்கி, விரைந்து நாவெடுத்துப்பேச
 

6))
ாட செல்வா ஈழவேந்தன்
முடியாத நிலையிலேயேதான் இன்றுதந்தை செல்வா வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையிற்றான், இந்தியாவிற்கு விடுதலை பெற்றுக்கொடுத்த காந்தி அடிகளின் உருவமும், பகற்கனவு என்று கருதபபட பாகிஸ்த்தானைத் தோற்றுவித்த ஜின்னாவின் உடலும் இருந்தது. வேறு சொற்களில் விளம்பின், இறுதிக் காலத்தில் காந்தி அடிகளின் உடலின் நிறை 95 இறாத்தல் களாகும். முகமது அலி ஜின்னாவின் நிறை 70 இறாத்தல்களாகும். ஊதிவிட்டால் விழக்கூடிய ஒல்லியான வடிவம் தாங்கிய இவ்விரு பெருமக்களும், தமக்குள் மாறுபட்ட அரசியற் கொள்கை கொண்டிருந்தபோதும், அவர்களிடம் குடிக்கொண்டிருந்த அரசியல் நேர்மை, உள்ள உறுதி காரணமாக் நிலைநாட்டிய வெற்றிகள் - உலகை வியப்பில் ஆழ்த்திய வெற்றிகளாகும். நம் தந்தை செல்வா அவர்களும், நடுநடுங்கும் உடல் தாங்கி நலிவுற்ற நிலையிலும், அவர் உள்ளத்திற் குடிகொண்டுள்ள நடுங்காக் கொள்கை நம் தமிழ் இனத்தை வாழ்விப்பது உறுதி. நம் ஆன்மபலம் கொண்டே பல வெற்றிகளை உலகில் சான்றோர் நிலை நாட்டினர் என்று வரலாற்று ஏடுகளும் சாற்றுகின்றன. ஆகவே, ஏறத்தாழ 80 வயதுள்ள தமிழரசுத் தந்தையும், தமிழ் இனத்திற்குத் தன் வாழ்நாளிலேயே விடுதலையைப் பெற்றுத் தருவார் என்று நாம் எண்ணுவதை எவரும் தவறென்று கூறிவிட முடியாது.
சாதிவெறியைச் சாடும் சான்றோன்
ஈழம்வாழ் தமிழ் இனத்திற்காக ஓயாது போராடிவரும் செல்வநாயகம் அவர்கள்,

Page 361
-3
"தமிழ் இனம் தான் விரும்பிய விடுதலையைப் பெறுவதற்கு முதல் படியாகத் தம்மைத்தாம் தூய்மைப்படுத்தி ஒற்றுமைக் குரல் எழுப்பவேண்டும்" என்று கூறுவார். குறிப்பாக, நம் செந்தமிழ் இனத்தைச் சீரழிக்கும் சாதிவெறியைச் சாட அவர் என்றும் தயங்கியதில்லை. சாதிப் பாகுபாடும், தாழ்த்தப்பட்டமக்களை அடக்கி - ஒடுக்க முயலும் உயர்சாதியினர் போக்கும் எம்மை எங்கே கொண்டு தள்ளிவிடும் என்பதைப் பின்வரும் முறையில் அவர் உள்ளம் உருக எடுத்துரைக்கின்றார்: "அரசியல் துறையில் தமிழ் மக்கள் இலங்கையில் அழிந்து போகாமல் தப்பிப் பிழைப்பதற்குச் சீவமரணப் போராட்டம் நடாத்தி வருகிறார் கள். பெரும்பான்மைச் சமூகம் தங்களை அடக்கி, ஒடுக்கி வருவதாகத் தமிழ்ச் சமூகத்தினர் குரல் எழுப்புகிறார்கள். தமிழ்ச் சமூகத்துள் ஒரு பிரிவினர் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் வரையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையினருடைய அடக்குமுறை யைத் தாம் முறியடித்து வெற்றி காண்போம் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், நம்முள் ஒரு சாராரை நாமே இப்பொழுதும் அடக்கி - மடக்கி வைத்திருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாய் இருக்கும் வரை, எப்படிநமக்கு அரசியல் போராட்டத்தில் வெற்றி கிடைக்கும்?” செல்வநாயகம் அவர்களின் செம்மை உள்ளத்திற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு என்ன இருக்கமுடியும்? தமிழ் ஈழத்தை ஒன்றுபடுத்தியவர்
சாதிவெறியைச்சாடிய செல்வநாயகம் அவர்கள், ஈழத் தமிழரிடையே காணப்பட்ட - தமிழ் இனத்தின் ஒற்றுமைக்கும் விடுதலை உணர்விற்கும் ஊறுசெய்யும் மாகாண வெறியையும் தகர்த்தெறிந்த பெருமைக்கும் உரியவராவார்.
வடக்கு, கிழக்கு, மலைநாடு, யாழ்ப் பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை என்று தமக்குள் மாறு பட்டு, வேறுபாட்டு, கூறுபட்டுக் கிடந்த தமிழ் இனத்தை 'பேசும் மொழியால்,

50
கொண்டொழுகும் பண்பாட்டினால், கடைப் பிடிக்கும் வாழ்க்கை நெறியினால் நாம் ஒருவர்" என்ற இன உணர்வினை, இவரைப்போல் இவருக்கு முந்திய எந்த அரசியற்றலைவரும் ஏற்படுத்தியதில்லை. கிழக்கு மாகாணத்தின் குக் கிராமங்களிலும், மலையகத்தின் தோட்டப் பகுதிகளிலும் இவரைக் காண மக்கள் திரள்கின்ற தன்மையையும், கையெடுத்துக் கும்பிட்டு - இவரின் காலில்
விழுந்தும் வணங்குகின்ற காட்சியையும் நேரிற் கண்டவன் என்ற முறையில், இவரைப் போல் வேறு ஒருதலைவன் இப்பேற்றினைப் பெறவில்லை என்பதை என்னால் அறுதியிட்டு உறுதியுடன் கூறமுடியும். தன்னடக்கத்தின் திருவுருவம்:
தன்னைத் தமிழ் மக்கள், "தம்மை
உய்விக்க வந்த தமிழ்த் தெய்வமாக வழுத்தி வாழ்த்திய போதும், எல்லை மீறிப் போற்றிப் புகழ்ந்த போதும் அவரிடம் 'நான்' என்ற செருக்கு மருந்தளவும் குடிபுகுந்ததில்லை. “பணியுமாம் பெருமை” என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு செல்வாவின் வாழ்வு. ‘என்மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு மிகுதியால் இங்கு என்னைப் பாராட்டிப் பேசினீர்கள். தனிப்பட்ட முறையில் நானோ அன்றேல் வேறு ஒருவரோ புகழ் பெறத் தகுதியில்லை. தனிப்பட்ட எவரையும் நீங்கள் போற்ற வேண்டாம். எமது கட்சியை, எமது இலட்சியத்தை நீங்கள் போற்றுங்கள்! புகழுங்கள்!! அவைதான் நிலையானவை. தனிப்பட்ட எவரும் நிலையானவர் எனக் கூற முடியாது" என்று எம் மூதறிஞர் ஓரிடத்திற் குறித்துள்ள கருத்து, எவ்வளவு தூரம் அவருக்குக் கொள்கைப்பற்று உண்டென் பதையும், g56floGolfgait 6 furt' 00L (Personality cult) எவ்வளவிற்கு அவர் வெறுக்கிறார் என்பதையும் ஆழமாய், ஆணித்தரமாய் எடுத்துக்காட்டுகிறது.
முன்கூட்டி உணரும் நுண்ணறிவு:
மூதறிஞர் செல்வாவிடம் யாம் காணும் மற்றுமோர் தலைசிறந்த பண்பு - ஏனைய

Page 362
35
தலைவர்களிடம் மிக அருமையாகக் காணத்தக்க பண்பு; தமிழ் இனத்திற்கு ஏற்படக்கூடிய பேரின்னல்களை, இன்று நேற்று அல்ல - அன்றே மிக்க நுண்ணறிவுத் திறத்தோடு, தீர்க்கதரிசன உணர்வோடு கூறிய அறிவுரைகள் - எச்சரிக்கைகளேயாகும். 1948ஆம் ஆண்டிலேயே" இன்று குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இந்தியத் தமிழரைத் தாக்கும் அரசாங்கம், நாளை மொழிச் சட்டத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கும் உலைவைக்கும்" என்று கூறிய மொழிகளும், 1950இல், "தற்போது தமிழ் இனத்தைச் சிங்கள இராச்சியமே ஆண்டுகொண்டிருப்பதுடன், தமிழ் இனத்தைப் பலவினப்படுத்தவும் அது முயல்கிறது.உதாரணமாக, உங்களது மாகாணத்திலே அரசாங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல் ஓயாத் திட்டத்தைப் பாருங்கள்! அங்கே கூடிய சீக்கிரமே சிங்களவர் குடியேற்றப்படுவார்கள். இது தமிழருக்கு நன்மைசெய்ய அல்ல; அவர்களது உரிமை களைப்பறிமுதலாக்கவே தான்” என்றுகூறிய மொழிகளும் ஒரு உண்மைத் தீர்க்கதரிசி யைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
தீர்க்கதரிசி,
முதலில் நம் கொடியுரிமையைப் பறித்த அரசாங்கம், பின்பு மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமைகளைப் பறித்தது. அடுத்து எம் நில உரிமையைப் பறித்தது. பின்பு எம் மொழி உரிமைக்கு உலைவைத்தது, எம் உத்தியோக உரிமையைத் தட்டிப்பறித்த அரசாங்கம், இன்று எம் இளைஞர்களின் படிப்புரிமையையும் பாழாக்கிவிட்டது. மேற்குறித்த பறிபோன உரிமைகளை ஒழுங்குபடுத்தி நோக்குகையில், "தந்தை செல்வா ஒரு தீர்க்கதரிசி என்பதை எவர்தான் மறுக்க முடியும்? தந்தை செல்வாவைவிட மூளைசாலிகள் பலர் இந்நாட்டில் இருந்தும், அவர்களுக்கு இல்லாத - "இந்த வருவதை உணரும் அறிவு இவர் பெற்றிருந்ததற்குக்

1.
காரணம், இவரின் உள்ளம் தூய்மைபெற்று விளங்கியதேயாம். உள்ளத் தூய்மையோடு, தெளிவோடு, துணிவோடு எடுத்துரைக்கும் கருத்துக்களை - இன்றில்லாவிடினும், நாளை பணிவோடு உலகம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஆகவேதான் "தந்தை செல்வாவின் செம்மை சான்ற கருத்துக்களை இன்றில்லாவிடினும் - நாளையாவது சிங்கள அரசு ஏற்றேயாகும்' என்ற நம்பிக்கையுடன் நாம் வாழ்கிறோம்.
அன்று தன் தள்ளாத வயதில், "என் இறுதி மூச்சுவரையும் அட்டூழியங்களையும் பொய்ம்மையையும் எதிர்த்துக் குரல் எழுப்பத் தயங்கேன்” என்று சேர் பொன். இராமநாதன் அவர்கள் தமிழர் சார்பில் இடி முழங்கினார். இன்று எமக்கிடையே ஏறக்குறைய அதே தள்ளாத வயதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை செல்வா அவர்கள், “இனிமேல் சிங்கள அரசாங்கங்களை நம்பிப் பயன் இல்லை. பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஒப்பந்தங்கள் செய்து, ஒத்துழைப்பு வழங்கியும் பார்த்துவிட்டோம். இனி எமக்குள்ள ஒரே ஒரு வழி - தமிழ் ஈழம் அமைப்பதே" என்கிறார். அவர் மேலும் கூறுவது யாதெனில், 'தனிநாடு அமைப்பது வில்லங்கமான காரியம்தான். ஆனால் தமிழ் இனம் தப்பிப் பிழைக்க வேண்டுமெனின் இதைவிட வேறு வழியில்லை.” என்கிறார்.
ஆகவே ஈழம் வாழ் தமிழ் மக்களாகிய நாம் தந்தை செல்வா காட்டும் பாதையில் பின் தொடர, இன்றே பின்வரும் உறுதியை எடுப்போமாக! தமிழன் வாழவேண்டின் தமிழன் தன்னை ஆளவேண்டும். இதுவே தந்தை செல்வாவிற்கு நாம் அளிக்கும் தலையாய உறுதி மொழியாகும். எம் நெஞ்சைவிட்டு அகலாத தம் புன் முறுவலுடன் அவர் இதை ஏற்பது உறுதி
வாழ்க செல்வா நாமம் வளர்க செல்வா புகழ்!

Page 363
கிழக்கில் கட்சி
அெnல்லின் செ. இராஜது
லங்கை முழுவதும் தமிழரசுக் கட்சியின் ஆரம்பமும் - வளர்ச்சியும் எதிர்ப்பின் முனையிலும் - ஏளனத்தின் முன்னிலையிலுமே வளர்ந்தது.
தமிழரசுக் கட்சியின் முதலாவது பகிரங்கப் பிரசாரக் கூட்டம், நல்லூர் பூரீ கைலாசபிள்ளையார் வீதி முன்றிலில் ஏற்பாடாகியிருந்தது. அக்கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். கூட்டம் பெரும் குழப்பத்தில் நடைபெறாது கலைந்தது.
கிழக்கி லங்கை யி ன் சரித்திரம் வேறுவிதமாக இருந்தது.
யாழ்ப்பாண மக்களுக்கும் - அரசியல்வாதிகளுக்கும் எதிராகக் கிழக்கிலங்கை மக்களின் எண்ணங்களும் - அரசியற் சிந்தனைகளும் வேரூன்றியிருந்த காலம்!
தமிழ்க் காங்கிரஸ் திருகோணமலை வரைதான் தனது கொள்கையைப் பரப்ப முடிந்தது.
மட்டக்களப்புப் பகுதியிலே ஒரு பகிரங்கப் பொதுக்கூட்டத்தை நடத்த விடாமற் பொதுமக்களே ஒதுக்கிய காலம்!
படித்தவர்கள் - பணக்காரர்கள் - பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு - யாழ்ப்பாணத்துவேஷத்திற்குத் தூபமிட்ட காலம்!
தமிழர் கட்சி அரசியல் மட்டக் களப்புப் பகுதியில் துளிர்விடாத காலம்
 

வளர்ந்த கதை
செல்வர்
| 60)), L-fn... 2 -.
அந்தக்காலத்தில் தமிழரசுக் கட்சியின் கருத்துக்களை இங்கு பரப்புவது - கல்லில் நார் உரிப்பது போலிருந்தது.
கல்லெறிகளுக்குக் கூட்டங்களிற் பஞ்சமில்லை.
நடுச்சந்திகளில், ஏவிவிடப்பட்டவர் களால் தாக்கப்பட்டோம்!
"மட்டக்களப்பை யாழ்ப்பாணத்துக்குக் காட்டிக் கொடுக்கின்றோம்." இப்படி இதைவிட மோசமான தூற்றுதல் களுக்கும் - வசைமாரிகளுக்கும் பஞ்சமில்லை.
அக்காலம், பகுத்தறிவு இயக்கம் இளைஞர்கள் மத்தியில் பரவியிருந்த காலம்!
கிராமத்திற்குக் கிராமம் பகுத்தறிவு இயக்க இளைஞர்கள் சிலர் இருந்தனர். துணிவும் - தைர்யமும் - கட்டுப்பாடும் - ஒழுங்கு முடைய இளைஞர்கள்.
இவர்கள் என் தலைமையை ஏற்றும், என்
சொல்லைக்கேட்டுச் செயற்படும் அடக்கமும் - பக்தியுமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
இவர்களைக் கொண்டு ஆங்காங்கே பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தோம்.
மட்டக்களப்புப் பட்டணத்தில் எங்கள் பகுத்தறிவு இயக்கப் பணிமனை தீக்கிரையாயிற்று இயக்க இளைஞர்கள் தாக்கப்பட்டார்கள்!

Page 364
3.
தமிழரசுக் கட்சியின் பொதுக்கூட்டத் தை நடத்திய மறுநாள், பட்டணத்தின் மத்தியில் - பகல் வேளையில் - பகிரங்கமாகத் தாக்கப்பட்டேன்!
களுதாவளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், யாரோ என்மீது அன்புகொண்ட அன்பன் எறிந்த கல் - என் இடது கண்ணைப் பதம்பார்த்தது.
மண்டூரில், மறைந்த தலைவர் திரு. எஸ். எம். இராசமாணிக்கம் அவர்களின் தாயகத்தில் கூட்டம் நடத்தச் சென்ற தந்தை செல்வா - தலைவர் வன்னியசிங்கம் - தளபதி அமிர்தலிங்கம் ஆகியோர் திருப்பியனுப்பப் பட்டனர்! பொதுக்கூட்டம் தடைசெய்யப் பட்டது. ஊர் முழுவதும் பெரும் குழப்பம்.
கல்முனையில், கூட்ட மேடையில் இருந்த மேசையும் - கடிகாரமும் காடையர் களால் எங்கள் முன்னிலையிலேயே எடுத்துக்கொண்டு போகப்பட்டன.
வந்தாறுமூலை - சிற்றாண்டிக்குடி போன்ற இடங்களில், பொதுக் கூட்ட
மேடைகளுக்கே போக முடியாமல் இருந்தது
1952 - பொதுத்தேர்தல் வந்தது. எங்கள் J. Lo Fluileir go Tri Lolei) அபேட்சகர்களை நிறுத்தப் பகீரதப் பிரயத்தனம் செய்தோம்.
கல்குடா - மட்டக்களப்பு - பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் தேர்தலுக்கு அபேட்சகர்களைத் தேடி அலைந்தோம்.
படித்தவர்கள் வீட்டுப் படிக்கட்டு களை ஏறி இறங்கின்ோம். பட்டதாரிகளைச் சந்தித்துப் பார்த்தோம். சட்ட வாதிகளைக் கேட்டுப் பார்த்தோம். தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட - எவரும் முன்வரவில்லை! இந்த நிலையிலே, நான் திருகோண மலைக்குச் சென்றேன். அங்கு முகாமிட்டுத் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டேன்.

3}
1952ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், தந்தை செல்வா காங்கேசன் துறையில் தோற்கடிக்கப்பட்டார். அவருடைய தோல்வி - எங்களையெல்லாம் உசுப்பிவிட்டது
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் எதிரிகள் கை ஓங்கியது. “யாழ்ப்பாணத்தில் தலைவரே தோற்றுவிட்டார்; இங்கு கட்சி வளர்க்கிறார்களாம் கட்சி" என்று சந்திக்கு சந்தி - தெருவுக்குத் தெரு நின்று தூற்றத் தொடங்கினார்கள். இந்தச் சமயத்தில், நாங்களும் விடாது வேகமாகச் செயற்படத் தொடங்கினோம்.
கருத்தரங்குகள் - பொதுக்கூட்டங்கள் ஆங்காங்கு நடத்தினோம். கோயில்களில் இலக்கியப்பேச்சுக்கள்; அவை தமிழ் மக்களின் நாகரீகச் சிறப்பை - பண்டைய தமிழகத்தின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவனவாக அமையும்.
கல்லூரிகளில் - இலக்கிய மன்றங் களில் முழங்குவோம்; அவை தமிழர்களின் பொற்கால வாழ்வின் பெருமைகளையும் - இக்காலச் சிறுமைகளையும் கூறுவனவாக விருக்கும்.
1956 - களனியில், யூ என். பிக் கட்சி "சிங்களம் மாத்திரம் தீர்மானத்தைப் பிரகடனம் செய்தது.
அத் தீர்மானத்திற் கெதிராக, மறைந்த லபுணபுரிவாவ தலைமையிலும், அவர் மாணவர் செட்டிபாளையம் செல்வநாயகம் அவர்கள் தலைமையிலும் அறப்போர் அணித் தலைவர் அரியநாயகமும், நாங்களும் மட்டக்களப்பு மைதானத்தில் ஒரு யாகம் செய்தோம்.
மின்னல் வேகப் பிரசாரங்களை மேற்கொண்டோம்.
மறைந்த டாக்டர் பரமநாயகம், காலஞ்சென்ற வைத்தீஸ்வரன் ஆகியோர் கிராமங் கிராமமாக இயக்கப் பணிகளுக்குச் செய்த சேவை - மனக்கண்முன் வருகின்றது.

Page 365
5{3}سسسسسة
தந்தை செல்வா - அருத்தலைவர் வன்னியசிங்கம் - அன்புநிறைய டாக்டர் நாகநாதன் - தளபதி அமிர்தலிங்கம்ஆகியோர், காலத்திற்குக்காலம் நடாத்திய பொதுக்கூட்டங்களில் தூவிய மணிமணி யான கருத்துக்கள் - வருங்காலத்தைப் படம் போட்டுக்காட்டிய தீர்க்கதரிசனமான பேச்சுக்கள் - கட்சியை வளர்த்தன; தமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை பூட்டின.
1956 - பொதுத்தேர்தல் வந்தது. "சிங்களம் மாத்திரம் தீர்மானம் கொண்டு வரப்பட்டதனால், யூ என். பி. யிலிருந்து திருஎஸ்எம். இராசமாணிக்கம் விலகினார்; தமிழரசக் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் அவர் வருகை, இப்பகுதி மக்கள் மனதில் நம்பிக்கையையும் - தைர்யத்தையுமளித்தது. கல்குடாவில் திரு. பொ. மாணிக்கவாசகர் கட்சியில் சேர்ந்தார். 1956 - பொதுத் தேர்தலில் திருவாளர்கள்: இராசமாணிக்கம் - மானிக்கவாசகர் போன்றோர் (தேர்தலில்) தோற்றாலும், மக்கள் கட்சியின் கருத்துக்களை ஏற்கும் வண்ணம், தேர்தல் மேடைகளைக் கொள்கை மேடைகளாக்கினோம்.
கல்முனையிலும், பொத்துவிலிலும் முறையே: முதலியார் காரியப்பரும் - ஜனாப் முஸ்தபாவும் வென்றார்கள்; சில மாதங்களில் கட்சியை விட்டு வெளியேறி, அரசாங்கத் துடன் சேர்ந்துகொண்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்தேன்.இக்காலத்தில் இளைஞனாகவும், தனித்தும் நின்ற எனக்குக் கைகொடுக்கவும் - கிழக்கு மாகாண மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலும் தந்தை செல்வா செயல்பட்டார்.
ஆம் 1956 - திருகோணமலை நடையாத்திரைக்குத் தான் மட்டக்களப்புக் கோஷ்டியுடன் சேரப்போவதாக அறிவித்து,

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி நடக்க முன்வந்தார். நடையாத்திரை தொடங்கிய அன்று, "தீர்க்க தரிசி செல்வநாயகம் என்ற நூலை நான் வெளியிட்டு, மட்டக்களப்பில் ஏலத்தில் விற்று, நிதியைக்கட்சிக்குக் கையளித்தேன். இலங்கையில் தந்தை செல்வாவைப் பற்றி வெளிவந்த முதல் நூல் அதுதான்!
சிங்கள "சிறீ'ப் போராட்டத்திலும், தந்தை செல்வா சிறீயை அழிக்க மட்டக் களப்புக்கு வந்தார்.சிறீயை அழித்து மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அடைக் கப்பட்டார்! அடுத்த வருடம், அவருடைய பிறந்த நாளை மட்டக்களப்பு மைதானத்திற் கோலாகலமாகக் கொண்டாடினோம். அறுபத்து நான்கு (64) தாய்மார்கள் மாலையிட்டு வாழ்த்த - நான் மட்டக்களப்பு மண்ணில் விளைந்த நெல் மணிகளால் இழைத்த மாலையைச் சூட்டினேன்.இலங்கையில் தந்தை செல்வாவுக்குப் பிறந்த நாள் விழா வெடுத்த பெருமையும் மட்டக்களப்புக்கே உரியது.
1956க்குப் பின், மட்டக்களப்பு அரசியலில் சூடுபிடித்தது. "சிங்களம் மாத்திரம் சட்டத்தைத் தொடர்ந்தும் - சிறீப்போராட்டத்தை அடுத்தும் மட்டக் களப்புப் பகுதி எரிமலையாக மாறியது!
துறை நீலாவணையில், மக்கள் இராணுவத்தையே தாக்கும் நிலைக்கு ஆளானார்கள்! திரு. இராசமாணிக்கம் நிலைமைகளைத் திறமையாகச் சமாளித்தார்.
கல்குடாப் பகுதியில், துப்பாக்கிச் சூடுகளும் கலவரங்களும் தலைதுாக்கின! பொ. மாணிக்கவாசகர் பொறுமையோடு நிலைமைகளைச் சரிசெய்தார்.
மட்டக்களப்புப் பகுதியில், புகை வண்டி தடம் புரண்டது. அதைத் தொடர்ந்து எழுந்த குமுறல்களைத் துடிப்புள்ள

Page 366
3.
இளைஞர்கள் (அன்று அரசாங்க ஊழியர்கள் அந்நிலையில் அவர்களிற் சிலர் இன்னும் இருப்பதனால் பெயர்களை வெளியிட நான் விரும்பவில்லை) வெற்றிகரமாகச் சமாளித்தனர்.
மட்டக்களப்பு மக்கள் இதயத்தில் வேப்பங்காயாக - வேண்டாதவர்களாக வேரூன்றியிருந்த யாழ்ப்பாண வெறுப்புக் கெதிராகக் கட்சி வளர்ந்த கண்ணிர் நிறைந்த கதை; கல்லில் நார் உரித்த கதை; கத்தி
90ിർഖ
ஒட்டு வாங்கவு வேட்டுத் தாங்கள் O
கட்சிகளுக்காக மச் மக்களுக்காகக் க
O அடிக்கடி கட்சிவிட்டு o ரசியற் க
 
 
 

5 H
முனையில் நடந்த கதை; அக் கதையின் முடிவு - மட்டக்களப்பு இன்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் பாசறையாக ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றது!
இப்பயணத்தை ஆரம்பித்த என்போன்றோர்க்கு - இதைவிட இனிக்கும் செய்தி வேறென்ன இருக்கமுடியும்?
தமிழ் வாழ்க! தமிழிம்ை வாழ்க! தமிழ் ஈழம் மலர்க!
தி யென்றால்
தெரியவேண்டும்
ம் துணியவேண்டும்.
O O
கள் பலியாகக்கூடாது
சிகள் பலியாகட்டும் t
O O
க் கட்சி மாறுபவர்களை
சியும் ஒற்றலாகாது

Page 367
+ சிந்து
sweat SINDU )
Sri Lankan, South
ارامf
சுத்தம், சுவை, தரம் மி
அன்பு, பண்பு, பயிற் விலையிலும் மேலா6 குறைந்த விலையில் அநுபவமும் திறமையும் உ
பக்குவம் மிக்க இரண்டும் இணைந்த
1ே5 பவுன்களுக்கு மேல் சாப்ப உட்பட்ட இடங்களுக்கு ச்ெ
Free delivery for orders
திருமணம், பிறந்ததினம், பூ உங்கள் வைபவங்கள் எது குறைந்த விலையில் ருசிமிக்க முதலில் எங்
274 B, Barking Roac Te: O2O

மஹால MÄHKL, ணி தமிழ் உணவகம்
རྫ་
ndian Re Straurant
ല്ലേd
க்க உணவு வகைகள் சி மிக்க பணிவிடை
ன பெறுமதி உணர்வு குன்றாத மனநிறைவு ள்ள உணவு ஆக்குனர்கள் பரிமாறுனர்கள்
இன்முக இயக்குனர்கள்
ாடு வாங்கினால் 3 மைல்களுக்கு ாண்டு போய் கொடுப்போம்.
within 3 miles Overf 15.00
புனித நீராட்டு விழா மற்றும் வானாலும் குறித்த நேரத்தில் உணவுகளைச் சுடச்சுட பரிமாற ளை நாடுங்கள்.
, East Ham, London E6
471 6226

Page 368
கடமை வீரர்களை என்செ
இயற்கையி
என் 3ெ
 
 

க் காவல் வீரர்கள் sij6ui?
R
கச்சேரியின் மறுபுற வாயிலாலேனும் வெளிச் செல்ல முயன்றார் அரசாங்க அதிபர். அதற்கு வழி சமைக்க முயன்றனர் பொலீஸார். விடுவார்களா வீர மறவர்கள்? அரசாங்க அதிபர் இங்கிருந்து செல்வதானால் எங்கள் மார்புகளைப் பாதையாக்கி அப்பாதை வழியாக அவரது வண்டி நகர்ந்து செல்லட்டும் என்று தோள் தட்டித் தரையிற் படுத்திட்டர்ர் - உயிரைத் துச்சமாக்கிட்டார் திரு. வி. தர்ம லிங்கமும் மற்றுமுள தீரர்களும்.
ன் சதிதான்
ய்யும்?
தமிழன்னையின் துயர்துடைக்கப் போர் தொடுத்துள்ள வீரத்தாய்க் குலத்தோர், ஏறக்குறைய இரு மாதங்கள் இயற்கை அன்னையின் வெயிலின் கொடுமையை மட்டுமல்ல, மழையின் கொடுமையையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவ்வாறு சந்தித்தவர்களோடு திரு. சி. கதிரவேற் பிள்ளையின் அன்னை திருமதி சி. வாலாம்பிகை அம்மாளும், திருமதி அ. மங்கையர்க்கரசி அம்மையாரும் அடங்குவர்.

Page 369
கடல்மடைதிறந்த வெள்ளமெனப் போர்க்கள காட்டாட்சி தர்ப்பாரின் காவல்துறையினர்
அரசமுயற்சி
யாழ். நாவாந்துறையில், சத்தியாக்கிரகத்தை ஆட்சியாளர் முயன்றபோது அதை எதிர்த்து தலைமையில் மக்கள் சத்தியாக்கிரகம் புரியும்
 
 

ம் திரண்ட மாணவ மணிகளைத் தடுத்தனர்
முறியடிப்பு!
முறியடிக்க - உணவு விநியோகம் செய்ய அஞ்சா நெஞ்சினர் அமிர்தலிங்கம் தம்பதியர்
காட்சி
ار

Page 370
-3
சோசலிச சுவடுகள
புரட்சி எழுத்த
".1953 ஹர்த்தால் நடவடிக்கையைக் (பிலிப்பின் சமசமாஜக் கட்சி - கம்யூனிஸ்ட் க மட்டுமே எஞ்சிநின்றன.
பெ ரும்பாலான ஜெர்மனியர் களின் சோசலிசம் தெளிவற்றதும், வரையறுக்கப்படாததும், வரையறுக்க முடியாததுமாக இருக்கிறது" என்றார் பிரெட்றிக் எங்கெல்ஸ் - 1845ல் இக் கூற்று இன்றும் இந்நாட்டுக்கு எவ்வளவு பொருத்தமானது சோசலிசக் கோட் பாட்டினைத் தமது பிதுரார்ஜித் சொத்தாகப் பேணிய பரம்பரைச் சோசலிசப் பயணிகள் பலரும், சோசலிசத்தைச் சொறியும் சிரங்கும் படிந்த உருவமாக இங்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். புரட்சிக் கோட்பாடு களும், வர்க்கப்போர் நெறிப்பாடுகளும் அரசியல் அங்காடியிலே இவர்களால் அற்ப இலாபத்திற்காக விற்கப்பட்டிருக்கின்றன. நிலப்பிரபுத்துவ வர்க்கமொன்றின் பரம்பரையின் காலடியிலே மார்க்சிச சித்தாந்தங்களை இவர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருக்கிறார்கள். மானியச் சமூகப் பண்ணையொன்றில் பிரபுத்துவப் பசளையிலே விளைந்த ஒரு பிற்போக்கு வர்க்கம், இனவெறியும், மதவெறியும் கொண்ட சிங்கள - பெளத்த ஆட்சியொன் றைச் சோசலிசத்தின் பெயராலே நடாத்திக் கொண்டிருக்கிறது. கம்யூனிச - சோசலிச சித்தாந்திகள் இந்த ஆட்சியின் புகழ்பாடு கின்றனர். இந்தச் சூழ்நிலையிலே, இலங்கைத் தமிழரசுக் கட்சி கடந்த கால் நூற்றாண்டாக நடாத்திய Gafntafe5&t Luleb எத்தன்மையது?

拉}一
வில் தமிழரசுக்கட்சி
ாளர் கரிகாலன்
கொண்டு நடாத்துவதற்குச் சமசமாஜக் கட்சியும் ட்சி), ஐக்கிய முன்னணியும், தமிழரசுக் கட்சியும்
* திரு. லெஸ்லி குணவர்த்தனா
அடிப்படை வேற்றுமை:
இலங்கை அரசியல் வானிலே தமிழரசுக் கட்சி 1949ல் உதயமானது. இக் கட்சியின் கொள்கைத் திட்டமும், வேலைத் திட்டமும் ஏனைய கட்சிகளினின்றும் அடிப்படையாகவே மாறுபட்டன. வர்க்கவாதக் குரல்களையும், வகுப்புவாதக் கோஷங்களையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் எழுப்பி, சோல்பரி அரசியலமைப்பின் கீழ் ஆட்சிகளை மாற்றுவதில் ஏனைய கட்சிகள் ஈடுபட்டிருந் தன. தமிழரசுக் கட்சியோ வஞ்சகத்தால் வாழ்விழந்து போன ஓர் இனத்தின் அடிப் படை அரசியலுரிமைகளை நிச்சயப்படுத்தி நிலைநிறுத்துவதற்கென, அந்த அரசியலமைப்பையே தகர்த்தெறிய அவதாரமெடுத்திருந்தது. வர்க்கபேதத்தின் வரம்புகளையே அடையாளங் காண் முடியாதவாறு அனைத்துத் தமிழரும் அரசியல் அடிமைத்தனத்திலே அழுந்திக் கொண்டிருந்த வேளையில், அடிமை களையே அக்குவேறு ஆணிவேறாக வர்க்கரீதியாகப் பிரிப்பதிலே தமிழரசுக் கட்சி அக்கறை காட்டவில்லை. தமிழ் மக்களின் சக்தியனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் ஒன்று திரட்டி, முதலில் அரசியல் சுதந்திரத்தை ஈட்டுவதிலேயே கட்சி கருத்தாயிருந்தது.

Page 371
3.
திருமலைத் தீர்மானம்:
அடிப்படை அரசியற்கேள்விகளுக்கு விடைகாணப் புறப்பட்ட கட்சிபொருளா தாரப் புலன்விசாரணைகளில் அழுத்தமாக ஈடுபடாதது புதுமையல்ல. தேவைப்பாடு களின் முதன்மை முறைகளை (Priorities) அரசியற் சுதந்திரம் பொருளாதாரச் சுதந்திரம் - என்றிவ்வாறு ஒழுங்காக வகுத்துக்கொண்டே, கட்சி இந்த இனத்தின் விடுதலை வரலாற்றை சோசலிசச் சுவடுகளில் வழிநடாத்திக் கொண்டிருக்கிறது. 1951ஆம் ஆண்டு ஏப்ரல் 13-15ஆம் தேதிகளில் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் அடிப்படை இலட்சியங்களை வரை யறுத்துக் கொண்ட கட்சியின் முதல் மாநாடு, அதன் சோசலிசக் கோட்பாட்டைக் கோடிட்டுக் காட்டிற்று. ஆங்கு நிறைவேற்றப் பட்ட கட்சியின் ஏழாவது தீர்மானம், தமிழினத்தின் விடுதலை 'முழுமையான சோசலிச பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலே' நிறுவப்பட வேண்டு மென அழுத்தம் திருத்தமாகக் கூறிற்று.
ஈட்டிமுனை:
ஈழத் தமிழ் மாநிலமான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இடதுசாரி இயக்கத்தின் ஈட்டி முனையாகவும், வலதுசாரி யூ. என். பி. - பிற்போக்குச் சக்திகளின் எதிர்ப்பு அணியாகவும் அன்று விளங்கியது தமிழரசுக்கட்சியே. இந்தக் கணிப்பைப் "பரம்பரை"ச் சோசலிச அணிகள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கி யிருந்தன என்று கூறினால், "புரட்சி" வட்டாரங்கள் இன்று புருவத்தை நெரிக்கலாம். ஆனால், அன்றைய வடக்கு - கிழக்கு மாகாண அரசியல் பின்னணியைத் தெளிவாக விமர்சிக்கத் தெரிந்தவர்கள் இதனை மறுத்தார். தமிழரசுக்கட்சி மார்க்சிசக் கருப்பையிலே உருப்பட்டதல்ல வெனினும், தமிழ் மாநிலத்து, இடதுசாரி அரங்கிலே தமிழரசுக் கட்சி "ராஜபார்ட் தாங்கியதற்குக் காரணம் உண்டு,
யூ என். பி. வைரி
இன்றுபோலவே அன்றும் தமிழ் மாநிலத்திலே மார்க்சிசக் கட்சிகள் வேரூன்ற

50H
முடியவில்லை. அன்றைய தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வலிமிக்க எழுச்சியின் முன்னே இடதுசாரிச் சக்திகள் எடுபட முடியவில்லை. அத்துடன், இச் சக்திகளுக்குத் தகுதியான தமிழ்த் தலைமையும் கிடைக்கவில்லை. சமசமாஜக் கட்சியின் துர்ப்பாக்கியம் போலும், கம்யூனிஸ்ட் கட்சியைவிட சமசமாஜக் கட்சிக்குத் தமிழ்த் தளங்களைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு அன்று மிகுந்திருந்தாலும், தோழர்கள்: சிற்றம்பலம், தர்மகுலசிங்கம் (ஜெயம்) போன்ற தகுதியும், செல்வாக்கும். மிக்க தலைவர்களும் இடைக்காலத்திலேயே காலன்வாய்ப் பட்டனர். குறிப்பாகத் தீவிர யூ.என்.பி. எதிர்ப்பியக்கத்திற்குத் தமிழ் மண்ணில் தலைமை தாங்க முற்பட்ட தோழர் ஜெயம், 1949ஆம் ஆண்டுமறைந்தமை மிகவும் முக்கியமானதாகும். தமிழ்க் காங்கிரஸ் கட்சி யூ என். பி. யுடன் இணைந்து மலைநாட்டுத் தமிழ்த் தொழிலாளர்களின் குடியுரிமையை யும் வாக்குரிமையையும் பறிக்க ஆதரவளித்த தைத் தொடர்ந்து, யூ என். பி. வைரியாக 1949ஆம் ஆண்டு அதாவது தோழர் ஜெயம் மறைந்த சில மாதங்களில் ஜனித்தது தமிழரசுக் கட்சி.
இடையில், ஆழமான ஓர் உண்மையை அழுத்தமாகக் கூறிவைக்கவேண்டும். இந்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் பிரச்சினையொன்றை நேரடித் தோற்று வாயாகக் கொண்டு - பாட்டாளிகளுக்கு இழைக்கப்பட்ட பச்சைத் துரோகத்தை துடைக்கவும், துரோகிகளைப் பழிவாங் கவுமென்றே தோன்றிய ஒரே அரசியல் கட்சி தமிழரசுக் கட்சியே. இந்த உண்மை சிலருக்கு நினைவில் நிற்பதில்லை
யூ என். பி. எதிர்ப்பியக்கம் தோழர் ஜெயத்தின் மறைவோடு கருகிவிடவில்லை. இதற்கு மாறாக, யூ என். பி. யாலும் அதன் ஏஜண்டுகளாலும் மிலேச்சத்தனமாகக் காட்டிக்கொடுக்கப்பட்ட தமிழ்/மக்களின் தன்மான அணியாக முகிழ்த்திருந்ததும், நேர்மையும் சீர்மையும் கொண்ட தலைமையைப் பெற்றிருந்ததுமான தமிழரசுக் கட்சியிலே படர்ந்தது.

Page 372
-3
கதாநாயகன.
தமிழரங்கிலே இடதுசாரி இயக்கத்தின் அல்லது யூ என். பி. எதிர்ப்பு அணியின் கதாநாயகன் தமிழரசுக் கட்சியே என்பதை நிறுவ மூன்று நிகழ்ச்சிகள் காத்திரமான வைகளாகும்: (1) 1952ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல், (2) 1953ஆம் ஆண்டு ஹர்த்தால். (3) 1956ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல்.
(1) 1952ஆம் ஆண்டுத் தேர்தல்:
தமிழரசுக் கட்சி முதன் முதலாக யூ. என். பி. பெருச்சாளிகளுடனும் அதன் உள்ளூர்ப் பேச்சாளிகளுடனும் தேர்தல் களத்தில் மோதியது. இத்தேர்தலில் சமசமாஜ - கம்யூனிச கட்சிகள் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு தந்தன. குறிப்பாக யாழ்ப்பாணத் தொகுதியில் திரு. ஜி. ஜி. பொன்னம்பலத் திற்கு எதிராகத் திரு. கு. வைகுந்தவாசனை நிறுத்துவதாகக் கம்யூனிசக் கட்சியும், திரு. அ. விசுவநாதனை நிறுத்துவதாகச் சமசமாஜக் கட்சியும் அறிவித்திருந்தனவாயினும், டாக்டர் இ. மு. வி. நாகநாதனை நிறுத்துவ தாகத் தமிழரசுக் கட்சி அறிவித்ததும், இரு கட்சிகளும் தேர்தலினின்றும் விலகி, தமிழரசுக் கட்சியின் வெற்றிக்குத் தீவிரமாக உழைத்தன. இத் தேர்தலில் நாடுபூராவும் இடதுசாரிகள் தோற்கடிக்கப்பட்டது பூோலவே தமிழ் மாநிலத்தில் தமிழரசுக் கட்சியும் யூ என். பி. யின் மூர்க்கத்தனமான தாக்குதலைச் சமாளிக்க முடியாது தோல்வியடைந்தது. (2) 1953ஆம் ஆண்டு ஹர்த்தால்:
ஏதேச்சதிகார யூ என். பி. அரசுக்கெதி ராக 1953, ஆகஸ்ட் 12ஆம் தேதி இலங்கை பூராவும் நடைபெற்ற மாபெரும் ஹர்த்தா லில், தமிழ் மாநிலத்தில் ஹர்த்தாலை நடாத்தவேண்டிய பொறுப்புத் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருந்தது. அக்கைங்கரியத் தைக் கட்சி கச்சிதமாகவே நிறைவேற்றியது. அந்தப் பெரும் போர் டட்லி சேனநாயக் காவையே பதவியை விட்டு விரட்டியது. அதன் வெற்றியிலே யார் யாரோ இன்று பெருமை பேசுகின்றனர். அந்த வெற்றிக்காக

s
முழுமூச்சுடன் உழைத்த சக்திகள் மூன்றே மூன்று என்பதையும், அவற்றுள் ஒன்று தமிழரசுக் கட்சி என்பதையும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி அவற்றுள் ஒன்றல்ல என்பதையும் இந்நாட்டின் அரசியல் வரலாறு அறியும். இந்த உண்மையைத் தென்னிலங்கையில் ஹர்த்தாலை முன்னின்று நடாத்திய சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. லெஸ்லி குணவர்த்தனா அவர்களே பதிவு செய்துள்ளார். அவர் கூறுவதாவது
". முடிவில், ஹர்த்தால் கிளர்ச்சியோடு
தம்மைச் சம்பந்தப்படுத்திக் கொண்டே அத்தனை அரசியற் கட்சிகளுள்ளும், செயலில் இறங்குவது என்ற நிலை வந்தபோது, (1) லங்கா சமசமாஜக் கட்சியுடன், (2) கம்யூனிஸ்ட் - சமசமாஜ ஐக்கிய முன்னணியும் (கம்யூனிஸ்ட் கட்சியையும் திரு. பிலிப் குணவர்த்தனாவின் சமசமாஜக் கட்சியையும் கொண்ட ஒர் அணி இப்பெயரில் சின்னாள் இயங்கிற்று), (3) தமிழரசுக் கட்சியும் மட்டுமே எஞ்சி நின்றன. சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரோ, கொள்கையளவில் தாம் ஹர்த்தாலுக்கு எதிர்ப்பில்லையாயினும், இலங்கை மக்கள் அத்தகைய ஒரு போராட்டத்தை நடாத்துவதற்குத் தயாரான ஒரு கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்று தாம் நம்பவில்லை என்று கூறினர். ஹர்த்தால் நடவடிக்கையைக் கொண்டு நடாத்துவதற்கு சமசமாஜக் கட்சியும் ஐக்கிய முன்னணியும் தமிழரசுக் கட்சியும் மட்டுமே எஞ்சி நின்றன."
("சமசமாஜக் கட்சியின் ஒரு சுருக்க வரலாறு" என்ற நூலிலிருந்து)
இந்நூல், கட்சியின் கால் நூற்றாண்டு முற்றியதையொட்டி, லெஸ்லி குணவர்த்தனாவினால் எழுதப்பட்டு, டாக்டர் என்.எம். பெரேரா, டாக்டர் கொல்லின் ஆர்டி சில்வா, எட்மன்ட் சமரக்கொடி, டொறிக் டீ. சூசா, பாலா தம்பு ஆகியோரைக் கொண்ட குழுவினால் வெளியிடப்பட்டது.

Page 373
3.
போராட்டத்தில் குதித்தது தமிழரசுக் கட்சி; பின்வாங்கி ஓடியது சுதந்திரக் கட்சி, அந்த மாபெரும் மக்கள் எழுச்சியின் பெறுபேறுகளைத் திருடிக்கொண்டு 1956ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது திரு. பண்டாரநாயக்காவின் மக்கள் ஐக்கிய முன்னணி இன்று சிங்களப் பிரபுத்துவ சுதந்திரக் கட்சியினரும், மார்க்சிசக் கட்சிகளும் அரசாங்கத்தின் அணியிலே அமர்ந்துகொண்டு, தாம் அனைவரும் சோசலிச முற்போக்குவாதிகள் என்றும், எம்மைப் பிற்போக்கு வாதிகள் என்றும் திட்டித் தீர்க்கின்றபோது - வரலாறு வாய்விட்டுச் சிரிக்கிறது. (3) 1956ஆம் ஆண்டுத் தேர்தல்:
ஏகசக்கிராதிபத்தியம் செலுத்திக் கொண்டிருந்த யூ என். பி, இத்தேர்தலில் அடியோடு நிர்மூலமாக்கப்பட்டது. தென்னிலங்கையில் பண்டாரநாயக்காவின் சுதந்திரக் கட்சி ஏனைய கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்துக் கொண்டு இதனைச் சாதித்தது. இவ்வெற்றியை வரலாற்று நிகழ்ச்சியென்றும், மாபெரும் அரசியற் புரட்சியென்றும் அரசியல் விமர்சக்ர்கள் அன்றுதொட்டு இன்றுவரை வியந்து கொண்டேயிருக்கின்றனர். பண்டாரநாயக்காவோடு அத்தேர்தலில் தொகுதி உடன்பாடு செய்துகொண்ட சமசமாஜிகளும், தனித்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்டுகளும்கூட இவ்வெற்றியை முதலாளித்துவ பிற்போக்கு யூ என். பி. யின் வீழ்ச்சியென்றும், முற்போக்குச் சக்திகளின் எழுச்சியென்றும் பாராட்டுகின்றனர். யூஎன்பியின் வீழ்ச்சியைப் பாராட்டுகின்ற வகையில் மார்க்சிசவாதிகள் யோக்கியர்களே.
அயோக்கியத்தனம்:
ஆனால், இதில் பச்சை அயோக்கியத் தனமொன்றும் இருக்கிறது. பண்டார நாயக்கா யூ.என்.பி.யை வீழ்த்தியது ஏழு மாகாணங்களில் மட்டுமே. ஏனைய இரண்டு மாகாணங்களிலும் யூஎன்பியை முறியடித்து யூ.என்.பி.யின் வீழ்ச்சியை முழுமைப் படுத்தியதும், மக்கள் புரட்சியை மகிமைப் படுத்தியதும் தனியொரு தமிழரசுக் கட்சியே.
சிங்கள வாக்காளர் செய்தால் புரட்சி; அதையே

52
தமிழ் வாக்காளர் செய்தால் அது வரட்சியா? வடக்குக் கிழக்கு மாகாணங்களில் யூ.என்.பி.
தளங்களைளயெல்லாம் அடியோடு நிர்மூலமாக்கி, கனம் காத்திர மான பல முன்னாள் யூ.என்.பி. அமைச்சர்
பிரதானிகளையும் அரசியல் அரங்கிலிருந்தே விரட்டியடித்து, முதலாளித்துவ யூ.என்.பி. யின் முகவர் நிலையங்களையும் முற்றுகையிட்டிருக்கிறது, இத்தேர்தலில் தமிழரசுக் கட்சி. இதை எந்தத் தென்னிலங் கை விமர்சகனும் குறித்துக் கொள்ள மறுத்துவிட்டான் என்பது புதுமையல்ல; "1956ஆம் ஆண்டும் அதன் பிற்பாடும் - இலங்கையில் இன்றுள்ள கட்சிகளினதும் Joyfuðsorgund Gir øTøff” ("1956 and After - Background to Parties and Politics in Ceylon Today") என 1958ஆம் ஆண்டில் விமர்சன நூலொன்றை வெளியிட்ட முன்னாள் “சிலோன் ஒப்சேவர்' ஆசிரியர் டென்சில் பீரிஸ், பாரியதொரு அரசியற் புரட்சியை நிகழ்த்திய தமிழரசுக் கட்சியைப் பற்றி முழு நூலிலும் ஒரு வார்த்தைதானும் எழுதாததும் விந்தையல்ல. ஏனாகில் தென்னிலங்கையில் புரட்சிப் போதனை களை நிகழ்த்தினாலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வலதுசாரித் தலைமை யொன்றைக் கட்டிக்காப்பதில் தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களுக்கு அக்கறை அதிகம். காரணம், வலதுசாரிகள் எப்போதும் கிளர்ச்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் தயாரில்லாதவர்கள்; சிங்கள இனவெறிக்கு இணக்கமாக விட்டுக்கொடுத்து "சமாதான சகவாழ்வு உடன்படிக்கை" செய்து கொள்ளத் தயாரானவர்கள். அதனால் அவர்களின் விழ்ச்சியையும், தமிழரசுக் கட்சியின் எழுச்சியையும் கண்டு தென்னிலங் கையின் இதர வட்டாரங்கள் விசனித்தது வியப்பல்ல, ஆனால், யூஎன்.பியின் பரம வைரிகளான மார்க்சிசவாதிகள், யூ.என்.பி. யைத் தூக்கியடித்த மாபெரும் சாதனைக் காகத் தமிழரசுக் கட்சியை 61 nt turt prly பாராட்டியிருக்காவிட்டாலும் குறைந்த பட்சம், அந்தச் சாதனையையாவது ஒரு பொருட்டாகக் கணித்திருக்க வேண்டும். அங்ங்ணம் கணிக்கக்கூடத் தவறியமை அசல் அயோக்கியத்தன்ம் ஆகும். அதிலும், 1953ஆம்

Page 374
3.
ஆண்டின் ஹர்த்தால்தான் 1956ஆம் ஆண்டின் அரசியற் புரட்சிக்கு அத்திவார மிட்டது என்ற மார்க்சிசவாதம் நிலையான தென்றால் (அது நியாயமானது தான்), ஹர்த்தாலைக் கண்டு தொடை நடுங்கிய சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு இவர்கள் வழங்கிய விருதினை, அக்கிளர்ச்சியில் இவர்களோடு தோளோடு தோள் சேர்ந்து போராடிய தமிழரசுக் கட்சிக்கல்லவா முதலில் சூடியிருக்க வேண்டும்? சூடத் தவறியது மட்டுமல்ல, அதற்கு மாறாக, தமிழரசுக் கட்சியைப் பிற்போக்குவாதிகள் - வகுப்புவாதிகள் - முதலாளித்துவ வாதிகள் எனச் சாடத் தலைப்பட்டதும் ஏன்? தர்மசங்கடம்:
ஏதோ மார்க்சிசச் சான்றிதழ்கள் மோட்ச சாம்ராஜ்யத்தின் நுழைவுச் சீட்டுக்கள் என்ற ஒரு மயக்கத்தில் இந்தக் கேள்வியை ஆராயவில்லை, முற்போக்கு பிற்போக்குவாதிகள் தமது செயற்றிட்டம், சாதனை இவற்றால் அக்கணிப்பைப் பெறுகிறார்களே தவிர, இந்நாட்டு மார்க்சிச மதபீடம் அரசியல் தட்ப வெட்ப நிலையை அனுசரித்து வழங்கும் சான்றிதழைக் கொண்டல்ல. எனினும் மேற்படி மார்க்சிச வாதிகளின் குளறுபடிக் கணிப்புகளை விளக்குவது பின்னைய அரசியற் போக்கினைத் துலக்குவதற்கு அவசிய மாகிறது.
இது ஓர் உளக்கூறுபாட்டுப் SudgeogrGu. (Psychological - Problem)
1956ஆம் ஆண்டுத் தேர்தலில் மொழிப் பிரச்சினை பூதாகாரமான உருவெடுத் திருந்தது. 1960ஆம் ஆண்டுத் தேர்தல்வரை மொழிப் பிரச்சினையில் "சம அந்தஸ்து" என்ற உறுதியான கொள்கையைக் கடைப் பிடித்தவர்கள் சமசமாஜிகளும், ஓரளவுக்கு, கம்யூனிஸ்டுகளும். எனினும் கம்யூனிஸ்டுகள் வேளையோடு தடுமாறத் தொடங்கி விட்டனர். சமசமாஜிகள் சிறுபான்மை யோரின் அனுதாபத்தைப் பெற்றிருந்தாலும், பண்டாரநாயக்காவின் தனிச் சிங்கள"க் கோஷம் எழுச்சியுற்றிருந்ததால், சிங்கள வாக்காளர் மத்தியில் சமசமாஜிகள் ஆதரவை இழக்கத் தலைப்பட்டனர். இந்தச்

53
சங்கடமான நிலையைத் திரு.லெஸ்லி குணவர்த்தனாவே மேலே குறிப்பிட்ட நூலில் கூறுகிறார்.
சிம்ம சொப்பனம்.
சமசமாஜிகளை இக்கட்டுக்குள் மாட்ட விரும்பிய மாற்றுச் சிங்களக் கட்சிகள், சிங்கள வாக்காளரின் சிம்ம சொப்பனமான தமிழரசுக் கட்சிக்கும் சமசமாஜக் கட்சிக்கும் (மொழிக் கொள்கையை அடிப்படையாக வைத்து) உறவு கலப்பிக்க முயன்றதால், தாம் வேறு - தமிழரசுக் கட்சியினர் வேறு என்பதை எல்லை வகுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சமசமாஜிகளுக்கு ஏற்பட்டது. இதனால் அரசியல் பேசுவதற்கு வாயைத் திறந்த வேளைகளிலல்லாம் வகுப்புவாதிகள் - பிற்போக்குவாதிகள் - முதலாளித்துவ வாதிகள் என நாலு வார்த்தைகள் தமிழரசுக் கட்சியையும் திட்டித் தீர்த்தனர். பிற்காலத்தில் தமிழ் மக்களின் நலனைக் கருதித் தமிழரசுக் கட்சி எடுத்த சில நடவடிக்கைகளை ஏதுவாகக் கொண்டு, ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டுகள் - யூ.என்.பி. யின் தாசர்கள் என்ற வார்த்தைகளையும் சூடினர். (இவை பற்றிப் பின்னர் ஆராய்வோம்)
கைகொடுப்பு:
சமசமாஜிகள், தாம் தமிழரசு அனுதாபிகள் அல்லர் என்பதைக் காட்டுதற் காகச் சிங்களவர் மத்தியிலும், தமது சொந்த அணியைக் கட்டியெழுப்புதற்காகத் தமிழர் மத்தியிலும் தமிழரசுக் கட்சியைப் பிற்போக்குச் சக்தியாகப் படம் பிடித்துக் காட்டினாலும், நாடாளுமன்றத்தினுள்ளே யும் வெளியேயும் அவர்களுக்கு நட்புரிமை யோடு அடிக்கடி கைகொடுத்தது. எந்த முற்போக்குச் சக்தியுமல்ல, இந்த “பிற்போக்குச் சக்தி” யான தமிழரசுக் கட்சியே. உதாரணமாக: * 1956ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் டொக்டர் என்.எம்.பெரேரா எதிர்க்கட்சித் தலைவராவதற்குத் தமிழரசுக் கட்சி கைகொடுத்துவியது. (1952ஆம் ஆண்டு டொக்டர் என்.எம். பெரேராவுக் கெதிராகக் கம்யூனிஸ்ட் கட்சி பண்டாரநாயக்காவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவராக்கியது ஒப்புநோக்கத் தக்கது.)

Page 375
3.
★ சமசமாஜ வேட்பாளர் தோழர் டொறிக் டீ. சூசா செனற்றர் ஆவதற்குத் தமிழரசுக் கட்சி தன் வாக்குகளைக் கொடுத்துதவியது. (இக்கடனை சமசமாஜக் கட்சி செனற்றர் நல்லையாவின் தெரிவின்போது, சுதந்திர - கம்யூனிஸ்ட் கட்சிகளின் அணிக்கெதிராக, தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்ததன் மூலம் திருப்பிக் கொடுத்ததாயினும், இரு கட்சிகளுக் கிடையிலும் நிலவிய நட்புறவு தெளிவானது.)
女 1964ஆம் ஆண்டுப் பிற்பகுதியில் சுதந்திரக் கட்சியின் கூட்டரசாங்கத்தில் நிதி அமைச்சராயிருந்த டொக்டர் பெரேராவின் மீது கொணரப்பட்ட (கிரிதர ஆலை சம்பந்தப்பட்ட) நம்பிக்கையில் லாப் பிரேரணையின்மீது தமிழரசுக் கட்சி நடுவுநிலை வகித்தது.
6 உதாரணங்களை d' (6) Gud காட்டினேன். இதற்கு மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியும், சுதந்திரக் கட்சியும் வாய்ப்புக் கிடைத்த நேரத்திலெல்லாம் தமது சோச லிசச் சகபாடியான சமசமாஜக் கட்சியைக் காட்டிக் கொடுத்து வந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சோசலிசத் திட்டங்கள்
சிங்கள - பெளத்த ஆதிக்கத்தை நிலை நாட்ட வந்ததாயினும், பண்டாரநாயக்கா அரசு சில சோசலிசத் திட்டங்களைச் செயற்படுத்த முற்பட்டமை உண்மையே. இவற்றுள் தேசியமயத் திட்டங்கள் முக்கியமானவை. எண்ணிக்கைப் பலத்தாலே ஏதேச்சாதிகாரம் செலுத்த முற்படும் சிங்கள அரசுகள் தேசியமயச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த போதெல்லாம், சோசலிச மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே கண்ணை மூடிக்கொண்டு ஆதரவாகக் கையைத் தூக்கத் தமிழரசுக் கட்சி தயாரில்லை, உண்மையில் தேசியமயமா? அல்லது சிங்களமயமா? எனப் புலனாயவேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழரசுக் கட்சிக்கு இருந்தது. தேசியப் பொலிவுள்ள ஆட்சி யினற்றான் தேசியமாக்க முடியும்; தனிச் சிங்கள ஆட்சியினால் சிங்கள மயமாக்கத் தான்முடியும். இந்த முன்னெச்சரிக்கையுடன், தமிழரசுக் கட்சி தனியார் துறைச்

4.
சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்ட
முயற்சிகளில், ஏறக்குறைய எல்லாவற்றிற்கும்
முழு ஆதரவு தநதது.
உதாரணமாக:
* பஸ் போக்குவரத்துத் தேசியமயம் * காப்புறுதித் தேசியமயம் * பெற்றோலியத் தேசியமயம் * துறைமுகத் தேசியமயம் * தோட்டங்கள் தேசியமயம்
பஸ் தேசியமயம்
இன்னோரன்ன அத்தனை தேசியமய நடவடிக்கைகளையும் (இரண்டொன்று விதிவிலக்காக) ஆதரித்தது. இதனால் கட்சிக்குத் தனிப்பட்ட இழப்பெதுவும் இல்லையென்பதுடன், அரசியல் ரீதியாக நல்ல ஆதாயம் என்றும் கூறலாம். ஏனெனில் தேசியமயத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தனவந்தர்களெல்லாம் வலதுசாரி யூஎன்.பி. அணியின் தளகர்த்தர்களே. தேர்தற் குருஷேத்திரம் ஒவ்வொன்றிலும் இவர்களது செல்வமும் செல்வாக்கும் தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஏவப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பஸ் முதலாளிகள் தமிழரசுக் கட்சியைப் பூவாக, பிஞ்சாகப் பிடுங்கி எறிவதற்குப் பலத்த பிரயத்தனம் செய்தனர். இதனாற்றான் மோட்டார் போக்குவரத்துச் சட்ட (பஸ் தேசியமய) விவாதத்தில் (1957, அக்டோபர் 3) நாடாளுமன்றத்தில் பேசிய கட்சி உறுப்பினர் திரு.வீ.ஏ. கந்தையா (ஊர்காவற்றுறை) இச்சட்டத்தினை உற்சாகத்துடன் வரவேற்று, "எங்களிற் சிலரைப் பொறுத்தவரை இச்சட்டம் குறைந்த பட்சம் 20 ஆண்டுகளாவது பிந்திவிட்டது" என்றார்.
இத் தொடர்பில், தோட்டங்கள் தேசியமயத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை கூறவேண்டும். நில உச்சவரம்பை 50 ஏக்கராக அரசாங்கம் பிரேரித்த போது 25 ஏக்கராக்கும்படி கோரிக்கை விடுத்தது தமிழரசுக் கட்சி என்பதை இந்த நாடு அறியும்; நாடாளுமன்ற அறிக்கை ஏடு அறியும்.

Page 376
விதிவிலக்குகள்
மேலெழுந்தவாரியாக முற்போக்கு நடவடிக்கையாகத் தோற்றினாலும் உள்ளடக்கத்தில் நச்சுத்தனமான அல்லது தமிழ் நலனைப் பாதிப்பதான சில திட்டங்களைக் கட்சி எதிர்த்திருக்கிறது. இதுகால வரையும் கட்சியைப் பிற்போக்கு வாதிகள் - முதலாளித்துவ வாதிகள் - ஏகாதிபத்தியவாதிகள் என வெறும் வாயை மென்ற மார்க்சிசவாதிகளுக்கு இதனால் சிறிது அவல் கிடைத்தது உண்மையே. இத் திட்டங்களில் முக்கியமானவை சில:
* நெற்காணிச் சட்டம்
* பாடசாலைகள் தேசியமயம்
* அந்நிய தளங்கள் கையேற்பு
இவற்றைத் தமிழரசுக் கட்சி எதிர்த்த
காரணங்கள் தர்க்கரீதியானவையே. 1. நெற்காணிச் சட்டம்
1957, டிசம்பர் 12ல், இவ்விடயத்தின் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார்:
"இச் சட்டத்தின்பால் என்ன கருத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றி எமது கட்சி ஆழமாகச் சிந்தித்திருக்கிறது. காணிக் குத்தகை விவசாயத்தைச் சீர்திருத்துவது மிகவும் அவசியமாகிறது. ஆண்டை விவசாயியின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்தக் கேட்டை அகற்ற முற்படுகின்ற வரையில் இதன் நோக்கம் ஆதரிக்கப்பட வேண்டியதே. அப்படியானால் இச்சட்டமூலத்தை ஏன் ஆட்சேபிக்கிறீர்கள் என்று கேட்கலாம்."
இவ்வாறு தொடங்கிய தந்தை செல்வா, எவ்வாறு இச்சட்டத்தின் நன்மைகள் குத்தகை விவசாயிகளான நாடற்ற தமிழ்த் தொழிலாளர்களுக்குக் கொடுமையான முறையில் மறுக்கப்பட்டிருக் கின்றது என்பதையும், ஒரு மார்க்சிசவாதி யென்ற முறையில் விவசாய அமைச்சர் திரு. பிலிப் குணவர்த்தனா சட்ட வரைவில் இந்தப் பாகுபாட்டைச் செய்யவில்லை யென்றும், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த

5
Sl
வகுப்பு வெறியர்களே இந்த நச்சினைப பின்னர் சட்டமூலத்தில் புகுத்தினர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருத்தப் பிரேரணை
இச் சட்டமூலத்திற்கு ஒரு திருத்தப் பிரேரணையைக் கொண்டு வந்த கட்சி உறுப்பினர் திரு. வ. ந. நவரத்தினம் (சாவகச்சேரி), “ஓர் இலங்கைப் பிரஜை" என்பதற்குப் பதிலாக “ஓர் இலங்கைப் பிரஜை அல்லது வேறு எந்த நாட்டின் பிரஜையுமாயில்லாது 1949ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே இலங்கையில் வதிபவரான ஓர் ஆள் அல்லது அத்தகைய ஓர் ஆளின் வழித்தோன்றல்" என்ற திருத்தத்தை ஏற்குமாறும், அநியாயச் சட்டத்தால் பிரஜாவுரிமையிழந்து நாடற்றவர்களான தமிழ் விவசாயிகளுக்கும் நிவாரணம் அளிக்குமாறும் கோரினார், கம்யூனிஸ்ட் உறுப்பினர் திரு. பி. கந்தையா, சமசமாஜ உறுப்பினர்கள்: டொக்டர் பெரேரா, எட்மன்ட் சமரக்கொடி ஆகியோர் மனிதாபி மானத்துடன் நடக்குமாறு அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவிடம் பலவாறு வேண்டினர், குறிப்பாக, ஆக்ரோஷத்துடன் பேசிய தோழர் சமரக்கொடி, "இச்சட்டம் ஒரவஞ்சனையானது” எனச் சாடினார். எனினும் என்ன? சிங்கள விவசாயிகளுக்கு நிவாரணமளிக்க முற்பட்ட “சோசலிச” அரசாங்கம், அந்த நிவாரணம் நாடற்ற தமிழ் விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிய நேரத்தில், வர்க்கரீதியாகச் சிந்தித்துத் தமிழ்த் தொழிலாளிக்கு அனுதாபம் காட்டவில்லை. வகுப்புவாத ரீதியாகவே முடிவெடுத்தது. வர்க்க நலன்
சோசலிச அரசாங்கமே இன ரீதியாக முடிவெடுத்தபோது, தமிழரசுக்கட்சி இனவாரியாகச் செயற்பட்டு இச்சட்டத்தை எதிர்த்தது தவறாகுமா? கட்சியின் முடிவு சிலருக்கு இன்னும் வாதத்திற்குரியதாய் இருக்கலாம். அந்த முடிவுக்குக் காத்திரமான ஒரு காரணம் இருந்தது என்பதை யாரே மறுப்பர்? இம்முடிவை யொட்டி இடதுசாரிகள் தமது வழக்கமான வார்த்தை வேட்டுக்களை வெடித்தனர் என்பதைக் கூறவேண்டியதில்லை.

Page 377
S
2. பாடசாலைகள் தேசியமயம்:
தேசியமயம் எப்படிச் சிங்கள மயமாகும் என்பதற்கு இது ஒப்பற்ற உதாரணமாகும். வளரும் தமிழ்த் தலைமுறை யினரின் மீது சிங்கக் கொடியையும், சிங்கள தேசிய கீதத்தையும், கட்டாய சிங்களக் கல்வியையும் திணிப்பதற்குப் பாடசாலை களை அரசு வலுவான கருவியாகப் பயன் படுத்துகிறது. அரசாங்க ஊழியர்களான ஆசிரியர்கள் சிங்களத் தேர்ச்சிக் கெடுபிடி களுக்கு ஆளாக்கப்பட்டனர். இவற்றுக்கு மேலாக, தனிப்பட்ட கல்விமான்களால் உரிமையுடனும் பெருமையுடனும் பேணி வளர்க்கப்பட்ட பாரம்பரியப் புகழ்மிக்க கல்விக்கூடங்கள் பல இன்று தரமிழந்து தடுமாறுகின்றன. பொதுமக்கள் தமது பொன்னையும் பொருளையும் உழைப் பையும் ஈந்து உருவாக்கிய கல்விக்கூடச் சாதனங்கள் பல இன்று அரசுடைமையாக் கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகின்றன.
பாடசாலைகள் தேசியமயத்தை எதிர்த்தமைக்காகக் கட்சி என்றுமே கழிவிரக்கப்படவேண்டியதில்லை.
3. அந்நிய தளங்கள் கையேற்பு
1956ல் பிரதமர் பண்டாரநாயக்கா திருகோணமலைக் கடற்படைத் தளத்தை விட்டுப் பிரிட்டிஷாரை வெளியேற்றிய நேரத்தில், தந்தை செல்வா பிரிட்டிஷ் மகாராணிக்குத் தலையிடுமாறு தந்தி அனுப்பினார். "ஏகாதிபத்தியதாசர்கள் என்று ஏசினர் இடதுசாரிகள். தமிழ் மாநிலத்தின் அரசியற் தலைவன், தமிழ் மாநிலத்தில் இடம்பெற்றிருந்த ஒரு தளத்தின்மீது தமிழருக்குள்ள ஆதிக்கத்தை நிலை நாட்டுதற்கும், அதனைப் பதிவு செய்தற்கும் குறைந்த பட்சம் செய்திருக்கக் கூடியது இதுவே. றொடீசியாவை, றொடீசிய வெள்ளையரின் பிரதிநிதியான ஐயன் சிமித்திடம் கையளிக்காதே என நீக்ரோவர் கள் பிரிட்டிஷ் அரசிக்குச் செய்தி அனுப்பினால், அவர்கள்.ஏகாதிபத்தியதாசர் கள் என்று அர்த்தமா? தவிரவும், தமிழ் மண்ணில்ஆங்கில ஏகாதிபத்தியம் இடம் பெயர்ந்து சிங்கள ஏகாதிபத்தியம் இடம்

6
பிடிப்பதில் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம்? மேலும், திருமலை - பிரிட்டிஷ் தளத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வேலை செய்தனர். அவர்களது எதிர் காலத்தை நிச்சயிக்காது பிரிட்டிஷ் தளம் அகற்றப்படுவதைத் தமிழரசுக்கட்சி விரும்பவில்லை. பிரிட்டிஷ் தளத்துத் தமிழ் ஊழியர்கள் எதிர்காலம் பற்றிய கவலை - பிரதமர் பண்டாவைக் காட்டிலும் தந்தை செல்வாவுக்கு இருந்தது புதுமையல்ல. பிரிட்டிஷ் தளம் அகன்றதும், வேலையிழந்த தமிழர் ஆயிரக்கணக்கில் குடும்பத்துடன் திருமலையை விட்டு வெளியேறவும் - சிங்களப் பட்டாளத்தினரும் அவர்கள் அனுசரணையுடன் ஏனைய சிங்களவரும் தமிழ் மண்ணில் இடம்பிடித்துள்ளமை கண்கூடு.
திரிபுவாதம்
சுருங்கக் கூறின், தமிழரசுக் கட்சியின் முற்போக்கு நடவடிக்கைகள், தமிழ் மக்களின் தற்காப்பின் பொருட்டு முன்னெச்சரிக்கையுடன் கூடியன என்பதே பொருந்தும். இதனைத் தம் அரசியல் அனுகூலத்திற்காக மாற்றார் தம் வசதிப்படி திரித்தும் மறைத்தும் விமர்சித்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, மக்கள் வங்கி (Peoples' Bank) pagplal 'L' Langsik s" A மனப்பூர்வமாக வரவேற்றது. அமைச்சர் களின் வருகையை நாம் தமிழ் மண்ணில் பகிஷ்கரித்த நாட்களில், யாழ்ப்பாணத்தில் மக்கள் வங்கியைத் திறந்து வைக்கும் சாட்டில் வந்த அமைச்சர் இலங்கரத்தினா வுக்குக் கறுப்புப்கொடி எதிர்ப்புக் காட்டியது கட்சி. எதிர்ப்புத் தமக்கேயன்றி மக்கள் வங்கிக்கு அல்ல என்பதை அமைச்சர் அறிவார்; இருப்பினும் அரசியல் அற்பத்தனத் துடன், மக்கள் வங்கியை எதிர்க்கும் பிற்போக்குவாதிகள் என வசைபாடினார்.
ப. செ. உடன்படிக்கை:
இடதுசாரி - வலதுசாரிப் போராட் டங்களில் கட்சி இடதுசாரிப் பக்கமே எப்போதும் நின்றிருக்கின்றது. துர்ப்பாக்கிய வசமாக, இடதுசாரிகள் இந்த உண்மையை ஒப்புக்கொண்டதில்லை. மேலும் தமிழ்

Page 378
-3
மக்களின் பிரச்சினைகளை இடதுசாரிகளின் ஈடுபாட்டுடன் தீர்ப்பதிலே யே கட்சி ஆர்வம் காட்டியிருக்கிறது. பச்சை இனவெறிய ராயிருந்தும், முற்போக்கு அரசாங்கம் என்று இடதுசாரிகளால் கணிக்கப்பபெற்றிருந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சியுடன் 1957ஆம் ஆண்டு கட்சி செய்துகொண்ட பண்டா - செல்வா ஒப்பந்தம் இதற்குச்சான்றாகும்.இந்த ஒப்பந்தத்தைக் கம்யூனிஸ்ட் கட்சி மனப்பூர்வமாக வரவேற்றது. சமசமாஜிகள் போற்றுவதா - தூற்றுவதா என்று தடுமாறி நின்றனர். "சிங்களவரின் சரணாகதி" எனப் பிரலாபித்த யூ.என்.பி. ஜே.ஆர். ஐயவர்த்தனாவின் தலைமையில் கண்டி நோக்கி ஒப்பந்தம் எதிர்ப்பு யாத்திரையை மேற்கொண்டது. பின்னர் பிக்குவாய்ப்பட்ட பிரதமர் பண்டாவினால் ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாகக் கிழிக்கப்பட்டபோது, முற்போக்கு சக்திகள் இந்த மிலேச்சத்தனத் தைக் கண்டித்து எதுவும் மொழிந்ததில்லை. 1960ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல்கள் இந்த இடது - வலது போராட்டத்திலே தமிழரசுக் கட்சிக்கு மிகவும் முக்கியமானவை. காரணம், அவை நல்ல படிப்பினையானவை. 1960 - மார்ச் பொதுத்தேர்தல்:
1960ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தல் "முற்போக்குச் சக்திகளுடன்" தமிழரசுக் கட்சி முழுமையாக ஐக்கியப்பட்ட காட்சியை மட்டும் காட்டவில்லை, தம் தேவை தீர்ந்ததும் இந்தச் சிங்களக் கனவான்கள் எப்படிக் கழுத்தறுப்பர் என்ற சூழ்ச்சியையும் காட்டிற்று. அத்தேர்தலில், யூ என். பிக்கோ சுதந்திரக் கட்சிக்கோ ஆட்சியமைக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க ஆதரவு தருமாறும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் திருப்திகரமாகத் தீர்க்க உறுதியளிப்பதாகவும் யூ என். பி. தமிழரசுக் கட்சியிடம் மன்றாடியது. அதே வேளையில் யூ என். பி. யை வீழ்த்தவும், இடதுசாரிகளின் ஆட்சியமைக்கவும் ஆதரவு தருமாறும், பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றித் தமிழ் மக்களின் பிரச்சினை"

团
களைத் தீர்ப்பதாகவும் சுதந்திரக் கட்சி வேண்டுகோள் விடுத்தது. நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் சமசமாஜ, கம்யூனிச அணியினரும் ஏனைய சிங்கள சோசலிச வாதிகளும் முற்போக்குவாதிகளுடன் அணிதிரளுமாறு தமிழரசுக் கட்சிக்கு நேசக்கரம் நீட்டினர். கம்யூனிஸ்ட் தோழர் சண்முகதாசன், சோசலிச சக்திகளைக் கைவிட வேண்டாமென்று தனிப்படவே தந்தை செல்வாவுக்குக் கடிதம் எழுதினார். இயல் பாகவே இடதுசாரி வயப்பட்ட - பூ என். பி. விரோதியான - தமிழரசுக் கட்சி, இடதுசாரி களின் துணைகொண்டு தமிழ் மக்களின் கண்ணிரைத் துடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கரத்தை இறுகப் பற்றியது. அரியணை உரையின் மீது தமிழரசுக் கட்சி இடதுசாரிகளுடன் சேர்ந்து வாக்களித்து யூ என். பி. அரசாங்கத்தைத் தோற்கடித்தது. சோசலிச வட்டாரங்க லிருந்து வாழ்த்து மொழிகள் தமிழரசுக் கட்சியை வளைத்துக் கொண்டன.
மார்க்சிசத்தின் தந்தை என்று
அழைக்கப்பட்ட திரு. பிலிப் குணவர்த்தனா உட்பட, வில்லியம் டீ. சில்வா, ஹெட்டியா ராய்ச்சி போன்ற பரம்பரை முற்போக்குவாதி கள் யூ என். பி. க்கு எதிராக வாக்களிக்காது நடுவுநிலை வகிக்கவும், அவ்வப்போது பிற்போக்குவாதிகள் என்று தம்மால் தூற்றப்பட்ட தமிழரசார் யூ என். பி. அரசை வீழ்த்திய செய்கை - இடதுசாரிகளின் இதயத்தை நனைத்ததோ என்னவோ. 1960 - யூலைத் தேர்தல்
மாற்று அரசு அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரை அழைத்திருக்க வேண்டிய மக தேசாதிபதி அதனைச் செய்யவில்லை. செய்திருந்தால் தமிழரசுக் கட்சியின் ஆதரவோடு இடதுசாரி அரசு உருவாகியிருக்கும். இருப்பினும் என்ன? 1960-யூஎ லத் தேர்தலில் ஏற்கெனவே சுதந்திர கட்சியுடனும் ஏனைய இடதுசாரி களுடனும் கண்ட உடன்பாட்டின் அடிப் படை யில், தமிழரசுக் கட்சி தென்னிலங்கை யின் தமிழ் வாக்காளர்களின் ஆதரவைச் சு Aந்திரக் கட்சிக்கும் அக்கட்சியோடு

Page 379
3.
தொகுதி உடன்பாடு செய்துகொண்ட சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தந்தது. யூ. என். பி. யோ அடிபட்ட வேங்கையைப்போல் பழிவாங்கு உணர் வுடன் சுதந்திரக் கட்சி - தமிழரசுக்கட்சி உடன்படிக்கையை மூர்க்கத்தனமாக விகாரப்படுத்தி நாடெங்கும் விமர்சித்தது. சதந்திரக் கட்சியைக் குறிக்கும் முதல் எழுத்துக்களுக்கு (S. L. F P) சிறி லங்கா FLDGyulqis" 6F (Sri Lanka Federal Party) 6TGOT விளக்கம் காட்டியது. இது தென்னிலங் கையிலே.
வட, கிழக்கு இலங்கையிலோ, யூ என். பி. தளகர்த்தர்கள் தமிழர் உரிமைகள் சுதந்திரக் கட்சியிடம் அடகு வைக்கப்பட்ட தாகக் குற்றஞ்சாட்டினர்: ஏமாற்றம்:
இந்தப் பின்னணியிலே நடந்த தேர்த லில், சுதந்திரக் கட்சி தன்னந்தனியே ஆட்சியமைக்கக்கூடிய பலத்தைப் பெற்றது. தான் தமிழரசுக்கட்சிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறித் தமிழ் மக்களுக்கு நிவாரணமளிக்க மறுத்ததுடன், சிங்கள சாம்ராஜ்யத்தைச் சிருட்டிப்பதிலேயே கருத்தாயிருந்தது. இந்த நம்பிக்கைத் துரோகத்தையிட்டு எந்த முற்போக்கு வாதியும் இற்றைவரை முகம் சுழித்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையிலேதான் 1960 - மார்ச்சில் யூ என். பி. க்கு அரசமைக்க ஆதரவு தந்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிராது என்ற வாதம் தமிழ் மக்கள் மத்தியில் புகுத்தப்பட்டது. இது கொள்கை நெறிக்கு ஒவ்வாதாயினும், நிதான புத்தி படைத்த சில நடுநிலை வட்டாரங்களும் இந்த வாதத்தை நம்பின என்பது உண்மையே. தமிழரசுக் கட்சி 1965ல் கடைப்பிடித்த அரசியற் போக்கினை விளக்கு வதற்கு இந்த உண்மை அவசியமானதாகும்.
1965 - பொதுத் தேர்தல்:
"யூ என். பி. தாசர்கள்" - ஆமாம், முற்போக்குவாதிகள் என்போர் தமிழரசுக்
கட்சிக்கு இறுதியாகச் சூட்டியுள்ள பெயர் இது யூ என். பி. எதிர்ப்பிலேயே கருவாகி

$8-
உருவாகிய கட்சிக்கு, வலதுசாரித் தளங்களையே வடக்குக் கிழக்கு மாகாணங் களிலிருந்து பெயர்த்தெறிந்த கட்சிக்கு இப் பெயர் சூட்டப்படவேண்டிய சூழ்நிலை உருவானதே - இந்நாட்டு அரசியல் முரண்பாடுகளின் அதியாச்சரியமான கட்டமாகும். யூ என். பி. யையும் தமிழரசுக் கட்சியையும் இணைத்துப் பேசுவதற்கான காரண காரியங்களை 1975ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் பின் எழுந்த சூழ்நிலை உருவாக்கியது. சூடுகண்ட பூனை
அப்பொதுத் தேர்தலில், சுதந்திரக் கட்சி - சமசமாஜக் கட்சிக் கூட்டணிக்கும், யூ என். பி. க்கும் அரசாங்கம் அமைப்பதற்குத் தமிழரசுக்கட்சி ஆதரவு தேவைப்பட்டது. சுதந்திரக் கட்சிக்கு நல்ல நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தான் தமிழினத் திற்குச் செய்த அயோக்கியத்தனத்தையும் மறந்து, மீண்டும் எந்த முகத்தோடு தமிழரசுக் கட்சியின் ஆதரவை நாடியதோ தெரியவில்லை. நாடியவர்களிடம் "சூடு கண்ட பூனை அடுப்பங்கரை சேராது" என்ற பழமொழியைச் சுட்டிக் காட்டினார் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் அண்ணன் அமிர்தலிங்கம். தந்தை செல்வாவின் மறுமொழியோ மேலும் தாக்கமானது. "(உங்களோடு சேர்ந்து) நாங்கள் (தமிழ் மக்கள்) எல்லாவற்றையும் இழந்து விட்டோம் - எங்கள் கெளரவ மொன்றைத் தவிர. அதையாவது காப்பாற்று வோம்” என்றார். முற்போக்குவாதம் அயோக்கியத்தனத்தின் மறுபதிப்பல்ல. மார்க்சிஸ்டுகள் என்பது மதோன் மத்தர்களின் மறுபெயருமல்ல. சோசலிசம் நீசர்களின் கொள்முதலுமல்ல. அந்தக் கட்டத்தில் இந்த அயோக்கியர்களுக்குத் தமிழரசுக்கட்சி ஆதரவு தந்திருந்தால் அதை எந்த
உண்மையான சோசலிசவாதியும் மன்னித்திருக்கமாட்டான். மாற்று வழிகள்
அந்நேரத்தில், தமிழரசுக் கட்சிக்கிருந்த மாற்றுவழிகள் இரண்டே இரண்டு. 1. யூ.என்.

Page 380
-3
பி. க்கு அரசமைக்க ஆதரவு தருவது. அல்லது 2. யாருக்கும் ஆதரவு தராமல் நடுவுநிலை வகிப்பது. தமிழரசுக் கட்சி அரசாங்கத்தில் பங்கு கொள்ளாது எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டே யூ என். பி. அரசுக்கு ஆய்ந்த ஆதரவு (Critical Support) அல்லது நிபந்தனையோடு கூடிய ஆதரவு (Conditional Support) அளிக்கவேண்டுமென ஒரு சாரார் கருதினர். (இக் கட்டுரையாளரின் கருத்தும் அஃதே) எனினும், கட்சி யூ என். பி. க்கு அரசமைக்க ஆதரவு தந்து, அரசாங்கத்திலும் அடையாளமாகப் பங்கேற்பது என்று தீர்மானித்தது. இது நிறைவான முடிவாகுமா என்பது வாதத்துக்குரியதாயிருக்கலாம். ஆனால் இம்முடிவுக்கான சில கணிசமான காரணங்கள் இருக்கத்தான் செய்தன.
1. தமிழரசுக் கட்சி, அரசமைக்க யூ.என். பி. க்கு ஆதரவு தெரிவியாது நடுவுநிலை வகிக்குமானால், மகாதேசாதிபதி சுதந்திரக் கட்சியையே மீண்டும் அரசமைக்க அழைக்கும் சாத்தியம் இருந்தது. எனவே நடுவுநிலை வகிப்பதும் மறைமுகமாக் சுதந்திரக் கட்சிக்கு உதவுவதாகும்.
2. தமிழினம் இறுதிப்போருக்கு இன்னும் தயாராயில்லாதபோது, இடைக் Est) நிவாரணம் பெறுவதுதான் நோக்கமென்றால், இரண்டிலொரு அரசாங்கத்திடமிருந்துதான் தமிழினத்திற்கு எந்த அரசியல் நிவாரணத்தையும் பெறமுடியும். சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை ஆரிக்க முடியாதபோது, யூ. என். பி. அரசாங்கத்தை ஆதரித்ததே அவசிய, அவசரமான நிவாரணங்களைப் பெற வேண்டியிருந்தது.
3. எல்லாவற்றிற்கும் மேலாக, 1960-மார்ச் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கு யூ என். பி. க்கு ஒரு வாய்ப்புக் கொடுத்திருந்தால் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கியிருக்குமென்ற ஒரு கருத்து, வேண்டுமென்றே சில வட்டாரங்களால் தமிழர் மத்தியில் பரப்பப்பட்டிருந்தது. இந்தக் கருத்துத் தவறானது எனக் கட்சி நம்பினாலும், இந்தக் கருத்தையும் மதித்துத் திருப்தி செய்யவேண்டிய கடமை கட்சிக்கு

59
இருந்தது. ஏற்கெனவே சுதந்திரக் கட்சிக்கு அளித்த அதே வாய்ப்பை, spCU தடவையாவது யூ என். பி. க்கும் அளிப்பது கட்சியின் நிதானமான போக்கை நிலைநாட்டுதற்கு அவசியப்பட்டது.
4. தமிழ் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் தன் நல்லெண்ணத்தை உறுதி செய்வது போல, தமிழரசுக் கட்சியுடன் யூ என். பித் தலைவர் டட்லி சேனநாயக்கா ஓர் உடன்படிக்கைக் கைச்சாத்திட்டிருந்தார். அந்த உடன்படிக்கை, மொழிப் பிரச்சினை, தமிழ் அரசாங்க ஊழியர் பிரச்சினை, மாவட்ட சுயாட்சிக் குடியேற்றத்திட்டப் பிரச்சினை, நாடற்ற தமிழர்க்கு நாடாளுமன்ற நியமனம் போன்ற விடயங்களில் பலசலுகைகளையும் வாய்ப்புக்களையும் பரிகாரத்தையும் வழங்குவதாயிருந்தது. இரண்டும் ஒன்றே:
தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுதந்திரக் கட்சிக்கும் யூ என். பி. க்கும் இடையே அடியோடு வேறுபாடு கிடையாது. இரண்டு கட்சிகளும் ஒன்றோ டொன்று போட்டி போட்டிக்கொண்டு தமிழ்வாழ்வைச் சூறையிட்ட கொள்ளையர் களே. சிங்கள வெறியின் சின்னங்களான இக் கட்சிகளுக்கே இங்கு அரசமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது பெரிய துர்ப்பாக்கியமே. 1956ல் பதவிக்கு வந்த சுதந்திரக்கட்சி, இதுகாலவரை தமிழ் மக்களுக்கு இழைத்த கொடும்ை கொஞ்சமல்ல. இருப்பினும், தமிழ் மக்களுக்காகத் தொடக்க காலத்தில் வெளிப் படையாகவே பரிந்து பேசிய இடதுசாரிக் கட்சிகள் சுதந்திரக் கட்சியைச் சார்ந்திருந்தமையால், இடது சாரிகளின் ஈடுபாட்டுடன் தமிழுரிமைகளை எளிதில் பெறலாம் என்ற எண்ணத்தில் தமிழரசுக் கட்சி, சுதந்திரக் கட்சிக்கு - அரசியல் நிலையை அனுமானித்து - அவ்வப்போது ஆதரவு தந்திருக்கிறது. நிந்தகமை நிலக்கிழார்களைக் கொண்ட சுதந்திரக் கட்சியின் தலைமையின் நிழலிலேகூட உண்மையான சோசலிஸ்டுகள் நிற்க மாட்டார்கள் என்பதைத் தமிழரசுக் கட்சி அறியும்.

Page 381
இலட்சிய வரலாறு:
சிங்களவெறியின் கோரத் தாண்டவத் தால் சீரழிந்துபோன தமிழரின் நிலையைக் கொஞ்சமாவது செப்பனிடலாம் என்ற நப்பாசையால் யூ என். பி. க்கு ஆதரவு தந்ததே தவிர, முதலாளித்துவ முகாமைப் பலப்படுத்தவோ, சோசலிசத்திற்குச் சமாதிகட்டவோ, வர்க்கப்போரைக் காட்டிக் கொடுக்கவோ, வலதுசாரிகளின் அணியைப் பெருக்கவோ அல்ல. தமிழரசுக் கட்சி அதன் இருபத்தைந்து ஆண்டுகால வரலாற்றில், இருபதாண்டுகளுக்கு மேலாக யூ என். பி. யினதும் வலதுசாரிச் சக்திகளினதும் பரமவைரியாகவே சூளுரைத்துச் செயற் பட்டு வந்திருக்கிறது. இந்தச் சரித்திரம் சோசலிசப் பெம்மான்களுக்குத் தெரிய வில்லை. சுமார் நாலரை ஆண்டுகள் தான் - சிங்கள வெறியின் வெப்பு நோயைத் தீர்க்கலாமென நம்பி - யூஎன்.பி. க்கு ஆதரவு தந்தது. இந்தச் சங்கதி இடதுசாரிகளுக்குப் பூதாகாரமாகத் தெரிகிறது. "யூ என். பி. தாசர்கள்" என்கிறார்கள், ஆனானப்பட்ட மார்க்சிசத்தின் தந்தையான பிலிப் குணவர்த்தனா போன்றோர் யூ என். பி. யுடன் ஐக்கியப்பட்ட வரலாற்றையும் மறந்து பிலிப்பின் புரட்சிப் பாரம்பரியத்தைப் பாராட்டத் தெரிந்த இவர்களால், மார்க்சிசப் பூங்காவிலே மலர்ந்திராவிட்டாலும்கூட சோசலிச சுகந்தம் கமழ்கின்ற தமிழரசுக் கட்சியின் இலட்சிய வரலாற்றைக் காணவும் முடியவில்லை, கணிக்கவும் முடியவில்லை.
அரசியூற்றுறையிலே இனவாதச் சக்திகளின் தலையீட்டினால், சோசலிசச் சுவடுகளில் நிதானமாகவே நடக்கவேண்டிய அவசியத்திற்குள்ளாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி - சமூகத்துறையில் தீவிரமான புரட்சியைச் செய்தது.
தீண்டாமை
வர்ணாச்சிரமம் வேரூன்றிவிட்ட ஒரு வைதீகச் சமூகத்தில், தீண்டாமைத் திட்டுக்களைத் தகர்ப்பதற்குத் தமிழரசுக் கட்சி தனியொரு கட்சியாக ஆற்றியுள்ள பணி இந் நாட்டின் எந்த மார்க்சிசக் கட்சியும்

0- ۔۔۔۔۔۔۔۔۔۔ـ
ஆற்றத்துணியாத பணியாகும். பெரும்பான்மை யினரான உயர் சாதியினரின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கட்சி, தனது "தேர்தல் - அரசியல்” வாழ்வையே பணயம் வைத்த இந்தச் சமூகப் புரட்சியில் ஈடுபட்டது. கட்சியின் சாதனை சமசமாஜ - கம்யூனிஸ்ட் கட்சிகள் இலங்கையெங்கும் சாதிக்கத் துணியாத சான்றாண்மை வாய்ந்ததாகும். பிரச்சினை அடியோடு தீர்ந்திருக்கிறது எனக் கூறி எவரையும் ஏமாற்றுவதற்கில்லை; பிரச் சினையின் அடித்தளமே அதிர்ந்து போயிருக் கிறது என்பதே பெரும் சாதனை. இப்புரட்சியின் வெற்றி முனைகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.
* 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் ஆதிக்கம் பெற்ற கட்சி. இரண்டு மாதங்களுக்குள்ளே யே - அதாவது யூலை மாதமே - பிறப்பில் ஏற்பட்ட சமூக, சமயக் குறைபாடுகளை நீக்குவதற்கு அரசாங்கம் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரும் தனியார் பிரேரணையை நடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது.
* மேற்கண்ட பிரேரணையின் பெறுபேறாகத் தீண்டாமை அனுட்டிப் பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் சமூகக் குறைபாடுகளைத் தடுக்கும் சட்டம் 1957ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
* தமிழரசுக் கட்சியின் தூண்டுதலின் பேரில், மேற்படி சட்டத்தை இன்னும் வலுவுள்ளதாக்கும் பொருட்டு இச்சட்டம் 1971ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
* இந்துக் கோவில்களுக்குள் தாழ்த்தப் பட்டோர் என்போருக்கு அனுமதி மறுக்கப்பட்ட வழக்கத்தை நிராகரித்து, தமிழரசுக் கட்சியே முன்னின்று ஆலயத் திறப்பு நடாத்தியது. இதன்படி பல தலையாய கோவில்கள் எல்லோருக்கும் திறந்துவிடப்பட்டன.
* தமிழரசுக் கட்சியின் முயற்சியால் பொது இடங்களில் சாதி வேற்றுமை அனுட்டித்தவர்கள்மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்

Page 382
ーE பட்டனர். கட்சித் தலைவர்களான வழக்குரைஞர்களே இவ்வழக்குகளை முன்னின்று நடாத்தினர்.
* உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரும்பான்மையான உயர்சாதித் தமிழ் வாக்காளர்களைக் கொண்ட இடங்களில், கட்சி தாழ்த்தப்பட்டவர்கள் என்போரைப் போட்டிக்கு நிறுத்தி வெற்றியீட்டியது.
* செனற்சபையில் உரிமையிழந்த சமூகத்தின் குரல் ஒலிக்கும்படியாகக் கட்சி இவர்களுக்கு உறுப்புரிமை தந்தது.
* சாதியொழிப்பை அரசின் கொள்கையாகப் புதிய அரசியல் சாசனத்தில் பிரகடனப்படுத்தும்படி கட்சி வற்புறுத்தியது. சமசமாஜ - கம்யூனிஸ இடதுசாரிகள் புதிய அரசியல் சாசனத்தை இயற்றிய அரசின் பங்காளிகளாயிருந்தும், இந்தக் கோரிக் கைக்குச் செவிமடுக்காதது புதுமையே.
தமிழ் மாநிலத்தில் இன்று மார்க்சிசக் கட்சிகள் மிரளும்படியாகத் தாழ்த்தப்பட்ட சமூகம் தமிழரசுக் கட்சியின் கொடியின் கீழ் அணிதிரண்டிருக்கின்றதென்றால், அது கட்சியின் சாதனைக்குக் கிடைத்த சான்றிதழாகும். சாமானியர்கள்
கட்சியின் பச்சை விரோதிகள்கூட ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளட்டும். தமிழரசுக் கட்சி அரசியல் அரங்கில் ஒரு சக்தியாகப் பரிணமித்த பின்னர்தான், தமிழ்த் தலைமை சாமானிய மக்களின் மட்டத்திற்கு வந்தது. மேட்டுக் குடியின் மேதாவிலாசங்களும் மச்சுவிட்டு மார்த்தாண்ட வம்சத்தவரும் ராஜரீகத்துடன் ஆண்டனுபவித்த தமிழ்த் தலைமைப்பீடத்தில், குலப்பெருமையும் குடும்பப் பெருமையும் அற்ற சாதரணமான வரும் கொள்கைப் பெருமையுடன் ஏறலாம் என்ற நிலையை உருவாக்கியது தமிழரசுக் கட்சி. கனதனவான்களிடமிருந்த கட்சி அமைப்புகளை, ஜனரஞ்சகமாக்கியது இக்கட்சி. சோசலிசப் பயணத்திற்குக் கட்சி அமைப்புக்களைப் பக்குவப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.

ஈழத் தமிழகத்தின் இலட்சோபலட்சம் ஏழை எளியவர்களின், தொழிலாளிகள், விவசாயிகளின் ஆதரவை அரணாகக் கொண்டது இக்கட்சி. இதனால், இடதுசாரி கள்தாம் அடித்தளத்து மக்களின் தலைவர் என்ற தமது பரம்பரைப் பாத்தியதையை இங்கு பறிகொடுத்துள்ளனர்.
முடிவுரை
இந்நாட்டின் கம்யூனிச - சமசமாஜ கட்சிகள்தாம் மார்க்சிச - லெனினிசம் போன்ற ஒரு புரட்சிகரமான தத்துவத்தின் உன்னதமான தூதர்கள் அல்லர். சோசலிச இலக்கணத்திற்கு இலக்கியமாய் இலங்குபவர்களும் இவர் களல்லர். இந்த உண்மையைச் சுருக்கமாக மூன்று முனைகளில் நிறுவலாம்.
ஒன்று: அரசியல் அறுவடைக்கான வாய்ப்பைக் கண்ட வேளைகளிலெல்லாம், பிழிந்தெடுத்த பிற்போக்கு வாதிகளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டே தொழிலாள வர்க்கத்திற்கு வேட்டுவைத்தவர்கள் இவர்கள். உதாரணமாக, 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சியுடன் சமசமாஜ - கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டு அரசாங்கம் அமைத்திருந்த வேளையிலேதான், சமசமாஜ நிதியமைச்சர் டொக்டர் என். எம். பெரேரா 1971ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தார்.பஞ்சமும், பசியும் விஞ்ச - தமிழ்த் தோட்டத் தொழிலாளர் பட்டினியால் தெருவோரங்களில் வீழ்ந்து மடிந்ததும், குப்பைத் தொட்டிக் களத்திலே மனிதன் எச்சில் இலைக்காகச் சொறி நாய்களோடு சண்டை போட்டதும் இந்தச் சோசலிச யுகத்திலேதான். (விரிவஞ்சி இவற்றை விளக்க முற்படவில்லை.)
இரண்டு: இன, மொழிப் பிரச்சினைகளின் ஆரம்ப நாட்களில் இக் கட்சிகள் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தது உண்மையே. கம்யூனிஸ்ட் கட்சியின் F n u u lb வேளையோடு வெளுத்தாலும், குறிப்பாக சமசமாஜிகளுக்கு அரசியல் ரீதியாகக் கணிசமான இழப்புகள் ஏற்பட்டன என்பதும் உண்மையே.

Page 383
-3
இருப்பினும், 1960ஆம் ஆண்டுக் கட்டத்தில் இக்கட்சிகள் தமிழர்பால் அனுதாபமான தம் கொள்கைகளைத் தளர்த்தத் தொடங்கின. அதைக்கூட மன்னித்து விடலாம். 1965ஆம் ஆண்டோடு இவை நாணமின்றித் தமிழ் விரோத நடவடிக்கைகளிலும் பிரசாரங் களிலும் ஈடுபட்டன. உதாரணமாக, 1970ஆம் ஆண்டின் கூட்டணி அரசின் சமசமாஜ அமைச்சரான டொக்டர் கொல்வின் ஆர்டி சில்வாவே புதிய அரசியல் சாசனத்தின் வரைநர் ஆவார். இவர் சிங்கள - பெளத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும், தமிழ்மொழிக்கு அரசியல் சாசன அந்தஸ்தை மறுப்பதுமான சாசனத்தைத் தயாரித்து நிறைவேற்றினார். கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர் பீற்றர் கெனமன் தமிழ்மொழிக்கு அற்ப அந்தஸ்தைக்கூட வழங்குவதை ஆட்சேபித்த இரத்தினசாரோ என்ற பிக்குவின் கல்லறையில் அஞ்சலி செலுத்தி னார். இவர்களின் ஆட்சியில் தரப்படுத்தல் என்ற பெயரில் தமிழ் மாணவரைக் கருவறுத்த சேதிகள், தமிழ் மாநாடு காண வந்த அப்பாவித் தமிழரைப் பிணமாக்கிய சேதிக்ள், இன்னோரன்ன தமிழ் விரோதச் சேதிகள் ஏராளம், அவை எழுதித் தீரா, சர்வதேசச் சித்தாந்தங்களைச் சிருட்டித்த கார்ல்மாக்ஸ், லெனின் இவர்களின் பிணங்கள்கூட - இந்த இனவிரோதச் சேதிகளைக் கேட்டுத் தம் கல்லறைகளில் கண்ணிர் வடிக்கும்.
மூன்று: இந்நாட்டு மார்க்சிசவாதி களுக்குப் புரட்சிப் பாரம்பரிய மொன்று கிடையாது. ஏனைய நாடுகளில் தமது

72
வரலாற்றை இரத்தத்திலே தோய்த்து எலும்பினால் எழுதிய தியாக சிலர்களும், தீவிரவாதிகளும் தாம் மார்க்சிச வாதிகளாக அறிமுகமாகியிருக்கிறார்கள். இந் நாட்டிலோ வர்க்கப்போரைப்பற்றி வாழ்நாள் முழுவதும் வாய்ச் சவடாலடித்த அக்கப் போர்விரர் களைத்தான் நாம் மார்க்சிசவாதிகளாக அறிந்திருக்கிறோம். சமசமாஜிகளாவது பிரிட்டிஷ் கெடுபிடிகளுக்கு ஆளாகிச் சிறைக்குச் சென்ற செய்திகள் உண்டு. கம்யூனிஸ்ட் புரட்சிவாதிகளோ கனவிற்கூடக் களம் காணாதவர்கள்; பச்சிரத்தம் பரிமாறாத பாக்கியவான்கள்.
சொர்க்க பூமி:
இந் நாட்டில், விடுதலைக் கிளர்ச்சிக ளென்றும் விரமரணமென்றும் இரண வடுக் களென்றும் சிறைச்சாலை யென்றும் சித்திரவதையென்றும் வீரகாவியங்களைக் கண்ணிராலும் செந்நீராலும் தீட்டிய - தீட்டிக்கொண்டிருக்கின்ற புரட்சி மரபு தனியொரு தமிழரசுக் கட்சிக்கு மட்டுமே உண்டு வர்க்கப்போரை வழி நடாத்தவும், சமூக - அரசியல் புரட்சிகளை நெறிப் படுத்தவும் தேவையான உள்ளமும் உணர்வும் உறுதியும் கொண்டது இந்த இலட்சியத் தானையே. இந்த இயக்கத்தின் இளைய தலைமுறை, ஆங்காங்கு நெருடுகின்ற பிற்போக்குப் பீடங்களை அழித்துவிட்டு, சாதிமத பேதமற்ற கரண்டுவோனும் கரண்டப்படுவோனுமற்ற - வர்க்கப் பேதமற்ற - கொள்வோரும் கொடுப் போரு மற்ற - சோசலிசச் சொர்க்கத்தைச் சாதிக்கும் நாள் விரைவில் மலர்க!

Page 384
கப்பலோட்டி தபால்சேவை நடத்
O
போரின் ஓர் அங்கமாகத் தமிழ் ஈழமெங் சேவையை, தந்தை செல்வா முதல் தபாற் த வைக்கிறார்.
தமிழரசுத் தபால்
தமிழர் மத்தியில் தமிழ்த் தொடர்பை ஏற்படுத் திருவாளர்கள். வ, நவரத்தினம், ராமகிருஷ்ண \ಶ೮b பிரிக்கும் கட்சி.
 
 
 

ய எமக்குத் துவது சிரமமல்ல!
தம் வெற்றி நடைபோட்ட தமிழரசுத் தபாற் sலையை விற்பதன் மூலம் இங்கு ஆரம்பித்து
0கள் பட்டுவாடா!
தும் தமிழரசுத் தபாற் சேவையின் தபால்களை, ாஸ் சி. பொ. வேலாயுதபிள்ளை ஆகியோர்
لم

Page 385
ஆயுதமற்ற சத்தியாக்கிரகத்தை ( பொலீஸ்
ராணுவத்தி
தமிழ்ப்போரைத் தகர்க்கவெனச் சத்தியாக் அவர்களை விரட்டவல்ல கருவிகளுடன் (க முற்றுகையிட்டனர் நகரசுத்தித் தொழிலாளர்க
 
 

முறியடிக்கத் திரண்ட ஆயுதமுற்ற
D 63).
ன் இறுமாப்பு
கிரகிகளை இராணுவத்தினர் முற்றுகையிட, ழிவுப்பொருட் பெட்டிகள்) இராணுவத்தினரை ள் என்னே தமிழன் மூளை

Page 386
கட்சியும் தொழில திரு. இ. பே
(பொதுச் செயலாளர், அர
ரிழத்தைத் தாயகமாகக் கொண்டு பலநூறு ஆண்டுகளாகத் தனிக் கொடியுடன் தனியாட்சி நடாத்தி வந்த தமிழ் இனம், 1619ஆம் ஆண்டு போர்த்துக்கீசரின் படையெடுப்பினால் - போரில் தனது ஆட்சியை இழந்துவிட்டது என்பது வரலாறு. போரில் ஆட்சியை இழந்தவர்கள் நிரந்தர அடிமைகளாக வாழ்ந்தார்கள் என்று வரலாறு இல்லை. அத்தகைய தமிழினம் தனது அரசுரிமையை மீண்டும் நிலைநாட்டச் சுமார் 350 ஆண்டுகளாகப் பரிதவித்துக்கொண்டிருந்தது. போர்த்துக் கீசரைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் அவர்களின் பின்னால் ஆங்கிலேயரும் ஈழத்தை ஆண்டனர். பின்னர் வந்த ஆங்கிலேயே அரசு தன் வசதிக்காகத் தமிழர் வாழ்ந்துவரும் ஈழத்தைச் சிங்கள மக்கள் வாழ்ந்துவரும் நாட்டுடன் ஒன்றாக இணைத்து இலங்கை என்ற பெயருடன் ஆட்சி நடாத்திய பின்னர் 1948இல் சிங்கள மக்களின் தலைவர்களிடம் ஒப்படைத்துச் சென்றனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இழைத்த இந்தத் துரோகத்தினால், 350 ஆண்டுகளாக அந்நியப் படையெடுப்பினால் அரசுரிமை இழந்து வாழ்ந்த தமிழ் மக்களுக்கு - 1948ஆம் ஆண்டு இலங்கை பெற்ற சுதந்திரம் எந்த விடிவையும் கொடுக்கவில்லை.
1948ல் பதவிக்கு வந்த சிங்கள அரசானது, அதற்கு முன்னர் தமிழ் மக்கள் அனுபவித்து வந்த உரிமைகளைக் கூடப் படிப்படியாகப் பறித்தெடுக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் தோன்றியதே இலங்கைத் தமிழரசுக் கட்சி. காந்தீயவாதியும், சிந்தனைத் திறன் மிக்கவரும், சட்ட நிபுணரும் -

O Ο Ο O ாளா வாககமும
ரின்பநாயகம்
சாங்க எழுதுவினைஞர் சங்கம்)
வாய்மை, நேர்மை, விடாமுயற்சி ஆகிய அரும் பண்புகளின் நிலைக்களனுமாகிய தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பெற்ற தமிழரசுக் கட்சியானது - இன்னும் அவரது உயர்ந்த தலைமையிலே ஈழத்தமிழ் மக்களின் பூரண விடுதலைக்காக உழைத்து வருவது - தமிழ் மக்கள் செய்த பெரும் பாக்கியமென்றே எவரும் கருதுவர். இந்திய சுதந்திரத்தின் சிற்பி அண்ணல் காந்தியடி களைப் போன்றும் - சீனக் குடியரசின் மாபெரும் தலைவர் மாசேதுங் போன்றும் நமது தலைவர் தந்தை செல்வா அவர்கள் இந்த நீண்ட இயக்க வரலாற்றில் செய்த தியாகங்கள் - ஆற்றிய பணிகள் - மனிதவரலாற்றில் அசாதாரணமானவை. தந்தை' என்று முப்பத்தைந்துலட்சம் தமிழ் பேசும் மக்களும் ஏற்றுக்கொண்ட எமது தலைவரின் வரலாறுதான் தமிழ்த் தேசிய இனத்தின் வரலாறு என்றால் மிகையாகாது. பிரதேச வேறுபாட்டினாலும்- சமூக அமைப் பினாலும் - சாதிக் கொடுமைகளினாலும் நாட்டில் நாற்புறமும் சிதறுண்டு கிடந்த தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, ஒரு கொடியின்கீழ் இன்று தமிழர் கூட்டணி என்ற அமைப்பிலே கொண்டுவந்த சாதனைக்கு எமது வரலாற்றில் எதையும் ஈடுகாட்ட முடியாது. அமெரிக்காவில் உள்ள பிரபல செய்தி ஏடான "வாஷிங்டன் போஸ்ற்” என்ற பத்திரிகை "தந்தை செல்வாவை ஈழத்தமிழ் மக்கள் தமது தெய்வமாகப் போற்றுகின்றனர்" என ஒரு சமயம் வர்ணித்திருந்தமை அவரது பெருமைக்கு ஒர் எடுத்துக்காட்டு தமிழினம் செய்த தவப்பயனினால் தரணி தந்த தந்தை செல்வா தன்னால் தோற்றுவிக்கப்பெற்ற

Page 387
3
இயக்கத்திலே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய பெருங்குணங்கள் நிறைந்த பலரைத் தனது வாரிசுகளாகப் பெற்றிருந்தார். கால ஓட்டத்தில் இனத்தின் விடிவுக்காகக் களங்களில் விழுப்புண் பெற்றும், அயரா உழைப்பினாலும் உருக்குலைந்து, நோய்வாய்ப்பட்டுப் பலர் மறைந்துவிட்டனர். இன்று இவ்வியக்கம் தந்தையின் முதல்வாரிசான நாவலர் அ. அமிர்தலிங்கம் தலைமையில் ஒப்படைக் கப்பட்டுள்ளது. நேர்மை - நெஞ்சுறுதி - தளரா உள்ளம் ஆகிய பண்புகளுக் குறைவிடமான நாவலர் அமிர்தலிங்கம் அவர்கள் தந்தையின் ஆசீர்வாதத்துடனும், வழிகாட்டுதலுடனும் இந்திய சுதந்திரத்தின் தந்தை அண்ணல் காந்தியடிகளுக்கு வாய்த்த பண்டித நேருஜி போன்றிருப்பது நம்மினம், செய்த பாக்கியமென்றே கருதவேண்டும்.
சுக்கானில்லாத நாவாய் போலவும் - மேய்ப்பனில்லாத பசுக்கள் போலவும் திசை தெரியாது தட்டுத் தடுமாறி வாழ்ந்து கொண்டிருந்த ஈழத் தமிழர் வரலாற்றில், தந்தை செல்வாவும் - தந்தையின் சிந்தையில் தமிழரசுக் கட்சி என்ற உயர்ந்த விடுதலைப் பாசறையும் கோட்பாடும் உதித்திராது விடின், சிங்கள ஏகாதிபத்தியத் துக்கு அடிமைப்படுத்தப்பட்ட தமிழினத்தின் எதிர்கால வரலாறு வேறு விதமாக அமைந்திருக்கும் என்பதில் எவரும் சந்தேகப்படுவதற்கில்லை. இந்த இயக்கத்தின் கால்நூற்றாண்டு வீரவரலாற்றில் இயக்கத் தினர் சந்தித்த களங்கள் - அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் பலநூறு. சமுதாயத் தின் ஒவ்வொரு துறையிலும் தமிழரசுக்கட்சி புரட்சியையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி அழிவினின்றும் இனத்தைக் காப்பாற்றி வந்திருக்கின்றது. சிங்கள ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக்கு ஏதிராகத் திட்டங்கள் பல தீட்டிப் போராட்டங்கள் நடாத்தித் தமிழ் மக்களின் நாணயத்தைப் பேணிப் பாதுகாத்து வரும் இவ்வியக்கம், சமுதாய அமைப்பில் மனிதனை மனிதன் சுரண்டும் - அநாகரிக மான - கொடூரமான சாதிக் கொடுமைக் கெதிராகப் பல போராட்டங்கள் நடாத்தி

76 ---
வெற்றியும் கண்டிருக்கின்றது. பொதுவாகச் சாதி - சமயம் - பிரதேசம் என்ற குறுகிய வட்டங்களுக்கப்பால் நின்று செயல் பட்டமையே தமிழரசுக் கட்சியின் வெற்றிக்குக் காரணமாகும்.
சமுதாயத்தின் ஒவ்வோர் துறையிலும் அடிமைத்தனத்திற்கும், அச்சுறுத்தல் களுக்கும், ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் போராடி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியானது - தமிழ்த் தொழிலாளர்களுக் கெதிராகச் சிங்களத் தொழிலாளர்கள் உயர்த்திய போர்க்கொடிக்கெதிராகவும் போராட்டம் ஆரம்பிக்கப் பின்னிற்கவில்லை. எமது கட்சி 1961ஆம் ஆண்டு தமிழகத்தில் சிங்கள ஆட்சியை இரண்டு மாதகாலமாக ஸ்தம்பிக்கச் செய்து - சிங்கள அரசுக் கெதிராகச் சமாந்தரத் தபால் சேவைகூட நடாத்தியதை இந்நாடில்ல- அகில உலகுமே அறியும். இப்பெரும் போராட்டத்தை நசுக்குதற்காகச் சிங்கள அரசு முப்படை களையும் சத்தியாக்கிரகிகள் மீது ஏவி, அப்பாவி மக்களை அடித்து நொருக்கியது. தலைவர்கள் அனைவரையும் ஹோமசுமை என்ற இடத்திலுள்ள இராணுவ முகாமில் சிறை வைத்தது. அக்காலக்கட்டத்திலேயே தமிழ் அரச ஊழியர்களுக்கெதிராகச் சிங்கள அரச ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தத் தலைப்பட்டனர். அரச சேவையில் அன்று பிரபல்யம்வாய்ந்த 'அரசாங்கலிகிதர் சேவைச் சங்கம் (G. C. S. U) என்ற தொழிற் சங்கம் தனிச் சிங்களச் சட்டத்தைத் தீவிரமாகத் திணிப்பதற்குப் பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளை ஆட்சியாளருக்கு எடுத்தியம்பிற்று. இதன்மூலம் தமிழ்த் தொழிலாளர்கள் பலர் தமது தொழிலை இழக்கவும் - வேலை நோக்கி இருப்பவர்கள் வேலை வாய்ப்பை இழக்கவும் ஏதுவான புத்திமதிகளை இத் தொழிற் சங்கம் மறைமுகமான முறையிலும் - நேரிலும் அரசுக்குக்கூறத் தொடங்கியதுடன், தானாகவே பல திட்டமிட்ட சதிகளைத் தமிழ் ஊழியர்களுக்கெதிராக மேற் கொண்டும் வந்தது. இதனால் தமிழ் ஊழியர்கள் பலப்பல திணைக்களங்களிலும் சிங்கள அதிகாரிகளினால் பழிவாங்கப்படத்

Page 388
-3
தொடங்கினார். இடதுசாரித் தலைமையின் கீழ் இயங்கி வந்த அ. லி. சே. சங்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் ஊழியர்கள் உறுப்புரிமை வகித்திருந்தும்கூட, அச் சங்கத்தின் கூட்ட நடவடிக்கைகள், பதிவேடுகள் அனைத்தும் தனிச் சிங்களத் திலேயே வைக்கப்படலாயின. தமிழ் ஊழியர்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப் பட்டன. மாறாக, அவர்களுக்கு ஆட்சியாளர் மூலம் பல நெருக்கடிகள் உருவாக்கப் பட்டன. தொழிலாளர் சுதந்திரத்திற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த தியாகி கந்தசாமி, தொழிற்சங்கப் பணிகளுக்காகத் தன் வாழ்க்கையை முற்று முழுதாக அர்ப்பணித் துழைக்கும் திரு. கே. சி. நித்தியானந்தா போன்ற தமிழ்த் தொழிற் சங்கத் தலைவர்களால் கட்டியெழுப்பப் பட்டு, வழிநடத்தப்பட்டு வந்த அ. லி. சே. சங்க நடவடிக்கைகள் தமிழ் ஊழியர் மத்தியில் மிகுந்த ஆத்திரத்தையும், வெறுப் பையும் உண்டாக்கின. இத் தொழிற் சங்கத்தைப் பின்பற்றி, அரச சேவை களுக்கான வேறு பல தொழிற் சங்கங்களும் தமிழ் ஊழியர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கின. தமிழ்த் தொழி லாளர் பால் இத்தகைய இருள் சூழத் தொடங்கிய காலக்கட்டத்தில்தான் தமிழ் ஊழியரின் பிரதிநிதிகள் ஹோமகமைச் சிறையில் இருந்த தமிழரசுத் தலைவர்களைப் பல தடவைகள் நேரில் சந்தித்து நிலைமை யை எடுத்துக் கூறி உதவி கோரினர். அமரர் டாக்டர் இ.மு. வி. நாகநாதன்,திரு. மு. திருச் செல்வம், கியூ. சி., திரு. அ. அமிர்தலிங்கம் முதலான பல தலைவர் களுடன் தமிழ் ஊழியர் பிரதிநிதிகள் நடாத்திய பல நீண்ட பேச்சுவார்த்தைகளின் பெறும்பேறே இன்றைய தமிழ் மொழி வழித் தொழிற் சங்கங்களாகும். இந்த மறுக்க முடியாத உண்மையை ஒரு சிலர் சந்தர்ப் பவாதமாக இன்று மூடி மறைக்க முற்படலாம்; ஆயின் உண்மை என்றும் நிலைக்கும்.
மொழிவழித் தொழிற் சங்கங்களில் முதன்மையானது "அரசாங்க எழுது வினைஞர் சங்க" மாகும். இத் தொழிற் சங்கம் 1961ஆம் ஆண்டு, மேத் திங்கள் 2ஆம் நாள் துவக்கப் பெற்றது. இதற்கு முன்னதாக அரச நிறுவனங்கள் பலவற்றிலும் உள்ள பல்வேறு

77
தரங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் பலர் சேர்ந்து "தமிழ் ஊழியர் சங்கம்” என்ற பெயரில் ஒரு தொழிற் சங்கத்தை நிறுவினார்களாயினும், அதனைத் தொழிற் சங்கப் பிரமாணங்களுக் கமையப் பதிவு செய்ய முடியாது போனமையால், அதனைக் கைவிட வேண்டியதாயிற்று. அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தைத் தொடர்ந்து அஞ்சல் எழுது வினைஞர்கள், புகைவண்டிப் பகுதி ஊழியர்கள், நாவாய் இயக்குநர்கள், துறைமுக நிலைய வழிகாட்டி ஊழியர்கள், இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள், தமிழ்த் தட்டெழுத்தாளர்கள், கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆகியோருக்கும் தனித்தனித் தொழிற் சங்கங்கள் ஆரம்பிக்கப் பெற்றன. இத் தொழிற் சிங்கங்கள் ஏறத்தாழ அனைத்தும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைமை அலுவலகத்திலேயே இயங்கி வருகின்றன. ஒவ்வோர் சங்கமும் தனது ஊழியர்களின், பிரத்தியேகப்
பிரச்சினைகளுக்காகப் போராடி வருவதுடன், தமிழ் ஊழியர்களின் ப்ெரதுப் பிரச்சினைகளிலும், தமிழ் இனப்
பிரச்சினைகளிலும் ஒன்றுகூடி ஆலோசித்து, ஆகவேண்டிய முடிவுகளை மேற்கொள்ளு கின்றன. இன்று 'தமிழ்த் தொழிற்சங்கக் கூட்டணி என்ற அமைப்பில் அனைத்தும் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளன.
அரசாங்க ஊழியர் பிரச்சினைகளில் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம், ஏனைய மொழிவழித் தொழிற் சங்கங்களின் உதவியுடன் எப்பொழுதும் முன்னின்று உழைக்கத் தவறியதில்லை. இதன் ஆரம்பகால முன்னோடிகளாக இருந்த திருவாளர்கள்: க. சிவானந்தசுந்தரம், இ. பாலசுப்பிரமணியம், ஆ. இராசரத்தினம், செ. கோடீஸ்வரன், தங்கவேலு, தம்பிமுத்து முதலானவர்களின் கடினமான உழைப்பு - மொழிவழித் தொழிற் சங்கத் துறையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இன்று அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் ஆலவிருட்சம்போல் வளர்ந்து, பலம் பொருந்திய சிங்களத் தொழிற் சங்கங்களுக்கெதிராக ஈடுகொடுத்துப் போராடக்கூடிய நிலையில்

Page 389
இருக்கின்றதென்றால், அதற்கு ஒரு முக்கிய காரணம் அன்று போடப்பட்ட பலம் வாய்ந்த அத்திவாரமேயாகும்.
தமிழ் ஊழியர் பிரச்சினைகளில் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கெல்லாம் கைகொடுத்து உதவியவர்கள் தமிழரசுத் தலைவர்களே. தந்தை செல்வா, அமரர் டாக்டர் இ. மு. வி. நாகநாதன், திரு. மு. திருச்செல்வம், கியூ சி, திரு. அ. அமிர்தலிங்கம் ஆகியோர் அவ்வப்பொழுது சங்கத்திற்கு ஆற்றிய சேவைகளை எவருமே அளவிட முடியாது. விசேடமாக நெருக்கடி மிகுந்த ஒவ்வோர் கட்டத்திலும் தந்தை செல்வா அளித்து வந்த ஆலோசனைகளும், அறிவுரைகளுமே சங்கத்தைச் சரியான வழியில் இட்டுச் சென்றது. சிங்களத் திணிப்பினாலும், சிங்களக் கெடுபிடிகளினாலும் ஊழியர் களுக்குச் சேவை விடயங்களில் அவ்வப் பொழுது ஏற்பட்ட நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு மேற்படி தலைவர்களே நிவாரணம் பெற்றுக் கொடுத்துள்ளார்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம்.
1964ஆம் ஆண்டு, தனிச் சிங்களச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படு முன்னர் சேவையில் சேர்ந்த ஊழியர்களும் சிங்களத் தகைமை பெற்றிருக்க வேண்டு மென அன்றைய அரசு ஒரு திடீர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இதனால் Lg56ofil -golgpu 6A6oli 66ir (Staff Officers) so IL ILLI பலர் வேலை நீக்க அறிவித்தல்களைப் பெற்றுக்கொண்டனர். ஆயிரக் கணக்கான பழைய தமிழ் ஊழியர்கள் வேலைநீக்க அறிவித்தல்களை எதிர்நோக்கிய வண்ண மிருந்தனர். இதனைக் கேள்வியுற்ற திரு. மு. திருச்செல்வம் அவர்கள் அப்போது பதவியிலிருந்த பிரதம அமைச்சர் திருமதி சிறீமா பண்டாரநாயக்கா அவர்களை நேரடியாகச் சந்தித்து, அநீதியை விளக்கி வேலை நீக்க அறிவித்தல்களை வாபஸ் பெறச் செய்தார். அரசியலில் ஒதுங்கி வாழ்வதைக் கெளரவமாக மதிக்கும் "பெரும் புள்ளிகள்" பகீரதப் பிரயத்தனம் செய்தும் நிறைவேற்ற முடியாத விடயத்தைத்

78
திரு. திருச்செல்வம் அவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியமையினால்தான் - இன்றும் ஆயிரக் கணக்கானோர் உத்தியோகத்தைப் பறிகொடுத்து நடுத்தெருவில் நிற்காது வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சிலர் இதனைச் சாவகாசமாக மறந்து விட்டிருக்க லாம் எனினும், இச் சந்தர்ப்பத்தில் அந்தப் பேருண்மையைச் சுட்டிக் காட்ட வாய்ப்பு ஏற்பட்டமைக்கு மகிழ்கின்றேன்.
திரு. மு. திருச்செல்வம், கியூ. சி. அவர்களுக்கும் மொழிவழித் தொழிற் சங்கங்களுக்கும் இடையே இருந்து வரும் தொடர்பு அதிமேன்மையானது. “சொலி சிட்டர் ஜெனரல்" என்ற மிக உயர்ந்த பதவியை அரசாங்கத்தில் வகித்துக் கொண்டே அவர் தம்மை ஒரு ‘தமிழரசுவாதி' என்று மக்களையும் நாட்டையும் அரசாங்கத்தையும் உணர வைத்திருந்தார். அப்பதவியில் இருந்து கொண்டே அவர் 'தமிழரசுக் கட்சிப் பேச்சாளனாக விளங்கி, நாட்டின் பிரதமராக அன்றிருந்த திரு. எஸ். டபிள்யூ அர். டி. பண்டாரநாயக்காவுடன் நடந்து கொண்ட LustaäT6o Lo எவரையும் சிந்திக்க வைக்கக்கூடியது. இத்தகைய துணிச்சல் வாய்ந்த ஓர் அரசஊழியனை நமது இனம் இதற்கு முன் என்றும் பெற்றிருந்ததில்லை எனத் துணிந்து கூறலாம். தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலம் தொடக்கம் தந்தை செல்வாவின் வலக்கரமாக இருந்து, கட்சி எடுத்த முக்கிய முடிவுகள் எல்லாவற்றிலும் பெரும் பங்குகொண்டு உழைத்து வரும் திரு. திருச்செல்வம், தமிழ் அரச ஊழியர் பிரச்சினைகளில் ஈடுபட்டு அவர்கள் விமோசனத்திற்காகவும் உழைத்து வருவதை நாடறியும்அவற்றை இங்கு விரித்துரைக்க அவகாசம் இல்லை. ஆயினும், இரண்டொரு விடயங்களை மாத்திரம் எடுத்துக் காட்டவிரும்புகின்றேன்.
தனிச் சிங்களச் சட்டத்தினால் புதிய ஊழியர்கள் மாத்திரமன்றிப் பழைய ஊழியர்களும் கொடுமைகளுக்காளாக்கப் பட்டனர். இதற்குப் பரிகாரம் காணவேண்டி அரசாங்க எழுதுவினைஞர், சங்கம் பல நாட்களாக அனுபவசாலிகள், அரசியல் வாதிகள் முதலான் பலவருடனும் ஆலோசனை நடாத்தி வந்தது. ஈற்றில்

Page 390
-3 வழமை போல் தந்தை செல்வாவின் ஆலோசனையுடனும், அனுமதியுடனும் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து அரசுக் கெதிராக வழக்குத் தொடருவதென முடிவாகிற்று. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திலே, சங்க உறுப்பினராக இருந்த திரு.செ. கோடீஸ்வரனின் பெயரில் வழக்குத் தாக்கல் செய்வதெனவும் தீர்மானிக்கப் பட்டது. கொழும்பில் இருந்த எத்தனையோ “பிரபல வழக்குரைஞர்கள்". "இதில் வேலையில்லை" எனக் கைவிரித்த பொழுது, திரு. திருச்செல்வம், கியூ. சி. அவர்கள் இதனை நடாத்தித் தர முன்வந்துழைத்து, அதில் வெற்றிவாகையும் சூடினார்! இதுவே சர்வதேசப் புகழ் வாய்ந்த “கோடீஸ்வரன் வழக்”காகும். திரு. திருச்செல்வம் அவர்கள் - திரு. சி. இரங்கநாதன், கியூ. சி, திரு. கே. சர்வர்னந்தா, கியூ.சி. முதலான பல இளைய வழக்குரைஞர்களின் அனுசரணை யுடனும், தந்தை செல்வாவின் ஆலோசனை யுடனும் இவ்வழக்கின் வெற்றிக்காக மாதக் கணக்கில் இரவு பகலாக உழைத்தார். அளவுக்கதிக உழைப்பினால் அவர் இருதய நோய்க்காளாகி மூன்று மாதம் வைத்திய சிகிச்சைக்கு உட்படவும் நேரிட்டது. அன்று சங்கத்தின் பொதுச் செயலாளரர்க இருந்த திரு. இ. பாலசுப்பிரமணியம் இவ்வழக்கில் சங்கத்தின் சார்பாக ஆற்றிய சேவையையும் நினைவு கூராமல் இருக்கமுடியாது.
பின்னர் 1965ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியானது ஐ. தே. கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தபொழுது, தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தந்தை செல்வாவினால் திரு. திருச்செல்வம் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற் காக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட அரசியல் மேதை திருச்செல்வம் அவர் களுக்கு, "முதலில் தமிழ் ஊழியர் பிரச்சினையைத் தீர்த்து விட்டு அதன் பின்பே தமிழ் மக்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டு" மென அரசாங்க எழுதுவினைஞர்

சங்கமும், ஏனைய தமிழ்த் தொழிற் சங்கங் களும் மிகுந்த நெருக்கடியைத் தோற்று வித்தன. இதனால் திரு. திருச்செல்வம் அவர்கள் தமிழ் ஊழியர் பிரச்சினைக்கு முதலிடம் கொடுத்து, அவர்களின் இடர்களை மிகப் பெருமளவில் போக்கி னார். பழைய ஊழியர்கள் சிங்களத் தகைமையினின்றும் விடுவிக்கப்பட்டனர். புதிய ஊழியர்களுக்கு முழுமையான நிவாரணம் கிட்டவில்லை. எனினும், புதிய ஊழியர்களில் பல தரங்களைச் சேர்ந்தவர் கள் சிங்களத் தகைமையினின்றும் விதிவிலக்குப் பெற்றனர். ஏனையோரும் பல சலுகைகளைப் பெற்றனர். இதனால் அரச சேவையில் உள்ள அத்தனை பேரும் நன்மை அடைந்தனர் என்று கூறலாம். இவற்றைத் தீர்ப்பதில் அதிக காலத்தைத் திரு. திருச்செல்வம் அவர்கள் அமைச்சரவையிற் செலவிட வேண்டியிருந்தது. இதனால் தமிழ் மக்களின் அதிமுக்கிய கோரிக்கையான மாவட்ட சபையை நிறைவேற்ற முடியவில்லை. காலம் கடந்ததால் சிங்கள மக்கள் மத்தியில் செயற்கையான எதிர்ப்புக்கள் தோன்றவே, அன்றைய பிரதம அமைச்சர் திரு. டட்லி சேனநாயக்கா மாவட்ட சபைகள் நிறுவும் யோசனையைக் கைவிடுவதாக அறிவித்தார். இதனால் தமிழ் ஊழியர்கள் நலனுக்காகத் தமிழ் மக்களின் உரிமையை இழக்கும் துர்ப்பாக்கிய நிலை தமிழரசுக் கட்சிக்கேற் பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி அரசை விட்டு வெளியேறித் தனியாக இயங்கத் தொடங்கியது.
திரு. திருச்செல்வம் அவர்கள் அமைச்சர்ப் பதவியை இராஜினாமாச் செய்த பின்பும், தொடர்ந்து தமிழ் ஊழியர் பிரச்சினைகளில் ஈடுபட்டு அயராது உழைத்து வருகின்றார். இலங்கை அரசாங்கத்தின் சட்ட ஆலோசகனாக இருந்து கொண்டே - தமிழரசுக் கட்சிக்கும் சட்ட ஆலோசகனாக இருந்த ஒருவரைத் தமிழ் ஊழியர்கள் தமது வழி காட்டியாகப் பெற்றமை ஓர் வரப்பிரசாதமாகும். அத்தோடு, அமரர் டாக்டர் இ. மு. வி.

Page 391
s
நாகநாதன் அவர்களும், கட்சியின் இன்றைய தலைவர் நாவலர் அ. அமிர்தலிங்கம் அவர்களும் தமிழ்த் தொழிலாளர்களின் இடர்களைக் களைய ஆற்றிய பணிகள் மகத்தானது. அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் உதவியினால் பல வெற்றிகளை ஈட்டிக் குவித்தது.
அரச ஊழியர் அல்லாத ஏனைய துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் தமிழரசுக் கட்சி தொழிற் சங்கங்களை உருவாக்கியது. தோட்டத் தொழிலாளர் களுக்கென "இலங்கைத் தொழிலாளர் கழகம்” என்ற பெயரில் ஒரு தொழிற் சங்கத்தை நிறுவிச் செயல் படுத்து கின்றது . யாழ்ப்பாணத்தில் பஸ்தொழிலாளர் களுக்காக ஆரம்பிக்கப்பெற்ற "இலங்கை பஸ் தொழிலாளர் கழகம்” பிரபல்யம் வாய்ந்தது. வட, கீழ் மாகாணங்களிற் கடமையாற்றும் மிகப் பெரும்பான்மையான தமிழ் ஊழியர்கள் இதில் அங்கம் வகிக்கின்றனர். இதன் பொதுச் செயலாளரான சட்டத்தரணி அடலேறு மு. ஆலாலசுந்தரம் தமிழரசுக் கட்சியின் முக்கியமான இளந் தலைவர்களில் ஒருவர். இவரது அயரா உழைப்பினால் உருவாகிய "பஸ் தொழிலாளர் கழகம்", அமரர் டாக்டர் இ. மு. வி. நாகநாதன் அவர்களின் ஆதரவினால் பஸ் தொழிலாளர் விடயங்களில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. இன்று இ போ. ச. பிறப்பித் துள்ள "ஐயாயிரம் (5,000) உறுப்பினர் களுக்குக் குறைந்த தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க முடியாது" என்ற எதேச்சதிகார மான சட்டத்தின் விளைவினால், இக் கழகம் தொடர்ந்து இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது! ஆயினும் இதனை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இன்று கட்சி ஈடுபட்டிருக்கின்றது. மேற்கூறியவை தவிர்ந்த - நெசவுத் தொழிலாளர்கள், சுருட்டுத் தொழிலாளர்கள், கடற்றொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களிலும் கட்சி
1.

380
அவ்வப்பொழுது ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்து வந்திருக்கிறது; உழைத்தும் வருகின்றது. தமிழரசுக் g5 * Surašyt தலையீடுகளினாலேயே, இத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமது நிலைகளைப் பெருமளவில் உயர்த்திக் கொள்ள முடிந்தது.
இவ்வாறு தமிழ்த் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆற்றிவந்த பங்கு மிக மகத்தானதாக விளங்குகின்றது. தமிழ் மக்களுக்கெதிரான மனித அடக்குமுறைக்கும் - ஆக்கிரமிப்புக்கும் எதிராகப் போராட்டம் நடத்தும் ஆற்றலும், பண்பும் நிறைந்த ஒரே விடுதலைக் கட்சி - எந்தக்காலத்திற்கும் - இலங்கைத் தமிழரசுக்கட்சியே என்பதை மனச்சாட்சியுள்ள எவரும் ஏற்றேயாக வேண்டும். இத்தகைய ஒரு புனித இயக்கத்தைத் தமிழ் மக்களிடையே, சத்தியவந்தனாகிய மூதறிஞர் சா. ஜே. வே. செல்வநாயகம் கியூ. எமி, பா. உ. அவர்கள் தோற்றியிருக்காவிடின் - தமிழினம் என ஒன்று இந்த நாட்டில் இருந்ததாக எதிர்கால வரலாறு எடுத்துக் காட்டுவது நிச்சயமற்றதாகி விடும். அத்தகைய அவல நிலையில் இருந்து எம்மைக் காப்பாற்றிய பெருமையை இ. த. அ. கட்சி தனதாக்கி - இன்று வெள்ளி விழாக் கொண்டாடு கின்றது. அனாதரவான தமிழ்த் தொழிலாளர் களின் ஒரே "இரட்சகன்” - இலங்கைத் தமிழரசுக் கட்சியே! எனவே, அத்தகைய கட்சியின் வெள்ளி விழாவில், தமிழினத்தின் பிரிக்கமுடியாத மாபெரும் சக்தியான தமிழ்த் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து திளைத்து மகிழ்வதில் வியப்பேது? விந்தையேது?
வாழ்க தமிழரசுக் கட்சி வாழ்க தமிழ்த் தொழிலாளர்கள் வாழ்க தமிழிம்ை!

Page 392
விடுதலைக்குப் பே முத்தமிழ்க் காவலர், ! கா. பொ. இரத்தினம். பி.
கொதிபத்தியங்களால் அடிமைப் படுத்தப்பட்ட நாடுகளின் மக்களும், பெரும்பான்மையினரால் நசுக்கப்படும் சிறுபான்மை இன மக்களும் தம்மைத் தாமே ஆளும் உரிமை பெறப் போராடுவது அன்றும் - இன்றும் - என்றும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். விடுதலை மக்களின் பிறப்புரிமையாகும். எனவே அடிமைத் தளையிற் சிக்கி அல்லலுறும் மக்கள், விடுதலை பெறத் துடித்துப் போராடுவது இயற்கையான செயலாகும்.
ஆளும் இனத்தவர்களை - அடிமைப்படுத்தினவர்களை -- அண்டிப் பிழைப்பதும், அவர்களின் காலைப் பிடித்துத் துதிபாடிச் சலுகைகள் பெற முயல்வதும், அவர்களுடைய ୬ – ଭ୩T ଈ] மேசைகளிலிருந்து விழும் வெறும் எலும்புத் துண்டுகளைக் கடித்தற்கு நாய்கள்போலச் சண்டையிடுவதும் இனத் துரோகிகளின் செயலாகும். இவர்களைத்தான் எட்டப்பர்கள்,
காக்கைவன்னியர்கள் என வரலாறு பழித்துரைக்கின்றது.
இன விடுதலைக்காக இன்று ஈழத் தமிழர் மட்டும் போராடவில்லை. உலகத்தின் பல நாடுகளிலும் விடுதலை பெற விரும்பிப் பல மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் சைபிறக தீவில் வாழ்ந்த துருக்கியின் மக்கள் தமக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கியுள்ளனர். சைபிறக - தமிழ் ஈழத்திலும் சிறிய தீவு. இங்கே 638,000 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஐந்து இலட்சத்து இருபத்து மூவாயிரம் பேர்
 

ாராடும் இனங்கள்
பண்டிதர், வித்துவான்
ஓ. எல். எம். ஏ. எம். பி.
கிரேக்கர்கள். ஒரிலட்சத்துப் பதினாயிரம் துருக்கியர். இந்தத் துருக்கி மக்கள் நாட்டின் தென்பகுதியைத் தமது நாடாகப் பிரகடனஞ் செய்து ஆண்டு வருகின்றனர். இந்நாட்டின் குடிசனம் யாழ் மாவட்டத்தின் குடிசனத் தொகையிலும் குறைவானது.
பாகிஸ்தானில் இருந்து பங்களாதேசம் பிரிந்து தனிநாடாகிய வீரவரலாற்றினை அறியாத மக்கள் யாரேனும் உளரா
பிலிப்பைன்ஸ் தீவுகளின் தென் பகுதியில் வாழும் முசிலிம்கள் தங்களுக்குத் தனிநாடு வேண்டுமெனப் படைகொண்டு போராடி வருகின்றனர். இவர்கள் லிபியா நாட்டுத் துவக்குகளைப் பயன்படுத்து கின்றனர். மின்டானோ பகுதியில் மீண்டும் தங்கள் சொந்தக் குடியரசை நிலை நாட்டப் போரிடும் இவர்களின் தொகை பதினைந்து இலட்சமாகும்.
எத்தியோப்பிய நாட்டிலி ருந்து பிரிந்து தனி ஆட்சியை நிறுவுவதற்கு, அந்நாட்டின் ஒரு மாகாணமாகிய ஏற்றிறீரியா போராடுகின்றது. சிரியா நாடு இந்தப் போராட்டத்தை ஊக்குகின்றது.
தைலாந்தில் முசிலிம் மக்கள் 'பாட்டாளி எனும் பெயருடைய சுதந்திர ஆட்சியை நிறுவுவதற்குப் போராடுகிறார்கள். முசிலிம் அரேபிய நாடுகளிலுள்ள பலர் இவர்களுக்கு உதவி செய்கின்றார்கள்.
பர்மாவிலேயுள்ள 'கரன்' எனும் மலைச்சாதி மக்கள் சுயாட்சி பெறுவதற்

Page 393
г L
காகப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். இவர்களிடம் 'கரன் தேசிய விடுதலைப் படையும் உளது.
ஸ்பெயின் நாட்டில் 'பாகை இன மக்கள் தனியாட்சியை நிறுவப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றார்கள். இவர்களிற் பலர் சிறையிலும் வாடுகின்றனர்.
தென் ஆபிரிக்காவிலும், நாம்பியா எனப்படும் தென்மேற்கு ஆபிரிக்காவிலு முள்ள மக்கள் வெள்ளையரின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு இன்னும் பல துறைகளிலே போராடுகின்றனர். தென் ஆபிரிக்காவிலும், றொடேசியாவிலும் வெள்ளையர் ஆட்சியை - நிற, இனவெறியை எதிர்த்துக் கறுப்பு மக்கள் சுய ஆட்சிக்காகப் போராடுகிறார்கள்.
அண்மையில் விடுதலையடைந்த மொசாம்பிக், அங்கோலா முதலிய நாடுகளிலும், மக்கள் தன்னாட்சிக்காக ஏகாதிபத்திய வாதிகளை எதிர்த்துப் போராடியே விடுதலையைக் கண்டனர். கனடாவிலுள்ள குயிபெக் மாகாணத் திலுள்ள பிரெஞ்சு மொழியைப் பேசும் மக்கள் தங்கள் மாகாணத்தை ஆங்கிலம் பேசும் மக்களைக் கொண்ட ஏனைய மாகாணங்களிலிருந்து பிரித்துத் தனி நாடாக்க வேண்டுமென்று போராடு கின்றனர். அண்மையில் நடைபெற்ற மாகாணத்தேர்தலில், "பிரிவினை'க் கட்சி, லிபறல் கட்சியை வென்றுளது. இங்கே இரண்டு ஆண்டுகளுக்குள் பொது வாக் கெடுப்பு எடுத்துப் பிரிவினை உறுதிப் படுத்தப்படும்.
இந்த மக்களைப் போலவே நாமும் நமது இன விடுதலைக்காகப் போராடு கின்றோம். இந்தப் போராட்டத்திலே சேராத தமிழர்கள், தன்மானம் - சுயமரியாதை - மனிதப் பண்பு உள்ளவர்களாக இருக்க (ւpւգ-ԱյւDIT?
அமைதியான ஆட்சி நடத்துகின்ற பிரித்தானியாவிலும் - ஸ்கொட்லாந்து மக்களும் உவேல்ஸ் மக்களும் தனி ஆட்சி

82
பெறக் கிளர்ச்சி செய்து வருகிறார்கள. இந்தக் கிளர்ச்சியின் பயனாகப் பிரித்தானிய அரசாங்கம். ஆட்சியைப் பரவலாக்கு வதற்கும், இந்த இரு நாடுகளிலும் தனித்தனி சட்ட மன்றங்களை நிறுவுதற்கும் சட்டம் இயற்றுதற்கு முன்னோடியாக ஒரு "வெள்ளை" அறிக்கையினை வெளி யிட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் தனியாட்சிக் கிளர்ச்சியை நடத்தி வரும் கட்சிக்கு “ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி" என்று பெயர். இந்தக் கட்சி சென்ற பொதுத் தேர்தலில் ஏழு தொகுதிகளை மட்டுமே வென்றது. ஸ்கொட்லாந்து மக்களின் நாலில் ஒரு பங்கினர் - 25 வீதத்தவர் மட்டுமே இக் கட்சிக்கு வாக்களித்தனர்.
உவெல்சிலுள்ள "பிளையிட்கம்றி" எனும் தனி ஆட்சிக் கட்சிக்கு இரண்டு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இக் கட்சிக்கு 10 வீதமான உவெல்சு மக்களே வாக்களித்தனர். கடைசியாக நடந்த தேர்தலில், ஸ்கொத்லாந்து தேசியக் கட்சியும் உவெல்ஸ் தேசியக் கட்சியும் - முன்னைய தேர்தலிலும் கூடிய தொகையான வாக்கு களைப் பெற்றுள என்பது குறிப்பிடத்தக்கது. அக் கட்சிகளை ஒரளவு அமைதியடையச் செய்தற்குப் பிரித்தானிய அரசாங்கம், இந்த இருபிரதேசத்துக்கும் தனித்தனி சட்ட மன்றங்களை நிறுவ முன்வந்துளது.
இங்குள்ள சிங்கள ஏகாதிபத்தியமோ, தமிழ் மக்களின் வாக்குகளில் எண்பது விதத்துக்குக் குறையாத வாக்குகளைப் பெற்ற தமிழர் கூட்டணியை - தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதினெட்டுப் பேரில், பன்னிரண்டு பேரைக்கொண்ட தமிழர் கூட்டணியை - ஒதுக்கித் தள்ளி விட்டு தமிழ் மக்களைச் சிறுமைப்படுத்தும் முறையில் - தனக்குத் தாளம்போடத்தக்க ஒருவரைத் தானே அமைச்சராக நியமித்து - தமிழ் ஈழத்தை அடிமைப்படுத்தி-கொலனி ஆட்சி நடத்துகிறது!

Page 394
தனி சிந்த6ை சி. கதிரவேலுப்
இரு இனங்கள்
லங்கை ஒரு தீவு. ஆனால் அது ஒருநாட்ல்ல. இங்கு ஆரியராகிய சிங்கள வரும் திராவிடராகிய தமிழரும் இருவேறு தேசிய இனங்களாக வாழுகின்றனர். ஈரினங்களும் சரித்திரம், நிலம், மொழி, சமயம், கலாச்சாரம், பாரம்பரியம், இறைமை ஆகியவற்றால் வேறுபட்ட இரண்டு இனங்களாக வாழ்ந்திருக்கின்றனர். இலங்கையில் இப்படி 2500 வருடங்களுக்கு மேல் இவ்விரு இனங்களும்
இப்படி வாழ்ந்தது மறுக்க முடியாத உண்மையாகும். 1797ஆம் ஆண்டில் பிரசித்தி பெற்ற 'கிளெக்கோண் குறிப்பு பின்வருமாறு பதிவு செய்துள்ளது. "மிக்க ஆதியான காலம் முதலாக வேறுபட்ட இரு இனங்கள் இந்தத் தீவைத் தங்களுக்குள் பிரித்துள்ளன. முதலாவதாக உள்நாட்டில் வசிக்கும் சிங்களவர் வளவை ஆறு முதல் சிலாபம் வரை தெற்கிலும் மேற்கிலும் உள்ளனர். இரண்டாவதாக மலபார்கள் (தமிழர்) நாட்டின் வடக்குக் கிழக்கு பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த ஆதி காலம் முதலாகச் சிங்களவரும் தமிழரும் தங்கள் வாழ்வுக்காகத் தனித்துவத்தைப் பேணிக் காத்து வந்துள்ளனர். முக்கியமாகச் சிங்களவர் தங்கள் வாழ்வுக்காகவும், தனித்துவத்துக் காகவும் நடத்திய போராட்டத்தினால், தமிழரை எப்போதும்
 
 

u gër
னச் சிற்பி பிள்ளை, பn. உ.
தங்கள் அரசியல் சமுதாயத்திலிருந்து விலக்கியே வந்திருக்கின்றனர். சிங்களவருடைய தேசிய வீரனான துட்டகைமுனு, தன்னைச் சுற்றிய தமிழர் ஆட்சியில் நிம்மதியாக நித்திரை செய்ய முடியாதிருந்தான். இப்படித் தமிழ், சிங்கள அரசர்கள் சில காலங்களில் போர்ப்பலத் தால் ஒருவரை மற்றவர் வென்று இலங்கை முழுவதையும் ஒருகுடைகீழ்க் கொண்டு வந்திருந்தாலும், இரு நாடுகளும் ஒன்றாகவில்லை, இரண்டு இனங்களும் ஒரே இலங்கை இனமாக மாறவில்லை. இன்னும், 400 வருடங்களுக்கு முன் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது இங்கே ஒரு தமிழ் இராச்சியமும் இரண்டு சிங்கள இராச்சியங் களும் இருந்தன. கோட்டே எனும் கரையோரச் சிங்கள இராஜ்யம் போர்த்துக் கேயருக்குக் கைமாறியபின், தமிழ் இராஜ்யமும் தாக்குதலுக் குட்பட்டது. முக்கியமாகக் கண்டி இராஜ்யத்திற்குத் தமிழ் இராஜ்யம் உதவி செய்த காரணத்தால், போர்த்துக்கேயர் தமிழ் இராஜ்யத்தை முதலில் பிடிக்கவேண்டியதாயிற்று. தமிழ் இராஜ்யத்தின்மேல் போர்த்துக்கேயர் படையெடுத்த போது ஓர் இலங்கைமேல் அன்னியன் படையெடுத்தானென்று சிங்களவர் நினைக்கவில்லை. தங்கள் இராஜ்யத்தின் பாதுகாப்புக்கு அவசிய மென்று நினைத்தோ அல்லது அயல் நாட்டான் தமிழ் இராஜ்யத்தின் மேல் அன்னியன் படையெடுத்தானென்று

Page 395
3 கருதியோ உதவிக்கும் வரவில்லை. இதற்கு மாறாகத் தமிழ் இராஜ்யம் கைப்பற்றப் பட்டது பற்றி ஓர் இரகசிய திருப்தி அவர்களுக்கு இருந்திருக்கிறது. இன்றைய சிங்கள சரித்திராசிரியர் கலாநிதி ஜி. சி. மென்டிஸ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார். "வடக்கில் இருந்த தமிழ் இராஜ்யம் ஆதிக்கத்தில் வளர்ந்து தெற்கிடம் திறை வாங்கும் அளவுக்கு வந்தது. பதினைந் தாம் நூற்றாண்டில் சிங்கள ராஜஸ்தானத்தில் தமிழர் செல்வாக்குப் பெரிதாக இருந்தது. இதனால் நல்ல நேரமாகப் போத்துக்கேயர் வந்திராவிட்டால், இலங்கையும் மதுரை அல்லது தஞ்சையின் ஆட்சியின்கீழ் போயிருக்கும்." சேர்த்துப் பூட்டிய விலங்குகள்:
போர்த்துக்கேயருக்குப் பின் ஒல்லாந்தர், கண்டி இராஜ்யம் தவிர்ந்த - தெற்கிலும் வடக்கிலும் இருந்த சிங்கள, தமிழ் இராஜ்யங்களின் தேசங்களைக் கையேற்றனர். ஒல்லாந்தருக்குப் பின் வந்த பிரித்தானியர், இறுதியாக 1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்யத்தையும் கையேற்றனர். இதனால் முழுத் தீவும் பிரித்தானியர் ஆட்சிக்குட்பட்டது. அவர்கள் 1833ஆம் ஆண்டில் சிங்கள, தமிழ் நாட்டின் எல்லைகளை அழித்து, முழுத் தீவையும் ஒரு நிர்வாக அமைப்பின்கீழ்க் கொண்டு வந்தார்கள். இந்த இணைப்பை, கண்டி நாட்டுச் சிங்கள மக்கள் அன்று எதிர்த்தார் கள். இப்படி அடிமைப்பட்ட இரண்டு இனங்களை, அந்நியர் தங்கள் ஆட்சியில் ஒன்றுசேர்த்து விலங்கு பூட்டினர். சம்மத மின்றி இரண்டு இனங்களையும் சேர்த்துப் பூட்டிய விலங்குகள் இன்று சுதந்திரத்துக்குப் பின்னும் இரண்டு இனங்களையும் அப்படியே தொடர்ந்தும் பிணைத்து வைத்திருக்கின்றன. பிரித்தானியர் பூட்டிய விலங்குகளைச் சிங்களவரோ தமிழரோ ஏற்க வில்லை. இவ் விலங்குகள் இரண்டு இனங்களின் சுதந்திரத்தையும், அரசுரிமை யையும் இன்றும் பாதிக்கின்றன. முக்கிய மாகச் சிங்களவர் பாராளுமன்றத்தில் தங்கள்

4
பெரும்பான்மை வாக்குகளாலும், தமிழ் ஈழத்தில் முகாமிட்ட படைகளினாலும் தமிழ் மக்களை ஆளுகிறார்கள். இதனால் தமிழர்களுடைய சுதந்திரம், உரிமைகள், வாழ்வு, அரசுரிமை முதலியவையெல்லாம் மறுக்கப்படுகிறது. தமிழ் இனம் ஆளப்படும் அடிமை இனம் ஆகிறது.
சிங்கள மக்களும் துட்டகைமுனு காலத்தில் இருந்த வெறுப்போடும் ஒதுக்கல் மனப்பான்மையோடும்தான் இருக்கிறார்கள். அந்த இனவெறி இன்று பாகுபாடாகவும், ஆக்கிரமிப்பாகவும், இனக் கொலையாகவும், கொலனி ஆட்சியாகவும் காட்சி அளிக்கிறது. தமிழர்கள் இன்றும் "பறைத் தமிழர்கள்', 'கள்ளத் தோணிகள்' என்று அழைக்கப் படுகிறார்கள். சர்வதேசியம் பேசும் சிங்கள மார்க்சியவாதிகளே சிங்கள நாட்டின் தெருக்களில் நின்று தமிழுக்கு உரிமைதர மறுத்து, "தோசை, வடை எங்களுக்கு வேண்டாம்" என்றும் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இப்படியே ஒர் இனம், ஒரு மொழி, ஒரு சமயம், ஒரே அரசு என்ற கொள்கை தமிழினத்தின் மேல் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறது.
இதன் விளைவால் பத்து இலட்சம் தமிழ் மக்கள் குடியுரிமை இழந்து நாடற்றவர்கள் ஆனார்கள்; வாக்குரிமை இழந்து ஆட்டுமந்தைகள் போல் ஆனார்கள். மேலும், அவர்களுடைய சம்மதம் இன்றி இலங்கை - இந்திய ஒப்பந்தங்களினால் நாடு கடத்தப்படுகிறார்கள். தோட்டங்களில் வேலை இல்லாது தெருக்களில் பிச்சை எடுத்துச் சாகிறார்கள். தமிழ் நிலத்தில் இன்னும் சிங்களவர் குடியேற்றப்படுகிறார் கள். தமிழ் ஈழத்தைப் பறிமுதல் செய்து சிங்களவருக்குக் கொடுக்கிறார்கள். தமிழ் நிலத்தில் தமிழன் குடியேறினால் பட்டாளத் தை அனுப்பி அவசரகாலச் சட்ட விதிகளை அமைத்து, அத்தமிழர்களை அடித்து விரட்டிக் குடிசைகளை எரிக்கிறார்கள். ஆனால் தமிழ் நிலத்தில் அடாத்தாகக் குடியேறிய சிங்களவருக்குப் பாதுகாப்போடு, அந்நிலமும் கொடுக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு வியாபாரம், உத்தியோகம்

Page 396
3.
முதலிய துறைகளில் இடமில்லை.தமிழ் மாணவர்க்குத் தரப்படுத்தல் என்ற போர்வையில் பல்கலைக் கழகப் பிரவேசம் மறுக்கப்படுகிறது. சிங்கள நாட்டில் தமிழ்ப் பாடசாலைகளும் தமிழ் வகுப்புக்களும் மூடப்படுகின்றன. தமிழ் ஈழத்தில்கூட, தமிழ் மாணவர்மேல் சிங்களம் போதனா மொழியாகத் திணிக்கப்படுகிறது. சிங்களம் தெரியாத தமிழ் ஊழியர் வேலையில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். தமிழ்ப் பிரதேசத்தில் சேவை செய்யும் சிங்கள ஊழியர்கள் தமிழ் தெரிய வேண்டும் என்ற நியதியே இல்லை. பெளத்தம் அரசாங்க மதமாகும்; அதற்கே பாதுகாப்பும், உதவியும். நானூறு வருடங்களாகப் புறக்கணிக்கப்பட்ட தமிழ் ஈழத்தில் இன்றும் அபிவிருத்தி வேலை ஏதும் இல்லை. தமிழர்க்கு ஆட்சியில் ஏதும் பங்கில்லை. தமிழரை அடிமைப்படுத்தச் சிங்களப் பொலிசும், பட்டாளமும். இவர்கள் அடிக்கடி தமிழர்மேற் பலாத்காரம் செய்கிறார்கள்.
சிங்களத் தலைவர்கள் இந்த அநியாயங் களை எல்லாம் ஏற்று ஒரு ஆக்கிரமிப்பு ஆட்சியை நடத்துகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ் ஈழம் சிங்கள நாட்டோடு இணைக்கப்பட்டதையும், சிங்கள நாட்டில் தமிழர்கள் வந்து குடியேறியதையும் ஏற்றுச் சமத்துவத்தின் அடிப்படையில் ஒற்றுமை காண மறுத்துவிட்டனர். காலத்துக் காலம் சிங்களத் தலைவர்கள் செய்த வாக்குறுதி களும், ஒப்பந்தங்களும் கைவிடப்பட்டன. இலங்கைச் சட்டசபையில் 1944ஆம் ஆண்டில் சிங்களமும், தமிழும் உத்தியோக மொழிகள் ஆகும் என்ற தீர்மானம் கைவிடப் பட்டது. இடதுசாரிகளும் மொழிச் சமத்துவத்தைக் கைவிட்டு விட்டார்கள். சோல்பரி ஆணைக்குழுமுன் மலைநாட்டுத் தமிழர்க்குப் பதின்மூன்று ஆசனங்கள் கிடைக்க உறுதி கொடுத்த தனிச் சிங்கள மந்திரி சபை, சுதந்திரம் கிடைத்த ஆறுமாத காலத்துக்குள் இதை மீறியது. அவர்களை நாடற்றவராக்கி, வாக்குரிமையைப் பறித்துப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் ஒழித்தது. சமயங்களுக்குச் சமத்துவம் மறுத்துக் குடியரசுத் திட்டத்தில் பெளத்தத் திற்குத் தனி இடம் கொடுத்தார்கள்.

5
திரு.செல்வநாயகத்தோடு ஒப்பந்தம் செய்த காலஞ்சென்ற பிரதமர்கள்: திரு. பண்டாரநாயக்காவும், திரு. சேனநாயக் காவும் தங்கள் ஒப்பந்தங்களைக் காற்றிலே பறக்கவிட்டார்கள். இப்படி இருபத்தைந்து வருடங்களுக்குமேல் சிங்கள ஆட்சியும், அதன் ஆக்கிரமிப்பும் தமிழினத்தைப் பிரிவினைக்குத் தள்ளியுள்ளது - அதாவது தமிழ் ஈழத்தை மீண்டும் உருவாக்கித் தாமே அதை ஆளவேண்டும் என்று தமிழர்கள் கண்டு கொண்டார்கள். நிர்ப்பந்திக்கப் பட்டுத் தள்ளப்பட்ட இடம் - இன்று தமிழ் மக்களின் இலட்சியம் ஆகிவிட்டது. இன்னும், தனி ஒரு தமிழனுடைய நாளாந்த வாழ்க்கைப் போராட்டம், முழு இனத்தின் விடுதலைப் போராட்டமாக மாறிவிட்டது. வாழ வேண்டும் என்றால் ஆளவேண்டும் என்றது இன்றியமையாத நிபந்தனை ஆகிவிட்டது. இப்படியாக எமது இனத்தின் வாழ்க்கையில் எழுந்த நிர்ப்பந்தம்
இலட்சியம் ஆகி, வாழ்விற்கே இன்றியமையாத நிபந்தனையாகி விட்டது. தமிழ் ஈழம்:
சிங்கள இனமும், தமிழ் இனமும் மனம் ஒருமித்து ஒரே அடிப்படையில் ஒருபொழுதும் ஒன்றுசேரவில்லை - அதாவது இரு இனங்களும் சுயநிர்ணய உரிமையும் அரசுரிமையும் தனித்தனி உடையனவாக இருந்தும், தங்கள் இரு தேசங்களையும், மக்களையும் ஒரு தேசமாகவும், ஒரு மக்களாகவும் உருவாக்கச் சம்மதித்து ஒருஅரசை நிறுவத் தீர்மானிக்க வில்லை. பிரித்தானியர், இரு பகுதியினரை யும் பிணைத்துப் பூட்டிய விலங்குகளும் - காலத்துக்குக் காலம் அவர்கள் சுமத்திய அரசியல் சட்டங்களும் - இன்று சிங்கள அரசு தமிழ் மக்களின்மேல் சுமத்திய குடியரசுச் சட்டமும்தான் நாங்கள் ஒரு மக்கள் - ஒரு நாடு - ஒரு இனம் - ஒரு அரசு என்ற போலிக் கருத்துக்களுக்கு ஆதாரமா கின்றன. பிரித்தானியர் போன பின்பும் அவர்கள் பூட்டிய விலங்குகள் அப்படியே இருக்கின்றன. இன்னும், ஆங்கிலம் கற்று அரசியல் அரங்கேறிய சிங்கள,தமிழ்த் தலைவர்களின் மறைந்துபோகும் நினைவில் - இலங்கை, ஒரு நாடு என்ற கற்பனை

Page 397
-3
குற்றுயிராய்க்கிடந்து அழிகிறது. இரு இனங்களுக்கும் உண்மையான முழுமையான சுதந்திரமும், தடையற்ற அரசாளும் உரிமையும் கிடைக்கவேண்டும் என்றால் - பிரித்தானிய விலங்குகளும், அந்த ஆட்சியின் கற்பனையால் 'ஒரு இலங்கை' என்ற சிந்தனையும் அறவே நீங்கவேண்டும். மீண்டும் இத்தீவில் தமிழரசும், சிங்கள அரசும் தனித்தனி உருவாக்கப்படல் வேண்டும். விவேகமுள்ள சிங்கள அரசியல் தலைமை இந்தப் பிரச்சினையை முழுமையாக விளங்கிக் கொள்ளவேண்டும். சம்மதம் இல்லாத தமிழ்மக்கள் மேல் ஆக்கிரமிப்பு ஆட்சியை நடத்தி, நவீன ஏகாதிபத்தியத்தை நடாத்தும் பொறுப்பைச் சிங்கள மக்கள் உண்மையில் விரும்ப மாட்டார்கள். சமரசமாக, இருபக்க முயற்சியால் தமிழரசையும், சிங்கள அரசையும் மீண்டும் உருவாக்குவது - இரு இனங்களின் வாழ்விலே கிடைக்கத்தக்க பெருவெற்றியாகும்; மனிதாபிமான நிறைவுகளுக்கு வெற்றியாகும்; அடிப்படை உரிமைகளுக்கு வெற்றியாகும்; இரு இனங்களுக்கும் உண்மையான சுதந்திரமும், விடுதலையுமாகும்.
சிங்கள அரசு, அகிம்சை இயக்கம் நடத்தும் தமிழர்மேற் பாராளுமன்றப் பெரும்பான்மையாலும், படை பட்டாளப் பலாத்காரத்தாலும் ஆட்சியை நடத்தினா லும், அது நிலைக்காது. தமிழர்களைப் பிரிவினைக்குத் தள்ளிய சிங்கள அரசு, அவர்களை மேலும் சுதந்திரத்திற்காகப் பலாத்கார மோதலுக்குத் தள்ளக்கூடாது. பலாத்கார மோதல் வளர்ந்தால் - இலங்கை முழுவதும் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும்நாடுகள் அனைத்தும் சிங்களவருக்கு எதிராகப் பலாத்காரத்தைக் காணும். ஆங்காங்கே தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாக மாறி உலகெங்கும் பலாத்காரம் பரப்புவார்கள். இன்னும் அந்நியர் தலையீடு கட்டாயம் உண்டாகும். இதனால்
ܛܥ

36
இலங்கை முழுவதும் அந்நியர் ஆதிக்கத்துக்கு அகப்பட்டு - இரு நாடுகளும் மீண்டும் அடிமைப்படவேண்டும்.
சிங்கள மக்களுக்கும், நாட்டுக்கும் இன்றைய தமிழருடைய தொடர்பு ஆங்கிலேயரினால் உண்டானது. தமிழ் ஈழத்தைச் சிங்கள நாட்டோடு இணைத்ததும் ஆங்கிலேயரே. எனவே, சிங்கள நாட்டில் உள்ள பல இலட்சம் தமிழர்களை நீக்கினால் தான் - சிங்கள மக்களும், சிங்கள நாடும் உண்மையான சுதந்திரத்தையும், அரசுரிமை யையும் அனுபவிக்கலாம். அதுதான் சிங்கள மக்களுடைய தனித்துவத்தை நிரந்தரமாகப் பாதுகாக்கும் வழி. அப்போது சிங்கள மக்களுக்குக் கள்ளக் குடியேற்றம், குடியுரிமை, மொழி, சமயம் ஆகியவற்றில் பிரச்சினையும் - தொழில் வாய்ப்பு, வியாபாரம், கல்வி ஆகியவற்றில் போட்டியும் நீங்கும். இப்படி இருபக்க முயற்சியால் தமிழ் ஈழத்தையும் - சிங்கள நாட்டையும் தனித்தனி உருவாக்கவேண்டும். தமிழ் மக்களும் தங்கள் தனித்துவத்தோடு சகல உரிமைகளையும், எதிர்கால வாழ்வையும் பாதுகாக்கலாம். இதற்கு உடந்தையாக அகிம்சை இயக்கங் களையும், தனிநாட்டை உருவாக்கப் பேச்சுவார்த்தையும் நடாத்துவது அவசியம். ஆனால், சிங்கள மக்களின் சம்மதத்தைப் பெறமுடியாத பட்சத்தில் ஒரு பக்க முயற்சியால், சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்கள் தங்கள் சுதந்திரத்தைப் பெறத்தான் வேண்டும். இதற்கான சிந்தனைகளையும், பிரச்சாரங் களையும், இயக்கங்களையும் நாம் மேற்கொள்ளவேண்டும். இந்த விடுதலை இயக்கத்தில் துரோகிகளுக்கு மட்டுமல்ல - பார்வையாளர்களுக்கே இடமில்லை. எல்லோரும் பொறுப்பெடுத்துப் பங்காளராக வேண்டும். அப்போதுதான் தமிழ் ஈழம் விடுதலை பெற்றுத் தனி அரசாகும்.

Page 398
முயற்கூட்டம்
எதிர்நிற்
(
 
 

சிங்கத்தின் ཡོད பதோ?
நெஞ்சுரமும் நேர்மைத்திறனும் கொண்டு அறப்போர் பூண்டுள்ள சத்தியாக்கிரகிகளை அப்புறப்படுத்த அரச படைகள் ஆனவரை முயன்றும் முடியவில்லை. இங்கே தமிழ்ப் பங்கம் துடைக்கச் சிங்கமெனப் போராடும் பருத்தித்துறை பா. உ. திரு. க. துரைரத்தினத்தின் முன்னால் ஈடுகொடுக்க முடியாது காவலர் கைகள் மாரடிக்கும் காட்சி.
க சவால்!
"செந்தமிழ் நாட்டை ஆளுந்திறனும் உரிமையும் தமிழர்க்கே உரியது' என்பதைச் சவாலாகவே சிங்கள வரசுக் குணர்த்திக் காட்டியது தமிழரசுத் தபாற் சேவை. இங்கே அதன் அஞ்சல் ஒன்றை ஆளும் அரசின் அரசாங்க (யாழ்ப் பாணம்) அதிபரிடம் தபால்காரத் தொண் டராகச் சென்று சேர்ப்பிக்கிறார் உடுவில் பிரதிநிதி திரு.விதர்மலிங்கம். படத்தில் தமிழரசு அஞ்சலைத் தர்மரிடமிருந்து மலைப்புடன் வாங்கு பவர் அரசாங்க அதிபரின் மாமனார் ஆவார்.
ار

Page 399
ஏறக்குறைய இரண்டு மாதங்கள் தமிழ் ஈழத்தி தடுத்துத் தமிழ்கூறு நல்லுலகின் கருத்தைக்
ஈர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய அறந்தாங்கிய படைகள் துப்பாக்கி முனையில் முறியடித்த 1 தளபதிகளில் குறிப்பிடத்தக்கவர்களான தி திருமதி அ. அமிர்தலிங்கம் ஆகியோர்க்கு அர உத்தரவை வழங்கிக் கைதுசெய்யும் வரலாறு
 

e
இராவணன் தம்பி!
மறத் தமிழன் இராவணனை, ஆரிய 'இராமனின் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேள்" எனக் கூறிய கோழைத் தம்பி விபீடணன் அல்ல இங்கே நீங்கள் காண்பது, இராணு வத்தின் துப் பாக்கிக் குண்டு நெஞ்சைப் பிளக்கப்போகிறது என்பதை யுணர்ந்தும், தயங்காது. பேரறிஞர் அண்ணாவின் 'எதையுந் தாங்கும் இதயம்' பெற்றுத் தண்டமிழுயிர் காக்கத் தன்னுயிர் போக்கத் துணிந்து போராடும் தமிழரசுத் தொண்டன் எஸ். ரி. அரசு.
க்கு இரும்பு விலங்கு
ல் அரசு இயந்திரங்கள் எதையும் இயங்கவிடாது கவர்ந்ததோடு முழு உலகின் கவனத்தையும்
சத்தியாக்கிரகத்தை ஆயுதந் தாங்கிய அரச 7-4-61அன்று நள்ளிரவு, போரை வழிநடத்திய
ரு. அ. அமிர்தலிங்கம், அவரது பாரியார்
சின் காவல்துறை அதிகாரிகள் தடுப்புக்காவல் படைத்த காட்சி.

Page 400
தமிழ் ஈழ
செந்தமி மாவை சோ.
இ. ஒரு தீவு; ஆனால்
இலங்கை இரு நாடு. அதுவும் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பின்னர்தான். அதற்கு முன்னர் இலங்கை முழுவதும் ஒரு திராவிடர் நாடு. வரலாற்று உண்மைகள் இதனை நிரூபிக்கும். வங்க இளவரசன் விஜயன், நாடு கடத்தப்பட்டபின், இலங்கைக்குத் தற்செயலாக வந்ததையும், புத்தரின் வருகையையும் இணைத்துக் காட்டிச் சிங்களவரின் வரலாற்றைத் தொடக்க முற்படும் மகாவம்சமும் ஒரு வரலாற்று நூல் அல்ல. திராவிட இனத்தின் வரலாறு சிந்துவெளி நாகரிகத்திலிருந்து தொடங்கு கிறது. அவ் வரலாற்றுக் காலத்தினை ஆராயும் வரலாற்றாசிரியர், முதல் உயிரினத் தோற்றத்திலிருந்து வளர்ச்சிபெற்ற திராவிட இனத்தின் பொற்காலமாகச் சிந்து வெளி நாகரிகம் விளங்கியதென்றும், அங்கிருந்து காலத்தின் சூழலால் இடம் பெயர்ந்து கடலால் இலங்கை முற்றாகப் பிரிக்கப்படு முன், இலங்கையுட்படத் தென்னாடு வரைக்கும் பரந்து வாழ்ந்த திராவிட இனத்தின் வழித்தோன்றலே தமிழினம் என்றும் நிறுவி வருகின்றனர். அவ்வாறே வரலாற்றோடு, நினைவுக் கெட்டாத காலமுதல் திராவிட இனமும் அதன் வழித் தோன்றலான தமிழினமும் வாழ்ந்து வருகின்றன. அரசு வைத்து ஆட்சி செய்தும் வந்துள்ளன.
ஈழத்தின் பண்டைய வரலாற்றுக் குறிப்புகள் அழிந்து போயினவோ அல்லது
 

ம் மலர.
ழ் வீரன்
சேnைதிராசா
இல்லாமலிருந்தனவோ எவ்வாறிருப்பினும், 1619ஆம் ஆண்டு வரைக்கும் யாழ்ப்பாண அரசும், 1911ஆம் ஆண்டுவரை வன்னியரசும் தமிழீழத்தின் அரசுகளையும் அவற்றிற்குரிய எல்லைப்பரப்புக் கொண்டனவாயும் விளங்கியுள்ளன. தமிழீழம் - வாழ்வும் வளமும் சீரும் சிறப்பும் நிறைந்த அரசாக மலர்ந்திருந்த அந்தத் தமிழீழம் எங்கே? தமிழன்னை எங்கே? தமிழ் அரசு எங்கே? எங்கே?
தமிழீழத்தையும் சிங்கள ஈழத்தையும் தனித்தனியாகப் படையெடுத்துக் கைப்பற்றினர் ஐரோப்பியர். 1833ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் | நிர்வாக வசதிக்காகத் தமிழரசுகளையும் சிங்கள அரசுகளையும் ஒன்றாக இணைத்தனர். அப்பொழுதும் 1815ஆம் ஆண்டுவரை கண்டி மன்னனாக இருந்தவன் கண்ணுச்சாமி என்ற தமிழன் - விக்கிரம ராஜசிங்கன். கண்டி அரசின் ஆட்சி, நிர்வாகம், ஒப்பந்தங்கள், குறிப்பேடுகள் தமிழில் இருந்திருக்கின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும்.
இலங்கையின் சுதந்திரத்திற்காகத் தமிழர்களும் சிங்களவர்களும் போராடி யிருக்கின்றனர். ஆனால் 1946ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கும் ஒப்பந்தம் நிறைவேறிய பொழுதோ, 1948ஆம் ஆண்டில் சுதந்திரம் வழங்கிய பொழுதோ தமிழர் தாம் ஆங்கிலேயனிடம் இழந்து விட்ட தமிழீழ அரசை மீட்கப் போராடவில்லை!

Page 401
-3
ஆங்கிலேயனோ சிங்கள ஏகாதிபத்தியத் திடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டுப் போய்விட்டான். ஆங்கிலேயனின் ஏகாதி பத்தியம், அடக்குமுறை, சுரண்டல் கொள்கைகளை அடியொற்றிச் சிங்களவன் தமிழனை அடிமையாக்கிக் கொண்டான். யாருக்குத்தான் தன்மானம் - தமிழ்மானம் வந்தது? அடிவருடிச் சுவைகண்ட தமிழன் - உலகம் முழுவதும் அடிமையாகக்கிடக்கிறான்!
33 நாடுகளில் வாழ்ந்த தமிழாம் - ஆண்ட தமிழாம்! கல் தோன்றி மண் தோன்றாக் காலமுதல் முன்தோன்றி மூத்த குடியாம் தமிழர்!! ஆம்! இன்று அவன் தமிழனல்ல! சர்வதேசக் கூலி - அடிமைக்கூலி அடிமைக்கு வாழ்வில்லை. நாளும் பொழுதும் சாவுதான். ஈழத்தில் முப்பத்தைந்து இலட்சம் தமிழன்! தமிழ் நாட்டில் நாலரைக் கோடி தமிழன்! உலகெலாம் தமிழன் - உலகில் பத்துக் கோடிக்கும்மேல் திராவிடன் கிடக்கிறான்!!! ஆனால் தமிழனுக்கென்று நாடில்லை! தமிழனுக்கென்று ஆட்சியில்லை! தமிழனுக் கென்று ஒரு கொடியில்லை!!! பதிலுக்கு அவன் அழிந்துகொண்டிருக் கிறான். தமிழா திரும்பிப்பார்! உள் பெற்ற தாயை - உன் பிறந்த பொன் நாட்டைத் திரும்பிப்பார்!
அறிஞர் அண்ணா, தமிழன் வாழ - தன்னைத் தானே ஆள - திராவிட நாடு கேட்டார்; வட நாட்டு ஆரியன் அதை அடக்கிவிட்டான்! ஆனாலும் அண்ணா ஏற்றிய அந்த ஒளி விளக்கு மூட்டிய சுதந்திரத் தீ அடங்கிவிடவில்லை! கொழுந்து விட்டுப் பரவி வருகிறது? 1948இல் தமிழீழ அரசைப் பிரகடனப்படுத்தத் தவறிவிட்ட தமிழர் - 1972இல் இலங்கையில் பெளத்த சிங்களக் குடியரசுப் பிரகடனத்தைச் சிங்கள ஆட்சி ஏற்படுத்திய பொழுது தமிழீழ ஆட்சியையும் பிரகடனப்படுத்தியிருக்க வேண்டும். 1971ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் சிறப்பு மாநாட்டில், சமஷ்டி ஆட்சிக்கான கொள்கையைக் கைவிட்டுச் "சுயநிர்ணய அடிப்படையில்

90
தமிழீழத்தைத் தமிழனே ஆளும்" தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தும் ஏன் 1972இல் தமிழீழ ஆட்சிப் பிரகடனத்தைச் செய்யவில்லை? உருவான தமிழர் கூட்டணியின் இலட்சியம் என்ன? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பெளத்த சிங்களக் குடியரசு அரசியலமைப் புப் பிரகடனத்தில் தமிழன் கையொப்பமிட வில்லை. அப்படிக் கையொப்பமிட்டவர்கள் தவறிப்போய் தமிழனாகப் பிறந்துவிட்ட தமிழினத்தின் துரோகிகள் சிலர்.
தந்தை செல்வா தமிழின விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுச் சின்னமாக - சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். தந்தை அவர்கள், 1975ஆம் ஆண்டு காங்கேசன்துறை இடைத்தேர்தலில் - உரிய காலத்தில் - சரியான இடத்தில் - "தமிழீழமே தமிழர் இலட்சியம்” என்று அறிவித்தார். இதனை 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாடு பிரகடனப் படுத்தியிருக்கிறது. தமிழர் தாகத்தை - தமிழ் இளைஞர் எண்ணத்தீயை - சரியாகப் புரிந்துகொண்டு, தமிழீழத் தீர்மானத்தைத் தமிழர் கூட்டணி பிரகடனப் படுத்திவிட்டதால் தமிழர்க் கெல்லாம் மகிழ்ச்சி! தமிழ் இளைஞர்கட் கெல்லாம் அவர்கள்தம் இலட்சிய இதயத்தில் புரட்சிப் பொங்கல்! ஆம்! தமிழ் இளைஞர் படை அறத்தின் வழியில் தமிழீழத்தை நிறுவிடும்பணியை ஏற்றிட வேண்டும். தமிழீழம் எனும் இலட்சியத்தி லிருந்து இம்மியளவும் விலகமாட்டோம்! தமிழீழ நிலப்பரப்பில் அங்குலந்தானும் இழக்கவிபோம்! தமிழீழ இலட்சியக் களத்தில் குதித்துவிட்ட தமிழ் இளைஞர் படை, தமிழ் மண் காக்கும் - தாயகம் மீட்கும் போர்க்களத்திற்குஞ் சென்றிடவேண்டும்; அங்கே தியாகங்கள் புரிந்திடவேண்டும். தமிழீழம் காலத்தால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
தந்தை செல்வா "அஹிம்சை" வழியில் தமிழீழம் நிறுவிடலாம் என நம்புகிறார். அந்த நம்பிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. தந்தை வழி தோற்கின் அறம் வழிகாட்டும். எந்த ஆயுதத்தையும் ஏந்திக்கொண்டு போர்க்களம் செல்லுதற்கும்,

Page 402
-3s
அந்த எல்லை யுத்தத்தில் என்ன விலையைக் கொடுக்கவும், எந்தத் தியாகத்தைச் செய்யவும் தமிழ் மண்மீது சத்தியம் செய்வோம்! தமிழீழம் தமிழர் தாயகம் - உலகத் தமிழர்க்கு ஒளிவிளக்கு உலகின் தமிழீழம் - பொங்கிவரும் சமதர்மப் பூங்கா.
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”
என்று பாடிய பாரதிதாசன்,
“கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே குகைவாழ் ஒரு புலியேகுண
மேவிய தமிழா" என்கிறான். அவன் மேலும்,
"தமிழுக்கு அமிழ்தென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்பதோடு,
“பொங்கு தமிழர்க் கின்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு”
என முழங்கினான். தமிழா திரும்பிப்பார்!
அஹிம்சை! அதுதான் அன்பு வழி. அது தமிழர் வாழ்க்கைத் தத்துவம். அந்த அன்புத் தத்துவம் தமிழர் ஆட்சித் தத்துவமாகட்டும்! ஆனால், உலகம் ஏற்றுக்கொள்ளும்வரை அன்புவழியை நிலைநாட்டவும் போர்க் கருவிகளை - ஆயுதத்தை ஏந்தித் தானாகவேண்டும். இந்நிலை தவிர்க்க (DLL if T95 Égl.
"அறத்துக்கும் மறத்துக்கும் அன்பு சார்பு" என்கிறார் வள்ளுவர். உலகம் எத்தனையோ நெருக்கடிகளுக்குப் போரின் மூலம் - ஆயுதத்தின் பயன்பாட்டின் மூலம் பாரிய அழிவுகளுக்குப் பின்னர் தீர்வு கண்டிருக்கிறது. தவிர்க்க முடியாமல் போர் வந்துவிடுகிறது. அது தற்காலிகத் தீர்வாகிப் பின்னர் நிரந்தரமாகியும் விடுகிறது. உலகம் அப்படித்தான் வழிவிடுகிறது. அதுதான் அன்புக்கும் வழியாகிறது.

"ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைக்கிறது" என்று தட்டிக் கேட்கிறான் அண்ணன் காசியானந்தன்; அதனை இடியென முழங்கித் தானையை வழிநடத்துகிறார் தளபதி அமு தண்ணா. “கொடியை இழந்தோம்! குடியை இழந்தோம்!! கோலையிழந்தோம்!!!" என்கிறார்கள்; இன்று “மொழியுரிமையை - குடியுரிமையை - ஆட்சியுரிமையை - கல்வியை - தொழிலை - உடைமைகளை - நிலத்தை - உயிரை இழந்து விட்டோம்” என்கிறார்கள்; “தமிழினம் அழிகிற” தென்கிறார்கள். ஆம்! அப்படியானால் இதில் ஒன்றையோ, பலவற்றையோ சிங்கள அரசு வழங்கிவிட்டால் நெருக்கடி தீர்ந்துவிடுமா? இல்லவே இல்லை.
ஒரு இனம் - ஒரு மொழி - ஒரு நிலம் - ஒரு கலை ம் ஒரு பொருளாதாரம் - எல்லாமே வாழவேண்டுமானால், அது தன்னைத் தானே ஆளவேண்டும். ஒரு நாடு என்ற வரைவிலக்கணத்தை வகுக்கும் அறிஞர்கள், "பாரம்பரியமான ஒரு பொது மொழி - பொதுப் பண்பாடு - பொதுப் பொருளாதாரம் - பொது வாழ்வு - பொது நிலப்பரப்பு இருந்தால் அங்கே ஒரு நாடு உண்டு” என்கிறார்கள். தேசிய இனம் பற்றி வரைந்த ஸ்டாலினும் இதைத் தான் சொன்னார். "சுயநிர்ணய அடிப்படையில் தன்னைத்தானே ஆளும் உரிமை - ஒவ்வொரு இனத்திற்கும் உண்டு; அவர்களுக்கென்று பொருளாதாரப் பாதுகாப்பு உண்டு என்று உலகம் பிரகடனப் படுத்தியிருக்கிறது.
அடிமைகொள்ளும் எந்த ஒரு ஆட்சியும் - முதலில் அடிமைப்பட்ட இனத்தை அழிப்பதில் தொடங்கிவிடுகிறது. கி. பி. 6ஆம் நூற்றாண்டில் செழிப்புற்று விளங்கிய ஐரிஸ் மொழியையும், இனத்தையும், நாட்டையும் இங்கிலாந்தில் குடியேறிய ஆங்கிலேயர் அழித்தனர். "ஐரிஸ் மக்கள் தங்கள் 'காலிக் (Gaeic) மொழியையும் நாகரிகத்தையும் பேணிப் பாதுகாக்கக் கடந்த எண்ணுாறு ஆண்டுகளாகப் போராடி வெற்றி கொண்டுள்ளனர். அப்படியே 'வேல்ஸ்' மொழியினர் நானூறு ஆண்டுகளாகப் போராடி

Page 403
வென்றனர். 'ஸ்கொட்டிஸ் மக்களும் அப்படியே போராடினர். பெல்ஜியத்திலுங்கூட 'விளமிஷ் மொழி யினர் 100 ஆண்டுகளாகப் போராடி வென்றனர். பின்லாந்தில் 700 ஆண்டு போராட்டத்தில் 'பின்னிஸ் மொழி ஆட்சியுரிமை பெற்றிருக்கிறது. கனடிய சமஷ்டியில் பிரென்சுக்காரர் தனிநாடு காணப் போராடுகின்றனர். சைப்பிரஸிலும் அண்மையில் துருக்கிய சைப்பிரஸ் மக்கள் ஒரு இலட்சம் பேர் தனிநாடாகினர்.
ரூசிய நாட்டை ஆண்டு 'சார் மன்னன் ரூசிய மொழியைத் தவிர்ந்த ஏனைய மொழிகளை அழித்தான். பொதுவுடைமைத் தத்துவத்தின்கீழ் லெனின், அழிவின் விளிம்பில் நின்ற மொழி, கலை, கலாச்சாரம், மக்களுக் கெல்லாம் உயிரூட்டினான். அவைகளுக்கெனத் தனி ஆட்சியும் வேண்டுமென்றபோது பிரிந்து செல்லும் உரிமையும், கூட்டாட்சியுமாக வழி கொடுத்தும் பாதுகாப்பு வழங்கினான்.
தமிழன் ஆண்ட பரம்பரை, தமிழனுக்குப் பாரம்பரிய மொழி - பண்பாடு - வாழ்வு - பொருளாதாரம் - நிலப்பரப்பு உண்டு. இந்த இரண்டு காரணங்களினாலும் தமிழன் தன்னைத் தானே ஆளும் உரிமை பெற்றுள்ளான். அவன் தன்னாட்சியை மீட்கும் உரிமையும் - கடமையும் உடையவன். உலகம் பிரகடனப்படுத்திய சுயநிர்ணய அடிப்படையில் 'தன்னைத் தானே ஆளும் உரிமை பெறுகிறான். இன்னும், ஒரு கூட்டம் - அல்லது சமுதாயம், இனம் - அல்லது நாடு தான் தன்னைத் தானே ஆண்டு, பாதுகாப்போடு - தனித்துவத்தோடு வாழ வேண்டுமென்றால், அது ஆளவேண்டு மென்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அவர்கள் தங்களை ஆளமுடியும். இப்படியெல்லாம் கணக்குப் பார்க்காமலே எத்தனையோ இனங்கள் அழிந்திருக்கின்றன. எத்தனையோ புதிய இனங்கள் உருவாகித் தம்மைத் தாமே ஆளுகின்றன. தனியாக,தனித்துவமாக வாழவேண்டும் - ஆளவேண்டுமென்ற தீர்மானத்தாலும், நம்பிக்கையாலும்

92
ஆளுகின்ற இனங்களுமுண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகள், படை பலம், வல்லரசுப் பின்னணிகளின் தாக்கங்கள் ஆகியனவும் எத்தனையோ நாடுகளை உருவாக்கியுள்ளன. முதலாவது, இரண்டாவது உலகப் போர்களும், ஏனைய போர்களும் காலத்துக்குக் காலம் நாடுகளின் எல்லைக் கோடுகளையும், உலகப் படத்தையுமே உருமாற்றியிருக்கின்றன. அதற்குப் பின் அப்படியான மாற்றங்களின் பிறப்புக்களுக்கு வரைவிலக்கணம் வகுக்கப்பட்டதுமுண்டு.
ஆட்டுக்குட்டியையும் - புலியையும் - பைங்கிளியையும் - வல்லுறையும் ஒரு கூட்டில் அடைத்திருந்தால், ஆட்டுக் குட்டியும் " பைங்கிளியும் அழிந்துதா னிருக்கும். இருப்பினும், அவ்வினங்களை முற்றாக அழித்துவிட முடிவதில்லை. எனவே வாழத்தான் வேண்டும்; நம்மை நாம் ஆளத்தான் வேண்டும். இப்படித்தான் வாழவேண்டுமென்று ஒரு கூட்டமோ - இனமோ - நாடோ - உறுதி பூண்டு விட்டால் அவற்றை எந்தச் சக்தியுமே அழித்துவிட முடியாது.
வியட்நாம், உலகத்தின் நெற்களஞ் சியங்களில் ஒன்று. தொழிலாளர், விவசாயி கள் நிறைந்த நாடு. அது இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்தது. இருபத்து மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா வியட்நாமுடன் போர் புரிந்து வந்தது. அமெரிக்கா உலக அணுசக்தி வல்லரசுகளில் முதன்மை வாய்ந்தது. அது நாசகாரிக் குண்டுகளை வீசியதால், நூறாண்டுகளுக்குப் பின்னும் கூட வியட்நாம் காடுகளில் புல் பூண்டே முளைக்க முடியாத நிலை எழுந்துள்ளது. இலட்சக் கணக்கான மக்களை அவ்வாறான குண்டுகளினால் அழித்தனர் அமெரிக்கர். இருபத்து மூன்று ஆண்டுகள் இடைவிடாத பயங்கர அழிவுகளின் இறுதியில் அமெரிக்கா தோல்வி கண்டது! வியட்நாமியப் பாட்டாளி வர்க்கம் வெற்றி கண்டது!! எப்படி? வியட்நாம் மக்களின் இலட்சிய உறுதிதான் - அவர்களை வெற்றி வாகைசூட வைத்தது.
முதலாவது உலகப் போரிலிருந்து இரண்டாவது உலகப்போர் முடியும்

Page 404
3
வரைக்கும் - 1917லிருந்து ரூசியப் பொதுவுடைமைப் புரட்சிக் காலத்திலி ருந்தும் - ரூசிய நாட்டுப் பொதுவுடைமைப் படைகளைச் சில இலட்சக்கணக்கான - பயிற்சியற்ற - படைபலம் குறைந்த - ஆனால் இலட்சிய உறுதிபடைத்த வீரர்களை எதிர்த்துப் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளின் படைபலமிக்க - களம் பலகண்ட கோடிக் கணக்கான படை வீரர்கள் - உலகமே எதிர்த்துப் போராடியதென்றே சொல்ல முடியும் - பல ஆண்டுகள் - ஒரே முனையில் - பல களங்களில் போராடின. ஆயினும், இறுதியில் ருசியப் பாட்டாளி வர்க்கப் படைகளே உலக வரைபடத்தை நிறுவியது; தம் நாட்டையும் நிறுவி உலகிலும் அமைதியை ஏற்படுத்தினர் - எப்படி? அவர்கள் கொண்ட இலட்சிய உறுதி யல்லவா காரணம்? அதுவல்லவா அங்கே வென்றது?
இலட்சிய உறுதி கொண்ட மக்கள் படை கிளர்ந்து எழுந்துவிட்டால் உலகமே நடுங்கிவிடுகிறது. பெரிய வல்லரசுகளாயினும் அடக்குமுறை ஆதிக்கபலம் காட்டும் படைகள் - கூலிப்படைகளாகக் கூனிக் குறுகித் தங்களைக் காப்பாற்றுவதற்கு ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இலட்சியத்தில் நம்பிக்கையும் உறுதியும் கொண்டவனோ எத்தியாகத்திற்கும் தயாராகப் போர் முனைக்கே சென்றுவிடும் பொழுது, அவன் முன் எதிர்ப்படைகள் அழிகின்றன; அவன் வெல்கின்றான்! காரணம், அவனது இலட்சியம் - நம்பிக்கை - தன்மானம் - உறுதி அங்கே வெற்றிவாகை சூட்டி நிற்கின்றன. பிரான்சியப் புரட்சி முதல் அமெரிக்காவிலிருந்து சீனா வரையிலான மக்களின் சுதந்திரப் புரட்சிக்கு முன்னால், உலக ஏகாதிபத்திய அடக்கு முறைப்போர்க் களங்கள் அனைத்துமே தவிடுபொடியாகிய வரலாற்றை நாம் அறிந்துள்ளோம். ஆதலால், தமிழீழத்தில் முப்பத்தைந்து இலட்சம் தமிழர் வாழுகின்றனர் - சிறு தொகையினர் - என்ன பலமுண்டு என்று பயந்தாங்கொள்ளிகளாகத் தமிழன் மாறிவிடக்கூடாது. தமிழீழத்தில்

93
தமிழனே பலமுடையவன் - பெரும் பான்மையானவன். தமிழனின் படைபலம் முதலில் இலட்சியம் - நம்பிக்கை - உறுதி - தியாகம் தான். அதன் பின்னரேதான் ஆயுதமும் - அதற்கான பின்னணியுமாகும். இலங்கையில் சிங்களவர் 80 இலட்சம்தான். அவர்களது படைபலம் முப்பத்தையா யிரத்துக்கும் உட்பட்டதுதான். தமிழ் உடன்பிறப்புக்கள் உலகமுழுவதும் ஆறு கோடி மக்கள்! திராவிடர் பத்துக் கோடி!! - விடுதலைக்குப் போராடுகின்ற உலகம் தமிழர் பக்கம், அறம் எம் பக்கம். அறம் அடக்குமுறை எனும் மறத்தைக் கொல்லும். மகாத்மாவை வழி நடத்திய பகவத்கீதை எம்மை வழி நடத்தும். வள்ளுவம் எமக்குத் துணை நிற்கும். அறம் எம்மை வழிநடத்தும். அவ்வழி செல்வோம்; வெல்வோம்.
தமிழீழம் சிங்கள ஆட்சியினால் நடத்தப்படும் தேர்தலினால் நிறுவிடக்கூடிய தொன்றல்ல. சிங்கப்பூர் அமைதியாக மலேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தது தான். இங்கே பாகிஸ்தானையும் ஓரளவு குறிப்பிடலாம். அத்தகைய சூழல் இலங்கை யில் உண்டென்று சொல்வதற்கில்லை அப்படி நினைப்பது எதிர்மாறான விளைவுகளையே தரும். எழுநூற்றைம்பது ஆண்டுகால ஐரிஸ் போராட்ட வரலாற்றில், பிரிட்டிஷ் பாராளுமன்ற மூலம் விடுதலை பெறலாம் என்ற சிந்தனைகள் தோல்வி கண்டு, ஐரிஸ் தன்னாட்சிக் கட்சி (Sinn Feing) வளர்ந்து வந்த காலம் - நேரடி நடவடிக்கை - ஒத்துழையாமை இயக்கம் - ஆயுதப் போராட்டங்கள் - இரகசிய இயக்கங்கள் ஆகியவற்றில் ஈடுபட்ட காலம். 1911 முதல் 1932 வரைக்குள் பிரிட்டிஷ் பாராளுமன்றமே முன்வந்து ஐரிசுக்குச் சுயாட்சி வழங்கிடச் சட்டங்களை நிறைவேற்றியது.
பூரண ஐரிஷ் குடியரசுக்குப் போராடிய "சின் பெயின்” இயக்கத்தின் உச்சக் கட்ட நேரத்தில் பிரிட்டிஷ் வழங்கிய சுயாட்சியை - அவ்வியக்கத்தின் தலைவர்களில் மைக்கல் கொலினஸ், ஆர்தர் கிறிப்த் போன்றவர்கள்

Page 405
வரவேற்று ஐரிஷ் பாராளுமன்றத்தையும் கைப்பற்றி ஆண்டனர். ஆனால் தீவிரப் போராட்டத் தை நடத்திக் கொண்டிருந்த 'சின் பெயின்” இயக்கத் தலைவர் டீவெலெரா, அவ்வியக்கத்திலிருந்து வெளியியேறிப் பூரண ஐரிஷ் குடியரசுக்கான போரைத் தீவிரப்படுத்தினார். விடுதலை இயக்கம் பிளவுபட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சுயாட்சிப் பாராளுமன்ற வாதிகளை முறையாக உபயோகித்து,
டீவெலெரா போன்றோரைச் சிறைக்கனுப்பியது. விடுதலை இயக்கத்துள் பிளவு பெரும் பயங்கரத்தை
உருவாக்கிவிட்டது. விடுதலை வாதிகள் தம்முள் போரிட்டனர். மைக்கல் கொலீன்ஸ், ஆர்தல் கிறிப்த் போன்றோர் கொலை செய்யப்பட்டனர். டீவெலெரா சிறையிலி ருந்தும் தப்பி ஓடினார்; போரைத் தொடர்ந்து நடத்தினார்: ஐரிஷ் சுயாட்சிப் பாரளுமன்றத்தைக் கைப்பற்றினார்; ஐரிஷ் சுதந்திரக் குடியரசைப் பிரகடனப்படுத்தி னார். 1932இல் ஐரிஷ் சுதந்திரமடைந்தது. இப் போராட்டங்களை லெனின் தீவிரமாக ஆதரித்தார். ஐரிஷ் போராட்ட வரலாறு - தமிழீழப் போராட்ட வரலாற்றுடன் பெரிதும் பொருந்தக்கூடியதாயிருக்கும். ஆனால் தமிழீழ இயக்கத்தில் பிளவு ஏற்படக்கூடாது
உலகில் ஏதாவது ஒரு வகையில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன. ஜனநாயகமோ பொதுவுடைமையோ தத்துவ அடிப்படைகளில் தனித்துவமும் - தன்னிறைவும் பெற்றனவாய் உலக நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு வருவதாகச் சொல்லவும் முடியவில்லை. தத்துவப் போராட்டங்களே மிக அதிகம். குறிப்பாக ஆசியாவின் ஜனநாயகப் பாராளுமன்ற முறை இங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதில் தோல்விகண்டு வருகின்றது. காலத்தோடு ஒட்டிச் செல்லும் வகையில், ஜனநாயகமோ - பொதுவுடைமையோ ஒடிச்செல்ல வேண்டும். ஆனால் ஜனநாயகம் என்ற போர்வைக்குள் சுதந்திரத்தை அதிகமாகச் சிலர் பயன்படுத்தி

94
மிகப் பெரும்பாலாரைச் சுரண்டுவதை - அடக்குவதை - அடிமைப்படுத்துவதை - ஏகாதிபத்திய முதலாளித்துவத்துக்கு அடித்தளமாய் உருமாற்றியிருப்பதைவிட, மிகப் பெரும்பாலான உழைப்பாளர் - பாட்டாளி வர்க்கம் சமதர்மப் பாதையில் ஆட்சியைக் கைப்பற்றி யாள்வது மிகச் சிறந்ததாகும். அந்த வகையில் அது அமைதிப் புரட்சியானாலும் - ஆயுதப் புரட்சியானாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சமதர்மப் புரட்சியும் இடம்பெற்றேயாக வேண்டும். காலத்தோடு - தமிழ் மண்ணோடு - தமிழர் பண்போடு - ஒட்டிய சமதர்மப் புரட்சி தமிழரிடம் ஏற்படவேண்டும்.
ஆட்சியதிகாரம் தமிழன் கையில் - தமிழீழத்திற் கிடைக்கும் வரைக்கும், விடுதலைக் கல்வியையும் - விடுதலையை அடித்தளமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையையுமே கடைப்பிடிக்க முடியும். ரூசிய நாட்டிற்கூட 1917ஆம் ஆண்டின் பின் முப்பத்தெட்டு ஆண்டுகளின் பின்னரே ரூசியப் பொருளாதாரம் குறிப்பிட்டளவு முன்னேற முடிந்தது. இன்றுவரையுங்கூட உணவுப் பற்றாக்குறையும் உணவு தானிய இறக்குமதியும் ரூசியாவில் ஏற்படத்தான் செய்கின்றன. தமிழீழத்தின் சமூக பொருளாதாரத் தீர்வுகளில் தமிழர் தெளிவாக இருக்கவேண்டும். ஆனால் சிங்கள ஏகாதிபத்தியத்தில் தமிழீழம் அடிமைப்பட்டுக் கிடக்கும்போது சமூகப் பொருளாதார தீர்வுகளை நிலைநாட்டிவிட முடியாது. இவைகளில் நடைமுறைச் சாத்தியமான அனைத்தையும் விடுதலைப் போர்க்களஞ் செல்லுமுன் செய்து முடிப்போம்! எதிர்காலத் தமிழீழத்தின் மீது எழுப்பப்படும் கேள்விகளுக்கு இயக்க நடவடிக்கைகளால் பதிலிறுப்பதன் மூலம் தமிழீழப் போராட்டத்தின்மீது நம்பிக்கை வலுப்பெற முடியும்.
தமிழிழ விடுதலைப் போரில் தமிழீழ மக்கள் மட்டுமல்ல - உலகம் முழுவதும் அடிமைகளாய்க் கிடக்கின்ற தமிழர் ஒன்றுபட வேண்டும். விடுதலை இயக்க

Page 406
3
அமைப்புக்கள் உலகம் முழுமைக்கும் பரவவேண்டும். ஒரே தலைமை, ஒரே கொடி, ஒரே அமைப்பு என்றவாறு இராணுவக் கட்டுப்பாடுள்ள போர்ப் படை வேண்டும். இன்று உதயசூரியன் கொடி ஒன்றுதான் தமிழர் விடுதலைக்கொடி எங்கு காணிலும் உதய சூரியன் கொடியை வணங்குவோம்! தமிழ் மண்மீது சத்தியம் செய்வோம். தமிழீழத்தை அடையும் வரை தமிழன் உழைப்பை, வியர்வையை இரத்தத்தை, உயிரைத் தியாகஞ் செய்வோம்!
இப்படித்தான் இஸ்ரேலியரும் பாலஸ் தீனியரும் தத்தம் மண்மீது சத்தியம் செய்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்நிலை தமிழனுக்கும் வேண்டும். கட்டுப்பாடு வேண்டும். நம்பிக்கை வேண்டும். முதலில் இலட்சியத்திற்கென எத்தியாகத்தையும் செய்யத் திடங்கொள்ள வேண்டும். அப்படியான இலட்சம் உறுப்பினர் பாசறைகளும், பத்தாயிரவர் படைவீர மறவர்களும் உருவாக வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தமிழீழ விடுதலைக்குப் பயன்படவேண்டும்.
தமிழீழம் மலர வேண்டும். ஆம்! தாயின் கருவிலே உருவாகவேண்டும் தமிழீழ இலட்சியம், பிறக்கின்ற குழந்தைக்குத் தமிழீழ இலட்சியம் முலைப்பாலோடு ஊட்டவேண்டும். தாயே வளர்ந்துவிட்ட ஆறுவயதுக் காளைக்கு அறிவுபடைக் கருவி கொடுத்துச் செருக்களமோட்டவேண்டும். தமிழா! பண்டைத் தமிழ்த் தாயைத் திரும்பிப்பார்! மொழியை, இனத்தை, நாட்டைக் காக்கப் போர்க்களத்திற்கு இறுதியாகத் தன்இளங் காளையை அனுப்பி விடுகிறாள் தமிழ்த்தாய். தன்னால் அனுப்பப் பட்ட மைந்தன், "மார்பினில் வேல் பட்டு வீரனாகப் மறவன் பட்டானே" என்று கேள்வியுற்ற போது, அவனைப் பெற்ற பொழுதிலும் பெரிது உவந்தனள்ாம். இதைத் தமிழ்த் தாய்மார் புரிந்துகொள்ள வேண்டும். உலக வரலாற்றில், விடுதலைப் போராட்டங்

95.
களில் தாய்க்குலத்தின் பங்கு அளப்பரியது. அது இன்று அளவு கடந்து வளர்ந்து வருகின்றது. தமிழ்க் குலமே! தாய்க்குலமே! தமிழ் மறவர் படையைப் பாசறையிலே சேர்த்துவிடு, மலர்ந்திடும் தமிழீழம்!
அழைக்கிறோம் வாருங்கள்! தமிழீழ விடுதலைக் கல்வி கற்போம்; தமிழீழ விடுதலைப் பாசறைகளைப் படைத்திடு வோம்; அங்கே பதினாயிரவர் படை வீரர்களை உருவாக்குவோம். இதில் ஒயுதல் செய்யோம். தலைசாயுதல் செய்யோம். எனவே இனி ஒரு விதி செய்வோம் - தமிழீழம், தமிழர் விதி என்று செய்வோம். தமிழீழம். தமிழர் சமதர்மப் பூங்கா - உலகத் தமிழினத்திற்கொரு ஒளிவிளக்கு - தமிழ் நாட்டிற்கொரு படைவீடு. உலகம் திரும்புகிறது! தமிழீழம் மலர்கின்றது!! தமிழா திரும்பிப்பார்!
"இதந்தரு மனையி னிங்கி
இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்தரு இரண்டும் மாறிப்
பழிமிகுந் திழிவுற் றாலும் விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே'
ன்ன்றான் பாரதி.
ஆம்! சிறையிலிருந்து மீண்ட என் எண்ணத்தின் சிதறல்களை - நெஞ்சத்தின் குமுறல்களை வடித்திருக்கிறேன்; வெந்துபோன சிற்பி இதோ முன்வைக்கிறேன். தாயே! என்னுயிரை எடுத்துக்கொண்டு, தமிழீழம் - தமிழர் சுதந்திர தேவியைத் தந்துவிடு.
தமிழ் வாழ்க! தமிழிம்ை வெல்க! தமிழீழம் மலர்க!

Page 407
O தமிழ் ஈழ திரு. மு.
(முன்னாள் மூத
திமிழ் ஈழம் மலர்ந்தபின், வட,
கிழக்கில் வதியும் அந்நியக் குடிமக்கள் அகற்றப்பட்டபின்னர் அங்கு தமிழர்களும் முசிலிம் களுமே முழு உரிமை பெற்ற குடிமக்களாக விளங்குவர். இதில் தமிழ்த் தேசிய இனம் இலங்கையின் பூர்விக இனம். முசிலிம் தேசிய இனம் கிழக்கிழங்கையில் கி.பி. 1626 தொடக்கம் வாழ்ந்து வரும் இனம். இங்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய முதற் கோட்பாடு என்னவெனில்,
மாவட்டம் தமிழ்
யாழ்ப்பாணம் 648.462 மன்னார் 39751 வவுனியா 58819 மட்டக்களப்பு 174736 திருகோணமலை 67516 ) 3024 அம்பாறை 6O152
1,049,436
குறிப்பு:
தென் இலங்கையில்
வாழும்
இலங்கைத் தமிழ் மக்களின் தொகை 366,131
ஆகும்.
 

O)6 உறுப்பினர்)
செக்கோசிலவேக்கியாவில் எப்படி 80 இலட்சம் 'செக் இனத்தவர்களும் 40
ஆகியோரின்
இலட்சம் கலோவிக் இனத்தவர்களும் சரிநிகர் சம உரிமையோடு வாழ்கிறார்களோ - அதேபோல் எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பினும், தமிழ்த் தேசிய இனமும் முசிலிம் தேசிய இனமும் முற்றும் முழுதான ஒத்த உரிமையுடனும் ஒத்த நிறைவுடனும் வாழும் உரிமை உறுதிப்படுத்தப் படும்.
தமிழ் மாவட்டங்களில் முசிலிம், தமிழ்
குடித்தொகை
மக்கள்
(1971)
பின்வருமாறு:
முசிலிம்
97.20 19032
6381 61.188 4 60698
123935
απο μανανε
28.0954.
245821
இவர்கள் இறுதியில் தமிழ் ஈழத்திற்குக் குடிபெயர வேண்டி வரும். இவர்களோடு வட, கிழக்கிலங்கையில் 14 இலட்சத்து 15 ஆயிரத்து 561 தமிழர்கள் வதிவர்.

Page 408
3.
அம்பாறை மாவட்டம் நீங்கலாக முசிலிம்களும் தமிழர்களும் திருகோண மலை மாவட்டத்தில் சம அளவாகவும், ஏனைய மாவட்டங்களில் முசிலிம்கள் சிறு தொகையினராகவும் வாழ்கிறார்கள். அம்பாறை மாவட்டத்தில் முசிலிம்கள் தமிழர்களை விட இரண்டு மடங்கு கூடுதலாக வாழ்கிறார்கள். இச் சூழ்நிலையில் முசிலிம்களுக்கு சம உரிமை, சம நிறை கொடுப்பதற்கு வேண்டிய முன்மாதிரியை சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
சோவியத் ஒன்றியத்தின் அரசமைப்பு முறை, ஒன்றியக் குடியரசுகள்; தன்னாட்சிக் குடியரசுகள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் தேசிய எல்லைப் பரப்புக்கள் ஆகிய வற்றை உள்ளடக்கியவையாக விளங்கும். சோவியத் ஒன்றியத்தில் வதியும் 100க்கு மேற் பட்ட தேசிய இனங்கள் மேற்குறிக்கப்பட்ட ஏதாவது ஒரு கூறில் அடங்கும். இது மட்டுமல்ல, நில அடிப்படையிலும் தேசிய இன அடிப்படையிலும் கூறுகளுக்குள் கூறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக எந்த ஒரு கூறும் எவ்வளவு சிறிதாய் இருப்பினும் தனது செயல்களைத் தாங்களே ஆட்சி செய்யக் கூடியதாக இருக்கின்றன.
“பாராளுமன்ற அமைப்பு முறையை தாம் தாண்டிவிட்டோமா? என்ற தலைப்பில் ஆகஸ்ட் ரொபின்பி என்பவர் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார். "இன்றைய நவீன உலகில் தேசிய அரசுகள் வாழவேண்டுமாயின் அவைகள் ஒரு கோபுர அமைப்பில் உருவாக்கப்படவேண்டும். கோபுர உச்சி உலக அரசாகவும், ஏனைய சிறிய அரசுகள் அதனின் அடித்தளமாகவும், இன்னும் பல அரசுகள் அதனின் இடை நிலைக் கூறுகளாகவும் அமையவேண்டும். இதன் வாயிலாகவே எல்லாத் தேசிய அரசுகளும் ஒரு உலக அரசியல் அமைப்பில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இயங்க (Քւգ-պւb.

97.
"அடிமட்டத்தில் கிராமிய ஆட்சியும் உச்சியில் உலக அரசும்” இந்தக் கோரிக்கை ஒரு கனவுலகக் கோரிக்கையா? இல்லை. இஃது எல்லோரும் அறிந்த எல்லாக் காலங்களிலும் நடைமுறைப் படுத்தப்பட்ட இணையாட்சித் தத்துவத்தின் விரிவாக்கமே. இணைப்பாட்சித் தத்துவத்திற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் சுவிஸ், இணைப்பரசா? இல்லை; இங்கிலாந்துப் பாராளுமன்ற அமைப்போடு ஒத்த தொன்மை வாய்ந்ததாகும்.
ஐக்கிய அமெரிக்க அமைப்புக்கூட இரண்டு நூற்றாண்டுப் பழமையுடைய தாகும். கனடா, அவுஸ்திரேலியா, மெக்சிகோ, பிறேசில், ஆயந்தீனா, மேற்கு சேர்மனி, இந்தியா, பாகிஸ்தான், சோவியத் ஒன்றிய நாடுகள் ஆகியன இணைப்பாட்சி அரசியல் யாப்பையுடையவையே. இந்த யாப்புக்கள் அனைத்தும் வெற்றிகரமாக இயங்குகின்றன என்று கூற முடியாவிடினும், இந்த நாடுகளில் இணைப்பாட்சிக் கோட்பாடு, இணைப் பாட்சி அரசியல் அமைப்பை இயக்கு வதற்குப் போதிய அனுபவத்தைப் பெற்றுள்ளன. இப்பொழுது எமக்குத் தேவை யானது என்னவெனில், இந்த அரசியல் அமைப்பை விரிவாக்குவதாகும்.
இணைப்பாட்சி அரசுகளை நிறுவு வதற்கு வேண்டிய அடிப்படை யாதெனில், இவ்வரசியல் அமைப்புக் கோபுரத்திலுள்ள ஒவ்வொரு படிகளுக்கும் அதற்குப் பொருத்த மான கடமைகளை ஒதுக்குவதேயாகும். இந்த அதிகாரங்களை ஒதுக்குவதில் தவறு ஏற்படும் நிலையில் இணைப்பரசு தோல்வியில் முடிவுறும். ஆனால் இன்று நாம் இந்த அமைப்பை யொட்டிப் போதிய அறிவுபெற்றிருப்பதனால், இதனை அடிமட்ட ஆட்சி, நிலைக்கும் - உச்சமட்ட ஆட்சி நிலைக்கும் விரிவுபடுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்.
இன்றுள்ள 125 தேசிய அரசுகளையும் நாம் அடியோடு ஒழித்துவிட முடியாது.

Page 409
「エ
அதே சமயத்தில் அவைகள் இறைமையோடு அல்லது மத்திய அரசுகளாகத் தொடர்ந்து இயங்கவும் விட முடியாது. மேற்குறித்த இவற்றை, அகில உலக அடிப்படையிலும் அதே வேளையில் பிரதேச அடிப்படையி லும் கட்டி எழுப்பல் வேண்டும். இன்றைய நிலையில் இவற்றின் உள்ளமைப்பிலும் மேலமைப்பிலும் குறைபாடு தென்படுகிறது. இன்றைய காலக் கட்டத்தில், தொழில்நுட்ப அமைப்பு அளவிலும் - வேகத்திலும் ஆளுமையோடு மோதிக்கொண்டிருக் கையில், 'தனிமனிதன் இணைப்பாட்சி அரசியல் அமைப்பில் பங்கு கொண்டு’ மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நாம் எம்மால் இயன்ற வழிவகைகளை வகுக்கவேண்டும். மேற்கூறிய அரசியல் முறை சோவியத் ஒன்றியத்தில் நடைமுறைப் படுத்தப்படுவதோடு ஆனல்ட் ரவுன் ஸியின் உள்ளத்தையும் நிறைவு செய்கிறது. இவ்விடயத்தில் இந்தியாவையும் நாம் பின்பற்றலாம். இந்திய ஒன்றியத்தின் எல்லைப்பரப்பு 30 இலட்சத்து 276 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஆகும். இதனின் மக்கள் தொகை (1961 குடித்தொகை) 4390 இலட்ச மாகும். இருந்தும் 479 கிலோ மீட்டரையும் 3 இலட்சத்து 69 ஆயிரம் மக்கள் தொகையை யும் கொண்ட புதுச்சேரி மாநிலம், sp(5. அரசாங்கத் தகைமை பெற்றுள்ளது.
செக்கோசிலவேக்கியாவில் சிலவேக்கி யர் ஒரு குறிப்பிடத்தக்க பிரதேசத்தில் வதிவது போல, முசிலிம் மக்களும் இங்கு வாழ்ந்திருந்தால், அவர்களது பிரச்சினை எளிதாகவிருந்திருக்கும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் முசிலிம்களும் தமிழர்களும் கிட்டத்தட்ட ஒன்றுவிட்ட கிராமங்களில் வதிகிறார்கள். அதாவது ஒரு முசிலிம் கிராமம் - அதற்கடுத்தது தமிழ்க் கிராமம் - அதற்கடுத்தது முசிலிம் கிராமம். இருந்தும் கல்முனைத்தொடக்கம் பொத்துவில் ஈறாக முசிலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார் கள். ஆகவே மத்திய அரசமைப்பிற்கு அடுத்த படியிலுள்ள உயர்ந்த அரசமைப்பிற்கு

98
அவர்கள் உரித்துடையவர்களாவர். ஆனால் இப்பிரதேசத்திற்குள் நெருங்கி வாழும் தமிழ் மக்களுக்குப் பிரதேச சுயாட்சி கொடுக்கப் படல்வேண்டும். இதன் வாயிலாகக் காரைதீவு, அக்கரைப்பற்று, தென்மேற்குப் பனங்காடு போன்ற இடங்களில் தமிழர்கள் தங்களது சொந்த அலுவலல்களைக் கவனிப்பதற்கு வாய்ப்பாயிருக்கும். அதே போல மட்டக்களப்பு மாவட்டத்தில் மூதூர், தோப்பூர், கிண்ணியா, புல்மோட்டை, மன்னார், வவுனியா மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி மற்றும் கிராமங்கள் இவற்றில் நெருக்கமாக வாழும் முசிலிம் களுக்குப் பிரதேச சுயாட்சி வழங்கப்படல் வேண்டும்.
இவ்வகையான, வடக்கிலும் கிழக்கிலுமுள்ள சுயாட்சிப் பிரதேசங்கள் ஒன்றுசேர்ந்து - இணைப்பாட்சி ஒன்றியத் தில் அமையும். முசிலிம் தேசிய இனத்தின் உரிமைகளை எந்தவிதத்திலும் மாற்றவோ, குறைக்கவோ, அழிக்கவோ முடியாதவாறு அவர்களுக்கு அரசியல் சட்டம் மூலமாக உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அப்படி ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின், அவை பெரும்பான்மை யான முசிலிம் பிரதிநிதிகளினது ஒப்புதலைப் பெற்றே செய்யப்பட வேண்டும். அல்லது முசிலிம் மக்கள், குறிப்பிட்ட சட்டத்தை யிட்டுப் பொதுமக்கள் வாக்கெடுப்புக் கோரும் உரிமை கொடுக்கப்படல் வேண்டும். இப்படியான வாக்கெடுப்பு மூலம் பெறப்படும் முடிவு - இறுதியானதாகவும் முடிந்த முடிபாகவும் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் முடியாகவும் அமையும்.
அரச பணியிலும் கூட்டுத் தாபனங் களிலும் செய்யப்படும் நியமனங்கள் பிரச்சினைக்குரியதாக அமைந்து விட்டது கண்கூடு. ஆனபடியால் இத்தகைய நியமனங்கள் அந்தந்த சுயாட்சிப் பிரதேசங் களுக்குள்ளேயே செய்யப்பட வேண்டும். மத்திய அரசபணிக்கு நியமனம் செய்யப் படும் பொழுது, வட - கிழக்கில் உள்ள

Page 410
-
L -
கல்முனை, மட்டக்களப்பு திருகோணமலை மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங் களில் வதிவோருக்கு ஆகக் குறைந்த தொகை நியமனங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். இயன்றளவு தெரிவுகள் கொம்பி பூட்டர் மூலமாகத் தெரிவு செய்யப்படல் வேண்டும். இந்த நிபந்தனைகள் நீங்கலாக, நியமனங்களுக்குத் திறமையே வழிகாட்டும் காரணியாக அமையவேண்டும். இனம், மதம், சாதி காரணமாக எந்த இனத்திற்கு எதிராகவோ அல்லது தனியான எவருக்கும் எதிராகவோ - நிர்வாகப் பாகுபாடோ அல்லது ஆதிக்கமோ காட்டப்படல் கூடாது. ஒரு தேசிய இனத்திற்கு எதிராக இன்னுமொரு தேசிய இனத்தினால் எந்த வொரு நிர்வாகப் பாகுபாடோ, ஆதிக்கமோ காட்டப்படுவது சட்டப்படி தடைசெய்யப் படும். ஒருதேசிய இனத்திற்கு வாய்ப்பாகவும் மற்றைய தேசிய இனத்திற்குப் பாதகமாகவும் எந்தவொரு சட்டமும் இயற்றப்படக்கூடாது. எல்லோரும் கல்வி கற்கச் சமவாய்ப்பு அளிக்கப்படும். கீழ்நிலைப் பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் கல்வி இலவசமாக வழங்கப்படும். ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்படும். தொழில் நுட்ப தொழில் தொடர்பான கல்வி எல்லோருக்கும் வழங்கப்படும். மற்றும் உயர் கல்விக்குத் திறமை அடிப்படையில் சம வாய்ப்பு அளிக்கப்படும். (மனித உரிமைகள்)
தன்நிறைவுடைய நான்கு பல்கலைக் கழகங்கள் நிறுவப்படும். முதலாவது கல்முனையிலும், இரண்டாவது மட்டக் களப்பிலும், மூன்றாவது திருக்கோணமலை யிலும், நான்காவது யாழ்ப்பாணத்திலும் நிறுவப்படும். திருமலைப் பல்கலைக்கழகம் - மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் தேவைகளை நிறைவு செய்யும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு - முதல் 15 ஆண்டுகளுக்கு முன்உரிமை (Wrightage) வழங்கப்படும். முசிலிம் மக்கள் தாம் விரும்பினால் இந்த நான்கு பல்கலைக்கழகங்களில் ஒன்றினைத் தங்களது

39
ஏகபோக தேவைக்குப் பயன்படுத்தும் உரிமை வழங்கப்படும். அத்துடன் அவர் களுக்கு ஏனைய பல்கலைக் கழகங்களிலும் இடம் அளிக்கப்படும். எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் அல்லது கூடுதலான பல்கலைக் கழகங்களில் அராபிய மொழிக்கு ஒரு பீடம் அமைக்கப்படும். எல்லா முசிலிம் பள்ளிக்கூடங்களிலும் முசிலிம் ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். இருந்தும் ஒரு பொதுவிதியாக, ஆசிரியர் நியமனங்கள் திறமை அடிப்படையிலேயே செய்யப்படும். எல்லா அடிப்படை உரிமைகளும் அரசியல் சட்டத்தில் உள்ளடக்கப்படும். நிறை வேற்றாளர்கள் தங்களது நாளாந்த அலுவல கங்களில் ஐக்கியநாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமை களைக் கடைப்பிடித்து ஒழுகல் வேண்டும். தரப்படுத்தல் போன்ற களையெடுப்புக் களுக்கு இடம் இருக்காது. ஒம்பட்சுமன் (Ombudsmen) ஒருவர் நியமிக்கப்படுவார்; எல்லா அமைச்சர்களினதும் அல்லது அதிகாரி களினதும் நடவடிக்கைகள் இவரது கண்காணிப்பின்கீழ்க் கொண்டு வரப்படும். அரசு மதசார்பற்றதாகவிருக்கும். எல்லா மதங்களும் சமமாகக் கணிக்கப்படும். எந்த ஒரு மதத்திற்கும், உரிய இடம் - பெரும் பான்மை காரணமாக வழங்கப்பட LDITL LITg1. பொதுநிதி எந்தவொரு மதத்தினதும் வழிபாட்டுத் தலங்களுக்குப் பாவிக்கப்படமாட்டாது. தமிழர்களைப் போலவே முசிலிம்களும் நீண்ட பாரம் பரியமான கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் - கல்வி அமைச்சர் கலாநிதி பதுதீன் முகமட் கூறுவதுபோல உரித்துடையவர்கள். அவர்களது கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் அரசினால் சம ஊக்கமும் சம வாய்ப்பும் அளிக்கப்படும்.
இவையே தமிழ் இனத்திற்கும் முசிலிம் இனத்திற்கும் உள்ள உறவுகளை நிர்ணயிக்கும் - அல்லது ஒழுங்குபடுத்தும் - பரவலான அரச நெறியாகும். தென் இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில்

Page 411
4
வாழும் பெரும்பாலான முசிலிம்களுக்கு இத்தகைய சமவுரிமையும் சம வாய்ப்பும் கிடைக்காது என்பது மட்டுமல்ல - வட, கிழக்கு இலங்கையில் வாழும் முசிலிம் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளில் ~ 100ற்கு ஒரு விழுக்காடுதானும் அவர்களுக்குக் கிடைக்கமாட்டாது.
மட்டக்களப்பில் இன்று வாழும் முசிலி ம்கள் 348 ஆண்டுகள் மட்டுமே இப்பகுதியில் வாழ்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதே சமயம் தமிழர்கள் அரசுகளையும் சிற்றரசுகளையும் கொண்டு விஜயன் வருவதற்கு முன்பு மட்டுமல்ல - அதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பேயே இலங்கையும் இந்தியாவும் நீரினால் பிரிக்கமுடியாத காலம் Gj, fri" (6 வாழ்ந்து வருகிறார்கள். இவ்வுண்மைகள் - வரலாற்று உண்மைகள் என்பதை முஸ்லிம்களும் சிங்களவர்களும் மனதில் இருத்துவது நலம்.
முசிலிம்கள் ஒரு சிறுபான்மை இனமாக என்றும் கருதப்பட மாட்டார்கள். அவர்கள் ஒரு தனித் தேசிய இனமாகவே கருதப்படுவர். சீனக்குடியரசுத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள கோட்பாட்டிற்கமைய, எந்த ஒரு இனமும் இன்னுமொரு இனத்தை ஆள (pig i Is H1- என்பதை штић ஏற்றுக்கொண்டிருக்கிறோம். தமிழர்களும் முஸ்லிம்களும் கடந்த 348 ஆண்டுகளாக மிக அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கிடையில் இரத்தத் தொடர்பான உறவுகள்கூட உண்டு. இதனை முசிலிம்களின் தமிழ் சாதிப் பெயர்களால் அறிந்து கொள்ளலாம்.
வட, கிழக்கிலுள்ள தமிழர்களுக்கும், வடக்கிலுள்ள சிறுபான்மைத் தமிழர் களுக்கும் ஒரு எச்சரிக்கை தமிழர்களைத் தீய சக்திகள் பிரிக்க முயற்சிப்பார்கள். தமிழர்கள் வட, கிழக்கில் பெரும்பகுதியில் இருந்தாலும் அவர்கள் பிரிக்க முடியாத ஒரு இனமே. நாங்கள் மலைநாட்டுத் தமிழர்களையும் எங்களுடன் சேருவதை மகிழ்ச்சியுடன்

00
வரவேற்கிறோம். அவர்களது விடாமுயற்சி, தொழிலார்வம் ஆகிய பண்புகள் நாடறிந் தவை. அவர்கள் எமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவர். அவர்களை வரவேற்கும் அதே வேளையில் அவர்களினது அடிமைத் தளைகளையும் அறுத்தெறிவோம்.
இணைப்பாட்சி அரசியல் அமைப்பின் கீழ், மிகச் சிறிய கூறும் தங்களைத் தாங்களே ஆளும் வாய்ப்பைப் பெறும். அதோடு நியமனங்களில் அந்தந்தக் கூறுகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆகக் குறைந்தளவு எண்ணிக் கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு, அரசபணிக்குத் திறமையும் ஒரு முக்கிய காரணியாகக் கணிக்கப்படும். இதன் மூலம் உள்ளுர் ஏகாதிபத்தியத்தால் தமிழரிடையே பிரதேச ஆதிக்க உணர்வையும், பிளவு களையும் தூண்டிவிடும் முயற்சிகள் முறியடிக்கப்படும்.
சிறுபான்மைத் தமிழர்களைப் பொறுத்தவரை, சமத்துவமும் - சாதி ஆதிக்கத்தை அகற்றப் பெருந்துணையாய் விளங்கும் கல்வியும் - பொருளாதார முன்னேற்றமும் பிரதேச சுயாட்சியின்கீழ் நிலைநாட்டப்படும். கீழ்மாகாணத் தமிழர்களும், வடக்கிலுள்ள தமிழர்களும் - சிங்கள ஏகாதிபத்திய வாதிகளினதும், அவர்களின் அடிவருடிகளினதும் தமிழர் களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு இரையாகக் கூடாது.
தமிழர்களாகிய நாம் எங்களை நாமே ஆளும் பிறப்புரிமை கோரி நிற்கிறோம். நாம் இழந்த அரசை மீண்டும் வரலாற்றுப் படங்களின் மூலம் காட்டப்படும் தேசிய எல்லைக்குள் நிறுவக் குரல் எழுப்புகிறோம். நாங்கள் மீண்டும் சிங்கள ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலைபெற்று - ஒரு முழு இறைமையும் சுதந்திரமும் கொண்ட ஆட்சியை ஏற்படுத்த விழைகிறோம். நாம் முசிலிம் மக்களுக்குத் தங்களைத் தாங்களே ஆளும் சம உரிமையை வழங்குவோம்.

Page 412
-4
அவர்கள் அரசியல் மேதை லெனின் வழி காட்டிய இணைப்பாட்சிக் கோட்பாடு களுக்கு உள்ளமைந்த ஒரு அரசியல் தனித்தேசிய இனமாக வாழவேண்டுமா அல்லது ஒற்றையாட்சியின் கீழ் ஒரு சிறுபான்மை இனமாக வாழவேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அவர் களுடையதே. இணைப்பாட்சியென்றால் - நாட்டைத் துண்டுபோடுவதென்ற, ஏமாற்றும்
சூழ்ச்சியும் நிறைந்த சிங்கள ஏகாதிபத்தியத்தின் விளக்கத்தை நாம் ஏற்கவில்லை. ஆளுமினம் ஆளப்படு
மினத்தைத் தம் சொந்த நலனுக்காகச் சுரண்டுவதை நாம் எதிர்க்கிறோம். வரலாற்றில், ஒரு சிறுபான்மை இனம் ஒரு பெரும்பான்மை இனத்தினை ஆட்டிப் படைத்து ஆதிக்கம் செலுத்தியதாகச் சான்று இல்லை. அப்படித் தற்ாலிகமாக நடந்திருந் தாலும் - அது சிறுபான்மை இனத்தின் அழிவிலும் தோல்வியிலுமே முடிந்திருக் கிறது.
வட, கிழக்கில் உள்ள முசிலிம்கள் தங்களது பாதையை அறிவோடு தெரிவு செய்வார்களாக. வடக்கில் உள்ள சிறுபான்
 

மைத் தமிழர்களும் - கிழக்கில் உள்ள தமிழர்களும் முன்கூட்டிய உணர்வோடு செயற்படுவார்களாக! சுதந்திரம் என்பது எந்தக் குடிமக்களதும் பிறப்புரிமையாகும். ஒரு காலத்தில் இறைமையோடும் சுதந்திரத் தோடும் ஒளிவிட்ட அரசை - அநியாயமான முறையில் சிங்கள அரசோடு இணைப்பதன் மூலம் அதனை இழந்துவிட்ட தமிழர் களுக்கு, இக்கூற்றுக்கூடிய முறையில் பொருத்தமாகும். ஆங்கிலேயர் வெளியேறிய போது எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட அரசை - மீண்டும் எம்மிடம் ஒப்படைத் திருக்க வேண்டும். அவர்கள் திருகோண மலையை மட்டும் வைத்துக் கொண்டு மிகுதியைத் தாரைவார்த்துக் கொடுத்து வெளியேறி விட்டனர்.
வெல்க தமிழிம்ை மலர்க தமிழ் ஈழம் வாழ்க தமிழ்!
) O Q`o o

Page 413
ՂՍմ, J6est
A
KRISH RA
61A/2 Kings Street,
UB24DQ 02

Compliments
ᏤᏅᏤᏤ
TNA & CO
SOuthall Middlesex
O 85 746303

Page 414
தமிழ் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட தந்தை செல்வாவும் தளபதி அமிரும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து அளவளாவும் அருமையான காட்சி.
 

உலகத் தமிழரின் இதயக் கனிகள்

Page 415
இலங்கையில்
35L6)
வ. ந. நவரத்
அகிம்சை தழுவிய ஆனி ஐந்து
னைத்திலங்கையிலும் பரந்து பட்டு வாழுகின்ற தமிழ்பேசும் மக்களுடைய அரசியல் வரலாற்றிலே 56 ஆனி ஐந்து மிக முக்கியம் வாய்ந்த மறக்கவொண்ணா நாளாக அமைகிறது. தனி நபரொரு வருடைய வாழ்க்கையிலே இவ்வானி ஐந்து வெவ்வேறு காரணங்களுக்காக முக்கியம் பெறலாம். ஆனால் ஒவ்வொரு நபரையும் உள்ளடக்கிய ஓர் இனத்தின் வாழ்வில் ஓர் நாள் முக்கியம் : பெறவேண்டுமாயின் அந்நாள் | அந்நாட்டின் சரித்திரத்தில் | இடம்பெறும் நாளாக | அமையவேண்டும்.
ஈழம்வாழ் தமிழ்பேசும் | மக்கள் நீண்டகாலமாக அந்நியர் | ஆட்சியின்கீழ் அடக்கப்பட்ட அடிமை இனமாக வாழ்ந்து வந்த போதிலும் அந்நியரின் அழுக்கு | பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்திர இலங்கை ஒன்றை உருவாக்கி அதில் வாழ்ந்து வந்த பொழுதிலும் தனது அடிமை நிலையை அகற்றி ஆளும் நிலையை அடைய வேண்டுமென்று மனதார நினைத்தாலும்கூட அந்நிலையை அடைகின்ற வழிவகையைப் பற்றியோ, சுதந்திர புருஷர்களாக வாழுவதற் கான மார்க்கத்தைப் பற்றியோ சிந்தித்தார்கள் என்று சொல்ல வருகின்றபோது - அவர்கள் கையாண்ட வழியை உற்று நோக்கும்போது சம்பிரதாயநெறி (convention) என்ற அந்த வழியே நம்முன் காட்சி தருகின்றது.
 

மொழிப்புரட்சி
LD 6SiJñt திம்ை, பா. உ.
ஆதலால் நாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்ட இவ் வழியைக் கைக்கொள்ளும் கருத்துக்கள், கொள்கைகளைக் கொண்ட அரசியற் கட்சிகளையே அவர்கள் ஆதரிக்கத் தலைப்பட்டனர். அதாவது - அத்தகைய கட்சிகளை வழிநடத்தும் தலைவர்களின் தலைமையை ஏற்று அவர்கள் மூலம் பாராளுமன்ற அரங்கிலே நின்றுகொண்டு தம்முடைய பிரச்சினைகளை முன்வைத்து வாது புரிந்து அவற்றைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற அடிப்படைக் கருத்தின்படியே அவர்களது அரசியற் பயணம் | நடைபோட்டது. அதன்படியே அனைத்துத் தமிழ் அரசியற் கட்சிகளும் அவ்வாறான கொள்கைகளைக் கொண்டு இயங்கலாயின. ஆயிரத்துத் | தெ (ா ள் ள |ா யி ர த் து நாற்பத்தொன்பதாம் (1949ஆம்) ஆண்டிலே சமையலான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இவ்வழியைப் பின்பற்றியதில் வியப்பில்லை. இந்தவழியில் நடைபோட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சி தான் கொண்ட கருத்துக்களை, கொள்கைகளைப் பக்குவமாக மக்கள் மத்தியிலே பரப்பி வந்தது. விசேடமாக ஒற்றை இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மையினரின் வாழ்வு வளம்பெற வேண்டுமாயின், அவ்வினத்தின் தனித்துவமும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் ஒற்றையாட்சி அகற்றப் பட்டுச் சமஷ்டி ஆட்சி அமைப்பிலான இணைப்பாட்சி ஏற்பட வேண்டுமென்ற கருத்தை நாட்டு முன் வைத்தது.

Page 416
4
இலங்கைத் தமிழரசுக்கட்சி விசேட மாக முன்வைத்த இக்கருத்து இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களைக் கவ்விக் கொண்ட இருள் அகன்று அங்கே ஒளி அமர்ந்திட வித்திட்ட காரணத்தினால், இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களுடைய பேராதரவு இ. த. அ. க. வை நாடியது.
நான் முன்னர் குறிப்பிட்டதைப் போலச் சம்பிரதாய நெறியி (conventional Method) லேயே இயங்கி வந்த இ. த. அ. க. உருண்டு வந்த ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறாம் ஆண்டிலே (1956), இடம் பெற்ற பொதுத் தேர்தற் களத்திலே நின்று கொண்டு, பாராளுமன்றத்திற்குச் செல்வத னால் மட்டும் - அங்கு வாதிப்பதனால் மட்டும் தமிழ்பேசும் மக்களுடைய அடிப் படை உரிமைகளை வென்றெடுக்கலாமா? எனச் சிந்திக்கத் தொடங்கியது. இச் சிந்தனை கருக்கொண்டு, பாராளுமன்ற அரங்கிற்கப் பாலும் போராடவேண்டிய சூழ்நிலை ஒன்று ஏற்படுமாயின் அங்கும் விரைந்து அதையும் நாம் சந்திக்க வேண்டும்; சந்திப்போம் என்ற உருவிற் பிரசவமாகியது.
இ. த. அ. க. பிரசவித்த இவ்வொலி இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் காதுகளைத் துளைத்து மேற்குறிப்பிட்ட 56 பொதுத் தேர்தற் களத்தில் பேரிரைச்சலாக LDITgi52uLug5/.
இப் பேரிரைச்சல் பற்றிக்கொண்ட 56பொதுத்தேர்தல் முடிந்தது; காலஞ் சென்ற பிரதமர் உயர்திரு. எஸ். டயிள்யூ. ஆர். டி. பண்டாரநாயகா அரசு கட்டிலில் அமர்ந்தார்; இந் நாட்டை ஆளுகின்ற இனத்தின் மொழியே - இந்நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும்" என்று தத்துவம் பேசினார்! அந்நிய மொழியை அகற்றி அகராதி அறியாச் சிங்கள மொழியை இந் நாட்டின் ஆட்சிமொழி என்று அறிவித்தார்!
திரு. பண்டாரநாயகா இதை அறிவிக்கும்போது, இந் நாட்டின் மொழிக் கொள்கையிலே மட்டும் LDstsibpub

05
ஏற்படவில்லை. ஒரு மொழிப் பிரச்சினையை மட்டும் பண்டா மக்கள் முன் வைக்க வில்லை. இந்த நாட்டை எந்த இனம் ஆளுகின்றது; இந்த நாட்டில் எந்த இனம் மாளுகின்றது என்பதை இந் நாட்டுவாழ் அனைத்து மக்களுக்கும் - இந்நாட்டுக்கு அப்பால் அனைத்து உலகுக்குமாகவே "படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி (Symbolic Act) போன்ற ஒன்றாகவே உருவகமெடுத்தார்.
"தமிழனுடைய தன்மானப் போரைப் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், அவசிய மேற்பட்டால் அதைப் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் நடத்துவோம்” என 56- தேர்தல் களத்தில் நின்றுகொண்டு மக்களுக்கு வாக்குக் கொடுத்து, அம் மக்களின் வாக்குகளின் மூலம் அமோக வெற்றி யடைந்த இ. த. அ. க. விற்கு - இதுவே தேர்தலின் பின்னால் பண்டாவால் விடப்பட்ட முதற் சவாலாக அமைந்தது எனலாம்.
சவால்களைச் சந்திப்பதில் சரித்திரங் கண்ட தமிழரசுக் கட்சிக்குப் பண்டாவின் இச் சவால் சரித்திரமாகத் தெரியவில்லை; ஆதலால் தமிழ்பேசு மினத்தின் பால் இழைக்கப்படுகின்ற இப்பெரும் அநீதியைக் கட்சி ரீதியாக மட்டுமன்றி இன ரீதியாகவும் எதிர்கொண்டு போராட வேண்டுமென்ற திடமான முடிபைத் தீர்க்க தரிசனமிக்க முடிபாகத் தந்தை செல்வநாயகம் அறிவித்தார். அவரது இவ் வறிவிப்பை, தமிழுரிமைப் போராட்டங்களிற் கிடைக் கின்ற இன்ப துன்பங்களைத் தந்தை செல்வா வோடு பங்கிட்டுக் கொள்ள என்றைக்குமே பின்நின்றறியாத திரு. கு. வன்னிய சிங்கம், திரு. என். ஆர். இராஜவரோதயம் திரு. இ. மு. வி. நாகநாதன் போன்ற 'உண்மைத் தியாகிகளாம்' எம்மியகத்தின் முன்னணித் தலைவர்கள் செயற்படுத்த விழைந்தார்கள்.
அருமைத் தந்தையும் அன்பு மைந்தர்களும். இ. த. அ. க. வை எதிர்த்துப் போரிட்ட தமிழ் அரசியற் கட்சிகளின் தலைவர்களையும் அவற்றின் தொண்டர் களையும் அணுகி, எந்த ஒரு விடுதலைப்

Page 417
-4 போராட்டத்திற்கும் மிக மிக இன்றியமை
யாததாக இருக்கவேண்டிய இன
ஒற்றுமையை அவர்களனைவருடனும்
நடத்திய பேச்சுவார்த்தைகளின் பெறும்
பேறாக ஏற்படுத்தினார்கள்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத் தாறாம் ஆண்டு, ஆனிமாதம் ஐந்தாம் திகதி (1956-6-5) கூடவுள்ள பாராளுமன்றத்தில், தனிச் சிங்கள மசோதா ஆளவந்தாரினாற் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவ்வறிவிப்பு இந் நாட்டுச் சிங்களர்க்கு ஒர் மங்கள பேரிகையாகவும், இந் நாட்டுத் தமிழர்க்கு ஒர் மரண பேரிகையாகவும் முழக்கமிட்டது என்பதில் ஐயமில்லை.
ஆனி ஐந்தாம் நாளன்று நாடாளு மன்றத்திற்கு வரக் காத்திருக்கும் தனிச்சிங்கள மசோதா சட்டமாக ஆகி அமர்ந்திடாது தடுத்து நிறுத்துவதற்கான மார்க்க மென்ன? இக் கொடிய சட்டத்தை இந்நாட்டுத் தமிழ்பேசும் பெருங்குடி மக்களனைவரும் ஏகோபித்து எதிர்க்கின்றனர் என்ற நிலையை இந்நாட்டிற்கும் உலகிற்கும் எப்படிப் படம் பிடித்துக் காட்டுவது? பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட எதிர்ப்போரை எந்த வழியில் - எப்படித் தொடுப்பது? என்பவற்றைச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு எம் தந்தையவர்களையும், இவ்வெதிர்ப்பியக்கத்தை ஆதரித்து நின்ற இதர தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் நாடி நின்றது. அனைத்துத் தலைவர்களும் சிந்தித்து ஓர் தீர்க்கமான முடிவிற்கு வந்தார்கள். பசும்புற்றரையில் பச்சை இரத்தம்
"இந் நாட்டை ஆளுகின்றவர்கள் நாங்கள்தான்" என்று சிங்கள மக்கள் பிரகடனம் செய்யப்போகும் அந்நாள் - ஆணி ஐந்தாம்நாள் வந்து சேர்ந்தது. ஈழம்வாழ் தமிழ்பேசும் மக்களின் விடுதலை இயக்கத்தில் அன்று ஒர் புதிய சகாப்தம் ஆரம்பித்தது. ஆம், முதன் முதலாக இலங்கையில் ஒரு மொழிப் புரட்சி வெடித்தது!

உலக உத்தமர் காந்திமகான் ஆராய்ந்து கண்டு, பாரதநாட்டின் சுதந்திரப்போரில் கைக்கொண்டு வெற்றி கண்ட அஹிம்சை என்ற - அணுக்குண்டினும் மேலான சக்தி மிக்க ஆயுதத்தை இலங்கையில் முதன் முதல் இராவணன் வழித்தோன்றிய மறத்தமிழன் அன்று பாவித்தான்!
தனிச்சிங்கள மசோதா பாராளுமன்றத் திற்குக் கொண்டுவரப்பட்ட ஆனி ஐந்தாம் நாள் பாராளுமன்றத்து முன்னுள்ள காலி முகக் கடற்கரையிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவங் கள். அதை இப்போது நினைத்தாலும் உடம்பெல்லாம் புல்லரிக்கும். கிழக்குத் திசையில் கதிரவன் உதித்த காலை நேரம் ஐந்நூறுக்கு (500) மேற்பட்ட தொண்டர்கள் தமிழினத்தின் ஏகோபித்த எதிர்ப்பைக் காட்டும் நோக்கமாகப் பாராளுமன்றத்து முன்னுள்ள பசும்புற்றரையில் அமர்ந்தார்கள்.
பாராளுமன்றத்தினுள்ளே குளிரூட்டிய அறையினுள் அலங்காரமாகக் காட்சி தருகின்ற பஞ்சணை ஆசனத்தில் அமர்ந்து கொள்ளவேண்டிய எமது தலைவர் தந்தை செல்வநாயகம், தமிழினத்தின் நல்வாழ்வுக் காகத் தொண்டரோடு தொண்டராய்ப் பாராளுமன்றத்து வெளியேயுள்ள வெப்பம் சூழ் பசும்புற்றரையில் சப்பாணி கட்டிக் கொண்டு அமர்ந்தார்.
காலை ஒன்பது, பத்து மணிபோல் தொலைவிலே ஓர் கூட்டம் எம்முன்னே காட்சி தந்தது. இக்கூட்டம் அங்கே நின்று கொண்டு தகாத வார்த்தைகளை எடுத்து எம்மை இம்சைப் படுத்தியது. படிப்படியாக எமக்குக் கிட்டே வந்த அந்தக் கூட்டத்தினர், காலிகளின் இயற்கைக்குணம் எவ்வாறிருக்கு மோ அவற்றைத்தாம் நமக்குக் காட்டி - அதாவது சேட்டைகள் புரிந்து எம்முன்னே காட்சி தந்தனர் இக் காட்சியைக் காட்டிய அந்தக் கூட்டம், தாம் காடையர் கூட்டம் தான் என்பதைக் கையும் மெய்யுமாகக் காண்பித்தன.
பாராளுமன்றக் கட்டடத்தைச் சுற்றியும், காலிமுகாம் முன்றலிலும் ஆயுத

Page 418
-4
பாணிகளாக நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினர் (போலீஸ்) நடந்துகொண்ட முறை, அங்கிருந்த தொண்டர் நமக்கு இந்நாட்டுத் தமிழருடைய நிலை என்ன என்பதை இன்னும் நன்றாகத் தெட்டத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது.
அடக்கியாண்டு அதிகாரம் செலுத்து கின்றவர்களுடைய கையிலே இருக்கின்ற காவற்படைகள், அடக்கி ஆளுகின்ற வனுக்குப் பக்கபலமாக இருக்குமேயன்றி, அடங்கித் துன்பப் படுகின்றவனுக்கு ஒருபோதும் பக்கத் துணையாக இராது" என்பதை அன்று பட்டவர்த்தனமாகக் காட்டியது. "நாட்டிலே ஆளுகின்ற அதிகாரம் இல்லாவிட்டால் - நாட்டிலே வாழுகின்ற பாதுகாப்பே எமக்கு எக்காலும் கிடைக்காது என்ற சிந்தனையை அன்றைய நிகழ்ச்சி எமக்கெல்லாம் உருவாக்கியது.
அமைதி தழுவும் தொண்டர்களை அட்டகாசம் புரியும் குண்டர்கள் அணுகினார்கள். இக் குண்டர்கள், தாம் பேசுகின்ற கொச்சைப் பாஷை எமக்கு விளங்காது எனக் கருதிய காரணத்தினாலோ என்னவோ, அதைச் செயலிற் காண்பிக்க முற்பட்டனர். ஆம், தாம் அணிந்திருந்த கீழாடையை அலாக்காக மேலெடுத்துத் காலி களுக்கே உரித்தான சிரிப்புடன் எமக்குக் காட்சி தந்தனர். அருவருக்கத்தக்க அந்தக் காட்சியைக் கண்டு எம்மாற் சகிக்க முடியவில்லையாயினும் நாம் புரிவது அறப்போர் என்ற காரணத்துக்காக அமைதியைத்தழுவினோம்! ஒருவாறு சகித்துக்கொண்டோம்.
யாழ்ப்பாண நன்நகரின் கற்பக விருட்சமாம் ஓங்குயர் பனைமரம் போல் வைரம் படைத்த நெஞ்சங் கொண்ட எனது உயிரனைய உடன்பிறப்பு, தலைவர் வன்னியசிங்கம் முதுகிலே ஓர் பலமான அடி விழுந்தது. அமைதியோடு, ஓர் உண்மையான தவசி தவம்புரிகையில் எவ்வாறிருப்பானோ அவ்வாறே தவசிபோல் இறைவன் புகழ்பாடும் தேவாரப் பதிகங் களைப் பாடிக் கொண்டிருந்தார்!

Z}
சாதாரண வேளையிற் கூடத் தனது தலைவரொருவரை ஒருவன் "அடேய்" எனக் கூறக் கேட்டால் அதுகண்டு அவனது முன்வாய்ப் பற்களை உடைத்தெறியத் தயங்காத தொண்டர் குழாம், இங்கே தம்முன்னே தமது தானைத் தலைவன் வன்னியசிங்கம் தாக்கப்பட்டது கண்டும், அறிஞர் அண்ணா விட்டுச்சென்ற கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்த காரணத்தினால் அமைதி கொண்டனர். தமிழனது பொறுப்புணர்ச்சியின் பெறுமதியை அறிந்திட இதைவிடச்சான்று வேறென்ன வேண்டும்?
தந்தையின் 13, 14 வயது மதிக்கத் தக்க மூத்த செல்வன் சந்திரஹாசன் தந்தையின் கண்முன்னாலேயே மிருகத்தனமாகத் தாக்கப்பட்டான். இம்மியும் மனமிடிந்திடாத நிலையில், தந்தை செல்வா இக்காட்சியைக் கண்டுகொண்ட அமைதி கண்டு நாமனை வருமே பிரமித்து விட்டோம்.
எமது கட்சியின் தாபர்களிலொரு வரான வைத்திய கலாநிதி இ. மு. வி. நாகநாதன், இன்னுமொருவரான திரு. சு. நடராசா, திரு. வி. ஏ. கந்தையா, திருமலை ஜோதி என். ஆர். இராஜவரோதயம், கட்சியின் இன்றைய தலைவர், நண்பர் நாவலர் அ. அமிர்தலிங்கம், சொல்லின் செல்வர் செ. இராசதுரை, பா. உ. ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் தொண்டர்களுமே குண்டர்களின் கொடூரத் தாக்குதல்களுக்கு இரையானார்கள். விசேடமாக, நண்பர் அமிர்தலிங்கத்திற்கு நெற்றி பிளந்த நிலையில் குருதி கொப்பளித்ததென்பதையும், தொடர்ந்தும் பலதடவை அவர்பால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக அவர் அணிந்திருந்த ஆடைகள் சிகப்பாகிய அக்கோலத்திலேயே - அதாவது இரத்தச் சிகப்பு நிறமாக உருமாறிய ஆடைகளுடனே யே அவர் ஆட்சிமன்றத்தினுட்புகுந்து தனிச்சிங்கள மசோதாவை எதிர்த்து வாதாடிய அஞ்சாத சிங்கம் என்பதையும் இங்கே எக்காலத்திற்குமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

Page 419
4.
இதைவிட, கொடுமை புரிந்த குண்டர் களின் பலரக தாக்குதல்களுக்கு ஆளாகிய தொண்டர்கள், பின் தனித்தனியாக அமர்ந்து போராடினர். (விரியுமென்பதால் விளக்க வில்லை) இப்படியாக, பாராண்ட தமிழன் பைந்தமிழ் காக்க அன்று பச்சை இரத்தம் பரிமாறினான்.
கொடுமையாளர்களின் அத்தனை தாக்குதல்களையும் கண்டு கொதிப்படைந் திடினும் கட்டுப்பாடு கருதிப் பொறுமை யைக் கடைப்பிடித்த இரும்பு மனிதர், இடையே தவிர்க்கமுடியாத தனிப்பட்ட அலுவல்காரணமாகக் காலிமுக D_GioTuqjłFITGMGuv6Oulu (Galle Face Hotel) Gipsmrš6 நடந்து சென்றார். அவர் போவதைக்கண்ட ஏழு, எட்டுக் குண்டர்கள் அவரைப் பின்தொடர்ந்து தாக்கினர். அதுவரைக்கும் பொறுமையாக இருந்த இரும்பு மனிதர் பொங்கியெழுந்தவராக அக் குண்டர்களை எதிர்கொண்டு தாக்கினார். இங்கே இரும்பு மனிதர் குண்டர்களைத் தாக்கினார் என்று சொன்னால் அனைவரும் வியப்பீர்கள். ஆம்! உண்மை. தன் கைகளாலும், கால்களாலும் வேகமாக - அதே வேளையில் விவேகமாக எதிரிகளை இரும்புமனிதர் தாக்கி அத்தனை பேரையும் அவ்விடத்தைவிட்டு விரட்டி யடித்த காட்சி - அவர்கள் தப்பினோம் பிழைத்தோமென்று தலைதெறிக்க ஓடிய காட்சி உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
பொறுமையைக் கையாள வேண்டிய இடத்தில் அதைக் கையாண்டு, பொங்கியெழ வேண்டிய இடத்தில் பொங்கியெழுந்து டாக்டர் நடந்துகொண்ட விதம், வீரம் தமிழனது தனிச் சொத்து என்பதை நாட்டுக்குணர்த்தியது.
சத்தியாக்கிரகம் பூர்த்தியாகும் வரைக்கும் அதில் பங்கேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. குண்டர்களினால் 'மூங்கில் தடிகொண்டு என் உடலின் பழு என்ற உறுப்பில் தாக்கப்பட்டதினால் மயக்கமுற்ற நிலையில் நான் அங்கிருந்து "இரத்தினம்" மருத்துவ மனைநோக்கி

08
எடுத்துச் செல்லப்பட்டு, அடிபட்ட இடம் கண்டியதால் அங்கு இரு தினங்கள் தங்கவேண்டியேற்பட்டதே அதற்குக் காரணமாகும்.
ஆண்டாண்டு காலமாகப் பச்சை நிறமாகக் காட்சிதந்த - நாம் சத்தியப் போர் புரிந்த பசும்புற்றரை எமது தொண்டர்கள் சிந்தியபச்சை இரத்தத்தினால் கருஞ் சிவப்பு நிறமாக அன்று உருமாறியது. ஆனி ஐந்தின் முக்கியத்துவம்:
முத்திரை பொறித்த இப்போரின் எதிரொலியாகத் தமிழினமே இலங்கை முழுதும் கொதித்தெழுந்தது. சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியன யாழ்ப்பாணத்தில் கூட்டங்கள் வைத்துக் கண்டித்தன. தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா, சிலம்புச்செல்வர் ம. பொ. சி. கலைஞர் கருணாநிதி மற்றும் தலைவர்களும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங் கள், பொதுக்கூட்டங்கள் வைத்துத் தமது மனக்கொதிப்பை வெளிப்படுத்தினர்.
இவைமட்டுமன்றி, இவ்வானி ஐந்தாம் திகதியில் தமிழர் சரிதையில் வேறு சில ஆண்டுகளில் சில முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 1958-இனக்கலவரத்தின் போது, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தபோது முக்கிய விடயங்கள் சில ஆட்சிமன்றத்தில் விவாதிக்க உள்ளது எனக்கூறி விசேட விமானமூலம் அரசினர் எம்மைக் கொழும்பிற்கு அழைத்தனர்.
அங்கு யாம் முதலில், இனக்கலவரத்தி னால் அகதிகள் முகாம்களிற் தஞ்சம் புகுந்த தமிழ்மக்களைப் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு, அவர்கள் பாதுகாப்பிற்காகக் கப்பல்மூலம் தமிழ் ஈழத்திற்கு (அவர்களை) அனுப்புவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துவிட்டு 58 - யூன் - 5 ஆந் திகதிப் பாராளுமன்ற விவாதத்திற் கலந்து கொண்டோம். அது முடிந்து எமது பா.உ.க்கள் அனைவரும் அங்கிருந்து வெளிவந்தபோது, இலங்கையில் - எமதியக்கத்தின் வரலாற்றில் முதன்முதலாக எமது பா. உ. க்கள் கைது செய்யப்பட்டனர்.

Page 420
4.
இவ்வேளையில், நான் கடைசியாக முழுமையாக முகச்சவரம் செய்ததும் 58 ஆனி 5இல் தான் என்பதையும்; அதைத் தொடர்ந்து நான் ஏன் தாடி வளர்க்க வேண்டியேற்பட்டது என்பதையும் எதிர் காலத்திற்காக இங்கு குறிப்பிடவேண்டி யுள்ளது.
கைதான பா. உ. க்களோடு நானும் ஒருவனாக அன்று இடம்பெற்றிருந்தேன். தினசரி முகச்சவரஞ் செய்து பழக்கப்பட்ட என்னால் காவற்சிறையிற்கூட அவ்வாறு செய்யாமலிருக்க முடியவில்லை. காவலரை அழைத்து யான் முகச்சவரஞ்செய்ய ஏற்பாடு செய்யும்படி கூறினேன். பலன் இல்லை. யான் போய்ச் சவரஞ் செய்துவிட்டு வரலாமா என்றால் அதற்கும் அனுமதியில்லை. இறுதியாக ஓர் பிளேற், றேசர் ஆவது தரும்படி கேட்டேன். எதுவுமே கைகூட வில்லை. தாடியோ வளர்ந்து கடிக்கத் தொடங்கி என்னைச் சினக்க வைத்தது. என்ன செய்வது? எனச் சிந்தித்தேன். ஓர் முடிவுக்கு வந்தேன். ஆம், தாடியின் அரும்பே தெரியாதிருந்த என் முகத்தில் தாடிப் பற்றையே உருவாகி விட்டது. அதனை அகற்றிடவும் மார்க்கமில்லை. இதற் கெல்லாம் காரணம், எம்மொழி - எம்மினம் - எம் நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதும்; அவ்வடிமைத் தளையைத் தகர்த்திட யாம் தொடுத்திடும் எதிர்ப்போர்களும்; அதன் விளைவாக யாம் அனுபவித்திடும் இத்தகைய துன்பங்களுந்தான். எனவே இயைனைத்தும் நீங்கும்வரை - எமது மொழியும், இனமும், நாடும் விடுதலை பெறும்வரை - எம்மை நாமே ஆளும்வரை என் முகத்தில் தாடி பற்றையாகட்டுமென்று திடங்கொண்டேன். இன்றுவரை அத்திடம் தொடர்கிறது.
S.

9
இதைவிட, இவ்வானி ஐந்தில் தான் இன விடுதலையே மூச்சாக, தன்மானமே உயிராக, துணிவே துணையாக வாழ்ந்து வீரமரணமெய்திய தீரன் தம்பி சிவகுமாரன் பிறந்தான். இன்னும், (சுய விளம்பரத்திற்காக அல்ல) இத் திகதி இன்னுமொரு விசேட ஞாபகத்தை என்பாற் கொணர்கிறது. திருமதி வ. நல்ல தம்பிக்கு யான் மைந்தனாக வாய்த்தது - என்னைப் பெற்றபோது என்தாய் பிரசவ வேதனை அடைந்தது இத் திகதியில்தான்;
இந்தவகையில், இத் திகதியைப் பொதுவாழ்வில் மட்டுமன்றி, என் சொந்த வாழ்விற்கூட மறக்கமுடியாது. மறக்க முடியாத இத் திகதியைப்பற்றியும், அது சாதித்தவை பற்றியும் மிகச் சுருக்கமாக என் கருத்தைத் தெரிவித்திடப் பொருத்தமாக என்னையே அது நாடிவந்ததையும் என்னால் மறக்கத் தான் முடியாது.
நான் மறக்கமுடியாத - நம் தமிழர் மறக்கமுடியாத - நமது கட்சி தனது வரலாற்றில் மறக்கமுடியாத இந் நன்னாளை - இலங்கையின் மொழிப்புரட்சிக்கு வித்திட்ட நாளை - இலங்கைத் தமிழரை விடுதலைப் பாதையில் தந்தை செல்வா அழைத்துச் செல்ல வாய்ப்பளித்த நாளை - சோதனை தந்து வேதனையாக்கிச் சாதனை சமைத்த நாளை - ஆனி ஐந்தாம் நாளை நன்றியுள்ள நம் தமிழர் எழுச்சி நாளாக ஆண்டுக்காண்டு கொண்டாடிட வேண்டுமன்றோ.
வளர்க மொழிப்புரட்சி
எழுக விடுதலைக் கிளர்ச்சி
வெல்க தமிழ் அன்னை
மலர்க தமிழ் ஈழம்
வாழ்க நற்றமிழர்
W

Page 421
'M/ith /%t )
A PAR SOLC
AJ.. PAT 76, LONSID,
BARNES, LO
TEL : 0208 -

Comp time nts
/O/
SON 2 CO
TOR
TERSON
ALE ROAD,
NDON, SWB - 748 - 8532

Page 422
புரட்சி நடிகருடன்
தமிழக விஜயம் மேற்கொண்ட எம் பொருளாளர் புரட்சி நடிகர் எம். ஜி. தம் இல்லத்தில் அழைத்து அன்பும் ஆ
 
 

இலட்சிய புருடர்
நந்தை அவர்களை ஆளும் தி.மு.க ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. அவர்கள் வமும் பொங்க அளவளாவும் காட்சி.

Page 423
திருமலை
நற்றமிழ்ச் 9r. sbl (முன்னாள் மூத6
1. அறிமுகம்:
ங்களம் மாத்திரம் சட்டம் நிறைவேறுவதற்கு முன், அதைத் தடுப்பதற்கு வழியென்ன என்று எவருக்குமே திசை தெரியவில்லை. பண்டாரநாயக்காவுக்குக் கிடைத்த பெரும்பான்மைப் பலத்துக்கு எதிராக என்ன ஆயுதமும் தொழிற்பட முடியாது என்ற ஏக்கமான சூழ்நிலை தமிழ் மக்களிடையே பரவியிருந்தது. காலிமுகக் கடற்கரையில் உயிரையும் ஒரு திரணமாக மதித்து விரதமிருந்து அப்பொழுது எல்லா நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழரசுக்கட்சி ஒன்றுதான் துளு சுதந்தரப் பாதையிலே செயற்பட வாரம்பித்திருந்தது. அடுத்த செயற்றிட்டம் என்ன என்பது தமிழ் மக்களிடையில் மாத்திரமல்ல. சிங்கள மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்காலத் தினவேடுகளின் முதல் தலையங்கம் அநேகமாகத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திரு. S.J.V. செல்வநாயகம் அவர்கள் விடுத்த பதிலாக இருக்கும்; அல்லது பண்டாரநாயக்காவின் ஒரு மிரட்டலகாவிருக்கும். தமிழரசுக் கட்சித் தலைவர்களின் வாயிலிருந்து விழும் ஒவ்வொரு சொல்லுக்கும் இன்று இருக்கும் பெறுமதிக்குக் காரணம் அன்று அவர்கள் சொன்னதைச் சொல்லுக்குச் சொல் நிறைவேற்றிக் காட்டிய பெருமைதான்.
காலிமுகச் சத்தியாக்கிரகத்தின் பின் அடுத்த திட்டம் என்ன? இந்தக் கேள்வி பல நாளாக அடிப்பட்டது. தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூடியது. திருமலையிற்
 

O யாத்திரை
செல்வர்
long-n வை உறுப்பினர்)
பெரியதொரு மாநாடு கூடுவதென்றும், அம்மாநாட்டிலே ஒரு இணையரசைக் கோருவதென்றும், இம் மாநாட்டுக்குக் கால் நடையாகவே செல்வதென்றும் தீர்மானங்கள் நிறைவேறின. இலங்கையின் பல பாகங்களி லிருந்து கால்நடை யாத்திரைகள் ஆரம்பமாயின. இவற்றுள் மூன்று முக்கிய யாத்திரைகள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டியவை. ஒன்று, அறப்போர் முன்னணித் தலைவர் திரு. அரியநாயகம் அவர்கள் தலைமையில் திருக்கோவிற் பகுதியிலிருந்து ஆரம்பித்தது. இரண்டாவது, திரு. அழகக்கோன் தலைமை யில் மன்னாரிலிருந்து வெளிப்பட்டது. மூன்றாவது, காங்கேசன் துறையிலிருந்து திரு S.J.V. செல்வநாயகம் | அவர்கள் தலைமையில் | ஆரம்பித்தது.
இக் கட்டுரையில் | காங்கேசன் துறையிலிருந்து வெளிப்பட்ட யாத்திரையின் சுருக்க வரலாறு தரப்படு கின்றது.
ஆரம்பம்: அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சியின் கிளைகளின் தொகைகள் இப்பொழுதுள்ள தொகையிலும் குறைவாக இருந்தபோதிலும் மிக விழிப்பாகச் செயலாற்றின. அன்றியும், கட்சி அங்கத்தவர்கள் மிகமிகச் சுறுசுறுப் பாக வேலை செய்தார்கள். காங்கேசன் துறையிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய யாத்திரையின் தலைமை செல்வநாயகம் அவர்களின் பேரிலே இருந்தபோதிலும்,

Page 424
4.
நிருவாகப் பொறுப்பைச் செயற்குழு என்னிடம் ஒப்படைத்திருந்தது. எனக்கு உதவியாகப் பலர் செயலாற்றினார்கள்.
அப்பொழுது திருமலை யாத்திரை யைப் பற்றிப் பல கண்டனங்களும் எழுந்தன. நியாயவாதிகள் கூடுமிடங்களில் அநேகமாக இந்த யாத்திரையைப் பற்றிய விவாதங்கள் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. ஒரு சிலர் ஆரம்பத்தில் நையாண்டியும் செய்தார்கள். பாத யாத்திரையால் பயன் என்ன என்பார்கள். நடந்து செல்வதனால் உடனே சுதந்திரம் கிடைத்துவிடுவதன்று. சுதந்திரப் பாதை திருமலை யாத்திரைபோல் நீளமானது. இந்த யாத்திரை மனவுறுதியை வளர்க்கின்றது. சுதந்திரப் பாதையில் வரும் எந்த இன்னலையும் சகிப்போம்; இறுதிவரை அயராது இலட்சியத்தை நோக்கி முன்னேறுவோம் என்ற திடசங்கற்பந்தான் சுதந்திரத்துக்கு முதற்படி, அந்த யாத்திரையில் உறுதியுடன் சென்றவர்கள் சுதந்திர யாத்திரைக்குத் தயாராக்கப்பட்டவர்கள்.
ஒரு அரசியற் கட்சியிலே, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வந்து சேருவார் பலர்; மேடை வாய்ப்புக்காகச் சேருவார் சிலர்; தொழில் வாய்ப்புக்காகச் சேருவார் சிலர்; மக்களிடையே செல்வாக்குப் பெறவும், தேர்தலில் வெல்லவும் சேருவார் சிலர், இலட்சியமே கண்ணாக, உயிரைத் தியாகஞ் செய்யவந்த தியாகிகளும் இருப்பார் கள். இந்தத் தியாகிகள்தான் தமிழரசுக் கட்சியின் வைரம். இந்த வைரத்தைச் சுற்றிச் சோற்றிகள் உண்டு. இந்தச்சோற்றிகள் காலத்தின் சோதனையில் மெல்ல அகன்றுவிடும். கட்சியின் இருபத் தைந்து வருடகால நேர் அனுபவத்திலி ருந்து இதை நாம் கற்றோம். ஆகவே, இலட்சியத் தியாகிகளை உருவாக்குவதுதான் திருமலை யாத்திரையின் நோக்கம்.
அன்றைய அரசியற் சூழ்நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டால்தான்,

3.
திருமலை யாத்திரையின் சாதனை மகத்தான சாதனையென்பது, கொதித்தெழும் இளைஞர்களுக்கு நன்கு புலனாகும். இன்று அரசாங்கத்தின் கொடுமையான அடக்கு முறைக்கு மாத்திரம்தான் ஆளாகியிருக்கி றோம். அன்று - 1954ஆம் ஆண்டில் இரட்டைக் கொடுமைக்கு ஆளாகி யிருந்தோம். அரசாங்கத்தின் அடக்கு முறை யோடு, காடையர்களைத் தமிழர்களின் மேல்தூண்டியும் விட்டார்கள். இது உலகம் அறிந்த உண்மை. இதற்குப் பண்டார நாயக்காவே சார்பாக இருந்தார் என்ற உண்மைக்கு இதோ ஒரு சான்று. காலிமுகத் திடரிலே சத்தியாக்கிரக மிருந்தவர்களை நோக்கி, ஒரு சிங்கள சனசமுகதிரம் அலையெடுத்து வந்தது. பல தமிழ் மக்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டார் கள்! திரு. நாகநாதன் துகிலுரியப்பட்டு, வழியில் தாக்கப்பட்டார்! பெரிய மடுவிலே பல தமிழ் மக்களை உயிரோடு அமிழ்த்தியிருந்தார்கள்! இத்தகைய சிங்கள வெறியர் கூட்டத்திற்கு, சோசலிசக் கடவுள் என வருணிக்கப்படும் திரு. பட்னாரநாயக்கா உப்பரிகையில் ஏறிச் சொன்னதென்ன? "அவர்கள் இன்னும் கொஞ்சம் நனையட்டும்.” (அன்று கொழும்பில் மழை பெய்தது. மழையிலும் சத்தியாக்கிரகிகள் அசையவில்லை) என்று கேலிபண்ணினார். பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில், இரத்த அழுத்தத்தாலும் வாதத்தாலும் வாடிய கோப்பாய்க் கோமான் வன்னிய சிங்கம் நெற்றியிலே, கருங்கல்லால் காடையர்கள் எறிந்து அவர் மூர்ச்சையுற்று - இரத்தம் பீறிடப் பலமுறை விழுந்ததை அறிந்தும் கூடப் பண்டார நாயக்கா அவ்வாறு காடையர்களைத் தடவிக் கொடுத்தார்! இதனை எவரும் மறுக்க முடியாது; நாம் மறக்க முடியாது. திருவாளர்கள் : K.M.P.
இராஜரத்தினா, C. P..de. சில்வா போன்றவர்களைப்பற்றிப் பேசவா வேண்டும்?
ஆகவே, பண்டாரநாயக்கா, "பொலிஸ் அதிகாரத்தால் அடக்குவேன்" என்று சூளுரைத்தது ஒரு பக்கம்; யாத்திரை செய்வோரைச் சிங்கள வெறியர்கள் தாக்கிக்

Page 425
-
கலைப்பார்கள் என்பது மறுபக்கம்; இவைகளுக்கிடையே, வவுனியாவுக்கூடாக வரும்போது “இந்த யாத்திரீகர்களுக்குப் "பச்சைத் தண்ணியும்” கொடுக்கக் கூடாது', என்ற அன்றைய வவுனியாப் பிரதிநிதி C. சுந்தரலிங்கம் அவர்களின் வேண்டுகோள் இன்னொருபுறம்! இந்த மும்முனைத் தாக்கங்களுக்குத் தங்களைத்தயார் செய்த யாத்திரீகத் தியாகிகளின் திடசித்தம் - "ஆயுதந் தாங்கிப் போர்புரிந்தேனும் சுதந்திரம் பெறுவோம்" என்றெழுந்து வீர மரணமடைந்த இளைஞர்களின் சங்கற்பத் துக்கு எட்டுணையும் குறைந்ததல்ல.
'நடந்து போவதென்பதே சாதாரணமாக ஒரு அந்தஸ்துக் குறைந்த செயல்" என்ற எண்ணம் அன்றும் பரவி யிருந்தது. அழகான மோட்டார் வாகனத்தில் வந்திறங்குவதே ஒரு தனி அந்தஸ்து என்பர். ஆகவே, நடந்து செல்லத் தியாகிகள் சேர்வது அற்பமாகவே ஆரம்பத்தில் இருந்தது ஆச்சரியமன்று.
அப்பொழுது காங்சேன்துறைக்கிளை சட்டத்தரணி, A.V. சதாசிவம் அவர்கள் வீட்டில் இருந்தது. யாத்திரீகருக்கு நியமிக்கப் பட்டதினம் பகற்போசனத்தை முந்நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்கள் அருந்தினார்கள். பின், இலட்சியத்தைப் பொறித்த பல சுலோக அட்டைகளை ஒவ்வொருவரும் தாங்கினார் கள். ஒலிபெருக்கி வாகனமொன்றில், "திருமலைக்குச் செல்லுவோம்” என்ற முழக்கப் பாடலுடனும், எனது சொற்பொழி வோடும், பல பெரியார்களின் ஆரம்ப உரை யோடும் சரியாக மூன்று மணியளவில் யாத்திரையை ஆரம்பித்தோம். அப்பொழுது காங்கேசன் துறைக் கிளையின் செயலாள ராக விருந்த க. சச்சிதானந்தன் அவர்கள் யாத்திரையின் ஆரம்ப ஒழுங்குகளைச் செய்திருந்தார். அவர் தனது நண்பரான திரு. இளமுருகனாரைக் கொண்டு, "திருமலைக்குச் செல்வோம்" என்ற பாடலை இயற்றுவித்தார். அதனை, "அரிச்சந்திரா புகழ் திரு. VV வைரமுத்து இன்னிசைப் பாடலாக்கினார். மின்னாடாவில் (Tape) ஒலிப்பதிவு செய்யும் வசதிகள் இப்போதையைப் போல

4.
அப்பொழுது நடைமுறைக்கு வரவில்லை. எனினும், யாழ்ப்பாணம் சோனக தெருவிற் குடியிருந்த ரேடியோப் பொறி நிபுணரான திரு. நடராசர் அவர்கள் தமது பொறிமுறை நுட்பத்தினால் இசைத் தட்டாகவே தயார் செய்து தந்தார். இந்தப் பாடல்தான் யாத்திரீகர்களுக்குத் தெம்பையும் உற்சாகத்தையும் ஊட்டியது.
வழிநெடுகிலும் மக்களின் வரவேற்பு யாத்திரீகளுக்கு அதிக உற்சாகத்தை அளித்தது. ஆனால், திரு. பண்டாரநாயக்கா வின் சூளுரையின்படி இது எங்கே இடை வழியில் மடக்கிக் குழப்பப்படுமோ என்பது எங்கள் பலரின் மனத்தில் இருந்தது. ஆனால், எங்கள் கட்சியின் ஒரு குணம் அரசாங்கத் திற்கு வெளிப்படையாகத் தெரிந்தது. அதுதான் கட்டுப்பாடுள்ளவர்கள் என்ற புகழ் அது இப்பொழுது பிரதமராயிருக்கும் பாரியரைவிடக் கணவனுக்கு அதிகம் தெரியும். பொலிசின் அதிகாரம் பெறாத ஒரு நடைபவனி - அரசாங்கத்தை எதிர்த்துப் போவதென்பது அப்பொழுது யாராலும் நினைக்கக்கூடியதல்ல. ஆனால் "வருவது வரட்டும்" என்று திடசங்கற்பம் செய்து விட்டோம். ஒரு கட்சியின் வெற்றிக்குக் கட்டுப்பாடும் - ஒருமித்த செயலாற்றுகையும் ஒரு காரணம் என்ற பாடத்தைப் புத்தகங்களி லிருந்தல்ல - நேரடி அனுபவங்களிலிருந்து அன்றே கற்றுக்கொண்டோம். தொண்டர் கள் விதியின் ஒருபுறமாக, இருவர் இருவராக அழகாக நடந்து சென்ற கட்டுப்பாட்டைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் கூடத் தங்கள் புகழ்மாலைகளை இரகசியமாக வைக்காமல் - மனந் திறந்து கூறியது எனக்கு ஞாபக மிருக்கிறது.
எமது தலைவர் திரு. S.J.V. செல்வநாயகத்தைத் திரு. பண்டாரநாயகா அழைத்தார். "உங்கள் யாத்திரையின் விபரம் வேண்டும்" என்று ஆணையிட்டார். அப்பொழுது யாத்திரையின் சில்லறை அம்சங்களைக்கூட நேர வரையறையோடு தயார் செய்யப்பட்ட - யாத்திரையின் நிகழ்ச்சி நிரலைத் தலைவர் நீட்டினாராம். அதனைக் கண்ட திரு. பண்டாரநாயக்கா சிறிது

Page 426
4.
அதிர்ச்சி அடைந்தார். ஒன்று, கட்சியின் திட்டத்தை மிக வெளிப்படையாக வைத்து, "வருவதை ஏற்போம்” என்ற கட்சியின் உறுதியைக் கண்டாக விருக்கலாம்; மற்றது, நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கு, நிமிடம் செக்கன் வரையறையில் யார் என்ன செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடான - திட்டமிட்ட ஒழுங்கு கண்டுமிருக்கலாம். அப்பொழுது பண்டாரநாயகா தம்மையும் மறந்து, கட்சிக்கு ஒரு புகழ்மாலையைப் போட்டாராம். "இவர்கள் இணையரசை (சமஷ்டி யாட்சியை) நடத்தக் கூடியவர்கள்” என்று சொல்லி அசந்து போனாராம். அதேபோல, பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் போது, "நீங்கள்கோரும் ஒரு அரசியலமைப்பைச் சமர்ப்பியுங்கள்” என்று கேட்டபோது, அப்படியே ஒரு அரசியலமைப்பைச் சமர்ப்பித்துச் சுதந்திர ஈழத்தை ஆள முற்றிலும் தகுதியுள்ளவர்கள் என்று நிரூபித்தது தமிழரசுக்கட்சி.அடுத்த நாள் பொலிஸ்படை யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரீகர்களைச் சூழ்ந்து வந்தது. ஆனால், குற்றங்கான யாத்திரீகர் எதையும் செய்யவில்லை. நமக்குள் அவ்வளவு கட்டுப்பாடு. பொலிஸ் தொடர்ந்து வந்தது.
யாத்திரீகர்கள் தெல்லிப்பழையி லிருந்து மல்லாகம் போய்க்கொண்டிருந்த போது, ஒரு நியாயதுரந்தர நண்பர் என்னைச் சந்தித்தார். "என்ன செய்யப் போகிறீர்கள்” என்ற ஒரு நையாண்டிக் குறியைக் காட்டினார். நான், "இது சாதனையின் ஆரம்பம்" என்றேன். முடிவில் அவர், "வெற்றியுண்டாகுக" என்று கைகுலுக்கிச் சென்றார். இது ஒரு சிறு சம்பவம்; இதன் முக்கியத்துவம் பெரிது. இப்படிப்பட்ட 'நையாண்டி மனப்பான்மை' தான் முதலிற் பலரிடமும் இருந்தது. யாத்திரீகர்களைக் கண்டவர்கள் - கேள்விப்பட்டவர்கள் முன்னைய அபிப் பிராயங்களைக் கைவிட்டு யாத்திரையில் பங்கு பற்றியது மாத்திரமன்றி, வழி நெடுகிலும் பல வரவேற்புகளையும் அளித்தார்கள். மக்களை இந்த இயக்கத்தில் முற்றாக ஈடுபடச் செய்த "மந்திர சக்தி தான் என்ன என்பது யாருக்கும் புரியாத புதிராகும்.

மல்லாகத்திலும், வழியிலும் அமோக வரவேற்பு. தாக சாந்தி, நிறைகுடம், மங்களச் சின்னங்கள் யாத்திரீகர்களை வரவேற்றன. சுன்னாகத்தைக் கடப்பதென்பது கொஞ்சம் சிரமமானதென்பது எங்களுக்குத் தெரியும். சுன்னாகச் சந்தையும், அதன் சுற்றாடலும் பல்வேறு நியாயங்களுக்காகத் தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பிடமாக விருந்தது. இங்கும் எந்த அசம்பாவிதமும் நிகழாததன் பின்புதான் நாம் கொஞ்சம் மூச்சுவிட்டோம். வழிநெடுகிலும் - யாழ்ப்பாணம் வரையும், பந்தல்கள், வரவேற்புகள், தாக சாந்தி என்பன மக்களின் கரைகடந்த உணர்ச்சி ஆவேசத் தோடு நிகழ்ந்துகொண்டிருந்தன. இணுவில், தாவடி, கொக்குவில் இவற்றின் வரவேற்புகள் அதிவிமரிசையாய் இருந்தன. யாழ்ப்பாணத் தில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. மக்களின் உணர்ச்சிமிக்க வரவேற்பைத் தடுக்க முடியாததால், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு சிறிது பிந்தியே ஊர்வலம் யாழ்ப்பாணத்தை அடைந்தது.
யாத்திரீகர்களிற் பலர் முதியோர். சிலர் நடைப்பழக்கமோ, உடல் உழைப்போ அறியாத உத்தியோகத்தர்கள். மூன்று, மூன்றரை மணித்தியாலங்களிற் பத்து மைல் நடந்து விட்டார்கள்! சிலருக்கு இதற்கிடை யில் காலுருவவேண்டியிருந்தது; பலருக்குக் கூட்டத்தில் நிலத்தில் இருக்க முடியாமற் போய்விட்டது; என்றாலும் களைப்போ, அலுப்போ அடையவில்லை. பொதுக் கூட்டத்திலே வெகு உணர்ச்சி ததும்பப் பேசினார்கள். அன்று பொதுக் கூட்டம் முடிந்ததும் கட்சிக் காரியாலயத்தில் தொண்டர்களாகிய நாம் உறங்கினோம்.
யாத்திரீகர்களுக்கு உணவு எங்கே? தங்குமிடம் எங்கே? தலையணையுண்டா? தேநீர் உண்டா? இந்தக் கேள்விகளை யெல்லாம் திட்டமிட்டவர்கள் யோசித்திருப் பார்கள். ஆனால் யாத்திரீகர்கள் பட்டினத் தடிகளின் மன உரத்துடனும், தியாகத் துடனும் சென்றார்கள்.

Page 427
"உடைகோ வணமுண்டு
உறங்கப் புறந் திண்ணை யுண்டு
அடைகா யிலையுண்டு அருந்தத்தண் ணிருண்டு . வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே."
என்ற மனோநிலைதான் தொண்டர்களுக்கும்.
நாளை உணவு எங்கே என்பதில் வழி நெடுகிலும் போட்டியேற்பட்டது. என்னிடம் தங்கு உன்னிடம் தங்கு என்பதில் போட்டி வலுத்துவிட்டது. சரி காலை ஏழு மணியளவில் பொலிஸ் பட்டாளம் புடைசூழ வெளிப்பட்ட யாத்திரீகர்கள், கைதடிச் சந்தியை அடைந்த பொழுது நிகழ்ந்த சம்பவத்தை என்றும் மறக்க (Lptgll Irigil.
காலிமுகக் கடற்கரையில் சம்மானங் கொட்டிச் சத்தியாக்கிரக விரதமிருந்த திருப்பாதங்கள் - ஏழைமக்கள் தஞ்சமென்று அடையும் இருமலர்கள் - மருத்துவப் பேராசான் மகளாகிய கற்பின்மங்கை' வருடிய மலர்ப்பாதங்கள் - வாதத்தினாலே வீங்கிநோவுற்று வருந்தும் பொற்பாதங்கள் - செருப்பின்றிப் பருக்கைக் கற்கள் குத்தி நெரிக்கத் தாண்டித் தாண்டித் தன்பின்னே பெரியதோர் தொண்டர் கூட்டத்தைக் கூட்டிவந்த காட்சி கல்மனத்தையும் கரைக்கும்.
"ஏதற்றார் வந்தடையும்
சினைமலர்கள் நீதிமன்ற வாதுற்றார் வாயடைக்க
எழுந்தருளும் கோமதியார் மீதுமலர் மஞ்சத்தே
வருடுமிரு மென்பூப் பாதம் வாதத்தால் வாடுவன
வன்னியன்ார் சுமக்கக் கண்டோம்.”
நினைத்தாலே நெஞ்சுருகும்! உயர்நீதிமன்ற அரியணையில் வீற்றிருக்க வேண்டிய திரு. கு. வன்னியசிங்கம் அவர்கள் ஒரு பெரிய தொண்டர் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டுவந்து, கங்கையிலே
பிரயாகை கலந்ததுபோலக் கைதடியிலே கலக்க வைத்தார்.

16
அதன்பின்பு, சுளிரென்று முகத்தையும் தலையையும் எரிக்கும் வெயிலையும் பாராது திருவாளர்கள்: E.M.V. நாகநாதன், S.J.W. செல்வநாயகம், கு. வன்னியசிங்கம், அ. அமிர்தலிங்கம் ஆகிய தலைவர்கள் முன்நடக்கப் பெரிய தொண்டர் கூட்டம் சாவகச்சேரியை நோக்கி வீறுநடை போட்டது. திருமலைக்குச் செல்லுவோம்' என்ற பாட்டும், தொண்டர்களின் சுலோகக் கோஷமும், இரு மருங்கிலும் வரவேற்கும் மக்களின் ஆரவாரமும் வானைப்பிளந்தது என்றால் மிகையாகாது.
சாவகச்சேரியை அடைவதன்முன் சாவகச்சேரித் தொகுதியின் அன்றைய அரசியல் பின்னணியைச் சற்றேனும் அறியா விட்டால் திருமலை யாத்திரையின் சாதனை மகத்துவம் புரியாது. திரு. வி. குமாரசுவாமி அவர்கள் ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஆளும் குழுவில் ஒருவராக இருந்தார். சகல அரசாங்க நிர்வாக இயந்திரங்கள், அவர் விரலை அசைக்க, ஆடும். அதனை ஒரு சிறு சம்பவத்தால் வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறோம்.
இந்தச் சூழ்நிலையிலே, இன்றைய பாஉதிரு. வி.என். நவரத்தினத்தை அறிமுகம் செய்ய முதன் முதல் மேடையொன்றைச் சாவகச்சேரிச் சந்தைக்குள்ளே ஏற்பாடு செய்திருந்தார் அன்றைய கட்சிப் பிரமுகர் திரு. அருணாசலம் ஆசிரியர் அவர்கள். கூட்டத்திற்கு வந்த காரை வழியிலேயே மறித்துத் திரு. S.J.V. செல்வநாயகத்தின் செருப்புக் காலை, "கொடிகட்டுகிறோம்” என்று சொல்லித் தூங்கவிட்டகயிற்றாற் சிக்க வைத்துக்கொண்டார்கள் குமாரசாமியின் கையாட்கள்! இதனைக் கூடவந்த திரு. க. சச்சிதானந்தனும், தெல்லிப்பழைச் சோதிடர் திரு. தில்லையம்பலம் மாணிக்கவாசகரும் ஒவ்வொன்றாகக் கழற்றப் பலமணி நேரம் ஆகிவிட்டது. பின்னர் சந்தையருகில் அங்கங்கே அமர்த்தப்பட்ட கையாட்கள், திருவாளர்கள்: S.J.V. செல்வநாயகம், கு. வன்னியசிங்கம், V.N. நவரத்தினம் ஆகியோர் மேடையேறக் கலகம்

Page 428
விளைவித்துக் கிடந்த கதிரை யொன்றைத் தூக்கித் தலைவர் திரு. S.J.V. செல்வநாயகத்துக்கு மண்டையிலே அடித்தார்கள்! உடனே பக்கத்தில் இருந்த சச்சிதானந்தன், இரண்டு கைகளையும் உயர்த்தித் தன்னுடைய கையிலே அதைத் தாங்கிச் சற்றுப் பலமாகக் காயமடைந்தார். பொலிசார் வந்து, "கூட்டம் நடத்தக்கூடாது" என்று தலைவர்கள் மேற்பாய்ந்தார்கள். அங்கு கூட்டம் கலைக்கப்பட்டது. பின்னர் தலைவர்கள், "வருவது வரட்டும்' என்று கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். இந்தப் பின்னணிகொண்ட சாவகச்சேரிக் குள் திருமலை யாத்திரை நுழைகின்றது.
ஆனால், சாவகச்சேரித் தொகுதியின் வரவேற்புத்தான் எந்த இடத்தைக் காட்டிலும் மேம்பட்டிருந்தது. அங்கே ஒரு முக்கிய அம்சம் பெண்மணிகளின் தியாகம். இதற்குக் காரணமாயிருந்தவர் திருமதி இராஜபூபதி அருணாசலம் அவர்கள். நளவெண்பாவிலே விமராசனுடைய மாளிகையை - புலவர் புகழேந்தியர் 960L. T25 வாயில் அகம் என்று கூறினார்கள். அதன் கருத்து, அவனுடைய மாளிகை வாயிலுக்குக் கதவே கிடையாது! ஏனெனில், இரவு பகலாக மக்கள் போய் வருவார்கள். அத்தகைய அடையாத வாயிலகமாகச் சாவகச்சேரி விதியிலுள்ள ஒவ்வொரு விடும் இருந்தன. குளிர்பானங்கள் - சோற்றுப் பொட்டலங்கள் - இளநீர்கள் - இனிய புன்னகைகள் - வரவேற்புக் கோஷங் கள் அபரிமிதமாகப் பரிமாறின. வழக்கம் போல் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. சாவகச் சேரிப் பெண்கள் யாவருக்கும் சமைத்துக் கொடுப்பதில் ஈடுபட்டார்கள். பொலிஸ் அதிகாரிகளும் கூட இளநீர் குடித்துத் திளைத்தார்கள். அன்றிரவும் அங்கே தங்கி யிருந்து தலைவர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் பல்வேறு பிரச்சினைகளையும் கலந்துரையாடிக் கொண்டார்கள்.
பின்னர் கொடிகாமத்தைத் தொண்டர் கள் அடைந்தார்கள். அங்கே பருத்தித்துறைக் கிளையைச் சேர்ந்த திரு.WW. வேலுப்பிள்ளை அவர்கள் தலைமையின்கீழ் பருத்தித்துறைக் கிளையின் உறுப்பினர்களும் தொண்டர்

7 ܚܚܚܚܚ ܚ ܝ ܢ ܒܓ ܚܚܝ
களும் வந்து சேர்ந்தார்கள். அதன்பின் இரண்டுமாகப் பளையை நோக்கி நடந்தன. ஒவ்வொரு இடத்திலும் வரவேற்பு - பொதுக் கூட்டம் - மக்கள், தலைவர்கள் கலந்துரை யாடல் மிக ஒழுங்காக நிகழ்ந்தன. அதன்பின் ஆனையிறவு வழியாகப் பரந்தன், கிளிநொச்சி, மாங்குளம் முறிகண்டிஇவற்றை யாத்திரீகர்கள் அடைந்தனர். முறிகண்டியில் நடந்த வரவேற்பும், உபசாரமும், கலந்துரை யாடலும் எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்ததுபோல் இருந்தது.
இப்படியாகவே, பல இடங்களையும் கடந்து வருவதும் - பொதுமக்களளித்த வரவேற்பும், யாத்திரீகளின் புகைப் படங்களும் - இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் நாளுக்குநாள் தோற்றுவதும் - எல்லாருடைய கவனத்தையும் யாத்திரை யின் பால் இழுத்தன. பண்டாரநாயக்காவும் மிகவும் உன்னிப்பாகவே அவதானித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் யாத்திரையின் முன்னேற்றப் படங்களையும் விவரங்களையும் கண்ட தமிழ் மக்களின் மனத்திலே மின்சாரம் பாய்ச்சியது போல ஒரு உணர்ச்சிவேகம் உண்டானது.
யாத்திரைக்கு இடையில் “என்ன குழப்பம் ஏற்பட்டு விடுமோ என்பது தலைவர்களின் பயம் நிறைந்த ஏக்கமாகும். யாத்திரீகர்கள் காடுகளையும் - கானாறு களையும் - குன்றுகளையும் - பள்ளத்தாக்கு களையும் - வனவிலங்குகளையும் கடந்து சென்றனர். ஆங்காங்கே தமிழ் மக்களின் வரவேற்பைப் பெற்றதனால், யாத்திரீகளின் கூட்டமும் - உற்சாகமும் பன் மடங்கு பெருகலாயிற்று. யாத்திரீகர்கள் கொக்கிளாய், - கொக்குத்தொடுவாய் வழியாகச் சென்றனர். சேறு நிறைந்த நதிக்கடற் பிரதேசத்தில் ஒலி பெருக்கி பொருந்திய மோட்டாரும், ஏனைய வாகனங்களும், மக்கள் கூட்டமும் சிறிதே கஷ்டமடைந்தன. புல்மோட்டையில் ஓடிய பாலாறும் - விசேட உணவும் தொண்டர் களின் சிரமத்தை நீக்கியது. பொதுமக்களின் புன்னகை பூத்த முகம் - அவர்கள் கோஷம் இன்னும் எம் மனத்தை விட்டு அகலவில்லை.

Page 429
4
இதைவிட இன்னுமொரு சம்பவம் என் மனத்தைவிட்டு இன்னும் அகலவில்லை. யாத்திரீகர்கள் செல்லும் பாதையில் ஒரு தவ மூதாட்டி, கன்னங்களிரண்டிலுமிருந்து முத்தாகக் கண்ணிருதிர அழுது கொண்டிருந் தாள். "எதற்காக அழுகிறீர்கள்” என்று கேட்டதற்கு, "தமிழை அழியாமல் வைப்பதற்கு இவர்கள் படும் பாட்டைக் கண்டுதான் கண்ணிர்
99
வடிக்கிறேன்" என்று கூறினார்.
பல கானாறுப் பாலங்களைக் கடப்பத்தில் தாமதமாயிற்று. எனினும் யாத்திரீகரின் உற்சாகமும் வேகமும், திருகோணமலையை அடைகின்றோம் என்பதில் மேலும், மேலும் பெருகிற்று. யாத்ரீகர்கள் குச்சவெளியை அடையும் போது, சனம் வெள்ளமாகப் பெருகியது. ஏனைய பகுதிகளிலுமிருந்து வரும் சனமுத்திரம் திருகோணமலையை நோக்கிப் பெருகியது. ஈற்றில் திரிகோணமலையில் அதன் சரித்திரமே காணாத பெரிய தமிழ் மக்களின் வெள்ளம் சரித்திரம் காணாத பெருஞ்சமுத்திரமாயிற்று. திருமலை யாத்திரை நனைந்ததிரி என்று கேலிசெய்த திரு. SWR.D. பண்ட்ாரநாயக்காவுக்குத் திருமலையாத்திரை - திருகோணமலைச் சரித்திரம் காணாத சன சமுத்திரம் உள்ளுர ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது பிழையாகாது.
ஈற்றில், திருகோணமலை மகாநாடு, மொழிக்குச் சமஉரிமை - மலைநாட்டுத் தமிழருக்குக் குடியுரிம்ை- சமஷ்டி அரசு என்ற மூன்று தீர்மானங்களையும், வரலாறு காணாத சனசமுத்திரத்தின் கரகோஷத்துடன் நிறைவேற்றியது. இந்த யாத்திரையின் பலனாக எழுச்சியுற்று நடக்கவிருந்த உரிமைப் போராட்டத்தை நிறுத்தவே, திரு. S.W.R.D.
4CK

8.
பண்டாரநாயக்கா, திரு. S.J.V. செல்வநாயகத் தை அழைத்து ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி
6.
இந்த மகத்தான சாதனையை, உலகமும் - சரித்திராசிரியர்களும் என்றும் மறக்க மாட்டார்கள். தமிழரசுக்கட்சி, 'ஒரு அரசை ஏற்று நடத்தும் ஆற்றல் வாய்ந்தது என்பதை இந்த மாநாடு நிரூபித்தது. ஆனால் ஒரு முக்கிய அம்சம்: ஒரு ஊர்வலத்திலே பங்குபற்றிவிட்டு "வெற்றி என்னுடையது"; “எனக்குக் கட்சியிலே ஒரு பெரிய இடம் வேண்டும்” “என்னை எதிர்வரும் தேர்தலிலே நிறுத்தவேண்டும்" என்று கோருகின்றவர்கள் மலிந்து விட்டார்கள்! “எனக்கு ஆசிரிய சேவை மாற்றம் எடுத்துத் தராவிட்டால், மாற்றுக் கட்சிக்குப் போய்விடுவேன்'; 'எனக்கு உத்தியோகம் தராவிட்டால், இதோ கட்சிக்கு எதிராக எவன் வந்தாலும் அவன் மேடையில் ஏறுவேன்" என்ற கோஷங்கள் அதிகமாகக் கிளம்புகின்றன! மேடைப் பிரபலமடைய வந்து தேர்தல் தொகுதி தரவில்லை' என்று கட்சிவிட்டுப் போன படித்தவர்களின் கூட்டத்தையும் காண்கிறோம். ஆனால் திருமலை மாநாட்டு எண்ணம் யாருடையது? - திட்டம் யாருடையது? ஒழுங்கு யாருடையது? - தலைவர் யார்? என்ற குரலே அன்று எழவில்லை எனலாம். தமிழரசுக்கட்சி செய்தது என்று - தனி மனிதனைத் தியாகம் செய்து கட்சியை உருவாக்கினார்கள். அதுதான் திருமிலை யாத்திரையின் மகத்தான வெற்றி.
வளர்க் தியாகம்! மலர்க தமிழ் ஈழம் வாழ்க தமிழ் - தமிழிம்ை!

Page 430
பகுத்தறிவுத் தந்தையைச் சர்
தனது தமிழக வருகையின் உட்பொருளைத் உதவியுடன் தந்தை செல்வா பகுத்தறிவுத் தந்ை எடுத்து விளக்கும் காட்சி. படத்தில் தலைவிய இலங்கைத் தமிழர் பேரவைத் தலைவர் திரு. 6 இச்சந்திப்பை ஏற்பாடுசெய்த உலகத் தமிழ் ஜனார்த்தனம் ஆகியோரும் உள்ளனர்.
அண்ணனுக்
தமிழக உலாவின்போது பேரறிஞர் அண்ணா அ சதிசெய்துவிட்டாலும், ஊருக்குழைத்து ஓய்வெ தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்ெ அவர் மனைவி, திரு. ஜனார்த்தனம் ஆகியோ
 
 

தித்தார் பைந்தமிழ்த் தந்தை!
தனது வாரிசான திரு. அ. அமிர்தலிங்கத்தின் த மாண்புமிகு ஈ.வே.ரா. பெரியார் அவர்களிடம் ார் திருமதி அ. மங்கையர்க்கரசி, குடிபெயர்ந்த எஸ். மணவைத்தம்பி, சரித்திரப் பிரசித்திபெற்ற
இளைஞர் பேரவைத் தலைவர் திரு. இரா.
கு அஞ்சலி
அவர்களைச் சந்தித்திட முடியாதவாறு இயற்கை டுத்த அவரது திருப்பள்ளியறைக்குச் சென்று காண்டார் தந்தை செல்வா. இதில் அமிர்தர், ரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Page 431
சிலம்புச்செல்வருட6
தமிழகச் சுற்றுலாவின்போது சிலம்புச்செல்வர் சந்தித்திடவும் தவறவில்லை எம் தந்தையவர்க சந்தித்த செந்தமிழ்வேள் செல்வா அவர்கள் அக்கறையோடு விசாரித்திருக்கிறார் சிலம்புச்ெ
தமிழக (முன்னாள்) முதல்வரு
தந்தையின் தமிழக சுற்றுலாவின் முக்கிய அம்ச சந்திப்பில் தமிழகத்தின் முன்னாள் முதலமை ஒருவருமான உயர்திரு. எம். பக்தவத்சல அப்பெரியாரது காரியாலயத்தில் அப்பெரியா செல்வா எடுத்து விளக்குவதை உன்னிப்புட அமிர்தலிங்கம்.
 
 
 

ன் செந்தமிழ்வேள்!
உயர்திரு. ம. பொ. சிவஞானம் அவர்களைச் 5ள். தளபதி அமிர் சகிதம் தன்னை இல்லத்தில் ரிடம் இலங்கைத் தமிழர் நலன்குறித்து மிக
செல்வர் அவர்கள்.
நம் ஈழத் தமிழக முதல்வரும்
மாக இடம்பெற்ற தமிழக அரசியல் தலைவர்கள் ச்சரும் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் )ம் அவர்களும் அடங்கியிருந்தார். இங்கு ரிடம் இலங்கைத் தமிழரின் துயரை, தந்தை ன் கவனித்துக் கொண்டிருக்கிறார் திரு. அ.
الصر

Page 432
சிங்கள சிறீ மூ
தமிழர் வி. தர்மலிங்
அடிழைச் சின்னம்
றியை எதிர்போம். சிறையை நிறைப்போம் என்று - சிங்க ஏறுகள் போன்ற துடிப்புள்ள இளைஞர் படை சங்கநாதம் செய்தது.
நண்டெழுத்து வேண்டாம் நமக்கு - தமிழ் ஈழக் கவிஞர்கள் புதிய புறநானூறு படைத்துப் போர்ப்பரணி பாட முன் வந்தனர்.
எமது ஆர்ப்பாட்டம் சிங்கள சிறீக்கு எதிரானதல்ல. சிங்கள சிறீ தமிழ் மக்களுக்கு வேண்டாம்; அது தமிழ்பேசும் மக்கள்மீது திணிக்கப்பட வேண்டாம்'
"சிங்கள சிறீயில் மாற்றம் செய்யும்வரை நாம் ஓயாது போராடுவோம். சிங்கள சீறி பொறித்த வண்டிகளைத் தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடோம். அவை தமிழ் சிறீ பொறித்த வண்டிகளாகவே உலவும் புனித தொண்டைச் செய்வோம்.
'தமிழர்களைப் பொறுத்த வரையில் சிங்கள சிறீ, தமிழன் இந்த நாட்டில் அடிமைப்பட்டவன் என்பதை வெளிப்படுத்தும் அவமானச் சின்னமாகும். இவ்வடிமைத் தனத்தைச் சொந்த நாட்டிற் பொறுத்துக் கொண்டிருக்கத் தமிழர் தயாராக இல்லை' -என்று தமிழ்த் தலைவர்கள் வீரமுழக்கத் தோடு அறைகூவல் விடுத்தனர்.
மோட்டார் வண்டிகளைப் பதிவு செய்யும் போது அவற்றின் பதிவு எண் களுக்கு முன்னால் "சிறீ என்று சிங்களத்தில்
 

ட்டிய சினத் தீ
ਪn.
எழுதப்பட வேண்டுமென்று மோட்டார் வண்டிப்பதிவுச் சட்டத்தில் சிங்கள அரசு - பண்டார நாயகா அரசு திருத்தம் செய்தது. இதன் விளைவாகவே மேற்கண்ட எதிர்ப்புக் குரல்கள் தமிழீழத்தில் எதிரொலித்தன. ஆங்கிலத்தில் வழக்கிலிருந்த முறைக்குப் பதிலாகச் சிங்களம் புகுத்தப் படும்போது தமிழும் இடம்பெற வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை அரசு உதாசீனம் செய்தது; அடிமைச் சின்னமாகிய சிங்கள
சிறீயைத் தமிழர்கள் மீது திணித்தது. 'சிங்களம் மட்டும் வழியில்.
1956ஆம் ஆண்டு ஆவணி 20ஆம் நாள் திருமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் சிங்கள அரசுக்கெதிராகப் போராட்டம் நடாத்துவதென்று முடிவானது. 1957ஆம் ஆண்டு ஆவணி 20ஆம் திகதிக்கு முன் மொழியுரிமை, ஆட்சியுரிமை, குடியுரிமை, பிரதேசப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான தமிழரின் கோரிக் கைகள் நிறைவேற்றப்படா விட்டால் போராட்டம் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டது. இதற்காகத் தமிழரசுக் கட்சி மக்களைத் தயார் செய்து கொண்டி ருந்தது. இந்த நிலையில் பண்டா அரசின் போக்குவரத்து அமைச்சர் சிங்களம் மட்டும் சட்டத்தின் பக்க விளைவாகச் சிங்க சிறியை வண்டிகளிற் பொறிக்கவேண்டுமென்ற சட்டத்தை நிறைவேற்றினார்.

Page 433
-4
தமிழுரிமை காக்க அனைவரும் இணைந்தனர்
1956ஆம் ஆண்டு ஆனி ஐந்தாம் நாள் நிறைவேற்றப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தினாலும் அதனை எதிர்த்துக் காலி முகத்திடலிலே நடாத்தப்பட்ட சாத்வீகச் சட்டமறுப்பின் போது தமிழர் மீது அரசின் மேற்பார்வையிற் கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனங்களாலும் புண்பட்டிருந்த தமிழர் சிங்கள சிறீயை எதிர்ப்பதற்குக் கட்சி வேறுபாடுகளின்றித் திரண்ட்டனர். தமிழரசுக் கட்சியினர், தமிழ்க்காங்கிரசினர், தமிழ் பேசும் வாலிபமுன்னணியினர், பொதுவுடை மையாளர், சமசமாசிகள் ஆகிய அனைவரும் சிங்கள சிறீயை எதிர்த்து நடாத்தப்பெற்ற கூட்டங்களிற் கலந்து தமிழரின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
1947ஆம் ஆண்டு தை 19ஆம் நாளுக்கு முன் மோட்டார் வண்டிகளின் இலக்கத் தகட்டில் தமிழ் சிறியும் இடம்பெற அரசு ஏற்பாடு செய்யவேண்டும். இன்றேல் சிங்கள சிறீக்கு எதிராகச் சட்டமறுப்பு ஆர்ப் பாட்டம் நடாத்தப்படும்' எனத் தலைவர்கள் அறிவித்தனர்; அரசுக்கு ஐந்துவார இடைக்காலம் வழங்கப்பட்டது.
நோக்கமும் நடைமுறையும்
"தனிச்சிங்களச் சட்டத்தை முறிடிப்பதே சட்டமறுப்பின் நோக்கமாகும். சிங்களச் சட்ட எதிர்ப்பின் ஒரு பகுதியாகவே இன்று சிங்களசிறீ உபயோகத்தினை நாம் எதிர்க்கிறோம். சிங்கள சிறீயை எதிர்ப்பதால் வரப்போகும் ஒரு மாபெரும் போராட்டத் திற்குப் பயிற்சிபெற முடியும். அடிமையாக வாழ்வதைவிடச் சுட்டுக்கொல்லப் படுவதையே நான் விரும்புகிறேன். சிங்கள சிறீச்சட்டத்தினை மீறுவதில் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களே முன்னிற்பார்கள். நீதி மன்றத்தில் அவர் களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். கொடுக்காவிட்டால் சிறைக்கு அனுப்புவார் கள். இதில் சிறைசெல்லவும் நேரிடலாம். இதுதான் எமது திட்டம்"

22
18.1.57 என்ற செல்வாவின் கூற்று, போராட்டம் பற்றிப் பூரண விளக்கத்தைத் தருகிறது.
அரசு தமிழரின் வேண்டுகோளை ஏற்க மறுத்ததால் திட்டமிட்டபடி 1957ஆம் ஆண்டு தைமாதம் 19ஆம் நாள் சிறீ எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பமானது. அந்நிய மொழி ஆதிக்க வெளிப்பாடாக இருந்த சிங்கள சிறீ, ஆங்கில சீஈ, சீவை, சீஎன், சீஎல், ஈஎல்,ஈஎன் முதலியவை அனைத்தும் தமிழாக மாற்றப்பட்டன.
போரின் தொடக்கம்
யாழ்ப்பாணத்தில் சிங்கள சிறீ எதிர்ப்புப் GLU II JIT ' L Ib; பார்த்தவிடமெல்லாம் மோட்டார்களில் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்று போராட்டம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது: "யாழ்ப்பாணம் எங்கும் ஒரே உற்சாகமும் கரை கடந்த உணர்ச்சியும் காணப்பட்டதான சூழ்நிலையில் திரு. சா. ஜே. வே. செல்வாநாயகம், திரு. ஜி. ஜி. பொன்னம்பலம் முதலான தலைவர் கள்அங்கு வந்து சேர்ந்தனர். மோட்டார் ஒட்டிகளின் இலக்க எழுத்து மாற்றும் பணி மிகவும் துரிதமாக நடைபெற்றது. பின், திரு. செல்வநாயகம் தலைமையில் ஓர்ஊர்வலம் புறப்பட்டது. திரு. பொன்னம்பலம் தலைமை யில் ஒர் ஊர்வலம் சாவகச்சேரி நோக்கிப் புறப்பட்டது. காலை 9-00மணிக்குப் புறப்பட்ட ஊர்வலம் பிற்பகல் 3-00 மணிக்குத் திரும்பி வந்தது. அன்று மாலை பரமேஸ்வரக் கல்லூரி மண்டபத்தில் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிக் கலந்துரையாடல் இடம்பெற்றது: சிங்கள சிறீயும் செந்தமிழர் சீற்றமும்
இந்தச் செயல் நடைமுறை பண்டா அரசின் சிங்கள இன, மொழி வெறிக்குத் தெளிவான எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதை எளிதில் உணர்ந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் அரசின் இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தச் சீறிக்

Page 434
4. கிளம்பியிருக்கிறார்கள். எவ்வித முன்னறிவிப் பும் திட்டமும் தூண்டுதலுமின்றித் தமிழரிற் சிலர் தாங்களாகவே ஒரு நாள் சிங்கள சிறீ எழுத்துடனான பதிவு எண் பொறித்த மோட்டார் வண்டி ஒன்றைக் கண்டதும் அதன் முன் படுத்து மறியல் செய்திருக் கின்றனர் என்று சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத் தொடக்கம் பற்றி நாவலர்
இரா. நெடுஞ்செழியன் குறிப்பிடுகிறார். தமிழீழ மெங்கும்.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றித் திருமலை, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் சிறீ எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. Lo" Lision't Shi) சொல்லின் செல்வர் செ. இராசதுரை, பா. உ. தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கோப்பாய்க் கோமான் வன்னிய சிங்கம், பா. உ. உட்படப் பலர் கலந்து கொண்டனர். திருமலை யில் அமரர் ந. இ. இராச வரோதயம், பா. உ. தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தளபதி அமிர்தலிங்கம் பா. உ. உட்படப் பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.
முதலில் ஆங்கில, சிங்கள எழுத்துப் பொறித்த மோட்டார் வண்டிகளுக்குத் தமிழ் எழுத்துப் பொறித்த தகடுகளை வழங்கும் ஒருநாட் போராட்டம் மேற்கொள்ளப் பட்டது. பின் மோட்டார் வண்டியுரிமை யாளர்களின் விரும்பியோர்க்குத் தமிழ் எழுத்துத் தகடுகளைப் பொருத்தும் இயக்கம் நடத்தப்பட்டது. பின் இயக்கம் எல்லா வாகனங்களுக்கும் தமிழ் எழுத்துப் பொறித்த தகடுகளை வழங்குவதாக விரிவடைந்தது. தமிழ்ப் பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள மக்களுக்குச் சொந்தமான வாகனங்கள் எதிலும் தமிழ் சிறீபொறிப்பதில்லை என்ற முடிவு உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
பண்டா மிரட்டினார்
பிரதமரின் ஆணைப்படி தமிழ் எழுத்துப் பொறித்த மோட்டார் வண்டி உரிமையாளர் கள் மீது நகர்காவலர்

23H
நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். சாவகச்சேரியில் திரு.கு. வன்னிய சிங்கம் அவர்களையும் யாழ்ப்பாணத்தில் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களையும் திருமலையில் கப்டன் ஏ. சி. கனகசிங்கம் அவர்களையும் தமிழ் எழுத்துப் பொறித்த மோட்டார் வண்டிகளிற் செல்லும்போது வழிமறித்து, நகர்காவலர் இலக்கங்களைப் பதிவு செய்து படமெடுத்தனர். வழக்குத் தாக்கல் செய்து அழைப்பாணை அனுப்பப் படுமென அறிவிக்கப்பட்டது.
சிங்கள சிறீ எதிர்ப்பியக்கம் தொடர் பாகப் பிரதமர் கூட்டிய மகாநாடொன்றில் சாதாரண தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகப் பெருந்தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றதற்காகப் பொலிசு அதிபர்கள் கண்டிக்கப்பட்டதாக வும் மேலே குறிப்பிடப்பட்ட சிறீ எதிர்ப்புச் சட்டமறுப்பாளர் மீது வழக்குத் தொடர்வதை உடனடியாக நிறுத்துமாறு பொலிசு மாஅதிபர் மாவட்டப் பொலிசு அதிபர்களுக்கு அறிவித்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று வரை சிங்கள ஏகாதிபத்திய வாதிகள் மக்களைச் சட்டமறுப்புச் செய்யத் தூண்டிச் சட்ட மறுப்பை முன்னின்று நடத்தும் குற்றத்தைச் செய்யும் தலைவர்களை விட்டு அடிநிலைத் தொண்டர்கள் மீதே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது அரசின் கோழைத் தனத்தைக் காட்டுவதாக அமைகிறது.
போர் தொடர்ந்தது; புகழ் பரந்தது
தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு துணிந்து செயற்பட்டதனால் சிறீ எதிர்ப்புப் போராட்டத்தில் புதிய உத்வேகம் ஏற்பட்டது. 'தொண்டர்கள் நகரின் பிரதான சந்திகளில் நின்று கார்களையும் பேருந்து களையும் மறித்துத் தமிழ் இலக்கத் தகடுகளைப் பொறிக்கும்படி வற்புறுத்தி வெற்றியீட்டி வருகின்றனர் என்ற செய்தியும், கடந்த நான்கு மாதங்களாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் மக்கள் தங்கள் மோட்டார் வாகனங்களின் இலக்கத் தகடுகளிலுள்ள சிங்கள, ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக நேரடியான

Page 435
4
தமிழ் எழுத்துக்களைப் பொறித்து மோட்டார்ப் போக்குவரத்துச் சட்டத்தை மீறி வருகிறார்கள் என்ற செய்தியும் சிறீப் போராட்டம் இடையீடின்றிப் பல மாதங்கள் தொடர்ந்து தீவிரமாக நடை பெற்றதை உறுதிப்படுத்துகின்றன.
கிழக்கிலங்கையிலிருந்த ஈஸ்டேன் பஸ் கொம்பனிப் போராட்டம், மக்கள் சிறீ எதிர்ப்புப் போராட்டத்தில் எத்துணை உறுதியாக நின்றார்கள் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இருநூறுக்கு மேற்பட்ட பேருந்துகளைக் கொண்டிருந்த இப்பேருந்து நிறுவனம் ஆங்கில, சிங்கள எழுத்துக்களை மாற்ற மறுத்ததோடு புதிதாகச் சிங்கள சிறீப் பேருந்துகளைத் தருவிக்கவும் முயன்றது. எனவே மக்கள் இரண்டு நாட்கள் இப்பேருந்துகளிற் பயணம் செய்யாது ஒதுங்கிக்கொண்டனர். இதனால் நிறுவனத்திற்கு 7000 ரூபா நட்டம் ஏற்பட்டது. மக்களின் உறுதி அவர்களைப் பணியவைத்தது. சீ ஈ 3636 ஆம் இலக்கப் பேருந்தில் முதன் முதலில் தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்டது. தமிழர் சிங்களத்துக்கு எதிரான்வர்; ஆங்கிலத்துக்குச் சார்பானவர் என்ற குற்றச்சாட்டு எவ்வளவு தூரம் பொய் என்பதை நிரூபிக்க இச்சிறு நிகழ்ச்சியே போதும். பண்டா குழம்பினார், சிங்களம் சீறியது
சிறீ எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு சிங்கள அரசுக்கும் பெளத்த, சிங்கள வெறியருக்கும் ஆத்திரமூட்டுவதாக அமைந்தது; இந்த ஆத்திரம்,
தமிழருக் குணர்வுண் டாக்கிச் சீலத்தால் ஒன்று பட்டுச் சிறந்திடும் வாழ் வளித்த ஈழத்தின் காந்தி. செல்வா மீது திரும்பியது. "பேராசை பிடித்த அற்ப மனிதர் என நியூயோக் ரைம்ஸ்' (1957-03-23) இதழில் சீஎஸ். சுல்பேக்கரால் வருணிக்கப்பட்ட பண்டார நாயகா வியாங்கொடை சங்கபோ தாஃகம்

24
பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பச்சிளம் பாலகர் முன்னிலையில் பேசும்போது தந்தை செல்வா அவர்களை தமிழ் மக்களிடையேயுள்ள படித்த மடையன் என்று அழைத்ததன் மூலம் தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்.
சிங்கள சிறீப் போராட்ட வெற்றியும் ஆவணிச் சட்டமறுப்புப் போராட்ட எழுச்சி யும் பண்டாவின் வெகுளிக்குக் காரணமாக அமைந்தன. அரசியற் படுகொலைகளுக்கும் இன, மொழி வெறிப் போருக்கும் மூலகாரணமாயமைந்ததாகக் கருதப்பட்ட பிக்குகள் ஐக்கிய முன்னணிக் கூட்ட மொன்றிற் பேசிய பண்டாரநாயக்கா 'ஒவ்வொரு நாளும் இந் நாடு உள்நாட்டுக் கலகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. மற்ற மனிதர்களின் அபிப்பிராயத்தையும் மதித்துத் தேவையானவற்றைச் செய்து கொடுக்க நாம் தவறக்கூடாது. மனிதனின் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக நாம் நடந்துகொள்ளக்கூடாது. நாட்டில் பரிபூரண அமைதியும் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் 9 D & எந்த அபிவிருத்தியையும் செய்ய முடியாது' என்று குறிப்பிட்டார். பண்டா பணிந்தார்
‘ஆரியம் வஞ்சகமானது' என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார். இந்த மதிப்பீடு ஈழத்திலுள்ள ஆரிய வர்க்கத் துக்கும் ஏற்புடையதே. சிங்கள ஆட்சியாளர் பயமுறுத்தல்கள் மூலமும் எச்சரிக்கைகள் மூலமும் தமிழினத்தை அடக்கியாள (UpLgluLI fTğ5I என்பதை உணர்ந்து, அரவணைத்து அழிக்கத் திட்டமிட்டனர். தமிழரின் எழுச்சியும் எதிர்ப்பும், அதனைத் தடுக்கப் பண்டா தீவிர நடவடிக்கை எடுக்கத் தயங்கியதும் ஆகிய காரணங்களால் சிங்கள மக்கள் பண்டாவுக்கு எதிராகத் திரண்டனர். இந்நிலையில் அரசு ஆட்டம்கண்டது. இதனைத் தடுத்து அரசினைக்காக்க பண்டா தந்தை செல்வாவைக் கொரகொல்லைக்கு அழைத்தார் சமரசம் பேச உண்மையான

Page 436
சத்தியாக்கிரகி என்ற வகையிற் பேச்சுவார்த் தைக்கான எந்த அழைப்பையும் நிராகரிக்கச் கூடாது என்ற நோக்கோடு செல்வா பண்டாவைச் சந்தித்தார். பேச்சுக்களின் விளைவாக 1957ஆம் ஆண்டு ஆடித்திங்கள் பண்டாரநாயகா - செல்வநாயகம் உடன்படிக்கை ஏற்பட்டது. உரிமை மறுத்தால் மீண்டும் போர்
நாம் எந்த வகையிலும் சோர்ந்து போகக்கூடாது. இந்த உடன்படிக்கை மூலம் தமிழ்பேசும் மக்கள் தம் சுதந்திரப்பாதையில் ஒருபடி முன்னேறி இருக்கிறார்கள் தமிழர் பிரதேசம் வகுக்கப்பட்டு விட்டது. கட்சியின் இறுதி இல்ட்சியங்கள்ை அடைவுதற்கரக இப்போதுதான் நமது போராட்டத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பித்திருக்கிறது. தொட்ர்ந்து போராடுவோம்; வெற்றி காண்போம் என்று நாம் திடசங்கற்பஞ் செய்வோம். இந்த இடைக்காலச் சமரச உடன்பாட்டில் தீமைகள் இருக்குமானால் அதற்கு முற்றும் பொறுப்பாளி நான். நன்மையானால்,அந்தப் பெருமை தமிழரசுக் கட்சிக்குச் சேரலுேண்டியது' என்ற செல்வாவின் கூற்று ஒப்பந்தம் பூரணமான தல்ல என்பதைத் தெளிவு படுத்துகிறது. உடன்படிக்கை நடைமுறைப் படுத்தப்படும் வரை எதிர்ப்பைத் தள்ர்த்தக்கூடாது என்று செல்வா அறிவித்தார். 'சமரச உடன் படிக்கைப் ப்டி மசோத்ா அமைக்கப்படா விட்டால் உடனே போராட்டம் தொடரும்' என்று வன்னியசிங்கம் குறிப்பிட்டார். சிங்கள்ப் பகுதியில் வாழும் தமிழர்கள் தமது வண்டிகளில் தமிழ், எழுத்துப் போடுவதிற் சிரமமிருந்தால் தமிழ்மொழிச் சட்டமும் பிரதேச சபைச் சட்டமும் நிறைவேறும்வரை பொறுத்திருக்கவேண்டும் என்று நாகநாதன் கூறினார்.
'சிங்கள சிறீக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தொடங்கிய சட்டமறுப்பு இன்னும் கைவிடப்படவில்லை. தமிழ்ப் பிரதேசங் களில் மோட்டார் வண்டிகள் தமிழ்

25
எழுத்துக்களையே போட்டு ஒடுகின்றன. அப்படி ஓடவேண்டும் என்பதுதான் கட்சியின் தீர்மானம். தமிழ்ப் பிரதேசங்களில் சிறீ இலக்க வண்டிகளை வாங்குபவர்கள் தமிழிலேயே சிறீயைப் போடலாம். அப்படி ஒட்டுபவர்மீது நடவடிக்கை எடுக்க அர்சுக்குத் துணிவும் சக்தியும் கிடையாது. என்ற தமிழரசுக் கட்சித் தலைவர் கூற்று ஒப்பந்தத் தினால் சிறீ எதிர்ப்பு எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது. மீண்டும் சிங்கள ஆதிக்கம்
ஒப்பந்தத்தைக் கேடயமாகவும் திரையாகவும் பயன்படுத்திக்கொண்டு சிங்கள அரசு சிங்களம் மட்டும் ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தும் செயல்களை ஒன்றன்பின் ஒன்றாகச் செயற்படுத்திவந்தது. ஆறு மாதங்களில் நடைமுறைப்படுத்து வதாக்க் கூறப்பட்ட ஒப்பந்தம் அதற்குப் பல மாதங்களுக்குப் பின்பும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. இதுபற்றி அமைச்சரவையுடன் தொடர்புகொண்ட போதெல்லாம் ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படும் வரை பொறுத்திருக்குமாறு அமைச்சர்கள் போதித்தனர்.
போரை ஒடுக்கத் தேசியமயம்
மோட்டார்ப் போக்குவரத்துப் பதிவுச் சட்டத்தின் குறைபாடு காரணமாகச் சிறீப் போராட்டத்தைத் தடுக்கமுடியாதிருப்பதை உணர்ந்த அர்சு தேசியமயமாக்கல் என்ற போர்வையில் பேருந்து நிறுவனங்களை அரசுடமையாக்கி 1958 தை மாதத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபையை நிறுவியது. இதன்மூலம் அரசுடைமைக்குச் சேதம் விளைத்ததாகக் காட்டிப் பேருந்து களில் தமிழ் எழுத்துப் பொறிப்பவர்களைத் தண்டித்து ஏனையோரைப் பயமுறுத்த அரசு வழிகண்டது.
பேருந்துகள் அரசுடைமையாக்கப் படுமுன் யாழ்ப்பாணத்தில் இரண்டு "சிறீ பொறித்த பேருந்துகளே ஓடின. அவையும்

Page 437
-4
தமிழ் சிறீயைக் கொண்டிருந்தன. ஏனைய தமிழ் மாவட்டங்களிலும் தமிழ் சிறீப் பேருந்துகளே ஓடின. அமைச்சரின் வாக்குறுதி
இந்நிலையில் 1958ஆம் ஆண்டு மார்ச் திங்களில் சிங்க்ள சிறீ பொறித்த பேருந்து களைத் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்ப அரசு முயன்றது. இந்நிலை ஏற்பட்டால் மீண்டும் சிங்கள சிறீ எதிர்ப்பை ஆரம்பிக்க நேரிடும்; அதனால் தமிழர் - சிங்களவர் ஒற்றுமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த தந்தை செல்வா போக்குவரத்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்புப் பற்றி அமைச்சர் மைந்திரிபாலா பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செய்தி வருமாறு:
நான் உயர்ந்த மதிப்புடன் போற்றும் திரு. செல்வநாயகம் அவர்களுடன் "சிறீ எழுத்துப் பிரச்சினை பற்றிக் கலந்துரையாடி னேன். வட கிழக்கு மாகாணங்களில் ஒடும் பேருந்துகளில் தமிழ் எழுத்துப் பொறிப் பதை அதிகாரபூர்வமாக அநுமதிக்க முடியாது என்ற எனது கருத்தை அவர் புரிந்து கொண்டதாக நான் உணர்ந்தேன். எல்லாப் பேருந்துகளும் கொழும்பிற் பதிவு செய்யப்படுகின்றன. எழுத்து சிறீயாக இருக்கவேண்டுமெனச் சட்டம் பணிக்கிறது. சிறீ பொறித்த பேருந்துகள் எதனையும் வட, கிழக்குப் பகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்ற அவரது கோரிக்கைக்கு நான் இணக்கம் தெரிவித்தேன்'
அமைச்சரின் சதி
சிங்கள சிறீ பொறித்த பேருந்துகளைத் தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்புவதில்லை யென்று ஒப்புக்கொண்ட போக்குவரத்து அமைச்சர் தமது உறுதியை மீறி 1958. பங்குனி 17இல் அவற்றை அனுப்பினார், இதனால் எழுந்த நிலையை ஆராய 1958 பங்குனி 17இல் கூடிய தமிழரசுக் கட்சியின் செயற்குழு சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதென முடிவு செய்தது, இதுபற்றிய செய்தியைக் கண்ணுற்ற

26
போக்குவரத்து அமைச்சர், "சிறீ விடயம் ஒரு சிறிய விடயம். அதனைப் பொருட்படுத்த வேண்டாம்; நாமெல்லாம் மிகப் பெரிய விடயமான மொழிப் பிரச்சினையிலேயே கவனம் செலுத்தவேண்டும்" என்று அறிவித்தார். ஆனால், பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வரவில்லை. மீண்டும் சிறீப்போர்
தமிழர்கள் திட்டமிட்டபடி 29-3-1958
இல் சிங்கள சிறீ எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்தனர். பேருந்துகளிலிருந்த சிங்கள சிறீ தமிழ் சிறீயாக மாற்றப்பட்டது. வேறு எவ்வகையிலும் அவற்றிற் பாதிப்பு ஏற்படுத்தப்படவில்லை. 29ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 30, 31ஆந் திகதிகளிலும் அமைதியாக நடைபெற்றது.
போராட்டத்தை ஆரம்பித்துவைத்த பெருமை தளபதி அமிர்தலிங்கத்தைச் சாரும். "அவர் தலைவர் வன்னியசிங்கத்திடம் அனுமதி பெற்று, தந்தை செல்வாவிடம் ஆசி பெற்று நகர்காவில் அத்தியட்சகருக்கு அறிவித்துவிட்டு மூதவை உறுப்பினர் நல்லையா, இளைஞன் சிறீதரன் ஆகியோருடன் சேர்ந்து சிங்களத்தை அகற்றி விட்டு செந்தமிழைப் பொறித்து அதன்மூலம் அருந்தமிழை அரியணையேற்றும் அரும்பணியில் ஈடுபட்டார்.
போராட்டம் தொடர்ந்தது; தொண்டர்கள் இருவர் அழித்ததும் பேருந்துவண்டிகள் அவை திருத்தும் நிலையத்துக்கேகும், தொண்டர்கள் கைது செய்யப்படுவர். பின்பு அங்கு சிங்கள எழுத்தாக மாற்றப்பட்டு வரும். புதிய தொண்டர் அழிப்பர். பேருந்து அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஒருபுறமும் தொண்டர்கள் மறுபுறமுமாக இந்தப் போர் நிகழ்ந்தது. சிறீயை அழித்தார், சிறையை நிறைத்தார்
வண்டிப் பதிவுச் சட்டத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டி வழக்குத்தொடர முடியாத நிலையில், அரசு, சிங்கள சிறீயை அழித்ததாகவும் அதன்மூலம் அரசுக்கு

Page 438
-4
நட்டம் விளைத்ததாகவும் வழக்குத் தொடுத்தது. தொண்டர்கள் அனைவரும், 'சிங்கள சிறீயைத் தமிழருக்குச் சொந்தமான வண்டிகளில் பொறிக்கும்படி கட்டாயப் படுத்துவதன்மூலம் அரசு தமிழரின் தன்மான உணர்வையும் சுயமரியாதையையும் பகிரங்கமாக அவமானப்படுத்துகிறது. ஆகவே இந்த அவமானச் சின்னத்தை அழிப்பது தன்மானத் தமிழரின் கடமை. அதனால் சிங்களத்தை அழித்துத் தமிழைப் பொறித்தேன்" என்று கூறினர். நீதிபதிகள் அனைவருக்கும் தண்டனை விதித்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 125 தொண்டர்கள் தண்டிக்கப்பட்டனர். இவர்களில் 44 தொண்டர்களுக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பருத்தித்துறை, சாவகச்சேரி நீதிமன்றங்களினால் இவர்கள் தண்டிக்கப்பட்டனர். 61 தொண்டர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு இருவாரச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டனர். திருவாளர்கள்: அ. அமிர்தலிங்கம், கு. வன்னியசிங்கம், ஜி. நல்லையா ஆகியோர் இவர்களிற் குறிப்பிடத்தக்கவர்கள். 20 தொண்டர்கள் நீதிமன்றம் கலையும்வரை சிறை வைக்கப்பட்டனர். இவர்களில், நான் உட்பட திருமதிகள்: மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், கோமதி வன்னியசிங்கம், சமாதானம் சோமசுந்தரம், ப. கிங்ஸ்பரி, நல்லையா, வைத்தியலிங்கம், ரி. பூபதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பெண்மணிகள் எழுவரும் இவருள் அடங்கியிருப்பது மகளிர் தமிழர் உரிமைப் போரிற் காட்டிவரும் ஆர்வத்தை எடுத்துக் காட்டுகிறது. அனைவரும் ஒரே குற்றத்தைச் செய்திருந்தபோதிலும் தண்டனை வேறுபடுவது எமது நாட்டின் நீதி வழங்கும் அமைப்புமுறையின் குறைபாட்டைப் பிரதிபலிக்கிறது.
முன்னணியிற் செல்வா
தந்தை செல்வநாயகம் மட்டக்களப்பில் சிறீ எதிர்ப்புச் சட்டமறுப்புச் செய்து தண்டனை பெற்றார். மட்டுநகர் முதல்வர்

7
திரு. செ. இராசதுரை சிறையிலே செல்வா வைச் சந்தித்தபோது நாம் சரியான பாதை யில் நடக்கிறோம்' என்று செல்வா கூறியது அவரது உறுதியை எடுத்துக்காட்டுகிறது. 'உங்களை முன்னுக்கு அனுப்பிவிட்டு ஒளிந்திருக்க என்னால் முடியாது. இயக்க ரீதியாக எது செய்வதானாலும் நானும் உங்க ளோடு என் பங்கைச் செய்யவேண்டும்.சிறை செல்வதானால் முதலில் நான் செல்ல வேண்டும்" என்று கூறிய செல்வா அதனைச் செயல் மூலமும் காட்டித் தாம் ஒப்பற்ற தலைவர் என்பதை நிரூபித்து வருவது தமிழருடைய பெரும் பேறாகும்
காட்டுமிராண்டித்தனம்
நாம் தமிழ்பேசும் மக்களின் நல்வாழ்வுக்கான வழிவகைகளை வகுக்க மகாநாடு கூட்டுவது சிங்கள மக்களை ஆத்திரமூட்டி அவர்களை அநாகரிகமாக - காட்டுமிராண்டித்தனமாக நடக்கத் தூண்டுமாயின் நாம் மூச்சுவிடுவதுகூட அவர்களைத் தூண்டவே செய்யும் என்று தந்தை செல்வா பல்கலைக்கழகப் பேருரை ஒன்றிற் குறிப்பிட்டார். 29-3-57இல் சிங்கள சிறீப் போராட்டம் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டபோது, செல்வா குறிப்பிட்டபடி சிங்கள மக்கள் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டனர். இதன் பயனாக முட்டாள்களின் தினமாகப் பிரகடனஞ் செய்யப்பட்ட 1958 ஏப்பிரல் 1ஆம் நாளில் - சிங்கள மக்கள் தார்ச்சட்டி - தூரிகை இயக்கத்தை மேற்கொண்டனர். 'முதலில் தமிழ் எழுத்துக்களை அழிப்போம், பின் தமிழரை அழிப்போம்" என உறுதி பூண்டனர். இபோ.ச. பேருந்துஊழியர்கள் திட்டமிட்டு சிங்கள சிறீ எழுத்துக்களை அழித்தும் பேருந்துகளைச் சேதப்படுத்தியும் சிங்களப் பகுதிகளுக்கு அவற்றை எடுத்துச் சென்று தமிழர், முஸ்லிம் எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொண்டனர்" எனத் திருஆர்.ஈ. ஐயதிலக்கா குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக நாவலப்பிட்டி, நோட்டன் பிறிட்ஜ் முதலிய இடங்களில் பல கொள்ளை, துன்புறுத்தற் சம்பவங்கள் நடைபெற்றன. அது நாடெங்கும் பரந்தது.

Page 439
-4 பாராளுமன்றில் சிறீ
இதனையொட்டி 1958 சித்திரை 8ஆம் நாள் 'சிறீ, எதிர் சிறீ இயக்கங்கள்' பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றது. சிங்கள சிறீ விடயம் சின்ன விடயம் என்று அரசு முன்பு அறிவித்தது. ஆனால், இவ் விவாதத்துக்கான ஒத்திவைப்பு முன் மொழிவைக் கொண்டுவந்த தொழில், வீடமைப்பு, சமூகசேவைகள் அமைச்சர் திரு. ரீ.பீ. இலங்கரத்தினா "சிறீ, எதிர் சிறீ இயக்கம் தொடர்பாக எழுந்துள்ள மிக முக்கியமான விடயம் பற்றி ஆராய சபையை ஒத்திவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். 9 மணி 37 நிமிடம் நடைபெற்ற இந்த விவாதத்தில் அரசின் பேச்சாளர்கள்: சி. சுந்தரலிங்கம், கொல்வின் ஆர். டீ. சில்வ , பீற்றர்கெனமன் முதலியோர் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட இயக்கம் நாட்டில் ஏற்பட்ட குழப்பங் களுக்குக் காரணம் எனப் பொழிந்து தள்ளினர். 1956இல் பண்டா மூட்டிய சிங்களம் மட்டும் தீ கொழுந்து விட்டெரி வதை உணர்ந்தும் அதனை வெளிப்படை யாக எடுத்துக் கண்டிக்கும் துணிவற்ற தமிழர் சிலரும் தமிழரின் நண்பரென்று நடிப்பதில் வல்லவர்கள். பலரும் தமிழரசுக் கட்சியே காரணம் என்று கூறியதைத் தமிழர் கவனத்திற் கொள்ளவேண்டும்.
தமிழரசு தனித்து நின்றது
போராட்ட ஆரம்பத்தில் தமிழ்க் காங்கிரஸ், அடங்காத் தமிழர் முன்னணி, பொதுவுடைமைக் கட்சி, சமசமாஜ கட்சி என்பவற்றைச் சேர்ந்தோர் சிறீ எதிர்ப்பை ஆதரித்து முழங்கினரேனும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றுதெரிந்ததும் ஒதுங்கிக்கொண்டனர். பொதுவுடைமைக் கட்சி சார்பில் கலந்துகொண்ட தலைவர்கள் கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டத்திற் கண்டிக்கப்பட்டதோடு, போராட்டத்தி லிருந்து ஒதுங்குமாறு பணிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் போராட்டத்திற்

28
கலந்துகொள்ள விரும்பாத காங்கிரசுத் தலைவர், சொல்லின் செல்வரிடம், "மட்டக்களப்பில் போராட உதவி வேண்டுமா? வரவா? என்று கேட்டபோது, வேண்டாம் என்று பதில் கிடைத்ததோடு நின்றுவிட்டார். வழக்கம்போல், கடைசித் தமிழன் உள்ளவரை போராடுவான்' என்று மடல் வரைந்த "காடு சுடும் வீரர் சுந்தரர், வன்னி மக்களுக்கு, "நல்ல நண்பர்களே, போராட்டத்திற் கலந்து கொள்ளாது விலகியிருங்கள்; இது ஒரு முட்டாள் வேலை; பைத்தியக்காரத்தனம்" என்று கூறி வன்னி மக்களைத் தடுத்ததாகப் பாராளுமன்றத்திற் பெருமையோடு கூறினார். இறுதியில் எஞ்சியது தமிழரசுக் கட்சியே. அவர்களே சிறீயை எதிர்த்தனர்; சிறையை நிறைத்தனர்.
1958 ஏப்பிரல் 9ஆந் திகதி பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட தோடு போராட்டம் தீவிரமடைந்தது. வவுனியா மகாநாடு நடைபெற்றது. வகுப்புக் கல்வரம் உச்சநிலை அடைந்தது. தமிழரும் சிங்களவரும் சொந்த நாடுகளுக்குக் கப்பலி லோடினர். தமிழ்த் தலைவர்கள் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். அரசின் செயலின்மை
ஆனாலும் சிங்களசிறீ பேருந்துகள் மீளப் பெறப்பட்டன. தமிழர் வண்டிகளில் தமிழ் எழுத்துப் பொறித்தவர்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க அரசு முன்வரவில்லை. இன்றுவரை தமிழ் எழுத்துப் பொறித்த வண்டிகள் அரசின் தலையீடின்றித் தமிழ் ஈழத்தில் ஒடுகின்றன. காவலூர் பா. உ திரு. கா. பொ. இரத்தினம் அவர்களின் மோட்டார் வண்டியும் இதற்கு உதாரணமாகும்.
யாழ்ப்பாணத்தில் ஒடுவதற்கு நல்ல நிலையிலுள்ள ஆங்கில எழுத்துள்ள பேருந்துகள் இல்லை என்ற காரணம் காட்டி மக்களைத் திட்டமிட்டுத் துன்பத்திற் குள்ளாக்கியது அரசு.

Page 440
-4
4
சிங்கள சிறீயை இறுதி மூச்சுள்ளவரை எதிர்ப்போம்" என முழங்கிய தமிழ்க் கொம்யூனிஸ்டுகள் 1958 ஆவணி முதல் வாரத்தில் "சிங்கள சிறீப் பேருந்துகள் வேண்டும் எனத் தீர்மானித்தனர்.
நல்லூர், செல்வச்சந்நிதி கோயில் உற்சவங்களை முன்னிட்டுத் தற்காலிகமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள பத்துக்கு மேற்பட்ட சிங்கள சிறீ இல்லாத பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் ஒடுகின்றன. இது அரசிடம் நல்ல நிலையிலுள்ள ஏனைய பேருந்துகளும் இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அரசுக்குத் தமிழ்மக்கள் மீது வஞ்சம் தீர்க்கும் நோக்கம் இல்லாவிட்டால் ஏன் இந்தவண்டிகள் இங்கு நிரந்தரமாக ஓடக்கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது? (சுதந்திரன் 1959-9-27). இவை 1957தையில் ஆரம்பமான சிறீப் போராட்டம் பல ஆண்டுகள் தீவிரமாக நடாத்தப் பட்டதை நிரூபிக்கும்.
எனினும் இன்றும் சிங்கள சிறீ ஆதிக்கம் மறையவில்லையே! ஏன்? சிங்கள ஏகாதிபத்தியம் என்ற நோய் இருக்கும்வரை அதன் அறிகுறியும் இருக்கும். அதனை
இயங்குநிலை ஏற்றகுறை 4ے - எழுச்சி
0
பொங்கு தமிழிற் á, சங்கரம் நிசமென்

9.
மாற்றியமைப்பது தமிழர் கடமை; உரிமையுங்கூட
வளர்க் தமிழுணர்வு வாழ்க தமிழிம்ை!
ஆதார நூல்கள்
1. 25,000,00 தமிழ் பேகம் மக்கள் தலைவர் -
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், கண்டி, 1959.
2. கோப்பாய்க் கோமகன் - க. சச்சிதானந்தம்.
3. தமிழ் அமிர்தம் தமிழ்மகன் - கருணாநிதி, அறிவாலயம், கந்தரோடை, சுன்னாகம், 1974.
4. Eylom: Beginnings of Freedom Struggle C. Suntharalingam, "Thiru -Lingam Kamam', Vavuniya. 1967.
5. சிறீ அளித்த சிறை - நாவேந்தன், தமிழ்மன்றம், சங்குவேலி, மானிப்பாய், 1959.
6. அஞ்சாட்டு (Hansard) - தொகுதி 30 - பகுதி
I, 1958 ஏப்பிரல் 8.
7. கதந்திரன் இதழ்கள் - 1957, 1958, 1959.
கொண்டதமிழ் தவிர்த்திடநீர் ଗamଗାଁଯାଁ)
» ()
ன்ல்ை விளைந்தால் று சங்கே முழங்கு

Page 441
பகர்கின்ற செந்தமி
LongbÖé திருமதி அ. ப
(பொதுச் செயல
<皂 யிரமாயிரம் ஆண்டுகளாக
அகில இலங்கையிலும் கொடியோடும் முடியோடும் அரசாண்டு முறையோடு வாழ்ந்த தமிழினம், அந்நியரின் ஆக்கிரமிப்பினால் அடிமைகளாகித் தம் அரசியல் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில், ஆற்றொணாத் துன்பத்துக்குள்ளாகி வாழ முடியாமல் வதங்கிய நேரத்திலே - அந்நியரின் அழுங்குப் பிடியிலிருந்து விடுபட்டும், அவரை அடுத்து அரசுகட்டிலில் அமர்ந்த - சிங்களவரின் பிடியில் மறுபடியும் சிக்குண்டு சித்திரவதை அனுபவித்த நேரத்திலே - சிங்களத்தின் சீற்றம் செந்தமிழ்பாற் புகுந்து அதன் அழிவுக்கு வழி கோலிய நேரத்திலே - "முகில் கிழித்து வெளிக் கிளம்பும் முழு மதி போல் மூதறிஞர் செல்வா அவர்களைத் தாபகராகக் கொண்டு முகிழ்த்தது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி!
தமது வாழ்வின் வழி படு பயங்கர பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதனை உணராது உறங்கிக் கிடந்த தமிழினத்தின் உறக்கத்தைக் கலைத்து உயிர் பெற்றெழச் செய்தது தமிழரசுக் கட்சி!
வெறும் தேர்தல் இயக்கமாக இல்லாமல் செந்தமிழின் விடுதலை இயக்கமாகச் செயல்படத் துவங்கியது தமிழரசுக்கட்சி!
 

ழின் பழிநீக்குவோம்
திலகம் pங்கையர்க்கரசி
TGITrf, 5. Lost. Cup.)
இத்தகைய கட்சியின் இணையற்ற இலட்சியம் ஈடேறிடத் தமது இன்னுயிரையு மீந்திட முன்வந்தனர் இளந்தமிழ் இளைஞர்கள். தமிழரசுக் கட்சியோடு தம் வாழ்வை இணைத்திடவெனத் தமிழரசு வாலிப முன்னணி என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார்.
அவர்களைப் போலவே, தமிழரின் விடுதலைப் போரில் தமக்கும் பங்குண்டு எனத் தம் வாழ்வையும் தமிழரசு இயக்கத்தோடு இ ைணத்துக் கொள்ள முன்வந்தனர் தமிழ் மாதர்கள் பலர். இதற்குமுன், செல்வி பத்மாவதி வேலுப்பிள்ளை என்ற மாது மட்டும் தம் சிறுவயது முதற்கொண்டு தமிழரசுக் கட்சியின் வாழ்வில் தன்னையும் | இ  ைணத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவராவர். தமிழரசுக்கட்சி மேடைகள் அனைத்திலும் செல்வி பத்மாவதியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அளவுக்குத் தமிழரசுக் கட்சி இவரைத் தகுந்த முறையில் பயன்படுத்தி வந்தது.
இதன் பலனால், 1957ஆம் ஆண்டு செயல்வீரர் வன்னியசிங்கத்தின் தலைமை யில் நடைபெற்ற தமிழரசு வாலிப முன்னணியின் மாநாட்டரங்கிலேயே, திருமதி இராசபூபதி அருணாசலம் தலைமையில் தமிழரசு மாதர் முன்னணியின் மாநாடும் முதன்முதலாக நடைபெறலாயிற்று.

Page 442
4.
செல்வி பத்மாவதி வேலுப்பிள்ளை என்ற மாதை மட்டும் பெற்றிருந்த தமிழரசுக் கட்சிக்கு - ‘மாதர் முன்னணி” என்ற அமைப்பே கிடைத்து விட்டது. அதுவுமல்லாமல் மாதர் பலர் ஒன்றுகூடி மாநாடு ஒன்று அமைக்கும் அளவுக்கு அந்த அமைப்பு வளர்ந்தும் விட்டது.
அன்று நடைபெற்ற இம் மாநாட்டில், செல்வி பத்மாவதி வேலுப்பிள்ளையோடு, ஆசிரியைகள். செல்வி கமலா நாகலிங்கம், செல்வி பத்மா பஞ்சநாதேஸ்வரன், திருமதி மானரட் பிரான்சிஸ், செல்வி செல்வநாயகி அமரசிங்கம், செல்விகள்: ரூபராணி யோசேப், செல்வமணி வடிவேல் ஆகியோர்
பேச்சாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர், இயக்க ரீதியில் மாதர் பலர் பேச்சாளர்களாக மட்டுமல்லாது செயலாளர்களாகவும் கலந்துகொள்ள வேண்டிய காலக்கட்டம் ஒன்று உருவானது. இது 1957ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாளில் உருப்பெற்ற சிங்கள "சிறீ போராட்டத்திற் கைகூடியது. அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் தத் தமது மோட்டார் வாகனங்களில் தமிழ் எழுத்துக்கள் பதித்த தகடுகளைப் பொறித்தனர். இவர்களைத் தொடர்ந்து, வீதிவழியே வந்த தனியார் வாகனங்களை மறித்துத் தமிழ் இலக்கத் தகடுகளைப் பொறிக்கும் பணியில் ஈடுபட்டனர் தமிழரசுத் தொண்டர்கள் பலர், இவர்களைப் போலவே, செந்தமிழ் நங்கையர் பலரும் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
"அகப்பை பிடிக்கும் கைகள்' எனப் பலரும் எண்ணிய கைகள், அருந்தமிழ் இலக்கத் தகடுகளைப் பிடித்தன; தமிழன்னை யின் தொல்லை நீக்கப் போரிட்டன!
"அன்னமூட்டிய தெய்வ மணிக்கை ஆணைகாட்டில் அனலையும் விழுங்கும்" என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. ஈழத் தமிழ்நாட்டு நங்கைகள் புரிந்த இந்தப் புனிதப் பணி, அந்தக் கவிஞனின் எண்ணக் கூற்றை மெய்ப்பித்துக் காட்டியது.

31
இதிலும், தமிழிற்கு வந்ததோ ஆபத்து என்று தலையைக் கொடுத்திட வந்தவனாம் தலைவர் வன்னியசிங்கத்தின் வீராங்கனை கோமதியும், கடையடைப்பு வைபவத்திற் கலந்து கொண்டோர் பலரும் பங்கு கொண்டனர். இவர்களை விட, செல்விகள்: மங்களேஸ்வரி சதாசிவம், பத்மாவதி வேலுப் பிள்ளை முதலியோரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். ஏழுமாதப் பாலகனான என் மகன் காண்டீபனுக்குப் பாலூட்டும் நிலையிலிருந்த நானும், வண்டிக்குள் மகனிருக்க, இடையிடையே, அவனுக்குப் பாலூட்டிவிட்டுத் தெருவில் நின்று தமிழ் இலக்கம் பொறிக்கும் பணியில் ஈடுபட்டேன் என்றால் - இயக்கத்திற் பெண்கள் கொண்டி ருந்த பங்கின் பாங்கு எத்தகையதென்பதை மக்கள் அறியக்கூடியதாகவிருக்கும். இப்படியே இந்த இயக்கம் விஸ்தரிக்கப்பட்டு நடந்தது. அடுத்த இயக்கம் 1958 ஏப்ரலில் பெண்களை அழைத்தது. பஸ் வண்டிகளில், பஸ்தரிப்பு நிலையங்களில் சிங்கள 'சிறீயை அழித்துத் தமிழ்ச் "சிறீயை அவர்கள் பொறித்தார்கள். இதன் விளைவாக அவர்கள் பொலிஸ்நிலையங் கொண்டு செல்லப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, கோடுகளிலே நிறுத்தப்பட்டு, கோடு கலையும் வரையிலான சிறைத்தண்டனைக் கும் ஆளாக்கப்பட்டனர்.
இவ்வியக்கம் மட்டக்களப்பிலும், திருக்கோணமலையிலும் ஏககாலத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு இயக்கத்தில், திருமதிகள்: கலா சாம் தம்பிமுத்து, செல்வநாயகி அமரசிங்கம் போன்றோர் தலைமையிலும்;
திருக்கோணமலை இயக்கத்தில் திருமதி அருந்ததி கனகசபை, செல்வி லீலா போன்றோர் தலைமையிலும் பல மாதர்கள் பங்குகொண்டு போராடினர். இப்படியாகப் பெண்களின் ஆர்வத்தோடு பல போராட் பங்களும் சிறப்புற நடைபெறலாயின.
1958ஆம் ஆண்டு, மே மாதம் கட்சியின் 6ஆவது மாநாடு வவுனியாவில்

Page 443
4.
நடைபெற்றது. சரித்திரப் பிரசித்திபெற்ற சிறப்பான மாநாடாக இம் மாநாடு அமைந்தது. இம் மாநாட்டின் நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமான மாதர் மாநாட்டிற் பங்குகொள்ளவென, நிறையப் பெண்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கோண மலை போன்ற தூர இடங்களிலிருந்தும் வருகை தந்தார்கள்.
அவ்வாறு வருகை தந்தவர்களில்,
திருமதி செல்வநாயகம், பெண்கள் தலைவி திருமதி கோமதி வன்னியசிங்கம், திருமதி அருணாசலம், செல்வி பத்மாவதி வேலுப்பிள்ளை, திருமதி சமாதானம் சோமசுந்தரம், திருமதி பொன்னம்மா அழகரத்தினம், திருமதி வைத்திலிங்கம், செல்வி செல்வமணி வடிவேலு, ஒவசியர் வேலுப்பிள்ளை அவர்களின் புத்திரிகள் போன்றோர் குறிப்பிடத்தக்கோராவர். மொத்தத்தில் ஓர் மாதர் அணியே வவுனியா மாநாட்டில் திரண்டு நின்றது எனலாம்.
இது ஒருபுறமிருக்க, மட்டக்களப்பி லிருந்து மாதர் பலர் வரமுடியாததொரு நிலைமயைப் பொலநறுவையிற் சிங்களக் காடையர்கள் சிலர் ஏற்படுத்தின்ர். ஆனாலும் துணிச்சலுடன் (செல்வி கலா மாணிக்கம்) திருமதி சாம் தம்பிமுத்து, திருமதி மாணிக்கம் போன்றோர் மாநாட்டை வந்தடைந்தனர்.
மாநாட்டிற்கென வருகைதந்த அத்தனை பெண்களையும், வண்டமிழ் செழித்து நெல் கொழிக்கும் வன்னிநாட்டு மக்கள், தங்கள் இல்லங்களுக்கு அழைத்து விருந்தோம்பி யுபசரித்தனர்.
மாநாட்டிற்குச் செல்லும் போதும் திரும்பி வரும்போதும், எமக்காகப் புகை வண்டியின் இரு பெட்டிகள் பதிவுசெய்ய்ப் பட்டிருந்தன. துடிப்புள்ள எம் வாலிபர்கள் சிலர் நாம் சென்றுவந்த புகைவண்டிகளில் எம் கட்சியின் மூவர்ணக் கொடிகளை

2
நாட்டிப் பறக்கவிட்டனர். கண்கவர் - கருத்துநிகர் மூவர்ணக் கொடியுடனும், பொறுப்புள்ள தலைவர்களுடனும், வீறு கொண்ட வாலிபர்களுடனும், சிங்கார மறக்குலப் பெண்களுடனும்புகைவண்டி சென்ற காட்சியோ கண்கொள்ளாக் காட்சி! இதற்கு முன்புமில்லைப் பின்புமில்லை இப்படியொருகாட்சி!
மூவர்ணக் கொடியுடன் புகைவண்டி வவுனியா நிலையத்தை சென்றடையவே, வன்னி நாட்டு மக்கள் கொடிகளுடன் அணி திரண்டு வந்து வரவேற்றனர்.
மாநாட்டில், "ஆகஸ்ட் 20க்குப் பிந்தாமற் போராட்டம்" என்ற உறுதி மொழி தலைவர்களாற் தரப்பட்டபோது, ஆண்களும் பெண்களும் சேர்ந்து அதை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
வெற்றிகரமாக மாநாடு முடிந்து வீடு திரும்பியதும், நாட்டில் வகுப்புக்கலவரம் வெடித்தது! தலைவர்கள் கைதாயினர்!! குடும்பங்களும் தமிழினமும் தவித்தன!!! அப்போது, தடுப்புக்காவல் சிறையில் கொழும்பில் வன்னியனார் இருக்க, திருமதி கோமதி வன்னியசிங்கமவர்கள் சிங்ள சிறீ அழிப்பு வழக்கில் கைதாகி நீதிமன்றத்தில் நின்றார். அதே நிலையில் அவர் தலைமை யில் சென்ற நானும், என் கணவர் தடுப்புக் காவலில் வன்னியனாருடன் இருக்கத் திருமதி வன்னியசிங்கத்துடன் மல்லாகம் நீதிமன்றத்தில் கைதியாகி நின்றேன். எங் களுக்கும் செல்வி மங்களா கிறிஸ்தோப்பர் என்ற பெண்ணுக்கும் நீதிபதி கோடு கலையும் வரை சிறைத்தண்டனை வழங்கினார். சிறையில் கைதியாகித் தன் கணவனைப் பிரிந் திருந்த திருமதி வன்னிய சிங்கமவர்களுடைய துணிவும், ஆற்றலும் தான் என்னைப்போன்ற இளவயதுப் பெண்களுக்குத் துணிச்சலைத் தந்தது என்று சொல்லவேண்டும்.
தன் வீட்டையே ஒர் பாசறையாக்கி, இரவு பகல் வருபவர்க்கு அரசியல் விளக்கமும் கொடுத்து, அருமையான உணவும் படைத்து, தமிழினத்தின் ஒப்பற்ற தலைவனாக விளங்கிய வன்னியசிங்கத்திற்கு

Page 444
4. வலதுகரமாகத் திகழ்ந்தவர் கோமதியவர்கள். இதை இன்றைய இல்லத்தலைவிகள் உணரவில்லையே! தாமும் தம் குடும்பமும் என்றிருப்பவர்கள் மனதில் கொள்ளவில்லை யே! இது எமது இதயத்திற்கு மிகவும் கவலை தரத்தக்கதொரு விடயமாகும். கோமதியம்மை யாரைப்போல இல்லாவிட்டாலும், ஒரளவு தன் தலைவனுடன் திருமலையில் அரசியல் வேலைகளில் கைகொடுத்துத் தன் சிறிய பணியால் அங்குள்ள பெண்களுக்கு வழிகாட்டியாக நின்றார் திருமலை ஜோதி மறைந்த மாவீரன் இராஜவரோதயத் தின் இல்லக்கிழத்தி. அன்று தலைவிகளாக நின்றவர்கள் தலைவர்களைப் பறிகொடுத்த அவல நிலையில் அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
இதன்பின் வந்தது 61- சத்தியாக்கிரகம். பட்டிதொட்டிகளெல்லாம் பிரசாரக் கூட்டங்கள் நடாத்தி, 61ஆம் ஆண்டு சத்தியாக்கிரக இயக்கத்திற்கான பிரசார வேலைகள் நடைபெற்றன. இதில் பெண்களும் சேர்ந்து ஈடுபட்டனர். பின்னர் சத்தியாக்கிரக இயக்கங்களில் தலைமைதாங்கிப் al பெண்கள் பணிபுரிந்தனர். குறிப்பாக இரவும் பகலும் அந்த இடத்திலே இருந்தவர்கள் ஒரு சிலர். திருமதி வைத்திலிங்கம், திருமதி பொன்னம்மா அழகரத்தினம், செல்விகள்: வாமசக்தி, ராதா, மகேஸ்வரி, கமலா போன்றவர்களைக் குறிப்பிடலாம். திருமதி கமலா அம்பலவாணர், சாமியம்மா என்றழைக்கப்படும் திருமதி சிவபாக்கியம் கந்தையா, இராசாத்தி அம்பலவாணர் போன்ற யுவதிகள் தொடர்ச்சியாக இருந்தனர். இதைவிடத் தொகுதிவாரியாகப் பெண்தொண்டர்களைத் தலைமைதாங்கி வந்தார்கள்; திருமதி இராஜபூபதி அருணாசலம், திருமதி சாந்தா இராமலிங்கம், திருமதி துரைரத்தினம், திருமதி பிலிப், திருமதி இராஜசேகரன் போன்றோர். இன்னும், இரவு பகல் முழுவதுமிருந்த

3.
பெண்கள் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட வில்லை. ஆண்களுடன் பெண்களும் பல்லாயிரக் கணக்கில் சத்தியாக்கிரக இயக்கத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பிலே, திருமதி உலகசேகரம், திருமதி இராஜதுரை, திருமதி இராசமாணிக்கம், திருமதி தோமஸ், திருமதி கிறேஸ் முத்துக்குமாரு, திருமதி மாணிக்கம் போன்றோரும் ஈடுபட்டனர். திருமதி இராஜவரோதயம் போன்றோர் திருமலையில் கலந்து பல பெண்களுடன் ஈடுபட்டார்கள். மன்னாரிலும் பெண்கள் கலந்து கொண்டனர். வவுனியாவிலும் திருமதி தா. சிவசிதம்பரம் போன்றோர் கலந்து கொண்டனர். இயக்கம் பிரிவினை இன்றி - சாதி, மத, கட்சி வேறுபாடின்றி மும்முரமாக நடைபெற்ற வேளையில் - அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவந்து தலைவர்களைக் கைது செய்தவேளையில் - என்னையும் என் கணவருடன் சேர்த்துக் கச்சேரி வாசலில் கைதுசெய்து கொண்டு போய்க் காங்கேசன் துறை இராணுவ முகாமில் அடைத்தனர். அதன்பின் அங்கிருந்த பெண்களைப் பொலிஸ்வேனில் ஏற்றிக்கொண்டுபோய் ஒரு சில மைல் களுக்கப்பால் தனிமையான இடத்தில் விட்டனர். அந்தநேரம் நள்ளிரவு 12 மணி. என்னைக் கைதுசெய்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பொலீசார் வந்து, "என்னையும் கைது செய்யப் போகிறோம்" என்றவுடன், சுற்றியிருந்த ஏனைய பெண்கள், "எங்களையும் கைது செய்யுங்கள்" என்று உணர்ச்சியோடு கூறினர். அவர்களிற் பலர் விவாகமாகாத இளம் பெண்கள். இராணுவத்தினரின் கையில் அவர்கள் எக்கதி அடைவார்களோ என்று ஏக்கமுற்ற நான், அங்கிருந்த பொறுப்புவாய்ந்த மூதாட்டி திருமதி வைத்தியலிங்கமவர்களிடம் அப்பெண்களைப் பாதுகாப்பாக வீடுசேர்க் கும் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றேன். இராணுவத்தினரால் தனிமையில் கொண்டு விடப்பட்ட அப்பெண்களைத் திருமதி

Page 445
4.
வைத்திலிங்கம், திருமதி சீ. பொ. வேலாயுதபிள்ளை போன்ற கடமை வீராங்கனைகள் வீடுகளில் சேர்த்தனர். அன்றிரவு அங்கிருந்த உரும்பராயைச் சேர்ந்த திருமதி செல்லம்மா வைத்திலிங்கம் அந்தப் பெண்களுக்குப் பொறுப்புணர்வோடு தலைமை தாங்கி, மறுநாள் ஒவ்வொருவரை யும் வீடு கொண்டுபோய்ச் சேர்த்த பெரும் தொண்டை மறக்கமுடியாது. அதன்பின் 63ஆம் ஆண்டு எல்லாம் தமிழியக்கம் ஆரம்பமாகியது. அதிலும் தபாற்கந்தோர் களில் நின்று, பெண்கள் பலர் "எதையும் தமிழில் செயல்படுத்துங்கள்” என்று பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதன் பின்னர் மந்திரிமாருக்குக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும், வேறுவகையான எதிர்ப்பும் காட்டப்பட்டது. பருத்தித் துறையிலும், யாழ்ப்பாணத்திலும் மக்கள் வங்கிக்கு முன்பாக நடாத்திய கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திலும் பெண்கள் பலரும் வந்து சேர்ந்து பங்கு கொண்டார்கள். இதன் பின்னர் மக்களை ஒற்றுமைப் படுத்தவும், சாதி வித்தியாசத்தை ஒழிக்கவும் பாத யாத்திரையைத் தந்தை செல்வா தொடங்கினார். இதிலும் பெண்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்கள். இயக்கத்தின் இரு கண்களாகத் தமிழரசு வாலிப முன்னணியும், மாதர் முன்னணியும் விளங்கின.
ஆண்களோடு பெண்க வாழ்வம் இ
O
மதர் தம்மை மடைமையைக்

இதன்பின்னர் தமிழரசுக்கட்சி ஒப்பந்தத்தின் நிமித்தம் அரசாங்கத்துடன் ஒத்துழைத்துக் கொண்டிருந்தமையால் போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் 70ஆம் ஆண்டுத் தேர்தலின்பின் தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளையும் சேர்த்துத் தமிழர் கூட்டணி அமைத்து இயங்கி வந்தபடியால். தமிழரசு மாதர் முன்னணி இயங்க முடியாது போய் விட்டது. தற்போது தமிழ்மகளிர் பேரவை' என்ற பெயரில் வேறு அரசியல் கட்சிகளின் பெண்களையும் சேர்த்து - மீண்டும் உண்ணாவிரதம், சட்டமறுப்பு இயக்கங்கள் முதலியவைகளை நடாத்தி வருகிறது. இன்றும் பல ஆர்வமுள்ள மகளிர் கலந்து மென்மேலும் தமிழர் கூட்டணி இயக்கத்திற்கு வலுவூட்டி வருகின்றனர். பாரதிதாசன் சொன்னதுபோல, பகர்கின்ற செந்தமிழின் பழிநீக்குவோம் - தமிழ்ஈழம் காண்போம்! வளமுடன் வாழ்வோம் - பெண்களெல்லாம் திரண்டுவாரீர்! வாரீர்!! என்று அழைக்கின்றோம்.
வாழ்க தமிழ்! வளர்க மதர்தம் தமிழ்த் தொண்டு! வெல்க தமிழிம்ை!
ளும் சரிநிகர் சமானமாக ܠܐ pத நாட்டிலே!
இழிவு செய்யும் கொளுத்துவோம்!

Page 446
ர்திலகமு ப்பு
மிழ சந்தி
திலகமும் த
0.66
கனிவுமிகு
LI I Loo - o " o o " " "
தமிழர் திலகம் தலைமை
 
 
 
 

"இலங்கைத் தமிழரின் உரிமை வாழ்வுக்கான உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் எங்கள் இதயபூர்வமான " ஆக்கபூர்வமான ஆதரவு களை வழங்கிட என்னாலான அனைத்து முயற்சிகளையும் தயங்காமல் மேற்கொள்வேன் என்பதை, நான் சார்ந்துள்ள தி.மு. கழகம் சார்பாகவும்- தமிழகத்து வாழ் என் உடன் பிறப்புக்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று உறுதிமொழி பகர்ந்து (எம்.ஜி.ஆர்) இலட்சியத் தம்பதிகளின் உள்ளங்கட்கு விருந்தளித்த புரட்சித் தம்பதிகள், கூடவே பல்சுவை உணவுவகை பகிர்ந்து கொண்டதன்மூலம் அவர்களது உடல்களுக்கும் விருந்தளித்து உபசரித்திடத் தயங்கவில்லை. படத்தில் மக்கள்திலகம், எம்.ஜி. இராமச் சந்திரன் எம்.எல்.ஏ.யும் அவர் மனைவியும் முன்னாள் திரைப்பட நாயகியுமான திருமதி எம்.ஜி. இராமச்சந்திரனும் (வி. என். ஜானகி, திருமதி அ. அமிர்தலிங்கமும், தமிழர்திலகம் திரு. அ. அமிர்தலிங்கமும் எம். ஜி. ஆர். அவர்களின் இல்லத்தில் காணப்படுகின்றனர்.
ண்டகால உண்மைத்தொண்டின் - கடின உழைப்பின் பறும்பேறாகக் கட்சியின் 6வது தலைவராக, அதன் 2வது மாநில மாநாட்டில் (1973-9-7) தரிவுசெய்யப்பட்டார் தளபதி - நாவலர் உயர்திரு. அ. அமிர்தலிங்கம், B.A., அவர்கள். வரலாற்று மக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில், தமக்குமுன் லைசிறந்த தியாகத் தலைவர்கள் ஐவர் அலங்கரித்த அப்புனித ஆசனத்தை - தலைமை ஆசனத்தை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்ற நாவலர் அமிர் தன் அறிகுறியாக ஆற்றும் தலைமைப் பேருரைக் ாட்சியைக் கண்டுகளித்திடும் பாக்கியம் பெற்றிடுவீர்!

Page 447
முஸ்லிம் பெரியாருட
 

༄༽ ன் தமிழ்ப் பெரியவர்
Hil
m
பாரதநாட்டு முஸ்லிம்களின் தந்தை யென வர்ணிக்கப்படும் பெருந் தலைவர் உயர் திரு. காயிதே மில்லத் அவர்களைச் சந்திக்கும் பேறுபெற்ற அளப்பரிய மகிழ்ச்சிப் பிரவாகத்தில் மிதக்கிறார் ஈழ நாட்டுத் தமிழ் மக்களின் தந்தை செல்வநாயகம் அவர்கள். அ வ்வாறே காயிதே மில் லத் அவர்களும் என்பதற்குச் சாட்சியே இக் காட்சி!
மிழகம் கெளரவித்தது!
சேய்த் தமிழகத்திலிருந்து தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த மூதறி ஞரை வரவேற்று விருந்தோம்பி உபசரித்த தமிழகம் வாழ்த் தி வணங்கிக் கெளரவிக்கவும் தவற வில்லை. பெரிய வர் செல்வா விற்குத் தமிழக அரசின் கல்வி யமைச்சரும், ஆளும் தி.மு.க. பொதுச் செயலாளருமான நாவலர் டாக்டர் வி.ஆர்.நெடுஞ்செழியன், எம். ஏ., எம்.எல்.ஏ. அவர்கள் அகமும் முகமும் மலரப் பொன் னாடை போர்த்துக் கரங்கூப்பி வணங்கும் இக் காட்சி அதனை நிரூபிக்கிறதல்லவா?

Page 448
பூக்கும் தமிழ் ஈழத்தில்
உணர்ச்சி
கோவை
ஆசிரியர்,
தமிழரசின் வெள்ளிவிழா
Tழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலைத் தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நிற்கின்ற பழந்தமிழ் ஈழநாட்டை மீட்டிடுகின்ற மகோன்னதமான இலட்சியப் பயணத்திலே நம்மை நாமே ஈடுபடுத்திக் கொண்டு 1974ஆம் ஆண்டு டிசெம்பர் 18ஆம் நாளுடன் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன! நம்முடைய உயிரோடு உயிராக - உணர்வோடு உணர்வாக இரண்டறக் கலந்துவிட்ட தமிழினத்தின் விடுதலைப் பாசறையாம் நம் தமிழரசு இயக்கத்துக்கு இஃது வெள்ளி விழா! கள்ளமற்ற மனத்துடன் நம் உள்ளம் ஏற்றுக் கொண்டிருக்கும் உன்னத இலட்சியமாம் தமிழ்ஈழ விடுதலை கண்டிடப் போர்க்கொடி உயர்த்திப் புதுப்பரணி Lחו L{_ - செந்நீருக்கும் கண்ணிருக்கும் | மத்தியிலே - நம் செந்தமிழ்த் தாய் சிரிக்கின்ற நாளைக் கண்டிட நாம் மேற் கொண்டிருக்கும் பயணத்திலே இருபத்தைந் தாவது மைல் கல்லை இந்த ஆண்டுடன் தாண்டிவிட்டோம் என்பதை எண்ணும் போது இதயத்திலே ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கும், பூரிப்புக்கும், நிறைவுக்கும் ஈடேது? இணையேது?
இருபத்தைந்தாவது ஆண்டுகள் முடிவடைகின்ற இந்த நேரத்திலே - நம் இயக்கம் நடந்துவந்த வழியைத் திரும்பிப் பார்த்திடின் - அப்பப்பா - நாம் சந்தித்திட
 

பொன்விழா எடுப்போம்!
எழுத்தாளர்
மகேசன் ‘சுதந்திரன்'
நேர்ந்த இன்னல்கள், இடுக்கண்கள் எத்தனை எத்தனை? சந்தித்த அடக்குமுறைகள் எத்தனை எத்தனை? கொடுக்க வேண்டியிருந்த பலிகள் எத்தனை எத்தனை? எவ்வளவு இரத்தம் சிந்தவேண்டியிருந்தது? எத்தனைபேர் தங்கள் எலும்புகளை முறித்துக் கொடுக்கவேண்டியிருந்தது? எத்தனை தொண்டர்கள் தங்கள் வாழ்வையே பலிகொடுக்க நேரிட்டது? என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்திடின் - "தண்ணிர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா - இப்பயிரைக் கண்ணிரால் காத்தோம்! என்கிற பாரதியின் பாடலே நம் நினைவுக்கு வந்திடுகிறது!
தமிழர்களாகிய நாங்களும் மற்றச் சிறுபான்மையோரும் இப் பெரும் பா ன் மை யோ ரின் ஆட்சியை ஏற்க மாட்டோமென்று தீர் மா னி த் து வி ட் டோ ம் ! தன்மானத்தோடு, சுயகெளரவத் தோடு இந்நாட்டில் வாழச் சங்கற்பம் செய்திருக்கும்
தமிழினத்தைச் சேர்ந்தவன் என்ற முறையிலேயே இதை நான் கூறுகிறேன். ஆளும் உரிமையோடு - சொந்த நாட்டிற்குடியிருப்ப வராக இலங்கைக்கு நாம் வந்தோமேயன்றி அன்னிய எஜமானுக்கு அடிமைகளாக அல்ல என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஐரோப்பியக் கடற்படை அரசுகளாகிய போர்த்துக்கேயர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோருடைய வருகைக்கு முன்நாம் எந்த அந்நிய ஆட்சிக்கும் அடங்கி வாழ்ந்ததில்லை! என்று 1944ஆம்

Page 449
-
ஆண்டு ஆவணி மாதம் 29ஆந் திகதி கொழும்பு நகரமண்டபத்தில் நடைபெற்ற தமிழர் மகாசண்பக் கூட்டத்தில் விடுதலை முழக்கமெழுப்பி - ஈழத் தமிழினத்துக்கு சுயநிர்ணய உரிமைழ்ே வேண்டும் என்று பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு மந்திரிக்குத் தந்தி அடித்துத் தமிழ்ச் சமுதாயத்தின் சுதந்திர உணர்ச்சிய்ை வெளிப்படுத்திய தலைவர்கள் - அந்த இலட்சியத்திலிருந்து சற்றுத் தடுமாறித் திசைமாறிய நேரத்தில் - தமிழ் சமுதாயம் தறிகெட்டு - விடுதலைப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தகுந்ததோர் தன்மான இயக்கமின்றித் தடுமாறிய வேலையில்தான் - தமிழ் ஈழநாட்டின் விடுதலைப் பாசறையாகத் தமிழரசு இயக்கம் தலையெடுத்தது.
தூய்மை
நேர்மை
கண்ணியம்
தியாகம்
வாய்மை
அந்தரங்கசுத்தி
விடாமுயற்சி
உறுதி
ஆகிய அத்திவாரங்களின்மீது 1949ஆம் ஆண்டு டிசெம்பர்த் திங்கள் 18ஆம் நாள் உருவாக்கப்பட்ட எஃகு கோட்டையான தமிழரசுக்கட்சி - அன்று கருத்துவேறுபாடு காரணமாக விட்டுப்பிரிய நேரிட்டவர் களையும் ஏனைய தமிழர்களையும் இலட்சியத்தினால் இறுகக் கட்டியணைத்து - தமிழர் கூட்டணியெனும் தமிழின விடுதலைப்பேரியக்கமாக விரிவடைந்து சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கிற தென்றால் - இந்த வெற்றியைக் கண்டிடுவதற்கு எத்தனை கல்லையும், முள்ளையும், கானாறுகளையும் நாம் கடக்கவேண்டியிருந்தது? எத்தனை பயங்கரப் புயல்களையும், சூறாவளிகளையும் நாம் சந்திக்க வேண்டியிருந்தது? எத்தனை நம்பிக்கைத்துரோகிகளை நாம் சமாளிக்க வேண்டியிருந்தது. நினைத்தால் ஒரு நீண்ட பெருமூச்சன்றோ ஏற்படுகிறது.

38H
நம்முடைய அரசு
இக்கட்டுரையின் மத்தியில் பார்க்கி
றோமோ நெஞ்சு பதறுகின்ற ஒரு காட்சியை துப்பாக்கி முனைக்குத் துணிச்சலுடன் தன் நெஞ்சைக் காட்டுகின்ற ஒரு வீரனை இந்த வீரன் வியட்னாம் நாட்டுக்காரனோ, அல்லது பாலஸ்தீன விடுதலை வீரனோ அல்ல;நம் தமிழரசுப் பாசறை உருவாக்கிய ஒரு இலட்சிய வீரன்! தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகத் தன் உயிரையும் அர்ப் பணிக்கத் தயாராகக் காணப்படும் இந்த வீரன் நம்முடைய அரசு! தமிழரசுத் தொண்டன் 1961ஆம் ஆண்டு நடைபெற்ற அறப்போராட்டத்தின் போதுதான் இந்த நெஞ்சுருக்கும் சம்பவம் நிகழ்ந்தது! கோழைகளே இல்லாத வீரர்கள் நிறைந்த பாசறையே இந்த இயக்கம்! தியாக வீரர்கள்
இதுபோல அரசாங்கத்தின் எத்தனை யோ அடக்குமுறைகளுக்கு இந்த விடுதலை இயக்கம் எத்தனையோ தடவைகள் ஆட்படுத்தப்பட்டும் - 1956ஆம் ஆண்டுக்கும் 1962ஆம் ஆண்டுக்குமிடையே இரண்டு தடவைகள் ஆட்சியாளரால் தடைசெய்யப் பட்டும் - எட்டப்பர்களும் இனத்துரோகி களும் இந்த இயக்கத்தை ஒழித்துக்கட்டிட எத்தனையோ இழி முயற்சிகளையும் தந்திரோபாயங்களையும் மேற்கொண்டும் - எம்மை யாராலும் எதுவுமே செய்ய முடியவில்லை யென்றால் - நமது தமிழரசு இயக்கம் தமிழ் மக்களின் உள்ளம் எனும் மலர்ப்படுக்கையுடன் ஒன்றி இருப்பதுதான் அதற்குக் காரணமாகும்!
ஆம், தமிழரக் இயக்கம் இந்நாட்டுத் தமிழனின் இதய வீட்டிலே குடியிருக்கும் இலட்சிய தீபம் சிங்கள ஏகாதிபத்தியக் கடலிலே சிக்கித் தவித்திடும் தமிழர் சமுதாயத்திற்கு ஒரு திசையறிகருவி தமிழ் ஈழ நாட்டுக்கு விசுவாசமுள்ள ஒரு தொண்டன் - தமிழர் வீட்டுக்கு ஒரு ஒளிவிளக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கங் களுக்கெல்லாம் மூலவித்து

Page 450
தனது இடைவிடாத கால் நூற்றாண்டுப் பணியினால் - சிதறிச் சின்னா பின்னப்பட்டு, பிரதேச, மத, சாதிப்பிரிவினை கள் பேசிக்கிடந்த ஈழத் தமிழர் சமுதாயத்தை ஒரே தேசிய இனமாக ஒன்றுதிரட்டி - நாம் இந்நாட்டில் ஆண்ட இனம், அடிமை இனமல்ல என்பதனை ஈழத் தமிழனுக்கு உணர்த்தி - 1956ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழிக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி - தியாகத்தீயில் குளித்துப் புடமிடப்பட்ட எண்ணற்ற தியாகிகளை உருவாக்கி - தமிழ் இளைஞர்களை இலட்சிய வீரர்களாக மாற்றி - நாம் வாழ வேண்டுமென்றால், மீண்டும் நம்மை நாமே ஆளவேண்டும் என்கிற எண்ணத்தைத் தமிழர் அனைவரது உள்ளங்களில் உறுதியாகப் புகுத்தி - தன்னம்பிக்கையை ஏற்படுத்தி - தமிழ் ஈழ விடுதலைக்காகப் போராடி வருகின்ற பாசறையாக இன்றைக்குத் தமிழரசுக்கட்சி செயல்பட்டு வருகின்றது!
ஈழத் தமிழினத்துக்காக உள்ளும் புறமும் ஒன்றிணைந்திட - உண்மையுடன் உழைத்து - அதிலேயே தன் இன்னுயிர் நீத்த
 

கர்மவீரர் அமரர் வன்னியசிங்கம் -
திருமலை ஜோதி அமரர் இராசவரோதயம்இரும்பு மனிதர் அமரர் நாகநாதன் - மூதூர் முதல்வர் அமரர் ஏகாம்பரம் - காவலூர் அமரர் வி. ஏ. கந்தையா - மன்னார் முத்து அமரர் வி.ஏ. அழகக்கோன்கிழக்கின் ஜோதி அமரர் இராசமாணிக்கம்; கொடிகாத்திடக் குண்டடிபட்டு உயிர் நீத்த திருமலைத் தியாகி நடராசன் - மொழிப்போரில் உயிர் நீத்த
மட்டுநகர் மாணவர் இராசேந்திரன் - மலையகத் தோழர்கள் ஐயாவு - பிரான்சிஸ் தமிழ் விரோதிகளால் சாகடிக்கப்பட்ட
கொடிகாமம் "ஐயா" - அறப்போரணித் தலைவர் அமரர்
ஆர். டயிள்யூ. வி. அரியநாயகம் - உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்குத் தந்த
விரத்தம்பி சிவகுமாரன் போன்ற இயக்கத்தின் எண்ணற்ற தியாக வீரர்களை எண்ணிப்பார்த்து - அவர்கள் அனைவருக்கும் இந்த வெள்ளி விழா நேரத்தில் மலர்தூவி இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துவோம்!

Page 451
அதே நேரத்தில் - இந்த இயக்கத்தை ஒழித்துக்கட்டிட ஆரம்பகாலத்தில் எதிரிகள் எத்தனையோ கணைகளை ஏவிய நேரத்தில், அதற்கெல்லாம் தாக்குப்பிடித்து - தமிழரசுப் பயிரைக் காட்டெருமைகள் மேய்ந்து விடாது, கண்இமைபோல் பாதுகாத்து - தமிழினத்துக்கு நிழல் தருகின்ற பெருமரமாக இன்றைக்கு அதை வளர்த்துத் தந்திருக்கின்ற கட்சியின் பழம்பெரும் மூத்த உறுப்பினர் களை - அவர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் இருக்கும் திசைநோக்கித் தொழுதிடுவோம்! அவர்களது தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் இல்லாவிடின் - இந்த இயக்கம் இவ்வளவுதூரம் வாழ்ந்திருக்க முடியாது. வளர்ச்சியடைந்திருக்கவும் முடியாது!
இன்றைக்குச் சிறைகளிலே வாடிக் கொண்டிருக்கிறார்களே தமிழ் இளைஞர்கள் கடந்த பல ஆண்டுகளாகத் தமிழினத்தின் உரிமைகளைக் கோரிய குற்றத்துக்காக! அந்தத் தியாகத் திருவிளக்குகளையும் இந்நேரத்தில் நம் நெஞ்சில் நிறுத்தி - அவர்களுடைய ஈடிணையற்ற உறுதிக்குத் தலை வணங்குவோம்!
தமிழரசின் பொன்விழா
இந்தப் பொன்விழா நேரத்தில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய மிகப்பெரிய உறுதிமொழி ஒன்று உண்டு. நம்முடைய இயக்கத்தின் வெள்ளிவிழா - வெறும் விழா என்ற அளவில் மட்டும் முடிந்துவிடக் கூடிய தொன்றல்ல இருபத்தைந்து ஆண்டுகாலம் நாம் ஆற்றியபணி - நாம் ஆற்ற வேண்டிய

40
பணியோடு ஒப்பிடுகையில் மிகவும் அற்பமே! எனவே இயக்கத்தின் பணி வெள்ளி விழாவுடன் புதியவேகம் பெற்றிட வேண்டும்!
எந்த அளவுக்கு அது வேகம் பெற்றிட வேண்டுமென்றால் - இப்போது இயக்கத்தின் வெள்ளிவிழாவைக் கொண்டாடுகிற நாம் - இரண்டாயிரம் ஆண்டளவில் இயக்கத்தின் பொன்விழாவைக் கொண்டாடுகிற நேரத்தில், அதைச் சுதந்திரம் பெற்ற நம்முடைய தமிழ் ஈழத்தில் - சுதந்திரம் பெற்ற மக்களாக அதைக் குதூகலத்துடன் கொண்டாடுவோம் என்கிற உறுதியேற்று - அதை நிறைவேற்றுகிற அளவுக்கு நமது இயக்கம் வேகம் பெறவேண்டும்!
நம்முடைய இயக்கத்தின் பொன்விழா - அடிமைத் தளையறுத்துச் சுதந்திரம் பெற்ற நம்முடைய சொந்தத் தாயகத்தில் - தமிழ் ஈழத் திருநாட்டில் நடைபெற வேண்டும் - நடத்தியே தீருவோம் என்கிற அந்த உறுதியை இந்த வெள்ளிவிழா நேரத்தில் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!
இயக்கத்தின் பொன்விழா நடை பெறுகிற நேரத்தில் ஒருவேளை நம்மில் எத்தனைபேர் இருப்போமோ, இல்லையோ அதுவேறு விடயம்! ஆனால் தமிழரசுக் கட்சியின் பொன்விழா - விடுதலைபெற்ற தமிழ் ஈழத்தில்தான் நிச்சயம் நடைபெறும்! நடைபெறவேண்டும்! அந்த நம்பிக்கை எனக்கு அசைக்கமுடியாத அளவு உண்டு!

Page 452
அறப்பே எழுச்சி எ
കnചG
கிளியை விருந்தாக்க முனைந்த பருந்து
குெப்புவாதத்தின் தலைவாயிலுக்கு நாட்டை அழைத்துச்சென்று, சிங்களத்தில் வாழ்ந்த தமிழரைக் கொன்று குவிக்கும் நிலைக்கு வழிவகுத்து, அதன்மூலம் சிங்களத்துக்கு உலக அரங்கிலே நீங்கா வசையைத் தேடித்தந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1960இல் தமிழர் விடுதலை இயக்கமாம் தமிழரசுக்கட்சிக்கு நேசக்கரம் நீட்டியது. ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சியை அகற்றிச் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசமைக்க உதவினால் தமிழர்களின் குறைந்த பட்சக் கோரிக்கையை வழங்க அது முன் வந்தது. அரியனை உரை விவாதத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஐ. தே. க. அரசு நீக்கப்பட்டாலும் சிறீலங்கா அரசு பதவியேற்கவில்லை. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே ஐக்கியம் நிலவிய சூழலில் 1960ஆம் ஆண்டில் இரண்டாவது பொதுத்தேர்தல் யூலையில் நடைபெற்றது. ஒப்பந்தத்தை நிறைவேற்ற வாய்ப்பளிக்கும் வகையில் தந்தை செல்வா தமிழீழத்திற்கு வெளியேயுள்ள தமிழர்கள் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். சுதந்திரக்கட்சி அமோக வெற்றிபெற்றது. தந்தை செல்வாவின் வெற்றி கேட்ட சிங்களம் "ஜெயவேவா செல்வநாயகம் மகாத்மயா" என வெடிகொழுத்தி ஆர்ப்பரித்தது. இனவெறிக்குப் பலியாகிய பண்டாரநாயக்காவின் விதவை மனைவி யான சிறீமாவின் ஆட்சியில் இலங்கையிலே,

T 1961
ழுத்தாளர்
கசன்
". ஆடற்கிளியும் பருந்தும்
ஒருகூட்டில் வாழும் உலகு"
என்றபடி சமதர்ம அரசு அமையும் என்று அனைத்துலகும் எதிர்பார்த்தது.
ஆனால்.? 'ஆதிக்கம் மாசுபடுத்தும்; தனியாதிக்கம் முற்றாக மாசுபடுத்தும்' என்ற அரசியற் சித்தாந்தப்படி பெரும்பான்மைப் பலம்பெற்ற அம்மையார் சித்தந் தடுமாறி னார்; வாக்குறுதியைக் காற்றிற் பறக்க விட்டார்; வல்லாட்சியின் திருவிளையாடல் களைத் தொடங்கினார். அதன் விளைவு.?
தமிழர்கள் எல்லா முனைகளிலும் தாக்கப்பட்டார்கள்.
படிவங்கள்
அலுவலக முத்திரைகள்
சம்பளப் பட்டியல்கள்
காசோலைகள்
அனைத்தும் தனிச்சிங்களத்தில்
அரசாங்க ஊழியர்கள்
ஆசிரியர்கள்
அதிபர்கள்
LDIT600Tahitisair
அனைவருக்கும் சிங்களம் கட்டாய பாடமாக்கப்பட்டது!
புலமைப் பரிசில்கள்
பதவி உயர்வுகள்
சிங்களம் தெரிந்தவர்களுக்கே என விதிக்கப்பட்டது!
நேசக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கப் பட்ட அரசு மோசம் செய்தது. கிளியோடு அருகே ஒருங்குண்டு வாழும் என நினைத்த பருந்து கிளியை விருந்தாக்க முனைந்தது.

Page 453
நீதிமன்ற மொழிச்சட்டம்:
இவற்றின் பயனாகவே காந்தீய நெறி செல்லும் தந்தை செல்வா தமது பொறுமைக்கு எல்லையிட்டுப் பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்று ஆணை யிட்டார். ஆனால், அதிலும் கூட அவர் சத்தியாக்கிரகிக்கே உரிய பொறுமையையும் நேர்மையையும் கடைப்பிடித்தார்!
சந்திப்புக்கள்
உரையாடல்கள்
கோரிக்கைகள்
உறுதிமொழிகள்
ஒப்பந்தங்கள்
அஞ்சல்கள்
வேண்டுகோள்கள்
நினைவூட்டல்கள்
என, மெல்ல மெல்லச் செல்லுகின்ற மேதை செல்வநாயகம்' நியாயமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
கடிதம் கிடைத்தது.
நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பப் பட்டுள்ளது.
பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று ஏகவசனத்தில் செல்வாவுக்குப் பதில்கள் அனுப்பப்பட்டன. சிலவற்றுக்குப் பதில்கூட எழுத மாண்புமிகு பிரதமருக்கு நேரம் இருக்கவில்லை.
இத்தனைக்கும் மத்தியில் அம்மை யாரின் பாசிச ஆட்சி தனது கொடிய கரங்களால் தமிழருக்கிருந்த மிகச்சில உரிமைகளையும் பற்றிப்பிடித்து அழித்துக் கோர தாண்டவமாடியது.
இத்தனை கொந்தளிப்புக்களுக்கும்
மத்தியில், 1960ஆம் ஆண்டின் இறுதி மாதத்தின் ஈற்றயல் நாளிலே (டிசம்பர் 30)

2.
நீதிமன்ற மொழிச் சட்டத்தை 9HU قhr நிறைவேற்றியது. அவ்வேளையிலே பேசிய திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். தமிழையும் சரிநிகர் சமானமாக மதிக்கும்படி வேண்டினார்.
ஆனால், வெறிபிடித்த வகுப்புவாத அரசு தமிழரசுக்கட்சி, சமசமாசக் கட்சி, கொம்யூனிஸ்டுக்கட்சி ஆகியவற்றின் ஒன்றுபட்ட நியாயமான திருத்தங்களை நிராகரித்தது. இதன்மூலம் தனிச்சிங்கள ஏகாதிபத்தியம் புகாது எஞ்சியிருந்த ஒரே ஒரு துறையாகிய நீதித்துறையிலும் அது புகுந்துகொண்டது. நெஞ்சை உருக்கிய காட்சிகள்
நாடெங்கும் சிங்களம் ஆட்சிமொழி யாக்கப்பட்டதனைச் சிங்கள மக்கள் குதுகலமாகக் கொண்டாடி விழா எடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் - 1961ஆம் ஆண்டு சனவரி மாதம் 21ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் ஏழாவது மாநில மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கிழக்கிலங்கை ஈன்ற நல்முத்தாகிய திரு. சி. மூ. இராசமாணிக்கம் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மகாநாட்டில் சிங்களத் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
இம் முடிவுக்கேற்ப 1961 சனவரி 30ஆம் திகதி தனிச்சிங்களம் நடைமுறைப் படுத்துவதை எதிர்த்து அமைதிப் போராட்டம் அலுவலகம் தோறும் நடத்தப்பெற்றது. சிங்களத்தில் பணியாற்ற வேண்டாம் என்றகோரிக்கை தொண்டர் களால் தமிழ் அரச ஊழியர்களுக்கு நேரில் விடுக்கப்பட்டது.
அரசுக்கு ஒரு மாத இடைவேளை கொடுத்த பின்பே சத்தியாக்கிரக இயக்கம் தொடங்கப்பெற்றது. 1961ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் திங்கட் கிழமை

Page 454
4
காலை ஏழரை மணிக்குத் தந்தை செல்வா தலைமையில் காங்கேசன்துறையி லிருந்து வந்த தொண்டர்கள் கச்சேரியின் எல்லா வாயில்களின் முன்பும் அமர்ந்து அரச ஊழியர்களை உட்புகவிட மறுக்கும் மறியற் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினர். "தமது முதியவயதையும் நோயுற்ற நிலையையும் பொருட்படுத்தாது, தமிழ் விடுதலை இயக்கத்தின் தந்தையாகிய திரு. செல்வநாயகம் கச்சேரி வாயிலில் நீண்டநேரம் அமர்ந்திருந்தது நெஞ்சை உருக்கும் காட்சியாக அமைந்தது" என்று வரலாற்றாசிரியர் ஒருவர் வருணித்துள்ளார்.
நாற்பது ஐம்பது சத்தியாக்கிரகி களோடு காட்சியளித்த 5é-GayFrf 6untufinsól6ü அர்ைமணி நேரத்துக்குள் மக்கள்வெள்ளம் நிறைந்தது.
மு. ப. 9-00 மணியளவில் காவல்துறை அத்தியட்சகர் சி. ஆர். ஆண்ட் அங்கு வந்து கச்சேரியினுள்ளே புக முயன்றார்.பிரதான வாயிலினுடாகச் செல்லுமாறு அரச ஊழியர்களை அவர் பணித்தார். ஊழியர்கள் உட்புகமுயன்றபோது தொண்டர்கள் படுத்துக்கொண்டு மறியல் செய்தனர். தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென அறிவுறுத்தல்கள் வழங்கிக்கொண்டிருந்த தலைவர்களும் மறியல் செய்தனர்.
சாதாரண நடைமுறைச் சட்டங் களுக்குட்பட்ட முறையில் மறியல் செய்த தொண்டர்களைக் கைதுசெய்து அகற்றும் அதிகாரம் காவல்துறையினருக்கு இருந்தது. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாது தொண்டர்களைத் தூக்கிச்சென்று எறிந்தனர்; நிலத்தில் இழுத்துச் சென்றனர்; அடித்து நொருக்கினர். கச்சேரி வாயில் களைப் பிடித்துக்கொள்ளக் காவலர்கள் முயன்றனர். பிரான்சிஸ் பெரேரா என்ற சிலாபத் தமிழர் முதலில் பலமான

43
தாக்குதலுக்குள்ளானார். பல தொண்டர்கள் தொடர்ந்து காயமுற்றனர். அவர்களுக்குப் பதிலாகப் புதிய தொண்டர்கள் வந்து சேர்ந்தனர்.
இந்நிலையில், பிரதான வீதியிலிருந்து பழைய பூங்கா வீதியில் முக்கிய நிகழ்வுகள் ஏற்படத் தொடங்கின. அரசாங்க அதிபர் ம. சிறீகாந்தா அவ்வழியாக மேல்நீதி மன்றத் தொடக்க ஆணையைப் பிறப்பிக்கச் செல்கின்றார் என்ற செய்தி கிடைத்தது. மு. ப. 10-30 மணிக்கு காவல்துறை அத்தியட்சகர் சி. ஆர். ஆண்ட் மெய்காப் பாளராக அமர, பூg காந்தா காவல்துறை வண்டியில் கச்சேரியிலிருந்து வெளியே வந்தார். தொண்டர்கள் வாயிலில் படுத்து மறியல் செய்தனர். சாரதி இவற்றைக் கவனிக்காது வண்டியைச் செலுத்த முனைந்தார். ஆனால் உயிரையும் இழக்கத் துணிந்த தொண்டர்கள் அசையவில்லை. 'அடித்து நொருக்கி வழியைத் திறந்து விடுங்கள் என ஆண்ட் ஆணையிட்டார். தொண்டர்கள் தாக்கப்பட்டனர். பிரதான வீதியிலிருந்த பா. உக்களான திருவாளர்கள்: வி.ஏ. கந்தையா, அ. அமிர்தலிங்கம், வி. தருமலிங்கம், க. துரைரத்தினம் ஆகியோர் வண்டிக்குக் குறுக்கே படுத்தனர். திரு. ஈ. எம். வி. நாகநாதன் முன்னணியில் நின்றார். அனைவரும் வெறிகொண்ட காவலரால் தாக்கப்பட்டனர். திருநாகநாதன் மீது பட்ட குண்டாந்தடி முறிந்தது! இக் குழப்ப நிலையில் வண்டி எவ்வாறோ வெளி யேறியது. ஆத்திரங்கொண்ட சிலர் காவலர் மீது கல்லெறிய முற்பட்டனர். கல்லுக்குக் கல்லு என்று அவர்களும் "நேரடி நடவடிக்கை'யில் இறங்கினர். "காவல் துறையினர் காடையர்கள்போலப் பொறுப் பின்றி, ஒழுக்கமின்றி, பெருந்தன்மையின்றி நடந்துகொண்டனர்" என வரலாற்றாசிரியர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

Page 455
4
இலங்கைக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஐந்தாம்படை வேலை:
ஜே.ஆர். ஜயவர்த்தனா, பீற்றர் கெனமன், பேணாட் சொய்சா, தகநாயக்கா, எஸ். டீ. பண்டாரநாயக்கா உட்படச் சிங்களத் தலைவர்கள் பெரும்பாலானோர் அன்று நிகழ்ந்த தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்தனர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் அவர்களுடைய கையிலே வந்தபோது அவர்களும் அதே அடக்கு முறையையே மேற்கொண்டதனை வரலாறு காட்டுகிறது. சிங்கள ஆளும் கணத்தைப் பொறுத்த வரையில் தமிழர் பிரச்சினையில்
அனைவரும் சிங்களரே.
தமிழரசுக் கட்சியினரால் ஆரம்பிக்கப் பட்ட சத்தியாக்கிரக இயக்கம் தமிழ்பேசும் மக்களின்போராட்டமாக விரிவடைந்தது. தமிழ்க்காங்கிரசு, சமசமாசக் கட்சி என்பனவும் போராட்டத்தில் முழுமையாகக் கலந்து கொண்டன. கொம்யூனிஸ்டுக் கட்சி மட்டும் கலந்துகொள்ளவில்லை. சத்தியாக் கிரகத்தை முறியடிக்கும் ஐந்தாம்படை வேலையில் அவர்கள் ஈடுபட்டனர். பங்கீட்டரிசி விநியோகத்தை நிறுத்தி அரசு தமிழ் மக்களைப் பணியவைக்க முயன்ற போது பொதுவுடைமை வாதிகள் பங்கீட்டரிசியைத் தவறான பலவழிகளில் விநியோகிக்கத் திட்டம் வகுத்துத் தந்தனர். இவர்களது ஐந்தாம் படைப் பணியைப் பாராட்டிப் பிரதமர் சிறீமா இராணுவத் தளபதி கேணல் உடுகமவுக்கு எழுதிய கடிதத்தில், “உங்கள் சாமர்த்தியமான திட்டங்களைச் செயல்படுத்தும் பணியில் யாழ்ப்பாணப் பொதுவுடைமைவாதிகளும், திருவாளர்கள்: அல்பிறெட் துரையப்பா, சு. நடேச பிள்ளை, எஸ்.யூ, சோமசேகரம் ஆகியோரும் முழுமனதோடு ஒத்துழைத் திருக்கிறார்கள். எனது மனமார்ந்த நன்றியை அக்கனவான் களான ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறேன்.” என்று எழுதினார். இந்தியாவிலிருந்து

44
பொதுவுடைமை பி. இராமமூர்த்தியை அழைத்து அறிக்கைவிடச் செய்து உலகின் கண்ணில் மண்துரவ இலங்கைக் கம்யூனிஸ்டுகள் முயன்றனர். மக்களின் உறுதி, அம்மையார் கலக்கம்,
மாணவர்கள், ஆசிரியர்கள், சட்டத் தரணிகள், வணிகர்கள், உழவர்கள், பட்டின, நகர, கிராம சபைகளின் தலைவர்கள், ! உறுப்பினர்கள அனைவரும் சத்தியாக் கிரகத்தில் கலந்துகொண்டனர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் நாள்தோறும் சத்தியாக்கிரகத்தை ஆதரித்து ஊர்வலம் நடத்தியதுடன் நேரடியாகவும் பங்குகொண்டனர். தமிழரசுக் கட்சி, காங்கிரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கள் மட்டுமன்றி ஐதே. கட்சி உறுப்பினரும் மட்டுநகர் இரண்டாவது பா.உ.ம் ஆன ஜனாப் மாக்கான்மாக்கார் அவர்களும், பொத்துவில் பாஉ ஜனாப் மஜீத், நிந்தாவூர் பா.உ. ஜனாப் மஜீத் ஆகிய சுயேச்சை உறுப்பினர்களும், வவுனியா பா. உ திருதா. சிவசிதம்பரம் அவர்களும் சத்தியாக் கிரகத்தில் கலந்து கொண்டனர். திரு.தா. சிவசிதம்பரம் வவுனியாவில் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தலைமைதாங்கி நடத்திச் சிறையும் சென்று பெருமை பெற்றார். ஆரம்பத்தில் ஆதரவு நல்கிய யாழ்ப்பாணத் தொகுதிப் பா. உ. அல்பிறெட் துரையப்பா படிப்படியாக அம்மையாரின் வலையில் விழுந்தது இரங்கத்தக்கதாகும்.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் படிப்படியாக மட்டக் களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தமிழ்பேசும் மக்கள் ஒவ்வொருவரும் எவ்வித வேறுபாடுமின்றி மொழியுரிமைப் போரிலே கலந்து கொண்டனர் என அரசும் ஏனைய சிங்களக்கட்சிகளும் அறிக்கைகள்மூலம் உறுதிசெய்தன.

Page 456
4.
அரசாங்கத் தலைமைச் செயலகமாகிய கச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக் கிரகம் ஏனைய அரச அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. சில நாட்களில் தமிழர்கள் வாழும் ஐந்து மாவட்டங்களிலும் அரசின் ஆட்சி நடைபெறாது நின்று விட்டது. இதனால் அரசு நாள்தோறும் கோடிக்கணக்கில் நட்டம் அடைந்தது. ஒரு மாதம் இடைவிடாது சத்தியாக்கிரகம் நடைபெற்ற நிலையில், சர்வ வல்லமைகளும் படைத்த பிரதமராகிய சிறீமா அம்மையாரே "வட, கிழக்கு மாகாணங்களில் எனது ஆட்சி நடைபெறவில்லை” என்று ஒப்புக்கொள்ள நேர்ந்தது. எனினும் மக்களின் நியாயமான உரிமைகளை வழங்காது பொலிஸ், இராணுவ, கடற்படை வீரர்களது பயமுறுத்தல்களாலும் உணவுப் பொருள்கள் முதலியவற்றை விநியோகிக்காது விடுவ தாலும் சத்தியாக்கிரகிகளுக்கு உணவு நீர் முதலியன கொடுக்காது தடுப்பதன் மூலமும் முறியடிக்க முயன்றார். ஆனால் மக்கள் உறுதியாக நின்றதால் அவர்களைப் பணிய வைக்க முடியவில்லை.
இதற்கிடையில் இன ஒடுக்கலில் ஈடுபடும் ஆபிரிக்க நாடுகளுக்கு அறிவுரை கூற அம்மையார் வெளிநாடு சென்றார். செல்லும்போது சத்தியாக்கிரகத்தைக் கைவிடாதவரை சமரசத்துக்கு இடமில்லை என்றும் விளைவுகளுக்குச் சத்தியாக் கிரகிகளே பொறுப்பேற்க நேரிடும் என்றும் பயமுறுத்திச் சென்றார். மீண்டும் வந்த பிரதமர் சத்தியாக்கிரகம் தொடர்ந்தும் நடப்பது கண்டு வியப்பும் கவலையும் அடைந்தார். இறுதியில் நீதியமைச்சர் சாம் பீ. சி. பெர்ணான்டோ சமரசத் தூதுவராக அனுப்பப்பட்டார். சமசரத்திற்கு எதிரானவர் என என்.எம். பெரேராவால் பாராளு மன்றத்தில் விபரிக்கப்பட்ட அமைச்சர், அம்மையார் எதிர்பார்த்தபடி அதிருப்தியை அதிகமாக்கினார்.

5
தமிழரசு அஞ்சற் சேவை மூலம் தவியரசு பிரகடனம்?
தமிழ்பேசும் விடுதலைப் போராட்ட இயக்கத்தினர் தமது போராட்டத்தை விரிவாக்கத் திட்டமிட்டனர். இதன் பயனாக 1961 ஏப்பிரல் 14ஆம் நாள் அஞ்சற் சேவைச் சட்டங்களை மறுக்கும் சட்டமறுப்பாகத் தமிழரசு அஞ்சற்சேவை ஆரம்பிக்கப்பட்டது. தந்தை செல்வா இந்த அஞ்சற் சேவையை ஆரம்பித்தார். சட்டத்தரணி சு. நடராசா அஞ்சற்சேவை நாயகமாகப் பணியாற்றினார். பாராளுமன்ற உறுப்பினர்களாகிய திரு.அ. அமிர்தலிங்கம், திரு.வி. தர்மலிங்கம், திரு.மு. சிவசிதம்பரம் ஆகியோர் அஞ்சற் சேவகர்களாக அமர்ந்து முதற் கடிதங்களைக் காவல்துறை அத்தியட்சகர், அரசாங்க அதிபர் ஆகியோருக்கு வழங்கினர். 10 சத முத்திரை, முத்திரையிட்ட கடித உறை, அஞ்சலட்டை என்பன வெளியிடப்பட்டன. இந்தச் சட்டமறுப்பில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அரசு தண்டித்திருக்கமுடியும். ஆனால் அரசு அவ்வாறு செய்யவில்லை.
நான்கு நாட்கள் அஞ்சல் சேவை மக்களின் பேராதரவோடு நடைபெற்றது. அரசு தமிழரசுக்கட்சி தமிழரசு அஞ்சல் சேவை மூலம் - தனியரசைப் பிரகடனம் செய்து விட்டதாக அறிவித்தது.
"முத்திரை வெளியிடுவதால் தனிநாடு அமைத்தற்கு உலகில் எங்காவது ஆதார முண்டா?" எனப் பாராளுமன்றத்தில் பின்னர் ஆளுங்கட்சி ஆதரவாளராக மாறிய அல்பிறட் துரையப்பா எழுப்பிய வினாவே அரசின் உள்நோக்கத்தை விளக்கப் போதியதாகும். விலங்கினும் கீழான நிலையில் தமிழன்
வான்வரியாகவும் தரைவழியாகவும் அரசு படைவீரர்களை வட, கிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பியது. 1961 ஏப்பிரல் மாதம் 17ஆம் திகதியின் பின்னிரவில்

Page 457
4.
முப்படையும் சத்தியாக்கிரக நிலையங்களை முற்றுகையிட்டது. 56 நாட்கள் FF எறும்புக்குக்கூட இன்னா செய்யாத முறையில் நடைபெற்ற சத்தியாக்கிரகம் பலாத்காரத்தின் மூலம் கணநேரத்தில் முறியடிக்கப்பட்டது. தேவாரமும் திருவாசகமும் ஏனைய மதப் பிரார்த்தனைப் பாடல்களும் ஒலித்த அறப்போர்க்களம் சிங்கள ஏகாதி பத்தியத்தின் வெறியாட்டக்களமாக மாறியது. எங்கும் செங்குருதி நீர் பாய்ந்தது.
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தொண்டர்களும் தலைவர்களும் கைது செய்யப்பட்டு கோமகம தடுப்புக்காவல் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களது பட்டியலை இறுதியில்
фfT6б б| 6)ITI D.
"இத் தொந்தரவுக்கு ஒரு முடிவு
ஏற்படும் வரை நாம் சலிப்பு அடையக் கூடாது. ஒவ்வோர் அதிகாரியும் ஒவ்வொரு படையினரும் தன்னுடைய முழுத் திறமையையும் காட்டவேண்டும். இராணுவ நடவடிக்கைகள் உணர்ச்சி வேகத்தை மிகவும் உயர்ந்த நிலையில் வைத்திருக்கவேண்டும். வெற்றிகரமான பலாபலன் கிட்டும் என நான் முழுக்க முழுக்க நம்புகிறேன். காரியம் கைகூடும் வரை எவருமே கணமேனும் தளர்ந்துவிடலாகாது. உங்கள் அனை வருக்கும் அதிர்ஷ்டம் அடிக்கட்டும்” என்ற பிரதமரின் ஆணைப்படி இராணுவ வீரர்கள், வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசத்தில் இராணுவம் எவ்வாறு நடக்குமோ அவ்வாறு நடந்துகொண்டனர். ஏறத்தாழ 170 நாட்கள்
 

6
அவசரகால ஆட்சியில் தமிழன் விலங்கினும் கீழாக நடத்தப்பட்டான். ஆனால் அவசரநிலை அகற்றப்பட்ட மறுநாளே தமிழன் மீண்டும் தமிழனாகத் தலைநிமிர்ந்து நின்றான்.
ஞான ஒளி:
170 நாட்கள் தலைவர்கள் சிறையிலே சித்திரவதை செய்யப்பட்டபோது, உடுப்பிட்டிப் பா. உ. திரு. மு. சிவசிதம்பரம் தமிழருக்குத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இனந் தெரியாத பலர் தமிழனது உணர்ச்சியை வெளிநாட்டுக்கும் அரசுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் பல நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்தினர். தமிழன் கண்ணீர், 'சத்தியாக்கிரக' (Satyagraha) போன்ற ஏடுகள் மக்களை இருளிலிருந்து ஒளியைக் காண உதவின.
அறப்போர் என்றும் தோற்பதில்லை என்றபடி தமிழர்கள் தமது போராட்டத்தில் ஒரு வெற்றியான கட்டத்தை நடத்தி முடித்தனர். உயிர் இழப்பு, அவமானம் முதலிய பல்வேறு துன்பங்களை அவர்கள் அனுபவித்தாலும் அடிமைத்தனமே மேலான துன்பம் என்ற ஞான ஒளி பெற இப்போராட்டம் உதவியது. தந்தை செல்வா வழியை நாடிநின்றவர்கள் தனித் தமிழ் ஈழமே தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ற உறுதியான, இறுதியான முடிவுக்கு வர வழிகாட்டிய போராட்டம் என்ற வகையில் 1961ஆம் ஆண்டின் அறப்போர் மிகப்பெரிய வெற்றியே.

Page 458
பின்னிணைப்பு - 1
1961ஆம் ஆண் சிறைச்சாலைக் கதவுகை வீட்டுக்காவலில் தடு
திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் (கியூ. ஸி. திரு. எம். சீ. அகமது (பா. உ.) 13-7-61இல் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி
கோமகம இராணுவ முக பாராளுமன்ற
திரு. வி. தருமலிங்கம் (பா. உ) திரு. வி. ஏ. கந்தையா (பா. உ) திரு. அ. அமிர்தலிங்கம் (பா. உ) திரு. க. துரைரத்தினம் (பா. உ) திரு. சிவசுந்தரம் (பா. உ) திரு. செ. இராசதுரை (பா. உ) திரு. சி. மு. இராசமாணிக்கம் (பா. உ) திரு. பொ. மாணிக்கவாசகர் (பா. உ) திரு. ந. இ. இராசவரோதயம் (பா. உ) திரு. வீ. ஏ. அழகக்கோன் (LunT. 2) திரு. இ. மு. வி. நாகநாதன் (பா. உ) திரு. மு. பாலசுந்தரம் (பா. உ) திரு. வந. நவரத்தினம் (பா. உ) திரு. தா. சிவசிதம்பரம் (பா. உ) யாழ்ப்பாணம்
திரு. என். நவரத்தினம் திரு. மு. திருச்செல்வம் திரு. வ. நவரத்தினம் திரு. சு. நடராசா திரு. சி. கதிரவேலுப்பிள்ளை திரு. சி. சின்னத்துரை திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் திரு. க. ஜெயக்கொடி

டுச் சத்தியாக்கிரகம்
6ा முத்தமிட்ட செம்மல்கள்
த்து வைக்கப்பட்டோர்:
LT. 20.)
அரசுடன் சங்கமம்)
ாமில் தடுப்புக்காவலானோர்:
உறுப்பினர்கள்
திரு. இ. நவரத்தினம் திரு. ஏ. ஆர். ஆசீர்வாதம் திரு. ஏ. அந்தோனி திரு. வி. கே. கந்தசாமி (புதுமைலோலன்) திரு. எஸ். நவரத்தினம் (கரிகாலன்) திரு. எஸ். அழகையா திரு. தி. க. இராசசேகரன் திரு. ரீ. எஸ். துரைராசா திரு ஞா. லூக்காஸ்
வவுனியா
திரு. சபா. சுப்பிரமணியம் திரு. வே. த. சுப்பிரமணியம் திரு. ஜி. பி. வின்சன்ட் திரு. த. ஐயாத்துரை திரு. இ வ. வில்வராசா திரு. வை. சிற்றம்பலம் திரு. சூ மரியாம்பிள்ளை திரு. சி. சிதம்பரப்பிள்ளை திரு. செ. ஞானசேகரம் திரு சி. ஐ. குலசேகரம்பிள்ளை திரு. கோ. நடேசபிள்ளை

Page 459
Z
திரு. பொ. பரராசசிங்கம் திரு. த. நல்லையா திரு. க. செ. கதிரேசு திரு. கே. கைலாயப்பிள்ளை
திருகோணமலை
திரு. பா. நேமிநாதன் திரு. ஜே. ஏ. பி. துரைநாயகம் திரு. கே. சி. பாலச்சந்திரன் (இடிமுழக்கம்) திரு. க. சிவகுரு திரு. நா. தம்பிராசா திரு. சு. ஜெகராசசிங்கம் திரு. ம. கிருபைராசா திரு. த. சின்னையா திரு. கே. பி. சீதாராமன் திரு. சி இராசதுரை (ராஜூ) திரு. செ. மகாலிங்கம் திரு. இரா. சம்பந்தன் திரு. பி. இரங்கநாதன் திரு. ஆர். சந்திரபாலன் மட்டக்களப்பு
திரு. மு. மாணிக்கம் திரு. சீ. எஸ். பூபாலரத்தினம் திரு. சாம். தம்பிமுத்து திரு. ஆர். டபிள்யூ. வி. அரியநாயகம் திரு. பி. இராசன் செல்வநாயகம் திரு. மசூர் மெளலானா திரு. சா. கு. கணேசநாதன் *திரு. கே. வி. கிருஷ்ணகுட்டி திரு. ஜே. திசைவீரசிங்கம் திரு. சா. கோபாலரத்தினம்
மன்னார்
திரு. ம. சி. பொன்னுக்கோன் திரு. க. வைத்திலிங்கம் திரு. எம். அருளப்பு திரு. வே. கைலாசபிள்ளை திரு. கே. எஸ். ஏ. கபூர் சேர் கந்தையா வைத்தியநாதன்
* பொதுவுடைமையாளர் தவறுதலாகக் கைது செய்யப்பட்டு விடுதலையானார்.

48 --
பின்னிணைப்பு - I
உசாத்துணை நூல்கள், ஏடுகள்
1. Satyagraha & Freedom Movement of the
Tamils in Ceylon
- S. Ponniah, B.A., Advocate (1963) 2. தடுப்புக்காவலில் நாம் (மடல்கள்) -
புதுமைலோலன் (1969) 3. பாராளுமன்ற விவாதங்கள் (அஞ்சாட்டு)
(1961) 4. தமிழன் கண்ணிர் (வார இதழ்) 5. Satyagraha (A Weekly News Bulletin) 6. தமிழ் எங்கள் ஆயுதம் - கவிதைத் தொகுப்பு - தமிழ் எழுத்தாளர் சங்கம் (1962)
7 ஈழத்து அறப்போரும் உரிமை
மறுப்போரும் - பொ. அப்பையா
8. இலங்கைத்தமிழர் அவலநிலை பற்றிய
வெளிநாடுகளின் கண்டனக் குரல்

Page 460
வாழிய6ே தங்க மா
பொங்கு மாவளம் தங்கு மா பொன்வழில் கொஞ்சும் புக எங்கள் தாயகம் எங்கள் த தங்க மாமணித் தமிழீழம்.
இனிய வானிலே இனிய க எழுபரி திக்கொடி திகழ்நா( மணிவிழி யாகும் தமிழ்மொ மாமற வர்வாழ் தமிழ்நாடு
வண்ணயாழ் மண்ணில் கடல் வன்னிவயல் காட்டில் நெல் மன்னர் கடலோரம் முத்துக் மட்டு நகர்மீ னிசைமுழங்கு
கூவும் சங்கமும் முரசமும் கோணமலைக் கோட்டை தரிவும் வேங்கைகள் போலு
தலைநிமிர்ந்து தமிழர் வாழ்
எழில்கலைச் செல்வி அறிவு இனியவளே எங்கள் அம்மா தமிழீழத் தாயே எங்கள்உயி தாழ்பணிந்து வணங்கிைேம்
 

ஈழத்தாய் வணக்கப் பண்
பல்லவி
வ வாழியவே வாழியவே - எங்கள்
மணித் தமிழீழம்.
(வழி)
(வழி)
bவளம் பொங்கும் குலுங்கும் கள் ஒதுங்கும் ம். (வழி)
கொண்டோம் ஆள்கிறோம்
ம் வீறொடும்
கிறோம். (வழி)
பின் தலைவி
ர் நீயே
அம்மா. (வழி)
- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

Page 461
விடுதலை வேட்ை
வியர்வையோ டி
கொடுமைகள் கோடி
கொள்கையைக்
விடிகின்ற நேர மின் விரைகினும் நம நெடியது கண்டீர்
நினைவினை அ
நமது சக்தியை நரி இப்படை தோற்கில்

கொண்டு
த்தஞ் சிந்திக்)
யேற்றுக்) வித்து நின்றோம்
சிறு
து பாதை
இந்த
கற்றல் வேண்டாம்!
ளை சரித்திரம் சொல்லும்!
எப்படை வெல்லும்?
)

Page 462


Page 463


Page 464


Page 465
K, (
TK is Accountants
Managemen 35 WOOGSiGe Gree Te: O 181 655 O344
 

OCTES
aXACViSerS
Et COnSUltants
Ondon SE25 5HO FaxO181 655 1871