கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2011.07

Page 1
SJÖLLÖ SEGES GLIJsluji
 


Page 2
3
ego)6D - 2011
| pal႔: 43 இதழ்: 05 2
ஆசிரியர்
றொஹான் பேனார்ட்
豹
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
须
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லியோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
後
ஆலோசகர்கள்
A.G.9yTG22söglutb A.S.யோகராஜா
貓
கணினி வடிவமைப்பு
மல்ரிவிஷன் 多
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம். திரு / மட். மறை மாவட்டம்
TEL: 065 - 2226486 E.mail: scCtribattiOgmail.com
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 公 மட்டக்களப்பு பதிப்பகம்
வணசிங்கா அச்சகம் மட்டக்களப்பு.
ஆக்கங்களுக்குய் பொறு SOCIAL COMMUNICATIONSCENTRE
P. O. BOX - 44 2 BATTICALOA. 须
 

※
貓
犯
穷 அன்புடன் உங்களோடு. . . .
நாம் தேடும் வாழ்வு. . . : O2
ஈழத்தை அளந்த புனிதன் : 0.
须
ஈழத்தின் புகழ் பூத்த. 06
வாழ்த்தொலிகள் : 09
இன்றைய உலகில்... 10
கேட்கிறதா. : 12
ஜெயலலிதாவை . 13
அர்ப்பணிப்போடு பணி. . . . : 15
விளம்பரமின்றேல். 17
须
2 இலக்கிய வீதி : 20
நாளைய இன்றில் (சிறுகதை) 21
முச்சுக்குழல் நோய் : 2.
மானவர் பக்கம் 26
விவிலியம் கற்போம் : 27
அறிவை வளர்ப்போம் 28
ப்பு அளித்தவர்களே (ஆர்)
விலை : 25/= ஆண்டு சந்தா : 400/=
(தபாற்செலவு உட்பட)

Page 3
ിg്.ീ{
ඌlගdiL|Lරෝ 8
1996ம் ஆண்டு அர்ஜ"ண ரணதுங்க தலைமையிலான கிரிக்கட் அணி உலகக் கோப்பையை வென்ற வேளையில் இலங்கையின் பெயர் கிரிக்கட் விளையாடும் நாடுகளிடையே கொடிகட்டிப் பறந்ததை நாம் அறிவோம்.
2009ம் ஆண்டிலிருந்து மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டுப்படைகளின் ஆகோரமான வன்னித் தாக்குதலுக்குப்பின்பும் கொடிக்கட்டிப் பறக்கின்றது. இலங்கை கிறிக்கட் அணி வென்ற வேளையில் இலங்கை மக்கள் குதூகலித்தார்கள். ஆனால் கூட்டுப்படைகளின் வெற்றியைக் கொண்டாட முடியாதவாறு இயற்கை கொடுக்கும் அடைமழையும் தருஸ் மணி அறிக்கையும் அமைந்து விட்டன. இதனால் மகிந்த ராஜபக்ஷ குடும்பமே செய்வதறியாது பரிதவிப்பதையும், ஏனைய உலக நாடுகளிடம் பல்லிளிப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான குழு தயாரித்த இனப்பிரச்சி னைக்கான தீர்வுத்திட்டம் என்ன ஆச்சு? கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான குழு தயாரித்த அறிக்கைக்கு நடந்ததென்ன? தற்போது தழிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தையும். வீணடிக்கப்பட்டு தீர்வுத் திட்டத்தை முன் வைக்க பாராளுமன்றத் தேர்வுக் குழு நியமிக்கப்பட இருக்கிறதாம். இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுத்திட்டத்தைத் தயாரிப்பதாக சிங்கள அரசாங்கம் காட்டும் பூச்சாண்டித்தனம் தான் இவை,
 
 
 
 

ஐ.நா.செயலாளினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு ஆராய்து வெளியிட்ட தருஸ்மன் அறிக்கைக்குத் தமிழ்ப்பிரதேசங்களிலும் அரச பேரினவாதிகளுக்குத் துணை போகும் தமிழ்க்கட்சியினர் எதிர்ப்புக்காட்டியது ஒன்றும் ஆச்சரியப்படவைக்கவில்லை. ‘நாய் வேசம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும்’ என்று அவர்களே தெரிவித்ததாகக் கேள்வி இருந்தும் இரண்டாவது தடவையாகப் பதவி நீடிக்கப் பட்டுள்ள ஐ.நா செயலாளர் பாண்கீமூன் தனது நடவடிக்கைகளில் வேகம் காட்டுவாரா என்ற ஐயப்பாடும் சாதாரணமாகவே எழுகின்றது. ஐ.நா உட்பட உலக நாடுகள் அனைத்துமே ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இலங்கையில் உள்ள தமிழர் தரப்புக்கு நடைபெற்று முடிந்த, நடைபெற்றுக்கொண் டிருக்கின்ற அநியாயங்களுக்குத் துணிந்து நின்று குரல் கொடுக்கக்கூடிய சக்தியும் அதற்குரிய அரசியல் சூழ்நிலையும் தற்போது இல்லை : என்பதை. ஆகவே, அத்தகைய சக்தியை உருவாக்குவதிற்கும் குரல் கொடுப்பதற்கும் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். அரசியல் சாணக்கியம் நிறைந்த தமிழ் அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும். வெறும் வாய்ஜாலங்களை நம்பி ஏமாறாது இருக்க தெளிவடைய வேண்டும். அபிவிருத்தி என்ற மாயாஜாலங்களில் இலயித்துப் போய் எதிர்காலத்தைக் கோட்டைவிடாதிருக்க கற்றறிய வேண்டும். நாம் ஒற்றுமையில் உறுதியாக இருந்தால் இறைவன் நிச்சயம் நம் பக்கமிருந்து செயற்படுவார் என்பது உறுதி 茎、
ஒளியில் இருப்பதுபோல் நாம்
ப்போமானால், ஒருவரோடு ஒருவர் புறவு கொண்டிருப்போம்"
(1 யோவா 1:7) 4

Page 4
இன்றைக்கு ஒருத்தர் நல்ல நிலையில் வாழ்கின்றதைக் காணும்போது அவர் மனதுக்கு இறைவன் நல்ல வாழ்வைத் தந்திருக்கின்றார் என்றுதான் கூறுவோம். சீரழிந்த வாழ்வுகொண்டவர் களைக் கானும் போது, மனம்போல வாழ்வு என்று சமயங்களில் திருப்திப்பட்டுக் கொள்ளவும் செய்கின்றோம். உண்மைதான், நம் மனம் கொண்டதுதான் வாழ்வு. நம் தெரிவுக்குட்பட்டது தான் நம் வாழ்வு! இதைவிடுத்து நல்லதோ கெட்டதோ எல்லாம் விதி என்றோ எல்லாம் கடவுள் தருவது என்றோ கூறுவதில் அர்த்தமில்லை, அப் படிக் கூறுவதால் தவறான பாதையை வாழ்வைத் தெரிந்து கொண்ட நம் பொறுப்பினின்றும் நாம் கழன்று விடவும் முடியாது
இறைவன் குறைக்கோ, கறைக்கோ, உட்பட்டவாராக இருப்பதில்லை. அப்படி இருந்தால் அவர் இறைவனாக இருக்கவும் முடியாது. உண்மைக்கும் நண் மைக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் உறைவிடமான தூய அன்பு கொண்ட இறைவன் தன் படைப்பானது தவறு கொண்டதாக, துன்பத்தைச் சுமக்கின்ற, வாழ்விழந்த ஒன்றாக இருப்பதை நிச்சயமாக விரும்பப் போவதில்லை! தன் பிள்ளைகள் நெறி கெட்டுப் போவதை எந்த நல்ல புத்தி கொண்ட தந்தைதான் பார்த்து ரசிப்பான். அப்படி இருக்க தந்தைக்கெல்லாம் தந்தையரகிய இறைவன்
s ஒரே அளவினதாக ஒரே மாதிரியானதாக எந்த உயிரினமும் மண்ணில் உருவாவதில் o ஓர் இனத்திற்குள்ளேயே நிறத்திலே தோற் வித்தியாசங்கள் எல்லாம் கறுப்பு வெள்ை கோடுகள் கொண்ட வரிக்குதிரை கூட ஒன்று மாதிரி ஒன் இருப்பதில்லை என்கின்றார்கள். மெலிந்தவன்
Ag
ன் இருந்தால்தான் பருத்தவன் என்ற
 
 
 
 
 
 

ஒருவனை அடையாளம் கண்டு கொள்ள நம்மால் முடிகிறது. இப்படியாக நல்லதும் கெட்டதும் கலந்ததாக ஒரு முப்பரிமாண உலகத்தைத்தான் இறைவன் படைத்தார். அதிலே அனைத்தின் மீதும் முழு உரிமையையும் மனிதனுக்குக் கொடுத்தார். தனக்குட்பட்டவனாக இருப்பானா என்று பார்க்க மனிதனுக்கு ஒரு பரீட்சை வைத்தார். அதில் ஆதாம் கோட்டை விட்டான். அதனால் முழுமனித இனமே கேட்டைக் கண்டது. நன்மையையும் தீமையையும் தெரிந்தெடுக்கின்ற முழுச் சுதந்திரத்தையும் இறைவன் மனிதனுக்குக் கொடுத்திருந்த நிலையில் - அதற்கான பொறுப்பையும் அவனிடமே விட்டுவிட்ட நிலையில் - மனிதன 1ழ்வின் இன்றைய நிலைக்கு அவனே முற்றுமுழுக் காரணியாக அமைகின்றானேயொழிய அவனைப்படைத்த
அவுளோ அவன் கற்பிக்கும் விதியோ அல்ல!
வாழ்க்கை என்பது எந்த நாளும் ஒரே சீராக န္တ၊၄ငံ့ ல்லும் நதிபோன்று இருப்பதில்லை. வண்டில் சக்கரத்திற்கு அது ஒப்பானது. ஒரு பொழுது மேல் (3 கிய வாழ்வாக இருப்பது மறுப்ொழுதில்
திதாக்கில் விழுந்தது போல் தெரியும்.

Page 5
ம் நம் போக்கில் தான் வாழ்வு எழும் விழும் வீழ்கின்ற வாழ்வு முடிவதுமில்லை உயர்ந்து விட்டவாழ்வு நிரந்தரமாவதுமில்லை. இதை நாம் தெளிவாக மனதிருத்தி எம் வாழ்வை உரிய பாதையில் வழி நடத்திச் செல்ல வேண்டும்.
வாழ்வுக்கான தெரிவைச் சரிவரச் செய்யாமல் மனிதன் நிலை தாழ்ந்து போவதை விரும்பாத ஒருவராக இருப்பதால்தான் அந்த இறைவன் தம் மகனையே அவனிடம் அனுப்பி, வழி காட்டச் செய்கின்றார். யேசுவும் தந்தை இறைவனின் சித்தத்தை - ஆசையை நிறைவேற்ற தாம் அடையப்போகும் துன்பத்தைச் சிறிதும் மனதிற் கொள்ளமல் நம்மிடையே வந்து வாழ்வைத் தேடித்தர உழைத்தார். வாழ்வைக் கேட்போருக்கு வாழ்வையும், அதற்கான வழியைக் கேட்போருக்கு அதைக் காட்டித்தரவும் அவர் தம்மை விட்டுத்தருகின்றார். ‘வாழ்வும் வழியும் நானே' என்று எடுத்துச் சொன்ன அவர் தம் வாழ்வாலும் சாவாலும் வாய் நிறைந்த போதனையாலும் அன்பு வாழ்வை வாழ நமக்குக்
குருத்துவ
அருள் தந்தை ஜெரேமிய அரசரெட்ணம் அவர்கள் குருத்து ஆறுபது ஆண்டுகளை நிறைவு செய்கிறா பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அ ஆண்டு ஜூன் மாதம் 29ம் திகத
திருநிலைப்படுத்தப்பட்டார். தழிழ்நாடு மறைமாவட்டத்தில் 1968ம் ஆண்டு வரை பணிபு அதன்பின் இலங்கை வந்து திருகோணமலை மறை மாவட்டத்தில் இணைந்து பல்வேறு பணிபுரிந்துள்ளார். 1991முதல் 1995 வ மருத்துவமனை பொறுப்பாளராகவும் பணிபுரி 1997 முதல் பரிபூரணம் முதியோர் இல்ல நடத்திவந்தார். தற்போது ஓய்வுபெற்று ஆ இருக்கும் அவர் உடல் உள ஆரே நீண்ட காலம் வாழ்ந்திட இறை
வாழ்த்துகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்றுத்தந்திருக்கின்றார். அவர் கற்றுத்தந்த வழியை, காட்டித் தந்த பாதையைத் தெளிவாக நாம் அறிந்திருக்கின்ற வரையும் நம் தெரிவுகள் ஒருக்காலும் திசை மாறிப் போகமாட்டா.
இதையும் மீறி நாம் வாழ முற்பட்டோமானால், எரியும் தணல் என்றறிந்தும் கையை விட்டுச் கொண்டுதான் திருந்துவோம் என்று நாம் முற்பட்டால் மீட்பு என்பது நமக்கு இல்லை.
நமக்கான உரிய வாழ்வையும், அந்த வாழ்வுக்கான பாதையையும் கிறிஸ்து காட்டிய வகையில் நாம் அமைத்துக் கொண்டால், தெரிவு செய்து கொண்டால், நாம் சொல்லுகின்றோமே நம்மை ஆட்டிப் படைக்கும் அந்த விதி - அது நாமேயல்லாது வேறொன்றுமல்ல ஆம், நாம் தான் நமக்கு விதி எழுதுபவர்கள் ஆகிவிடுவோம். அந்த அளவுக்கு நாம் உயர- நமக்கான சுயசரிதையை நாமே எழுதிக் கொள்ள கிறிஸ்து காட்டிய வழிமுறைகளை தெரிந்தெடுப்பதும், மறுப்பதும் நமது தெரிவாகவே இருக்கப் போகிறது. உங்கள் தெரிவு என்னவாக இருக்கப்போகிறது? சிந்தியுங்கள்
-ஆனந்தா ஏஜீ. இராஜந்திரம்
ாழ்வில் 60 ஆண்டுகள்
பா சைமன் துவ வாழ்வில் * யாழ்ப்பாணம் டிகளார் 1951ம் குருவாக தூத்துக் குடி பிந்த அடிகளார் மட்டக்களப்பு | பங்குகளில் ரை சீலோம் ந்த அடிகளார் pத்தை நிறுவி யர் இல்லத்தில் ாக்கியத்தோடு யருள் வேண்டி
-தொண்டன்

Page 6
65áII ciour புரந்தாண்டிக் கோடிழுத்து நேர்வாக்கில் மட்டக் களப்புவரை சென்றார் - விட்டாரா கட்டுக் கடங்காத
கனலான்ம புயல்வீச எட்டுத் திசைதாண்ட லானார்
உண்ண மறந்தாரோ உயிர் மூச்சை மறந்தாரோ எண்ணம் அதுமட்டும் வேறு-மண்ணில் நல்லான்ம விடுதலையே முழுமூச்சா யானதனால் முள்ளாகிப் போனதவர் படுக்கை
ஒல்லாந்த ரின்ஆட்சி ஓங்கிநின்ற இடமெல்லாம் அல்லலுற்றார் அவரருமை மக்கள்- கேள்வியுற்று வில்லிருந்து புறப்பட்ட
அம்பாக விரைந்தங்கு சொல்லரிய சோகமுற லானார்
கத்தோலிக் கர்அந்தக் கல்லான ஆட்சியிலே சித்தங்க லங்கித்தான் போனார்- முத்தான திருச்சபையாம் சத்தியத்தை முற்றாகத் தாம்மீறுந் தருணத்தை அவர் மீது திணித்தார்
 

செண்பகக்குழல்வாய்மொழி
(வேறு)
ஆயராய் பரிந்துரை
ஒல்லாந்துச் சட்டங்கள் ஏற்போர்க்கு மட்டுமே வில்லாக வளைந்தங்கு பேசும் - அல்லாது முரண்டு பிடிப்போரை மூக்கனாங் கயிறிட்டுச் சிறைதஸ்ளக் கங்கணங் கொள்ளும்
செபமாலை வரோனிக்கம் சிலுவை சொரூபங்கள் விபரீதம் விளைக்கின்ற பொருளாம் - அபராதம் அல்லாது சிரச்சேதம் இப்பண்டம் கைக்கொள்வோர் எல்லார்க்கும் அதுஈட்டித்தருமாம்
இவ்வாறு யோசேப்வாஸ்
இடுக்கண் நடுவினிலும் அவ்வாறு பணி செய்தார் வியப்பே - அவ்வாறும் இறைதிட்டம் தனைமண்ணில் எங்கும்விதைத்தும் பணி நிறைவுற்ற தாயெண்ண வில்லை.
ஒய்வின்றி யோசேப்வாஸ் எங்கும் புரிந்தபணி வாய்விட்டுப் பேசாதா ரில்லை - தாய் நாடு தாண்டியும் ஐரோப்பா கரை தொட்டுப் பாப்பரசர் மன்றுவரை சென்றதவர் பெயர்தான்
அந்நிய நாடதனில் அரிதாம் திருச்சபையைத்

Page 7
தொண்டின் தன்ன்ந் தனியனாய் நின்று - மண்வாழ ஆக்கிய யோசேப்வாஸ் அவரைநல் லாயராய் ஆக்குவம் எனமொழிந்தாராம்
மொழிந்ததும் பாப்பிறை மாசிலா வெள்ளியில் அழகுறு சிலுவையை ஆக்கி - பழுதிலா தூதனின் மூலமாய் தந்ததும் யோசப்வாஸ் முதலில் கலவர மானார்
தெளிந்தபின் அமர்ந்தவர்
தீர்க்கமாய் எழுதுவார் ஒளியது அகமெல்லாம் வீச- துளியதும்
들 들 e 綴 2. க்கினரையும் அவ நூல்களையும் பற்றி அனைவரும் புரிந்துகொள் வண்ணம் எளிமையாக விளக்கும் சிறந்த நூல்
 
 
 

பதவியை நெஞ்சினில் சுமந்தனில் (லை) பணிவிடை அதனையே சுமந்தனன் என்று
மடலுடன் மகிமையின் சின்னமாம் சிலுவையை விடையென அனுப்பியே மீண்டும் - கடவுளின் பணியினில் இணைந்தவர் பகலிர வெனத்தவ அணியிலும் இணைந்திடலானார்.
- வளரும் -

Page 8
தமிழ்மொழியின் தகைமை | சிறப்பைத் தமிழினம் கருதிடாக் கால “நும்மொழியின் சான்ற சிறப்பைத் | மக்களே இன் இனியே முழுவது உணர்மின்” என வீரமுரசு அை தமிழ் மக்களைத் தட்டி எழுப்பிய பெரு ஒப்பியல் அகராதியின் ஒப்பற்ற ே தவத்திரு கலாநிதி ஹயசிந்து சிங்க தாவீது அடிகளைச் சாரும்.
பருத்தித்துறையில் தும்பன் கிராமத்தில் மாவச்சை என்னும் வ6 1907.06.28 இல் பிறந்த இவர், த |கல்வியை யாழ்.சம்பத்திரிசியார் கல்லு ஆரம்பித்து உயர்நிலைக் கல்வி முடித்தார் 繳 ° இவர் கருவிலே திருவுடை விளங்கியபடியால் ‘என்னைப் பின்பற்றி | (மத்9:9) என்ற இயேசுவின் அருளுை ஆட்கொள்ளப்பட்டு கொழும்பு L பேணாட் குருத்துவக் கல்லூரியில் ட |பெற்று,1931.12.19 இல் குருவ
திருநிலைப்படுத்தப்பட்டார்.
(6650 D (Personality)
எழில்மிக்க செவ்விளநீர் புன்னகை பூத்துப் பொலிவோடு விள |முகம், ஞானக் குறியாகத் தோன் |வெண்ணிறக் குறுந்தாடி, அறிெ |அவாவும் கண்கள், எடுப்பான
மூக்கு, ஈகையில் வள்ளல், பா
மிஞ்சும் கரங்கள், உருவத்தில் குறு
அகத்தியர், நெப்போலியன் பே
| |அபூர்வ ஞாபக சக்திமிக்கவர். நேர 1உயிர் போன்று செயற்படுத்திய
ஒழுங்கும், சிக் கனமும் இவரு இருகண் கள் போன்றவை. ம கணினியாகவும், நுண்ணறிவு ! நடமாடும் பல்கலைக் கழகமாக திகழ்ந்தவர். துறவியின் இடது கர |ரெனிஸ் வீரனைப் பிரதிபலிக்கும் றக் |வலது கரத்தில் உத்தம மரியா |வீரவாள் ஆகிய திருச்செபமா
ருமுறை பார்த்தாலே நெஞ
 
 

& Teó
UJITêt வா’ JuJTGö புனித யிற்சி
ாகத்
நிறம்,
ங்கும ன்றும் வாளி கூரிய h60)uj
ான்று த்தை
6T. 5க்கு
றிக்க
நிறைந்திடும் தோற்றப் பொலிவு, உந்துசக்தி Lóla, 35 g, Gö6Ö)LD (Dynamic Personality) இவற்றின் ஒட்டு மொத்தமே தாவீது அடிகள் என்பது வெள்ளிடைமலை.
gaordsgjargo (Magniticent Character)
இருபதாம் நூற்றாண்டிலே பூமியில் மானிட, வானவ, தேவதையாகத் திகழ்ந்த அன்னை திரேசாவைப்போல் தாவீது அடிகள் எளிமையும் தாழ்மையும் நிறைந்தவர். மனித நேயத்தின் இலக்கணமே இவர். ஆண்டவரின் அன்பைப் பகிர்ந்தளித்தவர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பவற்றைக் கடைப்
கடுகளவு கதைத்து மலையளவு பெரும் பணியாற்றிய பெருமகனார். ஏழை மாணவர் களின் கண்ணிரிலே துன்புறும் இயேசுவைக் கண்டார். வீதியோரங்களில் வேதனைப்படும் கைவிடப்பட்ட மனித உள்ளங்களைக் கட்டி அரவணைத்து மோந்து முத்தமிடும் பழக்கமும், வஞ்சகமில்லா பிஞ்சுக் குழந்தை உள்ளமும் கொண்டவர். பல்லாயிரக் கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்வு ஒளிமயமாகத் திகழச் சுயநலமின்றி அருளையும் ப்ொருளையும் மனமகிழ்வுடன் வாரி

Page 9
தெரிண்டின் = வழங்கினார். நம் வாழ்வில் கண்ட புனிதர் தாவீது அடிகள்.
asoibafé Fragaoa (Academic Achievement)
இவர் இலண்டன் பல்கலைக்கழக கலைமானிப் பட்டத்துடன் முதுமானிப் பட்டத்தினையும், கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்ட ஒரு மாபெரும் கல்விமான்.
sbaffluů ugrof (1936-1967) தாவீது அடிகள் புனித பத்திரிசியார் கல்லுரியில் 3ஆண்டுகள் பணிபுரிந்து சிறந்த அறிஞர்களை உருவாக்கியுள்ளார்.
ஆராய்ச்சி (5a)LDabaseb (AMilestone in Research Work) கருவறை தொடக்கம் கல்லறை வரை கற்க, என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்தார் தாவீது அடிகள் என்றால் அது மிகையாகாது.
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், தான் தொடங்கிய சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியின் வேலை முற்றுப்பெறமுன் 1947.01.22 இல் மறைந்து விட்டார்; இவரின் சீடரே தாவீது அடிகள்.
'விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செயக்கருதி இருக்கின்றாயடா’ என்று பொங்கினான் பாரதி. ஆம் அந்தத் துர்ப்பாக்கிய நிலையில்தான் ஒப்பியல் அகராதி இருந்தது. அதை நிவர்த்தி செய்ய அடிகளார் சொற்பிறப்பியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். ஒரு பூரண பல்கலைக்கழகம் ஆற்ற வேண்டிய பரிய பணியை பண வலிமை குன்றியிருந்தும், மனவலிமை குன்றாமல் குருவாகவும், முழுநேர ஆசிரியராகவும் ஆற்றிக் கொண்டே பல வருடங்களாக மொழி ஆராய்ச்சியில் கடினமாக உழைத்தார்.
ஒப்பியல் அகராதியில் ஒன்பதாவது பகுதியை சிங்கள மொழியில் தாவீது அடிகள் எழுதத் திட்டமிட்டார். இதனால் தேசிய ஒருமைப்பாடு உருவாகும் என உணர்ந்து உழைத்த உத்தமராவர். தொல்திராவிடம் அன்றேல் சீரிய சிறந்த (தமிழ்) மொழியை விளக்கிச் சாதனை நிலை நாட்டிய மாமேதை இவர். அவை மட்டு மல்லாது, சிங்களம் தமிழின் தங்கை என்று ஆதார பூர்வத்துடன் நிரூபித்துக் காட்டிய முதல் அறிஞர் தாவீது அடிகள். கி.மு.100ஆம் ஆண்டளவில் தோன்றிய கலித்தொகை, குறுந்தொகை போன்ற நூல்களில்
 
 
 

வரும் யாழ் என்ற சொற்கள் காதலன் காதலியை, தோழன் தோழியை அழைப்பதாக வருகின்றது என்றும், எனவே தமிழ் யாழ் என்ற சொற்களி லிருந்துதான் சிங்கள யாழுவ (yaaluwa) பிறந்தது என்றும் இங்ங்ணம் 4000 பதங்கள் சிங்களத்திற்கும், தமிழிற்கும் பொதுவானவை என்பதை அறிஞரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியுள்ளார்.
யாழ். நூலகமும் தாவீது அழகளும்
1981.06.01 நடு இரவில் அப்போதுள்ள யாழ். நூலகம் விலைமதிப்புக்குரிய 97000 நூல்களுடன் தீக்கிரையாக்கப்பட்டது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மேன்மாடிக் கட்டித்திலுள்ள மேற்குப் பக்கம் அறையில் வாழ்ந்து கொண்டுடிருந்த 74 வயதுடைய தாவீது அடிகள் இதனைக் கண்ணுற்றதும் பேரதிர்ச்சியினால் உயிர் துறந்தார். யாழ். நூலகத்தை உருவாக்கினாலும் , நடமாடிய பல்கலைக்கழகமாகிய தாவீது அடிகளை யாரால் உருவாக்க முடியும்?
albuanos (Our Obligation)
பிதாலோங், தாவீது அடிகள் ஆகிய பேரறிஞர்களின் ஆண்மா சாந்திபெற, யாழ். நூலகம் உயிரூட்டம்பெற இலங்கை அரசும், தமிழ் மக்களும் பங்கெடுப்பது முக்கிய கடமையாகும்.
யாழ். நூலகத்தில் ஒரு பகுதியில் ஆய்வு அகம் உருவாக்கப்பட்டு, நல்லூர் சுவாமி ஞானப் பிரகாசர், தமிழ்த்தூது கலாநிதி தாவீது அடிகள் ஆகியோரின் சகல ஆய்வு நூல்களும், ஏனைய அறிஞர்களின் ஆய்வுக்குரிய நூல்களும் இடம்பெறச் செய்வதனால் தாவீதின் பணி தொடர வழி பிறக்கும். தேசிய ஒருமைப்பாட்டிற்கு உழைத்துப் பலியான தாவீது அடிகளைக் கெளரவித்து அரசு முத்திரை வெளியிட வேண்டும். யாழ். பல்கலைக் கழகம் புத்தி ஜீவிகளின் குழு மூலம் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி முற்றுப்பெற வழி செய்வது தமிழ் அன்னைக்குச் செய்யும் முக்கிய பணியாகும்
உண்மை, நீதி, சமாதானம் மலர்க!
துரை.ஆரோக்கியதாசன் முன்னாள் பிரதி அதிபர், ப.ஆ.க

Page 10
6)ණhයක්y_6) - -
ஆண்டு தோறும் நம் நாட்டில் நடக்கிறது அரும் பெரும் சாதனை
கோதுமை மா விலை ஏறும் அதைத் தொடர்ந்து பானின் விலை ஏறும்
ஏழை மக்கள் அங்கலாய்ப்பார்கள் போல் மாவின் விலை ஏறும் பாலகர்கள் தவிப்பார்கள் தாய்மார் ஒப்பாளி வைப்பார்கள்
பெட்ரோலின் விலை ஏறும் அதைத் தொடர்து பயணக் கட்டணங்கள் ஏறும் பயணிகள் தவிப்பார்கள் தேங்காய் விலை ஏறும் வீட்டிலுள்ளோர் தலையில் கைவைப்பார்கள் கோடிக் கணக்கான மக்களைப் பாதிக்கிறது இந்த விலை ஏற்றம் பற்றி == எமது தலைவர்கள் மெளனம் சாதிப்பது
வேடிக்கை வெப்பிசாரம் இந்த விலைகள் ஏன் ஏறுகின்றன? விெலை ஏற்றத்துக்கான காரணம் என்ன?
இந்த விலை ஏற்றத்திற்கும் நாட்டின் தலைவர்களுக்கும் சம்பந்தமில்லையா?
தேசப்பற்றுள்ள தலைவர்கள் என்றால் மக்களைப் பாதிக்கும் இந்த விலை ஏற்றம் பற்றி எதுவும் - சொல்லாதாது ஏன்? = நாட்டின் தலைவருக்குத் துதிபாடுவதால்
இந்த விலையேற்றம் தெரியவில்லையா? = நமது தேசிய சாதனைகள் பற்றி
= மார்தட்டும் தலைவர்கள் Eஇந்த அரும்பெரும் சாதனைகள் பற்றி மோர்தட்டிக் கொள்ளாதது ஏன்? E. அன்புமணி- ஆரையம்பதி-1
de 岔
 
 
 
 
 

கதலிக் என்ற கிரேக்கச் சொல்லின் அர்த்தம் பொது, உலகளாவியது எனலாம். கத்தோலிக்கம் என்ற சொல் இச் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமாகும். ம்ே நூற்றாண்டு முற் கூற்றில் அந்தியோக்கியா தூய இஞ்ஞாசியார் சிமிர்னா தலத்திருச்சபைக்கு எழுதிய மடலில் இச்சொல் முதன் முறையாகத் தோற்றம் பெற்றது. அம்மடலில் எமது பாவங்களுக்காகத் துன்பப்பட்ட மீட்பராம் இயேசுவின் உடல் தந்தையின் நன்மைத் தனத்தால் உயிர்ப்பிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ளாத திரிபுக் கொள்கையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இவ்வாறு குறிப்பிட்டுள்ளதை அவதானிக்கலாம். ஜெருசலேம் தூய சிறில் தனது மறைக்கல்வி மறையுரையில் கத்தோலிக்க திருச்சபை எதுவென்று தெளிவுபடுத்துவதைக் காணலாம். அவரது படிப்பினை கத்தோலிக்க திருச்சபை என்ற கருத்தாக்கம் பெறத் தெடங்கியதைக் குறிக்கிறது. இக்குறிப்பிட்ட பெயர் கடவுளின் ஒரே பேறான மகனாகிய இயேசுக் கிறிஸ்துவின் மணவாட்டியான தூய திருச்சபையைக் குறிக்கும் எனப் படிப்பித்தார். தூய அகுஸ்தீன், டொனாத திய பேதகத் திருச்சபையில் ஆயர் பெனாரியுசுக்கு வரைந்த மடலில் கத்தோலிக்கம் என்னும் சொல்லை திரிபுக் கொள்கையினரையும் திருச்சபையையும் வேறுபடுத்தி வரையறுக்கும் அர்த்தத் தில் எடுத்தாண்டுள்ளார். திருச்சபையில் கருவூலங்கள் பற்றிய திருச்சபையின் தொடக்க காலத் திருச்சபைத் தந்தையர்களான தூய அத்தனாசியுஸ் எழுதியதாக ஏற்ககப்பட்ட விசுவாச வாய்ப்பாட்டிலும் மற்றும் நாம் சொல்லும் நிசயா விசுவாச வாய்பாட்டிலும் திருச்சபை வரையறை செய்யும் அம்சங்களில் ஒன்றாகவே இச்சொல்வருகிறது.
13வது நூற்றாண்டில் திருச்சபையில் உருவான கிழக்கு மேற்கு என்ற பெரும் பிளவுக்குப் பின்னர் பொது என்ற அர்த்தம் அற்றுப்போய் கிழக்கத்திய பகுதித் திருச்சபைகளை மரபு மீறாத் திருச்சபைகள் எனவும் மேற்கத்தைய திருச்சபையை கத்தோலிக்க திருச்சபை எனவும் அழைக்கும் வழக்கம் உருவானது. 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சீர்திருத்த வாதப் பிளவுக்குப் பின் உரோமன் கத்தோலிக்கம் எனக் குறிப்பிடும் முறை வலுப் பெற்றது.
3)

Page 11
இறந்து விட்டார் என் அதனைத் தொடர்ந்து
போகலாம். இனி LDGOTai - குறை என்னவென்றால் அவரது இ படைப்புக்களுக்கு உரிய ஆதரவோ, ஆர்வமோ கிடைக்கப் பெறாததுதான், எழுதும் போது ஆதரவு கிடைக்காத
எழுதாமல் செய்து விடுவதுமுண்டு. எல்லோர் காது இனியவனைப் பொறுத்தவரையில் விடுகின்றன. இத எது எப்படி வந்தாலும் தனது தாக்கத்தினால் தி எண்ணங் 55 66 விட்டார்
இன்னும் எத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரலைத் தொடர்ந்து அவரின் அழு X குரல் இன்னும் மேலோங்குகின்றது.
எழுதும் எழுத்துகளுக்கு நண்பர்கள் கொடுக்கின்ற ஆர்வங் களே எழுதுகின்றவர்களை மேலும் எழுதத் தூண்டுகின்றன இதன் மறுதலையைப் பார்க்கும் போது v. அவர்கள் காட்டுகின்ற அலட்சியங்கள், உதாசீனங்கள் எழுதுகின்றவர்களை எழுதவிடாமல்மறைத்தும் விடுகின்றன. இனியவனின் இறுதி - "صممت ஊர்வல ஏற்பாடுகள் நிறைவேறு
இவைகள் கூட வரும் விதமாக ம்பி வாசிப்பார்கள்
யே. அதே போன்று ாக இருந்தாலும் ங்கள் சிறப்பாக
டுக்கப் பட்டன; ஆனால் பணியாற்ற வந்த இடத்திலே அவைகளை அவரால் கான முடியாமல் போனது பெரும் வேதனை தான். இறுதி இரங்கல் உரைகளிலே அழகான வர்த்தைகள் இனியவனை மொழியால் புகழ் பாடிக்கொண்
கரைந்து கொண்டிருந்தன. வாழும் களலு '? போது வாழ்த்த மறந்தவர்கள் யத்தில் ஏற்பட்ட மறைந்தபிறகு ରn\ 國 வதை நினைத்து டீரென மறைந்து இனியவனின் சகோதரிகள் அழுது ல 29வ59 புலம்பும் போது இனியவனின் இறுதி TTT ĉ595. [59001-NIČpoiT go6Iri 6j6otö 6upa5 ao [535 DJ ĝ5 ாங்கள் பெருகிக் தொடங்குகிறது.
து இன
O
யவனின்
ளும் ரங்கல் பாக்கள் னயோ. வாழும்

Page 12
பெண்கள் திருப் பீடத்துக்குள் ஆ செல்லுவதா? வேண்டவே வேண்டாம். பெண்கள் வாசகம் வாசிப்பதா? அபத்தம். é அப த த மி , , , ,
. திருச்சபையை
ച്ച\
s \4 யாளர்களா? கலி >S2A
கருணைப்பணி
யுகம் தொடங்கி விட்டது.
இது போன்ற கூப்பாடுகள் இன்றும் பரவலாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதாவது திருச்சபையில் சரி பாதி உறுப்பினர்களாக உள்ள பெண்கள் எதற்காக இவ்வாறு சில இடங்களில் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்படுகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது. புதிய மரபுகளும் புதிய சிந்தனைகளும் உருவாகி திருச்சபையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த விளைந்த இரண்டாம் வத்திக்கான் சங்கம் முன்வைத்த கருத்துகள் இன்று பெரும்பாலானோரைச் சென்றடையவில்லை என்பது
 
 
 
 
 
 
 

ஒன்றாகும்.
பெண் குருத்துவம் பற்றிப் பரவலாகப் பேசப்படும் இக் கால கட்டத்தில் பீடச் சிறுமிகளை அனுமதித்துள்ளது திருச்சபை. இதை ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர்கள் எத்தனை? எதற்காக இவர்கள் சிறிய மாற்றத்திற்கும் மாரடித்துப் புலம்புகின்றனர்? இயேசுவின் காலத்தில் யூத மரபு, பெண்களுக்குப் பல தடைகளை விதித்திருந் தாலும், இயேசு அனைத்துத் தடைகளையும் மீறி இறையாட்சிப் பணியில் பெண்களுக்குப் பங்களித்தார். (காண்- லூக் 8:1-3)
இறையாட்சிப் பணிக்காக இயேசு உருவாக்கிய இயக்கத்தில் பெண்களும் சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத் தக்கது. தொடக்கத் திருச்சபையில் திருத்துதர்களின் உடன் பணியாளர்களாகப் பெண்கள் செயற்பட்டனர். பிலிப்பி நகரில் லிதியா (திப 16:14:15,40) கொரிந்திலும் எபேசிலும் பிரிஸ்கா (உரோ 16:4) எயோதியா, சிந்திக்கா(பிலி 4:3) போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம். இவ்வாறு பெண்கள் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து பணியாற்றி வந்துள்ளனர்.
ஆயினும் அக்காலத்தில் நிலவிய சமூகப் பண்பாட்டுச் சூழலினால் பாதிக்கப்பட்ட திருச்சபைத் தலைவர்கள் பெண்களை ஓரங்கட்டத் தொடங்கினர். பெண்கள் திருச்சபையின் பணிகளில் பங்கேற்கத்
10)

Page 13
தடை செய்யப்பட்டனர் இருபதாம் நூற்றாண்டில்
ஏற்பட்ட பலவித மாற்றங்களுக்கும் ஏற்ப திருச்சபையும் தன்னை மாற்றியமைக்க முற்பட்டது. அத்தகைய முயற்சியின் கணிதான் இரண்டாம் வத்திக்கான் சங்கம். திருமுழுக்குப் பெற்ற அனைவரும் இறைமக்கள் சமூகமாகின்றனர். அவர்கள் இயேசுவின் முப்பணிகளில் பங்கு பெறுகின்றனர். இதையே புதிய திருச்சபைச் சட்டமும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவில் பெற்ற புதுப்பிறப்பின் காரணமாகக் கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவருக்குமிடையே மாண்பிலும் செயற்பாட்டிலும் உண்மையான சமத்துவம் நிலவுகிறது (திருச்சபைச் சட்டம் எண்208)
திருச்சபை ஆவியானவரால் இயக்கப்படும் சமூகம். தூய ஆவியானவர் எல்லார் மீதும் பொழியப்படுகின்றார். பாலின வேறுபாடின்றித் திருச்சபையில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆவியார் அருள் கொடைகளை வழங்குகிறார். (உரோ12:6- 8.1 கொரி 12:4-11) எனவே அனைவரும் தாங்கள் பெற்ற அருள் கொடைகளைப் பயன் படுத்தி இறை மக்கள் சமூகமாகிய திருச்சபையை உருவாக்கி வளர்க்க வேண்டும்.
இத்தகைய சிந்தனைகளின் அடிப்படையில் தான் வத்திக்கான் சங்கம் திருச்சபையின் பணிகளில் பெண்கள் பங்கேற்பதன் அவசியத்தை மிகத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டியது. இன்று சமூக வாழ்வு முழுவதிலும் பெண்கள் அதிகமதிகமாய் செயல் முறையில் பங்கு கொள்வதால் திருச்சபையின் பல்வேறு மறைத்தூதுப் பணிகளிலும் இவர்கள் அதிகம் பங்கு கொள்வது மிக இன்றியமையாதது. (பொது நிலையினரின் மறைத்தூதுப்பணி, எண் 9) இன்று திருச்சபையின் வாழ்விலும், பணியிலும், வழிபாடுகளிலும் பெண்களின் ஈடுபாடு மிகுந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். பங்கின்
%ਲੰ88ਲੰ
காற்றலை
ஒதுதமிழ் ஏதுசெய்ே
(1
 
 
 
 
 

அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெருவாரியாகப் பங்கெடுக்கும் பெண்களுக்கு, பங்கேற்பிலும், தலை மைத்துவத்திலும், முடிவெடுக்கும் நிலையிலும், பங்கு, மறைமாவட்டதிருச்சபையின் அமைப்புக் களிலும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஆண்களைப் போன்று சமவுரிமை பெறவேண்டும். பெண்களும் மறை ஆசிரியர்களாக, நற்கருணைப் பணியாளர்களாக, திருப்பீடப் பணியாளர்களாக உருவாக்கப்பட்டு பணியில் தங்களை அர்ப்பணிக்க வழி சமைக்க வேண்டும்
இன்று பல மறைமாவட்டங்களில், பல தலத்திருச்சபைகளில் பங்கேற்பு அமைப்புகளில், நிர்வாகப் பணிகளில் பெண்களுக்குப் போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர்களும் சம உரிமை பெற்று பணிபுரிய அழைக்கப்பட்வர்கள் என்ற கண்ணோக்கு முழுமை பெறவில்லை; பெண்களும் தாங்கள் ஒதுக்கப்பட்டதாக எண்ணி ஒதுங்கி இருக்கும் சூழலில் இருந்து முற்றிலுமாக விடுபடவில்லை. எனவே தலத்திருச்சபைகளில் பெண்களின் மேம்பாட்டுக்கான கொள்கைகளும் செயல் திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து பங்கேற்பு அமைப்புகளிலும் பெண்கள் பிரதிநிதித்துவம் 50 விழுக்காடுகளாவது இருக்க வேண்டும். பங்குகளில் குருக்களும் ஆண்- பெண் துறவியரும், பொதுநிலையினரும் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொண்டு இணைந்து பணியாற்றுவது காலத்தின் தேவையாகும்.
இறைவன் ஆண்களையும் பெண்களையும் சமமாகப் படைத்தார். எனவே திருச்சபையில் அனைத்துப் பணிகளிலும் ஆண்களும் , பெண்களும் சமமாக மதிக்கப்பட்டு,சம வாய்ப்புப் பெற்று உழைக்கும் போது இறையாட்சி மலரும்
அல்லவா?

Page 14
e தோ பாருங்கள் படர்ந்து விரிந்து கிளைத்து துளிர்த்து ஓங்கிய ஆலமரம்
சற்றுக் காதுகொடுங்கள் அழுகுரலொன்று கேட்கும் விம்மி வெந்து நெஞ்சு வெடித்து அழும ஈனககுரலது கேட்கிறதா..? நிச்சயம் கேட்கும் உங்களிடம் இதயம் இருந்தால் அதில் கொஞ்சம் ஈரம் இருந்தால்
உற்றுப் பாருங்கள் உறிஞ்சி உறிஞ்சி உருப்பெருத்த ஆலமரம் உள்ளே உருக்குலைந்த பனை வெளவாலின் மலச் பதுங்கியிருந்து பனைமரச்சுவட்டில் காலு சுற்றிப்படர்ந்து சுவடு தெரியாமல் அதைமூடி உறிஞ்சி உருக்குலைத்து தலைவிரித்து நிற்கும் தனி மரத்தினுள்ளே அடங்கி ஒடுங்கி அவலமாய் அழுகிறது அந்த மரம்.
விடியலுக்காய் விழுந்து விருட்சமாய் வளர்ந்து அடிமுதல் நுனிவரை
தாரை தந்திடவே தலைநிமிர்ந்த கற்பக
கவிஞர் பைந்த
பாண்டிருப்பு
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகுனியாய்க் கூனியாய் காக்கை வன்னியராய் எச்சில் பருக்கைக்காய் எலும்புத் துண்டுக்காய் வாய்பிளந்த பச்சோந்திகள் வட்டமிடும் வல்லூறுகள் கூடிக்கொக்கரிக்கும் காக்கைகள் ஊளையிடும் ஓநாய்கள் உருக்குலையும் உயிர்மூச்சுகள்
உயர்த்து உன்பார்வையை
படர்ந்து விரிந்த ஆலமரம்

Page 15
மாற்றத்திற்குப் பின் தமிழகம் எனும் தலைப்பில் R
9| . LDIT ri at5 6m5 தினக் குரலில் (24.05. 2011) எழுதிய கட்டு ரையில் தமிழ் நாட்டின் தற் போதைய முதலA மைச்சர் ஜெயல KA லிதா பற்றிக் குறிப்பிடு UAVÈ) مجھےیک கையில், அவர் (ஜெயலலிதா) \ZVS என்றைக்குமே தமிழின உணர்வுக்கு முன்னுரிமை அளித்தவரல்ல என்பதும், அவரைச் சுற்றியுள்ள சோ போன்றவர்களும் இதற்கு எதிரானவர்கள் என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்
என்று தெரிவித்துள்ளமை ஜெயலலிதா பற்றிய சரியான மதிப்பீடாகும்.
1948ம் ஆண்டு மாசி மாதம் 24ம் திகதி கர்நாடகத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜெயலலிதா வறுமை காரணமாகவே தனது தாயுடன் தமிழ் நாட்டில் காலடி எடுத்துவைத்தார். அந்த வறுமையே அவரைத் தொடர்ந்து படிக்க விடாமல் நடிப்புத் தொழிலில்
ஈடுபடச் செய்தது.
1965ல் வெண்ணிற ஆடை என்னும் பெயரில் பூரீதர் தயாரித்த ஆயிரத்தில் ஒருவன் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமான ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் இணைந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடையே இருந்த இந்த நெருக்கமான உறவு தான், 1977ல் தமிழ் நாட்டில் இடம் பெற்ற சட்டசபைத் தேர்த லில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதல அமைச் சரானதும்
அசிமுகவின் Z72 திமுر
* இந்தத் தற்
6l ér u ] Ꮆu fᎢ 60Ꭲ لڑ)$یج ܐܠ
sa NS நிகழ்வு ஜெயலலிதாவின் ( გეNo வாழி கையில் ஒரு பெரும்
\ಟ' திருப்பத்தை உண்டாக்கியது.
இந்தச் சூழ்நிலையில் 1987ல் எம்.ஜி.ஆர் حة
இறந்ததும் அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபடவே
அதன் ஓரணியின் தலைவராக ஜெயலலிதாவும்,
மற்றோர் அணியின் தலைவராக எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான வி.என் ஜானகியும் தெரிவு செய்யப்பட்டனர். எனினும், இவ்விருவரில் தமிழ் நாட்டின் முதல் பெண் முதல் அமைச்சர் என்னும் பெருமையை, ஒரு மாதத்திற் காவது கொண்டிருக்கும் வாய்ப்பு ஜானகிக்கே கிடைத்தது.
இது காரணமாகவே, ஆளுநர் ஆட்சிக்குள் தள்ளப்பட்ட தமிழ் நாட்டில் 1989ல் இடம் பெற்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருவெற்றி கண்டது. அதற்காக கலைஞர் வீடு சென்று அவரைப் பாராட்டியவர்களில் ஜானகியும் ஒருவர்.
கருணாநிதியின் ஆட்சி இரண்டாண்டுகளைக் கண்ட நிலையில் அவ்வாட்சி விடுதலைப் புலிகளுக்குச் சார்பானது எனும் காரணத்தைக் காட்டி அதனை மத்திய அரசு கலைத்து. மத்திய அரசில் அச்சமையம் காங்கிரஸ் இல்லாத போதும்,

Page 16
அச் சூழ்ச்சியின் சூத்திரதாரியாக ராஜீவ் காந்தியே இருந்தார் என்பது பலரும் அறிந்த செய்தி.
கருணாநிதி அரசு கலைக்கப்பட்ட பின்பு 1991ல் தேர்தல் பிரச்சரத்திற்காக ராஜிவ் காந்தி தமிழ் நாட்டிற்கு வந்தபோது எதிர் பாராத விதத்தில் அவர் கொல்லப்பட்டார். இதனால் உருவான அனுதாப அலையே ஜெயலலிதாவை தமிழ் நாட்டின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது.
அனுதாப அலையினால், தமிழ் நாட்டின் முதல் அமைச்சரான ஜெயலலிதா விடுதலைப் புலிகளின் முதல் எதிரியாகத் தன்னைப் பிரகடனம் செய்ததோடு ஈழத் தமிழர் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டுமென்று அவர் குரல் கொடுக்கவும் தவறவில்லை.
இந்திய வரலாற்றின் அடிப்படையில், தமிழ் நாட்டில் திராவிடருக்கும் ஆரியருக்கும் (பாரப்பனருக்கும்) இடையே தீராதபகை இருந்து வந்ததை நாம் அறிவோம். இதனை வெளிப்படையாகக் காட்டும் பொருட்டே பிராமணப் பெண்ணான ஜெயலலிதா திராவிடப் பாரம்பரியத்தில் ஊறித் திளைத்த கருணாநிதியைத் தனது ஜெண்மப் பகைவனாகவே கருதி அவருக்கெதிராகவே எப்போதும் செயற்பட்டார். இதற்கு துக்ளக் சோவும் அவர் போன்ற பிராமணர்கள் மட்டுமன்றி இந்து (Hindu) தினமலர் முதலான பார்ப்பனப் பத்திரிகைகளும் தம் முழு ஒத்துழைப் பையும் வழங்கின.
முப்பதுகளில் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பிராமணரான இராஜாஜி அவர்கள் திராவிடர்களைச் சிறுமைப்படுத்தும் விதத்தில் உருவாக்கிய குலக்கல்வித் திட்டத்தையும் பிராமணர்களின் ஏனைய ஆதிக்கச் செயற்பாடு
(
 

களையும் எதிர்த்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் செயற்பட்ட மையை மறவாத பிராமணர் கூட்டமே தம் இனத்தவரான ஜெயலலிதாவைப் "பயன்படுத்தி கருணநிதியை நடுஇரவில் கைது செய்து அவரை அவமானப் படுத்தியது.
ஜெயலலிதாவின் இந்த நடுநிசி மனித வேட்டைக்குப் பக்கபலமாகத் தமிழர்களும் இருந்தமையை எண்ணிப் பார்ப்பவர்களுக்கு ஆரியனான இராமன், திராவிடனான இராவணனுக்குஎதிராகப் போர் தொடுத்தவேளை அவனுக்குத் துணையாகச் சென்ற வானரர் என்னும் திராவிடர்களின் இழி செயல் நம் நினைவுக்கு வராமல் போகாது.
இந்தியாவின் முதல் பிரதமரும் வரலாற்றாய் வாளருமான பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்களின் பார்வையில் இராமாயணம் என்னும் இதிகாசம் அன்றைய ஆரிய-திராவிடப் போரையே உணர்த்தி நிற்கும். நேருவின் இந்தப் பார்வை சரியானது என நாம் கொள்வோமாயின் தமிழ் நாட்டில் ஆரியதிராவிட யுத்தம் இன்னும் முற்றுப் பெறவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
பிராமணப் பெண்ணான ஜெயலலிதாவின் இந்தப் பாரம்பரியத்தையும் அவரது குணநலன் களையும் புரிந்து கொள்ளாமல் அவர் ஈழத்தமிழ ருக்குக் கைகொடுப்பார் என நாம் நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். எனினும் இந்த உண்மையை இன்று எத்தனை பேர் ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள்?
இயல்பாகவே கருணாநிதியிடம் இருக்கும் தமிழ்ப்பற்றை அவரது குடும்பப்பற்று மறைத்து விட்டமையும் அவரது படுதோல்விக்கான காரணங்க ளில் ஒன்று என்பது உண்மையேயாயினும் ஜெயலலிதா வின் வெற்றி குறித்து நாம் சந்தோசப்படுவதில் அர்த்தமில்லை. ஏனெனில் எதிர்காலத்தில் அவருக்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்குமானால் காஷமீர் பிராமண வம்சத்தைச் சேர்ந்த ராஜிவ்காந்தியின் மனைவியான சோனியாவுடன் கைகோர்த்துக் கொண்டு ஈழத் தமிழரை ஒரு பிடி பிடிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம் அப்போது சீமான், வை. கோ, நெடுமாறன், பாண்டியன் ஆகிய தமிழ் நாட்டின் ஈழ ஆதரவாளர்கள் தம் பிழையை நினைத்து வருந்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்காது.
-வாகரைவாணன்.

Page 17
gിഞ്ഞ്.or(-=
தானும் படுக்கையில் கிடந்து துன்பப்படாமல், மற்றவர்களையும் துன்பப்படுத்தாமல் இயேசுவின் பெயரைத் தொடர்ந்து துதித்தபடியே என் அம்மா சென்று விட்டார். முடியாமல் மருத்துவமனைக்குச் செல்லும் வரையும் பிள்ளைகளுக்கு படிப்பிப்பதையும் சொல்லிக் கொடுப்பதையும் அவர் விடவில்லை.”
இவை கடந்த ஜூன் மாதம் 14ம் திகதி மறைந்த நம் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய திருமதி புவனேஸ்வரி ரீச்சர் பற்றி அவரது இளையமகன் எம்மிடம் அளித்த வாக்கு மூலம். இது எவ்வளவு உண்மை என்றுரீச்சர் அவர்களோடு பழகியவர்களுக்கும் அவரால் பயனடைந்தவர்களுக்கும் தெரியும்.
ஏறத்தாள இருபத்தைந்து ஆண்டுகளாக புவனேஸ்வரி ரீச்சர் அவர்களோடு பழகி யிருக்கிறேன், அவரிடம் இருந்த ஆற்றல் களை, அர்ப்பணிப்பை, பக்தியை, தமிழ்ப்பற்றை, கலைத் திறமைகளை ஓரளவு அறிந்து அனுபவித்தவன் பாடசலையிலும் சரி, பங்குத் தலங்களிலும் சரி ஏனைய பணித்தளங்களிலும் சரி எப்போதும் சுறுசுறுப் பாகவும் ஆர்வத்தோடும் அவர் பணிபுரிந்ததை பல
மாணவர்களும் ஆசிரியர் களும் இன்றும் கூறுகின்றனர். பாடசாலைப் பணியிலிருந்து அவர் ஒய்வு பெற்றபின்பும் கூட மாணவ மாணவியர் அவரைச் ஆழ்ந்து கொண்டே இருந்தனர். இது அவரது கற்பித்தல் திறனின் வெற்றி அன்றோ!
கல்விப் பணியோடு கலை ஆற்றலும் மிக் கவராக விளங்கிய அவர் பாடசாலை
மாணவர்களை வைத்து பல நாடகங்களை மேடையேற்றியவர். அதன் வழியாக பல நாடகக் கலைஞர்கள் உருவாகினர். மட்டக்களப்பில் உள்ள
 
 
 
 
 

கல்விப் பணியாளரும் நாடகக் கலைஞருமான ஒருவரை நாம் தொண்டன் சஞ்சிகைக்காகச் செவ்வி கண்டபோது தாம் பாடசாலைக் காலத்தில் புவனேஸ்வரி ரீச்சரின் நாடகங்களில் நடித்ததன் மூலமே இத்துறையில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டதாகக்
கூறினார். -
1980களுக்குப்பின் மட்டக்களப்பிலிருந்து கத்தோலிக்க வானொலி நிகழ்ச்சிகள் தயாரிக்க முனைந்தபோது அன்றுமுதல் உடல் நலமற்றுப் போன அண்மைக் காலம் வரை நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் நிகழ்ச்சிகளைத் தயாரித்தும் வானொலி நாடகங்களுக்குக் குரல் கொடுத்தும், நற்சிந்தனைகள் பலவற்றை வழங்கியும் எமக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பு எஞ் ஞான்றும் நாம் மறக்க முடியாதது. நிகழ்ச்சிகள்
தயாரிப்பதற்காக நாம் பலரிடம் கேட்டுத் திரிவதுண்டு. சிலர் ஏற்றுக்கொண்டு தயாரித்து வழங்குவர் ; வேறு சிலர் வேலைப் பளு,நேரமில்லை என்று கைவிரிப்பர். இன்னும் சிலர் செய்வதாக ஏற்றுக் கொண்டு விட்டு இறுதி நேரத்தில் கழுத்தறுப்பர். ஆனால் dਰ ( L60 தடவைகளில் நாம் கேட்காமல் எம்மைத் தேடிவந்து நிகழ்ச்சிகள் கேட்டு, தயாரித்து வழங்கிய பண்பாளர். எமது நிகழ்ச்சிகளில் அவர் காட்டிய ஆர்வமும், திறமையும் பலரதும் அவதானிப்
புக்குள்ளானது. அதன் காரணமாக கிழக்கில் தயாரிக்கப்பட்ட 'கிச்சான்’ என்ற
குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.
அதுபோல் நமது சஞ்சிகையான தொண்டன் விநியோகத்திலும் இறுதிவரை எம் மோடு துணைநின்றவர். இவ்வாறு அர்ப்பணிப்போடு தாமே

Page 18
தொண்டின் ே
முன்வந்து பணி செய்கின்றவர்களை இன்று காண்பதரிது. எல்லாவற்றிலும் இலாபம், வருமானம், கழிவுகள் என்று கணக்குப் பார்ப்பவர்கள் மலிந்து விட்ட உலகில் குடும்பப் பணிகள், நோய், முதுமை அனைத்துக்கும் மத்தியிலும் தம்மால் இயன்றதை ஆண்டவருக்கு, திருச்சபைக்குச் செய்யவேண்டும் என்ற துடிப்புடன் இறுதிவரை வாழ்ந்த அவரை தனக்கு இறைவன் வழங்கிய தாலந்துகளை ஒன்றுக்குப் பத்தாக - நூறாகப் பெருக்கி நல்ல ஊழியனே' என்று பாரட்டும் வண்ணம் வாழ்ந்த அவரை இறைவன் தாமே ஆசிர்வதித்து தம் வீட்டில் மகிழ்வோடு வரவேற்பார். அன்னாரது மறைவு திருச்சபைக்கு பேரிழப்பாகும். அதை நாம்
/
உலகப் படைப்பில் இறைவன் உருவாக்கிய உயிர்கள் யாவும் நல்லவையே. அல்லவை அவைகளில் இல்லை அத்தனை அம்சமாய் உயிர்க உருவாக்கினார் இறைவன் உருவாக்கம் ஒவ்வொன்று உயிர் கொடுத்தவர் உயிர் மூச்சையும் வழ உயிர் மூச்சுப் பெற்ற 然 பல்கிப் பெருகுங்கள் (၂ါ၉၈၊ தன் சாயல் கொடுத்து பகிர்வின் ஆரம்ப நிலையின் எடுத்தியம்பிய ஆண்டவர்
ஏமாந்து போனார்
பகிர்வில் மனிதன் வாழே ଶ୪i{ விரும்பிய இறைவன் சோர்ந்து போனார் திரும்புமிடமெல்லாம் சுயநலம். பொதுநலம், பிறநலம் கடுகளவும் காணாது கண்டு கண்கலங்கும் கடவுள்
கண்ணிர் வடிக்கின்றார்
பகிர்வு
(1
 
 
 
 
 
 
 
 
 
 
 

- ஜூலை 2011)
தனிப்பட்ட விதத்தில் மிக நன்றாகவே உணர்கிறோம்.
அவரிடம் கல்விபயின்ற, அவரால் உருவாக்கப்பட்ட,
அவரது பணிகளால் பயனடைந்த பலரது நெஞ்சிலும்
அவர் நீண்டகாலத்துக்கு நிலைத்திருப்பார்.
அன்னாரது பிரிவால் கலங்கி நிற்கும் அவரது
பிள்ளைகள், உறவினர்கள், மாணவர்கள்,மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அவரது ஆன்மா இறை சந்நிதியில் இனிதே
இளைப்பாற வேண்டுவோம்.
-மலர்வேந்தன்
நான் என்ற தனிமனித சிந்தனையும் எனக்கு என்ற தனிமனித புத்தியும் த்தியாய் விரட்டுகின்றது பகிர்வினை. பகிர்ந்து இல்லமதில், உள்ளமதில்
மதியுடன் வாழ வேண்டுமென சித்தம் கொண்ட இறைவன், இறுதிப் பகிர்வாய் தன் மகனை அனுப்பினார் இவ்வுலகிற்கு பாவம் கழுவப்பட்டது அதிலும் விசேடமாக க பாவம் கழுவப்பட்டது gচনতষ্ঠানটোগ্যান্ঠে கறை கழுவப்பட்டது இயற்கை. ஆனாலிங்கு ரத்தத்தால் கறை கழுவப்பட்டது எதனையும் யோசிக்காத மனிதன் இதனைப்பற்றி எண்ணாததும் விந்தையில்லை மனிதனும் கழுவினான்
பாவத்தையல்ல, தன்னிட முள்ள பகிர்வு எனும் பொது நலப் பண்பை
இன்றும் பகிர்வு விடையில்லா வினாவே?
SY
கியூரி

Page 19


Page 20
தெரிண்டின்
பார்வையிடக் கூடிய நிலையில் வெளிப்படையாக, ஒரு பொருள் அல்லது பொது மக்களுக்குப் பிரஸ்தாபிக்கும் செய்தியே விளம்பரமாகும். இவ்வாறு செய்திகளைப் பலரும் அறியச் செய்ய ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களையும், யுக்திகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான செலவுகளை விளம்பரம் மூலம் செய்திகளை அளிப்பவரே பொறுப்பேற்க வேண்டும்.
நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவை யில்லை அது தன்னைத்தானே விற்பனை செய்து கொள்ளும் என்பார்கள். ஆனாலும், போட்டியும், நவீன தொழில் நுட்ப சாதனங்களும், நவீன தொடர் பாடற் சாதனங்களும் துரிதவளர்ச்சியடைந்த இக்காலகட்டத்தில், விளம்பரம் இன்றேல் விற்பனை யில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது.
சந்தையில் புதிய பொருள் ஒன்றை அறிமுகப்படுத்த விளம்பரம் கட்டாயத்தேவை. பிற போட்டிப் பொருட்களுடன் ஒப்பிட்டுக் காட்ட விளம்பரம் தேவை, புதியபொருளைப் பயன்படுத்தும் விதத்தை விளக்க விளம்பரம் தேவை, வணிகப் பெயரை, வணிகக்குறியை நுகர்வோர் மனதிற் பதிய வைக்க விளம்பரம் தேவை, விலைக் குறைப்புகளை விளக்கிக் கூற விளம்பரம் தேவை, விளம்பரத்தி னாலேயே அனேக பொருட்கள் சந்தையில் நிலைத்து நிற்கின்றது.
விளம்பரத்தினால், உற்பத்தியாளர் மட்டு மல்ல, விற்பனையாளரும், நுகர்வோரும் உற்பத்தி நிறுவன முதலீட்டாளர்கள், ஊழியர்கள் என்போரும் விளம்பரத்தை மேற்கொள்ளும் முகவர் நிலையங் களும் முழுச்சமூகமும் நன்மை அடைகின்றன. மனிதரைப் போன்று பொருட்களுக்கும் வாழ்க்கைப் பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பொருளும் அதன் பிறப்பில் இருந்து இறப்பு வரை, சந்தைச் செயற்பாடுகளில் பல்வேறு போட்டிச் சூழ்நிலைகளுக் கேற்ப ஆறு பருவங்களைக் கடந்து செல்கின்றன. இந்த ஆறு பருவங்களிலும் எப்பருவத்தில் அதிகூடிய விளம்பரம் தேவை, எப்பருவத்தில் தேவையில்லை, ஒவ்வொரு பருவத்திலும் எவ்வாறான விளம்பரம் தேவை என்பதை முக்கியமாகக் கருத்திற் கொள்ளவேண்டும். பொருட்களின் ஆறு பருவங்களும்
வருமாறு:
 

. 91.5upéist' Ugbo Lib (Introductoryt stage) ... 6. Grifiété LJU56) Lib (Growth or consumers accetance stage) . (pg5 iété Uqba Lib (Maturity stage)
bloop6 u(b6) Lib (Saturation Stage) சரிவுப் பருவம் .. Lipóö56öölöëölö U(blö (Abandonment Stage)
(Declining Stage)
l
2
3
4.
5
6
இங்கு அறிமுக காலத்தில் விளம்பரம் அதிகம் தேவை. எனவே இக்கால கட்டத்தில் செலவுகள் அதிகம். வளர்ச்சிக் காலத்தில் நுகர்வோர் பொருளைத் தேடி வணிகப் பெயரைக் கேட்டு வாங்குவார்கள். பின்பு பல்வேறு சந்தைப் போட்டிகள் காரணமாக பொருள் வீழ்ச்சியடையும் காலகட்டத்தில் தொழில் நுட்பமாற்றங்களுக்கேற்ப பொருள் மீளமைக்கப்பட்டு பல மாற்றங்களுடன் வெளிவரும். அப்போது மாற்றங்களை வலியுறுத்த விளம்பரம் நிச்சயந் தேவை. சரிவேற்பட்டபின்பு விளம்பரம் செய்து பிரயோசனமில்லை. பொருளை நீக்கி விட்டு புதிய பொருள் உற்பத்தியில் இறங்குவதே சிறந்தது. இவ்வாறு வீழ்ச்சிகள் வியாபாரத்தில் ஏற்படும் என்பதைக் கருத்திற் கொண்டு, ஒரு நிறுவனம் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதால் ஒரு பொருள் வீழ்ச்சி அடைந்தாலும், ஏனைய பொருட்கள் இலாபத்தை ஈட்டிக் கொடுத்து ஈடுசெய்து விடும்.
விளம்பரத்தின் நோக்கங்களைச் சீர்தூக்கிப் பார்ப்போம்: 1. பொருட்களுக்கான அடிப்படைத் தேவையை உருவாக்குதல் 2. விலை மாற்றம் பற்றி அறிவித்தல் 3. பொருள் சந்தையில் விற்பனைக்குத் தயார் என்ற நிலையை அறிவித்தல்

Page 21
தொண்டின் 4. வணிகப் பெயர் (Brand Name) பற்றி அறிவித்தல் வணிகப் பெயரை மனதில் நிலைத்திருக்கச் செய்தல் உதாரணம் சிங்கர்- பிலிப்- போட்கார்- SRபற்பசை 5. புதிய பொருளின் தன்மைகள்- விலைபற்றி அறிவித்தல் 6.சில்லறை விற்பனையாளர்களுக்குச் சிரமத்தைக் குறைத்து விற்பனையைத் தூண்டுதல். 7. கம்பனிக்கு நற்பெயரை ஏற்படுத்தல் 8. சந்தையில் நிறுவனத்தின் பங்கை உயர்த்தல் 9. பொருட்களின் புதிய மாற்றம், புதிய பயன் பாடுகளை வலியுறுத்தல் 10. புதிய சந்தைகளுள் நுழைதல் 11. வெளிநாட்டு வாணிபத்தைப் பெருக்கல் 12. தற்போதைய சந்தைப் பங்கைத் தக்க வைத்தல் 13. போட்டியாளரின் விற்பனைத் திட்டங்களை முறியடித்தல் 14. பொருட்களை அடிக்கடி பயன்படுத்தத் தூண்டுதல் 15. தரமான பொருட்களை நுகர்வோர் பெறச் செய்தல். 16.பேரளவு உற்பத்திக்கு வித்திடல்.
விளம்பரமின்றி விற்பனை இல்லை என்பது
இருந்தாலும் எந்த விளம்பர சாதனங்களைத் தேர்த் தெடுப்பது? விளம்பர நகலை எவ்வாறு தயாரிப்பது? யாருக்காக விளம்பரம்? சிறுவர்க்கா? பெண்களுக்கா? ஆண்களுக்கா? என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்; செலவையும் கருத்திற் கொள்ள வேண்டும். பல்வேறுபட்ட விளம்பர சாதனங்கள் காணப்படுகின்றன. குறிப்பிட்ட சாதனத்தை தேர்ந் தெடுக்குமுன் நுகர்வோரின் தன்மை, விளம்பரச் செலவு, சந்தையின் அளவு போன்றவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும். Aidaஅப்படியானால் ஆங்கிலத்தில் விளம்பரநகலின் நோக்கங்கள் சுருக்கமாக
A- Attention என்பது, கவனத்தை ஈர்த்தல் 1- Interest என்பது ஆவலைத் தூண்டுதல் D- Desire என்பது வாங்கும் எண் ணத்தை உருவாக்குதல் A-Action என்பது வாங்க எடுக்கும் நடவடிக்கைகள்
விளம்பரம் செய்யும் போது எச்சாதனத்தின் ஊடாக விளம்பரம் செய்ய வேண்டும் மென்பதை கருத்திற் கொள்ள வேண்டும். எனவே விளம்பர சாதனங்களை நோக்குவோம்.
 

விளம்பரசாதனங்கள்
பத்திரிகை விளம்பரம் வானொலி விளம்பரம் திரைப்பட விளம்பரம் தொலைக்காட்சி விளம்பரம்
புராதன விளம்பர சாதனங்கள்
சுவரொட்டிகள்
பதாதைகள் (பனர்) மின் விளக்குகள் சுவர்களில் எழுதப்படும் விளம்பரம் வாகனங்களில் எழுதப்படும் விளம்பரம் சாலைகளில் பெரிதாகப் போடப்படும் வோட் பரிசூட் பலூன்விளம்பரம்
துண்டுப்பிரசுரம்
சஞ்சிகை விளம்பரம்
6. பொருள்வாங்கும் இடங்களில் செய்யப்படும் விளம்பரம் 7.உற்பத்திப் பொருட்களின் பொதிகளின் மேல் செய்யப்படும் விளம்பரம் .
அ . பொருளைக் கவர்சிகரமாகப் பொதியிடல் ஆ, கவர்ச்சிகரமாகப் பொதிகளை அடுக்கிவைத்தல்
8. காட்சி அறைகள்- அலங்காரப் பொம்மைகள்
அமைத்தல் - 9. உற்பத்திப் பொருட்கண்காட்சிகள் அமைத்து அதில் சோல்கள் அமைத்து செய்து காட்டல்
10.இன்னிசைக் கச்சேரிகள் நடத்தல்

Page 22
مصير
5ண்ணகி இலக்கிய விழாக் குழுவினர் நடாத்திய கண்ணகி இலக்கிய விழா-2011 கடந்த ஜூன் மாதம் 18,19 ஆகிய நாட்களில் மட்/மகாஜனக்
கல்லூரிக் கலை அரங்கில் நடைபெற்றது.
காலை மாலை இருவேளையும் நடைபெற்ற நிகழ்வுகள் உரையரங்கு, ஆய்வரங்கு, கலை அரங்கு என்னும் தலைப்புகளில் நடைபெற்றன. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், மற்றும் அரச உயர் அதிகாரிகள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு பங்களிப்புச் செய்தனர். குறிப்பாக கிழக்குப் பல்கலைக் கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம, மற்றும் யாழ் பல்கலைக் கழகம் போன்றவற்றிலிருந்து பேராசிரியர்கள்,
பீடாதிபதிகள் போன்றோர் கலந்துகொண்டனர்
கண்ணகி வழிபாடு, கண்ணகி இலக்கியங்கள் அவற்றின் தொன்மம், கிழக்கிலங்கை கலாசாரத்தில் கண்ணகியின் வகிபாகம் பற்றி யெல்லாம் இடம் பெற்ற ஆய்வுரைகள் பல புதிய தேடல்களையும், பார்வைகளையும் கொண்டிருந்த தோடு எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிகாட்டு வதாகவும் அமைந்திருந்தன.
 

சூழலுக்குப் பின் நீண்ட காலத்துக்குப் பினி னர் இத்தகைய ஒரு பெரு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது மட்டு
தருவதாகவும் அமைந் திருந்தது. அதேவேளை இத்தகைய ஒருபெருவிழாவு க்குப் போதுமான அளவு மக்கள் திரள் வந்து சேரவில் லையே என்ற கவலையும் எழாமல் இல்லை. இத்தகைய விழாக்களுக்கு இப்போதெல்லாம் பெருங்கூட்டம் கூடுவதில்லைதான் ஆனாலும் ஒரு விழாவின் பெறுமானத்துக்கேற்ப மக்கள் கலந்துகொள்ள வேண்டியது அவசிய மல்லவா? வழமையாக இது போன்ற விழாக்களுக்கு வருபவர்களை விட அதிகளவானோர் கலந்து கொண்டனர் என்பது ஓரளவு நிறைவைத் தருகின்றது. பல உரையாளர்கள், ஆய்வாளர்கள் தமது உரைகளில் சிறப்பான கருத்துகளை முன்வைத்த அதேவேளை சிலர் தமது உரைகளை சுவையாக வழங்கத் தெரியாதவர்களாகவும் தெரிந்த - தேடிய அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் திணித்துவிட நினைப்பவர்களாகவும் காணப்பட்டது அலுப்பைத் தந்தது. சில உயர் அதிகாரிகள் தெரியாத விடயங்களில் கால்வைத்து எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது எதைச் சொல்லுவது, என்று தெரியாமல் தள்ளாடியது வேடிக்கை பேசுவதை ஒழுங்காக ஆயத்தப்படுத்தி வரவேண்டாமா?
இந்த இடத்தில் இதைக் குறிப்பிட்டாக வேண்டும். தழிழ் நாட்டுப் பேச்சாளர்களிடமிருந்து நாம் கற்றுகொள்ள வேண்டிய ஒரு விடயம் உண்டு. எவ்வளவு முக்கியமான ஆழமான விடயங்களை பேசும் போது கூட நகைச்சுவையோடு ரசிக்க ரசிக்க பேசுகின்ற திறமை அவர்களுக்கு உண்டு. இத்தகைய ஆற்றல் நம்மவர்க்குக் குறைவுதான். ஆனால் அதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்
முடிவாக, நீண்ட நாட்களுக்குப்பின் ஒர் இலக்கிய விழாவை பெருமெடுப்பில் நடத்தி முடித் துள்ள கண்ணகி விழாக் குழுவினருக்கு பாராட்டுகள். ஒரு விழாவைத் திட்டமிடுவது ஒழுங்கமைப்பது, நடத்திமுடிப்பது என்பது எத்தனை கடினம், எவ்வளவு உழைப்பு என்பதை சம்மந்தப் பட்டவர்கள் நிச்சயம் உணர்ந்து கொள்வர். அந்தவகையில் விழாக்குழுவினரைப் பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்!
-இன்பம்
2O)

Page 23
6ෂ්mගණx_Offi
FRIGINGIEJ SIG
(சிறுகதை)
உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது பிச்சைக்காரக் கிழவி தேய்ந்து அறுந்து போன ஒற்றைச் செருப்பை கையில் எடுத்துக் கொண்டு சுடு வீதியில் துடித்த படியே வீதியோரத்தே புதிதாக முளைத்து நின்ற பளில் தரிப்பிடத்தினுள் வந்தாள். நட்ட கம்பிகளின் மேல் வளைந்து மலிவுத்தகர மொன்றைப் பொருத்தியிருந்தார்கள். எந்தப்பக்கம் வெயிலடித்தாலும் முழுதுமாக உள்ளே வெயில் தகிக்கும். எப்போதோ செத்துப் போன கிழவன், கிழவி ஞாபகார்த்த பஸ் தரிப்பிடமென்று விலை கூடிய விளம்பரப் பலகை தொங்கியது. புண்ணியம் தேட நினைப்பவர்களுக்கு இந்த விளம்பரம் எதுக்கோ “தங்கட பவிசு காட்ட செத்துப்போன சீவனுகள் ர பேரக் கூட தெருவுல போட்டு விக்கிறானுகள் நாசமாப் போவானுகள்’ திட்டினாள் கிழவி எனக்குள் சிரிப்பு. முன்னேயுள்ள பிள்ளையார் கோயில் ஒலிபெருக்கி
அகோரமாய்
 
 

ov 2011
அலறும் : எதிர் வீட்டு குமாரண்ணனுக்கு கொதி உச்சந்தலையில் ஏறும். என்னடா தம்பி புள்ளை யாருக்கு காது கேக் கா தெண்டா ஸ்பீக்கரப் போட்டு கத்துறானுகள், வயது போன காலத்தில நிம்மதியாக கிடக்கவும் வழியில்லாம. ஏங்கிக் குமைந்து, குறுகுறுத்து வெளிவரும் அவர் வார்த்தைகள், அப்போதும் எனக்குள் சிரிப்பு: பென்சனாகி நான்கு மாதங்கள் உருண்டுவிட்டன. ஞானியாகி விட்டது போன்ற உணர்வு முன்கேற்றைத் திறந்து திரும்பவும் சாத்தி கொழுக்கியை போடும் போது கடிதப்பெட்டியின் பின்புற துவாரத்தினூடாக வெள்ளைக் கடிதமொன்று எட்டிப் பார்த்தது.
கொஞ்சம் பரபரப்பு. கையில் செலவுக்குக் காசும் இல்ல. இன்னம் சுயவிபரக் கோவை கொத்துக் குறை வேலை முடியல்ல, அதால பென்சன் வரவுமில்ல. கடிதத்தைப் பிரித்தேன். காற்றுப் பரிபாலன சபையிடமிருந்து வந்திருந்தது. ஐயா. 99ம் இலக்க வீட்டில் வசிக்கும் தாங்கள் கடந்த மூன்று மாதங்களாகக் காற்றுக் கட்டணத்தை செலுத்தவில்லை. இது விடயமாக நேரடி விளக்கம் பெறுவ தற்காக எமது அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்கு சமூகம் தரவும்
திகதி, கையொப்பம், பதவி முத்திரை என்ற விபரங்களுடன் கூடிய கடிதத்தின் செய்தியிது.
மிகவும் பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாடு. ரெண்டே பிள்ளைகள். மூத்தவள் உயர் கல்வி, இளையவன் உயர்தரம். கடிதத்தை மடித்துக் கொண்டு இல்லாளைத் தேடினேன். மீண்டும் சிரிப்பு. வீட்டில் அவள் இல்லை, இல்லாத ாரணத்தால் அவள் இல்லாளே.
தண்ணிர் ஒரு மிடறு குடித்து விட்டு வெளியேறி பலவித இசைபாடும் ஈருருளியில் பயணித்து அந்த அலுவலகத் தினுள் நுழைந்து 'த். தம்பி. இங்க ஏ.ஓ ஆரு தம்பி’ அவன் காட்டிய அதிகாரியின்

Page 24
கடிதத்தை நிமிர்த்தி, விரித்து அவரிடம் நீட்டவும் பெரியவர் நீங்க இப்படிச் செய்யலாமா..? ஒரு நேர்மையான கவுமனிட் சேவண்ட் ஆக இருந்து பென்சன் எடுத்த நீங்க இப்படி அசமந்தமாக இருக்கலாமா. ? என்றார்
இ. இல்லத் தம்பி. தண்ணி பில்,கரண்ட் பில்,ரெலி போன் பில், இன்ர நெற் பில், என்ர சைக்கில் லைசன் எல்லாமே உரிய திகதிக்குள்ள கட்டிப் போடுவன். , அப்ப காற்று பில்ல மட்டும் ஏனய்யா மூணுமாசமா - Eகட்டல்ல. இஞ்ச பாருங்க كلية வீட்டில நீங்க நாலுபேர். ஒரு நாய், ரெண்டு பூனை, மூணு தென்னை, ரெண்டு விலாட் மா, கொல்லையில ஒரு முருங்கை ஒரு கறிவேப்பிலை இவ்வளவும் சுவாசிக் கிறியள் தானே இருபத்தி நாலு மணித் தி யாலமும் சுவாசம் நடக்குது, காற்றில இருக்கிற ஒட்சிசனப் பயன்படுத்துறிங்க. அத்தோட இந்த தென் னை, மா,
முருங் கையெல்லாம் ஒளித் தொகுப் புச் செய்ய காற்றில இருக்கிற காபனீரொட் சைட்ட பாவிக்குதுகள். பெரியவர் உங்களுக்கு எல்லாம் விளங்கும். காற்று மாசடையாம நாங்க எவ்வளவோ செய்யிறம். சூழல் பாதுகாப்பு, சூழல் சுத்தம், குப்பைகள் அகற்றுதல், நச்சுவாயுக் கழிவுகள் காற்றில் கலக்காம பாதுகாப்பது இப்பிடி ஏராளமான திட்டங்கள். இதுகள நடைமுறைப் படுத்த ஏற்படுற செலவுகளத் தானி பாவனையாளர்களிட்ட காற்றுக் கட்டணமாக அறவிடுறம். விளங்குதா. எல்லாம் விளங்குது. என்ர தவறுதான் தம்பி. கொஞ்சம் அவகாசம் தாங்க தம்பி. அடுத்த மாசத்துக்குள்ள கட்டிப் போடுவன். பெரியவர், வேறயாரெண்டாலும் உடனடி நடவடிகைதான். உங்களுக்காக பாக்கிறம்..ம்ம்ம். ம். ஒரு பதினைஞ்சு நாள் அவகாசம் தாறம். அதுக்குள்ள கட்டிப் போடுங்க. என்ன.. என்றார், வேறு வழியின்றி தலையை ஆட்டி விட்டு எழுந்தேன். வழமையான சுறுசுறுப்பு குறைந்து சோர்வு தொற்றிக் கொண்டது.
(2
 
 

தங்கை என்று பார்த்துப் பா
ாதது முப்பத்தாறு வயசிலதான் தாலிகட்டி அதோடே சுயத்தை இழந்தவன். பிள்ளைகள் படிப்பும் முடியவில்லை. என்ன செய்யலாம். பாஸ்கரன்ட
96565T
கடைக் கடன், தருமன்ட கடை அரிசிக் கடன், கைமாத்தாக வாங்கிய கடனுகள்..ம்ம். எப்படிச் சமாளிக்கலாம். சிந்தனையை எண் ஈருருளி குலைத்து பல விதமாக ஆறுதல் கூறிக் கொண்டே வந்தது, அதன் பாஷைதான் விளங்கவில்லை.
வீட்டுக் கேற் திறந்து கிடந்தது. இரண்டு உந்துருளிகள் வாசலில் நிற்க யாரோ தெரியாது என எண்ணிய படியே நுழைய. பென்சன் கிடைச்சுது ஒரு பொறுப்பில்லாமப் போச்சி தம்பி. சும்மா ஊர் அளந்து திரிய்து மனிசன். நீங்க இரியுங்க. என் இல்லாளின் அர்ச்சனை செவிப் பறையில் மோதியது. பொறுமை என்றது உள்மனம் e8. . . . . . ஆரு தம்பி என்றபடியே உள்ளிட்டேன் ஆ.வாங்கய்யா நாங்க ஒரு விசாரணைக்காக வந்திருக்கிறம். விசாரணையா என்ர வீட்டுல யாரும் ஒருவம்பு வழக்குக்கும் போறல்லை யே. ச்சே ச்சே. அப்பிடியெல்லாம் இல்ல. நாங்க சூரிய ஒளிப் பரிபாலன சபையில வேலை செய்யிற வெளிக்கள அதிகாரிகள். கடந்த மூணு மாசமா நீங்க ஒளிப்பாவனைக்கான கட்டணத்த கட்டல்ல. உங்கள விசாரிச்சி எச்சரிக்கை செய்யச் சொல்லி எங்கட ஒபிஸ் ஒடர். இடிக்குமேல் இடி விழுந்தது. லேசாக தலை சுழல்வது போல் தெரிகிறது. அது. வந்து.
2)

Page 25
தம்பி.நாங்க பெரிசாக ஒண்டும்.
ஐயா என்ன கதைக்கிறீங்க. பத்து பேச்
வளவு வீட்டில நாலுபேர். மரங்கள், செடிகளோட வளர்ப்புப் பிராணிகள், ஆரிய ஒளியிலதானே சீவிக்கிறியள். மேலாடையில இருந்து உள்ளாடை வரைக்கும் கழுவிக் காய வைக்கிறியள், ஊற வச்ச பச்சரிசி தொடக்கம் பொச்சி மட்டை வரைக்கும் சூரிய ஒளியிலதான் காயுது. மனத்துப் போன சோத்தக் கூட வெய்யில்ல காயவெச்சி எடுக்கிறியள், உங்கட மனைவி, மகள் கிழமையில ரெண்டு தரம் முழுகிப்போட்டு சூரிய ஒளியில்தான் கொண்டைய உலர்த்துகினம், ஒளியாக மட்டுமில்லாம வெப்பத்துக்காகவும் கூட நீங்க ஆரிய ஒளியப் பாவிக்கிறீங்க. கட்டணத்த மட்டும் மூணு மாசமா விட்டுட்டீங்க. என்ன காரணம் . . . . வந்து. அப்பிடியில்லத் தம்பி.
ஐயா. குசினியில் பாவிக்கிற பீங்கான் கோப்பைகள் கழுவி வெளி முற்றத்து வெயில்ல போட்டுத்தான் எடுக்கிறா உங்கட மனைவி, நீங்க ஒரு கவுரமான மனிசன். நாட்டுப் பற்று வேணாமா. ஓசோன் படையில பாதிப்பு ஏற்படாமப் பாதுகாக்க, வளிமண்டல ஒளியையும் வெப்பத்தையும் சீராகப் பேணிக் கொள்ள நாங்க நாய்படாப்பாடு படுறம், நீங்க எல்லாத்தையும் அனுபவிச்சிப் போட்டு ஹாயா இருக்குறீங்க என்ன, ஐயோ அப்பிடியெல்லாம் இல்ல தம்பி வாறமாசம் எப்பிடியும் கட்டிப் போடுவன் என்ர பென்சனும் வரல்லத் தம்பி.
ஐயா நீங்க என்ன செய்வியளோ ஏது செய்வியளோ தெரியாது, பதினைஞ்சி நாளுக்குள்ள மொத்தக் கட்டணத்தையும் கட்டிப் போடுங்க.
நாங்க வாறம். போனார்கள்.
 
 
 

இடது பக்க நெஞ்சில் வலி பரவியது. குண்டூசியால் குத்துவது போன்ற வலி, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தேன். தொலைக் காட்சியில் பிறேக்கிங் நியூஸ், தற்போது செயற்படு நிலையில் உள்ள காற்றுக் கட்டணம் மேலும் விரிவு படுத்தப் படவுள்ளதாக காற்றுப் பரிவர்த்தனை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது வீடுகளில் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்கள் மேற் கொண்டு சிறு பிராணிகள், பூச்சிகளைக் கட்டுப் படுத்த வேண்டுமெனவும் அவ்வாறு செயற் படாவிட்டால் மிக நுணுக்கமான மைக்றோ ரெக் னோலஜி முறையில் வீடுகளில் வசிக்கும் பல்லி, எலி, கரப்பான், மூட்டைப் பூச்சிகள், எறும்பு, நுளம்புகள், பயன் படுத்தும் காற்றுக்கும் கூட கட்டணம் அறவிடப் படும் முறை அறிமுகமாகும் என்று அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார். தொடர்து தொலைக் காட்சி பார்க்க முடியவில்லை, நெஞ்சு வலி கூடியது அ. அ. அம்மா. அப்பா. அப்பா. அம்மா ஓடிவாங்கம்மா அப்பாவுக்கு என்ன மோ தெரியாது. கதறினாள் மகள்.
சலசலப்புகள் ஓட்டோ வந்தது. . . ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சோகம் அப்பிய கோலத்தில் கிடக்கிறேன். மூக்கில் ஒக்சிசன் குழாய்கள், யுனிட் அலகில் ஒட்சிசன் அளவு கணிக்கப்படும். இறைவா முடியுமானால் ஒரு 'பிளாங் செக் அனுப்பிவையுங்க” என்று மனம் வேண்டிக் கொள்கின்றது.
ெ 翌 டேவிட்,
பாண்டிருப்பு - 01, கல்முனை.

Page 26
&b6ë gjLDIT.... என்று சொல்லப்படும் மூச்சிளைப்பு நோய் இன்று பலரையும் பிடித்து
வாட்டுகிறது. சிறுவர்கள் பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று எல்லாத் தரப்பினரும் இந் நோய்க்கு ஆளாகின்றனர்
இந்நோயால் பாதிக்கப்பட்டவர் மூச்சுவிடப் படும் பாட்டைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாகவும் பயமாகவும் இருக்கும். வீஸ். வீஸ். என்ற சத்தத்துடன் மிகுந்த சிரமப்பட்டு மூச்சுவிடுவார்கள். நெஞ்சை இறுக்கியது போன்றும் இருக்கும் இந்நிலைமை சில நிமிங்களில் மாற்ற மடையலாம், மாதக்கணக்கிலும் நீடிக்கலாம். மூச்சுக் குழாயில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினால் இந்நோய் தோன்றுகின்றது. மூச்சுக் குழாயின் சுவர்பகுதி சுருங்கும் தன்மையினால் குறுகலாக மாறி, அதில் அதிக அளவில் சளி உற்பத்தியாகி மூச்சு விடுதல் சிரமமாகிறது. இது சிலருக்குக் கோடை காலத்தில் வியர்வையாலும், மழை பனிக்காலங்களினாலும், தூசியினாலும் அஜீரணக் கோளாறுகளினாலும் ஏற்படக் கூடியது! இது பரம்பரை வியாதியாகவும் வரலாம். மிகவும் பிடிவாத குணமுள்ள வியாதி என்று கூறப்படும் ஆஸ்துமா ஒரு முறை வந்து விட்டால்
 
 
 

தொடர்ந்துவர் வாய்ப்புகள் அதிகம்.
இன்று காற்றுமண்டலம் மிகவும் மாசுபட்டு வருவதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர். அதிகரித்த அபிவிருத்தி நடவடிக்கைகள், தெழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்துகள், காடழிப்புகள், கழிவுகள் போன்றவற்றால் காற்றுமண்டலம் எங்கும் தூகமயமாகி விட்டது. இதனால் மூச்சுக்குழல் சம்மந்தப்பட்ட நோய்களும் குறிப்பாக ஆஸ்துமா போன்ற நோய்களும் அதிகரித்து விட்டன. இருமல், சளி, மூச்சடைப்பு, இழுப்பு, களைப்பு, கம்மல், கரகரப்பு, மார்பில் இறுக்கம் என்று பல்வேறு பிரச்சினைகளால் ஆஸ்துமா நோயாளிகள் துன்பப்படுகின்றனர். இவற்றுக்கு ஆங்கில, ஆயுர் வேத, ஹோமியோபதி என பல்வேறு மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. எந்த மருந்துகளாலும் சுலபமாகக் குணப்படுத்த முடியாத ஒரு வியாதியாகவே இது விளங்குகிறது. மேலும் ஆங்கில வைத்திய மருந்துகளால் உடனடி ஆறுதலும் கூடவே பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.
பொதுவாக தூசி, துர்நாற்றம் இல்லாத இடங்களில் வசிப்பதும், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வதும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை நீக்குவதும் அவசியம். வயிறு முட்ட உண்ணாதிருப்பதும், இரவு உணவை நீக்குவதும் நன்று. காலை மாலை நாடிசுத் தி
எனப்படும் மூச்சுப் பயிற்சியை தகுந்தவர்களின் வழிகாட்டலுடன் செய்துவந்தால் சளியை அறுத்து, மூச்சுக் குழாய்களைச் சரிசெய்

Page 27
உடலில் உள்ள அனைத்து நோய்களையும் விரட்டி விடலாம். பத்மாசனம், புஜங்காசனம், உத்திஸ் டாசனம் விபரீதகரணி, மத்ஸ் ஆசனம். போன்ற ஆசனப்பயிற்சிகளும் ஆஸ்துமாவை அடித்து விரட்டும்.
சளியை அகற்ற சில கை மருந்துகள்: கருந்துளசி இலையைச் சாறு பிழிந்து இரண்டுவேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு வரலாம்
அல்லது சிறுகுறிஞ்சாவேர்ப் பொடி வெந்நீரில் கலந்து குடிக்கலாம்
 
 

அல்லது
மாதுளம் பழச்சாற்றை எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்துவரலாம்
அல்லது சுண்டைக்காயை உப்பு நீரில் ஊறவைத்து, காய வைத்து வறுத்துச் சாப்பிடலாம் ஆஸ்துமா மார்புசளி அகலும்
ട്രേ வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று திண்று சுடுநீர் பருகி வர நீங்கும்
-ஓங்காரச் சித்தன்
மாவட்டத்தின் புதிய ΘυμπΠός மன்ட விக்கிரமசிங்க அவர்கள்

Page 28
உரோமையகலாபனைகளினது
(Uрц2
இ) ரோமையக் கலாபனைகள் பத்து இடம் பெற்றன. இவற்றில் பத்தாவது கலாபனை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இது எந்தளவு கொடியதாய் இருந்ததோ அதற்கு மாற்றாக கிறிஸ்தவர்களுக்கு சுதந்திரம் கிடைத்ததும் இப் பத்தாவது கலாபனையினாலேயே ஆகும். இக் கலாபனையில் தியோக்கிளேசியன், பேரரசினைக் காப்பாற்ற முடியாது என்பதனால் நான்காகப் பிரித்து சிற்றரசர்களின் உதவியுடன் ஆட்சி செய்தான். காலப் போக்கில் கல்லேரியுவும், மாக்சிமியனும் கிறிஸ்தவர்களை கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். 303இல் இது மேலும் உக்கிரமடைந்தது. தப்பறையான பல கொள்கைகளையும் கொண்டு வந்தான். கிறிஸ்தவர்கள் உடன்படாததினால் பல வழி வகைகளில் துன்புறுத்த லுக்காளானார்கள். ஆட்சியில் பல வகையான முரண்பாடுகள் தோன்றவே 305 இல் கல்லேரியுவின் தொல்லையினால் பேரரசர் தியோக்கிளேசியனும், மக்சிமியனும் பதவி விலகினார்கள்.
எத்தகைய துன்புறுத்தல்கள் இடம் பெற்றாலும் நாளுக்கு நாள் கிறிஸ்தவர்கள் பெருகிக்கொண்டே சென்றனர். அழிவிற்குப் பதிலாய்க் கலாபனையால் திருச்சபை வளர்ச்சியே கண்டது. நாளடைவில் கல்லேரியு கொடிய நோயினால் பீடிக்கப்பட்டான். நோயில் இருந்து குணம் பெற கிறிஸ்தவர்களின் உதவியை நாடினான். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதால் எந்தவிதப் பயனும் இல்லை என்பதை உணர்ந்து 311ல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது எனக் கட்டளை பிறப்பித்தான். இதன் மூலம் கிறிஸ்தவர்கள் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்காமல் வழிபாடுகளில் ஒன்று கூடவும், வழிபாட்டு இடங்களை அமைக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் நாடுகடத்தப்பட்ட கிறிஸ்த வர்கள் மீண்டும் தம் சொந்த இடங்களுக்கு வந்தனர். பறிமுதலாக்கப்பட்ட உடைமைகள் யாவும் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இதன் மூலம் கிறிஸ்தவர்கள்
(
 
 
 
 
 
 

நிம்மதியாக வாழும் நிலைமை ஏற்பட்டது.
கலி லேரியுவின் மரணத்தை அடுத்து மக்சிமினுஸ், தயாலிசினியுஸ் என்ற சிற்றரசர்கள் ஆட்சி செய்து கிறிஸ்தவர்களை மீண்டும் துன்புறுத்தினார்கள். இருப்பினும் கொன்ஸ்தான்ஸ் குளோறின் மகன் கொன்ஸ் தாண்ஸ் தந்தை மரணத்தை அடுத்து ஆட்சிக்கு வந்ததினால் அவன் கிறிஸ்தவர்கள் மட்டில் தந்தையை பார்க்கிலும் அதிகம் அன்புவைத்திருந்தான். அதிகமாய் உதவிகளையும் செய்தான். இதன்ால் அவன் ஆட்சியில் அமைதி நிலவியது. இருப்பினும் இத்தாலியை ஆண்ட மாக் சென்சியுஸ் அரசியல் சூழ்ச்சியின் நிமித்தம், "கிறிஸ்தவர்கள் மட்டில் சகிப்புத்தன்மை காட்டினான். 312ல் ஒரு முக்கிய நிகழ்வு இடம் பெற்றது. சிற்றரசன் மாக்சென்சியுல் முழுஅரசிற்கும் அரசனாகவேண்டும் எனும் பேராசையால் கொண்ஸ்ரன்ரைனுக்கு எதிராகப் போர் தொடுத்தான் இதை அறிந்த கொண்ஸ்ரன்ரைன் 25000பேரைத் திரட்டிக் கொண்டு உரோமையை நெருங்குகையில் வானில் ஒளிமயமான சிலுவையையும் அதைச் சுற்றி இருந்த அடையாளத்தைக் கொண்டு நீ வெற்றி பெறுவாய் என எழுதப்பட்டிருப்பதையம் கண்டான். இதன் பொருள் விளங்காதிருந்த அரசனுக்கு இயேசு அன்றிரவு கனவில் தோன்றி படைவீரனின் கழுகுச் சின்னத்திற்குப் பதிலாக சிலுவை சின்னத்தைப் பயன் படுத்துமாறும் கூறினார். கொன்ஸரண்ரைனும் அதற்குப் பணிந்து அவ்வாறே செய்து போரில் மாபெரும் வெற்றியைப் பெற்றான்.
இவ்வெற்றியானது உரோமைய அஞ்ஞான உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவ் வெற்றியானது கிறிஸ்தவர்களின் கடவுள் உரோமையக் கடவுளுக்கெல்லாம் மேலானவர் என்பதைக் காட்டியது. தனது வெற்றியில் கிறிஸ்தவர்களின் கடவுளின் வலிமையைக் கண்ட கொன்ஸ்ரன்ரைன் இறைவனுக்கு நன்றி செலுத்தினான். உரோமையில் அவர் எழுப்பிய தன் சிலையின் கையில் சிலுவைச் சின்னத்தை வைத்தான். சிலையின் அடியிலும் சிலுவை அடையாளத்தால் நான் கொடுங்கோலன் பிடியிலிருந்து உங்கள் நகரை விடுவித்தேன் எனப் பொறிப்பித்தான். இதனால் அரசன் உரோமையில் அனைவராலும் வரவேற்கப்பட்டான். அவ்வேளை அமைக்கப்பட்ட வெற்றி வளைவினை இன்றும் நாம் காணலாம். இவ்வாறு கொன்ஸ்தாந்தின் மேற்குப் பகுதி அனைத்திற்கும் பேரரசரானார். 313ல் மக்சிமானுஸ் தோற்கடிக்கப்பட்டு உரோமயப் பேரரசின் கீழ்ப்பகுதிகளுக்கு லிசினியுஸ் பேரரசரானார். இதன் பின் கொன்ஸ்தாந்தின் லினிசியுசுடன் மிலான்நகரில் ஒரு மகாநாட்டைக் கூட்டி கூட்டாலோசனை செய்து வரலாற்றுப் புகழ்மிக்கதொரு சாசனத்தையும் ஏற்படுத்தினான். இதனால் உரேமையக்கலாபனை முற்றுப் பெற்றது. கிறிஸ்தவர்களுக்கு விடிவும் ஏற்பட்டது.
6)

Page 29
தெரிண்டின்ே
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்ததிகதி 15- 08 - 2011
விவிலியம் க
(எண்ணிக்ை (பொருத்தமான சொற்களைத் தெ
மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையி படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பய இடங்களை. ஆண்டவர் கட்ட படிப்படியாகத்தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவைே இராம்சேசிலிருந்து புறப்பட்டனர்: பாஸ்காவின் மறுநாள் பார்வையிலும் வெற்றிக்கை ஓங்கியவராய் வெளியேறின எல்லாத் தலைப்பேறுகளையும் அவர்கள் புதைத்து தெய்வங்கள் மேலும் ஆண்டவர் . இராம்சேசிலிருந்து புறப்பட்டுச் சுக்கோத்தில் பாளைய பாலைநிலத்தின் ஓரத்திலுள்ள ஏத்தாமில் பாளையமிற பாகல் செபோனுக்குக் கிழக்கே பிகதிரோத்துக்குத் அகிரோத்தின் முன்னிருந்து கிளம்பி அவர்கள் கடல் அவர்கள் ஏத்தாம் பாலை நிலத்தில் மூன்று நாள் பின்பு. புறப்பட்டு அவர்கள் ஏலிமுக் பேரீச்சை மரங்களும் இருந்தன. அவர்கள் அங்கே பால் செங்கடல் அருகில் பாளையம் இறங்கினர். பின்பு செ பாலை நிலத்தில் பாளையமிறங்கினர். அவர்கள் சீன பாளையம் இறங்கினர். அவர்கள் ஆலுசிலிருந்து சு மக்களுக்குக் குடிக்க. இல்லை. பின் நிலத்தில் பாளையமிறங்கினர். சினாய்ப் பாலை நிலத்தி பாளையமிறங்கினர். கிப்ரோத்து அத்தாவிலிருந்து அவர்கள். இருந்து ரித்மாவில் பாலை பயணமாகி ரிமோன் பாரேசில் பாளையம் இறங்கினர். பாளையம் இறங்கினர். லிப்னாவிலிருந்து புறப்பட்டு, அ அங்கிருந்து சென்று, கெகேலாதாவில் பாளையம் இ பாளையமிறங்கினர். அங்கிருந்து புறப்பட்டு அராதாவி புறப்பட்டு தாகாத்திலும் பின் அங்கிருந்து புறப்பட பாளையமிறங்கினர்.
விடைகள் : சீன், அட்சரோத்தில், இரிசாவில்,த மாரவிலிருந்து,நீதித்தீர்ப்பு, மோ
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதாக
s
27
 

has 33:1-28) ரிந்து இடைவெளிகளை நிரப்புக)
ல் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டை விட்டுப் பணம் செய்தபகுதிகள் இவையே. அவர்கள் புறப்பட்ட ளைப்படி படிப்படியாக எழுதிவைத்தார்; அவர்கள் ய: முதல் மாதம் பதினைந்தாம் நாள் அவர்கள் பில் இஸ்ரயேல் மக்கள் . அனைவரின் ார். ஆண்டவர் அவர்களுக்காகச் சாகடித்த தங்கள் க் கொண்டிருந்த போது இது நடந்தது. அவர்கள் o வழங்கினார். இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் மிறங்கினர். அவர்கள் சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப் ங்கினர். பின்அவர்கள் ஏத்தாமிலிருந்து பயணமாகிப் திரும்பி. முன் பாளையமிறங்கினர் ம் நடுவே பாலை நிலத்துக்குள் கடந்து சென்றனர், பயணம் செய்து மாராவில் பாளையம் இறங்கினர் கு வந்தனர். ஏலிமில் பன்னிரு நீரூற்றுகளும் எழுபது விளயமிறங்கினர். அவர்கள் ஏலிமிலிருந்து பயணமாகிச் Fங்கடலிலிருந்து கிளம்பி அவர்கள் . ன் பாலை நிலத்திலிருந்து புறப்பட்டுத் தொப்காவில் கிளம்பி இரபிதிமில் பாளையம் இறங்கினர். அங்கு அவர்கள் இரபிதிமிலிருந்து புறப்பட்டு சீனாய்ப்பாலை லிருந்து பயணமாகி, அவர்கள் கிப்ரோத்து அத்தாவில் கிளம்பி அட்சரோத்தில் பாளையம் இறங்கினர் ாயம் இறங்கினர். பின் அவர்கள் ரித்மாவிலிருந்து ரிமோன் பாரேசிலிருந்து கிளம்பி அவர்கள் லிப்னாவில் வர்கள். பாளையம் இறங்கினர். பின்னர் இறங்கினர். அங்கிருந்து சென்று செபேர் மலையில் லும், பின் பயணமாகி மக்கலோத்திலும் அங்கிருந்து ட்டு தெராகிலும் பின் பயணமாகி .
நண்ணிர்,எகிப்த்தியர், மிக்தோலுக்கு, மித்காவில்,
BF
அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது

Page 30
பரிசுப் போட்டி しつイびイZイエイZイでイ乙イア
7 - அறிவை வளர்ப்போம் ܢܬ
(பொருத்தமான சொற்களின் கீழ் அடி
1. ஒலிம்பிக் கொடியிலுள்ள ஐந்து வளை (ஐந்து கண்டங்கள், ஐந்து கடல்கள், ஐ
2. 'மாண்டரின் என்பது?
(ஒருவாத்தியம், ஒருமொழி, ஒருபொரு
3. ஒட்டக் கூத்தர் என்பவர்?
(ஒரு கூத்தாடி, ஓர் உழவர், ஒரு புலவ
4. பால்வழி என்பது?
(ஒர் அண்டம், ஒருபாதை, பாலில் செ
5 “கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ (ஒளவையார், ஆண்டாள், காரைக்கால்
6. மதிமுகம் என்பது
(உம்மைத் தொகை, அன்மொழித்தொ6
விவிலிய
SL LL SL LSL LSL LS L S LS L S L LSSS LSL L SL L L L L S 0S S 0L CL S YS L LLLL L 0L 0L 0 0L 0L 0S Y 0 0 0 0L L 0L 0 S SL L S S S S S S S S
 

ந்து ஒலிம்பிக் விதிகள்)
ள்)
பர் )
ப்யப்படும் ஒர் உணவு)
’ இப்பாடலைப் பாடியவர் ) அம்மையார்)
கை, உவமைத்தொதை)
S L L L LS S SL S SL S LSSL S 0S S 0L CL L C C 0L 0L LLLL C C CC C Y 0L CSL C CL C LLL 0 C C 0 0C 0C S C 0SL 0LL 0 0 0 0C C 0L C C 0C 0 CL 0 0 0L C 0
அனுப்பவேண்டிய முகவரி: ம் கற்போம் / அறிவை வளர்ப்போம்- 99
தொண்டன் அ. பெ. எண் - 44 மட்டக்களப்பு.

Page 31
KS,
GS
キ然
(8 p d
Пliunio ćњELип
எலயாசர், ஆண்டவர், உவமையாக, பே
எபுன்னேயின், மூதாதையருக்கு,
dslao IIIñBL
1) எல்லாளன் 2) கலிலியோ 4) ஜெயகாந்தன் 5) வழியில் பயம்
பரிசுகள் - அனுசரணை; அரும்
இரு பிரிவுகளுக்கும் சரியான விடைகை
> லிவன்ஸ்டன் சுசந்திக்கா )
இல:1207, ஜேம்ஸ் வீதி, பாலையூற்று, திருகோணமலை
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
> A.K.குளோறியஸ்
ஐ.ஒ.சி. சீனக்குடா விடுதி,
திருகோணமலை
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= ) இரண்டாம் ரீனா நொய்லின் மாட்டில் வ.நிஷான
மாயழகு வீதி, 110 Aਰg5 அக்கரைப்பற்று-09 மகிஞர்மு களுவாஞ்
போட்டியில் பங்குகொண்ட அனை6

t S)
ாம் - B7 விடைகள்
ாருக்கு, காதேசுபர்னேயாவில், இஸ்ரயேல்,
நகர்களையும், உரிமைச்சொத்தை
flib - 597 Golfln(Léň
3) மூன்றாவது கோள் Sருக்கும் 6) பெயரெச்சம்
ர்தந்தை. அண்ரனி குருஸ் CRS ள எழுதி ரூபா 300/= பரிசு பெறுவோர்
டிலான் கிஷோ ஜெரூசன் ஆனந்தி வாசம், மாதா கோவில் வீதி, பெரியகல்லாறு-01
- எழுதி ரூபா 200/= பரிசு பெறுவோர்
> யூ நியோன்,
இல.09, சாமித்தம்பி வீதி, ஆரையம்பதி, கி.மா.
ம் தீட்டும் போட்டி 49 முடிவுகள்
Lunfair - 300/= ) 3ð Lunfasi - 200/=
유 சு.சஷ்னியா
சகாயமாதா வீதி, 8/45, 1ம் குறுக்கு, ാങ്ങിങ്ങ് , செல்வநாயகம் வீதி, சிக்குடி, மட்டக்களப்பு.
வருக்கும் எமது நன்றி. (ஆ - ர்)
ミ条

Page 32
இலங்கை வானொ கத்தோலிக்க நிக
-ജൂലൈ- ജ
கத்தோலிக்க நற்சிந்தனை - க
நாள்: 30, 31, 0, 02 - திரு. ஆ 03, 04, 05 - அருள்த 13, 14, 15, 16 - திரு. டெ 17, 18, 19 அருள்த 27, 28, 29, 30 - திரு. ஜே
சிறுவர் உலகம் - மாலை 7.00
நாள்:- 09, 23
كبرى
பாட்டு, கதை, செபம், பாடல்க்
புதிய உலகம் - மாலை 7.00 ம நாள்- 07, 21 -
இறை வார்த்தை, வழிபா ஈழத்தை அளந்த புனிதன்
சிந்தனை உரை, !
-
நிகழ்ச்சித் தொகுப்பு : ό
மலர்வேந்தன்
aa aa aa aa aa aa aa aa aa :
 

லி தேசிய சேவையில் கழ்ச்சிகள் - தமிழ்
O O A)YS கஸ்ட் 2011 —"
ாலை 5.55 மணி
நனந்தா ஏ.ஜி. ராஜேந்திரம் ந்தை கி. அன்னதாஸ்
ஸ்லியோ வாஸ் - AYS நீகை என்.சி. 6ó† நதை ತೆಗ್ಡೆ ரத
3. శ్మీ" s )خيLD630f
"صبر لألم.
ஸ்" இன்றி
இன்ஜி
ணி
டு, திருச்சபைச் செய்திகள், - காவியம், வேரைத்தேடி, A)YS பாடல்கள் இன்னும். R
A})
தாடர்பு: சமூகத் சிதாடர்பு நிலையம் തു്
49.6lur. 6 Tarsi - g, மட்டக்களப்பு.