கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கம்பன் மலர்: அகில இலங்கைக் கம்பன் கழகம் 20 ஆம் ஆண்டு நிறைவு மலர் 1980-2000

Page 1


Page 2


Page 3


Page 4
9)
“உருப்பளிங்கு போல்வா இருப்பளிங்கு
எண்ணிய சகாத்த மெண்ணுாற் நண்ணிய வெண்ணெய் நல்லூ பண்ணிய இராம காதை பங்கு5 கண்ணிய அரங்கர் முன்னே கவி
 

ள் எம் உள்ளத் னுள்ளே த வாராதிடர்”
றேழன்மேல் சடையன் வாழ்வு ர் தன்னிலே கம்ப நாடன் னரி அத்த நாளில் வியரங் கேற்றி னானே!

Page 5
mu
Gas II (tyř 4 。ど *** ;لتی۔
r(xبوڈیاڑی پ2Y
---------------
அவர்கள் நன்கொடையாக
 
 
 
 

|528 D مل 22
ங்கைக் கம்பன் கழகம் நிறைவு மலர்; 1980 - 2000

Page 6


Page 7

რჯვენესუელწწ.
| த்தின் கருவறை.

Page 8
ஜகத்குரு பரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூநீகாஞ்சிகாமகோடி பீடம்
காப்பானைக் காத்திடுமே அறமேதான் தர்வேரகூடிதிரத்திதா என்பது ஆன்றோர்தம் அனுபவ அமுதமொழி. இம்மொழியினது உட்பொருளைத் தெள்ளென விளக்கிக்காட்டுவது றுநீ ராமனது வாழ்க்கை வரலாறு. வடநூல் முனிவராம் வால்மீகியால் பாடப்பெற்று இராமனால் ஒப்புதற் சான்று அளிக்கப்பட்ட பெருங்காப்பியம் இராமாயணம். இதனைத் தமிழில் விருத்தப்பாக்களிற் பாடி இராமனது பேராண்மையை உய்த்துணர்ந்து மகிழ வைப்பவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் ஒருவர் இல்லை” என்பது பாரதியின் தெளிவுரை.
இப்புலவர் பெருமானது புகழ்பரப்பி வருவது கம்பன் கழகம். இலங்கையில் கடந்த இருபது ஆண்டுகளாக இவ்வரும்பணியாற்றி கம்பர் கோட்டமும் கண்டு மகிழும் கம்பர் கழகம் இவ்வாண்டு தங்களது பணிகளைப் பளிச்சிடவைக்கும் வகையில் ஒரு மலர் வெளியிடவிருப்பது அறிந்து மகிழ்கிறோம்.
மலர், கம்பனின் பெருமை - காப்பியத்தின் அருமை - மானிடவாழ்வினை மிளிரவைப்பது அறமே என்ற உண்மையின் இயல்பு - இவைகளை விளக்குவதாக அமைந்து மனிதகுலத்துக்கு அறவழியுணர்த்துவதாக விளங்க தர்மாத்மா இராமபிரானின் இன்னருள் சுரக்க ஆசீர்வதிக்கிறோம்.
நராயணஸ்ம்ருதி 犯
 
 
 
 


Page 9


Page 10
மூதறிஞர் பேராசிரியர்
1941 ஆம் ஆண்டில் காரைக்குடிக் க
 

அ. ச. ஞானசம்பந்தன்
ம்பன் கழகம் தொடங்கிய கம்பன் விழாவில், ல் இன்று இயங்கும் பெரும்பாலான கம்பன்கழக ல் இலங்கைக் கம்பன்கழகம் நடாத்தும் கம்பன்
சென்ற இரண்டு ஆண்டுகளிலும் நேரடியாகக்
வு செய்துவிட்டு அடுத்த வண்டியில் புறப்படும் ம் நிகழ்ச்சியை நடாத்தும் பிள்ளைகளின் கூடவே
றிருந்தேன். அதிலிருந்து ஒன்றைத் தெரிந்து
பவர்கள் ஏனோ தானோ என்றும், பிறரை ஏவிப் ண்டு அல்லது மூன்றாம் ஆண்டில் பரிதாபமான கியிருந்த காலத்தில், ஒரு முப்பது அல்லது தாழிலை மறந்து, மனைவி மக்களைக்கூட மறந்து
ாத்து, சிந்தித்து, பேசி, ஒடியாடிப் பணிபுரிந்ததைக்
க் கொள்பவர்களை Dedicated Souls என்று க்காக உள்ளவர்கள் இலங்கைக் கம்பன் விழாவை கிறது. நேரில் சென்று விழாவில் பங்கேற்க பலர் வருகிறது. பிரசாத மலராதலின் அதனை DL) மறந்து உழைப்பதற்குத் தொண்டர்கள் உளர்.
னியைச் செய்து கொள்வான். வாழ்க அவர்களது

Page 11
அம்பிலே சிலையை நாட்டி அ தம்பிரான் என்ன, தானும் கம்பநாடு உடைய வள்ளல்
நம்பு பாமாலையாலே நரர்
காவியத் தமிழமுதம் ஈந்து மானிடை ஆளாக்கி, தெய்வநிை
சிதறிய அமுத தாரைகளைத் தம் அங்
கூத்தாடுவோர் கூட்டம்
அதில் ஒரு பகுதிக்கு அகில இலங்
அக்கூட்டம் ஒன்றுதிரண்டு ஓர் அமை
அதிகாரங்களுக் மானிடம் வெல்வதற்காகக் காவிய அரச அதிகாரங்களால் தள்ளி கல்வியிற் பெரியன், கவிச்சக்கரவர் வாய்ந்த வெகுசன அங்கீ
தமிழச் சாதி அமரத்தன் மகாகவி பாரதி உறுதி கொள்வதற்
“கல்வி சிறந்த தமிழ்நாடு, புக என்று களிக்கச் ெ
"அறிவுடையோரையும் லோே கொண்டாடாத தேசத்தில் அறிவும் லே தமிழ் நாட்டில் இப்போது புதி நாம் இவ்விஷயத்தில் தே கம்பன், இளங்கோ, திருவள்ளு
ஞாபகச் சிலைகளும் வருஷோத்ஸவ
என்று வழிகாட்டினால்
 
 

JËsi
மரர்க்கு அன்று அமுதம் ஈந்த தமிழிலே தாலை நாட்டி,
கவிச்சக்கரவர்த்தி, பார்மேல் $கும் இன் அமுதம் ஈந்தான்.
'யும் அமுதம் உண்ட அமரர்நிலைக்கு லை உற்றவன் கம்பன்.
கைகளில் ஏந்திக்கொண்டு ஆனந்தக் உலகெங்கணும் உண்டு.
கைக் கம்பன் கழகம் என்று பெயர்.
ப்பாகி இருபது ஆண்டு ஆகிவிட்டன.
கு அடிபணியாது பம் படைத்தவன் கம்பன். அதனால், வைக்கப்பட்டவன். ஆனால், த்தி என்றெல்லாம் சிரஞ்சீவித்தன்மை
காரம் வாய்க்கப்பெற்றவன்.
மை வாய்ந்தது என்று கு'அநுமானம் தந்தவன் அவன் .
pக் கம்பன் பிறந்த தமிழ் நாடு” ய்தவனும் அவனே.
காபகாரியையும் வீரரையும் கோபகாரமும் வீரமும் மங்கிப் போகும்.
உயிர் தோன்றியிருப்பதால் மாகுணஞ் செலுத்தாமல் வர் முதலிய மகாகவிகளுக்கு ங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்”
மகாகவி பாரதி.

Page 12
நம்நாட்டிலும் இன உரிமைப் போராட்டம் என்ற ஒரு புதிய ஒரு உத்வேகத்தில் “கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்ே முளை விட்ட எண்ணம், அவருடைய ஆற்றலாலும் ஆளுமைய பெருமக்களின் அரவணைப்பாலும் துளிர் விட்டு, தென்னாட் இராதாகிருஷ்ணன் அவர்கள் செஞ்சொற் கொண்டலாய் வந்து சிறந்த யாழ்ப்பாணத்துக் கம்ப ரசிகர்களின் அன்பிலே சிலிர்த்து, அ
அது யாழ்ப்பாணத்திலே நல்லூரைத் தலைமைத்தானமாகக் ஆண்டுகள் அந்த நல்லைத் திருமண்ணிலே ஆனந்தித்துக் கிடந்த குண்டுமாரி பொழியும் அகாலத்திலும் அவற்றையும் ஏற்றுக்ெ உண்டு. சிலர் வெட்டிவிடவும் தலைப்பட்டார்கள். அவற்றையெல்லா தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? கண்ணீராற் காத்தோம் ஆ
பதினைந்து ஆண்டுகளாய்க் கழகத்தைத் தாங்கி நின்றவர்கள் கையளித்துப் புதுமை செய்தார்கள். பதினைந்து ஆண்டு நிறைவைட் யாழ்ப்பாணம் தேவருலகாய்த் திகழ்ந்தது.
என்ன கண்ணுறோ யாழ்ப்பாணம் அருந்திறல் பிரிந்தஅயே வனவாசம் தான், கொழும்பிலே.
ஆனால், நாடிறந்து காடுநோக்கி மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலமா
கொழும்பிலே திருவாளர்கள் தெ. ஈஸ்வரன், பொ. பாலசுந்த கொண்டார்கள். கெளரவ நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ே ச. ஆ பாலேந்திரன், பொ. விமலேந்திரன், பூ பூரீதரசிங், முதலானவ
இவர்களின் துணையால் அகில இலங்கைக் கம்பன் கழகத்தி
கழகம் இன்று நவயுகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.
அந்நிலையில் தனது இருபதாண்டு நிறைவை, கொழும்புக்கி மகிழ்கிறது தாய்க் கழகம்.
அந்த மகிழ்ச்சியின் மலர்ச்சிதான் இம்மலர்.
ஆழ்வார் பெருமக்களின் நாலாயிரத்தில் இருந்து இராமன் பு தலைப்பில் தரப்பட்டுள்ளமை இம்மலரின் சிறப்பம்சம்.
இது தவிர கம்பன்' என்றும் கழகம்' என்றும் இருவேறு பகுதி வியப்புக்களை உள்ளடக்கியது.
கழகம் பகுதி கழகப் பதிவேடாகவும் கழகப் பணிபற்றிய மதி
மலரில், அறிஞர்களிடம் கோரிப் பெற்ற புதிய கட்டுரைகள், க
ஆக்ககர்த்தாக்களுக்கும் மலராக்கத்தின்போது துணைநின்
கால எல்லையில் அக்கறையோடு அழகாய் அச்சேற்றித்தந்த “யுன்
நல்லைத் திருவீதியில் நள்ளிரவு வரை விழாக் கொண்ட பிரார்த்திப்போமாக.
கம்பன் புகழ்பாடிக் கள்
ந
மொழித்துறை தென்கிழக்குப்பல்கலைக்கழகம் பல்கலைக்கழகப்பூங்கா, ஒலுவில்
20 04 2000

உயிர் தோன்றிய காலத்தில், பாரதியின் வழிகாட்டலால் எழுந்த பாம்” என்று திரு. இ. ஜெயராஜ் அவர்களுடைய சிந்தனையில் ாலும் நெருக்கமான நண்பர் சிலரின் கூட்டுறவாலும் ஆசிரியப் டிலிருந்து ஆட்கொண்டருளிய பேராசிரியப் பெருந்தகை இரா. வருவித்த பைந்தமிழ்ப் பெருமழையால் புதுச் சோபை யுற்று, கல்வி கில இலங்கைக் கம்பன் கழகம் என்னும் பெருவிருட்சமாகியது.
கொண்டமைந்து ஆண்டுக்கு ஆண்டு பரிணாமமுற்று, பதினைந்து Sijil
காண்டு வளர்ந்தது. ‘விருட்சம் வேண்டாத ஒன்று என்றவர்களும் ம் வென்று வீறார்ந்து வளர்ந்ததால் வந்த ஆனந்தம், அந்த ஆனந்தம். பூதலால் சர்வேசன் கருகவிட்டதில்லை; மாறாகச் செழிக்க வைத்தான்.
அந்தப்பூரிப்போடு தம் பொறுப்பையெல்லாம் புதிய தலைமுறையிடம் பெருவிழாவாகக் கொண்டாடிகம்பமலர்'ஒன்றும் வெளியிடப்பட்டது.
ாத்தியாய் ஆகிவிட்டது. ஐந்து ஆண்டுகளாய்க் கம்பன்கழகத்திற்கு
யிற்றாமன்றே எனும்படியாய், புதுப்புது உறவுகளாற்பொலிந்தது கழகம்
நரம் முதலான புரவலர்கள் கழகவிருட்சத்தின் கிளையைத் தாங்கிக் பான்ற பெருந்தகைகள் காவல் செய்தார்கள். நா. சோமகாந்தன், பர்கள் புத்துரம் ஊட்டினார்கள்.
ன் பணிகள் கொழும்பிலும் விரிந்தன.
கம்பனுக்குக் கணனியிலும் ஒரு பக்கத்தை உருவாக்கியாயிற்று.
ளையின் இரண்டாயிமாம் ஆண்டுக்குரிய கம்பன் விழாவில் கண்டு
கழ் விளங்கும் தோத்திரங்கள் தொகுக்கப்பட்டு பாசுரராமன்' என்ற
திகளும் உள. கம்பன்' பகுதி கம்பன் பற்றிய ஆய்வுகளை, நயப்புகளை,
ப்பீடாகவும் அமையும்.
விதைகளோடு பழையவை சிலவும் தேர்ந்தெடுத்துச் சேர்க்கப்பட்டன.
ற திருமதி வசந்தா வைத்தியநாதன் அம்மையாருக்கும் மிகக்குறுகிய f ஆர்ட்ஸ்' நிறுவனத்தார்க்கும், ஊழியர்க்கும் மிக்க நன்றி. டுதற்கேற்ற கால, வர்த்தமானங்கள் விரைவில் வந்து வாய்க்கப்
ானித் தமிழ் வளர்ப்போம்.
ன்றி!
க. இரகுபரன் (பதிப்பாசிரியர்)

Page 13
1
10.
11.
12.
13.
4.
15.
16.
7.
18.
கம்பன்
கம்பன் கண்ட பக்தியும் அறமும் - பேராசிரியா சமயங் கடந்த கம்பன் - வித்துவான் திருமதி கம்பரும் கடவுள் வாழ்த்தும் - பேராசிரியர் ஒள ‘உலகம் யாவையும் - இ. ஜெயராஜ்
இஸ்லாத்தின் ஏகதெய்வக் கொள்கைக்கும் பைபிளின் ஏசுவும் கம்பனின் ராமனும் - தெ
இராமன் பரம் பொருள் - சிந்தாந்த வித்தகர்(
Of 60
கம்பனும் தமிழும் - பேராசிரியர் எஸ். வையாபுரி கம்பன் காவிய நடை - ச. கணபதி முதலியார் இராமாயணப் பாடுபொருள் - மூதறிஞர்வ கருட உபநிஷதம் - பியூரீ இராமகாதை முக்கிய திருப்புமுனைகளில் கட் கம்பன் இசை - கவிஞர்இ முருகையன கம்பராமாயணக் கிளைக் கதைகள் - பேரா மகாகவி கம்பனின் தத்துவமும் தனித்துவமு
- Guma
கம்ப உலா - க வில்வரத்தினம் இலக்கணம் மீறிய கம்பன் - க இரகுபரன்
கம்பனின் கவித்துவம் தனித்துவம் மகத்துவ
 

ர ாமன்) 01 - 31
@@ பன் ) 35 - 205
- கடவுள
அ. ச. ஞானசம்பந்தன் 35
வசந்தா வைத்தியநாதன் 43
வை. நடராசன் 46
53
ஏற்புடைய கம்பனின் காப்பு - ஜின்னாஹ்' 59
ளிவத்தை ஜோசப் 62
மரு. பழ. இரத்தினம் செட்டியார் 66
- பாத்திறம்
பிள்ளை 69
zア
ப. மாணிக்கம் ど。
9f
பன் காட்டும் கவி வண்ணம் - கேகே சோமசுந்தரம் 96
99
பிரியர் அ பாண்டுரங்கன் iO3
- ஒரு திறனாய்வு நோக்கு
hifu ufism. øst framsoonfusiór fiO
fits
20
ம் - தமிழ்மணி அகளங்கன் 23

Page 14
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
ஆராய்ந்த சொல்வன்மை - பூரீ பிரசாந்தன்
கம்பன் கவிப் பிரம்மன் - த ஜெயசீலன்
கோதாவரி நதியும் சான்றோர் கவியும் - க. ஜெ
பட்டறிவு கடந்த பாட்டறிவு - ச. முகுந்தன்
இளங்கோவின் கருவும் கம்பனின் திருவும் -
கம்பன் -
உவகையின் உருவம் - வாகீச கலாநிதிகி வா. ஜ:
புலையுறு மரணம் எனக்குப் புகழ் - புலவர்கி குன்று அன்ன கொள்கையான் - வித்துவான்க நட்பெனப்படுவது ஜடாயு - அதிவண. கலாநிதி மாண்புறு நங்கை மண்டோதரி - பேராசிரியர் தவம் செய்த தவம் - பேராசிரியர் சக்திப் பெருமா பாலைவனத்தில் சில ஈரச்சுவடுகள் - டாக்டர் பரத நம்பி - கம்பகாவலர்தி முருகேசன், புதுச்சே
வாராதே வந்தவன் - இரா. மாது திருச்சி
கம்பன் -
கம்பன் கண்ட பொருளாதாரம் - தவத்திருகு கம்பன் காட்டும் ஆள்பவனுக்கு உரிய கடப்ப நமது இலக்கியப் பண்பாட்டிற் கம்பன் - ே கந்தபுராண கலாசாரமும் கம்பராமாயண கலாசா வழி வழி கம்பர் - க சிவதாசன்
தமிழினத்தைத் தாழ்த்துவனோ கம்பன் - வ
கம்பர் காவியத்தை அமுதசாகரமாக்கிய அ. ே
宽M dolp
ஆதவன் போல் அருட் கம்பன் கழகம் வாழி மேடை மரபின் தனித் தரிசனங்கள் - டொமின் இலக்கிய உந்துசக்தி - நா. சோமகாந்தன் ஈழத்து இசைத்துறை வளர்ச்சியில் தடம்பதித் அகில இலங்கைக் கம்பன் கழகமும் தமிழ் நா இலங்கைக் கம்பன் கழகமும் வெகுசனக் கவர் கம்பன் பணியில் கைகொடுத்து என் இதயத்தி
கழகப் பதிவுகள்

3f
பநிதி 33
டாக்டர்இரத்தின ஜெனார்த்தனன் 37
பாத்திரம்
கந்நாதன்
ரன் f43
சொக்கலிங்கம் (சொக்கன்) 45
எஸ். ஜெயநேசன் 53
இரா. செல்வக்கணபதி
ir f63
. இராம. செளந்தரவல்லி f63
th, が2
f75
சமூகம்
ன்றக்குடி அடிகளார் 179
ாடுகள் - நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் ፱82
பராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி f35 ரமும் - சில குறிப்புகள் - குமாரசாமிசோமசுந்தரம் 189
93
ரதர்' 99
ச. சுந்தரராஜன் - ஆ. சிவநேசச்செல்வன். எம். ஏ. 204
説つ
209 -246
༄
- அருட்கவி சி விநாசித்தம்பி 29
ரிக் ஜீவா 2ff
23
த கம்பன் கழகம் - நா. சச்சிதானந்தன் 217 டக வளர்ச்சியும் - ஏ. ரி பொன்னுத்துரை 220 rச்சியும் - மேமன்கவி 224
தில் இடம் பிடித்தோர் - இ. ஜெயராஜ் 223

Page 15
ஆழ்வார் பெருமக்கள் அரு பூரீ ராமன் புகழ்பேசுவனவாய தேர்ந்து தொகுக்கப்பட்டு அவை இராமனைத் தெய்வமாகக் கம்பனின் 'கருத்துநிலை ஊற்றுக்கால்" ஆதாரநூலாக
இராமாயண செய்திகள் இராமநாமங்கள் மாத்திரம் உ6 பாசுரங்களை அடுத்து அவற்றின் தொடரி மயிலை மாதவதாஸன் பதிப்பின்
 

ராமன்
நளிச்செய்த நாலாயிரத்தில் 1மைந்த பாசுரங்கள் மாத்திரம்
இங்கு தரப்படுகின்றன. கொள்வார்க்குப் பாசுர நூலாகவும் களைக் காணவிழையும் ஆய்வாளர்க்கு ՋկլD 9յ60ԼDպլք.
உள்ளவையே அன்றி ஸ்ளனவும் தொகுக்கப்பட்டுள.
லக்கங்கள் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தம் அடிப்படையில் தரப்பட்டுள்ளன.

Page 16


Page 17
வாழாட்பட்டுநின்றீருள்ளிரேல்வந் கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் ( ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் பாழாளாகப்படைபொருதானுக்குட்
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசு இண்டைக்குலத்தை எடுத்துக்களை தொண்டக்குலத்திலுள்ளீர் வந்தடிெ பண்டைக்குலத்தைத்தவிர்த்து பல்லி தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழிதிக கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின் மாயப்பொருபடைவாணனை ஆயி பாயச் சுழற்றிய ஆழிவல்லானுக்கு
ଜୋ
பரந்திட்டுநின்ற படுகடல், தன்னை இரந்திட்டகைம்மே லெறி திரைே கரந்திட்டுநின்ற கடலைக்கலங்கச், சரந்தொட்டகைகளால் சப்பாணி
சார்ங்கவி குரக்கினத்தாலே குரைகடல்தன்6ை நெருங்கியணைகட்டி நீணிரிலங்கை அரக்கரவிய அடுகணையாலே, நெருக்கியகைகளால் சப்பாணி
நேமியங் கொங்கைவன் கூனி சொற்கொண்டு துங்கக்கரியும் பரியுமிராச்சியமும், எங்கும்பரதற்கருளி வன்கானடை, அங்கண்ணனப்பூச்சி காட்டுகின்ற அம்மனே ஆ
D6, D6) - 2000H
 

பரியாழ்வார் ப்பல்லாண்டு
துமண்ணும்மணமும்கொண்மின், தழுவினில்புகுதலொட்டோம், ர் இராக்கதர்வாழ்இலங்கை,
பல்லாண்டுகூறுதுமே. ரரிராக்கதரை, ாந்த இருடீகேசன் தனக்கு, தாழு தாயிரநாமம்சொல்லி
0ாண்டுபல்லாயிரத்தாண் டென்மினே.
ழ் திருச்சக்கரத்தின், ாறு குடிகுடியாட்செய்கின்றோம், ரந்தோளும்பொழி குருதி ப் பல்லாண்டு கூறுதுமே.
பரியாழ்வார்
திருமொழி
)ாதக்,
ற்கையனே சப்பாணி.
,
கையனே சப்பாணி.
, குவலயத்
ன்
ப்பூச்சிகாட்டுகின்றான்.
(3)
(5)
(7)
(81)
(82)
(125)

Page 18
வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த வில்லாளனை விட்டுசித்தன்விரித்த சொல்லார்ந்தவப்பூச்சிப் பாடலிெை வல்லார்போய், வைகுந்தம்மன்னிய
பொற்றிகழ்சித்திர கூடப்பொருப்பி உற்றவடிவி லொருகண்ணும்கொண் கற்றைக்குழலன்கடியன்விரைந்து, ! மற்றைக்கண்கொள்ளாமே கோல்ெ
மணிவண்ணநம்பு
மின்னிடைச் சீதைபொருட்டா, இன் மன்னன்மணிமுடி பத்துமுடன்வீழ, தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வி மின்னுமுடியற்கோர் கோல்கொண்
வேலையடைத்த
தென்னிலங்கைமன்னன் சிரந்தோள் மின்னிலங்குபூண் விபீடணநம்பிக் என்னிலங்குநாமத் தளவுமரசென்ற, மின்னலங்காரற்கோர் கோல்கொண்
வேங்கடவாண
புள்ளினைவாய்பிளந்திட்டாய் பொ கள்ளவரக்கியைழுக்கொடு காவல6 அள்ளிநீவெண்ணெய்விழுங்க அஞ் தெள்ளியநீரிலெழுந்த செங்கழுநீர்கு
வருகவருகவருகஇங்கே வாமனநப் கரியகுழல்செய்யவாய்முகத்துக் கா அரியனிவனெனக்கின்றுநங்காய்அ பரிபவம்பேசத்தரிக்ககில்லேன் பா
பற்றார்நடுங்கமுன் பாஞ்சசன்னிய சிற்றாயர்சிங்கமே சீதைமணாளா 8 சிற்றாடையும்சிறுப்பத்திரமுமிவை கற்றாயரோடுநீகன்றுமேய்த்துக்கல
படங்கள் பலவுடைப்பாம்பரையல் படர்பூமியைத் தடங்கைவிரலைந்தும் மலரவைத் தமோதரன் அடங்கச்சென்றி லங்கையை யீடபூ அனுமன்புக குடங்கைக்கொண்டுமந்திகள் கண் கோவர்த்தனெ
என்வில்வலிகண்டுபோவென் றெ தன், வில்லினோடும் தவத்தையெ முன்வில்வலித்து முதுபெண்ணுயி தன், வில்லின்வன்மையைப் பாடி
தாசரதி த
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 
 

பத்தும் ருப்பரே.
னில்,
ட, அக்
ன்னை
ாண்டுவா க்கோர் கோல்கொண்டுவா.
}ங்கையர்
ளைத்திட்ட, நிவா ாற்கோர் கோல்கொண்டுவா.
’துணிசெய்து, う。
ாடுவா iற்கோர் கோல்கொண்டுவா.
rருகரியின்கொம்பொசித்தாய் னைத்தலைகொண்டாய், நசாதடியேனடித்தேன், சூட்டவாராய்.
o வருகஇங்கே, குத்தநம்பி வருகஇங்கே,
அஞ்சனவண்ணா அசலகத்தார்,
வியேனுக்கிங்கேபோதராயே.
$தை வாய்வைத்தபோரேறே, என்
றுக்குட்டச்செங்கண்மாலே,
கட்டிலின்மேல்வைத்துப்போய்,
ந்துடன்வந்தாய்போலும்.
T தாங்கிக் கிடப்பவன்போல்,
த்
நாங்கு தடைவரை தான், த்ெத pபாடித் தங்குட்டன்களை, வளர்த்தும்
ன்னும் கொற்றக்குடையே.
நிர்வந்தான்
நிர்வாங்கி,
நண்டான்
ப்பற ண்மையைப் பாடிப்பற.
(127)
(178)
(179)
(180)
(186)
(203)
(248)
(270)
(308)

Page 19
மாற்றுத்தாய்சென்று வனம்போே ஈற்றுத்தாய்பின்தொடர்ந் தெம்பிர கூற்றுத்தாய்சொல்லக்கொடியவன சீற்றமிலாதானைப் பாடிப்பற
சீதைமன
முடியொன்றி மூவுலகங்களுமாண் அடியேற்கருளென் றவன்பின்தெ படியில்குணத்துப் பரதநம்பிக்கு, றடிநிலையீந்தானைப் பாடிப்பற
அயோத்திய
தார்க்கிளந்தம்பிக் கரசீந்து, தண்ட நூற்றவள்சொற்கொண்டுபோகி, நு சூர்ப்பணகாவைச் செவியொடுமூ ஆர்க்கஅரிந்தானைப் பாடிப்பற
அயோத்தி
காரார்கடலையடைத் திட்டிலங்ை ஓராதான்பொன்முடிஒன்பதோடெ நேராஅவன் தம்பிக்கேcளரசீந்த, ஆராவமுதனைப் பாடிப்பற
அயோத்திய
நந்தன்ம தலையைக்காகுத்தனைந உந்திபறந்தவொளியிழையார்கள் செந்தமிழ்த்தென்புதுவைவிட்டு சி ஐந்தினோடைந்தும் வல்லார்க்கல்
நெறிந்தகருங்குழல்மடவாய்நின்ன செறிந்தமணிமுடிச்சனகன்சிலையி தறிந்து, அரசுகளைகட்டஅருந்தவ செறிந்தசிலைகொடுதவத்தைச்சிை
அல்லியம்பூமலர்க்கோதாய்அடிட சொல்லுகேன்கேட்டருளாய் துை எல்லியம் போதினி திருத்தல்இரு
மல்லிகைமாமாலைகொண்டங்கா
கலக்கியமாமனத் தனளாய்க் கைே மலக்கியமாமனத்தனனாய்மன்ன?
O குலக்குமராகாடுறையப்போவென
இலக்குமணன் தன்னோடுமங்கே
வாரணிந்தமுலைமடவாய்வைதே தேரணிந்தஅயோத்தியர்கோன்டெ கூரணிந்தவேல்வலவன்குகனோடு சீரணிந்ததோழமைகொண்டதுமே
மானமருமென்னோக்கி வைதேவி கானமரும்கல்லதர்போய்க்காடுை தேனமரும்பொழிற்சாரல்சித்திரசு பால்மொழியாய்பரதநம்பிபணிந்
கம்பன் மலர் - 2000
 

5யென்றிட, ான்என்றழ, ம்போன,
னாளனைப் பாடிப்பற.
டு, உன் TLfifög5, அன்
'ர்கோமானைப் பாடிப்பற.
கம்
டங்கிடைச் க்கு, அவள்
நிக்கரசனைப் பாடிப்பற.
கபுக்கு, ான்றையும்,
பர்வேந்தனைப் பாடிப்பற.
வின்று
சொல்,
த்தன்சொல், லலில்லையே.
ாடியேன்விண்ணப்பம், றுத்துநினைக்கொணர்ந்த பத்ததோனிடைவிலங்க, தைத்ததுமோரடையாளம்.
பணிந்தேன்விண்ணப்பம், ணமலர்க்கண்மடமானே, ந்ததோரிடவகையில், ார்த்து மோரடையாளம்.
கேசிவரம்வேண்ட, வனும்மறாதொழிய, ாறுவிடைகொடுப்ப, கிய தோரடையாளம்.
வீ விண்ணப்பம், ருந்தேவிகேட்டருளாய், hம்கங்கைதன்னில், ாரடையாளம்,
விண்ணப்பம், றந்தகாலத்து,
டத்திருப்ப, ததுமோரடையாளம்,
(310)
(312)
(314)
(316)
(317)
(318)
(319)
(320)
(321)
(322)

Page 20
சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கைமு அத்திரமேகொண்டெறிய அனைத்து வித்தகனேஇராமாவோநின்னபயம் அத்திரமேஅதன்கண்ணைஅறுத்தது
மின்னொத்தநுண்ணிடையாய் மெய் பொன்னொத்தமானொன்று புகுந்தி நின்னன்பின்வழிநின்று சிலைபிடித் பின்னேஅங்கிலக்குமணன் பிரிந்தது
மைத்தகுமாமலர்க்குழலாய் வைதே ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்து அத்தகுசீரயோத்தியர்கோன் அடைய இத்தகையான்அடையாளம் ஈதவன்
திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்செ மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத் ஒக்குமாலடையாளம்அநுமன் என்று வைத்துக்கொண்டு, உகந்தனளால் ம
வாராரும்முலைமடவாள் வைதேவி சீராரும்திறல்அநுமன் தெரிந்துரைத் பாராரும்புகழ்ப்புதுவைப்பட்டர்பிர ஏராரும்வைகுந்தத் திமையவரோடி(
கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத் எதிரில்பெருமைஇராமனை இருக்கு அதிரும்கழல்பொருதோள் இரணிய உதிரமளைந்தகையோடிருந்தானை :
நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சா ஏந்துபெருமைஇராமனை இருக்குட காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடு வேந்தர்தலைவன்சனகராசன்தன் வே
கொலையானைக்கொம்புபறித்துக் ச சிலையால்மராமரமெய்ததேவனைச் தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று அலையார்கடற்கரைவீற்றிருந்தானை
அலம்பாவெருட்டாக் கொன்றுதிரிய குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நீ சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்கள சிலம்பாறுபாயும் தென்திருமாலிருளு
வல்லாளன்தோளும் வாளரக்கன்முட பொல்லாதமூக்கும் போக்குவித்தால் எல்லாவிடத்திலு மெங்கும்பரந்து ப செல்லாநிற்கும்கீர்த்தென்திருமாலிரு
கணங்குழையாள்பொருட்டாக்கனை இனம்கழுவேற்றுவித்த எழில்தோெ கனங்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந் இனங்குழுவாடும்மலை எழில்மால
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

லைதீண்ட, லகும் திரிந்தோடி, என்றழைப்ப, மோரடையாளம்.
யடியேன்விண்ணப்பம், னிதுவிளையாட, தெம்பிரானேக, மோரடையாளம்.
வீ விண்ணப்பம், நுநினைத்தேட, பாளமிவைமொழிந்தான், கைம்மோதிரமே.
:ன்றந்நாள், ந்தான் மோதிரங்கண்டு,
உச்சிமேல் லர்க்குழலாள்சிதையுமே.
தனைக்கண்டு, த அடையாளம், ான் பாடல்வல்லார், நப்பாரே.
தநீள்முடியன், தமிடம்நாடுதிரேல், ானாகம்பிளந்து, அரியாய் உள்ளவாகண்டாருளர்.
ர்ங்கம் திருச்சக்கரம், மிடம்நாடுதிரேல், ஞ்சிலைசென்றிறுக்க, பள்வியிற்கண்டாருளர்.
கூடலர்சேனைபொருதழிய,
சிக்கெனநாடுதிரேல், தடவரைகொண்டடைப்ப ா அங்குத்தைக்கண்டாருளர்.
புமரக்கரை, lன்றதோன்மலை, ாடும் சீர்ச், ந்சோலையே.
டியும், தங்கை ாபொருந்தும்மலை, ல்லாண்டொலி, iஞ்சோலையே.
னபாரித்து, அரக்கர்தங்கள் Iளம்மிராமன்மலை, தகல்ஞாலமெல்லாம், ருெஞ்சோலையதே.
(323)
(324.)
(325)
(326)
(327)
(328)
(329)
(330)
(338)
(339)
(355)

Page 21
எரிசிதறும்சரத்தா லிலங்கையினை,
வரிசிலைவாயிற்பெய்து வாய்க்கோ அரையனமரும்மலை அமரரொடுே திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்
தங்கையை மூக்கும் தமையனைத்த: எங்கும் தன்புகழாவிருந்தரசாண்ட எ கங்கைகங்கையென்ற வாசகத்தாலே கங்கையின் கரைமேல் கைதொழநி
கூன்தொழுத்தைசிதகுரைப்பக்கொடி ஈன்றெடுத்ததாயரையு மிராச்சியமுப கான்தொடுத்தநெறிபோகிக் கண்டக தேன்தொடுத்தமலர்ச்சோலைத் திரு
பெருவரங்களவைபற்றிப் பிழக்குை உருவரங்கப்பொருதழித்திவ் வுலகி குரவரும்பக்கோங்கலரக் குயில்கூவு திருவரங்கமென்பதுவே யென்திரும
மரவடியைத்தம்பிக்குவான்பணைய செருவுடைய திசைக்கருமம் திருத்தி திருவடிதன் திருவுருவும் திருமங்கை உருவுடையமலர்நீலம் காற்றாட்ட ஒ
தன்னடியார்திறத்தகத்துத் தாமரைய! என்னடியாரது செய்யார் செய்தாரேன் மன்னுடையவியீடணற்காய் மதிளில் என்னுடைய திருவரங்கற் கன்றியும்
தேவுடையமினமாயாமையா யேனட மூவுருவிலிராமனாய்க்கண்ணனாய்க சேவலொடுபெடையன்னம்செங்கம பூவணைமேல் துதைந்தெழுசெம்டெ
உன்னுடையவிக்கிரமமொன்றொழி என்னுடையநெஞ்சகம்பால்சுவர்வழி மன்னடங்க மழுவலங்கைக்கொண் என்னிடைவந்தெம்பெருமானினிெ
s
தி
கனைத்திளங்கற்றெருமை கன்றுக்கி நினைத்துமுலைவழியே நின்றுபால் நனைத்தில்லம்சேறாக்கும் நற்செல்ல பனித்தழைவீழ நின்வாசல்கடைபற் சினத்தினால் தென்னிலங்கைக் கோ மனத்துக்கினையானைப் பாடவும் நீ இனித்தானெழுந்திரா யீதென்னபே அனைத்தில்லாத்தாரு மறிந்தேலோ அன்றிவ்வுலகமளந்தா யடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கைச்செற்ற பொன்றச்சகடமுதைத்தாய் புகழ்பே கன்றுகுணிலாவெறிந்தாய் கழல்பே
கம்பன் மலர் - 2000
 

தன்னுடைய ட்டம்தவிர்த்துகந்த, கானும்சென்று, சோலையதே.
லையும் தடித்தவெம்தாசரதிபோய், ாம்புருடோத் தமனிருக்கை,
கடுவினை களைந்திடகிற்கும், ன்ற கண்டமென்னும்கடிநகரே. டயவள் வாய்க்கடியசொற்கேட்டு, ாங்கொழிய,
ரைக்களைந்தானுர், வரங்கமென்பதுவே. டய இராவணனை, னைக்கண்பெறுத்தானூர், ம்குளிர்பொழில்சூழ், ால்சேர்விடமே.
ம்வைத்துப்போய்வானோர் வாழச், வந்துலகாண்ட திருமால்கோயில், மலர்க் கண்ணும்காட்டி நின்று, ஒசலிக்குமொளியரங்கமே.
ாளாகிலும் சிதகுரைக்குமேல், ல் நன்று செய்தாரென்பர்போலும், லங்கைத் திசைநோக்கிமலர்க்கண்வைத்த, மற்றொருவர்க்காளாவரே.
மாயரியாய்க்குறளாய், ற்கியாய் முடிப்பான்கோயில் }லமலரேறியூசலாடி, பாடியாடி விளையாடும் புனலரங்கமே
யாமலெல்லாம், Nயெழுதிக்கொண்டேன், -இராமநம்பி, யங்குப்போகின்றதே,
ஆண்டாள் ருப்பாவை
ரங்கி,
சோர, பன் தங்காய், றி, மானைச்செற்ற வாய்திறவாய், ருறக்கம், ரெம்பாவாய்.
ாய் திறல்போற்றி, ாற்றி, ாற்றி,
(356)
(391)
(405)
(406)
(412)
(413)
(420)
(468)
(485)

Page 22
குன்றுகுடையாவெடுத்தாய் குணம்டே வென்றுபகைகெடுக்கும் நின்கையில்( என்றென்றுன்சேவகமே யேத்திப்பை இன்றுயாம்வந்தோ மிரங்கேலோரெப்
eg, நாச்சியா
முற்றில்லாதபிள்ளைகளோம்முலைே சிற்றில்மேலிட்டுக்கொண்டு நீசிறிதுை கற்றிலோம், கடலையடைத்தரக்கர்குே செற்று, இலங்கையைப்பூசலாக்கியே
பேதநன்கறிவார்களோ டிவைபேசின யாதுமொன்றறியாதபிள்ளைகளோபை ஒதமாகடல்வண்ணா வுன்மணவாட்டி சேதுபந்தம்திருத்தினா யெங்கள் சிற்றி சீதைவாயமுதமுண்டாயெங்கள்சிற்றி வீதிவாய்விளையாடு மாயர்சிறுமியர் வேத வாய்த்தொழிலாளர்கள் வாழ் வி கோதைவாய்த்தமிழ்வல்லவர் குறைவி
எல்லேயீதென்இளமை எம்மனைமா, பொல்லாங்கீதென்றுகருதாய் பூங்குரு வில்லாலிலங்கையழித்தாய் நீவேண்டி பல்லாரும்காணாமேபோவோம் பட்டி பரக்கவிழித்தெங்கும்நோக்கிப் பலர்கு அரக்கநில்லாகண்ணநீரக ளலமருகின் இரக்கமேலொன்றுமிலாதா யிலங்கை குரக்கரசாவதறிந்தோம் குருந்திடைக்க மாதலிதேர்முன்புகோல்கொள்ள மாய தாய்தலையற்றற்றுவீழத் தொடுத்ததன் போதலர்காவில்புதுமணம்நாறப் பெ காதலியோடுடன் வாழ்குயிலேயென்
முல்லைப்பிராட்டி நீயுன்முறுவல்கள் அல்லல் விளைவியே லாழிநங்காயுன் கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட ( சொல்லும் பொய்யானால், நானும் பி
உண்ணாதுறங்கா தொலிகடலையூடறு பெண்ணாக்கையாப்புண்டு தாமுற்றே திண்ணார்மதிள்சூழ் திருவரங்கச்செல் எண்ணாதேதம்முடைய நன்மைகளே
குலே
பெரும
ஏறடர்த்ததுமேனமாய்நிலங்கீண்டதும்
மாறடர்த்ததும்மண்ணளந்ததும்சொல் ராறுபோல்வரும்கண்ணநீர்கொண்ட
சேறுசெய்தொண்டர்சேவடிச்செழுஞ்
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 
 

ாற்றி, வேல்போற்றி, றகொள்வான், )பாவாய்,
ண்டாள் ார் திருமொழி
பாந்திலாதோமை, நாடொறும் ண்டுதிண்ணெனநாமது லங்களை முற்றவும் சவகாஎம்மைவாதியேல்.
ால்பெரிதின்சுவை, D நீநலிந்தென்பயன், மாரொடுசூழறும், ல்வந்துசிதையேலே. ல்நீசிதையேலென்று, மழலைச்சொல்லை, ல்லிபுத்தூர்மன்விட்டுசித்தன்றன், வின்றிவைகுந்தம் சேர்வரே.
ர்காணிலொட்டார், ந்தேறியிருத்தி, டியதெல்லாம் தருவோம், டைப்பணித்தருளாயே
நடைந்தாடும் சுனையில், றவாபாராய், கயழித்தபிரானே, கூறைபணியாய்.
பனிராவணன்மேல்,சரமாரி லைவன்வரவெங்குங்காணேன், ாறிவண்டின் காமரங்கேட்டு, உன் கருமாணிக்கம்வரகூவாய்.
கொண்டு, எம்மை ானடைக்கலம், குமரனார் றந்தமை பொய்யன்றே. பத்துப்,
பேதெல்லாம்,
வனார்,
யெண்ணுவரே.
சேகராழ்வார்
ாள் திருமொழி ம்முன்னிராமனாய், லிப்பாடி, வண்பொன்னிப்பே ரங்கன்கோயில் திருமுற்றம், சேறென் சென்னிக்கணிவனே.
(497)
(519)
(520)
(523)
(526)
(527)
(547)
(600)
(613)
(660)

Page 23
மன்னுடபுகழ்க்கெளசலை தன் மணில் தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந் கன்னிநன்மாமதிள் புடைசூழ்கணபு என்னுடையஇன்னமுதே இராகவ( புண்டரிகமலரதன்மேல் புவனியெ6 திண்டிறலாள் தாடகைதன் உரமுருள் கண்டவர் தம்மனம் வழங்கும் கண எண்டிசையுமாளுடையாய் இராகவ கொங்குமலிகருங்குழலாள் கெளசை தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமரு கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்ெ எங்கள் குலத்தின்னமுதே இராகவே
தாமரைமேலயனவனைப்படைத்தல் மாமதலாய் மைதிலிதன்மணவாளா காமரங்களிசைபாடும் கணபுரத்தெள் ஏமருவும்கிலைவலவா இராகவனே
பாராளும்படர்செல்வம் பரதநம்பிக் ஆராவன்பிளையவனோ டருங்கான சீராளும்வரைமார்பா திருக்கண்ணபு தாராளும்நீண்முடியென் தாசரதீதாே
சுற்றமெல்லாம்பின் தொடரத் தொல் அற்றவர்கட்கருமருந்தே அயோத்தி கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்ெ சிற்றவைதன்சொல்கொண்ட சீராமா
ஆலினிலைப்பாலகனாயன்றுலகமு வாலியைக்கொன்றரசிளைய வானர காலின்மணிகரையலைக்கும் கணபு
ஆலிநகர்க்கதிபதியே அயோத்திமே
மலையதனாலணைகட்டி மதிளிலங் அலைகடலைக்கடைந்தமரர்க் கமுத் கலைவலவர்தாம்வாழும் கணபுரத்ே சிலைவலவா சேவகனே சீராமாதா
தளையவிழும்நறுங்குஞ்சித் தயரதல் வளையவொருசிலையதனால் டிதில் களைகழுநீர்மருங்கலரும் கணபுரத் இளையவர்கட்கருளுடையாய் இர
தேவரையுமசுரரையும் திசைகளையு யாவரும்வந்தடிவணங்க அரங்கநக காவிரிநல்நதிபாயும் கணபுரத்தென் ஏவரிவெஞ்சிலைவலவா இராகவே
கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபு தன்னடிமேல், தாலேலோ வென்று: கொல்நவிலும் வேல்வலவன் குடை
கம்பன் மலர் - 2000
 

ாயிறுவாய்த்தவனே, துவித்தாய், செம்பொன்சேர் ரத்தென்கருமணியே, னே தாலேலோ.
bலாம்படைத்தவனே, பச்சிலைவளைத்தாய், புரத்தென் கருமணியே னே தாலேலோ லைதன்குலமதலாய், காதாசரதீ, தன்கருமணியே, ன தாலேலோ.
பனே, தசரதன்றன் வண்டினங்கள் கருமணியே, rதாலேலோ.
கேயருளி, மடைந்தவனே ரத்தரசே, லேலோ.
கொனமடைந்தவனே, நகர்க்கதிபதியே, தன்கருமணியே, "தாலேலோ.
ண்டவனே, த்துக்களித்தவனே, ரத்தென்கருமணியே, ன தாலேலோ.
கையழித்தவனே தருளிச்செய்தவனே, தென்கருமணியே, லேலோ.
ாறன்குலமதலாய், ரிலங்கையழித்தவனே, தென்கருமணியே, ாகவனே தாலேலோ.
ம் படைத்தவனே, ர்த்துயின்றவனே, கருமணியே, னதாலேலோ,
ரத்தென் காகுத்தன், ரைத்ததமிழ்மாலை, -க்குலசேகரன்சொன்ன,
(719)
(720)
(721)
(722)
(723)
(724)
(725)
(726)
(727)
(728)

Page 24
பன்னியநூல்பத்தும்வல்லார் பாங் வன் தாளினிணை வணங்கிவளநச நின்றாயை, அரியணை மேலிருந் வென்றாள், எம்மிராமாவோஉ6ை நன்றாகநானிலத்தையாள் வித்தே
வெவ்வாயேன்வெவ்வுரைகேட் டி மைவாயகளிறொழிந்து தேரொழி நெய்வாயவேல்நெடுங்கண் நேரி எவ்வாறு நடந்தனையெம் மிராம
கொல்லணைவேல்வரிநெடுங்கண் மல்லணைந்தவரைத் தோளா வல் மெல்லணைமேல்முன்துயின்றா
கல்லணைமேல்கண்டுயிலக்கற்
வாபோகுவாஇன்னம்வந் தொரு வேய்போலுமெழில்தோளி தன் ெ மாபோகுநெடுங்கானம் வல்விை நீபோகவென்னெஞ்ச மிருபிளவா
பொருந்தார்கைவேல்நுதிபோல் ட விரும்பாதகான்விரும்பிவெயிலுை பெரும்பாவியேன்மகனேபோகில் அரும்பாவிசொற்கேட்ட அருவி
அம்மாவென்றுகந்தழைக்கு மார் என்மார்வதிடையழுந்தத் தழுவா கைம்மாவின்நடையன்னமென்ன எம்மானையென்மகனையிழந்திட்
பூமருவுநறுங்குஞ்சிபுன்சடையாய் காமரெழில் விழலுடுத்துக் கலன ஏமருதோளென் புதல்வன்யானின் தூமறையீரிதுதகவோ சுமந்திரனே
பொன்பெற்றாரெழில்வேதப்புதல் மின்பற்றா நுண்மருங்கு மெல்லி நின்பற்றாநின்மகன்மேல் பழிவி என்பெற்றாய்கைகேசீ யிருநிலத்தி
முன்னொருநாள்மழுவாளிசிலை உன்னையுமுன்னருமையையுமுள என்னையும்என்மெய்யுரையும் ெ நின்னையே மகனாகப் பெறப்டெ தேன்நகுமாமலர்க்கூந்தல் கெளச கூனுருவில்கொடுந் தொழுத்தை
கானகமேமிவிரும்பி நீதுறந்தவ6 வானகமேமிகவிரும்பிப்போகின் ஏரார்ந்தகருநெடுமாலிராமனாய்
தாரார்ந்ததடவரைத்தோள்தயரதன கூரார்ந்தவேல்வலவன் கோழியர் சீரார்ந்ததமிழ்மாலையிவைவல்ல
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

காயபத்தர்களே. (729) ரம் தொழுதேத்தமன்னனாவான் தாயை நெடுங்கானம்பட ரப்போகு எப்பயந்த கைகேசிதன்சொற்கேட்டு, ன் நன்மகனேயுன்னைநானே. (730)
ருநிலத்தைவேண்டாதே விரைந்து, வென்றி ந்து மாவொழிந்துவனமேமேவி, ழையுமிளங்கோவும்பின்புபோக, ாவோ எம்பெருமானென்செய்கேனே. (731)
ா கெளசலைதன் குலமதலாய்குனிவில்லேந்தும், வினையேன் மனமுருக்கும்வகையேகற்றாய், யின்றினிப்போய்வியன்கானமரத்தின் நீழல் றனையோ காகுத்தாகரியகோவே. (732)
கால்கண்டுபோ மலராள்கூந்தல்,
பாருட்டாவிடையோன்றன்வில்லைச்செற்றாய், னயேன் மனமுருக்கும்மகனே, இன்று ாய்ப்போகாதேநிற்குமாறே. (733)
பரல்பாயமெல்லடிகள் குருதி சோர, றைப்ப வெம்பசிநோய் கூர, இன்று ாறாய் கேகயர் கோன்மகளாய்ப்பெற்ற,
னையே னென்செய்கே னந்தோயானே. (734)
வச்சொல்கேளாதே அணி சேர்மார்வம், தேமுழுசாதேமோவாதுச்சி, டையும்கமலம்போல்முகமும்காணாது, ட இழி தகையேனிருக்கின்றேனே. (735)
ாப்புனைந்து பூந்துகில் சேரல்குல், ணியாதங்கங்களழகு மாறி, ாறு செலத்தக்க வனந்தான்சேர்தல்,
வசிட்டனே சொல்லீர்நீரே. (736)
ல்வனையும் தம்பியையும் பூவை போலும், பலென் மருகியையும்வனத்தில்போக்கி, ளைத் திட்டென்னையும்நீள்வானில்போக்க,
லினிதாக விருக்கின்றாயே. (737)
வாங்கியவன் தவத்தை முற்றும் செற்றாய், ாமோயின்வருத்த முமொன்றாகக்கொள்ளாது, மய்யாகக் கொண்டுவனம்புக்கவெந்தாய், பறுவேனேழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே. (738)
லையும் சுமித்திரையும் சிந்தைநோவ, சொற்கேட்டகொடியவள் தன்சொற்கொண்டு, இன்று ாநகரைத்துறந்து, நானும் றேன் மனுகுலத்தார்தங்கள்கோவே. (739)
வனம்புக்கவதனுக்காற்றா, ாறான் புலம்பிய அப்புலம்பல் தன்னை கோன் குடைக் குலசேகரன்சொற்செய்த, ார் தீநெறிக்கண் செல்லார் தாமே. (740)

Page 25
அங்கணெடுமதில்புடைசூழயோத் அணிநகரத்துல வெங்கதிரோன்குலத்துக்கோர்விளக் விண்முழுதுமுய் செங்கனெடுங்கருமுகிலையிராமன் தில்லைநகர்த்தி எங்கள் தனிமுதல்வனையெம்பெரு யென்று கொே
வந்தெதிர்ந்த தாடகைதனுரத்தைக்கீ வருகுருதிபொழி மந்திரங்கொள் மறைமுனிவன்வேலி
வல்லரக்கருயி செந்தளிர்வாய்மலர்நகைசேர்செழுந் தில்லைநகர்த்தி அந்தணர்களொருமூவாயிரவரேத்த அணிமணியாச
செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்க சினவிடையோன் வெவ்வரிநற்சிலை வாங்கிவென்றிே வேல்வேந்தர்ட தெவ்வரஞ்சநெடும்புரிசையுயர்ந்த ட தில்லைநகர்த் எவ்வரிவெஞ்சிலைத் தடக்கையிரா யிறைஞ்சுவாரிை
தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசெ தொன்னகரந்துற பத்தியுடைக்குகன்கடத்தவனம்போ பரதனுக்கு சித்திரகூடத்திருந்தான்றன்னையின்று தில்லைநகர்த் எத்தனையும்கண்குளிரக்காணப்பெ இருநிலத்தார்க்கில வலிவணக்குவரைநெடுந்தோள் விர வண்டமிழ்மாமு கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீ கரனோடு தூ சிலை வணக்கிமான்மரியவெய்தான் தில்லைநகர்த் தலைவணக்கிக்கைகூப்பியேத்தவல் திரிதலால்தவ
தனமருவுவைதேகிபிரியலுற்றுத்
தளர்வெய்திச்சா வனமருவு கவியரசன்காதல் கொண் வாலியைக்கொன் சினமடங்கமாருதியால்சுடுவித்தான தில்லைநகர்த் இனிதமர்ந்தவம்மானையிராமன்ற யேத்துவாரி
கம்பன் மலர் - 2000
 
 

யென்னும் னைத்தும்விளக்கும் சோதி காய்த் தோன்றி பக்கொண்டவீரன் றன்னை, றன்னைத் ருச்சித்திர கூடந்தன்னுள், மான்றன்னை லாகண்குளிரக்காணுநாளே.
5) தரவன்கணையொன்றேவி, ாவிகாத்து நண்டமைந்தன்காண்மின், தண்சோலைத்
ருச்சித்திரகூடந்தன்னுள்,
னத்திருந்தவம்மான்றானே.
இச் சிலையிறுத்துமழுவாளேந்தி, கொண்டு
கைதடிந்தவீரன்றன்னை, பாங்கர்த் திருச்சித்ரகூடந்தன்னுள், மன்றன்னை ணயடியேயிறைஞ்சினேனே.
ால்லால் ந்து துறைக்கங்கைதன்னை, ய்ப்புக்குப் ப்பாதுகமுமரசுமீந்து,
திருச்சித்ரகூடந்தன்னுள்,
ற்ற மையவர்நேரொவ்வார்தாமே.
ாதைக்கொன்று னிகொடுத்தவரிவில்வாங்கி ந்கிக் உணன்றனுயிரைவாங்கி
றன்னைத் திருச்சித்ரகூடந்தன்னுள்,
6) [[[T முடைத்தித்தரணிதானே.
டாயுவைவைகுந்தத்தேற்றி டு நிலங்கைநகரரக்கர்கோமான், னத்
திருச்சித்ரகூடந்தன்னுள்,
3) GÖT ணையடியேத்தினேனே.
(741)
(742)
(743)
(744)
(745)
(746)

Page 26
குரைகடலையடலம்பால்மறுகவெ குலைகட்டி எரிநெடுவேலரக்கரொடுமிலங்கை இன்னுயிர் கெ திருமகளோடினிதமர்ந்த செல்வன் தில்லைநகர் அரசமர்ந்தானடிசூடுமரசையல்லா அரசாகவெ
அம்பொனெடுமணிமாடஅயோத் அரசெய்தி அகத்தி றன்பெருந்தொல்கதைகேட்டு மிதி யுலகுய்யத்தி செம்பவளத்திரள் வாய்த்தன் சரிை தில்லைநகர் எம்பெருமான்றன் சரிதை செவியா பருகுவோமி
செறிதவச்சம்புகன்றன்னைச்சென்று செழுமறையோ நிறைமணிப்பூணணியுங்கொண்டி தம்பியால்வா திறல்விளக்குமிலக்குமனைப்பிரிந் தில்லைநகர் உறைவானை, மறவாதவுள்ளந்தன் யுடையோம்ம
அன்றுசராசரங்களைவைகுந்தத்தே அடலரவட் வென்று, இலங்குமணிநெடுந்தே விண்முழுது சென்றினிதுவீற்றிருந்தவம்மான்ற
தில்லைநகர் என்றும் நின்றான வணிவனென்ே மிறைஞ்சுமினோ
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னு திறல்விளங்கும எல்லையில்சீர்த்தயரதன்றன்மகன றதுமுதல கொல்லியலும்படைத்தானைக்செ கோழியர்கோன்கு நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வ நலந்திகழ்நா
திரு திரு
அரங்கனே தரங்கநீர் கலங்கவன்று மரங்கடேயமாநிலம் குலுங்கமாக நெருங்க நீ கடைந்தபோது நின்ற( குரங்கையாளுகந்தவெந்தை கூறு(
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 

ாய்து மறுகரையையதனாலேறி, வேந்தன் ாண்டவன் தம்பிக்கரசுமீந்து,
றன்னைத் ந்திருச்சித்ரகூடந்தன்னுள்,
ல்
ண்ணேன்மற்றரசுதானே.
தியெய்தி யன்வாய்த்தான்முன்கொன்றான் லைச்செல்வி திருவயிறுவாய்த்தமக்கள், தகேட்டாள் த்திருச்சித்ரகூடந்தன்னுள், ல்கண்ணால் ன்னமுதைமதியோமின்றே.
கொன்று னுயிர்மீட்டுத் தவத்தோனீந்த, லவணன்றன்னைத் னேற்றி முனிவன்வேண்ட, தான்றன்னைத் த்திருச்சித்ரகூடந்தன்னுள்
go ற்றுறுதுயரமடையோமின்றே
ற்றி பகையேறியசுரர்தம்மை ாள்நான்கும்தோன்ற மெதிர்வரத்தன்தாமமேவி ன்னைத், த்திருச்சித்ரகூடந்தன்னுள், றத்திநாளு வெப்பொழுதும்தொண்டீர்நீரே.
னுள் ாருதியோடமர்ந்தான்றன்னை, ாய்த்தோன்றிற் ாத்தன்னுலகம்புக்கதீறா, ாற்றவொள்வாள் டைக்குலசேகரன் சொற்செய்த, பல்லார் ரணனடிக்கீழ்நண்ணுவாரே.
மழிசையாழ்வார்
ச்சந்தவிருத்தம்
குன்றுசூழ், ணம்சுலாய், சூரரென்செய்தார், தேறவேறிதே.
(747)
(748)
(749)
(750)
(751)
(772)

Page 27
வானகம்மும் மண்ணகம்மும் வெற் போனகம் செய்தாலிலைத் துயின்ற தேனஞ்செய் தண்ணறும் மலர்த்துபூ கூனகம்புகத்தெறித்த கொற்றவில்லி
காலநேமிகாலனே கணக்கிலாததீர்த ஞாலமேழுமுண்டுபண்டோர் பால வேலைவேவ வில்வளைத்த வெல் பாலாராயபத்தர்சித்தம் முத்திசெய்
குரக்கினப்படைகொடு குரைகடலி அரக்கரங்கரங்கவெஞ் சரந்துரந்தவ இரக்கமண்கொடுத்தவற் கிரக்கமெ பரக்கவைத்தளந்துகொண்ட பற்பட
மின்னிறத்தெயிற்றரக்கன் வீழவெளு பின்னவற்கருள் புரிந் தரசளித்தபெ நன்னிறத்தொரின்சொலேழை பின் பொன்னிறத்தவண்ணனாய புண்ட
வெற்பெடுத்துவேலைநீர் கலக்கின வெற்பெடுத்துவேலைநீர் வரம்புக வெற்பெடுத்தவிஞ்சிசூ Nலங்கைக வெற்பெடுத்துமாரிகாத்த மேகவண் கொண்டைகொண்டகோதைமீது ே உண்டைகொண்டரங்கவோட்டி யு. நண்டையுண்டுநாரைபேர வாளைட அண்டைகொண்டுகெண்டைமேயு
வெண்டிரைக்கருங்கடல் சிவந்துவே திண்டிறல்சிலைக்கைவாளி விட்ட, எண்டிசைக்கணங்களு மிறைஞ்சிய வண்டிரைத்தசோலைவேலி மன்னு
சரங்களைத்துரந்துவில் வளைத்து இ சிரங்கள் பத்தறுத்துதிர்த்த செல்வர் பரந்துபொன்நிரந்துநூந்தி வந்தலை அரங்கமென்பர்நான்முகத் தயன்ப
இலைத்தலைச்சரந்துரந் திலங்கைச் மலைத்தலைப்பிறந்திழிந்து வந்து குலைத்தலைத்திறுத்தெறிந்த குங்கு அலைத்தொழுகுகாவிரி யரங்கமே
இலங்கைமன்னனைந்தொடைந்து கலங்கவன் றுசென்றுகொன்று வெ விலங்குநூலர் வேதநாவர் நீதியான வலங்கொளக்குடந்தையுள் கிடந்த
மரம்பொதச்சரந்துரந்து வாலிவீழழு உரம்பொதச்சரந்துரந்த வும்பராளிெ வரம்குறிப்பில்வைத்தவர்க் கலாது நிரம்புநீடுபோகமெத் திறத்தும்யா
கம்பன் மலர் - 2000
 
 

புமேழ் கடல்களும், புண்டரீகனே, ாய்நன்மாலையாய், யெல்லையே.
தியாய், னாயபண்பனே, சினத்த வீர, நின் பும்மூர்த்தியே.
ன்மீதுபோய், ாதிநீ, ான்று மின்றியே, 1ாதனல்லையே.
நசரம்துரந்து,
ற்றியோய், னைகேள்வ மன்னுசீர்ப், ரீகனல்லையே.
ாய் அதன்றியும் ட்டி வேலைசூழ், ட்டழித்தநீர், ாணனல்லையே. தனுலாவுகூனிகூன், ள் மகிழ்ந்தநாதனூர், uITU pÉ6dy Guido,
மந்தணிரரங்கமே.
வவ முன்னொர்நாள், வீரர்சேருமூர், ாடுதீர்த்தநீர், சீரங்கமே.
இலங்கைமன்னவன், மன்னுபொன்னிடம், க்கும்வார்புனல், ணிந்தகோயிலே.
5ட்டழித்தவன், துந்துசந்தனம், மக்குழம்பினோடு, யவண்ணலே.
பைந்தலைநிலத்துக, ன்றிகொண்டவீரனே, கேள்வியார், மாலுமல்லையே.
மன்னொர்நாள், யம்பிரான், வானமாளிலும், க்குமில்லையே.
(781)
(782)
(783)
(784)
(790)
(800)
(8O1)
(802)
(805)
(807)
(824)

Page 28
கடைந்தபாற்கடல்கிடந்து காலநே உடைந்தவாலி தன்றனக் குதவவந் மிடைந்தவேழமரங்களு மடங்கெ அடைந்தமாலபாதமே யடைந்துந
பண்ணுலாவுமென்மொழிப் படை எண்ணிலாவரக்கரை நெருப்பினா கண்ணலாலொர் கண்ணிலேன் கல எண்ணிலாதமாயநின்னை யென்னு
சுரும்பரங்குதண்டுழாய் துதைந்த6 விரும்பிநின்றிறைஞ்சுவேற் கிரங்க கரும்பிருந்தகட்டியே கடல்கிடந்த இரும்பரங்கவெஞ்சரம் துரந்தவில்
ஊனின்மேயஆவிநீ உறக்கமோடு ஆனில்மேயவைந்தும்நீ அவற்றுள் வானினோடுமண்ணும்நீ வளங்கட யானும்நீயதன்றியெம் பிரானும்நீ
கடும்கவந்தன்வக்கரன் கரன்முரன் இடந்துகூறுசெய்தபல் படைத்தட கிடந்திருந்துநின்றியங்கு போதும் தொடர்ந்து விள்விலாததோர் தொ மாறுசெய்தவாளரக்கன் நாளுலப்ட நீறுசெய்துசென்றுகொன்று வென் வேறுசெய்துதம்முளென்னை வை கூறுசெய்துகொண்டிறந்த குற்றடெ
தொண்ட
புலையறமாகிநின்ற புத்தொடுசம கலையறக்கற்றமாந்தர் காண்பரே! தலையறுப்புண்டும்சாவேன் சத்தி சிலையினால்லிலங்கைசெற்ற தே
ஒருவில்லாலோங்குமுந்நீரடைத் செருவிலேயரக்கர்கோனைச் செற் மருவியபெரியகோயில் மதிள்திரு
கருவிலேதிருவிலாதீர் காலத்தைக் அடிமையில்குடிமையில்லா அய குடிமையில்கடமைப்பட்ட குக்கா முடியினில்துளபம்வைத்தாய் மெ அடியரையுகத்திபோலு மரங்கமா
தொண்ட திரு
மோட்டிளமேதிகள் தளைவிடுமா வேய்க்குழலோ ஈட்டிய இசை திசைபரந்தனவயலு இரிந்தனசுரும்
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

மியைக்கடித்து, திராமனாய், வய்து, வேங்கடம் iாளுமுய்ம்மினோ.
த்தடங்கணாள் பொருட்டு,
ல் நெருக்கினாய், பந்தசுற்றம்மற்றிலேன், றுள் நீக்கலென்றுமே.
ஸ்ர்ந்தபாதமே, கரங்கவாணனே, கண்ணனே, bலிராமனே.
ணர்ச்சிரீ, ர்நின்றதுய்மைநீ, டற்பயனும்நீ, பிராமனே.
சிரம்மவை, க்கைமாயனே, நின்னபொற்கழல்,
டர்ச்சிநல்கவேண்டுமே.
ப, அன்றிலங்கை றிகொண்டவீரனார், த்திடாமையால், நமன் மண்ணவல்லனே.
-ரடிப் பொடியாழ்வார்
திருமாலை
ணமெல்லாம், கேட்பரோதாம், யங்காண்மின்ஐயா, வனேதேவனாவான்.
துலகங்களுய்ய, றநம்சேவகனார், |வரங்கமென்னா, கழிக்கின்றீரே. ல் சதுப்பேதிமாரில், ரில்பிறப்பரேலும், ாய்கழற்கன்புசெய்யும், நகருளானே.
டரடிப் பொடியாழ்வார் ப்பள்ளியெழுச்சி
யர்கள்
சையும் விடைமணிக்குரலும்,
அள்
பினம் இலங்கையர்குலத்தை,
(832)
(842)
(844)
(845)
(855)
(867)
(878)
(882)
(910)

Page 29
வாட்டியவரிசிலைவானவரேறே
மாமுனிவே: ஆட்டியவடுதிறலயோத்தியெம்ம அரங்கத்தம் புலம்பினபுட்களும் பூம்பொழில் போயிற்று கலந்ததுகுணதிசைக் கனைகடலர களிவண்டுமி அலங்கலந் தொடையல் கொண் அமரர்கள் இலங்கையர்கோன் வழிபாடுசெ எம்பெருமா
தி
9} உவந்தவுள்ளத்தனா யுலகமளந்த நிவந்தநீண்முடிய னன்று நேர்ந்தற் கவர்ந்த வெங்கணைக்காகுத்தன்க சிவந்த வாடையின் மேல் சென்ற
சதுரமாமதிள் சூழிலங்கைக்கிறை துதிரவோட்டி, ஓர்வெங்கனையுய் மதுரமாவண்டுபாட மாமயிலாட றுதரபந்தன மென்னுள்ளத்துள்நில
திரு (ରL
எம்பிரானெந்தையென்னுடைச்சுற் அம்பினாலரக்கர்வெருக்கொள ெ வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்ை நம்பிகாளுய்யநான்கண்டுகொண்ே வாலிமாவலத்தொருவனதுடல்செ ஏலநாறு தண்டடம் பொழிலிடம் ஆலிமாமுகிலதிர்தரவருவரை யக பீலிமாமயில்நடஞ்செயும் தடஞ்சு
கலங்கமாக்கடலரிகுலம்பணிசெய் இலங்கைமாநகர்பொடிசெய்தவப விலங்கல்போல் வனவிறலிருஞ் { பிலங்கொள்வா ளெயிற்றரியவை
இலங்கையும் கடலுமடலருந்துட் குலங்களும்கெடமுன்கொடுந் த்ெ விலங்கலிலுரிஞ்சிமேல் நின்றவி வலந்தரு மணி நீர்க்கங்கையின் க மான்முனிந்தொருகால்வரிசிலை6 ஊன்முனிந்தவனதுடலிருபிளவா தான் முனிந்திட்டவெந்திறல்சாப
மாமுனிகொணர்ந்த கங்கையின் சு
கம்பன் மலர் - 2000
 

வியைக்காத்து, அவயிரதம் rᏣᎲ ா பள்ளியெழுந்தருளாயே.
5ளின்வாய் க்கங்குல் புகுந்ததுபுலரி,
D முற்றிய கலம்பகம்புனைந்த, -டியிணைபணிவான்
புகுந்தனராதலிலம்மா, ப்கோயில் ன் பள்ளியெழுந்தருளாயே.
ருப்பாணாழ்வார்
மலனாதிபிரான்'
ண்டமுற,
சாசரரை, டியார் போரிலரங்கத்தம்மான், அரைச் நாம் என சிந்தனையே.
வன் தலைபத்
பத்தவ னோதவண்ணன், ாங்கத்தம்மான், திருவயிற் iறுலாகின்றதே.
மங்கையாழ்வார்
பரியதிருமொழி
ற மெனக்கரசென்னுடை வாணாள், நருக்கிய வருயிர்செகுத்தவெம்மண்ணல், சை மாமணிக்கோயிலே வணங்கி, டேன் நாராயணாவென்னும்நாமம்.
கடவரிசிலைவளைவித்தன்று, பெற விருந்தநலிமயத்துள், டுறமுகடேறி, னைப் பிரிதிசென்றடைநெஞ்சே,
ய அருவரையணைகட்டி, .கள் தாமிருந்தநலிமயத்து, சினத்தன வேழங்கள் துயர்கூர, நிரிதரு பிரிதிசென்றடைநெஞ்சே,
பி னிருநிதிக்கிறைவனும், அரக்கர் ாழில்புரிந்த கொற்றவன் கொழுஞ்சுடர்சுழன்ற, சம்பில் வெண்துகில் கொடியெனவிரிந்து, ரைமேல்வதரியாச்சிராமத்துள்ளானே. ளைத்த மன்னவன் பொன்னிறத்துரவோன், வுகிர்நுதி மடுத்து, அயனரனைத்,
தவிர்த்தவன், தவம்புரிந்துயர்ந்த, ரைமேல்வதரியச்சிரமத்துள்ளானே.
(920)
(921)
(928)
(930)
(953)
(958)
(959)
(980)
(985)

Page 30
கலையும்கரியும்பரிமாவும் திரியும் சிலையும்கணையும் துணையாகச் மலைகொண்டலைநீரணைகட்டி
தலைபத்தறுத்து கந்தான்சாளக்கிர
கடம்சூழ்கரியும்பரிமாவும்மொலி உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை இடஞ்சூழ்தெங்குமிரு விசும்பிலி தடஞ்சூழ்ந்தெங்கு மழகாயசாளக்
உலவுதிரையும்குலவரையு மூழிமு நிலவும்சுடருமிருளுமாய் நின்றால் வலவன், வானோர்தம்பெருமான் சலவன், சலஞ்சூழ்ந்தழகாய சாள
ஊரான்குடந்தையுத்தம னொருகா தேராவரக்கர்தேர்வெள்ளம் செற்ற பேரான், பேராயிரமுடையான் பி. தாரான், தாராவயல்சூழந்த சாளச்
அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்? விடுத்தான்,விளங்குசுடராழிவிண் கடுத்தார்த்தெழுந்தபெருமழைை தடுத்தான், தடஞ்சூழ்ந்தழகாய ச1
வண்கையானவுணர்க்குநாயகன்ே மண்கையாலிரந்தான் மராமரமே எண்கையானிமயத்துள்ளானிருஞ் திண்கைம்மாதுயர்தீர்த்தவன் திரு
கண்ணார்கடல்சூழிலங்கைக்கிை திண்ணாகம்பிளக்கச் சரஞ்செலவு விண்ணோர்தொழும் வேங்கடம. அண்ணா, அடியேனிடரைக்கை
இலங்கைப்பதிக்கன்றிறையாய, குலங்கெட்டவர்மாளக் கொடிப்ட விலங்கல்குடுமித் திருவேங்கடம் அலங்கல்துளபமுடியா யருளாே
காசையாடை மூடியோடிக்காதல் நாசமாகநம்பவல்ல நம்பிநம்பெ வேயினன்னதோள்மடவார் வெளி ஏசநின்றவெம்பெருமா னெவ்வுல
தையலாள்மேல் காதல்செய்த தா பொய்யிலாதபொன்முடிகளொன் செய்தவெம்போர்தன்னி லங்கோ எய்தவெந்தையெம்பெருமா னெ
முன்னோர்தூது வானரத்தின்வாயி மன்னூர்தன்னை வாளியினால்மா பின்னோர் தூதனாதி மன்னர்க்கா இன்னார் தூதனெனநின்றா னெல்
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

ம்கானம்கடந்துபோய், சென்றான் வென்றிச்செருக்களத்து மதிள்நீரிலங்கைவாளரக்கர்தலைவன், ாமமடைநெஞ்சே,
மாத்தேரும்காலாஞம்,
பொடியாவடி வாய்ச்சரந்துரந்தான்
மையோர் வணங்கமணங்கமழும் கிராமமடைநெஞ்சே,
pதலாவெண்திக்கும், ன்வென்றிவிறலாழி
மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும் க்கிராமமடைநெஞ்சே.
லிருகால்சிலைவளைய, ான் வற்றாவருபுனல்சூழ் றங்குசிறைவண்டறைகின்ற ந்கிராமமடைநெஞ்சே.
விட்டலறவவள்மூக்கயில்வாளால் rணோர்பெருமான்நண்ணார்முன், யக்கல்லொன்றேந்தியினநிரைக்காத் ாளக்கிராமமடைநெஞ்சே.
வள்வியில்சென்றுமாணியாய், ழுமெய்தவலத்தினான், சோலைமேவியவெம்பிரான், வேங்கடமடைநெஞ்சமே.
றவன்றன் ய்த்தாய், ாமலைமேய ளயாயே.
அரக்கர் புள்திரித்தாய், மேய,
.
செய்தானவனுர்,
ருமான், ண்ணெயுண்டானிவனென்று, ர்கிடந்தானே.
னவன்வாளரக்கன், ாபதோடொன்றும், அன்று ார்செஞ்சரத்தாலுருள, வ்வுள்கிடந்தானே.
ல்மொழிந்து, அரக்கன் ாளமுனிந்து, அவனே கிப் பெருநிலத்தார் ப்வுள்கிடந்தானே.
(988)
(989)
(990)
(991)
(992)
(1022)
(1038)
(1039)
(1058)
(1059)
(1060)

Page 31
விற்பெருவிழவும்கஞ்சனும்மல்லும்ே செற்றவன்றன்னை, புரமெரிசெய்த சி பற்றலர்வீயக்கோல்கையில் கொண்டு சிற்றவைபணியால் முடிதுறந்தானை
பரதனும் தம்பிசத்துருக்கனனுமிலக்கு இரவுநன்பகலும் துதிசெய்யநின்ற வி குரவமேகமழும்குளிர்பொழிலூடு கு இரவியின் கதிர்கள் நுழைதல்செய்தற்
மாலுங்கடலாரமலைக்குவடிட்டனை கோலமதிளாயவிலங்கைகெடப்படை காலமிதுவென்றயன்வாளியினால் கதி நீலமுகில்வண்ணனெமக்கிறைவற்கி
தொண்டாயார் தாம்பபரவுமடியினா படிகடந்ததாளாளற்காள விண்டானை, தென்னிலங்கையரக்க விலங்குண்ணவலங்கை பண்டாயவேதங்கள் நான்கும் ஐந்து
வேள்விகளும்கேள்விே கண்டானை, தொண்டனேன் கண்டு
கடிபொழில்சூழ்கடல்ம
குடைத்திறல்மன்னவனாயொருகால் யடைத்தவனெந்தை பிரானதிடம்மன விடைத்திறல் வில்லவன் நென்மெலி படைத்திறல் பல்லவர்கோன் பணிந்:
கறைவளர்வேல்கரன்முதலாக்கவந்த கணையொன்றினால்மட பிறையெயிற்றுவாளரக்கர் சேனைெ பெருந்தகையோடுடன் மறைவளரப்புகழ்வளரமாடந்தோறு மண்டபமொண்டொளி சிறையணைந்தபொழிலணைந்த தெ திருக்கோவலூரதனுள் ச
கூனுலாவியமடந்தை தன்கொடுஞ்ெ கானுலாவியகரு முகில் திருநிறத்தவ வானுலாவியமதிதவழ்மால்வரைமா
தேனுலாவிய செழும்பொழில்தழுவி
மின்னின் நுண்ணிடைமடக்கொடிகா மன்னன், நீண்முடிபொடி செய்தமை அன்னமாமலரரவிந்தத்தமளியில் டெ செந்நெலார்கவரிக்குலைவீசுதண் திரு
எய்யச்சிதைந்ததிலங்கைமலங்க வரு உய்யப்பருவரைதாங்கி யாநிரைகாத் வையத்தெவரும்வணங்க அணங்கெ தெய்வப்புள்ளேறிவருவான் சித்திரக
கம்பன் மலர் - 2000
 

வேழமும்பாகனும் வீழச்
வனுறுதுயர்களை தேவை,
பார்த்தன்றன்தேர் முன்நின்றானை, த் திருவல்லிக்கேணிக்கண்டேனே. (1068)
நமனோடுமைதிலியும் ராவணாந்தகனை யெம்மானை, யிலொடு மயில்கள்நின்றால, றியாத் திருவல்லிக்கேணிக்கண்டேனே. (1074)
னகட்டி வரம்புருவ, மதிசேர் - தொட்டொரு காலமரிலதிர, Gர் நீண்முடிபத்துமறுத்தமரும், டம் மாமலையாவதுநீர்மலையே. (1082)
னைப்
ாயுய்தல் ர்வேந்தை
வாய்ச்சரங்களாண்டு,
யாடங்கமாறும் கொண்டேன்
ல்லைத்தலசயனத்தே. (1096)
குரங்கைப்படையா, மலையால்கடலை னி மாடங்கள் சூழ்ந்தழகாயகச்சி, யிெல் வெருவச்செருவேல் வலங்கைப்பிடித்த, த பரமேச்சுரவிண்ணகர மதுவே. (1135)
ன் வாலி
டியவிலங்கைதன்னுள்,
யல்லாம்
துணித்தபெம்மான்றன்னை,
ம்
யனைத்தும்வாரமோத
ன்றல்வீசும்
கண்டேன்நானே. (1142)
சாலின் திறத்திளங்கொடியோடும், னிடம் கவினாரும்,
மதிள்புடை சூழ
ய திருவயிந்திரபுரமே. (Il53)
ரணம்விலங்கலின் மிசை யிலங்கை ந் தனதிடம் மணிவரைநீழல்,
படையொடுமினிதமர,
நவயிந்திரபுரமே. (1154)
மழைகாப்பான்,
தானென்றேத்தி,
ழுமாமலைபோலே,
வடத்துள்ளானே. (1173)
15

Page 32
பைங்கண்விறல்செம்முகத்துவாலி படர்வனத்துக்கவந்தெ வெங்கண்விறல்விராதனுகவிற்குள் விண்ணவர்கோன் தா துங்கமுகமாளிகைமேலாயங்கூறு
துடியிடையார் முகக்க திங்கள்முகம்பனிபடைக்குமழகா
சீராமவிண்ணகரேசே!
பொருவில்வலம் புரியக்கன்முடிக
புற்றுமறிந்தனபோல செருவில்வலம்புரிசிலைக்கைமை
திருவடிசேர்ந்துய்கிற் மருவிவலம்புரி கைதைக்கழியூடா
வயல்நண்ணிமழைத தெருவில்வலம்புரிதரளமீனும் கா சீராமவிண்ணகரேசே!
அஞ்சுவன்வெஞ்சொல்நங்காய்அ வெஞ்சினமூக்கரிந்த விறலோன்தி பஞ்சியமெல்லடியெம்ப ணைத்ே வஞ்சியந்தண்பணைசூழ் வயலால்
சிறையார்உவணப்புள்ளொன்றேற திசைநான்கும் நான்கு கறையார் நெடுவேலரக்கர்மடியக் கடல்சூழிலங்கைகை முறையால்வளர்க்கின்றமுத்தீயர்ந ஐவேள்வியாறங்கரே மறையோர் வணங்கப்புகழ்ழெய் மணிமாடக்கோயில்
கலையிலங்குமகலல்குலரக்கர் கு காதொடுமூக்குடனரி தலையிலங்கைவைத்துமலையில தடந்தோளன் மகிழ்ந் சிலையிலங்குமணிமாடத்துச்சிமி செழுங்கொண்டலகப மலையிலங்குமாளிகைமேல்மலி வைகுந்தவிண்ணகரப்
மின்னனைய நுண்மருங்குல் மெல் வேந்தன் முடியொரு தன்நிகரில்சிலைவளைத்தன் றிலா தடந்தோளன்மகிழ்தி செந்நெலொடுசெங்கமலம் சேல்ச செங்கழு நீரொடுமின மன்னுடிகழ்வேதியர்கள் மலிவெ வைகுந்தவிண்ணகரப்
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

மாளப்
னொடும் படையார்திண்கை,
Eத்த
ளணைவீர், வெற்புப்போலும்
ο
கமலச்சோதிதன்னால்
ர் காழிச்
it SafGp. (1183)
5ள்பத்தும்
ப்புவிமேல்சிந்த,
லத்தோள்வேந்தன்
பீர், திரைநீர்த்தெள்கி
tg.
ருநீர் தவழ்கால்மன்னி,
ழிச்
řL66řG3. (Il84)
ரக்கர்குலப்பாவைதன்னை,
றங்கேட்கில், மெய்யே
தோளி பரக்கழிந்து,
லிளபுகுவர்கொலோ. (1210)
யன்று மிரிய, செருவில்
கடந்தானிடந்தான்
ால்வேதர்
ழினிசையோர்,
துநாங்கூர்
வணங்கென்மனனே. (1221)
லக்கொடியை
யக்கதறியவளோடி
ங்கைபுகச்செய்த
தினிதுமருவியுறைகோயில்
சைச்சூலம்
டிரியக்சொரிந்தசெழுமுத்தம்,
வெய்துநாங்கூர்
மவணங்குமடநெஞ்சே, (1231)
ஸ்லியற்காயிலங்கை
பதும்தோளிருபதும்போயுதிர
ங்கைபொடிசெய்த
னிது மருவியுறைகோயில்
கயல்கள்வாளை
டந்து கழனிதிகழ்ந்தெங்கும்,
ய்துநாங்கூர்
D வணங்குமடநெஞ்சே, (1232)

Page 33
வானெடுங்கண்மலர்க்கூந்தல் மைதி மன்னன்முடியொருட தாணெடுந்திண்சிலைவளைத்த தயர தனிச்சரண் வானவ சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல் செந்நெலொடுமடு, வாணெடுங்கண்கடைசியர்கள் வாரு அரிமேயவிண்ண
வாராருமிளங்கொங்கை மைதிலியை காரார் திண் சிலை இறுத்த தனிக்கா ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்ம சீராரும்மலர்ப்பொழில்சூழ் திருத்தே
கம்பமாகடலடைத் திலங்கைக்கும6 அம்பினாலறுத்து, அரசவன்தம்பிக செம்பலாநிரைசெண்பகம்மாதவி சூ வம்புலாம்கமுகோங்கியநாங்கூர்வன
தீமனத்தரக்கர்திறலழித்தவனேயென் தாய்மனத்திரங்கியருளினைக் கொடு தேமலர்ப்பொழில்சூழ்நாங்கைநன்ன காமனைப்பயந்தான்றன்னைநானடி
மல்லைமாமுந்நீரதர்படமலையால6 கல்லின் மீதியன்றகடி மதிளிலங்கை செல்வநான்மறையோர் நாங்கை நன் அல்லிமாமலராள் தன்னொடுமடிே
தான்போலுமென்றெழுந்தான் தரணி
அதுகண்டுதரித்திருப்பா கோன்போலுமென்றெழுந்தான் குன்
இருபதுதோளுடன் துை மான்போலுமென்னோக்கின் செய்ய
மரகதம்போல்மடங்கிளி தேன்போலுமென்மழலை பயிற்றுந
திருத்தெற்றியம்பலத்தெ
கருமகளிலங்கையாட்டி பிலங்கொள் வருமவள் செவியும்மூக்கும் வாளின பெருமகள் பேதைமங்கை தன்னொ திருமகள்மருவுநாங்கூர்த் திருமணிக்
உருத்தெழுவாலிமார்விலொருகனை கருத்துடைத்தம்பிக்கின்பக் கதிர்முடி பருத்தெழுபலவும்மாவும் பழம்விழு கருத்தனே காவளந்தண் பாடியாய்க:
முனைமுகத்தரக்கன்மாள முடிகள்ப கனையவற்கிளையவற்கே யரசளித்த சுனைகளில் கயல்கள்பாயச் சுரும்புே கணிகழல்காவளந்தண் பாடியாய்கை
கம்பன் மலர் - 2000
 

லிக்காஇலங்கை பதும் தோளிருபதும் போயுதிர, தன்சேய்என்றன் பர்க்கரசுகருதுமிடம், தடமார்
கயல்கள்வாளை த்தரிய வுதிர்ந்தசெழுமுத்தம், மணிநாங்கூர் கரம் வணங்குமடநெஞ்சே.
பமணம்புணர்வான், ளை கருதுமிடம் றையோர்நாங்கைதன்னுள், தவனார்தொகையே,
ன்கதிர்முடியவைபத்தும் ளித்தவனுறைகோயில் தகம்வாழைகள் சூழ், ண்புருடோத்தமமே.
று சென்றடைந்தவர் தமக்கு, க்கும்தயரதன்ம தலையை சயமே, எடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே, யேன்கண்டு கொண்டுய்ந்தொழிந்தேனே.
ணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,
கலங்க வோர் வாளிதொட்டானை,
ாண்டுவுள் செம்பொன் செய்கோயிலினுள்ளே
பன் கண்டுகொண்டல்லல் தீர்ந்தேனே.
சியாளன்
னரக்கர்தங்கள்
ாறமன்ன
Eந்த வொருவன் கண்டீர்,
வாயார்
யைக் கைமேல்கொண்டு,
ாங்கூர்
தன் செங்கண்மாலே.
வாய்திறந்து, தன்மேல் ால் தடிந்தவெந்தை, டும் பிரிவிலாத, கூடத்தானே.
னயுருவவோட்டி, டயரசளித்தாய், ழந்தொழுகும் நாங்கைக், ளைகணியே.
த்தறுத்து வீழ்த்து,ஆங் ருளினானே, தேன்நுகருநாங்கைக்,
ளகணியே.
(1243)
(1255)
(1258)
(1272)
(1273)
(1283)
(1292)
(1300)
(1301)

Page 34
கல்லால்கடலை யணைகட்டியுக நல்லார்பலர்வேதியர் மன்னியநா செல்வா, திருவெள்ளக்குளத்துை எல்லாவிடரும் கெடுமாறருளாே
அரக்கராவிமாள அன்றாழ்கடல்கு குரக்கரசனென்றும் கோலவில்லி நெருக்குமாடநீடுநாங்கை நின்மெ பரக்கழிந்தாளென்மடந்தை பார்த்
காற்றிடைப்பூளைகரந்தனவரந்:ை கூற்றிடைச்செல்லக்கொடுங்கனை ஊற்றிடைநின்றவாழையின் கனி சேற்றிடைக்கயல்களுகள் திகழ்வ
மேவாவரக்கர்தென்னிலங்கை 6ே மாவாய்பிளந்துமல்லடர்த்து மருத் காவார்தெங்கின்பழம்வீழக் கயல் பூவார்கழனியெழிலாரும் புள்ளம்
வெற்பால்மாரிபமுதாக்கி விறல்ல வற்பார்திரடோளைந்நான்கும் து கற்பார்புரிசைசெய்குன்றம் கவின பொற்பார்மாடமெழிலாரும் புள்
விளைத்தவெம்போர் விறல்வாள வளைத்தவல்வில் தடக்கையவனு துளைக்கையானை மருப்பு மகிலு திளைக்கும்செல்வப்புனல்காவிரி
வம்புலாம் கூந்தல்மண்டோதரிகா அம்புதன்னால் முனிந்த வழகனி உம்பர்கோனுமுலகேழும் வந்தீன் செம்பொனாரும்மதிள்சூழ்ந் தழக
நீரழலாய்நெடுநிலனாய்நின்றாை னுாரழலாலுண்டானைக் கண்டார் பேரழலாய்ப்பெருவிசும்பாய்ப்பி ஆரழலாலுண்டானைக் கண்டதுே
சுரிகுழல்கனிவாய்த்திருவினைப்ட எரிவிழித்திலங்குமணிமுடி பொ வரிசிலைவளையவடுசரம்துரந்து அரிகுலம்பணிகொண்டலைகடல்
ஊழியாயோமத்துச்சியா யொருக சூழிமால்யானைத்துயர் கெடுத்தி பாழியால்மிக்கபார்த்தனுக்கருளி ஆழியாலன்றங்காழியைமறைத்த
ஏழையேதலன்கீழ்மகனென்னா
திரங்கி மற்றவற்கின்
மாழைமான்மட நோக்கியுன்தோ யும்பியெம்பியென்ெ
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

தாய்,
ங்கூர்ச்
ரவானே,
. (1313)
சூழிலங்கைசெற்ற,
யென்றும், மாமதியை
ரன்தானென்றென்றோதி,
தன்பள்ளிபாடுவாளே. (1322)
நயுறக் கடலரக்கர்தம் சேனை, ன துரந்தகோலவில்லிராமன்றன் கோயில், களுழ்த்துவீழ்ந்தனவுண்டுமண்டி, பல்சூழ் திருவெள்ளியங்குடியதுவே. (1343)
வந்தன்வீயச்சரம்துரந்து,
நம் சாய்த்தமாலதிடம்,
கள் பாயக்குருகிரியும்,
பூதங்குடிதானே. (1350)
பாளரக்கர்தலைவன்றன்,
னித்தவல்விலிராமனிடம்,
ார்கூடம்மாளிகைகள்,
ளம் பூதங்குடிதானே. (1351)
ரக்கன்நகர்பாழ்பட,
க் கிடமென்பரால்,
1ம் கொணர்ந்துந்தி, முன்
சூழ் தென்னரங்கமே. (1381)
தலன் வான்புக,
டமென்பரால்,
எடிவணங்கும், நல்
கார்தென்னரங்கமே. (1382)
ன, அன்றரக்க
பின்காணோமே,
ன்மறையோர்மந்திரத்தின்,
தென்னரங்கத்தே. (1402)
பிரித்த கொடுமையில் கடுவிசையரக்கன், டி செய்திலங்கைபாழ்படுப்பதற்கெண்ணி, மறிகடல்நெறிபட,மலையால் மலையால், படைத்தானரங்கமாநகரமர்ந்தானே. (1414)
ாலுடைய தேரொருவனாய் உலகில், லங்கை மலங்கவன் றடுசரந்துரந்து, பகலவனொளிகெடப் பகலே, ானரங்கமாநகரமர்ந்தானே. (1415)
னருள்சுரந்து, ழி றாழிந்திலை, உகந்து

Page 35
தோழனியெனக்கிங்கொழியென்ற
சொற்கள்வந் தடியேன்ம
ஆழிவண்ண நின்னடியிணையடைந்' அணிபொழில் திருவரங்
வாதமாமகன்மர்க்கடம்விலங்கு
மற்றோர்சாதியென்றொ காதலாதரம்கடலினும்பெருகச்செய்
தகவினுக்கில்லைகைம். கோதில்வாய்மையினாயொடுமுடே யுண்பனானென்ற வொ6 ஆதல்வேண்டுமென்றடியிணையடை அணிபொழில் திருவரங்
விலங்கலால்கடலடைத்து விளங்கின இலங்கைமாநகர்க்கிறைவ னிருபது நலங்கொள்நான்மறைவல்லார்களே மலங்குபாய்வயல்திருப்பேர் மருவி
கல்லாவைம்புலன்களவைகண்டவா மல்லாமல்லருள் மல்லர்மாள மல்ல, மல்லா, மல்லலம்கீர்மதிள்நீரிலங்கை வில்லா, நின்னடைந்தேன் திருவிண்
மற்றோர்தெய்வமெண்ணே னுன்னை பெற்றேன், பெற்றதுவும் பிறவாமை வற்றாநீள் கடல்சூழிலங்கையிராவல் செற்றாய், கொற்றவனே திருவிண்ண
மின்னேரிடையார் வேட்கையைமாற் என் நீரிருமி யெம்பால்வந்ததென்றிக தொன்னீரிலங்கைமலங்க விலங்கெr நன்னீர்நறையூர்நாம்தொழுதுமெழுெ
ஆனைப்புரவித் தேரோடுகாலாளணி சேனைத்தொகையைச்சாடி, யிலங்ை மீனைத்தழுவிவீழ்ந்தெழும் மள்ளர்க் நானப்புதலிலாமையொளிக்கும் நை
தெள்ளார்கடல்வாய்விடவாயச்சினவ துள்ளாவருமான்விழ வாளிதுரந்தானி புள்ளார்புறவில்பூங்காவி புலன்கொ நள்ளார்கமலம்முகங்காட்டும் நறையூ
கிடந்தநம்பிகுடந்தைமேவிக் கேழல யிடந்தநம்பி, எங்கள்நம்பி யெறிஞர கடந்தநம்பிகடியாரிலங்கை உலகை நடந்தநம்பிநாமம்சொல்லில் நமோர
கல்லார்மதிள்சூழ் கச்சிநகருள்நச்சி ட எல்லாவுலகும் வணங்க விருந்தவம் வல்லாளாகம்வில்லால்முனிந்த வெ நல்லானுடையநாமம்சொல்லில் நே
கம்பன் மலர் - 2000
 
 
 

னத்திருந்திட தேன் கத்தம்மானே.
ழந்திலை, உகந்து
மாறென்று,
ண்பொருள், எனக்கும் டந்தேன் கத்தம்மானே.
ழபொருட்டு, வில்லால் புயம் துணித்தான், பத்தொலியேத்தக்கேட்டு, நான்வாழ்ந்தவாறே.
று செய்யகில்லேன், டர்த்த
கயழித்த னகர்மேயவனே.
னயென்மனத்துவைத்துப் யெம்பெருமான், ணனைச்
ாகரானே.
றியிருந்து, ழாதமுன், ரியூட்டினான்,
நஞ்சமே.
கொண்ட, கசெற்றாளனுர், கலமந்து,
றயூரே.
பாளரவில் துயிலமர்ந்து,
ரந்தான் மாவலிமண், ள்மாதர்கண்காட்ட,
பூர்நின்றநம்பியே.
ாயுலகை ரணழிய, பீரடியால், தாராயணமே.
ாடகத்துள், மான், இலங்கைக்கோன் ந்தை, விபீடணற்கு மாநாராயணமே.
(1418)
(1419)
(1433)
(1463)
(1472)
(1483)
(1490)
(1510)
(1538)
(1541)

Page 36
அகில இலங்கைக் கம்பன் கழகம்
குடையாவரையால் நிரைமுன் காத் விடைதானேழும்வென்றான்கோவ அடையாவரக்கர்வீயப்பொருது ே நடையாவுண்ணக்கண்டான் நாமம்
கானனண்கும்குரங்கும் முசுவும்பன மானமழித்துநின்ற வென்றியம்மா தேனும்பாலுமமுதுமாய திருமால் நானும்சொன்னேன்நமருமுரைமின் உரங்களாலியன்றமன்னர்மாளப்
பாரதத்தொருதே ரைவ இரங்கியூர்ந்தவர்கின்னருள்செய்யு எம்பிரானை வம்பார்பு அரங்கமாளியென்னாளிவிண்ணாளி ஆழிசூழிலங்கைமலங்
சரங்களாண்டதண்டாமரைக்கண்ண
கன்றியென்மனம் தாழ் தேராளும்வாளரக்கன்தென்னிலங்ை போராளும்கிலையதனால் பொருக தாராளும்வரைமார்பன் தண்சேறை பேராளன்பேரோதும் பெரியோரை செம்பொன்மதிள்சூழ்தென்னிலங்ை உம்பார்வாளிக்கிலக்காக வுதிர்த்தவ கொம்பிலார்ந்தமாதவிமேல் கோதி அம்பராவும்கண்மடவார் ஐம்பால பந்தணைந்தமெல்விரலாள்சிதைக்க
பகலவன் மீதியங்காத6 அந்தமில்திண்கரம்சிரங்கள் புரண்
அடுகணையாலெய்து செந்தமிழும்வடகலையும் திகழ்ந்த
திசைமுகனேயனையவ அந்தணர்தமாகுதியின் புகையார்ெ
தணியழுந்தூர்நின்றுகர் நீலமலர்கள் நெடுநீர்வயல்மருங்கி சாலமலரெல்லா மூதாதே, வாளரக் காலன்கண்ணபுரத் தெம்பெருமான் கோலநறுந்துழாய் கொண்டுதாய்ே
ஏழுமாமரம் துளைபடச் சிலைவை ஆழியான்,நமக்கருளியவருளொடு தோழிநாமிதற்கென்செய்தும் துணை ஆழஆழ்கின்ற ஆவியையடுவதோ கலங்கமாக்கடல்கடைந்தடைத் தில் மலங்க வெஞ்சமத்தடுசரம்துரந்த ெ இலங்குவெங்கதிரிளமதியதனொடு விலங்கல்வேயின தோசையுமாயின தொண்டீருய்யும்வகைகண்டேன்து திண்டோள்நிமிரச்சிலைவளையச் வண்டார்கூந்தல்மலர்மங்கை வடிக் கண்டான், கண்டுகொண்டுகந்த கல்
 
 

தபெருமான், மருவாத
ல்நின்றான், தென்னிலங்கை
மவிவெங்கூற்றம்,
நமோநாராயணமே. (1542)
டயா, அடலரக்கர்
ன், எனக்கென்றும்
Gருநாமம்,
ா நமோநாராயணமே. (1543)
ர்க்காய்ச்சென்று,
னல்காவிரி,
别
கச்சென்று,
ானுக்
ந்துநில்லாதே. (1571) கை வெஞ்சமத்துப் பொன்றிவீழ, ணைகள் போக்குவித்தாயென்று, நாளும் யெம் பெருமானும்பராளும்,
யொருகாலும்பிரிகிலேனே. (1581)
கைக்கிறைவன்சிரங்கள் ஐயிரண்டும் ரவோனூர்போலும்,
மேய்ந்தவண்டினங்கள்,
ணையுமழுந்தூரே. (1590)
ாகிப்
விலங்கைவேந்தன்,
டுவீழ
கந்தவம்மான்காண்மின்,
ாநவர்
பர்கள் செம்மைமிக்க
சல்வத்
தவமரர்கோவே. (1624)
ib,
கர்
கதிர்முடிமேல்,
கால்தும்பீ (1685) ளத்திலங்கையை மலங்குவித்த ம் பகலெல்லைகழிகின்றதால், னயில்லை சுடர்படுமுதுநீரில்,
ரந்திவந்தடைகின்றதே. (1692) உங்கையர்கோனதுவரை யாகம், வம்மடிகளும் வாரானால், ம்ெ விடைமணியடும், ஆயன் ரி விளைவதொன்றறியேனே. (1694)
ளங்காவரக்கர்துளங்க,முன்
சிறிதேமுனிந்த திருமார்பன், கண்மடந்தைமாநோக்கம் ண்ணபுரம்நாம்தொழுதுமே. (1698)
20

Page 37
பொருந்தாவரக்கர்வெஞ்சமத்துப் ெ பெருந்தோள் மாலிதலைபுரளப் டே இருந்தார்தம்மையுடன்கொண்டங் கருந்தாள்சிலைகைக் கொண்டானூ
வல்லியிடையாள் பொருட்டாகமதி அல்லல்செய்துவெஞ்சமத்து ளாற்ற வல்லாளரக்கர்குலப்பாவை வாடமு கல்விச் சிலையால் காத்தானூர் கண் மல்லைமுந்நீரதர்பட வரிவெஞ்சின கொல்லைவிலங்குபணிசெய்யக் ெ தொல்லைமரங்கள் புகப்பெய்து து கல்லால்கடலையடைத்தானூர் கண்
ஆமையாகியரியாகி யன்னமாகி, அ ஒமமாகிஊழியாகி உலகுசூழ்ந்தநெ சேமமதிள் சூழிலங்கைக்கோன் சிர காமற்பயந்தான்கருதுமூர் கண்ணபு வருந்தாதிருநீமடநெஞ்சே நம்மேல் திருந்தாவரக்கர்தென்னிலங்கை செ பெருந்தோள் வாணற்கருள் புரிந்து கருந்தாள்களிறொன்றொசித்தானூர் இலையார்மலர்ப்பூம்பொய்கைவா கொலையார்வேழம்நடுக்குற்றுக்குள் அலைநீரிலங்கைத்தசக்கிரீவற் கிளை கலைமாச்சிலை யாலெய்தானூர் கன தொண்டருமமரரும் முனிவரும்தெ அண்டமொடகலிடமளந்தவ ரமர்ெ விண்டவர்படமதிளிலங்கைமுன்னெ கண்டவர்கணபுர மடிகள் தமிடமே. வையமெல்லாமுடன்வணங்க வண வெய்யசிற்றக்கடியிலங்கைகுடி கொ செய்தவெம்போர்நம்பரனைச் செழு
கைதைவேலிக்கண்ணபுரத் தடியேல்
மீனோடாமைகேழலரி குறளாய்முை தானாய், பின்னுமிராமனாய்த் தாயே மானான்றன்னை, கண்ணபுரத்தடிய
தேனாரின்சொல்தமிழ்மாலை செப்
வானுளாரவரைவலிமையால்நலியு பானுசேர்சரத்தால்பனங்கனிபோலட் கானுலாமயிலின்கணங்கள்நின்றாட தேனுலாவரிவண்டின்னிசைமுரலும் கலையுலாவல்குல்காரிகைதிறத்துக்க சிலையினாலிலங்கை தீயெழச்செற் மலைகுலாமாடமங்கையர்தலைவன் உலவுசொல்மாலையொன்பதோடெ
கம்பன் மலர் - 2000
 

பான்றவன்றுபுள்ளூர்ந்து,
ர்ந்தவரக்கர் தென்னிலங்கை, கெழிலார் பிலத்துப்புக்கொளிப்ப,
கண்ணபுரம்நாம்தொழுதுமே. (1699)
ள் நீரிலங்கையார்கோவை,
ல்மிகுத்தவாற்றலான்,
னிதன்வேள்வியை,
ணபுரம் நாம்தொழுதுமே. (1700) லகால்வளைவித்து,
காடியோனிலங்கைபுகலுற்று
வலைநிமிர்ந்துவானணவ,
ணபுரம்நாம்தொழுதுமே. (17OI) ந்தணர்தம்
டும்புணரி,
மும்கரமும்துணித்து, முன்
ாம்நாம்தொழுதுமே. (1702) வினைகள்வாரா, முன்
ந்தீயுண்ணச்சிவந்தொருநாள், பின்னைமணாளனாகி, முன் கண்ணபுரம்நாம்தொழுதுமே. (1703)
ய்முதலைதன்னாலடர்ப்புண்டு, லையவதனுக்கருள்புரிந்தான், ாயோற்கரசையருளி, முன் ண்ணபுரம்நாம்தொழுதுமே. (1704) ாழுதெழ, சய்து எரியெழ,
(1712) ங்காமன்னனாய்த்தோன்றி, ண்டோடவெஞ்சமத்துச் ந்தண்கானல்மணநாறும், கண்டுகொண்டேனே. (1724)
எனுமிராமனாய்த்
ாதரனாய்க்கற்கியு
ன்கலியனொலிசெய்த,
ப்பாவம்நில்லாவே. (1727)
) மறிகடலிலங்கையார் கோனை, பருமுடியு திரவில்வளைத்தோன், க் கணமுகில்முரசநின்றதிர,
திருக்கண்ணங்குடியுள்நின்றானே. (1754) டல் பெரும்படையொடும்சென்று, ற திருக்கண்ணங்குடியுள்நின்றானை, மானவேல்கலியன் வாயொலிகள், ான்றும் வல்லவர்க்கில்லைநல்குரவே. (1757)
- 21

Page 38
வில்லாலிலங்கைமலங்கச் சரம்துர வல்லாளன்பின்போன நெஞ்சம்வ எல்லாருமென்றன்னை யேசிலும் புல்லாணியெம்பெருமான் பொய்
செற்றவன்தென்னிலங்கைமலங்க பெற்றும்,என்நெஞ்சகம் கோயில் கற்றவன், காமருசீர்க்கலியன் கண் கொற்றவன், முற்றுலகாளிநின்ற ( சிரமுனைந்துமைந்தும்சிந்தச்சென் உரமும்கரமும்துணித்த வுரவோணு இரவும்பகலுமீன்தேன்முரல, மன் குரவின் பூவேதான்மண நாறுங்கு
சிலையாலிலங்கைசெற்றான் மற்( கொலையார்கொம்புகொண்டான் கலையார்பனுவல்வல்லான் கலிய நிலையார்பாடல்பாடப் பாவம்நி
வணங்கலிலாரக்கன்செருக்களத்த அணங்கெழுந்தவன்றன்கவந்தம் பிணங்கலில்நெடுவேய்நுதிமுகம் மணங்கமழ்சாரல்மாலிருஞ்சோை
காவலனிலங்கைக்கிறைகலங்கச்ச ஏவலம்தவிர்த்தா னென்னையாளு நாவலம்புவிமன்னர்வந்துவணங்க தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்
இரக்கமின்றியெங்கோன்செய்ததீ யிம்மையேயெமக்ெ பரக்கயாமின்றுரைத்தென்இராவ பட்டனணினியாவர்க் குரக்குநாயகர்கா விளங்கோவே
கோலவல்விலிராமபி அரக்கராடழைப் பாரில்லைநாங் அஞ்சினோந்தடம்ெ
பத்துநீண்முடியுமவற்றிரட்டிப்
பாழித்தோளும்படை சித்தம்மங்கையர் பால்வைத்துக்ெ செய்வதொன்றறியா? ஒத்ததோளிரண்டுமொருமுடியும்
ஒருவர்தம்திறத்தோப அத்தவெம்பெருமானெம்மைக்ெ லஞ்சினோம்தடம்ெ
தண்டகாரணியம் புகுந்தன்று
தையலைத்தகவிலிெ கொண்டுபோந்துகெட்டான் எமக் குற்றமில்லைக்கொள் பெண்டிரால்கெடுமிக்குடிதன்னை பேசுகின்றதென் தாச அண்டவாணருகப்பதேசெய்தா
யஞ்சினோம்தடம்ெ
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

ந்த,
ருமளவும், பேசிடினும், கேட்டிருந்தேனே,
த்தேவர்பிரான்திருமாம களை, கொண்டபேரருளாளன்பெருமைபேசக், "ணகத்தும்மனத்துமகலாக் குறுங்குடிக்கேயென்னையுய்த்திடுமின்.
று, அரக்கன் ார்போலும், ாறெல்லாம் றுங்குடியே.
றோர்சினவேழம்,
மேயகுறுங்குடிமேல், னொலிமாலை, ல்லாவே.
வியமணிமுடியொருபதும் புரள, நின்றாட அமர்செய்த வடிகள்தம்கோயில், கிழிப்பப் பிரசம்வந்திழிதர, பெருந்தேன் ல வணங்குதும்வாமடநெஞ்சே,
ரம்செலவுய்த்து, மற்றவன்
டை யெம்பிரான்,
கமாலுறைகின்றதிங்கென,
ட்டியூரானே.
கய்திற்றுக்காணிர், ணன் குரைக்கோம்,
ரானே, கள் பாங்கத்தம்பொங்கோ.
த்தவன்செல்வம், கெட்டான் வடியோங்கள்,
>ன்றி வாழ்ந்தோம், கால்லே பாங்கத்தம்பொங்கோ
யங்கோமான் க்கிங்கோர் ப்லேல்குலவேந்தே, னப்
ரதீ, உன்
பாங்கத்தம்பொங்கோ.
(1782)
(1797)
(1801)
(1807)
(1822)
(1843)
(1858)
(1859)
(1860)

Page 39
எஞ்சலிலிலங்கைக்கிறை யெங்கோ
றன்னைமுன்பணிந்து, நஞ்சுதானரக்கர்குடிக்கென்று
நங்கையையவன் தம்பி விஞ்சைவானவர் வேண்டிற்றேபட்( வேரிவார்பொழில்மாம அஞ்சலோதையைகொண்டுநடமி
னஞ்சினோம்தடம்பொ
செம்பொன்நீண்முடி யெங்களிராவ சீதையென்பதோர்தெய் வம்புலாம்கடிகாவில்சிறையா
வைத்ததே குற்றமாயிற் கும்பனோடு நிகும்பனும்பட்டான்
கூற்றம்மானிடமாய்வந் அம்பினாலெம்மைக்கொன் றிடுகின் தஞ்சினோம் தடம்பொ
ஒதமாகடலைக்கடந்தேறி
யுயர்கொள்மாக்கடிகான காதல்மக்களும்சுற்றமுங்கொண்று
கடியிலங்கைமலங்கெ தூதுவந்தகுரங்குக்கே உங்கள்
தோன்றல்தேவியைவிட ஆதர்நின்றுபடுகின்றதந்தோ
அஞ்சினோம்தடம்பெ.
தாழமின்றிமுந்நீரையஞ்ஞான்று
தகைந்ததேகண்டு வஞ் மாழைமான்மடநோக்கியைவிட்டு
வாழகிலாமதியின்மன: ஏழையையிலங்கைக்கிறைதன்னை யெங்களையொழியக்ெ சூழுமாநினை மாமணிவண்ணா
சொல்லினோம் தடம்ெ
மனங்கொண்டேறும்மண்டோதரிழு அங்கயல்கண்ணினார் தனங்கொள்மென்முலைநோக்கயெ தஞ்சமேசிலதாபதரென் புனங்கொள்மென்மயிலைச்சிறைை புன்மையாளன்நெஞ்சி அனங்கனன்ன திண்டோளெம்மிர கஞ்சினோம் தடம்பெ
புரங்கள்மூன்றுமோர்மாத்திரைப்ே பொங்கெரிக்கிரைகண் சரங்களேகொடிதாயடுகின்ற
சாம்பவானுடன் நிற்க: இரங்குநீயெமக்கெந்தைபிரானே
இலங்குவெங்கதிரோ குரங்குகட்கரசே யெம்மைக்கொல் கூறினோம் தடம்பொ
கம்பன் மலர் - 2000
 

ாங்கள் கண்முகப்பே
யேசொன்னான்,
டாம்
யிலன்ன,
ங்கத்தம்பொங்கோ.
ணன் வம்கொணர்ந்து,
றுக்காணிர்,
துதோன்றி,
ாற 1ங்கத்தம்பொங்கோ.
வையிறுத்து
வரித்து
ட்டுக்கொடாதே,
ாங்கத்தம்பொங்கோ,
சிநுண்மருங்குல்
த்தானை,
காலையவனை,
பாங்கத்தம்பொங்கோ.
மதலா களிருப்ப,
ாழிந்து
ig),
வத்த
ல்புகவெய்த,
மற் ாங்கத்தம்பொங்கோ.
பாதில் டவனம்பில்
$தொழுதோம்,
ன்சிறுவா, லேல் ங்கத்தம்பொங்கோ.
(1861)
(1862)
(1863)
(1864)
(1865)
(1866)

Page 40
அங்கவிவானவர்க்காகுலம்தீர
அணியிலங்கையழித் பொங்குமாவலவன்கலிகன்றி
புகன்றபொங்கத்தங்ே எங்கும்பாடிநின்றாடுமின்தொண் இம்மையேயிடரில்ல தங்குமூரண்டமேகண்டுகொண்மி சாற்றினோம் தடம்ெ
ஏத்துகின்றோம்நாத்தழும்ப இரா சோத்தநம்பீசுக்கிரீவா வும்மைத்ெ வார்த்தைபேசீரெம்மை யுங்கள் வி கூத்தர்போல ஆடுகின்றோம் குழ
எம்பிரானேயென்னையாள்வா ெ அம்பின்வாய்ப்பட்டாற்றகில்லா நம்பி அநுமாசுக்கிரீவா அங்கதே கும்பகர்ணன் பட்டுப்போனான் (
ஞாலமாளுமுங்கள் கோமா னெங் காலனாகிவந்தவா கண்டஞ்சிக்க நீலன்வாழ்க சுடேணன் வாழ்க அ
கோலமாகஆடுகின்றோம் குழம6
மணங்கள்நாறும்வார்குழலார் மா புணர்ந்தசிந்தைப்புன்மையாளன் கணங்களுண்ணவாளியாண்ட கா குணங்கள் பாடியாடுகின்றோம் கு
வென்றி தந்தோம் மானம்வேண்( இன்றுதம்மினெங்கள்வாணா விெ நின்றுகாணிர்கண்களார நீரெம்பை குன்றுபோல ஆடுகின்றோம் குழ
கல்லின்முந்நீர்மாற்றிவந்து காவல் அல்லல்செய்தானுங்கள் கோமா வெல்லகில்லாதஞ்சினோங்காண் கொல்லவேண்டா ஆடுகின்றோட்
மாற்றமாவதித்தனையே வம்மின் சீற்றம்நும்மேல்தீரவேண்டில் சே ஆற்றல்சான்றதொல்பிறப்பி லனு கூற்றமன்னார்காண ஆடீர் குழம6
கவளயானைப்பாய்புரவித் தேரே துவள, வென்றவென்றியாளன்ற6 தவளமாடநீடயோத்திக் காவலன் குவளைவண்ணன்காண ஆடீர் கு
ஏடொத்தேந்தும்நீளிலைவே லெ ஒடிப்போனார், நாங்களெய்த்தே சூடிப்போந்தோம் உங்கள் கோம கூடிக்கூடியாடுகின்றோம் குழமணி
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

தவன்றன்னை
கொண்டு, இவ்வுலகினில்
цеfї
G), இறந்தால்
ଜର୍ଦt
பாங்கத்தம்பொங்கோ. (1867)
மன் திருநாமம், தாழுகின்றோம் பானரம்கொல்லாமே,
மணி தூரமே. (1868)
யன்றென்றலற்றாதே, திந்திரசித்தழிந்தான் ன நளனே
குழமணிதூரமே. (1869)
களிராவணற்கு
ருமுகில்போல்,
ங்கதன்வாழ்கவென்று,
Eதூரமே. (1870)
தர்களாதரத்தைப்,
பொன்ற வரிசிலையால்
வலனுக்கிளையோன்
தழமணிதூரமே. (1871)
டோம் தானமெமக்காக,
ாம்பெருமான் தமர்காள்,
மக்கொல்லாதே,
மணி துரமே. (1872)
ல்கடந்து, இலங்கை
னெம்மையமர்க்களத்து,
வெங்கதிரோன்சிறுவா,
D குழமணிதுரரமே. (1873)
அரக்கருள்ளீர்,
வகம்பேசாதே,
மனைவாழ்கவென்று,
னிதூரமே. (1874)
ாடரக்கரெல்லாம்
ன் தமர்கொல்லாமே,
றன்சிறுவன்
ழமணிதூரமே. (1875)
ங்களிராவணனார்
r முய்வதோர்காரணத்தால்,
ானாணை தொடரேல்மின்
னிதூரமே. (1876)
24

Page 41
வென்றதொல்சீர்த்தென்னிலங்கை ெ குன்றமன்னாராடியுய்ந்த குழமணிது கன்றிநெய்ந்நீர்நின்ற வேற்கைக் கலி ஒன்றுமொன்றுமைந்து மூன்றும் ப
படைத்திட்டதிவ்வைய முய்யமுனர் பணிந்தேத்தவல்லார் து துடைத்திட்டவரைத்தனக்காக்கவெ தெளியாவரக்கர்திறல்ே மிடைத்திட்டெழுந்தகுரங்கைப்பை விலங்கல்புகப்பாய்ச்சில் அடைத்திட்டவன் காண்மினின்றாய் அளைவெண்ணெயுண் நெறித்திட்டமென் கூழைநன்னேரின் டுடனாயவில்லென்னவ இறுத்திட்டவளின்பமன்போடணை டிளங்கொற்றவனாய்த்து செறித்திட்டிலங்கைமலங்கவரக்கன் செழுநீண்முடி தோளெ அறுத்திட்டவன்காண்மினின்றாய்ச் அளைவெண்ணெயுண்
புள்ளுருவாகிநள்ளிருள்வந்த பூதனை ஒள்ளெரிமண்டியுண்ணப்பணித்த வூ கள்ளவிழ்கோதைகாதலுமெங்கள் க பிள்ளைதன்கையில் கிண்ணமே யெ
அரக்கியராகம்புல்லெனவில்லாலன செருக்கழித்தமரர்பணியமுன்னின்ற முருக்கிதழ்வாய்ச்சி முன்கைவெண் எருக்கிலைக்காகவெறிமழுவோச்சே சென்றுவார்சிலைவளைத்து இலங் வென்றவில்லியார்வீரமேகொலோ, முன்றில்பெண்ணைமேல் முளரிக்க அன்றிலின்குர லடருமென்னையே.
பொருந்துமாமர மேழுமெய்தபுனித திருந்துசேவடியென் மனத்துநினைே கருந்தண்மாகடல் கங்குலார்க்கு அ வருந்தவாடைவரு மிதற்கிணியென் மன்னிலங்குபாரதத்துத்தேரூர்ந்து, பொன்னிலங்குதிண்விலங்கில்வை; தென்னிலங்கையீடழித்த தேவர்க்கி என்னிலங்குசங்கோ டெழில்தோற்ற இலைமலிபள்ளியெய்தியிதுமாயெ அலைமலி வேல்காணாளைய கல்வி கொலைமலியெய்துவித்தகொடியே சிலைமலிசெஞ்சரங்கள்செலவுய்த்
கொலைகெழுசெம்முகத்த களிறொ சிலைகெழுசெஞ்சரங்கள் செலவுய்த் கலிகெழுமாடவீதி வயல்மங்கை ம ஒலிகெழுபாடல்பாடியுழல் கின்ற
கம்பன் மலர் - 2000
 
 

வஞ்சமத்து, அன்ற ாரத்தை யனொலிமாலை, ாடிநின்றாடுமினே.
நாள் யராயவெல்லாம் ன்னத்
பாயவிய,
விம்ம, கடலை ப்ச்சியரால்
டாப்புண்டிருந்தவனே.
ழையோ பல்லேயதனை, ாந்திட் வளங்காதமுந்நீர்,
ாடுதாள் துணிய, சியரால்
டாப்புண்டிருந்தவனே.
னமாள, இலங்கை
பூக்கமதனை நினைந்தோ,
ாரிகைமாதர்கருத்தும்,
ாக்கப் பேசுவதெந்தைபிரானே.
Eமதிளிலங்கையர்கோனை,
சேவகமோசெய்த தின்று,
சங்கம்கொண்டு முன்னேநின்றுபோகாய்,
லென்செய்வதெந்தைபிரானே.
5)&S60)t,
கூட்டகத்து,
னார்,
தொறும்,
துவன்றியும், செய்கேன்,
மாவலியைப், த்துப்பொருகடல்சூழ், துகாணிர்
நிருந்தேனே,
மன்னஇனமாயமான்பின் எழில்சேர் பிபதற் கொருரு வாயமானையமையா, ானிலங்கை பொடியாகவென்றியமருள், தநங்கள் திருமால்நமக்கொரரணே.
ன்றுகொன்றகொடியோனிலங்கைபொடியா, ந்த நங்கள்திருமாலை வேலைபுடைசூழ் ன்னுகலிகன்றி சொன்னபனுவல், தொண்டரவராள்வரும்பருலகே.
(1877)
(1904)
(1905)
(1932)
(1937)
(1957)
(1965)
(1972)
(1988)
(1991)
25

Page 42
மானமருமென்னோக்கி வைதேவி கானமரும்கல்லதர்போய்க் காடுை கானமரும்கல்லதர்போய்க் காடுை வானவர்தம்சென்னி மலர்கண்டா
திரு திருச்
முன்பொலாவிராவணன்றன் முது அன்பினாலனுமன் வந்தாங் கடியி என்பெலாமுருகியுக்கிட் டென்னு அன்பினால்ஞானநீர்கொண் டாட்
மாயமான்மாயச்செற்று மருதிறநட தாயமாபரவைபொங்கத் தடவரை கீயுமாலெம்பிரானார்க் கென்னுை தூயபாமாலைகொண்டு சூட்டுவன்
திரு திருே
தேராளும்வாளரக்கன்செல்வம்மா தென்னிலங்கைமுன்ட பேராளனாயிரம்தோள் வாணன்ம பொருகடலையரண்க பாராளன், பாரிடந்துபாரையுண்டு பாருமிழ்ந்துபாரளந்து பேராளன், பேரோதும்பெண்ணை பெருந்தவத்தளென்ற
மைவண்ணநறுங்குஞ்சிகுழல்பின்
மகரம்சேர்குழையிரு எய்வண்ணவெஞ்சிலையேதுணை யிருவராய்வந்தாரென் கைவண்ணம்தாமரை வாய்கமலட் கண்ணிணையுமரவிந் அவ்வண்ணத்தவர்நிலைமைகண் அவரைநாம்தேவரெ
நைவளமொன்றாராயா நம்மைே நாணினார்போலிறை செய்வளவிலென்மனமும்கண்ணு யெம்பெருமான்திருடி கைவளையும் மேகலையும்கானே கனமகரக்குழையிரண் எவ்வளவுண்டெம்பெருமான்கே இதுவன்றோவெழில் தென்னிலங்கையரண்சிதறியவுன சென்றுலகமூன்றினை மன்னிலங்குபாரதத்தை மாளவூர் வரையுருவின்மாகளி பொன்னிலங்குமுலைக்குவட்டில் போகாமைவல்லேன என்னிலங்கமெல்லாம்வந்தின்ப
எப்பொழுதும்நினை
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

யின்துணையா, றந்தான்காணேடி, றந்தபொன்னடிகள், ய்சாழலே.
மங்கையாழ்வார் குறுந்தாண்டகம்
மதிளிலங்கைவேவித்து, ணைபணியநின்றார்க்கு, டைநெஞ்சமென்னும், டுவனடியனேனே.
.ந்து, வையம் த்திரித்து, வானோர்க் டச்சொற்களென்னும், ன்தொண்டனேனே.
மங்கையாழ்வார்
நெடுந்தாண்டகம்
ளத் மலங்கச்செந்தீயொல்கி, ாளப்
டந்துபுக்குமிக்க
பாரையாண்ட ாமண்மேல் ல்லால் பேசலாமே.
தாழ பாடிலங்கியாட, ாயாஇங்கே முன்னேநின்றார், மபோலும் தமடியுமஃதே, டும்தோழி ன்றரஞ்சினோமே.
நாக்கா யேநயங்கள் பின்னும் மோடி
படிக்கீழணைய, இப்பால்
ான் கண்டேன், ாடும் நான்குதோளும், ாயிலென்றேற்கு ாலியென்றார்தாமே.
ான்மாளச் ாயும் திரிந்தோர்தேரால், ந்த ற்றைத்தோழி, என்றன்
பூட்டிக்கொண்டு ாய்ப்புலவியெய்தி, மெய்த ந்துருகியிருப்பன்நானே.
(1992)
(2046)
(2047)
(2071)
(2072)
(2073)
(2079)
- 26

Page 43
பொ
(P5
அடைந்த வருவினையோ டல்லல்( மிடைந்தவை மீண்டொழிய வேண் முன்னிலங்கை வைத்தான் முரணழி தன்விலங்கை வைத்தான் சரண்.
இரண்
திரிந்ததுவெஞ்சமத்துத் தேர்கடவி,
பிரிந்ததுசீதையைமான்பின்போய்
கண்பள்ளிகொள்ள வழகியதே, நாக தண்பள்ளி கொள்வான்றனக்கு.
சென்றதிலங்கைமேல் செவ்வேதன் கொன்றதிராவணனைக் கூறுங்கால் வேயோங்குதண்சாரல் வேங்கடமே வாயோங்கு தொல்புகழான்வந்து.
மகனாகக்கொண்டெடுத்தாள் மாண் அகனாரவுண்பனென் றுண்டு,-மக தேறாதவண்ணம் திருத்தினாய், தெ நீறாக வெய்தழித்தாய்நீ.
C ep6irg
அவனேயருவரையா லாநிரைகள்க அவனேயணிமருதம் சாய்த்தான்,-ஆ கலங்காப்பெருநகரம் காட்டுவான்க இலங்கா புரமெரித்தானெய்து.
எய்தான்மராமர மேழுமிராமனாய், எய்தானம்மான் மறியை ஏந்திழைக் தென்னிலங்கைக்கோன்வீழச் சென் முன்நிலம்கைக்கொண்டான் முயன்
ஆய்ந்தவருமறையோன் நான்முகத் வாய்ந்தகுழவியாய் வாளரக்கன்,-ஏ முடிப்போதுமூன்றேழென் றெண்ண ஆடிப்போது நங்கட்கரண்.
திருப
நான்மு
இலைதுணைமற்றென்னெஞ்சே, ஈ
சிலைகொண்டசெங்கண்மால் சேர
ஈரைந்தலையா னிலங்கையையீடழ கூரம்ப னல்லால்குறை.
இதுவிலங்கையீடழியக் கட்டியசே இதுவிலங்குவாலியை வீழ்த்ததுவு தாேெனாடுங்கவில் நுடங்கத் தண்த ஊனொடுங்க வெய்தானுகப்பு.
கம்பன் மலர் - 2000
 

ய்கையாழ்வார் ற்றிருவந்தாதி
நோய் பாவம், டில்,-நுடங்கிடையை ய, முன்னொருநாள்
தத்தாழ்வார் டாந்திருவந்தாதி
அன்று புரிந்ததுவும்
கத்தின்
சீற்றத்தால், ,-நின்றதுவும் , விண்ணவர்தம்
ாபாயகொங்கை, னைத்தாய் ன்னிலங்கை
பேயாழ்வார் ாந்திருவந்தாதி
ாத்தான்,
அவனே
கண்டீர்,
காய்,-எய்ததுவும் றுகுறளுருவாய்,
g)J.
தோன்நன்குறங்கில் ய்ந்த Eனான், ஆர்ந்த
மழிசையாழ்வார் கன் திருவந்தாதி
சனைவென்ற
ஈ-குலைகொண்ட
மித்த,
து. ம்-இதுவிலங்கை ாரிராவணனை,
(2140)
(296)
(2206)
(2210)
(2332)
(2333)
(2358)
(2389)
(2409)

Page 44
கல்லாதவரிலங்கை கட்டழித்த, ச னல்லாலொருதெய்வம் யானிலே தேவரைத்தேவரல் லாரை, திருவி தேவரைத் தேறேல்மின் தேவு.
தொழிலெனக்குத் தொல்லைமான பொழுதெனக்குமற்றதுவே போது வல்லாளன்வானரக்கோன் வாலி வில்லாளன் நெஞ்சத்துளன்.
துழாநெடும்குழிருளென்று, தன் எழாநெடுவூழியெழுந்தவிக்காலத் வழாநெடும்துன்பத்தளென்றிரங் குழாநெடுமாடம், இடித்தபிரான
திங்களம்பிள்ளைபுலம்பத் தன்.ெ செங்களம்பற்றிநின்றெள்குபுன்ம வெங்களம்செய்த நம்விண்ணோ நங்களைமாமைகொள்வான், வர்
பேணலபமில்லாவரக்கர்முந்நீரடெ நீணகர்நீளெரிவைத்தருளாயென்று தாள்நிலந்தோய்ந்துதொழுவர்நில் காணலுமாங் கொலென்றே, வை.
Gଗt
சூழ்ந்தடியார்வேண்டினக்கால் ே வாழ்ந்திடுவர்பின்னும்தம் வாய் வாள்வரைகள்போலரக்கன் வன்; தாள்வரைவில் லேந்தினார்தாம்.
பின்துரக்கும்காற்றிழந்த சூல்கொ வன் திரைக்கண்வந்தணைந்த வா திருச்செய்யநேமியான் தீயரக்கிமூ பருச்செவியுமீர்ந்த பரன்.
பரனாமவனாதல் பாவிப்பராகில் உரனாலொருமூன்று போதும்,-ப றெப்தானைப்புள்ளின்வாய் கீண் கைதான் தொழாவே கலந்து.
தி( திரு
L L L L L 0L LLL LSL SLL L S SLL LSL SSL LS LSL S SL SL S S S S SS LSL S LS SSSL LS L SL LSL LSL S S LSL LSL LSL S , 9ք(5(Ա இருசுடர்மீதினி லியங்கா, மும்ப ளிலங்கையிருகால் வளைய, ஒரு யொன்றியவிரெயிற் றழல்வாய்வு
லட்டனை, .
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

5ாகுத்த ரன்-பொல்லாத ல்லாத்
(2434)
ல் தன்னாமமேத்த, தும்,-கழிசினத்த மதனழித்த,
(2466)
நம்மாழ்வார் திருவிருத்தம்
நண்தாரதுபெயரா
ந்தும், ஈங்கிவளோ
காரம்மனோ, இலங்கைக்
ார்கொடுமைகளே. (2513)
சங்கோலரசுபட்ட,
ாலை, தென்பாலிலங்கை
ர்பிரானார் துழாய்துணையா
துதோன்றிநவிகின்றதே. (2554)
ாரும்பதிவாய், று, நின்னைவிண்ணோர் ண்மூர்த்திபல்கூற்றிலொன்று கல்மாலையுங்காலையுமே. (2569)
நம்மாழ்வார் பரியதிருவந்தாதி
தான்றாதுவிட்டாலும், திறவார்-சூழ்ந்தெங்கும் தலைகள் தாமிடிய,
(26O1)
ாண்டல்பேர்ந்தும்போய், ாய்மைத்தே,-அன்று pக்கும்
(2647)
, மரமேழன் டானையே, அமரர்
(2648)
ருமங்கையாழ்வார்
வெழுகூற்றிருக்கை
றை
மதி
iசிலை
ாளியி
(2672: 2-6)
28

Page 45
திரும சிறி
ஆராலிங்கை பொடிபொடியாவீழ்ந்த
LY LL LLL S LLL LL LLL LLLL L0 LLL LLL LLS LL Y LLL LLLL LL LLL LLL LLL 0L L0L LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL 0LS S LL LLLLL LL LY YS L0 z Y தன் ! நேராவனென்றோர் நிசாசரிதான்வந்த கூராந்தவாளால் கொடிமூக்கும்காதி ஈராவிடுத்தவட்கு மூத்தோனை-வெ வாரார்வனமுலையாள் வைதேவிகா ஏரார்தடந்தோளிராவணனை - ஈரை சீரார்சிரமறுத்துச் செற்றுகந்தசெங்கள்
திரும பெ
கல்நிறைந்துதீய்ந்து கழையுடைந்துச பின்னும்திரைவயிற்றுப் பேயேதிரிற் கொன்னவிலும்வெங்கானத் தூடு -( துன்னுவெயில்வறுத்த வெம்பரல்ே மன்னனிராமன்பின் வைதேவியென் அன்னநடைய வணங்குநடந்திலவே
சின்னநறும்பூந் திகழ்வண்ணன், வன லன்னகடலை மலையிட்டணைகட் மன்னனிராவணனை மாமண்டுவெ பொன்முடிகள் பத்தும் புரளச்சரந்து தென்னுலகமேற்றுவித்த சேவகனை
தென்னிலங்கையாட்டி யரக்கர்குலட் மன்னனிராவணன்றன் நல்தங்கைதுன்னுசுடுகினத்துச் சூர்ப்பணகாசே பொன்னிறங்கொண்டு புலர்ந்தெழு தன்னைநயந்தாளைத் தான்முனிந்து மன்னியதிண்ணெனவும் வாய்த்தம தன்னிகரொன்றில்லாத தாடகையை தென்னுலகமேற்றுவித்த திண்டிறலு
திரு
நீள்கடல்சூழிலங்கைக்கோன், தோல் தாள்கள் தலையில்வணங்கி, நாள்க
பிரான்பெருநிலங் கீண்டவன், பின் விராய்மலர்த்துழாய் வேயந்தமுடிய மராமரமெய்த மாயவன், என்னு
ளிரானெனில்பின்னை யானொட்டு
ஏழைபேதை யிராப்பகல், தன கேழிலொண்கண்ணநீர் கொண்டாள் வாழ்வைவேவ விலங்கை செற்றீர், மாழைநோக்கொன்றும் வாட்டேன்
கம்பன் மலர் - 2000
 

ங்கையாழ்வார் யதிருமடல்
ģ» . . .
சீதைக்கு
தெை,
ரண்டும், பந்துவர்வாய்
T600TLDIT,
ாந்து
ண்மால்,.
ங்கையாழ்வார்
ரியதிருமடல்
கால்சுழன்று, துலவா, கொடுங்கதிரோன் மல் பஞ்சடியால், rறுரைக்கும்,
. . . . . . . .
காயாவின் ண்ணம்போ
g
ஞ்சமத்து,
ரந்து,
. . . . . . . . . . . . . . .
ப்பாவை, வாளெயிற்றுத் ார்வெய்தி ந்தகாமத்தால், மூக்கரிந்து, லைபோலும், 1,-மாமுனிக்காத் 1ம்.
ம்மாழ்வார் நவாய்மொழி
ள்கள் தலைதுணிசெய்தான், டலைக்கழிமினே.
னும்
ன்,
வேனோ.
r, an
இவள்
LBG607.
(2673:26)
(2673 : 39-42)
(2674: 49-51)
(2674 : 96-99)
(2674 : 14-147)
(2736)
(2746)
(2827)

Page 46
பாம்பணைமேல்பாற்கடலுள் பள் காம்பணைதோள் பின்னைக்கா ஏறு தேம்பணையசோலை மராமரமேே பூம்பிணையதண்டுழாய்ப் பொன்(
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின் பைந்தாளேழுருவவொரு வாளிகே கொந்தார்தண்ணந்துழாயினாயமுே மைந்தா, வானேறே யினியெங்குப்
இருடீகேசனெம்பிரானிலங்கைய முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்ெ தெருடியாகில்நெஞ்சேவணங்கு தி மருடியேலும்விடேல்கண்டாய் நப்
ஏறேலேழும்வென் றேர்கொளிலங் நீறேசெய்த நெடுஞ்சுடர்ச்சோதி,
தேறேலென்னையுன் பொன்னடிச் வேறேபோக எஞ்ஞான்றும்விடவே
மூவராகியமூர்த்தியைமுதல்மூவர்ச் சாபமுள்ளனநீக்குவானை தடங்கட தேவதேவனைத்தென்னிலங்கைெ பாவநாசனை பங்கயத்தடங்கண்ண
துயரமேதருதுன்பவின்ப வினைகள் உயரநின்றதோர்சோதியாயுலகேழு அயரவாங்குநமன்றமர்க் கருநஞ்சி தயரதற்குமகன்றன்னையன்றி மற்ற
நெஞ்சமேநிணாகராக விருந்தவெல் தஞ்சனே, தண்ணிலங்கைக் கிறை6 நஞ்சனே, ஞாலங்கொள்வான் குற வஞ்சனே என்னுமெப்போது மெ6
கொம்புபோல்சீதைபொருட்டிலங் அம்பெரியுய்த்தவர் தாளிணைமே வம்பவிழ்தண்ணந்துழாய்மலர்க்ே நம்புமால், நானிதற்கென்செய்கே?
கோவைவாயாள்பொருட்டேற்றிெ கோவைவியச்சிலைகுனித்தாய்குல பூவைவியாரீர்தூவிப் போதால்வன பூவைவியாமேனிக்குப் பூசும்சாந்ெ
நீயும்பாங்கல்லைகாண் நெஞ்சமே
ஒயும்பொழுதின்றி யூழியாய்நீண்ட காயும்கடுஞ்சிலையென் காகுத்தன் மாயும்வகையறியேன் வல்வினை
கொடியவினையா துமிலனேயென் கொடியவினையாவே கொடியவினைசெய்வேனும்யா6ே கொடியவினை தீர்ப்ே
அகில இலங்கைக் கம்பன் கழகம் -
 

ளியமர்ந்ததுவும், வடனேழ்செற்றதுவும், ழெய்ததுவும், முயம்போரேறே.
ாறாய்இலங்கைசெற்றாய், மராமரம் ாத்தவில்லா, த உன்னை யென்னுள்ளேகுழைத்தவெம் போகின்றதே.
ரக்கர்குலம்,
பம்மானென்றென்று,
ண்ணமறியறிந்து, Dபிபற்பநாபனையே.
fosgott,
சேர்த்தொல்லை,
R.
க்குமுதல்வன்றன்னை, உல்கிடந்தான்றன்னைத், பரியெழச்செற்றவில்லியை, ானைப்பரவுமினோ.
ாாயவையல்லனாய், முண்டுமிழ்ந்தான்றன்னை, னையச்சுதன்றன்னை, திலேன்தஞ்சமாகவே.
订
யைச்செற்ற
ளாகிய
*வாசகமே.
கைநகர்,
லணி,
கயிவள்,
ன்நங்கைமீர்.
னருத்தமிறுத்தாய், மதிளிலங்கைக் நல்யானைமருப்பொசித்தாய், எங்கேனேலும், நின் தன்னெஞ்சமே.
நீளிரவும்,
தால,
ாவாரானால், யேன் பெண்பிறந்தே.
ானும் னும்யானேயென்னும், னயென்னும்,
பனும்யானேயென்னும்,
(2835)
(2848)
(286O)
(2884)
(2953)
(2959)
(2975)
(302.5)
(3029)
(3152)

Page 47
கொடியானிலங்கைசெற்றேனேயெ கொடியபுள்ளுடையவ கொடியவுலகத்தீர்க்கிவையென்செr கொடியேன்கொடியென
அங்குற்றேனல்லேனிங்குற்றேனல் எங்குற்றேனுமல்லேனிலங்கைசெற் திங்கள்சேர்மணிமாடநீடு சிரீ வரம சங்குசக்கரத்தாய் தமியேனுக்கருளா
மின்னிடைமடவார்கள் நின்னருள் ( மன்னுடைஇலங்கை யாண்காய்ந்த உன்னுடையசுண்டாயம்நானறிவனி என்னுடையபந்தும்கழலும் தந்துடே
மாறுநிரைத்திரைக்கும் சரங்கள், இ நூறுபிணம்மலைபோல்புரள, கடல் ஆறுமடுத்துதிரப்புனலா, அப்பன் நீறுபடவிலங்கைசெற்றநேரே.
கற்பாரிராமபிரானையல்லால் மற்று புற்பாமுதலாப் புல்லெறும்பாதி ெ நற்பாலயோத்தியில்வாழும் சராசர நற்பாலுக்குய்த்தனன் நான் முகனா
நாட்டில்பிறந்தவர் நாரணற்காளன்ற நாட்டில்பிறந்து படாதனபட்டுமனி நாட்டைநலியுமரக்கரை நாடித்தடிந் நாட்டையளித்துய்யச்செய்து நடந்த
ஆளியைக்காண்பரியாய் அரிகாண்ற ஊளையிட்டன்றிலங்கைகடந்து பி மீளியம்புள்ளைக்கடாய் விறல்மாலி ஆளுயர்குன்றங்கள்செய் தடர்த்தான
காண்டுங்கொலோநெஞ்சமே கடிய ஆண்டிறல்மீளிமொய்ம்பி லரக்கன் மீண்டுமவன்தம்பிக்கே விரிநீரிலங் ஆண்டுதன்சோதிபுக்க வமரரரியேற்
நன்கெண்ணிநான்வளர்த்த சிறுகிளி இன்குரல்நீமிழற்றே லென்னாருயி நின்செய்யவாயொக்கும்வாயன் கை நின்பசுஞ்சாமநிறத்தன் கூட்டுண்டு
அவத்தங்கள்விளையிமென்சொற்ெ
தவத்தவர்மறுகநின்றுNதருவர்தனி உவர்த்தலை, உடன்திரிகிலையுமெ
திவத்திலும்பசுநிரைமேய்ப் புவத்தி
கம்பன் மலர் - 2000
 

ன்னும்
னேறக்கொலோ,
ால்லுகேன்
ன்மகள்கோலங்களே. (3180)
லேனுன்னைக்காணும்வாவில் வீழ்ந்து, நான் றவம்மானே,
ங்கலநகருறை,
Gu. (3184)
சூடுவார்முன்புநான தஞ்சுவன், மாயவனே, னியதுகொண்டுசெய்வ தென், பாகுநம்பீ. (3238)
o
(3376)
ம்கற்பரோ,
பான்றின்றியே,
ம்முற்றவும்,
ர்பெற்றநாட்டுளே. (3381)
தியாவரோ,
சர்க்கா,
திட்டு,
மைகேட்டுமே. (3382)
நரியாய், அரக்கர்
லம்புக்கொளிப்ப,
ைெயக்கொன்று, பின்னும்
னையும்காண்டுங்கொலோ. (3399)
வினையேமுயலும்,
குலத்தைத்தடிந்து,
கையருளி,
றினையே. (3400)
ப்பைதலே,
ர்க்காகுத்தன்,
ண்ணன்கைகாலினன்,
நீங்கினான். (3606)
காளந்தோஅசுரர்கள்வன்கையர்கஞ்சனேவத், மையும்பெரிதுனக்கிராமனையும் ன்றென்றுாடுற வென்னுடையாவிவேமால், செங்கனிவாயெங்களாயர் தேவே. (3698)
31

Page 48


Page 49
O
கம்பன் பற்றிய ஆய்வுகள், நயப்புக்கள், கம்பன் - கடவுள், கம்பன் - பாத்திறம், ! நான்காக வகுக் "கம்பன் - கடவுள்',பகுதியுள் கம்பனின் சமயம் முதலானவை பற்றிய கட் "கம்பன் - பாத்திறம்" என்ற பகுதியுள் முழுமையாய் நோக்கியும் "தோள் காப்பியப் பகுதிகளை,பாக்களைத் தனி முதலானவை ஆ கம்பராமாயணப் பாத்திரங்கள் பற்றிய பா கம்பனது சமூக சிந்தனைகள்,கம்பன் சமூ நோக்குவனவாய் அமைவன "கம்
 
 
 
 
 

O GÖT
வியப்புக்களை உள்ளடக்கிய இவ்வியல், கம்பன் - பாத்திரம், கம்பன் - சமூகம் என கப்பட்டுள்ளது. கடவுட் கோட்பாடு, கடவுள் வாழ்த்து, டுரைகள் அடக்கப்பெறுகின்றன. ஸ் கம்பனது, காப்பியப்புனைதிறனை காண்டார் தோளே காண்டா'ராய்க் த்தனியே நோக்கியும் எழுதப்பெற்றவை அடங்குகின்றன. ர்வைகள் அமைவது "கம்பன் - பாத்திரம்". pகத்திற் பெறும் இடம் முதலானவற்றை பன் - சமூகம்’பகுதியுள் அடங்கும்.

Page 50


Page 51
றமும் பக்தியும் வேறு வே. பக்தியையும் ஒரு கவிஞன் அறமும் என்ற இக்கட்டுை
புறவாழ்க்கை மட்டும் போதாது
அறம் என்று கூறியவுடன் அத6 ஏற்றுக்கொள்ள அஞ்சும் காலம் இது. நம்ன சென்றுவிட்டன. அற வாழ்வைக் கடைப்பி என்று மார்தட்டிய நாடு துக்கம், துக்க உற்பத் அடைய வேண்டுமானால், புத்தம் சரண போதுமானது. இதற்கு மேல் முழு முதற் அடிப்படையில் மாபெரும் சமயம் ஒன்றை நி புத்த பெருமான் தோன்றிய நாடு இது. ஆ புத்ததேவன் தோன்றிய இந்த நாட்டிலே அ பயன்படும் முழுத்தன்மை உடையதாக ஆவது ஒரு சிலர்க்கே தனி அறநெறி வீடுபேற்றை
அனைவர்க்கும் அது இயலாது
ஆனால், குறிக்கோளற்ற - அறிய காரியம் என்ற உண்மையை உணர்ந்த கரு உடன் இருத்தல் வேண்டும் என்றும் கூறியு வகையாக அதனைப் பகுத்துக்காட்ட முடியுே
இருவேறு கூட்டம்
மனிதவர்க்கம் முழுவதனையும்
கண்டவர்கள் ஒருபுறமும், கல்வி என்ற மூன் ஒரு புறமும் இருக்கக் கண்டனர். இந்த இ கோடிகட்கும் இடையில் தொடர்பு உண்டா அறத்தை உள்ளவாறு உணர்ந்தாலன்றிமணி இருப்பது ஆசை என்ற பேருண்மையை அறி வர்க்கத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற பிரச்சினையை ஆராயத் தொடங்கிய நம் விட்டவர்கள், அப்பா, அறியாமை நிரம்பிய
 
 

ம்பன் கண்ட யும் அறமும்
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்
றாக மாறுபட்டனவோ என்று எண்ணும் இக்காலத்தில் அறத்தையும் எவ்வாறு காணுகின்றான் எனக் காட்டவே கம்பன் கண்ட பக்தியும் ர எழுதப் பெற்றது.
னை ஏற்றுக் கொள்பவர்கள் பலரும். பக்தியை கூறின உடன் மையும் அறியாமல் அறமும் பக்தியும் என்ற இந்த இரண்டும் பிரிந்து டித்தால் போதும், பக்தியைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய நான்கையும் ம் கச்சாமி. சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லிவிட்டாலே பொருள் ஒன்று உண்டு என்று எண்ணத் தேவையில்லை, என்ற றுவி அகில உலகமும் அதனைத் தலை வணங்கி ஏற்கும்படி செய்த லுறம் ஒன்றே வாழ்க்கைக்குப் போதுமானது என்று கூறிச் சென்ற புறத்தோடுமட்டும் நீ வாழ்வாயானால் அந்த வாழ்க்கை பிறர்க்குப் து கடினம். மாரனை வெல்லும் வீரர்களான புத்த பெருமான் போன்ற அளிக்கலாம்.
ாமை நிரம்பிய மக்கள் அறநெறி ஒன்றையே பற்றி வாழ்வது இயலாத ணை மிகுந்த பல பெரியவர்கள் 'அறம் மட்டும் போதாது, பக்தியும் ள்ளனர். அப்படிச் சொன்னதோடு அமையாமல் எத்தனை எத்தனை மா அத்தனை அத்தனை விதமாகப் பகுத்துக் காட்டியும் சென்றனர்.
ஒரு கண்ணோட்டம் விட்ட இத் தமிழர், கல்விக் கடலில் கரை ாறெழுத்தின் வாசனையை அறியாது வாழ்க்கை நடத்துகின்றவர்கள் ரண்டும் மனித சமுதாயத்தில் இரண்டு கோடிகள். இந்த இரண்டு ? புத்ததேவன் சட்டப்படி பார்த்தால் இருத்தல் இயலாத காரியம். தன் உயர்நெறி அடைய இயலாது. எல்லாத் துன்பத்திற்கும் மூலமாக தல் கற்றறிவுடைய பெருமக்கட்கே மிகமிகக் கடினம் என்றால், மனித அறியாமை நிரம்பியவன் என்றுதான் உய்கதி அடைவது? இந்தப் பெரியவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் ஒரு கண்ணோட்டம் உனக்கும் இடம் உண்டு என்றார்கள், கல்வி என்ற ஒன்றை எழு
35

Page 52
பிறப்பிலும் காணாத ஒருவனுக்கும், கல்விக் கடலின் கரை கண்ட ஒருவனுக்கும், இங்கே இடம் உண்டு. அப்படியானால், இந்த இருவரும் இருவேறு இடத்தினை அடையப் போகின்றார்களா என்றால், இல்லை என்று வாதிட்ட பெருமை இந்தத் தமிழனுக்கு உண்டு.
மதவலிநிலைஇய மாத்தாட் கொழுவிடைக் குருதியொடு விரைஇயதுTவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரிஇ
முருகாற்றுப் படுத்த உருகெழு வியன்நகர்
(திருமுருகு. 232 - 244)
ஆட்டை அறுத்து அதனுடைய குருதியில் அரிசியைக் கலந்து சிதறி ஓ! முருகா என்று கத்துகின்றானே. கல்வி என்பதையே பல தலைமுறைகளாகக் காணாத இவனிடமும், முருகன் வருகின்றான் என்கின்றான் ஒரு பழந்தமிழன். கல்விக் கடலைக் கடந்து,
புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாவியல் மருங்கில்நவிலப் பாடி’
(திருமுருகு, 184-187).
ஆடும் அறிவு நிறைந்த ஒருவனுக்கும் அதே முருகன்தான் வீடுபேற்றை அருளுகின்றான். கல்வி என்பதே இன்னது என்று சொல்லும் தெளிவான நிலை இந்தத் தமிழனுக்கு உண்டு.
கம்பன் செய்த புதுமை
தத்துவ உலகிலே மட்டுமன்றிக் காப்பிய உலகிலேயும் இந்த இரண்டையும் மோதவிட்ட பெருமை கம்பனுக்கு உண்டு. முழுமுதற் பொருளே இராமனாக வந்திருக்கிறான். அந்தக் காட்சியை அறியாதவர் யாரும் இல்லை. எனவே, இராமனைப் பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. அந்த முழுமுதற்பொருள் கங்கைக் கரையின் ஒருபுறம் அமர்ந்திருக்கின்றான். நூற்றுக்கணக்கான முனியுங்கவர்கள், வாழ்க்கையில் இனி அறிய வேண்டியது எதுவுமே இல்லாதவர்கள், ‘கற்பனவும் இனியமையும் என்று மணிவாசகப் பெருமான் கூறியாங்கு எல்லாவற்றையும் கற்றவர்கள் இராமனைச் சுற்றி அமர்ந்துள்ளனர். அத்தனையையும் கற்ற அவர்களின் கல்வி அறிவானது, பொருளின் இயல்பை அது இது எனப் பகுத்தறிவதற்குப் பயன்பட்டதே தவிர, அந்த அறிவால் வேறு பயன் ஒன்றும் அறியாது, மயங்கிய நிலையில் உள்ளனர் அவர்கள். மாபெரும் தவசிகள் அத்தனை பேருக்கும் வேண்டியது ஒன்றே ஒன்று; அதுவே பிறவிக்கு மருந்து. அவர்கள் கற்ற கல்வி பிறவிப் பெரும் பிணிக்கு மருந்தாக அமையவில்லை என்று தெரிகிறது. கற்கக் கற்க மேலும் ஐயம் எழுந்ததே தவிர, எப்படி வாழ்கையைப் பயன் உள்ளதாக ஆக்குவது என்பதனை அறிந்துகொள்ள அவர்களால் இயலவில்லை. இதனை அறியவே இராமனிடம் வந்துள்ளனர் போலும் கல்வியின் கரைகண்டவர்கள் நடுவே இராமபிரான் பாற்கடலில் பாம்பணையில் பள்ளிகொண்டது போல் வீற்றிருக்கின்றான். இந்தச் சூழ்நிலையை அடித்தளமாக அமைத்துக் கொண்டு, அறிவுச் சூழலிலே அறிவுக் கடலாக
அகில இலங்கைக் கம்பன் கழகம்

இருக்கும் இராமபிரானை வீற்றிருக்க வைத்து, அறிவுக்கும் கல்விக்கும் பல தலைமுறைகளாகத் தொடர்பு இல்லாத ஒருவனை இடையே புகவைத்து மோத விடுகிறான் கவிச்சக்கரவர்த்தி. திரும்பிய இடமெல்லாம் அறிவுக் கடலாக விளங்கும் அறிவுலகத்திற்கு இடையே அறிவே இல்லாத ஒன்று புகுந்து புறப்படுகிறது.
குகன் வருகை
அறிவிலா அவன் வருகின்ற காட்சியே வெறுப்பை அளிக்கும் காட்சியாக உள்ளது. நாள்தோறும் கங்கையிலே மூன்று வேளை உடல் கழுவி வேள்வி செய்யும் முனிவர்களிடையே கங்கைக் கரையில் வாழ்ந்தாலும் ஒருமுறை குளிக்கவும் எண்ணம் ஓடாத ஒருவன், சிவந்த மேனியர்கள் சூழ இருக்கும் இடத்தின் நடுவே கரிய நிறத்தினனாகிய ஒருவன், கைகளெல்லாம் பனை மரத்தினைப் போன்ற வடிவமுடைய ஒருவன், உடல் முழுவதும் பனை மரத்தின் சிராம்புகள் போன்ற மயிர்களைப் பெற்ற ஒருவன், கையிலே மீன் நாற்றம் எடுக்கும் கலயத்தோடு நுழைகின்றான். முனி புங்கவர்கள் நடுவே மீன் நாற்றம் வீசும் கலயத்தைத் தாங்கியவன் ஒருவன் புகுகின்றான். முரண் அழகை இங்ங்ணம் ஒப்பற்ற முறையில் கையாள்கிறான் கவிஞன். கல்வியின் எதிரே கல்வி வாசனையே இல்லாமலும், தவத்தால் மெலிந்த உடம்புடைய முனிவரிடை எட்டுப் பனைமரம் போன்ற கட்டமைந்த உடல் உடையவனும் ஆகிய ஒருவனைப் புகுத்துகின்றான்.
குகன் வந்ததனைக் காவலன் இலக்குவனுக்கு உணர்த்தினான். பெற்றதாயைவிட, பெற்றதந்தையைவிட, மூத்த அண்ணனைவிடத் தான் அறிவிற் சிறந்தவன் என்று கருதிக் கொண்டிருப்பவனும், சினத்தின் எல்லையில் நிற்பவனுமாகிய இலக்குவன் வெளியே வந்து வந்திருப்பவனைக் காண்கிறான். வந்தவன் உடம்பிலும் கையில் உள்ள கலயத்திலும் உள்ள மீன் நாற்றமே, வந்துள்ளவன் யார் என்பதனைப் புலப்படுத்துகிறது. இருப்பினும் இலக்குவன், யார் என்று கேட்கிறான். அதற்குக் குகன் கூறும் பதிலோ, சேனாவரையர் விதிப்படி, விடைவழுவாகும். அவன் கூறுகிறான், தேவா நின்கழல் சேவிக்க வந்தனன்' கேட்ட கேள்விக்கு உரிய பதிலை அவன் சொன்னானில்லை. பாண்டியன் நெடுஞ்செழியன் கண்ணகியைப் பார்த்து, “யாரையோ நீ மடக்கொடியோய் என்று கேட்டான். கண்ணகிப் பெருமாட்டியோ முதலில் தன் நாட்டின் பெருமையையும் அடுத்துக் கணவனின் குடும்பத்துப் பெருமையையும் கூறினாள். அப்படிப்பட்ட மாசாத்துவான் மகனையாகி, ஊழ்வினை துரப்ப நின்நகர்ப்புகுந்து நின்பாற் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது பெயர்’ என்று கூறுகிறாள். கேட்ட கேள்விக்கு நேரடியாக விடை சொல்வதாயிருப்பின் ‘கண்ணகி என்று கூறியிருந்தாலே போதும். அறிவுடை உலகிலே வாழ்பவர் யார்’ என்று கேட்டவுடனே தன்னைப்பற்றியே தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். பக்தி உலகிலே வாழ்பவர் தம் நினைவை இழந்து விடுவார்கள். எனவேதான், கண்ணகி பல பேசினாலும் அனைத்தும் அவளைப் பற்றியல்லாமல், குலப் பெருமை, நாட்டின் சிறப்பு, அரசின் உயர்வு ஆகியவைகளைப் பற்றிப் பேசினாள். பக்தி நிலை அவ்வாறு பேசும். அவ்விடை நம் அறிவுக்கு வழுவாகத் தோன்றும். ஏன்? நாம் அவக் கண்கொண்டு நோக்குகின்றோம், அதனாலேயே அவ்விடை பொருத்தமற்றதாகத் தோன்றுகிறது.
36

Page 53
இலக்குவன் எடை போடுகிறான்
இந்த அடிப்படையில் தான் குகனின் சொற்களையும் காண வேண்டும். “தேவா நின்கழல் சேவிக்க வந்தனன், நாவாய் வேட்டுவன் நாயடியேன்” என்றான். ஏழு சொற்கள். அறிவே வடிவாக நிற்கும் இலக்குவனின் உள்ளத்தில் இந்தச் சொற்கள் சென்று ஆழப் பதிந்துவிட்டன. பக்தி வடிவத்திலிருந்து தோன்றும் இச்சொற்கள் அறிவின் படிவமாக விளங்கும் இலக்குவன் மனத்தே தோற்றுவித்த உணர்ச்சி மிகப் பெரிய உணர்ச்சி. எனவே, அண்ணனிடம் ஓடினான். “உள்ளம் தூயவன் தாயினும் நல்லன் (குகப் - 40) ஒருவன் வந்திருக்கிறான்” என்றான். வெகுளியில் விசுவாமித்திரன், துருவாசர் ஆகிய எல்லாரையும் விஞ்சக்கூடிய இலக்குவன் நாற்றம் வீசும் குகனைப்பற்றி அண்ணனிடம் இவ்வாறு கூறினான் எனின் இது வியப்பன்றோ? “தேவா நின்கழல் சேவிக்க வந்தனன் நாவாய் வேட்டுவன் நாயடியேன்” என்றானே தவிர, தன் பெயரைக்கூட அந்தக்குகன் சொல்லவில்லை என்றால், எவ்வாறு இலக்குவன் மனத்தில் தாயினும் நல்லன்' என்ற இவ்வெண்ணம் பிறந்தது? சொல்லால், தோற்றத்தால் மட்டும் ஒன்றை நிர்ணயித்துவிட முடியாது. அறிவில் விஞ்சிய இலக்குவன் அறிவின் துணையை நாடாமல் உணர்வால் குகனை எடையிட்டான். அங்கே, பக்தி செய்பவன், பக்தி செய்யப்படும் பொருள், பக்தியாகிய செயல் ஆகிய மூன்றும் வேறு வேறாக இல்லாத நிலை தோன்றுகிறது. ஆராய்ச்சி, அறிவு ஆகிய இரண்டிற்கும் அங்கே இடத்தைக் காணமுடியவில்லை. நாம் கடவுளை வணங்கும் போதுகூட நம்மை மறப்பது இல்லை. அங்கேயுங்கூட நமது அன்றாட வரவு செலவுக் கணக்கு மனத்தில் நிழலாடுகிறது. அறிவால் ஆயும்வரை நான் யார்? நான் வணங்கும் தெய்வம் எது?’ என்பன அறிவின் அடிப்படையில் நின்றுநோக்கும் வேறுபாட்டு உணர்வில் தோன்றிக் கொண்டு தான் இருக்கும். இடை இடையே பக்தி தோன்றி மறையும்.
குகனுடைய அன்பு
குகனிடமோ குகன் இல்லை; குகன் கொண்டு வந்த உணவு இல்லை; இராமன் ஒருவனே உள்ளான். அந்த ஒப்புயர்வற்ற நிலையில் அந்த எளிய மனிதன் நிற்கிறான். எனவேதான், இலக்குவன் கேட்ட வினாவும், குகன் அளித்த விடையும் வேறுபட்டனவாய்த் தோன்றுகின்றன. குகனைப்பற்றி இலக்குவன் இராமனிடம் கூறியதற்கும் குகன் இலக்குவனிடம் கூறியதற்கும் வேறுபாடு இருக்கக் காண்கிறோம். குகனுடைய சொற்களை இலக்குவன் இராமனிடம் கூறவில்லை; சொல்லால் சொல்ல இயலாத அவன் உள்ளத்தைச் சொன்னான். அங்கே பலப்பல முனியுங்கவர்கள் இருக்கிறார்கள். இலக்குவனோ இராமனோ அவர்களைத் தாயாகக் காணவில்லை. ஏன்? அவர்கள் வீடுபேற்றைப் பெறும் நோக்கத்தோடு பயன் கருதி அமர்ந்துள்ளனர்; முழுமுதற்பொருளிடம் தங்கள் துயரம் கூறி விடுதலைக்கு வழிதேடி வந்துள்ளனர். ஒருவருக்குக் கூட இராமனைப் பற்றிய கவலையே இல்லை. காட்டிலே நடந்து களைத்து வந்த இராமனுக்குப் பசிக்குமே என்ற எண்ணமில்லை. எண்ணியவர்கள் எல்லாம் ஆகிய முழுமுதற் பொருள் நாம் கொடுத்தா உண்ணப் போகிறது என்று அறிவின் துணை கொண்டு எண்ணி இருந்துவிட்டனர். தங்களையும் அவனையும் பிரித்துக் கண்டனர். அறிவால் வந்தவினை அது.
கம்பன் மலர் - 2000

தாயினும் நல்லான்
குகனோ இராமனையும் தன்னையும் பிரித்து அறியவில்லை. தன்னை இராமனிலே காணுகின்றான். தன்னை அவனுள் கரைத்துக் கொள்கிறான். பசியும் களைப்பும் முன் நிற்கின்றன. சக்கரவர்த்தித் திருமகனுக்குப் பசிக்குமே என்ற ஓர் எண்ணம்தான் அவனைச் சுற்றிலும் வட்டமிடுகிறது. ஊருக்கெல்லாம் பயில்வானாக இருந்தாலும் தாய்க்குப் பிள்ளை தானே! அவனுக்குப்பசி என்றால், நெடுநாள் உண்ணாமலும் வாழ இயலும் பயில்வான் என்று எண்ணாது தாய் பரிந்து சென்று"ஐயா சாப்பிடு, ஐயா சாப்பிடு” என்று அன்பாலும் ஆணையிட்டும் ஊட்டுகின்றாள். அப்படித்தான் இங்கேயும் குகன் செயல் இருந்தது எனவே தான் 'தாயினும் நல்லன்” ஆயினான். பள்ளிக்குக் குழந்தை செல்லாதது தாய்க்கும் தெரியும்; தந்தையும் அறிவான். அவன் வீடு வரும்போது தந்தை கடிகிறான்; தாய் குற்றத்தை மறந்து, முதலில் குழந்தை உண்ணட்டும், பின் கடியலாம் என்கிறாள். தாய்க்கு அவனைக் காணும்போது அவன் செய்த தவறு உள்ளத்தில் எழுவதில்லை. அவனுக்குப் பசிக்குமே என்ற பரிவு உணர்வு எழுகிறது. இது கருதியே போலும் மணிவாசகப் பெருந்தகை'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து” என்று பாடுகின்றார். அந்த அடிப்படையிலேதான் கம்பநாடன் இலக்குவன் வாயிலாகத்'தாயினும் நல்லன்' என்றுகுகனைப் பாராட்டுகின்றான்.
இராம, இலக்குவர்க்கு மூன்று தாயர்கள் இருக்கிறார்கள் என்றாலும் சந்தர்ப்பம் காரணமாக அவர்கள் யாரும் இப்போது உதவவில்லை. ஆனால், உணவை நினைந்து ஊட்டும் நிலையிலே குகன் முன்வந்து நிற்கின்றான். எனவே, ஊட்ட வேண்டிய தாயினும் நினைந்து ஊட்டும் கருத்துடன் முன்நிற்கும் இவன் நல்லவனாக உள்ளான் என இலக்குவன் பேசுகின்றான். இது அறிவோடு தொடர்பில்லாத நிலை; இந்நிகழ்ச்சிக்குக் கதையோடுகூடத் தொடர்பு இல்லை. சக்கரவர்த்தி இராமனைத் தவறாகக் காட்டுக்கு அனுப்பி விட்டார். இராமனுக்கு இப்போது பசிக்கும், இந்த எண்ணம் ஒன்றுதான் குகனுடைய மனத்தில் உள்ளது. அந்தக் குகன் இராமனைக் காண நுழைகின்றான். இராமன் குகனைக் கண்டு “இருத்தியீண்டு” என்னலோடும் குகன் இருக்க மறுத்துவிட்டானாம். 'தம்பி உட்கார்’ என்று இராமன் சொல்லியும் உட்காரவில்லை. ஏன்? 'இராமனுடைய பசி என்ற ஓர் எண்ணம் மட்டுமே குகனை ஆட்டிப்படைக்கும் உணர்வாக உள்ளது. எனவே, உண்ணச் செய்யவேண்டும். இதுதான் அவன் வேட்கை. தாயன்பு சில காலங்களில் தவறுகூடச் செய்யும். ஆனால், அன்பின் ஆணியாய், பக்தியின் கொடுமுடியாக விளங்கும் குகனின் தாயன்பு மிக உயரிய நிலையில் இயங்குகின்றது. முன்னரே உண்டுவந்த தனயனைக் கூடத் தன் கையால் சோறு உண்ணவேண்டும் என்ற விருப்பத்தால், வற்புறுத்தி மறுபடியும் உண்ணச் செய்யும் தாயரின் பிடிவாதம் தனயன்மார்களை இரண்டாட்ட நிலையில் நிறுத்துவதும் உண்டு. திறமான அறிவுடைத் தாயோ குழந்தை உண்ணுவதற்கான சூழ்நிலையை அமைத்து விட்டுக் குழந்தை ஆர்வத்தோடு உண்பதனைக் கண்டு மகிழ்வாள். இங்கே குகன் நிலை, நினைந்து ஊட்டுந் தாயின் நிலையாக, திறமான தாயின் நிலையாக இருக்கின்றது. இதனைக் கவிச்சக்கரவர்த்தி அழகாகக்
காட்டுகின்றான்.
37

Page 54
குகன் தான் கொண்டு வந்த உணவைக் காட்டினானாம்:
இருத்திஈண்டு என்னலோடும்இருந்திலன்; எல்லைநீத்த அருத்தியன், தேனும்மீனும் அமுதினுக்கு அமைவது, ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திருவுளம்? என்ன, வீரன் விருத்தமாதவரை நோக்கிமுறுவலன் விளம்பல் உற்றான்
(கம்பன் - 1966) (அருத்தியன் - அன்பன் விருத்தமாதவர் - முதிய முனிவர்)
“உணவைப் பக்குவப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். இங்கே வந்து பக்குவப்படுத்துவதானால் காலம் கழியும். உனக்குப் பசிக் கொடுமை மிகும் என அஞ்சி முன்னரே பக்குவப்படுத்தியே கொண்டு வந்துள்ளேன். சுவாமி திருவுளம் என்கொல்” என்று கேட்கிறான். நாகரிகம் அற்ற சாதாரண மனிதன் என்று நாம் கருதும் ஒருவன் நாகரிகத்தின் உச்சத்தில் நின்று பேசிய பேச்சாகும் அது. அவன் பக்தியிலே அறிவு ஓடிவந்து பணி செய்கிறது. உயரிய பக்தியின் நிலை இதுதான். அவன் ஆராயவில்லை. ஆராய்ச்சி அவனிடம் ஒடி வருகிறது. ஏன்? அவன் இல்லை அங்கே. இருப்பதெல்லாம் இராமனே. அவன் செயலை அறியாமை என்று எண்ணிய உயர்ந்தவர்கள் அங்கே இருந்தார்கள். அவர்கள் எண்ணம் அறியாமையில் விளைந்த விளைவாகும். அறிவிலே அறியாமையை நாம் காணவும் முடிகிறது. இதனைச் சேக்கிழார் மிகத் தெளிவாகக் காட்டுகின்றார்.
இருவர் வழிபாட்டு முறை
இரண்டு பேர்கள் ஒரே பொருளை வழிபட்டார்கள். குடுமித்தேவனைச் சிவகோசரியாரும் வழிபட்டு வந்தார்; திண்ணனாரும் வழிபட்டு வந்தார். ஒருவர் வேதங்களும் உபநிடதங்களும் கூறிய அறிவு நெயியிலே நின்று சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த சிவகோசரியார்; மற்றொருவர் கல்வி என்பதனைப் பல தலை முறைகளாக அறியாமல் குத்து, வெட்டு, கொலை என்ற சொற்களைத் தவிரப் பிறவற்றைக் கூறாத திண்ணனார். சிவகோசரியார் குடுமித் தேவரை,
நிர்குணநிராமயநிரஞ்சனநிராலம்பநிர்விஷய கைவல்யமாய் நிஷ்களஅசங்க சஞ்சலரகித நிர்வசனநிர்த் தொந்த நித்தமுக்த தற்பரவிஸ்வாதிதங்யோமபரிபூரணமாகத்
(தாயு - கருணா. 1)
(நிர்க்குணம் - குணமற்றதாய் நிராமய- குற்றமற்றதாய்: நிராலம்ப - சார்பற்றதாய்; நிர்விஷய - பொறி கட்குப் புலனாகாததாய்; கைவல்யமாய் - ஒரு தனியாய், நிஷ்கள - உருவற்றதாய், அசங்க ஒன்றுடனும் கூடாததாய், சஞ்சலரகித - அசைவிலாததாய் தனக்குத்தானே அப்பாற்பட்டதாய், விஸ்வா தீத - அனைத்திற்கும் அப்பாற்பட்டதாய், வ்யோம - வெட்டவெளியாய்) என்று தாயுமானவர் கூறியபடி முழுமுதற் பொருளாய் எல்லாம் வல்லதாய்க் காணுகின்றார். திண்ணனாரும் அதே குடுமித்தேவரைத்தான் காண்கின்றார். ஆனால், உடனே தம்மை மறந்துவிடுகின்றார். நாகன் அழைத்ததும் அவருக்குத்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

தெரியவில்லை. அங்கே உள்ள அந்த ஆண்டவனை முழுமுதற் பொருளாய், எல்லாம் வல்லதாய் ஆக்க, அழிக்க, காக்க, அளிக்க வல்ல பரம் பொருளாய் அவர் காணவில்லை. தான் வேறு அங்கு காணப்பெறும் குடுமித்தேவர்வேறு என்ற நிலையில் அவன் காணவில்லை. அப்படி ஒன்று பட்ட உணர்வோடு காணுகின்றார்.
திண்ணனார் கண்ட விதம்
"சாமிநீதனியே ஈண்டுத்தங்குதல்தரித்தல் ஆற்றே ஏமநல் உடுப்பூர்க்கு இன்னே என்னோடு வருதல் வேண்டும்”
(சீகாளத்திப் புராணம்) வெம்மறக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார்போல் கைம்மலைக் கரடி வேங்கை அரிதிரிகானம் தன்னில் உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றிக் கெட்டேன்! இம்மலைதனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார்”
(பெரிய புராணம் - கண்.புரா 107)
வேடர் குலத்து உதித்த திண்ணனாருக்குக் காட்டில் விலங்குகட்கு இடையே தனித்து இருப்பது எவ்வளவு இன்னல் நிறைந்தது என்பது நன்கு தெரியும். எனவே இறைவன் தனியே இருப்பது கண்டு மனம் உருகினார். இது அறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி, உணர்வு ஒன்றிய பக்தி. இந்தப் பக்திக்கு ஒரே ஒரு சோதனைதான் உண்டு. அந்தப் பக்தியில் ஈடுபட்டு விட்ட பிறகு ஈடுபட்டவனுக்குத் தான், தனக்கு உரிய பசி, தாகம், தனக்குரிய கடமைகள் என்பன இல்லாமற் போய்விடும். அத்தகைய நினைவுகள் எழுமானால் அங்கே பக்தியின் ஆழம் குறைந்து போய் விடுகிறது. திண்ணனார் எந்த விநாடியிலிருந்து குடுமித் தேவரைக் கண்டாரோ அந்த விநாடியிலிருந்து அவரைப் பற்றிய நினைவு தவிர வேறு நினைவே இல்லாமல் இருந்தார். "இவருக்குப் பசிக்கும். இவருக்கு இந்த ஊன் பிடிக்கும். நேற்றுக் கொண்டு வந்ததைவிட இன்று நல்ல உணவாகத் தரவேண்டும்” என்ற நினைவுகள் நிறைந்துநின்றாரே தவிர, தாம் காண்பது முழுமுதற்பொருள், காற்செருப்பால் அப்பொருளின் தலையிலுள்ள மலர்களை அகற்றுவது தவறு என்று அவர் நினைக்கவே இல்லை. இந்த நினைவு நிலை அவருக்குத் தோன்றவும் இல்லை. இதன் காரணத்தை எளிதாக அறியமுடியும். தான் என்ற ஒன்றைப் பிரித்துக் கண்டால் எதிரே உள்ள பொருள் வேறாகிவிடும். அந்தப் பிரிவு மனப்பான்மையில் உயர்வு, தாழ்வு முதலியன தோன்றி விடும். பிரிவு மனப்பான்மையற்ற திண்ணனாருக்கு இந்த வேறுபாடு தோன்றாதது சரியே. அதுதான் பக்தியின் முடிவு நிலை. அந்த முடிவாகிய பக்தியில் ஆராய்ச்சிக்கு இடமே இல்லை. ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆண்டவனிடம் செலுத்தப்படும் பக்தி அச்சத்தில் தோன்றும் பக்தி. அதுதான் சிவகோசரியார் பக்தி. சிவகோசரியாரின் கனவில் தோன்றி இந்த வேறுபாட்டினை ஆண்டவனே சொல்கிறான். வருந்தி நிற்கின்ற சிவகோசரியார், உண்மை நிலையை உணரவேண்டும் என்றே இந்த நிலைக்களனை இறைவன் உருவாக்குகின்றான். சிவகோசரியாரோ திண்ணனாரின் செயலை வெறுத்தார். பாவஞ் செய்வதாகவே எண்ணினார். இராமனைச் சூழ விருந்த முனியுங்கவரும் குகன் தேனும், மீனும் திருத்திக் கொண்டு
38

Page 55
வந்தபோது அப்படித்தான் எண்ணினார்கள். வெறுத்தார்கள். ஏன்? சிவகோசரியாரும் முனிவர்களும் அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து தாங்களாகவே அவனிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொள்கின்றனர். தாம் வேறு அவன் வேறு என்ற வேறுபாட்டுணர்ச்சி தோன்றத் தலைப்பட்டுவிடுகிறது. வேறுபாட்டு உணர்ச்சி தோன்றும்போதே மனிதன் கீழே போய் விடுகிறான்.
பாகற்காய் மிட்டாய்
குகனும் திண்ணனாரும் தம்மை இறைவனிடமிருந்து வேறு பிரித்துக் காணவில்லை. பாகற்காய் கசக்கும், பச்சை மிளகாய் உறைக்கும் என்பது குழந்தைக்குத் தெரியும்; ஆனால், இந்த வடிவங்கள் சர்க்கரையில் செய்த பொம்மையாக இருந்தால் இனிக்கும் என்பதும் தெரியும். இதனைத் தெரிந்து கொண்ட குழந்தையிடம், கையிலே காசு இல்லாத காரணத்தால் ஐயா! அது பாகற்காய் கசக்கும், மிளகாய் உறைக்கும்’ என்று கூறினால், அந்தக் குழந்தை "கசக்காது, உறைக்காது, அவை இனிக்கும்” என்றுதான் கூறும். மீனும் தேனும் கடவுளுக்கு ஆகாதவை என்று நினைத்தார்கள் முனிவர்கள். அவர்கட்கு அந்தக் குழந்தை அறிவுகூட இல்லை. ஏன்? மிகப் பெரிய பேரறிஞர்கள் என்றாலும் வேறுபாட்டு உணர்வினாலே வந்த வினையாகும் இது. அங்கே இருப்பது தேனாயினும், மீனாயினும் அவைகட்கு உள்ளே குழைந்து நின்று இருப்பது அன்பு என்பதனை மறந்துவிட்டார்கள். சர்க்கரையே மிளகாயாகவும், பாகற்காயாகவும் இருப்பதுபோல் தன்னலமற்ற அன்பே மீன் வடிவிலும், தேன் உருவிலும் அங்கே உள்ளது என்பதனை அவர்களாலே அறிந்து கொள்ள இயலவில்லை. எனவேதான் இராமன் அன்பே உருவாக நிற்கும் குகனைப் பார்த்து,
அரிய தாம்உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே! பரிவினின் தழிஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ? என்றான்”
(கம்பன் - 1967)
குகன் அன்புடன் கொணர்ந்த சட்டியுள் அறிவே வடிவாய் விளங்கிய முனியுங்கவர்க்குத் தேனும், மீனும் மட்டுமே தெரிந்தன. அன்பே வடிவமாய் விளங்கும் முழுமுதற் பொருளாகிய இராமனுக்குத் தேனும் மீனும் தெரியவில்லை. அதன் எதிராக அவைகளின் உருவில் விளங்கும் அன்பு (பரிவு) ஒன்றே தோன்றிற்று. உபநிடதம் படித்த முனிவர்க்கு, புறத்தே தெரிந்த இரண்டு பொருள்களைத் தாண்டியுள்ள மூன்றாம் பொருள் கண்ணுக்குப் புலப்படவில்லை; கருத்துக்கும் எட்டவில்லை. தேனும் மீனும் இழிவானாலும் மூன்றாம் பொருளாகிய அன்பு குழைந்து சேர்ந்துவிட்டதனால் அது பவித்திரமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் இரு வேறு நிலைப்பட்டவர்கள் இயங்கும் நிலையைக் கம்பநாடன் மிகவும் தெளிவாகவும் செம்மையாகவும் விரிவாகவும் காட்டி விட்டான்.
அறிவும் பக்தியும்
அவ்வாறானால் அறிவோடு கலந்தால் பக்தி வெளிப்படாதா
என்று வினவினால், வெளிப்படும் என்றே கூறலாம். ஆனால்,
அந்த வெளிப்பாட்டிற்கு எப்போதும் ஒரு குறை இருந்துகொண்டே
கம்பன் மலர் - 2000

இருக்கும். அறிவோடு கூடிய பக்தியில் எப்போதும் ஆபத்தும் உண்டு. என்ன ஆபத்து என்றால், தான் என்று அகங்காரம் தோன்றித் தன்னையும் மீறி வெளிப்பட்டுவிடுதல் கூடும். இலக்குவனுக்குப் பக்தி இல்லையா? பிராட்டிக்குப் பக்தியில்லையா? என்றால் நிச்சயமாக உண்டு. ஆனால், அது 99.99 சதவிகிதமே தவிர முழுமையானது என்று சொல்ல முடியாது. நான் தலைவனுக்கு ஏவல் செய்கிறேன்’ என்ற எண்ணம் அடிப்டையில் இருந்துகொண்டே இருக்கிறது. முழுமுதற் பொருளாக விளங்கும் இராமனுக்குத் தான் ஒருவனே துணையாக நிற்பதாக இலக்குவன் நினைத்துவிட்டான். எனவே தான் இராமனுக்குத் தீங்கிழைத்த கைகேயியிடம் ஆத்திரமும் கோபமும் ஏற்படுகிறது.
"சிங்கக் குருளைக்கு இடும் தீம்சுவை ஊனைநாயின் வெங்கன் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே”
என்றும்
புவிப்பாவை பரம் கெடப் போரில் வந்தோரை எல்லாம் அவிப்பானும் அவித்துஅவர் ஆக்கையை அண்டம் முற்றக் குவிப்பானும் எனக்கு ஒரு கோவினைக் கொற்ற மெளலி கவிப்பானும் நின்றேன்; இது காக்குநர்காமின் ”
(கம்பன் - 1722)
என்றும் சீறுகிறான். “சிங்கக்குட்டிக்கு இடுவதற்கு என இருந்த ஊனை ஒரு சிறு நாய்க்குட்டிக்கு இடுவதற்கு முனைந்து விட்டார்கள். அவர்களைக் கொன்று விடுகிறேன்” என்று சீறிப் பேசுகிறான். இந்த அவல நிலையைத் தான் ஒருவனே தனிநின்று சரிப்படுத்தி விட முடியும் எனச் சீறுகின்றான். இந்த அகங்கார உணர்வு அவன் உள்ளத்தில் தோன்றிவிட்டது. இலக்குவன் இராமனிடத்தில் உள்ள பக்தியால்தான் அவ்வாறு கோபிக்கின்றான். ஆனால், அவன் பக்தியில் தான்’ என்ற அகங்காரம் இழையோடி நிற்கிறது. இது அறிவால் வந்த வினை. அறிவோடு கூடிய பக்தியையும் இப்பகுதியில் விளக்கமாகக் காட்டுகிறான் கம்பன்.
அரிய கூட்டு
'அறிவு கலந்தால் பக்திக்கு விமோசனமே இல்லையா? என்றால், உண்டு. அதனை மூன்றாவது படமாகக் கம்பன் காட்டுகின்றான். அவன்தான் இராமகாதையில் இராமனையும் விஞ்சி நிற்கின்ற ஒரு மாபெரும் பாத்திரம். முதலில், நூறு இராமர்க்குச் சமமாகி நின்று'ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ? எனக் குகனால் அடுத்துப் போற்றப்பட்டு, ஆயிரம்கோடி இராமனுக்குச் சமம் என இராமனைப் பெற்ற கோசலையினால் இறுதியில் புகழப்பட்ட பரதனே அப்பாத்திரமாவான் இப்பரதன் படத்தினைக் கவிச்சக்கரவர்த்தி ஒப்புயர்வற்ற முறையில் தீட்டிக்
காட்டுகிறான்.
39

Page 56
அறமும் பக்தியும்
அறம் அறிவின் துணைகொண்டு பணிபுரிவது, பக்தி அறிவுக்கு அப்பாற்பட்டு வருவது. இந்த இரண்டும் கலந்து ஒரு மனிதனிடம் விளங்க முடியுமா என்று கூட ஐயப்படும் நிலை இன்றுளது. ஆனால், கம்பநாடனோ “இதோ ஒரு மனிதனிடம் இவை இரண்டும் கலந்து பணிபுரிகின்றன பாருங்கள்” எனக் காட்டுகின்றான். இலக்குவனிடம் பக்தியும் அறமும் இருந்தன. ஆனால் அவனிடம் அறிவின் பகுதியாகிய நான் செய்கிறேன்' என்ற முனைப்புத் தோன்றிக் கொண்டேயிருந்தது. இந்த முனைப்பு அவன் அறத்தையும் பக்தியையும் குறைபடச் செய்துவிட்டது. ஆனால், பரதனைப்பொறுத்த மட்டில் அறம் பக்தி என்ற இரண்டும் சரிசமமாக நிற்கின்றன. அதனால் நான் செய்கின்றேன்’ என்ற முனைப்பு இல்லாமலே போய்விடுகிறது. எனவே, அதில் குறைபாட்டினைக் காணவே முடியவில்லை. பரதன் அற அடிப்படையில் செயல்பட்டாலும் சரி, பக்தி அடிப்படையில் செயல்பட்டாலும் சரி, அங்கே பரதன் என்ற தனிப் பொருளைக் காண முடியவில்லை. இராமனைத் தான் காணுகிறோம் அதுவே பரதனின் சிறப்பு. பரதனிடம், இராமன், அறம், பக்தி இவைகளை வேறு வேறாகக் காண முடியாது. எல்லாம் ஒன்றாக விளங்கும் காட்சியைத்தான் பரதனிடம் காணுகின்றோம்.
பரதன் எனும் பெயரான்
ஒவியன் ஒருவன் ஒவியத்தினை ஒரு திரைச் சீலையில் வரைந்திருந்தான்; பலர் வந்து பார்த்தனர். “ஓவியம் எங்கே! திரைச்சீலையை விலக்குங்கள். ஒவியத்தினைக் காணலாம்” என்றனர். "ஐயா! திரைச் சீலைதான் ஓவியம்’ என்றதோடு வெற்றிப் பெருமிதமும் எய்தினான். அதுபோலப் பரதன் என்ற பொருள் அறிவா? அன்பா? அறமா? பக்தியா? என்றால், 'ஆம் இவை அனைத்துமே பரதன் தான்’ என்று விடை கூறலாம். அவை வேறு, பரதன் வேறு அல்ல. நான் என்ற அகங்காரத்தினை அறவே கரைத்துவிட்ட பாத்திரம் பரதன். அத்தகைய சிறந்த பாத்திரத்தினைப் பெற்றது இராம காதை. ஆதலினால்தான் பலமொழிகளைக் கற்றறிந்த திரு. வ. வே. சு. ஐயர் அவர்கள் “உலகக் காப்பிய இலக்கியங்களை எடுத்துக்கொண்டு பார்ப்பீர்களானால் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பக்கத்தில் வருவதற்குக் கூடப் பிற காப்பிய ஆசிரியர்களை எதிர் பார்க்க முடியாது’ என்ற பெருமிதத்தோடு கூறுகின்றார். உலக இலக்கியங்கள் முழுவதையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இப்படிப்பட்ட பாத்திரப் படைப்பைக் கவிச்சக்கரவர்த்தி கம்பனைத் தவிர வேறு யாராலும் படைக்க முடியாது என்று கூறிவிடலாம். இந்தப் பெருங்காவியத்தினைத் தமிழில் தவிர வேறு ஆங்கிலம் முதலிய எந்த மொழியிலேனும் எழுதியிருந்திருப்பான் ஆயின் கம்பன் உலகெல்லாம் போற்றும் ஓர் ஒப்பற்ற நிலையைப் பெற்றிருப்பான். பரதனைப் பற்றி
தள்ளிய பெருநீதித்தனி ஆறு புக மண்டும் பள்ளம்எனும்தகையானைப்பரதனெனும் பெயரானை
அகில இலங்கைக் கம்பன் கழகம்

எள்ளரியகுணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த வள்ளலையே அனையானை கேகயர்கோன் மகள் பயந்தாள்"
(கம்பன் - 657)
என்று எல்லாவற்றிற்கும் மேலானவன் எனத் தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் விசுவாமித்திரனே இவ்வாறு கூறுகிறான். அறக்கடல் பரதன் என்கின்றான்; அறக்கடல் வேறு பரதன் வேறு அல்ல என்று கூறுகின்றான். அந்தப் பாத்திரம் இந்நின்ற வள்ளலையே ஒக்கின்றான் இராமன் வேறு, பரதன் வேறு இல்லை; இராமனைப் பார்த்தவர்கள் பரதனை வீட்டில்சென்று பார்க்க வேண்டியதில்லை. வடிவத்தால், பண்பால் பிறவற்றால் பரதன் இராமனையே ஒத்துள்ளான். அத்தகைய படைப்பு, பரதனாகிய படைப்பு.
பரதன் என்றால்.
பரதன் எனும் அந்தப் பாத்திரம் தனியே எடுத்துப் பிரித்துப் பார்க்கும் பாத்திரம் இல்லை. பரதனை நோக்கும் போதெல்லாம் பரதன் மட்டுமா தோன்றுவான், அறம் தோன்றும்; பக்தியும் தோன்றும். இவற்றை விட்டுத் தனியே பரதன் என்ற ஒருவனைக் காண இயலாது. அப்படி ஒரு பாத்திரத்தினைப் படைக்கும் ஆற்றல் கவிச்சக்கரவர்த்திக்கு உண்டு. அறம் என்பதுபற்றி உபநிடதமும் அதனை ஒட்டிச் சாமர்செட்மாம் என்ற மேனாட்டறிஞனும் அது வாளின் கூரிய முனை போன்றது எனக் கூறுகின்றனர். பல சமயங்களில் வாழ்க்கைப் பிரச்சினையை ஆயும்பொழுது அறமா? அதுசரியா? எனப் பிரித்தறிய முடியாத தொல்லையிலே கொண்டுவந்து விட்டுவிடும். முடிவுக்கு வரமுடியாத நிலையில் இது சரியா? அதுசரியா? என்ற ஐயப்பாட்டில் நிற்க வைத்துவிடும். அறமும், பக்தியும் உருவாகிய பரதனுக்கும் ஒரு சோதனை. அந்த நிலையின் மூலம் பரதனின் குறிக்கோள் எங்கே இருக்கின்றது என்பதனைக் காட்டுகிறான் கவிச் சக்கரவர்த்தி. பரதனுக்கு தன் பாட்டன் வீட்டில் இருந்தவரை அயோத்தியில் நடந்தவை ஒன்றுமே தெரியாது. அயோத்தி வரும்வரை தந்தையின் இறப்பும், இராமன் காடு ஏகிய செய்தியும் அவனுக்குத் தெரியாது. முனிவன் அழைத்ததாக வந்த செய்தி கேட்டு ஊருக்கு வந்தான். வரும் வழியில் அயோத்தி காட்சியைப் பார்த்தான்; சந்தேகம் வந்து விட்டது. அம்மாவிடம் சென்றான். முதலில் அவன் கேட்ட கேள்வி, தந்தை வலியன் கொல்' என்பதே. அந்தத் தாயார் இந்த உலகில் எந்தப் பெண்ணும் சொல்லாத ஒன்றினை - சொல்ல முடியாத ஒன்றினை வானத்தான் என்ற சொல்லால் கூறினாள். இந்த உலகில் எந்த மனைவியும் சொல்ல முடியாத சொல்லைச்சொல்கிறாள். கணவனை இழந்த நிலையில் எவளிடமும் தோன்றாத ஒரு அலட்சிய நிலையில் நின்று பேசுகிறாள். இத்தகைய நிலை ஒரு பெண்ணிடம் தோன்றும் என்பது கனவிலும் கூட எண்ண முடியாத நிலை. இது பரதனை மயங்கச் செய்கின்றது. ‘வானத்தான்’ என்று அலட்சியமாகக் கூறுவது அவனை வெகுளவும் செய்கிறது. அங்கே அறம்
40

Page 57
அவனுக்குத் துணை செய்கிறது. உண்மை முழுவதையும் தெரிந்து கொள்ளும் முன்பே கோபித்துக் கொள்ளும் இலக்குவன் இயல்பு வேறு; பரதன் இயல்பு வேறு. எனவேதான், அடுத்து அண்ணனைப் பார்க்கத் துணிந்தான். அவனிடம் ஆறுதல் பெறலாம் என எண்ணினான். ஏன்? பரதனைப் பொறுத்தமட்டில் தாய், தந்தை, தெய்வம் அனைவருமே இராமன்தான்.
இராமன் செயல் - பரதன் நோக்கில்
எனவே, ‘இராமன் எங்கே’ என்றான். 'அவன் மனைவியுடன் காட்டில் உள்ளான்' என்றாள் அப்பெருமாட்டி, மனைவியோடு போய்விட்டான்' என்றால் அது மரபுக்கு ஒவ்வாத நிலை. என்ன தவறிழைத்தான்? தவறு செய்தவர் காட்டுக்கு அனுப்பப்படுவது நியாயம். “தவறிழைத்துத் தண்டனையாகக் காட்டுக்குப் போனானா தானாக விரும்பிப் போனானா? மன்னன் உயிருடன் இருக்கும் பொழுதே காட்டுக்குப் போனானா?” இவை பரதனுடைய வினா. இராமன் இவற்றுள் எந்தக் காரணத்தினால் போயினான் என்றுவினவுகிறான். பரதன் மூன்று காரணங்களைக் கற்பித்துக் கொண்டு கேட்டான். அவள் வேறு ஒன்றும் சொல்லமுடியாத நிலையில் "இரண்டு வரம் கேட்டேன். ஒன்றால் உனக்கு ஆட்சி உரிமையைப் பெற்றேன். மற்றொரு வரத்தால் இராமனைக் காட்டுக்கு அனுப்பினேன். இதனைப் பொறுக்காமல் மன்னன் மாண்டான்” என்றாள். இதுதான் நிலைக்களன். இதனை அமைத்து கொண்டான் கவிச்சக்கரவர்த்தி. ஒருமகன் - ஒருதாய். மகன் அன்பு உடையவர்கள். அன்பு காரணமாகத்தான் அறத்தையும் எண்ணாமல் வரத்தினால் பட்டத்தை வாங்கினாள். அன்புடைய இருவர்க்கிடையில் உரையாடல். 'அறத்தின் ஆணி என்று இராமனாலே புகழப்பட்டனவன், தள்ளரிய பெருநீதித் தனி ஆறு புகமண்டும் பள்ளம்' என்று விசுவாமித்திரனாலே பேசப்பட்டவன்,'ஆயிரம் இராமர் வந்தாலும் உனக்குச் சமமாகாது ஆயிரம்கோடி இராமருக்கும் மேலானவன்' என இராமனைப் பெற்ற கோசலையினாலும் குகனாலும் புகழப்பட இருக்கிறவன், அப்படிப்பட்ட பரதன் தாயையும் கொலை செய்யத் துணிகின்றான். பரதன் அரச குமரன், அறத்தின் நிலைக்களன், எதிரிலே நிற்பவள் அன்பால் அறமற்ற கொடிய செயலைச் செய்தவள், அறமல்லாதனவற்றை யார் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். அதுதான் அறம். அந்த வகையில் அவன் உந்தப் பெறுகின்றான்.
நீஇனம் இருந்தனையானும் நின்றனென்; ஏ’ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலேன்; ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் தாய் எனும் பெயர் எனைத் தடுக்கற்பாலதோ?”
மாளவும் உளன், ஒரு மன்னன்வன் சொலால் மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார் ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால் கோள்இல அறநெறி குறை உண்டாகுமோ?
(கம்பன் - 2173,74)
என்கிறான்.தாய்க்கொலை பொல்லாதது என்றாலும் துணிகிறான். ஆனால், “நாயகன் முனியும் என்று அஞ்சினேன்” என்று
கம்பன் மலர் - 2000

கூறுவதால் தான் வழிபடுகிற இராமன் முனிவான் என்றே விட்டுவிடுகிறானாம். “தாய் என்கிற உரிமைக்கான உறவுக்காக உன்னை விடவில்லை” என்று கூறுவதால் இராமனிடம் இருந்த பக்தி அங்கே அவனுக்குத் துணை செய்கிறது. தாய்க்கொலையிலிருந்து அவனைத் தடுத்து நிறுத்துகிறது. தாய்க் கொலையை எண்ணுவதும் பாதகம், பரதன் இவ்வாறு எண்ணியது அற வாழ்வா? என்ற வினா அடுத்துத் தோன்றுவது இயல்பே.
தேன் தடவிய வாள் முனை
அறம் ‘தேன் தடவிய வாள் முனை போன்றது என்று காந்தியடிகள் கூறுவார். அது பக்தியோடு சேரவில்லையென்றால் பல சமயங்களில் தவறு செய்துவிடும். அறத்தோடு அன்பு சேரவில்லையென்றால், அறம் என்ற பெயரால் பல தவறுகள் நடந்துவிடும். அத்தோடு பக்தி அல்லது அன்பு என்ற உணர்வு இழைந்து நிற்கவில்லையென்றால் அதனால் அறமுடையானுக்கும் பயன் இல்லை; மற்றவர்க்கும் பயன் இல்லை. புத்ததேவன் இதனை மறக்கவில்லை. கருணையின் அடிப்படையிலே வாழும் அறவாழ்வுதான்! பயனுடைய வாழ்க்கை என்று செயலிலும் காட்டினான். உலக மக்கள் உணரும் வகையில் அதனைச் செய்து காட்டினான். பிம்பிசாரன் செய்த யாகத்திற்கு ஆடு சென்றது. "அந்த ஆட்டைக் கொன்று யாகத்திலிட்டுத்தான் உயர்கதி பெற முடியுமென்றால் ஆட்டின் உயிரினும் உயர்ந்த என் உயிரைத் தருகிறோன்” என்று ஆட்டைத் தோளிலே சுமந்து சென்றான். பிற்காலத்திலோ அந்தப் புத்தனைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்பவர்கள் அறத்தை மட்டும் வைத்துக் கொண்டு இரக்கத்தை, கருணை உணர்வை மறந்துவிட்டார்கள். எனவே, அறமும் வெறும் சடங்காயிற்று. சமயம் உயிர் இழந்தது. அடிப்படையை மறந்து மேல் கட்டிடத்தை மட்டும் அழகு செய்யும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
தீயன இராமனே செய்யுமேல், அவை தாய் செயல் அல்லவோ, தலத்துளோர்க்கு எலாம்”
(கம்பன் 2163)
ள“தீயன இராமனே செய்யும்?” இங்கு ஏகாரம் எதிர் மறைப் பெருளில் வந்துள்ளது. இராமன் தவறே செய்யமாட்டான். அவனால் தவறு செய்ய முடியாது. ஒருவேளை பிறர் கண்ணுக்குத் தவறு போல் தோன்றும் நல்லதைச் செய்தால்?, செய்யுமேல்-அது தாய் செயல்' என்கின்றான். தாய் செயலே தவிரத் தீச்செயலன்று என்று கூறுகின்றான். குழந்தையைக் காலின் இடையில் போட்டு அமுக்கி மருந்தை ஊட்டும் தாயின் செயல் காண்பதற்கு மறம் போலக் காட்சியளித்தாலும், அது அன்பு காரணமாக நிகழும் செயலே தவிரக் கொடுமையான செயலன்று. வள்ளுவர் கூட
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை'
(குறள் -76)
என்று கூறுகின்றார். மருத்துவரின் செயலை நோக்கி முடிவுக்கு வருவது தவறு. செயலின் நோக்கம், பயன் ஆகியவைகளைக் கொண்டு முடிவுக்கு வருவதுதான் நடுநிலைமையாகும்,
- 41

Page 58
முறையுமாகும். இதனை நன்றாக உணர்ந்தவன் தமிழன். எனவே தான், கம்பன் பரதன் வாயிலாகத் தீயன இராமனே செய்யும் என்று கேட்டு, அது தாய் செயல்' என்று கூறுகின்றான். என்றால், இராமன் தவறு செய்யவில்லை என்ற முடிவிற்கு வந்தபின், ஏன் காட்டிற்குச் சென்றான் என்று வினாவுகிறான். இது அறத்தின் அடிப்படை எழுப்பிய வினாவாகும்.
தன்னை இழந்த பரதன்
ஒருவன் பூசை செய்கிறான். அவன் தந்தை முதுகில் அடிக்கிறான். ஆனால், பூசையில் ஈடுபட்டவனுக்கு பாலைக் காலால் தட்டியபோது அவ்வாறுதட்டிய தந்தையின் காலை மழுவால் துண்டித்தான். தந்தையைக் கொலை செய்யப் புகுந்தவன் சண்டேசுவரன். இது தவறு இல்லையா? தனக்குத் தீங்கு செய்யப்படும்போது அது அவனுக்குத் தீங்காகவே தெரியவில்லை. தன்னால் வணங்கப்படும் தெய்வத்திற்குத் தீங்கு செய்யப்படும்போது செய்தவர் யார் என்ற ஆராய்ச்சிச்கே இடம் இல்லை. உறவுக்கோ பிறவற்றிற்கோ அங்கு இடம் இல்லை. இந்த உணர்வு நிலையைத்தான் நாவுக்கரசர் பெருமான்:
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி
அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும்
அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள்.நங்கை தலைவன்தாளே”
(தேவா. 6, 25-7)
என்று பாடுகிறார். இதே நிலைதான் பரதன் நிலையும். இந்த
நிலையில் ஈடுபட்டுவிட்ட பரதனுக்குத் தந்தையில்லை, தாயில்லை, எல்லாம் இராமன் தான்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

"எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும் அந்தமில் பெருங்குணத்துஇராமன்; ஆதலால் வந்தனை அவன் கழல் வைத்த போதுஅலால் சிந்தைவெங் கொடுந் துயர்தீர்கலாது.
(கம்பன் - 2159)
என்கிறான் பரதன். ஆதலால்தான், நாயகன் முனியும் என்று அஞ்சித் தாயைக் கொல்லவில்லை. எனவே, அறிவே பக்தியாய், பக்தியே அறிவாய் விளங்கிய நிலையைப் பரதனிடம் காணுகிறோம். அதற்கு அறிவு நிலையில் நின்று ஆராயவும் தெரியும்; பக்தி நிலையில் நின்று தன்னை அர்ப்பணிக்கவும் தெரியும். குகனிடத்தும் திண்ணனிடத்தும் அறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி நிலையைக் காணுகின்றோம். சிவகோசரி யாரிடம் அறிவு நிலை விஞ்சி அறத்திற்கு மட்டும் சிறப்புத் தரும் பக்தியைக் காணுகின்றோம். இலக்குவனிடம் ஒன்று விஞ்சி நிற்கையில் பிறிதொன்று தாழ்ந்து நிற்கும் நிலையைக் காணுகின்றோம். அவைகளையெல்லாம் கண்டவர்கள் அறமும் பக்தியும் இணையவே இணையாதோ என்று கூட எண்ணத் தொடங்கிவிட்டனர். ஆனால், கவிச்சக்கரவர்த்தி கம்பன் படிப்படியே பலப்பல படங்களைக் காட்டிவிட்டு, அறமும் பக்தியும் இணையும் நிலையில் தவறே நேராத உயரிய நிலை ஏற்படும் நிலையினைக் காட்டுகின்றான். இதனைப் பரதன் வாழ்வின் மூலம் அறிகிறோம். அறமும் பக்தியும் முரண்பட்டவையோ என்று எண்ணும் திறனாய்வாளர்களின் சிந்தனைக்குக் கம்பன் நல்ல கருவூலமாகின்றான்; அறத்தையும் பக்தியையும் பரதனிடம் இணைத்துக் காட்டுகிறான்.
இந்தப் பேருலகில் அறம் வேறு பக்தி வேறு என்றும், இரண்டுக்கும் முரண்பாடு உண்டு என்றும் கருதவேண்டா. அறத்தின் அடிப்படையில் பக்திதோன்றும். பக்தி முதிர்ந்தால் அறம் அதனுள் இழையோடி நிற்கும். பக்தியின் சிறப்பில் அறம் கலந்து நிற்கும். இந்த உண்மையைக் கம்பன் தன் காப்பியத்தில் தெளிவாகக் காட்டுகிறான்.
- 42

Page 59
மிழ்க் கடலிலே கண்டெ புகழுடையோன். சமயப்ெ நிற்கும் இதன் பொருள் உணர்வுமாக கலந்து களைந்தெறிந்து மேலான உணர்வுகளைச் வினையடியாகப் பிறந்தது சமயம். பக்குவப்
ஆனால் பக்குவப்பட வேண்டியமன மண்மேடானது யாவரும் அறிந்த ஒன்று. பா அதிசயம். சமயம் காட்டும் இறைதத்துவம் ஆ
ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லார்க் திருநாமம் பாடித் தெள்ளேனம் கொட் என்ற மணிவாசகரின் கருத்து மாணிக்கக்
அல்லா என்பார் சிலபேர்கள், அரன் அ வல்லான் அவன் பரமண்டலத்தில் வாழு சொல்லால் விளங்கா நிர்வாணம் என்
எல்லாம் இப்படிப் பலர்பேசா ஏதோ ஒரு
அந்தப் பொருளை நாம் நினைத்தே அ எந்தப் படியாய் எவர் எதனை எப்படித் நிந்தை பிறரைப் பேசாமல் நினைவிலுL வந்திப்போம் அதை வணங்கிடுவோம்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ை செல்கின்றது.
இராமாயணம் மிகச்சிறந்த இலக் சிலதிவிரவாத சைவர்கள் அதனை ஒதுக்கிை
 
 

யம் கடந்த கம்பன்
திருமதி வசந்தா வைத்தியநாதன்
டுக்கப் பெற்ற ஆணிமுத்து கவிச்சக்கரவர்த்தி கம்பன். இறவாப் பாதுமையாளன். சமயம் என்று கூறும்பொழுதே ஆழமாக வேர்விட்டு நமக்குத் தெளிவாக வேண்டும். மனித உணர்வும், விலங்கு நிற்கும் மனித மனத்திலிருந்து கீழான விலங்கு உணர்வைக் 5 கால்கொள்ளச் செய்வதே சமயத்தின் நோக்கம். சமை' என்ற படாத உள்ளங்களையும் பக்தி வெப்பத்திலே பதப்படுத்துவதே சமயம்.
ரிதமனங்கள் சமயத்தின் பெயராலேயே சண்டையிட்டு மாண்டு மடிந்து மரன் மட்டுமல்ல படித்தவனே இதற்குப் பலியாகிறான் என்பதுதான் அற்புதமானது.
கு ஆயிரம் டாமோ”
கருத்து.
ரி என்பார் சிலபோர்கள்
ழம் தந்தை என்பார்கள் றும் சிலபேர் சொல்வார்கள்
பொருள் இருக்கிறது.
னைவரும் அன்பாய் குலவிடுவோம் தொழுதால் நமக்கென்ன } கெடுதல் செய்யாமல்
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.
ளையின் கருத்தின் ஆழம் சமயப் பொதுமைக்குள் நம்மை அழைத்துச்
கியம். அறக்காப்பியம். ஆனாலும் அது ஒர் வைணவ நூல் என்று
வக்கின்றனர். திருமால்வேறு சிவன் வேறு இல்லை. இருவரும் ஒருவரே.
43

Page 60
எரியலாலுருவமில்லையேறலா லேறலில்லை கரியலாற் போர்வையில்லை காண்டகு சோதியார்க்குப் பிரிவிலா வமரர்கூடிப் பெருந்தகைப் பிரானென்றேத்தும் அரியலாற்றேவியில்லையையனை யாறனார்க்கே"
இது அப்பர் பெருமானுடைய அருள்நிறைந்த வாக்கு. தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன்நானுந் தோன்றுமால் - குழும் திரண்டருவிபாயும் திருமலை மேல் எந்தைக்கு இரண்டுருவம் ஒன்றாய் இயைந்து
"பொன் திகழு மேனிப்புரிசடையப் புண்ணியனும் நின்றுலகந்தாய நெடுமாலும் - என்றும் இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன் ஒருவன் அங்கத்தென்றும் உளன்.”
முதலாழ்வார் மூவரில் பேயாரும், பொய்கையாரும் அரி அரனான இருவரையும் ஒருவராகப் போற்றித் துதிக்கின்றனர். முழுதும் உணர்ந்த ஞானிகள் சமரச பாவத்தைப் போதிக்க, ஒன்றுமே அறியாத நாமோ சிவன் பெரியவன், விஷ்ணு உயர்ந்தவன் என்று மண்டையை உடைத்துக் கொள்கின்றோம். கல்விற் பெரிய கம்பநாடனும்,
"அரன் அதிகன் உலகளந்த அரிஅதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்கு பரகதி சென்று அடைவரிய பரிசு”
என்று முத்தாய்ப்பு வைத்துவிடுகின்றான். தனது பெயரிலேயே ஏகம்பனின் பெயரைத் தாங்கி நிற்கும் கம்பன் படைத்த அதி அற்புதமான படைப்பை வைணவ பரமானது என்று காரணம் சுட்டி, தீண்டத்தகாத தன்மைத்து என்று ஒதுக்கி வைத்து பக்திப் பொதுமையினின்று ஒதுங்கிக் கொண்ட சைவர்களும் உண்டு. இவர்களது அறியாமைநிலை கண்டு இரங்கிய 'தமிழ்க்கடல் 'சிவமணி' 'சிவம் பெருக்கும் சீலர் காரைக்குடி அழகப்பா கல்லூரியின் தமிழ் ஆராய்சித்துறையின் இயக்குநராகப் பணிபுரிந்து அந்தப்பதவிக்குப் பெருமை சேர்த்தராய.சொ' என்று தமிழ் இலக்கிய நெஞ்சங்களால் இனிக்க, இனிக்க அழைத்துப் போற்றப்பெற்ற அமரர் திருமிகு, ராய சொக்கலிங்கம் அவர்கள் கம்பராமாயணக் கடலுள் மூழ்கி சிவமாம் நன்முத்துக்களைத் தேர்ந்தெடுத்துப் படைத்துள்ள அரிய நூல் 'கம்பனும் சிவனும்
அவர் நூலிற்கு பிள்ளையார் சுழி இடும் பொழுதே கம்ப நாடனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் பெயரே சிவபெருமானைக் குறித்து நிற்பது என்று கூறித் தொடங்குகின்றார். இராம காதையில் 395 இடங்களில் சிவனைப் பற்றிப் பேசப்படுகின்றது. இதில் கவிக்கூற்றாக 168 இடங்களிலும், வீடணன் 35, இராவணன் 31, இராமன் 19, கோசிகன் 17, அனுமன் 15, இந்திரசித்தன் 13, சூர்ப்பநகை 12, வசிட்டன் 7, சீதை 6, சதானந்தர் 5, பரசுராமன் 5, சுக்கிரீவன் 5, தயரதன் 4, இலக்குவன் 4, சடாயு 4, சாம்பன் 3, மகோதரன் 3, அதிகாயன் 3, அரக்கர் கூற்றாக 3, மண்டோதரி 3, மாரீசன் 2, வாலி 2, இலங்கை மாதேவி 2, அக்ககுமரன் 2, சாரன் 2, கும்பகன்னன் 2, மாலியவான் 2, வானரப்டைத் தலைவர் 2, மாதலி 2, நீலமாலை 1, பரதன் 1, கவந்தன் 1, சவரி 1, அங்கதன் 1, தாரை 1, சம்பாதி 1, துன்முகன் 1, சேனைத்தலைவன் 1, புகைநிறக் கண்ணன் 1, அகம்பன் 1, பிரமன் 1, ஆக 395 இடங்களில் பிள்ளைமதி
அகில இலங்கைக் கம்பன் கழகம்

தரித்தவனின் புகழ் பரவப் படுகின்றது. இராமாயணப் பெரும் பிரிவுகளை நோக்குமிடத்து, பாலகண்டத்தில் 55, அயோத்தியா காண்டம் 19, ஆரண்யகாண்டம் 50, கிஷ்கிந்தா காண்டம் 24, சுந்தரகாண்டம்49,யுத்தகாண்டம் 198 இடங்கள் ஆக 395. கம்பன் தான் படைத்த காப்பியத்துள் அனைத்துப் பாத்திரங்களையும் இமையா நாட்டத்திறைவன் புகழ் கூறுமாறு செய்துவிட்டதே அவனது சைவப்பற்றிற்கு உற்ற சான்றாகும்.
அறந்தலை நிறுத்தி, வேத அருள் சுரந்து, நீதித் திறந்தெரிந்து. நல்லோரைக் காத்து, அல்லோரை அழிக்க இராமன் என்னும் பரம்பெருள் முத்தலைப்படையையும், சங்குசக்கரத்தையும், குண்டிகையையும் துறந்து. ஆலிலை, தாமரைமலர், பனிப்பொருப்பையும் விட்டு காலமும் கணக்கும் நீத்த காரணனாக மூதண்டத்தைச் சாடும் கோதண்டத்தோடு அயோத்தியில் அவதரித்தான் என்று இராகவனது இறை தன்மையை அனுமன் இராவணனுக்குச் சொல்லுவது சிறப்புமிக்க இடம்.
மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர்மும்மைத்தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில்லேந்தி குலமும் திகிரிசங்கும் கரகமும்துறந்து தொல்லை ஆலமும்மலரும் வெள்ளிப்பொருப்பும் விட்டு அயோத்திவந்தான்.
இந்திரசித்தின் பாசக்கயிற்றிலே தானே விரும்பி கட்டுப்பட்ட அஞ்சனை மைந்தன் இராவணன் முன்னிலையில் நிறுத்தப்பட்டான். அனுமானை நோக்கி “நீயார்” என்று வினவிய இலங்கேசனுக்கு பவனகுமாரன் என்ன விடை கூறினான் தெரியுமா? சொல்லின் செல்வனின் வாக்கிலே மலர்ந்த அபூர்வமான பாவம் கம்பனைத், தமிழை, அனுமனை இனம் காட்டுகிறது.
“எங்கும் நிறைந்தவனாய் உள்ள பரம்பொருள் அடி, நடு, முடிவு அற்று அனாதியாய் உள்ளவன். என்றும் இருப்பவன். எந்தத் தத்துவங்களாலும் அளக்கொணாதவன். சிந்தையாலும் தொட முடியாதவன். தத்துவங்கள் அனைத்தின் சாரமும் அவனே. படைக்கின்ற பிரம்மா, காக்கின்ற திருமால், அழிக்கின்ற சிவன் இம்மூவருமே ஒருருக்கொண்டு இராமனாக வந்துள்ளான் என்ற அவதார இரகசியத்தை அறிந்த அறிஞன் அனுமன், இதைத் தெரிந்து கொண்டு இனியாவது நல்லநெறியைக் கடைப்பிடித்தொழுகுவாயாக என இலங்கேசனுக்கு அறிவுரை கூறுவதுபோல அற்புதமான உணர்ச்சியுடன் அமைந்த மேற் காணும் பாடலைப் படிக்கப் படிக்க இதயத்து ஊற்றுக் கண்கள் திறந்து பக்திரசம் ஊறும்.
அஞ்சனாபுத்திரனுடைய அறிவுரையை உதறித்தள்ளி, மண்மகளை விடமறுத்துப்போர்மகளை வரவேற்ற புலத்தியன் மகன் யுத்த களத்திலே செயலற்று நிற்கும் நிலையில், வேதங்களே பொய்த்தாலும் இராகவனின் வில்லிலிருந்து புறப்படும் சரங்களின் இலக்குத் தப்பாது.
“வேதம் தப்பின போதும் அன்னான் தனு உமிழ்சரங்கள் தப்பா” என்று தன்னையும் அறியாது வியப்பின் விளிம்பில் நின்று பேசுவதும் ஓர் அற்புத பாவம் கொண்ட பாடல்.
இராகவனின் அம்புகள் வில்லினில் தொடுக்கும் பொழுது நான்கு முகங்களையுடைய பிரமனை யொக்கும் பகைவனை
44

Page 61
இலக்கு வைத்து ஒடும் பொழுது ஆயிரம் முகங்கில்ைம்விேயூ ஆதிசேடனில் சயனிக்கும் திருமாலை யொக்கும். பொருது அழிக்கும் பொழுது ஊழிக்காலத்து உருத்திரனை யொக்கும். இச்சரங்களின் ஆற்றலுக்கு முன் எனது ஆணவமே குன்றிவிட்டது என்றால் அவற்றின் சிறப்பிற்கு வேறு ஓர் சான்று வேண்டுமோ? என்று பகைவனின் படைக்கலத்தை புகழுமளவிற்கு இராவணன் - இரா - வணனாகி விட்டான். பாடல் இதோ.
உற்பத்திஅயனே ஒக்கும் ஒடும் போது அரியே ஒக்கும் கற்பத்தின் அரனே ஒக்கும் பகைளுரைக் கலந்த காலை சிற்பத்தின் நம்மால் பேசச் சிறியவோ? என்னைத்திராத் தற்பத்தைத் துடைத்த தென்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ?”
மற்றுமோர் வியத்தகு இடம். அசோக வனத்தில் சிறையிருந்த செல்வியாம் சீதை, வானவரையும், தானவரையும் கவன்று கலக்கிய வீரன், திசையானைகள் கோடுழுதமார்பின், வெள்ளிப் பொருப்பெடுத்த தீரன், தசமுகனை ஒர் துரும்பென நினைத்துப் பேசுகின்றாள்.
தோற்றனை பறவைக்கன்று துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் வாளால் வென்றாய் இன்றெனின் இறத்தி அன்றே? நோற்ற நோன்புடைய வாள், நாள் வரமிவை நுனித்த வெல்லாம் கூற்றினுக் கன்றே வீரன் சாத்திற்கும் குறித்த துன்டோ?” கற்புடை மகளிரின் ஆற்றலின் முன்னால் கயிலையைப் புறங்கண்டவன்மட்டுமல்ல. கடவுளே வந்தாலும் எதிர்நிற்க முடியாது. அதேபோல மும்மூர்த்திகளே வந்தாலும் மங்கையின் மனநிலையை உணர முடியாது என்ற அநுபவ உண்மையை சீதையின் கூற்றாகவே கம்பர் கூறியிருப்பதும் நயமும், கனமும் உடைய பகுதி.
பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும் சங்கு கைத் தாங்கிய தருமமூர்த்தியும் அங்கையின் நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும் மங்கையர் மனநிலை உணர வல்லரோ"
இராமன் சீதையை தீக்குளிக்கச் சொன்ன பொழுது தீக்கங்குகளாகப் பறந்து வந்த வார்த்தைகள் காலங் காலமாக ஆண் இனத்தை நோக்கி நிற்கும் வினாக்கள். பெண்ணின் மனநிலையையும் மன ஆழத்தையும் உணருதல் என்பது அரியதொன்றாகும்.
"அத்திமலரும் அருங்காக்கை வெண்ணிறமும் கத்து புனல் மீன்பதமும் கண்டாலும் - பித்தரே கானார் தெரியல் கடவுளரும் காண்பரோ மானார் விழியார் மனம்”
ஆழங்காண முடியாத அந்த பெண்மை நலந்தான் காலங்காலமாக ஆண்வர்க்கத்தை கரத்து நிற்கின்றது. மண்ணினுள் மறைந்து நிற்கும் வேர் மரத்தின் செழுமைக்குக் காரணமாவது போலவும் தாய் வாழை தன்னை அழித்துக் கொண்டு கன்றுகளுக்குத் தோற்றமாவது போலவும் தன்னை மறைத்துக் கொண்டும், அழித்துக் கொண்டும் மனுக்குலத்தின் உயர்விற்கு மூலகாரணமாகின்றாள் பெண். அந்தப் பெண் இல்லையல் உலகில் உயிர் இல்லை.உயர்வில்லை. மனிதர்கள் மட்டுமா இல்லை மும்மூர்த்திகளே தங்கள் மனைவியின் பெருமையில் வாழ்பவர்கள் தான். யுத்த மீட்சிப் படலத்திலே சீதையின் மாண்பை
கம்பன் மலர் - 2000

விளக்குவதற்காக வீடணனிடம் இராமன் கூறுவதாக அமைந்துள்ள பாடல் பெண்ணின் ஏற்றத்தை ஒளிகாலச் செய்கின்றது.
பரசுடைக் கடவுள் நேமிப் பண்ணவன் பதுமத்து அண்ணல் அரசுடைத் தேவிமாரை இன்றியே அமைவதுண்டோ? கரை செயற்கரிய தேவர் ஏனையோர் கலந்த காண்பான் விரகறின் விலக்குவாரோ? வேறுளார்க்கு என்கொல் வீர'
மழுவேந்திய சிவபெருமானும், திகிரிப்படை ஏந்திய திருமாலும், மலரில் உறையும் நான்முகனும், தங்களையே ஆட்சி செலுத்துகின்ற மனைவிமார்களால்தான் மாண்புறுகின்றார்கள். இறைத் தன்மையை அடைகின்றார்கள். அரசுடைத் தேவிமார் என்ற அருமையான தொடர் அக்ஷரலகூடிம் பெறும். “பெண்ணிற் பெருந்தக்கதில்” - வள்ளுவம் இதனை அரண் செய்கின்றது. யுகக்கவிஞன் மகாகவி பாரதியும்,
ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான்
அயன்வாணிதனைநாவில் அமர்த்திக் கொண்டான் சோதிமதிமுகத்தினளை செல்வம் எல்லாம்
சுரந்து அருளும் விழியாளை திருவை மார்பில் மாதவனும் ஏந்தினான் வானோர்க்கேனும்
மாதர்இன்பம் போல் பிறிதோர்இன்பம் உண்டோ? காதல் செயும் மனையாளே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்” என்று கூறுவான்.
சிவசிந்தனையோடு கம்பனைப் புரட்டினால் நீற்றின் மணம் மெல்ல காற்றில் மிதந்து வரும். கொன்றையின் வாசம் நாசியைத் தாக்கும் அரவு ஊர்வதுபோல ஒர் ஆனந்தப் புல்லரிப்புத் தோன்றும். வைணவ நிலையிலே வைத்துப் பார்த்தால் பரந்தாமனின் விபவம், வியூகம், அந்தர்யாத்மிகம், அர்ச்சை நிலைகளை விளக்கும் உயர் நூலாக ஒளிருகின்றது.
சிவனாக இருந்தால் என்ன , விஷ்ணுவாக இருந்தால் என்ன? கடவுள் தத்துவம் ஒன்றுதான். பார்க்கின்றவனின் பார்வையில் உள்ள பேதமே இறைபொருளைக் கூறுபோடுகின்றன
“ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம்" கொட்டுகின்றோம். இருளிலே வருபவனுக்கு கயிறு அரவாகத் தெரிகின்றது. கிளிஞ்சல் வெள்ளியாகத் தோற்றுகின்றது. ஆழ்ந்து நோக்குபவனுக்கு அதன் உண்மை புலப்படுகின்றது. வேறுபட்ட ஜடப்பொருள்களில் பேதமற்ற ஒரு பொருளைக் காண்பவனே ஞானி. அரியதொரு உண்மையைத் தானும் அனுபவித்து நமக்கும் தருகின்றான் கவிஞன்.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப்பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம் கலங்குவதெவரைக் கண்டால் அவரன்றே கைவில் ஏந்தி இலங்கையில் பொருதார் என்பர் மறைகளுக்கு இறுதியாவார் சமயத்துறை தோறும் மூழ்கி, அதன் ஆழத்துட் சென்று முத்துக்களை எடுத்துமாலையாகக் கோர்த்து "கம்ப அலங்கலாகச்” செய்த, கருவிலே திருவாய்த்த அற்புதக் கவிஞன்,
கவிச்சக்கரவர்த்தி கம்பனே என்பதில் ஐயமேதுமில்லை.
45

Page 62
டவுள் கடவுள் என்னும் செந்தமிழ்
இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூ கடந்த நிலையினனான முழுமுதற் பொருளே
காலம் முதலியவற்றைக் கடந்தவ6 அஃதாவது எக்காலத்திலும் எவ்விடத்தும் செயல்களை உடையவன்; காணப்படும் உலக இருந்து, உயிர்கட்கு உரிய உலக வாழ்வு இ6
அத்தன்மையன் முழுமுதற் பொ வருகின்றது.
வாழ்த்து
வாழ்த்து என்பது வாழ்த்துதல்; து:
கடவுள் யாருடைய வாழ்த்தாலும் 'கடவுள் வாழ்த்து என்பது கடவுளை வணங்
இது முனிவர், பசு, பார்ப்பார், அர தனக்கும் பிறர்க்கும் பயன்படும்படி, யாப்பிலு இஃது இறைவணக்கம்' எனவும் படும்.
தொல்காப்பியமும் கடவுள் வாழ்த்
இன்றுள்ள தமிழ் நூல்களுள் நடைமுறைக்கும், தமிழர் வழக்கங்கட்கும் வ தொல்காப்பியர். அவர் காலத்தும், அவருக்கு வழக்கு தமிழில் இருந்துள்ளது. அதற்குத் ெ
"கொடிநிலை, கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
 
 

கம்பரும் புள் வாழ்த்தும்
பேராசிரியர் ஒளவை நடராசன்
ச்சொல் காலமும் கணக்கும் நீத்த காரணனைக் குறிப்பது.
ரவகைத்தாகிய காலத்தையும், மற்றும் இடம், குணம், செயல்களையும் ா அச்சொல்லுக்குரிய பொருளாவான்.
ன் என்றால் அவற்றின் வரம்புக்கு அப்பாற்பட்டவன் என்று பொருள். உள்ளவன்; வரம்பற்ற ஞானம், காட்சி, இன்பம், ஆற்றல், குணம், உயிர்கட்கு வேறாய், அவற்றோடு முறையே ஒன்றாகவும் உடனாகவும் Eதின் இயல அருளுபவன்.
ருளேயாதலின் அச்சொல் அப்பொருளையே குறிப்பதாக வழங்கி
தித்தல். இது வணக்கத்தையும் குறிக்கும்.
வாழ்பவர் அல்லர்; எல்லாரும் வணங்குவதற்கு உரியவர். எனவே கும் வணக்கத்தைத் தெரிவிப்பது.
சர், மழை, நாடு ஆகியவற்றை வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தன்றித் றும் பொருளினும் வேற்றுமையுடையதாய்த் தனித்துக் கூறப்படுவது.
தும மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம். அது தமிழ்மொழி விதிமுறை வகுக்கும் இலக்கண நூலுமாகும். அதனை ஆக்கியவர் முன்னர் வாழ்ந்த சான்றோர்காலத்தும் கடவுளை வாழ்த்தும் செய்யுள் தொல்காப்பியத்தில் வரும்,
46

Page 63
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.” "வாழ்த்தியல் வகையேநாற்பாக்கும் உரித்தே"
என்னும் நூற்பாக்களே சான்று பகரும். எனினும் நூல் இயற்றுவோர் கடவுள் வாழ்த்தை முதற்கண் நிறுத்தியே நூலைத் தொடங்குதல் வேண்டும் என்னும் மரபோ, அதனை வற்புறுத்தும் விதிமுறையோ தொல்காப்பியத்தில் இல்லை. தொல்காப்பியமே முதலில் கடவுள் வாழ்த்தைக் கொண்டு தொடங்கவில்லை.
கடைச் சங்க காலம்
கடைச்சங்க காலத்து எட்டுத் தொகை நூல்களுள் கலித்தொகை, பரிபாடல், பத்துப் பாட்டு என்னும் மூன்றினும் முதற்கண் கடவுள் வாழ்த்துப் பாடல் குறிக்கப்பட்டுள்ளது. பிறவற்றில் பின்வந்த பாரதம் பாடிய பெருந்தேவனாரின் பாடல்களே கடவுள் வாழ்த்தாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்னர்க் கூறிய கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு என்பனவற்றுள் பத்துப்பாட்டில் முருகாற்றுப் படையே கடவுள் வாழ்த்தாகக் குறிக்கப்பட்டுள்ளது. அஃது அந்நூலில் அடங்கிய பத்துப் பாட்டுக்களுள் ஒன்றேயாதலின் அதனை அந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலாகக் கொள்ளுதல் சாலாது.
பரிபாடலில் திருமாலைப் பற்றிய பாடல்களுள் ஒன்று கடவுள் வாழ்த்தாகக் காட்டப்பட்டுள்ளது. இஃது அந்நூலைத் தொகுத்தோர் அல்லது பின் வந்த ஒருவரின் செயலாக இருக்கலாம். அந்நூலின் முதலில் பல பாடல்கள் திருமாலைப் பற்றியனவாக இருத்தலின் அவற்றுள் ஒன்றை அந்நூலின் கடவுள் வாழ்த்தாகக் கொள்ளுதல் ஏலாது.
இவை புலவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகிய தொகை நூல்களாதலின் அவை முதலில் கடவுள் வாழ்த்துப் பாடலைக் கொண்டு அமைந்திருத்தல் இயலாது. அவற்றைத் தொகுத்தவராலோ, ஏடு எழுதியவர்களாலோ அவை கடவுள் வாழ்த்து எனக் குறிக்கப்பட்டிருத்தல் கூடும்.
கலித்தொகையும் தொகை நூலே, அதற்கும் நூலாசிரியர் என்று ஒருவர் இன்மையின் கடவுள் வாழ்த்துப்பாடல் அமைந்திருப்பதற்கில்லை. எனவே அதில் காணப்படும் கடவுள் வாழ்த்துப் பாடலும் பாரதம் பாடிய பெருந்தேவனாராலோ, பிறர் ஒருவராலோ இயற்றப்பட்டுப் பின்னர்ச் சேர்க்கபட்டதேயாதல் வேண்டும். ஏடு எழுதியோரால் இயற்றியவர் பெயர் குறிக்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம்.
திருக்குறள்
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் கடவுள் வாழ்த்தைத் தலையாய பொருளாக முதற்கண் கொண்டே இயன்றுள்ளது.
திருக்குறள் பழமைமிக்க நூலே எனினும் அது சங்க நூல்களுள் ஒன்றாகக் கொள்ளப்படவில்லை. அன்றியும் அதன் கடவுள் வாழ்த்து அதிகாரம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அவ்வதிகாரம் வள்ளுவரால் பாடப்பட்டதன்று என்று வாதிப்பாரும், அது கடவுள் இயல்பு கூறுவதே அன்றிக் கடவுள் வாழ்த்துக் கூறுவதன்று என்று சாதிப்பாரும் உள்ளனர்.
கம்பன் மலர் - 2000

அது வள்ளுவர் இயற்றியதே என்றும், கடவுள் வாழ்த்துக் கூறுவதே என்றும் கொள்ளினும், அக்காலத்தில் நூல் இயற்றுவோர், முகப்பில் கடவுள் வாழ்த்துப்பாடி அமைத்தே நூலைத் தொடங்க வேண்டும் என்னும் விதி முறையோ, மரபு நெறியோ வழக்கில் இருந்தது என்பதற்கு வேறு தக்க சான்று ஏதும் இல்லை.
சங்க காலத்திற்குப் பின்
கடைச் சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய பெருங்காப்பிய நூல்களிலும் முகப்பில் கடவுள் வாழ்த்து இல்லை. இவ்விரு பெருநூல்களின் ஆசிரியர்களாகிய இளங்கோவடிகளும், சாத்தனாரும் கடவுள் கொள்கை உடையவரல்லர் என்று கொள்ள இயலாது. இவர்களுடைய நூல்களில் சிவன், திருமால், முருகன், கொற்றவை, அருகன், புத்தன் என்போர் கடவுள் நிலையில் வைத்துப் போற்றப்பட்டிருத்தல் காணலாம்.
ஆகவே இவர்கள் காலத்தில் கடவுள் வாழ்த்தை முதல் உறுப்பாகக் கொண்டே நூல்கள் அமைதல் வேண்டும் என்னும் அறுதியான விதிமுறை வழக்கில் உறுதியாக இடம் பெறவில்லை என்றே கொள்ள வேண்டும்.
சமய நூல்களுள்
பிற்காலத்தில் சமணம், புத்தம் போன்ற புதுச் சமயங்கள் தமிழகத்தில் புகலுற்றன. அச்சமயங்களின் தலைவர்களும் துறவிகளும் உணர்ச்சி மிக்கவர்களாய் ஊக்கத்துடன் தங்கள் சமயங்களைப் பரப்ப முயன்றனர். அதனால் தூண்டப்பட்ட தமிழகச் சமயவாதிகளும் உறுதியோடு அவற்றை எதிர்த்துத் தடுக்கவும், தங்கள் சமயங்களை நிலைபெறச் செய்யவும் முற்பட்டனர். இதன் விளைவாக மக்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் கடவுள் வாழ்த்து முதலிடம் பெறவேண்டும் என்னும் கருத்து உருவாகியது. நாளடைவில் அஃது எல்லா நிலைகளிலும் வழக்கமாக வளர்ந்து விட்டது.
நூல்களும் கடவுள் வாழ்த்தும்
நூல் இயற்றும் புலவர்களும் முதற்கண் கடவுள் வாழ்த்தை நிறுத்தியே தங்கள் நூல்களைத் தொடங்கினர். இது விரைவில் பெரு வழக்காகப் பெருகியது.
சமண் சமயச் சான்றோர் தமிழ் இலக்கியத் துறையில் பணி செய்ய முற்பட்ட பொழுது கடவுள் வாழ்த்தைப் பாயிரத்தின் முதலுறுப்பாக அறுதியிட்டு உறுதி செய்தனர்.
வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் செப்பச்
சிறப்பென்னும் பாயிரமாம்”
"தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்தவுரைப்பது தற்சிறப்பாகும்"
என்னும் இலக்கண விதிகளும் எழுந்தன. இவ் விதிமுறை கி. பி. நான்காம் நூற்றாண்டினராகக் கருதப்படும் திருமூலர் காலத்தில் நடைமுறையில் கடைப் பிடிக்கப்பட்டிருந்தது.
47

Page 64
அக்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த சமயச் சான்றோர்களும் நூலாசிரியர்களும் இவ்விதியைப் பின்பற்றியே செயற்படலாயினர். இச்செயல்முறை பற்றியே பாரதம் பாடிய பெருந்தேவனார் தொகை நூல்கள் பலவற்றிற்குக் கடவுள் வாழ்த்தைப் பாடிச் சேர்க்கலானார். இன்றும் இவ்வழக்கம் எல்லா நிலைகளிலும் இடம்பெற்று வருவதைக் காணலாம்.
வடமொழி வழக்கு
வடமொழியில் கடவுள் வாழ்த்தை முதலில் கொண்டு நூல் தொடங்கும் முறை முன்னரே வழக்கில் இருந்தது. அம்மொழி அறிஞர் வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றையும் மங்களா சரணை’ என்று கொண்டு நூலுக்கு முதலுறுப்பாக வழங்கி வந்தனர்.
இவற்றுள் கடவுள் வாழ்த்து பொருளியல்பு உரைத்தல் (வஸ்து நிர்த்தேசம்), குணவியல்பு உரைத்தல் (குண நிர்த்தேசம்), பெயரியல்பு உரைத்தல் (நாம நிர்த்தேசம்) என மூன்று வகையாக வழங்கப்பட்டது. அதனை நிலை (சொரூபம்), வழி (உபாயம்), பயன் (புருடார்த்தம்) என்று கொண்டு வழங்குதலும் உண்டு. சமணச் சான்றோர் இவ்வழக்கையே தமிழிலும்பின்பற்றினர். பின்னர் வந்த தமிழ் நூலாசிரியர்களும் இதனைக் கருத்திற் கொண்டே கடவுள் வாழ்த்தை அமைக்கலாயினர். கடவுள் வாழ்த்து மங்கல மொழி முதலாக அமைதல் வேண்டும் என்னும் விதியும் தோன்றலாயிற்று.
காலப் போக்கில் கடவுள் வாழ்த்து வழிபடு கடவுள் வாழ்த்து, ஏற்புடைக் கடவுள் வாழ்த்து என இரண்டாகக் கிளைத்தது. நூலாசிரியன் தான் வழிபடும் கடவுளை வாழ்த்துவது வழிபடு கடவுள் வாழ்த்து எனவும், தான் வழிபடும் கடவுள் எதுவாயினும் நூலுக்கு ஏற்புடைய கடவுளை வாழ்த்துவது ஏற்புடைக் கடவுள் வாழ்த்து எனவும் கொள்ளப்பட்டன.
கடவுள் வாழ்த்தில் கடவுள் இயல்புரைத்தலும் நூற்பொருள், நூலின் குறிக்கோள் ஆகியவற்றைக் குறிப்பாக உணர வைத்தலும் இடம் பெறலாயின. முன்னோர் பெரும்பாலும் கடவுளின் உருவமும் செயலும் கூறியும், சிறுபான்மை அவை கூறாமல் அவன் குணம் செயல்களை மட்டும் கூறியும், வாழ்த்தாகவும், வணக்கமாகவும், காப்பாகவும் அமைத்துப் பாடுவதை வழக்கமாகக் கொண்டனர்.
கம்பர் கடவுள் வாழ்த்து
கம்பர் தம் காவியத்தில் பாடி நிறுத்தியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலில் மேற்கூறிய இலக்கணங்கள், மரபுகள், வழக்கங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருத்தலைக் காணலாம். அதன் அமைப்பின் அழகும் பொருட்சிறப்பும்கருத்தாழமும்பிறவும்கற்போர்க்குக்கழிபேரின்பம்தருவன. அப்பாடலைக்கண்டு ஆய்ந்து அதன் அருமைபெருமைகளை அறிவோம்
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அகில இலங்கைக் கம்பன் கழகம்

அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”
முதற்கண் இதன் அமைப்பைக் காண வேண்டும். பின்னர் இதனை ஒதியும், ஒதிக்கொண்டு ஓசை துணைகொண்டு இதன் பொருளை உணர வேண்டும். அதன்பின் ஆய்ந்து ஆழ்ந்து இதன் நுண்ணிய நன்னயங்களை அறிந்து துய்க்கவேண்டும்.
இதில் முழுமுதற்பொருளாகிய இறைவனின் முத்தொழில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதற்குரிய அவன் வடிவமோ பெயரோ குறிக்கப்படவில்லை.
சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் போன்றோரும் தம் கடவுள் வாழ்த்துப் பாடலை இம்முறையில் பாடியுள்ளனர்.
ஆனால் கம்பரின் இக்கவியில் ஒரு புதுமையான நயம் அமைந்துள்ளது. கடவுளின் தொழிலைக் கூறி, அதன் மேல் எவர் என ஒரு வினாவை நிறுத்தி, அதற்கு வெளிப்படையாக விடை கூறாமல், அவர்' என்னும் சுட்டால் குறித்து, அதன் வெளிப்படையான விடையை அவரவர் சமயச் சார்புக்கும், அறிவின் திறத்திற்கும், ஆய்வின் ஆழத்திற்கும், தம் காவியத்தில் அவர் பெற்றுள்ள பயிற்சிக்கும் ஏற்றவாறு கொள்ளும் உரிமையைக் கற்பார்க்கே விடுத்துள்ளார்.
கம்பர் தம் காவியத்துள் பலவிடத்தும் அச்சுட்டிற்குரிய பொருளைப் பிறர் கூற்றாகவும், தம் கூற்றாகவும் விளங்க வைத்துள்ளாராயினும், அதனை முதலில் வெளிப்படையாகக் கூறிக் கற்பார் உரிமையைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை.
சடகோபர் காட்டிய நெறி
இந்நயம், வேறு காவியக் கவிஞர்களின் கடவுள்
வாழ்த்தில் காணப்படாத ஒன்றாயினும் சடகோபரின் திருவாய்
மொழியில் இதற்கு ஆதாரம் காணலாம். அவர்,
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே"
என்று தம் முதல் பதிகத்தைத் தொடங்கியுள்ளார். அவர்பால் ஆழ்ந்த பக்தி கொண்டவரான கம்பர் அவர் காட்டிய நெறியைப் பின்பற்றியே இம்முறையைக் கையாண்டார் எனலாம். கம்பருக்குப் பின்வந்த காவியப் புலவர்களில் சிலர் இவர் கடைப்பிடித்த இந்நெறியைக் கையாண்டுள்ளனர். வில்லிபுத்தூரார் என்னும் புலவர் தாம் பாடிய பாரதத்தின் கடவுள் வாழ்த்தை,
ஆக்குமாறு அயனாம்; அவன் ஆக்கிய உலகம் காக்குமாறு செங்கண் நிறை கருணையம் கடலாம் விக்குமாறு அரனாம் அவை விந்த நாள் மீளப் பூக்குமாமுதல் எவன்! அவன் பொன் அடி போற்றி"
ーEE』

Page 65
என இம்முறையிலேயே அமைந்திருப்பதைக் காண்கின்றோம்.
மங்கல மொழி
வட நூலார் கடவுள் வாழ்த்தையே நூலுக்கு
மங்கலமாகவும், அது வாழ்த்து, வணக்கம், பொருளியல் புரைத்தல்
என முத்திறப்படும் என்றும் கொள்ளுவர்.
தமிழில் சில சொற்களை மங்கலமொழிகளாக எடுத்துள்ளனர். அவற்றுள் ‘உலகம்' என்பது சிறந்ததாகக் கொள்ளப்படுவது.
‘உலகம்' என்ற சொல்லின் முதலில் நிற்கும் உகரம் திதியக்கரமாதலின் 'மங்கல வர்ணம்' எனப்படும். அதனை முதலில் கொண்டிருப்பது அச்சொல்லின் சிறப்புக்களுள் ஒன்று. அதன் சிறப்புக் கருதியே 'உலகம் உவப்ப என முருகாற்றுப் படையில் நக்கீரனாரும்,'மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் எனச் சிந்தாமணியில் தேவரும், 'உலகெலாம் எனப் பெரிய புராணத்தில் பின் வந்த சேக்கிழாரும் அதனை முதன்மொழியாகக் கொண்டுள்ளனர்.
கம்பரும் மங்கல மொழிகளுள் சிறந்ததாகிய 'உலகம் என்பதையே முதலில் நிறுத்தித் தம் காவியக் கடவுள் வாழ்த்தைத் தொடங்கியுள்ளார்.
உலகம் என்பது உயர்ந்தோர் மேலதாகலின் இக் காவியம் கடவுளருள் உயர்ந்தவரான திருமாலின் மேலது என்பதையும், உயர்ந்தோர்க்கே உரிய உயர்நிலையது என்பதையும், தமிழகத்திற்கு மட்டுமன்றி உலகத்திற்கே உரியது என்பதையும் ‘உலகம்' என்னும் தொடக்கச் சொல் குறிப்பதாகக் கொள்ளலாம். அன்றியும் அது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கம்பரின் விரிந்த உள்ளத்தையும் பரந்த நோக்கத்தையும் கட்டுவதாகக் கருத இடம் தருவதாகவும் உள்ளது.
உலகங்கள் எண்ணற்றவை. அவை பதினான்காகவும், மூன்றாகவும் விரித்தும் தொகுத்தும் கூறுப்படும். அவற்றில் அடங்கிய உயிருள்ளனவும், உயிரில்லனவும், இயங்குவனவும் நிலையினவுமான பொருள்களும் கணக்கற்றவை. ஆகவே'உலகம் யாவையும் எனப்பட்டது.
முத்தொழில் உடையவரே தலைவர்
உலகைப் படைத்தலும், காத்தலும், அழித்தலும் முத்தொழில் எனப்படும். அம்முத்தொழிலை உடையவரே உலகங்கட்குத் தலைவர் என்பது முதல் மூன்று அடிகள் கூறும் பொருள்.
ஒரு பொருளை உண்டாக்கவும், காத்து வளர்க்கவும், முடிவில் அழிக்கவும் உரிமையுடையவன் எவனோ அவனே அதற்குத் தலைவனாகக் கொள்ளப்படுவது உலகியல் வழக்கிலும் உள்ளதொன்றே. அதனால் உலகைப் படைத்தலையும், காத்தலையும் அழித்தலையும் செய்தலையும் உடையவர் எவரோ அவரே அதற்குத் தலைவர் என்றார். இதனால் பரம்பொருளின்
கம்பன் மலர் - 2000

இலக்கணம் கூறியவாறு வியாசமுனிவர் மீமாம்சையில் இவ்வாறே பரம்பொருட்கு இலக்கணம் கூறியுள்ளார் என்பர்.
முதற் கடவுளே உலகுக்குத் தலைவர் என்பதை
வள்ளுவரும் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்றதனால் அறிவுறுத்துள்ளமை காணலாம்.
தாம்
நம்முடைய தொழில்களை நாம் செய்வதற்கும் முத்தொழிலைக் கடவுள் செய்தற்கும் வேறுபாடு உண்டு.
நாம் தொழில் செய்ய நமக்குக் கருவி, கரணம் முதலியன வேண்டும். அவை இன்றி நாம் தொழில் செய்ய இயலாது.
ஆனால் கடவுள் அவருடைய முத்தொழிலைச் செய்ய அவை வேறு வேண்டுவதில்லை. அவர் தாமே அக்கருவி கரணங்களாகவும் அமைந்து செயலாற்றுகின்றார். இதனைக் குறிக்கவேதாம் என்னும் வேண்டாத சொல்லை ஆண்டிருக்கிறார் கம்பர்.
நீங்கலா அலகிலா விளையாட்டு
சிறு குழந்தைகள் தமக்குத் தாமே ஏதாவது ஒரு செயலைச் செய்துகொண்டிருக்கும். அவற்றிற்கு நோக்கம் எதுவும் இல்லை. அவை முயற்சிசெய்வதும் இல்லை. அதனால் அவற்றிற்கு வருத்தமும் உண்டாவதில்லை. அவை இவ்வாறு செய்யும் செயலை விளையாட்டு என்கிறோம்.
முத்தொழில்கள் செயற்கரியனவாயினும் கடவுள் அவற்றைத் திட்டமும், முயற்சியும், வருத்தமும் இன்றி, எப்பயனும் கருதாமல் எளிதாகச் செய்துவருகின்றார். அவர் செய்வதெல்லாம் தம் உள்ளத்தில் நினைப்பதே. அந்நினைப்பளவிலேயே அம்முத்தொழில்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆகவே கம்பர் அதனை 'விளையாட்டு என்றார்.
இறைவனுடைய முத்தொழில் விளையாட்டு அவரை விட்டு நீங்குவதே இல்லை. அவர் அதனை ஒருகணமும் ஒய்வு ஒழிவு இன்றி இடைவிடாமல் நிகழ்ந்த வண்ணம் இருக்கச் செய்கின்றார். அவ்விளையாட்டு அவருக்கு நித்தியமானது; தொடக்கமும் முடிவும் இன்றித் தொடர்ந்து நிகழ்வது. இங்ங்ணம் நீங்காமல் நிலையாக வரம்பின்றி நிகழ்வதொன்றாகலின் அதனை நீங்கலா அலகிலா’ என்னும் அடைமொழிகளை அடுக்கிச் சிறப்பித்தார்.
முத்தொழில் விளக்கம்
இறைவன் நிகழ்த்தும் முத்தொழில்களுள் உளவாக்கல் என்றது படைத்தலை. அஃது இல்லாததொன்றை உண்டாக்குவதன்று உள்ளதாகத் தோன்றாமல் நுண்ணியவடிவில் ஒடுங்கியிருந்ததனைத் தோன்றச் செய்தல்.
திருமால் தம் உதரத்தில் ஒடுக்கி வைத்திருந்த உலகங்களை உந்தி மலரில் பிரமனைத் தோற்றுவித்து மீண்டும்
- 49

Page 66
பெருக்கச் செய்கின்றார் என்னும் புராணச் செய்தி இதனையே குறிப்பதாகும். அதனால் இதனை உளவாக்கல்' என்னும் சொல்லால் பெற வைத்தார்.
நிலை பெறுத்தலாவது நிலைநிறுத்தல்.
இறைவன் அவ்வாறு உளவான உலகுயிர்களை நிலை குலையாமல் காத்துநிலைபெற்று நிற்கச் செய்தலை நிலைநிறுத்தல் எனக் குறித்தார்.
நீக்கல் என்பது ஒடுங்கச் செய்தல். கடவுள் அவ்வாறு நிலைநிறுத்திய உலகுயிர்களைத் தோன்றாதவாறு தூலவடிவின் நீக்கிச் சூக்கும வடிவில் தன்பால் ஒடுங்கச் செய்கின்றார்.
திருமால் உகமுடிவில் உலகங்களையெல்லாம் உட்கொண்டு தம் உதரத்தில் ஒடுக்கிக் கொள்வதாகக் கூறும் புராணக் கூற்று இதனையே குறிக்கும். அதனால் இதனை நீக்கல் என்னும் சொல்லாட்சியால் நமக்கு நினைவுறுத்தினார்.
முன்னர்க் காட்டிய ஆக்குமாறு அயனாம் என்னும் பாரதப் பாடலில் வில்லியார் இக்கருத்துக்களை விளங்கவைத் திருத்தல் காணலாம். கடவுள் முத்தொழில்களையும் வேறு எவருக்கும் உரிமையின்றித் தமக்கே உடைமையாகக் கொண்டவர் என்னும் உண்மைஉடையார்’ என்றதனால் உணர்த்தப்பட்டுள்ளது.
அவர் தலைவர்
‘உடையார்’ என்பதனை அடுத்து எவர்?’ என்னும் வினாச்சொல் எஞ்சி நின்றுள்ளது. ‘உடையார் எவர்? அவர் தலைவர்' என அதனைத் தந்துரைத்து முடித்தல் வேண்டும். இவ்வெச்சத்தினால் கொள்ள வைத்திருக்கும் நயம் உணர்ந்து இன்புறத் தக்கதாகும். முத்தொழிலும் நீங்காமல் முடிவின்றி நிகழ்ந்த வண்ணம் இருப்பினும் அதனை நிகழச் செய்பவர் இன்னார் என்பது வெளிப்படையாக உணர முடியாதபடி, உய்த்தே உணரும்படி இருத்தலை இச்சொல்லெச்சம் நயம்பட உணர்த்துகின்றது.
எவர்'என்னும் வினாவும்,அவர்'என்னும் சுட்டுவிடையும் முத்தொழிலை நிகழ்விப்பவரே உலகுக்குத் தலைவர் என்னும் உண்மையை அழுத்தமாக வலியுறுத்தி நிற்கின்றன.
சரண் நாங்களே
தலைவர்'என்பது'ஆண்டான்', அஃதாவது'ஆள்பவன்' என்னும் பொருளது. சரண்’ என்பது 'அடிமை', 'அடைக்கலப் பொருள்' எனப் பொருள்படுவது.
நாங்கள் அவர்க்குச் சரண் என்றது.அவ்வாண்டவனுக்கு இவ்வுலகுயிர்கள் அடிமை, அடைக்கலப் பொருளாகும் என்பதைக் குறிக்கின்றது.
உலகுயிர்கள் கடவுளால் ஆக்கவும், நிலை நிறுத்தவும், நீக்கவும் பட்டு அவர் உடைமையாக உள்ளமையின் அவை அவருக்கு அடைக்கலப் பொருள்களாகின்றன. இதனால் அவற்றைப் போற்றிக் காக்கும் பொறுப்புடையர் கடவுள் என்பதும், அவரை வணங்கி வாழ்த்துவது அவற்றின் கடமை என்பதும் உணர்த்தி, ஆண்டான் அடிமைத் திறத்தை அறிய வைத்திருத்தல்
காணலாம்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

நாங்கள் அடைக்கலப் பொருள்' என்றதனால் அவரை வணங்கி வாழ்த்துவோம்’ என்பது குறிப்பெச்சம். இதனால் வாழ்த்தும் வணக்கமும் உடன் குறிப்பித்தார்.
கம்பர் காவியம், கடவுள் உலகுயிர்களையெல்லாம் ஆட்கொண்டு அருளும் ஆண்டவன் என்பதையும், அவனை அடைக்கலம் அடைந்து வணங்கி வாழ்த்தி உய்தி பெறுவதே உலகுயிர்கள் செயற்பாலது என்பதையும் உட்பொருளாகக் கொண்டே இயன்றிருத்தலின் வருபொருள் உரைத்தலும் இச் செய்யுளில் இடம்பெற்றுள்ளது. இங்ங்ணம் மூவகை மங்கலங்களையும் ஒருங்கமைய வைத்து வனைந்துள்ள கம்பர் திறம் வியக்கத்தக்கதாகும்.
தம்மைக் கொண்டே உலகத்தைக் காண்பவர் கம்பர் தாம் கடவுளுக்கு அடைக்கலப் பொருளாக இருப்பதைக் கொண்டு, தன்னைப் போலவே உலகுயிர்கள் அனைத்தும் அவருக்கு அடைக்கலப் பொருளாவதைக் கண்டு உணர்ந்தவர். எனவே அவை அனைத்தையும் தம்மோடு உளப்படுத்திக் கொண்டு நாங்கள்' எனத் தன்மைப் பன்மையால் குறித்தார்.
முத்தொழில் நிகழ்த்தும் முழுமுதற் கடவுளுக்கன்றி எளிய பயன் கருதி ஏனைச் சிறுதெய்வங்கட்கு ஆட்படமாட்டோம் என்னும் தம் உறுதியை உணர்த்த வேண்டி அன்னவர்க்கே எனத் தேற்றேகாரம் தந்து கூறினார். கம்பர் மறந்தும் புறந்தொழாத மாண்புடையவர்களின் வழி வந்தவர்; கம்ப நாட்டாழ்வார் என அன்பர்களால் அருமையாகப் பாராட்டப் பெற்றவர். அதனால் அவர் அவர்களைப் போன்றே உரமான கடவுட் கொள்கை உடையவராய்
இருந்தார் என்பதை இக்கூற்று நமக்குப் புலப்படுத்துகிறது.
பொருட்பேதமும் பாடபேதமும்
சரணாங்களே’ என்னும் தொடரை சரண் ஆங்கள் எனப் பிரித்தும், சரணங்களே' என்று வேறு பாடம் கொண்டும் பொருள் கூறப்படுவது உண்டு.
ஆசிரியர் தம்மோடு பிறரையும் உளப்படுத்திக்கொண்டு “சரண் ஆவோம்” என்றார் போலத்தன்மைப்பன்மையாகப் பொருள் கொள்ளுமாறு அமைவதே அன்றி, ‘சரண் ஆங்கள்’ எனப் பிறர்க்குக் கட்டளையிடுவதாகக் கடவுள் வாழ்த்து அமைவது பொருந்துவதன்று.
சரண் என்ற சொல்லுக்கு வணக்கம் என்ற பொருளும் உண்டு. ஆனால் அப்பொருளில் சரணாங்கள்’ எனப் பன்மைச் சொல்லை வழங்குவது சிறப்புடைய பண்டைய வழக்கன்று. அன்றியும் அன்னவர்க்கே சரணங்களே' என்னும் சொல்லாட்சி கம்பர் மாட்சிக்கு ஏற்புடையதாயில்லை.
மேலும் சரணங்களே' என்பதில் சரணாங்களே' என்பதில் உள்ள இன்னோசை இல்லை; ஒசை ஒடிந்து வீழ்ந்து நயம் குன்றச் செய்கின்றது. அப்பாடம் கொள்ளுவதால், உலகுக்குத் தலைவராகிய முழுமுதற் பொருளை வாழ்த்தி வணங்கி அவரிடம் அடைக்கலம் புகுவது உலகுயிர்களின் கடமை என்பதைக் கூறுவதே
50

Page 67
தன் இராமாவதார காவியம் என அதன் பொருளியல்பு உரைத்தலைக் குறித்தற்கு இடமில்லாமலும் போகும்.
பாட்டுக்குப் பொருளும் பாடமும் கொள்ளும் போது இலக்கணப் பொருத்தம் மட்டும் கருதி முடிவு செய்வது சாலாது. பாடலாசிரியனின் இயல்பு, தகுதி, சொல்லாட்சி, பாட்டமைப்பு ஆகியவற்றையே முதன்மையாகக் கொண்டு ஆராய்ந்து பொருத்தம் கண்டு முடிவு கொள்ள வேண்டும்.
உயர்ந்தோர் வழக்கும் கம்பர் தகுதியும் கருத்திற் கொண்டு நோக்குவார்க்கு அப்பொருள் வேறுபாடு, பாடவேறுபாடுகளின் பொருந்தாமை தெளிவாகப் புலனாகும்.
பிற பாடல்கள்
‘உலகம் யாவையும் என்று தொடங்கும் முதற்பாடலை அடுத்து சிற்குணத்தவர்' என்று தொடங்குவதொன்றும் 'ஆதியும் அந்தமும் என்று தொடங்குவ தொன்றுமாக வேறு இருபாடல்கள் வாழ்த்துக் கூறுவனவாகக் காணப்படுகின்றன. அவற்றுள் முதலது கடவுளின் குணவியல் புரைப்பதாகவும், இரண்டாவது பெயரியல்புரைப்பதாகவும் கொண்டு அவற்றிற்குப் பொருள் கூறப்பட்டு வருகின்றது.
வடமொழி நூல் வாழ்த்து முறைக்கும் வைணவ சமய தத்துவத்திற்கும் அவை ஒவ்வுவனவாக இருக்கலாம். ஆனால் பாட்டுக்களின் அமைப்பும் பொருட் சிறப்பின்மையும் நோக்கின்
அவை கம்பர் கவிகளாகத் தோன்றவில்லை.
சிற்குணத்தவர்' என்று தொடங்கும் பாடலில் நன்னிலை என்பது சிற்குணத்தவர் தெரிவரியது எனச் சிறப்பிக்கப் பட்டுள்ளதே யன்றி அது யாருடைய நன்னிலை என்பது கூறப்படவில்லை; வருந்தி வருவித்து உரைக்க வேண்டியுள்ளது. ‘எற்குணத்தற்கு அரிது’ என்றதனோடு அதனை அடுத்துவரும் 'எண்ணிய மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்' என்றதற்குப் பொருள் இயைபில்லை. அவர் நற்குணக்கடல் ஆடுதல் நன்று என்று முடிப்பவர் நன்னிலை எற்கு உணர்த்தரிது’ என்று முதலில் கூற வேண்டுவதில்லை. அது கேட்பார்க்கு அவன் நற்குணக் கடலில் ஆடுவதில் தயக்க முண்டாக்கக்கூடும்.
இப்பாடலை, எண்ணிய மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர். சிற்குணத்தவராகிய அவர் தெரிவரு நன்னிலை எற்கு உணர்த்தரிது. ஆயினும் அவர் நற்குணக்கடல் ஆடுதல் நன்று என்று கொண்டு கூட்டிப் பொருள் கொண்டால் ஓரளவு பொருட் பொருத்தம் காணலாம். ஆனால் அவ்வாறு செயற்கையாகக் கொண்டு கூட்டி முயன்று பொருள் பொருந்த வைப்பது கம்பர் கவிக்கு இயல்பன்று. அடுத்த பாடலைக் காண்போம்.
ஆதிஅந்தம் அரிஎன யாவையும் ஒதினார் அலகில்லன உள்ளன வேத மென்பன மெய்ந்நெறிநன்மையன் பாதம் அல்லது பற்றிலர் பற்றிலார்”
கம்பன் மலர் - 2000

என்பது அப்பாடல். இப்பாடலை முழுதும் நோக்கின் இதில் பொருள் விளக்கமே இல்லை. இதில் சொற்கள் கண்ட இடத்தில் கண்டபடி நிறுத்தித் தொடுக்கப்பட்டுள்ளன. இதனைச் சிதைத்து, சொற்களை நினைத்தவாறு கொண்டு கூட்டி, திரித்தும் விரித்தும் வலிந்து நலிந்து பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வளவு முயன்றும் யாராலும் இதில் உள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர்பு விடாமல் பொருள் பொருத்த முடியவில்லை.
முதற்பாடலை அடுத்துக் கடவுளின் குணம், பெயர், இயல்புகளையும், உபாயம் புருடார்த்தங்களையும் கூறும் பாடல்கள் இடம்பெறச் செய்யவேண்டும் என்னும் எண்ணத்தால் பின்வந்தார் எவரோ இவ்விரு பாடல்களையும் தம் திறமைக்கு ஏற்ப இயற்றிச் சேர்த்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டியுள்ளது. எனவே இவ்விரு பாடல்களையும் கொண்டு இடர்ப்படுவதைவிட, விலக்கிவிட்டு அமைதி காண்பதே செயற்பாலது.
இனி, காண்டந்தோறும் வேறு கடவுள் வாழ்த்துப் பாடல் காணப்படுகிறது. இவ்வாறு நூலின் தொடக்கத்தில் மட்டுமின்றி அதன் உட்பிரிவு தோறும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைக்கும் வழக்கம் பிற்காலத்தில் இருந்திருக்கிறது.
வில்லிபுத்துரார் தாம் இயற்றிய பாரதத்தில் பருவந்தோறும் கடவுள் வாழ்த்துப் பாடி வைத்துள்ளார். ஆனால் கம்பர் காலத்திலும் அதற்கு முன்னும் அவ்வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே தம் விருப்புவெறுப்புகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அடக்கமாகக் காவியம் செய்த கம்பர் அம்முறையை மேற் கொண்டார் என்று கருதுவதற்கில்லை. அன்றியும் அப்பாடல்கள் யாவும் முதற்கவிக்கு முரண்பட்டனவாக உள்ளன. அவற்றுள் சில பொருளமைதி உடையனவாக
அமைந்துள்ளன.
எடுத்துக் காட்டாக அயோத்தியா காண்ட வாழ்த்துப் பாடலும் சுந்தர காண்டத்து வாழ்த்துப் பாடலும் பரம்பொருளே இராமனாகத் தோன்றினான் என்னும் ஒரு பொருளையே வேறு விதமாகக் குறிக்கின்றன. அவ்வாறே ஆரணிய காண்டத்தும் உயுத்த காண்டத்தும் பெரிதும் ஒரு கருத்தையே கூறும் வாழ்த்துப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கிட்கிந்தா காண்டவாழ்த்துப்பாடல், கடவுள் உலகுயிர்களையெல்லாம் தமக்கு உடம்பாக உடையவன் என்பதைக் கூறுவதாகப் பொருள் காணப்படுகிறது. ஆனால்
பாட்டில் பொருள் தெளிவும் கம்பர் முத்திரையும் இல்லை.
எனவே இப்பாடல்கள் அனைத்தும் கம்பர் பாடியன அல்ல, பிறரால் பின்னர் பாடிச் சேர்க்கப்பட்டவை என்றே கருத
வேண்டியுள்ளது.
- 5

Page 68
இவ்வாற்றால் கம்பரின் கடவுள் வாழ்த்து முத்தொழில்களையும் நிகழச்செய்யும் முழுமுதற் பொருளே உலகுக்குத் தலைவர், அவரை வணங்கி வாழ்த்தி அவரிடம் அடைக்கலம் புகுவதே அதன் கடமை, அதனைக் கூறுவதே இராமாவதார காவியம் என வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் என்னும் மும்மங்கலங்களும் அடங்க அமைந்திருப்பதும், முழுமுதற் பொருளே உலகுக்குத் தலைவர் எனப் பொருளியல்பும், அவர் முத்தொழில் விளையாட்டுடையவர் என அவரது குணவியல்பும், முறையே கடவுளின் தன்மையும், அவரை அடையும் வழிமுறையும், அதனாற் பெறும் பயனும் ஆகியவற்றை வெளிப்படவும், குறிப்பாகவும் உணர்த்துமாறும் ஒருவாறு விளக்கப்பட்டன.
வான்நின்று இழிந்து வரம்புஇகந்த
மாபூதத்தின் வைப்புளங்கும் ஊனும் உயிரும் உணர்வும்போல்
உள்ளும் புறத்தும்உளன் என்ப கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழைப்பு கோல்துறந்து கானும் கடலும் கடந்து இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தே
- அயோத்தியா காண்டம்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுணன. பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

கலங்குவது எவரைக் கண்டால்?
அவர் என்பர் கைவில் ஏந்தி இலங்கையில் பொருதார்.அன்றே
மறைகளுக்கு இறுதி ஆவார்
- சுந்தர காண்டம்
பேதியாதுநிமிர் பேத உருவம் பிறழ்கிலா, ஒதிஓதி உணரும்தொறும் உணர்ச்சி உதவும் வேதம் வேதியர் விரிஞ்சன் முதலோர் தெரிகிலா ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவரோ?
- ஆரணியா காண்டம்
ஒன்றே'என்னின், ஒன்றே ஆம்
பல’என்றுஉரைக்கின், பலவே ஆம் அன்றே'என்னின், அன்றே ஆம்
ஆமே'என்னின், ஆமே ஆம் இன்றே'என்னின், இன்றே ஆம்
உளது'என்று உரைக்கின், உளதே ஆம் நன்றே நம்பிகுடிவாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு?அம்மா!
- உயுத்த காண்டம்
மூன்றுஉரு எனக்குணம் மும்மை ஆம் முதல், தோன்று உரு எவையும் அம்முதலைச் சொல்லுதற்கு ஏன்றுஉரு அமைந்தவும் இடையில் நின்றவும் சான்றுஒரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான்
- கிட்கிந்தா காண்டம்
'கம்பர் காட்சி”, தேசிகர் பதிப்பகம், சென்னை - 1982

Page 69
லகம் உய்ய இராமகால 'அறம் வெல்லும் பாவ தன்காவியத்தின் ஊடுெ அவன், மனுக்குலத்திற்கு அறம் உரைக்கத்த மூலஅறம், எத்தேயத்திற்கும் எவ்வினத்திற்கும் அவ்வுண்மை உணர்ந்த அவன், குறித்த மொழி, மதம், இனம் சார்ந்து தன் காவியம் உலகத்தோர் அனைவ என விருப்புக் கொண்டான். உலகம் அற இயல்பு பெற, மானுடம் அமர இயல்பு பெறும். இது கம்பனின் தெளிந்த தீர்மானம். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவ தெய்வத்துள் வைக்கப்படும்" - என, இக்கருத்து ஏலவே வள்ளுவனால் : தெளிவு நோக்கி வள்ளுவர்தம் குறட் மறுதலையாய்ச் சொல்லத்தலைப்பட வையத்துள் வாழ்வாங்கு வாழின் வானுறையும் தெய்வத்துள் வைகலா பின்பற்றுவார்க்குக் குழப்பம் தந்தது வானுறையும் தெய்வத்துள் வைக்கட் என அறிதல் கூடாமையின், எவரைப்போல் வாழ்தல் வாழ்வாங் எனும் கேள்வி குழப்பிற்று. இக்குழப்பம் தீர்த்து, வாழ்வாங்கு வாழ்தலை உலகுக்கு உ ஓர் உத்தியைக் கையாண்டான். வானுறையும் தெய்வத்தையே மானு வையத்தில் வாழ்வாங்கு வாழவைத் வாழ்வாங்கு வாழ்தலை வரையறை கம்பன் சொன்ன,
 
 

*ք) եՈhil* Isbbblli
இ.ஜெயராஜ்
பியம் செய்தான் கம்பன். 1ம் தோற்கும் எனும் பாவிகத்தை,
பாருளாக்கி
லைப்பட்டான்.
எம்மதத்திற்கும் பொதுவானதாம்.
து தான் இருப்பினும், பர்க்கும் பொதுவாதல் வேண்டும்
ன் வானுறையும்
உரைக்கப்பட்டிருப்பினும்,
கருத்தை,
ட்டான் கம்பன்.
ாம் எனும் வள்ளுவன் கருத்து
I.
பட்டார் யார்?
கு வாழ்வதாகும்?
-ணர்த்த முனைந்த கம்பன்
டனாக்கி,
وl செய்தான்.

Page 70
காசில் கொற்றத்து இராமன்தன் வாழ்வே, அறவாழ்வின் அடிப்படையாகி மானுட வ வள்ளுவன் கருத்தை உலகுக்குணர்த்தி, கம் இராமன்தன் வாழ்வு அகில உலகுக்கும் அ தான் இயற்றும் இராமகாதை, மனுக்குலத்திற்குப் பொதுவாதல் வேண்டும் காவியத்தின் முதற்பாடலான கடவுள் வாழ் எழுதத்தலைப்பட்டான். அறம் உலகம் முழுதிற்குமாம் எனும் பேரு அவன் கருத்திலிருந்து கரத்தில் புக, அவனை அறியாமல் அவன் எழுத்தாணி, ‘உலகம் என ஒருதரம் எழுதிற்று.
来来米米来
உளவாதல், நிலைபெறுதல், நீங்குதல் இம்மூன்றும் உலகின் நியதி. இவை உலகின் நியதியானது எங்ங்னம்? கம்பன் மனதில் கேள்வி பிறக்கிறது. எதில் நின்று உலகம் தோன்றியதோ அதன் இயல்பே உலகியலாதல் இயற்கை தொடர்ந்து பதில் பிறக்கிறது. அங்ங்னமாயின், தோன்றல், நிலைத்தல், முடிதல்,எனும் இய ஏதோ ஒரு மூலகாரணத்திலிருந்தே, உலகு உதித்திருத்தல் வேண்டும். உலகை உதிப்பித்த அம்மூலகாரணம் எது? ஒலியே உலகின் தொடக்கம். இது விஞ்ஞானிகளுக்கும் மெய்ஞ்ஞானிகளு உலகை உதிக்கச் செய்த ஒலியை, 'ஓம்' எனும் பிரணவம் என்றனர் எம் ஞானி பிரணவத்திலிருந்தே உலகுதித்தது என்பது, அவர்தம் முடிவான கருத்து. அக்கருத்தேற்றுச் சிந்திக்கிறான் கம்பன். தோற்றம், நிலைத்தல், முடிவு எனும் மூன்று 'ஓம்' எனும் ஓர் ஒலியுள் அடங்குதல் வேண் ஆராய்கிறது அவன் மனம் . 'அ', 'உ', 'ம்' எனும் மூன்றொலியின் கலப்ே 'ஓம்' எனும் பிரணவம் என்ற உண்மை புல 'அ' தோற்றம்
'உ' நிலைத்தல்;
‘ம்‘ முடிவு: தோற்றம், நிலைத்தல், முடிவு கொண்டு ஒ இம்மூன்றெழுத்தின் தொகுப்பான 'ஓம்' எ மேற்சொன்ன மூன்றியல்பையும் தன்னுள் இம்மூவியல்பையும் கொண்ட, பிரணவத்தின் சாரமாய்ப் பிறந்த உலகும், இம்மூவியல்பையும் கொள்ளுமாம். பிரணவத்தின் வழி நடக்கும் இம்முத்தொ! இறைவன்தன் விளையாட்டாய் நிகழ்வன. எனவே இம்மூவியல்பும், பொருந்திய பிரணவ வடிவான சொல் கொண்டு, தன் கடவுள் வாழ்த்தைத் தொடங்க நினை உலகம் எனும் சொல் அவன் மனத்துள் உதி
அகில இலங்கைக் கம்பன் கழகம்

க்கத்தை வழிப்படுத்திற்று.
ன் வென்றான். ம் உணர்த்தலால்,
எனும் விருப்பு உந்த, த்தினை ,
ண்மை,
. מוחו.
பல்புகள் பொருந்திய
ருக்கும் ஒத்த கருத்தாம்.
பர்.
பம், டும் என நினைந்து,
Ll»
னாகிறது.
மிக்கும், னும் பிரணவம், அடக்கியது.
மிலும்
$கிறான் கம்பன். க்கிறது.

Page 71
இச்சொல்லின் முதலெழுத்து 'உ', முடிவெழுத்து 'ம்', 'அ அனைத்தெழுத்துகளுள்ளும் கலந்தது. இவையுணர உலகம் எனும் சொல்லே, பிரணவமாய்க் கம்பன் காதில் ஒலிக்கிறது. அதுவுமன்றித், தன்காவியம் அறம் உணர்த்தி, நிலைக்கவேண்டும் என்ற விருப்புக் கொண்ட அ6 நிலைத்தலைக் குறிக்கும், உகரம் முன்னிற்கும் உலகம் எனும் சொல், மேலும் விருப்புண்டாக்க, எண்ணத்தில் உதித்த அக்கருத்தை, அவன் கை எழுத்தாணி
வண்ணமாக்கி, 'உலகம்' என மறுதரம் எழுதிற்று.
来来来来米
கடவுள் வாழ்த்தைப் பாடத்தலைப்பட்ட கம்பன், உலகுக்குப் பொதுவான இறையை, தன் எழுத்துள் அடக்க முயல்கிறான். இறைவனோ ‘உணர்ந்து ஒதற்கரியவன் மொழிக்கும் சிந்தனைக்கும் அகப்படாதவன். எனினும், அன்பால் நினைவார்தம், அகம் படுபவனுமாம். அகப்படாமையும் அகம்படுதலும், அவ்வாண்டவன்தன் அலகிலா விளையாட்டன்ே
இறைவன் குணம் குறி அற்றவன். இது வடிவு, இது இயல்பு என இயம்புதற்கரியன் எது வடிவு, எது இயல்பு எனக் கொண்டாலும் அ; குணங்குறி கடத்தலும்,
குணங்குறி எடுத்தலும், அவ்வாண்டவன்தன் அலகிலா விளையாட்டன்ே
இறைவன், 'உண்டு’ என்பார்க்கு உளனாவான். இல் என்பார்க்கு இலனாவான். 'ஒன்று என்பார்க்கு ஒன்றாவான் பல என்பார்க்குப் பலவாவான் நன்று என்பார்க்கு நலனாவான் தீது என்று உரைப்பின் தீதாவான் உளனாதலும் இலனாதலும் ஒன்றாதலும் பலவாதலும் நன்றாதலும் தீதாதலும் ஒருங்கு செய்தல், அவ்வாண்டவன்தன் அலகிலா விளையாட்டன்ே
இறைவன்
எப்பொருளிலும் அடங்காதவன்.
அவனே,
எப்பொருளிலும் அடங்கியவனுமாம். அனைத்திலும் அடங்கியும் அடங்காமலும் நிற்ற அவ்வாண்டவன்தன் அலகிலா விளையாட்டன்ே
கம்பன் மலர் - 2000

வனுக்கு,
Spiri

Page 72
மொத்தத்தில் இவ்வலகிலா விளையாட்டுடைய
வ்வுலகின் காரணனாம். தோற்றாத, உணரமுடியாத, அவ்வேதமுதற் காரணனை உணர்தல் எங்ங்னம் அவன் நிமித்த காரணனாக, காரியமாய் உதித்தது இவ்வுலகு. அருவங்கடந்த கடவுளாம் அக்காரணனை, உருவ நிலை கொண்ட உலகம் எனும் காரியம் ( உணர்தல் கூடுமாம். இவ்வுண்மை உணர்கிறான் கம்பன். சமயங்கடந்த இப்பொதுக்கருத்து, கம்பன் சிரத்தில் உதித்துக் கரத்துள் புக, அவனை அறியாமல், அவன் எழுத்தாணி, ‘உலகம் என மற்றொருதரம் எழுதிற்று.
来来来来来
படைத்தல், காத்தல், அழித்தல் என, இம்முத்தொழிலையும் முழுமையாய், பற்றின்றி விளையாட்டாய்ச் செய்ய வல்லான் எ அவனே தலைவனாம். அத்தலைவனை அடைதல் எங்ங்னம்? கம்பன் மனத்துள் மீண்டும் கேள்வி. முயற்சியும், புலன்களும், அறிவும், அவனைக்காண வல்லன அல்லவாம். அவனே காட்டினன்றி, அவனைக் காணுதல் என்றும் இயலாதாம். எப்போ அவன் தன்னைக் காட்டுவன்? அதற்காம் வழியாது? கேள்விகளுக்கு, ‘சரணாகதி" ஒன்றே பதிலாகிற "அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்கே எனும் நிலை கூடுதல் எங்ங்ணம்? கேள்வி பிறக்கச் சிந்திக்கிறான் கம்பன் சரணாகதி என்றால் என்ன? இறைவனிடம் தன்னை முழுமையாய் ஒப்பன முழுமையாய் ஒப்படைத்தல் கூடுமோ? தானே அவன் என உணர்ந்தாற் கூடும். அவ்வாறு உணர்தல் எங்ங்னம் சாத்தியம்? நான் அவனுள் ஒருபகுதி என உணர அது சாத் நான் அது எனும் இருநிலை துறந்து, நான் அதன் ஒரு பகுதியாதலை விளக்க, உவமை தேடிற்றுக் கம்பன் உள்ளம். உலகே அவ்வுவமையாயிற்று. நான் என நினைக்க உலகு நம்மில் வேறாகும். உலகென நினைக்க நாம் உலகில் ஒன்றாவோப் முதற்சிந்தனை நம்மினின்றும் உலகை வேறா ரண்டாம் சிந்தனை உலகோடு நம்மை ஒன் உலகின் இவ்விருமை நிலையே, உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலு அலகிலா விளையாட்டுடைய அத்தலைவனை உணர்ந்து அவர்தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்கே நாம் சரணாவதற்கான வழியை, உவமையாய் விளக்கி நிற்பது உணர,
அகில இலங்கைக் கம்பன் கழகம்

ஆண்டவன்,
காண்டே,
வனோ?
959 סר
s
டத்தல்.
யமாம்.
கும. ாக்கும்.
செய்யும்
ᎧTᎧᏈᎢ
56

Page 73
‘உலகம்' எனும் சொல், கம்பன் சிந்தையுள் ஒளிர்ந்து, கைவழி வழிந்து வர,
அவன் கை எழுத்தாணி ,
உலகம்' எனும் சொல்லை மீண்டும் ஒருதரம்
米米米米米
அருளாற் காவியம் செய்யத் தலைப்பட்ட, கம்பன் உலகம் செழித்தற்குத் தன் காவியம் காரணமா; உலகம் மங்களமுற, மங்களச் சொல் கொண்டு, காவியம் தொடங்கு ஒலியால் உருவான உலகில், ஒலிகள் பயன்செய்தல் இயல்பன்றோ. ஒவ்வோர் சொல்லின் ஒசையும், ஒவ்வோர் விதமாய்ப் பயன் விளைக்குமாம். நம் ஞானியர் தம்யோகக்காட்சியால் தமிழ்ச் சொற்களில், மங்களத்தன்மை கொண்ட வரிசைப்படுத்தினர். அவற்றுள் உலகம் எனும் சொல் முதன்மை ெ அது நோக்கியே, ‘உலகெலாம் எனச் சேக்கிழாரும், ‘உலகம் உவப்ப‘என நக்கீரரும், பாடல் தொடங்கினர்.
வ்வுண்மை உணர, கம்பன் மனதில், உலகம் எனும் வார்த்தை மீண்டும் ஒலிக்கிறது. உளத்தில் ஒலித்த அவ்வொலி, கரத்தின் வழியாக, அவன் கை எழுத்தாணி அவனையறியாமல், ‘உலகம் என மேலும் ஒருதரம் எழுதிற்று.
来来来来来
வைதீக இந்துமதம் பலகூறாய்ப் பிரிந்தது. அங்ங்னம் பிரியினும் அவை அனைத்திற்கும் விநாயக வணக்கம், ெ விநாயகனைத் தொழுது தொடங்கும் செயல் அ அவனால் வினை தீர உலகை உய்விக்கும் என்பது அவர் அனைவர்க்கும் கருத்தாம். மரபு வழிவந்த கம்பனும் இக்கருத்தால் கட்டு கடவுள் வாழ்த்தில் விநாயகனை வணங்கி, காப்புச் செய்ய அவன் மனம் விரும்பிற்று, அங்ங்ணம் செய்யின் தன் கடவுள் வாழ்த்து, குறித்த மதம் சார்ந்து, 'உலகு எனும் தன் நோக்கத்தை, சிதைவிக்கும் என உணர்கிறான் கம்பன். இலட்சியத்திற்கும் மரபிற்கும் இடையில் அை ரண்டையும், விடமுடியாது திகைத்த கம்பன் சிந்திக்கிறான். விநாயகன் பிரணவ வடிவானவன். கம்பன் மலர் - 2000

எழுதிற்று.
நல் வேண்டி நிற்கிறான்.
தல் மரபு.
வற்றை இனங்கண்டு,
பற்றது.
பாதுவாம்.
னைத்தும்,
ண்டான்.
வன் மனத்துள் போராட்டம்.
,

Page 74
நாதம், விந்து எனும் இரண்டின் சேர்க்கையே நாதக் குறியீடு ட', விந்துக் குறியீடு O, இவை இணைந்த வடிவாய், பிரணவத்தின் குறியீடாய் நிற்பது, 'உ' எனும் எழுத்து. இதுவே பிள்ளையார் சுழி எனப்படுமாம். சிந்தனை சிறக்கக் கம்பன் களிப்புறுகிறான். மரபுவழிநின்று விநாயகனை வணங்கும் அே மற்றை மதத்தார்க்கும் இடையூறின்றி, கடவுள் வாழ்த்தியற்ற வழிபிறக்கிறது. தன் மனத்திருப்திக்கு 'உ' எனப் பிள்ளையார் ச உலகம் எனும் சொல்லுள் அதனை அடக்கி, உவகை கொள்கிறான் கம்பன். உலகம் எனும் சொல் தந்த அவ் உவகை, அவன் கைவழிச் செல்ல அவன் எழுத்தாணி அவனையறியாமல், ‘உலகம் என அழுத்தி எழுதிற்று.
米米米来来 உயிர், மெய்யென தமிழ் முதல் எழுத்துக்கள் இரண்டு வகைய. அவற்றுள் தன்மை நோக்கி, மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என மூ தமிழ்மரபுச் சிந்தனை முழுவதையும் தன்காவியத்துள் அடக்க நினைத்த கம்பன் தானிடும் காவிய முதற் சொல்லில் பிரிவுபட்ட தமிழ் முதலெழுத்துக்களின் வன
அடக்க வேண்டுமென விரும்புகிறான். ‘உலகம்' எனும் சொல் மீண்டும் மனத்துள் : உ - உயிர் எழுத்து ல - இடையினம் க- வல்லினம் ம் - மெல்லினம் இவ்வாறு, உலகமெனும் சொல் கம்பன் எண்ணத்தை நிறைவு செய்ய களிப்புறுகிறான் அவன். அக்களிப்பு வெளிப்பட அவன் கையெழுத்த ‘உலகம்' எனும் சொல்லை நிறைவாய் அழு,
来来来来米
இங்ங்னமாய், கம்பன் கருத்துள் பிறந்த, ‘உலகம் யாவையும், ஒன்றாகி உவகை தர உலகம் எனச் சொல்லிட்டு, தன் கடவுள் வாழ்த்தைத் தொடங்கினான் கம் அச்சொல் உலகம் உள்ளளவும் கம்பனை, நிலைக்கச் செய்து சித்து புரிந்தது. இவ்வற்புதம் கண்டு , கற்றார் நெஞ்சு களித்தது கம்பன் இட்ட உலகமெனும் சொல் அவனைக் காலம் கடப்பித்துக் கடவுளாக்கி
来来来来来
அகில இலங்கைக் கம்பன் கழகம்

பிரணவம்.
தவேளை,
ழியிட்டு,
ழன்றாகும்.
க அனைத்தையும்
உதிக்கிறது.
ாணி த்தி எழுதிற்று.
பன்.
ற்று.

Page 75
ல்லாப்புகழும் அல்லாஹ்வுக் அகிலங்கள் அனைத்தையு படைத்துப் போஷித்துப் பரிபக்குவப் படுத்துபவன்"
அல்ஹம்து லில்லாஹிரப்பில் ஆலமீன்”
(હ
என்னும் திருக்குர்ஆனின் தோ பொருள்தான் இக்கட்டுரையின் தோற்று இறைவனின் முழுமையான சக்திகளையும்
1. எஜமான் (உரிமையாளன்) 2. வளர்ப்பவன், பேணுபவன், பாதுகாப் 3. ஆணையிடுபவன், ஆட்சிபுரிபவன்,
இனிக் கம்பனின் ராமாயணக் க
உலகம் யாவையும் தாமுள வாக் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீர் அலகிலாவிளையாட்டுடை யார தலைவர் அன்னவர்க் கேசரண்
இச்செய்யுளுக்குச் சுருங்கப் பொ மற்றெல்லா அண்டங்களையும் தோன்ற நிலைத்திருப்பவற்றை அழிப்பதும் ஆ அனைத்துலகங்களுக்கும், அவற்றில் வாழு என்பதாகும்.
காவியங்களில் காணப்படும் கா காப்புப் பாடலில் தத்தமது கடவுள்களை ( அவர்தம் கருணையை வேண்டி நிற்பர்.
 
 
 

இஸ்லாத்தின் தய்வக் கொள்கைக்கும் டைய கம்பனின் காப்பு
ஜின்னாஹ்”
க்கே
L
குர்ஆன் 1:1)
ற்றுவாய் அத்தியாயத்தின், முதல் வசனத்திற்கு முன் சொல்லப்பட்ட வாயுமாகும். இவ் அரபி வசனத்தில் வரும் ரப் என்னும் பதத்திற்கு,
உள்ளடக்கிய விரிவான பொருள் கூறப்படும். அவை,
பவன், நலம் காப்பவன், கண்காணிப்பவன். தீர்ப்பு அளிப்பவன், திட்டம் வகுத்து நிர்வகிப்பவன். என்பனவாம்.
ாப்புச் செய்யுளை நோக்குவாம்.
கலும்
கலா
ճշմ
நாங்களே.
ருள் கூறின் "சூரியனைச் சுற்றி நாம் வாழும் பூமி உட்பட, அதுபோன்ற ச் செய்தலும், தோன்றச் செய்தவற்றை நிலைபெறச் செய்வதும்,
ஆகியவற்றுடன், வேறு ஓயாத விளையாட்டுஞ் செய்பவரே கின்றஉயிர்களுக்கும் எசமானனாவார். நாம் அவருக்கே அடைக்கலம்"
புச் செய்யுளுக்கு தனிச் சிறப்புண்டு. புலவர்கள் தம் காப்பியங்களின் ழதன்மைப் படுத்திப்பாடுவது மரபாகும். காவியம் சிறப்புற்று அமைய
59

Page 76
காப்புச் செய்யுள் பற்றிக் கதைபலவுண்டு. இறைவனே அடியெடுத்துக் கொடுத்ததாகவும், காவியத் தலைவரே கனவில் தோன்றி முதலடியை மொழிந்ததாகவும் கூறுவர்.
கந்தபுராணம்பாட முருகனும், பெரியபுராணத்திற்கு சிவபெருமானும் அடியெடுத்துக் கொடுத்ததாகக் கூறுவர். சிலருக்குப் பாட்டுடைத் தலைவர்களாகிய இறையடியார்கள் கனவில் தோன்றி முதலடியுரைத்ததாய் மொழிவதுமுண்டு.
பிறப்பிலோ, வளர்ப்பிலோ, அன்றி இரண்டிலுமோ கம்பர் ஒரு வைணவராகவோ, அன்றியொரு சைவராகவோ இருந்திருக்கலாம். ஆயினும் மரபுமறுத்து தனது ஒப்பில்லாக் காப்பியமான ராமகாதைக்கு காப்புச் செய்யுளாய் ஒரு மதசார்பற்ற பொதுத்தன்மை வாய்ந்த காப்புச் செய்யுளைப் பாடியிருப்பது ஒரு அற்புதமே.
இது வேண்டுமென்றே அமைக்கப்பட்டதா! அன்றி தானாகவே அமைந்து விட்டதா என்பது சற்றுச் சிந்திக்கற்பாலது.
கவிதை என்பது எல்லோராலும் சாத்தியப்படக்கூடிய ஒரு இலக்கிய வடிவமன்று. கவிதை படைக்கக் கடவுளாசி வேண்டுமென்பது சத்தியமாகும். இன்றைய பேசப்படும் முற்போக்குச் சக்திகள் இப்படிச் சொல்வது ஒரு பத்தாம் பசலித்தனமான கருத்தெனச் சொல்லல்கூடும். ஆயினும் தூய்மையான மனத்தோடு இலக்கியம் படைக்கும் ஒரு சிறந்த படைப்பாளி தன் அனுபவவாயிலாக இக்கருத்தை ஏற்பானென நான் திடமாக நம்புகின்றேன்.
கம்பனின் காவியத்தில் அவன் பெரும்பாலான பாடல்கள் நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லப்பட வேண்டிய இடத்தில் சொல்லப்பட வேண்டிய சொற்களமைந்து அவனைக் கவிதைக்கு முதல்வனாக்கியுள்ளன.
அவன் சொல்லாட்சிகண்டு நாம்பூரித்துப்போகின்றோம். அவன் கவித்துவ ஆளுமையோடு மறைமுகமான ஒரு சக்தியும் அவனுக்கு துணை நின்றிருப்பது போன்ற ஒரு உணர்வையும் நாம் பெறுகின்றோம். கம்பனே கவிதையின் சக்கரவர்த்தி என நெஞ்சத்தால் அவனை வாழ்த்தி மகிழ்கின்றோம்.
ஓசை நயம் மிக்க ஒப்பில்லாச் சொல்லாட்சி இவனுக்கு மட்டுந்தான் சொந்தமானதோ எனும் எண்ணம் அவன் கவிதைச் சாகரத்துள் மூழ்கி எழும் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றதே! அது எதனால்? என்னைப் பொறுத்தமட்டில் அவனொரு இறையருள் பெற்ற பெரும்புலவன் என்றே முடிவு சொல்வேன்.
அதனால்தான் திருமாலின் அவதாரம் எனத் தன் பாட்டுடைத் தலைவனைக் கொண்ட கம்பராமாயணத்தின் முதற் பாடலான காப்புச் செய்யுளில் எல்லோர்க்கும் பொதுமையான இணைதுணையற்ற, முத்தொழிலுக்கும் உரியனான ஏகனிடம் அடைக்கலம் புகுவது இயல்பாக வந்தமைந்ததென எண்ணத் தோன்றுகின்றது.
வடிவமற்ற பரம் பொருளே முத்தொழிலுக்கும் அதிகாரி என்பதைக் கம்பன் தன்காப்பில் உறுதி செய்கின்றான். அதுமட்டுமன்றி, அளவிலா வேறு விளையாட்டுக்களையும்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

செய்கின்றான் என்னும் பொருள்பட இறைவனின் தனிப்பெரும் சக்தியினையும் கம்பநாடன் அதே செய்யுளில் சொல்லி யிருப்பதையும் நாம் காண்கின்றோம்.
திருக்குர்ஆனின் மற்றுமொரு அத்தியாயத்தில்
“நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமிகளையும், ஆறுநாட்களில் படைத்து 'அர்ஷ்'இன்மீது தன் ஆட்சியை நிலைநாட்டினான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது தீவிரமாகவே அதனைப் பின்தொடர்கின்றது. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் அவன்கட்டளைக்கு உட்பட்டிருக்கின்றன. படைப்பும் (படைத்தலும்) அதன் ஆட்சியும் அவனுக்குரியதல்லவா? அகில உலகங்களையும், படைத்துப் போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிகப் பாக்கிய முள்ளவன்"
(குர்ஆன் 7:54)
படைத்தலும், காத்தலும், அழித்தலுமாகிய முத்தொழிலுக்குமுரியனான இறைவனுக்கு இவையனைத்தும் ஒரு விளையாட்டேயன்றி வேறில. அவன் சக்தியின் உயர்ச்சியைக் கம்பன் விளையாட்டு என்கின்றான். அன்றி விளையாட்டுச் செய்கின்றான் எனப் பொருள் கொள்ளலாகா.
இது பொருந்த குர்ஆனின் மற்றுமொரு அத்தியாயத்தின் சிலவரிகளை நோக்குவோம்.
வானங்களையும், பூமியையும் அவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் வீண்விளையாட்டுக்காக நாம் சிருஷ்டிக்கவில்லை
(குர்ஆன் 21:16)
இறைவன் ஒவ்வொரு படைப்பையும் ஒரு காரணங் கொண்டே உலகில் படைத்துள்ளான். இறைவனின் ஆற்றலை விளையாட்டு’ எனக் குறிப்பிடும் வார்த்தை பொருந்தும் இன்னுமொரு இறைமறைவாக்கியத்தை இங்கு குறிப்பிடுதல் சாலப் பொருந்துவதாகும்.
"அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவன் எதைப் படைக்கக் கருதி முடிவு செய்தாலும் ஆகுக' எனக்கூறிய மாத்திரத்திலேயே அது ஆகிவிடுகின்றது. (குர்ஆன் 2:17)
இறைவனின் சக்திக்குள் இதுஒரு விளையாட்டேயன்றி, வேறில்லையல்லவா. கம்பனின் கருத்து இவ்வசனத்தோடு முற்றும் பொருந்துகின்றதே. இறைவன் தனித்தவன் என்பதை கம்பன் தாம் என்ற பதத்தால் நிறுவுகின்றனான். தாம் என்பது தாமே என்பதாகும். தனித்துத் துணையற்று அனைத்தையும் செய்யத் தக்க பெரும் சக்திமானாக அச்சொல்லொன்றால் விளக்குகின்றான்.
திருக்குர் ஆனின் பல இடங்களில் தன் ஆற்றலை இறைவனே கூறுகின்றான். தன்னைத் தனித்தவனென்றும் இணைதுணையற்றவனென்றும், ஆக்கவும் அழிக்கவும் செய்பவ
னென்றுங் கூறுகின்றான்.
60

Page 77
“நிச்சயமாக உங்கள் ஆண்டவன் ஒரே ஒருவன்தான்” (குர்ஆன்: 37:4) "அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய வேறு நாயனும் இல்லை. அவ்வாறாயின் ஒவ்வோர் ஆண்டவனும் தான் சிருஷ்டித்தவைகளை (த் தன்னோடு சேர்த்து) கொண்டு ஒருவர் மற்றவர் மீது யுத்தம் புரிந்து மிகைக்க ஆரம்பித்து விடுவார்கள். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இவைகளை விட்டு அல்லாஹ்மிக்க மேலானவன்" (குர்ஆன் 23:9) இல்லாத நிலையில் இருந்த ஒன்றை உண்டு பண்ணினான் என்பதை “உலகம் உளவாக்கலும்’ என்ற சொற்களுக்குப் பொருந்த திருமறை வசனங்கள் பல உண்டு. இருப்பினும் முன் சொன்ன உதாரணங்களே போதுமானவையாகும்.
நீக்கலும் என்னும் அழிவுநிலைக்கு படைப்புக்கள் அனைத்தையும் இறைவன் பின்னொருகால் கொண்டு வருவான் என்பதை உலக அழிவினையும், மறுமைபற்றிய வசனங்கள் பலவற்றிலும் இறைவன் பலவாறாய் விபரிக்கின்றான். உதாரணத்துக்கு ஒன்று:
பலமாக ஒருமுறை ஸுர் (எக்காளம்) ஊதப்பட்டு பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடு ஒன்று மோதிப் பலமாக அடிப்பட்டால் அந்த நாளில் தான் (யுகமுடிவின்) மாபெரும் சம்பவம் நிகழும். அந்த நாளில் வானம் வெடித்துப் போரையாகிவிடும்.
(குர்ஆன் 69:13+14 + 15 + 16) இருந்தவொன்றை அழித்து மீண்டும் சூட்சும நிலைக்குக் கொண்டு வருவான் என்பதற்கு கம்பனின் நீக்கலும் என்ற சொல் பொருந்தி நிற்கின்றனவெனலாம்.
நிலைபெறுத்தலும் என்னும் சொற்பொருந்தும் திருமறை வசனங்கள் திருக்குர்ஆனில் நிறையவே உண்டு. படைக்கப்பட்ட அனைத்தும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட கட்டுக்கோப்புக்குள் நின்று இயங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட காலம்வரை இது தொடரும். இறைவனன்றி இவற்றில் ஒரு மாற்றத்தைப் பிறரால் கொண்டு வர இயலா.
"வானத்தைத் தூண்களின்றி நிலை நிறுத்தினான். மேலும் சூரியனையும் சந்திரனையும், ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படி செய்தான். இந்தமுழுஅமைப்பிலுமுள்ள ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கிக்" கொண்டே இருக்கும்"
“அவன்தான் இந்தப் பூமியை விரித்து அதில் மலைகளை நாட்டி, ஆறுகளை ஒடச் செய்தான்"
(குர்ஆன் 13:2+3) 'அன்றியும் மனுக்குலம் வாழத் தேவையான சகலவற்றையும் நாம் படைத்தளித்துள்ளோம்' எனவும் பல இடங்களில் விரிவாகவே தன் படைத்தபின் காக்கும் பண்பினைச் சொல்லுகின்றான் இறைவன்.
“நாம்பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடன் வாழச் செய்தோம். மேலும் அங்கே உங்களுக்கு வாழ்க்கைச் சாதனங்களையும் அமைத்துத் தந்தோம்" (குர்ஆன் 7:10)
கம்பன் மலர் - 2000

“வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன்”
(குர்ஆன் 10:31)
“அலகிலா விளையாட்டு” என்பதற்கு, வேறு ஓயாத விளையாட்டுக்கள் எனப் பொருள் கூறுவர். உளவாக்கி, நிலைபெறுத்தி, நீக்கி என்பது படைத்து, நிலைபெறப் போஷித்தபின் அழித்தலாகும்.
இவ்வாறான அனைத்துப் படைப்பினங்களும் மீண்டும் அவையவை உலகில் செய்த தேட்டங்களுக் கேற்ப கூலி பெற வேண்டி மீண்டும் தோற்றுவிக்கப்படும் என இஸ்லாம் அறுதியிட்டுக் கூறுகின்றது.
“ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாவான். நீங்கள் அனைவரும் உங்களின் கூலியை மறுமை நாளில்தான் முற்றாகப் பெறுவீர்கள்”
(குர்ஆன் :3:185)
"இறந்து போனவர்களை அல்லாஹ் எழுப்பியே தீருவான். பிறகு அவர்கள் அவனிடமே (நீதி விசாரணைக்காக) கொண்டுவரப்படுவார்கள்”
(குர்ஆன் 6:36)
“உங்களை அவன் எவ்வாறுபடைத்திருக்கின்றானோ அவ்வாறே நீங்கள் மீண்டும் படைக்கப்படுவீர்கள்.
(குர்ஆன் 7:29)
இதுபோன்று இன்னும் பலவசனங்களால் அழித்தவற்றை அதுபோன்றே படைக்கும் ஆற்றல் பெற்றவன் இறைவன் என்பதையே “வேறு விளையாட்டுக்கள்’ என கம்பன் பாடினானெனக் கொள்வதும் இங்கு பொருந்துவதாக உள்ளதெனலாம்.
கம்பனின் காப்புச் செய்யுளில் “அன்னவர்க்கேசரண் நாங்களே” என்னும் இறுதி முச்சீரும் மற்றுமோர் இறைவசனத்திற்குப் பொருந்தி நிற்கின்றன.
திருக்குர்ஆனின் தோற்றுவாய் அத்தியாயத்தில் மற்றுமொரு வசனமான,
“ஈய்யாக்க நஃபுதுவயிய்யாக்க நஸ்த்தகீன்"
(குர்ஆன் 1 : 4)
“உன்னையே வணங்குகின்றோம் உன்னிடமே உதவியுந் தேடுகின்றோம்” என்பது
மக்கள் செய்யவேண்டிய பிரார்த்தனையாக திருமறையாம் குர்ஆன் கற்பித்துத்தரும் வசனங்களாக இவை அருளப்பட்டுள்ளன. தனித்தவனான தயாபரனிடம் முற்றாய்த் தம்மைச் சரணடையச் செய்வதே இவ்வசனங்கள் நமக்குணர்த்தும் பாடமாகும். இதனாலேயே கம்பனும் தன்னை இறைவனிடம் சரணடையச் செய்கின்றான்.
இவ்வனைத்தையும் நோக்கும் போது கம்பனின் காப்புச் செய்யுள் இஸ்லாத்தின் ஏக தெய்வக் கொள்கைக்கு ஏற்புடையதாய் அமைந்துள்ளதையும் காண்கின்றோம்.
61

Page 78
றிஸ்து பிறப்பதற்கு சில நூ வளர்ச்சியைப் பெற்றிருந்த6
கல்வியில் சிறந்த புல ஆதிநூலாகிய தொல்காப்பியமே இதற்குப் ெ அதற்கு முன்னாலேயே இலக்கண முறை இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகி
என்று எழுதுகின்றார் தமிழறிஞர் திரு ஏ.வி. கிறிஸ்துவுக்கு முன் நான்காம் நூற்றாண்ை
கிறிஸ்துவுக்குப் பிந்திய நான்கா இடைக்காலம். இந்த இடைக்காலத்தில் எழு
இது உலகில் உள்ள மிகப்பெருங் கவிகளில் ஒருவர்.
'சூர்ய குலதிலகனும் ராஜரி அவதரிக்கப்போகிறேன்' என்று பூரீமந் நார கூறுகின்றார்.
வேததர்மங்கள் இத்தனை உயர்வ கண்டு வேதனையுற்றிருந்த மகரிஷி வான்மி வாழ்ந்து காட்டும் மனித பாத்திரங்களினு அதற்கான காப்பியம் ஒன்று செய்ய முயற்சி தேன் மழையாகப் பொழிந்தது.
தர்மங்களின் நெறி நின்று வாழ காவியத்தின் நாயகன் என்று எண்ணுகின்
அந்த விநாடியே நீங்கள் காட் தெய்வீகக்குரல் வானின்று வந்தது. வா உயர்த்திக்காட்டி ஆசீர்வதித்தவாறு தேவி
 
 

பிளின் ஏசுவும் னின் ராமனும்
தெளிவத்தை ஜோசப்
ாற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழியும் இலக்கியமும் நல்ல
T.
வர்கள் பலர் விளங்கிப் பாடல்களை இயற்றினார்கள். தமிழின் பரிய சான்றாகும். தொல்காப்பியத்தின் இலக்கண வளத்தில் இருந்து களையும் விதிகளையும் அனுமானிக்கக்கூடிய இலக்கியங்கள் பல கிறது.”
சுப்பிரமணிய ஐயர். (தற்காலத் தமிழ் இலக்கியம்-1933), இந்தக்காலம் டக் குறிக்கிறது. இது பண்டைக்காலம்.
ம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலம் ழந்ததுத்ான் கம்பராமாயணம் என்னும் ராமகாவியம்.
வ்காப்பியங்களுள் ஒன்று. இதன் கர்த்தாவான கம்பர், உலகமகா
ஷியுமாகிய அயோத்தி மன்னன் தசரதனின் மகனாக நான் ாயணனே தன்னிடம் கூறியதாக தேவதூதர் நாரதர் வால்மீகியிடம்
ானவைகளாக இருந்தும் உலகம் அவற்றால் சிறிதும் நன்மை பெறாதது கி, தர்மங்கள் வெறுமனே தத்துவங்களாகக் கூறப்படாமல் தர்மங்கள் Tடாக கூறப்பட்டால் உலகம் அதனால் நன்மைபெறும் என்றுகருதி சிகள் மேற்கொண்டிருந்த அதே வேளையில் நாரதரின் இந்தக்கூற்று
ஒரு அவதாரம் நிகழப்போகின்றது. அந்த அவதாரமே என்னுடைய றார் வான்மீகி.
பியத்தை ஆரம்பிக்கலாம் உங்கள் முயற்சி வெல்லும் என்னும் ல்மீகியும் நாரதரும் திடுக்குற்றுத் திரும்பி வான் நோக்க, கையை சரஸ்வதி மறைகின்றாள்.
62

Page 79
- ராமனின் அவதாரம் பற்றிய செய்தி இது
வால்மீகியின் இந்த வடமொழி ராமாயணத்தைப் பெரும் காப்பியமாகத் தமிழில் கம்பர் இயற்றியமை தமிழர்களின் நல் அதிர்ஷ்டமாகும்.
கம்பர் ஈடும் இணையுமில்லாத கவிஞர். எந்தவித அம்சத்தைப் பொறுத்தவரையிலும் மற்றைய தமிழ்ப் புலவர்களைவிட கம்பர் சிரேஷ்டமானவராகவும் ஒருசில அம்சங்களில் உலகில் சகல கவிகளையும்விடச் சிறந்தவராகவும் இருக்கின்றார்
என்று வியக்கின்றார் வ. வே. சு. ஐயரவர்கள்.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று பாரதி துள்ளிக் குதிக்கின்றானே. அது வெறுமனே புகழ்ச்சிக்காக மட்டுமல்ல.
ராமாயணக் கதை நம் எல்லாருக்கும் தெரியும். இதில் படித்தவர்கள்,படிக்காதவர்கள்,அறிவாளிகள் சாதாரணர்கள் என்ற பேதங்கள் இல்லை.
‘விடிய விடிய ராமாயணம் கேட்டு'.என்னும் பழமொழிகூட இந்தப் பேதமின்மைக்கு நல்லதோர் உதாரணம்.
ராமனின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு பற்றிய ஆதாரபூர்வமான நூல் ராமாயணம்.
本本来
ஏசுவின் தாயாகிய கன்னிமரியாள் ஜோசப் என்னும் மரவேலை செய்யும் மனிதருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த வேளையில் ஒரு நாள் ஒரு சம்மனசு அவள் முன் தோன்றி மரியாளே பயப்படாதே. இன்னும் சில பொழுதில் நீ கருத்தரிப்பாய். உன் கருவில் உருவாகிறவர் எல்லாம் வல்ல இறைவன்' என்று கூறி மறைகின்றது.
'இது எப்படிச் சாத்தியமாகும். நானோ இன்னும் திருமணம் ஆகாத கன்னியாயிற்றே என்று மரியாள் தடுமாறிக் கொண்டிருக்கையில் அசரீரி மறைகின்றது. அவளுடைய அடிவயிற்றில் அவளறியா விஷயங்கள் ஏதேதோ நடந்தேறுகின்றன. தனக்கு நிச்சயிக்கப்பட்டவள் கருவுற்றிருப்பதுணர்ந்த ஜோசப் அவளைத்தள்ளிவைக்க எண்ணி மனங்குழம்பி யோசித்துக் கொண்டிருக்கையில் அவனுடைய கனவில் தோன்றிய தேவதூதர் “மனங்குழம்பாதே மரியாளை ஏற்றுக்கொள். பரிசுத்த ஆவியினாலேயே அவள்கருவுற்றாள். ஒருகுமாரனைப்பெறுவாள். அந்தக்குழந்தைக்கு "ஏசு என்று பெயரிடு. மனிதர்களை மீட்க வந்தவர் அல்லது கடவுள் மனிதர்களுடன் இருக்கிறார் என்பதே ஏசு என்னும் நாமத்தின் பொருள்” என்று கூறி மறைகின்றார்.
- ஏசுவின் அவதாரம் பற்றிய செய்தி இது
கம்பன் மலர் - 2000

ஏசுவின் பிறப்பு வாழ்வு, போதனைகள், மரணம் பற்றிய நேரான ஆதாரங்களைத் தருவது பைபிள்.
LnšGgu (MATHEW) Lorbeg (MARK) apráš (LUKE) ஜோன் (OHN) என்னும் நால்வர் பைபிளில் ஏசுவைப் பற்றி எழுதியுள்ளனர்.
இந்த நால்வரும் சில சிறு சிறு இடங்களில் முரண்பட்டாலும் பிறப்பு, போதனைகள், சாதனை, மரணம் ஆகியவற்றில் ஒத்தே இருக்கின்றனர்.
ஏசு பிறந்தவிதம் நம் எல்லோருக்கும் தெரியும். நடு நிசியில் ஒரு மாட்டுக் கொட்டிலில் அவர் பிறந்த வேளைவானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியது. கிழக்குத் திசையிலிருந்து வான சாஸ்த்திரம் அறிந்த மூன்று ராஜாக்கள் நட்சத்திரம் கூறும் செய்தி அறிந்து பரிசுப் பொருட்களுடன் பெத்தலகேம் நகருக்கு நட்சத்திரத்தைத் தொடர்ந்து வந்து அந்தச் சிசுவை வணங்கிச் செல்கின்றனர்.
ஏசு தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் கோவிலில் குருமார்களுடன் வாதிடுகின்றார். அவரைக் காணாது தவித்த பெற்றோர் மெதுவாக அவரை அணுகி நாங்கள் எங்கெல்லாம் தேடுகின்றோம் பயந்தே போனோம். என்று அவரை அழைக்கின்றனர்.
நான் எங்கும் போய்விடவில்லை. என் தந்தையின் வீட்டில்தான் இருக்கின்றேன். என்விட்டில் இருக்கும் என்னை நீங்கள் என்ன தேடுவது என்கிறார். பிறகு எழுந்து பெற்றோருடன் செல்கின்றார்.
- தன்னுடைய தேவ அவதாரத்தை அவரே வெளிப் படுத்தும் இடம் இது.
பிறகு தன்னுடைய முப்பதாவது வயதில் ஒருபோதகராகத் தோன்றுகின்றார்.
அதுவரையிலான அவருடைய வாழ்வு பற்றி இந்த நால்வருமே எதுவும் எழுதவில்லை.
அந்த இடைக்காலத்தில் அவர் இந்தியாவுக்கு வந்து ரிஷிகளுடன் வாழ்ந்து பழகி இந்து தத்துவங்களை நன்கு கற்றிருக்க வேண்டும்' என்னும் கருத்தையும் ஒரு சில ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அதற்கான ஆதாரமாக அவர்கள் கொள்வது ஏசுவின்போதனைகளில் விரவிக்கிடக்கும் இந்திய தத்துவங்களாகும்.
ராமாயணம் வால்மீகி, கம்பர், துளசிதாசர், எழுத்தச்சன்
என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்டேயுள்ளது. இவைகளிலும் அந்த ஒற்றுமை, முரண்பாடுகள் இருக்கவே
செய்கின்றன.
63

Page 80
ராமாயணங்களை ஆய்வு செய்யும் அமேரிக்கப் QUsia LoGouf (56nf (Lu6maoT ÓläFLOsör - PAULA RICHMAN - என்பது அவருடைய பெயர்) இந்தியாவில் எப்படி பல்வேறு ராமாயணங்கள் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து MANY RAMAYANAS என்னும் நூலை வெளியிட்டிருக்கின்றார்.
கடவுளின் அவதாரமாகிய ராமனைஒரு மனிதனாக்கிக் காட்டும் வல்லமை கம்பரிடம் அபரிமிதமாகவே இருந்திருக்கிறது.
கைகேகியின் தோழியான மந்தரையின் கூன் முதுகில் மண்ணுருண்டை அடித்து மகிழும் ஒரு சாதாரண மனிதக் குழந்தையாக ராமனைப்பார்க்கிறோம். இந்தச் செயலுக்காக மனம் நோகும் வளர்ந்த ராமனையும் கம்பர் காட்டுகின்றார்.
மிதிலையில் முதன் முதலாகச்சீதையைக் காணும் இராமனின் வாலிப உள்ளத்தின் துள்ளல்; மனம் கொள்ளும் மகிழ்வு கம்பனின் கவித்துவத் திறமையுடன் பொங்கியெழும் வேளையிலும் திருமால் அவதாரமாகிய ராமனை ஒரு மானுட ராமனாக்கியே மகிழ்கின்றார் கம்பர்.
‘என்னுடைய தூய மனத்தினையும் தன்பால் இழுத்துக்கொள்ளும் அந்தப் பெண் யார் எத்தகையவள்!! நிச்சயமாகக் கன்னியாகத்தான் இருக்கமுடியும். என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளும் வேளையிலும் மானுடம் பாடிய ஒரு மகா கவியாகவே அவர் திகழ்கின்றார்.
தர்மத்தை வாழ்ந்து காட்டியஒரு மனிதனை சிருஷ்டித்துக்காட்டிய சிறப்பிற்காகவே நாம் இன்றும் கம்பனைப் பேசுகின்றோம். அவனுடைய ராமாயணத்தைப் பேசுகின்றோம்.
நம்மால் - மனிதர்களால் - பேசப்படுகின்ற காரணத்தினாலேயே கம்பனும் கம்பனின் ராமாயணமும் சாகா வரம்பெற்றுத் திகழ்கின்றன.
பழந்தமிழ் இலக்கியங்கள் எத்தனைஎத்தனையோ இருக்கின்றன. அவற்றுள் சிலப்பதிகாரத்தையும் ராமாயணத்தையும் தவிர மற்றவற்றை யார் நினைக்கின்றார்கள். மானுடம் பாடாத - மனிதனைப் பார்க்காத - இலக்கியங்கள் எக்காலத்திலும் ஜிவிதம் கொள்வதில்லை என்பது எத்தனை சத்தியமானது.
கம்பனையும் துளசிதாசரையும்; கம்பராமாயணத்தையும் துளசிதாசரின் ஹிந்தி ராமாயணமான ராமசரிதமானஸையும் ஒப்பிட்டு நோக்கியுள்ள அறிஞர்கள் கம்பனின் ராமன் மனிதனாகவும் அவதாரமாகவும் இருப்பதையும்; துளசிதாசரின் ராமன் முழுக்க முழுக்க பரம்பொருளின் அவதாரமாக இருப்பதையும் சான்றுகளுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இராவணனின் பாத்திரப்படைப்பில்கூட கம்பர் அவனின் நல்லவைகளையும், வீரத்தையும், பக்தியையும் விஸ்தாரமாகக்கூறி அவன் பால் ஒரு இரக்க உணர்வை ஏற்படுத்துகின்றார். அகில இலங்கைக் கம்பன் கழகம்

துளசிதாசரோ அவனை முழுக்க முழுக்க ஒரு அரக்கனாகவே, கொடியவனாகவே காட்டுகின்றார் என்றும் இவ்வாய்வறிஞர்கள் குறிக்கின்றனர்.
இலங்கேஸ்வரன் பெருமைபாடும் இன்றைய குழுக்களுக்கு கம்பனே அடியெடுத்துக் கொடுத்துள்ளான்.
துளசிதாசரின் ராமன் கடவுளாகவே உலாவியதால்தான் மனிதர்களுடன் ஒட்டாமல் அந்நியப்பட்டு விட்டான் என்று நாம் எண்ணிக் கொள்வதிலும் தவறிருக்க முடியாது.
ஏசுவும் கடவுளின் அவதாரம் தான். ஆனால் பிறக்கக் கூட இடம் இல்லாமல் மாட்டுத் தொழுவத்தில் பிறக்கின்றார்.
கடவுள் உலகிற்கு வரப்போகின்றார் என்னும் நம்பிக்கை, யூதர்களுக்கு நிறையவே இருந்தது. ஆனாலும் இப்படி மாட்டுக் கொட்டகையில் ஒரு ஏழைத்தச்சனின் மகனாகப் பிறந்த ஏசுதான் அந்தக் கடவுள் என்று அவர்கள் நம்பவும் தயாராக இல்லை. ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை.
யூதர்கள் குடும்பங்களில் அதிக அன்பும் பற்றும் கொண்டவர்கள். சேர்த்து வைப்பதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்கள்.
“குடும்பத்தில் பற்றுக் கொள்ளாமல் கடவுளை நாட வேண்டும்” என்றார் ஏசு. தனக்கென்று எதனையும் சேர்த்து வைப்பதை வன்மையாகக் கண்டித்தார். கடலில் வீசிய மீன் வலையைக் கூட அப்படியே விட்டு விட்டு என்னுடன் வா என்று தன்னுடைய சீடர்களுக்குப் பணித்தவர் அவர்.
இவை ஒன்றும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக “ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைந்து விடலாம். ஆனால் ஐஸ்வர்யன் மோட்சராஜ்யத்துக்குள் நுழைய முடியாது” என்னும் அவருடைய கம்யூனிசக் கொள்கை அறவே பிடிக்க வில்லை. அவர் மேல் குற்றம் காண்பதையே தொழிலாகக் கொண்டு இயங்கினார்கள்.
மோட்சராஜ்யம்; என் தந்தையின் ராஜ்யம் என்னுடைய ராஜ்யம் என்று இவன் சதா கூறித் திரிகின்றான். ரோம சாம்ராஜ்யத்துக்கு எதிராக இன்னொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கத் திட்டம் போட்டிருக்கும் ஒரு தீவிரவாதி என்று குற்றம் சுமத்தினார்கள். அரச விசாரணைகள் நடந்தன. எழுதி வைத்திருந்த தீர்ப்பின்படியே பயங்கரவாதி என்று குற்றம் சாட்டி சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.
ஒரு நல்லவருக்கு மனிதசமுதாயம் அளித்த பரிசு இது
சிலுவையில் மரணிக்கும் போது ஏசு மிகவும் நொந்து போயிருந்தார். உடல்வருத்தம் தாங்காது மிகவும் துயரப்பட்டார். மரணவேதனைதாளாது துயருறும் ஒரு மனித மரணம் அது.
64

Page 81
தான் ஒரு தேவ அவதாரம் என்னும் பேச்சுக்கு இடமே இல்லை.
‘கடவுளே ஏன் என்னை இப்படிக் கை விட்டீர்' என்று இரண்டு தடவை கதறிய பிறகே அவருடய மரணம் நிகழ்ந்தது.
"சாகும்போது சாக்ரட்டீஸ் அவரை விட மனஅமைதியுடன் இருந்தார். ஏசுவுக்கு ஏனோ அந்த மனப்புக்குவம் இருக்கவில்லை” என்றெழுதுகின்றார் ஒரு தமிழறிஞர்.
சாக்கிரட்டீஸ் சிறையில் விஷமருந்திச் சாகின்றார். ஏசுவின் மரணம் அய்படிப் பட்டதல்ல. உடல் வலுவற்ற அவரின் சிலுவை ஊர்வலம்; முரட்டு வீரர்களால் அடிபட்டு உதைபட்டு சிலுவை மரத்தைத் தூக்க முடியாமல் மூன்று தடவைகள் மயங்கி வீழ்ந்து மரண மேடையில் சிலுவையில் ஆணியால் அறையப்பட்டு தூக்கி நிறுத்திய சிலுவையில் ஆணியின் பலத்தால் தொங்கிய படி அனுபவித்த மரண அவஸ்தை சாதாரணமானதல்ல. அத்தனை வேதனைகளுடன் மரணிக்கும் ஒரு மனிதன் எப்படி அமைதியுடன் இருப்பான்.
சாவுக்குச் சவால் விட்டுத் துரத்தியவர் ஏசு. புதைத்து நான்கு நாட்களாகிவிட்ட லாசரஸ் என்னும் தன் அன்புக் குரியவனை லாசரஸ் எழுந்து வெளியே வா’ என்று எழுப்பி மரணத்தைத் தோற்கடித்தவர் அவர்.
அவர் செய்த புதுமைகள் பல. அவற்றில் லாசரசின் மரண மீட்பும் ஒன்று. ஆனால் அத்தனைஅத்தனையும் ஆண்டவனை நேசிக்கும் ஆதரவற்ற மனிதர்களுக்காகவே தனக்காக அல்ல.
கடவுளே ஏன் என்னை இப்படிக் கைவிட்டீர் என்னும் அவருடைய கதறல், ஒரு தேவ அவதாரம் மனிதனாக வாழ்ந்து காட்டிய மகத்துவத்தை ஜீவன் கொள்ளச் செய்கின்றது.
விஸ்வாமித்திரருடன் மிதிலை நோக்கி நடக்கின்றான் ராமன்.போகும் வழியில் ஒரு கல்லில் அவனுடைய கால் படிகின்றது. ராமனின் பாதம்பட்ட அகல்யை கெளதமரின் சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாகின்றாள்.
சாதாரண மனிதர்களை விடவும் கடவுள் அவதாரமான ராமனுக்கு கூடுதலான சக்தி ஒன்று இருப்பதையே இது உணர்த்துகின்றது.
காட்டில் வைத்துச் சீதையைக் களவாகத் தூக்கிக் கொண்டு போய் விடுகிறான் இராவணன்.
“விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வீகத்தில் உங்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால் நான் சொல்லுகின்றேன்
கம்பன் மலர் - 2000

ஒருஸ்திரீயை எவனொருவன் இச்சையுடன் பார்க்கிறானோ அவன் அவளுடன் மனதால் விபசாரம் செய்தாயிற்று" என்றார் ஏசு.
இச்சையுடன் பார்ப்பதே தப்பென்னும்போது இன்னொருவனுடைய மனைவியை தூக்கிக் கொண்டோடுவது என்பது எத்தனை பாரதூரமானது.
தான் இருக்கும் இடத்தில் இருந்தவண்ணமே இப்பாதகச் செயல் புரிந்த இராட்சதன் இராவணனை எது வேண்டுமானாலும் செய்திருக்க முடியும் ராமனால், அழித்திருக்க முடியும். தூக்கிக் கொண்டு போனது போலவே கொண்டு வந்து விட்டு ராமபாதங்களில் விழப்பண்ணியிருக்க முடியும்.
ஆனால் பிறர் துன்பங்களுக்காகவன்றி தன் தேவைக்காக அந்த சக்தியை பயன்படுத்திக் கொள்ளாத மாண்பை - மனிதனாகவே வாழ்ந்து காட்டிய மகிமையை கம்பனின் ராமனில் காண்கின்றோம்.
'இராமன் சீதாபிராட்டிவாக்குவாதம் 'வாலிவதம் நீதியா என்னும் தன்னுடைய நூல்களில் ராமனின் சிறு தவறுகளை ஆராய்கின்றார். டாக்டர் ம.பொ. சி.
கூனியின் மீது மண்ணுருண்டை வீசியது: இராம இராவண யுத்தத்திற்கான முன்னோடி நிகழ்ச்சியான இராமன் சூர்ப்பனகை சந்திப்பு, அரக்கரை அழித்தல் போன்ற இராமனின் செயல்களில் குறை காண்கின்றார் அவர். வால்மீகி ராமனில் இல்லாத குறைகள் கம்பனின் ராமனின் இருப்பதாகக் கூறுகின்றார், ம.பொ. சி.
துளசிதாசரின் ராமன் தெய்வராமன். கம்பருக்கு அவனைத் தெய்வமாகவும், மனிதராகவும் காட்டுவதில் ஒரு தடுமாற்றம் என்றெழுதுகின்றார் ஒரு ஆய்வாளர். இது கம்பனின் தடுமாற்றம் அல்ல. கம்பனின் திறமை வெளிப்பாடு. மனிதனை மறந்த தெய்வங்களும் வாழா வென்பது கம்பனது நம்பிக்கை.
இந்திரனின் சூழ்ச்சிக்குப் பலியாகி கெளதமரின் சாபத்தால் கல்லான அகல்யையை மீட்ட ராமனே இராவணன் தூக்கிப் போனான் என்பதற்காகச் சீதையைத் தீக்குளிக்கச் செய்தான் என்பதைக் கேள்வியுற்ற அகல்யை மீண்டும் கல்லானாள் என்று எழுதினார் புதுமைப்பித்தன்.
(காஞ்சனை தொகுதி - சாபவிமோசனம் சிறுகதை)
இந்தக் குறைகாணல்கள் எல்லமே ராமன் மனிதனாக வாழ்ந்து காட்டியதால் தான்.
மானுட மீட்பிற்காக, மானுட வெற்றிக்காக மானுடராகவே வாழ்ந்து காட்டிய இவ்விரு தெய்வ அவதாரங்களும் உலகில் மனிதர் உள்ளளவும் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.
65

Page 82
கம்பன் மலர் - 2000
கிம்பன் வைணவன் எனச் சொ
இருப்பதற்காக அதனை மறுப்பது நியாயப மதத்தைச் சார்ந்தவனாகவே இருப்பான். எ
இவ்விரு சமயங்களுள் ஒன்றைப் பின்பற்றுட
சமயப் பொறையுடன் பேசுகின் இருந்திருக்கின்றனர் என்பதை இளங்ே சார்ந்திருப்பதில் எவ்வித இழிவும் இல்லை. இ நாம் குறை கூறமுடியாது. அக்காலத்தில் சமயத்தினர் வைணவ சமயத்தைக் குறை கம்பனை நாம் அவன் பாடியிருக்கின்ற காவி அபாரமான காவிய நயத்தோடு அவன் பாடி பாடும் பொழுது கூடக் கம்பன் அருமையான
தேவார ஆசிரியர்கள் இராவ திருவடிப்பெருவிரல் நுனியால் அம்மலைை பாடும் பொழுது, "அழுத்தினார்” எனக் தொடுகிறது. காவிய நயத்திற்காகத்தான் அவரவர் உயர்த்திப் பேசுவதை அக்கால வ
சீவகசிந்தாமணி, சமண காவியம் சாமிநாத அய்யர் பட்டயாடு கொஞ்சம் அன்று
சுவைக்காக அதனைப் பயில்வதை நாம் அ
மணிமேகலை ஒரு பெளத்த காவிய சொல்லப்பட்டிருக்கிறது. சாமிநாதஅய்ய பொருட்சுவைகளை வியந்து பாராட்டியிருக் பெளத்த அறிஞர்களோடு கலந்து பேசி அவ
 

திராமன்
| O ( ) LĩĐ{-LIT[[ ]au
த்தாந்த வித்தகர் முரு.பழ.இரத்தினம் செட்டியார்
ல்லுவது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மை கசப்பாக ாகாது. அந்தக் காலத்தில் ஒவ்வொரு கவிஞனும் ஏதேனும் ஒரு சைவமும், வைணவமும் கம்பன் காலத்தில் தழைத்தோங்கியிருந்தன. வனாகவே அவன் இருந்திருக்க வேண்டும்.
ற அக்காலக் கவிஞர்கள் கூடத் தம் மதத்தில் அழுத்தமாகவே காவடிகள் மூலம் அறிகின்றோம். நாம் நமக்குரிய சமயத்தைச் துபோலக் கம்பன் அவனுக்குரிய வைணவ மதத்தைச் சார்ந்திருப்பதை வைணவ சமயத்தினர் வைணவ சமயத்தைக் குறைத்தும், சைவ ரத்தும் பேசி வந்திருக்கின்றனர். கம்பன் இதற்கு விதிவிலக்கன்று. யத்தில் காணப்படும் சொற்சுவை, பொருட்சுவைக்காவேமதிக்கிறோம். யிருப்பதால் அப்பாடல்கள் நம்மைக் கவர்கின்றன. சிவனைப் பற்றிப்
சொற்களைக் கையாண்டிருக்கிறான்.
ணன் கைலையைத் தூக்கும் பொழுது சிவபெருமான் தன் ப அழுத்தினார் என்றே கூறியிருக்கின்றனர். கம்பனோ இதனைப் கூறுகின்றான். “கொழுந்து” என்னும் சொல் நம் உள்ளத்தைத் கம்பனை எல்லா மதத்தினரும் பாராட்டுகின்றனர். அவரவர் மதத்தை றக்கெனக் கொண்டு தள்ளிவிடுவதே அறிவுடைமையாகும்.
என்பதை யாவரும் அறிவர். அதனைப் பதிப்பிப்பதற்காகச் சைவராகிய ,இன்று எல்லாச் சமயத்தையும் சார்ந்த தமிழ்ப்பெருமக்கள் இலக்கியச் 5GTih.
பம். அதில் சைவத்தையும், பிறமதங்களையும் எவ்வளவோ குறைத்துச் r அவர்கள் அதற்கு உரை எழுதும் பொழுது அதன் சொற்சுவை, கிறார். பெளத்த மதக் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காகப் பல பற்றை மணிமேகலைப் பதிப்பில் விரிவாக எழுதியிருக்கிறார்.
-66

Page 83
"தேம்பாவணி' ஒருகிறித்துவ காவியம் "இரட்சணிய பாத்திரை” என்னும் நூலும் அதுபோலக் கிறித்துவ சமயத்தைச் சார்ந்த காவியமாகும். உமறுப்புலவர் பாடிய சீறாப்புராணம் நபிகள் நாயகம் வரலாற்றைக் கூறும் இஸ்லாமியக் காப்பியம் ஆகும். அவற்றை எல்லாம் மத வேறுபாடு கருதாமல் தமிழ் இலக்கியம் என்னும் அளவில் நாம் உளமாரச் சுவைக்கின்றோம். கம்பன் வைணவன் என்பதற்காக அவன் காவியத்தின் பெருமை ஒரு போதும் குன்றாது. எல்லாச் சமயத்தினரும் அக் காவியத்தைப் படித்துமகிழவே செய்வர். "சமரசவாதி” என்றும்“சைவன்"என்றும் அவனைச் சொல்லிச் சிறப்பளிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அவன் காவியமே அவனுக்குப் பெரும் சிறப்பை வழங்கும்.
இனிப் பரநிலை பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.
நம்மாழ்வார் நான் முன்னர் எடுத்துக் காட்டியபடி,
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளும் தனியுடம்பன்’
எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். சிவனும் நான் முகனும், திருமாலின் உடம்பில் இடம் பெற்றிருப்பதை இப்பாடல் மிக விளக்கமாகக் கூறுவதால் இதனை மறுக்கவில்லை, “சிலகாலம்” “பலகாலம்” என வேறுபாடுகள் சொல்லுகின்றார்களே யன்றித் திருமால் உடம்பில் சிவனும், நான்முகனும் இடம் பெற்றிருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள், இப்பாட்டு பரநிலையைக் குறிக்கின்ற பாட்டு என நான் சொல்லுவதற்கு ஆதாரம் கம்பன்தான். அவன் மூலமும்,நடுவும்,ஈறும்" என்னும்பாட்டில்"காலமும் கணக்கும்நீத்த காரணன் சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து வந்தான்” எனப் பரம்பபொருள் நிலையைச் சுட்டுகிறான். இதனாலேயே இதனைப் பரம்பபொருள் பாட்டெனச் சொல்ல வேண்டியதாயிற்று. மேலும் சுக்ரீவன் “முளரிமேல் வைகுவான்’ என்னும் பாடலில் சொல்லுவது பரநிலையைக் குறிக்கும் எனப் பொருள் கொண்டால்தான் பொருத்தமாக இருக்கும்; இல்லையேல் மூலம்பரம் பொருள் ஸ்னக் கம்பன் சொல்லும் திருமால் சிவனும் பிரமாவும் இல்லாவிட்டால் வலிமையற்றவர் ஆகிவிடுவார் என்னும் விபரீதப் பொருள் கொள்ள வேண்டியது வரும். அகவே பரநிலை என்றும், வியூகநிலை என்றும் பிரித்துப் பொருள் கொள்ளுவதுதான் கம்பன் பாடல்களுக்கு ஏற்றவையாக இருக்கும். கம்பன் பாட்டுடைத் தலைவனைப் புகழ்வதற்காகவே பலவாறாகப் பாடியிருக்கிறான் என்னும் ஓர் எண்ணத்தைத் தமிழ் நாட்டில் அறிஞர்கள் உண்டாக்கி யிருக்கிறார்கள்.
பரநிலை,வியூகநிலைபற்றியவிவரங்களைவைணவநுாற்களில் பரக்கக்காணலாம் வைமுகோபாகிருஷ்ணமாச்சாரியார், கம்பராமாயணம்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

பாலகாண்டம் கடிமணப்படலத்தில் வரும் "முப்பரம் பொருளுக்குள் முதலை மூலத்தை” என்னும் பாடலுக்கு உரை எழுதும்போது,"பரம், வியூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமிகத் தத்துவம்” என்னும் ஐவகை நிலைகளைக் குறித்திருக்கிறார். சந்தேகப்படுவோர் அவர் உரையில் இதனைக் கண்டு தெளியலாம்.
கம்பன் காவியம் பற்றி எத்தனையோ வகையான நூற்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் எந்த நூலும் பரம், வியூகம் என்னும் வேறுபாட்டை அறிந்து உரை கண்டதாகத் தெரியவில்லை. எனக்குத் தெரியாமல் யாரும் எழுதியிருக்கவும் கூடும்.
பரம், வியூகம் என்னும் இருவகை நிலைகளை வைத்துக் கம்பன் பாடல்களுக்குப் பொருள் கண்டால்தான் அவன் பாடியுள்ள பாடல்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முரணாமல் தெளிவாகப் பொருள் தரும் என்பதைக் கூறிக் கொள்ள
விரும்புகிறேன்.
னை முடிக்கும் சமயம் வைணவ அன்பர் ஒருவர் பின் 函 (Uply. 9905 إ
வரும் மூன்று வினாக்களை எழுப்பினார்.
வினார்.திருமால் உடம்பில் சிவனும், நான்முகனும் இடம் பெற்றால் அவர்களுக்குரிய தேவிமார்கள் எங்கே இடம் பெறுவார்கள்?
வினா 2. முளி மேல் வைகுவான்’ என்னும் சுக்ரீவன் பாட்டில் இராமனுக்கு ஈடாக யாரும் இல்லை என்பதை அவன் மீது கொண்ட ஈடுபாட்டால் கம்பன் சொல்லுகிறான். வான்மீகி, ‘இராமன் மலைக்கு ஒப்பாக மாட்டான்”“கடலுக்கு ஒப்பாக மாட்டான்” என்று சொல்லுவது போலச் சுக்ரீவன் சொல்லியிருக்கிறான். திருமால் இராமனுக்கு ஈடாக மாட்டார் என்பது இராமன் மீது கொண்ட ஈடுபாட்டைக் குறிக்குமேயன்றி அவன் திருமால் அல்லன் என்பதைக் குறிக்காது; இது பற்றித் தங்கள் கருத்தென்ன?
வினா 3, பாத்திரங்கள் பேசுவதை வைத்துக் கம்பன் கருத்து இதுதான் எனச் சொல்லுவது பொருத்தமாகுமா? இம்மூன்று வினாக்களுக்கும் பின்வருமாறு விடையளித்தேன்.
1. அந்தந்த மூர்த்திகளுக்குரிய தேவிமார்களும், ஆயுதங்களும் இருப்பிடங்களும் அந்தந்த மூர்த்தியிடம் ஒடுங்கி இருக்க அவர்கள் திருமால் உடம்பில் இடம் பெறுவார்கள், இது காரணமாகத்தான் நம்வாழ்வார் ‘என் மலைமகள் கூறன் என்கோ’ எனப்பாடியிருக்கிறார். கம்பனும்'சூலமும் திகிரியும் துறந்து எனப் பாடியுள்ளார். இருநிலையிலும் இதனால் தான் பேதமின்றி அந்தந்த மூர்த்திகளுக்குரிய அடையாளங்களை
ஆழ்வார்கள் சொல்லியிருக்கிறார்கள்.
- 67

Page 84
இராமன் மீதுள்ள ஈடுபாட்டால் திருமால் அவனுக்கு இணையாக மாட்டார் எனச் சொல்லலாம். ஆனால் திருமாலும், சிவனும் பிரமாவும் சேர்ந்து அவனுக்கு ஈடாவார்கள் எனச் சொல்லுவதுதான் சிந்தனைக்குரியது. எதற்கும் யாருக்கும் இராமன் ஈடாக மாட்டான் எனக் கூறுகிறோம். வான்மீகி மலையும், கடலும் இராமனுக்கு ஈடாகமாட்டா எனச் சொன்னாரேயன்றி இவை இரண்டும் சேர்ந்து இராமனுக்கு ஈடாகும் எனச் சொல்லவில்லை கம்பன் இராமனுக்கு ஈடு சொல்வதால்தான் பரநிலைப் பாட்டாக அதனைக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பாத்திரப் பேச்சுகள் பற்றி முன்னரும் கூறியிருக்கிறேன். சில கருத்துக்களைப் பாத்திரங்கள் தெரிவிக்கின்றன. “சம்பராசுர யுத்தத்தில் உனக்குத் தருவதாகச் சொன்ன இரண்டு வரத்தையும் நீ இப்பொழுதுகேள்” என மந்தரை கைகேயியிடம் சொல்லுகிறாள். சம்பராசுர யுத்தம் எங்கே நடந்தது? எதற்காக நடந்தது? ஏன் வரம் கொடுப்பதாகத் தசரதன் சொன்னான்?
வான்நின்று இழிந்து, வ மா பூதத்தின் 6ை
ஊனும் உயிரும் உணர்வு
உள்ளும் புறத்து
கூனும் சிறிய கோத்தாயு கொடுமை இை
கானும் கடலும் கடந்து,
இடுக்கண் காத்த
கம்பன் மலர் - 2000
 
 
 
 
 
 
 

என்னும் விவரங்கள் மந்தரை பேச்சில் இல்லை. நாம் அவற்றை விரித்துச் சொல்லவேண்டிவர்களாகிறோம். பாத்திரங்கள் சில கருதுக்களை எதற்காகச் சொல்லின? அவற்றின் அடிப்படை என்ன? என்பதை விவரித்துச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். அவ்வாறு காரண-காரியங்களைச் சொல்ல முற்படும்போது நாம் கூறியுள்ள வைணவ சித்தாந்தம் தானே உருவாகி விடுகிறது. கம்பன் வைணவனாக இருப்பதால் சற்பாத்திரங்கள் கூறும் வைணவக் கருத்துக்களை அவன் கருத்தாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.
கம்பனைப் பற்றிய இந்த ஆராய்ச்சியை ஒப்புக் கொள்ளாதவர்கள் உடனே இதனை நிராகரித்து விடாமல் நாம் சொல்லியுள்ள காரணங்களை விருப்பு வெறுப்பின்றிச் சிந்திக்க
வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி: "கம்பன் உணர்த்தும் பரம்பொருள் நிலை" - சென்னைக் கம்பன்
கழகம்.
2వాడనాడ
K
N
பரம்பு இகந்த
வப்பு எங்கும்
புபோல்,
ம் உளன் என்ப
ம்
ழப்ப, கோல் துறந்து,
இமையோர் த கழல் வேந்தே.

Page 85
V Va
ம்பன் உலக மகாகவி கவிச்சக்கரவர்த்தி என்றுக அவன் ஒருவன் என்று தற் பதவியை அவன் அடைவ துணைபுரிந்திருத்தல் வேண்டும். முதலாவதி சக்தி முதலியன; இவற்றை அடுத்துச் செய பல்வேறு நிலைகளும் பல நூற்றாண்டுகள் நிலைகளில், சில கூறுகள் துணையாய் ஆ
{
வேண்டும். துணையை வளம்படுத்த நிலையிட்டிருக்கவேண்டும். இங்கே தமிழ் க அவன் கையாண்ட தமிழினது இயல்பும் பற்றி
போலி இலக்கியங்கள் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கியங்க தமிழைக் குறித்துக் கூறுவதன் முன்னம் சி அவசியம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு கொண்டிருந்தனர். இந்த ஆவலைக் கண் சுமத்தலாயினர். அவற்றுள் ஒன்றுசெங்கோ என்ற யாப்பு வகையில் இயன்றதாம்! டெமி இக்கற்பித நூலையும் இதன் தமிழையும் தமி அகழ் பரிசோதனையில் கிடைத்த வரிக் கே உள்ளன என்று செந்தமிழ்ப்பத்திரிகையில் ஒ வேறு சான்று இல்லை. பண்டை எழுத்தார அறிஞர் கொடுத்துள்ள குறள்-பாக்க துணியமாட்டார்கள். இவ்வகை ஆராய்ச்சிஅறவே ஒதுக்குதல் வேண்டும்.
சங்க நூல்களுக்கு முற்பட்ட தமிழ்சங்க நூல்களுக்கு முன் தமிழ் இலக்கியங்க முதலிய செய்யுளின் வகைகளைக் குறிப்பி( அவை சங்க நூல்களுக்கு முற்பட்டன எ அறியப்படாமையால், அவற்றையும் ஈண்டு ந
 
 

பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை
ம்பனுக்கும் பட்டஞ் சூட்டினர் நம் மூதாதையர்; உலக மகா கவிகளுள் காலத்து அறிஞர்களுள் ஒரு சாரார் மதிப்பிடுகின்றனர். இப்பெரும் தற்கு எத்தனையோ அரிய இயல்புகளும், பக்குவ நிலைகளும் நாக, கம்பனுக்கு இயற்கையிலே அமைந்த பேரறிவு, பெருங் கவித்வ ற்கையில் அவன் பெற்றுள்ள பெருங்கல்வி, கேள்வி முதலியன. இப் ாக நிகழ்ந்து வந்த பரிணாமங்களின் விளைவுகளாகும். இந்த லுமைந்திருக்கவேண்டும்; வேறுசில பகையாய் எதிர்த்திருக்கவும் தி, பகையைப் புறங்கண்டு, தனது பேராற்றலை அவன் ாலக்கிரமத்தில் வளர்ந்து கம்பன் காலத்தே பக்குவமுற்ற வரலாறும்;
க் கூறுவதே எனது நோக்கமாகும்.
ளில் மிகப் பழமையானவை சங்க நூல்களாம். இவற்றில் காணும் ல போலி இலக்கியங்களைக் குறித்துச் சில சொல்ல வேண்டுவது முன்னர்; பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மீது நம்மவர் பேராவல் டு சிலர் புதியனவாகப் புனைந்து நம் மூதாதையர்கள் தலை மீது ன்றரைச் செலவு என்பது. இதுதலைச்சங்கத்துநூலாம்!தாப்புலிப்பா 16 அளவில் 8 பக்கங்கள் கொண்டதாய் இது வெளியிடப்பட்டது. ழ் அறிஞர்கள் ஒப்பியதே இல்லை. இங்ங்ணமே மொஹஞ்சதரோவின் ாவைகளைத் தமிழாகக் கொண்டு, அவற்றில் சில குறள் -பாக்கள் ர் அறிஞர் எழுதினர். அவர்தம் கொள்கைக்கு அவர்தாமே சான்று? ாய்ச்சியாளரில் எவரும் அதனை ஒப்புக் கொண்டது இல்லை. அவ் ளை நோக்குபவர்கள் அவற்றைத் தமிழென்று சொல்லவும் வேடிக்கைகளை உண்மையெனக் கண்டு மயங்கலாகாது. இவற்றை
இலக்கியம் ள் இல்லை என்று எண்ணுவது தவறு. தொல்காப்பியர் பண்ணத்தி கிென்றனர். அவை இக்காலத்து மறைந்து விட்டன. பெரும்பாலும் ன்று கொள்ளலாம். அவற்றைக் குறித்து யாதொரு விவரமும் ாம் ஒதுக்கி வைக்கவேண்டியதே.
69

Page 86
மிகப் புராதனமான தமிழின் இயல்புகள் யாவை என்று இனி நோக்குவோம். இவ் இயல்புகளை உணர்வதில் செய்யுளில் பொருளை அறவே ஒதுக்குதல் வேண்டும். செய்யுள் வகையையும் சிறிதளவுதான் கவனித்தல் கூடும். தமிழின், போக்கைச் செய்யுள்வகை ஓரளவு நெறிப்படுத்துமாதலின், ஒரு பழந்தமிழ்ச் செய்யுளை எடுத்துக் கொள்வோம். இச்செய்யுள் புறநானூற்றிலே வருவது :
யாழொடுங் கொள்ளா, பொழுதொடும் புணரா, பொருளொடும் வாரா ஆயினும் தந்தையர்க்கு அருள்வந்தனவால் புதல்வர்தம் மழலை; என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடிமதில் அரண்பல கடந்த நெடுமான் அஞ்சிநீஅருளன் மாறே (92)
ஒளவையார் பாடிய இப்பாட்டின் தமிழைக் கூர்ந்து நோக்கினால் ஒரு சில தனி இயல்புகள் புலப்படுகின்றன. முதலாவது, இதில் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களே உள்ளன; ஒருவேளை அரண்’ என்பது வடமொழித் தொடர்பு உடையதாயிருக்கலாம். வேறுவட சொல் ஒன்றும் காணப் படவில்லை. இரண்டாவதுஅன்ன’என்பதனாற் பெறப்படும் உவமம் தவிர, பிற அணியாதும் இல்லை. மூன்றாவதாக, இசையோடு பாடப் பெறுந்தன்மை இங்குக் காணுமாறு இல்லை. நான்காவது, தமிழுக்கு இயல்பாய் அமைந்த நேரிய பெருமித நடையோடு சொற்கள் செல்லுகின்றன. ஐந்தாவதாக, இயற்கையான பேச்சிலுள்ள இயற்கையோசையோடு (speech-rhythm) செய்யுள் நடை அமைந்துள்ளது. ஆறாவதாக, சொல்லும் பொருளும் ஒருங்கே இயைந்து சென்று, பொருள் முடிந்த இடத்துச் சொல்லும் முடிந்து நிற்கிறது; உயிர் நிலையாயுள்ள பொதுக் கருத்திற்குத்தக்க சொற்களே செய்யுளில் பயின்று வந்துள்ளன.
இங்கே குறித்த இயல்புகள் சங்கச் செய்யுள்கள் அனைத்திலும் காணப்படும் என்பது எனது கருத்தன்று. பெரும்பான்மை பற்றியே இங்குக் கூறியது. குறைந்த அடிகளையுடைய செய்யுள்களில் இவ் இயல்புகள் பெரிதும் காணப்படும். நிமிர்ந்த அடிகளையுடைய செய்யுள்களில் இவை ஒரளவில் தான் உள்ளன; சங்கச் செய்யுள்களில் மிகப் பழமையானவை தோன்றிய காலம் கி. பி. முதல் இரண்டு நூற்றாண்டுகள் எனக் கொள்ளலாம். இக்காலத்திலேயே இச் செய்யுளில் வடசொற்கள் அருளி வந்துள்ளன. ஒட்டு முதலிய ஒரு சில அணிகளும் அங்கங்கே காணலாம்.
இசையோடு அமைந்த பாடல்கள்
வெகு விரைவிலே, பாடப்பெறும் தன்மை தமிழ்ச் செய்யுள்கள் சிலவற்றிற்கு அமைவதாயிற்று. கலிப்பா இங்ங்ணம் இசையோடு பாடப்பெறுந்தன்மை வாய்ந்ததால், இதனை முரற்கை என நம் மூதாதையர்கள் வழங்கினர். ‘செய்யுள் வரலாற்றில் அகவலும் வெண்பாவும் முற்படத் தோன்றியன. கலியும் வஞ்சியும் பிற்பட்டு எழுந்தன’ எனச் சில ஆராய்ச்சியாளர் கருதுவதும் மேற்கூறிய நெறியே நோக்கினாலும் உண்மையாதல் காணலாம். செய்யுள் இனங்களில் தாழிசை என்ற பெயரும் இங்கு
அகில இலங்கைக் கம்பன் கழகம்

கூறியதனையே வற்புறுத்தும். கலித்தொகையில் தாழிசைப் பகுதிகள் எல்லாம் இசையோடு நன்றாகப் பாடுவதற்கு அமைந்த பகுதிகளேயாம். உதாரணமாக,
ஆய்துரவி அனம்என
அணிமயிற் பெடைஎனத் தூதுணம் புறவெனத்
துதைந்தநின் எழில்நலம் மாதர்கொல் மான்நோக்கின்
மடநல்லாய் நிற்கண்டார்ப் பேதுறுரம் என்பதை
அறிதியோ ?அறியாயோ ?
என்பதைப் பாடி நோக்குக. நம் முன்னோர்கள் மிகப் பூர்வகாலந்தொட்டே இசை முதலிய கலைகளைப் போற்றியவர்கள். யாழ் முதலிய இசைக்கருவிகள் மிகப் பழைய தமிழ் நூல்களிலேயே காணப்படுகின்றன. ஆடுதலும் பாடுதலும் அவர்கள் மனத்தைக் கவர்ந்தன. அரசர்கள், குறுநில மன்னர்கள் முதலியோர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்துவந்த ஓர் இனத்தவர் முற்காலத்து இருந்தனர். பாணர் என்று இவர்களை வழங்கி வந்தனர். இவர்கள் பாடிய இசை வகை அதுபற்றி அறிய விரும்புவோர்க்கு அங்கங்கே குறிப்புக்கள் கிடைக்கின்றன. இசைகள் பண்’ என வழங்கி வந்தன. ஐந்து நிலம் பற்றி இவை வகைப்படுத்தப்பட்டன. பண்டைப் பழங்காலத்தில் இந்த இசைகள் விரிவின்றி எளியனவாக அமைந்திருத்தல் வேண்டும்.
வடமொழிக் கலப்பு
இக்காலத்திற்குப் பின் வடநாட்டு மக்களது கூட்டுறவு பெருகத் தொடங்கிற்று. இதன் பயனாக வட சொற்கள் தமிழில் பெருகத் தொடங்கின. புது வரவினால் விளைந்த நன்மைகளை இனி நோக்குவோம்,
வடமொழிக் கலப்பினாலே தனித் தமிழினுடைய ஒலித்தன்மை நெகிழ்ச்சியுற்றது. தமிழ் மொழியின் ஒலி வேற்று மொழியின் ஒலியோடு நன்கு இயைந்து செல்ல முயன்று, தானும் சிறிது வேறுபட்டு, வேற்றொலியையும் சிறிது வேறுபடுத்தி, இரண்டும் நெருங்கி இழைந்து ஒன்றுபட்டன. ஒன்றுபட்ட இந்த நிலையைக் கலவை - உலோகத்திற்கு ஒப்பாகச் சொல்லலாம். உலோகங்கள் தனித்திருக்கும் நிலையில் அத்தனையாகப் பயன்படுவதில்லை. ஆனால் பிற உலோகங்களோடு கலந்து நிற்கும் கலவை நிலையில் பல புதுத் தன்மைகளைப் பெற்றுப் பல கருவிகளைச் செய்வதற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இதனைப் போன்றே தனி நிலையிற் காட்டிலும் கலப்பு நிலையில் தமிழ்மொழி முன்னையினும் சிறந்ததொரு கருவியாக மாறிற்று. புற-உலகப் பொருள்பற்றிய கருத்துக்களோடு (objective) அக - உலகப் பொருள்களை (subjective) வெளியிடுந் தன்மையும் இக்கலப்பு நிலையில் பெருக்கமுற்றது.
பண் அமைந்த பாடலின் தோற்றம்
இங்ங்னமாக உணர்த்தும் ஆற்றல்மிகுந்தது ஒரு நன்மை; பிறிதொரு நன்மை ஒலியிழைவினால் உண்டாகிய இசை மிகுதி.
- 70

Page 87
இப் பிற்கூறிய தன்மையால் இசை கலந்த பாட்டுக்கள் தமிழில் தோன்றுவதற்குத் தக்கதொரு வாய்ப்பு ஏற்பட்டது. எளிய முறையிலிருந்த பண்கள் இப்பொழுதுமுன்னையிலும் விரிவடைந்து சில பல நயங்களுடையவாய் வளர்ச்சியுற்றிருக்க வேண்டும். கற்று வல்லோன் ஒருவன் பாடப் பிறர் கேட்டு இன்புறும்படியாய் இவைகள் அமைந்தன. பரிபாடல் - செய்யுட்கள் இங்ங்ணம் பிறந்தனவே. இப் பாடல்களுக்குப் பண் அமைத்தவர்கள் முதலியோர்தம் பெயர்கள் நமக்கு அகப்படுகின்றன. பண்களின் இயல்புணர்ந்து செய்யுள்களை அவற்றிற்கிசைய இசையூட்டினமையால், பெரியதோர் வேறுபாடு தமிழ் மொழியில் ஏற்பட்டது. தமிழ் முறுக்கவிழ்ந்து நெகிழ்ச்சியுற்றது.
மெய்யாப்பு மெய்யார மூடுவார், வையத்துக் கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் ஆடுவார் பாடுவார், ஆர்ப்பார் நகுவார் நக்கு ஒடுவார் ஒழத் தளர்வார் போய் உற்றவரைத் தேடுவார் ஊர்க்குத் திரிவார்இலராகிக் கற்றாரும் கல்லாதவரும் கயவரும் பெற்றாரும் பெற்றாற் பிழையாத பெண்டிரும் பொற்றேரான்தானும் பொலம்புரிசைக் கூடலும் முற்றின்று வையைத் துறை
(பரிபாடல் - மாநிலந். 19-27) இச்செய்யுட் பகுதியைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்றனோடு ஒப்பிட்டால் இங்கே கூறியதன் உண்மை அறியலாம்.
பரிபாடல்
இந்நெகிழ்ச்சியுடன், உலக வழக்கிலிருந்த சொற்களும் சொல் வடிவங்களும் செய்யுட்களில் இடம் பெறலாயின. உதாரணமாக, ஈதா (8, 60) தோழம் (வானாரெழிலி,70), தோக்கை (22,49) முதலிய சொற்களையும் என்பாய் (8,62) இதனை (1812), இதுவோ (8, 63) முதலிய சொல் வடிவங்களையும், ஏறுமாறு (18, 8) முதலிய மரபுத் தொடர்களையும் பரிபாடலிற் காணலாம். இதன் காலம்சுமார் கி.பி. 7ஆம் நூற்றாண்டெனக் கொள்ளலாம்.
வைதிக சமயக் கிளர்ச்சி
ஏறத்தாழ இந்நூற்றாண்டிலேயே, தமிழ் நாட்டில் புதியதொரு கிளர்ச்சி தோன்றத் தொடங்கி இந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் உச்ச நிலையை அடைந்தது. சைவ வைஷ்ணவங்களாகிய வைதிக சமயக் கிளர்ச்சியே நான் இங்குக் கருதுவது. சங்க காலத்தின் தொடக்கத்திலேயே வைதிக சமயத்தின் தொடர்பு தமிழ் நாட்டில் இருந்தமை வெளியாகின்றது. பாண்டியருள் பல்யாக சாலை முதுகுடுமிப்பெருவழுதியும், சோழருள் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் இதற்குச் சான்று பகர்வர். சேரருள் செல்வக் கடுங்கோ வாழியாதன்,
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அருங்கலம் ஏற்ப, நீர்பட்டு
இருஞ்சேறு ஆடிய மணல்மலிமுற்றம் (54) உடையவன் என்று பதிற்றுப்பத்து உரைக்கும் ஆகையால் இவனும் வைதிகப்பற்றுக் கொண்டவனே. பெளத்த ஜைனமதங்களும் தமிழ்
கம்பன் மலர் - 2000

நாட்டில் அக்காலத்தில் இடம்பெற்றிருந்தன. இளம்போதியார், உலோச்சனர் முதலிய பெயர்கள் இதற்குச் சான்றாம்.
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியும்
(மதுரைக்காஞ்சி, 465-467)
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையும், சாவகர் பழிச்ச.
ஆன்று அடங்கு அறிஞர். நறும்பூஞ் சேக்கையும்
(மேற்படி 475-487)
என்பன முறையே பெளத்தப் பள்ளியையும் ஆருகதப் பள்ளியையும் குறிப்பன. ஆனால் இம்மதங்கள் தொடக்கத்தில் அருகி வழங்கி, அரசர்கள் வாழ்ந்த தலைநகரங்கள் சிலவற்றில் பின்பற்றப்பட்டன. அக்காலத்து இவை ஒன்றோடு ஒன்று வாதத்தில் மாத்திரம் இகலி வந்தன. தமக்கு அரசாங்கத்தையும் குடிஜனங்களையும் துணைக் கொண்டனவாகத் தெரியவில்லை. சுமார் கி. பி. 650-இல் இந்நிலைமை மாறிவிட்டது. இம்மதங்களைத் தழுவிய தமிழ் மக்களின் தொகை வரவர மிகுதியாயிற்று. வடநாட்டிலிருந்து வைதிக சமயிகள் திரளும், பிற சமயிகள் திரளும் கால அடைவில் அதிகரித்தன.
மதப்போராட்டம்
இவர்களுக்கும் இவர் மதங்களுக்கும் அரச பலமும், குடியினர் பலமும் அவசியம் என்று தோன்றி விட்டது. மதப் போராட்டம் தொடங்கியது. வைதிக சமயம் மேலோங்கியது. நாடு முழுவதும் வைதிக சமயப் பெரு வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. அரசர்களும் குடிகளும் இதனை ஆதரிக்கத் தொடங்கினர். முடிவில் இச்சமயம் இராசாங்க சமயமாகப் போற்றப்பட்டது.
தேவாரத் தமிழ்
இச் சமயத்திற்குரிய ஆலயங்கள் தமிழகத்தில் பல இடங்களிலும் தோன்றிச் செழிக்கலாயின. சமயாச்சாரியர்களாக அப்பர், சம்பந்தர் முதலினோர் விளங்கினர். இவர்கள் அங்கங்கே உள்ள கோவில்களுக்கு அடியார்களின் திரள்களோடு சென்று தரிசனம் செய்து, திருப்பாடல்கள் இயற்றி, அப் பாடல்களைப் பண்ணில் அமைத்து யாழிலே பாடி வந்தனர். இப்பாடல்களை உடன் சென்ற அடியார்களும் திரள் திரளாக நின்று பாடிப் பரப்பினர். பண்ணோடு இயைந்த பாடல்கள் தமிழ் நாடெங்கும் முழங்கி, பண் முறையும் தமிழிசையும் பெரிதும் வளர்ச்சியுற்றன. வைதிக சமயங்கள் வடநாட்டிற்குரிய ஆதலாலும், அவற்றைத் தமிழ் நாட்டிலேயே செழிக்கச் செய்தோர் பெரும்பாலும் சம்பந்தர் முதலிய அந்தணர்கள் ஆதலாலும், வடமொழி நூலுணர்ச்சி தமிழ்நாட்டில் பெருகி வந்த காரணத்தாலும், வடசொற்கள் மிகுதியாகத் தமிழில் புகுந்தன. இசையின் இனிமைக்கும் இச்சொற்கள் மிகப் பயன்பட்டிருக்க வேண்டும். தமிழ்ச் சொற்களில் முன்னையினும் அதிக வேறுபாடுகள் உண்டாயின. மொழியும் மிகமிக நெகிழ்ந்து பொதுஜனங்கள் எளிதில் உணரத்தக்க பக்குவநிலையை
- 7

Page 88
அடைந்தது. எளிமையும், உணர்ச்சி வேகமும் இசையினிமையும் தமிழின் சிறப்பியல்புகளாக முடிந்தன. ஓர் உதாரணம் காட்டுகிறேன்.
ஈண்டுச் செய் நல்வினை ஆண்டுச்சென்று உணஇயர் உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனென் (புறம், 174)
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் (புறம், 214)
என வருவனவற்றல் எளிமையும் உணர்ச்சி வேகமும் இல்லாமை உணரலாம். இதற்கு மாறாக,
மாசில் வீணையும் மாலை மதியமும்,
விசு தென்றலும் வீங்கிளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே (5,90, 1)
என்ற அப்பர் திருவாக்கிலே பேரின்ப வெள்ளத்தில் முழுகித் திளைக்கும் உணர்ச்சி உவமானங்களின் மூலமாக எளிதில் புலப்படுகிறது. இத் தேவாரத் தமிழின் எளிமையும், உணர்வு ததும்பும் தன்மையும், சங்கத் தமிழின் செவ்விய நேரியபெருமிதமும், ஒருங்கு அமைந்து, பண்டைத் தமிழின் அழகிற்குப் பேரெல்லையாக விளங்குவது தமிழ் வேதாமகிய திருக்குறள்.
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (100)
என்ற திருக்குறளில் மேற்காட்டிய இயல்புகள் நன்கு திகழ்வனவாதல் காணலாம். வடநூற் கருத்துக்களும் வடசொற்களும் மிகுதியாகப் பயின்ற பல செய்யுட்கள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் சிற்சிலவற்றிலும் தேவாரம் முதலிய அருளிச் செயல்களிலும் உள்ளன. உதாரணமாக,
மத்த மயில்அன்ன சாயலாய் மன்னியசீர்த் தத்தன் சகோடன் சவுத்திரன் - புத்திரி புத்திரன் பொய்யில் கிரிதன் அபவித்தன் இத்திறத்த எஞ்சினார் பேர்
என்னும் ஏலாதிச் செய்யுளையும் (31)
மங்கலக்குடி யீசனை மாகாளி வெங்க திர்ச்செல்வன் விண்ணொடு மண்ணும் நேர் சங்கு சக்கர தாரி சதுர்முகன் அங்கு அகத்தியனும் அர்ச்சித் தாரன்றே என்னும் தேவாரப் பாடலையும் (5; 73; 3) நோக்குக.
காவியத் தமிழ்
தேவார காலத்தை (7,8 ஆம் நூற்றாண்டுகளை) அடுத்துத் தமிழிற் புகுந்து அதனை இயக்கி வந்த சில சக்திகளை இனி நாம் கவனிக்கவேண்டும். வடமொழி உணர்ச்சி தமிழ்வாணர்களிடையே மிகப் பரந்துவிட்டது. இதன் பயனாகச் செய்யுளினங்களும் அணிகளும் மிகுதியாகப் பெருகின.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

விருத்தங்கள் தமிழில் புகுந்ததை இங்கே சிறப்பாகச் சொல்லுதல் வேண்டும். பண்பற்றி எழுந்த தேவாரப் பாடல்கள் இவ் விருத்தங்களுக்குத் தோற்றுவாய் செய்து விட்டன. விருத்தங்கள் புகவே, காவியங்களும் புகுந்தன. இக்காவியங்களில் தமிழ் ஒரு புதிய இளமையைப் பெற்றுவிட்டது. மிதமாக வடசொற்களைக் கலந்து, ஓசையையும் இனிமையையும் தலை சிறந்த இயல்புகளாகக் கொண்டு, புதிய சுவை ஒன்றைத் தமிழுக்கு இக்காவியங்கள் ஊட்டின. செய்யுட் பொருள் தமிழ் மொழியின் இனிய ஓசை நயத்தினுள்ளே மறைந்து போயிற்று, இந்த ஒசையின்பம் கற்போர் நெஞ்சை அள்ளின. இனிமையிற் சிறந்த தமிழ்ச் சொற்கள், இளமையிற் சிறந்த வடசொற்கள், இன்பினால் இழைத்த செஞ்சொல் - தொடர்கள். இவை இத்தமிழுக்குப்புத்தழகு தந்தன. தமிழ்நடை என்னும் ஓர் புத்துணர்ச்சி தனித்து விளங்குவதாயிற்று. சூளாமணி, சிந்தாமணி முதலிய காவியங்கள் இதற்குச் சான்று U505ts).
மாம்பொழில் மருங்கு குழ்ந்த
மணிச்சிலாதலத்து மேலால் காம்பழிபணைமென் தோள்மேல்
கருங்குழல் துவண்டு விழப் பூம்பொழில் விளங்கத் தோன்றும்
பொன்னிதழ் மறிந்து நோக்கித் தேம்பொழி செய்யுளின்பம்
செவிமுதற் சேர்த்து வாரும்
(சூளாமணி, சுயம் 85)
பொழிந்துகு காதல் பூண்டு
புல்லுகை விடாது செல்லக் கழிந்தன இரண்டு திங்கள்
காளையும் மற்றோர்நாளால் பிழிந்துகொள்வனைய பெண்மைப்
பெய்வளைத் தோளிதன்னோடு அழிந்துவிழருவிக் குன்றில்
ஆய்மலர்க் காவு புக்கான்
(சிந்தாமணி, 1503)
பழமை பற்றிய காவியங்கள் ஒரு சிலர் இங்ங்ணம் புதுமையில் மனம் விரைந்து நின்றனர். வேறு சிலர் பழமையிலே மனத்தைச் செல்ல விடுத்து, பழைய சங்கத் தமிழை நெகிழ்வித்து, காவியங்கள் இயற்றினர். இவற்றுள் சிறந்தன பெருங்கதையும், சிலப்பதிகாரமுமாம்.
பன்மணி விளங்கும் பள்ளிக் கட்டிலும் பொன்னின் அடைப்பையும் பூரண கலசமும் கவரியும் கடகமும் கதிர்முத்தாரமும் நிகரின் மாண்கல நிதியொடு நிறைந்த ஆரியச் செப்பும் யவனமஞ் சிகையும்
(உஞ்சை 32,72-76)
என்பதுபெருங்கதை. இங்கே வடமொழியும் தமிழும் தம்மின் இயைந்து இன்னோசைமிக்கு அழகுறச் செல்வதுஉணரலாம். இந்நெகிழ்ச்சியும் இனிமையும் தமிழ் தனித்து இயங்குங் காலத்தும் பதம் முற்றி
விளைந்து இன்பம் பயக்கின்றன. உதாரணம் வருமாறு:
72

Page 89
இடந்தொறும் பல்கிய மன்னர்போல
வரம்பில் பன்மீன் வயின் வயின் விலங்கிப்
பரந்துமீது அரும்பிய பசலை வானத்து
(உஞ்சை 33, 48-50)
வரிப்பாடல்கள்
இப்பெருங்கதை வட நூலின் வழித் தோன்றிது. இதிலுள்ள நயங்களெல்லாம் அமையத் தமிழ்க் கதை ஒன்றைத் தழுவி இயற்றியது சிலப்பதிகாரம். இக்காப்பியத்தில் இரண்டு சிறப்புக்கள் தனிப்பட் எடுத்துக் கூறத்தக்கன. செய்யுட் பொருளுக்கும் உணர்ச்சி ஆற்றலுக்கும் தக்கபடி தமிழும் தமிழ் நடையும் அமைந்து, பல இடங்களிலும் அழகு ததும்பி இன்பம் விளைக்கின்றன. வழக்குரை காதையை எடுத்துக் காட்டாகக் கூறலாம். பிறிதொரு சிறப்பு வரிப்பாட்டுக்களைப் பற்றியது, இவை தேவாரம் போன்று செயற்கையாகப் பண் ஊட்டியன என்று கருதமுடியவில்லை. இயற்கையிலே இசையின்பமும் உணர்ச்சி நலமும் உள்ளன என்று தோன்றுகின்றன. தமிழ்க் கடலிலே விளைந்து உலகு முழுதும் போற்ற விளங்கிய ஒண்முத்துக்கள் போன்று, தமிழ் நாட்டுப்புறங்களில் விளைந்து பழுதறத்திருந்திய இன்னிசை நன்முத்துக்களென இவற்றைக் கூறலாம். உதாரணமாக,
தம்முடையதண்ணளியுந் தாமுந்தம் மான்தேரும் எம்மைநினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென்இணர அடும்புகாள் அன்னங்காள்! நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் அன்னம் துணையோடு ஆடக்கண்டு நென்னல் நோக்கிநின்றார்.அவர்நம் பொன்னேர்சுணங்கிற் போவார்அல்லர்
(சிலப். 7,32, 45) என்பனவற்றைப் பாடிப் பாடித் தன்னை மறக்கச் செய்யும் தமிழ் இன்பத்தை நுகரலாம்,
சோழர் மொழி பேணியது
இக்காவியங்கள் தோன்றிய காலத்திற்குச் சிறிது முன்பின்னாக, பல்லவர்களும் பிற்சோழர்களும் தமிழ்நாட்டில் அரசு புரிந்து வந்தார்கள். சோழர்கள் தங்கள் வெற்றித்திறத்தால் தங்கள் இராச்சியத்தைப் பெருக்கி வந்தனர்; முடிவில் ஏகாதிபத்தியமும் பெற்றார்கள். வட நாட்டிலும் இவர்கள் வெற்றிக் கொடி பரவியது. கங்கை, கடாரம் முதலிய பிரதேசங்களிலும் கடலுக்கு அப்பாலுள்ள சுமத்ரா, ஜாவா முதலிய தீவாந்தரங்களிலும் இவர்கள் தம் சேனா பலத்தால் புகழோடு விளங்கினார்கள். கல்வியைப் போற்றி வளர்த்தவர்களுள் இவர்கள் முதன்மைப் பதவி பெற்றார்கள். பாரபசுஷ்மின்றித் தமிழையும் வடமொழியையும் பேணி வந்தார்கள். இரு மொழிகளிலும் பல துறைகளிலே நூல்கள் வெளிவந்தன. தமிழ்க் கவிவாணர்கள் இவர்கள் புகழைக் கவிகளில் அமைத்துப் போற்றினர். கலம்பகம், பரணி முதலிய பிரபந்தங்கள் தோன்றத் தொடங்கின. சங்கச் செய்யுட்கள் பெரும்பாலும் அரசர் முதலியோரைப் போற்றின; ஆதலால் அவர்கள் எளிதில் பொருள் உணருமாறு ஒரு சீரிய நேர்மை அவற்றில் பாய்ந்திருந்தது. தேவாரம், நாலாயிரம் முதலியன மக்கள் திரளாகக் கூடிப்
கம்பன் மலர் - 2000

பண்ணுடன் பாடுதற்கு அமைந்தன; உணர்ச்சி வேகத்தையே தம் தலைமை நோக்கமாகக் கொண்டன. காவியங்களோ எனில் கல்வியாளர்க்கே இயற்றப்பட்டன; ஆதலால் பொது மக்களுக்குப் பொருள் உணர்தற்கு அரியவாயின. பிரபந்தங்கள், அரசர், வள்ளல் முதலியோர் பொருட்டுத் தோன்றின; எனவே இவற்றில் பயின்ற தமிழிலும் சங்கச் செய்யுட்களிற் போன்று ஒரு நேர்மை காணப்பட்டது. ஆனால் கற்றுவல்லோர்களும், புலவர்களும் நிரம்பிய அரசவையிலே ஆங்குள்ளோர் பலரும் வியந்து கொண்டாட இக்கவிகள் பாடப்பெற்றன. ஆகவே கவிஞர் தமது கல்வி ஆற்றலைக் காட்ட வேண்டிய சமயங்களும் அடிக்கடி நேர்ந்தன. இங்ங்ணம் தோன்றிய தமிழ் கல்வியாளர்களும் உணர்தற்கு அரிதாய் முடிந்தது.
தமிழில் செயற்கை நலம் அதிகரித்தல்
பலவகை அணிகளையும் கவிஞர் கையாண்டனர். இயற்கைத் தமிழைக் கைவிடுத்துச் செயற்கைத் தமிழைப் போற்றுவாராயினர். தமிழும் செயற்கை நலன்கள் மிகுந்து வளரலாயிற்று; எனினும் இயற்கை நலத்தைப் பேணியவர்களும் அருகியிருந்தனர். ஆதலால் இயற்கை நலன்கள் ஒருபாலும் செய்கை நலன்கள் ஒருபாலும் தமிழில் செழித்து வரலாயின. அணி நூலார் இவ்விருவகை நலன்களையும் முறையே வைதர்ப்ப நெறி கெளடநெறி என்றும் கூறுவர். வைதர்ப்ப நெறி ஒரு சிலராலும், கெளடநெறி வேறு சிலராலும் போற்றப்பட்டன. கெளடநெறி முதன்மை பெற்று வந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
சொல் அதிகமாதல்
கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் பக்தி - இயக்கம் தமிழ் நாட்டில் புகுந்தது என்று கூறினேன். அவன் வழியாக வந்து சேர்ந்த ஒரு விளைவை இங்கே சொல்ல விரும்புகிறேன். பக்தி எத்தனை கனிவுற்றுச் சிறந்திருந்தாலும், அது ஒழுக்கமென்னும் நன்மரத்தில் உண்டாக வேண்டுமென்று நம் முன்னோர்கள் கொண்டனர். இதன் பயனாக ஒழுக்க நூல்கள் தோன்றின. வடமொழி ஸ்மிருதிக் கருத்துக்களும் ஆசாரம் பற்றிய நியதிகளும் தமிழ் நாட்டில் கைக்கொள்ளப்பட்டன. தமிழ் மொழியும் இவற்றால் சிறிது விரிவு பெற்றது. நல்லொழுக்கமேயன்றி, உலக இயல்பு, இறைவன் இயல்பு உயிர் இயல்பு என்பனவற்றைக் குறித்த தத்துவ விசாரணைகளும் பக்தி விளைவுக்கு உரந்தருவன என்று நம்மவர்கள் கருதினார்கள். இதனால் பலவகையான சமய சாஸ்திர உணர்ச்சியும் அவசியமாயிற்று. இச்சாஸ்திரங்கள் வடமொழியிலிருந்தமையால் இவற்றைக் கற்பது அறிஞர்கள் தமது கடமையெனக் கொண்டனர். இவற்றின் மூலமாகச் சாஸ்திரங்கள் பலவற்றிற்குரிய வடசொற்கள் தமிழில் இடம்பெறலாயின. இங்கே கூறிய இருவகைச் சொற்களும் தமிழுக்கு இன்றியமையாதனவாய் முடிந்தன.
இச் சொற்களோடு அமையாதபடி, மேலும் மேலும் வடசொற்களே வந்து பெருகிக் கொண்டிருந்தன. இதன் காரணங்கள் எளிதில் ஊகிக்கத்தக்கன. வடமொழி மிக்க செல்வாக்குடையதாய் நம் நாட்டில் அமைந்தது. கணிதம் முதலிய பல சாஸ்திரங்களும் அம்மொழியில் இருந்தன. பல்வேறு மதங்களுக்குரிய பிரமாண நூல்களும் பிறவும் அம்மொழியிலேயே அமைந்திருந்தன. தமிழ் நாட்டில் மட்டுமன்றிப் பாரத தேசம்
-73

Page 90
முழுமையிலும் அது போற்றி வளர்க்கப்பட்டது. வழக்கில் இல்லாமையால் அது தெய்வ மொழியென்று கருதப்பட்டது. எல்லா மொழிக்கும் அது தாய்மொழி எனவும் எண்ணத் தொடங்கி விட்டனர்.
கரை கடந்த வட சொற் பெருக்கு
வீரசோழியம் முதலிய நூல்களும் தோன்றின. தமிழ் முதலிய மொழிகளில் வட சொற்களைச் சேர்த்துக்கொள்வது பெருமையெனவும் கருதினர். இச்சொற்கள் நாளடைவில் மேன்மேலும் தமிழில் அதிகரித்து வந்தன. இவற்றை அளவுக்கு மிஞ்சிக் கலந்து புதியதொரு மொழி நடையையும் வகுத்தனர். இதுதான் மணிப்பிரவாள நடை என்று சொல்லுவது. வசனத்தில்தான் இந்நடை பெரும்பாலும் வழங்கி வந்தது. கி. பி. 10 முதல் 15-ஆம் நூற்றாண்டு முடிய, இந்நடை தமிழ்நாட்டில் பிரபலமாக வழங்கி இருந்தது. சிலாசாசனம் ஒன்றில் ஒரு செய்யுள் (தஞ்சை ஜில்லா, செம்பியன் மகாதேவியில் முதல் இராஜராஜனது மூன்றாம் ஆண்டில், அதாவது கி. பி 998-இல் பொறித்தது) இந் நடையில் உள்ளது. இதைத் தவிர வேறு எடுத்துகாட்டு இல்லாமையால் தமிழ்ச் செய்யுளில் இந்நடை இடம் பெறவில்லையென்று துணிதல் பொருந்தும். தொடக்கம் முதற்கொண்டே இந் நடையைத் தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை. பிற்காலத்தில் இது அறவே வழக்கொழிந்து விட்டது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியவற்றில் இந்நடை புகுந்து அம் மொழியிலுள்ள செய்யுட்களிலும் ஏறி, முடிவில் அம்மொழிகளையே கவளிகரித்துவிட்டது.
வடசொற் பெருக்கைத் தமிழ் எதிர்த்து வெல்லுதல்
தமிழ்மொழி ஒன்றுதான் வடமொழிப்பெருக்கை எதிர்த்து நின்று அணையிட்டுத் தடுத்தது. எனினும், பாரத தேசம் முழுமைக்கும் கலைப் பண்பு ஒன்றே எனக் காட்டுதற்குரிய இயல்புகள் சிலவற்றை இந்நடையின் மூலம் தமிழ் பெற்றது. தமிழின் சொல்வளம் சிறந்தோங்கியது; தன்னியல்பு குன்றாது தமிழின் மேனியும் செழித்தது. தொடர்ந்து பெய்த பெரு மழையால் பெருக்கெடுத்து கரை புரண்டு சென்று, மிகுதியும் கலங்கி, பின் அணையிட்டுத் தடுத்து வெள்ளத்தைப் பிரித்து விடுதலாலும் காலக்கிரமத்தில் நீர் வடிந்துவிடுதலாலும் பெருக்கு நீங்கி, குடைந்தாடுதல் முதலிய பயன் பெறுதற்குத் தக்கபடி அளவு சுருங்கி, தெளிவுற்று இனிதுசெல்லும் ஆறுபோன்றதாயிற்று நமது தமிழ் மொழி.
12-ஆம் நூற்றாண்டில் தமிழ்
12-ஆம் நூற்றாண்டளவில் தமிழ் மொழி இந்நிலையை அடைந்தது பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு சக்திகளால் இயக்கப்பட்டு. பலவாறாகப் பெருங் கவிஞர்களால் கையாளப்பட்டு வந்தமையினாலே பல நல்லியல்புகளைத் தமிழ் பெற்றது. குறித்த பொருளை நேரிதின் உணர்த்தும் நேர்மையும் பேச்சின் இயற்கை ஓசையும் நெகிழ்ந்த ஓசை இனிமையும், கல்லார்க்கும் கற்றவர்க்கும் ஒருங்கே இன்பமூட்டி உணர்வைப் பெருக்குகின்ற பண் இனிமையும் பொருளை விழுங்கி நின்ற நடை இனிமையும் தமிழில் இயைந்தன. இவையேயன்றி, அணிகட்கு அணியாம் இயற்கையழகும். பலவகைக் கருத்துக்களையும் உயர்த்த வல்ல ஆற்றலும் அகில இலங்கைக் கம்பன் கழகம்

அமைந்தன. இந்நல்லியல்புகளோடு தமிழ் அமைந்து விடவில்லை. வடசொற்கள் மிகுதியாகக் கலந்து தமிழின் இயற்கை நலத்தைக் கெடுக்கக்கூடிய நிலைமையும் இருந்தது. ஒரு சில ஆடம்பர நெறிகளால் தமிழின் இயற்கைச் சுவை கெடுகின்ற நிலைமையும் இருந்தது. இவற்றைப் புறகணித்து விட்டால், இயற்கை நெறி, நேர்மை, தெளிவு, சுருக்கம், இனிமை, அழகு, சுவை, ஆற்றல், முதலிய நல்லியல்புகளைப் பெற்று நன்கு திருத்தியமைந்த கருவியாகத் தமிழ் உருப்பெறத் தக்கதாய் நின்றது.
கம்பனது தோற்றம்
இந்நிலையில் கம்பன் தோன்றினன். கல்வியிற் பெரியவன் கம்பன் என்பது ஆன்றோர் மொழி. இதற்கு ஏற்பத் தமிழ்க் கல்வியிலும் வடநூற் கல்வியிலும் ஒப்பற்ற புலமை எய்தினன். தமிழினின்று ஒழிக்கவேண்டிய இயல்புகளை ஒழித்தனன். வளர்க்க வேண்டும் நல் இயல்புகளை வளர்த்தனன். தனது பெருங்கவித்வ சக்தியினாலே, தமிழ்க் கவிதையைத் திருந்த அமைத்து அற்புதத் தெய்விகக் கருவியாக முற்றுவித்தான்.
இயற்கைத் தன்மை
கம்பனது தமிழின் இயல்பைச் சில செய்யுட்களால் விளக்குகிறேன். இயற்கை நெறி என்ற தொடரால், பாத்திரங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் தக்கபடி எழும் இயற்கைப் பேச்சினது இயற்கை ஒசை இங்கே குறிக்கப்படுகின்றது. தீயால் இலங்கை அழிந்து மீண்டும் இயற்றப்பட்ட பின்னர் இராவணன் தன் மந்திரி முதலானவர்களோடு ஆலோசனை செய்கின்றான். மந்திராலேசனை சபையிலுள்ளோரில் கும்பகர்ணனைப் போன்று இராவணன் மீது அன்பு கொண்டார் யாரும் இலர் என்றே சொல்லலாம். ஆனால் இராவணது புன்தொழிலை அவன் மிகவும் வெறுத்தான். இவ்வெறுப்பை எத்தனை இயற்கையாகக் கம்பன் காட்டுகிறான் என்பது,
ஆசில்பரதாரம்அமையச்சிறை அடைப்பேம்,
மாசில்புகழ் காதல்உறு வேம் வளமை கூரப்
பேசுவதுமானம்; இடை பேணுவது காமம்;
கூசுவதுமானுடரை நன்றுநம கொற்றம்!
(யுத் மந்திர 52)
என்ற செய்யுள் கொண்டு உணரலாம். இங்கே இயற்கை ஒசை சிறிதேனும் தவறியதாயின் கும்பகர்ணனது நோக்கமே தோன்றாது ஒழிந்துவிடும். இங்ங்ணமே வாலி இராமனைப் பழித்துக்கூறும் செய்யுட்கள் இயற்கை - ஓசையோடும் வேகத்தோடும் வருகின்றன. ஒர் உதாரணம் :
வீரம்அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக் கென்னுடல்
பாரம் அன்று பகை அன்று பண்பொழிந்து
ஈரம் இன்றி.இது என்செய்த வாறுநீ?
(வாலி, 84)
நேர்மைத் தன்மை
இவ் இயற்கைத் தன்மையோடு நெருங்கிய தொடர்புடையது நேர்மை. அருமை மைந்தனும் சிறந்த போர் வீரனுமாகிய இந்திரசித்து'சீதையைவிட்டுவிடுகளன்று சொல்லத்
துணிந்த பொழுது இராவணன் கூறுவதைக் காண்க;
74

Page 91
முன்னையோர் இறந்தா ரெல்லாம்
இப்பகை முடிப்பார் என்றும் பின்னையோர் நின்றா ரெல்லாம்
வென்றனர் பெயர்வர் என்றும்; உன்னை நீஅவரை வென்று
தருதியென்றுணர்ந்தும் அன்றால்; என்னையே நோக்கியான்இந்
நெடும்பகை கொண்ட தென்றான்.
(இந்திரசித்துவதை, 8)
இங்கே குறித்த இயல்புகள் இரண்டும் பாத்திரத்தினது இயல்பை ஓரளவு பொறுத்தன.தமிழின் இயல்பை மட்டும் குறித்தன தெளிவும், இனிமையும் அழகும் ஆம்.
தெளிவு சுருக்கம்
தெளிவினைக் கம்பன் 'சவியுறத் தெளிந்து' எனக் கூறினன். ஒரு பிரெஞ்சு ஆசிரியர் உரை நடையைக் குறித்து எழுதும்போது அதன் தனி இயல்பாக, தெளிவு, மிக்க தெளிவு, இன்னும் மிக்க தெளிவு அமைதல் வேண்டும்' என்றனர். இச் செய்யுளை நோக்குங்கள் :
உற்ற போதவன் உள்ளக் கருத்தெல்லாம் கொற்ற வீரன் உணர்த்தென்று கூறலும் முற்ற ஒதியென்? மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி ஆசை அறா’தென்றான்
(அங்கதன் தூது 43)
இதிலே தெளிவும் சுருக்கமும் ஒருங்கே அமைந்துள்ளன.
சம்பக நறும்பொழில் இயற்றருனவஞ்சிக் கொம்பழ கொசிந்தன எனச்சிலர்குழைந்தார் வம்பளவு கொங்கையொடு வாலுகம்வளர்க்கும் அம்பவள வல்லிகள் எனச்சிலர்அசைந்தார்.
(தைலமாட்டு, 15)
இனிமை அழகு
இங்கே வடமொழியும், தமிழும் ஒன்றோடொன்று குழைந்து தழுவி நின்றுமிக்க இனிமை பயத்தலை எளிதின் உணரலாம். சீதை தோன்றிய அற்புதத்தை,
உழுகின்ற கொழுமுகத்தின் உதிக்கின்ற கதிரினொளி பொழிகின்ற புவிமடந்தை திருவெளிப்பட் டெனப்புணரி எழுகின்ற தெள்ளமுதோடு எழுந்தவளும் இழிந்தொதுங்கத் தொழுகின்ற நன்னலத்து பெண்ணரசி தோன்றினள்
(கார்முகப், 17)
என்ற செய்யுள் அற்புதமாகத் தெரிவிக்கின்றது. விபீஷணன் முன் இராமன் தோன்றிய கோலத்தை,
கம்பன் மலர் - 2000

கற்றைவெண் நிலவுநீக்கிக்
கருணையால் அமிழ்தங் காலும் முற்று கலையிற்றாய
முழுமதிமுகத்தினானைப் பெற்றவன் அளித்த மோலி
இளையவன் பெறத்தான் பெற்ற சிற்றவை பணித்த மோலி
பொலிகின்ற சென்னியானை
(விபீடணனடைக், 136)
என்ற செய்யுள் புலப்படுத்துகின்றது. இரண்டு செய்யுட்களிலும் அழகு ஒழுகுகின்ற தன்மை நன்கு காணலாம்.
மேற்குறித்த நான்கு இயல்புகளும் தனித்தனிச் செய்யுட்களில் காணப்பெறுவன. இங்ங்ணமேயன்றித் தொடர்ந்து செல்லுகின்ற செய்யுட்களில் தோன்றும் நலங்களை நோக்குவோம். இவற்றுள் முதலாவது கூறத்தகுவது சுவை. பலவகையான உணர்ச்சிகளுக்கும் தக்கபடி இச்சுவையைக் கம்பனது தமிழ் மேற்கொண்டு நம்மை உணர்ச்சி உலகில் செலுத்தித் தன்னிலை அழியச் செய்கிறது. கும்பகர்ணன் மடிந்தான் என்பதைக் கேட்டுத் துடித்துப் புலம்புகிறான் இராவணன். தான் சீதை முன்பு இரந்து கெஞ்சிக் கொண்டிருப்பதையும் உணரவில்லை. சீதையின் உள்ளத்திலோ களிப்புப் பொங்குகிறது, சோகத்திலே மூழ்கியிருந்தவள் இப்பொழுது மகிழ்ச்சியால் உடல் தடித்தாள். கம்பன் தமிழைப் பாருங்கள்.
அண்டத் தளவும் இணைய பகர்ந்தழைத்துப் பண்டைத்தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்; தொண்டைக் கனிவாய் துடிப்ப மயிர்பொடிப்பப் கெண்டைத் தடங்கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்.
வீங்கினாள் கொங்கைமெலிந்த மெலிவகல ஓங்கினாள்; உள்ளம் உவந்தாள்; உயிர்புகுந்தாள்; தீங்கிலாக் கற்பிற் றிருமடந்தை சேடியாம் பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்!
(LDTury60, 87,88)
பிரும்மாஸ்திரத்தால் மயங்கியிருந்த இராமனைக் காணச் சீதையைப் போர்க்களத்திற்கு இட்டுச் செல்லுகின்றனர் அரக்கர்கள். இறந்தவன் போல் கிடக்கும் தன் நாயகனைக் கண்டதும் அவள் எய்திய அவல நிலைமையை வர்ணிக்கிறான் :
மங்கை அழலும் வானாட்டு
மயில்கள் அழுதார், மழவிடையான்
பங்கில் உறையும் குயில் அழுதாள்;
பதும மலர்மேல் மாதழுதாள்;

Page 92
கங்கை அழுதாள்; நாமடந்தை
அழுதாள் கமலத்தடங்கண்ணன்
தங்கை அழுதாள் இரங்காத
அரக்கிமாருந்தளர்ந்தழுதார்.
விழுந்தாள் புரண்டாள்; உடல் முழுதும்
வியர்த்தாள், உயிர்த்தாள், வெதும்பினாள், எழுந்தாள், இருந்தாள், மலர்க்கரத்தை
நெரித்தாள், சிரித்தாள், ஏங்கினாள்; கொழுந்தா! என்றாள். அயோத்தியாதங் கோவே ? என்றாள் எவ்வுலகும் தொழுந்தாள் அரசே!ஒ’என்றாள்;
சோர்ந்தாள், அரற்றத் தொடங்கினாள்.
(பிராட்டி களங். 5, 8)
மாயாசனகன் ஒருவனை இயற்றி அவனைச் சீதை முன் கொணர்ந்து, அவளை உடம்படுத்த மகோதரன் முயல்கின்றான். இச்சனகனைத் தன் தந்தையென நினைத்து அவனைக் கோபித்துக் கூறும் தமிழைப் பாருங்கள் :
அறங்கெட வழக்கு நீங்க அரசர்தம் மரபுக் கான்ற மறங்கெட மெய்மை தேய வசையுற மறைகள் ஒதும் திறங்கெட ஒழுக்கங்குன்றத் தேவரும் பேணத்தக்க
வழிகெட வரினுந்தத்தம் வாழ்க்கை தேய்ந்திறினு மார்பம் கிழிபட அயில்வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் மொழிகொடு வாழ்வதல்லால் முறைகெடப்புறநின்றார்க்கும் பருபட வாழ்கிற் பாரும் பார்த்திவருளரோ !பாவம் !
அகில இலங்கைக் கம்பன் கழகம்

நீயும்நின் கிளையும் மற்றிந் நெடுநில வரைப்பும் நேரே மாயினுமுறைமை குன்ற வாழ்வெனோ?வயிரத்திண்தோள் ஆயிரநாமத்தாழியரியினுக் கழமை செய்வேன் நாயினை நோக்கு வேனோநாண்துறந்தாவிநச்சி ?
(மாயாசனகப் 65-67)
தமிழின் ஆற்றல்
சுவையை அடுத்து, இரண்டாவதாக நோக்கத்தக்கது தமிழின் ஆற்றல். இதுதானும் நூல் முழுவதிலும் காணப்படும் இயல்பே எனினும், ஒரு சில இடங்களில் கம்பன் தன்னையே வென்று விடுகின்றான். விபீஷணனை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளுதல் பற்றி அனுமன் கூறியனவும் (விபீடணனடைக், 87 - 105), விபீஷணனும் கும்பகர்ணனும் போர்க்களத்தில் சந்தித்து, தத்தம் லட்சியங்களைக் கூறி, பிரியாவிடை பெறும்பொழுது கூறியனவும் (கும்பகர்ணன் வதை. 128 - 167) தண்டமிழின் மேலாந்தரமாவன. அழகெலா மொருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார்'
கம்பன் தமிழ்
இங்ங்ணமாக, இராமாவதாரம் என்ற கலைத் தெய்வக் கோயிலைக் கம்பன் இயற்றியுள்ளான். தமிழ்மக்களுக்கு அழிவற்ற கலைச் செல்வத்தை வைப்பு நிதியாகச் சேரத் திரட்டி அளித்துள்ளான். நமது அருமைத் தமிழை நலன்கள் பலவும் முற்றிக் கனிந்த இனிய அழகிய கருவியாகப் பதப்படுத்தியுள்ளான். அவனது அற்புதக் கவித்வப் பேராற்றல் நமது மொழியிலே படிந்து, தனிப்பட்ட சிறப்போடு'கம்பன் தமிழ் என்பதாக விளங்குவதாயிற்று.
கம்பன் தமிழ்நெறிதழைத்தோங்குக !

Page 93
LOrfassuurtün (Omar Khayyam மறைந்த ஒர் வியத்தகு மின் கவித் தொகுதி அவர் அ அரும்பாடல்களை எட்வர் இருபதிப்புகளாக ஆங்கிலத்தில் மொழி டெ விழுமிய கருத்துக்களை அடிப்படையாகக்( காலஞ்சென்ற கவிமணி தேசிக விநாயகம்பி ஒரு பாட்டு உமர்கயாம் மூலத்தின்கண் பர நல்லியற்கைச் சூழலில் உண்ணுந்தோறும் உ துண்டும், ஆயுந்தோறும் ஆயுந்தோறும் பெ கவிதையும். தோயுந்தோறும் தோயுந்தோறு பணிமொழி நங்கையும், ஊற்றுந்தோறும் ஊ கொடுக்கவல்ல மதுவுமே இப்பாலைவனத்ை மெய்ப்பொருளுமாகும். இக்கருத்துக்களை மொழி பெயர்ப்புச் செய்யுளை அடியில் தருகி
"Here With a Loaf of Bread be A Flask of Wine, a Book of V. Beside me singing in the Wild And Wilderness is Paradise er
இப்பாட்டைக் கவிமணி அவர்கள்,
"வெய்யிற் கேற்ற நிழலுண்டு வீசு கையிற் கம்பன் கவியுண்டு கலச தெய்வ கீதம் பலவுண்டு தெரிந்து வையம் தருமிவ் வளமன்றி வாழுL
என்று தமிழர் பண்பிற்கேற்ப மொழி பெயர் பொதுவில் கூறவேண்டியதை ஒழித்துக்ை மொழிபெயர்த்தது அவர்கட்குக் கம்பன் க படுத்துவதாகும். என்னை?
“எத்திக்கும் போற்றும் இராமன் தி தித்திக்கும் செந்தமிழில் செய்தளி அம்புவியில் மக்கள் அமுதம் அரு கம்பன் கவியே கவி’
 
 

கம்பன் Viu. EGGDJL
ச. கணபதி முதலியார்
n) பன்னிரண்டாம் நூற்றாண்டின் நடுவண் பாரசீக வானில் தோன்றி னொளி. ஐந்நூநுாறுபாடல்களடங்கியருபையத்(Rubaiya) என்னும் ருளிப் போந்த பேரிலக்கியம். அவ்விலக்கியத்தில் நூற்றுப்பத்து ' '6ňu GJIT 6ão (Edward Fitzgerald) g(55606856f6ảo பயர்த்து வெளியிட்டார். அம்மொழி பெயர்ப்புச் செய்யுள்களின் சில கொண்டு இழுமென் மொழிகளில் நாற்பத்து மூன்று பாடல்களைக் ள்ளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து யாத்துத் தந்தனர். அஃதில் ாந்தோடும் தத்துவத் தேனைத் திரட்டி வடித்து நல்கா நிற்கின்றது. -ண்ணுந்தோறும் அயிற்சுவை பயந்து உடல் உரம் நல்க வல்லரொட்டித் ாருள் நயம் புலப்படுத்திப் புத்தின்பத்தைத் தரவல்ல அணிதிகழ் உயர் ம் பொறி புலனின்பங்களை முன்னையிலும் பன்மடங்கு பயக்கவல்ல மற்றுந்தோறும் உவட்டாமல் நறுமணத்தோடு உலப்பிலா இன்பத்தைக் த விண்ணுலக வீடாக்கும் என்பதே அவரது சித்தாந்தம்; அவர் கண்ட த் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்ற பிட்ஸ்ஜெரால்ட்டின் ஆங்கில
ன்றாம்.
eneath the Bough
erse - and Thou
CSSlow."
ந் தென்றல் காற்றுண்டு
ம் நிறைய மதுவுண்டு
பாட நீயுமுண்டு
ம் சொர்க்கம் வேறுண்டோ.”
55056flooTITsfö6ir. g55(5LTy6i) 'A Book of Verse' 6TsiTugsby கயிற் கம்பன் கவியுண்டு என்று சிறப்பில் ஒரு நூலை எடுத்துக் காட்டி வியின்பால் உள்ள ஈடுபாட்டினை அங்கை நெல்லியெனத் தெளிவு
ருக்கதையைத் த்து - நித்தமும் ந்தவைத்த
77

Page 94
என்பதுTஉம் அவர்களது அருள்வாக்கு ஆகலானும் என்க. எனவே கம்பன் கவி சிறந்தது என்பது இதனால் போந்த உண்மை.
கம்பனின் கவியமுதம் தெவிட்டாத் தன்மையது; நவில்தோறும் நவில்தோறும் நாச்சுவை நல்குவது; பயில்தோறும் பயில்தோறும்பாச்சுவை பயப்பது; உள்ளுந்தோறும் உள்ளுந்தோறும் உள்ளத்தில் உவகையை ஊட்டுவது. கம்பன் இராமகதையை ஆசைபற்றி அறையலுற்றான். எனவே அஃது இராம காவியமாயிற்று. அஃது ஒர் காவியக் களஞ்சியம்; அறிவுச் சுரங்கம், இன்ப ஊற்று; ஞானப் பேழை கருத்தோவியம்- செஞ்சொற் சதங்கை, ஒழுக்கக் கொள்கலம், வாழ்க்கைப் பெட்டகம். காவியத்திற்குரிய எல்லா நோக்குகளும் அதன்பாலுள. சொல் நோக்கு அதன் பாலுண்டு; பொருள் நோக்குண்டு; தொடை நோக்குண்டு; நடை நோக்குண்டு; துறை நோக்குண்டு; நாடக நோக்கும் உண்டு. எனவே அதனை வியவாதார் எவருமிலர்; யாண்டுமிலர். அதன்கண் கோதண்டராமனின் வீரத்தையும் பொறுமையையும் கண்டு அவனை வியக்குநர் பலர்; சிறையிருந்த செல்வியாம் சீதையின் கற்பின் ஆற்றலைக் கண்டு அவளை ஏத்துநர் பலர்; இலக்குவனின் சீற்றத்தின் பான்மையையும் பிரியாத் தோழமை மேன்மையையும் நோக்கி அவனைப் புகழுநர் பலர்; பரதனின் கள்ளமில் உள்ளத்தையும் பற்றற்ற பண்புடைமையையும் கண்டு அவன்சீர் பாடுநர் பலர்; அயோத்தி அரசராய தயரதற்கும் புள்ளரசாய சடாயுவிற்குமுள்ள நட்பின் திறத்தைக் கண்டு அதனைப் போற்றுநர் பலர்; வாலியின் அளவில் ஆற்றலைக் கூறுநர் பலர் சோற்றுக்கடன் கழித்த கும்பகர்ணனின் நன்றிகொல்லாத் தன்மையை நவிலுநர் பலர்; இடித்துரைத்தும் கேளாத உடன் பிறந்தோனாகிய தசக்கிரீவன்பால் வெறுப்புண்டு கருணைக் கடலாம் இராமனுழை விருப்புண்டு அடைக்கலம் புகுந்த வீடணனின் நல்லிணக்கத்தை நயக்குநர் பலர்;'நல்லறம் செய்தோர் நல்லுலகு அடைவர் அல்லறம் செய்தோர் அருநரகு, அடைவர் என்னும் கூற்றின் உண்மையை இராம காவியத்தில் நேரில் கண்டாம் எனக் கழறுநர் பலர், 'அறம் வெல்லும் பாவம் தோற்கும் எனும் உயர்மொழியின் நுட்பத்தை இராவணன்பாலும், தாடகை, கரன்தூஷணன், மாரீசன்பாலும் வைத்து உணர்ந்தோம் எனக்கூறி அவர்களை இகழுநர் பலர். இங்ங்ணம் பல்லாற்றானும் புகழ்தற்குரிய காவியம் கம்பனின் சொல்லோவியமாகிய இராமாயணம் என்பது வெள்ளிடைமலை.
காவியம் இயற்றுதல் அல்லது நூல்யாத்தல் எல்லார்க்கும் எளிதன்று; பலர்க்கு அரிதாம்; ஒரு சிலர்க்கே இயலுவதாம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் பெரியர். ஒல்காப்பெரும்புகழொடு தொல்காப்பியம் இயற்றுதல் தொல்காப்பியர்க்கே எளிதாம்; வித்தக நடையொடு பத்துப் பாட்டைப் பாடுதல் சங்கத்துச் சான்றோர்க்கே இயலுவதாம். குறுகத்தறித்த குறளை ஒரு மொழி நயத்தொடு யாத்தல் திருவள்ளுவனார்க்கே உரியதாம்; நந்தாப் பொருளொடு சிந்தாமணியைத் தருதல் திருத்தக்க தேவர்க்கே தகுதியுடைத்தாம்; இலக்கியச் செலவொடு நயத்தொடு சிலப்பதிகாரத்தைப் புனைதல் இளங்கோவிற்கே முடிவதொன்றாம்; அணிகெழு போக்கொடு மணிமேகலையை வெளிப்படுத்தல் சாத்தனார்க்கே சாதிக்கக் கூடுவதாம்; பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பெரிய புராணத்தைப் பாடுவது கடவுள் மாக்கவிஞர் சேக்கிழாரையே அகில இலங்கைக் கம்பன் கழகம்

சேர்ந்ததாம். செம்பொருள் இன்பத்தொடு இராமகாவியம் தொடுத்தல் கம்பர்க்கே உரியதாம்.
ஒரு காவியத்தின் பெருமையுஞ் சிறுமையும், உயர்வும் தாழ்வும், அக்காவியத்தை ஆக்கியோனின் உள்ளப் பண்பின் மாண்பினையும் கற்பனைத் திறனையும், சொற்போக்கு நெறியினையுமே பொறுத்துள்ளது. ஈண்டு முதற்கண் கம்பன் காவியப் பொருளமைப்பு முறையைக் கூறுவாம்.
கம்பனின் இராமகாதை வால்மீகி பகவானின் வடமொழி இராமாயணத்தைத் தழுவி எழுதப்பெற்றதெனினும், வால்மீகியின் காவிய அமைப்புமுறை வேறு, கம்பனின் பொருள் உள்ளமைப்புப் போக்கு வேறு என்று வடமொழிக் கடலும் தென்மொழிக் கடலும் நிலை கண்டுணர்ந்த மேதக்கோர் நவில்வர். கம்பன் காவியத்தில் கூட்டலுமுண்டு; பெருக்கலுமுண்டு;மூலத்தினின்றும் தமிழர் உயர் பண்பாட்டிற்கேற்ப மாற்றலுமுண்டு என்பது இருமொழிப் புலமை மிக்காரது கருத்து. கம்பனின் ராமாயணம் பால, அயோத்திய, ஆரண்ய, கிஷ்கிந்த, சுந்தர, யுத்தகாண்டமென ஆறுபெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
கம்பனின் காவிய அமைப்பைக் கூறுவதன் முன்னர் உலகில் காவியம் எங்ங்ணம் எழுந்தது என்று அதன் வரலாற்றை ஒரு சிறிது சிந்திப்பது இவண் ஏற்புடைத்தாம். காவியம் ஒருநாள் காலையில் ஒரு புலவனின் நுண்மாண் நுழை புலத்தில் திடீரென மலர்ந்தது அன்று பிறந்ததும் அன்று. அது பன்னெடுநாட்களாக, ஆண்டுகளாக ஒரு கிராமத்திலாதல், ஊரிலாதல், நாட்டிலாதல் கிராமப் பாடல்களாக, ஊர்ப்பாடல்களாக, நாட்டுப் பாடல்களாக, (Folk - songs or ballads) g5d(Eurt of sit Guurfleu5tti, 6T95ŮLJLITg5g5(Tui, 6 IMTiIGLOTT) egyp6OLOTiuė (Word of mouth Oral) பாடப்பட்டு வந்த பழங்கதைத் தொகுதியின் வளர்ச்சியேயாம் என்பர். மேல்நாட்டு ராபின்ஊட் (Robinhood) கதைகளும் கீழ்நாட்டுத் தேசிங்குராஜன் தெம்மாங்குப் பாடல்களும் இதற்கு அமையும் ஒரு சில சான்றுகளாம். அப்பாடல்கள் ஒரு வீரனின் வீரச்செயல்களைப் பற்றியோ அல்லது பல வீரர்களின் வீரச்செயல்களைப் பற்றியோ கூறாநிற்கும். அவை ஒரு புலவனாலோ அல்லது பல புலவர்களாலோ பாடப் பெற்றிருக்கலாம்; தொகுக்கப் பெற்றிருக்கலாம். அப்பழம் பாடல்களின், கதைகளின் அடிப்படையினின்றும் எழுந்தவைகளே காப்பியங்களாகும், 5TSuri&56TT5th. (Epics - the germ of the epic is to be found in the balad) மேல்நாட்டுப்பாகுபாட்டின்படி அக்காப்பியங்கள் இரு திறத்தனவாகக் காணப்படும். ஒன்றை வளர்ச்சி அடிப்படைக் காப்பியம் (Epic ofgrowth) என்பர்; மற்றொன்றை கவின் காப்பியம் (Epic of Art or Culture) 6T situfi. (ypsiT6060Tugil 6T6flu சொற்களையும் கருத்துக்களையும் கொண்டிலங்குவது; சொல் மாயம் அல்லது வித்தை அதில் இரா. பின்னையது சொல்லாழத்துடனும் கற்பனைத் திறனுடனும் சொல் மயக்குடனும் அணிநலத்துடனும் விளங்குவது. பொதுவில் அப்பாடல்களுக்கும் பழங்கதைகளுக்கும் ஒரு சில தனிப்பண்புகளுமுண்டு. அவை வரலாற்றைச் சொல்லும் நெறியையுடையவை; பின்பற்றுபவை (Narrative in Character).9LITL6)856flair 56 GLIT(56ir (Theme) அக்கால மக்களிடையே உணர்ச்சியை ஊட்டவல்ல, மிகவும்
78

Page 95
முக்கியமான பொருளையே உயிர்நாடியாகக் கொண்டதாகவே 960Louth. (Of momentous Importance for mankind) அக்கதைகளின் கதாபாத்திரங்கள் தேவர்களும் மக்களுமாக 960Ln6If (Characters partly divine and partly human). அப்பாடல்களின் மொழியும் நடையும் உயரிய கண்ணிய நிலையில் Gafi)616GT6) TE5 960Ln685 Gugh (Language and style full of elevation and dignity.)
பண்டைக்காலத்தில் மேல்நாட்டிலும் கீழ்நாட்டிலும் காவியங்கள் இல்லாமலில்லை. ஹோமர் எழுதிய இலியட்டும் (liad) ஒடீயசும் (Odyssey), வெர்ஜில் எழுதிய ஈனிடும் (Aeneid), தாந்தே 6Tg5uly 606isit SIT Shuh (Divine Comedy), fisioL6ör 6Tg5u சுவர்க்க நீக்கமும் (Paradise Lost) (Logopit'Gé, காப்பியங்களுக்குத் தலைசிறந்த எடுத்துக் காட்டுகளாம். வியாச பாரதமும் வடமொழி ஸ்காந்தமும், பாகவதமும் வால்மீகி இராமாயணமும் கீழ்நாட்டுக் காப்பியங்களுக்கு எடுத்துக்காட்டுகளாம். ஹோமர் எழுதிய இலியட்டும் வால்மீகி எழுதிய இராமாயணமும் கதை பொதிபாட்டில் ஒரு பெற்றித்தாகவே இலங்குகின்றன. இரண்டும் பெண்துக்கிக் கதைகளே. பாரிஸ் (Paris) என்னும் டிராய் நகரத்து இளவரசன் ஸ்பார்டா (Sparta) நகரத்தரசனான மெனிலாளின் (Menelaus) மனைவியாகிய ஹெலனைத் தூக்கித் (Helen) தன்னாடு சென்றான். ஹெலனை மீட்கும் பொருட்டுக் கிரேக்க வீரர்கள் டிராயினை முற்றுகையிட்டுச் சண்டை செய்தனர். இராமன் மனைவியாகிய சீதையை இராவணன் இலங்கைக்கு மண்ணோடு பெயர்த்தெடுத்துச் சென்றான். அவளை மீட்பதற்கு எழுந்த இராம இராவண யுத்தத்தையே இராமாயணம் பெரிதும் கூறும்.
காவிய அமைப்பைப்பற்றி மேல் நாட்டவர்கள் அரிஸ்டாட்டில் (Aristote) நாள் கொண்டு இன்றுவரை சிந்தித்து வந்தது போல் கீழ்நாட்டவர்கள் அத்துணை சிந்தித்தார்களில்லை. கீழ்நாட்டவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவெல்லாம் சொல்லலங்காரங்கொண்ட அணிவகைகள் தாம். காப்பிய உள்ளமைப்பு அல்லது பொருள் செல்லும் நடை அல்லது நெறி அவர்கட்கு அத்தனை புலப்படவில்லை. கீழ்நாட்டவர்கள் காட்டிலுள்ள மரங்களைத் தனித்தனியே ஆராய்ந்தார்கள்; மேல்நாட்டவர்கள் காட்டிலுள்ள மரங்களையும் தனித்தனியே ஆராய்ந்தார்கள்; ஆரண்யத்தையும் ஒருங்கே ஆராய்ந்தார்கள். ஒரு காவியத்தை ஒரு கலைக்கோயிலுக்கு ஒப்பிடலிாம். கலைக்கோயில் பல பகுதிகளைக் கொண்டது. ஒரு தனிப்பகுதி கலைக்கோயிலாகா. எல்லாப் பகுதிகளையும் ஒன்று சேர்த்து நோக்குழித்தான் அதன் எழில்நலம் கண்ணுக்கு நன்கு புலப்படும். அஃதேபோல் ஒரு காவியமும் பல உறுப்புக்களைத் தன்னகத்தே கொண்டது. அவ்வுறுப்புக்கள் தனித்தனி நின்றுழி காவியம் வேண்டிய சுவைதரா. எல்லா உறுப்புக்களும் இணைந்து பிணைந்து நின்று ஏகம் அல்லது ஒன்று என்ற உணர்ச்சியைத் தூண்டுழித்தான் அது பல்சுவையைப் பயந்து நிற்கும்.
இப்பொது இயல்புகளைச் சிந்தையில் தேக்கி வைத்துக்கொண்டு கம்பன் காவிய நடையைப்பற்றி ஆராய்வாம். ஒருகாவியத்தை ஒரு பெண்ணாகவும் உருவகிக்கலாம். அக்காவிய
கம்பன் மலர் - 2000

நல்லாளின் உடல் இரு கூறுடைத்து. ஒரு கூறு காவியத்தின் g-girlssop Guit(soir (Matter or Material); SpóGigsm(5 5-g அப்பொருளைக் கற்போர் உளங்கொளச் சொல்லும் திறனாகிய சொல்லமைப்பு நெறி அல்லது சொல்லமைப்பு முறையாகிய நடை (Style). முதற்கண் கம்பன் காவியப் பொருளமைப்பு நடையை அல்லது முறையைப்பற்றிக் கூறலாம்.
கம்பன் காவியம் இராமன், சீதை, இராவணன் ஆகிய மூன்று முக்கிய பாத்திரங்களைச் சுற்றியே நிற்கின்றது. இராமன் கருணைக்கடல், பொறுமைக்குறைவிடம்; சீதை கற்புக்கு அணி, கற்புக்கனல், இராவணன் தவவலிமையால் மண்ணும் விண்ணும் கொள்ளும் தறுகண்மை உடையவன். பிறனில் விழைவால் பேராண்மை இல்லாதவன், இழந்தவன். சீதைதான் காவியத்தின் சுற்றாணி (Pivot). இராவணன் சீதையை எடுத்து இலங்கைபுக்கு அசோக வனத்தில் சிறை வைத்தான். அவளைச் சிறையினின்றும் மீட்டுதற்காகவே பெரும் போர் மூண்டது. இராவணன் இறத்தலே காவியத்தின் குறிக்கோள். இலக்குமணன், பரதன், குகன், சடாயு, வாலி, சுக்கிரீவன், அனுமன், கும்பகர்ணன், வீடணன், இந்திரசித், திரிசிடை முதலியோர்கள் எல்லாம் துணைப்பாத்திரங்கள் தாம்.
பால காண்டம் இராம காவிய மாளிகையின் முன்னமைக்கப்பெற்ற பூமலிசோலையின் வாயிலாகும். அவ்வொரு வாயிலின் வழியாகத்தான் உள் நுழைதல் வேண்டும். அன்றியும் இக்காண்டம் காவியத்திற்கு முகவுரையாகவும் அமைந்துள்ளது எனலாம். இராவணவதத்திற்கு இக் காண்டம் உறுதுணையாக எங்ங்ணம் அமைந்துள்ளது என்பது ஈண்டுச் சிந்திக்கற்காலது. நாட்டு வர்ணனை, நகர் வர்ணனை, எழுச்சி, உண்டாட்டு, வரைக்காட்சி, பூக்கொய்படலம் முதலியன காப்பிய இலக்கணத்திற்காக அமைக்கப்பெற்றவை. இராமனின் அவதாரமும், கோசிகன்வரவும், தாடகைவதமும், சீதை மணமுமே இராவணவதத்திற்குக் கால்கோளாகக் கொள்ள வேண்டியவை. இராமன் இன்றேல் காப்பியம் இன்றாம்; சீதை இன்றேல் காப்பியம் உளதாகாது. சீதையோடு கூடிய இராமனே கதைப்போக்கிற்கும் இராவணவதத்திற்கும் வேண்டப்பட்டவன். தனி இராமனைக் கதை வேண்டிற்றிலது.
அயோத்தியா காண்டத்தில்தான் இராம காவியமே ஆரம்பிக்கிறதென்றால் அது பொய்யாகாது; பேருண்ழையாகும். இராவணனின் அழிவிற்கு இக்காண்டத்தில்தான் வித்து விதைக்கப்படுகின்றது. அவ்வித்துத்தான் கொடுமனக்கூனி. இராமன் சீதையுடன் அயோத்தியின் கண் உறைந்தால் இராம நாடகம் எழுதற்கும் எழுதுவதற்கும் ஒரு சிறிதும் இடணில்லை. இராமன் சீதையுடன் கானகம் அடைந்தால்தான் காவியம் உருப்பெறும். மந்தரை எனும் கூனி, நாளை இராமன் பொன்முடி சூடப் போகின்றான் என்று கேட்ட ஞான்று துடிக்கும் நெஞ்சினளாய், ஊன்றிய வெகுளியையுடையவளாய், உளைக்கும் உளத்தவளாய், கான்றெரி நயனத்தவளாய், கலிக்கும் சொல்லையுடையவளாய், மூன்றுலகிற்கும் இடுக்கண் மூட்டுபவளாய்க் கேகயன்மடந்தையை அணுகினாள். அவளே இராவண வதத்திற்கு அடிகோலியவள். அவளுடைய சூழ்ச்சியினாற்றான் இராமன் முடிதுறந்து சீதையுடன்
79

Page 96
காட்டிற்கேகவேண்டியது வந்தது. இராவணன் சீதையின் பேரழகைக் கேட்டும், கண்டும் அவளைத் தன்மனச் சிறையில் அடைத்துவைக்க முதற்காரணமாக இருந்தவள் அவளே. அதனாற்றான் போலும் அவள் வருகையைக் கூறுமிடத்துக் கம்பர்,
இன்னல்செ யிராவணனிழைத்த தீமைபோல் துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள்.”
(மந்தரை சூழ்ச்சிப்படலம் - செ. 36)
என்று பின்நிகழ இருக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் மனக்கண்ணிற்குக் கொண்டுவந்து முன்னர் மொழிந்தனர் என்பர். 'இராமனைப் பயந்தவெற் கிடருண்டோ’ என்றிறுமாந்திருந்த தொண்டைவாய்க் கேகயன் றோகையின் திரியா மனதை, புரந்தரனார் செய்த தவத்தானும், மறையவர்களின் நோற்றலின் ஆற்றலினானும் திரியவைத்தவளும் அவளே. கையேகி அறிவிலி அடங்குதி என்று அடக்கிய காலத்தும் அடங்காது நின்னலம் வீழ்ந்தது, திருவும் வீழ்ந்தது, கோசலை மதியினால் வென்றாள், பரதனுக்கு தந்தையுங் கொடியனற் றாயுந் தீயள், இராமனோ ஆடவர் நகையுற ஆண்மை மாசுற'தாடகை என்னும் தையலாள் மண்ணில்பட முதல் முதல் தன்கோடிய வரிசிலையை அறங்கேடுற எய்தவனாதலின் பெண்பாலார்க்கு நல்லவனல்லன்; உனக்கும் அன்னவனே என்று இயம்பியவளும் அவளே. சிவந்த வாய்ச்சீதையும் கரிய செம்மலும் மணி ஆசனத்திருக்க நின்மகன் மண்மிசை இருக்க நீ காண்குவையோ என்று இடித்துக் கூறிப் பொறாமைக் கனலையும் புரட்சிப் புயலையும் எழுப்பியவளும் அவளே. அவளின் தூண்டுதலினாற்றான், போதனையினாற்றான் அஞ்ஞான்று தீயவை யாவையினுஞ் சிறந்த தீயவளாய் விளங்கா நின்ற கைகேயி,
ஏய வரங்க ளிரண்டி னொன்றினாலென் சேயுல காள்வது சீதை கேள்வ னொன்றாற் போய்வன மாள்வது.”
என்று தயரதனைக் கேட்டாள்.
அங்ங்ணம் கேட்ட இருவரங்களுள் ஒன்றால் சீதை கேள்வன் போய்வன மாள்வது' என்பது ஆராய்வதற்குரியது. அறக்கடலாகிய இராமனைக் கொடிய உள்ளத்தளாய சிற்றன்னை நீகாட்டிற்கேகுதல் கடன்' என்று அவன் பெயர் குறித்துக் கூறவும் அஞ்சினள் போலும். எனவே 'சீதையின் கேள்வன்' என்று மறைமுகமாகக் கூறினாள் என்றும் கூறுவர். அன்றியும்,'சீதையின் கேள்வன்' என்ற சொற்றொடர் வேறோரு பொருளையும் உள்ளடக்கி நிற்கின்றது என்று அறிஞர் கூறுவர். சீதைக்குக் கணவனாகிய இராமன் மாத்திரம் காட்டிற்குச் செல்லுதல் வேண்டுமென்பதன்று. சீதையும் சீதைக்குக் கணவனாகிய இராமனும் காட்டிற்குச் செல்லுதல் வேண்டும் என்பது தொனிப் பொருள் (Suggestiveness) என்பர். சீதைக்குக் கேள்வன் என்ற நான்கனுருபுப் பொருளும், சீதையும் அவள் கேள்வன் இராமனும் என்ற உம்மைத் தொகைப் பொருளும் அச்சொற்றொடர் பயந்து நிற்குமாறு வைத்த கம்பனது சொல் வைப்புமுறை ஆழ நினைந்து இன்புறற்பாலது. இப்பொருள் காவியக் கதைப்போக்கிற்குத் துணையாதலையும் அறிக. இராமன் மாத்திரம் காட்டிற்குச் சென்றிருந்தால் இராவணவதம்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

ஏற்படுமாறில்லை; சீதையும் உடன் செல்லுதல் கதைப்போக்கிற்கு இன்றியமையாதது. சீதை காட்டில் இல்லையெனில் சூர்ப்பணகை அவளை ஆங்குக் கண்டிருத்தலுமில்லையாம்; அவளின் பேரழகை இராவணனுக்கு எடுத்துரைத்ததுமில்லையாம்; அவள்மாட்டு இராவணன் காதல் கொண்டது மில்லையாம்; அவளைச்சிறை எடுத்ததும் இல்லையாம்; இராவணவதமும் இல்லையாம். எனவே இராவணன் அழிவிற்கு முதற்கல் (First Stone) எடுத்தவள் உடற்கூனும் உள்ளக்கூனுமுள்ளவளாய மந்தரையே. கைகேயி அவளால் ஆட்டி வைக்கப்பெற்ற கைப்பொம்மையே. எனவே மந்தரை கம்பநாடகத்தில் சூழ்ச்சிவல்ல நயவஞ்சகிப்பாத்திரமாவள். (The Villian in Kambar Ramayanam).
ஆரண்ய காண்டம் இராமன் சீதையோடு காடு புகுந்ததையும், பஞ்சவடியில் அவர்கள் இலக்குவன் காவல் நிற்க வதிந்ததையும், சூர்ப்பணகை அவண் வந்ததையும், இராமனைக் கண்ணுற்று மையல் கொண்டதையும் அவள் இராவணனுக்குச் சீதையின் அழகை எடுத்து விரித்துரைத்ததையும், இராவணன் அவள்பால் தணியாக் காதல் கொண்டதையும், மாரீசன் துணைகொண்டு, சீதையைக் களவாடியதையும் கூறும் பகுதியாகும். இக்காண்டம் காவியத்தின் இடைப்பகுதியாகும் அயோத்தியா காண்டத்தில் தூவிய வித்து இக்காண்டத்தில் நிலத்தில் நன்றாக ஊன்றிற்று. சூர்ப்பணகை என்னும் இராவணனின் உடன்பிறந்தாள் அவ்வித்து மேலெழுந்து வளர நீர் வார்த்தாள். அவள் அன்றலர்ந்த செந்தாமரை போன்ற முகத்தாளைத் தீய ஊழ்வலியால் கண்டாள். விற்கலை வல்லுநனான இராமனை வற்கலை அடைய அஃது எந்நோற்றதோ வென்றாள்; கொண்டாள் அவன் மாட்டு மீளாக்காதல்; எடுத்தாள் எழிலுருவம்; மொழிந்தாள் காதல் மொழி; அடைந்தாள் மானபங்கம் இலக்குவனால், சென்றாள் இராவணன் பால்; பூண்டாள் வஞ்ச நெஞ்சம்;பேசினாள் அவன்பால் சீதை வடிவெல்லாம்; வருணித்தாள் சீதையின் நல்லுறுப்புகளையெல்லாம். சீதையின் நுதல் வில்லொக்கும்; விழி வேலொக்கும்; பல் முத்தொக்கும்; இதழ் பவளத்தை ஒக்கும். இவ்வுவமைகளெல்லாம் நெல்லுக்கும் புல்லுக்குமுள்ள உவமைகளே; சொல்லால் ஒவ்வாதன. நாளை நீயே நேரிற் காண்டி என்றாள். அவளைப் பெற்றால் எங்ங்ணம் வைத்து வாழ்தி; சீதை எனும் மானை நீ கொண்டாடப் பெறுதி; இராமப் பெம்மானை நான் கொண்டாட எனக்குத் தருதி என்றாள். செவி மடுத்த தசக்கிரீவன் தங்கைசொல்மிக்க மந்திரமில்லை என உள்ள்த்திற் கொண்டான். கரனை மறந்தான்; தங்கை மூக்கை அரிந்தவனின் உரனையும் மறந்தான்; தான் அரிதிற் பெற்ற வரனையும் மறந்தான். ஆனால் கேட்டமங்கையை மறந்தானில்லை. சீதையைப் பெற மாமன் மாரீசனை நினைந்தான். மாமனும் மனமின்றி, மிதிலைப் பொன்னிற்கு முன் பொய்ம்மானாகக் காட்சி அளித்தான். மான்விழியாள் மானைப்பிடித்துத் தாவென, மெய்ம்மொழியால் எய்யுமம்போடு பின் தொடர மாரீசமான் இலக்குமணா அபயம் எனப் பொய்க் குரலெழுப்பி விழ தேவர் செய்தவத்தினால் இளைய செம்மலும் சீதையைத் தனியே விட்டுப் பிரிந்தான். அஞ்ஞான்று இராவணன் தான் கருதிய அப்பரிசே செய்தான். அவன் வளைந்த யாகையனாய், தவத்தின் மாலையனாய், ஆமையிருக்கையனாய் வேடங்கொண்டு பொற்பிற் கரசியும், கற்பினுக்கணியுமான சீதையைக் கண்டான்; அவள்பால்
80

Page 97
காதற்பிச்சை கேட்டுப் பெரிதும் இரந்தான். சீதையோ பிறர் நெஞ்சுபுகாத இயல்பினள்; எனவே அவனைக் கண்ணெடுத்தும் பார்த்திலள். முன்னியது முடிக்க எண்ணிய மூர்க்கன் அவளை நிலத்தொடு கீண்டெடுத்துச் சென்றனன். இராம இலக்குவர்களை ‘சேக்கையில் பார்ப்பைப் பார்க்கும் பறவையிற் பார்க்கும் தன்மையனான சடாயுவெனும் கழுகின் காவலன் எதிரிட்டான்; விடாப் போர் செய்திட்டான்; இறுதியில் இராவணன் அவனது சிறகுகளை வாளால் வெட்டிவிட்டான்; அவனும் இராமன் வருமளவும் ஆவி பிடித்திட்டான்.
அயோத்தியா காண்டத்தில் மந்தரை இராவணன் வீழ்ச்சிக்குக் கால்கோள் எடுத்ததை ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பணகை பின்பற்றி உடன்பிறந்து இராவணனைக் கொல்லும் வியாதியாய் அவனைப்பற்றி நின்றாள் என்பது இவண் குறிக்கொளற்பாற்று. கம்பன் காவியக்கதைப் போக்கு நெறியில் கூனியும் சூர்ப்பணகையும் இரு திருப்பு மையங்களாக விளங்கினார்கள் என்பது அங்கை நெல்லியாம்.
கிட்கிந்தா காண்டம் இராம காவியப் போக்கில் தொடர் பில்லா, பயனில்லா உறுப்பு எனச் சிலர் கூறுவர். இக் காண்டம் ஒர் இன்றியமையா உள்ளுறுப்புமன்று எனக் கருத்தில் கொள்வாரும் உளர். எனினும் அதனை முற்றிலும் இராம காதையினின்றும் நீக்குதல் இயலாது. இக்காண்டமே சொல்லின் செல்வனாகிய அனுமனைத் தருவது, வாலி சுக்கிரீவனாகிய இரு குரக்கினத் தலைவர்களைப்பற்றிக் கூறுவது. வாலி பெண்பிழை செய்தவன் அவனைக் கோறல் கடுங்கோலன்று; அறநெறியுமாகும் என்றெண்ணிச் சுக்கிரீவன்பால் அன்பு பூண்டு அவனை விண்ணுலகடையச் செய்தான் இராமன். அன்றியும் வாலி இராவணனை வென்ற வீரன். அவனும்.இக்காவியத்தில் உரிய இடத்தைப்பெறுதல் வேண்டும். மற்றும் இக்காண்டம் கம்பனின் வியத்தகு வழக்காடும் ஆற்றலை, உரையாடும் திறனை எடுத்துக்காட்ட ஒர் சிறந்த வாய்ப்பை நல்குகிறது. அதனை இராமன் வாலி ஆகிய இருவர்களின் உரையாடல்களை வைத்து நன்கு உணர்கிறோம். இராமனுக்கு இராவணனோடு போரிடப் படைகள் வேண்டும். சுக்கிரீவன், அனுமன், அங்கதன் உள்ளிட்ட குரக்கின வீரர்கள் இராமனுக்குப் படைத்தலைவர்களாகவும் தூதுவர்களாகவும் பணி செய்துள்ளனர். இக்காரணங்களை எல்லாம் மனதிற்கொண்டுதான் இராமன் சுக்கிரீவனை கிட்கிந்தைக்கு இறையாக்கியதுங் கூட எனக்கொள்ளலாம்.
சுந்தர காண்டமே கம்பனுடைய [0] காண்டங்களுள்ளும் அழகுடைக் காண்டமாகப் பெரிதும்மிளிர்வது. கம்பன் கதையும் இங்கிருந்துதான் கங்காப்பெரு வெள்ளம்போல் கம்பீரமாக ஓட ஆரம்பிக்கின்றது. ஆரியர்க்காகக் கடல் கடந்து முதல் தூது சென்றவன் அனுமனெனும் சுந்தரனே. 'களிக்கின்றாரலாற் கவல்கின்றா ரொருவரைக்காணேன்' என இராவணனின் ஆட்சித் திறனைக் கண்டு வியந்தவனும் இந் நல்லறிவாளனே. ஒவியம் புகையுண்டதே யொக்கின்ற வுருவாள்' ‘விருந்து கண்டபோ தென்னுறுமோ வென்றழுங்கும் என்று சீதையின் மன நிலைமையையும் அறிந்தவன் இவனே. அந்தணரில்லென வீடணன் இல் பொலியக் கண்டவனும் இவனே,
கம்பன் மலர் - 2000

தவம் தவஞ் செய்து பெற்ற திரிசடையாம் ஒரு சடையைக் கண்டுவந்தவனும் இவனே.
"விற்பெருந்தடந்தோள் வீர வீங்குநீரிலங்கை வெற்பில் நற்பெருந்தவத்தளாயநங்கையைக் கண்டே னல்லேன் இற்பிறப் பென்பதொன்று மிரும்பொறை யென்பதொன்றும் கற்பெனும் பெயரதொன்றுங்களிநடம் புரியக் கண்டேன்."
என்று இராமன் திருவடி வீழ்ந்து வணங்கியவனும் இவனே. இக்காண்டம் அனுமனின் அளவில் ஆற்றலையும், தூதுரைக்கும் செவ்விய பண்பினையும், சீதையின் கற்பின் மாட்சியினையும் எடுத்துச் சொல்லவல்லது.
யுத்த காண்டமே கம்பன் காவியத்தின் இறுதிக் காண்டமாகும். கம்பனின் நாடகப் பண்புகளையும், காவிய மாண்புகளையும், யுத்தத்தை வருணிக்கும் திறனையும், கற்பனா சக்தியையும், பிற கவித்திறமைகளையும் இக் காண்டத்தில்தான் மிகுதியாகக் காண்கின்றோம். யுத்த வருணனையில் ஹோமரையும் (Homer) கம்பர் வென்றிட்டார் என்று கூறும்படியாகப் போர் வருணனை செய்திருக்கின்றார்.
இராவணனின் மந்திரசபை, கும்பகர்ணன் வீடணன் அறவுரை, வீடணன் அடைக்கலம், அங்கதன் தூது, கும்பகர்ணன் வீடணன் யுத்தகளச் சந்திப்பு, இந்திரசித்துப் போர், இராமன் இராவணப் போர் முதலியன கம்பனின் ஒப்பது மிக்கதுமில்லா அறிவுச் சிகரங்கள். யுத்த காண்டத்தில் இராவணன் சீதை உரையாடல், மாயாசனகப் படலம், மாயா சீதைப்படலம் முதலியன இடை இடையே புகுத்தப் பெற்றுள்ளன. காரணமின்றிக் காரியம் நிகழா. இப் படைப்புக்களுக்கும் காரணம் உண்டு. காண்டம் முற்றிலும் போர்க்களமே வருணிக்கப்படின் படிப்போர் நெஞ்சம் துன்புறுமன்றோ, சலிப்படையுமன்றோ! எனவே சலிப்பை மாற்றவும் மன அமைதியை நிலைநாட்டவுமே இப்படலங்களைக் கம்பர் படைத்தார் என எண்ண இடமிருக்கின்றது.
வீடணன் கூறுவதாக இரணியன் வரலாறு கம்பன் காவியத்தில் இடம்பெற்றுள்ளது. வேண்டிடின் இதனை நீக்கி விடலாம். ஆனால் கம்பன் விஷ்ணு மூர்த்தியின் வரலாறு என்று குறித்து ஆசைபற்றி இக் கதையினையும் காவியத்தில் ஒட்டி வைத்திருக்கிறார் எனலாம். மற்றவையெல்லாம் காவியத்தோடு நன்கு இணைக்கப்பெற்றுள்ளன; பின்னியும் கிடக்கின்றன. பரதன் நற்பண்புடையவன்; இராமன்பால் எல்லையிலா அன்பு கொண்டவன். தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என நீத்தவன்.
"ஆயிர மிராமர் நின்கே ழாவரோ தெரியினம்மா" என்றும்,
e பினோர் ளெல்லா ழாச் si ଗଥst 9 என்றும் குகனால் பாராட்டப்பட்டவன். இலக்குவனும் பரதனும் இராமனின் உடன் பிறப்பாளர்கள்; பின் தோன்றியவர்கள். பரதன்
முடிதுறந்த மூதறிவாளன்; உலகவர்க்கு ஓர் நற்பண்பைப்போதிக்கப் பிறந்தவன். இலக்குவன் இராமனின் உயிரெனப் பிரியா
-81

Page 98
நற்றோழன். அவன் இராமனோடும் சீதையோடும் காடு புக்கது களத்தில் இந்திரசித்தைக் கொல்வதற்காக. குகனும் சடாயுவும் இராம காவியத்தில் இடம்பெற்றது எற்றிற்காக வென்று வினா எழுவதும் இயல்பாம்; விடையிறுத்தல் வேண்டுவதே. குகன் கங்கையிரு கரையுடையான்; கணக்கிறந்த நாவாயான்; அவனை ஒரு வேடன், ஏழை ஏதிலன் என்று எண்ணாது அவனைத் தன் உயிர்த்தோழனென்றும், சீதையை அவனுக்குத் தோழி என்றும், இலக்குவனை அவனுக்குத் தம்பியென்றும் கூறியது இராமனின் உயர் மனிதப்பண்பையும் சகோதர மனப்பான்மையையும் (Brotherhood of man) 6 TG6ğögös 85T065bGas u JITGlosóT&B. FLTu அருணனின் புதல்வன்; சம்பாதியின் தம்பி, தசரதனின் யாத்த நண்பன். தசரதன் இறந்ததைக் கேட்ட ஞான்று,
புரவலர்தம் புரவலனேபொய்ப் பகையே
மெய்க்கனியே புகழின்வாழ்வே
இரவலரு நல்லறமு யானுமினி
என்படரீத் தேகினாயே’
என்று உளங்குலைந்து நிலைமயங்கிக் கண்ணிர் சோர நின்றவன். இராமன், இலக்குவன், சீதை ஆகிய மூவரையும் தாய்ப்பறவை தங்குஞ்சுகளைக் காப்பதுபோல் பஞ்சவடியில் பாதுகாத்துவந்தவன். இராவணன் சீதையைக் கட்புலனாகா விட்புலனில் எடுத்துச் சென்றுழி அவனோடு அடுபோர் செய்து உயிரை நீத்தவன். தசரதனுக்கும் தனக்கும் ஏற்பட்டுள்ள நட்பின் திறத்தைப் புலப்படுத்துவதற்கும், சீதையை இராவணன் எடுத்துச் சென்றான் என்பதை இராமனுக்குச் சொல்வதற்குமென்றே இவன் கதையில் இடம்பெற்றான் என்று கருதுதல் அமைவுடைத்தாம்.
இதுகாறும் கம்பன் காவியத்தின் பொருள் செல்லும் நெறியைக் கண்டோம். இனி அவனுடைய காவியத்தின் சொல் வைப்பு நெறியைக் காண்போம். செய்யுள்நடை என்பது புலவன் தான் கூறுவான் நினைந்த கருத்துக்களைப் பிறர்க்குப்புலப்படுத்தப் பயன்படுத்திய சொற்போக்கின் நெறியே நடை(Style) எனப்படும். செய்யுள் நடையைப்பற்றி மேல்நாட்டவரும் கீழ்நாட்டவரும் ஒருங்கே நன்கு கூறியுள்ளனர். நடையைப்பற்றி குறள் நடை' எனும் எமது கட்டுரையில் விரிவாகக் கூறியுள்ளோம். அதன் இயல்புகளை ஆண்டுச் சென்று கண்டுகொள்க. ஆண்டுக் கூறாது ஒழிந்தவைகளை இவண் கூறுவாம்.
L. H. ஹட்ஸன் (Hudson) இலக்கியம் பயிலுதற்கு (pirgsOly,(Introduction to the Study of Literature) 6TGirglgith எழுதிய ஆங்கிலப் புத்தகத்தில் இலக்கிய நடையின் இயல்புகளையும் பண்புகளையும் விரித்துரைத்துள்ளார். இலக்கிய நடை என்பது ஒரு புலவனுக்கு ஒருநாட்காலை எளிதிற் கிடைக்கும் பொருளன்று அவன் பன்னெடுங்காலமாகப்புத்தகப்புழுவாயிருந்து பல புத்தகங்களைப் படித்தும், பல ஆசிரியர்களை அடுத்துப்பிற்றை நிலை முனியாது கற்றும், அவர்களது பேச்சிலும் எழுத்திலும்படிந்து ஊறிக்கிடந்தபின் தனக்கெனக் கிடைக்கும் சொல்லமைப்பு ஆற்றலே நடை எனப்படும். அவன் பல புத்தகங்களைப் படித்தானேனும், பல ஆசிரியர்களின் சொற்களினும் எழுத்துக்களினும் நன்கு தோய்ந்தானேனும் அவன் சொல்லமைப்பு
அகில இலங்கைக் கம்பன் கழகம்

முறை அவனுக்கே உரியதாய் அமைவதே இலக்கிய நடையின் முதற்பண்பாகும். அந்நடை அப்புலவனுக்கே உரியதாய், அவனது நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துக் காட்டும் கண்ணாடியாய் அமையும் என்றும் கூறுவர் ஹட்சன். இதனை giélag,56) "Personal or Individual aspect of style' 6Tsirui. செய்யுள் நடைக்கு இலக்கணம் வகுத்த மேலைநாட்டு இலக்கியச் செல்வர்களும் இப்பண்பினையே பெரிதும் வலியுறுத்தியுள்ளனர். சிலவற்றை அடியிற் குறிக்கின்றாம்.
'Style is the writer's distinctive mode of expression'
(D. W. Walters) 'Style is the personal idiosyncracy of expression by which we recognize a writer
(The problem of style: Middleton Murry)
'Style is not the coat of the writer but his skin'
(Carlyle) 'Style is the man that is the unconcious expression of the writer's own Personality. It is the very Soul of one man, reflecting as in a glass the thoughts and feelings of humanity'
(W. G. Long) 'Style is an index of Personality'
(Hudson)
அடுத்து, நடை காலமாறுதலுக்கேற்பக் காலந்தோறும் மாறும் இயல்பினையுடைத்து என்றும் கூறுவர் அவ்வாங்கில எழுத்தாளர். இத் தன்மையினை ஒருவாறு சிறிது விளக்குவாம். சங்க காலத்து ஒரு புலவனின் சொற்கிடக்கைமுறை இடைக்கால அல்லது தற்கால ஒரு புலவனின் சொல் வைப்பு முறையைத் தழுவியதாக இராது. சங்க காலத்து நற்கீரரது நடை இடைக்காலச் சேக்கிழாரது நடைபோல் அமைந்திராது; தற்கால காலஞ்சென்ற கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களின் நடை சங்ககாலக் கபிலபரணரது செய்யுள் நடைபோல் வாய்க்கப் பெற்றிராது. கார்லைல் தாம் எழுதிய நடைப்படி எழுதியிருக்கமாட்டார் அவர் அடிசன் காலத்துப் புலவராக இருந்திருந்தால், அங்ங்னே அடிசனும். எனவே ஒரு புலவனது எழுத்து நடைக்கும் உருண்டோடும் காலத்திற்கும் தொடர்புண்டு என்பது இதனானே புலனாகின்றது. gil 65uisigou 'Historical aspect of style' 6Tsiruri.
மூன்றாவது இயல்பு சொல்லைப் பற்றியதே. சொல்லே புலவனுக்கு மந்திரக்கோல். அதனை வைப்பிடமறிந்து அழகுபட நயமுற வைத்தே கற்போர் உள்ளத்தைப் பிணித்தல் வேண்டும். சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பாக்களில் வைத்தல் வைரக்கற்களைத் தேர்ந்தெடுத்து வைர மாலையை ஆக்குதல் GuTurth, goi6) Goof p56.5605 "Technical or rhetorical aspect of style என்பர். புலவன் செஞ்சொற் கதிபதியாகத் திகழ்தல் வேண்டற்பாலது. அவன் சொல்லின் பொருளையும் நயத்தையும், ஆழத்தையும் நன்கு உணர்தல் வேண்டும்.
அவன் நார் கொண்டு பாய்முடைபவனல்லன்; இழை கொண்டு ஆடை புனைபவனுமல்லன். அவன் நேரின மணிகளைப் பொறுக்கி நிரல்பட வைக்குமாறறிந்து வைக்கும்
- 82

Page 99
பொற்கொல்லனைப் போன்றவன். சொல் திறனாய்வு அவனுழை நனி காணப்படுதல் வேண்டும். அவன் சொல்மாயம் அல்லது சொல் மயக்கம் விளைவிப்பவனாக இருத்தல் கூடாது. சொற்றெளிவு அவனுக்கு இன்றியமையாதது. குறித்த சொல்லை, குறித்த guj;5s, fpig, GeFITsib606) fpsis5 gL-556) (Right use of right Words) வைக்கும் ஆற்றல் படைத்தவனாக விளங்குதல் வேண்டும். gjë gj6ësTLOTGiT gj609 Lojëj605 "Intellectual element 6T6ërg கூறுவர். அன்றியும் புலவன் மென் சொல்லின் நயத்தையும் வன்சொல்லின் திறத்தையும் பிரித்தறியும் இயல்புடையோனாகவும் காணப்படுதல் வேண்டும். எவ்விடங்களில் மென்சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும். எவ்விடத்தில் வன் சொற்களை எடுத்தாளுதல் வேண்டும் என்பதையும் அவன் தெரிதல் வேண்டும். போர்க்கள வருணனையில் மென்கணத்தையும் இன்பச்சுவை பயக்க வேண்டிய காதல் கட்டங்களில் வன்கணத்தையும் எடுத்தாளுதல் புன்மையுடைத்தாம். புலவனின் அகத்தே மண்டிக்கிடக்கும் நல்லுணர்ச்சிகளைக் கற்போர் மனத்திலும் எழச் செய்யுமாறு உணர்ச்சிகளைத் தூண்டும் சொற்களை அறிந்து செய்யுட்களில் பெய்தல் கவிமாட்சியுடைத்தாம். உணர்ச்சி வேகம் சொற்களில் ததும்பி ஓடுமாறு சொற்களை அமைத்தல் நற் கவிஞனின் நற்பண்பாம். இதனை "Bmotional elements என்பர். (There are the emotional elements of force, energy, suggestiveness or the elements by which a writer conveys not only his thought but his feeling, stimulating in his reader sentiments and passions akin to his own and calling up vivid pictures of things he wishes his reader to see with him) g6of புலவன் ஓசை நயங்களை வெளிப்படுத்தும் வண்ணம் சொல்லிசை நுணுக்கங்களை (Music of words) அறிந்து சொல் சேர்க்கை முறையைக் கையாளுதல் வேண்டும். சொற்கள் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் (Charm) அழுத்தங்கள் (Stresses) உடையனவாய் இன்னோசை பயக்கும் நெறியில் அழகுபட(Beauty) அமைக்கப்படுதல் வேண்டும். இச் சொல்லிசைப் பண்பினை “Aesthetic element' GT60Ti, eigj6) i. (There are the elements of music, grace, beauty charm which make a style a pleasure itself apart from the thought and feeling of which it may be the vehicle)
கம்பன் காவியத்தில் இந்நடை இயல்புகள் எல்லாவற்றையும் ஒருங்கே காணலாம். ஆனால் கம்பன் விழுமிய கருத்துக்களையும் சொல்லமைப்பு முறைகளையும் தானே இராம காவியத்திற்கென்றுபடைத்துக் கொண்டானில்லை. திருக்குறளில் பல அகப்பைகள் முகந்து கொண்டான்; சீவகசிந்தாமணியில் சில அகப்பைகளை அள்ளிக் கொண்டான்; எனினும் பொருள் அமைப்பு முறையிலும் சொல்லமைப்புமுறையிலும் தனக்கென ஒரு நெறியை வகுத்துக் கொண்டான். பொருள் அமைப்புப் போக்கில் எடுத்துக்கொண்ட முறை அவற்கே உரியது. தான்கூற விழைந்த பொதுக் கருத்துக்களைப் பாட்டின் முதன் மூன்றடிகளில் கூறி நான்காவது அடியில் அப்பாட்டின் பிண்டப் பொருளாயுள்ள சிறப்புப் பொருளை அமைத்துக் கூறுவது அவனது நல்லியல்பு. முதல் மூன்று அடிகளும் அவ் வீற்றடிச் செல்வத்திற்கு அல்லது பேற்றிற்கு உறுதுணையாகப் பொருளைத் திரட்டித் தரும் பான்மையன. நான்காமடி சிறப்புப்பொருளை முடிந்த முடிபாகத் தாங்கி நிற்கும்
கம்பன் மலர் - 2000

அவ்வடி நினைவில் பதித்து வைத்தற்குரியதாக இருக்கும். ஒரு கவிஞனின் திறம் நினைவில் பதியவைத்துக் கொள்ளுதற்குரிய சீரிய கருத்துக்களடங்கி விழுமிய அடிகளைத் தருதலிலே அமைந்திருத்தல் வேண்டும் என்பது மேல்நாட்டுப் புலவர்களின் கருத்து. ராபர்ட் லிண்டு (Robert Lynd) என்பார் தற்காலப் புலவர்களின் பாடற்றொகுப்பு (An Anthology of Modern Verse) என்னும் நூற்கு முகவுரை (Introduction) எழுதுங்கால் இக் கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். (Memorableness after all, is one of the eminent qualities in literature we judge the greatness of an author largely for his genius for writting memorable passages) கம்பனின் ஈற்றடிகளெல்லாம் நினைவில்
பதித்து வைத்தற்குரிய சிறந்த அடிகளாம் என்பது ஒருதலை.
கீழ்வரும் கம்பன் பாக்களின் ஈற்றடிகள் கம்பராமாயணம் படித்தோர் நினைவில் யாண்டும் அசைக்க முடியா வண்ணம் மறத்தற்கியலாதாய் ஊன்றி நிலைபெற்றிருக்குமென்பதும் திண்ணம். அவ் வீற்றடிச் செல்வங்களுள் ஒரு சிலவற்றை அடியில் தருதும்:
'கண்ணினைக் காக்கின்ற விமையிற் காத்தனர் கைவண்ண மங்கு கண்டேன் கால்வண்ண மிங்கு கண்டேன்’ பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ 'அண்ணலுநோக்கினா னவளு நோக்கினாள் கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம் எடுத்தது கண்டன ரிற்றது கேட்டார் கைவளை திருத்துபு கடைக்கணினுணர்ந்தாள்' மண்ணே கொள்நீ மற்றைய தொன்றும் மறவென்றான்' அப்பொழுதலர்ந்தசெந்தாமரையினை வென்ற தம்மா கழுத்தின் நாணுன் மகற்குக் காப்பின் நாணா மென்றான்' தையற் கடலிற் கிடந்தானைத் தயிலக் கடலின் தலையுய்த்தார் நின், பிரிவினுஞ்சுடுமோபெருங்காடென்றாள்' ஆயிர மிராமர் நின்கே ழாவரோ தெரியினம்மா” தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான் என்றுமுள தென்றமிழியம்பியிசை கொண்டான்' சான்றோர், கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர்கண்டார்’ 'வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்' 'கற்றனர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ களிக்கின்றாரலாற்கவல்கின்றா ரொருவரைக் காணேன்' வெல்லுமோ தீவினை யறத்தை மெய்ம்மையால்
ஒரு புலவனின் செய்யுள் கற்றோராலும் மற்றோராலும் விரும்பிப்பயிலப்படவேண்டுமேல் அவனது பாடல்கள் எளிய, இனிய சொற்களால் ஆக்கப் பெற்றிருத்தல் நல்லது. புலவன் தெள்ளிய நடையில் பாக்களை யாத்தல் வேண்டும். பொருள் மயக்கந்தரும் சொற்களைப் பயன்படுத்தல் கூடாது. பகட்டுமொழிகள், ஆடம்பரச் சொற்கள், கரடு முரடான சொற்கள் நீக்கப்படுதல் வேண்டும். தெளிவு, அதைவிடத் தெளிவு, எல்லாவற்றையும்விட மிகத்தெளிவு (Lucid, more lucid, most lucid - positive, comparative, Superlative) என்ற முறையில் சொற்கள் தெளிவுநிலையோடு அமைதல் வேண்டும். கம்பன்காவியநடையில் இத்தெளிவுசாலவும் உண்டு. அவனது நடை செம்பாகமான நடை வெள்ள நீர் பள்ளம்
83

Page 100
பார்த்துச் செல்வதுபோல்தட்டுத்தடங்கலின்றி ஆற்றொழுக்காய்ச் செல்லும் நெறியது. தவளைப் பாய்த்தும், பருந்தின் வீழ்ச்சியும் அரிமா நோக்கும், ஆண்டுப் பெரிதும் கிடையா. கவிஞனுக்குச் சொற்றெளிவு வேண்டற்பாலது என்பதைச் ‘சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமுந் தழுவிச் சான்றோர் கவியென' என்ற அவரது வாக்கானும் அறிக. சொற்றெளிவில்லாக் கவிஞன் புன் கவிஞன் என்று கொள்ளப் படுவான் என்பதை அவரே மீண்டும் புன்கவி யெனத் தெளிவின்றி' என்று பிறிதோரிடத்தில் கூறியிருப்பதையுங் காண்க. கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்தில் புலவனின் காவிய நடையைப்பற்றிக் கம்பர் தம் கருத்தை அறுதியிட்டு உறுதியாகக் கூறியிருப்பதையும் ஈண்டு எடுத்தியம்புதல் தகுதியுடைத்தாம். இராமன் அனுமனுக்குச் சீதையின் அங்க அடையாளங்களை வருணிக்குமிடத்தில் சீதையின் நடைக்கு உவமை காட்ட வந்த கம்பர் இதனைக் குறிப்பிடுகின்றார். அன்னத்தின் மென்னடை சீதை தன்னடைக்கு ஒப்பாகா, இளம்பிடியின் பெருமித நடையும் சீதை நல்லாள் நடைக்கு நிகராகா. நாவிற்கு நற்சுவை பயக்கும் செஞ்சொற்களாலாய காவியத்தைப் புனையும் உத்தம கவிஞனின் காவிய நடைக்கே அன்னாளது நடை ஒக்கும் என்கின்றார். அப் பாட்டிது, கற்றுத் தேர்மின்:
பூவருமழலை புனைமடப்பிடியென்றின்ன தேவரு மருளத்தக்க செலவின வெனினுந் தேறேன் பாவரு கிழமைத் தொன்மைப்பருனிதர் தொடுத்த பத்தி நாவடு கிளவிச் செவ்விநடைவரு நடையனல்லோய்”
கீழ்வரும் செய்யுட்கள் கம்பனது தெள்ளிய நடைக்கு ஒரு சில எடுத்துக் காட்டுகள்:
"ஓங்குமரனோங்கிமலை யோங்கிமண லோங்கிப் பூங்குலை குலாவுகுளிர் சோலைபுடை விம்மித் தூங்குதிரை யாறுதவழ் சூழலதொர் குன்றின் பாங்கருளதாலுறையுள் பஞ்சவடி மஞ்ச” “வெய்யோ னொளிதன் மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோ வெனுமிடையாளெடு மிளையானொடும் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ வையோ விவன் வடிவென்பதொரழியாவழகுடையான்.”
இச் செய்யுட்கள் சொன்னோக்கும் பொருள் நோக்கு முடையன; எளிய, இனிய சொற்களால் ஆக்கப்பட்டன. சொல்லும் பொருளும் பருந்தும் நிழலும் போல் தொடர்வன.
கம்பன் காவிய நடையில் சொல்லிசை பயக்கும் பாடல்களும் பலவுண்டு. அவனது சொல்நடை சந்தர்ப்பத்திற் கேற்றவாறு மென்றொடர்ச் சொற்களாலும் வன்றொடர்ச் சொற்களாலும் அமையப் பெறுவதும் உண்டு. சூர்ப்பனகை பஞ்ச வடியில் கரிய செம்மலாம் இராமனைக் கண்டாள். ஒவியத்திலும் எழுதவொண்ணா அவன் எழில்நலத்தில் பெரிதும் ஈடுபட்டுக் காமத்தீயால் சுடப்பெற்றாள். அத் தீ நீங்கில் தெறுTஉம். குறுகுங்கால் தண்ணென்னும் என் செய்வாள்! எனவே இராமனை விட்டுநீங்கவுங்கில்லாள். அவனை அணுகத்தன் மாயா சக்தியால் கவினுரு ஒன்றெடுத்தாள். இராமனை நோக்கிச் சென்றாள். அவள் வருகையை வருணிக்க வந்த கம்பர்,
அகில இலங்கைக் கம்பன் கழகம்

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச் செஞ்செவிய கஞ்சநிகர்சீறடியளாகி அஞ்சொலிள மஞ்ஞையென வன்னமென மின்னும் வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.”
என்று இச் செய்யுளை மென் சொற்றொடரிலே பெரும்பான்மையும் வைத்து அமைத்தார். இஃது ஒழுகிசையின் பத்திற்கும் நடைக்கும் அமையும் நற்சான்று. சீற்றத்தை அல்லது கோபத்தை வருணிக்கும் இடங்களில் எல்லாம் கம்பன் முற்றிலும் வன்சொற்றொடராலேயே அச் செய்யுட்களை அமைப்பவன். கம்பன் காவியத்தில் இந்நடைக்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தாடகையின் சீற்றத்தை வருணித்துழி,
இறைக்கடை துடித்தபுரு வத்தளெயிறென்னும்
பிறைக்கடை பிறக்கிட மடித்தபில வாயள்
மறக்கடை யரக்கிவட வைக்கனலிரண்டாய்
நிறைக்கடன் முளைத்தென நெருப்பெழ விழித்தாள்.” என்ற பாட்டாலும்,
பரதனைக் கண்ட குகனின் கோபத்தைச் சொல்லோவியப் படுத்துழி,
"கட்டிய சுரிகையன் கடித்த வாயினன் வெட்டிய மொழியினன் விழிக்கட் டீயினன் கொட்டியதுடியினன் குறிக்குங் கொம்பினன் கிட்டிய தமரெனக் கிளர்ந்த தோளினான்.” என்ற செய்யுளாலும் குறித்தமை காண்க.
விரைவுக் குறிப்பைக் காட்டவேண்டிய இடங்களில் கம்பன் அதற்கென அமைத்த சந்தமும் சொற்சுருக்க நடையும் அடுத்து நாம் ஆராயவேண்டிய தொன்று.
மாலு மக்கணம் வாளியைத் தொட்டதும் கோல விற்கால் குனித்ததுங் கண்டிலர் காலனைப் பறித்தக் கடியாள் விட்ட குல மற்றன துண்டங்கள் கண்டனர்.” 'g5060ögğlso)Lo uLJITun 605kat5jiög562rfa5IT67flazir மடுத்தது நானுதிவைத்தது நோக்கார் கடுப்பினில் யாருமறிந்திலர்கையால் எடுத்தது கண்டனரிற்றது கேட்டார்.”
உற்ற போதவனுள்ளக் கருத்தெலாம் கொற்ற வீரனுணர்த்தென்று கூறுலும் முற்ற வோதியென் மூர்க்கன் முடித்தலை யற்ற போதன்றியாசை யறானென்றான்.”
மேலே காட்டிய இம்மூன்று பாடல்களும் கம்பனது அவ்வாற்றலை அங்கை நெல்லியென எடுத்துக்காட்டும். எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’ என்ற இவ்வடி நனிசிந்திக்கற்பாற்று. சனகன் சீதையின் திருமணத்திற்கென்று வில்விழா எடுத்தான். வந்த திருவுடை மன்னர்களில் பலர் வில்லை எடுக்கமாட்டாமல் மயங்கினர். சனகனின் மனம் பெரிதும் கவன்றது. அவன் இராம இலக்குவனோடு வீற்றிருந்த கோசிகனை நின்னுடைய வேள்வி
-84

Page 101
காணியவந்தார் வில்லும் காண்பார்' என்று அவன் முன் கூறியதால் மாதவனை மன்னன் நோக்கினான். மாதவனும் இராமனை நோக்கினான்; குறிப்பால் குறிப்பை உணர்ந்த தசரதன் மைந்தனும் வில்லை நோக்கி நடந்தான். ஆண்டுக் குழுமி இருந்த மகளிரெல்லாம் இராமனையே நோக்கினர். இராமனின் பேரழகில் ஈடுபட்ட மகளிருள் சிலர் இமையா நாட்டத்தோடு அவன் தோள் கண்டார் தோளே கண்டார்; அவன் தாள் கண்டார் தாளே கண்டார்; பின் பின்வருமாறு தம்முள் பேசுவாருமாயினர்; முனியை ஏசுவாருமாயினர்; சனகனைத் தூற்றுவாரு மாயினர். சிவனது வில்லை இவ்விளவழகன் முன் - இப்பிள்ளையின் முன் - இட்டது பேதைமை என்பார் ஒருசிலர்; கோனிவனிற் கொடியோனிலன் என்பார் பிறிதொரு சாரார். வில்லை இராமன் எடுப்பானோ, நாண் தொடுப்பானோ, அன்றிப் படுப்பானோ என்று வருந்துவாரும் ஒரு சிலர். என்ன நிகழுமோவென்று சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தவராய் தடுமாற்றமுற்று இருக்கும் காலையில் கம்பன் வில்லொடிக்கும் இராமனது ஆற்றலைப் பல பாட்டுக்கள் கூறி நீடிக்க மனமில்லாதவனாய் ஆண்டுள்ளோரின் மனத்தியக்கத்தைப் போக்குவான் கருதி விரைவில் எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று இமைப்பொழுதில் முடித்துவிட்டார். அங்ங்னமே அங்கதன் தன் தூதின் வரலாற்றைப் பலப்படச் சொல்லி இராமனின் பொறுமையைச் சோதிக்காவண்ணம் சுருக்கமாக மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி யாசை யறான்' என்று விரைவில் முடித்ததுமா மென்க.
இவையன்றியும் கம்பன் காவிய நடையழகில் ஆழ்ந்து éLiugig, Gorg, GSITóib616th g Giorgot ouTih. (Copiousness of Vocabulary) கம்பனிடத்தில் சொற்பஞ்சம் யாண்டுமின்று. ஒரு பொருளையோ அல்லது ஒரு கருத்தையோ விளக்குவதற்கு ஒரு பொருள் குறித்த பல சொற்கள் அவர்க்கு உற்றுபூழி வந்து உதவும் என்பதை அடியில் காணுறும் பாட்டுக்களினின்றும் தெரியலாம்.
ஆறுபாயரவமள்ளராலைபாயமலை யாலைச் சாறுபா யோசை வேலைச் சங்குவாய் பொங்கு மோதை ஏறுபாய்தமர நீரிலெருமையாய் துழனியின்ன மாறுமாறாகித் தம்மின் மயங்குமா மருத வேலி'
(நாட்டுப்படலம் - 3) திங்களுங்கரிதென வெண்மைதிற்றிய சங்கவெண் சுதையுடைத்தவள மாளிகை வெங்கடுங் கால்பொர மேக்கு நோக்கிய பொங்கிரும்பாற்கடற்றரங்கம் போலுமே.”
(நகரப்படலம் - 27)
இவ்விரு செய்யுட்களில் முதற் செய்யுளில் ஒலிக்குறிப்பைச் சுட்டக் கம்பன் - பல சொற்களைப் பயன்படுத்திய திறனை ஓர்மின். இவ்வாற்றல் புலவர்களில் ஒரு சிலர்க்கே அமைவதுண்டு. இளங்கோவடிகளின்பாலும் இத்திறனை நாம் காண்கின்றோம். வஞ்சிக் காண்டத்து காட்சிக் காதையுள் இளமைக்குரிய மரபுச் சொற்களை அவர் பயன்படுத்துவதைக் கீழ்வரும் அடிகளால் உணருங்கள் :
கம்பன் மலர் - 2000

ஆளியினணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும் குரங்கின் குட்டியுங் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும் காசறைக் கருவும் மாசறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் கானக் கோழியும் தேன்மொழிக் கிள்ளையும் மலைமிசை மாக்கள் தலைமிசை கொண்டாங்கு”
சொல்வளத்தின் மிகுதிபோலக் கருத்து வளத்து மிகுதியும் கம்பன் காவிய நடையில் ஒரோவழி காண்டலாகும். அடியிற் காணும் ஒரு செய்யுளில் பல கருத்துக்கள் பொதிந்து நிற்பதைக் காண்மின்
நிலமகள் முகமோதிலகமோ கண்ணோ
நிறைநெடுமங்கல நானோ இலகுபூண்முலைமே லாரமோ உயிரி
னிருக்கையோதிருமகட் கினிய tosurf%Dömr6emor Lonr6ğlunargör tamamil filosoragör tapsarofassir வைத்தபொற் பெட்டியோ வானோர் உலகின்மேலுலகோ ஊழியினிறுதி
யுறையுளோ யாதெனவுரைப்பாம்”
(நகரப்படலம் - 2)
இப்பொருட் செறிவிற்குக் கீழ்வரும் செய்யுளும் சான்றாதல் குறிக்கொள்மின்
தோற்பித்தீர்மதிக்குமேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர்வயிரத்தோளை மெலிவித்தீர் வேனில்வேளை ஆர்ப்பித்தீர் என்னையின்னலறிவித்தீர்அமரரச்சம் தீர்ப்பித்தீரின்னமென்னென் செய்துவித்துத் தீர்திரம்மா."
(மாயாசனகப்படலம்)
எச்சொல் எதற்குரித்தோ அச்சொல்லை அததற்குத் தகுந்த வகையில் ஆட்சி செய்தல் கம்பன் காவிய நடையின் மற்றோர் அழகாம். இராமன் வீதியில் உலாவுகின்ற காலத்து அவனைக் காண மகளிர் வந்த பலவிதத் தன்மையைக் கம்பன் அடியில் வரும் பாட்டால் நமக்கு உணர்த்துகின்றான். அப்பாட்டின் சொல்லின்ப நிலையை உய்த்தறிமின்
“மானினம் வருவ போன்றும் மயிலினந்திரிவ போன்றும் மீனினம் மிளிர்வ போன்றும் மின்னின மிடைவ போன்றும் தேனினம் சிலம்பியார்ப்பச் சிலம்பினம் புலம்ப வெங்கும் பூநனை கூந்தல் மாந்தர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார்.”
(உலாவியற்படலம் 1)
இச் சொல் வைப்புமுறை அவை நம் கண்முன் நடப்பன வருவன போன்ற உணர்ச்சியைப் பயக்கின்றது.
சொற் சுருக்கமும் பொருள் விளக்கமும் கம்பன் பாலுண்டு. வேண்டாத சொற்களை எந்நாளும் கம்பன்
- 85

Page 102
வேண்டிற்றிலன். ஒரு சொல்லை வைத்தே பொருள் நயங்கெழுமித் தோன்ற வருணனை செய்துவிடுவது கம்பனுக்கு எளிதாம். இதற்கோர் உதாரணம் கையடைப் படலத்தினின்றும் காட்டுதும். கோசிகனின் தவவேள்விக்குற்ற இடையூற்றை நீக்க இராமன் இலக்குவனோடு அவன்பின் செல்கின்றான். அஞ்ஞான்று முதற்கண் இராமன் கொண்ட கோலத்தைக் கம்பன் வருணிக்கின்றான்.
வென்றிவாள்புடை விசித்து மெய்ம்மைபோல் என்றுந் தேய்வுறாத் தூணியார்த்திரு குன்றம் போன்றுயர் தோளிற் கொற்றவில் ஒன்றுதாங்கினான் உலகந்தாங்கினான்”
என்பது கம்பனின் சொல்லோவியம். இரண்டாவதாக இலக்குவன் கோலத்தைக் கம்பன் வருணித்தல் வேண்டும். அவன் கோலத்தைக் காட்டக் கம்பன் ஒரு தனிச் செய்யுளைப் புனைந்திட்டானிலன். இராமன் எப் படைக்கலங்களைப் பூண்டு நின்றானோ அப் படைக்கலங்களையே இலக்குமணனும் தாங்கி நின்றான் என்ற கருத்தை'அன்னதம்பியும் என்ற சொற்றொடரால் பெற வைத்தார். அன்ன என்ற ஒரு சொல்லே இலக்குவனின் கோலத்தைக் காட்டாநின்றது. இராமன் தாங்கி நின்ற படைக் கலங்களையே பின்னவனும் தாங்கி நின்றான் என்று மீண்டுங் கூறின் அது 5, pugil 6, gp6) 6Tgjuh (5ip55siT (Tautology or Repetition) பாற்படும் எனினுமாம்.
அடுத்துக் கம்பன் தீட்டிய சொல்லோவியம் (WordPicture or images) மாண்பினைப் பற்றிச் சிறிது சிந்திப்போம். கலைகள் பல திறத்தன. அவை கவின் கலைகள் (Fine Arts) என்றும், சிறிய அல்லது கீழான கலைகள் (Lesser or Mechanial Arts) என்றும் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 5'lly L5560)6) (Architecture), fibus 85606) (Sculpture) ஓவியக்கலை (Painting), இசை (Music), செய்யுள் (Poetry) என்ற இவ்வைந்தும் கவின் கலைகள் எனப்படும். மரம், கண்ணாடி, பித்தளை முதலிய பொருள்களின் மீது செய்யப்படும் அழகிய கைவேலைகள் சிறிய கலைகள் எனப்படும். கவின் கலைகளுக்கும் சிறிய கலைகளுக்கும் பொதுவில் வேறுபாடுகள் இல்லாமலில்லை. இரண்டு வகைக் கலைகளும் மக்களின் அறிவு ஆற்றலின் வளர்ச்சி G66f UTilly sit (5,55661T (They are borth alike manifestations of the development of man) 85.656ft 35606)856ir G6).jpth பொறிபுலனின்பம் பயப்பன; கவின் கலைகள் நுண்ணறிவு வளர்ச்சியோடு ஒழுக்க சீலத்தையும் வளர்ப்பன (Intellectual as well as moral development); óf Óluu 5606u856îT LOėsass6rfsóT தேவைகளை நிறைவேற்றுவன.
"The arts of the first class minister to the enjoyment of man while those of the latter minister to his needs. Fine arts are concerned mainly with his moral and intellectual growth and the lesser arts with his physical and material well being" (Judgement in Literature-Worsfold.) அகில இலங்கைக் கம்பன் கழகம்

கவின்கலைகள் ஐந்தும் இருபிரிவினுள் அடங்குமென்பர். கட்டிடக் கலை, சிற்பக் கலை, சித்திரக்கலை இம்மூன்றும் கட்புலன் வழி அறியும் கலைகள் (Arts of the eye); இசையும் செய்யுளும் Gla odlueueir 6) ji bla,05th (Arts of the ear) 6606066ir. 9pejбOLш நல்ல கட்டிடத்தை, ஒவியத்தை, சிற்பத்தைக் கண்ணால் கண்டு களிக்கின்றோம். நல்லிசையை, பாட்டைக் காது குளிரக் கேட்டு அகமகிழ்கின்றோம். கட்டிடம் கல்லாலும் சுண்ணத்தாலும், நீரில் பிசைந்த மண்ணாலும் கட்டப்படுகின்றது; ஓவியம் திரைச்சீலையில் வண்ணங்கொண்டு கோலால் தீட்டப்படுகின்றது. சிற்பம் கல்லில் சிற்றுளி கொண்டு பொறிக்கப்படுகின்றது. செய்யுள் சொல்லால், சொல்லமைப்பால் யாக்கப்படுகின்றது. இசைக்கும் செய்யுளுக்கும் ஒசை அடிப்படை. ஓவியப் புலவன் ஒரு காட்சியைத் திரைச் சீலையில் கவினுற எழுதுகின்றான். அது பேசாது. காவியப் புலவன் அதே காட்சியைச் சொற்சேர்க்கையால் பாவாய்ப் புனைகின்றான். ஒவியமும் உணர்ச்சியை ஊட்டுகின்றது; காவியமும் உணர்ச்சியை ஊட்டுகின்றது இப் பண்பில் ஒவியமும் செய்யுளைப் போன்றதே. ஆனால் ஒவியம் பேசாதது; ஊமை; காவியம் பேசுவார்க்கு 2-gigaO)603T. (Painting is mute poetry) 6.6T600TriG5IT6tioTG (Colour) திரைச் சீலையில் (Canvas) ஒவியத்தைத் தீட்டுவது போலச் சொல்லைக் கொண்டு சொல்லோவியங்கள் (Word pictures) தீட்டுவது கவிஞர்களுக்கு இயல்பாம். அச் சொல்லோவியங்கள் கற்போர் மனத்தின்கண் சொல் சித்திரங்களை (Mental pictures) எழுப்புதலும் உண்டு. கம்பர் இங்ங்ணம் நெஞ்சையள்ளும் கொஞ்சும் நற்றமிழில் சொல் சித்திரங்களை எழுப்புவதில் வல்லவர். கீழ்வரும்பாடல்கள் கம்பனின் அவ்வாற்றலை நினைப்பூட்டுவன:
"விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல் எழுத லேங்குதலிரங்குதலிராமனை யெண்ணித் தொழுதல் சோருத நூளங்குதறுயருழந்துயிர்த்தல் அழுதலன்றிமற்றயலொன்றுஞ் செய்குவதறியாள்.
为多
எனும் இக் கம்ப சித்திரம் அசோக வனத்தில் சீதையின் நிலையைப் புலப்படுத்துவது.
"விழுந்தாள் புரண்டாளுடல்முழுதும் வியர்த்தாள்
உயிர்த்தாள் வெதும்பினாள் எழுந்தாளிருந்தாள் மலர்க்கரத்தை நெரித்தாள்
சிரித்தா ளேங்கினாள் கொழுந்தா வென்றாளயோத்தியர்தங் கோவே
யென்றா ளெவ்வுலகும் தொழுந்தாளரசேயோ வென்றாள் சோர்ந்தா
ளரற்றத் தொடங்கினாள்.”
எனும் இப்பாட்டு, களங்காண் படலத்தில் சீதையின் ஆற்றெணாத் துயரத்தைச் சித்திரிப்பது.
"தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கத் தாங்கக் கொண்டல்கள் முழவினேங்கக் குவளைகள் விழித்து நோக்கத் தெண்டிரையெழினி காட்டத் தேம்பிழி மகர եւInմlkմr வண்டுகளினிதுபாட மருதம் வீற்றிருக்கு மாதோ.” எனும் இப்பாட்டு மருதநிலத்துச்சொல்லோவியம்.
86

Page 103
இறுதியில் கம்பன் காவியத்தில் இராம கதையை முற்றிலும் தொகுத்து வைத்த நயப்பாட்டொன்றினை ஈண்டெடுத்துக் காட்டுவாம்.
“காந்தையருக் கணியனைய சானகியார் பேரழகு மவர்தங் கற்பும் ஏந்துபுயத்திராவணனார் காதலுமச்
குர்ப்பனகை யிழந்த மூக்கும் வேந்தர்பிரான் தயரதனார் பணியினால்
வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவுங் கடைமுறையே புரந்தரனார்
பெருந்தவமாய்ப் போயிற்றம்மா."
இச் செய்யுளில் இந்திரன் பேசப்பட்டிருக்கிறான். முக்கோடி வாணாளையும் முயன்று தவத்தால் பெற்ற இராவணனை அழிக்க இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மகாவிட்டுணுவை இரந்தனர்; அவர்களின் இடுக்கணைப் போக்கவே வைகுந்த வாசனாம் செந்தாமரைக்கண்ணன் இராமனாக அவதாரஞ் செய்தான். இராவண வதம் ஏற்பட வேண்டி மந்தரையின் சூழ்ச்சியால் இராமன் சீதையோடு காட்டிற்கு வரவேண்டும். அவனும் தசரதனிடத்தில் பெற்ற சிற்றன்னை கைகேயியின் வரத்தால் கானகம் எய்தினான். அது வேந்தர்பிரான் தயரதனார் பணியினால் என்று பாட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. இனி இராவணன் சீதையைக் காதலுற்று அவளைத் தன் இதயமாஞ் சிறையில் வைத்தாகல் வேண்டும். அக் காதலைத் தூண்டுவதற்குரிய பாத்திரமாகவுள்ளவள் சூர்ப்பனகை. எனவே அச்சூர்ப்பனகையும் இப்பாட்டில் இடம்பெற்றாள். இலங்கைநாதன் சீதையின் பேரழகில் ஈடுபட்டு அறிவிழந்து சீதையின் கற்பிற்குப் பங்கம் விளைக்க அவளைச் சிறை எடுத்தான்; முயன்றான்;
சீதையின் கற்பு வென்றது; இவ்வுண்மை காந்தையருக்கும்
கம்பன் மலர் - 2000

அணியனையசானகியார் பேரழகு மவர்தங் கற்பும் என்று பாட்டில் கூறப்பட்டது. இறுதியில் இராவணன் இராமன் வாளியால் கொல்லப் பெற்றான் என இப்பாட்டு இராம கதையை முற்றிலும் தன்னகத்தே கொண்டுமிளிர்வது.
அன்றியும் இக்கவி இன்னொரு சிறந்த நயத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. இப் பாட்டு இராவணன் இறந்தபின் அவன் மனைவி மண்டோதரி புலம்பி அழுத பாடல்களாக அமைக்கப் பெற்ற பாடல்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. ஆகவே இப் பாடல் மண்டோதரியின் கூற்றாக உள்ளது. அவள் இந்திரன், தசரதன், இராவணன், சீதை ஆகிய நால்வரையும் பெரிதும் மதிக்கின்றாள். ஆனால் சூர்ப்பனகை ஒருத்தியைத் தான் இகழ்கின்றாள். ஏனெனில் அவளே தான் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பாக வந்தவள். அவளே தான் சானகி எனும் பெருநஞ்சினைத் தன் கணவன் இராவணன் பருகுமாறு தூண்டியவள். மண்டோதரி தனது விருப்பையும் வெறுப்பையும் ஒரு சிறப்பு விகுதிச்சொல்லால் காட்டுகின்றாள். மேலேகூறிய நால்வரையுங் கூறுங்கால் சானகியார், இராவணனார், தயரதனார், புரந்தரனார், என்று 'ஆர்' எனும் சிறப்பு விகுதி அடை கொடுத்துப் புகழ்ந்தாள். அப் பாட்டில் வந்துள்ள ஐந்து பாத்திரங்களில் சூர்ப்பனகை ஒருத்திக்குத்தான் 'ஆர்' எனும் சிறப்படையை அவள் கொடுக்கவில்லை. மண்டோதரியின் மங்கல நாணைக் கழற்ற வந்தவள் அவளே. எனவே மண்டோதரி அவளை வெறுத்தது அறநெறியேயாம். இது கம்பன் காவிய நடையில் ஆர் எனும் சிறப்பு விகுதி எங்ங்ணம் வைக்கப்படுதல் வேண்டும் என்பதைப் புலப்படுத்த வந்தது என்க. இன்னனைய பல நடைநயங்கள் கம்பன் காவியத்தினுள்ளே இலைமறைகாய்போல் மறைந்து கிடக்கின்றன. ஒரு சிலவற்றை இதுகாறும் சுட்டினோம். அறிஞர்கள் மற்றையவற்றையும் அறிவுகொண்டு ஆய்ந்து இறும்பூதெய்துவார்களாக,

Page 104
வர்கட்கு இடுக்கண் செய்தி பொதுவாக நாம் அறிந்தி இராமாயணத்தின் முடிவா6 வரங்களைக் கொண்டே அ நீ அருள் செய்தாலல்லது உய்யும் வழியில் ஆதிசேடன்மேல் அறிதுயில் கொள்ளும் மழை
அரக்கர்தன் கொடுமை தீர்ப்பன்' என்று துன் மகனாய்ப்பிறந்ததும் நாடு துறந்ததும் சீதைே காமுற்றுச் சிறை வைத்ததும் இலங்கைப் ே தொடர் வினைகளே என்று நாம் அறிவோம்
காந்தை பேரழ 6/fեg/ւթLկ குர்ப் வேந்தாட Glas/2 போந்தது பெரு
என்ற உயுத்த காண்டச் செய்யுளில் காரணப் முறையில் தலைகீழ் அமைப்பு உண்டு. தே சூர்ப்பனகை மூக்கிழப்பு, இராவணன் காதல் காயும் கனியும் போலத் தலைமுறையாக என் கம்பர் பாட்டின் முடிவில் வைத்துள்ளார்.
இராவண வதம்
திருமால் இராமனாகத் திருப்பிற நோக்கம் என்பதனைக் காப்பியம் வீதிக்க இராமன் தாடகையை வீழ்த்தியது பின்னர் அறிகுறி எனப் பாலகாண்டத்தின் தொடக்க கம்பர். வேள்வியைக் காத்த இராமனை ந
 
 

Tollau டுபொருள்
பேராசிரியர் வ. சுபமாணிக்கம்
த அரக்கர்களை அழிப்பது இராமாயணத்தின் பாடுபொருள் எனப் திருக்கின்றோம். அறம் வெல்லும், பாவந்தோற்கும் என்பதே ன அறம், என்பது நமக்குப் புதிய கருத்தன்று எங்களிடம் பெற்ற ரக்கர்கள் எங்களையும் மூவுலகங்களையும் அழிக்கின்றனர் எனவும், லை எனவும் நான்முகன் முதலான தேவரெல்லாம் கடல் நடுவில் p நிற வண்ணனான திருமாலிடம் முறையிட்டதும் கொலைத் தொழில் புறும் அமரர்கட்கு உறுதியளித்ததும் அதனை நிறைவேற்றவேதசரதன் யாடு காடு சென்றதும் அவளைப் பிரிந்ததும் இராவணன் சீதையைக் ாரும் இராவண வதையும் எல்லாம் குடலை இழுத்தாற்போல் வரும்
பருக் கணியனைய சானகியார் ரகும் அவர்தங் கற்பும் த் திராவணனார் காதலுமச் பநகை இழந்த மூக்கும் பிரான் தயரதனார் பணியதனால்
கானில் விரதம் பூண்டு /வும் கடைமுறையே புரந்தரனார் ந்தவமாய்ப் போயிற்றம்மா.
படிமுறைகள் வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள; எனினும் சொல்லிய வர்கள் செய்த பெருந்தவம், இராமன் விரதம் பூண்டு கான் ஏகுதல், , சாணகியின் கற்பு, அவள் தன் பேரழகு என்பவை வித்தும் முளையும் ண்ணப்படாமல் கடைமுறையாக எண்ணப்பட்டுள. மூலகாரணத்தைக்
ப்பு எடுத்ததற்குத் தேவர் வேண்டுகோளின்படி இராவண வதமே ற்போல ஆங்காங்கே நினைவூட்டிச் செல்கின்றது. கன்னிப்போரில்
இலங்கைப் போரில் இராவணன் கொடி வீழ்ந்தொழியும் என்பதன் கத்திலேயே இராவண வதத்திற்கு உவமையால் அடிக்கல் நாட்டினார் நன்றியோடு நோக்கிய விசுவாமித்திரர் பெரிய காரியம் உள அவை
88

Page 105
முடிப்பது பின்னர் என்ற பாராட்டு மொழியிற் கூட இராவணவதைக் குறிப்பு உண்டு. நல்லோரெல்லாம் தீயோராய் மாறும் போது, இம் மாற்றங்கள் தன்னியல்பில் நிகழ்ந்தனவல்ல; தேவர்களின் முன்னைய வேண்டுகோளால் வலிந்து நிகழ்பவை என்ற நோக்கத்தைக் கம்பர் யாண்டும் ஒரு காரண அமைதியாகக் காட்டிக் கற்பவரை ஏற்றுக் கொள்ளச் செய்குவர். இஃது இவர் கையாளும் உத்தி
இராமன் முடிசூடாமைக்குக் கைகேசியின் புதிய தன்னலம் வெளிப்படையான காரணம் ஆம். இராமனோ கம்பரோ கைகேசியின் தூய நெஞ்சைத்தைப் பாராட்டிக் கொண்டிருந்தாலும், தயரதனோ, பரதனோ, இலக்குவனோ, ஊர் மக்களோ அவளைச் சிறிதும் மதிக்கவில்லை. இயற்கைகள் கூட அவள்தன் சூழ்ச்சியை வெறுத்தன. வாழ்நாள் முழுவதும் உயிரொன்றுபோற் காட்டித் தயரதனுக்கு இரக்கமிலாத பெருந் துன்பத்தைச் செய்த கைகேசியின் செயல் கண்டு இரவாகிய நங்கை நாணி அகன்றாளாம்; அறிவிலாத மனைவியால் மன்னன் படும் துயரைப் பார்த்து வைகறைக் கோழிகள் சிறகினால் வயிற்றில் அடித்துக் கொண்டனவாம்; வைகறைப் பறவை யொலிகள் நினைத்தற்கரிய கேடு சூழ்ந்த கைகேசிக் கயத்தியை வைவன போன்றனவாம்; தீய பெண்ணொருத்தியின் சிந்தையறிந்து ஏனைப் பெண்கள் வாயடங்கின போலக் குமுதங்கள் காலையிற் குவிந்தனவாம். இங்ங்ணம் கணவன் முதலான உறவினோர் கைகேசியை வசை மொழிந்தாலும், உயிரியற்கையும் உயிரில் இயற்கையும் அவளைப் பழித்துக் கூறினாலும், அவ்வாறு கூறுவதாகப் புலவரே புனைந்திருந்தாலும், தன் கூற்றாக வரும்போது இராமனைப் பின்பற்றிக் கைகேசியைப் பூசிமெழுகிப் பாராட்டுகின்றார்.
திய மந்தரையிங்வுரை செப்பலும் தேவி தூய சிந்தையுந் திரிந்தது குழ்ச்சியின் இமையோர் மாயையும் அவர்பெற்ற நல்வர முண்மை யாலும் ஆய அந்தனர் இயற்றிய அருந்தவத் தாலும்
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூய்மொழி மடமான்
பரக்கும் தொல்புகழமுதினைப் பருகுகின்றதுவே கைகேசி தூய சிந்தையும் நல்லருளும் தூய்மொழியும் இரக்கமும் இயல்பிற் பெற்றவள் எனவும், தேவர்தம் வரத்தால் அவள்தன் அருங்குணங்களைப் பலியிட்டாள் எனவும், அந்நல்லாளிடத்து அத்தகைய குணக்கேடு விளைந்திராவிட்டால் இராமன் புகழ்பாடும் வாய்ப்பு புலவர்க்கும் அதனை அள்ளிப்பருகும் வாய்ப்பு உலகர்க்கும் வந்திரா எனவும் கம்பர் ஒரு தீயவினையிலிருந்து பல நல்வினைகள் விளைந்த புதுமையைத் தம் புலமை மதுகையால் புலப்படுத்துகின்றார். இராவண வதம் அவரை இவ்வாறு பாடச் செய்கின்றது. தன் பிறப்பின் நோக்கம் இதுவாதலால், இராமன் ஒரு நாளும் கைகேசியை ஊறுபடப் பேசியதில்லை. பிறர் பேசவிட்டதும் இல்லை; இவ்வுள்ளத்தை நன்கு புரிந்து கொண்ட சீதை அசோகவனத்தில் துயருற்ற காலையும் 'சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை யாண்டு இறக்கின்றாள் தொழுதாள்’ என்று வேறுபாடின்றிப் போற்றியுரைப்பதைப் படிக்கின்றோம்.
போர்க்கோலம் பூண்டு வில்லேந்திச் சினந்த
இலக்குவனை ஈன்றாளை வென்றோ இனி இக்கதம் தீர்வது என இராமன் அடக்கிவிடுவதையும் காண்கின்றோம்.
கம்பன் மலர் - 2000

நியினம் இருந்தனை யானும் நின்றனென் ஏயெனும் மாத்திரத்து எற்று கிற்றிலென் ஆயகன் முனியுமென் றஞ்சினேன் அல்லால் தாயெனும் பெயரெனைத் தடுக்கற் பாலதோ.
பெருங்கேடு இழைத்த தாயைக் கொல்லலாம் என்று நெஞ்சோடும் பரதனை இராமன் நினைவு தடுக்கின்றது. எனவே கைகேசி காப்பிய முழுவதும் காப்பாற்றப் படுகின்றாள். அதற்குக் காரணம் இராவண வதம் என்ற இராமன் பிறப்பு நோக்கத்திற்கு ஓர் உயர்ந்த நற்பலி தேவை. அப்பலிப் பொருளே கைகேசியின் இரக்கம். இராமனையே மகனாக நினைத்தவள் மந்தரையால் அந்நினைப்பைக் கைவிட்டமை.
காப்பிய இலக்கணம்
இதுகாறும் விளக்கியபடி தேவர் வேண்டுகோள் என்ற இராவணவதம் இராமாயணத்தின் பாடுபொருள் என்பது வெளிப்படை. இது ஒன்றுதான் காப்பியப் பொருளா? வேறு பல பாடுபொருள்கள் இருக்கலாம். செய்யுட் பன்மையும், பாத்திரப்பன்மையும் கொண்ட தொடர் நிலைக் காப்பியத்துக்கும் பாடுபொருள் ஒன்று என்றுதான் முடிக்க வேண்டுமா?'நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாகி' என்பது தண்டியலங்காரம் கூறும் காப்பியவிலக்கணம். வீடு சிந்தையும் மொழியும் செல்லா அப்பாலாதலின் அறம், பொருள், இன்பம் என்ற ஏனை மூன்றுமே நூல்களாற் கூறப்படுவன என்பது பரிமேலழகர் விளக்கம். அறம் முதலாகிய மும்முதலும் பொருளாகலாம் என்பது தொல்காப்பியம். சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாதல், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டல் என்ற மூன்று அறங்களை நூற்பொருளாக வடித்துக் காட்டுகின்றது. ஆதலின் தலைப் பெருங்காப்பியம் ஆன இராமாயணம், இராவணவதம் என்னும் ஒரு பொருளே நுதலுவது என்ற கருத்து மறுபார்வைக்குரியது. தெய்வப் பிறப்பு
இராமன் கம்பரின் அன்புப்படி, தெய்வப் பிறப்பாகும். இதனை யாண்டும் நிறுவிக்கொண்டுசெல்வது அவர் குறிக்கோள். தானாட்டித் தனாஅது நிறுத்தல்' என்பது இலக்கண நெறி மட்டுமன்று, இலக்கிய நெறியும் ஆம் எனக் கம்பர் படைப்பால் அறிகின்றோம். இராமனது பிறப்பு நோக்கம் தேவர்கட்கு இராவணவதமாக இருக்கலாம். கம்பரின் படைப்பு நோக்கம் மக்களாகிய நமக்கு எது? குணங்களால் உயர்ந்த இராமனைத் தொழுந் தெய்வ வழிகாட்டியாகப் படைப்பது. யாவர்க்கும் தொழுகுலமாம் இராமன்' என்று பரதன், குகன் முன்பு சுட்டவில்லையா? சூழ்ச்சியாற் கொலைப்பட்ட வாலியும், நிற்கின்ற செல்வம் வேண்டி நெறிநின்ற பொருள்கள் எல்லாம் இவன்தன் நாமத்தைத்தானே ஒதுகின்றன என்று பாராட்டிக் கொண்டு மடியவில்லையா? அநுமனை இராமனுக்கு ஆழ்ந்த அன்பன் ஆக்குவதுதானே இக் காப்பியத்தின் நெடும் போக்கு. எத்துணை வசைமொழி மொழிந்தாலும், வஞ்சகம் செய்தாலும்
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழுவாளங்கை ஈசன் என்றினைய தன்மை யிளிவரும் இவராலன்றி நாசம் வந்துற்றபோதுநல்லதோர்பகையைப் பெற்றேன்.
என்று நேர்பகைஞனான இராவணனும் இராமனைப் புகழுமாறு முடிப்பது கம்பரின் நோக்கம். ஆதலால் இராவணவதஞ் செய்யப்
89

Page 106
பிறந்த இராமனை மக்கள் வணங்கும் தெய்வப் பிறப்பாக, பண்பெலாம் ஒரு வடிவெடுத்தமானிடத்தோன்றலாகப்பாடிப்பரவி மகிழ்கின்றார் கம்பர். இராமாயணத்தைத் திவ்வியப் பிரபந்தமாக்குகின்றார். காசில் கொற்றத்து இராமன் கதையை ஆசை பற்றி ஆதிசேடன் தலைபோல் விரித்துப்பாடுகின்றார். இதுவும் அவர் காப்பியத்தின் ஒரு பாடுபொருள் என்று கொள்ள வேண்டும்.
பல்பொருள்
ஒரு பெரு நாட்டிற்குப் பல வீதிகள் உண்டு. வானுற ஓங்கிய மாளிகைக்குப் பல மாடங்கள் உண்டு. நாடகப் பேரரங்குக்குப் பல திறப்புக்கள் உண்டு யாக்கைக்குப் பல வாயில்கள் உண்டு பேராற்றுக்குப்பலவாய்க்கால்கள் உண்டு. ஒரு பெருநாட்டிற்குப்பலமொழிகளும், பலவினங்களும், பல மதங்களும் உண்டு. அதுபோல் பெருங்காப்பியத்துக்கும் பாடுபொருள் பல இல்லாமல் இயக்கம் நிகழாது. திருமால் பிறப்பான இராமன் இராவணவதஞ் செய்ய இத்துணை நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகளும்அல்லல்களும் போர்களும் வேண்டுங்கொல்? தேவர்கட்குத் தொல்லை செய்தான் என்பது ஒன்றே கொண்டு இராவணனொடு போர் தொடுத்து அவனைக் கொல்லக் கூடாதா? முனிவர்களின் வேள்விக்கும், தவத்துக்கும் இடையூறு செய்தனர் என்பது ஒன்றே கொண்டு இராமன் அரக்கர்களைக் கொன்றிருக்கின்றானே.
இராவண வதத்திற்காகக் கைகேசியைத் தீயவளாக்கித் தந்தையை உயிர்விடுக்கச் செய்து நாடு துறந்து காடேகி அருந்ததியனைய சீதையைப் பறிகொடுத்து, பிறன் மனையைக் கவர்ந்தான் என்ற புதியதொரு குற்றத்தை இப்பிறப்பில் இராவணனுக்கு உண்டாக்கி, தான் தெய்வப் பிறப்பாக இருந்தும், மானிடப்பிறப்புக் கூட இல்லாத குரக்கினத்தை நட்பாக்கிப்பல்வேறு மாயங்கட்கு உள்ளாகி அழுது புலம்பி முடிவில் இராவணனை வதஞ் செய்து தேவர்தம் இடுக்கண் தீர்த்தான் என்று இத்துணை நிகழ்ச்சிக் கோவை செய்யவேண்டுமா? எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’ என்ற திறங்காட்டிய இராமபிரானுக்கு இராவணவதம் ஒரு பொருட்டோ? ஆதலின் இராமாயணக் காப்பியம் தேவர்க்காக எழுந்தது என்ற கருத்து வலுவுடைத்தன்று அது இராமன் பெருமைக்குச் சிறப்புத் தருவதுமன்று.
தெய்வ இராமனை மக்களுட் சிறந்தானாகப் படைத்து மக்கள் உறும் இன்ப துன்பமெல்லாம் அவனுக்கும் உறுவித்து, தன் மனைவியைப் பிறன் கவர விடுத்த பெருந்துயரை அவனும் அடைந்தானாகக் காட்டி, எந்நிலையிலும் சீதை கற்புநெறிநீங்காத் தமிழ்க் குறிக் கோளை நிலைநிறுத்தி, இவ்வுலகில் இல்லற மாட்சிகளை மக்கட்கு அறிவுறுத்துவதே இராம காப்பியம். இத் தொடர்நிலையில் எத்துணையோ பாடுபொருள்கள் பின்னல் போல் ஒன்றையொன்று மடுத்துக் கிடக்கின்றன. பாத்திரங்கள் பலவாகும்போதுகாப்பியத்தின் பாடுபொருளும் விருந்தில் உணவு வகைபோலப் பலவாகியே தீரும். பாடுபொருள் ஒன்று என்று ஒற்றைக்கண் கொண்டு ஆய்வார்க்குக் காப்பிய முழுமை மறைந்து நிற்கும். இருவகைப்பாகுபாடு
காப்பியங்களில் பாடுபொருளைப் பொதுவாக இருவகைப் படுத்தலாம். 1பலவன் தன் எண்ணத்தைப்பொருளாகக் கொண்டு
அகில இலங்கைக் கம்பன் கழகம்

பாடுவது. 2. பாத்திரங்களின் எண்ணங்களை அல்லது நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்டுபாடுவது. முன்னது சிறிய அளவாக வரும். பின்னதுதான் காப்பியத்தின் பெரும்பகுதியாக இருக்கும். எனினும் முன்னதாகிய புலவன் எண்ணம் நூல் முழுவதும் கலந்து வரும் எனவும், அவ்வெண்ணம் கலவாமல் பாத்திர நிகழ்ச்சிகள் பக்குவ மணம் பெறா எனவும் இலக்கியப் போக்கை உணர வேண்டும். நாட்டு நகர அரசியற் படலங்களில் கம்பர்தாம் காணும் மன்னாயப்பொருளைக் கற்பனையுலகில் நின்று பாடுகின்றார். இப்பாடல்களில் கதை நிகழ்வுகள் இல்லை. உயர்ந்த நல்வாழ்வுக் கருத்துக்களே செய்யுட் பொருளாக உள. கம்பர் இப் படலங்கள் அளவில் தம் உறவை நிறுத்திக் கொள்ளவில்லை. காப்பியத்தில் வேண்டுமிடந்தோறும், பாத்திரந் தோறும் தாம் நேராக, மறைவாக நின்று பல உத்திகளால் உறவு கொள்கின்றார். புலவன் கலந்து உடனாகி உறவு கொள்ளாக் காப்பியம் உயிரற்ற காப்பியம் ஆகும்.
கொல்லாத மைத்துணனைக் கொன்றாயென்
நதுகுறித்துக் கொடுமை குழ்ந்து
பல்லாலே யிதழதுக்குங் கொடும்பாவி
நெடும்பாரப் பழிதீர்ந்தாளோ
என்ற வீடணன் புலம்பலில் சூர்ப்பனகையின் நெடுநாள் வஞ்சகக் கிடக்கையைக் கம்பர் இடம் பார்த்துப் பாத்திரத்தோடு நின்று வெளிப்படுத்துகின்றார்.
மும்மைசால் உலகுக் கெல்லாம்
மூலமந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர்நாமந்தன்னைக்
கண்களில் தெரியக் கண்டான். வாலி காணும் பகழி யாருடையது என்பதனைக் கம்பரே புலமையுணர்வு பிற்படத் தெய்வவுணர்வு முற்பட முன்னின்று அப்பகழிக்கு உரியானை அறிமுகஞ் செய்கின்றார். இத்தகைய இடங்களில் புலவன் உறவு எவ்வளவு பெருமிதத்தை விளைக்கின்றது.
ஏனைய வகையான பாத்திரப் பொருள்களும் காப்பியத்தில் பலவாகும். இராவணனுக்குப் பிறன் மனைக் காம்மும் சுக்கீரிவனுக்கு அரசு மனை மீட்சியும், அனுமனுக்கு இராமனது அன்பும், கும்பகர்ணனுக்கு உடன்பிறப்புப் பற்றும், தயரதனுக்கு இராமன் மேற் காதலும், சீதைக்குத் தவக்கற்பும், இராமனுக்கு மனைமீட்சியும், ஒற்றுமையும் கைகேசிப்பற்றும், பரதனுக்கு இராமப் பற்றும், சூர்ப்பனகைக்கு காதலும், இலக்குவனுக்குத் தொண்டும், வீடணனுக்கு அரசு வேட்கையும், மேகநாதனுக்கு மாயையும் என்று இவ்வாறு வரும்பாத்திரங்களின் பொருளெல்லாம் ஒன்றிப் பிணைந்த கூட்டுப் பொருளே காப்பியப் பொருளாகும். காப்பியம் ஒரு கல்லில் செய்யும் குடைவரைக் கோயிலன்று; ஒரு கோபுரமுடைய கோயிலுமன்று. கல்பல அடுக்கிய உள்ளும் புறமும் கோபுரங்கள் கொண்ட வானளாவிய கட்டுமானக் கோயிலாகும்.
நன்றி: காப்பியப் பார்வை - மணிவாசகர் பதிப்பகம்
90

Page 107
ம்முடைய கடவுள் சக்தியுள்ள
o 'ஸர்வ சக்தியும் உள்ளவர்.
தற்கொலை செய்து கொள்ளும் சக்தி கூ எவ்வளவோ நிம்மதி என்று சிரித்தான் நா6
கடவுள் தற்கொலை புரிவதா? மு
வான வீதியிலே தேவர்களோடு ஒ பரம்பொருள் தன் அவதார நிலையில் தற்செ நடுங்கி நின்ற அந்த நிலையிலேயே வெளிட்
அந்த நடுக்கமே, மின்னல் - பாய் கிடந்த வீரர்களுக்கு மேலே கொண்டுவந்து ஸ்தூல வடிவம் பெற்று விடுகிறான்.
மின்னொளி வீசுகிறது கருடன் ( போக்கி விடுகிறது. சிறகுக் காற்று மெல்ல
இதைச் சொல்லப் பல பாடல்கள் ( உள்ளபடி உணர்ந்து கொள்ளாமல் நீளத்தை முள்ளை மட்டும், திருவிழாவின் ஒசையை
ஏதோ அலங்காரமான அடுக்கு ெ
ஆனால் ஹோமர், ஷேக்ஸ்பியர் காண்பது எளிதான காரியமன்று தக்க ப மகாகவிகளின் போக்கை அளந்து முடிவு அளந்து காட்டுமா?
இனி, இந்த எச்சரிக்கையை உள்ள ஆராய்ந்து பார்க்கலாம்.
 
 

L உபநிஷதம்
பி. பூ
வரோ?' என்று கேட்டான் நாஸ்திகன் பாதிரியாரை நோக்கி.
- உண்டோ? அப்படியானால் செய்து காட்டலாமே. எங்களுக்கும் ஸ்திகன்.
டியுமா? ஸர்வ சக்திக்குத் தற்கொலை புரியும் சக்தி உண்டா?
ரு தேவதையாக நின்று போரைப் பார்த்துக் கொண்டிருந்த கருடன். காலைபுரிந்துகொள்ளவும் துணிந்ததே என்று சித்தம் நடுங்கினான்.
பட்டான்.
ச்சலில் கருடனைக் கீழே செலுத்துகிறது; நாக பாசத்தால் கட்டுண்டு சேர்த்துவிடுகிறது. சூட்சும உருவில் நின்றவன் பறந்து வரும்போதே
மேனி. இப்போது போர்க்களத்திலுள்ள இருளை இந்தக் காந்தியே வீசவே நாகபாசம் நடுநடுங்கி முழுதும் அழிந்து போகிறது.
தேவையாகிறது கவிஞனுக்கு. சிலர் கம்பன் கவிதையின் போக்கை மட்டும், ஸ்தூலமாகக் கண்டுகொள்கிறார்கள், குருடன் ரோஜாவின் மட்டும் கண்டு கொள்வது போலே
மாழிகளின் சப்தஜாலக் கோவை என்றும் ஏமாறிப் போகிறார்கள்.
வால்மீகி, கம்பன் போன்ற மகா கவிகளை அளந்து அகல நீளம்
பிற்சியில்லாதவர்கள் தங்களிடன்ள அற்பக் கருவிகளைக் கொண்டு கட்டுவது சரியன்று. பாலை அளக்கும் நாழி பாலின் சுவையையும்
ாத்தில் கொண்டு கருடன் வருகையையும் செய்கையையும் ஒருவாறு
91

Page 108
இதோ இந்தப் பாட்டைப் பாருங்கள். பொருள் தெரிவதற்கு முன்பே ஓசை இன்பத்தை அனுபவித்துப் பாருங்கள். இந்த ஒசையிலே கருடன் வருகின்ற அதி சூட்சும விசையையும் அநாயாஸ விஜயத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.
காதங்கள் கோடி கடைசென்று காணும் நயனங்கள் வாரிகலுழக் கேதங்கள்கூரஅயர்கின்ற வள்ளல்திருமேனிகண்டு கிளர்வான், சீதங்கொள்வேலை அலைசிந்த ஞாலம் இருள்சிந்த வந்த சிறையால் வேதங்கள்பட, உலகங்கள் யாவும் வினைசிந்தநாகம் மெலிய
(காதங்கள் கோடி கடை சென்று - கோடிக் காத தூரம் அளவும் சென்று நயனங்கள் வாரி கலுழ - கண்களில் நீர் வழிய, கேதங்கள் - துன்பங்கள், கூர-அதிகரிக்க, அயர்கின்ற-அதனால் சோர்கின்ற, வள்ளல்- (இங்கே) ராமபிரான். கிளர்வான் -ஊக்கம் அதிகரிக்கப் பெறுபவனான கருடன். சீதம் கொள் வேலை - குளிர்ச்சி கொண்ட கடல். ஞாலம் - உலகம், வந்த சிறையால் - பறந்து வந்த சிறகுகளால். வினை சிந்த - தீவினைகளை உதறித்தள்ள. நாகம் மெலிய- நாகபாசம் தளர்ந்து போக)
பாட்டு முடியவில்லை; இசையின்பத்திற்கோ முடிவே இல்லை எனத் தோன்றுகிறது. நாதமே பேசுவது போல், "கீதமே பொருள் கூறுவது போல, ஏதோ ஒரு வேத மந்திரத்தைத் தமிழே பாடுவது போல், பொங்கி வருகிறது பாட்டு. இனி நாம் பொருளையும் சற்றுக் கூர்ந்து பார்ப்போம்.
கழுகின் நெடுந்துரப் பார்வை பிரசித்தமல்லவா? அந்த இனத்தைச் சேர்ந்த கருடனின் பார்வை காதங்கள் கோடியும் பார்த்து விடுகிறது என்பது கற்பனை.
கருடனது நெடுந்துTரப் பார்வை இப்போது, ஆதியஞ்சோதி உருவைப் பரம பதத்திலே விட்டு விட்டு மண்ணுலகில் வந்து பிறந்திருக்கும் வள்ளலின் துயரம் நிறைந்த திருமுகத்தை நோக்குகிறது; நோக்கி ஊக்கம் அடைகிறது
கிறிஸ்து பகவானைச் சோகங்கள் நிறைந்த மனிதன்' என்று சிறப்பாகக் குறிப்பிடுவதுண்டு. இங்கே ராமபிரானை, ‘துயரங்கள் நிறைந்த வள்ளல் என்று கவிஞன் சுட்டிக் காட்டுகிறான்.
இந்த வள்ளலைக் கண்டு, இந்தத் தியாகமூர்த்தியின் திருமேனி கண்டு ஒரு புதிய ஊக்கம் பிறக்கிறதாம் கருடனுக்கு, ‘துயரங்கள் நிறைந்த வள்ளல் என்று கவிஞன் சுட்டிக் காட்டுகிறான்.
கருடன் சிறகை மெள்ள வீசி, கடல் அலை சிந்தவும், உலகம் இருள் சிந்தவும் வருகிறானாம். சிறகுகளை அடித்துக் கொண்டா வருகிறான்? சிறகுகளால் வேதம் பாடிக் கொண்டு வருகிறானாம்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

ஏதோ ஒரு அதிசய பூமியை அதிசயமாகச் சுட்டிக் காட்டும் பாவனையில் வந்து விழுகிறது இந்தக் கவிதை - மந்திரம்
அல்லைச் சுருட்டி வெயிலைப்பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா வில்லைச்செலுத்திநிலவைத்திரட்டி விரிகின்ற சோதிமிளிர.
(அல்லை - இருட்டை அகல் ஆசை - அகன்ற திசைகள். அழியா வில் - இடையறாத ஒளி)
மந்திரத்தை ஜபித்துக்கொண்டேயிருக்க வேண்டியது தான்; பொன் மேனியனான கருடன் சந்திரிகை வீசும் வெண்ணிறக் கழுத்துடன் நமக்கும் பிரத்தியட்சமாகி விடுகிறானோ!
மின்னலால் செய்த ஒரு குன்று வானில் மிதந்து மிளிர்வதுபோல் ஒரு தோற்றம்; நாகரத்தினங்களால் செய்த ஆபரண ஜோதிகள் மின்ன, மார்பிலே திருமாலுக்குரிய வனமாலை புரள, அன்று பிரிந்த துயர் தீரத் தூரத்திலிருந்தே அண்ணல் திருமேனி கண்டு தொழுகின்றான் கருடன்.
சிறகுகளால் வேதம் பாடி வந்த கருடனது வாய்மொழி ராமனைத் தோத்திரம், செய்கிறது. இந்தத் தோத்திரம், தமிழிலே உபநிஷதம் அவதரித்ததோ!' என்று அதிசயிக்குமாறு வெளிப்படுகிறது.
எல்லாம் உடையவன் எதற்காக வருந்த வேணும்?’ என்று ராமனைத் தேற்றுவது போலத் தோத்திரம் செய்யத் தொடங்குகிறான் கருடன்.
ஆர் இவ்அதிரேக மாயை அறிவார்? என்று கேட்கிறான். (அதிரேகம் - மிகுதி, மேன்மை)
இந்தக் கேள்விகருட ஸ்தோத்திரத்தினிடையே அடிக்கடி எழுகின்றது. பரம் பொருளுக்கும் ஒரு தம்பியாம்; இவனுக்கும் ஒரு கஷ்டமாம்; இந்தக் கஷ்டத்திற்காகப் பரம் பொருளுக்கும் பெருந்துயரமாம், தளர்ச்சியாம். 'ஆர் இவ் அதிரேக மாயை அறிவார்?
பரம பக்தனாகிய கருடனுக்கும் - அவனுக்கு வாகனமாகிப் பிரியாது பழகிக் கொண்டிருப்பவனுக்கும் - பகவானின் மாயை விளங்குவதில்லையாம்.
துஷ்டநிக்கிரகம் என்ற பெயரால் தன்சொரூபத்திற்கு உட்பட்ட மக்களாகிய அரக்கரைக் கொல்லத்தான் தீர்மானித்தானே, அதற்கு ஒரு சங்கற்பம் போதாதா? வில்லும் அம்பும் வேண்டுமா?
வில்ஒன்று) எடுத்தி சரம்ஒன்று) எடுத்தி!
(எடுத்தி-எடுக்கிறாய். சரம் - அம்பு) அதாவது கருணைக் கடலும் ஒருவேடனைப் போல் வில்லும் அம்பும்
92

Page 109
எடுத்துக் கொண்டு வேட்டைக்குக் கிளம்ப வேண்டுமா? - என்று பரிகசிப்பது போலவும் கேட்கிறான்.
பரிகாசத்திற்கு ஒரு பரிகாரம் செய்து கொண்டது போல,
அல்என்று நிற்றி, பகல் ஆதி - ஆர்இவ் அதிரேக மாயை அறிவார்? (அல்-இரவு நிற்றி-நிற்கிறாய். பகல் ஆதி - பகலும் ஆகிறாய்.) என்றும் கேட்கிறான்.
பகல் தானா தெய்வ சொரூபம்? இரவும் தெய்வ சொரூபம் தானே? இருளிலும் இறை ஒளி காண்பது தானே முறை? இரவில்லாமல் பகலும் உண்டோ?
துன்புள(து) எனின் அன்றோ சுகம் உளது?
என்று ராமன் குகனை நோக்கிக் கேட்டானல்லவா? அப்படியே இரவு இருந்தால் தானே பகல் என்பதும் இருக்க முடியும்?
இப்படியெல்லாம் அமைந்திருக்கிறது கருட ஸ்தோத்திரமாகிய உபநிஷதம். சிறகுகள் வேதம்பாட நெஞ்சும் நாவும் இப்படி உபநிஷதம் பாட, விரைந்து வருகின்ற கருடனை ராமனும் பார்க்கிறான்; தலை நிமிர்ந்து பார்க்கிறான்.
இனி, உபநிஷத லோகத்திலிருந்து போர்க்களத்திற்கே இறங்கிக் கதைத் தொடர்ச்சிக்கே வந்து விடுவோம். நாகபாசம் மெலிந்தது என்று இந்த உபநிஷத ஆரம்பத்தில் கவி சுருக்கமாய்ச் சொன்னதற்கு இந்த உபநிஷத இறுதியில் உவமை ஒரு விளக்கம் கிடைக்கிறது.
இந்த விளக்கத்திற்கு இரண்டு உவமைகள். இவ் இரண்டும் கவிஞனுடைய அனுபவத்திலிருந்து கிடைத்தவையே.
கவிஞன் ஒரு தாமரைப் பொய்கையைச் சுற்றிச் சுற்றிச் சில சமயங்களில் உலாவி வருவதுண்டு, அந்தரங்க நண்பனும் வள்ளலும் ரஸிகனுமாகிய சடையப்பனும் உடன் செல்வதுண்டென்று கருதலாம்.
பொய்கையில் பூத்திருக்கும் செந்தாமரைப்பூக்களில் ஒரே மோகம் கவிஞனுக்கு. வள்ளலுக்கோ அந்தப் பூவின் மேல் பிறந்த மோகத்துடன் அதைக்கண்டு மோகித்து நிற்கும் கவிஞன் மேலும் மோகம்.
இந்த அதிசய உணர்ச்சி பாட்டாகி வரும்; அனுபவிக்கலாம். எப்போது, எப்படி வருமோ?’ என்று எண்ணமிடுகிறான் வள்ளல். கவிஞனோ ஒரு பூவைத் தண்டுடன் கிள்ளியெடுக்கிறான்.
இருவரும் உலாவிக் கொண்டிருக்கும் போதே இதழ்களைப் பிய்த்து எறிந்து விடுகின்றன கவிஞன் விரல்கள். தண்டுதான் மிச்சம். 'கவிஞன் கையும் இப்படிச் சேட்டை செய்கிறது என்று நினைக்கிறான் நண்பன்.
கம்பன் மலர் - 2000

தண்டையும் கிழித்து விடுகிறது கை. அதன் உள்ளே உள்ள நூலை எடுத்துக்காட்டுகிறது. மெல்லிய நூல் பளிச் சென்று அற்றுப் போகிறது.
இந்த அனுபவம் தான் முதலாவது உவமையாகிறது, நாகபாசம் அநாயாசமாக அற்றுப் போனதற்கு. அடுத்த உபமானமோ, கவிஞன் வாழ்க்கையுடன் மேலும் நெருங்கிய தொடர்புள்ளது.
சடையப்பன் மாளிகையில் அடிக்கடி கலை விழாக்கள் நடைபெறும். தத்துவ அறிஞர்கள் வருவார்கள்; வாதம் செய்வார்கள்; வேதம் ஒதுவார்கள். கம்பன் தன் உள்ளத்தைத் தத்துவக் கனவில் ஜொலிக்கச் செய்து கொண்டிருப்பான்; அல்லது வேதப் பண்ணிலே சித்தத்தைப் பறக்க விடுவான்.
கலைஞர்கள் வருவார்கள் - ஓவியக் கலைஞர், காவியக் கலைஞர், கல்லிலே காவியம் எழுதுவோர் எல்லாரும். தேவாமிர்தமாக அனுபவிப்பான் கம்பன் அந்தக் கலை விருந்துகளை.
இசைக்காரர் பாடுவார்; கூத்தர் ஆடுவார். கதா காலகூேடியங்கள் நடைபெறும். கம்பன் செவியால், கண்ணால் பருகுவான்.
பெரும்பாலும் தமிழ் விருந்துகள் நடைபெறும். வடமொழியிலும் சொல்விருந்துகள் - வாதப் பிரதிவாதங்கள், காவிய முழக்கங்கள், தெலுங்கு, கன்னடம் முதலான அண்டை அயல் மொழிகளிலும் அறிவுரைகள், அறவுரைகள், தத்துவ வாதங்கள். கம்பன் மெளனமாய்க் கேட்பான்; கனவு காண்பான்.
கவியரங்குகள் இங்கே ஒரு சிறப்பியல்பு. வால்மீகி பகவான் அருளிய ஆதி காவியத்தை மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருப்பான்.
செந்தாமரை வெண்டாமரைப் பூக்களின் அழகை மெளனமாக மெய்ம்மறந்து அனுபவிப்பதுபோல் கம்பன் சடையன் மாளிகையில் கலை மன்றங்களையும் உரையரங்குகளையும் அனுபவிப்பதுண்டு. சில சமயங்களில், பூவை விட்டுத் தண்டை மாத்திரம், பிறகு நூலை மாத்திரம் நோக்கி அனுபவிப்பதுபோலவும் அந்த அரங்கு நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்ப்பான்!
தன் நினைவுகளிலும் கனவுகளிலுமே தன்னை இழந்திருந்து, கடைசியாகச் சடையன் சன்மானிக்கும் போது கவனிக்கத் தொடங்குவான். சன்மானிக்கும் விதத்திலிருந்தே தன் நண்பனுடைய ரஸிகத் தன்மையைப் பெரிதும் ரஸித்துக் கொண்டிருப்பான்!
மாதம் மும்மாரி பெய்வதாகக் கவிகள் சாதாரணமாய்ச் சொல்வதுண்டல்லவா? கம்பனோ தினம் மழை பொழிவதைப் பார்க்கிறான் வெண்ணெய் நல்லூரிலே! அப்படிப் பொழிகிறானாம்
சடையன் தன் வண்மையை.
93

Page 110
மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ?
தமிழகத்தின் வடஎல்லைதான் திருமலை என்ற திருப்பதி; தமிழ் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வடஎல்லை வடமலையாகிய இமயம் என்று சொல்லுகிறோமல்லவா? சடையப்பனுள்ளம் எந்தத் தேசத்திலிருந்தும் அறிவையும் கலைகளையும் வரவேற்கச் சித்தமாக இருந்தது என்பதைக் கம்பன் அறிவான்.
சடையனுடைய பணியாளர்கள் திரிந்து கொண்டிருப்பார்களாம் புலவர்களை வரவேற்க வேண்டுமென்று. வெண்ணெய் நல்லூரை நெருங்கி வரும்போதே அறிஞர் முதலானவர்களை எதிர்கொண்டு நல்வரவு கூறி அழைத்து வந்துவிடுவார்கள். பிறகு சடையப்ப வள்ளலின் உபசாரத்தைச் சொல்லவா வேண்டும்?
கம்பன் கலைஞர்களின் மேதையை மறந்து சடையனின் ரஸிக மேதையையே வியந்து நோக்கிக் கொண்டே யிருப்பதும் உண்டு. இத்தகைய அனுபவத்தை எப்படி மறக்க முடியும்?
என்ன உவமை! என்ன நன்றி!
கருடன் சமீபித்ததால் நாகபாசம் விரைவில் நீங்கியதற்கு உவமை தேடிய உள்ளத்திலே பளிச்சென்று தாமரைப் பொய்கையைச் சுற்றி உலாவி வரும்போது தனக்குக் கிடைத்த தாமரைத் தண்டின் நூலைப் பற்றிய அனுபவம் நினைவிற்கு வருகிறது:
வாசம் கலந்த மரைநாள நூலின் வகை.
(வாசம் - வாசனை. மரை - தாமரை. நாள நூல் - தண்டின் உள்ளேயிருக்கும் நூல். வகை - தன்மை)
என்று பாடத் தொடங்குகிறான்.
இந்த உவமை பொருந்தமான தென்றே முதல் முதல் தோன்றுகிறது. ஆனால் சடையப்பனுடன் உலாவித்திரிந்து ஒருசமயம் அடைந்த இந்த அனுபவத்தைக் காட்டிலும், சடையப்பன் தன் மாளிகையிலே கலைஞர்களை வரவேற்று உபசரிக்கும் அந்த அனுபவமே பொருத்தமான உவமை தரும் என்று தீர்மானிக்கிறான்.
வெண்ணெய் நல்லூரை அணுகிவந்த அறிஞர்கள், கலைஞர்கள் முதலானவர்களின் பசி எவ்வளவு விரைவாக நீங்குமோ, அவ்வளவு விரைவாக நீங்கிவிட்டது நாகபாசம் என்கிறான்:
வாசம் கலந்த மரைநாளநூலின் வகையென்பதென்னை? மழையென்று) ஆசுங்கைகொண்டகொடைமீளிஅண்ணல்சபையன்தன்வெண்ணெய்அணுகும் தேசம் கலந்த மறைவாணர்செஞ்சொல்-அறிவாளர் என்று)இம்முதலோர் பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன்துரந்த உரகம்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

(ஆசங்கை - சந்தேகம் கொடை மீளி - கொடை வீரம் உள்ளவன். அண்ணல் - பெரியோன். வெண்ணெய் - வெண்ணெய் நல்லூர். அணுகும் - நெருங்கி வந்து சேரும். தேசம் கலந்த - பல பிரதேசங்களைச் சேர்ந்த, மறைவாணர் - வேதம் வல்லவர்கள். செஞ்சொல் அறிவாளர் - செம்மையான சொற்கலைகளில் தேர்ந்த அறிஞர்கள். இம் முதலோர் - இவர்கள் முதலானவர்களுடைய. பாசம் - யம பாசம். அகன்ற - நீங்கிப் போயிற்று. பதகன் - பாதகனான இந்திரஜித்து. துரந்த - பிரயோகித்த, உரகம் - நாகம்; (இங்கே) நாகபாசம்)
சடையப்பனுடைய g6T60) அணுகியதும் கலைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் பசி முழுதும் நீங்கி விடுவதுபோல், கருடன் அணுகியதும் நாகபாசம் இருந்த இடம் தெரியாது முழுதும் அழிந்து போகிறது என்று உவமை காட்டும் போது, கவிஞன் உள்ளத்திற்குத்தான் எவ்வளவு திருப்தி? சடையனுக்குத் தான் எத்தகைய உயர்வு
யமபாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டதுபோல் நாகபாசத்திலிருந்து விடுதலை பெற்ற லட்சுமணன் உணர்வு பெற்றெழுந்து ராமனை வணங்குகிறான். ராமன் அவனைத் தன் மார்பில் இறுகத் தழுவிக் கொள்கிறான்.
மழைக்கு புகழ் மாலையா?
பிறகு மிகக் கொடிய துன்பத்தை உண்டாக்கின தெய்வமே அதை நீக்கப் பிரத்தியட்சமாக வந்து விட்டது' என்று சொல்லிக் கொண்டே ராமன் வானர வீரர்களைத் தானே எழுந்து போய்த் தழுவிக் கொள்கிறான். அப்பால் கருடனுக்கு எதிரில் வந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறான்.
ஆனால் யாருக்கு நன்றி செலுத்த வேணும்?' என்று தெரியவேணுமே. அதற்காக,ஐயனே! நீயார்? என்று கேட்கிறான். நாங்கள் இருக்கும் இடம் தேடிவந்து எங்களுக்கு உயிரையும் வாழ்வையும் கொடுத்தாய்' என்கிறான்.
என்ன பிரதியுபகாரம் செய்ய முடியும் இந்த மகா புருஷனுக்கு? தோற்றத்தைப் பார்த்தால், 'உனக்குப் பிரதியுபகாரம் செய்யும்வகை எங்களுக்கு இல்லை' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ராமன் கருடனை நோக்கிப் புகழ்ந்து பேசத் தொடங்குகிறான். “எங்களுக்கு அருமையான உயிரை அளித்து உதவி எங்களிடம் பெறும் காரியம்.” என்று சொல்லும் போதே கருடன் மறைந்து போகிறான். எனவே கருடனை நோக்கி எழுந்த புகழுரையைப் பக்கத்தில் இருந்தவர்களை நோக்கிப் பூர்த்தி செய்யுமாறு நேர்ந்து விடுகிறது.
புகழ்மாலை கழுத்தில் விழுவதற்குமுன் அந்தப் பாராட்டுக்கு உரியவன் பளிச்சென்று நழுவிப்போய் விடுகிறான்
-94

Page 111
என்று வைத்துக் கொள்வோம். மாலை சூட்டவிரும்பியவன் அந்த மாலையும் கையுமாகச் சபையை நோக்கி நின்று முன்னிலும் அதிகமாய்ப் புகழத் தொடங்குவான், புகழுக்கு உரியவனாகி அதைப் பெற்றுக் கொள்ளாமல் போனவனைக் குறித்து இது இப்போது ராமனின் நிலை.
இனி இந்தப் புகழுரைப் பாட்டை நோக்கலாம்:
ஆரியன் அவனை நோக்கி ஆருயிர் உதவியாதும் காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடன்மை ஈதால்! பேரியலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் ஒன்னார் மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம்?'என்றான்.
(ஆரியன் - சிறந்தவானான ராமன். அவனை - கருடனை. கடன்மை - தன்மை. ஈதால் - இப்படித்தானிருக்குமோ. பேரியலாளர் - பெருந் தன்மையுள்ள பெரு மக்கள். செய்கை - செய்த உபகாரச் செய்கைக்கு. ஊதியம் - லாபம். பிடித்தும் - பெறுவோம். என்னார் - என்று கருதார். வையம் - உலகம்.)
மழை பெய்கிறதே என்று அதற்கு நாம் கைம்மாறு செய்ய முடியுமா? என்ற இந்த அழகிய கருத்து, பிரசித்தமான குறள் ஒன்றைத் தழுவி அமைந்திருக்கிறது:
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு; மாரிமாட்டு)
என்ஆற் ம்ம் கொல்லோ உலகு?
(கடப்பாடு - கடமை. மாரிமாட்டு-மழையிடம் மழைக்கு. என் ஆற்றும் கொல்லோ - என்ன செய்ய முடியும்.)
இந்தப்பெருநிகழ்ச்சி அனுமனுடைய வேடிக்கையான ஒரு வேண்டுகோளுடன் முற்றுப் பெறுகின்றது. “நாமெல்லாம் சேர்ந்து
கம்பன் மலர் - 2000

சத்தம் போட்டுப்பார்க்கலாமே! அதற்கு அனுமதி வேணும்" என்று கேட்கிறான் ராமனை நோக்கி.
ஏன் இந்த வேண்டுகோள்? லட்சுமணன் இறந்து போனதாகச் சீதை வருந்திக் கொண்டிருப்பாளே; “வெற்றி பெற்றோம்” என்று கவலையின்றி மெய்ம்மறந்து அரக்கர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்களே! என்பது அனுமான் சொல்லும்
காரணம்.
வஞ்சகர் உறக்கம் கெடவேண்டும்; "செத்துப் போனவர் மீளவும் பிறந்து விட்டார்கள்” என்று அந்த வஞ்ச உள்ளங்கள் நடுநிசியில் திகிலடைய வேண்டும்.
இனி, இந்தப் பாட்டைப் பார்க்கலாம்:
இறந்தனன் இளவல் என்னாஇறைவியும் இடுக்கண் எய்தும்; மறந்தனர் உறங்குகின்றவஞ்சரும் மறுகி மீளப் பிறந்தனர்”என்று கொண்டு) ஓர் பெரும்பயம் பிடிப்பரன்றே! அறம்தரும் சிந்தை அன்பா:ஆர்த்தும்'என்று அனுமன் சொன்னான்.
(இளவல் - தம்பி. என்னா - என்று எண்ணி இறைவி - தலைவி இடுக்கண் எய்தும் - துன்பம் அடைவாள். மறந்தனர் - மெய்ம் மறந்து. மறுகி - மனம் கலங்கி. ஆர்த்தும் - ஆரவாரம் செய்வோம்.)
அனுமன் எதிர்பார்த்தபடி ராவணன் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. சோர்ந்து கிடந்த இந்திரஜித்தின் காதில் ஆரவாரம் விழவும் இல்லை. ராவணன் காதில்தான் விழுந்ததே. பயந்தானா, என்ன?
நன்றி : சித்திர ராமாயணம் (ஆனந்த விகடன்)
95)

Page 112
ம்பனது இராமகாதை எனுட அதனை நோக்கி ஓடிக் ெ திருப்புமுனைகள் அதன் ஒ
"மெல்லியல் மிதிலைவந்த சானகி இரா சீதாபஹரணத்திற்கு ஏதுவாய மாயமானின் முனைகளாக, கம்பன் தனக்குரிய பாணியில்
இம்மூன்று நிகழ்வுகளின் முக்கி தெளிவாகப் பதியச் செய்யுமுகமாக, கவி, உபயோகித்து தனது முயற்சிக்கு அரண் கெ
ஆங்கிலவாணியின் ஆய்வாளர்க விதந்து போற்றுவர். இவ்விகற்ப அணியான 96 la)& Si606) (Tragic Irony) distriggio சுவைஞர்கள் எய்தும் காவிய இன்பத்திற் திருப்புமுனைகளிலும் இந்த அணி அவலச் கண்டு ஆனந்திக்கின்றோம்.
தமிழ் இலக்கியப் பரப்பில், குறிப் உரையாசிரியர்கள், இதனை வேறாகக் கண் தொனிப் பொருள் தந்து நிற்கிறது என்று ம
ஒரு நூலின் முழுமையை நோக்கி துலாம்பரமாகச் சுட்டிக் காட்டுவர்.
உள்ளுறை உவமம், பிறிதுமொழித குறிப்பு அல்லது தொனிப்பொருளில் வரும்.
வி + கல்ப் - 'வி என்ற உபசர்க்க
என்பது சிந்தித்தல் எண்ணுதல்;'வி எதிர்ம தரும். அதன், மேல்வருபொருளாக விளை
 
 

ராமு காதையின் |திருப்புமுனைகளில் காUடும் கவி லுண்ம்ை
கே. கே. சோமசுந்தரம்
ம் பெருநதி, இராவணவதமாகிய சமுத்திரத்துடன் சங்கமிப்பதற்காக, காண்டிருக்கிறது என்பர். காவியத்தின் இடையில், மூன்று முக்கிய ட்டத்தினைத் துரிதப்படுத்துகின்றன.
மனுடன் கானேகல், சூர்ப்பநகை தனது மூக்கினை இழத்தல்,
வருகை, என்ற மூன்று நிகழ்வுகளைத் தனது காவியத்தின் திருப்பு ஸ் சித்திரித்துக் காட்டுவான்.
யெத்துவத்தினை, காவிய இரசிகர்களின் சிந்தையில், தெட்டத் நாடகவிகற்பம் (Dramatic Irony) என்ற பொருளணியினை Fய்வான்.
ளும் சுவைஞர்களும், இப்பொருள்அணியினை'ஒகோ' எனப் பெரிதும் ாது ஒருகால் ஹாஸ்யச்சுவை படவும் (Comic Irony) மற்றொருகால் பதாகவும் அமையும். இவ்வணி அவலச்சுவை பயப்பதாக அமையின், கு எல்லையே இல்லை. யாம் மேலே குறிப்பிட்ட முக்கிய மூன்று
சுவையினையே தந்து நிற்பதால், கம்பனின் கவிவண்ணத்தினைக்
பாக, காவியங்களில் இவ்வணி ஆங்காங்கு காணப்படுவதாயினும்,
டு அழுத்தம் செய்து உரை வகுக்காது, இது, குறிப்புப்பொருள் அல்லது ட்டும் கூறி அமைவர்.
(inGestalt) அநுபவிப்பவர்களே, இதனைத்தக்கவாறு இனங்கண்டு
லணி, முரணணி, தற்குறிப்பேற்றவணி போல, நாடகவிகற்ப அணியும்
த்துடன் கூடிய 'கல்ப் என்ற வினையடிப் பிறந்தது - விகற்பம். 'கல்ப் றைப் பொருளைத் தருவது. எனவே மாறாக எண்ணுதல் எனப்பொருள் தல் சம்பவித்தல் என்பதைச் சுட்டி நிற்கும் விகற்பம் எனும் பதம்.
96.

Page 113
மேலும் விளக்குவதாயின், ஒரு நாடகத்திலோ அன்றிக் காவியத்திலோ, அந்நூலாசிரியரின் கவிக்கூற்றாக அமையும் சொற்களோ அல்லது கதாபாத்திரம் ஒன்றினது வாய்மொழியோ அவையவைக்குரிய வெளிப்படையான அர்த்தத்தினைத் தவிர, வேறு அவற்றிற்கு நேர்மாறான தொனி அல்லது குறிப்புப் பொருளையும் உணர்த்தி நிற்குமாயின் அதனை நாடகவிகற்ப அணி என்பாம்.
இராமகதை, இராமன் சீதையுடன் வனம்புகும் சந்தர்ப்பத்திலிருந்துதான் முதல் முதலில் ஊற்றெடுக்கிறது. இத்தொடக்க நிலையினைச் சுவைஞர்களின் மனதில் நன்கு நிலைநிறுத்தி அரண் செய்யுமுகமாக, கம்பன் அழகியதொரு நாடகவிகற்ப அணியினை பேரவலச் சுவைபொருந்த இராமனின் வாய்மொழியாக உபயோகிக்கிறான்.
சீதை கானகம் செல்வதற்கு விருப்புற்றவளாய் மரவுரிதரித்து வந்து கணவனின் பனையின் நீள்கரம் பற்றிய வண்ணம் நிற்கிறாள். அப்போது இராமன் அவளைப் பார்த்து
աաաաաաա விளைவை உன்னுவாய்
அல்லை, போத அமைத்தனை ஆதலின் எல்லையற்ற இடர்தருவாய்.”
எத்துணை அமங்கலமான அவலம் தருமொழிகள்!'யான் பற்பல எடுத்துக்கூறியும், நீவனம் போவதற்குத் துணிந்து விட்டாய். சொல்லொணாத் துன்பங்கள் நின்னால் விளையப் போகின்றன’ என்கிறான். தனக்கும் சீதைக்கும் இனிமேல் நிகழப்போகின்ற பாரிய துன்பங்கள் பற்றி அறியாத நிலையிலேயே, இத்தகைய சொற்கள் இராமனிடத்து வாய்மொழியாக வருகின்றன. இக்கால எல்லையில் இராமனோ அன்றிச் சீதையோ தமக்கு வரக்கூடிய இன்னல்களை எள்ளளவேனும் உணர்ந்திருக்க முடியாது. இது அவலச்சுவை விளைவிக்கும் நாடக விகற்ப அணியாம்.
இராமகாதையின் இரண்டாவது திருப்புமுனை மாயம் வல்லரக்கி சூர்ப்பநகையின் வருகை.
நிருதர் வேந்தனை மூலநாசம் பெற முடிக்கப்போகும் சூர்ப்பநகை தவக் கோலத்தில் இருந்த இராமனைக்கண்டு மோகித்து,
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLLSஇந்நளின நாட்டத்தான்தவம் செய தவம் செய்த தவம் என்ன’
எனத் தனக்குள் எண்ணியவளாய் மின்னும் வஞ்சியென
நஞ்சமென வந்த வஞ்சமகள் நூபுர ஓசை ஒலிப்பவருகின்றாள்.
அத்திசை குறித்து எதிர் விழித்த இராமனும் அழகிற்கு அவதியுண்டோ' என வியந்து, நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றவளை வரவேற்கிறான். அப்போது, இராமன் கூறும் வரவேற்புமொழிகள் நாடகவிகற்ப அணிநல்கும் அவலச் சுவையின் உச்சத்தினைத் தொட்டு நிற்கின்றன.
கம்பன் மலர் - 2000

இராமன் கூறுவான்,
தீது இல் வரவு ஆகுக திரு நின் வரவு'
திரு - இலக்குமி போன்றவளே! நின் வரவு தீதகன்று நன்மைதரக் கடவது.
தீது இல் - நன்மையினைக் குறித்தாலும் எதிர்மறை ரீதியாகச் சொல்லப்படுவதால் அமங்கலத் தொனியைத் தருவது.
மேலும், திரு ஆகிய சீதையே அருகில் இருக்கும்போது, சூர்ப்பநகையின் அழகிற்கு அவதியுண்டோ என்று வியந்த நிலையில், அவளைத்'திரு' என இராமன் விளித்தல், விபரீதமான ஒர் அவலச் சுவையை மேலும் தருகின்றது.
இவ்விடத்தில் சிலப்பதிகாரத்தில், கோவலன் கண்ணகி திருமணத்தின் போது சான்றோர் வாழ்த்துங்கால் எதிர்மறைச் சொற்றொடர்களை உபயோகித்து, தம்பதிகளை வாழ்த்தும் தீது அறுக’என்ற நாடக விகற்ப அவல அணியுடன் ஒப்பிட்டு நோக்குதல் இன்புறற்பாலது.
சிலப்பதிகாரத்தில், கவிக்கூற்றாக வரும் இந்த அவல அணி கம்பனிடத்தில் இராமனது வாய்மொழியாக வருவது மேலும் சுவைபயப்பதாகும்.
இன்னும் இச்சந்தர்ப்பத்தில் இராமன் தொடர்ந்து கூறும்
வார்த்தைகள் எதிர்கால அநர்த்தங்களைச் சுட்டும் அமங்கலப் பொருளைத் தருவனவாகப் பரிணமிக்கின்றன.
நிருதர்தம் அருளும் பெற்றேன்.
திருநகர்தீர்ந்த பின்னர் செய்தவம் பயந்தது.”
“பெண்ணே நின்மூலம் இராக்கதர்களின் அருளையும் பெற்றுக் கொண்டேன். என்ன வியப்பு:அயோத்தி மாநகரை விட்டு வந்ததன் பின்னர்தான் என் தவத்தின் பயன் பலிக்கப் போகிறது என முறுவலித்து, இராமன் சூர்ப்பநகையினைப் பார்த்துப் பரிகாசமாகக் கூறுவது, முதலில் ஹாஸ்யச் சுவை பயப்பதாயினும், நுனித்து நோக்கின், முடிவில் அதில் அவலச்சுவையே மேலோங்கி நிற்பதைக் காணலாம். எதிர்காலத்தில் இராமனுக்கு வரவிருக்கும் சொல்லொணாத் துன்பங்களை சூசகமாக உணர்த்தி நிற்பது இந்நாடக விகற்ப அணி.
இராமகாதையின் மூன்றாவது திருப்புமுனையாக அமைவது மாரீசன் மாய மானாகச் சீதைமுன் தோன்றும் கட்டமாகும். “மாணிக்க மயத்து மானைப் பற்றித் தா ” என இராமனிடம் சீதை கை தொழுது கேட்கிறாள். அது கண்ட
இளையோன் சொல்வான்,
函

Page 114
மாயம் எனல் அன்றி மனக் கொளவே ஏயும்? இறை மெய் அல’
“இது மாயத்தால் வந்தது. இது ஒருவரால் விரும்பப்படுவதற்கு ஏற்றதா? இதில் சிறிதேனும் உண்மையில்லை" இச்சந்தர்ப்பத்தில் இராமன் கூறும் வார்த்தைகள் வடமொழி மற்றும் ஆங்கில மொழி இலக்கியங்களிலே காணப்படக்கூடிய தலைசிறந்த அவலம் மேவிய நாடகவிகற்ப அணியினை விஞ்சியதெனக் கருதுகிறேன்.
நில்லா உலகின்நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்தாம் பல் ஆயிரம் கோடி பரந்துளவால்; இல்லாதன இல்லை - இளங்குமரா"
“இலக்குமணா! மாறுபடுகின்ற இயல்பினையுடைய இவ்வண்டத்தின் உண்மையாந்தன்மையினைப் பேரறிஞர்கள் கூட முற்றும் அறியார். பல்வேறு விதமான உயிர்கள் இவ்வண்டம்முழுவதும் பரந்து காணப்படுகின்றன. எனவே, இல்லாதன என்று சொல்லக் கூடியவை ஒன்றுமே இல்லை. எல்லாமே உண்டு.”
"இல்லாதன இல்லை எனவே இது மாயமான் அன்று நிஜமான மானேதான்” என இலக்குவனுக்கு உத்தரம் கூறிய இராமனுக்கு, அடுத்த சில நாழிகைகளிலேயே இது பொய்மான் என உணரும் அவலநிலை ஏற்படுகின்றது. அது மட்டுமன்றி, மானைப்பிடிக்க எத்தனித்த காரணத்தினால் பாரியதோர் அநர்த்தத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றான்.
செய்யது அன்று எனச் செப்பியதம்பியை ஐயன் வல்லன், என் ஆருயிர் வல்லன்; நான்
sy
உய்ய வந்தவன் வல்லன்;.
எனத் தனக்குத்தானே இராமன் வாய்விட்டுப் புகழ்ந்துரைத்தும் என்ன பயன்?
இது அவலச் சுவை நனி சொட்டும் மகோந்நத நாடக விகற்ப அணியாம்.
பாரியதோர் அநர்த்தம்பக்கலில் காத்திருக்கவும், இளவல் உணர்ந்ததை இராமன் உணராது, அவன் கூறியதை மறுத்துரைத்து, மாயமான்பின் சென்றமை விதியின்பாற் பட்டதன்றோ?
இராம காதையில் வரும் முக்கியமான
இத்திருப்புமுனைக்கட்டத்தினை உலகமகாநாடகக்கவிஞன் செகசிற்பியரின் அதிசிறந்த அவலநாடகமாகிய'ஹம்லத்தில் வரும்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

முதலாவது திருப்புமுனைக்கட்டத்தோடு ஒப்பீடு செய்தல் கம்பனைத் தக்கவழி துய்ப்பதற்கு உதவும்.
'ஹம்லத்தில் வரும் முதலாம் திருப்புமுனை 'ஹம்லத் இளவரசனுக்கும் கொலையுண்ட அவனது தந்தையின் ஆவிக்கும் இடையில் நிகழும் அபூர்வமான சந்திப்பு ஆகும். இத்தகைய அபூர்வ சந்திப்பு நிகழ்ந்த சில விநாடிகளுக்குள் அவ்விடத்திற்கு வருகைதந்த தனது நண்பன் ஹொரேஷ்யோவிடம் (Horatio) ஹம்லத் இளவரசன் கூறும் தன்மை நவிற்சியான மொழிகள்
இவை:
"There are more things in heaven and earth, Horatio than are dreamt of in your philosophy."
நினது தத்துவ சாஸ்திரங்கள் அனைத்துமே கனவிலும் உய்த்துணர முடியாத விடயங்கள் பற்பல வானிலும் பூமியிலும் உண்டே, நண்ப"
நாடகத்தின் முக்கிய திருப்புமுனையில் ஹத்மலத் கூறும் இவ்வார்த்தைகள், இராமகாதையின் மிகமுக்கியமான திருப்புமுனையில் இராமன் மாயமான்பற்றி இலக்குவனுக்கு கூறும் வார்த்தைகளின் அர்த்தத்தினை ஒத்திருக்கின்றன. அது மட்டுமன்றி இருபாத்திரங்களின் எண்ணம், தொனி ஆகியவையும் ஒரே மாதிரியாக இருப்பதாக உணர்கிறோம்.
ஆவி என்ற புதிர் பொதிந்த மாயத்தினால் தூண்டப்பட்டு பழிக்குப்பழி என்ற ஒழுகலாற்றினை மேற்கொண்டு, ஹம்லத் அவலம் எய்துகிறான்.
இராமனும் புதிர் பொதிந்த மாயமானால் ஏமாற்றப்பட்டு அவலத்திற்கு உள்ளாக்கப்படுகிறான்.
மானிடனாகப் பிறந்த ‘ஹம்லத் அவனிடத்துக் காணப்பட்ட தீர்மானமின்மை, காலம் தாழ்த்துதல் போன்ற குணக்குறைவுகள் காரணமாக அவலம் அடைதல் உலகத்து இயற்கை ஆகும்.
ஆனால், அவதாரபுருடனாக விபீடணன், அநுமன் மற்றும் வசிட்டர் போன்றோரால் இனங்காணப்பட்டு அங்ங்ணம் கம்பனாற் சித்திரிக்கப்படுகிற இராமன் மாநிடருக்குரியதாகிய மனோநிலை சிந்தனையின்பாற்பட்டு அவலம் எய்துதல் அசாதாரணமானதாகும்.
இராமனின் இத்தகைய அசாதாரணமான அவலநிலையினை, காவியத்தின் மிகமுக்கியமான திருப்புமுனைக்கட்டத்தில், அவலம் எய்தும் இராமனின் வாய்மொழிமூலம் அதுவும் நாடக விகற்ப அணி விரவிய வார்த்தைகளில் வெளிப்படுத்தும் மகாகவி கம்பனின் கவிவண்ணம் என்றுமே சுவைத்து இன்புறக்கூடியது மட்டுமன்றி, நினைவில் நிறுத்திப் போற்றுதற்கும் உரியதாகும்.
98

Page 115
1. கவிதைபோல்
கவிதைபோல் கிட - என்று
கம்பன், இன்கை அன்பன் பேசுகின் கவிதைபோல்.
சவியுடன் தெளிவு தண்ணென ஒழுகி கவிதை போல்.
புவியினுக்கணியா புலனுக்கும் விருந் சுவையுடன் அகப் சொல்லெலாம் ெ எவர்களும் விரும் இனிமையில் எல் அவன் - அவுள் உ அய்ந்திணை நெறி கவிதைபோல் கிட
2. மருத இளவர
மருத இளவரசி ெ - கம்பன்
வண்ணம் மின்னு சொன்ன வண்ணப்
மருத இளவரசி.
விரிமலர்ச் சோலை நாட்டியம் ஆட மேக மேள ஒலி
 

ம்பன் இசை
கிடந்தது கோதாவரி
ந்தது கோதாவரி
லயின் றான்.
ய், அய்ந்து து தந்து
பாவாகிச் பாருள் பொதிந்தே பும் வண்ணம் லை காட்டி உறவு பேசும்
அளாவி .ந்தது கோதாவரி.
சி கொலுவிருந்தாள்
காலுவிருந்தாள்
99

Page 116
பாட்டுகள் பாட மருத இளவரசி. கள்ளெனும் யாழொலி வண்டு வழங்க கதிரொளித் தீபங்கள் தாமரை ஏந்த தெள்ளிய நீர்த்திரை திவலைகள் தாங்க, திந்திமித் தோம் என்று தேனிசை ஓங்க
மருத இளவரசி.
3. அழகியல் தேர்ந்தவன் கம்பன்
அழகியல் தேர்ந்தவன் கம்பன்.
b) Ah I W O AW » O 8 8 80 அதில் ஆர்வமும் ஆசையும் வாய்ந்தவன் கம்பன்.
அழகியல் தேர்ந்தவன் கம்பன்.
ஒழுகிய நெய்போலும் யாழ்நரம் பென்பான். பழகிய மழலையே பண்ணென்று நின்றான்.
அழகியல் தேர்ந்தவன் கம்பன்.
மெல்விரல் வீணையின் மேல் விளையாட தெய்விக மேளங்கள் திந்திமி போட கைவழி கண்ணோட கண்வழி மனமோட செய்வனதான் புதுத்
தேன் கலை என்றான்.
அழகியல் தேர்ந்தவன் கம்பன்.
4. மங்கை நடந்தாள்
மங்கை நடந்தாள் - மணி மன்றில் நுழைந்தாள் மண்டப மருங்கில் ஒரு
மங்கை நடந்தாள்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

தென் தமிழில் அந்த நடை கம்பன் மொழிந்தான் அந்த நிகழ்வின் மகிழ்வு பொங்கி வழிந்தான்
மங்கை நடந்தாள் - அது கம்பன் மொழிந்தான். தென் தமிழில் அந்த நடை கம்பன் மொழிந்தான்.
அன்னமென வந்தாள் அல்லவென வந்தாள் அன்னமென அல்லவென ஆமென நடந்தாள் பொன்னின் மணி கிண்கிணி சிலம்பொடு புலம்ப மின்னனைய மேகலைகள் மெல்லென மிழற்ற சின்ன மலர் கொண்டு சில
சேடியர்கள் சூழ
மங்கை நடந்தாள்.
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம் மின்னின் நிழல் அன்னவளின் மேனி ஒளி ஆக அன்னமும் அரம்பையரும் ஆரமுதும் நாண மன்னரவை இன்பமணி
மண்டபம் அடைந்தாள்
மங்கை நடந்தாள்.
5. சீதையின் கலியாணம்
சீதையின் கலியாணம் தெருவழி அலங்காரம் செப்புகிறான் கம்பன் அற்புதமாய் - அந்தச் செந்தமிழ் சித்திரம் இப்படியாம் - அந்த
சீதையின் கலியாணம்.
100

Page 117
வீதியில் எங்கெங்கும்
தோரணம் நடுவார்கள் மின்னும் மணிமாலை தொங்க விடுவார்கள் மோதி மிதித்துத் தள்ளி முண்டி அடிப்பார்கள் மொகு மொகு என்று முந்தி முன்வந்து புகுவார்கள்
சீதையின் கலியாணம்.
அன்னமென் நடையாரும் ஆடவர் இளையாரும் கன்னிநன் னகர் வாழை கமுகுகள் நடுவார்கள் சந்தனம் அகில் நாறும் சாந்துகள் சொரிவார்கள் சிந்தையின் மகிழ்வோடே
சிந்துகள் பயில்வார்கள்
சீதையின் கலியாணம்.
வண்டியில் நிறை வாச மலர்மலை கொணர்வார்கள் குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவார்கள் தேர்மிசை வருவார்கள் சிவிகையில் வருவார்கள் பார்மிசை வருவார்கள்
பாடல்கள் தருவார்கள்
சீதையின் கலியாணம்.
6. வார்த்தையின் நேர்த்தி
வார்த்தையின் நேர்த்தி என்னே! கம்பன் ஆற்றலின் ஏற்றம் என்னே! கம்பன்
வார்த்தையின் நேர்த்தி என்னே!
இரணியன் தூண் உதைத்தான் இதுபற்றி எங்கள் கம்பன் வருணனை பாடுகின்றான் அந்த
கம்பன் மலர் - 2000

வார்த்தையின் நேர்த்தி என்னே! நசை திறந்திலங்கப் பொங்கி நன்று நன்றென்று நக்கான் விசை நிறைந்திடிகள் வீழ்தல் போலவே தூணில் எட்டி இசை திறந்துயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும் திசைதிறந் தண்டம் கீறிச் சிரித்தது சிங்கம் என்றான்
வார்த்தையின் நேர்த்தி.
பிளந்தது தூணும் அங்கே பிறந்தது சிங்கம் ஓங்கி வளர்ந்ததும் சொன்னான் கம்பன் வார்த்தையின் நேர்த்தி என்னே! கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது மேலும் கீழும் அளந்தது சிங்கம் என்றான் ஆர் அவன் ஆற்றல் சொல்வார்!
வார்த்தையின் நேர்த்தி.
7. களம் பாடிய கம்பன்
களம் பாடிய கம்பன் - ஒரு கனல் மாமலை அன்றோ! இளந்தீரனின் மறம் பாடுவன் எவர் பாடுவர் இவன்போல்?
களம் பாடிய கம்பன்.
சூலங்களும் மழுவும் சுடு கணையும் கனல் சுடரும் ஆலங்களும் அரவங்களும் அசனிக் குலம் எவையும் காலன் தனதுருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய்ச் சாலங்களும் நிமிர்கின்றன உலகெங்கணும் என்பான்
களம் பாடிய கம்பன்.
வெடிக்கின்றன திசை யாவையும்
விழுகின்றன இடிகள் இடிக்கின்றன சிலை நாணொலி

Page 118
இரு வாய்களும் எதிராய்க் கடிக்கின்றன கனல் வெங்கணை கலி வானுற விசை மேல் பொடிக்கின்றன பொறி வெங்கனல் புலவோன் இவை புகல்வான்
களம் பாடிய கம்பன். புரிந்தோடின பொரிந்தோடின புகைந்தோடின புகைபோல் எரிந்தோடின கரிந்தோடின இடமோடின வலமே திரிந்தோடின இரிந்தோடின செறிந் தோடின திசைமேல் சரிந்தோடின இளையான் விடு சரம் என்றனன் புலவோன்.
களம் பாடிய கம்பன்.
8. காகுத்தன் கையம்பு
காகுத்தன் கையம்பு பாடுகிறான் இதோ கற்பனை உச்சியைத் தேடுகிறான் - கம்பன்
காகுத்தன் கையம்பு பாடுகிறான் காகுத்தன் கையம்பு. வேகத்தை, வீரத்தை வெற்றியின் தீரத்தை பாகட்டும் பாவலன் பாடுகிறான் - அவன் காகுத்தன் கையம்பு.
நல்லியற் கவிஞர்தம் நாநலம் போன்றதாம் எல்லையில் லாததோர்
இன்னிசை போன்றதாம்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

மேருவைப் பிளக்குமாம் விண்ணையும் கடக்குமாம் பாரையும் உருவுமாம் பவ்வமும் பருகுமாம் காகுத்தன் கையம்பு.
9. காதலைப் பாட வந்தான்
காதலைப் பாட வந்தான்
A X Y XA XA கம்பன்
கரும்பையும் தேனையும் பிழிந்து கலந்து கொண்டு
காதலைப் பாட வந்தான்.
ஆதரித் தமுதிலே கோலொன்று தோய்த்தான் அவயவம் அமைத்தான் அழகியல் படைத்தான்
காதலைப் பாட வந்தான்.
மின்னொத்த இடையின்ாரும் வேயொத்த தோளினாரும்
அன்னத்தை வா, வா, இங்கே ஆட என்றழைப்பார் என்றான்
காதலைப் பாட வந்தான்.
குண்டலம் ஒளிகள் வீசக் குலமணி மாலை மின்ன விண் தொடர் மலையில் ஏறும் மென் மயிற் கணங்கள் போல வண்டுகள் கிண்டும் கோதை மாதர்கள் மலைபோல் மார்பம் கண்டவை தழுவ வாவிக் கரையினை அணைவார் என்று
காதலைப் பாட வந்தான்.
102

Page 119
லகக் காப்பியங்கள் அ6ை காப்பியங்களான இலியா காப்பியத்தின் இடையின காப்பியக் கவிஞர்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாம அமைந்துள்ளன.
கிளைக் கதையின் இலக்கணம்
ஐரோப்பிய இலக்கியத் திறனாய்வு
"நீண்டு செல்லுகின்ற கதைக் கூ மற்றொரு கதை நிகழ்ச்சி-மையக் கதை சில அதிலிருந்து விலகியும் நிற்கலாம்”
என்று இதனைக் கார்ல் பெக்ஸனுடைய இ கிளைக் கதையை உபாக்கியானம்' என் நளோபாக்கியானம்' எனப்படுகின்றனது. கு கூறும் முறையில், சூதாட்டத்தில் தே காப்பியக்கதையோடு இக்கிளைக் கதை ெ
தமிழ்க் காப்பிய இலக்கணிங்கன கூறப்படவில்லை. சிலப்பதிகார உரை! எண்ணியிருப்பது அவர் உரையிலிருந்து தெ முதல் ஆசான் அரிஸ்டாட்டில் இதனைப்ப
அரிஸ்டாட்டில் கருத்து
காப்பியத்தின் பாடுபொருள் முதன் அதற்கு எல்லா வகையிலும் துணை செய் ஒதிஸ்ஸிக் காப்பியத்தில் அமைந்திருக்கும் கருத்துக்கள், கிளைக்கதை எவ்வாறு அை
“தேவையில்லாத, தொடர்பில்ல புடையவைகளை மட்டும் கோத்து ஹோமர்
 
 

υ(τ(τυριταίαοτό ௗக் கதைகள்
பேராசிரியர் அ. பாண்டுரங்கன்
னத்திலும் கிளைக் கதைகள் இடம் பெற்றுள்ளன. பழங்கிரேக்கக் து, ஒதிஸ்ஸி போன்றவற்றில் ஹோமர் பல கிளைக் கதைகளைக் டயே பாடியுள்ளார். வர்ஜில், மில்டன் முதலிய ஐரோப்பியக் தம் காப்பியங்களில் பல கிளைக் கதைகளை அமைத்துள்ளனர். ணி போன்ற தமிழ்க் காப்பியங்களிலும் பல கிளைக் கதைகள்
ாளர் கிளைக் கதையை எபிசோட் (Episode) என்பர்.
ற்று கவிதையின்(Narative) நிகழ்ச்சிகளுக்கிடையில் அமையும் யோடு நெருங்கிய தொடர்புடையதாகச் சில கதைகள் அமையலாம்;
இலக்கியக் கலைச் சொல் அகராதி விளக்குகின்றது. வடமொழியில் று கூறுவர். பாரதத்தில் இடம் பெற்றுள்ள நளனுடைய கிளைக்கதை ந்தாட்டத்தில் நாடு நகரங்களை இழந்து வருந்தும் தருமனுக்கு ஆறுதல் ால்வியுற்று வருந்திய நளனுடைய வரலாறு கூறப்படுகின்றது. நருங்கிய தொடர்புடையதாகின்றது.
1ளக் கூறும் நூல்களில் கிளைக் கதைகளைப்பற்றிய செய்தி எதும் பாசிரியரான அடியார்க்கு நல்லார் கிளைக்கதை பற்றி ஓரளவு ளிவாகின்றது. ஆயின், ஐரோப்பிய இலக்கியத் திறனாய்வாளர்களின் ற்றி ஓரளவு விரிவாகச் சிந்தித்து எழுதியிருக்கின்றார்.
மையானதாகவும், முழுமையானதாகவும், ஒப்பற்றதாகவும் திகழ்வதால்,
கின்ற கதைகள் சிறந்த கிளைக் கதைகள் ஆகும். ஹோமருடைய கட்டமைப்பை வியந்து பாராட்டும் பொழுது, அரிஸ்டாட்டில் கூறும்
மதல் வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன:
ாத நிகழ்ச்சிகளையெல்லாம் நீக்கிவிட்டு, ஒன்றோடொன்று தொடர் காப்பியங்களைப் படைத்துள்ளார். இலியாது காப்பியமும் ஒதிஸ்ஸி
103

Page 120
காப்பியமும் ஒரே ஒரு முழுமையான பொருளைப் பற்றித்தான் பேசுகின்றன என்று கருதுமாறு மையக்கதையைச் சுற்றி அனைத்தும் நிகழுமாறு படைத்துள்ளார். 'போலச் செய்யும் முறையில் படைக்கப் பெறும் கலைப் படைப்புக்கள் அனைத்தும் அவை ஒரு முழுப் பொருள் எனத் தோன்றுமாறு படைக்கப்படுகின்றன. கவிதைக் கலையும் போலச் செய்யும் முறையில் படைக்கப்படும் கலையாதலால் அது மைய நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பெறுதல் வேண்டும்; எடுத்துக் கொண்ட மையக்கதை முழுமை வாய்ந்ததாக அமைய, அதனைச் சுற்றிப் பின்னப்படும் கிளைக் கதைகளும் மையக் கதையிலிருந்து பிரித்துக் காண முடியதவாறு கட்டமைப்புநிலையில் ஒன்றிவிட வேண்டும். இவற்றுள் ஒன்றை நீக்கினாலும், இடம் மாற்றி அமைத்தாலும், அதன் முழுமைத் தன்மை சிதைந்து கட்டமைப்புக் குலைந்து விடும். நீக்கி விட்டாலும், சேர்த்துக் கொண்டாலும், அதன் முழுமைக்கு எவ்விதத் தீங்கும் விளைவிக்காத கிளைக் கதை, அதன் கட்டமைப்போடு உயிர்த் தொடர்புடைய உறுப்பாக விளங்க முடியாது"
காப்பியங்களில் கிளைக்கதைகள்
பிற இலக்கிய வகைகளைக் காட்டிலும் காப்பியங்களில் கிளைக்கதைகள் மலிந்திருப்பதற்குக் காரணம் அதன் நெகிழ்வான கட்டமைப்புத் தன்மையாகும். நடிப்பின் துணையின்றி, கதைக்கூற்று முறையில் புலவன் கதையை நடத்திச் செல்வதால், காப்பியத்தில் கிளைக் கதைகளைப் படைக்க முடிகின்றது. நாடகத்திற்கு மாறாக, காப்பியம் நீண்டு அமைகின்ற இலக்கியமாகையால், அதன் அளவைப் பெருக்கிக் கொள்வதற்குக் காப்பியப் புலவர்கள் கிளைக் கதைகளை இடையிடையில் புனைகின்றனர். நாடகத்திற்கும் காப்பியத்திற்குமுள்ள வேறுபாட்டை விளக்கும் பொழுதும் அரிஸ்டாட்டில் கிளைக்கதை அமைப்பதால் காப்பியத்தின் சுவை பெருகுகின்றது என்பதைத் தெளிவுறுத்துகின்றார்.
“காப்பியத்திற்குத் தனித்திறன் - சீரிய திறன் - ஒன்றுண்டு; அது தன்னுடைய கட்டமைப்பை விரிவாக்கிக் கொள்ள முடியும். நாடகத்தில் ஒரே சமயத்தில் பல நிகழ்ச்சிகளைக் காட்ட இயலாது; ஒரு நிகழ்ச்சியை மட்டுமே காட்ட முடியும். காப்பியம் கதைக் கூற்று முறையைப் பின்பற்றுவதால், ஒரே சமயத்தில் நிகழும் பல நிகழ்ச்சிகளைக் காப்பியத்தில் வருணித்துச் செல்ல முடியும். இவ்வாறு, ஒருங்கு நிகழும் நிகழ்ச்சிகள் காப்பியத்தின் பாடுபொருளோடு நெருங்கிய தொடர்பு கொண்டு ஒன்றி நிற்குமாயின், அவை காப்பியத்தின் அளவைப் பெருக்கிச் சுவையை மிகுவிக்கும். கேட்போரின் மனத்தை மையக் கதையிலிருந்து, ஆங்காங்கு வருகின்ற கிளைக்கதைகளின் மூலமாகத் திருப்பி, அவரை இன்புறுத்துவதன் காரணமாகக் காப்பியம் செம்மாந்து செல்லுகின்றது.”
அகில இலங்கைக் கம்பன் கழகம்

அரிஸ்டாட்டில் காப்பியக் கதையின் பாடுபொருளை ஆழமாகவும், அழகாகவும் வற்புறுத்தும் உத்தியாகக் கிளைக் கதையைக் கருதினார் என்பதை இக்கூற்று விளக்குகின்றது. மேலும், காப்பியக் கதையோடு நன்கு ஒன்றாத, எளிதில் பிரித்தெடுத்துவிடக் கூடிய கிளைக்கதைகளும் உண்டு என்பதும், ஆனால் அத்தகைய கிளைக்கதைகளை அரிஸ்டாட்டில் சிறந்தனவாகக் கருதவில்லை என்பதும் இவற்றால் தெளிவாகின்றன.
கம்பராமாயணத்தில் கிளைக்கதைகள்
வேறு எந்தத் தமிழ்க் காப்பியத்தையும் விட நீண்டிருப்பதால், கம்பராமாயணத்தில் பிற தமிழ்க் காப்பியங்களைக் காட்டிலும் மிகுதியான கிளைக்கதைகள் உள்ளன. கம்பராமாயணத்திலுள்ள கிளைக்கதைகளில் இரணியன் கதை ஒன்று மட்டுமே கம்பரால் புதிதாகப் படைத்துக் கொள்ளப்பட்டது; ஏனைய அனைத்தும் முதனூலில் இருப்பனவேயாகும். மாவலி, விராதன், துந்துபி முதலியோரைப் பற்றிய வரலாறுகளை முனிவர் சுருக்கமாக உரைத்திருக்க, கம்பர் அவற்றை தம் வழி நூலில் விரித்துக் கொள்ளுகின்றார். மற்றொன்றும் இங்கு எண்ணத்தக்கது. முதனூலில் இடம்பெற்றுள்ள கிளைக்கதைகள் அனைத்தையும் கம்பநாடர் ஏற்றுக்கொள்ளவில்லை; பலவற்றை ஒதுக்கி விட்டார்; சிலவற்றைப் புதுக்கியிருக்கின்றார். இவற்றிலிருந்து கம்பர் அடிப்படைகளையொட்டியே இம்மாற்றங்களைச் செய்திருக்க வேண்டும் என்று எண்ணுவது
தவறாகாது.
வ. வே. சு. ஐயர் கருத்து
கம்பராமாயணக் கிளைக்கதைகள் குறித்து வ. வே. சு. ஐயர் அவர்கள் கூறியிருக்கின்ற கருத்துக்களிற் சில கருத்து வேறுபாட்டிற்கு இடமளிக்கின்றன. இராவணன் வீழ்ச்சியே காப்பியத்தின் பாடுபொருள் என்றும், அதனோடு உறுப்புத்தொடர்பு இல்லாதன அனைத்தும் ‘உபாக்கியான’ வகையில் சேர்க்கத்தக்கன என்றும் ஐயரவர்கள் கருதுகின்றார். அவருடைய கருத்தின்படி பரதனும், வாலியும் உபாக்கியானங்களாகின்றனர். இராவணனுடைய அழிவிற்கு நேரடியாகத் தொடர்பில்லாதவர்கள் பரதனும் வாலியும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்கள் காப்பியக் கதையோடு'அவயவசம்பந்தம் இல்லாதவர்கள், கிளைக் கதையாக அமையத்தக்கவர்கள் என்னும் கருத்து, பொருந்துமா? என்னும் ஐயம் எழுகின்றது. இவ்வகை ஆராய்ச்சிகள் ஐரோப்பியக் காப்பியங்களைக் கற்று, அவற்றோடு ஒப்புநோக்கி எழுதுவதால் ஏற்படும் விளைவு என்று பேராசிரியர் வ. சுப. மாணிக்கனார் சுட்டிக் காட்டியிருப்பது பொருத்தமானது. (கம்பர், பக். 8.) கம்பராமாயணத்தைக் கற்று, அதன் கட்டமைப்பு நெறியைத் தேர்ந்து, அந்நெறிக்குள் அவை பெறும் இடம் என்ன? என்று காண்பதுதான் உண்மை காண்பதாக முடியும்.
104

Page 121
புராணக் கதைகள்
கவிக்கூற்றுக்களின் மூலமாகவும், கதை மாந்தர்களின் உரையாடல்களின் மூலமாகவும் காப்பியக் கதை மாந்தரைப் பற்றியும், அவருடைய முன்னோர், உறவினர் பற்றியும், தேவர்கள் பற்றியும், பொன்னுலகு, பாதலம், பாற்கடல் போன்ற புராணப் பொருள்களைப் பற்றியும் பற்பல கதைக் கூறுகள் காப்பியம் முழுவதிலும் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன. இவை அனைத்தையும் தொகுத்துக் காணும் பொழுது அவை எண்ணுாற்று ஐம்பத்தைந்து கதைக் கூறுகளாக விரிந்து நிற்கின்றன. கம்பராமாயணத்திலுள்ள பொருட்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறும்கரை செறிகாண்டம் எழும் என்னும் தனியனில், கதைகள் ஆயிரத்தெண்ணுாறு எனப்படுகின்றது. உத்தர காண்டத்தையும் சேர்த்துக் கணக்கிட்டுக் கூறப்படுவதால், இத்தொகையில் பெரும் வேறுபாடு காணப்படுவது இயல்பே ஆகும். இது எவ்வாறு இருப்பினும், கதைக் குறிப்புக்களை நம் முன்னோர் தனிக்கதைகளாகக் கருதியிருந்தனர் என்னும் கருத்து இத்தனியன் மூலம் விளக்கமாகின்றது. அன்றியும், மையக்கதையிலிருந்து சிறிது நேரம் மனத்தைத் திருப்பி இன்புறுத்துவது கிளைக்கதைப் பண்பு என்னும், மேலை நாட்டுக் கொள்கைப்படி பார்த்தால், இவையும் கிளைக் கதைகளாகக் கொள்ளத்தக்கன ஆகலாம்.
இக்கதைகளைக் காப்பியப் புலவன் எந்நோக்கில் பயன்படுத்துகின்றான்? கட்டமைப்பு நிலையில் இவற்றிற்கு ஏதேனும் இடமுண்டா? செயற்பாட்டு நிலையில் இவற்றின் பங்கு யாது? என்னும் வினாக்கள் நம் மனத்தில் முகிழ்க்கின்றன. காப்பியப் புலவன் யாதொரு பயனும் கருதாது இவற்றை ஆங்காங்குக் குறிப்பிட்டுச் செல்லுகின்றான் என்று எண்ணுவது பொருந்தாது. இக்கதைக் கூறுகள் காப்பியத்தில் இடம் பெறுவதற்குரிய காரணத்தை ஆழ்ந்து சிந்திப்பின், பொருத்தமான விளக்கத்தைக் காணலாம்.
பகுப்பாய்வு
நூல் முழுவதிலும் பரவிக் கிடக்கின்ற புராணக்கதைக் குறிப்புக்ளைத் தொகுத்துப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். அவையாவன:
(அ) கதைமாந்தரைப் பற்றிய கதைக்குறிப்புக்கள்.
(ஆ) திருமால், சிவபெருமான், இந்திரன் முதலிய தேவர்களைப்
பற்றிய கதைக்குறிப்புக்கள்.
(இ) துறக்கம், பாதலம், பாற்கடல், மந்தரம், மேரு முதலிய புராணப்
பொருட்களைப் பற்றிய கதைக் குறிப்புக்கள்.
இக்கதைக் குறிப்புக்களை ஆராய்ந்தால் இவை முற்றிலும் மீவியல் நிலையில் செயலாற்றுகின்ற கதை மாந்தரைக் குறிப்பனவாக அமைகின்றன. மனித நிலையில் செயலாற்றுகின்ற இராமன், இலக்குவன், பரதன் முதலியோரைக் குறித்து ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவிற்கு இவை மிகவும் குறைவாக உள்ளன. இவர்களைக் குறித்து அருகிவரும் புராணக் குறிப்புக்களும், இராம இலக்குவர் சூரிய குலத்தில் பிறந்தோர்
கம்பன் மலர் - 2000

என்னும் குலமரபைக் குறிக்கின்றன அரிதாக சில இடங்களில் முனிவர்களைக் குறிக்கும் பொழுது புராணக்கதைக் கூறுகள் பயன்படுதப்படுகின்றன. அகத்தியர் கடலைக் குடித்தது. விந்திய மலையை அடக்கியதுமுதலியன இத்தகைய குறிப்புக்கள். ஆனால், முனிவர்கள் தம் தவத்தின் ஆற்றலால் மீவியல் நிலையில் செயல்படுகின்றனர். எனவே, இயல் நிலை மாந்தரைக் குறிக்கக் கம்பர் இக்கதைக் கூறுகளைப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகின்றது.
இராமனுக்குத் துணைபுரியும் வானரரும், அவனை எதிர்க்கும் அரக்கரும் மீவியல் கதைமாந்தராக உள்ளனர். இவர்களைப் பற்றிய கதைக் கூறுகள் முதன்மை பெறுகின்றன. தேவர்களைப் பற்றிக் குறிக்கும் கதைக் கூறுகள் இரண்டாவது இடம் பெறுகின்றன. தேவர்களிலும் திருமாலைப் பற்றிய குறிப்புக்கள் முதலிடம் பெறுகின்றன; சிவபெருமான் திருமாலுக்கு அடுத்த நிலையில் அமைகின்றார். நான்முகனும், இந்திரனும், சிவபெருமானுக்குப் பின்னர் நிற்கின்றனர். திருமால் இராமனாக மண்ணுலகில் அவதரிக்கும் கதை இராமகாதை, எனவே, திருமால் இக்கதைகளில் முதலிடம் பெறுவதில் வியப்பொன்றும் இல்லை. இவை மீவியல் புனைவுகளைப் போன்று வியப்புச் சூழலை உருவாக்கிக் கதை கேட்போரையும், கற்போரையும் இன்புறுத்துகின்றன. வானரர், அரக்கர் முதலிய கதை மாந்தரை இவை உயர்த்திக் காட்டுகின்றன.
கிளைக்கதை வகைகள்
கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள கிளைக்கதைகளை எடுத்துக் கொள்வோம். மேனாட்டுத் திறனாய்வாளர்கள் கருத்துப்படி காப்பியக்கதையோடு நேரடியான தொடர்புடையதாக இருக்கும் கிளைக்கதைகள், அத்தகைய தொடர்பில்லாமல் அமைந்துள்ள கிளைக்கதைகள் என இவற்றை இருவகை நிலைகளில் பகுத்துக் காணலாம். வேறொருவகையிலும் இவற்றைப்பகுத்துக் காணமுடியும்; காப்பியக்கதை நிகழ்ச்சிகளைப் பற்றிய கதைகள், காப்பிய நிகழ்ச்சிகளுக்கு முன்னரே நடைபெற்று, காப்பிய நிகழ்ச்சிகள் நடைபெறுங்காலத்தில் பூரித்து முழுமை பெறும் கிளைக் கதைகள் என முத்திறப்படுத்தலாம். அன்றியும் கவிக் கூற்றாக வரும் கிளைக்கதைகள், கதைமாந்தரின் கூற்றாக வரும் கிளைக் கதைகள் என்றும் வகுக்கலாம். கதைமாந்தர் கூற்றாக வருவனவற்றை மேலும் இருவகையாக - தன்னுடைய கதையைத் தானே கூறுதல், மற்றொருவரின் கதையை எடுத்துக் கூறுதல் - எனப் பிரித்துக் காணலாம்.
காப்பியக் கதையோடு நேரடியாகத் தொடர்புடைய கிளைக் கதைகள்
நம்முடைய ஆய்வில், காப்பியக் கதை, பாடு பொருள் என்னும் தொடர்புகள் இராவணன் வீழ்ச்சி என்னும் முதன்மையான செயலைக் குறிக்கின்றன. இதுவே, கம்பராமாயணக் காப்பியத்தின் முதன்மையான செயலாக இருப்பதோடன்றி, முழுமையான செயலாகவும் ஒப்பில்லாது உயர்ந்து ஓங்கி நிற்கும் செயலாகவும் நிற்கின்றது. காப்பியத்தில் நிகழும் பிற நிகழ்ச்சிகள் அனைத்தும் இவ்வொருமையை நோக்கி - முழுமையை மையமாகக் கொண்டு அமைவனவே ஆகும். பரம்பொருள் அரக்கரை அழிப்பதற்காகத்
105

Page 122
தயரதன் புதல்வனாக மண்ணில் அவதரிப்பதாகத் தேவர்களுக்கு வரமளித்தல் (எஸ். இராஜம், கம்ப,1:5:5 - 26, சென்னை, 1958) பரசுராமன் வருகை, (கம்ப,1:24), கவந்தன் வரலாறு (கம்ப. III: 15), சவரியின் வரலாறு (கம்ப.I:15), சடாயுசம்பாதி வரலாறு(III :4:25-26;V:16:53-56), இலங்கை மாதேவி வரலாறு (V : 2 91 - 94) என்னும் ஆறு கிளைக்கதைகளும் காப்பியப் பாடுபொருளோடு நேரடியாகத் தொடர்புடைய கிளைக்கதைகளாக அமைகின்றன.
உலகில் அரக்கரால் அறம் நிலைகுலைகின்றது; நல்லோர் வருந்துகின்றனர். அரக்கரை அழித்து அறத்தை நிலை நிறுத்தப் பரமன் பாரிலே அவதரிக்கின்றான். ஆனால், இதனைக் கம்பர் நேரடியாக வருணிக்கவில்லை. மகப்பேறு இல்லையே என்று தயரதன் வருந்திக் குலகுருவாகிய வசிட்டனிடம் கூறும் பொழுது, முக்காலமும் உணர்ந்த மூதறிஞனான அவன் திருமால் தேவர்களுக்கு அளித்த அருளிப்பாட்டை ஞானக்கண்ணால் உணர்ந்து, மகப்பேறு பெறும் வேள்வியைத் தொடங்குமாறு மன்னனுக்குக் கூறுகின்றான் (கம்ப. 1 : 5 : 5). இக்கதை பின்னோக்கு உத்தியால் அமைக்கப்பட்டிருக்கிறது. பரம்பொருள் மண்ணில் அவதரிக்கும் தெய்வமறை - தேவ ரகசியம்’- வெளிப்படாதிருக்க வேண்டுமென்னும் கொள்கையைக் காப்பியம் முழுவதும் கம்பநாடர் கடைப்பிடிக்கின்றமையால் குலகுரு ஞானக்கண்ணால் உணர்ந்ததாகப் பாடுகின்றார். பரசுராமன் வருகை இராமனைப் பரம்பொருள் என்று உணர்த்துவதோடு, கரனைக் கொல்லுவதற்கும், இதர அரக்கர்களை அழிப்பதற்கும் திருமாலின் தனுவை இராமனுக்கு அளித்துத் தவத்தையும் வாரிக் கொள்ளுமாறு செய்வதால் (கம்ப 1: 24: 37 - 40, 45; 111; 9: 17) இக்கதை பாடுபொருளோடு தொடர்புடையதாகின்றது. கவந்தனும், சவரியும் சுக்கிரீவனிடம் இராம இலக்குவரை ஆற்றுப்படுத்துகின்றனர் (கம்ப. I : 15 : 14; III 16 : 6-7). துணையிலாதவருக்குப் பகைவரைத் தொலைத்து நீக்குதல் அரிதென்றும், தீயவர்ச் சேர்கிலாது செவ்வியோரைச் சேர்ந்து செயலாற்றுதல் வேண்டுமென்றும், சவரியைக் கண்டு அவள் ஏவிய வழியில் இருவரும் முயலவேண்டும் என்றும் கவந்தன் ஆற்றுப்படுத்த (கம்ப. 111; 15 : 52 - 55), சவரியும் சுக்கிரீவன் தங்கியிருக்கும் இரலைமலைக்குச் செல்லும் வழியை அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றாள் (கம்ப I 16 : 6). இராவணவதம் என்னும் பாடுபொருளுக்குரிய துணைவலி உருவாக இவ்விருவர் கதைகளும் துணையாவதால், இவையிரண்டும் அதனோடு உயிர்த் தொடர்பு பெற்றுத் திகழ்கின்றன. சீதை இலங்கையில் சிறையிருப்பதைச் சம்பாதி அறிந்து கூறுதல் (கம்ப. IV: 16:58), அனுமன், இலங்கைக்குச் சென்று பிராட்டியைக் கண்டு இராவணவதத்திற்கு வழி வகுக்கின்றது. இலங்கைமாதேவி அரக்கர்களின் அழிவு உறுதி என்னும் நம்பிக்கையை உருவாக்குகின்றாள் (கம்ப. V 2 93) இவ்வாறு இக்கதைகள் மைய நிகழ்ச்சியோடு இயைந்து நின்று அழகுறுத்துகின்றன.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

காப்பியக் கதையோடு நேரடியான தொடர்பில்லாத கிளைக் கதைகள்
இத்தகைய கிளைக் கதைகளை எடுத்து விட்டால் காப்பியக் கதை எவ்வித ஊனமுமின்றி நடைபெறும். இவை முழுமையோடு உறுப்பமைதி இல்லாமல் தனித்து விளங்குகின்றன. மாவலி வரலாறு (கம்ப. 1:8:8-27), அகலிகை வரலாறு (கம்ப. 1: 9:17-24), சிவதனுசின் வரலாறு (1:13:12-14), தயரதன் சாப வரலாறு (11:4:72 - 86), விராதன் வரலாறு (II: 1: 61 - 68), அகத்தியர் பெருமை (I:3:37 - 41), அயோமுகி வரலாறு(III: 14), வாலி - மாயாவிபோர் (IV: 3: 37 - 49), துந்துபி வரலாறு (IV :5:3-14), சுயம்பிரபை வரலாறு(IV:14:55-63), இரணியன் வரலாறு (VI : 3), என்னும் பதினொரு கிளைக் கதைகள் இவ்வகையில் அமைகின்றன. இக்கதைகள் மையக் கதையோடு நெருங்கிய தொடர்பில்லாமல் புளியம் பழமும் ஒடும் போல இருக்கின்றன. காப்பியத்தோடு உறுப்பமைதி இல்லாத கிளைக் கதைகளை அரிஸ்டாட்டில் போற்றவில்லை என்பது ஈண்டு நினைவுகூர்தற்குரியது.
காப்பியக் கதையோடு நிகழும் கிளைக் கதைகள் காப்பியக்கதை நிகழும் காலத்தில் நடைபெறுகின்ற கதைகளை இங்கு வகைப்படுத்துக்கின்றோம். பரசுராமன் (1:24), விராதன் (III: 1: 61 - 68), guurTypáfi (III: 14), 65656ör (III : 16), GF6Nurf (I:15:51) ஆகிய ஐவரைப் பற்றிய கதைகளும் காப்பியம் நிகழும் போதுஉடன் நிகழ்கின்றன, சீதையை மணந்துகொண்டு இராமன் தயரதனோடு அயோத்திக்குத் திரும்பும் பொழுது பரசுராமனைப் பற்றிய வரலாறு நிகழ்கின்றது. விராதன், கவந்தன், அயோமுகி ஆகியோரோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் இராமன் சீதையைப் பிரிந்து காடுகளில் தேடி அலையும் காலத்தில் நிகழ்கின்றன. இன்னொரு வகையாகப் பார்த்தால் இவர்கள் காப்பியக் கதை மாந்தர்களாகவும் கருதத் தக்கவாறு, காப்பிய நிகழ்ச்சிகளை உருவாக்குகின்றனர்.
காப்பியக் கதைக்கு முன்னர் நிகழ்ந்த கதைகள்
இராமாயணக் காப்பியக்கதை நிகழும் காலத்திற்கு முன்பே நிகழ்ந்த, ஆனால் கதைமாந்தர்களால் எடுத்துக் கூறப்படுகின்ற கிளைக்கதைகளை இப்பிரிவில் அடக்கலாம். இராமன் அவதாரம் குறித்துத் தேவர் பெற்ற வரம் (55-26) மாவலி வரலாறு (1: 8: 8-27), அகலிகை சாபம் (19:17-24), சிவதனுசின் வரலாறு (1 :13:11-24),தயரதன் பெற்ற சாபம் (11:4:72-86), அகத்தியன் பெருமை (I:3:37 - 41), மாயாவி (IV: 3: 50 - 59), துந்துபி (IV 5: 3 - 14), eius Sysou (IV: 14:55 - 63), alburg (IV : 16 :53-56), இலங்கைமாதேவி (V:2; 9:1-93), இரணியன் (V1 13) ஆகியோரைப் பற்றிய கதைகள், காப்பியக்கதை நிகழ்வதற்கு முன்பே நடைபெற்று முடிந்த நிகழ்ச்சிகள். அவற்றுள் சில கதைமாந்தரால் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. தேவர் அருளிய பழைய வரத்தை வசிட்டன் நினைவுகூர்கின்றான். மாவலி வரலாற்றை இராம இலக்குவர்க்கு விசுவாமித்திரன் எடுத்துரைக்கின்றான்; வில்லின் பெருமையைச் சதானந்த
106

Page 123
முனிவன், விசுவாமித்திரனுக்கு விரித்துரைக்கின்றான், தயரதன் தான் பெற்ற சாபத்தைத் தன் மனைவி கோசலையிடம் கூறித்தான் இறப்பது உறுதி என்கிறான். அகத்தியன் பெருமையைக் கவிஞன் எடுத்துக் கூறுகின்றான்; மாயாவிவரலாற்றை அனுமனும், துந்துபி வரலாற்றைச் சுக்கிரீவனும் இராம இலக்குவர்க்கு எடுத்துக் கூறுகின்றனர்; சுயம்பிரபையும், சம்பாதியும், இலங்கைமாதேவியும் தம் வரலாற்றைத் தாமே எடுத்துரைக்கின்றனர்; இரணியன் வரலாற்றை வீடணன் தன் அண்ணனுக்கு எடுத்துக் கூறி அறிவுறுத்த முனைகின்றான். காப்பிய மாந்தர்களில் ஒருவர் மற்றவருக்கு எடுத்துக்கூறும் முறையில் இவை அமைகின்றன.
கவிக்கூற்றாக அமையும் கிளைக் கதைகள்
கிளைக்கதைகளில் நான்கு, காப்பியப் புலவன் கூற்றுக்களாக அமைகின்றன. பரசுராமன் (1 : 24), அகத்தியன் (I:3:37-41), அயோமுகி (I1:14), சவரி (I:16), ஆகியோர் வரலாறுகள் இப்பகுப்பில் அடங்குகின்றன.
கதைமாந்தர் கூற்றாக அமையும் கிளைக்கதைகள் நாம் ஆராய்கின்ற பதினேழு கிளைக் கதைகளில் மேற்கூறிய நான்கு கிளைக் கதைகளைத் தவிர எஞ்சியுள்ள பதின்மூன்று கிளைக் கதைகளில் ஆறு கிளைக் கதைகள், காப்பிய மாந்தருள் சிலர் தம் கதையைத் தாமே கூறுவனவாக அமைகின்றன. தம் கதையைத் தாமே கூறுவோர் தயரதன், விராதன், கவந்தன், சுயம்பிரபை, சம்பாதி, இலங்கைமாதேவி ஆகியோர் ஆவர். எஞ்சியுள்ள ஏழு கிளைக் கதைகள் பிறரைப்பற்றியவை அவற்றைக் காப்பியமாந்தர் பிறருக்கு எடுத்துரைக்கின்றனர். இவை அனைத்தையும் பின்வருமாறு வகைப்படுத்துவோம்:
(9) கவிக்கூற்றாக அமைவன -4 (ஆ) தம் கதையைத் தாமே கூறுதல் - 6 (g) பிறர் கதையைக் கூறுதல் - 7
கலைப் பண்புக் கூறுகள் (Motif)
கிளைக்கதைகள் கட்டமைப்புநிலையிலும், பொருண்மை நிலையிலும் காப்பியத்தோடு ஒன்றி நிற்கின்றன. இக்கதைகளின் கலைப் பண்புக்கூறு (Motif) காப்பியப் பொருளோடு ஒன்றி நிற்கின்றது. அகலிகைக் கதை காப்பியப் பொருளோடு ஒன்றி நிற்கின்றது. அகலிகை கதை காப்பியம் முழுவதையும் ஒன்றாக வைத்து நோக்கும் பொழுது முரண்நிலைக் காட்சியைத் தோற்றுவிக்கின்றது. பெண் தவறு செய்தல் அகலிகைக் கதையின் கலைப்பண்புக் கூறு ; அவளைக் கெளதமமுனிவன் கல்லாகச் சபித்துத் தண்டிக்கின்றான் (19:22). பிழையொன்றும் செய்யாத சீதை நெருப்பிலே குளித்து எழுந்து தன் தூய்மையை நிலைநாட்ட வேண்டியிருக்கின்றது. தவறு செய்யாத பெண், தவறிய பெண் என ஒன்றுக்கொன்று முரணிலைக்காட்சி அமைகின்றது. பிழை செய்த அகலிகைக்கு இரங்கிய இராமன் பிழையற்ற மனைவியை ஏற்க மறுத்துக் கொடுமொழி பேசுகின்றான் (IV : 40 : 48 - 55).
கம்பன் மலர் - 2000

சதானந்த முனிவன் கூறும், சிவனார் வில்லைப் பற்றிய வரலாறும், பரசுராமன் புகலும் திருமாலின் வில்லைப் பற்றிய வரலாறும் (1:24; 26 - 31) சைவ வைணவப் பூசலின் பழங்கருத்து வடிவாகலாம். இங்கு இலை முரண் நிலையில் அமைந்து, சிவனார் வில் முறிய, "நாரணன் வலியில் ஆண்டவில் ஏற்றம் பெறுகின்றது. திருமாலின் ஏற்றத்தைச் செப்பும் பொருண்மைக்கு இது இசைவாகின்றது. அயோமுகி காதல் சீதையின் காதலோடும், சூர்ப்பனகையின் காதலோடும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு முரண்நிலைக் காட்சியாகின்றது. சீதையின் காதல் தூய்மையானது; ஏனைய இரண்டும் காமத்தின் அடிப்படையில் எழுபவை. சூர்ப்பணகையின் காமம், வஞ்சனை, சூது போன்ற தீப்பண்புகளை மேல் பூச்சுக்களால் மறைத்து விட்டுப் போலி வேடமிட்டு மயக்க முயலும் கரவுத்தன்மை நிறைந்தது. அயோமுகியின் காதல் காட்டரக்கி ஒருத்தியின் நளினமில்லாத, முரட்டுத்தனமான காமம். காதல் என்ற நிலையில் மூன்றும் எதிரெதிர் நிலைகளில் நின்று காப்பியப் பொருண்மையைத் தெளிவுறுத்துகின்றன. இராமன் இலக்குவன் மீது கொண்டுள்ள எல்லையில்லாப் பரிவை இக்கிளைக் கதை மூலம் கம்பர் விளக்கி விடுகின்றார். முதனூலில் சுருக்கமாக வரும் இதனை, இக்கருத்துப் பற்றியே கம்பர் விரித்தனராதல் வேண்டும்.
தயரதன் &lruún ஒப்புநிலைக் காட்சியாக நின்றொளிர்கின்றது. மகனைப்பிரிந்த ஏக்கத்தால் உயிர்துறக்கும் பெற்றோர் நிலை இதன் கலைப்பண்புக் கூறு ஆகும். தன் மகன் பிரிவைப் பொறாது குருட்டுப் பெற்றோர் இறப்பதைப் போன்று, இராமனைப் பிரிந்து தயரதனும் இறப்பான் என்னும் ஒப்புநிலைக் காட்சி இதனுள் அமைகின்றது. தயரதன் தன் சாவை எதிர்பார்த்துக் காத்து நிற்குமாறு இக்கதை அமைவதால், அவலத்தின் ஆழம் உள்ளத்தைத் தொடுகின்றது. விராதனும், கவந்தனும் இராமனுடைய தெய்வநிலைக் காட்சியைக் காணுகின்றனர்; அவனை பரம் பொருளாகவே வழிபடுகின்றனர். இவை இரண்டும் ஒப்பு நிலையில் அமைகின்றன.
சிறைப்பட்டுள்ள பெண்ணை விடுவிப்பது இக்காப்பியத்தின் கலைப்பண்புக் கூறுகளுள் ஒன்று. சுயம்பிரபை பிலத்திற்குள் சிறைப்பட்டிருக்கிறாள்; அவளை அனுமன் விடுவிக்கின்றான். இதனைப் போன்று இலங்கையில் சிறைப்பட்டு உள்ள காப்பியத் தலைவியைத் தலைவனாகிய இராமன் மீட்பான் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்ற ஒப்புநிலைக் காட்சியாக சுயம்பிரபை கதை அமைகின்றது. நல்லோர்களின் துயரைத் துடைக்க கடவுள் மனிதனாக அவதரிக்கின்றான் என்பது காப்பியத்தின் மையப் பொருண்மை. இதனை மாவலிக் கதை ஒப்புநிலைக் காட்சியால் விளக்குகின்றது. நல்லோரைக் கடவுள் விடுவித்தல் இக்கதைகளின் கலைப்பண்புக் கூறு. திருமால் காசிபர் மகனாக அவதரித்து மாவலியை அடக்கித் தேவர்கள் துயரைத் தீர்த்ததைப் போன்று, மண்ணுலகில் மனித வடிவெடுத்து
107

Page 124
வந்துள்ள இராமனும், அரக்கரை அழித்துத் தேவர்களை வாழ்விப்பான் என்னும் ஒப்புநிலைக் காட்சியை மாவலி பற்றிய கதை
சுட்டுகின்றது.
கம்பராமாயணமாகிய காப்பியத்திலேயே ஒப்புயர்வில்லாத கிளைக்கதை இரணியன்வதைப்படலமாகும். இதுகாப்பியத்தோடு நேரடியான தொடர்பு கொண்ட கதையன்று. வீடணன் இராவணனுக்கு இராமனுடைய பெருமையை அறிவுறுத்தும் முறையில் எடுத்துரைக்கும் வரலாறாகக் காப்பியத்தில் இக்கதை இடம் பெறுகிறது. கம்பராமாயணத்தைக் கற்றறிந்த அறிஞர்கள் அனைவராலும் போற்றி புகழப்படுகின்ற கிளைக்கதை இரணியன்
கதை.
“இரணியப்படலம் ஒன்று தவிர ஏனைய கம்பராமாயணம் முற்றும் அழிந்து விட்டாலும் பெரிதன்று, கம்பருடைய கவித் திறமையினையும் இயற்கைப் புலமையினையும்
காட்ட இப்படலமொன்றுமே போதிய சான்றாகும்.”
வ. வே. சு. ஐயரவர்களும் இப்படலத்தைப் பாராட்டுகின்றார். கதையமைப்பிலும், நாடகப் போக்கிலும், சொல்வளத்திலும்
இப்பகுதி ஒப்புயர்வற்று விளங்குகின்றது.
தந்தையைத் தனயன் பகைவனிடம் காட்டிக் கொடுத்தல் இக்கதையின் அடிப்படையான கலைப்பண்புக் கூறு. இராவணன் - வீடணன் கதையிலும் இக்கலைப் பண்புக் கூறு நின்றொளிர்கின்றது. கடவுள் உண்மையை நிலை நிறுத்தும் போராட்டத்தில் தன் தந்தையையே பலி கொடுக்கிறான் பிரகலாதன்; நீதிக்காக அண்ணனைப் பகைக்கிறான் வீடணன், இரண்டிலும் கடவுளறமே இறுதி வெற்றி பெறுகின்றது. இரணியனோடு ஒப்பிட்டால் இராவணன் மிகவும் எளியன்; மிகப்பெரும் வீரனான இரணியனே அழியும்போது இராவணன் எம்மாத்திரம்? என்று வீடணன் அண்ணனுக்குக் குறிப்பால் உணர்த்த முயலுகின்றான்: வைணவ மரபுரைகளின் படி, பிரகலாதனும், விபீடணனும் ஒத்தவர்கள். இருவரும் பிரகலாதாழ்வான் விபீடணாழ்வான் என ஆழ்வார் தகுதி பெற்றவர்கள். சம்பாதியின் தீய்ந்து உலர்ந்த இறகுகள் இராம நாமத்தின் பெருமையால் தழைத்து வளர்வதைக் காட்டுவதன் மூலம் இராமனின் தெய்வத்தன்மை புலப்படுத்தப்படுகின்றது. அறமே இறுதி வெற்றி பெறும் என்னும் பாவிகத்தை இலங்கை மாதேவி கதை வற்புறுத்துகின்றது. வாலியின் பெருமைக்கும், வலிமைக்கும் சுவையூட்டுவன துந்துபி, மாயாவி பற்றிய கதைகள். கம்பருடைய தமிழ்ப் பற்றின் விளைவே அகத்தியன் கதை. அகில இலங்கைக் கம்பன் கழகம்

வாலி கதையும் பரதன் கதையும்
வ. வே. சு. ஐயரவர்கள் வாலியின் கதையும், பரதன் வரலாறும் காப்பியத்தின் மையப் பொருளோடு அவயவசம்பந்தம் இல்லாதவை என்றும், எனவே, அவற்றைக் கிளைக்கதைகளாகக் கொள்ளுவதே தக்கது என்றும் கருதுகின்றார். (வ. வே. சு. ஐயர், கம்பராமாயண ரசனை, பக். 39 - 40), காப்பியத்தின் பாடு பொருளான இராவணன் வீழ்ச்சிக்குப் பரதனும் வாலியும் தேவையற்றவர்கள் என்பது பொருந்தாது. பரதன் தோன்றியதாலன்றோ அவனைப் பெற்ற தாய் வரம் வேண்டி இராமனைக் காட்டுக்கு அனுப்பினாள். அதற்கு வித்தாக அமைபவன் பரதன். பரதன் இல்லாவிட்டால் இராமாயணக்
காப்பியம் வளர்ச்சி பெறாது.
வாலி - சுக்கிரீவர் போராட்டம் இராம இலக்குவரைக் கிட்கிந்தைக்கு உய்க்கின்றது. கவந்தனும், சவரியும் திட்டமிட்டே அவர்களைச் சுக்கிரீவனிடம் அனுப்புகின்றனர். இராவண வதம் நிகழ வேண்டுவதாயின், வாலி கொல்லப்பட வேண்டும். அவன் எவ்வளவுதான் இராமனைப் போற்றிப் பெரிதாக மதித்தாலும், அவன் இராவணனின் நண்பன். இராவணன் கூற்றுக்களே
இதற்குச் சான்று பகர்கின்றன.
வாலி வதத்தில் மற்றொரு நுட்பத்தை அமைக்கின்றார் கம்பர். கடவுளே ஆனாலும் மனித வடிவில் வரும்போது மனிதனாகக்தான் செயற்பட வேண்டுமே தவிர, கடவுளாக அன்று. எவ்வாறு கூனி இராமன் தன் முதுகில் உண்டையால் அடித்த சிறு குற்றத்தைப் பெரிதாக்கிக் கொண்டு கொடுமை இழைத்தாளோ, அதனைப் போன்று இராமனும் பிறர்மனை நயத்தல்' என்னும் குற்றத்தைப் பெரிதுபடுத்திக் கொண்டு வாலியைக் கொல்வதாக வாக்களித்து விடுகிறான். வாலி கூறுவது போன்று, தேவியைப் பிரிந்த பின்னர் சிந்தை திகைத்து நிற்கின்றான்; வில்லறம் துறந்ததற்காக நோன்பிருந்து கழுவாய் செய்யப் போவதாக இராமன் கூறி மலைக்குகைகுச் செல்லுகிறான் (IV:9:23) கம்பர் இராமனை மனிதனாகக் காட்டும் இடங்களில் இது முக்கியமானது. இந்நுட்பத்தை அறிஞர் சேஷாசலம் சுட்டிக் காட்டுகின்றார்:
"கம்பரது நூலில் அறம்சாய்ந்தால் வாயடங்க வேண்டி வருகின்ற . நுட்பமும் விளங்கும். வாலியின் வாதத்தில் இராமனே தோற்றனன். இவ்வாறிவன் தோற்க வேண்டுமென்பதே உட்கோள்"
அவயவ-சம்பந்தம் உண்டா? இல்லையா? என்பதெல்லாம் பொது நெறியாக அமைய முடியாது. ஒவ்வொரு நூலுக்கும் உள்ள இயல்பான நெறியைக் கண்டு, அதனைக் கொண்டு காப்பியத்தை அளக்க முயல்வதே பொருந்துவது எனலாம். எனவே பரதனும் வாலியும் கிளைக்கதைப் பாங்கினர் அல்லர்; காப்பியக் கதைக்கு இன்றியமையாத கதைமாந்தர் என்பது தெளிவாகும்.
108

Page 125
முடிவுரை
இக்கிளைக் கதைகளைப் பின்வரும் அட்டவணை வாயிலாக விளக்கலாம்.
எண் கிளைக்கதை 1 2 3 4 5 6 7 8 . தேவர் பெற்ற வரம் + - - + + - - + 2. மாவலி ح+۔ ۔ــــــ سے ہ{} -+ ــــــــے ۔+- سے
3. அகலிகை a res -- m - H 4. சிவதனுசு ASq S SJS SSSS S S SSS SSS qSS S SSSSSSJ 5. Uijöily stLogiT + ー + - ー + ー =
6. தயரதன் சாபம் - - - - - - - - 7. விராதன் =ܚ -- -- ܗ -- = -+- = 8. அகத்தியன் مــ ــــــــــــ ــ+ے ۔۔۔ -+ ۔۔۔۔ -+۔ ۔۔ 9. அயோமுகி m H -- - m -- - - 10. கவந்தன் -- -- - - - - - 11. F6 Jrf + - + - - + - -
12. LorruT6 ー + = + + ー - 十ー
13. துந்துபி - - - - - - - -- 14. சுயம்பிரபை ー + ー 十 + ー + =
15. சம்பாதி + ー ー + + ー + = 16. இலங்கைமாதேவி + - - + + - + - 17. இரணியன் ー + = 十 + ー + +
குறிப்பு விளக்கம்
1 மையக்கதையோடு தொடர்புள்ளது.
மையக்கதையோடு தொடர்பில்லாதது. காப்பியக் கதைக்கு முன்னர் நிகழ்வது காப்பியக் கதையுடன் நிகழ்வது. கதைமாந்தர் கூற்றாக அமைவது. கவிக்கூற்றாக அமைவது. தம் கதையைத் தாமே கூறுதல்.
பிறர் கதையைக் கூறுதல். (+) உண்டு என்பதையும் (-) இல்லை என்பதையும் குறிகின்றன.
'காப்பிய நோக்கில் கம்பராம
கம்பன் மலர் - 2000

கம்பராமாயணக் கிளைக் கதைகளில், பரசுராமன், அகத்தியர், அயோமுகி, சவரி ஆகியோர் கதைகளைத் தவிர பிற அனைத்தும் காப்பிய மாந்தருடைய கூற்றுக்களாக அமைகின்றன. காப்பிய நிகழ்ச்சிகளுக்கு முன்பே நடைபெற்றுவிட்ட சில நிகழ்ச்சிகள் காப்பியம் நிகழும் வரை நீறுபூத்த நெருப்பெனக் கிடந்து, காப்பியத் தலைவனோடு தொடர்பு கொண்டதும் முழுமை அடைகின்றன. அகலிகை கதையும் சம்பாதி கதையும் இத்தகையன. இராமனுடைய தெய்வத்தன்மையை வற்புறுத்தும் வகையில் விராதன் கதையும், கவந்தன் கதையும் அமைகின்றன. பெரும்பாலான கிளைக்கதைகள் கட்டமைப்பு நிலையிலும் பொருண்மை நிலையிலும் காப்பியத்தின் மையக்கதையை விளக்குகின்றன. காப்பியக் கதையோடு நேரடியான தொடர்பில்லாத கதைகளைக் கம்பர் மிகுதியிாக ஆளவில்லை. இரணியன் கதை கம்பருடைய கிளைக்கதை அமைக்கும் திறனுக்கு ஒப்பற்ற சான்றாகும்.
ஹோமர், வர்ஜில் முதலிய ஐரோப்பியக் கவிஞரோடு ஒப்பிடும் பொழுது கிளைக்கதை அமைக்கும் பாங்கிலும் கம்பர் ஈடிணையில்லாது நிற்கின்றார் என்று வ. வே. சு. ஐயர் பாராட்டுகின்றார்
“உபாக்கியானங்கள் அமைப்பதில் ஹோமரைத்தான்-அவனும் இலியாதைப் பாடுகையில்தான் - மிகச் சாமர்த்தியசாலி எனலாம். இலியாதிலுள்ள அவனுடைய உட்கதைகள் சிறியனவாயும் அவயங்களுக்கு அளவில் பொருத்தமாயும் இருக்கின்றன. கதையும் உபாக்கியானங்களும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கதைக்கு இடைஞ்சலேற்படுத்தாமல் பெரும்பாலும் எடுக்க முடியாதனவாய் இருக்கின்றன. ராமாயணத்தில்உபாக்கியான அமைப்பு இலியாதின் அமைப்புக்குத் தாழ்ந்ததன்று'
ஐயரவர்கள் கூற்று, பொருத்தமான முடிவாகத் தோன்றுகின்றது.
ாயணம், சென்னை நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் - 1989 - பக்.227 - 246

Page 126
மிழ் ஆய்வியலிலே ஐம்பதாண் அதுகாலவரை தேசிய
மேற்கொள்ளப்பட்டுவந்த ஆ தளம் நோக்கி நகரத் தொடங் கொடுத்தது அக்காலப்பகுதியில் இந்திய - பார்வையாகும். சமுதாய வரலாற்றைவர்க்கப் அறிவியலடிப்படையில் தெளிவுறுத்துவதுமார் தமிழில் முதலில் வித்துன்றிய பெருமை தமி மற்றும் எஸ். இராமகிருஷ்ணன், தொ. மு ஆய்வுமுறைக்கு ஏற்றவகையில் வடிவமைத் பரிமாணத்தை வழங்கியமுதல்வர் என்ற பெரு சாரும் என்பது தமிழ் ஆய்வுலகம் ஒப்புக் கொ
பல்கலைக்கழகப் பணியிலே தமிழ் பதவிகளைவகித்தவரும்பத்திரிகைத் துறை திறனாய்வு ஆகிய இரு துறைகளையும் திறனாய்வுநோக்கு அடிநாதமாக அமைந்தி விளக்கங்கள், கட்டமைப்பு முறைமை என்ட காரணமாக அவர் ஆய்வு - விமர்சகர் (S நிலையிலே அவர் சமகாலத் தமிழ் ஆய்வுல சமகாலத் தமிழ்ப் படைப்புலகின் நம்பிக்கை ந திகழ்ந்தார். இவ்வகையில் சமகாலத் தமிழ் அமைந்தவர் அவர்.
கைலாசபதி தமது திறனாய்வு நே சமுதாய வரலாற்றியக்கத்திலே படைப்பின் என்பவற்றை நுணித்து நோக்கமுற்பட்டவர்; க கொண்டு அவற்றின் உயிராற்றல் காலத்துக் முயன்றவர். இம்முயற்சிகளுக்கு சமூகவியல்,
இவ்வாறு அவர் தொடக்கிவைத்த பெருங்கவிஞன் கம்பனின் வரலாற்றுப் பாத் அமைகிறது.
 
 

காகவி கம்பனின்
ாமும் தனித்துவமும்
திறனாய்வு நோக்கு
பேராசிரியர் நா. சுப்பிரமணியன்
ாடுகளுக்கு முன்னர் ஒரு முக்கியதிருப்பம் நிகழத் தொடங்கியிருந்தது.
உணர்வு, பண்பாட்டுணர்வு ஆகிய தளங்களில் நின்று ய்வுச் செயற்பாடுகள் அத்தளங்களுக்கு அப்பால் சமுதாயவரலாற்றுத் கியமையே அத்திருப்பம் ஆகும். இந்தத் திருப்பத்திற்கு வழிசமைத்துக் தமிழக - மண்ணில் பரவத் தொடங்கியிருந்த மார்க்சியதத்துவப் போராட்டங்களின் வரலாறாக இனங்கண்டு அதற்கான காரணிகளை க்சியப்பார்வையின் தனித்தன்மை ஆகும். இவ்வாறான பார்வைக்குத் ழகத்தவர்களான ம. சிங்காரவேலர், ப. ஜீவானந்தம், இஸ்மத் பாஷா ர. சி. ரகுனாதன் முதலியவர்களைச் சாரும். இப்பார்வையை ஒரு துத் தமிழரின் சமூக - பண்பாட்டு வரலாற்றுக்குப் புதியதொரு மைஈழத்தவரான கலாநிதி. க.கைலாசபதி (1933-1982) அவர்களையே ாண்ட உண்மையாகும்.
ப் பேராசிரியர், கலைப்பீடாதிபதி, வளாகத்தலைவர் ஆகிய உயர் அநுபவங்கொண்டவருமாகத் திகழ்ந்த கைலாசபதி அவர்கள் ஆய்வு, ம் இணைத்துச் செயற்பட்டவராவர். அவரது ஆய்வுக்களில் ருந்தது. திறனாய்வுகளில் ஆய்வுக்குரிய தரவுகள், தர்க்கரீதியான பன திட்டப்பாங்குடன் அமைந்தன. இந்த இருமை இணைநிலை scholar - Critic) என்ற கணிப்பைப் பெற்றவர். ஆய்வாளர் என்ற கின் திசையறிகருவி' யாகவும் திறனாய்வாளர் என்ற வகையிலே நட்சத்திரமாகவும் நட்சத்திர அந்தஸ்து (Starvalue) பெற்றவராகவும் ஆய்வுலகு, படைப்புலகு இரண்டுக்கும் இணைப்புப் பாலமாகவும்
ாக்கிலே படைப்பின் சமுதாய உள்ளடக்கத்துக்கு முதன்மை தந்தவர்; பங்களிப்பு, படைப்பாளியின் அரசியல் மற்றும் வரலாற்றுப் பாத்திரம் லை,இலக்கியம் என்பவற்றைச் சமுதாயத்தின் விளைபொருள்களாகக் குக் கட்டுப்பட்டும் காலங்கடந்தும் நிற்கும் நிலைகளை இனங்காண
ஒப்பியல் அணுகுமுறைகளைக் கையாண்டவர்.
ஆய்வு மற்றும் திறனாய்வுப் பார்வைத் தளங்களில் நின்று தமிழ்ப் திரத்தை உரியவாறு இனங்காணும் ஒர் ஆர்வமுயற்சியாக இவ்வுரை
O

Page 127
மகாகவி கம்பன் தமிழ்க் கவியாற்றலின் உன்னதத்தின் குறியீடாகக் கணிக்கப்படுபவன். அவ்வகையில் அனைத்துலகப் பெருங்கவிஞர்களுடன் ஒருங்குவைத்து எண்ணப்படுபவன். கம்பராமாயணம் பற்றிப் பெருந்தொகையான ஆய்வுகளும் திறனாய்வுகளும் நிகழ்ந்துள்ளன. திருமணம் செல்வக்கேசவராய முதலியார், வ. வே. சு. ஐயர் ஆகியோர் முதல் அண்மைக்காலம் வரை பெருந்தொகையான ஆய்வாளர்கள் கம்பராமாயணத்தைப் பல்வேறு தளங்களிலும் கோணங்களிலும் நின்று தரிசித்துள்ளனர். இவ்வாறான தரிசனங்கள் நூல்கள், ஆய்வேடுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் என்பனவாகப் பல்கிப் பெருகியுள்ளன.
மேற்படி ஆய்வு முயற்சிகளில் பெரும்பகுதியானவை வியப்புணர்வால் தூண்டப்பட்ட நயப்புரைகள். குறிப்பிடத்தக்க தொகையின கட்டமைப்புசார் நுண்ணாய்வுகள். காண்டம், படலம், யாப்பு அணி, மொழி, மற்றும் பாத்திர உருவாக்கம், கதைப்புணர்ப்பு முதலிய கூறுகள் இவ்வகை ஆய்வுகளில் கவனத்தைப் பெற்றுள்ளன. மேற்படி இருவகை தவிர, கம்பராமாயணத்துக் கூடாகப் புலப்படும் சமூக - பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் சில ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இவ்வகையில் கம்பன் காட்டும் அரசியல், சமூகம், சமயதத்துவச் சூழல் மற்றும் அறஒழுக்கம், விழுமியங்கள் முதலியன நுனித்து நோக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பலகோணங்களிலும் பெருந் தொகையான ஆய்வுகள் நிகழ்ந்து விட்ட பொழுதிலும் கூட கம்பனைப்பற்றிய திறனாய்வு நிலையிலான மதிப்பீடு இன்னும் முழுமையுறவில்லை என்பதே எமது கணிப்பாகும். கம்பனது வரலாற்றுப் பாத்திரம் இற்றைவரை தெளிவாக இனங்காணப்படவில்லை என்பதே எமது கருத்து.தமிழ்ப் பெருங்கவிஞர் வரிசையில் கம்பனை வேறுபடுத்திக் காட்டும் வகையிலான பார்வைகள் - குறிப்பாகக் கம்பனது படைப்பு மனத் தின் தனித்தன்மையை இனங்காட்டும் வகையிலான ஒப்பியல் நிலையிலான முயற்சிகள் - உரியவாறு மேற்கொள்ளப்படவில்லை. என்பதே எமது மேற்படி கணிப்பின் அடிப்படை. கைலாசபதியவர்கள் பாரதியின் ஊற்றுக்கண்களைத் தேடும் முயற்சியில் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், கோபாலகிருஷ்ண பாரதியார், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க சுவாமிகள், பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை, பங்கிம் சந்திரர், இரவீந்திரநாத தாகூர், வால்ட் விட்மன், ஷெல்லி, பைரன் முதலியவர்களோடு அவரை ஒப்பிட்டது போல கம்பன் பற்றிய ஒப்பீடுகள் பரந்த அடிப்படையில் ஆழமாக நிகழ்ந்துள்ளனவா என நோக்கும் போதுதான் கம்பன் பற்றிய ஆய்வு - திறனாய்வுப் பார்வைகளின் நிறைவின்மையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். கம்பனது நிலைமட்டுமல்ல இளங்கோ, சாத்தனார், மணிவாசகர், திருத்தக்க தேவர், சயங்கொண்டார் ஒட்டக்கூத்தர், சேக்கிழார், வில்லிபுத்தூரர் முதலிய ஏனைய தமிழ்ப் பெருங்கவிஞர்களுடைய நிலையும் இதுதான். இவர்களை நயந்து போற்றி அல்லது விவாதப் பொருள்களாக்கி மகிழும் இலக்கியப் பண்பாட்டுச் சூழலிலிருந்து நாம் இன்னமும் விடுபடவில்லை
கம்பன் மலர் - 2000

என்பதும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகின்றது. மேற்படி பெருங்கவிஞர்களுட்பலர் தம்மைப்பற்றி நிலவும் தொன்மங்களிலிருந்து இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்பதும் நமது கவனத்துக்குரியதாகிறது.
இவ்வாறான சூழலில், கம்பனது தனித்தன்மை, அதற்கு அடிப்படையாக அவன் சார்ந்து நின்ற தத்துவத்தளம், தனது காவியத்தினூடாக அவன் உணர்த்தவிழைந்த உலகியலறம் என்பனவற்றை இனங்காண முற்படும் ஒரு தேடல் இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. மேற்படி கூறுகளில் ஏனைய தமிழ்க் கவிஞர்களிலிருந்து அவன் எவ்வாறு வேறு பட்டுத்திகழ்கிறான் என்பதைக் கண்டறிய ஒப்பியல் அணுகுமுறை அவசியமாகிறது. கம்பனின் படைப்பு என்றவகையில் இராமாவதாரம் (கம்பராமாயணம்) ஒன்று மட்டுமே இங்கு கவனத்திற் கொள்ளப்படுகின்றது. அவன் பெயரால் வழங்கப்படும் பிற ஆக்கங்கள் எவையும் இங்கு கருத்திற் கொள்ளப்படவில்லை என்பதையும் குறிப்பிடுவது அவசியமாகிறது.
கம்பராமாயணத்தின் சிறப்பியல்புகள் என்றவகையில் பலராலும் விதந்து பேசப்பட்டுவரும் அம்சங்களில் ஒன்று அதில் புலப்பட்டுநிற்கும் மனிதம்' ஆகும். சராசரி மனித மனத்தின் எண்ணக்கோலங்கள், அவற்றின் மோதல்களில் உருவாகும் சிக்கல்கள் என்பவற்றை வாசகர்கள் பரிவுணர்வுடன் தரிசிக்க வைத்துள்ள பாங்கே இங்கு மனிதம்' எனப்படுகின்றது. விதந்து பேசப்படும் இன்னொரு அம்சம் சொற்களை ஏவல் கொள்ளும் திறன்'. இது கம்பனுடைய அறிவுத்திறன், கற்பனையாற்றல், மொழிப்புலமை என்பன சார்ந்தது. மேற்சுட்டிய முதலாவது அம்சத்தை உள்ளிடு எனவும் இரண்டாவதை வெளிப்பாட்டுத்திறன் எனவும் கொள்ளலாம்.
மேற்படி உள்ளீடாகிய மனிதம் என்ற அம்சம் கம்பனது பாத்திர உருவாக்கங்களில் முழுவீச்சுடன் தொழிற்பட்டு நிற்கிறது. ஏற்கெனவே வால்மீகி படைத்துவிட்ட பாத்திரங்களை, பக்தியுணர்வுச் சூழலில் தொன்மப் படிமங்களாகிவிட்ட கதை மாந்தரை இரத்தமும் சதையுமுள்ள சராசரி மனிதர்களாக புதிய குணச்சித்திரங்களுடன் கம்பனிடம் நாம் தரிசிக்கிறோம் என்றால் அதற்கு அடிப்படை அவற்றிற் பொதிந்துள்ள மனிதமேயாகும்.
இந்த மனிதம் பாத்திரங்களின் அகநிலை - அடிமன - உணர்வுகளாக வெளிப்படுகின்றது; பாத்திரங்களை ஒன்றோடொன்று கருத்து நிலையில் மோதிக் கொள்ள - விவாதிக்க - வைக்கிறது; மேலும் கதைநிகழ்வுகளில் - குறிப்பாகக் கதாபாத்திரங்கள் எய்தும் துன்ப - துயரங்களில் வாசகர்களைப் பங்கேற்கவைக்கிறது. இராமன், சீதை இலக்குமணன், பரதன், குகன், வாலி, சுக்கிரீவன், இராவணன், கும்பகருணன், வீடணன் முதலிய பலரும் சாராசரி மனிதர்களாக நம்முன் வருகின்றார்கள். இவர்களுட்பலர் தத்தம் பலம், பலவீனம் ஆகிய இரண்டையும்

Page 128
நம்மிடம் நேரடியாக வெளிப்படுத்துகிறார்கள். சிலர் தத்தம் நிலைப்பாடுக்குச் சார்பாக நாங்கள் சிந்திக்கத் தக்கவகையில் தர்க்க பூர்வமான நியாயங்களை நம்முன்வைக்கிறார்கள். முரண்பட்டு நிற்கும் கருத்து நிலைகளில் தக்கது எது? தகாதது எது? என்பதைத் தீர்மானிப்பதில் வாசகர்கள் திகைக்கும் வகையில் அவர்களது நியாயவாதங்கள் கூர்மையாக அமைகின்றன. (சான்று வாலி - இராமன். வீடணன் - கும்பருணன்). சில கதாபாத்திரங்களுக்கு வழக்கப்படும் தீர்ப்புக்கள் வாசகருள்ளங்களில் இது நியாயமா? " என்ற வினாவை எழுப்புகின்றன. (சான்று : அகலிகை கல்லானமை, சீதையின் அக்கினிப் பிரவேசம்)
இவ்வாறான பல்தளப்பரிமாணங்கள் கொண்ட உயிரோட்டமுள்ள கதைமாந்தரை பாரதிக்கு முற்பட்ட தமிழிலக்கியப் பெரும்பரப்பில் கம்பனிடம் தவிர வேறு எந்தக் கவிஞரிடமாவது எம்மால் தரிசிக்க முடிகின்றதா? இதற்கு விடை இல்லை’ என்றுதான் அமையும். இளங்கோ, வில்லிபுத்துTரர் ஆகியோரிடத்தில் ஒரளவு - ஒரளவுதான் - இத்தகு பாத்திரங்களை நம்மால் தரிசிக்க முடிகின்றது. இவர்களுக்கு அடுத்த வரிசையில்தான் சாத்தனார், திருத்தக்கதேவர், சேக்கிழார் முதலியவர்களின் கதை மாந்தர்கள் நமது கவனத்துக்கு வருகின்றார்கள். இந்நிலை ஏன்? எதனால்? விடையிறுக்கப்பட வேண்டிய வினாக்கள் இவை.
இவற்றுக்கான விடை கூற முற்படுவோர் மேற்படி கவிஞர்கள் தெரிந்து கொண்ட கதையம்சங்களின் வன்மை, மென்மைகளைக் காரணம் காட்ட முயலலாம். அதாவது கம்பன் தேர்ந்து கொண்ட இராமகதையிலே இயல்பாகவே அமைந்துள்ள பல்தளப்பரிமாணங்கள் மற்றும் உணர்ச்சி மோதல்களுக்கான சந்தர்ப்பங்கள் என்பன போல ஏனையோர் தேர்ந்து கொண்ட கதைகளில் பரிமாணங்களும் சந்தர்ப்பங்களும் அமையவில்லை எனச் சிலர் வாதிக்க இடமுண்டு. இதில் ஒரளவு உண்மையும் உளது. ஓரளவு உண்மை தான். இளங்கோ, சாத்தனார், திருத்தக்கதேவர் மற்றும் இவர்கள் போன்ற சிலருக்கு இராமகதை போல உலகியல் வாழ்வின் பன்முகத் தரிசனங்களாக அமையக்கூடிய கதைகள் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் தடையில்லை. (இன்னொரு வகையாக நோக்கினால் அவர்கள் இராமகதைபோலப் பன்முகத்தரிசனங் கொண்ட கதைகளைத் தேடவோ அன்றேல் புனைந்து உருவாக்கவோ முற்பட்டார்களா? என்ற வினாவுக்கும் இடம் உளது).
வில்லிபுத்தூரர் இராமகதை போலவே வாழ்வின் பன்முகதரிசனத்துக்கு வாய்ப்பளிக்கும் பாரதக்கதையைத் தேர்ந்து கொண்டவர். அவரால் ஏன் கம்பனைப் போல அக்கதையிற் காவிய மாந்தரைக் குணசித்திர நிலையிற் படைக்க முடியாது போயிற்று?
சேக்கிழார் தேர்ந்து கொண்ட நாயன்மார் வரலாறுகள் இராமகதை போல பலதள விரிவுடையனவல்ல. ஆயினும் தமிழ்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

நாட்டில் நிஜமாக வாழ்ந்த பலரின் உண்மை அநுபவங்களை உள்ளடக்கியவை. எனவே வாழ்வின் பன்முக நிஜதரிசனங்களைக் தரத்தக்கவை. ஆனால் பக்தி என்ற ஒரு பேருணர்ச்சியின் தரிசனம் மட்டுமே சேக்கிழாரின் கதைமாந்தரூடாக எங்களுக்குக் கிட்டுகின்றது. ஏனைய உணர்ச்சிகள் முனைப்பாக வெளிப்படக் ön-ig til வெளிப்ப்ட வேண்டிய சந்தர்ப்பங்களிற்கூட அவை வெளிப்படத் தவறிவிடுகின்றன.
எனவே கம்பனின் பாத்திரங்களும் ஏனையோரின் பாத்திரங்களும் தரவேறுபாடுகொண்டமைக்குகதையம்சம் என்ற ஒன்று மட்டுமே காரணி எனக் கொள்ள இடமில்லை. அதற்கு அப்பாலும் காரணிகளை நாம் தேட வேண்டும். அவ்வாறு தேடும்போது நம் கவனத்துக்குவரும் முக்கியமான மற்றொரு காரணி படைப்பாளியின் பார்வை' அல்லது 'உலகநோக்கு
(Vision) geth.
வாழ்வியல் பற்றியும் குடும்ப - சமுதாயச் சூழல் பற்றியும் உலகம் பற்றியும் ஒருவருக்கு அமைந்திருக்கக் கூடிய சிந்தனைத் தெளிவே இங்கு பார்வை அல்லது உலகநோக்கு எனப்படுகின்றது. இதுவே அவரது நடத்தை மற்றும் இயங்குநிலை என்பவற்றைத் தீர்மானிப்பது. ஒரு படைப்பாளியைப் பொறுத்தவரை அவனது படைப்பூக்கம், எண்ணக்கரு, படைப்பின் கட்டமைப்பு முதலியவற்றைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணியாகத் திகழ்வது இந்தப் பார்வையேயாகும். இதனைப் படைப்பாளியின் தத்துவத் தன்மை எனலாம். எனவே கம்பனையும் ஏனைய கவிஞர்களையும் வேறுபடுத்தி நிற்பன கதையம்சங்கள் மட்டுமல்ல, அவற்றைக்கூட தீர்மானிக்கும் காரணிகளான பார்வைகளுமாகும் என்பதை உய்த்துணரலாம்.
படைப்பாளிகளை அவர்கள் கொண்டிருக்கும். பார்வைகளினடிப்படையில் பொதுவாக இருவகைப்படுத்தலாம். தமது கால அரசியல் மற்றும் சமுதாயக் கட்டமைப்புச் சூழல்களின் வரையறைகளுக்குள் நின்று கொண்டு அவற்றுக்கூடாக. உலகை நோக்குபவர்கள் ஒருவகையினர். மேற்படி சூழல்சார் வரையறைகளைத் தாண்டி, பொது மானிடத்தின் தளத்தில் நின்று கொண்டு சூழலையும் உலகையும் நோக்குபவர்கள் இன்னொருவகையினர். முதல்வகையினரின் பார்வை பொதுவாக தாம் சார்ந்திருக்கும் சூழல்சார் அமைப்பைக் கட்டிக்காக்கும் நோக்கிற் செயற்படும். இவ்வகையினருள் ஒருசாரார் நேரடியாகவே தாம் சார்ந்திருக்கும் அரச அதிகாரமையத்தின் பிரசாரகருவியாகச் செயற்படுபவர். இவர்களுக்கு கலை,இலக்கியம் என்பன ஊடகம் அல்லது உத்திமுறை மட்டுமே. முதல் வகையினருள் இன்னொரு சாரார் தாம் சார்ந்திருக்கும் சூழல்சார் கட்டமைப்பின் வரையறைக்குள் தத்தம் பாண்பாட்டு விழுமியங்களைப் பேணிக்கொள்ளும் உந்துதலுக்குட்பட்டுப் படைப்பாக்கத்துறைகளில் ஈடுபடுவர். இவர்களது படைப்புக்களின் சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் உணர்வுகள், உணர்ச்சி
112

Page 129
முனைப்புக்கள் என்பவற்றின் மீது மேற்சுட்டிய சூழல்சார் கட்டமைப்பின் வரையறைகளை மீறமுடியாத வகையிலான கட்டுப்பாட்டை இவர்களது பார்வை விதித்துவிடும்.
மேற்சுட்டிய இரண்டாவது வகையினரான பொது மானிடத் தளத்தினரின் பார்வைகள் பொதுவாகச் சமுதாயச் சூழலை விமர்சிப்பனவாக அமைவன. இவ்விமர்சனப் பார்வைகள் அவர்கள் காணவிழையும் மனிதப்பண்பு நிறைந்த ஒரு இலட்சிய வாழ்வியலை மையப்படுத்தியனவாக அமைவது இயல்பு. இதனால் இவர்கள் படைக்கும் ஆக்கங்களின் நிகழ்வுகள் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுநிலைகள், மனப்போராட்டங்கள் என்பன அவற்றுக்குரிய இயல்பான நிலையில் அமையவும், வெளிப்படவும் வாய்ப்புண்டு. குறிப்பாகக் கதைமாந்தர் சுயாதீனமாகத் தத்தம் இயல்பான தோற்றத்தை வாசகர்களுக்குக் காட்டுவர். இதனால் படைப்பாளியின் தலையீடின்றி, வாசகன் பாத்திரங்களின் உணர்வுகளோடு ஒன்றத்தக்க நிலை ஏற்படும்.
மேற்குறித்த இருவகைப் பார்வைகளின் அடிப்படையில் கம்பன் முதலிய கவிஞர்களை வகைப்படுத்தினால் திருத்தக்கதேவர்,சேக்கிழார் முதலிய பலர் முதல்வகையினர் என்ற கணிப்புக்கு உரியவர்களாகின்றனர். சோழப்பெருமன்னர் காலத்தில் கவிச்சக்கரவர்த்திகள் எனப் போற்றப்பட்ட சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் ஆகியோர் அன்றைய அரச அதிகாரமையத்தின் பிரசாரகர்களாக வெளிப்படையாகவே செயற்பட்டவர்கள் என்பதை இலக்கிய உலகம் அறியும். திருத்தக்கதேவர்,சேக்கிழார் ஆகியோரை அப்படிக் கூறமுடியாது. அன்றைய சூழல்சார் கட்டமைப்பில் நின்றுகொண்டு தத்தம் பண்பாட்டு விழுமியங்களைப் பேணவும் பதிவு செய்யவும் முயன்றவர்கள் இவர்கள். அவ்வகைச் செயற்பாட்டினூடாகத் திருத்தக்க தேவர் அன்றைய பேரரசு - எழுச்சியின் ஒரு குறியீடு எனத்தக்க வகையில் சீவகனின் கதையைக் காவியமாக்கினார். அதில் தமது சமயத்தத்துவத்தை உள்ளீடாக்கினார். சமூகம் பற்றிய குறிப்பிடத்தக்க பார்வை எதுவும் இல்லாமையால் அவரது பாத்திரங்கள் சாரசரி தரத்தின் மேல் எழுச்சி பெறமுடியவில்லை.
சோழப் பேரரசின் முதலமைச்சராகத் திகழ்ந்தவர் என்ற வகையில் சேக்கிழார் தாம் சார்ந்த நிறுவனத்தைக் கட்டிக்காக்கவும் வளர்க்கவும் கடமைப்பட்ட ஒருவர். அவர் அக்காலப்பகுதியில் அரச LogLorrs (State Religion) 6Tg5éQuiglös கொண்டிருந்த சைவத்தையும் அதன் 'கோயிற்பண்பாட்டையும் கட்டிக்காக்கும் வகையில் மேற் கொண்ட இலக்கியச் செயற்பாடே நாயன்மார் வரலாறான பெரிய புராணமாக உருப்பெற்றது. அவ்வகையில் இவ்வாக்கம் அவரது அரச நிறுவனசார்பானது. அவர் உணர்த்த விழைந்த சிவபக்தி' என்ற உணர்வு நிலையை மையப்படுத்தியே கதைமாந்தரின் பண்புகள் கட்டியமைக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாயிற்று. கதைமாந்தரின் இயல்பான உணர்ச்சிநிலைகள் மற்றும் மனப்போராட்டங்கள் என்பவற்றைப் புலப்படுத்தமுற்பட்டால் சேக்கிழாரின் நோக்கம் சிதைந்துவிடும். எனவே எல்லாப் பாத்திரங்களும் சேக்கிழார் பேசவைக்கவிழைந்தவற்றையே பேசுகின்றன. அவர் உணர்த்த விழைந்த மெய்ப்பாடுகளையே
கம்பன் மலர் - 2000

உணர்த்துகின்றன. சாதிக்கொடுமைக் கெதிராகக் கொதித்திருக்க வேண்டிய நந்தன் சேக்கிழாரின் விருப்பப்படி தன் இழிபிறப்புக்காகக் கவலைப்பட்டுத் தன்னைப் புனிதப் படுத்திக் கொள்ள எரிமூழ்குபவனாகிறான். மண மேடையிலே மணவாளக் கோலத்திலிருந்தவன் அடிமையோலையின்படி தடுத்தாட்கொள்ளப்பட்ட போது மனைவியாக விருந்தவளின் மனம் எத்தகைய துன்பத்தில் துவண்டிருக்கும் சேக்கிழாரின் பார்வையில் இதற்கெல்லாம் முக்கியத்துவமில்லை.
இளங்கோ, சாத்தனார், கம்பர் ஆகியோர் மேற்படி இரண்டாவது பொதுமானிடத் - தளப் பார்வையாளர்கள், சமுதாய விமர்சனம் செய்ய முற்பட்டவர்கள். தமிழ் நாட்டில் நிலவுடைமை உருவாகி முடியாட்சியாக அது முகிழ்க்கத் தொடங்கிய சூழலில் அதில் அதிகார நிலையில் ஊழல்கள் முளைவிடத் தொடங்கிய காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் இளங்கோவும் சாத்தனாரும். சமுதாய நிலையில் ஆணாதிக்கம் பெண்மையைப் போகப்பொருளாக்கி அவமதிக்கும் போக்கு மேலோங்கியிருந்த சூழலாகவும் அக்காலகட்டம் அமைந்திருந்தது. இவ்விரு நிலைகளுக்கும் எதிரான விமர்சனங்களாக உருவானவைதான் சிலம்பும் மேகலையும். எனவே இவற்றில் உயிரோட்டமுள்ள கதைமாந்தரை அவர்களின் பலம், பலவீனம் என்பவற்றோடு தரிசிக்க முடிந்தது. ஆனால் இவற்றின் ஊடாக வாழ்க்கை பற்றிய முழுத்தரிசனத்தையோ அல்லது திட்டவட்டமான உலகியலறத்தையோ தரமுடியாதவகையில் தொன்மத்திலும் சமயத்திலும் இளங்கோவும் சாத்தனாரும் புகலடைகின்றனர். பாண்டியன் முன் வழக்குரைத்துச் சிலம்புடைத்துக் கணவனுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்த கண்ணகிதெய்வமாகிறாள். விலைமகளிர் குலத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இழிதகைமைகளை உடைத்தெறிந்து மேற்கிளம்பிய மாதவியும் மணிமேகலையும் சமய உணர்வில் சங்கமித்துவிடுகின்றனர். இளங்கோவும் சாத்தனாரும் தொடக்கிவைத்த பொது மானிடத்தளப்பார்வையை அவர்களால் முழுமைப்படுத்த முடியாது போயிற்று. அதனை நிறைவு செய்யும் தகுதியுடன்தான் கம்பன் அரங்கிற்கு வருகிறான்.
சோழப் பெருமன்னர் காலக் கவிஞனாக அறியப்படும் கம்பன் சமய நிலையில் வைணவன், சமூகநிலையில் உவச்சர் எனப்படும் கோயில்களில் மேளம் வாசித்து இசைத் தொண்டு புரியும் சாதியினன். இவற்றுக்கு மேல் அவனைப் பற்றிய புனைவுத்தன்மைவாய்ந்த செவிவழிக்கதைகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டியதில்லை. அவனை அவனது மகாகாவியத்தினூடாகவே கண்டறியலாம். அக்காவியம் காட்டும் நிலையில் கம்பன் ஒரு சமநோக்கினன். பொருளியலில் ஏற்றத்தாழ்வற்ற-கொள்வாரும் கொடுப்பாரும் அற்ற-நிறைவான உலகத்தை-கோசலநாட்டை- அவன் கனவுகாண்கிறான். பிறப்பு அடிப்படையைக் கடந்து சகோதர பாசமும் தோழமையும்நாடும் பண்பாளரை அவன் நேசிக்கிறான். ஆதிக்க உணர்வுகளும் அவற்றால் விளையும் கொடுமைகளும் அவை எந்த வடிவில் தோற்றமளித்தாலும் அவற்றை வேரோடு களைந்தெறிய வேண்டும் என்பதில் பற்றுறுதிகொண்டவனாக அவன் உள்ளான். இயல்பான காதலில் உருவாகும் குடும்ப உறவையும் ஒருவனுக்கு ஒருத்தி
113

Page 130
என்ற உயர்பண்பையும் அவன் விதந்து போற்றுகிறான். வாழ்க்கையில் பின்பற்றத் தக்க அறவழிகள் எவை என்பது தொடர்பாக கருத்து நிலைச் சிக்கல்கள் ஏற்படும் வேளைகளில் தர்க்கரீதீயில் விவாதங்கள் நிகழ்த்தி அவை பற்றிய தெளிவை ஏற்படுத்தமுற்படுகிறான். இவ்வாறான பண்புகள், செயற்பாடுகள் என்பன மூலம் கம்பன் ஒரு விரிந்த சமூகப்பார்வையாளனாக - ஒரு திறந்த புத்தகமாக - எம்முன் காட்சிதருகிறான். வைணவம் என்ற சமய நிறுவனச் சார்புஅவனிடம் காணப்படுகின்றதெனினும் அதன் வரையறைகளையும் மீறிய மனித நேயமே அவனது சொற்களில் ஒலிக்கின்றது. தனிமனிதன், குடும்பம், சமூகம், நாடு, உலகம் என்ற அனைத்து வகைத் தளங்களிலும் மானிடம் தழுவிய இலட்சி வாழ்வியலை அவன், முன்வைக்க முனைவது தெரிகிறது. இந்த வகையில் அவனொரு தலைசிறந்த மனிதநேய வாதியாகத் திகழ்கிறான்.
கம்பன் தனது மகாகாவியத்தினூடாக நமக்குத்தரும் இக்காட்சியானது - அவன் புலப்படுத்தி நிற்கும் இப் பார்வைப் பரப்பானது - பாரதிக்கு முற்பட்ட தமிழிலக்கியப் பரப்பில் (அறநூலாசிரியனாகிய வள்ளுவனைத்தவிர) அனைத்துக் கவிஞர்களையும் விஞ்சியது என்பது வெளிப்படை. இவ்வாறு ஒப்பீட்டு நிலையில் கம்பனை உயர்த்தி நிற்கும் மேற்படி பார்வைத்திறன் அவனிடத்தில் அமைந்தது எப்படி? அவன் மட்டும்தான் இப்பார்வைக்குச் சொந்தக்காரனா? இவ்வாறான வினாக்கள் இங்கு முக்கியமானவை.
கம்பனுக்குத் தரப்படும் மேற்படி கணிப்பில் செம்பாகம் இராமாயண ஆதி காவிய ஆசிரியனான வால்மீகிக்குச் சென்று சேரவேண்டியது என்பதை இங்கு நாம் மனங்கொள்ள வேண்டும். வால்மீகி அமைத்த காவிய மாளிகையின் அடிப்படையமைப்பை மாற்றாமல், அதன் பார்வைத்தளம், உள்ளமைப்பு மற்றும் அதன் பயன்பாட்டுநிலை என்வற்றில் மாத்திரம் சிற்சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ததோடு, காட்சிக்கினிய வண்ணமும் தீட்டியவன் என்ற அளவில்தான் கம்பன் மேற்படி கணிப்புக்கு உரிய வனாகின்றான் என்பது நமது கவனத்திற்குரியது.
வட இந்திய மண்ணிலே பேரரசுகள் உருவாகிக் கொண்டிருந்த ஒரு வரலாற்றுக் கட்டத்திலே வாரிசுரிமை காரணமாக சகோதரக் குடும்பங்களிடையில் உட்பூசல்கள் முனைப்புற்றிருந்த சூழலில் வாழ்ந்தவர் வால்மீகி, ஆண் - பெண் உறவில் காதலைவிடக் காமம் மேலோங்கி நின்ற சூழலாகவும் அது அமைந்திருந்தது. மேற்படி சூழலை விமர்சித்து ஒரு இலட்சிய வாழ்வினை முன்நிறுத்தி அவர் கண்ட இலக்கியக் கனவே ஆதிகாவியமான இராமாயணம். அக்காலப்பகுதியில் வாய் மொழியாக நிலவிவந்த இராமன் - சீதை' பற்றிய கதை மரபுகளிலிருந்து அவர் தம் கதைப் பொருளைத் தேர்ந்து கொண்டார். சகோதரபாசம், மனைவி மீது மட்டுமான காதல், தியாகவுணர்வு, வர்க்கநிலை கடந்த நட்புறவு, மக்கள் போற்றும் தலைமைப்பண்பு முதலான நற்பண்புகளின் உறைவிடமான ஒரு காவிய நாயகனாக வால்மீகியின் இராமன் உருப்பெற்றான். அப்பாத்திரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் காவிய நாயகியாக சீதையும் ஏனைய துணைப் பாத்திரங்களும் வடிவம் பெற்றன.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

விமர்சிக்கப்பட வேண்டிய தீயகுணநிலைகளுக்குக் குறியீடுகளாக மந்தரை, கைகேயி இராவணன், சூர்ப்பணகை முதலியவர்கள் எதிர்நிலைப்பாத்திரங்களாக முன் நிறுத்தப்பட்டனர். 'நல்லோரின் வாழ்விலே பல்வேறு தடைகள் மற்றும் துயரங்கள் ஏற்பட்டாலும் அவற்றை அவர்கள் வெற்றி கொண்டு நல்நிலையும் எய்துவர் என்பதைத் தனது ஆதிகாவியத்தின் 'தொனிப் பொருள் ஆக முன்வைத்தார் வால்மீகி.
கம்பனது காவியமும் இதைத்தான் பேசுகிறது. ஆனால் சற்று வேறொரு தளத்திற்கு நகர்த்தி, அழுத்தமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. வால்மீகியின் கதைமாந்தர் பொதுவாக சராசரி மனிதர்கள். இயல்பான 'விருப்பு - வெறுப்பு' 'ஆசாபாசம்' என்பற்றின் பிடியிலிருந்து அதிகம் விடுபடாதவர்கள். குறித்த சில தலைமைத்தன்மைகள் பெற்ற கதைமாந்தர் மட்டும் சராசரி மனித நிலையினின்று விலகி உயர்ந்த மனிதர்கள்’ ஆகின்றனர். குறிப்பாக, காவிய நாயகனான இராமனை புருஷோத்தமன் ஆக (ஆடவருள் உயர்ந்தோனாக) வால்மீகி நம் முன் நிறுத்துகின்றார். இதற்கேற்பவே சீதை, இலக்குமணன், பரதன் முதலிய ஏனைய கதைமாந்தரும் அமைகின்றனர். இத்தகைய கதைமாந்தரின் குணநிலைகள் மனநிறைவுகள் என்பவற்றுக்கூடாகவே வால்மீகியின் சமகால சமுதாய விமர்சனம் நிறைவு பெற்றுவிடுகின்றது. ஆனால் கம்பனுக்கு இந்த அளவோடு கதையம்சத்தை நிறைவு செய்வது திருப்திகரமான ஒன்றாக இருக்கவில்லை எனத்தெரிகிறது. ஏனெனில் வால்மீகிக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளின் பின் வாழ்ந்தவன் அவன். இந்த இடைக்காலப்பகுதியில் பண்பாட்டு நிலையில் திகழ்ந்த பன்முகப் பரிமாணங்களால் கருத்தியல்கள் பல மாற்றமும் வளர்ச்சியும் எய்தின. அடிநிலை மாந்தர் மத்தியில் முளைவிட்ட நம்பிக்கைகளினடியிலான பக்தியுணர்வின் எழுச்சியும் மேல்மட்டத்தினரின் சிந்தனைகளில் விளைந்த தத்துவக் கருத்தியல்களும் வால்மீகியின் புருஷோத்தமனை'அவதாரபுருஷ னாக்கிவிட்டிருந்தன. சீதை, இலக்குமணன் முதலியோரும் வழிபாட்டுக்குரிய தெய்வப்படிமங்களாகி யிருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் வால்மீகியினுடைய, புருஷோத்தமனின் கதையைத் தன் காவியப் பொருளாகத் தேர்ந்து கொண்ட கம்பன், அதனை இன்னொரு தளத்திற்கு நகர்த்த வேண்டியிருந்தது. மனிதன் உயர்குணநலன்கள் பெற்றால் எப்படி இருக்கும் என வால்மீகி சிந்தித்த தளத்தினின்று விலகி, தெய்வம் மனிதவடிவில் வந்தால் எப்படியிருக்கும் எனச்சிந்தித்து எடுத்துப் பேச வேண்டியநிலையில் கம்பன் இருந்தான். எனவே புருஷோத்தமனின் கதை அவதார புருஷனின் கதையாக கம்பனில் தளமாற்றம் எய்துகிறது.
இவ்வாறான தளமாற்றம் என்பது வாள்முனையில் நடப்பதுபோன்ற ஒரு பரிசோதனை முயற்சியாகும். தெய்வத்தை அதன் தெய்விகத்துக்கு ஊறுவிளைவிக்காத வகையில் மானிட நிலைக்கு இட்டுவர வேண்டும், அதே வேளை காவியத்தின் சுவைகளுக்கு அடிப்படைகளான உணர்வுநிலை. மற்றும் மெய்ப்பாடு என்பவை பாதிக்கப்படவும் கூடாது. கம்பனின் இராமன் ஒரு மனிதன் என்ற நிலையில் மட்டும் சித்திரிக்கப்பட்டிருப்பின்

Page 131
அவனைத் தெய்வமாகப் போற்றி நிற்கும் அன்றைய வைணவ சமூகத்தின் எதிர்ப்பைக் கம்பன் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். அன்றியும் அவனது நம்பிக்கையையும் அது பாதித்திருக்கும். இராமன் தன்னைத் தெய்வ அவதாரம் என உணர்ந்தநிலையில் கம்பகாவியத்தில் நடமாடியிருப்பின் சகோதரபாசம், காதல், தியாகம், போருக்கான சீற்றம் மற்றும் சோக உணர்வுகள் என்பவற்றை அவன் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியிருக்க முடியாது. அன்றியும் அப்படி வெளிப்படுத்துவதாகவும் அவனது பாத்திரம் சித்திரிக்கப்பட்டிருப்பின் அது பாத்திரப்பண்பையே சீர்குலைத்திருக்கும். இவ்வாறான சிக்கலை மிகச் சாதுரியமாக எதிர் கொள்கிறான் கம்பன். இராமன் அவதாரபுருஷன் எனப் பல்வேறு பாத்திரங்களும் - இராமனுடன் வாதாடி நின்ற வாலி உட்பட - உணர்கிறார்கள், போற்றுகிறார்கள். சமுத்திரராஜனான வருணனும் போற்றிப் பணிகின்றான். ஆனால் இராமன் தன்னை மனிதநிலையிலேயே காட்டிக் கொள்கிறான். பிறர் தன்னை அவதாரபுருஷனாகக்காணும் பொழுது இராமன் அவர்களது கருத்தை எவ்வாறு எதிர் கொண்டான். ஏற்றுக் கொண்டானா? தன்னைத் தானே ஆய்வு செய்து தன் இறை நிலையை உணர்ந்து கொண்டானா? இவ்வாறான வினாக்கள் எவையும் வாசகன் உள்ளத்தில் எழாவண்ணம் காவியம் சுவைபட ஏறுநடை போடுகிறது. பரிசோதனையிலே கம்பன் வெற்றியும் பெற்றுவிடுகின்றான். கம்பகாவியம் வைணவமரபில் ‘தெய்வப்பனுவல் ஆகப் பேணப்பட்டு நம்மிடம் கையளிக்கப்பட்டமையும் அப்பேரிலக்கிய ரசனையிலே ஈடுபட்டு இன்றுவரை நாம் பேசியும் எழுதியும்வரும் வரலாறும் அவனது வெற்றிக்குச் சான்றுகளாகின்றன.
கம்பனது படைப்பிலே இராமகதை எய்திய மாற்றங்கள் என்ற வகையிலே பல அம்சங்கள் ஏற்கெனவே பலராலும் எடுத்துப் பேசப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக இராமன் சீதை ஆகியோரின் முதற் சந்திப்பு மற்றும் இராவணன் சீதையை மெய்தீண்டாது பர்ணசாலையுடன் கவர்ந்து சென்றமை முதலிய தமிழ்ப் பண்பாடுசார் மாற்றங்கள் பலராலும் பேசப்பட்டுள்ளன. இதை தவிர, கம்பனது தனித்தன்மையைத் தெளிவாகவும் சிறப்பாகவும் எமக்கு உணர்த்தும் சந்தர்ப்பங்கள் சிலவற்றையும் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். பாத்திரங்களின் மனப்போராட்டங்கள், பாத்திர உரையாடல்கள் மற்றும் விவாதங்கள், படலவைப்பு முறை முதலியன இவ்வகையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவற்றுட்சில சுட்டி நோக்குதற்குரியன.
கம்பகாவியத்தைக் கம்ப நாடகம்' என்போரும் உளர். நாடகபாணியில் பாத்திரங்களைக் காட்சிப்படுத்தி அவற்றின் மனப்போராட்டங்கள், உரையாடல் மற்றும் விவாதங்கள் என்பவற்றின் மூலம் கதையம்சத்தை வளர்த்துச்செல்லும் கம்பனது உத்தியே அக்காவியத்தை ஒரு நாடகமாகவும் நம்மைத் தரிசிக்க வைக்கிறது. இந்த உத்திபாத்திரப்பண்புகளைக் கூர்மைப்படுத்திப் பளிச்சிட வைப்பதாகும். இவற்றுட் குறிப்பாக விவாதப்பகுதிகள் முக்கியமானவை. வாலி - இராமன்' 'வீடணன்' - இராவணன்', வீடணன்' - கும்பகருணன்’ விவாதப் பகுதிகள் கம்பனது தனித்தன்மை, தத்துவச் சார்பு, உலகியலறம் பற்றிய தெளிவு என்பவற்றை நமக்குத் தெற்றெனப் புலப்படுத்துவன
கம்பன் மலர் - 2000

இராமாயணத்திலே 'வாலியை இராமன் மறைந்திருந்து கொன்றது சரியா?' 'வீடணன், கும்பகருணன் ஆகியஇருவரதும் செயற்பாடுகளில் ஏற்புடையது எது?’ என்றவகையான வினாக்கள் இன்று வரை தொடர்கின்றன. இவ்வகை வினாக்களை மையப்படுத்தி விவாதங்களை நிகழ்த்தி, இவை தொடர்பான தனது தீர்ப்பையும் கம்பன் அன்றே வழங்கிவிட்டான் என்றே நாம் கொள்ள வேண்டும்.
வாலி, இராவணன் இருவரும் பிறன்மனை நாடிய குற்றவாளிகள். இக் குற்றத்திற்குரிய தண்டனை கொலை தான். இராமாயணக் கதையின் பொதுநீதி இதுதான். இராவணனால் பாதிப்புற்றவன் என்ற வகையில் இராமன் அவனைக் கொல்வது நேர்முகமான எதிர்வினை, ஆனால் வாலியைக் கொல்வது நட்புக்காக, தீய சக்தியொன்றை அது தன்னை நேரடியாகப் பாதிக்காத நிலையிற் கூட அழிப்பது தனிமனிதன் ஒருவனின் சமூகக் கடமை, பொதுநீதி இதற்கான ஒரு வாய்ப்பு ஆகவே சுக்கிரீவனின் நட்பு இராமனுக்கு அமைகின்றது. மேற்குறித்தவாறு தண்டனைகள் வழங்கப்படும் O பொதுநீதிகள் செயற்படுத்தமுற்படும் சூழ்நிலைகளில் எழக்கூடிய அறச்சிக்கல்கள்’ (தர்மசங்கடங்கள்) என்ற வகையிலேயே 'வாலியை நேரில் எதிர் கொள்ளமுடியாத வர நிலை மற்றும் செய்ந்நன்றி தொடர்பான சிந்தனைகள் நம்முன் கவனத்துக்கு வைக்கப்படுகின்றன. வால்மீகியின் ஆதிகாவியத்தினூடாக நாம் புரிந்து கொண்டது இவற்றைத்தான். கம்பனும் இப்புரிதலைத்தான் தருகின்றான் - வால்மீகியைவிடத் தெளிவாகவும் தர்க்கபூர்வமாகவும்.
தீமை அழிக்கப்படவேண்டும். ஆனால் அது தன்னை அழிக்கக் கூடிய நேர்முக வாயில்கள் அனைத்தையும் அடைத்துவிட்டிருந்தால் எப்படி அழிப்பது? வாலி பெற்றிருந்த வரம் (நேரில் எதிர்ப்போரின் பாதிபலம் பெறும் வரம்) இதனைத்தான் குறிக்கிறது. எனவே இந்த அழிப்புமுயற்சி நிறைவு பெறவேண்டுமானால் மறைமுக வழிகளை நாடுவது தவிர்க்க முடியாதது. இங்கே முடிவு - தீமை அழிப்பு - வழியை நியாயப்படுத்தும். வால்மீகியும் அவரையொட்டிக் கம்பனும் எமக்கு உணர்த்த விழைந்தது இதைத்தான். பொது நீதியை நிலைநாட்டவிழையும் தனிமனிதன் அதற்காகத் தன்னை - தன் ஆளுமையை பலிகொடுக்கவும் தயங்கக்கூடாது. அது ஒரு வகைத்தியாகம். இராமன் வில்லறம் துறந்த நிலை - மறைந்துநின்று அம்பு தொடுத்தமை - யை இப்படித்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வால்மீகியைவிடக் கம்பன் இதனைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளான். இராமனை முன்னிறுத்தி வாலி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அத்தகு குற்றங்கள் சாட்டுவதற்கு வாலி அருகதை அற்றவன் என்ற பொருள்பட இராமன் அளிக்கும் விளக்கங்களும் தமிழிலக்கியப் பரப்பில் நிகழ்ந்துள்ள விவாதங்களின் கொடுமுடிகள் எனலாம்.
இராவணன் தொடர்பாக கும்பகருணன், வீடணன் இருவரும் எடுத்த நிலைப்பாடு அறச்சிக்கலின் இன்னொரு முகத்தைக் காட்டுவன. இருவரும் இராவணன் செய்தது தவறு என உணர்கிறார்கள். அதனை அவனுக்கு இடித்துரைக்கவும்
115

Page 132
முற்படுகிறார்கள். ஆனால் அவனைத் திருத்தமுடியாத நிலையில் இவ்விருவரும் மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் எதிரெதிர்த் தளங்களில் அமைகின்றன. ஒருவன் நன்றிக் கடன் தீர்க்கப் போர்க்களம் புகுகிறான், மற்றவன் பொதுநீதி சார்பாக எதிரியிடம் செல்கிறான். இவற்றில் எது ஏற்புடையது?
வால்மீகியின் காவியத்தில் வீடணன் செய்கையில் சராசரி மனிதன் ஒருவனின் நாட்டுக்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கே முனைப்புற்று நின்றது. ஆனால் கம்பன் இந்நோக்கை மேலும் விரிவான சமய-தத்துவத் தளத்துக்கு இட்டு வருகிறார். ஒரு வகையில் வீடணன் அறம் உணர்ந்த நீதிமான். இன்னொரு வகையில் அவன் இராமனின் அவதார தத்துவத்தைப் புரிந்து கொண்ட பக்தன். அவன் தனது சகோதரனுக்கு எதிராக மேற்கொள்ளப்போகும் நிலைப்பாட்டிற்குத் தெளிவான தத்துவத்தளம் அமைக்கும் வகையில் இரணியன் வதைப்படலம் என்ற புதிய படலம் ஒன்றை அமைத்து வழங்குகிறான் கம்பன். அதிகார வெறிகொண்ட இரணியனுக்கு எதிராக அவன் மகனான பிரஹலாதன் என்ற பக்தன் மேற்கொண்ட நிலைப்பாடு வீடணனுக்கு ஆதர்சமாக அமைவதைக் காண்கிறோம். இவ்வாறு அறமுணர்ந்த பக்திமானான வீடணனின் நிலைப்பாட்டைச் செய்ந்நன்றித் தளத்தில் நின்ற கும்பகருணனும் போற்றுவதைக் கும்பகருணன் வதைப்படல விவாத அரங்கிற் காண்கிறோம். இந்தவிவாத அரங்குகூட வான்மீகத்தில் இல்லாததாக கம்பன் திட்டமிட்டு அமைத்துக் கொண்டது தான்.
செய்ந்நன்றிக்கு தனிமனித - குடும்ப நிலையிலேயே பெறுமதி உண்டு. சமூகநிலையில் அதற்குச் செயல்வலு மிகக்குறைவே. நன்றிக்கடனுக்காகச் சமூகப்பொது நீதியை ஒருவரும் வளைக்க முடியாது. செய்ந்நன்றியை விடப் பொது நீதி பெரிது. பொதுநீதியை உணர்ந்து அதன் வழிச் செல்பவனைச் செய்ந்நன்றி கட்டுப்படுத்தமுடியாது. திருக்குறளிலே செய்ந்நன்றியறிதல் நடுவுநிலைமை' என அருகருகே அமைந்துள்ள அதிகாரங்கள் உணர்த்தும் தெளிபொருள் இது. இந்தத் தெளிவே ‘கும்பகருணன்- வீடணன்’ விவாதத்தினூடாகவும் கம்பனால் எமக்குக் கிடைக்கிறது.
தீயவை செய்வா ராகில் சிறந்தவர் பிறந்த உற்றார் தாயவைதந்தைமாரென்றுணர்வரோதருமம் பார்ப்பார் நீயவை அறிதிஅன்றே நினக்குநா னுரைப்ப தென்னோ தூயவை துணிந்த போது பழிவந்து தொடர்வ துண்டோ?”
(ејићи: 137)
இது வீடணனின் வினா.
மலரின்மேல் இருந்த வள்ளல் வழுகிலா வரத்தி னால்நீ உலைவிலாத் தருமம் பூண்டாய் உலகுளதனையுமுள்ளாய் தலைவன்நீஉலகுக் கெல்லாம் உனக்கது தக்க தேயால் புலையுறுமரன மெய்தல் எனக்கிது புகழ தேயால்
(øgahulu : 15)
அகில இலங்கைக் கம்பன் கழகம்

இது கும்பகருணனின் விடை. செய்ந்நன்றி, தன்னைவிடச் சமூகத்தின் பொது நீதி உயர்ந்தது என அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் என இதனைக் கொள்ளலாம்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் கம்பனது தனித்தன்மை சுடர்விட்டுப்பிரகாசிப்பதைச் சுவைத்துணரமுடிகின்றது. இவ்வாறு கம்பனது பார்வை அழுத்தமாகவும் ஆழமாகவும் வெளிப்படும் சந்தர்ப்பங்கள் பல உள. இவற்றைத் தொகுத்து நோக்கும் போது கம்பன் என்ற கவிஞனிடத்தில் ஒரு பண்பாட்டியல் அறிஞனையும் எம்மால் தரிசிக்கக் கூடியதாயுள்ளது.
கம்பனது இத்தகு ஆளுமையின் அடிப்படை அவன் தேடிக் கொண்ட அறிவுவளம் எனலாம். வடமொழியின் வேத இலக்கியம், புராண இதிஹாசங்கள், தரிசனங்கள், தர்மசாஸ்திரங்கள், காவியங்கள் மற்றும் தமிழின் சங்க இலக்கியம், அறநூற் பரப்பு, பக்தி இலக்கியப் பரப்பு, தொடர் நிலைச் செய்யுட்பரப்பு ஆகிய அனைத்தையும் கற்றுச் சுவைத்துச் சிந்தனைத் தெளிவு எய்தப்பெற்ற ஒரு அறிஞனையும் ஒரு மனிதநேய வாதியையும் ஒரு பக்தனையும் கம்பனிடத்தில் தரிசிக்க முடிகின்றது. உலகப் பொது மறை எனப்படும் குறளைத் தந்த வள்ளுவனுக்கு எத்தகு ஞானப் பின்புலம், மனித நேயம் என்பன அமைந்திருந்தனவோ அந்த அளவு கம்பனுக்கும் ஞானப்பின்புலம் மனித நேயம் அமைந்திருந்தன என்பது கம்பகாவியத்தைச் சுவைப்போருக்குத் தெற்றெனப் புலப்படும். மணிவாசகருக்கும் குலசேகராழ்வாருக்கும் நம்மாழ்வாருக்கும் எத்தகு பக்திப் பக்குவம் அமைந்திருந்ததோ அதே அளவு பக்திப் பக்குவம் கம்பனிடத்தினும் அமைந்திருந்தது. உணர்வுகளை வடித்தெடுப்பதில் மணிவாசகர் எந்த அளவுக்குத் தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டெல்லையை விரிவுபடுத்தினாரோ அந்த அளவுக்கு கம்பனும் தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டெல்லையை விரிவுபடுத்திச் செல்கிறான். இது புகழுரையன்று; திறனாய்வு நோக்கின் தெளிவு. ‘கல்வியிற் பெரியன் கம்பன்' என்ற பண்டை வாக்கு கம்பனை உரியவாறு பயின்றோரின் விமர்சன வாக்கு என்பதே எம் துணிபு.
கம்பன் வைணவ மதச் சார்பினன். அவ்வகையில் தமிழ் நாட்டில் முகிழ்த்த ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தின் வாரிசு’ ஆகவும் கி.பி.11-12ஆம் நூற்றாண்டுகளில் இராமானுசர் விளக்கம் தந்து நின்ற விசிட்டாத்துவைத தத்துவத்தின் சார்புடையவனாகவும் அவனை இனங்காண முடிகின்றது. கம்பகாவியத்தில் பரவலாக இவீற்றை அவதானிக்கலாம் எனினும் குறிப்பாக இரணிய வதைப்படலத்தில் அவனது தத்துவசார்பு மையப்பட்டிருப்பதைக் கண்டு தெளியலாம்.
இந்திய சிந்தனைமரபில் பக்தி சார்பான உணர்வெழுச்சிகள் பொதுவாக அடிநிலை மாந்தர்களின் தளத்திலேயே முளைவிட்டுள்ளன; இயக்க நிலைப்பட்டு வளர்ந்துள்ளன. தமிழ் நாட்டு - வடநாட்டுப் பக்தி இயக்கங்கள் மற்றும் சைவத்தின் சித்தர்மரபு, வீரசைவம், வைணவத்தில் இராமானுசருடைய பக்திச்சார்பு முதலியவற்றில் இதைத் தெளிவாக இனங்காணலாம். பொதுவாக வைணவம் சமூகத்தின் அடிநிலை மாந்தரின் உணர்வுத் தளங்களையே பெரிதும் சார்ந்து வளர்ந்த ஒன்று என்பதை வரலாறு உணர்த்தும். கம்பனது வைணவச்
116

Page 133
சார்பும் இத்தகையதே. அவன் உடைமைவர்க்கத்தைச் சார்ந்தவன் அல்ல என்பதை, சடையப்ப வள்ளல் என்ற உடைமையாளரின் தயவில் வாழ்க்கை நடத்தியவன்' என அவனைப் பற்றி வழங்கிவரும் கதை மரபு உணர்த்தும். தனது சமகாலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களோடு அவன் சுமுகமான உறவு கொண்டிருக்கவில்லை என்பதையும் மேற்படி கதை மரபு உணர்த்தியுள்ளது.
இவ்வாறு நோக்கும்போது கம்பன் தனது சமகால சமுதாயத்தின் छा&#fी மனிதர்களின் அல்லது ஆட்சியதிகாரங்களால் பாதிக்கப்பட்ட அடிநிலை மனிதர்களின் தளத்தில் நின்று காவியம் படைக்க முற்பட்டவன் என ஊகிக்க இடமுண்டாகின்றது: காவியத்தில் ஆங்காங்கு வெளிப்படும் அதிகாரவர்க்க எதிர்ப்புக் குரல்களில் இதனை உய்த்துணரலாம். குறிப்பாக, குகன் உள்ளத்தில் நிகழும் ஐயநிலையிலான சீற்றத்தின்போது அரச அதிகாரவர்க்கத்தின் மீதான எதிர்ப்புக்குரல் தொனிப்பது தெரிகிறது. “மன்னவர் நெஞ்சினில் வேடர்விடும் சரம் வாயாவோ?’ (கங்கைகாண்படலம், 16) எனக் குமுறுகிறான் குகன். இரணியன் வதைப்படலத்தில் இரணியனது அதிகார முனைப்புக்குரலுக்கெதிராகப் பிரஹலாதன் வைக்கும் வாதங்களில் கம்பனது சமகாலத்தில் ஆட்சியதிகாரத்திலும் சமய அதிகாரத்திலும் இருந்தவர்களுக்கு எதிரான பக்திசார் குரல் ஒலிப்பதை ஏற்கெனவே சில ஆய்வாளர் அவதானித்துள்ளனர்.
இத் தொடர்பிலே கம்பனது காலகட்டமான சோழப் பேரரசுக் கால
கட்டத்தின் அதிகாரமையம் பற்றிய ஒரு மதிப்பீட்டையும் இங்கு சுட்டுவது அவசியமாகிறது.
"கம்பர் காலத்தில் எத்தனையோ இராவணர்கள் இருந்தார்கள். பிறர் உரிமையை உடைமையைப் பறித்துத் தமதாக்கிக் கொண்ட இராவணர்கள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ அளவுகளில் இருந்தார்கள். இவர்களிற் சிலர் பக்தர்களாக, தானம் தவங்களில் வல்லவராகக் கூட இருந்திருக்கலாம்.
சோழர் காலத்து வரிவகைகளின் பட்டியலைப் பார்க்கும் போது மக்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று நம்மால் அறிய முடியும். வரிசெலுத்த இயலாதவர் பட்டாளம் எப்படியெல்லாம்
ஆய்வுக்குத்துணை நின்றவை: 1. கம்பராமாயணம். 2. சிவத்தம்பி, பேராசிரியர் கா. கம்பன் கவித்துவத்தின் கருத்து
15ஆவ ஆண்டு நிறைவுமலர் அகில இலங்கைக் கம்பன் கழகம் 3. ஞானி. மார்க்சியமும் தமிழ் இலக்கியமும், பரிமாணம் வெளியீடு 4. மாதவி சுந்தரம்பிள்ளை. கம்பராமாயணக் கதையமைப்பும்
பல்கலைக்கழகம். யாழ்ப்பாணம்1997. (நூலுருப்பெறாதது) (இக்கட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்திய கலாநிதி க. எ
கம்பன் மலர் - 2000

துன்பத்திற்காளானது என்பதையும் நாம் அக்காலக் கல்வெட்டுக்களிலிருந்து அறிந்து கொள்ள
פע
(Uills.---------------
(ஞானி மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் ப. 31-32)
கம்பனின் பார்வை, படைப்பூக்கம் என்பவற்றுக்கான பகைப்புலம்பற்றித் தெரிந்து கொள்ள மேற்படி மதிப்பீட்டுக் குறிப்பு ஓரளவு துணை நிற்கின்றது. இவ்வாறான அதிகார மையச் சூழலின்மீது தனது விமர்சனப் பார்வையை வெளிப்படுத்தும் வகையில் அவன் தனது காவிய முயற்சியை மேற்கொண்டிருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டாகிறது.
இன்னும் தெளிவாகக் கூறுவதானால் கம்பன் தன் சமுதாயப் பார்வையை முழுநிலையில் வெளிப்படுத்த ஏற்ற வகையிலான பல்தளப்பரிமாணங்கள் கொண்டதான ஒரு கதையம்சத்தைத் தேடிய போது வால்மீகியின் ஆதிகாவியம் அவனது அத்தேவையை நிறைவு செய்வதற்குப் பொருத்தமான ஒன்றாக அமைந்ததெனலாம். இராமாயணம் போலவே பல்தளப்பரிமாணங் கொண்டதான u TJ5ës கதை வில்லிபுத்துரருக்கு வாய்த்தது. கம்பனைப் போன்ற பார்வை மற்றும் அதற்குப்பின்புலமான ஞானச் செழுமை என்பன அவரிடம் இருந்திருப்பின் அவரது பாரதம் இப்போது இருப்பதைப் போலன்றி இன்னொரு பரிமாணத்தில் வெளிப்பட்டிருக்கும். தமிழுக்கு இன்னொரு கம்பனைக்கான விருப்பமில்லைப் போலும்.
கம்பனின் மானிடம் தழுவிய பார்வை அதற்கு வாய்ப்பாக அமைந்த கதையம்சம் என்பன பாரதிக்கு முற்பட்ட காலத்து ஏனைய தமிழ்க் கவிஞர்களிடமிருந்து அவனை வேறுபடுத்தி உயர்த்திவிட்டமையை ஒப்பீட்டு நிலையிலே நோக்கினோம். தமிழிலக்கியத்தளத்தில் மட்டும் நிகழ்ந்த ஒப்பீடு இது. அனைத்திந்தியமற்றும் தென்னாசிய இலக்கியப்பரப்பில் கம்பனைப் போன்ற ஞானச் செழுமையும் பார்வையும் கொண்ட இன்னொரு கவிஞனைச் சுட்டிக்காட்ட முடியுமா? ஆய்வுலகம் பதில் தர வேண்டிய வினா இது.
கம்பனது பார்வையை மையப்படுத்தியே இவ்வுரை அமைந்தது. வெளிப்பாட்டுநிலை தனியான இன்னொரு ஆய்வுக்குரியது.
நிலை ஊற்றுக்கால்' கம்பமலர் அகில இலங்கைக் கம்பன்கழக யாழ்ப்பாணம். 1995
1. கோவை. 1988.
கட்டமைப்பும் முதுதத்துவமாணிப்பட்ட ஆய்வேடு, யாழ்ப்பாணப்
கலாசபதி நினைவுப் பேருரையில் படிக்கப்பட்டது)
117

Page 134
உலா 1
கால்மேல் கால் டே கம்பன் இருந்தான் கட்டுத்தறி பட்டிை நெய்து கொண்டிரு கம்பீரத்தோடு.
"பட்டிழை கொண் யாருக்குச் சூட்டுவ கம்பன் உள்ளத்தில் பார்த்தான் ஒரு பெ “கொட்டிக் கிழங்ே கூவிக் கொண்டு வ
மருங்கசைய, நிரம்
கம்பன் எழுந்தான் “வழங்கோசை வை என நிமிர்ந்தான்
வெட்டுக் கண்ணா கட்டுத்தறி பட்டின எளிமையின் அழை கவிதையின் கம்பீர்
உலா 2
காலாற வயலோர நடந்து வந்தான்க தூங்கும் பணி நீரில் மூங்கிலிலை மேல்
 

ம்ப உலா
சு.வில்வரத்தினம்
ாட்டவாறு
ழயால் எதையோ
ந்தது
டு நெய்ததை
து
உருவெழுதிப் ண்ணாளை. கா கிழங்கென்று ந்தாள் அவள் - ப எளிமையுடன்.
பயம் பெறும்,
ல் இதைப் பார்த்திருந்த ழயை ஒதுக்கி கை நெய்யலாயிற்று
ம் குலையாமல்.
O
ம்பன்.
துளிர்க்கும் அழகை ) கண்டான்.
118

Page 135
ஏற்றத் துலாநின்ற உழவன் பனிநீரை வாங்கும் கதிரோனை விழிநிரம்ப வாங்கியவாறே துலாவில் மிதித்தான். வாய்க்கால் நீரில் ஒளிவெள்ளம்;
வாய்மொழியில் உயிர் வெள்ளம்.
உயிரொளி வெள்ளத்தின் மிடறுண்ட கம்பன் உழைப்பால் விளையும் பாற்கடல் அமுதுண்டேன் எனத் திளைத்தான். சேற்றில் மிதித்தாலும் துலாவில் மிதித்தாலும் உழவன் மிதிப்பதெல்லாம் ஏற்றமுறுதல் எவ்வாறெனத் திகைத்தான். ஒதிய தமிழில் உயிர்ப்பை விதைத்தான்.
g) G). T 3
கம்பன் ஆயர்சேரிக்கு வந்திருந்தான்.
கம்பனுக்காக
ஆய்மகள் குடில் போட்டிருந்தாள். ஒட்டக் கூத்தன் முதலான ஆஸ்தான வாய்களுக்குள்ளும் அரண்மனை வாசல்களுக்குள்ளும் நுழைவு மறுக்கப்பட்ட ஏழையின் சொல் ஆராய்ச்சி மணியில் கறள் கட்டியிருந்தது. கம்பன் அதைத் தன் கவிதைக் கொம்பால் இடித்து 'உன்னையறிந்தோ தமிழை ஒதினேன்” என்றான். பின்னை ஆரை அறிந்தாம்? ஒதுக்கி விடப்பட்டோர் சேரியிலிருந்தும், 'களை கட்டவர்தளை விட்டெறிகுவியலிலிருந்தும்
குவளைமலர் கண்டான்.
இவ்வண்ணம் எடுத்தாண்ட சொல் வண்ணம் தேடிய ஆராய்ச்சிமணியகாரர்ை இவ: சேரிப்புறம் நோக்கி அழைத்துச் செல்ல குடில் போட்டிருந்தவள் மோர் கடைகையிலே
கம்பன் மலர் - 2000

துமி பறக்கும் பிள்ளையள்
தள்ளியிருங்கள் என்றாள்.
சொல்லிற்குச் சாட்சி சொன்னது ஏழைக்குடில்.
ஏழை சொல் அம்பலம் ஏற இத்தனை இடைஞ்சல்.
குரங்குகள் கடலில் துள்ளத் தெறித்தது துமி. வானவர் அமிழ்தின் உரைசலென உவந்ததை கம்பன் எழுத தானும் உவக்கத் தயங்கிய கூத்தன் குரங்குப் பிடியாய் துமியைப் பற்றித் துள்ளிக் குதிக்க
உருவான புனை கதைதானிது.
ஆயினும் இதனுள் சொல்லாதிக்ககாரரின் சூக்குமம் தொக்கிருக்கிறது. ஏழை சொல் அம்பலம் ஏறல் கூடாதெனும்
சொல்லதிகாரச் சூத்திரம் உளது.
ஆதலால் சொற்களைக் கட்டவிழ்ப்போம் சோடனைகளைத் தாண்டிச் செல்வோம் சோடனைகளில் தரிக்கா உண்மை எளிமையில் வந்து இருப்பிடம் கொள்ளும் கம்பனுக்காக கலைத்தாயவள் எளிய குடிசை போட்டு அமர்ந்தமை போல, பட்டம், பதவிச் சோடனை துறந்து எளிமையால் எளிவந்த பிரானை அறிந்த மணிவாசகர் போல நாமார்க்கும் குடியல்லோமென்று இறுமாப்போடு எதிர்க்குரலெழுப்பிய உழவாரப் பணியவன் போல கைவிடப்பட்டோர் சேரியில் உலாவந்த கம்பன், ஒளவை போல நாமும்
உலா வருவோம்.
எளிவந்த தமிழை அரியணை ஏற்றாதிருப்போம்.
எங்கள் காலத்திற்கு ஏற்றதாய் மாற்றுவோம். எளியோர்க்கும் உண்மை அறிவிக்க இயல்வன செய்வோம். ஏர்க்கொழு போலும் கூர்மை எமக்குளதாகுக!
சேரிக்கும் வாழ்வு செழிக்க!
119

Page 136
வபாடையில் இக்கதை செய்த மூவரானவர்தம்முளும் முந்தி நாவினான்உரையின்படி நாடு
பாவினாலிஃது உணர்த்திய
என்று வாக்குத் தத்தம் பண்ணியபோதும் க கதைப்போக்கை மீறி, தான் தத்தம் பண்ணி அவ்வாறு அவன் வான்மீகத்தை மீறியதெல்ல
அவ்வாறு தமிழ் மரபைத் தாபிதம் மிகவும் சிலாகித்துப் பேசப்படுவது, வான்மீகில் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்ளு
வில்லையொடித்த வீரத்தின் பயன அண்ணலும் நோக்க அவளும் நோக்கி’மனம் கொண்டான் என்பர்.
இங்கு தமிழ்மரபு என்று குறிப்பிட காதல் மணத்தையே.
வீரதீரங்களால் ஒருத்தன், ஒருத் செல்வங்களையும் நாடிவந்து வரிசைய மாலையிடுவதுமாகிய சுயம்வர திருமணங்க
அவை அகம் ஒத்த திருமணங்கள் அன்பால் தலைவனும் தலைவியும் ஒருவ6 அன்பினைந்திணை' என்று விதந்து பேசப் என்றும் பழித்தே பேசப்படும்.
தமிழ் மரபு, காதலை - அன்பை சொல்லுக்கே அன்பு என்ற பொருள் உண்டு
 
 

லக்கணம்
5ff) கம்பன்
க. இரகுபரன்
வர்
ես
ர்தமிழ்ப்
பண்பரோ" ம்பன், சில சில இடங்களில் 'முந்திய நாவினனாகிய வான்மீகியின் ய வாக்கை மீறினான் என்பது அறிஞர் பலரும் உடம்பட்ட கருத்து. ாம் தமிழ் மரபை மீறாதிருக்கவே என்பதும் அவர்க்கு உடம்பாடானதே.
செய்வதற்காக கம்பன், வான்மீகியை மீறியவற்றுள் அறிஞர்களால் யைப்போல அல்லாமல் திருமணத்திற்கு முன்னரே இராமனும் சீதையும் ம்படி பண்ணியமையாகும்.
ாகவே சீதையை மணந்தானாயினும் அதற்கு முன்பே, அவர்களை பிடித்துவிட்டவர்களாக்கியதன் மூலம் கம்பன், தமிழ்மரபைப் பேணிக்
ப்படுவது தலைவனும் தலைவியும் ஒத்த மனத்தராய்க் கரம்பிடிக்கும்
தியைத் தனக்கு உரியவளாக்குவதும் ஒருத்தி, தன் அழகையும் பிட்டு நிற்கும் ஆடவர்களுள் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, ர் வடநாட்டு வழக்கங்கள்.
அல்ல; புறம் ஒத்த திருமணங்களே. தமிழ் மரபு போற்றுவது ஒத்த
ரை ஒருவர் காதலித்துக் கூடும் காதற் கூட்டத்தையே. அதுவே படுவது. ஏனையவை கைக்கிளை என்றும் பொருந்தாக் காமம்’
- போற்றுவதுபோல் வேறு எதையும் போற்றுவதில்லை. தமிழ் என்ற
120

Page 137
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
என்ற திருமந்திர அடிகளில் தமிழ் என்பதற்கு அன்பு என்பதே பொருளாதல் காண்க.
பழந்தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத் தொகையுள் ஆறு நூல்கள் அகத்துறை சார்ந்தவை; இரண்டுதான் புறம் சார்ந்தன. தொல்காப்பியமானது பொருளிலக்கணம் கூற எடுத்துக்கொண்ட நான்கு இயல்களுள் மூன்று அகத்திணை கூறுவன; ஒன்றேயொன்றுதான் புறத்துக்குரியது.
ஒரு காலத்தில், பாண்டிநாடு பன்னிரண்டாண்டு காலம் பெரும் பஞ்சத்துக்குட்பட்டதென்றும் புலவர்களை ஆதரித்து வந்த பாண்டியன், நாட்டிலுண்டான பஞ்சத்தால் அவர்களை ஆதரிக்க முடியாமற் போகவே பஞ்சகாலம் முடியும் வரையில் அப்புலவர்களை வேறு நாடுகளிற் சென்று வாழ்ந்து, பஞ்சம் முடியபாண்டிநாட்டுக்கு மீண்டு வருமாறு வேண்டினானென்றும் பஞ்சகாலம் முடியவே, நூல்வல்ல புலவரைப் பாண்டியன் தேடிய போது, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்லார் மாத்திரம் கிடைத்து, பொருளதிகாரம் வல்லார் கிடைக்காமையால் “என்னை, எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே; பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" என்று கவலையுற்றானென்றும் அதுகண்டு இரங்கிய இறையனார் களவியல் என்னும் நூலொன்றை யாத்து, அவன் கவலை தீர்த்ததாகவும் கதை ஒன்று உண்டு.
களவியல் என்பது அகத்திணை இலக்கணம் கூறுவதோர் நூல்; பாண்டியன் “பொருளதிகாரம் இல்லையே” என்று கவலை கொள்ள , இறையனார், பொருளதிகாரக் கூறுகளான அகம், புறம் எனும் இரண்டனுள் அகத்திற்கு மாத்திரம் நூல் செய்து, அவன் கவலைதீர்த்தார் என்பதும் புற இலக்கணம் பற்றிய பேச்சே இங்கு இல்லை என்பதும் கவனிக்கப்படவேண்டியன.
கவனிக்கத்தக்கது இன்னுமொன்று இங்கு உண்டு. களவியல், கற்பியல் என இருகூறுபட்ட அகத்திணை இலக்கணம் அமைந்த நூலுக்கு களவியல்' என்றே பெயரிடப்பட்டது என்பதே அதுவாம்.
தமிழ்மரபு, திருமணத்துக்கு முந்திய அகவாழ்வைக் களவென்றும் திருமணத்துக்குப் பிந்தியதைக் கற்பென்றும் வகுத்துரைக்கும். அவற்றுள் சிறப்பித்துப் பேசப்படுவது களவே. தலைவனும் தலைவியும் காதலித்துமுடிக்கும் திருமணமே தமிழ்மரபு போற்றுவது. அதாவது களவின் அடிப்படையிலேயே கற்பு நிகழ்தல் வேண்டும். அதுவே வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை
கம்பன் மலர் - 2000

தமிழில் ‘பொதுமக்கள் மத்தியில் இன்றும் செல்வாக்குடன் விளங்கும் பழந்தமிழ்க் காவியங்களை நோக்கினும் இவ்வுண்மை புலப்படக்கூடும்.
கம்பராமாயணத்தில் திருமணத்துக்கு முன்னமே இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டார்கள். கச்சியப்பர், கந்தனுக்கு வடநாட்டில் இல்லாத வள்ளியைத் தமிழ்நாட்டில் களவுமணம் செய்வித்தார்.
இவை வெற்றியடைந்த திருமணங்கள்.
சேக்கிழாரின் காவியநாயகருக்கு நிகழவிருந்த பேச்சுத்திருமணம் நிகழாமலே குழம்பியது. பின் வெற்றியாயமைந்த காதல் திருமணங்கள் இரண்டு அவருக்கு வாய்த்தன. சிலப்பதிகாரத்துக் கண்ணகியின் பேச்சுத் திருமணம் துன்பியலாகவே முடிந்தது.
இவையெல்லாம் தமிழ் LDITU, காதலைப் போற்றுவதென்பதைக் காட்டி நிற்பன. இந்த உண்மை உணர்ந்ததால்தான் பன்மொழிப் புலவர்கள், தமிழை 'அன்பின் மொழி என்றார்கள்.
இத்தகைய ஒரு கருத்துநிலையிலே கம்பனால் மூலநூலுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட மாற்றமே இராமன்சீதையின் திருமணத்துக்கு முந்திய சந்திப்பு என்பது பலராலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது என்பது முன்னரே கூற்ப்பட்டது. ஆனால் அம்மாற்றம் தமிழில் கம்பனுக்கு முன்னமே மேற்கொள்ளப்பட்டு விட்ட மாற்றம் என்று வழக்கொழிந்துபோன பழைய தமிழ் இராமாயணமொன்றால் உணரமுடிகிறது.
ஆள்வினைமுடித்த அருந்தவ முனிவன் வேள்வி போற்றிய இராமனவனொடு மிதிலை மூதூ ரெய்திய ஞான்றே
மதியுடம் பட்ட மாக்கட் சீதை
yy
என்று சீதையின் மதியுடம்பாட்டை அவ்விராமாயணம் உணர்த்தி நிற்பதை நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்கு எழுதிய உரையில் உதாரணமாக எடுத்தாண்ட செய்யுட்பகுதியால் அறிகிறோம். எனவே இம்மாற்றத்தை, கம்பன் மேற்கொள்ளவில்லை. அவ்வாறாயின் இப்புகழ் கம்பனுக்குரியதாகவே பரந்து உலவுவதன் காரணம் என்ன, என்று ஆராய வேண்டியவர்களாகிறோம்.

Page 138
காரணம் இன்றிக் காரியம் இல்லை யாதலால் இதுவிடயமாக கம்பன் ஏதோ செய்தே இருக்கிறான். அது அவன் இராமன் சீதையர் உற்ற காதலைப்பாடிய முறைமையேயாம்.
உருவாலும் திருவாலும் பருவத்தாலும் குணத்தாலும் ஒத்த தலைவனும் தலைவியும் சந்திக்கும் சந்திப்பில் முதலில் காட்சி, ஐயம் என்பன அவர் இருவரில் ஒருவரிடத்தே - பெரும்பாலும் தலைவனிடத்தே - தோன்றி, பின்னரே இருவரும் மனமொத்தநிலை உறுவர் என்பது களவிலக்கணம். ஆதலால் அவ்விலக்கணம் அவற்றைக் கைக்கிளையின் பாற்படுத்தியே பேசும்.
குறுகிய காலக்கழிவேயாயினும் ஒருவரிடத்து முந்தியும் மற்றவரிடத்துத் தாழ்ந்தும் தோன்றும் காதல், உந்நதமானதாக மாட்டாது. நச்சினார்க்கினியர் உதாரணமாகக் காட்டிய செய்யுட்பகுதி, சுட்டியொருவர் பெயர் கொள்ளும் கைக்கிளைக்கு என்பது இங்கு மனங்கொள்ள வேண்டியது. ஆகையால் கம்பன் இருவரையும் இடையீடெதுவுமற்ற காலத்தே கண்டு மனமொன்றி நிற்கச்செய்து மரபுவழிவந்த களவியல் இலக்கணத்தை மீறி நின்றான். இதற்காக அவன் சொல்லிலக்கணத்தையும் மீறுவானாயினான்.
எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
என்பது இராமன் - சீதை சந்திப்பைப் பற்றிய கம்பன் பாடல். இதில் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பதிலுள்ள, 'உம்மை கள் இலக்கணநூல்கள் கூறும் உம்மை இடைச்சொல்வகை எதனுள்ளும் முற்றப் பொருந்துவனவாய் இல்லை.
இது, செய்யுள்களின் எழுத்தெண்ணி உரை எழுதும் உரையாசிரியர்களுக்கு இடர்தருவதாய் உள்ளது. பிற்கால உரையாசிரியர்களில் உரைவேந்தர்' என்று புகழப்பெறும் வை. மு. கோபாலக்கிருஷ்ணமாசார்யர், அந்த உம்மைக்கு எழுதிய விளக்கம்
இது
அண்ணலும் என்ற உம்மை - உயர்வு சிறப்பு:
ஸ்வதந்த்ரனும் என்றபடி அவளும் - அபலையானவளும் : இழிவு சிறப்பு.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

எதையேனும் எழுதியே ஆகவேண்டும் என்ற நிலையில் எழுதப்பட்ட இவ்விளக்கம் கம்பனுக்குக் குற்றமேசேர்க்கத்தக்கது. ஆனையும் அடிசறுக்கும் என்பதையே வை. மு. கோவின் இந்த உரை உணர்த்தும்.
ஆனால் கம்பன் கையாண்ட 'உம்மையின் நுட்பத்தை நவீன இலக்கியகாரரொருவர் உணர்ந்து கொண்டு தன்னளவில் விளக்கியுள்ளார், தன் நாவல் ஒன்றில்.
. காதல், திட்டமிட்ட செயலல்ல, எனவே அதில் தந்திர மிருப்பதற்கு நியாயம் இல்லை.
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். இரண்டு 'உம்' போட்டு ராமன் - சீதை காதலைக் கம்பராமாயணக் கவிதை சொல்லுகிறது. ‘நான் பார்த்தேன். அவளும் பார்த்தாள்’ என்றுதான் தமிழில் வரும். அவன் வந்தான். அவளும் வந்தாள்’ என்று எழுதுவதுதான் நியாயமாகும். அப்படியானால் கம்பன் ஏன் இரண்டு 'உம்' போட்டான்? கம்பன் தமிழ் அறியாதவனா? வேறொரு உதாரணம் பார்ப்போம்.
“நான் ஒரு ஜங்ஷன்ல நின்னுட்டிருந்தேன். இடது பக்கத்துலேர்ந்து ஒரு லாரிவந்தது. வலதுபக்கத்துல இருந்து ஒரு பஸ் வந்தது. லாரியும் ஸ்பீடு. பஸ்ஸும் ஸ்பீடு. டணார்னு ரெண்டும் முட்டிக்கிச்சு”
இங்கேயும் இரண்டு 'உம்' வருகின்றன. பஸ்ஸை இடிக்க வேண்டும் என லாரி வரவில்லை. லாரியை நொறுக்க பஸ் திட்டமிடவில்லை. அதுவும் வர, இதுவும் வர - டணாரென மோதிக் கொண்டன. ஆக்ஸிடெண்ட் நடந்து விட்டது. அது போலவே ராமனைக் கவர சீதை நிற்கவில்லை சீதையைப் பார்க்க ராமன் போவில்லை. அங்கே விபத்தாய், எதேச்சையாய் காதல் நிகழ்ந்தது. திட்டமிட்டு காதல் வராது. காதல் விபத்து; அனிச்சை.
(நெல்லுச்சோறு -பாலகுமாரன்)
தலைவனதும் தலைவியதும் உள்ளத்தே காதல் தோன்றுவதில் காட்சி, ஐயம் என்றெல்லாம் காலக்கழிவுசெய்யாமல் ஒத்தகணத்தே இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தப்பண்ணித் தமிழ் அகத்திணை இலக்கணம் மீறுதற்காய்ச் சொல்லிலக்கணத்தையும் மீறினான் கம்பன். அவன் காலத்தையும் மீறியவன் அல்லவா ?
122

Page 139
லிங்கத்துப் பரணி பாடிய சய முதலான நூல்களைப் பாடி இராமாயணத்தைத் தமிழில் எனப் போற்றிப் புகழ்கின்றது.
இம் மூவரிலே, கம்பனின் புகழ், சக்கரவர்த்திகளுக் கெல்லாம் சக்கரவர்த்த கொண்ட காவியக் கதையும், அதைச் சொல்
வசிட்டர், போதாயனர், வான்மீகர் பாஷையில் பாடிய இராமாயணத்தை, இலக்கணங்களுக்கு அமைவாகப் பாடிப் பெ
வடமொழிவல்ல வேதியர்கள் பலன ஆராய்ந்து, அவர்களோடு விவாதித்துப் பின்
"விழுந்த ஞ (6 எழுந்த ஞா
U
என்று கம்பனின் கவிதா வேகத்தையும், ஆர
சூரியன் மறைந்து, மீண்டும் உதயம இராமாயணத்தை, வடமொழிவல்ல வேதிய தெளிந்து, தர்க்க நியாயங்களோடு விவா பகலுக்கு எழுநூறு பாடல்கள் என்ற வேகத்தி
வான்மீகி இராமாயணத்தின் பல இராமன் பற்றிய பல நாடோடிக் கதைகளை கதைகளையும், தனது இராமாயணத்திலே ெ பொதிந்து, தமிழ் மரபுக்கேற்ற வகையில், கம்
 
 

lன்
த்துவம்
தனித்துவம்
மகத்துவம்
தமிழ்மணி அகளங்கன்
ங்கொண்டாரையும், மூவருலா, தக்கயாகப் பரணி, ஈட்டி எழுபது ய, கவிராட்சதன் எனப் போற்றப்பட்ட ஒட்டக் கூத்தரையும், பாடிய கம்பரையுமே தமிழ் இலக்கிய உலகு, கவிச்சக்கரவர்த்திகள்
அழியாப் பெரும் புகழாய் அதிகரித்து வருகின்றமைக்கும், கவிச் நியாய்ப் போற்றப்படுகின்றமைக்கும் காரணம் ; அவன் எடுத்துக் லி முடித்த பாங்கும்தான் என்று கூறலாம்.
ஆகிய மூவர் தம்முளும் முந்திய நாவினாராகிய வான்மீகர், தேவ இராமாவதாரம்' என்ற பெயரில், தமிழில், பெருங்காப்பிய ருஞ்சாதனை படைத்தவன் கம்பன்.
ரத் தன்னுடன் இருத்தி, வான்மீகரின் இராமாயணத்தை நன்றாக ன் காவியமாகப் பாடினான் கம்பன்.
ாயிறு எழுவதன்முன் மறை பதியருடன் ஆய்ந்தே பிறு விழுவதன்முன் கவி டின தெழுநூறே"
ாய்வையும் பற்றிச் சிறப்புப் பாயிரத்திற் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ாகுவதற்கு இடைக்காலமான இராக் காலத்தில், வான்மீக முனிவரின் ர்களுடன் சேர்ந்து ஐயந் திரிபு இல்லாத வகையிலே ஆராய்ந்து, நித்து முடிவுகண்டு, தன்னம்பிக்கையோடு, பகற் பொழுதிலே ஒரு தில் கம்பன் இராமாயணம் பாடியதாக இச் செய்தி தெரிவிக்கின்றது.
கிளைக் கதைகளையும், தமிழ் நாட்டார் இலக்கியத்தில் புகுந்திருந்த ாயும், ஆழ்வார் பாசுரங்களிற் காணப்பட்ட சில அர்த்தமுள்ள சிறு வளிப்படையாகவும், சூசகமாகவும், உட்பொருளாகவும் பலவகையிற் பன் காவியஞ் செய்தான்.
123

Page 140
அந்தக் கதைகளைத் தெரிந்து கொண்டு கம்பனின் கவித்துவத்தை எடைபோடும்பொழுதுதான், கம்பனின் தனித்துவம் என்ன, மகத்துவம் என்ன என்பதைக் கண்டு கொள்ள முடியும்.
இராமாயணத்தில் இராமனின் வீரத்திற்கும் கருணைக்கும் மகுடம் வைத்தது போல் போற்றப்படும் ஒரு நிகழ்ச்சியாகப் போர்க் களத்திலே நிராயுதபாணியாக நின்ற இராவணனைப் பார்த்து, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என நல்கிய பேரறத்தைத்தான், போரறமாகப் பேரறிஞர்கள் எல்லோரும் போற்றுகின்றனர்.
திருவள்ளுவர், திருக்குறளிலே சொன்ன ஒரு கருத்தின் அடிப்படையில்தான், கம்பன் இக் காட்சியைக் காட்டுகிறான் என்று இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் தனது 'கம்பன் அபர பிரமன்' எனும் கட்டுரையில் சொல்லிக் கம்பனை அபாரமாகப் புகழ்ந்து பாராட்டியிருக்கின்றார்.
"பேராண்மை என்பதறுகண்ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு”
என்பதே அக்குறள்.
“ஒரு வீரன் தயை காட்டாமற் பகையைக் கொன்று குவித்தல் பேராண்மை. ஆனால் பகைவனுக்கு நினையாப்பிரகாரம் ஓர் இடையூறு நேர்ந்தால், உடனே அந்த வீரன், தன் பகைவனுக்கு உபகாரியாய் மாறல் வேண்டும். அது பேராண்மையாகிய வீரத்தின் சிகரமாயிருக்கும்” என்று பொருள் கூறி விளக்கியிருக்கிறார் பண்டிதமணி அவர்கள்.
ஆனால் இது, கம்பனுக்குக் கொடுக்கப்பட்ட அர்த்தமில்லாத புகழ்ச்சியே. ஏனெனில், இராவணனை, இராமன் “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என அனுப்பிய காட்சி கம்பனாலே புதிதாகப் புதுமையாகச் செய்யப்பட்ட தொன்றல்ல.
வான்மீகர், இக்காட்சியைத் தனது இராமாயணத்தில் காட்டியிருப்பதால், கம்பனின் புதுமைக் கருத்தாக இதனைக் கூறுவது சற்றும் பொருத்த மில்லாதது.
ஆனால், “ஆளையாவுனக்கமைந்தன” என்ற பாடலில் வரும் “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்ற கூற்றினையும் “மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை” என்ற கூற்றினையும் கம்பன் பொருத்திக் காட்டும் அற்புதம், அவனது கவித்துவத்திற்கு எடுத்துக் காட்டாகச் சிகரம் வைத்தது போல்அமைந்திருக்கின்றது என்று கூறலாம்.
முதலில் பாடலை முழுமையாகப் பார்ப்போம்.
ஆள் ஐயா! உனக்கு அமைந்தனமாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு நாளை வா என நல்கினன் - நாகு இளங் கமுகின் வாளை தாவுறு கோசலநாடுடை வள்ளல்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

இராம இராவண யுத்தத்தின் முதல் நாட் போரிலே, சகல ஆயுதங்களையும் இழந்து, நிராயுதனாக, பூமியைக் கால் விரலால் கீறிக் கொண்டு, இராமரின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாத அவமானத்தோடு, இறங்கு கண்ணினனாக, ஆலம் விழுது போன்ற இருபது கைகளையும் தொங்க விட்டுக் கொண்டு, பிரகாசமிழந்த தோற்றத்தோடு, சோபை இழந்த முகத்தோடு நிற்கிறான் இராவணன்.
செய்யக் கூடாதவற்றைச் செய்தவரின் நிலை இறுதியில் இப்படித்தான் இருக்கும் என்று உலகம் ஆரவாரிக்கும் படியாக இருக்கிறது அவனது நிலை. சிவபெருமானைக் கூட தலை தாழ்ந்து வணங்காத பெருமிதம் படைத்த இராவணனின் தலை குனிந்து இருக்கிறது.
அறங் கடந்தவர் செயல்இது
என்று உலகெலாம் ஆர்ப்ப நிறங் கரிந்திட, நிலம்விரல்
கிழித்தனன்நின்றான். இறங்கு கண்ணினன், எல்அழி
முகத்தினன் தலையன் வெறுங்கை நாற்றினன் விழுதுடை
ஆல்என மெய்யன்.
என இக்காட்சியைக் கம்பன் காட்டுகிறான். இப்படி ஒரு நிலையிலே நிற்க வேண்டி நிச்சயமாக வரும், என்று சீதை இராவணனை ஏசுவதாகச் சுந்தர காண்டத்திலே கம்பர் ஒரு காட்சியை ஏற்கனவே காட்டியிருக்கிறார்.
சிறை இருந்த சீதை, இராவணனைப் பார்த்துச் சொல்லுகிறாள். “நீ இராம இலக்குவருக்குப் பயந்தவன் என்ற காரணத்தினால்தான், வஞ்சனையாக, மானை அனுப்பி, இராமரைப் பிரித்து, பின் இலக்குவனையும் பிரித்து, மாறுவேடத்தில் வந்து என்னைச் சிறை எடுத்தாய். உனக்கு உயிரிலே ஆசையிருந்தால் என்னைப் பற்றிய எண்ணத்தை விட்டுவிடு. இல்லாது விட்டால், உன் குலத்துக்கெல்லாம் நாசம் விளைவிக்க வல்ல, நஞ்சு போன்றவரான இராமரை, நீ போர்க்களத்திலே சந்திக்கும் போது, வீரன் என்ற பெருமையோடு, அவரின் முகத்தை உன்னால் ஏறிட்டுப் பார்க்கவே முடியாது” என்கிறாள்.
அஞ்சினையாதலாலன்றாரியனற்றம் நோக்கி வஞ்சனை மானொன்றேவி மாயையான் மறைந்து வந்தாய் உய்ஞ்சனை போதியாயின் விடுதியுன் குலத்துக் கெல்லாம் நஞ்சினை எதிர்ந்த போது, நோக்குமே நினது நாட்டம்
என இதனைக் கம்பன் காட்டுகிறான். இதனைப் பொருத்தமாகக் கொண்டு வந்து, யுத்த களத்திலே நிராயுதனாக நிற்கும் இராவணன் அவமானத்தைத் தாங்க முடியாதவனாக, இராமனின் முகத்தை ஏறெடுத்துப்பார்க்க முடியாதவனாக, இறங்கு கண்ணினனாகத் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றான் என்று காட்டுகின்றான் கம்பன்.
124

Page 141
இப்படி நின்ற இராவணனை, இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் சிறைப்பிடித்தலே. அல்லது கொல்லுதலே. இவை இரண்டையும் விடுத்து, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா" என அனுப்புதல் அல்ல.
போருக்கு முன் அங்கதனைத் தூதாக இராவணனிடம் அனுப்பி, சீதையைச் சிறை விடும்படி அறிவுறுத்துகிறான் இராமன். சீதையைச் சிறை விட்டால், இராவணனை மன்னிக்க இராமன் தயாராக இருந்தான் என்பதை இது காட்டுகிறது.
போர்க் களத்திலும் கூட, இராவணன் நிராயுதனாக நிற்கும் பொழுது, இராமர் இராவணனை மன்னிப்பதற்குத் தயாராகவே இருக்கிறார். அதற்கு மூன்று கோரிக்கைகளையும் முன் வைக்கிறார்.
சீதையைச் சிறைவிடுதல், தேவர்களையும், முனிவர்களையும் சுதந்திரமாக இருக்க விடுதல், விபீஷணனை அரசனாக்குதல், இந்தக் கோரிக்கைகளுக்கு இராவணன் உடன்பட்டால், இராவணனின் தலையைத் தனது அம்புகளினால் அறுத்துத் தரையில் வைக்காமல், மன்னிப்பதாக இராமர் கூறுகிறார். இராவணன் இவைகளுக்கு எந்தப்பதிலும் சொல்லாது தலை கவிழ்ந்து நின்றான்.
இந்தச் சந்தர்ப்பத்திலே இராமன், இராவணனிடம் கோரிக்கைகள் எவற்றையும் முன்வைக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை. இராவணனைச் சிறைப் பிடிப்பது அல்லது கொல்வது முதற் கருமமாகவும், ஏனையவை அதன் தொடரான கருமங்களாகவுமே இருக்க வேண்டியவை. ஆனால் இராமன் என் அவைகளைச் செய்யவில்லை.?
மகாபாரத யுத்தத்திற் கூட, பதினோராம் நாள், சேனாதிபதிப்பதவியேற்கும் துரோணாசாரியாரிடம் துரியோதனன், தருமனைச் சிறைப்படுத்தித் தரும்படிதான் கோரிக்கை விடுத்தான்.
இராவணன் தவஞ்செய்து, பலம்பெற்றுத்திக்கு விஜயஞ் செய்த காலத்தில், ஆயிரம் கைகளையுடைய கார்த்த வீரியார்ச்சுனன் என்பவனுடன் போர் செய்து தோல்வியுற்றபோது, இராவணனை அவன் சிறைப்பிடித்து வைத்திருந்தான். பின் இராவணனது பாட்டனாகிய புலத்தியரின் வேண்டுதலின் பேரில் 'இராவணஜித் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டு, இராவணனை அவன் விடுதலை செய்தான்.
வாலியோடு வலிய வந்து போர் செய்த இராவணனை, வாலி வென்று வலியழித்துத், தனது வாலிலே கட்டிக் கொண்டு மலைக்கு மலை தாவிச் சென்றதாகவும், பின்பு இராவணன் வாலியோடு சமாதானஞ் செய்து, நண்பனாகித் திரும்பி வந்ததாகவும் இராமாயணத்திலே கதையுண்டு.
எந்த யுத்தத்திலும், எதிரி சிறைப்பிடிக்கப்படக் கூடிய நிலையில் இருந்தால், சிறைப் பிடித்தலே தான் யுத்தமுறை.
கம்பன் மலர் - 2000

அதுவே வீரம். அல்லது அந்த இடத்திலேயே அவனைக் கொல்ல வேண்டும்.
ஆனால் இராமரோ இந்த இரு யுத்த நடைமுறைகளுக்கும் புறம்பாக "இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என அனுப்பி வைக்கிறார். அதனால் இந்தச் செய்கை பற்றி நுணுகி நோக்குவது நல்லது.
சீதையை இராவணன் சிறை எடுப்பதற்கு முன்பாகவே, இராவணன் முதலிய அரக்கர்களைக் கொல்வதாக முனிவர்களிடம் கூறியிருந்தான் இராமன். இராமாவதாரத்தின் நோக்கமும் அதுவே தான்.
துஷ்ட நிக்கிரக சிஷ்ட ப்ரிபாலன என இதை வடநூலார் கூறுவர். துஷ்டர்களை அழிப்பதும், சிஷ்டர்களைக் காப்பதுமே, இவ்வவதாரத்தின் நோக்கம் என்பது இதன் பொருள்.
இராவணனிடம் சீதை இந்த விடயத்தையும் எடுத்துக் கூறுகிறாள். "அகத்தியர் முதலான முனிவர்கள், அரக்கர்களை அழிக்க வேண்டும் என்றும், அது இராமரால் தான் முடியும் என்றும், நாங்கள் காட்டுக்கு வந்தபோது முறையிட்டார்கள். அதற்கு இராமரும் ஒப்புக் கொண்டு உன்னை அழிப்பதாகக் கூறி அவர்களுக்கு அபயம் அளித்தார்.
அதன் பின்பு நீயாகவே வலிந்து வந்து, என்னைச் சிறையெடுத்து, இராமரோடு நேரடிப் பகையையும் உண்டாக்கிக் கொண்டாய். இப்பொழுது உனது அழிவுக் காலம் எனக்குக் கண்கூடாகவே தெரிகிறது” என்றாள் சீதை.
‘தென்தமிழ் உரைத்தோன் முன்னாத் தீதுதிர்முனிவர் யாரும் புன்தொழில் அரக்கர்க் காற்றேம் நோற்கிலம் புகுந்த போதே கொன்றருள் நின்னால் அன்னார் குறைவது சரதம் கோவே என்றனர். யானே கேட்டேன். நீஇதற்கியைவ செய்தாய்"
என்று கம்பன் இதனைச் சொல்லுகிறான். இதுமட்டுமில்லாமல், சீதை தானே தனது சொல்லினால், இராவணனை மட்டுமல்லாது எல்லா உலகங்களையும் சுட்டுப் பொசுக்கும் வல்லமையைப் பெற்றிருப்பதாகவும், ஆனால் அப்படிச் செய்தால் அது இராமனின் வில் வீரத்திற்கு இழுக்காகும் என்பதனால் செய்யாது விடுவதாகவும் அனுமனிடம் கூறுகிறாள்.
அல்லல் மாக்கள் இலங்கையதாகுமோ எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினாற்சுடு வேனது தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசுஎன்று வீசினேன்.
என்கிறாள் சீதை. இராமர் அரக்கர்களைக் கொல்வதாகச் சபதஞ் செய்திருக்கிறார். அதுவும் என்னைச் சிறையெடுக்கு முன்பாகவே சபதஞ் செய்திருக்கிறார். அச்சபதத்தை அவர் நிறைவேற்றுவதற்குச் சந்தர்ப்பம் கொடுக்க

Page 142
வேண்டும். இல்லாவிட்டால் இராமரின் வில்லுக்கும் இழிவு. சொல்லுக்கும் இழிவு. அதனாற்றான் நான் இராவணனாதியரைக் கொல்லவில்லை என்கிறாள் சீதை.
இவைகளிலிருந்து, எக்காரணம் கொண்டும் இராவணனை இராமன் மன்னிப்பான் என்றோ, கொல்லாது விடுவான் என்றோ எதிர்பார்க்கவே முடியாது. தூதிலே உரைத்தவைகளும், போர்க்களத்திலே புகன்றவைகளும் சம்பிரதாய வார்த்தைகளேயன்றிச் சத்திய வாக்குகளல்ல என்பது தெளிவாகின்றது.
இராவணனை இராமன் சிறைப் பிடித்திருந்தால் இராவணனைக் கொல்ல முடியாது. அதனால்தான் சிறைப்பிடிக்கவில்லை என்பது இப்போது புலனாகின்றது.
வாலியை இராமன் கொன்றதும் இந்த வகையைச் சேர்ந்ததே. வாலியைக் கொல்வதாகச் சுக்கிரீவனிடம் இராமன் உறுதியளித்து விட்டான். வாலியோடு நேராகப் போர் செய்தால் அவனைக் கொல்ல முடியாது என்பதாலேயே மறைந்திருந்து கொன்றான்.
ஆானல், இராமர், இராவணனை அன்றே ஏன் கொல்லவில்லை. “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என ஏன் அனுப்பி வைத்தார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, இராமாயணத்தில் வருகின்ற ஒரு கிளைக் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
இன்று போய் நாளைவா
இராமரின் மூதாதையர்களில் ஒருவன் அனரண்ய ராஜன். இவன் ஒரு பெரிய யாகஞ் செய்து கொண்டிருந்தான். பெரும் தவவலிமை பெற்ற இராவணன், எல்லா மன்னர்களையும் வெல்ல வேண்டும் என்ற ஆசையினால், திக்கு விஜயம் செய்து அயோத்திக்கும் வந்தான்.
அனரண்ய ராஜனை அறைகூவிப் போருக்கு அழைத்தான். யாகத்தைச் செய்து கொண்டிருந்த அனரண்ய ராஜன் அரை குறையிலே யாகத்தை நிறுத்தி விட்டுப் போர் செய்ய விரும்பவில்லை.
அதேவேளையில், அறைகூவலை அலட்சியப்படுத்துவது, சத்திரியனுக்கு அவமானம் என்பதை உணர்ந்து கொண்டு, இராவணனோடு போர் செய்தான். போரில் அனரண்ய ராஜன் எல்லா ஆயுதங்களையும் இழந்து நிராயுதனாக நிற்கிறான். அதாவது இராம இராவண யுத்தத்தில் இராவணன் நின்ற நிலையில், அப்பொழுது இராமரின் மூதாதையாகிய அனரண்ய ராஜன் நின்றான்.
அப்பொழுது இராவணன், அனரண்யராஜனைப்பார்த்து, "நீ என்னோடு போர் செய்ய விரும்பினால் சகல ஆயுதங்ளோடும் சகல ஆயத்தங்களோடும் நாளை வா. அதாவது இன்று போய்ப்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

போர்க்கு நாளை வா, அல்லது தோல்வியை ஒப்புக் கொண்டு நாட்டுக்குத் திரும்பிச் செல். உன்னைக் கொல்வது எனது நோக்கமல்ல. நான் உனக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறேன்" என்று அகங்காரத்துடன் கூறினான்.
ஆனால் அனரண்ய ராஜனோ வெறுங்கையோடு, தோல்வியைச் சுமந்து கொண்டு, யாகத்தைக் குறையில் விட்டு விட்டு, நாடு திரும்புவதைப் பெரும் அவமானமாகக் கருதினான். அதனால், “எனது பரம்பரையிலே ஒருவன் பிறந்து, இதற்குப் பழி தீர்ப்பான், இதே அவமானத்தை நீ அடைவாய்” என்று சாபமிட்டு விட்டு, யாக நெருப்பிலே வீழ்ந்து உயிர்நீத்தான்.
இது இராமாயணத்தில் உத்தர காண்டத்திலே சொல்லப்படுகின்ற ஒரு கதை. இப்பொழுது காட்சி மாறுகிறது. இராமனின் மூதாதையான அனரண்ய ராஜன் நின்ற அதே நிலையில், அவனை அவமானப்படுத்திய இராவணன் நிற்கிறான். இப்போது இராமரின் கடமை என்ன? சிறைப்படுத்தலா? அல்லது கொல்லுதலா?.
இராவணன் அனரண்ய ராஜனைக் கொல்லாது விட்டது போல, இராமனும் இராவணனைக் கொல்லாது உயிர்ப் பிச்சை வழங்குகிறான். இராவணன் அன்று கூறிய அதே வார்த்தையை இராமன் இப்பொழுது இராவணனுக்குச் சொல்லிக் காட்டுகிறான்.
“இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என இராமன் ராவணனை ப்பிய காரணம் ான்.
து த للإلك
தோல்வியின் அவமானத்தைத் தாங்க முடியாத மானஸ்த்தனான தன்மான வீரன், அனரண்ய ராஜன், அக்கணத்திலேயே உயிர்நீத்துப் புகழ் பெற்றான்.
ஆனால், கார்த்தவீரியார்ச்சுனனாலும் வாலியினாலும் இருதடவைகள் கர்வ பங்கப்பட்டுத் தோல்வியடைந்தும், உயிரைப் பெரிதெனப் பேணிய இராவணன் அவமானத்தைத் தாங்கிக் கொண்டு, மறுநாள் போருக்கு வருவதற்காக தொடர்ந்துபோம் பழியினோடும் தூக்கிய கரங்களோடும் தலை கவிழ்ந்தவனாக நடந்து போய் நகரை அடைந்தான்.
இராவணனும் பூளைப் பூவும்
இராவணனை இராமன் நிராயுதனாக்கி
ஆளையா உனக் கமைந்தன, மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை”
என்று கூறுவதற்கும் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றுண்டு. அதைத் தெரிந்து கொண்டாற்றான் இக்காட்சியின் மகத்துவமும் கம்பனின் கவித்துவமும் தெரியவரும்.
பொன் மானாக வந்த மாரீசனைத் தொடர்ந்து இராமன் சென்றான். இராமனுக்கு ஆபத்து என நினைத்து இலக்குவனை அனுப்பிய பின் தனது பர்ணசாலையில் தனிமையில் இருக்கிறாள் சீதை.
126

Page 143
அப்போது கிழப் பிராமண வடிவாகச் சிவனடியாரின் திருக்கோலத்தோடு வந்த இராவணனைச் சீதை, உண்மைத் தவமுனிவன் என நம்பி அழைத்துச் சென்று ஆசனத்தில் இருத்தி உரையாடுகிறாள். அப்போது அம்மாய முனிவன், தான் இராவணனின் அரண்மனையிலிருந்து வருவதாகச் சொல்லி இராவணனது பெருமைகளையெல்லாம் எடுத்துரைக்கிறான்.
இராவணனின் பெருமைகளை அக்கபடவேடதாரி கூறுவதாலும், சீதை இராவணனை அரக்கன் என்று ஏசி, அவன் தனது கணவனாலே கொல்லப்படுவான் என்றும் கூறுகிறாள்.
இப்படி வாக்கு வாதம் நடக்கும்போது, அற்ப மனிதர்கள், மூவுலகையும் ஒருங்கே ஆளும் முக்கோடி வாழ்நாளுடைய இராவணனை வெல்ல முடியுமோ எனக் கேட்கிறான் இராவணன்.
கரன், தூஷணன் முதலியோரும், விராதனும் இறந்ததை நீயறியாயோ. இராவணன் முதலியோர் இறப்பதும் நிச்சயம். அதை நாளையே கண்டு கொள்வாய் என்று சீதை கூற, இராவணன் கோபத்தினாலே சொந்த வடிவாகி நின்றான். தனது அரக்கக் கோலத்தோடு நிற்கும் அவன் சீதையிடம் தனது வீரதீரப் பிரதாபங்களைச் சொல்கிறான்.
அப்பொழுது சீதை “நீ பெரிய வீரனாக இருந்தால் எனது கணவன் நிற்கும் போது வந்து உன் வீரத்தைக் காட்டியிருக்க வேண்டும். அல்லது இளையவன் இலக்குவன் நிற்கும் போதாவது வந்திருக்க வேண்டும். தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் வந்து வீரம் பேசும் நீயா வீரன். உன்னைப் பற்றியும் உன் படைபலத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொண்ட பின்தான் உன் தங்கையின் மூக்கை இலக்குவன் அறுத்தான். எதிர்த்து வந்த உனது தம்பியாகிய கரன், தூஷணன் முதலானவர்களின் பெரும் படையைத் தனி ஒருவனாக நின்று இராமரே கொன்றழித்தார். அந்த வீர ராகவனுக்குப் பயந்து மாறுவேடத்தில் வஞ்சனையால் கவர வந்த நீயா வீரன்” என்று ஏசுகிறாள்.
சீதையின் கோபவார்த்தைகளைக் கேட்ட இராவணன், மிகவும் கோபத்தோடு சீதைக்குச் சொல்கிறான்:
சிறினன் உரைசெய்வான் அச்
சிலை வலிப் புல்லியோர்கட்கு ஈறுஒரு மனிதன் செய்தான்
என்று எடுத்து இயம்பினாயேல் தேறுதிநாளையே அவ்
இருபது திண்தோள் வாடை வீறிய பொழுது பூளை
வீயென வீவனன்றே.
கம்பன் மலர் - 2000

“கரன் தூஷணன், விராதன் முதலியோர் விற்றொழிலில் ஆற்றலற்ற அற்பர்கள். அவர்களை தனிஒருவனாக நின்றுஇராமன் கொன்றான் என்று அவனின் வீரத்தைப் பெரிதுபடுத்திக் கூறுகிறாய்.
பெண்ணே!இக்காட்டிலே பூத்திருக்கின்ற அற்பப்பூளைப் பூக்களைப் பார்த்திருப்பாய். காற்றடிக்கும் போது, அப்பூளைப் பூக்கள் காற்றிலே அள்ளுண்டு போவதையும் பார்த்திருப்பாய். நீ கூறியபடி நாளையே நீயே காண்பாய். எனது இருபது வலிய தோள்கள் அசையும் போது தோன்றும் காற்றிலே உனது கணவனும் மானிடனுமான இராமன் பூளைப்பூப்போலாகி விடுவான். இறந்துவிடுவான்” என்கிறான்.
இப்பொழுது யுத்த களத்திற்கு வந்து இராமரின் கூற்றைப் பார்ப்போம். “ஆளையா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை” என்று இராவணனைப் பார்த்து இராமன் சொல்லுகின்ற பொருத்தப்பாட்டைக் காண்போம்.
'இராவணா என்னோடு எதிர்த்துப் போர் செய்ய நீ எந்த ஆயுதங்களைக் கையாளப் போகின்றாய். உனது ஆயுதங்கள், வீரம் எல்லாம் காற்றினாலே அடித்துச் செல்லப்பட்ட பூளைப்பூவைப் போலப் பறந்து போனதை நீயே உன் கண் கூடாகக் கண்டு விட்டாய்” என்கிறான் இராமன்.
பூளைப் பூவைக் காற்று அடித்துச் செல்லும் உவமானத்தை இராவணன் முதலில் பயன்படுத்தி இராமனை இழிவுபடுத்தி"நாளையே காண்பாய்” எனச் சீதையிடம் கூறினான்.
இராமனும் இதே உவமையைப் பயன்படுத்தி "மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை" என்று செயலிலேயே காட்டி விடுகிறான். மாருதம் என்றால் காற்று.
இராவணன் இந்த உவமானத்தைக் கூறி இராமனை இழிவுபடுத்தியது சீதைக்கு மட்டுமேதான் தெரியும். இப்போது இதே உவமானத்தை இராவணனுக்குச் சொல்லிக் காட்டுகிறான் இராமன்.
இராமன் இதைத் தெரிந்து வைத்துக் கொண்டு சொல்லவில்லை. ஒரு உவமானத்துக்காகவே தான் சொல்லுகிறான். நீண்டநாட்கள் காட்டிலே திரிந்த இராமனுக்கு, இந்த உவமைக்கும் இராவணனின் நிலைக்கும் உள்ள பொருத்தப்பாடு நன்றாகத் தெரிந்திருந்ததால் சொல்கிறான்.
இதுமட்டுல்ல, இராவணன் முதலான அரக்கர்கள் இறந்து போகப் போவதை நாளையே காண்பீர் அன்றே” என்கிறாள்
சீதை. அதற்குப்பதிலாக இராவணன் “தேறுதிநாளையே’
127

Page 144
என்கிறான். யுத்த களத்தில் இராமனும் “இன்றுபோய்ப் போர்க்கு நாளைவா’ என நாளையப் பொழுதையும் ஞாபகப்படுத்தி விடுகிறான்.
ஆனால், இரு சந்தர்ப்பங்களிலும் இராவணன் சம்பந்தப்பட்டதால் இராவணனுக்கு இந்த உவமானத்தின் தாற்பரியம் புரிகிறது. அவமானம் ஆட்கொள்கின்றது. இதனைக் கேள்விப்பட்டால் சீதை சிரிப்பாளே என்று நினைத்துக் கொண்டு நடந்து செல்கிறான் இராவணன் என்று காட்டுகிறான் கம்பன்.
வானகு மண்ணுமெல்லாம் நகும்
நெடு வயிரத் தோளான் தானகு பகைவரெல்லாம் நகுவர்
என்று அதற்கு நானான் வேனகு நெடுங்கட் செவ்வாய் மெல்லியல்
ligio60 fig, சானகிநகுவள் என்றே
நானத்தான் சாம்புகின்றான்.
என்று இதனைக் கம்பன் கவியிற் காட்டுகிறான். வானத்திலேயுள்ள தேவர்கள் தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தைக் கண்டு சிரிப்பார்களே என்றோ, பூமியிலே உள்ள மனிதர்களும் முனிவர்களும் சிரிப்பார்களே என்றோ தன்னாலே பரிகசிக்கப்பட்ட பகைவர்களெல்லோரும் சிரிப்பார்களே என்றோ
இராவணன் வெட்கப்படவில்லையாம்.
ஆனால், எதனை நினைத்து வெட்கப்பட்டான் என்றால்,
வேலினும் கூர்மையான நீண்ட கண்களைக் கொண்ட
மென்மையான இயல்புகள் பொருந்திய சீதை (சானகி) சிரிப்பாளே
அகில இலங்கைக் கம்பன் கழகம்

என்றுதான் நாணத்தினாலே பெருந்துன்பமடைந்தான் இராவணன் என்று கம்பன் பின்னாலே காட்டுவதற்கு மேற் சொன்ன விடயங்களே காரணமாயமைந்தன.
இப்பாடலிற் கூட சீதையை இராமனின் மனைவி யாகவோ, அயோத்தி அரசனின் மருமகளாகவோ காட்டாமல் மிதிலை வந்த எனக் காட்டி இராவணனின் மனோநிலையை விளக்கியிருக்கிறான் கம்பன். அது மட்டுமன்றி சீதை' என்ற பெயரைப் பயன்படுத்தாமல் ஜனகனின் மகள் என்ற பொருளில் சானகி என்ற பெயரையே கம்பன் பயன்படுத்துவதையும் கண்டு களிக்கலாம்.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்த உவமானத்தைக் கம்பனே தான் காட்டுகிறான். அனரண்ய ராஜனும் இராவணனும், பின் சீதையும் இராவணனும் என நடந்த சம்பவங்களை மிகப் பொருத்தமாகக் கொண்டு வந்து இராம இராவண யுத்தத்தில் பொருத்திக் காட்டும் திறன் கம்பனுக்கே கைவந்த கலை. இப்போது பாடலை மீண்டும் பார்ப்போம்.
ஆளையா உனக்கமைந்தன மாருதம் அறைந்த பூளையாயினகண்டனை இன்றுபோய்ப் போர்க்கு நாளைவா எனநல்கினான்.நாகிளங் கமுகின் வாளைதாவுறு கோசலநாடுடை வள்ளல்
இவ்வகையாகப் பொருத்திக் காட்டும் வித்தையிலே கம்பன் அதிவித்தகன். இராம காதையை 'நூல் படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்த” தமிழ்த் தாய் நோற்றுப் பெற்றெடுத்த கம்பனின் கவித்துவம் இது. கம்பனின் தனித்துவமும் இதுவே. மகத்துவமும் இதுவே.
128

Page 145
னே தெய்வம்' என்ற நம்பிக் பூமியில், தாங்கள் மானுடர்கள்
அவ்வாறு வலம் வந்தவர்களும் அவளுக்குச் சீதை என்று பெயர்.
"பெருந்தெய்வம்” என்று பிறர் விய மஞ்சனை வைதேனே”என்று எண்ணி எண்
மாமிச மானுடத்தோல் போர்த்து பிரியவேண்டி வந்துவிட்டதால் ஏற்பட்ட சோக பொதும்பரிடைப் போகச் செய்துவிட்டன.
நல்லவேளை. அப்போது நிகழ்ந்
காத்துவிட்டது. அவன் வாயிருந்து பிறந்த நேராமற் பார்த்துக்கொண்டது.
உயிருதவிய அநுமனை உண்மைத் எப்படிக்கு அறிதி?” என்று ராமன் உடல்நல
தன் நலத்தை மற்றவர்கள் விசாரிக் கொண்டிருந்த வேளையில் தன் நாயகன் உச்சிமேற் கொள்ளத்தக்கது. அது, மனைத்
அந்தப் பெருந்தக்க பெண்மையின் ஒவ்வொன்றாக வர்ணிக்கும்படிதூண்டிற்று. வார்த்தை நீர் வழங்கவேண்டி அநுமன் வர்
மழை தொடங்கிற்று. அநுமன் ( சொல்லப்புகுந்த அவ்வடி, சாதாரணமானதல்
மற்ற அங்கங்கள் ஏங்கி நிற்கும்படி கல்லாயிருந்த ஆரோ ஒர் அகலிகைக்கே வ போவானா?” என்று கேட்டுச் சீதைக்குத் ெ
 
 

ராய்ந்த சால்வன்மை
கையோடும், பிரகடனத்தோடும் திரியும் மானுடர்கள் மலிந்துவிட்ட தாம் என்று எண்ணிக்கொண்டு, தெய்வங்கள் உலாச்செய்ததுண்டு.
ர் ஒருத்திக்கு, அசோகவனத்திற் சிறையிருக்கும்படி நேர்ந்துவிட்டது.
பந்தபோதும், "வஞ்சனை மானின் பின் மன்னனைப் போக்கி என் ணி வருந்தும் பேதைமை மிக்கவளாகவே அவள் இருந்தாள்.
விட்டதால் இயல்பாக வாய்த்த மயக்கமும், பிரிய நாயகனைப் மும் ஒன்று சேர்ந்து அவளைத் தற்கொலை எண்ணத்துடன் மாதவிப்
த உத்தமன் அநுமனின் வருகை, அறத்துக்கு வடு ஏற்படாமற் ாம என்னும் வார்த்தை சீதையை உயிர்ப்பித்து உலகுக்கு அந்திமம்
தூதன்தான் என்று ஐயத்தின் நீங்கித்தெளிந்தபின் ஐயன் மேனி ம் அறியச் சீதை அவசரப்படுவாள் ஆயினாள்.
5க வேண்டிய நிலையில் - அந்நியச் சூழலில் - நிதம் அல்லற்பட்டுக் பற்றிய சீதையின் நலவிசாரிப்பு உண்மையன்பிற்கு உதாரணமாக தக்க மாண்புடைமை.
ஏக்கம் பலசொல்லக் காமுறாத அநுமனையேராமனின் அங்கங்களை பிரிவுப் பாலையிலே பரிதவித்துக் கொண்டிருந்தவளுக்கு 'ஆறுதல் ணனை மழையையே பொழிவானாயினான்.
முதலில் ராமனின் அடி பற்றி மொழியத் தொடங்கினான். அவன் ல, அகலிகைக்கு வாழ்வு கொடுத்த திருவடி.
ாக, திருவடிக்கு அநுமன் கொடுத்த முதலிடம், “மனதோடு உடம்பும் ாழ்வு கொடுத்த ராமன் தன்னுயிராகிய உனக்கு வாழ்வளிக்காமற் தம்பு சேர்ப்பதாயிற்று.
129

Page 146
தவிரவும், அநுமனின் ராமவர்ணனை மானுடர்களை வர்ணிப்பது போலத் தலையில் இருந்து ஆரம்பிக்கும் கேசாதிபாதமாக அல்லாமல் பாதாதிகேசமாக அமைத்து,''பூரீராமன் தெய்வந்தான்” என்ற தெளிவையும் கொடுப்பதாயிற்று.
இதை, அடிமுதல் முடியின் காறும் அறிவுற அநுமன் சொல்வான்’என்ற கம்பனின் வரிகளே நிரூபணம்செய்யும். இங்கு அறிவுற' என்று கம்பன் குறிப்பிட்டது, “இராமன் மானுடமல்ல தெய்வம்” எனும் உண்மையறிவைச் சீதை உறும்படி அநுமன் சொன்னான் என்பதை விளக்கிநிற்கிறது.
ழநீராமன் தெய்வந்தான் என்பதைச் சொலல்வல்லன் அநுமன் உணர்த்த, குறிப்பிற் குறிப்புணர்வாளாய சீதையும் புரிந்து கொண்டுவிட்டாள். இனி, அவளும் தெய்வமே என்பதை அறிவிக்க வேண்டிய தேவையோடு வர்ணனையைத் தொடங்கிய அநுமன் “சேணுளோர் தாமரை என்று ராமனின் திருவடியை ஏயினர்” என்பானாயினான்.
படியெடுத்துரைத்துக் காட்டும் படித்தன்று படிவம் பண்பின் முடிவுள உவமமெல்லாம் இலக்கணம் ஒழியும்”
என்று, இராமனின் உருவத்தை ஒப்பிடப்புகும் உவமையின் கையாலாகாத்தனத்தைப் புரிந்துகொண்ட அநுமனே, திருவடி வர்ணனையின் தொடக்கத்தில் “தாமரை” என்று பிறர் மொழியும் உவமையைக் கூறியுள்ளான்.
எத்தனையோ உவமைகள் இருக்கவும் அவற்றை யெல்லாம் நிராகரித்துவிட்டு, “சேண் உளோர்’ சொல்லிய “தாமரை”யை அநுமன் தானெடுத்து முதலாவதாக மொழிந்தமை - அதன் துணை எளியது இல்லை” என்பதை அறிந்திருந்தும் அதை எடுத்துச் சொன்னமை சிந்திக்கத்தக்கது.
ராமன் அழகின்முன் உவமைகள் எல்லாம் ஊமைகளாந் தன்மைய என்பதை உணர்ந்திருந்த அவனைப் பொறுத்தவரை, தாமரை” என்ற சொல் சீதையின் செவிகளில் விழுதலே போதுமானதாகும். வேறொரு பயனும் அவனுக்கு வேண்டியிருக்கவில்லை.
அதுவே, மானுடமாய் மயங்கியிருக்கும் சீதைக்குத் தெளிவேற்படுத்தப்போதும் என்று கருதியிருக்கிறான் போலும்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

பழைய நிகழ்ச்சிகளை மறந்துபோய் இருப்போர்க்கு ஏதேனும் ஒர் அடையாளப் பொருளைக் காட்டுதலோ, அடையாள வார்த்தை கூறுதலோ நிகழ்ச்சி முழுமையையும் ஞாபகம் செய்துவிடும் என்பதை என்பதைப் புரிந்தவன்அநுமன்.
எனவேதான், திருமகளாய்ச் செந்தாமரையில் வீற்றிருந்து, பின் வான்நின்றிழிந்து அசோக வனத்தில் வருந்திக் கொண்டிருந்த சீதைக்குப் பழையதை ஞாபகம் செய்யவென ஓர் அடையாளம் சொல்ல விரும்பிய அநுமன் அதையே ராமன் திருவடிக்கு முதல் உவமையாக ஆக்கிவிட்டான்.
உவமைகளாற் பயனில்லை என்று ஒட்டுமொத்தமாகத் தான் கூறிவிட்ட பின்னும், பிறர் சொல்வதாகத் தாமரையை மொழியப் புகுந்த அவன் சீதைக்கு ஞாபகம் செய்வதற்காக அதனைச் “சேயிதழ்த் தாமரை” என்று சிறப்பிப்பான் ஆயினான். சேயிதழ் - சிவந்த இதழ், சேயிதழ்த்தாமரை - செந்தாமரை.
"சேயிதழ்த் தாமரை என்று சேணுளோர் ஏயினர் அதன்துணை எளிய தில்லையால் நாயகன் திருவடி.”
அநுமனின் இந்த ஆராய்ந்த சொல்வன்மை, சீதைக்குத் தனது பழைய இருப்பிடமாகிய செந்தாமரையையும் அதனோடு தொடர்புபட்டு அவளின் தெய்வ நிலையையும் ஞாபகம் செய்தது. அவள் விளக்கம் பெற்றாள்.
ஒரேயொரு உவமம் - உவமிக்க இலக்கணம் ஒழியக்கூடிய உவமம், சீதையின் உள்ளத்தினது மறைப்புத் திரையை விலக்கியதுதான் தாமதம் எல்லாக் காட்சிகளும் அவளுக்குத் தெரியத் தொடங்கிவிட்டன. தானும் தெய்வம் என்னும் உண்மை புலனாயிற்று.
ஆதலால், இறத்தலே அறத்தின் ஆறு”என்று முன்பு எண்ணியபடி மாதவிப் பொதும்பரிடைப் போன சீதை, எல்லைநித்த உலகங்கள் யாவும் என் சொல்லினாற் சுடுவன்’ என்னும் மகாவாக்கியத்தைச் சொல்லுவாளாயினாள்.
மானுடம் என்று எண்ணியிருந்த சீதையின் மெய் தீண்டக்கூசிய அநுமனும், அவள் தன்னைத் தெய்வமென உணர்ந்து கொண்ட பின்பு அடியேன் தோள் ஏறிஆறுதுயர்'என்று விண்ணப்பிக்கும் துணிவு பெறுவானாயினான்.
130

Page 147
கால நதியலைய
வாழும் கவிதை ஞாலப் பசிதணி பாலன்யானுன்
ep. . . . . . . . HL{ நாளைக் கழிக்கி சீலக் கவிஞனெ
பாவலனாய் மா
பத்தாயிரம் பாட் அர்த்தமுடன் ே வித்துவத்தின் உ பொத்தி ஒளித்து சத்தத்தின் நுட்ப கர்ப்பமுறச் செய தைத்தாய் வரல
சித்து விளையா
சோழரது காலத் தாழ்ந்த தமிழ்ச்ே பால்குடித்து உந் ஏணிவைத்தும் 6 கோளப் புவியி ஆழ்ந்த கவிச்சுை நாளையெது மா
வாழ. என்றும்
 

கம்பன் VVV VW vytvy vry T
த.ஜெயசீலன்
பிற் கரையாத கல்வெட்டாய் களை 'வடித்து. உருசி கலந்து க்கும் ஞானவானே. கம்ப நாடா ! பாட்டுப் பரம்பரையில் வந்தும். நின் டமுடியை அறியா வியப்பினிலே ன்றேன். உன்முன்னே நானென்னைச் னச் செப்பும் துணிவுமின்றிப்
ற்றென்றுன் பாவடியைச் சரணடைந்தேன்.
ட்டைப் பரவும் சரயுவைப்போல் கார்த்தாய், அணி நடை யால் நடக்க விட்டாய் ண்மை விலாசத்தைப் பாத்தி(ர/ற) த்துள் து அணுக - விரியும் புதிரானாய்! த் தரிசனத்துள் அறக்கருத்தைக் பதாய் விழுமியத்தைக் கலையாக்கித் மாற்றில் வாடாத் தமிழ்படைத்த ட்டால் சிரஞ்சீவி ஆகிவிட்டாய்!
தின் சுடர்விளக்கு நீயெல்லா? சேயன்று உண்டதாய்ப்பால் நீயெல்லா? தன் பரவணியில். பின் வந்தோம் ாட்டாத கவிப் பிரம்மன் நீயெல்லா? ல்நாமும் மார்தட்டிக் கொள்ளவல்ல வையின் அமுத ஊற்றும் நீயெல்லா? றினாலும். நம் வாழ்வின் சாரங்கள்
வரம்நல்கும் 'புனிதவளம் நீயெல்லா?
131

Page 148
தேன்தமிழுக்கு ஏற்ற திருத்தங்கள் மானுடத்தைப் பாடிநின்றாய்? ம6 மானிடனின் விம்பமாக்கி மண்ன "மாண்புகழாள் ஜானகியை "மான் கானகத்தான், பட்சிராஜன், 'கல்ல வானரணும். சமமென்று சோசலி தான்சொன்ன சொல்லுக்குத் தானே
சான்றோனாய். அன்று சடை
எத்தனை விமர்சனங்கள்? எத்த6ை எத்தனை புகழ்புளுகல்? எத்தனை அத்தனைக்குப் பின்னும் அசையா கற்பை நினைக்கிறேன்; நின் கத 'பாக் கற்பகமே உந்தன் கனி, கிழ அற்ப அறிவுடையோர், உருசிஅ நுட்ப அறம் புரியாது நுனிப்புல்ை
பற்றி நினைக்கையில் தான் நான்
விண்மீனின் தூரத்தை விளங்கிடல புல்லறிவால் முடியாதே! அதைப் உன்முழுமை கண்டறியப் பொய்ன கொண்ட எம்மால் ஏலாது! ஏனென் “மன்னவனும் நீயோ? என்றிருந்து மன்னவனாய் நின்றவன் நீ! மனநி தென்றலெனச் சுதந்திரமாய்ச் சென்
உண்மையுடன் வாழச் சுகந்துறந்த
உன்னுறவைப் பெற்று உயர்ந்தோ உன்னுறவு. மனிதத்தை 'உரைத் இன்பத்தில் எந்தன் இருதயத்தை என்று தேர்ந்தேன் வணங்குகின்றே உன்னினிய சாரலிலே உயிர்சிலிர்; விந்தை விருட்சத்தை விளைவிக்க மைந்தர்க்குக் கவியருளைப் பாய்ச்
உன்நிமிர்விற் கொஞ்சம் எங்களுக்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

செய்தெல்லோ ானவனை, விண்ணவனை
ணப் படிக்க வைத்து, * புகழால் நிரூபித்து, ானாள், நல்லசுரன் Fம் அன்றுரைத்துத் ன பொருளான
யனுக்கும் முடிதரித்தாய்
ன எதிர்வாதம்?
பிரமிப்பு? மல் நிற்குமுன் பொற் கதப்பிற் குளிக்கிறேன்; pங்கை சுவைக்கேலா. றிய. நாக்கிலாதோர். ல மேய்பவர்கள்.
பற்றி எரிகின்றேன்!
ாம்;. அதை அடைய போல் தான் புகழ்மலையே, மை முகம், போலிமனம் ன்றால். கொள்கை வாழ்வாய் து ஆன்மிகத்தில் மிர்வால் வென்றவன்நீ! ாறவன்நீர் மானமுள்ள
வானவன்நீ!
ரை நான் கண்டேன்!
து. பரவசப் பேர் த் திளைக்க வைக்கும் ]ன்! “ஈடில்லாக் கவிமழையே. துே. கவிதையென்னும்
ஏங்கும் உந்தன்
சு; வளர்த்துவிடு!
குப் பிச்சையிடு.
கல்லானாள் - அகலிகை, நல்லசுரன் - வீடணன்.
132

Page 149
லங்கடந்து நிற்றல், கடவுளுக் நல்ல கவிதைகளைப் படைத் உண்மை வானளவு விரிவை
இலக்கியத் தோட்டத்தில் அன்றே மலர்ந்து அ படைத்தவன் கம்பன்; கவிதை யாத்திரை "சொல்லுக்குள் வாக்கியத்தைச் சு கைவண்ணங்கள் விரிக்கிற் பெருக்கும்.
தமிழச்சாதி அமரத்தன்மை ஏற்படுத்திய அத்துணைப்பெருங்கவிஞன்கருத்தை, விளக்குவதே இக் கட்டுரையின்
ஆரண்ய காண்டத்தில் இலங்ை படலத்தின் முதற்பாடல், கோதாவரி என்னு
புவியினுக்கு (6)ւյոց அவிஅகத்து ஐந்தி சவி உறத் த்ெ ஒழுக் கவி எனக் கி
ausfluí
இதுவே கோதாவரி நதி பற்றிய கம்பனது ப
நிலமகளுக்கு ஒர் அணிகலனாய், உடையதாய், அவியுணவு கொடுக்கும் வேள் விளங்கும் தெளிவினை உடையதாகி, குளி விரையும் வீரர்களான இராம, இலக்குவர்க
 
 

தாவரி நதியும் ன்றோர் கவியும்
க.ஜெயநிதி
$கு மட்டுமன்றிக் கவிஞர்க்கும் உரிய குணமாம். காலத்தால் அழியாத த கவிஞர்கள், இறந்தும் வாழ்கிறார்கள். கம்பனைக் கற்போர் இந்த தக் காண்பர்.
அன்றே வாடும் மலர்களுக்கு மத்தியில், என்றும் மணம் வீசும் வாடாமலர் யின் ஏராளமான படிக்கற்களுக்கு மத்தியில் ஒரு மைல்கல்லவன்; ருக்கி வைத்த கவிப்புலவன். கவிதைக் கலையில் அவன்
வாய்ந்தது என்ற நம்பிக்கையைப் பாரதிக்குத் தன் கவிதையால் -'கவிச்சக்கரவர்த்தி’, நல்ல கவிதை பற்றிக் கொண்டிருந்த உயரிய நோக்கம்.
கயர்கோன் தங்கை, வஞ்ச மகள்' சூர்ப்பணகை அறிமுகமாகும் ம் தெய்வத் திரு நதியின் பொலிவைப் பாடவிழைகிறான் கம்பன்:
அணியாய், ஆன்ற நள் தந்து, புலத்திற்று ஆகி, /றைகள்தாங்கி, ணை நெறிஅளாவிச் 1ளிந்து, தண் என்று கமும் தழுவிச் சான்றோர் டந்த கோதா னை வீரர் கண்டார்’
டல்.
சிறந்த பொருள்கள் பலவும் கொடுத்து, விளைநிலங்களைப் பக்கத்தே வித் துறைகளைக் கொண்டதாய், ஐவகை நிலங்களைச் சேர்ந்து, ஒளி ந்த நீரோட்டத்தோடு ஓடி வரும் கோதாவரி நதியை, வனம் நோக்கி ள் காண்கிறார்கள்.
133

Page 150
அத்துணைச் சிறப்பு வாய்ந்த தெய்வத்திரு நதியைக் கம்பனும் தன் மனக்கண்ணால் காண்கிறான். 'கவிச் சக்கரவர்த்தியின் 'அகக்கண்களுக்கு அந்நதியின் திருப்பொலிவு சான்றோர் தம் கவிப் பொலிவைப் பெற்றுத் திகழ்வது புலப்படவே, "சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி’ என விரிகிறது அக்கவிதை.
சிறந்த அணியிலக்கணம் பொருந்தியதாய், சிறந்த பொருள்களைத் தந்து அறிவினிடத்ததாகி, அமைந்த அகப் பொருளிலக்கணத் துறை வகைகளையுடையதாய், ஐந்து திணைகளின் இலக்கணத்தைத் தழுவி, அழகு மிகும்படி தெளிவினைக் கொண்டதாகி, குளிர்ந்த இனிதாகிய நடையையும் பெற்று விளங்குகின்ற சான்றோர் கவி கம்பன் கைவண்ணத்தால் கோதாவரி நதிக்கு உவமானமாகிறது.
தொல்காப்பியனார் குறிப்பிட்ட வினை பயன் மெய், உரு என்ற நான்கும் பற்றித் தோன்றும் உவமை வகைகளை, தக்க சந்தர்ப்பத்தில் பொருள்களுக்கேற்ப எடுத்துக்காட்டி, கற்றோரும் மற்றோரும் அப்பொருளை நேரே காணுமாறு செய்து சுவை பெறச் செய்வதில் கம்பன் நிகரற்றவன். அழகு சேர்க்கக் கையாளப்படும் அணிகள் கம்பன் கைபட்டதும் அழகுக்கு அழகு சேர்ந்தாற் போலாகிவிடும் அவ்விந்தை காண்பாம்.
மேற்குறிப்பிட்ட பாடலில், கோதாவரி நதிக்குச் சான்றோர் கவியைச் சிலேடை நயம் தோன்ற உவமையாக்கியுள்ளான் கம்பன், “உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை’ என்னும் தொல்காப்பியர் உரைக்கேற்ப, ஒப்புமை சொல்ல வந்த அவன், சான்றோர் கவி என்னும் உயர்ந்த பொருளோடு கோதாவரி நதியை உவமித்துள்ளமை ஈண்டு நோக்கத்தக்கது.
இனி இவ்விரண்டு பொருட்களுக்கும் உரித்தான பொதுத்தன்மைகள் எவை என்பதை விரிவாக ஆராய்வாம்.
இரண்டுமே புவியினுக்கு அணி, கோதாவரி அழகிய பெருநதி, பூமிப் பெண்ணுக்கு முத்தாரம் போல்வது. சான்றோர் கவியும் பல்வகை அலங்காரங்களைக் கொண்டு, உலகத்தில் உயர்ந்தோர் பலராலும் கொண்டாடப்படுவது.
இரண்டுமே ஆழ்ந்த பொருள் உடையன. கோதாவரி நதி பொன்னும் மணியும் அகிலும் ஆரமும் போன்ற சிறந்த பொருட்களையும் மற்றும் மலைபடு திரவியங்களையும் ஆற்றுப் பெருக்கினால் அடித்துக் கொண்டு வருவது. சான்றோர் கவியும், சிறந்த அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருட்களின் திறத்தை உணர்த்தும்; மற்றும் செம்பொருள், இலக்கணப் பொருள், குறிப்புப் பொருள் என்னும் மூவகைப் பொருள்களையும் குறிக்கும்.
இரண்டுமே புலத்திற்று ஆகி வருவன. கோதாவரி நதி தன்னைச் சார்ந்த வயல்களும் விளைநிலங்களும் பயன் பெறுமாறு அமைந்து ஒடும். சான்றோர் கவியும் தன்னைக் கற்போர், அறிவு கொண்டு ஆராய, ஆராய நன்கு புலப்படும் ஆழ்ந்த பொருளைத்தந்து அறிவை வளப்படுத்தும்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

இரண்டுமே அவி அகத் துறைகள் தாங்குவன. கோதாவரி நதிக் கரையில் நெய் பெய்து ஓமத்தீ வளர்க்கும் ஒம குண்டங்களும், வெப்பந்தணிவிக்கும் குளிர்ந்த, மரச் செறிவுடைய இறங்கு நீர்த் துறைகளும் உள. சான்றோர்கவியும் எழுத்து,சொல், பொருள், யாப்பு, அணி என்னும் தமிழிலக்கணமைந்தினுள் பொருளின் பகுதியாகிய அகத்திணையின் களவு, கற்பு ஒழுக்கங்களின் தன்மை கூறும்.
இரண்டுமே ஐந்திணை நெறி அளாவுவன. கோதாவரி நதி குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் என்னும் ஐவகை நிலங்களினூடாகவும் பாய்ந்து வருவது. சான்றோர்கவியும் ஐவகை நிலங்களுக்குமுரிய புணர்தல், இருத்தல், பிரிதல், இரங்கல், ஊடல் என்னும் ஒழுக்கங்களுக்கு அங்கமானவற்றை உரைக்கும்.
இரண்டுமே சவி உறத் தெளிந்தவை. கோதாவரி நதிப் புனல் ஒளி பொருந்திய தெளிவினை உடையது; மிக்க ஆழத்திலுள்ள பொருள்களும் கட்புலனாகும்படி மிகத் தெளிந்திருக்கும். சான்றோர் கவியும் மயங்கவைத்தல் என்னும் குற்றத்திற்குச் சிறிதும் இடமின்றி, அழகுக்கு முழுவதும் இடமாய்ச் செவ்வையாய்த் தெளிந்திருக்கும்.
இவை இரண்டுமே தண் என்று ஒழுக்கமும் தழுவியவை. கோதாவரி நதி இடையறாது குளிர்ந்த நீரொழுக்குடன் கூடியது. சான்றோர் கவியும் என்றும் நல்லொழுக்கத்தை உணர்த்தும்; மெல்லென்ற ஒசையுடன் தட்டறச் சொல்லும் சிறந்த நடைகொண்டு விளங்கும்.
இவ்வாறாக இராம, இலக்குவர்கள் கண்ட கோதாவரி என்னும் தெய்வத் திருநதி, கம்பன் கைவண்ணத்தில் சான்றோர் கவிக்கு உவமிக்கப்பட்டுச் சிறப்புற்றது எனலாம். நுணுகி ஆராய்வோர்க்குக் கம்பன் கவியே அச்சான்றோர் கவிக்கு உவமானமாவதும் புலப்படலாம். இங்கும் தொல்காப்பியரின் “உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை” என்னும் விதி பொருந்தும்.
காரணம் கம்பன் கவியும், சான்றோர் கவிபோலவே புவியுனுக்கு அணியாகும்; ஆன்ற பொருள்தரும்புலத்திற்று ஆகும்; அவி அகத் துறைகள் தாங்கும்; ஐந்திணை நெறி அளாவும், சவி உறத் தெளிந்து; தண் என்று ஒழுக்கமும் தழுவும். இனிவரும் கவிஞர் ஆற்றை வருணிக்கும் கால் “கம்பன் கவி எனக் கிடந்த கோதாவரி’ என்று துணிந்து பாடலாம்.
இற்றைக்கு எண்ணுாறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கம்பன் என்னும் கவிதைப் பெருநதி ஓடிக்கொண்டிருக்கிறது. அள்ளி அள்ளி நம்முன்னோர்கள் எடுத்த பின்பும் தேவைக்கு அதிகமாகத் தருகிறது அந்நதி, எத்துணை ஆழமாகப் போனாலும் அதனினும் ஆழம் காட்டி நம்மனோர்க்கு அறிவின் எல்லையாய்க் காட்சி தருகிறான் கம்பகவி.
134

Page 151
ஓசை பொரு உயிர்த்து நுை வீசுகின்ற சீர6 அத்வைதமா பிறக்கின்ற பத்தாயிரம் ப சித்தருக்கும் அவரவர்க்குத் அகண்டு ஆழ்ந்து நீள்கி நற்றமிழின் ந
வட்டங்கள் நீ மனிதம் சலன திட்டங்கள் ஆ பட்டறைக்கு இருந்தே நீ,
பாட்டெழுத பட்டறிவை வி பகுத்தறிவு பா
பூங்குன்றனார் பொதுமைக் ச வாங்காது மே வேடுவனை குரங்கை, வீட சோதரங்கள் எ பூரித்தாய்!
கொல்லை, மு குப்பையள்ள
 

டறிவு கடந்த பாட்டறிவு
ச. முகுந்தன்
ர் ஒன்றிலொன்று
ரத்தெழுந்து சைக்குள் வீறாப்புக் குறையாமல் க அடங்கிப்
ாட்டுள் பரவெளியைத் தேடுகின்ற அப்பாவிச் சிற்றின்பகாரருக்கும் $ தக்கபடி
lன்ற நவகவிதை வாணா! டுவேரே!
றங்க்ளினால்
வசெய்த பூதிமுதல் திணிபட்ட சமுதாயப் 辽
வந்தாலும் பிஞ்சியுன்றன் ய்ந்தகில எல்லைகளையும் தாண்டி எகிறியது!
fair
கனவுகளை லும் வளமூட்டி உன்திறத்தால்
.ணனை இராமன்றன்
ானவே சொல்லவைத்துப்
>ற்றம் தாண்டி வும் எண்ணாக்
135

Page 152
கல்லறை மனதுகளின் கபாடம் உை அல்லவா நீயுமொரு அயோத்தி ச6
மானிடந் தன் மான்மயங்க அம்மானிடத்தை
தேடியிவன் போன இடத்தில்தானே புதுத்திருட் மானிடத்தைப் பாடவந்த மாகவியே உன்ராமன்
மானிடத்தைத் தேடியதில் மாண்
ஆறறிவும் கூடி அமைந்ததனால் நாங்கள்தான். பூரணங்கள் எனக்கூவிப் புல்லரிக்கும் எங்களுக்கு
பூரணத்தை மானிடத்துள் புகுத்தி நீ படைத்த காரணத்தை உணர்வதுவும் கலியுகத்
காட்டுத்தீ எங்கேனும் கஞ்சி சமைத்ததுண்டா? பாட்டுப் பிழம்பே பாவமந்தச் சே சிம்மாசன மருங்குச் சிறுசாமரை வி உன் சந்த வீச்சை உணரத் தலைப்பட்டான்.
“மன்னவனும் நீயோ?” என்றெழுந்த உன் நிமிர்வு ஒன்றுமட்டும் தானய்யா தூசுதட்டித்
தூசுதட்டி இன்றுவரையும் பீற்ற எம்மினத்துக் தன்னிகரில்லாத் தலைவனினைப் போற்றுவதே காவியங்கள் என்ற கருத்தடங்கல் த மனிதவரையறைகள் மனதின் வரைபடங்கள் தனிமனிதநோக்கு, சமுதாயத்தரிசி புனிதம், பண்பாட்டுப் போர்வை கனதிகளை லாவகமாய் கலந்து மெருகூட்டி வினைத்திட்பம், மனத்திட்பம், வி பாத்திரங்களை இயல்பாய் பரிணாமப்படுத்திய நி பாத்திறத்தை எண்ணுகையில் "படிமங்கள் எப்படியோ' வாசகம்தான் மனதில் வட்டமிட்டு சாசனமே நீதமிழின் சாறு!
அகில இலங்கைக் கம்பன் கழகம்

டப்பதற்கு
மப்பித்தாய்!
பம் வருகிறது.
பென்ன குறைகிறது?
வைத்து
த்தில் சாத்தியமா?
ாழன்தன் ச்சாய்
குதவுகுது!
னைமாற்றி
նւ, என'முரண்பட்ட
தித்திட்டம் இவை ஆய்ந்து
செல்கிறது
136

Page 153
ளங்கோவும் கம்பரும் இளங்கோ அடிகள் ஓர் அ இடைவெளி உள்ளவர்கள். கம்பர் வடித்ததோ சீதாராம அடுத்தவர் சில நூறு ஆண்டுகள் பின்னா வைணவர்.
செந்தமிழ்ச் சாத்தன் கூறக் கேட்டதில் இ ஒவியம்தான் இராமனின்காவியம் தீட்டியவ காவியங்களின் காலமும் இடமு காரணம், இம் மாபெரும் கவிகள் காலத்ை இளங்கோ அடிகள் இல்லற இன்பத்தை இ கவிப் பேரரசர் கம்பர் தெய்வத் திருமக நல்லுலகுக்கும் பெருமை.
கருப்பொருளும் திருப்பொருளும்
ஒரு கவிஞனை மற்றொரு கவி வரிகளையும் வார்த்தைகளையும், சொல்லில் உருப்பொருளை ஒப்பிடும் இம் முறையால் காலத்தால் பிற்பட்ட கவிஞர்களுக்கு எடுத் கவிஞன் காப்பிக் (copy) கவிஞனாகிவிடு தமிழ்க் கடலில் முத்துக் குளிக்கு மொழியின் சிறப்பால் அமைந்தவை. கவி மோதுவதும் முத்தமிட்டுப் பிரிவதும் இயற்ை ஆனால், இருவேறு காலங்களில் இருந்தால் - அதுதான் கவிஞர்களுக்கும் QolLu(U560)L0.
முன்னையது ஒரே உடலில் உ IMPLANTATION) gurgh. g6OTTái), psiri'G6.5iis (ORGAN TRANS PLAN
ஒருவர் உறுப்பை வேறொருவர் ஒற்றுமை இல்லையென்றால் பொருத்தப் அறிஞர்கள் இருவரின் கருப்பொருட்களுக் சீர்மையும், உயிர்ப்பும் உள்ளது. இரு வே
 
 

A767%, 467/7 Z/7%AA/7
டாக்டர் இரத்தின ஜெனார்த்தனன், துறைத் தலைவர், சிறுநீரியல் சிறப்புத்துறை, அரசு பொது மருத்துவமனை, புதுச்சேரி.
சுத் துறவி, கம்பரோ கவிப் பேரரசர். இருவரும் காலத்தால் நீண்ட இளங்கோ யாத்தது கற்பின் செல்வி கண்ணகியின் காவியத்தை, னின் சீர்மிகு காதையை. இளங்கோ அடிகள் காலத்தால் முந்தியவர்; ல் வாழ்ந்தவர். இளங்கோ அடிகள் சமணத் தமிழர்; கம்பரோ தமிழக
ருந்து அடிகளார் கண்ணகியின் காவியத்தைப் பாடினார். சீதையின் ர்வால்மீகி - திருவையும் கருவையும் உள்ளில் ஊடுருவ வைத்தவர் கம்பர். ம் வேறுபட்டன. என்னைப் பொறுத்த அளவில் காலம் பெரிதல்ல. தக் கடந்தவர்கள். இந்தக் கருவூலங்களும் அப்படியே. துறவியான றந்த இரு உயிர்களைப் பாடியதும், சடையப்ப வள்ளலின் நன்றிமறவா ன் இராமனின் காதையைப் பாடியதும், தமிழுக்கும் தமிழ் கூறும்
) நனோடு ஒப்பிட்டுப் பார்ப்பது உரைகல்லாளரின் மரபு. கவிதையின் ண் அழகையும், அதன் கூட்டு விளையாட்டையும் ஒப்பிடுவது ஒருமுறை.
எந்தக் கவிஞனின் புகழும் மேலோங்கிவிடாது. சில நேரங்களில் தாண்டுள்ளார்’ என்ற சிறுமைகூட வந்துசேரலாம். பின்னர் காப்பியக்
TT.
ம் கவி இருவர். எடுத்துவரும் முத்துக்களில் உருவ ஒற்றுமை - தமிழ் நர்கள் மூழ்கும்பொழுது கவித் திவலைகள் ஒன்றொடொன்று முட்டி
5.
மூழ்கி எடுக்கப்பட்ட முத்துக்கள் காலத்தைக் கடந்து உருவ ஒற்றுமை அக்கவிப் பெருமக்களைப் பெற்றெடுத்த மொழிக்கும், மண்ணுக்கும்
ள்ள உறுப்பை சிறிது இடம் மாற்றித் தைப்பதற்கு (ORGAN பிந்தையதோ ஒருவர் உறுப்பை வேறொருவர் உடலில் தைத்து உயிர் TATION) půurgh.
உடலில் பொருத்துவதென்றால் அடிப்படை உயிர் அணுக்களின் கரு ட்ட உறுப்பு உடனே உதிர்ந்து உயிரற்று விழுந்துவிடும். இதுவே கும் சான்றாகும். இந்தக் கருப்பொருள் ஒற்றுமையில்தான் சிறப்பும், று காவியங்களையும் அதனை யாத்த இருபெரும் கவிஞர்களையும்
137

Page 154
ஒப்பிடும் பொழுதும் அவை தாங்கி நிற்கும் மனித நேயக் கருப்பொருள் ஒன்றாக நிற்கவேண்டும். அடிப்படை உயிர் அணுக்களைத் தாங்கி நிற்கவேண்டும்.
நான் இளங்கோவின் கருவை, கம்பரின் திருவோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் இதே அடிப்படையில்தான். அடிகளார் தான் நாட்டிய பாட்டுடைச் செய்யுளான சிலப்பதிகாரத்திற்குக் கருவாயினவை யாவை என்பதைச் சாத்தனிடம் கூறுகின்றார்.
"அரசியல் பிழைத்தோர்க்கு
அறங் கூற்று ஆவதும் உரைசால் பத்தினியை
உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து
ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர்
பாட்டுடைச் செய்யுள்” என இளங்கோவின் கருப்பொருள்
.அரசியல் பிழைத்தோரை அறம் கொல்லும் |ان .பத்தினித் தெய்வத்தைச் சான்றோரும் போற்றுவார் "ولى g). ஊழ்வினை காலம் கடப்பினும் முன்வந்து உறுத்தும். ஊழ்வினை என்ற வேடனின் அம்பாகக் குத்துவது சூழ்வினை. இங்கு, கண்ணகி, கோப்பெருந்தேவி இருவரும் அணிந்த சிலம்புகளே ஊழ்வினை நாடகத்தில் சூழ்வினை நாயகர்கள். கருவும், திருவும் சிலப்பதிகாரம், அடிகளார் யாத்தது; 2 நூற்றாண்டு. இராமாயணம், கம்பர் யாத்தது;9 (அ) 12 நூற்றாண்டு. அரசியல் பிழைத்தோர் கரு - பாண்டியன் - நெடுஞ்செழியன் திரு - இராவணன்
வாலி
உரைசால் பத்தினிகள் சிலப்பதிகாரம் - கண்ணகி, கோப்பெருந்தேவி. இராமாயணம் - சீதை, மண்டோதரி. உருத்து வந்துட்டிய ஊழ்வினை (முற்பிறவி ஊழ்வினை) (முற்பகல் ஊழ்வினை) முற்பிறவி ஊழ்வினை சிலப்பதிகாரம் - கோவலனும் கண்ணகியும் செய்தவை. இராமாயணம் - இராவணன் செய்தவை.
சூர்ப்பணகை செய்தவை. வாலி செய்தவை. இராமன் செய்தவை.
முற்பகல் ஊழ்வினை கோவலன் இல்லறக் கற்பிழந்தவை. பாண்டியன் நெடுஞ்செழியன்.
சிலப்பதிகாரம் - சிலம்பு இராமாயணம் - சூர்ப்பணகைஇழந்தமூக்கு,காதுகள்,மார்பகங்கள்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

அரசியல் பிழைத்தோரும் அறம் கூற்றம் ஆனதுவும்
அடிகளாரின் நெடுஞ்செழியனை, இராமாயணத்தின் இராவணனோடு ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாது. ஆனால், மன்னுயிரைக் காக்கும் மன்னன் செய்யும் தவறு பரிமாணத்தை வைத்தல்ல; அதனால் வரும் விளைவுகளை வைத்தே. இராவணன் முறையற்ற மோகத்தின் வயப்பட்டான். அரசன் என்ற குடிகாக்கும் தர்மத்தினின்றும் வழுவி வேறொருவன் மனைவியைச் சிறையிட்டான். இதன் விளைவு - இலங்கை எரியுண்டது. அவனைச் சேர்ந்த எல்லாமே அழிவுற்றன.
வாலியின் ஊழ்வினை
வாலியும் மன்னர் நீதி மறந்து, உடன்பிறப்பின் நாட்டையும், துணைவியையும் முறையற்று தன்னடக்கப் பொருளாக்கிய காரணத்தால் இறுதியில் தர்மத்தின் வெற்றிக்கு ஊழ்வினைப் பொருளானான். இராமனின் பாணத்திற்குத் தன் இன்னுயிரை ஈந்தான். பாண்டியன் நெடுஞ்செழியன் ஊழ்வினை
பாண்டியன் நெடுஞ்செழியன் தன் இல்லத்தரசியின் மீது காதல் வயப்பட்ட நேரத்தில் பொற்கொல்லன் பொய்யுரை கேட்டு, உணர்ச்சி வழியில், அறிவு நிலை தடுமாறி அரசன் என்பவனின் நிதான தர்மத்தினின்றும் வழுவியதால் கோவலன் கொலையுண்டான். கண்ணகி என்னும் கற்புத் தீ மதுரையை எரித்தது. கற்பு மனைவி கோப்பெருந்தேவி உயிர் துறந்தாள்.
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
சிலப்பதிகார நாயகி கண்ணகி சோழ மண்ணில் பிறந்து பாண்டிய மண்ணில் தன் கற்புக் கனலை வீசி சேர மண்ணில் தெய்வநிலை அடைகிறாள். இலங்கை மன்னன் கயவாகு முன்னிருக்க சேரன் செங்குட்டுவன் கோயில் எடுத்த நிகழ்ச்சியும், கயவாகு இப்பத்தினித் தெய்வத்தின் புகழைத் தென் இலங்கையில் பரப்பியதையும் எண்ணுங்கால் இக் கூற்று புலனாகும்.
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக் கடவுள் மங்கலம் செய்கென ஏவினான் வடதிசை வணக்கிய மன்னவ ரேறன்.
இராமனின் சீதையோ இராவணனின் காமச் சிறையினின்றும் தன்னைக் காத்து மீளும் தறுவாயில் உலகின் பழிச்சொற்களுக்கஞ்சிய இராமனால் பழித்தும் இழிந்தும் பேசப்படும் நிலைக்காளாகிறாள். தன் கற்பின் மேன்மையை நிலைநாட்டல் வேண்டி அன்னை எரி தீயில் இறங்கி நடந்து மீளும் காலை பேருலகில் ஐந்து நிலைகளாலும் வணங்கப்படுகிறாள். ஐந்து நிலைகளில் ஒன்றான தீயினால் அவள் பாராட்டப் பெறுவதே சாலச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
"அங்கியாகி, என்னை இவ் வன்னை கற்பு எனும் பொங்குவெந்தீச்சுடப்பொறுக்கிலாமையால் இங்கு அனைந்தேன்."
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுவது : ஊழ்வினையை இருவகையாகப் பிரிப்பர். முற்பிறவி ஊழ்வினை
முற்பகல் ஊழ்வினை
138

Page 155
பிறவிகளைப் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஆனால், செயலுக்கு விளைவு உண்டு. அதை மறுப்பதற்குத் துணிவு வேண்டும். வெறும் துணிவும் மறுப்பும் மட்டுமே பதிலாகிவிட (plyllissgl. முற்பிறவி ஊழ்வினை
முற்பிறவியில் கோவலனும் கண்ணகியும் வாழ்க்கையில் செய்த ஒரு தீவினையே இப்பிறவியில் ஊழ்வினையாயிற்று என்பது இளங்கோவடிகளின் கூற்று. முற்பகல் ஊழ்வினை
கோவலன், காதல் மனைவியைக் கைவிட்டு நடன மகளைத் தழுவி முறைமாறிய வாழ்க்கையை மேற் கொண்டதால்தான் வறியனாகி வாணிபம் மேற்கொண்டு சென்ற இடத்தில் சூழ்ச்சி வலைக்கு ஆட்பட்டு உயிரை இழக்கிறான்.
இராமாயணத்தில் சூர்ப்பனகை முற்பிறவியில் அரச குமாரியாகப் பிறந்து, உடன் பிறப்பைப் போன்று உள்ளன்பு வைத்திருந்த மந்திரி குமாரன் மீது ஒருதலைக் காதல் வயப்பட்டு, காதல் நிறைவேறாத நிலையில் அம் மந்திரி குமாரனை தண்டனைக்குள்ளாக்கி மாறுகால், மாறுகை வாங்க வைத்தக் காரணத்தினால் அவள் இப் பிறவியில் தன் அங்கங்களை இழக்கின்ற நிலை ஏற்படுகின்றது. முற்பகல் ஊழ்வினை : இராவணன்
சிவ பக்தனாயினும், சிவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற வரங்களை வரைமுறையின்றி தீயவழி அழித்ததால்தான், அன்னவனின் அரக்க இனமே அழிய நேரிட்டது. முறையற்ற மோகம் கொண்டு கற்பின் கனலை சிறையிட்ட காரணத்தினால் அந்தக் கனலின் வெம்மையிலேயே அவன் மாண்டொழிகிறான்.
தயரதன்
காட்டுவேட்டையில் யானையின் குட்டி என்று தவறாக எண்ணி, கண்ணிழந்த பெற்றோரின் ஒரே ஊன்றுகோலான மகனைக்கொல்ல, அந்த பரிதாபத்திற்குரிய பெற்றோர் இட்ட சாபமே தயரதனைப் புத்திர சோகத்தால் அழித்தொழிக்கிறது. இராமன்
அறியாப் பருவத்தில் தெரியாத நிலையில் கூனி மந்தரையின் வளைந்த முதுகில் வில்லும் அம்பும் கொண்டு அடிக்க, அதுவே வெஞ்சின வஞ்சமாக மாறி அவனைக் கைகேயியின் மூலமாகப் பழிதீர்த்துக்கொள்ளும் நிலை எய்தியது. சூழ்வினை - சிலம்பு காரணமாக :
ஊழ்வினை உருத்துவந்துTட்டும்காலை, அதற்கென்று ஒரு சூழ்நிலை அமைவது இயற்கையின் கட்டாயம். சூழ்வினை ஒரு திருப்புமுனை.
அடிகளரின் சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கற்புக்கனல் எரிவதற்குக் காரணமான சூழ்வினையாக அமைவது சிலம்பு சிலம்பு ஒன்றல்ல. இரண்டு அணிந்தவர்கள் ஒருவரல்ல - இருவர்.
கம்பர் சூழ்வினையின் விளையாட்டை மிக அழகாகச் சித்திரிப்பார். இராமனின் பாணத்தால் துளைக்கப்பட்டு இராவணன் மாண்டுகிடக்கின்றான். கற்புக்கரசி மண்டோதரி
கம்பன் மலர் - 2000

அவன் உடலைத் தழுவி அரற்றிப்புலம்பி உயிர்விடும் முன்பு கூறும் கூற்றே சூழ்வினையின் நிலையை நன்கு விளக்கும்.
“காந்தையர்க்கு அணிஅனைய சானகியார் பேர் அழகும் அவர்தம் கற்பும் ஏந்துபுயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும் வேந்தர்பிரான் தயரதனார் பணியதனால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந்தவமாய்ப் போயிற்றம்மா”
இராமபிரானின் அம்பால் இராவணன் மாண்டான் என்பது உலகுக்குத் தெரியும். உண்மையா அது? இராவணன் என்ற மாவீரன், கேவலம் இராமன் என்ற ஒரு மனிதன் போட்ட அம்பாலா இறந்தான்? அல்ல, அல்ல. மண்டோதரி கூறுகிறாள்:
தெய்வப் பெண்டிரின் பேரழகையொத்த ஜானகியின் பேரெழிலும் அவளின் தூய கற்பும் அவனை முதலில் மாய்த்தது. வீரம் தோய்ந்த திண்தோள் இராவணன் முறையற்ற முறையில் மாற்றான் மனைவியின் மீது வைத்த மோகம் அவனை அடுத்து மாய்த்தது.
இதே முறையற்ற மோகத்தால் ஆட்கொள்ளப்பட்ட சூர்ப்பணகை இழந்த மூக்கும் மற்ற உறுப்புகளும் அவனைச் சேர்த்து மாய்த்தன. அது மட்டுமா? தயரதன் சொல்லை சிரமேற்கொண்டு வெங்கானில் விரதம்பூண்டு கடமைப்பயணமாக இராமன் எடுத்த முடிவே இராவணனின் கடைசிப் பயணமாக முடிந்தது. இவைகள் தான் ஊழ்வினையின் விளையாட்டுக்கள். ஊழ்வினையின் விளையாட்டுக் களம்தான் சூழ்வினை. பாரதி பாடிய முக்கவிகள் :
அடிகளார் கொடுத்துள்ள மூன்று கருப்பொருள்களையும் சிலப்பதிகார காட்சிகளும், இராமாயணக் காட்சிகளும் விளக்கிக் கூறுகின்ற அடிப்படை மனிதநேயத்தையும் அதன் தர்மங்களையும் உள் நிறுத்திப்பார்க்கும் பொழுது இந்த இரு காப்பியங்களும் காலத்தைக் கடந்து நிற்பதில் வியப்பொன்றுமில்லை. தேசியக் கவி பாரதி ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை” என்றதும் வள்ளுவனை இடையில் வைத்து கம்பனையும், இளங்கோவடிகளையும் அருகருகே வைத்ததும் ஏதோ சடங்குக்காகவோ, கவிதை வார்த்தை விளையாட்டுக்காகவோ அல்ல. வள்ளுவன் ஈடு இணையற்ற வாழ்க்கைத் தத்துவயோகி. அவனோடு யாரையும் ஒப்பிட்டுக் கூறமுடியாது. அதே நேரத்தில் வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களையும் கருவையும் திருவையும் தாங்கி, காலத்தைவென்று நிற்கும் காவியங்களையாத்த கம்பனையும் இளங்கோவடிகளையும் அருகருகே வைத்து பாரதி என்ற தெய்வமாக்கவி அழகு பார்ப்பது விலைமதிப்பற்ற முத்தோடு மாணிக்கப் பரல்களை அடுத்தடுத்து வைத்து தமிழன்னைக்குச் சூட்டி மகிழ்கின்ற மாலைக்கு ஒப்பாகும்.
139

Page 156
னிதனுடைய உள்ளத்தேதே “அகத்தின் அழகுமுகத்தில் தெரிவது மட்டும் அன்று உ அவன் கண் சிவக்கிறது. உட விளைவாகத் தோன்றுபவை. கோபத்தி உணர்ந்தவர்களுக்குத்தான் அவன் சினம் ெ தெரிந்து கொள்ளாதவர்களும் அவனுடைய கொள்வார்கள்.
வாயிலிருந்துவரும் சொற்கள் அவ் அழுகை, சிரிப்பு ஆகிய ஒலிகள் மனிதகுலத் அடையாளங்களும் பொதுவானவையே. உ இயற்கையாகவே வெளிப்படுத்துகின்றன. அதன் பொருள். பாவம் என்று வடமொழியி
பேசுகின்றபேச்சை விடப் பேசாத ே அலைகள் உடம்பிலே வந்து மோதும்போது உ
இவ்வாறு உண்டாகும் மெய்ப்பாடு முடியாமல் எழுவன; மற்றொரு வகை நினை சிவப்பதும் உடம்பு பதறுவதும் தடுக்க மு குழந்தையைக் கண்டு அன்பினால் முகமுட் முத்திட்டுக் கொஞ்சுவது ஓரளவு செயற்கை; அந்தச் செயலும் தொடர்ந்து நடைபெறுவதே
பக்தி, உவகை, துயரம், வீரம், அறிகுறிகளாகிய மெய்ப்பாடுகளை வடமொழ விரித்துரைக்கின்றன. உலக நிகழ்ச்சிகளிலு இலக்கணங்களை அமைத்திருக்கிறார்கள். வரும்.
ஓர் உணர்ச்சி மிகுதியானபோது இழந்துவிடுகிறான். அப்பால் அவ்வுணர்ச்
 
 

வகையின் உருவம்
வாகீச கலாநிதி கி. வா. ஜகந்நாதன்
ான்றும் உணர்ச்சிகளை அவனுடைய முகம் குறிப்பாகப் புலப்படுத்தும். தெரியும்” என்ற பழஞ் சொல்லை நாம் கேட்டிருக்கிறோம். முகத்தில் டம்பிலும் தெரியும். ஒருவனுக்குச் சினம் உண்டாகின்றது. அப்போது -ம்புபதறுகிறது. சொற்கள் வேகமாக வருகின்றன. இவை சினத்தின் னால் அவன் வெடிபடப் பேசும் போது அவனுடைய மொழியை காண்டுள்ளான் என்பது தெரியும் என்பது இல்லை. அம்மொழியைத் பேச்சின் ஒலியிலிருந்தும் படபடப்பிலிருந்தும் அதனை உணர்ந்து
வம் மொழிபேசுவாரிடம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் முனகல், துக்கே பொதுவானவை. அப்படியே படபடப்பு கண் சிவத்தல் முதலிய ள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளை உடம்பில் உள்ள உறுப்புகள் இவற்றை மெய்ப்பாடு என்பார்கள். மெய்யிலே தோன்றுவது என்பது லே சொல்லுவார்கள். சத்துவம், விறல் என்றும் சொல்வதுண்டு.
பச்சாகிய மெய்ப்பாடுகள் நுட்பமானவை. உள்ளத்தில் எழும் உணர்ச்சி உண்டாகும் அறிகுறிகள் அவை.
களிலும் இரண்டு வகை உண்டு. ஒருவகை நினையாமல், தடுக்க த்து எழுவன; அதனால், தடுக்கக் கூடியவை. கோபம் வந்தால் கண் டியாதவை. வைவது நினைத்துச் செய்வது; தடுக்கக்கூடியது. ம் கண்ணும் மலர்வது இயற்கை தடுக்க முடியாதது. அணைத்து நினைத்துச் செய்வது தடுக்கக் கூடியது. தடுக்கக் கூடியதானாலும் 5 பெரும்பான்மையான வழக்கம்.
அருவருப்பு என்று மனித மனத்தில் உண்டாகும் உணர்ச்சிகளின் ஜியிலும் தென்மொழியிலும் சுவையைப் பற்றிக் கூறும் இலக்கணங்கள் ம் இலக்கியங்களிலும் புலப்படுபவற்றை ஆராய்ந்து தொகுத்து அந்த நாடக நூல்களில் அபிநயங்களைப் பற்றிய பகுதியிலும் மெய்ப்பாடுகள்
முதலில் அதனை உடையவன் தனக்கு இயல்பாக உள்ள நிலையை சியின் மெய்ப்பாடுகள் அவனை ஆட்கொள்கின்றன. அதற்கு முன்
40

Page 157
அவனுடைய பேச்சு, செயல், குணம் வேறாக இருக்கும். அந்த உணர்ச்சி வசப்பட்டபோது அவை வேறாகத் தோன்றும்.
பெருங் கவிஞர்கள் தம்முடைய காப்பியங்களில் சொல்லலாகாத உணர்ச்சியின் உருவத்தை இத்தகைய மெய்ப்பாடுகளால் நுட்பமாகக் காட்டுவார்கள்; எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிக் காட்ட மாட்டார்கள். மெய்ப்பாடுகளில் பொதுவானவை சில உண்டு. அவற்றோடு சூழ் நிலைக்கும் உணர்ச்சியுடையவரின் நிலைக்கும் ஏற்ப அந்த மெய்ப்பாடுகளில் வேறுபாடு காணப்படும். உணர்ச்சிக்கு உருவம் இல்லையானாலும் அந்தப் பாத்திரப் படைப்பைப் பார்த்தால், “இது தான் இந்த உணர்ச்சிக்கு வடிவமோ” என்று வியப்படையும்படி இருக்கும். கம்பன் இந்த வித்தகம் நிரம்பப் பெற்றவன். அதைப் பார்க்கலாம்.
பல காலமாகச் சீதையின் மணத்தை எதிர் பார்த்து நிற்கிறார்கள் அவளுடைய தோழியரும் பிறரும். சிவபிரானுடைய வில் மலை போலக் கிடக்கிறது. அதை வளைத்தவனைத் தான் சீதை மணம் புரிந்து கொள்வாள். “இது எப்போது யாரால் நடைபெறும்?” என்று ஏங்கினார்கள் அவர்கள். அத்தகைய சமயத்தில் விசுவாமித்திர முனிவர் இராமனை அழைத்துக் கொண்டு வந்தார். அவன் வில்லை இறுத்தான். அதனால் யாவரும் இன்பக் கடலில் மூழ்கினர்.
இராமன் மிதிலையில் புகுந்து வரும்போதே அவனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டனர். அவர்கள் உள்ளம் கலந்தன. சீதை இராமனையே நினைத்து காதலால் வெதும்பிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய நிலையைக் கண்ட தோழிமார்கள் அவளைப் படுக்கையிலிருந்து எழுப்பி ஒரு பளிங்கு மாடத்தருகில் உள்ள தாமரைப் பொய்கைக்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே சந்திர காந்தத் கல்லிலிருந்து ஊறிய குளிர்ந்த நீரைத் தெளித்து ஒரு படுக்கையில் அவளை இருக்கச் செய்கிறார்கள்.
அங்கும் அவளுடைய மனம் அமைதி பெறவில்லை. இராமபிரானுடைய திருவுருவத்தையும் அவன் மேனி அழகையும் நினைந்து நினைந்து காதல் நோய் மிக்குச் சாம்புகிறாள். சீதையின் கூற்றாகக் கம்பன் பல பாடல்களைச் சொல்லுகிறான்.
அவள் அவ்வாறு இருக்க, அரசவையில் இராமன் வில்லை ஒடித்த மகிழ்ச்சிச் செய்தி அலை மோதுகின்றது. அங்கிருந்து அதைப் பல தோழிமார் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். வில் ஒடிந்து விழுந்தவுடன் யாவரும் உவகை மயமாக நிற்கின்றனர். அப்போது ஒரு தோழி, நீலமாலை என்னும் பெயருடையவள், இந்தக் களிப்புக்குரிய செய்தியைச் சீதைக்குத் தெரிவிக்க வேண்டுமென்று வருகிறாள்.
சீதையுடன் நம்மை இருக்கச் செய்து அவள் நிலையையும் பேச்சையும் காட்டிய கம்பன் இப்போது நம் கவனத்தை வேறொரு பக்கத்துக்குத் திருப்புகிறான். காதல் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சீதையோடு ஒன்றிப் போன நமக்கு இராமனை அரசவையில் நிறுத்தி விட்டு வந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. நீலமாலையினிடம் நம் கவனத்தைத் திருப்புகிறான் கவிஞன். அவள் சீதையிடம் வந்து இராமன் வில்லை ஒடித்த செய்தியைச் சொல்லப் போகிறாள்.
கம்பன் மலர் - 2000

நீலமாலை வரும் செய்கை, சீதையைக் கண்டபோது நிகழும் நிகழ்ச்சி என்பவற்றை ஒவ்வொரு பாடலால் சொல்லிவிட்டு அவள் கூறும் செய்தியை நான்கு பாட்டுக்களில் அமைக்கிறான். ஆக, நீலமாலை என்னும் பாத்திரம் ஆறே பாடல்களில் தன் உருவத்தைக் காட்டுகிறாள். அவளை நாம் முன்பும் கண்டதில்லை; பின்பும் காணப் போவதில்லை. இப்போதுதான் வருகிறாள்.
அவள் சிறிய பாத்திரமே யானாலும் பெரிய செயலைச் செய்கிறாள். துயரமே உருவமாகக் கிடந்த சீதையிடம் உவகையே உருவமாக வந்து செய்தியைச் சொல்கிறாள். சீதைக்கும் இராமனுக்கும் இடையே தோன்றிய காதலுக்கு அவள் வாய்மொழி உரமூட்டுகிறது. எனவே அந்த நிகழ்ச்சி கதையில் ஒரு சிறிய திருப்பத்தைக் காட்டுகிறது. ஆகையால் சீதையின் காதல் நோய்ப் புலம்பலால் நம்மை மறக்கச் செய்த கம்பன், ஒரு பீடிகை போட்டு நம்மை விழிக்கச் செய்கிறான்.
என்று கொண்டுள் நைந்துநைந்திரங்கிவிம்மி விம்மியே பொன்திணிந்த கொங்கைமங்கை இடரின்மூழ்கு போழ்தின்வாய்க் குன்றமன்னசிலைமுறிந்த கொள்கைகொண்டு குளிர்மனத் தொன்றும் உண்கண்மதிமுகத் தொருத்திசெய்ததுரைசெய்வாம்
பாட்டில் முன் இரண்டடி நாம் நின்ற இடத்தையும் பின் இரண்டடி இனிக் கவனிக்க வேண்டியதையும் நினைப் பூட்டுகின்றன. தான் காட்டப் போகிற பாத்திரத்தின் பேரைக் கூட இந்தப் பாட்டில் கவிஞன் சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு இராமன் வில்லை ஒடித்த செய்கை உள்ளத்தைக் குளிர்வித்ததென்றும், அதனால் விழிகள் விரிய முகம் மலர அவள் வருகிறாள் என்றும் புலப்படுத்துகிறான். “குளிர் மனத்து ஒன்றும் உண் கண் மதிமுகத்து ஒருத்தி” என்று சொல்கிறான் அல்லவா? இனி அந்தப் பாத்திரம் இயங்குகிறது.
நீலமாலை வேகமாக ஓடி வருகிறாள். அவள் கழுத்தில் அணிந்த வடங்கள் பல நிறமணிகளை உடையவை. காதில் அணிந்த குழைகளும் மணிகளால் ஆகியவை. அவை இப்போது அசைந்து மின்னுகின்றன. பல வண்ணங்களைக் காட்டுதலால் வானவில்லைப் போல ஒளிர்கின்றன. விரைவாக வருவதனால் ஆபரணம், ஆடை, குழல் எல்லாம் ஒன்றனோடு ஒன்று பிணைந்து கொள்கின்றன; சிக்கிக் கொள்கின்றன. இடையில் ஆடை, மேல் ஆடை என்று அவள் அணிந்திருக்கிறாள். அவள் குழல் கட்டுத் தளர்ந்து சோர்கிறது. அலை குலையத் தலை குலைய ஒடி வருகிறாள். உவகை பெரும் புயலைப்போல அவள் உள்ளத்தே அடிக்கிறது. சீதைக்கு மணவாளன் வரவேண்டுமே என்று ஏங்கின ஏக்கம் அவள் உள்ளம் அல்லவா அறியும்? மின்னல் நுடங்குவதுபோல வருகிறாள். மேகம் போன்ற கூந்தலும் வானவில் போன்ற அணிகலன்களும் தோன்ற, அவள் உடம்பு மின்னலைப் போல விட்டு விளங்குகிறது. அவள் கண் மட்டும் அந்த வேகத்திலும் நன்றாகத் தெரிகிறது. நீண்ட கண் அது விசாலமான கண்.
வடங்களும் குழைகளும் வான வில்லிடத் தொடங்குபு கலைகளும் குழலும் சோர்தர நுடங்கிய மின்என நொய்தின் எய்தினாள் நெடுந்தடங் கிடந்தகண் நீல மாலையே
முக்கியமான திருப்பங்களில் கம்பன் பாட்டின் சந்தத்தை மாற்றுவான். இங்கும் எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகப்

Page 158
பாடி வந்தவன், நிகழ்ச்சியின் வேகத்தைப் புலப்படுத்த நாற்சீரேயுள்ள கலி விருத்தமாகப் பாடத் தொடங்குகிறான்.
நீலமாலை சீதையை அணுகிவிட்டாள். அவள் உவகை என்னும் வெள்ளத்தில் மிதக்கிறாள். உவகையே வடிவாக நிற்கிறாள். சீதையின் தோழிகளில் அவள் ஒருத்தி, சீதையிடம் இடம் அறிந்து மரியாதையுடன் பேசிப் பழகுகிறவள். மற்ற சமயமானால் மெல்லச் சீதையை அணுகி அவள் அடியை வணங்கி அவள் குறிப்பை அறிந்து, “என்ன செய்தி?” என்று அவள் கேட்க, இனிய மொழிகளால் சொல்லவேண்டியதைச் சொல்லும் பழக்கம் உள்ளவள். இப்போதோ அந்தக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய நீலமாலையா அவள்? உவகையினால் தன்நிலையை மறந்து ஓடி வந்திருக்கிறாள். வழக்கம் போல வந்து அடிவணங்கினாளா? இல்லை.
வந்தடி வணங்கிலள்
இன்னது செய்தாள் என்று சொல்லி அவள் உவகை நிலையைப் புலப்படுத்தப் போகிறான் கவிஞன். அதற்குமுன் இது செய்திலள் என்பதனாலும் அதனை உணர்த்துகிறான். கவிஞனும் ஒவியனும் பல குறிப்புக்களைத் தம் காவியத்திலும் ஒவியத்திலும் காட்டுவார்கள். ஆனால் ஒவியனையும் விஞ்சிக் கவிஞன் மேற்செல்லும் ஆற்றல் படைத்தவன். ஒவியன் இருப்பதைக் காட்டுவான். நடப்பதைக் காட்டுவான். இல்லாததையும் நடவாததையும் காட்ட இயலாது. கவிஞனோ அவற்றையும் காட்டுகிறான்.
ஒன்றும் விளையாமல் ஒரே பொட்டலாக உள்ள நிலத்தை ஒவியன் எழுதுகிறான். அதைப் பார்க்கும் நமக்கு அது பொட்டல் என்று தெரியுமே அன்றி அந்தக் காட்சியிலே அழகு தோன்றாது. கவனம் செல்லாது. ஒவியன் எழுதிக் காட்ட அங்கே ஒன்றும் இல்லை. ஆனால் கவிஞனோ, அங்கே அருவியில்லை; பயிர் இல்லை; பச்சை இல்லை; மேடு இல்லை; பள்ளம் இல்லை; மனிதன் இல்லை; விலங்கு இல்லை; மலை இல்லை, மடு இல்லை; என்று அழகாக இல்லாதவற்றைச் சொல்லி சில நேரம் அவ்விடத்தில் நம்மை நிறுத்தி விடுவான்.
அவ்வாறே நீலமாலை செய்ததைச் சொல்வதற்குமுன் அவள் செய்யாததைச் சொல்லி, உவகை என்ற உணர்ச்சி அவளை ஆட்கொண்டு தன்னை மறக்கச் செய்தது என்பதை நுட்பமாகப் புலப்படுத்துகிறான்.
வந்தடி வணங்கிலள்
வணங்கவில்லை. சரி. பின் என்ன செய்தாள்? அவள் என்ன செய்ய வந்தாள்? இராமன் வில் ஒடித்த நற்செய்தியைச் சொல்லத்தான் அவ்வளவு வேகமாக ஓடி வந்தாள். செய்தியினால் விளையும் உவகை சீதையைச் சார்வதற்குள் அவளே அதில் மூழ்கி விடுகிறாள். வந்து நின்றவள் அதைச் சொன்னாளா? சொல்லவில்லை? ஏதோ கா கூ என்று சத்தம் போட்டாள்.
வழங்கும் ஒதையள்
ஒதை என்றால் ஆரவாரம் அல்லது ஒசை என்று பொருள். அவள் தன்னை மறந்து ஏதோ சத்தம் போடுகிறாளே ஒழிய வார்த்தையாக ஒன்றும் சொல்லவில்லை. அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சியினாலே பிறந்த உவகை வெள்ளமாகப் பரந்துவிட்டது. சீதையின் முன் நிற்கையில் அது பின்னும் கரைகடந்து பொங்குகிறது. அதற்கு ஒர் எல்லை தோன்றினால்தானே அவள் தன்உணர்வுபெறுவாள்? அந்தமிலா உவகை வடிவாக நிற்கிறாள்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

அந்தமில் உவகையள்
சத்தமிடுகிறாள்; ஆடுகிறாள்; பாடுகிறாள்; அவளுக்கு உவகை என்னும் பித்தமே பிடித்துவிட்டது. வந்தடி வணங்கிலள் வழங்கும் ஒதையள் அந்தமில் உவகையள்; ஆடிப் பாடினள்,
ஆவேசம் வந்தவளைப் போல அவள் செய்யும் ஆரவாரமும் ஆட்டமும் பாட்டமும் அவள் உள்ளத்தில் பொங்கிய உவகையின் மெய்ப்பாடாக வருபவை. சீதை அவளைப் பார்க்கிறாள்; அவளுக்கு மனித உள்ளத்தின் இயல்பு நன்றாகத் தெரியும். 'இவள் பழைய நீலமாலையாக வரவில்லை. உவகையே உருவமாக வந்திருக்கிறாள். இவள் சிந்தையில் கரைகடந்து பொங்கும் உவகையே இப்படி இவளை ஆட்டி வைக்கிறது. அதற்குக் காரணமாக ஏதோ நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்று ஊகித்துக் கொள்கிறாள். மெல்ல, “ஏ சுந்தரி, உன் சிந்தையில் உள்ள மகிழ்ச்சியையும் நிகழ்ந்த செய்கையையும் சொல் அம்மா” என்று கேட்கிறாள். சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்கையும் சுந்தரி சொல்என.
வேகமாகச் சுழலும் பம்பரத்தை ஒரு சிறுகோல் கொண்டு தொட்டால் அது சற்றே இடம்மாறிச் சுழலும். அப்படி ஆயிற்றுநிலை. தன்னை மறந்த நீலமாலையைச் சீதை, "சுந்தரி" என்று அழைத்து இவ்வுலகத்து நினைவுக்குக் கொணர்ந்தாள். அப்போதுதான் அந்தத் தோழிக்குத் தன் உணர்வு வந்தது. எதைச் செய்ய வேண்டும் என்று வந்தாளோ, அதையே செய்யாமல் ஆடிப்பாடி நின்ற பேதமையை உணர்கிறாள். உவகைமயமாய் நின்றவள், தான் தோழி என்பதையும் முன்னிருப்பவள் தன் தலைவியாகிய சீதை என்பதையும் உணர்கிறாள். "அடடா! என்ன காரியம் செய்தோம்! உவகை வெறி மூண்டு ஒரு கூத்தையே ஆடிவிட்டோமே!” என்ற எண்ணம் வருகிறது. சீதையை வணங்க வேண்டியவள் அது செய்யாமல் நின்றதையும் எண்ணுகிறாள். துயில் நீங்கியவளைப் போலவும் ஆவேசம் அடங்கியவளைப் போலவும் அமைதி பெற்று, தான் முதலில் செய்ய வேண்டியதை இப்போது செய்யலானாள். சீதையைத் தொழுது, சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லத் தொடங்கினாள். தொழுது சொல்லுவாள்.
வந்து அடி வணங்காமல் ஓசை செய்து ஆடிப் பாடியவள் உவகையின் உருவமாகிய பெண்; இப்போது உவகையை உள்ளத்தே அடக்கி நீலமாலை ஆகிவிட்டாள். அப்போது வரணங்காதவள் இப்போது தொழுதாள். அப்போது சொல்லாதவள்; இப்போது சொல்லலானாள்.
வந்தடி வணங்கிலள்; வழங்கும் ஒதையள்; அந்தமில் உவகையள்; ஆடிப் பாடினள், “சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்கையும் சுந்தரி சொல்” எனத் தொழுது சொல்லுவாள். கம்பன் படைத்த பெரிய பாத்திரங்களின் உருவத்தைப் பல இடங்களில் பல கோணங்களில் பார்க்கிறோம். அவன் படைக்கும் சிறிய பாத்திரமும் உயிருடையதாக உணர்வுடையதாக, அற்புத சித்திரமாக, ஒவியனையும் ஏமாற்றும் இயல்புள்ளதாக அமைந்து விடுகிறது. நீலமாலையின் உருவம் அத்தகையது தானே?
“அவள் என்ன சொன்னாள்?” என்றா கேட்கிறீர்கள்? அதைப்பற்றி இப்போது நமக்குக் கவலை இல்லை.
(நன்றி - கலைமகள், நவம்பர் - 1957)
142

Page 159
ரும்பாலும் உலகத்தில் எவே ஒருவர் இறந்து விட்டால் அவரைப் புகழவே வேண்டு
கடைசிவரை 'இராவணன்' என்றே கூறி வ இதுவோ பாவம்? என்று இராவணனுக்கு"
ஒருவர் தன் வாழ்க்கையின் எல்ை என்று பாடினார் பெரியாழ்வார். அப்பாடலி பேசுகின்ற மரபும் சுட்டப்படுகிறது.
"உற்றார்கள் எல்லாம் ஒருவன் இ செய்த நன்மைகளையே எடுத்துக்கூறி, பாடி போலே, கோடித்துணியால் மூடிக் கொண்டு கோவிந்தனோடு கூடி ஆடிய உள்ளத்தரா பெரியாழ்வார் பாடல் கருத்து.
கூடிக்கூடி உற்றா
குற்றம் நீ பாடிப் பாடியோர்ப நரிப்படை கோடி மூடி எடுப்படி கெளத்து கூழ் ஆடிய உள்ள குறிப்பிட
ஒருவர் இறந்துவிட்டால் அவரைப் எனவும், 'குற்றம் நிற்க நற்றவம் பறைந்து எ
மரணத்தை எந்த உயிரும் விரும்பு என்றார். அவரே சிற்சில இடங்களிலே அ ஈதல் இயையாக்கடை, புரந்தார் கண் நீர்ப அத்தகையோர் பண்பு நிலைகளைக் காட்ட
 
 

புலவர் கீரன்
ரேயாயினும் மரணம் என்பது அவருக்குப்புகழையே தரும். காரணம், அவர் குறைகளைப் பேசவே கூடாதென்பதும், அவர் நிறைவைப் பேசி ம் என்பதும் மரபு, நம் மக்கள் கடைப்பிடித்துவரும் பழக்கமுமாகும்.
ந்த கம்பன் இராவணன் வீழ்ந்தவுடன் 'இராவணனார் முடிந்த பரிசு ஆர் விகுதி சேர்த்து மரியாதைப்படுத்துவதையும் நாமறிவோம்.
லயிலேனும் மாயனை ஏத்தும் பேறு கொண்டவராக இருக்கவேண்டும் ல் ஒருவர் இறந்து விட்டால் அவர் குறைவைப் பேசாது நிறைவையே
றந்து விட்டால் கூடிக்கூடி இறந்தவன் குற்றங்களை ஒதுக்கி அவன் ப்பாடிப் பாடையில் இட்டு நரிப்படைக்கு ஒரு பாகுக்குடம் கொடுப்பது டுவைப்பர். அந்தச் சாவு நிலை வருவதற்குள் கெளத்துவம் உடைய னால் வாழ்க்கையில் கொண்ட குறிக்கோளை உய்யலாம்" என்பது
ர்கள் இருந்து நிற்க நற்றங்கள் பறைந்து ாடையில் இட்டு .க் கொரு பாகுடம் போலே தன் முன்னம் /வமுடைக் கோவிந்தனோடு த்த ரானால் ங் கடந்து உய்யலுமாமே.
பற்றிய குற்றங்களைப் பேசுவதில்லை எனவும்,நன்மைகளே பேசப்படும் ன்ற வரி அறிவிக்கும். அதனால் ஒருவருக்கு மரணம் புகழே தரும்.
வதில்லை; அதனால் திருவள்ளுவர் “சாதலின் இன்னாதது இல்லை” ந்தச்சாவே பெருமைக்கும் புகழுக்கும் உரியது என்றும் குறிப்பிட்டார். ல்கச் சாதல் போன்ற நிலைகளில் மரணம் விரும்பிவரவேற்கத்தக்கது. அந்தச்சாவே கருவியாக உள்ளது.
143

Page 160
இழிவுடனேயே வாழ்பவர்களுக்கும் சாவே நல்லது என்றார், திருவள்ளுவர். ஏனெனில் இறந்த பிறகு ஒருவர் புகழையே பேசுவதென்பது மரபாக இருத்தலின், இழிதகையோர் சாவு அவரை இழிவினின்றும் மீட்கக்கருவியாக இருத்தலின் புறங்கூறி பொய்த்து உயிர்வாழ்வதையே இயல்பாகக் கொண்டோர்க்குச் சாதல் அறங்கூறும் ஆக்கம் தருதலின் அவருக்கும் சாவே நல்லது.
அதனால் பொதுவாக மரணம் மனிதர்களின் புகழையே போற்றிப் பேசக் காரணமாகவிருத்தலின் மரணம் எனக்குப் புகழ் என்பது சரி. ஆனால் மரணமே நன்நோக்கத்திற்கு அமையாத புலையுறு மரணமாக இருந்தால் அது எவ்வாறு புகழாகும்.
ஆனால் ‘புலையுறு மரணம் எனக்குப் புகழே என்று ஒருவன் கூறவேண்டுமெனில் அவன் அத்தகைய மரணத்தாலும் புகழ் பெற்றவனாக இருத்தல் வேண்டும். ‘புலையுறு மரணம் இது என்று ஒருவர் எண்ணினாலும் அதனை உடனே மறந்து இம்மரணம் புகழுக்குரியதே என உடனே எண்ண வைக்கும் தகுதியுடைய சாவே புலையுறு மரணம் புகழ் மரணமாகும்.
‘புலையுறு மரணம் எனக்குப் புகழே' என்று ஒருவன் கூறிக்கொள்ள வேண்டுமாயின் அவன் கம்பீரமானவனாக இருக்க வேண்டும். அவன் உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே வேறுபாடு அறிந்தவனாக இருக்கவேண்டும்.
அத்தகைய பாத்திரம் யார்?
அவனே கும்பகர்ணன். அவன்தான் புலையுறு மரணம் எய்தல் தனக்குப் புகழ்' எனக் காரண காரிய விளக்கங்களோடு
நன்றி: கம்பராமாயணக் கள்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

அமையத்தக்க வகையில் சொன்னவனும், சொன்ன வண்ணம் செய்தவனும் ஆவான்.
அறங்களிடையே அமைந்த வேறுபாட்டை நன்குணர்ந்த கும்பகர்ணன் தெளிவே அவனைத் தர்ம சங்கடத்திற் குள்ளாகிக்கியது. ஒழுக்கத்தின் அடிப்படையிலான இராமனின் பொது அறத்தைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபாலும்; தன்னைச் சோறிட்டு வளர்த்து ஊனுடையவனாக்கிய சகோதரன் இராவணனுக்காகப் போர்க்களம் சென்று உயிர் கொடுக்க வேண்டுவது கடமை என்ற செஞ்சோற்றுக் கடனால் எழுந்த நன்றி மறுபாலுமாக இருக்க, ஒரு தரும சங்கடத்திற்குள்ளானான். அவன் செஞ்சோற்று அறமாகிய நன்றியுணர்வே வென்றதால் அவன் பெருவீரம் காட்டி இராவணனுக்காக உயிர் கொடுத்தான். மாற்றான் மனைவியைக் கவர்ந்து வந்த சகோதரனுக்காக உயிர் கொடுப்பதால், நன்றியுணர்வு மேம்பட்டு வெளிப்படுமே தவிர, சாவின் நோக்கம் உயர்ந்தது ஆகாது. ஆகவே அது ‘புலையுறு மரணம் தான். ஆனால் நன்றியுணர்வுக்கும் நல்லறம் கூறும் நாவுக்கும் உரிய ஒருவன்’ என்று நானிலம் போற்றும் புகழை இந்த மரணம் உண்டாக்கும். அதனால் இது புகழ் கொண்டதாகிறது.
சகோதரனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு உயிர் கொடுத்தாலும், முறையற்ற ஒரு செயலால் எழுந்த போரிலே சாவதால் தனக்கு வாய்ப்பது புலையுறு மரணமே என்றும், சாவின் மூலம் நன்றியுணர்வைக் காட்டுவதால், இது புகழுக்குரியதே என்றும் கும்பகர்ணன் தெளிவாக அறிந்திருந்ததாலேயே, வீடணனிடம், இராமன் பால் வர மறுத்துப் பேசும்போது உறுதியாகப் ‘புலையுறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் எனக் கூறினான்.
ாஞ்சியம்'- அல்லிநிலையம்
144

Page 161
கம்பன் மலர் - 2000
ம்பராமாயணத்தை ஒரு நலந்தீங்குகளை நயம்பட6 தோன்றும். இராமனின் நி பரதனை நிழலாய்த்தொடர் நேசிக்கக் காண்கின்றோம்.
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவ என்று குகனும்,
“எத்தாயர் வயிற்றிலும் பின்பிறந்
ஒத்தாற் பரதன் பெரிது உத்தமன்
என்று இராமனும் பெரிதும் போற்றிப் பாராட்
இராமனின் பகைவனான இராவ6 பரிவும் மிக்கவனாயினும் தருமநெறியினை கும்பகருணனோ, நீர்க்கோல வாழ்வை ந தமையனுக்காய் - இராவணனுக்காய் - இன் பிறந்தும் தன் காமவெறியாலும், பழிவாங்கு
"கொல்லாத மைத்துனனைக் கெ பல்லாலே இதழ் அதுக்கும் கொடு
என்று, (இராவணன் இறந்தது தாழாது சகோதரகாதகச் செயலுக்குச் சிறந்த எடுத்
சுக்கிரீவன் தன் தமையனுக்கு இ கூறியாங்கு அவனும்,
“மாற்றான் எனத்தம்முனைக் கொ6
(மாற்றான் -
மேலே கூறியவை உடன் பிறந்த காட்டுவன.
 
 
 

ாறு அன்ன ாள்கையான்
வித்துவான் க. சொக்கலிங்கம் (சொக்கன்)
கோணத்தில் நோக்கும் பொழுது அது உடன்பிறந்தார் பலரதும் பும் நுனித்தும் விரித்தற்கு எழுந்த மகாகாவியம் என்றே கொள்ளத் ழலை நீங்காத் துணைவன் அவன் தம்பி இலக்குவன். சத்துருக்கன், கையில், பரதனோ இராமனைத் தனது இன்னுயிரிலும் மேலானவனாய்
ரோ தெரியின்? yy
தோர்கள் எல்லாம் ஆதலுண்டோ?”
டும் பரதன் உடன்பிறப்பிற்கே இலக்கியமாய் ஓங்கி உயர்கின்றான்.
ணனுக்குத் தம்பியர் இருவர்; தங்கை ஒருத்தி. தமையன் மீது பாசமும் நீங்கிய அவனை நீங்கி இராமன் பக்கம் சேர்கின்றான் விபீடணன். ச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னர்ப் போர்க்கோலம் பூண்டுவிட்ட ானுயிர் நீத்துத் துறக்கம் புகுந்தான். இராவணனுக்குத் தங்கையாய்ப் ம் தீய நினைவாலும் தமையனுக்கே இறுதி சூழ்கின்றாள் சூர்ப்பனகை.
ான்றாய் என்று அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து ம்பாவி கொடும்பாரப் பழிதீர்த்தாளே”
(அதுக்கும் - கடிக்கும்)
விபீடணன் அழுதகாலை) உரைத்த கூற்று, சூர்ப்பனகையின் துக்காட்டு.
றுதி சூழ்ந்தமைக்கு நியாயம் கற்பிப்பது எளிது. ஆனால் இலக்குவன்
லிய வந்து" நின்றவனே! கைவன்) ரிடையே நிலவிய அன்புத் தொடர்பையும் வன்புப் பிரிவையும் நன்கு
145

Page 162
ஆனால், 'உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணிதீர்த்தாங்குத் தன் உடன்பிறவாச் சோதரராய் இராமனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவனுக்குக் கண்ணும் கவசமுமாய் விளங்கியோரும் உளர். குகன், சுக்கிரீவன், விபீடணன் என்ற அம்மூவரையும் சகோதர காவியத்தின் முக்கிய உறுப்பினராய்க் கொள்வதிலே தவறில்லை.
இந்தச் சகோதரர்கள் அனைவருள்ளும் எனது கருத்தை ஈர்த்துக் கவனத்தையெல்லாம் குவித்திட்ட ஒப்பரும் உடன் பிறப்பாய்க் கும்பகருணனே காட்சி தருகின்றான். இந்த முடிவு எவ்வாறு உண்டாயிற்று என்பதை விளக்குவதே இக்கட்டுரை.
‘என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது?
(என் - என்ன?) இராவணன் தனது பெருமிதம், வெற்றி, புகழ் யாவிற்கும் அடையாளங்களாயிருந்த அனைத்தையும் போர்க்களத்திலே போட்டு விட்டு, ‘மாருதம் அறைந்த பூளையாகி விட்ட பெரும்படையின் இழப்பையும் நெஞ்சிலே தாங்கிக் கொண்டு, பூமடந்தையாகிய நங்கை ஒருத்தியையே (அவளே எதனையும் பொறுப்பாள்; இகழாள்.) நோக்கிய வண்ணம் தன் அரண்மனை மீள்கின்றான். நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்’ என்று ஒரே ஆறுதலோடு, நெருப்பென நெட்டுயிர்க்கின்றான், இராமலக்குவரின் வலிமையை நீட்டிப் புகழ்கின்றான். “இனிச் செய்வது என்ன?’ என்று அறியாக் கையறுநிலையிலே, நடுக்கடலில் தத்தளிப்பவனுக்குக் கிடைத்த புணையாக அவனுடைய பாட்டன் மாலியவானின் அறிவுரைகள் ஒருகணம் அமைகின்றன. ஒரு கணந்தான்! அடுத்த கணமே மகோதரன் என்ற அமைச்சனின் இடிப்புரைகள் அவன் மனத்தை முற்றிலும் மாற்றிவிடுகின்றன.
1. “புன்தவர் இருவர் போரைப் புகழ்தியோ?”
(புன்தவர் - இழிந்த தவவிரதர்)
i. ‘பனியுடை வேலைச் சின்னீர் பருகினன் இரவி என்னத்
துனியுழந்து அயர்வது என்னே" (பனியுடை வேலை - குளிர்ச்சிபொருந்திய கடலை, இரவி - சூரியன்.)
i. "இனிஇறை தாழ்த்தியாயின் இலங்கையும் நாமும் எல்லாம் கனியுடைய மரங்களாகக் கவிக்குலம் கடக்கும் காண்டி’ (இறை - (ஒரு) கணம். கவிக்குலம் - குரங்குக் கூட்டம்)
என்றெல்லாம் இராவணனின் மான (?) உணர்வினைக் கிளர்ந்தெழச் செய்து விடுகின்றான் பெருவயிறனான மகோதரன். (மகா - பெரிய, உதரன் - வயிறன்)
அடுத்து அவன் கூறிய ஆலோசனைதான், “உனக்கு இளைய கும்பகருணன் (என்ற மாபெரும்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

வீரன்) இருக்கையில் அவனை இகழ்வதுபோல நீதளர்வடைவதா? அழை அவனை' என்பதாகும்.
'உறங்குகின்ற கும்பகன்னன்'
“இவன் எனக்கு முன்னவன், என் அண்ணன் இராவணனுக்குத் தாழ்விலாததம்பி, ஊழிக்காலம் உறங்கும் தன்மையன்” என்று இராமனுக்குவிபீடணன்,கும்பகருணனை அறிமுகம் செய்வதோடு அவனுடைய பெருமைகள், நற்பண்புகள், பலங்கள், பலவீனங்கள் என்ற பலவற்றையும் தொடர்ந்து விரித்துரைக்கின்றான். இவற்றின் தொகுப்புரையாகவும் சாரமாகவும் அமைந்ததுபோல அவன் கூற்று, பின்வரும் பாடலிலே தரப்பட்டுள்ளது.
தவறுணங்கியரும் தேவத் தலைவரும் உணருந்தன்மைச் சிவன் உணர்ந்தவரின் மேலைத் திசைமுகன் உணருந்தேவன் அவன் உணர்ந்து எழுந்த காலை அசுரர்கள்படுவர் எல்லாம்
இவன் உணர்ந்து எழுந்த காலை இமையவர் படுவர் எந்தாய்?
(தவன் உணங்கியர்-தவம் செய்யும் முனிவர்,அலர்- (தாமரை)மலர், . படுவர் - அழிவர்)
“பாற்கடலிலே பள்ளி கொள்ளும் பரந்தாமன் துயிலுணர்ந்தால் அரக்கர் அழிவர். இவன் (கும்பகருணன்) துயிலுணர்ந்தால் இமையவர் - தேவர்- அழிவர்” என்பதன் வாயிலாகக் கும்பகருணனின் வீரம் பரந்தாமனின் வீரத்திற்கு இணையாக்கப்படுகின்றது
இத்தகைய கும்பகருணன் தனது அரண்மனையிலே பெரும் மலை என, பேராழி என அமளியிலே நீண்ட துயிலிலே நெடுநாள் கிடந்ததில் வியப்பில்லை. சீதை அசோக வனத்திலே சிறைவைக்கப்பட்ட காலத்திலே தொடங்கிய துயில் அது! (அதன்பின் இலங்கையிலே பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டன!) இராவணன் இராமனுடன் போர் நடத்திப்படுதோல்வி கண்டு திரும்பியதும்தெரியாத பெருந்துயிலிலே பிணைப்புண்டு கிடக்கின்றான் கும்பகருணன்!
மல்லர் பட்ட அல்லல்கள் கும்பகருணனை எழுப்பிடச் சென்ற மல்லர்கள் அவனது உச்சுவாசத்தால் அவனருகில் இழுப்புண்டும், நிச்சுவாசத்தால் மாளிகைக்கு வெளியே தள்ளுண்டும் அல்லற்படுகின்றனர். இருப்புலக்கைகள், தண்டுகள் முதலியன கொண்டு அவனது அங்கங்கள், கன்னங்கதுப்புகளெங்கும் அடித்தும் இடித்தும் கைசோர்கின்றனர்; அவர்கள் அவன்மீது வலது சாரி இடதுசாரியாய் நடத்திய குதிரைகளும், கால் ஓய்ந்தன. அவனோ குழந்தைக்குத் தொடையில் தட்ட அது தனது அரைத்துயிலிலிருந்து, முழுத்துயிலாவதற்கொப்ப மேலும் பூரண துயிலில் ஆழ்கின்றான்!
146

Page 163
அப்பாடா! குன்றிலும் உயர்ந்த தோளான் கும்பகருணன் ஒருவாறு எழுந்து விடுகின்றான். ஆயினும் அரைத்துயிலிலே கண்கள் உறங்கிய நிலையில் கொடும்பசியும் தாகமும் அவனை வாட்டுகின்றன. நூறுநூறு வண்டிச் சோற்றையும், ஆயிரத்துநூறு எருமைகளையும் உண்டும் ஆயிரம் குடம் கள்ளருந்தியும் அவனுடைய பசி இறங்குவதாய் இல்லை; மேலும் ஏறுகின்றது:
இடியேற்றினைப் பிசைந்து எரியூதும் ஆற்றலன்? வானத்தையே இடறிடும் முடி; வளைந்த பேராழி நனைத்திடவும் போதாதாய் வளர்ந்த ஈர்அடி; இராவணன் நிற்பதும் கும்பருணன் இருப்பதும் உயரத்தால் சமமாகிடும் ஓங்கிய பேருரு; பாம்புகள் தூங்கிடும் செவிப்பாழி; மூங்கில்கள் இடர்ந்த காடனைய செம்மயிர்ப் பங்கி நிறைந்த நாசிக்குகை. அங்குக் கைமலையாம் கரிகளும் தாராளமாய் உலாவுகின்றன. சூல்கொண்ட மேகம் போலும் கறுத்துருண்ட திரண்ட பெருமேனி. அம்மேனியின் தடந்தோளிலே சூலத்தை ஏந்தியுள்ளான். காலனும் அஞ்சிநடுங்கிடும் வீரக்கழல் அணிந்த பாதங்கள். இப்படிப்பலப்பலவாய்க் கவிச்சக்கரவர்த்தி தனது கற்பனை வளத்தையெல்லாம் ஒன்று திரட்டிக்கும்கருணனனை வருணிக்கும் இடம் அற்புதச் சுவையும் நகைச்சுவையும் பொதுளி விளங்குவதைப் படித்துத்தான் உணரல் வேண்டும்.
நின்ற குன்று ஒன்று, நீள்நெடுங்காலொடும் சென்ற குன்று ஒன்று. எழுந்த கும்பகர்ணன் இலங்கைமாநகரத்தார் எல்லாரும் பொம் என்று இரைந்து எழச் சென்று, இராவணன் மாளிகையை அடைய அவனை இராவணன் தழுவிக் கொள்ளும் காட்சிதான் மேலே துணைத் தலைப்பாகத் தரப்பட்டுள்ளது.
சிற்றுண்டியாய்ப் பேருண்டி அருந்தியம், ஏறுகின்ற பசி மேலும் எழும்பிட வந்த கும்பகர்ணனுக்கு, அண்ணன் பலவாக விருந்தளித்து தசையாலும் நசைமிகுகள்ளாலும் குளிப்பாட்டி, அவனை யுத்த சன்னத்தனாய் ஆயுதங்கள், அருங்கலங்கள் பெருந்துணிகள் தந்து ஆயத்தம் செய்வதும் அரும் பெருங்காட்சிதான். ஆனால் ஒன்றும் புரியாதவனாய் விழப்பும் திகைப்பும் விஞ்சிட, இடப்புருவமும், இடத்தோளும் துடித்திட
usuaeus ஆயத்தம் யாவையும் என்ன காரணத்தால்?”
என்றுகும்பகருணன் இராவணனை வினாவுகின்றானே? அதுவே அனைத்தினும் பெரிதான அற்புதக் காட்சி (அரும் பெருங்கேள்வி)
"ஆனதோ வெஞ்சமம்?”
இராமனின் அம்புகளாலே தான் அடைந்த இழப்புக்கள், இழிப்புக்கள் யாவும் மகோதரனின் துர்ப்போதனையால் இராவணனுக்கு மறந்துபோய் விட்டன. "இராமனுக்கு முன்னால்
கம்பன் மலர் - 2000

நானும் என் போன்றாரும் நாயெனத் தகுவோம்” என்று உண்மையை ஏற்றிட்ட உள்ளத்தொளியும் மறைந்து, அங்கு ஆணவ இருள்சூழ்ந்து கொண்டது. அதுவோ அல்லது கும்பகருணனைத் தூண்டி அவன் பலத்தினை அவனுக்கு உணர்த்தி அவனைப் போர்களம் அனுப்புதற்கு இராவணன் கையாண்ட தந்திர உத்தியோ? இவற்றுள் எதுவாக இருப்பினும் அவனுடைய கூற்றிலே மீண்டும் பெருமித உணர்வும் துடுக்கும் கும்மாளம் இடக் காண்கின்றோம். அக்கூற்றின் ஒரு பகுதியே இது.
"வானரப்பெருந் தானையர்மானுடர் கோனகர்ப் புறஞ் சுற்றினர் கொற்றமும் ஏனை உற்றனர்நிஅவர் இன்னுயிர் போனகத் தொழில் முற்றுதி போய்” என்றான் (தானை - சேனை) (கொற்றம் - வெற்றி)
அளவு கடந்து உண்பதும் குடிப்பதும் அல்லும் பகலும் அறியாது நீளக் கிடந்து உறங்குவதுமே தொழில்களாய்க் கொண்ட கும்பகர்ணனை எளிதிற் கவர்ந்திடப் “போனகத் தொழில் முற்றுதி போய்’ என்றான் இராவணன்! ஆனால் கும்பகருணனோ வெறும் மாமிச மலையல்லன். இராவணனுக்கும் தனக்கும் தங்கள் இனத்திற்கும் எது நல்லது, எது தீயது என்பது அவனுக்கு நன்கு தெரியும். உறங்கச் செல்கையில், அண்ணன் சீதையை விடுவித்து சீராமனின் கழல் பணிந்து தன்னையும் தன்இனத்தையும் காத்திருப்பான்” என்ற நல்ல எதிர்பார்ப்புடன் சென்ற அவனுக்கு இராவணன் கூற்றுக்கள் பேரிடிகளாகச் செவிகளில் வீழ்கின்றன. அவன் பதிலுரையானது ஏமாற்றத்தில் மூழ்கி முக்குளித்துத்திக்கு முக்காடி வெளிவரத்தொடங்குகின்றது.
ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச் சானகி துயரினம் தவிர்ந்த தில்லையோ? வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ? புகுந்ததோ பொன்றுங் காலமே, (பொன்றுங் காலம் - அழியும் காலம்)
என்று அடுக்கடுக்காக அவன் எழுப்பிய வினாக்கள் குன்றுமுட்டிய குருவிபோல இராவணனின் செவிகளில் முட்டிப் பலம் இழந்து கீழே விழுகின்றன. தருமபோதனைக்குச் செவிடாய் விட்ட இருபது செவிகளைக் கொண்ட அண்ணனுக்கு ஓங்கிய தன் உறுதியுரைச் சங்கை, அது தன் கடமை என்ற உணர்வோடு தொடர்ந்து ஊதுகின்றான் கும்பகருணன், தான் வெறும் சோற்றால் உருட்டிய பிண்டம் அல்லன் என்பதையும் உணர்த்தி விடுகின்றான்!
“போர் கிட்டியதோ? அது பொன்னனைய சீதையைச் சுட்டியதோ? வேதவதி என்ற கற்பரசியின் சாபமாகிய சொற்கள் (உன்னை விரும்பாத பெண்ணை நீ அடைய முயன்று அதனால் நீயும் உன் இனத்தினரும் அழிவீர்கள்) நிறைவேறும் நாள் அண்மியதோ? பார்வையாலேயே கொல்லவல்ல விடம் போன்ற
- 147

Page 164
கற்பின் செல்வியை நீ இன்னும் விடுதலை செய்யவில்லையோ? இது விதியின் வண்ணமே.” என்று தொடரும் அறிவுரையிலே கும்பருணனின் தீர்க்கதரிசன உணர்வு மெல்லத் தலை காட்டுகின்றனது. விதியினால் நிகழப் போகும் பேரழிவு அவன் மனக்கண்களில் நிழலிடுகின்றது. எனினும் ஊழையும் உப்பக்கம் காணலாம்' என்ற அற்ப நம்பிக்கையோடு தன் அண்ணனுக்கு அறிவுரைகளை வாரி வழங்குகின்றான்.
“சீதையின் விடுதலை புரிந்து இராமபிரானின் பாதங்களில் தாழ்ந்து குற்றமற்ற உன் தம்பியான விபீடணனோடும் சமாதானம் செய்து அளவளாவுதலே உய்வதற்கு வழி. இந்தவழி உனக்கு ஏற்றதல்ல என்று நீ கருதினால் வேறோர் வழியும் உண்டு. அதனைத் தெளிவாய் அறிந்து கடைப்பிடி. அந்த வழி இதுதான் பந்தி பந்தியாக உன் படைகளைப் பிரித்துப் பிரித்து அனுப்புவது புத்திசாலித்தனம் அன்று; அவை அழிந்திட வருந்துவதும் நன்றன்று. முழுப்படைகளையும் ஒன்றாகச் செலுத்திப் போரிடுவாயாக?" என்று கும்பகருணனது அறிவுரை இடிப்புரையாய் இனிதுறுகின்றது.
ஆனால் கும்பகருணனுடைய வார்த்தைகள் இராவணனுக்கு வேம்பாய்க் கசக்கின்றன; வெகுளியைக் கிளப்புகின்றன. “எனக்கு என்ன நடக்கும் என்பதை அறிவதற்கு நான் உன்னை அழைக்கவில்லை. நீ எனக்கு அறிவுரை கூறுவதற்கு அறிவுசால் மந்திரியும் அல்லன். “சிறுதொழில் மனிதரைச் சென்று கொல்” என்று பணிக்கவே உன்னை அழைத்தேன். உன் வீரம் வெறிது. வீரம் நிகழ்த்தும் போருக்கான உரிமையை இழந்து விட்டாய். மிகுந்த பெரிய தசையை உண்டு அதனோடு கள்ளையும் அருந்திப் பகலும் இரவும் உறங்கு போ” என்று தம்பியின் மனத்திலே தைக்கும் படியும் மன உளைச்சல் ஏற்படும் படியும் இராவணனின் பேச்சு - ஏச்சு மேலும் தொடர்கின்றது. அவனது சீற்றம் கும்பகருணனோடு நின்று விடாது விபீடணனையும் சுற்றி வளைத்திடுகின்றது.
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அக் கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில் ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன் யான் அது புரிகிலன் எழுதி போதி”(யால்)
இதனோடு நில்லாது, “என் படைக்களைத் தருக. வானிலும் வையத்திலும் உள்ள அனைவரும் திரண்டு (இராம இலக்குமணராகிய) இருவலிய கைகளை உடைய சிறுவர் தலைமையில் அவர்களோடு இணைந்து என்னுடன் போர் புரிய வரட்டும், இந்தக் கூற்றினை அவர்களுக்கு உரை” (சாற்று என் கூற்றையும்' என்பதில் கூற்று என்பது கட்டளை என்றும் யமன் என்றும் இருபொருள்பட நிற்கின்றன.)
இராவணனின் இறுதிக் கூற்றும் கும்பருணனை அச்சுறுத்த எழுந்த தந்திரம் என்பது, கும்பகருணன் அவன்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்பதாலும், தனது சூலத்தினைத் தோளில் இட்டுக் கொண்டு போருக்கு ஆயத்தம் செய்வதாலும் நன்கு புலனாகின்றன.
பெற்றனன் விடை’ எனப் பெயர்ந்து போயினான். “வேறுவழி எதுவும் இல்லை. இனி நான் போருக்குச் சென்று உயிர் துறப்பது திண்ணம்”, என்ற முடிவிற்கு வந்த போதிலும் கும்பகருணனின் மனம் கேட்கவில்லை. தான் இறந்தாலும் தன் தமையன் பிழைத்து வாழவேண்டும் என்று அவன் ஏழைமணம் நீள நினைக்கின்றது. பாசத்தில் இழைந்து பரிவில் குழைந்து சோகத்தில் நீந்தும் அன்புரைகளை அறிவுரைகளாய் அவன் இராவணன் முன்பு வைக்கின்றான்.
“வென்று திரும்புவேன் என்று சொல்லமாட்டேன். விதிதான் என்னைப் பிடர்பிடித்துத் தள்ளுகின்றது. நான் இறப்பது உண்மை, அண்ணா, நான் இறந்த பின்னராவது அழகிய தோளினாள் சீதையை விடுதலை புரிந்திடு. தலைவனே, அதுவே உனக்கு நன்று. என்னை இராம லக்குமணர் வென்றால் உன்னை வெல்லுவதும் உயர்வதும் அவர்களுக்கு எளிதாகும். (இராவணனின் வலியையும் தன்வலியையும் ஒப்பிட்டுத் தன் வலிமை அவனிலும் மிக்கது என்று உணர்ந்த உணர்வு, இந்தப் பெருமிதவார்த்தைகள் மூலம் தெற்றெனப் புலனாகின்றது) இந்திரனுக்குப் பகைவனாகிய உன் மைந்தன் மேகநாதனும் மடிவது உண்மை. இவன்மரணம் இராமன் தம்பியான இலக்குவனாலேயே நிகழும். உன் படைகளோ காற்றிடைச் சிக்கிய சாம்பராகும். ஆகவே பின்பு நின்று கழிவிரங்குதல் வீண் - என் மரணத்தின் பின்னாவது சீதையை விடுதலை புரி. அதுவே உன் தவப்பலனாகும்"
இதற்குமேல் அறிவுரையோ எச்சரிக்கையோ வழங்க என்ன இருக்கிறது? இரத்தபாசமும், இனி இராவணனைக் காணலோ அவன் முகத்தில் விழித்தலோ நடவா என்ற ஏக்கமும் சோகமும் எழுந்திடக் கும்பகருணன்,
“பெற்றனன் விடை”
எனப் பெயர்ந்து போயினான்.
செவ்வழி நீரொடும் குருதி தேக்கினான் கம்பனின் உளவியல் இவ்விடத்திலே, இச்சூழலிலே இராவணனின் உள்ளம் எவ்வாறு இருந்திருக்கும் என்ற ஆராய்ச்சியிலே இறங்குகின்றது. அற்றைநாள்வரைப் பெற்றமகன்போலப் பேணி வளர்த்த தன் அன்புத் தம்பியைக் கொடுங்கூற்றுவன் கைக்குத் தானே அளிக்கப் போவதாகிய உணர்ச்சி இராவணனில் மேலோங்கியிருக்கும் என்றும், அவன் அந்த இறுதி வேளையிலே கூறிய கொடிய சொற்கள் கழிவிரக்கத்தினை அவனில் ஏற்படுத்தி இருக்கும் என்றும் சகோதர பாசமானது அவனை முற்றாக விழுங்கியிருக்கும் என்றும் கம்பனின் ஆராய்ச்சி, தீர்க்கமான முடிவுக்கு வந்தது என்பதற்கு,
148

Page 165
அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும் செவ்வழிநீரொடும் குருதி தேக்கினான் எவ்வழி உளோர்களும் இரங்கி ஏங்கினார் அவ்வழி அவனும் போய் வாயில் எய்தினான் (நாட்டம் - விழிகள்)
என்ற எதார்த்த சித்திரமே தக்கசான்று. எவ்வளவு கொடியவனாயினும் அவனது அந்தநேரநிலை கண்ட அவன் பகைவரும் (எவ்வழி உளோர்களும் என்பது வானில் கூடிநின்ற தேவர்களையும் குறிப்பாகச் சுட்டுகின்றது) அவனில் இரங்கி ஏங்கியது இயல்பேயாகும்.
மழையின்நீர் வழங்கும் கண்ணான்
மண்ணினை அளந்து நின்ற மாலென விண்ணுக்கும் மண்ணுக்குமாய் எழுந்த பேருருவம் ஒன்றுவெளியெங்கும் நிறைந்த நிலையில் சூரிய ஒளியினையும் மறைத்து இருளைக் கவிந்திட வைத்துச் செருக்களம் வந்தது. அதன் ஒரு தோளிலிருந்து மறுதோளை நோக்கவே பல நாள்கள் அகும். அது தான் கும்பகருணன் அவனைக் கண்டதுமே குரங்குப் படை அடைந்த அச்சமும் கலக்கமும் இத்துணை என்று கூறமுடியாதிருந்தது. இத்தகைய பேர் அச்சத்தை ஏற்படுத்த என்றே அரக்கனாகிய இராவணன் இப்படி ஒரு வேடம் எடுத்து வந்தானோ? என்று இராமபிரானே வியப்படைந்து, அதனை விபீடணனுக்கு எடுத்துரைத்ததோடு, இவன் யார் எனப் புகல் எனவும் அவனை வேண்டினான். அதுகாலை விபீடணன் கும்பகருணனின் வரலாற்றை விரித்துரைத்து, அவனது அறவழி ஒழுகிடும் மாட்சியையும் தெளிவுபடுத்தினான்.
“தருமம் அன்று இது. இதனால் எமக்கு மரணமே உண்டாகும். என்று இவன் தன் முன்னவனுக்கு எடுத்துரைத்ததை அவன் மறுத்ததால் அவனுக்காய் உயிர்விடக் காலனாகிய உன்முன் வந்துள்ளான்”
விபீடணன் கூறிய வரலாற்றினை இராமனோடு கேட்டு நின்ற சுக்கிரீவன் 'இவனைக் கொன்று ஒரு பயனும் இல்லை. இவன் எம்மோடு கூடுவானானால் கூட்டி வருதலே நன்று. இதனால் அரக்கர்கோனாகிய விபீடணனின் துயரமும் நீங்கும்” என்று கூற, இராமனும் “அதுவே நன்று” எனக் கொண்டான்; விபீடணனைத் தமையனிடம் சென்று அறிவுரை கூறி அழைத்து வரவும் பணித்தான். (சகோதர காதகம் சுக்கிரீவனோடு உடன் பிறந்த குணமோ?) “இராமனது படையாகிய கடலைக் கடந்து, தன்பெரும் பலமாகிய எமது படையை நோக்கி வருகின்றான் விபீடணன்” என்று படையினர் செய்தி கூறக் கும்பகருணன் உவகைக் கடலில் ஆழ்கின்றான். (ஆனால் தொடர்ந்து பெருங்கவலையும் உண்டாகின்றது.) விபீடணன் தன்னை அடைந்து வணங்கிய பொழுது, கும்பகருணன் அவனைத் தூக்கி
கம்பன் மலர் - 2000

எடுத்து ஆரத்தழுவுகின்றான். அவன் விழிகள் மழையெனக் கண்ணிர் பொழிகின்றன. உடன் பிறந்த பாசத்தால் உள்ளம் உருகுகின்றது.
“தம்பி, நீ ஒருவனாவது உயிர்பிழைத்து வாழச் சென்றாய் என்று மனம் உவந்திருந்தேன். ஆனால் இன்று உன் சிந்தனை முழுவதையும் சிந்திவிட்டு தனியேவந்துள்ளாய் காரணம் என்ன? இராமபிரானை நீ அபயம் அடைந்ததும் விண்ணிலும் மண்ணிலும் பெற முடியாப் பேரின்பம் அடைந்ததும் அறிந்து மகிழ்ந்தேன் நீ கவிஞரிலும் அறிவு மிக்கவன். (கம்பன் தன் முதுகிலே தானே தட்டிக் கொள்கின்றானே?) அறிவிலிபோல் வந்தது ஏன்? அமுதினை உண்டு சுவைப்பதைவிடுத்து நஞ்சை எவராவது உண்பாரா?” என்று தொடங்கிக் கும்பகருணன், இராமப் பிரபாவத்தையும், அரக்கராகிய தங்கள் இழிவையும் விரித்து ரைத்தது,
வருவதும் இலங்கை ஊர்க்கு இப்புலையெலாம் மாண்ட
பின்னைத் திருவுறை மார்பனோடு புகுந்தபின் என்றுந்திராப் பெருவருஞ் செல்வந்துய்க்கப் போதுதிவிரைவில்".
(இப்புலை - இந்த இழிந்த புலைவராகிய நாம்)
என்று முடிக்கின்றான். அவனது உரை, வஞ்சப் புகழ்ச்சியா என்ற ஐயம் ஏற்படலாம். ஆனால் அவன் இராவணன் மீது கொண்ட பாசத்திற்கு எள்ளவும் குறையாத பாசத்தினை விபீடணனிலும், செலுத்தியவன் என்பதை விபீடணனைத் தழுவி முத்தமிட்டுக் கண்ணிர் மழை பொழிந்ததிலிருந்து தெளிந்து கொள்ளலாம். பாசத்தால் நிறைந்து பரந்து விரிந்த உள்ளத்திற்கு உரியானகிய கும்பகருணன், உள்ளென்றுவைத்துப்புறமொன்று பேசுவானா? என்பதும் சிந்தனைக்கு உரியதாகும்.
மனக்குநோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு இராமாயணத்தைப் படைத்தளித்த கம்பனின் முதலும் முதன்மையுமான குறிக்கோள், திருமாலின் அவதாரமான இராமபிரானின் பிரபாவத்தைப் பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடுவது ஒன்றே. கும்பகருணன் வதைப் படலத்திலும் அந்தக் குறிக்கோள் இராவணன் (பகைவன்), கும்பகருணன் (பகைவனின் தம்பி, எனினும் இராமன் மகிமையை உணர்ந்தவன்) விபீடணன் (இராமனைச் சரண்புகுந்தவன்) ஆகிய மூவர் வாயிலாகவும் இனிது நிறைவேறுகின்றது. அதேபோது சம்பவ வளர்ச்சி, பாத்திரப்படைப்பு, முரணிலைகள் ஆகிய காவிய இலக்கணங்கள் வழுவாது இனிதே நடத்தும் பாங்கும் விதந்து கூறவேண்டுவதே. கம்பநாட்டாழ்வான் கவிச் சக்கரவர்த்தியுமாய்ச் சர்க்கரைப் பந்தரிலே தேன்மாரி பொழிவதற்குச் சொல்லவும் வேண்டுமோ?
விபீடணன் இராமயத்தன் மட்டுமல்லன். சொல்லின் செல்வனுமாவான். இராமனின் பணிப்பை இனிது நிறைவேற்றிட
149

Page 166
அவன் தனது உள்ளத்தாலும் (சகோதரபாச வெளிப்பாட்டாலும்), அறிவுத் திறனாலும் கும்பகருணனின் மனத்தை மாற்றிட இயம்பும் உரைகள் எண்பொருளவாகச் செலச் சொல்லும் திறத்தன என்பதற்கு ஐயம் இல்லை.
“இராமபிரான் இருள்நிறைந்த சிந்தையேனாகிய எனக்கும் இன்னருள் சுரந்த வீரன். நீ அவன் பக்கம் சேரின் உனக்கு அபயம் அளிப்பது ஒன்று மட்டுமா புரிவான்? அறியாமை நிறைந்த பிறவிநோய்க்கு மருந்தும் ஆவான். உருளுகின்ற வண்டிச் சக்கரம் போன்ற வாழ்க்கையை ஒழித்து முத்திப்பேற்றையும் அருள்வான். எனக்கு அவன் தந்த (துணிவுபற்றி வந்த காலவழுவமைதி) இலங்கை அரசு, செல்வம் யாவும் உனக்கு நான் தந்து உனது ஏவலை ஏற்று எளிதில் நிறைவேற்றுவேன். உனக்கு இதனிலும் உறுதி வேறில்லை. எனக்கு ஏற்பட்டுள்ள மனத்து நோயைப் போக்கிடு. நீ வந்ததாகிய இயக்க மரபையும் காத்திடு.
தப்பிப் பிழைத்து நகரம் திரும்பிப் போவதோ அரிது. (இராமபிரானைத் தவிரப்) புகலிடம் வேறு இல்லை. சாதலோ சரதம் (திண்ணம்). அறத்தோடு தழுவிய நீதியைத் தழுவி நிற்பவன் நீ. ஆதனால் உனது ஆவியை அநியாயமாய் விடுவதால் ஆம் பயன் என்ன? வேதநூல் குறித்த தருமவழியையே நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.
"தீமை செய்பவர்கள் எவ்வளவு சிறந்தவர்களாயினும் உடன் பிறந்த உறவினரேனும், தாய் தந்தையரேனும் தருமத்தை ஆய்ந்து பார்ப்போர் தம் கவனத்திற் கொள்ளாது அவர்களை ஒறுப்பதே கடன். தாய் பிழை செய்யத் தந்தை 'அவளைக் கொல் எனக் கட்டளை இடத் தனயனாகிய பரசுராமன் அவளை - தாய் என்றும் பாராது கொலை புரிந்தது உனக்குத் தெரியாததோ? தூய்மையான செயலைப் புரிந்திடத் துணிந்தபின் - அதனைச் செயற்படுத்துகையிலே - இடையிலே- பழிவந்து சேர்வது உண்டோ?
“ஒருவன் செய்யும் தீமைக்காக அவனோடு சேர்ந்த ஒரே குற்றமன்றி வேறு தீங்கெதுவும் அறிந்திடாத அப்பாவிகள் இறந்துபடுதல் மேன்மையோ? கீழ்மையோ? ஆய்வினை உடைய ஐயனே! பரசுராமன் மட்டுமோ? தீமை செய்த பிரமனை, நெற்றிக்கண்ணனான சிவபிரான் அவனது தலையி லொன்றை அறுத்து ஒறுத்ததும் அறியாயோ?
“எமது உடலிலே ஒரு கட்டி ஏற்பட்டுத் தொல்லை தருகிறது என்று வைத்துக் கொள்வோம் அது எம்முடலிற் பிறந்தது என்று எவராவது போற்றிப்பேணுவரா? அந்தக் கட்டியை வெட்டி எடுத்து, தீயினாற் சுட்டுப்பிரகரிப்பர் (எம் அண்ணன் எம்உடலிலே தோன்றிய கட்டி, அவனை அழித்தொழிப்பதே எம் இனத்தைப்பிடித்த நோய்க்குப் பரிகாரம்) இதை விடுத்து வேறு வழிகளில் இறங்குவது கடலிலே பெருங்காயம் கரைத்தல் போன்ற பயனில் செய்கை"
அகில இலங்கைக் கம்பன் கழகம்

இவ்வாறு பல உவமைகள், எடுத்துக் காட்டுக்கள், விரிவுரைகள் தெளிவுரைகள் மூலம் கும்பகருணனை மனம் மாற்ற முற்பட்டு, கடலிடைக் காயம் கரைக்கும் கடனிலே இறங்கிய விபீடணனுக்குக் கிடைத்த விடை என்ன?
தம்பி இன்றி மாண்டு கிடப்பனோ தமையன்?
அரம் போலும் கூர்மையான மதிபடைத்த விபீடணன் கும்பகருணனைக் கூர்மதி அற்றவனாகக் கருதித் தனது அரத்தினாலே (அறிவினாலே) கூர்செய்ய முனைந்தது, தனது கூர்மையையே கேள்விக் குறியாக்கியதை விபீடணன் உணருமாறு கும்பகருணனின் விடை அமைந்து விடுகின்றது. இலங்கை மாநகர், எய்தற்கரிய பெருஞ்செல்வம் என்றெல்லாம் அவன் ஆசைகாட்டியதை முதலிலேயே கூர்மழுங்கச் செய்து விடுகின்றான் கும்பகருணன்.
நீர்க்கோல வாழ்வைநச்சிநெடிதுநாள் வளர்த்துப்பின்னைப் போர்க்கோலம்பூண்டு விட்டாற்கு உயிர்கொடாது
அங்குப் போகேன்"
என்ற வாசகம் மாமிச பர்வதமான ஒருவனின் வாசகமாய் இல்லை! நில்லாத உலகியல்பும் நிலையா வாழ்க்கையும் வளர்ந்து பற்றற்றுப் பணி புரிந்திடும் பரமஞானியாகக் கும்பகருணனை அஃது உயர்த்தி விடுகின்றது. அதேவேளை, விபீடணனுக்கு உரிய கடமையையும் அவன் உணர்ந்திடத் தவறவில்லை.
“தார்க்கோல மேனிமைந்த என்துயர் தவிர்த்தியாயின் கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின்”
என்றான். அடுத்து, முன்னர் எடுத்துக் காட்டியாங்கு விபீடணனின் எதிர்காலத் தலைமைப்பாடும், அரக்கராகிய தங்களின் மரணவீழ்ச்சியும் விரித்துக் கூறப்படுகின்றன. தொடர்ந்து தனது குறிக்கோளினையும் உறுதிப் பாட்டையும் கும்பகருணன் நயம்பட எடுத்துரைத்தல், எமது சிந்தனையைத் தூண்டுவதாய் உள்ளது.
“தனக்கு நிகழப் போவது பற்றிக் கருத்திற் கொள்ளாத தலைவன் ஒருவன் தீமையில் ஈடுபடுவானானான் அவனைக் காக்க வேண்டிய கடப்பாடு உயைவர் அவன் திருந்துவதற்கான வழிகளை எடுத்துரைக்கலாம். திருத்தலாம் என்றால் திருத்தலாம். ஆனால் அவன் திருந்தான் என்று தெரிந்தபின் செய்யக் கூடிய செயல் வேறு யாது உள்ளது? அந்தத் தலைவனுக்கு முன்னரே சாவதுதான் அவனைச் சார்ந்தவர் கடைப்பிடிக்கக் கூடிய பொருத்தமானவழி"
இது மட்டும் அன்று தலைவன் யார்? எம் அண்ணன்.
தும்பியந் தொடையல் வீரன் சுடுகனை துரப்பச் சுற்றும் வெம்புவெஞ் சேனையோடும் வேறுளசிளைருரோடும் உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூவுலகை ஆண்டு தம்பியர்இன்றி மாண்டு கிடப்பனோதமையன் மண்மேல்
150

Page 167
படைவீரர், படைத்தலைவர் முதலியவர்கள் ஊதியம் பெற்றுக் கடன் புரிபவர்கள் போர் செய்வதும், போரில் இறப்பதும் அன்றி வென்றிகொள்வதும் அவர்களுடைய நீங்காப் பணிகள். எனினும் அவர்கள் ஒருவகையில் பிறரே. பிறராகிய அவர் களெல்லாம் எம் அண்ணனோடு செருக்களத்தில் மாண்டு கிடக்க, அவன், தம்பி தன் பக்கலில் இல்லாது அநாதையாய்ச் செத்துக்
கிடப்பதா?”
பாசமிகும் இந்தச் சிந்தனை பிறந்ததும் கும்பகருணன் தனது சோக நிலையினின்று விடுபட்டு, மான உணர்வும், வீரப் பெருமிதமும் கொண்டவனாய் ஆகிவிடுகின்றான்.
செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி வம்பிட்ட தெரியல் என்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி அம்பிட்டுத்துன்னங்கொண்ட புண்ணுடை நெஞ்சினோடும் கும்பிட்டுவாழ்கிலேன்யான்கூற்றையும் ஆடல் கொண்டேன்
கும்பகருணனின் தன்னம்பிக்கை வீரப் பெருமிதமாகத் தளிர்த்துத் தழைக்கத் தொடங்குகின்றது. செருக்களத்திலே தான் நிகழ்த்தப்போகும் வீரசாகசங்களை எடுத்து முழக்குகின்றான். இருந்தபோதிலும் தன்பலம் உணர்ந்த தன்மையனாதலின், - உண்மையான வீரப் பண்பு வாய்ந்தவனாதலின்றி தன்னால் வெல்லமுடியாதவர் இராம லக்குமணர் மட்டுமே என்பதையும் அவன் மூடி மறைக்கவில்லை.
"செருவிடை அஞ்சா வந்தென் கண்னெதிர் சேர்வரேல் அக் கருவரை கனகக் குன்றம் என்னலாங் காட்சி தந்த இருவரும் நிற்க மற்று இங்கு யாருளர் அவரை எல்லாம் ஒருவருந்திரிய ஒட்டேன் உயிர்சுமந்து உலகில்’
என்றான் (கருவரை - கரிய மலை போன்ற இராமன் கனகக்
குன்றம் - பொன்மலை போன்ற இலக்குவன்)
தன் திறன், குறிக்கோள், துணிவு, முடிபு என்பவற்றை மிகத் தெளிவாக விரித்துக் கூறி, தானும், தமையன் முதலானோரும் இறந்து படுகையில், தமக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளை, வேதியர் தேவனை பிரமனைப் புரோகிதனாகக் கொண்டு நிறைவேற்றுமாறு விபீடணனைக் கும்பகருணன் வேண்டும் இடம் எவரையும் நெஞ்சு நெகிழ்ந்து உருகவைப்பதாகும். இறுதியில்
ஆகுவது ஆகுங் காலத்து அழிவதும் அழிந்து சிந்திப் போகுவது அயலே நின்று போற்றினும் போதல் செய்யும் என்ற தத்துவத்தையும் எடுத்துரைத்து, மீண்டும் விபீடணனைத்
கம்பன் மலர் - 2000

தழுவிக் கண்ணிர் பொழிந்திட, விபீடணனும் ஏமாற்றத்துடன் இராமனிடம் திருப்பிச் சென்று கும்பகருணனின் முடிவை எடுத்துரைக்கின்றான். இராமன் “ உன் அண்ணனை உன் எதிரிலே அம்பு எய்து கொல்ல நான் விரும்பவில்லை. அதனாலேயே உன்னைச் சென்று அவனை எம் பக்கலில் அழைத்து வரச் சொன்னேன். இனிச் செய்வது என்ன? விதியை வெல்ல வல்லார் யார்?" என்று உரைத்துப் போருக்கு ஆயத்தம் ஆகின்றான்.
கொண்டனன் போயினன் நிருதர்கோன்
இராவணன் முதல் நாள் நடத்தித் தோற்ற போரிலும் இனி மேகநாதன், இராவணன் நடத்தி முடித்திடப் போகும் போரிலும் கடிய, கொடிய போரினைக் கும்பகருணன் நடத்தி, மிகப்பெரும் எண்ணிக்கையான குரங்குப் படைகளை அழித்தொழிக்கின்றான். படைக்கலங்கள், மலைகள், பாரிய மரங்கள், போதாததற்கு வலிய கைகள், கால்கள் என்ற யாவும் பயன்படுத்தப்படுகின்றன. குருதி கடலாகப் பெருகுகின்றது. தசைகள் மலைகளாய்க் குவிகின்றன. இலக்குவன், அநுமன் ஆகியோருடன் பொருது அழிவையும் அழிப்பையும் பெற்று பெறுவித்துக் களமாடிய கும்பகருணனின் கவனம் சுக்கிரீவன்மீது திரும்புகின்றது. இடியென முழங்கியும், நெருப்பும் புகையும் எழ ஒருவரை ஒருவர் விழித்தும் எங்கும் எவையும் அஞ்சி நடுங்கிக் கலங்கிட நடந்த போரின் இறுதியில், சுக்கிரீவனைத் தன் தோள்களாலும் கரங்களாலும் இறுகப் பற்றிப் பிணித்துக் கும்பகருணன் தன் நகர்நோக்கி இழுத்துச் செல்ல முற்படுகின்றான். இதனால் ஏற்படக்கூடிய விளைவு இராமனுக்கு உணர்த்தப்பட அவன் அரக்கன் செல்லும் வழியினைத் தடுக்கும் வகையிலே பெரும் சரக்கூடம் இடுகின்றான். அவன் செலுத்திய வெங்கணைகள் இரண்டு கும்பகருணனின் நெற்றியைத் துளைக்கக் குருதி வழிந்தோடி, அவன் கண்களை மறைத்திட, இதுவே தக்க தருணம் எனக் கொண்ட சுக்கிரீவன் அவனது மூக்கையும் செவிகளையும் கடித்துக் குதறிவிட்டு, அவன் கைகளிலிருந்து தப்பித் தனது சேனையின் பக்கம் வந்து சேர்க்கின்றான். இராமனுக்கு மகிழ்ச்சி உண்டாகின்றது.
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான்
இராமனுக்கும் கும்பகருணனுக்கும் இடையே கடும்போர் நிகழ்கின்றது. இராமனின் சரங்களும், கும்பகருணனின் வாளும் கணைகளும் போர்க்களத்தைக் குருதிச்சேறாட வைக்கின்றன. மாறிமாறி இருவரும் ஒருவர் படைக்கலங்களை மற்றவர் அழிப்பதும் எதிரெதிர்ப்படைகளை மாய்ப்பதும் தொடர்கின்றன.
ஆறினோடு ஏழுகோல் அசனி ஏறென ஈறிலா விசையன இராமன் எய்தனன் பாறுகு சிறைான விசும்பிற்பாறிட நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான். (கோல் - அம்பு, அசனிஏறு - இடியேறு, பாறுசிறை - பாசத்தால் கட்டப்பட்டமதில்) 'இராமனின் அம்புகளைத் தனது வாளால் பாறிவிழச் செய்தான்கும்பகருனன் எனக் கூறுவதோடு அமைந்து

Page 168
விடாது, அவனை நுணங்கு (நுட்பமான) கல்வியை உடையவன்' என்று உரைப்பது, எமது கவனத்தை ஈர்ப்பதோர் கருத்தாகும். தனது நுட்பமான கல்வியின் மூலம் எதிரது உணர்தல், தன் பலம் அறிதல், தன் முடிபு அறிதல், தன்கருத்தினைத் தெளிவுற எடுத்துரைத்தல் ஆகிய திறங்களைக் கும்பகருணன் குறைவறப் பெற்றிருந்தான் என்பதையே கம்பன் நுணங்கு கல்வியான் என்று எடுத்துரைத்தான் எனக் கொள்ளலாம்.
சாதியோ? உனக்கு உறுவது சொல்
நடக்க வேண்டியது சிறிது சிறிதாய் நடக்கலாயிற்று. இராமனின் சரங்கள் கும்பகருணனின் சேனையைப் பூளையாய்ப் பறக்க வைத்துவிட்டன. அவனுடை தேரும், வாளும், பிறவும் சிதைந்து விட்டன. அவனுடைய கரம், தாள் என்பனவற்றை ஒவ்வொன்றாய் இராமனின் கணைகள் களைந்து விட்டன. எனினும் கும்பகருணன் சளைக்கவில்லை முண்டநிலையிலும் மூண்ட போரில் முனைப்பாகவே செயற்பட்டு எட்டிய குரங்கினத்தை யமன் உலகுக்கு அனுப்பியவண்ணமே இருக்கிறான்.
எனினும் அவனுடைய இறுதி நேரம் கணங்களாய் குறுகிக் கொண்டிருப்பதை இராமன் உணரத்தவறவில்லை. அவன்மீது இராமனுக்குக் கருணை பிறக்கின்றது.
"உனது பெருந்துணையாய் வந்த படைபரிவாரங்களை நீ இழந்துவிட்டாய். நீதிமானான விபீடணனின் உடன் பிறந்தவன் ஆதலில் உன்னைக் கொன்றிட விழைந்திலேன். நீ இங்கிருந்து சென்று பின்னர் திரும்புவாயோ? அல்லது தொடர்ந்து போர்புரிந்து இறக்கப் போகின்றாயோ? நான் தெரிந்து கொள்ளும் வண்ணம் சொல்”
கும்பகருணன் இராவணன்போல “நீர்க்கோல வாழ்வை நச்சி மானமும் மதியும் இழந்து மாநகர் திரும்பியது போலத் திரும்புவானோ? உயிரை விட வந்தவன் உயிர் கொண்டு மீள விரும்புவானோ? அவன் இராமனின் வினாக்களுக்கு அளித்த
அகில இலங்கைக் கம்பன் கழகம்

விடைகள், இராமனின் வாயினை அடைத்திருக்கும் என்றே கருதக் கூடிய வகையில் அமைந்துள்ளன.
1. .செவிதன்னோடு
மூக்கு இழந்தபின் மீளல் என்றால் அது முடியுமோ” ii. eR சிரங்கொய்து
பொருத்தினால் அது பொருந்துமோ?"
இதன் பின்னரும் தன் வாயே போக்கருவியாய்க் கொண்டு மலைகளைக் கவ்வியெடுத்துப் போருடற்றுகின்றான்! ஆனால் இதுவும் எவ்வளவு நேரம்?
இறுதியில் மரணம் அவனுக்கு மிக அண்மையில் வந்து அழைப்புக் குரல் கொடுத்த வேளையில், அவன் இராமனிடம் பின்வரும் வேண்டுகோளினை முன்வைக்கின்றான்.
மூக்கிலாமுகம் என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை நுன்கணையால் எனக்களித்து
நீக்குவாய்நீக்கியபின் நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய் இதுநின்னை வேண்டுகின்ற பொருள்' என்றான்
இராமபிரான் அவன் வேண்டுகோளை நிறைவேற்றக் கும்பகருணனின் இவ்வுலக வாழ்வு முடிவுறுகின்றது. புகழுடல் எஞ்சுகின்றது.
குன்று அன்ன கொள்கையான் குன்றினும் உயர்ந்த தோளான் குன்று அன்ன கொள்கையானும் ஆவான் ஐயம் இல்லை.
கூயினன் நும்முன் என்றவர் கூறலும் போயினன் நகர் பொம் என்று இரைத்தெழ வாயில் வல்லை நுழைந்து மதில் தொடும் கோயில் எய்தினன் குன்றன்ன கொள்கையான்.
152

Page 169
ருவன் தன் சினேகிதருக்க வரிடத்திலுமில்லை"
புரந்தார் கண்ணிர்மல்கச் ச இரந்துகோள்தக்க துடைத்
நட்புறவை வைத்துத் தனது இராமாயண நாடகங்களினூடாகத் தோழமையுணர்வின் சிறப்பிற்கு அணிசேர்ப்பதாகவும் கருத்து வெ தழுவிய தோழமை உறவிற்கு அப்பால் பறை நற்புறவைக் கூடச் சாத்தியப்படுத்தி அதை ஒ - இராமன் போன்ற நட்புகளின் மேன்மைை சடாயு என்கின்ற கழுகிற்கும் தசரதனி தமிழோவியமாகக் காட்டினான். அவன: நட்புறவைவிட மகோந்நதமானதாக அமைகி
தசரத மன்னன் கோசல நாட்டை கழுகுகளின் அரசனாகிய சடாயுவாழ்ந்துவ வாழ்ந்தவன் சடாயு, தசரதன் மீது கொண்ட பேரன்பு பாராட்டி, அவனுக்கு உதவுவதற்கா வாய்க்கப்பெற்ற அக்கழுகரசன், இராமனது பிரிவுத்துயர் தாங்காமல் அழுது அரற்றி தடுத்திராவிட்டால் அக்கணமே தன் நட்புண
தாயின் கட்டளையை ஏற்று நாடுது அவனை ஓர் அரக்கன் என்றே எண்ணிவ பின்புதான் அவன் எப்பேர்ப்பட்டவன் என்பத கொண்டான். தன் தந்தையின் நண்பன் த
பஞ்சவடியில் இராமன், இலட்
பெருங்காவலனாக இருந்து பாதுகாப்பளி இராவணன் அவளை வஞ்சனையாற் கவர்ந்
 
 

பெனப்படுவது
2 Iru I
அதி. வன. கலாநிதி. எஸ். ஜெபநேசன்
ாகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒரு
யோவான். 15:13
ாகிற் பின்சாக்காடு ந்து தமிழ்மறை
த்தில் பல நாடகங்களை நிகழ்த்தியவன் கம்பன். இக்கவித்துவ பிரதிபலிப்புக்களைத் துல்லியமாக வெளிப்படுத்தியவன். காவியச் 1ளிப்பாட்டிற்கு பலம் சேர்ப்பதாகவும் அவை அமைந்துள்ளன. மானுடம் வக்கும் மனிதனிற்கும்; விலங்கிற்கும் மனிதனிற்கும் இடையிலான ர் உயரிய பண்பாடாகக் காட்டினான். குகன் - இராமன், சுக்கிரீவன் யயும் தனித்துவத்தையும் கவிதாகரமாகக் காட்சிப்படுத்திய கம்பன், }கும் இடையிலான தோழமை உணர்வின் வெளிப்பாட்டையும் து கைவண்ணத்தில் சடாயுவின் நட்புறவின் வெளிப்பாடு மனித ன்றது.
ஆண்ட காலத்தில் பஞ்சவடியின் அண்மையில் இருந்த காட்டில் தான். தசரதனது ஊனோடும் உடலோடும் ஒன்றிக்கலந்த தோழனாக பெரும் தோழமையின் காரணமாக, அவனது திருமகன் இராமன்மீதும் கத் தனது உயிரையே ஈந்தவன் சடாயு, அத்தகைய பெரும் பண்புநலம் வனவாசத்தின்போது தசரதன் இறந்ததனைக் கேள்விப்பட்டு அந்தப் நெருப்பினில் வீழ்ந்து உயிர்துறக்க முனைந்தவன். இராமன் ார்வின் உச்சத்தைத் தொட்டிருப்பான்.
றந்து காடு சென்ற இராமன் முதன்முதலில் சடாயுவைக் கண்டபோது ட்டான். பின்பு சடாயு எனும் அப்பறவை அவனுடன் உரையாடிய னையும் தன் தந்தையின் உயிர்த்தோழன் என்பதனையும் உணர்ந்து எக்கு உதவ ஆர்வமாய் இருப்பதைக் கண்டான்.
iமணன், சிதை மூவரும் அமர்ந்திருந்தபோது அம்மூவருக்கும் தான் சடாயு. அவ்வேளையில் சீதையின்பால் பெருங் காமமுற்ற செல்ல எண்ணிமாரீசன் எனும் மாயமானை சீதையின்கண்படுமாறு
153

Page 170
அனுப்புகிறான். அப்பெரும் சூழ்ச்சி வலையை உணராத சீதை அம்மானைப் பிடித்துத் தருமாறு இராமனை வேண்டுகிறாள். அவளை மகிழ்விக்க விரும்பிய இராமன் மாயமானைப் பின்தொடர்ந்தான். வெகு நேரமாகியதால், அவனுக்கு ஏதாவது அபாயம் நேர்ந்து விட்டதோ என எண்ணி, தனக்குக் காவலுக்கு நின்ற இலட்சுமணனை வலிந்து அனுப்பி வைக்கிறாள் சீதை. நெடுந்துரம் சென்ற தமையனைத் தேடித் தம்பியும் பின்னே சென்றான். அவ்வேளைக்காகவே காத்திருந்த இலங்கை வேந்தன் தனித்திருந்த சீதையை நிலத்தோடு பெயர்த்தெடுத்து காற்றினும் கடிது செல்லும் விமானத்தில் ஏற்றி வான்வழியே விமானத்திற் புறப்பட்டான்.
இலங்கை மன்னனது மாயமே மானாக வந்து தன்னை மயக்கியது என்று சீதை அறிந்தாள். இரக்கமற்ற அரக்கனைத் தடுத்துத் தன்னைக் காத்தற்கரிய தலைவனும் இளவரசனும் இல்லாமை கண்டு ஏங்கினாள்; மலைகளும் மரங்களும் மாய அரக்கனை நோக்கி அஞ்சக் கண்டு மயங்கினாள்; தனக்கு உதவி செய்வார் ஒருவரையும் காணாது, மலைச்சாரலில் வாழ்ந்த மயிலையும் குயிலையும்; கலையையும் பிணையையும் கூவியழைத்து, அவ்வுயிர்களிடம் தன் துயரை அறிவித்தாள். தாயனைய கோதாவரியைக் கண்டபோது,
“கோதாவரியே குளிர்வாய் குழைவாய் மாதா அணையாய் மனனே தெளிவாய்”
என்று தன் துயரை அவ்வாற்றினிடம் அறிவித்தாள். இவ்வாறு அரற்றியும் அபயம் அளிப்பார் எவரையும் காணாது அரக்கன் கையில் அகப்பட்ட திருமகள் அழுது சாம்பினாள். இந்நிலையில் சடாயு அங்கே வந்துவிட்டான். வானிலே விரைந்து சென்ற புஷ்பகவிமானத்திலே இலங்கை வேந்தனையும் அவன் வசப்பட்டுத் துடிதுடித்த சீதையின் அவல நிலையையும்கண்டு பொருமிக் கொதித்தான்.
“சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்யவந்து அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே.
என்று எண்ணி, துயரத்தில் ஆழ்ந்த சீதைக்கு அபயமளித்தான். இலங்கை மன்னனின் புஜபல பராக்கிரமத்தையும் போர்த்திறனையும் தவவலிமையாற் பெற்ற வரங்களையும் அறியாதவனல்லன் சடாயு. சிவபெருமான் அருளால் முக்கோடி வாழ்நாளும் திசையெட்டும் வெல்லும் திறனும், பெற்றுயர்ந்திருந்த இராவணனின் திறமையை அறிந்திருந்தும், அவன் பலாத்காரமாகத் தூக்கிச் செல்லும் சீதையை விடுவித்து இராமன் வசம் ஒப்படைத்தல் தன் தலையாய கடன் என்று எண்ணினான். அஃதன்றியும் தசரதனுடைய மகன்களிருவரையும் தன்னுடைய மகன்களாகக் கருதியதால் சீதை தன் மருமகள் எனக் கொள்கிறான். எனவே அவளை மீட்டெடுத்துப்பாதுகாப்பது என்று
அகில இலங்கைக் கம்பன் கழகம்

திடசித்தம் கொள்கிறான். எனவே இராவணனைத் தடுத்து “அரக்கனே கற்பிற் சிறந்த சீதையை நீ விட்டுச் சென்றால் பிழைத்தாய் இல்லையேல் நீ வேரோடு கெட்டாய், உன் வாழ்வை நீயே சுட்டழித்துக் கொண்டவனாகிறாய். உலகின் தாயாகிய சீதையை நீ யாரென்று நினைத்தாய். இம்மைக்கும் மறுமைக்கும் கேடு சூழ்ந்தாய். இம்மங்கையர்க்கரசியின் மனத்திற்கினிய தலைவனான இராமனே உலகிற்கெல்லாம் தலைவன். அத்தகையவனின் வில்வித்தைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் நீ மரணமடைய நேரிடும். கடவுளின் பேரருளால் நீதவமிருந்து பெற்ற வரம் பயனற்றுப் போய்ப் பாழாகும் எனவே சீதையை விடுத்து உனது உயிரைக் காப்பாற்றிக்கொள்” என அறிவுரை சொல்லுகிறான். ஆயினும் கூட, இராவணன் அவற்றை செவிமடுத்து நடப்பவனாகத் தெரியவில்லை. ஆகவே அவனைக் கொன்று ஒழித்தாலே ஒழிய சீதையின் மீது வைத்த காமத்தைக் கைவிடான் என்பதைத் தெளிவுற உணர்ந்தான்.
இலங்கை வேந்தன் விமானத்தில் வீணைக் கொடி பறந்தது. ஆரந்தாழ்ந்த அவன் அழகிய மார்பில் வீரக்கவசம் விளங்கிற்று வலிய கரங்களில் வில்லும் வேலும் வாளும் இலங்கின. இத்தகைய படைக்கலன்களோடு விளங்கிய வீரனை, வலிய சிறகே வாகனமாகவும், மூக்கே வாளாகவும், நகமே வேலாகவும் கொண்டு கழுகின் காவலன் எதிர்த்தான்; அவன் வில்லைப்பல்லால் இழுத்து தாளால் முறித்தான்; முத்தார மார்பை மூடியிருந்த கவசத்தின் மூட்டறுத்தான். இதனைக் கண்ணுற்ற இலங்கை வேந்தன் கடுஞ்சினங் கொண்டு, கூற்றினும் கொடிய கூரிய வேற்படையை வேகமாகச் சுழற்றி விடுவித்தான். அவ்வேல், வீரம் செறிந்த கழுகின் இறகைத் துளைக்க, வலியற்றுக் குழைந்து மீண்டது.
இந்த உடல் சோர்ந்த நேரத்திலும் கூட பறவை அரசன் வேகமாகச் சென்று எழுந்து தேர்ப்பாகனின் தலையைக் கொய்து இலங்கை வேந்தன் முகத்தின் மீது வீசி எறிந்தான். இதனால் பெருங்கோபமுற்ற இராவணன் ஒர் ஆடகத்தண்டால் கழுகரசனை ஓங்கி அறைந்தான். அதன் வெம்மையைப் பொறுக்க முடியாமல் சடாயு பெருமலை ஒன்று வீழ்ந்தது போல் விழுந்தான். இந்த நிகழ்ச்சியைக் கண்ட சீதை மிக்க மனம் நொந்து துடிதுடித்து வருந்தினாள். ஆனால் பறவை மன்னனோ தனக்கேற்பட்ட போர்க்காயத்தைப் பெரிது படுத்தாமல் தன் வேதனையை முழுவதுமாக மறந்து மாதரசியே பயப்படாதே" என அபயமொழி கூறி, மீண்டும் இராவணன் மீது பாய்ந்து அவன் தண்டைப் பறித்து தரைமீது எறிந்தான்.
இவ்வண்ணமாக தன் போராயுதங்களை நாசப்படுத்திய கழுகரசனின் உடல், உள வலிமையை எப்படி அழிக்கலாம் என இலங்கை வேந்தன் எண்ணிக் கொண்டு இருக்கையில் சடாயு அவன் குதிரைகளைக் குத்திக் கொன்றான். இராவணனுடைய மார்பிலும் புயத்திலும் சிறகால் அறைந்தான். அவ்வசுர வேகத் தாக்குதலினால், ஒப்பாரும் மிக்காரும் அற்ற போர்க்
154

Page 171
கலைஞனாகிய இராவணன் நிலை குலைந்து உயிர்ப் படங்கி மயங்கிச் சாய்ந்தான்.
ஆயினும் பின் மயக்கம் தெளிந்தெழுந்தபோது இறைவன் தனக்களித்த மந்திர வாளால் அன்றிக் கழுகரசன் இறந்துபடான் என உணர்ந்து அவ்வாளை எடுத்து சடாயு மீது வீசியெறிந்தான். அவ்வீச்சின் கோரம் தாங்காது அடிபெயர்ந்து மண்மீது சாய்ந்து விழுந்தான் சடாயு. இவ்வாறு அறநெறி தவறிய இராவணன் வாளால் தர்மத்தின் பால் நின்ற கழுகரசன் தோல்வியுறக் கண்ட திருமகள் நஞ்சுண்டவள் போல் நடுங்கி,
"அல்லல் உற்றேனை வந்து அஞ்சலென்ற இந் நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ இல்லையோ அறமென இரங்கி ஏங்கினாள்"
"ஐயோ பெருந்துயரில் சிக்கிய ஏழையாகிய எனக்கு ஆதரவாக வந்து பயப்படாதே நானிருக்கிறேன் எனப் பாதுகாப்பளித்த அறவாணன் தோற்பதும் அட்டூழியம் புரியும் இலங்கை நாயகன் வெல்வதும் தகுமோ? நீதியோ? முறையோ? இந்த உலகின் தர்மத்தைப் பாவம் வெல்லுமோ? தர்மம் என்பதே இவ்வுலகில் இல்லையோ?” எங்கி அழுது அரற்றினாள் சீதை. ஈவிரக்கமற்ற இராவணன் சீதையைக் கொண்டு தென்திசை நோக்கிச் சென்றான்.
தன்னால் இராவணனை எதிர்த்து வெல்ல முடியாது என்று சர்வ நிச்சயமாகத் தெரிந்த பின்பும் கூட, தனது உற்ற உயிர்த் தோழன் தசரதனது மகனுடையதும் அவன் மனைவியுடையதும்மானத்தைக் காப்பதற்காக இறுதிவரை போராடி வீரமரணம் அடைந்த சடாயுவை தெய்வமரணம் எய்தினான் என்று இராமன் புகழ்வதாகக் கம்பநாடன் கவிப்புகழ் கூட்டுகிறான்.
“சரண் எனக்கு யார் கொல் என்று சானகி அழுது சாம்ப அரண் உனக்கு ஆவன் வஞ்சி அஞ்சலென்று அருளின் ஓம்பி முரனுடைக் கொடியோன் கொல்ல மொய்யமர் முடித்துத் தெய்வ மரணம் என் தாதை பெற்றது என் வயின் வழக்கன் றாமோ?”
என்று இராமன் கூறும் இத்தமிழ் வார்த்தைகளால் கழுகரசன் எய்திய தெய்வ மரணத்தின் மாண்பு நன்கு விளங்கும். நட்புறவின் அதி உச்ச விளைவை சடாயுவின் மரணம் நமக்கு உணர்த்தி விடுகின்றது.
கம்பன் மலர் - 2000

சடாயுவை எண்ணும் போது மகாகவி பாரதியின் பெல்ஜியம் நாட்டிற்கான வீர வாழ்த்துக் கவிதைகள் ஞாபகத் திரையில் திரைப்படமாக ஒடுகின்றன. அறவாணர்க்குக்கூட ஐவகை வழிகளில் வீழ்ச்சி வரலாம். அதை ஆதிக்க வெறியரின் சூழ்ச்சி தரலாம் என்பதை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பதின்னான்காம் ஆண்டிலே மிக அதர்மமான முறையில் பெல்ஜியத்தை ஜேர்மனி தாக்கிய போது, நிகழ்ந்தவற்றின் ஊடாக புலப்படுத்திக் காட்டுகின்றான் மகாகவி ultijg. அடாவடித்தனமாகத் தனது நாட்டிற்குள் ஆதிக்கம் செலுத்த முயன்ற ஜேர்மனியை வீராவேசத்தோடு பாய்ந்து எதிர்த்த பெல்ஜியத்தைப் பார்த்து
அறத்தினால் opsig/ விட்டாய்”
"வண்மையால் வீழ்ந்து விட்டாய்” மானத்தால் வீழ்ந்து விட்டாய்” வீரத்தால் வீழ்ந்து விட்டாய்” துணிவினால் வீழ்ந்து விட்டாய்”
என மிக வியப்பும் களிப்பும் ஆவேசமும் எய்திப்பாடியுள்ளான் பாரதி. அந்த ஒன்பது கவிதைகளில் ஐந்தாவது கவிதையில்,
"துணிவினால் வீழ்ந்து விட்டாய்
தொகையில்லாப் படைகளோடும் பிணி வளர் செருக்கினோடும்
பெரும் பகை எதிர்த்த போது பணிவது கருத மாட்டாய்
பதுங்குதல் பயனென்றன்றாய் தணிவதை நினைக்க மாட்டாய்
நில்லெனத் தடுத்தல் செய்தாய்"
என்று பாடி நீ வீழ்ந்தது எல்லாம் உண்மையில் வீழ்ச்சியல்ல அறத்திற்கு உட்பட்ட அதிசய எழுச்சிகளே; அற்புத வெற்றிகளே என அடித்துக் கூறி ஆறுதல் அடைய வைக்கிறான் அந்த மகா கவிஞன். ஆக, அறம் அல்லது தர்மம் தழுவிய ஒரு விடயத்திற்காக எவ்வளவு பெரிய படைப்பலம் பண பலம் உடையவரையும் கூட எதிர்த்துப் போரிடலாம், அதன் மூலம் தோல்வியடைந்தாலும் கூட அது ஒர் உயரிய நிமிர்வான வெற்றியே என்பதை சடாயுவின் வீரம் பொருந்திய தெய்வ மரணத்தின் போதும் உணர்ந்து மெய் சிலிர்க்கிறோம்.
“தர்மத்தின் வாழ்வுதன்னைச் சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்"

Page 172
மிழ்க் கவிஞர்கள் பெண்மை தாக்கத்தால் விளைந்தது.
அச்சமும், நிச்சமும் ெ
என்ற தொல்காப்பிய நூற்பா, பெண்மையில் செய்து கொள்ளப்போகும் ஆடவனுக்கும் தொல்காப்பியர். அவற்றுள் அறிவு ஒப்பும்
திருவள்ளுவர், பெண்மைக்குப் ( அவரால் பிரித்தெடுத்துப் பாராட்டப்பெறுகி ஆண்மகனுக்கு, அவள், துணை என்கிறார். சொற்காத்து என்று சுட்டிச் செல்கிறார். எல்லாம் நிறையும் என்பார்,"இல்லதென், இ “பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்று வி
பலதார மணத்தை வள்ளுவர் ஏற்க ஆனால், ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு கடுமையாகச் சாடுகிறார். ஆண்மையிற்சி பண்பில் மிளிர்வதை, பிறன்மனை நோக்கா பெண், பொது மகளாக வாழ்வதை வள்ளு ஆடவர்களால்தான் என்பது அவர் கணிப் என்பார். பொது மகளிரை “வரைவின் மக பெண்ணை விடுவிக்க வேண்டு என்று குற சமூக அறங்களைச் செய்யத் தவறும் ஆடவ
கற்பனை கலந்த சங்க அக இலக்க என்ற பாத்திரங்களால் நிலைநாட்டப்படுகி கடாதலிலும் பெண்மையின் அறிவுத்திறம் ஒ
 
 
 

ண்புறுநங்கை ண்டோதரி
பேராசிரியர். இரா. செல்வக்கணபதி
யைப் பெரிதும் போற்றும் இயல்பினர். இவ்வியல்பு, சமூகத்
சமூகம், பெண்மையைப் போற்றாதிருந்தால், கவிதைகளில் காப்பியர் காலம் முதல், பாரதி காலம் வரை, தமிழ் இலக்கியச் சிறந்திலங்குகின்றது.
நானும் மடனும் முந்துறுத்த பண்பாற்கு உரிய என்ப"
ன் பெருமிதக் குணங்களைப் பதிவு செய்து காட்டுகின்றது. மணம் , பெண்ணுக்கும் பத்துவகை ஒப்புமை வேண்டும் என்கிறார் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது.
பேரிடம் தருகிறார். ஆடவனின் இல்லறத் துணையாகும் பெண், ன்றாள். வாழ்வு என்னும் கடலைத் தனித்துக் கடக்க இயலாத கணவன் குடும்பப் பெருமையை, அவளே காக்க வல்லவள் என்பதை, அவள் மட்டும் நன்கு அமைந்து விட்டால், ஆடவன் வாழ்க்கையில் ல்லவள் மாண்பானால்” என்று பேசி ஏற்றம் காட்டுவார். நிறைவாகப், வினாத் தொடுத்து அணி சேர்ப்பார்.
வும் இல்லை; மறுக்கவும் இல்லை. அது காலத்தின் தாக்கம் ஆகலாம். விட்ட பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் ஆண்மையை, அவர் ]ந்த ஆண்மை, மாற்றான் மனைவியை ஏறெடுத்துப் பார்க்காத மனப் த பேராண்மை” என்று புத்திலக்கணம் படைப்பார். மணம் கொள்ளாது, வர் கடுமையாகச் சாடுவார். பொதுமகளிர் உருவாதல் ஒழுக்கமற்ற பெண்ணை, விலை மாதராகக் கருதும் சமூகம் "நோயுடையது” ளிர்” என்று இனங்காட்டி, சமூகம், அவ்வாறான வாழ்விலிருந்து வித்துரைப்பார். மனைவி என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, னைக் கண்டித்தே, வள்ளுவரின் பெண்வழிச் சேறல் அமைந்தது.
கியங்களில், பெண்மையின் பெருமிதங்கள் தலைவி, தோழி, செவிலி ன்றன. அறத்தொடு நிலையிலிலும், உடன்போக்கிலும், வரைவு ளிவீசக் காண்கிறோம்.
156

Page 173
புற இலக்கியங்களில், பாடும் குயில்களாகப் பெண்பாற் புலவர்கள் வலம் வருகின்றனர். குலப் பெருமையும், மான வீரமும் மிக்க மகளிர்கள் அங்கே தீட்டப்பட்டுள்ளனர்.
தமிழின் முதற்காப்பியம், ஒரு பெண்ணிடமிருந்து, அது கூடச் சரியில்லை; அவள் காற் சிலம்பிலிருந்து பிறக்கிறது. ஒரு குலமகள், தெய்வமாகிறாள்; ஒரு அறியாப்பெண், ஆர்ப்பளித்து எழுகிறாள்; அறிவார்ந்த வாதத்தால், நீதி கேட்டு நிமிர்ந்து நிற்கிறாள்; தெய்வம் எனக் கைகூப்பப் பெறுகிறாள்; கணிகைகுல மாதவி, கற்பரசியாகிறாள்; கண்ணகியோடு ஒப்ப எண்ணமிடப்படுகிறாள்; அவள் மகள், அறச்செல்வியாகி, அகிலம் காக்கிறாள். “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" என அரசமாதேவி ஆவி துறக்கிறாள்.
“பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே"
என ஞானசம்பந்தர் நயமுறப் பேசுகிறார்.
‘பேயார்க்கும் அடியேன்”
என்று, சுந்தரர் அம்மையாரை 'ஆர்', விகுதி தந்து வணங்குகின்றார். ‘அள்', 'ஆள்’ என்ற விகுதியே பெய்யாமல், பெண்மைத் தொண்டர்களை, முடிக்கும் போதெல்லாம், 'ஆர்' என்னும் உயர்திணைப் பலர்பால் விகுதியே தந்து சேக்கிழார் பெண்மையைச் சிறப்பிக்கிறார். தீமையுடைய பெண்பாற்பாத்திரம், ஒன்று கூட இல்லாது, கதை நடத்திச் சேக்கிழார் கருத்துள் நிறைகிறார்.
பிறமொழிக் காப்பியம் தமிழுக்கு வந்தபோது, அவற்றைத் தமிழில் தர வந்த, தமிழ்க் கவிஞர்களுக்குப் பெண்மை பற்றிய சித்தாந்தம் அரணாய் நிற்கிறது. இராமகாதையும், பாரதமும், பெருங்கதையும், சிந்தாமணியும் தமிழில் எழுந்தபோது, பெண்மை பற்றிய சித்திரிப்புக்களில், கவிஞர்கள் மண்ணின் மரபைப் போற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர். காவியப்போக்கில், முரண்பாடுடைய, முறைதவறிய, மற்றும் சீர்மை திறம்பியமகளிர்கள், மூலக்கதைகளில் வருகின்றனர். அவர்களைத் தமிழ்ப்படுத்தும் போது தமிழ் இலக்கிய ஆடவர்சால்பும், மகளிர் திறமும், மாசுபடாவண்ணம் அவர்களைப் படைக்கத் தமிழ்க் கவிஞர்கள் உறுதி பூண வேண்டியுள்ளது. தீய மகளிர்கள் கூட நல்லவர்களாக, இயன்றவரை உயர்ந்தவர்களாகப் படைத்துக் காட்டப்படுவதற்கு, இந்த மண்ணின், கவிஞர்கள் போற்றிய மரபே, பாதுகாவல் செய்கிறது.
வான்மீகத்துச் சூர்ப்பனகையும், தாரையும், உருமையும், கைகேயியும், மண்டோதரியும் கம்பனின் கைவண்ணத்தில் எவ்வளவு உயர்ந்துள்ளனர், அல்லது உயர்த்தப்பட்டுள்னர் என்பதை, ஒப்பிட்டுப் பார்ப்பவரே உணர இயலும், கவிஞனின், தனிமனிதப் பண்பாடும் இணையும்போது, இச்சித்திரிப்புக்கள் மேலும் அழகாகின்றன.
தீமையையே, தீமை களைந்து, நன்மையாகச் சித்திரிக்கவல்ல, பண்பாடுமிக்க தமிழ்க் கவிஞர்கள் கையில், ஒரு
கம்பன் மலர் - 2000

நன்மை கிடைத்துவிட்டால், அதை, அவர்கள், எந்த அளவுக்கு ஒளியூட்டுவார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு, ஒரு சான்றாகத் திகழ்கிறாள், மயன்மகள் மண்டோதரி.
கவிஞன், ஒரு தாய் போன்றவன். தேறும் என்று, அவள் எதிர்பார்த்த பிள்ளை, தேறிவிட்டால் அவள் மகிழ்வதை விட, தேறாது என்று நினைத்த பிள்ளை, தேறும்போது, அவள் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. தீமையின் ஊடே நன்மையையும், மறத்தின் ஊடே அறத்தினையும், காணும்போது மகிழ்வது, மானுட இயல்பு. கவிஞன் மானுடத்திற்கும் மேம்பட்டவன். அதனைப் பாடிப் படைத்துச் சாகாவரம் தருபவன்.
இருள் சூழ்ந்த இலங்கையில், வீடணனும், திரிசடையும், மண்டோதரியும் கண்ணில் படும்போது, அவன் கவிதை உள்ளம் கர்வம் கொள்கிறது. கம்பனின் கை வண்ணத்தில், இராவணன் மனைவி மண்டோதரி மறக்கவொண்ணா, கற்பரசியாக, கவினார் நங்கையாகப் பேருருக் கொள்கிறாள்.
சீதையின் விடுதலை கண்டு மகிழ வேண்டிய நம்மை, மண்டோதரி, மாங்கல்யம் இழந்ததற்காகக் கலங்க வைக்கக் கம்பனால் முடிகிறது. இராவணன் வீழ்ச்சியால் நிறையவேண்டிய மனம், மண்டோதரி துயரத்தில் பங்கேற்கத் துடிதுடிக்கிறது. “இவனுக்கு இது வேண்டும்” என்று உள்ளம் துள்ளும்போது, “இவளுக்கா இத்துயரம்” என நெஞ்சம் அஞ்ச வைக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். தீயவன் துணைவி, உத்தமன் துணைவிசீதைக்கு, நிகராக, உருவாகும்போது, நெஞ்சம் அவளை ஏற்கவே செய்கிறது; நெகிழ்ந்த கண்கள், குளமாக ஆகின்றன.
ஆறு காண்டத்துக் கம்பனில், அவளை ஐந்தாவது காண்டத்து இடையில்தான், ஆஞ்சநேயன் கண் வழி, முதன்முதலாகக் காணுகிறோம். சிற்றுருக்கொண்டு சீதையைத் தேடி வருகிறான் அனுமன். நெடுநேரத்தேட்டத்திற்குப்பின், வித்தியாதரமாதர் வீதியைக் கடந்து வரும்போது, மண்டோதரி மாளிகை, அவன் கண்ணில் படுகிறது. கம்பன், அவள் உறையும் அழகையும் உரைக்கின்றான்.
“கண்டனன், நளிர்திங்கள் மாய நந்திய வாள்முகத்து ஒரு தனிமயன் மகள் உறை மாடம்.”
என்கிறாள். சந்திரமண்டலத்துக்கு மேலாகக் காண்பார்க்கு, மகிழ்ச்சியை விளைத்து விளங்கும், முக அழகுடையாளாம் மண்டோதரி. அசுரத்தச்சனாகிய மயனது மகள், அழகிலும் சிறந்தவள். அவள், அகலிகை, திரெளபதி, சீதை, தாரை என்பாரோடு பஞ்சகன்னியருள் ஒருத்தியாக வைத்து எண்ணப்படுபவள். கண்டமனைகளுக்கெல்லாம் மேம்பட்ட மனை இது, என்றுணர்ந்த அனுமன், சீதை சிறைவைக்கப்பட்ட மாடம் இதுவே என எண்ணுகிறான். உள் நுழைகிறான். சீதையோ என ஐயுற்று, அவன் காணும் மண்டோதரி, உறங்கிக் கிடக்கும் நிலையை மூன்று கவிதைகளில் கம்பன் புனைகிறான். மன்மதனின் அம்பறாத்தூணி போன்ற மன்டோதரியின் கால்களை, அரம்பை
- 157

Page 174
மேனகை, திலோத்தமை, ஊர்வசி முதலியோர் பிடித்துவிட்டுக் கொண்டுள்ளனர். சிலர்,வெண்சாமரம் வீசுகின்றனர். வேறுசிலர், வீணை மீட்டுகின்றனர். சிலர், கற்பகமலர்களின் மணத்தை, அவள் நுகர நீட்டுகின்றனர். தென்றல்,மண்டோதரி அருகிருக்கும் பெண்கள், வீசு என்று அழைத்தால் உள்ளே நுழையலாம் என்று காத்து நிற்கின்றது. அருகில் ஏற்றி வைக்கப்பட்ட இரத்திமணி விளக்குகளின் ஒளிகளைத் தன் உடல் ஒளியால் ஒளியிழக்கச் செய்தவாறு உறங்குகிறாள் மண்டோதரி.
அவளைக் கண்ட அனுமன், இவள் சீதையோ, என எண்ணி மயங்குகின்றான். மயங்கி வெகுள்கின்றான்.
அன்னள் ஆகிய சானகிஇவள் என
அயிர்த்து அகத்து எழு வெந் தீ
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஒர்
துயர் உழந்து இவை சொன்னான்”
வான்மீகத்தில், இராவணன் காற்கடையில், மிக உயர்ந்த படுக்கையில், மண்டோதரிபடுத்து உறங்குவதை அனுமன் கண்டு, பெருமகிழ்வுகொண்டு, பின்பு,உற்றுநோக்கி இவள் சீதை அல்லள் எனத் தெளிந்தான், எனக் கதை நடையிடுகிறது.
கம்பன், மண்டோதரிக்குத்தனி மாளிகை கட்டுகின்றான். சீதையோ என்ற ஐயம், இராவணன் காலடியில் உருவாவதை விட, தனியிடத்தில் உருவாவது, வலியுடைத்து என எண்ணுகிறான். காப்பியத்தில் அனுமன், கவிஞனின் கருத்து வெளிப்பாட்டிற்குத் துணை நிற்பவன். கம்பன் மதிப்பீடுகள் பலவும், அனுமன் வாயிலாகவே இராமகாதையில் வெளிவரப்பெறும். கண்களால் கற்புடைமையை நுனித்து அறியும் அறிஞன் அவன்.
இராமன், சீதையின் அங்க அடையாளங்களை அனுமனிடம் விரித்துரைத்தான். அவற்றையெல்லாம் மண்டோ தரியிடம் வைத்து நோக்கும் அனுமன், சீதைக்கு உரைத்த அடையாளங்கள் பலவற்றையும் மண்டோதரிபால் கண்டு, இவள் சீதையோ என ஐயம்கொள்கிறான். சீதைக்கு இணையான அங்க அடையாளங்கள் கொண்ட பேரழகி, கற்பரசி, உயர்குல மடந்தை இவள் என்பதைக் கற்பார்க்கு உணர்த்தக் கம்பன் செய்யும் உத்திகளில் ஒன்று இது.
அனுமனுக்கு, வாராத ஐயத்தை வரவழைத்து நமக்கு மண்டோதரி சீதைக்கு நிகரானவள் என்று செய்தி சொல்கிறான். நோக்கம், வேறு உண்டு. இத்தகு அழகும், கற்புமுடையாளைத் துணையாகப் பெற்றிருந்தும், அவளை விடுத்து, மாற்றான் மனைவியாகிய சீதையை நாடிய, இராவணன் சிறுமையை உணர்த்தவும் கம்பன் இதனைக் கையாளுகின்றான்.
கோபத்தோடு உற்றுநோக்கியவன், உறக்கத்தில், அவள் பால் நிகழும் நிகழ்வுகள் சிலவற்றைக் காண்கின்றான்.
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து
அறைகுவது இவள் யாக்கை;
அகில இலங்கைக் கம்பன் கழகம்

மலர்க் கருங்குழல் சோர்ந்து வாய் வெரிஇ சில
மாற்றங்கள் படைக்கின்றாள்
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இவ்
வியன் நகர்க்கு உளது"
என்றான். தீமை விரைவில் வரப்போவதை இவள் யாக்கை காட்டுகின்றது. மலர்க் கருங்குழல் சோர்கின்றது. வாய்பிதற்றி உறக்கத்தில் சில சொல் மொழிகின்றாள். இவ்வறிகுறிகள், இவள் கணவனுக்கும், இந்நகருக்கும், அழிவுவரப்போவதை உணர்த்துகின்றன. என்பதை, அனுமன் உணர்கின்றான். பின் அனுமன் இராவணன் மாளிகையில் புகுகின்றான்.
மீண்டும் மண்டோதரியை அக்ககுமாரன் வதைப்படலத்தின் இறுதியில் கம்பன் கொண்டு வருகின்றான். அக்ககுமாரன், மண்டோதரியின் இரண்டாவது குமாரன். இந்திரசித்தனின் தம்பி. பொழில் இறுத்த அனுமனோடு போரிட்டு, அக்ககுமாரன் மாள்கிறான். அவன் இறப்பு, இலங்கையில் பெரும் துயர் விளைவிக்கின்றது. எல்லோரும் புலம்புகின்றனர். மகனைப் பறிகொடுத்த தாய் மண்டோதரி புலம்பலை, கடைசியாகக் கம்பன் வைக்கின்றான். செய்தி கேட்ட மண்டோதரி, மகனைத் தேடிச் சென்றுகண்டு புலம்பாது, அருகில் நின்ற கணவன் இராவணனின், கால்களில் வீழ்ந்து, அழுது அரற்றுகின்றாள். கம்பன் அற்புதம் செய்யும் இடம் இது.
கயல் மகிழ்கண் இணைகலுழி கான்று உக புயல் மகிழ் புரிகுழல் பொடி அளாவுற அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் மயன் மகள், வயிறு அலைத்து அலறிமாழ்கினாள்”
இராவணன், அயன்மகன் மகன் மகன் என்று கம்பன் குறிக்கின்றான். அயன் மகன் புலத்தியன், புலத்தியன் மகன் விச்சிரவசு, விச்சிரவசுவின் மகன் இராவணன்.
இராவணனன் கால்களில் வீழ்ந்த, மண்டோதரி வயிறு அலைத்து, மாழ்கினாள் என்று மட்டுமே கம்பன் கூறுகின்றான். அவள் கூற்றாக ஏதும் கூறவில்லை. வார்த்தைகள் அற்ற அழுகைக்குள்ளே, ஆழ்ந்த நோக்குடைய குறிப்புக்களைக் கவிஞன் பெய்கின்றான். ஏனெனில், மண்டோதரி துயர், அது வந்த காரணம், கணவன்பால் வெளிப்பட உரைக்க இயலாத ஒன்று பாவி, உனது முறையற்ற காமத்தால் அல்லவா, என் அருமை மகன் அக்ககுமாரனை இன்று நான் இழந்தேன், என்று கூறாமற்கூறும் கூற்றுக்களைக் குறிப்பில் பெய்கின்றான் கவிச்சக்கரவர்த்தி
காப்பியங்களில் வரும் எதிர்முனைப்பாத்திரங்கள் பலவும் தீமையின் சித்திரிப்புக்களாகவே அமைகின்றன. இராவணன் மட்டும் அல்லன்; துரியோதனனும், சூரபதுமனும் கூடத் தீயவர்கள்தாம். ஆனால் ஒரு வியப்பு. இந்தத் தீயவர்களுக்கு வாய்த்த துணைவியர் பலரும் தூய கற்பரசியராகவே விளங்குகின்றனர். இராவணன் மனைவி மண்டோதரி; துரியோதனன் மனைவி பானுமதி; சூரபதுமன் மனைவி பதுமகோமளை. யாவருமே உன்னதமான பெண்மைப் படைப்புக்களே. மூவருமே துயருற்றனர். கணவனை இழந்தனர்.
158

Page 175
பிள்ளைகளைப் பறிகொடுத்தனர். மூவர் துயர் அளவும் ஒன்றுதாமா? அதுதான் இல்லை, மண்டோதரிக்கு உற்றதுயர் பெரிது; மிகப்பெரிது. வாய் திறந்து அரற்றவும் இயலாத, கணவனின் காமம் சார்ந்தது. மானத்திற்காகப் போரிட்டான் சூரபதுமன், மண்ணுக்காகப் போரிட்டான் துரியோதனன், அந்தப் போராட்டத்தின் இறுதியில் தோல்வி என்றாலும், துணைவியர்க்கு ஒரு பெருமிதம் இருந்தது. ஆனால், இராவணன் போரோ, காமத்திற்காக, மாற்றான் மனைவிக்காக, இங்கேதான், மண்டோதரியின் துயர் அளவு இரட்டிப்பாகிறது. இது, பெண்மைக்கு உற்ற பெரும் சோதனை.
மீண்டும் மண்டோதரியை யுத்தகாண்டத்தில் கம்பன் காட்டுகின்றான். அழுவதற்கு மட்டுமே அவள் உரியவள் போலும், மூத்த மகன் இந்திரசித்தன், இறந்தான் என்ற செய்தி கேட்டு மைந்தன் மேல் விழுந்து, புலம்புகின்றாள் மண்டோதரி. அவள் சோகத்தை ஏழு விருத்தங்களில் கம்பன் பதிவு செய்கின்றான். மண்டோதரி புலம்பல் கல்லையும் கரைவிக்கும் உருக்கம் மிக்கது.
"மகனே, நீ நாள்தோறும், திங்கள் போல் வளர்ந்து வந்த காலத்தில், வில் எடுத்து சிங்கத்தை வென்ற காட்சியைக் கண்டு அன்று களித்தேன். ஐயகோ, இன்று உன் தலையிலா உடலைக் காண நான் என்ன தவம் செய்தேன் அப்பா"
ஐயனே, அழகனே, என் அரும் பெறல் அமிழ்தே ஆழிக் கையனே, மழுவனே, என்று இவர் வலி கடந்த கால மொய்யனே, முளரிஅன்னநின்முகம் கண்டிலாதேன் உய்வெனோ?”
"மகனே, இளமைக்காலத்தில், ஒரு நாள் நீ இரு சிங்கக் குட்டிகளைப் பிடித்துக் கொண்டு முன்னே வந்தாய். சினம்மூட்டி ஒன்றொடு ஒன்றை மோதவிட்டாய். மீளமீள நீ ஆடிய அந்த ஆட்டத்தை மகனே இனி என்று காண்பேன். ஒருநாள் நீவானத்து நிலவை, வா என்று அழைத்தாய். அஞ்சி, அம்பு, உன் கையில் வந்தது. நிலவிலிருந்த மறுவைக்கண்டு, இந்திரா இந்த முயலை நீக்குகின்றேன். மீள எழுந்து வாராயோ?”
மகன் மறைவு பற்றிய சோகத்திற்குப் பின்னே பெண்மை மனம் சோகத்தின் பின்புலத்தை நினைவு கூர்கிறது. மெல்லிய சொற்களால் வெளிப்படுத்துகின்றாள் மண்டோதரி. அதில்தான் எவ்வளவுநனிநாகரிகம். முன்னை இராவணன் மகன் அதிகாயன் சாக்காட்டில் அவன்தாய் தானியமாலினி புலம்புவதைக் கம்பன் பதிவு செய்வான். பலவாறு அழுத தானியமாலினி சோகத்தின் உச்சியில் இராவணனை நோக்கி அவன் காமத்தைச் சுட்டிக் கண்டித்து.
"ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் என் இறந்த கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ?
கம்பன் மலர் - 2000

பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ? சீதையால் இன்னம் வருவ சிலவேயோ?
எனச் சீறுவாள். ஆனால் அதே போன்று சோகத்தின் உச்சியில் மண்டோதரியிடம் கணவனைக் கண்டிக்கும் அவன் காமத்தைச் சாடும் பண்பு காணப்படவில்லை. ஆனால் ஒரு உண்மை.
வரப்போகும் துயரத்தைக் கற்பு மனம் கணித்துக் காட்டுகிறது.
பஞ்சு எரிஉற்றது என்ன அரக்கர்தம்பரவை எல்லாம்
வெஞ்சினமனிதர்கொல்ல விளிந்ததே மீண்டதுஇல்லை. அஞ்சினேன்அஞ்சினேன்.அச்சீதை என்னும் அமுதால் செய்த
ர்சினால் இலங்கை வேந்தன்நாளைஇத் rஅன்றோ?”
மகன் இறப்புக்குக் கணவனே காரணம் என்பதைத் தாய் மனம் உணர்கிறது என்றாலும் இன்று மகனுக்கு நேர்ந்தது நாளை, கணவனுக்கும் நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் விரிகிறது. கற்பின் வீச்சுக்குக் கம்பன் காட்டும் உன்னத அடையாளம் இது. தானியமாலினி மகன் பிரிவில் கணவனைச் சாடுகிறாள். மண்டோதரியோ நாளை நிகழப் போகும் சோகத்தை நினைவுகூர்ந்து கற்பில் தலைநிற்கிறாள். 'சீதை என்னும் அமுதால் செய்த நஞ்சு” என்று முதல் முதல் அவள் வாய் சீதையின் திருப்பெயரை உச்சரிக்கிறது. மண்டோதரியின் மாண்பு நம் செஞ்சத்தை நெகிழ்விக்கின்றது.
"சோமகுண்டம், சூரியகுண்டத்தில் முழ்கி, காமவேளை வழிபட்டால்பிரிந்த கணவனைக் கூடலாம், வா நீராடலாம்” என்று அழைத்த தோழி தேவந்தியை நோக்கிப் “பீடன்று” என மொழிந்ததை இளங்கோ பேசுவார். கடவுளுக்கு முன்னின்று கூட, கணவன் குறைகளை இயம்புவது கற்புடைய பெண்ணுக்குப் பெருமை அன்று என்று கருதினாள் என்பர். இங்கே மண்டோதரியிடம் பெண்மைப் பண்பு பேரழகு பெறுவதைக் காண்கின்றோம்.
கற்பரசிகளின் கணிப்புகள் தவறுவதில்லை. அவள் நினைத்தவாறு ஒருநாள் இராவணன் மாண்டான் என்ற பேரிடி, செய்தியாக வந்தது. இராவணன் உயிர் துறந்து கிடக்கும் படுகளத்திற்கு அவள் வருகிறாள். கம்பன் செய்தியாகக் கூறும்போது,
இனம் தொடர்ந்து உடன்வர, எய்தினாள் என்ப நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்"
தன் கணவனை அவள் நினைத்ததே இல்லை. ஏன் தெரியுமா? அவள் மறந்தால்தானே நினைக்க,என்கின்றான் கம்பன். அவளே அவனே நினைவாக வாழ்கின்றாள். அவனோசீதையே நினைவாக வாழ்கின்றான். இராவணன் மார்மீது வீழ்ந்த மண்டோதரி புலம்புகிறாள். காவியத்தில் களம் நிறைந்த சோகம்
159

Page 176
கொட்டிக்கிடக்கும் கம்பன் கவிதைகள் நீளுகின்றன. மரங்களும், மலைகளும் உருக வாய்திறந்து இரங்கினாள் மயன்மகள் என்பான் கம்பன். உயிரற்ற மலைகளும், சிற்றறிவு படைத்த மரங்களுமே அவள் துயர்கண்டு இரங்கின எனின் ஏனைய மாந்தர் துயரை என்னென்பது என நம்மைக் கம்பன் வினவும் இடம் இது.
மண்டோதரியின் புலம்பலை ஏழு பாடல்களில் கம்பன் பதிவு செய்கிறான். அவற்றில் ஒவ்வொன்றும் ஆயிரம் பொருள் பொதிவு கொண்ட அவலம் நிறைந்தன. கணவன் பெயரை மனைவி வெளிப்பட உரைத்தல் பண்பன்று என்பது தமிழர் LfoJLj. “கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயரே” என, கணவன் பெயர் குறித்தாள் கண்ணகி, என்பார் இளங்கோ. “இறைவனே அஞ்சேல் இயற்பகை வெல்லும்” என்று கணவன் பெயர் உரைத்தார் இயற்பகை நாயனார் துணைவி என்பார் சேக்கிழார். ஒன்று தெரிகிறது. கணவன் பெயரை மனைவி உச்சரிக்கலாம். ஒன்று அவன் இறந்த பிறகு, உச்சரித்தாள் கண்ணகி. துறந்த பிறகு உச்சரித்தார் இயற்பகைதுணைவி. இலங்கை வேந்தன் நாளை இத்தகையணன்றோ என்று குறித்த மண்டோதரி, அவன் இறந்த பிறகு, “என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு” எனத் தன் கணவன் பெயர் உரைத்துப் புலம்புகின்றாள்.
கணவனுக்கு முன்னாகப் பூவொடும் பொட்டொடும் இறக்க விரும்புவது இந்தியப் பெண்களின் தலையாய விருப்பம். மண்டோதரியும் அதனையே நினைத்திருந்தாள். ஆனால் இவ்வளவு விரைவில் இராவணன் வீழ்வான் என்று அவள் நினைத்தாள் இல்லை. நினையாத ஒன்று நிகழ்வதுதானே உலக இயல்பு. மண்டோதரி அரற்றுகின்றாள்.
"அன்னேயோ, அன்னேயோ ஆ கொடியேற்கு
அடுத்தவாறு, அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த
கருத்து அதுவும் பிடித்திலேனோ?”
தன் எண்ணம் பொய்த்தது. ஏமாற்றத்தோடு இராமன் வில் அம்புகளால் துளைக்கப்பட்டு பொடியாடி வீழ்ந்து கிடக்கும் தன் கணவனின் திருமேனியைக் காணுகின்றாள். மனைவியை விட ஒர் ஆண் மகனைச் சரியாக எவரால் மதிப்பிட முடியும்? இராவணனை மற்ற எல்லாரையும் விட நன்கு அறிந்தவள் மண்டோதரி. மாற்றான் மனைவியை இதயமாம் சிறையில் வைத்தவன் கணவன் என்று அவள் அறிவாள். இக்காமம் பற்றி எழுந்த போரில் தன் கணவன் முதல் நாள் அவமானப்பட்டுத் தனியனானதும் அவளுக்குத் தெரியும். அப்போது கூட, சானகி நகுவாள் என அவன் மானத்தால் சாம்பியதை அவள் உள் உணர்வு எடை போட்டிருக்கும். காமத்தால் கிளைத்த போர் அது. எவர் சொல்லையும் கேளாது என்னையே நோக்கி நான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன் என்ற இராவணனின் வீரம் அவள் அறியாததன்று. ஆனால் போர்க்கள நிகழ்வுகளால் அடுத்து
அகில இலங்கைக் கம்பன் கழகம்

அடுத்து அதிகாயனும், கும்பகர்ணனும், இந்திரசித்தனும் ஒவ்வொருவராக மாள மாள அளவிறந்த சோகத்தில் இராவணன் தடுமாறுகின்றான். காமம் நிறைந்த நெஞ்சில் சோகம் நிறைகிறது. இராவணனின் மனமாற்றம் ஊருக்கும் உலகுக்கும் புலப்படாது இருக்கலாம். உயிர் கலந்த மண்டோதரிக்கு புலனாகிவிட்டது. அவள் தெளிவாக அதனைத் தெரிந்து கொண்டிருந்தாள். கணவனின் சிறு அசைவுகளில் கூட அவன் உளப்போக்கை அறியும் ஆற்றல் சராசரி பெண்களுக்கே உண்டு என்றால், சீதைக்கு நிகரான கற்பரசி மண்டோதரிக்கு இராவணனின் மனமாற்றம் தெரிய வந்ததில் வியப்பு என்ன உண்டு. பெண்மை சோகத்தின் விளிம்பில் வெளிப்படுத்தும் உண்மைகள் பெரிது, நேரிது.
இராமன், இராவணன் மீது அம்பெய்து அவன் உயிரை மாய்த்திட்டான். ஆனால் மண்டோதரி இராமபாணம் இராவணன் மார்பில் பாய்ந்ததற்கு வேறு காரணம் கற்பிக்கிறாள். தன் துணைவியை அசோகவனத்திலிருந்து விடுவிப்பது மட்டுமா இராமனின் நோக்கம்? அன்று. தன் மனையாள் பற்றிய காதல் எண்ணத்தை இராவணன் எந்த நெஞ்சத்தில் வைத்தானோ அந்த எண்ணச் சிறையிலிருந்து இராமன் அவளை விடுவிக்கவே விரும்பினான். அவன் இராமபாணத்தை இராவணன் மேல் ஏவியதும் அதற்காகத்தானம். மண்டோதரியின் அழுகுரல் ஊடே எழும் நுட்பமான வார்த்தைகளில் இராவணனின் தூய்மையும், இராமபாணம் ஏமாற்றம் உற்றதும் அழகுற வெளிப்படுகின்றன. இதனை நுனித்து அறியவல்லார் மட்டுமே உணர இயலும். இராவணன் மனச் சிறையில் சீதை இருக்கின்றாள் என்று இராமன் திடமாக நம்புகின்றான். அம்பு விடுகின்றான். அதுவும் மார்பை ஊடுருவிச் செல்கின்றது. மண்டோதரி நினைக்கின்றாள். என் கணவன் உள்ளத்திலிருந்த சீதை என்றோ எடுத்துத் தூர வீசப்பட்டாள். அவன் நெஞ்சில் காமம் குடிபெயர்ந்து வீரம் வேர்விட்டுள்ளது. ஆனால், ஐயகோ இராமபாணம் சீதை நினைவு அங்கே இருக்கும் என்று உள்ளே புகுந்து ஒவ்வோரிடமாகத் தேடி ஏமாற்றம் அடைந்துள்ளதே. இராமபாணத்திற்கா இந்தக் கதி? அழுகையின் ஊடே கணவனின் நெஞ்சறிந்து போற்றும் கற்பின் திறத்தைக் கம்பன் சாறு பிழிந்து காட்டுகின்றான்.
"வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
திருமேனி மேலும் கீழும், எள் இருக்கும் இடமின்றி, உயிர் இருக்கும்
இடம் நாடி, இழைத்தவாறோ? கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து
தடவியதோ ஒருவன் வாளி?”
“உள்ளிருக்கும் எனக் கருதி” என்ற தொடரில் காமம் என் கணவன் உள்ளத்தே என்ற உறுதி வெளிப்படக் காண்கிறோம். சீதையைக் “கள் இருக்கும் மலர்க் கூந்தற் சானகி” என அடைமொழி சேர்த்து அரற்றுவதில், அம்மலரை நான் இழந்தேனே என்ற ஏக்கம் தொனிக்கிறது.
160

Page 177
பொதுவாக, மனித உடலை, “மெய்" என்றே அழைப்பது மரபு மனித வடிவில் அமைந்த ஒன்றை"உருவம்” என்றே கூறுவர். கடவுள் வடிவை மட்டுமே"திருமேனி" என்று குறித்தல் தமிழர் மரபு. கம்பன், இராவணனின் வீழ்ந்து கிடக்கும் உடலைத் “திருமேனி” என்று கூறக் காண்கிறோம். ஆம், மண்டோதரி அறிவள், மனத்தூய்மையோடு, என் கணவன் மரணத்தைத் தழுவினான். அவன் உடல் வணங்கத்தக்க திருமேனி ஆயிற்று” என்ற அவள் அரற்றலில், இராவணன் கற்பார் நெஞ்சில் ஒருபடி உயர்கின்றான்.
கம்பன் கைவண்ணத்தில் மண்டோதரி புலம்பலாக வரும் “காந்தையருக்கு அணி அணைய' என்ற பாடல், பேரழகு பெற்று விளங்குகின்றது. கவிதை அழகெல்லாம் நிறைந்த உன்னதப் பாடல் அது. மண்டோதரியின் மனப்பண்பை அது அழகாகப்படம் பிடித்துக் காட்டுகின்றது.
இந்திரன் தவம் செய்தான், எதற்காக? அரக்கரை அழித்து, அமரரை வாழ்விக்க, அவன் தவம் வென்றதா? ஆம் வென்றது. எப்போது? இராவணன் வீழ்ச்சியில்; முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் உடைய இராவணனுக்கு வீழ்ச்சி யாரால் வந்தது? கற்புமணம், காரணங்களைச் சோகத்திலும் நிலை தடுமாறாமல் கணித்து உரைக்கின்றது.
இராவணன் வீழ்ச்சிக்கு முதற் காரணம், சீதையின் பேரழகு. அழகுக்கு அழிக்கும் திறம் உண்டா? அழகு மட்டும் காரணம் அன்று; அவள் கற்பு ஒரு காரணம், மூன்றாவதாக இராவணனார் சீதைபால் கொண்ட காதல்; இராவணன் கொண்டது காமம்தான். ஆனால், மண்டோதரியின் கணவனைக் குறை காணாத நெஞ்சம், காமத்தையும் காதல் என்று நாகரிகப்படுத்துகின்றது. அடுத்த காரணம், நாத்தி சூர்ப்பனகை. சூர்ப்பனகை என மட்டும் கூறாது, “அவள் இழந்த மூக்கும்” என்கிறாள் மண்டோதரி. சூர்ப்பனகையின் மூக்கு மட்டும் அரியப் பெறாதிருந்தால், அவள் இராவணனை நாடி முறையிட வந்திருக்க மாட்டாள். எனவே, இலக்குவன் செயல் கூட சூர்ப்பனகையின் வடிவில் இராவண வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்கிறது காதல் நெஞ்சம்.
வேந்தர் தலைவனாகிய இராமன், தயரதன் கட்டளையால், காடு போந்ததும் ஒரு காரணம் என்கிறாள் அவள். கணவன் வீழ்ச்சிக்குப் பல காரணங்களை அடுக்கும் மண்டோதரியின் அரற்றலுக்கு இடையே ஒரு உண்மை புலப்படவே செய்கிறது. என்ன அது? இராவணன் வீழ்ச்சிக்கு முதலும், முடிவுமான ஒரே காரம், அவன் சீதை பால் கொண்ட காமமே. ஆனால், அன்பு மனம், கணவனைக் குறைகாண விரும்பாத கற்பு நெஞ்சம், பல காரணங்களை அடுக்கி அவற்றுள் ஒன்றே என் தலைவனின் காரணம் என, அவனைக் காக்க முற்படும் அற்புதத்தைச் செய்கிறது.
கம்பன் மலர் - 2000

காந்தையருக்கு அணி அனைய சானகியார்
பேர் அழகும் அவர்தம் கற்பும் ஏந்துபுயத்துஇராவணனார் காதலும் அச்
குர்ப்பனகை இழந்த மூக்கும் வேந்தர்பிரான், தயரதனார் பணியதனால்
வெங்கானில் விரதம் பூண்டு போந்தவும் கடைமுறையே புரந்தரனார்
பெருந்தவமாய்ப் போயிற்றம்மா”
மண்டோதரியின் பெண்மைப் பண்பால், இராமன் என்ற பெயர் சுட்டாது, 'ஒருவன்' என்றும், மானுடவன்’ என்றும், வேந்தர் தலைவன்’ என்றும் மனிதனார்’ என்றும் கூறப்படும் அருமைப்பாடு, கம்பச் சித்திரத்திற்கு அழகு சேர்க்கிறது.
மண்டோதரியின் அழுகையைக் கூட, பலபடப் புனையும் கம்பன், அவற்றில் எல்லாம், அவள் கற்பின் மாட்சியைக் காட்டுகின்றான்.
πιατ. நீஉழந்த அருந்தவத்தின்
பெருங் கடற்கும் வரம் என்று ஆன்ற
காவற்கும் வலியான் ஓர்மானுடவன்
உளன் என்னக் கருதினேனே’
என்ற அவள் அரற்றலும்,
திரை கடையிட்டு அளப்பரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும் பிரை கடையிட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவப்பயனின் பெருமை பார்ப்பேன்."
என்ற அவள் மனக் குமுறல்களும்,
நாரநாள்மலர்க் கணையால், நாள் எல்லாம்
தோள் எல்லாம் நைய எய்யும்
மாரனார்தனி இலக்கை மனித்தன்ார்
அழித்தனரே வரத்தினாலே”
என்ற அவள் நிலை குலைவும் கம்பனில் மறக்க இயலாத துன்பியல் ஒவியங்களாக அமைகின்றன.
இவ்வாறு, பலபட அழுது அரற்றிய மண்டோதரி, வீழ்ந்துபட்ட இராவணன் மார்பினைத் தன் கரங்களால் தழுவி, யாருமற்ற இடத்தில் கணவன் மட்டுமே அறிய அவள் கூறும் அந்த ஒரு சொல்லை, கூட்டக் கலப்பில், இன்ப உச்சத்தில் சொல்லப்படும்
அந்த ஒரு சொல்லைக் கூறி அன்பனை அழைத்தாள், அவள் ஆவி
நீங்கிற்று எனக் கம்பன் நிறைவிக்கிறான்.
16

Page 178
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன் பொன் தழைத்த பொருஅரு மார்பினைத் தன்தழைக் கைகளால் தழுவிதனி நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்”
கணவன் உடலோடு சேர்ந்து ஆவி பிரிந்த தனி அன்பில் மண்டோதரி, மரணத்தையும் ஆட்சி செய்கிறாள். ஒரு நீண்ட இனம்புரியாத சோகம் நம்மைக்கப்பிக் கொள்கிறது. அவளுக்காக நாமும் அழத் தொடங்குகின்றோம். பன்னலக் கற்பில் மண்டோதரி என்னும் மாண்புறு நங்கை அமரத்தன்மை பெறுகின்றாள்.
அன்பு என்பதற்கு இலக்கணம் கூற வந்த, இறையனார் களவியல் உரைகாரர், நக்கீரர், அது சாவிற் சாதல், நோவில் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிதுமொழிதல், புணர்வு நனிவேட்டல், பிரிவு நனி இரங்கல், இவற்றால் அறியப்படும் என்பார். அன்பின் விரிவே காதல். கணவன் சாவில் சாதல் உன்னதமானதுதான். மரணம் அன்பில் விளைதல் வேண்டும். தானே அமைய வேண்டும்; தீக் குளித்தலோ, தற்கொலை செய்து கொள்ளுதலோ உண்மை அன்பின் வெளிப்பாடுகளாகிவிட முடியாது. மண்டோதரி மரணம் கணவனோடு அமைகிறது. அவன் மேனி தழுவி உயிர்க்க, அவள் ஆவி பிரிகிறது. இது, அவள் கற்பு நிலையின் உன்னதம் காட்டுகிறது.
அன்பின் வெளிப்பாடு சாதலில் உண்டு என்றாலும், உடன் உயிர்துறவாமை குற்றமாகிவிடாது. "கள்வன்"என்ற குறை நீக்க வேண்டி, சிலநாள் உயிர் வாழ்ந்து, பாண்டியனோடு வாதிட்டு, கணவன் பழிதுடைத்து மாளும் கண்ணகியும் கற்பரசியே. கோவலன் மரணத்திற்குப்பின் மகள் மணிமேகலையின்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

வாழ்வுகருதி, அவளைப் பெளத்த மதத்தில் சேர்ப்பித்துத் தானும் துறந்த மாதவியும் கற்பரசியே. “தகைசான்ற சொற்காக்கும்” பெண்மைப் பண்பு இவர்களிடையே சிறந்திலங்கக் காண்கிறோம்.
சிலம்பில் பாண்டிமாதேவியும் உயிர் துறக்கக் காண்கிறோம். தவறே செய்யாத கணவன், விதி வயத்தால் தவறியபோது, நேர்ந்த மரணம் பாண்டிய மன்னனுடையது. இராவணன் அப்படிப்பட்டவன் அல்லன். அவன் திட்டமிட்டுத் தவறு செய்தவன். பலர் எடுத்துரைத்தும் திருந்த முற்படாதவன். பலரை அடுத்தடுத்துப் பறி கொடுத்தும் நீதி சேராதவன். சொல்லப்போனால், மனைவி இடத்தில் மாற்றாள் ஒருத்தியை இருத்திப் பார்த்தவன்.
மண்டோதரி இராவணனை வெறுத்தொதுக்க ஆயிரம் காரணங்கள் உண்டு. ஆனால், அவற்றுள் அவள் ஒன்றையும் சிந்தை செய்தாள் அல்லள். மரணத்தில் மனிதனின் தவறுகள் தெரிவதில்லை. பிறருக்குத் தெரிந்தாலும், கற்புடைய மனைவிக்குத் தெரிவதில்லை. மண்டோதரி என்னும் மாண்புறு நங்கையின் பிறப்பு, வளர்ப்பு, மணம், வாழ்வு இவற்றுள் ஒன்றையும் காப்பியம் நமக்குக் காட்டவில்லை. சோகங்களில் மட்டுமே அவள் நிழலாடுகிறாள். இழப்புக்களில் மட்டுமே அவள் இனங்காட்டப்படுகிறாள். அவள் இடம் பெறும் காட்சிகளோ மிகச்சில. கம்பனின் பாடல்களோ வெகுசில. சிலவாய பாடல்களிலேயே மண்டோதரி கற்பார் மனத்தில் நிற்கிறாள். சோகத்திலும், பண்பு தவறாத அவள் பண்பும், குறையுடையவன் மாட்டும் மனம் மாறா அன்பு செய்யும், சால்பும், மரணத்தை வா என்று அழைத்து ஆட்சி கொள்ளும் உன்னதமும், மறக்கவியலாத மாபெரும் பாத்திரமாக அவளை உயர்த்தி விடுகின்றன.
162

Page 179
றி புலன்களை அடக்கி, முயற்சியைத் தவம் என்கிறே
காடு, குகைகள் என்று அ நாம் அறிவோம். உண்ண உச்சரித்து நினைவை ஒருமுகப்படுத்த அவ மாமுனிவர்களாகப் போற்றப்படுவர். இவர்கள் இத்தகைய முயற்சியாகிய 'தவம்’ என்பது என்றால் என்ன என்பது உலகோருக்குப்புரி கொடு இறைவா" என்று இறைவனைக் கேட் ஒரு பெண்ணைப் படைத்தது. அந்தப் பெண்
இராவணன் சீதையை அசோகவ6 சீதாபிராட்டியைத் தேடிவந்த அனுமன் அவன தவவாழ்க்கையாக மாற்றியிருந்தாள். உலகி செய்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆன மேற்கொண்டது மனத் தவம். “மங்கை சீதாபிராட்டியைப் பாராட்டிக் கொண்டான்.
வெங்கன நுங்குவ எங்குனர் நங்கைய
என்றான் அனுமன்.
அசோனவனத்தில் சீதை பத்துத் துயரமோ அளவிடற்கரியது. இராவணன் கடல் கடந்து வந்து அடர்ந்த காடுகளுக் இலக்குவர்களுக்கு அவளைச் சிறை வைத் சடாயுவும் மாண்டுவிட்டான். ஆகவே பத் வராத நிலையில், சீதை தவித்திருந்தால் தண்டு, சூலம் என்ற படைக்கருவிகளுடன் துருத்திக் கொண்டிருக்கும் விழிகளும் குகைகளைக் கொண்ட வாயுமாக அவர்
 
 

h செய்த தவம்
பேராசிரியை சக்திப்பெருமாள்
நினைவை ஒருமுகப்படுத்திப் பரம்பொருளை அடைய முயலும் ாம். ஐம்புலன்களை அடக்கப்பல்வேறு நோன்புகளை மேற்கொண்டு, லைந்து திரிந்து தவம் செய்த முனிவர்கள் பலரின் வரலாறுகளை ாமல், பருகாமல், நீருள் நின்று நெருப்பை மூட்டி, மந்திரங்களை ர்கள் படாதபாடு படுவார்கள். தவநோன்பில் வெற்றி பெற்றவர்கள் எண்ணற்றவரங்களையும், எல்லையற்ற ஆற்றலையும் பெற்றவராவர். ஒருமுறை தானே இறைவனை நோக்கித் தவம் செய்தது. “தவம் யவில்லை, தவத்திற்கு எடுத்துக்காட்ட ஒரு உருவத்தைப் படைத்துக் டது. அந்தத் தவத்தின் வேண்டுகோளை நிறைவேற்றப் பரம்பொருள் ாதான் ‘தவம் செய்த தவமாம் தையலாகிய சீதாபிராட்டி
ணத்தில் சிறைவைத்திருந்தான். அரக்கியருக்கு நடுவே அமர்ந்திருந்த ளைக் கண்டு வியந்தான். தன்னுடைய சிறை வாழ்க்கையையே சீதை ல் உண்ணாது, உறங்காது, நெருப்பில் நின்று, நீருள் மூழ்கித் தவம் ால் அவர்கள் இந்தப் பெண் தெய்வத்திற்கு ஈடாக முடியாது. இவன் யர் மனத்தவம் நவிலற்பாலதோ?’ என்று அனுமன் தனக்குள்
ல் முழுகியும் புலன்கள் வீக்கியும் வருந்துவ நீக்கி நோற்றவர்
குலனில்வந்தில்லின் மாண்புடை ர் மனத்தவம் நவிலற் பாலதே”
திங்கள் சிறையிருந்தாள். சிறையிருந்த காலத்தில் அவள்பட்ட என்ற அரக்கர் தலைவன், அவளைப் பர்ணசாலையுடன் தூக்கிக் கு நடுவே அசோகவனத்தில் சிறை வைந்திருந்தான். இராம திருந்த இடம் தெரியாது. வழியில் இலங்கேசுவனோடு போராடிய து மாதங்களாகத் தன்னைக் கண்டுபிடித்துத் தேடி மீட்க எவரும் அவளைச் சுற்றி அரக்கியர்கள் சூழ நின்று கத்தி, கோடரி, T மிரட்டிக் கொண்டிருந்தார்கள். வயிற்றில் வாயும், நெற்றியில் பற்களும் நடுவே புலி யானை போன்ற விலங்குகள் தங்கும் sளுடைய தோற்றமே அச்சம் தருவதாக இருந்தது. இத்தகைய
63

Page 180
இரக்கமற்ற அரக்க வெம்புலிகளுக்கு நடுவே அகப்பட்ட புள்ளிமானாக சீதை துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.
பாறைகளுக்கு நடுவேயிருந்த மருந்துச் செடியொன்று மழை முகம் காணாது துவஞவது போல, சீதை வாடியிருந்தாள். ஒரு காலத்தில் அவளுடைய இடை மட்டும் மெலிந்திருந்தது. இப்பொழுதோ அவளுடைய உடல் முழுவதும் மெலிந்திருந்தது.
தூக்கம் அவளை நெருங்கவில்லை. கண்கள் இமைத்தல் முகிழ்தல் என்ற இரண்டு செயல்களையும் துறந்து விட்டன. எரியும் வெயிலில் வைக்கப்பட்ட விளக்கின் மங்கிய ஒளிபோல அவள் ஒளியிழந்தவளாகக் காட்சியளித்தாள்.
இராமன் சீதாபிராட்டியின் உள்ளம் உயிர் அனைத்திலும் நிறைந்திருந்தான். இராமனை எண்ணிச் சீதை அழுதாள், விழுந்தாள், விம்மினாள் மெய்யுற வெதும்பினாள், எழுந்தாள், அவனை எண்ணித் தொழுதாள் சோர்ந்தாள், துயருழந் துயிர்த்தாள், மீண்டும் அழுதாள், வேறு ஏதும் செய்வதறி யாதவளாக இருந்தாள்.
ஆனாலும் அவள் நம்பிக்கை தளரவில்லை. விதியின் வலிமையை யாராலும் வெல்லவியலாது. என்றாலும்; வேதநாயகனாம் இராமன், தன் குலப் பெருமையை நிலைநாட்டத் தன்வில்லாற்றலுக்குப் பழி நேராதவண்ணம் காக்க எப்படியும் வருவான்; இராமன் வருவான் வருவான் என்று, மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணளாகச் சீதை இருந்தாள்.
கார் முகில், கரிய அர்சனம், கரிய குவளை மலர்கள் எல்லாம் சீதாபிராட்டிக்கு இராமனை நினைவிற் கொண்டுவர, அவள் கண்ணிர்க் கடலில் மூழ்கியிருந்தாள்.
இவ்வாறு பிரிவுத் துயரே, ஒரு உருவெடுத்து வந்தது போலிருந்த சீதாபிராட்டியின் துயரத்தை, விரிவாகப் புனைந்து வைக்கும் கம்பர், அவள் உடுத்தியிருந்த துகிலை வைத்தே அவளது அளவற்ற துயரை எடுத்துக் காட்டுகிறார். அவளுடுத்தியிருந்த மென்துகில் அவளுடைய கண்ணிர் மழையில் நனைந்தது. அடுத்த நொடியே அவள் விட்ட பெருமூச்சின் வெப்பத்தினால் புலர்ந்தது. இப்படி ஒரு நிலையில்லாத துகிலோடு அவள் அமர்ந்திருந்தாள். அவள் இருந்த மாநிலம் செல்லரித்திடவும், அவள் அசையாது இருந்தாள் என்று சிறையிருந்த சீதாபிராட்டியின் நிலையைச் சொல்லோவியமாகத் தீட்டுகிறார் கம்பர்.
துப்பினால் செய்தகை கொடுகால் பெற்ற துளிமஞ்சு ஒப்பினான்றனை நினைதொறும் நெடுங்கண்கள்உகுத்த அப்பினால் நனைந்து அருந்துய ருயிர்ப்புடை யாக்கை வெப்பினால் புலர்ந்து ஒருநிலை உறாத மென்துகிலாள்
(காட்சிப் படலம் :8)
கணவனைப் பிரிந்திருக்கும் பெண்ணுக்குப் பிரிவுத்துயர் ஏற்படுவது இயல்பே. ஆனால் சீதையோ இராவணன் என்ற அரக்கனால் கணவனிடமிருந்து பிரிக்கப்பட்டு கவர்ந்து வரப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறாள். சிறையிலும் நாள் தோறும் இராவணன் அவளை நாடி வருகிறான். “இன்று இரங்குவாய், நாளை இரங்குவாய் என்று நம்பி நம்பி, நாட்கள் வீணாகப் போகின்றன. என்றுநீஎனக்கு இரங்கப் போகிறாய்?” என்று காமம்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

நிறைந்த நெருப்புச் சொற்களை அவளிடம் அள்ளிக் கொட்டுகிறான். அவளைக் கண்டதுமே கூசிக்கூசி ஆவி குலைகின்ற சீதாபிராட்டியின் செவிகளில் அவனுடைய ஏக்கம் நிறைந்த சொற்கள் எரியாகி விழுந்து கொண்டிருக்கின்றன.
“பெண்ணே மூவுலகையும் அடக்கி ஆண்டவன் நான்; இன்றோ என் வாழ்வில் உனக்காக ஏங்கும் ஏக்கம் தவிர வேறு எதுவும் இல்லை. புகழேந்தும் என் செல்வத்தை நீ மதிக்காது தூக்கி எறிகிறாய்; உலகத்து அழகையெல்லாம் சேர்த்து உன்னுருவத்தைப் படைத்த இறைவன், உன்னிடம் அருள் என்பதே இல்லாமல் தவறு செய்து விட்டான். அதனால் தான் என் நிலைகண்டும் நீ இரங்காது இருக்கிறாய். உன் கணவன் சாகும் காலத்து, அலறிய கூக்குரல் கேட்டும், இன்னும் அவன் உயிருடன் வருவான் என்றிருக்கிறாய் அதைக் காட்டினும் மடமை வேறு இல்லை. மூவுலகத்தோர், தேவர், தேவியர் அனைவரும் என்னடி பணிகின்றனர். நான் உன்னடி பணிகின்றேன். நீஎன்னை ஏற்றுக் கொள்” என்று பிராட்டியின் காலடியில் தலையின் மீது கூப்பிய கையனாய்த் தலையில் விழுந்து கெஞ்சுகிறான் இராவணன். "படியின் மேல் விழுந்தான் பழி பார்க்கிலான். என்றார் கம்பர்.
இராவணனின் சொற்கள் கந்தகக் குழம்பெனச் சிதறிய போது, சீதையின் கண்கள் சிவந்தன. செவிகள் தீய்ந்தன. துரும்பென அவனைத் தூக்கியெறிந்து, அப்பகைவன் சிறையிலிருந்த பெண் துணிவுடன் பேசத் தொடங்குகிறாள். இதுவரை அவனை அச்சுறுத்திக் கொண்ட சூழல் அவளை விட்டு அகன்றது. மலையினும் உறுதியாக நின்ற அவளுடைய கற்பு நெஞ்சம் அவளுடைய சீற்றத்தைப் பொங்கியெழச் செய்தது. உரம் கொண்ட நெஞ்சத்துடன் சீதை இராவணனைத் துரும்பெனத் தூக்கியெறிந்து பேசுகிறாள்.
"அறிவில்லாதவனே! என்னுடைய நாயகனின் வில்லின் ஆற்றலை நீ அறிந்திருக்கிறாய். மேரு மலையை உருவ வேண்டுமா? விண்ணைப் பிளந்து செல்லவேண்டுமா? ஈரேழுலகத்தையும் அழிக்க வேண்டுமா, இராமபிரானின் வில் செய்து முடிக்கும் என்பதை அறிதிருந்தும் நீ தகாத சொற்களைப் பேசுகிறாய் தலை பத்தும் சிந்தப் போகிறாய்!
"நீ ஒரு கோழை ஆகவேதான் வஞ்சனை மானை ஏவி என் தலைவனைப் பிரித்தபின்னர், மாறு வேடத்தில் வந்து என்னைக் கவர்ந்து வந்தாய். நீபிழைத்துச் செல்ல வேண்டுமானால் என்னை விட்டுச் சென்றுவிடு. நீ உன் குலத்தோடு அழியப் போகிறாய்;நீபெற்றவரங்களும் உன் வாழ்நாளும், என் நாயகனின் அம்பினால் தெறித்து நொருங்கப் போகின்றன. உன்னுடைய தலைகள் பத்தும், வித்தக வில்லினனாகிய என் தலைவனின் வில்லாற்றலால் பந்தாடப்படப் போகின்றன.
“இராமபிரானை வெறும்மானுடன் என்றுநீஇகழ்கின்றாய். வள்ளல் தன் சீற்றத்தால், நீ ஒருவன் மட்டுமல்ல இந்த உலகமே அழியப் போகிறதே என்று நான் கவலைப்படுகிறேன். நீசனே, கடிக்கும் பாம்பும் கூட மந்திரங்களைக் கேட்டுக் கட்டுண்டு நிற்கும். உனக்கோ, உன்னை இடித்துரைத்து அறிவு புகட்டுபவர் எவரும் இல்லை. என் தலைவர் எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் ஆற்றல் உடையவர். அவர் வந்து உன்னை முடிக்கும்போது அழிவைத் தவிர

Page 181
வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை” என்று எச்சரிக்கிறாள். ஒவ்வொருநாளும் நடக்கிற நிகழ்ச்சி இது.
அரக்கர்கள் மானுடர்களைக் கொன்று தின்னக் கூடியவர்கள் இராவணனோ பத்துத் தலையும் இருபது திண்தோள்களும் கொண்டு வானவர்களையே ஆட்டிப் படைக்கின்றவன். அவனுடைய சிறையில் இருந்து வாடிக் கொண்டிருந்த போதும் சீதை அவனெதிரே அபலைப் பெண் போல் அஞ்சி நடுங்கி அழுது கொண்டு இருக்கவில்லை. அவனுடைய செயலை இழித்துப் பேசுகிறாள் அவனை இடித்துரைத்தும் பேசுகிறாள். இராமனின் வில்லாற்றலை, அவன் இதுவரை பெற்றிருந்த வெற்றியை எடுத்துக்காட்டி எச்சரிக்கிறாள். இந்தக்காட்சியை அனுமன் பார்த்துக் கொண்டிருந்தான்.
இராவணன் பொங்கியெழும் சீற்றத்துடன் அவளைக் கொன்று தின்பேன் என்று சீதையை நோக்கிப் பாய்ந்தான். ஆனால் அவனுடைய சினத்தைக் காமம் தடுக்கக் கட்டுண்டு நின்றான். அண்டத்தை அழிக்கும் கால வெந்தீ யென்றெழுந்த இராவணனின் சீற்றம் காதல் என்ற நீரால் அணைந்தது.
மீண்டும் இராவணன் சீதையிடம் கெஞ்சிப் பேசினான். "அன்று இராமனுக்கு அஞ்சி நான் மறைந்து வரவில்லை. நான் நேரில் வந்து போரிட்டு இராமனை அழித்தால் நீ உயிர் விட்டு விடுவாய் என்று நினைத்துத்தான் வஞ்சனை புரிந்தேன். இன்றும் அந்த மானுடர் இருவரையும் கொல்லாமல் பிடித்து வந்து உனக்கு ஏவல் கேட்க வைக்கிறேன். இராமலக்குவர் உன்னை எனக்குத் தந்தவர்கள். ஆகவே நான் அவர்களைக் கொல்லப் போவதில்லை. ஆனால் நீ என் ஆற்றலைப் புரிந்து கொள்ளவில்லை. இன்றே அயோத்தி சென்று பரதன் முதல் அனைவரையும் அழித்து, மிதிலையையும் வேரறுத்து உன்னுயிரையும் நான் எடுப்பேன்’ என்று சூளுரைத்தான். அரக்கியரைப்பார்த்து"இந்தப்பெண்ணை அச்சுறுத்தியாவது, அறிவுறுத்தியாவது எனக்கு ஆளாக்குங்கள். அவ்வாறு ஆளாக்காவிடின் நான் உங்களுக்குக் காலனாகிவிடுவேன்” என்று அரக்கியரை மிரட்டிச் சென்றான். இது நாள்தோறும் கடந்து வந்த நாடகம். இராவணனின் அச்சுறுத்தும் தோற்றத்தைக் கண்டும், அவனுடைய அளவிறந்த ஆற்றலைப் பற்றி அறிந்திருந்தும்; அவள் அஞ்சவில்லை. மலைபோன்ற உறுதியும் மலைப்பில்லா மனமும், பகைவன் பாசறையில் இருந்த ஒரு பெண்ணுக்கு எவ்வாறு வந்தது? வலிமை மிக்க திரண்ட தோள்களைக் கொண்ட வஞ்சகனின் மனம் சோரும் வண்ணம் சொற்களை அம்புகளாக்கி எறிந்த பெண்ணின் மனத்திண்மைக்கு அவளுடைய கற்பே காரணம். அந்தக் கற்பைக் காட்டிலும் உலகில் உயர்ந்தது எதுவும் உண்டோ என்று கம்பரே வியக்கின்றார்.
"மல்லடுதிரள்தோள் வஞ்சன் மனம்பிறிதாகும் வண்ணம் கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்மேல் கண்டதுண்டோ” என்கிறார்.
கற்புடை பெண், காமுகனின் பார்வை பட்டாலே துடிதுடிப்பாள். வேதனைப்படுவாள். இது இயற்கை. அந்தத் துயரம் சீதைக்கும் இருந்தது. கடுஞ்சிறையில், தப்ப வழியறியாது இருந்தவனிடம் தணலெரியாகக் காதற் சொற்களைக் கொட்டிய போது. அவளுடைய சோகம் சீற்றமாக மாறியது. இராவணனிடம் வீரம் ததும்ப வெஞ்சொற்களை அவள் வீசினாள். அவன்
கம்பன் மலர் - 2000

சென்றவுடன், அடுத்த நொடியே அவளுடையமனம் வேதனையுடன் சிந்திக்கத் தொடங்கியது.
நீண்ட காலமாக இராம இலக்குவர்கள் இன்னும் தேடிவரவில்லை. அவர்களுக்கு இலங்கையென்ற ஒருநாடு அலைகடல் நடுவே இருப்பது தெரியாமல் போயிருக்குமோ? அரக்கன் என்னைக் கவர்ந்து வந்தது, அவர்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம். சடாயுவும் இறந்துவிட்டான். அவர்களுக்கு என் நிலையை யார் எடுத்துரைப்பார்கள்? என்று கலங்கத் தொடங்கினாள்.
இந்தக் கலக்கத்துக்கு நடுவே அவள் செய்ததவறு ஒன்று அவள் மனதில் நெருடலாக வெளிவருகிறது. மாரீசமானின் பின்னால் சென்ற என் தலைவன் இராமபிரானின் கூக்குரல் கேட்டு அருகில் நின்ற இராவணனிடம் ஆத்திரத்தோடு பேசினேனே, அது அவருக்குத் தெரிந்திருக்குமோ? ஒருநாள் பழகியவர்கள் கூட இராமபிரானுக்காக உயிரை ஈவார்கள் அவருடைய குரல் கேட்டும் நீ அசையாது நிற்கிறாய்; நின் நிலை நெறியிற்றன்று; உடனே சென்று அவரைக் காப்பாற்றாவிடில் நெருப்பை மூட்டி அதில் விழுந்து, உயிரை விடுவேன் என்று நான் சொல்லியதை இராமபிரான் அறிந்திருப்பாரோ? தம் அண்ணன் இராமனின் ஆற்றல் மீது நம்பிக்கை கொண்டும், அரக்கர்களின் வஞ்சனையால் எழுந்தது மாரீசனின் குரல் என்றும் அறிந்துதான் இலக்குவன் நகரவில்லை. அதைப் புரிந்து கொள்ளாது நான் பேசிய சொற்களால் தானே, துன்பம் வந்தது. இதையுணர்ந்த இராமன் என்னை அறிவில்லாதவன் என்று எண்ணித் துறந்து சென்று 6LIT(GJIT?
மேலும் என்னைக் கவர்ந்து சென்ற அரக்கர்கள் இத்தனைக் காலம் உயிரோடு வைத்திருக்க மாட்டார்கள் என்று நினைத்திருப்பார்களோ! அயோத்தியிலிருந்து மீண்டும் அவருடைய தம்பியாரும் தாயாரும் வந்து அவரை அழைத்துச் சென்று விட்டார்களோ? இராவணனைப் போல, கரனைப் போல வஞ்சகமும் மாயமும் கொண்ட அரக்கர்களோடு (Sunrf'(6ö5 கொண்டிருக்கிறார்களோ?’ என்றெல்லாம் நினைத்து வருந்துகிறாள் சீதை. அலையெனப் புரளும் இத்தகைய எண்ணங்களுக்கு நடுவே, நாயகன் வரும் என்ற நம்பிக்கை மட்டும் அவளுடைய உள்ளமாம் கப்பலுக்கு நங்குரமாகத் திகழ்கின்றது.
இராமபிரானின் பாதங்களில், இவ்வாறு தன்னுடைய குற்றம் குறைகளையும் காணிக்கையாக்குகிறாள் பிராட்டி,
காட்டில் இருக்கும் இராமனுக்கு யார் அமுது படைப்பார்கள்? விருந்து வந்தால் என்ன செய்வார் என்று மனைவியால் தன் கடமையைச் செய்யவியலாத நிலைமையின் கவலைப்படுகிறாள் சீதை.
இத்தகைய கவலைகளுக்கு நடுவே ஒளியூட்டிக் கொண்டிருக்கும் இராமனின் திருமுகம், சீதாபிராட்டிக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றது. இராமனின் பண்பு நலன்கள், பழைய நிகழ்ச்சிகள், மலரும் மகிழ்ச்சி தரும் நினைவுகளாக அவளுடைய உள்ள வீதியில் மேளம் கொட்டி உலா வருகின்றன. அன்றொரு நாள், கேகயர்கோன் மகன் இந்தநாடு முழுவதும் உன் தம்பி பரதனுக்கு என்று கூறியதும் அவருடைய முகம் எப்படி
165

Page 182
மலர்ந்தது? வழக்கத்தைக் காட்டிலும் மூன்று மடங்கல்லவா அவருடைய முகம் மலர்ச்சி யடைந்தது, இந்த நாடு முழுவதும் உனக்குச் சொந்தம் என்ற போதும், இந்தப் பாராளும் செல்வத்தை இழந்து நீ கானகம் செல்லவேண்டும் என்றபோதும், இன்பமும் துன்பமும் இல்லாத மன நிலையில் அவருடைய முகம் சித்திரத்தில் மலர்ந்திருக்கும் செந்தாமரை போலல்லவா இருந்தது' என்று நினைத்து மகிழ்ந்தாள். இதனை
மெய்த்திருப்பதமேவென்ற போதிலும் இத்திருத்துறந்தே கென்ற போதிலும் சித்திர தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்'
(காட்சிப் படலம் 20
என்றர் கம்பர்.
மனவீதியில் வலம் வந்த நினைவுகளின் வரிசையில் இராமபிரானின் தோள்களின் ஆற்றல் அவளுடைய நினைவுக்கு முதலில் வருகிறது. மேரு மலையைக் காட்டிலும் வலிமை பொருந்திய சிவதனுசு, இராமபிரானின் கைப்பட்டதும் இற்று இரண்டாக விழுந்தது. இந்த நிகழ்ச்சிதானே அவளை அவனோடு இணைத்தது
குகனைச் சந்தித்தபோது, அந்த ஏழை வேடனைப் பார்த்து என் தம்பி, உன்தம்பி இந்த மங்கை இனிமேல் உன் கொழுந்தி' என்று கூறிய இராமனின் நட்புள்ளத்தையும் நினைத்து மகிழ்ந்தாள்.
அன்றொரு நாள் அவர்கள் நாட்டை விட்டுப் புறப்பட்ட போது இராமன் எல்லோருக்கும் பொன்னும் மணியும் தானமாகக் கொடுத்தான். அந்தணர்க்கு ஆநிரைகளைக் கொடுத்தான்.தனம் வாங்க வந்த ஒரு அந்தணர், தம் கைத்தடியைத் தூக்கி எறிந்து, அது விழுந்த எல்லை வரை நிறைந்திருந்த பசுக் கூட்டங்களைத் தானமாகக் கேட்டார். அந்த வேதியர் கருத்தில் நின்ற கரையில்லாத ஆசை கண்டு இராமபிரான் சிரித்தது அவளுடைய மனதில் இன்றும் பளிச்சிடுகிறது.
தவம் செய்பவர்கள் இறைவனாம் பரம் பொருளையே நினைத்திருப்பதுண்டு; அப்பரம்பொருளின் திருமுன்புதாம் செய்த குற்றங் குறைகளை முறையிட்டுப் புலம்புவதுண்டு. இறைவனின் அருட் செயல்களையும், அளவற்ற பண்புகளையும் எண்ணி மகிழ்வதுண்டு. அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையாகிய இறைவனின் கருணைத் திறத்தில் கரைந்து வருவதுண்டு. இந்த நான்கு நிலைகளிலும் தன்னை மறந்து திசை காட்டும் கருவியின் முள் வடக்கையே நோக்கியிருப்பது போல இராமனையே நினைந் துருகியிருந்தாள் சீதை.
இத்தகைய நிலையில் தவம் செய்திருந்த சீதையைக் கண்ட போதுதான் அனுமன் மங்கையர் மனத்தவம் நவிலற்பாலதோ’ என்று பாராட்டினாள்.
சீதையின் தோற்றம், அவளிருந்த நிலை எல்லாவற்றையும் அனுமனின் மனம் எடைபோட்டுப் பார்த்தது. இதுவரை அவள் இராமபிரானை மட்டும்தான் கண்டிருந்தாள். பாற்கடலில்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

ஆதிசேடன் மீது பையத் துயின்ற பரந்தாமனாக இராமன் இருக்கலாமோ என்ற எண்ணம் இருந்தது. இப்பொழுது சீதாபிராட்டியைப் பார்த்ததும் தான் அந்த எண்ணம் உறுதியாயிற்று. ஆம்
ஆவதே யையமில் அரவினிங்கிய தேவனே யவன் இவள்கமலச் செல்வியே ”
(காட்சி. 67) என்கிறான்.
இராமபிரானின் மனைவியாம் சீதாபிராட்டியைப் பார்க்கும் போது இவள் தாமரையில் உறையும் திருமகள் என்பது தெளிவாகிறது; ஆகவே இராமபிரான், எந்த வித ஐயமுமில்லாமல், பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனாகத் தான் இருக்க வேண்டும். என்ற முடிவுக்கு அனுமன் வருகிறான். இத்தகைய முடிவு சீதாபிராட்டியின் தவத்தின் அருமையை மேலும் உயர்த்துகிறது.
அசோகவனத்தில் அச்சம், கவலை, அவருவருப்பு என்ற சூழலில், இராமனைப் பிரிந்திருந்த துயரில் வெந்திருந்தவள் சீதை, அவள் முன்னால் விடுதலைக்கு வழிகாட்டுபவனாக அனுமன் வந்து நின்றான்; தாயின் முன் நின்ற கன்றினைப் போன்று, அவன் தன்னை உணர்த்தி, அவளை அழைத்தான் தாயே என் தோளில் ஏறி அமர்ந்து கொள், இராமபிரானிடம் கொண்டு சேர்த்துவிடுகிறேன். அடுத்த நொடியே அரக்கர்குலம் அழிந்து ஒழிந்துவிடும்' என்கிறான்.
சீதை நினைத்திருந்தால், அந்தக் கொடிய சூழலிலிருந்து ஒரு நொடியில் தப்பிச் சென்றிருக்கலாம். அவ்வாறு சென்றிருந்தால், மறைந்திருந்து கவர்ந்து வந்த இராவணனின் கோழைக் செயலுக்கும், தப்பித்துச் செல்ல நினைக்கும் சீதையின் செயலுக்கும் வேறுபாடில்லாமல் போயிருக்கும். சீதாபிரட்டி அவ்வாறு நினைக்கவில்லை.
"நன்றியென்பதம் வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ” என்று கேட்டாள்
அதுமட்டுமன்று'ஆரியன் வென்றி வெஞ்சிலை மாசுறும் மனைவியைக் கவர்ந்து சென்றவனைத் தன் வில்லாற்றலால் கொன்றறொழித்து மீட்க இயலாதவன் என்ற பெரும்பழி இராமனைச் சென்றடையும். அந்நிலை நேர்ந்துவிடக்கூடாது என்றாள். தன்னுயிர் போவதாயினும் தன் கணவனின் புகழுக்கு இழுக்க வந்து விடக் கூடாது என்று எச்சரிக்கையாகச் செயற்பட்டவள் சீதை.
அத்துடன் நிற்கவில்லை. இதுவரை அப்பாவி போல் காட்சியளித்து வந்த சீதை, தன் ஆற்றலை உணர்த்தும் நிலையில் அனுமனிடம் வெளிப்படையாகச் சில சொற்களைக் கூறினாள்.
துன்புறுத்தலையே தொழிலாகக் கொண்ட அரக்கர்கள் நிறைந்த இலங்கையை மட்டுமல்ல; இந்த நிலவுலகையே நான் நினைத்தால், என்னுடைய சொல்லினாலேயே சுட்டெரிப்பேன். ஆனால் அச்செயல் இராமனுடைய வில்லாற்றலுக்கு மாசுகற்பித்து விடும் என்று நினைத்துத்தான் அடங்கியிருக்கிறேன்' என்றாள்
166

Page 183
அல்லல் மாக்கள் இலங்கையதாகுமோ எல்லை நீத்த வுலகங்கள் யாவையுமென் சொல்லினாற் சுடுவேனதுதூயவன் வில்லின்ஆற்றற்கு மாசென்று வீசினேன்
(சூடாமணிப் படலம் :18) என்றாள்.
சீதை பேசிய சொற்கள் நம்மை வியக்க வைக்கின்றன. சீதாபிராட்டி அத்தகைய ஆற்றல் மிக்கவளா என்ற வினாவை எழுப்புகின்றன. பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் அவளுடைய ஆற்றல் வெளிப்பட்ட வாய்ப்புகள் இரண்டு அவளுடைய சொற்கள் உண்மை என்பதைக் காட்டுகின்றன.
இராவணனின் ஏவலால் அரக்கர்கள் அனுமன் வாலில் நெருப்பை வைக்க, அவன் ஊரைச் சுடத் தொடங்கினான் இதனை சீதை அறிய வந்தாள். உடனே அவள் நெருப்புக் கடவுளைப் பார்த்து ‘எரியே, நான் உள்ளத்தால், உரையால் தூயவள் என்பது உண்மையானால், அனுமனைச் சுட்டுவிடாதே’ என்றாள். எரி ஏவல் கேட்டது. அனுமனின் வாலில் நெருப்புக் குளிர்ந்தது. அனுமனின் என்புவரை குளிர்ந்தது. அனுமன் சீதையிருந்த திசை நோக்கித் தொழுதாள்.
இராவணவதம் முடிந்த பின்னர், இராமன் சீதையை எரி மூழ்கச் சொன்னபோது, எரியில் சீதை இறங்கினாள். அவள் மேனி பட்டது நெருப்பில் விழுந்த பஞ்சு போல, நெருப்புக்கடவுளே தீய்ந்தான் என்கிறார் கம்பர். அவனை நெருப்பிலிருந்து வெளியே எடுத்து வந்து இராமபிரான் முன் நிறுத்தி, அவளுடைய புகழ்பாடினான் நெருப்புக் கடவுள். இத்தகைய இயற்கையிறந்த ஆற்றலைப் பெற்றிருந்தவள் சீதை.
உலகில் ஆற்றல் இல்லாதவர் பலர் உள்ளனர். ஆற்றல் இருந்தும் அதனை அறியாதவர் பலர் உள்ளனர். சீதை ஆற்றல் உடையவள்; தனக்கு ஆற்றல் உண்டு என்பதையும் அறிந்திருந்தவள். அறிந்திருந்தும் அடக்கமாகத் தவம் மேற் கொண்டவள். சீதையின் தவமே இராவணனின் வரங்களை நொறுக்க இராமனின் கோதண்டத்திற்கு உரம் ஊட்டியது.
இந்தத் தவத்தியின் ஆற்றலை உணர்த்தவே, கம்பர் அரக்கர் கான் சுட வந்த கற்பின் கனலி என்றும் திட்டியின் விடமன்ன கற்பின் செல்வி' என்றும் சீதாபிராட்டியைக் குறிப்பிடுகிறார்.
அசோகவனத்தில் சீதையின் தவத்தைக் கண்ட அனுமன், இராமனை மீண்டும் சென்றடைந்த போது, இராமனைத் தொழவில்லை. தென் திசையில் இருந்த முளரி நீங்கியதையலை நோக்கித் தொழுத கையனாகப் படிமிசை விழுந்து வணங்கினான் என்றார் கம்பர்.
“கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்”
என்றஅனுமன் சீதாபிராட்டியின் பண்புகளைப் பலபடப் பாராட்டிப் பேசினான்.
கம்பன் மலர் - 2000

திருமணமாகிய இந்தியப் பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் மூன்று நிலைகள் உண்டு. கணவனிடம் மனைவி என்ற உரிமை, கணவனைப் பெற்றவனுக்கு மருகியென்ற நிலை, மூன்றாவதாகப் பிறந்த இடத்துப்புகழ்-இந்த மூன்றையும் காத்துப் பெருமை சேர்ப்பவள் பெண்.
அனுமன் இதனைச் சுட்டிக் காட்டிச் சீதாபிராட்டி இராமனின் மனைவி என்ற உரிமைக்கும், இராமனைப் பெற்ற மன்னவனாம் தசரதனின் மருகி என்ற வாய்மைக்கும் தன்னைப் பெற்ற மிதிலை மன்னனின் மகள் என்ற தகைமைக்கும் தலைமை சான்றாள் என்றான். ஆகவே அவள் என் பெருந்தெய்வம் என்றான்.
இராமபிரானைத் தெய்வம் என்று போற்றி வருபவன் அனுமன். 'இராவணன் புகழைத் திருத்தும் கவிக்கு நாயகன் என்று கம்பன் அனுமனைப் பாராட்டுகிறான். அந்த அனுமனே சீதையைப் பெருந்தெய்வமாகப் போற்றித் தொழுகிறான்.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குரு” என்பார் திருவள்ளுவர்.
இராவண வதம் என்ற குறிக்கோளை நிறைவேற்ற இராமபிரான் மண்ணில் தோன்றிய போது, அக்குறிக்கோள் நிறைவேறத் தன்னையே பணயப் பொருளாகத் துயரங்களைத் தானகவே ஏற்றுக் கொண்டவள் சீதை.
தன்னைத் துன்புறுத்திய அரக்கியர்களை அனுமன் தண்டிக்க முற்பட்ட போது அவர்களுக்கு அருள் செய்து காப்பாற்றியவள் சீதை. இராவணன் ஏவியதைச் செய்தார்களே தவிர அவர்கள் யாதும் செய்யவில்லை என்று வாதிட்டவள் சீதை.
இவ்வாறு அன்பும் அருளும் கொண்ட சீதை தவத்தினால் ஆற்றல் மிக்க தெய்வமாகிறான்.
நீருக்குள் மறைந்திருக்கும் நெருப்பு, யாருக்கும் தெரிவதில்லை. உயர்ந்த தேக்கத்திலிருந்து கீழ்நோக்கி வேகத்துடன் செலுத்தப்படும் நீரிலிருந்து மின்னாற்றல் பிறக்கிறது. அந்த மின்னாற்றல் ஒளியாகி, நெருப்பாகி இயக்க ஆற்றலாகி உலகினை வாழவைக்கிறது.
அதே போன்றது தான் சீதையென்னும் அமைதித்தவம் தந்த ஆற்றல். அதனால் தான் சுவாமி விவேகானந்தர் இந்தியமண்ணில் எத்தனையோ இராமர்கள் உருவாகிவிடலாம், ஒரே ஒரு சீதையென்னும் தெய்வப் பெண்தான் தோன்ற முடியும் என்றார். இராமாயணமே சிறையிருந்தாள் ஏற்றத்தைத்தான் பேசுகிறது என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை இத்தனை ஏற்றத்திற்கும் காரணமாகியது, சீதை யென்னும் மங்கையின் மனத்தவமே,
- 167

Page 184
லகின் எண்ணிறந்த படை வன்மையையும் இணைத்தே மட்டுமே இருப்பவர்கள் என் குணமும் குற்றமும் பிணை கொண்டால் எவர்மீதும் அதீத விருப்போ, ெ
இலக்கிய உலகில் காலம் கடத்துப் இக்காவியங்கள் இறவாத கதை மாந்தரை வரும் இராவணனைப் பற்றிய ஒரு பார்வை
வால்மீகி தந்த இராம காதை தமி மெருகு பெற்றது. காவியக்கதை பழையது 6 வளம் பெற்றது. காவியத் தலைவனாகிய இ பக்தர்களின் மனங்களை நிறைக்கக் கூடிய என்பது அவன் குலத்தின் பெருமையால் வி இராவணனைப் படைக்கின்றபோது, கம்பன கொள்கிறது. பாலை வனமாய் வறண்டிரு கண்டறிவதே நம் நோக்கம்.
இராவணன்- அரக்கன்
அரக்கர்கள் என்றாலே மிகக் ெ உடையவர்கள்; அதீத பலசாலிகள்; கடின சி பிறர் துன்பம் கண்டு மகிழ்பவர்கள் என் கற்பனைகள். அதனாலேயே இறைவ அமைகின்றார்கள்.
புலத்தியர் மரபில் விஸ்ரவசு என்ப விளங்கினான். இவன் தம்பியராகிய குட குறிப்பவர்கள். அரக்கனாய்ப்பிறந்தமையி இருந்தது. பத்துத் தலைகளும், இருபது ஆனால் இவற்றை அகத்தும் புறத்தும் கொ
 
 

வலவனத்தில்
-ᏑᏑrᏫJ (356m
டாக்டர். இராம. செளந்தரவல்வி
ப்புகள் இறைவனின் வெற்றி, தன் படைப்புகளில் மென்மையையும் இறைவன் இழையோடவிட்டிருக்கின்றான். உலகில் நல்லவர்களாக பாரும் இலர். தீயவர்கள் என்று மட்டுமே சொல்லத் தக்காரும் இலர். ணந்து கிடப்பதுதான் படைப்பின் இரகசியம். இதனைப் புரிந்து வெறுப்போ நமக்குத் தோன்றாது.
ம் அனைவர் மனத்திலும் நின்று பேசுபவை பாரதமும் இராமாயணமும். நம் உள்ளங்களில் உலவ விட்டவை. இவற்றுள் கம்பராமாயணத்தில் யே இக்கட்டுரை.
ழுக்கு வந்தபோது காவியப் புலவன் கம்பனின் கைவண்ணத்தில் புது ானினும் கம்பனின் கற்பனை ஆற்றலாலும் சொல் திறனாலும் காவியம் ராமனின் பண்புநலன்களைக் கம்பன் புலப்படுத்துமிடங்கள் வைணவ பவை. நடையில் நின்று உயர் நாயகனாக இராமன் விளங்கினான் ளைந்த விளைவு; இயல்புங்கூட. ஆனால் எதிர்நிலைத் தலைவனாகிய ரின் படைப்பாற்றல் இலக்கியச் சுவைஞர்களின் மனத்தைக் கொள்ளை ந்த இந்த அரக்கனின் மனத்தாழத்தில் கிடந்த சில ஈரச்சுவடுகளைக்
காடுமையானவர்கள்; இரக்கத்தை உகுத்வர்கள்; கோரமான உருவம் த்தம் உடையவர்கள்; கடுந்தவம் செய்பவர்கள்; போரிட அஞ்சாதவர்கள்; பனவெல்லாம் காவியங்களும், புராணங்களும் நமக்குள் கற்பித்த னின் அவதாரங்களில் எதிர்நிலைப் பாத்திரங்களாக இவர்கள்
ாருக்கு மைந்தனாகப் பிறந்த இராவணன் ரஜோ குணத்தின் குறியீடாக ம்பகர்ணன் தமோ குணத்தையும், வீடணன் சத்துவ குணத்தையும், ன் மனித இனத்தின் இயல்புகளுக்குமாறான புறத் தோற்றம் இவனிடம் கரங்களும் கண்டாருக்கு வியப்பையும் அச்சத்தையும் தருவனவே. ண்டவன் மனிதன். மனிதனுக்குரிய ஐந்துகர்மேந்திரியங்களும், ஐந்து
168

Page 185
ஞானேந்திரியங்களும் இராவணனுக்குப் பத்துத் தலைகளாயின என்கிறார் சுவாமி சித்பவானந்தர்.
தோற்றம் மட்டுமல்லாமல் இயல்பாலும் அவனிடத்துக் காணலாகும் அரக்கத் தன்மைகள் ஏராளம். குபேர சம்பத்தைப் பெறுவதற்காகப் பதினாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் தலையை அரிந்து வேள்விக் குண்டத்திலிட்டு, இறுதியில் பிரம்மனின் கருணையும் காட்சியும் கிடைக்கப் பெற்றான். கருடன், நாகன், யக்ஷன், தைத்யன், தானவன், ராட்சசன், தேவன் ஆகிய கணங்களால் தனக்கு மரணம் நேரிடா வண்ணம் வரம் பெற்றான். நினைத்த வடிவம் எடுக்கும் காமரூபன் என்ற நிலையையும், இழந்த தலைகளை மீண்டும் பெறுதற்கேற்ற வரத்தையும் பிரம்மன் இவனுக்கு உவந்தளித்தான். குபேரனிடமிருந்து அபகரித்த இலங்கைக்கு மன்னன் ஆனான். அவனிடத்திருந்த புட்பக விமானத்தையும் பறித்துக் கொண்டான்.
கைலயங்கிரியினைப் பெயர்க்க முற்பட்டு, சிவபெருமானால் அடர்க்கப்பட்டு, சாமகானம் பாடி மீண்டான்; நாரத முனிவர்க்கேற்ப வீணை வாசிக்கும் ஆற்றல் உடையவன். முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், யாராலும் வெலப்படாய்' என்ற வரமும் சந்திரகாசம் என்னும் வாளும் பெற்றவன்.
இராவணன்- அரசன் :
பெருஞ்சிறப்புப் பெற்ற இராவணன் இலங்கையில் செய்த அரசாட்சி வியத்தற்குரியது. அரக்கர்களின் காவலனாகவும், தேவர்களின் காலனாகவும் விளங்கினான். இவனது அரசாட்சிச் சிறப்பையும், பராக்கிரமத்தையும் எண்ணி எண்ணி வியக்கிறார் கம்பர். "மூவுலகிற்கும் ஒருவனாய் இருந்து அரசாண்டான்; வலிய நெடும் புலவியிலும் வணங்காத மகுட நிரை உடையவன்; இவன் அரியாசனத்திலிருக்கத் தேவர்களெல்லாம் இவன் கட்டளைக்குக் காத்திருந்தார்கள்" எந்த நேரத்தில் யாரை நோக்குவானோ என்ற அச்சத்தில் எந்நேரமும் கூப்பிய கரங்களோடு தேவர்கள் நின்ற காட்சியை,
இன்னபோது இவ்வழி நோக்கும் என்பதை உன்னலர் கரதலம் சுமந்த உச்சியர்”
எனக் கம்பன் எள்ளல் சுவையோடு தேவர்களின் உள்ளப் படபடப்பைக் காட்டுவான். மங்கையர் திறத்து ஓர் மாற்றம் கூறினும் தங்களையாம் எனத் தாழும் நெஞ்சினர்" என அவன் ஆட்சியில் தேவர்கள் அடைந்த பதட்ட நிலையினை விளக்குகிறான். இராவணன் - காமுகன்
எத்தனை சிறப்புக்கள் பெற்றிருந்தாலும், அவற்றையெல்லாம் உலகத்தார் கண்களுக்குப்புலப்படாவண்ணம் ஆக்கியது அவன் மனத்தில் புகுந்த காமம்.
எனைத் துணையராயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல் (144)
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க அவன் பெற்ற கல்வி, செய்த தவம், வாங்கிய வரம், செல்வம், அரசு என்ற அனைத்தும் காற்றில் கம்பன் மலர் - 2000

பதர்போல் ஓடிவிட, காமம் மடுமே எஞ்சியது. கண்டோர்க்கும் கேட்டோர்க்கும் அச்சம் வரும் வண்ணம் அரசாண்ட இராவணன், எந்த அரசியற் செயல்பாடுகளையும் தன் அமைச்சர்களிடம் கலந்து பேசிச் செய்பவன். ஆனால் காகுத்தன் மனைவிமீது கொண்ட காமம் அவனை எல்லா நிலையினின்றும் தடம்புரளச் செய்துவிட்டது. ஜானகி மீது கொண்ட காமம் அழிவைத் தரும் எனக்கூறிய மாமன் மாரீசன் வார்த்தைகளை அவன் செவி ஏற்கவில்லை.
நாரம் கொண்டார் நாடுகவர்ந்தார் நடை அல்லா வாரம் கொண்டார் மற்று ஒருவர்க்காய் மனைவாழும் தாரம் கொண்டார் என்ற இவர்தம்மைத் தருமம்தான் ஈரும் கண்டாய் கண்டவர் உய்ந்தார் எவர் ஐயா?”
என்று மாரீசன் நயமாகவும், அச்சுறுத்தியும் அறிவுரை பகர்கின்றான். ஆனால் மரம் குடைந்த தும்பி போல், அனங்கன் வாளி வந்து வந்து, உரம் குடைந்து, நொந்து நொந்து, உளைந்து உளைந்து நின்றமையின் இராவணன் சிந்தை சிதறிக் கிடந்தான். ஏற்காதது மட்டுமன்றி, தன் ஆணைக்குக் கட்டுப்படவில்லை என்றால் மாசீசனை அழிப்பேன் என்று சொல்லுமளவிற்கு அவன் மனம் காம விகாரத்தால் கடைநிலையடைந்தது.
“மறுத்தனை எனப்பெறினும், நின்னை வடிவாளால் ஒறுத்து, மனம் உற்றது முடிப்பேன், ஒழிகல்லேன்”
என்ற இராவணனின் திண்ணமான வார்த்தைகள், அவன் நினைத்தால் எதையும் செய்து முடிக்கும் இறுமாப்பின் வெளிப்பாடு எனலாம்.
அதுமட்டுமல்ல; அடுத்தடுத்துத் தன் தம்பியர் கூறிய அறிவுரைகளையும், தன் மைந்தனே கூறிய சொற்களைத் துச்சமாகத் தூக்கி எறிந்து, “என்னையே நோக்கி நான் இந்நெடும் பகை தேடிக் கொண்டேன்” என்று பேசுமளவிற்கு அவன் மனத்தில் காமவெறி நிறைந்து கிடந்தது. ஏற்கெனவே அவன் தன் காமத்தால் அடைந்த சாபங்களின் விளைவால் அவனால் சீதையை நெருங்க முடியவில்லை. ஆனால் தன் ஒருவன் உணர்வுகளுக்காக அரக்கர் குலம் முழுவதையும் காவு கொடுக்கத் தயாரானான்.
இராவணன் - அண்ணன்
காவியத்தை முழுமையாகப் படிக்கும் சுவைஞர்கள் இராவணன் இறப்புக்காக வருந்துகிறோம். இராவணவதம் நம் கண்களில் ஈரத்தை உண்டாக்குகிறது. ஏன்? கொடிய அரக்கன் மாண்டான் என்று மகிழ்ச்சியல்லவா அடையவேண்டும்! தன்னுடைய ஆசைக்காகவும், சுயநலத்திற்காகவும் இலங்கை அரசையும் அரக்கர் சேனையையும் பயன்படுத்திக் கொண்டவன், சீதைமீது கொண்ட காமத் தீயினால் வெந்து கருகினான் என்றல்லவா நம் மனம் ஆனந்தக் கூத்திட வேண்டும்? மாறாக, கம்பனின் கவி ஆற்றல் இந்த எதிர்நிலைத் தலைவனுக்காக, இரண்டு சொட்டுக் கண்ணிரை வரவழைத்து விடுகிறது. பாலைவனமாகக் காய்ந்துகிடந்த இராவணன் மனத்தில் எந்தெந்த ஆழங்களில் ஈரம் கசிந்து கொண்டிருந்தது எனக் கண்டறிந்து
காட்டுகிறான் கம்பர்.
169

Page 186
முதல் நாள் போர் முடிகிறது; இன்று போய்ப் போர்க்கு நாளைவா’ என்ற இராமனின் கருணையால், வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை சேர்ந்தான்; அடைந்த தோல்வி அவ்வீரனின் மனத்தைக் கூர்வாளென அறுத்தது. அடுத்துப் போருக்குச் செல்ல நினைத்த போதுதான் தம்பி கும்பகர்ணனை அழைக்கிறான். உறங்கிக் கிடந்த கும்பகர்ணன் எழுப்பப்பட்டு அண்ணனுக்கு எதிரே நிறுத்தப்படுகிறான். தனக்குப் போர்க்கோலம் செய்யும் அண்ணனிடம் சில அறவுரைகளைக் கூறிப் பார்க்கிறான் கும்பகர்ணன்.
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின் ஐயறுதம்பியோடு அளவளாவுதல், உய்திறம்”
என்று எடுத்துரைக்கின்றான். ஆனால் இராவணனின் ஆணவமும், காமமும் அவனைச் சினந்து எழச் செய்ததே ஒழிய சிந்தனை செய்யத் தூண்டவில்லை.
உறுவது தெரிய அன்று உன்னைக் கூயது
அறிவுடை அமைச்சன் நீஅல்லை”
என இகழ்ந்துரைக்கின்றான். மாதக்கணக்கில் தூங்கி எழுந்து ஊனும், நறவும் வேண்டியதைத் தின்று பழகிய நீ, போர்க்களத்திற்குத் தகுதியை இழந்துவிட்டாய்' என உணவிட்டமையை இடித்துக் காட்டிய போது மாவீரனாகிய கும்பகர்ணன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அண்ணனுக்காகத்தியாகம் செய்யத் தயாராகிவிடுகின்றான்.தன் இச்சை நிறைவேற வேண்டும் என்பதற்காக, எந்த இழிநிலைக்கும் தயாராகிறான் இராவணன். தம்பிவிடைபெறுகிறான். இனி எந்தப் பிறப்பில் இவனை அண்ணனாக அடைவோம் என்று ஏங்கும் கும்பகர்ணன்,
அற்றதால் முகத்தினில் விழித்தல்/ஆரிய
பெற்றனன் விடை’
எனக்கூறி அங்கிருந்து புறப்படுகின்றான். தன்தம்பிபோருக்கு செல்லும் காட்சியைக் கண்டபோதுதான் முதன் முதலாக இராவணன் முகம் கலங்குகிறது. அவனது உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த சகோதர வாஞ்சை வெளிப்படுகின்றது. ஒருவேளை இவனைப் போரில் இழந்து விடுவோமோ என்ற ஐயம் அவன் கண்களில் நீரை வரவழைக்கிறது.
"அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும் செவ்வழி நீரொடும் குருதி தேக்கினான்”
என்று கம்பன் படைப்பது இவண் நோக்கத்தக்கது. உன் வயிற்றுக்குச் சோறிட்டவன் நான் எனச் சற்றுமுன் இடித்துப்பேசிய இராவணனா இவன்? அவனது இருபது கண்களிலும் குருதியே கண்ணிராய் வடிந்தது ஏன் என்ற சிந்தனை நம் மனதில் எழுகின்றது. அதுதான் பாசம்; சகோதர பாசம், அரக்கன் என்றாலும் அவனும் இதயம் உடையவன் தானே!
இராவணன் உள்ளத்தில் புதைந்து கிடந்த இப்பாசம் கும்பகர்ணன் இறந்தான் என்ற செய்தி கேட்டபோது வெளிப்படுகிறது. தனக்காகத் தன் தம்பி மாண்டான் என்ற செய்தி
அகில இலங்கைக் கம்பன் கழகம்

அறிந்து துடிதுடித்து மண்ணில் வீழ்கிறான். “பாரோடும் நின்ற மராமரம் ஒன்று வேரோடும் வீழ்ந்தது போல வீழ்ந்தான்; தம்பி தன் பொருட்டு இறந்தான் என்ற அறிவு அழிந்து, அவசன் ஆகி, அரற்றினன் அண்டம் முற்ற, தம்பியே! வானவராம் காடுழக்கும் தும்பியோ! நீ இறந்தாய் என்ற சொல்லையா நான் கேட்டேன்! வன்மை கொண்ட மனத்தோடு என்னை நீத்து நீ வானுலகு அடைந்து விட்டாய் இனி என்னோடு ஒரு வயிற்றில் பிறத்தற்கு உரியார் யார்? நீராடும் காலத்தே விந்திய மலையையே கால் தேய்க்கும் கல்லாகக் கொண்ட உன்னை ஒரு மானுடவன் வில்லா கொல்விப்பது என் தம்பியர்கள் மாளவும், இலங்கை வருந்தவும், மாமனாகிய மாரீசன் இறக்கவும்,என் பின் பிறந்தாள் மூக்கறுபடவும் நான் மட்டும் இன்னும் வாழ்கிறேனே! சீதை மீது கொண்ட காமம் என்னை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறதோ"
“செந்தேன் பருகித் திசை திசையும் நீவாழ உய்ந்தேன்; இனி இன்று நானும் உனக்காவி தந்தேன், பிரியேன், தனி போகத் தாழ்கிலேன், வந்தேன் தொடர வந்தேனால் மதக் களிறே”
என அம்மாவீரன் ஒலமிட்டு, ஒப்பாரிவைத்து அழும்போது உடன் பிறந்த பாசம் எத்துணை வலிமையானது என வியக்கின்றோம் வார்த்தைகளுக்குக் கட்டுப்படாத இராவணன் மனம், தம்பியின் இறப்பால் கலங்கித்தவிக்கும் காட்சி நம் சிந்தையை ஒரு வினாடி உலுக்கத்தான் செய்கிறது.
இராவணன் - தந்தை
நேசம் மிகு அண்ணனாக விளங்கிய இராவணனைப் பாசம் மிகு தந்தையாகவும் காண்கிறோம். அக்க குமாரன் இறந்த போது கலங்காத இராவணன், இந்திரசித்தை இழந்தோம் என்பதறிந்த போது இடிந்து போனான்.
"அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான்
மிக்க திறத்துளார்கள் எல்லோரும் வீடினார்”
என்றும்
“பேதையாய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ
சீதையால் இன்னம் வருவ சிலவோ”
என்றெல்லாம் கூறித் தானியமாலி புலம்பும் போது கூட மானத்தால் புழுங்கினானே தவிரப் பாசத்தால் தவிக்கவில்லை. ஆனால் கிடைத்தற்கரிய வீரமைந்தன் இந்திர சித்தின்பிரிவினைஅவனால் தாங்க இயலவில்லை.
சாதாரண மைந்தனா இந்திரசித்து இந்திரனை வென்று சிறைப்பிடித்து, மேகநாதன் என்ற பெயர் மறைந்து இந்திரசித்து என வழங்கப்பட்டவன். பகைவர்களின் நெஞ்சகத்தில் அச்சம் நிலைத்திருக்க வழிசெய்யும் அழியா ஆற்றல் உடையவன். இராவணன் மூகுலகும் தனியாளத் தகுதி பெற்றமையே இந்திரசித்தன் பெருவீரத்தாலன்றோ. “எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழன்றோ தேய்ந்தது” எனத் தம்பி இறந்தமையைவிடத் தன் தந்தையின் புகழ் போனமைக்காக வருந்தியவன். போர்க்களத்தில் தன்திறனெல்லாம் கண்டோர் வியக்கும் வண்ணம் காட்டியவன். “இவனோடு எஞ்சும் ஆண்தொழில் ஆற்றல்" என்று
70

Page 187
எதிரியாகிய இலக்குவனாலேயே பாராட்டப் பெற்றவன். நாக பாசத்தால் பிணித்து இலக்குவனை நினைவிழக்கச் செய்து,
எப்பியே இறக்கும் எனக்கினிஇலங்கை வேந்தன் தம்பியே!புகழ் தான் என்னை? பழி என்னை?
என்று பரம்பொருளாகிய இராமனையே புலம்பவைத்த ஆற்றலுடையவன்.
இந்திரசித்து இறந்தானென்றால் இாவணவதம் உறுதிசெய்யப்பட்டு விட்டது என்பது பொருள். இராவணனுக்குக் கவசம் போல் விளங்கியவன் இந்திரசித்து. தன் ஆற்றலால் நிகும்பலை யாகம் நிகழ்த்த முயன்றவன், யாகம் அழிக்கப்பட்ட போது தந்தைக்கு அறிவுரைகூறத் தயங்காதவன். போர்க்களத்தில் வீடணனைக் கண்டபோது “குலத்துரோகியே இராமபாணத்தால் இராவணன் வீழ்ந்து மண்ணிற் கிடக்கும் போது, நீ அவன் மார்பில் விழுந்து அழுதரற்றுவாயா? அல்லது மாற்றாரோடு சேர்ந்து கொண்டு ஆரவாரிப்பாயா?"எனக்கடுமையாகக் கேட்ட குலமானம் மிக்க தனிப்பெரும் குன்று. இவ்வளவு சிறப்புக்களுடைய மாவீரன், இலக்குவன் விடுத்த பிறைமுகக் கணையால் தலையிழந்து களம்வீழ்ந்தான். தந்தை செய்த பாவத்திற்குத் தான் பலியானான். ஒரு வீர வரலாற்றின் வீழ்ச்சி இது. தம்பி உடையான் படைக்கஞ்சான் எனக் காகுத்தனை மகிழச்செய்த வீழ்ச்சி; வீடணன் தந்த வெற்றி என்ற பாராட்டு மடலுக்கும் காரணமான வீழ்ச்சி.
ஆனால் இந்த வீழ்ச்சி இராவணன் என்ற பெரிய மலையைச் சுக்குநூறாக வெடிக்கச் செய்துவிட்டது. செய்தியறிந்த இராவணனின் பத்துத்தலைகளும் புலம்பின. அவனது இருபது எனும் எரிபுரைநயனமும் உருகுசெம்பு என ஓடியது ஊற்றுநீர். “மைந்தனே! மாமகனே! எந்தையே! என்னுயிரே புரந்தரன் பகை போயிற்றோ!” என்று அரற்றினான். "அய்யனே என்று அழைக்கும் ஒர்தலை, யான் இன்னும் செய்வனே அரசு என்று புலம்பும் ஒர்தலை; உன்னைக் காட்டிக்கொடுத்த கயவனாகிய நான் உய்வனே! எனஅரற்றும் ஒர்தலை; மகனே! உன் ஆற்றல் மிக்க தோள்களால் என்னைத் தழுவிக்கொள்ள மாட்டாயா? என விம்மும் ஒர்தலை, வஞ்சமோ மகனே! நீ வரமாட்டாயா? என வினவும் ஒர்தலை” இவ்வாறு இராவணன் அடைந்த புத்திர சோகம் படிப்பவர் மனதைப் பாதிக்குமளவிற்கு அமைந்துள்ளது. சோகச் சித்திரத்தை இன்னும் அழுத்தமாக்கவிரும்பிய கம்பன். போர்க்களத்தில் சென்று தன் மைந்தன் உடலைத் தேடிய இராவணன் கையை மட்டும் கண்டு கதறும் காட்சியைப்படைக்கிறான். அரும்பாடுபட்டுத்தேடி மைந்தனின் தலையில்லா யாக்கையைத் தழுவியெடுத்த இராவணனின் ஒலம் நம் கண்களில் நீரை வரவழைக்கிறது.
"சினத்தொடும் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி நினைத்தது முடித்துநின்றேன்; நேரிழை ஒருத்திநீரால் எனக்கு நீ செய்யத்தக்க கடனெலாம் ஏங்கிரங்கி உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகிலுள்ளார்”
என்ற இராவணனின் புலம்பல் சோகத்தின் எல்லை. தன் மைந்தனுக்கு இறுதிக்கடன் செய்து புலம்பும் தந்தையின் அவலம் உலகில் யாருக்குமே வரக்கூடாத பேரவலம்.
கம்பன் மலர் - 2000

இராவணன் - கணவன்
ஒரு மாவீரனின் மறைவு அரக்கனாகிய தந்தையையே இவ்வளவு பாதிக்குமென்றால், வயிற்றில் சுமந்து இந்த மாவீரனை மண்ணுக்கு அறிமுகம் செய்த தாய் மண்டோதரியின் சோகத்தைச் சொல்லவும் வேண்டுமோ!
‘ஐயனே! அழகனே! என் அரும்பெறல் அமிழ்தே! கலைகளால் வளரும் திங்கள் போல நீ வளர்கின்ற காலத்திலேயே உன் வில்லாற்றலால் சிங்கக்குட்டிகளைக் கொண்டுவந்து விளையாடக்காணும் தவம் செய்த நான், உன்தலையில்லா யாக்கை காண என்னபாவம் செய்தேன்!” எனப் பரிதவிக்கிறாள். தாயாக நின்று புலம்பிய மண்டோதரியின் மனம் மற்றொருகணக்கைப் போட்டுப் பார்க்கிறது.
அஞ்சினேன், அஞ்சினேன் அச்சீதை என்று அமுதாற்செய்த நஞ்சினால், இலங்கை வேந்தன்நாளை இத்தகையன் அன்றோ!'
என இராவணனுக்கு வரப்போகிற இறுதியை எண்ணிப் புலம்பத் தொடங்கி விடுகிறாள். இப்பொழுதுதான் இராவணனுடைய மனதின் ஆழத்தைக் கம்பர் கீறிக்காட்டுகிறார். பெறுதற்கரிய மைந்தனின் மறைவு, இராவணன் மனத்திலிருந்த காமத்தை எரித்துவிட்டது. அதனால்தான்
LLLLLLLLLLLLLLLLLLL0LLLLLLLLLLCLLLLLLLLLLLLLLLLCLLLLCLCLCLLLLLLLLGLLLLLLLஇத்துயர்நமர்கட்கு எல்லாம் பொன்தழைத்தனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன வன்தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் கொன்று இழைத்திடுவல் என்னா ஒடினான்’
என்று பார்க்கின்றோம்.
மூத்தவர்களின் வார்த்தைகளால் மாற்றமுடியாத காமம்; மாமனின் வார்த்தைக்கு மதிப்புத்தராத காமம்; தம்பிகளின் அறிவுரைகளைத் துச்சமெனத் தூக்கியெறிந்த காமம்; அரக்கர் சேனை அனைத்தும் அழிந்தபிறகும் அழியாத காமம்; கிடைத்தற்கரிய வீரமகனின் இறப்பு என்னும் நெருப்பினால் எரிந்து போனது. இராவணனின் இறுகிப்போன பாறையான மனம் உடைந்து அதில் ஊற்றெழுந்ந பாசமாகிய நீர்ப்பெருக்கால் அடித்துக்கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அதனால்தான் இறுதியில் அவன் மனத்தில் சீதையைப்பற்றிய காமம் எங்கே உள்ளது? என்று இராகவனின் வாளி தடவிப்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அரக்கர்கள் என்ற பாலைவனத்தில் சுடுமணலும், கானல்நீரும் தவிர வேறு வளமில்லை. ஆனால் பாலையிலும் சிலசோலைகள் இருப்பது போல, அந்த அரக்கர்களிடத்தும் சில ஈரமான உணர்வுகளுண்டு. இராவணனிடத்திருந்த ஈரத்தின் சுவடுகளை நமக்குத் தேடிப்பிடித்து அடையாளம் காட்டுவது கம்பனின் காவியத்திறனே எனலாம். அரக்கனாகவும், அரசனாகவும் இருந்தபோது பாலைவனமாகக் காணப்பட்ட இராவணனின் மனம், அண்ணனாகவும், தந்தையாகவும், மயன்மகள் கணவனாகவும் காட்சிதரும்போது தன் ஈரச்சுவடுகளை வெளிப்படுத்துகிறது. அந்த ஈரம் காப்பிய அன்பர்களின் கண்களைக் குளமாக்குகிறது என்பது உண்மை.
171

Page 188
ரியாழ்வாரால் பரதநம்பி என்று
穩 議 議 鄒 என்பது கருத்து. குலசேகர U கவியரசர் கம்பர் தாமும் நம்
ଜୋଥF
ால்லாற் குறிப்பிட்டார்.
இராமபிரானுக்கு அன்பு செய்து பு உலகுடன் பெறினும் கொள்ளார்” என்ற சங்
புகழ்க் குணங்கள் மிக்க பரதனுக்( உறுதியாலும், அன்பாலும், நேர்மையாலும் ப
பெரியவர் வ. வே. சு. ஐயர் அவர் பற்றி அறியவில்லை என்றால் இராமகாதை
அத்துடன் நில்லாது, “வரலாறும் இ பெற்ற உள்ளத்தைத் தொடும் கதாபாத்திரங் குறிப்பிட்டார்.
"But the Reader that know Ramayana and knows not one of the known to story or history.
இதனால், பரதனின் இன்றியமை கோசலை - பரதனைக் குற்றமற் அலன் - செய்யனே” என்று கருதிய கோ: கைகயர் கோமகள் இழைத்த ை ஐய நீஅறிந்திலை போலுமால்” என்று பேச வைத்து விடுகிறது.
தூய சிந்தையரும்கூடச் சிலசமய வினவியதில் பிழைகாணக் கூடாதுதான் தடுமாற்றமுற்ற அவள் மனம் இப்படிப் பேச6
 
 
 

ரத நம்பி
"கம்பகாவலர்’ தி.முருகேசன்,புதுச்சேரி
று குறிப்பிடப் பெற்றவன் பரதன். பண்பிலே நிறைவுஉடையவன் பரதன் நம் இவரை நம்பி என்றே குறிப்பிட்டார். இவர்களைப் பின்பற்றியே
பியும் என்நாயகனை ஒக்கின்றான்”என்று - பரதனை நம்பி என்ற
கழ் பெற்றவன் பரதன். “புகழெனின் உயிரும் கொடுப்பர்; பழி எனின் க நூற் பாடலுக்குச் சான்றாகத் திகழ்ந்தவன் பரதன்.
குப் பெரும் பழியைச் சுமக்கும் நிலைமைகள் ஏற்படுகின்றன. தன் மன ழியைவென்று உதயத்துப் பரிதியாக எழுந்து உயர்கிறான்.
கள் எழுதினார்: “இராமகாதையைப் பயிலும் அன்பர்கள், பரதனைப் பிற்பாதிக்குமேற்பட்ட பேரழகைக் காணாது இழந்தவர் ஆவர்” என்று.
இதிகாசமும் காண இயலாத நிலையில், நேர்மையும் இளகிய நெஞ்சமும் களில் மிகச் சிறந்த ஒன்றை அறியாத பேரிழப்பிற்கு ஆளாவர்” என்றும்
s not Bharatha misses more than half the beauty of the most just and tender hearted and most touching characters
பாத நிலைமை நமக்கு விளங்கும். றவன்' என்றே உணர்கிறாள். "மை அறு மனத்து ஒரு மாசு உளான் Fலை மனம் - தன் காதல் மகன் இராமன் மேல் உள்ள ஆசையால் கதவம்
வ்களில் மனம்திரிவது உண்டல்லவா? கோசலையின் தாயுள்ளம் அப்படி எனினும், மாசற்றவன், செம்மையானவன் என்ற அவள் கணிப்பைத் வைத்துவிடுகிறது.
172

Page 189
இப்படிக் கேட்டவள் கோசலையா? தன்னை வளர்த்த - தன் நெஞ்சம் அறிந்த தாயா இப்படிக் கேட்டாள்? ஆம், பரதன் துடிதுடித்து விட்டான்.
தான் குற்றமற்றவன் என்பதை எப்படித் தாய் கோசலைக்கு உணர்த்துவது? பரதன் சூழுரைகள் பல கூறியதைக் கேட்ட கோசலை பண்பிலும், உடன் பிறப்புக்களிடம் அன்பிலும், நேர்மையிலும் இவன் தனிமைந்தன் எனத் தேர்கின்றாள்.
"எண்ணில் கோடி இராமர்கள் என்னிலும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?”
என்று. இனி, அவன் “நீதிக்கொருவன் என்பதை குலமுறைகிளத்து படலத்தில் முனிவன் மொழியாக நமக்குக் கம்பர் காட்டுகிறார்.
தள்ள அரிய பெரு நீதித்தனி ஆறு புகமண்டும் பள்ளம்” பரதன் என்றே, இராம நாடகத்தில் பரதனை மற்றவர்கள் நன்கு அறிந்திருந்தாலும் இராமன் மட்டுமே அவன் அன்பின் அடியாழத்தை நன்கு உணர்ந்தவன் ஆகிறான்.
கைகேயியின் மகனல்லவா பரதன்? அவன் மீது இலக்குவனுக்குச் சீற்றம் எழுந்ததில் என்ன தவறு; பரதனுக்கு நாடாம்; இராமனுக்குக் காடாம். சிங்கத்தின் உணவை நாய்க்கு
இடுவதா?
இராமனை ஒரு நொடியும்பிரியாத - அவனை நிழல் போல் தொடர்ந்த - இராமனிடம் அன்பிற்கு ஒருவனாக விளங்கிய தொண்டன் அல்லவா இலக்குவன்? அவன் இப்படிப் பேசியதில் குறை காண இயலாது
மகன் பிழையன்று மைந்தா! இது விதியின் பிழை” என்று இராமன் கூறியதைக் கேட்டு இலக்குவன், "விதிக்கு விதியாகும் வில் தொழில் காண்டி’ என்று மேலும் சினங் கொள்கிறான்.
"இலக்குவ, என் சொற்களை ஏற்றுக்கொள்” - என்று இராமன் கூற - இலக்குவன் சீற்றம் தணிகிறான்.
தவக் கோலத்தில் பரதன் நெருங்கிவருவதைக் கண்ட இலக்குவன், “நம் குலத்து உதித்தவர் எவரும் அறநெறி தவறுவரோ? பரதன் தருமத்தின் தேவு, செம்மையின் ஆணி’ என்ற இராமன் உரை கேட்டும் பரதன் கோலங்கண்டும் சினம் நீங்கப் பெறுகிறான். பரதன் குற்றம் அற்றவன் என்று உணர்கிறான்.
இலக்குவனே இப்படி எனில் முன் பின் அறியாத குகன் பரதன் மேல் ஐயுற்றதில் வியப்பேதும் இல்லையன்றோ?
பரதன் படை கொண்டு வருகிறான் - வஞ்சனையால் அரசெய்திய மன்னர் வந்தார். நாய்க்குகன் என்றெனை எண்ணிவிடலாகாது என்று வீறு கொண்டு நின்றவன்
'வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை நற்கலையில் மதி என்ன நகை யிழந்த முகத்தானை கல்கனியக் கணிகின்ற துயரானைக் கண்ணுற்றான்”
கம்பன் மலர் - 2000

அவன் கைவில் நழுவிவிழ - நெஞ்சம் தளர
"எம் பெருமான் பின் பிறந்தார். இழைப்பரோ பிழைப்பு?”
என்று தெளிவு பெற்றான்.
முழுதுலகு அளித்த தந்தை முந்தையோர்முறையினின்றும்
வழுவினன் அதனை நீக்க மன்னனைக் கொணர்வான் வந்தேன் - என்று பரதன் கூறிய வாசகம் - குகனை பரதன்பால் பன்மடங்கு மதிப்புக் கொள்ளச் செய்கிறது.
தாய் உரை கொண்டுதாதை உதவியதரனிதன்னைத் தீவினை” என்று நீத்தவன் பரதன்!
இவன் புகழை நோக்குமிடத்து பரதனை ஆயிரம் இராமர்நின் கேழ் ஆவரோ தெரியினம்மா” என்று பேசல்வத்துவிடுகிறது
பரதன் இராமபிரானை நாடாள அழைக்கிறான். “மீண்டு அரசு செய்க" என்று.
தாய் உரை கொண்டு தாதை ஆணையை ஏற்று நாட்டை நீங்கிய இராமன் - அவன் உரையை ஏற்கவில்லை!
“நாடு உனக்குரியது நீயே சென்று ஆள்க’ என்கிறான். மீண்டும்பரதன்,'அரசு நின்னதே, ஆள்க’ என்று வேண்டுகிறான்.
“நாடு என்னுடையதா? என்னுடையதாயின் - நாட்டாட்சியை நினக்கு வழங்குகிறேன்; நாடு திரும்பி முடி சூட்டிக் கொள்” என்கிறான்.
இன்றைய சூழ்நிலையில் வாழும் நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
இன்று ஒர் அடி நிலத்திற்காக - உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கிடும் உடன்பிறப்புக்களையே காண்கிறோம்.
ஆட்சியைப் பிடிக்க நூறாயிரங்கள் ஆறாக ஓடுவதைக் காண்கிறோம். அரசாட்சியைக் கைப்பற்ற சூதும், கையூட்டும், வஞ்சகமும்,கொலைகளும் நாடோறும் நாம் கேட்கும் செய்திகளாக இருக்கின்றன.
இராமன் வாழ்ந்த காலம் - பொற்காலம் என்பதையே கம்பர் காட்டுகிறார். இப்படிப்பட்ட உடன் பிறப்புக்களை நாம் இராம நாடகத்தில் மட்டும் தானே காணமுடிகிறது.
இராமன் - பரதனிடம் “நீ எனக்குத் தந்த நாட்டை நான் மீண்டும் உனக்குத் தருகிறேன். என் ஆணையைப் பெற்று தந்தை சொற்படி 14 ஆண்டுகள் நீநல்லாட்சிபுரிக”என்று பணிக்கின்றான்.
அதற்கு மேல் பரதனாற் பேசமுடியவில்லை! மணம் தெளிகிறது. இராமன் பாதுகைகளை வேண்டிப் பெறுகிறான். அவைகளைத் தலைமேல் சுமந்து நந்தியம்பதியை அடைந்து அதை அரியணை ஏற்றித் துறவுபூண்டு வாழ்கிறான். ஒவ்வொரு கணமும் இராமன் வரவை எதிர்பார்த்து குறித்த கணத்தில் வாரானாயின் தீப்புகலே சரி என்ற முடிவோடு நந்தியம்பதியில் காத்திருந்தான்.
இனிப் பரதன் குணநலன்கள் பற்றிய செய்திகள் சில
பார்ப்போம்.
园

Page 190
கோசலை “மும்மையின் நிறை குணத்தவன் - நின்னிலும் நல்லன்'
கவியரசர் பரதனை இராமனுக்கு நிகராகவும் சில இடங்களில் இராமனிலும் உயர்வாகவும் படைத்து அவன் செம்மையின் ஆணி என்பதை நிறுவுகிறார்.
ஆழ்வார்: “படியில் குணத்துப் பரதநம்பி” என்றார். உவமைக்கு யாரையும் கூற இயலாத பண்புகளை உடையவன் என்பது கருத்து.
குலசேகர ஆழ்வார். “பரத நம்பி” என்றார். “ பண்பிலே நிறைவு உடையவன் பரதன்” - என்பது ஒரு பொருள். முடி சூடும் அரசனாக எண்ணாது, அடி சூடும் அரசையே அரசாய் எண்ணித் தானோர் ஒப்பற்ற தம்பி - அடியவன் என்பதை உணர்த்தியவன் பரதன்.
குடிமக்கள்: “ஆளான் பரதன் அரசு” என்று அவன் உளமறிந்து பேசினர்.
பரத்துவாச முனிவர். பரதனை நோக்கி - “இராமனைக் கண்டு வழிபட்ட பயனால் அடியவருள் முடிமணியாகிய உன்னைக் கண்டு வணங்கும் பெரும்பேறு பெற்றோம்” என்று புகழ்ந்தார்.
சீதை: இராவணன் பிராட்டியை நிலத்துடன் அகழ்ந்தெடுத்துச் சென்றபோது சீதை புலம்பும் பாடலாக அமைந்த கம்பர் கவியில்
வரதா, இளையோய் மறு ஏதுமிலாய்
பரதா!இளையோய்! பழிபூணுதியோ?” என்று நால்வரையும் அழைத்ததாகக் காட்டுகிறார்.
"வரதா” என்று ராமனையும், இளையோய்” - என்று இருமுறை கூறி இலக்குவ சத்துருக்கனர்களையும் அடைமொழி இன்றிக் கூறி பரதனை மட்டும் மறு ஏதுமிலாப் பரதா”(மறு - குற்றம்) என்று சீதை அழைத்ததாகக் காட்டினார்.
வாலி: வலியற்று - அம்பேறுண்டு - வீழ்ந்து கிடக்கும் வாலி இராமனை வசைபாடும்போது - அப்பேச்சினிடையே
"வாய்மையும் மரபும் காத்து
மன்னுயிர்துறந்து வள்ளல் தூயவன் மைந்தனேநீ
பரதன் முன் தோன்றினாயே’
என்கிறான். பண்பில் சிறந்த பரதனுக்கு முன்னவனாகப் பிறந்த நீபண்பிற் குறைந்த இச் செயலைச் செய்து விட்டாயே! இது முறையோ? என்றான்.
கவிப் பேரரசர் மரவடிகளை வான் பணையமாக மணிமுடியாகப் பெற்ற பரதனின் பெருமையிலே தனது உள்ளத்தைப் பறிகொடுத்து திருவடி புனைந்த செல்வன்” என்ற தொடரால் பரதனைக் குறிப்பிடுகிறார்.
இராமனின் மரவடி பாதுகையாகிய மகுடத்தின் முன் செம்மணிமகுடமும் அவனுக்குச் சிறப்பாகத் தோன்றவில்லையாம். நால்வகைப் படைகளோ மற்ற அரசச் செல்வங்களோ இம்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

மரவடியின் முன்னால் பரதனுக்கு ஒரு பொருளாகத் தோன்றவில்லை. இவை அனைத்தையும் "வினை உறு செறுப்புக்கிந்தான்’என்றார் கவியரசர்.
மின்மினிப் பூச்சியின் ஒளி போன்று நிலையில்லாது அவ்வப்போது தோன்றி மறையும் பிறவியை வேரோடு அழிக்கும் வல்லமை உடையனவாம் இம்மரவடிகள். இதனை,
மின்மினி ஒளியின் மாயும்
பிறவியை வேரின் வாங்கச் செம்மணிமகுடம் நீங்கித்
திருவடி புனைந்த செல்வன்" என்றார் கவியரசர்.
எவ்வகையில் நோக்கினும் பரதனின் புகழ் என்றும் அழியாதது என்ற கருத்தில் ஊழிதிரியினும் பேராப்பெருமையான்" என்றார்.
வாயினால் எடுத்துக் கூறுவதற்கரிய வான்புகழ்"அது. பூவில் தோன்றிய பிரமனும் வணங்கிப் போற்றும் பெருமையுடையோன் இவன் என்ற கருத்தில் - "மலர் இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவன்’(அந்தணன் - பிரமன்) என்றார்.
இராமனின் திருவடிநிலைகளின் கீழ் அமர்ந்து ஆண்ட “அடிசூடிய அரசு" வானுலக இன்பமும் தொடர்ந்து வருவதற்குக் காரணமான பேரரசு - என்கிறார்; ஆகவே இவ்வுலகில் எத்தனை மறைகள் உள்ளனவோ அவை எல்லாவற்றாலும் பேசப்படும் புகழ்படைத்தது இவன் தூய வாழ்வென்பதை,
எனைத்துள மறையவை இயம்பற் பாலன
பனைத்திவன் கரக்கரி பரதன் செய்கையே’
(செய்கை -ஒழுக்கம்) என்றார். மறைவழிவந்த ஒழுக்கம் பரதன் மாண்புடைய ஒழுக்கம் என்பது கருத்து.
பரதன் அழகில் இராமனை ஒத்தவன்; குணங்களாற் சில நேரங்களில் இராமனை மிஞ்சியவன்.
குணத்தாலும் எழிலாலும்இவ்விருந்த வள்ளலையேஅணையான்”
"எண்ணில் கோடி இராமர்கள் என்னினும் அருகு ஆகா அருந்தகை அண்ணல்” ஊழி திரியினும் பேராப் பெருமையான்" மரபினோர்புகழையெல்லாம்
தன் புகழாக்கிக் கொண்டவன்" இவைபோல் 85 இடங்களுக்கு மேல் பரதன் கம்பரால் புகழப்படுகிறான்.
முடிவாக, வாழ்வில் எத்தகைய சூழ்நிலையிலும் உளம் தளராது, நேரிய பாதையைத் தன்வழியாகக் கொண்டு, தருமத்தின் தெய்வமாக விளங்கியவன் பரதன் என்பதை கம்பர்தம் காப்பியத்துள் காட்டிச் சென்றார். விரிவஞ்சிச் சிலவே கூறினோம்.
பங்கம் இல் குணத்துப் பரத நம்பியின் புகழ்பாடி மகிழ்வோம்.
174

Page 191
1. ம்பன் இச்சொல் பல ஆண் பாத்திரங்கள் ஆராதிக்கப்பட்
2. புலமை புகழப்பட்டதேயன்றி
என்ன காரணம்? கன்னித் தமிழ் மொழியைக் கன்னல் மொழிய
பிற கவிஞர்களின் படைப்புகளில் கொண்டு தன் பாத்திரங்களை மட்டும் முன்னி பெற்றவன்.
கம்பனின் காப்பியத்தில் தேவர்கள்
ஆயினும் இப்பாத்திரங்கள் யாவற்றிலும் ம குழுவையெல்லாம் மானிடம் வென்றது" என்
“மணமும் இல்லை; மறைநெறி வந் வாலி இறந்த பிறகு சுக்கிரீவனோடு வாழ்வத
அதனை மாற்றி, கைம்பெண்ணாக
அரச வாழ்வே பெற்றாலும், கற்ப அனுபவிக்க வேண்டாமா? சிந்தையில் நிறை
சலியாத மனத்தையும், நீங்காத செ ஆக்கித் தந்தவன் கம்பன்.
இம்பர்நாட்டிற் செல்வம் உம்பர்நாட்டிற் கற்பகக்க செம்பொன் மேருவனைய கம்பநாடன் கவிதையிற்
என்பது மூத்தோர் வாக்கு.
 
 
 

Wyvres
தவன்
இரா. மாது, திருச்சி
டுகளாக மக்கள் மனத்தில் பதிந்து விட்ட ஒன்று. இவன் படைத்த டதும் உண்டு. எதிர்க்கப்பட்டதும் உண்டு. ஆனால், கம்பன் இகழப்பட்டதில்லை.
பாக்கி வெள்ளமாக ஓட விட்டவன் கம்பன்.
ஆசிரியர்களின் திறனே முன் நிற்க, கம்பன் தன்னை மறைத்துக்
ரிறுத்தி, தான் கூற வந்த செய்திகளைக் குறிகளாக்கித் தனித்துவம்
ா, மனிதர்கள், அரக்கர்கள், குரங்குகள், கரடிகள் வருகின்றன. ானிடத்தின் இயல்புகளை இழையோட விடுகிறான். “வேறுள று பாடி வியக்கிறான்.
தன; குணமும் இல்லை” என்றபடி வாழும் குரக்கினத்துத் தாரையை, ாக வால்மீகி காட்டியது யதார்த்தம்.
கற்புக்கரசியாகக் காட்டுகிற கம்பனின் தாரை இலட்சியப் பாத்திரம்.
க மரத்தின் நிழலே கிடைத்தாலும் மனமகிழ்ச்சியோடு அதனை ]வு இல்லையெனில், எவையிருந்து என்ன பயன்?
ல்வத்தையும் தரவல்ல கவிதையைத் தன் சிந்தையின் செம்மையால்
மெல்லாம் எய்தி அரசாண்டிந்தாலும் ா வோங்கு நிழலிருந்தாலும் புயத்திறல்சேர்இராமன்திருக்கதையில் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே'
175

Page 192
கற்கண்டு மலையெனத் தன் காப்பியத்தைப் படைத்த கம்பன், ஆதியில் தொடங்கி அந்தம்வரை கதையினுடைய தொடர்போ, பாத்திரங்களுக்கு இடையேயான தொடர்போ, அற்றுப் போகாமல் காப்பியத்தை நகர்த்துகிறான்.
ஆயிரம் மறைபொருள் உணர்ந்து அறிவமைந்த இராவணன் தீய வழியில் புகுந்தபோது, தயரதன் மதலையாய் அறத்தை நிலைநிறுத்தவும், தக்கோர் இடர் துடைக்கவும் காலமும் கணக்கும் நீத்த காரணனாகிய பரம்பொருள் கைவில் ஏந்தி, அயோத்தியில் அவதாரம் செய்யும்படி ஆயிற்று.
தருமத்தை நிலைநாட்ட எழுந்த அவ்வவதாரத்திற்குத் துணைபுரிந்தோர் பலர். மலையரசன் சுக்கிரீவன், வாலியின் சேய் அங்கதன், செவிக்குத் தேனென இராகவன் புகழைத் திருத்தும் கவிக்கு நாயகனாகிய சிரஞ்சிவி அனுமன், அரக்கர் குலத் தோன்றல் வீடணன், தீராக் காதலன் குகன் எனப்பட்டியல் நீளும். இவர்கள் யாவரும் நண்பராக, சகோதரராக, அடியவர் களாகவிருந்து தொண்டு புரிந்தவர்கள். ஆனால் ஆசிரியனாக, தந்தையாக இருந்துஇராமனை வழிநடத்தியவன் ஒருவன் உண்டு. இராமனுக்கு உபநயன விதிமுடித்து, மறை ஒதுவித்து, வளர்த்தவன் வசிட்டன். வசிட்டனின் படிப்பறிவை, பட்டறிவாக மிளிரச் செய்தவன் அந்த மாமுனி. காயத்ரி மந்திரத்தை அருளிய அச்சென நினைந்த முதல் அந்தணனாகிய விசுவாமித்திர முனிவனே அவன்.
கெளசிகன் என்ற பெயரோடு அரசாட்சி செலுத்தி வரும் நாளில் வேட்டையாடக் காட்டுக்குச் சென்று, வசிட்ட முனிவனைச் சார்ந்து, அவரால் காமதேனுவின் மூலம் விருந்தளிக்கப் பெற்றான். அத்தேவலோகப் பசுவைத் தனக்கு வேண்டுமெனக் கேட்டான். வசிட்டரோ,“வந்தால் அழைத்துச் செல்” என்று கூற, அப்பசுவோடு போட்டியிட்டுத் தோற்றான். வசிட்டரின் தவத்தின் வலிமையை உணர்ந்தான். தவம் மேற்கொண்டான்.
இந்திரன் தவத்தைக் கெடுத்தான். திரிசங்குவிற்குத் தன் தவவலிமை முழுவதையும் அர்ப்பணித்தான். மா துறவு பூண்டவன்; மாதுறவுபூண்டான். தவவலிமை மீண்டும் போயிற்று ஆயினும் இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்தவில்லை. மீண்டும் தவம் மேற்கொண்டு தேவர்களாலேயே பிரம இருடி
யாக்கப்பட்டான்.
விசுவாமித்திரனின் பெருமையை இராமன் உணர வேண்டுமென்பதற்காகவே சதானந்த முனிவன் வாயிலாக விசுவாமித்திரன் வரலாற்றைப் பேச வைக்கிறான். கம்பன் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப் படலம், பிறப்பு என மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் காப்பியம் விசுவாமித்திரனின் அயோத்தி வருகையால் புயல் வேகம் அடைகிறது. அதற்குப் பிறகுதான் எவ்வளவு மாற்றங்கள்?
அகில இலங்கைக் கம்பன் கழகம்

தன் அரண்மனை வந்தடைந்த விசுவாமித்திரனை வரவேற்று உபசரித்து வந்த காரணம் யாதென வினவுகிறான் தயரதன்.
தயரதா! என்னைப் போன்ற முனிவர்களும், தேவர்களும் தங்கட்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமானால் பாதுகாப்பு நாடிப் புகலிடமாக கைலாசம், பாற்கடல், சத்தியலோகம், அமராவதிப் பட்டணம் இல்லையெனில் உனது நாடான அயோத்தியைத் தவிர வேறு எங்கு செல்வர்?
என் அணையமுனிவரரும் இமையவரும்
இடையூறு ஒன்று உடையரானால்
பல்நகமும் நகுவெள்ளிப்பனிவரையும்
பாற்கடலும் பதும பீடத்து
அந்நகரும் கற்பக நாட்டு அணிநகரும் மணிமாட அயோத்தி என்னும்
பொன்நகரும் அல்லாது, புகல் உண்டோ
இகல் கடந்த புலவு வேலோய்
மனம் நெகிழ்ந்த தயரதன் தன்னால் ஆக வேண்டிய காரியம் யாதென வினவினான்?
“வனத்துள் தான் இயற்றவிருக்கின்ற வேள்விக்குப் பாதுகாப்பாயிருந்து, காக்க உன்னுடைய செல்வர்கள் நால்வரினும் கரிய செம்மலாயிருக்கிற இராமனை என்னுடன் அனுப்பு” என்று கேட்டான் விசுவாமித்திரன்.
அவர்கள் சிறுவர்கள். “நான் படையுடன் வந்து வேள்வி காப்பேன்’ என்றுரைத்த தயரதனைச் சினந்து, வெளியேற நினைத்தான் விசுவாமித்திரன்.
அவ்வேளையில் வசிட்டன் பேசுகிறான். வசிட்டனுக்கும் விசுவாமித்திரனுக்கும் இருந்த உறவு நாம் அறிந்த ஒன்று. இருவருடைய பொருத்தமும் ஏழாம் பொருத்தம். விசுவாமித்திரன் பிரம்ம இருடி' யாக மாறக் காரணமானவன் வசிட்டன். எதிர்மறையானவர்கள். இருந்தால் என்ன? எதிரெதிர் துருவங்கள்தானே ஒன்றையொன்று கவரும்.
“தயரதா கறுத்த மாமுனிவன் கருத்தை எண்ணிப்பார். உன் மகன் இராமனுக்கு நன்மைகள் சேரவிருப்பதைத் தடுக்கலாமா? மழையினால் உண்டான பெருவெள்ளம் ஆறாக ஒடிக் கடலைச் சென்று அடைவதைப் போல, முனிவனுடன் போவதால் அளவில்லாத வித்தைகள் இராமனை வந்து சேரவிருக்கின்றன” என்று வசிட்டர் உரைத்தார்.
பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்
176

Page 193
ஐய! நின் மகற்கு அளவுஇல் விஞ்சை வந்து எய்து காலம் இன்று எதிர்ந்தது'என்னவே
மாறுபட்ட எண்ணமுடைய தன் குலகுருவே விசுவாமித்திரனைப் பெருமையாகக் கூறுவதைக் கேட்ட தயரதன், குருவின் வாசகத்தைத் திருவாசகமாகக் கொண்டு, திருவின் கேள்வனாகிய இராமனை விசுவாமித்திரனுடன் அனுப்புகிறான்.
மனிதப் பிறவியில் துன்பம் வருதற்குக் காரணமாகிய நல்வினை தீவினை இரண்டையும் அழித்து, காமம், வெகுளி மயக்கம் என்னும் மூவகைப் பகைகளாகிய அரண்களைக் கடந்து, முத்தியில் விருப்பம் கொண்ட ஞானிகள் காய்தல், உவத்தல் இன்றி, இன்னார், இனியார் என்ற பேதம் இன்றி எப்படி மனத்தில் பசையற்று இருப்பரோ; பொருளை இன்பத்திற்கு விலையாகப் பெறுகின்ற வேசியர் உள்ளம் எங்ங்ணம் இருக்குமோ? அங்ங்ணம் ஈரத்தன்மையற்றிருந்த பாலை நிலத்தை அடைந்தனர்.
தா வரும் இருவினை செற்று, தள்ள அரும் மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில் போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே.
பசையற்ற பாலை நிலத்தின் வெம்மையைத் தாங்காது, இராம இலக்குவர்கள் அடி குறுகுவதைக் கண்ட விசுவாமித்திரன் அவர்களுக்குப் பாலையின் வெம்மையைத் தாங்கும் பொருட்டு நான்முகன் ஆக்கிய பலா, அதிபலா என்னும் இரண்டு மந்திரங்களை உபதேசம் செய்தான்.
மந்திரங்களை இராம இலக்குவர்கள் சிந்தித்த பொழுதிலேயே பாலையின் வெம்மை தணிந்து, குளிர்ச்சியுடையதாயிற்று. இராமனும், “இக்கொடிய பாலை நிலம் உண்டாகக் காரணம் யாது?’ என்று வினவினான்.
“பற்று நீங்காத உலோபியின் குணமே அவனின் மற்ற நல்ல குணங்களையும் எப்படி அழிக்குமோ, அதுபோல, மாயமும் வஞ்சமும் வரம்பில் ஆற்றலும் பெற்ற அரக்கியாகிய தாடகையால் இம் மருதநிலம் பாலையாயிற்று” என்றார் விசுவாமித்திரர்.
அவ் வேளையில் எவரும் அஞ்சும்படி தாடகை, எதிரில் வந்து நின்றாள். ஆனால், இராமன் அவள் உயிரைக் குடிக்கக் கூடிய கணையைத் தொடுக்காது 'பெண்’ என்று மனத்திடை நினைத்திருந்தான்.
நான்மறை உணர்ந்த அந்தணன் விசுவாமித்திரன், “இராமா, இக் கொடியாளைப் பெண் என்று எண்ணாதே; எங்களையெல்லாம் 'கோது' என்று உண்ணாமல் விட்டு வைத்திருக்கிறாள்; அறத்தைக் கெடுத்து, பெரியோர்களுக்குத்
கம்பன் மலர் - 2000

தீங்கிழைக்கும் இவளைக் கொல்வதில் தவறில்லை; ஆராய்ந்துதான் கூறுகிறேன்.” என்று உணர்த்த, விசுவாமித்திரனின் உரையை வேதமெனக் கொண்டு தாடகைமேல் அம்பினைத் தொடுத்தான் இராமன். தாடகை மார்பில் அம்பு பாய, மாய்ந்து வீழ்ந்தாள்.
அவ்விடம் அகன்று, முனிவன் வேள்வி நடக்குமிடம் அனைவரும் நகர்கின்றனர். விசுவாமித்திரன் தன்னிடத்தில் யாதொரு தொழிலுமின்றி இருந்த, இந்திரன் முதலான ஒவ்வொருவரையும் தமக்குரிய தேவதையாகக் கொண்டிருந்த தெய்வப்படைக்கலன்களை இராமனுக்கு அளித்தான். தெய்வப் படைகளும் இராமனை வந்தடைந்து, நாங்கள் இலக்குவன் போல் உம்மைப் பிரியாது நின்று, பணியாற்றுவோம் என்றன. அப்படையின் உதவி கொண்டு விசுவாமித்திரன் வேள்வி காத்து, அரக்கன் சுபாகுவை அழித்து, மாரீசனைக் கடலுள் புகுந்து மறையும் படி செய்தான்.
பின்னர் அனைவரும் மிதிலையில் சனகன் நடத்தவிருக்கும் வேள்வியைக் காணப் புறப்படுகின்றனர். மிதிலை நகரின் மதிற்புறத்தே அகலிகை. கல்லாய்க் கிடக்கின்ற மேட்டைக் கடக்கமுற்படும் வேளையில் காகுத்தனின் கழல் துகள் பட பண்டை வண்ணமாய் மாறி நின்றாள் அகலிகை வியந்து பார்க்கின்றான் விசுவாமித்திரன். தாடகை வதத்தின் போது இராமனைப் பாராட்டாதவன் இப்போது பேசுகிறான். ஏன்? தாடகைவதம் என்பது விசுவாமித்திரனைப் பொறுத்த வரையில் பெரிய சாதிக்க முடியாத காரியமில்லை. அரசமரபில் வந்தவனும், போர்த் திறம் அறிந்தவனுமாவான் விசுவாமித்திரன். அது மட்டுமன்று திரிசங்குவிற்காகத் தனியொரு சுவர்க்கத்தையே படைத்தவன். எனவே, தாடகை வதம் நிகழ்ந்தபொழுது, இராமன் வீரம் குறித்துப் பேசாதவன், அகலிகை சாபம் நீங்கியதைக் கண்டு, மகிழ்ந்து முன்பு பாராட்டாததையும் சேர்த்து இப்பொழுது இராமனைப் புகழ்ந்து பேசுகிறான்.
இவ்வண்ணம்நிகழ்ந்த வண்ணம் இனி
இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்று ஒர்துயர்வண்ணம்
உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து
அண்ணலே உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம்
இங்குக் கண்டேன்.
மிதிலை நகரத்துக் கொடிகள் அசைந்து விரைவில் வாருங்கள்' என்றழைக்க, மூவரும் நகர் புகுந்தனர். கன்னி மாடத்தில் நின்ற நங்கைசீதையைக் கண்டு காதல் கொள்கிறான் இராமன்.
சீதையும் இராமனை விரும்புகிறாள். திருமணம் ஆக வேண்டுமெனில் சிவதனுசை முறிக்க வேண்டுமென்று
177

Page 194
அறிகின்றனர். இராமன் வில்லினை முறித்து, அனைவரின் ஆசியோடு சீதையை மணமுடிக்கிறான்.
காப்பியத்தில் இராமனுக்கு உதவிய அனைவரையும் இராமனாலேயே உயர்வகையில் பாராட்டப்பட வைக்கிறான் கம்பன்.
தயரதன் சம்பராசுரனை வென்ற காலத்தில் தேவேந்திரனால் வழங்கப்பட்ட தேர், யானை, ஆடைகள் முதலியவற்றை சுக்ரீவனுக்கு ஈந்தான்.
இட்சுவாகு மன்னனுக்கு பிரம்மதேவன் கொடுத்த அங்கதம் என்ற அணியை அங்கதனுக்குக் கொடுத்தான்.
மாருதியை பொருந்துறத் தழுவினான்
அவ்வளவு ஏன்?
காப்பியத்திற்கு சிறிதளவுகூட சம்பந்தமே இல்லாத சடையப்ப வள்ளலைப்பொருத்தமுற பல இடங்களில் வைத்துத் தன் நன்றிக்கடனைச் செலுத்துகிறான்.
ஆனால், விசுவாமித்திரன் இல்லாவிட்டால் பாலகாண்டமே இல்லை; அவதார நோக்கம் நிறைவேறஅடித்தளம் அமைத்துக் கொடுத்த அந்த மாமுனிவனை இராமனுடைய திருமணம் முடிந்த பிறகு எந்தவொரு இடத்திலும் நம்மால் காண முடியவில்லை. மறந்து விட்டானா? செயற்கரிய பல செயல்களைச் செய்த விசுவாமித்திரனை பட்டாபிஷேகம் வரை காட்டாது மற(றை) ந்(த்)து விடக் காரணம் என்ன? சிந்திப்போம்.
வேதமுதற் காரணனான பரம்பொருள் மனித உருவில் அவதாரம் எடுத்துள்ளதை அறிந்த விசுவாமித்திரன், அவதார நோக்கம் நிறைவேற சிலவற்றை இராமனுக்கு அளித்திட நினைக்கிறான். பெறுதற்கரிய ஒன்றைப் பெற வேண்டுமானல் அதற்குத் தகுதி வேண்டும். தகுதி உடையவன் இராமன் என்று கண்டு கொண்டான். பல சோதனைகளைக் கடந்து சித்திகள் பலவற்றைப் பெற்ற விசுவாமித்திரன் இராமனைத் தன் வழியில் இழுத்துப் பலவற்றை அவனுக்கு அளிக்கிறான்.
1. பாலையின் வெம்மையினைத் தாங்கும் பொருட்டு பலா, அதிபலா எனும் இரண்டு மந்திரங்களை உபதேசிக்கிறான். இதையே வசிட்டன் அளவில்லா விஞ்சைகள் உன் மகற்கு வரும் காலம் இது என்று தயரதனிடம் குறிப்பிடுகின்றான்.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

விஞ்சை என்பது வித்தை என்றாகும். வித்தையென்பது மந்திரமே. பாலையில் உபதேசித்த இரண்டு மந்திரங்களும் துர்க்கைக்கு உரிய மந்திரங்கள் ஆகும். இவை பாலையில் வெம்மையை மட்டுமல்ல ஆயுதங்களின் வெம்மையையும் தாங்கும் பொருட்டே இராமனுக்கு விசுவாமித்திரனால் உபதேசம் செய்யப்பட்டது.
2. இராமனின் சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம், கல் ஒக்கும் தாடகை நெஞ்சில் தங்காது, கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் போன்று போனதைக் கண்டவுடன் அவன் வில் திறம் அறிந்து தன்னிடமிருந்த தெய்வப் படைக்கலன்களையெல்லாம் அளிக்கிறான்.
3. கெளசலை தன் மணிவயிற்றில் ஐயிரண்டு திங்கள் இராமனைத் தன் கருவிற் சுமந்ததைக் காட்டிலும் பல ஆண்டுகள் தன் கருத்தில் சுமந்த அன்னை அகலிகையின் சாபம் இராமனின் கால் துகள் பட்டு நீங்க, 'இராமன் பரம் பொருளே’ என்று உலகறியச் செய்தான்.
4. இராவணன் வதம் நோக்கி விசுவாமித்திரன் சிந்தை செல்கிறது. அவதாரம் எடுத்துள்ள பரம்பொருள் இராமன் என உணர்ந்து, அவனைப் பிரியலள் ஆகி மிதிலையில் வாழும் சீதையை மணமுடித்து வைக்கிறான்.
யோசித்துப் பாருங்கள் மேலதிகாரியாகப் பணியாற்றிய அலுவலகத்திலிருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் அந்த அலுவலகத்தில் நுழைந்தால் பழைய மதிப்பும் மரியாதையும் இருக்குமா?
கொடுக்கிற கையாக மேலேயிருந்தவனை வாங்குகிற கீழ்க்கையாக மாற்றத்தான் விருப்பம் வருமா?
இராம அவதாரம் நிகழ்ந்தது எதற்காக? தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதற்குத்தானே? தாடகை அழிவில் தீயவர்களை அழித்ததையும், அகலிகை சாப நீக்கத்தில் நல்லவர்களைக் காத்தலையும் கண்டவன் விசுவாமித்திரன்.
பரம் பொருளுக்கே அனைத்தையும் ஈந்து, கல்யாண குணங்கள் கொண்ட இறையைக் கல்யாணக் கோலத்தில் கண்ட பிறகு வேறென்ன வேண்டும் என்ற நோக்கத்திலேயே, பின்னால் வரத் தேவையில்லாது போனாலும் தேவைகருதி முன்னாலேயே வந்தவனாகையால் வாராதே வந்த விசுவாமித்திரன் பாத்திரப்படைப்பை பாலகாண்டத்திலேயே நிறைவு செய்து விட்டான் கம்பன்.
178

Page 195
ரு நல்ல அரசு அமைய நல்ல : அமைவு சீராக இருக்கவேண் தள்ளினாலும் பொருள் முதலி இல்லை' என்று திருக்குற6 கடமையாக இருப்பது, அறவழியில் செல்வம்
கோசல நாட்டுப் பொருளாதாரம்
கோசல நாட்டில் பொருள் வள விளக்குகின்றான். கடல் கடந்த நாடுகளில் ஒருநாட்டின் ஏற்றுமதிதான் அந்நாட்டின் செ6 விளைந்தன. நிலத்தடியிலிருந்து வைரக் கற் செழித்த கோசல நாட்டைக் கம்பன்,
“கலம் சுரக்கு
நிலம் சுரக்குப்
பிலம் சுரக்குட் என்று குறிப்பிடுகின்றான்.
கோசல நாட்டில் வறுமை இல்லை. தப்பி என்று கூறும். நெருப்பினுள் தூங்கல வறுமை மனிதனுடைய உணர்ச்சியை மரத்துப் விடுகிறது. வறுமை மனிதனுடைய ஊக்கத்6
"இன்மையின் இன்மையே
என்றது திருக்குறள். மக்களிடத்தில் வறுை நல்லாட்சியும் இராது என்று கூறுவர். கோ கோசல நாட்டில் எல்லாரும் எல்லாப் பெருஞ் அல்லது கம்பனின் இலட்சியமா? எல்லா சமுதாயத்தில் இயலும் என்பது மாமுனிவர்ப நாட்டிலும் பொதுவுடைமைச் சமுதாயம்
 
 

LIST &Siðs ாளுளாதாரம்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
Fமுதாய அமைப்புத் தேவை. நல்ல சமுதாயம் அமையப்பொருளாதார rடும். நாம் எவ்வளவுதான் - பொருளை இரண்டாந்தர இடத்திற்குத் டத்திற்கு வந்து அமர்ந்துகொள்கிறது. பொருளிலார்க்கு இவ்வுலகம் ர் கூறுகிறது. கடவுள் பக்திக்கு அடுத்தபடியாக முக்கியமான ஈட்டுதலேயாம்' என்றார் முகம்மதுநபி.
ம் நிறைந்து இருந்தது என்பதைக் கம்பன் பல பாடல்களில் எல்லாம் வர்த்தகம் செய்ததன் மூலம் நிறைய நிதி வந்து குவிந்தது. ல்வத்தை அளந்தறிதற்குரிய அளவுகோல். விளைநிலங்கள் நன்றாக கள் அகழ்ந்தெடுக்கப் பெற்றன். இங்ங்ணம் பலவகையாலும் செல்வம்
ம் நிதியம்; கணக்கு இலா 0) நிறைவளம்; நல்மணி ம.” (கம்பன் - 69)
வறுமை கொடியது. சமய நூலாகிய சித்தியார், வறுமையாம் சிறுமை ம் ஆனால் வறுமையில் தூங்க முடியாது என்று திருக்குறள் கூறும். போகச் செய்து விடுகிறது. உயரிய பண்புகளை இழக்குமாறுசெய்து தையும் பண்பையும் பறித்து விடுகிறது. ஆதலால்.
இன்னாதது யாதெனின் இன்மையின் இன்னாதது"
(திருக்குறள் - 153)
ம இருக்குமானால், அந்நாட்டில் நல்ல சமுதாய அமைப்பும் இராது, ஈல நாட்டில் வள்ளன்மை இல்லை. ஏன்? வறுமையில்லாமையால் த செல்வமும் பெற்றிருந்தார்கள் என்பது நடைமுறைச் சாத்தியமா? நம் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தி வாழ்தல் பொதுவுடைமைச் ார்க்சின் கருத்து. இது வரையில் பொதுவாக உலக அரங்கில் எந்த அமையவில்லை. பொதுவுடைமைச் சமுதாயம் அமைப்பதற்கு
179

Page 196
முன்னோடியாக அமையக் கூடியசோஷலிச சமுதாய அமைப்பே - சமவாய்ப்புச் சமுதாயமே இன்னும் உலக அரங்கில் கால் கொள்ளவில்லை. சம வாய்ப்புச் சமுதாயத்தில் சக்திக்கேற்ற உழைப்பு. உழைப்புக்கேற்ற ஊதியம். பொதுவுடைமைச் சமுதாயத்தில் சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற ஊதியம் என்பது கோட்பாடு. இன்னமும்மக்கட் சமுதாயத்தில் பலர் உழைக்க விரும்புவதில்லை; ஆனால் அனுபவிக்க விரும்புகின்றனர்; துய்க்க விரும்புகின்றனர். இத்தகையோர் வாழும் இந்தச் சமுதாயத்தில் எங்ங்ணம் சோஷலிசம் உருவாகும்? பொதுவுடைமைச் சமுதாயம் அமைய இயலும்? என்றைக்கு மனிதர்கள் விருப்பார்வத்துடன், ஆவேசத்துடன் உழைப்பதை உயிரின் இயல்பாக (ஜிவசுபாவமாக) ஏற்றுக் கொள்கின்றார்களோ அன்றுதான் சோஷலிச சமுதாயம் மலரும்; பொதுவுடைமைச் சமுதாயம் தோன்றும்.
ஆதலால், கம்பன் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் ஓர் இலட்சிய உலகம் பற்றி எண்ணி இருந்தான் என்பதை உணர முடிகிறது. அந்த இலட்சியம் அவன் படைத்த கோசல நாட்டில் கூட நடைமுறையில் இல்லை. உறுதியான, பண்பார்ந்த சிந்தனையுடன் இராமனுக்கே முடிசூட்ட வேண்டும், பரதனுக்கன்று என்று கூனியுடன் வாதாடிய கைகேயியின் தூய சிந்தையும் திரிந்தது எப்படி? கூனி என்ன மந்திர வித்தையா செய்தாள்? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கோசல நாட்டின் பொருளாதாரம் குவியல் முறையில் இருந்தது. எல்லோருக்கும் செல்வம் கிடைக்கவில்லை. ஏன்? கைகேயிக்கே கிடைக்காது. எல்லா உரிமையும் இராமனின் தாய் கோசலைக்கே உண்டு. கோசலை விரும்பிக் கொடுப்பதைத்தான் பெற்று வாழவேண்டும் என்ற பொருளாதார அடிப்படை, கைகேயியின் தூய சிந்தையையும் திரியும்படி செய்துவிட்டது.
கைகேயி ஒரு சாதாரணப் பெண் அல்லள். கேகய நாட்டு இளவரசி, தசரதனையே மரணப்பிடியிலிருந்து காப்பாற்றிக் கைம்மாறாக வரம் பெற்றவள். அயோத்தியில் பல ஆண்டுகள் அரசியாக வாழ்ந்திருக்கிறாள். இந்த விஷயத்தில் கூனி கூறியது தவறாக இருந்திருக்குமானால், கைகேயி வாதாடி இருப்பாள். கோசல நாட்டின் நடைமுறை, அதிகாரம் உள்ளவர்களுக்கே பொருள்; ஆள்வோர்பக்கமே எல்லாம்; ஆளப்படுவோருக்கு ஒன்றும் இல்லை என்றுகூட எண்ண வேண்டியிருக்கிறது. இந்தக் கருத்துக்கு அரண் செய்யும் வகையில் பிறிதொரு நிகழ்ச்சியும் உள்ளது. இராமன் காட்டுக்குப் பயணம் செய்யும் நிலையில் ஒரு பார்ப்பனன்பசு தானம் கேட்கிறான். எத்தனை பசு என்று இராமன் கேட்கிறான். பார்ப்பனன், ஒரு கம்பை எடுத்துச் சுழற்றி எறி! அந்தக் கம்பு விழும் எல்லைப் பரப்பளவுக்குப் பசுக் கூட்டத்தை நிரப்பிக் கொடு' என்று கேட்கிறான். இராமன் அப்படியே கம்பைச் சுழற்றி எறிகிறான். கம்பு விழுந்த எல்லை அளவு பசுக்களை நிரப்பித் தருகிறான். ஆனால் அந்தப் பார்ப்பனன் பேராசை
அகில இலங்கைக் கம்பன் கழகம்

காரணமாக இராமன் சுழற்றி எறிந்த கம்பு, மேலும் தூரம் கடந்து விழவில்லையே என்று கவலைப்பட்டதை இராமன் கண்டு நகைத்தானாம். இது சீதை, அசோகவனத்தில் நினைந்து அழுத செய்தி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கொள்வார் இலாமை, கொடுப்பார்களும் இல்லை என்பதும்; எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்துதல், என்பதும் கம்பனின் இலட்சியமே என்று தெரிகிறது. அது இந்த மண்ணில் எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்?
அடுத்து, கள்வர் இலாமை, காவலும் இல்லை, என்று கம்பன் கூறுகின்றான். களவு வந்து காவல் வந்ததா? காவல் வந்து களவு வந்ததா? பரிணாம வளர்ச்சியின்படி பார்த்தால் காவலைத் தொடர்ந்துதான் களவு வந்திருக்கும். மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டிய பொருளைப் பூட்டி வைத்துக் காவல் காக்கின்றனர். தேவைப்படுவோர் எடுத்துக் கொள்கின்றனர். இதனை உலகியலில் களவு என்று கூறுகின்றனர். ஆனால், தமிழக வரலாற்றின் தொன்மைக் காலத்தில் களவு இருந்ததில்லை. சீன யாத்திரிகர்கள் பாஹியான், ஹுவான்சுவாங் போன்றவர்கள் தமிழ்நாட்டில் வீடுகள் திறந்து கிடந்தன. நள்ளிரவில் பயமின்றிமக்கள் நடமாடினர்’ என்று தங்களுடைய யாத்திரைக் குறிப்புக்களில் எழுதியுள்ளனர். களவும் காவலும் இலாத நாடு கோசலநாடு என்பது பெருமைக்குரிய செய்தி வறுமையுடையோன் பொருளைப் போற்றி வாழ்வான். வறுமையுடையோன் தனக்குரிய நன்செய் நிலம் சிறிதே எனினும் வளமாகப் பேணி வைத்து விளைவு கண்டு வாழ்வான். வறிஞன் ஒம்புமோர் செய்யெனக் காத்து என்பான் கம்பன்.
இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் எண்ணிக்கை 58.9% ஆயினும் இந்த நாட்டின் தரிசு நிலம் ஏராளம், வீட்டுப்புறத்தோட்டத்தைப் பயன்படுத்துவோர் மிகமிகக் குறைவு நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்தால் நாடு வளம் கொழிக்கும். இன்று கோதுமை, சர்க்கரை, எண்ணெய் முதலியன இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏன்? நமது நாட்டில் விளைவிக்க இயலாதா? இயலும் ஆனால் போதிய முயற்சி இல்லை!
கம்பன் ‘தவமும் முயற்சியும் வேண்டும்’ என்றான், வாழ்க்கை பயனுடையதாதல் முயற்சியினாலேயாம். முயற்சியினாலேயே வாழ்க்கையின் மதிப்பு உயர்கிறது. இரும்பைக் காய்ச்சி உருக்கி அடித்தால் அதன் விலை மதிப்புக் கூடுகிறது. அது மட்டுமல்ல, அந்த இரும்பு துருப்பிடித்து அழிந்து போகாமலும் பாதுகாக்கப்படுகிறது. அதுபோலத்தான் முயற்சியின் விளைவாக, பயனாகத் துன்பங்களையும் துயர்களையும் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து உழைப்பவர்கள் மாமனிதர்களாகிறார்கள்; சாதனை செய்தவர்களாகிறார்கள். வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். முயற்சியில் ஈடுபடாதவர்கள் செத்துப் பிறப்பதே தொழிலாகிச்
180

Page 197
சாகின்றனர். வாழ்க்கை என்பது போராட்டம் இந்த போராட்டத்தில் அக்கறையும் முயற்சியும் உடையவன் வீழ்ந்து விட்டாலும் தரையில் மோதிய பந்துபோல் மீண்டும் எழுந்து விடுவான். முயற்சி யில்லாதவன் கோழை. வீழ்ச்சியடைந்தால் மண் உருண்டை போல
உடைந்து மண்ணோடு மண்ணாகி விடுவான்.
தவத்தின் சின்னம் : தவத்தின் சின்னமாக விளங்குபவன் இராமன். ஆம் முடியைத் துறந்தபோதும் அப்பொழுதலர்ந்த செந்தாமரை போன்றிருந்தான். ‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ என்றும், மன்னவன் பணியன்றாகில் நும் பணி மறுப்பனோ? என்றும் கூறி உவகையுடன் காட்டிற்குள் புகுந்தானே! இது தவம் அல்லவா?
முயற்சியின் சின்னம் : முயற்சியின் சின்னம் சுக்கிரீவன். ஆம் இழந்ததைத் தொடர்ந்து முயன்று பெற்றவன் அவன். ஆதலால், சுக்கிரீவனை கம்பன் முயற்சியின் திருவுருவமாகப் பாராட்டுகின்றான். வாழ்க்கையை வலிமையுடையதாக்கிக் கொள்ள, தீமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, நாளும் நல்லன பல செய்ய, முயற்சி தேவை. முயற்சியே மனிதனை முழுமைப்படுத்துகிறது; வளர்க்கிறது; வாழ்விக்கிறது.
செல்வத்துப் பயன் :
பொருள் ஈட்டல், சேர்த்தல், பாதுகாத்தல் மனித வாழ்க்கையில் நடைபெறும் ஒரு பணி - இல்லை - ஒரு போராட்டம் பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம். அதைவிடப்பெரிய காரியம் அதைக் காப்பாற்றுவது. அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும், கொடுத்து மகிழ்தலுமாகும். வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ்மரபு பொருள் தேடல் வாழ்க்கையின் இலட்சியமன்று. பொருள் வாழ்க்கையின் கருவியே. நல்லறிவும் பண்பும் உடையவர்களுக்குப் பணம் பணியாள்; ஆனால், இவை இல்லாதவர்க்கோ மோசமான எசமானன். வாழ்க்கையைப் படித்துக் கொள்ளச் செல்வம் மட்டும் துணை செய்யாது. வறுமையும் அதற்குத் துணை செய்ய இயலும்.
நன்றி: கம்பன்
கம்பன் மலர் - 2000

பொருளும் தேவை; அதைத் துய்க்கத் திறனும் தேவை. பொருளும் திறமும் பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி பெறலாம். வேறு உபயோகம்தான் என்ன? செல்வத்தைத் தனியே அனுபவித்தல் - இழத்தலுக்கு சமம்.
“செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்கிறது புறநானூறு.
ஆற்றுவெள்ளத்தில் படகு போகிறது. ஆற்றுத் தண்ணிர் படகினுள் புகுந்து விட்டால் படகில் நிறைந்த தண்ணிரை உடன் வெளியேற்ற வேண்டும். அதுபோல வீட்டில் செல்வம் நிறைந்துவிட்டால் அதையும் மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்வதோடு ஆன்மிக அழிவு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். கம்பன் கிட்கிந்தா காண்டத்தில் கார்கால வருணனையில் செல்வத்தினைத் துய்த்த மாந்தரை வருணிக்கிறான். மேகம் கருத்துச் சூல் கொள்கிறது. நீர் வளம் சுமந்து திரிகிறது. மேகம் அதனை மழையாகப் பொழிந்து மண்ணக மாந்தரை வாழவைக்கிறது. அதனால் மேகம்,நீர் வளத்தை இழந்து விடுகிறது நீர்வளத்தை சூல் கொண்டமையால் கருத்து இருந்த மேகம் - மழை பெய்தவுடன் வெளுத்துப் போகிறது. எப்படி? பொருளுடையோர் தம்மை இரந்து வருவோருக்கு வழங்கி, பின்வரும் இரவலர்களுக்குப் பொருள் தர இயலாமல் நாணுவது போல் என்கிறான் கம்பன். ஈட்டிய பொருளில் வாழ்வின் தேவைக்குப் போக மீதிச்செல்வம் சமூகத்திற்கே சொந்தம்.
மள்கல் இல் பெருங் கொடை மருவி, மண் உளோர் உள்கிய பொருள் எலாம் உதவி, அற்ற போது எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால்,
வெள்கிய மாந்தரின் வெளுத்த - மேகமே. (கம்பன் - 4251)
என்ற கம்பன் பாடல் நினைந்து நினைந்து ஒழுகலாறாக ஏற்கத் தக்கது.
ன் கண்ட ஆட்சியில் - அரசியல், சமூகம்' - வானதிபதிப்பகம்.

Page 198
ம்ப இராமாயணத்தில் பாலக் காண்டத்தில் ஒரு அரசியற் தசரதனின் அரசியல் திறன் ! இராமன் அறிவுரை வழங்கு
படலத்தில் (1412-1427 வரை) வசிட்டன் இர எப்பேர்ப்பட்ட குணாதிசயங்களை ஆள்பவன் கட்டுரையின் குறிக்கோள்.
ஆள்பவன் ஒருவனின் கடப்பாடுக
தசரதனின் தனிப்பெருமை பற்றிக்
ஆதிம்மதியும் அருளும் அறனும் ஏதில் மிடல் வீரமும், ஈகையும் என நீதிந் நிலையும் இவை நேமியினே பாதி முழுதும் இவற்கே பணிகே
அதாவது ஆட்சி முறைக்கு இன்
பொறுமை, குற்றமற்ற திண்மை, கொடை ே "நான் என்ன பணி செய்ய வேண்டும்” என்
இதன் அர்த்தம் என்னவெனில் ஆ
அவற்றின் ஊடாக அவன் மக்கட் பணி செ
அவனின் அன்புப் பணியை விபரி
தாய் ஒக்கும் அன்பின், தவம் ஒக் சேய் ஒக்கும் முன்நின்று ஒரு ெ நோய் ஒக்கும் என்னின் மருந்து ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்
தசரதன் அன்பில் தாய் போலவும்,
பிள்ளை போலவும், வியாதிகளுக்கு மருந்
 
 

>பன் காட்டும்
பவனுக்கு உரிய டப்பாடுகள்
நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்
காண்டத்தில் ஒரு அரசியற் படலமும் (168 - 179 வரை) கிட்கிந்தா படலமும் (4115 - 4131 வரை) வருகின்றன. முதலில் வருவதில் பற்றியும் அடுத்து வருவதில், பிறவுடன், சுக்கிரீவனுக்கு அரசியல் பற்றி 5வது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் மந்திரை சூழ்ச்சிப் ாமனுக்கு கூறிய உறுதிப்பொருள் இடம்பெறுகிறது. இவற்றின் ஊடாக ா ஒருவனிடம் கம்பன் எதிர்பார்த்தான் என்பதை ஆராய்வதே இந்தக்
ள் எவை?
கூற வந்தபோது அவர் இவ்வாறு விபரிக்கிறார்
அமைவும் ண் இல் யாவும் ார்க்கு நின்ற ட்ப மன்னோ”
ாறியமையாத முதன்மையாகிய உண்மையறிவு, கருணை, தர்மம், பான்ற எண்ணில் அடங்காத ஒவ்வொன்றும் தசரதன் இடத்தில் வந்து று வலிந்து கேட்டு நின்றனவாம்.
ள்பவனுக்குரிய நற்குணங்கள் தசரதனை அண்டிப்பணிசெய்யக் கோர ய்தானாம்.
க்க வந்த கம்பர் பின்வருமாறு வெளியிடுகிறார் -
$கும் நலம் பயப்பின், சல் கதிஉய்க்கும் நீரால் ஒக்கும் நுணங்கு கேள்வி - எவர்க்கும் அன்னான்
நன்மை தருவதில் தவத்தைப் போலவும், நற்கதிக்கு வழி அமைப்பதால் து போலவும், நுட்பமாகிய கேள்விகளைக் கேட்கும் காவலர்களைக்
182

Page 199
கொண்டிருந்ததால் அறிவு போலவும் அவன் இருந்தான் என்கிறார்
கம்பர்.
அடுத்து தசரதனின் அரசு செய்திறன் பற்றிக் கூற வந்த கம்பர் இவ்வாறு கூறுகிறார் -
வயிர வான்பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஒம்பலால் செயிர்இலா உலகினில் சென்று நின்று வாழ் உயிர் எலாம் உறையது ஓர் உடம்பும் ஆயினான்” (மடங்கல் -இடி (போன்ற);மொய்ம்பினான் - வலிமை உடையவன்; செயில் இலா - குற்றம் இல்லாத)
மன்னுயிர் எல்லாம் தன்னுயிர் போலப் பேணிப் பாதுகாப்பதே அரசன் கடமை. அவ்வாறு தான் கம்பன் வாழ்ந்த நாள்வரை இலக்கியத்தில் பொதுவாகக் கூறப்பட்டு வந்தது. கம்பரோ தசரதனை ஒரு படி உயர்த்தி அரசனின் கடப்பாட்டுக்கு இலக்கணம் வகுக்கிறார். மன்னுயிர் அனைத்தையும் “தன்னுயிர் போல்” என்றில்லாது தசரதன் மன்னுயிர் அனைத்தையும் “தன்னுயிராக” மதித்தானாம். அவ்வாறு மதித்ததால் மன்னுயிர் யாவும் அவன் உடம்பில் உறைந்து அவனே உடலாகவும் மக்களோ அவ்வுடம்பின் உயிராகவும் மாறிவிட்டார்களாம். மன்னுயிரைத் தாங்கும் உடம்பாகவே தசரதன் தன்னை மாற்றிக் கொண்டதாகக் கம்பர் கூறுகிறார்.
இன்றைய அரசியல்வாதிகள் தங்களை உயிராகவும் மக்களை உடம்பாகவும் கருதுகின்றனர். பதவிக்கு வருமுன் நீங்களே எங்கள் உயிர் என்கிறார்கள். வந்தபின் நீங்களே எங்கள் உடம்புகள். உங்கள் மீது ஏறித் தான் சவாரி செய்யப்போகிறோம். நாங்கள் உங்களின் மேல் இருந்தால்த்தான் உங்களுக்கு விமோசனம். நாங்கள் இல்லை என்றால் நீங்கள் வெறும் பிரேதங்கள் தான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். அதாவது, உயிரைக் காப்பாற்ற உடலை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அர்த்தத்தில் அரசியல்வாதிகள் பொதுவாக இன்று நடந்து கொள்கின்றனர். கம்பரோ மக்களே உயிர், அரசாங்கம் வெறும் உடம்பே' என்று குடிமக்கள் நலத்தை முதல் நிலையில் வைத்து "உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு" என்று அழகாக எடுத்துக் கூறுகிறார். அரசனென்ற உடம்பு ஒன்று, குடிமக்கள் என்ற உயிர்கள் பல என்பதே கம்பனின் அரசியல் நோக்கு.
தசரதன்
வையகம் முழுவதும் வறிஞன் ஒம்பும் ஓர் செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்” என்று கூறுகிறார் கம்பர். அதாவது உலகை வேலி போல் காத்தானாம் தசரதன்.
அடுத்து மந்தரை சூழ்ச்சிப் படலத்தில், வசிஷ்ட மாமுனிவர் இராமனுக்கு உபதேசம் அளிக்கும்போது விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகியோரிலும் ஐம்பூதங்களிலும் பெரியவர்கள், (சிறந்தவர்கள்) அந்தணர்களென்று மனதிலே வைத்து பூஜிதை செய் என்கிறார். அவர்கள் கோபித்தாலும் கிருபை பண்ணினாலும்
கம்பன் மலர் - 2000

பலிக்கும். அவர்களுடைய பெருமையை ஒருவராலுஞ் சொல்லி முடியாது. ஆதலால் அவர்களைச் சேவித்துக் கொண்டு துதி பண்ணி நல்ல முறையில் அவர்கள் கூறுவதை மதித்து நடக்க வேண்டும்.
மும்மூர்த்திகளுக்குக் கூட தர்மம், நன்மை, அருள் ஆகியன வேண்டியிருக்கிறபோது மற்றவர்களுக்கு எத்துணை அவசியம் என்று கூறுத் தேவையில்லை என்பதைப் பின்வருமாறு கம்பர் கூறுகிறார் -
உருளும் நேமியும் ஒண்கவர் எஃகமும் மருள் இல் வாணியும், வல்லவர் மூவர்க்கும் தெருளும் நல் அறமும் மனச் செம்மையும் அருளும்நீத்தபின் ஆவது உண்டாகுமோ?
மேலும் சூது போன்ற துர்நடத்தைகள் உன்னிடத்தில் இல்லை இராமா! ஆனால் பெரியோர்கள் குற்றமென்று சொல்லுகிற காரியங்களில் ஒன்றாவது உன் வசம் வர ஒட்டாமல், ஒருத்தரோடும் பகை கொள்ளாமல் இருக்க வேண்டும். யாருடனாவது பகை கொண்டால் பகை ஒடுங்காது, வளரும். அது இராஜ்ய பரிபாலனத்துக்கு முட்டுக்கட்டையாகிவிடும். அதனால் மந்திரிகள் சொல்லும் வழி நடந்து கொள்வதே பலம் என்கிறார். சகல உயிர்களினிடத்தும் அன்பு வைத்திருந்தால் அதற்கு மிஞ்சின பலன் வேறில்லை. சகல உயிர்களையும் தன்னுயிராகவும், தன்னை அவ்வுயிர்களைத் தாங்கும் உடலாகவும் எண்ணி தர்ம வழி நின்று இராஜ்ய பரிபாலனம் செய்யும் அரசன் ஒருவன் வேறு யாகங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று கூற வந்த கம்பர் -
வையம்மன் உயிர் ஆக அம்மன் உயிர் உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு ஐயம் இன்றி அறம் கடவாது அருள் மெய்யில் நின்றபின், வேள்வியும் வேண்டுமோ?
என்கிறார்.
மேலும் அவர் அரசனுக்குரிய இயல்புகளைப் பின்வருமாறு பகர்கிறார் -
இனிய சொல்லினன், ஈகையன் எண்ணினன்; வினையன்; தூயன்; விழுமியன் வென்றியன் நினையும் நீதிநெறி கடவான் எனில் அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ?
அதாவது ஒரு அரசனுக்கு இன்சொல்லும், கொடைத் தன்மையும், சமயோசித புத்தியும், காரியத்தில் கண்ணும், தூய்மையும், நற்குணங்களும் நீதி நெறி நின்று தர்மம் கடைப்பிடிக்கும் ஆற்றலும் உண்டாகியிருந்தால் அவனுக்கு ஒரு போதும் அழிவு வரமாட்டாது. பொல்லாதவற்றைத் தள்ளிவிட்டு பொன்னிறுக்கிற தராசு போல சமமான மனதோடு அரசோச்சி அன்போடிருந்தால் அவனுக்குத் தன் எதிரிகளை வெல்ல வேறு
ஆயுதம் தேவையில்லை.
- 183

Page 200
இந்த வகையில் அறிவுறுத்துகிறார் முற்றுந்துறந்த முனியுங்கவரான வசிஷ்டர்.
அடுத்து சுக்கிரீவனுக்கு இராமன் வழங்கிய அறிவுரையினை ஆராய்வோம்.
சத்திய சந்தரும் விவேகிகளுமாகிய மந்திரிமார்களுடனும் சேனாதிபதிகளுடனும் சேர்ந்து மனங்கலந்து பேசி குற்றமற்ற செய்கைகளைச் செய்யும் சகலரையும் நீங்காமலும் நெருங்காமலும் தேவர்களைப் போல் நடந்து கொள்.
அழகாக மேற்கொண்ட கருத்துக்களைப் பின்வருமாறு கம்பர் கூறுகிறார் -
"வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும் தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள் அறு தொழிலை ஆகி சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி’
பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் என்று கூறுவார்களே, அந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் கம்பர்.
இந்த உலகமானது புகையுள்ள இடத்தில் நெருப்பு உண்டென்று நினைக்கும் உலகம். ஆகையால் உன்னிடத்தில் கருணை உண்டென்பது மற்றவர்களுக்குத் தெரியும் வண்ணம் பகைவருடன்கூட கொடூரமான வார்த்தை பேசாமல், நகை முகத்துடனே, இனிய வசனங்களைச் சொல்லும் பெரியோர்கள் அனுசரிக்கின்ற நற்செய்கைகளை நீயும் செய்ய வேண்டும் என்கிறான் இராமன்.
தேவர்களும் மதி மயக்கங் கொள்ளத்தக்க அரசாட்சியாகிய சம்பத்தை சுக்கிரீவனாகிய நீ பெற்றிருக்கிறாய். அதனை எளிதாக நினைக்க வேண்டாம். சிந்தித்துச் செயலாற்றுவாயாக.
மக்கள் யாவரும் மூன்று வகைப்படுவர். அவர்களைச் சிநேகிதர், பகைவர், அன்னியர் எனக் குறிப்பிடலாம். அவர்களில் ஒருவருக்குக் கூட தீங்கு நினையாமல் செய்ய வேண்டியவற்றைச் செய்வதையும், நிந்திக்கும் படி அடாத காரணங்கள் வந்தபோதும் நற்சொற்களையே பாவித்தலையும், உண்மை பேசுதலையும் தவறாமல் பாதுகாக்க வேண்டும்.
உருவத்தால் சிறியவர்கள் என்று எண்ணி எவருக்கும் துன்பத்தை உண்டு பண்ணாதே. நான் சிறு வயதில் ஒரு விஷமத்தைச் செய்து, அறிவு மிகுந்து வடிவு சிறுத்த மந்தரையினாலே (கூனி) அதி சீக்கிரத்தில் சகல அரசபோகங்களையும் இழந்து துக்கத்துக்கு உள்ளானேன்.
பெண் மோகத்தால் ஆண்களுக்கு மரணம் சம்பவிக்கலாம் என்பதை உன் தமையன் வாலியின் ஊடாக உணர்ந்து கொள். நானும் என் தம்பியும் கூட ஒரு பெண்ணின் நிமித்தம் தான் இத்தனை அல்லல் அனுபவிக்கிறோம் என்பதை மறவாதே.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

“பெற்றதாயினும் அதிக அன்புள்ளவர் எங்கள் மன்னர்” என்று உன் பிரஜைகள் யாவரும் சொல்லும்படி காருண்யத்துடனே குடிமக்களைக் காப்பாயாக. குற்றம் செய்தவர்களைத் தர்மந் தவறாமல் தண்டனைக்கு ஆளாக்குவாயாக.
இறப்பு பிறப்பு என்பது கர்ம வினைப் படி ஏற்படுகிறது. பிரம்மாவுக்குக் கூட இது பொருந்தும். எங்களுக்கு வந்து சேரும் செல்வமும் கேடும் கூட நாங்கள் செய்த புண்ணிய பாவங்களின் நிமித்தம் ஏற்படும். ஆகவே புண்ணிய காரியங்களைச் செய்.
இந்த வார்த்தைகள் மூலம் அரசனுக்கு இருக்க வேண்டிய கடப்பாடுகள் எவை என்பதை இராமர் சுக்கிரீவனுக்கு எடுத்தியம்புகிறார்.
இவை யாவற்றையும் ஆராய்ந்து பார்க்கையில் ஆள்பவன் ஒருவரின் கடப்பாடுகளைக் கம்பர் பின்வருமாறுவெளியிட்டுள்ளார் என்று கூறலாம் :- (1) அரசனொருவன் அறிவுடையவனாக இருக்க வேண்டும்.
(2) அவன் காருண்யம் மிக்க இன்சொல் உடையவனாக இருக்க
வேண்டும்.
(3) அதிகாரம் இருந்தும் எளியவனாகக் காட்சி அளித்தல்
வேண்டும்.
(4) வெறுப்பான விமர்சனங்களைக் கேட்டும் பொறுமை
உடையவனாக இருக்க வேண்டும். (5) தன்னைப் பற்றிக் குற்றங்குறை கூறக் கூடிய ஆனால் தனக்கு விசுவாசமான பெரியோர்களைத் துணையாக வைத்திருத்தல் வேண்டும்.
(6) குற்றஞ் செய்தவர்களைத் தர்மந் தவறாமல் தண்டிக்க
வேண்டும். (7) தர்ம வழியைக் கடைப்பிடிப்பவனாக இருக்க வேண்டும்.
(8) அந்தணர்களை வணங்க வேண்டும். (அம் + தணர்கள் = அந்தணர்கள்) குளிர்மையும் தேஜசும் ஒருங்கே பெற்றவர்கள் அந்தணர்கள். கற்று விட்டதால் தேஜசும் பற்று விட்டதால் உயிர்களிடத்தில் கருணையுங் கொண்டவர்கள் நீத்தாராகிய அந்தணர்கள்.
(9) தான் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை ஆள்பவன் அறவே தவிர்க்க வேண்டும். அவன் குற்றம் செய்திருக்கக் கூடும் என்று மற்றவர்கள் எண்ணக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தைக் கூட உண்டாக்காமல் பாதுகாக்க வேண்டும்.
(10) பகையை வெறுத்துப் பரிபாலனம் செய்ய வேண்டும்.
(1) விதைப்பதே அறுவடையாகும் என்ற தத்துவத்தை மறவாது
மன்னன் அரசோச்ச வேண்டும்.
(12) தராசு போல் சமமனம் படைத்தவனாக அரசன் இருக்க
வேண்டும்.
சுருக்கமாகக் கூறினால் மேற்படி 12 குண இயல்புகள் ஆள்பவன் ஒருவனிடம் இருக்க வேண்டும் என்பதே கம்பனின் எதிர்பார்ப்பு
184

Page 201
ன்று கம்பனைத் தளமாகக் ெ ஒரு வலுவான புணையாகக்
兹 இலக்கிய முறைமையாகும்.
ஜஸ்டிஸ் இஸ்மாயில் வரை, உதாரணமாகக் காட்டலாம். காரைக்கு முக்கியஸ்தர்களின் சமூகப் பின்புலங்கை கம்பனாரிடம் பெருமையுடைத்து. இந்தப்பெ வருவதாகும்.
கம்பனை தமிழின் மிகச் சிறந்த 8 பாரம்பரியத்தின் இலக்கியக் கொடுமுடியா ஆழமான அறிவும், நெருங்கிய பரிச்சயமுமு: மிகச் சிறந்த கவிஞனாக எண்ணப்படத்தக் எடுத்துக்காட்டாக அமைபவன் எனப் ே முக்கியத்துவம் மிகப் பெரிதாகும்.
இக்கட்டத்தில் 'இலக்கியப் பண்பா
"இலக்கியம் தொடர்பாக நம்மின ஆகியவற்றின் தொகுதிதான் இலக்கியப் மட்டங்களிலும் இலக்கியம் தொழிற்படுகின்ற எவ்வாறு நிகழ்கிறது. இந்த இலக்கிய மு நிறைவேற்றுகின்றன முதலியனவற்றை அற
இவ்வாறு நோக்கும் பொழுது இ ஏற்படும். இந்தத் தெளிவு ஏற்படும் பொ முக்கியத்துவமும் புலனாகும்.
கம்பன் பற்றிய இத்தகைய ஒரு கம்பனைக் கற்கும் நெறிகள்’ என்ற த தொகுதியிலுள்ளது (தமிழர் பண்பாடு கம்ப
 
 
 
 

MALA கியப் பண்பாட்டிற்
கம்பன்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
காண்டு சமூக வியாபகம் பெறுவதும், சமூக வியாபகத்துக்குக் கம்பனை
கொள்வதும் தமிழ் கூறும் நல்லுலகத்தில் காணப்படும் ஒரு சமூக முருகப்பா முதல் சா. கணேசன் வரை, ஜஸ்டிஸ் மகாராஜன் முதல் ஜீவானந்தம் முதல் கருத்திருமன் வரை பலரை இச் செல் நெறிக்கு டி, சென்னை, கோவை முதலான இடங்களிலுள்ள கம்பன் கழக ளை நோக்கும்பொழுது இவ்வுண்மை புலனாகும். முக்கியமாகக் ருமை தமிழ் இலக்கியப் பண்பாட்டில் அவன் பெறும் இடத்தின் வழியாக
கவிஞனாக, இளங்கோ முதல் காணப்படும் தொடர் நிலைச் செய்யுட் கக் கொள்ளும் மரபு உண்டு. இந்தியமொழி இலக்கியங்கள் பற்றிய டைய ஜோர்ஜ்ஹாற்றும் ஹைன்ஸ் ஹைல்பிற்கம், கம்பன் இந்தியாவின் கவன் என்பர். அதாவது தமிழிலக்கியத்தின் கவிதைவள ஆழத்துக்கு பாற்றப்படுபவன். அவன் நமது இலக்கியப் பண்பாட்டிற் பெறும்
டு என்பது யாது என்பது பற்றிய தெளிவு இருத்தல் அவசியமாகும்.
டயே நிலவுகின்ற நம்பிக்கைகள், நடைமுறைகள், பெறுமானங்கள் பண்பாடு (Literary Culture). நமது சமூகத்தின் பல்வேறு சமூக முறைமை, யார், எவற்றை, எப்படிச் சொல்கிறார்கள், இவற்றின் நுகர்வு பற்சிகள், தொழிற்பாடுகள் எத்தகைய கருத்துநிலைத் தேவைகளை
தல் இலக்கியப் பண்பாட்டு ஆய்வினுள் வரும்.
லக்கியத்தைச் சமூக பண்பாட்டு நடைமுறையாகக் காணும் தெளிவு ழது, எமது இலக்கிய நிகழ்ச்சிகள் / நிகழ்வுகளின் தன்மைகளும்
பார்வை, வையாபுரிப்பிள்ளையின் கட்டுரையொன்றில் உள்ளது. லைப்புள்ள அக்கட்டுரை, அவரது 'கம்பன் காவியம் கட்டுரைத் ன் காவியம் - பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் நூற்களஞ்சியம் -
185

Page 202
ஐந்தாம் தொகுதி - சென்னை 1993). அக்கட்டுரையில் அவர் மூன்று பிரதான கற்கை முறைகளை இனங்கண்டு, அவை ஒவ்வொன்றின் கீழும் சில உப பிரிவுகளைக் கண்டார்.
மரபு நிலை அணுகுமுறைகள்
காலேகூடிய முறை பண்டித முறை தர்க்க முறை அலங்கார முறை
(பிரசங்க முறை)
நவீன அணுகுமுறைகள்
ஆராய்ச்சி ஜாதிச் சூழ்ச்சி முறை பொய் மெய் தத்துவார்த்த முறை
இலக்கிய நய முறை
சித்திர முறை ரஸிக முறை உளநூல் முறை பொருள்கோள் முறை.
வையாபுரிப்பிள்ளை இந்த வெவ்வேறு முறைமைகளை எடுத்துக்கூறியுள்ள முறைமையில் , ஒன்றுக்குள் மற்றதுவரல், போன்ற சில இயல்புகளைக் காணலாம். ஆனால் இன்று நாம் முற்றிலும் புலமை நிலைப்பட்ட ஒர் அணுகுநெறியில் கம்பன் பயிலப்படுவதிற் காணப்படும் பல்வேறு போக்குகளையும் அவற்றின் இலக்கிய - சமூக - அரசியல் - கருத்துநிலை முக்கியத்து வங்களையும் சற்று வெளிப்படையாகவே எடுத்து நோக்கலாம்.
கம்பன் கற்கப்படும் / பிரசித்தப்படுத்தப்படும் முறைமைகளை ஆராய்கின்ற பொழுது, வரன் முறையான வகைப்படுத்தலிலும்பார்க்க அணுகுமுறை மட்டங்கள் (Levels of approach) எனக் கொள்வது பொருத்தமானதாகவிருக்கும். ஏனெனில் வகைப்படுத்தும் பொழுது, பண்பு ஊடாட்டங்கள் (ஒன்றின் தன்மை இன்னொன்றிலும் காணப்படுதல்) சிக்கலைத் தரலாம். மட்டங்கள் (Level) எனும் பொழுது ஒர் அணுகுமுறை நெகிழ்ச்சி உண்டு.
முதல் மட்டத்தில் எடுத்துக் கூறப்படத்தக்கது அதன் கரண நிலை முக்கியத்துவமாகும். வைஷ்ணவர்களிடையே இராமாயணத்துக்கு ஒரு மதநிலை முக்கியத்துவம் உண்டு. அதாவது வைணவர்கள் இராமாயணத்தைத் தமது பாராயண' நூலாகக் கொள்பவர்கள். அந்த அணுகுமுறையில், பக்தருக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சிக்கலின் தன்மைக்கேற்ப, அந்தச் சிக்கலுக்குச் சமனானதாகவுள்ள இராமாயணக்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

கதைக்கூட்டத்தினை இனங்கண்டு (சீதை சிறையிலிருப்பது போன்றோ, அல்லது சடாயு துன்பப்படுவது போன்றோ இந்தப் பக்தரும் ஒரு சிரம தசையிலிருத்தல்) அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காகக் குறிப்பிட்ட பகுதியினை மீள வாசித்தல் / படித்தல் இதன் நடைமுறையாம். இத்தகைய கம்பராமாயணப் பாராயண நூல்களை லிட்டில் ஃபிளவர் கம்பனி வெளியிட்டுள்ளது. அந்த மட்டத்தில் அது சைவர்கள் பெரிய புராணத்தையோ, கந்தர் அலங்காரத்தையோ பயன்படுத்துகின்றது போன்ற ஒரு பயன்பாடாகும். அந்நிலையில் அது ஒரு இலக்கிய பாடமாக (literary text)ப் போற்றப்படுவதிலும் பார்க்க வழிபாட்டு வாசகமாக (பாடமாக) (liturgical text)ப் போற்றப்படுகின்றது. வடமொழி தெரிந்தோர் வால்மீகியின் சுலோகங்களையும் தமிழ் மொழிதெரிந்தோர் கம்பனதுஇராமாயணச் செய்யுள்களையும் இடம் நோக்கிப்பாடும் மரபு உண்டு.
இதற்கு அடுத்த பயில்வு மட்டமாகக் கொள்ளத்தக்கது ரஸிகமுறையாகும். இந்த முறைமையின் அடிப்படை எடுகோளாக அமைவது, கம்பனின் கவிதா மேதாவிலாசம் பற்றிய எண்ணக்கருவாகும். அந்த நுணுக்கங்களை நாமாகத் தேடியறிந்து கொள்ள வேண்டுமென்பது இந்தப்பயில் முறையின் இலக்காகும். சமயச்சார்பற்ற இலக்கிய நயப்பு முறைமையில் இது பிரதானப்படுகின்றதெனினும், உண்மையில் மதநிலையில் (அதாவது மக்களின் நம்பிக்கை நிலையில்) சத்கதாகாலேட்சபமரபு முறிைமையாகும். இதனைத்தான் க. நா. சு. கதை கேட்கும் முறைமை என்றார்.
இந்த ரசனை மரபு, வர்க்க இயல்புகள் காரணமாக, ரசனையைத் தன்னுள் முடிந்த முடிபாகக் கொள்கின்ற ஒரு கூட்டத்தினர் மட்டத்திற் பெருமதிப்புப் பெற்றது. டி. கே. சிதம்பர நாத முதலியாரைஇந்த ரசிகமரபின் மிகச் சிறந்த உதாரணமாகக் கொள்வார்கள். மேனாட்டாட்சி முறை / அதிகார முறை தந்த வாய்ப்பான பதவிகளிலிருந்தவர்களைப் பெரும்பான்மை கொண்டிருந்தரசனை மரபில், ஒரளவு மிக்க நாசூக்கான முறையில் ஆங்கிலப்பண்பாட்டு எதிர்ப்புவாதமும் இருந்தது. "எந்த இங்கிலிஷ் புலவனால் இப்படிக் கம்பன் போல எடுத்துச் சொல்ல முடியும்” என்ற தொனிப்பட்ட ரசனை அதற்குள் தொக்கிநின்றது.
கதாகாலேட்சப மரபும் அதன் மத்தியதர வர்க்க வெளிப்பாடான ரசனை மரபும் இந்தப் பண்பாட்டின் வேர்களிலிருந்து வருபவையே. இராமாயணம், மகாபாரதத்தை இதிகாசங்களாகக் கொள்கின்ற (இவ்வாறு நிகழ்ந்தது - இதிஹாச) மரபினுள் வேர் கொண்டவையே. ஆனால் இந்த இலக்கிய ரசனை இந்த இதிகாசத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல் மற்றைய கவிச்சுவையுள்ள தமிழிலக்கியங்களையும் (கலிங்கத்துப் பரணி, முத்தொள்ளாயிரம்) தன்னுள்ளடக்கிற்று.
இந்த இரசனை மரபின் சமூக முக்கியத்துவம் காரணமாக, இந்த இரசனைக் குழுக்கள் சில பாரம்பரிய தமிழறிஞர்களுக்கும், ஆங்கில - தமிழ் ஒப்பியலறிவுள்ள அறிஞர்களுக்கும் இடம் கொடுக்கும் நுகர்வு மட்டமாகவும்,
186

Page 203
விளங்கிற்று. (வித்துவான் சண்முகசுந்தரம், அ. சீனிவாசராகவன், எஸ். இராமகிருஷ்ணன் போன்றோர்.) இதனால் இலக்கியச் சுவையுள்ள நூல்களைவரன் முறையாகக் கற்றோரும் இந்த வட்டத்தினுள் இடம் பெற்றனர். இத்தகைய ஒர் ஊடாட்டம், இந்த ரசனை மரபுக்கு ஒரு சமூக இலக்கிய வலிமையை வழங்கிற்று.
கம்பராமாயணம் பற்றிய இன்னொரு பயில்வு மட்டம் அரசியற் சார்புடையதாகும். இதனை ஒரளவுக்கு இருதுருவப்படுத்திப் பார்க்கலாம். ஒரு முனையில், ஆரிய - திராவிடக்கருத்து நிலை ஊக்குவித்த வாசிப்பு வழி வந்த வடமொழிஇதிகாசக் குறிப்பாக - இராமாயண - கண்டனமாகும். இந்தக் கருத்து நிலை இராமாயணக்கதையை, வட ஆரியர் தென்திராவிடரை அடக்கிய கதையாகவே கண்டது. அந்த நோக்கு அதற்குரிய இன்னொரு அரசியற் பரிமாணமான பிராமண எதிர்புக் கோஷமாக மாறிற்று. இராமாயணம் தமிழருக்கெதிராக நடந்த ஒரு சூழ்ச்சி என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சோமசுந்தர பாரதி போன்ற பல அறிஞர்கள் கம்பராமாயணத்தை இவ்வாறு நோக்கினர். (1959 இல் இக்கட்டுரையாசிரியர் சோம சுந்தரபாரதியார் அவர்களை அவரது இல்லத்திற் சந்தித்து உரையாடிய பொழுது அவர், கம்பன் தமிழின் சிறந்த புலவனெனினும், அவன் ஆரியச்சூழ்ச்சிக்கு அகப்பட்டுப் போனவன் என்ற கருத்தையே கூறினார். பாரதியார் பற்றி அவர் கூறியவையும் சுவாரசியமானவையாகும்)
தனித்தமிழ் வாதத்துடன் கிளம்பிய இந்த நோக்கின் அரசியல் மயப்பாடுதான், எம். ஆர். ராதா நடித்த (திருவாரூர் தங்கராசு எழுதிய) கீமாயணமும், அண்ணாதுரை எழுதிய கம்பரசமும்.
இராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும் திராவிடக்கழக, திராவிட முன்னேற்றக்கழகங்களுக்கான அரசியல் தேவைகளுக்காக, 'அரசியல் மயப்படுத்திய பொழுது, மறுமுனையில் இந்த இலக்கிய அரசியல் மயப்பாட்டை எதிர்த்த அரசியற் கொள்கையினர் (பொதுவுடைமை இயக்கவாதிகள்) கம்பராமாயணத்தின் இந்தியப் பொதுமையையும், கம்பனது இடதுசாரித் தன்மையையும் வற்புறுத்தினர். ஜீவானந்தம் இந்தப் போக்கிற்கான நல்ல உதாரணமாவார். இந்த வழியாகவே எஸ். இராமகிஷ்ணன் (எஸ். ஆர். கே. - பின்னர் கம்பனும் மில்டனும் எழுதியவர்) கம்பனது சிறப்பை எடுத்துப் பேசுபவர் ஆகிறார். திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற தொ. மு. சி. ரகுநாதனின் கம்பஈடுபாட்டையும் இந்தப்பின்புலத்திலேயே பார்க்க வேண்டும். ரகுநாதனின் கம்பன் என் காதலன்' எனும் கவிதை மிகச்சிறந்த ஒரு கவிதையாகும். எழுத்துத்துறையில் ஆரம்பகாலத்தில் இவரோடு "இரட்டையராக” விளங்கிய கு. அழகிரிசாமியும், இந்த வழியாகவே கம்பஈடுபாட்டில் இறங்கினார். பின்னர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பற்றிய ஒரு சிறந்த நாடகத்தையும், அதற்குமேல் இராமாயணப் பதிப்பு ஒன்றையும் தந்தார் (அழகிரிசாமியின் கம்பராமாயணப் பதிப்பின் அட்டை தி.மு.க.வின் கொடிவண்ணங்களான கறுப்பு - சிவப்பில் அமைந்திருந்தது).
கம்பன் மலர் - 2000

இவ்வாறு கம்பன் பற்றிய திராவிட அரசியல் நோக்கினை எதிர்த்தோர் சில வேளைகளில் ரசனைக்குழுவினருடன் சேர்ந்தும், சில வேளைகளில் தனியே ஆராய்ச்சி நிலையில் நின்றும் தொழிற்பட்டனர்.
கம்பராமாயணத்தை பிராமண எதிர்ப்பு அரசியலுடன் பார்க்கும் நோக்கு வெற்றி பெறவில்லை என்றே கூறவேண்டும். கம்பராமாயணத்தின் சிறப்புக்களைப் பரப்பும் பணியில் ஈடுபட்டவர்களுள்ளே பிராமணர்களும் உள்ளனர். ஆனால் கணிசமானவர்கள் செட்டி நாட்டவர்கள் என்பது ஒரு முக்கியமான சமூக பண்பாட்டு உண்மையாகும். நாட்டரசன் கோட்டையோடு கம்பனுக்கிருந்த உறவு மிக முக்கியமான வகையில் வலியுறுத்தப்பட்டது. காரைக்குடி கம்பன் சமூகத் தோற்றம் முதல் (சா. கணேசன்) சென்னைக் கம்பன்கழகம், யாழ்ப்பாண கம்பன் கழகம் (அலுவலர்கள் பட்டியலைப் பார்க்க) வரை, கம்பனின் நிறுவனமயப்பாட்டில் ஒரு சமூக அரசியல் ஊடுபாவாக ஓடுவதை அவதானிக்கலாம். திருக்குறள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கும் கம்பராமாயணம் அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ள முறைமைக்குமுள்ள வேறுபாடுகளை உய்த்தறிந்து கொள்ளல் வேண்டும்.
எனவே தான் கம்பன் நிறுவனமயப்படுத்தப்பட்ட மட்டம் (Levels of institutionalization) filas (pěséâuLJLOTTGOT 6örgpresiin.
இவ்வாறு கம்பன் நிறுவனமயப்படுத்தப்பட்டபொழுது, கம்பனது புகழ் மதச்சார்பற்ற நிலையில் பரப்பப்படுவதற்கா (Secular publicization)கப் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழல்வாதம் எனப் பல்வேறு மகிழ்வளிப்பு முறைமைகள் புகுத்தப்பட்டன; பரப்பப் பட்டன.
கம்பன் பற்றிய ஆய்வுமட்ட அணுகுமுறையை இவற்றிலேயும், இவற்றிலிருந்து வேறுபட்டும் காணலாம். கம்பன் பற்றிய ஆய்வுக்கண்ணோட்டங்கள் மேற்சொன்ன பார்வை மட்டங்களாலே தீர்மானிக்கப்பட்டுள்ளன எனினும், கம்பன் பற்றிய சில ஆய்வுகள் இவற்றிற்கு அப்பாலானவையாகவும் இருந்து வந்துள்ளன. சுத்தப்பதிப்பு முயற்சிகள் மிகச்சிறிய ஆய்வு நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டன என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்தத் துறையில் வையாபுரிப்பிள்ளையின் பங்கு மிகக் கணிசமானதாகும்.
கம்பன் பற்றிய ஆய்வு மட்டத் தொழிற்பாடுகளிலும் கூடச் சில செல்நெறி வேறுபாடுகளை அவதானிக்கலாம்.
கம்பனது இலக்கியச் சிறப்பை மிகச் செம்மையான முறைமையில் வெளிக் கொணர்ந்த ஒப்பியல், விமர்சனவியல் ஆய்வுகளில் முக்கியம் பெறுவோரை ஒரு புறமாகவும் (வ. வே. சு. ஐயர், எஸ். ஆர். கே, முத்துசிவன், சீனிவாச ராகவன், பி. பூரீ. ஆசார்யா, நாமக்கல் கவிஞர்) கால, பாட (Text) ஆராய்ச்சியாளர்களை ஒரு புறமாகவும் (வையாபுரிப்பிள்ளை,
187

Page 204
ராகவையங்கார், தெ. பொ. மீ, அ. ச. ஞானசம்பந்தன்) வைத்து நோக்கலாம். ஆனால் சற்று முன்னர் கூறியபடி, இவர்களுக்கும் இரசனை முறையாளர்களுக்கும் ஒரு தொடர்பு இருந்தது.
இக்கட்டத்தில் தி. மு. க. வின் கருத்து நிலைத் தாக்கங்களின் பின்னர் இதிகாசங்களுக்குப் புத்துயிரும், மக்கள் நிலை ஆர்வமும் ஏற்படுத்திய ராஜாஜியின் பங்கினை நாம் மறந்து விடக் கூடாது. வியாசர் விருந்து, சக்கரவர்த்தித் திருமகன் என்னும் நூல்களின் வெளியீட்டு வரலாறும் விற்பனை வரலாறும் முக்கியமானவை.
ஆங்கிலத்தில் வந்த கம்பன் ஆய்வுகள், கம்பன் பற்றிய தமிழ் நிலைக் கருத்தாடலில் அதிக முக்கியத்துவம் (Discourse) அதிக முக்கியத்துவம் பெறாது போயுள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும். உண்மையில் இத்துறையில் முன்னோடி முயற்சிகள் செய்தவர்கள் இருவராவர். ஒருவர் வ. வே. சு. ஐயர்; இவரது கம்பராமாயணம் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள் தில்லித் 5L6pāorigiggit 6) 1950 gigi) Kambaramayanam - A Study GT6öTp பெயரில் வெளிவந்தது. (இவ்விடயம் சம்பந்தமாக பெ. சு. மணி அவர்கள் அண்மையில் வ. வே. சு ஐயரும் கம்பராமாயண ஆராய்ச்சியும் என்பது பற்றி அரிய நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்). இன்னொருவர் Kambanandhis Art என்று எழுதிய சி.பி. வெங்கடராமையர் ஆவர் (1926). இது கம்பன் பற்றி ஆங்கிலத்தில் வந்துள்ள மிக முக்கியமான நூல்களுள் ஒன்றாகும்.
கம்பராமாயணத்துக்கான ஆங்கில மொழி பெயர்ப்புக்களுள் மிக உன்னதமானதாக அமைந்துள்ளதுஹர்ற்றும் (Hart) ஹைஃபிட்சுமி (Heift) தந்துள்ள ஆரணிய காண்ட GLOIT Guujifilureth. The Forest Book of Kamba Ramayanam என்பது இதன் பெயர் (1988 கலிபோர்னியப் பல்கலைக்கழகம்).
இப்பின்புலத்தில் தான் ஈழத்திற் கம்பன் பயில்வு பற்றி நோக்குவதும் பலன்தரும்.
ஆறுமுக நாவலரைப் பொறுத்தவரையில் அவர் தமிழ்ப் புலமை பற்றிப் பேசும் பொழுது “தமிழ் கற்கப்புகுஞ் சைவசமயிகள்.” என்று தொடங்கி, அக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் “வைணவ சமயிகள் மேற் கூறப்பட்டனவற்றுள் சமய நூல்ளொழிந்து ஒழிந்தவற்றையும் தங்கள் சுயசித்தாந்தங்களையும்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

கற்றறிந்து அவைகளின் விதிப்படி ஒழுகுக” என்று கூறுகிறாரே தவிர, தாம் தரும் நூற்பட்டியலிற் கம்பராமாயணத்தைச் சேர்த்துக் கொள்ளவில்லை.
அவர் அவ்வாறு சேர்க்கவில்லையெனினும், அவர் காலத்திலேயே அவர் மருகர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை கம்பராமாயணப் பிரசங்கள் நிகழ்த்தினார் என்றும், அப்பிரசங்கங்கள் பெரிதும் போற்றப்பட்டனவென்றும் அறிகின்றோம்.
கம்பராமாயணப் பதிப்புக்களில் முக்கியமான இரண்டு பதிப்புக்கள் (பாலகாண்டம் - கனகசுந்தரம் பிள்ளை, குமாரசாமிப்புலவர் பதிப்பு) ஈழத்தவர்களால் செய்யப்பட்டன வென்பதை வையாபுரிப் பிள்ளை கம்பன் காவியத்திற் குறிப்பிடுகிறார். கம்பராமாயணச் சுருக்கப் பதிப்புக்களுள் அ.சே. சுந்தரராஜன் பதிப்பு முக்கியமானதாகும்.
நாவலர் இராமாயணத்தைக் கூறவில்லையெனினும், நாவலர் பரம்பரையின் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கம்பனின் மிக உன்னதமான ரசிகர்களில் ஒருவராக விளங்கினார். கம்பராமாயணக் காட்சிகள் என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு மிகப்பிரசித்தமானது. இன்னொரு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளரான பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளையும் கம்பனைத் தமிழாசிரிய உலகுக்கு ரசனையுணர்வுடன் அறிமுகம் செய்துவைத்தார்.
கம்பன் பற்றிய ஈழத்தவர் நூல்களுள், கி. லெட்சுமணனின் கம்பனது கதாபாத்திரங்கள் சிறப்புள்ள ஒன்றாகும். கம்பனைப்பற்றி இலக்கியக் கட்டுரை எழுதுவோருள் இன்று அகளங்கன் எடுத்துக்கூறப்படத்தக்கவர்.
நிறுவன ரீதியாகப் பார்க்கும் பொழுது 1960களில் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் என்ற ஓர் இலக்கிய நிறுவனம் கம்பன் விழாக்கள் நடத்தி வந்தது. வித்துவான் க.சொக்கலிங்கம் அதன் செயலாளருள் ஒருவாராயிருந்தார்.
1980இல் இ. ஜெயராஜ், திருச்சிப் பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் வழிவந்த இலக்கிய உந்துதல் மூலம் அகில இலங்கைக் கம்பன் கழகத்தை 1980இல் நிறுவினார்.
188

Page 205
ந்தபுராணமும் கம்பராமா போஷாக்கும் சுவையும் அள இந்நூல்களைக் கற்றுத் ே கல்வி முறையிலும் இவ்வி வாழ்க்கை நலம், இலக்கிய நயம் என்பவற்ை ஆகும். “கல்விக்குப் பயன் அறிவு அறிவுச்
கல்வி, அறிவு, ஒழுக்கம் எனும் மூ மனிதன் எனப்படுபவன். அத்தகைய சான் பண்பாட்டுக் கல்வி. நயத்தக்க நாகரிகத்தை கல்வி. தனி மனித வாழ்விலும், சமூக வாழ் மேம்பட, நடுவுநிலைமை சரியாதிருக்க, கல்வியாகும்.
கற்றல், கேட்டல், கோவிற் பழக்க எனும் நாணயத்தின் இரு பக்கங்களாக கற் கல்வி அதன் மதிப்பை, பெறுமதியை இழந் காரணம் இவ்விரண்டு பக்கங்களும் சீராக
கற்கத் தகுந்த நூல்களைக் கசட நிற்றல் - வாழுதல், எனும் இரண்டையும் அ
“கற்றிலனாயினும் கேட்க” என்ப கேட்டு அறிய வழி செய்யப்பட்டிருந்தது. ( கல்வி பெற வாய்ப்பிருந்தமை குறிப்பிடத்தக்
இத்தகைய கல்விமுறையில் இலச் கற்றல் இடம் பெற்றிருந்தது. அத்துடன் ஆ
பாடநூல்களுள் கந்தபுராணம், க இவை ஒவ்வொன்றிலும் நிபுணத்துவம் ெ கந்தபுராணத்திலும், அவரது மருகர் வித் வித்துவம் பெற்று விளங்கியமை. இதற்குச்
 
 

ராண கலாசாரமும்
'tnrt T6OOr Ġ56bIrċifryrGħtà
சில குறிப்புகள்
குமாரசாமி சோமசுந்தரம்
யணமும் ஈழத் தமிழ்மக்களின் வாழ்க்கைக்கு வளமும் வனப்பும் ரித்து வரும் புனித நூல்கள். பண்டைய தமிழ்மரபுக் கல்வி முறையில் தறுதல் முக்கியமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்காலக் ரு நூல்களின் சில பகுதிகள் பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. றை அடைதல், இந்நூல்களைக் கற்றதனால், கற்பதனால் ஆயபயன் 5குப் பயன் ஒழுக்கம்” என்பர் நாவலர் பெருமான்.
ழன்றிலும் முழுவளர்ச்சி அடைந்தவனே சான்றோன். அவனே நிறை ன்றோனை உருவாக்க விழைந்தது தமிழ் மரபு வழிக் கல்வி. அது தயும், கலாசாரத்தையும் மக்கள் வாழ்க்கையில் வளர்ச்சிபெறச் செய்த டிவிலும் அமைதி நிலவ, அறம் வளர, நீதி நிலை பெற, மனித உறவு அன்பு மலர உறுதுணையாக விளங்கிய தூயநற்கல்வி, தமிழ்க்
ம் எனும் மூன்று முறைகள், கல்வி கற்றலில் பின்பற்றப்பட்டன. கல்வி றல், நிற்றல் என்பன உள்ளன. இவற்றுள் ஒரு பக்கம் பழுதுபட்டாலும் து விடுகிறது. தமிழ்மரபுக் கல்வி பெறுமதி கொண்டிருப்பதற்குக்
பேணப்பட்டு வந்தமையேயாகும்.
றக் கற்றல்; அவ்வாறு கற்ற கல்விக்குத் தக்கவாறு வாழ்க்கையில் ழத்துவது நழது கல்விப்பாரம்பரியம்.
நற்கிணங்க, நூல்களைக் கற்க முடியாதவர்களும், கற்றவர்களிடம் முறைசார் கல்வி, முறைசாராக் கல்வி ஆகிய இரண்டு முறைகளில் கது.
கியம், இலக்கணம், சமயம், நீதிநூல்கள், நிகண்டு என்பவற்றைக் சிரியரைக் கற்றலும் முக்கியமாக விளங்கியது.
பராமாயணம் ஆகிய இரண்டும் தனிச்சிறப்புப் பெற்று விளங்கின. பற்ற ஆசான்கள் இருந்துள்ளார்கள். பூநீலழரீ ஆறுமுகநாவலர் துவ சிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை கம்பராமாயணத்திலும் ான்று. ஊர்கள் தோறும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இத்தகைய
189

Page 206
நூல் வல்லுனர்கள் பலர் இருந்துள்ளார்கள். அந்தந்த நூல்களில் விசேட திறமை பெற விரும்புவோர்கள், அதற்குரிய வல்லுனர்களை அணுகிக் கற்றுத் தேர்ந்தனர்.
கந்தபுராணம், கம்பராமாயணம் நூல்களை முழுமை யாவும், ஆழ அகலமாகவும் கற்றுத் தேறும் நடைமுறை தமிழ் மரபு வழிக் கல்வியில் இருந்தது. அது ஆழ்ந்த புலமைக்கும் நுணுகி ஆராய்தலுக்கும், தருக்கித்து உண்மை தெளிதலுக்கும், மேலும் சிந்திப்பதற்கும், புதியன காண்டலுக்கும் வழிவகுத்தது. இன்றைய கல்விமுறையில் பாடசாலையிலுஞ் சரி, பல்கலைக் கழகங்களிலுஞ் சரி, இவ்விலக்கிய நூல்களைக் கற்றல், நுனிப்புல் மேய்தல் முறையில் அமைந்துள்ளது. பாடங்களின் சுமையினால், எந்த ஒன்றையும் முழுமையாகக் கற்க நேர அவகாசம் இல்லை என்று காரணம் கூறப்படுகிறது. ஒரு நூலைக் கூடச் செம்மையாகவும், முழுமையாகவும் கற்க முடியாதநிலை இன்று உருவாகியுள்ளது. கம்பராமாயணத்தில் ஐம்பது, நூறு செய்யுள்களைப் படித்து விட்டு, கம்பராமாயணம் படித்து விட்டதாகக் கூறுகிறார்கள். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பது சோற்றுக்குப் பொருந்தும், இலக்கியம் கற்றலுக்குப் பொருந்தாது என்பது நோக்கற்பாலது.
இக்காரணங்களினால், இன்று ஒரு கம்பராமாயண கலாசாரத்தையோ, கந்தபுராண கலாசாரத்தையோ நமது சமுதாயத்தில் காண்பதரிதாகி வருகிறது. வாழ்க்கை யிலிருந்து மலரும் இலக்கியம், வாழ்க்கையை நெறிப்படுத்தி வளம்படுத்த வேண்டும். இலக்கிய ரசனையைச் சுவைத்தால் மட்டும் போதாது. அந்த ரசனை வாழ்க்கையிலும் நன்மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
தேர்வுக்காகக் கற்றல், சான்றிதழ் பெறுதலுக்காகக் கற்றல், உத்தியோகம் வகிப்பதற்காகக் கற்றல் என்ற நிலைமை தொடரும் வரை, கல்வியால் கலாசாரம் ஒன்று உருவாகப் போவதுமில்லை, பேணப்படப் போவதுமில்லை. மாறாகப் போட்டி, பூசல்,பொறாமை, கழுத்தறுப்பு, குட்டி முந்துதல், அவா, அங்கலாய்ப்பு என்பன நிறைந்த எதிர்மறைக் கலாசாரம் மக்க்ளிடையே தீவிர வளர்ச்சி பெற்று வருவதற்கு ஏதுவாகவே விளங்கும்.
தமிழ் மரபுவழிக் கல்வி, உத்தியோகப் பற்றுள்ள கற்றலுக்கு இடமளிக்கவில்லை. உத்தியோகப் பற்றற்ற கல்வியாக அமைந்தது. அதனால் சான்றிதழ் முக்கியமன்று; சான்றாண்மையே முக்கியம் எனக் கொண்டது. உடன்பாட்டுக் கலாசாரம், பண்பாடு, நயத்தக்க நாகரிகம் என்பன தோன்றவும், வளர்ச்சியடையவும் காரணமாயிற்று.
வடக்கிலங்கையில் கந்தபுராண கலாசாரமும் கிழக்கிலங்கையில் பாரதக் கலாசாரமும் பெரிதும் பேணப்பட்டும்; இரு பாகங்களிலும் கம்பராமாயண கலாசாரமும் ரசனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் வந்தமைக்குக் காரணம் மரபுவழித் தமிழ்க் கல்விப்பாரம்பரியம் என்றால் அது மிகையாகாது.
வட இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கந்தபுராண கலாசாரம், ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைமையில் தமிழ் அரசு நிலை பெற்றிருந்த காலகட்டத்தில், தோன்றி அகில இலங்கைக் கம்பன் கழகம் -

உயர்நிலையில் இருந்தமைபற்றிக் கூறப்படுகிறது. முருக வழிபாடு, கந்தபுராணப்படிப்பு சைவசித்தாந்தம்; சிவனும் முருகனும் ஒன்றே என்னும் நிலைப்பாடு, சைவம் ஒரு வாழ்க்கை நெறி என்ற வகையில் அன்பு நெறியை வாழ்க்கை நெறியாக ஏற்றல் என்பன கந்தபுராண கலாசாரம் என்னும் பரப்பினுள் அடங்கும் கூறுகள். கந்தபுராணம் கோயில்களில் புராண படனமாகப் படித்துப் பயன்சொல்லப்பட்டு வந்தமையால் கந்தபுராணத்தை முறையாக் கற்றுணர முடியாதவர்களும் புராண படனம் மூலம் அறிவு பெற்றுக் கந்தபுராணக் கலாசாரத்தை வாழ்க்கையில் ஒம்ப முடிந்தது.
“காலத்துக்கும் விஷய குணபாவத்துக்கும் ஏற்ப எச்சுதியில், எவ்விராகத்தில் வாசிக்கப்படுகிறதோ, அச்சுதியில் அவ்விராகத்திற்றானே பொருள் சொல்ல வேண்டும்” என்பது நாவலர் கூறும் சிவபுராணபடன விதி. புராணபடனத்தில் பயன் சொல்பவர், செய்யுளுக்குப் பதவுரை, பொழிப்புரை கூறியதன் பின்னர் விரிவுரையும் நடத்துவர்.
திருக்கோயில்களில் சந்நிதி விரோதமின்றி உரிய முறையில், ஏற்ற ஆசாரம் பேணிப் புராணத்தை ஒருவர் வாசிக்க, மற்றொருவர் பயன்சொல்ல, அநேக பொதுமக்கள் கேட்டுணர்ந்து பயன்கொள்கின்ற இந்தப் புராண படனமுறை யாழ்ப்பாணத்திற்கேயுரியதொரு சிறப்பு முறையாக விளங்கி வருகின்றது. இன்று ஏனைய பாகங்களிலும் புராண படனம் இடம் பெறுகின்றது.
“கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் கந்தபுராணம் பாடிய காலத்திலே தானே, கந்தபுராண படனம் யாழ்ப்பாணத்தில் தொடங்கிவிட்டது” என்று பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கூறியுள்ளார்.
“ஒரு காலத்திலே இந்த யாழ்ப்பாணத்திலுள்ள ஆடவர்கள், மகளிர்கள், முதியவர்கள், இளையவர்கள் ஆகிய எல்லோருடைய இரத்தத்திலும் கலந்து, நரம்புத்துளைகள் தோறும் ஊறிச் சுரந்து கொண்டிருந்தது கந்தபுராணம்” - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.
“கந்தபுராணத்தினாலே தமிழும் சைவமும் வளர்ந்து வருகின்ற யாழ்ப்பாணத்துக்கு ஒருநாள் கண்ணுாறு உண்டானது.” போர்த்துக்கேயர் வருகையைப் பண்டிதமணி இவ்வாறு கூறுகிறார். அவரின் கருத்துப்படி, போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் யாழ்ப்பணத்தை ஆண்ட ஏறத்தாழ முன்னூறு ஆண்டுக்காலம், கந்தபுராண கலாசாரத்துக்கு இடையூறு நேர்ந்த இருட்காலமாகும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கந்தபுராண கலாசாரம், கந்தபுராண படனம் என்பவற்றை மீளவும் மலரச் செய்ய அயராது பாடுபட்டவர் ஆறுமுகநாவலர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கந்தபுராண கலாசாரம் யாழ்ப்பாணத்தில் மீண்டும் துளிர்த்தது. ஊர்கள்தோறும் கோயில்களிலும் மடங்களிலும் கந்தபுராண படனம் இடம்பெற்றன. சித்திரை மாதத்தில் தொடங்கி ஆனி வரை மூன்று மாதங்கள் கந்தபுராண படனம் நடைபெறும். இருபதாம் நூற்றாண்டிலும் இந்நிகழ்வு தொடர்ந்தது. மக்கள் வாழ்வாங்கு வாழவும், சைவத்தமிழ் நெறி பேணவும் இது உதவியது.
190

Page 207
சிவபரத்துவம் நிலை நாட்டப் பெறவும், இலங்கையிலுள்ள இந்துசமயம், சைவநெறியே என்னும் நிலையும், சமயதத்துவம், சைவசித்தாந்தமே என்னும் நிலைப்பாட்டையும் ஏற்படுத்தக் கந்தபுராணம் உதவியது.
கந்தபுராணத் தொடர்பினால், ஆட் பெயர், இடப்பெயர், வீட்டுப் பெயர் என்பன முருகன் மற்றும் தேவியர்களான வள்ளி, தெய்வானை என்பாரின் பெயர்கள் சம்பந்தப் பட்டவையாக விளங்கும் வழக்கம் ஏற்பட்டது. கந்தசாமி, சுப்பிரமணியம், வேலுப்பிள்ளை, முருகன், குமரன், வள்ளிநாயகி, தெய்வநாயகி என்பன ஆட் பெயர்களுக்கும்; காங்கேயன்துறை, குமாரபுரம், கந்தபுரம் என்பன இடப்பெயர்களுக்கும்; குமர கோட்டம், கந்தகோட்டம், கந்தன் கருணை, என்பன வீட்டுப் பெயர்களுக்கும் உதாரணங்கள்.
யாழ்ப்பாணத்திலுள்ள கோயில்களில் சூர சங்காரம் வருடா வருடம், கந்தசஷ்டி கால இறுதிநாளில் நடத்தப்படும் வழக்கம் இருந்து வருகிறது. சூர சங்காரம் என்பது அகந்தை, மமதை என்னும் ஆணவமுனைப்புக்களை அழித்தல் என்பதை உட் பொருளாகக் கொண்டு நடைபெறுகிறது. ஆணவமே எல்லாவித அழிவுகளுக்கும் அமைதியின்மைக்கும் காரணம் என்பது உணர்த்தப்படுகிறது. அகந்தை, மமதை அழிந்த இடத்தில் அன்பும் அருளும் உதயமாகின்றன. அன்பும் அருளும் மனிதரை அறநெறியில் செலுத்துவன, அன்பும் அறனும் வாழ்க்கையின் பண்பும் பயனுமாகக் கொள்வது கந்தபுராண கலாசாரம்.
இன்று கந்தபுராண கலாசாரம் நம்மை விட்டு விலகிச் செல்கின்றது என்பதை எமது வாழ்க்கைத் துயரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. கந்தபுராண கலாசாரம் மீட்கப்பட வேண்டியதன் அவசியம் உணரற்பாலது.
கந்தபுராண கலாசாரம் போன்று இராமாயண கலாசாரமும் நம்மை வாழ்வித்து வருகிறது. 'மானுடம் வென்றதம்மா" என்பது கம்பர் வாக்கு மானுடத்தை,மனுதர்மத்தை, மனித விழுமியங்களை மனிதகுலத்திற்கு எடுத்துக் காட்டி, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்ந்தால் வாழ்வில் ஒரு பொல்லாப்பும் நேராது என்பதை இராம சரிதம் உறுதி செய்கிறது. மக்களின் பண்பாட்டு, கலாசார, ஆன்மிக வளர்ச்சிக்கு இராமாயணம் பெரிதும் உதவியுள்ளது. மனிதன் மனிதத் தன்மைகளுடன் வாழ்வதற்கு, வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் அற்புதநூல் இராமாயணம். மிகத்தொன்மையான காலத்திலிருந்து இலங்கை மக்கள் இராமாயணத்தை அறிந்திருந்தனர். இராமாயணம் நடைபெற்ற களங்களுள் ஒன்றாக, இலங்கை இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே மட்டுமல்ல; சிங்கள மக்களிடையேயும் இராமாயணம் வாழ்கிறது. இலங்கையில் சமயரீதியில் வைணவர்கள் என ஒரு பிரிவினர் இல்லை. ஆயினும் சைவர்களும் பெளத்தர்களும் விஷ்ணுவை வழிபாடு செய்து வருகின்றனர். சைவர்கள் விஷ்ணுவை மும் மூர்த்திகளுள் ஒருவராக, காத்தற் கடவுளாகவும் ஏற்றுக் கொள்கின்றனர். அந்த
கம்பன் மலர் - 2000

வகையில் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றாக இராமாவதாரம் கொள்ளப்படுகிறது.
சேயோன்,மாயோன் ஆகிய தெய்வங்கள், முறையே தமிழ் நாட்டின் குறிஞ்சிநிலக் கடவுளாகவும், முல்லை நிலக் கடவுளாகவும் சங்கத் தமிழ் நூல்கள் பேசுகின்றன. சேயோன் முருகனைக் குறிக்கின்றது; மாயோன் திருமாலைக் குறிக்கின்றது. முருகனும், திருமாலும் தமிழ் மக்களின் வழிபாட்டிற்குரிய தெய்வங்களாகப் பண்டைய தமிழகத்தில் விளங்கினர். காலப்போக்கில் குறிஞ்சிநில சேயோன் வழிபாடு வடநாட்டுச் சுப்பிரமணியர் வழிபாட்டுடன் கலந்து விட்டது போல, முல்லைநில மாயோன் வழிபாடும் வடநாட்டு விஷ்ணு வழிபாட்டுடன் இணைந்து கொண்டது. தமிழ்நாட்டில் ஆழ்வார்கள் தோன்றிவைணவபக்தி இயக்கம் இந்தியா முழுவதும் பரவ வழி செய்தனர். இலங்கையிலும் அதன் செல்வாக்கு இருந்திருக்க வேண்டும். ஆயினும் சைவத்தின் செல்வாக்கு அதிகமிருந்தமையினால், வைணவத்தின் தாக்கம், இலங்கையில் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
இலங்கையில் எழுதப்பெற்ற மிகப்பழைய தமிழ்நூல்சரசோதி மாலையாகும். அந்நூலை இயற்றியவர் ஒரு வைணவர் என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அரசு செலுத்திய ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்தவர் அரசகேசரி. அவர் இரகு வம்சம் என்னும் நூலைத் தமிழில் தந்த பெரும்புலவர். கம்பரையும் கம்பராமாயணத்தையும் பெரிதும் மதித்துப் போற்றியவர். கம்பராமாயணத்தில் அவருக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் சொல்லுந்தரமன்று. யாழ்ப்பாணத்தில் கம்பராமாயணத்தைப் பரவச் செய்து, இலக்கிய ரசனையை மக்களிடையே பெருக்கெடுக்கச் செய்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அரசகேசரி, கம்பருக்குக் “கம்பநாடர்” என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்துள்ளார் என அறிஞர் கூறுவர். கம்பரும் யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரனின் அரசவைக்கு வந்தமை பற்றியும், கெளரவம் பெற்றமை பற்றியும் செவி வழிச் செய்தி ஒன்று உண்டு.
கம்பரை ஆதரித்து வந்த சடையப்ப வள்ளல் யாழ்ப்பாணத்துடன் வணிகத் தொடர்பு வைத்திருந்ததாகவும், மரக்கலங்கள் மூலம் நெல் முதலிய உணவுப் பொருள் வியாபாரஞ் செய்ததாகவும் செய்திகள் உள்ளன. அந்த வகையில் கம்பரும் யாழ்ப்பாண மன்னன் அரசவையைத் தரிசித்திருக்கலாம். கம்பர்மலை என்னும் ஒர் இடம் யாழ்ப்பாணத்திற்கு வடபால், கடற்கரையை அண்மித்து உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. கம்பர் மரக்கலத்தில் வந்து இறங்கிய துறையாகவும் அவ்விடம் இருந்திருக்கலாம். அதனால் அவ்விடம் கம்பர்மலை என்ற பெயரைப் பெற்றிருக்கக் கூடும்.
வைணவ மதத்தவர் இல்லாவிட்டாலும் கூட, யாழ்ப்பாணத்தில் வல்லிபுர ஆழ்வார் கோயில்,வண்ணார்பண்ணை பூரீ வேங்கடேசப் பெருமாள் கோயில், பொன்னாலை வரதராசப் பெருமாள் கோயில் ஆகிய விஷ்ணு கோயில்கள் உள்ளன. இவை புராதனமான வரலாற்றைக் கொண்ட கோயில்கள். சைவ சமயத்தவர்களே இங்கு சென்று வழிபாடு செய்கின்றார்கள்.

Page 208
சிவாகமமுறைப்படி சிவாச்சாரியார்களாலேயே நித்திய நைமித்திய பூசைகள் நிகழ்த்தப்படுகின்றன. கிழக்கிலங்கையிலும் விஷ்ணு கோயில்கள் புராதன காலந் தொட்டு இருந்து வருகின்றன. அங்கும் நிலைமைகள் சைவக் கோயில்களில் இருப்பன போன்றே உள்ளன.
ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலே வாழ்ந்த வரத பண்டிதர், சிவராத்திரிபுராணமும் பிள்ளையார் கதை நூலும் இயற்றியவர். அந்த வகையில் அவர் சைவராகவே இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் ஏகாதசி புராணமும் பாடியுள்ளார். ஏகாதசி விரதம் மகாவிஷ்ணுவுடன் தொடர்புபட்டது.
மேற்கூறியவற்றிலிருந்து புலப்படுவதுயாதெனில் வைணவ சமயத்தவராக இல்லாமல், சைவசமயத்தவராக இருந்து கொண்டு, சைவாகம முறையில் விஷ்ணு வழிபாடு, விஷ்ணு விரதங்கள் என்பவற்றை யாழ்ப்பாண மக்களும் ஏனைய கிழக்கிலங்கை மக்களும் மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதாகும்.
சைவசித்தாந்த நெறியும் கந்தபுராண கலாசாரமும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இறுக்கமாக இருந்தமை காரணமாக வைணவம் ஒரு மதம் என்னும் முறையில் இங்கு மக்களிடையே செல்வாக்குப் பெறாமல் போயிருக்கலாம். ஆயினும் விஷ்ணு வழிபாடும் கம்பராமாயணமும் சைவத்தமிழ் மக்களின் ஆராதனைக்கும் அரவணைப்புக்கும் பாத்திரமாகவே அன்றும் இன்றும் இருந்து வருகின்றன.
கம்பராமாயணத்தை ஒரு வைணவநூலாகக் கொள்ளாமல், அந்நூலில் புதைந்து காணப்படும் “மானுடத்தை” நுகரவும் இலக்கிய இரசனையில் திளைக்கவுமே அந்நூல் கைக் கொள்ளப்பட்டு வருகின்றது.
கம்பனுக்கும் யாழ்ப்பாணத்திற்குமுள்ள தொடர்பிற்கு வேறு சான்றுகளும் உள்ளன. சோழ மண்டலத்தில் பயன்பாட்டில் இல்லாது ஈழமண்டலத்தில் மாத்திரம் மக்களிடையே புழக்கத்திலிருக்கும் தமிழ்ச் சொற்களைக் கம்பன் தமது இராமாயணத்தில் இடம் பெறச் செய்துள்ளான். யாழ்ப்பாணத் தொடர்பு இருந்தமையினாலேயே கம்பன் இவ்வாறு செய்திருக்க முடியும். உதாரணத்திற்குத் துமி என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். இச் சொல்லைக் கம்பர் இராமாயணச் செய்யுள் ஒன்றில் இடம் பெறச் செய்தமையினால் அவருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இடையே எழுந்த சர்ச்சையையும், வாணியின் அருளால் அதற்குத் தீர்வு காணப்பட்டதையும் நாம் அறிவோம். துமி' என்ற சொல், தமிழ் நாட்டில் மக்கள்வழக்கில் இல்லை என்பதால், அச் சொல் கம்பரால் பயன்படுத்தப்பட்டமையை ஒட்டக் கூத்தர் ஏற்கவில்லை.
துமி' என்ற சொல் அன்றுமட்டுமல்ல இன்றும் யாழ்ப்பாணத்தில் பொது மக்களிடையே வழக்கிலுள்ளது. மழை துமிக்கிறது. காயப் போட்ட சீலையை எடுத்து வந்து வீட்டுக்குள் போடு” என்று பேசப்படுவதை இன்றும் காண்கிறோம். இலேசான மழையைத் துமி, தூறல் என்னும் பதங்களினால் குறிப்பிடுதல் வழக்கமாக உள்ளது. மழைத் துமிபட்டால் காய்ச்சல் வரும்” என யாழ்ப்பாண மக்கள் கூறுவதைக் கேட்கிறோம். மழைத்துமி என்பது மழை நீர்த் துளி என்ற பொருளில் இடம் பெறுகிறது. இவ்வாறன யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மாத்திரம் வழங்கும் சொற்கள்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

இராமாயணத்தில் இடம் பெற்றுள்ளமை எதனைக் காட்டுகின்றது என்பது சிந்திக்கற்பாலது. கம்பருக்கும் யாழ்ப்பாணத்திற்கு மிடையேயுள்ள தொடர்பினைக் காட்டுவதாக இருக்கலாம்.
கம்பர், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வடபால் அமைந்துள்ள வல்லிபுர ஆழ்வார் கோயிலைத் தரிசிப்பதற்கும் வந்திருக்கலாம் அல்லவா?
இரகுவம்சம் இயற்றிய அரசகேசரி நல்லூரில் வாழ்ந்தவர். கம்பர் மீதும், அவர் இயற்றிய இராமாயணத்தின் மீதும் அளவிலாப் பக்தி கொண்டிருந்தவர். இரகுவம்சத்தில் வரவேண்டிய இராம சரிதையை அரசகேசரிபாடாமல் விட்டுவிட்டார். காரணம், அவரின் பெருமதிப்பிற்குரியவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தை ஏற்கனவே பாடி விட்டமையே என்று அரசகேசரியே கூறியுள்ளதாக அறிஞர் குறிப்பிட்டுள்ளனர். இத்தனைக்கும் அரசகேசரி ஒரு வைணவர் என்று கூறிவிடமுடியாது. அதற்குச் சான்றுகள் இல்லை.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் விஷ்ணு கோயில்கள் சில இருப்பினும், இராமர் கோயிலோ, சீதை கோயிலோ இல்லை. இராமாயணம் சமயரீதியில் மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கைச் செலுத்தவில்லை. மானுடத்தைப் பரப்புவதிலும், இரசனையை வளர்ப்பதிலுமே இராமாயணம் ஈடுபாடு கொண்டுள்ளது. கம்பனும் இராமனைத் தெய்வமாக்கவில்லை என்றே கூறவேண்டும். இராமனை ஒரு சிறந்த காவியத்தலைவனாக,ஒப்பற்ற மானுடனாக, மனிதருள் மாணிக்கமாக, இலட்சிய புருஷனாகப் படைத்து மனிதர்கள் மத்தியில் உலாவ விட்டுள்ளான். ஒரு சிறந்த கணவன், ஒரு சிறந்த மகன், ஒரு சிறந்த சகோதரன், ஒரு சிறந்த நண்பன், ஒரு சிறந்த அரசன், ஒரு சிறந்த மாணாக்கன் எப்படி இருக்க வேண்டுமென்பதை உலகத்தவருக்குக் காட்டவே கம்பன் இராமன் என்ற பாத்திரத்தைப் படைத்துள்ளான். கற்பு எனும் திண்மைக்கு எடுத்துக் காட்டாகச் சீதை எனும் பாத்திரத்தைப் படைத்துள்ளான். அவ்வாறே ஒவ்வொரு பாத்திரங்கள் மூலமும் மானுடப் பண்புகள் வெளிப்படச் செய்தான். கம்பன் முழுமையாக வெற்றி கண்டான். “மானுடம் வென்றதம்மா" என்ற மகுடவாசகத்தைத் தந்த கம்பன் ஓர் உலக மகாகவி, அவன் தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் எல்லைப்படுத்திக் கொள்ள விரும்பாதவன். மதப் பிரசாரம் அன்று கம்பனின் நோக்கம்; மானுடப்பிரசாரமும், ஒவ்வொரு மனிதனையும் மானுடப் பண்புகள் நிறைந்தவனாக மாற்றுவதுமே கம்பனின் தலையாய நோக்கம் ஆகும்.
சமய, தத்துவரீதியில் கந்தபுராணமும் கம்பராமாயணமும் வேறுபட்டிருக்கலாம். . ஆனால் மனித தத்துவரீதியில் இரண்டிற்குமிடையே எவ்வித வேறு பாடுமில்லை. மனிதனை மனிதனாக, மனிதப் பண்புகளுடன் வாழ வைப்பதில் இரண்டு நூல்களும் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இரண்டும் இணைகின்றன. கந்தபுராணத்தைப் போற்றும் சைவ அறிஞர் பெருமக்கள் கம்பராமாயண ரசனையில் பெரிதும் மூழ்கியிருந்துள்ளனர். வித்துவசிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை, பண்டிதமணி சி. கணபதிப்பிளை ஆகியோர் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். கந்தபுராண கலாசாரமும் கம்பராமாயண கலாசாரமும் மானுடத்தைப் போற்றி வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. 'மானுடம் என்பது சமூக, சமய, இன வேறுபாடுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் அப்பாற்பட்ட ஒர் உன்னதம் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
192

Page 209
ஐ மிழ், பல்லோரும் போற்றும் ஆ 88 மொழிகளுள் ஒன்று. அதன் மொழிக்கென்று சிறந்த இய: எழுதவும் பேசவும் கவிதைக அந்த மொழியை விருத்தியடைந்த மொழி எ இருக்க, அந்த மொழியைப் பேசும் மக்கள் எ
அவர்களது சிந்தனை ஆற்றலும், உயர் உள்ள கற்போரின் மனதைக் கவரும் அளவுக்கு தமிழ் ஆண்டுகளுக்கு முன்னரே மிகுந்த வளர்ச்சி ஆராய்ச்சிகள் மூலம் நிறுவி உள்ளனர்.
இந்த உலகத்து மொழிகள் பேசும் அனைவரு பாரதியும் தம் மொழியைச் சேர்ந்தவரென நி இந்த நான்கு உலகப் புலவர்களையும் ஒரே ெ போல எவரும்.
“பூமி தனில் யாங்கனுமே 1
என்ற கோட்பாட்டை நிறுவுகின்றார் பாரதி. பாண்டித்தியம் பெற்றவர். தம்மொழிய்ான எனினும் தமது கூற்றை மிகைத்துக் கூறிவி
"உண்மை வெறும் புகழ்ச்சி
என்று உறுதியாக மொழிந்தார்.
"ஒராயிரம் ஆண்டு ஒய்ந்து
என்று மகாத்மா காந்தியைப் பற்றிக் கூறியிரு மக்களும் அவர்தம் மொழியும் வளர்ந்த பின் "வள்ளுவன் தன்னை உலகி
 
 

வழி கம்பர்
சு.சிவதாசன்
லுளவுக்கு வளர்ச்சியடைந்த மொழி. மிகவும் விருத்தியடைந்த உலக சிறப்பையும் செழிப்பையும் என்றுமே அறிஞர்கள் ஏற்றுள்ளனர். ஒரு ல்புகள் உள. எந்த சிந்தனையையும் கருத்தையும் அழகான முறையில் ள் யாக்கவும் அவற்றுக்கு வேண்டிய செழிப்பும், செறிவும் இருந்தால் ன்று கருதலாம். ஒரு மொழியின் பல்வேறுபட்ட சிறப்புக்கள் ஒரு புறம் த்தகைய இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து ாமும் கருத்துச்சிறப்பும் வெளியாகின்றன. இத்தகைய இலக்கியங்கள் ம்மொழியில் நிறைந்திருக்கின்றன. அறிஞர்கள் தமிழ்மொழிஈராயிரம் சியைக் கண்டது என்பதை உலகம் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்கு
ம், தமிழறிவும் பெற்றிருந்தால் கம்பனும், வள்ளுவனும், இளங்கோவும், னைக்க விரும்புவர். அந்த விருப்பத்தில் பெருமையும் கொள்ளுவர். மாழி படைத்த மாண்பு தமிழருக்கு உண்டு. இதில் முதல் மூவரையும்
பிறந்ததில்லை”
பன்மொழிப் புலவர் பாரதி பல இலக்கியங்களையும் கற்றுத் தேறிப் தமிழ் மொழியில் மட்டும் தம் பரந்த நோக்கை கட்டுப்படுத்தாதவர். ட்டார் என்று தமிழர்களே எண்ணலாம் என்ற ஐயத்தை நிராகரிக்க,
பில்லை”
கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணி”
நக்கின்றார் சுப்பிரமணியபாரதி. இவ்வாறே சில ஆயிரம் ஆண்டுகள்
னர் வள்ளுவர் தோன்றி திருக்குறளைத் தந்தார். னுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு”
193

Page 210
என்று போற்றுகின்றார் பாரதி. அவருக்குப் பின்னர் சிலப்பதிகாரத்தைப் படைத்தார் இளங்கோவடிகள். சங்க இலக்கியம், சங்கமருவிய கால நூல்கள், பல்லவர் காலத்துப் பக்தி இலக்கியங்கள் இவை எல்லாவற்றுக்கும் பின் கம்பர் இராமாயணத்தைத் தமிழருக்குத் தந்தார்.
"யாம் அறிந்தபுலவரிலேகம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல்பூமிதனில்யாங்கனுமேபிறந்ததில்லை"
என்றுதாம் தேர்ந்து அறிந்த உண்மையை எடுத்து உரைக்கின்றார் பாரதி.
கம்பரை அவரின் கவித்திறத்தால் அறிகின்றோம். அவரது விவேகத்தை விஞ்ச உலக கவிகளிலேயே நாம் பலரைக் காண்பதரிது. அவரது மதி நுட்பம் எல்லாக் கவிகளிலுமே தெளிவாகத் துலங்குகின்றது. தமிழுலகில் அன்றிருந்த இலக்கியங்களை முழுமையாகக் கற்றிருக்கின்றார். அவற்றால் கவரப்பட்டு அவற்றைத் திறம்படக் கையாண்டு மிருக்கின்றார்.
“வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்”
என்று ஒரு அடிக்குக்கூட வேறொரு அடியை மாற்றாகப் புகுத்த இயலாது என்று வான்மீகியின் கவித்துவத்தைப் புகழ்ந்தார். அத்தகைய கம்பன் தமது கவிகளிலே வள்ளுவரின் சில சொற்களையே மாற்ற முயலவில்லை. கம்பர் உவமைகளைக் கையாண்ட சிறப்பை விஞ்சியவர் தமிழ் இலக்கியத்திலே இல்லை. ஆறு, மலை போன்றவற்றை வருணிக்கும் பொழுது உவமான உவமேயங்களைக் கையாண்டு தத்துவக் கருத்துக்களைத் தெளிவுற விளக்கினார். பாத்திரங்களைச் சித்திரிப்பதில் ஒப்பார் இல்லாதவர். எதுகை மோனை, சொல் நயம், பொருள் நயம் யாவும் குவிந்து கிடக்கின்றன. புலமைக்கு வேண்டிய சிறப்புகள் எல்லாவற்றையும் நிகரற்ற முறையில் வெளிப்படுத்துவது கம்பனின் இராமாயணம். இத்தகைய சாதனையில் கூட கம்பனின் தாழ்மையைக் காண்கின்றோம். ஒரு பூனை பாற்கடலிலே குதித்தாலும் சில துளிகளை அருந்தி அனுபவத்தை உரைப்பது போல் தாம் இராமயணத்தை எழுத முற்படுவதாகக் கூறுகின்றார்.
"ஓசை பெற்று உயர் பாற் கடலுற்று ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென”
என்பது கம்பரின் அடிகள். இவ்வாறு தம்முயற்சியை பணிவோடு கணித்தார் கம்பர். ஆனால் அவரது செயற்பாட்டின் திறனை அவரின் பின் வந்தோர் முறையாக மதிப்பிட்டனர்.
“பாவின் சுவை கடல் உண்டெழுந்து - கம்பன் பாரிற் பொழிந்த தீம் பாற் கடலை”
அகில இலங்கைக் கம்பன் கழகம்

என்றார் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை. இதனால் பெறப்படுவது கம்பன் பாற்கடலுக்குள் குதித்தது மட்டுமல்ல, உலகத்தில் பொழிந்து உண்டாக்கியது இனிய பாற்கடல் என்பதாகும். இந்தக் கடலில் இருந்து ஒவ்வொரு கம்பன் விழாவிலும் எமக்குத் தீர்த்தம் கிடைக்கின்றது.
ஒரு நாட்டின் பண்பாட்டில் உருவெடுத்து அவற்றின் சீரிய சிறப்பம்சங்களைப் பிரதிபலிப்பது இலக்கியம். L6) நூற்றாண்டுகளாக விருத்தியடைந்து பக்குவம் பெற்ற சமுதாயத்தின் பிரதி விம்பமாக நாம் இலக்கியத்தைக் காணலாம். மிக நீண்ட காலமாக வளர்ச்சியடைந்த மக்களின் சிந்தனைகள், கருத்துக்கள், தத்துவங்கள், விருப்புக்கள், வெறுப்புக்கள், விழுமியங்கள் யாவும் இலக்கியத்தில் பரிணமிக்கின்றன. ஒரு சிறு குளத்தில் அலைகள் தோன்ற மாட்டா. நீர் நிறைந்த கடலில் அலைகளைக் காணலாம். தமிழ் இலக்கியம் என்ற கடலில் பாரியதோர் அலையாகத் தோன்றி ஆயிரம் வருஷங்களுக்கு மேல் தமது தாக்கத்தை நிறுவி மேலும் வளர்ந்து செல்வது கம்பராமாயணம். வடமொழியில் அமைந்த வான்மீகியின் இராமாயணக் கதை கம்பருக்குக் கருவாக அமைந்தாலும் அவர் தாம் வாழ்ந்த தமிழ் நாட்டின் சூழ்நிலைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப, தமிழ் மரபுக்கமைய இராமாயணத்தை யாத்துள்ளார்.
தமிழ்க்கடலில் பேரலைகள் பல தோன்றியுள்ளன. தொன்மைக் காலத்தை நோக்கும் பொழுது தொல்காப்பியத்தை நாம் நினைக்கின்றோம். அதன் பின்னர் திருக்குறளும், சிலப்பதிகாரமும் சங்க இலக்கியமும், இலக்கியம் கண்டபின் தான் இலக்கணம் வருகின்றது. தொல்காப்பியர் உருவாவதற்கு எவ்வளவு கால இலக்கிய வளர்ச்சி இருந்திருக்க வேண்டுமென்பதை நாம் அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியங்களை கம்பர் கற்றிருந்தார். அரிய கருத்துக்களை தமதாக்கிக் கொண்டார். குறள் பலவற்றை சேர்த்துக் கொண்டார். அத்தோடு சில குறட்பாக்களை அப்படியே தமது பாக்களில் இணைத்துக் கொண்டார். தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் கம்பர் என்பது கம்ப இராமாயணத்தில் தெற்றெனப் புலனாகும். அத்தோடு பிறமொழி அறிவும் இருந்தமைக்கு சான்றுகள் உள. காளிதாசனின் கவிதைகளையும் படித்துள்ளார். அத்தோடு நயந்தும் உள்ளார்.
உயர்ந்த அறிவாளிகளின் சிந்தனைகள் ஒரு அறிவுக்கடலில் தான் எழலாம். திருக்குறள் உதயமாவதற்கு தொல்காப்பியம் போன்ற நூல்களைத் தோற்றுவித்த கல்விச் சூழல் இருந்தது. சங்க இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், பல்லவர் கால இலக்கியம், பக்திப் பிரவாகத்தில் தோன்றிய தேவாரங்கள், இத்தகைய நூல்கள் உருவாகியதன் பின் கம்பரது இராமாயணத்தை நாம் காண்கின்றோம்.
"கம்பனைப் போல் . பூமி தனில் யாங்கனுமே பிறந்ததில்லை”
194

Page 211
என்றும்
"புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு”
என்றும் பாரதி கூறியதில் வியப்பொன்றுமில்லை.
எமது விவேகத்தை முழுமையாக உபயோகித்து நாம் பெறுவது அறிவு இவ் அறிவைநூல்களிலும் உயர்ந்தோரின் சகவாசத்தாலும் அவருடன் கலந்துரையாடி கருத்துப்பரிமாறுவதாலும் ஆராய்ச்சிகளாலும் கேள்வியாலும் பெறுகிறோம். அறிவில் உயர்ந்தவர்கள் தமது அறிவை பூரண நலனுக்காகவும் அர்ப்பணிக்கின்றார்கள்.
“தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவார் கற்றறிந்தார்"
என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் தமது முதிர்ந்த அறிவை நாட்டின் நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பது கிரேக்க தத்துவ ஞானிகளின் கருத்தாகும். எனவே இத்தகைய அறிவிற்சிறந்தோர் அவர் காலத்தில் அமைச்சர்களாக இருந்து அரசனுக்கு அறிவுரை நல்கினார்கள்.
“மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்"
என்பது பண்டைத்தமிழர் தம் அறிவாலும் அனுபவத்தாலும் கண்டு தேறிய உண்மை. சிறப்பான அரசு நிலவும் காலத்தில் நாடு சிறந்தது. செல்வம் கொழித்தது, மக்கள் செழித்தனர், கலைகள் வளர்ந்தன, எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தினர். ஆயிரம் ஆண்டுகளாக தெளிந்து நிலைகொண்ட அரசியற் சித்தாத்தங்கள் கம்பன் முன் இருந்தன. ஒரு சீரிய அரசனின் இலட்சணங்கள், அரசின் மாட்சிமைகள், அமைச்சரின் குணாதிசயங்கள்,கற்றோரின் பொறுப்புக்கள், எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சியங்கள், அனுசரிக்க வேண்டிய முறைகள் ஆகிய எல்லாவற்றையும் கம்பனுக்கு முதல் வரையறுத்தனர் எமது புலவர்கள். இந்த பாரம்பரியத்தில் ஊற்றெடுத்த கம்பளின் அரசியல் சித்தாத்தங்களும் விழுமியங்களும் இராமாயணத்தில் பிரதிபலிக்கின்றன.
அறநெறியின் அடிப்படையில் வளர்ந்தது அன்றைய அரசு. ஆட்சியை வகுக்க சாசனங்கள் இருந்தாலும் மக்கள் அறிந்து கொண்டு எதிர்பார்க்கும் முறைகளை ஒட்டி ஒழுக வேண்டிய மரபு, நிலை பெற்றிருந்தது.
"குடிதழிஇக் கோலோச்சு மாநில மன்னன்” - குறள் "குடி உயரக் கோன் உயர்வான்” - ஒளவையார்
மக்களின் வாழ்வையும் வளத்தையும் மையமாகக் கொண்டு நிலைநின்றது அன்றைய ஆட்சி. எல்லோரும் இந்நாட்டு மன்னர்
கம்பன் மலர் - 2000

என்ற பாரதியாரின் தத்துவம் நிலவிற்றெனலாம். இதனையே கம்பர் போற்றினார். மன்னர் ஆட்சிக்கு நித்திய வரம் கொடுப்பதல்ல கம்பரின் குறிக்கோள். தருமத்தின் மாட்சியையும் அதர்மத்தின் வீழ்ச்சியையும் துலாம்பரமாக விளக்குகின்றார். கம்பர் கண்ட அமைச்சர்கள் முறைமையை பெரிது படுத்தினர். இதற்கான பாரம்பரியம் உண்டு.
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன்” - குறள் "இறை முறை பிழைத்தோன் வாயிலோயே" - சிலம்பு "கோன் முறை அரசு செய்க" - தேவாரம் "முறைமையன்றென்பதொன்றுண்டு" - கோசலை
கல்வி கேள்விகளில் மிக்க அமைச்சர்களும் அறிவாளிகளும் புலவர்களும் முறைமையின் அத்தியாவசியத்தை எப்பொழுதும் அரசனுக்கு எடுத்துரைத்தார்கள். விடாது நின்றுரைக்கும் வைராக்கியம் அமைச்சருக்கிருந்தது. செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பு மன்னரிடம் இருந்தது.
அமைச்சரின் பண்புகளை உரைக்கப் புகுந்த கம்பர் அவர்களின் மனோபக்குவம் அவர்களது கல்வி கேள்விகளாலும், கலை அறிவினாலும், நிறைவெய்தியவர்களாக இருந்தனர் எனக்கூறினார். அவரது தலையாய பண்புகளில் ஒன்று
“நலமுத நலியினும் நடுவு நோக்குவார்"
என கம்பர் உரைக்கின்றார்.
“நெடு நுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினோர்”
"தமவும் பிறவும் ஒப்ப நாடி"
என்றுபட்டினப்பாலை, மக்கள் மத்தியில் நிலவிய பாரபட்சமற்ற நடு நிலைவகிக்கும் அரிய குணத்தை மிகுந்து பாராட்டியது.
“நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு
நிலைமையை”
கற்றதனால் ஒருவருக்கு உண்டாகும் அழகு என நாலடியார் குறிக்கின்றது. தமிழர் போற்றிய மிக உச்சமான விழுமியம் கல்வியாலும் அறிவாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த ஒருவனான சான்றோனுக்குக் கூட அணிகலனாக விளங்குவது நடுவுநிலமை
“ஒரு பாற் கோடாமை சான்றோர்க் கணி”
என்றார் வள்ளுவர். இத்தகைய பாரம்பரியங்களில் ஊறிய கம்பர் நடுவு நோக்கை மிகைத்துக் கூறினார்.
"நன்றே தரினும் நடு விகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல்”
- 画

Page 212
என்று வள்ளுவர் கூறினார். கம்பர் ஒரு படி மேல் சென்று தமக்குவரக்கூடிய நன்மைகள் நலிவுற்றாலும் நடுவுநிலமையிலேயே அவரின் புலன் சென்றது எனக்கூறினார். அமைச்சருக்கு அமைய வேண்டிய மேலும் பல குணங்களை எடுத்துரைக்கின்றார்.
“உற்றது கொண்டு மேல் வந்துறு பொருள்
உணரும் கோளார்”
சரித்திரத்தின் அறிவு கொண்டு தமது மதி நுட்பத்தால் நிகழப்போகும் காரியங்களை ஊகித்தறியக்கூடிய வல்லமை பொருந்தியிருந்தார். ஆவதறிவதும், வரமுன் காப்பதும் இந்தக் குணத்திலே அமையும்.
"வினையின் வந்ததாயினும் மாற்றலாற்றும் பெற்றியர்'
என்று விதியையும் மதியால் மாற்றும் வல்லமை படைத்த சாதனையாளர் எனப் புகழ்கின்றார் கம்பர்,
“முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்” “ஊழையும் உப்பக்கம் காண்பர்”
என்ற வள்ளுவரின் கருத்துக்களும் இங்கே அமைகின்றன.
“மான நோக்கிற் கவரிமா அனைய நீரார்”
இவ்வாறாக மானத்தை உயிரினும் மேலாக மதித்தனர் கம்பன் கண்ட அமைச்சர். இவ்விடயத்தில்
'மயிர் நீப்பின்வாழாக் கவரிமா அன்னார்”
என்ற வள்ளுவரின் கூற்றை நாம் கவனிக்க வேண்டும். இப்படிப்பட்டோரை உலகம் தொழுதேத்தும் என்பது வள்ளுவர் கருத்து. இத்தகைய அமைச்சரை தொழுதேத்துகின்றார் கம்பர்.
“கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு”
என்று அமைச்சரவைக்கு இருக்கவேண்டிய இலட்சணங்களை வரையறுக்கின்றார் வள்ளுவர். அந்த அறிவுரையையும், அக்காலத்தில் இருந்த மரபினையும், பண்புகளையும் நன்கறிந்த கம்பர்,
"காலமு மிடனு மற்ற கருவியுந் தெரியக்கற்ற”
அமைச்சர்களைத் தசதரனின் அவையில் கண்டார். அவர்கள் தாம் கற்ற தருமத்தை முறையே அனுசரித்த மேலோர்களாகவும் விளங்கினர். சீரிய ஒழுக்கமுடைய அவர்கள் தமக்கும் தம் அரசனுக்கும் புகழ் சேர்க்கும் நெறிகளைக் கடைப்பிடித்தனர். தமது கொள்கைகளாலும் செயற்றிறனினாலும் பெறப்படும் நன்மை
அகில இலங்கைக் கம்பன் கழகம்

களையும் புகழையும் அரசனுக்கே கொடுக்கும் குணமுள்ளவர்கள். அரசாட்சிக்கும் சரி, வேறு எந்த சந்தர்ப்பத்துக்கும் சரி, நன்மை தீமைகளை ஆராய்ந்து, கூடிய பயனைத் தரக்கூடிய முடிவுகளையே நாமும் எடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்"
என்பது குறள். இதே கருத்தின் அடிப்படையில், கம்பர் கண்ட அமைச்சர்களின் இலட்சணங்கள் அமைந்திருந்தன. ஒருவரின் பிணியை நீக்க ஒருமருத்துவன் எவ்வாறு சிறந்த முறையைக், கசப்பென்றாலும் கையாளுவானோ, அதே போல் தசதரனின் அமைச்சர்கள் அரசனின் சிறப்பை மட்டுமே எண்ணிச் செயற்பட்டனர்.
“நல்லவுத் தீயவு நாடி நாயகற்கு எல்லையின் மருத்துவனியல்பினெண்ணுவார்”
எந்நாட்டவர்க்கும், எக்காலத்துக்கும் பொருந்தும் குணச்சிறப்பை இவ்வாறு கம்பன் எடுத்துரைக்கின்றான்.
“தம்முயிர்க்குறுதி எண்ணார்”
என்பதும் ஒரு குணாதிசயம். “ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்” என்பது வள்ளுவரின் தத்துவம். எனவே ஒழுக்கத்திலேயே உயிரை வைத்தனர். அதில் உறுதியாகவும் இருந்தனர். ஒழுக்கத்தின் ஆணிவேர் நேர்மை. எது சரியானது எது உண்மையானது எது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கக் கூடியது அத்தோடு எது மன்னனுக்கு உயர்வினையும் கீர்த்தியையும் கொடுக்கக் கூடியது என்றெல்லாம் உணர்ந்துகொள்வது அறிவின் பாற்படும். அறிவின் துணைக்கொண்டு பெற்ற உண்மையை மன வைராக்கியத்தோடு எடுத்துரைத்தல் அறிவினால் ஆகும் பயன். இந்த மனோதைரியம் இல்லாதவிடத்து அமைச்சரிடம் அறிவிருந்தும் அந்த அறிவு அரசனை அடையாத துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தும்.
“சென்ற இடத்தாற் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு”
என்ற வள்ளுவர் கருத்து ஒருவன் தன்மனதை சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டிய'அவசியத்தை உணர்த்துகின்றது. இதே போன்று தான் ஒரு அமைச்சனும், அரசன் நினைத்தவாறெல்லாம் செல்ல விடாது தீய வழியை ஒதுக்கி நல்ல வழியில் செல்ல திசை காட்ட வேண்டும். நேர்மையில் சிறந்தது சிந்தனையில் நேர்மை. பலவீனம் காரணமாக நேர்மையாக அறிந்ததை நீக்கி அதிகாரம் நிறைந்த அரசனை மகிழும் வண்ணம் தீய வழியிற் புகுத்தலாம். ஒரு பேடியின் கையில் வாள் இருந்தாலும், மனோதைரியமில்லாத விடத்து அதனாற் பயனில்லை என்பது வள்ளுவர் சுட்டிக்காட்டும் உண்மை "தந்நெஞ்சறிவது பொய்யற்க” என்ற குறள் ஒருவரின் கருத்துக்களை உணர்த்துவதில் இருக்க வேண்டிய சுதந்திரத்தையும், நாணயத்தையும் குறிப்பாகக் காட்டுகின்றது. எனவே சரியாக அறிந்ததை நேர்மையாகக் கூறவேண்டும்.
196

Page 213
உண்மையை உணர்த்துவதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் உயிரை துச்சமாக மதித்து நேர்மையையும் அறவழியையும் பொன்னே போல் போற்றி உறுதியாக நிற்க வேண்டும். தம்முயிர்க்கு உறுதியை விரும்பாத, எண்ணாத பெற்றியுடையவர் தசரதனின் அமைச்சரென்று கூறுகின்றார் கம்பர். இது உண்மை நிலை அல்ல என்று ஆட்சேபித்தால், நாம் கொள்ள வேண்டிய கருத்து, இதுவே கம்பன் விரும்பிய அபிலாஷை என்பதாகும். அமைச்சரின் மற்றுமொரு பண்பு
“தலை மகன் வெகுண்ட போதும் வெம்மையைத் தாங்கி”
சர்வ அதிகாரம் படைத்த ஒரு அரசன் கோபித்தால் அந்த கோபம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இத்தகைய நிலைமையில் உண்மையில் நின்று வழுவுவதும் கோபத்துக்கு அஞ்சி அரசன் சொல்வதைக் கேட்பதும் விரும்பிச் செய்வதும் மிகவும் சுலபம். ஆனால் கோபத்தைத் தாங்கி நின்று நேர்மையைக் கடைப்பிடித்துவானம் துளங்கிலென் மண் கம்பமாகிலென், எடுத்த நிலைப்பாட்டில் மாறாது உறுதியாக நிற்பது அமைச்சரிடம் வேண்டப்படும் இயல்பு. இத்தகைய குணங்களை தசரதனின் அமைச்சர்கள் கொண்டிருந்தனர்.
அவர்களுடைய மேலும் சிறந்த பண்பு
"நீதி விடாது நின்றுரைக்கும்”
குணம். நீதிக்காக உயிரையும் அர்ப்பணிக்க வந்த மரபுகள் இந்தியாவிலும் உண்டு. தமிழர்களிடமும் நிறைய உண்டு.
“பொன்செய் கொல்லன் - தன் சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலம் காவல், என் முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்"
என்று கூறி பாண்டியன் நெடுஞ்செழியன் நீதியில் பிறழ்ந்தமைக்கு தன்னுயிரை நீத்தமை குறிப்பிடற்பாலது. நீதியை உரைக்கும் பொழுது எந்த எதிர்ப்புக்கும் இடங்கொடாது தாம் மெய்யெனக் கொண்டதை சிறிதும் தயங்காது உறுதியாக நின்று நீதியை உரைத்தலுக்கு மனோதைரியமும் வீரமும் வேண்டும். இதனை விடாது நின்று உரைக்கும் பண்பென கம்பர் போற்றுகின்றார், அவர்களை வீரர் எனவும் கணிக்கின்றார்.
உண்மையை இடித்துரைக்கும் பண்பு சங்க காலம் தொட்டே பரவியிருந்தது. உண்மையை இடித்துரைத்து குற்றம் கடியும் அமைச்சர் இல்லாத அரசன் கெடுவதற்கு எதிரிகள் வேண்டியதில்லை. அவர்கள் தாமாகவே அழிந்து விடுவார்கள் என்பது வள்ளுவர் கூறும் கருத்து. இத்தகைய வாசகங்களாலும் அறிவுரைகளாலும் நூல்கள் மூலமும் கேள்வி அறிவாலும் கர்ண
கம்பன் மலர் - 2000

பரம்பரைக் கதைகளாலும் விழுமியங்களாலும் உருவாக்கப்பட்ட தமிழரின் சிந்தனை இத்தகைய உயர் நிலையைப் பெற்று கம்பன் காலத்தில் அவனது காவியத்தில் பரிணமித்தன.
அவர்கள் “செம்மையில் திறம்பல் செய்யா தேற்றத்தார்’ அறிவாளிகளும் மக்களும் சரியென ஏற்கும் செம்மையான நிலைப்பாடுகளை அமைச்சர்கள் எடுக்க வேண்டும். அதிலே தளம்பல் ஆகாது. கருமங்கள் எண்ணித் துணியப்பட வேண்டும். துணிந்த பின் எண்ணுவது இழிவெனக் கருதப்படும். இவ்வாறு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் அமைச்சர்கள் தசரதனின் அவையில் இருந்தனர்கள். காலத்தைப் பொறுத்த வரையில் மூன்று காலங்களையும் உணர்ந்தவராக இருந்தார். கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நிகழ்கால நிலைமைகளை ஆராயும் பொழுது எதிர்காலத்தில் நிகழக்கூடிய விளைவுகளை எல்லாம் ஊகித்தறிந்து திறம்படு முறையில் தமது ஆலோசனைகளை வழங்குவர். வரும் காலத்தில் நிகழவிருப்பதை முற்கூட்டியே அறிவதற்கு ஏதுவாக இருப்பது அறிவு.
"அறிவுடையார் ஆவதறிவார்”
என்றார் வள்ளுவர். இந்த வல்லமையைப் பெற்ற அறிவாளிகள் அமைச்சராக இருந்தால் தமக்குள் ஆலோசனையையும் தர்க்கத்தையும் நடாத்தி விட்டு அரசனுக்கு உபதேசம் கூறும் பொழுது எல்லோரும் ஏகோபித்த முடிவைக் கூறுவர். வள்ளுவர் கூறும் இலட்சணத்திற்கு அமைய அவர்கள் இருந்தார்கள்.
"தெரிதலும் தேர்ந்து செயலும் ஒரு
தலையாச் சொல்லலும் வல்லதமைச்சு”
என்ற குறள் கம்பன் கண்ட இலட்சியத்தை வரையறுக்கின்றது.
"ஒருமையே மொழியும் நீரார்"
என்றார் கம்பர். கருத்தொற்றுமைகள் கவனிக்கற்பாலன. கூட்டுப் பொறுப்புள்ள அமைச்சரவை என்ற தற்கால அரசியல் சித்தாந்தம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்டு, கம்பன் காலத்தில் நிறைவும், பக்குவமும் பெற்றிருந்தன.
மேற்கூறியவற்றாலெல்லாம் உணர்த்த முயல்வது ஒரு உண்மை. மக்களின் மேன்மைக்கு, அறம், பொருள், இன்பமாகிய முத்துறைகளிலும் உலகம் ஏற்கும் வகையில் தத்துவம் வகுத்தனர் தமிழர். ஓராயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட வளர்ச்சியைக் கண்ட தமிழர் வளர்ச்சியின் உச்சமாக கம்பரின் இராமாயணத்தை காண்கிறோம். அதன் பின் ஓராயிரம் ஆண்டு ஒய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்தார் பாரதி. மூன்றாவது முறையாக பொற்காலம் தோன்ற இருக்கும் முற்பகுதியில் நாம் இருக்கின்றோம். இது நிறைவெய்துவதற்கு விதியொன்று இருப்பதென்று எண்ணுவதற்கில்லை.
197

Page 214
“மந்திரத்தால் எங்கும் கிளியே மாங்கனி வீழ்வதுண்டோ"
எனக் கேட்டர் பாரதி.
மனித சமுதாயம் சிந்திக்க வேண்டிய யாவற்றையும் தமிழர் சிந்தித்து, செல்ல வேண்டிய துறைகள் எல்லாவற்றிலும் சென்று, கற்க வேண்டிய சாத்திரங்களெல்லாம் கற்று, புதிய யுகம் அமைக்கும் வாய்ப்பு இன்று தமிழரிடம் உண்டு. இதற்கு உறுதுணையாய் நிற்பது ஈராயிரமாண்டு கால உயர்வுள்ளல்களும் சிந்தனைகளும். இந்த நீண்டகால சாதனைகளை எடுத்துரைப்பன எமது இலக்கியங்கள். இவற்றைக் கற்று பழம் பெருமையில் மயங்கி தேக்க நிலையும் அடையலாம். பழம் பெருமை அறியாமல், பெரியோர்களை அறிந்து மதிக்காமல், எதிர்காலத்தை நோக்க தன்னம்பிக்கை இல்லாமலும் வாழலாம். தமிழை மட்டும் தான் கற்க வேண்டும், தமிழரைப் பற்றி மட்டுந்தான் அறிந்திருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை ஒருவரும் முன்வைக்கவும் இல்லை. வைக்கவும் இயலாது. பண்டைத் தமிழர்களே பரந்த நோக்குப் பெற்றிருந்தார்கள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்ற உன்னத நோக்கை கணியன் பூங்குன்றனார் உணர்த்தியிருந்தார் சங்க காலத்திலேயே. உலகத்தில் சிறந்தவற்றையெல்லாம் நாம் பெறும் வாய்ப்புக்கள் இருக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு வேண்டிய உள்ளமும் இருக்க வேண்டும். அதனைப் பதனிடுவது இலக்கியம்.
"ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை”
என்பது பாரதியின் கனவும் அபிலாஷையும். இதனை சாதனையாக்குவதற்கு வேண்டியவை கல்வி, கேள்வி. கல்விக்கு
அகில இலங்கைக் கம்பன் கழகம்

கம்பமலர், கேள்விக்கு கம்பன் விழா. தமிழ் இலக்கியத்துக்கு நுழை வாயிலாகக் கம்பராமாயணம்.
எம்மொழியில் எழுதி இருந்தாலும் ஒரு பெரும் காவியம் ஆங்கிலம் வாயிலாக கிடைக்கும்பொழுது அது பிரசித்தி பெறுகின்றது. பேச்சு வழக்கில் இல்லாத மொழிகளான சமஸ்கிருதம், இலத்தின் மொழிகளில் உள்ள காவியங்களைப் பாராட்டுவார் உளர். வான்மீகி, காளிதாசன், ஹோமர் போன்றோர் பிரசித்தி பெற்றவர்கள். பத்தாயிரம் பாட்டுக்களைக் கொண்ட இராமாயணத்தை தக்க முறையில் மொழிச் சிறப்போடும் கவர்ச்சியோடும் மொழிபெயர்த்தல் இலகுவான காரியம் அன்று. பத்திலொரு பகுதியைத் தன்னும் மொழிபெயர்த்தல் கடினம். அத்தோடு அழகையும் சேர்த்தல் மேலும் கடினம். புல்லின் நுனிமேலே தொங்கும் பனிநீரின் அழகை கம்பன் பாராட்டி இருக்கின்றான். நாமும் அறிந்திருக்கின்றோம். அந்தப் பனிநீரைக் கையால் எடுத்தால் நீர் வந்துவிடும் அழகு போய்விடும். அதே போன்றதே மொழிபெயர்ப்பும். பொருள் வந்துவிடும் அழகு மறைந்துவிடும். கம்பராமாயணம் இறவாத புகழுடைய காவியம் என்றாலும் பிற நாட்டார் அதை வணக்கம் செய்வதற்கு வேண்டிய நிலை வருங்காலத்தில் மொழிபெயர்ப்புக்களுடனேயே உருவாகும். இன்று உலக மகா காவியங்களை ஒப்பீடு செய்வது கடினமாயினும் பன்மொழிப் புலவர்கள் முயன்றிருக்கிறார்கள். அவர்களில் சிலர் கம்பராமாயணத்தை பிறமொழிகளில் உள்ள எல்லாக் காவியங்களிலும் மேன்மையாகக் கணிக்கின்றார்கள்.
பல நாடுகளிலும் செறிந்திருக்கும் கம்பன் கழகங்கள்“கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்” என்ற உயர் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். “வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப் பெருக்கும், கலைப் பெருக்கும் மேவுமாயின்” என்ற பாரதியின் கனவும் நனவாக இடமுண்டு.
198

Page 215
லகளாவிய வகையில் தமிழ் ெ ஒருவன். இப்படி இந்த மூன்று ས་கம்பனைப் போல் வள்
இங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை”
என்கிறான் பாரதி.
தமிழில் முளைத்த இந்த மூன்று த போராட்டமே தமிழ்நாட்டில் நடந்ததுண்டு.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் புறப்பட்டவர்கள் சாதாரணமானவர்களல்லர்.
கற்றறிந்த பெரியார்கள், பகுத்த திராவிடக்கழகப் பெரியார் தந்தை ஈ. ெ கம்பராமாயணத்தை ஒழித்து விடுவதென்று ே
திராவிடக் கழகத்தை லேசாகக் கரு
அவர்கள் தமிழ்நாட்டின் பண்பாட்டை
தமிழ் நாட்டின் ஒரு பக்கத்தைத் தூக்கி நிறுத்
மிக வல்லவர்கள்!
ஆனால் கம்பனை ஒழித்து விடுவெ நேரிட்டது
இராமாயணத்தின் கதாநாயகனாகி அரசனான இராவணனை வெற்றி கொண்ட உயர்ந்தவர்களாகவும், திராவிடர்கள் மிக வ6 படைக்கப்பட்டுள்ளனர். தெற்கே வாழ்ந்த கேவலமான குரங்குகளாகவும் காட்டப்பட்டுள்
 
 

ழினத்தைத் ழ்த்துவனோ J5) y GÖT ?
"வரதர்’
மாழிக்குப் பெருமை செய்த முதல் மூன்று கவிஞர்களில் கம்பனும்
கவிஞர்களைத் தெரிவு செய்து சொன்னவன் மகாகவி பாரதி. ாளுவன் போல்
லைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்து விடவேண்டுமென்று பெரிய
ானால் கம்பராமாயணத்தை எரித்து அழித்து விடவேண்டுமென்று
றிவாளர்கள், சீர்திருத்தவாதிகள்! நான் அறிந்த வரையில் வ. ராவும் அவர் வழிநின்ற திராவிடக்கழக அறிஞர்களுமே பார்வாள் எடுத்தவர்கள்.
திவிட முடியாது.
யே ஓரளவுமாற்றிக் காட்டியவர்கள். தாழ்வுற்றுநிலைகெட்டுப்போன தி உயிர் கொடுத்தவர்கள்.
தன்ற முயற்சியில் இந்த வீரர்களின் கைகளும் சற்றே ஒயத்தான்
ய இராமன் ஓர் ஆரிய அரசன். தெற்கே வந்து திராவிட தமிழ் கதையே இராமாயணக்கதை. இந்தக் கதையில் ஆரியர்கள் மிக பிமை படைத்தோராயினும் - மறநெறி செல்லும் அரக்கர்களாகவும் எளிய மக்கள் கூட்டத்தினர் ஆரியர்களின் அடிவருடிகளாகவும்
6TTT.
199

Page 216
தமிழனை இப்படி இழிவு செய்யும் கம்பராமாயணத்தை தமிழர்களே போற்றுவதா? புகழ்ந்து பாராட்டுவதா? பூசை செய்வதா? என்பதுதான் திராவிட இயக்கத்தாரின் கோபமாக இருந்தது.
அந்தக் காலத்தில் ஆரியர்கள் என்று சொல்லப்பட்ட பிராமணர்களின் ஆதிக்கமே தமிழ் நாட்டில் நிறைந்திருந்தது.
கற்றவர்களும், செல்வர்களும், அதிகாரத்தில் இருந்தவர்களும் அப்போது பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தார்கள்.
வேதத்தில் சொல்லப்பட்டவருணாசிரமம் என்ற பெயரால் சாதிமுறையை வலுப்படுத்தி, பிராமணன்' என்ற சாதியில் பிறந்தவன் எத்தகைய கயவனாக இருந்தாலும் அவனுக்கு மன்னிப்பு அளித்து அவன் தாழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும், மற்றவர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அவர்களை மட்டம்தட்டிக் கீழே தள்ளிவிடுவதும் பிராமணகுலத்தின் பண்பாடாக இருந்தது.
இந்தக் கொடுமையைக் கண்டுதான் திராவிடக் கழகத்தினர் பொங்கி எழுந்தார்கள்.
வருணாசிரம தர்மத்தை எடுத்துச் சொன்ன வேதங்களின் தோலையே உரித்தார்கள். அந்த வேதங்களைத் தலைமேல் வைத்திருந்த ஆரியர்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார்கள்.
இந்த வழியில் பிறந்ததுதான் கம்பராமாயண எதிர்ப்புப் போராட்டம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கேயோ படித்த ஒரு செய்தி எனக்கு நினைவுக்கு வருகிறது. அது ஒரு சுவையான நிகழ்வு.
கம்பராமாயணத்தை எரிக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு பகுத்தறிவுப் பெரியாரிடம், அவருடைய மதிப்புக்குரிய நண்பரும், நல்ல இலக்கியரசிகருமான இன்னொரு பெரியவர் தனது மனவேதனையைச் சொன்னார்.
"ஐயா! கம்பராமாயண்த்தை எரிக்கும்படி சோல்லுகிறீர்களே, நீங்கள் அதை நன்கு கற்றவர் என்பது எனக்குத் தெரியும். அப்படி அதன் அருமையும் பெருமையும் தெரிந்திருக்கும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா? கம்பராமாயணம் இல்லாமற் போனால் தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரிய பள்ளம் விழுந்து விடுமென்பதை நீங்கள் உணரவில்லையா?”
இலக்கிய ரசிகரின் இந்த வினாவுக்குப் பகுத்தறிவுப் பெரியவர் சொன்ன பதில்தான் மிகச் சுவையானது.
“ஐயா, கம்பராமாயணத்தின் இலக்கிய மதிப்பை நான் நன்றாகத் தெரிந்திருக்கிறேன். இலக்கியம் என்று மட்டு பார்த்தால்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

அதற்கு இணையே இல்லை. ஆனால் அது எப்படிப்பட்ட இலக்கியம்? திராவிடர்களாகிய எங்களை இழித்துரைக்கும் இலக்கியம். அதன் ஆதிகாவியம் ஒரு ஆரியனால் இயற்றப்பட்டது. ஆரியன் உயர்ந்தவன் என்றும் திராவிடன் தாழ்ந்தவனென்றும் காட்டுவதற்காக எழுதப்பட்ட அந்தக் கதையைத்தான் கம்பன் தமிழிலே பாடியிருக்கிறான். தமிழர் பண்பாடு கருதிக் கம்பன் சில சிறிய மாற்றங்களைச் செய்திருப்பது உண்மைதான். ஆனால் கதையின் மூலக்கரு அப்படியேதான் இருக்கிறது. அதை அவன் மாற்றவில்லை. மாற்றியிருக்கவும் முடியாது. எங்களைத் தாழ்த்திக் கூறும் ஒரு கதையை நாங்களே படித்து போற்றிக் கொண்டிருப்பதா?”
"இருந்தாலும்.”
“கொஞ்சம் பொறுங்கள் ஐயா, ஒரு உதாரணம் சொல்லுகிறேன். உங்களுக்கு எப்படியோ ஒர் அழகான பெரிய ஒவியம் கிடைத்திருக்கிறது. அதை வரைந்தவன் மிகவும் கைதேர்ந்த புகழ்பெற்ற ஒவியன். அதுபோன்ற ஒவியத்தை நீங்கள் சாதாரணமாக எங்கும் காண முடியாது. ஒவியக் கலையின் சிகரம் என்றே அதைச் சொல்லலாம்.
“ஆனால் அந்த ஒவியத்தில் என்ன வரையப்பட்டிருக்கிறது தெரியுமா?.
“அந்த ஒவியத்தில் இரண்டு அழகான பெண்கள் இருக்கிறார்கள். ஒருத்தி உயர்ந்த ஆடைஅணிகள் பூண்டவளாய், ஓர் ஆசனத்தில் மதிப்பாக வீற்றிருக்கின்றாள்.
“மற்ற அழகியோ வேண்டுமென்றே தன்னை அரைகுறை ஆடைகளால் அலங்கரித்துக் கொண்டு நிற்கின்றாள். நிலவைப் போன்ற அவளது மெல்லிய ஆடைக்கூடாக அவள் அங்கங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன. பனைத்தெழுந்து நிற்கும் அவளுடைய கொங்கைகள் மிக அற்புதமாக வரையப் பட்டிருக்கின்றன. அவளுடைய அடிவயிறும், வாழைத்தண்டுகள் போன்ற தொடைகளும், கார்முகில் போன்ற கூந்தலும், சந்திரன் போன்ற முகமும், கயல் போன்ற விழிகளும், பவளச் செவ்வாயும் - எல்லாமே பார்ப்பவர் நெஞ்சங்களைச் சுண்டி இழுக்கின்றன. ஒவியத்தில் காணப்பட்ட வண்ணச் சேர்க்கையால், அது உயிர் பெற்று நின்று உலாவுவதுபோலத் தெரிகிறது. பொறாமை கொள்ள வேண்டிய பிற ஓவியக் கலைஞர்கள் கூட அதைப் புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு அது சிறந்திருக்கிறது.
“ஆனால் அந்த ஒவியத்தில் கவர்ச்சிகரமாக நிற்கும் அந்தப் பெண், ஜயா மன்னிக்க வேண்டும். (5 உதாரணத்துக்காகச் சொல்லுகிறேன் - அந்தப் பெண் உங்கள் தாயாராக இருக்கிறாள்!
“இப்போது சொல்லுங்கள் ஐயா, அந்த உயிரோவியத்தைப் போற்றிப்புகழ்ந்து, உங்கள் வீட்டு மண்டபத்திலே பலரும் பார்க்கக் கூடியதாக மாட்டி வைப்பீர்களா? அல்லது தீயிட்டுக் கொழுத்துவீர்களா?”
2OO

Page 217
இலக்கிய ரசிகருக்கு பதில் ஏதும் சொல்லத்தோன்றவில்லை. மன்னிக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு எழுந்து போய் விட்டார். பெற்ற தாயையே உதாரணம் காட்டி விளக்கியபோது, அவர் மேற் கொண்டு சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டார்.
மிகச் சிறு வயதில் நான் கூட இதைப் படித்தபோது, கம்பன்மீது மிகுந்த வெறுப்புக் கொண்டேன். அதிகம் சிந்தியாத தமிழ் வாசகர்களின் நிலையும் இதுதான்.
இந்தக் கருத்தை தமிழரை இழித்துரைக்கும் கதையைக் கம்பன் பாடினான். அதை மிகவும் ஆபாசமான கவிக்கதைகளால் இளைத்தான்' - என்ற கருத்தை வைத்து அந்தக் காலத்தில் பகுத்தறிவாளர்களின் நூல்கள் நிறையவே வெளிவந்தன.
அறிஞர் அண்ணாத்துரை எழுதிய கம்பரசம் என்ற நூலைப் பெரியவர்கள் கண்ணிற்படாமல், நான் ஒளித்து வைத்துப்
படித்ததும் நினைவுக்கு வருகிறது.
மேலே குறிப்பிட்ட உதாரணக்கதையைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்ப்போமா? அந்த ஒவியத்தில் இரண்டு பெண்கள் காணப்படுகிறார்கள். ஒருத்தி 'ஆரியம் மற்றவள் திராவிடம் என்று காட்டப்படுகிறது.
ஆனால் கம்பராமாயணத்தில் எந்த இடத்திலாவது ஆரியர்களை உயர்த்தியும் திராவிடர்களைத் தாழ்த்தியும் கம்பன் பாடியிருக்கிறானா? நான் அறிந்தவரையில் அப்படி எதுவுமில்லை.
இராமனை ‘ஆரியன்’ என்று கம்பன் குறிப்பிட்டிருக்கிறான். அது அந்த இனத்தின் பெருமையை விளக்குவதற்காக அல்ல. இராமன் என்ற தனிமனிதனின் சிறப்பைக் காட்டுவதற்காகவே அப்படிக் கூறியிருக்கிறான்.
அன்றியும்,
தமிழ்மொழியையும், தமிழ்நாட்டையும் மிக அதிகமாகவே போற்றிப்புகழ்ந்திருக்கிறான் கம்பன். அவனிடம் தமிழின உணர்ச்சி
நிறையவே இருப்பதைக் கம்பராமாயணத்தின் பல இடங்களிலும் காணலாம்.
இத்தகைய தமிழ்க்கம்பனா தன்னுடைய இனத்தையே இழிவுபடுத்துவதற்காகக் காவியம் புனைந்திருப்பான்?
கம்பன் மான உணர்வு மிக்க புலவன்.
e 够
மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ?”
என்று மன்னனையே எதிர்த்து நின்று துணிவோடு கூறியவன்.
இத்தகைய மானஉணர்ச்சிமிக்க கம்பனா தனது இனத்தின் மானத்தையே விலை பேசுவான்?
கம்பன் மலர் - 2000

கம்பன் நன்றி மறவாதவன்.
தன்னைஆதரித்த சடையப்ப வள்ளலின் பரம்பரைக்கே தனது காவியத்தில் உயர்ந்த ஓர் இடத்தைக் கொடுத்து மனநிறைவு கொண்டவன்.
இத்தகைய நன்றி பாராட்டும் கம்பனா தன்னை வாழவைத்த தமிழ் நாட்டை இழிவு செய்யத் துணிவான்?
இருக்காது?
மூலக்கதையை எழுதிய வால்மீகிக்குக் கூட இந்த மாதிரி ஒரு இனத்தை இழிவுபடுத்த வேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்குமா?
இராமாயணக் கதை ஒரு உறுதிப்படுத்தப்பட்ட வரலாறு அல்ல. குறிப்பிட்ட சிலநீதிகளை விளக்குவதற்காக உண்மையில் நடந்த சில நிகழ்வுகளையும், நடமாடிய பாத்திரங்களையும் வைத்துப் படைக்கப்பட்ட ஒரு கதை' என்றுதான் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இராமாயணக் கதையை எழுதியவருக்கு ஒரு நோக்கம் இருந்தது.
அந்த நோக்கத்தை உணர்ந்து அதைப் படித்தால் பயனுண்டு. தேவையில்லாத கற்பனைகளையெல்லாம் செய்யாமல் கம்பராமாயணத்தைப் படிக்கும்போது
அதன் உயர்ந்த கருத்துக்களும், கதையைக் கோத்திருக்கும் நயமும், கதாபாத்திரங்களின் சிறப்பான வடிவமைப்பும், கற்பனை வளமும்,
தமிழின் ஆற்றலை வெளிக்காட்டும் வாக்கியங்களும், சொற்களும் எல்லாமே உயர்ந்த இலக்கியமாக இனிக்கும் இனிக்கும்
இனி, கம்பனைப்பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். அது அவனது இயல்பை அறிந்து கொள்வதற்கும் சற்றே உதவக் கூடும்.
தமிழ்மொழியின் பெரும்புலவர்களில் ஒருவனாகக் கருதப்படும் கம்பனைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் எவையுமே பெரிதாக இல்லையென்பது வருத்தப்படவேண்டிய விடயம்.
கம்பனுடைய சரியான பெயர் என்னவென்பதே தெரியவில்லை. சுப்பிரமணிய ஐயர் என்ற பெயரை ஐயர்' என்று சொல்வதுபோலவும், நடேச முதலியார் என்ற பெயரை முதலியார்’ என்று சொல்வதுபோலவும், கம்பன்' என்ற அவருடைய குலப்பெயராலேயே அந்த மகாகவியும் அழைக்கப்படுகின்றான்.
சிறு வயதில் கம்பங் கொல்லைக்குக் காவல் இருந்த
காரணத்தால் அவனுக்குக்கு கம்பன்' என்ற பெயர் வந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். (கம்பு என்பது குரக்கன் போன்ற ஒரு சிறு
தானியம்)
- 20

Page 218
உவச்சர் குலத்தின் தெய்வமான காளி கோயிலின் கொடிக்கம்பத்தருகே அவன் சிறுகுழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டதால் அந்தப் பெயர் வந்தது என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
காஞ்சியிலே கோயில் கொண்டிருக்கும் 'ஏகம்பன்' என்ற சுவாமியின் பெயரையே கம்பன்' என்று வைத்ததாகவும் கதை சொல்லப்படுகிறது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட கம்பன்' என்பது அவனுடைய குலப் பெயர் என்பதே சரிபோலத் தெரிகிறது. ஏனெனில் தமிழ்நாட்டில் இப்போதும் வாழ்ந்து வருகிற உவச்சர் குல மக்களில் பலர் தங்கள் பெயரோடு கம்பர்’ என்ற பெயரையும் சேர்த்தே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாளடைவில் அவனுடைய உண்மையான பெயர் மறைந்து கம்பன் என்ற குலப்பெயரே நிலைத்து விட்டது. - இதுவே கம்பன் என்ற பெயருக்குப் பொருத்தமான காரணமாக இருக்க முடியும்.
சுமார் எண்ணுாறே ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகத்தரம் வாய்ந்த ஒரு தமிழ்க் கவிஞனின் சரியான பெயரோ, அவனது தாய் தந்தையர்களின் பெயர்களோ கூடத் தெரியாமற் போனது தமிழக வரலாற்றுத்துறையின் ஒரு முக்கியமான குறைபாடு என்றே சொல்ல வேண்டும்.
கம்பனுடைய சமயம் எது?
கம்பனுடைய காலத்தில் தமிழ்நாட்டிலே சைவமும் வைஷ்ணமும் நன்கு தளைத்திருந்தன.
விஷ்ணுவின் அவதாரமான இராமனின் கதையைக் கம்பன் தெரிவுசெய்து பாடியதால் அவன் ஒரு வைஷ்ணவன் என்றே பொதுவாகக் கருதப்படுகிறது.
வைஷ்ணவர்களும் அவரைக் கம்பநாட்டாழ்வார் என்று விஷ்ணுபக்தர்களான ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால், காளியை வழிபடும் உவச்சர் குடும்பத்தவனான கம்பன், எப்படி வைஷ்ணவனாக இருந்திருக்க முடியும்? காளி சைவர்களின் பெண் தெய்வம்.
அன்றியும் சைவசமயத்தவரின் முழுமுதற் கடவுளாகிய சிவனையும், சிவனின் சக்தியாகிய உமாதேவியையும் கம்பன் போற்றித்துதித்துப்பாடியிருக்கிறான். தீவிரமான வைஷ்ணவர்கள் சிவனை முழுமுதற்கடவுளாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எப்படியிருந்தபோதிலும் கம்பன் இந்த இரண்டு சமயங்களுக்கும் எதிரானவன் அல்லன் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அகில இலங்கைக் கம்பன் கழகம்

சாதி சமயப் பிணக்குகளுக்குள் அகப்படாமல் கம்பன் வாழ்ந்திருக்கிறான்.
ஆனால் தான் பிறந்த தமிழ்நாட்டையும் தனது தமிழ் மொழியையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உயர்த்திப் பேசுவதற்கு அவன் தயங்கவில்லை.
இவற்றிற்கும் மேலாக, அவன் நல்ல மனித”னாக வாழ்ந்திருக்கிறான். நல்ல மனிதப் பண்புகளை அவன் மனங் கொண்டிருக்கிறான். ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு அவசியம் இருக்க வேண்டிய மனித நேயம் அவனிடம் நிறையவே இருந்திருக்கிறது.
தெய்வங்கள் வந்து அற்புதம் செய்ததால் கம்பன் திடீரென்று பெருங் கவிஞனாகி விடவில்லை. அவன் நிறையப் படித்தவன். கல்வியிற் பெரியன் கம்பன்' என்று சொல்வார்கள்.
உண்மை. அவன் நிறையப் படித்தவன்.
கம்பன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். அவனுக்கு முன்னால் வாழ்ந்த புலவர்கள் எழுதி வைத்த இலக்கியங்கள் அனைத்தையும் அவன் பாடம் செய்தவன்.
வள்ளுவரின் திருக்குறளும் சங்கச் சான்றோர்களின் பாடல்களும் கம்பனுக்கு அறநெறிகளையும், வாழ்க்கை முறைகளையும் சொல்லிக் கொடுத்தன.
இளங்கோவின் சிலப்பதிகாரமும் அதன் பின்னர் வந்த மணிமேகலை, உதயணன் சரிதை, சிந்தாமணி முதலிய காப்பியங்களும் கம்பகாவியத்துக்கு வழிசமைத்துக் கொடுத்தன.
தமிழில் மட்டுமன்றி, அக்காலத்தில் ஒங்கி உயர்ந்து நின்ற வடமொழியிலும் அவன் நல்ல பாண்டித்தியம் பெற்றிருந்தான் என்பதற்குக் கம்பராமாயணமே சான்றாக இருக்கிறது.
தான் கற்ற நூல்களிலிருந்த நல்ல சாரங்களையெல்லாம் வடித்தெடுத்துஇராமாயணக்கதையிற் புகுத்தி அதை ஒப்பற்ற ஒரு காவியமாக்கி நமக்குத் தந்திருக்கிறான் கம்பன்.
சோழ மன்னரின் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்த காலத்தில் வாழ்ந்தவன் கம்பன். சோழ மன்னர்கள் தமிழ் புலவர்களைப் போற்றி மதிப்பளித்தவர்கள். பெரும் புலவரான சயங்கொண்டார், சோழ மன்னனின் அரசவைப் புலவர். குலோத்துங்க சோழனின் வெற்றியைப் பாராட்டியே கலிங்கத்துப் பரணி பாடியவர்.
2O2

Page 219
ஒட்டக்கூத்தர் என்ற மகாகவிஞர் மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப்புலவராக இருந்து சிறப்புற்றவர் என்று சொல்வார்கள்.
கம்பரும் சோழ மன்னன் ஆட்சியில் வாழ்ந்தவர்தாம். ஆயினும் அவர் மன்னனின் அவைக்களப் புலவராக வாழவில்லை.
மன்னனை அண்டி வாழும் புலவர்கள் அவனைப் போற்றுவதையே குறியாகக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் கம்பனோ மக்கள் கவிஞனாக அந்தக் காலத்திலேயே வாழ்ந்த பெருமைக்குரியவன்.
முன்பெல்லாம் மன்னர்களுக்காகவே மக்கள் வாழ்ந்தார்கள். கடவுளின் பிரதிநிதியாகவும், கடவுளுக்கு அடுத்த நிலையிலும் மன்னன் போற்றப்பட்டான். மன்னனின் சுகநலத்திற்காக மக்கள் தங்கள் சுகங்களைத் தியாகம் செய்தார்கள். சங்கப் புலவர்களில் ஒருவரான மோசிகீரனார் என்பவரே,
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே
மலர் தலை உலகம்"
என்று பாடியுள்ளார். கம்பன் காலத்தவரான சேக்கிழார் கூட,
மன்னரையின்று மலரும் மண்ணுல கெண்ணுங்காலை
கம்பன் மலர் - 2000

இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும்.”
என்று சொல்லுகிறார்.
“மன்னன் உயிர், மக்கள் அந்த உயிரைப் பாதுகாக்கும் உடம்பு” என்பதே புலவர்களின் போதனையாக இருந்தது.
ஆனால், கற்றறிந்த மனிதாபிமானமுள்ள கம்பனோ, இந்தக் கருத்தை மாற்றி,
“வையகம் மன்னுயிராக அம்மன்னுயிர் உய்யத்தாங்கும் மன்னவன்.”
என்று மக்களை உயிராகவும் மன்னனை உடம்பாகவும் கற்பித்து பெரிய புரட்சிகரமான கருத்தையே கூறியிருக்கிறான்!
பொதுவாக அக்காலப் புலவர்களெல்லாம் மன்னரின் அடிபோற்றி அவனை மகிழ்விக்கவே பாடல்களைப் புனைந்து கொண்டிருந்த காலத்தில் மன்னன் கருத்துக்கு மாறுபடவும் கம்பன் தயங்கியவனல்லன். மன்னனோடு மாறுபட்ட ஒரு சந்தர்ப்பத்தில் தான,
"கொல்லி மலையுடைய கொற்றவா
நீ முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்?"
என்று கூறி நாட்டை விட்டே வெளியேறியவன் கம்பன்.
இந்தக் கம்பனே, தமிழினத்தைத் தாழ்த்திப் பாடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டான்!

Page 220
ராமாயண கலாசாரத்தின் ஊடுருவி இருக்கின்றன கம்பராமாயணரசனை தமிழ் சி. கணபதிப்பிள்ளை ஆழப செய்துள்ளார். கந்தபுராண கலாசாரத்தில் கிளைபரப்பி விழுதுன்றியமைக்குப் பண்டித திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைகம் விளங்கியது
பண்டிதமணியவர்கள் தமக்கேயுரி ஊறவைத்தார். இது கம்பராமாயண ரசை பின்னிப்பிணைந்த இராமாயணம் வாழை இலக்கியப் பாரம்பரியங்களோடும் இரண் வேண்டியதொன்று. வித்துவசிரோமணி ே பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கம்ப அக்காலத்தில் தினகரன் பத்திரிகை ஆகி வெளியிட்டார். இந்தக் கட்டுரைகள் புத்த ஈழத்து மண்ணில் வேரூன்றவைத்தன. பால குறிப்புகள் ஆழமானவை. இவை ஆராய பேராசிரியர் ஆர் பி. சேதுப்பிள்ளை ஆகி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உபகாரம் செய்தை பூர்வஜென்ம உறவைப் பண்டிதமணி அவர்
“இலங்கை மாநகர் இராக்கதர் அதற்குமுன் அது தேவர்களுக்கு சிவஷேத்திரம் என்கின்றார். பொன் இலங்கை. பொன்னுக்கு மற்றொரு வடிவில் தேவகணத்தைச் சேர்ந்த மணந்தான்"
ஈழமண்டல சதகத்தில் வரும் கதை செய்தான் என்று கட்டுரையில் சுவைபடக் கம்பராமாயண இரசனை இலங்கையிற் தமிழாசிரியராகவிருந்த அ. சே. சுந்தரர
 
 

பராமாயணத்தை முதசாகரமாக்கிய
-சே-அந்தரராஜன்
ஆ.சிவநேசச்செல்வன் (எம்.ஏ)
வேரும் விழுதுகளும் இலங்கைத் தீவின் நரம்புத் துய்களில் எல்லாம் r. வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையின் வழிவழி ற் கூறும் நல்லுலகம் எங்கணும் செறிந்துள்ளமையைப் பண்டிதமணி ாகத் தமது உரைகளின் மூலமும் கட்டுரைகளின் மூலமும் விளக்கம் ஊறிய யாழ்ப்பாணக் கல்வி மரபில் கம்பராமாயண மரபும் இரசனை நமணி சி. கணபதிப்பிள்ளை ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதவை. பராமாயண ரசனை பெருகுவதற்கு வாய்ப்பான கல்விக் கோவிலாகவே
ய பாணியில் கம்பராமாயணத்தை ஈழத்து இலக்கிய அரங்குகளில் னயைப் பெருக வைத்தது. இதிகாச பெளராணிக வரலாறுகளோடு படி வாழையாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் மட்டுமன்றிச் சிங்கள ாடறக் கலந்தொன்றாகி உள்ளது. இது விரிவாக ஆராயப்பட பொன்னம்பலபிள்ளை அவர்களின் இரசனைக்குறிப்புகளில் மூழ்கிய ராமாயணக் காட்சிகளை நூற்றிமுப்பது கட்டுரைகளாக எழுதி சிரியராக இருந்த வி. கே. பி. நாதன் அவர்களின் தூண்டுதலால் க வடிவில் வெளிவந்துள்ளன. இவை கம்பராமாயண இரசனையை காண்டத்திற்குச் சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் எழுதிய உரைக் ப்பட வேண்டியவை. தமிழகத்தில் டி. கே. சிதம்பரநாதச் செட்டியார், யோர் இராமாயண மூலபாடத்தை அலசிப் பதிப்பித்த வேளைகளில் T மனமுவந்து வித்துவ சிரோமணியின் குறிப்புகளை அண்ணாமலைப் ம குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கும் இராமாயணத்துக்கும் உள்ள களே பின்வருமாறு முகம் செய்துள்ளமை அவதானத்துக்குரியது.
களின் இருப்பிடம் முன்னாள்’ என்கிறது இராமாயண இதிகாசம். இருப்பிடம் என்கிறது புராணம். சித்தரான திருமூலர் இலங்கையை மயமான இமயச் சிகரம் ஒன்று கடலில் வீழ்ந்தது. அப்பொற் சிகரமே த பெயர் ஈழம். எனவே ஈழம் இலங்கை எனப்படும். சீதை மனித வள்; சிவகுமாரி; இலங்கையிற் பிறந்தவள். இராமன் சீதையை
நயை பண்டிதமணி இலங்கையிற்பிறந்த சீதையைபூரீராமன் திருமணம் கூறியுள்ளார். இது கம்பராமாயணக் கலாசாரத்தின் ஒரு பரிமாணம். பெருகி வந்த காலத்திலே சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ாஜன், கல்லூரிகளில் தமிழ் கற்கும் மாணவர்கள் மத்தியிலேயே
2O4.

Page 221
கம்பராமாயணச் சுவையை வளர்க்கும் நோக்கத்துடன் கம்பர் கவிதைக் கோவை' என்ற நூலை அரிதின் முயன்று மூன்று பாகங்களாக வெளியிட்டார். கம்பராமாயணத்தில் உள்ள ஆறு காண்டங்களிலும் உள்ள சிறந்த செய்யுட் பகுதிகள் கதைப் போக்குக்கு இயைந்தவாறுகோக்கப்பட்டுள்ளமை இந்தச் செய்தியின் சிறப்பியல்பாகும். முதலாவது பாகத்திலே பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம் என்ற மூன்று காண்டங்களில் இருந்துதிரட்டிய செய்யுட்பகுதிகள் உள்ளன. இரண்டாம் மூன்றாம் பாகங்களில் கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம் என்ற மற்றைய காண்டங்களிலிருந்து திரட்டி செய்யுட் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக்கல்லூரி என்ற இரு கல்லூரிகளில் உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்துவந்தவர் அ.சே.சுந்தரராஜன் அவர்கள். ஏறத்தாழ 1942ஆம் ஆண்டு முதலாக மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக வெளிவந்த கம்பர் கவிதைக் கோவை கம்பராமாயண ஈடுபாட்டை இலங்கையில் வளரவைப்பதற்குரிய கருவி நூலாக அமைந்தது. சு. நடேசபிள்ளை, பேராசிரியர் வி. செல்வநாயகம் ஆதியோர் இந்த அருங்கோவை பதிப்பிக்கப்பட்ட காலத்தில் அ சே. சுந்தரராஜன் அவர்களுக்கு அணுக்கத் துணைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பராமாயண ரசனை வெள்ளம் இலங்கையில் பெருக்கெடுத்து ஓடுவதற்குக்கம்பர் கவிதைக் கோவை வெளியீடு பெருந்துணையாக விளங்கியது. இந்தக் கோவைநூல் வெளிவந்த காலத்தில் அ. சே. சுந்தரராஜன் அவர்களின் பணியை அறிஞருலகமே வியந்து பாராட்டியது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் இந்தக் கோவை நூலை உயர்தர மாணவர்களும் ஆசிரியர்களும் கம்பரை எளிதில் தரிசனம் செய்வதற்கு வாய்பான ஒரு கைக்கண்ணாடியாக மதிப்பிட்டுள்ளார்.
"திரு. அ.சே. சுந்தரராஜன் அவர்கள் ஆழ்வார்களின் அருளிப்பாடுகளில் ஆழ்ந்தவர்கள்; கம்பரில் திளைத்தவர்கள்; கம்பராமாயண மகா சமுத்திரத்தில் ரஸஞ் சொட்டுகின்ற ஆயிரத்துக்குச் சிறிது அதிகமான பாடல்களைத் தேடிச் சுவைத்து, ஒரு நல்ல ரஸகலசத்தை இலக்கிய இரசிகர்களுக்கு வழங்கியிருகின்றார்கள்.”
எனப் பண்டிதமணியவர்கள் விதுந்துரைந்துள்ளார்கள். கம்பன் கவிச் சுவையை நுகர விரும்பும் தமிழர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏறத்தாழ சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் பெருவிருந்தாக இந்தத் தொகுதி அமையலாயிற்று. இந்த அரிய நூலை அரிதின் முயன்று தொகுத்த அ. சே. சுந்தரராஜனின் பணிகள் பல்வேறு வகையில் கம்பராமாயண ரசனையைப் பெருக்கும் கலைக் களஞ்சியமாக அமைந்தமையை பலர் இப்பொழுது நினைவுகூருவதில்லை. கவிச்சக்கரவர்த்திகம்பனின் சொல்லோவியங்களில் பத்தில் ஒரு வீதம்தான் இந்தத் தொகையில் அடங்கியுள்ளது. ஆயினும் ஒவ்வொரு பாடலுக்கும் பதின்மடங்கு பொலிவு காணும் வகையில் பதிப்பாசிரியரின் உரைவிளக்கம், கம்பன் கவிதைத் திறன்களையெல்லாம் வெளிக் கொணர்ந்துள்ளது.
பாரகாவியமாகிய கம்பராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் நிகரான சுவையுடையவை. தாம் சுவையெனக் கண்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பிழையறப் பரிசோதித்து சுவைகுன்றாது காவிய ரசனைக்கு வழி செய்துள்ள
கம்பன் மலர் - 2000

அ.சே. சுந்தரராஜன் சுருங்கிய நேரத்தில் விரிந்த காவியத்தின் பெரும்பயனை அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார். வெறுமனே கதைத் தொடர்புகளை மட்டும் காட்டாது கதையோடு விமர்சன முறைகளையும் கலந்து சுவை பயக்கவைத்துள்ளமை இந்தத் தொகுதியின் பெரும் சிறப்பாகும். இதனை அறிஞருலகமே விதந்து பாராட்டியது.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் விசாலமான காவியம் முழுதையும் பயில இயலாதவர்களுக்குக் கம்பர் கவிதைக் கோவை பயன்நிறைந்த கைந் நூலாகத் திகழும் என்பது பேராசிரியர் அ. சீனிவாசராகவனின் கருத்து. கம்பர் கவிதைக் கோவை சீர் பதங்கள் பிரித்துச் செவ்வனே பதிக்கப்பட்ட நூல். சுருங்கக் கூறின் காவியக் கடலின் முத்துக்கள் யாவும் நேர்படவைத்து நிரல்படக் கோக்கப்பட்டுள்ள அழகு தமிழுணர்ந்தோர் அனைவரையும் ஆசிரியர் உதவியின்றிக் கம்பர் கவிகளில் திளைக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
கம்பராமாயணப் பயிற்சியும், ஆராய்ச்சி வன்மையும் நிறைந்தவர் அ. சே. சுந்தரராஜன். கம்பனின் மகாகாவியத்தை முழுதும் கற்றுணர்வது எளிய காரியமன்று. வ. வே. சு. ஐயர், பி. ழரீ. போன்ற பலர் பல்வேறு காண்டங்களுக்குச் சுருக்கவுரைகளும் விளக்கங்களும் செய்துள்ளனர். இந்த வரிசையிலே அ. சே. சுந்தரராஜனின் அரும்பணி கம்பனின் கவிநயத்தை வெளிக் கொணர்ந்துள்ளது என்பது பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களின் அப்போதைய கணிப்பாகும்.
இந்த அரிய தொகுப்பு நூல், கம்பன் கவித்திறன் பற்றி எத்தனை நூல்கள் வெளிவந்தாலும் அவற்றிற்கெல்லாம் மகுடமாக இருக்கக்கூடிய சிறப்புவாய்ந்தது. கம்பராமாயணத்தின் முழுமையையும் ஆழத்தையும் உணர விரும்புபவர்கள் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் கம்பராமாயண சாரத்தை நினைவுகொள்வது வழக்கம் இதற்கு அடுத்த நிலையில் அ. சே. சுந்தரராஜனின் கம்பர் கவிதைக் கோவையைத் தவற விடக் கூடாது. கதைத் தொடர்ச்சி, இன்சுவை, ஆதியன இடையறவு படாத வகையில் கம்பராமாயணக் கடலையே கோவையாக்கித் திரட்டிய அ. சே. சுந்தரராஜன் கம்பகாவியத்தை அமிர்த சாகரமாக மாற்றிக் கவிச்சக்கரவர்த்தி கம்பனை எளிதில் தரிசனம் செய்ய வைத்துள்ளார்.
பதிப்பாசிரியர் அகப்பை அகப்பையாகத் தாம் அள்ளிச் சுவைத்த இராமாயணப் பகுதிகளை உரைநயங்களோடு உணர்ச்சி பூர்வமாக கவிநயம் செய்வது கம்பர் கவிதைக் கோவையின் சிறப்பு என சுதேசமித்திரன் பத்திரிகை இத்தொகுதியைப் பாராட்டியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
“எத்தனை பாக்கியங்களையும் பெறலாம். ஆனால் கம்பன் கவியமுதை அனுபவிக்கும்பாக்கியம் பெறவில்லை என்றால் அத்தனை பாக்கியங்களையும் பெற்றுத்தான் என்ன பயன்?
இப்படி ஏங்குபவர்களுக்கு நல்லகாலம் பிறந்திருக்கின்றது.”
என்ற மணியான குறிப்போடு கல்கி அ.சே.சுந்தராஜனின் அருமையான கவித்திரட்டைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்தது. கம்பர் கவிதைக் கோவை மீண்டும் மறுபிரசுரம் செய்யப் படவேண்டிய ஒரு அரிய பொக்கிஷம். கம்பனின் கவிக்கடலைக் கடைந்தெடுத்த அமுதமாகிய கம்பர் கவிதைக் கோவை கம்பசித்திரங்களைப் பாடல் நயங்களோடும் உரைவிளக்கம் காட்டும் பொருளாழத்தோடும் விளக்கும்
கம்பதரிசனம் என்பதை மனங்கொள்வது அவசியமானது.
205

Page 222


Page 223
இப்பகுதி, கழகம்பற் கழகப்பணிபற்றிய மதி கழகத்தின் இயல்,இ6 அவ்வத்துறைசார்ந்தே கழகச் செயற்பாடுகள் முதலான அவற்றைக் காட்சிப்படுத்தும் பு
 
 
 

றிய பதிவேடாகவும் |ப்பீடாகவும் அமையும். சை,நாடகப்பணிகளை ார் மதிப்பிட்டுள்ளனர். வை சுருக்கிக் கூறப்பட்டுள்ளன. கைப்படத்தொகுதியும் உண்டு.

Page 224


Page 225
உலகம்யா எ
உண்மைகை
நிலவிவரும் நித்திலம்பே தலைசிறந்த தமிழ்சிறந்த
கலைசிறந்த
கவின்சிறந்த
தருமவழிதர் தாங்குதமது வருமேக பத் வந்துசரண் ஆ பெருகுமுயர் பேணுமொட் கருமமுயர் இ கம்பராழ் வ
எதுதர்மம் எ எதுவீரம் எது
எமதுஉலக வ இலட்சியங் நதிப்பெருக்(
நாமகளை ந
துதிநாராயன
சொல்லியப
 

ந்தவன் போல் ட்கம்பன் கழகம்
வாழி!
அருட்கவி. சீ. விநாசித்தம்பி
வையுமென்று தொடங்கி வேத ள இராமனிலே நிறுத்திக் காட்டி
இதிகாசம் மூன்றி னுள்ளே ால் மிளிர்இராமாயணத்தைத் தந்த கவிமன்னன்கம்பன் தன்னைத் பீடத்தில் இருத்திக் காட்டும் கம்பன்கழகத்தின் ஈர்பான்
அகவைகண்டினித்த துள்ளம்.
ந்தைசொல் கடவா நேர்மை டன்பிறந்தார் ஒற்று மைமெய் திணிகொள் விரதம், தம்மை அடைந்தாரைக் காக்கும் திண்மை * அறநெறிப்போர் புரியும் வண்மை
புரவொழுகல் ஆய மேலாம் இராமபிரான் மாண்பு கூறக்
ார்வந்தார்"உலக முய்ய.
துநீதி எதுவள் ளன்மை புகழ்ச்சி எதுபண் பாடு பழக்கம்இவை ஆதி யாய கள் இரத்தினமாய் விளக்கம் செய்யும் குக் கவிபாடும் ஞானக் கம்பன் ாவிருத்திப் பாடுங் கம்பன் னன்பாதம் சுமக்கும் கம்பன்.
ாட் டத்தனையும் சுருதிச் சாறு.
209

Page 226
கம்பன் மலர் - 2000
இயைந்தஆ யுதமில்லான் தனக் இன்றுபோய் நாளைவா எனவு ை நயமுன்னி வள்ளல்என்றார், தம்: நன்றிகொடு, சடையப்ப வள்ளல் பயனுதவும் இடங்கண்டு litt- g பதித்துரைத்தார், பத்தினியாம் சீன வயமிகுந்த ஆஞ்சனையின் குமார
"வள்ளலே வாழிய"என் றுரைத்த
சீதைசொல்லால் ஏன்சொன்னார் 6 சிந்தித்தால் தத்துவங்கள் பலபி ற ஆதரவாய்ச் சீதைஉயிர் மாய்க்க எ அமையத்தில் அனுமர்கணை யா ஆதலால் சீதைஉயிர் பெற்றாள்.
அவளிறந்தால் இராமலக்கு மண சோதரராம் பரதசத்ருக்கனும்மாள் தொல்லுலகம் மடியும்,தாய் மாரு
இவ்வகையால் எல்லோரும் உயி இயம்பரிய பணிபுரிந்த திறனை : பவ்வத்தைத் தாண்டிவந்த தூத ன பவனமகன் அனுமானை 'மகனே திவ்வியமா வள்ளலே என்றும் வ சீதைசொன்ன வாசகத்தால் கம்பன் எவ்வகையில் அமைந்ததென என
எந்தைகம்பன் கல்விநயம் உண்ணு
பற்பலவாய் இலட்சியங்கள் பா பயில்வண்ணம் எண்ணரிய நூல்க சொற்பொருளை உணர்ந்தோது 6 சுவைக்கவிஞன் கம்பன்புகழ் பர நற்பணியாய்க் கழகத்தை யாக்கிக் ஞான முயர் அன்பரெலாம் நயந் அற்புதசெந் தமிழ்வாழி ஆத வ6 அருட்கம்பன் கழகத்தின் பணி

) ரங்கி
ரத்த மைக் காத்த
தன்னைப்
லுக்குள் த சொல்லாய் ன் தன்னை
ார் கம்பர்.
பள்ள லென்று
ண்ணும் ழி தந்தார் அன்றேல் ரும் மாய்வர்
வார்கள்
ம் வீவர்.
ர்வாழ் கின்ற உன்னி,
T
என்றும் ாழ்த்திச்
ன் உள்ளம்
ண்ணு வார்கள்
று வார்கள்.
ரில் ஓங்கிப் ள், பாக்கள் பார்க்குத் தந்த வும், தெய்வ
காக்கும் து வாழி
போல்
பும் வாழி.

Page 227
ம்மைப் போன்ற இளசுகளுக் விசித்திரமான வித்தியாசமான பரபரப்புகளில் தணியாத ஈடு * பருவத்தில் தமிழகத்துக் கரு ஆட்கொண்டிருந்தன.
அன்றைய காலகட்டத்தில் இலக் கருணாநிதி போன்றவர்களின் எண்ணக்க சந்திமுனைகளிலும் பஸ் தரிப்புநிலையங்கள் சமுதாய, மத, இலக்கியக் கருத்துக்களை கொண்டிருந்த அந்தக் காலம்.
அண்ணாவின் தீ பரவட்டும் அண்மையிலுள்ள சிற்றி பேக்கரி முன்னால் சாதகமான கருத்துக்களைப் பரஸ்பரப் விவாதத்துக்கிடையே வழிப்போக்கரான மு
கம்பன் ஒருவம்பன்' எனப்பிடிவா திணிக்கப் பெற்றிருந்த எமக்கு அந்தப் பெரி வயசுப் பிள்ளையன். எவ்வளவோ படிச்சுப் வரக்கூடிய பொடியள் நீங்கள். தீர்க்கமான அறிந்து கொள்ளுங்கள்” என்றார்.
என்றவர் சொல்லி விட்டு வந்த வெளிச்சத்தைக் காட்டியது. நாங்கள் ஐ விமர்சனத்தையும் அறிவுரையையும் கேட்டு
அவர்களது அந்தப்பகிடிச் சிரிப்பி நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.
அந்தக் குழுக் கூட்டத்தை விட்டு என்னைப் புதுசு புதுசாகச் சிந்திக்கத் தூண்
கையில் கிடைத்த, நண்பர்களிட தீர்த்தேன்.
எத்தனை பெரிய இலக்கியமுதுச அறியத் தொடங்கினேன். எத்தனை மூலப்
 
 

GOLLOJoõi த் தரிசனங்கள்
‘கு உலகம் இளமையாக இருந்த காலம். அந்த வயசுப் பருவம் ா பருவம் அறிவு தேடும் ஆர்வமும் அதே சமயம் குதர்க்கப்புத்தியும் பாடும் நிறையப் பேசுகின்ற இயல்பும் கொண்ட அந்த இளம் வயசுப் ருத்துக்கள் என்னைப் போன்ற இளைஞர்களை வெகு சுலபமாக
கியக் கலகக் குரலாக மேல்வாரியாகத் தெரிந்த அண்ணாதுரை, ருத்துக்கள் எம்மைப்பாதித்திருந்த காலகட்டம். தெருவோரங்களிலும் ரிலும் குழுவாகத் தோழமைப்பட்ட சிலருடன் நின்று அவர்களுடைய மனனம் பண்ணியதை ஒப்பித்துத் தர்க்கமும் விவாதமும் பண்ணிக்
நூலைப் பற்றி ஒரு நாள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு ம் நின்று நம்மைப் போன்ற இரண்டொரு இளைஞர்கள் காரசாரமாகச் உரத்த குரலில் வாதிட்டுக் கொண்டிருந்த சமயம், நமது தியவர் ஒருவர் குறுக்கிட்டார்.
தமான கருத்துக்களை மூளைச்சலவை மூலம் எமது கருத்துக்களாகத் யவரின் தலையீடு எரிச்சலைத் தந்தது. “தம்பி நீங்களெல்லாம் இள தெரிஞ்சு கொள்ளக் கூடிய வயசு இது. எதிர் காலத்தில் நல்லா தீர்மானத்திற்கு வரைக்கு முந்தி அவை பற்றித் தெளிவாகப் படிச்சு
த வழியே சென்று விட்டார். எனக்கு அவரது பேச்சு ஒரு புதிய ந்தாறு இளைஞர்கள்தான். குழுமியிருந்தவர்களிற் சிலர் அவரது
நையாண்டி செய்த வண்ணம் சிரித்து மகிழ்ந்தனர்.
ல் ஏனோ நான் கலந்துகொள்ளவில்லை. மனசில் ஏதோ குறுகுறுப்பு.
நான் விடைபெற்று வந்த பின்னரும் அந்த முதியவரின் அறிவுரை ண்டியது.
ம் பெற்ற ஆரோக்கியமான புத்தகங்கள் அத்தனையையும் படித்துத்
ச் சொத்துக்கு நான் சொந்தக்காரன்! இதைக் கொஞ்சம் கொஞ்சமாக
பசளையுள்ள மொழி இது என்றறிந்தேன்.
21

Page 228
எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு தமிழனாக இருப்பதில் பெருமிதமடைந்தேன். வார்த்தைகளுக்குள் அடங்காத மகிழ்ச்சியடைந்தேன்.
காரைக்குடிக் கம்பன் விழா மேடைகளிற் பேசிய பேராசிரியர் ராமகிருஷ்ணன், தோழர் ஜீவானந்தம், குன்றக்குடி அடிகளார் போன்றோரின் கருத்துக்களைத் தமிழகத்தினசரிகளிற் படித்துத் தெரிந்து கொண்டபோது, பண்டைத் தமிழ்க் காப்பியங்களில் இத்தனை சிறப்புக்கள் பொதிந்து போய்க் கிடக்கின்றனவா? என வியந்தேன்.
இந்த ஆரோக்கியமான தொடர் சிந்தனையின் வளர்ச்சிதான் என்னை உருவாக்கி வளர்த்தெடுத்தது.
என்னுடைய எட்டையபுரப் பாட்டன் பாரதி மீது அபார ஈடுபாடு கொண்டிருப்பவன் நான். அந்தப் பாட்டனது கவிப் பார்வையினூடாக நான் கம்பனைத் தரிசிக்கத் தொடங்கினேன்.
1981 இல் மதுரையில் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. முதலமைச்சர் எம். ஜி. ஆர். முதல் வரிசையில் வீற்றிருந்தார். நானிருந்தது நாலாவது வரிசை. ஒர் இளம் பேச்சுப் புயல் மேடையைத் தனது அறிவுநேர்மைச் சொற்பொழிவின் மூலம் முற்று முழுதாக ஆட்கொண்டு, ஆட்கொண்டதுமாத்திரமல்ல, முன்னால் அமர்ந்திருந்த அவையினரையும் நிமிர்ந்து உட்கார வைத்தது.
சபையெங்கும் ஆழ்ந்த பரவசம் நிலவியது. அன்று முழுச் சபையையும் தன் வயப்படுத்தி தமிழக முதல் அமைச்சரின் விசேஷ கவனத்தைக் கவர்ந்தவர்தான் இலங்கையில் கம்பன் அமைப்பை இவ்வளவு சீரும் சிறப்புமாகக் கட்டுக்கோப்புடன் இயக்கி வரும் ஜெயராஜ் அவர்கள்.
யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் கடையில் இந்தச் சங்கீதப் பேச்சாளனைக் கண்டிருக்கிறேன்; பார்த்து மிருக்கிறேன்.
அந்தத் தனித் திறமைமிக்க இளைஞனின் சிறப்பு அப்போது இந்த மண்ணில் எனக்கு விளங்கவில்லை, கடல் கடந்து, ஊர் கடந்து மதுரை மாநகரில் மாபெரும் மாநாட்டுச் சபையில் தமிழக முதலமைச்சர் அந்த இளைஞனை அழைத்துத் தட்டிக் கொடுத்துத் தனக்கருகே இருக்கை கொடுத்து அமரச் செய்ததை என் கண்களாற் கண்டதும் நான் அப்படியே பிரமித்துப் போய் விட்டேன்.
என் நெஞ்செல்லாம் பூரித்தது; புளகாங்கிதமடைந்தது. இவரது அயராத உழைப்பினால் உருவாகியதுதான் நல்லூர்க் கம்பன் கோட்டம். இந்த மண்டபம் கட்டப்பட ஆரம்பிக்கும் வேளையில் அதற்கு அடிக்கல் இட்ட முக்கியஸ்தர்களில் நானும் ஒருவன்.
இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.
அந்தக் காலத்திலேயே ஒரு சில அதி தீவிர இலக்கிய முற்போக்கு வாதிகள் எம்மைப் போன்றவர்களினது கம்பன் கழக உறவைக் கொச்சைப்படுத்தி மேடையில் பேசி வந்தனர். எழுத்தில் வடித்துக் குதூகலித்தனர்.
அவர்களில் பலர் இன்று காணாமலே போய் விட்டனர். இதையும் விட, மல்லிகை வளர்ச்சிக் காலகட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
கம்பன் மலர் - 2000

வெகு உன்னிப்பாக இந்தக் கலை இலக்கிய உலகை அவதானித்துவருபவன், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உழைத்து வருபவர்களைக் கவனித்து வருபவன் ஆகிய நான். 1989ஆம் ஆண்டு ஜுலை மல்லிகை இதழின் அட்டைப் படத்தில் நண்பர் ஜெயராஜினது உருவத்தைப் பதித்து வெளியிட்டிருந்தேன். இவரைப் பற்றி ஈழத்துச் சிவானந்தன் அட்டைப்படக் கட்டுரையை வரைந்திருந்தார்.
இது கல்வியாளர் வட்டாரத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. கடுகுள்ளம் கொண்டோர் நேரடிப் பேச்சுக்களிலும் கடித வாசகங்களிலும் என்னைக் கடிந்து கொண்டனர். கலையும் இலக்கியமும் கல்வியும் தங்களது சட்டைப் பைக்குள்அடக்கமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது எனத் திடமாகக் காலம் காலமாக நம்பிவந்த அறிவுஜீவிகள் பலர் இந்தக் கதாப்பிரசங்கப் பொடியனுக்கு இத்தனை முக்கியத்துவம் தருவது சரிதானா? எனக் கேட்டனர்.
ஏதோ மல்லிகை தங்களுக்கான குத்தகைப் பண்டம் என நம்பிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கும் மனசுக்குள் என்மீது வருத்தம். இப்போது போட்டிருக்கக் கூடாதாம்.
என் தனிப்பட்ட ஆளுமைமீது எந்த விதமான அழுத்தங்களையும் அங்கீகரிக்காதவன் நான். இந்தச் செயல் அதற்கு உதாரணம். நான் சரியாகச் சிந்தித்து, சரியானதைத்தான் தேர்ந்தெடுத்து வந்துள்ளேன் என்பதை யாழ்ப்பாணக் கம்பன் மேடைகள் நிரூபித்தன.
இத்தனை இளந் தலைமுறையினரையும் ஒருங்கு சேர்த்து, அரவணைத்து, இணைத்துப் பிணைத்துச் செயற்படுத்த வைப்பது என்பது அசுர சாதனைகளில் ஒன்று. அதற்கென்றே தனித் திறமை வேண்டும்.
இந்த அற்புதத்தை யாழ்ப்பாணத்திலும் சில ஆண்டுகளாகக் கொழும்பிலும் நேரிலும் பார்த்துப் பிரமிப்படைந்துள்ளேன். இந்த யுத்தச் சூழ்நிலையிற் கூட, அவலம்மிக்க சந்தர்ப்பங்களில் மக்களை விரக்தி விளிம்புக்குத் தள்ளிவிடாமல் அவர்களை நம்பிக்கைப்படுத்துவது முக்கியமான செயற்பாடுகளில் ஒன்று.
சம காலத்தில் இதற்கான இசகுபிசகான விமர்சனங்கள் வரலாம். வரலாறு சரியான தீர்ப்பை நல்கும் எனத் திடமாக நம்புபவர்களில் நானும் ஒருவன்.
இதைச் சாதனையாக்கி நடைமுறைப்படுத்துபவர் என்பதில் என்றுமே அவர்மீது தனி அபிமானம் எனக்கு.
எனக்குத் தனி மனித ஸ்துதியில் - வழி பாட்டில் நம்பிக்கை இல்லை. யாருக்குமே தலைப்பாகை கட்டுவது எனது நோக்கமுமல்ல. ஆனால், தனிமனித ஆளுமை, திறமை, நெறிப்படுத்தல் இல்லாமல் ஒரு வேலையும் இந்த மண்ணில் நடைபெற மாட்டேன் என்கிறதே - இதற்கு என்ன சொல்லுவது?

Page 229
லங்கைக்கும் இராமாயண வேந்தன் இராவணன் சீை அசோக வனத்தில் வைத்தி அவனை அழித்துச் சீதா கருதப்படும் மிகப்பழைய சம்பவங்கள்.
இலங்கையில் பல ஊர்களின் பெயர்க விளங்குவதைக் காணலாம். அசோகவன இராவண எல்ல, இராவணன் குகை, ( இராமாயணத்துக்கும் இலங்கைக்கும் உள்
இராமாயணக்கதை இந்தியாவில் காலத்துக்கு முன்னரே பரவியிருக்கிறது. எழுதியிருக்கிற போதிலும், அது பல கம்பராமாயணத்துக்கு நிகராக எந்த இ மக்களின் ஒழுக்கத்தை, அறத்தின் மா6 செழுமையைக் கொண்டதாக அமைந்தது
காரணம் கம்பன் சாதாரண களி பாட வந்த பேரறிஞன். காவியும் பாடும் உ நேர்த்தியும், சமுதாயம் எப்படி அமைய ே கவிக்கோமான் நாடு, மொழி, சமுதரீயம்,ச கூர்மையான பார்வையும், தெளிவான கோர்த்துக்களிநடமிட்டன. அதனால் மூ6 நிற்கிறது!
கம்பரின் கற்கண்டு நிகர் காவி மகாகவி சுப்பிரமணிய பாரதி, கம்பனி கூத்தாடுகின்றார்.
யாமறிந்த புலவரிலே கம்பலை வள்ளுவன் போல் இள பூமிதனில் யாங்கனுமே பிறந்ததி
உண்மை! வெறும் பு
 
 

G)ääU ந்துசக்தி
நா. சோமகாந்தன்
ாத்துக்கும் உள்ள உறவு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இலங்கை தயைக் கவர்ந்து கொண்டு வந்து எழிலும் குளிர்மையும் அழகும் மிக்க ருந்ததும், பின்னர் வலிமைமிக்க வானரர்துணையுடன் இராமபிரான் பிராட்டியை மீட்டுச் சென்றதும் திரேதாயுகத்தில் நிகழ்ந்ததாகக் அந்நிகழ்வுகளின் எச்சசொச்சமான நினைவுச் சின்னங்களாக ள் பழைய தொடர்புகளை உறுதிப்படுத்தும் வகையில் இன்றும் ாம், சீதா எலிய, சீதாவாக்கை, ராமஸ்ஸலகந்தை, சீதாத்தலாவை, இராவணன் வெட்டு, திருவடி நிலை, வில்லூண்டி எனப்பல ஊர்கள் ள பண்டைய உறவைப்பட்டவர்த்தனப் படுகின்றன.
b மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியா நாடுகள் பலவற்றிலும் நீண்ட வான்மீகி முனிவர் முதன்முதலில் அதனை சமஸ்கிருத மொழியில் மொழிகளில் பலபுலவர்களால் எழுதப் பெற்றுள்ளது. எனினும் ராமாயணமும் இராமனின் சிறப்பை, சீதையின் கற்பின் திறத்தை, ண்பை, ஆட்சி முறைமையை, தொண்டின் சிறப்பை, இலக்கியச் இல்லை என்பர் கற்றுணர்ந்தோர்.
விஞன் அல்ல. அவன் கவிச்சக்கரவர்த்தி, தமிழில் சாகாத காவியம் -த்தியும், ஒப்பற்ற பாத்திரங்களை அற்புதமாய்ச் செயல்படச் செய்யும் வண்டும் என்பதை அடித்துச் சொல்லும் ஆற்றலும் கைவரப் பெற்ற மயம், தத்துவம், அரசியல் முதலியவை எப்படி அமைய வேண்டுமென்ற சிந்தனையும், கவிதா ஆற்றலுடன் அவரின் சிந்தனையில் கை பநூலையே விஞ்சும் வகையில் கம்பராமாயணம் கம்பீரமாக எழுத்து
யத்தில் சுவைத்துத் திழைத்த நவயுகக்கவிஞன், புரட்சிக்கவிஞன் ன் கவிதாவிலாசத்தையும், பெருமையையும் எண்ணிக்குதித்துக்
னைப் போல்
ாங்கோவைப் போல் நிலை, கழ்ச்சியில்லை"
23

Page 230
ஈடிணையில்லாப் பெருங்காப்பியம் படைத்தளித்தவர் கம்பனே என அறுதியிட்டு உறுதியாக அடித்துச் சொல்லிய பாரதியார், இன்றைய தமிழிலக்கியக்காரர்களால் இவர் புகழ்ந்து குறிப்பிட்டவர்களின் வரிசையில் ஒருவராக மதித்து ஏற்றிப் போற்றிக் கொண்டாடப்படுபவர். கம்பனின் கவிதா ஆற்றலுக்கு இவரின் கூற்றுக்கு மேலாக வேறெவர் சான்றுரைக்க முடியும்?
கற்றோர்களின் மத்தியில் மட்டுமே சுவைக்கப்பட்டு வந்த கனியாக விளங்கிய கம்பராமாயணத்தை, மற்றோர்களிடமும் முன்னெடுத்துச் செல்லும் பணியில் கொடுமுடியாகத்திகழ்ந்தவர் காரைக்குடி பெரியார் சா. கணேசன் அவர்களாவர். அதனால், அறிஞர்களான ராஜாஜி, டி. கே. சி, தெ. பொ. மீ, பி. பூரீ, ரா. பி. சேதுப்பிள்ளை, ஜீவானந்தம் முதலியோரின் பணிகள் குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல. எழுத்து வடிவிலும், கதாப் பிரசங்கிமாரின் சங்கீர்த்தனங்களிலும் அடங்கியிருந்த கம்ப இராமாயணத்தை, மக்களிடம் கம்பன் விழாக்கள் மூலம் பரப்புவதற்கு கால்கோளிட்ட பெருந்தகை கம்பனடிப்பொடியார் அவர்களேயாவர் என்பதை நான் அழுத்திக் குறிப்பிடுகின்றேன்.
கம்பனின் பெருமையையும் கம்பராமாயணத்தின் சிறப்புகளையும் பரப்புவதற்கெனப் பெரியார் சா. கணேசன் அவர்கள் தாய்க்கழகமான காரைக்குடிக் கம்பன் கழகத்தை ஸ்தாபித்த காலத்தில் தொட்டிலில் கிடந்து கைசூப்புகிறதல்வலாக நான் இருந்திருப்பேன். பல தசாப்தங்களாக, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை அறிஞர்களும், பேச்சாளர்களும் சங்கமித்த திருவிழாக்கள் போல காரைக்குடிக் கம்பன் விழாக்கள் அமைந்திருந்ததைப் பின்னர் படித்து அறிந்து கொண்டேன். ஆற்றல் மிக்க பலரை அடையாளம் கண்டு அவ்விழாக்கள் ஊக்குவித்ததனால், தமிழிலக்கியப் பேச்சாளர்கள் பலர் உருவாகினர். கம்பனடிப் பொடியார் அன்று இட்ட வித்து, அவர் மறைந்தபின்னர் கூட எத்தனை பெரிய ஆலவிருட்சமாக வளர்ந்து, பலமான பலகிளைகளைப்பரப்பிஉறுதியாக விழுதுவிட்டுநிலைத்து நின்று, தமிழிலக்கியம் வளர இணையில்லாப் பணி புரிந்து வருகின்றது.
இலங்கையிலும் கூட அதற்கு ஒரு கிளை. அந்தக் கிளை 5 கிளைகளைப் பரப்பி செழிப்புற்றுத் திகழும் கோலம், தமிழிலக்கியம், எந்த இடுக்கண் ஏற்பட்டாலும் இங்கு நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையொளியைப் பரப்புகின்றது
இலங்கை சிவபூமி, சிவபக்தனான இராவணன் ஆண்ட மண். இதன் சிகரமான யாழ்ப்பாணத்தில் கந்தபுராண கலாசாரமேநிலவுகிறது. திருமாலின் அவதாரமான இராமகாதை வைஷ்ணவஞ் சார்ந்தது என்றொரு கருத்து நீண்டகாலமாக நிலவி வந்தது. அதனால் ஆலயங்களில் கம்பராமாயணம் படிக்கப் படுவதில்லை. இலக்கியரசனைக்காகப் பண்டிதர்கள் மட்டத்திலே வகுப்புகள் நடந்தன. 19 ஆம் நூற்றாண்டிலேயே இப்பழக்கம் தொடங்கி விட்டது. சைவமறுமலர்ச்சியாளராக விளங்கிய ஆறுமுகநாவலர் அவர்களின் மருமகனான வித்துவ சிரோமணி பொன்னம்பலம்பிள்ளைக்கு கம்பனில் பெரும் ஈடுபாடு. இரவில்
கம்பன் மலர் - 2000

பலரையும் தமது இல்லத்தில் கூட்டி வைத்து கம்பராமாயணச் சுவையை ரசிக்கும்படி அதனை விளக்கிக் கூறி வந்தார்.
இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியை நோக்கி உயர் வகுப்பு பாட நூல்களில் கம்பராமாயணப் பகுதிகள் படிப்படியாக இடம் பெற்றன. நான் எஸ். எஸ். சி. படித்த நாட்களில் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களின் வீரமாநகரில், திழைத்துமகிழ்ந்தேன்.
அதற்கு அடுத்த கட்டமாக, நான் இராமாயணச் சுவையிலும் இலக்கியரசனையிலும் ஆழ்ந்து புளகாங்கிதம் அடைந்தது இலங்கைக் கம்பன் கழகம் நல்லூரில் நடத்திய கம்பன் விழாக்களில் தான்.
1981 மே மாசம் அப்போது கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் வார இறுதி விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தேன். எனது வீட்டை ஒட்டினாற் போல இருந்த தெருவால், ஆனைக்கோட்டை, மானிப்பாய், சுதுமலை, சங்கானை, சித்தன்கேணி, காரைநகர் போன்ற ஊர்களிலிருந்து மக்கள் கால் நடையில், சைக்கிள்களில், கார்களில் எனச் சென்று கொண்டிருந்தார்கள்.
நல்லூர்க் கந்தசாமி கோவில் விசேட திருவிழா நாட்களில் தான் அவ்வாறு மக்கள் கூட்டமாகச் செல்வதைக் கண்டிருக்கிறேன்.
“கம்பன் விழாவுக்குச் சனங்கள் புறப்பட்டுப் போகினம். கொஞ்சம் பொறுத்து நாங்களும் போவமே?” பயணக்களைப்பில் இருந்த எனக்கு, எனது துணைவி கூறிய போது தான், கம்பன் விழா நடைபெற இருப்பது பற்றி புகைவண்டியில் அன்று படித்தது நினைவுக்கு வந்தது.
அரசியல் கூட்டங்களுக்குப் பணம் கொடுத்து ஆட்களைச் சேர்ப்பதை அறிந்திருக்கிறேன். ஒர் இலக்கிய விழாவுக்கு இவ்வளவு நேரகாலத்துடன் பெரிய எண்ணிக்கையில் மக்கள் செல்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
நானும் மனைவியும் விழா நடைபெற்ற நல்லை ஆதீன மண்டபத்துக்குச் சென்ற பொழுது, நான் பிரமித்துப் போனேன். நல்லூர்த் தேர்த்திருவிழா போல ஜனத்திரள் மண்டபத்திற்குள் சென்று உட்காரலாம் என நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை. முன்னாலுள்ள தெரு, நல்லூர் ஆலய மேற்கு வீதி எங்குமே ஜனக்கூட்டம்
"அறம் வெல்லும் என்ற கம்பன் அடியினை நினைக்க நெஞ்சில்;
நகைவரும்
நாணம் தோன்றும்
வெகுளி பொங்கும்
வேதனை மிகுந்து நிற்கும்
சலிப்பே தோன்றும்
உரம் வரும்”
214

Page 231
என்னும் தலைப்பில் நடைபெற்ற அக்கவியரங்கில், கவிஞர் சோ. பத்மநாதன், புதுவை இரத்தினதுரை, கல்வயல் குமாரசாமி, முருகையன், ச. வே. பஞ்சாட்சரம் முதலியோரின் கவிதைகள் ஈழத்தமிழினத்தின் இழிநிலையை உணர்ச்சியுடன் படம் பிடித்துக் காட்டின.
அடுத்து, பட்டிமண்டபம். மக்கள் மத்தியில் புதிய உற்சாகமான எதிர்பார்ப்பு:
“இராமன் பால் விஞ்சிய அன்பு கொண்டவன் இலக்குவனா? அனுமனா? குகனா? தலைமை இ.ஜெயராஜ்
வாதிட்டவர்கள் : திருநந்தகுமார், சிவகுமாரன், குமாரதாசன்
தலையில் குடுமியுடன் தடித்த உடம்புகொண்ட ஜெயராஜ் பேச எழுந்ததும், யாரடா இந்த ஐயர்ப் பெடியன்? என எனக்குள் எழுந்த கேள்வி, அவரின் கணிரென்ற கம்பீரமான தெளிவான முன்னுரையில் கரைந்து போனது. மூவரின் காரசாரமான விவாதத்தைக் கண்டு தமிழிலக்கியத்தை வழி நடத்த ஒரு புதிய தலைமுறை உருவாகி விட்டது என்ற எண்ணம் மனதில் இறுக்கமாக விழுந்தது.
“ஒழிவு மறைவாகக் குடிப்பதிலும், சைக்கிளில் சீழ்காய் அடிச்சுக் கொண்டு, பெட்டைகளைத் துரத்துவதிலும் திரிகிற இந்தக் காலப் பெடியங்கள் மத்தியில், இந்தப் பெடியள் இப்படிப் பெரிய விசயத்தை சோக்காகக் செய்திட்டாங்கள்”
எனக்கு அருகில், சுருட்டுப் புகைத்துக் கொண்டு நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டு நின்ற வயது போன ஒருவர் தமக்கு அருகில் நின்றவரிடம் கூறிச் சந்தோஷப்பட்டார்.
அந்த 3 நாள் விழாவிலும் இந்த இளைஞர்களுக்குக் கிட்டவே நான் நெருங்கமுடியவில்லை. காலில் சக்கரம் பூட்டியவர்களைப் போல கடமையுணர்வில் எடுத்தபணியை வெற்றியாக நடத்தி முடிக்க வேண்டுமென உணவு, உறக்கம் முதலியவற்றைமறந்துசுறுசுறுப்பாக உழைப்பிலே மூழ்கியிருந்தார்கள். விழாவைப்பார்வையிடச் செல்பவர்கள் அதன் சிறப்புகளைப்பார்த்துக் கைதட்டி மகிழ்வார்கள். அதனை நடத்துபவர்களுடைய சிரமம், எதிர் நோக்குகின்ற நெருக்கடிகள், வெளியில் பார்வையாளர்களாகச் செல்பவர்களுக்குத் தெரியாது.
"கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்” என்ற குறிக்கோளுடன் செயலில் இறங்கிய இவ்விளைஞர்களிடம் உள்ள பணிவும், அர்ப்பணிப்பான செயற்பாடும் எவரையும் கவரும் தன்மை கொண்டவை. தமிழில் ஈடோ இணையோ இல்லாத கம்ப இராமாயண காவியத்துக்கும் அதனை ஆக்கிய கவிஞனுக்கும் விழா எடுப்பதன் மூலம்,தமிழுக்கும் தமிழினத்துக்கும் இலங்கையில்
அகில இலங்கைக் கம்பன் கழகம்

புத்துணர்ச்சியூட்ட வேண்டும்; அப்பணியில் அனைவரையும் ஓரணியில் கொண்டுவர வேண்டும் என்பதே இவர்களின் இதயதாகமாக இருந்தது என்பதனைப் பின்னர் நடைபெற்ற கம்பன் விழாக்களில் என்னால் நன்குணர முடிந்தது.
மரபு இலக்கிய அறிஞர்கள், புத்திலக்கிய கர்த்தாக்கள், பல்கலைக்கழகக் கல்விமான்கள், இசை மற்றும் நாடகத்துறை வல்லார்களென பலதிறத்தாரையும் மதித்து, கம்பன் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தனர்.
கருத்தரங்கு, ஆய்வரங்கு, ஐயந்தெளி அரங்கு, சிறப்புரை போன்ற நிகழ்ச்சிகளில் மூதறிஞர்கட்கு முன்னுரிமை அளித்தது போன்று, கவியரங்கு, விவாத அரங்கு, இளைஞர் அரங்கு, சுழலும் சொற்போர், வழக்காடுமன்றம், பட்டிமண்டபம் முதலிய புதிய கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளினூடாக, ஆற்றலுள்ள இளைஞர்களை ஊக்குவித்து, சிறந்த புதிய தலைமுறை இலக்கியப் பேச்சாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கிய பெருமை இலங்கைக் கம்பன் கழகத்துக்கே உரியது என்பது மறைக்க முடியாத உண்மை.
பண்டைய இலக்கியமாகிய கம்பராமாயணத்தின் கர்த்தாவான கம்பனுக்கு எடுக்கும் விழாக்களில், மரபிலக்கியப் புலவர்களைப் பாராட்டிப் பரிசும் கெளரவமும் வழங்கும் அதே மேடையில், புத்திலக்கியத்தில் புலமை மிக்காரையும் பாராட்டிக் கெளரவித்து வரும் இக்கழகத்தினரின் பரந்த விரிந்த மனப்பாங்கைப் பாராட்டாமலிருக்க முடியாது.
பேனாவினால் எழுதுவது, குறிப்பிட்ட எண்ணிக்கையான வாசகர்களை மட்டுமே சென்றடைகின்றது. நாவன்மை மிக்க பேச்சாளனின் கருத்துக்களோவெனில், வாசிக்கமுடியாத பல்லாயிரம் மக்களிடம் சென்றடைகின்றன என்பதற்குச் சான்றாக கம்பவாரிதியின் உரைகளைக் குறிப்பிடலாம். மணித்தியாலக் கணக்கில் மக்களை அசையாமல் ஒரே இடத்தில் உட்கார வைத்திருந்த அவரின் பேச்சாற்றலைச் சில ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோணமலை பத்திரகாளி அம்மன் ஆலயவிழாவில் என்னால் நேரில் காணமுடிந்தது. இந்தவரிசையில் சிவகுமாரன், நந்தகுமார், குமாரதாசன், ஆறுதிருமுருகன் முதலியோரையும் குறிப்பிட வேண்டும். இவர்களின் பாதையில் இளைஞர்களான சிவசங்கர், பூரீபிரசாந்தன் என்போரும் முன்னணி இலக்கியப் பேச்சாளர்களாக வளர்ச்சிபெற்று வருவதனை இன்று அவதானிக்க முடிகின்றது.
நான் சிறுவனாக இருந்த நாட்களில் எமது ஊர்க் கோவில்களில் 'சின்ன மேளக் கச்சேரி, என மேளக் கச்சேரிக்குப்பிறகு ஒரு தமாஷான நிகழ்ச்சி நடைபெறும். இந்தியாவிலிருந்து, சில பெண்களைக் கூட்டி வந்து, கொச்சைப் பாடல்களைப் பாடவைத்து, விரசமாக உடலை நெளித்து ஆடல் என்ற பெயரில் கூத்தடிப்பார்கள். ஆடவும் தெரியாது;
215

Page 232
அவர்களுக்குப்பாடவும் தெரியாது. அரிதாரம் அப்பியமுகத்தோடு அவர்களின் தாளம் தப்பிய ஆட்டம், பக்தி உணர்வுக்குப் பதிலாக, விரசஎண்ணங்களையே தூண்டிவிடும். ஒருபடியாக அவை ஒய்ந்து போன நிலைமையில், கானமயிலாடக் கண்டிருந்த வான் கோழிகள் போல, சில காலத்துக்கு முன்னர், கோல உரையாடல், பட்டிமண்டபம், வழக்காடு மன்றம் எனச் சொல்லிக் கொண்டு, தென்னகத்தின் மூன்றாந்தரப் பேச்சாளர்கள் இங்குவந்து இரட்டை அர்த்தங் கொண்ட வசனங்கள் பேசி அடித்த கும்மாளங்கள் விரைவிலேயே வெடித்துப் போயின. காரணம்?
அந்த இறக்குமதிப் பேச்சாளர்களின் நிகழ்ச்சிகளிலும் பார்க்க இலங்கைக் கம்பன் கழகத்தினரின் இந்நிகழ்ச்சிகள் பலமடங்கு உயர்வானவையாகவும், இலக்கியக் காத்திரமானவையாகவும், பண்பு மிகுந்தனவாகவும், பயனுள்ளதானவையாகவும், அர்த்தபுஷ்டியானவையாகவும் நடத்தப் பெற்றமையை கொழும்பிலும் வெளியூர்களிலும் ரசித்து மகிழ்ந்த மக்கள், அங்கிருந்து பணம் பண்ண” வந்தவர்களை வெறுத்து ஒதுக்கி விட்டனர்.
பட்டி மண்டபம், வழக்காடு மன்றம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு புதிய வீச்சையும், புதிய பரிமாணத்தையும் இலங்கையில் ஏற்படுத்திய பெருமை இலங்கைக் கம்பன் கழகத்துக்கு உரியது. அதனால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆலயங்கள் முதலிய நிறுவனங்களிற் பெரிதும் ஊக்குவித்து வளர்க்கப்படும் கலா வடிவங்களாக இவை பரிணமித்துவிட்டதைக் காணமுடிகின்றது.
கம்பன் விழா அழைப்பிதழை விரித்தாலே அதில் இலக்கிய மணமும் எழிலும் கமழும். அதனைப் பெற்றுக் கொள்வதைப் பெரியகெளரவமாகக் கருதுபவர்கள் பலர்; பெற்றுக் கொண்டவர்களோ அதனைப் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாப்பதில் எடுத்துக் கொள்ளும் அக்கறை கொஞ்சநஞ்சமல்ல.
விழாவுக்குச் செல்லும் முக்கியஸ்தர்களுக்கும் நிகழ்ச்சிகளிற் பங்கேற்போருக்கும் உணவு வேளைக்குச் சிறிது முன்பதாக, சிறிய கையடக்கமான அழகிய துண்டுக் கடிதம் ஒன்று கைக்கு வந்து சேரும். அது இலக்கிய நயமிகு வெண்பா மூலம்
கம்பன் மலர் - 2000

உணவருந்த வருமாறு பல்வியமாக கோரும் அழைப்பு. மதிய உணவுக்கு, இரவு உணவுக்கு என ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான இனிய கவிதை அழைப்புகள்!
கம்பன் கழகத்தின் அழைப்புகள், மற்றும், பிரசுரங்கள், விழா மேடை அமைப்பு, நிகழ்ச்சிகள் என எதை எடுத்துக் கொண்டாலும், அதில் கலைஅழகும் இலக்கிய மணமும் விரவி நிற்பதைக் காணலாம். ஓயாத உழைப்பு, எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையுடனான துணிவு, சரியான வழி நடத்தல், அர்ப்பணிப்பு முதலியவையே கம்பன் கழகத்தோரின் அச்சாணிகளாக விளங்குகின்றன.
கொழும்புக் கம்பன் கழகத்தின் செயற்பாடுகள் வேகம் பெறுவதற்குமுன், கொழும்பு, மலையகம் முதலிய பகுதிகளில், தமிழகத்துப் பேச்சாளர்களை அழைத்தால் மட்டுமே விழாக்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்ற மாயை நிலைமை நிலவியது. தமிழகத்திலிருந்து புலமை மிக்கவர்களை அழைப்பதில் தவறொன்றுமில்லை. அப்படி வருபவர்கள் ஈழத்தைக் கலை இலக்கியப் பாலைவனம் என நினைப்பவர்களாக இருக்கக் கூடாது. ஈழத்திலக்கியத்தை நேகிக்கின்ற, இங்கும் ஆற்றல் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்துக் கொண்ட பல அறிஞர்களை இலங்கைக் கம்பன் கழகம் தனது விழா நிகழ்ச்சிகளிற் பங்கேற்கச் செய்ததுடன், இங்குள்ள புதிய தலைமுறையின் ஆற்றலையும் வள்ர்ச்சியையும் துலாம்பரமாக அவர்களைத் தரிசிக்க வைத்தது. வியந்து போன தமிழக அறிஞர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் விழாக்களைச் சோபிக்க வைப்பதற்காக இங்கிருந்து பேச்சாளர்களையும் கவிஞர்களையும் அழைப்பது இப்போது வழக்கமாகிவிட்டது
எத்தனையோ பேர், பல தடவைகளில் முயன்றும், இடை நடுவில் நின்றுவிட்ட, ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான இருவழி இலக்கிய உறவுப் பாலத்தை இறுக்கமாக, கெட்டியாகக் கட்டியெழுப்ப இலங்கைக் கம்பன் கழகத்தினால் மட்டுமே சாத்தியமாயிற்று.
கழகம் பல்லாண்டு வாழ்க!
216

Page 233
மது நாட்டில் கம்பன் ச தனித்துவமானதுமாகும். ெ அது இசைத்துறைக்காற்றிய ஆற்ற முடியாத பல பணிகை
அகில இலங்கைக் கம்பன் கழகம் 1 மண்டபத்தில் தன் ஆரம்ப கால விழாக்கள் இன்றுபோல் வருவதில்லை. அது ஆரம்ப வி கூட்டம் நிச்சயம் அதிகம் இருக்கும். அக் தொடங்கியதற்கான சான்று இது.
மூன்றாவதோ நான்காவதோ ஞாப இராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்தார் நூற்றாண்டில் நடந்த விழா. பாரதியின் ஞா அமைத்திருந்தது. அந்நிகழ்ச்சியில் திரும பொன்சுந்தரலிங்கம் ஆகிய இசைக்கலை பாடல்களையே பாடினர். அனைத்துக் கச்ே இராதாகிருஷ்ணன் பாராட்டுரை வழங்கினா தெரிந்தளவில் இதுதான் கம்பன்கழகம் எடு
இதுதவிர கம்பன் விழாக்களில் ஒவ் மேதைகள் இணைந்து ஒரு மணித்தியாலம் ம பேணப்பட்டு வருகின்றது. மற்றைய விழாக் மண்டபம் நிரம்பிவிடும். அங்குள்ள சபை இரசிக்கப்படும். பிற்காலத்தில் நல்லூரில் கம்ப ஊர்வலத்தில் யாழ்ப்பாணத்தின் அத்தனை வாசிக்கும் காட்சி கண்கொள்ளாக்காட்சி. இசை அறிஞர்களும் மதிக்கப்பட்டார்கள். 19 என்.கே.பத்மநாதன் அவர்கள் கலாசூரி விரு பாராட்டு நடைபெற்றது. பொன்னாடை மலி காட்சியளிக்க வைத்து கம்பன் கழகம் எடு பிற்காலத்தில் கம்பன் கழகம் நாதஸ்வர வித்வ
 
 

Fg5g.I ந்துறை வளர்ச்சியில்
தடம்பதித்த ÖUGö கழகம்
நாவாலியூர் நா. சச்சிதானந்தன்
5ழகம் ஆற்றும் கலைப்பணி முக்கியமானது மாத்திரமன்றி வெளிப்படையாய் கம்பன் கழகம் ஓர் இயல்மன்றமாய்த் தோன்றினும் ப பணி அபரிமிதமானது. இசை மன்றங்கள் கூட இசைத்துறைக்கு ளை அது ஆற்றியுள்ளது எனக்கூறின் அது உயர்வு நவிற்சி ஆகாது.
1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நல்லை ஞானசம்பந்தர் ஆதீன ளை நடாத்தியது. அப்போதெல்லாம் கம்பன் விழாவுக்கு கூட்டம் பளர்ச்சிக் காலம். ஆனால் முதல் விழாவைவிட அடுத்த விழாவில் க் காலத்திலேயே கம்பன் கழக நிகழ்ச்சிகள் மக்களைக் கவரத்
கமில்லை - ஒரு கம்பன் விழாவுக்கு தமிழகத்திலிருந்து பேராசிரியர்
ஆதீனத்தில் இருக்க இடம் இல்லாமல் கூட்டம். அது பாரதி பகமாக ஒரு மாலை நிகழ்ச்சியை இசையரங்காக கம்பன் கழகம் தி சத்தியபாமா இராஜலிங்கம், திரு. பரம் தில்லைராஜா, திரு. ஞர்களின் கச்சேரிகள் நிகழ்ந்தன. அனைவரும் தனியே பாரதி சரிகளும் அற்புதமாய் அமைந்தன. நிகழ்ச்சி முடிவில் பேராசிரியர் ர். அவ்வுரையும் இசைக்கச்சேரிபோல் இனிமை பயந்தது. எனக்குத் த்த முதல் இசை நிகழ்ச்சி.
வோர் நாள் மாலையிலும் யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வர தவில் ங்கள இசை வழங்குவது அன்றுதொட்டு இன்றுவரை ஓர் மரபாகவே களைப் போலல்லாமல் கம்பன் விழாக்களில் இம்மங்கள இசைக்கே பால் இயல் நிகழ்ச்சிபோல் இவ்விசை நிகழ்ச்சியும் தரம் அறிந்து பன் கோட்டம் அமைந்த பிறகு முதல் நாள் விழாவில் கம்பன் உருவப்பட பிரபல நாதஸ்வர தவில் வித்துவான்களும் வரிசையாய் நின்று கம்பன் கழகத்தைப் பொறுத்தவரை இயல் அறிஞர்களைப் போலவே 84 என்று ஞாபகம், யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான் து பெற்றதையொட்டி கம்பன் விழாவில் ஒர் நாள் அவருக்குப் பெரும் ர்முடி முதலியவை சூட்டி அவரை நாதஸ்வரச் சக்கரவர்த்தியாகக் த்த பாராட்டு இன்னும் என் கண்ணுள் நிற்கிறது. அதுபோலவே பான்கள் கோண்டாவில் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களின்
27

Page 234
வெள்ளி விழாவை யாழ்ப்பாணம் வியக்கும் வண்ணம் முன்னின்று நடத்தியதும் காரை நகரில் தவில் வித்துவான் சின்னராசாவுக்குப் பாராட்டு விழாவை முன்னின்று நடத்தியதும், சாவகச்சேரி நாதஸ்வர வித்வான் பஞ்சாபிகேசனுக்கு இசைப்பேரறிஞர் விருதளித்து விழாவெடுத்துப் பாராட்டியதும் கம்பன் கழகத்திற்கும் இசை வேளாளர்களுக்கும் இருந்த நெருக்கத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகள்.
இதன்பின் நல்லூர்க்கோயில் வீதியில் கம்பன் கோட்டம் அமைக்கப்பட்டபின் 1991இல் கம்பன் கோட்டத்து மேல்மண்டபத்தில் பூரீதியாகராஜ சுவாமிகள் இசை ஆராதனையை முதற்றரமாக நடாத்தியது. மிகச் சிறப்பாக இவ்விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தின் பிரபல நாதஸ்வர தவில் வித்துவான்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் வாசித்ததும் பின் இசைக்கலைஞர்கள் இணைந்து ஆராதனை நிகழ்த்தியதும் , மண்டபம் கொள்ளாமல் கூட்டம் நிறைந்து வழிந்ததும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள். இந்நிகழ்ச்சி காலையிலிருந்துமாலைவரை நிகழ்ந்தது. மதியம் விழாவில் கலந்து கொண்ட கலைஞர்கள் அனைவர்க்கும் இந்தியப் பாணியில் வழங்கப்பட்ட தயிர்ச்சாதம் முதலிய உணவுகள் யாழ்ப்பாண இசை இரசிகர்களை திருவையாறுக்கே அழைத்துச் சென்றது எனலாம். இத்தியாகராஜர் ஆராதனை பின் 1991 இலும் 1993 இலும் 1994இலும் தொடர்ந்து நிகழ்ந்தது. 1995இல் விழா நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு நாட்டுச் சூழ்நிலை காரணமாக நடைபெறாமற்போயிற்று.
இத்தியாகராஜ சுவாமி ஆராதனை விழாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு மூத்த இசைக்கலைஞரைக் கெளரவித்து 'இசைப் பேரறிஞர்' என்ற விருதும் தங்கப்பதக்கமும் அளித்து கம்பன் கழகம் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது. 1992 இல் நாதஸ்வர வித்துவான் கே. எம். பஞ்சாபிகேசன் அவர்களும் 1993 இல் சங்கீத வித்துவான் கே. ஆர். நடராஜா அவர்களும் 1994இல் வயலின் வித்துவான் வி. கே. குமாசுவாமி அவர்களும் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டனர். 1995 இல் விருதுக்காக சங்கீத பூசணம் ச. பாலசிங்கம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். விழாத்தடைப்பட்டதால் விருது வழங்கும் வைபவம் நடைபெறாமற் போனது.
விழா அமைப்பதில் கம்பன் கழத்திற்கென ஒரு தனிப்பாணி உண்டு. மேற்சொன்ன இசை விழாக்களும் அவர்களின் தனித்துவமான பாணியில் மிகச் சிறப்பாக நிகழ்த்தப்பட்டன. பஞ்சரத்தினத்தில் இறுதிக் கீர்த்தனையான பூரீராக ‘எந்தரோ கீர்த்தனை பாடும்போது தியாகராஜ கவாமிகளின் படத்திற்கும் பாடும் கலைஞர்களுக்கும் சுற்றிநின்று பூமாரி சொரிந்ததும் கெளரவிக்கப்படும் கலைஞர் குடை, கொடி, ஆலவட்டங்களுடன் அழைத்து வரப்பட்டு சிம்மாசனத்தில் இருத்தி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் கெளரவிக்கப்பட்டதும் இன்றும் நெஞ்சில் நிழலாடும் காட்சிகள். இவ்விழாவில் பஞ்ச ரத்தினங்களையும் இசைக்க வேண்டும் எனும் கம்பன் கழகத்தாரின் வேண்டுகோளுக்கிசைந்து பிரபல நாதஸ்வர வித்வான்களும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து ஒரிரு கீர்த்தனைகளை பாடம்
கம்பன் மலர் - 2000

பண்ணியதும் இவர்களின் இசைவிழாவின் சாதனைகள்.
இவ்விசையாராதனை விழாவைத்தவிர வேறு சில தனிப்பட்ட இசை நிகழ்ச்சிகளையும் அகில இலங்கைக் கம்பன் கழகம் நடத்தி வந்துள்ளது. 1991 இல் நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கம்பன்கோட்ட மேலரங்கில் தொடர்ந்து பதினைந்து நாட்கள் இவர்கள் நடத்திய இசைநிகழ்ச்சியில் பல அற்புதமான இசைக்கச்சேரிகள் நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் சபைநிறைய இசைக் கலைஞர்களே சேர்ந்திருப்பதால் பாடுவோர் மிகுந்த ஆயத்த நிலையோடுதான் மேடையேறுவர். இங்கு பாடுவோரின் ஒரு கச்சேரி திறம்பட அமைந்துவிட்டால் அது யாழ்ப்பாணம் முழுவதும் பேசப்படும். அத்திருவிழாக் கச்சேரிகளில் சங்கீதபூசணம் எஸ்.கணபதிப்பிள்ளை அவர்களின் கச்சேரியும் எம். கே. பத்மநாதன், ஆர். இராதாகிருஷ்ணன் இணைந்து வாசித்த கெஞ்சிற்கச்சேரியும் எம். கே. பத்மநாதன், வி. கே. பஞ்சமூர்த்தி ஆகியோர் இணைந்து வாசித்த நாதஸ்வரக் கச்சேரியும் இன்றும் சிந்தை இனிக்கச் செய்பவை. இதுபோலவே 1994இல் அளவெட்டி எஸ். சிதம்பரநாதன் வாசித்த நாதஸ்வரக் கச்சேரியும் என்றும் மறக்க முடியாதது. அன்று அவர் வாசித்த தேனுகா இராக ஆலாபனையை இன்றுவரை நான் எங்கும் கேட்டதில்லை.
இயல்துறையில் கம்பன் கழகம் பல புதுமைகளைச் செய்தது போலவே இசைத்துறையிலும் பல புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ஒர் இசை ஆராதனையின் போது நாதஸ்வர வித்வான் என்.பி. நாகேந்திரன் அவர்களைக் கொண்டு வாய்ப்பாட்டுக் கச்சேரி ஒன்றினை நிகழ்த்தி புதுமை செய்தனர். பின் கொழும்பில் நடந்த ஒர் இசைவிழாவிலும் அளவெட்டி எம். பி. பாலகிருஷ்ணன் எம். பி. நாகேந்திரம் ஆகிய நாதஸ்வர வித்துவான்கள் இணைந்து பாடி இரசிகர்களை மகிழ்வித்தனர். மற்றுமொரு இசை ஆராதனையில் சங்கீத பூசணம் எஸ். கணபதிப்பிள்ளை எல். திலகநாயகம் போல் வி. இராமேஸ்வரன் ஆகிய மூன்று தலைமுறைப் பாடகர்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்ட கச்சேரியும் இரசிகர்களுக்கு விருந்தானது. அம்மூன்று வித்வான்களும் இராகங்களையும் கற்பனாசுரங்களையும் பகிர்ந்து பாடி அந்நிகழ்ச்சியைச் சிறப்புறச் செய்தனர். இவை இசைத்துறையில் கம்பன் கழகம் செய்த புதுமைகள்.
1995 இன் பின் அகில இலங்கைக் கம்பன் கழக உறுப்பினர்கள் கொழும்பு வந்தபின் அவர்கள் ஆதரவால் கொழும்புக் கம்பன் கழகம் சிறப்புற இயங்கத் தொடங்கியது. இங்கும் அவர்களின் இசைப்பணி தொடர்ந்தது. 1997, 1998, 1999 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் மார்கழி மாதத்தில் பத்துத் தினங்கள் ‘ழரீ இராமநாம கானாமிர்தம்' எனும் பெயரிலான இசைவேள்வியை தமிழக இசை விழாக்களைப் போலவே கொழும்புக் கம்பன் கழகம் நடாத்தியது. இவ்விழாவிற்கென அடிக்கப்பட்ட அழைப்பிதழ்களே அற்புதமானவை. இன்றும் இசை இரசிகர்கள் அவ்வழைப்பிதழைப் பொன்போற் பாதுகாத்து வருகின்றனர். கொழும்பு இசை விழாக்களில் இந்தியக் கலைஞர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டு இசைவிழாவில் தமிழகத்திலிருந்து வசந்தி சங்கரராமன்
218

Page 235
அவர்களும், சேஷகோபாலனின் மகன் கிருஷ்ணன் அவர்களும் பிரபல கிளாரிநெற் வித்துவான் எ. கே. சி. நடராஜன் அவர்களும் கலந்து கொண்டனர். 1999 ஆம் ஆண்டில் வசந்தி சங்கர ராமனும் பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி அவர்களும் பிரபல நாதஸ்வர வித்துவான் சேக்சின்னமெளலானா அவர்களின் பேரர்களான திரு. சேக்மகபூப்கபாணியூரீமதி காலிஷாபி மகபூப்தம்பதியரும் வருகை தந்தனர். இவர்களின் கச்சேரிகளை கொழும்பு இசை இரசிகர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
வேறுசில இசைக் கழகங்கள், கம்பன் கழகம் கம்பனையும் இராமாயணத்தையும் வைத்துக் கொள்ளட்டும். இசைத்துறைக்குள் அது ஏன் தலை நீட்டுகின்றது என்ற ரீதியில் அபிப்பிராயப்பட்டதும், முரண்பட்டதும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியவை. இத்தகு அபிப்பிராய பேதங்கள் தோன்றினாலும் அவற்றைப் பொருட்படுத்தாது பல சோதனைகளின் மத்தியிலும் தனது இசைப்பணியைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. முரண்பட்டவர்களையும் அணைத்து உள்வாங்குவதில் கம்பன் கழத்திற்கு நிகர் கம்பன் கழகமே. அவ்வகையில் முரண்பட்ட பல கலைஞர்களையும் கொழும்பு இசைவிழாக்களில் இணைத்துக் கொண்டு கம்பன் கழகம் இசை இரசிகர்களை மகிழ்வித்தது. எமது கலாச்சாரத்தைப் பேணி வளர்க்க யாழ்ப்பாணத்திலிருந்தாலும் கொழும்பிலிருந்தாலும் தாமே முன்வந்து பணியாற்றும் கம்பன் கழகம் என்றென்றுமே பாராட்டப்பட வேண்டியது. எந்தக் கம்பனையும் எந்த ராமாயணத்தையும் கம்பன் கழகம் பாராட்டி விழா எடுத்து வருகிறதோ அதே கம்பன் வாயிலாக அதே இராமாயணத்தில் இசை பற்றியும் இசைக்கருவிகள் பற்றியும் ஏராளமான குறிப்புகளையும் நாம் காண்கிறோம். அவற்றின் இசையின் தன்மையையும், அதன் முக்கியத்துவத்தையும் மாத்திரமன்றி, இசை எமது பண்பாட்டில் எத்தகைய உயர்வான நிலையில் வைக்கப்பட்டிருந்ததென்பதையும் நாம் அறிகிறோம்.
கம்பன் கழகம் இசையை வளர்ப்பதில் இத்துணை ஆர்வங்காட்டுவதற்கு வேறெந்தக் காரணங்களுக்கும் மேலாக இந்த ஒரு காரணமே போதுமானதென்று கூறலாம். ஒரு இசைக்கழகம்தான் இசை விழாக்களைக் கொண்டாட வேண்டும் என்ற அபிப்பிராயம் சரியானதல்ல என்பது எமது அபிப்பிராயமாகும்.
யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வந்தபோது அந்த மேடையில் இசைக்கச்சேரி செய்யாத கலைஞர் எவரும் இல்லை எனக் கூறலாம். சங்கீத பூஷணம் திலகநாயகம் போல் அவர்களுக்கும் சங்கீத பூஷணம் பொன். சுந்தரலிங்கம் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் கம்பன் கழகம் பெரும் பாராட்டு விழாக்களை நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மிகச் சாதாரண தரத்திலுள்ள கலைஞர் களையும் புறக்கணிக்காது அவர்களுக்கும் சந்தர்ப்பம் அளித்து அவர்களுடைய இசை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பாரபட்சமற்ற ஒரு நிறுவனமாக கம்பன் கழகம் தன்னை இனங்காட்டி வருவதை யாவரும் அறிவர். கம்பன்கழக மேடையில் இசைக்கச்சேரி செய்தால் அது தமக்கு ஓர் அங்கீகாரம் எனக் கலைஞர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு கண்ணியமும் கட்டுப்பாடும் கலையம்சமும் காத்து கம்பன் கழகத்தின் இசையரங்கங்கள் திகழ்ந்தன.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

கம்பன் கழகத்தாரின் உயிர் மூச்சு சங்கீதமே என்பதை இன்னும் சிலர் உணராமல் இருக்கக்கூடும். அவர்கள் அவ்வுண்மையை உணரும் காலம் வெகுதூரத்திலில்லை. நல்ல சங்கீதம் எங்கிருந்தாலும் அதைத் தேடிப்பிடித்து மேடையேற்றுவது கம்பன் கழகத்தின் உண்மையிசைத்தொண்டிற்கோர் சான்று.
தமது இசையார்வத்தினால் கம்பன்கழக உறுப்பினர் பலரும் திருமதி. சத்தியபாமா இராஜலிங்கம் அவர்களிடமும் திரு. வேலாயுதபிள்ளை அவர்களிடமும் இசையை முறையாகப் பயின்றனர். கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் பிரபலமான பின்பும் வடமாகாண சங்கீத சபையின் நாலந்தரப் பரீட்சை வரையும் தோற்றி சித்தியெய்தினார். அவரும் கம்பன் கழகப் பொருளாளரான டாக்டர். கே. பூரீ. இரட்ணகுமார் அவர்களும் (இவர் பிரபல வயலின் வித்துவான் வி.கே. குமாசுவாமி அவர்களின் மகன் ஆவார்) ஒருமுறை இளங்கலைஞர் மன்றத்தின் இசைவிழாவில் இணைந்து பாடி சபையோரைத் திகைப்படையச் செய்தார்கள். இந்த இசைப்பின்னணியே கம்பன் கழகத்தினரின் இசைப் பணிக்குத் தூண்டுகோலாய் அமைந்ததுபோலும்,
இது ஒருபுறம் இருக்க, இசை வளர்க்கும் பணியில் கம்பன் கழகம் இன்னும் சில அம்சங்களை காலக்கிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நாம் எண்ணுகின்றோம். குறிப்பாக எமது நாட்டின் இசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய இசைச் சொற்பொழிவுத்துறையை மேலும் அவர்கள் வளர்க்க வேண்டும் நம்நாட்டில் நலிந்து வரும் இக்கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் பலர் இந்தியாவில் உள்ளனர். அவர்களை இசை விழா நிகழ்ச்சியில் இணைத்துக் கொண்டால் அதனால் பயன் விளையும் என எண்ணுகிறேன்.
அதேபோன்று நாட்டியமும் இசையைத் துணையாகக் கொண்டு இயங்குவதால் அதனையும் வளர்க்கக் கம்பன் கழகம் முன்வரவேண்டும். பல நாட்டிய நிகழ்ச்சிகளை இசைவிழாவில் இணைத்துக் கொள்ளலாம். அதைவிட இயலுக்கும் இசைக்கும் விழாக்கள் எடுக்கும் கம்பன் கழகம் நாட்டியத்திற்கென ஒரு தனி விழாவை எடுப்பதும் பொருத்தமாய் இருக்கும் என்பது என் கருத்து. வருங்காலத்தில் அவர்கள் இம்முயற்சியை எடுப்பார்கள் என நம்புவோம்.
முன்பு யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் சங்கீத பூஷணம் எல். திலகநாயகம் போல் அவர்களைக் கொண்டு ஒர் இசை ஆய்வு நிகழ்ச்சியினை நடத்தியது. அந்நிகழ்ச்சி இசை மாணவர்களுக்காக பெரிதும் பயனுள்ளதாய் அமைந்தது. அது போன்ற நிகழ்ச்சிகளை நம்நாட்டு, தமிழ்நாட்டு இசைக்கலைஞர்களைக் கொண்டு தொடர்ந்து நடாத்தினால் இசைத்துறை நம்நாட்டில் மேலும் வளரும் என்பது திண்ணம்.
இயல் மன்றமாக இருந்தபோதும் கம்பன் கழகத்தின் இசைப்பணி ஈழத்தின் இசை வரலாற்றில் ஓர் தனித்த இடத்தைப் பிடித்துள்ளதையாரும் மறுக்கமாட்டார்கள். அவர்கள் இசைப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
219

Page 236
ண்டு தோறும் அகில இ ஆர்வலர்களுக்குத் தனி ஆ புளசிப்புடன் அரங்கைச் சுற்
s్యళ్ల நடைமுறைப் படுத்தும் வல்லுநர் குழு இந்த
அரங்கின் முக்கிய களம் மேடை, பே அமரும் பீடமென, அழகு ஒழுக, அமைப்பர் பீடங்கள், அரசர் காலத்து புலவர் பெருமக் அமைப்பு நுட்பங்கள் தனிக் கவர்ச்சியூட்டும்
கேட்போர் கூடத்து மக்கள் புத்து தொடங்குவர். அரங்கக் கலை நிகழ்வை கம்பன் கழகத்துக்கு நிகர் அதுவே. உள திருக்கூட்டம்.
"அன்புடன் அழைப்போம் அரங் வீட்டிற்குத் திருப்பி அனுப்புவோம்?” என்ற வரம்பு நின்று நிகழ்வுகளை நடாத்துவோட் தலையெடுக்க விடமாட்டோம்” என்று தொ அது ஒரு இயற்றமிழை முன்னெடுக்கும் அணி சைவ சித்தாந்த சமாஜம், சேக்கிழார் மன்ற பேச்சுக்களுக்கும் ஆய்வுகளுக்கும் முக்கிய விரவிய நிகழ்வுகளாக, குறிப்பாக நாடக கம்பன் கழகத்தினர். அமைப்பாளர் கம்பவா கலையின் அடிமுடி உணர்ந்தவராக, ஆளுை துணை நின்றன.
வரவேற்புரை, தலைமையுரை போ நிற்கும். பல்துறை வல்லுநர்களைத் தத்தம் ! கட்டுப்பாட்டுடன் நிகழ்த்தப்படுதல் மூலம் அமையும். தனித்தவில் என்பது போலத்
 
 

பன் கழகமும் க வளர்ச்சியும்
கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை
லங்கைக் கம்பன் கழகம் மகாநாடு நடத்துகிறது என்றால், னந்தம்; குதூகலம். றி மொய்க்கிறார்கள். மேடைக்கலையை அற்புதமாக ஆராய்ந்து
க் கம்பன் கழகம்.
படை அமைப்பு:தமிழ்ப்பண்பாட்டைப்பிரதிபலிக்கும் வகை, மணமக்கள் . தலைவர் முதல் பேச்சாளர்கள் வரை அமர்வதற்கு என அமைக்கும் கள் அணியணியாய் வீற்றிருக்கும் கோலம் காட்டி நிற்கும். ஒலி ஒலி
னர்ச்சியுடன், ஒரு வித பரவசநிலையில் நிகழ்வோட்டங்களை நுகரத் நயக்கப் பெரும் ஊக்கியாக சூழலை அமைப்பதில் அகில இலங்கைக் நூலை நுட்பமாகக் கரைத்துக் குடித்த வல்லுநர்கள் தான் இந்தத்
கிற்கு ஆசறுதியான அறுவடையைச் சுவைஞர்கள் பெற வைத்தே இலட்சியத்தில் உயர்ந்து நிற்பவர்கள். “நேரம் என்றால் நேரம் என்ற ; கொடுப்பவற்றைக் கோணல் இன்றி வழங்குவோம்; ஏமாற்றநிழல் நிற்படுவர்கள் இந்தப் புத்திஜீவிகள் கூட்டம். கம்பன் கழகம் என்றால் மைப்புஎன்றே எண்ணுவோம். முன்னோடி நிறுவனங்களாய் இலங்கிய ம், சிலப்பதிகார மகாநாடு, நாவலர் சபை அனைத்துமே பேரறிஞர்கள் த்தும் கொடுத்தன. இந்த மரபு ஒட்டத்துக்குப் புறநடையாக முத்தமிழ் உத்திகளைப் பெய்து நிகழ்ச்சி நிரலமைத்து புதுமை செய்தவர்கள் ரிதி இ.ஜெயராஜ்கலைப்பிரியனாக, ஆர்வலனாக, தலைமை தாங்கும் மமிக்கவராக அமைந்தமையும் கம்பன் கழகத்தின் உச்ச வளர்ச்சிக்குத்
ன்ற உரைகள் ஆழமான விடயங்களை விளக்குவதாய் தரம் உயர்ந்து துறைசார்ந்த விடயங்கள் பற்றி உரை நிகழ்த்த வைப்பதன் மூலம் நேரக்
அனைத்துமே ஆரோக்கியமாக அறிவுச்சுடர் கொழுத்துவனவாக தனிப் பேச்சுகள் சபையில் எடுபடாது. சலிப்பையும் ஏற்படுத்தலாம் என
220

Page 237
உணர்ந்த கம்பன் கழகத்தினர் நிகழ்வோட்டத்தில் இருவர், மூவர், நால்வர், ஐவர் குரல்கள் ஒலிக்கும் வண்ணம் புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
கவியரங்கம் ஒரு குழுநிகழ்வு. தாம் தாம் யாத்த கவிதைகளைத் தாமே பல்வேறு பாணியில், ஒசை ஒழுக்கில், செப்புதல் நடையில் ஏதோ போட்டி போடுதல் போல கவிஞர்கள் பாடுவர். விடய ஞானமும் சுவைஞர்களுக்குப் பெருவிருந்தாகும்.
பட்டிமண்டபத்தில் ஒரு காத்திரமான பொருள் பற்றி ஒட்டியும் வெட்டியும் பேசுதல் இடம் பெறும். சூடேறும் போது விறு விறுப்பாக அமையும். இரு கோஷ்டிகள் பிரிந்து நின்று பேச்சுப்படுதலில் பொது மக்கள் இன்புறுவது ஊர்வழக்கம். இந்த உத்தியைப் பயன்படுத்தி சிக்கலான அம்சங்களை இலகுபடுத்தி கிரகிக்கும் வகை முன்வைப்பர்.
வழக்காடு மன்றம் கரகோஷங்கள் மத்தியில் மேடையேறும் நிகழ்வு. உடனுக்குடன் திடீர்திடீரென வாதப்பிரதி வாதங்கள் முன் வைக்கப்படும். நீதி மன்றத்தில் வழக்குகள் நடைபெறும் போது பொதுவாகவே சனக் கூட்டம் கூடும். பார்க்க கேட்க தனி இன்பம் தருவது. வழக்குகள் நடாத்தப்படும்முறை. சபையினரை நிகழ்விலே ஆழ்ந்து மூழ்க வைத்து தோய வைத்து அறிவூட்டல் செய்வர். ஒராட்டலுக்கு இங்கு இடமில்லை. உணர்ச்சியும் சிந்தனையும் போட்டி போட்டு உருளும். சபை நித்திரை தூங்காது.
மேலே குறிப்பிடப்பட்ட கவியரங்கம், பட்டி மண்டபம், வழக்காடு மன்றம் என்பன இயற்றமிழ் நிகழ்வுகளேயாயினும் மறைமுகமாக நாடகத் தன்மை உள்வாங்கப்பட்ட நிலையைக் காட்டுகின்றன. பேச்சுக்கலை நுட்ப திட்பம், தர்க்க சாஸ்திர வலு: மேலாக மதிநுட்பம், முன்வைக்கும் ஆற்றல் வளர்க்கப்படுகின்றன.
நாடக உத்திகளை மறைமுகமாகப் புகுத்தி வெற்றி நடைகண்ட கம்பன் கழகம் ஒரு கால கட்டத்தில் வெளிப்படையாகவே தெட்டத் தெளிவாக நாடகபாணியை அப்பட்டமாகக் கையாள முன் வந்தது.
56tflysly jL (One man's theatre) g6) isóir sió55Tsi (Couple acting) glyrics STL85th (One act play) 6T6öTp நாடகத்தின் பல்வேறு கூறுகளைத் முறையாக வளமாகப் பயன்படுத்தினர்.ழரீதயாளன் என்ற பட்டதாரி ஆசிரியர் கலாசார உத்தியோகஸ்தர் கூனியாகத் தனி நடிப்புச் செய்தார் ஒரு ஆண்மகன் பெண்பாத்திரத்தைச் செய்தல் கிள்ளுக் கீரை விடயமல்ல. ஒப்பனைப் பொருத்தம், வேடப் பொருத்தம், குரல் பொருத்தம் மூன்றும் முறையாகப் பொருந்தினாலே பாத்திரம் காத்திர உருப்பெறும். நடுநடுங்கிப் பேசி, ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரேமட்டத்தில் கோணத்தில் கூனலை நிலை நிறுத்தி அற்புதமாக நடித்தார். தனிநடிப்புOne mans theatreஜைஅகில உலகமும் உயர்தர உத்தியென கணிப்பீடு செய்துள்ளது.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

ஆண், பெண் பாத்திரம் தாங்கி நடித்த வகையில் யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி எஸ். சிவலிங்கராசா அவர்கள் (அப்போ சிரேஷ்ட விரிவுரையாளர்) சூர்ப்பனகைப் பாத்திரம் தாங்கி நடிக்க முன்வந்தார். அரக்கியாக அதுவும் ஆணை மயக்கி மாயாஜாலம் செய்யும் காமாந்தக் காரியாக நடித்தால் தனது சீடவர்க்கம், நண்பர்கள் பட்டம் கட்டி குட்டலாமே என்பதை விட, கலை இலக்கிய வளர்ச்சி தான் முக்கியம் என்ற இலட்சியத்துடன் நடித்தவர். கொடியவளாக அதே வேளை அழகியாக தழுக்கு நடையில் தோன்றி நடிக்க வேண்டும். நீண்ட மூக்கும் முழிகளும் தழுக்கு நடையும் மருட்ட முனையும் பெண்ணாகவே தோற்றம் தந்தது. ஒப்பனை வல்லுநர் பென்சமின் பரந்து விரிந்து மிக உயர்ந்த தனங்களை எப்படித்தான் உருவாக்கினரோ? வெக்கறை விட்டு இலட்சிய நோக்கில் இவர் போல் பல கற்றறிந்தோர் பங்கு கொண்டு குறிக்கோள் நிறைவுற வந்தார்களே, கொண்டு கூட்டினார்களே. இதுவே அகில இலங்கைக் கம்பன் கழகம் ஈட்டிய பெருவெற்றி.
இவர்கள் சந்தித்தால் என்ற நிகழ்வில் ஊரெழுஅரங்கில் சீதை என்ற பெண் பாத்திரமாகத் தோன்றி நடித்தவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள்.
முன்னர் குறிப்பிட்ட பெண்பாத்திரங்களை ஆண்கள் நடித்தனர். இந்த அரங்கில் ஒரு பேராசிரியரின் பாரியார் பங்கு கொண்டமை ஒரு சிறப்பம்சமெனலாம். துணிவுடமைக்கு இலக்கணமாய் இவரைக் குறிப்பிடலாம். பேச்சாற்றலும், நாடக நயப்பில் ஈடுபாடுமுள்ள இவர் சீதைப் பாத்திரத்தை உணர்ந்து நடித்தார்.
இவருடன் இணைந்து இராமராகத் தோன்றியவர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள். இன்று யாழ். பல்கலைக்கழக உயர்பட்டதாரிப் படிப்புகள் பீடாதிபதியாய் கடமைபுரிபவர். இவரது பெருந்தன்மை பெருவியப்புக்குரியது. தானும் மனைவியும் இராமர் சீதையாகத் தோன்றச் சம்மதித்து தம் கடமையைச் சிறப்புற நிகழ்த்தினர். சென்னைக் கிறீஸ்தவக் கல்லூரியில் கதம்ப விழா நடந்தவேளை பெருந்தன்மையுடன் ஆங்கிலப் பேராசிரியர் மக்னிக்கல் என்பவர் தமது மனைவியையும் கூட்டி (அவர் ஆசிரியர் அல்ல) மேடையில் தோன்றி சிறு நடிப்புச் செய்தார். கலை, நாடக உணர்வுத்துடிப்பே இதற்குக் காரணம். ‘இவர்கள் சந்தித்தால் நிகழ்வில் கணவனும் மனைவியும் இணைந்து நடித்த வரலாறு வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. இது ஒரு பெருந்தன்மையான (Magnanimous) செயல் எனலாம். இச்செயல் தமிழ் நாடக வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியானமை வியப்பல்ல. பருத்தித்துறை அரங்கிலே “இவர்கள் சந்தித்தால்” நிகழ்விலே பேரறிஞர் க. சிவராமலிங்கம் B.A. அவர்களும் மூதறிஞர் க. சொக்கவிங்கம் M.A. (சொக்கன்) அவர்களும், இராவணனாகவும் விபீஷணனாகவும் தோன்றி நடித்தனர். ஊனம் காரணமாக சிவராலிங்கம் ஐயா எழுந்து நிற்க முடியாத நிலை. இருப்பினும் நாடக உத்திமூலம் இலக்கியம் வளர்ப்போம் என்ற நிலையில், இராவணனாகக் கச்சிதமாக நடித்தார். ஆசிரியர் உடையில், பீடத்தில் அமர்ந்தபடி, வீரபாத்திரமாம் இராவணன்
22

Page 238
பாத்திரத்தைக் குரல் வளப்பலத்தால் உச்சரிப்புச் சிறப்பால் சபை முன்னே அப்பட்டமாக நிறுத்தினார். நாடக அனுபவம் மிக்க சொக்கன் விபீஷணன் குணச்சித்திர நடிப்பை வியப்புறும் வகை காட்டினார்; களை கட்டியது. மேற்போந்தோர் நாடகத் தன்மை உள்ள இந்நிகழ்வில் பங்கு கொண்டு, ஒரு காலம் ஒதுக்கப்பட்ட நாடகத்துறைக்கு உயர்வும் ஊட்டமும் கொடுத்தனர். பட்டதாரிகள், பட்டறிவுப் பேர்வழிகள், ஆசிரிய மணிகள் அனைவரும் போற்றவல்ல பொன்னான கலைஎன நடைமுறை மூலம் நிரூபித்தனர். கம்பன் கழகத்தால் தான் இது முடிந்தது.
நல்லூர் ஆதீன அரங்கிலே ‘கவிஞர் கோன்’ என அழைக்க வல்ல கவிஞர் முருகையன் விஸ்வாமித்திரராக, கல்வயல் குமாரசாமி வசிட்டராகக் கோல உடையில் தோன்றி குரல்வளம் காட்டி நுட்பமாக நடித்தனர்.
கலாநிதி காரை சுந்தரம்பிள்ளையும், கவிஞர் சோ. பத்மநாதனும் முறையே சுக்கிரீவன், வாலி பாத்திமேற்றுப் பங்களிப்புச் செய்தனர். கற்றறிந்து பெருமக்கள் குரங்குகளாக தோன்றுவதும், நடிப்பதும் அவர்களது கலையுள்ளத்தை மேலுயர்த்திக் காட்டுகிறது. எள்ளலைப் பொருட்படுத்த வில்லை. கம்பனாகவும், வால்மீகியாகவும் ஒரு தடவை தோன்றிய இவர்கள் இரு வேறு கவிஞர் பெருமக்கள் வாழ்வை, கவித்துவச் சிறப்பை சபையோர்க்கு நன்கு விளக்கி நடித்தனர்.
கல்வித்திணைக்களத்தைச் சேர்ந்த சங்கீத பூஷணம் கே. கணபதிப்பிள்ளை (உதவிக் கல்விப் பணிப்பாளர்) யும், முருகையனின் தம்பி இ. சிவானந்தனும் இரு வேறு பாத்திரங்கள் மூலம் பல வேறு உத்திகள் கையாண்டு மேம்பட நடித்தனர்.
வில்லிசை வல்லுநர் கலாபூஷணம் S. சின்னமணி திரு. செல்வவடிவேல், கலாமணி ஆறுதிருமுருகன் என்போர் வெவ்வேறு பாத்திரங்களில், சபையைக் கிறங்க வைத்து பாத்திரத் தன்மைகளைப் படம்பிடித்துக் காட்டினர். இன்றும் பல பேரறிஞர்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இருவர் சந்தித்தால் நிகழ்வு மூலம் நாடகத் திசை நோக்கிக் கல்விமான்களை, பேரறிஞர்களை ஈர்த்து, நன்கு பயன்படுத்தி, இலக்கிய பிசிறல் இன்றிக் கனதியான உரையாடல்கள், நடிப்புகள் மூலம் நாடகம் பற்றிய செயற்பாட்டை மக்களுக்குக் காட்டினர். முன்னொருகால் கற்றவரும், மற்றையோரும் துச்சமென மதித்து ஒதுக்கிய நாடகக் கலையை நனிசிறக்கும் வகை கம்பன் கழகம் எடுத்து வைத்த அடிகள் அத்தனையும் முற்போக்குத்தனமானவை.
கோல உடைகள் மூலம் பாத்திரங்களை முழுமையாக உணரவைத்தும், குணாசித்திர நடிப்பென்றால் என்ன, என்பதை உணரவைத்தும், முரண்பாடு, சிக்கல், சிக்கல் அவிழ்த்தல் போன்ற
கம்பன் மலர் - 2000

பல நாடக நிலைப்பாடுகளை இலகு உத்தியில் விளக்கியும், நாடகத்துறை மேம்பட ஆர்வத்துடிப்புடன் கழகம் பணிசெய்துள்ளது.
நிதியைப் பொறுத்தவரை தாரள சிந்தையுடன் தொழிற்பட்ட கம்பன் கழகம் செய்வன திருந்தச் செய்தல், முறைப்படி செய்தல் என்ற நிலை தவறாது ஆவன செய்து மக்கள் அறிவை உயர்த்தியது. பழமை பேணலும் புதுமை புகுத்தலும் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் இரு பெரும் இலட்சியங்களாயின. நாடகத்துறையிலும் பழமையை உதாசீனம் செய்யவில்லை; புதுப்புனல் பாய்ச்சுதலை இகழவில்லை. ஆரோக்கியமான நல்நெறி இது.
இசை நாடகம், கொட்டகைக் கூத்து,'ஸ்பெஷல்'நாடகம் என்றெல்லாம் பேசப்படும் நாடக வகையை நம்மவர் குறைவாகவே மதித்தனர். நடிகர்களை நெறியாள்கை செய்தவர்களை உரிய இடம் கொடுத்து உயர்த்திப் பேசவில்லை. நடாத்தவில்லை. அவங்கள் கிடந்தாங்கள்; குண்டி நெழிக்கிற பேர்வழிகள் என்று நளினம் செய்தார்கள். நாற்பது ஐம்பது அறுபதுகளில் அரவணைப்பு பெற்ற இந்தத்துறை எழுபது எண்பதுகளில் மக்கள் மன்றில் ஒருவித தேக்கநிலை கண்டது. விஸ்வாசத்துடன் இதன் வளர்ச்சிக்கு நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டாத காலம். அகில இலங்கைக் கம்பன் கழக உதயத்தின் பின் இசை நாடக மேம்பாட்டிற்கு வாய்ப்புகள் பல அளிக்கப்பட்டன. கம்பன் கழகம், நல்ல தலைமையில் மெல்லென வளர்ந்து புகழேணியின் உச்சத்தைத் தொடத்தொடங்கியது. அதன் பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அதிர்ச்சி தரும் அளவு உயர்ச்சி கண்டது. நல்லூர் மகாநாடுகள் வருடாவருடம் படியுர்ந்து மக்களை எல்லாம் கிறங்க வைத்தது. இவ்வேளை அங்கொன்று இங்கொன்றென உதிரிகளாக இருந்த இசை நாடக வல்லுநர்களை இணைத்து அணைத்துக் கம்பன் கழகம் புத்துணர்ச்சி ஊட்டி சிறந்த பல நாடகங்களை மேடையேற்றியது. நடிகமணி வி. வி. வைரமுத்துவின் அரவணைப்பில் வசந்த கானசபா உறுப்பினர்களாக மிளிர்ந்து இசை நாடகத்துறையில் துறை போகிய நடிகர்களாக விளங்கிய, சண்டிலிப்பாய் வி.என். செல்வராசா, அரியாலை செல்வரத்தினம், இணுவில் கனகரத்தினம் என்போரின் ஆசியுடன் அரிய நற் சேவையுடன் உயர்தர இசை நாடகங்களை மேடையிட்டது. கழகத்தின் இச் செய்கை நொந்து போயிருந்த இசை நாடகக்காரருக்கு தனி எழுச்சி ஏற்படுத்தியது. அமைப்பாளரும் கழகத்தினரும் தமது சொந்த சகோதரர்களைப் போல அணைத்து ஆவன செய்து ஒரே குடும்பத்தினர் போல தொழிற்படத் தொடங்கினர். மேடை அமைப்பென்றால் பிரமிக்க வைக்க வேண்டும்; காட்சி அமைப்பா! ஒப்பனையா! உயர்நிலை எய்த வேண்டும், பணம் பெரிதல்ல பண்டம் நற்பண்டமாக அமைய வேண்டும் என்ற கோட்பாட்டில் பம்பரம் போல் தொழிற்பட்டது அகில இலங்கைக் கம்பன் கழகம். பேரன்பு பாய்ச்சி நடிகர்களுக்கு வேண்டிய வேண்டிய உதவிகளை உரிய காலங்களில் உதவி பெரு
-222

Page 239
நிலை எய்த உதவியது. ஒத்திகைகளுக்கு வசதியான இடமளித்து அரங்கேற்று வேளை மிக உயர் அவையைக் கொடுத்து வல்லுநர் பலரின் முன்னிலையில் கெளரவம் அளித்து கம்பன் கழகம் செய்த பணி மகத்தான பணி எனலாம்.
முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தேர்ந்ததெடுத்த வி. என். செல்வராசா, அரியாலையூர் செல்வரட்ணம், இணுவில் கனகரட்ணம் என்போர் மேடைக்குரியவர்கள்; பிறவி நடிகர்கள். செல்வரட்ணம் இசை நாடக வரலாற்றில் பெண்பாத்திரம் அன்று முதல் எப்படிப் பாடி அசைந்து உணர்ந்து நடித்தது என்பதற்கு உதாரணமாய் விளங்கினார். ஒரு தனிப்பாணியை உருவாகி மெருகூட்டினார். ராஜபாட்டா, பல்வேறு குணசித்திர நடிப்பா, அட்சர சுத்தியுடன் கூடிய வியத்தகு பாட்டு வன்மையா, வி. என். செல்வராசாவைக் கேட்டுத்தான். மேடை நடிப்பு தண்ணிபட்டபாடு. ஆர்வத்துடிப்புடன் நடிப்பார்; இணுவில் கனகரட்ணம் ஒரு வல்லவர், அதேவேளை நல்லவர். இசை நாடகம் ஒரு காலகட்டத்தில் மதிப்பு இழந்தமைக்கு காரணம் இத்துறை கலைஞர்கள் பலர் தீய நெறியில் பகிரங்கமாகவே ஈடுபட்டமையே. வல்லமையை பொதுமக்கள் போற்றும் அதே வேளை பண்பு இன்மையை வெறுக்கவும் செய்வார்கள். ஒழுங்கும் ஒழுக்கமும் நடிகர்க்கு அவசியம் எனக் கலையரசு சொர்ணலிங்கம் அடிக்கடி கூறுவார். வாழ்ந்து காட்டினார். பாடும் ஆற்றலில், நடிப்புத் திறத்தில், குணசித்திர நடிப்பில் வல்லமையும் பேர்புகழும் மிக்க கனகரட்ணம் செருக்கின்றிப் பணிவாக சக நடிகர்களுடன் பழகும் இயல்பினர். 'இயமன்'வேடத்தில் ஒரு தனித்துவம் காட்டி மெருகூட்டியவர். இந்த மும்மணிகளையும் நன்கு பயன்படுத்தி ஆவன செய்து இசை நாடக இன்றியமையா அம்சங்களை செயல்முறைக் கற்கை நெறிபோல் சபையினருக்குப் படிமுறையாகப் படிப்பித்த பெருமைக்குரியவர்கள் அகில இலங்கைக் கம்பன் கழகத்தினர். பெருந்தொக்ை செலவிட்டு வருடா வருடம் பல நாடகங்களை முறைப்படி திறம்பட மேடையிட்டமையால் 'நாடகம் பார்த்தல் பண்பு' பன்மடங்கு வளர்ந்தது. கம்பன் கழக நாடக அரங்கு எம்மை ஏமாற்றாது; மகிழவைக்கும்; நாடகம் சம்பந்தமான நுண்ணிய அம்சங்களைக் கற்க நெறிப்படுத்தும் என்ற அசையாத நம்பிக்கை பார்வையாளரிடத்து வளர்ந்தது. தமிழ்நாடக வளர்ச்சிக்கு நாடகம் பார்த்தல் பண்பு மிக அவசியம். இதனைக் கழகம் தனது தொழிப்பாட்டால் வளர்த்தது. கொட்டகை கூத்துக்கள்ை நாம் பார்ப்பதில்லை. தரம் குறைந்த குப்பைகள் இவை. நவீன நாடக நுட்பங்கள் உண்டா? அகில உலக வளர்ச்சியுடன் ஈடுகொடுக்கிறதா? என்று சொல்லாடல் செய்வர் பலர். ஆனால், ஈழத்தமிழர்கள் நல்ல இரசிகர்களாகத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணி முப்பதுகளில் இருந்து இசை நாடகத் தோய்ச்சல் நம்மிடை நல்ல வரவேற்பு பெற்றமையே. தென்னக கலைஞர்கள்; யாழ்ப்பாணத்தில் நாடகம் நடித்தோம் எனக் குறிப்பிடுமளவுக்கு பெருமையுறும் அளவுக்கு நமது ரசிகர்கள் குழாம் தரமுயர்ந்து இருந்தது. கொத்த மங்கலம் சுப்பு தில்லானா மோகனாம்பாள்' நாவலில் ஒரு அத்தியாயத்தில் யாழ்ப்பாண இரசிகர்கள் பற்றி எழுதினார். நாடக ரசிப்புத் தன்மையை இரு தசாப்தங்களுக்கு
அகில இலங்கைக் கம்பன் கழகம்

மேல் இரட்டிப்பு வேகத்தில் உயர்த்திட கம்பன் கழகம் முனைந்ததை நாடறியும்.
நடிகமணி வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் என்ற ஆய்வுநூலுக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர், நாடக வல்லுநர் கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் இசை நாடகத்து நுட்பங்களையும் சிறப்பு அம்சங்களையும் விதந்து விளக்கியுள்ளார். இசை நாடகத்தில் தொகையறா பற்றி அடிக்கடி பேசுவார். கர்நாடக இசை தழுவிய பாடல்களுடன் சில சந்தர்ப்பங்களில் தொகையறா பாடும் போது அரங்கு தனிச் சிறப்பெய்துகிறது. தன் குறை உணர்தல் (Realisation) உருகுதல் அல்லது வாழ்வோட்ட கோலம் (மேடும் பள்ளமும்) விளக்கல் போன்ற வேளைகளில் இசை நாடக நடிகர்கள் தொகையறா பாடும் உத்தியில் அவையை ஸ்தம்பிக்க நயக்க வைப்பர்.
எடுத்துரைப்புக்கு, சம்வாதத்துக்கு பொருத்தமான சுதியில்பாடுதல், பாடலும் நடிப்பும் இணைந்தும் இடையிட்டு வந்து கொண்டிருத்தல், சிலவேளை பாடல் சொல்லாடலாக அமையும் தருக்கள் பற்றியெல்லாம் பேராசிரியர் பேசுவதுண்டு. மேற்போந்த நுண்ணிய அம்சங்கள் அரங்கு சென்று அநுபவித்தே அவதானித்தே பெரிதும் நுகரலாம்.
நாடக வகையில் இறுக்கமும்நுட்பதிட்டமும் கூடிய ஓரங்க நாடகத் துறையும் வளர்க்கப்படவேண்டிய ஒன்றே என்ற திட்டத்தின் கீழ் நாடக விற்பன்னர் திரு. கே. கே. சோமசுந்தரம் எழுதிய, கும்பகர்ணன், குகன் என்ற இரு ஓரங்க நாடகங்களை நல்லூரில் இறுதியாக நடந்த கம்பன் விழாவில் மேடையேற்றினர். ஆங்கில நாடகங்களில் பலவித பாத்திரங்கள் தாங்கிய, பல நிறுவனங்களில் நெறியாள்கை செய்த சோமசுந்தரமவர்கள் ஒரங்க நாடகத்தை அதன் இலக்கணப்படி முறையாகத் தயாரிக்க வல்லவர் எனக்கருதிய கம்பன் கழகம் அவரை நன்குபயன்படுத்தியது. பல உத்திப்பிரயோகங்களுடன் நாடகக்காரர்பலர் வியக்கும் முறையில், ஓரங்க நாடகப் போக்கைப் பண்புகளை பழக்கும் வகையில் அவரது ஆக்கங்கள் அமைந்தன. எனது நாடக மாணவன் S. சுப்பிரமணிய சர்மா, குகனாக நன்கு நடித்து'சபாஸ் பெற்றார். கும்பகர்ணனாக நான் நடித்தேன். முழுமையான ஓரங்க நாடக வார்ப்புகளாய் அமைந்தமை இத்துறையில் ஈடுபாடு உடைய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நாடக பாடமாய் அமைந்தன. புதியன புகுத்தலில் கம்பன் கழகம் பின்நிற்கவில்லை.
ஒட்டு மொத்த நோக்கில், இசை நாடகத்தை மேலெடுத்தும், தனி நடிப்பு, ஒரங்க நாடகம் போன்ற புதிய பாணிகளை ஊக்கியும், நாடகம் பார்த்தல் மூலம் நல்லறிவு பெறக் களம் அமைத்தும், நாடகக் கலைஞர்களை தென்புடன் வாழத் தொழிற்பட ஆவன செய்தும், தமிழ் நாடக உலகை முன்னெடுத்த நிறுவனங்களுள் அகில இலங்கை கம்பன் கழகம் இதயபூர்வமாக பங்களிப்புச் செய்தது. ஒரு நோக்கில் தியாக உணர்வுடன்
தொழிற்பட்டதெனலாம்.
223

Page 240
ம்பன் கழகம்! இதைப் பற்றி என்னிட எனக்கும் கம்பன் கழகத் கூடிப் போனால் கம்பன் தடவை பங்கு ஏற்று இருக்றேன். இன்னும் கொஞ்சம் நெருக்கமாகச் மல்லிகை 25ஆவது ஆண்டு மலர் வெ சென்ற பொழுது கம்பன் கழகம் கெ கெளரவிக்கும் முகமாக நடத்திய கூ
இவ்வளவுதான்!
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் ( கழகம் போன்ற அமைப்புகளுடன் ெ காரணிகளாக அமையா என்பதை ந
ஆனாலும், என்னைப் பொறுத்தவை கம்பன் கழகத்தைப் பற்றிய ஒரு புதி அந்த அறிவித்தலில் நான் கம்பன் க முன்னதாக ஒரு சில விடயங்களைப்
கடந்த காலத்தில் பழந்தமிழ் இலச் பற்றிப்பேசியவர்களின் பார்வையில் வரட்டுத்தனத்தைக் கண்டுசலித்துக் ( அவர்கள் அதைப் பற்றிப் பேசத் தய அத்தோடு, நவீன இலக்கியவாதிகளு நெருக்கம் அற்றவர்களாகவும் இருந் பழந்தமிழ் இலக்கியங்களை வெகுச கொண்டுச் செல்ல முடியவில்லை எ நான் வெகுசனக் கவர்ச்சி எனக் குறி அர்த்தத்தில் அல்ல. அதாவது சாதா ஊடகங்கள் எவை என்பதை,
அவர்கள் அடையாளம் கண்டு கொ
 
 

இலங்கைக் பன் கழகமும் சனக் கவர்ச்சியும்
மேமன்கவி’
ம் ஆக்கம் கேட்டு இருக்கிறார்களே! திற்கும் என்ன சம்பந்தம்.? ா கழகம் நடத்திய கவியரங்குகளில் இரண்டு
சொல்லப்போனால் பளியீட்டு விழாவுக்கு யாழ்ப்பாணம் ாழும்பிலிருந்து வந்த எழுத்தாளர்களைக் ட்டத்தில் கலந்து கொண்டேன்.
மேற்கூறிய நிகழ்வுகள் ஒருவரைக் கம்பன் நெருக்கத்தை உண்டாக்க போதுமான ான் அறிவேன்.
ர மேற்கூறிய நிகழ்வுகள்தான் எனக்கு ப பார்வையை தந்தது எனலாம் முகத்தைப் பற்றிப் புரிந்து கொண்டதைச் சொல்வதற்கு பற்றி பேச வேண்டும் என்று தோன்றுகிறது.
கியங்களைப்
ஒரு வகையான கொண்டவன் நான். பங்கியவர்களாகவும், நடன் தார்கள். இப்போக்கினால் இவர்களால் னக் கவர்ச்சியுடன் மக்களிடம் ன்பது உண்மை. ப்பிடுவது மலினப்படுத்தல் என்ற ரண மக்களிடம் செய்திகள் சென்றடையும்
ள்வதில் தயங்கினார்கள் என்பதுதான்.
224

Page 241
இத்தகைய இவர்களது போக்கினால் நடந்தேறிய பின்னடைவு யாதெனில் பழந்தமிழ் இலக்கியங்களும் அந்நியமாகிவிட்ட சூழலை நாம் காணக்கூடியதாக இ
இந்தகைய போக்கினைக் கொண்டவர்களில் கணிசமானவர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தமையும், அவர்கள் தங்களது அரசியல் கருத்திய இலக்கியக் கருத்துக்களைத் திரித்து கூறுபவர்களாக இருந்ததோடு, (உ+ம் அறிஞர் அண்ணா போன்றோர், கம்பராமாயண பற்றி எதிர்மறையான முறையில் முன்வைத்த கருத்துக் இலக்கிய லயத்தோடும் நயத்தோடும் அவ்விலக்கியங் தோன்றிய சமூக, அரசியல் காரணிகளை விஞ்ஞான ே என்ற ஆவலை மக்களிடம் தூண்டும் வகையில் அவர் கூறவேண்டும் (இலக்கியங்களை லயத்தோடும், நயத்ே வளர்த்துச் சென்றதில் டி. கே. சி. போன்ற பெரியார்களி குறிப்பிடலாம். அவரது தனித்துவமான பணி ஆய்வுக்
இலங்கையைப் பொறுத்தவரை, மேலெழுந்தவாரியா வெவ்வேறு தளங்களில் இயங்கியது போல், தோற்றம் தந்திருந்தாலும், ஆழமாக நோக்குமிடத்து இலக்கியத் துறையைச் சார்ந்தவர்களில் கணிசமானவர் ஏதோ ஒரு வகையில் அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அதன் காரணமாக, இலக்கியங்களை மலினப்படுத்தாத நிலையில் மக்கள் மயப்படுத்தினார்கள். அதேவேளை பழந்தமிழ் இலக்கியங்களை வெறுமனே இரசனை ரே அதற்கு மேலாக சமூக விஞ்ஞான பார்வையுடன் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். (உ+ம் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் ‘தமிழர் சால் பேராசிரியர் க. கைலாசபதியின் பண்டைத் தமிழர் வாழ் மேலும்,
இலங்கையைப் பொறுத்தவரை, வெகுசன ஊடகங்கள் (பத்திரிகைகள், வானொலி, தெ அவை கொண்டிருக்க வேண்டிய மலினப்படுத்தல் தன் இலக்கியத்தைப் பொறுத்தவரை கையாளாமல் (இதன் காரணமாகத்தான் இலங்கையில் புஷ்பாதங்கத் மூன்றாந்தர எழுத்துக்களைத் தயாரிக்கும்பேனா வியா எனலாம்) மாறாக, ஆரோக்கியமான கலை, இலக்கியத்திற்கு அவை வழா இலக்கியங்கள் மக்களுக்குப் பரிச்சயமாகும் சூழலை
அத்தோடு, இன்னொரு விடயத்தை இங்கு குறிப்பிட இலங்கையைப் பொறுத்தவரை, இயக்கமாகச் செயற்பட்ட இயக்கங்கள் பாரிய தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கி (உ+ம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போ
அகில இலங்கைக் கம்பன் கழகம்

சரி, நவீன இலக்கியங்களும் சரி மக்களிடமிருந்து நந்தது.
லுக்கேற்ப
த்தைப்
களைக் குறிப்பிடலாம்) களை அறிமுகப்படுத்தி, அவ்விலக்கியங்கள் நாக்குடன் அறிந்து கொள்ள வேண்டும் கள் செயற்படவில்லை என்றே தோடும் மாத்திரம் ரசிக்கும் பண்பை ன் பணியினை இங்கு விதிவிலக்காக
தரியது,
கப் பார்த்தால் இலக்கியமும் அரசியலும்
கள்
ாக்குடன் நோக்காது
ப்பு மற்றும் ழ்வும் வழிபாடும் போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.)
ாலைக்காட்சி)
o)))
துரை, ராஜேஷ்குமார் போன்ற பாரிகள் தோற்றம் பெறு சாத்தியம் ஏற்படவில்லை
கிய முதன்மையானது, ஆரோக்கியமான ஏற்படுத்தியது எனலாம்.
வேண்டி இருக்கிறது.
ன்றன.
ன்ற சங்கங்களைச் சொல்லலாம்)
5

Page 242
அத்தகைய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்களுக்கும், மேற்குறித்த வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் பக்கபல கம்பன் கழகத்திற்கும் வெகுசனத்தொடர்பு சாதனங்களின் கிடைத்து வருவதன் மூலம், அதன் பணிகளின் பயன்பா மக்களைச் சென்றடையக் கூடியதாக இருக்கிறது.
இந்த இடத்தில் கம்பன் கழகத்தின் வளர்ச்சிப் போக்கின் இ. ஜெயராஜ் அவர்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகி வழிபாடாய் கூறவில்லை. இவரிடம் காணப்படும் எளி மக்களைச் சென்றடையும்
வகையில் கருத்துக்களை முன்வைக்கும் நுணுக்கமும்தால் கம்பன் கழகத்தை மக்களிடம் விரைவாகக் கொண்டு டே
கம்பன் கழகம் விரைவாக மக்களிடம் சென்றடைவதில் காரணத்தையும் நாம் அடையாளம் காணலாம். அது யாதெனில், எப்பொழுதும் ஒரு சமூகம், அந்நிய சக்திகளால் ஆளப்ப வரலாறும், அதன் கலை கலாசாரமும் மறைக்கப்படும் ெ கலாசாரக் கூறுகளையும், வரலாற்றையும் மீளக் கண்டுபிடிப்பதற்கும் மீட்டெடுப்பு வரலாற்று ரீதியாக நாம் கண்ட உண்மை.
அதேவேளை, நவீன சமூகவியல் பார்வையின் அடிப்படையில் அக்கை கண்டுபிடித்து அதற்கான ஆழமான விமர்சனங்களை மு வருகையும் முக்கியத்துவம் பெறுகிறது. (மறைந்த பேரா நா. வானமாமலை, கே. கேசவன் மற்றும், பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றோரை உதாரணமாக ஆனால், அவ்வியக்கங்களுக்கும் அச்சிந்தனையாளர்கள் குழுவின பாரிய கருத்து முரண்பாடுகள் நிலவியதோடு, ஒரு வகை நிலவியது என்றுகூடச் சொல்லலாம். இப்போக்கு தமிழ இலங்கையில் நிலைமை வேறாக இருந்தமை இங்கு கு அதாவது, அவ்விருசாராருக்கிடையே கருத்து முரண்பா நிலவிய பொழுதும், பகைமை உணர்வின்றி பரஸ்பரம் மதிக்கிற போற்றுகின்ற பண்பு இலங்கைக் கம்பன் கழக காணப்படும் சிறப்பான பண்பு எனலாம். (அதேவேளை, தமிழகத்தில் பழந்தமிழ் இலக்கியங்கை அறிஞர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த, தீவிர சிந்த அவர்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய போக்குக்குத் தம்ை உ+ம் பாரதிதாசன் போன்றவர்களை ஏற்றுக் கொள்ளாம தற்பொழுது அவரை ஏற்றுக் கொண்டு இருப்பது இவ்வ அதற்கான காரணகள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆராயப்
ஒட்டு மொத்தமாக நோக்குமிடத்தில், இலங்கைக் கம்பன் கழகத்திடம் காணப்படும் சிறப்பிய இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களிடையே நல்லதொ எனலாம். இந்த வரவேற்பு இன்னொரு விடயத்தையும் நமக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. கம்பன் மலர் - 2000

மாற்றங்களுக்கும் மாக இருந்திருக்கின்றன. ா ஒத்துழைப்பு
டுகள்
ா பிரதான மனிதராகத் திகழும்
விறது. இதை நான் தனி நபர் மையும்,
ானது எனலாம்.
அடிநிலையாக இன்னொரு
டும் அல்லது அடக்கப்படும் பொழுது அதன் பொழுது அச்சமூகத்தில் அதன் கலை
பதற்கும் இயங்கங்கள் தோன்றும் என்பது
ல கலாசாரக் கூறுகளை ன்வைத்த சிந்தனையாளர் குழுவினர் சிரியர்களான க. கைலாசபதி,
குறிப்பிடலாம்)
ார்களுக்கும் இடையில் யிலான பகைமை உணர்வு கத்தில் பரவலாக நிலவியது. ஆனால் றிப்பிட வேண்டிய ஒரு அம்சமாகும். டுகள்
கத்திடமும், சிந்தனையாளர்களிடமும்
ள ந்ேசிக்கின்ற
னையாளர்கள் ம மாற்றி கொண்டார்கள். ல் இருந்த தீவிர சிந்தனையாளர்கள் பிடத்தில் நினைவுக்கு வருகிறது. பட வேண்டியவை.)
ல்புகள் காரணமாக
ரு வரவேற்பினைப் பெற்று இருக்கிறது

Page 243
அதாவது, இலங்கைவாழ்தமிழ் பேசும் மக்கள் இழந்து கொண்டிருக்கும் தமது கலை கலாசார அடையாளங்கை கலைஇலக்கியங்கள் மூலம் மீட்டுத்தரும் ஓர் இயக்கமாக இலங்கைக் கம்பன் கழகத்தைக் காண்கிறார்கள்.
அச்சிறப்பியல்புகளை பின்வருமாறு தொகுத்துக் கூறல
(l) கட்டுக்கோப்பான, நேரிய தலைமையிலான ஓர்
(2) பழந்தமிழ் இலக்கியங்களை வரட்டுத்தனத்துட மக்கள் அவை தம் ஆர்வத்துடன் கற்று அறிய ே உணர்வுடன் செயற்படுதல்.
(3) நவீன கலை இலக்கியத்தின் சமூகத் தேவையை
அம்சங்களையும் மதிப்பிட்டுப் போற்றுதல்.
(4) மாற்றுக் கருத்து உடையவர்களையும் மதித்து அ
பேணி, அவர்களைக் கெளரவித்தல்.
மேற்குறித்த சிறப்பியல்புகள்தாம் கம்பன் கழகத்தை ப போற்றத்தக்க வரவேற்பினை பெற்றுத் தந்து இருக்கின் மிகைக் கூற்றாகாது என்பதை எவரும் ஏற்றுக் கொள்வா
நான் இக்கட்டுரை எழுதுவதற்கான காரணம் உங்களுக்கு புரிந்து இருக்குமோ, இல்லையோ என்னால் அக்காரணம் ஏலவே புரிந்து கொள்ளப்பட்ட அதாவது என்னிடம் காணப்படும் சில இயல்புகள்தான் அதற்கு 4 அப்படி என்ன இயல்புகள் என்னிடம் இருக்கின்றன எ தங்கிவிடக் கூடாது என்பதற்காய் எனது இயல்புகளின் உங்களுக்குத் தருகிறேன்.
l. நான் கட்டுக்கோப்பான இயக்கத் தலைடை 2. பழந்தமிழ் இலக்கியங்களை ரசிக்கும் ரசை 3. நவீன கலை இலக்கியங்கள் பற்றிய பிரக்ை 4. கம்பன் கழகம் கொண்டிருக்கும் கலை இல
என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னும்பொழுது, அவை ஒரு சிந்தனையா அளவு கோல்களால் விளைபவை என்ற ரீதி
கம்பன் கழகத்தின் ஒவ்வொரு சிறப்பியல்புக்ளு எனது இயல்புக்களை ஒவ்வொன்றையும் பொ பட்சத்தில் நான் இக்கட்டுரை எழுத முடிந்தற்க சாத்தியப்பாடு உங்களுக்கு இப்பொழுது புரிந்தி
அகில இலங்கைக் கம்பன் கழகம்

ாம்.
இயக்கமாக இயங்குதல். ன் போற்றிக் கொண்டிருக்காமல் வண்டும் என்ற
யும் அதன் சிறப்பான
வர்களுடன் உறவு
ாவலான மக்களிடம் றன என்பது எந்த வகையிலும் rர்கள்.
ஓர் உண்மையாகும்.
காரணம் எனலாம். ன் றகேள்வி உங்களிடம் பட்டியலை
மயை மதிப்பவன்.
ன எனக்கு உண்டு.
ஞ கொண்டவன். க்கிய சம்பந்தமான சில கருத்துக்களை அதேவேளை மாற்று கருத்துக்கள் ளனோ, அல்லது ஓர் இயக்கமோ கொண்டிருக்கும் யில் அக்கருத்துக்களை மதிப்பவன்.
டனும், , நந்திப்பார்க்கும்
Ta ருக்கும் என நினைக்கிறேன்.
227

Page 244
~~~~\~ س--
~s、fれのい
/ k一 w Sぐ/「) --سمجھ KK) &NõUDUMør
2. jó 6. ( ۔ ہجل;{ کی * இ
/ Y నాగ 2 ༽བhད། ح ኳ፱ Y፧ ーリー
பாரதி
கம்பனை எனக்குக்
காட்டித்தந்தவன். இவன் சிபார்சினால்தான்
கம்பன் என் மனச்சிம்மாசனம் ஏறினான். இவன் எளிய தமிழும் வலிய கருத்தும் என் மனத்துட் புகுந்து மாமலையாய் இவனைக் காட்டின. இவனோ "கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்” என வியந்துநின்றான். கம்பனைக்காணும் விருப்பை எனக்கு உண்டாக்கினான். அதனால் ஒருவகையில் கம்பன்கழகத்துக்கு இவனும் காரணனாம்.
பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன்
கம்பனைச் சுவைக்கும் விதம் காட்டித்தந்தவர். கம்பன் பாடல்களை
அனுபவிக்கும் கற்பனையில் கம்பனையும்
விஞ்சியவர். கம்பன் கைவண்ணம் இவர் நாவண்ணத்தால் விஸ்வரூபம் எடுக்கும். வானொலி மூலம் ஒசையாய் என் உள்ளத்துட் பதிந்தவர். குடுமிவைத்த பேராசிரியர். பேசியபடி வாழ்ந்த பெருமகன். பாரதி போன்ற பிராமணன். அன்பால் என்னை ஆட்கொண்ட குருநாதன். பிள்ளையாய் என்னைப் பேணிய பெருந்தகை. கம்பராமாயணக் கதவுத்திறவுகோல். திறந்து இவர் அள்ளித்தந்தவை ஏராளம். இன்று மேடைகளில் இவர் கருத்துக்களைத் தம் கருத்துக்களாய் முழங்கியபடி பலர். அறிவின் மூலம் கண்டவர். வாழ்க்கையால் எனக்கு இராமாயணம் உணர்த்தியவர். இன்றுவரை என் ஆத்மாவுள் கலந்து கம்பன் பணியில் என்னை வழிநடத்துபவர். கம்பனுக்கு இராமன் கடவுள். இவருக்குக் கம்பன் கடவுள். எனக்கோ இவரே கடவுள். மறுபிறவியிலும் இவர் திருவடியில் விழும் பாக்கியம் வேண்டித் தவமிருக்கிறேன். இவர் காட்டிய கம்பன் சுவை காரணமாயிருந்து கம்பன்கழகத்தைக் காரியமாக்கிற்று.
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 
 
 

பணியில் கைகொருத்து
ன் இதயத்தில்
உம் பிடித்தோர்
இ.ஜெயராஜ்
கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
கம்பனைக் கடவுளாய்த் தொழுத
சான்றோன். சட்டை போடாத இல்லறச்
சன்னியாசி. கம்பனே நினைப்பாய், கம்பனே பேச்சாய், கம்பனே வாழ்வாய் வாழ்ந்த வள்ளல். வட்டி போட்டு கம்பனை வளர்த்த செட்டி நாட்டார். கம்பன் கழகங்களின் பிதாமகன். கம்பனுக்கு மணிமண்டபமும், தமிழ்த்தாய்க்குக் கோயிலும் கண்ட பேராளன். பட்டிமண்டபத்திற்கு இன்றையவடிவு கொடுத்தவர். கம்பன் தமிழ்ப்பணியெனும் தனிப்பாதை அமைத்தவர். கற்றோரைக் கூட்டி கம்பன் தமிழால் களிக்கச்செய்தவர். செவிக்கு மட்டுமன்றி வயிற்றிற்கும் விருந்தளிக்கும்வண்ணம் காட்டித்தந்தவர். கம்பன் தொண்டும் கடவுள் தொண்டேயென உணர்த்தி எங்கள் கம்பன் கழகத்தின்
உயர்வுக்கு வழிசமைத்த சான்றோன்.
க. சிவராமலிங்கம்
நடக்கமுடியாத காலோடு என் கைபிடித்து நடந்து என்னைத் தமிழுலகில் தலைநிமிர்ந்து நடக்கச் செய்தவர். கம்போடு
நடப்பதால் கம்பன் எனும் காரணப்பெயருக்குப் பொருத்தமானவர். இன்றைய உலகோடு இயல்பாய்க் கலக்கக் காட்டித்தந்தவர். தமிழையும் சமயத்தையும்விட மானுடம் பெரிதென்று உணர்த்தியவர். மற்றவர்க்காய் வாழ்வதில் மகிழும் பண்பாளன். நியமிக்கப்படாத ஊர் விதானை. ஆரம்ப கால இடரையெல்லாம் இவர் பெயர் காட்டியே நான் வென்றேன். என் வேக விஷத்தை விழுங்கிச் சிரிக்கும் சிவன். பகைவரிலிருந்து என்னைக் காக்கும் கேடயம். இன்றுவரை கம்பன் கழகத்தின் காவல் தெய்வம்.
228

Page 245
கலாநிதி. வித்துவான் க.ந. வேலன்
தமிழோடு ஆளுமையும் கற்றுத் தந்தவர். கூழைக் கும்பிடை வெறுக்கச் செய்தவர். பாரதியை என் உறவாக்கிய ஆசான். என்னுட் கிடந்த தமிழை எனக்கு இனம்காட்டியவர். சிறுமை கண்டு பொங்கக் கற்றுத் தந்தவர். படிக்கும் காலத்தில் எனக்கும் என் நண்பர்க்கும் இவர் வீடே சரணாலயம். பலம், பலவீனம் இரண்டுடனும் எங்களை ஏற்றுப் பாதுகாத்தவர். நல்லவை நோக்கிய நாட்டம் இவர் தந்த ஊட்டம். இவரின் தர்மாவேசத்தை இலக்கியமாய்ப் பயின்றவன் நான். புல்லாய்க் கிடந்த என்னை வார்த்தைகளால் நிமிர்த்தி புயலாக்கிய பெருந்தகை. ஆசிரியர் மாணவ உறவுக்கு புத்துரை செய்த புனிதர். எமது கம்பன் கழகத்தின் நிமிர்வில் இவர் சாயல் தெரியும். அனைத்து விடயங்களிலும் என் இரசனைத் தரத்தை உயர்த்தியவர்.
வித்துவான் சி. ஆறுமுகம்.
தமிழை அன்பாக்கிய தண்ணளி யோன். என்மேல் என்னைவிட அக்கறை காட்டிய பெரியோன். கடவுளைக் கும்பிடக் கற்றுத்தந்தவர். தமிழால் இளகிப் பெண்மையுற்றவர். காரைக்கால் அம்மையார்க்காய்க் கண்ணிர்விட்டு வியப்பேற்படுத்தியவர். மற்றவர் இன்னல் கண்டு மருளும் மாண்பாளர். அறவழியில் நடக்க என்னோடு போராடியவர். என்னை எவரும் இகழின் கண்ணிர் வடிக்கும் காவலன்.
என்னையும் என் நண்பர்களையும் கம்பனைக் கற்கச் சொல்லிக் கடிந்து நின்றவர். இசையும் கவிதையும் இவர்க்கு ஏவல் செய்யும். கம்பன்கழகக் கவியரங்கங்களின் இன்றைய உயிர்ப்பிற்கு வித்திட்டவர்.
ஆசிரியர் தேவன்
பல்துறை விற்பன்னர் முரண்பட்டுப் பின் உடன்பட்ட ஆசான். இவர் எம்மை ஆக்கிரமிக்கு முன்னரே நோய் இவரை ஆக்கிரமித்தது எம் துரதிஸ்டம். பேச்சில் தனக்கெனத் தனிப்பாணியமைத்தவர். இவர்
சாயல் காண விரும்புவோர் எம் கழகத்தலைவர் திருந்தகுல்ேரக் காணலாம். பலகாரியங்களை ஒரே மனிதனாய்ச் சாதிக்கும் பாங்கினைக் கற்றுத்தந்தவர். பதம்பார்த்து பலாக்கனி வாங்கியனுப்பும் பாசமனிதர். கழகம் நம்மண்ணில் காலூன்றிப் பலம்பெறும் முன்னரே விண்ணில் காலூன்றி விட்டவர்.
நல்லைக் குருமுதல்வர்
இயல், இசை, நாடகம் வல்லவர். கடவுளையும் கலைகளையும் நேசித்தவர். அவர் அமைத்த நல்லை ஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் கம்பன் கழகம் ஆரம்பித்த நாள் தொடக்கம் தமிழ்
வளர்ச்சிக்காய்ப் பயன் கருதாது இடம் தந்தவர். எங்களை
கம்பன் மலர் - 2000
 
 
 
 

ஆசீர்வதித்த முதல் துறவி. முதற் கம்பன்விழாவில் நான் பேசிய பேச்சை ஒலிப்பதிவு நாடாவிற் கேட்டுவிட்டு “இந்தியாவிலிருந்து வந்து பேசிய பெண்யார்?’ என என்னிடமே கேட்டு என்னை ஊக்குவித்தவர். அவர் ஆசியும் ஆதரவும் அறிமுகமில்லாமல் கழகம் இருந்த காலத்தில் தெம்பு தந்தன.
தி. திருநந்தகுமார்
உடன் கற்ற நண்பன். "நான் ஏன் தலைவனாகக் கூடாது?’ எனக் கேள்வி கேட்டு கழகத்தின் தலைவனானவன். என் கருத்து முழுவதையும் அப்படியே உள்வாங்காது மோதி நிற்பவன். முரண்படினும் நான் எடுக்கும்
முடிவைத் தன் முடிவாய்க்காட்டிப் பலம்சேர்ப்பவன். நன்மையோ தீமையோ என் உடன்நின்று பாரம் சுமந்தவன். கழகத்திற்காக தன் வாழ்வின் உயர்ச்சிகளைத் தவிர்த்து வாழ்ந்தவன். பிள்ளை பிறந்தபின்பும் என்னைத் தனித்து வெளிநாடு விட்டுப்போக விருப்பமின்றி வாடி முகம்பார்த்தவன். வெளிநாட்டில் நம் மண்ணினைந்து மனம்வாடும் மான்பாளன். இவன் உறவு
கம்பன்கழகத்தின் நிமிர்வு. பிரிவு என்பலத்தின் முறிவு.
க. குமாரதாசன்
என் கருத்தையே தன் கருத்தாக்கி வாழ்ந்த பெரியோன். என்னைவிட என்னை நேசித்தவன். எனக்காகக் கம்பனைக் கடவுளாக்கியவன். அதற்காக உலகியலை இழந்தவன். என் குருநாதர்க்குத் தட்சணை கொடுப்பதற்காக தன் தமக்கை தந்த கல்யாண மோதிரத்தை தயக்கமின்றித்தந்த தயாநிதி. என் புகழுக்காய் என்னைவிட அதிகம் பாடுபட்டவன். ஒரு காலத்தில் தன் துவிச்சக்கரவண்டியில் என்னையேற்றி யாழ்ப்பாணம் முழுவதும் கொண்டு சென்று கம்பனை நிலை நிறுத்தியவன். என் நட்புக்காகவும் கம்பனுக்காகவும் தமிழ்நாட்டில் கிடைத்த பல்கலைக்கழகக் கல்வியையும் தாரைவார்த்தவன். என்னோடு சிரித்து என்னோடு அழுது நானேயாய் நின்ற நம்பி, தன் இரத்தஉறவுகளை எனக்காக இரண்டாம் உறவாக்கிய ஏந்தல். இவனின்றேல் இன்றைய கம்பன் கழகம் இல்லையென்பது உறுதி. இன்று வெளிநாட்டில் தனக்காகவும் கொஞ்சம் பாடுபட தனித்துச்சென்றிருக்கிறான். அவன் கடல் கடக்க கண்ணிர் மடல் கடந்தது. இவன் நினைப்பாலேயே இன்றும் செயற்படுகின்றேன்.
க. மாணிக்கவாசகர்.
கழகத்தை பொருளாதார ரீதியில் ஆரம்பகாலத்தில் நிலைநிறுத்த அத்தி பாரமிட்டவன். இவனின் அத்தான் தந்த பணமே கம்பன் கழகத்தை அங்குரார்ப்பணம் " க செய்தது. இவன் மட்டுமல்ல இவன் குடும்பமும் அன்பால் எம்கழகத்தோடு இணைந்து போயிற்று. எங்கள் ஆரம்பப் பொருளாளர். தொழில் நோக்கிப் பின் பதவி துறந்தான். இன்றும்
229

Page 246
என்னையும் கழகத்தையும் நேசிக்கும் அன்பன். இவனால் என் உறவு பெருகிற்று.
கு. பூணீரத்தினகுமார்
கழகத்தில் பிந்தி வந்து நெருங்கியவன். வைத்திய கலாநிதி. தன் துறை வேறெனினும் என்மேற் கொண்ட பாசத்தால் தமிழை நேசித்தவன். உண்மையே இவன் வடிவு. வெளியே முரட்டுத்தனமும் உள்ளே அன்பும் நிறைந்த பலாக்கனி. கடமை மறவாத கண்ணியன். கழகத்தைப் பொறுத்தவரை மற்றவர்களை மிரட்டும் சட்டம்பி. கழகத்தையே தன்வீடாகக்கருதி பலகாலம் தன் வாழ்வு பற்றியும் நினையாமல் வாழ்ந்தவன். தடன் அடையக்கூடிய உலகியல் வெற்றிகளையெல்லாம் எனக்காகவும் கழகத்திற்காகவும் அர்ப்பணித்த தியாகி என் புகழை உலகளாவி விரிக்க தன் புகழைச் சுருக்கிக்கொண்டவன். இன்றும் என்னையும் கழகத்தையும் நிழல் செய்து காக்கும் விருட்ஷம். நான் கிளைபரப்பி நிழல் கொடுக்க வேராய் நின்று வீறுதருபவன். இன்று இவனே கழகத்தின் ஆணிவேர் எனது காவல்தெய்வம்.
எஸ். டி. சிவநாயகம்
தமிழ்ப்பித்தர், கம்பகாதலன், காரியங்களால் மட்டும் தன்னை இனங்காட்டும் பெரியோன் எங்களை முதலில் இனங்கண்டு வளர்த்த பத்திரிகையாளர். தன் எழுத்தாலும் பேச்சாலும் எம்பணிக்கு உயிர்ப்பூட்டியவர். கொழும்பு வரை எமது கழகம் நீழ வழிகாட்டியவர். எங்கள் முகந்தெரியாக்காலத்தில் எமக்கு இவர் தந்த ஊக்குவிப்பு காலத்தாற் செய்த உதவி. கழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு, இவர் இட்ட உரமும் ஒரு காரணம்.
பொன். சுந்தரலிங்கம்
இசை அறிஞர். சங்கீதக் காரர்களுக்குள் ஆழுமையும் செயற்பாடும் நிறைந்திருந்த தனியொருவன். எங்கள் கழகம் ஆரம்பிக்கும்பொழுதே அவர் நடத்திய இளங்கலைஞர் மன்றம் பெரும் புகழ்பெற்றிருந்தது. இவர் முகம் செல்லாத இடம் இல்லை. ஆரம்பகாலத்தில் எங்கைைள இனங்கண்டு தோளோடு துணை நின்ற பேராளன். அக்காலத்தில் கம்பன் கழக முதல்நாள் விழா இவர் கடவுள் வாழ்த்தோடுதான் ஆரம்பிக்கும். துன்பம் நேர்ந்த கலைஞர்க்கு இன்பம்சேர்க்க ஓடிவரும் இனியன். பிற்காலத்தில் சில முரண்பாடுகள் வரினும் கழகத்திற்கு அவர் செய்த உதவி மறக்க முடியாதது.
அ. குமரன்
கழகத்தின் ஆரம்பகால நட்சத்திரப் பேச்சாளன். என் நட்புக்குரிய ஆசிரியன். இவன்பேச்சைக் கேட்கவெனவே எங்கள் விழாக்களில் ஒரு காலத்தில் கூட்டம் சேர்ந்தது. பல்துறை ஆற்றலோன். நாத்திகம் இவன் கொள்கை, எனினும்
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 
 
 
 

இவனிடமிருந்த ஒர் ஆத்திகனுக்குரிய அன்புள்ளம் இவன்பால் என்னை ஈர்த்தது. இவன்மட்டும் வாழ்வைத் தெளிவுற நெறிப்படுத்தியிருந்தால் இன்று அறிஞராய்ச் சொல்லிக்கொள்ளும் பலர் அஞ்சவேண்டி இருந்திருக்கும்.
கோடுர் இராஜகோபால சாஸ்திரிகள் சான்றோன் எனும் சொல்லுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். என் குருநாதர் இரா. இராதாகிருஷ்ணனின் நண்பன். இயல், இசை இரண்டிலும் துறைபோனவர். அடக்கத்தில் அமரர். இராமேஸ்வரத்தில் இவர் பெயர் தெரியாத குழந்தையும் கிடையாது. எங்கள் கழகத்திற்கு தமிழகத்திலிருந்து வந்த முதல் விருந்தாளி. நான் இளைஞனாய் இருந்த காலத்திலேயே இராமேஸ்வரக் கம்பன் விழாவிற்கு என்னை அழைத்துப் பேசவைத்து ஊக்குவித்த பெரியோன். அக்காலத்திலேயே என்னைச் சிறியன் எனக் கருதாது மதிப்புத் தந்த மாண்பாளன். அவ்வன்புத்தொடர்பு பிள்ளைகளூடு இன்றும் தொடர்வதில் எனக்கோர் திருப்தி,
கம்பவானர் அருணகிரி
கம்பனடிப்பொடி, பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் ஆகியோரது மறைவின் பின் அறுந்துபோயிருந்த தமிழகத்தொடர்பை உயிர்ப்பித்தவர். நடையில் கும்பகர்ணனது
கம்பீரமும் பேச்சில் இராவணனது மிடுக்கும் கொண்ட தமிழ்ப்புலவர். கம்பனடிப்பொடி மேல் கொண்ட நட்பினால் அவர் அன்புக்காளான என்னை ஆதரித்த வள்ளல். தமிழக மேடைகளில் நான் பேசும்போது அருகிருந்து சபாஸ் என என்னைத் தட்டிக்கொடுத்து வளர்த்தவர். இவர் இன்றேல் தமிழகத்துடனான கழகத்தின் தொடர்பு முற்றாய் அறுந்திருக்கும்.
அ. ச. ஞானசம்பந்தன்.
தமிழ்நாட்டில் எனக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த அறிஞர்கோன். எழுத்துலகில் நான் வைத்த முதலடியை தன் அன்பால் அங்கீகரித்து அருள் செய்தவர். கல்வியையும்
கடக்கக் காட்டித் தந்த ஞானி. இளமையில் கம்பனை என்மனதில் விதைத்தவர்களில் இவரும் ஒருவர். தன் எழுத்தால் இராமாயணப் பாத்திரங்களுடன் நட்பு உண்டாக்கியவர்.
இலக்கண வித்தகர்.நமசிவாயதேசிகர்
என் அறிவுக் கண் திறந்த ஆசான். பேச்சையே நம்பி இருந்த என்னையும் கழகத்தையும் அறிவேற்றி உயரச் செய்தவர். எங்களை உயர்த்துவதற்காகத் தான் தாழ்ந்து
வந்தவர். தன் வித்தகத்தால் சித்து புரிந்து எங்களையும் அறிஞர்
230

Page 247
போல் ஆக்கியவர். இவர் இன்றேல் அறிவு உலகத்தில் எனக்கு ஒர் இடம் இருந்திருக்காது என்பது திண்ணம்.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
யாழ்ப்பாணத்தில் பேச்சுக்கலைக்கு மதிப்புண்டாக்கியவர். பேச்சோடு நிற்காமல் செயற்றிறத்தால் யாழ். மண்ணில் தன் பெயர் நிறுத்தியவர். கம்பன் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பே எம்மை ஊக்குவித்து வளர்த்தவர். பிற்காலத்தில் நான் பேசிய இடமெல்லாம் வந்து பாராட்டி யாழ். மண்ணில் எனக்கோர் அங்கீகாரம் பெற்றுத்தந்தவர். என்னைக்காணும்போதெல்லாம் "உடம்பைக் கவனித்துக் கொள்ளும்” என அக்கறையுடன் சொல்லும் அன்னை. கம்பன் விழா விஸ்வரூபம் எடுத்தபோது தன்வாக்காலும் வளத்தாலும் துணை நின்றவர்.
தி ரு . தி ரு ம தி வைத்தியநாதன் தம்பதி
த  ைல வ ன் ஆர்வக்கடல். தலைவி
அன்புக்கடல். எங்களைப் பிள்ளைகளாய் நேசித்த குடும்பம், என் குருநாதர் யாழ். வரும்போது அவரைப் பிள்ளையாய்ப் பராமரிக்கும் பொறுப்பு இவர்களது. இரவு விழா முடிந்ததும் “ஜெயராஜ் நீயும் வந்து கொஞ்சம் சாப்பிட்டுப்போப்பா” என அன்போடு வரும் அம்மாவின் அழைப்பு இன்றும் என் காதில் ஒலித்தபடி. ஆரம்ப காலத்தில் தன் பதவியால் பொருளா தாரத்துறையில் எங்களைப்போசித்தவர் ஐயா. அவர் மறைவுக்கு முதல் நாளும் என் கை பிடித்து கம்பன் கழகம் பற்றி அக்கறையாய் விசாரித்தவர். மனதால் குழந்தை. அம்மா இன்று தனித்திருந்தாலும். பெற்றதாயாய்க் காட்டும் அன்பால் உயிர்ப்புறுகிறோம்.
"சொக்கன்'
எங்கள் கால யாழ்ப்பாணத்தின் குறுமுனி. முத்தமிழ்த்துறை வல்லவர். எங்கள் முதல் விழாவிலிருந்து தொடர்ந்து எம்மோடு இருப்பவர். சோராத இவர்தம் முயற்சி எனக்கு முன்னுதாரணம். எங்கள் கழகம் அமையும் முன்னரே கம்பனுக்காகக் கழகம் அமைத்தவர். என்னை முழுமையாய் அங்கீகரிக்காவிடினும் என்மேல் அன்பும் என்வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவர்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
கம்பனையும் மரபுத்தமிழையும் பல்கலைக்கழகம் இழிவாய் நோக்கிய காலத்தில் துணிந்து எங்கள் மேடையேறியவர். முதற் கம்பன் விழாத்தொட்டு அனைத்து விழாக்களிலும் கலந்து கொண்டவர். எங்கள் செயலாளர் குமாரதாசன் பலகலைக்கழகப் பணியில் இணைய இவர் அன்பே
கம்பன் மலர் - 2000
 
 
 
 

காரணமாயிற்று. ஒரு குழந்தையைக்கூட மதிக்கும் பண்பாளர். எங்கள் கழகத்தின்மேல் இவர் காட்டிய அக்கறையும் அன்பும் மறக்கமுடியாதது. பல்கலைக்கழகத்தார்க்கு கழக மேடைநோக்கி பாதையிட்டவர். பல்கலைக்கழகம் பற்றி ஒர் கேள்விக்கு நான் எழுதிய பதிலால் மனம் வாடி இன்று சற்றுத் தூரத்தில் நின்றாலும் என்றும் இவர்மேல் எனக்கு அன்புண்டு.
என். வித்தியாதரன்
இன்றைய புகழ்பெற்ற பத்திரி கையாளன். அன்றைய திருகோணமலைக்
புகுந்தாலும் தன்னை மறந்து அதுவேயாவது και இவன் இயல்பு. தன்னை வெளிக்காட்டும் விருப்பம் இளமையிலேயே இவனுக்கு இல்லாதிருந்தது. கழகத்தின்மேல் இவன் காட்டிய பற்று மட்டுமல்ல இவன் குடும்பத்தார் காட்டிய பற்றும் ஆச்சரியமானது.
கம்பன்கழக அமைப்பாளன். எந்த வேலையில்
பத்திரிகையாளனாய் முற்றாய் மாறிய நிலையில் இன்று அநாதரவாய் நிற்கும் யாழ்ப்பாணத்தை தன் ஆழுமையால் நெறிப்படுத்தி நிற்கிறான். கழக குடும்ப உறுப்பினன் என்ற வகையில் கழகமும் பெருமை கொள்கின்றது.
S. SuuTJTyT (S. T. R.)
கலைத்தொண்டன். கழகம் ஆரம்பித்த நாள் தொட்டு கைகொடுத்து வருபவர். சிரிக்கப் பேசி வசீகரிக்கும் செயல்வீரர். என் குருநாதர் பேராசிரியர் இரா.
இராதகிருஷ்ணன் வருகையை பிரமுகர்க்கு அறிவித்து பிரபல்யப் படுத்தியவர். இவர் வீட்டில் இன்றும் கலைஞர்க்கு விருந்துதான்.
வீரவாகு குகன்
இவ்விரு வரும் வ ட ம ர ன ட் சி க் கம்பன்கழகம் அமைத்த வ ள் ள ல் க ள் . அறிமுகமில்லாக்காலத்தில் எங்களுக்குக் கை கொடுத்து கடைசிவரை கம்பனைக் காத்தவர்கள்.
அருமைநாயகம்
வேடிக்கை மனிதன், மண்ணில் நின்று கொண்டு ஆகாயத்தில் வாழ்ந்தவன்; நாடகம் இவன் உயிர்மூச்சு. மனதில் பட்டதை வெளிப்படைப்பாய்ப் பேசும் இயல்பால் வந்த வாய்ப்புகள் அத்தனையும் இழந்தான். துன்பத்தையும் இறைக்கொடையாய் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவன். என்மேலும் கழகத்தின்மேலும் எல்லையற்ற அன்பினன். மரணம் வரையும் கம்பீரமாய் வாழ்ந்தவன்.
23

Page 248
சீ. வீ. கே. சிவஞானம்
சிலகாலம் யாழ்ப்பாணத் தலைமையேற்ற ஆழுமையாளன். சிறந்த நிர்வாகி. மாநகரசபையில் அரச உத்தியோகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் போல் பணியாற்றியவர். எங்கள் கழத்தின் போசகர். இன்று கம்பன்கோட்டம் நிமிர்ந்து நிற்பது இவரால். இந்திய இராணுவத்திடமிருந்து எங்கள் கட்டிடத்தை மீட்டுத்தந்தவர். எங்கள் மேல் இவர் கொண்ட தனியன்பு பலருக்கு பொறாமை தந்தது. சர்ச்சசைகளுக்கு அஞ்சாத மனிதன். இன்றும் எங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்.
குமாரதாச மாப்பாணமுதலியார்
கம்பன்கோட்டம் அமைக்க காணி தந்த வள்ளல். தர்மகர்த்தா என்னுஞ் சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவர். கம்பன் கோட்டமமைந்து பலவிழாக்கள் நடந்தும் இன்று வரை எம்கழகத்துள் கால் வைக்காத மாண்பாளர். முருகன் வழிநடத்தலில் வாழும் உண்மைத்தொண்டர். கழகத்திற்கு இவரால் முருகன் அருளும் வாய்த்தது.
'முரசொலி ம. சிவராஜா
எதையும் நூறுவீதம் சரியாய்ச் செய்யவேண்டும் எனும் விருப்பம் கொண்டவர். அதனாலேயே உலகியல் வெற்றிகளைச் சந்திக்க முடியாமற் போனவர். இவரைத் Y XN திருப்திப்படுத்த முடியாது என அறிந்து கழக விஷயத்தில் இவர் கண்ணில்படாமல் ஒழிந்து திரிந்திருக்கிறேன். கண்டதும் யாரும் மதிக்கும் தெய்வீகத்தோற்றம். குடும்பமே அன்புவடிவானது. தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் இன்றைய உலகில் தன் தோல்விகளுக்கு மத்தியிலும் மற்றவர் பற்றி அவர்களைவிட அக்கறை எடுக்கும் அதிசயன். தமிழ்நாட்டில் தனிந்திருந்தாலும் எங்கள் வளர்ச்சிபற்றி ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இருக்கும் அவர் குடும்பத்தை மறக்க முடியாது.
ஈ. சரவணபவன்
கழகத்தின் ராசிக்காரரான வள்ளல். எங்கள் விழக்களில் முதல்நாள் மங்கள விளக்கேற்றுதல் இவர் குடும்பப் பொறுப்பு. என்னையும் கழகத்தையும் நிதியால் மட்டுமன்றி மதியாலும் காத்து வருபவர். நண்பன் வித்தியாதரனால் அறிமுகமாகி பின் அவனுக்கும் கழகத்துக்கும் உறவானவர்.
மா. தவயோக ராஜா
கம்பனுக்கு வாய்த்த சடையப்பர் போல் எங்கள் கழகத்திற்கு வாய்ந்த வள்ளல். கம்பன் கோட்டம் அமைத்து, கடன் பட்டு நான் நின்றபோது நான் யார் என்று தெரியாமலே துணை செய்த வள்ளல். தாழ்விலாச் செல்வர் நம் இனம்பற்றி அதிக அக்கறை கொண்டவர். தெள்ளியரான
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 
 
 
 

திருவாளர். புகழ்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் புண்ணியத்திற்காய் தர்மம் செய்யும் பெரியோன். இன்று கழகம் நிலைக்க இவர் செய்த உதவியே காரணம். எங்கள் செயல்களால் தர்மம் வளரின் அதன் காரணர் இவரே.
ஜெ. கி. ஜெயசீலன்
இவனொரு பாரதிப்பித்தன். தமிழ்ப்பித்தால் என்னோடு இணைந்தவன். தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் தமிழைப் பற்றிக் கவலைப்படும் வேடிக்கை மனிதன். எங்கள் கழகத்திலிணைந்த முப்பது வயதுக்குழந்தை. புத்தகப்பயித்தியம். என்மேல் இவன் கொண்ட அன்பு எல்லையற்றது. அம்மை நோய் வந்து நான் கிடக்கையில் என்னைப் பிள்ளையாய்ப் பராமரித்த அன்பு மறக்க முடியாதது. நான் திட்டினாலும் அடித்தாலும் பொருட்படுத்தாத அவன் போக்கு வியப்பிற்குரியது. யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுக்காதவன். எங்கள் கழகத்தில் புதுக்கவிதைக்கு உயிர்ப்பூட்டியவன்.
க. இரகுபரன்
எங்கள் காலத்து வித்துவான் ஆறுமுகம். எங்களுக்குள் இவனே இலக்கணவித்தகன். கம்பன்கழகத்தின் பதிப்பாசிரியன். ஒடிந்து நடந்தாலும் உள்ளே நிமிர்ந்தவன். பற்றின்மை இவன் பலமும் பலயினமுமாம். நன்மை தீமைகளில் என்னைக் கைவிடாதவன். கழகப்பணத்தை நான் கையாடிவிட்டதாய் ஒர் கவிஞர் எழுதிய கடிதம் கண்டு கோபத்தாற் கண்ணிர் வடித்த என் அன்பன். 1995இல் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டபோது எங்கள் கம்பன் கோட்டக்கட்டிடம் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மாளிகை என தவறாய் அறிவிக்கப்பட்டு அதன்காரணமாக வவுனியாவில் நடுச்சாமத்தில் இராணுவம் எம்மைக் கடத்திச்சென்று நடுக்காட்டில் ஓர் வீட்டில் சிறை வைத்தபோது "நித்திரை வருகுது கொஞ்ச நேரம் படுக்கட்டே”எனக்கேட்டு எம்மை வியக்கவைத்த விந்தை மனிதன்.
ம.ந. கடம்பேஸ்வரன் ஆரம்பகாலத்தில் எங்களோடு துணை நின்ற
தமிழ்பித்தன். இன்றைய பண்டிதன். தமிழை வாழ்வாக்க வேண்டுமென்ற தவிப்புடையோன்.
பலதமிழரிஞர்கள் கம்பன் கழகத்தோடு as a
இணையக் காரணமானவன். ஒரு காலத்தில் இவன் வீடு கழகத்துக்கு சங்கமத்தலம்.
என். ஆர். சின்னராசா
தவில்மேதை. நான் வியக்கும் கலைஞன். எத்துறையிலிருந்தாலும் மிளிர்ந் திருக்கக்கூடிய நுண்ணறிவாளன். தன் செல்வாக்கை கழக வளர்ச்சிக்காய்ப் assassiss பயன்படுத்திய பெரியோன். வாசித்தும் யாசித்தும் கழகத்தை
232

Page 249
வளர்த்தவன். இன்றும் இவர் அன்பு இவர் மாணவரான தவில் வித்துவான் புண்ணிமூர்த்தி மூலம் தொடர்கிறது. யாழ்ப்பாணம் போரால் வறுமையுற்றபோது அவரவர் தம்தம் தேவைக்காய்த் திரிய “தம்பிக்கோர் அரிசி மூட்டை கொணர்ந்தனான்” எனத் தேடிவந்து அரிசியோடு ஆச்சரியம் தந்தவர்.
புதுவை இரத்தினதுரை
தன் கவிதையால் பாரதிக்குப்பின் என்னைக் கவர்ந்த கவிஞன். அன்பால் என் உறவானவன். சிறுமை கண்டு பொங்குதல் இவன் கவிதைக்கு மட்டுமல்ல இவனுக்கும் இயல்பாம். இவன் வார்த்தை தரும் மயக்கத்தால் இவன் வீட்டுவாசலே எனக்கும் என் நண்பர்க்கும் பலகாலம் தஞ்சமானது. மேற்சென்று இடிக்கும் உரிமையுள்ள நண்பன். பலவகையில் கழகத்தைக்காத்தவன். இடத்தாற் பிரிந்தாலும் இதயத்தாற் பிரியாதவன்.
கல்வயல் வே. குமாரசுவாமி
கோபத்தில் துர்வாசர். பாதகம் செய்வாரைக் கண்டு பதைக்கும் நெஞ்சத்தன். இவர் கோபமெல்லாம் மற்றவர் மேற்றான். கழகத்தை வீடாய்ப் போற்றும் பெரியர். பொங்கலுக்கு முதல்நாள் வேர்க்க விறுவிறுக்க சைக்கிளில் அரிசி தேங்காயோடு அத்தனை தூரம் கடந்து இவர் வர என் நெஞ்சம் உருகும். 1995 இல் யாழ்ப்பாணம் விட்டு
இடம்பெயர்ந்த போது கழக உறுப்பினர் அனைவர்க்கும் இவர் வீடே சரணாலயம் ஆயிற்று. இவர் கவிதையில் கிராமியம் மணக்கும்.
த. சிவகுமார்
பேச்சாளன். காரைநகரில் கம்பன் கழகம் அமைத்து வெற்றி கண்டவன். ஓயாத உழைப்பாளி. புராணச் செய்திகள் இவன் விரல் நுனியில். இந்திய இராணுவம் யாழ். மண்ணில் நின்ற போது பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கம்பன் விழாக் கண்டவன். பேச்சு இவன் மூச்சு. சற்று முதிர்ந்தால் தமிழ் உலகம் பயன் கொள்ளும்.
S. A.E ஏகநாதன்
இயலும் இசையும் வல்ல நீதிபதி. கம்பன் கழகத்துக்காய் அன்றாடம் பாடுபடும் ஆர்வலர். அன்பால் எளியவர். இன்று யாழ்ப்பாணத்தைக் கலக்கிவரும் நீதிபதி.
ப. தயாபரன்
இளகிய இரும்பு வியாபாரி. வடமராட்சிக் கம்பன் கழக அமைப்பாளன். இறைத் தொண்டன். தோற்றத்தால் அளவிட (plg. LLITg5 செயல் வீரன். 6Syst எடுப்பதற்கென்றே பிறந்தவன். கம்பனை விட இவன் என்மேல் காட்டும் நேசிப்பு மிக அதிகம்.
கம்பன் மலர் - 2000
 
 
 
 
 

பூ, பூனிதரசிங்
இவருக்கு மட்டுமல்ல இவர் குடும்பத்துக்கும் கம்பன் கழகத்தோடு பல பிறவித் தொடர்பான அன்பு. வஞ்சனை இல்லா நெஞ்சன். சிரிக்காமற் சிரிக்க
வைப்பதில் வீரன். இரண்டு தசாப்தங்களுக்கு மேல் கழகத்தில் நின்று பிடிப்பவர்.
டொமினிக் ஜீவா
தூர இருந்து என்னை வசீகரித்த கொள்கைவாதி. பொது வாழ்வில் பொறுமையைக் கற்றுத் தந்தவர். பேராசிரி யர்களையும் மிரட்டும் ஆளுமையாளன். எழுத்து எனக்குத் தொழில் எனச் சொல்லி தொடர்ந்து நின்று பிடிக்கும் இன்றைய உலகின் வீரிய பாரதி. இலக்கிய உலகை உறவாக்கிக் காட்டியவர். கொள்கைகளுக்கு அப்பால் மாநுடத்தை நேசிக்கக் கற்றுத்தந்தவர். அன்று தொட்டு இன்றுவரை என்மேலும் கழகத்தின் மேலும் காட்டும் அக்கறை ஓர் ஆச்சரியம்.
புலவர் ஈழத்து சிவானந்தன்
எங்கள் ஆசிரியர் சிவராமலிங்கத்தின் தம்பி, அதனால் கழகத்தார் அனைவருக்கும் சித்தப்பா. பேரளவில் நிற்காமல் அன்னமிட்டு எங்களைக் காத்த உறவு எதிரில் இருப்பவர்க்கு எந்தக் கவலையையும் நிமிடத்தில் நீக்கும் கலகலப்பு இவர் கைவண்ணம். சீதையையும் கண்ணகியையும் எளிமைப்படுத்தி
வீட்டுப்பெண்களில் ஒருவராய்ப்பேசவைத்தவர்.பல சோதனையிலும் என் அருகிருந்து அஞ்சாமல் உரம் ஊட்டியவர். நாடு விட்டு நாடு போனாலும் இன்னும் என்னையும் கழகத்தையும் நேசிப்பவர்.
வித்துவான் சி. குமாரசாமி
கல்வியென்னும் பல்கடற் பிழைத்த கண்ணியன். தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் புண்ணியன். இவருக்குப் பகைவர் இவ்வுலகில் இருக்கமாட்டார். கல்வியால் சிறிதும் செருக்கடையாதவராய் நான் கண்ட முதல் மனிதர். கழகத்தார்க்குத் தேடிவந்து கற்பித்த நல்லாசிரியன்.
ஆ, கனகசபாபதி
நாடகக் காவலன். மிகப் பிற்காலத்தில் என்னுடன் இணைந்து என் வளர்ச்சி பற்றி 24மணி நேரமும் சிந்தித்து இருந்த பெருமகன். உயிர்விடும் போது என் பெயர் சொல்லி என்னைக் கலங்கச் செய்தவர்.
GLIT65Tg95g516o (A.T. P)
கலைப்பித்தர். அப்பித்தே இவரின் சொத்து. மற்றவர்களை மதித்து ஊக்கு வித்தலை இவரிடம் கற்றுக் கொண்டேன். 60 வயதைக் கடந்த இளைஞனாக இவரைச்

Page 250
சந்தித்ததுஎனது அதிஷ்யம் கலையார்வத்தால் கழகத்தையே வீடாக்கி என்னைக் காவல் செய்தவர். நாடகத்துறை சார்ந்திருந்தாலும் சுவைமிக்க தன் பட்டிமண்டபப் பேச்சுகளால் கழகத்திற்குப்
பாமரமக்களிடமும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர்.
பூனி. பிரசாந்தன்
என்னைப் பெருமைப்படுத்தும்
மாணவன். நூறுவீதம் உண்மையானவனாக
இருந்து வருங்காலத்தில் உலகியலை எப்படிச்
சமாளிப்பானோ என என்னைப் பயங்கொள்ள
வைப்பவன். எதிர் பார்ப்புகள் இல்லாத
கொள்ளைகையாளன். அதி தூய்மைவாதி. இளமையிலேயே ஒழுக்கம் கைவரப் பெற்றவன். கழகத்தைக் கண்ணாய் நினைப்பவன். இவனால் உலகம் பயன் கொள்ளும் என்பது என்
நம்பிக்கை .
ச. மணிமாறன்
என் மாணவர்களுள் வன்ரொண்டன். நுண்மதியோன். பலமுகப்பட்ட ஈர்ப்பு ஏதொன்றிலும் இவனை மிளிராமற் செய்தது. கழகப் பொறுப்பேற்றுக் கைவிட்டவன். தன்
வேகத்தைத் தடை செய்பவனாய்க் கருதி என்னை வெறுப்பவன். அவ் வெறுப்பின் மூலம் இவன் என்மேல் கொண்ட விருப்பே. தன் செயல்களில் என் அடையாளம் பல கொண்டவன். என் மந்தையில் இருந்து பிரிந்து சென்ற ஆடு.
த. சிவசங்கர்
வயதிற்கு மிஞ்சிய முதிர்ச்சி கொண்ட கவிஞன். ஆளுமையாளன். கழகத்தையும் என்னையும் உறவாய் நேசிப்பவன். நட்புக் கலந்த சீடன். சாதிக்க
வேண்டும் எனும் விருப்பை தன் மனதுள் நிரப்பியவன். அதுவே இவனின் பலமும், பலவீனமுமாம். வெற்றி மேல் கொண்ட விருப்பு இவனை உலகியற்படுத்தி விடுமோ எனும் அச்சத்தோடு நான். கோபம் இவன் குறியீடு. அன்பின் அடிமை.
த. ஜெயசீலன்
கவிதையால் கழகத்துள் வந்தவன்.
கவிதையே மூச்சானவன். அலட்டிக்
கொள்ளாத என் உண்மை அன்பன். கவிதை
மேல் இவன் கொண்டிருக்கும் காதல் ஒரு
ஆச்சரியம். கழகத்தின் உண்மைத் தொண்டரில் ஒருவன்.
க. ஜெயநிதி
இடையில் வந்த இளைஞர் கூட்டத்தில் கடையன். ஒட்டியும் ஒட்டாமலும் செயற்படுவது இவன்பாணி. இவன் எழுத்தில் என் சாயல் உண்டு. யேசுவின் பிள்ளை.
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 
 
 
 
 

சிற்பாசாரியார் ஆசீவரத்தினம்
எங்கள் கம்பன் கோட்டத்தைக் கலைக்கூடமாக ஆக்கித் தந்த பெரியோன். சிற்ப வள்ளல். என்மேற் கொண்ட அன்பால் கழகத்துக்கு தன் உடல் பொருள் ஆவியை வழங்கத் தயாராக நின்ற தயாநிதி. சிம்மாசனம் செய்து அதில் எனை ஏற்றி முடிசூட்டி மகிழ்ந்த என் ஆரா அன்பன். உலக உயர்வு கண்டு மகிழும் உத்தமன்.
தருமராசா
தன் கம்பீரத்தால் என்னை ஆட்கொண்டவன்; சமூகப்பிரக்ஞையோடு வாழ்ந்த தனிமனிதன். குனியாத இவன் தலையும் தாழாத இவன் கையும் எனக்காக மற்றவரிடம் குனியவும் தாழவும் செய்தன. என் உயர்வுகண்டு உண்மையில் மகிழ்ந்தவன். கம்பீரமும் மறக்க முடியாதவை.
மன்னவன் கந்தப்பு
எங்கள் கழகத்துக்கு நட்பான முதிர்ந்த இளைஞன். சுறுசுறுப்பு பற்றி எறும்பு இவரிடம் பாடம் கேட்கும். தன் அன்பாலும் அரவணைப்பாலும் கழகத்தின் அனைவரினதும்
உள்ளம் பதிந்தவர். நெற்றிக்கு நேரே பிழைகளைச் சுட்டிக் காட்டும் பெரியோன்.
தி. மார்க்கண்டு
தாயின் நல்லான் என்ற வார்த்தைக்குத் தகுதியானவன். தூர இருந்து என்மேல் அன்பைப் பொழிந்த தூயன். மேற் சென்று இடிக்கும் நண்பன். பொய்யறியாப் புகழினோன். உண்மை இவன் உரிமை. நானும் கழகமும் இடுக்கண் உற்ற போது அருகில் இருந்த பலர் கைவிட தூர இருந்து என் உரிமைக்காகப் போராடியவன். கழகத்தை இவன் நேசிக்கும் அளவு வேறு எவரும் நேசிப்பார்களா என எண்ண வைப்பவன்.
கி. கிருபானந்தா
அதிரப்பேசத்தெரியாத அன்பன். எனக்காகவும் கழகத்துக்காகவும் பலரின் பகையைச் சம்பாதித்துக் கொண்டவன். என்னோடு உடன் பிறந்திருக்க வேண்டிய 餐 அன்புத்தம்பி. என்ன துன்பம் நேரினும் எனைவிட்டு விலகாதவன். இவனின் ‘அண்ணே’ என்ற வார்த்தையில் என் அகம் குளிரும்.
எஸ். ஏ. பாலேந்திரன்
உற்சாத்தின் மறுவடிவம். கலைப் பித்தன். பலம் பலவீனத்தோடு என்னை உள்வாங்கிய அன்பன். என் ஆத்திரத்தை சிரிப்பால் அகற்றும் சீரியோன். புறம் புறம்

Page 251
கோட்டத்திலிருந் தொடங்கிய ஊர்வல கொடி, குடை சகிதம் 高 சித்திரம் 3ܐ
மாண்பாளர்; LITë ஜெயகுலராஜா.
கலாநிதி சுந்தரம்பிள் தலைமையில் கவிஞ آشنایی
மங்கல விளக்கேற் 'உதயன் சரவணபவ தம்பதியர்
 


Page 252
ருவாளர்கள் தவயோகராஜா,
தில்லைநாதன், ஈஸ்வரன்.
கொழும்புக்க கழகத்தைப்ப
புதுவைக் கம்ப
(3 முதலியாருக்கு
 

முறையீட்டுப் :பேராசிரியர் க்கு பாராட்டு:
6T (SGITLD5T5560T ஷ்ரப், யோ
ஜம்ராஜரட்ணம்எஸ்பிசாமி திருவ "שפן"? -
萤 கராஜன.
யபிரமுகர்கள். அமைச்சர் அ

Page 253
ப ங் கு ெ பெரியோர்கள்
d
羲 ଜୋeft கம்பகாவ6
மதனுக்குமா கொ. க.கழக ஈஸ்வரன்.
 

ாடாளுமன்றம் ாய் வருகை நாதன்.
றும் மேடையில்
கவிஞர்க
மாசனத்தில் மாந்திருக்கும் b பழனியப்ப 沅

Page 254
மங்களவிளக்கேற்றும் கலாபூஷணம் சண்முகம்பிள்ளை பாராட்டுப்
கூடவே கொ.க.கழகப் பொருளர் பாலேந்திரன். கிரு
உரையாற்று Gಲೂ
கலைஞர் சந்தானகிருஷ்ணனுக்கு கொ.க.கழகச் யல
56T6) is பாலசுந்தரம் சூட்டும்பதச்
மதுரை சேஷ கம்பவர்
 

பெறும் வித்வான்; ருமதி மங்கையரால் மாண்புறும் அரங்கு ஷ்ணப்பிரியா.ஆ உரையாற்றும் திருமதி சிவானந்தினி
லமாமணி கணேசபிள்ளையை
கும் உறுப்பினர் விமலேந்திரன்.
சங்கரனைப்பாராட்டும் கெர் க.கழக உபதலைவர் சிவதாச
கோபாலன் கிரு ணனுடன் நா மழைபொழியும்
ஷண آنان نخستین نخی: ரிதி, நீதிபதி ஏக்நாதன். ஏ. கே. சி.நடராஜன்.

Page 255
கொ. க.கழகப் பெருந்தலைவர் விக்னேஸ்வரனால் பாராட்டப் பெறும் ராஜ்குமார் பாரதி.
LOT6) சாந்தி ஹேமா கெளரீஸ்வரி அரு சபாரட்ணம். நாவுக்கரசன். சர்மா, ராஜப்பன். பூரீரங்
தலைமை தாங்கிய
 
 
 

கெளரவ யோகராஜனால்
நடத்தப்படும் கெளரவம், ஷேக் மகபூப் சுபாணிதம்பதிக்கு.
ந்ததி திரிபுரசுந்தரி வாசுகி லஷ்மிதேவி ஜமுனா நாதன். யோகானந்தம். ஜெகதீஸ்வரன். பாலகிட்ணர் கணேசலிங்கம்
தமிழ் நங்கையர்

Page 256
அருள்தர உருப்டெ அபிடேகம்
கிரியைகளிற் கம்பன் ܗܘ ܐ
கம்பமலர் அறிமுக கலந்துகொண்ட
வன்னியில் வா!
து!ை
蔓 கழகப் பதிப்பா
 

ளர் பாலகுமாரனுடன் வசங்கர்,கம்பவாரிதி.

Page 257
* புதுவைக் கம்பன் விழா -1998
மூப்பனாருடன் கழக முக்கியஸ்தர்கள்.
* புதுவைக் கம்பன் விழா - 1998
பாரூக் தலைமையில் தனிப் பேச்சு
* புதுவைக் கம்பன் விழா - 1999
அரங்கத்தில் ஈழத்து அன்பர்கள்.
 
 
 

* சென்னைக் கம்பன் விழா - 1999
சிறைப்பிடிக்கும் ரசிகர்கள்
露
* ଭିଓ ன்னைக் கம்பன் விழா -1998
சென்னைக் கம்பன் விழா 1997
ம்பன் அறிஞர்களுடன் கம்பவாரிதி
சேக்கிழார் விழா -1998 கருத்தரங்கில் பூரீபிரசாந்தன், கம்பவாரிதி, ஈஸ்வரன்.

Page 258

புதுவைக் கம்பன் விழா -1999 கம்பவாரிதிக்கு அறக்கட்டளைப் பரிசில்.
புதுவைக் கம்பன் விழா-1997 புதுவைக் கம்பன் விழா -1999 முதலமைச்சர் முன்னிலையில் ஈஸ்வரன் தலைமையில்
உரை கண்னன்.
ష్ర எஸ்.எஸ். தம்பதியோடு சேக்கிழார் விழா - 1999 வாரிதி. உரையாற்றும் பூரீ பிரசாந்தன்,

Page 259
திரிந்து என்னைச் சிக்கெனப் பிடித்த கழகக் காவலன். கழகத்தில் பிந்தி இணைந்தாலும் கம்பன் தொண்டில் முந்தி நிற்கும் உறுப்பினன். பணத்தைவிடத் தமிழைப் பெறுமதியாக நினைக்கும் வியாபாரி. இவனுக்கு மட்டுமல்ல இவன் குடும்பத்துக்கே கலைப்பித்தன். கழகம் பயன் கொண்டது.
சி. சிவமகாராஜா
தன்னடக்கமான செயல்வீரன். மற்றவர்க்காய் வாழ்வதில் மகிழ்வு கொள்பவர். பணிவு இவர் சொத்து. துணிவு இவர் பிறவிக்குணம். எதற்கும் அதிராதவர் அற்புதன். இவர் நெஞ்சில் கழகத்தின் பதிவு என்றும் உண்டு.
தி. முருகேசன்
அன்பாலும், பண்பாலும், பணிவாலும்
என் உள்ளத்தை வெற்றி கொண்ட வக்கீல்.
எனக்குக் கம்பவாணர் செய்த கருணை. எங்கோ இருந்தும் என்னை உறவாய்க் கருதும் உண்மை நெஞ்சன். தமிழை புலவர்கள் நேசிப்பதைவிட அதிகம் நேசிக்கும் தண்ணளியோன். இலங்கைக்கும் புதுவைக்குமான இலக்கியப் பாலத்தை உறுதி செய்த உத்தமர். அடுத்த பிறவியிலும் இத் தொடர்பு ஏற்படவேண்டுமென என்னை எண்ண வைப்பவர். என் இலட்சியப் பாதையில் நிழல் செய்த மற்றொரு இந்திய விருட்சம்.
நா. சோமகாந்தன்
கொழும்பில் நான் நிலைக்கக் காரணமானவர். கழகத்தையும் என்னையும் கொழும்பில் வெளிப்படுத்த உண்மையாய்ப் பாடுப்பட்டவர். செயல்வீரன். மற்றவர் திறமையைக் கணிக்கும் திறமுடையார். கொழும்பின் நெளிவு சுழிவுகளைக் கற்று நான் கொழும்பில் நிலைக்கக் காரணமானவர்.
பொ. விமலேந்திரன்
கழகத்தின் அச்சுவேலைகளை அழகாக்கிப் பெருமை சேர்த்தவர். அச்சுத் தொழிலை அச்சுக் கலையாக்கி வெற்றி கண்டவர். எல்லையற்ற என் கற்பனையைக் கண்டு சலிக்காமல் அச்சு முயற்சிகளில் என்னைத் தட்டித்தந்து ஊக்கு வித்தவர். இவர் பதிப்புகளினால் கழகம் பலர் மனதில் இடம் பிடித்தது. நான் முட்டி மோதும் உரிமை நண்பன். உலகத்தோடு ஒன்றி வாழும் பண்பினர்.
ச. சிவகுமார், க. வசந்தன், க. மகாராஜா, சி. கிரிதரன் எஸ். சிவலோகராசா, ந. ஜெபரஞ்சன், செ. சுே சி. கோகுலராஜ், த. முகுந்தன், க. கஜரூபன், க. ம
இவர்கள் என்மேல் காட்டிய அன்பால் கழகத்தைக் கழகத்துக்கும் நெஞ்சத்தின் ஓர் ஓரத்திலேனும் ஓர் உண்மை இ உழைத்தவர்கள். ஏதோ வகையில் என் அடையாளம் காட்டி நி நெஞ்சங்கள்.
கம்பன் மலர் - 2000
 
 
 

R, யோகராஜன் பா. உ
கொழும்பில் சிறைப்பட்ட என்னையும் கழகத்தாரையும் தேடிவந்து காத்த பெரியோன். யாரென்று தெரியாமல்
தமிழுக்காய் எங்கள் மீது அன்பு செய்த
தயாநிதி. உண்மையான மக்கள் தொண்டன்.
தெ. ஈஸ்வரன்
திரு வேறாகாத தெள்ளியர். இருவேறு இயற்கையும் இந்த ஒருவரிடம் வாய்ந்தது ஓர் அற்புதம். தமிழை மட்டுமல்ல தமிழ்ப் புலவோரையும் போஷிப்பவர்.
வானத்தைத் தொட முடிந்தும் மண்ணை மறக்காதவர். தன் பொருளினால் மட்டுமல்ல அன்பினாலும் கம்பன் கழகத்தைப் போஷிப்பவர். மற்றவர் துன்பம் கண்டு கண்ணிர் சொரியும் கண்ணியன். உள்ளத்தனைய உயர்வு எனும் தொடருக்கு
உவமானமானவர். தகுதி அறிந்து தமிழை ரசிப்பவர்.
பொ. பாலசுந்தரம்
கொடையும், தயையும், நட்பும் இவர்
பிறவிக் குணம். அள்ளிக் கொடுக்கும் வள்ளல்.
தன்னை விட தன் இனத்தையும் தமிழையும்
நேசிக்கும் ஏந்தல். கொழும்புக்கு அகதியாக வந்த என்னை ஆதரித்து விழாக்களில் அதிதியாக ஆக்கிய பெரியோன். என் அகத்தில் அருவமாக இருந்த இராமனைப் புறத்தில் உருவமாய் வடித்துத் தந்து வணங்கச் செய்தவர். தன் தயாளகுணத்தை பறைசாற்றாமல் பணிந்து நடக்கும் பண்புமலை, நெஞ்சத் தூயன். இப்படி ஒருவர் இருப்பதால் தான் இன்றும் மழை பெய்கிறது.
நீதியரசர் விக்கினேஸ்வரன்.
மேன்முறையீட்டு நீதியரசர் தன் சமூகப்புகழைக் கம்பனுக்கும் கழகத்துக்கும் ஆக்கிப் பெருமை சேர்த்தவர். ஆன்மீகத்திலும் தமிழிலும் ஆர்வம் செலுத்தும் நீதித்துறை வல்லுநர்.
சி. சிவஜிவன், எஸ். யோகராஜா, சி. தணிகாசலம், ரந்திரன், தி. சோமாஸ்கந்தராஜா, சி. குமரன், ணிகண்டன், சி. மயூரன், இ. பூனிதரன்.
குடும்பமாக்கியவர்கள். கழகத்தின் பக்கவேர்கள். எனக்கும் டம் தந்தவர்கள். உலகம் என்னை அங்கீகரிக்க என் பின் நின்று ாறு என் உறவானவர்கள். எங்கிருந்தாலும் என்னை நேசிக்கும்
235

Page 260
(கம்பன் விழாக்கள்)
* நல்லூரில் நடாத்தியவை.
1980 -
1980 -
1980 -
1981 -
1981 -
1982 -
1983 -
1986 -
1987 -
கழக அறிமுக விழாவும் முதலாவது கம்பன் விழாவும்
எமது கழகத்தின் இரண்டாவது கம்பன்விழா செப்ரெட ஆசிரியர் தேவன் அவர்களிற்கு 'சொல்லின் செல்வர்
மூன்றாவது கம்பன்விழா நவம்பர் 16* நல்லை ஆ கவிச்செல்வர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார் வெளியிடப்பட்டது.
நான்காவது கம்பன்விழா மே 3, 4, 5ஆம் திகதிகளில் தமிழ்ப் பேராசிரியை திருமதி ப. நீலா சிறப்புப் பேச்சா
ஐந்தாவது கம்பன்விழா செப்ரெம்பர் 25, 26, 27, 28, 2 பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் கலந்து கொ6
ஆறாவது கம்பன்விழா மார்ச் 24, 25, 26, 27, 28 அ பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணனும், இராமேஸ்வ கலந்து கொண்டார்கள்.
ஏழாவது கம்பன்விழா பெப்ரவரி 23, 24ல்" திக இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் இறுதியாகப் பங்
எட்டாவது கம்பன்விழா ஓகஸ்ட் 1, 2, 3ஆம் திகதிகளில்
ஒன்பதாவது கம்பன்விழா ஜுலை 17, 18, 19* திகதி
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 

கப் பதிவுகள்
ஜூன் 20இல் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
ம்பர் 14ஆம் திகதி நல்லை ஆதீனத்தில் நடாத்தப்பட்டது. இவ்விழாவில்
பட்டம் வழங்கப்பட்டது.
பூதீனத்தில் நடைபெற்றது. வித்துவான் சி. ஆறுமுகம் அவர்கள் அவரது திருக்கேதீஸ்வரநாதர் வண்டுவிடு தூது என்னும் நூல்
நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தருமையாதீன ளராகக் கலந்து கொண்டார்.
19ஆம் திகதிகளில் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. கம்பகலாநிதி ண்டு சிறப்புச் செய்தார்.
பூகிய நாட்களில் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. கம்பகலாநிதி பரம் கம்பன் கழகத் தலைவர் கோடூர் இராஜகோபால சாஸ்திரிகளும்
திகளில் நடைபெற்றது. இதுவே, கம்பகலாநிதி பேராசிரியர் குபற்றிய விழா.
நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
களில் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
236

Page 261
1992 -
1993 -
1994 -
1995
பத்தாவது கம்பன்விழா பெப்ரவரி 14,15, 16, 17 திச
பதினோராவது கம்பன்விழா ஏப்ரல் 2, 3, 4, 5, 6 ஆ விழாப் பந்தலில் நடைபெற்றது. மகரயாழ் விருது வழங்கப்பட்டது. 'கம்ப களஞ்சியம் நூல் வெளியிடப் வித்தகர் இ. நமசிவாய தேசிகர், பண்டிதர் மு. கந்ை பண்டிதர் க. சச்சிதானந்தன், சிரித்திரன்’ சி. சிவ வித்துவான் ஆறுமுகம் நினைவு பேச்சு, கவிதைப் பே
பன்னிரண்டாவது கம்பன்விழா ஜுலை 20, 21,22,23, 2 விழாப்பந்தலில் நடைபெற்றது. மகர யாழ் விருது 'அகலிகை நூல் வெளியிடப்பட்டது. நினைவுப் மு. ஞானப்பிரகாசம், இந்து சாதனம் நம.சிவப்பிரகா (வரதர்) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
பதின்மூன்றாவது கம்பன்விழா மே 5*"திகதி தொடக் விழாப்பந்தலில் நடைபெற்றது. மகர யாழ் விருது வை நினைவுப் பரிசில்கள் மகாவித்துவான் எவ், எக்ஸ்.ஸி. ந க. வைத்தீஸ்வரக்குருக்கள், பண்டிதர் சு.வேலுப்பிள்ளை பதினைந்து ஆண்டு நிறைவு நினைவாக,'கம்பமலர்'ெ அறிமுகப்படுத்தப்பட்டது.
* பிறஇடங்களில் நடாத்தியவை.
1982ー
1982 -
கொழும்பு - மார்ச் 19, 20, 21ஆ" திகதிகளில் சரஸ்வதி பத்திரிகையாளர் எஸ். டி. சிவநாயகம் முன்னி இரா. இராதாகிருஷ்ணன், கோடுர் இராஜகோபால சா6
இணுவில்-விழாவுக்கென விசேடமாக அமைக்கப்பெற் கம்பகலாநிதி பேராசிரியர் இரா. இராதாகிருஷ்ணன் ,
(மரீ தியாகராஜ சுவாமிகள் இசை ஆராத
1991
1992
1993
1994 -
கம்பன்கோட்ட மண்டபத்தில் ஜனவரி 27இல் நடாத்த ஜனவரி 12இல் கம்பன்கோட்ட மண்டபத்தில் இை அறிமுகப்படுத்தப்பட்டு நாதஸ்வரக் கலைஞர் எம். ஜனவரி 31இல் கம்பன்கோட்ட மண்டபத்தில் நடை கே. ஆர். நடராசா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஜனவரி 31இல் கம்பன்கோட்ட மண்டபத்தில் நடை வி. கே. குமாரசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
(அமரர்
1990
1991
1992
கம்பன் மலர் - 2000
பொ. ச. குமாரசாமி நினைவுப் ே
ஜனவரி 19இல் அமரர் திரு. பொ. ச. குமாரசாமி அவர் நடைபெற்றது. உரை நிகழ்த்தியவர் பேராசிரியர் க
மார்ச் 3* கம்பன்கோட்ட மண்டபத்தில் நடைபெற்ற
டிசம்பர் 27இல் கம்பன்கோட்ட மண்டபத்தில் நடைடெ

திகளில் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது.
கிய நாட்களில் நல்லூர்க் கோயில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட அறிமுகப்படுத்தப்பட்டு வைத்திய கலாநிதி ச. சிவகுமாரனுக்கு ட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட நினைவுப் பரிசில்கள் இலக்கண தயா, பண்டிதர் க. கிருஷ்ணபிள்ளை, பண்டிதர் ச. பொன்னுத்துரை, நானசுந்தரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. ஆசிரியர் தேவன், ாட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆகிய நாட்களில் நல்லூர்க்கோயில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட அமரர் பேராசிரியர் அ. துரைராஜா அவர்களிற்கு வழங்கப்பட்டது. பரிசில்கள் அருட்கவி சீ. விநாசித்தம்பி, ‘சித்தாந்த வித்தகர்’ சம், வைத்திய கலாநிதி க. இராமசாமி, எழுத்தாளர் தி. ச. வரதராசன்
கம் ஆறு நாட்கள் நல்லூர்க் கோயில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட த்திய கலாநிதி து. வி. ஜெயகுலராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டது. டராசா, பண்டிதர் க. வீரகத்தி,'ஆத்மஜோதி நா.முத்தையா, பண்டிதர் , ஒவியர் பி.எஸ். மணியம் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. கழகத்தின் வளியிடப்பட்டது. வித்துவான் குமாரசாமி நினைவுக் கட்டுரைப் போட்டி
தி மண்டபம், விவேகானந்த சபை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ன்று நடாத்திய இவ்விழாவில் 'கம்பகலாநிதி பேராசிரியர் ஸ்திரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
0இணுவில் கம்பன் கழகத்தினூடு மார்ச் மாதம் நடாத்தப்பட்ட விழாவில் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
னைகள்)
iப்பட்டது.
Fயாராதனை நடைபெற்றது. அதில் 'இசைப் பேரறிஞர் விருது பஞ்சாபிகேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பெற்றது. அதில் 'இசைப் பேரறிஞர் விருது சங்கீத பூஷணம்
பெற்றது. அதில் 'இசைப் பேரறிஞர் விருது சங்கீத பூஷணம்
பருரைகள்)
களின் நினைவுப் பேருரை நிகழ்ச்சி யாழ். பல்கலைக்கழக அரங்கில் . சிவத்தம்பி.
து. உரை நிகழ்த்தியவர் அதிபர் க. பூரணம்பிள்ளை.
]றது. உரை நிகழ்த்தியவர் பண்டிதர் ச. சச்சிதானந்தன்.
237

Page 262
நிலாக்கால நிகழ்ச்சிகள்)
1998
1998
1999
伯99
1999
世999
1999
நவம்பர் 3 - கவியரங்கம்; கலாநிதி காரை செ. சுந்தரம்
டிசம்பர் 3 - பட்டி மண்டபம்; யாழ்ப்பாணம் இந்துக் கல்
நடைபெற்றது.
ஜனவரி 1 - நாதயாகம்; சங்கீத வித்துவான் திருமதி வா
ஜனவரி 31 - இளைஞர் கவியரங்கம்; கவிஞர் ஜெ. கி. ெ
மார்ச் 31 - ஆய்வரங்கு வைத்தியகலாநிதி செ. நச்சின் ஏப்ரல் 30 - சுழலும் சொற்போர்; ஆசிரியர் இரா. செல்வ
மே 30 - இசைவேள்வி; சங்கீத வித்துவான் கு. நக்கி
(ஏனைய நிகழ்ச்சிகள்
节982
1985
1991
1991
1991
1992
伯92
1992
1993
1995
1995
1998
1998
1998
ஜூன் 27இல் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அத
செல்லவிருந்தமைக்கும், திரு. மு. பொ. வீரவாகு
பெற்றமைக்குமான பாராட்டு விழா. டிசம்பர் 21இல் கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துை
நடாத்தல். ஏப்ரல் 14இல் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியாக கவிதை மே 19இல் இருந்து கம்பன்கோட்ட மண்டபத்தில் பாரம்
ஒகஸ்ட் 24 முதல் செப்டெம்பர் 9 வரை நல்லூர்க் க
நடைபெற்றது. செப்டெம்பர் 30இல் கலாநிதி சி. மெளனகுரு அவர்
தலைவராக நியமனம் பெற்றமையைக் கெளரவிக்குமு ஒக்ரோபர் 10ஆம் திகதி கழக ஆதரவில் நாட்டியக் கலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்
சங்கீத வித்துவான் எல். திலகநாயகம் போல் அவர்க பெப்ரவரி 28இல் இலங்கை இளங்கலைஞர் மன்றத்தின்
பொ. சுந்தரலிங்கம் அவர்கள் கம்பன் கோட்ட மண்டL செப்டெம்பர் 9இல் கம்பன்கோட்ட மண்டபம் புனருத்தா
நாள் நிகழ்ச்சி. செப்டெம்பர் மாதத்தில் நவராத்திரி கால முத்தமிழ் வி செப்டெம்பர் 27இல் நவராத்திரி கால இசையரங்கு. சா ஒக்டோபர் 21 முதல் 26 வரையான கந்தசஷ்டி விரத தி ஈழத்தறிஞர்களின் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன கழக போஷகர் வித்துவான் க. ந. வேலன் பிரித்த
வழங்கப்பட்டது.
அகில இலங்கைக் கம்பன் கழகம்

பிள்ளை தலைமையில் நடந்தது. லூரி முன்னாள் பிரதி அதிபர் க. சிவராமலிங்கம் நடுவராக இருக்க
ாசஸ்பதி ரஜிந்திரன் அவர்களுடைய இசைக்கச்சேரி.
ஜயசீலன் தலைமையில் நடந்தது.
னார்க்கினியன் தலைமையில் நடைபெற்றது.
வடிவேல் தலைமையில் நடைபெற்றது.
ரனின் இசைக்கச்சேரி நடைபெற்றது.
திதிப் பேராசிரியராக நைஜீரியா, ஜப்பான் ஆகிய நாடுகட்கு
அவர்கள் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்
ர அவர்களது உடல்நலம் வேண்டிப் பிரார்த்தனைக் கூட்டமொன்றை
ப் பட்டிமண்டபம் கம்பன்கோட்ட மண்டபத்தில் நடாத்தப்பட்டது. பரிய இசை நாடக விழா நடாத்தப்பட்டது.
கந்தசுவாமிஉற்சவ கால இசையரங்கு கம்பன்கோட்ட மண்டபத்தில்
கள் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்துக்கு நுண்கலைத்துறைத்
கமாக தேநீர் விருந்து நடாத்தப்பட்டது.
ஞன் செல்வன் முருகையா அருள்மோகனின் பரதநாட்டிய அரங்கேற்றம் தில் நடாத்தப்பட்டது. ளின் இசை வெள்ளி விழா குறித்த பாராட்டுவிழா நடாத்தப்பட்டது. சார்பில், கலா மண்டபத்தை நிர்மாணிப்பதில் ஈடுபட்ட சங்கீத பூஷணம் பத்திலே பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார்.
ரணம் செய்யப்பட்டு கம்பன் அரங்கமாக திறந்து வைக்கப்பட்ட ஆரம்ப
ypIT. வ்கீத வித்துவான் எஸ். பத்மலிங்கம் அவர்களின் இசைக் கச்சேரி, தினங்களில் திருமிகு திருஞானசம்பந்தர் அவர்களின் பண்ணிசையும்,
5.
தானியாவில் குடியேறுவதை முன்னிட்டு, கொழுபில் பிரிவுபசாரம்
238

Page 263
கம்பன் மலர் - 2000
திருக்கேதீஸ்வரநாதர் வண்டுவிடு தூது ஆசிரியர் - வித்துவான் சி. ஆறுமுகம். வெளியீடு - 1980 நவம்பர் 16. மன்னார் மாதோட்டம் கெளரியம்பாள் சமேத திருக்கேதீஸ்வரந கழகத்தின் முதலாவது வெளியீடாக அமைந்தது.
நல்லூரான் வெண்பா நாற்பது ஆசிரியர் - வித்துவான் சி. ஆறுமுகம். நல்லூர்க் கந்தன் மேற்பாடப்பட்ட நாற்பது வெண்பாக்களைக் ெ
கந்தரநுபூதி அருணகிரிநாதரின் இந்நூல் பக்தர்கள் பாராயணம் செய்ய உத
வாலி வதைப் படலம்
வெளியீடு - 1987 பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கான பாடப்பகுதி மாணவர்களின் வசதி கருதி தனி நூலாக அரும்பத உரைகளுட
வாலி ஆசிரியர் - அகளங்கன்' அறிவுலகில் விவாதத்துக்குரியதாக விளங்கும் வாலிவதையின்
கம்ப களஞ்சியம்
பதிப்பாசிரியர் - க. இரகுபரன்.
வெளியீடு - 1993. இந்நூல் கம்பனால் இயற்றப்பட்டனவாகக் கருதப்படும் கம்பராமா ஏரெழுபது, திருக்கை வழக்கம், கம்பன் தனிப்பாடல்கள் என்பனவ
அகலிகை பதிப்பாசிரியர் - க. இரகுபரன். வெளியீடு - 1994.
இராமாயணக் கதாபாத்திரங்களுள் ஒன்றான அகலிகை பற்றி பிற்பட்ட இருபதாம் நூற்றாண்டு ஆக்ககர்த்தாக்களின்படைப்புக் தொகுப்பு.
கம்பமலர்
பதிப்பாசிரியர் - க. இரகுபரன். தொகுப்பாசிரியர் - வே. குமாரசாமி.
ଜୋsuffiuଏଁ (, -1995, அகில இலங்கை கம்பன் கழகத்தின் பதினைந்தாண்டு நிறை கவியியல், ஆக்கவியல், பதிவியல், என்னும் பிரிவுகளை உடைய
 

தரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டமைந்த தூதுப்பிரபந்தம்.
காண்டமைந்த ஒரு சிறு நூல்.
வும் வகையில் பதம் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டது.
களுள் ஒன்றாக விளங்கிய கம்பராமாயணம் வாலி வதைப்படலம் -ன் வெளியிடப்பட்டது.
நியாயப்பாடு பற்றி ஆராய்வதாக அமைந்த நூல்.
பணம் தவிர்ந்த பிற நூல்களான, சரஸ்வதி அந்தாதி, சடகோபரந்தாதி, }றோடு கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துக்களும் அமைந்த தொகுப்பு.
கம்பனுக்கு முற்பட்ட வான்மீகிராமாயணம், மகாபாரதம் என்பனவும் களும் கூறும் அகலிகை பற்றிய வேறுபட்ட பல்வேறு ஆக்கங்களின்
| குறித்து வெளியிடப்பட்ட மலர். நயப்பியல், ஆய்வியல், ஒப்பியல், Eil.
3
Q

Page 264
பட்டங்கள்
1980 - ஆசிரியர் தேவன்
1980 வித்துவான் சி. ஆறுமுகம்
1982 பேராசிரியர் இரா. இராதாகிரு இசைப் பேரறிஞர் விருது பெற்றோர்) 1992 - நாதஸ்வரக் கலைஞர் எம். பஞ்சாபிகேசன்
1993 - சங்கீத பூஷணம் கே. ஆர். நடராசா 1994 - சங்கீத பூஷணம் வி. கே. குமாரசாமி
(மூதறிஞர் கெள
1993 1994 இலக்கணவித்தகர் இ. நமசிவாயதேசிகர் அருட்கவி சீ. விந பண்டிதர் மு. கந்தையா 'சித்தாந்த வித்தக பண்டிதர் க. கிருஷ்ணபிள்ளை இந்து சாதனம் ந பண்டிதர் ச. பொன்னுத்துரை கவிஞர் வே. ஐயாத் பண்டிதர் க. சச்சிதானந்தன் வைத்திய கலாநிதி சிரித்திரன் சி. சிவஞானசுந்தரம் எழுத்தாளர் தி. ச.
ஸ்தாபக அமைப்பாளர் :
கம்பவாரிதி இ. ஜெயராஜ்
பெருந் தலைவர் :
தி. திருநந்தகுமார்
பெருஞ் செயலர் :
க. குமாரதாசன்
பெரும் பொருளர் :
வைத்தியகலாநிதி கு. பூனிரத்தினகுமார்
அமைப்பாளர் :
பூணி, பிரசாந்தன்
தலைவர் :
த. சிவசங்கர்
செயலர் :
இ. பூனிதரன்
பொருளர் :
த. ஜெயசீலன்
அகில இலங்கைக் கம்பன் கழகம்
 
 

சொல்லின் செல்வர்
கவிச் செல்வர் ஷ்ணன் 'கம்பகலாநிதி
"மகரயாழ் விருது பெற்றோர்)
1993 - வைத்தியகலாநிதி ச. சிவகுமாரன் 1994 - அமரர் பேராசிரியர் அ. துரைராசா 1995 - வைத்தியகலாநிதிது. வி. ஜெயகுலராஜா ரவம் பெ ற்றோர்)
1995 ாசித்தம்பி மகாவித்துவான் எப். எக்ஸ். சி. நடராசா f'மு. ஞானப்பிரகாசம் பண்டிதர் க. வீரகத்தி ம. சிவப்பிரகாசம் 'ஆத்மஜோதி நா. முத்தையா துரை பண்டிதர் க. வைத்தீஸ்வரக் குருக்கள் க. இராமசாமி பண்டிதர் சு. வேலுப்பிள்ளை வரதராசன் ஒவியர் பி. எஸ். மணியம்
பூணிலழனி சோமசுந்தர பரமாசார்ய சுவாமிகள்
அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலக்கணவித்தகர் இ. நமசிவாயதேசிகர்
ஆசிரியர் க. சிவராமலிங்கம்
வித்துவான் க. ந. வேலன்
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
திருமிகு ஈ. சரவணபவன்
240

Page 265
(திருகோணமலைக் கம்பன் கழகம்)
1982 - கம்பன் விழா மே 15, 16ஆம் திகதிகளில் திருகோணமை
1983 - கம்பன் விழா திருகோணமலை இந்துக்கல்லூரியி இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து சிறப்பித்த
(வடமராட்சிக் கம்பன் கழகம்)
1983 - கம்பன் விழா பெப்ரவரி மாதம் பருத்தித்துறை சிவன்
சபையினரால் நடாத்தப்பட்டது. கம்பகலாநிதி பேராசி
1994 - கம்பன் விழா தடங்கன் புளியடி முருகமூர்த்தி கோய
சபையினரால் நடாத்தப்பட்டது.
(காரைநகர்க் கம்பன் கழகம்)
1986 - கம்பன் விழா செப்ரெம்பர் 6,7,8 ஆகிய திகதிகளில்
1987 - கம்பன் விழா செப்ரெம்பரில் யாழ்ற்ரன்' கல்லூரியில் ந
1988 - கம்பன் விழா செப்ரெம்பரில் யாழ்ற்ரன்' கல்லூரியில் ந
1990 - கம்பன் விழா செப்ரெம்பரில் யாழ்ற்ரன் கல்லூரியில் ர
1994 - கம்பன் விழா செப்ரெம்பரில் நல்லூர் இளங் கலைஞர்
(ஊரெழுக்கம்பன் கழகம் )
1988 - திருவாசக விழா ஊரெழுழரீமீனாட்சியம்பாள் தேவஸ்
1994 - கம்பன் விழா ஊரெழு வீரகத்திப் பிள்ளையார் கோயில்
(கொழும்புக் கம்பன் கழகம்)
* கம்பன் விழாக்கள்
1998 - வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தி தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தல் விருது அறிமுகப்படுத்தப்பட்டு புதுவைக் கம்பன் ச திரு. பொ. கந்தையா, புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் பிரேம்ஜி ஞானசுந்தரன் ஆகியோர் கெளரவிக்கப்பட்ட
கம்பன் மலர் - 2000

முகங்கள்
ல இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
ல் பெப்ரவரி மாதம் நடைபெற்றது. 'கம்பகலாநிதி பேராசிரியர் Tf.
கோயில் மண்டபத்தில் வடமராட்சிக் கம்பன்கழக முதலாவது நிர்வாக ரியர் இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பில் மண்டபத்தில் வடமராட்சிக் கம்பன்கழக இரண்டாவது நிர்வாக
யாழ்ற்ரன்' கல்லூரியில் நடைபெற்றது.
டைபெற்றது. டைபெற்றது.
டைபெற்றது.
மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
தான திருமுன்றிலில் நடத்தப்பட்டது.
மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
கில் ஜனவரி மாதம் 09, 10, 11, 12 ஆம் திகதிகளில் நடைபெற்றது. r உள்ளிட்ட பல அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். கம்பகாவலர்' ழகச் செயலாளர் தி. முருகேசன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ா, கவிஞர் சக்தி அ. பால - ஐயா, மல்லிகை டொமினிக் ஜீவா, திரு. 50TT.
241

Page 266
1999 - வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் முன்னின் செயலாளர் பழ. பழனியப்பனுக்கு வழங்கப்பட்டது. 'வீரே திருமதி வசந்தா வைத்தியநாதன்,பண்டிதர் இ.வடிவேல்
2000 - வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் டிண்டபத் கம்பகாவலர் விருது திரு. க. சிவராமலிங்கம் அவர்க கெளரவ எஸ். சர்வானந்தா, திரு. தேவநேசன் நே திரு. த. மாரிமுத்துச் செட்டியார் ஆகியோர் கெளரவி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாடளாவியரீதியி அறிமுகப்படுத்தப்பட்டு நடாத்தப்பட்டன.
* இசை வேள்விகள்
1997 - வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் பிரபல இசைக் கலைஞர்களிற் பெரும்பான்மையோர் க
1998 - வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில்
திருமதி வசந்தி சங்கரராமன், திரு. ச. சங்கரன், செல்வ ஆகியோர் கலந்து கொண்டனர். மிருதங்க வித்துவா
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ܚ- 1999
மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார்பா
மகபூப் சுபாணி தம்பதி ஆகியோர் கலந்து கொண்டன
* ஏனைய நிகழ்ச்சிகள்
1996 - மார்ச் 31சி கொட்டாஞ்சேனை பூரீ வரதராஜ விநாயகர் பதினைந்தாண்டு நிறைவு நினைவு வெளியீடான 'கம்
1998 - பிரித்தானிய மண்ணில் நடந்த கிரிக்கட் போட்டித் அவர்களுக்கு பாராட்டு. அணித் தலைவர் அர்ஜுன
தமிழகக் கவிஞர் மேத்தா அவர்கள் கொழும்பு வந்திரு جسے 1998
1998 - வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத் செல்வி பரமேஸ்வரி கணேசன் ஆகியோரின் இசைக்
1999 - வன்னியில் வாடும் மக்களுக்கென ஒரு இலட்சம் ரூ
கையளித்தமை.
2000 - ழரீதியாகராஜ சுவாமிகள் உற்சவத்தை முன்னிட்டு ந
பாடப்பட்டது.
புத்தாயிரமாண்டு சிறப்பு இசை நிகழ்ச்சியாக சங்கீத வி س 2000
அகில இலங்கைக் கம்பன் கழகம்

31.12.1998 முதல் 03.01.1999 வரை நடைபெற்ற இவ்விழாவிற்கு லை வகித்தார்கள். கம்பகாவலர் விருது சென்னைக் கம்பன் கழகச் கசரி' எம்.ஜி. வென்சஸ்லோஸ், பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸ், , எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
3தில் 20.04.2000 முதல் 23.04.2000 வரை நடைபெறுகிறது. ளுக்கு வழங்கப்படுகிறது. வைத்தியகலாநிதி எஸ். தனபாலசுந்தரம், சையா, திருமதி பூமணி குலசிங்கம், திரு. க. சண்முகம்பிள்ளை, க்கப்படுகின்றனர். சமூகப் பணியாற்றும் தரிசனம் நிறுவனத்திற்கு ல் அமரர் துரை விஸ்வநாதன் ஞாபகார்த்த பேச்சு, கவிதைப் போட்டிகள்
15.12.1997 முதல் 25.12.19997 வரை நடாத்தப் பெற்றது. ஈழத்தின் லந்து கொண்டனர்.
04.12.1998 முதல் 13.12.1998 வரை நடைபெற்றது. தமிழகத்திலிருந்து பன் சேஷகோபாலன் கிருஷ்ணன், இசைப் பேரரசு ஏ. கே. சி. நடராசன் ன் சந்தான கிருஷ்ணனுக்குக் கெளரவம்.
24.12.1999 முதல் 01012000 வரை நடைபெற்றது. தமிழகத்திலிருந்து ரதி, திருமதி வசந்தி சங்கரராமன், திரு.ச. சங்கரன், கலைமாணி ஷேக் i.
ஆலய ஐங்கரன் மண்டபத்தில், அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ப மலர் அறிமுகவிழா.
தொடரில் சாதனை புரிந்த வீரர் திரு. முத்தையா முரளிதரன் ரணதுங்க பிரதமவிருந்தினராக வருகை தந்தார்.
ந்தபோது 'சாந்தி விகாரில் கெளரவித்து விருந்துபசாரம் நடத்தியமை.
தில் ஈழத்தின் பிரபல சங்கீத வித்துவான்கள் எஸ். பத்மலிங்கம், 5 கச்சேரி நடைபெற்றது.
பா துயர்துடைப்பு நிதியை அகில இலங்கை இந்து மாமன்றத்திடம்
டத்தப்பட்ட பூசை, சங்கீத வித்துவான்களால் பஞ்சரத்தின கீர்த்தனை
த்துவான் எல். திலகநாயகம் போலின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது.
242

Page 267


Page 268
"உலகம் பாவையும் நிலைபெறுத்தலும் நீ அலகிலா விளையா
தலைவர் அன்னவர்க்
வடிவமைப்பும் அச்சுப்பதிப்பும்: வரையறுக் இல48, புளுமென்பால் வீதி, ெ
 

ாம் உளவாக்கலும்
கலும் நீங்கலா
டையார் அவர்
கே சரண் நாங்களே
- Golgin
பட்ட யுனிஆர்ட்ஸ் தனியா) நிறுவனம்
be 3, agrangeles 33095