கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை மனித உரிமைகள் நிலை 2006

Page 1
og insi, , ,
கனம் பிரச்சனைகளும் மற்று
 

அதன் angin

Page 2

இலங்கை: மனித உரிமைகளின் நிலை 2006

Page 3

இலங்கை: மனித உரிமைகளின் நிலை 2006
2005 ஆம் ஆண்டு தை-மார்கழி வரையுள்ள காலப்பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பை இவ்வறிக்கை உள்ளடக்குகின்றது.
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அற நிலையம் 3, கின்சி ரெறஸ் கொழும்பு 08 இலங்கை

Page 4
C சட்டத்துக்கும் சமுகத்துக்குமான அறநிலையம் பல்குனி 2008
ISBN 978-955-1302-11-5

பொருளடக்கம்
.
II.
2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு
6.1
6.2
6.3
6.4
6.5
அறிமுகம் சுனாமிக்குப் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டமூலம்
சமாதான நடைமுறை அவசரகாலச் சட்டப் பிரமாணங்கள் ஒருவரின் நேர்மை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு
காணாமல்போதல்
பிந்துனுவெவ மனிதப் படுகொலை சித்திரவதை செய்தல் மற்றும் தடுத்துவைத்திருக்கும் போது ஏற்படும் மரணம் சட்டத்திற்கு முரணான முறையில் உடனடியாக அல்லது ஒருதலைப்பட்சமாக மரணதண்டனைகளை நிறைவேற்றுதல்
7. பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள 8. முடிவுரை
கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 1. அறிமுகம்
1.1
1.2
1.3
1.4
சுனாமியின் தாக்கம் மனித உரிமைகள் மீதான விளைவு அரச இடையீடுகள் 1.3.1 சட்டவாக்க இடையீடுகள் 13.2 கொள்கை இடையீடுகள் 13.3 நிறுவனரீதியான ஏற்பாடுகள் அரச சார்பற்ற இடையீடுகள்
2. கரிசனத்துக்குரிய சில விடயங்கள்
2.1
இடப்பெயர்வு மற்றும் வீட்டு வசதி 2.1.1 பாதுகாப்பு வலய மற்றும் வீடமைப்புக் கொள்கை 2.1.2 பாதுகாப்பு வலயக் கொள்கைக்கான மாற்றங்கள் 2.1.3 பின்னுரித்து மற்றும் ஆதன உரிமைகள் 2.1.4 பயனாளிகள் பட்டியல் மற்றும் சேத மதிப்பிடல்
26
28
30
33
33
34
37
37
42
45
46
47
47
47
51
51
53

Page 5
7.
2.1.5 வீடமைப்பு நிர்மாணங்களின் முன்னேற்றம் மற்றும் கட்டிட அமைவிடங்களின் பொருத்தமான தன்மை 2.1.6 உட்கட்டுமானம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் வாழ்வாதாரம் மற்றும் ஊட்ட உணவு பெண்கள் 4.1 பங்குபற்றல் 4.2 நிவாரணங்கள் கிடைக்கப் பெறுதலுக்கான வழிவகைகள் 4.3 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன முரண்பாடு சுனாமியால் பாதிக்கப்பட்டதும் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதுமான உள்ளக இடம்பெயர்ந்த மக்களைக் கையாள்வதிலான ஒப்புரவு முடிவுரைக் குறிப்புகள்
II. மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு
1.
2.
அறிமுகம் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளின் பின்னணியில், உயர்நீதிமன்றத்தின் நீதிமுறை மறுமொழி 2.1. ஆட்கள் ‘காணாமற் போதலின்’ பின்னணியில் வாழும்
உரிமையை உறுதிப்படுத்துதல் 2.2. தகவலுக்கு அணுக்கம் பெறுவதற்கு பிரசைகளின் உரிமை 2.3 சமத்துவத்திற்கான உரிமைதொடர்பில் சட்டநெறித் தர்க்கம்
2.3.1 விமல் வீரவன்ச மற்றும் ஏனையோர் எதிர்
சட்டத்துறைத் தலைமையதிபதி மற்றும் ஏனையோர் 2.3.2. முதல் தகவல் தொடர்பில் பொலிஸ் நடவடிக்கையை
நுணித்தாய்வு செய்தலும் குற்றவியல் புலனாய்வுகளைத் தொடக்கிவைத்தலும் 2.3.3. பல்கலைக்கழக அதிகாரிகளின் தற்றுணிபைத்
தடைசெய்தல் 2.3.4 தொழிலிருக்கும் ஆட்களின் நீதி முறையான
எதிர்பார்ப்புகள் 2.3.5. நிவாரணத்தை மறுப்பதில் காலத்தடையின்
6JDL60)L60o D
2.3.6 பாடசாலை அனுமதிப்புகளுக்கான உரிமை 2.4 சித்திரவதைக்கும், கொடுரமான, மனிதாபிமானமற்ற
அல்லது இழிவான நடாத்துகைக்கும், அல்லது தண்டனைக்கும், உட்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை தொடர்பில் நீதிமுறைப் பகுத்தறிவு (உறுப்புரை 11)
55
57
57
60
62
63
64
64
67
7
74.
76
76
87
88
9
95
97
99
OO
O

6.
1.
2.
2005ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்கள் Ol அரசியலமைப்பின் 140ஆம் உறுப்புரையின் நியதிகளின்படி 103 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் பின்னணியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிமுறை எதிர்வினை
4.1
4.2
4.3
4.4.
4.5
4.6
வாக்காளரின் உரிமைகளை உறுதிப்படுத்துதல் 103 பதவியுயர்வு நடைமுறைகளில் நல்லாட்சியின் 104 கோட்பாடுகளைப் பாதுகாத்தல்
பகிரங்க அலுவலர்களின் எதேச்சையான, நியாயமற்ற 106
நடவடிக்கைகளைத் தடைசெய்தல் உற்பத்தியாளர்களின்..வியாபாரிகளின் உரிமைகளுக்கும் 107 சமுதாயத்திற்கும் அத்தியாவசியமான பண்டங்களை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் சமநிலை பரீட்சார்த்தியொருவரின் எதிர்பார்க்கப்பட்ட 108 உரிமைகளுக்குச் சாதகமாக கல்விசார் (பல்கலைக்கழகம்) தன்னாட்சியைக் குறைத்தல் தனியார் காணிச் சொந்தக்காரர் ஒருவரின் காணியை 109 சுவீகரிப்பதற்கான அரசின் முடிவையடுத்து நட்டஈட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துதல்.
கு.அ.உ.ச.ச.வின் விருப்பத்திற்குரிய வரைவேட்டின்கீழ் 1 11 தனியாள் தொடர்பாடல்களுக்கு எதிர்வினையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் முடிவுகள்
(!plഖങ്ങ] 17
IV. அவசரகால ஒழுங்குவிதிகள்
அறிமுகம் 18 அவசரகால விதிகளின் சட்டமுறை அடிப்படை, விடயப்பரப்பு 120 மற்றும் கட்டுப்பாடு
2.1 உரிய சட்டமுறை ஏற்பாடுகளும், அவற்றின் விடயப்பரப்பும் 120 2.2 பிரகடனம் பற்றிய பாராளுமன்றக் கட்டுப்பாடு 122 2.3 புறத்தொதுக்கும் பிரிவுகள் 123
1 ஆம் பாகம்
3.
அவசரகாலம் நிலவிய முதலாம் கால கட்டம் 124 3.1 பூர்வாங்க அவதானிப்புக்கள் சில 125 3.1.1 அவசரகால ஒழுங்குவிதிகளுடன் இணங்கும் தன்மை 125 3.1.2 ஒழுங்குவிதிகளின் ஏற்புடைமை 26 3.1.3 ஒழுங்குவிதிகளின் வாசகங்களுக்கு இடையில் 127
உள்ள மொழிfதியான ஒவ்வாமை

Page 6
3.1.4 தொடர்பற்ற முரணான ஒழுங்குவிதிகள் 3.1.5 ஆங்கில வாசகத்தின் வரைபுத் தவறுகள் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் முக்கியமான ஏற்பாடுகள் சிலவற்றை சுருக்கமாக ஆராய்ந்து பார்த்தல் 4.1 காணிகள், வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட சேவைகள்
கைப்பற்றிக் கொள்ளல் (8, 9 மற்றும் 10ஆம் ஒழுங்குவிதிகள்) 4.2 அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின்
நியமனம் (11ஆம் ஒழுங்குவிதி) 4.3 அத்தியாவசிய சேவைகள் மற்றும் மீறுதலுக்கான
தண்டனைகள் (12ஆம் ஒழுங்குவிதி) 4.4 சோதனை செய்தல், கைது செய்தல்,
தடைசெய்வதற்கான அதிகாரங்கள் (16ஆம் ஒழுங்குவிதி) 4.5 கைது செய்தல் பற்றிய மனித உரிமைகள் ஆணைக்
குழுவுக்கு அறிக்கையிடுதல் 4.6 மரண தண்டனை மூலம் தண்டனை வழங்கக்கூடிய
குற்றங்கள் (17ஆம் ஒழுங்குவிதிகள்) 4.7 வேறு குற்றங்களும் தண்டனைகளும் 4.8 அவசர ஒழுங்குவிதிகளை மீறுவதற்கான சாதாரண
தண்டனைகள் 4.9 குற்றமொன்றைப் புரிவதற்கு முயற்சி செய்தல் போன்ற
விடயங்களும் தண்டனையும் 4.10 குற்றங்களுக்கான புலன்விசாரணை வழக்கு
விசாரணைகள், குற்ற ஒப்புதலை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பிணை வழங்குதல் அவசரகால ஒழுங்குவிதிகளில் (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) அடங்கியுள்ள வேறு ஒழுங்குவிதிகள் அவசரகால நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும் ஒழுங்குவிதிகளின் பல்வேறு ஏற்பாடுகள் முதலாம் அவசரகாலப் பிரகடனமும், 14 நாட்களுக்குப் பின்னர் அதன் வலிதாந்தன்மையும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவசரகால ஒழுங்கு விதிகள் எடுக்கப்பட்ட வெளிப்படையான முயற்சிகள் இரண்டாம் பிரகடனத்தினதும் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் வலிதான தன்மை
127
28
129
129
130
130
133
34
35
137
138
138
138
142
143
144
46
48

I ஆம் பாகம்
10.
11.
12.
3.
அவசரகாலத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த இரண்டாம் காலகட்டம் பிற்காலத்தில் நீக்கப்பட்ட அல்லது இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 11.1 வாகனங்களை கைப்பற்றிக்கொள்ளல்
(2005 ஒக்டோபர் 13ஆந் திகதி) நீக்கப்பட்டுள்ளது 11.2 தனிப்பட்ட சேவைகளை கைப்பற்றிக் கொள்ளல்
(2005 ஒக்டோபர் 13ஆந் திகதி நீக்கப்பட்டுள்ளது) 11.3 அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமொரு
வரை நியமனஞ் செய்வதற்கான ஏற்பாடுகள் (2005 ஒக்ரோபர் 13ஆந் திகதி நீக்கப்பட்டது) 11.4 அத்தியாவசிய சேவைகள் (2005 ஒக்டோபர் 13ஆந் திகதி)
நீக்கப்பட்டுள்ளது 11.5 கடமையை மேற்கொள்ளும் போது அதன் விளைவாக
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது ஆயுதங் தாங்கிய படையினால் ஏற்படுகின்ற மரணங்கள் அல்லது கைது செய்யப்பட்டிருக்கும் போது ஏற்படுகின்ற மரணங்கள் (2005 ஒக்ரோபர் மாதம் 13ஆந் திகதி நீக்கப்பட்டுள்ளது) 11.6 பொதுக் கூட்டங்கள் மற்றும் பொது ஊர்வலங்களைத் தடைசெய்தல் (2005 செப்ரெம்பர் 20ஆந் திகதி) இடைநிறுத்தப்பட்டுள்ளது 11.7 பிரசுரங்கள் கட்டுப்படுத்துதல் (2005 செப்ரெம்பர் மாதம்
20ஆந் திகதி இடைநிறுத்தப்பட்டுள்ளது) துன்புறுத்தப்படும் ஏற்பாடுகள் சில சுருக்கமாக 12.1 நடமாடுதலுக்கான மட்டுப்பாடுகள் 12.2 19ஆம் ஒழுங்குவிதிகளின் கீழ் ஆட்களை
தடுத்துவைத்தல் (தடைசெய்யும் தடுத்து வைத்தல்) 12.3 சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல்
(20ஆம் ஒழுங்குவிதிகள்) 12.4 தடுத்துவைத்தல் (21ஆம் ஒழுங்குவிதிகள்) 12.5 தங்கியிருப்பவர்களுடைய பட்டியலொன்றை குடும்பத்
தலைவரினால் வழங்கப்படல் வேண்டும். 12.6 மரண தண்டனை மூலம் தண்டனை செய்தல் 12.7 மரண தண்டனை பிரயோகிக்கப்படும் குற்றவ்கள் வேறு குற்றங்களும் தண்டனைகளும் 13.1 குற்றங்கள் 13.2 தண்டனை
150
51
15
51
152
152
153
154
154
55
155
155
58
159
162
162
64
65
165
166

Page 7
14.
5.
16.
17.
18.
19.
13.3 அவசர கால ஒழுங்குவிதிகளை மீறுதல் தொடர்பாக
விதிக்கப்பட்டுள்ள சாதாரண தண்டனைகள் 13.4 குற்றமொன்றை புரிவதற்கு முயற்சி செய்தல் போன்ற
மற்றும் தண்டனைகள் சுருக்கமாக விவரிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதியின் சில முக்கியமான பிரிவுகள் 14.1 கட்டிடங்களை சுயாதினப்படுத்தல் தொடர்பிலான
குற்றங்கள் 14.2 சரணடையவர்களைக் கட்டுக்காப்பில் வைத்திருத்தல் 14.3 சில புத்தகங்களை உடமையில் வைத்திருத்தல் 14.4 குற்றங்கள் பற்றி புலன்விசாரணை செய்தல், வழக்கு
விசாரணை குற்ற ஒப்புதல்களின் ஏற்புடைமை மற்றும் பிணை வழங்கல் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் வேறு ஒழுங்குவிதிகள் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளில் அடங்கியுள்ள பல்வேறு ஏற்பாடுகள் புதிய ஜனாதிபதியின் நியமனம் பாராளுமன்ற அமர்வை நிறுத்துதல் மற்றும் அதன் வலிதானதன்மை அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளுக்குப் புரியப்பட்ட திருத்தங்கள்
(pl.96)
அட்டவணை 1
அட்டவணை 11
அட்டவணை 111
SDL_66DD6oo IV
அட்டவணை V
166
67
167
167
68
169
169
7
72
173
175
76
185
188
19 |
192
193

சொற்சுருக்கமும் விளக்கமும்
AG
AHRC
AI
ASP CA Minutes
CAT Act CC CEDAW
CENWOR
CFA
CMC
CRC
CRM CRPO
CYPO
DRMU
EAJP
EMPPR
EPDP EPRLF (V) ICCPR
ICESCR
ICJ
IGP
ILO INGOS
JHU
JVP
LAC
LHRD
LTTE
MOU
சட்டமா அதிபர்
ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் சர்வதேச மன்னிப்புச்சபை
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேன்முறையீட்டு நீதிமன்றக் குறிப்புகள் சித்திரவதைகளுக்கெதிரான சமவாயச் சட்டம் அரசியலமைப்புப் பேரவை பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் மீதான சமவாயம் பெண்களுக்கான ஆராய்ச்சி மையம் யுத்தநிறுத்த உடன்படிக்கை
கொழும்பு மாநகர சபை சிறுவர் உரிமைகள் மீதான சமவாயம் சிவில் உரிமைகளுக்கான இயக்கம் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் சிறுவர் மற்றும் இளம் பராயத்தினர்களின் கட்டளைச் சட்டம் அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவு நீதிக்கான சமத்துவ செயல்முறைத் திட்டம் அவசரகால (நானாவித ஏற்பாடுகள் மற்றும் அதிகாரம்) சட்டம் ஈழமக்கள் சனநாயகக் கட்சி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (வன்னி) குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேசப் பொருத்தனை பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேசப் பொருத்தனை சர்வதேச நீதி வல்லுனர்களுக்கான ஆணையகம் பொல்ஸ் மா அதிபர்
சர்வதேச தொழில் ஸ்தாபனம் சர்வதேச அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் ஜாதிக ஹெல உறுமய மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுன) சட்ட உதவி மன்றம் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான வழக்கறிஞர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்
புரிந்துணர்வு ஒப்பந்தம்

Page 8
MP
NCPA
NESHOR
NGOS
NIC
NLR
NPC
OIC
PA
PLOTE
PSO
PTA
P-TOMS
SC Minutes
SCSL
SLFP
SLMC
SLMM
SLR
SP
STF
TNA
TRO
TULF
UDHR
UGC
UNDP
UNHRC
UNICEF
UNOCHA
UNP
UPFA UTHR (J)
WHO
பாராளுமன்ற உறுப்பினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் மீதான செயலகம் அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் தேசிய அடையாள அட்டை புதிய சட்ட அறிக்கைகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழு
பொறுப்பதிகாரி
மக்கள் கூட்டமைப்பு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் சுனாமிக்குப் பின்னரான நமவடிக்கை மற்றும் முகாமைத்துவக் 5LL60)LDUL
உயர் நீதிமன்றக் குறிப்புகள் சேவ் த சில்ரன் அமைப்பு (இலங்கை)
ரீ லங்கா சுதந்திரக் கட்சி ரீ லங்கா முஸ்ல்ம் காங்கிரஸ் இலங்கை கண்காணிப்பு சபை இலங்கை சட்ட அறிக்கைகள் பொல்ஸ் அத்தியட்சகள்
விசேட அதிரடிப் படை
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான சபை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம்
ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டமைப்பு மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்)
உலக சுகாதார ஸ்தாபனம்

முன்னுரை
இந்த ஆண்டறிக்கை, இலங்கையில் முக்கியமாக 2005ஆம் ஆண்டில் தோன்றிய மனித உரிமை நிலைமைகள் பற்றி தெளிவுபடுத்துவதுடன் அவை தொடர்பில் சர்வதேச மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான கடப்பாடுகளை இலங்கை எந்தளவிற்கு உறுதிப்படுத்தியுள்ளது என்பதையும் மதிப்பிட முயற்சிக்கிறது.
இலங்கை ஏற்று அங்கீகரித்த மனித உரிமைகளை நிறைவேற்றுவதிலான அதன் கவனத்திற்கப்பால் பொதுவான கருப்பொருளைக் கொண்டிருக்காத கட்டுரைகளின் ஒரு திரட்டாகவே முன்னைய வருடங்களின் அறிக்கை இருந்தது.
எவ்வாறாயினும், 26 டிசம்பர் 2004 அன்று நாட்டை உலுக்கிய சுனாமியின் தாக்கத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களும் அநேகமாக பாதிக் கப்பட்டன. ஆகையால் இந்த அறிக் கையின் அனைத் து அத்தியாயங்களுமே சுனாமிக்குப் பின்னர் ஏற்பட்ட தாக்கங்களை அவற்றின் சட்ட, அரசியல், சமூக மற்றும் சில சமயங்களில் தனிப்பட்ட மட்டங்களில் வெளிப்படையாக அல்லது உள்ளார்ந்த அர்த்தப்படுத்தும் வகையில் கையாளுகின்றன. ஆதலால், இந்தப் பொதுத்தன்மையைக் குறித்துக் காட்டுவதற்காக நாம் 'சுனாமியும் அதன் பின் விளைவுகளும்" என்ற கருப்பொருளைத் தெரிவு செய்தோம்.
இந்த வருடத்தின் மனித உரிமைகள் நிலை மீதான அறிக்கைக்கும் முன்னைய பதிப்புகளிற்கிடையிலுமுள்ள மற்றொரு வேறுபாடு அறிக்கையின் கண்ணோட்டத்தின் உள்ளடக்கமாகும். இதுவரை, அறிக்கையின் முக்கியமான சாராம்சமே கண்ணோட்டமாக அமைந்து வந்தது. இந்த வருடத்து அறிக்கையின் கண்ணோட்டம், ஆண்டின் செயற்பாடுகள் பற்றிய விரிவானதொரு விபரத்தைத் தருவதுடன் இவ்வறிக்கையின் வேறேதேனும் இடத்தில் கையாளப்பட்டிருக்காத விடயங்களைக் குறிப்பிடும் தனியானதோர் அத்தியாயமாகவுள்ளது.
இந்த அறிக்கை சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அற நிலையத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டதுடன், நீண்ட ஆராய்ச்சி மீளாய்வு மற்றும் சீர்படுத்தல் என்பவற்றின் விளைவாக உருவானதாகும். சம்பந்தப்பட்ட விடயப்பரப்புகளில் விசேட அறிவு கொண்ட தனிப்பட்டவர்களே அத்தியாயங்களை எழுதுவதற்கு வேண்டப்பட்டனர். அத்தியாயங்களுக்கான கட்டுரைகள் பின்னர் அவற்றின் சரியான தன்மை, குறிக்கோளுடனான இணக்கம் மற்றும் தெளிவான தன்மை என்பவற்றுக்காக மீளாய்வு செய்யப்பட்டன. தொகுக்கப்பட்ட அறிக்கை பினி னர், அதனி மாதிரி மற்றும் அணுகுமுறைகளின் ஒரு

Page 9
சீர்தன்மைக்கமைவாக சாத்தியமானவரை கவனமாக சீர்படுத்தப்பட்டன. அறிக் கையில் உள்ளடக் கப்பட்ட விடயங்கள் வேறுபட்ட பல கோணங்களிலிருந்து அணுகப்படக் கூடியவையாதலால் சில விடயங்கள் அல்லது பிரச்சினைகள் ஏனையவற்றைவிடக் கூடுதல் விரிவாகக் கையாளப்பட்டுள்ளதுடன் சில அத்தியாயங்கள் அவற்றுக்கிடையேயான விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று மேற்படிந்து காணப்படுவதும் தவிர்க்கப்பட முடியாதவையாக உள்ளன.
இந்த அறிக்கை, இலங்கை நிலைநிறுத்துவதாக ஏற்று அங்கீகரித்த சர்வதேச சட்டத் தர நியமங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டை நோக்கிய முன்னேற்றும் குறித்தான ஒரு கால அளவீடான இருப்பதுடன், அரசு நிறைவேற்றத் தவறியமைக்காக பொறுப்புக் கூற வைக் கும் ஒரு வழிவகையாகவும் உள்ளது. சிவில் சமூகத்தினுள்ளும் அதே போன்று சிவில் சமூகம் மற்றும் அரசிற்கிடையில் பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பதன் மூலம் அரசினால் மனித உரிமைகளை பயனுறுதியான விதத்தில் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் இவ்வாவணம் வசதியளிக்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் இவ்வறிக்கை தேசிய முக்கியத்துவம் கொண்ட மனித உரிமை விடயங்கள் மீதான தலைப்புக்களை பொதுமக்கள் விமர்சிப்பதில் ஈடுபடுவதற்கான ஒரு நுழைவாயிலாக அமைவதையும் நோக்காகக் கொண்டதாகும்.
சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநின்)லயம் கொழும்பு LDTsiġF, 2007

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு
அம்பிகா சற்குணநாதன் *
1. அறிமுகம்
இலங்கையின் தெற்கு, வடக்கு, கிழக்குக் கரையோரங்களை 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று தாக்கிய சுனாமியின் அழிவுகளை சீரமைக்கும் முயற்சியில் 2005ஆம் ஆண்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில், சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருந்த சமாதான நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செய்முறையைப் பொறுத்தவரையில் இவ்வாண்டில் சட்ட நடைமுறை உதாசீனப்படுத்தப்படும் செயற்பாடுகள் அதிகரித்தவண்ணம் இருந்தது. பாதுகாப்பின்மை, அச்சுறுத்தல் உச்சகட்டத்தை அடைந்திருந்ததனால், பலரும் அவசரகால ஆட்சி முறையின் கீழ் இன்னுமொரு பயங்கரவாத யுகம் உருவாகும் என்று அஞ்சினார்கள். அவ்வாண்டின் நிகழ்வுகளான, உதாரணத்திற்கு சுனாமி மற்றும் நிறுத்தப்பட்ட சமாதான நடைமுறை ஆகிய இரண்டும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் சமூக பொருளாதார உரிமைகளை செயற்கை ரீதியில் பிளவுபடுத்திவிடலாம் என்ற ஒரு நோக்கு இருந்தது. அத்துடன், மனித உரிமைகளைப் பிரிவுபடுத்தி அதனுடன் ஒன்றுக்கொன்று தங்கியிருக்கச் செயப்வதன் அவசியம் வலியுறுத்தப் பட்டது. எனவே, இவ் வாணி டு இப்பிரச்சினைகளைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. பிரிவுகளை ஒன்றிணைத்தல் மற்றும் இலங்கையில் மனித உரிமைகளுடன் ஒனி றையொன று தங்கியிருக் கச் செயப் வதன் அவசியமும்
水 ஆய்வாளர்/ஒன்றிணைப்பாளர், மனித உரிமைகள் மற்றும் அரசியல் சாசனம் தொடர்பான
நிகழ்ச்சி, இனம் சார்ந்த கல்விக்கான சர்வதேச நிலையம், கொழும்பு.

Page 10
2 மனித உரிமைகளின் நிலை 2006
வலியுறுத்தப்படுகின்றது. 2005ஆம் ஆண்டின் நிகழ்வுகள் மனித உரிமைகளை உள்ளடக்கத் தவறியமையின் தாக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இதனுடன் சமாதான நடைமுறை மற்றும் சுனாமியை அடுத்து நிர்மாண நடைமுறைகளைக் கையாள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்பாடுகளும் தோல்வியடைந்துள்ளன.
2005இன் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அடைந்த வெற்றி சமாதான நடைமுறையின் அணுகுமுறையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது. இந்த தேர்தலில் சிறிதளவு இடைவெளியின் மூலம் திரு.ராஜபக்ஷ வெற்றி பெற்றமை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் மிக முக்கியமான அடிப்படை உரிமையான வாக்குரிமை பறிக்கப்பட்டதை எடுத்துக்காட்டியது. எல்.ரி.ரி.ஈ இனர் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று இவர்களுக்கு அறிவித்ததனால்தான் இந்நிலை ஏற்பட்டது. ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி கையாண்ட மென்மையாக செல்லும் அணுகுமுறையைக் கைவிட்டு, எல்.ரி.ரி.ஈ. மனித உரிமைகள் மற்றும் யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டமைக்காக அவ்வியக்கத்திற்கு எதிராகக்கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். சிங்கள தேசியவாத கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ) ஆகியவற்றுடன் இவர் கூட்டுச்சேர்ந்திருந்ததனால், முரண்பாட்டுக்கு சமஷ்டி தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதை இவர் கைவிட்டு, அதற்குப் பதில் ஒற்றையாட்சி முறையின் அடிப்படையில் முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பது என்ற கொள்கைக்கு மீண்டும் திரும்பினார்.
உதவிவழங்கும் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் (NGOS) குறிப்பாக சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் (INGOS), ஆகியவற்றின் பங்களிப்பு மற்றும் சமாதான செயற்பாட்டுக்கு அவை ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சுனாமிக்குப் பின்னர் உதவிகளைப் பகிர்ந்தளித்தல் போன்றவையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக சிங்கள தேசியவாதக் குழுக்கள் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை பெரும்பாலும் இந்த அமைப்புக்கள் தேசிய ஒற்றுமைக்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்டுபத்தும் என்று அவர்களின் கற்பனையில் இருந்து உருப்பெற்று பகிரங்கப்படுத்தப்பட்டது. அவற்றைவிட ஒளிவு மறைவற்ற செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் மற்றும் உதவி வழங்கும் அமைப்புக்கள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்புடைய வகையில் நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவதன் அவசியத்துக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு இக்குழுவினர் ஆர்வம் காட்டவில்லை. இத்தகைய செயற்பாடுகள் ஜனநாயக அடிப்படையில் அரசாங்க சார்பற்ற அமைப்புக்கள் செயற்படுவதற்கு இருந்த வாய்ப்பை
1. ஜனாதிபதி தேர்தல் 2005 நவம்பர் 17ஆம் திகதியன்று நடைபெற்றது.

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 3
இறுக்கப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் இன்னும் ஒரு கடும் நடவடிக்கையாகவே தென்படுகிறது.
இலங்கைக்கு சர்வதேசரீதியில் உள்ள பொறுப்புக்களின் அடிப்படையில் 2005இல் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சித்திரவதைக்கு எதிரான குழுவுக்கு (CAT) சமர்ப்பித்த அறிக்கை பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அது பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு தனிப்பட்ட முறையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு பற்றிய தீர்வினை வெளியிட்டது.
2. சுனாமிக்குப் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள்
உலக வங்கியின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சுனாமியின் போது 35,322 பேர் உயிர் இழந்ததாகவும், 516,150 பேர் இடம்பெயர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது. இத்துடன் 150,000 பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 900 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. பெருமளவு இழப்பு மற்றும் சேதங்கள் ஏற்பட்ட காரணத்தினால் அரசாங்கத்துக்கு மக்களின் வாழ் வாதாரத்தை மீளபெற்றுக்கொடுத்தல் மற்றும் இரு தடவைகள் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல் (முரண்பாடு மற்றும் சுனாமி) ஆகியவற்றையும் கையாளவேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் பெண்கள் உட்பட பின்தங்கிய ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களின் தேவைகளை ஈடுசெய்யவேண்டிய பெரும் சவாலையும் அரசாங்கம் எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆயினும், சுனாமி அனர்த்தம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சிவில் சமுதாய அமைப்பின் முயற்சிகளை அடுத்தே அரசாங்கத்தின் பங்களிப்பு வரத் தொடங்கியது. இவற்றுடன் நிவாரணச் செயற்பாடுகளை நெறியாக மேற்கொள்வதில் ஏற்பட்ட தோல்விக்கு அரசாங்கத்தின் திறமை இன்மையே ஒரு காரணம் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகள் பற்றிய கட்டுப்பாட்டினை அரசாங்க அதிபரிடம் இருந்து
2. உலக வங்கி, சுனாமி மீளமைப்பு - சிறிலங்கா - பிரதான புள்ளிவிபரங்கள் http:// we wordbank.org/WBSTEAEXTERNAL/COUNTRIES/EXTTSUNAM 2006 GBD இல் தொடர்பு படுத்தப்பட்டது.
3. bid
4. ஜியான் பெரேரா சுனாமி அனர்த்தம் மற்றும் முரண்பாடு: இலங்கையின் அனுபவம்: வெளிவிவகார அமைச்சு பின்லாந்து மற்றும் ஜொகன்கு பல்கலைக்கழகம் 2006 ஏப்ரல் 3 ஆம் திகதியன்று ஒழுங்கு செய்த ஆசிய இயக்க கருத்தரங்கில் ஆற்றிய உரை http://gobal finland...fi/aasiaan/TSunaniPerera.pdf

Page 11
4 மனித உரிமைகளின் நிலை 2006
இராணுவத்துக்கும், பின்னர் ஜனாதிபதிக்கும் அடுத்து இந்தச் சிக்கலை மேலும் மோசமடையச் செய்வதற்கு விசேட பணிப்படைகளும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் மற்றும் சிவில் சமுதாயத்தைப் பொறுத்த மட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பல தனிப்பட்டவர்களும் தனியார் நிறுவனங்களும் பெருமளவில் மனமுவந்து உதவி செய்ய முன்வந்தன. அரசாங்க செயற்பாடுகளைப் பொறுத்தமட்டில் ஒளிவு மறைவற்ற தன்மை, பதில்கூறும் பொறுப்புடமை மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளை ஒன்றிணைப்பதில் தாக்கங்கள் ஏற்பட்டன.
2005 ஜூன் மாதத்தில் அரசாங்கம் 2005ஆம் ஆண்டின் சுனாமி (விசேட சரத்துக்கள்) சட்டத்தை நிறைவேற்றியது. காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதற்கும், பிள்ளைகள் மற்றும் இளம் வயதினரைப் பொறுப்பேற்பதற்கும், சொத்து விடயங்கள் தொடர்பான சான்றிதழ்களை வழங்குவதற்குமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறிப்பிடத்தக்க சில குற்றச்செயல்களுக்குக் கூடுதலான தண்டனையை வழங்குவதற்கும் இடமளித் திருக்கின்றது. இந்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டமூலத்தில் ‘தேசியக் கொள்கை' என்ற பதத்தைப் பயன்படுத்தியது தொடர்பாகவே இந்த ஆட்சேப மனுவை தாக்கல் செய்தவர் அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மேலாக மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரங்களைக் கொண்டுவருவதற்காகவே இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று ஆட்சேபம் தெரிவித்தார். ஆயினும், உயர் நீதிமன்றம் அனர்த்தங்கள் ஏற்படும் காலப்பகுதியில் அவசியத் தேவைகளை ஈடுசெய்வதற்காக அரசாங்கத்திற்கு நேரடியாக தேசியக் கொள்கை ஒன்றை வகுக்க முடியும் என்று கூறியுள்ளது. அரசியல் சாசனத்தின் 127(2)(A) மற்றும் 27(9) ஆகியன அரசாங்கம் ஏதாவது தேசிய கொள்கையைக் கொண்டுவருவதை இயலத்தகாததாகச் செய்கின்றது என்றும், அனர்த்தங்கள் மூலம் பேரழிவு ஏற்படும் காலகட்டத்தில் கூட அரசாங்கம் இத்தகைய கொள்கைகளை வகுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கின்றது. மனுதாரர் தெரிவித்த மற்ற ஆட்சேபங்கள் குறித்து அரசாங்கம் சட்டமூலத்துக்குத் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து இச் சட்டமூலம் 2005 ஜூன் மாத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
5. சுனாமியை அடுத்து நிவாரணம் மற்றும் புனர்நிர்மாணம் மனித உரிமை மீறல்கள், இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தகவல் திரட்டும் அமைப்பின் அறிக்கை பக்கங்கள் 8-9 http://www.hic-sarp.org/ TuSunami'%20Report.pdf
6. SC/2005, SC 9/2005

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 5
இலங்கை அரசாங்கம் மற்றும் எல்.ரி.ரி.ஈ. 2005 ஜூன் 24ஆம் திகதியன்று சுனாமியை அடுத்து செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்புக்கான (P- TOMS) என்ற செயற்பாட்டினை உடன்பாடு ஒன்றைக் கைச்சாத்திட்டதன் மூலம் ஏற்படுத்தியது. இந்த P-TOMS நடைமுறை உதவிகளைப் பகிர்ந்தளிப்பதற்கும் புனர்நிர்மாண புனர்வாழ்வு நடவடிக்கைகளை வடக்கு, கிழக்கில் துரிதப்படுத்துவதற்கும் வகை செய்யும். ஆயினும், இந்த ஒப்பந்தத்தை பல்வேறு காரணங்களின் நிமித்தம் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது. முதலில் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எல்.ரி.ரி.ஈ. இயக்கத்துடன் அரசாங்கம் இத்தகைய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு எவ்வித சட்டபூர்வ உரிமையும் இல்லை என்ற வாதத்தின் அடிப்படையில் இதற்கு பிரதானமாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் குழுக்களுக்குக் கொடுக்கப்படும் அதிகாரம் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது என்றும், அது அரசாங்கத்தின் அதிகாரங்கள் என்றும், ஆகவே அந்த அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதற்கு இந்தக் குழுக்களுக்கு ” எதுவித சட்டபூர்வத் தகுதியும் இல்லை என்றும் வாதாடப்பட்டது. இதற்கான நிதியம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் ஏற்படுத்தாத காரணத்தினால் இந்தச் செயற்பாட்டிற்கு சட்டபூர்வ வலு இல்லாதிருக்கிறது என்றும், ஆகவே, இந்தப் பணத்தைப் பகிர்ந்தளிப்பது சட்டத்துக்கு முரணான செயல் என்றும் மனுத்தாக்கல் செய்தவர்கள் வாதாடினார்கள். பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் கணக்காளர் நாயகத்திற்கு அதன் கணக்கு விபரங்களைப் பரிசீலனை செய்வதற்கு சட்டபூர்வ அதிகாரம் கிடைத்திருக்கும். இந்தக் குழுக்களைக் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களில் (வடக்கு மற்றும் கிழக்கில்) ஏற்படுத்துவது இவ்விரு பிரதேசங்களுக்கு வெளியில் வாழ்ந்துவருபவர்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சமான செயற்பாடு என்றும், இந்த பாரபட்சம் அவர்களின் பிறப்பிடம் மற்றும் வசிப்பிடம் காரணமாக ஏற்படுகின்றது என்றும், இது இலங்கை அரசியல் அமைப்பின் 12(2) சரத்தை மீறும் செயற்பாடு ஆகும் என்றும் தெரிவித்திருந்தனர்.
உயர் நிதிமன்றம் தனது தீர்ப்பில் பிராந்தியக் குழுக்கள் மற்றும் பிராந்திய நிதியம் பற்றி நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது. இலங்கை அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின் ஏனைய அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்காக P-TOMS க்கு தனது பிரதிநிதிகளை நியமித்தபோதிலும் எல்.ரி.ரி.ஈ. இயக்கம் அதற்கு சார்பான முறையில் தனது இணக்கப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. ஆகவே, சம்பந்தப்பட்டவர்களின் நலவுரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக
7. SC228/2005, SC 229/2005, SC 230/2005

Page 12
6 மனித உரிமைகளின் நிலை 2006
ஏற்படுத்தப்பட்ட செயற்பாடான பிராந்தியக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. எனவே, இந்த முழுச் செயற்பாடுமே இடைநிறுத்தப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நவம்பர் 22ஆம் திகதியன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பித்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உத்தேச தேசிய அனர்த்த முகாமைத்துவ பேரவைச் சட்டம் உருவாக்கப்பட இருப்பதனால், P-TOMS செயலிழந்துவிடும் என்றும் எனவே, இந்த மனு மீதான விசாரணையைத் தொடருவதற்கான அவசியம் இப்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்கள் ஜே.வி.பி. கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் (UPFA) முன்னைய தேர்தலில் வெற்றிகரமாகப் போட்டியிட்டு அரசாங்கக் கட்சியில் அங்கத்துவம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்சேப மனுக்களை அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கும் இரண்டு அமைச்சர்களும் மேலும் இரண்டு பிரதி அமைச்சர்களும் தாக்கல் செய்திருந்தனர். அரசாங்கமே கைச்சாத்திட்ட அன்றைய கூட்டரசாங்கத்திலே அங்கத்துவம் வகிப்பவர்கள் இந்த ஆட்சேப மனுவை இவ்விதம் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் அரசியல் உறவு முறையும் முறிவடைந்தது. PTOMSஐ எதிர்த்த ஜே.வி.பி. யினர் கூட்டரசாங்கத்திலிருந்து வெளியேறினர். இதனால் அன்றைய அரசாங்கம் சிறுபான்மைப் பலத்தையுடைய அரசாங்கமாக மாற்றம் கண்டது.” மற்ற சிங்கள தேசியவாதக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய (JHU) ஆகியனவும் PTOMS எதிராக எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், சமாதான நடைமுறைகளுக்கும் பொதுவாக எதிர்ப்புத் தெரிவித்தன.
சுனாமி அனர்த்தத்தினால் இன்னுமொரு பதற்ற நிலையும் ஏற்பட்டது. அபிவிருத்திக்கும் வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான உரிமை மற்றும் சுற்றாடலைப் பாதுகாத்தலுக்கும் இடையிலும் அழுத்தங்கள் ஏற்பட்டன. சுனாமியினால் சில கட்டிடங்கள் முழுமையாகத் தரைமட்டமாயிருந்தாலும் அல்லது சேதமடைந்திருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் எவ்வித அனுமதியுமின்றிப் பாதுகாப்பாக ஒதுக்கிவைத்திருந்த காணிகளிலும் சட்டவிரோதமான நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக காணி உரிமை மற்றும் கடற்தொழிலாளர் ஆகியோரின் வாழ்வாதாரத்திற்கு இருக்கும் உரிமையை எவரும் புறக்கணிக்கவும் முடியாதிருந்தது. இந்தப் பதற்ற நிலையை சாந்தப்படுத்துவதற்குப் பதிலாக அரசாங்கம் இது பற்றி ஒன்றையுமே தெரியாத நிலையில் செயற்பட ஆரம்பித்தது. இதன் மூலம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களின் உரிமைகளைப் பொருட்படுத்தாத
8. Daily News, 22 June 2005 at http://www.daily news.lk/2005/06/22/ 9. Daily News, 16 June 2005, at http://www.dailynews.lk/2005/06/16

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 7
வகையிலும், சுற்றாடலைப் பாதுகாக் காத முறையிலும் இடம் பெற ஆரம்பித்தன. இதனால் அரசாங்கத்திற்கும் , பெரிய வர்த்தக அமைப்புக்களுக்குமிடையில் பிணைப்பு ஏற்படுவதைக் காணக்கூடியதாக இருந்தது. சுனாமியை அடுத்து மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி மற்றும் மீள் நிர்மாணத்திற்கான திட்டமிடல் ஆகியன பாரிய தனியார் நிறுவனங்களுக்கும் மற்றும் வர்த்தக சமூகத்திற்கும் வழங்கப்பட்டதையடுத்து இங்கு இன்னுமொரு சர்ச்சையும் எழ ஆரம்பித்தது. இந்த விடயத்தில் சிவில் சமூகத்தின் அல்லது சுற்றாடலைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டப்படாத காரணத்தினால் தான் இந்த சர்ச்சை எழுந்தது." தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிப் படை (TAFREN)இல் உதாரணமாக பத்து அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 6 பேர் கடற்கரையோர உல்லாசப் பிரயாணத்துறைக் கைத்தொழிலில் ஈடுபடும் தலைவர்களாவர். மேலும் இருவர் தேசிய வங்கிகளின் தலைவர்களாவர்.
கடந்த காலத்தில் பதவியிலிருந்த இலங்கை அரசாங் கங்கள் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளும், அபிவிருத்தித் திட்டங்களும் பல்வேறு சமூகங்களிடையே எதிர்ப்பு உணர்வையும், பதற்ற நிலையையும் ஏற்படுத்தி முரண்பாட்டு நிலையை மேலும் மோசமடையச் செய்வதற்கே உதவியிருக்கின்றது. அரசாங்கத்தினால் சகல சமூகங்களினதும் மற்றும் குழுக்களினதும் உரிமைகள், தேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கக்கூடிய வகையில் கொள்கைகளை வகுக்க முடியாதிருப்பதனால் தான் இந்நிலை எழுகின்றது. சுனாமியை அடுத்து மேற்கொள்ளப்பட்ட புனர் நிர்மான நடவடிக் கைகளும் இந்த முரணி பாட்டை மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்தமை ஆச்சரியப் படுவதற்கு இடமளிக்கவில்லை. சுனாமி ஏற்பட்ட பின்னர் சகல சமூகங்களிடையிலும் நல்லுறவு தளைத்தோங்கி இதன் காரணமாக இந்த சமூகங்களிடையே நல்லுறவு வலுவடையும் என்றும் சிலர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். உதாரணமாக, கிழக்கில் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்குமிடையில் நல்லுறவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் இந்த ஆரம்ப தேன்னிலவு காலம் முடிவடைந்த பின்னர் இவ்விரு சமூகங்களிடையே எதிர்ப்புணர்வும் பதற்ற நிலையும் மீண்டும் உருவெடுத்தது. தங்களுடைய காணிகளை மற்றவர்கள் அத்துமீறி ஆக்கிரமித்துவிடுவார்கள், அரசாங்கம் காணிகளை ஒதுக்கீடு செய்யும்போது தாங்கள் தங்களுடைய காணிகளை இழந்துவிடுவோம் என்ற அச்சம் போன்றவை சுனாமியினால் பாதிக்கப்பட்டு காணிகளை ஒதுக்கீடு செய்யும் வரை காத்திருந்த மக்களின் மனதில்
10. Sarath Fernando, Justice to Tsnami Victims - Sabmission to the European Parliament Committee on Development, MONLAR, 2005, at http://www.medico-international.de/
projekte/suedasicn/tsunami/200507 monlar Submission to ep.pdt

Page 13
8 மனித உரிமைகளின் நிலை 2006
வேரூன்றி இருந்த அச்சமென்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகள் ஆணைக்குழு கிழக்கு மாகாணம் பற்றிய தனது அறிக்கையில், பிரதேச செயலகங்கள் இனரீதியில் பிரிக்கப்பட்டிருப்பதனால் அரசாங்கம் மீள்குடியேற்றத்திற்குக் காணிகளை ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கின்றது என்றும் சில சந்தர்ப்பங்களில் மக்கள் அரசாங்கம் ஒதுக்கீடு செய்த காணிகளில் சென்று குடியிருக்க மறுப்புத் தெரிவிக்கிறார்கள் என்றும், அவ்விடங்களை அடுத்துள்ள அயல் கிராமங்களில் மாற்று இன மக்கள் இருப்பதனால் தான் அவர்கள் இவ் விதம் எதிர்ப் பைத் தெரிவிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.*
அரசாங்கத்தின் கொள்கைகளினால் மக்களுக்கும் சுற்றாடலுக்கும் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் பற்றி அரசாங்கம் அதிகளவு அக்கறை காட்டாதிருந்ததை அரசாங்கம் பிரகடனம் செய்த கடற்கரையோர பாதுகாப்பு வலயத்தை நாம் ஞாபகத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். சுனாமி முடிவடைந்த பின்னர் TAFREN கரையோரப் பாதுகாப்பிற்கென 100 மீற்றர் தூரத்தை ஒதுக்கி மேலும் 200 மீற்றர் தூரம் வரை இந்தப் பாதுகாப்பு வலயத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தடை விதித்தது. கடற்கரையோரத்தில் வாழும் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆயினும், இந்த விடயத்தில் ஹோட்டல்களுக்கு சலுகை காட்டும் முன்னுரிமையை அரசாங்கம் கடைப்பிடித்து அவ் ஹோட்டல்களின் ஒரு பகுதி சுனாமியினால் சேதமடைந்திருந்தாலும் அவற்றை மீள்நிர்மாணம் செய்வதற்கு அனுமதியை வழங்கியது. இந்த ஹோட்டல் கட்டிடத்தின் முழுப் பெறுமதியிலிருந்து புனர் நிர்மாண வேலைகளுக்கான செலவு 40 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதனைவிட அரசாங்கம் கரையோரப் பகுதிகளில் உல்லாசப் பிரயாணத் துறைக்கான வலயங்களை உருவாக்கி கரையோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் கட்டிடங்களை நிர்மாணிக்க முடியாதிருந்த வர்த்தகத் துறையினருக்கு இந்த உல்லாசப் பிரயாணத் துறைக்கான வலயத்தில் இலவசமாக காணிகளை ஒதுக்கீடு செய்யும் சலுகையையும் கடைப்பிடித்தது." ஆயினும் பல வேறு அமைப்புக் கள் இதற்கு எதிராக கோஷம் எழுப்பியதையடுத்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் 1997ஆம் ஆண்டில் கரையோர வலய முகாமைத் துவத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட வலயம் இருந்த பகுதிக்கு இந்த பாதுகாப்பு வலயத்தை மீண்டும் ஏற்படுத்தப்போவதாக அறிவித்தது.
11. "The Human Rights Situation in the Eastern Province - An Update by the National Human
Rights Commission' LST Review, Volume 16, Issue 215, September 2005, p. 13.
2. Ibid
3. Fernando (2005), P6
4. Ibid.

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 9
நிர்மாணத் துறை தொடர்பாக உள்ளூர் பிரதேசங்களில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் பொதுமக்கள் பங்குகொள்வதற்கு போதியளவு வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினாலும் உதவிகள் பகிர்ந்தளித்தல், மத்தியிலுள்ள தீர்மானம் எடுக்கும்/கொள்கை வகுக்கும் அமைப்புக்கும் பிராந்தியங்களில் அவற்றைச் செயற்படுத்தும் ஸ்தாபனங்களுக்குமிடையில் ஒன்றிணைப்பு குறைவாக இருந்த காரணத்தினாலும் இந்த நிலை ஏற்பட்டது. உதாரணமாக கிராம சேவக உத்தியோகத்தர்கள் இந்த உதவிப் பணத்தை விநியோகிக்கும் பணியில் உண்மையில் ஈடுபட்டு வருகின்றபோதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கவனிப்பது தொடர்பாக இருந்துவரும் நிலைப்பாடு குறித்து உரிமைகளுக்காகப் போராடும் பல நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. உதாரணமாக கடற்கரையோரப் பாதுகாப்பு வலயம் பற்றிய வழிகாட்டல்கள் மாவட்ட செயலாளர்களைச் சென்றடைவதற்கு 2 மாதங்களுக்கும் கூடுதலான கால தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டல்கள் பற்றி தெரியாதிருந்த காரணத்தினால் அப்பகுதி வாசிகளுக்கு கடற்கரையிலிருந்து 100/200 மீற்றர் பாதுகாப்பு வலயத்தில் நிர்மாணங்களை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் அனுமதி மறுத்தன."
சுனாமியை அடுத்து உருவாகிய பல வேறு பிரச் சினைகளைக் கையாள்வதற்காக அரசாங்கம் பல்வேறு அமைப்புக்களை ஏற்படுத்திய காரணத்தினால் அவற்றை ஒன்றிணைப்புச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் சீரற்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. இதற்கு ஒரு பொதுவான மேற்பார்வை செய்யும் அமைப்பு ஒன்று நியமிக்கப்படாத காரணத்தினால் இப் பொறுப் புக் களைப் பல வேறு அமைப் புக் கள் கையாணி ட காரணத்தினால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டது. சுனாமி இடம்பெற்ற உடன் காலதாமதமின்றி அரசாங்கம் தேசிய செயற்பாடுகளுக்கான நிலையம் (CNO) ஒன்றை ஏற்படுத்தியது. இந்த அமைப்பு தேசிய மட்டத்தில் 3 பணிப் படைகளுடன் ஏற்படுத்தப்பட்டன. அவை மீட்பு மற்றும் நிவாரண வேலைகளுக் கான Lu 600fuj 60) TA FRER, தேசத் தைக் கட்டியெழுப்புவதற்கான பணிப்படை TAFREN மற்றும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிப்படை TAFLOL, தேசிய செயற்பாடுகளுக்கான நிலையம் (CNO), 2005 பெப்ரவரி மாதத்தில் கலைக்கப்பட்டு நிவாரண வேலைகளுக்கான பணிப்படை TAFROR,
15. Centre for Policy Alternatives, Reflections on Tsunami One Year On: Lessons to be Learnt,
Discussion paper, March 2004, p.2, at www.cpalanaka.org 6. Ibid.

Page 14
10 மனித உரிமைகளின் நிலை 2006
6JÖUGSjögöÜLuL'(6 Đgal CNO, TAFRER LOÖOOJĎ TAFLOL głóluu6usĎ Ó6i பணிகளைப் பொறுப்பேற்றது. 2005 நவம்பர் மாதத்தில் மீள்நிர்மாண மற்றும் அபிவிருத்தி அதிகார சபை (RADO) என்ற பெயரில் மேலதிக செயற்பாடுகளைக் கையாள்வதற்கு ஏற்படுத்தப்பட்டது. இது TAFREN, TAFOR மற்றும் இது போன்ற மேலதிக சிறிய அமைப்புக்களுக்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டது. இந்தப் புதிய அமைப்பே அரசாங்கத்தின் புனர்நிர்மாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மையமாக அமைந்து செயற்பட்டது. இவ் அமைப்பு சுனாமிக்குப் பின்னர் ஏற்பட்ட சகல இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களுக்கும் நாடெங்கிலும் சுனாமிக்குப் பின்னர் ஏறி பட்ட முரணி பாடுகளையும் நிர்வகிக் கும் பொறுப் பைக் கொண்டிருந்தது.' மனித உரிமைகள் ஆணைக் குழு இனங்கண்ட இன்னுமொரு செயற்பாடும் இருக்கிறது. அரசாங்க கட்டமைவும், அரசாங்க உத்தியோகத்தர்களும் புனர்நிர்மாண, புனர்வாழ்வு நடவடிக்கைகளை உள்ளூர் நிலை பற்றி தெரிந்துகொள்ளாதிருக்கும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு இப்பணியை மேற்கொள்ளும் பொறுப்பை மீண்டும் தாங்களே பெறுவதற்கு விருப்பம் தெரிவிக் காதமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.'
உதவி பெருமளவில் வரத்தொடங்கியதையடுத்து இந்த உதவி திறமையான முறையில் பகிர்ந்துகொடுக்கப்படுகின்றதா என்பது குறித்தும், அவை பற்றி ஒளிவு மறைவு அற்ற முறையில் நெறியான நடைமுறை இருக்கின்றதா, கணக்கு விபரங்கள் சரியாக இருக்கின்றனவா போன்றவை குறித்தும் சந்தேகங்களும், அக்கறையும் ஏற்பட்டது. மேலிருந்து கீழ் வரையில் இந்த நடவடிக்கைகளில் குழப்ப நிலையும் ஒன்றிணைப்பும் அன்று இருந்துவந்ததே இதற்கான காரணமாகும். உதவி சரியான முறையில் நியாயமாகவும், நீதியாகவும் பகிர்ந்தளிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக தென்னிலங்கையில் நிர்மாண வேலைகள் பற்றி கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களை விட அங்கு வேகமாக நிர்மாண வேலைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹம் பாந்தோட்டையில் (தென்னிலங்கையில்) உதாரணமாக தேவையான அளவுக்குக் கூடுதலான அளவில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த நிர்மாண வேலைகள் மிகவும் மெதுவாகவே நடைபெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டது.? இனப்பிரச்சினை முரண்பாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சுனாமியால் பாதிக்கப்பட்ட
17. RADA website at http://www.tafren.gov. lk/portal/index.jsp?sid=3&nid =18&y=2005&
m=10&id=14
18. LST Review (September 2005), p. 15
19. CPA (2004), p. 11

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு
மக்களுக்கும் வழங்கப்படும் நன்மைகள், ஆதரவு குறித்தும் முரண்பாடு மற்றும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இனப் பிரச்சினையால் பாதிக்கப்படும் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் நிவாரணங்களை விட கூடுதலான அளவில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கின்றதென்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.* சுனாமியினால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களான கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவும் அவர்களின் கவலைகள் தேவைகள் குறித்து குரல் எழுப்புவதற்கு இடமளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
உதாரணமாக சுனாமி தொடர்பாகக் கிடைத்த உதவியைப் பகிர்ந்து கொடுப்பது மற்றும் புனர் நிர்மாண நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு கூட்டு நடைமுறை ஒன்றை ஏற்படுத்துவது பற்றி ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவை P- TOMS தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளவில்லை.* நீதி, நியாயம், பாகுபாடு காட்டப்படாமை ஆகியவற்றை நலன்புரி நிலையங்கள் மற்றும் விடுதிகளில் இருப்பவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது. உதாரணமாக அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் நிர்வகித்துவரும் சிறிய முகாம்களில் நீர், சுகாதார வசதிகள் ஆகியன போதியளவில் செய்துகொடுக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அங்குள்ளவர்களுக்கு மனநல சமூக ஆதரவும் வழங்கப்பட்டது. கிராமங்களிலுள்ள முகாம்களிலும் உயர் தரமான வசதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முகாம்களில் சிறிதளவு எண்ணிக்கையிலான மக்களே இருந்ததுடன் அவர்கள் ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், நகரப்புறங்களில் உள்ள பெரிய முகாம்களில் இருந்த வசதிகள் மிகவும் கவலைக்குரிய நிலையிலேயே இருந்தன? இந்த முகாம்களில் வாழும் மக்கள் இந்த முகாம்களை யார் நிர்வகிக்கிறார்கள் என்பதே தங்களுக்குத் தெரியாது என்றும், இம் முகாம்களுக்கு அரசாங்க, அரச சார்பற்ற அமைப்புக்களின் அல்லது சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் வந்து தங்களைச் சந்திக்கவில்லை என்றும் புகார் செய்கிறார்கள்.* இடைக்கால வசிப்பிடங்களை நிர்மாணிப்பது தொடர்பாகவும் அவை சரிசமமாக நடத்தப்படுவதில்லை என்றும் அடிப்படைத் திட்டங்களின் அடிப்படையில் உள்ளூர் தேவைகளை ஈடுசெய்யக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
20, Ibid, p. 14 2. LST Review (September 2005), p.4 22. Ibid, p. 16
23. Harvey M.Weinstern, 'After the Tsunami. Human Rights of Vulnerable Populations'. A Case Study of Srilanka, LST Review, Volume 16, Issue 218 (December 2005), p.27

Page 15
12 மனித உரிமைகளின் நிலை 2006
இங்குள்ள பெரும்பாலான வசிப்பிடங்கள் உள்ளூர் காலநிலைக்கு ஏற்றவகையில் நிர்மாணிக்கப்படவில்லை என்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இங்குள்ள மக்களின் எண்ணிக்கையை உள்ளடக்கக்கூடிய வகையில் அங்கு குடியிருப்பதற்கான வசதிகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.* தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் படி சுனாமியினால் ஆண்களை விட பெருமளவிலான பெண்களே உயிரிழந்துள்ளார்கள் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.* சுனாமியினால் உயிர் தப்பியவர்களில் குறிப்பாக எஞ்சியிருக்கும் பெணி களுக்கெதிராக பாராமுகக் கொள்கை கடைப் பிடிக் கப்படுவதாகவும் பெண் களின் தேவைகள் உதாசீனம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. சுனாமியினால் பெருமளவு பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். இதனால் குடும்பத்திற்குக் கிடைக்கும் வருமானமும் இல்லாமல் போயுள்ளது. உதாரணமாக பருத்தித்துறைப் பிரதேசத்திலுள்ள ஒரு நல் வாழ்வு நிலையத்தில் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் விதவைகளாகிய பெண்கள் இருக்கிறார்கள் ?? இந்த முகாம்களில் முழுமையாக அரசாங்க அடிப்படையிலான நிர்வாகமே நடைபெறுவதால் இங்கு தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளில் பெண்கள் பங்களிப்புச் செய்வதற்கு சிறிதளவு வசதிகளே இருக்கின்றன. இந்த நிர்வாகிகளினால் பெரும்பாலும் பெண்களின் தேவைகள் உதாசீனம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. முகாம்களில் உதவிகளை விநியோகம் செய்யும் பொறுப்பு ஆண்களின் கைகளிலேயே இருக்கின்றது. சில சந்தர்ப்பங்களில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் சுகாதார வசதிக்கான சாதனங்களை ஆண்கள் பங்கீடு செய்யும்போது பெண்களை தர்மசங்கடத்துக்கு இலக்காக்கும் சில சொற்பிரயோகங்கள் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.' இது மட்டுமன்றி பெண்கள் இம்முகாம்களில் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்குக்கூட அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் தாங்கள் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.* பெண்கள் குடும்பத்திற்குத் தேவையான பங்கீட்டுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டாலும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் பண உதவி குடும்பத்தின் தலைவருக்கே வழங்கப்படுகிறது. குடும் பத் தலைவர் என்று குடும் பத்திற்கான வருமானத் தைப்
24. Ibid. 25. Tsunami's Impact on Women, Oxfam International at http://www.oxfam.org.uk/what we dol issues.conflict disasters/downloads/bn tsunami women.pdf, http://www.reliefweb.int/rw/ RWB.NSF/db900SID/MIRA6DR8BS?OpenDocument
Based on visit by author Gender Specific Issues Relating to Post Tsunami Displacement, Briefing note 2, CATAW Press Release 2, 15 January 2005.
28. Ibid.

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 13
பெற்றுக்கொடுப்பவரே குறிப்பிடப்படுகின்றார். மனித உரிமைகள் ஆணைக்குழு இநீ த பங் கட்டு முறை குறித்து எழும் சில சிக் கல களைச் சுட்டிக்காட்டியுள்ளது. உதாரணமாக மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் கணவன்மார் குடும்பத்திற்குக் கிடைக்கும் உதவிப் பணத்தை அவர்களே எடுத்துச் செல்லும் வழி உண்டு என்றும் முஸ்லிம் விதவைகள் கணவனை இழந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனிமையில் துக்கம் அனுபவிக்க வேண்டி இருப்பதால் அவர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியே சென்று இந்த உதவிப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது? உடனடி நிவாரணமாக நடுத்தர மற்றும் நீண்ட கால புனர்நிர்மாண புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது பெணி கள் தீர்மானம் எடுக் கும் நடைமுறையிலிருந்து மேலும் ஒதுக்கப்படுவதுடன், தங்களுடைய வாழ்க்கை எவ்விதம் அமையவேண்டும் என்று கூறுவதில் அதாவது புனர்நிர்மாண நடவடிக்கைகளில் அவர்களுக்கு அபிப் பிராயம் தெரிவிப்பதற்குக் கூட அந்தளவு வாய்ப்புக் கள் கிடைக்காதிருக்கும். பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை தொடர்பாக முக்கியத்துவம் பெறும் விடயங்களில் காணி உரிமை மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் காணி உரிமையைப் பொறுத்தமட்டில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் குடும்பத்திற்கும் இருக்கும் உரிமை காரணமாக 60 சதவீதமான காணிகளுக்கு பெண்களே உரிமையாளர்களாக இருக்கிறார்கள்." ஆயினும் அரசாங்கத்தின் காணிக் கொள்கையின் நிமித்தம் குடும்பத் தலைவர்கள் என்ற முறையில் ஆண்களே காணியின் உரிமையாளர்களாக மதிக்கப்படுகிறார்கள். இதனால் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான காணியை இழக்கக் கூடிய காரணம் இருக்கின்றதென்றும் புதிய நடைமுறையின்படி புதிதாகக் காணிகள் ஒதுக்கப்படும் போது அவர்களுக்கு தங்கள் காணியைப் பெற முடியாத நிலையும் ஏற்படலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது."
3. குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டமூலம்
2005ஆம் ஆண்டு குடும்ப வன்முறையைத் தடுக்கும் சட்டமூலம் 2005ஆம்
ஆண்டில் சட்டமாக நிறைவேற்றப்பட்டபோதிலும் இறுதியில் இது சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போது அது அதிகப் பலவீனமுடைய ஒரு சட்டமாகவே
29. LST Review (September 2005), p.20
30. Sarala Emmanuel, Srilankan Women's Small but Significant Gains in the Post Tsunami Reconstruction Process, Asia Pacific Forum on Women, Law and Development, http:// www.apwld.org/tsunami reconstruction.htm.
31. Ibid.

Page 16
14 மனித உரிமைகளின் நிலை 2006
இருந்தது.* பாராளுமன்றத்தில் இந்தச் சட்டமூலம் பற்றி நடைபெற்ற விவாதத்தில் இந்த சட்டமூலத்தின் தாக்கம் பற்றித் தெரிந்துகொள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்த சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான போதியளவு காரணங்கள் பற்றியும் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் பற்றியும் சரியான புரிந்துணர்வைப் பெறமுடியாத காரணத்தினால்தான் இந்த நிலை அங்கு எழுந்தது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பல உறுப்பினர்கள் இந்த சட்டமூலம் பொருத்தமாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த சட்டம் இலங்கையின் கலாசார மற்றும் பாரம்பரியங்களுக்கு முரணானது என்றும் அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.? சில சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மனைவி, தனிப்பட்ட காரணங்களுக்காக ஆதாரமற்ற முறைப்பாடுகளை செய்வதற்கு இந்த சட்டம் இடமளிப்பதனால், பல குடும்பங்கள் பிரிந்து சீரழிவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இந்த விவாதத்தில் கலந்துகொண்ட பலரும் கருத்துத் தெரிவித்தனர். இங்கு நீதி நெறிமுறை அமைப்புக்கும் மக்களுக்கும் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இருக்கும் சிக்கல்கள் குறித்தும் சிந்திக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சட்ட ஒழுங்கு பெறுவதற்கு ஏற்படுகின்ற செலவு, சமூக நடைமுறைகள் ஆகியன மக்களை குறிப்பாகப் பெண்களைக் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விடயங்களைப் பொதுவில் வெளிப்படுத்துவதையும் தடை விதிக்கின்றது. இத்துடன் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பொலிஸாருக்கு இருக்கும் பங்களிப்புக்குறித்தும் சந்தேகம் தெரிவித்தனர். இந்த சட்டத்தின் ஒரு சரத்து பாதிக்கப்பட்ட ஒருவரின் சார்பில் பாதுகாப்பு அளிக்கும் உத்தரவுக்கு விண்ணப்பிப்பதற்கும் அதிகாரம் பெற்றிருக்கிறார்.* இந்தப் பாராளுமன்ற விவாதம் இலங்கையில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் பற்றி நிலவும் தப்பபிப்பிராயங்கள் குறித்து தெட்டத்தெளிவாக விளக்கிக் கூறுவதாக அமைந்தது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து அதற்கு எத்தகைய முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பது தொடர்பாக முகம்கொடுக்க வேண்டிய பல்வேறு பிரச்சினைகளையும் இவ்விவாதத்தின் மூலம் எடுத் துரைக் கப்பட்டது. இந்த சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஏற்பட்ட விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கையாள்வது தொடர்பாக சட்டபூர் வமற்ற நடைமுறைகள் மேற் கொள்வதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது. பெண்கள் மீதான தப்பபிப்பிராயங்கள் அவர்களின் நிலைப்பாடுகள் பற்றிய தவறான நோக்குதலை மாற்றுவதற்கும் இது உதவியாக அமையும் என்று கூறப்படுகிறது.
32. For a detailed analysis of the Bill, see State of Human Rights, 2005. 33. “In Parliment on Tuesday.” Daily News, 23 February 2005, p.26 34. Ibid.
35. Ibid.

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 15
4. சமாதான நடைமுறை
சுனாமியை அடுத்த சில நாட்களின் போது அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ இயக்கமும் ஒரு இணக்கப்பாடான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைப்பை நல்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு தரப்பினரும் சுனாமியினால் பெருமளவு ஆளணிகளின் உயிரிழப்பையும் இராணுவ உபகரணங்களின் அழிவையும் எதிர்நோக்கியிருந்ததனால் சமாதானம் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுவடைந்தது. ஆயினும், அடுத்தடுத்த வாரங்களில் இரு தரப் பினரும் தங்கள் நிலைப் பாட்டை வலுப்படுத்திக்கொண்டனர். எல்.ரி.ரி.ஈ.இனர் தங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திற்கு நிவாரணப் பணியாளர்கள் செல்வதைத் தடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்தது. அதேவேளையில் எல்.ரி.ரி.ஈ.இனர் விசேட அதிரடிப் பொலிஸ் பிரிவினர் (STF) எல்.ரி.ரி.ஈ.இன் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு உணவுப் பொருட்கள் வருதைத் தடுப்பதாக முறைப்பாடு செய்து சகல விதமான உதவிகளையும் தமிழர் புனர்வாழ்வின் ஊடாக (TRO) அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இந்த TRO அமைப்பு எல்.ரி.ரி.ஈ.இன் ஒரு கிளை என்று கூறப்படுகிறது.* அரசாங்கம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை வட பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று ஆலோசனை தெரிவித்தது. மற்றும் சுனாமியினால் அனாதைகளாகிய பிள்ளைகளை எல்.ரி.ரி.ஈ.இனர் போராளிகளாக சேர்த்து வருகின்றனர் என்ற யுனிசெவ் (UNICEF) நிறுவனத்தின் அறிக்கை ஆகியன ஏற்கனவே வலுவிழந்த நிலையிலிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாக அமைந்தது. அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ அமைப்பும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கள் நிலையை மேலும் வலுவடையச் செய்துகொள்ளலாம் என்று இரு தரப்பினரும் மற்றவர்களைப் பார்த்து அச்சம் கொண்ட நிலையும் அப்போது ஏற்பட்டது. ஆகவே இரு தரப்பினரும் ஏதாவது ஒரு செயற்பாட்டை மேற்கொண்டால் அது தங்கள் பலவீனம் காரணமாக எடுத்த நடவடிக்கை என்ற தப்பபிப்பிராயம் ஏற்படும் என்று இவ்விரு தரப்பினரும் எந்த யதார்த்தபூர்வமான செயற்பாடுகளையும் செய்யத் தயங்கினார்கள். அமெரிக்கக் கடற்படையினரின் வருகை மற்றும் திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்ய இந்தியா முன்வந்தமை ஆகியன இவ்விரு தரப்பினருக்கிடையிலான நம் பிக் கையின் மை யை மேலும் சிக் கலாக் கி நிலை மை யை மோசமடையச்செய்தது."
36. LST Review, (September 2005), p.7 37. Tamilnet, 1 January 2005 at http://www.tamilnet.com att.html?catid=13&artid=13822

Page 17
16 மனித உரிமைகளின் நிலை 2006
யுத்த நிறுத்த உடன்பாட்டு மீறல்கள் பல பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வருடம் பூராகவும் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அத்துடன் இதில் புதிதாக இணைந்து கொண்ட கருணா பிரிவு (எல்.ரி.ரி.ஈ.இலிருந்து பிரிந்த குழுவினர்) ஆகியனவும் இப் பிரதேசங்களில் அதிகரித்த அளவிலான அரசியல் கொலைகளுக்குத் தூபமிட்டன. நத்தார் தினம் ஆரம்பிக்கும் நடு ராத்திரி வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயப் பலிப்பூசை நடைபெற்றுக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார் 8 2005 செப்ரெம்பரில் இலங்கை கண்காணிப்புக் குழு (SLMM) 1466 ஆட்கடத்தல்கள் மற்றும் 641 யுத்த நிறுத்த மீறல்கள் பற்றிய புகார்களைப் பதிவு செய்தது.” இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு 2005இல் 200க்கும் மேற்பட்ட கொலைகள் பற்றி அறிவித்து அவ்வாண்டின் கடைசி சில மாதங்களின் போது வன்முறைகளும் கொலைச் சம்பவங்களும் நாளா நீ தம் இடம் பெற்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ளது." சர்வதேச மன்னிப்புச் சபை ஊடகவியலாளர்கள் முதல் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் வரை பெரும்பாலான சாதாரண மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது." யுத்த நிறுத்த உடன்பாட்டின் கீழ் இரு சாராரும் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளுக்கு அமைய இலங்கை அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. இயக்கமும் ஜெனீவா சாசனத்தின் மூன்றாவது பிரிவு சர்வதேச ஆயுதக் குழுக்கள் போராளிகளற்றவர்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுவதை முற்றாகத் தடை செய்கின்ற நிலைப் பாட் டைக் கடைப் பிடிக்க வேணர் டிய கடப் பாட்டினைக் கொண்டிருக்கின்றன.* கிழக்கு மாகாணம் எல்.ரி.ரி.ஈ. யில் இருந்து கருணா பிரிந்து சென்றதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. கடற்தொழிலாளர்கள் முதல் பாடசாலை சிறுவர்கள் வரையில் இந்தப் பாதுகாப்பின்மை உருவாகியிருப்பதனால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான சகல செயற்பாடுகளும் சீர்குலைந்திருக்கின்றன. பாடசாலையில் பிள்ளைகள் கூட தாங்கள் பலவந்தமாகப் போராளிகளாகக் கடத்தப்படுவார்கள் என்று பயந்து அவர்களின் பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்குக் கூட அனுப்புவதில்லை. அவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் கிழக்கில் 32 வன்முறைச் சம்பவங்கள்
38. The Hindu, 26 December 2005 http://www.hinduonnet.com/thehindu/thscrip
print.pl?file=2005 12260614600.htm&date=2..., accessed on 5 September2006.
39. Human Rights Watch, Essential Background: Overview of human rights issues in
Srilanka, 2006, p. 1 at http://hrw.org/english/docs/2006/01/18/slanka 12252 txt.htm
40. Amnesty International, 'Sri Lanka: A Climate of Fear in the East" (2006), p. 10 at http://
web.amnesty.org/library/print/ENGASA 37001 2006
41. Amnesty International (2006), p.2
42. Ibid
43. Human Rights Watch (2006), p.3

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 17
இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் வீதிச் சோதனை நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன." எல்.ரி.ரி.ஈ.இன் மட்டக்களப்பு அரசியல் பிரிவின் தலைவர் கெளசல்யனின் கொலை இந்தத் தரப்பினர்களிடையே நிலவிய நம்பிக்கை இழப்பு மோசமடைய உதவியது. இதனால் கிழக்கில் பாதுகாப்பு இன்மை தலைதூக்கியது. அரசியல் கொலைகள் மற்றும் சிறுவர்கள் போராளிகளாகச் சேர்க்கப்படுதல் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் அவ்வாண்டு செப்ரெம்பரில் எல்.ரி.ரி.ஈ.இனர் மீது பிரயாணத் தடையை அமுல்படுத்தியது.
2005இல் ஜனநாயக சுதந்திரம் வேகமாக வலுவிழப்பதைக் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. முரண்பாட்டினால் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் அங்கு அதிகாரம் படைத்தவர்களுக்கு எதிரானவர்கள் செயற்படுவதற்கு இடமளிக்கப்படவில்லை. அத்துடன் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் கூட அச்சமின்றி சுதந்திரமாக இப்பிரதேசங்களில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மனித Đ_fì60) tD 56i J560õi 5 ff 600fldi (95 Lô 6rò g5 TL160I Lô (Human Rights Watch) உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் பலர் குறிப்பாகக் கிழக்கில் தங்கள் பணிகளை நிறுத்தியிருப்பதாக அல்லது தலைமறைவாகியிருப்பதாக அல்லது நாட்டை விட்டே வெளியேறியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.? சிறுவர்களை ஆயுதப் போராளிகளாகச் சேர்க்கின்ற விடயம் தொடர்ந்தும் வேதனைக்குரிய கண்காணிப்பின் கீழ் இருந்தது. எல்.ரி.ரி.ஈ.இனர் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்ட நடவடிக்கைத் திட்டத்திற்கமையச் செயற்படத் தவறி போராளிகளாக உள்ள சிறுவர்களை விடுவிக்காமல் 2005ஆம் ஆண்டில் தொடர்ந்தும் சிறுவர்களைப் போராளிகளாக சேர்க்க ஆரம்பித்தது. சுனாமிக்குப் பின்னர் எல்.ரி.ரி.ஈ.இனர் நலன்புரி நிலையங்களில் இருந்து சிறுவர்களைக் கடத்திச் சென்றதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. 2008ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதியன்று எல்.ரி.ரி.ஈ.இனருக்கும், பொலிஸ் அதிரடிப் படையினருக்கும் (STF) இடையில் எல்.ரி.ரி.ஈ. கடத்திச் சென்ற ஒரு சிறுபிள்ளை குறித்து அம்பாறையில் மோதல்கள் ஏற்பட்டன. இந்தப் பிள்ளை எல்.ரி.ரி. ஈ. பிடியிலிருந்து தப்பி STFஇடம் தஞ்சம் கோரியமை குறிப்பிடத்தக்கது." சுனாமிக்குப் பின்னர் சிறுவர்களை ஆயுதப் போராளிகளாகச் சேர்க்கும் செயற்பாடு ஓரளவு குறைவடைந்திருந்தது. ஆயினும், 2005 நடுப்பகுதியில் ஒரு கோயில் திருவிழாவின் போது சிறுவர்களைப் போராளிகளாகச் சேர்ப்பதற்கான கடத்தல்கள் மீண்டும் அதிகரித்தன." மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில்
44. Ibid, p.5
45. bid, p.2
46. LST Review (September 2005), p. 11
47。 Ibid., p.10; Human Rights Watch (2006), p.2

Page 18
18 மனித உரிமைகளின் நிலை 2006
கிழக்கு மாகாணத்தில் சிறுவர்களைப் போராளிகளாகச் சேர்க்கும் செயற்பாடுகளுக்கு வன்னியின் தலைமைப் பீடம் அனுமதி அளித்ததா என்பது தெளிவற்ற நிலையில் இருக்கிறது என்றும் எப்படி இருப்பினும் எல்.ரி.ரி.ஈ. தலைமைத்துவம் அதன் சகல மட்டத்திலும் உள்ள போராளிகள் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.* யுனிசெவ் ஸ்தாபனம் 2005இன் முதல் 9 மாதங்களின் போது சிறுவர் போராளிகளாக சேர்க்கப்பட்ட 483 சம்பவங்கள் குறித்து பதிவு செய்துள்ளது. 2005இல் 146 பிள்ளைகளை எல்.ரி.ரி.ஈ. யினர் விடுவித்தனர்.? இந்த எண்ணிக்கை மொத்த சிறுவர் போராளிகளின் எண்ணிக்கையை எவ்விதமேனும் சரியாகப் பிரதிபலிக்காதிருக்கின்றது. சிறுவர்கள் கடத்தப்படுவது போன்ற பல நிகழ்வுகள் அச்சம் மற்றும் பயமுறுத்தல்கள் காரணமாக எவராலும் முறைப்பாடு செய்யப்படாத நிலையில் இருந்து வருகிறது. மனித உரிமைகள் ஆணைக் குழு 9 சிறுவர் போராளிகளை வடக்கு கிழக்கிலுள்ள மனித உரிமைகள் செயலகத்தில் (NESOHR) யுனிசெவ் ஸ்தாபனத்திற்கு ஒப்படைப்பதற்குப் பதிலாக ஒப்படைத்ததாக அறிவித்துள்ளது. NESOHR மற்றும் UNICEF ஆகியன விடுவிக்கப்பட்ட சிறுவர்கள் பற்றிய பட்டியலை அவதானித்துப் பார்க்குமிடத்து இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது." இதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய முடியாதிருக்கிறது. இத்துடன் இவ்விதம் விடுவிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் யுனிசெவ் ஸ்தாபனத்திற்கு மீள் ஒன்றிணைவின் கீழ் நன்மைகளையும் பெறமுடியாதிருக்கிறது.
2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒவ்வொரு வன்முறையும் யுத்த நிறுத்த மீறல்களும் யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பலவீனப்படுத்துவதற்கு உதவின. இதனால் சமாதானப் பாதையில் பல கஷ டங்களும் முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டன. இலங்கை அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ.யும் சமாதான முயற்சிகளுக்கு தங்களின் திடமான கடமைப்பாடு இருக்கின்றது என்று தொடர்ந்தும் கூறிக்கொண்டு வந்தபோதிலும் இரு தரப்பினருமே யுத்த நிறுத்த மீறல் வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இதனால் இவ்விரு தரப்பினரும் இந்த இனப்பிரச்சினை முரண்பாட்டுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று இவ்விரு சாராரும் தெரிவிக்கும் கூற்று உண்மையானதா என்றுகூட சந்தேகங்கள் எழுகின்றன.
48. LST Review (September 2005), p. 10 49. Human Rights Watch (2006), p.2 50. LST Review (September 2005), p. 11

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 19
5. அவசரகாலச் சட்டப் பிரமாணங்கள்.
சுனாமியை அடுத்து அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனம் செய்தது. இயற்கை அனர்த்தங்களை வெற்றிகரமான முறையில் கையாள்வதற்கு அரசாங்கத்திற்கு மேலதிக அதிகாரம் அவசியம் என்ற கூற்றை அங்கீகரிக்கின்ற அதேவேளையில், இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஆகக் கூடுதலான காலத்திற்கு அவசர காலநிலையிலேயே அரசாங்கங்களினால் ஆட்சி செலுத்தப்பட்டிருப்பதால் இந்த அவசரகால நிலைப் பிரகடனம் குறித்து சந்தேகம் எழுந்தது. 2005 ஜனவரி 4ஆம் திகதியன்று சுனாமியினால் பாதிக் கப்பட்ட 14 மாவட்டங்களில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த அவசரகால சட்டப்பிரமாணம் அது பிறப்பிக்கப்பட்ட 14 நாட்களில் செயலிழந்து காலாவதியானது. சட்டத்திற்கு அமைய பாராளுமன்றத்தினால் இந்த அவசரகாலச் சட்டப் பிரமாணங்கள் அங்கீகரிக்கப்படாததனால் தான் இந்நிலை எழுந்தது. இரண்டாவது தடவையாக அவசரகாலநிலை 2005 பெப்ரவரி 3ஆம் திகதியன்று பிரகடனம் செய்யப்பட்டது. அரசியல் சாசனத்தின் பிரிவு 155(7)இன் கீழ் இந்தப் பிரகடனம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாத நிலையில் காலாவதியானால் அன்றிலிருந்து 30 நாட்களுக்கு ஏற்படுத்தப்படும் எந்தப் பிரகடனங்களும் சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படாத நிலை ஏற்படும். அந்த கால எல்லைக்குப் பின்னர் செய்யப் படும் புதிய பிரேரணை பாராளுமனி றத் தினால் அங்கீகரிக்கப்படவேண்டும். இதனடிப்படையில் 2004 பெப்ரவரி 3ஆம் திகதியன்று செய்யப்பட்ட பிரகடனம் பெப்ரவரி 11ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியதன் மூலம் சட்டபூர்வமாக அமுல்படுத்தப்பட்டது. 2005 ஓகஸ்ட் 13ஆம் திகதியன்று வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து அவசரகாலநிலை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டது. இதையடுத்து பாதுகாப்புச் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டமையினால் மக்களிடையே பீதி நிலவ ஆரம்பித்தது.
6. ஒருவரின் நேர்மை
2005இல் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைய ஆரம்பித்ததையடுத்து வன்முறைகள் சித் திரவதை மற்றும் சட்டத்திற்கு மாறான மரண தண்டனைகளை நிறைவேற்றுதல் போன்றன அதிகரிக்க ஆரம்பித்தன.
51. According to Article 155(6) of the Constitution a 'Proclamation shall expire after a period
of fourteen days... unless such Proclamation is approved by a resolution of Parliment.”

Page 19
20 மனித உரிமைகளின் நிலை 2006
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஓகஸ்ட் மாதத்திலும், தமிழர் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவ்வாண்டு நத்தார் பண்டிகைக்கு முதல் தினம் இரவும் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் சமாதான நடைமுறையின் ஒரு முக்கிய திருப்பு முனைகளாக விளங்கின. இவ்விரு படுகொலைகளும் ஏற்கனவே பலவீனமுற்றிருந்த யுத்த நிறுத்த உடன்பாட்டினை மேலும் மோசமடையச் செய்தது. இதனால் அரசாங்கத்திற்கும் எல்.ரி.ரி.ஈ.இனருக்கும் இடையில் படுமோசமான நிலை உருவாகியது. இந்தக் கொலைகள் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நீங்களே கொலைகளைப் புரிந் தீர்கள் என்று பரஸ்பர குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் பரராஜசிங்கம் அவர்கள் தேவாலயத்தில் பலிபூஜை நடைபெற்றுக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டமை அடிப்படை மனிதாபிமான கொள்கைக்கு மாறான செயற்பாடாகும். பொதுவாக வழிபாட்டுத் தலங்கள், மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்புப் பிரதேசங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் போதும் இந்த அநியாயம் இழைக்கப்பட்டிருக்கின்றது.
6.1 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின்
தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ்
இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடு சர்வதேச சட்டங்களுக்கு இலங்கை கடப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு (இது ஒரு குழு) சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) பற்றிய மாற்று ராஜதந்திர உடன்பாட்டின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவை ஆராய்ந்தது. இலங்கை உயர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
கருத்துக்களை வெளியிடுதல்* ஐக்கிய நாடுகள் குழு இம் மனுவை ஆராய்ந்த ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரிவு 9(1)இன் கீழ் இந்தத் தண்டனை இந்த சர்வதேச சட்டத்தை மீறுகின்றதென்று அறிவித்துள்ளது. இவ்விதம் ஒருதலைப்பட்சமாக ஒருவரது சுதந்திரத்தைப் பறித்தலை இந்த சாசனம் தடை செய்கிறது. நீதிமன்றங்கள் பொதுவான நீதி வழங்கும் நீதிச் செயற்பாட்டின் மூலம் சட்டத்தை நிலைநாட்டுவதற்கும் நீதிமன்றத்தின் நேர்மையைக் கடைப்பிடிப்பதற்கும் ஏற்புடைய வகையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிமன்றங்களை அவமதிக்கும் குற்றச்செயல்களுக்குத் தண்டன்ைகளை விதிக்கின்றது. ஆயினும், இந்த சம்பவத்தைப்
52. Tony Michael Fernando Vs Sri Lanka (Communication No 1189/2003- Adoption of Views by
the United Nations Human Rights Committee 31 March 2005)

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 21
பொறுத்தமட்டில் பாதிக்கப்பட்ட இந்த மனுதாரர் தொடர்ச்சியாக மனுக்களை நீதிமன்றத்திற்குத் தாக்கல் செய்த காரணத்தினால் அவருக்கு நீதி சம்பந்தமான தண்டனையை விதித்திருந்தால் போதுமானதென்றும் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த மனுதாரர் நீதிமன்றத்தின் முன்னிலையில் உரத்த குரலில் பேசியதாகவும் அதையடுத்து இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கோர மறுத்தமையும் சுட்டிக்காட்டப்படுகிறது. இது சம்பந்தமாக நீதிமன்றமோ அரச தரப்பு வழக்கறிஞர்களோ ஏன் இவ்விதம் தீவிரமான தண்டனை ஒன்றை வழங்கினோம் என்பதற்கு நியாயபூர்வமான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் சட்டத்தையும் நிலைநாட்டுவதற்கும் இந்தளவு தண்டனை அவசியம் தானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இறுதியில் இந்தக் குழு போதியளவு விளக்கத்தை அளிக்காமல் ஒரு மனுதாரர் மீது இத்தகைய கடுமையான தண்டனையை விதித்தமை ஐ.நா. சாசனத்தின் பிரிவு 9(1) தடை செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தக் குழு அரசாங்கத்தின் நீதிப் பிரிவு ஐ.நா. சாசனத்தின் 9(1) பிரிவை மீறியுள்ளது என்றும், அத்துடன் அரசாங்கம் இந்த அரச தரப்பினரின் இத்தகைய செயற்பாடுகளைத் தடுக்கமுடியாத நிலையில் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தக் கருத்துக்களை நடைமுறைப்படுத்துதல் குறித்து இந்தக் குழு இன்னும் ஒரு வழக்குக் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளது. இது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்மா என்பவருக்குமிடையிலான வழக்காகும்.* அரச தரப்பு அதாவது இலங்கை அரசாங்கம் ICCPRஇன் பிரிவு 7 மற்றும் 9ஐ மனுதாரரின் மகன் விடயத்தில் மீறியிருக்கிறது என்றும் பிரிவு 7இன் கீழ் மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான தொடர்பை இதில் குறிப்பிடுகின்றது. இதையடுத்து குழு இலங்கை அரசாங்கத்திற்குப் பொருத்தமான போதியளவிலான நஷ்டஈட்டை வழங்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கும் நிலைப்பாட்டின் கீழ் 2003இல் தீர்ப்பளித்தது. இந்தக் குழுவின் தீர்மானத்தையடுத்து இலங்கையின் சட்டமா அதிபர் இந்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவருமாறு வெளிவிவகார அமைச்சிற்கு ஆலோசனை தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது பற்றிய தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பது நல்லதென்று அவர் ஆலோசனை தெரிவித்தார். 2005ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திற்கு அமைய மனித உரிமைகள் ஆணைக்குழு நஷ்டஈட்டுத் தொகை குறித்துத் தீர்மானித்து இலங்கையின் பொருளாதார ஸ்திர நிலைக்கு ஏற்ப நஷ்டஈட்டுத் தொகையைத் தீர்மானித்து வழங்கவேண்டும் என்று கூறியது.
53, Communication No. 950/2000

Page 20
22. மனித உரிமைகளின் நிலை 2006
ஆணைக்குழு இந்த விடயத்தில் மிகவும் அவதானமான சிபார்சுகளைச் செய்தது. அரசாங்கத்தினால் இந்த உரிமைகள் மீறப்பட்டிருக்கும் பட்சத்தில் இத்தகைய உரிமை மீறல்கள் குறித்து மக்கள் மனித உரிமை மீறல்கள் என்பதைப் பகிரங்கமாக அங்கீகரிப்பதனால் அது குறித்துத் தெளிவான கொள்கை அறிக்கையொன்றை விடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியது. திட்டமிட்ட முறையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறும்போது குறிப்பாக ஆட்கள் காணாமல் போகும்போது இவை குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கத்தின் சார்பில் செய்யப்படும் உரிமை மீறல்களுக்கு நிவாரணம் அளிப்பது மிகவும் முக்கியத்துவம் பெறவேணி டும் என்றும் இவை அரசாங்கத்தின் கொள்கையையும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதற்கு ஊக்குவிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் திடசங்கர்ப்பம் பூண்டுள்ளது என்பதைக் காண்பிப்பதற்கும் வகை செய்யும் என்று கருதப்படுகிறது.* ஆணைக்குழு செய்த சிபார்சில் நஷ்ட ஈட்டைத் தீர்மானிப்பது குறித்து தற்போதுள்ள தரநிலை பற்றிய முழுமையான பகுப்பாய்வு ஒன்றும் சேர்க்கப்பட்டிருப்பதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிமன்றங்கள் பொதுவாகக் குறிப்பிடத்தக்க காரணங்களை சுட்டிக்காட்டாமலேயே ஒரு குறிப் பிட்ட தொகையை நஷ டஈடாக வழங்கவேணி டும் என்று தீர்ப்பளிக்கின்றன. இந்த நீதிமன்றங்கள் தங்களின் இந்தத் தீர்மானங்களுக்கு ஒரு குறிப் பிட்ட காரணங்களையோ அல்லது தரங்களையோ கடைப்பிடிக்காமல் செயற்படுகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தால் ஒரு குறிப்பிடத்தக்க தீங்கிழைத்தமைக்கு பொருத்தமான அளவு நஷ்டஈட்டை வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்க
(DQUID.
தனது மகன் 16 வருட காலம் காணாமல் போயிருந்த காலத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனுபவித்த மனவேதனையை அங்கீகரித்து அக் குடும்பத்திற்கு பணத்தை வழங்காமல் வேறு வழியில் நஷ்டஈட்டை வழங்கவும் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது. இவ்விதம் ஒருவர் காணாமல் போவதனால் அது அவரது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் பெரும் தாக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு செயற்பாடாக அமைகிறது. ICCPRஇன் கீழ் உள்ள தனது பொறுப்புக்களை பாரதூரமான முறையில் மீறுவது பற்றி முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் தவறுகிறது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு தனது அறிக்கையில் மனித உரிமை மீறல்களிலிருந்து பிரஜைகளைப் பாதுகாப்பது அரசாங் கத்தின் நியாயபூர்வமான கடமை என்றும்
54. Decision on file with author

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 23
சுட்டிக் காட்டியுள்ளது. இவ் விதம் தனது கடமைகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறுவது அரசாங்க கொள்கைகள் தொடர்பான தவறான முன்மாதிரிகைகளாக அமைகிறது என்றும் இது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அதனை உத்வேகப்படுத்துவதற்கும் இருக்கும் நிலைப்பாட்டை மீறுகிறது என்றும் தெரிவித்துள்ளது.* இந்த நிலைப்பாட்டை அங்கீகரித்து சிறந்த முறையில் நஷ்டஈட்டை வழங்குவது இலங்கையில் இத்தகைய தவறான செயற்பாடுகளுக்கு எதிராக எடுக்கும் ஒரு முன்னோக்கிய அடியாகும்.
6.2 காணாமல்போதல்
இலங்கை உயர்நீதிமன்றம் கணபதிப்பிள்ளை மாச்சவல் லவனுக்கும் திருகோணமலையின் பிளாண் டன் பொயிண்ட் இராணுவமுகாமினி பொறுப்பதிகாரிக்கும் ஏனையோருக்கும் எதிரான° வழக்கில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. ஒவ்வொருவருக்கும் நான் காணாமல்போகக்கூடாது என்பதை ஊர்ஜிதம் செய்வதற்கான வாழும் உரிமை இருக்கிறது என்பதை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தற்போது எமது அரசியல் சாசனத்தின் 13(4) பிரிவில் வாழ்வதற்கான உரிமை பற்றிய ஒரு சிறு அம்சமே சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் ஒருவருக்கு வாழ்வதற்கு உரிமை உண்டு என்பதையும் அவரை மன்னிக்கச் செய்வதன்மூலம் தண்டிக்கவோ, அல்லது சிறையில் இடவோ முடியாது என் தையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு திறன்மிக்க நீதிமன்றம் ஒன்றின் ஆணையின்படியே இதனைச் செய்ய முடியும் என்றும் அரசியல் சாசனத்தின் இந்தப் பிரிவு வலியுறுத்துகின்றது. கடந்த பல ஆண்டுகளாக உயர் நீதிமன்றம் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்றும் பின்னர் அதன் அடிப்படையில் அவரின் வாழும் உரிமையைப் பறித்துவிடக் கூடாது என்றும் அறிவித் திருக்கிறது. மச்சவல்லவனின் வழக்கில் தந்தையொருவரும் அவரது இரண்டு மகன்மாரும் திருகோணமலை பிளாண்டன் பொயின்ட் என்னும் இடத்தில் இராணுவம் மேற் கொணி ட சுற்றிவளைப் புத் தேடுதலினி போது கைதுசெய்யப்பட்டனர். அன்று மாலை தந்தை விடுவிக்கப்பட்டபோதிலும் அவரது மகன்மார் இருவரும் விடுவிக்கப்படவில்லை. இது பற்றி அவர் விசாரணை நடத்திய போது அந்த இரண்டு மகன்மாரும் இராணுவ முகாமில் இல்லை என்று அவருக்கு தகவல் கிடைத்தது. ஆயினும், இந்த விடயத்தை நேரில் கண்ட ஒருவர் மனுதாரரின் கூற்றுக்கு அமைய அவரது மகன்மார் இருவரும் கடைசியாக இராணுவ முகாமில் இருந்ததை தான் கண்டதாக சாட்சியம் கூறினார். உயர் நீதிமன்றத்துக்கு முதலாவது பிரதிவாதியைக்
55. Ibid 56. SC Appeal No. 90/2003, SC (Spl) L.A. No. 177/2003

Page 21
24 மனித உரிமைகளின் நிலை 2006
காணமுடியவில்லை. (அந்த முகாமின் பொறுப்பதிகாரி) அவரே இந்த உரிமை மீறலுக்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்புடையவர். உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் காணாமல் போனால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது. பின்னர் இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று ஊகிக்கப்படுகிறது. எனவே ஒருவர் கைது செய்யப்பட்டால் அல்லது பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக் கப்பட்ட பின்னர் அங்கிருந்து காணாமல் போய் விட்டதாக அறிவிக்கப்பட்டால் அந்த நபரைப் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் கொன்றுவிட்டார்கள் என்றே நினைக்கவேண்டியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. ஒரு தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் உத்தரவின்றி இவர்கள் மன்னிக்கச்செய்யப்பட்டிருப்பது இலங்கை அரசியல் சாசனத்தில் 13(4) பிரிவை மீறிய செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
6.3 பிந்துனுவெவ மனிதப் படுகொலை
முனசிங்க ஆராய்ச்சிகே சமி மற்றும் ஏனையோருக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான இன்னுமொரு வழக்கில் இந்த வழக்கு பிந்துனுவெவ வழக்கு என்று பிரபல்யம் பெற்றிருக்கிறது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஏமாற்றமாக அமைந்தது. இந்த வழக்கில் தடுப்புக் காவலில் இருந்த 27 தமிழர்களை பிந்துனுவெவ புனர்வாழ்வு நிலையத்தில் 2007 ஒக்டோபர் 25ஆம் திகதியன்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்." புனர்வாழ்வு நிலையத்தில் 12 வயது முதல் சுமார் 35 வயது வரையிலானவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சிலர் எல்.ரி.ரி.ஈ. இடமிருந்து தப்பிவந்தவர்களாவர். ஏனையோர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாவர். ஒரு வருட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னரும் இவர்களில் ஒருவருக்கெதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த மனிதப் படுகொலை தொடர்பாக சேகரித்த அறிக் கைகளின் படி இந்த வன்முறைகளைத் தடுப்பதற்கும் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களைப் பாதுகாப்பதற்கு மி பொலிஸார் தவறிவிட்டார் கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (சம்பவம் நடந்த இடத்தில் இந்த நிலையத்தில் 65 உத்தியோகத்தர்கள் இருந்தனர்) தண்டனையிலிருந்து விலக்கப்படுவதற்கான உரிமை மற்றும் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களை சட்டத்தின் முன்னர் சமமாக நடத்துவதற்கு முடியாமை போன்ற பல பாரிய விடயங்கள் இந்த வழக்கின் மூலம் வெளியாகின. இந்த வழக்கு அரசாங்கத்தின் பாரிய நீதி பரிபாலனத்துறையின் சீரழிந்த தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. (உதாரணமாக பாலிய குற்றமிழைத்ததாகக் கருதப்படும் தடுப்புக் காவலில்
57. Five of the 41 accused were given death sentence which were overturned by the
Supreme Court.

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 25
உள்ளவர்களும் சகல தடுப்புக்காவலில் உள்ள மற்றவர்களுடன் ஒன்றாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் ஆயினும் நீதி நெறிமுறைக்கமைய சிறுவர்கள் பெரியவர்களிடமிருந்து பிரித்து தடுத்து வைக்கப்படவேண்டும் என்ற விதிமுறை அமுலில் இருக்கின்றது.* அத்துடன் யுத்தத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளையும் அரசாங்கத்தினால் பராமரிக்க முடியாமல் போன நிலையும் இருக்கின்றது. முன்னாள் போராளிகளாக இருந்த சிறுவர்களை சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைப்பதற்கும் அரசு தவறிவிட்டது. இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்திறனுடனான அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த மனிதப் படுகொலையில் சம்பந்தப்பட்ட மிக சிஷ்ேட உத்தியோகத்தர்களுக்கெதிராக சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடரத் தவறிவிட்டது. மற்ற சாதாரண உத்தியோகத்தர்களைப்பொறுத்தமட்டிலும் கூட மிகப் பெரிய குற்றச்செயல்களுக்கு எதிராக வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்தது.”
6.4 சித்திரவதை செய்தல் மற்றும் தடுத்துவைத்திருக்கும்
போது ஏற்படும் மரணம் 2005ஆம் ஆண்டில் சித்திரவதை மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது ஏற்படும் மரணங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றுவந்தன. மனித உரிமைகள் ஆணைக் குழு இவ்வாண்டில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் 19 மரணங்கள் சம்பவித்ததாக அறிவித்தது." சிறுவர்களைப் பொலிஸார் சித்திரவதை செய்த சம்பவங்களும் அறிவிக்கப்பட்டது. சித்திரவதைக்கு எதிரான சாசனத்தின் 13ஆவது பிரிவின் கீழ் இலங்கையின் செயற்பாடுகளை ஆராய்ந்த பின்னர் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. இவ் அறிக்கையின் முடிவுரையிலும் சிபார்சுகளிலும் மனிதர்கள் தடுத்துவைக்கப்படும் சகல இடங்கள் குறித்தும் நெறியான முறையில் மீளாய்வு செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்படாதிருப்பது கவலைக்குரிய விடயம் என்று சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழமையாகவும் முன்னறிவித்தலின்றியும் இவ் இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து அங்குள்ள செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான ஒரு நடைமுறையை மேற்கொள்ளவேண்டும் என்றும் இக்குழு சிபார்சு செய்துள்ளது." சுயாதீனமான மனித உரிமைகள் கணி காணிப்பாளர்களுக்குத்
58. Article 37 (c) Convention on the Rights of the Child 1989
59. Alan Keenan, 'Making Sense of Bindunuwewa - From Massarcre to Acquittals,' LST
Review, Volume 15, Issue 212 (June 2005), P29.
60. LST Review (September 2005), p.2
61. Consideration of Reports Submitted by States Parries Under Article 19 of the Convention, Committee Against Torture, 35th session, pp. 7-25 November 2005, LST Review, Volume 17 joint Issue 216 & 217 (October & November 2005), p.3

Page 22
26 மனித உரிமைகளின் நிலை 2006
தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றைக் கண்காணிப்பதற்கு இலங்கை அரசாங்கம் பூரண அனுமதியை வழங்கவேண்டும் என்றும் இக்குழு வலியுறுத்தியுள்ளது. பாலியல்ரீதியிலான வன்முறைகள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பெண்கள் மற்றும் பிள்ளைகளைத் துன்புறுத்துதல் ஆகியவை குறித்தும் தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும் குழுவினர் இலங்கை அரசாங்கத்திற்குக் கையளித்த தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த தடுத்துவைக்கப்படும் இடங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து அவசியமாயின் அவை பற்றி விசாரணைகளை நடத்தி பாலியல் வன்முறைகள் அல்லது துன்புறுத்தல்கள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும்? வகை செய்வதற்கான நடைமுறை ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்றும் இந்தக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு சிபார்சு செய்துள்ளது?
6.5 சட்டத்திற்கு முரணான முறையில் உடனடியாக அல்லது
ஒருதலைப்பட்சமாக மரணதண்டனைகளை நிறைவேற்றுதல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சட்டத்திற்கு முரணான முறையில் உடனடியாக அல்லது ஒருதலைப் பட்சமாக மரணதண் டனைகளை நிறைவேற்றுதல் ஆகியன தொடர்பான விசேட அறிவிப்பாளரான பிலிப் அல்ஸ்ரன் 2005ஆம் ஆண்டு பிற்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று விஜயம்செய்தார். அல்ஸ்ரன் தமது அறிக்கையில் யுத்த நிறுத்தத்திற்குப் பின்னர் இடம்பெற்ற அரசியல் கொலைகளை மையமாக வைத்து விடுத்த அறிக்கையில் துணைப் படையின் பங்களிப்பு மற்றும் கருணா பிளவுபட்டதினால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை பற்றித் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் போர் வீரர்களைத் தாக்குவதற்காக எல்.ரி.ரி.ஈ.இனர் சிவிலியன் மக்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்து அவர் இவ் அறிக்கையில் பிரஸ்தாபிக்கிறார். எல்.ரி.ரி.ஈ.இனர் தாங்கள் இந்த உத்தரவுகளை சிவிலியர்களுக்குப் பிறப்பிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவித்தாலும் சிவிலியன் மக்கள் மீது எல்.ரி.ரி.ஈ.க்கு நல்ல செல் வாக்கு இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் சிவிலியன்களைக் கட்டுப்படுத்துவதற்கு எல்.ரி.ரி.ஈ.இனர் குறிப்பாக வன்முறையைப் பயன்படுத்துதல் குறித்தும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
62. Ibid., p.4
63. Ibid.
64. Report of the Special Rapporteur on Extrajudicial, Summary or Arbittary Executions. Philip Alston, Mission to Srilanka, 28 November to 6 December 2005, LST Review, Volume 16, issue 221 (March 2006) p.5

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 27
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வன்முறைகள் அச்சுறுத்தல்கள் மற்றும் பயமுறுத் தல கள் இடம் பெறுவது குறித் தும் இவ்வறிக் கையில் ஆராயப்படுகிறது.? ஆயுதப் படையினர் மனித உரிமை நெறிகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அல்ஸ்ரன் எல்.ரி.ரி.ஈ. யின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் அதாவது வன்னியில் மேற்கொள்ளும் ஆளுமை பரீட்சார்த்த முயற்சி பற்றியும் குறிப்பிட்டு அங்கு சிவில் நிர்வாகம் நீதி நிர்வாகம் ஆகியன இடம்பெறுவதாகவும் இவ் இயக்கம் தன்னை அடையாளம் கண்டிருப்பதுடன் அது தடைகள் மற்றும் சட்டவிரோதமானவை என்ற பிரகடனங்களுக்கும் உட்பட்டிருக்கின்றது என்றும் குறிப் பிட்டுள்ளார் . சர்வதேச சமூகம் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதனால் இதற்கான பொறுப்பை எல்.ரி.ரி.ஈ. ஏற்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆயினும் இதுபற்றி அளுத்தங்களை சர்வதேச சமூகம் எல்.ரி.ரி.ஈ. மீது கொண்டுவரத் தயங்குகிறது. இவ்விதம் நேரடியாக அழுத்தங்களைக் கொண்டுவந்தால் அது எல்.ரி.ரி.ஈ. யை ஒரு அரசாங்கமாக அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும் என்றும் அதனாலேயே இவ்விதம் செய்யத் தயங்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.° அரசியல் கொலைகளைப் பொறுத்தமட்டில் பொலிஸ் படையின்விசாரணை செய்யும் பொதுவான திறமையின்மை" மற்றும் மொழித் திறனின்மை மற்றும் கலாசார உணர்வுகள் குறித்து சாட்சியமளிப்பவர்களை விசாரணை செய்வதற்கு இருக்கும் தயக்கம் போன்றவை காரணமாக இந்தக் கொலைகள் பற்றிய விசாரணைகள் தோல்வியில் முடிவடைவதாகக் கூறுகிறார்.8 பரிவின்மை மற்றும் அச்சம் காரணமாக இந்த விசாரணைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துவதனாலும் இதனால் யுத்த நிறுத்தத்திற்குத் தீங் கிழைக்கப் படும் என பதனாலும் ? இந்த விசாரணைகள் தோல்வியடைகின்றன. நீதி சட்டத்துறைத் திறன் இன்மை மற்றும் அற்குத் தேவையான உபகரணங்கள் இன்மை காரணமாகவும் பெரும்பாலான வழக்குகள் அதிகளவு சாட்சியங்களின் காரணமாகவும் வெறுமனே வலுவிழந்து நிராகரிக்கப்படுகின்றன." சாட்சியமளிப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான செயற்பாடுகள் இல்லாதிருத்தலும் சரியான முறையில் குற்றத்தை நிரூபிக்க முடியாமைக்கு இன்னொரு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. சாட்சியமளிக்கும் பெரும்பாலானோர், முன்வந்து சாட்சியமளிக்க அஞ்சுவதும், இதன் தோல்விக்கு இன்னுமொரு காரணமாகும். பொலிஸ் படை இப்போது இராணுவ மயமாக்கப்பட்டிருப்பது குறித்தும்
65. Ibid, p.6 66. Ibid, p.7 67. Ibid., p.9 68. Ibid,
69. libid.
70. Ibid., p.15

Page 23
28 மனித உரிமைகளின் நிலை 2006
இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டும் அல்ஸ்ரன் இந்தப் பொலிஸ்படை இப்போது கிளர்ச்சிப்படைக்கு எதிரான ஒரு படையாக மாற்றமடைந்திருக்கிறது என்று கூறுகிறார்." 2005 ஜனவரி 5 முதல் ஒக்டோபர் 30 வரை பொலிஸாரின் தாக்குதல் மற்றும் சித்திரவதை பற்றி 221 முறைப்பாடுகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு வந்து சேர்ந்துள்ளன.’ இவ் அறிக்கையின்படி பொலிஸார் உடனடியாக மரணதணர் டனையை நிறைவேற்றும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸார் சந்தேக நபர்களைச் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் குறித்து விசாரணை எதுவும் நடத்தப்படுவதில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்." தன்னிச்சையற்றமுறையில் பலவந்தமாகக் காணாமல் போகச் செய்பவர்களின் சம்பவங்கள் இப்போது மீண்டும் தோன்றியுள்ளன என்று தமது அறிக்கையில் குறிப்பிடும் அல்ஸ்ரன், குறிப்பாக இந்த காணாமல் போகும் சம்பவங்களில் தமிழ் இளைஞர்களே பலியாகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு டிசம்பரில் மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கிலிருந்து 16 காணாமல் போன சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகளைப் பெற்றிருக்கிறது."
7. பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள்
2005 இல் அரசாங்கமும் எல். ரீ. ரீ. ஈ. யினரும் ஊடகங்கள் மீதான தாக்குதல் கள் மற்றும் வன்முறைகள் பயமுறுத்தல் கள் மற்றும் அச்சுறுத்தல்களை மேற்கொண்டு பேச்சு சுத்ந்திரத்தைக் கட்டுப்டுத்துவதற்கான முயற்சிகளை எடுக்கும் செயற்பாடுகள் பொதுவாக அதிகரித்துக்கொண்டு வந்தன. இதனால் ஊடகவியலாளர்களிடையே அச்சத்தை உருவாக்கும் ஒரு பயங்கரமான சூழ்நிலை உருவாகியது. இதன் தாக்கத்தினால் ஊடகவியலாளர்கள் செய்திகளை சுயதணிக்கை செய்யவேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்தை ஆதரித்து எழுதும் ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராம் கொழும்பில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்? இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) அறிவிப்பாளரான ரேலங்கி செல்வராஜாவும் அவரது கணவரும் ஒகஸ்ட் மாதத்தில் படுகொலை செய்யப்பட்டனர்." எல்.
71. Ibid., p. 13 72. Ibid., p. 14 73. Ibid.
74. Ibid., p. 19
75. Sri Lanka - Annual Report 2006 - Reporters Without Borders, http://www.rsf.org/
print.php3?id article=1762
76. International Press Institute, "World Press Freedom Review 2005; Sri Lanka." at http:// www.freemedia.at/cms/ipi/freedom detail.html?country=KW0001/KW0001/KW0005/KWOl

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 29
ரீ. ரீ. ஈ. இயக்கத்தைக் கண்டிக்கும். நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்திருந்தார். ரேலங்கியின் கணவர் போராளிக் குழுக்களில் ஒன்றான புளொட் (PLOTE) இயக்கத்தின் முன்னாள் அங்கத்தவர் ஆவார். அரசாங்கத்திற்கும் எல். ரீ. ரீ. ஈ. யினருக்கும் இடையில் உறவு மோசமடைந்திருப்பதை அடுத்து அதிகரித்துவரும் வன்முறைகளின் ஒரு அங்கமாக இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. இவ் விரு கொலைகள் பற்றி விசாரணைகள் நடைபெற்றபோதிலும் அவை எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை. அத்துடன் இவை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவும் இல்லை.
2005 ஆம் ஆண்டில் ஊடகவியலாளருக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளருக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற ஆரம்பித்தன. டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியன்று தினக்குரல் என்ற தமிழ் தினசரிப் பத்திரிகையில் கடமைபுரியும் 3 தமிழ் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவம்" மேற்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கு எதிராக மாணவர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றிய செய்திகளை திரட்டச் சென்றபோது அம் மூவரும் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதே வாரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசியவாதத்தை ஆதரிக்கும் தமிழ் தினசரியான நமது ஈழநாடு என்ற பத்திரிகை காரியாலயத்தில் இராணுவத்தினர் தேடுதல்களை மேற்கொண்டனர்." அதே வாரத்தில் தினக்குரல் பத்திரிகையின் சிரேஷ்ட நிருபரான பி. பார்த்திபன் மற்றும் அப் பத்திரிகையின் இரு கணினி தொழில்நுட்பவியலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் வழியில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அவர்களின் தேபற்றம் வீடியோ ஒளிநாடாவில் பதிவு செய்யப்பட்டு கைரேகை அடையாளங்களும் எடுக்கப்பட்டன." இதனுடன் பல்வேறு பத்திரிகைக் காரியாலயங்களும் தாக்குதலுக்குட்பட்டன. எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தை ஆதரிக்கும் தமிழ் தேசியவாத பத்திரிகையான சுடர் ஒளிய்ன் காரியாலயத்தின் மீது ஒகஸ்ட் மாதத்தில் ஒரு கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலில் பாதுகாப்பு ஊழியர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு உத்தியோகஸ்தர்க்ள் காயமடைந்தனர்." அதே மாதத்தில் பிரேமச் சந்திரன் யதுர்ஷன் என்ற சுடர் ஒளி பத்திரிகை நிருபர் மக்கள் விடுதலை முனனணி (JVP) கூட்டம் ஒன்று பற்றிய செய்திகளை சேகரிக்கச் சென்றபோது தாக்குதலுக்குட்பட்டார். பின்னர்
77. Ibid
78. Ibid
79. Ibid
80. Ibid.; Asia Media; Media News Daily, "Sri Lanka Violence Against Tamil Journalists
Escalating" http://www.asamedia.ucla.edu/articlesouthasia.asp?parentid=29294

Page 24
30 மனித உரிமைகளின் நிலை 2006
அவரிடமிருந்த தனிப்பட்ட உடமைகளும் பறிக்கப்பட்டன. ஒக்டோபர் மாதத்தில் சண்டே லீடர் பத்திரிகையின் அச்சகம் இனந்தெரியாத ஒரு குழுவினால் தாக்கப்பட்டு அங்கிருந்த பத்திரிகைப் பொதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. இப் பத்திரிகையைத் தொடர்ந்தும் அங்கு அச்சிட்டால் நாம் உம்மைப் பழிவாங்குவொம் என்று அச்சகத்தின் முகாமையாளரை அச்சுறுத்திய பின்னர் அக்குழுவினர் அங்கிருந்து சென்றனர்.*
சில சந்தர்ப்பங்களில் அரசாங்க உறுப்பினர்கள் மறைமுகமாகவும் சில சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்தனர். இத்தகைய செயற்பாடுகள் சம்பிரதாயபூர்வமற்ற, சட்டபூர்வமற்ந செய்தித் தணிக்கையாகவும் செயற்படுவதற்கு ஏதுவாக அமைந்தன. உதாரணமாக சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தன்னைக் கூட்டரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் பயங்கரவாதி என்று குற்றம் சாட்டியதையடுத்து அவர் பொலிஸ் பாதுகாப்பு தனக்கு அளிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிபியதாக கூறப்படும் மகாராஜா கூட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான சிரச தொலைக்காட்சி நிலையத்தின் இரண்டு செய்தியாளர்கள் அரசாங்கக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்° 54 ஆவது வருடாந்தக் கூட்டம் பற்றிய செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்தபோது இவ்விருவரும் வாய்மூலம் ஏசிய பின்னர் உடல் ரீதியிலான தாக்குதலுக்கும் உட்பட்டனர். சிரச தொலைக்காட்சி சேவை மற்றும் சொர்ணவாகினி ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது பாராளுமன்ற உறுப்பினரான மேவின் சில்வா தனது மகன் சம்பந்தப்பட்ட* துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டு வெளியேறும் போது நீதிமன்ற வளவில் வைத்து கடுமையாக இவ்விரு நிருபர்கள் மீது ஏசி அச்சுறுத்தியுள்ளார். 2005இல் இதுபோன்ற வன்முறைகள் றதிகரித்து வந்த அதேவேளையில் யுத்த நிறுத்த செயற்பாடுகளும் பலவீனமடைந்தவண்ணம் இருந்ததனால் மக்களின் பேச்சு சுதந்கிரம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.
8. (pla660)
2005 இல் இலங்கையில் சுனாமி மற்றும் மோசமடைந்துவரும் சமாதான செயற்பாடுகள் ஆகியன மனித உரிமைகளின் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன என்றும் இவற்றுக்கு சரியான
81. Ibid
82. World Press Freedom Review (2005) 83, Asia Media (2005)
84. World Press Freedom Review (2005) 85. Ibid

2005 இல் இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு பற்றிய ஒரு கண்ணோக்கு 31
உட்கட்டமைப்பின் அடிப்படையில் தீர்வுகளைக் காணவேண்டி இருக்கிறது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் நம்பி வாழவேண்டியிருப்பதுடனும், மனித உரிமைகளுடன் ஒன்றிணைந்திருப்பதனாலும் தோல்வியை எதிர்நோக்கும் சமாதான முன்னெடுப்புக்கள் காரணமாகவும் நாட்டில் நியாயமான சமாதானத்திற்கான தேவை வலுப்பெற ஆரம்பித்துள்ளது. உதாரணமாக ஆயுதப் போராட்டத்திற்கு வெறுமனே ஒரு முடிவை ஏற்படுத்துவதை விட ஜனநாயக செயற்பாட்டின்மூலம் மனித உரிமைகளைப் பாதுகாத்து அதனை ஊக்குவிக்க வேண்டுவதற்கான செயற்பாட்டை உருவாக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. சமாதான நடைமுறையைப் பொறுத்தமட்டில் யுத்தநிறுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியன தீர்வுகள் ஏற்படுத்தப் பட்ட பின் னர் எழக் கூடிய பல வேறு கேள்விகளை முன்வைத்திருக்கின்றது. இவை மீண்டும் வன்முறைகள் எழுவதைத் தடுப்பதற்கும் ஆளுமை செயற்பாடுகள் தீர்மானங்களை எடுத்தல் போன்றவற்றை அரசியல் கலாசாரத்திற்கு ஏற்ப உருவாக்கப்படவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.
பரந்த அடிப்படையிலான கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்கான ஊக்குவிப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அவசியம் மற்றும் சமாதான நடைமுறை மற்றும் சுனாமி புனர் நிர்மாண புனர் வாழ்வு நடவடிக் கைகள் தொடர்பான ஆளுமையில் பொதுமக்களுக்கும் பங்களிப்பதற்கு உத்தரவாதம் அளிப்பதன் அவசியம் 2005ஆம் ஆண்டில் வெளிப்படையாகத் தெரிந்தது. மனித உரிமைகள் விடயங்களில் சம்பந்தப்படுதல் அவ்வளவு இலகுவான செயலல்ல. இதில் சம்பந்தப்படுதல் அவசியமாக இருக்கின்றபோதிலும் தற்போது பலவீனமான நிலையில் உள்ள பேச்சுவார்த்தைகளின் நடைமுறையைப் பாதிக்காத வகையில் இதற்கான செயற்திறன்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே 2005ஆம் ஆண்டில் மனித உரிமைகள் விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றபோதிலும் பொதுமக்களின் நம்பிக்கையை அரசாங்கத்தின்மீதும் நீதி பரிபாலனத்துறை, பொலிஸார் மற்றும் இராணுவத்தின் மீதும் கட்டியெழுப்புவது அவசியமாகின்றது. இதன் மூலம் அரசாங்க அமைப்புக் களின் செயற்பாடுகளை ஒழிவு மறைவு அற்ற முறையில் மேற்கொள்வதை வலுப்படுத்துவதுடன் அரசியல் ஆழ்நிலைக்கு ஏற்ப இவ்வமைப்புக்களின் கலாசாரத்திலும் மாற்றங்களைச் செய்யவேண்டும். அத்துடன் இந்த சமாதான நடைமுறை ஏற்படக் கூடிய சீர் திருத்தங்களுக்கு ஒரு வகையில் முட்டுக்கட்டையாக இருந்திருக்கவேண்டும் என்றே சொல்லப்படுகிறது.

Page 25
I
கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள்
அமல் டி சிக்கேரா?
இலங்கையை டிசம்பர், 2004இல் தாக்கிய கடற்கோளின் (சுனாமி) முழுப் பிரமாண்டமும் அது விட்டுச் சென்ற எண்ணிப் பார்க்க முடியாதளவிற்கான அழிவுகளும் ஆரம்பத்தில் விளங்கிக் கொள்ளப்பட முடியாதவையாக இருந்ததுடன் பின்னர் அவை தாங்கிக் கொள்ளப்பட முடியாதவையாகவும் இருந்தன. பதின்மூன்று கரையோர மாவட்டங்கள், ஐம்பத்தாறு பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் கடலின் இந்த கடுஞ் சீற்றத்துக்குள்ளான போது நாட்டின் ஏனைய பகுதிகள் அதன் உதவிக்கு விரைந்தன. இறந்தவர்களின் தொகை நாளொவ்வொன்றுக்கும் சில ஆயிரங்களால் துரிதமாக அதிகரிப்பது வழக்கமாகி இறுதியில் 35,322 உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகக் கணக்கிடப்பட்டது.*
கட்டுரையாசிரியர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவில் ஒர் ஆராய்ச்சி உத்தியோகத்தராக ஜூலை 2005 தொடக்கம் பணியாற்றினார். இந்தப் பிரிவு கடற்கோளுக்குப் பின்னரான நிவாரண மற்றும் புனருத்தாரணச் செய்முறைகளை மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு கணி ணோட்டத்தில் கணி காணிப் பதற்காக விசேடமாக உருவாக்கப்பட்டதாகும். அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றும்
冰 LLB (Hons), சட்ட பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்.
1. கிராம சேவகர் பிரிவென்பது உள்ளுராட்சி மன்ற முறைகளிலுள்ள சிறிய நிர்வாக அலகாகும். கிராம சேவகர் கிராமத்திலுள்ள சில நூறு குடும்பங்கள் அல்லது இதுபோன்ற சிறிய அலகுக்கு வழமையில் சேவை வழங்குவார்.
2. இலங்கை அரசாங்கம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள், இலங்கை சுனாமியின் பின்னரான tÖLil Lopbpyub uö6ïT 51st DII6OOTub (Sri Lanka: Post Tsunami Recovery and Reconstruction) lu. 2

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 33
போது கள விஜயங்கள், ஆலோசனைகள், முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் ஆராய்ச்சிகள் என்பவற்றினூடாகப் பெற்ற அனுபவங்கள் கடற்கோளின் மனித உரிமைகள் மீதான தாக்கங்கள் பற்றிய விரிவானதோர் உட்பார்வையைத் தந்தன.
1. அறிமுகம்
1.1 சுனாமியின் தாக்கம் சுனாமியின் போது கொல்லப்பட்டவர்களுக்கு மேலதிகமாக 21441 பேர்கின் காயமடைந்ததுடன் 835,028 பேர்கள் இடம்பெயர்ந்தனர். இழந்த வாழ்வாதாரங்களின் எண்ணிக்கை 150,000 எனக் கணிக்கப்பட்டது, ஆயினும், இவ்வெண்ணிக்கை பாதிக்கப்பட்ட 250,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இழந்த வாழ்வாதாரங்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவாக 5,000 ரூபாய்களின் முதலிரண்டு தவணைக் கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதிலிருந்து மிகவும் அதிகமாக இருக்குமென அறிப்படுகிறது. தொண்ணுற்றெட்டாயிரம் வீடுகள் சேதமாக்கப்பட்டன, நாட்டின் 75 சதவீதமான மீன்பிடிப் படகுத் தொகுதிகள் அழிக்கப்பட்டன, 23,449 ஏக்கர்கள் விவசாய விளைநிலங்கள் உவர்த்தன்மை அடைந்தன, 97 சுகாதார வசதி நிலையங்கள் மற்றும் 201 கல்வி நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்டன. இதைவிட இடம்பெயர்தல்கள் மற்றும் பாடசாலைகள் அழிவடைந்தமையால் 200,000 பாடசாலைச் சிறுவர்கள் மோசமாக பாதிப்படைந்ததாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பதின்மூன்று மாவட்டங்களுள், கிழக்கிலுள்ள அம்பாறை 10,436 பேர்களின் உயிரிழப்பு மற்றும் 133,997 பேர்களின்
3. மேற்குறிப்பிட்ட அதே ஆதார ep6Lib.
4. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின், “உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் செயல் திட்டத்திற்கான தேசிய பாதுகாப்பும் நீடித்திருக்கக்கூடிய தீர்வுகளும்” (National Protection and Durable Solutions for Internally Displaced Persons Project), ஆண்டறிக்கை 2004.
S. இலங்கை அரசாங்கம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள், இலங்கை சுனாமியின் பின்னரான Lft. LDribylb LÉ6irfiridsTe007 Lib (Sri Lanka: Post Tsunami Recovery and Reconstruction) u. 2
6, மேற்குறிப்பிட்ட அதே ஆதார முலம் . ப.15, மூன்றாம் தவணைக் கொடுப்பனவுக்கு
பணம் பெறுவோர் தொகை 165,000 ஆகக் குறைவடைந்தது.
7. இலங்கை அரசாங்கம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள், இலங்கை சுனாமியின் பின்னரான Lft'L LDsbDub fair Éir DT 600TLD (Sri Lanka: Post Tsunami Recovery and Reconstruction)
... 2
. மேற்குறிப்பிட்ட அதே ஆதார மூலம்.

Page 26
34 மனித உரிமைகளின் நிலை 2006
இடம்பெயர்தலுடன் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்தது?
இதற்கு மிகவும் மாறுபட்ட வகையில், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் நான்கு பேர் மட்டும் உயிரிழந்ததுடன் 66 பேர்கள் இடம் பெயர்ந்தனர்." கிழக்கு மற்றும் தெற்குக் கரையோரங்களே கடற்கோளின் முழுமையான தாக்கத்துக்கு முகங் கொடுத்ததுடன் குறைவான அபிவிருத்தியடைந்த பகுதிகளே பெரிதும் பாதிக்கப்பட்டன.
1.2 மனித உரிமைகள் மீதான விளைவு சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களால் முகங்கொடுக்கப்பட்ட மனித உரிமைப் பிரச்சினைகள் பாரியளவில் பரந்துபட்டதாகவுள்ளன. மேலும் இந்த உரிமைகளனைத்தும் ஒன்றிலொன்று தங்கியிருப்பவையாகவும் தனித்தனியாக பிரிக்க முடியாதவையாகவுமுள்ளன. இவ்வாறு, அவையொரு தொகுதி உரிமைகளாக உருவெடுப்பதுடன் அவை வெறுமனே தனிப்பட்ட ரீதியில் அல்லது வெவ்வேறாக மீள்நிலைப்படுத்தப்படுமிடத்து அவை அர்த்தமற்றவையாகவும் காணப்படும்.'
சுனாமியின் உடனடியான தாக்கங்கள் அதேபோன்று கடந்த வருடங்களாக நிவாரணம், புனருத்தாரணம், மீள்நிர்மாணம் மற்றும் மீள்ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்ட முறை ஆகிய இரண்டிலும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல மனித உரிமைகள் மீறப்பட்டு, விட்டுக் கொடுக்கப்பட்டு அல்லது அழுத்தங்களுக்கு ஆளாகின. மேலும் சில தீவிரமான பிரச்சினைகள் வினைத்திறனான முறையில் கவனத்தில் கொள்ளப்படாவிடின் இவ்வுரிமைகளில் பல மேலும் மீறல்களினால் பாதிப்படையும் நிலையில் உள்ளன. இவற்றுள் சில, சமத்துவம், வாழ்க்கை மற்றும் ஒருவரது பாதுகாப்பு, தகவல், பொது விவகாரங்களில் பங்கு கொள்ளும் உரிமை, நீதிக்கான வழிமுறை, வாழ்வாதாரம், போதுமானதொரு வாழ்க்கைத் தரம், அந்தரங்கம், சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் உறைவிடம், சுத்தமானதும், ஆரோக்கியதுமான சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒருவரது மொழி மற்றும் கலாச்சாரம், சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மதம், நடமாடும் சுதந்திரம் போன்றன சுதந்திரத்திற்கான உரிமைகள் எனப்படுவதுடன் பேச்சு மற்றும் கருத்துத் தெரிவிப்பதற்கான சுதந்திரமும் இதனொரு பகுதியாகின்றது. பெண்கள், சிறுவர்கள், வயது
9. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனர்த்த நிவாரண கண்காணிப்புப்
பிரிவு; ஆண்டறிக்கை 2005, ப.47
10. மேற்குறிப்பிட்ட அதே ஆதார மூலம். u.76.
11. உதாரணமாக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் ஒரேயொரு வருமானமீட்டுபவரது வாழ்வாதாரம் திருப்தியான முறையில் மீள்நிலைநிறுத்தப்படாத விடத்து, அக்குடும்பத்துக்கு மாற்றிடம் வழங்கப்பட்டு, ஒரு வீடு, 8ї въ т gѣ п J 5ѣ' கவனிப்பு மற்றும் கல்விக்கான வழிவகைகளுடன் மதச்சுதந்திரமும் அளிப்பது அக்குடும்பம் அதன் உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் நிலையிலுள்ளதென்பதாகாது.

3
5
கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள்
முதிர்ந்தோர். இனரீதியான சிறுபான்மையினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் போன்ற பல்வேறு நலிவடைந்த குழுக்களின் கூட்டான உரிமைகளும் விசேட கவனத்தின் தேவையைக் கொண்டுள்ளன.
மேற் குறிப்பிட்ட உரிமைகளில் ஒரு சில மட்டும் இலங்கையின் அரசியலமைப்பில் ஆதரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் இவையனைத்தும் சர்வதேசளவில் மனித உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்டு அவற்றை முன்னேற்றிப் பாதுகாத்து மற்றும் நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டை ஒவ்வொரு நாடும் கொண்டுள்ளன.
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேசப் பொருத்தனை மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேசப் பொருத்தனை ஆகிய இரண்டினதும் கையொப்பதாரியான இலங்கையும் இவ்விதமான கடப்பாட்டிற்கு பிணைப்புடையதாக இருந்தது."
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மனித உரிமைகளின் கண்ணோட்டத்தில் சாத்தியமானதோர் சவால்களை அளிப்பவையாக இருந்தன. பல சந்தர்ப்பங்களில் அந்த உரிமைகள் தொடர்பான மனித உரிமைகள் நிலைமைகள் சுனாமிக்கு முன்னரான நிலையில் கூட திருப்திகரமானதோர் தரத்தில் இருந்ததாக இல்லை. இதனால் சுனாமிக்குப் பின்னரான புனருத்தாரணங்களின்போது சுனாமிக்கு முன்னரான நிலையைக் கூட முன்னேற்றும் ஒர் மேலதிக பொறுப்பும் ஏற்பட்டது. நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிலைகளை மீள்வடிவமைக்கவும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமானதொரு சந்தர்ப்பமாக சுனாமி பலராலும் நோக்கப்பட்டது.
சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதாரண நிலையை மீளவும் அடைவதற்கான பிரதான பொறுப்பை இலங்கை அரசாங்கமே கொண்டுள்ளது என்பது விவாதங்களுக்கு அப்பாற்பட்டதொரு கருத்தாகும்.
2. சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மதம் என்பவற்றுக்கான சுதந்திரம் - (உறுப்புரை 10), சமத்துவமான உரிமை (உறுப்புரை 12), பேச்சு மற்றும் கருத்துத் தெரிவிக்கும், அமைதியான முறையில் ஒன்று கூடுதல், ஒருங்கு சேர்த்தல் மற்றும் நடமாடுவதற்கான சுதந்திரம் (உறுப்புரிமை 11)
3. உரிமைகள் மீதான சர்வதேச சட்ட உரிமைகளை ஆதரித்துப் பாதுகாப்பதில் மிகவும்
முக்கியமான சர்வதேச மனித உரிமைகள் ஆவணங்களாகும்.
4. சுனாமியின் மனித உரிமைகள் மீதான விளைவு என்பதன் ஓர் கூடுதல் விபரமான பகுப்பாய்வை டி சிக்கேராவின், “சுனாமி மற்றும் மனித உரிமைகள்: மீள்நிர்மானம் மற்றும் புனருத்தாரண செய்முறைகளுக்கானதோர் கட்டமைப்பு” என்பதைப் பார்க்கவும் (De Chickera, The tsunami and human rights: a framework for the reconstruction and rehabilitation process), இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவு 2005.

Page 27
36 மனித உரிமைகளின் நிலை 2006
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளின் மீறல்கள் மீதான மாஸ்ரிச்ட் வழிகாட்டிகளின்படி (Maastricht Guidelines) நாடுகள் அனைத்தும் குடியியல், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை “மதிப் பதறி கு”, “பாதுகாப்பதற்கு' மற்றும் “நிறைவேற்றுவதற்கு" கடப்பாடுடையவையாகும். இக்கடப்பாடுகளில் ஒன்றையேனும் நிறைவேற்றத் தவறுவது இந்த உரிமைகளின் ஓர் மீறலாக அமையும்.?
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசின் இந்தக் கடப்பாடு நாட்டின் ஸ் திரத் தனி மை மற்றும் சாதாரண நிலைமைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை, அதேபோன்று அது கடற்கோள் போன்ற அனர்த்தங்களின் போது மறைந்து விடுவதுமில்லை." உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் (IDPs) பாதுகாப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரத்தைக் கொண்டதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உள்ளக இடம்பெயர்ந்தோர் தொடர்பான வழிகாட்டல் கோட்பாடுகள் (GPID) உருவாகியது. உள்ளக இடம்பெயர்ந்தோர் தொடர்பான வழிகாட்டல் கோட்பாடு 3இல் கூறப்பட்டுள்ள கருதுகோளான, “அரசுகள் தங்களது நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பிற்கான பிரதான பொறுப்பையேற்க வேண்டுமெனும் கருதுகோளின் அடிப்படையிலேயே வழிகாட்டல் கோட்பாடுகள், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டங்கள் என்பவற்றின் மையக்கரு உள்ளது” என
15. மாஸ்ரிச்ட் வழிகாட்டிகள் (Maastricht Guidelines), 30க்கும் மேற்பட்ட சர்வதேச மனித உரிமை நிபுணர்கள் குழுவால் 1997இல் வடிவமைக்கப்பட்டது, இது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் எவ்விதம் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டுமென உத்தியோகபூர்வமற்ற ஆனால் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பகுப்பாய்வை உருவாக்குகிறது.
16. மதிப்பளித்தல் என்னும் கடப்பாடு, உரிமைகளை அனுபவிப்பது தொடர்பாக
அரசுகளிடமிருந்தான தலையீடு இல்லாதிருப்பதை வேண்டுகிறது.
17. பாதுகாப்பது எனும் கடப்பாடு, உரிமைகள் மூன்றாம் தரப்பினரால் மீறப்படுவதை அரசுகள்
தடுப்பதை வேண்டுகிறது. 18. நிறைவேற்றுதல் எனும் கடப்பாடு, உரிமைகள் முழுமையாக அடையப்படுவதற்கு அரசுகள்
எடுக்க வேண்டிய பொருத்தமான சட்டவாக்க, நிர்வாக, வரவு-செலவு, நிதி மற்றும் ஏனைய முறைகளில் தேவையை வேண்டுகிறது.
9. பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளின் மீறல்கள் மீதான மாஸ்ரிச்ட்
வழிகாட்டிகள், பிரிவு 6. 20. எவ்வாறாயினும், அரசுகள் காரணங்களோடு அமைந்த சந்தர்ப்பங்களில் அரசுகள் சட்டரீதியான
முறையில் உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கு அல்லது சில உரிமைகளிலிருந்து விடுபடுவது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
21. வோல்டர் கலின் (Walter Kalin), இயற்கை அனர்த்த நிலைமைகளில் உள்ளக 3LibQuujibg, LDis356f 6f urg) is Til (Protection of Internally Displaced Persons in Situations of Natural Disaster) list6316id El (663)), Gutij6us 2005, U.2.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 37
வோல்டர் கலின்? (Walter Kalin) குறிப்பிட்டார். இதன் மூலம் உள்ளக இடப்பெயர்விற்காளாகியோர் தொடர்பில் அரசாங்கங்கள் விசேடமானதொரு கடப்பாட்டைக் கொண்டுள்ளனவென்பது தெளிவாகிறது. உள்ளக இடம்பெயர்ந்தோர் தொடர்பான வழிகாட்டல் கோட்பாடுகளில் விளக்கப்பட்டது போன்று, இக்கடப்பாடு, உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் விசேட தேவைகள் மற்றும் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முன்னர் குறிப்பிட்ட பல்வேறு மனித உரிமைகளின் விசேட பாதுகாப்புக்கும் விரிவடைகிறது.*
1.3 அரச இடையீடுகள் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எதனையும் செய்யவில்லையென இங்கு கூற வரவில்லை. சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், புனருத்தாரணம் மற்றும் மீள் ஒருங்கிணைத்தல்களை வழங்குவதற்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவுகளில் நிலையான மற்றும் ஒத்திசைவான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. துரிதமான, நியாயமானதும் நிலையானதுமான செயல் நடவடிக்கைகளுக்கான பெரும் கேள்வியை சமாளிப்பதற்குப் புதிய சட்டவாக்கங்கள் வரையப்பட்டு, கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டும் நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.*
1.3.1 சட்டவாக்க இடையீடுகள் சுனாமி தொடர்பாக மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டன. அவை சுனாமி (விசேட ஏற்பாடுகள்) சட்டம், இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் அனர்த்த முகாமைத்துவச் சட்டம் என்பவையாகும். இவையனைத்தும் அனர்த்தம் நடைபெற்று ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டன.
22. வோல்டர் கலின் (Walter Katin), உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் தற்போதைய விசேட பிரதிநிதியாவ்ர். உள்ளக இடம்பெயர்ந்தோர் தொடர்பான வழிகாட்டல் கோட்பாடுகள் (GPID) உள்ளக இடம்பெயர்ந்தோர் தொடர்பான முன்னைய விசேட பிரதிநிதி பிரான்சிஸ் டெங் (Francis Deng) என்பவரால் உருவாக்கப்பட்டது.
23. சுனாமியின் பின்னரான சூழ்நிலைகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசுகளின் கடப்பாடுகள் குறித்தான மேலும் ஆழமான பகுப்பாய்தலுக்கு டி சிக்கேராவின், “சுனாமி மற்றும் மனித உரிமைகள் மீள்நிர்மானம் மற்றும் புனருத்தாரன செய்முறைகளுக்கானதோர் EL60)LDL' 66L605 uTicist6 b. (De Chickers, "The tsunami and human rights: a framework for the reconsturction and rehabilitation process") g6)|til 6 De LD6fgs உரிமைகள் ஆணைக்குழுவின் அனர்த்த நிவாரண கண்காணிப்புப்பிரிவு, இலங்கை 2005.
24. சம்பந்தப்பட்ட விடயங்கள் மீதான விபரங்களுக்கு, சாரா பிஷப்பின் “சுனாமியிலிருந்து
எழும் ஆவணப்படுத்தல் பிரச்சினை’களைப் பார்க்கவும் (Sara Bishop, “Documentation issues Arising out of the Tsunami).

Page 28
38 மனித உரிமைகளின் நிலை 2006
சுனாமி (விடேச ஏற்பாடுகள்) சட்டம்? இச்சட்டம் பின்வரும் ஆறு பிரிவுகளைக் கையாள்கிறது:
l இறப்புச் சான்றிதழ்களின் வழங்குதல்கள். 2 சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் பாதுகாவல். 3. கால விதிப்பு. 4 முதனிலை நீதிமன்றச் செய்முறைச் சட்டத்தின் பிரிவு 66இன் கீழான
செயற்பாடுகள்.
5
வாடகை உரிமைகள்.
6. சுனாமி நிவாரண உடைமைகள் தொடர்பான குற்றங்கள்
பகுதி I - இறப்புச் சான்றிதழ்களின் வழங்குதல்கள் இந்தப் பிரிவில், காணாமற் போனோர்கள் தொடர்பாக வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்களுக்கான காலவரையறை ஒரு வருடத்திலிருந்து ஆறு மாதங்களாகக் குறைக்கப்பட்டது." துரதிர்ஷ்டவசமாக, இச்சட்டம், இவ்விதம் காணாமற் போனவர்களிற்குக் குறித்த ஒரு தினம் (உதாரணம், 26 டிசம்பர் 2004) உத்தியோகபூர்வமான இறப்புத் திகதியாக அத்தாட்சிப்படுத்தப்படுமெனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இது பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதாக இருக்கலாம். விசேடமாக, அற்றோனித் தத்துவத்தைக் (Powers of Atorney) கொண்டுள்ளவர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் உயிருடன் இருக்கும் வரையில் அவர் சார்பில் நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளதினால் அவர்கள் அதனைத் துஷ்பிரயோகிக்கலாம்?
பகுதி II - சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் பாதுகாவல்
இச்சட்டத்தின் பகுதி II, சுனாமியால் அநாதரவாக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் தத்தெடுத்தலின் போது பின்பற்ற வேண்டிய
25. சட்ட இல, 16, 2005.
26. சட்டத்தின் பிரிவு 2 (சான்றுகளுக்கான கட்டளைச் சட்டத்தின் உப பிரிவு 108 இன் திருத்தம்) கீழான உப பிரிவு 4 இன் கீழ், இறந்ததாகக் கருதப்பட்டு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒருவர் உண்மையில் உயிருடன் இருப்பதாகத் தகவலொன்றை ஒருவர் பெறுவாராயின் அதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்குச் சட்டத்தில் ஏற்பாடுள்ளது. அவ்விதமான சந்தர்ப்பத்தில் பதிவாளர் நாயகம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச், சட்டத்தின் உப பிரிவு 52இன் கீழ் விடயத்தை சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
27. உதாரணமாக, சுனாமியின் பின்னரான முதல் ஆறு மாதங்களுக்குள் அற்றோனித் தத்துவம் கொண்டவர்கள் நிதி நடவடிக்கைகளில் காணாமல் போனவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சந்தர்ப்பங்கள் நடைபெற்றிருக்கலாம் . இக்காலத்தில் காணாமற் போனவர்கள் இறந்தவர்களாகக் கருதப்படாமையினால் இது அவர்களது சட்டரீதியான வாரிசுகள் பின்னுரித்தான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதைத் தடை செய்யலாம்.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 39
நடைமுறைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இதன்படி, சுனாமியால் பாதிக்கப்பட்ட அநாதரவானவர்களின் சேமநலன்கள் தொடர்பான சட்டபூர்வ அமைப்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) விளங்கும். பிரிவு 7, சட்டத்தின் பகுதி II, இரு பெற்றோர்களையும் இழந்த அல்லது அவர்களைப் பராமரிக்க முடியாத நிலையிலுள்ள தனிப் பெற்றோர்களைக் கொண்ட சிறுவர்கள் (18 வயதிற்குக் குறைந்தவர்கள்) மற்றும் இளம் பருவத்தினர் (18 வயதிற்கும் 21 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்) ஆகியோருக்குப் பிரயோகிக்கப்படத்தக்கது எனக் கூறுகிறது.
பிரிவு 14இன் படி, வளர்ப்புப் பெற்றோர் ஒன்றுக்கான விண்ணப்பம் விசேட நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவால், அவர்கள் அநாதரவானவர்களைத் தங்கள் கவனிப்பில் தத்தெடுப்பதற்கு தகுதியானவர்கள் எனக் கருதப்படுவதற்கு முன்னர் ஒரு வருட காலத்திற்கு கண்காணிக்கப்பட்டு, மதிப்பிடப்படுவர். வளர்ப்புப் பெற்றோர்களால் தத்தெடுக்கப்படுவதற்கு முன்னர் அநாதரவான ஒருவர் ஒரு வருட காலத்திற்கு வளர்ப்புப் பராமரிப்பில் இருக்க வேண்டுமென்பதும் கட்டாயமாகும்.
பகுதி II - காலவிதிப்பு
பிரிவு 28(1)இன் படி, சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருவரது ஆதனத்தின் 26 டிசம்பர் 2004இற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பாதகமான உடைமை, அதன் தொடர்ச்சியான உடைமை கொள்ளலிருந்து சுனாமியின் விளைவால் அந்த நபர் தடுக்கப்படுவாராயின், ஒரு வருட காலம் வரை (26 டிசம்பர் 2005 வரை) உடைமை கொள்ளல் குறுக்கீடு செய்யப்பட்டதாகக் கருதப்படமாட்டாது.* சட்டத்தின் ஏற்பாடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்குப் பிரயோகிக்கப்படக்கூடியதேயன்றி சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆதனங்களுக்கல்ல என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். இதன் பயனாக, பாதகமான உடைமை கொண்ட ஆதனத்தை வேறெங்காவது கொண்டிருக்கும் சுனாமியால் பாதிப்படைந்த ஒருவர் இச்சட்ட ஏற்பாட்டின் பாதுகாப்பைப் பெறுவர்.
பிரிவு 29 சட்ட நடவடிக்கைக்குத் தேவையான காலவிதிப்பைக் கையாள்கிறது. இதற்கமைய, விண்ணப்பதாரி சுனாமியால் பாதிப்படைந்தவராயின் நீதிமன்றம் ஒன்றில் அல்லது நியாய சபையில் நடவடிக்கையொன்றைத் தாக்கல் செய்வதற்கான காலவரையறை கணிப்பீட்டிலிருந்து 26 டிசம்பர் 2004இலிருந்து 26 டிசம்பர் 2005 வரையிலான காலப்பகுதி தவிர்க்கப்படும். எவ்வாறாயினும் இந்த விலக்கு, தனியே நீதிமன்றம் மற்றும் நியாய சபை நடவடிக்கைகளுக்கு
28. காலவிதிப்பு கட்டளைச் சட்டத்தினாலான விளைவு, நபரொருவர் ஒரு அசையாச் சொத்துக்கான பாதகமான, குறுக்கீடற்ற உடைமையை 10 வருடங்களுக்கு மேலான காலப்பகுதிக்கு கொண்டிருப்பின், அவர் அந்த சொத்து அல்லது ஆதனத்திற்கான காலவிதிப்பு உரித்துக்கான உரிமையொன்றைக் கொண்டுள்ளார் எனக் கூறுகிறது.

Page 29
40 மனித உரிமைகளின் நிலை 2006
LDL (6 (SLD பிரயோகிக்கப்படக் கூடியதென்பதுடன் மேன் முறையீட்டு செய்முறைகளுடன் கூடிய ஏனைய சட்டரீதியான அமைப்புகள் மற்றும் நிறைவேற்றுப் பொறிமுறைகளுக்கல்ல. மேலும், இந்த ஏற்பாடு, எழுத்தினாலான சட்டத்தினால் கால வெல் லை வழங்கப் பட்டிருந்தால் மட்டுமே பிரயோகிக்கப்படக்கூடியதாகும். இதனால், ஒப்பந்தங்கள் முக்கியமாகக் காப்புறுதி ஒப்பந்தங்கள் என்பன இந்த வரம்புக்குள் அகப்படாது.
பகுதி IV - பிரிவு 66இன் செயற்பாடுகள் சட்டத்தின் பிரிவு 30(1), சுனாமியின் பின்னரான ஒரு வருட காலத்திற்கு 1979ஆம் ஆண்டின் முதனிலை நீதிமன்றச் செய்முறைச் சட்டத்தின் பிரிவு 66இன் கீழ் பிரத்தியேகமாகக் காணி தொடர்பான செயற்பாடுகளைக் கையாள்கிறது. சுனாமி ஏற்பட்ட தினத்தன்று ஒரு நபர் வசம் உடைமையான அல்லது அந்நபர் இறந்தோ அல்லது காணாமற் போயிருப்பின் அவரிற்கு உரித்தாக இருந்தவர்கள் (உதாரணம்: மனைவி அல்லது பிள்ளைகள்) இந்த நடவடிக்கையின் நோக்கத்திற்கான உடைமை கொண்டவர்கள் எனக் கருதப்படுவர். சுனாமி ஏற்பட்ட இரணி டு மாதத்திற்குள் நபரொருவர் பல வநீதமாக உடைமையகற்றப்பட்டிருப்பின் அவர் ஒரு ஆக்கிரமித்து இருப்பவராயினும் அவர் உடைமை கொண்டிருந்தவற்றை மீள் நிலைநாட்டிக் கொள்வதற்கு உரித்துடையவராவர்.
பகுதி ஏ - வாடகை உரிமைகள்
சட்டத்தின் பிரிவு 31, சுனாமியால் உடைமையகற்றப்பட்ட வாடகையாளர்கள் அல்லது குத்தகைக்காரர்கள், சொத்து அழிக்கப்பட்டு அல்லது குடியிருப்பதற்குத் தகுதியற்றதாக ஆக்கப்பட்டிருந்தாலும் கூட தங்கள் வாடகை உரிமைகளைத் தக்க வைத்திருப்பர் எனக் கூறுகிறது. இதன்படி, ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதினால், நிலவுரிமையாளர் சொத்தை மீள்நிர்மாணிப்பதற்கான அரசாங்க உதவியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், சுனாமியால் தடைப்பட்டதாகக் கருதப்படாத வாடகை ஒப்பந்தத்தைத் தொடர்வதற்கான கடப்பாட்டைக் கொண்டிருப்பர்.
பகுதி VI - சுனாமி நிவாரணச் சொத்து தொடர்பான குற்றங்கள்
சுனாமி நிவாரணச் சொத்துக்கள் தொடர்பான ஏதேனும் சொத்துக்களின் (பணத்திருட்டு உட்பட) குற்றம், தண்டனைச் சட்டக்கோவையில் குறித்த குற்றத்திற்கு வழங்கப்படும் தணி டனையின் இரு மடங்கினால் தண்டனைக்காளாக்கப்படும் என பிரிவு 32 கூறுகிறது.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 41
இறப்புகளின் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்? பயங்கரவாத அல்லது நாசகார நடவடிக்கைகளின் காரணமாகக் காணாமற் போனவர்களென அறிவிக்கப்படும் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது கொல்லப்பட்டவர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு செய்தல் சட்டத்தில்° குறிப்பிட்டதை விட இலகுவான முறைகளைத் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் (இது மூன்று வருட கால செயற்பாட்டுக் காலத்தைக் கொண்டது) வழங்குகிறது. இச்சட்டத்தின் பகுதி 1, மோதல்களினால் காணாமற் போனதாக அறிவிக்கப்படுபவர்களின் இறப்பின் பதிவிற்கான ஏற்பாடுகளை வழங்கு கையில் , பகுதி I இயற்கை அனர்த்தங்களினால்க் காணாமற் போனவர்களின் இறப்பைப் பதிவு செய்வது குறித்துக் கையாள்கிறது. இவ்விதமான சந்தர்ப்பங்களில் கிட்டிய இரத்த உறவினர் அல்லது காணாமற் போனவரைப் பற்றிய தகவலறிந்தவர்கள் கிராமசேவையாளரிடம் இறப்புச் சான்றிதழுக்காக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விடயத்தை உடனடியாக ஆராய்ந்து, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதற்காக "இயலுமான விரைவில்” பிரதேச செயலாளருக்கு அறிவிப்பது கிராம சேவையாளரின் கடமையாகும்.
அனர்த்த முகாமைத்துவ சட்டம்? அனர்த்த முகாமைத்துவ சட்டம், ஒரு உயர் வலுக் கொண்ட அனர்த்த முகாமைத்துவ சபையை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகளை அளிக்கிறது. சட்டத்தின் நான்காம் பிரிவின்படி, தேசியக் கொள்கையொன்றின் உருவாக்கம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் மீதான நிகழ்ச்சித் திட்டம், தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டமொன்றைத் தயாரித்தல், திட்டத்தின் அமுல்படுத்தலைக் கணி காணித்தல் , அனர்த்தமொன்று ஏற்படுமிடத்து அவசரகால நடவடிக்கைகளுக்கு வசதியளித்தல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் (இதுவும் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது) செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் என்பவை உட்பட பல பொறுப்புக்களை இச்சபை கொண்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ சட்டமூலம் சுனாமி ஏற்படுவதற்கு முன்னதாகவே வரையப்பட்டிருப்பினும் அதன் சட்டவாக்கம் துரிதப்படுத்தப்பட்டதுடன் அனர்த்தத்தின் விளைவாக 'சுனாமி’ எனும் சொல் வரைவிலக்கண வாசகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இச்சட்டம் சுனாமிக்குப் பின்னதான செயற்பாடுகளில் சிறிதளவான தாக்கத்தையே கொண்டிருக்கையில் அதன் பிரதான கவனம்
29. சட்ட இல: 17, 2005, 30. சட்ட இல: 1, 1993 (திருத்தப்பட்டது) 31. இறப்புகளின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், பிரிவு 10(3) 32. சட்ட இல.13, 2005,

Page 30
42 மனித உரிமைகளின் நிலை 2006
எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களைத் தடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பதன் மீதேயிருந்தது. இவை முறையாக அமுல்படுத்தப்படுமாயின் அவை சுனாமி போன்ற அளவிலான மற்றும் சிறியளவிலானவை உட்பட எதிர்கால அனர்த்தங்களை எதிர்கொள்ள அவசியமான உட்கட்டுமாணங்களுக்கான ஸ்தாபித்தல்களை அளிக்கும்.
1.3.2 கொள்கை இடையீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணம், புனருத்தாரணம், மீள்நிர்மாணம் மற்றும் இறுதியான அபிவிருத்தி என்பவற்றுக்காக அரசாங்கம் பல கொள்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தது. சில முக்கியமான நிகழ்ச்சித் திட்டங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்பு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்து வதற்கானதோர் குறுகிய கால முறையாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் ஒரு தொகை நிதியையும் வாரமொன்றுக்கு ரூபா 375/-இற்கு பெறுமதியான உலர் உணவுப் பொருட்களையும் பெறுவதற்கு உரித்துடையவர்களாவர். மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் சமையலறை உபகரணங்களை மாற்றீடு செய்வதற்காக ரூபா 2,500/- வழங்கப்பட்டது.
ஆதாரம் சுனாமியினால் தங்களது நிரந்தர வருமானத்தையிழந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் ஓர் வாழ்வாதாரப் படியாக ரூபா 5,000/- கொடுப்பனவு செய்யப்பட்டது. இவ்விதம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறு மாத தவணைகளில் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட போதிலும், முதல் ஆறு மாதங்களிற்குள் இரண்டு தவணைக் கொடுப்பனவுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இதன் பின்னர் மூன்றாம் தவணைக்கான பயனாளிகளின் தொகை 250,000இலிருந்து 165,000ஆகக் குறைவடைந்ததுடன், நான்காவது தவணைக்கு மேலும் குறைவடைந்தது. ஏனெனில், எந்தவித ஒழுங்கான வருமானமுமின்றி வாழ்வோர் மட்டுமே தொடர்ந்தும் இந்த நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து பயனடைவதற்குத் தகுதியாக எஞ்சியிருந்தனர்.
விட்டு வசதி மற்றும் இருப்பிடம் இலங்கை அரசாங்கத்தின் வீட்டு வசதி நிகழ்ச்சித் திட்டம் முக்கியமாக உள்ளக இடம்பெயர்தலுக்கு ஆளானவர்களுக்கு இருப்பிட வசதிகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தியது. ஆரம்பத்தில் அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களைத் தற்காலிக இருப்பிடங்களில் இருந்து (கொட்டகைகள்) நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரையிலான இடைக் காலத்தில் இடைத்தங்கல் முகாம்களுக்கு மாற்றுவதில் கவனம் செலுத்தியது.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 43
நவம்பர் 2005 அளவில், இடைத்தங்கல் முகாம்கள். பூர்த்தியாக்கப்பட்டதுடன் மேலும் 1948 இருப்பிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வந்தன. மொத்தத் தேவை சுமார் 60,000ஆக கணிப்பிடப்பட்டது.*
நிரந்தர வீட்டு வசதித் திட்டம், அவற்றின் புவியியல் அமைவிட அடிப்படையில் இரு வகைகளைக் கொண்டிருந்தது. கடல் எல்லையிலிருந்து 100 மீற்றர் பாதுகாப்பு வலய எல்லை சுனாமி பாதித்த கிளிநொச்சி, மன்னார், புத்தளம், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்; மற்றும் 200 மீற்றர் பாதுகாப்பு வலய எல்லை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் என்பவற்றில் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டது. நன்கொடைகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் உட்பட்ட வீடுகளுக்கும், வீட்டு உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயும் அமைந்தருந்தன.
பாதுகாப்பு வலய எல்லைக்குள்ளானவற்றுக்கான கொள்கை" (நன்கொடை மூலம் முன்னெடுக்கப்படும் வீடமைப்புகள்) இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு எல்லைக்குள் சுனாமியால் சேதமாக்கப்பட்ட அல்லது அழிவடைந்த ஒவ்வொரு வீட்டுக்குமாக, பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே சுமார் 500 சதுர அடி கொண்ட புதிய வீடொன்று நிர்மாணிக்கப்படும். சட்டரீதியான உரித்து மற்றும் காணிக்கான சொத்துரிமை போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் வீடொன்றைப் பெறுவதற்கான தகுதி தனியே பாதுகாப்பு வலயத்தினுள் சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடொன்றில் வசித்ததற்கான ஒரு அத்தாட்சி மட்டுமாகவேயிருந்தது. சுனாமியால் பாதிக்கப்படாத வீடுகளில் குடியிருந்தவர்களுக்குப் புதிய வீடுகள் வழங்கப்படமாட்டாது, ஆனால் , அவர்கள் தொடர்ந்தும் தங்கள் வீடுகளில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர். வாடகைக்கு குடியிருந்தவர்கள் புதிய வீடுகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களல்லர், ஆயினும் சுனாமி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற் கமைய வாடகைக் கிருப்போர் அல்லது குத்தகைக்கிருப்போர் சுனாமியால் உடைமையகற்றப்பட்ட அவர்களது வாடகைக்கிருக்கும் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வர்.
33. இலங்கை அரசாங்கம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள், இலங்கை சுனாமிக்குப் பின்னதான மீட்சி மற்றும் L56i SriLDIT600TLD - usiastb; 9 (Sri Lanka: Post Tsunami Recovery and Reconstruction)
34. டப்ரன் (TAFREN) வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான கொள்கை உதவி மற்றும் அமுல்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள். www.tafren.lk எனும் இணையத்தள முகவரி முலம் அணுகலாம்.
35. சுனாமி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 2005, பிரிவு 31, மேற்சொல்லப்பட்ட கலந்துரையாடலைப்
பார்க்கவும்.

Page 31
44 மனித உரிமைகளின் நிலை 2006
பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ளவைக்கான கொள்கை* (உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் வீடமைப்புகள்) பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள வீடுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை, சுனாமியால் சேதமாக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள், சேதத்தின் அளவுக்கேற்ப நட்டஈட்டிற்கு உரித்துடையவர்கள் என்பதாகும். முற்றாகச் சேதமான வீட்டுரிமையாளர்கள் ரூபா 250,000ஐப் பெறுவர். பகுதியளவில் சேதமடைந்த வீட்டுரிமையாளர்கள் ரூபா 100,000ஐப் பெறுவர். ரூபா 250,000ஐப் பெறுபவர்கள் குறைந்த வட்டி வீதத்துடனான ரூபா 500,000 கடன் தொகையொன்றுக்கும் மேலும் தகுதியுடையவராவர். எவ்வாறாயினும், நட்டஈடுகள் உண்மையான வீட்டுரிமையாளர்களாலும் சட்டபூர்வமாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கும் மட்டுமே பெறமுடியும். எனவே, அனுமதியளிக்கப்படாத குடியிருப்புகளில் வசிப்பவர்கள் நட்டஈட்டைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாகமாட்டார்கள். பாதுகாப்பு வலயத்திற்குள்ளே வாடகைக்கு இருப்போர் தொடர்பான நிலைமைகளே பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள வாடகைக்கு இருப்போருக்கும் பிரயோகமாகிறது.
வாழ்வாதாரத்தை மீள்நிலைநாட்டுதல் சுனாமியால் பாதிப்படைந்தவர்களது அழிவடைந்த வாழ்வாதாரங்களை மீள்நிலைநாட்டுவதன் மீது அரசாங்கம் கவனம் செலுத்தியது. மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறை என்பனவே மிகவும் பாதிப்படைந்தன. சேதமாக்கப்பட்ட மற்றும் அழிவடைந்த அனைத்து மீன்பிடிப் படகுகளையும் திருத்துவதற்கும், மாற்றீடு செய்வதற்கும் சர்வதேச உதவிகளுடன் தொழில் கட்டுமானங்களை மீள்நிலைநாட்டுவதையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. உல்லாச விடுதிகளின் மீள்திருத்தங்களுக்காக இறக்குமதி வரிச்சலுகைகள் மற்றும் ‘சுசபான' கடன்கள் உட்பட பல ஊக்குவிப்புக்களையும் அரசாங்கம் உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முயற்சிகளுக்கு அறிமுகப்படுத்தியது.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் தொடர்பாக, கடன் வழங்கும் நிறுவனங்கள் நடப்பிலுள்ள கடன் தொகைகளுக்கு, மீள்செலுத்தும் முறைகளை மீள் அட்டவணைப்படுத்துதல் மீள்செலுத்தும் காலக்கெடு, கடன் தொகைகளை முழுமையாக மீள்செலுத்துதலை பின்தள்ளிப் போடுதல், திரண்ட வட்டியை இரத்துச் செய்தல் போன்ற நிவாரணங்களை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டன. சிறியளவிலான தொழில் முயற்சியாளர்கள் மற்றும்
36. டப்ரன் (TAFREN) வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான கொள்கை உதவி மற்றும் அமுல்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள். www.tafren.lk எனும் இணையதள முகவரி மூலம் அணுகலாம்.
37. சுசபான (Susabana) கடன் திட்டம், இலங்கை மத்திய வங்கியின் ஒரு முன்னெடுப்பாகும். இதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலகு கொடுப்பனவு கடன்கள் வழங்கப்பட்டன.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 45
சுனாமியால் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கை நிலங்களைக் கொண்டவர்கள் சுசயான கடன் திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி நம்பிக்கை நிதி கடன் திட்டங்கள் மூலம் உதவி செய்யப்பட்டனர். விவசாயத்துறைக்கான சர்வதேச உதவி விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
1.3.3 நிறுவனரீதியான ஏற்பாடுகள் நிகழ்ந்த பெரும் அனர்த்தத்துக்குப் பதிலிறுக்கும் வகையில் அரசாங்கமும் பல நிறுவனங்களை உருவாக்கியது. துரதிர்ஷ்டவசமாக, ஒரு திட்டமிடப்படாத வகையில் நிறுவனங்களும், அதிகார சபைகளும் உருவாக்கப்பட்டு பின்னர் கலைக்கப்பட்டமையானது எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அரசாங்கம் முன்னெடுத்த நிவாரண மற்றும் புனருத்தாரண நிகழ்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சி, அனுசரித்தல் மற்றும் பொறுப்புக் கூறுதல் என்பன போதியளவிலில்லாதிருந்தன.
தேசிய நடவடிக்கைகளுக்கான மையம் (Centre for National Operations-CNO) தேசிய நடவடிக்கைகளுக்கான மையம் 29 டிசம்பர் 2004இல் ஸ்தாபிக்கப்பட்டு பெப்ரெவரி 2005 வரை செயற்பாட்டிலிருந்தது. அரசாங்கம், தொண்டர் அமைப்புகள், அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் மற்றும் ஏனைய ஸ்தாபனங்களால் ஒரு தன்னார்வ அடிப்படையில் ஆதரவளிக்கப்பட்டு ஒருங்கிணைத்தல் மற்றும் அவசர நிவாரணங்களுக்கான ஆரம்ப நிறைவேற்று அமைப்பாகச் செயற்பட்டது.
L. g65 - TAFREN (Task Force for Rebuilding the Nation) தேசிய நடவடிக்கைகளுக்கான மையம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்பு மற்றும் மீள் நிர்மாண நிகழ்ச்சித் திட்டங்களுக்குப் பொறுப்பானதாகவும் ஒருங்கிணைத்தல், வசதியளித்தல் மற்றும் கொள்கை அமுல்படுத்தல் என்பவற்றுக்கானதொரு ஆணையுடன் ஓர் நிறைவேற்று அமைப்பாகத் தேசத்தை மீள்கட்டமைப்பதற்கான செயலனியாக (TAFREN) ஸ்தாபிக்கப்பட்டது. இது 2005 டிசம்பரில் ராடா (RADA) எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்படும் வரை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சுனாமிக்குப் பின்னதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் அரசாங்கம், அரச சார்பற்ற மற்றும் வணிகத்துறையினர் டட்பரனுடன் ஒன்றிணைந்து பணியாற்றினர். வீட்டு வசதி மற்றும் இருப்பிடம்; வாழ்வாதாரம்; சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு; மற்றும் தேசிய உட்கட்டுமாணம் என்பன கவனம் செலுத்தப்பட்ட நான்கு முக்கிய விடயங்களாகும்.
L.'(31 Isi - TAFOR (Task Force for Relief)
நிவாரணப் பணிகளுக்கான செயலணி பெப்ரெவரி 2005இல், காப்பாற்றுதல் மற்றும் நிவாரணத்துக்கான செயலணி (TAFRER) மற்றும் சட்டம், ஒழுங்கு

Page 32
46 மனித உரிமைகளின் நிலை 2006
மற்றும் ஏற்பாடுகளுக்கான செயலணி (TAFLOL) என்பவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. டட்போரின் ஆணை, உணவு, நிதிக் கொடுப்பனவு, இடைத் தங்குமிடங்கள் என்பவற்றுக்கான ஏற்பாடுகள் மற்றும் நிவாரணங்கள் குறித்த ஏனைய செயற்பாடுகள் என்பவை உள்ளடங்கியதாக இருந்தது.
JILI – RADA (Relief and Development Agency) புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ட'.பரன் அமைப்பைக் கலைத்து நிவாரணம் மற்றும் அபிவிருத்தி முகவரமைப்பை டிசம்பர் 2005இல் ஸ்தாபித்தார். டட்பரனின் பணிகளையொத்த ஆணையையே ராடா கொண்டிருந்தது.
அனர்த்த நிவாரணக் கண்காணிப்புப் பிரிவு - DRMU (Disaster Relief Monitoring Unit) சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பரெனும் எதிர்பார்ப்புடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அனர்த்த நிவாரணக் கண்காணிப்புப் பிரிவை 9 ஜனவரி 2005இல் ஸ்தாபித்தது. அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவு அரசாங்க மற்றும் அரச சார்பற்ற செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான விசேட ஆணையைக் கொண்டிருந்தது. அது, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுடனான நேரடித் தொடர்பு கொண்ட களமட்டம், அரசாங்க சேவையாளர்கள் மற்றும் நன்கொடை நிவாரண முகவரமைப்புகளின் அமுல்படுத்துவோர் என்பவர்களுடன் தொடர்புடைய பிரதேச மற்றும் மாவட்ட மட்டம், மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுடனான மத்திய மட்டம் என மூன்று மட்டங்களில் செயற்பட்டது.
1.4 அரச சார்பற்ற இடையீடுகள் சுனாமி அனர்த்தத்தின் போது சிவில் சமூக அமைப்புகள் செயற்பட்ட விதங்கள் பாராட்டுக்குரியவையாகும். முறைசார்ந்ததும் மற்றும் முறைசாராததுமான ஆயிரக்கணக்கான சிவில் சமூகக் குழுக்களின் மிகுந்த தாராளத்துடனான உடனடியான செயற்பாடுகள் இல்லாதிருந்திருப்பின் விடயங்கள் மிக மோசமான நிலையை அடைந்திருக்கும். அரசாங்கம் மற்றும் பெரும் உதவி முகவரமைப்புகள் நிலைமைக்குப் பதில் நடவடிக்கை எடுப்பதற்குக் கால அவகாசம் எடுத்துக் கொண்ட வேளையில், முன்னொருபோதும் இல்லாதிருந்த இந்த தன்னிச்சையான சேவையாற்றுதலும், கொடுக்கின்ற தன்மைகளுமே சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் உணவு, உடை மற்றும் பேணுதல்களைக் கொண்டு சென்றன.
அரச சார்பற்ற ஸ்தாபனங்கள், சர்வதேச அரச சார்பற்ற ஸ்தாபனங்கள், சர்வதேச உதவி முகவரமைப்புகள், தனியார் துறை, மத ஸ்தாபனங்கள், கீழ்

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 47
மட்டத்திலமைந்த ஸ்தாபனங்கள், முறைசாரா அமைப்புடைய குழுக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் என அனைவரும் சுனாமியின் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காகப் பங்களித்தனர். சில குழுக்கள் ஏனையவற்றை விட மிகவும் வெற்றிகரமானவையாகவும், வினைத்திறனானவையுமாக இருந்தன. சில குழுக்கள் உணர்மையில் மக்களின் தேவைகளுக்குக் கூருணர்வு கொண்டவையாக ஏனையவற்றை விட கூடுதல் ஒளிவு மறைவின்றியதாகவும், பொறுப்புக்கூறத்தக்கவையாகவுமிருந்தன. இந்த ஸ்தாபனங்களுக்கிடையில் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு இல்லாமையே அவற்றுக்கெதிராக அதிகம் தொடர்ச்சியாகக் காணப்பட்டதொரு கண்டனமாகும்.
அரச சார்பற்ற அமைப்புக்களால் ஆற்றிய பணிகள் சுனாமிக்குப் பின்னதான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக அமைந்திருந்தன. அவர்களது உதவியின்றி அரசாங்கம் சுனாமிக்கு வெற்றிகரமான பதிலிறுப்பைக் காட்டியிருக்க முடியாது. ஏற்படுத்திய முன்னேற்றங்களுக்கு இக் குழுக்கள் பெரிதும் பங்களித்தது போன்று சுனாமிக்குப் பின்னதான செயற்பாடுகள் பலவற்றில் ஏற்பட்ட தவறுதல்கள் மற்றும் குறைகளுக்குமான பொறுப்புக்களையும் அவை பகிர்தல் வேண்டும்.
2. கரிசனத்துக்குரிய சில விடயங்கள்
2.1 இடப்பெயர்வு மற்றும் வீட்டு வசதி
அனைத்துச் செயற்பாட்டாளர்களும் பெரும்பாலும் முகங்கொடுத்த மிகப் பெரிய சவால் வீட்டு வசதியாகும். வீட்டு வசதி மற்றும் இடப்பெயர்வு தொடர்பான மனித உரிமைப் பிரச்சினைகள் சுனாமியால் மட்டும் ஏற்படுத்தப்பட்டவையல்ல என்பது வருத்தத்திற்குரியதாகும். அரசாங்கக் கொள்கை அதேபோன்று அரச மற்றும் அரசல்லாத செயற்பாட்டாளர்களின் தவறான அமுல்படுத்தல்கள் மனித உரிமைகள் தொடர்பான கரிசனங்களை எழுப்பின.
2.1.1 பாதுகாப்பு வலய மற்றும் வீடமைப்புக் கொள்கை
கரையோரங்களில் அநேக அனுமதியற்ற, தரம் குன்றிய வீடுகள் மற்றும் கட்டிடங்களே அதிகரித்த மட்டத்திலான உயிரிழப்பு மற்றும் சேதங்களுக்குமான பிரதான காரணங்களிலொன்றாக இருந்தது. பாதுகாப்பு வலயக் கொள்கை இதற்கானதொரு பதிலிறுப்பாகவே அமுல்படுத்தப்பட்டது. குறித்த சில கைத்தொழில்கள், உட்கட்டுமான வசதிகள் மற்றும் மதரீதியானதும் மற்றும் வரலாற்றுக் கட்டிடங்கள், சின்னங்கள்? போன்றவற்றுக்கான சில மட்டுப்படுத்தப்பட்ட விதிவிலக்குகள் தவிர ஒரு விதியாகப் புதிய
38. டப்ரன் (TAFREN) வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான கொள்கை உதவி மற்றும் அமுல்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள். www.tafren.lk எனும் இணையதள முகவரி மூலம் அணுகலாம்.

Page 33
48 மனித உரிமைகளின் நிலை 2006
நிர்மாணங்களெதுவும் பாதுகாப்பு எல்லைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.” கரையோர பாதுகாப்புச் சட்டத்தின்" கீழ் 300 மீற்றர் கரையோரப் பாதுகாப்பு வலய எல்லையென்பது, அது முறையாக அமுல்படுத்தப் படாது விட்டாலும் கூட நடைமுறையிலுள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேணி டியதொன்றாகும்." ஆகவே பாதுகாப்பு வலய எல்லைக் கொள் கையென்பது புதிதாக ஆகாயத்திலிருந்து கொண்டு வந்து விதிக்கப்பட்டதல்ல, மாறாக அது சட்டத்தின் தாமதமானதும் மட்டுப்படுத்தப்பட்ட அமுல்படுத்தலாகும். இருந்தபோதிலும், அநேகமான குழுக்கள், மக்களைப் பாதுகாப்பதற்கல்ல, ‘சுற்றுலா வலயங்களை உருவாக்குவதிலான ஆர்வமே இக்கொள்கையின் அமுல்படுத்தலுக்குத் தூண்டியது எனக் குற்றஞ்சாட்டின."
இக்கொள்கையின் அமுல்படுத்தலின் ஓர் விளைவாக, பாதுகாப்பு எல்லைக்குள் வசிப்பவர்கள் மற்றும் அதற்கு வெளியே வசிப்பவர்கள் என இலகுவாக வேறுபடுத்தக்கூடிய இரு குழுக்கள் உருவாக்கப்பட்டதுடன் தனியான ஒரு தொகுதி விதிகளும் அவையொவ்வொன்றுக்குமாக உருவாக்கப்பட்டன." இந்த நிலைமையிலிருந்து கரிசனத்துக்குரிய பல பிரச்சினைகள் தோன்றின.
அனுமதியின்றிய குடியிருப்பாளர்கள்: பாதுகாப்பு எல்லைக்குள் உள்ள அனுமதியற்ற குடியிருப்பாளர்கள் புதிய வீடொன்றுக்கு உரித்துடையவர்களாவர், ஆனால் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள குடியிருப்பாளர்கள் எந்தவித நட்டஈட்டிற்கும் உரித் து ையவர்கள் அல்லர். இந்த வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கான வெளிப்படையான காரணம் என்னவெனில், சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து அனுமதியற்ற குடியிருப்பாளர்களும் அவர்களது வீடுகளுக்கு உரிமையுள்ள சொந்தக்காரர்களென சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென கோருவதற்கானக் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடுமென்பதேயாகும்.
இக்குடியிருப்புகளுக்கு குழாய் நீர், மின்சாரம் மற்றும் ஏனைய வசதிகளை அளித்து அரசு அவர்களைக் குறிப்பால் சட்டபூர்வமானவர்களாக்கிய பின்னர் அரசின் இந்த நிலைப்பாடு திருப்தியானதோ அல்லது நியாயமானதோவல்ல.
39. சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கிளிநொச்சி, மன்னார், புத்தளம், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை என்பவற்றிற்கு கடல் மட்ட எல்லையிலிருந்து 100 மீற்றர்கள் பாதுகாப்பெல்லையும்; 200 மீற்றர் பாதுகாப்பெல்லையை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு அரசினால் விதிக்கப்பட்டது.
40. கரையோர பாதுகாப்புச் சட்ட இல.57, 1981.
41. பிரிவு 14(1)இன் படி, பாதுகாப்பு எல்லைக்குள்ளான எந்த அபிவிருத்தி நடவடிக்கையும் கரையோரப் பாதுகாப்புப் பணிப்பாளரின் அதிகாரமளிக்கப்பட்ட அனுமதியை வேண்டுகிறது.
42. “சுனாமிக்குப் பின்னர் மீட்புக்கான மக்கள் திட்ட ஆணைக்குழு மீதான அறிக்கையைப்” uffi di 56.Lò. (Report on the People's Planning Commission for Recovery after the TSuanami) LST - மீளாய்வுத் தொகுதி 16, வெளியீடு 218 டிசம்பர் 2005, பக்கம் 3.
43. அரசாங்கக் கொள்கை இடையீடுகளை மேற்கூறிய பிரிவில் பார்க்கவும்.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 49
இந்த அனுமதியளிக்கப்படாத குடியிருப்பாளர்களுக்கு (இவர்கள் வறியவர்களிலும் வறியவர்கள்) எந்த நட்டஈட்டையும் வழங்காததின் மூலம் அவர்களது வீடமைப்புக்கான உரிமைகள், போதியளவிலான வாழ்க்கைத் தரத்திற்கான உரிமை, பல்வேறு குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் என்பவை மறுக்கப்படுவதற்கும் அத்துடன் கல்வி மற்றும் வாழ்வாதாரமொன்றுக்கான உரிமையும் மறுக்கப்படலாம். மேலும், இந்த சீரற்றதன்மையின் விளைவாக இருக்கின்ற நிலையை மீள்வரையறை செய்வதற்கான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டமைக்காக அரசு பதில் கூற வேண்டியிருக்கும்.
வாடகைக்கிருப்போர்: பாதுகாப்பு வலயக் கொள்கை வாடகைக்கிருப்போருக்கும் பாரபட்சமானதாகவேயுள்ளது. வாடகைக்கிருப்போருக்கும், அவர்களுக்கு சொந்தமாக வீட்டை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை சுனாமி ஏற்படுத்தியிருக்கலாம். மாறாக, அவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை, அத்துடன் சுனாமிச் சட்டம் அவர்களின் வீட்டுரிமையாளர்களது மீள் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு மாறிச் செல்வதற்கு அவர்களை உரித்துடையவர்கள் ஆக்கினாலும் யதார்த்தத்தில் அவர்களுக்கு அந்த உரிமையின் பாதுகாப்பை வழங்கவில்லை.
சமூக வாழ்வு: பாதுகாப்பு வலயத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்த கற்பனைக்கோடு பல சமூகங்களை இரண்டாகப் பிளவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பு வலயத்திற்குள் வசிப்போர் அவர்களது முன்னைய இடங்களிலிருந்து பதினைந்து கிலோ மீற்றர் தூரம் வரை தள்ளியுள்ள சில இடங்களுக்கு இடம்மாற்றப்பட வேண்டியிருந்தது. மேலும், பாதுகாப்பு வலயத்திற்குள் வாழ்ந்து, வீடுகள் சேதப்படாதவர்கள் தொடர்ந்தும் அதேயிடங்களில் குடியிருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகையில் அவர்களது அயலவர்கள் வேறெங்காவது இடம் மாற்றப்படுகின்றனர். இதனால் இக்கொள்கையின் அமுல்படுத்துதல் சமூகங்கள் வேறாகுவதை விளைவிக்கும். விசேடமாக சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரையில் இவ்விதமான பிரிவு பாரிய அழுத்தத்தை உருவாக்குவதுடன் அவர்களது கலாச்சார அடையாளம் மற்றும் மொழிப் பயன்பாட்டையும் விட்டுக்கொடுக்கப் பண்ணலாம். கீழே கூறப்பட்டுள்ள இரு உதாரணங்களில் இக்கரிசனம் தெளிவாகிறது.
O அட்டைப்பாலம் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவுரிலுள்ள ஒரு கிராமம். இது சுனாமியினால் மிகவும் பாதிக் கப்பட்டது. இது அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழும் பகுதி, ஆயினும் இப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் காணிகளில் 250 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்டு வந்து குடியமர்த்துவதற்கு (இவர்கள் அயல் கிராமத்தில் வசிப்பவர்கள்) ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்பகுதியிலுள்ள தமிழ் மக்கள் இந்த ஏற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து முஸ்லிம்கள் அவர்களுக்கு அண்மித்த பகுதிகளில் மாற்றிடம் வழங்கப்படவுள்ளனர், ஆயினும் அவர்களுக்கான காணி இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

Page 34
50 மனித உரிமைகளின் நிலை 2006
e இதே இடத்தில், சீனித்தம்பி என்பவரது வீடு பாதுகாப்பு வலயத்திற்கு" வெளியே அமைந்துள்ளது. இதனால் அவர் வேறோர் இடத்தில் புதிய வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்தல்லாதவர். எவ்வாறாயினும், பாதுகாப்பு எல்லைக்குள் வசித்து வந்த அவரது சமூகத்தைச் சேர்ந்த ஏனைய அனைத்துக் குடும்பங்களும் மாற்றிடத்தில் குடியமர்த்தப்படுவர். இதன் விளைவாக சீனித்தம்பி தனிமைப்படுத்தப்படுவார். அவர், தானும், சமூகத்தின் ஏனையவர்களுடன் சேர்த்து மீள்குடியமர்த்தப்பட வேண்டுமென பிரதேச செயலாளரிடம் முறையிட்ட போதும், அது நிராகரிக்கப்பட்டது.*
பாதுகாப்பு வலயக் கொள்கை எவ்விதம் சமூக வாழ்வுகளைச் சிதைக்கிறது என்பதற்கான எண்ணற்ற உதாரணங்களில், இந்த இரு சம்பவங்களும் ஓர் எடுத்துக் காட்டாக உள்ளன. இதற்கு மேல், விசேடமாக கிழக்கில், இவ்விதமான நிகழ்வுகள் உண்மையில் இன முரண்பாடுகளுக்கும் சாதகமானதொரு அச்சுறுத்தலாகவுள்ளது. மூன்று பிரதான இனக் குழுக்களாலும் (தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்) அநேகம் ஓர் சமனான விகிதத்தில் பகிரப்படும் கிழக்கின் மக்கள் தொகையின் தன்மை மற்றும் இனமோதல் சூழ்நிலைகளிலான ஓர் வரலாற்றுரீதியான வன்முறைகள் இப் பிராந்தியத்தைக் குறிப்பாக இனவன்முறைக்கு எளிதில் பாதிப்படையும் தன்மையில் இடுகின்றன.
நடமாட்டத்திற்கான சுதந்திரம்: சுனாமியினால் ஏற்பட்ட அழிவுகளின் மறுக்கப்பட முடியாத யதார்த்தத்தை ஓர் செயற்கையான கோட்டை வரைவதன் மூலம் வரையறை செய்துவிட முடியாது. பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள பகுதிகள் சில, பாதுகாப்பு வலயத்திற்கு உள்ளிருந்த பகுதிகள் சிலவற்றிலும் பார்க்கக் கூடுதல் அழிவுடையதாக இருந்தன. இதன் விளைவாக, பாதுகாப்பு வலயத்தினுள் வசித்த சிலர் அவ்விடத்தை விட்டு அகன்று செல்வதில் தயக்கம் காட்டிய போது, பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள ஏனையவர்கள் அங்கு இருப்பதற்குத் தயக்கம் தெரிவித்தனர். இதன் காரணமாக பாதுகாப்பு வலயக் கொள்கையின் திட்டவட்டமான அமுலாக்கம் நடைமுறைச் சாத்தியமற்றது மாத்திரமன்றி அது இவ்விரு பிரிவினரதும் சுதந்திரமான நடமாட்டங்களைக் கடுமையாகப் பாதித்தது. உதாரணமாக மட்டக்களப்பின் நாவலடிக் கிராமத்தில் களப்பு மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம், அந்தப் பகுதிக்கான விசேஷ பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்தாலும்கூட அவர்கள் மாற்றிடத்தில் குடியமர்வதற்கு விரும்பவில்லை. அதேபோன்று மட்டக்களப்பின் பணிச்சங்கி, பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே அமைந்திருந்தாலும், கிராமம் சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்டதினால், அங்குள்ளவர்கள் கிராமத்திற்கு மீள்திரும்புவதற்கு விரும்பவில்லை."
44. இது கரையிலிருந்து சரியாக 210 மீற்றர் தொலைவிலுள்ளது.
45. அனர்த்த நிவாரண கண்காணிப்பு பிரிவு அறிக்கை, மட்டக்களப்பு, அம்பாறை, ஒக்டோபர் 2005.
46. இவ்விரு சம்பவங்களின் ஓர் விபரங்களுக்கு அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவின்
கள அறிக்கையை பார்க்கவும், மட்டக்களப்பு, அம்பாறை, ஜூன் 2005.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 51
3.1.2 பாதுகாப்பு வலயக் கொள்கைக்கான மாற்றங்கள் பாதுகாப்பு வலயக் கொள்கை தொடர்பாக அனைத்து தரப்புகளிலுமிருந்தான கடுமையான கண்டனங்கள் மற்றும் அமுல்படுத்தலின் நடைமுறைச் சிக்கல்கள் என்பவற்றால், சுனாமி ஏற்பட்டு பத்து மாதங்களின் பின்னர் கொள்கை தளர்த்தப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளரது 14-10-2005 திகதியிட்ட பத்திரிகை அறிக்கை வெளியீட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களின் சில பகுதிகளில் பாதுகாப்பு வலயம் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிய எல்லை 25 மீற்றர்களிலிருந்து 100 மீற்றர்கள் வரையானது எனவும் அறிவிக்கப்பட்டது."
கொள்கை மீதான இந்த மாற்றம் வரவேற்கப்பட்டாலும் அது மிகுந்த செலவின் மேலேயே ஏற்பட்டது. அவை, வீடுகளின் சேதங்களுக்கான அனைத்துக் கணிப்பீடுகளும் இப்பொழுது தேவையற்றுப் போயுள்ளதால் அவற்றுக்கான செலவு; கொள்கை அனுமதித்திருக்குமாயின் தங்கள் வீடுகளின் மீள்நிர்மாணங்களை ஆரம்பித்திருக்கக் கூடிய எண்ணற்ற குடும்பங்களில் வாழ்பவர்களின் செலவு; மற்றும் காலம் தாழ்த்தப்பட்ட அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்களுக்கான செலவு என்பவற்றை இது உள்ளடக்குகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்கான முறையான அங்கீகாரம் இல்லாமலும் முறையான கலந்தாலோசனைகளுமின்றி உருவாக்கப்பட்ட அவசரமான கொள்கைத் தீர்மானங்களுக்கான உண்மையான விலையே இதுவாகும்.
2.1.3 பின்னுரித்து மற்றும் ஆதன உரிமைகள் பின்னுரித்து மற்றும் சுனாமியில் உயிர் தப்பியவர்களின் ஆதனவுரிமைகள் என்பன கவனம் செலுத்தப்படாத தனியான சவால்களை ஏற்படுத்தின. சுனாமியால் கொல்லப்பட்ட பலர் மரண சாதனமின்றி இறந்திருந்தனர். மேலும், இறந்த பலரது சொத்துக்களும் அழிவடைந்திருந்தன. அரச வீடமைப்பு கொள்கையின் கீழ்? சுனாமியால் வீடுகள் சேதமாக்கப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டவர்கள் நட்டஈட்டை" பெறுவதற்கு அல்லது ஒரு புதிய வீட்டைப்' பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர். அநாதரவான பிள்ளைகளின் பின்னுரித்து உரிமைகள் மேலும் சிக்கலானவையாக உள்ளன. பிள்ளைகள் சார்பாக பாதுகாவலர்கள் ஆதன உரிமைகளைக்
47. நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, பத்திரிகை அறிக்கை, Revision of
Setback Standards, 14 6ọö{3_JTLIĩ 2005.
48. மரண சாசனம் (உயில்) இல்லாது இறத்தல்.
49. பாதுகாப்பு வலயக் கொள்கை மீதான மேற்கூறப்பட்ட பகுதியில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
50, பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே வாழ்ந்திருப்பின்
51. பாதுகாப்பு வலயத்திற்குள்ளே வாழ்ந்திருப்பின்

Page 35
52 மனித உரிமைகளின் நிலை 2006
கோருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அநாதரவான ஒருவர், அரச வீடமைப்புக் கொள்கையின் கீழ் வீடொன்றுக்கு அல்லது நட்டஈட்டிற்கு உரித்துடையவராவர், பாதுகாவலர் அவ்வாதனத்தை நம்பிக்கையின் பேரில் பிள்ளைகளுக்காகக் கொண்டிருப்பர். சுனாமிச் சட்டத்திற்கு அமைய வளர்ப்புப் பெற்றோர், பிள்ளைகளைத் தத்தெடுப்பதற்கு முன்னர் ஒருவருட காலத்துக்கு மதிப்பிடப்படுவர்.* எவ்வாறாயினும், அரச வீடமைப்புக் கொள்கைக்கான பயனாளிகளின் பட்டியல்கள் சுனாமி ஏற்பட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குள் முடிவு செய்யப்படும். ஆகவே, தகுதியில்லாத பாதுகாவலர்கள் இவ்விதமான ஆதனவுரிமைகளை ஆர்வத்துடன் தேடி நடவடிக்கைகள் எடுக்காதவிடத்து பிள்ளைகளுக்குத் தங்களது உரிமையுள்ள ஆதனங்களை இழப்பதற்கான சாத்தியமுள்ளது. வளர்ப்புப் பெற்றோர்கள் அவர்களது பராமரிப்பிலுள்ள அநாதரவானவர்களின் ஆதனங்களை அபகரித்துக் கொள்வதற்கு முயற்சிக்கும் ஆபத்துக்களுக்கும் சமனான சந்தர்ப்பங்களுண்டு. வீடமைப்புக் கொள்கையின் காலக்கெடுக்களிலிருந்து அநாதரவான பிள்ளைகளுக்கு விலக்களிப்பது, வளர்ப்புப் பெற்றோர்கள் பிள்ளைகள் சார்பாக ஆதனவுரிமைகளைக் கோருதல் மற்றும் பின்னைய காலங்களில் அவர்களது தத்துப்பிள்ளைகளின் பின்னுரித்து மற்றும் ஆதனவுரிமைகளைத் தாங்கள் காப்பாற்றிக் கொள்வதற்கேதுவான நிலைமைகள் என்பவற்றுக்கு அனுமதி மறுப்பதே இவ்விரணி டு பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையும். மிக முக்கியமாக, உரித்துகள் சட்டபூர்வமான வாரிசுகளுக்கு சட்டபூர்வமாக மாற்றப்படும் வரை அத்துமீறல்களிலிருந்து இந்த ஆதனங்களைப் பாதுகாப்பதற்கு அரசினால் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.
ஆதனங்கள் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட மற்றொரு முக்கியமான கரிசனத்திற்குரிய விடயம், நிர்வாக முறைகளில் காணப்படும் கூருணர்வின்மை, பாரபட்சமான பணித்துறைக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் என்பனவாகும். தற்போதுள்ள நடைமுறை, புதிய ஆதனமொன்றுக்கான உரித்து குடும்பத்தின் தலைவர் பெயரிலேயே வழங்கப்படும், அவர் அநேகம் எப்பொழுதும் ஆணொருவராகவே இருப்பர். சில நிர்வாகப் பிரிவுகளில் இதுவொரு பரவலான அணுகுமுறையாகக் கொள்ளப்பட்டது, ஏனைய சில பிரிவுகளில், இவை காணாமற் போன ஆவணங்களுக்காக எடுக்கப்பட்ட அணுகுமுறைகளாகும். சுனாமியால் அழிவடைந்த வீடுகளில் கணிசமானவை பெண்களுக்குச் சொந்தமான சீதனச் சொத்துக்களாகும். நிர்வாக நடைமுறையின் விளைவாக குடும்பத் தலைவர் பெயரில் புதிய உரித்தை எழுதும் ஒரு செயற்பாட்டின் மூலம் சொத்துக்களிலிருந்து இப்பெண்களின் உரித்துரிமை பறிக்கப்பட்டு அவர்களது கணவர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. இழந்த ஆவணங்கள் தொடர்பில் கணவன், மனைவி ஆகிய இருவர் பெயர்களிலும் காணிக்கான இணைந்த ஆதனவுரித்தை வழங்குவது இப்பிரச்சினைக்கான ஒரு எளிமையான தீர்வாகும்.
52. சுனாமி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரிவு 14

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 53
2.1.4 பயனாளிகள் பட்டியல் மற்றும் சேத மதிப்பிடல் சேதங்களை மதிப்பிடல் மற்றும் பயனாளிகளின் தெரிவு செய்தல் என்பன வீடமைப்புக் கொள்கையின் அமுல்படுத்தலில் மிக முக்கியமான இரு செய்முறைகளாகும். இவ்விரு செயற்பாடுகளிலுமான குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் என்பன பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீது நிச்சயமொரு பாதகமான தாக்கத்தைக் கொண்டிருந்திருக்கும்.
விடுகளின் சேதத்தை மதிப்பிடல்: இந்த மதிப்பிடல் வீட்டுரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் உள்ளம்சமாகவுள்ளது. பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள அனைத்து வீடுகளும் தகுதி மற்றும் சேதங்களின் அளவு என்பவற்றைத் தீர்மானிப்பதற்கு மதிப்பிடப்பட்டன. 2005இன் பிற்பகுதிகள் கூட, அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவு, சில பகுதிகளில் சேத மதிப்பிடல் மேற்கொள்ளப்படவில்லையென முறைப்பாடுகளைத் தொடர்ச்சியாகப் பெற்று வந்தது. வேறு சிலவற்றில் மதிப்பிடல் மேற்கொள்ளப்பட்ட பின் சுனாமியால் ஏற்பட்ட விரிசல்கள் வீடுகளில் வெளித்தோன்றின. எவ்வாறாயினும் அவற்றுக்கு மீள்மதிப்பிடல் மேற்கொள்ளப்படவில்லை. மதிப்பிடல் செய்முறைகளில் இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் காணப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தன. சேத மதிப்பிடல் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் கவனிப்பதற்கென ஓர் மூன்றடுக்கு முறைப்பாட்டு பொறிமுறை ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், அப்பொறிமுறை திறம்பட செயற்படவில்லை. தவறான சேத மதிப்பிடலிற்கான ஒரு உதாரணம் கல்முனை தமிழ் பிரிவின் A2 கிராமசேவகர் பிரிவிலிருந்து முறையிடப்பட்டுள்ளது. A2 பிரிவிற்கு அருகருகே அமைந்துள்ள இரு கிராமசேவகர் பிரிவுகள் கரையிலிருந்து 1,300 மீற்றர்களுக்கு உட்பட்ட அனைத்து வீடுகளையும் சேதங்களுக்காக மதிப்பிட்ட வேளையில் A2 பிரிவு தனியே 800 மீற்றர்களுக்குட்பட்ட வீடுகளையே மதிப்பிட்டது. இதன் விளைவாக, சுனாமியால் பாதிக்கப்பட்டு 800 மற்றும் 1300 மீற்றர்கள் அடையாளங்களுக்கிடையில் அமைந்திருந்த 35 குடும்பங்கள் அவைக்குரிய மதிப்பிடல்களைப் பெற்றுக் கொள்ளவில்லை. பிரதேச செயலாளருக்கு முறையிட்டதன் பின்னர், ஒரு புதிய சேத மதிப்பிடலிற்கு உத்தரவிடப்பட்டது, இதன் பின்னர் ஒரு முறைப்பாட்டாளருக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. ஆனால் ஏனையவர்களது வீடுகள் சேதமடைந்திருந்த போதிலும் அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவில்லை."
S3. அனர்த்த நிவாரண கண்காணிப்பு பிரிவின் முறைப்பாடுகளை விசாரிக்கும் பிரிவிற்குக்
கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலானவை.
54. அனர்த்த நிவாரண கண்காணிப்பு பிரிவின் கள அறிக்கை, மட்டக்களப்பு, அம்பாறை, ஒக்டோபர் 2005. இந்த முறைப்பாட்டை விசாரணை செய்த அனர்த்த நிவாரண கண்காணிப்பு பிரிவு, (இக்குழுவில் நானுமொரு உறுப்பினர்) ஏனைய வீடுகளும் சுனாமியால் சேதமடைந்ததை விசாரித்தறிந்து கொண்டதுடன் இவ்விடயம் அம்பாறை மாவட்ட செயலாளர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Page 36
54 மனித உரிமைகளின் நிலை 2006
பயனாளிகளைத் தெரிவு செய்தல்: பயனாளிகளைத் தெரிவு செய்யும் செய்முறைகள் சர்ச்சைகள் மற்றும் முரண்பாடுகள் நிறைந்ததாகக் காணப்பட்டது. தெரிவு செய்யும் செய்முறைகளில் ஊழல்கள் இருந்தனவென்பது பாதிக்கப்பட்ட மக்களின் ஓர் பொதுவான குறையாக இருந்தது என்பதுடன் வீடுகளைப் பெறுவதற்கு உரித்து இல்லாதவர்கள் உண்மையான பயனாளிகளிற்குப் பதிலாக வீடுகளைப் பெற்றனர்? மீள்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல நன்கொடை முகவரமைப்புகள் கூட, அரசாங்க அதிகாரிகளின் கைகளில் பயனாளிகளின் பெயர் பட்டியல்களில் எதேச்சாதிகாரமான முறையில் மாற்றங்கள் ஏற்படுவதையிட்டு தங்கள் கரிசனங்களை வெளிப்படுத்தின. உதாரணமாக, தங்காலையில் பல்பொத்த என்னுமிடத்தில் ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு உதவி முகவரமைப்பான “இன்டநஷனல் சேர்விஸ் பாட்னர்ஸ்’ (ISP) அரசாங்கத்தாலும், நன்கொடை முகவரமைப்பாலும் இனங்காணப்பட்டு இணங்கிக் கொண்டபடி மொரக்கெட்டியார கிராமத்தவர்களுக்காக 90 வீடுகளை நிர்மாணித்துக் கொண்டிருந்தது.* பின்னர், கிராமத்தவர்களின் குடும்ப அமைப்பிற் கமைய நண் கொடையாளர்கள் வீடுகளைத் திட்டமிட்டு நிர்மாணித்தனர். ஐ.எஸ்.பி (ISP) திட்டமிடப்பட்ட பயனாளிகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியதுடன் அவர்களுக்காக ஒரு கூடாரமொன்றையும் அமைப்பதற்கு தொடங்கியது.' எவ்வாறாயினும் ஒரு அரசாங்க அதிகாரி சமூகத்தைப் பிளவுபடுத்தும் சாத்தியத்துடன் எந்தவித விளக்கமுமின்றி எதேச்சதிகாரமான முறையில் பயனாளிகளின் பெயர் பட்டியலை மாற்றினார். இதன் இயல்பான எதிர்விளைவாக நன்கொடையாளர் மற்றும் மொரக்கெட்டியார கிராமத்தவர்களின் ஆத்திரம், ஏமாற்றம் மற்றும் மனக்கசப்பு என்பன வெளிப்பட்டன. இந்தப் பிரச்சினை அனர்த்த நிவாரணக் கண்காணிப்புப் பிரிவின் தகுந்த சமயத்திலான தலையீடு மூலம் தீர்க்கப்பட்டாலும் இதுவொரு தனியான சம்பவமல்ல. பயனாளிகளின் பெயர் பட்டியல் களில் செல் வாக்கு கொண்டவர்களால் மாறாட்டம் செய்யப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன, இதன் மூலம் நன்கொடையாளர்களால் முன்னெடுக்கப்படும் முழு வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களினதும் நம்பகத்தன்மை மற்றும் வினைத்திறன் என்பவற்றை அவை ஆபத்திலிடுகிறது.
55. அனர்த்த நிவாரண கண்காணிப்பு குழுவின் முறைப்பாட்டு விசாரணைக்குழு இது
தொடர்பாகப் பல முறைப்பாடுகளைப் பெற்றது.
56. ஐ.எஸ்.பி இனால் அமைக்கப்படும் 90 வீடுகள் மொரக்கெட்டியார கிராமத்து மக்களுக்கானவையென அரசாங்கம் மற்றும் ஐ.எஸ்.பிக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
57. அனர்த்த நிவாரண கண்காணிப்பு குழுவின் ஆய்வு அறிக்கை, மாத்தறை மற்றும்
அம்பாந்தோட்டை மாவட்டங்கள், ஜனவரி 2006.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 55
2.1.5 வீடமைப்பு நிர்மாணங்களின் முன்னேற்றம் மற்றும் கட்டிட
அமைவிடங்களின் பொருத்தமான தன்மை
அனைத்து நிரந்தர இருப்பிடங்களும் 2005ஆம் ஆண்டின் முடிவில் பூர்த்தி செய்யப்பட்டு விடுமென டஃபரன் மக்களுக்கு வாக்குறுதியளித்தது. ஆயினும், அவர்கள் இந்த இலக்கை அடையும் முயற்சியில் அதை அண்மிக்ககூடவில்லை. நன்கொடையாளர்களால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட வேண்டிய 32,000 வீடுகளில் தனியே 4.299 மட்டுமே கட்டி முடிக்கப்பட்டதுடன், மேலும் 6,408 வீடுகள் நிர்மாணிப்பின் கீழ் இருந்தன. எஞ்சிய 21,293 வீடுகளுக்கான வேலைகள், சுனாமிக்குப் பின் ஒரு வருடம் கழிந்துவிட்ட போதிலும் ஆரம்பிக்கப்படவில்லை.* மொத்தத்தில் வீடுகளுக்குப் பெருமளவிலான பற்றாக்குறை நிலவுகையில் மகிந்த ராஜபக்சவினால்? முன்னெடுக்கப்பட்ட பாரிய வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் காரணத்தால் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்° புதிய வீடுகள் மேலதிகமாகக் காணப்பட்டமை அதிர்ச்சிகரமான உண்மையாக இருந்தது. இவ்விடயத்தின் மற்றொரு அந்தத்தில் கொழும்பில் தேவையான 5,112 வீடுகளில் 280உம், அம்பாறையில் தேவையான 7,236 வீடுகளில் 1,018 மட்டுமே நிர்மாணிப்பின் கீழ் இருந்தன.91
வீட்டுரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் எண்ணிக்கைகளும் இதேபோன்றதொரு சோகமான கதையையே கூறுகிறது. சேதமடைந்த தங்களது வீடுகளைக் கட்டுவதற்கு 55,525 குடும்பங்களுக்கு முதலாவது தவணைக் கட்டணங்கள் வழங்கப்பட்டன, இரண்டாவது தவணைக் கொடுப்பனவை 13,018 குடும்பங்கள் மட்டும் பெற்றுக் கொண்ட வேளையில், மூன்றாவது தவணைக் கட்டணம் 1,449 பேர்களுக்கும், நான்காவது கொடுப்பனவு வெறும் 491 பேர்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டது.* கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டவர்களில் எத்தனை பேர் நான்கு தவணைக் கட்டணங்களையும் பெறத் தகுதியானவர்கள் என்பது தெளிவாக இல்லை (சேதத்தின் அளவைப் பொறுத்து ஏற்பட்ட எதிர்பினால் இது இரண்டாகக் குறைக்கப்பட்டது). ஆயினும், 42,407 பேருக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தவணைக் கட்டணத்தைக் கூடப் பெறவில்லையென்பது தோல்வியுறும் ஒரு முயற்சியின் கதையைக் கூறுகிறது.
நன்மைகள் புலப்படாத நிலையிலும், இவ்விதமான புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டும், ட'பரன் வழங்கிய வாக்குறுதி முழுமையாக யதார்த்தமற்றது
S8. இலங்கை அரசாங்கம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள், இலங்கை: சுனாமிக்குப் பின்னரான
மீட்புப் பணிகள் மற்றும் மீள்நிர்மாணம், பக்கங்கள் 11-12,
59. அந்த வேளையில் பிரதம மந்திரி.
60, தேவையான வீடுகள் தனியே 2,343ஆக இருக்கையில் 3,155 வீடுகள் நிர்மானிக்கப்பட்டன.
61. Supran , 2 - LJääsub 12.
62. மேற்கூறிய ஆதாரமூலம்

Page 37
56 மனித உரிமைகளின் நிலை 006
என்பது தெளிவாகின்றது. தவறான தகவல்களை அளிப்பது தகவல்களுக்கான உரிமை மீறல்களுக்கு ஒப்பானதாகும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடமைப்பு தொடர்பில் முன்னெப்பொழுதையும் விட கூடுதலாக ஏமாற்றமடைந்திருப்பதே அதன் தற்போதைய நிலையாகும்.
நிரந்தரமான வீடுகளின் நிர்மாணிப்பில் காணப்பட்ட தாமதங்களிற்கான முக்கியமான காரணங்களிலொன்று நன்கொடை முகவரமைப்புகளின் மெதுவான முன்னேற்றமாகும். அனைத்து நன்கொடை முகவர்களையும் தேவையற்ற காலதாமதங்களின்றி அவர்களது பணிகளை மேற்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கும் இறுதியான பொறுப்பை அரசே கொண்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த முகவரமைப்புகளுக்கு அவர்களது பணிகளை, குறித்த கால அட்டவணைப்படி செய்து முடிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான கடப்பாட்டை அரசும் கொண்டுள்ளது.
வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தெரிவு செய்யப்பட்ட இடங்களின் பொருத்தமான தன்மை கரிசனத்திற்குரிய மற்றொரு பெரும் பகுதியாக உள்ளது. உதாரணமாக வெலிகமவில், பெத்தக்கோணாவிலவத்த எனுமிடம் 200 வீடுகள் கட்டுவதற்கான இடமாக இனங்காணப்பட்டது. ஜனவரி 2006இல் நிர்மாணத்துக்குத் தயாராக காணி துப்புரவாக்கப்பட்டு, மட்டப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் இந்த இடத்தைச் சென்றடைவதற்கு முறையான வீதி வசதிகளில்லாத காரணத்தினால் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன. அண்ணளவாக ஒரு கிலோ மீற்றர் நீளமான புதிய வீதியொன்றுக்கான வழிவகைகள் ரயில்வே திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டது. உத்தேசிக்கப்பட்ட வீதி ரயில் பாதையின் வளைவொன்றில் குறுக்கறுத்துச் செல்வதால் ரயில்வே கடவையொன்றை நிர்மாணிப்பதன் தேவையை அது உருவாக்குவது இதற்கான காரணமாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றீடாக ஒப்பந்தக்காரர்கள், வீதியை மலையின் ஒரு பக்கத்தை ஒட்டியதாக அமைப்பதற்குப் பிரேரித்தனர். அது மலையை 78 மீற்றர் நீளத்திற்கு 7 மீற்றர் அகலத்தில் வெட்டியகற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும் குறிப்பிட்ட மலை இயற்கை பராமரிப்பின் பாதுகாப்புக்குட்பட்ட பகுதியாக அமைவதினால், மத்திய சூழல் அதிகாரசபையின் அனுமதி பெறப்பட வேண்டியதாக இருந்தது. செயல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் திட்டமிடலில் காணப்பட்ட குறைபாடு செலவுமிக்கதாக இருந்ததை நிரூபித்தது. போய் வருவதற்கான வீதி வசதிகளின்றி 200 வீடுகளை அமைப்பதற்குப் பொருத்தமான இடமாக எவ்விதம் இது கருதப்பட்டது என்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) பதிலளித்தல் வேண்டும். இதேசமயம், நிர்வாக திற்மைக் குறைவினால் ஏற்பட்ட அசெளகரியங்களுக்காக எந்தவிதமான நிவாரணங்களுமின்றி பயனாளிகள் 200 பேர் காத்திருக்கின்றனர்."
63. அனர்த்த நிவாரணக் கண்காணிப்புப் பிரிவின் வீடமைப்பு மதிப்பாய்வு, மாத்தறை,
ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள், ஜனவரி 2005, பார்க்கவும்.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 57
2.1.6 உட்கட்டுமானம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் புதிய வீடுகளுக்கு இடம்மாறிய பின்னர் அனைத்துப் பயனாளிகளுக்கும் உட்கட்டுமானம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் என்பன வழங்கப்படவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் அமைந்திருந்த இடங்களுக்கு தண்ணிர், போக்குவரத்து மற்றும் மின்சாரம் போன்ற வசதிகள் வழங்கப்படாமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவொரு நிலைமையென்பதுடன் இதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சாரும். வீடமைப்பு ஏற்பாடுகளின் முன்னேற்றங்கள் மிகவும் உயர்வாகக் காணப்பட்ட மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அனர்த்த நிவாரண கண்காணிப்புப் பிரிவு ஒரு வீடமைப்பு மதிப்பாய்வை நடாத்தியது. தண்ணிர் மற்றும் மின்சார வசதிகள் வழங்கப்படாத நிலைமைகளில் பயனாளிகள் தங்களது புதிய வீடுகளில் குடியிருக்கவில்லை அல்லது வசதிகளற்ற நிலையில் பெரும் சிரமங்களுடன் புதிய வீடுகளில் வாழ்வதையும், அல்லது சில சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமான வழிகளில், சில சமயங்களில் பெரும் பணச்செலவுடன்ப் வசதிகளைப் பெற்றுக் கொள்வதையும்" இவ்வாய்வு கண்டது.
போக்குவரத்து வசதிகளில்லாமை பயனாளிகளுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற மற்றொரு கரிசனத்திற்குரிய விடயமாகும். பெரும்பாலான பயனாளிகளின் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதியிலிருந்தே வந்தவர்கள், அவர்களது முழு வாழ்க் கையுமே இந்த இடத்தைச் சூழ் நீ தே அமைந்துள்ளதென்பதால் ஒரு வினைத்திறனான போக்குவரத்து முறைக்கான தேவை இங்கே அவசியமாகிறது.
3. வாழ்வாதாரம் மற்றும் ஊட்ட உணவு
தேசிய பொருளாதாரம் மீது சுனாமியின் தாக்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு சதவீதம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. சுனாமியின் மிகவும் நீடித்திருக்கக்கூடிய பின்விளைவாக ஏற்கனவே வறுமைப்பட்டிருந்த குழுக்களின் வறுமை மட்டத்தை அதிகரித்தமை உள்ளது.? போல் ஸ்டெல்லி (Paul Steele) என்பவரின் கருத்துப்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே ஆறு சதவீதத்தினர் சமுர்த்தி உதவி பெறுபவர்கள் என்பதுடன் மேலுமொரு மூன்று சதவீதத்தினர்
64. அதே ஆதாரமுலம்
65. போல் ஸ்டெல்லி, சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையா? சுனாமிக்குப் பின்னரான இலங்கைக்கான பொருளாதாரக் கொள்கைச் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் (Paul Stelle, Phoenix from the Ashes? Economic Policy, Challenges and Opportunities for Post-Tsunami Sri Lanka) ப.1; சமுர்த்தி என்பது தற்போதுள்ள தேசிய வறுமைத் தணிப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டம்.

Page 38
58 மனித உரிமைகளின் நிலை 2006
இக்கொடுப்பனவுகளையே தங்களது வருமானத்துக்கான தோற்றுவாயாக நம்பியிருந்தனர்."
சுனாமியின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்கம் பரந்துபட்டதாகும். சேதத்தின் அளவு மீன்பிடித் தொழிலில்" பாரியதாக இருக்கையில், அழிவுகளின் தாக்கங்கள் சுற்றுலா வர்த்தகம்; விவசாயம் , சிறியதும் மற்றும் நடுத்தரமானதுமான தொழில் முயற்சிகள், கடைகள், வாகனங்கள் திருத்துமிடங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் என சில பெயர் சொல்லக்கூடிய பாதிக்கப்பட்ட ஏனைய அனைத்து வாழ்வாதாரங்களினாலும் கூட உணரப்பட்டது. கரையோரத்தை நம்பித் தங்கியிருந்த அல்லது சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்திருந்த எந்தவொரு கைத்தொழில் அல்லது வியாபாரம் என்பன மாற்றியமைக்க முடியாத விளைவுகளால் பாதிப்புற்றன.
துரதிர்ஷ்டவசமாக, வாழ்வாதாரம் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து தீர்மானம் மிக்க, ஒரு சீரான, கோட்பாட்டு அடிப்படையிலான கொள்கைகள் எதுவுமிருக்க வில்லை. மேற்குறிப்பிட்டது போன்று, இழந்த வாழ்வாதாரங்களுக்குப் பதிலாக நிதியின்மை காரணத்தினால் தனியே மாதாந்தம் ரூபா 5,000 படி மூன்று தவணைக் கட்டணங்கள் மட்டும் 2005° இல் கொடுப்பனவு செய்யப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட பல கைத்தொழில்களுக்குப் புத்துயிர் அளிப்பதற்கு வழங்கப்பட்ட கவனங்கள் கூட திருப்தியானதாக இல்லை. முழுக் கவனத்தையும் பெற்ற மீன்பிடித்துறை கூட முழுமையாக பழைய நிலையை அடையவில்லை. பல்வேறு குழுக்களினால் திட்டமிடப்படாத முறையிலான மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விநியோகம், மீனவர்களுக்குப் பதிலாக மீன்பிடியில் ஈடுபடாத பலர் மீன்பிடிப் படகுகளைப் பெறுவதற்கு வழிவகுத்தது. மேலும் சில மீனவர்கள் படகுகளைப் பெற்றனர். ஆனால், மீன்பிடி உபகரணங்களையல்ல. அதேபோன்று மீன் பிடி உபகரணங்களைப் பெற்றவர்களுக்குப் படகுகள் கிடைக்கவில்லை. வேறு சில சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்குக் கிடைத்த படகுகள் மற்றும் உபகரணங்கள் என்பன அவர்கள் ஈடுபட்டிருக்கும் குறிப்பிட்ட மீன்பிடிப்பு வகைகளுக்குப் பொருத்தமற்றவையாக இருந்தன.
இதேவேளை, ஏனைய கைத் தொழில்கள் முக்கியமாக அவற்றின் நிலைமைகளைத் தணிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்களில்லாமை மற்றும் புறக்கணித்தல் என்பவை காரணமாகப் பாதிப்படைந்தன. சுயதொழிலில்
66. அதே ஆதாரமூலம்
67. வாழ்வாதாரங்களை இழந்துவிட்டதாக கணிக்கப்பட்டவர்களுள் 50% மீன்பிடித் தொழில்
சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
68. மூன்றாவது தவணைக் கொடுப்பனவுக்காக பயனாளிகளின் பட்டியல் கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டது, நான்காவது கொடுப்பனவுக்கு மேலும் குறைக்கப்பட்டதுடன் இது 2005 இல் முழுமையாக வழங்கப்படவில்லை.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 59
ஈடுபட்டிருக்கும் நபர்களுக்கு உபகரணங்களின் வ்ழங்குதல் தொடர்பாக தனியான ஆனால் நீடித்த முறையிலல்லாத சம்பவங்களும் காணப்பட்டன.°
வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களின் பல குறைபாடுகள், திரும்பச் செய்தல் மற்றும் இடைவெளிகள் என்பவற்றுக்கான பிரதான காரணம் உதவி வழங்கும் முகவரமைப்புகளுக்கு இடையில் காணப்பட்ட முழுமையான ஒருங்கிணைப்பு இல்லாமையே ஆகும். தகுதியான பயனாளிகளின் சரியான பெயர்ப்பட்டியலைப் பேணுவதற்கு சிறந்த இடம் உள்ளூராட்சி மன்ற நிர்வாகமாகும். இதனால், அது விடயங்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்று வழிநடாத்திச் செல்லும் பொறுப்பை மேற்கொண்டிருக்க வேண்டுமென்பதுடன், நன்கொடை முகவரமைப்புகள் ஏதேனும் நிகழ்ச்சித் திட்டங்களைத் தாங்களாகவே சுயமாக அமுல்படுத்துவதற்கு முன்னால் உள்ளூராட்சி நிர்வாகத்தை ஆலோசிப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
வாழ்வாதாரங்களுக்கு குறைந்த வட்டி வீதத்திலான கடன் வழங்கல் கரிசனைக்குரிய மற்றொரு விடயமாகும். சுசயான கடன் திட்டம் ஒரு கூருணர்வு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமுல்படுத்தப்படவில்லை. உதாரணமாக, அறுபது வயதைத் தாண்டியவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர், அத்துடன் அரச வங்கிகள் சில சந்தர்ப்பங்களில், குடும்பத்தின் தலைவர்கள் (ஆண்கள்) மட்டுமே கடன்கள் பெறத் தகுதியானவர்களெனக் கூறி பெண்களுக்குக் கடன்கள் வழங்க மறுத்தது." இவ்விதமான பாரபட்ச நடவடிக்கைகள் குறிப்பாக தனியான அல்லது பிரதான வருமானமீட்டுபவர்களைக் கொண்ட குடும்பங்களைப் பாதிக்கிறது.
அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான தவறுகளும் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தின் தோல்விக்குப் பங்களித்தன. பாதிக்கப்பட்ட, உதவிகளுக்கு முற்றிலும் தகுதியான பலர் எதனையுமே பெற்றுக் கொள்ளவில்லையென்பதுடன் சுனாமி ஏற்பட்டு ஒரு வருடம் கழிந்து விட்ட நிலையிலும் கூட இதுவரை ஓர் ஸ்திரமான வருமானமுமின்றி உள்ளனர். மணல்சேனையின் கதை இதற்கானதொரு உதாரணமாகும். மிகவும் வறுமைப்பட்ட ஒரு சிறிய சமூகத்தைக்" கொண்ட மணல்சேனைக் கிராமம் சுனாமியின் தாக்கங்களுக்கு உதவிகளின்றி, மெளனமாகத் துன்பப்பட்டது. அறுபது குடும்பங்களின் களிமண் பூசிய குடிசைகள்
69. மேற்கூறிய தகவல், அனர்த்த நிவாரணக் கண்காணிப்புப் பிரிவில் எனது அனுபவம் மற்றும் கள விஜயங்களின் போதான மக்களது கலந்துரையாடல்கள் மூலம் பெறப்பட்டவையாகும். நாடு பூராகவுமிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகளினூடாக நாட்டு நிலைமைகளின் தாற்பரியம் மீது கவனம் செலுத்துகிறது.
70. அனர்த்த நிவாரணக் கண்காணிப்புப் பிரிவின் பெண்கள் பகுதி அறிக்கை, செப்டெம்பர்
2005.
71. இச்சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் ஆரம்பத்தில் திஸ் ஸமகாரகம மற்றும் மொனராகலையைச் சேர்ந்தவர்கள், 1977இல் மணல்சேனையில் மீள்குடியேறியவர்களாவர்.

Page 39
60 மனித உரிமைகளின் நிலை 2006
சுனாமியால் தரைமட்டமாக்கப்பட்ட பின்னர், அவர்கள் மரங்களின் கீழ் மிகவும் மோசமான நிலையில் வசித்ததுடன் தனியே இலை, பழங்கள் போன்றவற்றையே உண்டு உயிர் பிழைத்திருந்தனர். நிர்வாகத் திறனின்மை மற்றும் புறக்கணிக்கப்பட்டமை காரணமாக அவர்களுக்கு உரித்தான நன்மைகளை அவர்கள் பெறவில்லை. இக்கிராமம், இரு கிராமசேவகர் பிரிவுகளான கோமாரி மற்றும் சங்கமான்கந்த” ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருந்ததுடன் இரு கிராமசேவகர்களுமே அக்கிராமம் அடுத்தவருக்குரிய உத்தியோக பரப்பிற்குள் அமைந்திருப்பதாக எண்ணி அதனைப் புறக்கணித்துவிட்டனர். மக்கள் சபையின் தலையீட்டினூடாக கிராமத்தவர்கள் வாரந்த உலர் உணவுகளைப் பெற்றனர், ஆனால், வேறெதனையும் அல்ல. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இச்சமூகம், அவர்களது வீடுகள், பயிர்கள் என்பன அழிக்கப்பட்டு, அவர்களது வயல் நிலங்களும் உவர்த்தன்மை அடைந்து அனைத்தையும் இழந்து நின்றது. இருந்த போதிலும் அவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான ரூபா 5,000 கொடுப்பனவு இல்லை, இலகு கடன்கள் இல்லை, பயிர்கள் இல்லை, வீடுகளென எதுவுமேயில்லை. சுனாமியால் சிதைக்கப்பட்ட அவர்களது வாழ்வாதாரம் அரசாங்கத்தின் முறைகேடான நிர்வாகத்தால் இப்பொழுது புதைக்கவும்பட்டுள்ளது.
4. பெண்கள்
சுனாமிக்குப் பின்னரான நிலைமைகளில் பால்நிலை சார்ந்த பிரத்தியேகமான பிரச்சினைகள் பலவுள்ளன என்பதுடன் அவையனைத்தும் இங்கு ஆராயப்பட முடியாதவையாகும்." இடர்களுக்காளாகும் இரட்டிப்புத்தன்மை கொண்டதொரு குழுவாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட நபர்களால் எதிர்கொள்ளப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் சுனாமி முறையற்ற விகிதத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அநேகமான மாவட்டங்களில் பால்நிலை அடிப்படையில் வேறுபடுத்தப்பட்ட தரவுகள் இருக்கவில்லை. சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாகும்."
72. உண்மையில் கோமாரி, பொத்துவில் பிரதேச சபைக்கும், சங்கமான்கந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்கும் உரியவை, இரு பிரதேச செயலாளர்களுமே அக்கிராமம் அடுத்தவர் பிரதேச சபைக்குரியதெனக் கூறுகின்றனர்.
73. விரிவான பகுப்பாய்வுக்கு, அனர்த்த நிவாரணக்கண்காணிப்புப் பிரிவின் பெண்கள் பகுதியின்
இறுதி அறிக்கையைப் பார்க்கவும், செப்டெம்பர் 2005.
74. பாதிக்கப்பட்ட பெண்கள் மீது சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கைகள் ஏற்படுத்திய
இறுதி அறிக்கையைப் பார்க்கவும்.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 6
சுனாமியேற்பட்டு சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர், நாம் முன்னெடுக்க எண்ணியிருந்த நீண்ட கால நிகழ்ச்சித் திட்டமொன்றின் மூலம் நன்மை பெறக்கூடிய சில சமூகங்களை இனங் காணும் நோக்கில் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த ஒரு குழுவில் நானுமொரு அங்கத்தவராக இருந்தேன். சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதொரு முஸ்லிம் சமூகம் அதன் அரசியல் தொடர்புகள் காரணமாக பாரபட்சத்திற்குள்ளானதால் குறிப்பாக அச்சமூகம் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு தகுதி வாய்ந்ததாக எங்களுக்குத் தென்பட்டது. இச்சமூகம், வறியவையாக இருந்தாலும் தங்களைப் பற்றியதொரு கெளரவமும் பலமும் கொண்ட கடும் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போது எங்கள் குழுவின் தலைவர் அப்பாவித்தனமாக (பெரும்பாலும் சிந்திக்காத வகையில்) அவர்களிடம் உங்களது பெண்களெல்லாம் எங்கேயுள்ளனர்? என வினவினார். இதையடுத்து அங்கு ஒரு அசாதாரண அமைதி நிலவியது. அங்குள்ள மக்களைக் நான் கூர்ந்து அவதானித்த பொழுது, கூட்டத்தின் பிற்பகுதியில் நல்ல திடகாத்திரமான உடல் அமைப்புடன், நீண்ட தாடி மற்றும் கூர்மையான கண்களோடு சற்று அச்சத்தை ஏற்படுத்தும் தோற்றத்தைக் கொண்ட ஒருவரைக் கண்டேன். எனது கண்கள் அவரைக் கண்ட பொழுது அவர் மெளனமாக தேம்பி அழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இறுதியில் அவர்களிலொருவர் இந்த மெளனத்தைக் கலைத்து கிராமத்துப் பெண்களனைவரும் சுனாமியில் இறந்து விட்டதாகக் கூறினார்.
ஏன் அதிகளவில் பெண்கள் இறந்தனரெனக் கேள்வியெழுப்பிய ஒரு கட்டுரை
பின்வருவனவற்றை அதன் முடிவுகளாகக் கண்டது:
அசம்பாவிதம் நடைபெற்ற தினம் ஒரு பூரணை தின ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளையாகவும், கிறிஸ்மஸ் விடுமுறை தினத்திற்கு மறு நாளாகவும் இருந்ததினால் அன்றைய காலைப் பொழுதில் அநேகமான ஆண்கள் வெளியே சென்றிருக்கையில் பெண்கள் வீட்டில் பல்வேறு வேலைகளில் ஈடுப்ட்டிருந்தனர்.
பெண்களின் உடைகள் - சேலை, லுங்கி, பாவாடை மற்றும் துணிகளென்பன அலைகளிலிருந்து தப்புவதற்கான அவர்களது அவசரமான முயற்சிகளில் கடுமையான தடங்கல களை ஏற்படுத்தியிருக்கலாம் அத்துடன் பெண்களது நீண்ட கூந்தலும் அவர்களது முயற்சிகளில் பாதகமாக இருந்துள்ளது.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் இரு யுக்திகளான நீச்சல் மற்றும் மரமேறுதல் என்பன பெண்களுக்கு அநேகம் கற்றுக் கொடுக்கப்படு வதில்லை. பல ஆண்கள் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இத்திறமைகளை அவர்கள் கொண்டிருந்தமையே காரணமாகின்றது.

Page 40
62 மனித உரிமைகளின் நிலை 2006
O கலாச்சாரத்தின் செல்வாக்கும் ஒரு காரணியாக அமைந்தது. ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடா தென்கின்ற ஒரு சுய கட்டுப்பாட்டினால் அநேகமான இளம் முஸ்லிம் பெண்கள் அலைகள் தாக்கிய போது வீட்டினுள்ளேயே இருந்துள்ளனர். அதேபோன்று முதலாவது அலையின் ஆக்ரோஷத்தால் ஆடைகள் சின்னாபின்னமாகி கிழிந்துபோன நிலையில் பெண்கள் தங்கள் உடலைக் காட்டிக் கொள்ள விரும்பாமையினால் வெளியே ஒடித் தப்புவதற்கும் முயற்சிக்கவில்லை, அதனால் தங்கள் மானம் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் தங்கள் உயிரையே விலையாகக் கொடுத்தனர்.?
இந்த முடிவுகள் அடிப்படையானவையாகத் தோன்றினாலும், அதற்குள்ளே அவர்கள் கூறிய சோகங்கள் பல ஒளிந்திருந்தன. சமூக கலாச்சார ஒழுக்கங்களே சுனாமியின் போது நூற்றுக்கணக்கான பெண்களின் இறப்புக்குக் காரணமாகவிருந்தன என நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள், அனர்த்தத்தின் பின்னரும் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது மன்னிக்கப்பட முடியாததாகும். அனர்த்த நிவாரணக் கங்காணிப்புப் பிரிவின் பெண்கள் பகுதி அவதானித்தது போன்று “சுனாமி தாக்கிய போது பெண்களே மிகவும் ஆபத்துகளுக்கு உட்படக்கூடிய குழுக்களிலொன்றாகக் காணப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக நிவாரணம், மீள்நிர்மாணம் மற்றும் புனருத்தாரண செய்முறைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நிறைவேறி வருகையிலும் இக்குறைபாடு தொடர்கின்றதொன்றாக உள்ளது. மனிதனுக்கு, இயற்கையின் பாரபட்சமாக இருந்த சுனாமியை இதே மனிதனின் சொந்தப் பாரபட்ச செயல்கள் மாற்றீடு செய்தது.”*
4.1 பங்குபற்றல்
உள்ளக இடம்பெயர்தலுக்கான வழிகாட்டல் கோட்பாடுகள், போதியளவிலான வாழ்க்கைத் தரத்திற்கு அனுமதிக்கும் “திட்டமிடல் மற்றும் விநியோகத்தில் பெண்களின் முழுமையான பங்களிப்பை உறுதிப்படுத்தும் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது." அத்துடன் அவர்களது மாற்றிடத் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் பெண்களை ஈடுபடுத்துதலின் முக்கியத்துவத்தையும் அது ஏற்றுக்கொள்கிறது." மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பால்நிலைக்குரியவர்கள்
75. சுனிலா அபயசேகர, “இயற்கை அனர்த்தத்தின் பால்நிலைத்தன்மை: இலங்கையில் di6OT FILóu 6 969) L16) Ishid,6ii' (Sunila Abeysekera, "The Gendered Nature of Natural Disaster: The tsunami experience in Sri Lanka) Qg5fossit, (Options) Qg5 (55 36(i) 2005, பக்கம் 2.
76. அனர்த்த நிவாரணக் கண்காணிப்புப் பிரிவின் பெண்கள் பகுதியின் இறுதி அறிக்கை,
செப்டெம்பர் 2005.
77. உள்ளக இடம்பெயர்தல் மீதான வழிகாட்டல் கோட்பாடுகளின் கோட்பாடு 18
T8. உள்ளக இடம்பெயர்தல் மீதான வழிகாட்டல் கோட்பாடுகளின் கோட்பாடு 7

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 63
என்ற ரீதியில் பெண்கள், தீர்மானங்களை மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைளிலும் அவசியமானவர்களாக சம்பந்தப்படுதல் சிறந்ததாக இருக்கும். முகாம் நலன்புரிச் சபை, அரசாங்கம் ஸ்தாபித்த “சேதக் கணிப்பீட்டு அணிகள்”, மாவட்ட மற்றும் நன்கொடையாளர் கூட்டமைப்புகள் மற்றும் "குறைகேள் சபைகள்’ போன்ற பல்வேறுபட்ட அமைப்புகளில் அவர்களது அதிகரித்த பங்குபற்றுதல் அவர்களுக்கும் அவர்களது சமூகத்திற்கும் பயன் தந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக அனர்த்த நிவாரணக் கண்காணிப்புப் பிரிவு அவதானித்ததின்படி இவ்விதமான அமைப்புகளில் பெண்களின் பங்குபற்றுதல் பொதுவில் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான கட்டமைப்பால் (CATAW) சுட்டிக் காட்டப்பட்டதொரு விடயம், முகாம்களின் அடிப்படை நிர்வாகத்தில் பங்குபற்றாதிருப்பது எவ்விதம் அவர்களது உரிமைகள் மற்றும் கெளரவம் என்பவற்றுக்கு மிகவும் பாதகமானது என்பதாகும். இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களைப் பொறுத்தவரையில், ஆண்கள் பாலியல்ரீதியிலான தொல்லைப்படுத்துதல் எனக் கருதக்கூடிய வகையில் உணர்வுகளை மதிக்காதும் மற்றும் புண்படுத்தும் வகையில் முகாம் நிர்வாகத்தை மேற்கொள்கின்றனர். பெண்களின் உள்ளாடைகளின் விநியோகங்களின் போது, முகாம் நிர்வாகம், எந்தப் பெண்ணுக்கு எந்த உடை அளவில் பொருத்தமானதென தேவையற்ற குறிப்புகளுடன் பகிரங்கமாக விநியோகிக்கப்பட்டன. மேலும் சுகாதாரத் துவாய்களின் வழங்கல் முகாமின் ஆண் உத்தியோகத்தர் கட்டுப்பாட்டில் இருந்தது, அவர் ஒரு தடவையில் இரு துவாய்களை மட்டுமே வழங்கியதுடன், புதிய துவாய்கள் தேவையான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெண்கள் அவரிடம் சென்று கேட்கும்படியான கட்டாயத்தை ஏற்படுத்தியது.”
4.2 நிவாரணங்கள் கிடைக்கப் பெறுதலுக்கான
வழிவகைகள்
அனர்த்த நிலைழைகளில் பெண்கள் அதிகரித்த ஆபத்துகளுக்கு உள்ளாகுந்தன்மையை கவனத்தில் கொண்டும் மற்றும் நிவாரணங்களுக்கான கொள்கையின் புரிந்துணர்வற்ற அமுல்படுத்துதல் காரணமாகவும் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் அவர்களுக்கு உரித்தான நிவாரணங்களைப் பெறவில்லை. பல சந்தர்ப்பங்களில், நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளிலான பிரச் சினைகள் இலகுவாக நிவர்த் தி செய்யபடக்கூடியவையாக இருந்தன. உதாரணமாக, யாழ்ப்பாணத்தின் மாங்காடு நலன்புரி முகாமிலுள்ள இடம்பெயர்ந்த பெண் அனர்த்த நிவாரணக்
79. சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான கட்டமைப்பின் பத்திரிகை அறிக்கை, சுனாமிக்குப்பின்னரான இடம்பெயர்தலுடன் தொடர்புபட்ட பால்நிலை ரீதியிலான பிரத்தியேகமான பிரச்சினைகள் (Gender Specific Issues Relating to Post Tsunami Displacement) 15 ஜனவரி 2005, தெரிவுகளின் முதல் வெளியீடு 2005, பக்கம் 21.

Page 41
64 மனித உரிமைகளின் நிலை 2006
கண்காணிப்புப் பிரிவுக்கு முறையிடுகையில் அரசினால் வழங்கப்பட்ட அனைத்து நிவாரண நிதிக் கொடுப்பனவுகளும் கணவரது வங்கிக் கணக்கிலேயே வைப்புச் செய்யப்பட்டனவெனவும், கணவனின் பிரசன்னமின்றி அவரால் பணத்தை மீளப்பெற முடியாதுள்ளதெனவும் தெரிவித்தார். அவர்கள், தங்களுக்காக ஒரு கூட்டுக் கணக்கை ஆரம்பிப்பதற்கு வேண்டியிருந்தாலும்கூட கிராமசேவகர் அவ்விதம் செய்யவில்லை."
4.3 பெண்களுக்கு எதிரான வன்முறைகள்
சுனாமியின் பின்னர் பெண்களுக்கெதிரான வன்முறைகளிலானதொரு அதிகரிப்புக்கு ஆதரவான அதிகாரபூர்வமான தகவல்கள் இல்லாதிருக்கையில் முகாமி வாழ்க் கை நிலைமைகளில் அநீ தரங் கத்திற்கான சந்தர்ப்பங்களின்மையால் குடும்ப வன்முறைகள் கூடுதல் புலப்படுதலுக்கு உட்பட்டது. பெண்களுக்கெதிரான வன்முறை எங்கும் பரவலாகவுள்ளது எனும் உண்மை மறுக்கப்பட முடியாததினால் வன்முறை இருக்கின்றதோ இல்லையோ, அங்கே பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அதிகரிப்பு காணப்பட்டது. அனர்த்த கண்காணிப்புப் பிரிவின் பெண்கள் பகுதிக்கு அம்பாறை இடம்பெயர்ந்த முகாமிலுள்ள ஒரு பெண் தெரிவித்த சம்பவமொன்றில் ஆறு மாதக் குழந்தையொன்றின் தாய், மதுவுக்கு அடிமையான அவளது கணவனால் தொடர்ச்சியாக அடித்துத் துன்புறுத்தப்பட்டதால் அப்பெண் தனக்குத்தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார்."
5. இன முரண்பாடு
“ஒவ்வொரு தீமையிலும் ஓர் நன்மையுண்டு” என்பது சுனாமியைப் பொறுத்தவரை மிகவும் பொருத்தமானதாக இருந்தது. யுத்தத்தால் சீரழிந்து போயிருந்த எங்கள் நாடு, தற்காலிகமாக இனவேறுபாடுகள், மதம் மற்றும் கட்சி அரசியல் என அனைத்தையும் மறந்து வாழ்க்கை சிதைக்கப்பட்டவர்களுக்காக பலரும் ஒய்வின்றி உழைத்தனர். தமிழீழ விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்கள் இராணுவ வீரர்களுக்கு உதவியது, விசேட அதிரடிப்படையினர் தமிழ் மக்களுக்கு சேவையாற்றியது மற்றும் மத ஸ்தாபனங்கள் அனைத்து மக்களுக்கும் மதப் பாகுபாடுகளின்றி உதவியது என ஏராளமான கதைகள் உண்டு.
இவற்றுள் இன ஒற்றுமைக்கான ஒரு நன்னெறிக் கதை அம்பாறை நகரின் ரீ வித்தியானந்த மஹா பிரிவேனாவிலிருந்து வருகிறது. 1987இல்
80. அனர்த்த நிவாரணங்கள் கண்காணிப்புப் பிரிவின் பெண்கள் பகுதியின் இறுதி அறிக்கை,
செப்டெம்பர் 2005.
81. அதே ஆதாரமூலம்.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 65
பிரிவேனாவிலிருந்த பிரதம துறவியும், முப்பத்திரண்டு சமனேராக்களும்? தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். பிரிவேனாவுக்கு பொறுப்பாகவுள்ளவரும், முன்னைய பிரதம துறவியை தனது குருவாகக் கருதும் பிரதம துறவியான வணக்கத்துக்குரிய கிரிந்திவல சோமரத்ன தேரரை நாம் சந்தித்தோம். இப்படுகொலையின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது தாம் மிகுந்த காழ்ப்புணர்வு கொண்டிருந்ததை சோமரத்ன தேரர் ஏற்றுக்கொண்டார். அவர்கள் செய்த செயலுக்காக அவர்களை அவரால் மன்னிக்க முடியவில்லை.
சுனாமியின் பின்னர், பெரும்பாலும் தமிழர்களைக் கொண்ட சில நூறு பேர்கள் வரையிலானோர் பிரிவேனாவில் தஞ்சம் தேடினர். அம்பாறை நகரில் அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லாததினாலும், பிரிவேனாவிலுள்ள பெளத்த துறவிகளிடமிருந்து எந்தவிதமான வரவேற்பு தங்களுக்கு கிடைக்குமென அவர்களால் நிச்சயிக்க முடியாதிருந்தது. அவர்களை உள்ளே அனுமதிப்பதற்குத் தயக்கம் கொண்டிருந்தாலும் சோமரத்ன தேரர் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்தார். துறவிகள் அகதிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுத்துப் பராமரித்தனர். சிறுவர்களுக்காக பாடசாலையையும் ஏற்படுத்தினர். இவ்விதமாக ஒருத்தர் மற்றொருவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதினுடாக அவர்கள் மற்றையவர்களையும் தங்களில் ஒருவராகக் காணத் தலைப்பட்டனர். ஒருவர் மற்றவர் சமூகத்தின் மீது கொண்டிருந்த ஒரே விதமான மற்றும் தப்பபிப்பிராயங்கள் மறைந்து போயின. பிரதம துறவி அகதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் தனது சகோதரர்களென குறிப்பிடத் தொடங்கினார். பெண் அகதியொருவர் எம்மிடம் கூறுகையில் வேறெந்த இடத்தையும் விட இங்கு தான் வீட்டிலிருப்பது போன்ற உணர்வையே பெரிதும் பெற்றதாகக் கூறினார். தைப்பொங்கல் தினத்தை° அகதிகள் ஆலயத்தில் கொண்டாடுவதற்கு உற்சாகப்படுத்தியதுடன் அவர்களுக்கு ஆடை, அணிகள் என்பனவும் அளிக்கப்பட்டன. அனர்த்தத்தின் விளைவாக இதுவரையும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த அறியாமை, சந்தேகம் மற்றம் அச்சம் என்பவற்றை விட்டு இரு சமூகங்களும் புதிய ஒளியொன்றில் ஒன்று சேர்ந்து வளர்ந்து, ஒன்றையொன்று அறிந்து கொண்டன.
நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கானதோர் ஆரம்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு சுனாமி அனர்த்தத்தின் ஆற்றல் இருந்தது. தேசிய மட்டத்தில் கூட, அமைதிக்காக, முன்னர் காணப்படாத கதவுகள் கூட இழுத்துத் திறக்கப்பட்டதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான ஒத்துழைப்புப் பற்றிய வதந்திகள் இதற்கான சாத்தியங்கள் வலுவாகவுள்ளன என்பதை உறுதிப்படுத்தின. அரசாங்கமும்
82. பெளத்த துறவறம் கற்கும் மாணவத் துறவிகள் 83. தமிழர்களின் உழவர் திருநாள் விழா.

Page 42
66 மனித உரிமைகளின் நிலை 2006
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகமும் வடக்கு மற்றும் கிழக்கில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கான இணைந்த பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. இத்தகைய அபிவிருத்தி இலங்கையின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிவில் சமூகங்களின் உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்களுக்கான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முன்னெடுப்புகளை வழங்குவதிலான பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதன் அவசியம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்விதமானதோர் பொறிமுறையின் சாத்தியம் பரஸ்பரம் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் அப்பியாசமாக சமாதானச் செயற்பாடுகள் மீது முழுமையான சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒர் முக்கியமான மேலதிக நன்மையாக இருந்திருக்கும்.
துரதிஷ்டவசமாக இந்த இணைந்த பொறிமுறையை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் ஜாதிக ஹெல உறுமய" (JHU) ஆகிய இரு கட்சிகளினால் கடுமையாக எதிர்க்கப்பட்டதுடன் இவ்விரு கட்சிகளினதும் பெளத்த துறவிகள் கோட்டை ரயில் நிலையம் மற்றும் கண்டி தலதா மாளிகையிலும்° முறையே சாகும்வரையான உண்ணாவிரதம் இருந்தனர். மிகவும் பதற்றமான சூழ்நிலை உருவாகிய நிலையில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இணைந்த பொறிமுறை அமுல்படுத்தப்படுவதற்கு முன் மகா நாயக்கர்களின்° ஒப்புதல் பெறப்படும் என வாக்குறுதி அளித்த பின்னரே உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இதன் பின்னர் சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பின் (PTOMS) அமுலாக்கத்திற்கான உடனர் படிக் கையொன் று நிவார ண, மீள் நிர்மாண மற்றும் நல்லிணக்கப்பாட்டுக்கான அமைச்சு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலகம் என்பவற்றால் கைச்சாத்திடப்பட்டன. சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துக் கட்டமைப்பு தேசிய, பிராந்திய மற்றும் மாவட்டம் எனும் மூன்று மட்டங்களிலான சபைகளை ஸ்தாபித்தது. இச்சபைகள் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் முஸ்லிம் சமூகம் என்பவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கில் சுனாமி சம்பந்தப்பட்ட அனைத்து நிவாரணம், மீள்நிர்மாணம் மற்றும் புனருத்தாரணப் பணிகளை மேற்பார்வை செய்யும். மேலும் இந்த நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக ஓர் பிராந்திய நிதியும் உருவாக்கப்படும்.
84. ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) மற்றும் ஜாதிக ஹெல உறுமய (சிங்கள தேசிய உரிமை இயக்கம்) ஆகிய இரு அரசியல் கட்சிகளும் சிங்கள தேசிய கருத்தியல்களைக் கொண்டவையாகும்.
85. புத்தரின் புனித தந்தம் உள்ள ஆலயம்.
86. பெளத்த மத பீடத்தின் பிரதான குரு.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 67
இந்த உடன்படிக்கையின் அரசியலமைப்புத்தன்மை ஜாதிக ஹெல உறுமயவினால் உயர் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. நிதி முகாமைத்துவம் மற்றும் பிராந்திய சபை கிளிநொச்சியில்" அமைக்கப்படவிருப்பதனால் அதனை அணுகுவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம் என்பவை தொடர்பாக கேள்விகள் எழுகின்றன என்பதால் உயர் நீதிமன்றம் இவ்வுடன்படிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு விதித்தது.
இதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மகிந்த ராஜபக்ச வெற்றியடைந்ததும் அரசியல் கள நிலைமைகள் விரைவில் மாற்றமடைந்தன. சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்புக்கான உடன்படிக்கை மீள்பரிசீலனைக்கு கவனத்தில் கொள்ளப்படாததுடன் மோதல் தீர்வுக்கான மற்றுமொரு வாய்ப்பும் என்றுமில்லாதவாறு இழக்கப்பட்டுவிட்டது.*
6. சுனாமியால் பாதிக்கப்பட்டதும் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதுமான உள்ளக இடம்பெயர்ந்த மக்களைக் கையாள்வதிலான ஒப்புரவு
கடந்துபோன வருடங்களில் பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கையைச் சிதைத்த உள்ளக இடம்பெயர்வு மிகவும் உண்மையானதொரு பிரச்சினையாகும். கடந்த காலங்களில், இலங்கையில் உள்ளக இடப்பெயர்வை ஏற்படுத்திய காரணிகளுள் சுனாமி முதலாவதல்ல. உள்ளக இடம்பெயர்ந்த மக்களுக்கு 2004ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால் முக்கியமானதாக இருந்தது. தங்கள் சொந்த இடங்களுக்கு மீள்திரும்பி தங்கள் வாழ்க்கையில் சாதாரண நிலைமைகளைக் கொண்ட சில வசதித்தன்மைகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளப் போராடும் போரினால் பாதிப்புற்று உள்ளக இடப் பெயர்வுகளுக்குள்ளானவர்கள் என்ற அந்தஸ்தைக் கொண்ட 879,320 பேர்கள் என்ற எண்ணிக்கையுடன் இந்த வருடம் ஆரம்பமாகியது? இந்த உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் ஒரு பெரும்பாலான தொகையினர் பல்வேறு
87, கிளிநொச்சி, இலங்கையின் வட பகுதியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின்
கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தின் நிர்வாகத் தலைநகராகும்.
88. இந்த வழக்கின் இறுதி விசாரணைத் தினமான நவெம்பர் 21இன் பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையை ஸ்தாபிக்கும் திட்டத்தின் பின்னணியில் சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பு (P- TOMS) இன் சட்டத்தன்மை குறித்தான கேள்வி தேவையற்றதென உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
89. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் “உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் செயல் திட்டத்திற்கான தேசிய பாதுகாப்பு மற்றும் நீடித்த தீர்வுகள்’ (National Protection and Durable Solutions for Internally Displaced Persons Project) sa,605 L5s,608, 2004.

Page 43
68 மனித உரிமைகளின் நிலை 2006
அளவுகளிலான நன்மைகளுடன் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இதன் மூலம் நாட்டிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் தொகையும் கணிசமானளவு குறைவடைந்தது. ஆயினும் வருடத்தின் இறுதியில் சுனாமி தாக்கியதில் மேலும் 835,028 பேர்களை இடம்பெயர்தலுக்கு ஆளாக்கியது? இதில் பலர் முன்னர் யுத்தத்தினால் இடம்பெயர்தலுக்கு ஆளானவர்களாகவும் இருந்தனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த பல வருடங்களாக நிவாரணம், உதவி அல்லது அவர்கள் மீதான அவதானம் என்பவற்றின் அடிப்படையில் குறைவான கவனத்தையே பெற்றனர். அவர்கள் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலிருந்து தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டதுடன் ஒரு மறக்கப்பட்ட சமூகமாகவும் இருந்தனர். சுனாமி அவலங்களின் சடுதியான தாக்கம், சுனாமியால் இடம்பெயர்ந்தவர்களின் விதி பற்றி உலகத்தின் கவனம் மற்றும் அனுதாபம் என்பவற்றை ஏற்படுத்தியது. சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை மக்களிடமிருந்து பெருமளவில் வந்து குவிந்த தாராள உதவிகள், நிவாரணங்களின் விநியோகச் செயல்முறைகள் பிரச்சினைக்குரியவையாக இருந்தாலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் கணிசமானளவு நிவாரணங்களைப் பெற்றனர் என்பதை உறுதிப்படுத்தியது.
சுனாமியால் உள்ளக இடம்பெயர்ந்த மக்களுடன் ஒப்பிடுகையில், யுத்தத்தினால் உள்ளக இடம்பெயர்வுகளுக்கு ஆளாகியவர்களின் உரித்துக்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமேயானவையாக இருந்தன. சமுர்த்தித் திட்டத்தின் கீழ் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் ஒரு அங்கத்தவரைக் கொண்ட குடும்பங்கள் மாதமொன்றுக்கு ரூபா 360 பெறுமதியான உலர் உணவு அட்டைகளையும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் ரூபா 1,200 பெறுமதியான உலர் உணவுகளையும் பெற்றனர். மறுபுறத்தே சுனாமியால் இடம்பெயர்ந்த மக்கள் ரூபா 175 பெறுமதியான உலர் உணவுகளையம் ரூபா 200 பணத்தையும் வாராந்த அடிப்படையில் பெற்றனர். இவ்விதமாக, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த ஒருவர் மாதமொன்றுக்கு பெறும் நிவாரணத்தைவிட, சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாரமொன்றுக்கு கூடுதலான நிவாரணத்தைப் பெற்றுக்கொள்கிறார்." யுத்தத்தினால் இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பமும் அரசாங்கத்திடமிருந்து மீள்குடியேற்றத்திற்காக ரூபா 25,000 நன்கொடையை பெற்றுக் கொள்வதுடன் வடக்கு கிழக்கு வீடமைப்பு மீள்நிர்மாண நிகழ்ச்சித் திட்டத்தின் (NEHRP) கீழ் ரூபா 250,000* வீடமைப்புக் கான உதவியையும் பெறுவதற்கு
90. அதே ஆதாரமூலம்.
91. இத்தொகைக்கு மேலதிகமாக, சுனாமியால் உள்ளக இடம்பெயர்ந்த மக்கள், இழந்த வாழ்வாதாரத்திற்குப் பதிலாக ரூபா 5,000 கொடுப்பனவையும் பெறத் தகுதியுடையவர்களாவர்.
92. இந்த உதவி ஆரம்பத்தில் ரூபா 150,000ஆக இருந்தது. ஆயினும், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டின் அளவுடன் ஏற்கத்தக்க வகையில் ரூபா 250,000ஆக அதிகரிக்கப்பட்டது.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 69
தகுதியானவர்களாவர். எவ்வாறாயினும், யுத்தத்தினால் உள்ளக இடப் பெயர்வுகளுக்குள்ளான அனைவருக்கும் ரூபா 250,000 உதவி வழங்குவதற்கு நிகழ்ச்சித் திட்டம் போதுமான நிதியைக் கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக இத்திட்டத்தின் கீழ் அரசாங்க அதிகாரிகள் பயனாளிகளைத் தெரிந்தெடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.?
நிவாரணங்களின் அளவு மட்டுமன்றி, அவற்றை வழங்குவதிலான கால அவகாசமும் பாரபட்சத்திற்குரியதாக இருந்தது. யுத்தத்தினால் உள்ளக இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் வறுமைப்பட்டவர்களாகவும் அவர்களுள் அநேகர் பத்து வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்தவர்களாகவும் உள்ளனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட உள்ளக இடம்பெயர்ந்த மக்களுக்கு, புனருத்தாரணம் மற்றும் அவர்களை மீள்ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் காட்டப்பட்ட உடனடிக் கவனம் மற்றும் அவசரம் என்பன யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் நிலையை மேலும் பரிதாபத்திற்குரிய தாக்கியது. பின்வரும் சம்பவம் இந்த நிலைமையை மேலும் விரிவாக எடுத்துரைக்கிறது.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கிராமத்தின் காஞ்சனன் குடாவிலுள்ள யுத்தத்தின் உள்ளக இடப்பெயர்வுகளுக்கு ஆளாகியவர்களுக்கான முகாம் 1990இல் யுத்தத்தினால் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறிய ஒரு சிறிய சமூகத்தின் வசிப்பிடமாக இருந்தது. அவர்கள் 12 வருடங்களுக்கும் மேலாக இடம் பெயர்ந்திருந்து, 2002இல் தங்கள் சொந்த இடங்களுக்கு மீள்திரும்பியிருந்தனர். இப்பகுதியில் பதிவு செய்திருந்த 185 குடும்பங்களுள் 30 குடும்பங்கள் மட்டும் அவர்கள் தினசரி முகங்கொடுக்கும் கடுமையான கஷ்டங்கள் காரணமாக அங்கேயே தங்கியிருந்தனர். ஜூலை 2005இல் நாங்கள் அச்சமூகத்திடம் விஜயம் செய்த வேளையில், ராணி என்பவர் எங்களை தனது குடிசையின் முகப்பிற்கு அழைத்து (உள்ளே ஒரே நேரத்தில் மூன்று பேர்கள் இருப்பதற்கு கூட இடமில்லை) தனது கதையைக் கூறினார். கொழும்பில் பிறந்து வளர்ந்த ராணி, திருமணத்தின் பின்னர் அம்பாறைக்கு இடம் மாறினார். ராணி அவரது கணவர் செல்வராஜ் மற்றும் இரண்டு இளம் பிள்ளைகளும் இதற்கு முன்னரும் இரு தடவைகள் இடம்பெயர்தலுக்காளாகி, தங்களது வாழ்க்கையில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையையும் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் தற்பொழுது தங்கள் சொந்த இடங்களுக்கே திரும்பியிருந்தனர். செவ்வராஜ் நிரந்தர தொழிலற்ற கூலி வேலை செய்பவராகவிருந்தார். ராணி கணவரது சிறிய வருமானத்தை ஈடு செய்வதற்காக பயிர்ச் செய்கையிலும் ஈடுபட ஆரம்பித்தார். அவர்கள் அரசாங்கம் கொடுத்த ரூ.360 பெறுமதியான உணவு முத்திரை மற்றும் அரச சார்பற்ற ஸ்தாபனங்களின் சில உதவிகளிலேயே முற்றிலும் தங்கியிருந்தனர். அவர்கள் ஆரம்பத்தில் இடம்பெயர்ந்த சமயம் அவர்களுக்கு
93. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மேலதிக அரசாங்க அதிபர் திரு. புண்ணியமூர்த்தியுடனான
நேர்காணலின்போது தகவல் திரட்டப்பட்டது.

Page 44
70 மனித உரிமைகளின் நிலை 2006
கூப்பிடு தொலைவில் இருந்த பாடசாலை மூடப்பட்டுவிட்டதனால், அவர்களது பிள்ளைகள் மூன்று கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பாடசாலைக்கு நடந்து செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். ராணி சோர்வின்றி உற்சாகமானவராகவும், மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்டார். அவர் விடயங்கள் நடந்தேற வேண்டுமென விரும்பினார், தனது வீடு மற்றும் பிள்ளைகள் குறித்து பெருமை கொண்டிருந்தார் அரசு அவரை பாரபட்சமான முறையில் நடாத்தியிருந்தாலும் கூட தனக்கு பாதகமான விடயங்கள் அனைத்துக்கும் மத்தியிலும் தனது கெளரவத்தையும், மதிப்பையும் விட்டுக் கொடுக்காது இருந்தார். நாங்கள் விடை பெற்று செல்லும் வேளையில், ராணி தனது ஒரேயொரு வேண்டுகொளை தயக்கத்துடன் எங்களிடம் கூறினார். அந்தப்பகுதிகளில் மின்சார விநியோக வசதிகள் இருக்கவில்லை, அவர்கள் உள்ள குன்றின் மறுபுறத்தே சுனாமியால் கொல்லப்பட்டவாகளுக்கான பெரும் புதைகுழிகள் இருப்பதினால், ஆவி நடமாட்ட அச்சங்கள் காரணமாக வீட்டை அண்மித்த ஒரு இடத்தில் தெரு விளக்கொன்றைப் பொருத்தித் தருவதற்கு ஏற்பாடுகளை செய்து தரமுடியுமா? என்று கேட்டார்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் ஒரம் கட்டப்படுவதற்கான பிரதான காரணம் அவர்களது புனருத்தாரணங்களுக்கான திட்டங்களை அமுல்படுத்துவது அரசியல் இலாபமற்றது என்பதாகும். மேலும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் வறியவர்களாகவும், சமூகத்தில் குறைந்த கல்வியறிவு கொண்ட பிரிவினராகவும், அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய வகையில் தங்களை ஒழுங்கமைத்து தமது நிவாரணங்களைக் கோருவதற்கான செயற்றிறன் அற்றவர்களாகவும் உள்ளனர்.
சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்ட இந்தப் பிரிவினர் மீதான சுனாமியின் தாக்கம் இரு விதங்களிலானதாக இருந்தது. ஒரு புறத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அபிவிருத்தி மற்றும் புனருத்தாரண நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்திவந்த பல அரச சார்பற்ற ஸ்தாபனங்கள் தங்கள் கவனத்தை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் திசை திருப்பிக் கொண்டன. மறுபுறத்தில், சுனாமிக்கு பின்னதான நிவாரண நடவடிக்கைகளுக்காக இப்பகுதிகளுக்கு பெருமளவிலான நிதி மற்றும் வளங்கள் போன்றன வந்தாலும் அவை யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் சமூகத்தைக் கடந்து ஏனையவர்களுக்கு சென்றது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படாத வறியவர்கள் ஆகிய இரண்டு பிரிவினரதும் இந்த நியாாயமான குறைகள் பரந்துபட்ட முறையிலான நிவாரண மற்றும் புனருத்தாரண முயற்சிகளினூடாக கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 71
7. முடிவுரைக் குறிப்புகள்
இந்த அத்தியாயம், சுனாமி அலைகள் ஓய்ந்த பின் தோன்றிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்பவற்றின் அளவு, சிக்கல்தன்மை மற்றும் ஆழம் என்பவற்றை போதுமானளவு வெளிப்படுத்துவதாக அமையாது. அது ஒரு சில பிரச்சினைகளை அவற்றின் மீதானதொரு மிகவும் மட்டுப்படுத்திய கண்ணோட்டத்துடனான பார்வையை மட்டுமே வழங்குகின்றது.
26, டிசம்பர் 2005, அன்று சுனாமி அனர்த்தத்தின் முதலாம் வருட நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்ட போது நேரடியாகவும், மறைமுகமாகவும்" பாதிக்கப்பட்ட பல இலட்சக்கணக்கான மக்கள் அந்த சோக நாளை பல உணர்வலைகளுடன் நினைவுபடுத்தியிருப்பர். தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள் அவர்களை நினைத்து வேதனைப்பட்டிருப்பர், புதிய வீடுகளைப் பெற்றும் மற்றும் தங்கள் வாழ்வாதாரங்கள் மீள்நிலைப்படுத்தப்பட்டமை என்பவற்றின் மூலம் சுனாமிக்குப் பின்னதான நடவடிக்கைகளினால் பயனடைந்தவர்களுக்கு நினைவுபடுத்துவதின் மூலமான வேதனை சற்று இலகுவாக இருந்திருக்கும். அந்தளவிற்கு அதிர்ஷ்டமில்லாதவர்கள், இடைத்தங்கல் முகாம்களில் இன்னமும் தங்கியிருந்து வாடுபவர்கள், வாழ்வாதாரத்துக்கான கடன் வசதிகளுக்கு தகுதியற்றவர் களெனக் கருதப் பட்டவர்கள் , பயனாளிகள் பெயர்ப்பட்டியல்களிலிருந்து விளக்கமேதுமின்றி பெயர் நீக்கப்பட்டவர்கள் மற்றும் பதில் நடவடிக்கை எடுக்காத அதே போன்று அக்கறை காட்டாத அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தவர்கள் ஆகியோர் கோபம், மனவேதனை மற்றும் அதிக ஏமாற்றம் என்பவற்றை உணர்ந்திருப்பர். சுனாமியின் பின்னர் பல்வேறு தரப்பினரதும் கைகளில் சிக்குண்டு வேதனைப்பட்டவர்கள், பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், திருட்டுக் கொடுத்தவர்கள், இலஞ்சம் கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது நிலைமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஏங்கும் நீதி அவர்களுக்கு ஏற்படுத்தப்படல் வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நன்மைகளுக்காக உண்மையான உணர்வோடு பணியாற்றியவர்கள் திட்ட முறைகளிலிருந்த பல குறைபாடுகளால் ஏமாற்றமடைந்திருக்கக்கூடுமென்பதுடன் இவற்றைத் தமது குற்றமாகவும் அநேகம் எண்ணியிருப்பர். நிறைவுசெய்தல், புதிய அனுபவங்கள், பகிர்தல், கற்றல் மற்றும் பணிவு என்பவை மூலம் வளமடைந்தவர்கள் அநேகம் மெளனமாக தம் நன்றியைத் தெரிவித்திருப்பர். மற்றையவர்களது துன்பங்களில் அக்கறை கொண்டிராதவர்கள் மற்றும் சுனாமியை தங்களது நலன்களுக்காக, அரசியல் நலன்களுக்காக, மோசடி மற்றும் ஊழல்களுக்காக, தங்களது நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்காக,
94. எனினுடைய புரிந்து கொள்ளுதலினி படி, அலையினி விளைவுகளினால் துன்பப்பட்டிருக்காவிட்டாலும், சுனாமியின் பின்னர் நிவாரணம், மீள்நிர்மானம் மற்றும் புனருத்தாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களும் பாதிப்படைந்தவர்களே.

Page 45
72 மனித உரிமைகளின் நிலை 2006
முறையற்ற விதத்தில் மதம் மாற்றுவதற்கு, அல்லது யுத்தத்தைத் தூண்டியவர்கள் என்போர்கள் குற்றத்தை அல்லது ஒரு திருப்தியை உணர்ந்திருப்பர் அல்லது எதனையுமே உணர்ந்திருக்கமாட்டார்கள்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கூறப்பட்ட குழுக்கள் அனைத்தினதும் வாழ்க்கை, அனுபவங்கள், உணர்ச்சிகள் மற்றும் செயற்பாடுகள் என்பவை கலந்த ஓர் கூட்டாகவே இலங்கையின் சுனாமி பற்றிய அனுபவமும், நினைவுகளும் உள்ளன. இந்தக் குழுக்கள் தங்கள் தனிப்பட்ட வெவ்வேறான வாழ்க்கைப் பயணங்களைத் தொடர்கையில் இப்பயணங்கள் தவிர்க்க முடியாது ஒன்றையொன்று குறுக் கிடுகையில் ஒரு சில கோட்பாடுகளாவது வழிகாட்டல்களுக்காக இடப்படுதல் வேண்டும்.
இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் அபிவிருத்திப் பங்காளிகளால் எட்டு வழிகாட்டல் கோட்பாடுகள் மே, 2005இல் உருவாக்கப்பட்டன. இவ்வெட்டுக் கோட்பாடுகளும் பின்வருமாறு:
1. ஒப்புரவிற்கான கோட்பாடு - இனங்காட்டப்பட்ட தேவைகள் மற்றும் உள்ளூர் முன்னுரிமைகளுக்கு அமைவாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அது முரண்பாட்டு அல்லது மோதலுக்கு கூருணர்வு கொண்டதாகவும் பாரபட்சதினை ஏற்படுத்தாத ஒன்றாகவும் இருத்தல் வேண்டும்.
2. துணையதிகாரக் கோட்பாடு - மீட்பு நடவடிக்கைகள் இயலுமானவரை
அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படல் வேண்டும்.
3. கலந்தாலோசனைக்கான கோட்பாடு - பாதிக்கப்பட்ட உள்ளூர் சமூகங்கள் மற்றும் அக் கறை கொண்டோர்களுடனான ஆலோசனைகள் அவசியமானவையாகும்.
4. தொடர்பாடல் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கான கோட்பாடு - அனைத்து மட்டங்களிலுமான தீர்மானங்களை மேற்கொள்ளல் மற்றும் கொள்கை அமுலாக்கத்தின் போது தொடர்பாடல் மற்றும் ஒளிவு மறைவின்மை என்பன உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
5. எதிர் காலத்தில் ஆபத்துக்களுக்காளாகும் சாத்தியங்களைக் குறைப்பதற்கான கோட்பாடு - மீள்நிர்மாணம் மற்றும் புனருத்தாரணம் என்பன எதிர்கால இயற்கை அனர்த்தங்களின் ஆபத்துக்களுக்காளாகும் சாத்தியங்களைக் குறைத்தல் வேண்டும்.
6. தனிப்ப்ட்ட இடையீடுகளைப் பகுப்பாய்வதற்கான கோட்பாடு - சுனாமிக்குப் பின்னதான அனைத்துத் தனிப்பட்ட இடையீடுகளும் அதன் நீடித்ததன்மை, தாக்கம் மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்காக பகுப்பாயப்படல் வேண்டும்.
7. கடன் நிவாரண முகாமைத்துவக் கோட்பாடு

கடற்கோளின் (சுனாமி) மனித உரிமைகள் மீதான விளைவுகள் 73
8. ஒருங்கிணைப்பதற்கான கோட்பாடு - பயன்களை அதிகப்படுத்தவும் வேலைகளை இரட்டிப்பாக்காமல் தடுப்பதற்கும் அரசு மற்றும் அரசல்லாத செயற்பாட்டாளர்களுக்கிடையில் அனைத்துமட்டங்களிலும் ஒருங்கியைத்தல் அவசியம்*
சுனாமிக்கு பின்னதான செயற்பாடுகளில் ஈடுபட்ட அநேகமான செயற்பாட்டாளர் களால் இந்தக் கோட்பாடுகள் ஒரே சீராக அமுல்படுத்தப்படவில்லை. இது ஏனெனில், இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பல செயற்பாட்டாளர்களால் இக்கோட்பாடுகள் உருவான, சுனாமியால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாதவர்கள் அனுபவிப்பதற்கு உரித்தான சர்வதேச மனித உரிமைகளைப் புரிந்து கொள்ளுதல், மதித்தல், மேம்படுத்துதல், நிறைவேற்றுதல் மற்றும் பாதுகாத்து நிலைப்படுத்துதல் போன்ற கருத்தியல்கள் போதுமானளவு மதிக்கப்படுவதில்லை என்பதாகும்.
இதன் விளைவாக, சுனாமிக்குப் பின்னதான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்கள் சேவை வழங்குனர்களாகத் தாம் கொண்டுள்ள பொறுப்புகள் மற்றும் சுமைகளான உலக சமூகம் நம்பிக்கைப் பொறுப்பாக ஒப்படைத்த மிகுந்த நிதி மற்றும் வளங்களைக் கொண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களது துன்பங்களைத் தணித்தல் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து உதவி மற்றும் ஆதரவை வழங்குதல் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரித்தான நிதி மற்றும் வளங்களை அவர்களது சிறந்த நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்ற நம்பிக்கை நிதிப் பொறுப்பாளர்களாகவும், சேவகர்களாகவும் செயற்படுதல் போன்றவற்றின் தாற்பரியங்களை உணர்வதில்லை.
இதில் பயணிக்கின்ற குழுக்கள் எவ்வளவு விரைவாக இந்த கருத்தியல்களைப் போற்றி, அவற்றைப் பின்பற்றி இந்த மிகுந்த சுமையைத் தாங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு உண்மையானதோர் முயற்சியை எடுக்கின்றனரோ அந்தளவு விரைவில் எங்கள் நாடு சரியான திசை நோக்கி நகரத் தொடங்கும்.
சுனாமிக்குப் பின்னதான புனருத்தாரண மற்றும் மீள் நிர்மாணம்: வழிகாட்டல் (345/TL'UITGä56IbL-6OTT607 36007&5üust (6 (Post-tsunami rehabilitation and reconstruction, complience with Guiding Principles backround paper), ITDG workshop - Building Back Better, January, 2006.

Page 46
III
மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு
கிஷாலி பின்றோ ஜயவர்தன*
1. அறிமுகம்
நீதி காண்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு தத்துவப் பிரிவு என்னும் கோட்பாட்டையும் சனநாயகக் கோட்பாடுகளையும் பயன்படுத்துகையில் கலிகன் போன்ற எழுத்தாளர்கள் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
நீதிமுறை மீளாய்வானது தற்றுணிபைப் பிரயோகிக்கையில் ஏற்படும் பொருளளவிலான கொள்கைத் தெரிவுகளை நோக்கித் திசை திரும்பும்போதல்லாது, தற்றுணிபு அரசியலமைப்பு சார்ந்த எந்தக் கட்டுக்கோப்பிற்குள் ஏற்படுகின்றதோ அந்த அரசியலமைப்பு சார்ந்த கட்டுக்கோப்பின் ஒரு பாகமாக அமையும் விழுமியங்களிலிருந்து வெளிப் படும் போதுதான் மிகவும் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. பெறுமதியற்றதாக இருப்பதற்கு மாறாக மீளாய்வுக்கான நியாயப் படுத் துகையானது தற் றுணிபினி பிரயோகத் தின் மீது மட்டுப்பாடுகளாக அமைவதற்குப் போதியளவு முக்கியமானதாகக் குறித்த சில விழுமியங்களின் உறுதிப்படுத்துகையில் தங்கியுள்ளது.
விழுமியங்கள் இல்லாதிருப்பதற்கு அதற்கிணங்க, நீதிமுறையான மீளாய்வின் சட்டமுறைமை அரசியல் நடைமுறைக்குப் பதில்கூறும் பொறுப்புடைமையின் தன்மையில் அல்ல, ஆனால் அடிப்படையானதும் நிலைத்திருக்கக்கூடியதுமான
水 சட்ட, சமுதாய அறநிலையத்தின் குடியியல், அரசியல் உரிமைகள் அரசின் பிரதிப் பணிப்பாளரும், தலைமையதிகாரியும், ஆசிரியர் பீட (சட்ட ஆலோசகர்/சிறப்பு நிருபர், சண்டே டைம்ஸ், கொழும்பு.
1. டீ.ஜே. களின் தற்றுணிபுத் தத்துவங்கள், அலுவலக முறையான தற்றுணிபு பற்றிய ஒரு
சட்ட ஆய்வு, கிளரண்டன் அச்சகம், 1986.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 75
அரசியலமைப்பு சார்ந்த விழுமியங்களை முன்னெடுத்துச் செல்வதிலான கடப்பாட்டிலேயே தங்கியுள்ளது. இந்த அடிப்படைக் குறிக்கோளிலிருந்து விலகிச் செல்வதால் நீதித்துறை என்னும் நிறுவனத்தின் மீது பாழடிக்கக்கூடிய ஒரு தாக்கத்தைக் கொண்டிருப்பதோடு சட்டத்தின் குறிக்கோள் மீதும் நோக்கத்தின் மீதுமுள்ள மரியாதையை முறியடித்துவிடுகின்றது.
2005ஆம் ஆண்டின் போது இலங்கை உயர் நீதிமன்றத்தின் பல முடிவுகள் பகிரங்க விவாதங்களிலும் உரையாடல்களிலும் நியாயமாகவும் சீராகவும் விவாதிக்கப்பட்டன. இந்த முடிவுகளில், தன்னிச்சையாக அல்லாமல் காணாமற் போகும் ஒரு சந்தர்ப்பத்தில் பொதுவாகப் பாராட்டப்படும் உயிர் வாழ்வதற்கான உரிமையின் பிரயோகமும் மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசுவதற்கும் கருத்துத் தெரிவிப்பதற்குமான சுதந்திரத்திற்குள் தகவல் பெறுவதற்கான உரிமையின் விஸ்தரிப்பும் அடங்கும்.
முதலாவதாக முன்னைய பிரதம மந்திரியால் (தற்பொழுது இலங்கையில் பதவியிலிருக்கும் நிறைவேற்று சனாதிபதி) சார்த்துரைக்கப்பட்ட குற்றவியல் கையாடல்/நம்பிக்கைத் துரோகச் செயல்களையிட்டு குற்றவியல் புலனாய்வு விசாரணையை நிறுத்துதல், இரண்டாவதாக வடக்கிலும் கிழக்கிலும் சுனாமியின் பின்னரான நிவாரண விநியோக அமைப்பின் குறிப்பிட்ட அம்சங்களின் நடைமுறை நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட விடயமாகிய பிரபல "P-Toms” வழக்கு என்பன தொடர்பிலான இடைக்காலக் கட்டளைகள் சம்பந்தப்பட்ட மேலும் முரண்பாடான வினாக்களுக்கும் கவனம் ஈர்க்கப்பட்டது. இந்த முடிவுகள் இவ்வத்தியாயத்தில் ஆராயப்படுகின்றன.
2. இந்த அரசியலமைப்பு சாரந்த கோட்பாட்டைப் பற்றிய உரையாடலை "The Egodawela Judgement: A Judicial Response to Executive Interferences" in Most point, Legal Review 2001 volume 5 Centre for Policy Alternatives, Colombo 616ip b|T656) 3.Bg5 ஆசிரியரின் வாக்களிக்கும் உரிமை என்ற ஆய்வின் பின்னணியில் நோக்கவும். இந்த வழக்கு (ஜயந்த அதிகாரி எகொடவில மற்றும் ஏனையோர் எதிர் தேர்தல்கள் ஆணையாளர்) அலுவலக முறையான சட்ட அறிக்கைகளில் தவறாக மெதிவக்க எதிர் தேர்தல்கள் ஆணையாளர் (2001) 1 இலங்கை சட்ட அறிக்கை (177) என அறிக்கையிடப்பட்டுள்ளது. இது தேர்தல் மோசடியைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அரசியலமைப்பு சார்ந்த அதிகாரத்துடன் தத்துவமளிக்கும் முறையில் 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்திற்கு குறிப்பிட்ட நோக்கத்தை கருத்திற் கொண்டு பொருள்கோடல் செய்த அப்போதிருந்த உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.டி.எச். பெர்னாண்டோ என்பவரால் வழங்கப்பட்ட பின்விளைவு வாய்ப்புச் செறிந்த தீர்ப்பொன்று சம்பந்தமானது.
3. வண. கலாநிதி ஒமல்பே சோபித தேரோ எதிர் தயானந்த திசநாயக மற்றும் ஏனையோர் (SC (FR) 278/2005, SCM26.08.2005 வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு (நீதியரசர் சரத் நந்த சில்வா, நீதியரசர்கள் ஜயசிங்க உடலாகம, திசநாயக, அமரதுங்க ஆகியோரின் உடன்பாட்டுடன்) சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்தின் இரண்டாம் தவணை சரியாக முடிடைவது தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி பின்வரும் இரண்டு அரசியலமைப்பு சார்ந்த உறுப்புரைகளின் கீழ் வழங்கப்பட்டபோதிலும் சிறந்த விடயம் பற்றிய தீர்ப்பைத் தெரிவிக்கையில் பிரதானமாக அரசியலமைப்பின்

Page 47
76 மனித உரிமைகளின் நிலை 2006
கடந்தகால நடைமுறைக்கிணங்க இவ்வத்தியாயம் சட்டமூலங்கள் மீது உயர் நீதிமன்றத்தின் தெரிவு செய்யப்பட்ட சில தீர்மானங்களையும் உரிமைகளின் முன்னெடுப்பில் விளையும் அரசியலமைப்பின் 140ஆம் உறுப்புரையின் நியதிகளின்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானங்களையும் ஆராயும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேசப் பொருத்தனைக்கு விருப்பத்திற்குரிய வரைவேட்டின் நியதிகளின்படி இலங்கைப் பிரசையொருவரால் அணைக்கப்பட்ட தனியாள் தொடர்பாடல் ஒன்றுக்கு மறுமொழியாக ஐக்கிய நாடுகளின் தொடர்பாடலொன்றைப் பரிசீலனை செய்வதோடு முடிவடையும்.
இத்தொடர்பாடல் நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு சார்ந்த தத்துவங்களின் பிரயோகம் தொடர்பில் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
2. குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளின் பின்னணியில்,
உயர்நீதிமன்றத்தின் நீதிமுறை மறுமொழி
2.1. ஆட்கள் ‘காணாமற் போதலின்” பின்னணியில் வாழும்
உரிமையை உறுதிப்படுத்துதல்
இவ்வாண்டு விளம்பப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த முடிவொன்றில் (கணபதிப்பிள்ளை மச்சவல்லவன் எதிர் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, பிளாண்டன் பொயின்ட், திருகோணமலை மற்றும் ஏனையோர் :) "காணாமற் போகாதிருப்பதற்கான உரிமை அரசியலமைப்பின் உறுப்புரை 13(4) என்பதனை வலியுறுத்துகின்றது என உயர் நீதிமன்றம் அங்கீகரித்தது. அரசியலமைப்பு சார்ந்த உறுப்புரை கூறுவது யாதெனில் “சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கு இணங்கத் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் கட்டளையின் மூலமாகவன்றி ஆள் எவரும் மரணதண்டனையினால் அல்லது மறியற் தண்டனையினால் தண்டிக்கப்படுதலாகாது.” என்பதாகும்.
இவ்வழக்கு 1990ஆம் ஆண்டு பிளாண்டன் பொயின்ட் இராணுவ முகாமால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கையொன்றில் தமது
125(1)ஆம் 126ஆம் உறுப்புரைகளிலேயே பிரதானமாகத் தங்கியிருந்தது. ஆதலால் அது இந்த அத்தியாயத்தில் ஆராயப்படவில்லை. இவ்வழக்கில் நீதிமன்றத்தால் 125(1)ஆம் உறுப்புரையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தீர்க்கரீதியிலான திறனாய்வொன்றுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செய்தி மடலில் சிரேஷ்ட வழக்கறிஞர் திரு.ஆர்.கே.டப்ளியூ. குணசேகரவினால் ஈடுபடுத்தப்பட்ட “CBK to 2006 - Why the Supreme Court decision is wrong,” 616 ug568)6]T LJTiddishub.
4. SC Appeal No. 90/2003 S.C. (Spl.) LA No. 177/2003, SCM 31.03.2005. ostin Bouygst ஷிராணி ஏ. பண்டாரநாயக, நீதியரசர்கள் என்.கே. உடலாகம மற்றும் ராஜா பெர்னாண்டோ உடன்பட்டனர்.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 77
இரண்டு புதல்வர்களுடன் கைதுசெய்யப்பட்டிருந்த தந்தையொருவரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு விண்ணப்பமொன்று தொடர்பிலானதாகும். அதன் பின்னர் தந்தை விடுவிக்கப்பட்ட அதேவேளை அவரது புதல்வர்கள் தொடர்ந்து இராணுவ முகாமின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்து பின்னர் காணாமற்போயினர். கடந்த தசாப்தங்களின் துயருக்கு சான்று பகருவதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்னமும் முடிவுறாதிருக்கின்றதுமான முக்கிய வழக்குகளுள் இதுவும் ஒன்று.
அவரது புதல்வர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்குத் தந்தையின் மனுவில் எடுத்துக்காட்டப்பட்ட இராணுவ அலுவலரே பொறுப்பாளியாவார் என்பதனை எண்பிக்குமாறு அவர் மீது சுமத்தப்பட்ட பொறுப்பை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றவில்லை என்ற அடிப்படையில் தந்தையால் அணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட போது அவர் அதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். அந்தக் கட்டத்தில் நீதிமன்றம் மிக அபூர்வமான ஏதுக்களின் மீது மேன்முறையீட்டிற்கு அனுமதி வழங்கியது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் அவரது விண்ணப்பத்தின் விசாரணையின் பொழுது எந்த அரச அலுவலரின் செயலுக்காக அரசு பொறுப்பாயிருந்ததோ அந்த அரச அலுவலரால் அரசியலமைப்பின் 13(4)ஆம் உறுப்புரையின் கீழ் அடிப்படை உரிமை மீறலொன்று மீறப்பட்டதா என்பதே அத்தியாவசியமான கேள்வியாக அமைந்தது.
இதன் விளைவாக அரசியலமைப்பின் 126(3)ஆம் உறுப்புரையின் நியதிகளின்படி முழு விடயமும் உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமா? மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை விண்ணப்பமொன்று விசாரிக்கப்படும் பொழுது அடிப்படை உரிமை மீறல் ஒன்றைப் பற்றிய முகத்தோற்ற சான்று ஒன்று இருக்குமிடத்து நீதிமன்றம் அத்தகைய விடயத்தைத் தீர்மானத்திற்காக உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்துதல் வேண்டும்.
இலங்கை அரசியலமைப்பில் உயிர் வாழ்வதற்கான திட்டவட்டமான உரிமையொன்று விடுபட்டிருக்கும் நிலையில் உயிருக்கான உரிமை அல்லது (எதிர்மறையாகக் கூறுமிடத்து) உயிர் பறிக்கப்படாதிருப்பதற்கான உரிமை முன்பு நீதிபதிகளால் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், சித்திரவதையின் விளைவாக அரச கட்டுக்காவலில் இருக்கும் பொழுது இறக்கின்ற ஆளொருவரின் சட்டமுறையான மரபுரிமையாளருக்கு அல்லது தங்கிவாழுநருக்கு நீதிமன்றத்தை நகர்த்துவதற்கும் பாதிக்கப்பட்டவர் அவ்வாறு நேரடியாக செய்ய முடியாத

Page 48
78 மனித உரிமைகளின் நிலை 2006
நிலையிலிருக்குமிடத்து நிவாரணம் பெறுவதற்குமான உரிமையை வழங்கிய 2003ஆம் 2004ஆம் ஆண்டுகளிலான அண்மைய நீதித்துறை முன்னேற்றங்கள் பழைமைவாய்ந்த கோட்பாடுகளை மாற்றியமைத்தன.
இந்த நீதித்துறைப் பின்னணியில் இதே பொருள்கோடல் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் நீதியரசர் சிராணி ஏ. பண்டாரநாயக நீதிமன்றத்திற்காக எழுதும் போது மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் கட்டளையை ஆக்கிய நேரத்தில் சில அரச அலுவலர்களால் அரசியலமைப்பின் 13(4) ஆம் உறுப்புரையின் மீறுகையொன்று இருந்தது. “சந்தேகத்திற்கு இடமில்லாதிருந்தது' என்பதனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்துகை அரசியலமைப்புரீதியில் தேவைப்பட்டது என மச்சவல்லவன் வழக்கில் எடுத்துரைத்தார்.
126(3)ஆம் உறுப்புரை தம்முடைய விண்ணப்பத்துடன் நீதிமன்றத்தை நகர்த்தும் பொறுப்பை மனுதாரர் மீது சுமத்தவில்லை எனவும் அதேவேளை இது தொடர்பிலான பொறுப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தையே சாரும் எனவும் முக்கியமாக அவதானிக்கப்பட்டது. பேராணை விண்ணப்பத்தை விசாரிக்கையில் அடிப்படை உரிமை மீறல் ஒன்றுள்ளதா என்பதனைத் தீர்மானிப்பது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கடமையாகும்.
உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில் வைக்கப்பட்ட விடயத்தைப் பற்றிய பகுப்பாய்வொன்றை மேற்கொண்ட நீதியரசர் பண்டாரநாயக சம்பந்தப்பட்டவரை கைது செய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் 1ஆம் எதிர்வாதி பொறுப்பாளியாக இல்லாதபோதிலும் அத்துடன்/அல்லது கைது செய்தல் மற்றும் தடுத்துவைத்தல் தொடர்பில் அவர் எதையுமே அறிந்திராதபோதிலும் மேற்படி முகாமின்
5. சில்வா எதிர் இத்தமல்கொட (நீதியரசர் எம்.டீ.எச். பெர்னாண்டோவின் தீர்ப்பு 2003 (2) SriLR, 63) மற்றும் வேவலகே ராணி பெர்னாண்டோ (காலஞ்சென்ற லமா ஹேவகே லால் என்பவரின் மனைவி) மற்றும் ஏனையோர் எதிர் பொறுப்பலுவலர், சிறு தவறுகள், சீதுவை பொலிஸ் நிலையம், சீதுவை மற்றும் மேலும் 8 பேர்) SC (FR) No. 700/2002, SCM26/07/2004, நீதியரசர் ஷிராணி ஏ. பண்டாரநாயகவின் தீர்ப்பு நீதியரசர்கள் ஜே.ஏ.என். டீ சில்வா நிஹால் ஜயசிங்க இருவரும் உடன்பட்டனர்.
6. இந்த விரிவாக்கம் பலருக்குப் பொது அறிவுக்குட்பட்டதாகவும் இயற்கையான தர்க்கரீதியிலானதாகவும் காணப்பட்டபோதிலும் உட்கிடையான இந்த உரிமையை அங்கீகரிப்பதற்கு இலங்கை உயர் நீதிமன்றத்திற்குப் பல தசாப்தங்கள் எடுத்தன. 126(2)ஆம் உறுப்புரையின் எந்த ஆளுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதோ அந்த ஆள் தாமாகவோ அல்லது சட்டத்தரணி ஒருவரின் ஊடாகவோ நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என விதித்துரைக்கின்றது. எனினும் முற்போந்த அடிக்குறிப்பில் எடுத்துக்காட்டப்பட்ட முடிவில் நீதிமன்ற ஆள்’ என்னும் சொல்லுக்குப் பரந்த அடிப்படையில் பொருள் கொண்டது. அல்லாவிடில் மறியற்றண்டனை அல்லது சித்திரவதை என்ற குறைந்தளவு மீறலுக்கு நிவாரணம் வழங்குதலான முரண்பாடு காணப்படும். ஆனால், இதே சித்திரவதைச் செயல்கள் ஊடாக மரணம் விளைவித்த பாரிய தவறுக்கு எதுவுமில்லை என நீதிமன்றம் அவதானித்தது.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 79
கூறொன்றில் அல்லது இரு கூறுகளிலுமிருந்த அலுவலர்களால் சம்பந்தப்பட்டவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருக்கப்பட்டிருக்கலாம் எனத் தீர்மானித்தார்.
குடிமக்கள், விசேடமாக கலவரங்கள் உச்சக் கட்டத்திலிருந்த ஒரு நேரத்தில் அனுமதியின்றி பிளாண்டன் பொயின்ட் இராணுவ முகாமில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பர் என்று நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆதலால் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ அலுவலர்கள் அறிந்திருந்த நிலையிலும் அவர்களது மறைமுக ஆதரவுடனுமே இராணுவ முகாமில் வைத்திருக்கப்பட்டனர் எனவும் மேன்முறையீட்டாளரின் இரண்டு புதல்வர்களும் தங்கியிருக்கின்றார்கள் என்பதற்குப் பதில் கூறும் பொறுப்பு இராணுவ அதிகாரிகளையே சாரும் எனவும் முடிவெடுப்பது நியாயமானதே.
நீதியரசர் பண்டாரநாயக தொடர்ந்து பின்வரும் கேள்வியை எழுப்பினார்:
அத்தகைய சூழ்நிலைகளில் ஆட்கொணர்வு பேராணையின் அளிப்பிற்கு நீதிமன்றத்தை நகர்த்துவதற்கான உரிமை மேன்முறையீட்டாளருக்கு இல்லை எனக் கூறுவது சரியாகுமா? ஆட்கொணர்வுப் பேராணை பரிகாரத்தின் இயல்பினதான பேராணையொன்றாகும் என்பதுடன் ஆளுக்குரிய சுதந்திரம் தவறான முறையில் மறுக்கப்படும் எல்லா வழக்குகளிலும் ஒரு நிவாரணமாகக் கிடைக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்வதற்கும் தடுத்து வைப்பதற்கும் முதலாவது எதிர்வாதி அலுவலரே பொறுப்பாவார் என்பதற்கு சான்று எதுவுமில்லையாதலால் பாதிக்கப்பட்டவர்கள் காணாமற்போனமைக்கு அரசாங்கம் பொறுப்பு எனத் தீர்மானிக்கப்பட்டு மொத்தம் ரூபா 300,000 நட்டஈடும் செலவுகளும் செலுத்துமாறு கட்டளையிடப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் 1990 யூலை மாதத்தில் கட்டுக்காவலுக்கு எடுக்கப்பட்டு மேன்முறையீட்டாளர் 1994 யூன் மாதந்தான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலைக்கும் வந்துள்ளார் என்ற போதிலும் அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்களை அணைப்பது தொடர்பில் அரசியலமைப்பின் 126(2)ஆம் உறுப்புரையில் விதித்துரைக்கப்பட்ட ஒரு மாத கட்டாயக் கால வரையரையை மேன்முறையீட்டாளர் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவில்லை என்க் கூறுவது சரியல்ல.
இங்குள்ள பிரச்சினை என்னவெனில் (நீதிமுறையில் அபிப்பிராயப்பட்டவாறு) ஆட்கொணர்வு பேராணையொன்றேயொழிய உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் சார்ந்த நியாயாதிக்கத்தின் நியதிகளின்படி அணைக்கப்பட்ட விண்ணப்பம் ஒன்றினைப் பற்றியதல்ல. இந்த வழக்கில் மேன்முறையீட்டாளர் முற்றிலும் வேறுபட்ட ஒரு காரணத்தின்மீதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நகர் தி தியுள்ளார் . ஆதலால் ஒரு மாதகால கால வரையறை மேன்முறையீட்டாளருக்கு ஏற்புடைத்தானதல்ல. அத்தகைய சந்தர்ப்பத்தில் கால

Page 49
80 மனித உரிமைகளின் நிலை 2006
வரையறையை ஏற்புடைத்தாக்குவது இந்த மேன்முறையீடு தொடர்பில் இயைபானதல்ல.
நீதிமன்றத்தின் முடிவு சரியானதொரு நேரத்தில் கிடைக்கப்பெற்றது. பல ஆண்டுகளாக நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள குடும்பங்களின் வலையமைப்புகளாலும் பாதிக்கப்பட்டவர்களாலும் காணாமற்போதல் என்னும் விவகாரம் அரசியலமைப்புரீதியிலும் தண்டனைச் சட்டத்தாலும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென கிளர்ச்சி பண்ணப்பட்டு வந்துள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையிலான காணாமற்போதல் பற்றிய சம்பவங்களின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலிருந்த ஒரு காலக் கட்டத்திலேயே இந்தக் கிளர்ச்சி இயக்கம் நியாயமானதே என உணரப்பட்டது. நீதி கோரி நின்ற ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சவாலைச் சமாளிப்பதற்கு சட்டம் போதுமானதல்ல என்பது வெளிப்படையாகத் தென்பட்டது. ஒரு புறம் ஆட்கொணர்வு என்ற நிவாரணம் சகிக்க முடியாதவகையில் மந்தகெதியில் இருப்பதாக எணி பிக்கப்பட்டது. மறுபுறம் உயிருக்கான உரிமை விட்டுவிடப்பட்டுள்ளதன் மூலமும் அதேபோல் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பிலான விண்ணப்பங்கள் அவை நிகழ்ந்ததாக அறியப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் அணைக்கப்படவேண்டுமென்ற அரசியலமைப்புரீதியிலான தடையின் மூலமும் அடிப்படை உரிமை மீறல்கள் சார்பான நியாயாதிக்கத்தைக் கோரும் வாய்ப்பு தடை செய்யப்பட்டிருந்தது.
திட்டவட்டமான நியதிச்சட்ட/அரசியலமைப்பு சார்ந்த மாற்றம் இது தொடர்பில் இன்னமும் ஒரு முந்நுரிமையாகும். ஆயினும் மச்சவல்லவன் வழக்கில் ஆட்கொணர்வுப் பேரணை விண்ணப்பத்தின் பின்னணியில் அரசியலமைப்பின் 13(4)ஆம் உறுப்புரிமையைப் பயன்படுத்திய உயர் நீதிமன்றத்தின் கற்பனைத்திறன் நீண்ட காலத் தேவைப்பாடொன்றாகக் காணப்பட்ட சட்டத்தின் விரிவாக்கம் தொடர்பில் நீதிமுறை எதிர்வினைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றது.
2.2. தகவலுக்கு அணுக்கம் பெறுவதற்கு பிரசைகளின்
உரிமை என்வயரின்மன்ட்டல் பவுண்டேஷன் லிமிட்டெட் எதிர் இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஏனையோர் வழக்கில்" கொழும்பின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற கடலோர உலா வீதியான காலிமுகத்திடலின் அபிவிருத்தி தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் (UDA) தனியார் கம்பனியொன்றுக்கும் (ஈ.ஏ.பி. நெட்வேர்க்ஸ் (பிறைவேட்) லிட்டெட்) இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக் கையொன்றின் உள்ளடக்கங்களுக்கு
7. SC (FR) Application 47/2004, SCM 28.11.2005 LFJgbLD 5 guj &f gJg afså 6uT, நீதியரசர்களான என்.கே. உடலாகம, என்.ஈ. டீ திசநாயக இருவரும் உடன்பட)

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 81
பொதுமக்கள் அணுக்கம் பெறுவதற்கான உரிமையை நீதிமன்றம் உன்னிப்பாகக் கருத்திற் கொண்டது. 2001இல் அரசியல் நிர்வாகத்தின் மாற்றத்தையடுத்து ந.அ.அ.இனால் “பாரிய பொழுதுபோக்குத் தொகுதி” ஒன்றை அபிவிருத்தி செய்வதற்காக தனியார் கம்பனியொன்றுக்குக் கையளிக்கப்படுவதை முனைப்பாக எடுத்துக்காட்டிய 2003 டிசெம்பர் மாத செய்தித்தாள் அறிக்கை ஒன்றிலிருந்து இந்த வழக்கு எழுந்தது.
மனுதாரருக்கு (பகிரங்க அக்கறை கொண்ட ஒழுங்கமைப்பொன்று) இந்த அறிக்கைகள் பற்றிய குறிப்பாக பொதுமக்கள் மைதானத்தை சுதந்திரமாகவும் தடங்கலின்றியும் அணுக முடியாது என்ற அச்சத்தைத் தணிப்பதற்கு “கண்ணாடியைவிடக் கூடுதலாக ஊடறுத்துக் காட்டுகின்றது” என்ற தலைப்பில் ந.அ.அ.ஆல் அரைப்பக்க செய்தித்தாள் அறிவித்தலைப் பற்றிய விளக்கம் தரப்பட்டதன்மேல் மனுதாரர் தமக்கு இரண்டு திறத்தவர்களுக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அணுக்கம் தேவை என இரு அமைப்புகளிடமும் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். ஆயினும் தான் உடன்படிக்கையின் பிரதியொன்றை அனுப்ப முடியாத நிலையிலிருப்பதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை பதிலனுப்பியது. ஈ.ஏ.பி. நெட்வேர்க்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டிடமிருந்து பதிலே இல்லை.
இது தகவலுக்கான உரிமை மறுக்கப்படுவதாக அமைகின்றது எனவும் (அரசியலமைப்பின் 14(1) (அ) என்னும் உறுப்புரையில் உத்தரவாதமளிக்கப்பட்ட பேச்சு சுதந்திரம், வெளியீட்டு சுதந்திரம் என்பவற்றிற்கான உரிமையில் உட்கிடையாகப் புலப்படுவது போல) இது அரசியலமைப்பிற்கு மாறானது எனவும் சார்த்துரைத்து மனுதாரர் நீதிமன்றத்தின் முன்னிலையில் மனுவொன்றை அணைத்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையே அதன் செய்தித்தாள் அறிவித்தலின் மூலம் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தது ஆதலால் இதன் விளைவாக இயைபான ஆவணங்களின் பிரதிகள் (உரித்தாக்கற் கட்டளை, உடன்படிக்கை, அபிவிருத்திக்காக அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்கள் என்பவற்றின் பிரதிகள்) தனக்குக் கிடைக்கச் செய்விக்கப்படுதல் வேண்டும் என்ற திட்டவட்டமான உரிமை மனுதாரருக்கு எழுந்தது.
14(1) (அ) என்னும் உறுப்புரையின் கீழ் தகவலுக்கான உரிமையின் தன்மை. தனது மறுமொழியின் அலுவலக முறையான தகவலுக்கான அணுக்கம் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் மறுக்கப்பட்டமை உறுப்புரை 14(1) (அ) என்பதன் கீழ் மனுதாரரின் உரிமை மீறலொன்றாகும் என்ற கருத்தை நீதிமன்றம் கொண்டிருந்தது. அதாவது உறுப்புரை 14(1) (அ) என்பதிலுள்ள உரிமைகள் அர்த்தமுள்ளவையாகவும் பயனுறுதியுடையனவாகவும் அமைவதற்குப் பொதுமக்களின் ஆதிக்கத்திலிருக்கவேண்டிய விடயமொன்று தொடர்பில் பகிரங்க
8. இது ஐக்கிய தேசிய முன்னணி 2001 டிசெம்பரில் அதிகாரத்திற்கு வந்ததைக் குறிப்பிடுகின்றது.

Page 50
82 மனித உரிமைகளின் நிலை 2006
அதிகாரசபையொன்றிடமிருந்து இயைபான தகவலைப் பெறுவதற்கு ஆளொருவருக்கு உட்கிடையான உரிமையொன்றுளது என விதிக்கப்பட்டது. “சம்பந்தப்பட்ட விடயத்தில் பொதுமக்களின் அக்கறையானது அரச அலுவல்களையும் அலுவலக முறையான தொடர்பாடல்களையும் சார்ந்த நம்பகத்தன்மையைவிட வலுவானதாக இருக்குமிடத்து நிலைமை அவ்வாறு இருப்பது அவசியம்’ என அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நீதித் தீர்ப்பு அதன் தர்க்க வாதத்தில் முன்னைய முன்தீர்ப்புச் சட்டத்தை ஆராயாதபோதிலும் தகவலுக்கான உரிமையை உள்ளடக்கும் விதத்தில் அரசியலமைப்பு சார்ந்த உரிமையைப் பேச்சுச் சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் வெளியீட்டுச் சுதந்திரத்திற்கும் நீடிப்பதற்கான முன்னைய எத்தனிப்புகளின் பின்னணியைப் பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். இயைபான இலங்கை அரசியலமைப்பு சார்ந்த ஏற்பாடு உறுப்புரை 14(1) (அ) என்பதில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “ஒவ்வொரு பிரசையும் வெளியிடுதல் உட்பட பேச்சுச் சுதந்திரமும் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும் உடையவராவார்.”
உயர் நீதிமன்றத்தின் முன்னைய விளம்பல் சுதந்திரமான பேச்சுக்கான உரிமையில் தகவல் பெறுவதற்கான உரிமையும் அடங்கியுள்ளது எனத் தீர்மானித்தது. பெர்னாண்டோ எதிர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன" வழக்கில் பேச்சுச் சுதந்திரமானது ஏனைய சுதந்திரங்களோடு சேர்த்து கோரப்படலாம் என்பதுடன் வெளிப்படையான உத்தரவாதங்களை அர்த் தமுள்ளவையாக்குவதற்கு அவசியமான உட் கிடையான உத்தரவாதங்களுக்கும் பேச்சுச் சுதந்திரம் நீடிக்கப்படுவதுடன் அதனையும் உள்ளடக்குகின்றது என நீதிமன்றம் அவதானித்தது. ஆகவே பேச்சுச் சுதந்திரத்தைப் பிரயோகிப்பதற்குத் தகவல் அவசியப்படுமிடத்து அத்தகைய தகவலைப் (நேர்க்காணல் மற்றும் ஒலிப்பதிவுகள் ஊடாக) பெறுவதற்கும் பதிவு செய்வதற்குமான உரிமையை உள்ளடக்கலாம்.' தகவலுக்கான உரிமையை முழுமையாக அர்த்தமுள்ளதாக்குவதற்குத் தகவலின் மூலவளத்தை வெளியிடுமாறு நிர்ப்பந்திக்கப்படாதிருப்பதற்கான சிறப்புரிமை அவசியமாயின்
9. விஸ்வலிங்கம் மற்றும் ஏனையோர் எதிர் லியனகே மற்றும் ஏனையோர் (1983) 2 Sri LR
311
10. (1996) 1 Sri LR 157, நீதியரசர் எம்.டீ.எச். பெர்னாண்டோவின்படி
ll. இந்த வழக்கில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சியொன்று அதிகாரிகளால் திடுதிப்பென்று நிறுத்தப்படாதிருப்பதற்கு பங்குபற்றும் வானொலி நேயர் ஒருவரின் உரிமை கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் கீழ் நிலைநாட்டப்பட்டது. எனினும் வானொலி நேயர் ஒருவரின் உரிமை, அதாவது வானொலி நேயரது மட்டுமே (தகவலை மாத்திரம் பெறுவதில்) 14(1) (அ) என்னும் உறுப்புரையில் பேச்சுச் சுதந்திரத்திற்கான உரிமையாளரின் நோக்கெல்லைக்குட்பட்டதைவிட இலங்கை அரசியலமைப்பின் 10ஆம் உறுப்புரையால் உத்தரவாதமளிக்கப்பட்ட சிந்தனை செய்யும் உரிமையின் கீழ் வருகின்றது என சட்டநெறி அபிப்பிராயம் கொள்ளப்பட்டது. அரசாங்கங்களையும் தகவலையும் பெறுவதற்கான உரிமை தொடர்பில் இந்த சட்டநெறித் தர்க்கவாதம் (தகவலுக்கான உரிமையில் விதிமுறையின் கீழ் எடுத்துக்காட்டப்பட்டவாறு, நேர்நிலையாக, சிந்தனை செய்யும் சுதந்திரத்தின்

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 83
அத்தகைய சிறப்புரிமையொன்றையும் உள்ளடக்குவதற்குக்கூட இவ்வுரிமை
நீடிக்கப்படலாம் என்ற நீதித்துறை வற்புறுத்துதல் குறிப்பாக ஊடகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது கருத்திற் கொள்ளப்படலாம்.
இந்த வழக்குகளின் பின்னணியில் கருத்துத் தெரிவிப்பதற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் சுதந்திரத்தில் தகவல் பெறுவதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்குவதற்குக் குடியியல் சமுதாயக் குழுக்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இம் முயற்சிகள் 2000ஆம் ஆண்டின் அரசியலமைப்பு வரைவின் 16(1)ஆம் வாசகத்தில் பிரதிபலித்தன.
உறுப்புரை 16(1) ஒவ்வோராளும் வெளியீட்டிற்கான சுதந்திரம் உட்பட பேச்சுச் சுதந்திரத்திற்கும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்திற்கும் உரித்துடையவராவார்; இந்த உரிமைவாய்மொழியாகவாயினுஞ்சரி, எழுத்தில், அச்சு வடிவில், ஒவியத்தின் வடிவிலாயினுஞ்சரி, வேறு ஊடகத்தினுTடாகவாயினுஞ் சரி, அபிப் பிராயம் தெரிவிப்பதற்கும் தகவலையும் கருதுக் களையும் தேடுவதற்கும் பெறுவதற்கும் அளிப்பதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்குதலும் வேண்டும்.
தகவலுக்கான உரிமையை கருத்துத் தெரிவிக்கும் உரிமைக்குள் கொண்டுவருவதற்கான எத்தனிப்புகளுக்கு ஓரளவு எதிர்ப்பு இருந்ததென்பதும் அவதானிக்கப்படுதல் வேண்டும். உதாரணமாக இலங்கை சட்ட ஆணைக்குழு அதன் முந்திய பதவிக்காலத்தின்போது தகவலைத் “தேடுவதற்கான” உரிமை கருத்துச் சுதந்திரத்தில் உள்ளடக்கப்படக் கூடாது என அபிப்பிராயப்பட்டது. தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டம் இலங்கைக்குத் தற்பொழுது இல்லாத நிலையில் தகவல் பெறுவதற்கான புதிய உரிமையொன்றை அறிமுகம் செய்வதற்கான ஒரு முயற்சியாக இப்புத்தாக்கம் கருதப்படலாம் என ஆணைக்குழு தெரிவித்த அச்சட்டத்தின் காரணமாகவே அத்தகைய ஆட்சேபணை முன்னெடுக்கப்பட்டிருந்தது. சட்ட ஆணைக்குழு குறிப்பாக அந்தரங்கத் தகவலைப் பற்றி அக்கறை கொண்டிருந்தது."
ஆனால், இந்த அச்சத்திற்குப் போதியளவு நியாயப்படுத்துகை இருக்கவில்லை. மனித உரிமைகள் மீதான ஐரோப்பிய சமவாயத்தின் (ECHR) 10ஆம் உறுப்புரை
பின்தொடர்பொன்றாக 1997ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் மேலும் முன்னேற்றம் செய்யப்பட்டது. ஒலிபரப்பும் அதிகாரச் சட்டத்தின் S.D. இல. 1797 - 151 97) சுயேச்சையில்லாத ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தும் குழுவொன்றைத் தாபிப்பதற்கான சட்டமூலம் தீர்மானிக்கப்பட்ட போது அரசியலமைப்புக்கு மாறானதெனத் தீர்மானிக்கப்பட்டது.
2. அரசியலமைப்பு வரைவில் மேம்படுத்தப்பட்ட உரிமைகள் அத்தியாயமொன்றின் சட்டவாக்கம் சனாதிபதியின் அதிகாரப் பரவல் அமைப்புகள் மற்றும் தத்துவங்கள் தொடர்பில் விரைவின் ஏனைய வாசகங்கள் பற்றி அரசியல் தலையீடுகள் காரணமாக 2000ஆம் ஆண்டிலிருந்து தாமதப்படுத்தப்பட்டது.
3, 2000ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் வரைவின் மீது இலங்கைச் சட்ட ஆணைக்குழுவின்
குறிப்புரைகள் கடைசிக் குறிப்பு 30 பக்கம் 25.
14. இதுவுமதே.

Page 51
84 மனித உரிமைகளின் நிலை 2006
தொடர்பில் ஐரோப்பிய நீதிமன்றத்தின் சட்டவியலில் புலப்படுமாறு தகவல் பெறுவதற்கான உரிமையானது இரகசியமான தகவலை வெளியிடுமாறு அரசை நிர்ப்பந்திக்கும் உரிமையை புறநீக்கம் செய்வதற்காகவே என ஐயப்பாட்டிற்கு இடமில்லாமல் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
தகவல் பெறுவதற்கான உரிமையானது ஆளொருவரை மற்றவர்கள் அவருக்குத் தெரிவிக்க விரும்பக்கூடிய அல்லது தயாராயிருக்கக்கூடிய தகவலைப் பெறுவதனை மட்டுப்படுத்துவதிலிருந்து அரசாங்கமொன்றைத் தடைசெய்கின்றது. தற்போதைய வழக்கினைப் போன்ற சூழ்நிலைகளில் உறுப்புரை 10, தகவல் அடங்கிய இடாப்பொன்றுக்குத் தமது தனிப்பட்ட நிலையில் அணுக்கம் பெறுவதற்கான உரிமையை தனியாளொருவருக்கு உரித்தாக்குவதுமில்லை, அத்தகைய தகவலைத் தனியாளொருவருக்குத் தெரிவிக்கும் கடப்பாடொன்றை அரசாங்கத்திற்கு அளிக்கவுமில்லை.
தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டம் ஒன்றைச் சட்டவாக்கம் செய்வதற்கான அண்மைக்கால முயற்சிகளின் பின்னர் இந்த விவாதங்கள் குறிப்பாக முக்கியமானவை. 2003ஆம் ஆண்டில் குடியியல் சமுதாயத்தினதும் ஊடகத்தின் உள்ளிட்டுடன் வரைவொன்று வகுத்தொதுக்கப்பட்டு இப்பொழுது பொதுமக்களின் அரங்கிலுள்ளது." இது குறிப்பாக அரசாங்க அதிகாரிகளினால்
15. லீடர் எதிர் சுவீடன் (1987) (9) EHHR 433 பந்தி 74 அத்துடன் பார்க்கவும். குஸ்கின்
6aġġi u G35. [1989 (12) EHHR 36.
16. பார்க்கவும் சட்ட, சமுதாய அறநிலைய மீளாய்வு தொகுதி 14, கூட்டு வெளியீடுகள் 192, 193. அக்டோபர், நவம்பர் 2003. சட்டத்துறைத் தலைமையதிபதி, அப்போதைய நீதி அமைச்சுச் செயலாளர், சட்ட வரைநர், சிரேஷ்ட பத்திரிகையாசிரியர்கள், சட்டத்தரணிகள், சட்ட அறிஞர்கள் ஆகியோர் அடங்கிய வரைவுக் குழுவொன்றினால் தீர்க்கமாக முடிவு செய்யப்பட்ட வரைவொன்று பகிரங்கக் குழுமங்களின் கையிலுள்ள தகவலுக்கு ஏற்புடைத்தாக்கியது. அத்துடன் முறைசார்ந்த பதவிப் பெயர்களுக்கு அல்லாமல் வழங்கப்படும் சேவைகளின் வகைகளுக்குக் கவனம் செலுத்தி "தகவல்”, “குழுமங்கள்” என்பவற்றிற்குப் பரந்த அளவில் பொருள்கோடல் செய்தது. இது தகவல் சுதந்திர ஆணைக்குழுவொன்றை விதந்துரைத்ததுடன் தகவலை மட்டுப்படுத்தும் உளதாம் சட்டங்களின் மேல் நிலவும் வெளிப்படுத்துகைக்குச் சாதகமாக ஊகம் ஒன்றையும் உள்ளடக்கியிருந்தது. உரிமைக்கான விதிவிலக்குகளையும் அணுக்கத்திற்குரிய செயல் முறைகளையும் (அதாவது தகவலுக்கான கோரிக்கையின் நியாயமான, துரிதமான நடைமுறை) ஆலோசனையாகத் தெரிவித்திருந்தது. மறுப்புகளின் சுயேச்சையாகத் தெரிவித்திருந்தது. மறுப்புகளின் சுயேச்சையான மீளாய்வுக்கு ஏற்பாடு செய்தது. அத்துடன் எதேச்சையான மறுப்புகளை ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தியது. தகவலில் விடுவிப்பதற்கு நியாயமான செலவுகள் விதித்துரைக்கப்பட்டிருந்தன. இந்த வரைவு 1996இல் சட்ட ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்ட முந்திய வரைவிலிருந்து புறம்பாக எடுத்துக்காட்டப்படுதல் வேண்டும். அதில் ஊடக அல்லது குடியியல் சமுதாய உள்ளீடுகள் இருக்கவில்லை. மேலும் அது சட்டவாக்கம் செய்யப்பட்டிருப்பின் சட்டத்தின் நோக்கத்தையே முறியடித்திருக்கும் உரிமைக்கான விதிவிலக்குகளைக் கொண்டிருந்தது. இந்த அத்தியாயம் எழுதப்பட்ட நேரத்தில் இந்தப் பிரேரணைகள் இறுதியாக முடிவு செய்யப்பட்டிருக்கவில்லையாதலால் தகவல் சட்டத்திற்கான உரிமை தொடர்பில் சட்ட ஆணைக்குழுவின் மிக அண்மைக் காலத்தின் புதிய சிந்தனை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பீடு செய்யப்படவில்லை.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 85
மேற்கொள்ளப்படும் கருத்திட்டங்கள் தொடர்பிலான தகவல் குறிப்பிட்டவொரு பணப்பெறுமதியின் மீதே வெளியிடப்படுமென எதிர்பார்த்தது." அத்துடன் தகவல் வழங்குபவருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பாதுகாப்பையே விதித்துரைக்கின்றது."
காலிமுகத்திடல் வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கருத்துத் தெரிவிப்பதற்கும் வெளியிடுவதற்குமான அரசியலமைப்பு சார் நித உரிமையின் நோக்கெல் லைக்குள் தகவலுக்கான உரிமையைத் திட்டவட்டமாக உள்ளடக்குவதற்கும் தகவல் பெறுதல் தொடர்பான சட்டமொன்றின் சட்டவாக்கத்தைக் கோருவதற்குமான வருங்கால முயற்சிகளைத் தூண்டுவதற்குப் பயனுறுதியுடன் பயன்படுத்தப்படலாம் என்பதில் ஐயப்பாடில்லை. உறுப்புரை 14 (1) (அ) என்பதன் மீறுகை நீதிமன்றத்தால் அவதானிக்கப்பட்ட அதேவேளையில் இவ்வழக்கின் சூழ்நிலையில் கோரப்பட்ட தகவலை வெளிவிட மறுத்தமை அத்தகைய மறுப்பிற்கு ஆதாரமாக திட்டவட்டமான காரணங்கள் இல்லாத நிலையில் அது எதேச்சையான அதிகாரப் பிரயோகம் எனவும் அதன் மூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) மீறப்படுகின்றது எனவும் தீர்க்கப்பட்டது.?
17. சட்டவரைவின் 8ஆம் வாசகம் வெளிநாட்டு நிதியளிப்பு பெற்ற கருத்திட்டங்கள் (பெறுமதி 1,000,000 அமெரிக்க டொலரை விஞ்சுமிடத்து) மற்றும் உள்நாட்டு நிதியளிப்பு பெற்ற கருத்திட்டங்கள் (பெறுமதி 5,000,000 ரூபாவை விஞ்சுமிடத்து) தொடர்பில் ஆவணப்படுத்துதல்களை வெளிவிடுமாறு இயைபான அமைச்சர்/அரசாங்கக் குழுமத்தின் மீது கடப்பாடொன்றை விதித்தது. தகவல் சட்டத்தின் நியதிகளின்படி தாபிக்கப்படவுள்ள தகவல் சுதந்திர ஆணைக்குழுவினால் விதித்துரைக்கப்படும் வழிகாட்டு நெறிகளுக்கிணங்க வெளிவிடப்படும்.
18. வரைவின் 34ஆம் வாசகம் “ஏதேனும் பகிரங்க அதிகார சபையின் ஊழியர் ஒருவராக இருப்பதன் பயனைக் கொண்டு ஆளொருவர் எந்தச் சட்ட அல்லது வேறு கடப்பாடுகளுக்கு அமைந்தவராக்கப்படலாமோ அந்தச் சட்ட அல்லது வேறு கடப்பாடுகள் எவ்வாறிருப்பினும் பகிரங்க அதிகாரசபையொன்றின் ஊழியர் எவரும் இச்சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோள் ஒன்றின் மீது விடுவிக்க அல்லது வெளிவிடப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஏதேனும் அலுவலக முறையான தகவலை அத்தகைய ஊழியர் நல்லெண்ணத்துடின் அத்தகைய தகவல் பொருளளவில் உண்மையானது எனவும் அத்தகைய தகவல் ஏதேனும் தவறான செய்கை அல்லது எவரேனும் பிரசையின் சுகாதாரத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு அல்லது சூழலுக்குப் பாரதூரமான அச்சுறுத்தலொன்றின் சான்றை வெளிப்படுத்தியது என்ற நியாயமான நம்பிக்கையுடனும் அத்தகைய ஊழியர் செயற்பட்ட அளவுக்கு மாத்திரம் ஏதேனும் அலுவலக முறையான தகவலை விடுவித்து வெளியிட்டமைக்கு ஏதேனும் ஒழுக்காற்று அல்லது வேறு வகையான தண்டனைக்கு உட்படுத்தலாகாது.
19. காலி முகத் திடல நகர அபிவிருத் தி அதிகார சபைக் கு (ந. அ. அ.) உரித்தாக்கப்பட்டமையையும் அத்தகைய உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குத் தேவையான தத்துவத்தைக் கொண்டிருந்தது என்பதனையும் காட்டுவதற்கு நீதிமன்றத்தின் முன்னிலையில் சாட்சி எதுவும் இல்லாத நிலையில் காலிமுகத்திடலைத் தனியார் கம்பனியொன்றுக்குக் குத்தகைக்குக் கொடுத்து ந.அ.அ.யால் செய்துகொள்ளப்பட்டதாகக் கருதப்பட்ட உடன்படிக்கை வலுவிகழ்ந்தது எனவும் சட்டத்தில் வலுவோ பயனோ இல்லை என வெளிப்படுத்தி மேலும் ஒரு கட்டளை ஆக்கப்பட்டது.

Page 52
86 மனித உரிமைகளின் நிலை 2006
கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்று உறுப்புரை 12(1) மற்றும் 14(1) (அ) என்பவற்றின் நியதிகளின்படி உரிமைகளைக் கொண்டுள்ளதா? அரசியலமைப்பின் ஏற்புடைத்தாக்கக்கூடிய ஏற்பாடுகளின் நியதிகளின்படி கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனி என்ற வகையில் மனுதாரர் நீதிமன்றத்தின் முன்னிலையில் தோன்றுவதற்கான அந்தஸ்தைக் கொண்டுள்ளாரா? உறுப்புரை 12(1) என்பதனைப் பொறுத்தளவில் அந்த அரசியலமைப்பு உறுப்புரையில் “ஆட்கள்’ என்னும் சொற் பதம் “இயற்கையான” ஆட்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல் சட்ட ஆளுமைகொண்ட அனைத்து அமைப்புகளுக்கும் நீடிக்கும் வகையில் பொருள் கொள்ளப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தால் அவதானிக்கப்பட்டது.* உறுப்புரை 14(1) (அ) என்பதனைப் பொறுத்தளவில் அரசியலமைப்பின் உறுப்புரை “ஆட்களைக்” குறிப்பீடு செய்யாமல் “பிரசைகள்’ என்பதனைக் குறிப்பீடு செய்து வித்தியாசமாக வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் கம்பனியொன்று இந்த அரசிலமைப்பின் உறுப்புரையின்கீழ் உரிமைகளைக் கோரமுடியுமா என்ற மேலும் சிரமமான ஒரு கேள்வியை அல்லாவிடினும் வித்தியாசமான ஒரு கேள்வியை எதிர்பார்க்கின்றது.
ஆயினும், இங்கேயும் மனுதாரரின் கூட்டிணைக்கப்பட்ட அந்தஸ்து அது “பிரசைகளுக்கு’ வழங்கப்பட்ட பாதுகாப்பைக் கோருவதிலிருந்து அதனைத் தடைசெய்கின்றது என்ற ஆட்சேபனை, இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனியை உறுப்புரை 12(1) என்பதன் கீழ் தலையீடொன்றை நிலைநாட்டுவதற்கும் நிலைநாட்டுவதனை இயலச் செய்வதற்கும் உறுப்புரை 14(1) என்பதன்கீழ் தலையீடொன்று தொடர்பில் அவ்வாறு செய்வதினின்று அதனைத் தகைமையிழக்கச் செய்கின்றது என்ற நீதிமுறை அவதானிப்புடன் சுருக்கமுறையில் நிராகரிக்கப்பட்டது’.
ஆயினும், உறுப்புரை 14(1) என்பதன் உள்ளார்ந்த உருமுறைப்படுத்துதலின் பின்னணியிலும் குறிப்பாக பேச்சு சுதந்திரம் பற்றிய பிரச்சனைகளுடன் ஒரு நீதிமன்றத்தின் முன்னிலையிற் தோன்றுவதற்கு கம்பனியொன்றுக்குள்ள உரிமைகளை நிராகரித்து உயர் நீதிமன்றத்தால் முன்னர் வழங்கப்பட்ட நெறிமுறையின் காரணமாகவும் இது ஒரு இக்கட்டான கேள்வியாக அமைகின்றது. இவை பெர்னாண்டோ எதிர் லியனகே* வழக்கை உள்ளடக்கியுள்ளன. இவ்வழக்கில் ஒரு கம்பனியானது ஒரு பிரஜையல்ல என எடுத்துரைத்த உயர் நீதிமன்றம் பேச்சு சுதந்திரம் பற்றிய பிரச்சினைகள் மீது
20. உறுப்புரை 12(1) கூறுகின்றது. “சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள்; அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள்.
2. ஸ்மித்கிளைன் பீச்சம் பயோலொஜிக்கல்ஸ் எஸ்.ஏ. மற்றும் இன்னுமொருவர் எதிர் இலங்கை அரச மருந்தாக்கட் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனையோர் (1977) 3 Sri LR பக்.20
22. SC 1161/82 DbDLò 134/82

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 87
நீதிமன்றத்தின் முன்னிலையிற் தோற்றுவதற்கு ஊடகக் கம்பனிகளுக்கும் அதன் பங்குதாரர்களுக்குமுள்ள உரிமையை அகற்றிவிட்டது.
இந்த முடிவு நெவில் பெர்னாண்டோ மற்றும் ஏனையோர் எதிர் லியனகே மற்றும் ஏனையோர்? வழக்கில் உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வழக்கில் பிரசையொருவர் அல்லா கம்பனியொன்று அடிப்படை உரிமை மீறலையிட்டு முறைப்பாடு செய்ய முடியாதெனவும் அதன் பங்குதாரர்களும்கூட அடிப்படை உரிமை மீறல் பற்றி முறைப்பாடு செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் சந்தேகத்திற்கு இடமின்றி தீர்மானித்தனர். பங்குதாரர்களின் விடயத்தில் தங்களது அடிப்படை உரிமை மீறல் பற்றிச் சார்த்துரைப்பதற்கு உரித்துடையவர்களாயிருக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க புறம்பான ஊறு அவர்களுக்கு ஏற்படவில்லை. விஸ்வலிங்கம் மற்றும் ஏனையோர் எதிர் லியனகே மற்றும் ஏனையோர்?' வழக்கில் பெரும்பாலானோர் இந்தக் கருத்திற்கு உடன்பட்டனர்.
தற்போதைய வழக்கில் விஸ்வலிங்கம் வழக்கையும்? உள்ளடக்கிய (இதில் ஒரு சிறுபான்மையினர் உறுப்புரை 14(1) என்பதன் ஏற்புடைமை (அதன் ஏற்புடைமை கம்பனிகளையும் உள்ளடக்கும் விதத்தில்) அது விரிவுபடுத்தப்படுவதை ஆதரித்தனர் லிடர் பப்ளிகேஷன்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் எதிர் தகவல் பணிப்பாளரும் தகுதி வாய்ந்த அதிகாரியுமான ஆரிய ரூபசிங்க வழக்கையும்? நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. பிந்திய வழக்கில் உறுப்புரை 14(1) (அ) மற்றும் (எ) உறுப்புரை 12(1) என்பவற்றின் நியதிகளின்படி மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கூட்டிணைக்கப்பட்டவொரு கம்பனி என்ற வகையில் மனுதாரரின் அந்தஸ்தைப் பற்றிய வினா உறுப்புரை 14(1)இன் நியதிகளின்படி உரிமை மீறல் ஒன்றின் வெளிப்படுத்துகையை புறநீக்கம் செய்யும் காரணியொன்றாக எதிர்வாதியால் எழுப்பப்படவில்லை. எது விதத்திலும் வழக்கில் பிரச்சினைக்குரிய விடயமாக தகுதிவாய்ந்த அதிகாரியின் நியமனம் வறிதானதாகும் என்ற வெளிப்படுத்துகைக்கு நீதிமன்றம் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் உறுப்புரை 14(1) என்பதன் நியதிகளின்படி கம்பனிகள் உரிமைகளுக்கு உரிமை கோரமுடியுமா என்ற சட்டப் பிரச்சினையை முழுமையாகக் கலந்துரையாடுவது காலிமுகத் திடல் வழக்கில் பயனுடையதாக இருந்திருக்கலாம்.
2.3 சமத்துவத்திற்கான உரிமைதொடர்பில் சட்டநெறித் தர்க்கம் இதன் பின்னராகக் கலந்துரையாடப்படுகின்றவாறு அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) மற்றும் 12(2) என்பவற்றின் நியதிகளின்படி உரிமை மீறல் பரிகாரம் கோரி
23. [1983) of SRI LR 214 24. [1983) of SRI LR 3 1 25. இதுவுமதே
26. 2000) i SRI LR Užs. 265

Page 53
88 மனித உரிமைகளின் நிலை 2006
அரசியல் ரீதியில் நுண்ணுணர்வான பல வழக்குகள் நீதிமன்றத்தின் முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டன.
2.3.1 விமல் வீரவண்ச மற்றும் ஏனையோர் எதிர் சட்டத்துறைத்
தலைமையதிபதி மற்றும் ஏனையோர்? இவ்விடயத்தில் பிணக்கு யாதெனில் வடக்கிலும் கிழக்கிலும் ஆறு மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோர சமுதாயங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சுனாமிக்குப் பின்னரான தொழிற்பாட்டு முகாமைத்துவ அமைப்பு (P-Toms) ஒன்றைத் தயாரிப்பதற்கென உத்தேசிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றாகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசாங்க அலுவலர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரி.ரி.ஈ.) பிரதிநிதியொருவருக்குமிடையில் உடன்பட்டுக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இடதுசாரிகளும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வீ.பி.) உறுப்பினர்களுமான மனுதாரர்கள் அது தங்களது உரிமைகளிலும் வாக்காளர்களின் உரிமைகளிலும் தலையிடுகின்றது என்ற அடிப்படையில் உடன்படிக்கையினது நீதிமுறை மீளாய்வுக்காக மனுவை அணைத்தனர். குறிப்பாக எல்.ரி.ரி.ஈ. சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு பயங்கரவாத ஒழுங்கமைப்பு என்ற வாதத்தின் மீது இத்தகைய இயல்பினதான உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு அந்தந்த திறத்தவர்களுக்குள்ள அதிகாரத்தை மனுதாரர்கள் மறுதலித்தனர். முக்கியமாக புரிந்துணர்வு உடன்படிக்கையின் நியதிகளின் படி அமைக்கப்படவுள்ள குழுக்களின் தத்துவங்களும் பணிகளும் அவற்றின் இயல்பில் அரசாங்கச் சார்புடையவை எனவும் அத்தகைய குழுக்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் உரித்தாக்கப்பட வில்லை எனவும் அவர்கள் வாதாடினர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று வகையான குழுக்களை விதித்துரைத்தது. உச்சியில் அரசாங்க நியமத்தர் ஒருவரையும் எல். ரீ. ரீ. ஈ. யின் நியமத்தர் ஒருவரையும் முஸ்லிம்களின் நியமத்தர் ஒருவரையும் கொண்ட உயர்மட்டக் குழுவாகும். உதவி வழங்கும் நாடுகளின் நிதியை சமமாக ஒதுக்கீடு செய்து பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை வகுத்துத் தொகுக்கும் பணி இக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்டது. அதன்கீழ், அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களையும் எல்.ரி.ரி.ஈ.இன் ஐந்து உறுப்பினர்களையும் (இவர்களுள் ஒருவர் தவிசாளராக இருப்பார்) மூன்று முஸ்லிம் உறுப்பினர்களையும் கொண்ட பிராந்திய குழு அமைந்தது. இக்குழுவுக்கு சுனாமியின் பின்னரான நிவாரணம் தொடர்பில்
27. SC (FR) Application 228/05, 229/05, 230/05, SCM 15.07.2007 îNgg5D sốuóu u Jaff as Ugi நந்த சில்வா, என்பவரின் கட்டளை. நீதியரசர்கள் ராஜா பெர்னாண்டோ மற்றும் ஆர்.ஏ.என்.ஜி. அமரதுங்க உடன்பட்டனர். இவ்வழக்கில் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் கவனத்தை ஈர்க்கும் இவ்வழக்கிற்கு இயைபான இடைக்காலக் கட்டளை இங்கு கலந்துரையாடப்பட்டது.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 89
செயல் நுணுக்கங்களை உருவாக்குவதற்கும் சுனாமியின் பின்னரான கருத்திட்டங்கள் தொடர்பில் கருத்திட்ட அங்கீகாரத்தையும் கருத்திட்ட முகாமைத்துவத்தையும் மேற்கொள்வதற்கும் பொதுப்படையில் கருத்திட்டத்தினதும் பிராந்திய நிதியத்தின் நிதி முகாமைத்துவத்தினதும் கண்காணிப்பைப் பொறுப்பேற்பதற்கும் தத்துவமளிக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரிவு 6 (ஊ) என்பதன் நியதிகளின் படி பிராந்தியக் குழு கிளிநொச்சியில் அமைக்கப்படவிருந்தது. அடிமட்டத்தில் மாவட்டக் குழுக்கள் இருந்தன (இவற்றின் அமைப்பைப் பற்றிய திட்டவட்டமான நியதிகளில்லை ஆனால் அவை ஏற்கனவே தாபிக்கப்பட்டு நன்கு செயலாற்றும் குழுக்களாக அமையும் என்ற குறிப்பீடொன்றிருந்தது). இவற்றிற்கு முன்னேற்றம் பற்றி பிராந்திய குழுவுக்கு அறிக்கையிடும் பணியும் அதன்கண் விதப்புரைகளை சமர்ப்பிக்கும் பணியும் பொறுப்பிக்கப்பட்டன. அத்துடன் உதவி வழங்கும் நாடுகளின் சுனாமி நிவாரணப் பணங்கள் பிராந்திய நிதியமொன்றில் வைப்பீடு செய்யப்படுவதற்கும் பலதரப்பு குழுமமொன்றினால் முகாமை செய்யப்படுவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட ஏற்பாட்டிற்கு எதிராகவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடுத்துக் காட்டப்பட்ட காரணம் யாதெனில் இந்நிதி அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முறையில் செலவீடு செய்யப்படவேண்டிய குடியரசின் நிதி ஆதலால் இது சட்டவாட்சிக்கு முரணானது என்பதாகும்.
நீதிமன்றம் அதன் கட்டளையில் எதிர்த்துரைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இரகசியமாகத் தயாரிக்கப்பட்டது" எனவும் அதன்மூலம் ஒளிவுமறைவற்ற தன்மையைப் புறக்கணித்துவிட்டது எனவும் மனுதாரர்களால் எழுப்பப்பட்ட ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு இடைக்கால நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு? ஏற்புடைத்தான சட்ட மூலப்பிரமாணத்திற்குள் இடைக்கால நிவாரணம் அளித்தலைப் பரிசீலனை செய்வதற்காக வழக்கைக் கொண்டுவந்த முக்கியமானவொரு காரணியாகக் கருதியது. மனுதாரர்களின் குறித்தசில வாதங்கள் - உதாரணமாக எதிர்த்துரைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்வதற்கு சனாதிபதியின் அரசியல்ரீதியிலான அதிகாரம் சனாதிபதியின் பொறுப்புடைமை மற்றும் பாராளுமன்றத்திற்குப் பதில் கூறும் கடப்பாடு என்பன தொடர்பில் ஏற்புடைத்தான ஏற்பாடுகள் இந்த வழக்கில் மீறப்படவில்லை என்ற
28. இங்கு சுவாரஸ்யமான விடயம் யாதெனில் மனுதாரர்கள் அரசாங்கத்தின் அணியினராவர்; இவர்களுள் சிலர் அமைச்சர் பதவிகளும் வகிக்கின்றனர். ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நியதிகள் பற்றித் தங்களுக்கு அறிவிக்கப்படவோ தங்களுடன் கலந்துரையாடப்படவோ இல்லை என வாதாடினர்.
29. வேறு வகையில் கூறுவதானால் இந்த ஒளிவுமறைவான நடைமுறை புரிந்துணர்வு ஒப்பந்தமும் பிரேரிக்கப்பட்ட முகாமைத்துவ அமைப்பொன்றும் நிறுத்தப்படவேண்டும் என்றும் அவ்வாறல்லாவிடில் பெறப்படக்கூடிய எத்தகையதுமான இறுதி நிவாரணம் “வெற்றுத் தீர்வை’ யொன்றாகவே அமையும் என்ற வாதத்தை வலுவடையச் செய்யும் என நீதிமன்றம் அபிப்பிராயப்பட்டது (பார்க்கவும் பிலிமோரியா எதிர் காணி மற்றும் காணி, மகாவலி
Đî6îlebjöf SÐ60LDěj si [ 1978-79) (l) SRI LR v. 10).

Page 54
90 மனித உரிமைகளின் நிலை 2006
அடிப்படையில் தள்ளுடி செய்யப்பட்டன.° புரிந்துணர்வு ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அது நிறைவேற்றப்பட்டபொழுது அமைச்சரவைக்கு அதனைப் பற்றித் தெளிவுபடுத்தப்படவில்லை எனக் கூறுவதற்குச் சான்று எதுவுமிருக்கவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு அவசரமான மனிதாபிமான உதவி வழங்கும் நோக்கத்திற்குப் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு சனாதிபதிக்கு அரசியலமைப்புரீதியில் தத்துவமளிக்கப்படவில்லை என்பதற்கோ அல்லது எல்.ரி.ரி.ஈ. ஒரு பயங்கரவாத ஒழுங்கமைப்பு என்ற காரணத்தினால் அதனுடன் அத்தகைய உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டிருக்க முடியாது என்பதற்கோ உடன்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தேசிக்கவில்லை."
அதேபோன்று தொழிற் பாட்டு முகாமைத் துவக் கட்டமைப் பாக உருவாக்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட மூன்று குழுக்களும் ஏற்புடைத்தான ஏதேனும் சட்டத்தின் அதிகாரத்திலிருந்து பெறவில்லை என்பதனால் அவை வலுவிகழ்ந்தவை (Ultra Vires) என்ற ஆட்சேபனையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.*
நீதித்துறையின் கவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டவாறு பிராந்தியக் குழுக்களின் தத்துவங்களை, குறிப்பாக, கருத்திட்ட அங்கீகாரம், முகாமைத்துவம், பிராந்திய நிதியம் என்பவற்றின் மீது அதற்குள்ள கட்டுப்பாட்டை நோக்கிச் செலுத்தப்பட்டது. இதன் பின்னணியில் அரசியலமைப்பின் உறுப்புரை 149(1) என்பதன் நியதிகளின்படி பலதரப்பு மற்றும் இருதரப்பு நன்கொடை வழங்கும் நாடுகளிடமிருந்து பெறப்பட்ட நிதி ஏற்புடைத்தான சட்டங்களின் நியதிகளின்படி செலவீடு செய்யப்படுவதற்காக திரட்டு நிதியத்திற்குள் செலுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன் கணக்காய்வாளர் தலைமையதிபதியால் கணக்காய்வுக்குட்படுத்தப்படுதலும் வேண்டும் எனத்
30. அரசியலமைப்பின் உறுப்புரைகள் 42,43(1), அரசாங்கம் சார்ந்த தத்துவத்தைப் பிரயோகிப்பதற்கு கலந்தாலோசிப்பதற்கான அல்லது முன் ஒருப்பாட்டைப் பெறுவதற்கான கடப்பாட்டை விதிப்பதைவிட அவசியமானவிடத்து மாத்திரம் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தின் அல்லது அமைச்சரவையின் ஒருப்பாட்டை நாடலாம் என இந்த உறுப்புரைகள் வலியுறுத்துகின்றன.
3. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சட்டவிரோதமானதன்மை எதுவுமில்லை என்ற முடிவுக்கு வருகையில் 23.3.2002இல் எல்.ரி.ரி.ஈ.க்கும் அரசாங்கத்திற்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
32. அமைப்பு முறை அவசரமான மனிதாபிமான நிவாரணத்தின் விநியோகத்திற்கு வசதியளிப்பதற்காகவே ஏற்படுத்தப்படுவதற்குப் பிரேரிக்கப்பட்டது என்பதனால் அது நியதிச்சட்டமொன்றிலிருந்தே அதிகாரத்தைப் பெற்றது எனக் காட்டுவது அவசியமில்லை என அவதானிக்கப்பட்டது.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 9.
தீர்க்கப்பட்டது. எனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரிவு 7, பிரிவுகள் (ஆ) (ii) மற்றும் (ஆ) (iv) என்பவற்றுடன் சேர்த்து அரசியலமைப்பிற்கு ஒவ்வாதனவெனத் தீர்க்கப்பட்ட அவற்றின் செயற்பாடு நிறுத்தப்பட்டது.* பிராந்திய நிதியத்தில் வைப்பீடு செய்யப்படுவதற்கென உத்தேசிக்கப்பட்ட நிதி குறித்தொதுக்கப்பட்டதும் சட்டரீதியாக அதிகாரமளிக்கப்பட்டதுமான பாதுகாவலுடனான புறம்பான கணக்கொன்றில் வைப்பீடு செய்யப்பட வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டது.
பிராந்தியக் குழு அனைத்து ஆட்களும் இலகுவாக அணுகுவதற்கு உசிதமான “சுதந்திரத்தின் சூழல்’ இல்லை என நீதிமன்றம் உடன்பட்ட கிளிநொச்சியில் அமைய வேண்டும் என்ற இதனையொத்த தடையின் பின்னணியிலேயே பிரிவு 6(ஆ) (ஊ) ஆராயப்பட்டது.* மாறாக, பிராந்தியக் குழு எங்கு அமையவேண்டும் என்பது இரண்டு மூலப்பிரமாணங்களுடன் ஒத்திசைந்து அனைத்துத் திறத்தவர்களாலும் தீர்மானிக்கப்பட வேண்டுமெனப் பணிக்கப்பட்டது; அதாவது அது சுனாமி அனர்த்த வலயத்தினுள் நடுமையமொன்றாக அமையவேண்டும்; அத்தகைய அமைவிடத்தைச் சுதந்திரமாகவும் அணுகுவதற்கு அனைத்து ஆட்களுக்கும் வசதியிருத்தல் வேண்டும்.
2.3.2. முதல் தகவல் தொடர்பில் பொலிஸ் நடவடிக்கையை நுணித்தாய்வு செய்தலும் குற்றவியல் புலனாய்வுகளைத் தொடக்கிவைத்தலும் மஹிந்த ராஜபக்ச எதிர் சந்திரா பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையோர்? வழக்கில் நம்பத்தகாததாக அல்லாவிடினும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு சம்பவம் சம்பந்தப்பட்டிருந்தது. அதாவது, நாட்டின் அப்போதைய பிரதம மந்திரி, இப்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி சிக்கவைக்கப்பட்டதாக சார்த்துரைக்கப்பட்ட சம்பவமாகிய சுனாமி அகதிகளுக்கான நன்கொடைகளின் சார்த்துரைக்கப்பட்ட துஷபிரயோகம் தொடர் பில் பொலிஸ் படையின் சிரேஷ்ட அலுவலர் களால் மேற்கொள்ளப்பட்டுவந்த குற்றவியல் புலனாய்வுகளுக்கெதிராக நீதிமன்றத்தின்
33. குழுவுடன் சேர்த்து கருத்திட்டத்தை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அலகுக்குப் பதிலாக (இதன் மூலம் 6(1)ஆம் பிரிவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதும் குழுக்களுடன் சேர்ந்து ஒருங்கிணைப்பதும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுமான அலகுக்குப் பதிலாக இயைபான அமைச்சினால் கருத்திட்ட முகாமைத்துவ அலகொன்று நிறுவப்படுவதை நீதிமன்றம் விதந்துரைத்தது. (இது 6(1)ஆம் பிரிவை பயனற்றதாக்கிவிடும்)
34. இது தீர்ப்பில் திட்டவட்டமாக கருத்திற் கொள்ளப்படாவிடினும் கிளிநொச்சி எல்.ரி.ரி.ஈ. இன் மத்தியத் தளமாகும் என்ற நிகழ்வு இக்கருத்தைத் தெரிவிக்கும் வெளிப்படையான ஒரு காரணமாகும்.
35. SC (FR) Application 387/2005 SCM 28.09.2005. Gåsæl L606n lygbuD Bouygst Fyst நந்த சில்வாவினால் ஆக்கப்பட்டது. நீதியரசர்களான ஜயசிங்க, திசநாயக இருவரும் உடன்பட்டனர்.

Page 55
92 மனித உரிமைகளின் நிலை 2006
நியாயாதிக்கத்தை நாடினார். இது மனதைச் சிலிர்க்கவைக்கும் முரண்பாடான ஒரு விண்ணப்பமாகும். இது இலங்கையின் நிறைவேற்றுத்துறையிலான பதவிவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள பிரதம மந்திரியால் பாதுகாப்பு அமைச்சரின் கீழ் வருவதும் பயனுறுதியுடன் அதே நிறைவேற்றுக் கிளையின் ஒரு பாகமுமாகிய பாதுகாப்பு அமைச்சின் கீழ்வரும் பொலிஸ் பகுதிக்கு எதிரான ஒரு முறைப்பாடு சம்பந்தப்பட்டதாகும்.
நடந்த விடயம் என்னவெனில் சுனாமியையடுத்துப் பெருந்தொகையான பணம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்கொடையின் முதலாவது பாகம் மனுதாரரின் தேர்தற்தொகுதியாகிய ஹம்பாந்தோட்டையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கென குறித்துரைக்கப்பட்ட செலவீடுகளுக்கானதாகும். இப்பணம் “ஹம்பாந்தோட்டைக்கு உதவி புரிதல்” ("Helping Hambantota’) என்னும் தலைப்பிலான கணக்கொன்றில் வைப்பீடு செய்யப்பட்டது. இது பொது மக்களின் நம்பிக்கையை மீறும் ஒரு செயலாக ஊடகத்தின் குறித்த சில பிரிவுகளால் சார்த்துரைக்கப்பட்டது. பணத்தின் இரண்டாவது பாகம் (இப்பணம் எந்தத் துறையில் பயன்படுத்தப்படலாம் என உதவி வழங்குநரால் திட்டவட்டமாக இனங்காணப்படாமல் வழங்கப்பட்டது) சுனாமி நிவாரணத்திற்காக மத்திய வங்கியால் பொதுக் கணக்கொன்றில் வைப்பீடு செய்யப்பட்டது. “ஹம்பாந்தோட்டைக்கு உதவி புரிதல்” வைப்பீடு அந்நேரத்தில் பாரிய ஊடக முரண்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டதன் மீது இப்பணம் பின்னர் பொதுக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. “ஹம்பாந்தோட்டைக்கு உதவுதல்” நன்கொடை தொடர்பில் குற்றவியல் நம்பிக்கை மோசடி அத்துடன்/அல்லது கையாடல் என சார்த்துரைத்த பத்திரிகை அறிக்கைகளின் விளைவாகப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இவ்விடயம் குற்றவியலின் அடிப்படையில் புலனாய்வு செய்யப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்து பொலிஸில் முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தம்மகத்தேயுள்ள சொந்தத் தகவலின் மீதல்லாமல் தனியே செய்தித்தாள் அறிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே செயற்பட்டிருந்தார் என்ற அடிப்படையில் பொலிஸ் புலனாய்வுக்கெதிராக நீதிமன்றத்தில் விண்ணப்பமொன்று அணைக்கப்பட்டது. இந்த அறிக்கைகள் ஆதாரமற்றவை எனவும் மனுதாரருக்கு அவப்பெயர் உண்டுபண்ணும் நோக்கத்துடன் மாத்திரமே வெளியிடப்பட்டன எனவும் மனுதாரர் உரிமை கோரினார். அந்நேரத்தில் எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுதாரரின் நியமனம் அவரது கட்சியின் மத்திய செயற்குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. இதன் விளைவாக குற்றப் புலனாய்வு சார்ந்த நடைமுறையின் அத்தகைய துஷ பிரயோகம் அரசியலமைப்பின் 12 (1)ஆம் உறுப்புரையால் உத்தரவாதமளிக்கப்பட்ட சமத்துவமான பாதுகாப்பு அவருக்கு மறுக்கப்பட்டதென அவர் உரிமைகோரினார்.
1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 109ஆம் பிரிவு பின்வருமாறு கூறுகின்றது.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 93
“தவறொன்று புரியப்பட்டமை தொடர்பிலான ஒவ்வொரு தகவலும் அலுவலர் ஒருவருக்கு அல்லது விசாரணையாளர் ஒருவருக்கு வாய்மொழி மூலமாக அல்லது எழுத்தில் கொடுக்கப்படலாம்.” செய்தித் தாளொன்றிலிருந்து திரட்டப்பட்ட சொல்லக் கேட்ட விடயம் குற்றவியல் புலனாய்வொன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸை நிர்ப்பந்திக்கும் தகுந்த “முதற் தகவலின்’ நோக்கெல்லைக்குள் வரமாட்டாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தகுந்த “முதற் தகவல்” “சொந்த அறிவின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் தகவலுக்கு” மாத்திரமே கண்டிப்பாக மட்டுப்படுத்தப்படுகின்றது எனக் கூறப்பட்டது.*
செய்தித்தாள் அறிக்கைகளின் அடிப்படையில் பொலிஸ் நடவடிக்கையின் நடைமுறை ஒழுங்குகள் கேள்விக்குட்படுத்தப்பட்டதுடன் புலனாய்வு அநாவசியமாக இழுத்தடிக்கப்படுகின்றது எனவும் அதன் விளைவாக மனுதாரருக்குப் பாரதூரமானதும் பாதகமானதுமான பிரசாரம் அளிக்கப்பட்டது என்ற மனுதாரரின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முழு நடவடிக்கை மீதும் பாரதூரமான கண்டனம் தொடுக்கப்பட்டது. அதனையடுத்து மேலும் புலனாய்வுகளை நிறுத்தி இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.
திருமதி எல்.பீரி பிரேமரத்ன எதிர் பீ.எல்.வீ.எஸ். கொடித்துவக்கு, பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையோர் வழக்கில்" முற்றிலும் மாறுபட்டவொரு சம்பவம் இடம்பெற்றது. இங்கு, சட்டத்திற்கு முரணான பாதையொன்று வெட்டப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவித்த காணிச் சொந்தக்காரர் ஒருவரிடமிருந்து “முதற் தகவலொன்று' கிடைக்கப் பெற்றதன் மீது சட்டத்திற்கும் 1999ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் இணங்க செயற்படவில்லை எனப் பொலிஸ் அலுவலர்கள் நீதிமுறையில் கடிந்துரைக்கப்பட்டனர். சாத்தியமான சமாதான சீர்குலைவை அல்லது நிலைமை தூண்டிவிடப்படுவதைத் தடுத்து நிறுத்துவதில் அவர்களது செயற்படாமை அல்லது இது தொடர்பில் புலனாய்வொன்றை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை அணைப்பது தொடர்பில் மிகவும் அடிப்படை நடவடிக்கையை எடுக்கத் தவறியமை சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பு மறுக்கப்பட்டதாகவும் அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரை மீறப்பட்டதாகவும் அமைவதாகக்
36. கட்டளையின் 3ஆம் பக்கத்தில். இவ்வத்தியாயம் வழக்கில் 27.3.2006 ஆம் திகதி வழங்கப்பட்ட இறுதிக் கட்டளையின் பின்னால் வந்த இடைக்கால கட்டளையின் மீது மட்டுமே கருத்தைச் செலுத்தியது. அதன் மூலம் அந்நேரமளவில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த மனுதாரருக்கு அவரது உரிமை மறுக்கப்பட்டடிருந்ததென வெளிப்படுத்தப்பட்டு நட்டஈடு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பைப் பற்றிய ஆய்வு 2006இல் தீர்மானிக்கப்பட்ட வழக்குகளுக்கு இயைபான எதிர்வரும் உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு பற்றிய அத்தியாயத்திற்கான விடயப்பொருளாகும்.
37. SC (FR) Application No.747/99, SCM 27.01.2005 JÉgouJañ 69)JT60î 5labas6uñg5676û6ù
தீர்ப்பு நீதியரசர்களான சில்வா, வீரசூரிய இருவரும் உடன்பட்டனர்.

Page 56
94. மனித உரிமைகளின் நிலை 2006
கருதப்பட்டது. இது தொடர்பில் நீதிமன்றத்தின் பின்வரும் அவதானம் பொருத்தமானதாகும்.
பொலிஸ் செயலற்ற தனி மை காணப் படுமிடத்து தாமதமற்ற முறைப்பாடொன்றின் பெறுமதி அற்றுப்போகின்றது. அது சுறுசுறுப்புடன் செயற்பட்டு முறைப்பாட்டையிட்டு விசாரணை செய்து புலனாய்வை மேற்கொள்வது பொலிஸின் கடமை.
மஹிந்த ராஜபக்ச எதிர் சந்திரா பெர்னாண்டோ பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையோர்? அத்துடன் திருமதி எல்.பீரி பிரேமரத்ன எதிர் பீ.எல்.வீ.எஸ். கொடித்துவக்கு, பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையோர்” ஆகிய இரண்டு வழக்குகளிலும் “முதல் தகவலின்’ இயல்பும் வடிவமும் அதன் விளைவாக விடயத்திற்கேற்ப செயற்படுவதில் அல்லது செயற்படாதிருப்பதில் பொலிஸ் படையினரின் குற்றமுடைமையும் கேள்விக்குட்படுத்தப்பட்டன.
முதல் வழக்கில் “முதலாவது தகவல்” பிரத்தியேகமாக சொந்த அறிவின் அடிப்படையில் இருந்திருத்தல் வேண்டும். அத்துடன் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு அமைந்ததாக்கப்பட்டிருத்தல் வேண்டும். சட்டமுறையான முதலாவது தகவலின் இயல் பு (சொநித அறிவுக் குக் குட் பட்ட விடயங்களுக்கு மட்டுப்படுத்தப்படாதிருக்கலாம்) அந்த முதலாவது தகவல் எந்தப் பாவனைக்குப் பயன்படுத்தப்பட்டதோ அந்தப் பாவனையிலிருந்து வேறுபட்டதாக்கப்படுதல் வேண்டும். நிச்சயமாக வழக்கொன்று நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டதும் அத்தகைய ‘முதலாவது தகவல்’ அது தகவல் தருபவரின் சொந்த அறிவுக்குட்பட்ட அல்லது நேரடி அறிவுக்குட்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பின் வலியுறுத்தும் நோக்கங்களுக்கு மாத்திரம் எடுத்தாளப்படலாம்."
மஹிந்த ராஜபக்ச எதிர் சந்திரா பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனையோர் வழக்கில்" நிகழ்வுகளின் அடிப்படையில் வெறுமனே செய்தித்தாள் அறிக்கையொன்றை படியெடுப்பாகிய “முதலாவது தகவல்” மீது பொலிஸ் முறைசார்ந்த விதத்தில் குற்றவியல் புலனாய்வொன்றை ஆரம்பித்தல் தொடர்பாக செல்லுபடியான ஆட்சேபனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். கணக்காய்வாளர் தலைமையதிபதி போன்ற இயைபான ஆட்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்படவில்லை என்ற நிகழ்வு இது தொடர்பிலான எதிர்மறையான காரணியொன்றாகும்.
ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இந்த வழக்குகளுக்கு எதிர்மாறாக சரத் ரத்நாயக மற்றும் இன்னுமொருவர் எதிர் நிமல் மெதிவக்க, பிரதிப் பொலிஸ் மா
38. Shpra in 35
39. Shpra n 37
40. பார்க்கவும். Siriniyal (1965) 70 NLR ரி.எஸ். பெர்னாண்டோவின்படி. 41. தீர்ப்பின் 14ஆம் பக்கத்தில்

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 95
அதிபர்? வழக்கில் முறைப்பாடொன்றின் மீது செயற்பட்ட பொலிஸின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு ஹோட்டல் வளவொன்று விபசார விடுதியொன்றாகப் பயன்படுத்தப்படுகின்றது என்ற (அநாமதேய) முறைப்பாடொன்றைப் பின்பற்றி முன்னர் பொலிஸின் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த அத்தகைய வளவை பொலிஸார் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை சம்பந்தமானதாகும். சார்த்துரைக்கப்பட்ட அநாமதேய தகவல் தருநர் ஒருவர்மீது பொலிஸ் தங்கியிருக்க முடியாது என்ற மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கவில்லை. முறைப்பாடு கிடைக்கப்பட்டதும் உடனடியாகப் பொலிஸ் விரைந்து செயற்பட முற்படவில்லை. மாறாக சம்பந்தப்பட்ட வளவைத் தேடுகை செய்வது அவசியமானது என்ற நியாயமான சந்தேகத்தை எழுப்பியுள்ள வளவை முன்கூட்டியே கவனமாக தீவிர கண்காணிப்பில் மாத்திரமே ஈடுபட்டது என்ற நிகழ்வை நீதிமன்றம் அதன் கருத்திற் கொண்டது.
நீதிமன்றம் பின்வருவதனை அவதானித்தது:
எதிர்வாதிகள் வெறுமனே ஒரு சந்தேகத்தின் மீது மாத்திரம் செயற்பட்டிருந்தால் எதிர்வாதிகளின் செயல் எதேச்சையானதென்பதும் அதனால் அது மனுதாரர்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என்பதும் வாதத்திற்குரிய நிலைமையொன்றாக இருந்திருக்கக்கூடும். வளவுகளை சோதனையிடுவதன் மூலமும் அந்நோக்கத்திற்கு பொலிஸ் தேடல் எழுத்தாணையொன்றை பெற்றிருக்கும் பொழுது முறைப்பாடு அல்லது தகவல் தொடர்பில் மேலும் புலனாய்வு செய்யப்படவேண்டுமா என்பதனை நிச்சயிப்பதற்கு எதிர் வாதிகளால் மேலும் பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வாதிகளின் செயற்பாடு நீதித்துறை வலுவளிப்பைப் பெற்று எதேச்சையான செயல் என்ற நிலைப்பாட்டையும் கடந்து சென்றிருக்கின்றது.*
2.3.3. பல்கலைக்கழக அதிகாரிகளின் தற்றுணியைத்
தடைசெய்தல் பேராசிரியர் நிரியெல்லகே சந்திரசிறி எதிர் ருஹ"ணு பல்கலைக்கழகம் மற்றும் ஏனையோர்' வழக்கில் ருஹ"ணு பல்கலைக்கழகத்தில் சட்ட மருத்துவத்தில் சிரேஸ்ட கல்விமான் ஒருவராகிய மனுதாரர் (ஆலோசனை வழங்கும் நீதித்துறை மருத்துவ அலுவலர் ஒருவருடன் சேர்ந்து) தென் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, சுகாதாரத் திணைக்களத்தைச் சேராத ஆனால்
42, SC (FR) Application No. 326/2003, SCM 06.06.2005: 5 guj Ff 6nfl T606f; 6J. பண்டாரநாயகவின் தீர்ப்பு. நீதியரசர்களான வீரசூரிய, ஜயசிங்க இருவரும் உடன்பட்டனர்.
43. தீர்ப்பின் 3ஆம் பக்கத்தில்,
44. SC (FR) Application No. 326/2003, SCM 06.06.2005: 5g5Yuu Jag ri 6.fg IT 60:sf 6J. பண்டாரநாயகவின் தீர்ப்பு. நீதியரசர்களான வீரசூரிய, ஜயசிங்க இருவரும் உடன்பட்டனர்.

Page 57
96 மனித உரிமைகளின் நிலை 2006
பல்கலைக்கழகப் பீடங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் சிறுவர் துஷபிரயோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில்? நீதித்துறை மருத்துவ அலுவர்களின் பணிகளைப் புரிகின்றனர் என்ற நிழ்வுக்கு அவரது கவனத்தை ஈர்த்து கடிதமொன்றை எழுதியிருந்தார். இக்கடிதத்தின் பிரதி இயைபான ஏனைய அரசாங்க அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.
அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடச்சபை மனுதாரருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அதனையடுத்து அவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குப் போதிய தகவல் இருக்கின்றதா என்பதனைப் பரிசீலனை செய்வதற்குப் பேரவை உப குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்தது. விடயத்தைப் பரிசீலனை செய்ததன் மீது அத்தகைய விசாரணையொன்றை நடத்துவதற்குப் போதிய ஆதாரம் இல்லையெனத் தீர்மானித்த உப குழு மனுதாரருக்கு எச்சரிக்கைக் கடிதமொன்று சேர்ப்பிக்கப்படவேண்டும் என விதப்புரை செய்தது. பல்கலைக்கழகப் பேரவையால் அனுப்பப்பட்டதும் (துணை வேந்தரால் கையொப்பமிடப்பட்டதுமான) இக்கடிதத்திற்கு எதிராக மனுதாரர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்தார். இக்கடிதத்தில் அவர் மேற்படி உப குழுவின் முன்னிலையில் தாம் விசாரணைகூட செய்யப்படவில்லை எனவும் சேர்ப்பிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட கடிதம் சட்டத்தின் நியதிகளின்படி சமத்துவத்திற்கான தம்முடைய உரிமைகளை மீறுகின்றது எனக் குறிப்பிட்டிருந்தார். பல்கலைக்கழகத்தின் முன்னிலைத் தெரிவிப்புரையான இது தண்டணையாக அமையவில்லையாதலால் எச்சரிக்கையொன்றை வழங்கும் தத்துவம் பல்கலைக்கழகத்தின் “தடையற்ற தற்றுணிபிற்குட்பட்டதாகும்’ என்ற கருத்தினை ஆதாரமாகக் கொண்டிருந்தது."
எதேச்சையானதும் கட்டுப்பாடற்றதுமான தற்றுணியை உரித்தாக்குவதனைத் தடைசெய்வதில் நிலைநாட்டப்பட்ட சட்ட முன்னிகழ்வு உறுதியாக
45. 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவு 122(1) கூறுவதாவது: பொலிஸ் நிலையமொன்றுக்குப் பொறுப்பான பொலிஸ் அலுவலர் எவரும் புலனாய்வொன்றை நடத்துவதற்கு ஆளெவரும் மருத்துவத் தொழிலர் ஒருவரால் பரிசோதனை செய்யப்பட வேண்டுமெனக் கருதுமிடத்து அத்தகைய ஆளின் சம்மதத்துடன் அவ்வாளை அரசாங்க மருத்துவ அலுவலர் ஒருவரால் பரிசோதனை செய்வித்தல் வேண்டும். மாறாக, சட்டக்கோவையின் 2ஆம் பிரிவு "அரசாங்க மருத்துவ அலுவலர்” என்னும் பல்கலைக்கழகத்தின் ஏதேனும் மருத்துவப் பீடத்தின் சட்ட மருத்துவப் பகுதியின் எவரேனும் அலுவலரை உள்ளடக்கும் என்பதனை மறுக்கின்றது.
46. தாபனக் கோவையின் 44ஆம் பந்தி எச்சரிக்கையொன்றை விடுப்பதற்கான தற்றுணியை பல்கலைக்கழகமொன்றின் துணை வேந்தர் ஒருவருக்கு உரித்தாக்குகின்றது. ஆனால் அப்பிரிவு, அவ்வாறு செய்கையில் பின்பற்றப்படவேண்டிய எவையேனும் வழிகாட்டு நெறிகளை குறித்துரைக்கவில்லை.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 97
இருக்கின்றது." ஆதலால் இந்தப் பிந்திய முன்னிலைத் தெரிவிப்புரையைத் தள்ளுபடி செய்வதில் நீதிமன்றம் தயக்கம் காட்டவில்லை. ஆதலால்
எந்த ஆளுக்கெதிராக சார்த்துரைகள் செய்யப்பட்டுள்ளனவோ அந்த ஆளுக்கெதிராக வழங்கப்படவுள்ள எச்சரிக்கையொன்று தொடர்பில் துணை வேந்தர் பரந்தளவிலான தற்றுணிபுத் தத்துவம் பெற்றிருக்கும் போது அத்தகைய தற்றுணிபைப் பிரயோகிக்கையில் குறித்தசில பாதுகாப்புகள் இருக்க வேணி டியது அவசியம் . முதலாவது எதிர் வாதியாகிய பல கலைக்கழகம் சீரான நிர்வாகத்தையும் ஆளுகையையும் கருத்திற் கொண்டு அதன் சிரேஷ்ட பேராசிரியர்களுள் ஒருவரான மனுதாரர் மட்டில் நியாயமாக செயற்பட்டிருத்தல் வேண்டும். முடிவொன்றைத் தேடுவதற்கு முன்னர் எதிர்வாத விசாரணையொன்று நடாத்தப்பட வேண்டுமென்ற தேவைப்பாடு இல்லாதிருந்திருப்பினும்கூட மனுதாரர் மட்டில் நியாயமாகச் செயற்படுமாறு இயற்கை விதியின் பல்கலைக்கழகத்தைத் தேவைப்படுத்தியது.*
இதற்கு இயைபாக, உப குழு (மனுதாரர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டுமா எனத் தீர்மானிப்பதற்கு மேலே சொல்லப்பட்டவாறு நியமிக்கப்பட்டது) எச்சரிக்கை வழங்குமாறு விதப்புரை செய்வதற்கான அதிகாரத்தை அல்லது பணிப்பாணையைக் கொண்டிருக்கவில்லை என்ற நிகழ்வை நீதிமன்றம் கருத்திற்கொண்டது. அதற்கிணங்க அதன் முடிவு சட்டரீதியான முடிவல்ல எனவும் சொல்லப்பட்ட முடிவின் அத்துடன்/அல்லது விதப்புரையின் அடிப்படையில் அதன் விளைவாக பேரவையால் எடுக்கப்பட்ட முடிவு சட்டப்பயனுடையதாக இருக்கவில்லை எனவும் அவதானிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) மீறப்பட்டதென, நட்டஈடாக 25,000 ரூபாவும் செலவுகளும் வழங்கப்பட்டு வெளிப்படுத்துகையொன்று செய்யப்பட்டது.
2.3.4 தொழிலிருக்கும் ஆட்களின் நீதி முறையான
எதிர்பார்ப்புகள் ஊழியர்களுக்கு சேவைக்கால நீடிப்பை மறுக்கும் மக்கள் வங்கியின் முகாமைத்துவ நடைமுறையானது, எதிர்வாதி வங்கியில் நடைமுறைகளை நெறிப்படுத்திய 323/2001ஆம் இலக்க சுற்றறிக்கையின் ஏற்புடைமையின் பின்னணியில் இக்காலப்பகுதியில் அணைக்கப்பட்ட விண்ணப்பங்களில் வாதத்திற்கு வந்தன. ஏ.ஈ.எம்.ஜி பெனாண்டோ எதிர் மக்கள் வங்கி மற்றும்
47. இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தால் குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள் நிர்வாக வழக்கில் தடைசெய்யப்படாத தற்றுணிபு என்னும் எண்ணக் கருத்தை நிராகரிக்கும் நன்கறியப்பட்ட முடிவுகள் அடங்கும். இவற்றுள் பெட்பீஸ்ட் எதிர் விவசாய அமைச்சர் (1968) A.C. 997 பிரீன் எதிர் அமல்கமேட்டட் என்ஜினியரிங் யூனியன் (1971) 1 A11 B.R. 1148 வழக்கில் டெனிஸ் பிரபுவின் அங்கீகாரத்துடன் எடுத்தாளப்பட்டது.
48. தீர்ப்பின் 14ஆம் 18ஆம் பக்கங்களில்

Page 58
98 மனித உரிமைகளின் நிலை 2006
ஏனையோர் வழக்கில? எடுக்கப்பட்ட ஒரு முடிவில் நலம் வாய்ந்ததும் நியாயமானதுமான காரணங்களுக்காகவே தொழில் நீடிப்பு வழங்கல் மறுக்கப்பட்டது என்ற கோட்பாட்டை" (சம்பந்தப்பட்ட ஊழியருக்கு இது அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும்) சம்பந்தப்பட்ட ஊழியருக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியதுடன், இது அத்தகைய நலம் வாய்ந்ததும் நியாயமானதுமான காரணத்தையும் அதனைத் தீர்மானித்து மேலும் ஒரு நீடிப்பை மறுப்பை அறிவிப்பதிலான வழமைக்கு மாறான தாமதம் ஊழியரின் சட்டப்பூர்வமான எதிர்பார்ப்புகளை மறுப்பதாகவும் அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையின் மீறுகையாகவும் அமையும்.
ஆயினும், அதன் பின்னர் லால் விமலசேன எதிர் அசோகா சில்வா, பொது முகாமையாளர், மக்கள் வங்கி? இதனையொத்த விண்ணப்பமொன்றைக் கருத்திற் கொள்கையில் ஏற்புடைத்தான சுற்றறிக்கையின் நியதிகளின்படி அத்தகைய முடிவு தொழில்தருநரான நிறுவனத்தின் உயர் முகாமைத்துறைக்கு அறிவிக்கப்பட்டால் போதுமானது எனக் குறிப்பிடுமளவுக்கு நீடிப்பு வழங்கப்படாமைக்கான காரணம் தொழில்தருநரால் ஊழியருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற பரந்தளவில் ஒன்றுதிரட்டப்பட்ட தேவைப்பாட்டைக் குறுக்கிவிட்டது. பெரும்பான்மைக் கருத்தை வரைகையில் நியாயத்தன்மையின் தேவைப்பாடுகளைத் திருப்திப்படுத்துவது போதுமானது என்னும் கருத்தை நீதியரசர் ராஜா பெர்னாண்டோ கொண்டிருந்தார். ஆயினும், சேவை நீடிக்கப்படாமை நீதிமன்றத்தில் எதிர்த்து வாதாடப்படுமிடத்து, தனது செயற்பாடுகள் நியாயமற்றவையாக, யதார்த்தப்படுமிடத்து, தனது செயற்பாடுகள் நியாயமற்றவையாக, யதார்த்தபூர்வமற்றவையாக, எதேச்சையானவையாக அல்லது ஏறுமாறானவையாக இருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியுறும் வகையில் எண்பிக்கும் பொறுப்பு எதிர்வாதி - வங்கிக்கு ஏற்பட்டிருக்கும். இக்கருத்துடன் உடன்பட்ட நீதியரசர் திசநாயக சேவைக் காலம் நீடிக்கப்பட வேண்டும் எனக் கோரிய தனியாளாகிய அலுவலருக்கு காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என இயைபான சுற்றறிக்கையின் ஏற்பாடுகள் வலியுறுத்துகின்றன என்ற அவரது முன்னைய அபிப்பிராயத்திலிருந்து விலகிச் சென்றார்ஃ பெரும்பான்மைக் கருத்து விண்ணப்பத்தை செலவுகளின்றி தள்ளுபடி செய்தது.
49. SC (FR) Application No. 283/2004. SCM 08.07.2005, sigu4Jgst 616å.Gæ. D L6vstæLD616å தீர்ப்பு. நீதியரயசர்களான பண்டாரநாயக, திசநாயக இருவரும் உடன்பட்டனர்.
50, இது தொடர்பில் அடிக்கடி எடுத்தாளப்படும் முன்னிகழ்வுக்குப் பார்க்கவும். சுரங்கணி
மாரபன எதிர் இலங்கை வங்கி மற்றும் ஏனையோர் (1991) 3 Sri LR 156.
51. SC (FR) Application No. 473/2003. SCM 04.08.2005 GuçgbLibLuT6\)fT63I gÉñ['ıLqa56ir ÉgÉuugöFñi ராஜா பெர்னாண்டோவால் நீதியரசர் திசநாயக உடன்பட்டார். நீதியரசர் ஷிராணி ஏ. பண்டாரநாயக மறுப்பு தெரிவித்தார். அத்துடன் பார்க்கவும் டப்ளியூ.ரி.ஏ. பத்திரண எதிர் LDöæ6s 6uEid udbold 6j6o631Gu Inst SC (FR) Application 297/2004 SCM 12.12.2005.
52. Shpra n.43

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 99
ஒருப்படாத தமது தீர்ப்பில் நீதியரசர் ஷிராணி ஏ. பண்டாரநாயக இந்த வழக்கின் சூழ்நிலைகளில் மனுதாரர் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்த ஏனைய ஊழியர்களுடன் அதேபோன்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தார் எனவும், இவர் வித்தியாசமாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் அவதானித்தார். காரணங்கள் ஊழியருக்கு நேரடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற அவசியமில் லை என ற நிலைப் பாடு பேணப் பட்டிருந் திருக்க முடிந்திருக்குமானாலும்கூட, குறைந்தபட்சம் சேவை நீடிப்புக் குழுவுக்கு நீடிப்பை மறுத் தமைக் கான அதன் காரணங் களைக் கொடுப் பது அவசியமானதாயிருந்திருக்கலாம். அவ்வாதம் முன்வைக்கப்படாமை தொழில்தருநர் அந்நேரத்தில் எதேச்சையாக செயற்பட்டிருந்தார் என்பதனையே சுட்டிக்காட்டுகின்றது எனவும், இது அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையின் மீறுகையொன்றாகும் எனவும் கண்டார்.
2.3.5. நிவாரணத்தை மறுப்பதில் காலத்தடையின் ஏற்புடைமை கமகே சுகத் பிரேமச்சந்திர மற்றும் இன்னுமொருவர் எதிர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனையோர் வழக்கில் * இரண்டு மனுதாரர்கள் தாங்கள் மருத்துவப் பீடங்களுக்குத் தெரிவு செய்யப்படாமை காரணமாகத் தங்களுக்கு விளைந்த உரிமை மீறுகை தொடர்பில் நீதிமன்றத்திற்கு வந்தனர். நாற்பது மாதங்களுக்கு முன்னால் அணைக்கப்பட்ட மூன்று விண்ணப்பங்களில் இதனையொத்த மீறுகைகள் அடிப்படை உரிமை மீறல்களாக அமைவதாக விதிக்கப்பட்டது. ஆனால், இப்போதைய வழக்கில் விண்ணப்பங்கள் அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்களை அணைப்பதற்கு ஏற்புடைத்தான ஒரு மாத கால விதிப்பனவுடன் இணங்கியொழுகப்படவில்லை என்ற அடிப்படையில் (நாற்பத்திரண்டு மாதகால தாமதம்) மனுதாரர்களுக்கு நிவாரணங்கள் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டன. இவ்விடயத்தில் நீதிமன்றம் ஓரளவு தற்றுணியைப் பிரயோகிப்பதனை இயலச் செய்வதற்கு இந்த மட்டுமீறிய தாமதத்திற்கான காரணமாக மனுதாரர்கள் விதிவிலக்கான சூழ்நிலைகள் எவற்றையும் முன்வைக்கவில்லை.”
எல்லாக் கருத்துக்களுக்காகவும், நோக்கங்களுக்காகவும் மனுதாரர்கள் செயலற்றிருந்த நீண்ட காலத்தின் பின்னணியில் இடர்களுக்குட்பட்டவர்கள் “தங்கள் உரிமைகளின் மீது உறங்கிக் கொண்டிருக்கக்கூடாது’ என நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்ட எச்சரிக்கை நியாயப்படுத்தப்படுகின்றது.
53. SC (FR) Application No.573/2004, SCM 04.08.2005 ĝi tiu šgĵuuygři 6ĵJT65šín 6J. பண்டாரநாயகவினால் நீதியரசர்கள் திசாநாயக, ராஜா பெர்னாண்டோ இருவரும் உடன்பட்டனர்.
54. அரசியலமைப்பின் உறுப்புரை 126(2).
55. பார்க்கவும் கமளத்திகே எதிர் சிறிவர்தன மற்றும் ஏனையோர் (1988) 1 Sri LR 384, எதிரிசூரிய எதிர் நவரத்தினம் மற்றும் ஏனையோர் (1985) 1 Sri LR 100, நரேந்திரகுமார் எதிர் ஸியாட் மற்றும் ஏனையோர் (2000) 1 Sri LR 256.

Page 59
100 மனித உரிமைகளின் நிலை 2006
ஒருமாத காலக்கெடுவை விதித்துரைக்கும் திட்டவட்டமான அரசியலமைப்பின் ஏற்பாடுகளால் நீதிவான்கள் வற்புறுத்தலுக்கு உட்பட்டிருந்தனர். ஆயினும், தெற்காசிய நியாயாதிக்கத்தின் பின்னணியில் உரிமைகள் தொடர்பிலான விண்ணப்பங்களை அணைப்பதில் அரசியலமைப்பு சார்ந்த கால விதிப்பனவின் நகைப்பிற்குரிய இயல்பினை இவைபோன்ற விண்ணப்பங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
2.3.6 பாடசாலை அனுமதிப்புகளுக்கான உரிமை
எம்.கே. விஜேதாச மற்றும் ஏனையோர் எதிர் அதிபர், செளத்லேண்ட்ஸ் கல்லூரி, காலி மற்றும் ஏனையோர் வழக்கில்" தங்களது மத நம்பிக்கை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் மதப் போதனையைப் பெறமுடியும் என உரிமை கோரக்கூடிய பாடசாலையொன்றில் பிள்ளைகளை அனுமதிப்பதற்கான உரிமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. ஏற்புடைத்தான சுற்றறிக்கையைப் பொருள் கொள்கையில் 1960-1961ஆம் ஆண்டில் பாடசாலைகள் அரசுக்கு உரித்தாக்கப்பட்ட நேரத்தில் நிலவிய மாணவர்களின் சமய நம்பிக்கையின் அடிப்படையில் மாணவ சமுதாயத்தின் விகிதாசாரத்தைப் பேணுவதற்காக அரசுக்கு உரித்தாக்கப்பட்ட பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பில் தெரிவு செய்யும் மூலப்பிரமாணத்திற்குக் கல்வியமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதென நீதிமன்றம் கண்டது.
இது தொடர்பில், கிறிஸ்துவ மத நம்பிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டிய மாணவர்களின் நூற்றுவீதம் எதிர்வாதிகளால் உரிமை கோரப்பட்டவாறு 2% வீதமல்ல, 6.9% வீதம் வரையிலான கூடிய பங்கீடொன்றாக இருந்திருக்கவேண்டும் எனக் காணப்பட்டது. நூற்றுவீதங்கள் தொடர்பில் சுற்றறிக்கையின் இயைபான ஏற்பாடுகளைக் கருத்திற் கொள்ளாமல் அதன் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலையில் மனுதாரரின் பிள்ளைகளை அனுமதிக்க மறுத்த 1 ஆம் எதிர் வாதியின் செயல் அரசியலமைப்பின் 12(1)ஆம் உறுப்புரையை மீறும் எதேச்சையான செயலாக அமைவதாகத் தீர்மானிக்கப்பட்டு அவரது பிள்ளைகளின் அனுமதிப்பிற்கான கட்டளையொன்று ஆக்கப்பட்டது.
56. SC (FR) Application No.6 12/2004, SCM 07.1 1.2005. for 'il fu Jag är 6ĝigrT6Bóî 6J. பண்டாரநாயகவினால் நீதியரசர்கள் உடலாகம மற்றும் ராஜா பெர்னாண்டோ உடன்பட்டனர். அத்துடன் பார்க்கவும் ரத்னசிறி பீ. விமலவிக்ரம மற்றும் ஏனையோர் எதிர் அதிபர். ffléLD6öïL' 56ù9)ffffi, asTGö (SC) (FR) Application No. 613/2004, 615/2004, 616/2004, SCM 07.11.2005 இதனையொத்த தர்க்கவாதத்திற்கு.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 101
2.4 சித்திரவதைக்கும், கொரூரமான, மனிதாபிமானமற்ற
அல்லது இழிவான நடாத்துகைக்கும், அல்லது தண்டனைக்கும், உட்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை தொடர்பில் நீதிமுறைப் பகுத்தறிவு (உறுப்புரை 11) முந்திய ஆண்டுகளில் காணப்பட்டதற்கு மாறாக இது தொடர்பில் நலிவுற்ற சட்டவியல் தொகுதியொன்று புலனானது. விஜயலத் பெலிகே ஜினதாச சேனாதீர எதிர் சியசிங்க மற்றும் ஏனையோர் வழக்கில்" தரைப்படை அலுவலர்களால் மனுதாரர் தாக்கப்பட்டார் என்ற சார்த்துரை தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் விண்ணப்பமொன்றை அணைத்திருந்தார். வழக்கின் நிகழ்வுகளின் மீது நீதிமன்றம் மனுதாரரின் சாட்சியத்தை நம்பத்தயாராயிக்கவில்லை. நிகழ்தகவு சமநிலைச் சோதனையின்மீது சார்த்துரைகளை எண்பிக்கும் பொறுப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்படவில்லை என நீதிமன்றம் விளம்பியது. நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு காரணி மனுதாரரின் சாட்சியத்திற்கு ஆதாரமாக மனுதாரருடனும் அவரது மனைவியுடனும் கூடவந்த ஏனைய பொலிசு அலுவலர்களால் (இவர்களுள் ஒரு சிலர் சம்பவத்தின்போது காயமடைந்திருந்தனர்.) சத்தியம் செய்யப்பட்ட சத்தியக் கடதாசி இல்லாதிருந்தமையே. அத்துடன் மருத்துவ அலுவலரால் விவரிக்கப்பட்ட காயங்கள் “இலேசான காயங்களாகவே’ இருந்தன. மனுதாரர் துப்பாக்கியின் அடிப்பாகத்தால் மோசமான முறையில் தாக்கப்பட்டார் என்ற அவரது கூற்றுக்கு ஒருப்பாடில்லாதிருந்தது என நீதிமன்றம் அபிப்பிராயப்பட்டது.*
3. 2005ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்கள்
சுனாமி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமும்? அனர்த்த முகாமைத்துவ சட்டமூலமும்° விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை. முதற் சந்தர்ப்பத்தில் 2004 டிசம்பர் 26ஆம் திகதிய சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணிசமான சமத்துவத்தை உறுதிப்படுத்துவதன் மூலமும் மாத்திரமே அவர்கள் தள்ளப்பட்டிருக்கும் மோசமான நிலைமையை அங்கீகரிக்கும் விசேட சட்டவாக்கத்தை வழங்குவதன் மூலமுமே உறுதிப்படுத்தபடலாம் எனவும் அதன் வாயிலாக அரசினால் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதனை நீதிமன்றம் இனங்கண்டது. இதனை மனதிற்கொண்டு அது அரசியலமைப்பிற்கு
St. SC (FR) Application No.263/2001, SCM 01.04.2005. g5ri üLI J5g5u J ğFfi 6I 6öi.(3g5. உடலாகமவினால் நிதியரசர்கள் வீரசூரிய மற்றும் ராஜா பெர்னாண்டோ உடன்பட்டனர்.
S8. இச்சம்பவம் தொடர்பில் ஒரு சில எதிர்வாதிகளுக்கெதிராக குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் தொடரப்பட்டபோதிலும் சந்தேக நபர்கள் நீதிவானால் விடுவிக்கப்பட்டனர் என நீதிமன்றம் கருதியமை புலனாகின்றது.
59. SC (SD) No.8/2005 udbUd 9/2005 SCM 26.04.2005.
60. SC (SED) No.4/2005.

Page 60
102 மனித உரிமைகளின் நிலை 2006
ஒவ்வாததாக இல்லாதிருக்கின்றது எனத் தீர்மானிக்கப்பட்டபோதிலும் சட்டத்தின் சீரான செயற்பாட்டிற்கு வசதியளிக்கும் நோக்கத்துடன் தீர்மானத்தில் அதன் வாசகங்களுக்குப் பல திருத்தங்கள் பதிவு செய்யப்பட்டன. அதற்கிணங்க இறந்துவிட்டதாக செய்யப்பட்ட ஊகம் நடைமுறைக்கு முன் கழியவேண்டிய காலப்பகுதியாக முன்னர் விதித்துரைக்கப்பட்ட ஒரு மாத காலப்பகுதி ஆறு மாதங்களாக மாற்றப்பட்டது. மேலதிகமாக விதந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் ஏனையவற்றுடன் சட்டத்தின் வரம்பிற்குள் சுவீகாரப் பிழைகளை உட்புகுத்துதல் நல்லெண்ணத்துடன் செயற்படுபவர்களை சட்டத்தைப் பொருட்படுத்தாமல் பின்னால் வரும் தண்டனை பெறக்கூடிய விளைவுகளிலிருந்து விலக்களித்தல் என்பன தொடர்பிலானவையாகும்.
இரண்டாம் சந்தர்ப்பத்தில் அனர்த்த நிலையொன்று நிலவுகின்றது என வெளிப் படுத் தி சனாதிபதியால் செய்யப் பட்ட பிரகடனம் அது இல்லாதொழிக்கப்படும் வரை நடைமுறையிலிருக்கும் என்ற வரைவு ஏற்பாடு உட்பட சட்டமூலத்தின் பல வாசகங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் விதித்தது. அத்தகைய வெளிப்படுத்துகை இரண்டு மாதங்களைக் கொண்டவொரு காலப்பகுதிக்கு அமுலிலிருப்பதற்கும் அது ஒரு நேரத்தில் இரணி டு மாதங்களை விஞ் சாமல் மேலும் காலப் பகுதிகளுக்கு நீடிக்கப்படுவதற்கும் திருத்தத்தைத் தேவைப்படுத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், எந்த விதிகளுக்குட்பட தேவைக்கெடுத்தல் நிகழக்கூடுமோ அந்த விதிகள் இல்லாதபட்சத்தில் "தோதான ஓர் ஒழுங்கமைப்பினால் அசைவுள்ள, அசைவற்ற ஆதனங்களை தேவைக்கெடுப்பதனை அனுமதிப்பதற்கெதிரான எழுப்பப்பட்ட ஆட்சேபனையை' நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அனர்த்தத்திற்கு எதிரான எவையேனும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமாகக்கூடியவாறான ஏதேனும் அசைவுள்ள, அசைவற்ற ஆதனத்தைத் தற்காலிகமாக அனுமதிப்பதற்கு மாத்திரம் இது மட்டுப்படுத்தப்படவேண்டும் எனப் பணிக்கப்பட்டது. ஆயினும், இது சொந்தக்காரர் இருப்பின் அத்தகைய சொந்தக்காரரின் சம்மதத்துடன், எதுவிடயத்திலும் ஒரு வாரத்தை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு மாத்திரமே.
இறுதியாக “தோதான ஒழுங்கமைப்பொன்றினால்” செயல்கள் புரியப்படுதல், புரியப்படாமை அல்லது தவணை தவறுகைகள் தொடர்பில் அரசியலமைப்பின் 126ஆம் உறுப்புரையின் நியதிகளின்படி நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் நியாயாதிக்கத்தைத் தடுத்துவிடும் முன்தடை வாசகமொன்று அரசியலமைப்பிற்கு ஒவ்வாததாக இருப்பதாகவும், அதன் விளைவாக நீதித்துறைத் தத்துவம் குறைந்து விட்டதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 103
4. அரசியலமைப்பின் 140ஆம் உறுப்புரையின்
நியதிகளின்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் பின்னணியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிமுறை எதிர்வினை
உரிமைகளை முன்னெடுத்துச் செல்லும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒரு சில முடிவுகள்" அத்தியாயத்தின் இப்பிரிவில் ஆராயப்படுகின்றன.
4.1 வாக்காளரின் உரிமைகளை உறுதிப்படுத்துதல் மொஹமட் ஹனிபா மொஹமட் மஸாஹிர் எதிர் தெரிவத்தாட்சி அலுவலர், கேகாலை மாவட்டம் மற்றும் ஏனையோர் வழக்கில்? 2003ஆம் ஆண்டு மாவனெல்ல பிரதேச சபையில் வெற்றிடமொன்று ஏற்பட்டதன் மீது ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன நிரலுக்கு வெளியிலிருந்து தனியாள் ஒருவர் அப்பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படுத்துவதற்கான கேகாலை உதவித் தேர்தல்கள் ஆணையாளரின் முடிவை நீதிமன்றம் இல்லாதொழித்தது. வெற்றிடத்தை நிரப்புவதற்கு சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உதவி ஆணையாளரைப் பணித்தது.
இந்த வழக்கின் பின்னணி என்னவெனில் தமது பதவியிலிருந்து பதவி விலகிய உறுப்பினர் ஒருவரால் சபையில் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு வெளியாள் ஒருவரைப் பெயர் குறித்து நியமித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் (விண்ணப்பத்தின் 2ஆம் எதிர்வாதி) 1ஆம் எதிர்வாதியாகிய உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதமொன்றை வழங்கியிருந்தார். அதனையடுத்து 1ஆம் எதிர்வாதியால் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்காளர்களால்
61. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புரீதியில் உள்ளடக்கப்பட்டுள்ள முறையானது மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் பேராணை நியாயாதிக்கத்தின் மீது நேரடியான தாக்கத்தைக் கொண்டுள்ளது என்பது மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு பற்றிய முந்திய அத்தியாயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பார்க்கவும். 2004ஆம் 2005ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மனித உரிமைகளின் நிலை என்பதனைப் பார்க்கவும். இயைபான வழக்குகளுக்கு பெரேரா எதிர் எதிரிசிங்க (1995) 1 Sri LRAppeal 58/03 SL. ஹெதர் மண்டி எதிர் மத்திய சூழல் அதிகாரசபை மற்றும் ஏனையோர் SCAppeal 58/03, SCMinister 20.01.2004 SCAppeal58/2003. தீர்ப்பு நீதியரயசர் மார்க் பெர்னாண்டோவால் நீதியரசர்கள் இஸ்மாயில் மற்றும் விக்னேஸ்வரன் உடன்பட்டனர். இயைபான தர்க்கம் யாதெனில் அரசியலமைப்புக் கோட்பாடுகளும் ஏற்பாடுகளும் நிர்வாகத் தற்றுணிபு மற்றும் பாதிப்பின்மை ஆகிய துறைகளை மட்டுப்படுத்தியுள்ள நேரொத்ததாக விரிவுபடுத்தப்பட்ட ஆணையீட்டெழுத்தாணைக்குக் கட்டுப்படும் பகிரங்கக் கடமைகளின் இயல்பையும் நோக்கெல்லையையும் தவறான செயல்களின் பிரிவுகளையும் முடிவுகளையும் உறுதிகேள் பேராணைக்கும் தடைக்கும் அமைய விரிவுபடுத்தியுள்ளது. (அரசியலமைப்பின் உறுப்புரை 140 என்பதன் நியதிகளின்படி) அத்துடன் நீதித்துறை மீளாய்வினதும் நிவாரணத்தினதும் நோக்கெல்லையையும் விரிவுபடுத்தியுள்ளது.
62. 2005 (2) Appellate Law Recorder, பக்கம் 37. நீதியரசர் எஸ்.ஜீ. சிறீஸ்கந்தராஜாவின்படி
நீதியரசர் எஸ்.ஐ. இமாம் உடன்பட்டார்.

Page 61
104 மனித உரிமைகளின் நிலை 2006
அளிக்கப்பட்ட விருப்புத் தெரிவுகளுக்கிணங்க ஐ.தே.க. வேட்பாளர்களின் நிரலில் பதினேழாக வந்தவரும், தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு நேரடியாகக் கீழே இருந்தவருமான வேறொரு போட்டியாளரால் மனுவொன்று அணைக்கப்பட்டது. வெற்றிடம் ஏற்பட்ட போது அவர் நீண்ட கால ஐ.தே.க. உறுப்பினராகவும், இதே பிரதேச சபையின் முன்நாள் உறுப்பினரொருவராகவும் இருந்தபோதிலும் மேன்முறையீட்டாளர் தாண்டிச் செல்லப்பட்டு வெற்றிடத்தை நிரப்புவதற்கு முனைப்பான அரசியல் அல்லது சமூகப் பணியிற்கூட ஈடுபட்டிராத வெளியூர்வாசியொருவர் பெயர் குறித்து நியமிக்கப்பட்டிருந்தார்.
மேன்முறையீட்டாளர் ஆணை விண்ணப்பமொன்றின் மீது, வெற்றிடத்தை நிரப்புவதற்கு வெளியூர் வாசியொருவரின் பெயர் குறித்த நியமனமும் தேர்தலும் உயர்நீதி மன்றத்தின்° அண்மைய முடிவுக்கு முரணானது எனக் குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்திருந்தார். உயர் நீதிமன்றத்தின் மேற்படி முடிவானது வெற்றிடமொன்று எழுவதன் மீது பெயர் குறித்து நியமனம் செய்வதற்கு அரசியல் கட்சியொன்றின் செயலாளர் ஒருவரின் தத்துவம் ஆரம்ப நியமனப் பத்திரத்தில் எந்த வேட்பாளர்களின் பெயர்கள் காணப்பட்டனவோ அந்த வேட்பாளர்களுக்கும், தேர்தலில் சில விருப்புத் தெரிவுகளைப் பெற்றிருநீ த வேட்பாளர் களுக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது எனத் தீர்மானிக்கப்பட்டது.
நீதிமுறையில் பொருள் கொள்ளப்பட்டவாறு 1987ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்கள் (திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்டவாறான) 1946ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 65அ என்னும் பிரிவின் பயனைக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரால் செய்யப்பட்ட வெளியூர் வாசியொருவரின் சொல்லப்பட்ட பெயர் குறித்த நியமனத்தை நிராகரிக்குமாறு உதவித் தேர்தல்கள் ஆணையாளர், சட்டத்தால் கடப்பாட்டிற்கு உட்பட்டிருந்தார் என்பதே அவரது முன்னிலைத் தெரிவுரையாக இருந்தது. மேன் முறையீட்டு நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்று கோரப்பட்ட உறுதிகேள் பேராணையையும் Writs of certiorari 3,60600Tuiol (95 g5T60600Tub (Mandamus) 6 prisiugi.
4.2 பதவியுயர்வு நடைமுறைகளில் நல்லாட்சியின்
கோட்பாடுகளைப் பாதுகாத்தல் இது தொடர்பில் அந்தக் காலப்பகுதியில் கவனத்திற்கொள்ளப்படவேண்டிய இரண்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. வைத்திய கலாநிதி (திருமதி) எச்.சீ.என். கஜவீர எதிர் எயார் மார்ஷல் ஜீடீ. பெரேரா மற்றும் ஏனையோர் வழக்கிலி
63. மாற்றுக் கொள்கைகளுக்கான நடுநிலையம் (குணரத்ன லிமிட்டெட்) மற்றும் ஏனையோர்
61g5hi óigibiru lag 2003 (l ) SLR 277
64. CA Application (Writ) No. 1416/2004 CA Minutes 15.9\07.2005 gổi ủLí Bạ6ìuuj giĩ
பஸ்நாயக நீதியரசர் ரீபவனின் உடன்பாட்டுடன்

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 105
வெளிநாட்டுப் பட்டதாரியொருவரால் கொண்டுவரப்பட்ட விண்ணப்பமொன்றை நீதிமன்றம் கருத்திற்கொண்டது. இப்பட்டதாரியின் பட்டம் மருத்துவப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இவர் 1994ஆம் ஆண்டு இலங்கை வான் படையில் பிளைட் லெவ்ட்னெண்ட்டாக ஆட்திரட்டப்பட்ட பின்னர், அவரது சிறந்த சேவை பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், ஸ்குட்ரன் லீடர் பதவி வரிசைக்கு மேலும் பதவியுயர்வு நியாயமற்ற முறையில் மறுக்கப்பட்டதென இவர் முறைப்பாடு செய்தார்.
ஏற்புடைத்தான விதிகளைப் பரிசீலனை செய்த நீதிமன்றம் 1949ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க வான்படைச் சட்டத்தின் 15ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் ஆக்கப்பட்ட 1961ஆம் ஆண்டின் 6(1)ஆம் ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி "மருத்துவர் அல்லது பல் மருத்துவர் ஒருவர் வான் படையின் ஏவுநரது விதப்புரையின் மீதும் சனாதிபதியின் அங்கீகாரத்துடனும் எட்டு ஆண்டுகளைக் கொண்ட சேவையின் பின்னர் ஸ்குவட்ரன் லீடர் பதவி வரிசைக்குப் பதவி உயர்வு செய்யப்படுதல் வேண்டும். ஆயினும், அவர் ஏவுநரால் தீர்மானிக்கப்படபக்கூடியவாறான அத்தகைய பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்” என நீதிமன்றம் அவதானித்தது. இது தொடர்பில் இந்நோக்கத்திற்காக மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்ட ஒரேயொரு பரீட்சை “அலுவலர்களின் பதவியுயர்வுப் பரீட்சை ஆ’ என்பதாகும். மனுதாரர் இதில் வெற்றிகரமாக சித்தியடைந்திருந்தார். ஆயினும், மனுதாரர் வெளிநாட்டுத் தகைமைகள் கொண்டவொரு அலுவலர் ஆதலால் இவர் மேலும் ஒரு “16ஆம் இலக்க சட்டப் பரீட்சையில்’ சித்தியடைதல் வேண்டியிருந்தது என எதிர்வாதியாகிய வான் படை வலியுறுத்தியது. இது 1977ஆம் ஆண்டின் பின்னர் ஒரு தேவைப்பாடானது என வான்படை குறிப்பிட்டிருந்தது.
இவ்வழக்கைப் பரிசீலனைசெய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுதாரர் வான்படையில் ஒன்பது ஆண்டுகள் சேவையாற்றியபின்னர் (1994ஆம் ஆண்டு இவர் வான் படையில் சேர்ந்தபோது இந் நிகழ்வுபற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டவில்லை) பதவியுயர்வுக்குத் தகைமை பெறுவதற்கு இவர் மேலும் ஒரு பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென இவருக்குக் கூறப்படுவது நியாயமற்றது எனத் தீர்மானித்தது. வைத்தியக் கலாநிதி இஷாந்தி குணதிலக எதிர் அட்மிரல் எச்.சி.ஏ.சீ திசேரா, கடற்படை ஏவுநர் மற்றும் ஏனையோர்? என்ற மற்றுமொரு முன்னைய வழக்கொன்றைப் பற்றி நினைவூட்டி நீதியரசர் பெர்னாண்டோ அது இந்த வழக்கின் நிகழ்வுகளுக்கு இயைபானதாகும் எனக் குறிப்பிட்டார். இந்த வழக்கில் நீதியரசர் பெர்னாண்டோ குறிப்பிடுவதாவது:
தொழிலுக்கான விண்ணப்பங்களைக் கோரும் அறிவித்தலொன்று
நேர்மையான விண்ணப்பக்காரர்களுக்கும் பகிரங்க நிறுவனங்களுக்கும் தெளிவான வழிகாட்டியாக இருத்தல் வேண்டும். அவர்களது
65. SC Minutes of 9.12.2003 (SC Appeal No. 76/2001, CA Application No. 366/99)

Page 62
106 மனித உரிமைகளின் நிலை 2006
மதியுரையாளர்கள் விழிப் பாயிராதவர்களுக்கு சுற்றிவளைக் கும் சூழ்ச்சிகளுக்குள் இட்டுச்செல்வதற்காக வலிந்து தோற்றுவிக்கப் பட்ட பொருள் கோடலில் தஞ்சம் புகுதலாகாது.
இந்த வழக்கில் மனுதாரரின் பதவி உயர்வுக்கு ஒரு மாதத்திற்குள் சனாதிபதிக்கு அவசியமான விதப்புரையைச் செய்யுமாறு எதிர்வாதிகளைப் பணித்து நீதிமன்றம் ஆணையீட்டெழுத்தாணை ஒன்றை வழங்கியது.
மனுதாரருக்கு வான் படை ஏவுநரால் செலுத்தப்படவேண்டிய செலவுகளாக ரூபா 25,000 பணத்தொகையொன்று செலுத்தப்பட்டதும் கவனிக்கப்படுதல் வேண்டும்.
இதேபோன்று எச்.எஸ். வனசிங்க எதிர் இலங்கைப் பல்கலைக்கழகம் மற்றும் ஏனையோர் வழக்கிலி பேராசிரியர் பதவியில் உறுதிப்படுத்துவதிலான தாமதம் மற்றும் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட கல்விமான் ஒருவர் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்குப் பதவியுயர்த்தப்படாமை தொடர்பில் பொதுமக்களின் நலன் கருதிக் கொணரப்பட்ட விண்ணப்பமொன்றை நீதிமன்றம் பரிசீலனை செய்தது. இந்த வழக்கில் கல்விமான்கள் ஏற்புடைத்தான பல்கலைக்கழகச் சுற்றறிக்கைகளில் விதந்துரைக்கப்பட்ட தேவையான மூலப் பிரமாணங்களைக் கொண்டிருந்தபோதிலும் பகைமை காரணமாக உறுதிப்படுத்துகையையும் பதவியுயர்வையும் தாமதப்படுத்திய பல்கலைக் கழகத்தின் அலுவலர்களின் நடத்தைக்கு விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது. இங்கும் உறுதிப்படுத்துகை மற்றும் பதவியுயர்வு தொடர்பில் கோரப்பட்டவாறு பேராணைகள் வழங்கப்பட்ட அதே வேளை நீதிமன்றம் செலவுகளாக ரூபா 50,000 பணத்தொகையொன்றை வழங்கியது.
4.3 பகிரங்க அலுவலர்களின் எதேச்சையான, நியாயமற்ற
நடவடிக்கைகளைத் தடைசெய்தல் பீனிக்ஸ் பெஷன்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் எதிர் மொறட்டுவை மாநகர சபை மற்றும் ஏனையோர் வழக்கில்" மனுதாரர் எந்தக் காலப்பகுதியின்போது வளவொன்றின் சொந்தக்காரராக இல்லாதிருந்தாரோ அந்தக் காலப்பகுதி தொடர்பில் வீதவரிகளை அறவிடுவதற்கு உள்ளுரதிகார சபையொன்றினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை மேன்முறையீட்டு மன்றம் அனுமதிக்க மறுத்தது. இதன் விளைவாக இந்த வழக்கில் நிர்வாகச் சட்டத்தில்° தகுந்த
66. A (Writ) No. 1419/2004 CA Minutes of 7.12.2005. L fu Jeff 6Irfld, u6ùbiTub.
நீதியரசர் ரீபவன் உடன்பட்டார்.
ó7。 CA (Writ) No. 2185/2004 CA Minutes of 05.09.2005. $füq É:ÉluJaï éléfy Le 92,ùeb.
நீதியரசர் ரீபவன் உடன்பட்டார்.
68. அசோசியேட்டட் புரொவிண்சியல் பிக்சர் ஹவுஸ் எதிர் வெட்னஸ்பெறி கோர்பரேஷன் (1948) KB 223 மற்றும் வீலர் எதிர் லீச்செஸ்டர் சிற்றி கவுன்சில் (1985) AC 1054 (House of Lords) ரெக்ஸ் எதிர் டைன்மவுத் மாவட்ட சபை (1896) 20B 219 மற்றும் ரெஜினா எதிர் பேர்மிங்ஹம் உரிமமளிக்கும் திட்டமிடல் குழு (1972) 20B 140

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு O7
தற் றுணிபின் பின் பயன்பாடு பற்றிய நன்கறியப்பட்ட கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டன. தற்றுணிபுத் தத்துவம் பொறுப்பிக்கப்பட்ட பகிரங்க அலுவலர் ஒருவர் சட்டத்தால் விதித்துரைக்கப்பட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்காதவிடத்து அல்லது எந்த விடயங்களைக் கருத்திற் கொள்ளுமாறு அவர் பிணிக்கப்பட்டுள்ளாரோ அந்த விடயங்களைக் கருத்திற் கொள்ளாதவிடத்து நீதிமன்றம் சட்டநெறி மீளாய்வைப் பிரயோகிப்பதற்குத் தனக்குள்ள அதிகாரத்தை உறுதிப்படுத்தியது.
(வீதவரிகள் செலுத்தப்படாமை என சார்த்துரைத்து எதிர்வாதியாகிய உள்ளுராட்சி மன்றத்தால் வழங்கப்பட்ட) பறிமுதல் அறிவித்தலைத் தள்ளுபடி செய்து உறுதிகேள் பேராணையொன்றும் (writs of Certiorari) எதிர்வாதிகளை ஏனையவற்றுடன் மனுதாரர் வளவுகளின் சொத்துவத்தைக் கையேற்பதற்கு முந்திய காலப்பகுதி தொடர்பில் வருமதியாக இருந்த எவையேனும் வீதவரியின் பேரில் சம்பந்தப்பட்ட வளவுகளைப் பறிமுதல் செய்வதிலிருந்து அல்லது பராதரீனப் படுத்துவதிலிருந்து எதிர் வாதிகளைத் தடைசெய்யும் தடைப்பேராணையொன்றும் வழங்கப்பட்டன.
44. உற்பத்தியாளர்களின்/வியாபாரிகளின் உரிமைகளுக்கும்
சமுதாயத்திற்கும் அத்தியாவசியமான பண்டங்களை
ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் சமநிலை நெஸ்லே லங்கா லிமிட்டெட் எதிர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் ஏனையோர்? வழக்கில் விரிவான செலவுத்திட்டமொன்றினதும், ஆதார ஆவணங்களினதும் அடிப்படையில் உற்பத்தியாளர் ஒருவரின் பால் உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதி தொடர்பில் அவ்வுற்பத்தியாளரின் விண்ணப்பமொன்று" நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் (பா.அ.அ.) முடிவுக்கெதிராக உறுதிகேள் பேராணையொன்றை வழங்கியது. நீதிமன்ற விசாரணையின் போதுகூட பா.அ.அ.ஆல் அத்தகைய மறுப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
நீதிமன்றம் பல நிர்வாகச் சட்டக் கோட்பாடுகளைக் கையாண்டது. உதாரணமாக ஏனையவற்றுடன் “உறுதி கேட்கப்பட்ட ஆணையீட்டெழுத்தாணை’ என்பதன் எண்ணக் கருத்து (ஆணையீட்டெழுத்தாணையை மறுத்து நிவாரணத்தைப்
69. 2005Appellate Law Recorder 31 நீதியரசர் ரீபவனின் படி நீதியரசர் பஸ்நாயக
உடன்பட்டார்.
70, 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் விதித்துரைப்பதாவது: முழு ஆடைப் பால் மா சமுதாயத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய பொருளொன்றாக விதித்துரைத்தது. எனவே, பா.அ.அ.இன் எழுத்திலான முன்னங்கீகாரமின்றி இதன் மொத்த அல்லது சில்லறை விலையை அதிகரிப்பதனை உற்பத்தியாளர்களுக்கு இயலாததாக்கியது.

Page 63
108 மனித உரிமைகளின் நிலை 2006
பொறுத்தளவில் அதே குறிக்கோளை எய்தியிருக்கக்கூடிய உறுதி கேள் பேரணையை வழங்கியமை) எதிர்த்துரைக்கப்பட்ட கட்டளையொன்றில் காரணங்களை வெளிவிடத் தவறியமை (அதன் மூலம் இயற்கை நீதி என்பதன் கோட்பாட்டின் பரந்த உட்பொருளைக் கவர்ந்தது) மற்றும் எந்த நியதிச்சட்ட அதிகார சபையின் முடிவை எதிர்க்குமாறு கோரப்படுகின்றதோ அந்த நியதிச்சட்ட அதிகார சபையின் எதிர்த்துரைக்கப்பட்ட முடிவு வறிதானதாகக் காணப்படின் திறத் தவர் ஒருவரின் (ஊகிக் கப்பட்ட) மெச் சத் தகாத நடத்தை புறக்கணிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள்.
விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பின் அதன் விளைவாக மனுதாரர் சொல்லப்பட்ட உற்பத்திப் பொருளை சந்தையிலிருந்து அடியோடு மீளப் பெற்றிருந்திருக்கலாம் என்ற ஊகத்தின் பின்னணியில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட அம்சம் முக்கியமானது. அந்தக் கோணத்திலிருந்து நோக்குமிடத்து நிர்வாகச் சட்டத்தின் கோட்பாடுகளைப் பற்றி குறிப்பீடு செய்வதன் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு உற்பத்தியாளர்களின்/வியாபாரிகளின் உரிமைகளை வலியுறுத்துவதாக அமைவதோடு மாத்திரமல்லாமல் சொல்லப்பட்ட உற்பத்திப்பொருளை சந்தையில் பெற்றுக்கொள்வதற்குப் பாவனையாளர்களின் எதிர்பார்ப்புகளை வற்புறுத்திக் கூறுவதாகவும் கருதப்படலாம். இவை அனைத்துக் கும் மேலாக நியதிச் சட்ட அதிகார சபையொன்று தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்ட வகையில் செயற்படவோ அதன் முடிவுகளுக்கான காரணங்களைத் தெரிவிக்க மறுப்பதில் அதன் விடாப்பிடியான தன்மையில் நிலைத்திருக்கவோ முடியாது என்ற கோட்பாட்டிற்கு நல்லதோர் அதிகாரத்தையும் அளிக்கின்றது.
4.5 பரீட்சார்த்தியொருவரின் எதிர்பார்க்கப்பட்ட
உரிமைகளுக்குச் சாதகமாக கல்விசார் (பல்கலைக்கழகம்) தன்னாட்சியைக் குறைத்தல் சிரந்தி பெரேரா எதிர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஏனையோர் வழக்கில்" (திருத்தப்பட்டவாறான) 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளையும் பட்டப்படிப்பின் மருத்துவ நிறுவகக்கட்டளைச் சட்டத்தின் (PGM) செயற் திட்டத்தையும் கருத்திற் கொண்டு கண்வைத்தியத்தில் மருத்துவக் கலாநிதிப் பட்டத்திற்கு இட்டுச் செல்லும் பரீட்சை தொடர்பில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட புள்ளி வழங்கும் செயற்திட்டம் எதுவுமில்லை என்ற மனுதாரரின் முறைப்பாட்டில் அவருக்கு சட்டமுறையான குறைபாடொன்றிருந்தது என நீதிமன்றம் தீர்மானித்தது. மனுதாரர் தேவையான பரீட்சையில் சித்தியடையவில்லை என வெளிப்படுத்தப்பட்டிருந்தார்.
71 CA (Writ) 2246/2004, CAMinutes 22.11.2005 நீதியரசர் கே. ரீபவனின் படி, நிதியரசர்
பஸ்நாயக உடன்பட்டார்.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 109
பட்டப் படிப் பின் மருத்துவ நிறுவகத்தின் அதிகாரிகள் (மேற் படி பல்கலைக்கழகங்கள் சட்டத்தினதும் நியதிகளின்படி) பரீட்சைகள் தொடர்பிலான எல்லா விடயங்களிலும் (புள்ளி வழங்கும் செயற்திட்டம் உட்பட) இயைபான துறையிலுள்ள கற்கைச் சபையால் ஒழுங்கு விதிகள் வரையப்பட்டு முகாமைச் சபைக்கு அதன் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னர் சட்டவாக்கத்திற்காக (ஒழுங்கு விதிகள் அங்கீகாரத்திற்காக பல்கலைக்கழகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்ற மேலும் ஒரு காப்பு வாசகத்துடன்) மூதவைக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்ற சட்டமுறையான தேவைப்பாட்டுடன் இணங்கியொழுகவில்லை என நீதிமன்றம் கண்டது. எதிர்த்துரைக்கப்பட்ட புள்ளி வழங்கும் செயற்திட்டத்தின் மீது ப.ப.ம.நி. மனுதாரரை பரீட்சையில் தோல்வியுறச் செய்ததோ அந்தப் புள்ளி வழங்கும் செயற்திட்டம் உறுதிகேள் பேராணையால் தள்ளுபடி செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட பரீட்சையை வறிதாக்கும் அளவுக்கு நீதிமன்றம் முனையவில்லை (இது சித்தியடைந்த பரீட் சார்த்திகளைப் பாதித் திருக்கும்) என்பது வலியுறுத்தப்படுதல் வேண்டும். மாறாக சித்தியடைந்தோரின் எதிர்த்துரைக்கப்பட்ட நிரலை நீக்கி சித்தியடைந்தோரின் புதிய நிரலில் மனுதாரரின் புதிய நிரலில் மனுதாரின் பெயரை உட்புகுத்துவதற்கான விதிமுறைக்கு நீதிமன்றம் தன்னை மட்டுப்படுத்தியது. (கடைசியாக அங்கீகரிக்கப்பட்ட புள்ளி வழங்கும் செயற்திட்டத்தின் நியதிகளின்படி பரீட்சார்த்த பரீட்சையில் சித்தியடைவதற்குப் போதியளவு புள்ளிகளைப் பெற்றிருந்தார் என்ற அடிப்படையில்). அவ்வாறு செய்கையில் கல்விசார் தன்னாட்சி என்ற எந்த “மாநாட்டுப் புகைத்திரை’யின் மறைவிற்குள் பரீட்சார்த்தி ஒருவரை பரீட்சை யொன்றில் சித்தியடையச் செய்யும் அல்லது தோல்வியடையச் செய்யும் நீதிமுறை மீளாய்வுக்கு அப்பாற்பட்டது என்ற கல்விசார் சபையொன்றின் முடிவு பெரும்பாலும் உரிமை கோரப்படுகின்றதோ அந்த ‘மாநாட்டுப் புகைத்திரையை ஊடறுத்துச் செல்வது உணரக்கூடிய நீதிமுறை முன்னேற்றம்’ என்பது தெளிவு.
4.6 தனியார் காணிச் சொந்தக்காரர் ஒருவரின் காணியை
சுவீகரிப்பதற்கான அரசின் முடிவையடுத்து நட்டஈட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துதல். ஹெதர் முண்டி எதிர் மத்திய சூழல் அதிகாரசபை மற்றும் ஏனையோர் வழக்கில்? தென்பகுதி கடுகதி வீதியின் மார்க்கத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் அதிகாரிகளால் வெளிப்படையாக உறுதியளிக்கப்பட்ட உத்தரவாதங்களின் நியதிகளின்படி அரசினால் முன்கூட்டியே நட்டஈடு செலுத்தப்படாமல் மனுதாரரின் காணி அரசினால் கையேற்கப்பட்டதன் மீது மனுதாரர் ஒருவர் காணியினர் ஆட்சியுடைமையிலிருந்து
2. CA (Writ) No. 84/08 CA Minutes Ol.04.2005

Page 64
110 மனித உரிமைகளின் நிலை 2006
அப்புறப்படுத்தப்படமுடியுமா என்ற கேள்வியை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர் நோக்கியது.
மனுதாரரின் காணி சுவீகரிக்கப்பட்டிருந்ததுடன்’ சுவீகரிப்பின் நடைமுறை பற்றி அறிவிக்கப்படாத நிலையில் இயற்கை நீதியின் உரிமை மீறலுக்கு நட்டஈடும் அத்துடன் அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட நட்டஈட்டின் கொடுப்பனவும் செலுத்தப்படுவதற்கமைய சுவீகரிப்பும் உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது." உதாரணமாக மலேசிய அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு" மாறாக கொள்ளப்பட்ட காணியின் ஆட்சியுரிமையை ஏற்பதற்கு முன்னர் நட்டஈட்டின் கொடுப்பனவை இலங்கை காணி கொள்ளல் சட்டம் கருத்திற் கொள்ளவில்லை." எனினும் உயர் நீதிமன்றத்தின் மேற்படி முடிவிலிருந்து' சட்டநெறி அடிப்படையொன்றைப் பெற்று (ஆதலால் வெறும் நியதிச்சட்ட ஏற்பாடொன்றிலிருந்தல்ல) மேன்முறையீட்டு நீதிமன்றம் நட்டஈட்டின் கொடுப்பனவுவரை காணியின் ஆட்சியுடைமையைக் கையேற்பதிலிருந்து அரசைத் தடைசெய்யும் தடைப் பேராணையொன்றை வழங்கியது. அத்தகைய காணிச் சொந்தக்காரர்களின் பாதுகாக்கும் நடைமுறைச் சட்டங்களில் இடைவெளி இருந்த போதிலும் தனியார் காணிச் சொந்தக்காரர் ஒருவரின் இடரலுக்கு உணர்வை வெளிக்காட்டும் நீதிமுறை நுண்ணுணர்வு பற்றிய ஒரு சம்பவமாக இது இடம் பெற வேண்டும்.
73. ஹெதர் முண்டி எதிர் மத்திய சூழல் அதிகாரசபை மற்றும் ஏனையோர் SCAppeal 581 03., SC Minutes of 20.01.2003 SC Appeal 58/2003, gồüüLị Bigfuujgff upTird, QLiĩ681m68ổi(3_II, நீதியரசர்கள் இஸ்மாயில் மற்றும் விக்னேஸ்வரன் உடன்பட்டனர். பக்கம் 13
74. LEC (Vol MI) Cap. 300 (1980 Revised)
75. இயைபான பிரச்சினைகள் பற்றிய முழுமையான ஆய்வொன்றுக்கு இலங்கை காணி கொள்ளும் சட்டத்தின் பின்னணியில் “தனியார் காணிச் சொந்தக்காரர்களின் உரிமைகள் - 2005இல் நீதித்துறை சிந்தனையின் பின்னணியில் ஒரு சமூக, பொருளாதார கணிப்பீடு” என்ற அத்தியாயத்தைப் பார்க்கவும்.
76. Shpran 67
77. இலங்கை அரசு, குடியியல், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தையும் (ICCPR) அதன் விருப்பத்திற்குரிய வரைவேட்டையும் முறையே 1980ஆம் 1997ஆம் ஆண்டுகளில் ஏற்றங்கீகரித்தது. அதன் மூலம் எந்த கு.அ.உ.ச.ச. உரிமை மீறல்களுக்கு உள்ளூரில் நிவாரணம் இல்லையோ அந்த உரிமை மீறல்களைச் சார்த்துரைக்கும் தனியாட்களிடமிருந்து மனுக்களை ஏற்பதற்கு ஜெனிவாவில் தளம் கொண்ட மனித உரிமைகள் குழுவின் தகுதியை ஏற்றுக்கொண்டது.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 111
5. கு.அ.உ.ச.ச.வின் விருப்பத்திற்குரிய வரைவேட்டின்கீழ் தனியாள் தொடர்பாடல்களுக்கு எதிர்வினையாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் முடிவுகள்
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின்" (UNHCR) கருத்துக்கள் பற்றிய தொடர்பாடல் 2005ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் டோனி பெர்னாண்டோ வழக்கில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்மீதான சர்வதேசச் சமவாயத்தின் 9(1)ஆம் உறுப்புரையின் மீறுகையைக் கண்டமை முக்கியமானவொரு வெளிப்படாகும்.”
ஒர் ஆங்கில ஆசிரியரும் ஆண் குழந்தையொன்றின் தந்தையுமான பெர்னாண்டோ நீதிமன்றத்தில் உரத்த குரலில் பேசியதன் மூலமும், அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்களை அணைப்பதனை விடாப்பிடியாக வற்புறுத்தியதன் மூலமும் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக 2003ஆம் ஆண்டு பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா நீதியரசர்களான யாபா, எதுசூரிய ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி குழாம் ஒன்றினால் ஓராண்டு கால கடுழிய மறியற்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அதன் முந்திய கட்டளையை மீளாய்வு செய்யக்கோரி அணைக்கப்பட்ட விண்ணப்பமொன்று இதே நீதிபதிகளைக் கொண்ட நீதிபதி குழாம் ஒன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து பெர்னாண்டோ அவரது மறியற்தண்டனையானது சமவாய உரிமைகளை மீறியது என வழக்குரைத்து தனியாள் தொடர்பாடல் ஒன்றாக ஐ.நா.ம.உ.கு.க்கு (UNHCR) மேன்முறையீடு செய்தார்.
ஐ.நா.ம.உ.கு.இன் பதின்மூன்று யூரர்கள் இவருக்கு சாதகமாக முடிவெடுத்து, நீதிமன்றங்கள், குறிப்பாக, பொதுச் சட்ட நியாயாதிக்கங்களில், நீதிமன்ற அவமதிப்பிற்காக தண்டனைகளை விதிக்கும் சுருக்கமுறைத் தத்துவத்தைப் பிரயோகிப்பதன் மூலம் ஒழுங்கையும் மகத்துவத்தையும் பேணுவதற்கான பாரம்பரிய அதிகாரத்தைத் துய்க்கின்றபோதிலும் “ஒழுங்கான வழக்கு நடவடிக்கைகளைப் பேணுவதற்கு நீதிமன்றங்களின் தத்துவத்தைப் பேணுகையில் ஏன் அவ்வளவு கொடூரமான, சுருக்கமுறை தண்டனை தேவையாயிருந்தது என்பது பற்றி நீதிமன்றத்தாலோ, அரச திறத்தவராலோ தர்க்கரீதியிலான விளக்கம் தரப்படவில்லை’ என கருத்து முரண்பாடின்றி உடன்பட்டனர்.
78. டோனி மைக்கல் பெர்னாண்டோ எதிர் இலங்கை (தொடர்பாடல் இல. 1189/2003 - 2005 மார்ச் 31) என்பதில் மனித உரிமைகள் குழுவின் கருத்துக்கள். முந்திய தொடர்பாடல்கள் கருத்துக்கு தொடர்பாடல் இல. 950/200 என்பதனைப் பார்க்கவும். (ஜெகதீசன் சர்மா வழக்கு) CCPR1078D/950/2000, 31.07.2003.தொடர்பாடல் இல. 916/200 (ஜயலத் guu6uri g56T 6upaig, CCPR/C/75/D/916/909/2000. Gg5 Tuff uT6ð 6No. 909/2000. (விக்டர் ஐவன் வழக்கு CCPR/C/81/D/909/2000, 26/08/2004) அத்துடன் தொடர்பாடல் இல, 1033/2004 (சிங்கராசா வழக்கு, CCPR/C/81/1033/2001, 26/08/2004 )
79. விக்டர் ஐவன் வழக்கில் shpra n 78

Page 65
112 மனித உரிமைகளின் நிலை 2006
அரச திறத்தவரால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரேயொரு தடங்கல் திரு. பெர்னாணி டோவால் திரும் பத் திரும்ப நகர்த்தல் பத்திரங்கள் அணைக்கப்பட்டமையேயாகும். இதற்குப் பணரீதியிலான தண்டனைகளை விதித்திருந்தால் போதுமானதாயிருந்திருக்கும். நீதிமன்றத்தின் முன்னிலையில் “குரலை உயர்த்தி’ அதன் பின்னர் மன்னிப்புக்கோர மறுத்தமை ஒரு சந்தர்ப்பமாகும்.
அது மேலும் கூறியதாவது: சமவாயத்தின் உறுப்புரை 9(1) சுதந்திரத்தின் ஏதேனும் ஏதேச்சையான மீறலைத் தடுக்கின்றது. போதியளவு விளக்கமின்றியும், சுயேச்சையான நடைமுறைசார்ந்த பாதுகாப்புகளும் இல்லாமல் கடுமையான தண்டனை விதித்தல் அந்தத் தடைக்குள் வருகின்றது. உறுப்புரை 9(1)இன் மீறுகையொன்றாக அமையும் செயலொன் று அரசாங் கத்தினி நதித் துறைக் கிளை யால புரியப்படுகின்றது என்ற நிகழ்வு மொத்தத்தில் அரச திறத்தவரின் பொறுப்புடைமையை ஈடுபடுத்துவதனைத் தடுக்க முடியாது.
கு.அ.உ.ச.ச.இன் உறுப்புரை 2இன் 3(அ) என்னும் பந்திக்கிணங்க சம்பந்தப்பட்ட வருக்கு நட்டஈடு உட்பட போதியளவு நிவாரணம் அளிப்பதற்கும், வருங்காலத்தில் இதனையொத்த மீறல்களைத் தவிர்ப்பதற்கும், சட்டவாக்கத்தில் அவசியமான அத்தகைய மாற்றங்களைச் செய்வதற்குமான கடப்பாட்டின் கீழ் திறத்தவராக அரசு இருக்கின்றது. பிந்திய கடப்பாடு நீதிமன்ற அவமதிப்புச் சட்டமொன்றைச் சட்டவாக்கம் செய்யும் அவசியத்தை மையமாகக் கொண்டுள்ளது. வருங்காலத்தில் இதனையொத்த மீறுகைகளைத் தவிர்த்துக்கொள்ளும் கடப்பாட்டின் கீழும் திறத்தவரான அரசு உள்ளது.
2005 வரை இலங்கை தொடர்பில் ஐ.நா.ம.உ.கு.இனால் அனுப்பப்பட்ட ஐந்தாவது கருத்துத் தொடர்பாடல் இதுவாகும்.
ஒரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம் செலுத்தப்படவேண்டிய நட்டஈட்டின் உள்ளவாறான தொகையைத் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்திய போதிலும்° இவற்றுள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசோ, எவையேனும் அரசாங்கக் குழுமங்களோ உண்மையிலேயே இக்கருத்துக்களில் அடங்கியிருந்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆயினும், பெர்னாண்டோ வழக்கில் கருத்துக்களின் தொடர்பாடலின் விளைவாக இலங்கை அரசாங்கம் முன்னெப்பொழுதுமில்லாத மறுமொழியாக பொருத்தனையின்
80, 2005 ஆகஸ்ட் 8ஆம் திகதி கொண்ட இலங்கை அரசாங்கத்தின் மறுமொழி
81. குழுவின் வழமையான நடைமுறைக்கிணங்க அரசாங்கத்தின் எதிர் மறுமொழிக்கு மறுமொழியாக ஐ.நா. குழு மறுமொழி அனுப்பியதையடுத்து, அவரது வழக்கறிஞர் என்ற வகையில் கிஸாலி பின்ரோ ஜயவர்தனவினால் முறைப்பாட்டைச் செய்தவரான திரு. டோனி மைக்கல் பெர்னாண்டோவின் சார்பில் செய்யப்பட்ட சமர்ப்பணம்.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 113
2ஆம் உறுப்புரையின் பந்தி 3(அ) என்பதன் நியதிகளின்படி" கருத்துக்களைத் தன்னால் பயனுறுத்த முடியாது என ஐ.நா.ம.உ.கு.க்குத் தெரிவித்தது.
இலங்கை விருப்பத்திற்குரிய வரைவுருக்கு ஒரு திறத்தவராக வரத் தீர்மானித்த நேரத்தில் ஐ.நா.ம.உ.கு. இலங்கையின் தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றினால் வழங்கப்பட்ட எவையேனும் தீர்ப்புகளை, குறிப்பாக நிகழ்வுகளில் கண்டறிந்த விடயங்களையும் அதற்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியத்தை முழுமையாகக் கருத்திற்கொண்டதன் மீது அத்தகைய நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புகளைக் கருத்திற்கொள்ளும், மீளாய்வு செய்யும் அல்லது அதன் மீது குறிப்புரை வழங்கும் அளவுக்கு ஐ.நா.ம.உ.கு.இன் தகுதி நீளும் என எதிர்பார்க்கவில்லை என அரசாங்கம் குறிப்பிட்டது.
(அ) இலங்கையிலுள்ள தகுதிவாய்ந்த ஒரு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பு மற்றும் தண்டனைத் தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் எவரேனும் ஆளுக்கு நட்டஈட்டின் கொடுப்பனவு செய்வதனை அரசாங்கம் கருத்திற்கொள்ள முடியாதிருக்கின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் இலங்கை உச்ச நீதிமன்றமான உயர் நீதிமன்றத்தால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டு, அதே நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டார். ஆதலால் குற்றத்தீர்ப்பினதும், தன்டனைத்தீர்ப்பினதும் அடிப்படையில் அத்தகைய நட்டஈட்டின் கொடுப்பனவு அத்தகைய நீதிமன்றத்தின் அதிகாரத்தை முறியடிப்பதாக அமையும் என்பதுடன், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் பொருள் கொள்ளப்படும்.
(ஆ) நீதிமன்றத்தின் வருங்கால முடிவுகள் மீதோ, தீர்ப்புகள் மீதோ அரசாங்கத்திற்குக் கட்டுப்பாடு எதுவுமில்லையாதலால் அரசாங்கத்தால் இதனையொத்த தீர்ப்புகளைத் தடுக்கவோ, ஏதேனும் வருங்காலத் தீர்ப்பு தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்குப் பணிப்புகள் வழங்கவோ முடியாது.
(இ) சட்டவாக்கங்கள் தொடர்பான மாற்றங்கள் தொடர்பாக குழுவின் கருத்துகள் தொடர்பில் இவ்விடத்தை இலங்கை சட்ட ஆணைக்குழுவுக்கு அதன் பரிசீலனைக்காக ஆற்றுப்படுத்தும் என இலங்கை அரசாங்கம் குழுவுக்கு அறிவித்துள்ளது.
எதிர் மறுமொழியாக* அரசாங்கத்தின் நிலைப்பாடு அதன் சர்வதேசச் சட்டத்திற்கும் குறிப்பாக அதன் வரைவேட்டுக் கடப்பாட்டிற்கும் அதன்
82. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் ஒன்றை இலங்கைப் பத்திரிகாசிரியர் குழாம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற கண்காணிப்புக் குழுக்கள் உட்பட ஊடகமும், உயர்தொழில்சார் ஒழுங்கமைப்புகளும் கடந்த பல ஆண்டுகளாகக் கோரியிருந்தபோதிலும் அப்படியானதொரு சட்டம் இலங்கையில் இல்லை. 1996இல் ஊடகச் சட்ட மறுசீரமைப்பைப் பரிசீலனை செய்வதற்கென அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவொன்று அவமதிப்புச் சட்டமொன்று சட்டவாக்கம் செய்யப்படுவதை விதந்துரைத்தது. அவமதிப்புச் சட்டமொன்றின் சட்டவாக்கம் மீதான

Page 66
114 மனித உரிமைகளின் நிலை 2006
வெளிப்படுத்தப்பட்ட பொறுப்புக் கும் பொருத்தமே இல் லை என பெர்னாண்டோவின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அரசு தன்னிச்சையாகவே குறித்துரைக்கப்பட்ட உடன்பாட்டுக் கடப்பாடுகளில் ஈடுபட்டிருப்பதன் ஏதுவின் மீது அவற்றை நிறைவேற்றுவதற்கு சட்டப்படி பிணிக்கப்பட்டுள்ளது எனவும், அநாதரவான நிலை பற்றிய அரசாங்கத்தின் வாதம் ஏனையவற்றுடன் பின்வரும் காரணங்களினால் நிலைபேறானதல்ல எனவும் அத்தியாவசியமாக எடுத்துக்காட்டப்பட்டது.
(அ) முதலாவதாக சட்டபூர்வமான தீர்ப்பொன்றை அல்லது அதனையொத்த சட்டமுறையான செயலை அரசாங்கம் அதன் சொந்த விருப்பப்படி வலுவற்றதாக்க விழையும் போது அது சர்வதேசக் கடப்பாடுகளுடன் இணங்கியொழுகுதல் இடம்பெறும் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தலையீடொன்றல்ல. எதுவிதத்திலும் விருப்பத்திற்குரிய வரைவேட்டை அங்கீகரித்தலானது உள்ளூர் நிவாரணங்கள் தீர்ந்துபோதல் தொடர்பில் விதித்துரைத்தலின் நிலையில் அத்தகைய முடிவொன்றிருப்பது குழுவின் முன்னிலைக்குவரும் வழக்குகளுக்கு வழமையாக ஒரு முன்னிபந்தனையாக இருப்பதனால் உச்ச நீதிமன்றத்தின் முடிவு உதாசீனம் செய்யப்படலாம் என்பதனை உட்கிடையாக அங்கீகரிப்பதாகும்.
(ஆ) இரண்டாவதாக, ஐ.நா.ம.உ.கு.இனால் பணிக்கப்பட்டவாறு நட்டஈட்டின் கொடுப்பனவு நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையமாட்டாது. இந்த வகையில் நட்டஈடு செலுத்துவதை ஒரு சிலர் நீதித்துறையை விமர்சிப்பதாக விளங்கிக்கொள்ளக்கூடும். மேலும் சிலர் இதனை ஒரு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு விமர்சனமாகக்கூடக் கருதலாம். எனினும் நீதித்துறையால் அதன் பணிகளை நிறைவேற்றுவதில் தலையிடுவதாக அமையமாட்டாது.
(இ) மூன்றாவதாக, அரசியலமைப்பை முறையாகப் பொருள்கொள்வதற்கு அதன் அனைத்து ஏற்பாடுகளுக்குமிடையில் இசைவாக்கம் தேவைப்படுகின்றது. நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பிலான ஏற்பாடுகள், குறிப்பாக சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அரசின் பொறுப்புடைமை உட்பட ஏனைய தத்துவங்களினதும்,
சமர்ப்பணங்களைப் பரிசீலனை செய்வதற்கென 2003இல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும், பாராளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டதையடுத்து இக்குழு இல்லாதொழிந்தது. 2005இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட குழுவொன்று சட்டவரைவொன்றைத் தயாரித்தது. அதன் பின்னர் இது சட்டத்தரணிகள் பேரவையால் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர் அது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. நாட்டிற்கு அவமதிப்புச் சட்டம் தேவை என்பது பற்றிய பல கட்டுரைகளை நீதித்துறை நடவடிக்கைகள் முடிவுறாதிருந்தபோதிலும் கூட நியாயமான அளவு பகிரங்க உரையாடல்களுக்கு இடமளிக்கும் அவமதிப்பு மீதான சட்டமொன்றை இலங்கையிடமிருந்து (335ft (blf Freedom of Excpression and Sub Judice. Lakshman Kadirgamar, President's Counsel, Organisation of Professional Association (OPA) Journal Vol. 15, 1992-3 என்பதில் பார்க்கவும். அத்துடன் இதே வெளியீட்டில் சனாதிபதியின் வழக்கறிஞர் எச்.எல். டீ சில்வாவின் Fice Press and Fair Trial என்பதிலுள்ள குறிப்புரை ஒன்றையும் பார்க்கவும்.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 115
கடமைகளினதும் பிரித்தொதுக்கம் தொடர்பிலான பின்னணியில் விளங்கிக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஈ) நாலாவதாக அரசாங்கம் சட்டத்தைப் பொருள்கோடல் செய்து பிரயோகிக்கும் அதன் தகுந்த பணியைப் பிரயோகிக்கையில் நீதித்துறையின் மீது கட்டுப்பாட்டைப் பிரயோகித்தலாகாது என்ற கோட்பாடு, ஆயினும் நீதித்துறை பிரயோகிக்கவேண்டிய நியமங்களை நிர்ணயிப்பது அதாவது சட்டங்களைக் கையாள்வது அரசாங்கத்தின் ஏனைய கிளைகளுடைய குறிப்பாக சட்டவாக்க மன்றின் அத்தியாவசியமான பணியாகும். ஆதலால் நீதிமன்றத்தின் பார்வையில் அவமதிப்பு உட்பட, நீதிமன்ற அவமதிப்பை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமொன்றை சட்டவாக்கம் செய்வது சட்டவாக்க மன்றுக்கு முழுநிறைவாக சட்டபூர்வமானதாகும். இது தற்போது ஒரு குறையாகக் காணப்படும்.* தகுந்த நடைமுறை சார்ந்த உத்தரவாதங்களை வழங்குவதுடன் எந்த வகையான நடத்தை வலுவளிப்பைக் கவரும் என்பதனைப் பற்றிய நியமங்களை நிர்ணயிக்கும்.
அரசாங்கத்தின் நீதித்துறைக் கிளையொன்றினால் புரியப்பட்ட மீறுகையொன்று இங்கு சம்பந்தப்பட்டிருக்கும் கருத்துக்களின் தொடர்பாடலில் ஐ.நா.ம.உ.கு.இன் உறுதிப்படுத்துகையால் புலப்படுத்தப்பட்டவாறு அரச திறத்தவரின் பொறுப்புடைமை ஈடுபடுத்தப்படுவதைத் தடுக்கமுடியாது என்பதனை வலியுறுத்த முடியாது.
ஐ.நா.ம.உ.கு. வின் பொதுக் குறிப்புரை 31 இந்த கடப்பாட்டைப் பின்வரும் முறையில் மேலும் விரிவுபடுத்துகின்றது.*
83. General comment No.31 (80-2004 மார்ச் 29ஆம் திகதி (2198வது கூட்டம்) ஏற்றங்கீகரிக்கப்பட்ட சமவாயத்துக்கான அரச திறத்தவர்கள்மீது சுமத்தப்பட்ட பொது சட்டக் கடப்பாடுகளின் இயல்பு. இது தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் (IC) அபிப்பிராயம் 1991 என்பதனையும் பார்க்கவும். நன்கு தாபிதமான சர்வதேசச் சட்ட விதிக்கிணங்க அரசொன்றின் ஏதேனும் உறுப்பின் நடத்தை அந்த அரசின் செயலொன்றாகக் கருதப்படுதல் வேண்டும். “DraftArticleson Stateresponsibility is of a customary character' 6T6iugisi (gp) 156 Gauju Is LIGd56.jpg. Difference Relating to Immunity from Legal Process of a Special Rapporteur of the Commission on Human Rights, ICJ Reports 1999 p. 62 at p. 87 para 62
84. உதாரணத்துக்குப் பார்க்கவும். பின்வரும் வழக்குகளில் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் செய்யப்பட்ட விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், Mukung V Cameroon (case 458/1991) கைதுசெய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தடுப்பு நிலைகளின்கீழ் வைக்கப்பட்டிருந்த கமரூன் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் சம்பந்தப்பட்டது. கமரூன் அரசாங்கம் நட்டஈடு வழங்கியது. Pinto V Trinidad and Tabago (case 512/1992). மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவரான முறைப்பாட்டாளர் தடுப்புக் காவலில் கொடுரமாக நடத்தப்பட்டார் என குழு முடிவுசெய்தது. குழுவினது முடிவின் நேரடிப் பலனாக தாம் விடுவிக்கப்பட்டதாக மனுதாரர் பின்னர் குழுவுக்கு அறிவித்தார். Villaces Ortega V Ecuador (case 481/1991) முறைப்பாட்டாளர் தடுப்புக் காவலில் மோசமாக நடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என குழு முடிவுசெய்தது. பின்னர் ஈக்குவடோர் 25,000 அமெரிக்க டொலர் நட்டஈட்டை முறைப்பாட்டாளருக்கு வழங்க உடன்பட்டதாக அறிவித்தது. Osbourne v Jamaica (case 759/1997) 6T68iTugasio FfJ 563öTL6oo6oTu quib 560D3FuJọuqub GubugbogbúUL நீதித்துறைத் தீர்ப்பு சமவாயத்தின் 7ஆம் உறுப்புரையை மீறியதாக குழு கண்டது. அரசாங்கம் பின்னர் கசையடித் தீர்ப்பு தணிக்கப்பட்டதாகக் குழுவுக்கு அறிவித்தது.

Page 67
116 மனித உரிமைகளின் நிலை 2006
பொதுவில் பொருத்தனையின் கடப்பாடுகளும், குறிப்பாக 2ஆம் உறுப்புரையும் மொத்தத்தில் அனைத்து அரச திறத்தவர்களையும் பிணிக்கின்றன. அரசாங்கத்தின் எல்லாக் கிளைகளும் (நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை) ஏனைய பகிரங்க அல்லது அரசாங்க அதிகாரசபைகளும் அவை தேசிய, பிராந்திய அல்லது உளளூர் ஆகிய எத்தன்மையதுமான மட்டத்திலிருப்பினும் சரி அரச திறத்தவரின் பொறுப்புடைமையை ஏற்கும் நிலையிலுள்ளன. சர்வதேசரீதியில், குழுவின் முன்னிணையில் உட்பட சர்வதேசரீதியில் வழமையாக அரச திறத்தவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறைவேற்றுக் கிளை சம்பந்தப்பட்ட நடவடிக்கைக்கும் அதன் விளைவாக ஒத்திசைவின்மைக்குமான பொறுப்புடைமையிலிருந்து அரச திறத்தவரை விடுவிக்க விழையும் ஒரு வழிமுறையாக பொருத்தனையின் ஏற்பாடுகளுக்கு ஒத்திசைவில்லாத நடவடிக்கை அரசாங்கத்தின் வேறொரு கிளையால் நிறைவேற்றப்பட்டது என்ற நிகழ்வை எடுத்துக்காட்டமாட்டாது. இந்தப் புரிந்துணர்வு பொருத்தனைகள் சட்டத்தின் மீதான வியன்னா சமவாயத்தின் 27ஆம் உறுப்புரையில் அடங்கியுள்ள கோட்பாடுகளிலிருந்து நேரடியாக வருகின்றது. இதற்கிணங்க ஒரு அரச திறத்தவர் பொருத்தனையொன்றை நிறைவேற்றத் தவறியமையின் நியாயப்படுத்துகையாக அதன் உள்நாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளை நாடாத்தியிருக்கலாம்.’ அரச திறத்தவர்கள் உள்ளூர் அரசியலமைப்பு நடைமுறைகளுக்கிங்க உடன்பாட்டு உரிமைகளுக்குப் பயனளிப்பதற்கு 2ஆம் உறுப்புரையின் 2ஆம் பந்தி அனுமதியளித்த போதிலும் அப்பொருத்தனையின் கீழ் கடப்பாடுகளை நிறைவேற்ற அல்லது அவற்றைப் பயனுறுத்தத் தவறியமையை நியாயப்படுத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டங்களின் ஏற்பாடுகளை அல்லது உள்ளூர்ச் சட்டத்தின் ஏனைய அம்சங்களை நாடுவதினின்று தடைசெய்வதற்கு இதே கோட்பாடு நடைமுறையிலிருக்கின்றது.
மேலும் பெர்னாண்டோவில் சார்பிலான எதிர் மறுமொழி ஐ.நா. பொருத்தனைக் குழுக்களால் செய்யப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்நாட்டு சிரமங்கள் இருந்தபோதிலும், அவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்குப் பல்வேறு அரசாங்கங்கங்களினால் கையாளப்பட்ட பலதரப்பட்ட வழிமுறைகளை சுட்டிக்காட்டியது. அத்தகைய முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவதனை இயலச் செய்வதற்காக ஒரு சில அரசாங்கங்கள் திட்டவட்டமான சட்டவாக்கத்தையும் கையாண்டுள்ளன.*
இவ் விடயம் தற்பொழுது ஐ.நா.ம.உ.கு. இனி முன் னிலையில முடிவுறாதிருக்கின்றது.
85. கொழம்பியாவில் 1996 யூலை 5ஆம் திகதிய சட்டம் 288 குழுவின் கருத்துகளுக்கிணங்க நட்டஈட்டின் அளிப்புகள் வலுவுக்கிடப்படுவதை இயலச் செய்கின்றது. செக். குடியரசில் சட்டம் இல. 317/2002 என்பதன் கீழ் குழுவின் கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப் படுவதை ஒருங்கிணைப்பதற்கு நீதி அமைச்சர் பொறுப்பாயிருக்கின்றார்.

மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு 17
6. முடிவுரை
மீளாய்வுக்குட்பட்ட ஆண்டில் உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பைப் பொறுத்தளவில், உயர் நீதிமன்றத்தில் அரசியலமைப்பின் 126ஆம் உறுப்புரையின் நியதிகளின்படி அணைக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் சார்பான விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டமையும் அதன் விளைவாக குறிப்பாக அரசியலமைப்பின் 11ஆம் உறுப்புரையின் நியதிகளின்படி (அரசியல் முக்கியஸ்தர்களுக்கு மாறாக) சாதாரண பிரசைகளின் உரிமைகளின் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் தீர்ப்புகளை வழங்குவதில் கண்டுணரக்கூடிய வீழ்ச்சியும் முக்கியமானதொரு அம்சமாகும்.
இது கடந்த தசாப்தங்களில் நீதிமன்றத்தில் கோப்பிடப்பட்டு வந்து குவிந்த விண்ணப்பங்களுக்கு எதிர்மாறானதாகும். இது நீதிமன்றத்தினால் சட்டவியலின் முனைப்பான குழுமமொன்றை விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. உரிமை மீறல்களைத் தீர்மானிக்கும் நீதிமன்றத்தின் பிரத்தியேகத் தத்துவங்களிடம் புகலிடம் தேடும் நடவடிக்கைகளில் இந்த வீழ்ச்சிக்கான திட்டவட்டமான காரணம் தொடர்பில் தீவிரமானதும், நிலைபேறானதுமான ஆய்வொன்று அவசியம் என்பதற்குச் சந்தேகமில்லை.
அத்துடன் ஐ.நா. குழுவின் கருத்துக்கள் அரசாங்கத்தினால் நடைமுறைப் படுத்தப்படாமை (சர்வதேச பொருத்தனைச் சட்டத்துறையில் அரசினால் தன்னிச்சையாக பொறுப்பேற்கப்பட்ட கடப்பாடுகளைப் பொருட்படுத்தாமல்) கு.அ.உ.ச.ச.க்கு அதன் கடப்பாடு தொடர்பில் எதிர்மறையான தகவலொன்றைத் தெரிவித்தது. அதன் விளைவாக இலங்கையின் சட்டவியலுக்குட்பட்டவர்களின் உரிமைகள் மற்றப்படி எந்தப் பயனுள்ள நடைமுறையின் ஊடாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமோ அந்தப் பயனுள்ள நடைமுறையைத் தடுத்து நிறுத்தியும்விட்டது.*
மொத்தத்தில் (ஒரு சில நீதிபதிகள் சட்டத்தின் முக்கியமான முன்னேற்றத்தை பிரதிபலித்தபோதிலும்) சட்டத்தினதும், உரிமைகளின் சட்டமுறையிலான பாதுகாப்பினதும் நேரடியான அபிவிருத்தி தொடர்பில் மனமுவந்து பூரிப்புடன் பாராட்டப்படவேண்டிய ஓர் ஆண்டாக இது அமையவில்லை.
86. பல சந்தர்ப்பங்களில் இலங்கையின் உயர் நீதிமன்றம் உரிமைகளின் பாதுகாப்பின் அரசியலமைப்பு சார்ந்த நோக்கெல்லையை அதிகரிப்பதற்காக ஐ.நா. குழுவின் சட்டவியலை ge46hug51T6öílgi5ğ5I6ñ6ITg5). Lô5ñg5 g960ö60)LDuLu WeeraWansa v AG (2000) l Sri LR 387 6T6öLuğ5I உட்பட, நீதியரசர் எம். டீ. எச். பெர்னாண்டோவின் தீர்ப்பின்படி

Page 68
IV
அவசரகால ஒழுங்குவிதிகள்
சாலிய எதிரிசிங்க*
1. அறிமுகம்
2001ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையில் அவசரகால நிலைமைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படாத போதிலும் தொடர்புரீதியாக “சாதாரண நிலையிலான’ எனக் கருதப்பட்ட அக்கால கட்டமானது 2005ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் முடிவடைந்தது. இதில் “அவசரகால ஒழுங்குவிதிகள்’ எனும் சொற்றொடரானது பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் அவசரகால ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கான தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வருதல் என்பதை விளக்குவதற்கு பாவிக்கப்படுகின்ற போதிலும், அவ்வாறான தத்துவங்கள் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை மிகைத்துச் சென்று சட்டமாக்கும் தத்துவத்திறனைப் பெற்றுக்கொள்வதாகும்.
2001ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அவசரகாலக் கட்டுப்பாடு முடிவடைதல் பற்றியும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கூடாக ஏதேனும் அவசரகால விதிகளை நடைமுறையில் வைத்திருப்பதற்காக அரசு எடுத்த முயற்சி பற்றி சிறு அறிமுகம் “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” எனும் அறிக்கையின் மீளாய்வு அத்தியாயத்தில் இவ்வாசிரியரினால் வெளியிடப்பட்ட அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
来源 எல்எல்.பீ. சட்டத்தரணி
1. 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்கமுடைய பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம்
2. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கமுடைய பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்)
8FLLUD
3. http://www.law and Society trust org.

அவசரகால ஒழுங்குவிதிகள் 119
அவசரகால நிலைமையை நடைமுறைக்குக் கொண்டுவரும் போது ஜனாதிபதியினால் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகள் (EMPPR) என அழைக்கப்படும் ஒழுங்குவிதிகள் பலவற்றைப் பொதுவாக ஆக்குதல் நடைபெறுகின்றது. இவ் விதிகளின் மூலம் பொதுவாக ஏதேனும் அடிப்படை உரிமைகளை அனுபவித்தல் தொடர்பான மட்டுப்பாடுகள் நிறைவேற்றுப்படுவதுடன், அதற்குப் புதிய குற்றங்களும் தண்டனைகளும் உருவாக்கப்படுவதுடன் நடைமுறையிலுள்ள குற்றங்கள் தொடர்பில் தண்டனைகளை அதிகரிக்கின்ற ஏற்பாடுகள் மற்றும் கைது செய்தல், தடுத்து வைத்தல், விசாரணை செய்தல். வழக்குகளை விசாரித்தல், பிணை வழங்குதல், குற்ற ஒப்புதல் ஏற்றுக்கொள்ளக் கூடிய தொடர்பிலான விசேட ஏற்பாடுகளையளிக்கும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும். கலந்துரையாடலுக்கு உட்பட்ட வருடத்தின் அவசரகால சட்டமானது நடைமுறையிலிருந்த இரு காலகட்டங்கள் இருந்த போதிலும் அக்காலகட்டம் வரை மூன்று அவசரகால ஒழுங்குவிதிகள் பிறப்பிக்கப்பட்டன.
2004 மார்கழி 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட முதலாவது அவசரகால நிலைமையானது 14 மாவட்டங்களுக்கு ஏற்புடையதாக இருந்த போதிலும் அது 2005ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் முடிவுற்றது. இக்காலம் முழுவதும் அவசரகால நிலைமைகள் நிலவி வந்ததென விவாதிக்க முடிகின்ற போதிலும் இவ்விடயம் தொடர்பாக பின்னர் ஆராயப்படும் ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலையுடன் பிரகடனப்படுத்தப்பட்ட இரண்டாம் அவசரகால நிலைமையானது நாடு முழுவதிலுமே அமுலிலிருந்த போதும் அவ்வாண்டு இறுதி வரையிலும் அவ்வாறே நடைமுறையிலிருந்தது.
அவசரகால தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வருதலைக் கட்டுப்படுத்துகின்ற அடிப்படை சட்டமுறை வரையறையானது கீழே விபரிக்கப்படுகின்ற போதிலும் அவற்றிற்கேற்ப சட்டமுறை ஏற்பாடுகள் பற்றிய விபரமடங்கிய பகுத்தாராய்தலுக்குரிய பிரச்சனைகளைக் கலந்துரையாடும் போது அவை முன்வைக்கப்படுகின்றன.
இவ்வறிக்கைகள் அரச வர்த்தமானிகளைக் கொண்டு வருவதற்கான பொறுப்பினை ஏற்றுள்ள, அதேபோன்று அவசரகால கட்டுப்பாட்டுக்குரிய அரச வர்த்தமானி தொடர்பில் முழுக்கவனத்தையும் செலுத்துகின்ற நடேசன் மத்திய நிலையத்திடம் (Nadesan Centre) உள்ள அரச வர்த்தமானிகளை
4. சட்டத்தினூடாக மனித உரிமைகளுக்கான நடேசன் மத்திய நிலையமானது கொழும்பு 03 சாள்ஸ் சுற்றுவட்டம், இலக்கம் 04 எனும் இடத்தில் அமைந்துள்ள மனித உரிமைகள் பற்றிய நூலக சேவைகள், ஆவணங்கள் மற்றும் தகவல்கள் பற்றிய நிலையமாகும்.

Page 69
120. மனித உரிமைகளின் நிலை 2006
அடிப்படையாகக் கொண்டே செயற்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும் சில வேளைகளில் ஏதேனும் அரச வர்த்தமானி கிடைக்காத போதிலும் அதன் காரணமாக சில ஒழுங்குவிதிகளைக் கவனத்திற் கொள்ளாமல் விடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. சிலவேளைகளில் ஆங்கில வாசகத்துடன் சிங்கள வாசகங்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதுமுண்டு.
2. அவசரகால விதிகளின் சட்டமுறை அடிப்படை,
விடயப்பரப்பு மற்றும் கட்டுப்பாடு
2. உரிய சட்டமுறை ஏறி பாடுகளும் , அவற்றின்
விடயப்பரப்பும்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டமும், அரசியல் அமைப்பின் 76ஆம் , 155ஆம் 8 உறுப் புரைகள் மூலம் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளைத் தயாரிப்பதற்குரிய திறனை ஜனாதிபதி பெற்றுள்ள சட்டமுறை அடிப்படைக்கான ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பிற்காகவும், பொது ஒழுங்கைப் பேணுவதற்காகவும் கிளர்ச்சி கலவரம் அல்லது குடியியல் அமைதியின்மையைத் தடுப்பதற்காக அல்லது பொது வாழ்க்கைக்குத் தேவையான வளங்களையும், சேவைகளையும் நடாதி திச் செல் லும் முகமாக தேவையானவை அல்லது சந்தர்ப்பத்திற்கேற்றவை என தனக்கு தோன்றுகின்றவிடத்து “அவசரகால ஒழுங்கு விதிகளைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.”
எவ்வாறாயினும், ஜனாதிபதியினால் அவசரகால ஒழுங்குவிதிகளைத் தயாரிப்பதற்கு முன்பு மற்றைய விடயங்களுக்கிடையில் அவசரகால ஒழுங்குவிதிகளைத் தயாரிப்பதற்கான ஜனாதிபதிக்கு தத்துவம் அளிக்கும் சட்டமுறை ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்புக்
5. 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்கமுடைய பாதுகாப்புக் கட்டளைச் சட்டம்
6. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு
7. வேறு விடயங்களுக்கிடையில் அவசரகால ஒழுங்குவிதிகளை ஆக்கும் தத்துவம்
ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு பாராளுமன்றம் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும்.
8. திருந்திய 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்கமுடைய பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால ஒழுங்கு விதிகளை ஆக்கும் தத்துவத்திற்கு அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் தவிர்ந்த வேறு ஏதேனும் அல்லது சட்டத்தினது ஏற்பாடுகளின் தொழிற்பாட்டை ஒதுக்கித்தள்ளுகின்ற, திருத்துகின்ற அல்லது இடைநிறுத்துகின்ற சட்டப்பயன் கொண்ட ஒழுங்குவிதிகளை ஆக்கும் அதிகாரங்களையும் உள்ளடக்கும்
9. 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்கமுடைய பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் iஆம்
பகுதியில் அடங்கியுள்ள 5(1)
10. 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு i

அவசரகால ஒழுங்குவிதிகள் 121
கட்டளைச் சட்டத்தின் iஆம் பகுதியை அமுல்படுத்துதல் பற்றி அறிவிக்கின்ற பிரகடனப்படுத்தல்' அவன்/அவளினால் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும். அவ்வாறான பிரகடனப் படுத்தலின் பிரதான நோக்கம் யாதெனில், அவசரகால விதியை இயற்றும் தத்துவங்களை ஜனாதிபதி தன்வசம் கொண்டுள்ளார் என்பது பற்றி பொதுமக்களுக்கு அறிவிப்பதாகும். பிரகடனப்படுத்தல் மூலம் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் iஆம் பகுதியைப் பிந்திய தினமொன்றிலிருந்து நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருந்தபோதிலும் உரிய பிரகடனப்படுத்தல் தினத்திலிருந்தே பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் iஆம் பகுதியை நடைமுறைப்படுத்துதல் பொதுவாக நடைபெறுகின்றது. இவ்வாறு இப்பிரகடனத்தை வெளியிடுவது அவசரகால நிலைமையைப் பிறப்பித்தல் என பொதுவாக அழைக்கப்படுகின்றது.
ஜனாதிபதி' அவசரகால ஒழுங்குவிதியைத் தயாரிக்கும் நேரத்திலேயே அவை அமுலுக்கு வருகின்ற போதிலும் அரசியல் அமைப்பு சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் தவிர்ந்த ஏனைய சட்டங்களின் செயற்பாட்டை ஒதுக்கித்தருகின்ற அல்லது திருத்துகின்ற சட்டமுறை அதிகாரம் அவற்றுக்குள்ளது. எவ்வாறாயினும் முக்கியமான சந்தர்ப்பங்களில் சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம்? அல்லது சித்திரவதைகளிலிருந்து அல்லது கொடுரமான மனிதாபமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கோ' அல்லது தண்டனைக்குள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம், நீதியான வழக்கு விசாரணைக்குள்ள உரிமை, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தினால்" ஆக்கப்படும் கட்டளைப் பிரகாரமன்றி ஆள் எவரும் மரணதண்டனைக்குட்படுத்துதல் அல்லது சிறைச்சாலைக்கு அனுப்புதல் மூலம் தண்டனை வழங்குதலைத் தடைசெய்தல், மற்றும் நிறைவேற்று அல்லது நிர்வாகச் செயலொன்றின்' மூலம் அடிப்படை உரிமையொன்றை மீறுவதற்கெதிரான நிவாரணம் ஒன்றைப் பெறுவதற்குரிய உரிமை எனும் அரசியல் அமைப்புரீதியான உறுதிப்படுத்தல் தவிர்ந்த வேறு ஏதேனும் அரசியல் அமைப்புரீதியான ஏற்பாடுகள் (அதாவது அடிப்படை உரிமைகள்) அவசரகால ஒழுங்குவிதிகளின் மூலம் மட்டுப்படுத்துவதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வாய்ப்பு அளிக்கின்றது.
11. 1947ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் iஆம்
பிரிவு 2. அரசியல் அமைப்பு 155 (2ஆம் உறுப்புரையைப் பார்க்க). 3. அரசியல் அமைப்பு சட்டத்தின் 10ஆம் உறுப்புரை
4, அரசியல் அமைப்பு சட்டத்தின் 11ஆம் உறுப்புரை
5. அரசியல் அமைப்பு சட்டத்தின் 13ஆம் (3)ஆம் உறுப்புரை 16. அரசியல் அமைப்பு சட்டத்தின் 13ஆம் (4)ஆம்
1T. அரசியல் அமைப்பு சட்டத்தின் 17ஆம் உறுப்புரை

Page 70
122 மனித உரிமைகளின் நிலை 2006
2.2 பிரகடனம் பற்றிய பாராளுமன்றக் கட்டுப்பாடு சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்ட போதிலும் முக்கியமான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் இவ்வதிகாரத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க முடியும். அவ்வாறாயினும் பாராளுமன்றம் அவ்வதிகாரத்தைத் துறத்தலோ அல்லது பராதீனப்படுத்துதலோ புரிய முடியாது. பிரகடனம் பிறப்பிக்கும் போதும் அதன் கீழ் அவசரகால விதியை ஆக்கும் போதும் ஜனாதிபதி பாராளுமன்றத்தினால் ஒப்படைக்கப்பட்ட சட்டமாக்கும் தத்துவத்தை நிறைவேற்றுவார். அதன் காரணமாக உரிய பிரகடனஞ் செய்தல் மற்றும் அவசரகால விதிகளின் உள்ளடக்கம் எனும் இரண்டுக்குமாக பாராளுமன்றம் கட்டுப்பாட்டை நிறுத்திவைக்கும் ஏற்பாடுகள் உள்ளன.
ஜனாதிபதியினால் பிரகடனஞ் செய்யப்படும் போது அதனை உடனடியாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டிய போதிலும் பிரகடனம் செய்த திகதியிலிருந்து 10 நாட்களுக்குள் முடிவுறாதவாறு பாராளுமன்றம் ஒத் தி வைக் கப்பட்டிருப் பின் அல்லது பாராளுமன் றம் அமர்வு நிறுத்தப்பட்டிருப்பின் ஜனாதிபதி பிரகடனம் திகதியிலிருந்து 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கூடும்படி அழைக்கப்படல் வேண்டும்.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் iஆம் பகுதியின் ஏற்பாடுகள் அமுலுக்கு வருதல் ஆரம்பித்த திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் பாராளுமன்றம் பிரகடனத்தை அங்கீகரித்திருப்பின் அப்பிரகடனமானது (ஒரு தடவை) ஒரு மாத காலத்திற்கு (செல்லத்தக்கதாக) செல்லுபடியானதாக இருப்பதுடன் பின்னர் அது அற்றுப் போய்விடும். அப்பிரகடனமானது அங்கீகரிக்கப்படாவிடின் அது 14 நாட்களின் இறுதியில்" அற்றுப் போய்விடும். “பாராளுமன்றத்தினால் ஒழிக்கப்படுமாயின் அப்பிரகடனமானது அவ்வாறு ஒழிக்கப்படுவதன் மேல் அற்றுப் போய்விடும்.” பாராளுமன்றத்தினால் ஏதேனும் பிரகடனமொன்று அங்கீகரிக்கப்படாமல் அல்லது ஒழிக்கப்படல் காரணமாக அப்பிரகடனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அவசரகால விதிகளின் சட்டமுறை விளைவுகள் நிறுத்தப்படுகின்ற போதிலும் அவ்வாறு ஏதேனும் விதியொன்றின் கீழ் இதற்கு முன் சட்டரீதியாக புரியப்பட்ட எவற்றிற்குமே அதன் மூலம் தாக்கம் ஏற்பட மாட்டாது? மேலும் பாராளுமன்றத்தினால் ஏதேனும் அவசரகால விதியொன்றை ஒழிக்கவோ அல்லது மாற்றுவதற்கோ முடியும்.*
18. அரசியல் அமைப்பு சட்டத்தின் 155(5)ஆம் உறுப்புரை
9. அரசியலமைப்புச் சட்டத்தின் 155(8)ஆம் உறுப்புரை
20. 1947ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம்
பிரிவு 21. 1947ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5(3)ஆம்
பிரிவு

அவசரகால ஒழுங்குவிதிகள் 123
முக்கியமான விடயம் யாதெனில் பாராளுமன்றத்தினால் ஏதேனும் பிரகடனமொன்று அங்கீகரிக்காமை அல்லது ஒழித்தல் காரணமாக தொடர்ந்து பிரகடனஞ் செய்யும் ஜனாதிபதியின் தத்துவத்தில் சிறிது வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இடையூறு ஏற்படுமென்பதாகும். அதிலும் அவசரகால சட்டத்தின்மூலம் பாராளுமன்ற அமர்வை நிறுத்தலுக்கான ஜனாதிபதியின் தத்துவத்தில் சிறிது மட்டும் விதிக்கப்படுகின்றது. அவசரகால சட்டம் தொடர்பாக பாராளுமன்றக் கட்டுப்பாட்டை எடுத்துக்காட்டும். இவ் ஏற்பாடுகள் பற்றி மேலும் விபரமாக கீழே ஆராயப்படுகின்றது.*
2.3 புறத்தொதுக்கும் பிரிவுகள் ஏதேனும் பிரகடனமொன்றின்? அல்லது அவசரகால விதியொன்றின்* வலிதான தன்மையை (செல்லுபடி பற்றி) பரீட்சித்தலின் மூலம் நீதிமன்றம் தடுக்கும் ஏற்பாடுகள் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வேற்பாடுகள் பொதுவாக ‘புறத்தொதுக்கும் பிரிவுகள்’ என அழைக்கப்படுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தில் அடங்கியுள்ள பிரகடனங்களுடன் தொடர்பான புறத்தொதுக்கும் பிரிவுகளின் வலிதான தன்மை பற்றி உயர் நீதிமன்றம் இதுவரையில் தீர்ப்பளிக்கவில்லை. யாதெனில் அவசரகால விதிகளின் தொழிற்பாட்டை ஒதுக்கித் தள்ளுகின்ற தத்துவம் தமது நீதிமன்றத்திற்கு உண்டு என்பதாகும். அதேபோன்று உண்மையிலேயே அடிப்படை உரிமைகளை மீறல் எனும் அடிப்படையின் மேல் அவசரகால விதிகளை நீதிமன்றம் புறத்தொதுக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.*
பிரகடனப்படுத்தலுடன் தொடர்பான புறத்தொதுக்கும்* பிரிவு அரசியலமைப்புச் சட்டத்திலும் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அப்பிரிவானது அரசியலமைப் புச் சட்டத்தின் 13 ஆம் திருத்தத் துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இப் புறத்தொதுக்கும் பிரிவானது ஒரு மாகாணத்திற்கு சில சந்தர்ப்பங்களில் ஆளுநரின் தத்துவங்களை
22. “9 இரண்டாம் பிரகடனமும் அவசரகால பல்வேறு ஏற்பாடுகளும் தத்துவங்களும் விதிகளின் தொகுதியின் வலிதானதன்மையும் 17ஆம் புதிய ஜனாதிபதியின் நியமனம், பாராளுமன்ற அமர்வை நிறுத்துதல் மற்றும் அதன் வலிதானதன்மை' எனும் தலைப்பின் கீழ் உள்ள விளக்கத்தைப் பார்க்க.
23. 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 3ஆம் பிரிவு
24. 1947ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 8ஆம் பிரிவு
25. ஜோசப் பெரேரா அல்லது புருட்டன் பெரேரா எதிர் சட்டமா அதிபர் (1992) (S.L.R. 199) கருணாதிலக மற்றும் பலரும் எதிர் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க மற்றும் பலரும் (S.L.R. 157) லிவன் தி சில்வா எதிர் சட்டமா அதிபர் மற்றும் பலர் (2000)/3 S.L.R. 155)
26. 154 எ உறுப்புரை

Page 71
124 மனித உரிமைகளின் நிலை 2006
நடைமுறைப் படுத்துதல் தொடர்பில் உத்தரவு பிறப் பிப்பதற்கு ஜனாதிபதியினால் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் பிரகடனம் ஒன்றினை உபயோகிக்கும் சந்தர்ப்பம் ஏற்புடையதாகின்றமை புலனாகின்றது.
மாகாண சபை' வழக்கில் ஒரு பிரகடனமொன்றை ஒரு பரந்த பிரதேசம் வரை விஸ் தீரணப்படுத்தும் வலிதானதன்மை பற்றி மனுதாரர்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட போதிலும், நீதிமன்றம் வேறு காரணங்களுக்கிடையில் உரிய விடயத்தை விவாதத்திற்குட்படுத்தும் பயன் இல்லை எனக் கூறி அதனை மீளாய்தலுக்குட் படுத்துதலைப் புறக்கணித்தது.
1 ஆம் பாகம்
3. அவசரகாலம் நிலவிய முதலாம் கால கட்டம்
அவசரகால கட்டுப்பாட்டின் ஆரம்பகால எல்லையானது ஆரம்பித்தல் 2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 2005ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதியிலிருந்து 14 நிருவாக மாவட்டங்களில்? பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பாகத்தை நடைமுறைப்படுத்தியதுடன் ஜனாதிபதியினால் 2005 ஜனவரி 04ஆம் திகதி பிரகடனஞ்? செய்த சந்தர்ப்பத்திலேயே ஆகும். அதன் பின்பு 2005 ஜனவரி 06அம் திகதி ஜனாதிபதியினால் அவசரகால ஒழுங்குவிதிகள் (அவசரகால நானாவித ஏற்பாடுகளும் தத்துவ விதிகளும்) தயாரிக்கப்பட்டது. இவ்வவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளில் (EMPPR) கருத்திற்கொள்ளக் கூடியதும் விரும்பக்கூடியதுமான பண்புகள் காணப்பட்டன. கடந்த 25 வருடகால அளவில் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளில்" (EMPPRS) அங்கமாக விளங்கிய தனிநபர்களைத் தடுத்து வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கும் நிறைவேற்றுத்துறைக்குப் பெற்றுக் கொடுத்த எந்தவித ஏற்பாடுகளும் அதில் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும்.
27. கருணாதிலக்க மற்றும் பலர் எதிர் தேர்தல் ஆணையாளர் தயானந்த தசாநாயக்க மற்றும்
usuf (1999)(S.L.R. 157)
28. 2005 ஜனாதிபதி 04ஆம் திகதிய 1374/08 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானி
29. இலங்கையில் நிர்வாக மாவட்டங்கள் 25 உள்ளன
30. 2005 ஜனாதிபதி 04ஆம் திகதிய 1374/08 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2005ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்கு விதிகள்

அவசரகால ஒழுங்குவிதிகள் 125
3.1 பூர்வாங்க அவதானிப்புக்கள் சில
3.1.1 அவசரகால ஒழுங்குவிதிகளுடன் இணங்கும் தன்மை 2005 ஜனவரி மாதம் 06ஆம் திகதி ஆக்கப்பட்ட அவசரகால நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்," ஒழுங்குவிதிகள் 2005 ஜனவரி 25ஆந் திகதி பொதுமக்களிடம் சென்றடைந்தன. இவ்விடயம் பற்றி இலங்கை சிவில் உரிமைகள் (CRM)? அமையத்தினால் 2005 ஜனவரி 13ஆந் திகதி வழங்கிய தமது அறிவித்தலின் மூலம் இவ்வாறான விடயங்களைக் காண்பித்துள்ளது.
அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்வதன் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை மிகைத்துச் சென்று அவசரகால ஒழுங்குவிதிகளை ஆக்கும் திறனைப் பெற்றுள்ளார். எவ்விதமான உத்தரவு அல்லது ஒழுங்குவிதிகள் இயற்றப்பட்டுள்ளதென இலங்கை சிவில் உரிமைகள் அமையத்திற்கு (CRM) தெரியாது.
தான் எச்சட்டத்தினால் ஆளப்படுகின்றோம் என்பதனை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது கட்டாய விடயமாகும். இலங்கை சிவில் உரிமைகள் அமையம் (CRM) ஆண்டுகளாக பல தடவைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவசரகால ஒழுங்குவிதிகளுடன் இணங்கியிருக்காமை தொடர்பில் ஆட்சிக்கு வந்த பல வேறு கட்சிகளின் சகல அரசாங்கத்திடமும் தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளது.*
அவசரகால ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்ட உடனே அவை நடைமுறைக்கு வருவதனால் உடனடியாக பொதுமக்களுக்கு அடையக்கூடியதாய் இருத்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இத் தேவைப்பாட்டை உயர் நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அறிவுறுத்திக் கூறியுள்ளது. ட்ரெவல் பாஸ் வழக்கின்* 5ஆம் பக்கத்தில் நீதிமன்றம் கூறியது யாதெனில் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்ற சட்டங்கள், விதிகள் போன்றவை கட்டாயமாகப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்பதுடன், அதேவாறு அவை மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதாகும் (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது). அவசரகால ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டமையை அறிவிப்பதுடன் அவ்வாறு அவை பற்றிய சுருக்கமொன்றை அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள வானொலி மற்றும் ரூபவாஹினி போன்றவை ஊடாக பகிரங்கமாக்கப்படுவதுடன் இவ்விதிகள் குறைந்தபட்சம் அரசாங்கக்
3. அரசாங்க வெளியீட்டுப் பணியகத்தில் இருந்தது.
32. 1971இல் தாபிக்கப்பட்ட அரசதாபனமற்றதும், இலாபத்தை நோக்கமாகக் கருதாத இவ்வமைப்பு இலங்கையின் புராதன குடியியல் சுதந்திரத்திற்கான அமைப்பென ஏற்றுக்கொள்ளப்படும் (C.O.L.)
33. அறிவித்தலின் மூன்றாம், நான்காம் பந்தி தொடர் E01/A/1/05
34. ஆறுமுகம் வடிவேல் எதிர் வவுனியா சிதம்பர புரம் அகதிமுகாம் பொலிஸ் காவல் அரண் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இன்னும் பலர் உயர்நீதி வ.இல. 44/2002(F/R) 2002 செப்ரெம்பர் 5ஆந் திகதிய உயர்நீதிமன்ற வழக்குக் குறிப்பு

Page 72
126 மனித உரிமைகளின் நிலை 2006
கட்டுப்பாட்டின் கீழுள்ள அச்சகப் பதிப்பு ஊடகங்களில் ஏன் பிரசுரிக்க முடியவில் லை எண் பதனை விளக்குவதற்கு எ க் காரணமும் காண்பிக்கப்படவில்லை.
3.1.2 ஒழுங்குவிதிகளின் ஏற்புடைமை 2005 ஜனவரி 04ஆம் திகதி புரியப்பட்ட பிரகடனமானது 14 நிர்வாக மாவட்டங்கள் தொடர்பில் மாத்திரம் புரியப்பட்ட போதிலும் அதன் கீழ் அமைக்கப்பட்ட ஏதேனும் விதிகள் அல்லது ஏற்பாடுகள் அப்பிரதேசங்களுக்கு மாத்திரம் ஏற்புடையதாக இருக்க முடியும். எவ்வாறாயினும் இவ்விதிகளில் சில முழு நாட்டுக்குமே ஏற்புடையதாகுமெனும் பிழையான முடிவை அடிப்படையாகக் கொண்டுள்ளமை புலனாகின்றது. சில உதாரணங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன (வலியுறுத்துதல் சேர்க்கப்பட்டுள்ளது).
9(1) ஒழுங்குவிதியில் இவ்வாறு கூறப்படுகின்றது. தேவையானது அல்லது உசிதமானது எனக் கருதப்படல தகுதிவாய்ந்த அதிகாரியின் அபிப்பிராயமெனில் இலங்கைக்கு எந்த வாகனத்தையும் கைப்பற்ற முடியுமென்பதுடன்.
9(3) ஒழுங்குவிதியில் இவ்வாறு கூறப்படுகின்றது. இவ்விதியில் 1ஆம் பந்தியில் அளிக்கப்பட்டுள்ள தத்துவங்களை வெற்றிகரமான முறையில் செயற்படுத் துவதற்காக கட்டளையிடுதல் தேவையென உரிய உத்தியோகத்தர் அபிப்பிராயப்படுவாராயின் அவர் முழு இலங்கையிலும் அல்லது இலங்கையின் ஓர் குறிப்பிட்ட பகுதிக்கேற்ற வகையில் உத்தரவு விடுவதன் மூலம். பணிக்கப்பட முடியும்.
11(1) ஒழுங்குவிதியில் இவ்வாறு கூறப்படுகின்றது. “ஜனாதிபதி கட்டளை இடுவதன் மூலம் முழு இலங்கைக்குமான அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக ஏதேனும் பெயர் குறித்து ஒரு நபரை அல்லது அப்பதவியை நியமனம் செய்ய முடியும்.”
12ஆம் ஒழுங்குவிதியில் இவ்வாறு கூறப்படுகின்றது. “ஏதேனும் ஒரு சேவையொன்றை. ஜனாதிபதியினால். அத்தியாவசிய சேவை என்று பிரகடனம் செய்ய முடியும்.”
அத்தியாவசிய சேவைகள் கட்டளையொன்றினால் சுட்டிக்காண்பிக்கப்படுவது 14 மாவட்டங்களினுள் உள்ள சேவைகள் தொடர்பாக மாத்திரமென்பதால் அப்பதினான்கு மாவட்டத்திற்கு வெளியில் உள்ள பிரதேசங்களின் அலுவல்களுடன் தொடர்புடைய புகையிரதம், நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் தபால் சேவைகள் போன்ற நாடளாவிய சேவைகள் தொடர்பாக புரியப்பட்ட கட்டளைகள் மூலம் எதிர்பார்த்த பயனை அடைய முடியாது.

அவசரகால ஒழுங்குவிதிகள் 127
13ஆம் ஒழுங்குவிதியில் இவ்வாறு கூறப்படுகின்றது. ஜனாதிபதியின் கட்டளையொன்றின் மூலம் முழு இலங்கைக்குமான சிவில் பாதுகாப்பு ஆணையாளர் நாயகமாக பதவி வகிப்பதற்கு பெயர் குறித்து ஒரு நபரை அல்லது அப்பதவியை நியமனம் செய்ய முடியும் (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது).
3.1.3 ஒழுங்குவிதிகளின் வாசகங்களுக்கு இடையில் உள்ள
மொழிfதியான ஒவ்வாமை
அவசரகால (பல்வேறு ஏற்பாடுகளும், தத்துவங்களும்). ஒழுங்குவிதிகளில் உள்ள சிங்களம் மற்றும் ஆங்கில மொழி வாசகங்கள் சில வேளைகளில் முரண்படுகின்றன. அவ்வாறான தெளிவான ஒவ்வாமையொன்று 17ஆம் ஒழுங்குவிதியில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன் சிங்கள வாசகத்தில் குறிப்பிடப்படுவதானவது; அவ்விதியில் கூறப்பட்ட* குற்றங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றம் முன்னிலையில் குற்றவாளியாக்கப்படும் போது மரண தண்டனை அல்லது ஆயுட்காலம் வரையிலான (இவ்விரண்டுக்குமான ஒரு வகையிலான தண்டனைக்கு) மறியலுக்குட்படல் வேண்டுமென்பதாகும். ஆயினும் , ஆங்கில வாசகத்தில் மரண தணி டனை அல்லது (இவ்விரண்டுக்குமான ஒரு வகையிலான தண்டனைக்கு) மறியல் தணர் டனைக் குட் படல எனக் குறிப்பிடப் பட்ட போதிலும் , மறியலுக் குட்படுவதற்கான கால எல்லை எவ் வகையானதெனக் கூறப்படவில்லை.
3.1.4 தொடர்பற்ற முரணான ஒழுங்குவிதிகள் 8(1)ஆம் 8(2) ஒழுங்குவிதிகளில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
8(1) கட்டடமொன்று அல்லது காணியொன்று ஏதேனும் ஒரு இயற்கை சீற்றம் காரணமாக அதற்கு நிவாரணப் பணிகள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அப்பிரதேசமான இலங்கை இராணுவப்படை, இலங்கை கடற்படை, அல்லது இலங்கையின் வான் படையின் பிரிகேடியர் ஒருவரினால் அப் பணிகளுக்காக அல்லது அக்கட்டடங்களின் அல்லது காணிகளின் உடமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய போதிலும் அதில் இருக்கின்ற ஏதேனும் நபரை அல்லது உதாரணமாக குடியிருப்பாளரை அக்கட்டடம் அலி லது காணியிலிருந்து வெளியேற்றி ஏதேனும் அதிகாரமளிக்கப்படாத நபர்களை அக்கட்டடங்களுக்கோ அல்லது காணிகளுக்கோ உட்பிரவேசிக்க முடியாதவாறு பாதுகாத்தல் வேண்டும்.
35. இக் குற்றம் “4, 6 மரணதண்டனை மூலமாக அவசரகால ஒழுங்கு விதிகள்
தண்டனையளிக்கக்கூடிய குற்றங்கள் (17ம் ஒழுங்கு விதிகள்)'.

Page 73
128 மனித உரிமைகளின் நிலை 2006
அவ்வாறாயினும் அச்சொத்துக்கு உரிமை கோரும் ஒரு நபருக்கு அச்சொத்தை விடுவிப்பதற்கான கட்டளையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக மேல் நீதிமன்றத்திடம் விண்ணப்பமொன்றை இடுவதற்கான உரிமை இருத்தல் வேண்டும். அக்கட்டளை பிறப்பித்ததிலிருந்து இரண்டு வார காலம் கழிந்ததன் பின்பு அவ்வாதமானது அவனுக்குத் தெரியாமல் அல்லது அவனுடைய அறிவுரைகளுக்கு எதிராக அல்லது உபயோகிக்கப்பட்டதென மேல் நீதிமன்றம் திருப்திப்படுத்துமாயின் மேல் நீதிமன்றினால் அவ்வாதத்தை விடுவிக்க முடியும்.
அவ்வாறு மேலும் அவ்வாதத்தை உடமைக்குட்படுத்தி 06 மாதம் செல் வதற்குள் மேற் கூறியவாறு குறி ற மொனி றை ஏற்படுத்துவதற்கான எந்தவித வழங்கு நடவடிக் கையோ ஆரம்பிக்கப்படாமல் இருக்குமாயின் அவ்வாதமானது அதன் சட்டரீதியான உரிமையாளரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படல் வேண்டும்.
(2) ஏதேனும் நபர் ஒருவர் இவ்விதியின் கீழ் குற்றமொன்றுக்குக் குற்றவாளி யாக்கப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பமொன்றில், மற்றும் அக்கட்டடங்கள் அல்லது காணி இவ்வொழுங்கு விதியின் கீழ் ஏதேனும் குற்றமொன்று தொடர்பில் பாவிக்கப்பட்டுள்ளதென நீதிமன்றம் திருப்திப்படுமாயின் நீதிமன்றத்தில் அவ்விதமான குற்றத்திற்கு சுமத்தக்கூடிய வேறு தண்டனைக்குப் புறம்பாக அவ்வாதத்தை குடியரசு பறிமுதல் செய்தலும்
இவ்வொழுங்கு விதியின் மூலம், சுனாமி அனர்த்தத்துடன் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான கட்டடம் அல்லது காணி என்பனவற்றைக் கைப்பற்றுவதற்குரிய ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளமை புலனாகின்றது. அவ்வாறாயினும் மேற் கூறப்பட்ட விடயங்களை அவதானிக்கக்கூடியவாறு இவ்வொழுங்கு விதிகளின் உப விதிகள் இரண்டும் சிக்கலானவைகளாக இருப்பதுடன், அதன் காரணமாக இவ்வேற்பாடுகளை சட்டரீதியான வகையில் செயற்படுத்து முகமாக கிரகித்துக் கொள்வது கடினமானதாகும். சிங்கள வாசகமும், ஆங்கில வாசகமும் இவ்விரண்டும் இவ்வாறான தவறுகளைக் கொண்டுள்ளன.
3.1.5 ஆங்கில வாசகத்தின் வரைபுத் தவறுகள்
17(2) ஒழுங்குவிதிகள் பிழையான வகையில் 15ஆம் ஒழுங்குவிதிகள் பற்றி குறிப்பிடுகின்ற போதிலும், அக்குறிப்பானது 22ஆம் ஒழுங்குவிதிகள் பற்றியானதாயிருத்தல் வேண்டும் (சிங்கள வாசகம் 22ஆம் ஒழுங்குவிதிகள் பற்றிக் குறிப்பிடுகின்றது). 33(4)ஆம் ஒழுங்குவிதிகள் பிழையான வகையில் 48ஆம் ஒழுங்குவிதிகள் தொடர்பில் குறிப்பிடுகின்ற போதிலும் அது 29ஆம் ஒழுங்குவிதிகள் தொடர்பினதாய் இருத்தல் வேண்டும் (சிங்கள வாசகம் 29ஆம் ஒழுங்குவிதிகள் பற்றிக் குறிப்பிடுகின்றது) 39(1) ஒழுங்குவிதியில்

அவசரகால ஒழுங்குவிதிகள் 129
அவ்வொழுங்கு விதிகளில் அடங்கியிராத 21(3) ஒழுங்குவிதிகள்
தொடர்பாகவும் 41(2) ஒழுங்குவிதியில் அதேவாறான 50ஆம் ஒழுங்குவிதிகள்
பற்றியும் குறிப்பிடுகின்றது.
4. அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் முக்கியமான ஏற்பாடுகள் சிலவற்றை சுருக்கமாக ஆராய்ந்து பார்த்தல்
4. காணிகள், வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட சேவைகள் கைப்பற்றிக் கொள்ளல் (8, 9 மற்றும் 10ஆம் ஒழுங்குவிதிகள்)
8(1) ஒழுங்குவிதிகளின் மூலம் ஏதேனும் இயற்கை அனர்த்தம் தொடர்பான நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான கட்டடத்தை அல்லது காணியைக் கைப்பற்றுவதற்குரிய பிரதேசத்தின் ஆயுதந்தாங்கிய படையின் கட்டளைத் தளபதிக்கு அதிகாரமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏதேனும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவ்வாறு புரியும் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஏதேனும் ஏற்பாடுகள் அதில் உள்ளடக்கப்படவில்லை. சிக்கலான ஒழுங்குவிதிகள் எனும் உப தலைப்பின் கீழ் ஆராயப்பட்டவாறு இவ்வொழுங்கு விதியில் உள்ளடக்கப்பட்ட ஏனைய ஏற்பாடுகளிலும் மேற்கூறப்பட்ட ஏற்பாடுகளுக்குமிடையில் எதுவித தொடர்புமில்லை.
9ஆம் ஒழுங்குவிதியின் மூலம் தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கைப் பேணுவதற்கான அல்லது பொது வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய வழங்கல்களையும், சேவைகளையும் நடாத்திச் செல்வதற்கு அல்லது சமயோசிதமான தெனின் இலங்கையில் உள்ள ஏதேனும் வாகனமொன்றைக் கைப்பற்றுவதற்குரிய உத்தியோகத்தருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அவசரகாலம் பற்றிய பிரகடனத்துக்குரிய 14 நிர்வாக மாவட்டங்களுக்கு வெளியில் உள்ள ஏதேனும் ஒழுங்குவிதியின் சட்டமுறை பற்றி மேலே “ஒழுங்குவிதிகளின் ஏற்புடைமை எனும் உப தலைப்பின் கீழ் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.”
10ஆம் ஒழுங்குவிதிகளின்படி தேசிய பாதுகாப்பை நடாத்திச் செல்வதற்கு அல்லது அத்தியாவசிய சேவைகளை நடாத் திச் செல்வதற்கு உதவியளிக்குமுகமாக அல்லது அது தொடர்பில் ஏதேனும் சேவைகளைப் புரிவதற்கு அல்லது தனிப்பட்ட சேவைகளை புரிவதற்கு ஒரு நபரை நியமித்தல் . ஜனாதிபதியினால் அல்லது அதிகாரமளிக் கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் அல்லது பலரினால் புரிய முடியும்.
இவ்வொழுங்கு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள, “ஏதேனும் நபரொருவருக்கு” எனும் சொல் மேற்கூறப்பட்ட பிரகடனம் மற்றும் இவ் அவசரகால

Page 74
130 மனித உரிமைகளின் நிலை 2006
ஒழுங்குவிதிக்கு ஏற்ப 14 நிர்வாக மாவட்டங்களுடன் இருக்கின்ற ஏதேனும் நபரொருவரைக் கருத்திற் கொண்டவாறு கட்டுப்பாட்டுடன் பாவிக்கப்படல் வேண்டும். கைப்பற்றிய காணிகள், வாகனங்கள் அல்லது சேவைகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்காக எவ்வித ஏற்பாடுகளும் இல்லாத போதிலும், எக்கால எல்லைக்குள் கைப்பற்றப்பட முடியுமென்பது பற்றியும் கட்டுப்பாடுகள் காண்பிக்கப்படவில்லை. சுனாமி அனர்த்தத்தின் அளவும் அதன் உக்கிரத்தன்மை போன்று புனர்நிர்மாணம் மற்றும் புனரமைப்புக்காக எடுக்கப்படுகின்ற காலம் பற்றி கவனம் செலுத்தும் போது அவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்படுகின்ற தேவைப்பாடுகள் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கும்.
அதேவாறு ஏதேனும் ஆளொருவருக்கு கைப்பற்றுதல் தொடர்பில் சட்டரீதியான ஆட்சேபனைக்குட்படுத்தக் கூடிய எதுவித ஏற்பாடுகளுமோ அதில் சேர்க்கப்படவில்லை.
4.2 அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின்
நியமனம் (11ஆம் ஒழுங்குவிதி)
இவ்வொழுங்கு விதியின் மூலம் ஜனாதிபதியினால் முழு இலங்கைக்குமான அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ?? ஏதேனும் ஆளொருவரைப் பெயர் குறித்து அல்லது அப்பதவியை நியமனஞ் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் உள்ள போதிலும் அவ்வாணையாளர் நாயகத்தின் பணியாதெனில் அத்தியாவசிய சேவைகளை நடாத்திச் செல்வதற்குரிய சகல செயற்பாடுகளையும் செயற்படுத்துவதும் இணைத்தலுமாகும். எவ்வாறாயினும் இந்நியமனம் செய்யும் வேளையில் மேற்கூறப்பட்ட பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்ட' 14 மாவட்டங்களில் பற்றி மாத்திரமே தெளிவாகக் குறிப்பிடப்பட்டது.
4.3 அத்தியாவசிய சேவைகள் மற்றும் மீறுதலுக்கான
தண்டனைகள் (12ஆம் ஒழுங்குவிதி) ஏதேனும் ஒரு சேவை யொன்று அதி தியாவசிய சேவையெனப் பிரகடனப்படுத்தப்படுவது யாதெனில் பொது ஒழுங்கைப் பேணுவதற்கும் பொது வாழ்க்கைக்குத் தேவையான வளங்களையும் சேவைகளையும் நடாத்திச் செல்லுமுகமாக அது தேவையெனக் கருதும்பட்சத்தில் அச்
36. எவ்வாறாயினும் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்கு விதிகளின் 14 நிர்வாக மாவட்டங்கள் தொடர்பில் மாத்திரமே ஏற்புடையதாக இருக்கும். ஒழுங்கு விதிகளின் ஏற்புடைமை எனும் உப தலைப்பின் கீழ் உள்ள விளக்கங்களைப் பார்க்கவும்.
37. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக திலக் ரணவிராஜாவை நியமனஞ் செய்த 2005ஆம் அண்டின் பெப்ரவரி 7ஆம் திகதிய 13794 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானி

அவசரகால ஒழுங்குவிதிகள் 131
சேவைகளை அத்தியாவசியச் சேவை எனப் பிரகடனப்படுத்துவதற்கு இவ்வொழுங்கு விதிகளின் மூலம் ஜனாதிபதிக்குத் தத்துவமளிக்கப்படுகின்றது. இவ்வொழுங்கு விதிகளின் மூலம் ஜனாதிபதியினால் ஏதேனும் அத்தியாவசிய சேவை யொனி றை “குறித் துரைக் கப்பட்ட சேவை”** எனப் பிரகடனப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. “3.1.2 ஒழுங்குவிதிகளின் ஏற்புடைமை'இன் கீழ் உள்ள அவதானிப்புக்களைப் பார்க்கவும். அத்தியாவசிய சேவையொன்றின் அல்லது குறித்த சேவையொன்றில் ஈடுபட்டிருக்கும் போது சட்டரீதியான காரணங்களின்றி வருகை தராமல் இருக்கின்ற அல்லது கட்டளை இடப்படுகின்றவாறு வேலையைத் தவறுகின்ற அல்லது நிராகரிக்கின்ற நபர்களுடைய தமது வேலைவாய்ப்பு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் வகையில் இல்லாமல் ஆக்கப்படும். அவ்வாறு அவர்கள் குற்றமொன்றுக்கு குற்றவாளியாக்கவும்படுவர். ஒரு குறிப்பிட்ட சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் வேலைக்கு சமூகமளிக்காமை அல்லது வேலை செய்தலை நிராகரிக்காமை அல்லது வேலை செய்தலை நிராகரித்தல் போன்றவை வேலை நிறுத்தமொன்றினால் அல்லது வேறு திட்டமிட்ட நடவடிக்கைகளினால் ஏற்பட்டிருப்பினும் கூட மேற்கூறப்பட்ட விளைவானது அதே மாதிரியே அமையும். வேறு நபர்களினால் அத்தியாவசிய வேலையை நடாத்திச் செல்வதைத் தடுத்தல் அல்லது அவ்வாறு புரிவதற்கு தூண்டிவிடுதலும் ஒரு குற்றமாகும்.
இவ்வொழுங்கு விதிகளை அமுல்படுத்துவதன் விளைவாக தமது வேலையை முடிவுறுத்தப்பட்ட நபரொருவர் அவ்வாறு வேலை முடிவுறுத்தப்பட்ட திகதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கம் சார்பில் அந்நபருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோக விடுமுறையிலிருந்து காலியாகுதல் வேண்டும். அவ்வாறு அவ்விடயத்தைக் கைவிட்டு விடாமல் இருப்பது ஒரு குற்றமாகும்.
ஏதேனும் ஒரு நபர் இவ்வொழுங்கு விதிக்கு எதிராக ஏதேனும் குற்றமொன்று தொடர்பில் குற்றவாளியாக்கப்படும் போது 29(1) ஒழுங்குவிதியில் காண்பிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு ஏற்புடையவராவார். அதாவது 3 மாதங்களுக்குக் குறையாத 5 வருடங்களுக்குக் மேற்படாத கடுழிய சிறைத்தண்டனை மற்றும் 500/= ரூபாவுக்குக் குறையாத ரூபா 5,000/= க்கு மேற்படாத அபராதமாகும். அதற்குப் புறம்பாக அந்நபருக்குரிய சகல அசையும், அசையா சொத்துக்கள் (சட்ட நடைமுறைக்குக் கொண்டுவருவதனால்) சுயமாகவோ பறிமுதல் செய்யப்படும். மேலும் இவ்வொழுங்கு விதி அமுலுக்கு வந்த தினத்திற்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட
38. குறித்துரைக்கப்பட்ட சேவையொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ள நபரொருவர் கடமை நேரங்களுக்குப் புறம்பாக அல்லது லீவு நாட்களில் வேலை செய்யுமாறு பணிக்கப்பட (Մ)tգեւյմ).

Page 75
132 மனித உரிமைகளின் நிலை 2006
ஒழுங்குவிதியின்படி அந்நபருக்கு சொந்தமான ஏதேனும் சொத்துக்களை வேறொருவருக்கு மாற்றுதல் (பராதீனப்படுத்தல்) வறிதாகும்.
சுயமாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படல் தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றினால் நிறைவேற்றப்பட்ட தண்டனை இல்லை எனவும் குற்றவாளியாக்கப்படுதலின் பயனாக வருகின்ற தண்டனையெனவும் வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது. உயர் நீதிமன்றம் 1979ஆம் ஆண்டளவில் அதாவது சிறிது காலத்திற்கு முன்னர் அத்தியாவசிய பகிரங்க சேவைகள் சட்டமூலத்தின் 4ஆம் பிரிவு அரசியலமைப்புக்கிணங்கியுள்ளமை பற்றி தீர்மானிக்கப்பட்ட போது ஓரளவு இதற்கொத்த தண்டனைகளை* கவனத்தில் எடுக்கப்பட்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஒன்றின் பின் ஒன்றான தண்டனைகளை நிறைவேற்றுவதனுாடாக தண்டனைகளை ஏற்படுத்துகின்ற 4ஆம் பிரிவில் குற்றவாளிகளினால் ஏற்படுத்தப்படுகின்ற குற்றங்களின் தன்மை அல்லது அவர்களுடைய குற்றத்தன்மைகளின் அளவைக் கருத்திற் கொள்ளாது சகல குற்றவாளிகளையும் சேர்க்கும் பரந்த ஏற்பாடுகளாகும் எனும் மனுதாரருடைய குற்றச்சாட்டுகளுக்கு நியாயமான காரணம் உண்டென நாங்களும் நம்புகின்றோம். எங்களுடைய அபிப்பிராயத்தின் படி இதுவானது மிகவும் தண்டனைகள் அதிகரித்துக் காணக்கூடிய வழக்கன்றி மனிதாபிமானமற்ற நடாத்துகைகளையும் தண்டனை களையும் பற்றிய வழக்கமாகும்."
நீதிமன்றம் மேற்சொல்லப்பட்ட தண்டனைகளை அரசியலமைப்புச் சட்டத்தின் 2ம் உறுப்புரைக்கு" இணங்காததெனும் கருத்துடன் இவ்வாறு தெளிவாகக் கூறியுள்ளது.
கட்டாயச் சொத்து பறிமுதல் செய்தல் அல்லது ஏதேனும் தொழில் ரீதியான பதிவு இடாப்பிலிருந்து பெயரை அகற்றுதல் இயற்கைக்கு மாறான கூடாதென அல்லது கடினமானதைப் போன்ற தகுந்த வழக்கொன்றின் போது மேற்கூறப்பட்ட சகல தண்டனைகளும் ஒன்றாக ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியாதென நாங்கள் கருத்துக் கொள்ளவில்லை. எங்களின் எதிர்ப்பு தெரிவிப்பானது யாதெனில் அவற்றில் உள்ள கட்டாயத்தன்மை மீதும் குற்றத்தின் தன்மை அல்லது
39. ஆகக்குறைந்தபட்சமாக 2 வருடங்களிலிருந்து ஆகக்கூடுதலாக 5 வருடங்கள் வரையிலான காலத்துக்கு சிறைத்தண்டனைக்குட்படுதல் அல்லது 2,000/-இலிருந்து 5,000/- வரையிலான தண்டித்திற்கோ அல்லது சிறைத்தண்டனை மற்றும் தண்டம் எனும் இரண்டிற்கும் மற்றும் சகல அசையும் சொத்துக்கள் கட்டாயப் பறிமுதல் செய்வதற்கும் மற்றும் ஏதேனும் தொழில்ரீதியான பெயர் குறித்த இடாப்பிலிருந்து பெயரை அகற்றுதல்
40. ரத்னசிறி விக்ரமநாயக்க எதிர் அரச உ/நீதி விண்ணப்ப இலக்கம் 58/79, பாராளுமன்ற
சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்பப்பு 1978 - 1983 Volume 1, p.72
41. ஆளொருவர் சித்திரவதைக்கு அல்லது கொடுரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான
நடாத்துகைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது

அவசரகால ஒழுங்குவிதிகள் 33
குற்றவாளியின் கண்மூடித்தனமான போக்கின் மீதும் கருத்திற் கொள்ளாது அத்தணி டனைகளை மதிக் காது ad terrorem ஏற்புடையதாக்கிக் கொள்ளுதல் பற்றியதாகும்.*
மேலும் இவ்வொழுங்கு விதிக்கெதிராக ஏதேனும் குற்றமொன்றுக்கு குற்றவாளியாக்கப்பட்ட ஆளொருவருக்குப் சொந்தமான சொத்து பரா தீனப் படுத்தல் அற்றுப் போதல் இடம் பெறுவது குற்றவாளியாக்கப்படுவதற்குப் பின்னர் அல்ல அவ்வொழுங்குவிதி அமுல்படுத்தப்பட்ட திகதியிலிருந்தே ஆகும். அதன்படி சொத்துக்களைக் கைப்பற்றப்படுதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் எதுவித குற்றங்களையும் புரியாத ஏதேனும் ஆளொருவரிடமிருந்து தரப்பினருக்கு அச்சொத்தை இழக்க நேரிடும் இவ்வேற்பாடுகளில் உள்ள நியாயமற்றதன்மையும் அதன் மூலம் நிரபராதியாகி மூன்றாம் தரப்பினர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் நன்கு தெளிவாகின்றன.
4.4 சோதனை செய்தல், கைது செய்தல்,
தடைசெய்வதற்கான அதிகாரங்கள்
(16ஆம் ஒழுங்குவிதி) பொலிஸ் அல்லது ஆயுதம் தாங்கிய படையின் உறுப்பினர் அல்லது ஜனாதிபதியினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறொரு நபரினால் கவர்ந்து செல்லல், கடத்தல், Procuration, கற்பழித்தல், இயற்கைக்கு மாறான குற்றம், அத்துமீறிப் பிரவேசித்தல் போன்ற குற்றங்களாகிய தண்டனைச் சட்டக்கோவையில் குறிப்பிடப்படும் ஏதேனும் குற்றங்களைப் புரிந்துள்ள அல்லது அவ்வாறான குற்றமிழைத்ததாக சந்தேகம் கொள்ளக்கூடிய நியாயமான காரணங்களைக் கொண்டுள்ள ஆளொருவரை சோதனை செய்வதற்கு அல்லது பிடியாணையின்றி கைது செய்வதற்கு இவ்வொழுங்கு விதி மூலம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேவாறு இவ்வொழுங்கின் மூலம் ஏதேனும் குற்றமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் பாவிக்கப்பட்ட ஏதேனும் வாகனமொனி றை, கப் பலொனி றை அல்லது ஒரு பொருளைத் தடைசெய்வதற்கு, அகற்றுவதற்கு அல்லது தடுத்து நிறுத்தி வைப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் பிற்காலத்தில் ஏற்பட்ட விளைவுகளுக்கிடையில் விவாதிக்கக்கூடிய தொடர்புகள் இருப்பதாகவும் அவ்வாறான நிலைமையின் கீழ் பொலிஸ் அல்லது ஆயுதம் தாங்கிய படையினரிடம் சோதனை செய்யும் மற்றும் அதிகாரங்களை கையளித்தல் நீதியற்றதல்ல என்பது புலனாகின்றது. அவ்வாறாயினும் ஜனாதிபதியினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள ஏதேனும்
42. மேற்படி இலக்கம் 40

Page 76
134 மனித உரிமைகளின் நிலை 2006
அவ்வாறான அதிகாரங்களைக் கையளிக்கும் தேவைப் பாடானது பிரச்சினைக்குரியதாகும்.
ஆயுதம் தாங்கிய படையினரினால் கைது செய்யப்படுகின்ற நபர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயினும் “அதிகாரம் வழங்கப்பட்ட நபர்களினால்’ புரியப்படுத்தப்படுகின்ற கைது செய்தல் தொடர்பில் அவ்வாறான தேவைப்பாடு இருக்கமாட்டாது. பொலிஸாரினால் கைது செய்யப்படும் போது பொலிஸ் பிரிவின் பொலிஸ் சுப்ரின்டனிடம் அது பற்றி அறிவிக்க வேண்டியுள்ள போதிலும், ஆயுதம் தாங்கிய படையினரினால் கைது செய்யப்படும் போது அப்பகுதியின் கட்டளை வழங்கும் உத்தியோகத்தரிடம் அறிவித்தல் வேண்டும். மேற்கூறப்பட்ட இவ்விரு சந்தர்ப்பங்களிலும் “அதிகாரம் வழங்கப்பட்ட நபர்களினால்” கைது செய்யும் சந்தர்ப்பங்கள் தொடர்பாக அவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட வில்லை.
சோதனையொன்றை நடாத்துகின்ற ஆளொருவருக்கு சோதனை செய்ய வேண்டிய காணிக்குள், வாகனத்திற்குள், கப்பலுக்குள் செல்வதற்கு ஏதேனும் கதவொன்றை அல்லது ஜன்னலொன்றை உடைத்து திறப்பதற்கு அதிகாரம் உண்டு. பெண்ணை சோதனை செய்தல் பெண்ணினாலேயே புரியப்படல் வேண்டும். ஒரு சொத்தை தடை செய்யும் போது அச்சொத்தானது தடை செய்யப்பட்டது ஏதேனும் ஆளொருவரின் , பொறுப்பில் இருக்குமாயின் அவ்வாளிடம் அச் சொத்து தொடர்பில் ரசீது வழங்கப்படல் வேண்டும். எவ்வாறாயினும் கடந்த காலங்களில் அவசரகால ஒழுங்குவிதிகள் (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) (EMPPRS) பலவற்றில் அடங்கியுள்ள ஏற்பாடாகிய ஏதேனும் ஆண் ஒருவரைக் கைது செய்யப்பட்ட போது அவ்வாறான கைது செய்தலை வெளிப்படுத்தும் பத்திரமொன்று கைது செய்யப்பட்ட ஆளினுடைய நெருங்கிய உறவினருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தேவைப் பாடு இவ்வொழுங்கு விதியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. “கைது செய்தல் பற்றி ரசீது’ வழங்குவதன் மூலம் கைது செய்யப்பட்ட நபர் “தலைமறைவாகுதலை’ தடுப்பதற்கு ஓரளவில் உதவுகின்றது என்பதனைக் கடந்த கால அனுபவங்கள் மூலம் எடுத்துக் காண்பிக்கப்பட்டுள்ளது.
4.5 கைது செய்தல் பற்றிய மனித உரிமைகள் ஆணைக்
குழுவுக்கு அறிக்கையிடுதல்
அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் நபர் ஒருவர் கைது செய்தல் அல்லது
தடுத்து வைத்தலைப் புரியும் ஏதேனும் நபரொருவரினால் அவ்வாறான கைது செய்தல் பற்றி உடனடியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம்

அவசரகால ஒழுங்குவிதிகள் 135
அறிவிக்கும் கடமையானது 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக் குழுச் சட்டத்தின் 28(1)ஆம் பிரிவு மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அவ்வாறான அறிவித்தல் வழங்குதல் எந்நிலைமையின் கீழ் ஆயினும் கைது செய்ததிலிருந்து 48 மணித்தியாலங்கள் கழிவதற்கு முன்னர் நடைபெறுதல் வேண்டும். 28 (3)ஆம் பிரிவின் கீழ் கைது செய்தல் தொடர்பில் அறிக்கையிடத் தவறுதல் ஒரு குற்றமென்பதுடன் குற்றவாளியாக்கப்பட்டதன் பின்னர் ஒரு வருட காலம் வரையிலான மறியல் தண்டனைக்கு அல்லது 5,000 ரூபா வரையிலான அபராதத்திற்கு அல்லது அவ்வித தண்டனைக்கும் உட்படுத்துவார். இது நாட்டிலுள்ள பொது நீதியின் ஒரு பகுதியாகும். இத்தேவைப்பாடு பற்றி எவ்வளவு துாரம் அறிந்திருக்கின்றனர், அதற்கேற்ப நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்பது தெளிவில்லாமல் உள்ளது. கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தலுக்கு அதிகாரம் வழங்கும் சகல அவசரகால ஒழுங்கு விதிகளிலும் இதற்கு ஒத்த ஏற்பாடுகளைச் சேர்த்தல் உசிதமானதாகும்.
4.6 மரண தண்டனை மூலம் தண்டனை வழங்கக்கூடிய
குற்றங்கள் (17ஆம் ஒழுங்குவிதிகள்) 17ஆம் ஒழுங்குவிதியின் மூலம் அவசரகால ஒழுங்குவிதிகளுக்குட்படுகின்ற குற்றங்களாக சொத்துக்கு தீங்கு விளைவித்தல் அல்லது நஷ்டம் ஏற்படுத்தல் பொதுவான குற்றவியல் சட்டத்தின்* கீழ் சொத்துக்கு அல்லது மனித உடலுக்கு எதிரான சில குற்றங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ள குற்றங்களில் சில குற்றங்கள் (உதாரணம்: குற்றவியல் அத்துமீறிப் பிரவேசித்தல், வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், மறைந்திருந்து வீட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல், வீடுடைத்தல் போன்ற குற்றங்கள்) பொதுச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமில்லாத போதிலும், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் கூறப்பட்டுள்ள தண்டனைகள் (குற்றவியல் அத்துமீறலுக்கு) ஆகக்கூடியது மூன்று மாத காலம் மறியற் குட் படுத்துதல் அலி லது blT [[]] ரூபாய் அபராதத்திற்குட்படுத்துதலிலிருந்து (இரவு காலத்தில் மறைந்திருந்து வீட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தல் அல்லது இரவு காலத்தில் விடுடைத்தலுக்கு) ஆகக்கூடியது மூன்று வருடம் மறியலுக்குட் படுத்தல். அபராதம் விதித்தல் எனும் தண்டனை வரை செல்லும்.
எவ்வாறாயினும் குற்றமிழைக்கும் நேரத்தில் நிலவிய பொதுமக்கள்
குழப்பங்களின் போது குற்றம் புரியப்பட்டதென* சட்டமா அதிபர்
43. குற்றவியல் கோவை 44. 19ஆம் ஒழுங்கு விதி

Page 77
136 மனித உரிமைகளின் நிலை 2006
தீர்மானிக்கப்படின் அதன் விளைவாக மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றவாளியாக்கப்படும் போது உரிய குற்றவாளி மரண தண்டனைக்கோ அல்லது ஆயுட்காலம் வரையிலான இரண்டு வகையின் ஒரு வகையிலான மறியற் தணி டனைக் குட்படல வேண்டும் (ஆங்கில வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில் மரண தண்டனை அல்லது இரண்டு வகையின் ஒரு வகையிலான மறியற் தண்டனைக்குட்படல் எனவாகும். மேற்கூறப்பட்ட “ஒழுங்குவிதிகளின் மொழிfதியான வாசகங்களுக்கிடையிலான ஒவ்வாமை” எனும் உப தலைப்பின் கீழ் உள்ள விளக்கங்களைப் பார்க்கவும்).
மேல் நீதிமன்ற முன்னிலையில் குற்றப்பகிர்வை அணைக்கும் பொதுச் சட்டத்தின் கீழ் நீதிவான் நீதிமன்றில் வழக்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குப் பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரத்தை கையளிக்கும் தற்றுணிவானது சட்டமா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது. பின்பு கூறப்பட்ட சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக்கப்படும் போது சுமத்தப்படுகின்ற தண்டனையானது பொதுச் சட்டத்தினுள் (தண்டனை சட்டக்கோவை) வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளில் உள்ள தண்டனையல்ல. அவசகரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துங்களும்) ஒழுங்குவிதிகளின் 29ஆம் விதிகளின் கீழ் காணப்படுகின்ற தண்டனையாகும். அது அவசரகால ஒழுங்குவிதிகளை மீறுதல் தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதாரண தண்டனையாகும். இது தொடர்பாக “அவசரகால ஒழுங்குவிதிகளை மீறுவதற்கான சாதாரண தண்டனையாகும்” எனும் உப தலைப்பின் கீழ் பின் காணப்படும் குறிப்பை பாவிக்கவும்.
சில குற்றங்கள் தொடர்பில் பொதுச்சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுகின்ற தண்டனையானது அக்குற்றத்திற்காக அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் நிறைவேற்றப்படுகின்ற தண்டனையை விடக் கடுமையானதென்பதனால் அதன் மூலம் சாதாரண நிலையை உருவாகின்றது. உதாரணமாக களவு செய்யும் எண்ணத்துடன் மறைந்திருந்து வீட்டுக்குள் அத்துமீறல் அல்லது வீடுடைத்தல் போன்ற குற்றங்களுக்கு பொதுச் சட்டத்தின் குற்றவாளியாகக் கருதப்படுகின்ற நபருக்கு தணி டனையாக O 6) (5 L கால மி வரை மறியலுக்குட்படுத்தப்படுவதற்கும், அபராதம் விதிப்பதற்கும் முடியும். ஆயினும் இச் செயலுக்கு 17ஆம் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் அது தொடர்பாக மேல் நீதிமன்றத்தின் முன் குற்றப்பதிவுப்பத்திரம் தாக்கல் செய்யப்படாமல் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமுகமாக அதிகாரத்தை வழங்க தீர்மானிக்கப்படின் அதன்படி குற்றவாளியாக்கப்படும் போது சுமத்தப்படும் தண்டனையானது மூன்று மாதங்களுக்குக் குறையாத ஐந்து வருடங்களுக்கு மேற்படாத கடுழிய மறியலுக்குட்படுத்துதல் மற்றும் 500

அவசரகால ஒழுங்குவிதிகள் 137
ரூபாவுக்குக் குறையாததும் 5,000 ரூபாவுக்கு மேற்படாததுமான அபராதமாகும்.
4.7 வேறு குற்றங்களும் தண்டனைகளும் அவசரகால (நானாவித ஏற்பாடுகள் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் கீழ் பல்வேறு செயல்கள் குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதற்கு கீழ்க்காணும் செயல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
(1) அரச உத்தியோகத்தர்களுக்கிடையில் அல்லது குடியரசின் சேவைகளில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கிடையில் அல்லது கட்டாய சேவைகளை நிறைவேற்றுகின்ற நபர்களுக்கிடையில் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்தல்.* (II) பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பொது ஒழுங்குக்கு அல்லது மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசிய வளங்களையும், சேவைகளையும் நடாத்திச் செல்வதற்கு தீங்கிழைக்கும் விளம்பரத் தாள்கள், துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைப் பகிரங்க இடத்தில் ஒட்டுதல் அல்லது விநியோகித்தல்." (Il) பொதுமக்களை அச்சுறுத்தக்கூடிய அல்லது பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்கக்கூடிய வதந்திகளைப் பரப்புதல்." (TV) ஏதேனும் அவசரகால ஒழுங்குவிதிகளுக்குகேற்ப ஏதேனும் ஒரு விடயத்திற்கு மறுமொழியாகப் பொய்யான கூற்றுக்களை வெளியிடுதல்.* (V) பொது விதிகளில் ஆளொருவருக்கு வண்டியொன்றுக்கு அல்லது வாகனமொன்றுக்கு, அந்நபரின் அல்லது பொருளின் பாதுகாப்புக்கு சேதம் ஏற்படும் வகையில் ஏதேனும் ஒன்றினால் அல்லது ஒரு பொருளினால் எறிதல்? (VI) அச்சுறுத்தல்" (VI) உத்தியோக பூர்வநிலைமையில் செயல்படும் ஆளொருவரிடத்தில் எதிர்ப்பை அல்லது இடையூறு ஏற்படுத்தல்." (VIII) பொது வீதிகளில் தடைகளை ஏற்படுத்துதல்’ போன்றவையாகும்.
(22ஆம் ஒழுங்கு விதிகளின் படி) ஏதேனும் பிரதான பாதையில் ஆளொருவருக்கு வண்டியொன்றுக்கு அல்லது வாகனமொன்றுக்கு அந்நபரின் பாதுகாப்புக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் ஒன்றினால் அல்லது ஒரு பொருளினால் எறியும் குற்றத்திற்கு தண்டனை 10 வருடங்களுக்குக் குறையாத காலம் கடுழிய சிறைத் தணி டனையாகும். ஏனைய
45. 18ஆம் ஒழுங்கு விதி 46. 19ஆம் ஒழுங்கு விதி 4T. 20ஆம் ஒழுங்கு விதி 48。 21ஆம் ஒழுங்கு விதி 49. 22ஆம் ஒழுங்கு விதி 50. 23ஆம் ஒழுங்கு விதி S. 24ஆம் ஒழுங்கு விதி 52. 25ஆம் ஒழுங்குவிதி

Page 78
138 மனித உரிமைகளின் நிலை 2006
குற்றங்களுக்கு 29ஆம் ஒழுங்குவிதிகளில் காண்பிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் விபரிக்கப்பட்டுள்ள சாதாரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
4.8 அவசர ஒழுங்குவிதிகளை மீறுவதற்கான சாதாரண
தண்டனைகள்
அவசரகால ஒழுங்குவிதிகள் அல்லது அதன் கீழ் தயாரிக்கப்பட்ட விதிகளை மீறுதல் தொடர்பாக வேறு ஏதேனும் தண்டனை விதிக்கப்படாமலிருக்கும் போது ஏற்புடையதான சாதாரண தண்டனை 29ஆம் ஒழுங்குவிதியின் கீழ் காண்பிக் கப்பட்டுள்ளது. அத்தணி டனையானது 3 மாதங்களுக்குக் குறையாததாக 5 வருடங்களுக்கு மேற்படாததாக கடுழிய மறியற் தண்டனையும் 500 ரூபாவுக்கு குறையான 5,000 ரூபாவுக்கு மேற்படாத அபராதமுமாகும். உண்மையிலேயே இத்தண்டனையானது ஏதேனும் குற்றமொன்றுக்கு ஏதேனும் விசேட தண்டனை விதிக்காமலிருந்தால் மாத்திரமே ஏற்புடையதாய் இருக்கும். இவ்வொழுங்கு விதிகள் மூலம் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் ஏதேனும் குற்றமொன்றிற்காக குற்றவாளியாக்கப்பட்ட நபர்கள் தொடர்பாக 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை கோவை சட்டத்தில் அடங்கியுள்ள குற்றவாளிகளை நிபந்தனையுடன் விடுதலை செய்தல்? பற்றிய ஏற்பாடுகளை ஏற்புடையதாக்கிக் கொள்வதும் தடுக்கப்படுகின்றது.
4.9 குற்றமொன்றைப் புரிவதற்கு முயற்சி செய்தல் போன்ற
விடயங்களும் தண்டனையும்
26ஆம் ஒழுங்குவிதியின் படி, ஏதேனும் அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் குற்றமொன்றைப் புரிவதற்கு முயற்சி செய்தல் அல்லது குற்றமொன்றைப் புரிவதற்கு ஆயத்தமாவதற்கு ஏதேனும் செயலைப் புரிதல் அல்லது குற்றமொன்றைப் புரிவதற்கு உதவி, ஒத்தாசை புரிதல் அல்லது சதிசெய்தல் எனும் சந்தர்ப்பங்களில் அக்குற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதெனக் கருதுகின்ற போதிலும், அதன்படி அக்குற்றங்களுக்குரிய தண்டனைகள் மூலமே தண்டனை அளித்தல் விதிக்கப்பட்டுள்ளது.
4.10 குற்றங்களுக்கான புலன் விசாரணை வழக்கு விசாரணைகள், குற்ற ஒப்புதலை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பிணை வழங்குதல் 30ஆம் ஒழுங்குவிதியிலிருந்து 34ஆம் ஒழுங்குவிதி வரை விசாரணை நடவடிக்கை, வழக்கு விசாரணைகள், குற்ற ஒப்புதலின் ஏற்புடைமை அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் குற்றங்கள் தொடர்பிலான பிணை வழங்குதல் மற்றும் காரணங்கள் பற்றிய ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
53. 306(2)ஆம் பிரிவு

அவசரகால ஒழுங்குவிதிகள் 139
30ஆம் ஒழுங்குவிதியின் மூலம் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் உள்ள குற்றங்களைப் புரிதல் அல்லது புரிவதற்கு முயற்சி செய்தல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் நபர்கள் அத்தகவல்களை அறிவிக்க வேண்டியமை தேவையாக்கப்பட்டுள்ளது. 31ஆம் ஒழுங்குவிதியின் மூலம் விசாரணைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கு விரிவான விசாரணைகளை நடாத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதில் மாதிரி கையெழுத்துக்கள், புகைப்படங்கள், விரல் அடையாளங்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல். ஓர் இடத்தில் வாகனத்தினுள் அல்லது கப்பலுக்குள் உட்பிரவேசித்தல் மற்றும் சோதன செய்தல் மற்றும் அவசரகால ஒழுங்கு விதியின் கீழ் குற்றமொன்றுக் குத் தொடர்புடையதென சந்தேகிக்கப்படும் அசையும் சொத்துக்களைத் தமது பொறுப்பில் எடுப்பதற்கான அதிகாரம் என்பன சேர்க்கப்பட்டுள்ளன. குற்றமொன்றுக்குத் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களின் பொறுப்பிலிருந்து கணி டுபிடிக் கப்படுகின்ற ஆவணங்கள், புத்தகங்கள் போன்றவை அந்நபர்களுக்கெதிரான சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு 32ஆம் ஒழுங்குவிதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 33ஆம் ஒழுங்குவிதியின் மூலம் ஏதேனும் அவசரகால ஒழுங்கு விதியினர் கீழ் கைது செய்தலுக்குட்படுத்தப்பட்டிருக்கும் நபர்களிடம் கேள்வி கேட்டல் மற்றும் அவ்வாறு கேள்வி கேட்கும் காலங்களில் புலன் விசாரணை செய்வதற்காக அந்நபர்களை ஓர் இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கான அதிகாரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் , அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 34ஆம் ஒழுங்குவிதியின் மூலம் கைது செய்தலுக்குட்படுத்தப்பட்டிருக்கும் நபரிடம் நியாயமான கால வேளைகளின் போது செல்லும் உரிமையானது ஏதேனும் அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் குற்றம் பற்றிய புலன் விசாரணை நடாத்தும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கப்படும். அவசரகால ஒழுங்கு விதியினர் கீழ் பொலிஸ் உத் தியோகத் தர்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற தத்துவமானது வேறு சட்டங்களின் கீழ் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதிகாரங்களுக்கு மேலதிகமானதொரு 35ஆம் ஒழுங்குவிதியில் காண்பிக்கப்படுவது யாதெனில் அவசரகால ஒழுங்கு விதியின் கீழ் பொலிஸ் உதி தியோகத் தர்களினால் நடைமுறைப்படுத்தப்படும் அதிகாரங்கள், முப்படைகளுக்குரிய படைத் தளபதிகளினால் அதிகாரமளிக்கப்பட்டிருப்பின் அவ் ஆயுதம் தாங்கிய படைகளின் ஏதேனும் அதிகாரமளிக்கப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்படாத உத்தியோகத்தரினாலும் நடைமுறைப்படுத்தப்பட முடியுமென்பதாகும். மேலும் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது ஜனாதிபதியினால் அதற்கென தத்துவமளிக்கப்பட்டுள்ள நபர்களினாலும் நடைமுறைப்படுத்த முடியுமென இவ்வொழுங்கு விதிகளின் மூலம் மேலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Page 79
140 மனித உரிமைகளின் நிலை 2006
அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் நடாத்தப்படுகின்ற ஏதேனும் விசாரணைக்கு 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கமுடைய குற்றவியல் நடவடிக்கை முறைக் கோவை சட்டத்தின் XIம் அத்தியாயத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையதாகாதென ஏற்பாடு செய்கின்றது." இவ்வத்தியாயத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது யாதெனில், வேறு விடயங்களுக்கிடையில், பிறவற்றுள் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் உள்ள குற்றங்களைப் புலன்விசாரணை செய்தல் தொடர்பானதாகும்.
39, 38, 39 மற்றும் 40 எனும் ஒழுங்குவிதிகளின் வேறு விடயங்களுக்கிடையில், பிறவற்றுள் கீழ் காணப்படுபவைகளுக்கான ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விளங்குவதற்காக நீதிமன்றங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் தற்றுணிபை சட்டமா அதிபருக்குப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடாத்துதல் அல்லது வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டிய நீதிமன்றங்கள் யாதென ஜூரி சபை இல்லாமல் எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை செய்யப்படும் போது சில குற்றங்கள் தொடர்பாக நேரடியாகவே மேல் நீதிமன்றத்தில் குற்றப் பகிர்வு பத்திரத்தைத் தாக்கல் செய்வதற்கான சட்டமா அதிபர் கொண்டுள்ள தத்துவம், அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழுள்ள குற்றங்கள் அதில் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் மூலம் குறிக்கப்பட்டுள்ளவை தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபரின் அனுமதி அவசியமாயிருத்தல். சட்டமா அதிபரினால் பூர்வாங்க விசாரணையின்றி நேரடியாகவே மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு பத்திரத்தைத் தாக்கல் செய்தல் மற்றும் எதிரி இல்லாமல் வழக்கு விசாரணையை ஆரம்பித்தலும் நடாத்துதலும் (வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு 30 நாட்களுக்கு முன்னில்லாததொன்றில்) வழக்கு விசாரணையின் போது தமக்கு எதிராகப் பாவிக்கப் படுகின்ற வழக்குத் தொடுனர் சார்பிலான சாட்சிகளின் வாக்குமூலங்களினதும் வேறு ஆவணங்களினதும் பிரதிகளை எடுப்பதற்கு நீதிமன்றத்திடம் விண்ணப்பிப்பதற்கு எதிரிக்கு அனுமதி வழங்குதல் அவ்வாறான தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதிமன்றம் கொண்டுள்ள தற்றுணிபு போன்றவை பற்றி இவ்வொழுங்கு விதியின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
41ஆம் ஒழுங்குவிதியின் மூலம் ஏதேனும் அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் உள்ள குற்றம் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் உதவிப் பொலிஸை விட குறைந்த தராதரத்தில் அல்லாத பதவி வகிக்கும் பொலிஸ் உத்தியோகத்தரிடம் அளித்த குற்ற ஒப்புதலை அந்நபருக்கெதிரான வழக்கு
54. 42ஆம் ஒழுங்கு விதி

அவசரகால ஒழுங்குவிதிகள் 141
விசாரணையின் போது ஏற்றுக்கொள்வதற்கு? ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூண்டுதல், பயமுறுத்தல் அல்லது வாக்குறுதியளித்தல் காரணமாகப் புரியப்பட்ட* குற்ற ஒப்புதலோ அல்லது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அளித்த குற்ற ஒப்புதலோ' அல்லது பொலிஸில் கைது செய்யப்பட்டிருக்கும் போது (நீதிவானொருவருக்கு குற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டிருத்தல் தவிர்ந்த)* அளிக் கப்பட்ட குற்ற ஒப்புதல் , வழக்கு நடவடிக் கைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென பொதுச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பானது இவ்வொழுங்கு விதியின் ஏற்பாடுகளினால் அகற்றப்பட்டுள்ளது.
ஏதேனும் குற்ற ஒப்புதலொன்று சுயவிருப்புடன் புரியப்படவில்லை என எண்பிக்கும் பொறுப்பு குற்ற ஒப்புதலைப் புரிந்த நபரிடமே சுமத்தப்படும்.” குற்ற ஒப்புதலை ஏற்றுக்கொள்ளல் பற்றி மேலே உள்ள ஏற்பாடு பிற்காலத்தில் அவசரகால ஒழுங்குவிதிகளில் காணப்படுகின்ற பொதுப் பணமா இருக்கின்ற போதிலும், அது புலன்விசாரணை உத்தியோகத்தரின் பொறுப்பில் இருக்கும் சந்தேக நபர்கள் முறைகேடான நடாத்துகைக்கு உட்படுத்துவதற்கு உதவியளிக்கின்ற காரணியாக மாறியுள்ளது. மேலும் குற்ற ஒப்புதலானது ஒரே சாட்சியமாக அமையும் போது அக்குற்ற ஒப்புதலானது சுயவிருப்புடன் புரியப்படவில்லை என எண் பிக்கும் பொறுப்பானது எதிரியிடம் கையளித்து இருத்தல் அரசியலமைப்பின் 13(3)° 13(5)ஆம்° உறுப்புரைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள “நியாயமான வழக்கு விசாரணை’ மற்றும் சுற்றவாளி எனும் ஊகம் ஆகிய அரசியலமைப்புரீதியான உரிமைகள் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைந்துள்ளதெனக் கூற வேண்டியுள்ளது.
“நியாயமான வழக்கு விசாரணை’ க் காகவுள் ள உரிமையை புறத் தொதுக்குவதற்கு எவருக்குமே வாய்ப்பில் லாத போதிலும் இவ்வரசியலமைப்புரீதியான உத்தரவாதம் மீது எதுவித மட்டுப்பாடுகளையும் அவசரகால விதிகளின் மூலம் நிறைவேற்ற முடியாது. அவசரகால விதிகள் மூலம் “சுற்றவர்ளி எனும் ஊகம்” எனும் அரசியலமைப்புரீதியான
55. சான்றியல் கட்டளைச் சட்டத்தின் 24ஆம் பிரிவு
56. சான்றியல் கட்டளைச் சட்டத்தின் 25ஆம் பிரிவு
57. சான்றியல் கட்டளைச் சட்டத்தின் 26ஆம் பிரிவு
58. 41(3) ம் ஒழுங்கு விதி
59. 41(3)ஆம் ஒழுங்குவிதி
60. தவறொன்றுக்கு குற்றஞ்சாட்டப்படும் எவரேனுமாள் தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றினால் நடாத்தப்படும் நியாயமான விளக்கத்தில் அவசர நேரடியாக (தனிப்பட்ட முறையில்) உரைப்பதற்கு அல்லது சட்டத்தரணி மூலம் உரைப்பதற்கு உரித்துடையவராதல் வேண்டும்
61. குற்றவாளியென எண்பிக்கப்படும் வரை ஆளொவ்வொருவரும் சுற்றவாளியென ஊகிக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயினும் குறிப்பிட்ட நிகழ்வுகளை எண்பிப்பதற்கான பொறுப்பை குற்றஞ்சாட்டப்பட்ட ஆளொருவர் மீது சட்டம் சுமத்தலாம்

Page 80
142 மனித உரிமைகளின் நிலை 2006
உத்தரவாதத்தை மட்டுப்படுத்த முடிகின்ற போதிலும் அவ்வாறான மட்டுப்பாடுகளை “தேசிய பாதுகாப்புக்கு” மாத்திரமே விதிக்க முடியும்.* 2004 மார்கழி மாதம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் அல்லது அதன் பயங்கர விளைவு மூலம் “தேசிய பாதுகாப்புக்கு’ பங்கம் ஏற்பட்டதெனக் கூற முடியாது. அதன் காரணமாக ‘நிரபராதி எனும் ஊகத்'திற்கான உத்தரவாதத்திற்கு மட்டுப்பாடு விதிக்கக் கருத்து 41ஆம் ஒழுங்குவிதியானது (Ultra Vires) என்றும் வறிதானதுமாகுமெனப் புலப்படுகின்றது.
13(5) உறுப்புரையில்° “நிரபராதி எனும் ஊகத்” திற்கான உத்தரவாதத்தின் கீழ் உள்ள ஏற்பாட்டின்படி ஏதேனும் விசேட நிகழ்வுகளை எண்பிக்கும் பொறுப்பை சட்டத்தினால் ஒரு எதிரியிடம் பாரஞ்சாட்ட முடியுமென ஏற்பாடு செய்யப் பட்டிருப்பினும், விசேட நிகழ்வுகளின்றி வழக்குத்தொடுநரின் முழு வழக்குமே ஏதேனும் குற்ற ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டிருக்குமாயின் இவ் உபவேற்பாடானது ஏற்புடைத்தாகாதெனக் குறிப்பிடுதல் வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தினுள்° “சட்டம்” என்பது ஏதேனும் மட்டுப்பாட்டுக்குள் பொருள் தேடல் செய்யப்படுகின்ற போதிலும் அதற்குள் அவசரகால ஒழுங்குவிதிகள் உள்ளடக்கப்படுவதில்லையென்பதாலும் எந்நிலைமையாயினும் இவ்உபவேற்பாடுகளின் கீழ் அவசரகால ஒழுங்குவிதிகளின் மூலம் ஏதேனும் பொறுப்பொன்றைத் விதித்தல் சட்டரீதியாகப் புரிய முடியாது.
பிணை வழங்குதல் தொடர்பாக எடுத்துக்கொள்ளும் போது ஏதேனும் ஆளொருவருக்கெதிராக மேல் நீதிமன்றத்தின் முன் குற்றப் பகிர்வு முன்வைக்கப்படும் போது சட்டத்துறைத் தலைமையதிபதி இணங்கினால் மாத்திரமன்றி அவ்வாளுக்கு பிணை வழங்கப்படமாட்டாது.*
5. அவசரகால ஒழுங்குவிதிகளில் (நானாவித ஏற்பாடுகளும்
தத்துவங்களும்) அடங்கியுள்ள வேறு ஒழுங்குவிதிகள்
வேறு ஒழுங்குவிதிகளுள் முழு இலங்கைக்குமான சிவில் பாதுகாப்பு ஆணையாளர் மற்றும் ஆணையாளர் போன்றவர்களை நியமித்தலுக்கான
62. அரசியலமைப்பின் 15(1)ஆம் உறுப்புரை
63. குற்றவாளியென எண்பிக்கப்படும் வரை ஆளொவ்வொருவரும் சுற்றவாளியென ஊகிக்கப்படுதல் வேண்டும். அவ்வாறாயினும் குறிப்பிட்ட நிகழ்வுகளை எண்பிப்பதற்கான பொறுப்பைக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆளொருவர் மீது சட்டம் சுமத்தலாம்.
64. அரசியலமைப்பின் 170ஆம் உறுப்புரை “சட்டம்” என்பது ஏதேனும் பாராளுமன்ற சட்டம் எனவும், அரசியலமைப்பு தொடங்குவதற்கு முன்னர் எந்நேரத்திலும் ஏதேனும் சட்டவாக்கத்துறை ஆக்கப்பட்ட ஏதேனும் சட்டம் எனவும் பொருளாவதுடன், அரசப் பேரவை கட்டளையையும் உள்ளடக்கும்
65. 40(2) ஒழுங்குவிதி

அவசரகால ஒழுங்குவிதிகள் 143
ஏற்பாடுகள் (13ஆம் ஒழுங்குவிதியிலும்) பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆலோசனைக் குழுக் களை நியமிக் கும் ஏற்பாடுகள் (14ஆம் ஒழுங்குவிதியிலும்) அமைதியின்றி அத்துமீறலை (15ஆம் பிரிவிலும்) அவசரகால ஒழுங்குவிதிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்தல் அவர்களுக்கெதிரான வழக்குகளை விசாரணை செய்தல் அல்லது அவர்களுக்குத் தண்டனை வழங்குதலைத் தடுத்தல் , அதற்காக அந்நபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், (27ஆம் ஒழுங்குவிதியிலும்) கூட்டிணைக்கப்பட்ட சபைகளின் விதிகளிலுமுள்ள குற்றமொன்று தொடர்பில் வேண்டுமென்றே தகவல்களை அறிவிக்கத்தவறும் அல்லது மறுக்கும் குற்றங்களை உருவாக்குதல் (36ஆம் ஒழுங்கு விதி) அரசாங்க பகுப்பாய்வாளரின் சான்றிதழ் அது பற்றி தொடர் சாட்சியங்களை நெறிப்படுத்தாமல் இறுதியும் முடிவுமான சாட்சியங்களைக் கருத்திற்கொள்தல் (43ஆம் ஒழுங்குவிதி) பிரதான இடங்களில் கூட்டமாக இருப்பதை விட்டும் தவிர்ந்திருக்குமாறு பொதுமக்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமுகமாக ஏதேனும் உத்தியோகபூர்வம்வாய்ந்த உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அல்லது ஆயுதம் தாங்கிய படை உத்தியோகத்தர்களுக்கு அதிகாரம் வழங்குதல் குற்றவாளிகளை நிபந்தனையுடன்கூடிய விடுதலை செய்தல் தொடர்பிலான 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் சில ஏற்பாடுகள்? ஏற்புடையதாகாமலிருத்தல் (44ஆம் ஒழுங்குவிதி) ஆயுதம் தாங்கிய படை உறுப்பினர்களை மோட்டார் வாகன சட்டத்தின் சில ஏற்பாடுகளிலிருந்து விடுவிப்பளித்தல் (47ஆம் ஒழுங்குவிதி) ஏதேனும் பிரதேசமொன்றின் மாவட்ட செயலாளர் ஒருவருக்குள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இணைப்பதிகாரங்களை நியமனஞ் செய்தல். (48ஆம் ஒழுங்குவிதி) ஏதேனும் அவசரகால ஒழுங்கு விதியின் கீழ் நல்லெணி ணத் துடன் நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டதெனக் கருதும் ஆட்களுக்கெதிராக மேற்கொள்ளப் பட்டதெனக் கருதும் ஆட்களுக்கெதிராக சட்டத்துறை தலைமையதிபதியின் ஆட்களுக்கெதிராக சட்டத்துறை தலைமையதிபதியின் எழுத்துமூல அனுமதியின்றி வழக்குத் தொடர் தலைத் தடை செய்தல் (40ஆம் ஒழுங்குவிதி) போன்ற ஒழுங்குவிதிகளை உள்ளடக்கும்.
6. அவசரகால நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்
ஒழுங்குவிதிகளின் பல்வேறு ஏற்பாடுகள்
அவசரகால ஒழுங்குவிதிகளின் இப்பகுதியினுள் அடங்கியுள்ள முக்கிய ஏற்பாடு யாதெனில், அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் ஏற்கனவே
66. 306 (1), (2) மற்றும் (4)ஆம் பிரிவு

Page 81
144. மனித உரிமைகளின் நிலை 2006
தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆட்களை ஒரு தடவையில் ஏழு நாட்களுக்கு மேற்படாத காலத்திற்குத் தம்மைக் கைது செய்வதற்காக ஏதேனும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அல்லது ஆயுதம் தாங்கிய படைத் தளபதிகளினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு உத்தியோகத் தர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. 45ஆம் ஒழுங்குவிதியாகும். அவ்வாறான முறையில் தடுத்து வைக் கப்பட்டவர் அவ்வாறு தான் எத்தனை தடவைகள் கைது செய்யப்படலாம் என்பது பற்றி வரையறை காண்பிக்கப்படாமையினால் அதனை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானதொரு விடயமாகும். இவ்வதிகாரமானது கைது செய்ய நீதிமன்ற உத்தரவை மிகைத்துச் செல்லக்கூடியதாகவுள்ளது. இலங்கை நாட்டின் அனுபவத்தின் படி அத்தகைய செயலானது தடுத் து வைக் கப் பட் டவர் களை நியாயமற்ற நடாத்துகைக்குட்படுத்துவதற்கு இட்டுச் சென்றுள்ள அதிகாரமாகும். எநீ நிலைமையின் கீழ் ஆயினும் தற்போதைய நிலைமையின் தேவைப்பாட்டைவிட மிதமிஞ்சியதொன்றாகும்.
1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுச் சட்டத்தின் 28(2) ஆம் பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டவாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள தடுத்து வைக்கப்பட்டவர்களை சந்திக்கச் செல்லும் சட்டரீதியான கடமையை நிறைவேற்றக்கூடியவாறு மேற்கூறப்பட்ட அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் பற்றி தமது ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்துதல் வேண்டும்.
முதலாம் அவசரகாலப் பிரகடனமும், 14 நாட்களுக்குப் பின்னர் அதன் வலிதாந்தன்மையும்
சுனாமி பேரலையினால் ஏற்பட்ட அழிவின் பாதிப்பைக் குறைக்குமுகமாக அவசரகாலச் சட்டத்தை உபயோகிப்பதன் மூலம் சட்டம், ஒழுங்கைப் பேணும் முயற்சிகள் இந்நாட்டை அவசரகாலச் சட்ட சம்பிரதாயங்களுள் மாறுபட்ட வகையிலான “நீரோட்ட”த்தை தோற்றுவிப்பதற்குக் காரணமாய் அமைந்தது. இவ்வாறான வியத்தகு சம்பவங்கள் கீழே விபரிக்கப்படுகின்றன.
முன்பு கூறுயவாறு 2004ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னர் ஜனாதிபதியினால் (அவசரகால ஒழுங்குவிதிகளைத் தயாரிக்கும் தத்துவத்தின் கீழ் செயற்பட்டு) அன்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 11ஆம் பகுதியை அமுல்படுத்தியதுடன் , 2005 ஜனவரி 4ஆம்" திகதி
67. 2005 ஜனவரி 04ஆந் திகதிய 1374/8 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானி

அவசரகால ஒழுங்குவிதிகள் 145
பிரகடனமொன்றைப் பிறப்பித்ததுடன் பின்பு 2005 ஜனவரி 6ஆந்° திகதி அவசரகால ஒழுங்குவிதியொன்று (EMPPR) பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு முன் தெளிவாகக் கூறப்பட்டவாறு? பிரகடனப்படுத்தல் பற்றி உடனடியாக பாராளுமன்றத்திற்கு அறிவித்தல் வேண்டும்." பிரகடனம் செய்த திகதியன்று அன்றிலிருந்து 10 நாட்களுக்கு முடிவடையாதவாறு பாராளுமன்றம் ஒத்தி வைத்திருப்பின் ஜனாதிபதியினால் பிரகடனஞ் செய்த திகதியிலிருந்து 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடுவதற்காக அழைக்கப்படல் வேண்டும்."
பாராளுமன்றம் 2005 ஜனவரி 4ஆம் திகதி ஒன்றுகூடி பெப்ரவரி 8ஆந் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2005 ஜனவரி 4ஆந் திகதி பிரகடனம் பற்றி 2005 ஜனவரி 4ஆந் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவித்தல் பற்றி எதுவித குறிப்பும் இடம்பெறவில்லை." இந்நிலைமையின் கீழ் 2005 ஜனவரி 4ஆந் திகதிய பிரகடனத்திற்காக பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெறுமுகமாக ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை 10 நாட்களுக்குள் கூடுவதற்காக அழைக்க வேண்டியிருந்தது. எவ்வாறாயினும் ஜனாதிபதியினால் அவ்விடயத்தைப் புரிவது பற்றி எவ்வித அறிக்கையும் இருக்கவில்லை.
இதற்கு முன்பும் சுட்டிக்காட்டப்பட்டவாறு" பொது மக்கள் பாதுகாப்புச் கட்டளைச் சட்டத்தின் 11ஆம் பகுதியின் ஏற்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டு வந்ததிலிருந்து 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தினால் பிரகடனம் அங்கீகரிக்கப்பட்டிருக்குமாயின் அப்பிரகடனமானது மாதம் ஒரு தடவைக்கு வலிதானதாக இருக்கும். அப்பிரகடனமானது அவ்வாறு அங்கீகரிக்கப்படாவிடின் அது அதன் கீழ் இயற்றப்பட்ட ஏதேனும் அவசரகால ஒழுங்குவிதியுடன் சேர்த்து 14 நாட்கள் முடிவில் அற்றுப்போய்விடும். எவ்வாறாயினும் அழைக்கப்பட்ட பாராளுமன்றம் கூடியிராத வேளையில்" ஏதேனும் பிரகடனம் ஒன்று 14 நாட்களுக்கு மேலாக நடைமுறையில் வைத்திருக்க வேண்டிய ஏற்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் அவ்வேற்பாடுகள் பற்றி கலந்துரையாடலுக்குட்படுகின்ற தற்போதைய சந்தர்ப்பங்களுக்கு ஏற்புடையதாகாது.
மேற்கூறப்பட்ட நிலைமையினுள் 2005 ஜனவரி 4ஆம் திகதிய பிரகடனமானது பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படாமை" காரணமாக 2005 ஜனவரி
68. 2005 ஜனவரி 04ஆந் திகதிய 1374/15 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானி
69. 2.2 பிரகடனம் பற்றிய பாராளுமன்றக் கட்டுப்பாட்டின் கீழுள்ள விடயங்களைப் பார்க்க 70. அரசியலமைப்புச் சட்டத்தின் 155(4) உறுப்புரை
71. அரசியலமைப்புச் சட்டத்தின் 155(4}(i) உறுப்புரை
T2. ஹான்சாட் இலாபம் 158 - 2005 ஜனவரி 04 இலக்கம்
73. "2.2 பிரகடனம் பற்றி பாராளுமன்ற கட்டுப்பாட்டின் கீழ்" உள்ள விடயங்களைப்பார்க்க.
14. அரசியல் அமைப்பின் 155(6)ஆம் உறுப்புரையின் உப ஏற்பாடு 75. அரசியல் அமைப்பின் 155(6)ஆம் உறுப்புரை

Page 82
146 மனித உரிமைகளின் நிலை 2006
18ஆந் திகதி அற்றுப்போயின. அதன் விளைவாக மேற்கூறப்பட்ட பிரகடனத்தின் கீழ் இயற்றப்பட்ட சகல அவசரகால ஒழுங்குகளும் அவ்வாறு அற்றுப் போன சமயம் வரை அவ்வொழுங்கு விதிகளின் கீழ் சட்டரீதியான முறையில் புரியப்பட்டிருந்த எவற்றிற்குமே எவ்வித தீங்கும் ஏற்படாவண்ணம் 2005 ஜனவரி 18ஆம் திகதிக்குப் பின்னர் அற்றுப் போயிருந்தது." அவ்வாறாயினும் அரசுக்கு இச் சட்ட நிலைமை பற்றிய விளக்கம் இருந்திருக்கவில்லையென்று தெரிந்திருந்த போதிலும் அரசு அவசரகால சட்டமானது தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது எனும் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டமை காணப்பட்டது. இலங்கையின் சிவில் உரிமைகள் அமைப்பினால் 2005 பெப்ரவரி 2ஆம் திகதி புரியப்பட்ட கீழ் காண்பிக்கப்படும் கூற்றுக்களுக்கு இந் நிலைமை காரணமாகியது.
அவசரமாகக் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய விடயம் யாதெனில் அசாதாரண வேறுபாடுகள் உள்ள மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமைகள் எம்முள் இருப்பதாகும். ஜனவரி 06ஆம் திகதி இயற்றப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகள் பொதுமக்கள் கரத்திற்கு விடப்பட்டது ஜனவரி 25ஆம் திகதியாகும். அது வரையில் அவை அற்றுப் போயிருந்தன. அவ்வாறாயினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல பொதுமக்களும் அவ்வொழுங்கு விதி முழுமையாக அமுலில் இருந்தது எனும் கருத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உண்மையிலேயே 2005ஆம் ஆண்டு ஜனவரி 4ஆந் திகதி பிரகடனத்திற்கு ஒரு போதும் பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படவில்லை."
8. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவசரகால ஒழுங்கு
விதிகள் எடுக்கப்பட்ட வெளிப்படையான முயற்சிகள்
ஜனாதிபதியினால் 2005 பெப்ரவரி 3ஆம் திகதி புதிய பிரகடனமொன்று" புரியப்பட்டதுடன், அன்றை தினமே வேறு அவசரகால ஒழுங்குவிதிகளும் (EMPPR) இயற்றப்பட்டது. இவ்வொழுங்கு விதிகள் இதற்கு முன்பு 2005 ஜனவரி 6ஆம் திகதி இயற்றப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளுடன் (EMPPR)? ஒத்ததாக இருந்தன. 2005 பெப்ரவரி 03ஆம் திகதிய பிரகடனம்
T6. 1947ஆம் ஆண்டின் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவு
77. “அவசரகால சட்டம் காலங்கடந்துள்ளது. ஒழுங்குவிதிகள் மேலும் செல்லுபடியாகாது”
2005ஆம் பெப்ரவரி E/01/02/2005
78. 2005 பெப்ரவரி 03ஆம் திகதி 1378/22 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில்
பிரசுரிக்கப்பட்டது.
79. 2005 பெப்ரவரி 03ஆம் திகதி 1378/23 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில் 3
பிரசுரிக்கப்பட்டது.

அவசரகால ஒழுங்குவிதிகள் 147
பாராளுமன்றத்தினால் 2005 பெப்ரவரி 11ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அச்சந்தர்ப்பத்தில் 2005 பெப்ரவரிய 03ஆம் திகதிய அவசரகால நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன."
இதற்கு முன்பு கூறப்பட்டவாறு பிரகடனமொன்றுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்படுமாயின் அது (ஒரு தடவை) ஒரு மாத காலம் வரை வலிதானதாக இருக்கும். அதன் படி ஒவ்வொரு மாதமும் புதிதாக பிரகடனங்களைப் பிறப்பித்தலும் உரிய காலத்திற்குள் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதலும் அவசிமயாகின்றது. அவ்வாறாயினும் அவசரகால ஒழுங்குவிதி தொடர்பான நிலைமையானது அதை விட மாறுபடுகின்ற போதிலும், அவை ஒரு முறை இயற்றப்பட்டதன் பின் இரத்துச் செய்யப்படாவிடின் உரிய பிரகடனங்கள் நடைமுறைப்படுத்தப்படும் காலம் வரை வலிதானதாய் இருக்கும்."
2005ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதிய முதலாம் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகள் ஒழிக்கப்படாததுடன் அதன்படி அதற்கொத்த 2005 பெப்ரவரிய 3ஆம் திகதிய 2ஆம் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளை இயற்றும் தேவைப்பாடானது எழுந்தது, 2005 ஜனவரி 4ஆம் திகதி இயற்றிய முதலாம் பிரகடனத்தின் சட்டமுறை நிறுத்தப்பட்டமையினாலேயேயாக இருக்க முடியும். அதன் பயனாக 2005 ஜனவரி 6ஆம் திகதி அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் (EMPPR) சட்டமுறை விளைவுகளும் நிறுத்தப்பட்டன. ஆகையினால் ஜனாதிபதியினால் 2005 ஜனவரி 3ஆம் திகதி 2ஆம் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகள் (EMPPR) இயற்றும் செயலினுடாக எழும் முக்கியமான யூகம் யாதெனில் 2005 ஜனவரி 4ஆம் திகதி பிறப்பித்த பிரகடனமானது காலாவதியாவதன் காரணமாக அவளினால் 2005 ஜனவரி 6ஆம் திகதி இயற்றப் பட்ட முதலாம் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும்,தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் (EMPPR) சட்டமுறையான வலிதான தன்மை இல்லாமல் போவதாகும். உண்மையிலேயே இலங்கை சிவில் உரிமைகளின் அமைப்பின் நிலைப்பாடுகளும் இதுவாகவே இருந்தது. இவ்வியூகமானது ஜனாதிபதியின் இன்னுமொரு செயலின் மூலமும் பிரதிபலித்தது. அதாவது 2005 ஜனவரி 6ஆம் திகதி அவளினால் புரியப்பட்டிருந்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்
80. ஹான்சாட் Volume 158-2005 பெப்ரவரி 11 இலக்கம் 5
8. 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கமுடைய பொதுமக்கள் பாதுகாப்பு (திருத்திய) சட்டத்தின் 2ஆம் பிரிவு மூலம் உள்ளடக்கப்பட்ட 1997ஆம் ஆண்டின் 25ஆம் இலக்கமுடைய பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 2ஆம் பிரிவின் 2(அ)ஆம் பந்தி

Page 83
148 மனித உரிமைகளின் நிலை 2006
நியமனமானது, 2005 பெப்ரவரி 3ஆம் திகதி? மீண்டுமொருமுறை ஏற்படுத்திய ஒன்றாகும்.
ஆயினும், 2005 பெப்ரவரி 3ஆம் திகதிய இரண்டாம் பிரகடனம், இரண்டாம் g96.ilagFJa6T6IdėF F'LLb (EMPPR) ஆகிய இரண்டுமே 2005 பெப்ரவரி 3ஆம் திகதியிலிருந்து அவசரகால விதியை அமுலாக்குவதன் மூலம் உத்தேசிக்கப்பட்ட பயனைத் தரவில்லை எனினும் மற்றுமொரு சட்ட முரண்பாட்டிற்கு வழிகோலியது.* பரபரப்பான இந்தப் பிரச்சினை கீழே ஆராயப்படுகின்றது.
9. இரண்டாம் பிரகடனத்தினதும் அவசரகால (நானாவித
ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் வலிதான தன்மை
“2.2. பிரகடனம் பற்றிய பாராளுமன்றத்தின் கட்டுப்பாடு’ எனும் தலைப்பின் உப தலைப்பின் கீழ் இவ்வறிக்கையானது ஆரம்பத்தில் கூறப்பட்டவாறு பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் (PSO) கீழ் ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற துணை நிலைச்சட்ட அதிகாரம் தொடர்பான பாராளுமன்ற கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துமுகமாகத் தேவையான ஏற்பாடுகள் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 155(7)ஆம் உறுப்புரையில் காண்பிக்கப்படுகின்ற போதிலும் அதில் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பிற்கேற்ப ஏதேனும் சட்டமொன்றின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தப்பட்ட திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் இவ்விதப்புரையின் 6ஆம் பந்தியில் கூறப்பட்ட பிரகடனமொன்று ஒழிக்கப்படும் போது அல்லது 6ஆம் பந்தியின் ஏற்பாடுகளுக்கமைவாக அவ்வாறான பிரகடனமொன்று காலாவதியாகும் போது அவ்வாறு ஒழிக்கப்படும் அல்லது அற்றுப்போகும் திகதியிலிருந்து அடுத்து வருகின்ற 30 நாட்களுக்குள் புரியப்படுகின்ற எதுவித பிரகடனமும் அப்பிரகடனம் பாராளுமன்ற தீர்மானமொன்றினால் அங்கீகரிக்கப்படும் வரை நடைமுறைக்கு கொண்டு வருதலாகாது.
82. 2005 பெப்ரவரி 15ஆம் திகதிய 1380/8 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானி
83. இலங்கை குடியியல் உரிமைகள் இயக்கத்தின் கூற்றைப் பார்க்கவும் - “மீண்டும் அவசரகால நிலைமை. ஆனால் செல்லுபடியாகும் ஒழுங்குவிதிகள் இல்லை." குடியியல் உரிமைகள் இயக்கம். பொறுப்பு வாய்ந்த ஆளுகையைக் கோருகின்றது. Ref E03/2/05
84. ஏதேனும் சட்டத்தினது ஏற்பாடுகளின் தொழிற்பாட்டை ஒதுக்கித்தள்ளுகின்ற அல்லது இடைநிறுத்தி வைக்கின்ற சட்டப் பயன் கொண்ட ஒழுங்குவிதிகளை ஆக்குவதற்கு ஜனாதிபதிக்கு தத்துவமளிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பிற்குரிய ஏதேனும் சட்டத்தினது ஏற்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டு வந்து அச்சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்தாலொழிய நடைமுறைக்குக் கொண்டு வருதலாகாது.

அவசரகால ஒழுங்குவிதிகள் 149
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 155(6) ஆம் உறுப்புரையில் இவ்வாறு கூறப்படுகின்றது.
இவ்வுறுப்புரையின் 3ஆம் பந்தியில்° கூறப்படும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான ஏதேனும் சட்டத்திலுள்ள ஏதேனும் ஏற்பாடுகள் அச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்துதல் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள சந்தர்ப்பத்தில் அப் பிரகடனமானது பாராளுமன்றத் தீர்மானமொன்றினால் அங்கீகரிக்கப்பட்டாலொழிய அவ்வேற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த திகதியிலிருந்து 14 நாட்களுக்குப் பின் அற்றுப்போகுதல் வேண்டும்.
ஏதேனும் பிரகடனமொன்றிற்குப் பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்கப் பெறாததன் காரணமாக 14 நாட்களின் இறுதியில் காலாவதியாகும் வேளையில் அவ்வாறு அற்றுப்போகும் திகதியிலிருந்து அடுத்து வருகின்ற 30 நாட்களுக்குள் புரியப்படுகின்ற எவ்வித பிரகடனத்தையும் பிரகடனம் செய்தல் பாராளுமன்றத் தீர்மானமொன்றினால் அங்கீகரிக்கப்படும் வரை நடைமுறைக்குள் கொண்டு வரக்கூடாதென மேற்கூறப்பட்ட ஏற்பாடுகளின் மூலம் தெளிவாகின்றது. 2005 ஜனவரி 4ஆம் திகதி பிரகடனமானது பாராளுமன்ற அனுமதி பெறாததன் காரணமாக 14 நாட்களின் அங்கீகாரத்தின் பின், அதாவது 2005 ஜனவரி 18ஆம் திகதி அற்றுப்போனதென மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதியினால் 2005 பெப்ரவரி 3ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட இரண்டாம் பிரகடனம் 2005 பெப்ரவரி 11ஆம் திகதி பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்கும் வரை அமுல்படவில்லை. சட்டமுறைரீதியாக நடைமுறைப்படும் அவசரகால பிரகடனம் நிலவுவதானது அவசரகால ஒழுங்குவிதிகளை இயற்றுவதற்கான முதற் தேவையாகும். பிரகடனத்திற்காக ஜனாதிபதியிடம் பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது 2005 பெப்ரவரி 11ஆம் திகதி என்பதால் ஜனாதிபதிக்கு அவசரகால ஒழுங்குவிதிகளை இயற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2005 பெப்ரவரி 11ஆம் திகதி கிடைத்த அவ்வங்கீகாரத்திற்குப் பின்பேயாகும். அதன் விளைவாக ஜனாதிபதியினால் 2005 பெப்ரவரி 03ஆம் திகதி இயற்றிய அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகள் (EMPPR)° சட்டரீதியாக வெற்றானதுடன் அதில் சட்டரீதியான அதிகாரமும் இருக்கவில்லை.
2005 பெப்ரவரி 11ஆம் திகதிக்குப் பின் அவசரகால ஒழுங்குவிதியை இயற்றுவதற்கு ஜனாதிபதிக்கு சட்டரீதியான அதிகாரமிருந்தும் ஜனாதிபதி அவ்வாறான ஒழுங்குவிதிகள் எதனையும் இயற்றாத போதிலும் 2005 பெப்ரவரி 3ஆம் திகதி பிரகடனத்தைக் காலங்கடத்துவதற்கு இடமளிக்கப்பட்டது.
85。 2005 பெப்ரவரி 3ஆந் திகதிய 1378/23 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகள் (2005ஆம் ஆண்டின் 01ஆம் இலக்கமுடைய ஒழுங்கு விதிகளின் 2005 ஜனவரி 6ஆந் திகதி ஏற்கனவே ஆக்கப்பட்டிருந்தன.

Page 84
150 மனித உரிமைகளின் நிலை 2006
இந் நாட்டு அவசரகால கட்டுப்பாடு பற்றிய வரலாற்றில் முன்பு எப்போதும் காணப்படாத நிறைவேற்றுத் துறை சார்ந்த தவறுகளும் சட்டரீதியான அபிப்பிராய பேதங்களிலும் நிரம்பிய 2005ஆம் ஆண்டின் அவசரகால கட்டுப்பாட்டின் முதலாம் காலகட்டமானது அவ்வாறே முடிவடைந்துள்ளது.
I ஆம் பாகம்
O. அவசரகாலத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த
இரண்டாம் காலகட்டம்
விமர்சனங்களுக்குட்படுகின்ற வருடத்தின் அவசரகால ஒழுங்குவிதிகளின் இரண்டாம் காலகட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆந் திகதி இரவு லக்ஸ் மண் கதிர் காமர் வெளிநாட்டமைச்சர் கொலையுண்டதன் பின்னர் ஜனாதிபதியினால் 2005 ஆகஸ்ட் 13ஆந் திகதி முழு நாட்டிற்குமே° ஏற்புடையவாறு அவசரகால நிலைமை பிரகடனஞ் செய்ததிலிருந்தாகும். ஜனாதிபதியினால் அன்றைய தினமே அவசரகால ஒழுங்குவிதிகள் ஆக்கப்பட்டதுடன் (EMPPR) அவை திருத்தங்களுடன் கூடிய ஆண்டின் இறுதி வரையில் நடைமுறையில் இருந்து வந்தது. இவ் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளுக்கு (EMPPR)° முன் இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட 2005 ஜனவரி 06ஆந் திகதி அவசரகால ஒழுங்குவிதிகள் (EMPPR) அடங்கிய பல ஏற்பாடுகள் உள்ளடக் கப்பட்டதுடன் கடந்த காலங்களில் நடைமுறைக் குக் கொண்டுவரப்பட்ட அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவ்களும்) வழங்கி விதிகளுள் துணி புறுத்தும் ஏற்பாடுகள் பல அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ்வேற்பாடுகள் பற்றி கீழே ஆராயப்படுகின்றது. எவ்வாாறயினும் இவ்வேற்பாடுகளில் சில ஏற்பாடுகள் பிற்காலத்தில் நீக்கப்பட்டன அல்லது இடைநிறுத்தி வைக்கப்பட்டன.
86. 2005 ஆகஸ்ட் 13ஆந் திகதிய 1405/13 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
87. 2005 ஆகஸ்ட் 13ஆந் திகதிய 1405/14 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டின் 01ஆம் இலக்கமுடைய அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகள் (2005ஆம் ஆண்டின் 01ஆம் இலக்கமுடைய ஒழுங்கு விதிகள் ஏற்கனவே 2005 ஜனவரி 6ஆந் திகதி ஆக்கப்பட்டிருந்தன).

அவசரகால ஒழுங்குவிதிகள் 151
1. பிற்காலத்தில் நீக்கப்பட்ட அல்லது இடைநிறுத்தி
வைக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
11.1 வாகனங்களைக் கைப் பற்றிக் கொள்ளல் (2005
ஒக்டோபர் 13ஆந் திகதி98) நீக்கப்பட்டுள்ளது தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கைப் பேணுமுகமாக அல்லது பொது வாழ்க்கைக்குத் தேவையான வழங்கல்களையும் சேவைகளையும் நடாத்திச் செல்வதற்கு அல்லது சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தேவைப்படின் இலங்கையிலுள்ள ஏதேனும் வாகனத்தைக் கைப்பற்றுவதற்கு 9ஆம் ஒழுங்குவிதிகளின் மூலம் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அதிகாரமளிக்கப்பட்டது. உரிய வாகனத்தைப் பாவிக்கப்படுதலுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவு வழங்குவதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லாத போதிலும் எக்கால எ ல் லைக் குள் கைப் பற்ற முடியுமெனும் ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. கைப்பற்றுதல் தொடர்பாக சட்டமுறை ரீதியான விவாதத்துக்குட்படுத்தக்கூடிய ஏற்பாடுகளும் அதில் உள்ளடக்கப்படவில்லை.
11.2 தனிப்பட்ட சேவைகளை கைப்பற்றிக் கொள்ளல் (2005
ஒக்டோபர் 13ஆந் திகதி நீக்கப்பட்டுள்ளது?9) அரச பாதுகாப்பை நடாத்திச் செல்வதற்கு அல்லது அத்தியாவசிய சேவைகளை நடாத்திச் செல்வதற்கு தனிப்பட்ட சேவைகளை வழங்குவதற்கு ஆளொருவரை நியமித்தல் அல்லது அவ்வாறு நியமிப்பதற்கு வேறு ஆளுக்கு அதிகாரமளித்தல் ஜனாதிபதியினால் புரிய முடியுமென்பது 10ஆம் ஒழுங்குவிதியில் காணப்படுகின்றது. அவ்வாறான கட்டளைப் பிரகாரம் தொழிற்பட மறுத்தல் ஒரு குற்றமென்பதுடன் குற்றவாளியாக்கப்படும் போது வேறு தண்டனைக்குப்" புறம்பாக குற்றவாளியாக்கப்பட்டதன் நிமித்தம் அசையும் அசையா சொத்துக்கள் யாவும் அரசுக்கு பறிமுதல் செய்யப்படும். மேலும் இவ்வொழுங்கு விதிகள் அமுலிலிருந்த திகதிக்குப் பின் அவ்வாளினுடைய எந்தச் சொத்துக்களையும் பராதீனப்படுத்துதல் வெறும் வறிதானதாகுமெனக் கருதப்படும் (தண்டனைகளின் தன்மை பற்றிய கருத்துக்களை அறிவதற்கு 4.3 அத்தியாவசிய சேவைகள் , மற்றும் மீறுதலுக்கான தண்டனைகள் (12ஆம் ஒழுங்குவிதிகள்) எனும் உப தலைப்பை வாசிக்கவும்).
88. 2005 ஒக்ரோபர் 13ஆந் திகதிய 141422 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க அவசரகால ஒழுங்குவிதிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் ஒழுங்குவிதிகள்.
89. மேற்படி இலக்கம் 88
90. 13.3 அவசரகால ஒழுங்குவிதிகளை மீறுவது தொடர்பில் விதித்துள்ள சாதாரண தண்டனைகள்
எனும் உபதலைப்பைப் பார்க்கவும்

Page 85
152 மனித உரிமைகளின் நிலை 2006
உரிய குற்றத்தைப் புரிவதற்கு முன் (ஆயினும் இவ்வொழுங்கு விதி வலுவிலிருந்ததன் பின்) ஏதேனும் சொத்தொன்றை கைப்பற்றியிருந்த ஆளொரு வருக்கு அலி லது நல லெணி ணத் துடனர் 9L 60) D கொண்டிருந்தவருக்கு எதுவித பாதுகாப்பும் இருக்கவில்லை. முன்னர் கூறிய ஒழுங்குவிதிகளிலுள்ளவாறே இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகளோ அல்லது கைப்பற்றுதலைப் புரியக்கூடிய காலம் பற்றிய வரையறைகளோ அல்லது கைப் பற்றுதலை சட்டமுறைரீதியாக சவாலுக் குட் படுத் துவதற்கான ஏற்பாடுகளோ எதுவுமே அதில அடக்கப்படவில்லை.
11.3 அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமொரு வரை நியமனஞ் செய்வதற்கான ஏற்பாடுகள் (2005 ஒக்ரோபர் 13ஆந் திகதி நீக்கப்பட்டது9) 11ஆம் ஒழுங்குவிதியின் மூலம் ஜனாதிபதியினால் முழு இலங்கைக்குமான அல்லது அதன் ஒரு பகுதிக்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக ஆளொருவரை, பெயர் குறித்து அல்லது பதவி நிலையாக நியமனஞ் செய்வதற்கான ஏற்பாடுகள் அளிக்கப்பட்ட போதிலும் அவ்வாணையாளரின் பணியானது, அத்தியாவசிய சேவைகளை நடாத்திச் செல்வதற்குரிய சகல தொழிற் பாடுகளையும் நடைமுறைக் குக் கொண்டுவருவதற்கான இணைப்பை ஏற்படுத்துதலாகும்.
11.4 அத்தியாவசிய சேவைகள் (2005 ஒக்டோபர் 13ஆந்
திகதி) நீக்கப்பட்டுள்ளது?
40ஆம் ஒழுங்குவிதியின் மூலம் அத்தியாவசிய சேவைகளுக்கான ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளிலுள்ள ஒரு அட்டவணையில் பொது சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், ரூபாவாஹினி மற்றும் வானொலிச் சேவைகள், சில உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதி போன்ற சேவைகள் பல அத்தியாவசிய சேவைகள் என பெயரிடப்பட்டுள்ளன. இவ்வட்டவணையானது சுருக்கமான ஏற்பாட்டுடன் முடிவுற்றதுடன் அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்குத் தேவையான ஏதேனும் உணவுப் பொருட்கள் மருந்து வகைகள் அல்லது வேறேதேனும் பொருட்களை விற்றல் வாங்குதல் அல்லது விநியோகித்தலுடன் தொடர்பானவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான அல்லது குறிப்பிட்ட எவ்வகையிலுமான சகல சேவைகள், கருமங்கள் அல்லது தொழிலாளர் நடவடிக்கைகள்.
91. மேற்படி இலக்கம் 88 92. மேற்படி இலக்கம் 88

அவசரகால ஒழுங்குவிதிகள் 153
மேலும், வேறு தேவையான சேவைகள் அரசாங்க வர்த்தமானி அறிக்கையின் மூலம் அத்தியாவசிய சேவை எனப் பிரகடனஞ் செய்வதற்கு ஜனாதிபதிக்கு தத்துவமளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் (அட்டவணையில் குறிப்பிட்டுள்ள சேவைகளுடன்) தொடர்பான குற்றங்கள் சில உருவாக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை மீறும் விளைவுகளுக்கிடையில் பதவி காலியாகுதல் காரணமாக பதவிநீக்கம் மற்றும் சகல சொத்துக் களையும் பறிமுதல் செய்தல் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஏதேனும் குற்றமொன்று ஏற்படுகின்ற அல்லது அதற்கு உதவி ஒத்தாசை அளிக்கப்படுகின்றதென ஜனாதிபதியினால் கருதப்படுகின்ற ஏதேனும் இயக்கமொன்றைத் தடைசெய்யக்கூடிய போதிலும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவ்வியக்கத்தின் சகல உறுப்பினர்களும் குற்றத்திற்குக் குற்றவாளியாக் கப்படுவர். மேலும் , அரசினால் சேவைக்கமர்த்தப்பட்ட அவ்வாாறன இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது ஏதேனும் அரச கூட்டுத்தாபனத்தினால் கடமையில் ஈடுபட்டுள்ள நபர்கள், தடை செய்த கட்டளைத் தினத்திலிருந்து தமது பதவியை விட்டு விலகியவராவர் எனக் கருதப்பட்டது. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்குச் சொந்தமான சில சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளும் காணப்பட்டன (அவ்விதமான தண்டனைகள் பற்றிய கருத்துக்களைக் காண்பதற்கு “43 அத்தியாவசிய சேவைகள் மற்றும் மீறுதலுக்கான தண்டனைகள்” (12ஆம் ஒழுங்குவிதிகள்) எனும் உபதலைப்பைப் பார்க்கவும்).
40ஆம் ஒழுங்கு விதிகளும் , அதன் அட்டவணையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
11.5 கடமையை மேற்கொள்ளும் போது அதன் விளைவாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது ஆயுதங் தாங்கிய படையினால் ஏற்படுகின்ற மரணங்கள் அல்லது கைது செய்யப்பட்டிருக்கும் போது ஏற்படுகின்ற மரணங்கள் (2005 ஒக்ரோபர் மாதம் 13ஆந் திகதி நீக்கப்பட்டுள்ளது)99 54இலிருந்து 57 வரையிலான ஒழுங்கு விதிகளினி மூலம் கடமையிலீடுபட்டிருக்கும் போது பொலிஸ் உத்தியோகத்தர் அல்லது ஆயுதந்தாங்கிய படையினரால் ஏற்படுகின்ற தனிநபர் மரணம் அல்லது பொலிஸ் கைதில் மற்றும் ஆயுதம் தாங்கிய படையினரின் கைதிலிருக்கும் போது ஏற்படுகின்ற மரணங்கள் குறித்து ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. திடீர் மரண விசாரணையுடன் தொடர்பான பொதுச் சட்டத்தை
93. மேற்படி இலக்கம் 88

Page 86
154 மனித உரிமைகளின் நிலை 2006
ஏற்புடையதாக்கிக் கொள்ளாத போதிலும், இறந்த சடலத்தைப் பற்றிய இறுதிக்கிரியை செய்தல் தொடர்பான விசேட ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான மரணம் குறித்து விசாரணை நடாத்துவதற்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் பிரத்தியேக நீதிமன்ற நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ள போதிலும், அவ்வாறான விசாரணையை நடாத்துவதற்கு பொலிஸ் மா அதிபரிடம் விண்ணப்பத்திருந்தால் மாத்திரமே அதனைப் புரிய முடியும். மேல் நீதிமன்றத்தினால் அதிகாரமளிக்கப்பட்டிருந்தாலொழிய பிரேதப் பரிசோதனையை நடாத்திய வைத்திய அதிகாரியினால் பிரேதப் பரிசோதனை பற்றிய தமது முடிவை வெளியிடுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வேற்பாடுகள் குறித்து இலங்கை சிவில் உரிமைகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட விரிவான ஆய்வு அறிக்கையொன்று ‘அ’ எனும் இணைப்பில் காண்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட ஒழுங்குவிதிகளை நீக்கிய ஒழுங்குவிதிகள் மூலம் அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் , தத் துவங்களும்) ஒழுங்கு விதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள வேறு தொடர்புடைய ஏற்பாடுகளையும் நீக்குவதற்கான ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
11.6 பொதுக் கூட்டங்கள் மற்றும் பொது ஊர்வலங்களைத்
தடைசெய்தல் (2005 செப்ரெம்பர் 20ஆந் திகதி)
இடைநிறுத்தப்பட்டுள்ளது? பொதுக் கூட்டங்கள் மற்றும் பொது ஊர்வலங்கள் என்பன பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்குமென அல்லது பொதுமக்களின் அதிருப்திக்குக் காரணமாயமையுமென ஜனாதிபதி அபிப்பிராயப்படுவாராயின், அவ்வாறான பொதுக் கூட்டங்கள் மற்றும் பொது ஊர்வலங்கள் ஜனாதிபதியினால் தடைசெய்வதற்கு 13ஆம் ஒழுங்கு விதி மூலம் ஏற்பாடளிக்கப்பட்டுள்ளது.
11.7 பிரசுரங்கள் கட்டுப்படுத்துதல் (2005 செப்ரெம்பர் மாதம்
20ஆந் திகதி இடைநிறுத்தப்பட்டுள்ளது)99 15ஆம் ஒழுங்குவிதியின் மூலம் பத்திரிகை முன் தணிக்கைக் கட்டளைகள் மற்றும் அச்சகத்தை சீல் வைக்கும் கட்டளைகள் உள்ளிட்ட விரிவான வகையிலான கட்டளைகள் பிறப்பிப்பதற்குத் தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அதிகாரியினால் ஆக்கப்பட்ட கட்டளைகளை ஜனாதிபதியினால நீக் கஞ செய்வதற்கும் ,
94. 2005 செப்ரெம்பர் 21ஆந் திகதிய 1411/14 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கமுடைய அவசரகால (ஒழுங்குவிதிகளைத் தற்காலிகமாக நிறுத்தும்) ஒழுங்குவிதிகள்
95. மேற்படி இலக்கம் 94

அவசரகால ஒழுங்குவிதிகள் 155
துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட ஆட்களின் எதிர்ப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதியிடம் மகஜர் களை முன் வைக் குமுகமாக ஆலோசனைக் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
13ஆம், 15ஆம் ஒழுங்குவிதிகளை இடைநிறுத்துதல், 2005 நவம்பர் 17ஆம் திகதி குறிக்கப்பட்டிருந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்டதென நம்பியிருந்த போதிலும் அவை வருடம் முடியும் வரை இடைநிறுத்தப்பட்டிருந்தன
2. துன்புறுத்தப்படும் ஏற்பாடுகள் சில சுருக்கமாக
12.1 நடமாடுதலுக்கான மட்டுப்பாடுகள் 18ஆம் ஒழுங்குவிதியின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அல்லது பொது ஒழுங்கைப் பேணுவதற்கு அல்லது அத்தியாவசிய சேவைகளை நடாத்துவதற்கு அல்லது பங்கம் விளைவிக்கும் வகையில் தொழிற்படுவதன் மேல், அல்லது அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் சில குற்றங்களைப் புரிவதன் மூலம் ஆட்களைத் தடுக்கும் நோக்குடன் அவ்வாட்களின் நடமாடுதலை மட்டுப்படுத்த வேண்டுமென தேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அபிப்பிராயப்படும் போது, அவ்வாட்களின் நடமாடுதலை மட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
12.2 19ஆம் ஒழுங்குவிதிகளின் கீழ் ஆட்களை
தருத்துவைத்தல் (தடைசெய்யும் தருத்து வைத்தல்)
19ஆம் ஒழுங்குவிதியின் மூலம் பொதுவாக 'தடைசெய்யும் தடுத்துவைத்தல்” என்றழைக்கப்படும் தடுத்து வைத்தலுக்கு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் இக்கட்டளையைப் பிறப்பிக்க முடியுமென்பதுடன் தேசிய பாதுகாப்புக்கு அல்லது பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அல்லது அத்தியாவசிய சேவைகளை நடாத்திச் செல்லும் போது குந்தகம் விளைவிக்கும் வகையில் தொழிற்படுவதன் மூலம் அல்லது அவசரகால ஒழுங்குவிதிகளை மீறுகின்ற சில குற்றங்களைப் புரிவதிலிருந்து ஏதேனும் ஆளொருவரைத் தடுப்பதற்காக அவ்வாளைத் தடுத்து வைத்தல் தேவையென மேற்கூறிய செயலாளர் அபிப்பிராயப்படும் போது அவ்விதமான கட்டளையொன்றைப் பிறப்பிக்க முடியும்.
ஏதேனும் ஆளொருவரைத் தடுத்து வைக் கும் காலம் பற்றி செயலாளரினால் குறித்துரைக்க வேண்டிய அவசியமில்லை. ஆயினும், ஆளொருவரை ஒரு வருடத்திற்கு மேல் தடுத்து வைத்திருக்க முடியாது. அதேபோன்று பொலிஸ் மா அதிபரினால் அதிகாரமளிக்கப்பட்ட இடத்தில்

Page 87
156 மனித உரிமைகளின் நிலை 2006
அவரினால் வழங்கப்பட்ட அறிவுரைகளின் பிரகாரம் தடுத்துவைத்தல் வேண்டும்.
21 (11) ஒழுங்குவிதியின் மூலம் 19ஆம் ஒழுங்குவிதியின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஆட்கள் தொடர்பில் 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கமுடைய குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவை சட்டத்தின் 36, 37 மற்றும் 38ஆம் பிரிவுகளிலுள்ள ஏற்பாடுகள் ஏற்புடையதாகாதென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேற்பாடானது கைதுசெய்தலுக்குட்பட்ட ஆட்களைக் கைது செய்ததிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் நீதிவானொருவர் முன் கொண்டு வரப்படல் வேண்டுமெனக் கூறும் பொதுச் சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 19, 20 மற்றும் 21ஆம் ஒழுங்குவிதிகளை ஆராய்ந்து பார்க்கும் போது 21ஆம் ஒழுங்குவிதியிலுள்ள 19ஆம் ஒழுங்குவிதி பற்றிய குறிப்பானது தவறான தொன்றென்றும், அக்குறிப்பானது 20ஆம் பிரிவு தொடர்பானதாக இருக்க வேண்டுமென்றும் தெளிவாகின்றது.
குற்றவியல் நடவடிக்கைக் கோவைச் சட்டத்தில் மேற்கூறப்பட்ட பிரிவுகள் ஏற்புடைமை இல்லாமை வரைபு தவறொன்றெனின் பொதுச் சட்டத்தின் கீழுள்ள இவ்வேற்பாடானது 19ஆம் ஒழுங்குவிதியின் கீழ் கைது செய்யப்பட்ட ஆளொருவருக்கு ஏற்புடையதாக இருக்கின்ற போதிலும், அத்தகைய ஆளொருவர் கைது செய்யப்பட்டதிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் நீதிவானொருவர் முன் கொண்டு வரப்படல் வேண்டும்?. ஆயினும், நீதிவானொருவரிடம் தோற்றுவித்தலானது 19ஆம் ஒழுங்குவிதியின் கீழ் அவ்வாளைத் தடுத்துவைப்பதற்கான ஒழுங்குவிதிக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது. ஆட்களைத் தடுத்து வைக்கப்படக்கூடிய அதிகாரமளிக்கப்பட்ட இடங்கள் பற்றிய பதிவேட்டைப் பகிரங்கப்படுது தப்பட வேண்டிய தேவையானது அதில் உள்ளடக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் ஆக்கப்பட்ட சில அவசரகால ஒழுங்குவிதிகளில் இத்தேவைப்பாடு உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அதன் மூலம் தடுத்து வைக்கும் இரகசிய இடங்களை நடாத்திச் செல்வதற்கெதிராக மற்றும் கைது செய்தலின் மூலம் தடுத்து வைத்திருக்கும் ஆட்களை நியாயமற்ற நடாத்துகைக்கு உட்படுத்துவதற்கு எதிராக ஓரளவில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறான இடங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்குமாயின் அது இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு" தடுத்து வைத்திருக்கும் இடங்களை சோதனை செய்யும் தமது சட்டபூர்வமான கடமையை நிறைவேற்றுவதற்கு இலகுவாக இருந்திருக்கும்.
96. டீ.சிறிசேன குரேவுக்குப் பதிலாக சுனில் ரொட்ரிகோ எதிர் சந்திரானந்த சில்வா மற்றும்
usuf (1997) 3 SLR 265
97. 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின்
28ஆம் பிரிவின்படி

அவசரகால ஒழுங்குவிதிகள் 157
உரிய ஆள் மறியற்சாலையில் தடுத்து வைத்திருப்பின் மறியற்சாலை கட்டளைச் சட்டத்தின் சில ஏற்பாடுகள் ஏற்புடையாகாதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், மறியற்சாலைக் கட்டளைச் சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகள் ஏற்புடையதாகா தென பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுவதற்கு முடியுமாயிருந்தது. சிறிசேன குரே வழக்கில்° இதற்கு முன் னர் வெளியிடப்பட்ட அவசரகால ஒழுங்கு விதியொன் றில் உள்ளடக்கப்பட்டிருந்த இதற்கொத்த ஏற்பாடொன்றை கவனத்தில் எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம் கூறியது யாதெனில், ஏதேனும் சட்டமொன்றில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் தொழிற்பாட்டை ஒதுக்கித் தள்ளுவதுடன், அவசரகால ஒழுங்குவிதிகள் மூலம் அவ்வாறான தத்துவத்தை செயலாளரிடம் கையளிக்க முடியுமா என்பது சந்தேகத்துக்குட்படும் என்பதாகும்.
தடுத்து வைப்பதற்கு எதிரான எதிர்ப்பை கருத்திற்கொள்ளுவதற்கும் விடுதலை செய்வதற்கு சிபாரிசுகளை முன்வைக்குமுகமாக ஆலோசனை செயற்குழுவொன்றை நியமிப்பதைப் போன்று தடுத்து வைக்கப்பட்டுள்ள நபருக்கு ஜனாதிபதியிடம் எழுத்துமூலமான விடயங்களைக் காண்பிக்கும் உரிமை பற்றிய ஏற்பாடுகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் உறுப்பினரென தேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் உறுதிப்படுத்தும் ஆளொருவர் தொடர்பில் இவ்வேற்பாடு ஏற்பாடுடையதாகாது.
21(3)ஆம் ஒழுங்குவிதியிலுள்ள மீண்டும் 19ஆம் ஒழுங்குவிதி பற்றிய தவறான குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அதில் குறிப்பிடப்படுவது யாதெனில் 19ஆம் ஒழுங்குவிதியின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆளொருவரைத் தகுந்த நியாயாதிக்க முறை நீதிமன்றத்திடம் தோற்றுவிக்கும் போது அந்நீதிமன்றத்தினால் அவ்வாளை பிஸ்கலின் காவலில் தடுத்து வைக்குமாறு கட்டளையிடுதல் வேண்டுமென்பதாகும். 19, 20 மற்றும் 21ஆம் ஒழுங்குவிதிகளைப் பரீட்சிக்கும் போது புலப்படுவது யாதெனில் 19ஆம் ஒழுங்குவிதி தொடர்பிலான குறிப்பு தவறானதொன்று எனவும் அக்குறிப்பு 20ஆம் ஒழுங்குவிதியாக திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதாகும்.
வேறு வகையில் கைதுசெய்தலைப் போலன்றி (கீழே காணப்படும் 20ஆம் ஒழுங்குவிதியைப் பார்க்கவும்) கைது செய்யும் உத்தியோகத்தர் (பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது ஆயுதம் தாங்கிய படையினரினால்) ஏதேனும் ஆளொருவர் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொண்டு குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அல்லது நெருங்கிய உறுப்பினரொருவருக்கு ரசீது வழங்கும் தேவைப்பாடு இதில் இல்லை.
98, டி.சிறிசேன குரேவுக்குப் பதிலாக சுனில் ரொட்ரிகோ எதிர் சந்திரானந்த சில்வா மற்றும்
usuf (1997)

Page 88
158 மனித உரிமைகளின் நிலை 2006
அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் கைது செய்தல் பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படல் வேண்டும் (மேலே காணப்படும் 4.5 கைது செய்தல் பற்றிய மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் அறிக்கையிடல் பார்க்கவும்).
12.3 சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் (20ஆம்
ஒழுங்குவிதிகள்)
அவசரகால ஒழுங் குவிதிகளின் கீழ் ஏதேனுமொரு குற்றத்துடன் தொடர்புபட்டாரென அல்லது குற்றமொன்று புரிந்தார் என கருதப்படும் ஏதேனும் ஆளொருவரை அல்லது இடங்களை சோதனை செய்வதற்கு அல்லது அத்தகைய ஆளைக் கைது செய்யும் அதிகாரம், 20ஆம் ஒழுங்குவிதியின் மூலம் ஏதேனும் அரசாங்க உத்தியோகத்தரொருவருக்கு, பொலிஸ் உத்தியோகத் தரொருவருக்கு, ஆயுதம் தாங்கிய படை உறுப்பினரொருவருக்கு அல்லது ஜனாதிபதியினால் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரிடம் கையளிக்கப் பட்டுள்ளது. மேலும் அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழுள்ள குற்றமொன்றுடன் தொடர்புபட்டாரென சந்தேகிக்கும் வாகனமொன்றை, கப்பலொன்றை அல்லது பொருளொன்றை தடைசெய்வதற்கும் இவ்வொழுங்குவிதி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்ணொருத்தியை சோதனை செய்ய அவசியமேற்படும் போது அச்சோதனையானது வேறொரு பெண்ணினாலேயே புரியப்படுதல் வேண்டும்.
கைது செய்தலுக் குட் பட்ட ஆளொருவரை அல்லது கைது செய்யப்பட்டதிலிருந்து 24 மணித்தியாலத்திற்குள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைத்தல் வேண்டும். மேலும் கைது செய்யப்பட்டது பொலிஸ் உத்தியோகத்தரொருவராயின் அக்கைது செய்தல் பற்றி உரிய பிரதேசத்தின் பொலிஸ் அத்தியட்சகரிடம் அறிவிக்க வேண்டியதுடன், கைது செய்தலானது ஆயுதம் தாங்கிய படைகளின் உறுப்பினரொருவரினால் புரியப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அது பற்றி உரிய பிரதேசத்தின் கட்டளையிடும் அதிகாரியிடம் அறிக்கையிடுதல் வேண்டும். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் அவ்வறிக்கையிடுதலானது கைது செய்தல் நடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நடைபெறல் வேண்டும். அரச உத்தியோகத்தர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரினால் புரியப்படுகின்ற கைது செய்தல் பற்றி வேறேதேனும் உத்தியோகத்தரிடம் அறிவிக்க வேண்டிய ஏற்பாடுகள் எதிலுமில்லை.
ஏதேனும் ஆளொருவர் கைது செய்யப்பட்ட தருணத்தில் கைது செய்யும் உத்தியோகத்தரினால் செயலாளரினால் கூறப்பட்ட மாதிரியிலான 'கைது செய்தலுக்கான ரசீது கைது செய்தலுக்குட்பட்ட ஆணினுடைய குடும்ப உறுப்பினருக்கு அல்லது மிகவும் நெருங்கிய உறவினரொருவருக்கு

அவசரகால ஒழுங்குவிதிகள் 159
வழங்கப்படல் வேண்டும். கைது செய்தலுக்குட்படுத்துதல் பொலிஸ் உத்தியோகத்தரொருவரினால் இடம்பெற்றிருப்பின் 'கைது செய்தலுக்கான ரசீது உரிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அறிக்கையிடப்பட வேண்டிய போதிலும் அந்நிலையப் பொறுப்பதிகாரியினால் அது பற்றிய தகவல்களை பொலிஸ் நிலைய தகவல் புத்தகத்தில் குறிக் கப் படுதல் வேணி டும் . ஜனாதிபதியினால் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரினால் புரியப்படுகின்ற கைதுசெய்தலின் போது கைது செய்தலுக்கான ரசீது வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி அல்லது அவ்வாறு செய்ய முடியாத போது அதற்கான காரணத்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் அறிக்கையிட வேண்டுமா என்பது பற்றி தெளிவில்லை.
கைது செய்யும் உத்தியோகத்தரினால் நியாயமான காரணமின்றி 'கைது செய்தலுக்கான ரசீது’ வழங்கத் தவறும்பட்சத்தில் அல்லது பொலிஸ் உத்தியோகத்தரினால் அல்லது ஆயுதம் தாங்கிய படை உறுப்பினரால் பொலிஸ் தகவல் புத்தகத்தில் மேற்கூறப்பட்டவாறு குறிப்பு எழுதுவதற்கு அல்லது (ஆயுதம் தாங்கிய படை உறுப்பினர்கள் தொடர்புபடும் போது) * கைது செய்தலுக்கான ரசீது’ வழங்க முடியாமை பற்றி பொலிஸ் நிலையத்திடம் அறிக்கையிடுவதனை வேண்டுமென்றே புறக்கணிப்பதன் மூலம் அவர்கள் குற்றமிழைக்கின்றதுடன், அதற்குக் குற்றவாளியாக்கப்படும் போது இரணர் டு வருட காலம் வரையிலான மறியற் தணி டனைக் கும் தண்டத்திற்குமுட்படுகின்றனர்.
ஏதேனுமொரு சொத்தைத் தடை செய்திருக்கும் போது, அச்சொத்தை எவ்வாளிடமிருந்து கைது செய்யப்பட்டதோ அவ்வாளுக்கு ரசீது வழங்கப்படல் வேண்டும்.
12.4 தடுத்துவைத்தல் (21ஆம் ஒழுங்குவிதிகள்) இவ்வொழுங்கு விதிகளின் 19ஆம் ஒழுங்குவிதியில் (தடைசெய்யும் தடுத்து வைத்தல்) கீழ் கைது செய்யப்பட்ட ஆட்கள் பற்றி குறிப்பிடப்படுகின்ற போதிலும் 21ஆம் ஒழுங்குவிதியின் உள்ளடக்கம் பற்றி பரிசீலிக்கும் போது புலப்படுவது யாதெனில் உண்மையிலேயே அக்குறிப்பானது 20ஆம் ஒழுங்குவிதியின் கீழ் இடம்பெறுகின்ற கைது செய்தல் தொடர்பானவற்றிற்கே ஏற்புடையதாகுமென்பதாகும். இவ்விடயம் பற்றி மேற்படி தடைசெய்யும் தடுத்துவைத்தலின் (19ஆம் ஒழுங்குவிதியில்) கீழ் வருகின்ற ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்களில் தற்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
21ஆம் ஒழுங்குவிதியின் மூலம், கைது செய்தலுக்குட்பட்ட ஆட்களை 24 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன் கொண்டுவரப்படல் வேண்டுமெனக்

Page 89
160. மனித உரிமைகளின் நிலை 2006
கூறும் குற்றவியல் நடைமுறைக்கோவைச் சட்டத்தின்? சில ஏற்பாடுகள் ஏற்புடையாக கிக் கொள்ளுதலைத் தவிர் க் கினி றது. தடுத் து வைக்கப்பட்டவர்கள் நியாயமான கால எல்லைக்குள் நீதிவானொருவர் முன் தோற்றுவிக்கப்பட வேண்டுமென்பதுடன் அக்காலப் பகுதியானது 30 நாட்களுக்கு மேற்படாததாக இருத்தல் வேண்டும். ஆயினும், தடுத்து வைக்கப்பட்ட ஆட்களை சட்டமா அதிபதியின் எழுத்துமூல அனுமதியின்றி நீதிவானால் விடுவித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆட்களுக்கு சட்டமா அதிபரின் விருப்பமின்றி பிணை வழங்க முடியாத சந்தர்ப்பங்களில் உரிய நபரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா எனத் தீர்மானிப்பதற்கு சட்டமா அதிபருக்கு முடியுமாறு புலன் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பற்றி சட்டமா அதிபருக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு தடுத்து வைக்கும் உத்தியோகத்தருக்கு அளிக்கப்படுகின்றதென உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது."
(20ஆம் ஒழுங்குவிதியென வாசிக்கப்பட வேண்டிய) 19ஆம் ஒழுங்குவிதியின் ஏற்பாடுகளின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் (மறியற்சாலை உட்பட) ஆகக்கூடியது 90 நாட்கள் தடுத்து வைப்பதற்கும் ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. இக்கால எல்லை முடிந்ததும் தடுத்து வைக்கப்பட்ட ஆட்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும், அல்லாவிடின் நீதிமன்றம் முன் கொண்டு வரப்படல் வேண்டும். அவ்வாறு நீதிமன்றம் முன் தோற்றுவிக்கப்படும் போது அந் நீதிமன்றத்தினால் அவ்வாளை பிஸ்கால் உத்தியோகத்தரின் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கட்டளையிடப்படல் வேண்டும். இத்தகைய விளக்கமறியற் கட்டளையானது உரிய நபரை விடுதலை செய்தல் பற்றிய எந்தவிதமான ஏற்பாடுகளுமற்ற திறந்ததாக இருக்கின்றதெனப் புரிகின்றது.
அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் குற்றமிழைத்தவர் எனக் கருதப்படும் ஆட்களுக்கு பிணை வழங்குதல் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள முழுமையான புறத்தொதுக்கும் தற்றுணிவினுடாக அரசியலமைப்பின் 13(2)ஆம் உறுப்புரை மூலம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள அவர்களுடைய அடிப்படை உரிமையானது மீறப்படுகின்றதெனத் தெரிகின்றது. அவ் 13(2) உறுப்புரையில் காண்பிக்கப்படுவது யாதெனில், சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்க நீதிபதியினால் ஆக்கப்படும் கட்டளைப்படியன்றியும் அதன் நியதிகளுக்கிணங்க அன்றியும் தொடர்ந்தும் கைதில் வைத்திருக்கப்படுதலோ
99. 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை கோவைச்சட்டத்தின் 36, 37
மற்றும் 38 எனும் பிரிவுகள்
100. சுகுமார் எதிர் வவுனியா ஜோசப் படைமுகாமின் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மேலும்
பலர் சிறி.ச.அ. 399

அவசரகால ஒழுங்குவிதிகள் 161
அல்லது தடுத்து வைக்கப்படுதலோ அல்லது அவ்வாளின் சொந்தச் சுதந்திரம் பறிக்கப்படுதலோ ஆகாது’ என்பதாகும்.
கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் வேறு வகையிலான வன்செயல்களைத் தடைசெய்யும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கும் நீதிமன்றத் தற்றுணியை 6 மாதகாலங்களுக்கு புறத்தொதுக்குவதற்கு பிரயத்தனம் செய்த 10ஆம் ஒழுங்குவிதி பற்றி கவனம் செலுத்திய உயர் நீதிமன்றம்" கூறியது யாதெனில் அத்தகைய நீண்ட காலம் வரையிலான புறத்தொதுக்குதலானது அரசியலமைப்பின் 15(7)ஆம்? உறுப்புரையின் விதிக்கப்படக்கூடிய நீதியான மட்டுப்பாடு அல்ல என்பதாகும். ஆயினும், அப்பிரிவு அரசியலமைப்பின் 13(2)ஆம் உறுப்புரையுடன் இணங்கமாட்டாதென நீதிமன்றம் கூறியது. மேலும், பிணை வழங்குவது தொடர்பாகவுள்ள நீதிமன்ற தற்றுணிபை அவ்வாறு புறத்தொதுக்குதலானது சில வேளைகளில் 13(4)ஆம்? உறுப் புரைக்கு மாறாக தணி டனை விதித்தலுக்கு ஒத்ததாக இருக்கக் கூடியதெனவும் நீதிமன்றம் கூறியது. இல் 13 (4) ஆம் உறுப்புரையானது எவ்வித மட்டுப்பாடுகளுக்கும் அனுமதியளிக்காது.
மறியற்சாலை கட்டளைச் சட்டமானது பொலிஸ் மா அதிபரினால் மறியற் சாலைகளினுள் தடுத்து வைத்துள்ள ஆட்களை சில விலக்களிப்புக்களுடன் வைத்திருத்தல் தொடர்பானதாகும். மேலும் கட்டளைச் சட்டத்தின் மற்றைய ஏற்பாடுகள் ஏற்புடையதாகாதென பொலிஸ் மா அதிபரினால் கட்டளையிட முடியும். எவ்வாறாயினும் அவ்வாறான கட்டளை பிறப்பித்தலுக்கான பொலிஸ் மா அதிபர் கொண்டுள்ள அதிகாரம் தொடர்பாக மேலே கூறப்பட்டுள்ள “12.2.19ஆம் ஒழுங்குவிதியின் கீழ் ஆட்களைத் தடுத்து வைத்தல் (தடைசெய்யும் தடுத்துவைத்தலின்)” கீழ் காண்பித்துள்ள கருத்துக்களைப் பார்க்கவும்.
இவ்வொழுங்குவிதியின் மூலம் பொலிஸ் மா அதிபர் எனும் சொல்லிற்கு பொருள் கோடலாக, உதவி பொலிஸ் மா அதிபரொருவர், பொலிஸ்
101. உயர் நீதிமன்ற விசேட தீர்ப்பு இலக்கம் 6/98 மற்றும் 7/98
102. வேறு விடயங்களுக்கிடையில் தேசிய பாதுகாப்பு நாட்டின் ஒழுங்கு பொது சுகாதாரம், ஜனநாயக சமுதாயத்துக்கு நீதியான தேவைகளைப் பூர்த்தி செய்தலை உத்தரவாதம் செய்யுமுகமாக 13(2) உறுப்புரையின் மூலம் வாய்ப்பளிக்கப்படுகின்றது
103. சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்க தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றினால் ஆக்கப்படும் கட்டளைப்படியன்றி எவ்வாளையும் மரண தண்டனைக்கு உட்படுத்தலோ அல்லது மறியற் தண்டனைக்கு உட்படுத்தலோ கூடாது. ஆயினும், புலன்விசாரணையை நடாத்தும் வரை அல்லது வழக்கை விளங்கும் வரை ஏதேனும் ஆளைக் கைது செய்தலோ அல்லது கட்டுக்காவலில் வைத்திருக்கப்படுதலோ அல்லது தடுத்து வைக்கப்படுதலோ அல்லது வேறு வகையில் அவ்வாளின் சொந்தச் சுதந்திரம் பறிக்கப்படுதலோ ஆகாது.

Page 90
162 மனித உரிமைகளின் நிலை 2006
அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் அடங்கலாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 90 நாட்கள் தடுத்து வைத்திருத்தல் தடுத்து வைக் கும் இடங்களுக்கு அதிகாரமளித்தல் , தடுத்து வைக் கும் நிபந்தனைகளை விதித்தல் எனும் இச் சகல ஏற்பாடுகள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அதிகாரிக்குக் கூட முடிவெடுக்கும் ஆற்றல் உள்ளன.
12.5 தங்கியிருப்பவர்களுடைய பட்டியலொன்றை குடும்பத்
தலைவரினால் வழங்கப்படல் வேண்டும்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவியை விடக் குறையாத தராதரத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தரொருவரினால் கூறப்படும் பொழுது குடும்பத் தலைவரினால் தமது வீட்டிலிருக்கின்ற அனைத்து தங்கியிருப்போர்களினதும் பெயர்ப் பட்டியல் ஒன்றை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முன்வைக்கப்படல் வேண்டுமென்பதுடன், அத் தங்கியிருப்போர்களின் எண்ணிக்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் போது அது பற்றி அப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அறிக்கையிடப்படல் வேண்டுமெனவும் 23ஆம் ஒழங்கு விதியின் மூலம் கூறப்பட்டுள்ளது. தங்கியிருப்போர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏதேனும் மாற்றம் பற்றி அறிக்கையிடுமாறு கூறப்படும் போது பிரதேசத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அறிவிக்காமல் அறிமுகமில்லாதவருக்கு அடைக்கலம் கொடுக்கும் குடும்பத் தலைவர் குற்றமொன்றைப் புரிந்தவராவார். இதுவானது குடும் பத் தலைவருக்கும், தங்கியிருப்போருக்கும் மிகவும் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ள ஏற்பாடுகள் என்பதுடன், அதன் மூலம் நாட்டில் நடமாடும் சுதந்திரத்திற்கு ஊறுவிளைவித்துள்ளதெனப் புதிதாக சொல்ல வேண்டியதற்கில்லை.
12.6 மரண தண்டனை மூலம் தண்டனை செய்தல் 41ஆம் ஒழுங்குவிதியின் மூலம் ஏதேனும் ஆளொருவர் ஏதேனும் தொழிற்சாலை யொன்றில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபடுவதைத் தடுக் குமுகமாக மரண அச்சுறுத்தல் அல்லது உடல் ரீதியான கொடுமைப்படுத்தும் அச்சுறுத்தலையும், ஏதேனும் கட்சியொன்றிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அல்லது ஏதேனும் கட்சியொன்றில் சேர்ந்து கொள்ளுமாறு நபர்களை தூண்டுதலும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள ஆட்களையும் தமது பணிகளை மீறும் ஏதேனும் செயலொன்றைப் புரியுமாறு அல்லது புரியாதிருக்குமாறு தூண்டுதலும் குற்றமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் ஆளொருவர் அவ்வாறான குற்ற மொன்றிற்காக மேல் நீதிமன்றத்தின் முன் குற்றவாளியாக்கப்படும் போது அவருக்கு மரண தண்டனை விதித்தல் வேண்டும்.

அவசரகால ஒழுங்குவிதிகள் 163
அவ்வாறான அச்சுறுத்தல் அடங்கியுள்ள ஆவணமொன்று தமது பொறுப்பில் இருத்தல் பற்றி நிருபணமாயிருத்தல் உரிய குற்றம் புரிவதற்கு ஆயத்தமாவதற்கு ஒரு செயல் புரியப்பட்டதென முதல் தோற்றத்திலேயே புலனாகின்ற நிரூபித்தல் எனக் கருதப்படுகின்றது. 42ஆம் ஒழுங்குவிதியின் மூலம் உரிய குற்றத்தைப் புரிவதற்கு முயற்சி செய்தல் அல்லது அக்குற்றத்தை புரியுமுகமாக ஆயத்தம் செய்யும் ஏதேனும் ஒரு செயலைப் புரிதல் தொடர்பாக அக்குற்றத்துக்குரிய தண்டனை மூலம் தண்டிப்பதற்கு குறிப் பிட்டுள்ளமையால் அவ்வாறான குற்றமொன்று அடங்கிய ஆவணமொன்று தமது பொறுப்பில் வைத் திருத்தல் தொடர்பாக குற் வாளியாக் கப்பட்டு ஆளொருவருக்கு மரண தணி டனையால் தண்டிக்கப்படும்.
சூழ்நிலை எவரேனும் ஆளுக்கு ஏதேனும் அல்லது சந்தர்ப்ப நிகழ்வுகளின் கீழ் புரியப்படுகின்ற குற்ற ஒப்புதல் அல்லது வீண்பழி சுமத்தும் வாக்குமூலமொன்று வழக்கு விளக்கத்தின் போது ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் அளிக்கப் பட்டுள்ளன. குற்ற ஒப்புதல் அல்லது வீண்பழி சுமத்தும் வாக்குமூலத்தின் பொறுப்பின் அளவைக் குறைக்குமுகமாக அல்லது குறைப்பதற்கு மாத்திரம் ஏற்பாடுகள் இருக்கின்ற போதிலும், அதை அவ்வாறு குறைப் பதற்கு அல்லது குறைக் க எதிர் பார்க் கும் ஆளினால் அந்நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நிகழ்வுகளை எண்பிப்பதன் மூலம் புரிய வேண்டும்.
அதன்படி புலனாகுவது யாதெனில், அதிகாரத்தைப் பாவித்து பெற்றுக் கொண்ட குற்ற ஒப்புதலைக்கூட ஏற்றுக்கொள்வதற்கு இவ்வேற்பாடு வாய்ப்பளிக்கின்ற தென்பதாகும். அவ்வாறான நிலைமையின் கீழ் நடாத்தப்படுகின்ற வழக்கு விளக்கமானது அரசியலமைப்பின் 13(3) உறுப்புரையில் அளிக்கப்பட்டுள்ள நியாயமான வழக்கு விளக்கத்திற்கான அரசியலமைப்புரீதியான உத்தரவாதத்தை மீறும் ஒரு செயலெனத் தெளிவாகின்றது (மேலே கூறப்பட்டுள்ள “4.10 குற்றங்கள் பற்றி புலன் விசாரணை நடத்துதல் . வழக்கு விசாரணை குற்ற ஒப்புதலை ஏற்றுக்கொள்ளல்” பற்றி முன்வைக்கப்பட்டுள்ள அவதானிப்புக்களைப் பார்க்கவும்).
மேலும், வழக்கு விசாரணையை நடாத்துவதற்கிடையில் ஏதேனும் கட்டளை யொன்றை நீக்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு வழக்கு விளக்கத்தை நிறுத்துவதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கு எந்நீதிமன்றத்திற்கும் அதிகாரமில்லை. இவ்வேற்பாடுகளும் வேறு விடயங்களுக்கிடையில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் மேன்முறையீட்டு நியாயாதிக்கம் மற்றும்" writ
104. அரசியலமைப்பின் 138ஆம், 139ஆம் உறுப்புரைகள்

Page 91
164 மனித உரிமைகளின் நிலை 2006
ஆணை வழங்கும்* நியாயாதிக்கம் தொடர்பான அரசியலமைப்பு
ஏற்பாடுகளுடன் இணங்கமாட்டாதென்பது தெளிவாகின்றது.
12.7 மரண தண்டனை பிரயோகிக்கப்படும் குற்றங்கள் சொத்தொன்றை அழித்தல் அல்லது அதற்கு நஷ்டம் விளைவித்தல் மற்றும் சொத்துக்களுக்கும் மனித உடலுக்கும் எதிரான சாதாரண குற்றவியல் சட்டத்தின்° கீழ் சில குற்றங்களைப் புரிதல், அவசரகாலச் சட்டத்தின் கீழ் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளின்" கீழ் மரண தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களென 25ஆம் ஒழுங்குவிதியின் மூலம் பகுப்பாக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள இவ்வொழுங்கு விதியின் கீழுள்ள குற்றங்களுக்குள் குற்றவியல் அத்துமீறல், வீட்டிற்குள் அத்துமீறல், மற்றும் வீடு உடைத்தல் போன்ற குற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலே குற்றங்களுக்குரிய தண்டனைகளை ஒத்தவைகளாக இருப்பதனால், 2005 ஜனவரி 5ஆந் திகதிய அவசரகால (நானாவித செயற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் 17ஆம் ஒழுங்குவிதியில் அடங்கியுள்ள சமமான குற்றங்களுக்குரிய தண்டனைகள் தொடர்பில் “4.6 மரண தண்டனை மூலம் தண்டனையளிக்கக்கூடிய குற்றங்கள்’ எனும் உப தலைப்பின் கீழ் புரியப்பட்ட அவதானிப்புக்கள் இவ்வொழுங்கு விதியின் கீழ் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் பற்றிய கலந்துரையாடல்களுக்குரியதாகும். ஆகையால் அவ்விடயங்கள் மீண்டும் இதில் ஆராயப்படமாட்டாது. (25ஆம் ஒழுங்கு விதியில் சாதாரண தண்டனைகள் விதிக்கும் ஒழுங்கு விதியாக 48ஆம் ஒழுங்குவிதியானது தவறான முறையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அது 45ஆம் ஒழுக்கவிதியென திருத்தப்படல் வேண்டும்). ஆயினும் 25ஆம் ஒழுங்குவிதியில் அடங்கிய 2005 ஜனவரி 6ஆந் திகதிய அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும் ஒழுங்குவிதிகளில் அடங்கியுள்ள 17ஆம் ஒழுங்குவிதியில் கூறப்பட்டுள்ள குற்றங்களை விட குறைந்த குற்ற அளவுகளாகுமென கருத்திற்கொள்ள வேண்டிய விடயமாகும்.
சட்டபூர்வமான அதிகாரமின்றி வெடிக்கும் பதார்த்தங்கள், மற்றும் ஆயுதங்களை தன்வசம் வைத்திருத்தல் அல்லது எடுத்துச் செல்லல் என்பதை தடைசெய்யும் 36 ஆம் ஒழுங்கு விதியின் மூலம் அக் குற்றத்திற்கு குற்றவாளியாக்கப்படும் போது மரண தண்டனை மூலம் தண்டனை அல்லது ஆயுட் காலம் வரையிலான சிறைத் தண்டனை மூலம் தண்டனை
105. அரசியலமைப்பின் 140ஆம் உறுப்புரை
106. தண்டனைச் சட்டக்கோவை
107. குற்றத்தைப் புரியும் சமயத்தில் அல்லது அச்சந்தர்ப்பத்தில் நிலவிய பொதுமக்கள் குழப்பங்களின் போது குற்றமிழைக்கப்பட்டதென சட்டமா அதிபர் திருத்தப்பட்டு அவரினால் குற்றப்பகிர்வு முன்வைப்பதற்கு முடிவு செய்யும் போது 25(1) (2)ஆம் ஒழுங்குவிதிகள்

அவசரகால ஒழுங்குவிதிகள் 165
விதிக்கப்படும். மேலும் குற்றவாளியாக்கப்படுவதன் காரணமாக குற்றவாளியின் சகல அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் போன்று குற்றம்புரியப் பாவித்த வாகனம் அல்லது கப்பல் என்பன பறிமுதல் செய்யப்படும். மேன்முறையீட்டின் போது குற்றவாளியாக்கப்பட்ட தீர்ப்பினை நீக்கியிருந்தாலொழிய குற்றமிழைக்கப்பட்ட ஏதேனும் வாகனம் அல்லது கப்பல் நிரபராதியான உரிமையாளருக்கு அல்லது கப்பலை மீளப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் அளிக்கப்படவில்லை.
13. வேறு குற்றங்களும் தண்டனைகளும்
13.1 குற்றங்கள்
அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களின்) ஒழுங்குவிதிகளின் கீழ் பல்வேறு செயல்கள் குற்றமென ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ்க்காணும் செயல்கள் உள்ளடக்கப்படுகின்றன.
(1) சட்டவிரோதமான முறையில் அரசைக் கவிழ்ப்பதற்கு முயற்சி செய்தல்" (ii) தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது பொது வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய வழங்கல்களையும், சேவைகளையும் நடாத்திச் செல்லும் போது அதற்கு தீங்கு இழைக்கும் விடயங்களடங்கிய சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல்" (iii) பொதுமக்களை அச் சுறுத்தக் கூடிய அல்லது பொதுமக்கள் கலவரமடையக்கூடிய வதந்திகளை அல்லது போலி அறிக்கைகளைப் பரப்புதல் அல்லது கட்டவிழ்த்துவிடல்" (iv) (அ) ஏதேனும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (ஆ) பயங்கரவாதத் திட்டம் தொடர்பான அரச புலன்விசாரணை நடவடிக்கைகள் (இ) பொலிஸ் மற்றும் ஆயுதம் தாங்கிய படைகளை நிறுத்தி வைத்துள்ள முறை அதன் நிலைமைகள் நடமாடும் அல்லது நடவடிக்கைகள் (ஈ) இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பளித்தல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இனவாத உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய விடயங்கள் பற்றி (நிரூபணங்கள், புகைப்படங்கள், திரைப்படம் உட்பட) ஏதேனுமொன்றை அச்சிடுதல் அல்லது பிரசுரித்தல்' (V) பொலிஸ் அல்லது ஆயுதம் தாங்கிய படையினரால் பாவிக்கப்படுகின்ற ஏதேனும் கட்டடம் ஒன்றின் அல்லது
108. 26ஆம் ஒழுங்கு விதி 109, 27ஆம் ஒழுங்கு விதி 110, 28ஆம் ஒழுங்கு விதி 111, 29ஆம் ஒழுங்கு விதி

Page 92
166 மனித உரிமைகளின் நிலை 2006
அத்தகைய கட்டடமொன்று, கப்பலொன்று அல்லது ஆகாய விமானமொன்று கண்ணுக்குப் புலப்படும் தூரத்திலிருந்து படங்களை எடுத்தல்' (Vi) சில விடயங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்குதல்" (vii) சில வரைபடங்கள் போன்றவற்றை சட்டபூர்வமான காரணமின்றி தன்வசம் வைத்திருத்தல்' (vii) சட்டபூர்வமான அதிகாரமின்றி இராணுவ ஆயுதங்களைத் தன் வசம் வைத்திருத்தல் * (Xi) சட்டபூர்வமான அதிகாரமின்றி உத்தியோக ஆடைகளை தன்வசம் வைத்திருத்தல்" (x) ஏதேனுமொரு ஆள், வண்டியொன்றின் மீது அல்லது வாகனம் மீது ஒரு பொருளை அல்லது ஒரு பதார்த்தத்தை எறிதல்' (xi) சட்டபூர்வமான காரணமின்றி ஏதேனும் தோட்டாவொன்றை வேறொரு நபருக்கு நீட்டுதல்" (Xi) ஜனாதிபதியினால் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள பிரதேசங்களிலிருக்கும் நபர்களை பயமுறுத்தல் இடையூறு செய்தல் அமைதியை சீர்குலைவைச் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளல்.19
13.2 தண்டனை சட்டபூர்வமான அதிகாரமின்றி இராணுவ ஆயுதங்களை தன் வசம் வைத்திருத்தல் (34ஆம் ஒழுங்குவிதி) மற்றும் ஏதேனும் நபரொருவர் வண்டி அல்லது வாகனம் போன்றன மீது ஒரு பொருளை அல்லது பதார்த்தத்தை எறிதல் (37ஆம் ஒழுங்குவிதி) எனும் குற்றங்களுக்காக அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகள் மூலம் விதிக்கப்பட்ட தண்டனையானது 10 வருடங்களுக்கு குறையாத காலம் கடுழிய சிறைத்தண்டனையும் அதைத்தவிர்த்து மேற்கூறப்பட்ட சகல குற்றங்கள் தொடர்பாகவும் ஒரே வகையிலான ஏற்புடையதான தண்டனைகள் (கீழே பார்க்கவும்) அவ்வொழுங்கு விதிகளின் மூலம் விதிக்கப்பட்டுள்ளது.
13.3 அவசர கால ஒழுங்குவிதிகளை மீறுதல் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சாதாரண தண்டனைகள்
இதில் கீழே காணப்படுகின்றவாறு அவசரகால ஒழுங்குவிதிகளின் மூலம் சில சந்தர்ப்பங்களில் அவ்வொழுங்கு விதிகளுக்குரிய குற்றங்கள் தொடர்பாக விசேட தண்டனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
112, 30ஆம் ஒழுங்கு விதி 113, 31ஆம் ஒழுங்கு விதி 114. 32ஆம் ஒழுங்கு விதி 115. 34ஆம் ஒழுங்கு விதி 16. 35ஆம் ஒழுங்கு விதி 117. 37ஆம் ஒழுங்கு விதி 118. 38ஆம் ஒழுங்கு விதி 119. 39ஆம் ஒழுங்கு விதி

அவசரகால ஒழுங்குவிதிகள் 167
ஏதேனும் தண்டனைகள் விசேடமாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பங்களில் 45ஆம் ஒழுங்குவிதியின் மூலம் மூன்று மாதங்களுக்கு குறையாததும், ஐந்து வருடங்களுக்கு மேற்படாததுமான கடுழிய சிறைத் தண்டனை மற்றும் 500 ரூபாவுக்கு குறையாததும் 5,000 ரூபாவுக்கு மேற்படாததுமான தண்டம் விதிக்கப்படும். அதேபோன்று இவ்வொழுங்குவிதியின் மூலம் 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கமுடைய குற்றவியல் நடவடிக்கை கோவைச் சட்டத்தின் 306(2) பிரிவு? அவசரகால ஒழுங்குவிதியின் கீழுள்ள குற்றத்திற்கு குற்றவாளியாக்கப்படும் நபர்கள் தொடர்பாக ஏற்புடையதாக்கிக் கொள்வதைத் தடை செய்கின்றது.
13.4 குற்றமொன்றை புரிவதற்கு முயற்சி செய்தல் போன்ற
மற்றும் தண்டனைகள்
அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் குற்றமொன்றைப் புரிவதற்கு முயற்சி செய்யும் செயலைப் புரியும் அல்லது குற்றமொன்றைப் புரிவதற்கு உதவி ஒத்தாசை வழங்குகின்ற அல்லது சதி செய்யும் நபரொருவர் அக்குற்றத்திற்கு குற்றவாளியாக்கப்படுகின்ற போதிலும் அக்குற்றத்திற்குரிய தண்டனையினாலேயே தண்டனையளிப்பதற்கு 42ஆம் ஒழுங்குவிதியின் மூலம் ஏற்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
14. சுருக்கமாக விவரிக்கப்பட்ட அவசரகால
ஒழுங்கு விதியின் சில முக்கியமான பிரிவுகள்
14.1 கட்டிடங்களை சுயாதினப்படுத்தல்
தொடர்பிலான குற்றங்கள்
அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் முக்கிய ஏற்பாடுகள்' சுருக்கமாக அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத் துவங்களும்) ஒழுங்குவிதிகளின் கீழ் அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழுள்ள குற்றங்கள் ஒழுங்குவிதியின் மூலம் உரிய பகுதியின் பொலிஸ் அத்தியட்சகருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இவ்வொழுங்கு விதியின் உப விதிகளின் மூலம் அக்கட்டடங்களில் உரிமையைக் கோரும் ஆட்களுக்கு அக்கட்டடங்களை விடுவித்துக் கொள்வதற்கு மேல் நீதிமன்றத்திடம் விண்ணப்பிப்பதற்கான உரிமை வழங்கப் பட்டிருக் கினி ற போதிலும் , அக் கட்டடமானது அதன்
120. குற்றவாளிகளை நிபந்தனையுடன் விடுவித்தல் 121. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கமுடைய பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்)
FLLub

Page 93
168 மனித உரிமைகளின் நிலை 2006
உரிமையானவருக்குத் தெரியாமல் பாவிக்கப்பட்டுள்ளதென மேல் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அக்கட்டடத்தை விடுவிக்க முடியும்.
பொலிஸ் அத்தியட்சகரினால் கட்டடத்தை தன்வசமொத்த ஆறு மாதத்திற்குள் வழக்கு நடவடிக்கை எதுவும் ஆரம்பிக்கப்பட்டிருக்காவிடில் அக்கட்டிடத்தின் உரிமையாளரிடம் மேலதிக உப விதியின் மூலம் உரித்து பெற்றுக் கொடுக்கப்படும். கைப்பற்றல் இடம்பெற்ற பொழுது கட்டடம் யாரினால் பாவிக்கப்பட்டதென்பதை கருத்திற் கொள்ளாது கட்டடத்தின் உடமையை அதன் உரிமையாளருக்கு மாத்திரமே பெறக்கூடியதாகவிருக்கும். ஆகையால், இவ்வேற்பாட்டின் மூலம் நியாயமற்ற குத்தகை உரிமையாளர் மத்தியில் சந்தேகமற்ற உடமையைக் கொண்டுள்ள நபர் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட முடியும்.
அவசரகால ஒழுங்குவிதிகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றமொன்று தொடர்பில் ஏதேனும் நபரொருவர் குற்றவாளியாக்கப்பட்டதன் பின்னர் உரிய கட்டடமானது அக்குற்றத்தைப் புரிதல் தொடர்பாகப் பாவிக்கப்பட்டதென நீதிமன்றத்தினால் திருப்தியுற்றால் அக்கட்டடம் பறிமுதல் செய்யப்படும். அக் கட்டடத்தின் ஏதேனும் சந்தேகத்திற்கிடமில்லாத உரிமையாளருக்கோ வாடகை குடியிருப்பாளருக்கோ அல்லது ஈட்டுரிமையாளருக்கோ எவ்வித பாதுகாப்பும் கிடையாது.
14.2 சரணடையவர்களைக் கட்டுக்காப்பில் வைத்திருத்தல் வெடிப்பதார்த்தச் சட்டம்,? தீங்கு விளைவிக்கும் ஆயுதச் சட்டம்,? தோட்டா கட்டளைச் சட்டம் ,'* பயங்கரவாத தடைச் சட்டம் , தண்டனைச் சட்டக்கோவையின் சில அத்தியாயங்கள்,* பயங்கரவாத தடைச் சட்டம், தண்டனைச் சட்டக்கோவையின் சில அத்தியாயங்கள் தொடர்பாக அல்லது ஏதேனும் அவசரகால ஒழுங்குவிதியின் கீழுள்ள குற்றம் தொடர்பாக அல்லது பயங்கரவாத செயற்பாடுகளினால் அச்சமுற்று சரணடையும் ஆட்களைக் கட்டுக்காவலில் வைத்திருத்தல் பற்றி 22ஆம் ஒழுங்குவிதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கூறப்பட்ட நபர்களுக்கு ஏதேனும் பொலிஸ் உத்தியோகத்தரிடம், ஏதேனும் அரச உத்தியோகத்தரிடம் அல்லது ஜனாதிபதியினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறேதேனும் நபரிடத்தில் அல்லது தனிப்பட்ட சபையிடம் சரணடைய முடியும். சரணடையும் நபரினால் தான் சுய விருப்புடன்
122. திருத்தப்பட்டவாறான 1956 ம் ஆண்டின் 21 ம் இலக்கமுடைய சட்டம் 123. திருத்தப்பட்டவாறான 1966 ம் ஆண்டின் 18 ம் இலக்கமுடைய சட்டம் 124. திருத்தப்பட்டவாறான 1966 ம் ஆண்டின் 33 ம் இலக்கமுடைய சட்டம் 125. VI, VII SÐ6ů6og VIII, SÐËögluu Tuushib6

அவசரகால ஒழுங்குவிதிகள் 169
சரணடைவதாக எழுத்துமூல அறிக்கையொன்றைப் பெற்றுக்கொடுத்தல் வேணி டும் . அதன் பின்னர் அவ்வாறு சரணடையும் நபர் 24 மணித்தியாலங்களுக்குள் அணி மையிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் சரணடைய வேண்டிய போதிலும், அவரால் சரணடைந்த உடனே நீதிவாணி முன்னிலையில் கொணி டுவரப்பட்டு தகுந்த கட்டளையொன்றை" பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
இது முன்பு இருந்த அவசரகால ஒழுங்குவிதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது விரிவான வளர்ச்சியான நிலைமையாகும். முன்பிருந்த அவசரகால ஒழுங்கு விதிகளின்படி சரணடையும் ஆட்கள் ஒரு வருட காலம் வரை கட்டாயமாக தடுத்து வைப்பதற்கும் நிறைவேற்றுத் துறையின் தற்றுணியின்படி மொத்தக் கால எல்லையாக 2 வருட காலம் வரை தொடர்ந்தும் தடுப்பில் வைத்திருக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டன.
14.3 சில புத்தகங்களை உடமையில் வைத்திருத்தல் 33ஆம் ஒழுங்குவிதிகளில் இவ்வாறு கூறப்படுகின்றது. ‘தேசிய பாதுகாப்பை பொது ஒழுங்கைப் பேணுவதற்கு தீங்கிழைக்ககக் கூடிய அல்லது அரசாங்கத்துடன் பொறாமை கொண்டுள்ள அல்லது அவமதிக்கக்கூடிய உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அதற்கு உற்சாகம் அளிக்கின்ற அல்லது ஒத்தாசை வழங்குவதற்கு வாய்ப்புள்ள அல்லது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு நேரடியாகவோ அல்லது வேறு வகையில் நபரொருவரை துTணி டிவிடக் கூடிய ஏதேனும் புத்தகமொன்றை ஆவணமொன்றை அல்லது ஏதேனும் காகிதமொன்றை அல்லது எழுத்துமூல சமர்ப்பணங்கள் அடங்கிய கடிதமொன்றை சட்டரீதியான அதிகாரமோ அல்லது மன்னிப்பதற்கு எத்தகைய காரணமுமற்ற தமது பொறுப்பில் அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எவராயினும் ஒரு நபர் குற்றத்திற்கு குற்றவாளியாக்கப்படல் வேண்டும். சட்டரீதியான அதிகாரம் அல்லது மன்னிப்பதற்கு தக்க காரணம் உள்ளதென நிரூபிக்கும் பொறுப்பு பாரஞ்சாட்டப்படும்."
சட்டபூர்வமான அரசை மாற்றுவதற்கு செலுத்தும் முயற்சியை இவ்வேற்பாட்டின் மூலம் தடைசெய்தல் எனப் பொருள் கோடல் செய்தலாகாது.
14.4 குற்றங்கள் பற்றி புலன்விசாரணை செய்தல், வழக்கு விசாரணை குற்ற ஒப்புதல்களின் ஏற்புடைமை மற்றும் பிணை வழங்கல்
46இலிருந்து 52 வரையிலான ஒழுங்குவிதிகளின் மூலம் புலனாய்வுகளுக்குரிய
அல்லது அதற்கு நேர்முறையான விடயங்கள் பற்றிய ஏற்பாடுகளை
126. 33ஆம் ஒழுங்குவிதி

Page 94
170 மனித உரிமைகளின் நிலை 2006
அளிக்கின்றது. 46ஆம் ஒழுங்குவிதியில் தகவல்களை வெளியிடும் கடமை பற்றியும், 47ஆம் ஒழுங்குவிதியில் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அதிகாரங்கள் பற்றியும் 48ஆம் ஒழுங்கு விதியில் சில ஆவணங்களை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளல் பற்றியும் ஏற்பாடு செய்கின்றது. விபரிக்கும் உரிமை மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் கடமை பற்றி 49ஆம் ஒழுங்குவிதியிலும், பொலிஸ் உத்தியோகத் தர்களுக்குள்ள அணுகும் உரிமை பற்றியும் 50ஆம் ஒழுங்குவிதியிலும் ஏற்பாடுகள் காண்பிக்கப்பட்டுள்ளன. அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் பொலிஸ் உத்தியோகத் தர்களினால் நடைமுறைப்படுத்தப்படும் அதிகாரங்கள், அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ள வேறு அதிகாரங்களுக்குப் புறம்பானவை பற்றி 51ஆம் ஒழுங்குவிதியில் காணி பிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத் தர்களினதும் அதிகாரங்களை வேறு சில உத்தியோகத் தர்களினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆற்றல்கள் பற்றி 52ஆம் ஒழுங்குவிதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேற்பாடுகள் 2005 ஜனவரி 6ஆந் திகதிய அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளை ஒத்ததான ஏற்பாடுகள் (30இல் இருந்து 36 வரையிலான ஒழுங்குவிதிகளுடன்) அநேகமாக ஒத்ததாக இருப்பதுடன் அவ்வேற்பாடுகள் “4.10 குற்றங்கள் பற்றி புலனாய்வு நடாத்துதல். வழக்கு விசாரணைகள், குற்ற ஒப்புதலின் ஏற்புடைமை மற்றும் பிணை வழங்குதல்’ எனும் உப தலைப்பின் கீழ் ஓரளவு விபரமாக ஆராய்ந்து பார்க்கப்பட்டது.
54இலிருந்து 55 வரையிலான ஒழுங்குவிதிகளில் மரணப் பரிசோதனைக்குரிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் மேலே “11.5 கடமை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கிடையில் அதன் பயனாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்லது ஆயுதம் தாங்கிய படையினரால் ஏற்படுகின்ற மரணங்கள் அல்லது கட்டுக்காவலில் இருக்கும் போது ஏற்படுகின்ற மரணங்கள்’ (2005 ஒக்ரோபர் 13ஆந் திகதி நீக்கப்பட்டது)* எனும் உப தலைப்பின் கீழ் ஆராயப்பட்டுள்ளது.
59இல் இருந்து 62 வரையிலான ஒழுங்குவிதிகளின் மூலம் வழக்கு விசாரணை பற்றிய ஏற்பாடுகள் அளிக்கப்படடிருக்கின்ற போதிலும், அதில் கீழ்க்காணும் காரணங்கள் தொடர்பான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதாவது அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழுள்ள குற்றங்கள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தின் முன்னுரிமையைப் பெற்றுக்கொடுத்தல். வழக்குகளை விளங்கப்பட வேண்டிய நீதிமன்றத்தை
127. 2005ஆம் ஆண்டின் ஒக்ரோபர் 13ஆந் திகதிய 141422 இலக்கமுடைய அதிவிசேட அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2005ஆம் ஆண்டின் 3ஆம் இலக்கமுடைய அவசரகால (தற்காலிக இடைநிறுத்தும் ஒழுங்குவிதிகள்) ஒழுங்குவிதிகள்

அவசரகால ஒழுங்குவிதிகள் 171
பெயரிடுவதற்கு சட்டமா அதிபரிடம் வழங்கப்பட்டுள்ள தற்றுணிபுடன் அக்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை நடாத்துதல் மற்றும் வழக்குகளை விளங்கக்கூடிய நீதிமன்றங்கள், சட்டமா அதிபரினால் சில குற்றங்கள் பற்றி நேரடியாகவே மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகிர்வு கோர்வையிடப்படல் மற்றும் அதில் எதிரிக்கெதிரான விளக்கத்தை யூரி சபையின்றி நடாத்திச் செல்லல்; அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் உள்ள குற்றங்கள் தொடர்பாகவும் (விதிவிலக்குகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள போதிலும் அக்குறிப்பிடுதலுக்குரிய ஏதேனும் ஏற்பாடுகள் இல்லை) மற்றும் வேறு சில குற்றங்கள் தொடர்பாக நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபரின் அனுமதி அவசியமாகுதல், பூர்வாங்க விசாரணையின்றி மேல் நீதிமன்றம் முன் நேரடியாகவே குற்றப்பகிர்வை கோர்வையிடுவதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் எதிரி சமூகமளிக்காத போது வழக்கு விசாரணைகளை நடாத்திச் செல்லல்; ஏதேனும் ஆவணமொன்றை நீதிமன்றத்திடம் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற தற்றுணிபுடன் சேர்த்து வழக்கு விளக்கத்தின் போது தமக்கெதிராக உபயோகிப்பதற்கு எதிர்பார்க்கும் ஆவணங்களின் பிரதிகள் விளக்கம் ஆரம்பிக்கும் திகதிக்கு 30 நாட்களுக்கு முற்படாத திகதியொன்றில் தமக்குப் பொறுப்புத்தருமாறு கோருவதற்கு எதிரிக்கு அனுமதி வழங்குதல் எனும் ஏற்பாடு அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குற்ற ஒப்புதலின் ஏற்புடைமை பற்றி 63ஆம் ஒழுங்குவிதியின் மூலம் ஏற்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வேற்பாடு 2005 ஜனவரி 6ஆந் திகதிய அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் 41ஆம் ஒழுங்குவிதியில் அடங்கியுள்ள ஏற்பாடுகளுடன் ஒத்ததாக இருப்பதுடன் அவ்வேற்பாடு “4.10 குற்றங்கள் பற்றிய புலனாய்வு நடாத்துதல், வழக்கு விளக்கம், குற்ற ஒப்புதலின் ஏற்புடைமை மற்றும் பிணை வழங்குதல்” எனும் உப தலைப்பின் கீழ் ஓரளவு விபரமாக ஆராய்ந்து பார்க்கப்பட்டது.
பிணை வழங்குதல் தொடர்பாக பார்க்கும் போது நபரொருவருக்கெதிராக மேல் நீதிமன்றத்தின் முன் குற்றப் பகிர்வு கோர்வையிடப்பட்ட போது அந்நபருக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தால் மாத்திரமே பிணை வழங்க முடியும்.*
15. அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்)
ஒழுங்குவிதிகளின் வேறு ஒழுங்குவிதிகள்
வேறு ஒழுங்குவிதிகளினுள் ஜனாதிபதியினால் அவசரகால சட்டத்தை பிரடகனஞ் செய்தல் (14ஆம் ஒழுங்குவிதி) சிறைக்கைதிகளை பாதுகாப்பில்
128. 62 (2)ஆம் ஒழுங்குவிதி

Page 95
172 மனித உரிமைகளின் நிலை 2006
கொணர் டு செல்லும் போது அல்லது ஏதேனும் கலவரங்களை அடக்குவதற்காக மறியற்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தரிடமளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஆயுதம் தாங்கிய படை உறுப்பினர்களினால் நடைமுறைப்படுத்துதல் (24ஆம் ஒழுங்குவிதி). அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் குற்றவாளியெனக் கருதும் நபர்களை வேறு விடயங்களுக்கிடையில் கைதுக்குட்படுத்துதல் அவர்களுக்கெதிரான வழக்குகளை விளங்குதல், அல்லது அவர்களுக்கு தண்டனையளித்தலை தவிர்க்கும் நோக்குடன் அந்நபர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதலைத் தடைசெய்தல் (43ஆம் ஒழுங்குவிதி) கூட்டிணைக்கப்பட்ட சபைகளின் உறுப்பினர்களிடம் பொறுப்புக்களைச் சுமத்துதல் (44ஆம் ஒழுங்குவிதி கடமை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நபர்களினதும் மரணத்தை ஏற்படுத்தும் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை அல்லது ஆயுதம் தாங்கிய படை உறுப்பினரொருவரை பொலிஸில் அல்லது படையில் ஒப்படைத்தல். (53ஆம் ஒழுங்குவிதி). அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் நடாத்தப்படுகின்ற புலன் விசாரணை நடவடிக்கை தொடர்பாக (புலன் விசாரணை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொதுச் சட்டத்தின் ஏற்பாடுகள் அடங்கிய) 1979ஆம் ஆண்டின் 128.62(2)ஆம் ஒழுங்குவிதி.
15ஆம் இலக்கமுடைய குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் XIஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகள் ஏற்புடையதாகாதென (64ஆம் ஒழுங்கு விதி) அரசாங்க பகுப் பாய்வாளரின் சான்றிதழ் , தொடர் சாட்சியங்களை நெறிப்படுத்தாமல் முடிவான சாட்சியங்களாக இருக்க வேண்டுமென (65ஆம் ஒழுங்குவிதி) அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் நபர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தல் அல்லது இடையூறு விளைவித்தலைத் தடை செய்தல் (66ஆம் ஒழுங்குவிதி) எனும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
16. அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்)
ஒழுங்குவிதிகளில் அடங்கியுள்ள பல்வேறு ஏற்பாடுகள்
பல்வேறு ஏற்பாடுகள் என்பதற்கு சட்டவிரோத கூட்டங்களைக் கலைத்தல் பற்றிய ஏற்பாடுகள் மற்றும் குற்றவாளிகளை நிபந்தனையுடன் விடுவித்தலுக்கான ஏற்பாடுகளை அளிக் கும் பொதுச் சட்டம் ஏற்புடையாகாமை? (67ஆம் ஒழுங்குவிதி) தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆளொருவர், பொலிஸ் உத்தியோகத்தரொருவரினால் அதிகாரமளிக்கப்பட்ட
129. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கமுடைய குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின்
306(1), (2) மற்றும் (4) ஆம் பிரிவு

அவசரகால ஒழுங்குவிதிகள் 173
ஏதேனும் ஆயுதம் தாங்கிய படையின் உத்தியோகத்தர் ஒருவரினால் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் கடமை மற்றும் அந்நபர்களை ஏழு நாட்களுக்கொருமுறையான காலத்திற்கு மேற்கூறிய உத்தியோகத்தர்களுடைய கட்டுக்காவலில் தடுத்து வைக்கும் அதிகாரம்" (69ஆம் ஒழுங்குவிதி) மோட்டார் வாகனச் சட்டத்தின் சில ஏற்பாடுகளின் மூலம் ஆயுதம் தாங்கிய படைகளின் உறுப்பினர்களை விடுதலை செய்தல் (70ஆம் ஒழுங்குவிதி) தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய சேவைகள் போன்றவற்றை நடாத்திச் செல்வதற்கு தீங்கிழைக்கும் வகையில் ஏதேனும் இயக்கமொன்று செயல்படுகின்றதென ஜனாதிபதி அபிப்பிராயப்படும் போது அவ்வியக்கத்தைத் தடைசெய்வதற்கும் அத்தகைய அச்சங்கள் போன்றவைகளைத் தடை செய்வதற்கான அதிகாரம் (71ஆம் ஒழுங்குவிதி) வெடிக்கும் கருவிகள், குண்டுகள் போன்றவற்றின் மூலம் காயத்துக்குள்ளாக்கப்பட்ட ஆட்களுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் அவசரகால நிலைமையொன்றின் கீழ் நல்லெண்ணத்துடன் செயற்பட்டாரெனக் கருதும் நபர்களுக்கெதிராக சட்டமா அதிபரின் எழுத்து மூல அனுமதியின்றி வழக்குத் தொடர் தலை தடைசெய்தல் எனும் ஏறி பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
17. புதிய ஜனாதிபதியின் நியமனம் பாராளுமன்ற அமர்வை
நிறுத்துதல் மற்றும் அதன் வலிதானதன்மை
அப்போதைக்கு பதவி வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி அவர்களின் இரண்டாம் பதவிக் காலம் முடிவுறுவது, முன்னர் திட்டமிட்டிருந்தவாறு 2006ஆம் ஆண்டில் அல்லாமல் 2005ஆம் ஆண்டிலென உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்' பிரகாரம் 2005ஆம் ஆண்டு நவம்பர் 17ஆந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்* (UPFA) ஜனாதிபதி அபேட்சகராகிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதுடன், அவர் இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியாக 2005 நவம்பர் 19ஆந் திகதி பதவியேற்றுக்கொண்டார்.
முன்பு கூறியவாறு அவசரகால ஒழுங்குவிதிகளின் இரண்டாம் கால கட்டம் 2005 ஆகஸ்ட் 13ஆந் திகதியப் பிரகடனத்துடன் ஆரம்பிக்கப்பட்டதுடன்,
130, 6-2005 ஜனவரி 6ஆந் திகதிய அவசரகால (நானாவித ஏற்பாடுகளும், தத்துவங்களும்) ஒழுங்குவிதிகளின் நானாவித ஏற்பாடுகளின் கீழ் உள்ள அவதானிப்புகளைப் பார்க்கவும். 131. கலாநிதி சங்கைக்குரிய ஓமல்பே சோபித்த தேரோ எதிர் தயானந்த திசாநாயக்கவும் மற்றும் பலரும் உயர்நீதி (FR) விண்ணப்ப இல. 278/2005 ஓகஸ்ட் 26ஆந் திகதிய உநீ. குறிப்புகள் 132. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

Page 96
174 மனித உரிமைகளின் நிலை 2006
ஒவ்வொரு மாதமும் 13ஆந் திகதி புதுப் பிரகடனங்கள் பிறப்பிக்கப்பட்டு அவசரகால ஒழுங்குவிதிகள் வருடம் முழுவதும் நடைமுறையிலிருந்தன.
அதன்படி குமாரதுங்க ஜனாதிபதியினால் 2005 நவம்பர் 13ஆந் திகதி பிரகடனமொன்று செய்யப்பட்டிருந்தது. இத்தினங்களின் போது, பாராளுமன்றக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த போதிலும், பிரகடனம் இயற்றப்பட்ட திகதியில் இருந்து 10 நாட்களுக்குள் அதாவது 2005 நவம்பர் 22ஆந் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு ஆயத்தமாயிருந்தது. எவ்வாறாயினும் பிரகடனத்திலிருந்து 10 நாட்களுக்குள் கூடாதவாறு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பின் அல்லது அமர்வு நிறுத்தப்பட்டிருப்பின், ஜனாதிபதியினால் அரசியலமைப்பின் 155(4)ஆம் உறுப்புரையின் பிரகாரம் பிரகடனம் செய்த திகதியிலிருந்து 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூடுமாறு அழைக்கப்படல் வேண்டும். அவ் 155(4)ஆம் உறுப்புரையில் இவ்வாறு கூறப்படுகின்றது.
(i) அவ்வாறான (அவசர காலம்) பிரகடனத்தைப் பிறப்பிக்கும் போது அது பற்றி இவ்வுறுப்புரையின் ஏனைய ஏற்பாடுக்கேதுவாக உடனடியாக பாராளுமன்றத்துக்கு அறிவித்தல் வேண்டும். மேலும் அதன்படி
(i) அப்பிரகடனத்தைப் பிறப்பித்த தேதியிலிருந்து பத்து நாட்கள் முடிவடையாதவாறு கூட்டங்களை ஒத்திவைத்திருப்பதனால் அல்லது அமர்வு நிறுத்தப்பட்டிருப்பதனால் அல்லது பாராளுமன்றம் கூடிவராவிட்டால் 10 நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரகடனமொன்று பிறப்பிக்கப்படல் வேண்டும். (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது).
அதன்படி அவசரகாலப் பிரகடனமொன்று பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதலின் மூலம் பிரகடனத் திகதியிலிருந்து 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட வேண்டும் என்பது தெளிவாகின்றது. இப்பிரகடனம் மற்றும் அதன் கீழ் ஆக்கப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை* பரிசீலிக்கும் விதத்திலான கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தல் தொடர்பானது பாராளுமன்றம் கொண்டுள்ள அரசியலமைப்புரீதியான கடமைகளுடன் ஒத்ததாக நடைபெறும் . எவ்வாறாயினும் மேற் கூறப் பட்ட அரசியலமைப்புரீதியான மட்டுப்பாடுகள் எதுவாயினும் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி 2005 நவம்பர் 21ஆந் திகதி நள்ளிரவிலிருந்து 2005 நவம்பர் 25ஆந்* திகதி வரை பாராளுமன்றத்தின் அமர்வை நிறுத்தியதுடன்
133, 2.2 பிரகடனம் பற்றி பாராளுமன்ற கட்டுப்பாட்டை பார்க்கவும் 134. 2005 நவம்பர் 21ஆந் திகதிய 142011 இலக்கமுடைய அரசாங்க வர்த்தமானி

அவசரகால ஒழுங்குவிதிகள் 175
அதன் ‘* மூலம் 2005 நவம்பர் 13ஆந் திகதியப் பிரகடனத்தை பிறப்பித்ததிலிருந்து 10 நாட்களுள் பாராளுமன்றம் கூடுதல் தவிர்க்கப்பட்டது. அவசரகாலப் பிரகடனமொன்று பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பமொன்றில் பாராளுமன்ற அமர்வை நிறுத்துவதற்கு ஜனாபதிக்குள்ள தத்துவங்கள் மீது அரசியலமைப்பின் மூலம் மட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றதெனவும் 2005 நவம்பர் 21ஆந் திகதி நள்ளிரவிலிருந்து, 2005 நவம்பர் 25ஆந் திகதி வரை பாராளுமன்ற அமர்வை நிறுத்துதல் மூலம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அரசியலமைப்பின் மூலம் தம்மீது அளிக்கப்பட்டுள்ள தத்துவங்களை மீறி நடவடிக்கை மேற்கொண்டுள்ளாரெனவும் விவாதிக்க முடியும். அவ்வாறு பாராளுமன்றத்தின் அமர்வை நிறுத்துதல் முன்பிருந்து ஜனாதிபதியின் தலைமையிலான அரசினால் அப்போதைக்கு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்த வரவு செலவுத் திட்டத்தை நீக்கி வேறு வரவு செலவுத் திட்டமொன்றை கொண்டு வரும் நோக்குடன் புரியப்பட்டதென பரவலாக நம்பப்பட்டது. மேற்கூறப்பட்ட நிலைமையின் கீழ் பாராளுமன்றம் அவ்வாறு அமர்வை நிறுத்தும் செயலினுடாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த இரண்டாம் வரவு செலவுத்திட்டத்தின் வலிதாந்தன்மை பற்றியும், விசேடமாக ஜனாதிபதியினால் வேண்டுமென்றே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதா என்பது பற்றியும் விவாதத்திற்குரிய பிரச்சினைகள் எழுகின்றன. எவ்வாறாயினும் இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து பார்த்தலானது இவ்வறிக்கை தலைப்பைச் சார்ந்ததொன்றல்ல எனக் கூறமுடியும்.
2005 நவம்பர் 13ஆந் திகதியப் பிரகடனத்தின் வலிதாந்தன்மை பற்றி ஆராயும் போது அது 2005 நவம்பர் 25ஆந்' திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் 21ஆந் திகதியானது பிரகடனத்திலிருந்து 14 நாட்களுக்குட்பட்டமையால், அப்பிரகடனம் ஒரு மாத காலம் வரை செல்லுபடியாக இருந்தது.
18. அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்)
ஒழுங்குவிதிகளுக்குப் புரியப்பட்ட திருத்தங்கள்
அவசரகால (நானாவித ஏற்பாடுகளும் தத்துவங்களும்) விதிகளுக்கு இரண்டு திருத்தங்கள் மாத்திரம் புரியப்பட்டுள்ளன. இத் திருத்தங்கள் மூலம் சில
135. “பாராளுமன்ற அமர்வை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கொண்டுள்ள தத்துவங்கள் பற்றி அரசியலமைப்பின் 70(1)ஆம் பிரிவின் மூலம் ஏற்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. பிரகடனம் மூலம் பாராளுமன்றத்தை அழைத்தல் பாராளுமன்ற அமர்வை நிறுத்துதல், மற்றும் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.’2005 நவம்பர் 21ஆந் திகதிய 1420/1 இலக்கமுடைய அரசாங்க வர்த்தமானி
136. ஹன்சார்ட் Volume 162 - 2005 நவம்பர் 25ஆம் திகதிய இல.01 165ஆம் நிரல்

Page 97
176 மனித உரிமைகளின் நிலை 2006
ஒழுங்குவிதிகளின் தொழிற்பாடுகளை இடைநிறுத்துதல் மட்டும் நீக்குதல் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அது பற்றி பிற்காலத்தில் நீக்கிய அல்லது இடைநிறுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் எனும் தலைப்பின் கீழ் கலந்துரையாடப் பட்டுள்ளது.
19. முடிவு
2005 ஆகஸ்ட் 13ஆந் திகதி (அவசரகால ஒழுங்குவிதியின் இரண்டாம் கால கட்டத்தின் ஆரம்பம்) அவசரகாலத்தைப் பிரகடனஞ் செய்ததன் மூலம் நோக்கம் லக்ஷ்மன் கதிர்காமர் வெளிநாட்டமைச்சரின் படுகொலை பற்றிய புலன்விசாரணை நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காகுமென்பது, 2005 ஆகஸ்ட் 18ஆந்' திகதிய பாராளுமன்ற விவாதத்தின் மூலம் புலனாகின்றது. எவ்வாறாயினும் இந் நோக்கம் எவ்வாறு அணுகப்பட்டதென்பது தெளிவாகவில்லை. அவசரகால ஒழுங்குவிதிகள் மூலம் ஏற்பாடு அளிப்பது அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் உள்ள (அதாவது ஒழுங்குவிதிகளின் கீழ் உருவாக்கப்படுகின்ற) குற்றங்களை புலன் விசாரணை செய்தல் பற்றியதாகும். அமைச்சர் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட போது அவசரகால நிலைமை நடைமுறையில் இல்லாத போதிலும் ஆகையினால் அவருடைய படுகொலையானது ஏதேனும் அவசரகால ஒழுங்குவிதியின் கீழுள்ள குற்றமொன்றாகவிருக்க முடியாது. அப்படுகொலையானது தண்டனைச் சட்டக் கோவையின் கீழுள்ள குற்றமென்பதுடன், அதன்படி அக்குற்றம் குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் கீழ் சாதாரண முறையில் புலன் விசாரணைக்கு உட்படுத்துமொன்றாகும். அதேபோன்று அது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழுள்ள குற்றமொன்றாகும்.*
அவசரகால ஒழுங்குவிதிகள் பற்றி இவ்வத்தியாயத்தில் கடந்த வெளியீடுகள் சிலவற்றில் நடைமுறையிலுள்ள அவசரகால ஒழுங்குவிதிகள் எவை என்பது பற்றியும் பொதுமக்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்புக் கூறும் நிறுவனங்கள் அறிந்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் போன்று இவ்வொழுங்கு விதிகளைப் பெறக்கூடிய கடுமையான நெருக்கடி பற்றியும் தெளிவாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்நிலைமையானது அவ்வாறே மாறாமல் இருப்பதுடன் அதன்படி அதனை மீண்டுமொருமுறை"? குறிப்பிட வேண்டியுள்ளது.
137. ஹன்சார்ட் volume 160 - 2005 ஆகஸ்ட் 15ஆந் திகதிய இல.05 849 - 850 138. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் 139. “3.1.1 ஒழுங்கு விதிகளிடம்இவை இருத்தல்” பார்க்கவும்.

அவசரகால ஒழுங்குவிதிகள் 177
இவ் வத்தியாயத்தில் சுட்டிக் காணி பிக் கப்பட்டவாறு அவசரகால ஒழுங்குவிதிகளினுள் பல்வேறு செய்யாமை, தவறுகள் மற்றும் ஒவ்வாமைகள் இருந்த போதிலும் அதன் காரணமாக எழக்கூடிய நியாயமான அனுமானம் யாதெனில் ஜனாதிபதியினால் இவ்வொழுங்கு விதிகளைப் பிரகடனஞ் செய்வதற்கு முன்னர் அவை கவனமான முறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதாகும். மேலும், மேற்கூறப்பட்டவாறு அவசரகால வழக்கு விதிகளை பிறப்பித்தலுடன் தொடர்பான கட்டாய நடைமுறைகளை அணுகுதல் கைவிடப்பட்டிருந்தன. இது மன்னிப்பளிக்க முடியாத விடயமொன்றாக இருப்பதற்கான காரணம் யாதெனில் கடந்த 25 வருட காலத்தில் கூடிய பங்கு காலம் இந்நாட்டு அவசரகால ஒழுங்குவிதிகளுக்கே ஒதுக்கியிருந்ததனாலாகும்.
இறுதியாக காண்பிக்கப்பட வேண்டியது யாதெனில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தின் பங்குதாரர்களாகிய அரசொன்றுக்கு “பொது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற அவசரகால” நிலைமையின் போது உரிய நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான அளவில் மாத்திரம்” அச்சமவாயத்தின் கீழ் உள்ள சில கடமைகளுக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்பதாகும். எவ்வாறாயினும் அத்தகைய தமது கடமைகளின் கண்ணியத்தைக் குறைக்கும் உரிமைகளைப் பாவிக்கும் ஏதேனும் அரச தரப்பினர் அவ்வாறு சீர்குலைத்தது ஏதேனும் ஏற்பாட்டிற்கு எதிரானவையாயின் அவ்வேற்பாடு என்னவென்றும் அதற்கான காரணங்கள் பற்றியும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மூலம் உடனடியாக ஏனைய அரச தரப்பினர்களிடம் அறிவித்தல் வேணி டும்." இலங்கை இவ்வாறான தேவைப் பாட்டிற்கிணங்க தொழிற்படுகின்றதா என்பது தெளிவில்லாமல் உள்ளது.
140. குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தின் 4(3)ஆம் பிரிவு

Page 98
“அ” பின்னிணைப்பு
E/03/09/2005
மரண விசாரணை நடாத்துதலும், பிரேதத்தை அகற்றுதலும்
2005 ஆகஸ்ட் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் பற்றிய குடியியல் உரிமைகள் அமைப்பினால் (CRM) தயாரிக்கப்பட்ட அறிக்கை
இதில் கீழே கலந்துரையாடப்படுகின்ற ஏற்பாடுகள் எவரேனும் ஆளொருவருடைய வாழ்க்கையின் தந்திரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான பின்விளைவுகளை உருவாக்குகின்றவைகளாகும். பல ஆண்டு காலமாக ஆக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் சகலவற்றிலுமே இவ்வேற்பாடுகள் இதற்கு ஒத்தவகையில் காணப்பட்ட போதிலும் அவையானது கடுமையான விமர்சனத்துக்குட்பட்ட ஏற்பாடுகளாகும். அவ்வேற்பாடுகள் மீண்டும் 2005ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 13ஆந் திகதிய 1405/14 இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 2005இன் 01ஆம் இலக்க அவசரகால (நானாவித ஏற்பாடுகளும்) ஒழுங்கு விதிகளில் எமக்கு காணக்கூடியதாகவுள்ளது.
1. மரண விசாரணை
பொதுச்சட்டத்தின் படி எவரேனுமொரு ஆள் (வேறு விடயங்களுக்கிடையில்) பொலிஸ் கைதில் இருக்கும் போது இறக்கும் எச்சந்தர்ப்பத்திலும் மரண விசாரணயொன்றை நடாத்துதல் கட்டாயமானதொன்றாகும். இச்சட்டமானது 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கமுடைய குற்றவியல் நடைமுறைக் கோவைச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதில் மரண விசாரணை அதிகாரிகளுக்கு மற்றும் நீதிவான்மார்களுக்கு மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை நிச்சயப்படுத்துவதற்கு அதிகாரம் வழங்குதல், சாட்சிகளை அழைத்தல் மற்றும் பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட மரண விசாரணை தொடர்பான போற்றத்தக்க ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2005 ஆகஸ்ட் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகளின் மூலம் மேற் கூறப்பட்ட ஏற்பாடுகளுக்கு மாறாக தொழிற் படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதற்குரிய ஏற்பாடுகள் அதன் 54இலிலிருந்து 58 வரையிலான ஒழுங்குவிதிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
1. இவ்வொழுங்குவிதிகள் 2005ஆம் ஆண்டின் 03ஆம் இலக்கமென திருத்தப்படல் வேண்டும். இதற்கு முன்னர் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 2005 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 2 அவசரகால ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டன.

அவசரகால ஒழுங்குவிதிகள் 179
1) 54ஆம் ஒழுங்குவிதி-மரண விசாரணைகளுக்குரிய பொதுச்
சட்டத்தை தவிர்ந்துக் கொள்ளல்
தனி னால அலி லது தனக்கு கீழ் உள்ள ஏதேனும் உத்தியோகத்தரொருவரினால் தமது கடமையைப் புரிவதற்கிடையில் புரியப்பட்ட ஏதேனும் செயலொன்றின் விளைவாக ஏதேனும் ஆளொருவருடைய மரணம் ஏற்பட்டுள்ளதென நம்பும் ஏதேனும் பொலிஸ் உத்தியோகத் தரொருவருக்கு (பதவி திட்ட வட்டமாக காண்பிக்கப்படவில்லை) அல்லது ஆயுதம் தாங்கிய படைகளின் ஏதேனும் உறுப்பினரொருவருக்கு (பதவி திட்டவட்டமாக காண்பிக்கப்படவில்லை) அல்லது காரணங்கள் உள்ள சந்தர்ப்பமொன்றில் அல்லது பொலிஸ் கைதில் அல்லது படைகளின் கைதில் இருக்கும் போது ஏதேனும் நபரொருவர் இறக்கும் போது (வலியுறுத்தல் ஆசிரியரினால்) பொதுச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மாறாக தொழிற்படுவதற்கு 54ஆம் ஒழுங்குவிதியில் ஏற்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் பொலிஸ் அத்தியட்சகரினால் அல்லது உரிய ஆயுதம் தாங்கும் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியினால் (சந்தர்ப்பத்திற்கேற்றவாறு) குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் XXXஆம் அத்தியாயத்தினதும் மற்றும் 9ஆம் பிரிவில் அல்லது வேறு ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணான வகையில் யாது கூறப்பட்டுள்ளதோ, அல்லது அண்மையிலுள்ள உதவிப் பொலிஸ் மா அதிபருக்கோ அல்லது உதவிப் பொலிஸ் மா அதிபருக்கோ அறிக்கையிடுதல் வேண்டும்.
விவாணம்
(அ) மரண விசாரணையை நடாத்துதலின் நோக்கம் யாதெனில் மரணம் ஏற்பட்ட முறை மற்றும் அதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை முடிவு செய்தல் என்பதுடன் அவ்வாறானவற்றைப் புரிவதற்குள்ள விதிசார் முறை பற்றி பொதுச்சட்டத்தில் ஏற்பாடுகள் காண்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவசரகால ஒழுங்கு விதிகளுக்கு இப்பொதுச் சட்டத்தை கருத்திற் கொள்ளாது நடவடிக்கை மேற்கொள்வதற்குள்ள வல்லமையானது ஒரு சம்பவத்தின் மீது தங்கியுள்ளது. அதாவது உரிய மரணமானது தன்னால் அல்லது தனக்கு கீழுள்ள ஏதேனும் உத்தியோகத்தரினால் தமது கடமைகளை மேற்கொண்டிருப்பதற்கு இடையில் புரியப்பட்ட ஏதேனும் செயலொன்றின் விளைவாக ஏற்பட்ட மரணமொன்றாக இருத்தலாகும்.
(ஆ) “ஏதேனும் பொலிஸ் உத்தியோகத்தரொருவருக்கு அல்லது ஆயுதம் தாங்கிய படைகளின் ஏதேனும் உறுப்பினரொருவருக்கு காரணமுள்ள

Page 99
180 மனித உரிமைகளின் நிலை 2006
2)
சந்தர்ப்பமொன்றில்’ எனும் சொற்கள் முக்கியமானதாகும். மரண விசாரணையை நடாத்துதலிலிருந்து தவிர்த்து கொள்ளும் முழு செயற்பாடுகளுக்கும் அடிப்படையாய் அமைவது யாதெனில் உரிய மரணமானது தமது பணிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ளதென ஏதேனும் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் அல்லது ஆயுதப் படைகளின் உறுப்பினரொருவரினால் புரியும் வாக்குமூலத்தினாலாகும்.
(இ) எவ்வாறாயினும் இதையும் விட பயங்கரமான ஏற்பாடு யாதெனில் உரிய ஒழுங்கு விதியின் சொற்களுக்குள் மறைத்துக் கூறப்பட்டிருக்கும் நாட்டின் வேண்டிய ஓரிடத்தில் பொலிஸ் அல்லது இராணுவக் கட்டுக் காப்பில் இருக்கும் போதும் மரண விசாரணையுடன் தொடர்பான பொதுச்சட்டத்தைத் தவிர்ந்து செல்வதற்கு இடமளிக்கும் ஏற்பாடாகும்.
55ஆம் ஒழுங்குவிதி - பொலிஸ் உத்தியோகத்தரினால் அறிக்கையிடப்பட வேண்டியதெனவும் வாக்குமூலம் போன்றவற்றை அறிக்கையிடல் வேண்டியதெனவும்,
54ஆம் ஒழுங்கு விதியின் மூலம் ஏற்பாடு அளித்துள்ளவாறு பொலிஸ் மா அதிபர் அல்லது பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் தகவல்கள் கிடைக்கும் போது அவரால்
(அ) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு கீழ் இல்லாத உத்தியோகத்தரொருவருக்கு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அவருடைய அவதானிப்புக்களை அறிக்கையிடுவதற்கு ஏதேனும் முன்வைக்கக்கூடிய பொருட்களை தமது பொறுப்பில் எடுப்பதற்கும் அம்மரணத்திற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குரிய விடயங்கள் பற்றி தெரியுமெனத் தோன்றுகின்ற ஏதேனுமொரு ஆளுடைய வாக்குமூலத்தை அறிக்கையிடக் கட்டளை பிறப்பித்தல் வேண்டும்.
(ஆ) மேலும் பிரேதத்தைக் கண்டுபிடிக்கப்பட்ட ஏதேனும் சந்தர்ப்பம் ஒன்றின் போது அச்சம்பவத்தை உடனடியாக நீதிவான் ஒருவரிடம் அறிக்கை செய்யப்படல் வேண்டும்.
விவரணம்
இதில் விளங்குவது யாதெனில் உரிய மரணம் தொடர்பாக வகை சொல்ல வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் புலன் விசாரணை செய்ய வேண்டுமெனவும் பிரேதத்தை கண்டுபிடிக்கும் சந்தர்ப்பத்தில் அது பற்றி நீதிவானிடம் அறிவித்தல் வேண்டுமென்பதாகும். இவை போற்றத்தக்க ஏற்பாடுகளாகும். எவ்வாறாயினும் கடந்த காலங்களில் அதற்கிணங்க

3)
அவசரகால ஒழுங்குவிதிகள் 181
எவ்வளவு தூரம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை எங்களால் உணர முடியாதுள்ளது.
56ஆம் ஒழுங்குவிதி பிரேத பரிசோதனயை நடாத்துதல் பிரேதத்தை அடக்கம் செய்தலும் தகனஞ் செய்தலும்
பொலிஸ் மா அதிபரிடமிருந்து அல்லது பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து 55ஆம் ஒழுங்கு விதியின் கீழ் சம்பவம் பற்றிய அறிக்கையொன்று நீதிவானுக்கு கிடைத்த போது அவரினால் மரண விசாரணையொன்றை நடாத்துவதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிக்கு உத்தரவு வழங்க வேண்டிய போதிலும் மரண விசாரணையின் இறுதியின் போது பிரேதத்திற்குப் புரிய வேண்டியவைகளுக்காக பிரேதத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்தல் வேண்டும். அப்பிரதி பொலிஸ் மா அதிபரினால் தேசிய பாதுகாப்பு அல்லது பொது அமைதியை நடாத்திச் செல்வதற்கு அல்லது அவசியமானதென அவரினால் கருதப்படுகின்ற ஏதேனும் நிபந்தனைகளுக்கு மட்டுப்பாடுகளின் கீழ் பிரேதத்திற்கு உரிமை கோரும் உறவினர்களுக்கு அப்பிரேதத்தை ஒப்படைக்க முடியும். அவ்வாறு இல்லையாயின் சந்தர்ப்ப சூழ்நிலை விடயங்களுக்கேற்ப தேவையென பிரதி பொலிஸ் மா அதிபரினால் கருதப்படுகின்ற ஏதேனும் நடவடிக்கைகளுக்கிணங்க பிரேதத்தை நல்லடக்கம் செய்வதற்கு அல்லது தகனஞ் செய்வதற்கு அவரினால் அதிகாரமளிக்க முடியும்.
விவாணம்
பிரேதத்தைக் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அது பற்றி உடனடியாக நீதிவானிடம் அறிவிக்கப்பட வேண்டிய போதிலும் (55ஆம் ஒழுங்குவிதி) அந்நீதிவானுக்கு தமது தற்றுணிவின் பிரகாரம் மரண விசாரணையை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் இல்லை. அதற்கு பொலிஸ் மா அதிபரிடமிருந்து அல்லது பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து சம்பவம் தொடர்பான அறிக்கை கிடைக்கும் வரையில் காத்திருக்க வேண்டியிருக்கும்.
மேலும் பிரேதத்தை அகற்றப்பட வேண்டிய முறை அதாவது அடக்கம் செய்தல் அல்லது தகனம் செய்தலும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தற்றுணிபின்படியே நடைபெறும். அவருடைய தற்றுணியை நடைமுறைப் படுத்துதல் தொடர்பில் எவ்வித வழிகாட்டல்களும் வழங்கப்படவில்லை. இறந்த நபர் சித்திரவதைக்குட்பட்ட நிலைமையின் கீழ் பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் பிரேதத்தை தகனம் செய்வதற்கு கட்டளையிட்டால் அதன் மூலம் முக்கியமான வைத்திய சாட்சியங்கள் புதையுண்டு போவதற்கு வாய்ப்புள்ளது.

Page 100
182
4)
மனித உரிமைகளின் நிலை 2006
மரண விசாரணையொன்றில் பொது நடைமுறைகள் பின்பற்றப்படாதிருப்பின் பிரேதத்தை தகனம் செய்யப்படுவதற்குள்ள வரையறைக்குட்படாத தற்றுணிபு இருத்தல் அபாயரகமானதென புதிதாய் கூறவேண்டியதற்கில்லை.
57ஆம் ஒழுங்குவிதி பொலிஸ் மா அதிபரினால் மேல் நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கப்படும் போது ஏதேனும் நபரொருவருடைய மரணம் தொடர்பாக விளங்குவதற்கு மேல் நீதிமன்றத்திற்கு உள்ள தத்துவம்
54ஆம் ஒழுங்குவிதியில் கூறப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப விடயங்களின்படி ஏற்படுத்தப்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்டதென கருதப்படுகின்ற ஏதேனும் நபரொருவருடைய மரணம் தொடர்பாக பரீட்சிப்பதற்கு கொழும்பில் நடாத்தப்படுகின்ற மேல் நீதிமன்றத்திற்கு பிரத்தியேக நீதிமன்ற நியாயாதிக்கம் உள்ளன. பொலிஸ் மா அதிபரினால் விண்ணப்பமொன்று செய்யப்படும் போது அந்த மேல் நீதிமன்றத்தினால் அவ்விண்ணப்பத்தில் பெயரிடப்பட்ட நபரினுடைய மரணத்திற்கான காரணம் தொடர்பான விசாரணையொன்று நடாத்தப்பட வேண்டியுள்ள போதிலும் அந்நபரின் மரணம் தொடர்பாக ஏதேனும் நீதிவான் நீதிமன்றமொன்றில் ஏதேனும் வழக்கு நடவடிக்கை விளங்கப்பட்டிருக்கும் சமயத்தில் அச் சகல வழக்கு நடவடிக்கைகளும் அந்த மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படல் வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பேணுமுகமாக அதனைக் கவனத்திற்கொண்டு அந்த மேல் நீதிமன்றத்தினால் அவ்விசாரணையை அல்லது அவ்விசாரணையின் ஒரு பகுதியை இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் நடாத்தபட முடியும்.
பிரேத பரிசோனையை நடாத்திய அரச வைத்திய அதிகாரியினால் அந்த மேல் நீதிமன்றத்திடம் தமது அறிக்கையை முன்வைக்க வேண்டிய போதிலும் மேல் நீதிமன்றத்தினால் ஏதேனும் மீள் பணியைப் புரியுமாறு அதிகாரம் அளிக்கப்பட்டாலொழிய அதில் உள்ளடக்கப்பட்டுள்ள எச்செயலையும் எந்நபருக்கும் வெளிப்படுத்தக்கூடாது.
பூர்வாங்க விசாரணை அறிக்கைகளையும் விசாரணை நடாத்தும் பணிக்குத் தேவையான வேறு ஆவணங்களையும் பொலிஸ் மா அதிபரினால் மேல் நீதிமன்றத்திடம் முன்வைக்க வேண்டிய போதிலும், பொலிஸ் மா அதிபரினால் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு உத்தியோகத்தர் ஒருவரினால் தனது முன்னிலையில் வைக்கப்படுகின்ற சாட்சியங்கள் மற்றும் ஏதேனும் நபர்களின் சாட்சியங்களை மேல் நீதிமன்ற நீதிபதியினால் அறிக்கையிடப்படல் வேண்டும். மேல் நீதிமன்றத்தின் முன் நடைபெறுகின்ற வழக்கு நடவடிக்கைகள் பகிரங்கமாக நடாத்தப்படக்கூடாத போதிலும் குறித்த அரசின் உறுப்புக்களால் அதிகாரமளிக்கப்படுகின்ற

அவசரகால ஒழுங்குவிதிகள் 183
வழக்கு நடவடிக்கைகளின் அறிக்கைகள் மாத்திரம் பிரசுரிக்கப்படல் வேண்டும். அவ்வாறாயினும் மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் வழக்கு நடவடிக்கை அல்லது அதன் ஒரு பகுதியை பகிரங்கமாக நடாத்துவதற்கு உத்தரவிடப்பட முடியும். விசாரணையின் இறுதியில் வேறு ஏதேனும் ஆவணங்களுடன் சாட்சி அறிக்கை மற்றும் மரணம் ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலை நிகழ்வுகள் பற்றிய அறிக்கையொன்றை மேல் நீதிமன்ற நீதிபதியினால் சட்டமா அதிபரிடம் முன் வைக்கப்படுதல் வேண்டும்.
விவரணம்
இவ் வேறி பாட்டினுள் அதிருப்தியான உறுப் புக் கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.
.DHتگی
மரணம் பற்றிய விசாரணையானது பொலிஸ் மா அதிபரினால் விண்ணப்பமொன்று செய்தால் மாத்திரமே நடாத்தப்படும். பொலிஸ் மா அதிபரினால் தனது தற்றுணிவை நடைமுறைப்படுத்தும் போது சேர்க்க வேண்டிய வழிகாட்டல்கள் எதுவும் காண்பிக்கப்படவில்லை. இது ஏற்க முடியாத நிலைமையாகும். இதற்கான காரணம் யாதெனில் அநேகமான சந்தர்ப்பங்களில் உரிய சம்பவங்களுடன் தொடர்பான நபர்கள் அவருக்குக் கீழுள்ள அலுவலர்கள் ஆகின்றபடியினாலாகும்.
54ஆம் ஒழுங்கு விதியில் காண்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்ப சூழ்நிலையின் கீழ் ஏதேனும் மரணமொன்று ஏற்பட்டிருக்கும் போது பிரேத பரிசோதனை அறிக்கையை இரகசியமான முறையில் வைத்திருக்கக் கூடாது. இறந்தவரின் உறவினர்கள் அதற்கு இணங்கியிருத்தல் வேண்டும்.
அவ்வாறான மரணம் பற்றிய விசாரணையை நடாத்துதல் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தியிருத்தல் திருப்தியான தொன்றல்ல.
மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்குட்படுத்தும் மரணத்துடன் தொடர்பான சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்குரிய தகவல்களை அறிந்த ஏதேனும் நபர்களிடமிருந்து சாட்சியங்களை விசாரணை செய்தல் அவசியமாகின்ற போதிலும் அத்தகைய விளக்கத்தில் உறவினர்களுக்கோ அல்லது நபர்களுக்கு சமூகம் தருவதற்கும் இறந்த நபரின் உரிமைகள் பற்றி கவனமெடுப்பதற்கும் விசேட ஏற்பாடுகள் அளிக்கப்படவில்லை. அத்துடன் மேல் நீதிமன்ற தீர்ப்பை அவர்களிடம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றதா என்பதும் காணப்படவில்லை.

Page 101
184 மனித உரிமைகளின் நிலை 2006
உ வழக்கு நடவடிக்கைகள் பகிரங்கமாக நடாத்தப்படாமல் இருப்பதும் குறித்துரைக்கப்பட்ட அதிகாரியின் அனுமதி இருந்தாலொழிய தகவல்களை வெளியிடுவதை தடை செய்தல் என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழக்கு நடவடிக்கைகளுக்கு அல்லது அதன் ஒரு பகுதி மீது இணங்கியிருக்கக்கூடிய நிலைமை இருந்த போதிலும் வெளியிடுதலின் மீதுள்ள தடையை நீக்குவதற்கு அதிகாரமில்லை.
5) 58ஆம் ஒழுங்குவிதி - சட்ட மாஅதிபரின் அங்கீகாரம்
மேல் நீதிமன்றத்தினால் சட்ட மாஅதிபரிடம் முன்வைக்கப்பட்ட சாட்சி அறிக்கையும் வேறு ஆவணங்களின்படி ஏதேனும் குற்றமொன்று நடைபெற்றிருத்தல் தெரியவருகின்றதென சட்ட மாஅதிபர் திருப்திப்படுவாராயின் உரிய நபர்களுக்கெதிராக அவரினால் பொருத்தமான வரையில் வழக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட முடியும்.
விவாணம்
இவ்வேற்பாடானது முன்பிருந்த அவசரகால ஒழுங்கு விதிகளிலும் காணப்பட்டது. இவ்வேற்பாட்டின் கீழ் சட்டமா அதிபரினால் எவ்வளவு சந்தர்ப்பங்களில் ஆராயப்பட்டதெனவும் அதன் முடிவுகளுக்கு என்ன நேர்ந்ததென அறிதலும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

அட்டவணை 1
பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சம்பிரதாய ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகள் இலங்கை அரசாங்கத்தினால் 2005 டிசம்பர் 31ஆம் திகதியன்று கையெழுத்திடப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆவணமாகும்.
0 அணுவாயுத செயற்பாடுகளை அடக்குவதற்கான சர்வதேச ஒப்பந்தம்.
2005 செப்ரெம்பர் 14ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது
o சில சம்பிரதாயபூர்வமான ஆயுதங்கள் அளவுக்கு அதிகமான சேதத்தை அல்லது பாகுபாடு காட்டாத வகையில் பெரும் பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருப்பின் அவற்றுக்குத் தடை செய்தல் அல்லது கட்டுப்பாடு விதிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பான மேலதிக இராஜதந்திர விதிமுறைகள். (இராஜதந்திர விதிமுறைகள் ஐஏ குருடாக்கக்கூடிய லேசர் ஆயுதங்கள் என்ற தலைப்பிலான விதிமுறைகள்) 2004 செப்ரெம்பர் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
0 ஊழல்களுக்கு எதிரான ஒப்பந்தம்
2004 மே 11ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதி இவ் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்போது அந்த நாடு இவ் ஒப்பந்தத்திற்கு இணக்கப்பாட்டைத் தெரிவிக்கிறது என்பதையும், அன்றிலிருந்து இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படுகிறது என்பதையும் உறுதிப்படுத்துவதாக அமையும். இதன் அடிப்படையில் பல சந்தர்ப்பங்களில் தரப்பினர் இந்த ஒப்பந்தத்தின் சகல சரத்துக்களுக்கும் இணக்கப்பாட்டைத் தெரிவித்தல் அல்லது இந்த ஒப்பந்தத்தைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இந்த கையொப்பம் வெறுமனே போதியளவு ஏற்புடையதாக இருக்காது. எனவே, இன்னும் ஒரு செயற்பாடாக அங்கீகரிக்கின்றோம் என்ற பதத்தின் கீழ் இணக்கப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இந்த அணுகுமுறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் பொதுவாக ஒப்பந்தத்தின் மூலம் அதன் பொருளடக்கத்திற்கு உத்தியோகபூர்வ தன்மையை வழங்கும் செயற்பாடாகவே கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தங்களுக்கு அங்கீகாரத்தை அளிப்பதற்கான செயற்பாட்டின் குறிக்கோள் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை மேலும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்று தீர்மானிப்பதற்கும் இன்னுமொரு சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்கிறது. ஆரம்பத்தில் இதுபற்றிய பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாத நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் பங்குதாரர்களாகச் சேர விரும்பும் பட்சத்தில் அவை இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இதில் சேர்ந்துகொள்ளலாம். இவ்விதம் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பங்களிப்புச் செய்யும் நாடாக ஒரு நாடு மாறிவிட்ட பின்னர் அந்நாடு இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தாலும் மற்றும் அதை அங்கீகரித்து அல்லது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் சகல உரிமைகளையும் பொறுப்புக்களையும் அந்நாடு பெற்றுக்கொள்ள முடியும்.

Page 102
186 மனித உரிமைகளின் நிலை 2006
• சித்திரவதை செய்தல் மற்றும் கொடுரமான - மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமான முறையில் நடத்துதல் அல்லது தண்டனை விதித்தல். 1994 ஜனவரி 3ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
0 ஆட்களைக் கடத்திச் செல்லுதலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மற்றவர்களை
விபச்சாரத்தில் ஈடுபடவைப்பதன் மூலம் துஷ்பிரயோகம் செய்தல். 1958 ஏப்ரல் 15ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
0 பெண்களுக்கு எதிரான சகல விதமான பாகுபாடான செயற்பாடுகளையும்
ஒழித்துக்கட்டுவதற்கான ஒப்பந்தம். 1981 அக்ரோபர் 05ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
0 சர்வதேச ரீதியில் இராஜதந்திரிகள் உட்பட பாதுகாப்பைப் பெற்றிருப்போருக்கு எதிராக குற்றச் செயல்களை மேற்கொள்வதையும் தண்டிப்பதையும் தடை செய்யும் ஒப்பந்தம். 1991 பெப்ரவரி 27ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
0 மனிதப் படுகொலைகளைத் தடுத்தல் மற்றும் அவ்விதமான தண்டனைகளை
தடுப்பதற்கான ஒப்பந்தம். 1950 அக்டோபர் 12ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
0 பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய அல்லது பாரபட்சமற்ற முறையில் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய சில சம்பிரதாயபூர்வமான ஆயுதங்களைத் தடை செய்தல் அல்லது அவற்றின் பாவனையைக் கட்டுப்படுத்துதல். (இராஜதந்திர விதி 1, 11, மற்றும் II) 2004 செப்ரெம்பர் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
0 சிறுவர்களின் உரிமைகள் பற்றிய ஒப்பந்தம்.
1996 ஜூலை 12ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது
e கடலில் பிரயாணம் செய்வோரின் பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோதமான
செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம். 2000 செப்ரெம்பர் 06ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
e ஆட்களைப் பணயக் கைதிகளாக வைத்திருப்பதற்கு எதிரான சர்வதேச
ஒப்பந்தம். 2000 செப்ரெம்பர் 06ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
0 ஆயுதப் போராட்டங்களில் சேர்த்துக்கொள்ளப்படும் பிள்ளைகளின் உரிமைகள்
பற்றிய ஒப்பந்தத்திற்கான மாற்று இராஜதந்திர விதி. 2000 செப்ரெம்பர் 06ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது

187
பிள்ளைகளை விற்பனை செய்தல், பிள்ளைகளை விபசாரத்தில் ஈடுபடுத்துதல் மற்றும் பிள்ளைகளை ஆபாசப் படங்களை எடுக்குமிடத்து பிள்ளைகளின் உரிமைகள் பற்றிய ஒப்பந்தத்திற்கான மாற்று இராஜதந்திர விதி 2002 மே 09 அங்கீகரிக்கப்பட்டது
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பல்தேசங்களிடையே ஒழுங்கு செய்யப்படும் குற்றச் செயல் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒப்பந்தத்திற்கு மேலதிகமாக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரை தரை, கடல் மற்றும் விமான மார்க்கமாக சட்டவிரோதமாகக் கடத்திச் செல்வதற்கு எதிரான இராஜதந்திர விதி.
2000 டிசம்பர் 15 இல் கைச்சாத்திடப்பட்டது
சில சம்பிரதாயபூர்வமான ஆயுதங்களுக்கு எதிரான தடை விதித்தல் அல்லது அவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது பற்றிய ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள், மறைத்து வைத்து வெடிக்கச் செய்யும் கண்ணிவெடிகள் மற்றும் அவை போன்ற ஆயுதங்களைத் தடை செய்வதற்கு அல்லது அவற்றின் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜதந்திர விதி. 2004 செப்ரெம்பர் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பல் தேச குற்றச் செயல் அமைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்திற்கு மேலதிகமாக ஆட்களை கடத்திச் செல்வதைக் குறிப்பாக பெண்களையும் பிள்ளைகளையும் வேறு நாட்டுக்குக் கடத்திச் செல்வதைத் தடுத்தல் அடக்குதல் மற்றும் தண்டிப்பதற்கான இராஜதந்திர விதிமுறைகள்.
2000 டிசம்பர் 15இல் கைச்சாத்திடப்பட்டது
பல்தேச குற்றச் செயல்களில் ஈடுபடும் அமைப்புக்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒப்பந்தம். 2000 டிசம்பர் 15இல் கைச்சாத்திடப்பட்டது

Page 103
188
மனித உரிமைகளின் நிலை 2006
SDL_66oo6OO II
இலங்கையால் பின்னுறுதிப்படுத்தப்பட்ட
நிறுவன (L0) சமவாயங்கள்
C4
C5
C6
O7
C8
C10
C 1
C15
Ο 16
C18
C26
O29
C41
சம.இல. பெயர் தற்போதைய
இரவில் பணிபுரிதல் (பெண்கள்) gup6 Tujub 1919
ஆகக்குறைந்த வயது (கைத்தொழில்) சமவாயம் 1919
இளவயது நபர்கள் இரவில் பணி புரிதல் (கைத்தொழில்) மைவாயம் 1919
ஆகக்குறைந்த வயது (கடல்)
FLD6ru Lb 1920
வேலையின்மை இழப்பீட்டு
FLD6hTuulb 1921
ஆகக்குறைந்த வாது (விவசாயம்)
LD6TuuLb 1921
சங்கத்தின் உரிமை (விவசாயம்)
FLD6hTullb 1921
ஆகக்குறைந்த வாது (வுசஅைஅநசள ரூ ஞருவழஉமநசள) சமவாயம் 1921
இளம் ஆட்களின் மருத்துவ பரிசோதனை (கடல்) சமவாயம் 1921
பணியாளர்களின் நஷ்டஈடு (தொழில்சார்ந்த நோய்கள்) dLD6hTuub 1925
ஆகக்குறைந்த வேதனம் (இயந்திரம் பொருத்துதல்) சமவாயம் 1930
கட்டாய ஊழியம் சமவாயம் 1930
இரவு வேலை (பெண்கள்) சமவாயம் (திருத்தப்பட்டது) 1934
சர்வதேச தொழிலாளர்
பின்னுறுதிப்ப -டுத்திய திகதி
08.10.195.
27.09. 1950
26.0.1950
02:09.1950
25.04.1951
29.11.1991
2508.1952
25.04.1951
25.04.1950
17.05.1952
09.06.1961
05.04.1950
02:09.1950
நிலை
கைவிடப்பட்டது
கைவிடப்பட்டது
கைவிடப்பட்டது
கைவிடப்பட்டது
கைவிடப்பட்டது
கைவிடப்பட்டது
கைவிடப்பட்டது

C45 நிலத்தின் கீழ் வேலை (பெண்கள்)
5Lo6)ITub 1935
C58 ஆகக்குறைந்த வயது (கடல்)
சமவாயம் (திருத்தப்பட்டது) 1936
C63 வேதனங்கள் மற்றும் வேலைநேரப்
புள்ளிவிபரங்கள் தொடர்பான
D6Tuub 1938
C80 இறுதி உறுப்புரைகளின் திருத்தம்
சமவாயம் 1946
C81 Qg56) Uff(3&ng,60601 (Labour
Inspection) g-LD6 lituuLib 1947
C87 சங்கத்தின் சுதந்திரம்
ஒழுங்குபடுத்துவதற்கான பாதுகாப்பு உரிமை சமவாயம் 1948
C89 இரவு வேலை (பெண்கள்)
சமவாயம் திருத்தப்பட்டது 1945
C90 இளம் ஆட்களின் இரவுவெலை
(கைத்தெபழில்) சமவாயம் (திருத்தப்பட்ட) 1948
C95 வேதாைங்களின் பாதுகாப்பு
gup6 IITuulb 1949
C96 முன்கட்டணம் அறவிடும் வேலை
வாய்ப்பு முகவரகங்கள் சமவாயம் (திருத்தப்பட்டது) 1949
C98 ஒழுங்குாடுத்தல், கூட்டாகப் பேரம்
பேசுதலுக்கான உரிமை சமவாயம் 1949
C99 இயந்திரத்தைப் பொருத்துவதற்கான
ஆகக்குறைந்த வேதனம் (விவசாயம்) சமவாயம் 1951
C100 சம ஊதியச் சமவாயம் 1951
C103 பிரசவ பாதுகாப்பு சமவாயம்
(திருத்தப்பட்டது) 1952
20.12.1950
1805.1959
25.08.1952
10.09.1950
03.04.1950
15.11.1995
3.03.1966
8.05.1959
27.10.1983
30.04.1958
13.12.1972
05.04.1954
01.04.1993
0.04.1993
189
கைவிடப்பட்டது

Page 104
190
C105
CO6
C108
C110
Cl
C 15
C16
C131
C135
C138
C144
C 60
C182
மனித உரிமைகளின் நிலை 2006
கட்டாய ஊழியத்தினை ஒழித்தல்
FLD6. Tulub 195
வாராந்த ஓய்வு (வர்த்தக மற்றும் அலுவலகங்கள்) சமவாயம் 1957
Seafarers அடையாளப் பத்திரங்கள்
FD6Tub 1958
பெரந்தோட்ட வேலையாட்களின் தொழில் நிலைமைகள் சமவாயம் 1958
பாரபட்சம் (தொழில் மற்றும் வேலை) dLD6hTulb 1958
கதிர்வீச்சுப் பாதுகாப்பு சமவாயம் 1960
இறுதிக் கட்டுரைகளின் திருத்தம் GFL D6 Tuub 1961
ஆகக்குறைந்த வேதன நிர்ணயம் dLD6h ITILib 1970
தொழிலாளர் பிரதிநிதகள்
FLD6ub 1971
தொழில் அனுமதிக்கான ஆகக்குறைந்த வயது 1973
உலக தொழிலாளர் 6mög5 Tu6OTgög6l6ö (ILO) சமவாயத்தினை மேம்படுத்துவதற்கான மூவரிடையிலான ஆலோசனைகள் 1976
தொழிலாளர் புள்ளிவிபரங்கள்
FLD6hlstub 1985
அதிகொடுரமான சிறுவர் ஊதியத்திற்கெதிரான சமவாயம்
07.01.2003
27.10.1983
24.11.1995
24.04.1995
27.11.1998
18.06.1986
26.04.1974
17.03.1975
16.11.1976
.02.2001
17.03.1994
O1.04.1993
0.03.2001

191
SDL_6600600 III
இலங்கையினால் பின்னுறுதிப்படுத்தப்பட்ட மனிதாபிமான சட்ட dudóIFTuilds 6f
0 களத்தில் காயமமைந்திருக்கும், நோய்வாய்ப்புற்றிருக்கும் ஆயுதப்படைகளின்
நிலைமைகளைச் சீர்படுத்தலுக்கான ஜெனீவா பிரகமனம் 1949 1959 மாசி 28ல் பின்னுறுதிப்படுத்தப்பட்டது.
e கடலில் ஆயுதப்படை அங்கத்தவர்கள் காயமடைதல், நோய்வாய்ப்படுதல், கப்பல் உடைவுக்குட்படல் நிலைமைகளை சீர்படுத்துவதற்கான (Ameliotation) Gigofo) IIT &LD6)ITULILb 1949 1959 மாசி 28ல் பின்னுறுதிப்படுத்தப்பட்டது.
e யுத்தக் கைதிகளைப் பராமரிப்பது தொடர்பான ஜெனீவா சமவாயம் 1949
1959 மாசி 28ல் பின்னுறுதிப்படுத்தப்பட்டது.
e யுத்த காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான ஜெனீவா சமவாயம்
1949 1959 மாசி 28ல் பின்னுறுதிப்படுத்தப்பட்டது.

Page 105
192 மனித உரிமைகளின் நிலை 2006
GDL6l6oo6oo IV
இலங்கையினால் பின்னுறுதிப்படுத்தப்படாத சில மனித உரினைச் சாசனங்கள்
 ைசர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உரோம் நியதிச் சட்டம்
e குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேசக் கட்டுறுத்திக்கான
விருப்புரிமை பின்ைேடு 11
0 மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றங்களுக்கான பிரயோகத் தன்மையற்ற சட்டரீதியான வரையறைகள் பற்றிய சமவாயம் 1968
0 தொழில் பதவியுயர்வு மற்றும் வேலையின்மைக்கெதிரான பாதுகாப்பு
தொடர்பான ஐ.எல்.ஓ (ILO) சமவாயம் (இல.168)
e கூட்டு பேரம்பேசுதல் தொடர்பான ஐ.எல்.ஓ (ILO) சமவாயம் (இல.154)
0 சமூகப் பாதுகாப்பின் ஆகக்குறைந்த நியமங்கள் தொடர்பாக ஐ.எல்.ஒ.
(ILO) FLD6) untu ulub (26). 102)
0 புலம்பெயர் தொழிலாளர்களைப் பராமரித்தல் மற்றும் சம சந்தர்ப்பத்தை மேம்படுத்தல் மற்றும் மோமான நிலைமைகளில் உள்ள புலப்பெயர்வாளர்கள் தொடர்பான ஐ.எல்.ஓ. (ILO) சமவாயம் (இல. 143)
0 தொழிற் கொள்கை தொடர்பான ஐ.எல்.ஓ. (ILO) சமவாயம் (இல.122) 0 கிராம தொழிலாளர்களின் நிறுவனங்கள் மற்றும் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் அவர்களின் பங்கு தொடர்பான ஐ.எல்.ஓ. (ILO) சமவாயம் (இல.141)
0 பொதுத்துறைச் சேவையில் தோழில் நிலைமைகளை நிர்ணயிப்பதற்கபன நடைமுறைகள் மற்றும் ஒழுங்கமைப்பதற்கான பாதுகாத்தல் உரிமை தொடர்பான ஐ.எல்.ஓ. (ILO) சமவாயம் (இல.151)
9 அகதிகளின் நிலைமை தொடர்பான சமவாயம் 1951
0 1951 அகதிகள் சமவாயத்திற்கான பின்னேடு 1967
0 சர்வதேசரீதியில் அல்லாத ஆயுதப் பிணக்குகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புடன் (பின்னேடு 1) தொடர்புபடுகின்ற 1949 ஆவணி 12ஆம் திகதி ஜெனிவா சமவாயத்திற்கு மேலதிகமான பின்னேடு
9 சர்வதேசரீதியில் அல்லாத ஆயுதப் பிணக்குகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புடன் (பின்னேடு II) தொடர்புபடுத்துகின்ற 1949 ஆவணி 12ஆம் திகதி ஜெனீவா சமவாயத்துக்கு மேலதிகமான பின்னேடு

193
அட்டவணை V
2005 ஆம் ஆண்ட்ன் அமிப்படை உரிமைகள் வழக்குகள்
உறுப்புரை 11 சித் திரவதைக்கும் மன்தாப்மானமற்ற இழிவுபடுத்தும் நடத்துகைக்குமான சுதந்திரம் விசயலத் பீஸிக் ஜினதாச சேனதீர எதிர் சியசிங்க மற்றும் ஏனையோர் (உநீ) (அ.உ) விண்ணப்ப இல 263/2001 குறிப்பறிக்கை 01.04.2005
உறுப்புரை 12 - சட்டத்துக்கு முன் சமத்துவம்
என்.எப்.எல் எதிர் இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஏனையோர் (உ.நீ) (அ.உ) விண்ணப்ப இல 47/2004 குறிப்பறிக்கை 28.11.2005
விமல் வீரவன்ச மற்றும் ஏனையோர் எதிர் சட்டமா அதிபர் மற்றும் ஏனையோர் (உ.நீ) (அ.உ) விண்ணப்ப இல228/5 229/5 ரூ 230/5 குறிப்பறிக்கை 15.07.2005
மகிந்த ராஜபக்ஷ எதிர் சந்திரா பெர்னாண்டோ ஐ.ஜி.பி மற்றும் ஏனையோர் (உநீ) (அ.உ) விண்ணப்ப இல 387/05 குறிப்பறிக்கை 28.09.2005
திருமதி எல்.பி.பி.பிரேமரத்ன எதிர் பி.எல்.வி.எஸ்.கொபிதுவக்கு பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஏனையோர் (உ.நீ) (அ.உ) விண்ணப்ப இல 747/99 குறிப்பறிக்கை 27.01.2005
சரத் ரத்நாயக மற்றும் ஏனையோர் எதிர் நிமல் மெதிவக உப பொலிஸ் அத்தியட்சகர் (உ.நீ) (அ.உ) விண்ணப்ப இல 231/2003 குறிப்பறிக்கை O3.06.2004
பேரா.நிரிலகே சந்திரசிரி எதிர் WFZ பல்கலைக்கழகம் மற்றும் ஏனையோர் (உநீ) (அ.உ) விண்ணப்ப இல 326/2003 குறிப்பறிக்கை 06.06.2005
AEMG பெர்னாண்டோ எதிர் மக்கள் வங்கி மற்றும் ஏனையோர் (உ.நீ) (அ.உ) விண்ணப்ப இல 283/2004 குறிப்பறிக்கை 08.07.2005
லால் விமலசேன எதிர் அசோக சில்வா முகாமையாளர் மக்கள் வங்கி (உநீ) (அ.உ) விண்ணப்ப இல 473/2003 குறிப்பறிக்கை 04.08.2005
கமகே சுகத் பிரேமசந்திர மற்றும் ஏனையோர் எதிர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனையோர் (உநீ) (அ.உ) விண்ணப்ப இல 573/2004 குறிப்பறிக்கை 04.08.2005

Page 106
194 மனித உரிமைகளின் நிலை 2006
MK விஜேதுங்க மற்றும் ஏனையோர் எதிர் காலி சவுத்லேண்ட் கல்லூரி அதிபர் மற்றும் ஏனையோர் (உ.நீ) (அ.உ) விண்ணப்ப இல 612/2004 குறிப்பறிக்கை 07.11.2005
டாக்டர்.சோபிதா தேரோ எதிர் தயானந்த திசாநாயக மற்றும் ஏனையோர் (உநீ) (அ.உ) விண்ணப்ப இல 278/2005 குறிப்பறிக்கை 26.08.2005
ரத்னசிரி பி.விமலவிக்ரம மற்றும் ஏனையோர் எதிர் காலி ரிச்மண்ட் கல்லூரி அதிபர் மற்றும் ஏனையோர் (உ.நீ) (அ.உ) விண்ணப்ப இல 613/2004 614/ 2004 615/2004 616/2004 குறிப்பறிக்கை 07.11.2005
WPA பத்திரன எதிர் மக்கள் வங்கி மற்றும் ஏனையோர் (உநீ) (அ.உ) விண்ணப்ப இல 297/2004 குறிப்பறிக்கை 12.12.2005
உறுப்புரை 13 - எதேர்ச்சையாக கைது செய்யப்படுதல் தடுத்து வைத்தல் தண்மிக்கப்படுதல் எண்ணவற்றிற்கெதிரான சுதந்நிரம் மற்றும் பின்னோக்கி செயற்படும் தண்டனையைத் தடைசெய்தல் தொடர்பான சட்டவாக்கம் கணபதிப்பிள்ளை மச்சவளவன் எதிர் பிணான்பின் பொயின் ஆமி கேம்ப் OC திருகோணமலை மற்றும் ஏனையோர் (உநீ) (அ.உ) மேல்விண்ணப்ப இல 90/2003 உநீ (விசேட) இல 177/2003 குறிப்பறிக்கை 31.03.2005
உறுப்புரை 14 - கதைப்பதற்கும் ஒன்று கூடுவதற்கும் நடமாடுவதற்கான சுதந்திரம்
என்.எப்.எல் எதிர் இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஏனையோர் (உ.நீ) (அ.உ) விண்ணப்ப இல 47/2004 குறிப்பறிக்கை 28.11.2005

195
* பாராளுமன்ற சட்டழுலத்தின் பிரதிபயன்
சுனாமி (விசேட பிரிவுகள்) சட்டமூலம்இ உநீ விசேட தீர்மானம் இல.8/2005 மற்றும் 9/2005, குறிப்பறிக்கை 26.04.2005
அனர்த்த முகாமைத்துவ சட்டமூலம்இ உநீ (விதி) இல.4/2005
பகுடிவதை மற்றும் கல்வி நிலையங்களில் வேறு வகையான மீறல்களைத்
தடுத்தல் சட்டமூலம்இ’, உநீ (விதீ) இல.6/1998 7/1998
* குறிப்பிடப்பட்ட வேறு வழக்குகள்
சிட்டிசன்ஸ் டிரஸ்ட்(1), ‘சந்தி ரட்னாயக்(2), இலங்கையின் சட்ட உதவித் திணைக்களம் (3) எதிர் சட்டமா அதிபர் உநீ (விதீ) இல.8/2005 ரூ 9/2005.
ஜோசப் பெரேரா அலியஸ் புரூடன் பெரேரா எதிர் சட்டமா அதிபர் (1992) 1 SLR 199
லிலந்தி டி சில்வா எதிர் சட்டமா அதிபர் மற்றும் ஏனையோர் (2000) 3 SLR 155
கருணாதிலக மற்றும் ஏனையோர் எதிர் தயானந்த திசாநாயக தேர்தல் ஆணையாளர் மற்றும் ஏனையோர் (1999) 1 SLR 157
ஆறுமுகம் வடிவேலு எதிர் OC சிதம்பரபுரம்இ அகதி முகாம், வவுனியா மற்றும் ஏனையோர் உநீ இல 44/2002 (அஉ), குறிப்பறிக்கை 05.09.2002
ரட்னசிரி விக்ரமநாயக எதிர் அரசு உநீ விண்ணப்ப இல 58/79 பாராளுமன்ற சட்டமூலத்தின் மீதான உநீ ன் முடிவுகள் 1978-1983 volume 1 p:72
சுனில் றொட்ரிகோ எதிர் சந்தநந்த டி சில்வா மற்றும் ஏனையோர் (1997) 3 SLR 265.
சுகுமார் எதிர் OIC ஜோசப் இராணுவ முகாம், வவுனியா, மற்றும் ஏனையோர் (2003) 1 SLR 399.
விஸ்வலிங்கம் மற்றும் ஏனையோர் எதிர் லியனகே மற்றும் ஏனையோர் (1983). 2 SLR 311
சுரஞ்சனி மாறப்பன எதிர் இலங்கை வங்கி மற்றும் ஏனையோர் (1991) 3 SLR 156
வீரவன்ச எதிர் சட்டமா அதிபர் (2000)1 SLR 387 பெரேரா எதிர் எதிரிசிங்ஹ (1995) 1 SLR 148, 156
வோகர்ஸ் & சன்ஸ் எதிர் குணதிலக மற்றும் ஏனையோர் (1978-79-80) A SLR 231

Page 107
196 மனித உரிமைகளின் நிலை 2006
கந்தையா எதிர் அபேகோன் 4 SLR 96
ரத்வத்த எதிர் காணி அமைச்சர் 72 NLR 60
குணசேகர எதிர் காணி அமைச்சர் 65 NLR 119
கிங்ஸ்லி பெர்ணாண்டோ எதிர் தயாரத்ன (1991) 1 SLR 129
குணவர்தன எதிர் மாவட்ட அலுவலர் 73 NLR 333
பிரேமசந்திர எதிர் ஜயவிக்ரம 1994
குணசேகர எதிர் A.G.A குருநாகல் 73 NLR 263
மானல் பெர்னாண்டோ எதிர் காணி அமைச்சர் (2000) 1 SLR 112
சூரியபண்டார எதிர் டி/ப்ரன்ஸ் 73 NLR 134
நெவில் பெர்னாண்டோ எதிர் லியனகே மற்றும் ஏனையோர் (1983) 2 SLR 214
லீடர் பப்லிகேஷன்ஸ் எதிா ஆரிய ரூபசிங்ஹ (2000) 1 SLR
பிலிமோரியா எதிர் காணி அமைச்சர் (1978-79) 1 SLR
கமதிகே எதிர் சிறிவர்தன மற்றும் ஏனையோர் (1988) 2 SLR 384
எதிரிசூரிய எதிர் நவரட்ணம் மற்றும் ஏனையோர் (1985) 1 SLR 100
நரேந்திர குமார் எதிர் செய்யது மற்றும் ஏனையோர் (2000) 1 SLR 256
னுச.இஷாந்தி குணதிலக எதிர் அட்மிரல் H.C.A.C. திஸ்ஸர இல.76/2001 இல 366/99
H.S. வனசிங்ஹ எதிர் பேராதனைப் பல்கழலக்கழகம் மற்றும் ஏனையோர் மே.மு இல 2185/2004
நெஸ்லே லங்க்கா எதிர் நுகர்வோர் அரிகாரசபை மற்றும் ஏனையோர் 2005 (2) ALR
குசுமாவதி எதிர் A.D.S. பேருவல மே.மு இல 1104/03
பந்துல எதிர் அல்மேதா மற்றும் ஏனையோர் (1995) 1 SLR 309 WK.C. பெரேரா எதிர் எதிரிசிங்ஹ (1995) 1 SLR 112

97
* ஐ.நா மனித உரிமைகள் குழுவின் வழக்குகள்
ஜெகதீஸ்வர சர்மா எதிர் இலங்கை (தொலைத் தொடர்பு இல.950/2000) CCPR/C/78/D/950/2000,31/07/2003
ஜயலத் ஜயவர்தன எதிர் இலங்கை (தொலைத் தொடர்பு இல.916/2000) CCPR/C/75/D/916/2000,26/07/2002
விக்டர் ஐவன் எதிர் இலங்கை (தொலைத் தொடர்பு இல.909/2000) CCPR/ C/81/D/909/2000,26/08/2004
நல்லரத்னம் சிங்கராசா எதிர் இலங்கை (தொலைத் தொடர்பு இல.1033/ 2004) CCPR/C/81/D/1033/2001, 26/08/2004
டொனி மைகல் பெர்னாண்டோ எதிர் இலங்கை (தொலைத் தொடர்பு இல.1189/ 2003)

Page 108


Page 109
இலங்கை மனித உரி
2005 தை முதல் மார்கழி வரையிலா நிலை பற்றிய முழுமையான கண்ணே
இலங்கையின் மனித உரிமை பொருளடக்கமானது பின்வரும் அத்தி
2005 இல் இலங்கையின் மனித ஒரு கண்ணோக்கு
கடற்கோளின் (சுனாமி) மனித உரி மனித உரிமைகளின் நீதிமுறைப் அவசரகால ஒழுங்கு விதிகள்
சட்டத்துக்கு 3. கின்சி கொழும்பு இலங்கை
Tel 2 Tele Fax : 2 E-mail 1 Website : W
ISBN 978, Printed by Ka
 

மகளின் நிலை 2006
இலங்கை மனித உரிமைகளின்
566 2006 இன்
ாயங்களைக் கொண்டுள்ளது.
ரிமைகள் நிலைப்பாடு பற்றிய
மைகள் மீதான விளைவுகள்
ாதுகாப்பு
தம் சமூகத்துக்குமான அறநிலையம் ரெறஸ் 8
691228/.2684.845
686843
st(a)eureka.lk Tww.lawandsocietytrust.org
-955-1302-11-5 runaratne & Sons (Pvt) Ltd.