கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயும் பிள்ளையும்

Page 1


Page 2

தாயும் பிள்ளையும் )
வைத்திய கலாநிதி ச. இராசரத்தினம் அவர்கள் (இலங்கை அரசினர் வைத்தியசேவையிலிருந்து ஒய்வுபெற்றவர்)
(ASSociate Momber, The Ceylon Academy of Postgraduate Medicine)
எழதியது.
嫩
議
songaợntoề 皺
யாழ்ப்பது 畿
வெ ை ཏུ་
[ ġ i sibt L M 1 ħ LI LI L | |
மீளவாய்ந்து விரிவாக்கப்பட்டது.
鬱
1974
118889
பதிப்புரிமை ஆசிரியருக்கு [ si“ièa) g5u ) T 5-00.
c \\

Page 3
5606) : பேற்றுப் பேணிவளர்த்த
தாய்க்கும் தந்தைக்கும்
 
 

முன்னுரை
முதற்பதிப்பு 1
சிசுமரணத்தின் எண்ணிக்கையைக் குறித்துப் பலவருடங்களா கக் கவலைப்பட்டுவந்த தமியேன், எங்கள் சமுதாயத்திற்கு ஒரு சிறுதொண்டைச் செய்வதாகுமென்றெண்ணிக் கர்ப்பிணிகள் விஷய மாகவும், குழந்தைகளைப் பேணிவளர்க்கும் விஷயமாகவும் தமிழி லும், ஆங்கிலத்திலுமுள்ள சில வைத்தியநூல்களை ஆதாரமாகக் கொண்டும், அனுபவப்பட்டுள்ளவர் வாய்மூலம் கேட்டும், எனது அற்ப அனுபவத்தையொட்டியும் " தாயும் பிள்ளையும் " என்ற இச் சிறிய நூலைத் தமிழ்வசன நடையில் ஒருவாறு எழுதி முடித்தேன் இப்படிமுடித்தும், இந்நூல் பூரணமானதோ, தமிழ்த்தாய்மாரின் அங்கீகாரத்தைப் பெறுமோ என்ற சந்தேகத்தினுல் இதனை அச் சிடுவதற்குச் சிலகாலந் துணிந்திலேன். இதனை வெளியிடத்தான் வேண்டுமென்ற ஆசைமேலீட்டினுல் விஷயமறிந்த பெரியார் சில ருக்கு இந்நூலின் கையெழுத்துப் பிரதியைப் பார்க்கும்படி கொடுத் தேன். இந்துசாதனம் பத்திராசிரியரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப்பண்டிதருமாகிய பூரீ மா. வே. திருஞானசம்பந்தப் பிள்ளையவர்களும் இந்நூலின் கையெழுத்துப்பிரதியைப் பார்த்த வர்களுள் ஒருவராவர். அவர்கள் என் கையெழுத்துப் பிரதி யைப் பார்த்து அங்கீகரித்ததோடமையாது இப்படியான ஒரு சிறுபுத்தகம் தமிழ்ப்பெண்மணிகளுக்கு இன்றியமையாததெனவும், இதனைத் திருத்தி அச்சிட்டுப் புத்தகமாக்கும் விஷயத்தில் தாம் செய்யக்கூடிய உதவிகளை எல்லாம் மனப்பூர்வமாகச் செய்வதாக வும் என்னை ஊக்கப்படுத்தினர். அவர் காட்டிய ஊக்கத்தினல் உந்தப்பெற்றே இதனை அச்சிடத் துணிந்தேன். பண்டிதரவர்கள் இவ்விஷயத்தில் தமது வாக்கை நிறைவேற்றி எனக்குப் பெருந்துணை புரிந்ததின் நிமித்தம் அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி கூறுகின் றேன். மேலும் இப்புத்தகத்தை அச்சிட்டு ஒருபிரதியை அனுப்பி மதிப்புரையொன்று எழுதியுதவவேண்டுமெனக் கேட்டபோது, என் வேண்டுகோட்கியைந்து அங்ங்ணம் எழுதி உதவியவராகிய டக்ரர் S. L. (56)Té5) 657 b F. R. C. S. (Ed.) D. T. M. & He (London) 96)ris ளுக்கும், இப்புத்தகப் பிரதியைத் தெளிவாகவும், அழகாகவும் அச்சிட்டுதவிய யாழ்ப்பாணம் சைவப்பிரகாசயந்திரசாலை மனேஜ ரவர்களுக்கும் ஸ்துதி கூறுகிறேன். டக்ரரவர்களும், பண்டிதரவர் களும் இந்நூலைப்பற்றி எழுதி உதவிய பாயிரங்களை இதன்கண் நன்றியறிதலோடு வெளியிடுகிறேன்.
இச்சிறிய நூல் தமிழ்ப்பெண்மணிகளுக்குப் பெரிதும் பயன்படு மென்பதே எனது நம்பிக்கை. hospital Bungalow, ச. இராசரத்தினம்
Watawa ia,
25-4-33,

Page 4
Preface
(First Edition 1934)
This small handbook has been written with a view to educating the Tamil speaking public in the functions and responsibilities of Motherhood. It should prove of great value to young inexperienced mothers as it teaches them the elementary facts and physiological processes relating to Child-birth.
Although there are several such books in the English Language there are very few books of this nature in Tamil, and this is the first Tamil Book
of its kind written by a Ceylonese author.
Ignorance and fear are associated with Child-birth and this book should do much to dispel such fears and teach prospective mothers how to look after themselves during pregnancy, and when to seek suitable I ante-natal advice and treatment.
This book deserves to be widely circulated and if the advice given is followed, it should help to
reduce unnecessary suffering and loss of life
S LI NAWA RATNAM Medical Superintendent F. R. C, S, (Ed) lying-in-home and Lecturer in Midwifery D. T. M. & H. (Lond)
Ceylon Medical College.

0SSLSLYL0SeSLSLSee L eSeSJeSee SLLLSeYYSSJSeSL SSeLSLSeLSeSLSLS0SYLLLS eSYLSLS YLeeSYJSSLJeYJ eeLLeSLLLSe LSLLSeSSLLLLS S
அன்று ۔۔۔۔۔۔
பேற்று வைத்தியத்தில் ஒப்பாரும் மிக்காருமில்லா ராய்த் திகழ்ந்தவர்.
குணக்குன்று - சற்குரு வைத்தியகலாநிதி S, L, நவரத்தினம்
*-K-K>Esk-Kak-K-K-P-K:ExK> K-Kakake K-Kak> Kız

Page 5

கோழும்பு பிரசவசாலே அதிகாரியும் இலங்கை வைத்தியக் கல்லூரி விரிவுரையாளருமான டாக்டர் எஸ். எல். நவ ரத்தினம் அவர்கள்
எழுதிய முகவுரையின் தமிழாக்கம்
தாய்மையின் கடமைகளையும் பொறுப்புக்களையும் தமிழ்மக்க ளுக்குச் செவ்வனே அறிவுறுத்தும் நோக்கமாகவே இச்சிறுநூல் எழுதப்பட்டது. மகப்பேற்றின் அடிப்படை உண்மைகளையும், உடற். கூற்று நிகழ்ச்சிகளையும் இந்நூல் விளங்கவைப்பதால் அனுபவம் குறைந்த இளம் தாய்மாருக்குப் பெரிதும் பயன்பயக்கும் என்று திடமாகக் கூறலாம்.
ஆங்கிலத்தில் இத்தன்மைய நூல்கள் பலவுண் டெனினும் தமி ழில் மிகச்சிலவே உள. இலங்கையர் ஒருவரால் இத்துறையில் எழுதப்பட்ட முதலாவது தமிழ்நூல் இதுவேயாகும்.
கருப்பவதியில் அறியாமையும் மனப்பயமும் இணைந்தே இருக் கின்றன; அவற்றை அகற்றி மகப்பேற்றை நோக்கிநிற்கும் மங்கை யர் தம்மை எங்ங்ணம் கவனித்துக்கொள்ளவேண்டும், எவ்வெக் காலங்களில் வைத்தியரின் ஆலோசனையையும், சிகிச்சையையும் தேடிக்கொள்ளவேண்டுமென்றும் தெளிவாகக் கற்பிக்கின்றது,
இந்நூலில் காணப்படும் புத்திமதிகள் நன்கு கடைப்பிடிக்கப் படின் தமிழ்த்தாய்மாரின் அணுவசிய துயரங்களும், உயிர்ச்சேதங் களும் பெருமளவில் குறையும் - குறைக்க இந்நூல் மிகவும் உத வும். எனவே பலரும் படித்துப் பயனடையக்கூடியதாய்ப் பெரு மளவில் இந்நூல் விநியோகிக்கப்படவேண்டும்.
8. L. நவரத்தினம்
F. R. C. S. (Ed). D. T. M. & H. (Lond)

Page 6
அணிந்துரை முதற்பதிப்பு)
" தாயும் பிள்ளையும் ' என்னும் இந்நூலின் கை எழுத்துப் பிரதியை, இதன் ஆசிரியராகிய பூரீச . இராசரத்தினமவர்கள் தாம் எம்மிடத்தில் தமிழ்ப்படித்துள்ள தொடர்புபற்றிப்போலும் பார்த்து அச்சிட்டு வெளியிடத் தக்கதானுல் பரிசோதித்து உத வும்படி அனுப்பியிருந்தார். கை எழுத்துப் பிரதியைப் படித்துப் பார்த்துவிட்டு இப்படியான ஒரு தமிழ்நூல் தமிழ்மகளிருக்கு ஆவசி யகம் வேண்டுமென்றும், அச்சிடும் விஷயமாக நான் செய்யக்கூடிய திருத்தங்கள் உதவிகள் முதலியவற்றைச் செய்கிறேனென்றும் அவருக்கு வாக்களித்தேன். அதன்படி இந்நூலைப் பரிசோதித்து அச்சிடும்பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.
எமதுநாட்டிலே சென்ற பலவருடங்களாகப் பெண்பாலார் கர்ப்ப வதிகளாகும்போது தங்கள் மூதாட்டியர் கைக்கொண்டுவந்த சுகா தாரத்துக்குரிய பழையமுறைகளைக் கைநழுவவிடுத்து நவநாகரீக மான மேலைத்தேச முறைகளைக் கைக்கொள்வதினலேயே, இங்கே வருஷம்தோறும் பிரசவ காலத்திற் பெண்களின் மரணமும், பிறந்த சிசுக்களின் மரணமும் அதிகப்படலாயின என்ற ஒரு எண்ணம் என்மனதிற் குடிகொண்டிருந்தது; பூரீ இராசரத்தினம் எழுதிய இந் நூல், நான்கொண்ட எண்ணத்தைத் திடப்படுத்தி, நவநாகரீக முறைகளை எல்லாம் இங்குள்ள தமிழ்ப்பெண்கள் ஒழிக்கச்செய்து, எங்கள் பழைய பூரணமான பிரசவகால முறைகளையே அநுசரிக் கும்படி தூண்டுவதாகும். இந்நூல் அற்ப தமிழ்க்கல்வியை உடைய வர்களும் படித்து விளங்கக்கூடிய இலகுவான நடையில் எழுதப் பெற்றுள்ளது. இந்நூல் இல்லறத்துக்குரிய தமிழ்ப்பெண்கள் ஒவ் வொருவரும் ஏற்றுப் படித்து இதன்படி நடக்கவேண்டுமென்ப தோடு, இதனைப் பெண் வித்தியா சாலைகளில் மேல்வகுப்புப் பிள்ளை களுக்கு ஒரு பாடமாக நியமித்தல்வேண்டும் என்பதும் எனது விருப்பம் ,
பூரீ இராசரத்தினம் தமிழ்மகளிருக்கு ஆற்றிய இத்தொண்டைப்
பெரிதும் பாராட்டுகிறேன்.
ம. வே. திருஞானசம்பந்தன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி,
, 4 3 مطے کہ سے 10

மதி ப்புரைகள் (முதற்பதிப்பு - 1934)
லாநிதி 1 ஐசாக் தம்பையா ), D. எழதுவது
*
Your little book is a very useful one. It cannot of course be put into the hands of everybody. Like English and French books of the kind your book has to be used with discrimination. The best way to have it recognised is to work through the D. M. & S. S. Tamil Medical students should read the book, also Nurses in Hospitals and generally senior students (boys and girls) in schools.
I wish your little book a very wide circulation.
T. 18Sat, Thambiah fehang House,
laffina, 2-8-1934,
if ($
, , , , , , , , , , , , , , , , , , , , , , , நமது நாட்டுப் பெண் மக்கள் கர்ப்பமாயிருக்குங் காலத்திலும், பிரசவ காலத்திலும், பின்னரும் நடந்துகொள்ள வேண்டிய முறைகளையும், பிள் ளே வளர் க் கும் முறையையும் இன்னுேரன்ன பிற அரிய விஷயங்களையும் நுட்பமாக எடுத்து விளக்குவது; தமிழில் முதன்முதல் இவ்விஷயமாக வெளி வந்த நூல் இதுவேயாகும். இல்லறத்துக்குரிய தமிழ்ப்பெண்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கத்தக்கது ',
24-5-1°ö4, * இந்துசாதனம்
' , , , , , , , , , சிசுக்களே எவ்வாறு பாதுகாப்பது என்பது
பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது , , , , , , , , , ' 24-5-1934 * sify GдJ i o

Page 7
ܚ ܲ8 ܚܢܢ .
1 . . . . . . . . . இச்சிறிய நூல் தமிழ்ப் பெண் மக்களுக்கு மிக வும் அவசியமானது . . . . . . . . . . இதில் கருப்பவதிகளுக்கும் சிசுக்களுக்கும் வரும் சில நோய்களும் பரிகாரமுறையும் நன்கு எழு
தப்பட்டிருக்கின்றன; - , , , , , , , , , , '
邬0-5-I9ö4。 * சோதிட பரிபாலினி
' , , , , , , , , , , , , ஒவ்வொரு குடும்பத்திலும் கைவசமிருக்க
வேண்டியது அவசியமாகும் ',
ჭ (წთ 1 9 ჭ4 ஈழகேசரி
“. . . . . . . . . We welcome the publication which has received the appreciation of Dr. S. L. Navaratnam, Lecturer in Midwifery at the Ceylon Medical College and Wish that village Committees in the province encourage the circulation of the booklet to secure a Wide diffusion of knowledge Cn matters relating to the responsibilities of motherhood'. 31-5-1934, * Hindu Organ

முன்னுரை (இரண்டாம் பதிப்பு)
பிள்ளைப்பேற்றுடன் தொடர்பான பலவிஷயங்களும் இன்றும் பெரும்பாலார்க்கு மறைபொருட்களாகவேயிருக்கின்றன. தாயான வர்களும்கூட முதியோர்கள் சொல்லும் ' குளறுபடிகளையே ' நம்பி அவதிக்குள்ளாகின்றனர்; கல்விகற்பிப்பதையே தொழிலா கக்கொண்ட கன்னியரில்கூட 95 விகிதமானுேர், " இச்சிறுவிஷயம் தெரியாதோ' என அதிசயிக்கக்கூடியதாகக் கதைப்பார்கள். காரணம் - இப்பெண்களுக்கு இவ்விஷயம் சம்பந்தமான நூல்கள் கிடைப்பதில்லை, வாசிகசாலைகளிலும் கிடைக்காது. வாசிக்கவும் மற்றவர்கள் தங்களைத் தரக்குறைவாய்க் கணிப்பார்களோவென்ற பயம் தடுத்துவிடுகிறது;
மேல்நாடுகளில், ஆங்காங்கு மகப்பேற்று நிலேயங்களை நிறுவி, கர்ப்பிணிகளுக்குக் கருவுற்ற காலம் தொட்டுத் தாய் தன் பால் மறக்கவைக்கும் காலம் மட்டும் தேவையான உதவிகள் யாவும் செய்துவருகின்றனர். பேற்றே டொட்டிய அறிவுரைகளே பெரும் பங்கைப் பெறுகின்றன. இங்கும் மகப்பேற்றில்லங்களும், வைத் தியசாலைகளும், அறிவுரை இல்லங்களாயும் சாலைகளாகவும் மாறு தல் வேண்டும்.
எத்துறையிலும் முன்னுேடியாகத் திகழும் சோவியத் ரஷியா வில் கடைசி இரண்டுமாதங்களும் கர்ப்பவதிகளைக்கூட்டி வகுப்புகள் நடத்துகிருர்கள். ஈனுதல் ஒர் இயற்கை அமைப்பு என்பதை வற் புறுத்திக்கூறி, பெண்ணில்நேரும் மாறுதல்கள் அனைத்தையும் விரித்து விளக்கி, பேற்ருேடொட்டிய வேண் டாப் பயத்தைப்போக்கி, தீங்கு கள் ஏற்பட நியாயமே இல்லையெனத் தெளிவாகக் காட்டி நோவே இல்லாது பெறலாமென்று போதிக்கிருர்கள். இவ்விரண்டு மாதங் களிலும் ஒரு திட்ட அடிப்படையில் நாலுவகுப்புக்கள் நடக்கும். எங்கள் நாட்டிலோ வைத்தியர் இந்நோக்கமாய் மிகவரிதாகவே வாய் திறப்பார்கள். ' நோவர வா, பெற்றதும் போ ! ' என்ற மிகச்சுருங்கிய அடிப்படையில் அலுவல்கள் நடக்கும், ' விளங்க வும் வைத்தல் அவர்கள் கடமை ' என்ற கூக்குரல் எழவேண்டும்; அறியாமை அகலவேண்டும் இத்துறையில்,
பேற்றுநோவை உணரவைக்கும் நரம்புகள் நடுமூளையில் மேற் பக்கமாகவேயிருக்கின்றன. பேற்றுநேரம் " நோவே உணராது பெறச் சில சுவாசிக்கும் முறைகளை ரஷியாவில் கற்றுக்கொடுக் கிருர்கள். சுவாசத்தின்மூலம் எப்படி நாம் நினைத்ததும் நடுங்கச் செய்யும் அந்தப் பேற்றுநோவை இல்லாது செய்யலாம் என்று மனம் திகில்படுகிறதா ? நல்லது பா ரு ங் கள்! மற்ற முன்

Page 8
سے 10 سے
செல்லும் மக்கள் சீனுவில் அங்கும் இங்கும் சில குறிப்பிட்ட இடங் களில் ஊசிகளைச் சுழற்றி ஏற்றி (Acupuncture) வயிறுபிளந்து பிள்ளை எடுக்கும் அந்தப் பெரும் அறுவைச் சிகிச்சையையே அறிவை மயக்காது, நோவை உணர்த்தாது சீனவைத்தியர்கள் செய்கிருர் கள்: வைத்தியமேதைகளுக்கும் விஞ்ஞானப் புலிகளுக்கும் இது எப் படி நேருகின்றது என்பது பெரும் புதிராகவேயிருக்கின்றது. அந் நாட்டின் பழையமுறை அது. எந்நாட்டின் புதியமுறைகளிலும் இது சிறந்ததென எடுக்கப்படும் நிலையிலிருக்கின்றது இன்று, தமி ழர் காதுகளைத் துளைத்தார்கள் விதைவீக்கத்தைத் தடுக்க; குன மாக்க ஒயாது இடையிடைவரும் மாருத வலிப்பைப் போக்க (Epiepsy) நெஞ்சிலும் உச்சியிலும் தீகொண்டு சுட்டார்கள் ! அந்நியரின் ஆதிக்கத்தில் அவர்களின் பண்பாட்டில் ஊறியவர்க ளின் பரிகசிப்பால்போலும் இவை கைவிடப்பட்டன. இந்த அக் கியுபங்சரின் வெற்றியைப் பார்க்கும்பொழுது இந்தப் பழந்தமிழர் களின் முறைகளிலும் ஏதோ இருந்துதானிருக்கவேண்டுமென்று படுகிறதன்ருே ! நம்பமுடியாதன நிகழ்கின்றன ! இதுமட்டோ ! * மூல முளைகளை ' அறுவையில்லாது, இரத்தம் பெருகாது நூல் கொண்டு கட்டி, தொப்புள்கொடி காய்வதுபோல் காயவைத்து விழச்செய்தார்கள் இன்றும் இம்முறை இடையிடை தமிழ்வைத் தியர்களால் கையாளப்பட்டு வருகின்றது. செய்கை நியாயத்துக் குட்பட்டது. செய்யும் முறையோ சீருள்ளதென்று சொல்வதற் கில்லை. ஏற்புநோய் ஏற்படாது எப்படிப் பாதுகாக்கிருர்களோ அதிசயம் ! ஆணுல் ஏற்புவலியால் நோயாளர் இறந்து தொடரும் விளக்கங்களால் ' பரிகாரிமார் ' கோடேறியதாய்த் தெரிய வில்லையே இவ்வைத்தியத்தைத் தொடரும் உபத்திரவங்களே அனுபவித்தவர் எடுத்துக்கூறக் கேட்டு மிகவும் நான் மனம்தளர்ந்த துண்டு. கத்திகளால் இம்முனைகளைக் கத்தரித்தெறியும் அறுவைச் சிகிச்சை நிபுணர்கூட இந்த முறையை ஏற்றதென்றுகூறிப் பெருமள வில் மேற்தேசங்களில் கையாண்டும் வருகிருர் கள் இன்று. தமிழ் நாட்டில் ஒரு பெரிய தனியார் வைத்தியசாலையிலும் இம்முறை நடைமுறையிலிருக்கின்றது. புகழ்பெற்ற மூலவைத்திய நிபுணர் திரு. அலன்பார்க்ஸ் இம்முறையை ஆதரித்து எழுதுகிருர் (Mr. Alan Parks Surgeon, London Hospital, in a letter to the Editor "Practitioner) இலங்கையிலும் இம்முறை என்ருே ஒருநாள் ஏற் கப்பட்டேதிரும்; திரு. அலன்பாக்ஸின் கடிதமும் வேறு ஆதாரங் களும் அரசினரின் கவனத்துக்குச் சிலகாலத்துக்குமுன் என்னுல் கொண்டுவரப்பட்டன. கத்தியின்றி, நோவின்றி, இரத்தப் பெருக் கின்றி, செலவின்றி ஆஸ்பத்திரிப் படுக்கையே தேவையின்றி வெளி நோயாளராயே இச்சிகிச்சையைக் கொடுக்கலாம் என்று எழுது

6)(pri LTälli ()) 3,8rgi F. R. C. S. (Rubber Band treatment for Piles. Antiseptic September 1970) ܡ ܢ
தமிழன் கையாண்டமுறை ஆஸ்பத்திரிச் சூழ்நிலையில், நவீன ஆயுதங்களின் உதவியுடன் இன்று ஏற்கப்பட்டு நடைமுறையிலிருக் கிறதா யின் நாம் பெருமையடையவேண்டியதொன்றன்ருே ? எதை யும், எங்கிருந்து அதுவரினும், யார் யார் வாய்க்கேட்பினும், தூக்கி லிட்டு, ஆராய்ந்து, உண்மையறிந்து, நன்மைபயப்பனவென்முல் ஏற்பதன் ருே உண்மை முன்னேற்றத்திற்கு முதற்படி ?
தமிழ்நாட்டரசு தமிழ் ஆக்கம் செய்வித்த சிறந்த ரஷிய Ulf GorrainSei (Obstetrics and Gynecology by A. Kaplan) gaoful தமிழில் தெளிய தமிழாக்கம் செய்த தமிழ்ப்பெண்மணி, டாக்டர் (குமாரி) ந. மணிமேகலை தமிழர் கைக்கொண்ட சிறு சிறு வைத் தியங்களை ஆங்காங்கே கோட்டுக்குள் கொட்டி அகமகிழ்வதைக் கண்டு யானும் பெரிதும் மனமகிழ்ந்தேன். இதுமட்டோ ? பாற் கஞ்சிக்குப் பருப்பிட்டாற்போல், அகநாநூறு, திருமுறைகள், திரு வள்ளுவர் திருமொழிகளிலிருந்தும் பொறுக்கிப்போட்டு எங்கள் மூதாதைகளுக்கும் இவை தெரிந்திருந்தனவென்று இனிமையாய் இடையிடை நினைப்பூட்டுகிருர் ! எங்கள் ஈழநாட்டிலோ தப்பித் தவறி எதையும் சொன்னூல், எழுதினல் ' என்ன ஆயுர்வேதம் கற் பிக்கிறீர் ' என்று ஏளனம் செய்கிருர்கள் ! இந்தநிலை மாறவேண் டும். குரைத்தாமரை இலையை அவித்துப் பேதியாய்க் குடித்தால் அது தமிழ்மருந்து; அதே இலை 1 செனக்கொட், பேர்சனேயிட்' ( Senakot, Pursenid) என்ற போர்வையில் குளிகைகளாய் மேல் நாட்டிலிருந்துவந்தால் அவை மேல்நாட்டு வைத்தியம் ! இப்படி எத்தனையோ தமிழ் மருந்துகள் " இங்கிலிஸ் மருந்துகளாய் மாறு கின்றன. ஆயுர்வேதம் "ஆணுவும் கல்லாதவன் நான். ஆனல் மருந்துகளுக்கும், வைத்தியப் படிப்புக்கும் வேலிபோட்டுப் பிரிக் கும் காலம் பேர்கவேண்டும் என்று மனமார நினைக்கிறேன். கலந்த உறவு எங்கு ஒரிடத்தில் வேண்டுமாயின் அது வைத்தியத்துறையிற் தான். ரஷியப் பேராசிரியர் நிக்கலயேவ் (Prof Nikolayey) தான் இந்திய பழைய வைத்திய நூல்களிலிருந்து அதிகமறியவந்ததாய் தருணம் வாய்க்கும்போதெல்லாம் பெருமையாய்க்கூறுவர். (U.S.S.R. Embassy Bulletin of 29-4-74 Via Health June 74) egy Gás வீட்டில் நோயுற்ற அக்காவைப் பார்ப்பதற்குக் காற்சட்டைமாட்டி ரைகட்டிச் சென்ற டாக்டர்களும் அந்நாட்களில் இந்நாட்டிலிருந் தனர் ! எதுவெனிலும் மேல்நாட்டிலிருந்து வருவது உகந்தது என்றநிலை மிகமெதுவாய் மாறிவருகிறது; அடிமைத்தனம் நெஞ் சில் உறையவிடக்கூடாது. எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறேன் மன்னிக்கவும்.

Page 9
ரீஷியாவில் கர்ப்பமுற்றநாட் தொடங்கிப் பெண்கள் பெறும் சலுகைகள் பலப்பல. வேலைசெய்யும் பெண்களுக்கு அந்நாள் தொடங்கி பெற்றுப் பிள்ளைக்குத் தன் பால்மறப்பிக்கும் காலம் வரை இரவுவேலை இல்லை. நாலாம் மாதத்திலிருந்து காலம் மீறிய (0Wertime) வேலை இல்லை. பேறுகால விடுதலை 112 நாட்கள்; 56 நாட்கள் பேற்றுக்கு முன்பும், 56 நாட்கள் பேற்றுக்குப் பின்பும், தேவைநேரின் இத்துடன் மூன்றுமாதகால சம்பளமில்லாத விடு தலையுமுண்டு, வேலைத்தலங்களில் பிள்ளையைப் பராமரிக்கச் சகல வசதிகளும்கூடிய இல்லங்களுண்டு. தாய்க்குப் பாலனைப் பார்க்க வும், பாலூட்டிப் பராமரிக்கவும் மூன்றுபணித்தியாலங்களுக்கு ஒரு முறை அரைமணித்தியால ஓய்வுமுண்டு. தாய் தன் முலைப்பாலைப் பெற்று ஒருவருடம் முடியும்வரை முற்ருக மறப்பிப்பதில்லை; இந் தச் சலுகைகளெல்லாம் சீரிய நீண்டகால நோக்குடனேயே கொடுக் கப்படுகின்றன. முதற்தர (A1) நாட்டை உருவாக்குவதே அந் நல்நோக்கம். இச்சலுகைகள் தாய் இந்த நொந்தகாலத்தில் தனக்குத் தேவையான ஒய்வெடுக்கவும், மகப்பேற்று இல்லங்க ளுக்குத் தவழுது செல்லவும், தேவையாய நல்ல உணவுகளைத் தேடி உண்ணவும் உதவுகின்றன, அறியாமையோடு இல்லாமையால் இன்று வாடும் நாடுகளின் மக்களின் மக்கள் என்னுய உருவாய் உருவாகுவார்களோ இருபதுவருட கால எல்லையில் இவை எல்லா வற்றின் விளைவுப்பொருளாய் முடிவில் மிளிர்வது திடகாத்திரமான சேய், இச் சேய்களே பிற்கால நாடு; இதையுணர்ந்து எந்நாட் டரசும் செயல்படவேண்டும். (மேற்கூறிய உதவிகள், சலுகைகள் மற்றும் விபரங்கள் யாவும் " மகப்பேறும் மாதர்நோயும் ' என்ற தமிழாக்கநூலிலிருந்து பெறப்பட்டன என்பதை நன்றியறிதலுடன் வெளியிடுகிறேன்.)
இளம் பெண்கள் இந்நூலை வாசிக்கவேண்டும். கர்ப்பமுற்றிருக் கும்போதும், பின்பும் திரும்பத் திரும்ப வாசிக்கவேண்டும். காகித விலையுயர்வால் மலிவான பதிப்பாய் விலையாக்க முடியாததுபற்றிப் பெரிதும் கவலையுறுகின்றேன். இந்நூலை வேண்டவும், வாசிக்கவும் வசதிகிடைக்காத சகோதரிகளுக்குத் தருணம் வாய்க்கும்தோறும் வாசித்தறிந்தவர்கள் வாய்விட்டுக்கூறிப் பேறுபற்றி நிலவும் அறி யாமையையும், ஆதாரமற்ற வீண்பேச்சுக்களையும் போக்கவேண்டும். எப்படி வாய்வாயாய் அவை பரவி நிலைத்துநிற்கின்றனவோ அப் படியே இந்நூலில் காணப்படும் உண்மைகளும் நல்லறிவுரைகளும் வாய்வாயாயும் பரவி உள்ளங்களில் நிலைக்கவேண்டும்.
பகவான் படைப்பில் அழகு ஒழுகாதன ஒன்றுமேயில்லை. அவை பற்றியறியவோ பேசவோ வெட்கப்படுவதே வெட்கம் நோயைத் தவிர்க்க, நல்லதோர் சேயை உருவாக்க, இன்னலின்றிப் பெற் றெடுக்க, நல்லமுறையில் பெற்றபிள்ளையைப் பேணிவளர்க்க இச்

பிக்கை. சிறுகவேனும் அப்பெரும் பணிகளேயாற்ற இந்நூல் உதவு மாயின் எனது நாற்பத்தேழுவருட வைத்தியப் படிப்பும், வைத் தியப்பணியும் அவைகளினுல்பெற்ற அறிவும் அனுபவங்களும் வீணுகாது பயனுடையதாய் முடிவடைகிறது என நம்பி, தோன் முத் துணையாய் நிற்கும் பரம்பொருளைப்போற்றிச் சாந்தமடைவேன். இப்பதிப்பு பலவருடங்களுக்கு முன்பே வெளிவந்திருக்கவேண் டும்; அரசசேவையிலும், பின்பு தனியார் துறையிலும் ஒய்வு காணுது வைத்தியப்பணியில் ஈடுபட்டிருந்தமையால் முன்பதிப்பை மீளவாயவும் மிகவேண்டியவைகளைப் புதுக்கச் சேர்க்கவும் நேரம் கிடையாதுபோனது. அறிவில், ஆற்றலில், அனுபவத்தில் என்னில் கூடியோர் பலர் உளர். அவர்களில் எவராகுதல் சாதாரண சகோ தரிகளின் இத்தேவையைப் பூர்த்திசெய்ய வருதல்கூடும் என்ற எண்ணமும் காலம் கழிய ஒரளவுக்குக் காரணமாயிருந்தது. நூலின் தேவையை எனது பழைய நண்பர்கள் அடிக்கடி உணர்த்தினர்கள், எனது பாலிய நண்பர் திரு. இ. துரைசாமி அவர்கள் (ஓய்வுபெற்ற மாவிட்டபுரம் விதானையார் ) முற்பதிப்பின் கொப்பி ஒன்றைத் தேடி என்னிடம் வந்தும் கொடுக்கமுடியாமை கண்டு மனமுடைந் தேன். அவர் வருகை இப்பதிப்பைத் துரிதப்படுத்தியதென்றும் சொல்லலாம். அவ்ருக்கு எனது மனமார்ந்த நன்றி உரிமையாகிறது. எனது தட்டச்சுப் பிரதியை மும்மொழிகளில் பாண்டித்திய முடைய சகோதரி ஒருவர் உவந்தேற்றுப் பார்த்துத் திருத்தி உத வினராயினும், அவர் திருத்தியபின் பலபக்கங்கள் அவர் பாராம லேயே சேர்க்கப்பட்டமையால், அவருடைய பெயரைப் பெருமை யுடன் வெளியிடமுடியாமை கண்டு மனம் வருந்துகிறேன். சோராது செய்த இப்பேருதவிக்கு அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட் டுள்ளேன். で
கையெழுத்துப் பிரதியைத் தட்டச்சுப் பிரதியாக்கவும் வேறு பலவழிகளிலும் வேண்டியநேரமெல்லாம் மறுக்காமல் மனப்பூர்வ மாய்ப் புன்முறுவலுடன் உதவிவரும் எனது நண்பர் கனகசபை அவர்களின் புதல்வன் மகாதேவன் அவர்களையும் இந்நேரத்தில் மிக நன்றியுடன் நினைவில் கொண்டுவருகிறேன்.
இப்புத்தகத்தை அழகாகவும் ஊக்கத்துடனும் அச்சிட்டுதவிய சோதிடப்பிரகாச அச்சகச் சொந்தக்காரருக்கும் பணியாளரனைவ
இலங்கை, 10-9-74,
% ருக்கும் எனது உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன். V வணக்கம் ། ச இராசரத்தினம்
பிரசாந்தி ", கொக்குவில், (s) ༄།
118883

Page 10
பொருளடக்கம்
முகவுரை (முதற்பதிப்பு) அணிந்துரை (முதற்பதிப்பு ) மதிப்புரைகள் (முதற்பதிப்பு) முன்னுரை (இரண்டாம் பதிப்பு)
e.
1. பிரசவ காலம் Oso 2. கர்ப்போற்பத்திக்கு உதவும் அவயவங்களும்
தொழில்களும்
1. கருப்பை as
23 கோளங்கள் 3. பலோப்பியன் குழாய்கள் 4. கருப்பையின் கடமைகள்
3. கர்ப்பவதியில் ஏற்படும் மாறுதல்கள்.
●●●
1. gig, 616trigg ● * 2. ஸ்தனங்களில் மாறுதல் 3. காலைநோய் Ge 4. நீர்ப்பையின் நிலை 5. தீட்டுப் படுதல் . 8. சிசுவின் அசைவு . 7. இருதய ஓசை . 4 , (31 irr g9)ğ5ırf "hı I Lib . 5. கர்ப்பவதி கவனிக்கவேண்டியவைகள்
1. ஆகாரம் 0 2. சுத்தமான காற்று 3. தேகசுத்தம் G. s. 4 தேகாப்பியாசம் . 5 முலைகள் 8. உடை ed
75 உடலுறவு o di s
6. கர்ப்பவதியில் ஏற்படும் சில பிணிகள்
1. இரத்தக்குறைவு . 2. வீக்கம்
W 32 இரத்தக் கொதிப்பு 4. மலச்சிக்கல் 总é 献 5. நாரிநோ
6. இரத்தக் கசிவு .
is
7. கால் இரத்தநாளங்கள் தடித்தல்
7. காலங்கழித்தும் வயிற்றுள் சிசு
8. வயிற்றுள் இறக்கும் சிசு
9 O O

9。
0.
I .
I 2.
13.
I 4.
5, 16.
I 7. I 8.
I 9.
20.
2 II ,
22,
- 15 ܚܚܘ
பிரசவகாலம் வந்தெய்தியுதும் 1. பிள்ளை பிறக்கும் நாள் 25 மருத்துவப்பெண் 3. பிரசவ அறை se 4 உடை 8 no பிரசவத்துக்குப் பிள்ளை எடுக்கும் காலம்
நஞ்சுக்கொடி வெளிவர எடுக்கும் நேரம் பிரசவம் நடக்கும்பொழுதும் பின்பும்
1. சிசுப்பைச் சுருக்கம் 2. சலமடைத்தல் *** 3. தாய் அசைதல் , e 4. D36ਨ ଠି , କ୍ଷୁ, ଚନ୍ଦ୍tବା 赠 ●● Ꮘ Ꮎ 6. உடலுறவு * ●碑
தாய்க்கு ஏற்படும் நோய்கள் e 鲇翰鲇
1. இரத்தப்பெருக்கு a 2. வலிப்பு 3. சுரம் a ge a 4. முலைகள் வீங்குதல் pe 5. முலைக்காம்புகள் வெடித்துப் புண்படுதல் பிள்ளே பிறந்தவுடன் so ee பிள்ளையை நீராட்டல் நாபிக்கொடி e () ) ) காலமாகாது பிறக்கும் குழந்தை பிள்ளையின் பால் - O ø G
பால்கொடுக்கும் முறை Q 8 8 sh p. தாயின்பாலே இழந்த சேய் . On 8
(அ) பசுவின் பாலை எப்படிக்கொடுக்கலாம் ? (ஆ) மாப்பால் so (இ) விசேட நடவடிக்கைகள் பிள்ளையின் மற்றைய தேவைகள் e de
1. அமைதிநிறைந்த நித்திரை 2. சுத்தமான காற்று
On
3; தேகாப்பியாசம் op 45 அசுத்தமின்மை . 0 () 5 சூப்பி to o பிள்ளையின் வளர்ச்சி as pe D
1. நிறையும் உயரமும் 2. பற்கள் ge e a 3. அவயவங்கள் . ess
11.8889

Page 11
23, 24.
26. 27. 28.
29.
30. 3 .
33.
34.
- 16 -
4 , பேச்சு e P 5. போக்கு பால் மறப்பித்தல் ©Ꮝ ●●● பிள்ளைக்கு ஏற்படும் நோய்கள் e O e e ge
1. வயிற்ருல் கழிதல், வாந்தி 9 . . 2. மலச்சிக்கல் ● 魏 @ @ • 33 வயிறுTதல் 9 4. வாய்ப்புண்கள் . a e f * ge 5. வலிப்பு е 9 *@• 6. காய்ச்சல், இருமல், தடிமன் பிறவியில் ஏற்படும் குறைகள் a de as as a 1. மேல்உதடு முரசுடன்சேர்ந்துபிளவுபட்டிருத்தல் 2. வளைந்த பாதங்கள் are 3. மலசலவாசல்கள் மூடப்பெற்றிருத்தல் 。*· 4. இரத்தாசயகோளாறுகள் முதலியன யார் இந்தப்பிள்ளை de P go ge
தேர்ந்தெடுக்கும் திருமணம் 9 8 o' கர்ப்பமும் நீரழிவும் ... ... கர்ப்பமும் சயரோகமும் . ee
ஆணு அல்லது பெண்ணு a o so பாட்டியின் பிடியிலிருந்து தாயை விடுவிக்க இவை மலடு · · · 8 O (அ) பெண்ணில் :
1. முதிர்ச்சியடையாத சிசுப்பை fr ) v. 2. முட்டையை வெளிப்படுத்தாத கோளங்கள் 3. சிசுப்பையின் வாயை அடைத்திருக்கும் சளி 4. போகத்துக்குப் போதாத யோனித்துவாரம் (ஆ) ஆணில் :
1. சக்தியற்ற ஆண்குறி 2. சுக்கிலத்தில் ஏற்பட்டிருக்கும் விகாரங்கள் 3, மேகரோகங்கள் . . 4. கூகைக்கட்டு · o 8 to தேவையற்ற பிள்ளை ♦ ap D a 4 8 p.
1. புலனடக்கம் to a 2. புறக்கருவிகளும், மருந்துகளும் 3. சத்திரசிகிச்சை . O. z op 4. இயற்கையோடு ஒத்த மற்றைய வழிகள் தொற்றுநோய்த் தடுப்புமுறைகள் to 9
. சயரோகத்தடுப்பு 4e Ꮎ ey
ஏற்புவலி, தொண்டைக்கரப்பன், குக்கல் இளம்பிள்ளைவாதம் 9 அம்மை o a சின்னமுத்து செங்கைமாரி, கூகைக்கட்டு, பொக்கிளிப்பான் a Q R A
59
60 63 64 66 67 67 67 69 69 69 70 70 70 71 74 75 75 76 77 78
78 78 79 79
79 80 80 80 80 82 83 83 84
& 5 86 86 87 87
88

தாயும் பிள்ளையும்
1. பிரசவ காலம்
ஒரு பெண் தனது பிரசவ காலத்தை நோக்கி ஏங்கிப் பயந்திருக்க ஞாயமே இல்லை. இருந்தும் நாம் கண்ணுரக் காண்பது துக்கமே உருவாய கர்ப்பவதிகளைத்தான். இந்த நிலை மாறுதல் வேண்டும்: அது ஏற்பட அறிவே தேவை. தன்னில் ஏற்பட்ட மாற்றமென்ன ? இனி நடக்கப்போவதென்ன ? அதன்முடிபுதான் என்ன ? என்ற இன்னுேரன்ன கேள்விகளுக்குப் பதில்களைப் பெண் தெளிவுறத் தெரிவாளாயின் மனதில் பயத்துக்குப் பதிலாகச் சாந்தமும் சந் தோஷமும் குடிகொண்டிருக்கும்,
இயற்கை யின் நோக்கம் இனத்தைப் பெருக்குவது; இனத்தை அழிப்பதல்ல. தேக அமைப்பு, சிசு உற்பத்தி, அதன் காரணமாய்த் தாயில் ஏற்படும் மாறுதல்கள், பிறப்பு - இவைகளெல்லாம் எப் படி அமைகின்றன என்பதை இளம் மகளிர் சந்தேகமறச் செவ் வனே தெரிந்திருத்தல்வேண்டும். அவர்கள் இந்த மிகத்தேவை யான அறிவை அடைய, பெற்ருேர் பெரியோர் வழிவகுத்தல் வேண்டும். ஒருபெண்ணின் சீவியத்தில் மிகவும் முக்கியமான இந் தப் பாடம் மூடு புத்தகமாயிருப்பது வருத்தத்துக்குரியது; ஆபத்து நிறைந்தது என்றே சொல்லுதல் வேண்டும்.
ஒன்றுமே அறியாத இளம்தாய் தான்பட்ட கஷ்டங்களே விப ரிக்கிருள். ? ? ஐயோ 1, அப்படியோ ! ' என்று தயங்குகிருள் இளம் கர்ப்பவதி, பயத்துடன் சீவிப்பவர்கள் தங்கள் தேகத்தின் உறுதியைக் கெடுத்துக்கொள்ளுகிருர்கள். நரம்புகள் விண்பூட்டிய நிலையை அடைகின்றன. தேகத்தில் ஏற்படும் சின்னஞ்சிறு இயற்கை ஏற்படுத்தும் வித்தியாசங்களும் பெரும் நோய்கள் போன்று தோன்று கின்றன. பயமுண்டேல் போசனமில்லை; நித்திரையில்லை. உடம் பில் அப்பப்பா ! ஒரே குழப்பம் இந்த நிலை கர்ப்பவதியின் நன் நிலைக்குக் கூடவே கூடாது;
விலங்கினங்கள் தங்களினத்தைத் தங்களுக்கோர் ஆபத்துமின் றிப் பெருக்குகின்றன. அப்படியாயின் நன்மை தீமையைப் பிரித் தறியக்கூடிய மனித இனம் ஏன் விசேஷ ஆபத்துக்காளாகவேண்டும் ? மக்களைப் பெற்றெடுப்பது மட்டில்லா ஆனந்தத்தைக் கொடுக்கும் ஒரு செயல், அதை நாம் சரியான மனப்பாங்குடன் நோக்குதல் வேண்டும் அதை மிஞ்சக்கூடிய சந்தோஷம் பெண்ணுக்கு இல்

Page 12
2 தாயும் பிள்ளையும்
லாமல் இல்லே. தான் பெற்ற LD in Göt 6 * சான்ருேன் ' என்று அழைக் கப்படும்பொழுது இந்த ஒப்பில்லா இன்பம் ஏற்படுகின்றது. இதைப்பெற முன்பிள்ளை பெற்றேயாக வேண்டும்.
2. கர்ப்போற்பத்திக்கு உதவும் அவயவங்களும் தொழில்களும்
1. கருப்பை இது வயிற்றில் கீழ்ப்புறமாய்ச் சரிநடுவேயிருக் கும். அதற்கு முற்புறமாய்ச் சலப் பையும், பின்புறமாய் மலக்குட லும் உண்டு. கர்ப்பந்தரியாத கன்னிப்பெண்ணின் கருப்பை சரா சரி மூன்று அங்குல நீளமுள்ளதாயிருக்கும். மேற்புறம் அகலமான தாயும் கீழ்நோக்கிவரச் சிறிது ஒடுங்கி வாயுடையதாய் முடியும் பெண்ணின் யோனி மேற்புறத்தில் மூடிபோட்டதுபோன்று இருக் கும். இந்தக் கருப்பையின் வாய் யோனிக்குள் அமைந்திருக்கும். யோனி மலவாசலுக்குச் சிறிது மேலும், சலவாசலுக்கு அணித் தாய்க் கீழும் தன் வாசலை உடையதாயும், வெளிப்பார்வைக்குத் தெரியக்கூடியதாயுமிருக்கும்.
2 கோளங்கள் - (0Waries) இங்குதான் கர்ப்போற்பத்திக்கு ஏதுவாய் முட்டைகள் உண்டாகின்றனரு கருப்பையின் மேற்பக்கத் தில் பக்கத்துக்கு ஒவ்வொன்ருய் இருபுறமும் இருக்கும். பக்குவ மான பெண்ணின் கோளங்களில் முட்டைகள் மாசத்துக்கு ஒன்ருக முதிர்ந்து வெளிப்படும். இது ஆண்கிருமி ஒன்றைச் சந்தித்துச் சிசு உற்பத்தி ஏற்படாவிடின் அழிந்துபோகின்றது. அருமையாய் இரண்டு முட்டைகள் முற்றி வெளிவருவதும் உண்டு. இவை இரண் டும் இரண்டு ஆண்கிருமிகளைச் சந்தித்தால் இரு சிசுக்கள் உண்டா கும் கிட்டத்தட்ட 300 பிள்ளைகளுக்கு ஒன்று இரணைக்குழந்தையா யிருக்கும். எனது பாது காப்பில் (1956 - 59-ல் ) பெற்ற 932 பெண்களில் மூவர் இரணைப்பிள்ளை களைச் சுகமே பெற்றனர்.
இரண்டு முட்டைகளில் உண்டாகும் இரு சிகக்களுக்கும் பன்னீர்க் குடமும் நச்சுக்கொடியும் தனித்தனியிருக்கும். இன்னும் அருமை பாய் ஒருமுட்டையிலேயே இரு சிசுக்கள் உண்டாவதுண்டு. அது ஒரு முட்டையில் இரு சீவ அணுக்களிருந்து (NEUCLI) இந்த இரண்டை யும் இரு ஆண்கிருமிகள் சந்தித்தலால் ஏற்படுகின்றது. அப்படி உண் டாகும் குழந்தைகள் தங்களிருவருக்கும் பொதுவே ஒரு நச்சுக்கொடி மாத்திரம் உடையனவாயிருக்கும். இது மிகவும் அருமையாகவே ஏற்படுகின்றது, முற்கூறிய மூன்று இரணைப்பிள்ளைகளும் தமக்குத் தாமே ஒவ்வொரு கொடியை உடையனவாயே இருந்தன.

தாயும் பிள்ளையும் 岛
ஒருகோளம் இருமாதங்களுக்கு ஒருமுறை ஒருமுட்டையை உண்டாக்கி வெளியனுப்பும். இரண்டு கோளங்களும் மாறிமாறி இத்தொழிலைப் புரிகின்றன. எனவே சராசரி மாதம் ஒருமுட்டை வெளியாகும்.
இம்முட்டைகள் முதிர்ந்து வெளிவரும்பொழுது சில பெண்க ளுக்குச் சிறிது நோ அந்த இடங்களில் ஏற்படுகின்றது. மற்றவர் சளுக்கும் சிறிது இருக்கத்தான் செய்யும். ஆனல் அவதானத்துக்கு எடுக்கக்கூடிய பெரிய நோவாயிராது. இந்த நோ (0vulation Faia) மாதம் மாதம் பக்கம் மாறுவதை நோவை உணர்வோர் அறிவர். நோவும் மாதவிடாய் ஏற்படும் காலத்திற்கு இரண்டுகிழமைகள் போல் முன்னதாயிருக்கும். வலக்கோளம் இடும்பொழுது வலி' பக்கமா சவும், இடக்கோளம் இடும்போது இடப்பக்கமாகவும் இருக் கும். தொப்பிளுக்கும், இடுக்கணுக்கும் (Groil) கோடொன்றைக கீறினல் சரிநடுவில் இந்த நோவிருப்பதை அவதானிக்கலாம். இந்த நோவுண்டாகும் நாட்கள் கர்ப்போற்பத்திக்கு மிகவும் சாதகமா?) காலம், முட்டை வெளியாகி மூன்றுநாட்களுள் சிசுவாகாவிடின் அது சிதைவடையும். மாதவிடாயாகிப் பன்னிரண்டுமுதல் பத் தொன்பது நாட்கள்வரை சிசு உற்பத்திக்கு ஏற்ற காலம் oಷೆ? வேண்டாதோர் இந்தக் காலத்தைத் தவிர்க்கலாம். வலப்பக்க (315 Tapai (Appendicitis) விளங்காமல் விளங்கி அவதிக்குள்ளானவர் களும் இல்லாமலில்லை; . ܐ ܕ
3. பலோப்பியன் குழாய்கள் - (Fallopean Tubes) இவை கருப்பைச்கு மேற்புறமாய் இரண்டு காக்கும் கைகள்போன்று கோளங்களை மூடி இருபக்கமும் வளைந்துகிடக்கும் அவைகளின் அந்தலைகள் பிள்ளைகளின் பந்தை ஏந்தக் காத்துநிற்கும் விரிந்த கைவிரல்கள்போன்று மேல்நோக்கி விரிந்திருக்கும். நோக்கம் ஒன்றே இங்கே கோளங்களிலிருந்து உதிர்ந்துவரும் முட்டைகளை இ ைவ ஏந்துகின்றன. ஏந்தப்பட்ட முட்டைகள் குழாய்களின் வழியாய்த் தள்ளப்பட்டுக் கருப்பையை நோக்கிச்செல்லும்
4. கருப்பையின் கடமைகள் : வயதுவந்த டுபண் ரிைல் உண்டா கும் சிசுவை வளர்க்கும் நோக்கமாய்ச் சிகப்பை பஞ்சணைபோன்று தன் உட்புறம் சுற்றவர மிருதுவான சதையை வளர்க்கும் முட்டை இடுமுன் குருவிகள் கட்டும் கூட்டை நினைத்துப் படம்போட்டால் அதிக பிழையாயிராது. சிசு உற்பத்தி நேராவிடில் இந்த வளர்ந்த சதை உதிர்ந்து இரத்தமாய்ப் பெருகும். இதையே மாதவிடாய் GT65, GLIT Li), ''Guit Gofu'.65, 9 (p603, ' ' (Weeping of the Wagina ) என்பர் ஆங்கிலேயர் . அது சரியே! கட்டிய கோட்டை உடைந் தால் அழுவது ஞாயமே இந்த மாதவிடாய் 8 ரா சரி 28 நாட்க

Page 13
4 , தாயும் பிள்ளையும்
ளூக்கு ஒருமுறை நேரும், மணமான பெண் வழக்கமாய்வரும் மாத
விடாய் தவறுமாயின் தான் கர்ப்பவதி என்று கணித்துக்கொள்ள
இ
GDIFF I)
கோளத்திலிருந்து உதிர்ந்த முட்டை பலோப்பியன் குழாய்களி விருக்கும் விரல்களினுல் ஏந்தப் பட்டுக் குழாய்களின் ஒருவித அசைவினல் தள்ளப்பட்டுக் கருப்பையை நோக்கிச்செல்லும் என்று முன் அறிந்தோம். இந்த முட்டை இந்தப் பிரயாணத்தில் இருக் கும்போது கருப்பையின் வாயிலில் கொட்டப்படும் ஆண்கிருமிகள் (ஒருமுறைக்கு 50 கோடியிலிருக்கும்) சருப்பைவாயிலால் ஊர்ந்து கருப்பைக்குள் செல்கின்றன. அவை மிசவும் விறுவிறுப்பானவை. பின் கருப்பையையும் தாண்டிப் பலோப்பியன் குழாய்வழியாகச் செல்லும், செல்லும் பாதையில் கருப்பையை நோக்கி எதிர் வரும் பெண்ணின் முட்டையைச் சந்திக்கின்றன. கோடானகோடி ஆண் கிருமிகளுள் ஒன்று மாத்திரம் தன் அம்புபோன்ற கூர்த்தலையால் முட்டையைக் குற்றி உட்புகும். உட்புகுந்தவுடன் ஆண்கிருமியின் வால்போன்ற கீழ்ப்பாகம் ஒடிந்துவிடும். இந்த வைபவமே சிசு உற்பத்தியின் முதற்படி, முட்டையும் ஆண்கிருமியும் சேர்ந்து ஒன் ருகுதல் ஒன்றுபட்ட இந்த முட்டையை வேறு ஆண்கிருமிகள் தாக்கமாட்டா ஒரேயொரு ஆணுக்கு மாத்திரம் அங்கே இட முண்டு. எஞ்சிய கோடானகோடி ஆண்கிருமிகளும் தோல்விகண்டு இருக்க இடமும் கிடைக்காது இறக்கின்றன. ஒருமுட்டையின் வாயிலில் எத்துணைப் பலிதான் நேருகின்றது !
அநேகமாகப் பலோப்பியன் குழாயில்தான் இந்தச்சந்திப்பு ஏற்பட்டுச் சங்கமம் நடக்கின்றது, இது இங்கு நடந்தாலும் உண் டாய சிசு தள்ளப்பெற்றுக் கருப்பையை அடைந்து அங்கேயே வளர்ச்சி ஏற்படுகின்றது; இந்த இளம் சிசு நாலு கிழமை9ள்வரை தானகவே வளரும் சக்தியை உடையது: இந்தக்காலத்தில் தாயிட மிருந்து பின் உணவைப் பெறக்கூடிய ஆயத்தங்களெல்லாம் நடந்து கொண்டிருக்கும். சிகப்பையில் நாபிக்கொடிமூலம் சிசு பிணைக்கப் பட்டபின் தன் வளர்ச்சிக்கு வேண்டிய உணவு அனைத்தையும் இக் கொடி வழியாகத் தாயிலிருந்து பெறும்.
3. கர்ப்பவதியில் ஏற்படும் மாறுதல்கள்
கர்ப்பம் உண்டா கிப் பிள்ளையாய் வளர்ந்து வெளிவரும் காலம் 280 நாட்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் பெண்ணில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவைகள் என்னவென்றும் ஏன் στεί ριi: இளந்தா யானவள் நிச்சயமாக அறிந்திருத்தல்வேண்டும்.

தற்குள் நீர்சுரக்கும் இந்த நீரிலேயே (Amniotic Fluid) வ ம் சிக நீந்திக்கிடக்கும். அம்னியோன் என்று சொல்லப்படும் வ்வுக்கு மேற்புறமாய்ச் சதைசெறிந்த இரத்த நரம்புகள் வளரும், ாலுகிழமைகளில் இவை வளர்ந்து (உட்புறமாய்) தாயின் சிகப் பையில் ஒன்றிக்கொள்ளும். பரந்து, ஒட்டி உட்புறமாய் வளரும் இச்சதையை பிளசன்ற்ரு (Placenta) என்பார்கள், இதிலிருந்து ஆலம்விழுதுபோல் நீண்டு பிள்ளையின் தொப்பிளில் தொடர்புகொள் ளும் கொடியை நாபிக்கொடி (Umbilical Chord) என்பர், இந்தக் கொடிமூலமே வளரும் சிசுவுக்கு வேண்டிய ஆகாரங்கள் யாவும் செல்கின்றன; எனவேதான் அன்னையின் சுகம் எப்படியோ அதே போன்றிருக்கும் குழந்தையின் சுகமும், தேகதிடமுள்ள பெண் நிச்சயம் தேகதிடமுள்ள மகவைப் பெறுவாள். தாயின் மனே நிலையோ, நினைவுகளோ, விருப்பு வெறுப்புக்களோ பிள்ளையில் பின் பிரதிபலிக்கும் என்ற கூற்றை ஆராய்ச்சியாளர் ஆட்சேபிக்கிருர்கள். இடையிடையே பார்க்கும் நல்ல படம், பயங்கரச் சம்பவங்கள் நிரந் தரமாய் தாயின் மனதில் குடிகொள்வதில்லை. அப்படிக் குடிகொண் டால் சந்தோஷநிலை தாயின் ஆரோக்கியத்தைக் காட்டும். பயம், துக்கம் எதிராய்ச் சுகத்தைப் பாதிக்கும். அப்படியாயின் பாலனும் பாதிக்கப்படுவனன்ருே ? தாய் உண்ணும் நல்ல உணவுகளின் பல *னப் பிள்ளையும் பெறுகின்றது. அதேபோல் தாய் உண்ணும் மருந்துவகைகளும் சேயைப் பாதிக்கின்றன. சிறிது காலத்துக்கு முன் கர்ப்பவதிகளுக்குக் கொடுக்கப்பட்ட புதிய மருந்தொன்று எத்தனையோ பிள்ளைகளைக் கூன், குருடு, செவிடு, முட மாக்கிவிட் டது. நஷ்டம்கோரி மருத்துவருக்கு எதிராகவும், கொம்பனிக்கு எதிராகவும் வழக்குகளும் நடந்தன. எனவே தக்க மருத்துவரின் புத்திமதியை மட்டும் கர்ப்பவதி ஏற்றல்வேண்டும். தானே தனக்கு வைத்தியம் புரியும் தாய் சாதாரண காலத்தில் அவையால் தான் நன்மையடைந்தாலும் கர்ப்பவதியாயிருக்கும்பொழுது சேய்க்குத் தீங்கு இழைப்பவளாவாள். சில மருந்துகளால் பிள்ளையின், பற்கள், எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. மருந்துகளை முற்ருக முதல் நாலு மாதங்கள்வரையில் தவிர்த்தல் கூடுமாயின் அது மிகவும் நன்ருகும் தேவைப்படின் நிபுணரிடம் வைத்தியம்பெறுவதே நன்றென்று நாம் கூறுவோம். முதலாம், இரண்டாம், மூன்ரும் மாதங்களில் சிசு வளர்ச்சி வெளிப்பார்வைக்கும் மற்றவர்களுக்கும் தோற்றக்கூடியதா யிராது; நாலாம் மாதக் கடைசியில் கீழ்நோக்கி விரல்நுனிகளால் தடவினல் சி சுப் பை யி ன் மேல்விளிம்பை உணரக்கூடியதாய் இருக்கும். அப்பொழுது சிசுப்பை தாயின் தொப்பிளுக்கு இரண்டு அங்குலம்வரை கீழ்த்தென்படும்; ஆரும் மாதக் கடைசியில் தொப்

Page 14
t தாயும் பிள்ளையும்
பிள்வரை வளர்ந்துவிடும். ஏழாம் மாதக் கடைசியில் தொப்பிளுக்கு ஒரு அங்குலம் மேலும், எட்டாம் மாதக் கடைசியில் மார்புக்குழிக் கும் தொப்பிளுக்கும் சரி இடைவரையிலும் ஒன்பதாம் மாதக் கடைசியில் மார்புக்குழிவரையிலும் சிசுப்பை பருத்துவிடும். பிர சவத்துக்கு இரண்டு கிழமைகள்முன் பிள்ளை கீழ்நோக்க, மேல்வயிற் றின் தோற்றம் எட்டாம் மாதத் தோற்றத்தை அடையும்.
சதையும் சவ்வுமாயிருக்கும் சிசு அறுபது நாட்களில் குழந்தை யின் உருவத்தை அடையும். பின் படிப்படியே அது வளர்ந்து உறுதிபெற்றுச் சராசரி ஏழரை இருத்தல் நிறையுடையதாய் 280 நாட்களில் பூரணமாகும். சாதாரணமாய் மூன்று அங்குல நீளமுள்ள கருப்பை பிள்ளை வளர்ச்சிக்கேற்பத் தானும் வளர்ந்து தாயின் வயிற்றை நிரப்பும் ,
இந்தச் சராசரி ஏழரை இருத்தல் நிறை வாழ்க்கைத்தரம் உயர்ந்த மேலைத்தேசப் பிள்ளைகளுக்கே பொருந்தும். பஞ்சமிகுந்து பட்டினியும் பாதிவயிறு சோறுமாகக் காலம் கழிக்கும் கீழைத்தேச மகளிருக்கு இந்த அளவுகோல் பொருந்தவேமாட்டாது. σTLD ΦΙ நேர் பாதுகாப்பில் பிறந்த 678 ( 1956-59 ) ஐந்தரை இருத்த லுக்கு மேற்பட்ட குழந்தைகள் மொத்தம் 4614 இருத்தல் நிறை யுடையவர்களாய் இருந்தார்கள். எனவே சராசரி நிறை 6'80 இருத்தலாய் இருந்தது. ஐந்தரை இருத்தலும் அதற்குக் குறைந்த நிறையையுடையதும் ஆனல் 280 நாட்களும் முற்றுப்பெற்றுப் பிறந்த குழந்தைகளின் நிறையையும் சேர்த்தால் ஒரு பிள்ளையின் நிறை இன்னும் குறைவேயாகும் பிறந்த பிள்ளைகளுள் ஆகக்கூடிய நிறையையுடைய குழந்தை பத்தரை இருத்தலுடையதாயிருந்தது. உலக சுகாதார நிறுவனம் (W. H 0 ) ஐந்தரை இருத்தலும் அதற் குக் குறைந்த எடையையுடைய அத்தனை பிள்ளைகளையும் முதிர்ச்சி ய டையாத குழந்தைகளாகக் கணிக்கின்றது 300 நாட்கள் சுமந்து இறக்கினலும் நிறை குறைவானுல் அந்தப்பிள்ளை அந்தக் கூட்டத் இடுவயே சேர்க்கப்படுகின்றது. பிறந்த மொத்தம் 834 பிள்ளைகளுள் 1 56 பிள்ளைகளும் இந்தக் கட்டுப்பாட்டுக்குள் அமையவே அவர் கஜ முதிர்ச்சியடையாது பிறந்த பிள்ளைகளாகக் கொண்டோம். ட்ெடத்தட்ட 5 பிள்ளைகளில் ஒன்று முதிர்ச்சியடையாத குழந்தை,
2. ஸ்தனங்களில் மாறுதல் : கர்ப்பம் தங்கி இரண்டாம் மாதம் தொடங்கி முலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதை அவதானிக்கலாம். அவை பருக்கும் ; கெட்டிபடும். ஊசியால் குற்றுவதுபோல் இடை பிடையே நோவதை உணரலாம். முலைக்காம்புகள் முன்னரிலும் பருமை அடைகின்றன. அவைகளும் அவைகளைச் சுற்றி
";&ه

தாயும் பிள்ளையும் ή
போல் இருக்கும் செந்நிறத்தோலும் சிறிது கருமையடைகின்றன இருவிரல்களால் மெல்ல நெரித்தால் கிழுவம் பால்போன்ற இரண் டொரு துளிகள் வெளிவரும். தலைக்கர்ப்பவதியில் இ. மாற்றங்கள் * வயிற்றில் கர்ப்பமேதான் ' என்ற முடிவைத் திடப்படுத்தும்,
3 காலநோய் கர்ப்பம்தரித்து நாலைந்துவாரங்கள் செல்லவே J. It al.) துயில்விட்டெழுப்பும்பொழுது தலைசுற்றுவதைக் கர்ப்பவதி உன்னர் வாள். நித்திரைவிட்டு எழும்போதே ஆரம்பிப்பதால் அதைக் * காலைநோய் ' என்றழைக்க நேர்ந்தது. நாள்முழுவதுமே சில பெண்களுக்கு இந்நிலை இருக்கும். தேகம் பெலம் குன்றுவதுபோல் தோன்றும், வாயூறும் . வயிறு பிரட்டிக்கொண்டேயிருக்கும், வாந்தியேற்படக்கூடும். சில பெண்களுக்கு இந்நிலை ஏற்படுவதே யில்லை, சிலர் மிக வருந்துவார்கள். அவர்கள் படுக்கையிலேயே வாயை அலம்பி இரண்டொரு றஸ்க்கை ’ சாப்பிட்டு மறுபக்கம் திரும்பிப் பின்பும் இரண்டொரு மணித்தியா லம் படுக்கையிலிருக்க லாம். பகலில் எலுமிச்சம்புளி கலந்த இளநீர் நல்ல பானமாகும், மனம் நாடுவனவைத் தேடி யுண்ணலாம். ஆனல் கரியையும் மண் ணேயுமல்ல. சிலருக்கு இவைகளில் நாட்டமேற்படுவதுண்டு. நாட் கள் செல்லப் படிப்படியாகக் குறையும். பன்னிரண்டு கிழமை கள் செல்ல இக்குணங்கள் அனைத்தும் முற்முக நீங்கிவிடும். ஒன் றுமே உட்செல்லமாட்டாது வருந்தும் பெண்கள் வைத்திய உத வியை நாடவே வேண்டும். 'இந்நோய்க்கு மருந்தில்லை என்ற காலம்போய்விட்டது. மருந்துகள் உண்டு. ஆணுல் தேர்ந்த ഞഖ.j தியரிடமிருந்தே அவற்றைப் பெறுதல்வேண்டும். மற்றவர்கள் Ֆ6ւ Այl தலாய்த் திங்கிழைப்பதை நாம் காண்கின்ருேம்,
4. நீர்ப்பையின் நிலை : கர்ப்போற்பத்தியாகி முதல்மூன்று மாதங்களிலும் சலம் அடிக்கடிபோதல்கூடும். பின்னர் கடைசி இருவாரங்களிலும் சலம் அடிக்கடி கழியும், வளரும் சிசுப்பை சலப்பையைச் சிறிது தாக்குவதால் இது ஏற்படுகிறது. சிசுப்பை வளர்ந்து தாக்கம் மேல்வயிற்றில் ஏற இக்குணம் மறைந்துவிடும் கடைசி இருகிழமைகளிலும் பிரசவத்துக்கு ஆயத்தமாய் சிகப்பை இழ்நோக்கும். அப்பொழுதும் சிறுநீர்ப்பை சிறிது அமுக்கப்பட்டு வழமைபோல் நீரை நிரம்பவைத்திருக்க இயலாமல் அடிக்கடி வெளி யேற்றும்,
5. SCGCu6:56): (Physiologic Bleeding ) (up,56) gly air (, மூன்றுமாதங்கள் தீட்டுப்படுதல்கூடும் வழக்கமான பெருக்கா யிராது. இதனைத் தமிழ்த் தாய்மார் கண்ணில் காணல்" என்

Page 15
8 தாயும் பிள்ளையும்
2ார்கள். இந்தக் காலங்களில் வேலைகளை நீக்கி அமைதியாய்ப் படுத்திருத்தல்வேண்டும். இது நோயல்ல. சில பெண்களில் மாத் திரம் காணப்படும். ஒருநாளோ அன்றி இரண்டு மூன்று நாட் களோ தென்படக்கூடும். பயங்கரப் பெருக்காயின் நாட்கள் கூடி ணுல் வைத்தியரை நாடவேண்டும்,
6, சிசுவின் அசைவு : பெரும்பாலும் ஐந்துமாதங்கள் சென்ற தும் பிள்ளையின் அவயவங்கள் பெலப்பட்டு அசைய ஆரம்பிக்கும். இந்த அசைவுகளைக் கர்ப்பவதி உணருவாள். இதனையே " பிள்ளே துடிக்கிறது என்பர். இதைக்கொண்டும் சிசுவின் வயதை, (திட்டு நின்ற கணக்குத் தெரியாதவிடத்து) ஒருவாறு நிட்சயிக்கலாம்.
7. இருதய ஓசை ; சிசுவின் இருதயத்துடிப்பை ஐந்துமாதக் கடைசியில் கேட்கலாம், மற்றக் குறிகள் கொண்டு கர்ப்பிணி என்று சொல்லலாமாயினும் அந்தக் குறிகள் ஒன்ருே கூடவோ நோயின் காரணமாகவும் நிலவுவதுண்டு. எனவே ஐயத்துக்கிடம் ஏற்படும் போது இருதய ஓசையை மாத்திரம் கேட்டுவிட்டால் பின் ஐயமே யில்லை வைத்தியர் தங்கள் ஸ்ரெதஸ்கோப் ( Stethescope) மூலம் இதைக் கேட்பார்கள் அவதானமானவர் எவரும் தங்கள் காதா லேயே இச்சத்தத்தைக் கேட்கலாம். வயிற்றில் காதை ஒட்ட வைத்து உன்னிக்கேட்டல் வேண்டும் பெரும்பாலும் தொப்பிளுக் குக்கீழ் ஒர் பக்கமாய், இடமோ, வலமோ இந்த ஓசை கேட்கும்; பஞ்சுபொதிந்த தலையணையுள் வைக்கப்பட்ட கடிகாரத்தின் ஒசை போன்று தொனிக்கும்.
4. போலிக் கர்ப்பம்
முற்கூறிய சின்னங்களெல்லாம் உள்ள ஒரு சுகதேகமுடைய இளம்பெண்ணைக் கர்ப்பவதி என்று சொல்லலாம். இதுகூறுமுன் இவைகளில் எவை எம்மை ஏமாற்றமடையச் செய்தல்கூடும் என் பதை எடுத்துக் காட்டுவாம். கர்ப்போற்பத்தியினல் மாதவிலக் குத் தடைப்படுவதாயும், கருப்பை வளர்வதாயும் முன்கூறி யுள்ளோம். இவை சிலகாலங்களில் சிசுதரியாப் பெண்களிலும் ஏற்படலாம். நோய்காரணமாய்த் தீட்டுத் தடைப்படலாம். கட்டி வளர்வதினுல், நீர் வயிற்றுள் ஊறுவதினல் வயிறு பருக்கலாம். ஆனல் மேற்கூறிய சின்னங்களெல்லாம் இவர்களில் ஒருங்கே தென்படமாட்டா. இவற்றை அவதானித்துப் போலிக்கர்ப்பத்தை யும் உண்மைக் கற்பத்தையும் பிரித்தறிதல் இலகுவாகும்.

தாயும் பிள்ளையும் 9
பரிதாபத்துக்குரிய இன்னுமொரு கர்ப்பவதியுண்டு. தாயாக வேண்டுமென்ற ஒரு பெரும் ஆவலால் மாதவிடாய் தடைப்படு கின்றது. காலத்துக்குக்காலம் கர்ப்பவதியில் ஏற்படும் மற்ற மாறுதல்களும் ஏற்படுகின்றன. வாந்தி, வாயூறல், தலைச்சுழற்சி யால் பாதிக்கப்படுகிருள், முலைகள் பருக்கின்றன. வயிறும் பருமை யடைகின்றது. திடமாகவே தான் கர்ப்பவதியென்று நம்புகிருள் நினைவில் மாத்திரம் கர்ப்பம்! மிக அருமையாகவே ஒரு பெண் இந்த அவலநிலைக்கு ஆளாகிருள். ஆனல் எத்தனையோ இச்சம்பவங்கள் புத்தகங்களில் பார்க்கக்கூடியதாய் இருக்கின்றன. ( Phantom Fregnancy) மனதுக்கு, உடம்பில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய பெரும் சக்தியுண் டென்பதை யாரும் மறுக்கமாட்டார் கள். கொழுப்புநிறைந்த வயிற்று மேற்பரப்பாயின் பிள்ளையின் இரத்தாசயச் சத்தத்தைக் கேட்பது கடினம். அந்த நிலையில் படம் (Xray) ஒன்றே பிள்ளை அல்ல என்பதை நிரூபிக்கும். சில வரு டங்களுக்கு முன்போலல்லாமல் தாயாக வர ஆசைப்படுவோருக்கு சிகிச்சைகள் பலவுண்டு. இப்போ மலடு என்று ஏங்க இடமில்லே கர்ப்பமா இல்லையா என்ற ஐயம் தீர்க்க மருந்துகள் உண்டு. இரண்டுநாட்கள் மட்டும் விழுங்கவும், மூன்று நாலுநாட்கள் விழுங் கவும் குளிகைகள் உண்டு. ஊசிமூலமும்பாய்ச்ச ஏற்ற மருந்துகள் உண்டு. நெடுங்கால வைத்தியமல்ல. நாளுக்கு ஒரு குளிகை, நாளுக்கு ஒரு ஊசியாய் இரண்டு ஊசிமட்டும் போடுவார்கள். இவை கர்ப் பத்தைப் பாதிக்கா வென்று நிபுணர்கள் கருத்து. தயங்காதும் கொடுக்கிருர்கள். கர்ப்பமாயிராவிடின் பத்துநாட்களுள் பெண் திட்டாகுவாள். தவறுதலரிது. ஆனல் தாயாய்வர ஆசைப்பட்ட வரிடம் இது தோல்வியடையக்கூடும் ! எமது 45 வருட அனுபவத் தில் அப்படி இருவரைமாத்திரம் கண்டோம் ஒரேநாளில் அது வும் மாமியாரும் மருமகளும் !
5. கர்ப்பவதி கவனிக்கவேண்டியவைகள்
கர்ப்பவதி எத்தொழில் புரியும்பொழுதும் தன்வயிற்றில் உரு வாகும் குழந்தையின் எண்ணம் மனதில் குடிகொண்டவளாயிருத் தல்வேண்டும். பிள்ளையின் சீவியமும், தாயின் சீவியமும் நாபிக் கொடிமூலம் பிணைந்து நெருங்கிய தொடர்புள்ளவையாய் இருக் கின்றன. தாய் நல்ல ஆகாரம்தேடி உண்ணுவிட்டால் சிசுவுக்கும் அதன்பயன் இல்லாதுபோகின்றது. தாய் சுத்தமான காற்றைச் சுவாசிக்காவிடின் சேய்க்கும் அதன் பயன் கிடையாதுபோகின்றது பின் எழும்பும் வீடு முன்போடும் அத்திவாரத்தைப் பொறுத்துப் பெலமுடையதாயும், நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கக்கூடியதாயு
11.8889

Page 16
l() தாயும் பிள்ளையு
மிருக்கும். அதேபோன்று நல்வளர்ச்சிக்கும், நற்சுகத்திற்கும், நுண் அறிவுக்கும் தாய் இக்காலத்தில் அத்திபாரமிடுகிறவளாயிருக்கிருள். தேக ஆற்றல் இல்லாதோருக்கு மற்ற ஆற்றல்கள் எங்கிருந்து வரக் கூடும் ?
1. ஆகாரம் : கர்ப்பவதியின் ஆகாரம் நல்வளர்ச்சிக்கு ஏற்ற பொருட்களைக்கொண்டதாயும், இலகுவில் ஜீரணிக்கக் கூடியதாயு மிருக்கவேண்டும். உள்ளி, மிளகு, வெங்காயம் உடம்புக்கு நல்ல தென்றும் இரத்தத்தை உறையவிடாது காக்கும் என்றும் மேலைத் தேச ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருக்கிருர்கள். (வயது வந்த வர்கள் கவனிக்கவும் ) கர்ப்பவதி வழமைபோல இவைகளைச் சேர்த்து உண்ணலாம். தேசிக்காய், உகந்தபுளி, அதில் சீவசத்து ‘சி’ நிரம்ப உண்டு. கறிவகைகள் ஆறியபின்பே இப்புளி சேர்க்கப் படல் வேண்டும். இரும்புச்சத்து, சுண்ணும்புச்சத்து, சீவசத்துக்கள், புரதச்சத்து (Proteins) ஆகியவற்றை உடம்புக்குக் கொடுக்கக் கூடிய உணவுகளையே தேடி உண்ணல்வேண்டும். பலதரப்பட்ட உணவுப்பொருட்களை மாறிமாறி உணவில் கலந்துகொள்ளுதல் வேண்டும். இம்முறையால் நல்வளர்ச்சிக்குரிய பலவகையான உண வுச்சத்துக்களைத் தேகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இன்னது இவ் வளவு என்று வரையறுத்துத் தராசில் நிறுத்துக் குசினிக்குக் கொண்டு போகும் சிரமம் தேவையாகாது; பால், பிறந்தநாட் தொடக்கம் இறக்கும்வரை குடிக்க ஏற்றதொரு சிறந்த ஆகாரம். இதில் பல தரப்பட்ட சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. சுண்ணும்புச் சத்தைக் கொடுக்கும் உணவுகளில் பால் சிறந்தது. குழந்தையின் பற்கள், எலும்புகள் சீர்பட்டுச் சிறந்துவளர இச்சத்து இன்றி யமையாதது. கர்ப்பவதி தன்குழந்தையின் நலன்கருதித் தினமும் ஒருபோத்தல் பாலாகுதல் பருகுதல்வேண்டும், ஒருசொட்டும் கிடைக்க வழியில்லாதவர்களுக்கு அரசாங்கம் உதவவேண்டும் சமுகசேவை செய்வோர் உதவ முன்வர வேண்டும். இரண்டு மூன்று மரக்கறிகள் தினமும் சாப்பாட்டில் சேருதல்வேண்டும். இவைக ளுள் ஒன்று கட்டாயம் இலைக்கறியாய் இருத்தல்வேண்டும், சோற் முல்பட்டும் வயிற்றை நிரப்புவதால் பிரயோசனமில்லை. உடம்பு மாத்திரம் பருக்கும்; சுகம் குறையும். கறியைத் தொட்டுக்கொண்டு சோற்றை அள்ளி அடைவது பயனைப் பயக்காது. இதனை மனதில் நன்கு பதியவைக்கவும் கறிவகைகளைத் தாராளமாய்ச் சேர்த்து உண்ணல்வேண்டும். உப்பு உடம்பில் நீரைச் சேர்க்கிறது. இரத் தக்கொதிப்புக்கும் காலாயிருக்கின்றது. எனவே கறிகளுக்கு வழக்க மாய்ச் சேர்க்கப்படும் உப்பினளவைக் குறைப்பது பாதுகாப்பாகும், சோறும் கறியும் சம அளவில் இருத்தல் நன்று, நெய், பருப்பு,

தாயும் பிள்ளேயும்
தயிர் நிச்சயம் சேர்க்கவேண்டிய உணவுகள். மேலேத்தேசத்து ஆராய்ச்சியாளர் கீழ்க்கண்டவைகளைத் தினமும் கர்ப்பவதிகளுக்குக் கொடுத்தல்வேண்டும் என்று வற்புறுத்துகிறர்கள்.
1. ஒரு முட்டை 2. ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய், 3. ஒரு தோடம்பழம் , 4. இரண்டு தேக்கரண்டிகொண்ட மீன் எண்ணெய்
5. வழக்கமான பாண். அத்தோடு ஈரல்கறியும் சேர்த்துக்
கொள்ள வேண்டுமாம்
வறுமை மிகுந்த எங்கள் நாடுகளில் இவைகளை எல்லாம் சாதா ரன வாழ்க்கை நடாத்தும் பெண் தேடியுண்பது எங்ங்னம் ? மற்ற வர்கள் சிறிது தம்மை ஒறுத்தும் கர்ப்பவதிக்கு ஏற்றவைகளைத் தேடிக்கொடுத்து உதவவேண்டும். கடல்சூழ்ந்த சிறுதீவில் வசிக் கும் எமக்கு மலிவாய் மீன்வகை கிடைக்காதிருப்பது துர்அதிஷ் டமே. மீன் சாப்பிடுவோர் சாதாரணமாய்த் தினமும் சாப்பிட லாம். ஒரு சிறு துண்டல்ல; இரண்டு மூன்று துண்டுகளைச் சேர்த் துச் சாப்பிடல்வேண்டும். நெத்தலிமீன் மிகநன்று. சத்துள்ள ஆகாரக்குறைவால் தாய் மெலிந்தால் சேயும் இளைத்துவிடும். மூளைத் திறனும் பாதிக்கப்படும். பிறந்தபின்பும் இலகுவில் நோய்வாய்ப் படும். எங்கள் இனமே நொந்து சீர்குலையும். எழும்பும் வீட்டின் உறுதி அத்திபாரத்திலேயே தங்கியிருக்கிறது. பிள்ளை மிகப்பருக் கும்; பேற்றுக்குக் கஷ்டமுண்டாகும் என்று ஊணைக் குறைப்பவர் பற்றிப் பரிதாபமே கொள்ளல்வேண்டும்; அதற்கு ஆதாரமே இல்லை;
2. சுத்தமான காற்று தேகசுகத்துக்கும் நல்வளர்ச்சிக்கும் சுத்த மான காற்று இன்றியமையாதது. கர்ப்பவதி நல்ல காற்று நிறைந்த விசாலமான இடங்களிலேயே ஊடாடல் வேண்டும் கடற்கரை ஓரமாய் உலாவுதல் மிகவும் நன்று. சஞ்சரிக்கும் வீட் டின் யன்னல்கள் ஒருபோதும் மூடப்பெற்றிருத்தல் கூடாது. நித் திரைகொள்ளும் இடமும் பொருட்களும் தூசு நிறைந்ததாயிருத் தல் கூடாது. யன்னல்கள் இல்லாது இருட்டடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் மூடிவளர்க்கப்பெற்ற தாவரம்போன்று மெலிந்து வெழுத்திருப்பார்கள். படுத்துறங்கும்பொழுது துணியால் முகத்தை மூடுதல் கூடாது; இந்தப்பழக்கம் பெரும்பான்மையோரிடம் உண்டு. முகம் மூடி உறங்கும்பொழுது நாம் வெளிவிடும் நச்சுக்காற்றையே திரும்பத் திரும்பச் சுவாசிக்க நேரிடுகின்றது. இதனல் தேகம் நோய்க்கிடமாகின்றது. எனவே திறந்தவெளிச் சீவியம் நன்றென் 1கை மறக்கக்கூடாது;

Page 17
12 தாயும் பிள்ளேயும்
மூச்சு மெது வா யு ம் ஆழ்ந்ததாயும் இருத்தல் வேண்டும் . இம்முறை எவர்க்கும் பொருந்தும். வயது எத்தனை மூச்சுக் கள் கொண்டது என்று கணக்கிடுதல் பொருத்தமானது ஏன் எனின் ஒடிக்களைத்தவர்கள்போல் கெதியாய் மூச்சுவிடுபவர்கள் கெதியில் இறப்பார்கள். கெதியாய் மூச்சுவிடுவதால் வயது கெதி யில் முடிந்துவிடும் சுவாசப்பை நோய்கள், நியூமோனியா, சய ரோகம், இரத்தாசய நோய்கள் உள்ளவர்கள் மிதமிஞ்சிய களியாட் டங்களில் ஈடுபடுபவர்கள் கெதியாய் ' மூச்சு விடுவதால் வயதைக் கெதியில் முடித்துவிடுவார்கள். சாதாரணமாக மணி ஒன்றுக்கு 18 - 20 முறை விடவேண்டிய மூச்சு, இவர்களுக்கு 80 - 100 ஆகக் கூடுகின்றது. எனவே நெடுங்காலம்வாழ மூச்சு மெதுவானதாயும் ஆழ்ந்ததாயும் எவருக்கும் இருத்தல்வேண்டும். அத்துடன் ஒவ் வொரு மூச்சுக்கும் இறைவனின் திருநாமம் ஏற்றதை (இயேசுவே! அல்லாவே ! ஓம் சிவாயநம ! * இப்பெயர்களெல்லாம் ஒரு வருக்கே ) நினைத்து வாழ்வை வளமும் அழகுமுடையதாக்குவோம். ஆழ்ந்தமூச்சு சுவாசப்பையை நன்கு நிறைத்து வேண்டிய பிரான வாயுவைப் போதியளவுசேர்த்து உடம்பை உறுதியாக்கும்.
3. தேகசுத்தம் : கர்ப்பவதியின் தேகம் அழுக்குப்படியாது காக்கப்படல் வேண்டும். தோலிலிருக்கும் துவாரங்கள் அழுக்கால் அடைபடாதிருந்தால்தான் நச்சுநீர்கள் வியர்வையாய் வெளிவரு தல் இலகுவாகும். நாள்தோறும் கர்ப்பவதி குளித்தல்வேண்டும். தேகத்தின் ஒவ்வோர் பாகத்தையும் புனிதமாக வைத்திருத்தல் வேண்டும். சூடான எங்கள் தேசத்தில் வெந்நீர்க் குளிப்பு விரும் பத்தக்கதல்ல. அவசியமாயின் நகச்சூடான நீரைப் பயன்படுத்த லாம். இடையிடையே எண்ணெய் முழுக்கு மிகவும் நன்று. இத னல் ஏற்படும் நன்மைகள் எண்ணிறந்தன.
மலசலவாசல்கள் விசேட கவனத்துக்குள்ளாகவேண்டும் சல வாசல் கழுவியே மலவாசல் கழுவப்படவேண்டும். மலவாசல் கழு விய விரல்களைச் சலவாசலைத் தொடவிடக்கூடாது. அப்படிச்செய் தால் நாமே நோய்க்கிருமிகளைச் சலவாசலுக்குக் கொண்டுசெல்ப வர்களாவோம், அதன் பயணுக எரிவு சொறிவு, புண்கள் சீழ்வடி தல் முதலிய ரோகங்கள் உண்டாகின்றன. கருப்பம் தரித்த காலத் தில் மாத்திரமன்றி எக்காலத்திலும் கன்னியர் இப்பழக்கத்தைப் பின்பற்றி நடந்தால் வைத்தியரிடம் போகவேண்டிய முறைகள் கணிசமான அளவால் குறையுமென்பது திடம்,
கருப்பையிலிருந்து இறங்கும் கசிவுநீர்கள் ( Secretions) நாலா
பக்கமுள்ள சுரப்பிபிகளிலிருந்து ஊறும் (Sebaceous and Bஜrtholing glands) வழுவழுப்பான நீர்கள் யோனிவாசலை ஈரமாகவே வைத்திருக்

தாயும் பிள்ளையும்
கின்றன. இவை நீர் கலந்த பால் நிறமாகவும் வெள்ளைத் தூள்கள் செறிந்ததாகவும் இருக்கக்கூடும் இவை வெளியிலிருந்து உட்செல் லும் நோய்க்கிருமிகளை ஒரளவில் கொன்றுவிடுகின்றன. எனவே விரல்களை உட்செலுத்தி யோனியின் உட்புறம் தூய்மைப்படுத்தல் கூடாது. இந்தக் கசிவுகளை நோய் என்று உன்னி வைத்தியரிடம் வருவதுமுண்டு. இவை இயற்கை அமைப்பு என்பதை எவ்வயது மகளிரும் அறிந்திருத்தல்வேண்டும். நோய்காணுமிடத்து இவ் வெண்ணிறக் கசிவுநீர் சீழ்போன்று மாறும் முடைநாற்றம் வீசும்; சொறிவும், எரிவும் உண்டாகிப் புண்படும்.
4. தேகாப்பியாசம் : தினமும் செய்துவந்த வேலைகளைக் கர்ப்பவதி தொடர்ந்தும் செய்துவருதல் வேண்டும். களைப்பேற்படக்கூடிய கடினமான வேலைகளைத் தவிர்க்கலாம். சயிக்கிள் ஒடுதல், ரெனிஸ் பந்தடித்தல், குத்தல், இடித்தல் கூடாது. உலாவுதல் மிக உகந்த அப்பியாசம். மாதவிடாய்நின்று பதினறுகிழமைகள் முடியும்வரை ரெயில், மோட்டார், விமானப் பிரயாணங்கள் தவிர்க்கப்படல்
வேண்டும் 17-ம் கிழமை தொடங்கி 36 கிழமைகள்வரை அதிக
அலுப்பைக்கொடாத பிரயாணங்கள் செய்யலாம் 36 கிழமைகள் சென்றதும் பழைய ஒட்டாட்டங்களைக் கைவிடவேண்டும். ஆகா யப் பயணமும் ஆபத்தானது.
5. முலைகள் : பிரதானமாய்த் தலைக் கர்ப்பவதியின் முலைகள் விசேஷ கவனத்திற்குள் கொண்டுவரப்படல் வேண்டும். முலேக் காம்புகள் சில பெண்களில் வெளித்தோற்ருது முலையோடு முலே பாய்ப் பரவியிருக்கும். கடைசி நான்குகிழமைகள் குளித்தபின் தினமும் இருவிரல்களினல் சிறு முத்துப்போல் இருக்கும் முலைக் காம்புகளை மெல்லென நான் ைகந்துமுறைகள் நீள இழுத்தல்வேண் டும். பாவிக்கும் விரல்கள் முலைகளின் நாலாபக்கமும் முறைக்கு முறை படியப் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்து வரும்பொழுது நாளடைவில் முலைக்காம்புகள் நீண்டு பிறக்கப் போகும் பாலன் வசதியாகப் பாலைப் பற்றி உமியக்கூடியதாயிருக் கும். இல்லையேல் பிரசவத்தின் பின் பாலன் பற்றி உமியமுடியாத முலைகளால் தாயும் சேயும் திண்டாட நேரிடும். தேர்ந்த வைத்திய நிபுணர் சிலர் முலையிலிருக்கும் முதற்பாலைப் பிதுக்கி எடுத்துவிடு தல் நல்லதென்கிருர்கள். இந்தக் காலத்தில் அப்படிச் செய்யத் தூண்டுவதன் நோக்கம் முலைக்காம்புகளை நீளச் செய்வதற்கும் சுற் றுப்புறத் தசையைப் பெலப்படுத்துவதற்குமேயாகும். பின் குழந்தை தினமும் பலமுறைகள் பால் உமியும்பொழுது இவ்வாறு கெட்டிப் படுத்தப்பட்ட முலைகளில் புண்களோ அல்லது வெடிப்புகளோ இலகு வில் எற்படமாட்டா.

Page 18
1 4 தாயும் பிள்ளேயும்
6. உடை மூச்சுத் திணற இறுக்கும் மேற்சட்டையும் இடுப்பை இறுக்கும் பாவாடையும் கர்ப்பவதிக்கு ஏற்ற உடைகள் அல்ல. கணமில்லாத துணிகளை உடம்பை இறுக்காதமுறையில் அணிந்து கொள்ள வேண்டும். பிள்ளையின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படாத வாறு இலேசாகத் துணியை இடுப்பில் செருகவேண்டும். கழுத்தி லிருந்து தொங்கவிடக்கூடிய ஒரே சட்டை வீட்டுப்பாவிப்புக்கு ஏற்ற 5TகுL).
7. உடலுறவு : சுகமுடைய பெண் புருஷனின் தேவையைப் பூர்த்திசெய்யத் தடை யாதுமேயில்லை. அது இருபாலார்க்கும் நன்மையே பயக்கும். ஆனல் முற்பிரசவங்கள் குறைமாதங்களில் ஏற்பட்டிருந்தால் பெண்ணின் தேகநிலையைக் கவனித்துப் படுக்கை பகிர்தல் வேண்டும். எதற்கும் மிதமிஞ்சிய சேர்க்கை குறைமாதப் பிரசவத்தைக் கொண்டுவரும். மிருகத்தன்மை நிறைந்ததாயிருந் தாலும் அதேமுடிவையே தரும். கர்ப்பம்தரித்து முதல் 16 கிழமை கள் முடியுமுன்பும், 32 கிழமைகள் முடிந்தபின்பும் தனிப்படுக் கையே விரும்பத்தக்கது.
6. கர்ப்பவதியில் ஏற்படும் சில பிணிகள்
சுகதேகமுடைய பெண் கர்ப்பவதியானல், சுகதேகியாய்க் காலத்தைக் கழித்து உரியகாலத்தில் திடகாத்திரமான மகவை ஈன்றெடுப்பாள். இருந்தும் காலத்துக்குக்காலம் கவலையீனத்தி ஞலோ அல்லது வேறு காரணம் பற்றியோ சிலநோய்கள் ஏற்படுவ துண்டு. நோய்வாய்ப்பட்டால் இன்று நாளை என்று தாழ்த் தாது தகுந்த வைத்தியனையடைந்து சிகிச்சைபெறுதல் வேண்டும். இல்லையேல் இரு உயிர்களுக்கும் - (தாய்க்கும் சேய்க்கும்) ஆபத் தாய்முடியும்.
1. இரத்தக் குறைவு : கர்ப்பவதி பழுத்த இலைபோல் வெளுத் திருப்பாள். தினம் புரிந்த கருமங்களை வழமைபோல் ஆற்றமுடி யாது சோர்வடைவாள். திடீரென எழும்பினல் தலைசுற்றும்; நடந்தால் இளைக்கும். இரத்தச் செழிப்பைப் பொறுத்து இவை கூடிக்குறைந்திருக்கும். விரலில் இரத்தத்தைக் குற்றி எடுத்தால் நீர்போல் தடிப்பில்லாமலும் வெண்மையாயும் தோன்றும் இரத் தம் மிகமோசமானநிலையை அடைந்திருக்கும்பொழுது நெஞ்சு பட படக்கும். சழுத்துநரம்புகள் துடிப்பதை அவதானிக்ச லாம், கால் அடிகளில் அதைப்பும் ஏற்படும் , இந்த நிலைக்குக் தாய்வாவே சு டாது. ,ܠܐ

தாயும் பிள்ளையும் இரத்தச் செழிப்பை இலகுவில் பார்க்க அட்டை ஒன்று வகுத் திருக்கிருர்கள். அதன்மூலமே வைத்தியர் இரத்த நிலைபரத்தைக் கணக்கிடுகிருர்கள். மற்றமுறைகள் சிறந்தனவெனினும் இது சிர மம் குறைந்தது. இந்த அட்டையில் நூறுவரையும் வகுக்கப்பட்டு இருக்கின்றது. இது இரத்த நிறத்தையே அடிப்படையாய்க் கொண் டுள்ளது. 100 சிறந்தது. 90க்குக் குறைந்தவையெல்லாம் சரா சரிக்குக் குறைந்தவை என்று கொள்ளப்படுகிறது.
எமது பார்வையில் அடுத்துவந்த தெரிந்தெடாத 125 கர்ப் பிணிகளின் சராசரி இரத்தப்பொலிவு ஐம்பதாயிருந்தது. ஆகக் கூடியவர் அறுபதுமாத்திரம் உடையவராயிருந்தார், ஆகக் குறைந் தவர் 35 ஐக் காட்டினுர் இதுவும் எங்கள்நாட்டு வாழ்க்கைத் தரக்குறைவையே காட்டுகிறது. சராசரி மிகக்குறைவாயிருப்பதா லும் வாழ்க்கைத்தரம் உயர்ந்த குடும்பப் பெண்களும் 60 விகிதத் துக்குமேல் காட்டவில்லையாகையாலும் உஷ்ணம்கூடிய பரப்பில் வாழும் எம்மவரின் இரத்த நிறம் சூட்டினுல் பாதிக்கப்படுகின் றதோ, நாம் கைக்கொள்ளும் மேலைத்தேச இரத்தப்பொலிவு அளவுகோல் எங்களுக்கும் சரியாய்ப் பொருந்துமோ என்று ஐயம் கொள்ள நேருகின்றது. இந்த 125 பெண்களும் ஒரு கிராமத்தை யும் அதன் சுற்றுப்புறத்துையும் சேர்ந்தவர்கள். இக்கிராமம் கல்வி யிலும் செழிப்பிலும் மற்றக்கிராமங்களிலும் கூடியதொன்று என்று சொல்லலாம், 35 விகிதம், 40 விகிதம் காட்டிய பெண்களில்தான் முன்காட்டிய ஆபத்தான அடையாளங்கள் தென்பட்டன. அவர்க ளுக்கும் நேரகாலத்திலேயே இக்குறை கண்டுபிடிக்கப்பட்டு இரும்புச் சத்து, ஈரல்சத்து, சீவசத்துக்கள் கொடுக்கப்பட்டு 20 விகிதம், 25 விகிதம் இரத்தப்பொலிவு கூட்டப்பட்டது. பிள்ளைகளையும் ஒவ்வொருவரும் சிரமமின்றிப் பெற்றெடுத்தார்கள், வளரும் குழந்தைக்கும், வளர்க்கும் தாய்க்கும் இரும்புச்சத்து மிகுதியாகத் தேவைப்படுகிறது. இந்தச் சத்துத்தான் இரத்தத்தின் நிறத்தை யும் கூட்டுகின்றது. இரும்புச்சத்துக் குளிகைகள் பெரும்பாலும் நன்கு சீரணித்து உடலுடன் சேருகின்றன. சீரணிக்காவிடினும் பிரசவம் மிகநெருங்கிவிட்டாலும் இதனை ஊசிமூலம் உடலிற் பாய்ச்ச உடன்படவேண்டும். குளிகைகளால் செலவும் சிரமமும் மிகக் குறைவாகும்.
2. விக்கம் : கர்ப்பவதியின் கால் அடிகள், இமைகளின் கீழ்ப் புறங்கள் வீங்கினுல் அவைகளே ஆபத்தின் அறிகுறிகளாகக் கருதல் வேண்டும். சிறு அதைப்புச் சிலரில் சாதாரணமாய் உண்டெனினும், அதனையும் வைத்தியனே நிட்சயிக்க வி ட் டு வி டு த ல் வேண் டும், குண்டிக்காய்கள் (Kidnies ) தங்கள் தொழில்களைச் செவ் வனே செய்யாததால் இது ஏற்படுகின்றது. நச்சுநீர்கள் குண்டிக்

Page 19
s , 姆 | 6 தாயும் பிள்ளையும்
காய்களால் செவ்வனே கழிக்கப்படாதுபோகவே சலப்போக்குக் குறைகின்றது, அது தசைகளில் செறிகின்றது; தொடக்கத்தில் மேற்காட்டிய இடங்களில்தான் தெற்றெனப் புலப்படும் கைவிரலி ணுல் அதைப்புள்ள இடத்தில் ஊன்றினுல், நீர் செறிந்த தரையில் கால் புதைவதுபோன்று புதைந்து குழிவிழும். காற்படங்களிலும், கெண்டைக்கால்களின் மேற்புறங்களிலும் இலகுவில் இதை அவ தானிக்கலாம். இதைக் கவனியாதுவிட்டால் கர்ப்பவதியின் நிறை அதிகரிக்கும்; இளைக்கும்; இலகுவில் களைக்கும். கர்ப்பம்தரித்த காலத்திலிருந்தே சலத்தை நன்ருகக் கழிக்க உதவும் உணவுகளைத் தெரிந்தெடுத்து உண்ணல்வேண்டும். சலம் செவ்வனே கழிகிறதா என்று கவனித்தல் வேண்டும். முன்னுேர்கள் சுரைக்காயைத் தேடிச் சமைத்துக் கர்பபவதிக்குக் கொடுப்பார்கள். தக்காளியைத் தவிர்த் தல் நன்று, இளநீரில் தேசிக்காய்ப் புளியையும் சர்க்கரையையும் கலந்துகுடித்தல் நன்று. இது சத்துக்கள் நிறைந்த பானமாகும். பார்லி அரிசி, தேங்காய்ப்பூக்கீரை அவித்துக் குடிக்கலாம். தொடக் கத்திலிருந்தே சலப்போக்கை அவதானித்து இவற்றைக் குடித்து வருவதால் வீக்கத்தைத் தவிர்க்கலாம்.
இரத்தாசயத்தின் பெலவீனத்தாலும், பித்த ஈரல் நோய்ப் படுவதாலும் வீக்கம் ஏற்படக்கூடும் வீக்கம் காணப்பட்டால் தகுந்த வைத்தியரின் உதவியை நாடவேண்டும்.
3. இரத்தக் கொதிப்பு : தலையிடி, தலைச்சுழற்சி, பிடரி, கும் பம் உழைதல் தோன்றினுல் இரத்தக்கொதிப்புக் கூடியிருக்கக்கூடு மென்று கருதல்வேண்டும். பெரும்பாலும் வீக்கமும் தோன்றும், விக்கமில்லாமலும் இரத்தக் கொதிப்புக் கூடியிருத்தல்கூடும். கர்ப்ப வதியில் ஒருநோய் தோன்றினல் வேறு பலநோய்களும் பிணைந்து கிடத்தல் உண்டு. எனவே தேர்ந்த வைத்தியரின் நல்ல சோதனைக் குள்ளாக வேண்டும். இரத்தக் கொதிப்புத் திடீரென வலிப்பைக் கொண்டுவருதல் கூடும். தாய்க்கும் சேய்க்குமே ஆபத்து உண்டா கக்கூடும்; ஆரம்பத்திலிருந்தே இதற்குரிய அறிகுறிகளைக் கவனித் துச் சிகிச்சை பெற்றுவந்தால் பயமே இல்லை; இரத்தக்கொதிப்பு வீக்கமுடையோர் இறைச்சி, முட்டை, கொழுப்பு உணவுகளையும், கறி உப்பையும் தவிர்த்தல்வேண்டும் காய்கறிகள் கீரைவகைகளை விரும்பி உண்ணல்வேண்டும். வைத்தியர் கட்டளைகளை வழுவாது கடைப்பிடிக்கவேண்டும்.
4. மலச்சிக்கல் : கர்ப்பவதியை வருத்தும் நோய்களில் இதுவும் ஒன்று. மலமும் சலமும் செவ்வனே தினமும் கழிந்தால் வருத் தங்கள் தலைகாட்டவே மாட்டா எனலாம்.
சாதாரணமாய்ச் சில பெண்கள் தினமும் இரண்டு மூன்று முறைகளும், சிலர் ஒருமுறையும் இன்னும் சிலர் இருநாட்களுக் கொருமுறையும் மலமகழிக்கும் வழக்கம் உடையவர்களாய் இருப்பர் :

7ேலம் ஆர். - தாயும் ೧:ಕ್ಲಿà: d 7
r:T~, Α. και
இது ஒவ்வொருவருடைய பழக்கத்தையும் பொறுத்தது. தினமும் குறிக்கப்பட்ட நேரத்தில் மலம் கழித்தல் சாலவும் சிறந்தது. துரண்டுதல் வரும்வரைக்கும் காத்திருத்தல் கூடாது. ஒரு குறித்த நேரத்துக்குப் போக மலமும் கழியும். இவ்வாறு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை போவதுதான் பழக்கமாயிருந்தால் கர்ப்ப வதி அப்படியே நன்ருகக் சழிக்கத் தவருது கவனித்துக்கொள்ள வேண்டும்.
தினமும் குளித்து உரியநேரங்களில் உணவருந்திப் பலவகைக் காய்கறி இலை வகைகளையும் உணவிற் சேர்த்துக்கொண்டால் மலச் சிக்கல் ஏற்படாது. முக்கியமாகக் கொதித்தாறிய நீரைத் தினமும் 6 கிளாசுகளுக்குக் குறையாமல் குடித்தல் வேண்டும். சமைக்கும் அரிசி தீட்டப்படாததாய் தவிட்டினுலான சிவப்பு உறை சிதைவு படாததாய் இருத்தல்வேண்டும். இதில் சீவசத்து நிரம்ப இருக் கிறது. இது உடம்புக்கு ஊக்கத்தை அளிக்கக்கூடியது. நரம்புக ளுக்குத் தைரியத்தைக் கொடுத்து எரிவு, உளைவு முதலிய வியாதி களையும் தடுக்கும். அத்துடன் மலக்குடலையும் பெலப்படுத்தி நன் முக இயங்கச் செய்யும், பழவகைகளையும் இடையிடையே இளநீரை யும், தேசிக்காய்ப் புளியையும் சேர்த்து உண்பதாலும் குறிக்கப் பட்ட நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வ தாலும் மலச்சிக்கல் ஒருபொழுதும் ஏற்படாதவாறு தடுத்துக் கொள்ளலாம். இதற்குமேலும் மலச்சிக்கல் ஏற்பட்டால் கடும் பேதிகளை உபயோக க்கக்கூடாது. 'லிக்குவிட் பறவின் (Liquid Paraffin) போதுமானது. எந்த மாதத்திலும் குடிக்கலாம். கழி தல் சீராகும்வரை தினமுமே குடிக்கலாம். காலையில் வெறுவயிற் றிலே குடித்தல் நல்லது, இரண்டு மேசைக்கரண்டியளவு போது 10ானது
5. நாரிநோ இடுப்புவலி, அடிவயிற்றுநோ இந்த நோக்கள் காலம் பூர்த்தியாகுமுன் வெளிவர எத்தனிக்கும் கர்ப்பத்தின் நிமித்தம் ஏற்படுகின்றன. மற்றது பலோப்பியன் குழாயில் உண் டாகிய சிசு கருப்பைக்கு இயற்கையாய்த் தள்ளப்படாது குழாயி லேயே வளரும்போது ஏற்படும் நோ வெளிவர எத்தனிக்கும் கர்ப்பத்தை வயிற்றுநோவினலும், நாரி உளைவினுலும் அதைத் தொடர்ந்து யோனிவழியாய் நீர்பொ சிவதாலும் அறியலாம். கருப்பையில் அல்லாமல் பலோப்பியன் குழாயிலேயே வளரும் சிசுவைச் சதைநெரிவின்மூலம் ஏற்படும் தாங்கொணு நோவினுலும் அதைத்தொடர்ந்து யோனிவழியாய்ச் சிந்தும் இரத்தத்தாலும் ஒருவாறு பிரித்தறியலாம். சிசு தரித்த சில நாட்களிலேயே இந்த நோ தொடங்கிவிடும், பலோப்பியன் குழாயில் சிசுவளர்ந்து பிறப்

Page 20
i8 தாயும் பிள்ளையும்
பது சிந்திக்கமுடியாத ஒருகாரியம். இருந்தும் பிள்ளே கள் முழுக் காலமும் குழாயிலேயே வளர்ந்து சத்திர சிகிச்சை மூலம் தாய்மாரி னின்றும் பிரித்தெடுத்த சம்பவங்கள் பதிவேடுகளில் மிக அரிதா கக் காணப்படுகின்றன. காரணம் எதுவாயினும் எவ்வித நோவை யும், நீர்ப்பெருக்கையும், இரத்தச் சிதைவையும் அலட்சியம் செய் யவே கூடாது.
6, இரத்தக்கசிவு : (அ) யோனிவாயிலால் திடீரென இரத்தம் போகக்கூடும். நோவோ கிடையாது. முன்னெச்சரிக்கையெதுவுமே இல்லாது இது நடக்கும். அரிதாகவே தீங்கேற்படக்கூடிய பெரும் பெருக்காயிருக்கும். படுக்கை ஆறுதலுடன் மறையவும்கூடும். பின்பு எந்நேர மாகிலும் ஏற்படலாம். பிள்ளை வெளிவரும்வரை இந்த அபாயம் உண்டு. எதுவாயினும் வைத்தியசாலைக்குக் கர்ப்ப வதி அழைத்துச் செல்லப்படல்வேண்டும். எது செய்யவேண்டும் என்று நிட்சயிப்பது வைத்தியரின் பொறுப்பாகும், இரத்தப் பெருக்கைப் பொறுத்து மிகச் சிறிதளவாயிருந்தால் பிள்ளை முதிர்ந்து பிறக்குங்காலம் வரும்வரை திடீர்நடவடிக்கை ஒன்றும் எடுக்காது வைத்தியர் பொறுத்திருக்கக்கூடும். சிசுப்பையின் மேற்பக்கமாய் ஒன்றவேண்டிய பிளசன்ரு கீழ்ப்பக்கமாய் ஒன்றுவதால் இது ஏற் படுகின்றது
(ஆ) முறையாய் மேற்பக்கமே ஒன்றிய பிளசன்ருவும் காயப் படுவதால் பிரிவதுண்டு. இப்பிரிவு பெரிதும் பயங்கர விளைவுகளைக் கொண்டுவரக்கூடும், சடுதியாய்க் கடும்நோவினுல் தாய் பாதிக் கப்படுவார், களைத்துச் சோர்வடைவார்: இரத்தம் சிசுப்பையிலே தங்குவதால் இரத்தப்பொசிவு இல்லாமலும் இருக்கலாம். ஆனல் கருப்பவதியின் நிலை - சோர்வு, தாங்கொணு நோ முதலியவை வைத்தியனைத் தேடி அடையவே செய்யும். அப்படிப்பட்ட நோயா ளிக்கு வைத்தியசாலைச் சிகிச்சையே வேண்டியது.
7. கால் இரத்தநாளங்கள் தடித்தல் : இந்த நாளங்கள் (Lf) (ol) மாக இரத்தம் ஓடாது தடைபடுதலால் இவை உண்டாகின்றன : கால்களில் பச்சைக் கயிறுகள் நெளிந்து நெளிந்து கிடப்பதைப்போற் காணப்படும். சிறிதுநோவும் இருத்தல்கூடும். படுக்கும்பொழுதும், ஆறி இருக்கும் நேரங்களிலும் கால்களை உயரமாய் வைத்திருத்தல் மாத்திரம் போதுமான சிகிச்சை, இரத்தம் தடைபடாது ஒட இந்த உயரம் உதவியளிக்கும். பிரசவம் முடிந்ததும், இரத்த ஒட்டத்துக்குத் தடையாயிருந்த பிள்ளை நீங்கவே, நாளங்கள் பழைய நிலையை அடையும்,

தாயும் பிள்ளேயும் 9 7. காலம் கழித்தும் வயிற்றுள் சிசு, 280 நாட்கள் மட்டுமே சிசு பக்குவமடையத் தேவையா? காலம். இக்கால எல்லையில் பிரசவம் நிகழும். எனினும் சராசரி நாலுபிள்ளைகளுள் ஒன்று பிறப்பதற்கு இந்த எல்லையைக் க!-1 பதையும்; பதினறு பிள்ளைகளுள் ஒன்று 42 கிழமைகளுக்குமேல் எடுப்பதையும் காணலாம். பிள்ளை எப்பொழுது பக்குவமடைந்தது என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாமலே இருக்கிறது. சிசி வுக்குச் சிசு வளர்ச்சி வித்தியாசமாகையால் எப்போது வளர்ச்சி முடிந்து முதிர்ச்சி ஏற்பட்டது என்று எவராலும் சொல்ல இய லாது. சிசுப்பையில் முதிர்ச்சி ஏற்படுவது அரிது. ஆனல் சிசுப் பையில் பிள்ளை வளர்ச்சியடையும் காலம் வரையறுக்கப்பட்ட 270 நாட்களிலும் கூடலாம். 280 நாட்கள் போய் 300 நாட்களும் வரலாம். அப்படி நாட்கள் கழிந்தமையால் சிசு கிழத்தன்மை அடைந்துவிட்டதென்று சொல்வதற்கில்லை. பட்டணத்தடிகளும் ** முந்நூறு நாட்கள் சுமந்து ' என்ருர், மாணிக்கவாசகரும் " தக்க தசமதி தாயொடு தான்படும் ' என்ருர் முந்நூறு நாட்களைத் தான் முன்னேர் கணக்கிட்டிருக்கிருர்கள். எனவே 280 நாட்கள் கழிந்ததும் ஏங்குவதற்கு இடமே யில்லை. 280 நாட்களை ஒட்டிப் பெறும் பெண்களிலும் பார்க்கக் கூடிய நாட்கள் சிசுக்களை வயிற் றில் வைத்திருக்கும் பெண்கள் விசேஷ ஆபத்துக்குள்ளாவதாகத் தெரியவில்லை. இந்தத்துறையில் ஆராய்ச்சிநடத்தியவர்களின் முடிபு இதுவே. எதற்கும் விலக்குண்டு; உண்மையில் பிள்ளை வயிற்றில் முதிர்ச்சியடைந்த பின்பும் பிறப்புச் சுணங்கும் பிள்ளைகளும் உண்டு தான். அப்படி ஏற்படும்போது தாயிலும், சேயிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நர்பிக்கொடி பிள்ளைக்கு உணவூட்டும் பணியைத் திறம்படச் செய்யாதுவிடுகின்றது. கருப்பையில் இருக்கும் பன்னீர் (Amniotic Fluid) காய்ந்து குறைகின்றது. எனவே வயிற்றுப் பருப்பம் - சுற்றள்வு குறைகின்றது; உடம்பில் நீர்த்தன்மை குறைவதனல் தாயின்நிறை குறைகின்றது.
பிள்ளையும் நீளத்தால்கூடும்; ந க ங் க ள் வளர்ச்சியடையும்; தேகத்தில் மயிர் நீண்டுவளரும்; முகம் ஒடுங்கி வாடி, கவலைகொண் டதாயிருக்கும் தோல் தளரும்; சுருங்கும்; இரப்பர்போன்று பிடித் திழுக்கக்கூடியதாயிருக்கும். உண்மையிலேயே கிழத்தன்மைதான் பிறந்தபின் இந்தக் காட்சியையே காண்பீர்கள்.
இப்போது ஒன்று தெளிவாகின்றது. 280 நாட்கள் சென்றதும் கர்ப்பவதி கவலைகொள்ளத் தேவையில்லே உறவினர் மற்ருேர் வீண் கதைகளால் தாயின் மனத்தைக் குலைத்தல்கூடாது; எல்லா வற்றிற்கும் மேற்பொறுப்பாயிருக்கும் வைத்தியரை அவசரப்படுத்

Page 21
20 தாயும் பிள்ளையும்
தக்கூடாது. பலவற்றையும் சீர்தூக்கிப்பார்த்து யோசிக்கவும்: பலபக்கமும் பார்த்து ஆராய்ந்து அறியவும் தேவையானவற்றைத் தேவைப்படும்போது நிச்சயித்துச் செய்யவும் வைத்தியருக்குப் போதிய அவகாசத்தை நாம் கொடுத்தல்வேண்டும்.
பிள்ளை தானுகவே பிறக்கும். இயற்கை தாயுடன் பிள்ளையை எப்பொழுதும் வைத்திருக்கவிடமாட்டாது. நாட்கள் கழிந்தாலும் இயற்கையாகப் பிறக்க இடம்கொடுப்பதில் இருக்கும் ஆபத்தைவிட மருந்தால், ஆயுதத்தால் பிறப்பைத் தூண்டும் முயற்சிகளில் ஏற் படும் ஆபத்துக் கூடியதாகும் என்பதை நாம் மனதில் புதியூவைத் திருத்தல் வேண்டும்;
8. வயிற்றுள் இறக்கும் சிசு.
பிள்ளையின் அசைவை நாளும்பொழுதும் அவதானித்த தாய் திடீரென அது இல்லாதுபோகவே ஏங்குகிருள் வைத்தியன அடைந்து ' ஊரவில்லை, துடிக்கவில்லை ' என்று முறைப்படுகிருள். முன்கேட்ட இரத்தாசய ஒசை அவருக்குக் கேட்கவில்லை. பிள்ளை இறந்திருக்கவேண்டும். ஆனல் ** நோ இல்லை. பிள்ளை பிறக்கும் அறிகுறிகள் வேறெதுவும் இல்லை. தாய்க்கு மனக்குழப்பமேயல் லாது உடம்பில் வேறுயாதும் வித்தியாசமில்லை. இனத்தவர்கள் இடிகேட்ட சர்ப்பம்போல் ஏங்குகிருர்கள் குழந்தை இறந்தே போனது. இந்த நிலையில் என்ன செய்யவேண்டும் ? வைத்தியரை எதற்கும் அவசரப்படுத்தக்கூடாத மற்ருேர் சமயம் இது. பிள்ளை இறந்ததினுல் தாயின் உடம்புக்கு ஒரு தீங்கும் ஏற்படப்போவதில்லை. இறந்த இந்தச் சிசு தாயின் உடம்பில் தேவையில்லாத வேருேர் பொருளாகிறது. இயற்கை அதை வெளியே தள்ளவே எத்தனிக் கும். பெரும்பாலும் இறந்து இரண்டு கிழமைகளில் வெளிவந்து விடும். இந்தத் தாமதத்தால் தாய்க்கு ஒரு ஆபத்தும் நேராது ஆனல் ஆயுதம் பிரயோகிப்பதனுலோ அல்லது மருந்துமூலமாகவோ பலவந்தமாகப் பிள்ளையை வெளிப்படுத்த எத்தனிப்பதில் தீங்கு ஏற்படக்கூடும். நிபுணர்கள் முடிவு இதுவே. எனவே ஏங்கி நடுங் கக் காரணம் இல்லை. தேர்ந்த வைத்தியரிடம், எதை எப்போது செய்யவேண்டும் என்பதை நிச்சயிக்க விட்டுவிடவேண்டும், பெரும் பாலும் பிள்ளை இறந்ததையே வெளிக்காட்டாது பயமில்லை, நோ கிளம்பக் கொண்டுவாருங்கள் ' என்பார் நிபுணர். இறந்ததை வெளிக்காட்டாதுவிடுவது நன்மையே பயக்கும். வீண் அங்கலாய்ப் புக்கு இடம் ஏற்படாது.
ஒருநாள் அசைவைக் காணுது ஏங்கும் தாய் அடுத்தநாள் வழமைபோல் " ஊருவது, துடிப்பதை ' அவதானித்து

பூரிப்பதுண்டு. சில நேரங்களில் பிள்ளை சோர்வடைந்து அசையாது
விடலாம். இன்னும் சில நேரங்களில் தாயே பிள்ளையின் அசைவை அவதானிக்காதுவிட்டு மனம் ஏங்கலாம்,
9. பிரசவ காலம் வந்தெய்தியதும்
1. பிள்ளே பிறக்கும்நாள் : கடைசித் தீட்டின் கடைசிநாளேயே கர்ப்பவதி கணக்கில் எடுத்தல் வேண்டும். முதல்நாளே எடுப்பவர் கள் ' நாள் பிந்திவிட்டது ' என்று கடைசியில் அணுவசியமாகப் பயப்படுவார்கள்; உதாரணமாக தைமாதம் பத்தாம் தேதி தீட் டின் கடைசிநாளாயிருந்தால் மாசிமாதம் பத்தாம் தேதி ஒருமாதம் முடிந்துவிட்டதாகக் கொள்ளவேண்டும். அப்படியே கணக்கிட்டு ஒன்பதுமாத முடிவுடன் ஏழுநாட்களைச் சேர்க்க 280 நாட்கள் சரி யாய் இல்லாவிட்டாலும் அந்தநாள், அல்லது அந்தநாளுக்குப் (ஐப்பசி 17-ந் திகதி) பின்முன்னுய்ப் பிள்ளை பிறக்கும். -
சில பெண்களில் இந்த 280 நாட்கள்முடியும் காலத்தையே அறிவது சங்கடமாயிருக்கும். சிலருக்குத் தீட்டுவந்தநாளே தெரியா திருக்கும். ஏன் ? எந்த மாதம் என்றே தெரியாத மகளிரும் உண்டு! இன்னும் சிலருக்குக் கர்ப்பம் உண்டாகிய பின்பும் இரண்டொரு தீட்டுக்கள் காணப்படுவது உண்டு. இதனுல் எந்தத் தீட்டைக் கணக்கில் எடுப்பது என்று தெரியாது திண்டாடுவார்கள். அரி தாகச் சிலரில் கர்ப்பகாலம் முழுவதுமே தவருது தீட்டு மாதா மாதம் காணப்படுவதுமுண்டு இந்தக் கூட்டத்தாரைச் சேர்ந்தவர் களுக்கு எது கடை சித் தீட்டென்று கூறுதல் இயலாததே. மேற் கூறிய கூட்டத்தினரில் ' காலைநோய் ' கண்ட காலத்தைக்கொண் டும், பிள்ளை 8 ஊருவதை தாய் முதல் உணர்ந்த நாளைக்கொண் டும், பிள்ளையின் வளர்ச்சியைக் கொண்டும் பிறக்கும் காலத்தை ஊகித்து அறிதல்வேண்டும்.
இந்த நல்நாளை அறிந்து அந்தநாளுக்கு மிகமுன்பே பிரசவத் துக்குத் தேவையான பொருட்களைக் கணப்பொழுதில் எடுக்கக் கூடியதாய்ச் சேகரித்து வைத்துக்கொள்ளல்வேண்டும். பெரும் பாலும் அணித்தே இலகுவில் அடையக்கூடிய அரசினர் பிரசவ சாலைகள் இருந்தால் அங்கு பிரசவத்துக்குச் செல்வது சாலச்சிறந் தது. வறியவர்களுக்கு இப்பிரசவசாலைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். செலவில்லை; சிரமமில்லை; நாளும் ஊதி யத்துக்கு உழைக்கவேண்டிய கணவன் வீட்டில் தங்கிநிற்க வேண் டியதில்லை. சேர்ந்தோர் எல்லோருக்கும் மனதில் சமாதனம் நில வும். திடீரென ஏற்படும் இடைஞ்சல்களைச் சமாளிப்பதற்கும் கர்ப்பவதிக்கு இந்தக்காலத்தில் வேண்டிய மனச்சாந்தியைக் கொடுக்

Page 22
2& தாயும் பிள்ளேயும்
சவும் பிரசவ சாலைகளே நன்று. இருந்தும் (அதிகமாய் வறியவர்கள்) இடையிடையே வீடுகளில் பிரசவித்தபின்னர் அவதிப்படுவதைக் காணக்கூடியதாக இருப்பது வருந்தத்தக்கது.
பிரசவத்தின்போது பெண்ணுக்கு மனச்சாந்தியை ஏற்படுத்த அவருக்குப் பிரியமானவர் ஒருவரைக் கூட நிற்க விடவேண்டுமென்ற கிளர்ச்சி மேல்நாடுகளில் நடக்கிறது. இதனுல் நன்மை உண் டென்று நிபுணர்களும் உணருகிறர்கள். சில மேலைத்தேச ஆஸ் பத்திரிகளில் புருஷனையோ அல்லது அன்புக்குரிய மற்ருெரு வரையோ பிரசவம் நடக்கும்பொழுது பெண்ணுடன் நிற்க அனு மதிக்கிருர்கள். குளித்துச் சுத்தமான உடையுடன் வைத்தியரைப் போல் மேல் அங்கி முதலியன அணிந்து, அவர்களின் சொல்லுக் கமைய அணித்தே நிற்பதால் தீங்கொன்றும் நேரிடப்போவதில்லை. கர்ப்பவதிக்குத் தனது மனதிற்கு உகந்த ஒருவர் கூடநிற்பதைக் காணவே ஒரு புதுத்தென்பு உண்டாகும். பிரசவமும் அவருக்கு இலகுவாகவே இருக்கும். இம்முறைக்கு எதிர்ப்பிருக்க நியாயமே இல்லையெனலாம்.
2. மருத்துவப்பெண் : பயிற்றப்பட்ட மருத்துவப்பெண் கிரா
மத்துக்கு இருவராகுதல் இருத்தல்வேண்டும். இலகுவில் இவர்கள் கிட்டாததினலேயே இப்பொழுதும் பயிற்றப்படாத பெண்கள் குடும்பத்தொழில்போன்று இதில் ஈடுபடுகிருர்கள். அவர்களின் உதவியை மக்களும் நாடிச்செல்கின்றனர். இந்த நிலைமை மாறல் வேண்டும். ஒவ்வொரு கர்ப்பவதியும் பயிற்றப்பட்ட பெண்ணுல் பராமரிக்கப்படும் பாக்கியம் இலகுவில் கிடைக்க வகைசெய்தல் வேண்டும். அரசினர் அமர்த்தியிருக்கும் பயிற்றப்பட்ட பெண்கள், கர்ப்பவதியைக் கர்ப்பம்தரித்த காலந்தொட்டுப் பிள்ளை பிறக்கும் வரை தங்கள் கவனத்தில் வைத்திருப்பார்கள். மாதம் இருமுறை களுக்குக் குறையாமல் வீடுகளில் சந்தித்துக் கர்ப்பவதியின் நிலையை ஆராய்ந்து அவ்வப்பொழுது தேவையான புத்திமதிகளைப் பயன் கருதாது புகட்டுவார்கள். இவர்களின் சேவையைப் பெண்கள் கூடியவரை பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். இரத்தத்தைச் சோதித்து அதன் குறைவு நிறைவுகளைக் கூறுவார்கள்; சலத்தைச் சோதித்துத் தீங்கான மாறுதல்களைக் கவனிக் துச் சிகிச்சை செய்யத் தூண்டுவார்கள்; பிறக்கப்போகும் பிள்ளைகளைத் தாங்களே கூட நின்று உங்கள் வீடுகளிலேயே யாதொரு விக்கினமுமில்லாமல் பிறப்பிப்பார்கள். ஆனல் பிரசவ சாலையே பிரசவத்துக்கு ஏற்ற சிறந்த இடமென்பதைத் திரும்பவும் கூறுகின்ருேம்.
3. பிரசவ அறை இது புனிதமானதாகவும் காற்ருேட்டமுள்ள தாகவும் விசாலமானதாகவும் இருத்தல்வேண்டும், தாயின் தேவைக்

தாயும் பிள்ளையும் 23
கும் பிள்ளையின் உபயோகத்துக்கும் தேவைப்படாத பொருள்கள் ஒன்றுமே அங்கிருக்கக்கூடாது. பெரும்பாலும் வறிய குடும்பங்கள் வசிக்கும் வீடு ஒரு அறையைக்கொண்டது. அப்படியானவர்கள் விட் டில் பிரசவிக்க நிச்சயிப்பது வருந்தத்தக்கது. வைத்தியசாலையில் மகவை ஈன்ருலும், ஒரு கிழமைக்குப் பின்போ முன் போ விடுதிரும்ப வேண்டும். வீட்டிலுள்ளவர்கள் இந்தக்காலத்தில் தங்கள் சுகத் தைக் கவனியாது இளந்தாயின் சுகத்தையும் மகவின் சேமத்தை பும் கவனித்து நடத்தல் வேண்டும். வீட்டின் நல்ல பாகத்தையே கூடியவரை சுத்தம் செய்து புனிதமாக்கி அவர்களுக்கு அளித்தல் வேண்டும். ரஷ்ஷியாவில் பேற்றின் பின் ஒன்பது நாட்கள் கழிந்தே தாயை வெளிச்செல்ல அனுமதிக்கிருர்கள்.
4 உடை : பிள்ளை பிறந்தவுடன் மாற்றவும், பின் தேவைப்படி தினமும் மாற்றவும், தோய்த்து வெய்யிலிலுலர்த்திய சுத்தமான துணிகள் வேண்டும். நேர காலத்துக்கு இவைகள் கிடைக்க ஏற்க .
ஒழுங்குகள் செய்திருத்தல்வேண்டும். பிரசவநோ தொடங் கும் குறிகள் ஏற்பட்டதும், குளித்துத் தேகத்தைச் சுத்தமாக்கிச் சுத்தமான உடையும் தரித்துக்கொள்ளல் வேண்டும். சுத்தத்தின் அவசியத்தை இந்தக் காலத்தில் மிகைப்படுத்திக் கூறமுடியாது.
தாயைக் கவனித்துவந்த மருத்துவமாதை அழைத்து அவரின் அறிவுரைப்படி நடத்தல்வேண்டும். பயிற்றப்பட்ட இந்தப் பெண் ணிடம் சிலவருட அனுபவங்களும் சேர்ந்திருந்தால், ஒரு தீங்கும் நேராது. கலாசாலையால் வெளிவந்த பட்டதாரிகள் இந்நிலையில் செய் யக்கூடியன இவர்களாலும் செய்யமுடியும். அப்படி ஒரு மருத்துவப் பெண்ணின் கவனத்திலிருந்திராவிட்டால் முன்கூட்டியே எது பிரசவ சாலை என்று தீர்மானித்திருப்பீர்கள். பிரசவ காலம் நெருங்கியதும் அவ்விடத்துக்குக் கர்ப்பவதியைக் கொண்டுசென்று விட்டுவிடல் வேண்டும்
10. பிரசவத்துக்குப் பிள்ளை எடுக்கும் காலம் சாதாரணமாய் வளர்ந்த சிசு சுகதேகியான தாயினின்றும்
பிரிந்து வெளிவரச் சராசரி 8 மணித்தியாலங்கள்வரை எடுக்கும்.
தலைப்பிள்ளையைப் பெறும் பெண்ணில் இந்தநேரம் 12 முதல் 15 மணித்தியாலங்களாகவும் கூடும். ' நோ ' தொடங்கி அந்த "நோ தொடர்ந்து பெலனுள்ளதாய்க் கூடிக் கொண்டுவந்தால் மட் டுமே இந்தக் கணக்கிலமையும், 18 மணித்தியாலங்களுக்குப் பிந் தினுல் காலம் நீடித்துவிட்டது என்று கொள்ளல்வேண்டும். சிறி தாய்த் தொடங்கும் "நோ காலம்செல்லச் செல்லப் பெரிதாகிக் கொண்டும், நோவுக்கு நோ இடைத்தூரம் குறைந்துகொண்டும்

Page 23
4.
போகும். உண்மையான 'நோர் இப்படியே வளரும். 18 மணித் தியாலங்கள் சென்றும் பிறப்பு ஏற்படாவிட்டால், வைத்தியர் நிலைபரத்தைத் திருப்பி ஆலோசனைக்கெடுப்பார். காலம் நீடிப்ப தற்குக் காரணங்கள் யாதென்று ஆராய்வார்,
காரணங்கள்
1. பெலன் குறைவான பெண்ணின் தசைநார்கள் இலகுவில் சோர்வடைந்துபோகும். சோர்வடைந்த தசைநார்கள் சிறிதே இயங்கும். அல்லது இயங்காதுவிடவேசுடும். சிறு இயக்கத்தால் ஏற்படும் அந்தச் சிறிய நோ பிள்ளையை வெளித்தள்ளக்கூடிய பெலனுடையதாயிராது.
2. பிள்ளையின் தலை பெரிதாகவும், தாயின் இடுப்பு எலும்புக் கூடு கீழ்ப்புறம் ஒடுங்கியதாகவும் இருத்தல்கூடும். நோ இருந்தும் பிள்ளை வெளிவர இடம்போதாது போகவே தாய் களைத்துச் சோர்வதன்றிப் பலன் கிடைக்காது போகும். மருத்துவமாதின் கவனத்திலிருந்திருந்தால் அவர் முன்பே எச்சரித்துப் புத்திமதியும் அளித்திருப்பார். இவைகளுள் எதுவாயிருத்தல்கூடுமென்று கண்டு பிடித்து நேரத்துக்கு ஆவனசெய்வது பராமரிக்கும் வைத்தியர் கடன், பராமரிப்போர் கவனமாயிருந்தால் முதலாவது தடை நேராமல் ஏற்ற நடவடிக்கைகளால் முன்பே திருத்திவிடலாம்.
11. நஞ்சுக்கொடி' வெளிவர எடுக்கும் நேரம்
பிள்ளை பிறந்தவுடன் தாய் விபரிக்க இயலாத சந்தோஷமும், ஆறுதலும் பெருமையும் அடைவார். பட்ட கஷ்டங்கள் பகற் கணுப்போல் மறைந்துவிடும். இந்தப் பூரிப்பில் இதயம் இருக் கவே பின்பும் ஒரு சிறு நோவுண்டாகி நாபிக்கொடியும் அதைத் தொடர்ந்து சிசுப்பையில் பரந்து பிடித்திருந்த தாமரையிலே போன்று வட்டமான சதையும், சவ்வும் வெளியில் தள்ளப்படும். இந்த நோவை அவர் உணர்வாரோ என்பதும் சந்தேகம், பெரும் பாலும் பிள்ளை பிரிந்த 15 நிமிடங்களுள் இது நடந்துவிடும், 30 நிமி டங்களுக்குமேல் நீடித்தால் தக்கநடவடிக்கைகள் எடுத்தல்வேண்டும் , சீனிகலந்த சூடான கோப்பிகொடுத்தல் நன்று. அக்கோப்பி பிரச வப்பொழுது ஏற்பட்ட களைப்பைப்போக்கி நச்சுக்கொடியை வெளித்தள்ளும்; உற்சாகத்தையும் ஊட்டும்.
நேரம் நீடிப்பதற்குரிய காரணங்கள்
1. தாயின் பெலன் பிள்ளையை வெளிக் காட்டும் பெரும் செய லில் செலவாகவே, தசைநார்கள் சோர்வடைந்து, ! ୩ ଜitätil')

தாயும் பிள்ளையும் 25
பையைச் சுருக்கும். அந்தச் சிறுவேலேயைச் செய்ய இயலாது கிடக் கும் களைத்த தாய்க்கு நிறைந்த சீனியுடன் கோப்பிகொடுத்துச் சிறிது உற்சாகம் ஏற்படுத்தல்வேண்டும். மருத்துவப்பெண்ணும் உதவியாகத் தன்னுடைய கைவிரல்களே மேற்புறம்வைத்துச் சிறிது கீழ்நோக்கி அமுக்கக் கருப்பை தானும் இயங்கி நஞ்சுக்கொடியை வெளியில் தள்ளிவிடும். இதற்குத் தவறிஞல் ஊசிமருந்தும் இதையே செய்யும்.
2. கருப்பையின் உட்புறத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும் நாபிக்கொடியும் அத்துடன் சேர்ந்த பரந்தசவ்வும், சதையும் பிரிந் தும் பிரியாமலும் இருத்தல் அல்லது முழுவதுமே ஒட்டிக்கொண்டு இருத்தல், பழுத்த பழம் மரத்திலிருந்து விழுவதுபோல், பிள்ளே பிறந்ததும் நஞ்சுக்கொடி தானுகவே பிரிந்து விழுவதே இயற்கை அமைப்பு. இதற்குமாருக வைத்தியர் தன்கையால் பலவந்தமாகப் பிரித்தெடுக்கநேரும் சந்தர்ப்பங்களுமுண்டு அந்தநிலையே இது இந்த நிலையில் இரத்தம் பெருக்கெடுத்துப் பாயவும் கூடும். இது அபாயம் நிறைந்த நிலேயாகும். ஆணுல் காலந்தர்ழ்த்தாது வைத் திய உதவியை நாடுதல்வேண்டும். வைத்திய நிபுணர் தாய்க்கு எது வித தீங்கும் ஏற்படாது பார்த்துக்கொள்ளுவார்.
12. பிரசவம் நடக்கும் பொழுது
பெரும்பாலும் அவதானத்துக்கு எடுக்கவேண்டியது சுத்த மின்மையே. அழுக்குடைய எதையும் பிரசவப்பெண்ணுக்குக்கிட் டக் கொண்டுவருதல் கூடாது. பிறரின் கிருமிகள் நிறைந்த முச் சுப் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. மருத்துவமாது தன்வாயையும் மூக்கையும் சுத்தமான துணியால் முடிக்கட்டியிருப்பதை அவதானிக்கலாம். பிரசவ அறைகள் வைத் தியசாலைகளில் பரிசுத்த அறைகளாகப் பாதுகாக்கப்படுகின்றன, பலரும் நடமாட அங்கு இடம் கொடுக்கப்படமாட்டாது. வைத் தியரும் மற்றைய உதவியாளரும் தங்கள் வாய் மூக்குகளைத் துணி களால் மூடிக்கட்டியே அங்குசெல்வார்கள், இதற்கெனவுள்ள மேல் அங்கியையும் அணிந்திருப்பார்கள்,
பிரசவத்தின் பின் ,、 1. சிசுப்பைச் சுருக்கம் பிள்ளையும் அதைத்தொடர்ந்து நஞ் சுக்கொடி'யும் வெளிவந்ததும் சிசுப்பை சுருங்கத் தொடங்கும். சிசுப்பையின் உட்புறமிருந்து நஞ்சுக்கொடி உரிந்து வெளிவருவ தால் இரத்தப்பெருக்குண்டாகும் இதைத்தான் திட்டு என்பார்

Page 24
易仿 தாயும் பிள்ளையும்
கள், சிசுப்பை சுருங்கச்சுருங்க இரத்த நரம்புகளின் உடைவுகள் நசிவுண்டு மூடப்பெற இரத்தம் ஒரு கணக்குள்ளதாயே இருக்கும். மருத்துவமாது இயற்கைக்கு உதவிசெய்யும் நோக்கமாகத் தன் வலக்கையின் நாலு விரல்களாலும் மெல்லிய அசைவுடன் சிசுப்பை யின் மேற்புறத்தைக் கீழ்நோக்கி அமுக்குவார். அது கெட்டியான * கிறிக்கெட்பந்து போல் சுருங்குவதை இலகுவில் உணரலாம். பந்து போல் கெட்டியாய்ச் சுருங்காத சிசுப்பையினின்றும் இரத்தம் மித மிஞ்சிப் பெருக இடமுண்டு. சாதாரணமாகப் பத்துநாட்கள் வரை தீட்டுப்படும், தொடக்கத்தில் தனிச் செந்நிறமாய்ப்படும் திட்டு, நாட்கழியச் செங்கல் மங்கலாயும், வெளுத்தும் மாறிப் பின் இல் லாதுபோகும். ஆனல் துர்நாற்றமுடையதாய் இராது. கர்ப்பவதி யைப் பராமரிப்போர் இதனை அவதானித்தில் வைத்திருத்தல் வேண்டும். துர்நாற்றம் வீசுவது நோயின் அறிகுறியாகும்.
2. சலமடைத்தல் : பிள்ளை பிறந்து ஆறுமணித்தியாலங்களுள் சலம் வெளிப்படும். சலப் பை சோர்வடைந்து தன் கடமையைச் செய்யாதுவிட்டால்மட்டுமே சலம் வெளிவராது பையில் தங்கிநிற் கும் நீர்நிறைந்தும் தாய் தன்னுல் அதை வெளிப்போக்க முடிய வில்லையென்ருல், நாம் அதை வெளிப்போக்க ஆவன செய்தல் வேண் டும். கைவிரல்களால் தொப்புளடியிலிருந்து மெதுவாகக் கீழ்நோக்கி அமுக்கப் பெரும்பாலும் நீர் வெளியாகும். கையை வைக்கவே சலப்பை தானே இயங்கக்கூடும். சலப்பை இயங்கக் கை ஆதர வும் கொடுக்கிறது. பலன் அளிக்காவிடின் ஆயுதம்கொண்டு நீர் அகற்றப்படல்வேண்டும். இது ஒரு சிறியவேலை, இதைப் பயிற் றப்பட்ட மருத்துவமாது சிரமமில்லாது செய்வார், பயன்படுத் தும் ஆயுதம் செவ்வனே அவிக்கப்பெற்றிருக்கிறதா என்பது கவ னிக்கப்படவேண்டிய ஒன்று.
3. தாய் அசைதல் : பிள்ளை பிறந்து இரண்டு மணித்தியாலங்கள் சென்றபின் தாய் சிறிதுநேரம் நிமிர்ந்திருக்கலாம். நான்கு மணித் தியாலங்கள்செல்ல எழுந்துநிற்கலாம், நாலைந்து அடிகள் நடக்க லாம், இந்த அசைவுகளால் தீங்கேதும் ஏற்படமாட்டாது. தீட் டுத் திறம்படக்கழிய உதவி நன்மையேயுரியும்,
4. மலச்சிக்கல் : பிள்ளைபெற்ற பெண்கள் அதிகநேரம் படுக்கை யிலே இருப்பதால் மலம் கட்டுப்படுவதுண்டு. மூன்ரும்நாள் மருத் துவப்பெண் சவர்க்கார நீர் கொண்டு எனிமா வைப்பதுண்டு: "கிளி சரீன் சப்போசிற்றறி ( Glycerine Suppository) கொண்டு மலத் தைப் போக்குவது இலகுவான வேலை, அல்லது இரண்டு மேசைக் காண்டிகொண்ட ஆமணக்கெண்ணெய் தேநீருடன் கலந்து வெறு வயிற்றில் குடிக்கலாம்; பின்னரும் தேவைப்படின் இந்த எண்ணெ ஷ்யயே உட்கொள்ளலாம் பால்கொடுக்கும் தாய் உப்புப்பேதி

தாயும் பிள்ளேயும்
குடித்தல் கூடாது, அது தேகத்தை வறளச்செய்து பாலேக் குறைக் கும். யாதேனும் காரணம்பற்றி மகவுக்குப் பாலூட்டாத தாய்க்கு இது நன்மையையே பயக்கும்; தினமும் செவ்வனே மலம் வெளி யாகும்வகையில் உணவு அமைதல்வேண்டும். அப்படி அமைந்தால் பேதி எவர்க்கும் வேண்டியதில்லை,
5. உணவு : முதல் இரண்டுநாட்களும் நீர் உணவே நன்று. பகவின்பால் கொடுக்கலாம். அல்லது புட்டிகளில் அடைத்துக் கிடைக்கும் மா எதுவும் கொடுக்கலாம்; இவையும் காய்ச்சி மாவாக் கப்பட்ட பசுவின்பாலே என்பதைப் பெரும்பாலாஞேர் உணர்வ தில்லை. கோப்பி, தேநீர் எதுவும் விருப்பப்படி தாய் அருந்தலாம். கொதித்தாறிய நீர் எவ்வளவும் பருகலாம்: ' வயிறு பழுக்கும் ' என்று தடுப்பது பெரிய அறியாமை, நோய் ஒன்றும் அணுகாத தாய்க்கு மூன்ரும்நாள் பத்தியம் கொடுக்கலாம்; பத்தியம் என்று சொல்லும்பொழுது தாயின் வழக்கமான சாப்பாட்டையே குறிக் கின்ருேம் ஆனல் காரமான பதார்த்தங்களும் இலகுவில் ஜீரண்ட் படாத காய்கறிகளும் தவிர்க்கப்படல் வேண்டும். மல்லி, உள்ளி, மிளகு மிகச்சிறுகச் சேர்த்தல்வேண்டும். எண்ணெய், நெய்ப்பதார்த் தங்கள் தவிர்க்கப்படல் வேண்டும், மதுபானம் மறந்தும் குடித்
தல்கூடாது; விறண்டியாவது, சாராயமாவது, இவைபோன்ற வேறு குடிவகையாவது, கலவையாவது குடித்தல் தீமையையே தரும். இவைகளை ' வயிற்றுப்புண் காய' என்ற போர்வையில்
பாவித்து, வயிற்ருல் கழிதலையும், தீட்டுப்பெருக்கையும் உண்டாக்கி மருந்துகள் தேடிவருபவர்களைத் தினமும் காணலாம். மல்லி, இஞ்சி மிளகு, உள்ளி இவைகளை ஒன்றுசேர்த்து அரைத்துப் பாக்களவு உறுளைகள் இரண்டோ, மூன்றே இக்காலத்திலும் பிள்ளைப்பெற் ருேருக்குக் கொடுப்பதை நாமறிவோம்; இதனுல் நன்மை ஏற்படு கிறதென்று ஊகிக்கவும் முடியவில்லை. ஆனல் இதன் நேர்விளை வாய் தீமைகள் ஏற்பட்டவர் நிவர்த்திதேடி வருவதை நாமறி வோம். இந்த உறுளைகளை ' காயம் ' என்று அழைப் பார்கள்.
6. உடலுறவு நோயொன்றும் அணுகாது? தன் பழைய சுக
நிலையை அடைந்த பெண் மூன்றுமாதங்கள் கழிந்ததும் உடலுறவில்
ஈடுபடலாம். ஆனல் சிசு உற்பத்தி உண்டாகாத முறைகள் ஒரு வருடம் வரையிலும் கைக்கொள்ளப்பட வேண்டும்.
13. தாய்க்கு ஏற்படும் நோய்கள்
1. இரத்தப் பெருக்கு பிள்ளை பிரிந்து வெளிவரமுன்பும், வெளி வந்து1ொண்டிருக்கும்பொழுதும், வெளிவந்தபின்பும் இது ஏற்படக் கூடும் பிரசவத்துக்கு முன்பெருகும் இரத்தமும், பிரசவித்துக்

Page 25
28 தாயும்
கொண்டிருக்கும்பொழுது மட்டின்றிப் பெருகும் இரத்தமும் அபாய அறிகுறிகள். ஆனல் இவை மிக அரிதாகவே ஏற்படுகின் றன. எம் கவனத்துக்குட்பட்ட அந்த 932 கர்ப்பவதிகளில் ஒரு வருக்குமே இவை ஏற்படவில்லை. பிரசவத்தின்பின் ஏற்பட்ட இரத் தப்பெருக்குகளும் மிகச்சிலவே. ஆனல் அவை சீவமோசத்தைக் கொண்டுவரக்கூடியனவாய் இருக்கவில்லை. சாதாரண நடவடிக்கை களுடன் கட்டுப்பாடாயின. இவை ஏற்படின் முதற்சிகிச்சைசெய்ய எவரும் தெரிந்திருக்கவேண்டும் வைத்தியனே அழைக்க ஆள் போப், வைத்தியர் வரும்வரையும் ' எம்பிரானே ' என்று φτιά, β) யிருத்தல்மட்டும் போதாது. உடம்பின் கீழ்ப்பகுதியைத் தாயின் இரத்தாசயத்தின் மட்டத்திற்கு மேலுயர்த்துவது முதல் வேலை. கட்டிலின் காற்பக்கத்தை ஒரு அடியளவுக்கு உயர்த்திவிடலாம். கற்களோ அல்லது செங்கட்டிகளோ கட்டிலின் காற்பக்கக் கால் களுக்கு வைத்து அவைகளை உயர்த்திவிடலாம். அதேவேளையில் தலையனேகளையும் விலக்கிவிடுதல் வேண்டும், இ டு ப் பு ப் பக்கம் உயர்ந்தவுடன் இரத்தப் பெருக்குக்குச் சிறிது தடையேற்படும். பனிக்கட்டிநிறைந்த பையை (tee bag) அடிவயிற்றுக்கு வைக்க லாம். இது கிடைக்காவிடின் இரண்டுமுழச் சதுரமுள்ள சுத்தமான துணியை ஐந்தாருக மடித்துக் குளிர்ந்த நீரில் நனைத்துத் தொப்புளி லிருந்து யோனிவாய்வரை போட்டுவிடலாம். ' களை தெளிய என்ற நியாயத்தில் விரண்டியோ, சாராயமோ கொடுத்தல் கூடவே கூடாது. அவை இரத்தாசயத்தைக் கூட இயங்கச்செய்து இரத் தப்பெருக்கை மேலும் கூட்டுவன.
வெறும் தரையில் பாய்மேல்படுக்கும் சகோதரியின் இடுப்பை உயர்த்த இரண்டோ, மூன்ருே தலையணைகளைப் பாவிக்கலாம். இவைகள் நடந்துகொண்டிருக்க வைத்திய உதவி தேடப்படவேண் டும். பாய்ப்படுக்கையுடைய பெண் தக்கவைத்தியம் தேடுவதற் குச் செலவுக்கு எங்கேபோவது ? எனவேதான் நடமாடும் பிரசவ மோட்டார் வைத்தியசாலை தேவை. காசில்லாத ஒரு குற்றத்துக் காகச் சிலர் கஷ்டப்படுகிரு?ர்கள் - செத்துமடிகிரு?ர்கள்.
2. வலிப்பு : கருப்பவதியாயிருக்கும்பொழுதும் பிள்ளை பிரசவிக் கும்பொழுதும், பிரசவித்தபின்பும் ଜୁଣ୍ଡ ஏற்படக்கூடும் கருப்பவதி யானதும் கவனமாயிருந்து இடையிடையே சலம் சோதித்துக் குறை நிறை அறிந்து ஆவன செய்து அதேபோல் இரத்தக் கொதிப்பும் இடையிடை அளந்தறிந்து குறைகள்தெரிந்து கண்டிக்க மருந்துகள் அருந்திவந்தால் இதற்கு இடமேயில்லை. கலம், மலம் தேகத்தின் நச்சுத்தன்மைகளை வெளிக்காட்டுவன. கர்ப்பவதி இவைகளில் கண்ணுங் கருத்துமாயிருத்தல்வேண்டும். அவை செவ்வனே சழி பும் வழியைத் தேடிக்கொள்ளுதல் வேண்டும். தலேசுற்றுதல், கும்.
A

தாயும் பிள்ளேயும் 39
உளவு, பாதங்கள் வீங்குதல் முதலியன பின்வரும் வலிப்புக்கு முன் னெச்சரிக்கை அறிகுறிகள். இவைகளில் ஒன்ருே, இரண்டோ கண் டாலும் வைத்தியனை அணுகுதல்வேண்டும்.
வலிப்பு வந்துவிட்டால் வீட்டில்செய்வதற்கு ஒன்றுமேயில்லை என்று சொல்லலாம். வைத்திய உதவிதான் துரிதமாய்த் தேடப் படல்வேண்டும் வலிக்கும்பொழுது நாக்கு, பல்வரிசைகளுக்கிடை யில் அகப்பட்டுத் துண்டாகவும்கூடும். கூடநிற்போர் இது நேராது பார்த்துக்கொள்ளல் வேண்டும். பெலமான தடித்துண்டையோ, பாக்குவெட்டிக் காம்பையோ, அல்லாது அதுபோன்ற வேறு ஏதும் பொருளோ பல்வரிசைகளுக்கு இடையில் செலுத்தி நாக்கைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இந்தப் பொருட்களைச் செருகமுன் துணியாற் சுற்றுவது நன்று.
இந்த அநர்த்தங்களைச் சமாளித்துத் தாடையும் சேயையும் காப்பாற்றும் நோக்கமாய் மேல்நாடுகளில் நடமாடும் வைத்திய சேவை (Mobile Unit ) என்று ஒன்று உண்டு. இந்த ரோந்துசெல் லும் வைத்தியசாலைகள், தேவைக்கான எல்லாம் உடையனவா யிருக்கும். வைத்தியர், தாதிமார், மருந்துகள் எல்லாமே அடங்கிய தாயிருக்கும். தகவல் கிடைத்தவுடன் இந்த ஊரும்சேவை கருப்ப வதி கிடக்கும் இடத்துக்கே வந்து தேவையானவை எல்லாவற்றை யும் செய்யும். இத்தகைய சந்தர்ப்பங்களில் கருப்பவதியை அங்கு இங்கு எடுத்துச்செல்லல் ஆபத்துநிறைந்தது. எனவே இதற்கென ஊரும் வைத்தியசாலேகள் எங்கும் அமைய அதிகாரிகள் ஆவன செய்தல் வேண்டும். அந்நாள் எந்நாளோ ?
3 சுரம் பிரசவ காலத்தில் வெளியிலிருந்து அழுக்கு ஜனனேந் திரியங்களுக்குக் கொண்டுசெல்லப்படுவதால் தாய் சுகவீனப்படு இருள். காய்ச்சல் உண்டாகிறது. காய்ச்சல் ஒரு தனிப்பட்ட வருத்தம் என்று நினைப்பது தவறு. அது - வருத்தம் ( உடம்பு நோய்ப்பட்டது) என்பதைக் காட்டும் ஒரு அறிகுறி.
கவலையீனமுள்ள மருத்துவப்பெண் செவ்வனே கழுவப்பெருத கைகளை உபயோகிப்பதால், அழுக்கடைந்த துணிகளைப் பாவிப்ப தால், துரசுநிறைந்த அறையில் பிரசவம் நடப்பதால், துப்புரவில் லாத பராமரிப்போரால் இந்த அநர்த்தம் ஏற்படுகின்றது.
மனிதனுக்கும், நோய்க்கிருமிகளுக்கும் எந்தநாளும், எந்நேர மும் ஒரே போராட்டம்தான். நோய்க்கிருமிகள் எங்களைச் சுற்றி எங்கும் பரவியிருக்கின்றன. சுவாசிக்கும் காற்றில், குடிக்கும்நீரில், உண்ணும் உணவில், உடுக்கும் உடையில், எவையிலும் இருத்தல்

Page 26
தாயும் 19oir bir ufıh
கூடும். அவை மூலம் எம்முடலுட்சென்று எம்மைத் தாக்குதல் கூடும். எங்கள் எதிர்ப்புச்சக்தி குறைந்தவுடன் நாம் நோய்க்கு ஆளாகின்முேம்,
பிரசவகாலம் பெண்ணில் எதிர்ப்புச்சக்தி குறைந்தகாலம். கண்காணிப்போரின் கவலையீனத்தால், கிருமிகள் பெருவாரியாகச் சேர்க்கப்படவே பெண் நோய்வாய்ப்படுகிருள். சுரம் காண்கிறது. தீட்டு நாற்றமுடையதாயிருக்கின்றது. அடிவயிறு புண்படுகின்றது. முன்னெருகாலத்தில் இந்நோய் பெண்களைப் பெருமளவில் மரண
மடையச் செய்தது. ( Puerperal Sepsis) அதிர்ஷ்டவசமாய்க்
கையாளப்படும் முறைகளும், புதிய மருந்துவகைகளும் இந்த நோயி லிருந்து இப்போது பெண்களைக் காப்பாற்றிவருகின்றன.
4. முலைகள் வீங்குதல் முலையின் ஒருபக்கம் அல்லது முழுமுலை யும் அல்லாமல் இருமுலைகளுமே வீங்கி நோகக்கூடும். இது முதற் கிழமை; பெரும்பாலும் தலைப்பிள்ளைபெற்ற தாயில் ஏற்படுகிறது. பிள்ளை பாலை உமிழ்ந்து நேரத்திற்குநேரம் முலையை வெறுமையாக் காததால் நேர்கின்றது. நோய் தாங்கமுடியாததாய் இருக்கக் கூடும். அத்துடன் குளிர்காய்ச்சலும் ஏற்படக்கூடும். வீக்கம் சிகிச்சையினுற் கட்டுப்படுத்தப்படாவிட்டால் கட்டியாகிச் சிதல் சேரவும்கூடும். பிள்ளைக்கு மிஞ்சிய பால் முலையில் தங்குகின்றது என்று உணர்ந்தால் தாய் தன்கையால் எஞ்சிய பாலைப் பிதுக்கித் தள்ளிவிடுதல் வேண்டும். அல்லது பால் எடுக்கும் க ரு வி ய ர ல் Beast Reliever) முலைகளைக் காலியாக்குதல் வேண்டும். மெல் லிய குடுள்ள ஒத்தடம் தொடக்கத்தில் நன்மைசெய்யும், பேதி உப்பு (Magsulph ) கரண்டிக்குக் கரண்டி அளவில் நீரில் கரைத் துத் தூய சீலையில் அல்லது லின்ற் (Lint) துணியில் தோய்த்து வீக் கத்துக்குப் போட்டு அடிக்கடி நனைத்துச் சுகம்பெறலாம். பாலூற் றைக் கட்டுப்படுத்தவும், வீக்கம் கூடாதவாறு தடுக்கவும் தடித்த ஒ%லயிலான இறவக்கை அணியலாம் முலைகளை உயர்த்தி அமுக்கிச் சிறிது இறுக முடிந்துவிடலாம். அல்லது பின்களால் பிணைத்து விடலாம். இச்செயல் தாய்க்கு நோவைத் தாங்கும் தென்பையும், சுக உணர்ச்சியையும் கொடுப்பதாகும் தமிழ்நாட்டுச் சகோது முள் மல்லிகை மலர்களை எவ்வித வீக்கத்துக்கும் பரவக் கட்டிப் பல
ஏடைவதுண்டு. அவர்களுக்குப் பூக்கள் ' எனின் ஒரு தனி ஆசை. இறவக்கைக்குள் முலைகளின்மேல் இப்பூக்களைப் பரவிக்கட்டிக் குண
மும் நறுமணமும் பெறலாம். வியர்வைகாலத்தில் முலைகளே மாது
திரம் மூடித் தடித்த துணியால் சுற்றி முன்பக்கமாய் முடியலாம்
அல்லது பின்பண்ணலாம். கவலையீனமாயிருத்தல்கூடாது. வீக்கம் படியாது கூடியே போனல் தேர்ந்த வைத்திய உதவியைத் தே

W: , ! . يرز . م a. II (LILE பிள்ளை ILLE 3
ਹੈ । انه طارق 1. وقامش (جية வெடித்துப் புண்படுதல் பால்கொடுக்க முன்பும் பின்பும் முலைகள் கழுவப்பட்டு அழுக்கு இல்லாத துணி tị }|T (ẩì) துடைக்கப்படவேண்டும். பேலுக்கு இடம்கொடுத்து' பெரும்பாலானேர் இதைச் செய்வதேயில்லே அதன் வி2ளவாகப் புண்கள் ஏற்படுகின்றன: சேயின் வாயும் அவிகின்றது. கன்னிப் இன்களின் முலேக்கா ம்புகள் பாலன் செவ்வனே பற்றி உமியக்கூடி தாய்ச் ஒாக்கப்படவேண்டுமென்று முன் எழுதினுேம் பிள்ளை நாற் புறமும் பற்றி நன்கு மியமுடியாததாலும் காம்புகள் (ରର Lq - ā, ଖି କର୍ତ! றன. பால்கொடுத்த இடைநேரங்களில் கொதித்தாறிய வேப் பெண்ணெயால், நல்லெண்ணெயால் அல்லது பகநெய்யால்தானே) முஜலக்காம்புகளேத் தடவுதல்வேண்டும் இ ச் செ ய்  ைக முலைக்
தாம்புகளின் தோலேக் தா விடாது மிருதுவாக்கி வெடிப்புக்களுக்
இடம்கொடுக் காது தடுக்கும். வெடித்துவிட்டால் போரிக் குழப்பு (Boric Aοία ) (ο) 4. Τοδοι (5) தடவலாம். அதேதுரளே மேற்கூறிய நெய் களில் ஒன்றைத் தடவி அதன்மேல் தூவலாம். பாலனைப் பாலுமிய அதற்கான ாதுகாப்பு முைேயப் Gragg (Nipple Shield) பின் அதன்மூலம் நியவிட வேண்டும். இச் செயற்கைமுலே பொருத்த முன்பும் பின்பும் அவிக்கப்படல் வேண்டும்: இந்த வெடிப்புக்கள் 19ó L可磁g முழு முலைகளுமே வீங்கக்கூடும். இங்கு கூறுவன முத லுதவிகளாகக்கொண்டு (5.660, LDfT SIT gif போகுமேயானுல் வைத் தியரை நாடவேண்டும். விழுங்கவும் வெளியேபோடவும் மருந்து g; @† நூற்றுக்கணக்காயுண்டு இதிச்சை செய்யக் கற்றுக்கொடுப் பது எமிதி நோக்கமல்ல,
பிறந்தபின் தாயிலிருந்து பிள்ளையைப் பிரித்தல்வேண்டும். நாபிக்கொடியின் நாடித்துடிப்பு ( Pulsation) நின்றபின்னரே இதைச் செய்தல்வேண்டும். அவசரப்பட்டுப் பிரிப்பதால் பிள்ளைக் குத் தாயிடமிருந்து இன்னும் செல்ல இருக்கும் இரத்தம் துண்டிக் கப்படுகின்றது: கொடியின் துடிப்பு நின்றதும் தாயிடமிருந்து பிள் அளக்குச் செல்ல வேறு இரத்தம் இல்லை என்றது உசிதமாகும். நாபிக்கொடியை வெட்டும் ஆயுதமும் இரத்தம்பெருகாது G),55 FT i q. பில் தடைபோடும் நூலும் சுத்தமானவையாயும் கொதிநீரில் 15 நிமி டங்களுக்குக் குறையாமல் அவிக்கப் பெற்றவையாயுமிருத்தல்வேண் டும். பிள்ளை பிறக்கமுன்னரே இவை அவிக்கப்பெற்றுத் தேவைக்கு எடுக்கும்வரை அவித்த பாத்திரத்திலேயே மூடியுடன் விடப்பட் 呜岛° டும்.

Page 27
2 ܬ݀ ... ό 岛2 தாயும் பிள்ளையும்
பிள்ளையின் தொப்பிளிலிருந்து இரண்டங்குலத்திற்கு அப்பால் நாபிக்கொடியைத் தடித்த நூலால் இறுகக் கட்டல்வேண்டும், அதி லிருந்து ஒர் அங்குலத்திற்கு அப்பால் இன்னுமோர் கட்டுப்போட்டு இந்த இரு கட்டுகளுக்கிடையில் அந்த அவித்த கத்தரிக்கோலால் நாபிக்கொடியைத் துண்டித்தல் வேண்டும். வெட்டப்பட்ட விளிம்பு களிலிருந்து இரத்தம் ஊருதவாறு முற்கூறிய கட்டுக்கள் இறுக அமைதல்வேண்டும். ஆணுல் நாபிக்கொடியை நறுக்கக்கூடிய இறுக்க மாயிருத்தல் கூடாது.
இந்தக் கடமையைச் செய்பவர்கள் பொறுப்புடமை உள்ளவர்க ளாயிருத்தல் வேண்டும். சிறிது கவலையினமும் பிள்ளைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவருதல்கூடும். தொப்புள் புண் ஆற நாட்கள் எடுக்கக்கூடும்; சுரம் ஏற்படக்கூடும். ஏற்புவலி ஏற்பட்டுச் சீவ னுக்கும் உலைவைக்கக்கூடும். பிரிக்கப்பட்ட பிள்ளை நல்ல கவனத் துக்குள்ளாகவேண்டும். தடையின்றிச் சுவாசிக்கின்றதோ என்று பார்க்கப்படல்வேண்டும். சளி மூக்கு, வாய்த்துவாரங்களை அடைத் தல்கூடும்; மூச்சடங்கியே இருத்தல்கூடும். அப்படியிருந்தால் மூக்கு, வாய்ச்சளியை அகற்றி முதுகைச் சிறிது கையாற் தட்டுவதால் பிள்ளை மூச்செடுக்கும். தவறினுல் பிள்ளையின் இருகால்களையும் இடக்கையால் பற்றித் தலைகீழாய்த்துக்கி வலக்கையால் பிள்ளையின் முதுகைப் பலமாய்த் தட்டுதல்வேண்டும். மூச்சுவிடச் செய்ய இவை போன்ற வேறுவழிகளும் உண்டு. பயிற்றப்பட்டவர்கள் செய்வார் கள். பிள்ளைப்பெறும் அறையில் பயிற்றப்பட்ட மருத்துவப்பெண் Eன் அவசியத்தை மிகைப்படுத்திக் கூறமுடியாது. இருந்தும் இப்போதும் சாதாரண மாதர்களின் கண்காணிப்பில் பல பிரசவங் கள் நடக்கின்றன. இதற்கு யாரை நோவது ? பிள்ளையின் மல சலம் கழிக்கும் துவாரங்களும் கவனத்துக்குள்ளாகவேண்டும். சில சிறுவர்களில் அவை மூடப்பெற்றிருத்தல் கூடும். அப்படியிருக்கு மாயின் அவை சிகிச்சைக்குள்ளாக வேண்டும், பிள்ளையின் உடம் பின் எல்லாப் பாகமுமே கவனமாகப் பரிசோதிக்கப்பட்டுக் குறை கள் கவனிக்கப்படல் வேண்டும். பிள்ளையின் நன்நிலையை இவ் வாறு கவனித்துக்கொண்டு சுத்தமான துணியினுல் பிள்ளையைச் சுற்றிமுடி வலப்புறமாய்ச் சரித்துப் படுக்கையில் விடுதல் வேண் டும். இவைகள் அனைத்தையும் பராமரிக்கும் பெண் செ ய் யு ம் பொழுது பெற்ற தாயிலும் ஒரு கண்வைத்தேயிருப்பாள். தாய்க்கு இரத்தப்பெருக்கு ஏற்படக்கூடும். அந்த நினைவு அவள்மனதை விட்டகலாது படித்தேயிருக்கும்;

தாயும் பிள்ளையும் 88 15. பிள்ளையை நீராட்டல்
குளிர்காற்று வீசாத இடத்தி ல், நக்ச்சூடான நீரில் பிள்ளையை நீராட்டல் வேண்டும். தலையை முதற் கழுவித் துடைத்துக்கொண்டு உடம்பைப் பின் கழுவுதல்வேண்டும். முகம், கண், காது ஆகியவற் றைச் சுத்தமான நனைத்துப் பிழிந்த மெல்லிய துணியால் மெது வாய் ஒத்தித் தூய்மைசெய்யப்படுதல் வேண்டும், பயிற்றப்பெற்ற மருத்துவப்பெண் முறையாய் இவைகளைச் செய்வாள். தாய் இவை களைக் கவனித்துப் பின் தானும் அதேபோல் செய்தல்வேண்டும். தொப்புள் காய்ந்து, நாபிக்கொடி விழும்வரை ஈரத்துணிகொண்டு துடைத்தலே போதும் , மருத்துவசாலைகளில் தாய்மாராகக் காத் திருக்கும் பெண்களை இருவரிருவராய் அழைத்துப் பிள்ளையை நீராட் டும் முறையைப்போதிக்கும் வழக்கம் வருதல் வேண்டும். அப்படிச் செய்யின் பிரசவ சாலையைவிட்டு வீடுபோகும் ஒவ்வொரு பெண் னும், பிள்ளையைத் தீங்குகள் ஏற்படாது நீராட்டும் முறைகளே அறிந்திருப்பாள்ளு ஆணுல் மூக்கினுள் நீரைப் போகவிட்டுப் பிள்ளே யைத் தத்தளிக்கச்செய்து விட்டுப்பிரியாத தடிமனை உண்டாக்கும் முறைதான் நாம் காணக்கூடியதாயிருக்கிறது. வைத்தியசாலைகள் ஏன் சுகாதாரப் பாடசாலைகளாயும் மாறக்கூடாது? தனித்தனிப் போதிப்புக்கு எவ்வளவு இடம்தானுண்டு. எங்களில் (வைத்தியர்) எத்தனைபேர் அதைப் பயன்படுத்திவருகிருேம் ? அப்படிப் போதிப்ப தால் நித்திய தடிமனும் இருமலும், நெஞ்சில் சளி இழுத்தலும், அவைகளைத் தொடர்ந்து காதில் சீழ்வடிதலும், காய்ச்சலும் வராது தடுக்க உதவுபவர்களாவோம். பெண் கு ழ ந்  ைத க ளி ன் மலசலத் துவாரங்கள் வெகு கவனத்துக்குள்ளாகவேண்டும். சில வாசல் கழுவியபின்பே மலவாசல் கழுவுதல் வேண்டும். மறந்தும் மாறிச் செயல்படக்கூடாது. சலக்கடுப்பு, சொறி, வெள்ளே படுதல் முதலியன ஏற்பட இது ஏதுவாகும். நோய்க்கிருமிகள் மலவாசலி லிருந்து சலவாசலுக்கு விரல்களால் கொண்டுபோகப்படும்,
16. நாபிக்கொடி
தொப்புளுடனிருக்கும் அறுக்கப்பட்ட அந்த இரண்டு அங்குலத் துண்டு நீராட்டியபின் விஷேச கவனத்துக்குள்ளாகவேண்டும். ஒரு வித அழுக்கும் இதில் சேரவிடக்கூடாது, லின்ற் (Lint) துணியை நாலு அங்குலச் சதுரமாகக் கத்தரித்து நடுவில் ஒரு துளை போடுதல் வேண்டும் அவித்த கத்தரிக்கோலே ஸ்பிறிற்ருல் (Surgical Spirit) துடைத்துப் பயன்படுத்தவேண்டும். இந்தத் துளைக்கூடாக நாபிக் கொடியின் அந்தலையை மெதுவாக இழுத்தல்வேண்டும். இந்த
ܐܶܐܶ

Page 28
霹4 தாயும் பிள்ளையும்
நிலையில் ஸ்பிறிற்றைப் பஞ்சில்தொட்டு வெட்டுண்ட அந்தக் கொடித்துண்டு பூராகவும் பூசுதல்வேண்டும். பின் "போறிக் துளை அதன்மேல் சிறிதளவு தூவுதல் வேண்டும். இவை முடிந்ததும் அந்த லின்ற் துணியின் நாலு பக்கக் கரைகளையும் நாபிக்கொடிக் கட்டையை மூடி எடுத்து அந்தலையைக் கட்டிவிடல் வேண்டும் இந் தப் பையைப்போல் தோன்றும் முடிச்சைச் சரித்து ஒரு அகன்ற துணியால் பிள்ளையின் வயிற்றைச் சுற்றிக் கட்டிவிடலாம். இந்த நாபிக்கட்டைக்குத் தாயிடமிருந்து இப்போ து இரத்தம் வருவ தில்லை. எனவே பலாமரக் க்ள்ளிபோல் காய்ந்தொடுங்கி ஆறேழு நாட்களில் விழுந்துவிடும். விழுந்தபின்பும் பிள்ளையின் தொப்பு ளில் கவனம்செலுத்தல்வேண்டும். நீர் ஊறி அழுக்குச்சேர்ந்து புண் உண்டாக, சொறிபரவ மிகவசதியான இடமாகையால் நீராட்டலே முதல்நாளுடன் நிறுத்திவிட்டுத் தினமும் காலையில் 9 மணி அல் லது 10 மணிபோல் தேகத்தை ஈரத்துணிகொண்டு துடைத்து விட லாம். நாபிக்கொடி விழுந்ததும் குளிப்பை ஆரம்பிக்கலாம். இந் தப் பராமரிப்பில் அசட்டையாயிருத்தல் கூடாது. சுத்தமின்மையே தொப்புள் புண் மாற நாட்கள், ஏன் மாதங்களே எடுப்பதற்குக் காரணம். அதே இடத்தில் தோல்மெலிவடைந்து குடல் புறப்பட எத்தனிக்கிறது, சிறிது சிறிதாக முளை போல் புறப்படும். மாதங் கள் செல்லப் பந்துபோற் பயங்கரப் பருப்பமாகிச் சத்திரவைத்தியத் திற்குக் காரணமாகிவிடுகிறது; அதனுல் கொடிவிழுந்த பின்பும் தொப்புள் நல்ல கவனத்துக்குள்ளாகவேண்டும், ஸ்பிறிற்ருல் ஒற்றப் படவேண்டும். அழுக்குத் துணிகளால் பிள்ளை மூடப்படக்கூடாது; துணிகள் தோய்த்துத் தூசுபரவாத இடத்தில் வெய்யிலில் உலர்த் தப்பட்டவையாய் இருத்தல் வேண்டும். முன்போலன்றி இப்போது கூடிய கணக்கில் பிள்ளைகளின் தொப்பிள் நிலையம் துன் னு வ  ைத (Hernia) அவதானிக்கக்கூடியதாயிருப்பது துக்கத்துக்கிடமானது, மகப்பேற்று நிபுணர்கள் இதன் நியாயத்தை ஆராய்ந்தறிய முன்
இவரவேண்டும்,
17. கால மாகாது பிறக்கும் குழந்தை
கருப்பையில் கருக்கழித்த காலம் நிறைவுற்றதோ அல்லவோ என்று எவராலும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. உலக சுகர் தார நிறுவனம் (W. H. 0, ) ஐந்தரை இருத்தலும் அதில் குறைந்த நிறையும் உள்ள பிள்ளைகள் குறித்தகாலத்துக்குமுன் பிறந்ததாகக் கணிக்கப்படவேண்டுமென்று விடுத்த ஆக்ஞையை ஏற்று எந்த நாடும் அதன்படி நடந்துவருகிறது. வாழ்க்கைத்தரம் உயர்ந்த நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும்; பசியும், பாதிப்பட்டினி

தாயும் பிள்ளையும் 岛岛
யா யும் காலம் கழிக்கும் கீழ்நாட்டுப் பெண்கள் பெறும் மிகவுகளுக் கும் ஒரே அளவுகோல் சரியா என்பது சந்தேகமே.
குறைமாதத்திற் பிறந்த குழந்தை பார்வைக்குப் பரிதபிக்கக் கூடியதா யும், பாரம் குறைந்ததாயும், ஒரல் முகமுடையதாகவும் இருக்கும். பாலை உமியவும், விழுங்கவும் சக்திகுன்றியோ அல்லது முற்றும் இழந்தோ இருக்கும் இச்சக்திகள் சிகப்பையில் 35 கிழமை கள் முற்றுப்பெற்ற பிள்ளைகளுக்கே உண்டு. ஐந்தரை இருத்தல் நிறையில்லாக் குழந்தையை வளர்ப்பது கஷ்டமே. அதுவும் நாலரை இருத்தலுக்குக் குறைந்து பாலை உமியவும் விழுங்கவும் சக்தியற்ற தாயின் பரமசங்கடமே. நிறை எவ்வளவுக்கெவ்வளவு குறை கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வளர்க்கும் கஷ்டம் கூடுகின்றது. பிள்ளைகளின் மரணமும் நிறையைப் பொறுத்துள்ளது. நிறை விே00க்குறைய மரணத்துக்குள்ளாகும் குழந்தைகளின் விகிதமும் சீ டிக்கொண்டுபோகும்.
குறைமாதத்தில் பிறந்த பிள்ளைகளை வளர்க்க விசேஷ நட வடிக்கைகள் எடுத்தல்வேண்டும். காற்ருேட்டமுள்ள அறை வேண்டும். அந்த அறையில் பிள்ளைக்குத் தேவையான படுக்கை மற்றும் பொருள்களன்றி வேறெதுவுமே இருக்கக்கூடாது. உஷ்ண (புள்ள படுக்கைவேண்டும்; குளிர் நேரங்களில் அறையைச் சூடாக் கும் உதவிகள் தேடவேண்டும். மின்சார விளக்குகள் இல்லாத விடங்களில் மற்ற விளக்குகளோ ( மண்ணெண்ணெய்ப் போத்தல் விளக்குகளிலும் பார்க்க வேப்பெண்ணெய் விளக்குகள் நன்று) இதை ஒருவாறு செய்யும். அவைகளையே நம்முன்னேர் பயன்படுத்தினர். குடிசைகளிலிருப்போர் வேறு எதைச் செய்ய இயலும் ? பிள்ளைக்குப் பாலூட்ட விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படல்வேண்டும். அதி கம் தூக்கி அளையக்கூடாது. தூக்குபவர் தன் கைகளைச் சுத்திகரித் தல்வேண்டும். தாய், தாதியாகியோரின் மூச்சுப் பிள்ளையைப் பாதிக்கும். எனவே பிள்ளையைத் தூக்கும்பொழுதும், பாலூட்டக் கொடுக்கும்பொழுதும் தன்வாயையும், மூக்கையும் சுத்தமான துணியால் மூடிக்கொள்ளல்வேண்டும். சம்பாஷணையில் ஈடுபடுதல் கூடாது. வயிறுாதல், வாந்தி, மலச்சிக்கல் என்பனவே இப்பிள்ளை களே வாட்டும் பிரதான நோய்கள். வீட்டில் பிறந்து வீட்டில் பரா மரிக்கப்படும் இப்பிள்ளைகள் தப்பிப்பிழைக்கின்றனவோ என்பதே ஐயம் அதற்கெனவுள்ள வைத்தியசாலைகளில்தான் அவர்களை வளர்க்கலாம்: அதற்கெனத் தேர்ச்சிபெற்ற தாதிமார்களாலேயே
அவர்களேப் பாாழரிக்கமுடியும்,

Page 29
8(፩
ஐந்து இருத்தலுக்குக் குறைந்த பிள்ளைகளே ஆறு இருத்தல் தேறும்வரை பராமரித்துக்கொடுக்கும் பணியை அரசாங்கம் ஏற்றல் வேண்டும் ஆங்காங்கே விசேஷ வைத்தியசாலைகள் (அதற்கென) அமைக்கப்படல் வேண்டும். இல்லையேல் இருக்கும் வைத்தியசாலை களில் ஒருபகுதியை அதற்கென ஒதுக்குதல் வேண்டும். அதற் கெனத் தேர்ச்சிபெற்ற நபர்களினல் இப்பிள்ளைகள் பாரமெடுக்கப் பெற்று அங்கே பராமரிக்கப்படல் வேண்டும். இக்குழந்தைகளின் சுவாசப்பை தகுந்த படி பெலனடையாதிருக்கும். சுவாசப்பையினுள் காற்றுச் சரிவர உட்சென்று நல்லநிலையில் நிரப்பாதிருக்கக்கூடும் அந்நிலை ஏற்பட்டால் மூச்சுத் தினறும்; ஆழ்ந்த மூச்சாயிராது. இளைத்த பசுக்கன்றின் மூச்சுப்போல் சிறியதாகவும், வேகமுடைய தாகவும் இருக்கும். மூக்குத்துவாரமும், தொண்டைத்துவாரமும் சளியாலும் நீராலும் நிரம்பியிருக்கும். இரத்தாசயம் பெலம் குன் றியதாய் இருக்கும். மூக்கால் வாயால் இரத்தம் பொசியலாம், பிறந்த முதல் இருகிழமைகளும் இவர்களுக்கு ஆபத்தானகாலமே காலம் செல்லச்செல்ல வளர்க்கலாம் என்னும் நம்பிக்கை பராமரிப் போருக்கு வளரும். எனினும் ஆறு இருத்தல் காணும்வரை தொடர்ந்து விசேட கவனம் கொடுக்கப்படல் வேண்டும்; விசேட உணவூட்டும் முறைகள் கையாளப்படல் வேண்டும். நோய் அறி குறிகளை அவதானித்து அதற்கேற்ற சிகிச்சைகள் கையாளப்படல் வேண்டும். இரவும் பகலும் தேர்ந்தவர் கண்காணிப்பில் இருத் தல் வேண்டும். வைத்தியசாலையில் இதற்கெனப் பயிற்றப்பட்டவர் இளால் அல்லாது வேறுயாரால் இவற்றைச் செய்யமுடியும்?
இப்பிள்ளை பிறந்தவுடன்
(அ) பிறந்தவுடன் அவசரமாகப் பிள்ளையைத் தாயினின்றும் பிரித்தல்கூடாது. நாபிக்கொடியின் இரத்தத் துடிப்புநின்றும் சிறிது காலங்கழித்துப் பிரிப்பது நன்று. பிரித்தவுடன் வாய், மூக்கில் இருக்கும் சளிநீர் துடைக்கப்படல் வேண்டும். கண்கள் கொதித் தாஹிய நீரில் தோய்த்துப்பிழிந்த சுத்தமான சீலையால் அல்லது பஞ்சால் துடைக்கப்படல் வேண்டும். சரீரத்திலுள்ள நீர்த்தன்மை மெல்லிய துணியால் ஒற்றியெடுக்கப்படல் வேண்டும் நீராட்டக் கூடாது. தேகத்தில் படர்ந்திருக்கும் வெண்மையான சளிபோன்ற பொருள் காய்ந்து பின் பொருக்காய் உதிர்ந்துவிடும். அதை இல் லாது செய்யவென்று உரோஞ்சலில் ஈடுபடவேண்டாம். ஒற்றுதல் முடிந்ததும் பிள்ளைக்கான மெல்லிய துணியால் சுற்றி வலப்புற மாய்க் கிடத்திவிடல் வேண்டும்; ஏனெனில் இடப்புறத்தில் இரத் தாசபம் இருக்கின்றது முதிர்ச்சியின் மையும் பிறப்பின்

தாயும் பிள்ளையும் 岛?
சேர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் இரத்தாசயத்தை அமுக்கக் கூடியதாக இடப்புறமாய்த் தொடக்கத்திலேயே வளர்த்திவிடக் கூடாது. ஒருபக்கமாகவே நெடுநேரம் விடுவதும் ச ரி ய ல் ல. மணித்தியாலத்திற்கு ஒருமுறைபோல் மெல்லெனப் பிள்ளையைத் திருப்பிவிடலாம். வலம், நிமிர்ந்து இடம், பின்பும் வலம் என்ற முறையைப் பின்பற்றலாம். துணியால் இறுகச் சுற்றக்கூடாது. பிள்ளையின் மூச்சுக்குத் தடையேற்படும். மெத்தை குழிவிழக் கூடிய மெதுமையா யிருத்தல் கூடாது. அதே தீங்கை ஏற்படுத்தும், பாரமான கம்பளியால் மூடச் கூடாது. நாலு பக்கமும் சுடுநீர்ப் போத்தல்களை தேகத்தில் முட்டாது வைத்தல் வேண்டும். அறை யில் வேப்பெண்ணெய் விளக்கோ, மின்சார விளக்கோ எரித்தல் வேண்டும். நாலு பக்கக் காற்றும் சூடாக்கப்படவேண்டுமென்பதே இதன்நோக்கம்.
(ஆ) உணவு : நிறைகுறைந்த பிள்ளைகளில் ஆணவூட்டல் ஒர் விக்கல் நிறைந்த சம்பவம். ஆஞல் அதுதான் மிகமுக்கிய பகுதி. 35 கிழமைகள் முற்றுப்பெறமுன் பிறந்த பிள்ளைகளுக்குப் பாலை உமிந்து விழுங்கும் சக்தியிராது. கரண்டிகொண்டு பருக்குவதிலும் தீங்குகள் உண்டு. எனவேதான் இப்பிள்ளைகளைப் பராமரிக்க இதற் கெனப் பயிற்றப்பட்ட பெண் தேவையாகிருள்.
முதல் 24 மணித்தியாலங்களுக்கு ஒன்றுமே தேவையில்லை. ஏன் ? முதல் நான்கைந்து நாட்களுக்கே ஒன்றும் தேவையில்லை என்பது சில நிபுணர் கருத்து. தொண்டை காயக்கூடுமாதலாலும் சிறுநீர் கழித்தலுக்கு உதவியாகுமாகையாலும் எட்டுமணித்தியா லங்களுக்குப்பின் கொதித்தாறிய நீர் பருக்கப்படலாம். இதற்கு இரண்டுதேக்கரண்டி நீர் போதுமானது, குளுக்கோஸ் அல்லது வெள் ளைச்சீனி சேர்க்கலாம்; ஐந்து சதவிகிதத்துக்குக் கூடாதிருத்தல் வேண்டும். இரண்டு மேசைக்கரண்டி நீருக்கு அரைத்தேக்கரண்டி போல் சீனி சேர்க்கலாம். முதல் 24 மணித்தியாலங்களும் நாளுக்கு நாலுமுறை இந்நீரையே பருக்கலாம். இந்தக்கால எல்லேயில் குழந்தையைத் தாயின் மார்பகத்துக் குக் கொண்டுவரலாம். தாய் அதற்குமுன் ஊறும் பாலை நசித்தெடுத்த வீசிவிடலாம். பிள்ளை உமியும் சக்தி இல்லாததாயிருந்தால் முலைகளைக் கழுவிப் பாலை ஒர் கலயத்தில் பிதுக்கி எடுத்தல் வேண்டும், கலையம் கொதிதண்ணீரில் கழுவப்பெற்றதாய் இருத்தல் வேண்டும். பிதுக்கிய பா லை யும் கொதிக்கவைத்துப் பின் ஆற்றியே பருக்குதல்வேண்டும். பயிற் றப்படாதவர்கள் இம்முறைகளை வீடுகளில் கடைப்பிடிப்பது கஷ் டம். எனவே தான் இப்பிள்ளைகளைப் பாரமெடுத்துப் பராமரிக்க

Page 30
岛岛
வேறுநிலையங்கள் வேண்டுமென்று திரும்பத் திரும்பக் கூறுகின்ருேம்: இல்லையேல் சின்னம் சிறரின் கொலேக்கே இடமளிப்பவர்களாவோம்.
பாலைத் தாயிடமிருந்து உமிந்துகுடிக்கும் சக்திவாய்ந்த பிள்ளை களே ஒருநிமிடத்திற்கு ஒருமுலையாய் முதல் நாளும், இரண்டுநிமி டங்களுக்கு ஒருமுலையாய் இரண்டாம் நாளும், நாலு நிமிடங் கள் ஊட்டக்கொடுத்து அப்படியே படிப்படியாய் ஊட்டவிடும் நேரத்தைக் கூட்டி இரண்டுகிழமைகளில் ஏழு, எட்டுநிமிடங்கள் ஒவ்வொரு முலையிலும் கொடுக்கக்கூடியதாய் இருக்கும். சாதா ரண பிள்ளைகள் சாதாரணமாக வயிறுநிரம்ப உமியும்நேரம் இதுவே. எமது கவனத்தில் பிறந்த பிள்ளைகள் அனைத்தும் சாதாரணமாய்த் தாய்முலையிலிருந்து பால் ஊட்டும் சக்தியைப் பெற்றிருந்தனவாகை பால் எமக்குச் சிரமமிருக்கவில்லை.
நிறைகுறைந்த பிள்ளைகளைத் தொடக்கத்தில் அதிகநேரம் ஊட்டவைத்தால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும் இக்காலத் தில் மூன்றுமணித்தியாலங்களுக்கு ஒருமுறையாக எட்டுமுறைகள் முற்கூறியவாறு ஊட்டவிடலாம். ஐந்து இருத்தல் நிறையைப் பிள்ளை அடையும்வரை இந்தமுறையைக் கைப்பற்றலாம். இதன் பின் நாலு மணித்தியாலங்களுக்கு ஒருமுறையாக ஆறுமுறைகள் கொடுக்கலாம். எட்டு இருத்தல்களானதும் சாதாரண குழந்தைக ளில் கையாளும் முறைகளைப் பின்பற்றலாம். அம்முறைகள் பின் விபரிக்கப்படும் கையும், கடிகாரமுமாய் இந்த முறைகளைப் பற்றவேண்டியதில்லை. பராமரிப்போர் கண்ணும் கருத்துமாய் இருந்து பாலனின் ஒவ்வொரு நிமிட நிலையையும் அவதானித்து ஏற்ற மாறுதல்களைத் தாங்களே கடைப்பிடிக்க இடமுண்டு. மேற்கூறிய இடைநேரங்களில் குடித்த பால் சீரணமாகிவிடும். சீரணமாக, இரைப்பை சுருங்க அந்த விபரிக்க இயலாத பசி நோ (Hunger Pain) உண்டாகும். பாலன் எழும்பிப் பால்கோரி அழுவான், அதுதான் பால் கொடுக்கும் நேரம். குறிப்பிட்ட மணித்தியாலத் துக்குச் சற்றுமுன் அழுதால் பால் கொடுக்கவே கூடாது என்பது தவறு. பிள்ளை அழுதழுது களைத்து நித்திரையாக விடுவது தர்மமு மல்ல. குறித்த நிமிடத்தைப் பார்த்திருப்பவர் குழந்தைக்குத் தீங்கு விளைவிப்பவர் என்றே சொல்லவேண்டும்.
முதலாவதாகப் பிள்ளை நேரத்துக்குமுன் அழுததெதற்கு என்று ஆராய்தல் வேண்டும். துணியைச் சலத்தால் நனேத்த குளிரினல் பிள்ளை அழுதிருக்கலாம். ஈ, எறும்பு நித்திரையைக் கலைக்கப் பாலன் அழுதிருக்கலாம்; வயிறு தலாயிருக்கலாம். எவை என்று ஆராய்ந்து அவைகளைத் தவிர்த்தால் எஞ்சுவது பசிநோவே. அதற்கு மருந்து தாயின் மார்பகத்திலேயே உண்டு. ஆறுதலாய் வயிரப்

5 IT u ji Î LİGİT ÖGAT II || 13 虏9 பால்குடித்த பிள்ளே இடைத்துரம் பாதிகழியமுன்னமே அழுதால் பால் மருந்தாயிராது என்று சொல்லவும் வேண்டுமோ ?
பாலனுக்கு உகந்த உணவு தாயினுடைய பால்மட்டுமே ஆறு மாதங்கள் கழியுமுன் செயற்கைப் பாலில் வளர்க்கப்படும் பிள்ளை கள் அதிர்ஷ்டவீனர்களே. அப்பிள்ளைகளின் மரணத்தொகை தாய்ப் பாலே அருந்தி வளரப் பாக்கியம்பெற்ற பாலர்களிலும் பெருந் தொகை கூடியதாயிருக்கும். ஏதோ காரணம்பற்றிச் செயற்கைப் பாலைக் கொடுக்கநேர்ந்தால் அரை வெண்ணெய்ச் சத்துடைய (Half Cream) பால்மாக்களையே கொடுத்தல் வேண்டும்; அதுவும் முதற்கிழமை புட்டியில் வரையறுக்கப்பட்ட கணக்கில் மூன்று பங்கு நீர்கூடக் கலந்தே கொடுத்தல்வேண்டும். புட்டியிலிருக்கும் கணக்கு சாதாரண நிறையை உடைய பிள்ளைகளுக்கு ஏற்றது.
எம் கையிலிருப்பவர் வயதுக்குமுன் தாயைவிட்டுப் பிரிந்தவர்நிறை மிகக் குறைந்தவர். கிழமைக்குக் கிழமை பிள்ளையின் சீரண சக்தியைக் கவனித்து நிறையைக் கணித்துப் பாலின் பெலனைக் கூட்டி - அதாவது நீர்த்தொகையைக் குறைத்துப் பால் புட்டியில் குறித்த கணக்குக்குக் கொண்டுவருதல்வேண்டும். பெற்ருேர், பரா மரிப்போர் திகைக்கத் திடீரென இறக்கும் பிள்ளைகளில் அதிக மானுேர் செயற்கைப் பாலில் வளர்வோரே. ' தொட்டிற் சா' ( Cot Deaths) என்பார்கள். தாய்ப்பாலுக்குச் சமமான பால் கிடைக்கவே கிடையாது, அது பாலனின் உரிமை, அது ஆகாது என்று சொல்பவர் தாய்-பிள்ளே தொடர்பு அறியாதோர்,
சாதாரண நிறையையுடைய குறித்த காலத்தில் பிறந்த சேயின் உணவுபற்றி இங்கு ஆராய்வோம், பிறப்பின் களை தெளியப் பிறந்து ஆறுமணித்தியாலங்கள்வரை பிள்ளையை அவருக்குரிய இடத்தில் சொகுசாய்த் துணியால்சுற்றி உறங்கவிட்டுவிடல் வேண்டும். இந்தக் காலத்துக்குள் பிள்ளைக்கு ஒன்றுமே பருக்கவேண்டியதில்லை. பனங் கட்டி, குளுக்கோஸ், சீனிகரைத்துப் பருக்கும் பழக்கங்கள் அறவே ஒழித்தல் வேண்டும். பிள்ளே உறங்காது இந்தநேரத்துள் அழுதால் அல்லது நீர்த்தேவையை உணர்த்தத் தன் உதடுகளை நாக் கைநீட்டி நக்கினல், பொச்சடித்தால் கொதித்தாறிய நீர் ஒரு தேக்கரண்டி பருக்கலாம். இந்தத் தேவை ஏற்படவே மாட்டாது. ஆறுமணித் தியாலங்கள் கழிந்ததும் அன்னையின் மார்பில் பாலனைப் பாலருந்த விடல்வேண்டும். முதல் இரண்டு மூன்று நாட்களும் ஆறுமணித்தி யாலங்களுக்கொருமுறையாய் நாலுமுறைகள் பால்பருகவிடலாம், பிள்ளையின் பால்த்தேவை இந்தநாட்களில் மிகக்குறைவு, தாயின்

Page 31
4() தாயும் பிள்ளையும்
முலையிலும் பால் மிகக்குறைவாகவே இருக்கும். பி ன் ளே யி ன் தேவைக்கேற்பப் பின் பால் முலையில் சுரக்க ஆரம்பிக்கும். இயற்கை தன் தொழிலைத் தவருது செய்யும். எனவே நாலு நிமிடங்கள் வரை பாலூட்டவிடப் போதுமானது. இருமுலைகளிலும் சமமாக இவ் விரண்டு நிமிடங்கள் ஊட்ட விடப்படவேண்டும். இந்த நாட்களில் பிள்ளைக்குக் கிடைக்கும் பால் பிள்ளைக்கு அவசியம் வேண்டியதே. இது தொற்றுநோய்களை எதிர்க்கும் சக்தியுடையதாய் இருக்கும். பிள்ளையின் மலத்தைக் கழியப்பண்ணும் பேதித்தன்மையும் உடை யது. இந்த நாட்களில் நாலைந்துமுறைகள் மலம் கழியும், மலம் கருமையாயும், தடிப்பாயும், பசைபோன்று ஒட்டுந்தன்மை உடைய தாயுமிருக்கும். ஆணுல் நாற்றமுள்ளதாயிராது. மூன்றுநாட்கள் சென்றபின் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறையாய் ஆறு முறைகள் கொடுக்கலாம்.
முதல் இரண்டு மூன்று நாட்களும் சாதாரணமாகப் பால் சுரப்ப தில்லே என்ருலும் அந்த நாலு நிமிடங்கள் ஒருநாளைக்கு ஆறுமுறை பிள்ளையை ஒழுங்காகப் பாலுமியவிடத் தவறக்கூடாது. முலையில் சேர்ந்திருக்கும் அந்தக் கடும்புப்பால் பிள்ளைக்கு நன்மைபயக்கும். * தாயில் பாலில்லை என்ற காரணம்காட்டிப் பிற பா ல் க ளே க் கொடுக்கவே கூடாது. சாதாரணமாகப் பால்சுரக்கப் " பாலூட் டல் தூண்டுதலாயிருக்கும், மற்றையதோர் பெரிய நன்மை என்னவெனில், தாய்க்குத் தானின்ற சேயை மார் போடணைக்க விபரிக்கமுடியாத ஒர் ஆனந்தமும், மனச்சாந்தமும், சரீர உற்சாக மும், பெண்ணின் பெருங்கடமை முடிந்ததால் ஒரு பெருமையும் உண்டாகிறது. இந்த ஆனந்தத்தை ஒத்த ஆனந்தம் வேருென்றுமே கிடையாது. திருமணத்தை நழுவ விட்டவர்களும் பிள்ளை பெரும் தொல்லையென்று தடைபோட்டவர்களும் அதிர்ஷ்டவீனமாய்ப் பிள்ளைப்பெற முடியாதவர்களும் இந்த இன்ப உலகைக் காணுதவர் களே. இந்தக்காலத்தில் பிள்ளையைத் தக்க காரணமின்றித் தாயி னின்றும் பிரித்தல் பெருந்துரோகமாகும். இதனுல் இருபகுதியினரும் இடருக்குள்ளாவார்கள். இன்னுமொரு நன்மை ஏற்படுகிறது. பிள்ளை மார்பகத்தேவந்து முலைகள் உமியப்படவே இயற்கையைத் தட்டிக்கொடுத்தாற்போல் சிசுப்பை தானகவே சுருங்க ஆரம்பிக் கின்றது. மார்புக்கும், சிசுப்பைக்கும் தொடர்புண்டு. தீட்டும் தங்கித் தீங்கேற்படாது வெளிச்செல்லும், தாய்ப்பால் பிள்ளையின் சொந்தம்; பிள்ளைக்கெனவே அமைக்கப்பெற்றது. s-220I LDfTab வளர்ச்சிவரை பிள்ளைக்குத் தேவையான உணவுப்பொருட்களெல் லாம் அதிலுண்டு. இதற்குச் சமமான உணவு வேருென்றுமே கிடை யாது. தகுந்த காரணமின்றித் தனயனுக்குரிய இந்தப் பாலைக் கொடாது பறித்தல் வழிக்கொள்ள போன்றது, ' கிரநதிப்பால் '!

தாயும் பிள்ளையும் 4. I
' என்னுடைய பிள்ளேக்கு என்பால் ஒத்துவராது', ' குடித்த வுடன் வாந்தி எடுக்கிறது' , ' பரிகாரியார் கூடாதென்கிருர் '
என்ற நியாயங்கள் சிறிதும் ஆதாரம் அற்றவை. தாய்ப்பால் ஒரு போதும் தீங்குடையதாயிராது. எவ்வளவோ வடிகள் கண்டு முலே களில் சுரக்கின்றது. அதை ஒருபோதும் பிள்ளைக்கு இல்லாது செய்தல்கூடாது.
தாய்ப்பால் குடித்துவளராத சேய்க்கும் தாய்க்கும், தாய்ப்பால் குடித்து வளருவதால் ஏற்படும் பந்தபாசம் சிதறத்தான் செய்கிறது. அதனுல் மனதுக்கு ஏற்படும் அமைதி, ஆறுதல், ஆனந்தம் இரு பாலாருக்கும் இல்லாதொழிகின்றன. இவை பற்றிச் சிறிது சிந்தித் தால் எந்தத் தாயும் தகுந்த காரணமில்லாமல் ஒருபோதும் இயற்கையாய்ச் சேய்க்கென அமைந்த அந்தப்பாலைப் பிள்ளைக்கு இல்லாதுபோகச் செய்யமாட்டாள்.
பால் எத்தனை மணித்தியாலத்துக்கொருமுறை கொடுத்தல் வேண்டும் என்று குறிக்கும்பொழுது முன்குடித்த பால் எவ்வளவு நேரத்தால் சீரணமாகும், இரைப்பை காலியாகும் என்பதையே குறிக்கும். வாயினுல் உமிந்து பாலுண்ட பிள்ளே நிம்மதியாக நித் திரை செய்யும், இரைப்பை காலியாகப் பசி உண்டாகும். பிள்ளை யும் விழிப்படைந்து பால்கேட்டழும் பெரும்பாலும் பால்கேட் டழும் நேரம் மூன்றுமணித்தியாலங்களுக்குமேல் கழிந்ததாயிருக்கும். இந்த அழுகை பால்குடித்து இரண்டு இரண்டரை மணித்தியாலத் துக்கு முன்னதாயின் ஏன் அழுகிறதென்பதை ஆராய்ந்தறிதல் வேண்டும், ஈ, எறும்பு, ஈர்த்துணி வயிற்றுாதல் காரணமாயிருக்க லாம். ஆனல் தாயிடம் முன்குடித்த பால் போதாததாயிருந்தால் ப்சிநேரம் கட்டளைக்குள் அமையாதுதானே. பால்கொடுக்கக் கடிகாரமும் கையுமல்லத் தேவை. தாயின் ஊகமும், தளராத கவனிப்பும். எதற்கும் கொதித்தாறிய நீர் பிள்ளைக்கு ஏற்றதா யிருக்கும். நேர சூசிகைபோட்டு அந்தநிமிடம் வரும்வரை பால் கொடுக்கக்காத்திருந்த காலம் மலையேறிவிட்டது. பிள்ளை அழும் பொழுது முன்னேர்கள் பால்கொடுத்தார்கள். அதில் தவறேயில்லை, ஆணுல் மற்றைய அழுகைக்குரிய காரணங்களை மனதில்வைத்து அவை களை முன் தவிர்த்துக்கொள்ளல்வேண்டும். காலத்துக்குமுன் பிறந்த பிள்ளைகளுக்குப் பால்கொடுத்தல்பற்றி முன் எழுதியவைகளையும் கவனத்தில் கொணர்க. இரவில் ஆறுமணித்தியாலங்களுக்காயினும் தாயும் சேயும் குழப்பமில்லாது அமைதியாகத் தூங்கும்வண்ணம் ஒருநாளின் கடைசிப் பாலூட்டலும் மற்றையநாள் முதல் ஊட்ட லும் அமையவேண்டும். இரவு பத்துமணிக்குக் கடைசி உவட்டலாக்கி
6

Page 32
r
ga, No. INICCC99
is tá ,ۂ
罗 தாயும் பிள்ளேயும் மற்றைய ஊட்டல் அதிகாலே நாலு மணிக்காய் அமையலாம். இடையில் அழுதால் ஆறிய நீர் பருக்கலாம். இதை ஒர் கட்டளே யாகக் கொள்வதல்ல. கூடியவரை கடைப்பிடிக்கவேண்டும்.
19. பால் கொடுக்கும் முறை
பிள்ளைக்குப் பால்கொடுக்குமுன்பும், பின்பும் முலேகள் நன்நீர் கொண்டு சுத்திகரிக்கப்படவேண்டும். துணியால் எந்நேரமும் மூடப் பெற்றிருக்கும் முலைகள் வியர்வை ஊறி அழுக்கடைந்து கிருமிகள் நிறைந்தனவாயிருக்கும். முலைகள் கழுவப்பெரு விடின் அழுக்கும், கிருமியும் பாலுடன் பாலனுட் செல்லும், அவை பாலனின் மெல் லிய இரைப்பை அமைப்பைக் கெடுத்து வயிற்றுாதல், வலிப்பு, வாந்தி முதலிய ரோகங்களே உண்டாக்கிவிடும்; தாயும் கெடுதிக் குள்ளாவாள். வெடிப்பு, சொறி, புண் முதலியன முலைகளில் உண் டாகும். சோம்பலுக்குள்ளாகி முலைகளைக் கழுவும் இச்சிறுவேலையை அசட்டைசெய்யும் தாய் தன்னேயும் தனேயனையும் பெரும் நோய் களுக்கு ஆளாக்குகிருள்,
பால் கொடுக்கும்போது தாய் தன்வசதிக்கேற்ப இருந்துகொள் ௗல்வேண்டும் படுத்திருந்துகொண்டோ அல்லது வேறு வேலேக எரில் ஈடுபட்டுக்கொண்டோ கவலையினமாகக் கொடுத்தல் கூடாது. பால்கொடுத்தல் கவனத்தோடுச்ெய்யும் ஒரு முக்கிய தொழிலாகக் கொள்ளல்வேண்டும். நாற்காலியிலோ அல்லது பாயிற்தானுே ( சப்பாணி கொட்டி ) இருந்துகொண்டு கொடுக்க ஆரம்பிக்கலாம். சொகுசாகப் பிள்ளையை அணைத்துத் தலேயைச் சிறிது உயர்த்தி, தாயின் முழங்கை, முன்கை உட்புறம் தலையைத் தாங்க விரல்கள் தலேயை அசையாது அணைக்கப் பாலனேப் பாலூட்டவிடவேண்டும். குழந்தையின் குண்டியும், கால்களும் தாயின் மடியில் தங்கும். தனையனின் தலை முன்புறம் வளைதல் கூடாது. சிறிது பின்பக்கம் சரியலாம். சப்பாணிகொட்டியிருந்து பால்கொடுக்கும் பெண் தன் மடிந்த காலையும் பிள்ளையைச் சொகுசாக வைத்திருக்க உதவியாக் கிக்கொள்ளலாம். தலையைத் தாங்கும் கைபோக மற்றைய கைவிரல் களால் தன்முலையைப் பிள்ளையின் வாயில்வைத்து வசதியாகப் பிடித்துக் கொள்ளலாம். பிள்ளையின் மூக்கு முலையுடன் அமர்ந்து மூச்சுத் திணருது பார்ப்பது பால்கொடுப்பதில் ஓர் விசேட பாகம்.
சுகதேகியான பிள்ளை 18-20 நிமிடங்களுள் தன் சிறுவயிருர அவட்டிவிடும், பாதிநேரம் ஒருமுலையும் மற்றைய பாதிநேரம் மற்ற முலையிலுமாக உறிஞ்சவிடல்வேண்டும். மணிக்கூடுவைத்து இந்த நேரமானதும் பிள்ளையிடமிருந்து முலையைப் பறித்துவிடல்வேண்டு மென்பதல்ல, பிள்ளை பாலே உமிந்து வயிருர உண்டதும் தானு

43
சுவே முலேயை வாயிலிருந்து வழுவ விட்டுவிடும். அந்தக்காலம் பெரும்பாலும் இருபது நிமிடங்களுக்கு மேலாகாது பத்துநிமிடங் களில் வயிற்றைநிரப்பும் சக்திவாய்ந்த பிள்ளைகளும் உண்டு.
பாற்பெருக்குடைய பெண்ணில் ஒருமுலையும் மற்றையதில் ஒரு பாகமும் பாலனுக்குப் போதியதாயிருக்கும். அப்படி உள்ள ஒரு தாய் பிள்ளை ஒருபாகம் குடித்த அந்த முலையையே மறுமுறை முத லில் உமியக்கொடுத்தல்வேண்டும். முலைகள் முறைக்குமுறை நன்கு வற்ற ஊட்டப்பட்டால்தான் வற்ற இறைத்த கிணறுபோல் குறை பாது தொடர்ந்து பால்சுரக்கும்.
பிள்ளைக்குப் பால்கொடுத்து முடிந்தவுடன் பிள்ளையை நிமிர்த்தி நெஞ்சோ டு நெஞ்சனைய நாலைந்து நிமிடங்கள் வைத்திருத்தல் வேண்டும். தாயின் மடித்த வலக்கையில் பிள்ளையின் குண்டி தங்க, தலை தோளுடன் மருவ, கால்கள் தாயின் மடித்த கையின்கீழ்த் தாங்கவைத்து, இடக்கையால் பிள்ளையின் முதுகை மூன்று நான்கு முறைகள் மெதுவாகத் தட்டுதல்வேண்டும். இப்படிச் செய்யும் போது பாலுடன் உமியப்பட்டு உட்சென்ற காற்று ஏப்பமாய் வெளிவரும். இந்த ஏப்பத்துடன் குடித்த பாலும் சிறிது வாந்தி யாகக்கூடும்; இதனல் நன்மையே உண்டு. வயிற்றுாதல் குறையும் பால்குடித்தவுடன் எடுக்கும் இந்த வாந்தியை வருத்தம் என்று நினைத்துக் கவலைகொள்ளும் தாய்மார்கள் சமாதானமடைவார்க ளாக, வீணே மருத்துவமும் தேடுவதுண்டு. அத்துடன் இரண்டு தேக்கரண்டி சுடுநீர் பருக்கும் பழக்கமும் நன்மையையே தரும் பால் கொடுத்தவுடன் பாலனைக் குலுக்கிக் கூத்தாட்டுதல் கூடாது. எந்தநேரமும் இந்தக் குலுக்கல் கூடாது. குலுக்கிக் கூத்தாட்டிய தன் நிமித்தம் வலிப்பு ஏற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு எம்மிடம் வந்துள்ளன. நிமிர்த்தி அந்தச் சொற்பநேரம் சென்றவுடன் பிள் ளையை வலப்பக்கமாகப் படுக்க விட்டுவிடுதல்வேண்டும். வயிருர உண்டபின் பிள்ளை குழப்பமின்றித் தானகவே நித்திரையாகிவிடும்: ஊணும் உறக்கமுந்தான் இளம் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் தொட்டில் அசையலாமேயன்றி ஆட்டப்படுதல் கூடாது. தாயின் பால் பிள்ளைக்குப் போதாதிருந்தால் பிள்ளை முலையை வருடி ஊட்டும். மறுகணம் பால்கானது முலையை நழுவ விட்டு அலறும். தாய்ப்பால் போதாத பிள்ளையின் நிறை அதிகரிக்க மாட்டாது. ( நிறைபற்றிப் பின் விபரிக்கப்படும்). நல்ல வளர்ச்சி யைக் காட்டும் சிறந்த அளவுகோல் பிள்ளையின் நிறையே. இந்த நிலை ஏற்படின் தேவைப்படி ஒருமுறையோ, இரண்டுமுறைகளோ குழந்தைகளுக்கென இருக்கும் எத்தனையோ புட்டிப் பால்மாக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கரைக்துக்கொடுக்தல் வேண்டும். அணித்தேயிருக்கும் சுகாதார நிலையத்திலோ அல்லது வைத்திய

Page 33
4 4
சாலேயிலோ ஒரு குறித்த பிள்ளைக்கு நல்லது எது என்பதை அறிந்துகொள்ளலாம். வைத்தியர் பிள்ளேயின் நிறை, தேகநிலே, சீரணிக்கும் தன்மை ஆகியவற்றைக் கவனித்து ஒரு பால்மாவைத் தேர்ந்தெடுத்துச் சொல்வார். தனியார் துறையினரும் தாய்மார் இதனைக்கேட்டறிய வரக்கூடியதாகப் பணமின்றிப் புத்திமதிகளேக் கூறல் வேண்டும். இதை நாட்டுக்குச் செய்யும் நற்சேவையாய் மதிக்கவேண்டும், ' பத்தியம் கேட்கவந்து பத்து ரூபாவை மேசை யில் விட்டுச்செல்வார்கள் ' என்று ஒரு நிபுணர் கேலியாக ஒருமுறை கூறினர். தாராளமனத்துடன் விட்டுச்சென்ற அப்பனத்தைத் திருப்பி அவரிடம் ஒப்படைத்தலன்ருே நற்பண்பாயிருக்கும். வைத் தியத்துக்கு முதல்முறை பணம் வேண்டியவரன்ருே அவர் ? பசித்ததும் உரிமையுடன் தாயிடம் ஓடிவரும் பாலகனைப்போல் நோயுற்றதும் வைத்தியனிடம் நோயாளி கசாது செல்லல்வேண்டும். பரிந்து தாக்கி உணவூட்டும் தாயைப்போல வைத் கியனும் பரிந்து பேசி மருந்து கொடுக்கவேண்டும் - தூக்கி அணைக்கவேண்டாம் இந்நிலை இப்போது எந்த வைத்தியசாலையிலும் இல்லையே!
நல்ல திடகாத்திரமான பெண்கள் பாரமான பால் நிறைந்த முலைகளையும் தாங்கிக்கொண்டு ஒரு மாதமும் செல்லாத தனைய னுடன் வருவார்கள். ' வயிற்ருல் கழிகிறது; என்னுடைய பால் போதாது; மாவும் கரைத்துக் கொடுக்கிருேம் ' என்பார்கள்: என்னே பரிதாபம் வேறு பாலும் கொடுக்கிருேம் ' என்பதில் ஒரு பெருமைசொட்டும். தேவையில்லாத பாலைக்கொடுத்துத் தீங்கிழைக்கிருேமென்பதை அறியாரா? இது சீரா? அன்றிச் சீர் (35 fr?
தாய் தானே தன் தனயனுக்குப் போதிய பாலைக்கொடுக்கும் சக்தியுடையவளாக இருக்க முயற்சித்தல்வேண்டும். நீர் உணவுகள் தாயின் பாலைக் கூட்டும். பசுவின்பால், கஞ்சி, கூழ் முதலியவை களையே தாய் தாராளமாக உட்கொள்ளுதல் வேண்டும். சீவசத் துக்கள்கொண்ட உணவுகளைத் தெரிந்தெடுத்து உண்ணல்வேண்டும்: மீன், முட்டை, பருப்பு, தயிர், இலைவகை இறைச்சி முதலியவை களைத் தேடிக் கலந்து உட்கொள்ளல்வேண்டும். பழவகைகள் ஒன்று தினமும் தெண்டித்துச் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். நெத்தலி மீனே, அதன் கருவாடோ தாய்க்கும், தாயாகவர இருக்கும் பெண் ணுக்கும் ஓர் சிறந்த சத்துள்ள உணவு என்பதை வறியவர்கள் மறந்து விடக்கூடாது. இலைவகை தவருது தினமும் உட்கொள்ளல்வேண் டும். வாழைப்பழம், தோடம்பழம், பப்பாளிப்பழம், எலுமிச்சம் பழம் ஆகிய இவைகள் எதுவும் நன்மையே பயப்பன. மரக்கறி மட்டும் உண்போர் .ால், தயிர் பருப்புவகைகளைத் தேடி உண்

தாயும் பிள்ளேயும் 廖静
எர்னல்வேண்டும். மனதைத் தாக்கும் உணர்ச்சிகள் பாற்பெருக்கைப் பாதிக்கின்றன. எனவே, கவலை, கோபம் என்பன இளந்தாயைத் தாக்காதிருக்க நாம் பார்த்துக்கொள்ளல் வேண்டும். அத்துடன் போதிய ஆறுதலும் எடுத்தல் வேண்டும். வீட்டுக்கருமங்கள் யாவும் தாமே பார்க்கும் தாய்மார் இதைத் தேடுவது கஷ்டமே இருந் தும் குடும்ப அங்கத்தவர்கள் மனமுவந்து துணைபுரிந்தால் இந்த ஆறு தல் கொஞ்சத்துக்குக் கொஞ்சமாகுதல் தாய்க்குக் கிடைக்க வழி பிறக்கும், தாய் சும்மா இருக்கவேண்டுமென்பதல்ல இதன் கருத்து. வேலேயும் வேண்டுவதே. பின் போதிய ஆறுதலும்வேண்டும்.
தயிருக்கு இரத்த உறைவு - கட்டி - தடுக்கும் சக்தி உண் டென்று மிக அணித்தாய் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்திருக்கிருர் கள். தயிரிலுள்ள எது இதைச்செய்கிறதென்பதுபற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது .
20. தாயின் பாலே இழந்த சேய் துர்அதிர்ஷ்டவசமாகத் தாயின் பால் குடித்துச் சுகமே வளரச் சாத்தியமில்லாத குழந்தைகளுமுண்டு.
1. பிறந்த உடனேயோ அல்லது பால் அருந்தி வளரும் காலத் திலேயோ தாயை மரணத்தினுல் பிரிந்த பிள்ளை.
2. பொல்லா நோய்வாய்ப்பட்டுப் பாலனைப் பாலூட்டி வளர்க்க இயலாத தாயின் சேய்,
3. ஊதியத்துக்கு உழைக்கவேண்டிய பொறுப்புடைய அன் னேயை அடைந்த மகவு
4 தேசசேவையிலீடுபட்டுச் சொற்பநேரமும் தன்மகவைத் தாலாட்டிப் பாலூட்டநேரங்கிடைக்காத தாயைப்பெற்ற சேய்,
இப்படியே காலத்தின் கோலமாகவோ அல்லது விதியின் பய கைவோ துன்பத்துக்கிடமாக, தமக்கென இயற்கைசேர்த்த அந் தத் தாய்ப்பாலே இழந்த குழந்தையை வளர்க்கும் வழிவகைகளே இங்கு ஆராய்வாம்.
(அ) பசுவின்பாலே எப்படிக் கொடுக்கலாம்? பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை சுகதேகியும் புத்தியுமுள்ள ஒரு பெண்ணின் கையில் கொடுக்கப்படல் வேண்டும். அவள் சித்திரப் பதுமைபோல் புத்தகங்களில் தருவனவற்றையே தவருதுசெய்து மற் றவை நடந்தேதீரும் என்று இருத்தல்கூடாது. பிள்ளையின் ஒவ்வோர் நிமிடநிலையிலும் கண்ணுங் கருத்துமாயிருந்து கருமமாற்றல் வேண் டும். தேர்ந்த வைத்தியரை அணுகிச் சந்தேகங்களுக்கு நிவாரணம் தேடல் வேண்டும். புத்தகங்களில் கூறுவன வழிகாட்டியாய் உதவுமே யன்றிஅவைகளைப் பிரமாணங்களாகக்கொண்டு அவற்றின்படியே நடத்தல் வேண்டுமென்பதல்ல; எல்லாப்பிள்ளைகளும் எப்போதும்

Page 34
Η ύ
ஒரேவித அல்லது ஒரளவு உணவுகளில் நன்கு வளரமாட்டா வளர்ப் பின் பொறுப்பேற்ற தாய் தன் சிந்தனையில் ப ல வ ற் றை யும் கொணர்ந்து தன் பிள்ளைக்கு உகந்தவைகளைக் கைக்கொள்ளல் வேண்டும். கைக்கொண்டமுறையில் பிள்ளை நன்குவளர்ந்தால் தொடர்ந்து அம்முறையைப் பின்பற்றல்வேண்டும். தவறி வளர்ச்சி தடைப்பட்டால், வாந்தி, வயிற்றுப்போக்கு முதலியவைகளால் பாதிக்கப்பட்டால் கைக்கொண்ட முறைகளில் தவறு உண்டு என்று கொள்ளல்வேண்டும். தேர்ந்த வைத்தியரின் ஆலோசனையை நாடல்வேண்டும் நோயில்லாத சொந்தப் பசுவின் பாலே நம் பிக்கையானது எவரைக் குட்டியும் தாம் பணம்சம்பாதிக்கவேண் டும் என்ற எண்ணமே மிகுந்த இந்த உலகில், எவரையும் நம்பி விலைக்குவாங்கும் பசுவின் பாலில் பிள்ள்ையை வளர்த்தல் கூடாது. தனிப்பாலைச் சீரணிக்கும் சக்தி பச்சிளம்பிள்ளைகளுக்குக் கிடை யாது. பாலிலுள்ள சில பொருட்கள் பிள்ளையின் சீரணசக்தியைச் சிக்கலாக்குகின்றன. அப்பொருட்களின் அளவைக் குறைத்துப் பிள்ளே யின் சீரண சக்திக்கேற்கச் செய்யத் தனிப்பாலுக்கு நீர் கலக்கவேண் டும். நாட்கள் செல்லச்செல்லப் பாலைச் சீரணிக்கச்செய்யும் சக்தி பாலனுக்கு அதிகரிக்கும். அதற்கேற்பக் கலக்கும் நீரை நாம் படிப் படியாகக் குறைத்துவரலாம்.
பிறந்த முதல்மூன்று நாட்களும் பிள்ளைக்குத் தேவைப்படும்" பால் மிகக் குறைவு. ஒருநேரத்திற்கு ஒரு மேசைக்கரண்டி ( அரை அவுன்ஸ் ) கொண்ட நீர் கலந்த பால் போதுமானது? இதை நாலு மணித்தியாலங்களுக்கு ஒருமுறையாகக் கொடுக்கலாம். நாலாம் நாள் கொடுக்கும் தொகையை நேரத்துக்கு இரண்டு மேசைக் கரண்டி கொண்டதாக்கலாம். ஏழுநாட்கள் செல்லவே மூன்று மேசைக்கரண்டிகொண்ட பால் கொடுக்கக்கூடியதாயிருக்கும். ஒரு மாதம் செல்லவே நாலு மேசைக்கரண்டியளவு (2 அவுன்ஸ்) கொடுக் கக்கூடியதாயிருக்கும். இரண்டுமாதங்கள் செல்ல மூன்று அவுன்சும், மூன்றுமாதங்கள் முடிய நாலு, ஐந்து அவுன்சும் கொடுக்கக்கூடியதா யிருக்கும். பின்பு அரை அவுன்சுக்குக் குறையாது கூட்டக்கூடிய தாயிருக்கும். இது எதற்கும் திட்டவட்டமான வரையறையில்லை. புத்தியுள்ள பெண்ணின் கையில் பராமரிப்பு இருத்தல் வேண்டு மென்று அதற்காகவே முன்கூறினுேம்.
பிள்ளையைக் கிழமைக்குக் கிழமை நிறுத்து, வளர்க்கும் வசதி யும் ஊக்கமும் உள்ளவர்கள் பிள்ளை பிறந்து இரண்டுகிழமைகளுக் குப்பின் பிள்ளையின் நிறைப்படி பாற்தேவையைக் கணக்கிடலாம்: ஒவ்வொரு இருத்தல்நிறைக்கும் இரண்டரை அவுன்ஸ் பால் ஒரு நாளைக்குத் தேவையாகும். எட்டு இருத்தல் எடையையுடைய பிள்ஃளக்கு 20 அவுன்ஸ் பால்தேவையாகம் ஆறுமுறை பங்கிட்டு

தாயும் 47
ஊட்டும்பொழுது ஒருநேரத்தேவை ஏறக்குறைய மூன்றரை அவுன் சாகும் ஒருநேரம் அந்த மூன்றரை அவுன்ஸ் பாலையும் உறிஞ்சத் தவறின் பராமரிப்போர் ஐயோ ஊ | எனத் தேவையில்லை. மறு தரம் பிள்ளை முழுக்கக் குடித்தேதீரும். குடிக்காவிட்டாலும் பாத கம் ஒன்றுமேயில்லை. தனது தேவைக்கேற்பக் கணக்கிட எங்களி லும்பார்க்கக் குழந்தைக்கு நன்ருகத் தெரியும். கடைசிச் சொட்டு வரையும் உறுஞ்சவிடுதலிலும் தீங்குண்டு வயிற்றினுள் காற்றும் போய்ச்சேர்ந்துவிடும். ஒரு தேக்கரண்டியளவு பால் போத்தலில் இருக்கப் போத்தலை நாம் எடுத்துவிடுதல் நன்று மற்றையது பால் குறைந்துகொண்டு போகும்போது போத்தல் முலையை மூடி இடைவிடாது பால் இருக்கப் பார்த்துக்கொள்ளல்வேண்டும்; இல்லையேல் இந்நிலையிலும் காற்றையும் பாலேயும் அல்லது தனிக் காற்றையே பாலன் உறிஞ்சி வயிறு ஊதிக் கஷ்டப்படுவான். மேசைக்கரண்டிகளெல்லாம் சரிவர அரை அவுன்சு கொள்ளக்கூடி யவைகளல்ல. தெரிந்தவர்களை அண்டி அளந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லது அளவைக்காட்டும் பாலூட்டும் போத் தல்களே உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம். அவைகள் அவுன்சுக் கணக்கில் வரையறுக்கப்பட்டிருக்கும்.
பிள்ளையின் சுகத்தைக் கவனித்துச் சீரணிக்கும் சக்திக்கேற்பப் பாலுடன் நீர் கலக்கப்படல்வேண்டும் ஒருபங்கு பாலும் இரு பங்கு நீருமாய் முதற்கிழமை கொடுக்கலாம். வயிற்றுதல், வாந்தி இல்லாது பிள்ளே இக்கணக்கில் வளருமாயின் நாட்கள் செல்லச் சேர்க்கும் நீரைப் படிப்படியாகக் குறைத்துவரலாம். ஒரு கிழமை பாயினும் ஒரு கணக்கில் துன்பமின்றி நலமேவளர்ந்த பிள்ளைக்கே மற்றைய கிழமை பாலின் கணக்கில் மாற்றம்செய்தல்வேண்டும். அப்படியே செய்துவரும்போது மூன்றுமாதங்கள் முடியவே தனிப் பால் பிள்ளேக்குக் கொடுக்கக்கூடியதாயிருக்கும். நோயின்மை, நிறை அதிகரித்தல் பிள்ளையின் நல்ல வளர்ச்சிக்கு அறிகுறிகள் பசுப்பாலுக்குச் சிறுகச் சீனி சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு அவுன்சு பாலுக்கு அரைத்தேக்கரண்டி சீனி போதுமானது. பால் வைக்கும் பாத்திரமும் பாலூட்டும் போத்தலும் எந்தக் காரணம் பற்றியேனும் பிறிதோர் உபயோகத்திற்கு எடுத்தல் கூடாது. பாலும் நன்கு கொதித்தபின்பே அடுப்பிலிருந்து இறக்கப்படல் வேண்டும். நீர் உள்ள பாத்திரத்தில் பாற் பாத்திரத்தைவைத்து அந்த நீர் கொதித்து, அதே கொதித்தநிலையில் 15 நிமிடம்வரை இருக்கவிட்டு இறக்குவது சாலச்சிறந்த முறை என்பர். பசுவிலிருந் தும், கறப்பவரிலிருந்தும், கொடுப்பவரிலிருந்தும் பாலில்சேரும் கண்களுக்குத் தெரியாக் கிருமிகள் இப்படிக் கொதிக்கவைக்கும் பொழுது மாண்டு மடிந்துபோகும். பாலில் இருக்கும் சீவசத்து 'சி' இப்படிக் காய்ச்சும்போது கெட்டுவிடும்; அதை நிவிர்த்தி

Page 35
Á 8 தாயும் பிள்ளையும்
செய்ய இடைவேளைகளில் தோடம்பழம், தக்காளிப்பழம், தேசிக் காய் எதுவெனினும் கிடைப்பதின் சாறு கொடுத்துவரலாம். பிறி தோரிடத்தில் இவை கொடுக்கும் முறைகள் விபரிக்கப்பட்டிருக்
கின்றன.
濂、 அடுப்பிலிருந்து இறக்கிய பாலை உடனுக்குடன் குளிரச் செய்
தல் வேண்டும். நகச்சூடான நிலையிலிருக்கும் பால் கிருமிகள் பெருகுவதற்கு மிக வாய்ப்பான இடம். ஆகவே நெருப்பிலிருந்து நீக்கிய பால் பாத்திரத்தை உடனே குளிர்ந்த நீருள்ள பாத்திரத் தில் வைத்துக் குளிரப்பண்ணி அப்படியே விட்டுவிடுதல் வேண்டும். குளிர்சாதன வசதியுள்ளவர்கள் அதனுள் ஆறிய பாலேவைத்துப் பாதுகாக்கலாம். உடன் தேவைக்குரிய பாலே எடுத்துக்கொண்டு மறுநேரத் தேவைக்குரிய பாலே இப்படியே பத்திரப்படுத்தல் வேண் டும். மற்றையநேரப் பாலே வெந்நீரில் பாற் பாத்திரத்தைவைத் துச் சூடாக்கிக் கொடுக்கலாம். காலையில் கறந்த பாலை மாலையில் கொடுக்கநேர்ந்தால் பின்பும் ஒருதடவை முன்போலக் கொதிக்க வைத்து ஆற்றிக்கொடுப்பதே நன்று ஆணுல் காலேப்பாலே மிாலே கொடுப்பதைத் தவிர்த்தல் நன்று, வாயாலூதி எவ்வித உணவை யும் குளிரச்செய்தல் கூடாவே கூடாது. அது ஆபத்துநிறைந்த செயல் என்றே சொல்லலாம்.
பால் கொதிக்கவைக்குமுன் பாத்திரங்கள் வெந்நீரால் கழுவப் படல் வேண்டும், கொதிக்கும் பாலைத் துழாவப் பயன்படுத்தும் அகப்பை அல்லது கரண்டி, பாத்திரங்கள் போலவே கழுவப்பெறல் வேண்டும். பால் நெருப்பிலிருந்து இறக்கும்வரை துழாவப்படல் வேண்டும். இச்செய்கை ஆடை அதிகம் உண்டாகாதவாறு தடுக் கும். அத்துடன் பால் பொங்கிவழியவும் தடையாயிருக்கும்,
மட்பாத்திரங்களை அல்லது அலுமினியப் பாத்திரங்களைப் பால் கொதிக்கவைக்கவும், மறுநேரத்திற்கு மூடிவைக்கவும் பயன்படுத்த லாம். பிள்ளை வளர்ப்பில் ' சுத்தம் முதலிடம்பெறவேண்டும். பாத்திரங்கள் புனிதமாயிருத்தல் வேண்டும். நேரத்துக்கு நேரம் அவை கொதிநீரால் கழுவப்படவேண்டும். பாலூட்டும் போத்தல், கலக்கும் கரண்டி முதலியன விசேஷ கவனத்துக்குள்ளாகியிருத்தல் வேண்டும். பராமரிப்பவர் தன்னுடைய கைகளைச் சவர்க்காரம் கொண்டு கழுவியபின்பே பாலூட்டும் போத்தலை எடுக்கவோ பாலைக் கணக்குக்கு வார்க்கவோ வேண்டும்,
வாயாலூதி எவ்வித உணவையும் குளிரச்செய்தல் கூடாது. அதுவும் குழந்தையின் பாலை அப்படிக் குளிரச்செய்தல் பெருந் தீங்குக்குள் பிள்ளையை இழுப்பதாகும் வாயிலிருந்து வெளியேறும்

O தாயும் பிள்ளையும் 4锣 காற்று நோய்க்கிருமிகள் நிறைந்ததாயிருக்கும் இருந்தும் வாயா லூதி உணவுகளைக் குளிராக்கமுனையும் பழக்கம் பெருமளவில் பரவியிருப்பதைக்காண மனம் வருந்துகிறது.
பாலூட்டும் போத்தலை வெந்நீரால் கழுவுதல்வேண்டும் பால் கொடுத்து முடிந்ததும் போத்தல் நீரினுல் சுத்தம்செய்யும் தும்பு கொண்டு நன்கு கழுவப்படல்வேண்டும். பின்பு கொதிநீரில் அலம்பிப் பின் உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளும்வரையும் கொதித்தாறிய நீரையுடைய பாத்திரத்தில் அமுக்கிவைக்கப்படல் வேண்டும், இந்த நீருக்குச் சிறிது அப்பச்சோடா சேர்த்தல் நன்று ஒருபோத்தல் TTTT TT S TTTTTTTT S TTTTTT eTTG G SrrLLLLSLLLLLLLLlLlLlLLLLLLLLCS விகிதம் போதுமானது. பால்கொடுக்க எடுக்கும்பொழுதும் பால் கொடுத்தபின்பும் நன்கு சுத்திகரிப்பதைவிடக் காலை மாலை இரு முறைகள் தினமும் கொதிநீரில் 15 நிமிடங்களுக்குக் குறையாது அவை அவிக்கப்படல்வேண்டும்,
பிள்ளை வாயால்பற்றி உமியும் முலையும் மிக அவதானத்துடன் பாதுகாக்கப்படல் வேண்டும். பாவிக்கமுன்பும் பின்பும் உட்புறம் வெளிப்புறம் ஆகிய இரண்டும் கொதிநீரால் நன்கு கழுவப்படல் வேண்டும். நாளுக்கு இருமுறை அதுவும் ஐந்துநிமிடங்கள்வரை அவிக்கப்படல் வேண்டும். அந்த ஐந்து நிமிடங்களிலும் கூடி ஞ ல் இரப்பரால் செய்யப்படும் முலைகளாதலால் பழுதடையக்கூடும். அவித்தபின் நீர்வடியக்கூடியதாய் கவிழ்த்து ஒருபாத்திரத்தில் வைத்து இன்னென்ருல் மூடிவிடல் வேண்டும். துணி கொண்டு துடைத்தல் கூடாது. இந்தமுலை சிலகாலத்தில் தரம்கெடக்கூடும், முலைக்கண் கணக்குக்குமிஞ்சிப் பெரிதடையக்கூடும். அவைகளைக் கவனித்துத் தேவைப்படி புதியமுலை போடப்படல் வேண்டும், பெரும்பாலும் மாதம் ஒருமுறை முலை மாற்றப்படவேண்டிநேரிடும்: புதிய முலையின் கண் பால் கணக்காய் ஒடக்கூடியதாயிருப்பதில்லை. அப்படியிருந்தால் தையல் ஊசியால் குற்றிக் கண்ணேப் பெரிதாக்க லாம். அப்படிச் செய்யுமுன் ஊசி 15 நிமிடங்களுக்குக் குறையாது கொதிநீரில் அவிக்கப்படல்வேண்டும் அல்லது ' ஸ்பிறிற் ' தோய்ந்த பஞ்சைப் பற்றவைத்து அதில் சிவக்கக் காய்ச்சப்படல் வேண்டும்.
(ஆ) மாப்பால் எத்தனையோ ஆராய்ச்சிகளின் பயணுகப் பசுவின்பாலேக் காய்ச்சி மாவாக்கிப் பச்சைப்பாலனின் சீரண சக்திக்கேற்பக் கொழுப்பைக் குறைத்துச் சீவசத்துக்களைச் சேர்த்துப் புட்டிகளில் அடைத்து அனுப்புகிருர்கள். பிள்ளையின் பெலத்திற்கேற்ற மா வயதுக்கேற்ற

Page 36
50} தாயும் பிள்ளையும்
மா, வருத்தகாலங்களுக்கேற்ற மா என ஏராளமானவை இன மின மாயுண்டு. அவையெவையும் நல்லனவே. இவைகளில் ஒன்றை எங்கள் பிள்ளையின் வயது, நிறை, சுகம் என்பனவற்றிற்கு ஏற்ற தாய் வைத்தியரின் உதவிகொண்டு தேர்ந்தெடுத்துப் பிள்ளைக்கு ஊட்டத்தொடங்கலாம். இவை எதுவும் தாயின்பாலுக்கு ஈடா காது என்பதை மீண்டும் கூறுகின்ருேம். பிள்ளையின் நல்வளர்ச்சி, தேகதிடம், ஆரோக்கியம் முதலியவற்றை அறிவதற்கு நிறை ஒரு சிறந்த அளவுகோலாகும். இரண்டுகிழமைகளுக்கு ஒருமுறையாகி லும் தாயானவர் பிள்ளையை நிறுத்து ஒரு புத்தகத்தில் குறித்து வைத்தல் நன்று. பிள்ளையின் நிறை கணக்காய்க் கூடிவருவதைக் காண எந்தத் தாய்தான் பெருமிதமடையமாட்டாள் இந்த வழக் கம் கிழக்குநாடுகளில் இருப்பதாய்த் தெரியவில்லை. ஆணுல் இவ் வழக்கம் பழக்கத்தில் வர வைத்தியர் ஊக்கம் எடுத்தல் வேண்டும்,
பிள்ளையின் பாரத்திற்குத் தக்கதாய் அவருக்குக் கொடுக்கும் பாலே நிச்சயிப்பதுதான் சாலச்சிறந்த முறை சாதாரணமாக ஒரு இருத்தல் எடைக்கு இரண்டரை அவுன்ஸ் பால் தேவைப்படும். ஒரு அவுன்ஸ் பால் இரண்டுமேசைக்கரண்டிகள் கொண்டதாயிருக்கும், எட்டு இருத்தல் நிறையையுடைய பிள்ளைக்கு ஒருநாளுக்குத் தேவை யான பால் 20 அவுன்ஸ், ஒருபோத்தல் 24 அவுன்ஸ் கொள்ளும், உணவுச்சக்திக் கணக்கில் கூறில் ஒரு இருத்தல் நிறைக்கு ஒருநாளைக் குத்தேவை 50 கலோரிகள் (Calories), 8 ருத்தல் நிறையையுடைய பிள்ளைக்கு ஒருநாள் தேவை 400 கலோரிகள்”. ஒரு அவுன்ஸ் முலைப் பால் கிட்டத்தட்ட 20 "கலோரிகள் கொடுக்கும், புட்டியில் அடைக் கப்பட்ட மாக்கள் நீர் கலந்து கொடுக்கும் பக்குவத்தில் ஆக்கும் பொழுது முழுக் கிறிம்பால் (Full Cream) ஒரு அ வு ன் க க் கு 18 கலோரிகளும், அரைக்கிறீம் (Half Cream) பால் 16 கலோரிக ளும் கொடுக்கும். ஒரு தேக்கரண்டிகொண்ட சீனி 15 கலோரிகள் போல்தரும். எனவே செயற்கைப்பாலுக்குச் சொற்பசினியும் சேர்க்க பிள்ளையின் தேவை கிட்டத்தட்ட தாய்ப்பால்போன்று பூர்த்தியா கிறது. தலை சுற்றுகிறதா ? மேற்கூறியவை மேல்நாட்டு அறிஞர் கள் மிகப்பொறுமையுடன் ஆராய்ச்சிசெய்து எங்களுக்குத் தந்த உண்மைகள். இவைகளை நாம் வழிகாட்டிகளாய் வைத்துக்கொண்டு பிள்ளைப் பராமரிப்பில் இறங்கினல் வழி வழுவவே மாட்டோம், பெரிதும் வெற்றிபெறுவோம்,
கீழைத்தேசத் தாய்மார் உயரத்தில், தேகபுஷ்டியில், இரத்தச் செழுமையில் மேலைத்தேசத் தாய்மார்களிலும் குறைந்தவர்களே, நம் நாடுகள் வாழ்க்கைத்தரத்தில் குறைவானவையே. இதன் விளைவே இந்த வித்தியாசமும், அதேபோல் எங்கள் பிள்ளைகளும்

மேல்நாட்டுப் பிள்ளைகளிலும் பார்க்கச் சராசரி எடை குறைந்தவர் களே. எனவே பாற்தேவையும் குறைவுதான். எந்தப் பிள்ளையை யும் ஒரே அளவுகோலில் வளர்க்கமுடியாது. கூடியும் குறைந்தும் தேவைகள் நேரும். தேவைக்கு ஏற்பக் கணக்குகளை மாற்றிஅமைப் பது புத்தியுள்ள பெண்ணின் கடமை.
பிள்ளை பிறந்து முதல்மூன்று நாட்களும் பிள்ளைக்குப் பாற் தேவை மிகக்குறைவு. முதல் 6 மணித்தியாலங்களும் ஒன்றுமே தேவையில்லை. பிள்ளை அழுதால் அல்லது உதட்டை நாக்கைநீட்டி நக்கினல் கொதித்து ஆறிய நீர் ஒரு தேக்கரண்டி பருக்கலாம். பனங் கட்டியோ, சீனியோ சேர்த்தல்கூடாது. 6 மணித்தியால முடிவில் ஒரு மேசைக்கரண்டி பால் பருக்கலாம். புட்டிகளில் குறிக்கப்பட்ட நீர்க்கணக்கில் இருமடங்கு நீர் கூடக்கலத்தல் வேண்டும் அப்படி நாலுமணித்தியாலங்களுக்கு ஒருமுறையாய் 6 முறை கொடுக்கலாம். மூன்று நான்குமுறை இந்தக் கணக்கில் கொடுத்துப் பிள்ளையின் சீர ணம், வயிற்றுாதல், வயிற்ருல் கழிதல் முதலியவற்றைக் கவனித்து ஆபத்தொன்றுமில்லாதிருந்தால் பாலுக்குச் சேர்க்கும் நீரைப் படிப்படியாகக் குறைக்கலாம். பின்பு புட்டியில் குறித்திருக்கும் விதிக்குக் கொண்டுவரலாம்; பாலின் அளவை மூன்ரும்நாள் முடி வில் நேரத்துக்கு இரண்டு மேசைக்கரண்டி (ஒரு அவுன்ஸ்) ஆக்கி விடலாம். ஏழுநாட்கள் செல்லவே மூன்று மேசைக்கரண்டி (ஒன் றரை அவுன்ஸ்) கொண்ட பால் கொடுக்கக்கூடியதாயிருக்கும். ஒரு மாதம் சென்றதும் நாலுமேசைக்கரண்டி (2 அவுன்ஸ்) பாலும் இரண்டுமாதங்கள் சென்றதும் மூன்று அவுன்ஸ் பாலும், மூன்று மாதங்கள் சென்றதும் நாலு அவுன்ஸ் பாலும் கொடுக்கக்கூடிய தாயிருக்கும். நான்காம் மாதமுடிவில் கொடுக்கும் அளவை ஐந்தவுன்சாக்கலாம்.
இந்த அளவுகளை வழிகாட்டிகளாகக்கொண்டு பாலைக்கொடுத் துப் பாலனைவளர்த்தல் வேண்டும். ஆரோக்கியமாக நோய்வாய்ப் படாது சீரும் சிறப்புமாக வளர்ந்தால் கைப்பற்றிய முறைகள் சரியே என்று சொல்லவும் வேண்டுமோ ? பிள்ளை வயிருரக்குடித்து முலையைத் தானகத் தவறவிடும்பொழுது கணக்காய் அருந்திவிட்ட தென்றுகொள்ளலாம். முலை எதுவாயினும் சரிதான்; தாயின் முலையாயினும் சரி - பாற்போத்தல் முலையாயினும் சரி. பால்குடிக் கும்பொழுது போத்திற் பால்முடியுமுன் நித்திரைநிமித்தம் முலை யைத் தவறவிட்டால் பிள்ளையைத் தட்டி எழுப்பவேண்டும். சிறிது மாத்திரம் எஞ்சியிருந்தால் அதையும் முடியக் குடிக்கும்படி குழந் தையைத் தூண்டுதல் கூடாது. பால்குடித்த முடிவில், தாய்ப்பா லுண்ட பிள்ளையை நிமிர்த்தி நெஞ்சோடணைத்து முதுகில் தட்டுவது போன்று தட்டி வலப்புறமாய்ச் சரித்து வளர்த்திவிடுதல்வேண்டும்.

Page 37
5易 தாயும் பிள்ளேயும் }
பால்கொடுக்கும் நேரம்போக மற்றையநேரம் பெரும்பாலும் பாலன் உறங்கியே இருப்பான், பால் சீரணித்து இரைக்குடல் வெறுமையடையக் குழந்தை எழும்பும் வீறிட்டலறும். பால் கொடுக்கும் அடுத்தநேரம் அதேதான், கடிகாரமும் கையுமாக இருந்து அருமைக் குழந்தைகளை அவஸ்தைக்குள்ளாக்கிய காலம் மலையேறிவிட்டது. முன்னேர் கடைப்பிடித்தமுறை, வேறும் எத் தனையோபோன்று திரும்பிவிட்டது; அழும்போது பால் என்ருல், இந்த அழுகை பால்கொடுத்து மூன்றுமணித்தியாலங்களுக்குள்ளா யின் பசியைவிட வேறு காரணங்களுண்டோவென ஆராய்தல் வேண் டும். ஈ, எறும்பு, ஈரத்துணி, வயிற்றுTதல் முதலியன காரணமா யிருக்கலாம் அழும்பொழுது இவைகள் தாயின் கவனத்துக் குள்ளாகவேண்டும்
(இ) விசேட நடவடிக்கைகள்
16 பிறபால் கொடுத்துவளர்க்கும் பிள்ளைகளுக்கு ஏற்படும் கஷ்டங்கள் சுத்தமின்மையாலேயே நேருகின்றன; பெற்றவர் தானுே, பணிப்பெண்ணுே அல்லது இனத்தவர்தானே பிள்ளை வளர்ப்புக்குப் பொறுப்பானவர் பிணியில்லாதவராயும், தினமும் குளிப்பவராயும், தோய்த்து உலர்ந்த துணி தினமும் மாற்றுபவ ராயும் இருத்தல்வேண்டும். விரல்நகங்கள் வெட்டப்பெற்று அழுக்குச் சேராதவாறு பாதுகாக்கப்படல் வேண்டும். பாலகனுக்குப் Lyrici) பக்குவப்படுத்தப் போகும்போதெல்லாம் கைகள் சவர்க்காரம் கொண்டு நன்கு கழுவப்படல் வே ண் டு ம். கழுவியபின் பால் கொடுத்து முடியும்வரை தலைசொறியவோ, மேல்சொறி யவோ, ஆடையைத்தன்னும் அங்கு இங்கு இழுக்கவோ கைகளைப் பா விக் கக்கூடாது. கதைகளில் ஈடுபடுதல், தும்முதல் கூடவே கூடாது;
2. பாலூட்டும் போத்தலைப் பாலுடன் கவிழ்த்துப் பிடிக்கும் போது முலைக்கண்ணுற் பாலூறிச் சொட் டுப்போடுதல் வேண்டும். அப்படி இல்லாவிடின் முலைக்கண் சிறிதெனத் தெரிந்து அதைப் பெருப்பித்தல்வேண்டும். சிறு துவாரத்திலிருந்து பாலை உமிவது சிறுவனுக்கு மிகச் சிரமமாயிருக்கும். சிரமமிகுதியால் பாலை உமி யாது "முலையை நழுவவிடக்கூடும்.
3 பசுப்பாலிலோ அல்லது புட் டிமாக்களாலோ வளர்க்கப் படும் பிள்ளைகளுக்குச் சீவசத்துக்கள் கூடிய பானங்கள் கொடுக்கப் படல் வேண்டும். தோடம்பழம், எலுமிச்சம்பழம், தக்காளிப்பழம், லெமன்பழம் ஆகிய எவற்றின் சாறும் கொடுக்கலாம். இவைக வில் பிள்ளே யின் வளர்ச்சிக்கேற்ற சீவசத்துக்கள் உண்டு தோடம்

தாயும் பிள்ளேயும் 5岛 பழம் விசேடமானது என்று நினைத்தல் தவறு. மற்றையது, அது எல்லோராலும் எக்காலத்தும் பெறக்கூடியதல்ல. ஒன்றைவெட்டி மறுநேரம் வைத்துக்கொடுக்க ஏற்றதல்ல. எலுமிச்சம்பழம், தக்காளிப்பழம், லெமன்பழம் என்பன எவராலும் வாங்கக்கூடி யன; எக்காலத்திலும் வாங்கலாம். ஒரு தோடம்பழத்திலுள்ள சீவசத்து 'சீ' அதேயளவு தக்காளிப்பழத்திலும் உண்டு. அத்துடன் தக்காளிப்பழத்தில் சீவசத்து ‘ஏ’ இருக்கிறது; இது தோடம்பழக் தில் கிடையாது. முந்திரிகைப்பழத்தில் இவைகளில் உள்ளதைப் போல் சீவசத்துக்கள் அதிகமில்லை. இருந்தும் அறியாமை நிமித் தம் தோடம்பழம், முந்திரிகைப்பழங்களை விரும்பி வாங்குகிருேம். இவை விலை அதிகமான பொருட்களாகையால் அவற்றை வாங்கு வதில் பெருமைப்படுகிருேம்.
இரண்டு மாதங்கள் முடியவே குழந்தைசளுக்குப் பழச்சாறு கொடுக்கத் தொடங்கலாம். நாளொன்றுக்குப் பத்துச்சொட்டுக ளாகத் தொடங்கிச் சிறதுசிறிதாகக் கூட்டி நாலைந்து கிழமைகளில் ஒரு தேக்கரண்டி கொண்டளவு கொடுக்கக்கூடிய த ர யி ரு க் கு ம் ஆறேழுமாதங்களில் இரண்டுமேசைக்கரண்டிகொண்ட சாறு கொடுக் கக்கூடியதாகவிருக்கும் இந்தச் சாறுடன் கொதிக்கவைத்து ஆறிய நீர் இருபங்கு (சாறு 1 - நீர் 2) சேர்த்துக்கொடுத்தல் வேண்டும்.
மூன்ரும் மாத முடிவில் மீன் எண்ணெய் கொடுத்தல்வேண்டும்: தினமும் ஐந்துசொட்டுக்கள் ஒருதேக்கரண்டி பாலில் மேற்புறம் விட்டுப் பருக்கலாம். இதைக் குறிக்கப்பட்ட ஒர் உணவின்பின் கொடுத்தல் வேண்டும். பழச்சாறு மத்தியான உணவுநேரத்துக்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகக் கொடுக்கலாம் பால்கொடுத்த வுடன் அந்தப்பர்லில் ஒரு கரண்டி எடுத்து அதில் மீன்எண்ணெய்ச் சொட்டுகளைவிட்டு இன்னெருநேரம் கொடுக்கலாம்; இந்த ஐந்து சொட்டு எண்ணெய் கிழமைக்குக் கிழமை கூட்டப்பட்டு வரலாம். இவை எல்லாம் பிள்ளையின் சீரண சக்தியையும், விக்கினமின்றி வளரும் தன்மையையும் பொறுத்திருக்கும். இரண்டு தேக்கரண்டி வரையும் கூட்டலாம். அதைத்தொடர்ந்து பிள்ளைப்பருவத்திலும் கொடுத்துவரலாம். சாயந்தரமாகுமுன் இது கொடுக்கப்படல் வேண் டும். சீவசத்து மருந்துச் சொட்டுகள் (Witamin drops) ஏராள மாய்ப் பலவகைகளில் விற்பனையாகின்றன. அவையினல் உண்மை யாய் நாம் பயனடைகிருேமோ அல்லது எங்கள் காசு வீண் விரைய மாகின்றதோ என்பது கேள்விக்குறி ! எங்கள் நாட்டில் கிடைக் கும் பழச்சாறுகள்; நேரடியாய் எங்கள் கையால் பிழிந்தெடுக்கப் படுவன; சந்தேகத்துக்கு இடமில்லாதன. எனவே இவைகளையே நாம் கொடுத்தல் வேண்டும்,

Page 38
葛4 தாயும் பிள்ளேயும்
21. பிள்ளேயின் மற்றைய தேவைகள்
1. அமைதிநிறைந்த நித்திரை பிறந்தநாட்களில் பிள்ளை பாலூட்டும்நேரம் தவிர மற்றையநேரம் எல்லாம் உறங்கிக் கிடக் கும். ஊண் ஒன்றே அதன் தேவை. வேறு கவலையே பிள்ளைக் குக் கிடைக்காது. 21 மணித்தியாலங்கள்வரை பிள்ளை தூங்கும் நாட்கள் செல்லக் கவலைகள் கூடுகின்றனபோலும் 1 விழிப்புநேரம் கூடிக்கொண்டேபோகும். ஆறுமாதங்கள் செல்லவே நித்திரையின் அளவு பதினெட்டு மணித்தியாலங்கள் போலாகின்றது. இரவுமுழு வதும் உணவுநேரங்களின் பின் சிறிதுநேரமும் உறங்கும். பிள்ளே பின் நித்திரைக்குறைவு அவரின் சுகவீனத்திற்கு ஒர் அறிகுறி
நாட்கள்செல்லத் தந்திரங்களிலும் ஈடுபடுவர். வெம்புவர்; வெடிப்பர். இவைகளுக்கு ஒரு காரணமும் இருக்கத்தான்செய்யும். இவைகள் தாய்க்குப் புதுப்புதிராகத் தோன்றும். நாளடைவில் காரணங்களை அவள் அறிவாள்; அதற்குப் பரிகாரமும் தேடுவாள். அமைதியான நித்திரையில் தேக அவயவங்களும் நரம்புகளும் களை தெளிந்து உற்சாகமடைகின்றன. நல்ல நித்திரை செ ய் த பி ன் பிள்ளை விளையாட்டும் தந்திரமும் உருவெடுத்தாற்போல் வீட்டார் எல்லோரையும் சந்தோஷக்கடலில் ஆழவைக்கும்.
2. சுத்தமான காற்று எவருக்கும் சுத்தமான காற்று இன்றி யமையாதது. காற்று பிள்ளைக்கு விசேட தேவையென்று எழுத வும் வேண்டுமோ ? பிள்ளையைக் காற்ருேட்டமில்லாத இருட் டறைகளில் வைத்திருக்கவோ உறங்கவோ விடக்கூடாது. இரவு நேரங்களில் தாயும் சேயும் ஒரே கட்டிலில் உறங்குதல் கூடாது. இது பாலனின் நல்வளர்ச்சிக்கு இடையூருன செயல் என்பதை எவரும் உணருதல் வேண்டும். ஒரு படுக்கையைப் பிள்ளையும் தாயும் உபயோகிக்கும்பொழுது தாயின் மார்பகத்திலேயே பிள்ளை உறங்கு கின்றது இந்தநிலையில் தாயின் உடம்பால் சூடாக்கப்பெற்ற காற்றுச் சேயைச் சுற்றி இருப்பது மாத்திரமன்றித் தாயின் நாசியி லிருந்து வெளிச்செல்லும் நச்சுக்காற்றையே பிள்ளை திரும்பத் திரும்பச் சுவாசிக்கின்றது. எனவேதான் தனக்கென ஒரு தொட்டி வில் அல்லது கட்டிலில் அல்லது பாயில் பாலன் தனியே படுத் துறங்க விடவேண்டும். தொட்டிலும் துண்டுதுணிகளால் சுற்றப் பெற்றிருத்தல் கூடாது. அவை தூசுகளைப் படியவைத்திருப்பதற்கு ஏதுவாயிருப்பதோடு நற்காற்ருேட்டத்திற்குத் தடையை விளைவிக் கின்றன. இதனுல் சுத்தமான நுளம்புவலையால் ஈ, எறும்பு அணு காமல் காப்பாற்றக்கூடாது என்பதல்ல. இராக்காலத்தில், அது வும் மழைக்காலத்தில் விசேடமாகப் பணிகூடிய நாட்களில் யன் னல்களையும் காற்று உள் வரும் வெளிகளையும் மூடிவைத்தல் வழக்

தாயும் பிள்ளையும் 5 5
கம், காற்று நடமாடக்கூடியதாய் இவ்வெளிகள் திறந்திருப்பதே நன்று. ஆணுல் காற்றுநேரடியாகப் பாலனின் மேற்படாது பாதுகாக் கப்படல் வேண்டும். யன்னல் வெளிகளுக்கணித்தாகப் படுக்கையை வைக்காமல் காற்றுச் சுற்றிப் பாலனே அடையக்கூடியதாக ஒழுங்கு செய்யலாம். திரைகளைப்போட்டு நேர்க் காற்றைத் தடுக்கலாம். சுத்தமான காற்றுள்ள இடங்களில் வளரும் பிள்ளை சுகதேகியாக இருக்கும். சுவாசப் பை கெட்டிபடும். தடிமன், இருமல் அணுக மாட்டாது. தேகத்தை மட்டும் சூடுள்ள துணிகளால் குளிர்காலங் களில் மூடிக்கொள்ளலாம். ஆணுல் போதிய நல்ல காற்று எங்கும் எப்பொழுதும் நடமாடவேண்டும்.
3. தேகாப்பியாசம் : நாட்கள் செல்ல நித்திரை குறையும்; தேகப்பியாசம் கூடும். பிறந்த காலத்தில் பிள்ளையின் உடம்பு மெல் லிய தசைநார்கள் பொருந்தியதாயிருக்கும். இயற்கையாகவே பிள்ளே தன் பெலனுக்கேற்ற அப்பியாசங்களேச் செய்யத் தலைப்படும், கைகால்களைத் தானே அசைக்கும்; இடையிடை அலறும், அழுகை யும் தேவைதான். சுவாசப்பையும் அதனேடுசேர்ந்த மற்ற அவ யவங்களும் அழுகையால் அப்பியாசப்படுகின்றன,
பிறந்தவுடன் பிள்ளை தன் பெரியதலேயைத் தானே உயர்த் தவோ, சரிக்கவோ சக்தியற்றதாயிருக்கும், மூன்றுமாதங்கள் செல் லவே இவ்வசைவுகளைத் தானே செய்ய ஆரம்பிக்கும், இச்செய்கை கள் பிள்ளே யின் கழுத்திலும் அதைத்தொடர்ந்து முதுகிலும் உள்ள தசைநார் களேப் பலப்படுத்தி எட்டுமாதங்கள் செல்லவே பிள்ளை நிமிர்ந்திருக்கக்கூடியதாயிருக்கும், பத்துமாதங்கள் செல்லப் பிள்ளை உதவியோடும் பின் தானுகவும் எழுந்துநிற்கத் தொடங்குகின்றது, தேகநலனுக்கும், பெலனுக்கும், வளர்ச்சிக்கும் தேகப்பியாசம் தேவை. இதனைக் குழந்தை தானே தனக்கேற்றவாறு தேடுகின் றது; குடுமிக்க எங்கள் நாட்டில் பிள்ளைகளுக்குத் துணியே தேவை யில்லை, பயன்படுத்தும் துணி பாரமில்லாததாயும், தைக்கும் சட்டை இச்சிறு தேகப்பியாசங்களுக்குச் சிறிதேனும் தடையேற் படுத்தாததாயும் இருத்தல் வேண்டும். கால்களைப் பிள்ளை நீட்டவும் முடக்கவும் தடைகள் யாதேனும் இருக்கவே கூடாது. நிலத்தில் விரித்திருக்கும் தடுக்கும் ( சிறிய பாய்) வெறும் மேலும் சாலச்சிறந் தது என்று சொல்லலாம். ஆணுல் சலமலவாசல்கள் அரைச் சட்டை யால் (Drawers) மூடப்படல்வேண்டும். திண்ணையும், தடுக்கும், நல்லெண்ணெயும், நல்லெண்ணங்களுமே பிள்ளை வளர்ப்புக்கு முன் ஆதாரமாயிருந்தன. ஆனல் இன்று இச்சொற்கள் மறதியில் செல் கின்றனபோலும் !

Page 39
குர்யும் பிள்ளையும்
4. அசுத்தமின்மை : சுத்தம் பிள்ளையின் நல் வள ர் ச் சி க் கு இன்றியமையாதது; வருபவர் எவரும் பிள்ளையைத் தூக்கிக் குலாவுவதும், கட்டியணைத்து முத்தமிடுவதும் தீங்கிழைக்கும் தீய பழக்கங்கள். இவைகள் எல்லாம் நோய்களைப் பிள்ளையின்பாற் கொண்டுவர ஏதுவாகின்றன. காய்ச்சல்கிருமிகள், தடிமன் கிருமி கள், சயரோ கக்கிருமிகள், மற்றும் எத்தனை எத்தனையோ நோய்க் கிருமிகள் நிறைந்திருக்கும், பஸ்மூலம், கார் மூலம், நடந்துவரும் போதெல்லாம் என்னென்ன இடர்விளைவிக்கும் கிருமிகளைச் சேர்த்து வருவார்களோ யார் அறிவார் ? அவை வெறும் கண்களுக்குப் புலப்படக்கூடியனவல்ல, பெலன்வாய்ந்த பெரியோரே நோய்களுக் காளாகிருர்கள். கிருமிகளுக்கும் எங்களுக்குமிடையில் எந்நேரமும் போர் நடந்துகொண்டேயிருக்கிறது. நாம் தோல்விகாணும்போது தான் நோயுற்றவர்களாகின்ருேம். பாலர்களோ எதிர்க்கும்சக்தி குறைந்தவர்கள். அதனுல் இலகுவில் நோய்வாய்ப்படுவர். எனவே இந்நோய்களிலிருந்து அவர்களைக் காப்பது பெற்றேரின் தலையாய கடன், பிள்ளையைக் கண்டவுடன் பெற்ருேரோ மற்ருேரோ கொஞ் சும் வழக்கம் ஒழியவேண்டும். உதடுகளால் முட்டவும் கூடாது,
5. சூப்பி : இந்தச் செயற்கைமுலையைப் பிள்ளையின் வாயிற் கொடுத்துப் பிள்ளையை ஏமாற்றி அழாதுசெய்வதை நாம் காண் கின்ருேம். இந்த ஆபத்தான பழக்கம் அறவே ஒழிதல்வேண்டும். இதனுல் பிள்ளைக்கு ஏற்படும் கேடுகள் பல. பிள்ளை தன் வாயி லூறும் உமிழ்நீரை உமிழ்ந்து விழுங்கி ஏமாறுகின்றது. அத்துடன் வாயுவும் வயிற்றுட்சென்று வயிறுாதுகின்றது. அஜிரணமும், வாந்தி யும், வயிற்றுவலியும்தான் பலாபலன்கள். பிள்ளை சூப்பியை மண் னில் தவறவிடுவதையும், தாய் அதை எடுத்துப் படிந்திருக்கும் மண்ணை வாயால் ஊதிப் பின் பிள்ளையின் வாயில் அதே சூப்பியை வைப்பதையும் காணலாம். சூப்பி, பிள்ளையின் வாயில் ஒருபோதும் இடம்பெறக்கூடாது. பிள்ளை வளர்ப்பில் சூப்பிக்கு இடமேயில்லை அது ஒரு சாத்தானின் கண்டுபிடிப்பு என்றே சொல்லவேண்டும்.
22. பிள்ளையின் வளர்ச்சி
1. நிறையும், உயரமும் : சுகதேகமுடைய பெற்ருேருக்குப் பிறக் கும் குழந்தை, தாய் நோய்வாய்ப்படாது ஆகாரக்குறைவின்றிப் பக்குவகாலம் வந்து பிறக்கும்பொழுது ஏழு இருத்தலுக்குக் குறை யாத நிறையுடையதாகவிருக்கும். நீளமும் பத்தொன்பது, இரு பது அங்குலம்வரையிருக்கும். பிறந்த முதற்கிழமை தினமும் ஒரு அவுன்ஸ்வரை பாரம் குறைந்துகொண்டுபோகும். இந்த ஆறேழு நாட்கள் கழியவே நோய்கள் தாக்காது தாயின் பாலும் போதிய தாகவிருந்தால் பிள்ளை பொழுதொருவண்ணமும் நாளொருமேனி

தாயும் பிள்ளையும் 57
யாகவும் வளர்ந்துவரும், முதல்வருட வளர்ச்சியின் விரவுை பின்பு எந்தக்காலமும் ஏற்படுவது கிடையாது. ஏழு இருத்தல் எடையை யுடைய பிள்ளை ஆறுமாத முடிவில் பதிநான்கு இருத்தல் எடையை உடையதாகவிருக்கும் இக்காலத்தின்பின் இதேபோல் துரித வளர்ச்சி ஏற்படுவதில்லை. ஒருவருடமுடிவில் பிறக்கும்பொழுது இருந்த நிறையில் மூன்றுபங்கு கூடியதாகவிருக்கும். ஏழு இருத்தல் பிள்ளை இருபத்தொரு இருத்தலுக்குத் தராசைத் திருப்பும். இக் கணக்குச் சுகதேகியாக வளர்ச்சிக்கு ஏதுவாய எல்லாம் வாய்க்கப் பெற்ற குழந்தைகளுக்கே பொருந்தும். மாதம் இருமுறை தவ றின் ஒருமுறையாவது பிள்ளையை நிறுத்து இதற்கெனவுள்ள கொப்பி யில் நிறையைக் குறித்துவைத்தல் நன்று, நிறைபோன்று நீளமும் அதிகரித்துவரும்; சராசரி முக்கால் அங்குல வளர்ச்சி மாதம் மாதம் ஏ ற் ப டு ம். இருபது அங்குல நீளமாய்ப் பிறந்த சேய் வருட முடிவில் முப்பது அங்குலத்தை அணுகும். இவை சராசரிக் குறிப்புக் கள். பிள்ளையின் வளர்ச்சி, பெற்ருேர், குடும்பவளர்ச்சி, சுகம், உணவு எல்லாவற்றையுமே சார்ந்துள்ளது என்பதை மறக்கக்கூடாது; இரண்டுவயதாகும்பொழுது 34 அங்குல உயரமாகவிருப்பின் 22 வய தில் ஆண்குழந்தை இதை 68 அங்குலமாக இரட்டிப்பார். பெண் குழந்தைகள் உயரத்தில் ஆண்குழந்தைகளைவிடச் சிறிது குறை வாகவே இருப்பர். ஆகவே குழந்தை பெரியவனுனதும் எவ்வளவு உயரத்தை அடைவான் என்று அதிக பிழையில்லாது கணக்கிட்டுக் கொள்ளலாம் பிள்ளைகள் பெரும்பாலும் பெற்ருளின் உயரம், பருமனே மீறுவதைக் காணலாம். பெண்குழந்தை தாயையும், ஆண்குழந்தை தந்தையையும்விட உயரம், பருமனில் கூடுவதைக் காணலாம்:
2. பற்கள் : பிள்ளே பிறக்கும்போதே பற்களின் வளர்ச்சியும் ஆரம்பமாகிவிடும். ஆரம்பம் முரசின் அடிப்படையிலாகையால் வெளியில் எதுவுமே தோன்ருது, ஆருவதுமாதம் தொடங்கிப் பற்கள் எம்பார்வைக்குத் தோற்றலாம், ஒன்பதுமாதம் முடிந்தும் கூடச் சில பிள்ளைகளில் பற்கள் தோற்ருதிருக்கலாம். பன்னிரண்டு மாதங்கள் சென்றும் பற்கள் வெளிவராவிடின் பல்வைத்தியருடன் கலந்தாலோசித்தல் நன்று. சாதாரணமாகக் கீழ்க்காணும் முறைப் படியே பற்கள் வெளிவரும்: ܒܝ ܬ
6 வது மாதம் 2 நடு உளிகள் ( முன் பற்கள்) 9 வது மாதம் 2 பக்க உளிகள் (முன்பக்கப் பற்கள் ) 12 வது மாதம் 2 பக்க அரைப்பான்கள் (கடைவாய்ப் பற்கள் )
8

Page 40
58 தாயும் பிள்ளையும்
கீழ்வரிசைப் பற்கள் முன்தோன்றும் அவை வளர அவைக்கு நேரே மேல்வரிசைப் பற்களும் தோன்றும்.
பற்கள் வெளிவரும் காலத்தில் சிறிய சுரம் பிள்ளைக்கு ஏற்படக் கூடும். முரசுவிங்கிச் சிறிது நோவைக் கொடுத்தல்கூடும் அப்படி ஏற்பட்டால் பிள்ளையின் சாதாரண சந்தோஷமும் விளையாட்டும் குறைந்து பிள்ளை வெந்துவெதும்பித் துக்கக்குறிகள் காட்டும்; அலறும், பாலையே உமிய மறுக்கக்கூடும். இளம் அன்னையர் பிள் ளேக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுவிட்டதென்று ஏங்கிக் கலங்குவர். அப்படிக் கலக்கமடைய நியாயமேயில்லை. இரண்டொரு நாட்க ளுக்குமேல் இந்நிலை நீடிக்காது என்ருலும் கவலையினம்கூடாது. சுரமிருந்தால் சிகிச்சை தேடவேண்டும். மலச்சிக்கலிருந்தால் அதை அகற்றவேண்டும். குழந்தைகளில் சுரம்கூடினுல் வலிப்பேற்படுவ துண்டு. உடன் சிகிச்சையாக () சாற்குளிகை 'டிஸ்பிறினுே' அல் லது "பனடோலோ கொடுக்கலாம். இவை வலிப்பு ஏற்படும் நிலேயைத் தடுக்கும். எங்கள் நாடுகளில் இரண்டுமாதங்கள்வரை பற்கள் ஒவ்வொன்றும் பிந்தி வெளிவருவதை அவதானிக்கலாம் , பற்கள் ஒழுங்காகவும், சோடியாகவும், வரிசையாகவும், உடைவு நெளிவு இல்லாமலும் முளையாவிடில் பல்வைத்தியருடன் ஆலோ சித்தல்வேண்டும், கவனியா திருந்தால் பிற்காலத்தில் பிள்ளேகள் பற்களால் கஷ்டப்படக்கூடும்,
3. அவயவங்கள் : பிறந்த உடனேயே பிள்ளேக்குத் தனது கால் கைகளே அசைக்கும் சக்தி உண்டு, வயிற்றில் இருக்கும்போதே இச்சக்தி தொடங்கிவிடுகிறதுடு எவ்வளவு அடியும் உதையும் நடந்த தென்று தாய்க்கன்ருே தெரியும் ! ܐ*
மூன்றுமாதங்கள் செல்ல மார்போடு மார்பாகப் பிள்ளேயை அணேத்து நிமிர்த்தினுல் அது தன்தலேயைச் சிறிதுநேரம் நிமிர்த்தி வைத்திருப்பதை அவதானிக்கலாம். நாலு மாதங்கள் செல்லவே தலையைத் தானே நிமிர்த்தி வைத்திருக்கும் தன்மை ஏற்பட்டுவிடும், பிள்ளையை இருத்தி எங்கள் கையும் உதவினுல் சிறிதுநேரம் இருக் கும். கையில் யாதேனும் சிறியபொருள் அகப்பட்டால் தன் வாய்க்குக் கொண்டுசெல்லும் ஐந்து மாதங்கள் செல்லவே தாயின் முலையைப்பற்றிப் பிடிக்கும். பால்கொடுக்கும் போத்தலைப் பற்றிப் பிடித்து அசையாமல் பாதுகாக்கும். படுக்கையில் உடம்பைப் புரட்ட எத்தனிக்கும். இப்படியே அவயவங்கள் அப்பியாசப்பட பிள்ளையின் வளர்ச்சிச்சக்தி கூடிக்கூடி ஏழுஎட்டுமாதங்கள் செல்லவே தானே இருக்கும் திறமை ஏற்படும். பிடித்து நிறுத்தினுல் எங்கள் கைகளின் உதவியுடன் நிற்பர். ஒன்பது மாதங்கள் செல்லவே உடம் பைப் புரட்டி நெஞ்சால் நகர எத்தனிப்பர் முழங்கையில் நிமிரு வார்; முழங்கால்களே மடிப்பார் தவழ, எத்தனிப்பார் படிப்

தாயும் பிள்ளையும் 59
படியே இப்படிச்சென்று பத்துமாதங்கள் செல்லவே தவறிவிழாது தவழ ஆரம்பிப்பார். நிமிர்த்தி நிறுத்திப்பிடிப்போமாயின் நிற்பார். பதினெருமாதங்கள் செல்லவே எங்கள் உதவியுடன் எட்டி அடி வைப்பார். இந்த இயக்கங்கள் எல்லாம் கூடியது பதினைந்து மாதங்களுட் கற்ருய்விடும் இக்காலவெல்லைக்குள் இவ்வியக்கங் களைச் செய்யாது பிந்தும் பிள்ளைகள் வயதுக்கேற்ற சக்திபோதாது இடர்ப்படுவன என்று கொள்ளல் வேண்டும். பெரும்பாலும் வளர்ச் சிக்குப் போதாத உணவே இதற்குக் காரணமாகவிருக்கும்; நோய் வாய்ப்பட்டிருக்கவும் கூடும். யாது காரணம் என்பதை வைத்திய ரு டன் ஆலோசித்து நிவர்த்தி தேடல்வேண்டும்
4. பேச்சு : குழந்தை வீரிட்டுக் கதறுவதே அதன் முதற்பேச்சு ஏன் பிறந்தேன் என்று அழுகின்றதுபோலும் ! ஒருமாதம் செல் லவே சத்தத்துக்குச் செவிசாய்ப்பார்த் தாயின் குரலை மட்டிடுவார். வித்தியாச தேவைகளுக்கு வித்தியாசமாக அழுவார் வெம்பி வெதும்பித் தொட்ங்குவார் பசியைக் குறிக்க, ஈ, எறும்பு கடித் தால் வீரிட்டழுவார். சலத்தால் மலத்தால் நனைந்தவுடன் அழுகை வேருெருவிதமாகவிருக்கும். கவனமான பெண், புத்தியுள்ள தாய் பிள்ளையின் அழுகைச்சத்தம் கேட்டதும் காரணம் எதுவென்று ஊகித்தறிந்திடுவாள். சிரிப்பைப்போன்று அழுகையும் பலவிதம் இரண்டுமாதங்கள் செல்லவே கதைக்குச் செவிமடுப்பார். மூன்று மாதங்கள் செல்லவே சந்தோஷக் குறிக்கான சத்தங்கள் போடுவார் தானே தன்னுடன்கதைப்பதுபோலத் தோன்றும். பெற்றேர்கேட்டுப் பேரானந்தம் அடைவார்கள். இதனுலேதான் மழலைமொழி கேளா தவர்களே ' யாழ் இனிது குழலினிது என்பர் ' என்று வள்ளுவப் பெருமான் உரைத்தார். இவ்வித சத்தங்கள் கூடிக்கூடிச் சொற்க ளாக மாறத்தொடங்கும். எட்டு ஒன்பது மாதங்களில் "அப்பப்பா' அம்மம்மா’ என வாயில் கூட்டும்; மற்றவர்களின் கதைகளை அவ தானிக்கும். பிறர்கூறும் சொற்களைத் தானும் சொல்லப்பார்க் கும். இப்படியே கதைவளர்ந்துகொண்டுபோகும். முந்தலாம்; பிந்தலாம்; எதற்கும் வரம்பில்லை. மூன்ரும் நாள் "அம்மா' என்று அறுத்து அலறும் சத்தம் எம்காதில் ஒருமுறை விழுந்தது. தனி யார் வைத்தியசாலை ஒன்றில் சுகதேகியான தாய்க்குச் சுகமேபிறந்த ஏழரை இருத்தல் எடையுடைய சேயொன்று பிறந்தவுடனேயே தாயினின்றும் பிரிக்கப்பட்டுப் பிறிதோரறையில் பிறபால்கொடுத்து (நியாயம் தாயில் இப்போ பாலிருக்கமாட்டாது) பராமரிக்கப்பட்ட தன்விளைவாக ஏற்பட்ட காய்ச்சலுக்கும் கழிதலுக்கும் பரிகாரமாய் ஊசிமருந்து பாய்ச்சியபோது இது நடந்தது. இவை "அம்மா’ என்று சாதாரணத்துக்குப் புறம்பான நிகழ்ச்சி. மூன்றுவயதின்பின்பே அம்மா’ என்று அழைக்கும் பிள்ளைகளும் உண்டு பேசாதுவிடும் குழந்தைகள் ஒரு சோகக்காட்சியே.

Page 41
60
5. போக்கு : ஒருமாதத்துள் தனக்குப் பாலூட்டும் தாயின் முகத்தை உற்றுப்பார்ப்பார். சொந்தம் பாராட்டுவார். இரண்டு மாதங்களில் கை அணைப்புக்குப் பிரியம் சாட்டுவார். அழுதவர் அனைத்தவுடன் அழுகையை நிற்பாட்டுவார். மூன்றுமாதங்கள் செல்லவே தாய்பிரியத் தயங்கி வெதும்புவார். தாலாட்டுக்குச் செவிகொடுத்து அழுகையை நிற்பாட்டுவார். ஆறுமாதங்களில் தன்பெயருக்குச் செவிமடுப்பார். கோபக்குறி, சந்தோஷக்குறி, பயக்குறி என்பனவற்றைத் தன் கண், வாய், உதடுகள் மூலம் காட்டு வார். எட்டுமாதங்கள் செல்லவே விளேயாட்டுப்பொருட்களில் நாட்டமுண்டாகும். இப்படியே சூழ்நிலைக்கேற்பப் பிள்ளையின் போக்குப் போய்க்கொண்டேயிருக்கும்.
ஒரு பிள்ளையைத் தனிப்பட்ட ஒரு பிள்ளையாகவே எடுத்தல் வேண்டும்; மற்றைய பிள்ளைகளுடன் ஒப்பிடல்கூடாது. அந்தப் பிள்ளை அந்த வயதில் இது செய்தது, எங்களுடைய பிள்ளை இன்னும் செய்யவில்லையே என்று ஏங்குதல்கூடாது. ஒருபிள்ளை ஒன்றை முன்செய்யக்கூடும். மற்முென்றை எங்கள் பிள்ளை முன்செய்யக் கூடும். இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது பிழை. ஒப்பிடவேண்டி யவை நாட்கள் செல்லத் திருத்தங்கள் ஏற்படுகின்றதா ? ஒவ்வொன் றிலும் வளர்ச்சி காட்டுகின்றதா ? சென்றமாதங்களில் எங்கள் பிள்ளையில் இருந்தவை இந்தமாதங்களில் வளர்ச்சியடைந்திருக் கின்றனவா என்பனவற்றையே ஒப்பிட்டுப் பார்த்தல்வேண்டும். திருத்தங்கள் கண்டு மகிழல்வேண்டும். வளர்ச்சி, பேச்சுத்திருத்தம், பேச்சின்போக்கு என்பவை வளர்ந்துகொண்டுபோனல் அது நல் வளர்ச்சி என்று சொல்லவும் வேண்டுமோ ? リ。
23. பால் மறப்பித்தல்
தாய்ப்பால்கொண்டு வளர்க்கும் பிள்ளையும் பிறபால்கொண்டு வளரும் பிள்ளையும் வேறு உணவுகளே பிரதான உணவுகளாக உண்டு வளரும் காலம்வரும். அந்தக்காலம் எது என்பதுதான் ஆட்சேபத் துக்குரியது. சில வைத்தியநிபுணர்கள் மூன்றுமாதங்களிலேயே உணவு கொடுக்கத் தொடங்கலாம் என்கிருர்கள். ஆணுல் ஐந்து மாதங்கள் செல்லமுன் நீருணவு அல்லாத மற்றைய உணவுகள் உட் கொண்டு, நோய்வாய்ப்படாது இருக்கமுடியுமோ என்பது சந் தேகம். இதிலும் நாம் நம் மூதாதைகள் கடைப்பிடித்தவைகளையே கடைப்பிடித்தல் சாலச்சிறந்தது. தாய் சுகதேகியாயிருந்து பாலும் போதியளவு சுரந்தால் அந்தப் பாலைப் பாலனிடமிருந்து தட்டிப் பறிப்பதற்கு நியாயமேயில்லே தாய் பின்பும் கர்ப்பவதியானல் பாலே நிறுத்துவதே நன்று. சில நிபுணர்கள் கர்ப்பம் மூன்று நாலு

6.
மாதங்களாகும்வரை தாய் பிள்ளேக்குப் பாலூட்டலாம் என்கிருர் கள். தாய் இந்தக்காலத்தில் உணவில் விருப்பமில்லாது வாந்தி
முதலியவைகளால் பாதிக்கப்பட்டிருப்பாள். அப்பொழுது பால னுக்குப் பாலூட்டுவது கஷ்டமான காரியம். அதுமாத்திரமன்றிக் கர்ப்பச்சிதைவுக்கும் ஏதுவாய செயலாகும். முலேகளைப் பிள்ளை
வருடி உமியும்பொழுது சிசுப்பை தானுகவே சுருங்க எத்தனிக் கிறது. அச்சுருக்கம் சிசுவைச் சிதையச்செய்யக் கூடும். இதுபற் றியே பாலூட்டல் மற்றப்பிள்ளே உற்பத்திக்கும் ஒருவாறு தடையா யிருக்கலாம் எனலாம். ஆறுமாதத்திலோ, எட்டுமாதத்திலோ, அன்றிப் பன்னிரண்டு மாதத்தில்தானே தாயின்பாலே முற்ருக மறக்கப்பண்ண வேண்டியதில்லை. பலவிதங்களிலும் முன்னேறிய ரஷ்ஷியப் பெண்கள் ஒருவருடம் முடியும்வரை தங்கள் பாலேத் தனய னுக்கு முற்ருக நிற்பாட்டுவதில்லை. மேலைத்தேச நிபுணர் சிலர் * ஒரு தாய் இரண்டுவருடங்களுக்குத் தனது பிள்ளேக்குப் பால் கொடுக்கலாம். இதஞ ல் பிள்ளேக்கு நன்.ைCய உண்டாகும் 11 என்கின்ருர்கள். அந்நாளில் பள்ளிப்பருவத்திலேயே தாய்ப்பாலை விடாது உண்டார்களாம் எங்கள்நாட்டுப் பிள்ளைகள் ! ஐந்துமாதங் கள் செல்லவே வேறு உணவுகள் ஊட்டத்தொடங்கல் வேண்டும் * பால் பருக்கல் ' என்பார்கள் மூதாதையர்கள், ஏனே அப்படி ? கஞ்சி பருக்கல் அன்ருே சரி ? அரிசி அவிந்த பசுவின் பால், ஐந்துமாத முடிவில் இந்தப் பால்பருக்கும் விழா நடக்கும் பஞ்சாங்கங்களும் * அன்னப்பிராசனம் ' என்று கணக்கிட்டு நாட்கள் குறித்திருக் கின்றன. பால் மறத்தல் படிப்படியாய் ஏற்படட்டும். வருடங் கள் இரண்டுசென்ருலும் காரியமில்லை. ஐந்துமாத முடிவில் ஊர் அரிசிக் குஞ்சி கொடுக்கத்தொடங்கலாம். இறக்குமதி செய்யப் படும் அரிசி பெரும்பாலும் கஞ்சிக்கேற்றதாயிராது. கொதித்து வரும் "தெளிவைச் சூடு ஆற்றி ஒருமேசைக்கரண்டி கொடுக்கலாம். தொடக்கத்தில் தடித்தகஞ்சி பச்சிளம்பாலனின் சக்திக்கேற்றதா பிராது வீட்டோருக்கு மத்தியான போசனத்திற்கு அரிசி அவிந்து வரும்பொழுது பாலனுக்குத் தேவையான தெளிவை அள்ளிச் சூடு ஆற்றிப் பருக்கலாம் தினமும் ஒருமுறை இப்படியே பருக்கி ஒரு கிழமை முடிவில் அளவைக்கூட்டலாம். படிப்படியே கூட்டி இரண் டாம் கிழமை இரு மேசைக்கரண்டிகளாக்கிவிடலாம். அப்படியே கிழமைக்குக் கிழமை கூட்டி ஒருநேர உணவைப் பாலுக்குப் பதிலா கக் கஞ்சியாக்கிவிடலாம். கஞ்சித்தெளிவில் தொடங்கிப் பின் வடித்த கஞ்சியும் கொடுக்கக்கூடியதாகவிருக்கும். ஏழுமாதங்கள் செல்லவே சோறுகொடுக்கத் தொடங்கலாம். அரிசி நன்கு குழைய அவிதல்வேண்டும். நன்கு வெந்த அந்தச்சோற்றைப் பிசைந்து களிபோலாக்கிப் பாலனுக்குச் சுவைக்கக் கொடுத்தல் வேண்டும். மிளகளவாய்த் தொடங்கிப் பின் படிப்படியாகக் கூட்டலாம். ஆரம்

Page 42
鲁岛 தாயும் பிள்ளையும்
பத்தில் விழுங்கத்தெரியாது நாக்கால் வெளித்தள்ளுவார். நாட் கள் செல்ல விழுங்குவார். ஒருதேக்கரண்டிகொண்ட சோற்றுக்கு மேல் முதற்கிழமை கொடுக்கக் கூடாது. பின்பு கிழமைக்கு ஒரு தேக்கரண்டிவீதம் மாத்திரம் சோற்றின் அளவு அதிகரிக்கப்படல் வேண்டும் ஒருவருடம் செல்லும்வரை கறிகள் சேர்க்கக்கூடாது. பத்துப் பதினெருமாதங்கள் செல்ல வல்லாரை, பொன்னுங்காணி போன்ற கீரைகளே அவித்து அரைத்துச் சிறிது சேர்க்கலாம். ஒரு வருடமுடிவிலும்கூட உறைப்புக் கூடவே கூடாது. பாற்கறிகள் சிறுகச் சேர்த்துவரலாம். இப்படித் தாய்ப்பாலை மறப்பிக்கும் காலத்தில் பராமரிப்போர் பிள்ளையில் ஏற்படும் சிறு மாற்றங்களை யும் மிகக் கவனமாக அவதானித்தல் வேண்டும். பராமரிப்போ ருக்கு இது ஒரு பெரிய சோதனைக்காலம். வயிற்றுாதல், வயிற்ருல் சழிதல், காய்ச்சல் என்பவை புதியதீனை நிறுத்தும்படி விடும் கட் டளைகள். எதற்கும் கட்டளைக் கோடுகள் இல்லை. ஒவ்வொரு பிள்ளைக்கும் அதற்கேற்றவாறு கருமங்கள் கையாளப்பட ல்வேண் டும். எட்டுமாதங்கள் செல்லவே அரை அவியல் முட்  ைடயி ன் சிவப்புக் கரு கொடுத்தல் நன்று. படிப்படியேதான் இதுவும் பழக் கப்படல்வேண்டும். முன் ஒரு மிளகளவு சுவைக்கக் கொடுக்கலாம். பின் படிப்படியே கூட்டி ஒருவருட முடிவில் ஒருமுட்டையின் முழு சிவப்புக்கருவும் கொடுக்கக்கூடியதாயிருக்கும்; வெள்ளைக் கருவை விரும்பிப் பெற்றேர் சேர்ப்பதுண்டு. சிவப்புக் கருதான் முட்டை யில் விசேடபாகம் என்பதைப் பெரியோர் இன்னும் அறியாதிருக் கிருர்கள். முட்டை இரண்டுநாட்களுக்கு ஒருமுறை கொடுத்தால் பிள்ளையின் வளர்ச்சிக்கேற்ற சத்துப்பொருட்கள் போதுமான அளவு பிள்ளைக்குக் கிடைக்கும் ,
தாய்ப்பாலில் தனியேவளர்ந்த பிள்ளைக்குக் காலைமாலை தாய்ப் பாலை நிறுத்திப் பசுப்பால் கொடுக்கலாம். தொடக்கத்தில் காலை உணவைப் பசுப்பாலாக்கலாம். இரண்டுகிழமைகள் கழியவே காலே மாலை இருநேரத்தையும் பசுப்பாலாக்கலாம். தொடக்கத்தில் சரி சம அளவுநீர் பாலுக்குக் கலக்கப்படல்வேண்டும். நாட்கள் செல்ல நீரைப் படிப்படியே குறைக்கலாம். நீர் கலவாது காலகதியில் கொடுக்கக்கூடியதாகவிருக்கும்.
பசுப்பா லில் வளர்ந்த பிள்ளைகளின் பிரதான சாப்பாடு சோருக மாற்றினலும் பசுப்பால் எவருக்கும் இன்றியமையாத உணவாகக் கருதப்படல் வேண்டும். பிறந்தநாட் தொடங்கி இறக்கும் வரை நல்ல போசாக்கைக்கொடுக்கும் ஒரு சிறந்த உணவு பகவின்பாலா கும். ஒவ்வொருவருக்கும் அரைப்போத்தல் பாலாவது கிட்டச்

தாயும் பிள்ளையும் 63 செய்வது நல்ல அரசின் குறிக்கோளாயிருத்தல்வேண்டும் நாடு சிறந்தது என்று சொல்ல அதில் வசிக்கும் நாங்கள் சிறந்திருக்க வேண்டும். முதல்வருட வளர்ப்புப் பின்வரும் வளர்ச்சிக்கு அத்தி வாரமாய் அமையும் என்பதை நாம் மறக்கக்கூடாது. சரீரபலம், முளைவளர்ச்சி இரண்டுக்குமே இக்காலத்தில் அத்திபாரம் போடப் படுகிறது. எனவே பெற்றேர் தங்கள் செல்வங்களுக்குத் தம்மால் முடிந்தவரை எல்லாம் கிட்டச்செய்தல்வேண்டும்.
யப்பானில் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ஆறுமாத முடிவி லேயே சோற்றுணவு கொடுக்கத் தொடங்குகிருர்கள், ரஷ்ஷியர் ஒருவருடம்வரை தாய் தன்பாலே மகவுக்குக் கொடுப்பதை ஆதரிக் கிருர்கள், முதற்தரமான உடம்புகளையும் முளைகளையும் உடைய வரிகளன்ருே யப்பானியரும் ருசியரும் ?
வெப்பம் கூடிய காலங்களில் பால்மறப்பிக்க எத்தனிக்கக் கூடாது, பிள்ளை நோய்வாய்ப்பட்டிருக்கும்போது தாய்ப்பாலே
鬱 சிறந்த உணவு,
24. பிள்ளைக்கு ஏற்படும் நோய்கள்
பாலூட்டிவளர்க்கும் காலத்தில் பாலனுக்குப் பலவித நோய் களும் ஏற்படுகின்றன. ஒருநோயுமே அணுகாது வளரும் குழந்தை களுமுண்டு. அது பராமரிப்போரின் கவனத்தைப் பொறுத்த தென்றே சொல்லவேண்டும். இருந்தும் வெகுகவனத்துடன் முறைகள் தவருது வளர்க்கப்படும் பிள்ளைகளுக்கும் ஏதாவது நோய் வந்து வி டு கிற து, பிள்ளை பூப்போன்றது. சிறு காற் றும், சொற்ப வெய்யிலும் சற்று வேறு வித்தியாசமுமேபோதும் பூவை வாடவைப்பதற்கு, பெரும்பாலும் உணவும் அதை அண்டி நேரும் சீரண வேறுபாடுகளுமே பிள்ளையின் நோய்களுக்குக் காரண மாயிருக்கும். தாய்ப்பாலைத் தவறவிட்டு வேறு பால்கொண்டு வளர்க்கப்படும் பிள்ளைகளே கூடியவிகிதம் நோய்வாய்ப்படுகின்ற னர். தாயின் கவலையினத்தாலும், ஏன் மிதமிஞ்சிய கவனத்தா லும்கூட நோய்கள் ஏற்படுதலுண்டு. பிள்ளையில் ஏற்படும் சிறு மாறுதல்களையும் கவனத்துக்கு எடுத்தல்வேண்டும். அந்த மாறு தல்கள் என்ன காரணங்களால் ஏற்பட்டனவென்று தாய் ஆராய்ந்து அறிதல்வேண்டும். பிள்ளை வளர்ப்பு ஒரு பெரிய பொறுப்பு. இருந் தும் ஈன்றவளுக்குப் பிள்ளையைப் பொறுத்தளவில் மலையும் மணல் போன்று சிறிதாகத் தென்படும்.

Page 43
*rم
INCLINA ****** A、°。 6 4η தாயும் பிள்ளேயும்
1. வயிற்றல் கழிதல், வாந்தி : இவை பிள்ளைக்குத் தனித்
தனியே ஏற்படலாம். அல்லது இரண்டும் ஒரு பிள்ளையை ஒரே நேரத்தில் பாதிக்கலாம். நோய்க்கிருமிகள்தான் வருத்தங்களுக் குக் காரணம். இந்தக் கிருமிகள் எப்படிப் பிள்ளையின் உடலிற் சேர்ந்து நிலையைக் குழப்பிக் கலக்கத்தை உண்டுபண்ணுகின்றன? சுவாசிக்கும் காற்றுமூலம் செல்லலாம். பயன்படுத்தப்படும் துணி மூலம் சேரலாம். பெரியவர்கள் கொஞ்சுவதன்மூலம் கொடுக்க லாம். பருகும் பால் மூலம், நீர்மூலம், ஊண் மூலம் கொண்டு செல்லப்படலாம்; அழுக்கு எங்கு உண்டோ அங்கு நோய்க்கிருமி களுமுண்டு. அவைகளால் ஏற்படும் நோய்களும் உண்டு. எனவே பிள்ளையுடன் தொடர்புகொள்ளும் இவைகள் ஒவ்வொன்றும் தாயின் கவனத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்ளாகவேண்டும்.
கழிதல், வாந்தி ஏற்பட்டதும் பிள்ளை பால்குடிக்க மறுக்கும். வெந்துவெடித்து அழும். முகத்திலும் மாறமுடியாத அமைதி பினத்தை அவதானிக்கலாம், வாயாலும், வயிற்ருலும் கழியவே பிள்ளையின் நிறை திடீரெனக் குறையும்; காய்ச்சல் இருக்கலாம் அல் லது இல்லாதிருக்கலாம். கழிதல் நீர்த்தன்மையாகப் பயப்படக்கூடிய
பெருவாரியாக இருக்கலாம். அல்லது சிறிதுசிறிதாகச் சிதம்
சேர்ந்ததாய் இருக்கலாம். இரத்தமும் சேர்ந்துபோதலும் உண்டு,
மலக்கழிவாலும் வாந்தியாலும் பிள்ளை தேகநீரை இழப்பதால் பிள்ளையின் கண்கள் குழிவிழுகின்றன. நீர்விடாய் அதிகரிக்கின் றது. அவாவுடன் ஆசையாய்ப் பிள்ளை நீர்குடிக்கும். குடித்த மறுகணம் வாந்தி எடுக்கும். உதடு, நாக்கு என்பன காய்ந்து போகும்; அடிக்கடி அலறும்; அனுங்கும்; சோர்ந்துகிடக்கும். அல் லது அங்கும் இங்கும் உளலும்,
முதலில் செய்யவேண்டியது வழக்கமான உணவை முற்ருக நிற்பாட்டல், மற்றையது வைத்திய உதவி தேடல், வாந்திகுறை யும்வரை உணவு தேவைப்படாது. உடம்பிலிருந்து கழியும் நீரை யும் உப்புச்சத்துக்களையும் நாம் திருப்பிப் பிள்ளைக்குக் கொடுத் தல்வேண்டும். ' குளோரைட்ஸ் (Chlorides), காபனேற்ஸ் (Carbonates) தான் அந்த உப்புக்கள். இவைகளே உணவுகளில் இருந்து உடம்புபெற்று வளருகின்றது. இவைகள் உடம்பில் குறைந் தால் அபாயமே. இதை நிவர்த்திக்கச் சுத்தமான கறியுப்பு ஒரு தேக்கரண்டி, அதேயளவு அப்பச்சோடா (Sodium bicarbonate) இரண்டையும் இரண்டுபோத்தல் கொண்ட கொதித்தாறிய நீரில் கலந்து அடிக்கடி சிறிதுசிறிதாகக் கொடுக்கலாம். எவ்வளவும் தாகம் தணியும்வரை கொடுக்கலாம் தாகம் இருக்கும்; பிள்ளை

o தாயும் பிள்ளையும் 65
யும் ஆவலாய்க் குடிக்கும்; "லேற்றன் (Lytten) பாக்கற்கணக்கில் வாங்கலாம். இது மேற்சொன்ன உப்புக்களையே கொண்டது. ஒருபாக்கற் தூள் ஒருபோத்தல் (24 அவு) ஆறிய நீரில் கலக்கப்
போதுமானது. வசதியுள்ளவர்கள் இதைக் கலந்து கொடுக்கலாம்; இவை இரண்டையும் தவிர்த்து இளநீரைக் கொடுக்கலாம். இந்த மூன்றில் ஒன்றையே கொடுத்தல்வேண்டும். வாந்தி நின்றதும் தாய்ப்பால் கொடுக்கலாம். கொடுக்கும் நேரத்தை மா த் தி ர ம் குறைத்துக்கொடுத்தல்வேண்டும். முதல்முறை ஆறுதலாய் 120 எண்ணும்வரை மாத்திரம் முலை வாயில் விடப்படவேண்டும். அப் படியே மணித்தியாலத்துக்கொருமுறை மூன்றுமுறைகள் கொடுத் துப் பின்பு 300 எண்ணும்வரை முலையை உமியவிடலாம். இப்படி இரண்டுமணித்தியாலத்துக்கு ஒருமுறையாய்க் கொடுத்துப் படிப் படியே அதிகரித்து வழமையான முறைகளுக்குக் கொண்டுவரலாம், புட்டிப்பாலில் வளரும் பிள்ளைகளுக்கு வழமையாகக் கொடுக்கும் கணக்கில் மூன்றுபங்கு நீர் கூடக்கலந்து கொடுத்தல்வேண்டும். வழமையான அளவு மாவில் ஆறில் ஒருபங்கு மாத்திரமே கொடுத் தல் வேண்டும், அப்படியே மணித்தியாலத்துக்கு ஒருமுறை மூன்று தடவைகள் கொடுத்துப் பின் அளவை நாலிலொருபங்குக்குக்கூட்டி இரண்டுமணித்தியாலத்துக்கு ஒரு மு  ைற யா க மூன்றுமுறைகள் கொடுத்துப் பின் படிப்படியே கூட்டிச் சாதாரணமாகக் கொடுக்கும் அளவுக்கும் முறைகளுக்கும் கொண்டுவரலாம். வழமையான உணவு ஜீரணிக்கமாட்டாதாகையால் உணவு குறைதல்வேண்டும் முதல்முறையே வயிறுநிரம்பக் கொடுத்தால் இரைப்பை ஏற்காது வெளியில்தள்ள எத்தனிக்கும். இந்த நடவடிக்கைகள்மூலம் வயிற் றுப்போக்கையும் வாந்தியையும் கட்டுப்படுத்திவிடலாம். வைத் திய உதவி கிடைக்கும்வரை இவைகளைச் செய்யலாம், செய்தவை கள் அவ்வளவையும் வைத்தியருக்குச் சொல்லிவிடலாம். வழமை யான சாப்பாட்டை இரண்டு மூன்றுநேரம் நிற்பாட்டவே நோய் சுகமாய்ப்போதலும் உண்டு. இல்லாது நீடித்தால் மருத்துவரின் புத்திமதிகளை ஏற்று அவர்தரும் ஒளடதங்களையும் கொடுத்தல் வேண்டும்.
மருந்துகள் பலப்பல விதம்விதமாய் இந்த நோய்களுக்குண்டு
எனவே இப்போ இந்த நோய்களால் குழந்தைகள் இறப்பது மிக வும் குறைவு. ஆனல் நோய் ஆபத்தானது என்பது எங்கள் மனதை விட்டு அகலக்கூடாது, சொற்பநேரத்திலேயே சில பிள்ளைகள் ஆபத்துக்குள்ளாகக்கூடும். பங்குனி வெய்யிலில் பிடுங்கிப்போடப் பட்ட பூப்போன்று பிள்ளை திடீரென வாடி மடிதல்கூடும்) ?? கை
9 1 9 :ܢܙ,܀ . .. .. ..

Page 44
66 தாயும் பிள்ளையும்
மருந்துகள் ? எதுவும் குழந்தைகள் விஷயத்தில் கையாளக்கூடாது. வைத்தியரையே, தேவை எதுவென்பதை நிட்சயிக்க விட்டுவிடல் வேண்டும்.
2. மலச்சிக்கல் : மலக்கட்டுப்பாடு பிள்ளைகளை அடிக்கடி பாதிக் கும் ஒருநோய், தாயே இதற்குப் பெரும்பாலும் காரணமாயிருப் பார் தாய்மூலமே பால்வழியாய் பிள்ளையின் வளர்ச்சிக்கேற்ற பொருட்களெல்லாம், சுகத்துக்கேற்ற சத்துகளெல்லாம் பிள்ளை யைச் சேருகின்றன. தாய் தன் ஆகாரத்தில் போதிய பழவர்க் கங்களும், தாவர வர்க்கங்களும் சேர்த்துக்கொள்ளல்வேண்டும், இல்லையேல் தாய்க்கு மாத்திரமன்றிச் சேய்க்கும் மலச்சிக்கல் ஏற் படும். மற்றையது பாலனுக்குப் பால்கொடுக்க ஒருமணித்தியா லத்துக்குமுன் கொதித்தாறிய நீர் ஒருபேணி தாய் குடித்தல் வேண்டும். இது பாற்பெருக்கத்தைக் கூட்டும், பிள்ளையின் மலச் சிக்கலையும் குறைக்க ஏதுவாகும்.
குழந்தைகளுக்குச் சாதாரணமாக மூன்று நாலுமுறைகள் வயிற் முல் கழியும். ஒருமுறை மட்டும் வயிற்ருல் கழிந்து சுகமேவளரும் குழந்தைகளும் உண்டு ஒன்றைவிட்டு ஒருநாள் வயிற்றல்கழிந்து பிணியால் பீடிக்கப்படாமல் வளரும் பிள்ளைகளும் உண்டு. இத் தனேமுறைதான் மலம் கழிக்கவேண்டுமென்று ஒரு நியதியில்லை. தினமும் கழிந்தால் தாய்க்கு ஒரு மனச்சாந்தி உண்டுதான். தவறி ஒருநாள் போகாதிருந்தால் பிள்ளையின் நிலையைக் கவனிக்கவேண் டும் வயிறுரதாவிட்டால், சோர்ந்து சிணுங்காமல், வழக்கமான தந்திரங்களிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டால் தாய் தலையை உடைக்கவேண்டியதேயில்லை. ஒருநேரப்பாலை நிறுத்தி அந்த இடத் துக்குக் கொதித்து ஆறிய நீரைமாத்திரம் கொடுத்தல்வேண்டும். எடுத்தவுடன் பேதிகொடுக்கும் பழக்கம் தீங்குநிறைந்தது. குடல் பெலவீனமடையும், நாட்கள்செல்லத் தானே இயங்கும் சக்தி போய் மருந்தில்லாமல் மலம் வெளிவர மறுப்பதை நாம் பார்க்க லாம். " நெஞ்சில் கரகரக்கும் சளியை வெளிப்போக்கவேண்டும்; பிள்ளைக்குப் பேதி தாருங்கள் ' என்று கேட்டுவரும் தாய்மாரும் உளர் நெஞ்சில் இருக்கும் சளி வயிற்ருல் எப்படிப் போகும்? அத னேப் பிள்ளை முன்விழுங்கவன்ருே வேண்டும் ?
மற்றையது ஐந்துமாதங்கள் சென்ற குழந்தைக்கு வாழைப் பழம் அல்லது பப்பாசிப்பழம் கொடுக்கலாம்; அவைகளில் நல் வளர்ச்சிக்கேற்ற சீவசத்துக்கள் உண்டு. அத்துடன் மலத்தையும் தினமும் கழியச்செய்யும். தொடக்கத்தில் ஒருதேக்கரண்டிகொண்ட பழம் மாத்திரம் தினமும் கொடுத்தல்வேண்டும். கிழமைக்கு ஒருமுறையாக ஒவ்வொரு தேக்கரண்டி கூட்டிவரலாம், குழந்தை

தாயும் பிள்ளேயும் 67
களேப் பொறுத்தளவில் எதுவும் கூட்டிக்கொடுக்க வேண்டுமாயின் ஒரு கிழமைகொடுத்து அந்தப் பிரமாணத்தில் நன்கு அந்தக்கிழமை கழிந்தால் மட்டுமே மற்றைய கிழமை அளவைக் கூட்டுதல் நல்ல முறையாகக் கொள்ளல்வேண்டும்.
3. வயிறுதல் : இது பெரும்பாலும் உணவுப்பிழையாலேயே உண்டாகிறது. பாலில் நோய்க்கிருமிகள் சுத்தக்குறைவால் சேர்ந்து சீரணக்குறைவை ஏற்படுத்துகின்றன. மற்றையது அந்தச் சூப்பி. அது ஒரு சாத்தானின் கண்டுபிடிப்பென்றே சொல்லுதல்வேண்டும். அதை உமிய வெறும் காற்றே வயிற்றுட்சென்று வயிறு ஊதுகிறது: அதேபோன்று தாய்ப்பால் குறைந்த தாயின் முலையை உமியும் பாலனும் காற்றையே உமிந்து வயிறுாதி ஏமாற்றமடைகின்ருன். பாற்போத்தலில் மாட்டப்பெற்ற முலையின் கண் சிறிதாயிருக்க வலிந்து உமியும் குழந்தையும் சிறிது பாலுடன் காற்றை உட் கொள்கின்றது. பிள்ளையை நேராக நிறுத்தி இருத்துவதினுல் அல் லது தாயின் நெஞ்சில் பிள்ளையின் வயிறு அண்டச்சாற்றி முதுகில் மெல்ல மூன்று நான்குமுறைகள் தட்டுவதினுல் உமிந்த காற்றைப் பின்பும் வெளிக்காட்டமுடியும். சீரணக்குறைவால் ஏற்பட்ட வயிற் றுTதலை மாற்ற ஒருமுறை அல்லது இரண்டுமுறை வழக்கமாய்க் கொடுக்கும் பாலை நிற்பாட்டிக் கொதித்து ஆறிய நீரை உணவு நேரங்களில் கொடுத்தல்வேண்டும். இரண்டுவிரல்களால் எடுக்கக் கூடிய சோடாத்தூளை இந்நீருக்குச் சேர்ப்பதால் (Pinch of Sodium Biearbonate ) 156760LoGupoTib.
4. வாய்ப்புண்கள் : இவை பிள்ளையின் வாயின் உட்புறமெங்கும் வெள்ளைப் புள்ளிகளாய்த் தோற்றும். புள்ளிகளைச் சுற்றிவரத் தசை, கோபத்தோற்றமாய் கொவ்வம்பழம்போல் சிவந்திருக்கும். அல் லது முழுவாயும் அவிந்து ஒரே புண்ணுயிருத்தல்கூடும் அப்படி நேரும்போது பாலன் பாலை உமிந்துவிழுங்க இயலாது கஷ்டப் படுவான். பிறபால்கொண்டு வளர்க்கப்படும் பிள்ளைகளிலேயே பெரும்பாலும் இந்நோய் ஏற்படுகின்றது. ஆகாரக்குறைவு, ஆகா ரத்தில் சீவசத்துக்கள் குறைவு, சுத்தமின்மை ஆகிய இவைகளே வாய் புண்படுதலுக்குக் காரணங்கள். அவைகளை நிவர்த்திசெய் யப் புண்கள் தானேமாறுவதைக் காணலாம். உடன் சிகிச்சையா கத் தேன் அல்லது கிளிசறின் (Glycerine) மூன்று நான்குமுறை கள் தடவிவரலாம்; துடைத்தல் கூடாது.
5. வலிப்பு : சடுதியாய் வலிப்புப் பிள்ளைகளில் ஏற்படுதல் கூடும். விளையாட்டில் கவனம் செலுத்திய பிள்ளை மறுகணம் அறி வில்லாது பற்கள் கிட்ட வெள்ளைமுழிபிரள, உடம்பு பின்புறம்வளைய, கைகால்கள் தடிபோல் நீட்டிக் குலுங்க, வாயால் நுரைவழிய, அவலப்படுகின்றது. இது சில நிமிடங்கள் நிகழும் பின் சோர்ந்து

Page 45
68 தாயும் பிள்ளையும்
அரைக்கண் மூடியபடி கிடக்கும். அப்படியன்றி மணித்தியாலக் கணக்காக ஓயாது வலிக்கவும் கூடும். வலித்துக்கொண்டிருக்கும் பொழுது ஏதேனும் பருக்க எத்தனித்தல் கூடவேசுடாது. வைத் திய உதவிபெறும்வரை கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும். படுக்கையில், தலையை ஒருபுறம் சரித்து வளர்த்திவிடல் வேண்டும். இறுக்கமான உடைகளை அகற்றிவிடல்வேண்டும். நாக் குப் பற்களுக்கிடையில் அகப்பட்டுக் கடிபடாதிருக்க கரண்டிக் காம்பில் துணியைச் சுற்றிப் பல்வரிசைகளுக்கிடையில் ஒருபக்க மாகச் செருகுதல்வேண்டும். கரண்டிக்காம்பு போன்ற பெலமான பொருட்கள் எதையும் பயன்படுத்தலாம். இச்செய்கை வாயைத் திறந்தபடியே வைத்திருப்பதால் மூச்சும் திணறமாட்டாது. ஒடிக் கலனுக்கு ஒடித்திரியவேண்டாம். கிணற்றுநீர்போதும். ஒடிக் கலோன் கிட்ட இருந்தால் நீருடன் கலந்து தலையை நன்கு நனைத் தல்வேண்டும். பெரும்பாலும் காய்ச்சல்கூடியே குழந்தைகளில் வலிப்பு ஏற்படுகிறது, கடும்காய்ச்சலிருந்தால் தேகம் முழுவதை யும் ஈரத்துணிகொண்டு துடைத்துவிடலாம்; இச்செய்கையால் நன்மையே யன்றித் தீமையொன்றுமே நேராது. அஜீரணம் வலிப் புக்கு மற்ருெரு காரணமாகையால் வயிற்ருற் போகச்செய்வது நன்று. சவர்க்காரத்தைக் கூராகவெட்டி நீரில் அல்லது எண்ணெயில் தோய்த்து ஆசனவழியே செலுத்த மலம் கழியும். கிளிசரீன் சப்போ சிற்றறி கிடைக்குமாயின் சவர்க்காரத்துக்குப் பதிலாக அதைப் பயன்படுத்தலாம். வைத்தியர் வந்ததும் வலிப்பின் காரணத்தை அறிந்து ஏற்ற மருந்துகள் கொடுப்பார். நரம்புகள் சாந்தியடைய மருந்துகளும் சேர்க்கப்படுமாகையால் பிள்ளை நன்கு நித்திரைசெய் யும், குழப்பாமல் உறங்கவிட்டுவிடுதல் வேண்டும். காய்ச்சல் காரணமாயின் சிடிஸ்பிரின்", "அஸ்பிரின் பரசற்றமோல் (பனடோல்) எதுவும் (4) காற்குளிகை கொடுக்கலாம் கொடுத்த நேரத்தைக் குறித்துவைத்து வைத்தியனுக்குக் காட்டுதல்வேண்டும்.
அஸ்பிரின், டிஸ்பிரின் திரும்பத் திரும்பக்கொடுத்தல் கூடாது. இவை சிருர்களின் இரைப்பையைப் புண்படுத்தும் தன்மை வாய்ந் தன. பரசற்றமோலில் அக்குணமில்லை. பரசற்றமோலெனிலும் பனடோலெனினும் ஒன்றே ஒருமருந்தை எத்தனை மருந்து தயா ரிக்கும் கொம்பனிகளுண்டோ அத்தனை பெயர்களில் விலைப்படுத்து கிருர்கள். ஒன்று குளிகையாயிருக்கும்; மற்றையது கூட்டில் அடைத் திருக்கும் பலவர்ணங்களிலும் இருக்கும். ஆனல் மருந்து ஒன்றே. ஏமாற்றுப்படுபவர்கள் நோயாளிகளே. விதம்விதமான பெயர்கள் சூட்டப்பட்டாலும் மிகச் சிறிய எழுத்தில் ஒர்மூலையில் உண்மை மருந்துப் பெயருமிருக்கும். வைத்தியரும் இந்த ஏமாற்றுவித்தை களுக்கு உடந்தையாயிருக்கிறர்களென்பதை மறுக்கமுடியாது"
Regd, No. JMC/CC|332

தாயும் பிள்ளையும் 岱9
அப்பப்பா ! ஒரே மருந்து ! ஒன்று பத்துச்சதமாயிருக்கும்; மற்றை யது ஒரு ரூபா ஐம்பதுசதமாயிருக்கும்! இப்படிப் பலபெயரில் பல மருந்துகள் பரப்பப்பட்டு வருகின்றன; ஏழையின் பணத்தைச் சூறையாட நாங்களும் உதவுகின்ருேம். வெட்கம் ! “காசாசை வெட்க மறியாது" என்று அன்று ஒருவர் சொன்ன முதுமொழி ஞாபகத் துக்கு வருகிறது. கூடியவிலை மருந்துகள் செய்கைநுணுக்கத்தால் கூடிய நன்மையைச் செய்கின்றனவோ என்ருல் அதுதான் இல்லை என் கிருர்கள் ஆராய்ச்சியாளர்களும், அறிஞர்களும்.
6. காய்ச்சல், இருமல், தடிமன் : பிள்ளை கருப்பையிலிருக்கும் காலத்தில் சுவாசத்துடன் சம்பந்தப்பட்ட அவயவங்கள் யாவும் நோயை உண்டாக்கும் கிருமிகள் ஒன்றுமே இல்லாதிருக்கின்றன. பிறக்கும்பொழுது தாயின் உடம்பிலிருந்தும், பிறந்தபின் சுற்றுப் புறங்களிலிருந்தும் நோய்க்கிருமிகள் சேயைச் சேர்கின்றன. இந்தக் கிருமிகள் பலப்பல. புதியபுதிய கிருமிகளை ஆராய்ச்சியாளர்கள் தினமும் கண்டுபிடிக்கிருர்கள்போன்று தோன்றுகிறது. பிறந்தநாள் தொடங்கி இறக்கும்வரை இந்த நோய்க்கிருமிகளுடனும் அவற் றுக்கு இடையிலும் நாம் வாழ்கின்ருேம். எங்களுக்கும் இவைக்கும் இடையில் நித்திய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. எங்கள் தோல்வியின் அடையாளமே காய்ச்சல், தோல்விகண்ட பிள்ளை யில் காய்ச்சல், இருமல், தடிமன் தென்படும். மருத்துவர் உதவி யைச் சுணக்கமின்றித் தேடல்வேண்டும். கொத்தமல்லி அவித்த நீர் கொடுக்கலாம். "பனடோல்', 'டிஸ்பிரின்", அஸ்பிரின்போன்ற மருந்துகள் காய்ச்சலைக் கட்டுப்படுத்தக் கொடுக்கலாம். மருத்துவர் வரும்வரை ஒருவயதுக்குட்பட்ட குழந்தைக்கு (4) நாலில் ஒருபங்கு குளிகைபோதுமானது. காய்ச்சல் கூடினல் பச்சிளங் குழந்தைகளில் வலிப்பேற்படும், மேற்படி மருந்துகளைக் கொடுப்பதனுல் அதைத் தடுப்பவர்களாவோம்; குழந்தையின் தலையையும் குளிர்ந்த நீரால் நன்கு தோய்த்துக்கொள்ளவும். பனிக்கட்டியையே (Ice Bag ) தலை யில்வைக்கலாம். குளிராக்கும் என்ற பயமேவேண்டாம். நீரைத் தலையில் தேய்க்கக்கூடாது. அழுகையை ஆற்றக் குலுக்கவும்கூடாது.
25. பிறவியில் ஏற்படும் குறைகள்
1. மேல் உதடு முரசுடன் சேர்ந்து பிளவுபட்டிருத்தல் (Hare Lip and Cleft Palate) ; மேல் உதடுமாத்திரம் பிளவுபட்டிருக்கலாம். அன்றி உதடும் மேல்வாயும் சேர்ந்து வெட்டுண்டதுபோன்று பிளவு பட்டிருக்கலாம். கிட்டத்தட்ட எண்ணுாறு பிள்ளைகளுக்கு ஒன்ருக இந்தக்குறை நேருகின்றது என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்டு பத்துவருட காலம்போல் தொடர்ந்து எம்முடைய கண்காணிப்பில் மூன்று பிரசவசாலைகள் மூன்று வேற்றிடங்களில்

Page 46
  

Page 47
και 72 தாயும் பிள்ளையும்
ஆண்கிருமியும் பெண்முட்டையும் மேற்கூறிய ஆற்றல்களேத் தலைமுறை தலைமுறையாகத் தம்முடன் கொண்டுசெல்லும். ஜின்ஸ் ( Genes) என அழைக்கப்படும் அணுக்கள்தான் இதற்குப் பொறுப் பாயிருக்கின்றன. அவை ஆயிரமாயிரமாகவுண்டு. ஒவ்வொரு ஆண் கிருமியிலிருக்கும் அணுவுக்குச் சோடியாகப் பெண்முட்டையிலும் உண்டு. ஒரே ஆற்றலை, குணத்தை, தன்மையைக் கொண்டுசெல் லும் ஒவ்வொரு ஆண்கிருமி அணுவுக்கும் சோடியாக அதே ஆற் றல்களுடைய அணு பெண்ணின் முட்டையிலுமிருக்கும். இந்த ஜீன்கள் இனமினமாகச் சங்கிலித்தொடர்போல் சேர்ந்திருக்கும். அக்கூட்டங்களைக் குரோமோசோம் (Chromosomes) என்று அழைப் பார்கள்; அவை ஒருமுறைபற்றியே கூடியிருக்கும். இவற்றை விளக்கத்துக்கு எடுப்போம்
தேகவனப்பு : தேகவனப்பைக் கொண்டுசெல்லும் ஜின் ஆணிலு முண்டு; பெண்ணிலுமுண்டு. இந்த ஒரே இன ஜீன்கள் இரண் டும் ஒன்ருகச் சேர்ந்துகொள்ளும், சேர்ந்தபின் எந்தத் தன்மை வலிமை கூடுகிறதோ அந்தத் தன்மைதான் பிள்ளையில் பிரதிபலிக் கும். தாயின்வனப்பைக் கொண்டுசெல்லும் ஜினின் ஆற்றல் கூடிய தாயிருந்தால் தாயின் வனப்பையே பெரிதும் பிள்ளையில் காணலாம். தகப்பனின் முன்னேரின் தன்மைகளும் இந்த ஜீன்களில் தலைமுறை தலைமுறையாகக் கொண்டுசெல்லப்படுகின்றன. எ ன வே அத் தன்மைகளில் எதுவும் பிள்ளையில் தோன்றக்கூடும் பிள்ளையின் தோற்றம் அதிர்ஷ்டத்தையும் பொறுத்ததே. தாயின் தலைமயிர் கறுத்துக் கவர்ச்சிகரமானதென்றும் தகப்பனுடையது செந்நிறம் உடையதென்றும் வைத்துக்கொள்ளுவோம். அதனுல் என்ன சம் பவிக்கின்றது? மயிரின் குணத்தைக் கொண்டுசெல்லும் இருபக் கத்து இருஜின்களும் ஒன்றுசேருகின்றன. சேர்ந்தபின் தராசு எந் தப்பக்கம் தாக்குகின்றதோ, எந்தப்பக்க ஆற்றல் வலுப்படுகின் றதோ அந்த ஆற்றல் பிள்ளையின் மயிரில் பிரதிபலிப்பதைக் கான லாம்; தந்தையின் அணு வலுக்கூடியதாயிருந்தால் பிள்ளையின் மயிர் செந்நிறமாகவே இருக்கும். இனத்தைப் பெருக்கும் காலம் இந்தப்பிள்ளைக்கு வரும்பொழுது தான்கொடுக்கும் ஜின்மூலம் தகப் பனின் செந்நிறத் தன்மையை மாத்திரமன்றித் தோற்று ஒதுங்கிக் கிடக்கும் தாயின் கருநிறத்தன்மையையும் சேர்த்துக் கொடுக்கின் றது. இந்தப்பிள்ளை வளர்ந்து வரிக்கும்பெண்ணும், அப்படியே இருதன்மைகளைப் பெற்றிருந்தால், இரு தன்மைகளையும் அல்லது பெற்ருேர் இரத்த உறவினர்களையே (ஒன்றுக்குள் ஒன்று) விவாகம் செய்துவந்த தன்மையால் ஒருதன்மையான ஜின்மாத்திரம் இருந் தால் அந்த ஒரு ஜீனையும் மாத்திரம் குழந்தை வைத்திருக்கும்,

தாயும் பிள்ளையும் 7、
அது எப்படி நேர்ந்தாலும் சேரும் காலம் வரும்பொழுது இனம் இனத்தைச் சேர்ந்துவிடும். பின்பு கூட்டல் கழித்தல்தான் நடக் கிறது, கூட்டும்பொழுது பெண் கொண்டுவரும் கறுப்புத் தன்மையை யும் ஆண் கொடுத்த கறுப்புத்தன்மையையும் சேர்க்க இருபக் கத்தாலும் சேரும் சிகப்புத்தன்மையிலும் பெலன் கூ டு மா யி ருந்தாற் பிள்ளை தன்பாட்டியின் அழகுபொருந்திய கார்மேகம் போன்ற சிகையைப் பெறு கி ன் ற து. அப்படியே கண்களின் தன்மையும் அவயவ விகாரங்களும், தேகதோற்ற வேறுபாடு களும் சந்ததி சந்ததியாய் ஜின்கள்மூலம் கொண்டுசெல்லப்படுகின் றன. தோற்றம் மாத்திரமல்ல நடைவேற்றுமைகள், பேச்சுத் தன்மைகள், சிரிப்பின் பேதங்கள், மற்றும் ஒவ்வொரு குணுதிசயங் களும் மூதாதைகளிலிருந்து பிள்ளே பெறுகின்றது. சிலபோது அவை பெலன்கெட்டவையாய் மறைபொருள்களாயிருந்து காலம்செல்லச் சக்திகூடி மூன்று நாலு தலைமுறைகளின் பின்பும் வெளியாவதுண்டு. பொதுவாகப் புலமைவாய்ந்த பெற்றேர்களுக்குப் புலமையுடைய பிள்ளைகளே பிறக்கும் பெற்றேரின் புலமையை அப்படியே அவர் கள் பள்ளிசெல்லாது காட்டுவரென்பதல்ல, இலகுவில் கிரகிக்கக் கூடிய ஆற்றல் உள்ளவராயிருப்பார்கள் சங்கீத ஆற்றல் அப்படியே குடும்பத்தில் செறிந்து த க ப் ப ன் பிள்ளைக்குச் சந்ததியாகவே கொடுப்பதைக் காணலாம் என்ருலும், இவை கட்டாயமாக நடக்க வேண்டியதல்ல. சிலவேளைகளில் நல்ல புலமைவாய்ந்த பெற்ருே ருக்கு அறிவிலிக் குழந்தை பிறக்கவும்கூடும். சங்கீதக் குடும்பத் தில் கழுதைக்குரல் ஒன்று எழுதல்கூடும். மனிதனுக்குப் பெலவீனம் ஏற்படுதல்போன்று ஜீன்களிலும் சக்தியின்மை ஏற்பட்டு அந்தக் குறிக்கப்பட்ட சக்திகளைப் பிள்ளையில் பிரதிபலிக்கச் செய்யாதிருத் தல்கூடும். கைகால் முட முள்ள தாய்க்கு அல்லது தந்தைக்கு முட மில்லாப் பிள்ளைகள் பிறக்கின்றன. பெற்ருேர் இருவருமே குருட ராய் இருக்கப் பிள்ளைகள் நல்ல பார்வை உள்ளவர்களாகப் பிறக் கின்றனர். இந்தக் குறைகளைக் கொண்டுசெல்லும் ஜி ன் க ள் அதிர்ஷ்டவசமாகத் தாமே பெலயினராகித் தம் தொழிலைச் செய் யாதுவிடுகின்றன. அதேபோல் பெற்றேரின் நிறைவுகளும், கொண்டு செல்லும் ஜின்களின் பெலவீனத்தால் பிள்ளைகளில் தோற்றப்படா திருத்தல்கூடும்.
எங்களுக்கு ஏற்படும் காயங்கள், நோய்கள் மன அதிர்ச்சிகள் இவையெல்லாம் எங்களிலிருக்கும் ஜீன் குடும்பத்தைப் பாதிக்க மாட்டாடு ஆனல் திரும்பத் திரும்ப எடுக்கும் எக்ஸ்ரே (Xray ) அணுக்குண்டுகள் வெடிப்பதால் வெளிவரும் கதிரியக்கப்பொருட்க ளின் தாக்கம் (Radioactive tal out ) தலோடமைட் போன்ற
O

Page 48
74. தாயும் பிள்ளையும்
மருந்துகள் ஜின்களில் மாற்றங்களே உண்டாக்குகின்றன. இவை தீமைகளைக் கொண்டுவருபவைகளாகவே இருக்கும் கர்ப்பவதியில் எக்ஸ்ரே படப்பிடிப்பு, புதிதாகத் தயாரித்து வெளிவரும் மருந்து கள் தவிர்க்கப்படல்வேண்டும். அதுவும் சிசுத்தரித்து மூன்றுமாதங் கள் முடிவுக்குமுன் மருந்துகள் தேவையில்லாதுபோனுல் அதிர்ஷ் டமே. இந்தக்காலத்துள்தான் பிள்ளே பெரும்பாலும் பாதிக்கப் படுகின்றது, எனவே எந்த மருந்தையும் சமசியத்துடன் பார்த்தல் வேண்டும். கர்ப்பவதி நோய்க்கு நிபுணரிடம் செல்வதே சாலச் சிறந்தது. பெரிதும் புகழப்பட்டு எடுத்தவுடன் கையாளப்படும் * சயிக்கிளின்களும் ', மைசீற்றீன்களும் மற்றவையும் பல நஷ்டங் களைச் செய்யக்கூடியன. எலும்புவளர்ச்சியைக் குறைப்பன, இரத் தச் செழிப்பைப் பாதிப்பன. செங்கைமாரியைத் தருவன. பிள்ளே அழிப்பையே கொண்டுவரக்கூடியன. ஆகையால் அலட்சியமாயிருத் த ல் கூடாது.
தாயாகும் பெண் குங்குமப்பூ அருந்திவரின் பிள்ளை செவ்விள நீர் நிறத்தைப்பெறும் என்று நினைப்பது தவறு; அதற்கு ஆதார முமே இல்லை, ஜின்களன்றி மற்றெதுவுமே நிறத்தை மாற்றவல் லனவல்ல. ' அப்பீல்' அவைகளுக்கே அனுப்பப்படல்வேண்டும்
27. தேர்ந்தெடுக்கும் திருமணம்
நெருங்கிய உறவினர் இருவர் திருமணஞ்செய்தல் கூடாது, குடும்பக்குறைவுகள் பெல ப் பட் டு க் கூடிக்கொண்டேபோகும், நிறைவுகள் நிறைந்துவழியவும்கூடும். மணமுடிக்குமுன் மணமக்க ளின் தாய்தந்தையர், அவர்களின் மூதாதையர்களிலுள்ள குறைவு நிறைவுகளைக் கவனித்தல்வேண்டும். அழகு, ஆற்றல், உயரம், குணம் ஆகிய இவைகளெல்லாமே பெருமளவு பிள்ளைகளில் பிரதி பலிக்கின்றன; இந்த விதைகள், விழுந்த நிலத்தைப் பொறுத்து, வசிக்கும் சூழ்நிலையைப் பொறுத்து, வாய்க்கும் சிநேகிதரைப் பொறுத்து, வழிகாட்டும் பெற்றேர் பெரியோரைப் பொறுத்து ஓங்கிவளர்ந்து உச்சத்தை அடையும், அதிர்ஷ்டத்தைப் பொறுத்து வாய்ப்புகள் சூழ்நிலைகள் ஏற்படும். முடிபுகளும் அவைக்கேற்ற தாயிருக்கும். எப்படியெனினும் அத்திபாரம் நாங்கள் போடக் கூடியதாயிருப்பது தெளிவு. எனவே ஒருகுணத்தில் குறைவு ஒரு குடும்பத்தில் காணப்பட்டால் அந்தக் குடும்ப யுவனே யுவதியோ அந்தக்குணத்தில் நிறைவுடைய இன்னுெரு குடும்பத்திலேயே தனக் குத் துணைவன் துணைவியைத் தேடல்வேண்டும்3 அப்படிச்செய்யும் பொழுது பிள்ளைகளில் அந்தக்குறைவு இல்லாதுபோக வழியுண்டு. பிள்ளையின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து எந்த ஜின் வெற்றியமை

தாயும் பிள்ளையும் 75 கிறதோ அதன் குணம் வெளியாகிறது. இருந்தும் நாலுயிள்ளேகள் பிறந்தால் நாலும் நிறைவு உடையதாயிராதுவிடினும் இரண் டாவது நாம்விரும்பும் நிறைவு பெற்றிருக்கும். பயித்தியம் ஒரு குடும்பத்தில் பரவலாய் இருந்தால் அந்தக் குடும்பத்தில் ஒருவரை வரிக்க நாம் தயங்கவேண்டும். அப்படியே மற்றைய குணக்கேடு களையும் மனதில்கொணர்ந்து சிந்தித்து வைத்தியருடன் ஆலோ சித்துப் பின் நிச்சயித்தல் வேண்டும்.
பாலியத் திருமணம் உகந்ததல்ல. பிள்ளைகள் பெலவீனர்க ளாவர். தாயும் திடம் கெட்டு இளம்வயதிலேயே முதுமையடை வாள். பெண்களைப் பொறுத்தவரை 20 - 30 வயதுவரை முதற்
பிள்ளைப்பெறச் சிறந்த காலம். வயது செல்லச்செல்லத் தசைநார்
களில் நீண்டுசுருங்கு ம் தன்மைகள் குறைகின்றன. எனவே 30 வய துக்குப் பிந்தினுல் பேற்றுக் கஷ்டங்கள் ஏற்படக்கூடும். காலத் துக்கு முதற்பிள்ளை பெற்றுவிட்டால் தசைநார்கள் பழக்கப்பட்டுப் பின் இயற்கையாகவே நீண்டுசுருங்கும் இயங்கும் தன்மையை எய் தும் ஆண்கள் 25 வயதுக்குப்பின் வரிக்கலாம்,
28. கர்ப்பமும் நீரழிவும்
நீர் அழிவு (Diabetes) ஒரு மாற்றக்கூடிய வருத்தமல்ல பயன் படுத்தும் மருந்துகள் மூலமும் உணவுக் கட்டுப்பாட்டு மூலமும் நோயின் போக்கைக் குறைத்துச் சீவியகாலத்தை நீடிக்கலாம்: நீரழிவுள்ள பெண் கர்ப்பவதியானுல் அவர் விசேஷ கவனத்துக் குள்ளாகவேண்டும். அப்படி விசேஷ வைத்திய கவனத்திலிருந்தால் அபாயம் எதுவும் ஏற்படாது பிள்ளையைப் பெற்றெடுப்பார்: நிறைமாதம் சென்று பெறுவது குறைவாகவிருக்கும். பிள்ளைகளும் மற்றைய பிள்ளைகளிலும்பார்க்கச் சக்திகுறைந்தவர்களாயே இருப் பார்கள். இளம்வயதிலேயே அந்த ரோகத்துக்கு ஆளாகிவிடுவார் கள். எனவே நீரழிவுள்ளவர்கள் திருமணஞ்செய்து இனத்தைப் பெருக்குவதால் நாட்டில் நீர் அழிவு நோயுள்ளவர்களைப் பெருக்கு LJohlff46TTGITrigor.
29. கர்ப்பமும் சயரோகமும்
சயரோகம் (T. B.) பூரணமாகக் குணப்படுத்தக்கூடிய வருத் தங்களுள் ஒன்ருகிவிட்டது. துரிதகுணமடைய, இந்நோய் முற்று வதற்குமுன் சிகிச்சைக்குள்ளாகவேண்டும். இருந்தும் இந்நோயால் வருந்தும் பெண் கர்ப்பத்தையும் தாங்கிச் சுகமேபெற்றெடுத்துப் பிள்ளையையும் சுகமே வளர்க்கக்கூடியவளல்ல. எதிராகச் சக்தி

Page 49
76 தாயும் பிள்ளையும் குறைந்து நோய்கூட ஏதுவாகும். பிறக்கும் பிள்ளையும்தேய்ந்து சக்தி யற்றதாய் விளங்கும். அத்துடனில்லாது பிறந்தாலும் தாயினின்று பிரிக்கப்படாவிடின் சயரோகத்தால் பாதிக்கப்பட்டு இறக்கும். சயரோகம் சிசுவைச் சிசுப்பையிலிருக்கும்போது பாதிப்பதில்லே சயரோகத்தால் பாதிக்கப்படுவோர் கல்யாணத்தைப் பின்போடு தல் வேண்டும். குணமடைய அதற்கென இருக்கும் வைத்தியரிடம் சிகிச்சைபெறுதல் வேண்டும். அவருடைய ஆலோசனையைப்பெற்று அவருடைய சம்மதத்துடனேயே விவாகம்செய்தல்வேண்டும். சாயந் தரக் காய்ச்சல், இரவில் வியர்த்தல், இலகுவில் இளைத்தல், தேக நிறை படிப்படி குறைதல், இருமல் நீடித்தல் என்பன சயரோகத் தின் ஆரம்ப அறிகுறிகள். இவைகளுள் ஒன்ருே பலவோ தென் படின் வைத்தியனை நாடல்வேண்டும். படம் எடுத்துப் பார்ப்பார் கள்; எச்சிலைப் பரிசோதனைக்குள்ளாக்குவார்கள். சயரோகம் என்று நிச்சயித்தவுடன் சிகிச்சை ஆரம்பிப்பார்கள் தொடக்கத் தில் இலகுவில் மாற்றிவிடலாம். பின்பு திருமணம்பற்றி ஆலோ சனையளிப்பார்கள்,
30. ஆணு அல்லது பெண்ணு ?
பிள்ளை பிறக்குமுன், பிறக்கும் பிள்ளை ஆணுே பெண்ணுே என் றறிய ஆசைப்படுகிருர்கள். பிள்ளைப்பையிலிருக்கும் பன்னிரைக் குற்றி எடுத்துப் பரிசோதித்துச் சரியாகக் கூறமுடியும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகிருர்கள். இந்தச்செய்கையில் தாய்க்கும் சேய்க்கும் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும் பிள்ளை எதுவாயினும் அதன்பாலை மாற்றமுடியாத நிலைபரத்தில் இந்த ஆராய்ச்சியின் முடிவில் பிரயோசனமெதுவுமேயில்லை.
மற்றும் ஒர் உண்மையை நாம் அறிந்திருத்தல் வேண்டும்3 பிள்ளை ஆணுவதும் பெண்ணுவதும் தகப்பனைப் பொறுத்திருக்கிறது. அதிர்ஷ்டமே பெரும்பங்கை எடுக்கிறது. தகப்பன் வெளியாக்கும் கோடானகோடி கிருமிகளில் ( Speematozoa ) சரிபாதி ஆண் அணுக் களையும் மற்றையபாதி பெண் அணுக்களையும் கொண்டிருக்கும். இவைகளில் ஒன்று மாத்திரம் பெண்ணின் முட்டையை அடைந்து பிள்ளையாகின்றது. அது எது என்பதுதான் கேள்வி ? ஆண் அணு வைக்கொண்ட கிருமியாயிருந்தால் பிறக்கும் பிள்ளை ஆணுகும். பெண் அணுவைக்கொண்ட கிருமியாயிருந்தால் பிறக்கும்பிள்ளை பெண்ணே, தாய் இந்த விஷயத்தில் பங்கேதும் எடுப்பதில்லையாம், ஆராய்ச்சியாளர் ஒரு கதவைத் திறக்க அப்பால் ஒன்பது தோன் றும் . அவைகளும் திறக்கப்பட வேண்டுமே !

தாயும் பிள்ளையும் 77
31. பாட்டியின் பிடியிலிருந்து தாயை விடுவிக்க இவை :
சிறுவர் நோயுற்றவுடன் பாலூட்டும் தாய்மார் பாட்டிமாரின் கடும்பத்தியத்துக்கு ஆளாக்கப்படுகிருர்கள் பெற்ற பிள்ளையின் பொருட்டு எதையும் சுமக்க ஆயத்தமாகவிருக்கும் தாய் பாட்டி யின் கோடுகள் எதையும் தவறிநடக்கார் , * பத்தியமோ ' சித் திரவதையைப் போன்றன. குளிப்புக்குத் தடை, தலையெண்ணெய்க் குத் தடை, மற்சமாமிசங்களுக்குத் தடை, எண்ணெய்சேர்ந்த கறி வகைகளுக்குத் தடை உப்பு, புளிகளுக்குத் தடை, மரக்கறிகள் பலவற்றுக்குத் தடை, பருப்புத்தன்னும் தீங்குவிளைவிக்கும் பட்டிய லில் சேரும். அப்பப்பா ! பிள்ளைக்கு நோய்மாறச் சுணங்கினல் அல்லது தீங்குகள் ஏதேனும் ஏற்பட்டால் தாய் ' பத்தியத்தை முறித்ததாய்' கொடிய சொற்களுக்கு ஆளாகுகிருர் ! யார் போட்ட பத்தியங்கள் இவை ? வாய்வாயாய் வந்து நிலைகொண்டனவல் லாது நூல்களில் காணப்படுவனவாயில்லை. வைத்தியரைப் பத்தி யம் கேட்பதேயில்லை. நிரந்தரமான கட்டளைகள் போன்று இவை நடக்கும்.
சுரம்கண்ட சேயை ஈரத்துணிகொண்டு தினமும் துடைப்பது நன்று. காய்ச்சல் கூடினுல் தலையை நனைக்கிருர்கள்; பனிக்கட்டி யையே அப்படியே தலையில் வைக்கிருர்கள். பலன்காணுதவிடத்து நீரால் உடம்பைக் கழுவியேவிடுகிருர்கள். இவை யாவும் வைத் தியசாலையிலேயே செய்கிருர்கள். இவைகள் பிள்ளைக்கு அப்படியே நடக்க, தாயைக் குளிக்காது தடுப்பதற்கு நியாயமுண்டோ ? குளிக் காதுவிடுவதால் தாய்க்கும் சேய்க்கும் தீங்கு ஏற்படுவதன்றி நன் மையே கிடைக்காது. சூடான நம்நாட்டில் தாய் தினமும் குளித் தல்வேண்டும். எண்ணெயைப் பழக்கப்படி வைத்துவரலாம். ஆறு தலாயிருந்து பாலனுக்குப் பாலேக்கொடுத்துவிட்டுக் குளிக்கச்சென் ருல் பின்பும் மூன்று நான்கு மணித்தியாலங்கள் கழிந்தே பால் கொடுக்கநேரும்
உணவு ; தாய் உட்கொள்ளும் உணவு அந்தவிதமேயே முலை வாயிலாகப் பாலனைச் சேர்வதில்லை. எத்தனையோ வடிகண்டு பிள் 2ளக்கு ஏற்றதாய்த் தாயின் முலையில் சுரக்கின்றது. இந்தப்பாலே நோயுற்றிருக்கும் குழந்தைக்குச் சிறந்த உணவு. சொற்பகாலத்துக்கு முன் பாலை மறப்பித்திருந்தாலும் பிள்ளை நோயுற்ருல் திரும்பவும் தாய் தன்பாலைப் பிள்ளைக்குக் கொடுக்கலாம். கொடுப்பதுவும் நன்று பாலன் உமிய உமிய முலைகளில் பின்பும் பழமைபோல் பால்சுரக்கும். அப்படியிருக்கத் தாயின் பாலுக்கே தடைபோடும் பாட்டிமாரும் உண்டு பாற்தேவை அதிகமாயும் அவசியமாயும்

Page 50
78 தாயும் பிள்ளையும்
இருக்கும் இக்காலத்தில் உணவுக் கட்டளைகளை அதிகமாக்கித் தாயைப் பட்டினிபோட்டு முலைகளை வரளப்பண்ணுவது நன்றல்ல, பழைமைபோல் உண்ணலாம்; அந்தச் சொற்ப உப்பும் புளியும் எதையும் பங்கப்படுத்தப்போவதில்லை, எதற்கும் வைத்தியனை விணுவியே கட்டளைகள் போடவேண்டும், தாய் நோயுற்று மருந் துண்டால் அது கட்டாயமாய் வைத்தியனுக்கு அறிவிக்கப்பட வேண்டும்; சில மருந்துகள் அப்படியே தாயின் முலைவழியாய்க் சேயை அடைகின்றன.
32. LD 6u)(6 ( StiexrAitéy )
பிள்ளையில்லாத துக்கத்திற்கு வேறு எத்துக்கமுமே ஈடாக மாட்டாது. பிள்ளையின்மை புருஷன் மனைவியைத் துன்பக்கடலி லேயே ஆழ்த்திவிடும். எத்துறையிலிருந்தாலும் சீவியத்தின் சிக ரத்தைத்தான் அடைந்தாலும் பிள்ளையில்லையாயின் மனை நிறை வெய்தாது, இருமனங்களும் இருளடைந்து துன்பக்குழியில் கிடந் துளலும், யார் குற்றவாளி ? ஆணுே ? அல்லது பெண்ணுே ? பெரும்பாலும் பெண்ணேக் குற்றம்சொல்லும் வழக்கமுண்டு, ஆணிலும் அதுபோற் குற்றமிருக்கக்கூடும் என்று உணர்தல்வேண் டும். மலடாவதற்கு ஏதுக்கள் என்ன ?
(அ) பேண்ணில்
1. முதிர்ச்சியடையாத சிசுப்பை நல்ல வளர்ச்சியும், தேகக் குளிர்ச்சியும் உடைய பெண்ணும் கருவை ஏற்றுவளர்க்கும் முதிர்ச்சி யும், சக்தியுமில்லாத சிசுப்பையை உடையவளாகவிருக்கலாம். இக் கூட்டத்தைச் சேர்ந்த பெண்களில், சாதாரண பெண்களில் ஏற் படும் மாதவிடாய்போன்று மா த வி டா ய் ஒழுங்காகவிராது; மாதக்கணக்கில் வராதேயிருத்தல்கூடும். வந்தாலும் இரத்தப் பெருக்கு மிகக் குறைவாயிருத்தல் கூடும் விவாகமானதின்பின் நிகழும் சந்தோஷ சீவியம் காரணமாகச் சிசுப்பை ஊக்கப்பெற்று முதிர்ச்சியடைந்து தன் கடமையை ஆற்றத்தொடங்கும். இதன லேயே விவாகம் ஆனவுடன் தாயாகாமல் இரண்டு மூன்று வருடங் களின் பின் தாயாகிருள். 15, 20 வருடங்களின்பின் கர்ப்பவதி யாகிப் பிள்ளைப்பெற்று வளர்க்கும் பெண்களுமுண்டு; பெண் வயது முதிர முதிரக் கர்ப்பவதியாகும் தேகநிலை குறைவுபடுகிறதாயினும் 50 வயதுவரையும் நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை,
2. கோளங்கள் ( 0Varies) தங்கள் கடமையாகிய முட்டை உண்டாக்கலைச் செய்யாதுவிடலாம். முட்டை பெண்ணில் உண்

தாயும் பிள்ளையும் 79
டாகி உதிராவிடின் பிள்ள்ை ஏது? நோய்கள் காரணமாக இந்நிலை ஏற்படலாம். வாலிப வயதில்வரும் உக்கிரமான கூகைக்கட்டும் (Mumps) g)5 ibG 3 T(5 5TGottp:
3. சிசுப்பையின் வாயை மூடிபோல் அடைத்திருக்கும் சளி : ஆண் கிருமி சிகப்பையைச் சேர இந்தச்சளி தடையாயிருக்கும். இந்தத் தடை நிவர்த்தியாகும்வரை சிசு உண்டாக முடியாது.
4 போகத்துக்குப் போதாத யோனித்து வாரம் : இது இப்படி இருந்தால் போகம்தான் ஏது ? அறியாமையால் குற்றம் எங் குள்ளதென்று தெரியாது வெட்கத்துக்கு அஞ்சி வேதனைப்படு கிருர்கள், சிறு சத்திரவைத்தியம் சீர்நிலையைக் கொண்டுவரும். போகத்துக்கு இருந்த தடை நீங்கியவுடன் மற்றத்தொடர் அவய வங்கள் நல்ல நிலையில் இருப்பதால் கர்ப்ப உற்பத்தி ஏற்படும்.
பெரும்பாலும் மேற்கூறிய குறைகள் இதற்கெனப் பயிற்சி பெற்ற தேர்ந்த வைத்தியர்கையால் குணமாகின்றன. மருந்துகள் சத்திரவைத்தியங்கள் எது தேவையோ அதை அல்லது இரண்டை யும் உபயோகிப்பார்கள் பெற்ருேராய்வர விரும்புவோர் விவாக மாகிப் பலன்காணுத பட்சத்தில், காலமதிகம் போக்காமல் காரண மறியப் புறப்படல்வேண்டும். பெரும்பாலும் நிபுணர்கையில் இவைக்கு நிவர்த்தியுண்டு.
(ஆ) ஆணில் பெண்ணே மாத்திரம் சோதனைக்குள்ளாக்குவது போ தா து; ஆணும் சோதனைக்குள்ளாகவேண்டும். பெண்ணேப்போல் ஆணும் நோயின்காரணமாகவோ இயற்கை அமைப்பின் குறைகள் காரண மாகவோ இனத்தைப்பெருக்க முடியாதவராக இருத்தல்கூடும். 1. ஆண்குறி சக்தியற்றதாய் தன்கடமையைப் புரிய இயலாததா யிருத்தல்கூடும் நோயின் காரணமாகப் பெலனை இழந்திருக்கலாம்; அன்றிப் பிறப்பிலேயே ' பேடித்தனம் ' கொண்டிருக்கலாம்.
இந்த நிலையில் இருக்கும் "ஆண்மகன்' எக்காரணம்பற்றியும்
விவாகத்துக்கு உடன்படுதல் கூடாது. அப்படியின்றிச் செய்தால்
தான் வெட்கித் தலைகுனியவேண்டி நேரிடும். பெண்ணின் வாழ்க்
கையையும் கெடுத்து அவரின் வெறுப்புக்கும் ஆளாவார். இப்படி
யானவர் சிலரை எம் தொழிற்துறையில் இடையிடை சந்திக்கிருேம். அவர்கள் எம்மைச் சந்திக்கவேண்டிய காலம் விவாகத்துக்கு முன்
னன்றிப் பின்னல்ல; விவகாரத்தில்தான் இவ்விவாகங்கள் முடி
sı
கின்றன.

Page 51
80 தாயும் பிள்ளையும்
2. சுக்கிலத்தில் ஏற்பட்டிருக்கும் விகாரங்கள் ஆண்கிருமிகள் அதில் அடியோடில்லாது இருத்தல் கூடும்; மிகக்குறைவாகக் காணப் படக்கூடும். அன்றிப் பெலனற்றனவாய் இருத்தல் கூடும். ஆண் கிருமி இல்லாததாயின் பிள்ளையும் இல்லையே. குறைவாகக் காணப் பட்டால் சிசு உண்டாகும் வாய்ப்பும் குறைவே. பெலனற்றவை யாயிருந்தால் பிரயோசனம் இல்லாதவையே சிலரில் வெளியா கும் சுக்கிலத்தின் அளவும் மிகக்குறைவாயிருக்கும். சாதாரண மாக ஒருமேசைக்கரண்டி கொண்டளவுக்குக் குறையாதிருத்தல் வேண்டும். இதற்குக் குறைந்தால் ஆண்கிருமித்தொகையும் குறை யும். ஆண்கிருமி ஒன்றுமட்டுமே ஒரு பிள்ளையை உருப்படுத்த வேண்டுமாயினும் இயற்கை வகுத்தபடி கோடிக்கணக்காகக் கிருமி கள் இருந்தால்தான் முட்டையைச் சந்தித்துச் சிசுவாகும் வாய்ப் புக்கூடும். இவற்றுள் பெருந்தொகையின முட்டையை அணுகு முன் மடிகின்றன. இக்குறையை நிவர்த்திசெய்யும் மருந்துகள் உண்டு. நிபுணரே குறைகளை அறியவும் ஆவனசெய்யவும் உதவுவர்.
3. மேகரோகங்கள் (Wenepeat Diseases) கட்டுப்பாடில்லாத நடையினல் ஏற்படும் இந்நோய்களால் மலடு ஏற்படலாம். உடனுக் குடன் வெட்கத்துக்கு ஆளாகி ஒழித்துமறைத்துத் தீராநோய்க்கு ஆளாகாது, வைத்திய உதவி தேடின் மலட்டுநிலை ஏற்படக் காரண மில்லே. இறக்கும்வரை வருந்தவும் தேவையில்லை.
4. கூகைக்கட்டு : பெரும்பாலும் பாலருக்கே வருகிறது. பாலிய வயதில் வருவதை வரவேற்கலாம். அவ்வளவு உக்கிரமாயும் வருவ தில்லை, வாலிபவயதிலும் பின்பும் வருவது பெருந்தீங்கை உண் டாக்குகின்றது. கடும்சுரமாயிருக்கும் விதைகளும் வீங்கக்கூடும். ஆண்கிருமி உற்பத்தியையும் அழிக்கும்தன்மை வாய்ந்தது. அப்படி நேரின் பிள்ளையுற்பத்தியுமில்லையே. எனவே நல்ல பரிசோதனைக் குள்ளாகவேண்டும். நிபுணர்கையில் சிகிச்சையும் உண்டு. நிபுணர் என்னும்பொழுது நாம் எல்லோரும் அல்ல. இத்துறையில் தேர்ந் தவர்களையே (Specialists) குறிக்கும், -
33. தேவையற்ற பிள்ளை
கணக்கில்லாதோர் தமக்கு எல்லாச் செல்வங்களிருந்தும் பிள் ளே ச்செல்வம் இல்லையே என்று கவலையுறுகின்றனர். ஆலயங்கள் சென்று ஒருமனதினராய்ப் பிள்ளை வேண்டிப் பிரார்த்தனே செய்கின் றனர். நாடுவிட்டு நாடுசென்று இதே நாட்டமாகக் கோவில்களை வலம்வருகின்றனர். இது ஒர் உலகம், மற்றையபக்கத்தில் சிறு பான்மையினரால் வருடாவருடம் இயந்திரம்போன்று தவழுது

தாயும் பிள்ளையும் 81 இனத்தைப் பெருக்கிக் கூடும் வயிறுகளை நிரப்ப வழிகாணுது தாமும் சேய்களும் நோய்வாய்ப்பட்டு அல்லோ லகல்லோலப்படுகின்றனர். ஒர் அறையில் குடும்பந்தொடங்கிய இருவர் ஈசல்போன்று மக்கள் பெருகவே அவர்களை வளர்த்தி வளர்க்கவும் இடம்கிடையாது தவிக் கின்றனர். ' இப்பிள்ளைகள் எமக்கேன் ? ' என்று மனம் வருந்து கின்றனர். பிள்ளைகள் வளரவே ஊண் மாத்திரமா பிரச்சனை ? உடுக் கத்துணி, கிடக்க இடம், படிக்கப் புத்தகம் அப்பப்பா ! பிரச்சனை கள் வளர்ந்துகொண்டே போகும்; இதனுலன்ருே மகாத்மா காந்தி யடிகளின் நண்பரொருவர் அன்னவரின் ‘* மன அடக்கம் ' என்ற தலைப்பிரசங்கங்களை வாசித்தும் கேட்டும் மனம்பொருது பின்வரு மாறு எழுதினர் ' எனக்கோ ஆறுபிள்ளைகள் உளர். இவர்களே வளர்க்கும் சக்தி எனக்கில்லை. அரசகட்டளை இடம்கொடுக்குமாயின் எசமானில்லாது தெருவே திரியும் நாய்கள் போல் சுட்டுவிடுவேன். இது இவ்வாருக இன்னும் பெறும் செயலில் ஈடுபட விருப்பமில்லே யென்பதைக் கூறவும் வேண்டுமா ? இனியேனும் உமது ஞான உரைக்கேற்ப " மனதை அடக்கும் ' தொழிலில் ஈடுபடுவோம் என் ருல் எனது பிரியநாயகி " கம்பக் என்கிருள் ', இப்படிப் பல பெற்றேர்கள் இருதலைக் கொள்ளி எறும்புபோல் துன்புறுகின்றனர்.
பிள்ளைப்பெறுவதோடு மாத்திரம் பெற்ருேரின்கடன் முற்றுவ தில்லை. பெற்ற பிள்ளைகளைச் சீராய்நேராய் வளர்ப்பதும் அவர்க ளேப் பொறுத்ததே. இல்லையேல் தமக்குமாத்திரம் நித்திய அல் லல்களையும், தொல்லைகளையும் சேர்க்கின்றதல்லாது நாட்டுக்கும் துரோகிகளாகின்றனர். செவ்வனே வளர்க்கப்பெருத மைந்தரே ஒருநாட்டின் வைத்தியசாலைகளையும், மறியற்சாலைகளையும் நிரப்பு கின்றனர். அவர்களே வேலையில்லாக் கூட்டத்தைப் பெருக்குகின் றனர். நாட்டின் தெருக்களையும் திண்ணைகளையும் மெலிந்துவாடிய, அழுக்குப் படிந்த மேனிகளால் அலங்கரிப்பவர்களும் அவர்களே, சுருங்கக்கூறின் பெற்ருேரின் ' தேவையற்ற பிள்ளையே " நாட்டுக் குச் சொல்லொணு இன்னல்களைக் கொண்டுவருகிறது. இது இவ் வாறிருக்க வளர்க்கச் சக்தியற்ற பெற்ருேர் பெறும்செயலில் ஈடு படுவது சரியன்று என்று சொல்லவும் வேண்டுமோ ?
கீழைத்தேசங்களில் சனப்பெருக்கம் உச்சநிலையை அடைந் திருக்கின்றது; இருபதுவருடங்களில் இருமடங்காகும் என்று கணக் கிடுகிருர்கள், பல்கிப் பெருகும் வயிறுகளை நிரப்ப உணவுகளை உற் பத்திசெய்தல் கூடுமாயின் பயப்படவேண்டியதில்லை. இப்பொழுதே போதாக்குறையினல் உழலும் நாடுகள் விழிப்புடன் செயல்படுதல் வேண்டும். சனப் பெருக்கத்தைத் தடுப்பதே ஒருவழி. இல்லையேல்
1

Page 52
82 தாயும் பிள்ளையும்
பசியும், பட்டினியும் அவையைத்தொடர்ந்து நோயும், சாவும் பலாபலன்களாகும். இதனுலேயே அரசாங்கங்கள் குடும்பக் கட் டுப்பாட்டை நாடுகளில் கொண்டுவந்து அதில் வெற்றிகாணத் தீவிரமாய் உழைக்கின்றனர். நாமும் எங்கள் பூரண ஒத்துழைப்பை நல்கினல் வெற்றிகாணமுடியும்.
எப்படி :
ஒரு பெண்ணுக்கு ஒரு பிள்ளே பிறந்து மற்றையபிள்ளையை ஏற்று விக்கினமின்றிப் பெற்றுவளர்க்கக் குறைந்தது 24 மாதங்கள் செல்லு தல்வேண்டும். பிள்ளையைத் தாங்கியதால் ஏற்பட்ட உடற்களைப் பும், பாலூட்டி வளர்த்ததாலேற்பட்ட தேக இழைப்பும் மாறி உடல், மனம் முந்திய சுகநிலேயை அடைய இந்த 24 மாதங்கள் செல்லவே வேண்டும். எனவே இந்த வரம்புக்குள் சிசு உற்பத்தி தன்னில் உண்டாகாது பெண் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும்.
தங்கள் பொருளாதாரத் தகுதிக்கேற்ப மக்கள் ஒருவரோ, இருவரோ, அன்றி மூவர் நால்வரைத்தாமோ பெற்றவுடன் குடும் பக்கட்டுப்பாட்டில் இறங்குதல் வேணடும். இல்லையேல் தங்களை யும் நாட்டையும் இடர்களுக்குள் இழுப்பவர்களாவார்கள். அது மட்டுமா ? பிள்ளைகள் பசியால்வாட, மனம்பொருது தற்கொலை புரிபவர்கள்தான் எத்தனைபேர் ? பொய், களவு, ஏமாற்றுதல் முதலிய தீய செய்கைகள் கூடிவருவதும் இதனுலேயே. ' பசிவந் திடில் பத்தும் பறந்திடும் ' என்பார்கள். அவை நல்லொழுக்கங் கள் பத்துமே, பிள்ளைகள் பட்டினியாற் துடிக்க அதைத் தீர்க்கப் பெற்ருேர் எதையும் செய்வார்கள் என்பது கண்கூடு.
குடும்பத்தைக் கட்டுப்படுத்த வழிகள்
1. புலனடக்கம் : மகாத்மா காந்தியடிகளும் அவர்போன்ற மற் ருேரும் புலனடக்கம் சிறந்ததும், எங்கள் பண்பாட்டிற்கு உகந்த தும் என்கிருர்கள். ஆனல் சாதுக்களாகமாற, திருமணஞ்செய் திருந்தும் இடையிடையல்லது தொடர்ந்தும் பிரமச்சரியம்பூண எத்தனைபேர்தான் திடசித்தம் உடையவர்களாக இருப்பார்கள்; எத்தனை பெண்கள் இந்நோக்கத்தில் தங்கள் ஒத்துழைப்பை நல்கு வார்கள். இருபகுதியினரும் மனமொருப்பட்டு இந்தமுறையில் இறங்கினுல் மிகவும் நன்றே, தேகநலனும் அவர்களுக்குண்டே ! இவர்களுக்கு வணக்கம் செலுத்தி மற்றவர்களுக்கு எது வழிவகை என்று ஆராய்வாம்.

தாயும் பிள்ளையும் 83
2. புறக்கருவிகளும் மருந்துகளும் : உடல் உ ற வின் போ து ஆளுல் செலுத்தப்படும் ஆண்கிருமிகள் பெண்முட்டையை அடைய விடாது தடுத்தலே குடும்பக்கட்டுப்பாட்டின் ஒரே ஒருவழி. இந் தத் தடைபோடப் பலமுறைகள் உண்டு. அவைகளில் ஒன்றை ஏற்று நடைமுறையில் கொண்டுவருதல் வேண்டும். அரசினர் குடும் பக்கட்டுப்பாட்டு முறைகளில் பழக்கும் நிலையங்களை, ஆங்காங்கு ஏற்படுத்தியிருக்கிருர்கள். கர்ப்பத்தடைமருந்துகளும் இலவசமாகக் கொடுக்கிருர்கள். ' லூப்' என்ற கருவியையும் உட்செலுத்திக் கருப்பத்தைத் தடுக்க உதவுகிறர்கள். பிள்ளையைத் தாங்கிப் பெற்றுவளர்க்க மனம் ஏவும்பொழுது இதை எடுத்துவிடலாம்: மருந்துகளை நிற்பாட்டிவிடலாம்.
3. சத்திர சிகிச்சை : சத்திர சிகிச்சைமூலம் பிள்ளை உற்பத்திக் குத் தடைசெய்யலாம். இந்த முறையைக் கைக்கொண்டால் பின் மாற்றியமைக்க முடியாதுபோகும் பெண்ணில் முட்டையை ஏந் திக்கொண்டுசெல்லும் பலோப்பியன் குழாயை அடைத்துவிடுவதே அந்தச் சிகிச்சையின் நோக்கம். அப்படிச் செய்தபின் ஆண்கிருமி பெண்முட்டை சந்திப்பு ஏற்படாது. இந்தச் சந்திப்பு ஏற் படாதுவிடின் பிள்ளை உற்பத்தியும் இல்லையே. " இனி வேண்டாம் ' பிள்ளைகள் என்ற பின்னரே இந்தச் சிகிச்சைக்கு ஆளாகவேண்டும்: தேவையான கடைசிப்பிள்ளையைப் பெற்றபின் அந்தக்காலத்தி லேயே இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளல் நன்று பெற்றுப் பதின்நான்கு நாட்கள்போல் வைத்தியசாலையில் இருக்கநேரும்
ஆணும் இந்தநோக்கத்துடன் சத்திரசிகிச்சைக்கு ஆளாகலாம். விதையில் உண்டாகும் ஆண்கிருமிகள் ஆண்குறியை அடையாது தடுத்தலே இதன் நோக்கம். இதுவும் ஒர் அறுவைச் சிகிச்சையேடு செய்து மூன்றுநாட்களிலேயே தன்னுடைய கடமைகளில் ஈடுபட லாம். இச்சிகிச்சைகளால் ஆணுக்கோ பெண்ணுக்கோ ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை என்பது நிபுணர் கருத்து பெண்ணுக்கு மாதவிடாய் வழமைபோல் வந்துகொண்டேயிருக்கும் இருவருக்கும் போகப்பிரி யம் குறைவுபடாது. தேகத்திலும் ஒருவித அநர்த்தமும் நேருவதா கத் தெரியவில்லை. வலிமையாவது இந்திரியக்குறைவாவது அல் லது சேர்க்கைக்கு இச்சையாவது சக்தியாவது குறைவுபடுவ தில்லை. பிள்ளைத் தடுப்புக்கு ஆணுே பெண்ணுே ஒருவர்மட்டும் இச்சிகிச்சைக்கு ஆளானல்போதும்
இயற்கைக்கு எதிராக இத்தடைகளை விதிக்கும்பொழுது ஆண் பெண்ணுக்கு விக்கினம் எதுவும் சேராதிருக்குமோ என்று ஒரு கேள்வி எழுகின்றது. நிபுணர்கள் ஒன்றுமே நேராதென்கிரு?ர்கள். இருந்தும் நாம் உற்றுநோக்கும்பொழுது மனச்சாந்தம் தம்பதி

Page 53
84 தாயும் பிள்ளேயும்
களுக்குப் பங்குபடாமல் இருக்கமுடியாது என்பது வெளிப்படை இக்கட்டுப்பாடுகளால் ஏற்படும் சமாதானவீனத்தையும் கட்டுப் பாட்டுக்குள்ளானவர்களிடம் சம்பாஷிக்கும்பொழுது காணக்கூடிய தாக இருக்கின்றது. கட்டுப்பாடில்லாத பிள்ளைப்பெறுதலால் ஏற் படும் கவலைகளையும், கட்டுப்பாட்டால் ஏற்படும் நிம்மதியின்மை முதலியவைகளையும் தராசில்போட்டு ஆராயும்போது கட்டுப்பாடு உகந்தது என்று கொள்ளவரும். பல்லாயிரம்பேரில் ஒருவருக்கேதும் வித்தியாசம் ஏற்படுகிறது என்று இம்முறைகளைக் கைப்பற்ருதுவிட முடியாது. கார் அக்சிடன்ட் போன்று அது நடக்கும் ஆணுல் நாம்
கார்ப்பிரயாணத்தைத் தவிர்ப்பதில்லை.
4. இயற்கைவழி : இயற்கையோடு ஒத்த மற்றவழிகளும் உண்டு. நூற்றுக்குநூறு பலன் அளிக்காவிட்டாலும் பலன் உண்டு என்ப தற்கு ஐயமேயில்லை. பெண்ணின் முட்டை முதிர்ந்து உதிர்வது இரு தீட்டுகளுக்குச் சரிநடுக் காலத்திலேயே, முதிர்ந்த முட்டை சிகப் பையை நோக்கிப் பிரயாணம்செய்யும் அந்தக்காலமே சிசு உற்பத் திக்கு மிகச் சாதகமான காலம். இந்தக்காலத்தில் ஆண் பெண் படுக்கை பகிராது இருத்தல்வேண்டும் மாதவிடாயாகி 12 நாட் தொடங்கி 19 நாட்கள்வரையே அக்காலமாகும். இன்னும் இரு நாட்களை முன்னும் பின்னும் சேர்த்தால் கூடியவெற்றிக்கிடமா யிருக்கும்; பத்தாம்நாள் தொடங்கி இருபத்தோராம் நாள்வரை போகத்தைப் புறக்கணித்தல் வேண்டும்
இந்தமுறையில் ஒரு கஷ்டமுண்டு. எல்லாப் பெண்களும் சரி யாய் 28 நாட்களுக்கு ஒருமுறை தீட்டாவதில்லை. குறைந்த காலத் தில் தீட்டுக் காணப்படுபவரும், கூடிய காலத்துக்கொருமுறை தீட்டு வருபவ்ர்களும் உண்டு அவர்களுக்கு ஒருவழியுண்டு. காய்ச்சல் அளவிடும் கருவிகொண்டு நாளும் காலை ஒரு குறிக்கப்பட்ட நேரத் தில் காய்ச்சலை எடுத்துக் குறித்துவருதல்வேண்டும்; அப்படிச் செய்துவரும்பொழுது ஒருநாள் அக்காய்ச்சல் குறைதலைக் காண லாம். அன்றுதான் பெண்களில் அடிவயிற்றில் ஒருபக்கத்தில் சிறு நோ ( 0vulation Pain) ஏற்படுகிறது. இதை அவதானிப்பவர் கள் மிகச்சிலரே. அன்றே முதிர்ந்த முட்டை உதிரும் நாள். அத ஞல் உண்டாகும் நோவே அது. கிட்டத்தட்ட ஒரு அளவான கால எல்லையில்தான் இது ஏற்படுகிறது. இரண்டு மூன்று மாதங் கள் காய்ச்சலை எடுத்து அந்த நாட்களை நிட்சயித்துக்கொண்டு முன் மூன்றுநாட்களும் பின் மூன்றுநாட்களுமாய் அந்தநாளுடன் ஏழு நாட்கள் உடல் உறவைத் தவிர்த்தல்வேண்டும். இக்காலத்திலேயே ஒருவித சளிபோன்ற திராவகம் யோனிவாசலில் தென்படும்

தாயும் பிள்ளேயும் S5 இதை " வழுவல்' என்று சொல்லுவார்கள். வழுக்கும் தன்மை யானது; நூல்போன்று இழுபடும். இது வெளிப்படும் காலத்தில் தேகச்சூடு குறையும் நாளும் வருவதை அவதானிக்கலாம். (நோய் நிமித்தம் சளியாய் வருவது வேறு. இது துர்நாற்றம் வீசுவ தாய் இருக்கும்; எக்காலத்திலுமிருக்கும் ). பிள்ளை உற்பத்திக்கு ஏற்ற இந்தக்காலத்தில் படுக்கை பகிரும் விரு ப் ப ம் பெண் ணுக்குக் கூடியிருக்கும். எனவே பிள்ளை உற்பத்தியைத் தடுக் கப் புருஷன் மனைவி இந்நாட்களில் பிரிந்திருக்கவேண்டும். இம் முறை இயற்கையோடு ஒத்திருப்பதாலும், தீங்கேதும் கடைப் பிடிப்பவர்க்கு நேராதாகையாலும் எ ச் ச ம ய ங் க ஞ க் கு ம் ஏற்றதாயிருப்பதாலும் பிள்ளைப்பேற்றைத் தடுக்க இதுவுமோர் நல்லவழி. பிள்ளைக்குப் பிள்ளை இடைத்தூரத்தைக் கூட்டவும் இம்முறையைக் கையாளலாம். குறைந்த தொகையினராகிய நாம் பிள்ளைகளை நன்குவளர்க்கச் செல்வமுமிருந்தால் தீவிரத்தடையில் இறங்காது இம்முறையைக் கைப்பற்றிப் பேற்றைத் தேவைப்படி குறைக்கலாம். மேற்குத் தேசங்களிலும் பிரதானமாய் அவுஸ் திரேலியாக் கண்டத்திலும் குடும்பங்கள் வழுவல்காலத்தை வழு வாமல்பற்றிப் பலன் காண்கிருர்கள். சளித்தன்மை வெளிவரு வதை அவதானிக்க எந்தப் பெண்ணுலும் முடியும். இந்த நாட் களைத் தவிர்ப்பதால் பலன் பெறலாம் என்று கணக்குகளுடன் காட்டியவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் யோன் பில்லிங்சும் (Billings) அவருடைய சகாக்களும் இதைப் பாராட் டிப் போப்பாண்டவர் அவர்கள் ( Papal Knighthood ) என்னும் பட்டத்தை அவருக்கு அளித்தார்,
34. தொற்றுநோய்த் தடுப்புமுறைகள்
பிறந்த பிள்ளைகளைக்கொல்லும் கொடிய தொற்றுநோய்களி லிருந்து தடுக்கக்கூடியதாயிருப்பது நாம்செய்த புண்ணியமே அப் படியிருந்தும் அறியாமையாலும், அறிந்தும், பெற்ருரின் கவலை யீனத்தாலும், பிள்ளைகள் அந்நோய்களுக்காளாகித் தவிக்கிறர் கள். அது துர்அதிர்ஷ்டமே. சயரோகம் ஏற்பட்டால் எத்துணைத் துன்பம். நினைக்கவும் மனம் கலங்கவில்லையா ? அப்படியே சிந்தித் துப்பாருங்கள். ஏற்புநோய் தொண்டைக்கரப்பன், குக்கல், இளம் பிள்ளைவாதம், அம்மை ஆகிய இவைகளெல்லாம் பொல்லாக் கொல்லும் தரத்தன. தப்பினலும் தேகத்தரத்தைக் குறைப்பன அப்படியிருக்க அவைகளை வாாது தடுக்கம் வழிவகைகளுமிருக்க

Page 54
&6 தாயும் பிள்ளேயும் O
நாம் பாராமுகமாயிருந்தோமாயின் நாம் மன்னிக்கப்படவேண்டிய வர்கள்தாமோ? பிள்ளைகளுக்கும் நாட்டுக்கும் நாம் எம்மை அறி யாதே துரோகிகள் ஆகின்ருேம். வெறும் மண்ணல்ல நாடு, அதில் வசிக்கும் நாமே நாடு.
1. சயரோகத் தடுப்பு : பிறந்த முதற்கிழமையே சயரோகத் தடுப்பூசி போடப்படல் வேண்டும். பெரிய வைத்தியசாலைகளில் இரண்டாம் மூன்ரும் நாட்களில் போடும் வழக்கம் வந்துவிட்டது எந்த வைத்தியசாலையிலுமே போடப்படல்வேண்டும். அப்படி யானல்மட்டுமே பெரும்பாலான குழந்தைகள் இந்தச் சிகிச்சைக் குள்ளாவார்கள். சயரோகம் பர வாது தடுக்க ஒரு சிறந்த வழி யும் இதுவே. இந்த மருந்து செலுத்தப்பட்டது என்று பெற்ருே ருக்கு அறிவிக்கப்படல் வேண்டும், இந்த மருந்து பாய்ச்சப்படும் வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகள், ஒத்துப்பார்க்கும் போது மிகச்சிலரே. எனவே மற்றைய பெரும்பாலான பிள்ளைக ளும் இந்த மருந்தைப் பெறச்செய்வது பெற்றேரின் கடன், எந்த வயதிலும் இந்த மருந்தை ஏற்றலாம். ஆனல் தாமதிப்பது கூடவே கூடாது. சுகாதாரக் கந்தோர்களில் விசாரித்து இந்த மருந்துபோடும் இடத்தைத் தேடிச்சென்று இந்தப்பிள்ளைகள் இந்த மருந்தின் நன் மையைப் பெறச்செய்தல் வேண்டும். சயரோகத்துடன் பிள்ளைகள் பிறப்பதில்லை. பிறந்தபின்பே தொற்றுகிறது.
ஏற்றியபின் சம்பவிப்பன : மருந்து பாய்ச்சப்பட்ட இடத்தில் ஈ கடித்த வீக்கம்போல் ஒருசிறு வீக்கம் தோன்றும். சில நிமிடங் களில் அது மாறிவிடும். 10, 12 நாட்கள் செல்லவே அந்த இடம் சிவத்து மிளகு அளவு கட்டியாகத் தோன்றும். அது பின் பழுத்து சிதலும் வரக்கூடும். இரண்டு மூன்றுமாதங்களில் அது தானகவே மாறிவிடும். ஒரு வைத்தியமும் தேவைப்படாது. ஆனல் அழுக் குப்படாது பாதுகாக்கப்படல்வேண்டும்:
2. ஏற்புவலி, தொண்டைக்கரப்பன், குக்கல் : இவை மூன்று நோய்களையும் தடுக்கக்கூடியதாய் ஒருமுறையிலேயே ஒரே ஊசியால் பாய்ச்சக் கலந்த மருந்துகள் உண்டு. (Triple Waccine) இரண்டு மாதங்கள் சென்ற குழந்தைக்குக் கொடுக்கலாம்; தாயிடமிருந்து பெற்ற இயற்கையான நோய்த்தடைச் சக்தி, ஏற்பு, தொண்டைக் சுரப்பனைப் பொறுத்தளவில் பிள்ளைக்கு ஆறுமாதங்கள்வரையுண்டு. குக்கலைத் தடுக்கும் சக்தி அறவே கிடையாது. குக்கல் சிறுகுழந்தை களைக் கொல்லும் நோய் என்றே சொல்லல் வேண்டும். கிராமத் தில், அயலில் குக்கல்நோயிருந்தால் இரண்டுமாதங்கள் கழியு முன்பே கொடுத்தல் வேண்டும், முதல் ஊசிபோட்டு நாலு

தாயும் பிள்ளையும் 87 தொடங்கி எட்டுக்கிழமைகளில் இரண்டாம் ஊசிபோடுதல்வேண் டும். மூன்ரும் ஊசியும் இரண்டாம் ஊசிபோட்டு நாலுகிழமைகள் கழிந்தபின் போடலாம். நாலு மாதங்கள் கழியவேண்டும் என்று சொல்லும் நிபுணரும் உளர். எதற்கும் ஊசிபோடும் வைத்தியர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். பிந்துவதால் தீங்கில்லை; தடைச்சக்தி குறைவதும் இல்லை; மூன்ருவது ஊசிபோட்டு இரண்டு வருடங்கள் கழிந்தபின் பின்பும் ஒன்று போடுதல்வேண்டும். அது ஏற்பும் தொண்டைக்கரப்பன் தடைமருந்தும் கலந்ததாய் மாத் திரம் இருக்கலாம். குக்கல் தடைமருந்து தேவையாகாது. வயது செல்லச்செல்லக் குக்கல்வருவதற்கு ஏது இயற்கையாகவே குறைந்து கொண்டுபோகும்.
மருந்து பாய்ச்சிய இடத்தில் சிறிது வீக்கம் உண்டாகக்கூடும் சிறிது காய்ச்சலும் ஏற்படும். டிஸ்பிரின் அல்லது அஸ்ப்பிரின் அல்லது பனடோல்போன்ற குளிகையில் காற்பங்கு போதுமானது காய்ச்சலைக் கட்டுப்படுத்த சிறிது காய்ந்தாலும் வலிப்பு ஏற்படக் கூடும்; குழந்தைகளில் இளம்பிள்ளைவாத நோய் அயலில் பரவ லாய் இருந்தால் இந்த ஊசிமருந்துகள் பாய்ச்சுவதைப் பின்போடல் வேண்டும். எதற்கும் இதற்கென வைத்திருக்கும் அரசினர் வைத் தியரைக் கலந்து ஆலோசித்தல் வேண்டும்.
3. இளம்பிள்ளைவாதம் : பிள்ளையின் சீவியத்தைப் பாழாக்கும் இக்கொடிய நோயைத் தடுக்கும் மருந்து மூன்ரும் மாதம் கொடு படவேண்டும். தொடர்ந்து ஆறுகிழமைகளால் எட்டுக் கிழமைகள் முடியமுன் இரண்டாம் முறை கொடுபடவேண்டும், 9p(U5 @).i (D5 L — (UDLqவில் பின்பும் ஒருமுறை கொடுபடவேண்டும். நோய்த்தடுப்பு மருந்து கள் யாவும் சுகாதாரக் கந்தோரில் சுகாதாரவைத்தியரிடம் சுகமாய் கட்டணமெதுவுமின்றிப் பெறலாம். கவலையீனத்துக்கு இடம் கொடாது அவரிடம்போய் இவைகளைப் பெறுவது பெற்ருரின் தலை யாய கடனுகும். மேல்வகுப்பினரும், நடுவகுப்பைச் சேர்ந்தவர் சிலரும் இவைகள் கொடுப்பதில் அக்கறை எடுப்பதைக் காணலாம். பட்டகாலே படும் ' என்பதற்கேற்ப ஏழைகளுக்கே இவை இருக் கின்றன; இலவசமாய்ப் பெறலாம் என்பது தெரியாதிருக்கின்றது. சுகாதாரப் பகுதியினர் அவர்களுக்கு இவை கிட்டத்தக்கதாய் பிரசாரம்செய்வதுமாத்திரமன்றி அவர்கள் அதைப்பெறவும் வசதி செய்யவேண்டும்.
4. அம்மை ? இதற்குரிய தடுப்புப்பால் குற்றுவதை இந்தியா வில் பிறந்த நாட்களிலேயே செய்கிருர்கள். முதற்கிழமையிலேயே பிரசவசாலைகளில் கசரோகத் தடுப்பூசிபோட்டு அம்மைப்பாலும் கட்டிவிடுகிருர்கள் அம்மை பரவலாய் உள்ள இந்தியாவில் இந்த

Page 55
8& தாயும் பிள்ளையும்
நடைமுறையைத் தொடர்ந்ததால் தக்கவெற்றியும் பெற்றிருக் கிழுர்கள். சென்னைமாநகரில் அம்மை அறவே ஒழிக்கப்பட்டதென் றும் சொல்லலாம். இலங்கையில் இந்நோய் இல்லாதபடியால் ஆறுமாதங்கள் கழித்தும் கட்டலாம். நாட்டில் நோய்கண்டால் முன்பே கட்டவேண்டும்; பால்கட்டிய இடத்தில் 10, 12 நாட்க ளில் சிறு பருப்போல் தோன்றிப் பழுத்து அயர் உண்டாகிக்காய்ந்து அழியாத காயமாகும். கிறிது காய்ச்சலும் தோன்றக்கூடும். பன டோலோ, அஸ்பிரினே அல்லது டிஸ்பிரினுே கொடுக்கலாம். குளிகை யின் காற்பங்கு போதுமானது. புண் தானேகாயும் தன்மை உடை யது; இலைகுழை அரைத்துப்போடுவது பிள்ளையைத் தீங்குக்குள் இழுப்பதாகும். ஏற்புநோய்தன்னும் ஏற்படக்கூடும். புண் தான கவே மாறமறுத்துப் பெரிதாகும் தன்மை ஏற்பட்டால் வைத்தி யரை நாடவேண்டும். பால்கட்டுபவர் சொல்லும் புத்திமதிகளை ஏற்று அதன்படி நடத்தல்வேண்டும். பால்கட்டும்பொழுதே செய்ய வேண்டியதைக் கேட்டு மனதில் பதித்துக்கொள்ளல்வேண்டும். பால் கட்டுக்கு ஒவ்வாதவர்கள் : சொறி, சிரங்குடைய தாயின்சேய், இவைகளையுடைய சேய், மற்றையது காய்ச்சல், இருமல் உள்ள
ܬܪ
5. சின்னமுத்து, செங்கைமாரி. கூகைக்கட்டு, பொக்கிளிப்பான் : இவற்றுக்குக்கூடத் தடுப்புமருந்துகள் வந்துவிட்டன. எங்கு வீசு வது என்று ஏங்கவைக்கும் நாபிக்கொடியுடன் தள்ளப்படும் பிள சன்ரு என்னும் அந்தச் சதையும் அதிலிருந்து பெருகும் இரத்த மும் கவனமாகக் கெடாது பாதுகாக்கப்பட்டுப் பிரசவ வைத்திய சாலைகளிலிருந்து மருந்துண்டாக்கும் நிலையங்களுக்கு அனுப்பப் படுகின்றன. அவைகள் இந்தத் தடுப்புமருந்துகள் உண்டாக்க உதவு கின்றன. உலக சுகாதார நிறுவனம் அம்மருந்துகளைத் தடுப்புக்கு ஏற்றவையென்று எப்போதோ ஏற்றுக்கொண்டுவிட்டது. மேற்கு நாடுகளில் இம்மருந்துகள் பயன்படுத்தவும் படுகின்றன. இங்கும் சிறிது காலங்களில் ஏற்கப்பட்டுப் பயன்படுத்தக்கூடும். எனவே தாய் ஒரு தங்கச் சொத்து சேயைத் தருவது மாத்திரமல்லச் சேயைத் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் நாம் நினை யாதமாதிரியே உதவுகின்ருள் நிலத்துள் புதைக்க மனமில்லாது ஆலில் தொங்கவிடப்படும் அந்தத் தாமரை இலைபோன்ற " பிள சன்ரு நோய்த் தடுப்புமருந்துகள்செய்ய உதவுகின்றது ! g2G) கில் கழிக்கக்கூடியன ஒன்றுமே இல்லை என்பதை ஊன்றியோசித் தால் நாம் உணர்வோம்.
வையகம் வாழ வழிவகுப்பவளே தாயே!
வணக்கம்3 ീ8 ജ് 1 . . . .


Page 56


Page 57
<> K > K > K > K > K2KS KAIKI><><
பிரசவ நிலையத் திறப்
இவை போததிைலேயங்களாகவும்
sagasakakas 223:23akakakakazar:
சோதிடப்பிரகாச அக்யெந்திரசா%
 
 

Noor-------:>|<>[:>-->(ci>:1:2:3으.
s.
·
·
·
· , , , |×
புவிழா
ー
******)
E.
ki><>a<>