கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.08

Page 1
-U|COU Health G RS 50/- ©ITចំ
Registered at the Department of Post
 
 
 
 

O) ISSN 1800-4970
N41-N
uide o
5UI öf65ğFİ6)Döb
August 2011
s of Sri Lanka under No. 4 News/2011

Page 2
நீரிழிவு நோய் சிறந்த முறை கண்பார்வை, சிறுநீரகம், இ ஏனைய முக்கிய உறுப்பு
கருஞ்சீரகம் குருதி
கட்டுப்படுத்துவது நோய் எதிர்ப்புசக்
DABO
LLILIGaMVIG)
கருஞ்சீரக கெப்ஸ்யூல்ஸ்
HOT LINE 073688685
Manufactured by BIOEXTRACTs (Pvt) LTD, Market 11A, Milepost Avenue, Colombo 3, Sri Lal
1986) I DI ID,
 
 
 
 
 

பில் கட்டுப்படுத்தப்படாவிடின் இருதயம், பாதங்கள் மற்றும் களில் பாதிப்புகள் ஏற்படும்.
ளூக்கோஸினளவை ன், இயற்கையாக தியை அதிகரிக்
夔
臀
ed by: EXPOLANKA PHARMACEUTICALS (PVT) L'
琛 tik www.barakalk
BjöuOh

Page 3
හිgr:5.
கிராபிக்ஸ்
S.C. (తా. వర్తి எஸ்.நேசராஜ ଶsers ($1.H6)]]
 

E GANGGAL ফ্ৰান্তক্টো, தர்ஷினி,
,g,62gbITھے.gg@ T.
குமரி
ಛೀಕರಿ(ಹ್ಲಿ

Page 4
அன்பார்ந்த சுகவாழ்வு சஞ்சிகைக்கு, நீ சுமந்து வரும் அனைத்து ஆக்கங்களும் அருமையிலும் அருமை. நீ மென்மேலும் மணம் பரப்பி புகழ்பெற எனது
மனமார்ந்த ஆசிகள்.
LðISOðflj,3,5 6)Fað6()
அட்டன்.
டர் கதையை வருகிறேன். - டர்கதை மி .உள்ளது انتقلت 2 " كتلة تنتقلت
அன்பின் சுகவாழ்விற்கு, மாதத்தின் முதலாம் திகதி வந்தால் உன்னை காண வேண்டும் என்று ஆவல் புரண் டோடும். நீ தொடர்ந்து நல்ல ஆக் கங்களைத் தருவாய் என்ற நம்பிக்
கையுடன்,
அன்பன், பூபாலபிள்ளை வவுனியா
 

6T6 இனிய சுகவாழ்வு மாத சஞ்சிகைக்கு, உன்னில் இடம்பெறும் யோகாசன கட்டுரை மதிப்பு வாய்ந்தது. நான் அதனை தவறாது படித்து வருகி றேன். உன் பணி சிறக்க எனது
உளம் கனிந்த ஆசிகள்.
சுகந்தன்
நகங்கள் எல்லாம் அ
விஷப் பரீட்சை தொ
விஷப் பரீட்சை தெ கவும் சுவாரசியமாக
மாதம் ஒரு முறை மலரும் சுகவாழ்விற்கு, எனது வாழ்த்துக்கள். நீ தரும் கட்டுரைகள் மற்றும் ஜோக்கு கள் சூப்பரிலும் சூப்பர்.
எஸ்.என். சிவபாலன்
யாழ்ப்பாணம்.

Page 5
வாழ்வின் ஒளிக்கீற்றைத் தேடுதல். ஒரு மனிதன் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புரிந்து கொள்கிறான் என்பதிலேயே அவனது வாழ் வின் மகிழ்ச்சியும் துக்கமும் தாங்கியுள்ளது என்பது ஒரு ஆங்கிலத் தத்துவம். அநேகம் பேர் வாழ்க்கை என்பது என்னவென்பது தெரியாமலேயே ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழ்ந்து விட்டுப் போய் விடுகின்றார்கள். அர்த்தமுள்ள வாழ்வு ஒன்றை வாழ்வதற்குக் கூட தேடல் என்ற உணர்வு இருக்க வேண்டும். அத்தகைய உணர்வு இல்லாத வர்கள் வாழ்வின் பயனைப் பெறாமலேயே மாண்டு போய் விடுகிறார்கள்.
ஒரு சமயம் ஒரு மீனவன் அதிகாலையில் எழுந்து சூரியன் வருவதற்கு முன்பே மீன்பிடிக்கச் சென்றான். அவன் ஆற்றங்கரையை அடைந்து அமர்ந்து விடியலுக்காக காத்திருந்த போது அவன் காலடியில் கற்கள் நிறைந்த சிறு சாக்குப் பை யொன்று தட்டுப்பட்டது. அவன் தனது வலையை ஒரமாக வைத்துவிட்டு சாக்குப் பையை எடுத்தான். தன் வேலையைத் தொடங்க சூரியனுக்காக காத் திருந்த அவன் இருளில் ஒன்றும் செய்யத் தோன்றா தவனாய் சாக்குப் பையில் இருந்த கற்களை ஒவ் வொன்றாக எடுத்து ஆற்றை நோக்கி வீசத் தொடங் கினான். அவன் சூரிய வெளிச்சம் வரும் வரை பொழுதைப் போக்க வேண்டியிருந்ததால் அவசரப் படாமல் மெது மெதுவாக ஒவ்வொரு கல்லாக ஆற அமர வீசிக் கொண்டிருந்தான்.
கொஞ்ச நேரத்தில் சூரியன் உதிக்கவே பூமி யெங்கும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது. அச் சமயத் தில் அந்த மீனவன் எல்லாக் கற்களையும் வீசிவிட்டு ஒரே ஒரு கல்லை மாத்திரம் கையில் வைத்திருந் தான். அதனையும் வீசிவிட்டு தன் வேலையை ஆரம்பிக்க எண்ணிய அவன் அப்போது தான் அந்தக் கல்லைப் பார்த்தான். அந்த கல் சூரிய ஒளிபட்டு மின்னிப் பிரகாசித்து பல வண்ணங்களைக் காட்டிப் பளிச்சிட்டது. அவனுக்கு அவனது இதயமே நின்று விடும் போல் ஒரு உணர்வு தோன்றியது. அது சாதா ரண கல் அல்ல. அது ஒரு இரத்தினக்கல். அப் படியானால் தான் இவ்வளவு நேரம் சாக்குப்பையில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து வீசியதெல்லாம் இரத்தினக்கற்களா?
இருளில் அவை என்னவென்று தெரியாமல் வீசிய அனைத்தும் இரத்தினக் கற்கள். அதை நினைத்ததும் அவன் மனதில் பெருந்துன்பம் மூண் டது. அவன் அழுது புரண்டு அரற்றினான். சாக்கு நிறைய இரத்தினக்கற்கள் இருந்திருக்கின்றன. எவ் வளவு இனிமையாக அவன் வாழ்வை வாழ்ந்திருக் கலாம். எல்லாம் வீணாகிப் போய்விட்டது. அவன் தான் அறியாமல் செய்த தவறுக்காக கண்
AO 900DI DI5 Hee
ஆரோக்கிய சஞ்சிந்து
ஆகஸ்ட் 2011
 
 
 
 

ஆரோக்கிய சஞ்சிகை
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP: 011 - 5375945 0 1 1 - 55.16531 Fax: 0 1 1 - 5375944
LSLLL LLLYLLLLLYLLLLLLTTTLYYLLSzYYYLLLLLYYY00LeSStZ
கலங்கினான். மேலும் மேலும் வருந்தினான். ஆனால் அவன் ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலி. எஞ்சியிருந்த அந்த இறுதிக் கல்லையும் எறியுமுன் விடிந்து விட்டதே. நிறையப் பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கூடக் கிடைப்பதில்லை.
இப்படித்தான் அநேகம் பேர் இருளில் அமர்ந்து அறியாமையால் வாழ்வின் அரும் பொக்கிசங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சுற்றி இன்னும் வெளிச்சம் வரவில்லை. இன்னமும் விடிவதாய்த் தெரியவில்லை. சூரிய ஒளியை காணவே முடியாது நாம் சூரிய ஒளியைக் காணும் போது வாழ்வின் முக்கியத்துவத்தை அறியும் போது வாழ்வின் இறுதிக்கு வந்திருப்போம். வாழ்வின் மகிழ்ச்சியை நமது அறியாமை காரணமாக தவற விட்டு விட்டு இருள் என்னும் துன்பத்தில் உழன்று கொண்டிருப்போம். இது தான் வாழ்க்கை என்று தேடி உணர முடியாதவர்களுக்கு அதனை புரிய வைக்க முடியாது.
அவர்கள் சாக்குப்பையில் இருந்த இரத்தினக் கற்களை மீனவன் வீசியதுபோல தம் வாழ்வின் பொக்கிஷங்களை அவை பொக்கிஷங்கள் என்பதை அறியாதவர்களாக வீசி வீசி வீணடிப்பார்கள். வாழ்க்கை என்பது மிகக் குறுகியது. இப்போதும் கூட இழந்ததைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டி ருப்பதில் அர்த்தம் இல்லை. இன்னும் ஒரு கல் வீசப் படாமல் மீதம் இருக்கிறதே அதனை வைத்துப் பிழைத்துக் கொள்ள முடியும். எம்மால் இப்போதும் கூட வாழ்வின் பாடங்களை கற்றுக் கொள்ள முடி யும். காலம் இன்னும் முடிந்து போய் விடவில்லை. நம்பிக்கையுடன் வாழ்வின் ஒளிக்கீற்றைத் தேடு.
மும் 1ஆம் திகதி வெளிவருகிறது
『隠。

Page 6
F1தாரணமாக குருதி அழுத்தமோ, நீரிழிவு நோயோ இல்லாத சிலருக்கு இந்நோய் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதை அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே இந்த நோய்களால் பீடிக்கப்பட் டுள்ளவர்களைப் போலவே கர்ப்ப காலத்தில் இந்நோய்களின் தாக்கங்களுக்கு உள்ளாகுப வர்கள் சிகிச்சை பெறுவது அவசியம்.
குருதி அழுத்தம் (HYPERTENSION) கர்ப்பவதிகளில் சிலருக்கு குருதி அழுத்தம் அதிகரிப்பதுண்டு. அநேகமாக கர்ப்ப காலத் தின் நடுப் பகுதிக்கு பின்னரே இது ஏற்படுகி றது. அதிகரித்த குருதி அழுத்தத்துடன் இணைந்ததாக சிலரில் கால் பாதங்களில் வீக் கம் ஏற்படுவதுண்டு. இன்னும் சிலரில் சிறுநீ
 
 
 

ரில் அல்புமின் எனும் புரதம் வெளியேறுவது முண்டு. இந்த மூன்று விடயங்களில் ஏதாவது இரண்டு விடயங்கள் இருப்பின் அது மிகவும் கவனம் எடுக்க வேண்டிய நிலையாகும். இவ் வாறானவர்களின் கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிப்படையும். அத்துடன் P. E. T. என்ற ஆபத்தான நிலை ஏற்படும். Pre
Eclamsic Toxaemia என்ற இந்த நிலை ஏற்ப டும் தாய்மார்களில் சிசு கர்ப்பப்பையினுள் ளேயே இறந்து விடும் ஆபத்தும் உண்டு. அத் துடன் பிரசவத்தின் போதோ அதற்கு சற்று முன்னதாகவோ ஏற்றதாகவோ தாய்க்கு வலிப்பு நஞ்சாதல் நோய் படக்கூடும். இவ் வலிப்பு முன்னதாக ஏற்படின் பிரசவம் கடின
ஆகஸ்ட்-2011

Page 7
மாக இருக்கும். வலிப்பைக் கட்டுப்படுத்திய பின்னரே பிர சவிக்க முடியும், நோயாளி மயக்க நிலைக்கோ, மனக் குழப்பமான நிலைக்கோ செல் லக் கூடும். பொதுவாக PET தாய்மார்களை முன் கூட்டியே வைத்தியசாலையில் நிறுத்தி குருதி அழுத்தத்தை கட்டுப்ப டுத்தி பிரசவம் முன்கூட்டியே நிகழ்த்தப்படும்.
கிளினிக் செல்லும் கர்ப்பவ திகளுக்கு குருதி அழுத்தத்தை யும் சலத்தில் அல்புமினையும் ஒவ்வொரு தடவையும் சோ தித்து கண்காணிப்பில் வைத்தி ருக்க வேண்டும். அதிகரிப்பு இருப்பின் ஒய் வும், உரிய சிகிச்சையும் அவசியம். இதன்
மூலம் PETயை கட்டுப்பாட்டுக்குள் வைத்தி ருக்க முடியும்.
கர்ப்ப கால நீரிழிவு (DIABETES) முன்னர் ஒருபோதும் நீரிழிவு இல்லாத ஒரு வருக்கு கர்ப்ப காலத்தில் தற்காலிகமாக நீரிழி வு ஏற்படலாம். இதுவும் நீரிழிவு நோயைப் போலவே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதே. இல்லாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்படுத்தும் தாக்கங்களை இதுவும் ஏற்படுத் தும். உணவுக் கட் டுப்பாடு மூலம் இதை சீர்செய்ய முடியாத பட்சத்தில் சிகிச்சை பெற
வேண்டும். LD5 சத்து மற்றும் கொ ழுப்பு 2-6ÛÙT6) களைக் குறைத்து, புரத உணவையும் மரக்கறி, இலை கறி வ  ைக க  ைள யும் கூடுதலாக 9 L கொள்ள வேண் டும். நேரடியான இனிப்புப் பதார்த்
2011
 
 
 
 
 

தங்களை உட்கொள்ளக் கூடாது. கர்ப்ப காலத்தில் நீரிழி வு நோய்க்கு மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்க முடி யாது. இரத்தத்தில் சீனியின் அளவை மதிப்பிட்டு அதற்கு ஏற்ப இன்சுலின் ஊசி மருந் தையே பாவிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் இரத்தத்தி லுள்ள குளுக்கோசின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக் 55m6S) lʻlLIT6\o (F B S 80 — 120 mg /dl) பல சிக்கல்கள் சிசுவுக்கும், தாய்க்கும் ஏற்படலாம். குறைப் பிரசவம், குறைபாடு உள்ள குழந்தை, பெரிய குழந்தை என் பன சில சிக்கல்களாகும். பெரிய குழந்தையா
யின் பிரசவம் கடினமாக இருக்கும். சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் பிரசவத்தை மேற் கொள்ள வேண்டி ஏற்படலாம். ஏற்கனவே நீரி ழிவு நோயுள்ளவர்கள் குளுக்கோசின் அள வைக் கட்டுப்பாட்டில் வைத்தபடி கருத்தரித் தல் நன்று.
கர்ப்பகால நீரிழிவு தற்காலிகமானது. பிர சவத்தின் பின்னர் சீராகிவிடும். எனினும் சில காலம் கண்காணித்தல் நன்று

Page 8
Tui அன்றாடம் சமையலுக்காகப் பயன் படுத்தும் பலசரக்குகளில் சீரகம் மிக முக்கியம னது. பண்டைக்காலம் முதல் சீரகம் உணவுடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சமையலின் போது பலவகைப்பட்ட சீரக வகைகள் பயன் படுத்தப்படுகின்றன. சீரகம், பெருஞ்சீரகம் கருஞ்சீரகம் என்று பலவகையான சீரக வகை கள் உள்ளன. இவற்றில் மணம் மற்றும் சுவை என்பன குறிப்பிடக்கூடியவை. இவை சமைய லின்போது உணவில் மணத்தைக் கொடுப்பு தோடு மருத்துவ குணங்கள் பலவற்றைக் கொண்டுள்ள சிறந்த மருந்து என இதனை ஆயுள்வேத வைத்தியர்கள் எடுத்துக்காட்டுகின் றனர். புரோட்டின், கொழுப்பு, காபோஹைத ரேட், கல்சியம், பொஸ்பரஸ் மற்றும் இரும் உட்பட விற்றமின்கள் பலவற்றைக் கொண் டுள்ளது. அதுபோல் தயமின் மைக்ரோ, கரோட் டின் மைக்கோ, பிளேவின் மைக்கோ என்பன வும் இதில் அடங்கியுள்ளன.
சீரகத்தை வறுத்துத் தூளாக்கி தேநீர் குடிப்பது போல் குடித்தால் வயிற்று வலி விரைவில் குணமாகும். இதயத்திற்கு வலுவூட்டுவதோடு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கவும் உதவி புரி கின்றது.
மேலும் உடலிலுள்ள இரத்தத்தை சுத்திகரிக் வும் சீரகம் பேருதவி புரிகின்றது. குமட்டல் வாந்தி, வயிற்றுப் போக்கு என்பவற்றை கட் டுப்படுத்தக்கூடியது, உடலுக்கு உற்சாகத்தை பெற்றுக் கொடுப்பதோடு களைப்பை போக்க
 
 
 

dolls-Uugil.
பண்டைய ஆயுள்வேத நூல்களில் மனித னின் மரணம் வரை சகல நோய் நொடிகளின் போதும் ஒரு நோய் நிவாரணியாக சீரகம் செயற் படக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது. வயிற் றுப் போக்கு காணப்படும் நேரம் சீரகத்தை நெருப்பில் வாட்டி பின்பு அதனை அவித்து அந்த நீரூடன் தேன் சேர்த்து குடிப்பதன் மூலம் வயிற்றுப் போக்கினை நிறுத்தலாம்.
உணவு காரணமாக ஏற்படும் அஜீரணம்,
உணவில் வெறுப்பு, வயிற்றுப் போக்கு, உண வு சமிபாடடையாமை போன்ற பிரச்சினைக ளின் போது அதனை நிறுத்துவதற்கும், பசியை ஏற்படுத்தவும் சீரகத்தை அரைத்து கறிகளில் அல்லது மீன் கறிகளுக்கு சேர்ப்பதன் மூலம் நிறைந்த பலனைப் பெறலாம்.
ரசம் வகைகளுக்கு சீரகத்தை சேர்ப்பதன் மூலம் சிறந்த சுவையைப் பெறலாம். சீரகத்தை சேர்ப்பதன் மூலம் உணவின் ருசி அதிகரிக்கும். சீரகம் சேர்த்த கறியுடன் சோற்றை உண்பதன் மூலம் தாய்ப் பால் அதிகரிப்பதோடு வயிற்றி லுள்ள அமிலம் குறைந்து செல்லும். பெருஞ் சீரக மரத்தின் இலையை வல்லாரை இலை சம் பல் போல் நன்றாக அரிந்து சம்பல் செய்து
உண்ணலாம். அஜீரணம் ஏற்பட்ட சந்தர்ப்பங்க ளில் பெருஞ்சீரக இலை சம்பல் மிகவும் சிறந்த து.
கருஞ் சீரகத்தினைக் கொண்டு தயாரிக்கப் படும் தைலம் உடலில் ஏற்படும் பல நோய்
ஆகஸ்ட் 2011

Page 9
களை சுகப்படுத்தக் கூடியது.
புற்றுநோய், நீரிழிவு மற்றும் குஷ்டம் மற் றும் தோல் நோய்களுக்கு கருஞ்சீரகத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம் மூலம் செய்யப்படும் மருந்து நோயைக் கட்டுப்ப டுத்தக்கூடியது. ஆயுள் வேதத்தில் அரிஸ் டம் மற்றும் லேகியம் என்பவற்றை தயாரிக்க
சீரகம், பெருஞ்சீரகம்,கருஞ்சீரகம் என்பன பயன்படுத்தப்படுகின்றது. தடிமன், ஆஸ்த்து மா, பீனிசம் என்பவற்றுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய நிலையின் போது கருஞ்சீரகத்தை வறுத்து நன்றாகத் தூளாக்கி மூக்கில் உறிஞ்சுவதன் மூலம் சுகதைப் பெறலாம். அநேகமாக சளி யால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இது சிறந்த நிவாரணியாக உள்ளது.
கோபத்தை கட்டுப்பருத்த
இனிப்புப் பானங்களைக் குடிப்ப தால் கோபம் கட்டுப்படும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள் 6TTg5.
இனிப்புப் பதார்த்தங்களை விட இனிப் புச் சுவையுள்ள பழச்சாறுகள் பானங்கள் அருந்துபவர்களுக்கு கோபத்தை வெளிக் காட்டும் சம்பவங்கள் ஏற்பட்டால் அவர்களு டைய கோபத்தை மனத்தளவில் கட்டுப் படுத்தி சாந்தப்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது. குளுக்கோஸ் பானங்கள் தொ டர்ந்து குடிப்பவர்களுக்கு இயல்பாகவே மன தை அடக்கி ஆளும் சக்தி அதிகரிப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்ற
60TT.
ஆகஸ்ட்-2011 密 エ Os
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"நான் ஒரு கேள்வி கேப்பேன். அதுக்கு நீங்க தெரியும் அல்லது தெரியாதுனு மட்டும் தான் பதில் சொல்லனும்?
"சரி கேளு?
'நீங்க ஒரு லூசுனு உங்க வீட்டுக்கு தெரியுமா??
翌 弈

Page 10
-எஸ்.சர்மினி
சாதாரணமாக ஓடி, கீழேயும் மேலேயும் ஏறி இறங்கி சுறுசுறுப்புடன் வேலை செய்யும் மனிதன் திடீரென எதனையும் செய்ய முடியாமல் கால், கைகளைத் தூக்க முடியாமல் மரத்துப் போய் துரதிஷ்டமான நிலைக்கு தள்ளப்படும் போது ஏற்படும் துன்பத்தை அளவிட முடியாது. இத்தகைய துரதி ஷ்டமான நிலைக்கு உட்படாமல் இருக்கவும் அதனை தடுக்கக்கூடிய ஆற்றலும் சிறிய வகை மீனினத்திற்கு இருப்பதாக சுவீடன் நாட்டு விஞ்ஞா னிகள் குழுவினர்
மூலம் கண்டு பிடித்துள்ளனர்.
ஆகக்குறைந்தது ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களாவது gd L6öo5T6Sheôo சேர்த்துக் கொள்வதன் மூலம் பாரிசவாதத்தின் பயங்கர பிடியிலிருந்து தப்பலாம் எனவும், மீனின் அளவு சாப்பாட்டில் எந்த
96T6). கூடுகின்றதோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

二壹 வாதத்தின் தாக்கம்
குறைந்து செல்லும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ரகசியத்திற்கு காரணம் யாதென்றால் ஒமேகா 3 என்ற கொழுப்பைக் குறைக்கும் அமிலம் மீனில் காணப்படுவதாகும். ரொய்ட் டர் ஊடக நிறுவனத்தின் அண்மைய செய்தி ஒன்றின்படி குருதியுடன் தொடர்புடைய பாதிப்புக்கள் மற்றும் தேவையற்ற கொழுப்பு என்பவற்றை குறைக்கும் சக்தி கொண்டது. இந்த அமிலம் சாதாரணமாக பாரிச வாதத் திற்கு அதிகளவான கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் என்பன காரணங்களாக அமைகின் றன.
விசேடமாக பெண்கள் மீனை உணவுடன் சேர்த்துக் கொள்வதால் அதிகளவிலான பயன்கள் ஏற்படும். குழந்தை பெறும் வயதை விட மாதவிடாய் நின்ற பின்பு பெண்களுக்கு பாரிசவாதம் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். ஒமேகா 3 ஐ விட மீனினுள்ள விற்றமின் ஈ என்பனவும்
பாரிசவாதத்தை கட்டுப்படுத்
தக் கூடியன. রািগ
மா வித்து, சுண் டைக்காய், வெந்தயம், ஓமம் போன்றவற்றைச் "சம அளவு எடுத்து இலேசாக றுத்து பொடிசெய்து காலை யிலும் மாலையிலும் புளிப்பில் லாத தயிரியில் இரண்டு தேக்க ரண்டி சேர்த்து சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, பசியின்மை, போன்ற உபாதைகள்
தஸ்.2011
|կիրիիիիիիիիիիիիիիի

Page 11
ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலி-கை-க-ளும் பெற்றுள்ளன. அந்த வகையில் அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும்.
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை மிக எளிய முறையில் பயன்படுத்தினாலே அநேக நோய்களை நீக்கி விட முடியும்.
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்
L Y L Y YtY STtT S TYtt LLL
Lఇవ్రాఇడ్స్ SLTశ్రLi
ஆகஸ்ட்-2011
 
 
 

--& Q[i]; ܝܗܝ
வதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் கல்லடைப்பை நீக்கவும் அதிமதுரம் அரிய நிவாரணமளிக்கிறது.
பொதுப்பிரயோகமாக அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவில் எடுத்து இலே சாக வறுத்து சூரணம் செய்து வைத்துக் - கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிக சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
அது தவிர அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது. - L.

Page 12
®፬D{
Táilléiriúil
EBTT UFIGENDED THEID
*TUem電信Uu恩門
 
 
 

றைத் தலைவலி
|கமான மன அழுத்தம், குறைவான சர்க்கரை வு, ஒவ்வாமை, மருந்துகளை அதிகமாக த்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, கப்படியான வேலை, சரியான தூக்கம், வு இல்லாமை, அதிகப்படியான ப்பழக்கம், புகைப்பழக்கம். லுமிச்சை தோலை நன்கு காய வைத்து ரத்து நெற்றியில் பற்று போடுதல். ன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து ாணி சேர்க்காமல் அருந்தல்.
2
ஆகஸ்ட்-2011

Page 13
ஆகுளிர்ந்த நீரை துண்டில் நனைத்துத் தலையிலும் கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும்.
அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.
ஆ10 அல்லது 12 பாதாம் பருப்புகளை
தலைவலியின் போது சாப்பிடலாம்.
ஆவாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தடம் தரலாம்.
செய்ய வேண்டியவை:
விட்டமின் நியாசின் அதிகமுள்ள Φ 600T6) | 6) 160035356ΠΠ 607 முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.
2-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்) மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.
தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள
வேண்டும்.
ஆகஸ்ட்-2011 կիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի:#; 翌 蕊
 
 
 

தவிர்க்க வேண்டியவை:
புகை மற்றும் மது வெய்யிலில் அலைவது ஆகாரமான உணவு வகைகள் வயிறு முட்ட சாப்பிடுதல் தேவையில்லாத மன அழுத்தம்
மற்றும் கவலை
தொகுப்பு: ஆர்.சுபாஷினி
'எதுக்கு டொக்டர் பேண்ட் முன்னாடி நமிதா படத்த மாட்டி
வச்சிருக்கிங்க?"

Page 14
Dr. ஆனந்த சமரசிங்க கண் மற்றும் கண்ணாடி பரிசோதனை நிபுணர் (Optometrist) உடனான நேர்காணல்
சூரிய கிரகணங்களின் வாயிலாக புவி மேற்பரப்பை வந்தடையும் புற ஊதாக் கதிர் கள் எந்த அளவுக்கு நமது கண்களையும், சரு மத்தையும் பாதிக்கின்றன என்பதை மிகச் சிலரே அறிந்திருக்கின்றனர். இந்த கதிர்த்தாக் கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணியும் கிரகணத்தடுப்புக் கண்ணாடிகள் அல்லது வெய்யிற் கண்ணாடிகளை (Sun Glass) பலரும் அவை வெறுமனே நவீன மோஸ்தர் விரும்பிகள் அணியும் கண் ணாடிகள் என்று மட்டுமே கருதுகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும்.
இது தொடர்பில் கண் பரிசோதனை மற் றும் கண்ணாடி நிபுணர் ஒருவரின் கருத்துக 6061Turf" Curtib.
கேள்வி :- எமது நாடு மிகுந்த சூரிய வெப்பத்தினை பெறும் நாடு என்ற வகை யில் அதில் இருந்து பாதுகாப்பு பெற உங் கள் ஆலோசனை என்ன?
பதில் - நிறையப்பேருக்கு சூரிய வெப்பத்தையும் அதன் கிரகணங்க ளின் தாக்கத்தையும் தாங்கிக்கொள் ளும் அளவுக்கு கண்கள் சக்தி வாய்ந்தனவாக உள்ளன. ஆனால் பலருக்கு சிறு பிரகாசமான வெ ளிச்சத்தைகூட பார்க்கும் சக்தி
罠
颉 リー
 
 
 

கிடையாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் கண்களை மூடிக் கொண்டு கூச்சத் தைத் தாங்கிக்கொள்கின்றார்கள். இப்படி இவர் கள் தொடர்ந்து செய்து வருவார்களாயின் விரைவில் கண்களில் கண்ணீர்வற்றிப் போய் விடும் நிலை ஏற்படும். இதன் பயனாக தலை வலி உண்டாகும். இந்த நிலைமையில் இருந்து தப்புவதற்கான ஒரு மார்க்கமாக மேற் படி சூரிய கதிர்த்தடை கண்ணாடிகளை அணி u6)Tib.
கேள்வி :- இத்தகைய வெய்யிற் கண்ணாடி களுக்கு உரிய வகையான தர நிர்ணயம் இருக் கவேண்டுமல்லவா?
ஆகஸ்ட்-2011
Ëիիիիիիիիիիիիիիի

Page 15
பதில் :- இத்தகைய கண்ணாடி கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத் தில் பல நாடுகளில் தர நிர்ணயம் என்பது ஒரு தேவைப்பாடாக இருக் கவில்லை. கண்களைப் பாதுகாக்க இவற்றை அணியலாம் என்ற நோக் கமும் இருக்கவில்லை. இவற்றை அணிந்தால் கண்கள் பழுதாகிவிடு மோ என்ற பயமும் இருந்தது. ஆனால் விரைவிலேயே பல நாடுக ளும் தரநிர்ணயம் இல்லாத இத்த கைய கண்ணாடிகளைத் தயாரிப்ப தைத் தடை செய்தன. இலங்கை யில் இத்தகைய நிலை கிடையாது. கேள்வி :- இத்தகைய கண்ணாடி களை அவை தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ள னவா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?
பதில் :- அதற்காகத்தான் என் போன்ற கண் மற்றும் கண்ணாடி பரிசோதனை விசேஷ நிபு ணர்கள் (Optometrist) இருக்கின்றனர். அவர் களிடம் சென்று கண்ணாடிகளின் தரத்தை எத் தகையது என்று பரிசீலனை செய்து கொள்ள முடியும். அதற்குத்தேவையான தொழில் நுட் பமும் கருவிகளும் அவர்களிடம் தான் காணப் படுகின்றன.
கேள்வி :- தர நிர்ணயத்துக்கமைய தயாரிக் கப்படாத வெய்யில் கண்ணாடி ஒன்றை அணி யும்போது உடனடியாக என்னவிதமான உணர்வு ஏற்படும்?
பதில் :- கண்களுக்கு ஒத்துவராத கண்ணா டியை அணிந்த சில நிமிடங்களிலேயே அசெளகரிய உணர்வு ஏற்படும். அல்லது தலை வலிக்கத் தொடங்கும். கண்ணாடி மூல மாக பார்க்கும் போது பொருட்கள் தெளிவில் லாமல் இருப்பது போல் தோன்றும். பலர் இத் தகைய பிரச்சினைகளுக்கு செவிமடுக்காமல் தம்மை பழக்கப்படுத்திக்கொள்ள முனைகின் றனர். ஆனால் அப்படிச் செய்வதால் அது கண் களுக்கும் அல்லது வேறு உடல் உறுப்புக்க ளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமையலாம்.
கேள்வி :- சூரிய கிரகணங்களில் இருந்து கண்களைப் பாதுகாப்பதற்காக பகலில் இத்த கைய கண்ணாடிகளை அணிவது போல் இர வில் அணிவதற்கான கண்ணாடிகள் உள்ளன
ஆகஸ்ட்-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6T 2
பதில் :- ஆம் உள்ளன. பல சமயங்களில் இருளில் இருந்து வெளிச்சத்தைப் பார்ப்பவர்க ளுக்கு கண்கள் கூசுகின்ற தன்மை காணப்ப டும். குறிப்பாக இரவில் வாகனம் ஒட்டுபவர்க ளுக்கு எதிரில் வரும் வாகனங்களின் பிரகாச மான வெளிச்சம் பெரிய பிரச்சினையாக இருக் கும். இவர்களுக்கு இரவில் வாகனம் ஒட்டுப வர்களுக்கென தயாரிக்கப்பட்ட கண்ணாடிகள் (Night Driving Glass) p 6ireligot. Sya, Tsiorgot கண்ணைக் கூசும் ஒளியைப் பார்க்க முடியாத வர்களுக்கு இத்தகைய கண்ணாடிகள் பொருத் தமானவையாகும்.
கேள்வி :- இத்தகைய கண்ணாடிகளை தெரிவு செய்ய வருவோருக்கு நீங்கள் வழங் கும் ஆலோசனைகள் யாவை?
பதில் - பலரும் பல்வேறு தேவைகளை வைத்துக் கொண்டே இத்தகைய கண்ணாடி களை வாங்கி வருகின்றார்கள். ஆதலால் அவர்கள் கண்ணாடி ஒன்றை அணியத் தீர்மா னித்ததன் காரணியைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் என்ன தொழில் செய்கி றார்கள்? அன்றாடம் அவர்கள் மேற்கொள் ளும் நடவடிக்கைகள் எத்தகையன? போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளுதல் அவசிய மானதாகும்.
வெறுமனே ஏதாவது ஒரு கண்ணாடியை வாங்கிப் பயன்படுத்துவது வேறு விளைவு

Page 16
隔
களை ஏற்படுத்தலாம். ஆதலால் முதலில் அவர்களை கண்பரிசீலனை ஒன்றுக்கு உட்ப டுத்தல் மிகப் பொருத்தமானதாகும். அதன் பின்னர் அவர்களின் நோக்கத்துக்கமைய கண் ணாடி ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அது வெறுமனே மோஸ்தருக்கு அணிவதாகவும்
960)LDUL6 orth.
கேள்வி :- வெய்யில் கண்ணாடிகளுக்கு பல்வேறு வண்ணக்கண்ணாடிகளை பயன்ப டுத்துகிறார்களே. அதனால் ஏதும் பாதிப்புக் கள் ஏற்படுவதில்லையா?
பதில் - பாதிப்புக்கள் இருக்கின்றன. கபில நிறம், பச்சை, நீலம் கறுப்பு எனப் பல வர் ணங்களில் கண்ணாடிகள் உள்ளன. அதன் பாதிப்புக்கள் பொதுவானதாக இருந்தபோது அவை ஒவ்வொருவரை பொறுத்து வேறுபட லாம். சிலருக்கு கறுப்பு வர்ணமும், சிலருக்கு கபில வர்ணமும் கண்களுக்கு சுகமளிப்பதாக இருக்கலாம்.
இங்கு அணிபவரின் கண்களுக்கு செளகரிய மான வகையில் கண்ணாடிகள் தெரிவு செய் யப்படவேண்டும் என்பதே முக்கியமானதா கும்.
கண்ணாடிகளுக்கூடாக பார்க்கும்போது காட்சிகள் இயல்பானவையாகவே இருக்க
 
 

வேண்டுமென்பது அடிப்படை
கும். -arab.
臀*
நிபந்தனையா ஷர்மினி
ஆகஸ்ட்-20
鼬

Page 17
First
(EBULA . GIUTAT (GUIU A
(சென்றவார தொடர்ச்சி) முத்ராசனம் இத்தகைய நோயாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும். இந்நோயைக் குணப்படுத் தும் ஆசனங்களில் முதன்மை வகிப்பது யோக முத்திராவாகும். இவ்வாசனத்துடன் உஸ்பாரா
சனம், புஜங்காசனம், கோமுகாசனம், தனுரா சனம், நவுக்காசனம் போன்ற ஆசனங்களை யும் இணைத்துக் கிரமமாகச் செய்துவர நோயாளி மெதுவாகக் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார். இந்நோயைக் குணப்படுத்த பெரிதும் உதவும் தியானம் நோ யாளியின் மனஉளைச்சல், மன இறுக்கம், பதட்டம், பயம், சோர்வு, ஞாபக மறதி போன்றவற்றை நீக்கும். மூளைக்குப் புத்து யிரூட்டி நோயாளியை சுறுசுறுப்புடன் செயற் பட வைக்கும்.
இந்நோயால் பீடிக்கப்பட்டு சுமார் பத்து வருட காலம் கொழும்பிலும் இந்தியாவிலும் பிரபல நரம்பியல் நிபுணர்களிடமும் சிகிச்சை பெற்றும் பூரணமாகக் குண
32
مصیبہ۔ ....................^جمع.................
மடையாது இது தான் தலை
விதி என முடங்கிக் கிடந்து
திருமணமான 37 வயது நோயா எளியொருவர் சுகவாழ்வு மூலம் என்
னைத் தெரியவந்து பிறமாவட்டமொன்றிலி ருந்து மட்டக்களப்புக்கு வந்து என்னிடம் யோ கா சிகிச்சை பெற்றார். சிகிச்சை அளித்த மிகக் குறுகிய பத்தே நாட்களுள் அவரின் நோய் குறிப்பிட்ட அளவு குணமடைந்து ஊர் திரும் பினார் என்பதை சுகவாழ்வு வாசகர்களுக்குத்
 
 
 
 
 
 
 
 

III 国エlücm。 Ισοσταση δίοδο της δεσοποτ
தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின் றேன். இவ்வாசனம் மூலம் பத்மாசனத்தின் பலன்கள் அனைத்தும் கிடைக்கும். * மனதை ஒரு நிலையில் வைப்பதற்குத் தேவையான சக்தியை கொடுக்கும். * உடலும் மனமும் மிகவும் இலகுவாகி
அமைதி பெறும் மன அழுத்தம் , மன உளைச்சல் அகலும். * உடலை நெகிழ்வாக வைத்திருக்க உதவும். * முதுகெலும்பு வளைவு நோய் (Seoliosis)
உட்பட முதுகெலும்பில் ஏற்படும் சகல கோளாறுகளும் அகலும், முதுகெலும்பு நிமிரும். * இடுப்பு, வயிற்றுப் பாகங்கள் அழகான அமைப்பைப் பெறும்.உடல்பருமன்அக
லும். * என்றும் சுறுசுறுப்புடன் வாழ உதவும். * மூளைக்கு அதிக இரத்தோட்டத்தை ஏற்ப
டுத்தும், நரம்பு தளர்ச்சி அகலும், gp LD6016055 (Subconsuous Mind) தூண்டி விடும். * உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை
ஆகஸ்ட்-2011

Page 18
鶯
ஆகஸ்ட் 2011
உடனுக்குடன் அகற்ற உதவும்.
கழிவுகள் தேங்குவதால்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குன்றி நோய்கள் ஏற்படு
கின்றன.
醬
பசியின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டும். மனதை மூலாதார சக்கரத்தில் வைத்து இவ் வாசனத்தைச் செய்ய பிரான சக்தி (Vital Energy) வளர்வதுடன் உடல் வனப்பும், உடலுறுதியும் பெருகும். முகத்தில் பொலிவு ஏற்படும். இவ்வாசனம் குண்டலினி சக்தியை எழுப்ப உதவுவதால் கிரமமாகப் பயின் றால் நமது ஆன்மாவும் கடவுளும் ஒன்றி ணைவதாகச் சொல்லப்படுகின்றது. இத னால் தான் சித்தர்கள் இவ்வாசனத்தை யோக முத்ரா எனச் சிறப்பாக அழைத்தனர். இவ்வாசனத்தினால் ஒருவர் தியான நிலையையும் உணர்வு நிலையை
யும், பரவசத்தையும் கவனம்
குவிப்பதையும் சுலபமாகப் பெற முடியும்.
தூக்கமின்மை (Insomia) நோய் குணமடையும். கல்லீரல், மண்ணிரல் சம்பந் தமான சகல நோய்களும் குணமடையும். ஏனைய உடலுறுப்புக்கள் பாதிக்கப்
 
 
 
 
 
 
 

பட்டால் மாற்று இருதயம், சிறுநீரகம் என்பது போன்று மாற்று கல்லீரல் என்று மாற்ற முடி யாத ஓர் அபூர்வ உறுப்பு இது உடலி லுள்ள சுரப்பிகளால் மிகப் பெரியதான இச்சுரப்பி பித்த நீரைச் சுரக்கிறது. மேலும் உடலின் இரசாயன மாற் றம் கிரியையில் பெரும்பங் கு வகிக்கின்றது. கல்லிர லீல் ஹெபாடைடீஸ் வைரஸ் H (Hepatitis) மற்றும் பி எனும் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய் மஞ் சள் காமாலையாகும். ஆங்கில மருத்துவத் தில் இந்நோய்க்கு இற்றைவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நோய்க் குச் சிறந்த மருந்து யோக முத்திராவாகும் என்றால் மிகையாகாது. * கணையச் சுரப்பியை (Pancreas) நன்கு
அழுத்தி விடுவதால் அது செம்மையாகச் செயலாற்றி போதிய அளவு இன்சுலினைச் சுரக்கும். இதனால் நீரிழிவு நோய் குணம டையும். மெட்போமின் போன்று பக்க விளைவு களை ஏற்படுத்தும் நீரிழிவு மருந்துகள் போல் செயலாற்றி நோயைக் குணப்படுத்தும் நீரி ழிவு நோயாளர்கள் இவ்வாசனத்தை தினமும் ஆறு சுற்றுக்கள் காலை, மாலை வெறும்
வயிற்றில் செய்ய வேண்டும்.
வயிறு நன்கு அழுத்தப்படுவ \ தால் ஜீரணம் நன்கு நடைபெறும். \ \ இதனால் அஜீரணம், நீடித்த மலச்சிக்கல் போன்ற உபா N தைகள் அகலும்,

Page 19
தொப்பை அகலும் வாயுத் தொல்லை மறை யும். வயிற்றுப் புண் குணமடையும், வயிற் DiGLInéG (Amoebiasis) Sergyld.
* சிறுநீரகம் புது உத்வேகம் பெற்று செம்
மையாகச் செயலாற்றும் சிறுநீரகக்கற்கள் ஏற்படாது தடுக்கும், ஏற்பட்ட கற்களைக் கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரக கோளாறுகள் ஏற்படாது. * நீரிழிவு நோயாளர்கள் நம்பிக்கையுடன்
தினமும் இவ் ஆசனத்தில் ஆறு சுற்றுக்கள் காலை, மாலை வெறும் வயிற்றில் செய்து வரப் படிப் படியாக நோய் குணமடையும். * முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்துவலி
ஏற்படாது தடுக்கும் தைரோயிட்டு LGh6ö»ULu (Thyroid Gland) நன்கு தூண்டிவிடும்
* இவ்வாசனம் செய்யும் போது பால் சுரப்பி கள் நன்கு அழுத்தப்படுவதால் ஆண்மைக் குறைபாடு, பெண்மைக் குறைபாடு போன்ற உபாதைகள் மறையும் ஆண்களின் துரித ஸ்க லிதம் (பலக்குறைவு)அகன்று நீண்டநேர இன்பத்தை வயாகரா (Viagra) மாத்திரையை போன்று கொடுக்கும். * ஆண், பெண் மலடு அகல தினமும் ஐந்து நிமிடங்கள் இவ்வாசனத்தைச் செய்ய வேண்டும். * சுவாச தொகுதியில் ஏற்படும் பல்வேறு
நோய்களைக் குணப்படுத்தும். மார்பு
,-
 
 
 
 
 
 

கள் அழியும். ஆஸ்துமா, காச நோய் குணம டையும். மூக்கடைப்பு உபாதை அகலும்,
* கண் சம்பந்தமான தூரப் பார்வை, கிட்டப்
பார்வை, மாலைக்கண் நோய்கள் குணம டையும். கண் பார்வை தெளிவடையும். * இவ்வாசனம் மூலம் பெண்கள் அபரிமித
மான நன்மைகளைப் பெறுவர். பெண்க ளின் ஒழுங்கற்ற மாதத் தீட்டுப்பி |jrè'&éငါ@60†
9.
அளவுக்கு அதிகமான உதிரப் போக்கு நிற்கும். வயிற்று வலி, இடுப்பு வலி அகலும். மன உளைச்சலை அகற்றும் கர்ப்பப்பை இறக்கம். அடிவயிற்றுக் கனம், தொடைக்க னம் அகலும்.
பிரசவத்தின் பின் வயிற்றில் தொப்பை போடாது. முகத்தில் பொலிவு ஏற்படும். இடை சிறுத்து வயிறு ஒடுங்கி அழகாகவும் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பர்.
மலடு பட்டம் அகலும் பருவ வயது வந் தும் பருவமடையாத பெண்கள் பருவமடைய தினமும் ஐந்து நிமிடங்கள் இவ்வாசனத்தைச் செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பலன்களை முழுமையா கப் பெற இவ்வாசனத்தைக் கிரமமாகச் செய்ய வேண்டும்.
9 ஆகஸ்ட்-2011

Page 20
எழுதுபவர்
-ராம்ஜி
வாஷிங்டன் நகரத் தில் இருந்து மூவாயிரம் மைல்க ! ளுக்கப்பால் வடதுருவத்தின் விசாலமான பனிப் பாறையின் மீது அமைக்கப்பட்டிருந்த நா ஸாவின் ஆய்வு கூட வாழ்வு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதில் நரேஷ் பாபு
 
 
 

வுக்கும் சாராவுக்கும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர்களது சம்பாஷணை முடிவு பெற்றதும் வின்சன்ட் தோமஸ் நரேசையும் சாரா வையும் அவ்விடத்தில் இருந்து அழைத்துக் கொண்டு வேறொரு அறைக்குச் சென்றார்.
அந்த அறையும் ஒரு பெரிய அறையாகவே இருந்தது. இரண்டு மூன்று வரிசைகளில் சீராக மேசை நாற்காலிகள் போடப்பட்டு அவற் றின் மீது விதவிதமான கணனிகள் மற்றும் பல்
கஸ்ட்-2011

Page 21
வேறு நவீன ஆய்வு கூடக் கருவிகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. அத்தனை மேசை, கதி ரைகள் போடப்பட்டிருந்தபோதும் அங்கே ஒரே ஒரு மனிதர் மட்டும் ஒரு கணனி முன்னமர்ந்து சூழ்நிலையை மறந்து ஏதோ ஆய்வில் ஈடுபட் டுக் கொண்டிருந்தார். வின்சன்ட் தோமஸ் நேரே அவரிடம் சென்று காதுக்குள் ஏதோ முணுமுணுத்தார். அந்த மனிதர் தலை நிமிர்ந்து பார்க்காமலேயே வின்சன்ட் சொல்வதை செவி மடுத்தார். பின்னர் கணனியையும் மற்றக் கரு விகளையும் அணைத்தார்.
சில விநாடிகளில் தன் மேசையை ஒழுங்குப டுத்தி விட்டு எழுந்து வந்தார். சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அவர் உயரமான வாட்ட சாட்டமான மனிதராக இருந்தார். அவரை அழைத்து வந்து சாராவுக்கும் நரேசுக்கும் முன் நிறுத்திய வின்சன்ட் தோமஸ் அவர்களை அறி முகப்படுத்தினார்.
இவர் விஞ்ஞானி விஸ்வநாதன் உங்களைப் போல் இவரையும் ஜனாதிபதியே தெரிவு செய்து இங்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த இடத்தில் இருந்து விஸ்வநாதன் உங்களைப் பொறுப்பேற்பார். நான் பிறகு சந்திக்கி றேன்.' என்று கூறிய வின்சன்ட் அவர்களி டம் இருந்து விடை பெற்றுச் சென்றார்.
அவர் செல்வதை சற்றே அவதானித்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் தன் வலது கரத்தை நீட்டி 'நான் ராஜகுரு தேவ சேனாதி பதி விஸ்வநாதன்' என்று தன்னை அறிமுகப்ப டுத்திக் கொண்டு இருவருடனும் சிரித்த முகத் துடன் கை குலுக்கிக் கொண்டார்.
அந்தப் பெயரை உச்சரித்ததுமே அவர்கள் இருவருக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை. அவர் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து அமெரிக்கா சென்று படித்துப் பட்டம் பெற்று விஞ்ஞானியானவர். பல விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை செய்து எல்லா ஊடகங்களாலும் பாராட்டப் பெற்றவர். இவை எல்லாவற்றுக் கும் மேலாக அவர் நூற்றுக்கணக்கான விஞ் ஞான கண்டு பிடிப்புக்களை விவரண குறுந் தி ரைப்படங்களாக எடுத்து எக்ஸ்புளோரர் டி.வி. அலைவரிசை வாயிலாக புகழ் பெறவர். அவ ரை இந்தியாவின் அப்துல் கலாமுக்கு ஒப்பிட 6) Tib.
அமெரிக்க ஜனாதிபதி வில்கின்சன் சா ராவை அழைத்து அவளின் வட துருவ பிரயா ணம் பற்றி பேசிய போது அவர் ஏற்கனவே
ஆகஸ்ட்-2011

ஒரு விஞ்ஞானிகளின் குழுவை இங்கே அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவித்திருந் தமை சாராவுக்கு ஞாபகம் வந்தது. அவர்களில் ஒருவர்தான் விஸ்வநாதன். விஸ்வநாதன் போன்றவர்களின் வாயிலாக எந்தப் பொய் யைச் சொன்னாலும் மக்கள் அதனை உண்மை என்று நம்புவார்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியாததல்ல. அண்மையில் 'அண்டத்தின் அற்புதங்கள்’ என்ற பெயரில் அமெரிக்காவின் தேசிய தொலைக்காட்சிச் சேவையில் ஒளிபரப் பப்பட்ட புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமெரிக்காவின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசப்பட்டதுடன் விஸ்வநாதனை உலக மக் கள் அனைவரும் அறிந்து கொள்ளச் செய்தது.
அதன் பிறகு அவர்கள் சுமுகமாகப் பேசிக் கொண்டார்கள். உண்மையில் இத்தகைய அர சியல் விவகாரங்களில் தன் பெயரை இணைத் துக் கொள்ள தான் விரும்பவில்லை என்றும் ஆனால் அமெரிக்க ஜனாதிபதியே தன்னை அழைத்து இந்தக் கண்டு பிடிப்பைப் பற்றி ஒரு விவரணப் படம் தயாரித்துத் தரும்படி கேட்ட போது தன்னால் 'முடியாது’ என்று மறுக்க முடி யாமல் போய்விட்டதென்றும் விஸ்வநாதன் தெரிவித்தார்.
“என்னை இந்தப் பணிக்கு ஜனாதிபதி தெரிந்தெடுத்து அனுப்பியிருக்கிறார் என்றால் அதற்கான காரணம் என் விஞ்ஞானப் புலமை என்பதை விட எனக்கு ஊடகத்துறையில் கா ணப்படுகின்ற மதிப்பும் மரியாதையும் தான்' என்று மேலும் கூறி தனது பேச்சை முடித்தார் விஸ்வநாதன்.
'அப்படியானால் இந்தக் கண்டுபிடிப்பு பற்றி ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு அறி விக்கும்போது உங்கள் விவரணப் படத்தை தொலைக்காட்சிகளில் போட்டுக் காட்டுவார் கள். எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தது.? இப்படிக் கூறி சாரா வியந்தாள். இவ்வளவுக்கும் பின்னரும் தன்னை இங்கு அனுப்பி இந்த கண் டுபிடிப்பின் நம்பகத்தன்மை தொடர்பில் சரி பார்த்துச் சொல்லும்படி ஏன் ஜனாதிபதி கோரி யிருக்கிறார் என்று சாராவுக்கு இன்னமும் விளங் கவில்லை.
“உங்களைப் போல் வேறு யாரெல்லாம் இந்த விஞ்ஞானிகள் குழுவில் இருக்கிறார் கள்.? சாரா வியப்பாலும் ஆர்வ மிகுதியா லும் கேட்டாள்.
'வாருங்கள் மற்றுமொரு வியப்பானவரை
nggunian
*羲義↔

Page 22
உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறி அடுத்த அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றார் விஸ்வநாதன்.
அவர்கள் சில அறை களைக் கடந்து வேலைத்
| Ws தளம் என்று பெயர்ப் பலகை
மாட்டப்பட்டிருந்த பகுதிக்கு வந்தார்கள். அங்கேயும் ஒரு விசாலமான அறை காணப் ம் 62 பட்டது. ஆனால் அந்த அறையில் ஒரே ஒரு மேசை யும் நாற்காலியுமே காணப்பட்டது. மற்றபடி தரையெங்கும் தட்டு முட்டுச் சாமான்கள் ஒழுங்கற்றுப் பரப்பப்பட்டிருந்தன. எதையெல் லாமோ பொதி செய்து அங்கு வைத்திருந்தார் கள். அங்கேயிருந்த ஒரே ஒரு மேசை மீது ஒரு கோப்பையில் புதிதாக ஊற்றப்பட்ட கோப்பி யில் ஆவி பரந்து கொண்டிருந்தபோதும் அத னை அருந்துவதற்கு யாரையும் காணவில்லை. அதனருகில் சென்ற விஸ்வநாதன் சுற்று முற் றும் பார்த்துவிட்டு ககாரின் என்று சத்தம் போட்டு அழைத்தார். ஆனால் சில நிமிடங்கள் கழிந்த போதும் ககாரின் என்பவர் வர 6ી60606o.
பின் விஸ்வநாதன் சாராவையும் நரேசையும்
அத்தியா
HH
 
 

பார்த்து பின்வருமாறு கூறினார். புகழ் பெற்ற ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரினை மறந்தி ருக்கமாட்டீர்கள் என்று கருதுகிறேன். முதன் முதல் விண்வெளியில் பறந்து சாதனை படைத் தவர் அவரது பேரன் தான். இமானோல் யூரி ககாரின் விண்வெளி ஆய்வுக்கென பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றவர். அவர் ரஷ்ய ராக இருந்த போதும் ஒரு அமெரிக்க பிரஜை"
விஸ்வநாதன் இப்படிக் கூறியதும் சாரா வுக்கு வியப்புக்கு மேல் வியப்பாக இருந்தது. அவளுக்கும் இந்த இமானோவ் யூரி ககாரி னைத் தெரியும். விண்வெளிக் காந்தப் புலங் கள் தொடர்பில் பல்வேறு விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு பல நூல்களை எழுதியவர். விண்வெளி காந்தப் புலங்கள் தொடர்பில் இவ ரது கொள்கைகளே இப்போது விதிகளாகப் பின் பற்றப்படுகின்றன. நாஸா விஞ்ஞானிகள் அனைவருமே அவரது விண்வெளிக் கொள் கைகளைப் பின்பற்றுபவர்கள்தான்.
அண்மையில் ஒரு பாரிய விண்கல் பூமி யை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அது பூமியில் வந்து மோதினால் பூமியில் பேரழிவு ஏற்படும் என்றும் பல விண்வெளி ஆய்வாளர் கள் எதிர்வு கூறியிருந்தனர். இது தொடர்பில் ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்
22 ஆகஸ்ட்-2011

Page 23
டிருந்தன.
எனினும் இது தொடர்பில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் பூமியின் காந்தப் புல அமைப்பும் வருகின்ற விண்கல்லின் காந்தப் புல அமைப்பும் அதே சமயம் குறித்த விண்கல் பூமியின் எந்த இடத்தை வந்து தாக்கும் என்ற கணிப்பீடும் ஒரு விஷயத்தைக் தெளிவுபடுத் துகின்றன. அதன்படி ஒத்த காந்த முனையைக் கொண்டிருக்கின்ற காந்தப் புலங்கள் ஒன்றை ஒன்று ஈர்ப்பதற்குப் பதில் எதிர்மாறாக செயற் பட்டு அருகில் வருகின்ற பொருளை நிராக ரித்து நெருங்காமல் உந்தித் தள்ளிவிடும். அத னால் மேற்படி விண்கல் ஒரு போதும் பூமியில் மோதுவதற்கு சாத்தியமில்லை என்று விஞ் ஞானி ககாரின் தெரிவித்த கருத்தை விஞ் ஞான உலகம் ஏற்றுக் கொண்டது.
ஆதலால் ககாரின் இமானோவ் போன்றவர் களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற போது ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக் கையை சாராவால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்களுடனெல்லாம் தன் னால் ஈடுகொடுக்க முடியுமா என்பதும் புரிய வில்லை.
“என்னதான் இருந்தாலும் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் ஜந்துக்கள் ஒரு வகையில் நட்டு லூசானவர்கள்தான். நீ நினைத்துக் கொண்டிருக்கிறாயே இந்த யூரி ககாரின் இமானோவ் என்னுடைய நல்ல நண் பர். அவர் அன்றோ மேடா நட்சத்திரத்துக்கும் ஸ்கோப்பியன் நட்சத்திரக் கூட்டத்துக்கும் எவ் வளவு தூரம் என்பதை இம்மி பிசகாமல் கணக் குப் பார்த்துக் கூறுவார். ஆனால் அவர் விஞ் ஞானிகளின் கூட்டத்துக்கு செல்லும் போது யாராவது தான் அவர் கழுத்தில் டை கட்டி விட வேண்டும்?
'அப்படியானால் நான் கேள்விப்பட்டது உண்மைதான் போலிருக்கிறது’
“என்ன? விஸ்வநாதன் சுவராஸ்யமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார். நரேஷ் ஆர்வமற்றவனாக எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருந்தான். அவன் என் னதான் மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருந்தாலும் நகைச் சுவை உணர்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் வாய்விட்டு சிரித்து இதுவரை யாரும் பார்த்தது கிடையாது.
ஆகஸ்ட்-2011
--—

சாரா சிரித்துக் கொண்டே விஸ்வநாதனின் கேள்விக்குப் பதில் சொன்னாள் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் வீட்டில் ஒரு பூனை வளர்த்தார். அந்தப் பூனை குட்டி ஒன்று போட்டு விட்டது. ஐன்ஸ்டீன் அவற்றுக்கு கூடு ஒன்று செய்தார். அந்தக் கூட்டுக்கு ஒரு பெரிய நுழைவாயிலும் பக்கத்தில் ஒரு சிறிய நுழைவாயிலும் வைத்தார். சக விஞ்ஞானி ஒரு வர் அந்த சின்ன நுழைவாயில் எதற்கு என்று கேட்டார். அதற்கு ஐன்ஸ்டீன் குட்டிப் பூனை நுழைவதற்கு என்று பதில் சொன்னார். 'இப் படி சாரா சொன்னதும் விஸ்வநாதனும் சாராவும் வாய் விட்டுச் சிரித்தனர். நரேஷ் பாபு இரும்பு மனிதன் போல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தான். சாராவும் விஸ்வநாதனும் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தனர். அவன் நிலைமையை உணர்ந்து செயற்கையாக 'இஹி. இஹறி.’ என்றான்.
அப்போது அங்கே விஞ்ஞானி ககாரின் இமா னோவ் வந்து சேர்ந்தார். அங்கே சிரித்தபடி நின் றிருந்த அந்த மூன்று பேரையும் மாறி மாறி பார்த்த அவர் கேட்ட முதல் கேள்வி 'யார் இங்கே நடிகைகளை எல்லாம் கூட்டி வந்தது' என்பதாகும். (தொடரும்)
உங்களுக்கு அல்சராமே p? 'அந்த வயிற்றெறிச்சல ஏன் கேக்குறிங்க?"
23 nd
-**-

Page 24
நோய்களை உண்டாக்குவதில் புரோட் டோஸோவா எனும் நுண்ணுயிரின் பங்கினை முதன் முதலாக கண்டறிந்து அதனை விரி வான விளக்கமளித்து மருத்துவ முன்னோடி யாக திகழ்பவர்தான் சார்ள்ஸ் லூயிஸ் அல் (f) போன்ஸ் லவரன் அவர்கள்.
Charles Louis Alphonse Layer
1845 - 1922
 

ரான அல்போன்ஸ் லவரன் 1845 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி பிறந்தார்.
கல்வியில் பெரும் சிரத்தை எடுத்துக் கற்ற அவர் தனது கல்வியை முடித்த பின் மருத்துவ ரானார். அல்போன்ஸ் லவரன் வாழ்ந்த 19 ஆம் நூற்றாண்டில் மலேரியா ஒர் ஆட்கொல்லி நோயாக இருந்தது. மலேரியா நோயால் பீடிக்கப்பட்ட பலர் இறந்து கொண்டிருந்த னர். மலேரியா மட்டுமல்ல இன்று சிகிச்சை யளித்து இலகுவாக குணமாக்கக் கூடிய வேறு பல நோய்கள் அந்நாளில் உரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த மையால் ஆட்கொல்லி நோயாகவே இருந் 55l.
இதனால் ஆதங்கப்பட்ட லவரன் இதிலி ருந்து மனித சமுதாயத்தைக் காப்பாற்ற தீவிர ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இதன் விளைவாக புரோட்டோஸோ எனும் ஓரணு நுண்ணுயிர் பற்றி விரிவான விளக்கமளித்தார். "ட்ரைபானோ ஸோம் எனும் ஒரு மருத்துவப் பதத்தை பிரபலப்ப டுத்தினார். அதாவது இரண்டு வெவ்வேறு உயிரியல் ஜீவராசிகள் ஒன்றாக சேர்வ துண்டு. இதில் ஒரு தனித்தன்மை உண்டு. ஓர் உயிரியை Parasite என அழைக்கின் றோம். இது எந்த உயிரியுடன் போய் இணைகின்றதோ அந்த இரண்டாவது உயி ரியுடன் அப்படியே நீண்ட நாட்கள் இருந்து விடுவதுண்டு. அதாவது ஒர் உயிரி இன்
னொன்றுடன் போய் ஒட்டிக் கொண்டு அப்
ஆகஸ்ட்-2011

Page 25
படியே அதனுடன் ஒட்டுண்ணியாக இருந்து விடும். A. இந்த வகை ஒட்டுண்ணிகள்தான் "ட்ரை : பானோ ஸோம் என்பவை. இவை பூச்சி வகைகளில் மிக அதிகமாக காணப்படும். ட்ரைபானோஸோம் என்பவையும் புரோட் டோஸோவாதான் என்பதையும் உறுதிப்ப இ டுத்தினார் அல்போன்ஸ் லவரன்.
மேலும் இந்த ஒட்டுண்ணி உள்ளே நுழைந்தால் இரத்தத்தை உறிஞ்சி விடும். 5 ஏறக்குறைய அட்டைப் பூச்சியின் குணம் தான் இதற்கும் இருக்கும். இவை ஓரணு உயிரி னம் பெரிதாக ஒரு தலையும் அதிலிருந்து நீளமான வாலும் கொண்ட பிரபலமான
அமைப்பில் தான் இது காணப்படும். இவை ஆபத்தானவை.
பூச்சியினங்களில் மட்டுமல்லாது விலங்கு கள் மற்றும் மனிதர்களில் கூட ட்ரைபா னோஸோம் ஒட்டுண்ணிகள் நுழைந்து விடுவ துண்டு. இதனால் இவை ஏற்படுத்தும் நோய் கள் மிக ஆபத்தானவையாக இருக்கும் என்பது தான் சார்ள்ஸ் லூயிஸ் அல் போன்ஸ் லவரன் அவர்களின் நீண்ட ஆய்வின் தீர்வாக இருந்
தது.
உண்டாகும் நோய்கள் இதனால் பல நோய்கள் உண்டாகும் என்பத ைைனயும் கண்டு பிடித்தார். இதற்கு உதாரண மாக ஆபிரிக்காவில் தூக்கமே வராத ஒரு
நோய் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்
ஆகஸ்ட்-2011 SS SM
 
 

5922 PRISKTNõSS :0UVERTE DE : o EMMATOZOARE PAl-Josn.: , ప్రజా
றது என்றும் தென் அமெரிக்காவில் இதுபோல் ஒரு நோய் குருதி மூலமாக துரிதமாக பரவிக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டார். அத் தோடு மலேரியா போன்ற ஆட்கொல்லி நோய்க்கும் இதுவே காரணம் என அறிவித் தார். பற்றீரியா வகையான ட்ரைபானோஸோம் ஒட்டுண்ணுகளே நுண்கிருமியியலில் பெரும் சவால் என்பதை உறுதிப்படுத்தினார்.
மலேரியா நோய் புரோட்டோஸோவா எனும் ஓரணு உயிரி அமீபா போன்றதொரு வகையைச் சேர்ந்தது. இதுதான் மலேரியா உருவாகக் காரணம் என முதன் முதல் உறுதிபட அறிவித்தவர் அல் போன்ஸ் லவரன் அவர்களே. இவரின் இந்த அறிவிப்புதான் ஆட்கொல்லி நோய்
களை உண்டாக்கும் வல்லமை புரோட் டோஸோவாவுக்கு இருப்பது தெரிய வந்தது.
மலேரியா நோய்க்குத் தரப்பட்ட சிகிச் சையின் பலனின்றி அப்பொழுதுதான் மரணமடைந்த ஒரு நோயாளியின் உட லில் இருந்து இரத்தத்தை எடுத்தார் அல்போன்ஸ் லவரன். அதனை நுணுக் குக் காட்டியில் வைத்து ஆராய வசதி யாக விரல் நீளக் கண்ணாடித் தகட்டில் அந்த ரத்தத்தின் சில துளிகளை பரிசோ தனைக்காக எடுத்துக் கொண்டார். அதில் என்ன நுண்ணுயிர் இருக்கிறது என்பதையும் மலேரியா இதில் எந்த வகையான நுண்கிருமியை அவன் உடலில் நிலைக்கச் செய்திருக்கிறது என்பதனையும் ஆராய்வதுதான் இவருடைய இலக்காக இருந் தது. இந்த பகுப்பாய்வின் முடிவே நோயா ளியைக் கொன்ற கிருமி புரோட்டோஸோவா

Page 26
தான் என்ற முடிவினை முன் வைத்தது. மலே ரியாவால் பலர் இறந்து கொண்டிருந்த 19 ஆம் நூற்றாண்டில் அல்போன்ஸ் லவரனின் இந்த ஆராய்ச்சி முடிவு ஒரு வரப்பிரசாதமாகவும் ஆய்வு முயற்சியில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது.
லெத்தர்ஜி அல்லது நெளசியா நோய் இது மாத்திரமல்லாமல் ட்ரைபனோ ஸோம்ஸ் (Trypanosomes) எனும் புரோட்டோ ஸோவாவின் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது இவர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண் டார். இதன் விளைவாகவே சுறுசுறுப்பற்ற சோம்பல் மிகுந்த நோய் ஒன்று மனிதனை பிடிக்கின்றது என்பதை அல்போன்ஸ் லவரன் கண்டுபிடித்தார்.
அரை மயக்க நோய் ஒரு கடுமையான நோயாகும். எதையும் செய்ய விடாமல் விழித் தபடியே நம்மைத் தூக்கத்தில் தள்ளியே வைக் கும் அற்ப நோய். இதனால் அநேகர் பாதிக்கப் படுகின்றனர். (Lethargy) லெதர்ஜி அல்லது (Nausea) நெளசியா எனப்படும் இந்நோய் பிடித்தால் அரை மயக்க நிலையிலேயே வாழ்ந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் போய் விடும்.
Sleeping Sickness 6T60T Lp(555.6 g. 6).35th கூறும் நோய்க்குரிய காரணமாக புரோட் டோஸோவாவை முன் வைத்ததோடு மலேரி யாவுக்கான காரணத்தையும் கண்டுபிடித்த
மேற்கு இந்தியாவை பூர்வீகமாக்கிக் கொ இப்பொழுது உலகம் முழுவ: விற்றமின் சி நிறைந்துள்ள இப்பழத்தி இரும்பு, பொஸ்பரஸ், கல்சியம் சத்துக்க
பழம் 104 கலோரி சக்தியும் அ4 இது எளிதில் ஜீரணம் ஆகும் என்பதுட4 கும் மருந்தாகப் பயன்ப எனவே இதை பல்வேறு மருந்துகளிலு
 

** * * ா,
*-
*- sh."
மையால் 1907 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு சார்ள்ஸ் லூயிஸ் அல்போன்ஸ் லவரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மருத்துவ உலகிற்கு அரும்பணி புரிந்த அவர் 1922 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் தனது 77 ஆவது வயதில் மறைந்தார்.
ண்ட அன்னமுன்னாப்பழம் தும் பயிராகிறது. ல் புரோட்டீன், மாச்சத்து, நம் உள்ளன. 100 கிராம் ரிக்கவல்லது. எ வாயுக் கோளாறுகளுக் டுகிறது.
ம் பயன்படுத்துகிறார்கள்.
கஸ்ட்-2011 ஆ

Page 27
勿
ー
孙
CAN
/
1. ஆடாத அசையாத நிலையில் ஒளி ஏற் வும். கண்மட்டத்தில் இத்தீபம் அல்லது மெழு குவர்த்தி இருத்தல் வேண்டும். முள்ளந் தண்டு, கழுத்து, பிடரி நேராக இருத்தல் அவ சியம். மரப்பலகை, கம்பளி அல்லது துணியி னால் ஆக்கப்பட்ட ஆசனத்தில் அமைதியான இடத்தில் அமரவும். நிலத்தில் இருந்து சற்று உயர்வாக இருத்தல் வேண்டும். உடலை நேராக வைத்துச் சரியாகத் தியானிப்பதன் மூலம் ஒருவரில் இருக்கும் தெய்வீகத் தன்மை யைப் பெற முடிடியும்.
இறை நாமம் உச்சரித்தல் அவன் நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்ச ரிக்கவும். (ஜெபம், மந்திர உச்சாடனம் முதலி யன)
பலமுறை ஆழமாக அமைதியாகச் சுவாசிக் கவும் தோள், முதுகு, மார்பு உயர்ந்து தாழாது இருத்தல் வேண்டும். சுவாசிக்கும் போது அடி வயிற்றைப் பாவித்தல் வேண்டும். வயிறு நன் றாக உட்செல்வதை அவதானிக்கலாம். சுவா சம், உடல் அசைவு, சிந்தனை இவற்றுக்கிடை யில் கூடிய தொடர்புண்டு ஆழமாகச் சுவாசிப் பதனால் இருதயம் அமைதியாகச் செயற்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--
晨。
வதை எம்மால் அவதானிக்க முடியும். இத னால் உடலும் உள்ளமும் அமைதி பெறுவதை நாம் உணரலாம்.
இயல்பாகச் சுவாசித்தல் சுவாசத்தில் எமது செல்வாக்குச் செலுத்து தல் தவிர்க்கப்படல் வேண்டும். அதே வேளை அவதானித்து மூச்செடுக்கும் போது 'சோ' (So) எனவும், வெளிவிடும் போது 'கம் (Ham) எனும் உச்சரிப்புடன் சுவாசிக்கவும், இதே போன்று Ge (ஜி) எனும் ஓசையுடன் உள்ளெ டுத்து 'Sus (சஸ்) எனும் ஓசையுடன் வெளி விட்டுச் சுவாசிக்கலாம் நம் இஷ்ட தெய்வங் களின் இறை நாமங்களை எமது விருப்பத்திற் கேற்ப உச்சரிக்க முடியும் இம்மந்திர DěFBFITLD னத்தை 5 10 நிமிடங்கள் வரை நடைமு றைப்படுத்துக எமது சுவாசம் தான் எம் உயிரா கும். சுவாசம் தான் கடவுள்
சுவாசிக்கும் ஒவ்வொரு பொழுதும் இறை நாமம் உச்சரிப்பதனால் வாழ்க்கையின் ஒவ் வொரு படியும் பிரகாசம் அடைகிறது.
ஓங்காரம் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை 21 முறைகள் அமைதியாக உச்சரிக்கவும் இம்மந் திரம் புலன், நாக்கு, இதயத்தில் இருந்து உச்ச
ரிக்கப்படல் வேண்டும்.

Page 28
தொடர்ந்து சுவாசம் எவ்விதமாக அமைகி றது என்பதை அவதானிக்கவும்.
வெளிச்சம் கண்களைத் திறந்து ஆறுதலாகவும், அமை தியாகவும் ஒளியை உற்று நோக்கவும். தீபம் அல்லது மெழுகுவர்த்தியின் ஒளி, கண்மட் டத்தில் அமையக் கூடியதாக வடிவமைத்தல் இன்றியமையாததாகும். சில விநாடிகள் வெளிச்சத்தை உற்று நோக்கிய பின் கண் களை மீண்டும் மூடிக் கொள்ளவும். அவ்வொ ளியின் பிரதிபிம்பத்தைக் காண முடியும். அவ் விதம் தென்படாவிடின் கண்களைத் திறந்து மீண்டும் அவ்வெளிச்சத்தைப் பார்க்கவும்.
தலையில் அக உணர்வால், இவ்வொ ளியை உள்வியாபிக்கச் செய்யவும். மூளை யின் ஒவ்வொரு கலத்திலும் இவ்வொளி சென் தாக நிச்சயப்படுத்தவும் மனதாரச் Gीका 6066 கொள்ளுங்கள். 'எனது புத்திக் go isold பிரகாசம் அடைகிறது.
ஒளியையும் - அன்பையும்
ஆறுதலாகவும் எளிதாகவும் இ 羲 வெளிச்சத்தை இதயத்திற்கு வும். இதயத்தின் சகல பகுதிகளுக் கும் இவ்வெளிச்சம் அடைவதாகச் செய்யவும். இருதயத்தில் தங்கள் இஷ்ட தெய்வத்தை அமர்த்தவும். இதன் மூலம் ஒருவரின் சிந்தனை, உணர்ச்சி, மன எழுச்சி முதலியன வற்றின் நிழல்களை இவ்வெளிச்சத் தில் கரைக்கவும் இருட்டை ஓர் இடத்திலும் ஒளிக்க முடியாமற் செய்யவும்: @១៣ தீவிரமாகப் பரவும் போது கூடாத ក្s எதுவும் நிலை பெற மாட்டாது
தற்போது சிந்திக்கவும் அன்பு எல்லாவற்றிலும் 蠶 செறிந்துள்ளது என உணர்கிறேன். நான் முற்றி லும் உண்மை, நான் புனிதமான வன்; நான் அமைதியாக உள்ளேன். அன்பானவனாக உள்ளேன்.
ான் சாத்வீகமானவன், நான் க
野
ருண்யமானவன் நான் சகிப்புத்தன்
 
 
 
 
 
 
 
 
 

மையானவன். மன்னிக்கும் சுபாவம் உள்ள வன். விவேகமானவன். நடுநிலையாளன். அழ கானவன். இவ்விதமாக உணருங்கள். ஒவ் வொரு குண இயல்புச் சிந்தனையின் பின் சில விநாடிகள் தாமதித்துச் சிந்தியுங்கள். ஒளியை சகல பாகங்களுக்கும் பரவச் செய்தல் மேற்படியான உணர்தலின் பின் இவ் வொளியை உடலின் சகல பாகங்களுக்கும் பரவச் செய்யவும் வெளிச்சம் தொப்பிளை அடைந்து அங்கிருந்து இடது தொடை கால், பாதம், விரல் நுனியை அடையச் செய்யவும். இதை அடுத்து உடல் உறுப்புக்கள் யாவும் வெளிச்சத்தினதும், அன்பினதும் பிரதி விம் பங்களாக மிளிரும் தலை முழுவதையும் இவ்
வெளிச்சம் அடைவதனால் எவ்விதமான குறைவான சிந்தனையும் இருக்கவே முடி யாது. தற்போது இவ்வொளி உடலின் நாலாப் புறமும் வியாபித்துச் செல்வதை உணர முடி

Page 29
U-LD.
உடலில் உள்ள வெளிச்சமும், வெளியில் உள்ள வெளிச்சமும் ஒன்றாகவே உணர முடி யும். உடல் முழுதும் பிரகாசமாக இருக்கும்.
இஷ்ட தெய்வத்தை மனக்கண் முன்
கொண்டு பிரார்த்தனை செய்க. தற்போது தங்கள் இஷ்டதெய்வத்தை மனக்கண் கொண்டு பார்க்கவும். எம்மைச் சூழ்ந்தவை யாவும் பிரகாசமாக இருக்கும். யா னும் இறைவனும் ஒன்று, யானே இறைவன் எனப் பிரார்த்தனை செய்க.
இச்சந்தர்ப்பத்தில் இறைவனை நன்றியத லுடன் வழிபாடு செய்க. "இறைவா எனது பல மும் நீயே; எனக்குப் பாதுகாப்பும் நீயே எனக் குப் புகலிடமும் நீயே நன்கு பராமரிக்கின் றாய். உனது கருவியாக யான் உலாவி வரு கின்றேன். எனக்கு விமோசனம் அளிப்பவரே எனக்குக் கவசமாக இருந்து என்னை இரட்சிப் பதை உணருகின்றேன்.
என்றும் எப்போதும் தங்கள் நாமம் என்னை
ஆசீர்வதிப்பதாக எங் கும் எவ்விடத்திலும்
மஞ்சளை நாம் அழகு சாதனப் பொ ருளாகவும் கிருமி நாசினியாகவும் பயன்ப டுத்தி வருகின்றோம். மஞ்சளுக்கு புண்களை விரைந்து ஆற்றும் தன்மை உண்டு.
ஸ்ரெப் டோகாக்கஸ், ஸ்டைலோகாக்கஸ்
போன்ற பற்றீரியாக்களையும், பூஞ்சைகளால் தோலில் ஏற்படும் நோய்களையும் அழிக்கி றது. அதற்கு முக்கிய காரணம் கர்குமின் என்ற இரசாயனப் பொருளாகும்.
இந்த இரசாயனப் பொருளும் மஞ்சளில் உள்ள ஆவியாகக்கூடிய எண்ணெயும் தான் மஞ்சளின் மருத்துவக் குணத்துக்குக் காரண மாகும். மஞ்சள் உடலில் உண்டாகும் கட்டி களைப் போக்கும் தன்மையைப் பெற்றிருக் கிறது. புற்று நோயாளிகளுக்கு தினமும் 500
 
 

எப்போதும் இறை நாமம் பெருமைக்குரியதா கட்டும்? 獸
குறிப்பு : "சோகம், அல்லது இஷ்ட தெய்வத்தின் நாமத்தைத் தொடர்ந்து சில நிமி டங்கள் உச்சரிக்கவும். இதையடுத்துக் கண் களை மெதுவாக திறக்கவும் கிரமமாக இத்தி யானத்தைச் செயற்படுத்துவதனால் மனதிற்கு மனநிறைவைக் கொடுக்கும். ஐம்புலன்களை அடக்கவும், ஆக்கரீதியான முயற்சிகளுக்குச் சிந்தனையை ஒருமுகப்படுத்தவும் இத்தியா னம் பேருதவியாக அமைய முடியும் புலனை ஒருமுகப்படுத்துவதனால் கற்றல் இலகுவாக அமையும் ஞாபக சக்தி கூர்மையா வதுடன் புலக்காட்சியை ஆழமாக்குவதற்கும் உறுதுணையாக முடியும் நான் எனும் மமதை அருகி மறையும் யாவரையும் நேசிக்கும் மனப்பான்மை மேலோங்கும். நற்பண்புகளும் விசேட குணாம்சங்களும் மேலோங்க முடி unifo.
காவைதீஸ்வரன்
உளநல ஆலோசகர்
SSS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS a
மில்லிகிராம் ကြီး၏† கொடுத்தால் கட்டி கரைவது கண்டுபிடிக்கப்படுகிறது.
ஈரல் புற்று நோயையும் இது கட்டுப்படுத் துகிறது. மஞ்சள் பூசிக் குளிப்பதால் அதில் உள்ள மெழுகு போன்ற மருந்துப் பொருள் சருமப் பிரச்சினைகளை சரி செய்து முகத்தை பளபளப்படையச் செய்கிறது. ஆனால் மஞ் சள் பூசிக் குளிப்பது முடிகளை நீக்குகிறது என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட @ါ၍) @၅၇) @).
ஆகஸ்ட்-2011 1. .ܛ.

Page 30
கருதி யுரித்ரா சிறுநீரகக் குழாய் பாதிக் கப்பட்டுள்ளவர்களுக்கு செயற்கை சிறுநீ ரகக்குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் வெற்றிகிட்டியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வின்ஸ்டன் செலம் வேக் போரேஸ்ட் மறுசீரமைப்பு மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் கள் டொக்டர் ஆன்டா அடலா தலைமையில் ஆய்வு நடத்தி செயற்கை சிறுநீர் குழாயை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். ஆய்வுக்காக விபத்தால் பாதிக்கப்பட்டு யுரித்ரா பாதிப் பில் இருந்த சிறுவர்கள் சிலரிடமிருந்து சிறுநீர்ப்பை செல்கள் எடுக்கப்பட்டு செயற்கை யுரித்ரா உருவாக்கப்பட்டது. ஆய்வுகூடத்தில் கண்காணிக்கப்பட்டு முழு வளர்ச்சிக்கும் பிறகு அறுவை சிகிச்சை மூலம் நோயாளிகளின் உடலில் அவை பொருத்தப்பட்டன. அவர்கள் / உடல்நிலை திருப்திகரமானதாக இருந் / ததால் சிறுநீர்க்குழாய் பாதிப்புள்ள \ அனைவருக்கும் இதைப் பொருத்துவது தொடர்பாக ஆய்வை நடத்தி வருகின்ற
60 TT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிழிவு மற்றும் இதய நோய்களினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் அரச
தனியார் ஊழியர்கள் உள்ளனர்.
எமது நாட்டில் பணிபுரியும் பெரும்பாலான
அரசாங்க ஊழியர்களின்
৪১২ – 20 ^ 23 இரத்தத்தில் சீனியும் கொழுப்பும் அதிகரித்து காணப்படுவதாக வைத்திய ஆய்வொன்
றின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் 55 TJ600TLD IT595 அரசாங்க ஊழியர்களில் நீரிழிவு மற்றும் இருதய நோயாளிகளின் எண்ணிக்கையும்
அதிகரித்து காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் தனியார் துறையில் பணியாற் றும் ஊழியர்களும் நீரிழிவு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக அந்த ஆய்விலிருந்து
தெரிய வந்துள்ளது.
கடுமையான உடல் உழைப்பாளிகளான கூலி வேலை செய்பவர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் மேசன் தச்சன் தொழில் ரீதியான விளையாட்டு வீரர்கள் இன்னும் இது போன்ற தொழிற்துறையில் ஈடுபட்டுள் ளோரை விட அரச மற்றும் தனியார் துறை களில் பணியில் ஈடுபட்டுள்ள உத்தியோகத் தர்களும் ஊழியர்களும் இலகுவில் நோய்
களுக்கு ஆளாவது பொதுவான ஒரு உண்மை யாகும். இதற்கான பிரதான காரணம் என்ன?
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் உடல் உழைப்பும் அன்றாட
ஆகஸ்ட்-2011

Page 31
வாழ்க்கை முறையுமே பிரதான
காரணங்களாகும்.
அரச மற்றும் தனியார் துறையில் பணி புரிவோர் நீரிழிவு மற்றும் இதய நோய்களால் அதிகளவில் பாதிக்கபட்டுள்ளதன் காணம் |Tទៅ? -
O1 நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து
பணியாற்றுவது. 02 உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்
களில் ஈடுபடாதது. 03 எண்ணெய், சீனி, மா அடங்கிய உணவு வகைகளை அதிகளவில் பயன்படுத்து தல். 04 உடல் நிறை அதிகரித்து காணப்படல். 05 தொழில் ரீதியில் ஏற்படும் வேலைப்பளு மற்றும் பிரச்சினைகள் காரணமாக தோன் றும் அழுத்தம். இதேவேளை எமது நாட்டில் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக இவை களிலிருந்து பாதுகாப்பை பெறுவதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கை மக்களில் நான்கில் ஒருவர் நீரிழி
ஆகஸ்ட்-2011
 
 

இரவில் தூங்கும்போது
படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக் குகளைப் பயன்படுத்துகிறோம். இத்தகைய விளக்குகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெ ரிக்காவில் உள்ள ஒளியோ நரம்பி யல் விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர்.
இரவு நேரத்தில் மங்கலான அள வில் ஒளி இருந்தால்கூட மூளைக் குள் இரசாயன மாற்றங்கள் ஏற்ப டுத்துவதுடன் மூளையின் கட்ட மைப்புக்களையும் மாற்றிவிடும் எனக் கூறியுள்ளார். குழந்தைகளின் படுக்கையறைகளில் இத்தகைய விளக்குகள் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Page 32
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞா soflurr6ori 6 ba\o6ör6ñol inte-Sträu 6T6öTLu6). If விற்றமின் சி யைத் தொடர்ந்து உண்ப வரின் ஆயுள் மொத்தத்தில் நான்கிலி ருந்து ஆறு ஆண்டுகள் வரை கூடும் என்று கூறுகிறார்.
மேற்கண்ட கருத்தை அமெரிக்கா வில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிரூ பித்துள்ளனர். அவ் விற்றமின் சி பிரதா
னமாக உள்ள நெல்லிக்கனியில் புர
தம், கொழுப்பு சுண்ணாம்புச்சத்து,
பொஸ்பரஸ், மாச்சத்து, நார்ச்சத்து, விற்றமின் ஏ போன்ற சத்துக்களும் அடங்குகின்றன.
। । as a
 
 
 
 
 
 
 

ால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று விக்கிறது. அதே போன்று பாடசாலை மான ள் உட்பட 22 வயது வரையானோரில் 18.4
சதவீதமானோருக்கு நீரிழிவு நோய் 5T600TL
படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
எமது நாட்டில் வசிக்கும் பெண்களில் 24
சதவீதத்தினரும் ஆண்களில் 19 சதவீதத் தினரும் எந்த வித உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுவதில்லை எனவும் கிராம மக்களில் to சதவீதமானோரும் நகர மக்களில் 20 வீத மானோரும் நீரிழிவினால் பாதிக்கபட்டுள்ள தாகவும் அந்த ஆய்விலிருந்து தெரிய வந் துள்ளது.
இந்நிலையிலேயே அரசாங்க ஊழியர்களில் குறிப்பிடத்தக்க அளவினர் நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களினால் பாதிக்க
பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அரசாங்கம் மற்றும் தனியார் ஊழியர்கள் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வருமானமுடைய இந்தப் பிரிவினர் நோய்களினால் அதிகள வில் பாதிக்கப்படுவது கவனத்திற்குரிய விடயமாகும்.
தமது தொழில் தொடர்பாகவும் குடும்பம் தொடர்பாகவும் அதிகம் கவனம் செலுத்தும்
குழுப் பிரிவினர் தமது உடல் ஆரோக்கியம்

Page 33
தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டி அவசியம். っ「下
01. தினசரி உடற்பயிற்சி செய்தல். 02. ஒய்வு வேளைகளில் விளையாட்டுக்
களில் ஈடுபடல் தியானம் சமய வழிபாடு யோகாசனம் போன்றவை களில் ஈடுபடல். 03. வருடத்திற்கு ஒரு -ಡಾ|
வைத்திய பரிசோதனை மேற்கொள்ளல். 04. பரபரப்பான வாழ்க்கை முறைகளி
லிருந்து விடுபடல் (உதாரணம் ஒய்வு பொழுது போக்கு விடயங்களுக்கு நேரப் ஒதுக்குதல்) 05 உணவு தொடர்பில் அதிக அக்கறை
செலுத்துதல் (இனிப்பு மற்றும் கொழுப்பு, மா அடங்கிய உணவு வகைகளை முடியுமான அளவு தவிர்த்தல்) 06. தேசிய உணவு வகைகளை மேற்கொள்
6T6). 07. உயரத்திற்கு ஏற்ப நிறையைப்
(SugoOT6). 08. மன அழுத்தத்திலிருந்து விடுபடல். 09. நேர முகாமைத்துவம் பேணல் 10. திட்டமிட்ட வாழ்க்கை முறை. 11. ஓய்வு நேரங்களை உடல் உள ஆரோக்கி
யம் மேம்படும் விதத்தில் செலவிடல், 12 மகிழ்சியான குடும்ப வாழ்க்கையை
(Suso Too. 13 வைத்திய ஆலோசனை பெறல்.
இன்னும் இது போன்ற பல விடயங்களை குறிப்பிடலாம்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்டலாம். அரச தனியார் ஊழியர்களே உடல் உள ஆரோக் கியம் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத் துங்கள். வீட்டுக்கும் நாட்டுக்கும் பங்களிப்பு
வழங்குங்கள்.
கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed
நீர்கொழும்பு
ஆகஸ்ட்-2011 (33
醛
 
 
 
 
 
 
 
 
 
 

GiotGol Lä. காலத்தில் வெளி நாட்டு வர்த்தகர்கள் இந்தியா வந்து
மிளகுகளை வாங்கிச் சென்றார்கள்.
அதை பெரும் செல்வமாக கருதி னார்கள் என்றெல்லாம் படித்திருக் கிறோம். இதற்கெல்லாம் அடிப்ப sume SLuis Sergu (SLITeo மிளகு காரமாக இருப்பினும் பாதிப்பு ஏற்படுத்தாத ஒன்றாகும். புரதம், கொழுப்பு, கார்போஹைட்
ரேட், நார்ச்சத்து, விற்றமின்கள்,
சுண்ணாம்பு, இரும்பு, பொஸ்பரஸ்
என்று பல்வேறு சத்துக்கள் மிளகில்
நிறைந்துள்ளன. இரத்தக் குழாய்க ளில் படியும் கொழுப்பைக் குறைக்

Page 34
5BDGUEFDDT N
DööööLO
象
@ 意 Möfen
 
 
 
 
 
 


Page 35
தலைசுற்றுகிறது மயக் வருது என்னைச் சுற்றி மு சுற்றுகிறது போல் தோன்று செத்துப் போய் விடுவேனோ றுகிறது. இத்தகைய புலம்பல்க: றல்களையோ நாம் அன்றாடம் வயதைத் தாண்டிய பெரியவர்கள் கேட்கின்றோம். இந்த தலைச்சு மயக்கமான மாயத்தோற்றம் ஏற்ப வீடுகளிலும் சாதாரணமாக கா6 அதன் அடியையும் முடியையும் ப ார்ப்பது நல்லதென்று நினை தொடர்பில் கோட்டே பூரீ ெ வைத்தியசாலையைச் சேர்ந்த தொண்டை சம்பந்தமான
நிபுணர் அசோக ஜயசேன என்
என்று பார்ப்போம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dr. அசோகா ஜயசேன காது மூக்கு தொண்டை விசேட மருத்துவர் பூரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை கோட்டே
SLò LouLjësēSLIDIT முழு உலகமே கிறது. நான் என்று தோன் ளையோ பிதற் 6$GB)556f6ão 40 ரிடம் இருந்து ற்று கிறக்கம் டுவது எல்லா ணப்படுவதால் ற்றி ஆராய்ந்து த்தோம். இது ஜயவர்த்தனபுர காது, மூக்கு, சத்திரசிகிச்சை ன சொல்கிறார்

Page 36
தலைச்சுற்றின்
வரைவிலக்கணம்
தலைச்சுற்று என்பது சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் எதிர்நோக்கும் ஒருவித நோய் நிலை எனலாம். இதனை பொதுவாக தலைச் சுற்று மயக்கம், கிறக்கம் என்று கூறினாலும் இதன் மருத்துவப்பெயர் Giddiness அல்லது Vertigo என்பதாகும்.
.3 S S S S S S S S S S S S S 9 ܘܠܐ 1 13 11 ܥܢܬܐ
ܬܐܡܝܢܘܬܐ ܐܠܝܨ ܕ ܐ ܘܬܐܬܪ71 ܠܐ ܦ
 

தலைச்சுற்று ஏற்படக்
காரணம்
இதற்கான அடிப்படைக் காரணி உடலின் சமநிலை பாதிக்கப்படுதல் என்று கூறலாம். உடலின் சமநிலை பேணப்படுதலுக்கு மூன்று காரணிகள் துணை நிற்கின்றன. அவை கண், காது மற்றும் மூட்டுக்கள் என்பன. இவற்றின் சமநிலையைப் பேணுதல் மூலமே உடலின்
சமநிலையைப் பேண முடியும்.
இந்த மூன்று அம்சங்களில் இருந்தும் கிடைக்க பெறும் சமிக்ஞைகள் மூளையின் செரிபெலம் (Cerebellum) என்ற சிறு உறுப்புக்கு அனுப்பப்பட்டு அதன் செயற்பாடு வாயிலாகவே உடலின் சமநிலை பேணப் படுகின்றது. இதற்கு மூல காரணியாக காது செயல்படுகிறது. குறிப்பாக உட்காது பல சிக் கலான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என லாம். ஏதும் காரணத்தின் நிமித்தம் உட்காதில் உபாதை ஏற்படுமாயின் அது முழு உடம்பையும் பாதிக்கும். காது மூன்று அங்கங்களானது. அவை வெளிக்காது செவிப்பறை உட்காது
என்பனவாகும். இவற்றில் - ഉ_e( g நிலை பேணுவதற்கு உட்காதின் செயற் பாடுகள் பிரதானமானவைகளாகும்.
தலைச்சுற்று ஒரு நோய் என்று கூறலாமா?
தலைசுற்றின் அடிப்படை குணாம்சம் ஒருவர் தாம் செயலிழப்பது போல் உணர்வதாகும். அத் துடன் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் சுழல் வது போல் பிரமை ஏற்படுவதாகும். உதாரண மாக அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் நேராக நிற்க முடியாமல் நாற் புறமும் சுற்றுவது போல் உணர்ந்து விழப் போகும் நிலை ஏற்படுமாயின் தலைச்சுற்று ஏற் பட்டுள்ளது என்று கூறலாம். இந்த நிலை சடுதியாக ஏற்பட்டு சுற்றுப் புறச் சூழல் சுழல் வது போல் தோன்றும். யாராவது நம்மைத் தள்ளிவிட்டால் தட்டுத்தடுமாறுவது போல் தோன்றுமே அதற்குச் சமனானது. சிலர் கட்டிலில் இருந்தும் விழுந்து விடுவதுண்டு.
ஆகஸ்ட்-2011

Page 37
இத்தகைய தலைச்சுற்று ஏற்படுவதற்குக் காரணம் உட்காதின் சமநிலை பாதிக்கப் படுவதாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில் காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான வைத்தியரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
தலைசுற்று அதிகமாக ஏற்படும் வயதுப் பிரிவினர் குறிப்பாக மத்திய வயதையடைந்த வர்களுக்கு தலைசுற்று அதிகம் ஏற்படுகின்றது. 45-50 வயதடைந்தவுடன் அது பொதுவான நோய் நிலைமை எனலாம். இளம் வயதில் பொதுவாக தலைசுற்று ஏற்படுவதில்லை. அவ்விதம் ஏற்பட்டால் அதற்கு வேறு விசேட காரணங்கள் இருக்கும். இலங்கையின் சனத் தொகையில் 50 வயதடைந்தோருக்கு மத்தியில் சுமார் 60 வீதத்தினருக்கு இந்நோய் காணப் படுகின்றது. 70 - 80 வயதையடைந்தவுடன் இந்நிலை மேலும் அதிகரிக்கின்றது.
இந்நிலைமைக்கான
பிரதான காரணிகள்
தலைச்சுற்றல் ஏற்படுவதற்கான காரணிகள் பல காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தடிம்ன் ஏற்பட்டு சளி காரணமாக காதில் தொற்று ஏற்படுதல். இச்சந்தர்ப்பத்தில் விஷக் கிருமிகள் காதுக்குள் செல்லுகின்றன. சில சமயம் காது கேட்காத தன்மைகளும் ஏற்பட 6) Th.
தலைச்சுற்று ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணம் தான் நரம்பு மண்டலம் பலவீன மடைதல் பல்வேறு காரணங்களினால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் போது உடம்பு தனது சமநிலையை இழக்கின்றது. (Մ) (Լք gd - Lid LG6õT இயக்கத்துக்கும் நரம்பு மண்டலமே பிரதான காரணி மூளையில் இருந்து நரம்பு மண்டலம் கட்டுப்படுத் தப்படுகின்றது. அத்தகைய கட்டுப் பாட்டினை மூளை இழக்கும் போது
நரம்பு மண்டலம் செயலிழந்து உடல் இயக்கம் தடைப்படும் போது தலைச்சுற்று ஏற்படும்.
மனிதர்கள் முதுமையடையும் போது உடல் இயக்கமும் தள
ஆகஸ்ட்-2011
 
 

வடைவது பொதுவான இயல்பு. இந்த செயற்பாட்டை சற்று நுணுகிப் பார்த்தால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டிய பல உடற் பாகங்கள் காதின் உட்புறத்தில் இருந்தே செயற்படுகின்றன. இத்தகைய உடற்பாகங்களில் Endolim மற்றும் Perim ஆகிய உடற்பகுதிகள் மூளையின் கட்டளை யைப் பெற்று உடல் இயக்கத்துக்கு முக்கிய காரணிகளாகின்றன. வயது முதிரும் போது இவையும் முதிர்வடைந்து உடற் தளர்ச்சியை உண்டு பண்ணுகின்றன. இச் செயற்பாடு மனிதர்கள் சகலருக்கும் பொதுவானதாகும். எனவே தான் காதின் உட்புறம் சரியாகப் பேணப்பட வேண்டும் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
தலைச்சுற்று ஏற்படுவதற்கான வேறு காரணிகளைக் பொறுத்த வரையில் கழுத்தில் முள்ளந்தண்டுடன் சம்பந்தப்படும் நாளங் களில் ஏற்படக் கூடிய ஏதும் பாதிப்புக்களும் உடல் இயக்கத்தின் சமநிலையைப் பாதித்து தலைச்சுற்றினை ஏற்படுத்தும். அதன் போது கழுத்தை சுதந்திரமாக இடம் 66) DT55
தி ரு
L

Page 38
முடியாதிருக்கும். நாம் வயது முதிர்ச்சி யடைவதுடன் அதிகமாக நமது நடமாட்டங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்திருக்க நினைக்கின்றோம். இதன் காரணமாக குருதிச் சுற்றோட்டம் உடலெங்கும் சீராகச் செல்வது தடைப்படுகின்றது. குறிப்பாக தலைக்குச் செல்லும் குருதியின் அளவும் குறைவடை கின்றது. ஆதலால் தான் ஓரிடத்தில் நீண்ட நேரம் அமர்ந் திருந்து பின் எழுந்தவுடன் தலைச்சுற்று ஏற்படு கின்றது. வயதடைத லுடன் குருதிச் சுற்றோட்டத்துக்கு பொறுப் பான இதயமும் பலவீனமடை வதால் உட லெங்கும் சீராக குருதி சென்றடைவதும் தளர் கின்றமை பொதுவான காரணியாகும்.
தலைச்சுற்று ஏற்படுவதற்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தை மெனியர்ஸ் சின்ட்ரம் என்று அழைக்கின்றார்கள். மத்திய வயதடைந்த பெண்கள் மனோ ரீதியிலான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் போது இந்த நிலை ஏற்படுகிறது. இந்த நிலைமையின்போது காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்கத் தொடங் கும். இரைச்சல் சத்தம் அதிகரிக்கும் போது காது கேட்கும் சக்தி இழக்கப்படுகின்றது. சிரசின் 8ஆவது நரம்பு என்று அழைக்கப்படுகின்ற நரம்பில் ஏதும் கட்டி ஏற்பட்டாலும் இத்தகைய நிலைமை ஏற்படுகின்றது. அது எப்போதாவது ஒருவருக்கே ஏற்படுகின்றது. இத்தகைய நிலை ஏற்பட்டால் குறித்த பகுதியை ஸ்கேன் செய்து
SS
 
 

V
சத்திர சிகிச்சை மூலம் கட்டியை அகற்றி சுகப்படுத்த முடியும்.
Positional Vertigo
என்பது பற்றி தலைச் சுற்று ஏற்படுவதற்கான மற்றுமொரு சந்தர்ப் பத்தை இவ்வாறு அழைக்கின்றார்கள். இது கழுத்தைச் சடுதியாக எதிர்பாராமல் இடமோ வலமோ திருப்புவதனால் ஏற்படுகின் றது. உதாரணமாக படுக்கையில் இருந்து சடுதியாக திடுக்கிட்டு எழுந்திருந்தால் ஏதாவது கீழே விழுந்தவிடத்து அதை எடுக்க திடீரென குனிதல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் தலைச் சுற்று ஏற்படலாம்.
தொடர்ச்சியாக மன அழுத்தங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் உட்படுபவர்களுக் கும் தலைச்சுற்று ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு. குறிப்பாக நீண்ட நாட்களாக மனோவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இது ஏற்படுகின்றது.
இவற்றைத் தவிர அதிகமாக வேலை செய்து களைப்படைந்த பின்னர் இரவிலோ அல்லது அதிகாலையிலோ குளிரான நீரில் குளிப்ப தானாலும் இந்த நிலைமை ஏற்படலாம். இவ்
- ஸ்ட்-2011
ஆகஸ்ட்-20

Page 39
விதம் குளித்து விட்டு நித்திரை செய்து எழும் பும் போது அவர்களுக்கு தலைசுற்று ஏற்படும். வயது முதிர்ந்தவர்களிலேயே இந்த நிலைமை ஏற்படுகின்றது.
சிலவகை ஆகாரம் உண்ட பின்னரும் தலைச்சுற்றல் எற்படலாம். அச்சாறு, பால்ச்
சோறு, விலாம்பழச்சாறு உண்ட பின்னர் தயிர், இளநீர் போன்றவற்றை அருந்திய பின்னர் சிலருக்கு தலைச்சுற்று ஏற்படலாம். சில பொழுதுகளில் இத்தகைய தலைச்சுற்று சில கணங்களில் நின்றுவிடும். ஆனால் சிலருக்கு நாட் கணக்கில் நீடிக்கக் கூடும். இத்தகைய தலைச்சுற்று ஏற்படும் போது சிலர் தடுமாறி கீழே விழுந்து விடுவதுமுண்டு. சிலர் மயக்க மடைந்து விடுவார்கள்.
தலைச்சுற்று, மயக்கம் என்பவற்றுக்கான வேறுபாடு தலைச்சுற்று என்பது உத்வேகமடைந்து அது பின் மயக்கமுறுதலுக்கு இட்டுச் செல்லு
ஆகஸ்ட்-2011 .6 ܒܡ
 

கின்றது. எனவே தலைச்சுற்றலின் அடுத்த கட்டம் மயக்கம் எனலாம். தலைச்சுற்றலின் போது தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறச் சூழல் சுற்றிச் சுழல்வது போன்ற உணர்வு ஏற்படும். மயக்கம் என்பது மூர்ச்சையடைவது டன் மூச்சுப் பேச்சற்ற நிலையை அடைதலாகும். தலைச்சுற்றலுக்கான பரிகாரங்கள் -
அநேகமானவர்களுக்கு இவ்வாறு தலைச் சுற்றலும் மயக்கமும் ஏற்படுவ தைத் தொடர்ந்து தாம் இறந்துபோய் விடுவோமோ என்ற அச்சம் தோன்றி விடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் முதல் நடவடிக்கையாக கண்களை இறுக மூடிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதனால் சுற்றுப்புறச் சூழல் சுற்றுவது நமக்குத் தெரியாது. அத்துடன் பய உணர்வும் அற்றுப் போய்விடும். அடுத்த நடவடிக்கை எழுந்து எங்கும் போகாமல் அவ்விடத் திலேயே அமர்ந்திருப்பதாகும். கட்டி லிலோ அல்லது ஏதாவதுதொரு இடத் தில் அசையாமல் அப்படியே அமர்ந் திருத்தல் வேண்டும். அதே சமயம் அத்தகையவர்களுக்கு நீர் அருந்தக் கொடுக்கக்
56.LT5.
தலைச்சுற்று ஏற்பட்டால் மேலும் தலையை சிறிது 5 L அசைக்கக்கூடாது. இத்தகையவர்கள் கடலில் குளித்தல், நீச்சல் தடாகங்களில் நீந்துதல் முதலானவற்றைத் தவிர்த்தல் வேண் டும். வாகனங்கள் ஒட்டக்கூடாது. தலைச்சுற்று நிற்கும் வரை ஓரிடத்தில் அசையாதிருத்தல் வேண்டும். தொடர்ச்சியாக இத்தகைய நோய் நிலைமை நீடிப்பின் காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான விசேட மருத்துவரிடம் ஆலோ சனை பெற வேண்டும். இந்த நோய் மிக ஆபத்தானதாக இல்லாவிட்டாலும் கவனயீ னமாக செயற்படுதலால் ஆபத்தில் சென்று முடிவடையலாம். குறிப்பாக எழுந்து நடமாடப் போய் கீழே விழுந்தால் பல பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு. -எஸ்.கிறேஸ்
Mengen

Page 40
1) மூலிகையின் பெயர் - மருதாணி
2), TaIJúGLIuuli :- LAWSONIA INERMIS
3)j, IGIJiej GhLih:- LYTHRACEAE
4)வேறு பெயர்கள் - மறுதோன்றி, அழவணம், ஐவனம் மற்றும் மெகந்தி
5) தாவர அமைப்பு - மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. இலைகள் 2-4 செ.மீ நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு தாவரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வளத்திற்குத் தகுந்தாற் போல் இருக்கும். வாசனை உடையது. இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக்
குலுங்கும். இதன் விதைகள் மருத்துவ குணமிக்கது.
பூர்வீகம் : இதன் பூர்வீகம் வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு
ஆசியா மற்றும் ஆ ஸ் தி ரே லி ய |ா ந ர டு களி லு ம் பரவியுள்ளது. இ த ன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலைகளை 5 நாட்கள் நிழலில்
உலர்த்திப் பயன்படுத்துவார்கள்.
முக்கிய வேதியப்
பொருட்கள்
இலைகளில் க்ளுகொஸ், லாசோம், சாந்தோம்களும் இதன் விதைகளில் பீட்டா ஐநோனோன் போன்ற வேதியப் பொருட்களும் உள்ளன.
பயன்படும் பாகங்கள்
இலை, பூ, காய், வேர் மற்றும் விதை.
மருத்துவப் பயன்கள்
மருதாணி இலை சிறந்ததொரு கிருமி நாசினியாகும். கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றும் சிறப்பு மருந்து. - மேகநோய்
பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு, 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகியவற்றை அரைத்து ஒவ்வொரு நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோயும் அதனால் ஏற்படும் கிரந்திப் புண், அரிப்பு ஆகியனவும் குணமாகும். தொடர்ந்து 10 - 20 நாள் அருந்த வேண்டும்.
தோல் நோய்
மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை சோற்றுடன் இரவு ஊறப் போட்டு காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள்
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகிய வற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3 - 5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப் பற்றிடலாம்.
இ9 ஆகஸ்ட்-2011
'

Page 41
(plg. SA INSTITUT முடி வளர்க்கவும் இளநரையை அகற்றவும் மருதாணி பயன்படுகிறது. பாத்திரத்தில் தேங் காய் எண்ணெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்க வும். இலையின் சாறு எண்ணெயில் சேர்ந்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திற்காக 10 கிராம் சந்தணத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்தத் தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும். நரைமாறும்.
உறக்கமின்மை தூக்கமின்மைக்கு மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.
கால் ஆணி இதன் வேர்ப் பட்டையை அரைத்துப்
பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.
- சுபாஷினி
ஆகஸ்ட்-2011
 

வேப்பிலை, மா இலை, மிளகு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வெந்நீர் அருந்தினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து உண்டு வர விரைவில் பலன்
"யோவ் எதிர்கட்சித்
என்னை அரை லூஸுன்னு சொல்லி
டுச்சி தலைவா!'

Page 42
坠马飞
மனிதனின் தோற்றத்தில் முகம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றதை யாவரும் அறிவர் தமது முகம் பளபளப்பாகவும் வசீகர மாகவும் இருக்க வேண்டும் என்பதில் யாருக் குத் தான் விருப்பம் இருக்காது. எல்லோருமே தமது முகம் பிறரைக் கவர வேண்டும் என் பதில் முனைப்புடன் விரும்புவர். எனினும் இளம் வயதினரிடையே முகம் பற்றி மும்மர மான அக்கறை சற்று அதிகம் தான். அதிலும் பெண்களைப் பற்றி சொல்ல வேண்டிய தில்லை. உங்கள் முகம் பளபளப்பாக பளிச் சிட வேண்டுமா? இனி கவலையை விடுங் கள். பின்வரும் இயற்கை மருத்துவ குறிப்புக் களை பின்பற்றுங்கள்.
தினமும் அதிகாலையில் செடிகளின் மீது படர்ந்திருக்கும் பனித்துளிகளைப்
 
 
 
 
 

பஞ்சினால் ஒற்றியெடுத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாக விளங்கும்.
* இனிப்பு அதிகம் உண்ணாதீர்கள் முகத் தில் பருக்கள் வரும் இனி பருக்கள் வந்தால் பளபளப்பாகுமா? எனவே பருக்களை கிள்ளா தீர்கள். முகத்தை தண்ணிர் கொண்டு அடிக்கடி கழுவுங்கள். தோல் மிருதுவாகும்.
* கடற்சங்கை கொண்டு வந்து பசுவின் பால் விட்டு உரைத்து பருக்களின் மேல் தடவினால் ஓரிரு நாட்களில் பருக்கள் மறைந்து முகம் பொலிவடையும்.
* புருவங்களை மழித்துக் கொள்வது நல்லதல்ல. அவை தலையின் முன் பகுதியி லிருந்தும் நெற்றிப் பரப்பிலிருந்தும்
வெளியாகும் வியர்வை
கண்களுக்குள் இறங்காமல் தடுத்துப் பக்கவாட்டிலுள்ள பொட்டிற்கு திரும்பும் வடிகால்களாகும்.
ஆகஸ்ட்-2011

Page 43
கண்களைத் தூசுகள் நெருங்காதவாறு பாதுகாப்பு வழங்கும் முடியாலான வலைப் பின்னல்கள் தான் இந்த புருவங்கள்.
* காலையில் எழுந்ததும் அவரை இலைச் சாற்றை முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்துப் பின் குளித்தால் முகம் பளபளப்பாக மாறும்.
குங்குமம் இடுவதால் ஒரு சிலரின் நெற் |றியில் நிறம் மாறி கறுப்பாகப் புள்ளி தோன்று கின்றது. அதை நீக்க எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து இலேசாக அந்த இடத்தில் இரண்டு மூன்று நாட்கள் தடவினால் கறுப்புப் புள்ளி மறைந்து விடும்.
4 முகத்தில் வெள்ளைத் தேமல் இருந்தால் துளசியும் சிறிது அளவு உப்பையும் சேர்த்து அரைத்த பின் வரும் சாற்றை எடுத்து தேமல் மீது தேய்த்து வந்தால் தேமல் மறைந்து விடும்.
* முகத்தில் பருக்கள் அதிகரித்துக் கொண்டு வந்தால் சந்தனம், மிளகு, சாதிக் காய் முதலியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துத் தடவ பரு நீங்கி முகம் பளபளப்பாகும்.
மக்னீசியம் சேர்ந்துள்ள உணவு நம் உட லில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கின்றது. உடல் உற்சாகமாக இருப்பதற்கும் அழகும் நிறமும் பெற மக்னீசியம் உதவுகிறது. தசைநார்களும், தசைகளும் அறுந்து குட லிறக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. உட லில் கல்சியத்தின் அளவு அதிகரித்துவி டாமல் தடுக்கிறது. இதயம் சீரில்லா மல் துடிப்பதையும், சிறு இரத்த அணுக்களின் சேர்க்கையைத் "gristus தவிர்ப்பதற்கும் இது உத எதிர்வீட்டுக் வுகின்றது.
உயிரணுக்களில் நிகழும் பல்
பொண்டாட்டி யாரோடயோ ஒடிப்போயிட்டாளாம்"
"சரி விடு. அவனோட நல்ல மனசு எப்பவும் நல்லதே நடக்குது'
 

LS
তাতেlaouণী69 குளிப்பதற்கு முன் கடலை மா ஆவாரம் பூக்கள் இவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்கவும். இதனால் சரு மத்தில் மென்மை ஏற்படுவதுடன் சுருக்கமும் விழாது.
* தோடம்பழத்தோலை காயவைத்து தூளாக்கி கொள்ள வேண்டும். அந்த தூளில் சிறிது மோர் கலந்து பிசைந்து முகத்தில் பூசிக் கொண்டால் முகம் பளிச்சென்று நல்ல அழகு பெறும்
* முகம் எண்ணெய்ப் பசை இல்லாமல் பளிங்கு போல் பளபளப்புடன் இருக்க ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, ஒரு தேக்க ரண்டி தேன் கலந்து கண் இமை, புருவத்தில் படாமல் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். பின் பத்து நிமிடம் கழித்து சுத்தமான தண்ணிரால் இலேசாகத் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் பருவோ கரும்புள்ளியோ இல்லாமல் முகம் பளபளப்பாக இருக்கும்.
* சாதிக்காயை இடித்து இரவில் தினமும் முகத்தில் பூசி வர முகப்பருக்கள் இருந்த இடம் மறைந்து விடும்.
- ரஞ்சித்
SqqS S LSTST TST S T STSTS T ST S T S S S q TST T T T S T qqq LS வேறு வினைகளுக்கு மிகவும் அவசியம். ஆண்களுக்கு 350 மில்லிகிராம் மக்னீசியம் இருக்க வேண்டும். பெண்களுக்கு 300 மில்லிகிராம் மக்னீசியம் இருக்க வேண்

Page 44
எமது முக அழகை மெருகூட்டுவதில் பற் கள் மிக இன்றியமையாதனவாக இருக்கின்ற து. பல்லானது மனிதனுக்கும் விலங்குகளுக் கும் முக்கியமான உறுப்பாக உள்ளது. உணவை வெட்டுவதற்கும், கிழிப்பதற்கும், கெளவுவதற்கும் பற்கள் பயன்படுத்தப்படு கின்றன. பற்கள் மிகவும் இறுக்கமானதும்,பல மானதுமான உறுப்பாகும். பற்களை மூடி மறைந்திருக்கும் பகுதியை எனாமல் என்கின் றோம். இப்பகுதியானது எமதுடம்பின் மிக வைரமான பகுதியாகும். எம்மில் ஏற்படும் பல்வலி, பற்சிதைவு, முரசு கரைதல் போன்ற வியாதிகள் ஏற்படாதிருக்க பற்களைச் சுத்த மாக வைத்திருக்க வேண்டும்.
Llâd) 9 GOLDůl
எம்மிடம் நான்கு வகையான பற்கள் உள்ளன. இப்பற்கள் தாடை எலும்புடன் பொருத்தப் பட்டுள்ளன. அதாவது மேல் தாடை எலும்பில் வளர்ச்சிய டைந்த மனிதனில் 16 பற்க ளும், கீழ்த்தாடை எலும்பில் 16 பற்களுமாக மொத்தம் 32 பற்
கள் உள்ளன. அதாவது மேல்
SDSSSY SSSSSSS S
'' ->ബ
 
 

வெட்டுப்பல் நான்கும், வேட்டைப் பல் இரண்டும், முன் கடவாய்ப்பல் நான்கும், வேட்டைப்பல் இரண்டும், பின் கடவாய்ப்பல் நான்கும், கட வாய்ப்பல் ஆறும் அமைந்திருக்கின்றன. இவற்றில் வெட்டுப்பல் உணவைக் கெளவுவ தற்கும், கடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின் றன. வேட்டைப்பற்கள் சற்றுப் பெரிதாகவும், உணவைக் கிழிக்கவும் உதவுகின்றன. முன்க டவாய்ப்பற்களும் கடவாய்ப்பற்களும் உண வை நன்கு அரைக்க பயன்படுகின்றன.
pe
போன்றவை காணப்படும்.

Page 45
எலும்பின் துவாரத்தினூடாக பற்கு ழியைச் சென்றடைந்து உணவு பரி மாற்றம், வாயுப்பரிமாற்றம் போன்ற வற்றையும் அங்குள்ள நரம்புகள் அமுக்கம், வெப்பம், குளிர், நோ போன்றவற்றையும் உணர்கின்றன.
ISOTILDâÒ பற்களின் மேல் ஒரு வெள்ளைப் படலமாக இருப்பதையே எனாமல் என்கிறோம். L6) 6T6T'LT3: இருப்பதற்கு இதுவே முதற் காரண மாகும். எனாமல் உதிர்ந்தால் பற் கூச்சம் உருவாகி பழுதடைந்து விடும். அதனுடன் துர்நாற்றம் வீசு வதுடன் கிருமிகள் பரவக்கூடிய
நிலையை தோற்றுவிக்கும்.
குறிப்பு பல் வளரவும், இறுக்கமாக இருக்கவும், நீண்டகாலம் நின்று பிடிப்பதற்கும் சத்துக்கள் அவசியமாகின்றன. மற்றும் காரணமின்றித் தோன்றும் தோல் நோய்களுக்கும் பல்லுக்கும் தொடர்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. சிலவேளைகளில் பற்களை அகற்றினால் சில தோல் நோய்கள் அகன்றுவிடுவதுண்டு.
பற்களைப் பாதுகாக்க SISi GO GJILIGOTh? * பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்ப டும் போதே பல் மருத்துவரை அணுகி பல்லை அடைத்துக் கொள்வது நல்லது. * பல் சொத்தை, பல் கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை மூலம் பற்
களைப் பாதுகாக்கலாம்.
 
 
 

* வாயில் ஏற்படும் புண், கட்டி, அழற்சி போன்றவற்றை உடனடியாக பல் மருத்து வரை அணுகி உடனடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
* தினமும் ஆகக்குறைந்தது இரண்டு முறை
பல் துலக்க வேண்டும்.
* ஆறு வயதிற்கு மேற்பட்டவர்கள் குறைந் தது 6 மாதத்திற்கு ஒரு தடவை பல் மருத்து வரை நாடி ஆலோசனைப் பெற்றுக் கொள் வது நல்லது.
தொகுப்பு: மு. தவப்பிரியா
"பேய்னா சாதாரணமா பாழடைஞ்ச பங்களால தானே இருக்கும்? இந்த பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?
'இது ஏழைப் பேயாம்?
ܦܬܐ ܐ ܠ

Page 46
தாமதித்து பேசு இா குழந்தை
அத்தியாயம் டு
Verbal and Nonverbal Communications ஒடிசம் குழந்தைகளின் பேச்சுத் திறன் மிக வும் குறைவாகவே காணப்படும். கூடுதலான 96T60636t பேச்சு இல்லாது ஊமை போன்றே காணப்படுவர். இவர்கள் கதைப்ப தற்கு முயற்சி எடுக்க மாட்டார்கள். அதாவது ஒரு சாதாரண குழந்தையை எடுத்துக் கொண் டால் அவர்கள் முதலில் ஏதாவது சத்தங்களை உருவாக்கி சிறிது சிறிதாக சொற்களை சொல் வதற்கு எத்தணிப்பார்கள்.
ஆனால் ஓடிசம் குழந்தைகள் அவ்வாறு சத்தங்களை உருவாக்கி பேசுவதற்கு எத்த ணிக்கவே மாட்டார்கள். சில ஒடிசம் குழந்தை களில் பேச்சு ஆற்றல் சாதாரண குழந் தைகளை போன்றே உருவாகி சில மாதங்க ளின் பின் திடீர் என்று அந்த பேசும் ஆற்றல் 36)6Ong Guité66TDs). (Speech Lost) 9(35 நேரம் வேறு சில ஒடிசம் குழந்தைகளை எடுத்துக்கொண்டால் அவர்களிடம் பேசும்
கை
 

ஆற்றல் காணப்ப டும். ஆனால் அவர் கள் பேசுவது யாருக் குமே விளங்காது. அதாவது அவர்கள் தங்களுக்கு என்றே
8905 விதமான
பாசையை உருவாக்
கிப் பேசுவார்கள். சில
W வேளைகளில் தனி
Di antai ouglas இருந்து
Channa
OSMOAusmete கதைத்து கொண்டு
இருப்பார்கள். கூடுதலான ஒடிசம் குழந்தைகள் மிகவும் தாமதமாக பேச ஆரம்பிப்பார்கள். அவ்வாறு பேசும் போதும் இவர்களால் கிரகித்து பேச (ԼՔԼԳեւ III5 தன்மை காணப்படும். வசனங்களை உருவாக்கி தொடர்ந்து பேச முடி யாத தன்மை காணப்படும்.
இவர்கள் காதுக்கு கேட்கும் சொற்களை அல்லது வசனங்களை திரும்ப சொல்வார்கள் (Echolalia) உதாரணமாக ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாது கேட்ட கேள்வியையே திரும்பச் சொல்வார்கள். அல் லது நாம் ஏதாவது சொன்னால் இவர்களும் அதை திரும்ப (Repeat) சொல்வார்கள். Echolalia இரண்டு வகையில் குறிப்பிடலாம்.
Immediate Echolalia யாராவது இவர்களிற்கு ஏதாவது கூறினால்
ஆகஸ்ட்-2011

Page 47
அதனை உடனடியாக திரும்ப சொல்லுதல். உதாரணமாக காலையில் என்ன சாப்பிட்டீர் கள் என்று கேட்டால், இவர்கள் அதற்கு பதில் சொல்லாது உடனடியாக காலையில் என்ன சாப்பிட்டீர்கள்? என்று சொல்வார்கள். அதே போன்று 'தம்பி மேசை மேல் புத்தகம் இருக் கிறது”என்று சொன்னால் இவர்களும் அதை ன திரும்பச் சொல்வார்கள்.
Delayed Echolalia இன்று சொன்ன விடயத்தை திரும்ப மறு நாள் அல்லது சில நாட்களாக திரும்பத் திரும்ப சொல்லி கொண்டே இருப்பார்கள். (Stereotyped and Repetitive use of of Language.)
உதாரணமாக தம்பி மேசை மேல் புத்த கம் இருக்கிறது என்ற வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லி கொண்டே இருப்பார்கள்.
ஒடிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு விடயத்தை கூறும் போது அதை புரிந்து கொள்ளும் தன்மை மிகவும் குறைவாகவே கா ணப்படும். அதே நேரம் மற்றவர்கள் கதைத்து கொண்டு இருக்கும் போது அதை பொறுமையாக பார்த்துக் கொண்டு இருக்க வோ புரிந்து கொள்ளவோ / LDIL'LTİ56T.
இவர்கள் ஏதோ ஒரு உலகத்தில் தங்களை தாங் 36it gT600TGib (Self stimulation) செயற்பாடுகளில்
„ergrዮጸኽኽ
ஆகஸ்ட்-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈடுபடுவர் அல்லது கதைத்து கொண்டு இருப்பவர்களை குழப்ப முற்படுவர்.
தங்களை தூண்டும் செயற்பாடு என்று சொல்லும் போது உதாரணமாக இப்பிள்ளை கள் துள்ளிக் கொண்டு இருப்பார்கள். பிள்ளை கள் துள்ளுவது வழமை.
ஆனால் சாதாரண பிள்ளை ஒன்றை எடுத்தால் சிறுது நேரம் விளையாட்டிற்கு துள்ளி விட்டு நிறுத்தி விடுவார்கள். ஆனால் ஒடிசம் பிள்ளைகள் அர்த்தம் இல்லாது தொடர்ந்து துள்ளி மகிழ்வார்கள். இவ்வாறு பல விதமான Self Stimulation செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
ஒடிசம் பிள்ளைகள் கை பாசையையே கூடுதலாக மேற்கொள்வர். இவர்களிற்கு
ஏதாவது பொருள் தேவை
வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றால்

Page 48
கையை காட்டி அதனை சொல்ல முற்படுவர்.
உதாரணமாக இவர்களிற்கு தண்ணிர் குடிக்க வேண்டும் என்று கேட்காது தாயின் கையை அல்லது அந்த இடத்தில் இருப்பவர் களின் கையை பிடித்து சென்று காண்பிப்பார் கள். ஆனால் சில வேளைகளில் தண்ணீர் உடன் வேறு பொருட்களும் இருக்குமாயின் இவர்கள் காண்பிப்பதை புரிந்து கொள்வது மிகவும் கஸ்டமாக இருக்கும்.பெற்றோர் இந்த இடத்தில் மிகவும் வேதனைக்கு உள்ளாகின் றனர். தனது பிள்ளை பசி வந்தால் பசிக்குது என்று கூட கூறுகிறார் இல்லை என்று மன வேதனைப்படுகின்றார்கள்.
மேலும் இப் பிள்ளைகள் மலசலம் வந்தால் கூட கூற முடியாத நிலைமை காணப்படுகின் றது. கூடுதலான பெற்றோர் இப்பிள்ளைக ளிற்கு பம்பேஸ் பயன்படுத்துவதை பழக்கத் தில் கொண்டுள்ளார்கள். ஆனால் இப் பிள்ளைகளிற்கு தகுந்த பயிற்சிகளை வழங்கு வதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகள் நாளடைவில் இல்லாது போகக் சாத்தி
 

யக் கூறுகள் உண்டு.
ஒடிசம் பிள்ளைகள் தாங்கள் நினைப்பதை கூற முடியாததன் காரணத்தினால் கூடுதலாக கோபப்படுவார்கள். கோபம் வரும் போது பல விதமான செயற்பாடுகளில் ஈடுபடுவர். உதார ணமாக மற்றவர்களுக்கு அடித்தல், பொருட் களை எடுத்து வீசுதல், மிகவும் பெரிய சத்த மாக கத்துதல் போன்றன காணப்படும். இங்கு முக்கியமான விடயம் சாதாரண பிள்ளைக ளிற்கும் கோபம் வந்தால் இவ்வாறான செயற் பாடுகளில் ஈடுபடுவர். ஆனால் சிறுது நேரத் தில் அதனை மறந்து சாதாரண நிலைமைக்கு திரும்புவர். ஆனால் ஓடிசம் பிள்ளைகள் அவ் வாறு இல்லை.
ஆனால் சில ஒடிசம் பிள்ளைகள் கோபம் வரும் போது தங்களை தாங்களை தாக்குவார் கள் (Self injured) உதாரணமாக தங்கள் கைக ளை கடித்தல், தலையை நிலத்தில் அடித்தல் அல்லது சுவரில் இடித்தல், தாங்களே துள்ளு தல் அடித்தல் போன்றன காணப்படும்.
இவர்களிடம் மிகவும் பிடிவாதம் காணப்ப டும். ஏதாவது ஒன்று தேவை என்றால் நிச்சய மாக அதை வேண்டிக் கொடுத்தே ஆக வேண் டும். அதே போன்று உதாரணத்திற்கு இன்று மாலை Parkஇற்கு விளையாட செல்வோம் என்று சொன்னால் நிச்சயமாக போயே ஆக வேண்டும். தற்செயலாக போக முடியாது போனால் வீடு இரண்டாகி விடும்.
(தொடரும்.)
கஸ்ட்-2011

Page 49
இது வெப்பமான காலமல்லவா? தென் ே வப் பெயர்ச்சிக் காற்று முறையாக இம்முறை தால் வழமையான மழைக் காலத்திற்கு பதில் இப்பொழுது உஷ்ணம் மிகுந்த காலநிை பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது ! னால் பலர் நீர்க்கடுப்பு போன்ற உபாதைகளு ஆளாகலாம்.
இந்த நீர்க்கடுப்பு நீங்க சில எளிமையான மருத்துவ முறைகள் உள்ளன.
*நீர்க்கடுப்பு உள்ளவர்கள், ஒரு களிப்பாக் வெற்றிலையோடு சேர்த்து இடித்து வாயி போட்டு அடக்கிக் கொண்டால் நீர்க்கடுப்பு நி கும்.
* புளியம் பூ, மிளகாய் வற்றல் (ஒன்று) சிற உப்பு இவை மூன்றையும் அரைத்துத் துளை செய்து அதில் நெய் ஊற்றிச் சாப்பிட்டால் நீர்ச் உடனடியாக குணமாகும்.
*சாம்பல், கத்தரி இலைச்சாற்றுடன் தேன் டால் நீர்க்கடுப்பு குணமாகும்.
*வாழைத்தண்டுச் சாறு எடுத்து அதை ம இட்டு சூடாக்கி குடித்தால் நீர்க்கடுப்பு இரண் ளில் மறைந்து போய்விடும்.
しり●) ●
 

*கறந்த பசும் பாலுடன் துளசிச் சாற்றை (20 மி.லி) கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு உட னே நிற்கும்.
மேற்குறித்த சித்த மருத்துவங்கள் நீர்க் கடுப்பு சற்று அதிகமாக இருந்தால் மாத்தி ரமே மேற்கொள்ள வேண்டியவைகள் சாதார ணமாக நீர்க்கடுப்பு ஏற்பட்டவுடன் சுத்தமான நீரை அதிகளவு குடிப்பதன் மூலமே கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்து விடலாம். அத்துடன் செவ்விளநீரைக் குடிப்பதும் நீர்க்க டுப்பு சுகமடைய உதவும். இதற்கும் குணமா கா விட்டால் மேற்குறிப்பிட்டுள்ள சித்த மருத் துவ முறைகளை கையாளலாம்.
- ஜெயகர்
9) ஆகஸ்ட்-2011

Page 50
வேகமாகச் செயல்படும் இன்றைய உல கில் வேலை வேலை என பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கும் இன்றைய மக்கள்
DUID, 2D C - - 6)IՓյID ՑԵԼ
எதனை சாப்பிடுகின்றோம்? எப்படி சாப்பிடு கிறோம்? என்றெல்லாம் சிந்திக்காமல் அவசர அவசரமாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமல்ல பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் இதே போல் தான் நடந்து கொள்கின்றனர்.
இவர்களில் சிலர் உணவுக்குப் பதிலாக வெறும் நொறுக்குத்தீனியை உண்டே பசி யைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பெக் கட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் ச்சிப்ஸ் லேஸ் போன்றவற்றைத் தான் அதிகம் உண்கி றார்கள். அடுத்து பிட்ஸா பெர்கர் இவை அடுத்த கட்டத்தில் உள்ளவர்களின் உணவு.
இவ்வாறான உணவை உண்பதை பழக்க மாகக் கொண்டவர்கள் தங்களுக்குத் தெரியா மலே நோயை விலை கொடுத்து வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்பதே
ܬܐ->
ܢ
 
 

அதிர்ச்சியான உண்மையாகும் என இந்திய உணவுப் பாதுகாப்பு நிபுணர் பசுபதி ஆதாரபூர்வமாக விளக்கமளிக்கின்றார்.
இத்தகைய உடனடி உணவு வகைகள் கெட்டுப் போகாமலும் ருசியாகவும் இருக்க கலக்கப்படும் பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்று நோயை வரவழைக்கக்கூடியது. இது போன்ற உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர் நிலையில் மைனஸ் 18 பாகை முதல் 22 பாகை வரை வைக்க வேண்டும். ஆனால்
இதை எப்பொழுதும் அவ்வாறு வைக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்காது.
இது போன்ற நேரங்களில் இத்தகைய உணவுகளில் நீர்க்குமிழிகள் தோன்றும். இது உணவுப் பொருளின் மீது படிந்து கெட்டித் தன்மையை ஏற்படுத்தி விடும். உதாரணமாக
C)
ஆகஸ்ட்-2011

Page 51
கடலை பெக்கட் ஒன்றை வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பெக் கட் அப்படி ஆடாமல் மொத்தமாக ஆடும். அது கெட்டுப் போன நிலையில் உள்ள பக்கெட் என்பதை கண்டுபிடிக்க உதவும். நொறுக்குத்தீனியிலுள்ள ஆபத்துக்கள்
அதேபோல் ஃப்ரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் தூள்கள் நம் உடலுக்கு தீமை விளை விக்கக் கூடியவை. இந்த வண்ணக் கலவை யை ஏற்று சமிபாடடையவைக்கும் சக்தி நம் குருதிக்கு கிடையாது. ള്ള8 சிறுநீரகமும் இதைச் சுத்திகரிக்காது.
ஒரு நொறுக்குத் தீனி பெக்கட்டில் எந் தளவு கெமிக்கல் கலந்து தயாரிக்க  ேவ ண் டு |ே ம |ா அந்தளவு குறைவான (100கிராம்) அள6 தான் கலப்பார்கள். ஆனால் இதை உண்ணும் 69(U) குழந்தை தனக்கு ருசி பட்டுவிட்டால் அடிக்கடியோ அதிகமாகவோ உண்ண வாய்ப்புண்டு. அவ்வாறு அக்குழந்தை அதிகமாக உண்டால் அதன் நிலை என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பதில்லை.
குழந்தைகள் மாத்திரமல்ல பெரியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உண்ணக் கூடாது. ஆனால் இதனை நொறுக்குதீன் உண்ணும் எவரும் சிந்திப்பதில்லை. ஏனெனில் அநேகருக்கு இதிலுள்ள தீங்குகள் பற்றி தெளிவு போதுமானதாக இல்லாததே காரணமாகும்.
உருளைக் கிழங்கும் வெங்காயமும் வேகவைத்த உருளைக்கிழங்கையும் நறுக் கிய வெங்காயத்தையும் சில கடைகளில் அப் படியே தட்டுக்களில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண்கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமாக
 
 
 
 
 
 
 
 

இருக்கும். பக்கத்தில் ஒருவர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே உருளைக் கிழங்கும் வெங்காயமும் ஈர்த்து விடும். எவ்வளவு ஆபத்து பார்த்தீர்களா?
பெரும்பாலான ஷோட்ஈட்ஸ், பிஸ்கட் பர் கர், பிட்ஸா இவையெல்லாம் மேலைத்தேய நாகரீகத்திலிருந்து நாம் உள்வாங்கியவை. ஆனால் அங்கேயுள்ள வெப்பநிலைக்கும் கலக்கின்ற பொருட்களுக்கும் இங்கேயுள்ள நமது சுவாத்தியத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
නූ - 6Gir ෙග ගu ඵ් சூடாக்குதல்
69 (5 பொருளின் தன்மைக்கு அதிகமாக சூடாக்கக் ஒன்றரை
15O பாகையில் சூடாக்கும் போது ஏற்படும் உயிர் இரசாயனவியல் மாற்றம் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்து கின்றது. இந்த மாற் றத்தை போலி அக்ரலை மைட் (f) போர்மேசன் என உலக விஞ்ஞானி களே ஏற்றுக் கொள்கின்றனர்.
உணவு உண்ணும் விதிமுறை
பிட்ஸா, பர்கர், பிராஞ்ச் ப்ரைஸ், உருளைக்
கிழங்கு சிப்ஸ், ஏனைய சிப்ஸ், எண்ணெயில் தயாரித்த ஒயில் ப்ரயிட் சிக்கன், ஐஸ்கிறீம், பெப்சி கொக்காகோலா இவை அனைத்துமே நொறுக்குத் தீன்கள் தான். இன்றைய இளைய தலைமுறையினரின் பாதி நேர உணவே இது தான்.
ஒவ்வொரு உணவும் இப்படித்தான் உண்ண வேண்டும் என்ற விதிமுறை இருக் கிறது. முழுக் கோதுமையை அரைத்து உண் பதுதான் நல்லது. இல்லாவிட்டால் அது நம் உடலுக்கு சக்தியை கொடுக்காமல் சமிபாட டைவதற்காக நம் உடலில் இருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும். சீனியும் அப்படித்தான். நிலத்தில் பயிர்ச்செய்கையின் போது உரம் போடாமல் வளர்க்கிற ஒர்கானிக் உணவுதான்
50

Page 52
நல்லது. ஒரு முறை உண்ணும்போது நம்
கட்டுப்படுத்தலாம். இந்த கலோரி அளவு சரியாகக் கிடைக்க சமைக்கும் போது உண
வில் சேர்க்கும் பொருட்களும் காய்கறி வகை
நெருங்காது.
இலைபோட்டு பரிமாறும் கலாசாரம் í
உணவு உண்பது நாம் உள்வாங்கிய காபோ வைதரேட்டை எரிப்பதற்காக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என்பவற்றை கண்டிப்பாக மேற் கொள்ள வேண்டும். 慈 இலை போட்டு உணவு பரிமாறும் கலா சாரம் வந்ததே சத்தான உணவும் சரியான உடற்பயிற்சியும் கிடைக்கத்தான். அதாவது காய்கறி, பருப்பு, உப்பு, புளிப்பு, இனிப்பு எல் லாமே சம அளவில் நமது உடலுக்கு கிடைக்கும்படி செய்யத்தான் நம் முன்னோர் கள் தலைவாழை இலையில் விருந்து வைக் கிற பழக்கத்தைக் கொண்டு வந்தார்கள்.
பாதிப்புக்கள் பலவிதம் மேற்குறித்தவற்றை 6T6)6OTf மீறி தொடர்ந்து நொறுக்குத் தீன் பழக்கம் உள்ளவர் கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். ஒவ்வொருவரு டைய உடலமைப்பு, குடல் இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை அதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவாக சமிபாடடைய பித்தநீர், கணைய நீர் என்பன
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவை. இது குறைந் தால் சமிபாடு நிக ழாது. இவை எல்லாம் " நாம் உண்ணும் உணவைப் பொறுத்துத்தான் சரியாக இருக்கும். இல்லை என்றால் அஜீர ணம், வாய்வு நெஞ்சு எரிச்சல், அல்சர் அதிக பட்சமாக புற்றுநோய்கூட வர வாய்ப்பிருக் கின்றது. அதுவும் தந்தூரி எனும் உணவு வகை யை அதிகம் உண்பவர்களுக்கு இந்த வாய்ப்பு மிகமிக அதிகம். நேரடியாக தீயில் சுட்டு உண்பதே இதற்குக் காரணமாகும். எனவே இத்தகைய உணவை தவிர்த்து ஆரோக்கியம் தரும் நல்ல உணவு வகைகளை தேர்ந் தெடுத்து உண்ணுங்கள்.
-இரஞ்சித் ஜெயகர்
"ஏன்டி, கோவிலுக்கு போய் வந்துட்டு கோவமா இருக்க?"
"என் கணவர் நான் கோவிலுக்கு போனத சாமிக்கிட்ட போயிட்டதா
இருக்கார்டி'
ஆகஸ்ட்-2011

Page 53
ஒருவருக்கு விக்கல் வந் தால் அவரை யாரோ நினைப் பதாகக் கூறுவர். வேறு சிலர் - சற்று அதிகமாகவே திருட்டுத் தனமாக ஏதோ உண்டதால் தான் .6 يهمهم ஏற்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டுவர். ஆனால் இக் கருத்துக்கள் இரண்டுமே ஆதார மற்றவை. விக்கல் என்பது உடலில் ஏற்படும் ஓர் அனிச்சைச் செயலாகும். இச்செயலால் உடல் பாதுகாக்கப்படுகிறது.
மார்புக்கும் இரப்பைக்குமிடையில் மார்பு வயிற்றிடை மென்தகடு அமைந்துள்ளது. இதனை உதரவிதானம் (Diaphragm) என்றும் அழைப்பர். நாம் காற்றை உள்ளே சுவாசிக்கும் போது மார்பு வயிற்றிடை மென்தகடு கீழே அழுத்தப்படுகிறது. இதனால் இரைப்பை அழுத்தப்படுகிறது. இச்செயலால் நுரையீரல் களில் காற்று நிரம்புகின்றது. அதேபோல் வெளிச்சுவாசத்தின் போது மார்பு வயிற்றிடை மென்தகடு மேலே செல்வதால் காற்று நுரை யீரல்களில் இருந்து வெளியே செல்கின்றது. மார்பு வயிற்றிடை மென்தகடு மேலும் கீழும்
リ
 
 

செல்வதால் சுவாசம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெறுகிறது. இங்கு மார்பு வயிற்றிடை மென்தகடு பிஸ்டன் (Piston) போல் செயல்படுகிறது. சில சமயம் இரைப் பையில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் மார்பு வயிற்றிடை மென்றகட்டின் வயிற்றிடை மென்தகட்டின் செயலில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மார்பு வயிற்றிடை
நுரையீரல்களில் ஒருவித சத்தம் ஏற்படுகிறது. இதுவே விதிவிலக்காக வெளியேறுகிறது. இச்செயலால் உடலுக்கு தேவையற்ற வாயுவை அல்லது தீங்கு தரும் உணவுப் பொருட்களை இரைப்பையிலிருந்து வெளி யேற்றுகின்றது. ) இந்நிலையிலும் சுவாசம் தடை யின்றி ஒழுங் காக நடைபெறு கின்றது.
éle) 3-LDunál 3.
பருவது ஏன்?
ளில் போதைப் பொருட்களாலும் மார்பிடை மென்தகட்டில் கட்டிகள் (Tumour) தோன்றுவதாலும் மார்பு வயிற்றிடை மென்த கடு சுருங்குகின்றது. இதனாலும் விக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
அதே சமயம் சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் நோய்கள், மூளைக்காய்ச்சல், நீரிழிவு நோய், குடல் அடைப்பு போன்றவற்றின் அறி குறியாகவும் விக்கல் வரலாம் என்பது குறிப் பிடத்தக்கது.
இதற்கு (!pഞpu][ഞ് மருந்துவ ஆலோசனை பெறவேண்டும். பெரும்பாலான
விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் மறைந்தும் போகின்றன.
இவ்விக்கல் சில நிமிடங்களுக்கு மேல்
ஆகஸ்ட்-2011

Page 54
ருவர் விக்கக் குறைந்தளவு நேரம் மட் டும் நீடிக்கும் அத்தகைய விக் கள்களிற்கு எவ்வித மருந்து களும் தேவைப்படாது.
Gl556 சாதாரண பிரச்சினையென்று நாம் கருதி னாலும் 85__ அதுவே பாதிக்கப்பட்டவருக்கு பெரும் சிரமத்தையும் மன உளைச் சளையும் மற்றவர் மத்தியில் 96). ILDIT60T உணர்வையம் ஏற்படுத்தலாம். அவ்வாறான நிலையில் சில முதலுதவிகள் அளிக்க முடியும்.
விக்கலை நிறுத்த வழி
66
விக்கலை நிறுத்த பல நல்ல வழிகள் உள்ளன. ஒரு கிளாஸ் குளிர்ந்த நீரைக் குடித்தால் அது மார்பு வயிற்றிடை மென்தகட்டில் ஏற்படும் ஒழுங்கற்ற செயலை நிறுத்துவதுடன் உதரவிதானத்தை பழைய நிலைக்கு கொண்டு வருகின்றது. மூச்சை சற்று அடக்குவதாலும் விக்கலை நிறுத்தலாம். மற்றும் சுத்தமான பொலித்தீன் அல்லது கடதாசியை எடுத்து அதற்குள் முகத்தை புதைத்து சற்று நேரம் தொடர்ந்து அதனுள்ளே
 
 
 
 
 
 

சுவாசிப்பது, அதாவது சுவாசிக்கும் காற்றை
வெளியே விடாது அதனையே திரும்ப திரும்ப சற்று நேரம் சுவாசிக்க விக்கல் நின்று விடும். அதிர்ச்சி ஏற்படும் விடயத்தை கேட்டால் விக்கல் நிக்கலாம். இவை எல்லாம் காலம் காலமாக விக்கலை நிறுத்த பயன்படும் உத்திகளாகும். இவற்றில் எது எவருக்கு பயன் அளிக்கின்றதோ அதை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக விக்கலை நிறுத்து வதற்காக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் அளவிற்கு அதிர்ச்சியான விட யத்தை சொல்லக்கூடாது. விக் கல் அதிக நேரம் தொடர்ந்து வந் தால் மருத்துவரை அணுகுவது று. விக்கல் நிற்பதாகவே இல்லை என்றால் மார்பு வயிற் றிடை மென்தகட்டைச் சுற்றி யுள்ள பகுதியில் ஊசியின் மூல மாக மருந்தைச் செலுத்தி அதை மருத்துவர் செயலிழக்க வைப்ப தும் உண்டு. 憩
-ஜெயா

Page 55
இடமிருந்து வலம் 1. இவனுக்கு புல்லும் ஆயுதமென்பார்கள். 3. பெண்களின் இதனை கொடிக்கு
ஒப்பிடுவர் கவிஞர். 4. வித்தையை கற்பிப்பவர். 5. குழந்தைகளுக்கு இது கேட்க மிகவும்
பிடிக்கும். (திரும்பியுள்ளது) 7. இதன் சொல் பலன் உண்டு என்று
நம்புகின்றார்கள். 10.யானை வரும் பின்னே. இதன் ஓசை வரும் முன்னே. 11. பாலில் இருந்து தயாரிக்கப்படுவது. 12.இது செய்தால் தண்டனை கிடைக்கும். 13. பாம்பும் இங்கு வாழும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல் 3 விடைகள்
அடை
III
வெல்லும் அதிர்ஷ்டசாலி
ஏ.எம்.ஏ.முபீ(f)டா, அக்குரன.
வெல்லும் அதிர்ஷ்டசாலி வனுஜா தர்மலிங்கம், மட்டக்களப்பு.
வெல்லும் அதிர்ஷ்டசாலி ஆர்.சுரேஷ் கண்ணா, கொட்டகல.
ANGagi 1) விக்டோரியா ஜெயராஜ், வத்தளை. 2) எஸ்.எச்.எப்.மண்மீனா ரவுதீட், அக்குரன. 3) சிவசுப்பிரமணியம், மன்னம்பிட்டிய. 4) ஐ.நிலாமுகி, வவுனியா, 5) பஸிலா ரஹ்மான், நாவலப்பிட்டி 6) ஐ.செபஸ்டியன், மட்டக்களப்பு. 7) ஆர்.ஆறுமுகம், லுணுவில. 8) எம்.பீ.முகைoன், பெரியநீலாவணை. 9) கவிதா, யாழ்ப்பாணம். 10) எம்.ஏ.எம்.சலீம், வெலிகம.
麟 -鬱寡
կ##ԳԱԱիիիիիիիիիի :
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GUI q. 66). AO
7.
8.
9
மேலிருந்து கீழ் முதலுக்கு இலாபமாகக் கிடைப்பது. பெண் என்றும் சொல்லலாம். சளி பிடித்தால் இது வருவதுண்டு. அன்னை போன்று இவரும் அன்பு காட்டுபவர்தான். பெண்களின் நாற்குணங்களில் ஒன்று. மருத்துவ குணமிக்க கனியொன்று. (தலைகீழாக இருக்கிறது) சொத்து என்றும் சொல்லலாம்.
10.ஒன்றும் புரியாதவர் என்று குறிப்பிட
இப்படிக் கூறுவர்.
pais 18.08.2011
சரியான விடைகளை எழுதியவர்களில்
அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த
இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி
தபால் அட்டையில் அனுப்பவும்)
O
Tகுறுக்கெழுத்துப் ப்ோட்டி இல் 40,T சுகவாழ்வு, Virakesari Branch Office,
12-1/1, St.Sebastian Mawatha, Wattala.

Page 56
பெட்ரோல் பங்குக்கு 100 மீற்றர் சுற் றளவில் உள்ள வீடுகளில் வசிப்பவர்க ளுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் அதி கம் இருப்பதாக ஸ்பெயின்நாட்டு ஆராய்ச் சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட் ரோல் பங்குகளில் எரிபொருள்களில் இருந்து வெளியாகும் நச்சுப்பொருள் காற் றில் கலப்பதாகவும், அதை சுவாசிப்பவர்க
வரிக்கும் ர
ளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற் படுவதாகவும் இந்த ஆய்வை நடத்திய முர்சியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டார்டா மோஷல் என்பவர் தெரிவித் துள்ளார்.
புற்றுநோய் உண்டாக்கும் பென்சீன் என்ற இரசாயனப் பொருளின் படிமங்கள் பெட்ரோல் பங்குகளில் அதிகம் காணப்
குறுக்கெழுத்துபோட்டியில்
the ଅଷ୍ଟ୍ରିry #####ୋ;
- அத்துடன் இத்தேழுக்கு ஆக்கங்கள் செய்திகள் டன்கள் முதலானவற்றை எமக்கு எழுதியணு
No. 12 - 11, St., Sebastiyan Mawatha, V Fax - Ol 1537.5944, E-mail : si
*ଜ୍ଞାon R 6
 
 
 
 
 
 
 

படுவதாக அவர் கண்டுபிடித்துள்ளார். அதனால் வீடுகளை பெட்ரோல் பங்கில் இருந்து குறைந்தபட்சம் 50 மீற்றர் தூரத்தி லும் மருத்துவமனைகள், குப்பைக் கிடங் குகள் போன்ற நோய்க்கு எளிதில் இலக் காக்கக் கூடிய இடங்களை 100 மீற்றர் தூர த்திலும் அமைக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
()
ாழ்வு சஞ்சிகை iLITGOT e Tërësoit
* (essے صحیspچے تھے حیح> a ح> a 10 பொருத்தலான உங்கள் ് ( TOTTTO O O L u O OO u uTT u kOks OO ku TO
ப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
LLLLLL LLL LLLLtttSS S S L S 000S S 00 0 0 E 0S00SSS 0 0 0 S 0 00 00000S kL k kC L C S LS CCCC C LC C t YY LLL LLL t tkttCCktCl YYSLLLS
au-2011
կիիիիիիիիիիիիիիիիիի

Page 57
శ్యా
* శ్యా
畿 豪
畿 *్యతి
ܢܨܲܠܸܐ. �)
ஆகஸ்ட்-2011
தேவையான பொருட்கள் :
பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு கடலைப் பருப்பு - 100 கிராம் போஞ்சி - 100 கிராம்
கரட் - 100 கிராம்
பூண்டு - 4 பல் மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி இன்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6 சீரகம், சோம்புத்தூள் - அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு கறிவேபில்லை தேவையான அளவு
தேவையாயின் ஒரு சிறிய மெகி சூப் கட்டி
 
 
 
 

தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி போஞ்சி - கரட் என்பவற்றை சாதாரணத்
துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
命 கடலை பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, சீரகம், சோம்புத்தூள் என்பவற்றையும் சேர்த்து குக்களில் வேக
வைக்கவும்.
அக்கலவையை நன்கு மசித்துக்
கொள்ளவும்.
பருப்பில் போட்டு
கீரையை ஆய்ந்து வெந்த R
**ஜி விடவும்.
பொடியாக நறுக் கிய வெங்காயம், தக்
காளி, நீளமாக கீறிய பச்சை
மிளகாய், போஞ்சி - கரட் ஆகிய வற்றை போட்டு வேகவிடவும்.
命 கொதிவரும் போது கறிவேப்பிலையை போடவும். பின் ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சூப்பில் கொட்டவும். கடைசியாக உப்பு போட்டு இறக்கவும்.
萤
リリ

Page 58
ჯაბარიტიკაზე.»...ჯვა...კრ.რ.რ. ტაჯაროჯოჯოჯაკატა’’X^ზებია:
fińရဆဲရဲချုံး၌
அது ஒரு அமைதியான வெள்ளிக்கி ழமை. மாலை நேரம் பொதுவாகவே டிஸ் பென்சரியில் சனக்கூட்டம் குறைந்த ஆர வாரமில்லாத நாள்.
அப்பொழுது ஆச்சி ஒருத்தி, பரபரப்புடன் எனது அறைக்குள் நுழைந்தாள்.
"இப்படி இருங்கோ இருங்கோ ஆச்சி', நான் சொல்ல
அவளோ இருப்பதற்கு கூட அவகாசம் இல்லாததுபோல் பொரிந்து தள்ளினாள்.
'செவ்வாய்க்கிழமை ஐயாட்டை இந்தப் பிள்ளைக்கு மருந்து எடுத்தனான். கொஞ் சம் கூடச் சுகமில்லை. அடிக்கொருத
ரம் வயித்தை முறுக்கிக் கொண்டு வயித்தா லைபோகுது. இரத்தமும் சீதமாகவும் போகு பச்சை பச்சையாகவும் போகுது. ரா ولقي . முழுக்க நாங்களும் கண் மூடவில்லை. பிள் ளையும் தூங்கயில்லை. பச்சைத் தண்ணி கூட குடியாதாம், துவண்டு போச்சுது'
எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வருடம் தொற்று நோயாகப் பரவி வரும் இந்த வயிற்றுளைவு நோய்க்கான மருந்து விஞ்ஞான பூர்வமாக கண்டறியப் பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நோயாளிக ளுக்கும் வைத்தியம் செய்யப்பட்டு வெற்றி யளித்துள்ளது. எனவே இக்குழந்தைக்கு நோய் குணமாகாதது எனக்கு வியப்பாக
இருந்தது.
 
 
 
 
 
 
 
 

தியம் எங்கே பிழைத்தது என யோசித்தேன்.
பரிசோதித்து நோயை திரும்பவும் நிச்சயப்
படுத்திக் கொண்டேன்.
பிள்ளையின் பொதுவான உடல் நிலை
யும் ஆபத்தான நிலையில் இல்லை என்ப
。 (ހ
தையும் உறுதிப்படுத்திக் கொண்டு ஆச்சியிடம் 'அண்டைக்கு தந்த மருந் திலை ஏதும் மிச்சம் கிடக்கோ? பாப்பம் என்று கேட்டேன்.
"இஞ்சார் அப்படியே கிடக்கு' என்று சொல்லி பையுக்குள் கிடந்தவற்றை எடுத்து மேசை மேல் பரப்பினாள்.
மருந்துகளைப் பார்த்தபொழுது சரியான மருந்துகள்தான் கொடுக்கப்பட்டிருந்தது நிச்சயமாயிற்று.
அப்பொழுதுதான் அந்த விசயம் பட் டென என் மனதுக்கு வெளித்தது. மருந் துகள் பிள்ளைக்கு ஒழுங்காக கொடுக்கப்ப டவில்லை. ஒரு நேர மருந்து மாத்திரம் கொ டுக்கப்பட்டிருந்தது. மிகுதி மருந்துகள் அப் படியே மீந்து கிடந்தன. ஆச்சி மேல் எனக்கு / கோபம் கோபமாக வந்தது. : کھیے
ஆகஸ்ட் 2011

Page 59
'மருந்துகளை ஒழுங்காகக் கொடுத் தாலல்லோ நோய் மாறும். ஒரு நேர மருந்து தானே குடுத்திருக்கிறியள். மிச்சமெல்லாம் அப்படியே கிடக்குது. பின்னை எப்படி பிள் ளைக்கு சுகமாகும்’ சூடாகக் கேட்டேன்.
ஆச்சி அமைதியாகச் சொன்னாள், 'வழக் கமாக இப்படித்தானே ஐயாட்டை மருந்தெ டுத்து கொண்டுபோய் ஒரு நேரம் குடுத் தாலே சுகமாகிப் போகும். ஐயாடை கைராசி
01. தூக்கமின்மை 02. தலைவலி 03. உடல் வியர்த்தல் 04. வயிற்று உபாதைகள் 05. தோல் உபாதைகள்
S SSSSYSSSSSSL SSSYSLLSSYSLSSYSLSSLSYLSLSYSLSSYSLSSYSLS S SLLSSYSS SSYLSLSYLSLSSYSYSSYLSLSYLSLSYSLSYLSLSSL SSSYSSSSSSSS LSL SLLS SDS SS
s
செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண் ー
66 இந்த இலையின் சாறு தலை வழுக்கை யைப் போக்கக் கூடியது.
கூந்தலை கறுப்பாக்க உதவுகிறது. இதன் பூக்கள் இதயக் கோளாறையும் கர்ப்பக் கோளாறையும் போக்கவல்லது.
சிவப்பு பூக்கள் தான் மருத்துவச்
. അം சிறப்பு வாய்ந்தவை.
 
 
 

அப்படி இந்த முறையும் அப்படித்தான் ஒரு நேர மருந்து பருக்கினனான். ஆனால் சுகமா 3.686606).”
கைராசியால் மட்டும் நோய் குணமாகு LDs 2
எனக்கு கோபமும், சிரிப்பும் கலந்து வந் தது. எனது தலையை எங்காவது போய் முட்டி உடைக்கலாம் போலிருந்தது.
06. மார்பு வலி 07. மூச்சுத் திணறல் 08. முதுகு தோள்வலி 09. நடத்தை மாற்றம் 10. உடல் சோர்வு
"குடியை மறக்க இந்த மருந்து கொடுத்தீங்க , சரி! கூடவே இந்த மருந்து வேற எதுக்கு டொக்டர்?’
'இது சைட் டிஷ்ஷை மறக்கறதுக்கு”

Page 60
இந்நோய் அதிகமாக ஏற்படக் கூடிய இடங் களாக பின்வரும் இடங்களைக் குறிப்பிட 6) Th.
* சிறைக்கூடங்கள். * இடம்பெயர்ந்தோர் அகதி முகாம்கள். * அநாதைகள் முகாம்கள். * வைத்தியசாலைகள்.
(மன நோய் வைத்தியசாலைகள்) சுரங்கங்களின் சுற்றாடல் * வயோதிபர் இல்லங்கள் போன்றவைகளைக்
குறிப்பிடலாம். காச நோயின் அடையாளங்கள் என்ன? அல் லது உங்களுக்கு சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் என்ன தெரியுமா?
* நாட்பட்ட இலேசான
காய்ச்சல்
贊
* சாப்பாட்டில்
விருப்பமின்மை * அதிக களைப்பு * நிறை குறைதல் * மூன்று வாரங்க
ளுக்கு மேற்பட்ட இருமல் * சளியுடன் இரத்தம் 况 வெளியேறல் d * நாட்பட்ட இலேசான காய்ச்சல். * சாழ்பாட்டில் விருப்பமின்மை
 
 
 

முக நாடுகளைத் Tögi ETE JTi
o 6no6onTLibأ16ژg|Ligت .6J.ge,fir
RO B. A S. )
്. (i) (8 ( siste
* நிறைகுறைதல் * உடம்பு மெலிதல் * அதிக களைப்பு ஏற்படல் * இரவில் அதிக வியர்வை ஏற்படல் * நிணநீர் முடிச்சுக்கள் வீக்கமடைதல். யாருக்காவது காச நோய் பீடித்திருக்கிறதா என்ற சந்தேகம் இருக்குமாயின் உடனே அரு கிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரின் ஆலோசனைபடி பின்வ
ரும் பரிசோதனைகளில் ஒன்னுறு செய்து நோயை உறுதிப்படுத்திச் G5ITsiT6T6) Tib.
* சளிப் பரிசோதனை
X-ray பரிசோதனை ஆமாண்டோ
பரிசோதனை
ಟ್ವಿಟಿಣಛಿಓ-ಜಟಿತೆ..!

Page 61
சளிப் பரிசோதனை
வெற்றிகரமானது, இலாபகரமானது, இலகு வானது இதன் மூலம் பக்டீரியா கிருமியை நுணுக்குக் காட்டியின் மூலம் இனங்கண்டு சிகிச்சை அளிக்கலாம்.
நிழல் பட பரிசோதனை (X-ray) இப்பரிசோதனை மூலமாக காச நோயின் தாக்கத்திற்குள்ளான குறித்த அவயவங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை இனம் காணலாம்.
மாண்டோ பரிசோதனை இது பொருத்தமான பரிசோதனை இல்லை என்றாலும் நோயை உறுதிப்படுத்திக் கொள் வதில் ஓரளவிற்கு பங்களிப்புச் செய்கின்றது.
குருதிப் பரிசோதனை சில சந்தர்ப்பங்களில் இப்பரிசோதை யும் மேற்கொள்ளப்படும். இனம் கண்டு சிகிச்சையை ஆரம்பித்தால் நுரையீரல் பாதிப்பை மட்டுப் படுத்தலாம்.
நோயாளர்கள் சிகிச்சையை
ரணங்கள் என்ன
என்று ஆராய்ந்து
பார்த்தபொழுது
醫 சிறிது
சிகிச்சைப்
பெற்றதும் நோய் அறிகுறிகள் குறைவடைவதனால் நோய் பூரணமாக சுகம் அடைந்து விட்டது என்று தவறான எண்ணம்.
* உடம்பின் வருத்தங்கள் இல்லாதபோது மருந்து குடிப்பதை மறந்துவிடுதல்.
* தனக்கு காச நோய் ஏற்பட்டிருக்கின்றது என்பதை நம்பாதிருத்தல்.
* தான் காச நோய்க்கு சிகிச்சைப் பெறுவ தைப் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார் கள் எனப் பயப்படுதல்.
* சிகிச்சைப் பெறுவதற்காக செல்வதற்கு ரிய வசதியின்மை. -
* காச நோய்க்கான மருந்துகளினால் ஏற் படும் பக்கவிளைவுகள் பற்றி அஞ்சுதல். (பின் வாங்குதல்) அல்லது பயம் காரணமாக,
* சில வைத்தியசாலை ஊழியர்களின் பொருத்தமற்ற பொறுப்பற்ற செயற்பாடுகள்
式式 6
 
 
 
 
 
 
 

காரணத்தினால் உண்டாகும் வெறுப்பு.
* நோயும் சிகிச்சை முறையும் பற்றிய எவ் விதமான தெளிவின்மை அல்லது அறிவின் 60LouiseOTT6).
* மதுபானம் போதைப் பொருட்கள் பாவிப் பதனால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக நீண்ட கால சிகிச்சை பெறும் வேறு நோய்கள் காரணமாக, சிகிச்சையை இடையில் விடுவ தாகவும் தெரியவந்தது.
காசநோய் தடுப்பு நிலையத்தினால் இந்நோயாளர்களுக்கு
கிடைக்கும் சேவைகள். * சிகிச்சை நிலையங்கள் நாட்டின் (சகல மாவட்டங்களிலும் வசதிக்
கேற்ப)
விருப்பப்படி சிகிச்சை அ க்கும் நபரைத் தெரிவு செய்து கொள்ளல்.
* இலவசமான மருந்து கள் விநியோகம்.
贊 உதவிப் பணம் வழங்குதல்
* நோய் கண்டு பிடிக் கப்பட்டதிலிருந்து பூரண சுகம் பெறும்வரை F56) சேவைகளும் gസെഖ8ഥr கவே வழங்குதல்.
* விசேட விடுமுறை பெற்றுக் கொடுத்தல்.
சிகிச்சை : *பூரணமாக நோயைச் சுகப்ப டுத்திக் கொள்ள (6) ஆறு மாதங்கள் தொடர்ச் சியாக சிகிச்சைப் பெறுதல்
*வைத்தியரின் ஆலோசனையின் பிரகாரம் (6) ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக மருந்து களைப் பாவிக்க வேண்டும்.
*2 மாதங்கள் 4 வகையான மருந்துகள் பாவிக்கும்பொழுது 90% கிருமிகளும்.
*4 மாதங்கள் 2 வகையான மருந்துகள் பாவிக்கும் பொழுது 10% கிருமிகளும்
*பூரணமாக (100%) கிருமிகள் உடம்பிலி ருந்து அழிகின்றன. -
காச நோய்க்காக பாவிக்கும் மருந்து வகை
56
ZZzZLLLLL ܗܗܗܘܼܬܐ

Page 62
1. RIFEMPICIN (R) 150 mg 2. INAH (ISONIAZID) (H) 100 mg 3. PYRAZINAMAID (Z) 500 mg 4. ETHOMBUTOL (E) 400 mg 5. STEPTRO MYCINE (ing;) (S) 5 வகையான மருந்துகளும் வெவ்வேறாறு வகையான மருந்துகளும் ஒன்றாக சேர்க்கப் பட்ட ஒரேயொரு மருந்து (FDC)
குறிப்பிட்ட சில மருந்துகள் ஒன்று சேர்க்கப் LIL' L- 856o60p6) j60ou uġig5T6oT F. D. C. (Fixed Dose Combination) என்று புதிய பெயர் கூறி அழைக்கப் படுகின் (Oğl. இவற்றையே ! (1)- FDC 2, (11)- FDC 3, (iv)- FDC 4 என குறிப்பிடப்படு கின்றது.
மேலும் மருந்து பாவிக்கும்போது ஏற்ப டும் பக்க விளைவுகள் (Side defects) urbó குறிப்பிடுகையில், *கண் மஞ்சள்
நிறமாக மாறுதல். 督56m LITfGO)6) குறைதல்
*மூட்டுக்கள் வீக்கம்/ வலி ஏற்படுதல் *தோலில் அரிப்பு (சொறிச்சல்) ஏற்படுதல் *வாந்தி மற்றும் ஓங்காளம் ஏற்படுதல் *உடம்பு முழுதும் சிவப்பு நிறமாகுதல் *தலைசுற்று ஏற்படுதல் *சிறுநீர் கருமஞ்சள் அல்லது சிவப்பு நிறத்
தில் வெளியாகுதல். *சிறுநீர் குறைவாக வெளியேறுதல் *உடம்பு வலி அல்லது வயிற்றில் எரிவுத் தன்மை உண்டாகுதல்
மேலும் மருந்தை இடையில் நிறுத்தினால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படுவதுடன் இதை MDR (TB) Multi Drug Resistant (T.B.) '3a5'LGBg55 முடியாத பல வகை மருந்துகளுக்கும் எதிர்ப் புத் தன்மையுடைய காச நோயாளி” என்று கூறப்படும். எனவே இந்நிலைமைக்கு முன் னர் தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்
顯
 

கொள்வது அவசியமாகும்.
சிகிச்சையின் இன்னுமொரு முறைதான் Dots" முறை "டொட்ஸ்’ என்றால் என்ன?
இது நேரடி கண்காணிப்பின் கீழ் மருந்து குடித்தல் முறையாகும்
What is the Dots? (Direct Observation Treatment Short Couse)
இம் ("டொட்ஸ்" சிகிச்சை) முறையின் நன் மைகள் என்னவென்றால்
சிகிச்சையிலிருந்து தவறுபவர்கள் (விலகுப வர்கள்) ளை இனங்கண்டு. உடனடியாக சிகிச்சைப் பெறுவ தற்கான ஒழுங்கை செய்து கொடுக்க 6) Tib. நோயாளி சிகிச்சைப் பெறும் காலத்திற்குள் உண் டாகும் பிரச்சினை களை இனங்கண்டு கொள்வதற்கு (பக்க விளைவுகள் பற்றி) வசதியாக இருக்கும். சிகிச்சையிலிருந்து த வ று ப வர் க ள் தொகை குறைவத னால் நோயாளர் (MDR- TB) "Multi Drug Resistant TB") "சுகப்படுத்த முடியாத பல வகை மருந்துகளு க்கும் (ஒளடதங்களுக்கும்) எதிர்ப்புத் தன்மை யுடைய காச நோயாளிகளை சரியாக சிகிச்
சைப் பெறுவதை உறுதி செய்து கொள்ள லாம்.
இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற் கான தடை நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடு வதென்றால்.
* தாமதமின்றி நோயாளிகளை இனங் கண்டு அவர்களுக்குரிய சிகிச்சைகளைப் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல். * இருமும் பொழுதும், தும்மும் பொழுதும், மூக்கையும் வாயையும் கைக் குட்டையினால் மூடிக் கொள்ளல் வேண்டும்.
* கண்ட கண்ட இடங்களிலெல்லாம் துப் புதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
* நோயாளியின் எச்சில் (சளியை) பாத்திர
govo-2011 ஆக

Page 63
மொன்றில் சேகரித்து புதைத்து விடுதல் அல் லது எரித்து விடுதல் வேண்டும்.
* குழந்தைகள் பிறப்பின் பொழுது பீ.சீ.ஜி. தடுப்பு மருந்து பெற்றுக் கொடுத்தலின் மூலம் காச நோயின் அனேக பயங்கரமான விளைவுகளை ஆரம்ப கால 5 வருடங்களில் தடுத்துக் கொள்ளலாம்.
*(இத்தடுப்பு மருந்து மூலம் காச நோயி லிருந்து 100% பாதுகாப்பும் வாழ்நாள் பூராவும் பெறப்படமாட்டாது என்பதை மனதிற்
மாணவர்களே ஒருவன் கழுதையை N அடிப்பதை பார்த்து அவனை தடுக்கிறேன். இந்த நல்ல குணத்தின் பெயர் என்ன?
மாணவன் : சகோதர பாசம்
ஆகஸ்ட்ம2011 6.
 
 
 
 

கொள்ள வேண்டும்)
இந்நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற் காக வேண்டி நோயாளிகளும் மற்றவர்களும் சமூகத்திற்கு செய்யும் சேவைகள் பற்றி குறிப் பிடும்போது.
அநீங்களும் மேற்குறிப்பிட்டுள்ள முறையி லும் பின் வருமாறும் உதவிகள் செய்யலாம்.
*இந்நோயாளிகளை சமூகத்தில் ஏளனப் படுத்துவதைத் தவிர்த்தல்.
%இந்நோயைப் பற்றி உங்களுக்குத் தெரிந் தவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளல். *இந்நோய் அறிகுறிகள் உள்ளவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்ப தற்கு உற்சாகப்படுத்துவதுடன்,
இக்கட்டுரையில் உள்ள அறிவுரைகளை (நோயாளிகள்) தாமும் ஏற்று நடப்பதுடன் மற் றவர்களுக்கும் எடுத்துக் கூறி சுகாதாரமான ஒரு சமூகத்தை உருவாக்குவது மாத்திரமின்றி
“காச நோய் இல்லாத ஓர் இலங்கையை
உருவாக்குவோம்" "இலங்கையிலிருந்து காச நோயை வேரோடு
அழித்து விடுவோம்" என உறுதி பூணுவோமாக.
முற்றும்
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவிட்டு பின் சுமார் 2050 கொய்யா இலையைப் போட்டு மீண்டும் கொதிக்கவிட வும். இரண்டு நிமிடம் கழித்து அந்த நீரை வாயில் ஊற்றி பல்லில் படுவது மாதிரி
கொப்பளிக்க வேண்
செய்தால் பல்வலி பூரண குணமாகும்.

Page 64
Dr. ஹேமப் If ULI
ராகம போதனா வைத்தியசாலை
தடிமன், நெஞ்சில் சளி மற்றும் ஏனைய பிற காரணிகளால் இருமல் ஏற்பட்டதும் அதி லிருந்து நிவாரணம் பெற வைத்தியரால் வழங்கப்படும் இருமல் பாணி மருந்து Dextro methorphan ஆகும். இதனை DXM என்று சுருக்கமாக குறிப்பிடலாம். இந்த பாணி மருந் தானது மூளையில் இருமலை ஏற்படுத்துவ தற்கு காரணியாக உள்ள பகுதியின் செயற்பா டுகளை கட்டுப்படுத்தி இருமலைக் குறைக் கின்றது.
மதுபானம் உட்கொண்ட பின் ஏற்படும் மாற்றங்கள் போன்ற உணர்வுகளை இப் பாணி மருந்தை அதிகளவில் உட்கொண்டவ ருக்கு ஏற்படும். மதுபானத்திற்கு அடிமைப் பட்டவர்களில் பலர் இப் பாணி மருந்தை அதி களவில் உட்கொண்டுள்ளனர். ஆதலால் இருமலை கட்டுப்படுத்த மிகக் குறைந்த அளவிலேயே இப்பாணி மருந்தை உட் கொள்ள வேண்டும்.
அது மட்டுமின்றி, நல்ல விளைவுகளை
G
爵 藏
 
 
 
 
 
 

இம் மருந்து ஏற்படுத்துவது மட்டுமின்றி இருமல் தவிர்ந்த நோய் குணங் குறிகள் கா ணப்பட்டாலும் விரைவில் சுகப்படுத்தக் கூடிய மருந்தாகும். இதனால் சிலர் அளவுக்கு அதிகமாக (அதாவது ஒன்று அல்லது இரண்டு போத்தல்) தினமும் தொடர்ச்சியாக எடுப்பது மதுபான பிரியராக மாற்றும் தன் மையை ஏற்படுத்தும். இவ்விதம் எடுப்பதால் மூளையின் நரம்புத் தொகுதி பாதிக்கப்படுவ தோடு நினைவாற்றல் குறைவடைந்து உயி ருக்கும் ஆபத்து ஏற்படக் கூடிய நிலை ஏற்ப டும். இத்தகைய நிலையை Dextromethorphan Addiction என்றோ, DX M Addiction என்றோ (மருந்திற்கு அடிமைப் படல்) குறிப்பிடுவர்.
இருமலுக்கு இம் மருந்தை எவ்விதம் பயன் படுத்துவது? 鬣
உண்மையில் நாம் முன்பு கூறிய 'இது மிகப் பெறுமதி வாய்ந்த மருந்து அது போல் மிகவும் அவ

Page 65
தானத்துடன் எடுக்க வேண்டிய
| ஒன்றாகும். அநேகமாக எமக்கு இருமலுக்கு பயன்படுத்தும் பாணி மருந்தாகவே கிடைக் கின்றது' உதாரணமாக (Corex D) மற்ற நாடுகளில் இவை வில்லைகள் அல்லது குளிசை
களாக விற்பனை செய்யப்படு கின்றன.
இப்பாணி மருந்தை வைத் தியரின் ஆலோசனைப் படி யே எடுக்க வேண்டும். இருமல் ஏற்படுவதைப் பொறுத்து 6 மணித்தி யாலங்களுக்கு ஒரு முறையோ அல்லது 8 மணித்தியாலங்களுக்கு ஒரு முறையோ அல்லது தேவையேற்படின் மட்டும் எ டுக்க வேண்டும். இங்கு வீடுகளில் பயன் படுத்தும் மேசை மற்றும் தேக்கரண்டி என் பவற்றை பயன்படுத்துவது பொருத்தமான தல்ல. சிரப் எடுப்பதற்கென பயன்படுத் தும் அளவு குறிப்பிடப்பட்ட கரண்டி அல்லது சிறு அளவு கோப்பையை பயன் படுத்த வேண்டும். (தேக்கரண்டி என்று குறிப்பிடப்படுவது மி.லி. 5 ஆகும்)
மேலும் இன்னுமொரு விடயம் யாதெ | னில், இருமலை மட்டும் நீக்குவதற்கு கொடுக்கும் இம் மருந்துப் பாணியை தலைவலி, காய்ச்சலுடன் ஏற்படும் இரு மல், Rash என்பவற்றுக்கு அருந்தாமல் வைத்தியரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
இம் மருந்து பாணியால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னவென்றால் மற்ற மருந் துகளுக்கு உள்ளது போல் இந்த மருந்துக் கும் பக்க விளைவுகள் உண்டு. தூக்க ம யக்கம், தலைச்சுற்று, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்று நோ என்பவற்றை உதார குறிப்பிடலாம். இவை யாவும்
பாரதூரமான பிரச்சினைகளல்ல, அதைவி
ட மிகப் பெரிய சேவையை இந்த இருமல் பாணி செய்கின்றது என்றே கூற வேண் | டும்.
இந்த இருமல் பாணி மருந்தில்
ty-2011 --- - 65
 
 
 
 
 
 
 
 

இனிப்புத் தன்மை அதிமாகக் காணப்படு வதால் சிறு குழந்தைகள் எடுக்காத வகையில் கவனமாக பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். முன்பு கூறியதுபோல் குறித்த அளவை விட அதிகளவில் (OVerdose) பாணி மருந்தை எடுக்கும் போது மேல் குறிப்பிட்ட பக்க விளைவு கள் ஏற்படும். மேலும் அதிகளவு அருந் தும் போது குமட்டல்/ வாந்தி என்பவற்று டன் பார்வை மங்குதல், மூச்சு எடுக்க கஷ் டமாக இருத்தல், இதயத் துடிப்பு அதிகமா குதல், மாயத் தோற்றம் ஏற்பட்டதைப் போன்ற உணர்வுகளும் சத்தங்களும் கேட் டல் (Halucinating) என்பனவும் ஏற்படும். மற்றும் வலிப்பு நினைவிழத்தல் என்ப னவும் ஏற்படலாம். ஆனாலும் மிகப் பெறு மதி வாய்ந்த விரைவில் நிவாரணத்தை 6JÖLUGIšguid @jb.g5 Dextro Menthorphan பாணி மருந்தை குறிப்பாக மதுப் பழக்கத் திற்கு அடிமைப்பட்டிருக்கும் இள வய தினரின் தேவையற்ற பாவனை காரண மாக இன்று புதிய தலைப்பில் பிரச்சினை உருவாகியுள்ளது. மிகவும் பயனுள்ள பா துகாப்பான, உடனடி நிவாரணியாக உள்ள இப் பா மருந்தை தேவையற்ற விதத் தில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்து வது மருந்து வர்த்தகத்தில் உள்ளவர்களின் மிகவும் பொறுப்பான
காரியமாகும்.
எஸ். கிறேஸ்

Page 66
பிளவையென்பது சீழ் கோர்த்துக் கொள்ளு தல் அல்லது இழையங்களின் கீழ் சீழ் ஒன்று சேருதலாகும். கட்டியென்பது. கொப்புளங்க ளும் பிளவைகளும் வலி, வெப்பம், வீக்கமு டையவைகளாயிருக்கும்.
#? 1. வெந்நீர் ஒத்தடம் ஒரு நாளைக்கு இரு முறை 30 நிமிடங்கள் கட்டி பழுக்கும் வரை கொடுக்கப்படல் வேண்டும். 2. பிளவையோ கட்டியோ மலக்குடலை குதத்தை சுற்றி இருக்குமாயின் 30 நிமிடங் களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை வெந்நீர் அமர்வுக் குளியல் கொடுங்கள்.
மூலிகை மருத்துவம் 1. பசளி இலைப்பத்து
* 2 இலையை அரைக்கவும். * ஒரு நாளைக்கு 2 முறை பத்துப் போட
 
 
 

養
贊
கேந்தி இலைப்பத்து
3 இலைகளையும் 2 பூக்க ளையும் அரைக்கவும். ஒரு நாளைக்கு 3 முறை பத்துப் போட வும்.
3. செவ்வரத்தைப் பூ இலைப்பத்து
贊
5 இலைகளையும் 2 பூக்களையும் அரைத்து நேரடியாக பிளவையிலும் கட்
டியிலும் ஒரு நாளைக்கு 2 முறை பத்து போடவும்.
4. பலாப்பால்
贊
醫
அடி மரத்தை வெட்டிப் பால் எடுத்துச் சிறிது வினாகிரியுடன் கலக்கவும். கலவையைச் சூடாக்கி சூட்டொத்தட மாக பாவிக்கவும். சுத்தமான துணித் துண்டுகளை உபயோகித்து ஒரு நா ளைக்கு 2 தடவை 20 நிமிடங்கள் ஒத்தடம் இடவும்.
5. வெண்பாவட்டை இலைப்பூச்சு
養
養
இலைகளை அரைக்கவும். நேரடியாக ஒரு நாளைக்கு 2 முறை பூச வும்.
6. கரிப்பூச்சு
醫
கரியை அரைத்தோ தூளாக்கியோ தண் னில் குழைத்து ஒரு கைக்குட்டை யில் அல்லது சுத்தமான துணியில் வைத்து ஒரு நாளைக்கு 2 முறை கட்ட
6Ls).
- இரஞ்சித்
ಟ್ವಿಟ್ತಿ-ಜಿಲ್ಲಿ! ֆֆինիիիիիիիիիիիիիիիիիիիիիիիիի

Page 67
உங்களது சகல விள எமது சினே fഞഖ@l எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்டு 185, கிராண்ட்பாஸ் வீதி, கொழு
விளம்பரப்பிரிவு : 5322730-8, ! E6DD6OOTULLô: WW
நாடுமுழுவதுமுள்ள எமது
வத்தளை 12-1/1, புனி, செபஸ்தியான் வீதி, வததளை. தொ பே: 5375945, 5336609 தொ பே/பக்ஸ் 4350518, 4812565
வெள்ளவத்தை for- 866 73. மன்னிங் பிளேஸ், 129/2, ig.6T6m).
கொழும்பு 06. 8Ꮬt
தொ @上:5528○ア1 தொ (8, 1: Ο U தொ பே/பக்ஸ்: 4513515 U தொ பேபக்ஸ்
- བ། DLLdbd66 II திருகே 11, 2ஆம் குறுக்குத்தெரு, 167/49,
மட்டக்களப்பு. திருகே தொ பே: 06:55679579 தொ பே: 0 \தொபேபக்ஸ்o65 2222109 UUதொபேபக்ஸ்
F fr
யாழபாணம கிளி 17, புகையிரதநிலைய வீதி, 56/2, A965.
யாழ்ப்பாணம்.
தொ பே: 02:1567O100
தொ பே/பக்ஸ் தொபே/பக்ஸ் O212222730
ܥܬ
விரிே இழுத்து
HYEFAYAYIN SANKA
 
 
 
 
 

ம்பர தேவைகளுக்கும் கபூர்வமான நாருங்கள் i) (சிலோன்(பிரை) லிமிடட்
ம்பு 14. தொலைபேசி: 53227OO விநியோகப்பிரிவு : 5322781,3,9. W. Virakesari. İk
து கிளைக்காரியாலயங்கள்
கொட்டாஞ்சேனை கீல்ஸ் சுப்பர்மார்க்கட், 01, பொஞ்ஜயன் ரோட், கொட்டாஞ்சேனை, கொழும்பு 13, 6gT GL: 5345701, Ljš6rö: 53457OO
ー ཚོ་ ད། OOC வறட்டன் சேனநாயக்க வீதி, 1139-1/, மெயின் வீதி, ஹட்டன். 5ÖöTig. 6g|T (SU: O51570O8OO 81574O66 தொ பே/பக்ஸ்: O515677300
O8122226O7 U. تھے۔
ཅི་ཚེ་
6D6D6) வவுனியா மெயின் வீதி, 86E, 1ஆம் குறுக்ககுத்தெரு,
666). வவுனியா. 265678969 தொ பே: 0245679559 3: O26 2227138 Jóg" (usus56. O24 2221146. நொச்சி நீர்கொழும்பு தி, ஆனந்தபுரம், 18ഠ, ധൈിങ് வீதி, நொச்சி, நீர்கொழும்பு, :○2156ア3333 6gbIT GBLI: O31 521OO21
(தொ பே/பக்ஸ் 0315210020
*ஐழ்வு
蚤
Lகேசரி
*** Iraketari

Page 68
隠
描
韃
前
ன்பிடிய 'ሎ
þ]ഉ
Gabuut தியசாலை
O5.
கொழும்பு
ിഖേ ய் வைத்
600TL6) LDT6)lg560) 35,
நைன் தாய் சே , கிரிம
55/
3.
2011 ஆம் ஆண்டு ஆக
இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்
இந்த
தில்
க்கத்
இல
185ஆம்
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கருக்கட்டலுக்கான JT355u 15 Jagias606Tujtb (Sub Fertility) அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
மிெட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்ட்பாஸ் வீதி, ஸ்ட் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.