கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆரோக்கிய வாழ்வுக்கு சில ஆலோசனைகள்

Page 1
∞) *
|
 


Page 2

ஆரோக்கில வாழ்வுக்குச்
#င်္႔@)
ஆலோசனேகள்
85 32
தொகுப்பு:
டாக்டர் வி. ரி. இளங்கோவன் சூலிகை மருத்துவ ஐ நா தொண்டர்-பிலிப்பைன்ஸ் ஆசிரியர்: "மூலிகை")
தேதுே ീബ്&' " நூலக சேவை i fjar தீப்பானது O/
மூலிகை
"சிகரம்
புங்குடுதீவு - 3

Page 3
"மூலிகை" வெளியீடு : எண் : 2
முதற்பதிப்பு : அக்டோபர் 2 1986
பதிப்பாசிரியருக்கு
层_
مع ملك
শ্ৰেণী:80 ছেেড় যায় : 1.0/-
sjš5 (8-r. :
ஜீ சுப்பிரமணிய அச்சகம் 63, B.A. 5 to a 689,
ឃប្រវែង៦
 
 
 
 
 

முன்னுரை சிலக சேை
ஆரோக்கியமான வாழ்வே அனைவரும் விரும்புவதாகும். உடலிலும், உள்ளத்திலும் நோயற்று வாழ்வதே தனி மனிதன் விரும்பும் ஆரோக்கியமாகும்.
மனிதன் ஆரோக்கியமாகவும், சுற்ருடல் ஆரோக்கிய மாசவும், சமுதாயம் ஆரோக்கியமாகவும், நாடு ஆரோக் கியமாகவும் இருப்பதே உண்மையில் பூரண ஆரோக் கியமாகும். இவை ஒவ்வொன்றினது ஆரோக்கியமும் ஒவ் வொன்றுடன் தொடர்புடைய தாகும். ஒன்றினது ஆரோக் கியம் கெட்டால் மற்றையவற்றினது ஆரோக்கியமும் பாதிப்படையும். எனவே, பூரண ஆரோக்கிய வாழ்வு என் னும்போது தனிமனிதன், சுற்ருடல், சமுதாயம், நாடு இவையாவும் தொடர்புடைய ஆரோக்கிய வாழ்வையே குறிக்கும்,
இன்று எமது நிலை என்ன ? சகல ஆரோக்கியமும் சீரழிவு நிலையை எட்டியுள்ளன. இந்த வேளையில் நாம் இந்தித்துச் செயற்படவேண்டியது அவசியமாகும் பூரண ஆரோக்கியத்தை நாம் பெற்றுக்கொள்ள சகல வழிகளிலும் முன்னின்று உழைக்க வேண்டும்.
ஒன விடுதலைப் போராட்ட காலத்திலும், விடுதலைக்குப் பின் கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்திலும் இனப் பெருந் தலைவன் அந்நாட்டின் சகல துறைகளிலும் செலுத்திய கவ ஐம், வழிகாட்டுதல்கள் நாம் சிந்திக்கத்தக்கன, குறிப் பாக மருத்துவத் துறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் கவனிக்கத்தக்கன "வெறுங்கால் வைத்தியர்களை (Bar 80ot Doctors) வீடு தோறும் அனுப்பி பிணி தீர்க்கும் நடை மூறை அங்கு அமுல்படுத்தப்பட்டது. மூலிகை மருத்துவ ஐம், "அக்கு பங்ஷர் மருத்துவமும் அங்கு வளர்ச்சி கண்டன.
65132

Page 4
iV
எம் மூதாதையர் காலத்திலும் சித்த ஆயுர்வேத வைத் தியர்கள் வீடு தோறும் சென்று பிணி தீர்க்கும் பணி செய் தனர் என்கிருேம். ஆனல் இன்று நிலைமை.? சகல துறை களிலும் நாம் மேற்கத்தைய வழிமுறைகளைப் பின்பற்ற தள்ளப்பட்டுள்ளோம். தலையிடித்தால் கூட பனடோல் தேடி கடைக்கு ஒடும் நிலையே இன்றைய தாய்மாரின் நிலை
பாகிவிட்டது,
கிராமங்களில் மக்கள் சிறுபிணிகளைத் தாமே வழிவழி வந்த அனுபவ வைத்தியமுறை கொண்டு செலவின்றித் தீர்த்துக்கொண்ட காலம் அருகி விட்டது.
நெருக்கடி மிக்க இன்றைய நிலைமையில், மேலும் மேலும் கஷ்டங்கள் எம்மை நோக்கி வரும் வேளையில், நவீன மருத்துவ வசதிகள் கிடைப்பது அரிதாகும் வேளையில் கூட தாம் தாக்குப் பிடிக்க வேண்டும் அல்லவா ? சொந்தக் காலில் நின்று தாக்குப் பிடித்து, நாம் பூரண ஆரோக்கி பத்தைப் பெற்றுக்கொள்ள, நல்வாழ்வு வாழ சுகாதார - மருத்துவ அறிவுரைகளையும் ஒரளவேனும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் உதவும் பொருட்டு, மருத்துவ ஆலோசனைகள் அறிவுரைகள் சிலவற்றை உள்ளடக்கி வெளி வரும் இந்நூல் நம் தமிழ் மக்களுக்கு நயம் பயக்குமென
தீவகத்தின் மூத்த வைத்தியப் பரம்பரையைச் சேர்ந் தவரும், புங்குடுதீவு கிராமசபை ஆயுர்வேத வைத்தியசாலை இயின் ஸ்தாபக வைத்தியரும், பல்லாண்டு காலம் பல்லாயி ரம் மக்கள் பிணி போக்கிய பண்பாளரும், சிறந்த சமூக சேவையாளரும், மூலிகை மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் ஆலோசகர்களில் ஒருவருமான டாக்டர் வி. கே. குணரத் தினசிங்கம் ஜே. பி. அவர்களின் நினைவாக, இந்நூலேத் தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- டாக்டர் வி. ரி. இளங்கோவன் (ஆசிரியர் "மூலிகை')

டாக்டீர் வி. கே. குணரத்தினசிங்கம் ஜே. பி.
ஒத்த மருத்துவ கலாநிதி சீர்பெறு சமாதான நீதவான், வித்தகன் - குண ரத்தினசிங்கம் விதைத்த நற்பணி விளங்கிடும் நாள்தோறும் நின்று.

Page 5

ஆரோக்கிய வாழ்வுக் சில ஆலோசனைகள்
隱 ே
ஆரோக்கியமற்ற சமூகத்தால் ஒரு புதிய சமுதாயத் தைப் படைத்திட முடியாது. ஆரோக்கியம் இல்லாமற் போஞல், ஒருவனுடைய வாழ்க்கையில் பேரும்பாலும் யாதொரு பயனுமில்லை. வாழ்க்கையால் உண்டாகும் இன் பங்களும் மகிழ்ச்சியும் கிடைக்கமாட்டாது.
நோய் உடம்பிலும் மனத்திலும் துன்பம் விளேவிக்கும். நோயற்ற நிலையே ஆரோக்கியம். உடம்பிலோ மனத்திலோ நோயினல் துன்பமிருப்பின் மனிதரால் ஒரு நல்ல கருமமும் முறைப்படி செய்ய முடியாது. ஆரோக்கியமாயிருந்தால் தான் எந்தக் காரியத்தையும் செவ்வனே செய்ய முடியும். உடம்பை மட்டும் வாட்டும் நோய்கள் சில மனத்தை மட்டும் வாட்டும் நோய்கள் சில. இரண்டையும் வாட்டும் நோய்களோ பல. உடம்பு, மனம் இரண்டிலுமே நோயின்றி இருக்கும் நிலைதான் உண்மையான ஆரோக் கியம், அதே அடையவே முயற்சி செய்ய வேண்டும்.
ஆரோக்கிய முறைகளைப் பேணுத தினுல் நோய் உண்டா கிறது. நாம் ஆரோக்கிய விதிகளைப் பேணி, உடம்பைச் சரியாக பேணி வந்தால் பெரும்பாலும் நோய்களிலிருந்து விடுபடக் கூடும். ஆரோக்கிய முறைகளே அனுசரிப்பதால் எல்லோரும் விரும்புகின்ற பெரிய நன்மையாகிய நீண்ட ஆயுள் உண்டாகிறது. அவைகளை அலட்சியம் செய்தால் நோயும், எல்லோரும் பயப்படுகிற மரணமும் உண்டா கின்றன.
ஒரு குழந்தை நோயின்றியும் பலமுள்ளதாகவும் இருக்க வேண்டுமானல், குழந்தை பிறக்கும் முன்னேயே இதை நன்கு கவனிக்கத் தொடங்கவேண்டும். தாய் தந்தையர் தங்களுடைய ஆரோக்கியத்தை முதலில் நன்கு
பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனென் ருல் பலவீன

Page 6
2
மூம் நோயும் கொண்ட தாய் தந்தையர் பலமுள்ள
ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற முடியாது.
நோய் தடுக்கமுடியாத ஒன்றல்ல. வைத்தியர்களும் ஆராய்ச்சியாளரும் இன்ன இன்ன வியாதிகள் இன்ன இன்ன காரணங்களால் உண்டாகின்றன என்று யிருக்கின் ருர்கள், உடம்புக்கு வேண்டிய சத்துணவு வகைகள் கிடைக்காததால், விஷ பதார்த்தங்கள் உடம்பில் உட்செல்வதால் உணவைக் கண்டபடி உண்பதினுல் சில நோய்கள் உண்டாகின்றன.
மனிதனுக்கு பெரிய எதிரி நோய்க் கிருமிகள். நாள் தோறும் அவை மக்களை ஆயிரக்கணக்கில் கொல்லு கின்றன. காசம், சளி, காய்ச்சல், வயிற்றேட்டம், வயிற் நுளைவு நெருப்புக் காய்ச்சல், நச்சுக்காய்ச்சல், மலேரியா, குஷ்டம், கட்டி, பிளேக் முதலிய நோய்களும் நோய்க் கிருமிகளால் தான் உண்டாகின்றன. நோய் வராமல் காத்துக் கொள்ளவும் நீண்ட ஆயுளைப் பெறவும் பின்வரும் விதிகளை அனுசரிக்க வேண்டியது அவசியம்.
அதிகாலையில் எழுந்திருத்தல்
சூரியன் உதிப்பதற்குமுன் எழுந்திருக்க வேண்டும். அதிகாலையில் எழுவதால் கண் ஒரே சீராக அதிகரிக்கும் ஒளியைப் பெறுகிறது. இதனுல் கண் கெடுவதில்லே, நீண்ட தாள் நன்கு பயன் பெறுகிறது. நேரம் கடந்து எழுவதால் கண்ணில் திடீரென்று பிரகாசமான ஒளிபடுகிறது. ஆதனுல் கண்ணின் நுண்ணிய உறுப்புக்கள் அதிர்ச்சியடை கின்றன. கண் சீக்கிரம் கெட்டுவிடுகிறது.
ஒவ்வொரு நாளும் காலையிலே மலம் கழித்தல் வேண் டும். காலே, மாலை இரு வேளையிலும் கழித்தல் மிகவும் சிறந்தது. அன்றேல் மலம் குடலில் தங்குவதால் ஒரு வித நச்சு வாயு உற்பத்தியாகி நரம்புகளை மந்தப்படுத்தும்

அதஞல் புத்திக் குறைவும் ஆரோக்கியக் குறைவும் உண் டாகும்.
காலையில் தூங்கி எழுந்த பிறகும், இரவில் நித்தி ரைக்குப் போகும் முன்பும் பல் துலக்குதல் வேண்டும். மிக மென்மையான ஆலம் விழுது, கருவேலங்குச்சி, வேட்பங் குச்சி போன்றவைகளாலே துலக்கலாம் செங்கல் பொடி, கரி போன்ற பொருள்களால் தேய்த்தால்பல்லின் மேலுள்ள அனுமல் தேய்ந்து அழிந்து இறுதியில் பல் கருமையாக மாறி அருவருப்பான தோற்றத்தைக் கொடுக்கும். முரசு கள் பாதிப்படையும்
காலநிலை, உடல் நிலைக்கு ஏற்ப வெந்நீரிலோ, தண்ணி ரிலோ, குளிக்கவேண்டும்.
வெந்நீரில் குளிப்பதாஞல் காலிலிருந்து ஆரம்பித்து கிரமமாக உடல் முழுவதும் வெந்நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகுதான் தலைக்கு வெந்நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும் இதனுல் உடலிலுள்ள சூடு தலைக்கேறி வெத் நீரின் சூட்டை ஏற்கத் தலைக்குத் தகுதி ஏற்படும் திடீ ரென்று வெந்நீரை தலையில் விட்டுக் கொண்டால் தலையில் கொதிப்பு, உடம்பிற்கு உழைச்சல், கண்ணிருட்டல் முதலிய வைகள் ஏற்படும். தலைக்கு ஊற்றிக் கொள்வதற்காகத் தனியே வெந்நீர் ஆற வைத்தல் மிகவும் நல்லது.
தண்ணிரில் குளித்தால் முதலில் தண்ணீரை த&யி விருந்த விட்டுக்கொள்ளுதல் வேண்டும் குளங்களிலோ ஆற்றங் கரைகளிலோ குளிப்பவர்கள் இறங்கிய உடன் அதிகநேரம் செல்லாமல் முழுக வேண்டும். பின்பு தண்ணி சில் எவ்வளவு நேரம் சென்ருலும் பாதகமில்லை. இந்த முறை மூளைக்குக் களைப்பு, பலவீனம் உண்டாகாமல் உடலுக்கு நல்ல சுகம் தரும்
。 வேலையையும், பொழுது போக்கையும் கூடிய கிட்டில் ಔ? ற்றேட்டமுள்ள இடத்தில்  ைவத் து க் கொள்ள வேண்டும்.

Page 7
4
வாயால் சுவாசிப்பதால் பலவித நோய்கள் உண்ட கும் முதலில் மூக்கில் சதை வளரும் முகம் விகாரமாகும் புத்தி மந்தும் ஏற்படும். வாசனை உணரும் நரம்புகள் செயலிழக்கும். நெஞ்சில் சளி ஏற்படும். மூக்கினுலேயே சுவாசிப்பவர்களேப் பணி, வேயில், மந்தமான உஷ்ணநிலை ஆகியவை இலகுவில் தாக்காது.
அன்ருட உணவிலே காரம் சேர்த்த உணவுகளைக் குறைத்து சத்தான உணவு வகைகளை உண்ணவேண்டும். ஒவ்வொரு நாளும் உணவில் ஏதாவது ஒரு சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் இலைகளில் போஷாக்கு அதிகம் உண்டு. இவற்றை உட்கொண்டு வந்தால் மலச்சிக்கலும் ஏற்படாது. நிறை போசாக்குள்ள பால் தினசரி அருந்துவது நன்று
நமது உடலுக்கு கல்சியம், அயடீன், பொசுபரசு, பொட்டாசியம், தாதுப் பொருள், விட்டமின் ஆகியவை தேவையானவை. இவை பழங்களில் அதிகமாக இருக் கின்றன. தினசரி, ஏதாவது ஒரு பழவகை சாப்பிடுவது நன்று
உணவு உட்கொண்ட பிற கு வாயைப் பலமுறை கொப்பளித்துப் பல் இடுக்குகளில் துணுக்குகள் தங்காத படி பார்த்துக்கொள்ள வேண்டும். நார் போன்று பற் களின் இடுக்குகளில் தங்கினலும் பலமுறை கொப்பளிப் பதால் அவை அகலும் நிற்கும்போதும் நடக்கும் போதும், உட்காரும் போதும் நிமிர்ந்திருக்க வேண்டும்.
வயது வந்தவர்கள் நாள்தோறும் இரு போத்தல் சுத்த மான நீர் குடிக்க வேண்டும் குடிக்கிற தண்ணீரை நன்முக கொதிக்க வைக்க வேண்டும். நீரின் மூலம் 'காலரா? போன்ற கொடிய நோய்கள் பரவுகின்றன. ஆகவே நீரை நன்கு காய்ச்சி ஆறவைத்துப் பருகுதல் வேண்டும்.
மக்களுக்கு ஞாபகசத்தி வளர உடற்பலம், மனுே நீலம், மூளையின் பலம் நன்முக இருக்க வேண்டியிருக்இன் றது. இதற்கு எண்ணெய் முழுக்கு மிகவும் அவசியமானதே.
 
 
 

புகையிலை போடுதல், மூக்குத்தூள் போடுதல், வெற் றிலே போடுதல் பீடி, சுருட்டு, சிகரெட் புகைத்தல் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை இரத்தத் தைக் கெடுக்கிறது. புற்று நோய்க்கும் காரணமாகலாம்.
ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்குக் குறையாமல் நன்ருகத் துரங்க வேண்டும் மக்கட்கு துரக்கம் இன்றி யமையாதது. தினசரி அவரவர்களது வயதுக்கும் உழைப் புக்கும் ஏற்றவாறு குறித்த நேரம் இரவில் அயர்ந்து நித் திரை செய்தல் அவசியம். இல்லாவிடில் உடல் வலிமை குறைந்து நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு நாளடைவில் நோயாளியாக வேண்டியதுதான். படுக்கப்போகுமுன் மனக் கவலை கோபம் ஒன்று க்கும் இடமளிக்காமலும், கண்களை மூடி ஆனந்தமாக அயர்ந்து நித்திரை கொள்ளவேண்டும், ஒரு மனிதன் ஒரிடத்தில் அதிக நேரம் தங்கியிருப்பது அவன் படுக்கையில்தான், ஆகையால் படுக்கையையும், படுக்கை அறையையும் மிகச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தம்பதிகள் மாதத்திற்கு இருமுறைதான் உடலுறவு கொள்ளல் நன்று அடிக்கடி கர்ப்பம் ஏற்பட்டுப் பிறக்கிற குழந்தைகள் சாதாரணமாகத் திடமாயிருப்பதில்லை, அடிக் கடி கர்ப்பமடைவதால் தாயின் ஆரோக்கியமும் குன்றிப் போகிறது. தேவையற்ற கோபத்தையும், கவலையையும் போக்கி சாந்தமான மனத்துடன் இருக்க வேண்டும். தின சரி இயன்ற அளவு தேகாப்பியாசம் செய்ய வேண்டும் ஆல் லது உலாவுதல் வேண்டும்.
சரீரம் ஒரு இயந்திரத்தைப் போன்றது. உபயோகங் படுத்தாத இயந்திரம் சீக்கிரத்தில் துருப்பிடித்துப்போகும், துருப்பிடித்த இயந்திரம் விரைவில் கெடுக், அது போலவே தேகப்பயிற்சி இல்லாமற் போனல் உடலும் கெடும். ஆகவே தினந்தோறும் காற்றேட்டமுள்ள இடத்தில் உலா வவாவது வேண்டும்.
இவ்விதிமுறைகளைக் கடைப்பிடித்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழுங்கள்!
ei gâ6n a Fer
ിu ബ: 9ീജ

Page 8
கர்ப்பவதிகள் கவனிக்க வேண்டியவை !
கர்ப்பம் உருவான நாள் முதல் கர்ப்பவதி எத்தொழில் புரியும் போதும் தன் வயிற்றில் உருவாகும் சிசுவின் எண் ணம் மனதில் குடிகொண்டவளாயிருத்தல் வேண்டும். அவள் நல்ல உணவினைத் தேடி உண்ணுவிட்டாலும், சுத்தமான காற்றைச் சுவாசிக்காமல் விட்டாலும் அஃது சிசுவினப் பாதிக்கச் செய்யும். குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக் கியத்திற்கும், நுண் அறிவுக்கும் தாயே அத்திபாரமிடுபவ
೩೮೮೫೩!
கர்ப்பவதியின் உணவு சிசுவின் வளர்ச்சிக்கு ஏற்றதாயும் இலகுவில் சமிபாடு அடையக்கூடியதாயுமிருக்க வேண்டும். உள்ளி, மிளகு, வெங்காயம் போன்றவற்றை வழமை போலச் சேர்த்துக் கொள்ளலாம். தேசிக்காய் புளி சேர்த் துக் கொள்வது நன்று. இதிலிருந்து உயிர்ச்சத்து "சி" கிடைக்கும் பலவகை உணவுவகைகளேயும் மாறிமாறி உண்ணவேண்டும். தினமும் பால் பருகி வருவது நன்று. சிசுவின் பற்கள், எலும்புகள் சீர்பட்டு சிறந்துவளர பால் பெரிதும் உதவும். இரண்டு மூன்று மரக்கறி தின மும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவைகளில் ஒன்று கட்டாயம் இலைக்கறியாய் இருத்தல் வேண்டும். சோற்றினை அதிகம் சாப்பிடாமல் கறிவகைகளை நன்ருய்ச் சேர்த்து சாப்பிட வேண்டும். கறி வகைகளுக்கு உப்பைக் குறைத்துப் பாவிப்பது, இரத்தக் கொதிப்பிலிருந்து பாது காக்க உதவும், நெய், பருப்பு, தயிர் ச்ேர்த்துக் கொள்ள வேண்டிவ உணவுகளாகும். ஒரு முட்டை ஒரு மேசைக் கரண்டி வெண்ணெய், ஒரு தோடம்பழம், இரு தேசி கரண்டி மீன் எண்ணெய், ஈரல் கறி என்பன தினமும் கர்ப்பவதிகள் உண்ண வேண்டுமென மேலைநாடுகளில் கூறு கின்றனர்.
நம்நாட்டில், மீன் தாராளமாகக் கிடைத்தால் சாப்பிட வேண்டும். நெத்தலி மீன் அல்லது கருவாடு மிக நன்று.

雳
நன்ருகச் சாப்பிட்டால் சிசு பருத்து விடும் பிரசவ வேதனை அதிகமாயிருக்கும் என்று சிலர் உணவைக் குறைப் பதுண்டு. அப்படியில்லை ! சத்துள்ள உணவுக் குறைவால் தாய் மெலிந்தால் சிசுவும் இளேத்துவிடும்; மூளைத்திறனும் பாதிக்கப்படும். பிறந்த பின்பும் இலகுவில் நோய்வாய்ப் படும். எனவே சத்துள்ள உணவைக் கர்ப்பவதிகள் தேடி உண்பது அவசியமாகும்.
சுத்தமான காற்று
கர்ப்பவதி வசிக்கும் இடம் நல்ல காற்ருேட்டமுள்ள இடமாயிருத்தல் வேண்டும். கடற்கரை அருகில் இருந்தால் கடற்கரை சென்று உலாவி வருதல் நன்று வீட்டில் யன் னல்களே பூட்டி வைத்திராமல் எந்நேரமும் அவற்றைத் திறந்து வைத்திருக்க வேண்டும். நித்திரை கொள்ளும் இடம், வடுக்கை அறை தூசு படிந்திராமல் நன்கு சுத்த மாய் இருத்தல் வேண்டும். படுத்துறங்கும்போது துணி பால் முகத்தை மூடுதல் கூடாது. மூ ச் சு மெதுவாயும், ஆழ்ந்ததாயும் இருத்தல் வேண்டும்,
உடற் சுத்தம்
கர்ப்பவதிகளின் உடல் அழுக்குப்படியாது காக்கப்படல் வேண்டும். நாள்தோறும் குளித்தல் வேண்டும். காலையில் தண்ணீரில் குளிப்பதே நன்று. அவசியப்படின் நகச்சூடான வெந்நீரையும் பயன்படுத்தலாம். வழமைபோல எண்ணெய் மூழுக்கும் வைத்துக்கொள்ளலாம்.
சலவாசல், மலவாசல் சுத்தமாகக் கழுவப்படல் வேண் டும். சலவாசல் கழுவியே மலவாசல் கழுவப்படல் ஜேஜ் டும். மலவாசல் கழுவிய விரல்களால் உடல் తొGarFటౌశక్తి தொடக்கூடாது. கருப்பையிலிருந்து இறங்கும் கசிவு நீர், நாலாவக்கமுள்ள சுரப்பிகளிலிருந்து ஊறும் வழுவழுப்பான நீர் ஆகியன யோனிவாசலை ஈரமாகவே வைத்திருக்கும்,

Page 9
8
இதுவெளியிலிருந்து உட்செல்லும் நோய்க் கிருமிகளை ஒர ளவில் அழித்துவிடும். எனவே விரல்களை உட்செலுத்தி யோனியின் உட்புறம் சுத்தப்படுத்தத் தேவையில்லை. இது இயற்கை அமைப்பு என்பதை அறிந்துகொள்ளல் வேண்டும்,
உடற்பயிற்சி
வழமைபோல, செய்துவந்த வேலைகளைக் கர்ப்பவதிகள் செய்து வரலா,ே கடின வேலைகள், சைக்கிள் ஓடுதல், பந்தடித்தன், குத்தல் இடித்தல், பாரம் துரக்குதல் தவிர்க்க வேண்டும். உலாவுதல் நடத்தல் சிறந்த பயிற்சியாகும். முதல் நான்கு மாதங்கள் முடியும்வரை மோட்டார், ரெயில், விமானப் பயணங்களைத் தவிர்த்தல் வேண்டும். அடுத்து 9-ம் மாதம்வரை சளேட்புக் கொடுக்காத சிறு பிரயாணங்கள் செய்யலாம் ஒன்பது மாதத்தின் பின் பிரயாணங்களைத் தவிர்த்து கவனமாயிருத்தல் வேண்டும்.
CS (366)
கர்ப்பவதிகள் மார்பகங்களை நன்கு பேனல் வேண்டும். தலைக் கர்ப்பவதிகள் முலேகளில் நன்கு கவனம் செலுத்தல் வேண்டும். சிலருக்கு முலைக்காம்புகள் வெளித் தோற்ருது அமுங்கியிருக்கும், கடைசி நான்கு கிழமைகள் குளித்தபின் தினமும் இரு விரல்களினுல் முலைக்காப் புகளை மெல்லென நான்கைந்துமுறை நீள இழுத்துவிடுதல் வேண்டும். அப் போது விரல்கள் முலைகளின் நாலா பக்கமும் முறைக்கு முறை படியக் கூடியதாய் பார்த்துக்கொள்ள வேண்டும், இப்படிச் செய்து வந்தால் நாளடைவில் முலைக்காம்புகள் நீண்டு குழந்தை வசதியாகப் பாலே உமியக் கூடியதாயிருக் கும். இல்லையேல் சிலவேளை பிரசவத்தின் பின் குழந்தை பாலை உமியமுடியாத முலைகளால் தாயும், குழந்தையும் திண்டாட நேரிடும்.
a@L
கர்ப்பவதிகள் மிக இறுக்கமான மேற்சட்டைகளோ, பாவாடைகளோ அணியக்கூடாது. கனமில்லாத துணிகளை
 

9
உடம்பை இறுக்காத முறையில் அணிந்து கொள்ள வேண் டும். இலகுவான முழு நீளக் கவுண் வீட்டில் அணிய ஏற்றதாகும்.
உடலுறவு
ஆரோக்கியமுள்ள பெண் கணவனின் விருப்பத்தை நிறைவேற்றத் தடையில்லை. இது நன்மை பயக்கக்கூடி யதே. ஆனல் முன்னர் குறை மாதங்களில் பிரசவங்கள் ஏற்பட்டிருந்தால் பெண்ணின் உடல் நிலையைக் கவனத் தில் கொள்ள வேண்டும். மிதமிஞ்சிய சேர்க்கை குறை மாதப் பிரசவத்தை ஏற்படுத்தலாம். கர்ப்பம் தரித்து முதல் நான்கு மாதம் முடியுமுன்பும், எட்டுமாதம் முடிந்த பின்பும் உடலுறவு வைத்துக்கொள்ளாமை பாதுகாப்பான தாகும்.
கர்ப்பவதிகள் இம்முறைகளைக் கவனத்திலெடுத்து ஆரோக்கியம் பேணுங்கள்!
 ைசிந்து
கர்ப்பவதிகள் கர்ப்பம் தரித்து 12 வாரத்தின் பின் முதலாவது ஏற்புவலி மருந்தையும், அடுத்து 6 வாரத்தின் பின் இரண்டாவது ஏற்புவலி மருந்தை யும் பெற்றுக் கொள்ளல் நன்று, இது பிறக்கும் குழந் தையையும், தாயையும் ஏற்புவலியிலிருந்து பாது காக்கும்.

Page 10
தாய்ப்பால் கொடுக்கத்
தவருதீர்!
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிடச் சிறந்த பாலுணவு உலகில் கிடையாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளே ஆரோக்கியமாக வளர்கின்றன. அக்குழந்தைகளுக்கு நோய் தொற்றும் வாய்ப்புகள் குறைவு, ஏனெனில் நோய் எதிர்ப் புச் சக்தி (பொருட்கள்) தாய்ப்பாலில் நிறைய இருக் கின்றது.
குழந்தை பிறந்து ஆறு மணித்தியாலங்கள் வரை குழந் தைக்குப் பால் கொடுக்க அவசியமிராது. பனங்கட்டி, குளுக்கோஸ், சீனி என்பன கரைத்துப் பருக்க முயற்சிப் பது தேவையற்றது. பிறந்து ஆறு மணித்தியாலங்களின் பின்பு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கத் தொடங் リ@rrt)。
முதல் இரண்டு - மூன்று நாட்கள்வரை ஆறு மணித்தி பாலங்களுக்கொரு முறையாய் நான்கு தடவைகள் பால் கொடுக்கலாம். இந்த நாட்களில் குழந்தைகளுக்குப் பாலின் தேவை மிகக்குறைவு. இந்நாட்களில் பால் சுரக்காவிட்டா லும் குழந்தையைப்போல் உமியவிடத் தவறக்கூடாது இவ் வாறு பால் உமிய விடுவது தாய்ப்பால் நன்ருகச் சுரக்க ஏதுவாகிறது.
தாய்க்குப் பிள்ளையை மார்போடணைத்து பாலூட்டும் போது ஏற்படும் விபரிக்க முடியாத உணர்வு-ஆனந்தம் வேறெதிலும் கிடைக்கமாட்டாது. நான்குமாத வளர்ச்சி வரை குழந்தைக்குத் தேவையான உணவுப் பொருட்க ளெல்லாம் தாய்ப்பாலில் கிடைக்கின்றன. இக்காலத்தில் தவருது தாய்ப்பால் கொடுத்து வருவது மிகநன்று.
குழந்தைக்குப் பால் கொடுக்கமுன்பும், பின்பும் முலைகளை நல்ல நீரினுல் கழுவிச் சுத்தமாக்க வேண்டும். இது நோய்த் தொற்றிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பதற்கு உதவும். பால்கொடுக்கும்போது கட்டிலிலோ, பாயிலோ, கதிரை யிலே (சப்பாணி கட்டி) இருந்து கொண்டு கொடுக்
 
 

கலாம். படுத்திருந்துகொண்டோ அல்லது வேறு ஏதாவது வேளையில் ஈடுபட்டுக்கொண்டோ பால் கொடுக்கக்கூடாது. குழந்தையை அனைத்து, தலேயைச் சிறிது உயர்த்திக் கொடுக்கவேண்டும். குழந்தையின் மூக்கு முலையுடன் சேர்ந்து மூச்சுத்தினருது பார்த்து, கவனத்தோடு போல் கொடுத்தல் வேண்டும்.
நீர் உணவுகள் தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பசுப்பால், பால்பொருட்கள், மீன், முட்டை, பருப்பு, இலை வகை, இறைச்சி முதலியன தாய்க்கு நல்ல உணவா கும் நெத்தலிமீன்-கருவாடும் சிறந்த உணவு, இலைவகை, ஏதாவதொரு பழவகை என்பன தினமும் தாய் உணவோடு சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
மனதைப் பாதிக்கும் உணர்ச்சிகள் பாற்பெருக்கைப் பாதிக்கலாம். எனவே கவலை, கோபம் கொள்ளுதல் என்ப வற்றைத் தவிர்க்கத் தாய் முயலவேண்டும் போதியளவு ஒய்வும் எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
இரண்டுவயதுவரை, இயன்றவரை பிள்ளைக்குத் தாய்ப் பால் கொடுக்கலாம். நான்காவது மாதத்தில் இருந்து தாய்ப் போலுடன் மற்றச்சத்துள்ள உணவுகளையும் குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கவேண்டும். 6-ம் மாதம் முதல் குழந்தைக்கு அதிகளவு உணவு, ஊட்டச் சத்துள்ள உணவு கொடுக்கவேண்டும்.
967L. Léo சத்துள்ள உணவுடன் தாய்பாலும் தொடர்ந்து கொடுக்கலாம். கொதித்து ஆறிய நீரே குழந்தைக்குக் குடிக்கக் கொடுக்க வேண்டும். மசித்த சோறு கீரை, பருப்பு, பால், முட்டை, உருளைக்கிழங்கு, பழங்கள் என்பன குழந்தைகளுக்குச் சிறந்த உணவாகும். தாய்ப்பால் கொடுப்பதின் மூலம் தாய்க்கும் குழந் தைக்குமிடையில் பந்தபாசம் நெருக்கமடையும், ஆனந்தம், அமைதி, ஆறுதல் கிட்டும். இவற்லைச் சிறிது சிந்தித்தால், எந்தத்தாயும் தகுந்த காரணமில்லாமல் தன்பாலேக் குழந் தைக்குக் கொடுக்கத் தவறமாட்டாள்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்
ஆரோக்கியமாக வளரும் !
- ராணி
மூலிகை - 1

Page 11
ഏഷ്യേ குழந்தைகளைக் காப்மாற்றுங்கள் !
இலங்கையில் வருடத்திற்கு 7000 பேர் வயிற்ருேட்டத் தினுல் மரணமடைகின்றனர். இதில் 5 வயதிற்குக் குறைந்த குழந்தைகள் தொகை 3500,
பொதுவாக ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தை இளின் இறப்புகளுக்கு முக்கிய காரணம் வயிற்றேட்டமே
ாகும், வயிற்ருேட்டமும் டs போஷாக்கின்மை (ஊட்டக்குறைவு போஷாக்கின்மை ட, வயிற்ஜேட்டம் 鷲
வயிற்ருேட்டமும் போஷாக்கின்மையும் பிள்ளே களேப் பொறுத்தவரையில் நெருங்கிய தொடர்புள்ளன. போஷாக் இன்மையான பிள்ளைகளை வயிற்ருேட்டம் பீடிக்கின்றது. வயிற்றேட்டமுள்ள பிள்ளைகள் போஷாக்கின்மையாக சாணப்படுகின்றனர். இதனல் வயிற்ருேட்டத்தால் ஏற் 2.GS) è,
(அ) போஷாக்கின்மை 50Այպլի (ஆ) இறப்புக்களையும்
se தடுக்கவேண்டியுள்ளது,
வயிற்றேட்டம் தொற்றுவது &Tմuւգ? நோயாளி (கிருமி அஆ சுற்ருடல் சுற்ருடல் -> சுகதேகி அ சுகதேகி
A. நோயாளியிடமிருந்து கிருமி ஒரு சுகதேகியை பின்
வரும் வழிகளில் சென்றடைகிறது எனலாம். (9) F556i epajúh. (ஆ) சுகாதாரக் குறைவினுல், (இ) உணவுகளின் மூலம்,
 

3.
8。 சுற்ருடல்களிலிருந்தும் கிருமிகள் சுகதேகியைச் சென்
றடைகின்றன. 剑 (அ) அசுத்தமான நீர் மூலம் (ஆ) சுற்ருடல் அசுத்தமடைவதின் மூலம்
வயிற்றேட்டத்தை இனங்காணுவது எப்படி?
ஒருநாளில் வழமைக்குமாருகப் பலதடவைகள் நீர்த் தன்மையாக மலம் கழிவது வயிற்ருேட்டமாகக் கருதப்
படும் ,
வயிற்றேட்டத்தினுல் ஏன் மரணம் ஏற்படுகின்றது?
உடம்பில் உள்ள நீர் கூடுதலாக வெளியேறுவதால் வரட்சி (நீரிழப்பு) ஏற்படுகின்றது. இதனுல் உடம்பில் இரத்த ஒட்டம் தடைப்படுகின்றது. இதனுல் கலங்கள் தொழில் இழக்கின்றன.
வரட்சியை அறிந்து கொள்வது எப்படி? (அ) சிறிதளவே சிறுநீர்போதல், அல்லது சிறுநீரே போகாமலிருத்தல், சிறுநீர் மஞ்சள் நிறமாக இருத்தல் (ஆ) திடீரென எடை குறைதல், (இ) உலர்ந்துபோன வாய். (ஈ) கண்குழிவிழுந்து உலர்ந்து போதல், கண்ணீர்
QUTತ್ತಿ! (உ) கைக்குழந்தைகளுக்கு உச்சி மென்தடம் குழிவிழுந்து
போதல். (ஊ) தோல் நெகிழ்வுத் தன்மை இழந்து போதல், (எ) சுவாசம் வீச்சாகவும் ஆழமாகவும் இருக்கும். )ே நாடித்துடிப்பு கூடியும் பலங்குறைவாகவும் இருக்கும். சிகிச்சை முறைகள் சிறிதளவு வரட்சியுள்ளவர்களுக்கு :
(அ) தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளாயின் பாஜது
கொடுக்காமல் விடாது, தொடர்ந்து

Page 12
14
கொடுக்க வேண்டும் இழக்கப்பட்ட நீர்த் தன் மையை ஈடுசெய்யப் போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். இழக்கப்பட்ட நீர்த் தன்மையை ஈடு செய்யப் போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும்.
(ஆ) பால்மா கொடுக்கப்படும் குழந்தையாயின் நீர்தி
தன்மை கூட்டிக் கொடுக்க வேண்டும்.
(இ) நெற்பொரித் (அரிசிப்பொரி) தண்ணிர், புழுங்கல் அரிசியை வறுத்தெடுத்த மாவில் செய்தகளி, பழச் சாறு, சாயம் குறைத்து தேநீர், கஞ்சி, இளநீர், மோர், எலுமிச்சம் பழச்சாறு கொடுக்கலாம்.
(ஈ) குழந்தை உண்ணக்கூடிய (இலகுவில் சமிபாடு அடை
யக்கூடிய) உணவுகள் கொடுக்கலாம்.
(உ) 0, R. S. (ஜீவனி) நீர்க்கரைசலைத் (நீரிழப்பை-வரட் சியை ஈடு செய்யும் உப்புக்கரைசல்) தயாரித்துக் கொடுக்கலாம்.
0.R. S. நீர்க்கரைசலுக்குத் தேவையானவை.
குளுக்கோஸ் - 20 G grrraħ கறிஉப்பு உண 85 கிராம் சமையல் சோடா  ை25 கிராம்
பொட்டாசியம் குளோரைட் - 15 கிராம், அத்துடன் கொதிக்க வைத்த நீர்  ை1 வீட்டர்
மேற்கண்ட பொருட்கள் அடங்கிய 0, R. S (ஜீவனி) பைக்கற் கிடைத்தால் அத்துடன் கொதிக்க வைத்த லீட்டர் நீரைச் சேர்த்து நீர்க்கரைசல் தயாரித்து அதனை, சிறுநீர் வழக்கம்போல போகும்வரை இரவும் பகலும் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கலாம்,
0. R. S. (ஜீவனி பைக்கற் கிடைக்காவிட்டால் அதனை பின்வரும் முறையிலும் தயாரித்துக் கொள்ளலாம்
 

15
கொதிக்க வைத்த நீர் - 1 லீட்டர்.
குளுக்கோஸ் )
அல்லது f
தேன் > 2 மேசைக் கரண்டி
அல்லது (தலைதட்டிய அளவு)
#ಹಾಗೆ?
உப்பு - 4 தேக்கரண்டி சமையல்சோடா ஆ தேக்கரண்டி (சமையல்சோடா கிடைக்காவிட்டால் மேலும் ஆ தேக் கரண்டி உப்புச் சேர்க்கவும். (கிடைக்குமானுல் அரை டம்ளர் தோடம்பழச்சாறு அல்லது எலுமிச்சம்பழச்சாறும் சேர்த்துக்கொள்ளலாம்)
வைத்தியசாலைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள்
(அ) வரட்சி (நீரிழப்பு) கூடுதலாக இருந்தால், (ஆ) வாந்தி கூடுதலாக இருந்தால், (இ) வயிற்ருேட்டத்தோடு கடுமையான காய்ச்சல்
இருந்தா ல் ,
முறைகள் தனிநபர் சுகாதாரம்  ைசுற்ருடல் சுகாதாரம் பேனல்,
(ஆ) கொதித்தாறிய நீர் அருந்தல், (இ) பாதுகாப்பாக உணவுப் பொருட்களை வைத்
திருத்தல், (ஈ) ஈக்கள் மற்றும் கிருமிகளை அழித்தல், (உ) நிறை குறைவான குழந்தைகள் (2500 கிராமுக்கு
குறைந்தால்) பிறப்பதைத் தடுத்துக் கொள்ளல் (ஊ) தாய்ப்பாலே அதிககாலம் கொடுத்தல்,
(எ) சின்னமுத்துத் தடைமருந்து குழந்தைகளுக்கு
9-ம் மாதத்திலே ஏற்றிக் கொள்ளல்,

Page 13
6
(ஏ) மலகூடங்கள் அமைத்துக் கொள்ளல்,
(ஜ) புட்டிப்பாலூட்டும் உபகரணங்களைத் தொற்று
நீக்கல்,
(ஒ) உணவுப்பண்டங்களை நன்கு வேகவைத்தல்; மூடி
வைத்தல்,
ஓ) கண்ட இடங்களிலும் விற்பனைக்கு இருக்கும்
உணவுப் பண்டங்களைச் சாப்பிடாமை,
இம்முறைகளைக் கடைப்பிடித்து வயிற்ருேட்டத்திலிருந்து உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்!
.ெ R. S. (ஜீவனி) பைக்கற் குடும்பசுகாதார ஊழியர் களிடமும், அரசாங்க மருத்துவ நிலையங்களிலும் இலவச மாகக் கிடைக்கும், மருந்துக் கடைகளில் விலைக்கும் கிடைக்கும்.
.ஜோதிவர்மன் يع كسب (பொது சுகாதாரப் பரிசோதகர்)
*மூலிகை" - 1
தடுப்பு மருந்துகள் கொடுத்து, குழந்தைப் பருவத் தில் ஏற்படும் ஆறு பயங்கர நோய்களாகிய ஏற்புவலி, தொண்டைக்கரப்பன், குக்கல், இளம்பிள்ளைவாதம், காச நோய், சின்னழுத்து ஆகியவற்றிலிருந்து உங்கள் குழந் தையைக் காப்பாற்றலாம்.
வியரங்களே குடும்ப சுகாதார ஊழியர்களிடமோ, அர சாங்க மருத்துவ மனைகளிலோ அறியலாம்.
- ஜோதி,
 
 

கண்நோ எனப்படும்
Gននៅr விழியழற்சி
கண் வியாதிகளில் ஒன்ருன வெள்விழியழற்சி இப்
பொழுது யாழ்ப்பாணத்தில் சில பாகங்களில் ப ர வ த் தொடங்கியுள்ளது. கண்நோ என அழைக்கப்படும் இது தொற்றுந்தன்மையது
சீழ் வெள் விழியழற்சி (Parulent Conjunctivitist) பூனே gom grb Glavah 60 g/lupija (Mucopurelent conjunctivitist) என இவற்றைப் பிரிப்பர் சீழ்வெள்விழியழற்சி அனேகமாக பிறந்த குழந்தையில் 1 வாரம் முதல் மூன்று வாரத்துள் உண்டாகும். இது மிக அபாயகரமானது. இதனுல் குருடும் உண்டாகும். கண் வைத்திய நிபுணர்களிடம் காட்டி உடன் சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.
இது தவிர வெட்டை கிருமிகளால் (G0000003) ஏற் படும் வெள்விழியழற்சியில் விழிவெண்படலம் (Cornea) பழுதாக நேரிடலாம். இதனுல் பார்வைப் புலனில் ஊறும் நேரிடலாம். இந்நிலையில் கண் வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனை புரிவது நல்லது.
பூளை சாறும் வெளிவிழியழற்சி கோச் வீக்ஸ் (Koch LLLSSTMTtTTTLL O OTt TTTmT TT TTTTS SSLLLLL S LLLLLLLLS என்னும் கோலுருக் கிருமிகளாலும், ஸ்டெபிலோ கொக்கஸ் (Staphdlococcus), så Gert Gay GastréSøst (Streptococcus), நியுமோ கொக்கஸ் (Pneumococcus) என்னும் வட்டவுரு வக் கிருமிகளாலும் ஏற்படக்கூடியது. 2 முதல் 10 நாட் களுள் இது சுகமாகும்.
இந்நோயாளருடன் நேரடியாக நெருங்கிப் பழகுவதும், அவரது கைக்குட்டை போன்ற பொருட்களேப் பாவித்த
85 32

Page 14
8
லும் கூடாது. இந்நோயுள்ள சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பக்கூடது. வெளிச்சத்தைப் பார்க்கக் கண் கூகிதல் கண் எரிவு, வீக்கம், நீர்வடிதல், வெள்விழிகள் சிவத்தல், சிலவேளைகளில் லேசான சுரம் என்பன இந்நோயின் அறி குறிகள்
நோயாளி தூக உள்ள இடங்களில் நிற்றல் நுண் னிய பொருளையும், எழுத்துக்களையும் உற்றுப்பார்த்தல் என்பவற்றைத் தவிர்க்கவும் அடிக்கடி இத் துளைக் கைக ளால் கசக்குதல் கூடாது. கண்ணுேயுள்ளபோது பெருங் காயம் சாப்பிடலாகாது. இதனுல் தீமையுண்டாகும்
இந்நோய்க்கு கைவைத்தியமாக, ஒருபிடி மாதுளம் இலேத் துளிரை எடுத்து ஒரு மட்பாண் டத்திலிட்டு எட்டு அவுன்ஸ் சுத்தமான நீர்விட்டு காய்ச்சவும். சுமார் இரண்டு அவுன் ஸாக அக் கஷாயம் வற்றியபின் அக்கஷாயத்தால் தினசரி மூன்றுவேளை அக்கண்களை கழுவுக. இதனுல் மூன்று தினங்களில் நல்ல சுகம் ஏற்படும்.
மலரத்தயாராக இருக்கும் அடுக்கு நந்தியா வட்டைப் பூவின் முதிர்மொட்டுக்களை ஒரு பீங் கான் பாத் இரத்திலிட்டு சிறிது சுத்தமான நீர் விடவும் அதிகாலையில் மலர்ந்திருக்கும் அப்பூவிஞல் கண்களே துஉைச்து வெளிப்புறக் கழிவுகளே அகற்ற வும் பேரும்பாலும் வெயிற்காலங்களில் இந்நோ யுண்டாவதால் அதனுலேற்படும் வெப்பத்தாக்கு தலைக் கண்களைப் பொறுத்தவரையில், இது தவிர்க்குக் n -
இணைய நோய் என அழைக்கப்படும் இவ்வெள் விழி பழற்சிக்கு மேனுட்டு வைத்தியர்களின் ஆலோசனையுடன் பென்சிலின் (Penicin) மருந்தை ஊசி மூலமாகவோ அன்றி

19
வாய் மூலமாகவோ கொடுப்பது பயன்தரும், மேலும் ஒரு வீத அளவுள்ள ரெற்ரா சைக்கிளின் (Tetracyclin) 56:in பூச்சு மருந்தை (Eye Qinment) கண்ணின் கீழ் இமைக்குள் இரவில் பூசிப்படுக்கலாம். கண்ணை மூடி மறைத்துக் கட்டவேண்டியதில்லை. தகுந்த பாதுகாப்பு, பராமரிப்பு,
பத்தியம், சிகிச்சை பெறின் இந்நோய் சில தினங்களுள் குண
மாகிவிடும்.
கட்டுரை எழுத உதவியவை:
1. குணபாடம் (சென்னே இறைபாட்சியாளர் வெளி
யீடு)
2. Text Book of Medical Treatment E. T. B. S. 8. சுகாதாரமும், சரீரசாஸ்திரமும் N. நடராஜா
= டாக்டர் விஸ்வபாரதி
நன்றி: "ஈழநாடு?
கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பொன்னுங்கண்ணிக் கீரை அருமருந்தாகும்.
இதனே நெய்யில் வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வருதல் நன்று. இதனுல் உடல் அழகுறும். கண்கள் குளிர்ச்சியடைந்து ஒளி பெறும்,
தைலம் செய்து தலைக்குத் தேய்த்து முழுகிவர கண் நோய்கள் அகலும்,
ா சித்தன்,

Page 15
தேனின் மகத்துவம் !
உலகில் பல நாட்டினரும் தேனை உணவாகவும், மருந் தாகவும் பயன்படுத்துகின்றனர். நம் நாட்டிலும் அதிக மானேரின் வீட்டில் தேன் பயன்படுத்தப்படுகிறது அல்லவா? தேனில் பலவிதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை வளரும் பிள்ளைகளுக்கு உணவுடன் சேர்த்துக் கொடுத்தால் அவர்களின் தசைநார்கள் பலம்பெற்று, இரத்த விருத்தி பெற்று ஆரோக்கியமாக அழகுடன் விளங்குவார்கள்.
தடிமலால் பாதிக்கப்படுபவர்கள் இளஞ்சூடான பாலில் 2, 3 தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடிக்கலாம்.
சளியோடு கூடிய இருமல் நோய் உள்ளவர்கள், வெள் ள்ாட்டுப் பாலைக் காய்ச்சி 2, 3 தேக்கரண்டி அளவு தேன் கலந்து குடித்தால் இருமல் குறைந்து சளியும் நீங்கிக் குண மாகும். மாதுளம் பழச்சாறுடன் சிறிது தேன் கலந்து குடித்து வருவது இருதய நோய்களுக்கு நன்று.
சிறிது தேன் தினமும் குடித்து வருவது கல்லீரல் நோய்களுக்கும், நரம்பு நோய்களுக்கும், சர்மரோகங்களுக் கும் நல்ல குணத்தை அளிக்கும் படுக்கைக்குப் போகுமுன் ஒரு கிளாஸ் தண்ணிரில் சிறிது தேன் கலந்து குடித்துவர நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
செவ்வரத்தம் பூவின் இதழ்கள் ஒருதொகை எடுத்து ஒரு சாடியில் போட்டு அதற்குத் தகுந்தளவு தேன் கலந்து கிளறி பத்து நாட்கள் ஊறவைத்து, பின் காலை மாஜ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரக் கணேச்சூடு, எலும் புருக்கி, நீர்ரோகங்கள் குணமாகும்.
பாலில் சிறிது தேன் கலந்து படுக்கைக்குப் போகுமுன் திருமணத் தம்பதிகள் பருகி வந்தால் தாம்பத்திய வாழ்வு சுவையாய், மகிழ்ச்சியுடையதாய் இருக்கும். பாலும் தேனும் தினசரி உணவுடன் சேர்த்துக்கொள்வோர் நீடித்த ஆயுளைப் பெறுவர்.
* பாலும் தெளிதேனும் . ' என்ற ஒளவை மூதாட்டியின் பாட்டிலிருந்து தேனின் சிறப்பினைப் புரிந்து கொள்ளலாம். உலகில் சோவியத் நாட்டு மக்கள் தேனை அதிகளவு உற்பத்திசெய்து பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கை துரை *மூலிகை-2'

சிரங்கை ஒழித்து
ம்மதி பெறுங்கள் !
நாட்டின் பலபாகங்களிலும் ஒருவித சிரங்கு (சொறி) பரவி உபத்திரவம் கொடுத்து வருகிறது, வயது வந்த வர்கள் மாத்திரமல்ல சிறுவர், சிறுமிகளும் கூட இதன்
இந்தச் சிரங்கிலிருந்து விடுபட ஆயுள்வேத மருத்து வத்தில் இலகுவான கைமருந்துகள் உண்டு. அதுபற்றி சிறிது அறிந்துகொள்ளுவோம்.
சிரங்கு "சாக்கோற்றெஸ் கேபி' என்னும் ஒட்டுண்ணி யால் ஏற்படும் ஒட்டுவாரொட்டி நோயாகும். சிறு பருக் களும் கொப்புளங்களும் இவை வாழும் பாகங்களாகிய கைகள், மணிக்கட்டுக்கள், பொருத்துக்கள், பிட்டம், அக் குள், முழங்கைப் பிற்பக்கம், சன்ன உறுப்புக்கள் ஆகிய வற்றில் ஏற்படும். உடலில் தீவிர அரிப்பை ஏற்படுத்துவ தால் நகங்களாலோ, விசிறி உடைகளாலோ சிலவேளை கையில் வைத்திருக்கும் கத்தி, அடிமட்டம் (3 till it ଖାଁt []; பொருட்களாலோ கூட நோயாளி சொறிய ஆரம்பிப்பார், இதனுல் துணைத் தொற்று ஏற்படுவது காரணமாகப் புண்
ளும், பருக்களும் அதிகரித்துப் பருக்கின்றன.
நோயாளியுடன் நெருங்கிப் பழகுவது தவிர்க்கப்படுவ டன் அவரது ஆடைகள் அணிகள் தினமும் சுத்தமாக் கப்படவேண்டும், அவர் பழகும் பொருட்களையும் மற்றை
u Tiř 2 trašláš8áš i L-. Tgl.
கமெக்ஸின் 1% கலவை, பென்ஸில் பென்ஸோனேற் 25% கலவை, ரெந்மோசோல் 5% கலவைபோன்ற மேல்
நாட்டு மரு ந்துகளை மேல்நாட்டு மரு த்துவரின் ஆலோசனை யின்றி வெளிப்பூச்சாகப் பாவிக்கக்கூடாது;

Page 16
22
சிரங்கு தொற்றினலும் ஏற்பட்டாலும் பொதுவாகத் தோல் நோய்கள் பலவற்றுக்கும் உண்ணும் உணவுகளின் ஒவ்வாமையும் (Alergy) காரணமாகின்றது இான ஆயுள் வேத வைத்தியம் கூறுகின்றது. பாடலைக் கவனியுங்கள்.
*" பெரும் கம்பு சோளம் இறுங்குடன்
வரகு காருடன் வாழையின் காயொடு உரை கொள் போகல் கெளிற்று மீன் உண்டியர் விரிவதாய்க் காப்பாறும் வளர்ந்திடும்,
எனவே கம்பந்தானியம், சோளம், இறுங்கு, வரகரிசி, காரரிசி, வாழைக்காய், பாகற்காய், கெளிறு, மற்றும் கொழுப்பு அதிகரித்த மீனினங்கள், இருல், நண்டு, கணவாய், தக்காளி, றம்புட்டான், அன்னமுன்னுப்பழம், அன்னசி போன்றவற்றை தோல் நோயாளர் தொடர்ந்து சாப்பிடுவது நல்லதல்ல.
சாதாரணமாக சொறி சிரங்குகளுக்கு பின்வரும் பாட வில் கூறப்படும் மருத்தெண்ணெயைச் செய்து வெளிப் பூச்சாகப் பூசிப்பாருங்கள் நல்ல சுகம் தெரியும்.
"சோம்பித் திரியும் மானிடரே
சும்மா சிரங்கைச் சொறியாதீர்
ஆம்பற் சிரங்கு வேம்பால்
அவுரிச்சாறு விட்டரைத்து
வேம்பின் நெய்விட்டதைக் குழைத்து
வெயிலில் பிதங்கவைத்தெடுத்து
சாம்மல் பறக்கத் தேய்ப்பீரேல்
தழும்பு சற்றும் காணுதே'
நீராம்பற் கிழங்கு வேம்பால் இரண்டும் சம அளவாய் எடுத்து அவுரிச்சாற்ருலரைத்து, வேப்பெண்ணெய் சேர்த்து வெயிலில் காயவைக்கவும். நீர் வற்றியதும் எண்ணெயை வடித்து வெளிபூச்சாகப் பாவிக்கவும்.
அறுகம் புல்லையும் மஞ்சளையும் சேர்த்து வைத்துபூசி அரை மணித்தியாலத்தின் பின் குளிக்கவும். குப்பைமேனி

23
இலைச்சாற்றில் கறி உப்புத்தூள் கலந்து காலையில் பூசவும் அரை மணித்தியாலத்தின்பின் குளிக்கவும். ஒரு வாரம் கழியச் சுகமாகும்.
ஆடு தின்னுப்பாளைச்சாறும் நல்லெண்ணெயும் கலந்து வெயிலில் வைத்து நீர் சுண்டினதும் எண்ணெய் பூசிவருக,
மேற்படி மருந்துகளை நாங்களாகவே செய்து பாவிப் பதில் ஒரு சிரமமும் இல்லை. ஆனல் கந்தகக் களிம்பு, சிரங்கெண்ணெய் போன்ற பூச்சுக்களையும், நிலபாவல் சூர ணம், சிவகரந்தைச் சூரணம், கைசோர குங்குலு, கந்தகர சாயணம் போன்றவற்றை ஒரு ஆயுள் வேத மருத்துவரின் கண்காணிப்பிலே பெறல் நன்று.
= டாக்டர் விஸ்வபாரதி
(நன்றி: ஈழநாடு)
உணவில் கறிவேப்பிலை சேருங்கள். இது வாந்தி யைத் தடுக்கும். சீரணத்தை உண்டுபண்ணும். வாய் வைப் போக்கும், சீதபேதியை நிறுத்தும். வயிற்றுப் பொருமலைக் கண்டிக்கும். பித்தத்தைத் தணிக்கும்.
உணவுக்கு மனமுட்டச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை யைச் சாப்பிடும்போது நீக்கிவிடாதீர், சேர்த்துச் சாப் பிடுங்கள் ! எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிப் பாவிக்க முடி உதிர்வைத் தடுக்கும். முடி கறுக்கும்.

Page 17
நீரிழிவா 翰,等。鲁
நீரிழிவு நோயினுல் அவதிப்படுகிறீர்களா ? அப்படி யானுல் ரீ
(அ) உங்கள் உணவை முறைப்படுத்திக்கொள்ளுங்கள்.
(ஆர் "இன்சுலின் ஊசிமருந்து அவசியப்படின் தவ
ருது போட்டுக்கொள்ளுங்கள்.
(இ) மாத்திரைகள் அவசியப்படின் முறைப்படி உட்
கொள்ளுங்கள்.
(ஈ) உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள்,
(உ) மனத்தளவில் சோர்ந்து பீதியடைந்து விடா
தீர்கள்,
"பஞ்சந்தாங்கி" எனப்படும் குரக்கன், (கேழ்வரகு) எள், முருங்கைஇலை போன்ற இயற்கை உணவுகளைத் தாராள மாக அன்ருட உணவு வகைகளில் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்திவிடலாம்.
குரக்கன் உணவை வாழ்நாளில் தொடர்ந்து உணவாகப் பயன்படுத்துவோரை எந்நிலையிலும் இந்நோய் பற்றுவ தில்லையாம் .
எள்ளைச் சுத்தஞ்செய்து தோல் நீக்கி வறுத்துக் கொள் ளவும். பின் பனவெல்லப்பாகு காய்ச்சி அத்துடன் சேர்த்து எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாகச் செய்து பத்திரப் படுத்தவும். தினமும் காலை ஒரு உருண்டை வீதம் சாப் பிடுங்கள்.
முருங்கை இலையும் சிறந்த உணவு, கொழுப்பில்லாத இறைச்சி, மீன், முட்டை, பருப்பு வகைகள், பயறு, பாகற்காய், கீரை வகைகள் நன்கு சாப்பிடுங்கள்.
வெண்ணெய் எடுத்த மோர், தக்காவி, வெள்ளரிக் காய், எலுமிச்சம்பழச்சாறு என்பனவும் நன்று.

25
அரிசி கோதுமை, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு வாழைப்பழம், பலாப் பழம் போன்ற உணவுகளைத் தவிர்க் இவும். இனிப்புப் பண்டங்களைச் சாப்பிடவே ಟಿಸಿಕಿ-{"ಟ್ರಿ
ாதங்களில் காயங்கள் . புண் ஏற்படாமல் பாது காத்துக்கொள்ளவேண்டும், வெறுங்காலுடன் நடப்பதைத் தவிர்க்கவும்.
இந்நோயினுல் பாதிக்கப்பட்டவர்கள் தி ைசரி சிறிது உடற்பயிற்சி செய்தல் வேண்டும். சிறிது தூரம் வேதி மாக
நடத்தல், ஓடுதல், நீச்சல் அடித்தல் போன்றவை போது மான உடற்பயிற்சிகளாகும்.
"இந்த வியாதியிலிருந்து மீளப்போவதில்லே' என மனப் பீதியடைந்து சோர்ந்து போகக்கூடாது.
சரியான மருத்துவத்தை மேற்கொண்டால், உணவுக் கட்டுப்பாடுடன் இருந்து விட்டால் இந்நோயை எளிதாக வென்றுவிடலாம்.
சிந்து "மூலிகை"-1
ஒவ்வொரு வீட்டு வளவிலும் மூலிகை நாட்டுங்கள்! அவை உணவாகவும், மருந்தா அவும் பயன்படும், அழகும் தரும்g

Page 18
gp6mLS) GELBFIE LGFAP EDIFY . . . ?
பெரும்பாலான நிலைமைகளில் ஊசி தேவைப்படுவதில்லை. மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிற பலநோய்களை மருந்து சாப்பிடுவதன் மூலமாகவே குணப்படுத்திவிட முடியும். இது ஊசிக்கு நிசராகவும் அல்லது அதற்கு மேலாகவும் பயன விக்கிறது. மிகவும் அவசியமானபோது மட்டுமே ஊசி போடவேண்டும். அவசர நிலைமைகளைத் தவிர மற்ற நேரங்களில் சுகாதாரப் பணியாளரோ அல்லது ஊசிபோடு வதில் பயிற்சிபெற்றவரோதான் ஊசிபோடல் வேண்டும்.
எப்போது ஊசி போடலாம்?
சிபார்சு செய்யப்பட்ட மருந்து, மாத்திரை அல்லது மருந்து வடிவில் கிடைக்காத சந்தர்ப்பங்களில் . . .
ஒருவர் அடிக்கடி வாந்தி எடுப்பதால் மருந்தை விழுங்க ¥: இருக்கும்போது அல்லது மயக்கமடைந்திருக்கும்
Rhif 357 - 6 =
நோய்க்கு ஊ சி மருந்தே உடனடித் தேவையென கருதும் பட்சத்தில் , , ,
எப்போது ஊசி போடக்கூடாது?
மருத்துவ உதவி இலகுவில் கிடைக்கக்கூடுமானுல் ஊசி
போடக்கூடாது. நோய் கடுமையாக இல்லாதபோது ஊசிபோடக் கூடாது.
ஜலதோசம் அல்லது ஃபுளுவுக்கு ஊசிபோடக்கூடாது. சிபார்சு செய்யப்படாத மருந்தை ஊசிமூலம் செலுத் தக்கூடாது. மருந்தைப் பயன்படுத்துவதற்குரிய முன்னெச்சரிக்கை களை மேற்கொண்டாலொழிய மருந்தை ஊசி மூலம் செலுத்தக்கூடாது. உங்கள் கிராமத்தில் இளம்பிள்ளைவாதநோய் பரவிக் கொண்டிருக்கும்போது, குறிப்பாகச் சிறு குழந்தை களுக்கு, ஊசி போடுவதைத் தவிர்க்கவும். பொதுவாக மருந்தை வாய்வழியாக உட்கொள்வது பாது காப்பானது; ஊசிமூலம் செலுத்துவது ஆபத் தானது
- சித்தன் *மூலிகை"-3

குடிநீர்வகை சில .
1. சகல சுரத்துக்கும் குடிநீர்,
சுக்கு சிறு நெருஞ்சில் மிளகு சிறு தேக்கு திற்பலி வாய்விடங்கம் திரிபலை பேய்ப் புடோல் அதிமதுரம் நிலப்பன
கோரைக் கிழங்கு சீந்தில் வெள்ளுள்ளி ufiġ u L. Arresaħ சிற்ருமட்டி நற்சீரகம் சதகுப்பை சிற்றரத்தை
வகை 10 கிராம் எடுத்து 2 லீற்றர் நீர் விட்டுக்காய்ச்சி 4 பங்கு ஆக வற்றவைத்து 2 அவுன்ஸ் வீதம் தினம் 3 தடவை குடிக்கவும்.
2. சகல இருமலுக்கும் குடிநீர்,
கண்டங்கத்தரி வேர், வட்டுக்கத்தரி வேர், துதுவளே இலை, முசுமுசுக்கை இல், திற்பலி, மிளகு, சுக்கு, அதி மதுரம், கற்பூரவள்ளி இலை, நிலபாவல், மல்லி, கருஞ் சீரகம், ஆடா தோடை இலை, சிந்தில், நாயுருவி ஆகிய வற்றை வகை 10 கிராம் எடுத்து 2 லீற்றர் நீர்விட்டு த் பங்கு ஆக சுண்டக் காய்ச்சி ஒரு அவுன்ஸ் வீதம் தினம் மூன்று வேளை தேக்கரண்டி தேன் கூட்டி குடிக்கக் சகல இருமலும் சுகமாகும்.
வாந்திக்குக் குடிநீர்,
நெற்பொரி கக்கு
ஓமம் திற்பவி அதிமதுரம் உள்ளிப்பூடு மிளகு நற்சீரகம்
வகை 10 கிராம் எடுத்து 2 லீற்றர் நீர் விட்டு 4 பங்காக ண்டக்காய்ச்சி அவுன்ஸ்படி சிறிது தேன் சேர்த்து குடிக்க ாந்தி உடன் நின்று விடும்.

Page 19
28
கீத வயிற்றேட்டத்துக்கு குடிநீர்
அதி விடையம் மங்குஸ்தான்பழ ஒடு
அதிமதுரம் மாங்கொட்டைப் பருப்பு
திற்பலி வெந்தயம்
ஏலம் - அக்கரr
ஓமம் கோரைக் கிழங்கு மாதுளம் ஒடு காட்டாத்திப் பூ
வகை 10 கிராம் வறுத்து, அவித்து நான்கில் ஒன்ருகக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் எடுத்து தேன் 1 மேசைக் இரண்டி வீதம் சேர்த்து ஒரு நாளைக்கு 6 தடவை குடிக்கவும், சகல கழிச்சல், வயிற்றுளைவு, வயிற்றேட்டமும் தீரும்,
செங்கண்மாரி குடிநீர்
வ 3 கிராம்
வெட்டி வேர் வ ை16 கிராம் சந்தனச் சீவல்  ை10 கிராம் தாமரை வளையம்  ை7 கிராம் நற்கீரகம் மே 8 கிராம் அதிமதுரம் ఊ తీ కj"గా கோஷ்டம் --n, 3 Gipuratruis சுக்கு ம 3 கிராம் மிளகு ல 3 இராம் திற்பவி வ 5 இரrம் மல்வி வ 20 கிராம் சர்க்கரை
இச் சரக்குகளை 4. லீற்றர் செவ்விளநீர் விட்டு அரைவாசி பூக வற்றக் காய்ச்சிய கஷாயத்தில் ஒரு அவுன்ஸ் எடுத்து தேற்பொரித்தூள் கலக்கிக் குடிக்கவும்

ஒர் ஆய்வு -
un se
வைத்திய சோதிட நூல்களைத் தமிழிலே தந்த ஈழத்து மன்னர்கள் பண்டைய தமிழகத்தில் ஆயுள்வேதம், காலக்கணிதம் (சோதிடம்) ஆகிய கலைகள் அந்தண வகுப்பினருக்கு உரிய னவாகவே கருதப்பட்டுவந்துள்ளன. சமஸ்கிருத மொழியில் உள்ள புராதன ஆயுள்வேத நூல்களையும், சோதிட நூல் களையும் அந்தணரல்லாதார் படித்துப் பயன்பெற அனும் திக்கப்படவில்லை. மேற்படி நூல்களை ஆதாரமாகக் கொண்டு தமிழில் நூல்கள் ஆக்கப்பெற்ற பின்னரேயே அந்தணரல் லாதாரும் மருத்துவத் தொழிலை மேற்கொள்ள முடிந்தது. கி. பி. 12-ஆம் நூற்ருண்டின் முற்பகுதியில்கூட தமிழ் நாட் டில் இருந்த மருத்துவக்கல்லூரி யொன்றில் வடமொழி மருத் துவ நூல்களே பயிற்றுவிக்கப்பட்டன என்பதை அறிகி ரேம். இச்சந்தர்ப்பத்தில் மதுரைத் தமிழ்ச் சங்க ஏடொன் றில் காணப்படுவதாகக் கூறப்படும் (அருணுசலம் - 1970) கீழ்க்காணும் வாசகம் நமது கவனத்தைப் பெரிதும் ஈர்ப்ப தாக உள்ளது.
"சகரனுண்டு ஆயிரத்திருநூற்றின் முன்னையோர் வட
மொழியிற் செய்த சாத்திரங்களையெல்லாம் செந்தமிழி
ஞலே செய்து முடித்தான் வெண்பைக் குடிநாட்டுப் பிர தேசப் பாண்டவன் மங்கலமான பஞ்சமாதேவிச் சதுர்
வேதி மங்கலம் கடவூர் ஆரியன் திருக்கோட்டி நம்பி என்று
கருதுவது"
மேற்காணும் வாசகத்தைச் சு ட் டி க் காட்டியுள்ள தமிழ் இலக்கிய வரலாற்ருசிரியர் அருணுசலம், திருக்
கோட்டி நம்பி மொழிபெயர்த்ததாகக் கூறப்படும் நூல் களுள் ஒன்றினையேனும் குறிப்பிடவில்லை. இவற்றுள் எது
வும் அவருக்குக் கிடைக்கவில்லை என்றே கருதலாம். எனி
னும் இலங்கையில் கொழும்பு கலாநிலையத்தினரால் வெளி
யிடப்பெற்ற 'சூடாமணி உள்ளமுடையான்" என்னும் சோதிடநூலின் ஆசிரியராகக் திருக்கோட்டி நம்பி என்பவர்
ൈത്ത

Page 20
30
கூறப்படுகிருர், இந்நூல் சகரளுண்டு 1100-இல் ஆக்கப் பெற்றது என்ற விபரம் இந்நூலிலேயே தரப்பட்டுள்ளது.
* விளம்பிய சகரணுண்டாயிரத் தொரு நூற்றின் மிக்க வளம் புகழ் பாண்ட மங்கை மாறி முனிய வன்சே யிளங்கொடி மடவார் காம ணிசைத்திரு கோட்டி நம்பி யுளம் புகக் கணிதநூலை யுரைத்தன னுலகுக் கெல்லாம்.?
(சூடாமணி உள்ளமுடையான்-பாடல் 446)
மதுரைச் தமிழ்ச்சங்க ஏட்டில் திருக்கோட்டி நம்பியின் காலம் 1200 எனக் கூறப்பட்டுள்ள போதிலும் சூடாமணி உள்ளமுடையான் நூலில் காணப்படும் விளம்பி ஆண் டாகிய சகவருடம் 100 (கி. பி. 1178) என்பதையே சரி யான ஆண்டாகக் கொள்ளலாம்.
திருக்கோட்டி நம்பியின் காலமாகிய கி. பி. 12-ஆம் நூற் முண்டின் இறுதியில் சோதிடம், வைத்தியம் போன்ற கலைகள் பற்றிய வடமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்கும் முயற்சிகளுக்கு அத்திவாரம் இடப்பட்டிருக்கலாம். எனி னும் திருக்கோட்டி நம்பியின் சோதிட நூலான சூடாமணி உள்ளமுடையானுக்கு அடுத்தபடியாக நாம் அறியக்கூடிய நூல் ஈழத்தில் எழுந்த "சரசோதிமாலை என்னும் சோதிட நூலேயாகும். இந்நூல் கி.பி. 1310-ஆம் ஆண்டில் ஆக்கப் பெற்றுள்ளது. தம்பதெனியாவில் அரசுபுரிந்த நான்காம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் அரசனது ஆணையின் பேரில் தேனுவரப்பெருமாள் என்பவர் "சரசோதிமாலை" யினே ஆக்கிஞர் அரசர்களின் தூண்டுதலின் பேரில் வைத் தியம், சோதிடம் முதலான கலைகள் பற்றிய வடமொழி நூல்களைத் தமிழில் ஆக்கும் பணிகள் இலங்கையிலே மேற் கொள்ளப்பட்டன என்பதற்குச் சான்ருக சரசோதிமாலை, செகராசசேகரமாலை போன்ற சோதிடநூல்களும், செகராச சேகரம், வரராசசேகரம் போன்ற வைத்திய நூல்களும் சான்றுபகருகின்றன. கி. பி. 14-ஆம் நூற்றண்டில் யாழ்ப்பா னத்தையாண்ட வரோதய சிங்கையாரியன் (செகராக

3.
சேகரன்) என்பவனது புகழ்கூறும் பாடல்களே செகராச சேகரமாலை என்னும் சோதிட நூலிலும், செகராச சேகரம் என்னும் வைத்திய நூலிலும் காணலாம் அடுத்து தன் வந்தரியின் பெயரில் வழங்கி வந்த வைத்திய சிந்தாமணி என்னும் வடமொழிநூலே ஆதாரமாகக் கொண்டு ஆக்கப் பெற்றதே பரராசசேகரம் என்னும் தமிழ் மருத்துவ நூலாகும். பறங்கிப்பட்டை என்னும் மூலிகைபற்றியும் கூறும் இந்நூல் கி பி. 1540 க்கும் பிற்பட்டதாகும். பார் மேவு மரசர்குல திலகமான பரராசசேகரனேப் புகழும் இந் நூல் பெரும்பாலும் பரராசசேகரன் புவிராசபண்டாரத் தின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1580 - 1591) ஆக்கப் பெற்றிருத்தல் கூடும்.
செகராசசேகரன் காலத்தில் எழுந்ததும் இன்னமும் ஏட்டுச் சுவடியிலேயே காணப்படுவதுமான தமிழ்வாகட நூலில் மன்னன் புகழ்கூறும் அநேக பாடல்கள் காணப் படுகின்றன அவற்றுள் ஒன்று பின்வருமாறு =
*ஆக்கியே திற்பலியுட னருந்தப் போகு மாமசுரம் நோக்கிய வாகடம்டியின்று நோயதுயிரண் காலனேயுந் நீக்கியே யாருயிரை நிலையாக்குந் நரபாலன் சேக்கொடியோன் செகராச சேகரன வணங்கிடுமே."
தன்வந்திரி வைத்திய சிந்தாமணி" என்னும் நூலில் இலங்கைச் சிங்கமன்னனின் புகழ் கூறப்படுகிறது. இம் மன்னன் யார் என்பதை அடையாளம் காணமுடியாதுள்ளது. எனினும் மேற்படி நூலில் காணப்படும் பாடல்கள் சில வற்றை மேற்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் இங்கு தருகிறேன்.
சதுரக் கள்ளிச்ச மூல மதைத்
தயங்க வுலர்திப் பொடி செய்து அதிர மணக்குஞ் சந்தண்ணிர்
விட்டரைத்த குளிகை யுரைத்திடவே
851.32

Page 21
32
குதிரை முதலாய் நாற்காலி கூறு
மிரு விழி நோய் தீரும் கதிரோனிலங்கைச் சிங்கத்தைக்
கண்ட படை போல் வெளியாமே,
இணங்கும் பறவை விழி கலங்கி
லிருமா மானே வணங்கியினீர் குணங்கள் விழியும் வெளியாகுங்
கூறக் கேளுமெதிர்த்த படை கணங்கள் காளிக் கிரை கொடுக்குங்
858 afls)ții sosă găl8 idsărsării வணங்கித் திரைகளேந்தாக மன்னர் படை போல் வெளியாமே.
உப்பு முருங்கையிலைச் சாறு
வுடனே புளியிலைப் பறவைவிழி செப்புமூடனே வெளியாகுந் தீருந்
திட நாம் சொற்கேளு தப்பா திலங்கைச் சிங்கமுன்னே
தரணி மன்ன ரெதிர்தாலும் அப்பால் பிழைத்தோ மென்ருேடு
மதுபோல் வியாதி பறந்திடுமே.
தமிழ்நாட்டைச் சேர்ந்த திருக்கோட்டி நம்பியே வட மொழிச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற் சியில் முதன்முதலில் ஈடுபட்டவராகத் தெரியினும் அவரது சோதிடநூல் ஒன்றே இன்று காணப்படுகிறது. அதேசம யம் வைத்தியம், சோதிடம் முதலான துறைகளில் தமிழ் நூல்களை ஆக்குவதில் ஈழத்தவரே முன்னணியில் நின்றனர் என்பதற்குச் சான்ருக மேற்குறிப்பிடப்பெற்ற நூல்கள் பல விளங்குகின்றன. இத்துறையில் ஈழம், தமிழகத்தைவிட முந்தி நின்றது என்றே கருதலாம்.
- கலாநிதி பால, சிவகடாட்சம்


Page 22
விரைவில் வெளிவருகின்றன
* என் கதை
(சுய விமர்சனம்)
* மருத்துவப் பூக்க
* யாழ்ப்பாண மூல
விபரங்களுக்கு :
ep636. "சிகரம்
புங்குடு
* ஆரோக்கிய வாழ்வுக்கு "மூலிகை" படியுங்கள் !

ކު ހޯ8{
-கே. டானியல்
ᏛᏍ85
தீவு-3.