கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளம் பெண்ணோயியல்

Page 1

魯
 ̄ ܐ .
-
3_prិយម្បិ-_g. F;
a

Page 2


Page 3


Page 4

இளம் பெண்ணுேயியல்
பேராசிரியர் அ. சின்னத் தம்பி

Page 5
பதிப்பு: முதலாவது - 1982
உரிமை ஆக்கியோனுக்கு
い*2 \ 。
*z్నూలోని lleol2 . விலை ரூபா /-
அச்சுப்பதிவு: திருமகள் அச்சகம், சுன்னகம்.
பூரீ காந்தா அச்சகம், யாழ்ப்பாணம். கலாநிலையம் யாழ்ப்பாணம்.

தேசிய நூலகப் பிரிவு மாநகர நூலக சேவை
யாழ்ப்பாணம். +一
ஆக்கியோன்: பேராசிரியர் அ. சின்னத்தம்பி L. M. S. (Cey); F. R. C. S. (Edin) F. R. C. S. (Eng); F. R. C. O. G. (Girt. Brt.)
(D. Sc... Jaf.) Emeritus Professor University of Ceylon.
DANIEL CHAPMAN VAITILINGAM COMMEMORATION COMMITTEE.
1982.

Page 6

(P356 HONU
பெண்ணுேயியல் என்ற சொற்ருெடர் பல கருத்துக்களே அடக்கியுள்ளது. இவற்றுள் ஒரு பெண்ணை வருத்தும் பொது நோய்கள், அவற்றின் தடுப்புமுறை கள், இரசாயன மருந்துமுறைகள் அகச் சுரப்பியின் சுரப்பு மருந்து முறைகள், அறுவை வினைகள் முறைகள் முதலியன அடங்கும். ஆகவே பெண்ணுேய் அறிவியலை இரு பாகங்களாக எழுதி வெளியிட எண்ணியுள்ளேன். இவ்வெண்ணம் நிறைவேறப் பல இடர்கள் தடையா யிருந்தன. இக் காலத்தில் நூல் வெளியிடுவதில் உண் டாகும் இடர்களே அத்துறையில் ஈடுபடுவோரே நன் கறிவர். எனவே பரந்த பெண்ணுேய் அறிவியலின் ஒரு பகுதியை எழுதி "இளம் பெண்ணுேயியல்' என்னும் பெயரோடு இப்போது வெளியிடுகிறேன்.
மருத்துவ மாணுக்கர்க்கும் இளம்பட்டதாரி மருத்துவர்க்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகை யில் எளிய தமிழில் செவ்வையாக விளங்கும் முறையில் எழுதியுள்ளேன். இந்நூல் வெளிவரப் பெரும் உதவி செய்த திரு. க. ஞானச் செம்மல் அவர்களுக்கு என்னு டைய நன்றி.
ஆ. சின்னத் தம்பி தேசிய நூலகப் | ୩fiୋ LDITF53 D. ごT@5 (୫#ୋ}ଛି! யாழ்ப்பாணம்

Page 7

பொருளடக்கம்
இயல்:
(1)
(2)
(3)
(4)
(5)
பெண்ணின் கூபகவுறுப்புக்களின் கட்டமைப்பியல்
புறத்துப் பிறப்புறுப்புக்கள் - யோனிம்டல் அகத்துப் பிறப்புறுப்புக்கள் - சூலகங்கள் சூலகத்தின் குருதி வழங்கலும் நரம்பூட்டலும் கருப்பை
வயிற்றுச் சுவரினதும் கூபகத் தளத்தினதும் தாங்கல் செய்யும் கட்டமைப்புக்கள்.
பரீனத் தசைகள்
முக்கோண இணையம் கூபக் பிரிம்ென் தகட்டுத் தசைகள் புடைதாங்கி குயிவலகுத் தசை
L iħaffu u Lib
கூபக பட்டிப்பும் கலவ இழையமும் கருப்பைக் கழுத்து குறுக்கிணையங்கள்
பெண்ணின் சலப்பையும் ஊறித்தாரையும் ஊறித்தரும்
F6) 16ö)L
ஊறித்தாரை
நேர்குடல்
கூபகத்தின் மூட்டுக்கள்
கூபகக் குருதிக் கலன்களும் நிணையக்கலன்களும், நரம்புகளும்
உயர் நேர்குடல் நாடி கூபகத்தின் நாளங்கள் கூபக உறுப்புக்களின் நினையவடிப்பு மேற்பரப்பு கவட்டு நிணையச் சுரப்பிகள் உள்புடைதாங்சி நினையச் சுரப்பிக்ள் வல்வம்
கருப்பைக் குழாயும் சூலகமும் கூபக்வுறுப்புக்களின் நரம்பு வழங்கீடு தன்னியக்க நரம்புத் தொகுதி
முளையவியலும் பெண்ணின் பிறப்புறுப்புக்களின் தழைப்பும் வளர்ச்சியும் ஊறுநீரியுறுப்புக்களினதும், பிறப்புறுப்புக்களினதும் முளைப்பும் வளர்த்தியும், வளர்ச்சி மலர்ச்சியும் பிறப்பிச் சுரப்பிகள் பிறப்பிக் கான்கள்
Laish
(1-32)
2
8
2
16
(88-46 )
37
39
4.
42ے
43
45
4 6
(47-53) 47 4&
50
5.
(54-Ꮾ8)
57 58 60 60
61
62
63
66
(69-75)
70
72 73

Page 8
பொருளடிக்கம்
இயல் E ješ5 Lib:
(6) பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் (76-102) மனிதனிற் காணப்படும் நிறமூர்த்தங்கள் 79 மூலவுயிர்க்கல முதிர்வு மாற்றங்கள் 8 I கருவுருவின் பாலின வியர்த்தம் 82 நிறமூர்த்தப் பிறழ்வுகள் 83 கிளைன் பெல்ரர் ஒருங்கோட்டி 90 சனணி இடைப் பாலினர் 9 I அரைகுறை ஆணுக்கல் 92 புறமிருந்து வரும் ஒம்ோனுல் பெண்களுக்குத் தூண்டப்படும் ஆணுக்கம் 95 இழகிழ்ந்த ஆணுக்கம் 96 நோயாளரின் வைத்தியப் பார்வை முறைகள் 93 கீழப் போகுளையும்; விதைகள் இறங்கா நிலையும் Ol கிறெயின் பெல்ரரின் ஒருங்கோட்டி 1. Of
(7) இனப் பெருக்கமும் பரியகமும் (103-115 முற்பக்க கபத்தி ஓமோன்கள் 103 கீழ்பரியகம் 105 பின்னூட்டுப் பொறிமுறைகள் 107 பித்துயித்தறி 109 பூப்புப்பருவரும் 7 13 கருப்பநிலை 114 மாதவிடைவு g.
(8)
நரம்பு அகச்சுரப்பி, பித்துயித்தறி, சூலக ஒமோன்பிள் (116-127) ஆகியவற்றினது ஒருங்கிணை வினோங்கள்
கூம்புருச்சுரப்பி 6 இலூற்றினுக்க செமோன் I 7 புடகத் தூண்டி ஒம்ோன் 17 சனணியூட்டிகள் II 7 யோனி 1 2 1 புருேசெசுற்றேன் 122 முலைக்ள் 122 சூலகத் தெரொயிட்டுக்கள் 125 ஈத்திரசன்கள் I25 கோறியன் சனனியூட்டி ஓமோன் 127 மனித கோறிய சனனியூட்டி 127
மனித சூல்வித்தக இலற்றசன் ஓமோன் 127

பொருளடக்கம்
இயல்:
(9)
(10)
(11)
(12)
சூலகங்களின் அல்குதலின் அறிகுறிகள் 141) மாதவிடைவுக் காலத்தில் காணப்படும் நோய்களின்
அறிகுறிகள் 1 εί மாதவிடை வும் சனணிகள் அல்குகாலப் பருவமும் 142 முல்லர் கான்களின் பிறழ்வுகள் 149 கருப்பைப் பிரிசுவர் 1 56 அல்துளையுயா யோனிப்பகுதி 158 யோனிக் குறுக்கு மென்சவ்வு 159 கருப்பையும் யோனியும் இல்லாதவர் 1.59 சூலகம் 164 கழிவு அறைப் பிறழ்வுகள் 17 1 ஊறுநீரிப் பிறழ்வுகள் 172
அல்மாதயிரிவுயா (173-198) உடற் ருெழிலியல் அல்மாதயிரிவுயா 17.3 கீழ்ப்யரியகம் 7 15 பித்துயித்தறி 177 சூலக அல்மாதயிரிவுயா 178 மிதவிஞ்சிய அந்திரசனுக்கம் 180 ஈத்திரசன்கள், புருேசெசுற்ருேன் 80 கருப்பை அல்மாதயிரிவுயா 18 அகச்சுரப்பிப் பிறழ்வுகள் 183 ஊட்டவளக்குறைபாடுகள் 五84 சாரகச்சோதனை 186 யோனிக் கவலச் சோதனை 87 கருப்ப நிலைச் சோதனை 188 நிறமூர்த்தப்படினங்கள் 188 கட்டிளம் பருவகால அல்மாதயிரிவுயா 190 சுரப்பிகளின் பிறழ்வுகள் 193 குறைமாதயிரிவுயா 96.
பக்கம்:
வளர்ச்சிப் பக்குவமும் இளமைக் (கட்டிளம்) காலமும் (128-137) வளர்ச்சிப் பக்குவம் 128 மாதவிடாய் - 132
கருக்கட்லும் கருப்பநிலையும் (138-148) கருப்பநிலை 138
பெண்ணின் பிறப்புச் கவட்டினதும் சூலகங்களினதும் (149-172) பிறழ் உருவாக்கங்களும் தழைப்புகளும்
இருந்திட்டொருக்கால் நிகழ்மாதயிரிவு 197

Page 9
இயல்:
(20)
(21)
பொருளடக்கம்
ஊறுநீர் அடக்கலாமை
அடர் அடக்கலாம்ை
இச்சை வழித்தசை
ஊறுநீர்த் தேக்கம் கூர்ப்புத் தேக்கத்தையுண்டாக்கும் பொறிமுறை ஊறித்தாரைப் புழையடைப்பு
மீதித் தேக்கம் ஆணசு அரிப்பு
, , 1, $ଗtଗ|
மலடும் (கருவளமின்மை) குறை கருவளமும் சமூக வாழ்வும் கல்யாண வயதும் Il Gi) GTŻGYT GIGIT Lib ஆண்களில் தோன்றக்கூடிய ஏதுக்கள் பீனத்தின் அமைப்புப் பிறழ்வுகள் பெண்ணில் காணப்படும் பிழை பாடுகள் கூபகவுறுப்புக்களின் நோயியல் மாற்றங்களால் ஆகிய மலட்டுநிலை
கழலையங்கள் யோனியின் வெறுப்பும் எதிர்ப்பும் கருப்பையின் வெறுப்பும் எதிர்ப்பும் முயக்கப் பிழைபாடுகள் முயக்கம் நிகழ்த்த வேண்டிய காலக்கூறும் நிகழ்த்த வேண்டிய தடவைகளும் உராய்வு நெய்கள் கருப்பத்தடை முறைகள் மலட்டுநிலை ஆராய்வு
உடற் சோதனை
ஆண் மலட்டுநிலை
Lj95 Liby
309-322
310
3 II
3 14
315
316
3 18
3.18
岛19
323-378
岛24
327
3.3 II
334
325
337
339
岛43
343
344 347
349
岛5】
357.
3.54
356
பெண்ணின் கருக்கட்டல் வளத்தை ம்தீப்பீடு செய்தல் 359
கேசு ருெக்மில்லர் அத்துமீறிப் புகுகைச் சோதனை
ஒல்கு பேமுயா விதை நாளப் பரிவிறுக்கம் பேமினற் பொறிமுறையை அடக்கல் சூலிடலைத் தூண்டு வித்தல் மலட்டு நிலைமையைத் தடுத்தல்
363
365
369
370
270
376
கணவனின் சீமனை செயற்கை முறையால் உள்ளேற்றல் 377

இயல்:
பொருளடக்கம்
(22) தடுங்கோள் (கருப்ப)
(23)
சூலகத்தின் அளவைத் திட்டப்படுத்தல் கருப்பநிலை தடுப்புமுறைகள் கீருக்கட்டலுற முடியா மாதச் சுழற்கூறு பீனவுறைகள் ஒமோனலாகிய சூல் கொள்ளல் எதிர்ப்பு ம்ாதச் சுழலை ஏற்ற வகையில் மாற்றல் ஆண்மையை வலுப்படுத்தும் குளிகைகள் உயர் எடைக் குளிகைகள் முயக்கத்திற்கு பின் விடியற்காலைக் குளிகை கருப்பையக சூல் கொள் எதிரிப் பொருட்கள் டல்கன் கேடயம் கருப்பையக சூல் கொள்ளெதிரிப் பொறியை கருப்பைக் குழிக்குள் புகுத்தல்
கருப்பை அகவணி சூல் கொள்ளெதிரிப் பொருட்கள்
கருப்பைக் கழுத்து வெளிவாயை மூடும் பொறிகள்
LID GN)L LITš55 h) அறுவை வினைகள் வயிற்று நோக்கியூடாக மலடாக்கல்
Lig, b:
379-417
379 383 387
390
392
398 403
405 4.08 4 Ι0
410 4 Ι 4 4 15
418-420
4】9 420

Page 10
இயல்:
(13)
(14)
பொருளடக்கம்
கருப்பை, யோனி இவற்றில் நிகழும் பிறழ்வுகளும்
சாரசு வகைகள் அல் குலிடற்காரணங்கள் நுழைவாயிற் குருதி வடிதல்
யோனி கருப்பைக் கழுத்துக் கலங்களின் சோதனை
இளம்படு மங்கையில் தைருெயிட்டு கருப்பை நோய்க் குருதிவாரி கருப்பைத்துமி பூப்புப் பிற்காலக் குருதிவாரி மாதவிடைவுக் குருதிவடிதல்
இடர்மாதயிரிவு கூபக நெருக்கம் உண்மை இடர் மாதயிரிவு கருப்பைக் கழுத்துத்தடை கருப்பைக் குறைவிளேசலுயா தசை அல்லிசை வாக்கம் ஒமோன் தீர்வு கருப்பையின் உருக்கேடுகள் வழிவந்த இடர்மாதயிரிவு மாதபிரிவுக் கன்னஇடி
15) பாலின உந்தல்களும் மணம் புரிதலும்
(16)
உடற் புணர்ச்சி மணவினையை முற்றும் செய்தல் மாதயிரிவுக் காலத்தில் கலவி கருப்பை காலத்தில் கலவி புணர இயலாயுயாரும் இடர் புணர்ச்சியுயாவும் குறுகியயோனியுறை
கருப்பைப் பின் திருப்பம்
பீனவலுவின்ம்ை
யோனி யொருக்கம்
யோனிப் புகுவாய் இடர்
விறைப்பம் விறைப்பத்தை உண்டாக்கும் ஏதுக்கள் கச்சு இன்பம் எய்த இயலாமை ஆணில் தோன்றும் கலவியிடர்கள்
Idhe), Lh):
(199-223)
199
208 229
2 I I
213
215
217 220
221
(224-241)
266 227
228
228
228
230
232
232
289
(242-162)
244
248
249
250
25】
257 253
259 261
292
(268-275)
264
268
269

இயல்:
(17)
(18)
(19)
பொருளடக்கம்
Lidigith:
செயற்கை சீமன் உட்புகுத்தல் 273 முன் முதிர் சீமன் வெளிவீசல் 273 நிமையினையுயா 274 தற்பாலினருடன் பாலுறவு 27.4 எதிர்ப்பாலினராக விருப்பவுயா 275
யோனியிரிவுகள் (276-228) கழுத்துச் சுரப்பிகள் 277 கருப்பைச் சுரப்பி 277 பலோப்பியக்குழாய் 278 நோயியல் இரிவுகள் 279 வல்வப்பிரதேய அரிப்பு 283 நேர்குடல் ஏனசு நோய்களும் ஏனசு நோய்களும் குடலில் புழுக்களின் தாக்கமும் 岛岛组 േജ് நோயியற் காரணிகள் 2&5
நாரிவலி (289-298) கருப்பை இறக்கம் 292 கூடக அழற்சி 292 கருப்பைப் பின்திருப்பம் 292 கருப்பைக் கழுத்தழற்சி 293 கூபகக் கழலையங்கள் | 29.3 கூடகவுறுப்புக்களால் அல்லாத நாரிவலிக்கான
காரணிகள் 29 ja
ஊறுநீரி அறிகுறிகள் (299-308) பொலி நீர்த்தலுயா 299 ஊறித்தாரை நோய்கள் 360 நோயியல் தோற்றங்கள் 301 ஊறித்தாரை அகட்டல் 304 பரியேன அழுத்தம் 305 துலப்பைப் புண்கள் 305 ஊறுநீரிக் கூபக-ஊறுநீரியழற்சி 305 ஊறுநீர்ப்பை யழற்சி 306 306
நீரூறு போதிை

Page 11
மகிழ்ச்சியுடனும் அன்புடனும் நான் கல்வி, புகட்டிய எண்ணற்ற மாணவர் கூட்டத்தின் ருக்கும் இளம் பெண்களுக்கும் பெருமையுடன் அரும் பெரும் பணியாக இந்நூலே உரித்தாக்கு கின்றேன்.
 

இளம் பெண் நோயியல்
a (3, 5
இயல் 1
பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல்
@][jးမှ ၉၇ံ ကြီးမှ பிறப்புறுப்புக்களை வழக்கமாக இரு பிரிவுகளாக வகுத்து விபரிப்பர். அவை புற உறுப்புக்கள், அக உறுப்புக்கள் என்பனவாம். புற உறுப்புக்களாவன: வேனில் மேடு, பேரிதழ்கள், சீறிதழ்கள் (சொண்டுகள் எனவும் கூறுவர்), தலைவாயில் கிளைத்துரு, தலே வாயில் மென்திரை தலைவாயில் பெருஞ் சுரப்பின், தலை வாயில் சிறுசுரப்பிகள் ஆகியனவாம். இவற்றை வல்வம் (யோனி முகம்) எனவும் கூறுவர். யோனியுறையானது வல்வத்தின் ஒர் உறுப்பு அல்லாதபோதும் அதை அதனுள் சிலர் அடக்குவர் ஊறித் தாரை, ஊறித்தாரைவாய் (துளை), (இஸ்கீனின்) பரவூறித்தாரைச் சுரப்பிக் கான்கள்-இவை பிறப்புறுப்புக்களின் கூறுகளாக இராத போதிலும், பெண்ணுக்கு நோயையுண்டாக்குவதினுல் அவ் வகுப் பினுள் அடக்கப்படும் . அகப் பிறப்புறுப்புக்களாவன: சூலகங்கள், பலோப்பியாக் குழாய்கள், கருப்பை, யோனி மடல் ஆகியனவாம். கூபகமும் கூபகவுறுப்புக்களும் சரியான அமைவிலிருப்பதன் பொருட்டுப் பல கட்டிழையங்கள் அவற்றைத் தாங்கும். அவை:
i, பரீனம் (இதன் தசைகளும் பட்டிப்புகளும்) i. கூபகத் தசைப்பிரிமென்றகடு (குத உயர்த்தி, குயிலலகுத்
தசை, பேரியுருத்தசை, இவற்றின் பட்டிப்புகள்) i. கூடக அகப்பட்டிப்பு (இதன் பெறுதிகளான அகலவினை
பங்கள், கருப்பை, திருவென்பு, இணையங்கள்) iy, உருண்டை இணையங்கள் ஆயனவாம்.
இப் பிந்தியன தாங்கு இணையங்களாக அமைந்தபோதி லும் பிறப்பில் பிறிதொரு பகுதியிலிருந்து பெறப்படுவன

Page 12
660) g Lu Life 1
வெளிப்புற பிறப்புறுப்புக்கள் 1. வேனில் மேடு, 2. முன்ருேல், 3. கிளேத்து 15 முகை, 4. கடிவாளம், 5. பேரிதழ், ,ே சிற்றிதழ், 7. ஊறித்தாரை போகுழை, 8. யோனிவாய், 9. பாதோலின் சுரப்பி, 10. மென்திரை, 11. சிற்ருேடக் குழிவு, 13. பிற்பக்கக்கூடல், 18. பிற்சொண்டுக் கவர், 14. குதத் துவாரம்
புறத்துப் பிறப்புறுப்புக்கள் வரைபடம் 1, ஒரு செவ்வன் மூத்த பெண்ணின் புறத்துப் பிறப் புறுப்புக்களைக் காட்டும். இவற்றுடன் வெளிஊறித்தாரைப் போகுழையும் , பரினமும், குதமும் (ஏனசு) காட்டப்பட்டுள்ளன.
வேனில் மேடு (அல்குல் மேடு) ; இது பூப்பிணைப்புக்கு மேலாகக் கிடக்கும் கொழுப்பிழையத் திட்டாகும். உயரவாக - வயிற்றுச் சுவர்க்கொழுப்பிழையத்துடன் தொடர்புறும், கீழாக இது பிரிந்து பேரிதழ்களுடன் தொடர்புறும். பெண்களில் பூப்படையும் பருவத்தில் இம்மேட்டில் மயிர்கள் முளைத்து அடர்த்தியாகும். இம் மயிர்ப்
 

பெண்ணின் கூபகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் a
பரப்பின் உயர் விளிம்பு, சரி நேர் குறுக்காகவிருக்கும். ஆண்களிலோ, அல்லது ஆண் தன்மை கூடியவர்களிலோ இது முக்கோண வடிவமடைந்து மயிர்கள் பொக்குழை நோக்கி வளரவுங் கூடும்.
பேரிதழ்கள்: இவை ஊருேப்பிறப்பிப் பிளவைச் சுற்றிப் பக்கத்துக்கு ஒன்முகக் கிடக்கும் பெரிய, உருண்டைத் தோல் மடிப் புக்களாம். உயரவாக இவை வேனில் மேடுடன் தொடர்புறும், இவற்றின் கீழ்முடிவிடங்கள் பரீ(யே)னததுடன் ஒடுங்கும். இவற்றின் கீழ் முடிவிடங்கள் ஒரு மெல்லிய தோல் மடிப்பால் இணைக் கப்படும். இதைப் பிற்பக்கக் கூடல் (பிணைப்பு) என்பர். பொதுவாக இப் பேரிதழ்கள் ஒன்று மற்றென்றுடன் அணைந்து தலைவாயில் உறுப்புக்களை முற்ருக மறைக்கும். இவ்வுறுப்புக்கள் ஆணின் விதைப் பையை (காரோ டம்) அமைப்பிலொக்கும்.
ஒவ்வொரு பேரிதழுக்கும் இரு பரப்புகளுண்டு. ஒன்று பக்கல், மற்றையது நடுசார் பக்கல் மேற்பரப்பு குவிந்திருக்கும்; சிறிது கருமையுடையது. மேற்பரப்புத் தோலுள் எண்ணற்ற பெரிய நெய்ச் சுரப்பிகளும் வியர் சுரப்பிகளும் உண்டு. இதன் பிற்பகுதியைத் தவிர்ந்த ஏனைய பகுதிகள் பூப்புக் காலத்துக்குப் பின்பு மயிர்களாற் போர்க்கப்பட்டிருக்கும் நடுசார் தட்டையான பரப்பானது ஊருே பிறப்பிப் பிளவின் பக்கல் எல்லையாகும். இரு தொடைகளும் அண் மித்திருக்கும்பொழுது இப்பரப்பு இதற்கு ஒத்த மற்றைய பரப்புடன் நெருங்கியிருக்கும். இப்பரப்பைப் போர்க்கும் தோல் மெல்லியதும் மழமழப்பானதுமாம். இதற்கு மயிர்களில்லை; நெய்ச் சுரப்பிகளுண்டு.
ஒவ்வொரு பேரிதழும் கொழுப்பிழையத்தையும் சிற்றிடவிழை யத்தையும் சில உரித்தோற்றசைநார்களையும் அடக்கியிருக்கும். கருப்பையின் விருத்தவிணையம் (உருண்டை இணையம்) பக்கத்துக்கு ஒவ்வொன் ருகும். இது பேரிதழ்களில் உள்ள நார் - சிற்றிடவிழையத் துடன் ஒருங்கிணையும் வயிற்றுச் சுவரின் முற்பக்கத்துக் கீழ்ப்பகுதி யின் மேற்பரப்புப் பட்டிப்பும் ஆழ்பட்டிப்பும் பேரிதழுள் உள்ள நாரிழையங்களுடன் ஒன்றுபடும்.பேரிதழ்களுக்கிடையிலுள்ள பிளவை ஊருே-பிறப்பிப் பிளவென்பர். இது நிமிர் கரண நிலையில் முன்பின் திக்கில் கிடைக்கோட்டிற் கிடக்கும். பேரிதழின் மையப்பகுதி யில் கிடக்கும் கொழுப்பு உடலமானது கவட்டுக் கால்வாயின் கொழுப்புப் படையுடனும் பரிவிரியப்புறத்து நார்-சிற்றிடவிழையத் துடனும் இடையருத் தொடர்புடையது.
கருவுருவில் கொணுடுகளுடன் தொடுக்கப்பட்ட ஆட்சி நாண் ஆனது பின்னர் கருப்பையின் விருத்த இணையமாகவும் சூலக இணைய மாகவும் அமையும். கருவுருவின் வளர்த்திக் காலத்தில் விருத்த

Page 13
| 4 இளம் பெண் நோயியல்
இணையம் முன் செல்லவும் பரிவிரியத்திலிருந்து ஒரு குழாய் மடிப் பானது கிளம்பி விருத்த இணையத்துடன் அணைந்து (மடலுறை முளையெனப்படும்) வயிற்றுச் சுவர் அடுக்குகளூடாகச் சிறிது தூரத் துக்குக் கவட்டுக் கால்வாய்க்குட் செல்லும். பொதுவாகப் பெண் ணுனவள் மூப்படையவும் இம் மடலுறை (நுக்கின் கால்வாய்) அழிந்து போகும். முழுதாக நிலைத்திருப்பின் கவட்டு ஏணியா அல்லது பேரிதழ் ஏணியா உண்டாவதற்கு வாய்ப்பளிக்கும். முற்ருக அழிந்துபோகாது ஒரு பகுதி எஞ்சியிருப்பின் நுக்கின் கால்வாய் ஒதம் உண்டாகக் கூடும். விருத்த இணையத்துடன் அருமையாக இம்மட லுறை அணைந்து காணப்படுவதே இருந்திட்டொருக்கால் தோன்றும் கவட்டுக் கால்வாயினது அல்லது பேரிதழினது கருப்பையகவணி ஒமாவுக்குக் காரணமாகும். விருத்த இணையம் சூலகவாட்சி நாணின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைவதால் இருந்திட்டொருக் கால் சூலகமும் கவட்டுக் கால்வாயூடாக - ஆணின் விதை இழுபடுவதுபோல்-இழுக்கப்பட்டுப் பேரிதழுள் கிடக்கும்.
மிக அருமையாகக் காணப்படும் ஆண் பேடிகளில் ஆணின் விதையானது பேரிதழ்களுள் இழுபடக் கூடும்.*
நரம்பு வழங்கல் : ஒவ்வொரு பேரிதழின் முற்பக்கப் பகுதியும் புடைதாங்கி கவட்டு நரம்பாலும், பிற்பகுதியானது நாண நரம்பின் கிளைகளாலும், தொடையின் தோல் நரம்பின் பிற்பக்கப் பகுதியின் பரீனக் கிளையாலும் நரம்பு வழங்கல் பெறும்.
குருதி வழங்கல் : தொடை நாடியின் புறத்து நாணக் கிளை களாலும் உள்நாணக் கலங்களின் இதழ்க்கிளைகளாலும் வழங்கப் பெறும்.
சீறிதழ்கள் : இவை பக்கத்துக்கு ஒன்ருக நெட்டாங்காகக் கிடக்கும். இவை மிகச் சிறியனவும் இடுங்கியவையுமாம். அவை பேரிதழ்களுக்கிடையிலுள்ள பிளவில் முற்ருக மறைபட்டிருக்கும். அவற்றின் பிற்பகுதிகள் பருமனில் சிறுங்கிப் படிப்படியாகப் பேரிதழ்களின் நடுசார் பரப்புடன் இணையும். இளம் பெண்களில் சிறிதளவு முனைத்திருக்கும். குறுக்குத் தோல் மடிப்பானது சீறிதழ்
*என் நீண்ட கால அனுபவத்தில் 3 பேரிதழ் ஏணியாக்களையும் சூலகத்தை அடக்கிய இரு கவட்டுக் கால்வாய் ஏணியாக்களையும் கண்டுள்ளேன். சில கருப்பையகவணி ஒமோக்களையும் பேரி தழில் கண்டுள்ளேன். உண்மை ஆண்மகடு ஒன்றை மட்டும்தான் காண நேர்ந்தது. ஆனல் விதை வயிற்றுக்குழியுள்ளேயே இருந்தது.
 
 
 

பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் 5
களின் பிற்பகுதி முடிவிடங்களை ஒன்முக இணைக்கும். இதை, இதழ் களின் கடிவாளம் (கவர்) என்பர் : இது பெரும்பாலும் பேற்று வேளையில் அல்லது புணர்ச்சி நிகழ்வில் கிழியும், முன்னுேக்கி ஒவ் வொரு சீறிதழும் பிரிவுண்டு இரு மெல்லிய பகுதிகளாகும்-ஒரு பக்கல் பாகமாகவும், ஒரு நடுசார் பாகமாகவுமாம். இரு சீறிதழ்களின் மெல்லிய பக்கற் பாகங்கள் கிளைத்துருவின் முகை மேலாக இணைந்து முகைக்கு ஒரு மூடுதோல் (முன்தோல்) மடிப்பை உருவாக்கும். இதைக் கிளைத்துருவின் முன்தோல் என்பர். நடுசார் பாகங்கள் ஒரு கூர்ப்புக்கோண ஒழுங்கில் ஒன்றுசேர்ந்து முகையின் வயிற்றுப்புறப் (முற்பக்க) பரப்புடன் இணையும். இதைக் கிளேத்துருக் கடிவாளம் என்பர். இச்சீறிதழ்களின் தோலானது பேரிதழ்களின் நடுசார்ப் பகுதியின் தோல் போன்றது. அவை மழமழப்பானவை. ஈரத் தகைமையுடையவை. அவற்றிற்கு மயிர்களில்லை. அவை கொழுப்பை படக்கா, நெய்ச்சுரப்பிகளும் சில வியர்சுரப்பிகளும் உடையன. அவற்றின் பக்கப் பரப்புகள் பேரிதழ்களுடனும், நடுசார் பரப்புகள் ஒன்று மற்ருென்றுடன் தொடுகை செய்யும் முறையில் அணைந்திருக் கும். சீறிதழ்கள் குருதிக்கலன் செறிவு மிக்கவை: மிகவும் உணர்ச்சி புடையன; நிமிரியிழையத்தையடக்கியிருப்பன. இவற்றிற்கிடையில் போனியின் தலைவாயிலுண்டு. இதழ்களைப் பக்கமாக விலக்கினுல் யோனியினதும் ஊறித்தாரையினதும் வாய்கள் நடுப்பகுதியிலிருப் பது தென்படும். சீறிதழ்கள் ஆணின் ஊறித்தாரைத் தவாளிப்பின் விளிம்புகளின் அமைப்பையொத்தவையாம்.
யோனி மடலின் தலைவாயில் : இத்தலைவாயிலானது சீறிதழ்களுக்கு இடையிலுள்ள இடமாகும். இதன் கூரையில், ஊறித்தாரை, யோனிமடல், தலைவாயிற் பெரும் சுரப்பிகளின் கான்கள் ஆகியவற் றின் வாய்களும் உண்டு. தலைவாயிற் குழிவு-இது யோனியுறை வாய்க்கும் இதழ்களின் கடிவாளத்துக்குமிடையிலுள்ள பள்ளமாம்.
ஊறித்தாரையின் வெளிவாய் ! யோனியுறையின் வாய்க்குச் சரி முன்னுக இருக்கும். ஏறத்தாழ கிளேத்துருமுகைக்கு ஒர் அங்குல அளவில் பின்னுகவிருக்கும். இவ்வாயின் தோற்றம், ஒரு செங்குத் தான சிறு கிழிவு அல்லது தலைகீழாகக் கிடக்கும் V வடிவமுடை யது. இதன் விளிம்புகள் முனைப்பானவை; ஒட்டிக் கொண்டிருக்கும். சிலரில் ஊறித்தாரைவாய்க்குப் பக்கத்துக்கு ஒன்ருக பரஊறித் தாரைக் கான்களின் மிகச் சிறிய வாய்கள் இருப்பது கண்ணுக்குத் தென்படும். இந்தக் குழிவின் முன் நுனியில் கிளைத்துருவுண்டு.
யோனியுறை வாய் : இதன் தோற்றம் மென்றிரையின் தோற் றத்தைப் பொறுத்து வேறுபடும். மென்றிரை சேதப்படாதிருப்பின், வாய் சிறிதாகும். இதைக் காண்பதற்கு மென்றிரையை நீளிப்புச்

Page 14
இளம் பெண் நோயியல்
செய்யவேண்டும். இது பிரிபட்ட பின்னர் வாயானது பெரிதா யிருக்கும். இதன் விளிம்பில் வட்டமாகச் சிறிய சவ்வு முளைகள் காணப்படும். இவை பிரிந்த மென்றிரையின் துண்டங்களாம் (மென்றிரை ஊன்றலைகள்). சிலரில் பிரிபடாத மென்றிரை வாயூ டாகச் சுட்டிவிரலைப் புகுத்த முடியும். இரு விரல்களை அது உட்புக விடின் அது ஒரளவுக்கு விரிப்புற்ற மென்றிரையெனக் கருத வேண்டும். அகட்டப்பட்ட யோனியுறையின் வெளிவாய் நீள்வட்ட வடிவமுடையது. இதற்குச் சுற்றிவரவுள்ள யோனிக்குழியானதுதான் இதன் மிக இடுங்கிய பகுதியா ம்.
மென்றிரை (மென்ற கடு) ; இது ஒரு பாதிப் பிறையுரு மெல்லிய சவ்வு மடிப்பாம். இது யோனிவாயை அரைகுறையாகவும் (மூன்றில் ஒரு பகுதியை) அல்லது பின்னக பாதிப்பரப்பையும் மூடும். இருந் திட்டொருக்கால் தலைவாயிலுக்குச் சற்றுக் கீழாகவிருக்கும் ஒரு மிகச் சிறிய பிறையுரு துவாரத்தைத் தவிர்ந்த ஏனைய பகுதியை இது முற்ருக மூடும். (இவ்வகை மென்றிரையையுடைய இரு மூத்த கலியாணமாகிய பெண்களை இவ்வாண்டில் மட்டும் கண்டுள்ளேன்). சிலரில் மென்றிரையானது வாயைச் சுற்றி துவாரம் சரி நடுவில் இருக்கும் விதத்தில் தோன்றும். வேறு சிலரில் இது வாயை மூடி யிருப்பதாயும் பல்துளைகளிருப்பதாயும் (கண்ணறை) காணப்படும். அருமையாக இன்னும் சிலரில் இது வாயை முற்ருக மூடும். மென் சவ்வானது இறுக்கமாக வெளிவாயை மூடாது சிறிது தளர்ந்து இருக்கும். பொதுவாக வாயானது மென்றிரை நடுவில் காணப்படும் ஒரு பிளவாகும். இதன் விளிம்புகள் மிகவும் நெருங்கி அண்மித் திருக்கும். மென்றிரைகள் உருவாகாத கன்னிப்பெண்களும் சிலர் உளர் என நூல்கள் கூறும் நான் கண்டிலேன்.
கட்டமைப்பு முறையில் இது ஒர் இணைய இழையத்தாலாகிய சவ்வாம். இதன் இரு பரப்புக்களும் படையுண்ட செதில் மேலணி யால் நுதிக்கப்படும். வயது முதிர்ந்த கன்னிப்பெண்களில் இது நாருண்டு தடித்து கிழிய முடியாத நிலையில் இருக்கும். பெரும் தலைவாயிற் சுரப்பிகள் (பா தோலின் சுரப்பிகள்) யோனிவாயில் இரு மருங்கிலும் பக்கத்துக்கு ஒன்ருகச் சீறிதழ்களின் பிற்பக்க முடிவிடமட்டத்தில் ஆழமாகக் கிடக்கும். இதன் கால்வாயின் வாய்கள் சீறிதழுக்கும் மென்றிரை ஊன்றலைகளின் கீழான பரப்புக்கு மிடையிலுள்ள வெளியில் கண் காட்சிக்குத் தென்படும் மிகச் சிறிய மியூக்கசு சுரப்பிகள் (தலைவாயில் சிறு சுரப்பிகள்) உள. இவற்றின் வாய்கள் தலைவாயிலில் ஊறித்தாரை வாய்க்கும் யோனி வாய்க்கு
முள்ள பிரதேசத்திற் காணப்படும்.
 
 

பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல்
கிளைத்துரு உருவவியல் முறையில் இது பீனத்துக்குச் சமனுனது. இதற்கு ஒர் உடலும் இரு காற்சிறைகளும் உடலின் சேய்மை யிடத்தில் ஒரு மிகச் சிறிய முகையுமுண்டு. உடலின் மிகுதியான பகுதி நிமிர் இழையத்தாலாகியது. இது ஒர் அங்குல நீளமுடையது. இது மடிவுண்டு, குறுகி முடிவிடத்தில் முகையால் மூடப்படும். உடலானது ஒர் அடர்த்தி நாரிழையப்பட்டிப்பால் போர்க்கப்பட்டு இதிலிருந்து இறங்கும் ஒரு முற்ரு காத பிரிசுவரால் இரு பல்குகைச் சடலங்களாகப் பிரிக்கப்படும். இவை கிளைத்துருவின் அடியில் வேருகப் பிரிந்து காற்சிறைகளை உருவாக்கும். இவை நாரிய பூப்புக் கிளை யென் பின் நடுசார் விளிம்பைச் சுற்றும் ஒரு தவாளிப்பில் கிடக்கும், இக் காற்சிறைகள் நாரியப்பல் குகைத் தசையால் (கிளைத் துரு உயர்த்தி) போர்க்கப்பட்டு பரியேன மென் சவ்வுக்கு மேலாகக் கிடக்கும். இவ்விரு நாரியப் பல்குகைச் சடலங்கள் தம் நடுநார் தட்டையான பரப்புக்களால் இணைவுற்று கிளைத்துருவின் உடலை யுருவாக்கும். கிளைத்துருவின் முதுகுப்புறம் பூப்பென்புப் பிணேப் புடன் ஒரு நார்த்தாங்கி இணையத்தால் இணைக்கப்படும், முகையும் உடலின் முடிவிடத்துடன் பொருத்தப்பட்ட ஒரு சிறிய நிமிரிழையத் திணிவாகும். மிக உணர்வுக் கூர்ப்புடைய மேலணியால் இது நுதிக் கப்படும். இதற்குத் துளையில்லை. இதை மூடும் முன்ருேலும், கடி வாளமும் சீறிதழ்களுடன் தொடர்புடையன. மேலும் இது ஒரு நொய்தான நிமிரிழையப் பட்டியால் தலைவாயில் குமிழ்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
குருதி வழங்கல் : ஒவ்வொரு காற்சிறைக்கும் உள் நான நாடியின் கிளையான கிளைத்துரு ஆழ நாடியால் குருதி வழங்கப் படும். முகையானது கிளைத்துருவின் புறத்து நாடிகளால் குருதி வழங்கல் பெறும்.
நரம்பு வழங்கல் : இது கூபக பரிவு நரம்புப் பின்னல்களிலிருந்தும் நாண நரம்புகளின் கிளைத்துருப் புறப்பக்க நரம்புகளிலிருந்தும் பெறப்படும்.
தலைவாயில் குமிழ்கள் - வளர்த்தி முறையில் இவை பீனத்தின் குமிழின் இரு செம்பாகங்கள் போன்றவை. இவை ஒரு சோடி நிமிர் இழையத் திணிவுகளாம். பரிவு-மென்சவ்விலிருந்து வரும் ஒரு நார் உறையால் கரக்கப்படும். ஆனல் பெண்ணில் இவ்விரு பாகங் களும் யோனியாலும் ஊறித்தாரையாலும் ஏறத்தாழ முற்ருகப் பிரிக்கப்பட்டிருக்கும். முன்னுக இவ்விரு பகுதிகளும் ஒரு சிறு இடுங்கியபகுதியால் (கூடல் பிணைப்பு) பிணைப்புறும். ஒவ்வொரு குமிழும் பிற்பகுதியில் கொழுத்து முன் ணுகக் கூடலுடன் இணைவுறும் இடத்தில் கூராகும். இது யோனியின் பக்கல் சுவருடனும் பரீன

Page 15
இளம் பெண்
மென்சவ்வின் கீழான பரப்புடனும் அண்டிக்கிடக்கும். மேற் பரப் பானது குமிழ் பொஞ்சித் தசையாற் கரக்கப்படும் (யோனி மட லிறுக்கி). கூடலானது ஊறித்தாரை வாய்க்கு முன் ணுகக் கிடக்கும். ஒரு மெல்லிய நிமிரிழையப்பட்டி அதைக் கிளேத்துரு முகையுட னிணைக்கும். குமிழானது மிகுதியாகச் சிறிதளவு சிற்றிடவிழையத் தால் கட்டுண்டு மிகச் சிறிய முறுக்கு குருதிக்கலன்களாலாகியது.
குருதி வழங்கல் : உள் நாண நாடியிலிருந்து வரும் குமிழ் கிளை குருதி வழங்கல் செய்யும்.
தலைவாயில் பெரும் சுரப்பிகள் (பாதோலின் சுரப்பிகள்): இவை கீழ்ப்பகுதி யோனி மடலுக்குப் பக்கத்துக் கொன்ருக இடம்பெறும். இவை பரீன (சழிவிடவயல்) மென்சவ்வுக்குக் கீழாக இடம்பெற்றுத் தலைவாயில் குமிழ்களின் பிற்பகுதிகளால் கரக்கப்படும். அதன் பெருப்பமும் வடிவமும் ஒரு பயற்றங் கொட்டை போன்றது. நீண்ட மென் லிய வெளிகாவு கான் டிஸ் பரீன மென்சவ்வைத் துளைத் து தலைவாயினுள் சீறிதழுக்கும் மென்றிரைக்குமிடையிலுள்ள கோணத் தில் வாய்விடும். இவை புன் குழாய்ப் புல்லறைச் சுரப்பிகளாம். குமிழ் ஊறித் தாரைச் சுரப்பிகளைப் போன்றவை. இவை பற்றீரியத் தொற்றுறக் கூடும். நுண்ணுயிரெதிரி மருந்துப் பொருள்கள் புழக் கத்தில் வந்த பின்பு தொற்றுதல் குறைவாம்.
பெண்ணிற் காணப்படும் இப்பல வெளியுறுப்புக்கள் ஆணினது பீனத்தினதும் விதைப் பையினதும் வெவ்வேறு பகுதிகளை ஒத்தவை
aff lib.
அகத்துப் பிறப்புறுப்புக்கள் சூலகங்கள் : இவை பக்கத்துக்கு ஒன்ரு க உண்மைக் கூபகத்தின் பக்கச் சுவருடன் நெருங்கியிருக்கும் இரு திண்மக் கட்டமைவுகளாம். வடிவத்தில் பலாக்கொட்டை வடிவமுடையன. பக்கத்துக்குப் பக்கம் தட்டையாகவிருக்கும். இவற்றின் நீளம் ஏறத்தாழ 25 - 3 ச. மீயும் தடிப்பு 13 ச. மீயும் ஆகவிருக்கும், ஒரு பரிவிரிய மடிப்பால் அகல் இணையத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும். சூலகங்களுக்கு இரு அந்தலேகளுள-ஒன்று உயர மற்றையது கீழாக இருக்கும் உயரமாக விருக்கும் அந்தலை உருண்டையானது, பெரிதானது. அது கருப்பைக் குழாயுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆகவே அதைக் குழாயந் தலை என்பர். கீழான அந்தலே கூரானது. இது சூலகவிணையத்தால் கருப்பையுடன் தொடுக்கப்படும். அதன் பரப்புகள் பக்கல், நடுசார் எனப்படும். இவற்றைப் பிரிக்கும் ஒரங்களை முற்பக்க (சூலக நடுமடிப்போரம்) பிற்பக்க அல்லது சார்பற்ற ஒரமெனக் கூறுவர். முற்பக்க ஒரம் (சூலக நடுமடிப்பு) நேரானதும் இடுங்கியதுமாம். இது அகல் இணையத்தின் பிற்பக்க அடுக்குடன் இரு குறுகிய
 

பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல்
விரியப் படைகளால் இணைக்கப்பட்டிருக்கும். நரம்புகளும் குருதி நாடிகளும் இவ்வோரத்தூடாகச் சூலகத்துட் புகும். இப் புகுதல் செய் ஒரத்தைச் கிலம் என்பர்.
சூலகத்தின் இட அமர்வும், அயல் தொடர்புகளும்
பிள்ளேப்பெருப் பெண்ணில் அதன் நீள் அச்சு செங்குத்தாகும். அதன் பக்கல் பரப்பானது கூபகப் பக்கச் சுவரில் ஊறித்தருக்கும், ஒழிப்புற்ற பொக்குள்நாடிநாணு க்குமிடையிலுள்ள ஒரு குழிவில் கிடக்கும். இக் குழிவுக்கு வெளிப்புறமாக நெருங்கல் (அடை) நரம்பும், நெருங்கல் குருதிக் கலன்களும் கிடக்கும். குல சத்தின் குழாயந்தலேயானது வெளிப்புடைத்தாங்கிக் கலன்களின் மட்டத் துக்குச் சிறிது பணியவிருக்கும். கருப்பை அந்தலையானது கூபகத் தளத்தின் பரிவிரியத்துக்குச் சற்று உயரமாக இருக்கும். சூலக நடுமடிப்பு ஒரமானது. ஒழிப்புற்ற கொப்பூழ் நாடிக்குப் பின்னகக் கிடக்கும். சார்பற்ற ஒரமானது ஊறித்தருக்குச் சற்று முன்னகக் கிடக்கும். சூலகத்தின் நடுசார் பரப்பானது பெருமளவிற் கருப் விபக் குழாயால் மூடப்பட்டிருக்கும். குழாயானது முதலாவதாகக் கிடைக்கோட்டுத் திக்கில் சென்று சூலக நடு மடிப்புக்குக் கிட்ட உயர்வாக ஏறி குழாயந்தலை மேலாக வளைந்து பின்னர் சார்பற்ற ஒரமாகவும் நடுசார் பரப்பின் பிற்பக்கமாகவும் கீழ்நோக்கிச் செல்லும்,
குலகத்தின் இறக்கம் தொடக்கத்தில் சூலகங்கள் வயிற்றுக் குழியில் இடம்பெறும். பின்னர் கூபகத்துள் ஆட்சி நாணுல் இறக் கப்படும் பேற்று வேளையில் இதன் ஒரு பகுதி வயிற்றுக்குழிக்குள்ளும் மறு பகுதி கூபகக் குழிக்குள்ளும் கிடக்கும். விரைவில் உண்மைக் கூபகக் குழியையடையும், ஆணில் இருக்கும் ஆட்சி நாணைப்போல், சூலகத்தின் வளர்ச்சிக்காலத்தில் ஆட்சிநாணுனது பேரிதழைப் பின் னர் உருவாக்கும் இழையத்துடன் (கீழாகக் கிடப்பன) சூலகத்தை இணைக்கும். ஆனல் பெண்ணில் கருப்பையையுருவாக்கு பரஇடைக் கழிநீரகக் கானுடன் (முல்லரின் கான்) இது தொடுக்கப்படும் ஆகவே ஆட்சி நாண் முன்னக கருப்பையின் உருண்டையிணைய மாகவும் பின்னுக சூலகவிணையமாகவும் உருப்பெறும். எனவே சூலகம் கூடகக் குழிக்குள் மட்டுமே இறக்கப்படும். மிகவும் அருமையாகத் தான் சூலகங்கள் கூபகத்தையடையாமல் நேராகப் பேரிதழை யடையும் குழந்தை பெற்ற பெண்களில் சூலகத்தின் அமர்விடம் வேறுபடும். அதன் நீளச்சும் கிடைத்தளத்திலிருக்கக் கூடும். அவை
இடவமர்விலிருந்து பணியத் தொங்கக்கூடும்.

Page 16
0. இளம் பெண் நோயியல்
சூலகத்தின் இணைப்புகள்
தொங்கல்செய் இணையம் (புனலுரு-கூபகவிணையம்). இது சூல கத்தின் குழாயந்தலையிலிருந்து வெளி-புடைதாங்கிக் குருதிக் கலன்களுக்கும், மா புடைதாங்கி-நிதம்பத் தசைக்கும் மேலாக விருக்கும், பரிவிரியத்துக்குச் செல்லும் பரிவிரிய மடிப்பாம். இது கீழாகவிருக்கும் சூலக நடுமடிப்புடனும், முன்னக விருக்கும் அகலிணையத்துடனும் தொடர்புறும். இதன் அடுக்குப் படை களுக்கிடையில் சூலகக் கலன்களும் நரம்புகளும் சூலகக் கிலத் துக்குச் செல்லும்.
2 சூலகவிணையம்: இது சூலகக் கருப்பை அந்தலையை கருப்பையின் பக்கல் ஒரத்துடன் இணைக்கும். இவ்விணையம் சூலக நடுமடிப் பின் சார்பற்ற விளிம்புக்குக் கீழாகக் கிடந்து கருப்பைக் குழாய் புகும் இடத்துக்கு உயர்வாகவும் பின்னகவும் கருப்பையுடன் தொடுப்புறும். நாரிழையத்தாலும் கருப்பையுடன் தொடர்புறும் சில மழமழப்புத் தசைநார்களாலும் அமைவுபெறும்
3. சூலகத்தின் கருப்பையந்தலையானது, சூலக மருவுடன் நேராகத் தொடர்புறும். இதுதான் கருப்பைக்குழாயின் மிகப் பெரிய மருவTம்.
சூலகத்தின் கட்டமைவு ; இதன் பெரும்பகுதி நார் சிற்றிட வெளியிழையத்தால் அமைவுபெறும். இது சூலகத்தின் பஞ்சணை (தாயம்) எனப்படும். இப்பஞ்சணையின் மேற்பரப்பில் இது அடர்த்தி யாய் ஊசியுரு நாரரும்பர்களையும் வலையுரு நார்களையும் அடக்கி யிருக்கும். மையப்பகுதியில் அதன் தரிசு அடர்த்தி குறைவானதாம் பல குருதி நாடிகளும் நரம்புகளும் அதற்குச் செல்லும், அதனுள் மீள்சக்தி நார்களுண்டு. சூலகத்தின் மேற்பரப்பு மூலவுயிர் மேலணியாற் கரக்கப்படும். இது சூலகத்தின் கிலத்துக்கு அண்மையி லிருக்கும். பரிவிரியத்தின் தட்டைக் கலவமைப்புடைய இடையணி யுடன் தொடர்புறும். ஆனல் அதன் கட்டமைவானது கட்டைக் கம்பக் கலங்கள் அல்லது கனவுரு (முப்பரிமாண)க் கலங்களா லாகியது. மூலவுயிர் மேலணியானது பிரிக்கமுடியாத விதமாகச் சூலகத்தின் வெண் போர்வையுடன் ஒன்றுசேர்ந்திருக்கும். இது பரிவிரியத்தைப் போல் மினுங்குவதில்லை. மூலவுயிர் மேலணியானது சூலகம் தோற்றுவாய்பெற்ற மூலவுயிர் மேலணியின் எச்சமாம். அதன் பரிதியில் அக்கலங்கள் திடீரென அடுத்தாற்போலிருக்கும் பரிவிரியத்தின் அகவணிக் கலங்களுடன் தொடர்புறும், பூப்புப் பருவத்துக்கு முன்னம் சூலகத்தின் மேற்பரப்பு மழமழப்புடையது. இதன்பின்னர் அது கிடங்குண்டும் நார் தழும்புண்டு மிருக்கும்.

:
பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் 11
சூலகத்தின் மேலணியூடாக பல சிறிய புடகங்கள் தென்படும். இவை புடக சூலகப் புடைப்புக்களாம். இவற்றுள் முட்டைக் கலங்கள் அல்லது முட்டைக் குழியங்கள் அடக்கப்படும். இப் புடகங்கள் எண்ணிக்கையிலும் தோற்றத்திலும் வேறுபடும். ஒரு புடைப்புப் பீறி உடையும்பொழுது, முட்டைக்குழியம் (சூல்) வெளித்தள்ளப் படும். பின்னர் அதன் சுவர்கள் மடிந்து வெளியொழுகிய குருதி யாலும் மஞ்சள் நிறமுடைய கலவ இழையத்தாலும் நிரப்பப்படும். இதை மஞ்சட் சடலம் என்பர். முட்டைக் குழியம் கருக்கட்டலடையா விடின் அது சிதலமடைந்து அல்லூட்டமடையும், மஞ்சட் சடலத் தின் கலங்கள் மறைந்துவிடும். நிறமும் மறைந்து கொல்லாசனல் மாற்றீடு செய்யப்படும். இதை வெண் சடலம் என்பர். காலப் போக்கில் இது ஒரு நாரிழையவடுவாக மாறும் கருக்கட்டல் நிகழின் மஞ்சள் சடலம் பெருத்து தன் உச்சப்பருமனே கருப்ப நிலையின் மூன்று மாதக் கட்டம் வரையில் அடையும்.
சூலகத்தின் வெட்டுமுக இழையவியல் தோற்றம்
ஒர் இளம் குழந்தையில் மேற்பரப்புப் பகுதி (காரோடு) க்குள் பெரும் எண்ணிக்கையில் (1,00,000 மட்டில்) சிறிய முதலான (அல்லது தொடக்க வடிவ) சூலகப் புடைப்புக்கள் பஞ்சணையின் நார் சிற்றிட இழையத்துள் பொதிந்திருப்பதாகக் காணப்படும். ஒவ்வொரு முதல் புடைப்பானதும் ஒரு புடைப்புக் கலங்களா லாகிய போர்வையடுக்கால் குழப்பெற்ற ஒரு முதலான முட்டைக் குழியத்தையடக்கியிருக்கும். இம் முட்டைக்குழியங்கள் பிறந்த நாள் தொடக்கம் உள. இவை மஞ்சள் கருவூண் பையின் சுவரிலிருந்து உண்டாகி சூலகத்துள் நகரும் முதலான மூலவுயிர்க் கலங்களி லிருந்து வளர்த்தியடையும். சில அறிஞர் கூறுவது யாதெனில் சூல கத்தைக் கரக்கும் மூலவுயிர் மேலணியிலிருந்து ஒவ்வொரு மாத விடாய் வட்டகாலத்தில் இந்த முதலான புடைப்புக்கள் புத்தம் புதிதாக உண்டாகின்றன என்பதாம். பூப்புப் பருவத்துக்குப் பின்பு இந்த முதலான புடைப்புக்களுட் சில வளர்ந்து புடகச் சூலகப் புடைப் புக்களே யுண்டாக்கும். இவற்றிலொன்று மேலும் மேலும் வளர்த்தி யடைந்து முதிர்வுற்று சூல் உலுரும் வேளையில் பீறி ஒரு இரண்டாவ தான முட்டைக் குழியத்தை (இரண்டாம் முதிர்வுப் பிரிவுறும் பொழுது) விடுத்தல் செய்யும். ஆகவே, வயது முதிர்ந்து செல்லஇந்த முட்டைக் குழியங்களின் எண்ணிக்கை -மேலும் மேலும் குறைந்து போகும். முப்பது வயது மட்டில் பெரும் எண்ணிக்கையில் குருதிக் கலன்களும் சில எளிய தசைநார்களுமுண்டு. புடைப்பின் முதிர்வு பின்னர் விளக்கப்படும். முதலான (தொடக்க வடிவ) கலங் களின் ஒரு சிறிய தொகைதான் முதிர்வடையும்,

Page 17
2 இளம் பெண் நோயியல்
லேக் கலங்கள் : சூலகத்தின் கிலத்தில் இடைக்கிடை நீள்வட்ட அல்லது பன்முகிக் கலங்களடங்கிய சிறிய கூடுகள் அல்லது இருந் திட்டொருக்கால், பெரும் புலங்கள் காணப்படும். இவை ஓடுகள் பதிக்கப்பெற்ற தளம் போல் தோற்றம் தரும். இவை விதையின் இழைய விடையக் கலங்களு (இலேடிக்கு) க்கு ஒத்த கலங்கள் என ଶtଶର୍ତ୍ତୀ ତost will Glub.
சூலகத்தின் குருதி வழங்கலும் நரம்பூட்டலும்
சூலக நாடிகள் குருதியை வழங்கும். இவை பெரு நாடியின் முற் பக்கத்தில் ஊறு நீரிக் கலன்கள் முளேக்கும் இடத்துக்குப் பணிய வாகக் கிளம்பி சூலகத்தின் தாங்கு இணையத்தின் வழியாகப் போக்குச் செய்து கிலம் வழியாகச் சூலகத்தையடையும். இவை மிகவும் மெல்லிய நாடிகளாம். பின்னர் சூலகக் கிலத்தில் ஒரு வசிவு அமைவுபெற்று, இதிலிருந்து புரிநாடிகளாகக் கிளைவிட்டுச் சூலகத் துக்கு வழங்கல் செய்யும். இதன் பின்னர் கருப்பை நாடியின் கிளைக சூளுடன் சங்கமமாகி இணையும். நாளக் குருதியானது பல இணைப்புறும் நாளங்கள் வழியாக வடிந்து, இறுதியில் ஒரு சூலக நாளமாகி, வலது பக்கத்து நாளம், கீழ்க்குகை நாளத்துள்ளும் இடது பக்கத்து நாளம் இடது ஊறு நீரி நாளத்துள்ளும் வடியும்.
சூலகத்தின் நரம்பூட்டல் : இதைச் சிறப்பாக சூலக நாடியுடன் அணைந்து செல்லும் பரிவு நரம்புப் பின்னலிலிருந்து பெறும். இது ஊறு நீரிப் பின்னலுடன் தொடர்புடையது. ஏனைய நார் வழங்கல் பெருநாடிப் பின்னலிலிருந்து வரும். இவை சூலக நாடிப் பின்ன லுடன் சேர்ந்து செல்லும். சூலகத்திலிருந்துவரும் உட்காவி நார்கள் 10ஆம் நெஞ்சறை நரம்பின் பிற்பக்க வேர் வழியாக் மைய நரம் புத் தொகுதியை அடையும்.
கருப்பைக் குழாய்கள் (பலோப்பியாக் குழல்கள்): இவை சூலக புடைப்புப் புடகங்களிலிருந்து விடுத்தல் உறும் முட்டை களை (சூல்களை) கருப்பைக் குழிக்குள் கடத்தும். சிலர் இவற்றை முட்டைகாவு கான்கள் என்பர். இவற்றின் நடுசார்முடிவிடம் கருப் பைத் தசைக்குள்ளும், மற்றைய பெரும் பகுதி அகல் இணையத்தின் உயர் விளிம்பின் குழாய் மடிப்பெனப்படும் ஒரு பரிவிரிய மடிப் புள்ளும் அடக்கப்பட்டிருக்கும். ஆகவே அவற்றின் கீழான பரப்பைத் தவிர்ந்த மற்றைய பரப்புக்கள் பரிவிரியத்தால் கரக்கப்படும். இக் குழல் கருப்பையிலிருந்து வெளிவந்த சூலகத்தின் கீழான முடி விடத்தை (கருப்பை முடிவிடம்) நோக்கிச் சென்று (25 ச.மீ. தூரத் துக்கு) பின்னர் செங்குத் தாக கூபகத்தின் பக்கச் சுவரில் சிறிது
தூரத்துக்குச் சூலகத்தின் தொடுப்புற்ற விளிம்புக்கு நடுசாராக ஏறி
 
 

பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல்
3.
لیکنه)
A
২২
浏
مجی
苏
N
麓
ԱԶ.
's 剑
s سے * س& ) -్యక్టోషాn- ? 轰 په سیسیسیسیلیسی.
665). Li Li, 2
கூபக அகத்துப் பிறப்புறுப்புக்களின் நேமநிலை
கருப்பைக் குழாய், ,ே குலகம் 3. கருப்பை, 5. பூப்பென்பு 6, ஊறித்தாரை, 7 யோனிமடல், 8 பேரிதழ், 9. சிற்றிதழ், 10 நேர்குடல், ! . குதவிறுக்கித் தசை, 13 குதம்,
உயர் முடிவிடத்தை (குழல் முடிவிடம்) யடையும். பின்னர் பின் நோக்கி சூலகத்தின் பிற்பக்கக் குவிந்த ஒரம் நீளமாகவும் சூலகத்தின் நடுசார் பரப்பின் அடுத்தாப்போலிருக்கும் பரப்புப் பக்கமாகவும் இறங்கி முடிவடையும். ஒவ்வொரு குழலும்-கருப்பைப் பகுதி, தொடுகழுத்து குடுவையுரு (விரிமுனே), மருவுடலம் எனப் பிரிவு செய்யப்படும். ஒவ்வொரு குழாய்க்கும் இருவாய்கள் உண்டு-கருப்பை வாய், வயிற்றறை வாய் என்பன.
குழலின் நீளம் ஏறத்தாழ 10 ச.மீ. ஆய் இருக்கும்.
潭、

Page 18
1 4 இளம் பெண் நோயியல்
கருப்பைப் பகுதி ! இது கருப்பைச் சுவருள் இதன் உயர் கோணத்தில் அடக்கப்படும். இதற்கு கருப்பை வாயுண்டு (1 மி. மீ விட்டம்). இப்பகுதியானது இரு கொம்பு கருப்பையின் ஒரு கொம்புக்கு ஒத் தது. இது குழலின் ஒரு பகுதியல்ல. உருண்டையிணையத் தொடுப் பிடத்துக்கு அண்மையிலிருக்கும் பகுதி கருப்பைக் குழாயைச் சேர்ந்தது. இதற்குச் சேய்மையிலிருக்கும் பகுதி கருப்பையைச் சேர்ந்ததாம்.
தொடு கழுத்து : இது கருப்பைப் பகுதிக்கு அடுத்த பகுதியாம். குழலின் மூன்றில் ஒரு பகுதி இதனுலாகியது. இது நேரானது. உருண்டையானது, தடவின் ஒரு திண்மப் பொருளாக உணரப்படும் (வட்டத் தசைநார்கள் முதன்மைக் கூருக இருப்பதாலாம்). இப் பகுதியின் விட்டம் 2 மி. மீ. அடுத்தாற்போலிருப்பது குடுவை யுருப்பகுதியாம். இது குழலின் பாதி நீளவளவிலாம். இது பருமனில் பெரிது; நெளிவுடையது; தொடுகைக்கு (சிறப்பாக மியூக்கசு மென் சவ்வானபடியால்) மென்மையானது. இதன் விட்டம் படிப்படியாக சேய்மைத் திக்கில் கூடி 7 மி. மீ அளவு மட்டிலிருக்கும். பின்னர் சேய்மை முடிவிடத்தில் இது ஒடுங்கிக் கழுத்தாகி, வயிற்றறை வாயாக முடிவடையும். இக் கழுத்துக்கப்பால் குழல் விரிந்து புனலுரு வடிவம் அடையும். இதன் நடுவில் வயிற்றறை வாய் இடம் பெறும் (4 மி.மீ. விட்டம்). புனலுருவின் பரிதியானது பல ஒழுங் கற்ற தூங்கல்களாக-மருக்கள்-பிரிவுறும். இதை மருவுடலம் எனக் குறிப்பர். பெரிய மருக்கள் சிறிய இழையுருச் சிம்பிகளாகப் பிரி வுறும். இவற்றின் வெளிப்பரப்பு பரிவிரியத்தாலும் உட்பரப்பு பிசிர் கம்ப மேலணியுடைய மியூக்கசு மென்சவ்வாலும் போர்க்கப் படும். கருப்பைக் குழாயின் பக்கத்துப் பரப்பில் பல சிறிய தவாளிப் புகள் உள.
இந்த மருக்களிலொன்று பெரிதானதும் நீளமானதுமாம். இது சூலக மருவாகும். இது சூலகத்தின் உயர் முடிவிடத்துடன் (குழல் அந்தலை) நேராகத் தொடுக்கப்படும். அல்லது அகல் இணையத்தி லிருந்து வரும் ஒரு நுண்ணிய நார்ப்பட்டியின் உதவியால் தொடுக் கப்படும். இம்மருவுக்கு ஒர் ஆழமான நெட்டாங்கு வடுவுண்டு. இது வயிற்றறை வாய்க்கும் சூலகத்துக்கும் சூல் செல்வதற்காகிய ஒரு வழியாக அமையும்.
கட்டமைவு:
குழாயின் உறையானது, சீரசு, தசை, மியூக்கசு (சீதமென்சவ்வு) ஆகியவற்ரு லாகியது. சீரசுப் போர்வையானது பரிவிரியத்தா லாகியது. தசைப் போர்வையானது எளிய தசை இழையத்தாலாகி யது. இது வெளி நெட்டாங்கு அடுக்காகவும் உள்வட்ட அடுக்காகவும்

பெண்ணின் கூபகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் 15
ஒழுங்கமைவு பெறும் வட்ட அடுக்கு மிகத் தடித்ததாம். மியூக் கசுப் போர்வையானது மருக்களின் ஒரங்களில் பரிவிரியத்துடனும், மற்றைய முடிவிடத்தில் கருப்பையின் அகவணியுடனும் தொடர்புறும். இப் போர்வை நெட்டாங்கு மடிப்புகளாக அமையும். இவை தொடு கழுத்துப் பகுதியில் எளியவை. குடுவையுருப் பகுதியில் சிக்கலானவை. இப்பகுதியில் இவை பின்னும் பல மடிப்புகளுற்றும் கிளைகளுந்றும் ஒரு சுரப்பியின் கட்டமைவுத் தோற்றம் போன்றதாம். இதன் குறுக்கு வெட்டு முகம் பல கிளைபட்ட மடிப்புகளைக் காட்டும். குழல் விவரமானது வெட்டுண்ட மடிப்புகளால் நிரப்பப்படும். இவை இலைகள் போன்ற ஒரு ஒழுங்கமைவைக் காட்டும். மியூக் கசு மென்சவ்வானது ஒர் அடுக்குடைய பிசிர் கொண்ட கம்பவுரு அகவணியைக் காட்டும். இவை மருக்களின் ஒரத்தில் பரிவிரியத்தின் அகவணியுடன் தொடர்புறும். குழலின் இம் மியூக்கசுவின் பஞ்சணை யானது சிறிய அளவிலுள்ள நார்-கலவப் பஞ்சணையாகும். இது தசையிலிருந்து மிக அற்பவளவு பஞ்சணையாற் பிரிக்கப்பட்டிருக்கும்:
குழலின் கருப்பைப் பக்கப் பகுதியில் மடிப்புக்கள் சிலவாம். ஆனல் குடுவையுரு, புனலுருப் பகுதியில் இவை எண்ணற்றவையும் முன் கூறப்பட்டதுபோல் பல கிளைகளுடையனவுமாம். இந்தச் சிக்கலான அமைவானது பேம் கலங்களையும் சூலையும் தடைசெய்து கருக்கட்டல் நிகழ்வதற்கு உதவுமெனக் கருதப்படும். பிசிர்களும், குழல்களில் நிகழ் பரியிறுக்க அசைவுகளும் சூலை அலசி யசைத்துக் கருப்பைக்குட் சென்றடைய உதவும். மாதவிடாய்க் காலத்தில் அதன் அவத்தை நிலைகளுக்கு ஒப்பச் சில மாற்றங்கள் குழல் அக வணியில் நிகழ்வதாக அறிய முடியும். கருப்ப நிலையிலும் இவ்வகவணி சிறப்பு மாற்றங்களைக் காட்டும். ஆணுல் உண்மை உதிர்வு மாற்றம் நிகழ்வதில்லை. மாதவிடாய் முடிவிலும் அகவணி உதிர்வதில்லை இவ்வடுக்குக்குச் சுரப்பிகளில்லை.
தசைப் போர்வையைப் பொறுத்தமட்டில் இது கருப்பைப் பாகத்திலும் தொடுகழுத்திலும் மிகத் தடித்ததாம். குடுவை உருப் பகுதியிலும் புனலுருப் பகுதியிலும் மிகக் குறைவாம். மருவுக்களுக்கு தசைப்பகுதி யில்லை.
குருதி வழங்கல் : சூலக நாடிகளும், கருப்பை நாடிகளுமாம்
நரம்பு வழங்கல் : சூலகம், கருப்பை ஆகியவற்றின் பரிவுப் பின்னல்களி லிருந்தாம்.

Page 19
i 6 இளம் பெண் நோயியல்
GAJ) JI LA LI ÉS 3 கருப்பை, கருப்பைக் குழாய்கள், சூலகங்கள்-பிற்பக்க நோக்கு
கருப்பைக்குழாய், 2. குலக நடுமடிப்பு, 8 சூலகம், 4 சூலக குருதிக் கலன்கள், 5. அகலினேயம், ,ே ஊறிதர், 7 ஆடஞளசின் அடைப்பம், ,ே கருப்பை=திருவென்பு இண்யம், 9. நேர்குடல்.
GA GUDS LA LÁ 4
கூபகவகத்துப் பிறப்புறுப்புக்களின் முன் நோக்கு ஈஇப்பைக்குழாய், 3. குலகம், 3. கருப்பை அடிக்குழி, 4. குலகக் குரு கிக்கலன்கள், 5 அகல் இணையம், .ே கருப்பைக் கழுத்து 7 வட்ட இனேயம், 8. ஊறித்தரின் துளே, 9, இறக்கப்பட்ட வேறுநீர் (சல) ப் பை, 10. திரிகோணி, 11 ஊறித்தாரை உட்போகுழை,
 
 

பெண்ணின் கூடகவுறுப்புக்களின் டமைப்பிய
கருப்பை ஒரு கோறைத் தசையுறுப்பாகும். இந்தக் கோறை ஒரு சிறு குழிய வடிவமானது. இதைச் சுற்றியிருக்கும் தசைச் சுவர் தடிப்பானது திண்ணியது. இக்குழி மியூக்கசு மென்சவ்வால் நுதிக் கப்படும். இதைக் கருப்பை அகவணி என்பர் உருவத்தில் ஒரு சீமைப் பேரைப்பழம் டோலாகும். இது பல வகையில் உதவும். கருக்கட்ட லுற்ற சூல் நாட்டல் உறுவதற்கும் ஊட்டவளம் பெற்று நிறை மாத வளர்ச்சி அடைவதற்கும் உதவும். பேற்று வேளையில் இதன் தசைகள் சுருங்கி வெளித்தள்ளு (உதைக்கும்) வலுவை உதவி கரு வுருவைப் பெறுவிக்கும். மேலும் இது பேம்கள் கருப்பைக் குழல்களை யடைவதற்கும் உதவும். இன்னும் இதிலிருந்துதான் மாதக் குருதி இரிவு (தீட்டு) உண்டாகும். இதன் நீளம் 75 ச.மீ. (3 அங்குலம்). இதில் உடலானது 5 ச.மீ. நீளமும், கழுத்தானது 25 ச.மீ. நீளமு முடையது. இது யோனிமடலேக் கருப்பைக் குழல்களுடன் தொடுக்கும்.
இதன் உயர் கோணங்களுடன் கருப்பைக்குழல்கள் பொருந்தும், பணியவாக, இது யோனிமடலின் முற்பக்கச் சுவரின் உயர் பகுதியூடாக யோனிக்குழிக்குள் முனைக்கும். கன்னிக் கருப்பையானது ஊறுநீர்ப்பையின் உயர் (மேலான) பரப்பின் மேல் கிடக்கும். வழமையாக நடுக் கோட்டுக்குச் சிறிது வலதாகச் சரிந்திருக்கும். இதற்கு உயர்வாக கூடகப் பெருங்குடல், சுருள் குடற் சுருன் கள் கிடக்கும். கீழ் முடிவிடத்தில் யோனி மடலுண்டு. அகல் இணையம் இதன் பக்க ஒரத்திலிருந்து பக்கமாக விரிந்து பரவும்; ஏறத்தாழ முக்கோண வடிவமுடையது. இதன் அகல் முடிவிடம் உயர்வாகவும்: முன்னுகவும் கிடக்கும். முன்பின் திக்கில் இது தட்டையானது. இதைப் பொதுவாக அடிக்குழி, உடல், கழுத்து எனப் பிரிவுபடுத்தி G?el jiffa u uri .
அடிக்குழிப் பாகம் : இப் பகுதியானது கருப்பையின் உயர் கோணங்களைத் தொடுக்கும் கோட்டுக்கு உயரவிருக்கும் பாகமாம். இக்கோணங்களில்தான் கருப்பைக்குழல்கள் கருப்பைச் சுவரூடாகப் புகும் இடங்களாம். இவ் ஆடிக்குழிப் பகுதி பக்கத்துக்குப் பக்கம் குவிந்திருக்கும் அல்லாமலும், முன் பின் திக்கிலும் குவிந்திருக்கும், கருப்பையின் பக்கல் ஓரங்கள் கீழ் நோக்கியும் நடுசார் திக்கிலும் சரிந்து செல்லும். இதன் உயர் மூன்றிலிரு பகுதிக்கும் கீழான மூன்றில் ஒரு பகுதிக்குமிடையிலுள்ள சந்தியில் ஒரு சிறிய ஒடுக்கமுண்டு. இதைத் தொடுகழுத்து என்பர். இது முன்பின் திக்கிலும் ஒடுங்கி யிருக்கும். இளம் கருப்பைகளில் இது தெளிவாகத் தெரியும். தொடுகழுத்துக்கு உயரமாக இருப்பது உடலாகும். கீழாகவிருப்பது கழுத்தாகும். ܘ ܬܐ ܝ ܢ
2

Page 20
8 இளம்பெண் நோயியல்
உடல்:
இது 5 ச.மீ. நீளமுடையது (2 அங்குலம்). இதற்கு முற்பக்கப் பரப்பு, பிற்பக்கப் பரப்பு என இரு மழமழப்புப் பரப்புகளும், இரு பக்க ஓரங்களுமுண்டு. முற்பக்க அல்லது ஊறு நீர்ப்பைப் பரப் பானது கீழ் நோக்கிச் சரிந்திருக்கும். இது தட்டையாக அல்லது சிறிது குவிந்திருக்கும். பிற்பக்க அல்லது நேர்குடல் பரப்பானது உயர நோக்கிச் சரிந்திருக்கும். இது குறிப்பிடத்தக்க அளவுக்குக் குவிந்திருக்கும். இப்பரப்புக்களின் இயல்பைக் கொண்டு இதன் முற் பக்கம், பிற்பக்கம் என்பவற்றைக் கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு பக்கல் ஒரமும் உயர் கோணத்திலிருந்து கீழ்நோக்கியும் நடுசார்ந்து மிருக்கும். உயர் கோணங்களாவன கருப்பைக்குழல்கள் கருப்பை யுடன் சேரும் இடங்களிலிருக்கும். இவை சில விலங்குகளில் கொம்பு களாக நீண்டிருக்கும்; இவை கருப்பைப் பகுதிகளை ஒக்கும். முன் நோக்கியும் உயர நோக்கியு மிருக்கும் நிலையை முற்பக்கத் திருப்பம்
கழுத்து:
இது 25 ச. மீ. (1 அங்குல) நீளமுடையது; உருளையுரு வடிவ முடையது. உடலிலும் பார்க்க இடுங்கியது. உடலுக்கும் கழுத்துக்கு மிடையில் கீழ் நோக்கியும் முன் நோக்கியு மிருக்கும் ஒரு விரிந்த கோணமுண்டு. இந்தக் கோணமாதல் நிலை முற்பக்க மடக்கல் நிலை என்பர். கழுத்தானது யோனிமடலின் முற்பக்க உயர்பகுதிச் சுவ ரூடாகப் புகுகை செய்யும். யோனிமடல் சுவர்களும் இதனுடன் பொருந்தி இதனை உயர் யோனிப் பகுதி, யோனி யகப் பகுதியென இரு பாகங்களாக வேறுபடுத்தும், புகுகை செய்யும் முறையில் பேரி மடலின் பின் சுவரானது முன்சுவரிலும் பார்க்கக் கழுத்தில் உயர்வாக ஏறும். ஆகவே கழுத்தின் உயர் யோனிப் பகுதியின் முற்பக்கப் பரப்பு தீ அங்குல (1 25 ச.மீ.) நீளமுடையது. இது ஊறுநீர்ப் பையின் தளத்துடன் தொடர்புடையது. இவற்றிற்கு இடையே ஐதாக அமைவுபெற்ற சிற்றிடை வெளியிழையம் உண்டு. உயர் யோனிப் பகுதியின் பிற்பக்கப் பரப்பானது அங்குல (6 ச.மீ.) நீளமுடையது. இது நேர் குடல் கருப்பை அடைப்பத்தின் முற்சுவரின் உயரிய பகுதியாகும். இதற்குக் குறுக்காகக் கருப்பை எழுச்சித் திட்டு இருக்கும்.
யோனி அகப்பாகத்தின் கீழ் முடிவிடத்தில் கழுத்தானது சிறிது முஜனப்பாகவிருக்கும். இதில் ஒரு துவாரம் உண்டு. இது கருப்பை பின் வெளிவாயாம். இதனூடாகக் கழுத்துக்கால்வாய் விவரம்
யோனிக் குழியுடன் தொடர்புறும். (இவ்வாய் மீன் வாய் வடிவ
). | 7"
 

பெண்ணின் கூபகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் 19
சிறுபிள்ளைக் காலத்தில் இவ்வாயானது வட்ட வடிவானது. பின்னர் ஒரு குறுக்கு வெட்டுத் துவாரமாக மாறும். இதற்கு முன் பின் சொண்டுகளென இரு சொண்டுகளுள. இவை கன்னிப் பெண் களில் மழமழப்புடையன. முற்பக்கச் சொண்டு கட்டையாய்த் தடித்து உருண்டு இருக்கும். பிற்பக்கச் சொண்டு மெல்லியதும் நீளமானது மாம். முற்பக்கச் சொண்டு, கழுத்து யோனிக்குள் சரிவாகப் புகுகை செய்யும் காரணத்தினுல் பிற்பக்கச் சொண்டிலும் பார்க்க இது பணியவாகவிருக்கும். யோனிச் சோதனை செய்யும்பொழுது அல்லது வேறு புறப்பொருளைப் புகுத்தும்பொழுது முதலாவதாகத் தட்டுப்படுவது முற்பக்கச் சொண்டாம். பிற்பக்கச் சொண்டு மிக நீளமாகத் தோன்றும். இது யோனி மடலின் பின்சுவர் மிக நீள மாகி கழுத்தின் பிற்பக்கத்தைத் தொடுகை செய்வதாலாம். கழுத்து சரிவாகவிருக்கிறபடியால், புறத்துவாயானது கீழ்நோக்கியும் பின் நோக்கியும் பாயிகள் அடையக்கூடிய பிற்பக்க விதானத்துள் வாய் விடும் யோனிமடலானது கழுத்துக்கு ஒரு விதர்னக் கவிகை போன்ற ஒர் அமைவாக இருக்கும். இதனுள் அடக்கப்பட்ட இடத்தை முற்பக்க, பிற்பக்க பக்கல் விதானங்களாகப் பிரிவு படுத்துவர்.
கருப்பையின் அயல் தொடர்புகள் :
கருப்பை உடலின் முற்பக்கப் பரப்பானது ஊறுநீர்ப்பையின் உயரவிருக்கும் மேற்பரப்பின் மேல் தங்கும். யோனிக்கு உயர்வாக இருக்கும் கழுத்தானது ஊறுநீர்ப்பையின் தளத்துடன் தொடர் புடையது. பக்கல் அயல் உறுப்புக்களாவன-கருப்பைக் குழல்கள் விருத்த இணையங்கள், சூலக இணையங்கள், அகல் இணையங்கள் கழுத்துப் பக்கங்களைச் சூழ்ந்திருக்கும், ஒரு குறிப்பிடத்தக்க அளவு கலவவிழையம் கழுத்தைச் சூழ்ந்திருக்குமாம். இக் கருப்பையின் கலவ இழையமானது பக்க ஒரங்களில் அகலவிணையங்களின் படை களுக்கிடையில் உயர்வாகப் பரவி இருக்கும். இதனுள் கொழுபட பெரிய கலன்கள், நரம்புகள் ஆகியனவும் உள. இக்கலவ விழையத்தை பரகருப்பையிழைய மென்பர். இது கருப்பை ஒரங்களுக்கருகாமையில் சிறிது அடர்த்தியாயும் தடித்து மிருக்கும். இக்கலவவிழையம் பின் நோக்கிச் சென்று, நேர்குடல் கருப்பைப் பரிவிரியத்தால் கரக் கப்பட்டு கருப்பை திரு இணையங்களாக உருப்பெற்று, திருவென்பின் முற்பக்கத்துடன் (3 தி என்பு) தொடுகை செய்யும், மேலும் பக்கல் பக்கமாகப் பரவி, குதவுயர்த்திகளின் பட்டிப்புக்களுடன் ஒருங்கு சேரும். இப்பகுதிக் கலவவிழையத்துள் பெருமளவில் மழமழப்புத் தசைநார்களுண்டு. இவற்றைப் பக்கல் கழுத்து இணையங்களென்பர். இவ்விணையங்களின் உயர் பகுதியூடாகக் கருப்பைக் கழுத்துக்கு 2-25 ச மீ அப்பால் ஊறித்தர்கள் போக்குச் செய்யும். உடலின் பிற்பக்கப் பரப்பு நேர்குடலுடலை அயலுறுப்பாகக் கொண்டிருக்கும். உயர்

Page 21
盛级
கருப்பைக் கழுத்தின் யோனிப்பகுதியின் பிற்பக்கப் பரப்பான யோனியின் பிற்பக்கச் சுவருடன் சேர்ந்து ஆடைப்பத்தின் முற் பக்கச் சுவராக அமையும் சிறு குடலும் பெருங்குடல் பகுதிகளும் கருப்பையுடன் அணைந்து இருக்கும். (பக்கல் தொடர்பாக கருப்பை நாடிகள் அகவாய் மட்டத்தில் கருப்பையையடையும், ஊறித் தர்கள் இந்நாடிகளைக் கழுத்திலிருந்து 2 ச.மீ க்கு அப்பால், முன்னு கவும், உள்ளாகவும், இந்நாடிகளுக்குக் கீழாகவும் கடந்து செல்லும்)
பரிவீரியத் தொடர்புகள்
பரிவிரியம் கீழ்வரும் முறையில், உயர் யோனிக் கழுத்துப் பகுதியின் பிற்பக்கப் பகுதியையும் கருப்பையுடலினதும் அடிக்குழியி னதும் பிற்பக்கப் பகுதியையும் உடலின் முற்பக்கப் பகுதியையும் தொடு கழுத்து மட்டம் வரைக்கும் கரக்கும். பரிவிரியமானது கழுத் தின் யோனியகப் பகுதியையும், கருப்பையின் பக்க ஒரங்களின் ஓர் இடுங்கிய பகுதியையும் (இவ்வோரத்தில் பரிவிரியமானது அக லிணையத்தின் இருபடைகளாகப் பிரிந்திருக்கும்) கரக்கமாட்டா, கருப் பையூடன் தொடர்புடைய பரிவிரி மடிப்புக்களாவன-கருப்பை ஊறுநீர்ப்பை மடிப்புக்கள் (பக்கத்துக்கு ஒன்று க இரு மடிப்புக்கள்), சிலர் இவற்றை முற்பக்கக் கருப்பை இணையங்களெனக் குறிப்பர். (இவை இணையங்கள் அல்ல); நேர் குடல்-கருப்பைமடிப்புக்கள் (இவை கருப்பைக் குறுக்குத் திட்டுடன் தொடுக்கும்) சூலக இணைய மடிப் புக்கள், விருத்த இணைய மடிப்புக்கள், அகல் இணைய மடிப்புக்கள் என்பனவாம். இவற்றுள் கருப்பை வெளித்தசை நார்கள் பரவும். கழுத்து உயர் யோனிப் பகுதியின் பிற்பக்கத்திலிருந்து பக்கத்துக்கு ஒன் ருகே இரு கருப்பை திருவென் பிணையங்கள் சென்று திருவென்பின் 3ஆம் விருத்த என்புடன் இணைவுறும்,
கருப்பையின் இடஅமர்வு ஊறுநீர்ப்பையும் நேர்குடலும் வெறு மையாக இருக்கும்பொழுது கன்னிப் பெண்ணின் கருப்பை முற் பக்கமாக மடிந்தும், திரும்பியுமிருக்கும். இம் முற்பக்க மடிதல் ஆனது கழுத்து தொடுகழுத்து மட்டத்தில் நிகழும். இந்தக் கோணமானது முன்னுகவும் கீழாகவும் நோக்கும். கருப்பைக் கழுத்தானது திண்ணிய பொருளினுல் ஆனது. கருப்பை உடலின் மென்மையான இயல் பினுல் அது கழுத்தின்மேல் மடியக்கூடியதாக இருக்கின்றது. முற்பக்கத் திருப்பமானது முழுக் கருப்பையும் முன்னு கச் சுழன்று இருப்பதாலாம். எனவே தான் கருப்பையின் நீள் அச்சு முண்டத்தின் நீளச்சுடன் ஒரு கோணத்தையுண்டாக்குகின்றது. ஆகையால் இதன் முற்பக்கப் பரப்பானது ஊறுநீர்ப்பையின் உயர் பரப்பைக் கீழ் நோக் கிப் பார்க்கும். இதன் பிற்பக்கப் பரப்பானது கூபகப் பெருங்குடலே யும் சுருள்குடலின் சில சுருள்களையும் தாங்கும் நேமநிலைமையில்
 
 
 

பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல்
கருப்பையின் அடிக்குழியானது (உயர் பகுதி) பூப்பிணையவிளிம்பு மட்டத்திற் கிடக்கும். கழுத்தானது தி ரு பு  ைட தாங்கி முள் பூப்பிணைப்புத் தள மட்டத்திலிருக்கும். ஊறுநீர்ப்பை நிறைந்து இருப்பின் கிடைநிலையில் கருப்பையின் இடவமர்வு வேறுபடுத்தப்
படும். நேமநிலைகளில் அகலிணையத்தின் உயர் விளிம்பு முன்னு கவும்
கீழ்விளிம்பு பின்னுகவும் இருக்கும். பரப்புக்கள் உயர்வாகவும் கீழாக வும் நோக்கும்.
ஊறுநீர்ப்பை நிரம்பியிருப்பின் இது உயர்த்தப்பட்டிருக்கும். கருப்பையும் உயர்த்தப்பட்டுச் செங்குத்தாக இருக்கும். அகலிணையப் பரப்புகள் முன் பின்ணுக நோக்கும். சில கன்னிப் பெண்களில் கருப்பை பின் திரும்பிய நிலையிலிருக்கும். குழந்தை பெற்றவர்களிற் சிலருக்குக் கருப்பை பின் திரும்பிய நிலையிலிருக்கக் கூடும் தாங்கல் இழையங்களின் குறைபாட்டுடன் வளரும் பெண்களுக்குக் கருப்பை யானது கீழேயிறங்கிப் பல இடர்களே உண்டாக்கும். சில கன்னிப் பெண்களுக்குக் கருப்பையானது மிகவும் கூர்ப்பாக மடிந்திருக்கும்.
கருப்பையின் அகம் இது இரு பகுதிகளாகப் பிரிவுபடுத்தப்படும் உடலின் குழி, கழுத்துக் கால்வாய் என இரு பகுதியாகும். கருப் பைத் தசையின் தடிப்புடன் ஒப்பிடும்பொழுது குழியானது சிறி தாகும். இது முக்கோண வடிவமுடையது. சுவர்கள் குழித் திக்கில் எல்லாப் பக்கங்களிலிருந்தும் குழிக்குள் விம்மும் முக்கோணத்தின் அடித் தளமானது அடிக்குழியை நோக்கியிருக்கும். முற்பக்கச் சுவ ரும் பிற்பக்கச் சுவரும் ஒன்று மற்றென்றுடன் நெருங்கியிருக்கும். கருப்பையின் அகமானது இரு குழிக்கொம்புகள் உடைய தோற் றத்தைத் தரும், உயர் கோணத்துக்கு அண்மையில் குழியானது இடுங்கி கருப்பைக் குழாயின் நடுசார் முடிவிடத்திற் சிறுங்கி கருக் குழலின் விவரத்துடன் தொடர்புறும், குழியானது கீழாக இடுங்கி உடலும் கழுத்தும் சந்திக்குமிடத்தில் ஒரு சிறிய வட்டத் துவார மாய் மாறும் இது அதன் அகவாயாகும். இது புறத்து வாயிலும் பார்க்கச் சிறியது. கழுத்தின் கால்வாயானது ஊசியுரு வடிவ முடையது, இது முடிவிடங்களின் அகலத்திலும் பார்க்க நடுப்பகு தியில் அகலம் கூடியதாம். கால்வாயானது முன் பின் திக்கில் தட்டையாய் இருக்கும் . இது அகவாய் வழியாகக் கருப்பைக் குழியுடனும் புறவாய் (வெளிவாய்) வழியாக யோனிக் குழியுடனும் தொடர்பாய் இருக்கும். ஒரு கருப்பை புகுத்திக்கம்பியை கால்வா யூடாகச் செலுத்த முடியும். பருமன் 6ஆனது பெரும்பாலும் கால்வா யூடாகப் புகுத்த முடியும். கருப்பைக் கால்வாய் மியூக்கசு மென் சவ்வால் நுதிக்கப்படும் இதற்கு முற்பக்க, பிற்பக்க நெட்டாங்கு வரைகள் உண்டு. இவ்வரைகளிலிருந்து சுருக்குகள் கிளைகளாக

Page 22
罗罗 இளம்பெண் நோயியல்
உயர்வாகவும் பக்கலாகவும் செல்லும். (உயிர் மர அமைவு என்பர்). கருப்பையின் குழி 5 ச. மீ. நீளமுடையது - உள்வாயை விடக் கழுத்துக்கால்வாய்க்குள் இழையஇயல் வாய் எனும் பிறிதொரு வாயுண்டு. இவ்விடத்தில் கால்வாயின் கம்ப அகவணி தன் வடிவம் வேறுபட்டு க் கன வுரு வடிவம் அடையும். இவ் மிகக்குறுகிய பகுதி (8 மி. மீ. நீளம்) தொடுகழுத்துப் பகுதியாகும். இப்பகுதிதான் கருப்ப இறுதி மாதத்தில் நீண்டு விரிந்து கீழான கருப்பைக் கடிகையை உருவாக்கும். மாதவிடாய் மாற்றங்கள் இம் மியூக்கசு நுதியில் அவ்வளவு முனைப்பாக நிகழ்வதில்லை. கருவுரு அமினிய மென் சவ் வுகள் உருவாகுவதில்லை. புனிற்றுக் குழந்தையில் கருப்பையுட லானது சிறியது; கழுத்துப் பெரிதானது. முழு நீளத்தில் இது மூன்றில் இரு பகுதியாகவிருக்கும். அடிக்குழி சிறியதாகும்; உயர் கோணம் மிக ஒடுங்கி நீண்டிருக்கும்; இதனுல், இரு கொம்புக ளுடைய ஒரு கருப்பை போன்ற வடிவத்தைத் தரும். ' உயிர் மர அமைவு கழுத்துக் கால்வாயுள் மட்டுமில்லாமல் கருப்பைக்குள் ளும் பரவும் அடிக்குழி பெரும் பாலும் கருப்பமுற்ற பின்புதான் உருவாகும்.
கட்டமைவு 8
கருப்பைக்கு 3 உறைகள் உள. அவையாவன சீரசு, தசை, மியூக்கசு ஆகிய உறைகளாம். கீழ் மியூக்கசுப்படையில்லை சீரசு உறை பரிவிரியத்தால் ஆனது. இது முன்னர் விபரிக்கப்பட்டது. தசை யானது சிற்றிடை வெளியிழையம் கலந்த எளிய தசையால் ஆனது. இதுவே கருப்பையின் தடிப்புக்கு முக்கிய காரணியாகும். இது மூன்று அடுக்குகளாக அமையும் வெளி, நடு, உள் ஆகிய அடுக் குகள், வெளியடுக்கு மெல்லியது. இதன் நார்கள் தொடர்ச்சியாக நெட்டாங்காக முற்பக்கத்திலும் பின்னர் அடிக்குழி மேலாக ஏறி பிற்பக்கத்திலும் கிடக்கும். கருப்பையின் பக்க ஒரங்களுக்குக் கிட்ட வாக இருக்கும், நார்கள், ஆவன பக்கல் பக்கமாகச் சாய்ந்து சூலக இணையங்கள், கருப்பைக் குழல்கள், விருத்த இணையங்கள் ஆகியவற்றுட் செல்லும், கழுத்தின் உயர் யோனிப் பாகத்தின் பிற்பக்கத்து நார்கள் இதே விதமாக கருப்பை-திருஎன்பு-இணை யங்களுட் செல்லும், நடு அடுக்கு மிகத்தடிப்பானது. கருப்பை உட லில் இந்நார்கள் சிக்கலான முறையில் குறுக்குமறுக்காகச் செல்லும் ஆனல் சழுத்தில் ஒருவட்ட ஒழுங்கமைவு பெறும். இவ்வடுக்கானது குருதிக் கலனச் செறிவும் நரம்புச் செறிவும் மிக்கது. இவ்வடுக்கின் பாதிப்பகுதி இவ்வகையான குருதிக்கலன்களால் ஆகியது. சில கலன்கள் நல்ல உருவ அமைவு பெற்ற கலன்களாகும். உள்ளடுக்கும் தடிப்பானது, சிற்றிடை வெளியிழையத்துடன் கலந்திருக்கும். உடலில் இவை சரிவாகக் கிடக்கும். ஆனல் கருப்பையின் உயர்

பெண்ணின் கூபகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் 23
கோணங்களில் இவை வட்ட அமைவு பெறும். இவ்வடுக்குக்கு உள்ளாகக் கருப்பைச் சுரப்பிகள் எல்லேமீறி முளைக்கும். கீழாகத் த சையுறை யோனியின் தசையுறையுடன் தொடர்புறும். உள் ளடுக்குத் தசையுள் நார்இழையமும் மீள்சக்தியிழையமும் கூடிய தொகையிற் காணப்படும்.
உடல் குழியின் மியூக்கசு மென்சவ்வு :
இது மழமழப்பும் மென்மையும் உடையதாகும். பிசிர் உடைய கம்பமேலணியால் நுதிக்கப்படும். இதன் பரப்பில் எண்ணற்ற துவாரங்களுண்டு இவைதான் கருப்பைச் சுரப்பிகளின் வாய்க ளாகும். இவை எளிய புன்குழாய்ச் சுரப்பிகளாம். இவை மென் சவ்வுள் முற்றிலும் சுருண்டு கிடக்கும். இவற்றின் குருட்டு முடிவிடங் கள் உள்ளிருக்கும் தசை அடுக்குள் முனைக்கும். (கீழ் மென்சவ் வடுக்கு இதற்கு இல்லாத காரணத்தினுலாம்.) கழுத்துக் கால்வா யின் மென்சவ்வானது கருப்பைக் குழியின் மென்சவ்விலும் பார்க்கத் திண்ணியது. இது கம்ப மேலணியால் நுதிக்கப்படும். உயரவாக தொடுகழுத்தில் கனவுருவடிவமாகப் படிப்படியாக மாறும். கீழ்ப் பகுதியில் உள்ள கம்பபே லணி திடீரெனச் செதில் மேலணியாக மாறி யோனியகப்பாகத்தின் வெளிப்பரப்பை நுதிக்கும் அடுக்குச் செதில் மேலணியுடன் தொடர்புறும் . இம் மென்சவ்வுள் ஏராளமான நுனி வளர் சுரப்பிகள் பொதிந்திருக்கும்.
தொடுகழுத்தில் : தசைநார்கள் குறைவடைந்து நாரிழையம் கூடுதலாக இருக்கும்.
கழுத்தில் நடுத்தசையுறையானது மிகுதியாக நாரிழையத்தால் ஆனது. தசையிழையமும் மீள்சக்தியிழையமும் சிறிய தொகையில் இருக்கும். ஆகையால் இது திண்மமாய் விறைத்துத் தடிபோ லிருக்கும்.
சுரப்பிகள் : இவை தொடு கழுத்தில் மிகக் குறைவு-வளர்த்தி மலர்ச்சியும் குறைவு. அதிகம் சாயமூட்டல டையாது. a DIT35 விடாய் மாற்றங்கள் அவ்வளவு நிகழ்வதில்லை.
கழுத்தில் : மியூக்கசு மென்சவ்வு கூடிய திண்மை உடையது. கருப்பையுடலின் மியூக்கசு மென்சவ்விலும் பார்க்க இதற்குக் கூடிய நாரிழையங்கள் உண்டு. இதனுல் இது திண்ணியதாகக் காணப் படுகின்றது. மேற்பரப்பும் அதிகம் மழமழப்புடையதல்ல. இதன் பரப்பில் பல்வகையான வரைகள் உள. இதற்குக்கீழ் மியூக்கசு மென்சவ்வில்லையாம் மேலணியும் கம்பமேலணியால் ஆனது. அருக லாக பிசிர் மேலணிக் கலங்களும் காணப்படும். சுரப்பிகள் நுனி

Page 23
வளர் கிளை யுண்ட குழாய்ச் சுரப்பிகளாம். எண்ணற்ற சிறிதளவு இணை புற்ற சுரப்பிகளும் உள. சுரப்பிகளும் கான்களும் இதே வகைக் கம்பமேலணியால் நுதிக்கப்படும். கழுத்து மென்சவ்வுன் தெளிவுப் பாபியால் நிரப்பப்பட்ட பல சிறிய தேங்கற் சிறைப்பைகளுண்டு.
罗蟹 இளம்பெண் நோயியல்
வயதுக்கு வயது கருப்பையுறும் மாற்றங்கள் :
புனிற்றுக் குழந்தையில் கருப்பைக் கழுத்து ஒப்பீட்டுமுறையில் நீளமானது. உடலிலிருந்து தொடு கழுத்தால் வேறுபடாது. கருப்பையும் இக்காலத்தில் வயிற்று உறுப்பாக அமையும். கழுத்தில் காணப்படும் மடிப்புக்கள் கருப்பையுடலுள்ளும் முழு நீளத்துக்கும் காணப்படும். வயது செல்லச் செல்ல இது படிப்படியாக வளரும். பூப்படைய முன்னம் இதன் வளர்ச்சி மிக விரைவானதாம் கருப் பையின் உடல் வளரவும் அதன் மியூக்கசு மென்சவ்வும் மழமழப் படையும். இதிற் காணப்படும் ஒலைவடிவ மடிப்புக்களும் மறைந்து பேரம், பிள்ளைகள் பெற்ற பெண்களில் கருப்பைக் குழி நிலைபேருக அகன்றும், பெருத்துமிருக்கும் . முது: யதில் கருப்பைச் சுவர் திண் ணிையதாய், மிக வெளிறி இருக்கும். வடிவத்தில் வேறுபாடுகள் அடையக் கூடும். இவை வளர்த்திப் பிறழ்வுகளா லாம். கொம்புகள் கொண்ட கருப்பையும் பிரிசுவர் உடைய கருப்பைகளும் இருந்திட் டொருக்கால் காணப்படும். இவை பின்னர் விபரிக்கப்படும்.
கருப்பைச் சுவர் மாற்றங்கள் : மாதவிடாய் வட்ட காலத்து இறுதியில் (ஒவ்வொரு 28 நாட்களுக்குப் பின்) கருப்பையகவணி தடித்திருக்கும். இதன் மேற்பரப்பில் நேரானதும், இடுங்கியதுமாய் அடர்த்தியாகக் காணப்படும் சுரப்பிகளின் வாய்களுக்கு இது ஒரு பஞ்சணையாகும். இதுவே அடர்த்தி அடுக்காகும். நடுவடுக்கு அல்லது பொஞ்சியடுக்கு அகவணியின் மிகத் தடித்த அடுக்காகும். இதில் சுரப்பிகள் மிக அகன்றும் எண்ணிக்கையில் கூடிய கலன்களையும், நிணயக் கான்களையும் இது அடக்கியிருக்கும். மேற்கூறப்பட்ட இரு அடுக்குகளும் மாதவிடாய் வேளையில் உலுர்த்தப்படும். தள அல்லது அடியடுக்கு ஆனது கருப்பைத் தசையடுக்கு மேல் கிடக்கும். ஒரு பெண்ணின் மாதவிடாய் வட்டத்தில் அகவணியின் மேலாகவிருக்கும் மூன்றில் இருபகுதியானது மாதந்தோறும் ஒத்திசைந்து நிகழும் மாற்றங்களேத் தோற்றும். இம்மாற்றங்கள் பின்னர் விளக்கப் படும். மாதவிடாய் முடிந்த பின்னர் அடித்தள அடுக்கிலிருந்து கருப்பையகவணி விரைவில் மீள்பிறப்புறும். அடித்தளவடுக்கு மாத விடாய் காலத்தில் மாற்றமடைவதேயில்லே. இவற்றைப் பற்றிய வேறு குறிப்புக்களே மாதவிடாய் விளக்கத்திற் பார்க்கவும்,
 
 
 

பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் 25
கருப்ப நிலையில் மாற்றங்கள் :
கருப்பை பருமனிலும் நிறையிலும் விரைவில் மிகையடையும். 3 அங்குல நீளமும் 40 கிராம் நிறையுமுடைய கருப்பையானது கருப்பநிலை 8ஆம் மாதத்தில் 20 ச. மீ நீளமும் கிலோ கிராம் நிறையையும் அடையும். இதன் வடிவம் முட்டையுரு போல் அல்லது வட்ட வடிவமாயிருக்கும். சுவர்கள் தடித்தும் தசையடுக்குகள் தனிப்பட்ட அடுக்குகள் உடைய அமைவைக் காட்டும் அடிக்குழி வட்டமாயும் முனைப்பாகவுமிருக்கும். உருண்டை இணையங்கள் நீண் டிருக்கும். அகலிணையத்தின் நடுசார் பகுதியின் அடுக்குகள் பெருத்து வரும் கருப்பையாற் பிரிக்கப்படும்.
உட் சுருள்வு மாற்றங்கள், பேறல் நிகழ்ந்தவுடனேயே கருப்பை சுருங்கும். சுருங்கியபின்பும் பெரிதாகத் தானிருக்கும் இது முற் பக்க வயிற்றுச்சுவருடன் நெருங்கி அணைந்திருக்கும். இதன் அடிக் குழி கொப்பூள் மட்டத்திலாம். இதன் மேற்பரப்பு சுருங்கியிருக் கும். தாங்கு இணேயங்கள் தளர்வடையும். கருப்பையை அசைத்து இடம் பெயர்த்தல் செய்ய முடியும். கருப்பைக் கழுத்து நீண்டும் தொய்ந்துமிருக்கும் பேறல் நிகழ்ந்த இரண்டாம் நாள் தொடக் கம் அது விரைவில் சுருங்கும். முதலாம் கிழமை முடிவில் 500 கிராம் நிறையை எய்தும். மேற்பரப்பில் உள்ள சுருக்குகள் மறைந்து போம். கழுத்து குறுகித் திண்மமடையும். இணையங்களும் சேர்ந்து அருங்கும். கூபகத்தளமும் தன் முன்னிலைத் தொணியை மீளப் பெறும் 2ஆம் கிழமை முடிவில், நிறை 350 கிராம் ஆகும். 8ஆம் கிழமை முடிவில் தன் முந்திய ஒய்வு நிலைப் பருமனையடையும் (40 இராம்),
யோனிமடல் :
இது பெண்ணின் புணர்ச்சி உறுப்பாகும். இது கோறையுண்ட தசைக்குழாயமைவுடையது. செதின் மேலணியால் நுதிக்கப்படும். இதன் குழி உயர்வாக கருப்பைக் கழுத்து வெளிவாய் வழியாகக் கருப்பைக் குழியுடன் தொடர்புடையது. கீழாக யோனிவாய் வழி யாகப் புறவெளியுடன் தொடர்புடையது. இம்மடல், பேற்றுக் கால்வாயாகவும், மாத இரிவுக் குருதிக்கு (தீட்டு) வடி குழாயாக வும் அமையும் பொதுவாக இது கருப்பைக் கழுத்துச் சுரப்பி களினதும், கருப்பைச்சுரப்பிகளினதும் சுரத்தல் நீரால் ஈரமாக வைத்திருக்கப்படும். இது 3 அங்குல நீளமுடையது (75 ச.மீ). இலங்கைப் பெண்களின் நீளம் இதுவாகும். மேல் நாட்டுப் பெண்

Page 24
୭୫ இளம்பெண் நோயியல்
களில் இது இன்னமும் 25 ச.மீற்றரால் கூடியது. யோனிமடல் அச்சு கருப்பையச்சுடன் 909க்குச் சிறிதளவு கூடிய கோணத்தை அமைக் கும். ஊறுநீர்ப்பை நிரம்பவும் இந்தக் கோணவளவு மிகையுற்று கருப்பையை யுயர்த்தும். கருப்பைக் கழுத்து முற்பக்கச் சுவரூடாக யோனி மடலுள் முனைக்கும். இப்போது முற்பக்கச் சுவர் 6 25 ச.மீ. (24 அங்குலர் நீளமும் பிற்பக்கச் சுவர் 7 " 5 ச.மீ. (3 அங்குல) நீளமும் உடையது. நிமிர் நிலையில் இது உயர்வாகவும் பின்னுகவும் நோக் கும். முற்பக்கச் சுவரும் பிற்பக்கச் சுவரும் உயர் பகுதியைத் தவிர்ந்த மற்றைய பகுதியில் ஒன்று மற்றையதுடன் தொடுகை செய்யும். கருப்பைக் கழுத்து தொடுக்கப்பட்ட உயர் பகுதிதான் மடலின் மிக விரிந்த பகுதியாகும். இதன் குறுக்கு வெட்டு முகம் கீழான பகுதியில் H வடிவமாயும் நடுப்பகுதியில் ஒரு சிறு பிளவு போன்றதாயுமிருக்கும். உயர் பகுதியான விரிந்த பகுதி கருப்பைக் கழுத்தைச் சுற்றியிருக்கும் கீழாக யோனி வாய் நாணப் பிளவுகள், சீறிதழ்களுக்கு இடையிலாக வாய்விடும். கன்னிப் பெண்களில் இவ்வாயானது அரைகுறையாகக் கன்னித் திரையால் மூடுண் டிருக்கும். யோனி மடலின் நீளமானது பெண்ணுக்குப் பெண் வேறு படும். இது மிக விரிவடையக்கூடிய வுறுப்பாகும்.
யோனிமடல் அயல் உறுப்புக்களுடன் உறும் தொடர்புகள் :
முற்பக்கமாகக் கிடக்கும் அயல்கள், கருப்பைக் கழுத்து, ஊறு நீர் ப்பை அடித்தளம், ஊறித்தர்களின் முடிவிடங்கள். ஊறித்தாரை ஆதியன, மிக உயரமாக வயிற்றுக்குழியின் மிக உயரமாக இருக்கும் ஒரு சிறுபகுதியும் இதற்கு முற்பக்கமாக இருப்பதாகக் கருதின் பிழையில்லையாம். கருப்பைக் கழுத்தின் உயர் யோனிப் பகுதி ஊறு நீர்ப் பையின் தளத்துடன் நேரடித் தொடர்புடையது. ஊறுநீர்ப் பைத் தளத்தை இலகுவில் பின்னுகத் தள்ளி முற்பக்க யோனிச் சுவரை அடையலாம். (முற்ரு ன கருப்பையகற்றலிலும், ஒரளவுக்கு கீழ்க்கடிகைச் சீசர் அறுவை வினையிலும் இது செய்யப்படும்). ஊறித்தாரையானது முற்பக்கச் சுவரின் கீழ்ப் பகுதியுடன் மிக ஒட்டிய இணைவுடையது. (இது ஊறுநீர்ப்பையிறங்கல் செப்ப அறுவை வினை ஆற்றும் பொழுது அறியப்படும்) ஊறு நீர்ப்பையையும் ஊறித் தாரையையும் தாங்கும் ஒரு பட்டிப்பு யோனி முற்பக்கச் சுவரை மேற்கூறப்பட்ட கட்டமைவுகளிலிருந்து வேறுபடுத்தும். இது ஒரு தசைப் பட்டிப்புப் படையாகும். இப்பட்டிப்பு ':

பெண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் 27
கருப்பைக் கழுத்துக்கு விரிந்து பரவும். முன் கூறியது போல் ஐதான சிற்றிடையிழையத்தால் ஊறுநீர்ப்பை அப்பட்டிப்பிலிருந்து வேறு படுத்தப்படும் - ஊறித்தாரையோ மிக ஒட்டியிணைவுற்றிருக்கும். இப்பட்டிப்பு ஊறுநீர்ப்பைக்கும் ஊறித்தாரைக்கும் யோனியுறை முற்பக்கச் சுவருடன் ஒட்டி ஒரு தாங்கல் கட்டமைவாக அமையும் பேற் றுக்குப் பின் சிலரில் இது தளரக்கூடும் யோனி மடலின் உயர் முடிவிடம் ஒரு பக்கத்துக்குச் சிறிது விலகியிருக்கக் கூடும். இவ் விதம் இருப்பின் ஒரு பக்கத்து ஊறித்தர்கள் இதற்கு அண்மித் திருக்கக்கூடும்.
யோனிமடலின் பிற்பக்கத்து அயல்கள்: இவையாவன- பிற்பக்கச் சுவர் உயர் (13 ச. மீ.) பகுதிக்குப் பின்ணுக நேர்குடலும் -யோனி அடைப்பமும், இதனுள் அடக்கப்பட்ட குடல்களும் , நேர்குடல் விரி முனை குடுவையுருவும், (இக்கட்டமைவு ஐதான சிற்றிடையிழையத் தால் யோனிச் சுவரிலிருந்து வேறுபடுத்தப்படும்) பரியேனத்தின் மையச் சிரையும் கிடக்கும்.
பக்கலாக அகலிணையத்தின் அடியானது இரு மருங்கிலுமுண்டு. ஊறித்தரானது பக்க விதானத்துக்கு உயர்வாகச் செல்லும், இவ்விடங்களில் கருப்பை நாடிகள் ஊறித்தாரைகளைத் தாண்டிச் செல்லும்.
பதியவாக இரு பக்கங்களிலும் குதவுயர்த்திகளுண்டு. இவை யோனியிலிருந்து நாளப் பின்னல்களால் இடைபடுத்தப்படும். இன் னமும் பதிய, பக்க அயல் உறுப்புக்களாக பெரும் தலைவாயிற் சுரப்பிகளும், குமிழ் - பொஞ்சித் தசைகளாற் கரக்கப்பட்ட தலை வாயிற் குமிழ்களும் இருக்கும். மேலும் பரியேன மென்சவ்வானது நடுத்தளத்தை அண்மித்து யோனியுறையின் ஒவ்வொரு பக் கத்திற்குக் கீழாகவும் யோனிக்கும் தலைவாயிற் குமிழுக்குமிடையி லாகவும் சென்று சிறிதழ்களின் அடியுடன் ஒருங்கிணைவுறும்.
G3u u T Gif) Di Gió) Går தாங்கு கட்டமைவுகளைத் தொகுத்துக் கூறின், அவை கீழ்வருவனவாம்:
அ. உயர் பகுதியின் பக்கங்களில் வலிவான குறுக்குக் கருப்
பைக் கழுத்து இணையங்கள், கூபக ப க் க ச் சுவர்களி
லிருந்து யோனி விதானத்துக்கும் உயர் யோனிக் கழுத் துக்கும் ஒரு தொங்கு கவிகை போல் பரவி இருக்கும்.

Page 25
8
అస్త్రీ
s
இளம்பெண் நோயியல்
பிற்பக்கத்தில் : கருப்பை - திரு இணையங்கள் பக்கத்துக்கு ஒன்ரு கவிருக்கும். இவை மேற்கூறப்பட்ட இணையக் கவி கையின் பின் விளிம்புகளாம். நடுப்பகுதியின் பக்கங்களில் : குதவுயர்த்தியின் நடுசார் விளிம்புகள் அதைத் தாங்கும். இத்தசைகளிலிருந்து தசை நார்கள் யோனித் தசையைச் சென்றடையும். கீழான பகுதியில் : யோனியுறை குதவுயர்த்திகளின் தடுசார் விளிம்புகள் யோனிமடலை மேற்பரப்பு பரீனத் தசைக ளாலும் தாங்கல் பெறும். குதவுயர்த்திகள் பொதுவாக முற்குத அராவியுடனும் தொடுக்கப்படும். இவ்விரு தொகுப்புத் தசைகள் பரீன உடலை அமைவு செய்யும். இத்தகைய அமைப்புக்களை அடக்கும் கூபகப்பட்டிப்புகள் தாங்கல் வினை செய்வதற்கு ஒரு பட்டிப்புக்கோப்பாக உதவும்.
6) opju. i 5
கூபகப் பட்டிப்புக்களின் படைகள்
தடித்த கறுப்புப் பரப்புகள்-இச்சைவழித் தசைகள், இவை ஆழ் பட்டிப்புக்களால் (வெண்ணிற) அடக்கப்படும், குறுக்குக் கீறுகளிட்ட பரப்புகள் அகக் கூடகப் பட்டிப்புக்களாம். இது கருப்பையையும் யோனியின் பெரும் பகுதியையும் காக்கும்.
புடைதாங்கித் தசை, 3. ஆழ்பட்டிப்பு. 3. உள்நெருங்கற் (அடையல்) மசை, அகக்கூடகப் பட்டிப்பு, 5. குதவுயர்த்திக்கசை .ே குறுக்குப் பரீனக் கசை
 
 
 
 

பேண்ணின் கூடகவுறுப்புக்களின் கட்ட
ຂຶuLທີ່ ນີ້
பரீனத் தசைகள்
2. குமிழ் பல் குதைத்தசை, 3. குறுக்கு ப்
1. நாரிய பல் குகைக்கசை, பரீனத் த8ை, 4 குதவிறுக்கிகள், சி. குக உயர்த்தித்திசை, 8. பெரிய திரு-கடிஇணையம், ?, பெருபிட்டத் (குண்டித்) தசை, 8. திருவென்பு,
9. குயிலலகு என்பு, 10, உள் நானநரம்பு,
யோனி மடலின் கட்டமைவு:
யோனி மடல் சுவருக்கு மூன்று உறைகள் உண்டு. அவையாவன:
இ.நே) , தி லிசியு இற ,
ぬ *
அகக் கூபகப்பட்டிப்பாலாகிய (நாரிழைய)
மியூக்கசு உறை ஆகியனவாம்.

Page 26
30 இளம்பெண் நோயியல்
நாருறையானது குதவுயர்த்திகளையடக்கும் பட்டிப்பு, பரீனத் தசைகளையும் அடக்கும் பட்டிப்புக்கள் தாமே தம்முள் தொடர்புற்று யோனியைத் தாங்கவும் உதவும். இந்நாருறை அடர்த்தி இணை யிழையத்தா லாகியது.
தசையுறை : எளிய மழமழப்புத் தசையாலாகியது. இது வெளி நெட்டாங்குத் த சையடுக்காகவும் உள்வட்டத் தசையடுக்காகவும் ஒன்று மற்றையதுடன் நெருங்கிய இணைவுடையதாகவும் இருக்கும். இத்தசையள் பொதுவாய்ப் பொருத்துடைய நாள வலையுரு அமை வுண்டு. இது நிமிரி இழையத்தைக் குறிக்கும். இது சிறப்பாக யோனி உறையின் கீழ்ப் பகுதிக்குச் சுற்றிவரவுண்டு. வெளிவாய்ப் பகுதியில் எளிய தசையானது (குமிழ் - பொஞ்சித் தசையின்) வட்ட வரியுண்ட தசைக் கற்றைகளால் மாற்றீடு பெறும். இவற்றுட் சில ஊறித் தாரைச் சுவரையமைக்கும் தசைகளுடன் தொடர்புடையன.
மியூக்கசு மென்சவ்வு :
இது ஒரு தடித்த அடுக்காகும். இது படைபட்ட செதில் மேலணியால் நுதிக்கப்படும். கன்னிப் பெண்களில் மென் சிவப்பு நிறமுடையது. இம் மென்சவ்வானது குறுக்காகக் கிடக்கும் அலை நெளிவுகளேயும் நடுவிலிருக்கும் நெட்டாங்கு வரைகளையும் தோற் றும். பிள்ளை பெற்றவர்களில் இத் தோற்றப்பாடு நிகழ்வதில்லை. அது மறைந்துபோகும். இம் மேலணிக்குள் கீழாகவிருக்கும் இணை இழையத்திலிருந்து பல சிறிய சிம்பிகள் முளைக்கும். மியூக்கசு உறை யுள் சிறிய நிணைய இழையக் கணுக்களும் உண்டு, யோனி மேலணி யானது குழந்தைப் பருவத்திலும், முதுமைக் காலத்திலும் செயற்கை மாதவிடைவு காலத்திலும் மெல்லியதாகக் காணப்படும். கலங் களுள் கிளேக் கோசன் இல்லை. இத்தோற்றம் சூலகங்கள் செயற் படாத காரணத்தினுலாம்.
பாலினச் செயல்கள் நிகழும் காலத்தில், யோனி மேலணி யானது தடித்தும் பலவடுக்குகள் உடையதாகவுமிருக்கும். மேலடுக் குக் கலங்கள் கொம்புரு மாற்றங்கள் அடையும், கலங்களுள் கிளைக் கோசன் நிறைந்திருக்கும் இத்தோற்றங்கள் சூலகங்கள் செயற் படுவதாலாம். யோனி க்குள் இருக்கும் பாயி அமிலத் தாக்கமுடை யது (PH = 40 மட்டிலாம்). இது பூட்புப்பருவத்துக்குப் பின் யோனிக் குள் குடியிருக்கும் உடோடர் லன் பசில சுவாலாம். இது கிளைக்கோசனை மாற்றி இலற்றிக்கமிலத்தை உண்டாக்கும். இது ஒரு பாதுகாப்பு அமிலமாக அமைந்து, யோனிக்குள் புகும் நோயையுண்டாக்கும் பல உயிரிகளைக் கொல்லும். சில உயிரிகள் கொல்லப்படமாட்டா (அமி லப்பாயியில் வளரும் உயிரிகளாவன யோனி திரைக்கோமொனுசு, மொனிலியா அல்பிக்கான்சு ஆதியன). புணர்ச்சி வேளையில் புகுத்தப் படும் பேம்பாயியானது காரத்தன்மையுடையது. கருப்பைக் கழுத்தி லிருந்து வடியும் பாயியும் காரத்தன்மையுடையது. இது கருப்பைக் கழுத்துவாய் பின்விதானத்துள் முனைப்பதால், இவ்விதானத்தில்
 

பெண்ணின் கூபகவுறுப்புக்களின் கட்டமைப்பியல் 3 Ι .
தேங்கியிருக்கும் பாயி காரத்தன்மையுடையது - இவ்வித விதானத் துள்ளேயே க ரு ப்  ைப க் கழுத்து வாய்க்கு நேராக பேம்பாபி விடப்படுகின்றது. பேம்கள் காரப்பாயியூடாக கருப்பைக்குள் ஊர்ந்து செல்வதற்கு, இவ்வகையான அமைவு உதவுகின்றது. பெண் கூபகத்துள் எச்ச உறுப்புக்கள்:
எல்லா மு ளே யங் களு ம் (கருக்களும்) பின்னர் ஆணு கவோ அல்லது பெண்ணுகவோ மாற்றம் அடையப்போகின்றன என்பதைப் பொறுத்திராது அவற்றில் ஆண் பாலின உறுப்புக்களும் பெண் பாலின உறுப்புக்களும் உருவாக்கப் பெறும் (வூல்வியன் கான் களும் முல்லேறியன் கான்களும்.) இந்த வியர்த்தமடையாப் பிறப் புச் சுரப்பி (ஆதிகொணுடு அல்லது ஆதி சனணி) இறுதியில் அறுதியிடு கூறுகளால் ஒரு விதையாகவோ அல்லது சூலகமாகவோ மாறுகின்றது. இவ்விதமாகவே ஆணுகவோ அல்லது பெண்ணுகவோ மாறுகின்றது. இந்தப் பாலின வரையறுப்புக்குப் பின்னர் கருவுருவின் பாலின வகைப்படுத்தல் உறுதிப் படுத்தப்படல் வேண்டும். இந்த நோக்கில் இப்பாலினவகையின் துணைப்பிறப்புறுப்புக்கள் தொடர்ந்து வளர்ச்சி யும் மலர்ச்சியுமடையும் வேளையில் (ஆணில்-வூல்வியன் கான்களும் பெண்ணில் முல்லேறியன் கான்களும்) இவற்றின் எதிர் பாலின உறுப்புக்கள் பின்னடைவுற்று அல்லுரட்டமடையும் அல்லது வளராது எச்சங்களாக நிலைக்கும். இவ்விதமாகவே ஒரு பெண்ணில் ஆணின் எச்ச உறுப்புக்கள் காணப்படுகின்றன. கருப்பைக்குழாய் நடுமடிப் பில் கருப்பைக்குழாய்க்கும் சூலகத்துக்குமிடையில் நூல் போன்ற நுண்ண ய புன் குழாய்க் கட்டமைவுகள் காணப்படும் - இவற்றை உயர் முட்டை தாங்கிகளென அழைப்பர் இந்த எச்சப் புன் குழாய் கள் வூல்வியன் உடலின் (இடை ஊறுநீரி) உயர் பகுதியின் புன் குழாய்களாம். இவை விதை மேற்றிணிவின் அமைப்பொத்தவையாம். இவை வூல்வியன் கானுள் (இடை ஊறுநீர்க்கான்) தமது சுரத்தலைச் சேர்க்கின்றன. வூல்வியன் உடலின் கீழான பகுதியில் உள்ள புன்குழாய் களினதும் திரணைகளினதும் எச்சங்கள், குழாய் நடுமடிப்பில் கருப் டைக்கு அண்மித்திருக்கும். இவற்றைப் பரமுட்டைதாங்கி என்பர். உயரக்கிடக்கும் முட்டை தாங்கியுடன் தொடுக்கப்பெற்ற சிறிய சிறைப்பைக் கட்டமைவுகளும் சிலரிற் காணப்படும். இவற்றை நீர்புடகங்கள் என்பர். அடிக்கடி பெண்களில் ஒரு மெல்லிய காம் பால் தொடுக்கப்பெற்ற ஒரு பெரிய சிறைப்பைக் கட்டமைவு காணப்படும். இதனை மோகா னியின் நீர்ப் புடகம் என்பர். இது வூல்வியன் கானுடன் சேர்மானமுடையதாகக் காணப்படும். இது விதை மேற்றிணிவில் காணப்படும் காம்புற்ற தொங்கலுடன் அமைப் புடையது. -
வூல்வியன் கானும்-துண்டப்பகுதிகளாகக் காணப்படும். இது குழாய் நடுமடிப்புப் படைகளுக்கிடையாகக் கருப்பையை நாடிச் செல்லும். பின்னர் கருப்பைக் கழுத்து மட்டத்தில் கருப்பைக் கழுத்துட் புகுந்து இதனூடாகச் சென்று யோனிச் சுவரை அடை

Page 27
இளம்பெண் நோயியல்
பும் யோனியின் பக்கக் கூர்த்தசைகளுள் இது கிடந்து பின்னர் முற் பக்கச் சுவருள் கிடந்து கன்னி மென்திரை ை அடைய முன்னம் வெளியே வடிவதற்குத் துவாரம் இல்லாததின் காரணத்தினுல் இது முடங்கிப்போகும். இவ்வுறுப்புக்கள் தம் வினைச் செய்கைகளில் ஈடு படுவதில்லை. ஆனல் இவை நோயியல் மாற்றங்களடைந்து சிறைப் பைகளாகவோ அல்லது கழலேயங்களாகவோ மாறும். தரமான பருமனளவு அடையவும் கூடும். அகலினையத்திற் காணப்படும் பரச் சூலகச் சிறைப்பைகள் வூல்வியன் கான்களில் இருந்து ஐருவாகின் றனவெனக் கருதப்படும்.
(ஆணில்-வூல்வியன் கான்கள்-உடல் இடை கழிநீரகம்
பெண்ணில் முல்லேறியன் கான்கள்-பரவிடை கழிநீரகம்)
Si giga. Là
பெண்கூபகவக உறுப்புக்களிற் காணப்படும் ஆண் உறுப்புக்களின் எச்ச உறுப்புகள்
1. இருப்பைக்குழாய், 8, மோகானியின் ஐயீடாற்றிடு, 3. வூல்வியன் உடலியின் உயர் புன்குழாய்களின் ஐயிடாற்றிடுகள், 4, வூல்வியன் உடலியின் உயர் பகுதிப்
புன்குழாய்கள், 5. குலகம், ,ே இருப்பை, 7. வூல்வியன்கான், 8. யோனிச்சுவர்.
 

இயல் 2
வயிற்றுச் சுவரினதும் கூபகத் தளத்தினதும்
தாங்கல் செய்யும் கட்டமைவுகள்
பெண்ணுேயியல் மருத்துவனுக்கு இக்கட்டமைவுகளைப் பற்றிய அறிவு மிகவும் முக்கியமாகும். மிகுதியான நோய்களுக்கு வயிற்று முன் சுவரைக் கீறித் தீர்வு செய்ய வேண்டிவரும், கூபகத் தளமானது பேறல் நிகழ்ச்சிகளில், சேதங்களால் காயப்படக்கூடும்; தாங்கல் கட்டமைவுகளும் வலிமை குன்றக்கூடும். அறுவை வினைகளை ஆற்றி இவற்றைச் செப்பம் செய்ய வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.
வயிற்றுச் சுவர் : இது பல பட்டிப்பு அடுக்குகளாலும் தசை படுக்குகளாலும் ஒரு வலிவுடைய தாங்கல் கட்டமைவைப் பெறு கின்றது.
வயிற்றுச் சுவர்களின் அடுக்குகள் : வெளியிலிருந்து உள்ளாக,
1. தோல், இது கீழாகப் பரவி, பரீனத்தையும் கரக்கும்.
2. முற்பக்கச் சுவர் பட்டிப்புகள் (பேசியாக்கள்).
1. மேற்பரப்புப் பட்டிப்பு
முற்பக்க உயர் புடைதாங்கி முள்ளுபட்டத்துக்குக் கீழாக இதற்கு இரு படைகளுண்டு. ஒன்று கொழுப்பு தோற்கீழ்ப் படை (காம்பரின் படை) , மற்றையது ஆழமான மென்சவ்வுப்படை (இஸ் காப்பானின் படை), முந்தியபடை சிற்றிட இழையத்தால் அமைவு பெறும் இதன் அரில்களுள் கொழுப்பு அடக்கப்படும். உயரவாக இதைத் தொடரின் இது முற்பக்க உயர் புடைதாங்கி முள்மட் டத்துக்கு உயரவாக ஆழமான படையுடன் ஒருங்கிணேவுறும் கீழ் நோக்கி அதைத் தொடரின் அது கவட்டிணையத்துக்கு மேலாகப் பரவி, தொடையின் முற்பக்க மேற்பரப்புப் பட்டிப்பின் மேற்பரப் புப் படையுடன் தொடர்புறும் காம்பரின் படையானது பூப்புச் சிறு முகிழ் மட்டத்தின் ஆழ் பட்டிப்புப் படையுடன் ஒருங்கிணைந்து, தன் அரில்களில் கொழுப்பையடக்கியிருக்கும். கீழாகவும் நடுசார்ந் தும் இந்தக் கொழுப்பு மேற்பரப்புப் படையானது பேரிதழ்களேக் கரந்து பரீன மேற்பரப்புப்படையுடன் தொடர்புறும்,
2. ஆழ்மென்சவ்வுப் படையானது (இஸ்காப்பா)
இது மீள்சக்தி நார்களை அடக்கிய வலிவுடைய படையாம்.
மேற்பரப்பு மேல்வயிற்றுக் குருதிக்கலன்களும், கவட்டிணையப் பகுதி
3.

Page 28
శ్రీ 4 இளம் பெண் நோயியல்
யில் கவட்டு நிணையச் சுரப்பிகளும், இவ் ஆழ் மென்சவ்வுப் படைக் கும், காம்பர் படைக்கும் இடைப்பட்டிருக்கும். இதன் ஆழமான பரப்பு சிற்றிடஇழையத்தால் தளர்வான முறையில் வயிற்று வெளிச் சரிவுத் தசைகளின் நார் விரிவுடன் இணைபட்டிருக்கும். உயரவாக இப்படையானது தோல் கீழ் படை போன்றிராது வெண் கோட்டுடன் நார்ப்பட்டிகளால் திடமாகத் தொடுக்கப்பட்டு இருக்கும். கீழாக, கவட்டிணையத்தின் நடுசார் பகுதியுடன் இணையும். ஆனல் இணை யத்தின் பக்கல் பகுதியானது சிறிது தூரத்துக்கு இதற்குக் கீழாகப் பரவித் தொடையின் அகலப்பட்டையுடன் இணைவுறுகின்றது. (நினை யச் சுரப்பிகளை அகற்றும் பொழுது இத்தொடர்பு உணர்த்தப்படும்.) கீழாகவும் நடுசார்ந்த திக்கிலும் அது கருப்பையின் உருண்டை இணையத்திற்குச் சமாந்தரமாகச் சென்று பேரிதழையடையும்.
இவ்விரு அடுக்குகளும் பரீனத்தில் இவற்றிற்கு ஒத்த அடுக்கு களுடன் தொடர்புறும் . இவ்விரு அடுக்குகளுக்குமிடையில் ஒரு வகையான தசையும் காணப்படுவதில்லை.
3. நார் விரிப்புக்கள்
ஆழ் மேற்பரப்புப் பட்டிப்புக்குக் கீழாக வயிற்று வெளிச் சரிவுத் தசையின் நார் விரிப்புக் காணப்படுகிறது.
4. வயிற்று வெளிச் சரிவுத் தசையானது
கீழாகவிருக்கும் எட்டு விலா என்புகளின் வெளிப் பரப் புக்களிலிருந்து கிளம்பி கீழ் நோக்கியும் முன் நோக்கியும் நடு சார்ந்தும் செல்லும். தசையின் உயர் மூன்றிலிரு பகுதியானது 9ஆம் விலாவிலிருந்து செங்குத்தாக கொப்பூழ் வரைக்கும் ஒரு நார் விரிப்பாக மாறி, பின்னர் இக் கோட்டிலிருந்து பக்கலாக முற்பக்க உயர் புடைதாங்கி முள்ளுக்குப் பின்னு கவிருக்குமிடத்தை இணைக்கும் கோட்டுக்கு முன்னுகப் பெரும் நார் விரிப்பாக மாறு கின்றது. இவ் விரிப்பானது நடுசார்ந்து உட்சரிவுத் தசை நார் விரிப்புக்கு மேலாகச் சென்றும் இப்பிந்திய நார் விரிப்புடன் உறுதி யான தொடுப்புற்று வெண்கோட்டை உருவாக்கும். இத்தசை யானது இவ்வெண் கோட்டின் மூலமாக, உயரவாக வாட்போலி கசிவிழையத்துடனும், கீழாக பூப்பிணைப்புடனும் தொடர்புறு கின்றது.
முற்பக்க உயர் புடைதாங்கி முள்ளுக்கும் பூப்புச் சிறு முகிழுக்கு மிடையில் இது தடிப்புற்றுக் கவட்டு இணையத்தை (பூப்பாற்று) உரு வாக்கும். இதன் சில நார்கள் சீப்புக் கோட்டுடன் தொடுப்புற்று கவட்டு இணையத்தின் சீப்புப் பகுதியை உருவாக்கும். (யோனி

வயிற்றுச் சுவரினதும் . கட்டமைவுகள் 霹荔
விதான இறங்கலில் இவ்விணையங்களைக் கொண்டு விதானத்தைத் தாங்கல் செய்திருக்கிறேன்.) சில நார்கள் எதிர்ப்பக்கத்துப் பூப்புச் சிறுமுகிழுக்குச் செல்லும் இந்நார் விரிப்பில் பூப்புச் சிறு முகிழுக் குச் சற்று உயரவாக வெளிவயிற்று வளை யமுண்டு. இதனூடாகக் கருப்பையுருண்டை இணையம் வெளியேகிப் பேரிதழையடையும்,
5. வயிற்று உட்சரிவுத்தசை
இது மேற்கூறப்பட்ட தசைக்கு ஆழமாகக் கிடக்கும். இவ் உட் சரிவுத்தசையானது கவட்டு இணையத்தின் பக்கல் பகுதியின் மூன் றில் இரு பங்கு நீளத்திற்கு வயிற்றுப்புறப் பரப்புடன் தசை நார் களால் தொடுக்கப்பட்டும், புடைதாங்கி முகட்டின் முற்பக்கத்து மூன்றின் இருபகுதி நீளத்திற்கு இதன் நடுவரை குறுகிய சிரை நார்களால் தொடுக்கப்பட்டும், நாரியப் பட்டிப்பின் முற்பக்கப் பட்டையுடன் சில தசைநார்களால் தொடுக்கப்பட்டும் இருக்கும். இத்தொடுப்பிடங்களிலிருந்து நார்கள் விசிறி போன்று வயிற்றுப் பக்கத்தை அடைக்கும். புடைதாங்கி மு கட்டுடன் தொடர்புடைய நார்கள் முன்னுகவும் நடுசார்ந்தும் உயரவாகவும் பரவும், இவை முற் பக்க புடைதாங்கிமுள்ளை யணுகி கிடைநிலையை அடையும். இதற்கு அப்பால் இது வயிற்றுக்கு முன்னக நார்விரிப்பு அமைவைப் பெறும், கவட்டிணையத்துடன் தொடுப்புற்ற நார்கள் நார் விரிப்பின் கீழ்ப் பகுதியை அடைவதற்குச் சாய்ந்து செல்லும், கீழான தசைநார்கள் கருப்பை உருண்டையிணையத்துக்கு மேலாக வளைந்து சென்று வயிற் றுக் குறுக்குத் தசைநார் விரிப்பின் கீழாக நார்களுடன் இணைந்து, ஒருங்கிணை சிரையை உருவாக்கும்.
உட்சரிவுத் தசையின் நார்விரிப்பு: இது பரவலாக அதிகம் மாற்றம் அடைவதில்லை. இது 10ஆம் விலாக் கசியிழையத்திலிருந்து பூப்புடன் தொடுக்கும் ஒரு கோட்டுக்கு முன்னுக நார் விரிப்பாக மாற்றம் அடையும். இதனுல் உயரவாக இது அகன்றிருக்கும். கீழாக ஒடுங்கி யிருக்கும். வயிற்று நேர்தசையின் பக்கல் ஒரத்தில் அது இரு பட்டை களாகப் பிரிந்து ஒன்று நேர்தசைக்கு மேலாகவும் மற்றையது நேர்தசைக்குப் பின் ஞகவும் சென்று நேர் தசைக்கு ஒரு பட்டிப் புறையை அமைக்கும். இவ்விரு பட்டைகளும் வெண்கோட்டில் இணையும், முற்பக்கப்பட்டை வெளிச்சரிவுத் தசையின் நார் விரிப் புடன் ஒருங்கிணையும். கொப்பூழுக்கும் பூப்பிணைப்புக்கும் இடையி லுள்ள நடுமையத்திலிருந்து கீழாக உட்சரிவுத் தசையின் பிற்பக்கப் பட்டை இல்லையாம். ஆனல் இது நேர்தசையின் பக்கல் விளிம்பு ஒரமாகக் கீழ்நோக்கிச் சென்று வயிற்றுக் குறுக்குத் தசைநார் விரிப் பின் கீழான பகுதியுடன் இணைந்து ஒருங்கிணைசிரையை உருவாக்கி பூப்புமுகட்டுடனும் சீப்புக் கோட்டுடனும் தொடுப்புறுகின்றது.

Page 29
இளம் பெண் நோயியல்
வயிற்றுக் குறுக்குத் தசை இது தசைக்கீலங்களால், கீழாக இருக்கும் ஆறு விலா என்பு களின் ஆழ்பர்ப்புடனும், பிற்பக்க நார் விரிப்பால் நாரியப்பட்டிப் பின் முற்பக்கப்பட்டையுடனும், குறுகிய சிரை நார்களால் புடை தாங்கி முகட்டின் முற்பக்கப் பகுதியுடனும், தசைநார்களால் கவட் டிணையத்தின் பக்கல் பகுதியின் மூன்றில் ஒரு பங்கின் ஆழ்பக்கத் துடனும் தொடுப்புறும், தசையானது மெல்லிய தசையாம். தசை நார்கள் பெரும்பாலும் வயிற்றுக்குக் குறுக்காகச் செல்லும் மிகுதி யானவை முன்னுக ஒரு நார்விரிப்பில் முடிவடையும். இவ் விரிப்பு கொப்பூழ் மட்டத்தில் அகலமாய் இருக்கும். கீழாக இத்தசையானது உட்சரிவுத் தசையின் பிற்பக்கப் பட்டையுடன் நெருங்கி இணை வுறும். கொப்பூழுக்கும் பூப்பிணைப்பு இடையிலுள்ள இடைப்பிரதே சத்து நடுப்பகுதியில், தசைநார்கள் நேர்த்தசையின் பக்கல் விளிம்பு ஒரமாக கீழ்நோக்கிச் சென்று உட்சரிவுத் தசையின் பிற்பக்கப் பட்டையுடன்இணைந்து ஒருங்கினேசிரையை உருவாக்கும். இத்தசை யின் கீழ் விளிம்பு யாதொன்றுடனும் இணைவுறுவதில்லை. உருண்டை யிணையத்தை வளைத்திருக்கும்.
.ே கூம்புருத் தசை
இது நேர்தசையின் கீழ் முடிவிடத்தில் நேர்தசையின் உறையுள் ளேயே அடக்கப்பட்டிருக்கும். இது சிறு சிரை நார்களால் பூப்பு முகட்டின் முற்பக்கப் பகுதியுடன் தொடுக்கப்படும். இது உயரவாக (5 ச. மீ.) ஒரு கூர்முனையால் வெண் கோட்டுடன் தொடுக்கப்படும். மேலே கூறப்பட்ட தசை நார் விரிப்புக்களாவன ஆழமான பட்டிப் புடனும், முக்கோண இணேயத்துடனும், கூபக இச்சை வழித் தசைகளின் பட்டிப்புகளுடனும் தொடர்புறும் வயிற்று இச்சை வழித் தசைகள், கூபகப் பிரிமென்ற கட்டுத் தசைகளை ஒக்கும்.
8. பரிவிரிய சிற்றிட இழையப் படையொன்றுண்டு
இது கூபக கீழ்பரிவிரியப் பட்டிப்பை ஒக்கும். இது அதனுடன் தொடர்புடையதுமாம், அறுவைக் காயத்தைச் செப்பம் செய்யும் பொழுது கூறப்பட்டவையை அறிந்து செப்டம் செய்யவேண்டும். வயிற்றுச்சுவர் ஏணியாக்களைச் செப்பம் செய்யும்பொழுது இம் முற் பக்கச் சுவரின் கட்டமைவை உணர்ந்து செய்யின் நற்பயனைத் தரும்,
கூபகத்தளத்தின் கட்டமைப்பு
முன் கூறப்பட்டது போல் கூபகத் தளத்தின் பட்டிப்புக்கள்,
தசைகள், கீழ் பரிவிரியவிழையம், பரிவிரியம் ஆகியன வயிற்றுச்
சுவரின் மேற்கூறப்பட்ட கட்டமைவுகளின் தொடர்ச்சிகளேயாம்.
 
 

வயிற்றுச் சுவரினதும் . கட்டமைவுகள் 霹雳
இத்தளத்தின் அடுக்குகள் வெளியிலிருந்து உள்ளாக, 1 தோல், 2. மேற்பரப்பு பரீனப் பட்டிப்பு (பேசியா), 3. பரீனத் தசைகள் குதவிறுக்கி, குறுக்குப் பரீனத்தசை நாரிய-பல்குகைத்த இசை ஊறித்தாரை அமுக்கி, குமிழ்-பல்குகைத்தசை ஆகியன. 4. ஆழ் பரீனப் பட்டிப்பு-முக்கோணஇணையம், இச் சைவழித் தசைகளின் பட்டிப்புகள், 5. கூடகப் பிரிமென்ற கட்டின் இச்சைவழித் தசைகள்குதஉயர்த்தி, குயிலலகுத்தசை, பேரியுருத்தசை, 6. கூபக அகப்பட் டிப்பு-ஊறுநீர்ப்பையின் தொங்கட்டான் இணையங்கள், கருப்பை, யோனியுறையின் அகஇணையம், பூப்பு-கழுத்துப் பட்டிப்பு (பரி விரியக் கீழ் இழையத் திணிவுகள்), 7. பரிலிரியம் ஆகியனவாம்:
இக்கட்டமைவுகளிற் பல, பேற்று வேளையில் சேதமடையக் கூடும்; காயங்கள், கிழிவுகள் , பிரிதல்கள், நீளிப்புக்கள் ஆகியன நிகழக்கூடும். செப்பம் செய்யாவிடின் ஊறுநீர்ப்பை, கருப்பை: நேர்குடல் ஆகியவற்றில் இறக்கம் உண்டாகக் கூடும்.
மேற்பரப்புப் பரீனப் பட்டிப்பு. இது வயிற்றுச் சுவர் மேற்பரப்புப் பட்டிப்புடன் தொடர்புடையது. இதைப் போல் இது இரு அடுக்கு கள் உடையது. கொழுப்புத் தோற்கீழ்ப்படை அவ்வளவு திட்டப் படுத்தக் கூடிய படையாகக் காணப்படவில்லை. ஆழ்படை (கொல் லசின் பட்டிப்பு) ஒரு தொடர் விரிப்பாக நாரியத்தினதும் பூப்பென் பினதும் கவரிகளுடன் தொடுப்புறும் பக்கங்களில் பேரிதழ்களின் பட்டிப்புகளுடன் தொடர்புறும் பின்னுக நாரிய கழலையங்களை பிணைக்கும், வெண்கோட்டில் கிடக்கும் முக்கோண இணையத்தின் பிற்பக்க விளிம்புடன் ஒருங்கிணைவுறும்.
இவ்விடத்தில் இது மேற்பரப்புத் தோல்கீழ் பட்டிப்புடன் ஒடுங்கி குண்டிகளின் மேற்பரப்புப் பட்டிப்புடன் தொடர்புறும். இந்த மேற்பரப்புப் பரீனப் பட்டிப்பின் இரு படைகளுக்கிடையில் உள்ள இடத்தை மேற்பரப்புப் பரீன இடைவெளியென்பர். இவ் இடை வெளிக்குள் மேற்பரப்புப் பரீனத் தசைகள், நரம்புகள், பாதோலின் பல சுரப்பிகள், கிளைத்துருவின் காற்சிறைகள், தலைவாயிற் குமிழ், நாரியகுமிழ், பல்குகைத் தசைகள் என்பவை உள. இம் மேற்பரப்புப் பட்டிப்பு முக்கோண விணையம், கூபகப் பிரிமென்ற கட்டு ஆழ் அடுக்குகளின் வலிமைபோல் வலிவான படை அல்லவாம்.
மரீனத் தசைகள்:
இவற்றிற்கு ஒத்ததசைகள் வயிற்றுச்சுவரில் இல்லை. இவை ஊறித்தாரை, யோனி நேர்குடல் ஆகியவற்றின் வெளிவாய் களைச் சுற்றியிருக்கும் சிறப்பு விணையமுடைய தசைகளாம். இத் த சைகளாவன குதக்கால் வாய் வெளியிறுக்கி, குறுக்குப் பரினத்

Page 30
岛岛 இளம் பெண் நோயியல்
தசைகள் (மேற்பரப்பு ஆழ்வகை), நாரியகுமிழ் பல்குகைத்தசை கள், ஊறித்தாரை அமுக்கி ஆகியனவாம். இத்தசைகளுள் குதக் கால்வாய் வெளியிறுக்கி மட்டும்தான் மிக வளர்ச்சியுற்றதாம்.
வெளி குதக்கால்வாய் இறுக்கி - இது மூன்று பகுதிகளையுடையது 1. தோல்கீழ் வெளியிறுக்கி - (குதக் கால்வாய்த் தோல்
ஆலே நெளிவாக்கி) இது 2 அங்குல விட்ட முடைய வளையஉருத் தசையாம் குதக் கால் வாய் ஒரத்தில் தோலுக்கு அடுத்தாற்போல் கீழாகக் கிடக்கும். இதன் உயர் விளிம்பு உள்குதக்கால்வாய் இறுக்கியின் கீழ் ஒரத்தில் இருந்து குதக்கால் வாய் தசையிடைப் பிரிசுவரால் பிரிக்கப்பட்டிருக் கும், இது மனிதனில் தோல் தசைத் தொகுதிவிரிப்பின் (தசைமென் ன சு) எஞ்சியிருக்கும் ஒரு பகுதியாம்.
2. மேற்பரப்பு வெளியிறுக்கி
என்புடன் தொடுக்கப்பட்டிருக்கும் குதக்கால்வாய் வெளியிறுக்கி யின் ஒரேயொரு பகுதி இதுவேயாம். இது ஒரு நீள் வட்டத்த சையாம். இது குயிலலகென் பின் முடிவுக்கடிகையின் புறப்புக்கத்திலிருந்து குதக்கால்வாய்-குயிலலகு அராவி நார்ப்பட்டையாய்க் கிளம்பி குதக்கால்வாயை வளைத்துச் சுற்றியபின் பரீன வுடலின் மையப்புள்ளி யிடத்தில் பிரதானமாகச் செருகப்படும். சில நார்கள் நடுக்கோட் டைத் தாண்டி எதிர்ப்பக்கத்து நார்களுடன் குறுக்கீடல் செய்யும்
3. ஆழ் வெளிக் குதஇறுக்கி
இது குயிலலகென்புடன் தொடர்புறுவதில்லை. இது குதவுயர்த் தியின் பூப்பு - நேர் குடற் பகுதியுடன் நெருங்கிய தொடர்புடையது. இப்பகுதி குதவுயர்த்தியின் ஒரு பகுதியென்றும் சிலர் கருதுவர்இத்தசை ஒரு இச்சைவழித் தசையாம். இதனைச் சுருக்கி ஒருவர்
தன் குதவாயை மூடலாம்.
மேற்பரப்புக் குறுக்குப் பரீனத்தசை
இத்தசை பரீனத்தின் குறுக்காக நாரிய என் பின் கீழ்க் கவரிக்கும் பரீன மென்சவ்வின் பிற்பக்க ஒரத்துக்கு மிடையிற் கிடக்கும். நடுக் கோட்டில் இதன் மிகுதியான நார்கள் பரீனவுடலுடன் தொடர் புறும் சில தசைநார்கள் எதிர்ப்பக்கத்துத் தசை நார்களுடன் தொடுப்புறும். சில குமிழ் -பல் குகைத் தசைநார்களுடன் தொடுப் ஆறும். இது பரீன மையப் புள்ளியிடத்தை நிலைப்படுத்தி குமிழ்பூல் குகைத் தசை சுருங்க உதவும்: --

வயிற்றுச் சுவரினதும் . . கட்டமைவுகள் 39
நாரிய - பல்குகைத் தசை (கிளைத்துரு நிமிர்த்தி): இது பெண்களில் ஒரு சிறிய தசையாம். இது நாரியக் கழலேயத்தின் நடு சார் பரப் புடனும், திரு - கழலை இணையத்துடனும் நாரிய - பூப்புக் கவரியுட னும் தொடுக்கப்படும். தசைநார்கள் கிளேத்துரு காற்சிறையைச் சூழ்ந்து ஒரு நார்விரிவால் காற்சிறையின் மேற்பரப்பிலும் கிளைத் துருவின் புறப்பக்கத்து நார் விரிவிலும் முடிவடையும். இத்தசைகள் சுருங்கும்பொழுது கிளைத்துருக்காற்சிறை என்புடன் நெரிந்து நாளக் குருதியின் பாய்ச்சலைத்தடுத்து கிளைத்துருவை நிமிர்நிலையிற் பேணும். கிளேத்துருவின் புறப்பக்க நாளத்தை அமுக்கி நிமிர்நிலைமையை மேலும் நிலைக்க உதவும்.
குமிழ்-பல் குகைத்தசை (யோனியிறுக்கி): இது பரியேன வுடலுடன் தொடுக்கப்பட்டிருக்கும் . இவ்விடத்தில் தான் வெளிக் குதவிறுக்கியும் மேற்பரப்புக் குறுக்குப் பரீனத்தசைகளும் தொடுக் கப்படும். இது பின்னர், முன்னுகச் சென்று இரு சமபகுதிகளாகப் பிரிவுண்டு யோனி வாயையும், தலைவாயிற் குமிழ்களையும் சுற்றும். ஒவ்வொரு பாதிப்பகுதியும் அவற்றைச் சேர்ந்த தலைவாயிற்குமிழின் வெளிப்பரப்பை நெருக்கி மூடும். முற்பக்கமாக இவ்விரு பகுதிகளும் இடுங்கி பல்குகை (பொஞ்சியுடலம்) உடலின் நாருறையுடன் ஒருங் கிணைவுறும். இத்தசை நார்களுட் சில கிளைத்துருவின் புறப்பக்க நாளத்தைக் கரக்கும். சிரை விரிவுடன் தொடுப்புறும். சில தசை நார்கள் தலைவாயில் குமிழை நுதிக்கும், மென்சவ்வுடனும் தொடுக் கப்படும் - குமிழானது நிமிர்இழையத்தால் ஆகியது.
ஊறித்தாரை இறுக்கி: இது பரியேன மென்சவ்வுக்கு உயரவாகக் கிடக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நாரிய - பூப்புக் கவரின் நடுசார் ஒரத்துடன் தொடர்புறும் நடுக்கோட்டில் இது யோனியுறையால் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படும். முற்பக்கப் பகுதியானது ஊறித் தாரைக்கு முன்னதாக பூப்பு வில்லுக்குக் குறுக்காகச் செல்லும் பிற்பக்கப் பகுதியானது (பெரிதான பகுதி) நடுசார்ந்த பகுதிக்குக் குறுக்காகவும், சரிவாகவும் யோனிச் சுவரையடைந்து அதனுடன் ஒருங்கிணைவுறும் பரியேன மென்சவ்வுக்கு உயர ஊறித்தாரையை இறுக்கி ஊறுநீரைக் கழிப்பதற்கும் இது உதவும்.
முக்கோணஇணையம் (ஆழ் பரியேனப்பட்டிப்பு அல்லது பரியேனமென்சவ்வு)
இது பெண்ணில் அவ்வளவு சிறப்பான அமைப்பு வளர்த்தி படைவதில்லை-இதற்குக் காரணம் பெண்ணின் புறத்துப்பாலினத் தசைத்தொகுதி இரு பகுதிகளாக அமைவுபெறுவதாலும் யோனி
யுறை இதில் பெரும் இடம் எடுப்பதாலுமாம். -

Page 31
萎 இளம் பெண் நோயியல்
இது முக்கோண வடிவுடையது. பூப்பென்பு வில்வளைவை முற் பக்கப் பகுதியைத் தவிர்ந்த எல்லாப் பகுதியையும் நிரப்பும். இம் முற்பக்கப் பகுதியில் பூப்புக் கீழ் இணையங்கள் உள. இதன் பக்க லோரமானது நாரிய - பூப்புக் கவரின் நடுசார் ஒரத்துடன் தொடுப் புறும். இத்தொடுப்பு கிளேத்துருக்காற் சிறைக்கும் நாரிய-பல் குகைத்தசைக்கு உயரவாகவும், பின்னக நாரிய சுழலையம் வரைக்கும் காணப்படும். இதன் அடியானது பின் திக்கை நோக்கும் மேற் பரப்புப் பட்டிப்பின் ஆழ் பட்டிப்புடன் இணைவுறும்,
நார்கள் பெரும்பாலும் குறுக்காகச் செல்லும். இதன் உயர் பரப்பில், நடுக்கோட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ஊறித்தாரை யிறுக்கியும் ஆழ்குறுக்குப் பரியேனத் தசையும் கிடக்கும். நடுக் கோட்டில் முக்கோண இணைய மான து ஊறித்தாரைக்கும், யோனிக்கும் வெளியேக இடம் அளிக்கும். அடி விளிம்பின் நடு வானது பரியேனவுடலுடன் தொடுக்கப்பட்டிருக்கும், பெண்ணில் இப்போது கூறப்பட்ட கட்டமைவுகள் ஆணில் காணப்படுவதிலும் பார்க்க மிகவும் குறைந்த அளவில் உண்டு, உண்மையில் யோனி வாயின் அளவைப் பொறுத்து இந்த மென்சவ்வு இல்லையேயென்று கருதலாம். இம்மென்சவ்வைத் துளைத்து வெளியேகும் கட்டமைவுக ளாவன-ஊறித்தாரை குமிழுக்காகிய நாடிகள், கிளேத்துருவின் ஆழ நாடிகள், இதன் புறப்பக்க நாடிகள், நாளங்கள், நரம்புகள் ஆதியனவாம். இப்பிந்தியவை பரியேன இணையங்களுக்கும் கீழ் பூப்பு இணையங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி ஊடாகக் கிளேத்துருவை அடையும், இப் பரியேன மென்சவ்வானது வயிற்றுத் தசைகளின் நார் விரிப்புகளுக்கு ஒத்தது. இப்பரியேனப் பட்டிப்பு பரியேனத்துக்கு வலிவையும் இதனுடன் தொடர்புறும் தசைகளுக் குத் தாங்கலேயும் இதனுடாகச் செல்லும் உறுப்புக்களின் போர் வைப் பட்டிப்புக்களுடன் கூட்டிணைவுற்று தாங்கலேயும் அளிக்கும். பேறல் வேளையில் இப் பரியேனம் கிழிவுறும்; அல்லது தளர்வுறும்.
பரியேனம் (பரீனம்) உண்மையில் பரியேனத்தின் உருவ அமைப்பு கூடக வெளிவாயின் அமைப்பை ஒத்திருக்கும். இது முன்னுகப் பூப் புக் கீழ்க் கோணத்திலிருந்து பின்னக குயிலலகு என்பு நுனிக்கும், பக்கங்களில் நாரியக்கழலையங்களுக்கும் பரவும் பரப்பாகும், பெண் னில் நாரியக் கழலையங்களை இணைக்கும் கோடுகளைக் கொண்டு இப் பரப்பை :றுநீரி-பிறப்புறுப்புப் பகுதி யென்றும், செவ்விய பரி யேனம் (மகப்பேற்று மருத்துவனினது) என்றும், குதப் பரியேனப் பரப்பென்றும் விபரிக்கப்படும் ஊறிநீர் - பிறப்புறுப்புப் பகுதியானது ஊறுநீருறுப்புப் பிறப்புறுப்புப் பிளவாகும். செவ்விய பரியேன மானது முன்கூறிய பகுதிக்குப் பின்னுகவும் குதத்துக்கு இடையிலு மிருக்கும் பகுதியாம் குதப் பகுதியானது குதத்துக்குப் பின்னண பகுதிகாம் יד יידי יה" - ..

வயிற்றுச் சுவரினதும் . கட்டமைவுகள் 4
செவ்விய பரியேனம் இது குதத்துக்கும் தலைவாயிலுக்குமிடை யில் இருக்கும் பகுதியாகும் இப்பகுதியில்தான் பரியேன உடல் உண்டு (மையச் சிரைப்புள்ளியிடம்) பெண்ணில் பரியேன அராவியானது இல்லையாம். பரியேனவுடல் குதத்துக்கும் யோனிவாய்க்கும் இடை யில் உண்டு. இது இணைய இழையத்தாலாகிய கூம்புருத் திணிவாகும். இதனுடன் மீள்சக்தி நார்களும் வெளிக்குத இறுக்கி, குதவுயர்த்தி, குமிழ் பல்குகைத்தசை ஆகியவற்றிலிருந்து வரும் சில நார்களும் கலந்திருக்கும். இது யோனியின் பிற்பக்கச் சுவருக்கு ஒரு தாங்க லாக அமையும். இதன் வழியாக யோனி முற்பக்கச் சுவரையுந் தாங்கும் பேறல் வேளையில் கடும் விரிவடையும். இதைத் தடுப் பதற்கு மருத்துவர் பரியேனத்துமி செய்வர். இதன் அயல் கட் டமைவுகளான-முற்பக்கத்தில் யோனியுறையின் பின் சுவரும், கீழா கத் தோலும், பின்னுக குதக் கால்வாயின் முன் சுவருமாம். உயர வாக குதவுயர்த்தித் தசைகளுக்கு முன்னுக ஒடுங்கும் பகுதிகள் பரியேனத்தை எல்லேப்படுத்தும்,
கூடகப் பிரீமென்தகட்டுத் தசைகள்
இவையாவன-இரு குதவுயர்த்திகள், குயிலலகுத்தசை, பேரை யுருத்தசை ஆதியனவாம்.
குதவுயர்த்தி: இது ஒர் அகன்றதும், தட்டையானதும், சதை மிக்கதுமான தசையாகும். இது கீழ் நோக்கியும் நடுசார்ந்தும் பின் நோக்கியும் சென்று தனக்கு ஒத்த எதிர் குதவுயர்த்தியுடன் ஒரு தசைத் தளத்தைக் கூபகக் குழிக்கு உதவும். இதன் கூபகப் பக்கம் கூடகப் பட்டிப்பின் உடலுகப் பகு தி ப 7 லு ம் பரியேனப் பக்கம் குத (ஏனசு)ப் பட்டிப்பாலும் போர்க்கப்படும். இவ்வகையில் குதவுயர்த்தி கூபகக் குழியின் ஒரு செம்பாகத்துக்கும், அதே பக் கத்து நாரிய-நேர் குடல் குழிக்கும் ஒரு பிரிசுவராக அமையும். தசை இருபகுதிகளாகப் பிரிக்கப்படும். (1) பூப்பு - குயிலலகுத்தசை, (2) புடைதாங்கி - குயிலலகுத்தசை எனவாம். குயிலலகுத்தசையே நாரியா குயிலலகுத் தசையாக அமைகின்றது.
1. பூப்பு-குயிலலகுத் தசை இது மூன்று தொகுப்புகளாக அமை யும், இதில் ஒன்றுதான் குயிலலகை அடையும்.
(அ) இதன் மிக நடுசார்ந்த நார்கள் பூப்பென் பின் பிற்பகுதி யில் தொடுக்கப்படும். இதிலிருந்து பின் நோக்கி யோனி யின் பக்கமாகச் சென்று யோனியின் பின் பக்கத்திலும், நேர்குடலுக்கு முன்னுகவும் எதிர்ப்பக்கத்தில் இருக்கும் இதையொத்த நார்களுடன் சேர்ந்து பூப்பு-யோனித் தசையை உருவாக்கிப் பரினே ஆடலுடன் தொடுபடும்.

Page 32
42 இளம் பெண் நோயியல்
இதில் ஒரு பகுதி யோனிக்கும் ஊறித்தாரைக்கும் முன் ணுகச் சென்று பூப்பு ஊறுநீர்ப்பை தசைப்பகுதி யொன் றையும் உருவாக்கும்.
(ஆ) மேற்கூறிய தசைக்குப் பக்கலாக ஒரு பூப்பு-நேர்குடற் பகுதியுண்டு. இது பூப்புப் பிணைப்பின் மிகக் கீழான பகுதியி லிருந்து பின் நோக்கி, நேர் குடலுடன் நெருங்கிய தொடர்புகொண்டு, நேர் குடலின் பின்பக்கத்தில் எதிர்ப் பக்கத்தில் இருக்கும் இதையொத்த தசைகளுடனும் ஆழ்வெளிப் பரியேன இறுக்கியுடனும், நேர்குடலின் நெட்டாங்கு தசையுறையுடனும் ஒருங்கிணைவுறும். இவ் விதமாக அவை ஒரு தசைத் தொங்கல் தாங்கியை நேர் குடலும் குதக் கால்வாயும் சந்திக்கும் இடத்தைச் சுற்றி அமைக்கும், இது குதக்கால்வாய்-நேர்குடல் இறுக்கி வளையத் தசையின் ஒரு முக்கிய பகுதியாக அமையும்.
செவ்விய பூப்பு குயிலலகுத்தசை இது நேர்குடலுக்குப் பக்க லாக பூப்பென்பின் பிற்பக்கத்திற் தொடுக்கப்படும். இது பின் நோக்கியும் நடுசார்ந்தும் சென்று குத-குயிலகு உடலுடனும், குதகுயிலலகு அராவியுடனும் குயிலலகென்பின் முற்பக்கத்திலும் பக்கல் பக்கங்களிலும் தொடுப்புறும்.
புடைதாங்கி - குயிலலகுத்தசை
இது உள் நெருங்கற் த சையைப் போர்க்கும் பட்டிப்பின் தடிப் புப் பகுதியுடனும் நாரிய முள்ளின் கூபகப் பரப்புடனும் (குயிலல குத் தசைத் தொடுப்புக்குக் கீழாக) தொடுக்கப்படும். இந்த தடித்த பட்டிப்புப் பகுதியை சிரைவில்லு அல்லது வெண் கோடு என்பர். இது பூப்பென் பிலிருந்து நாரிய முள் வரைக்கும் பரவும். சிலரில் இந்நார்கள் கூபக விளிம்பு வரை செல்வதைக் காணலாம். இக் கோட்டிலிருந்து நார்கள் நடுசார் திக்கில் சென்று, குயிலலகென் புப் பக்கங்களுடனும் குத- குயிலலகு அராவியுடனும் தொடர்புறும். இத்தசை ஒரு மெல்லிய தசையாம். இதில் தசைநார்களும் நல் வளர்ச்சியடைவதில்லை. இத்தசையின் பிற்பக்க-பக்கல் ஒரம் சார் பற்றதாயிருக்கும். நாரிய குயிலலகுத்த சையிலிருந்து சிற்றிட இழை யத்தால் இது பிரிக்கப்படும்.
இரு குதவுயர்த்திகளின் நடுசார் ஒரங்களுக்கிடையில் ஊறித் தரும், யோனியும், நேர்குடலும் வெளியேகும்.
நரம்புவழங்கல்: 3ஆம் 4ஆம் திரு நரம்புகளின் முற்பக்க முதல் பிரிவுகளிலிருந்தும் நாண நரம்பின் பரியேனக் கிளையிலிருந்துமாகும்.
 

வயிற்றுச் சுவரினதும் . கட்டமைவுகள் 4氯
இத்தசையின் செயல்களாவன : (1) கூபகத்துக்குத் தளமாக அமைந்து அடக்கல் உறுப்புக்களைத் தாங்கும். (2) மலம் கழிக்கும் போதும், ஊறுநீர் பெய்யும்போதும், பேறல் வேளையிலும் தசை கள் தளரும். இவை நெஞ்சுப் பிரிமென்ற கட்டின் முரண்களாம். இச்செயல்கள் முடிவுற்றபின்பு குதவுயர்த்திகளின் கூடகவுறுப்புக்களை முன்னிலை அடையச் செய்யும்
பூப்பு-நேர்குடல் பகுதியானது குத-நேர்குடல் வளையத் தசை யைப் பலப்படுத்திக் குத இறுக்கிகளுக்கு வலுவூட்டும்.
கூபகப் பிரிமென்ற கட்டுக்கூடாகச் செல்லும் எல்லாக் கட் டமைவுகளையும், பூப்பு - குயிலலகுத் தசையின் நடுசார் நார்கள் தம் அமுக்கச் செயலால் தாங்கும்.
குயிலலகுத் தசை இது ஒரு விசிறி போன்ற தசையாம். புடை தாங்கி-குயிலலகுத் தசையின் தளத்தில் கிடக்கும். இது நாரிய முள்ளின் கூடகப் பரப்புக்கு (குதவுயர்த்திகளின் பிற்பக்க நார் களுக்குச் சற்று உயரவாக) அடுத்தாற் போலிருக்கும் சுவர் கூபகப் பட்டிப்புடனும் தொடுக்கப்பட்டிருக்கும். இது நடுசார்ந்து சென்று கீழாக இரு திரு விருத்தங்களினதும் உயர் இரு குயிலலகு விருத் தங்களினதும் ஒரங்களுடன் தொடுக்கும். நரம்பு வழங்கல் 4ஆம் , 3ஆம் திருநரம்புகளின் முற்பக்க முதலாம் பிரிவுகளாம்.
இத்தசை கூபக பிரிமென்ற கட்டை உருவாக்க உதவியும், கூபக கட்டமைவுகளையும் தாங்குகின்றது.
தசையானது ஒரளவுக்குத் திரு-முள் இணையத்துடன் நேரடித் தொடர்புடையது. இத்தசையை குதவுயர்த்தியின் தெறித்த பகுதி யாகக் கருதவேண்டும்.
Lif și fu in
சுபகப் பரிவிரியமானது வயிற்றுக் குழியை நுதிக்கும் பொதுப் பரிவிரியத்தின் பரவலாகும். இது கூபகக்குழிச் சுவர்களை நுதித் துப் பின்னர் இவற்றிலிருந்து கூபகஉறுப்புக்களையும் நுதிக்கும். பிற்பக் கச் சுவரிலிருந்து இப்பரிவிரியமானது ஒரு விரிப்பாக கூபகப் பெருங் குடலை இடது திரு-புடைதாங்கி மூட்டு-3ஆம் திரு என்பு மட்டம் வரைக்கும் முற்ருகப் போர்த்து, இதற்கு ஒரு நடுமடிப்பையும் உதவு கின்றது. இப்பரிவிரியமானது 3ஆம் திருவென்பு மட்டக்தூக்குக் கீழாகவும், குயிலலகின் நுனிக்கு 14 முன்புறமாகவும் கூடக பிரிமென் றகடு வரையும் சென்று நேர்குடலை அடையும். நேர்குடலின் உயர் மூன்றில் ஒரு பகுதியை முற்பக்கமாகவும் பக்கல் பக்கங்களாகவும் போர்க்கும்.இதன் பிற்பக்கம் பரிவிரியத்தின் போர்வையைப் பெறுவ
தில்லை. இதன் மூன்றில் ஒரு பகுதி முற்பக்கத்தின் நடுவில் மட்டும்

Page 33
இளம் பெண் நோயியல்
பரிவிரியப் போர்வையைப் பெறுவதேயில்லை. நேர் குடலை விட்டு யோனிமடலின் பிற்பக்க விதானத்தையடையும் மட்டம் ஏனசுக்கு (குதவாய்க்கு 3 அங்குல உயர்விலேயாம் . இது பிற்பக்க விதானச் சுவரை 3/4 அங்குல மட்டத்துக்குப் போர்த்த பின்னர் கருப்பைக் கழுத்தின் உயர் யோனிப் பகுதியினதும், கருப்பையினதும் பிற்பக்கச் சுவரைப் போர்த்து கருப்பையின் அடிக்குழியை அடைகின்றது. பின்னர் இதன் மேலாக கருப்பையின் முற்சுவரையடைந்து கருப்பை பின்தொடுகழுத்து வரைக்கும் அப்பரப்பைப் போர்க்கும். பின்னர் கருப்பையை விட்டு ஊறுநீர்ப்பையின் அடியின் உயர்பகுதியை படைந்து, உச்சி வரைக்கும் அதைத் தளர் முறையில் போர்த்து முற்பக்கச் சுவரின் பிற்பக்கப் பரிவிரியப்படையுடன் தொடர்புறுகின் றது. ஊறுநீர்ப்பையின் ஒவ்வொரு பக்கல் ஒரத்திலிருந்து கூபகப் பக்கச் சுவரைப் பரிவிரியப்படை அடையும், மேலும் கருப்பையின் பக்க ஒரங்களிலிருந்து அது இரு பக்கங்களிலும் கூடகப் பக்கச் சுவர் களே யடையும், இம்மடிப்புகளை அகல் இணையங்களெனக் குறிப்பர். நேர்குடலுக்கும். யோனியின் பிற்பக்கச் சுவரின் உயர் பகுதிக்கும், கருப்பைக் கழுத்தின் உயர் யோனிப் பகுதி என்பவற்றிற்கும் இடை யில் ஒரு பரிவிரியச் சிறுகுடாவுண்டு. இதை நேர்குடல்-கருப்பை அடைப்பம் என்பர் (இடகுளசின் அடைப்பம்). இந்த அடைப்பத் தின் வாயானது இரு பக்கல் பக்கங்களிலும் ஒரு பாதி மதிவடிவ பரிவிரிய மடிப்பால் எல்லைப்படுத்தப்படும். இவை திரு என் பின் முற் பகுதியிலிருந்து நேர்குடல் பக்கமாக கருப்பைக் கழுத்தையடையும். இது கருப்பைத்தொடு கழுத்தின் பிற்பக்கத்தில் எதிர்ப்பக்கத்து மடிப் புடன் தொடர்புறும். இவை நார் இழையங்களையும் மழமழப்புத் தசைகளையும் அடக்கியிருக்கும். இந்த அடைப்பத்தின் முற்பக்கத்து எல்லே யோனியின் பிற்பக்கச் சுவரின் உயர் பகுதியும், கருப்பைக் கழுத்தின் உயர்யோனிப் பகுதியுமாம். இதன் பிற்பக்கத்து எல்லை நேர்குடலாம். கருப்பையின் முற்பக்கத்திலும் பரிவிரியம் ஒரு சிறு குடாவையுண்டாக்கும். இது கருப்:ை-ஊறுநீர்ப்பை பரிவிரிய மடிப் புகளால் எல்லைப்படுத்தப்படும். இம்மடிப்புக்கள் ஊறுநீர்ப்பைக்குப் பொய் இணையங்களை உதவும். இவ்வடைப்பம் ஊறுநீர்ப்பையானது நிரம்ப இல்லாமற் போகும்.
அகலிணையம்: இதற்கு இரு பரிவிரியப் படைகளுண்டு. இதனுடன் தொடர்புடைய கட்டமைவுகளாவன:
(1) கருப்பைக் குழாய்கள்-இவை இதன் உயர் விளிம்பில் இருக் கும் , (2) சூலகம் - இது ஒரு பரிவிரிய மடிப்பால் அகலிணையத் தின் பின்ஞன படையின் பிற்பக்கத்தில் தொடுக்கப்பட்டும், கருப் பையுடன் சூலக இணையத்தால் தொடுக்கப்பட்டும், கருப்பைக் குழாய் மட்டத்துக்குச் சிறிது பணியவாகவும் இருக்கும் (3) உருண்டை
 

வயிற்றுச் சுவரினதும் . கட்டமைவுகள்
w 8 Ö e ( • ® ® ፵
யிணையம் இது முற்பக்க அகலிணைப் படையின் ஒரு முனைப் பில் கிடக்கும். இதுவும் கருப்பைக் குழாய்க்குப் பணியவாக இருக்கும். (4) மேல்மூட்டைதாங்கி - இது அகலிணையத்தின் இரு படைகளுக் கிடையில் சூலகத்துக்கும் கருப்பைக் குழாய்க்கும் இடையில் இருக் கும். (5) பரமுட்டைதாங்கிய இது மேல் முட்டை தாங்கிக்கு நடு சார்ந்து கருப்பைக்குக் கிட்டவாகவிருக்கும். சூலகத்தின் முற்பக்க விளிம்பை அகலிணையத்தின் பிற்பக்கத்தின் முழு நீளத்துக்கும் இணைக்கும், இரு மடிப்புக்களையும் சூலக நடுமடிப்பென்பர். கருப் பைக் குழாய்க்கும் சூலகத்துக்குமிடையில் இருக்கும் அகலிணையப் பகுதியை கருப்பைக் குழாய் நடுமடிப்பென்பர்; இது கருப்பைத் திக்கில் ஒடுங்கியிருக்கும்; பக்கம் பக்கமாக விரிந்து பருத்திருக்கும்; பக்கல் பக்கமாகக் கருக்குழாய்களையடக்கியிருக்கும். அகலிணையத்தின் உயர் பகுதியானது கூடகச் சுவருடன் தொடுக்கப்படாமலும், கீழ்ப்பகுதியானது தொடுக்கப்பட்டும் இருக்கும். இப்பகுதியின் உயர் மடிப்பை சூலக-கூபக இணையமென்பர். இதனூடாகத்தான் சூலக நாடிகள், நரம்புகள், நினையக்கான்கள் ஆகியவை செல்லும்,
கூயகப்பட்டிப்பும் கலவ இழையமும்
இது பெண்ணில் முக்கியம் வாய்ந்தது. இது கூபகத்துள் அடக் கப்பட்ட உறுப்புக்களைச் சூழ்ந்திருக்கும். சில சில இடங்களில் மழ மழப்புத் தசைநார்களால் வலிவூட்டப்பட்டுக் கருப்பைக்கும் யோனிக் கும் ஊறுநீர்ப் பைக்கும் தாங்கல் இணையங்களை யுதவும். இவை கூபகப் பரிவிரியத்துக்குக் கீழ் இருப்பவை. உயரவாக வயிற்றுக் கீழ்ப் பரிவிரிய இழையங்களுடன் தொடர்புடையவை. பணிய குதவுயர்த் திகளால் நாரிய-நேர் குடல் குழியை நிரப்பும் இழையங்களிலிருந்து பிரிக்கப்படும், கூபக உறுப்புக்களைச் சென்றடையும் குருதிக்கலன்கள், நரம்புகள் ஊறித்தர் ஆகிய கட்டமைவுகள் இதனூடாகச் செல் லும், கலவ இழையங்கள் அகவுறுப்புக்கள் விரிவடைதற்கு இடத்தை உதவும். மேலும் இவை தசைகள் மீது வலுவூட்டப்பட்டுப் பட்டிப் புக்களாக அமையும். இவை கூபகச் சுவரைப் போர்க்கும் பட்டிப் புக்களுடன் தொடர்புடையன. இக் கலவ இணையம் கூபகவுறுப் புக்களின் பட்டிப்புகளுடன் தொடர்புற்று அவ்வுறுப்புக்களையும் தாங் கல் செய்யும்.
கலவ இணையங்கள்-இழையங்களாலும் மழமழப்புத் தசைநார் களாலும் வலுவுறுத்தப்பட்ட சில தாங்கல் இணையங்கள்,
1. கழுத்துக் குறுக்கு இணையங்கள் (முதலாய இணையங்கள்) 2. கருப்பை-திருஎன்பு இணையங்கள்.

Page 34
德馨 இளம் பெண் நோயியல்
கருப்பைக் கழுத்து குறுக்கிணையங்கள்
இவை நாரிழையத்தாலும் மழமழப்புத் தசைநார்களாலும் உரு வாக்கப்பட்ட விசிறி போன்ற விரிவுகளாம். இவை கருப்பைக் கழுத்தையும் யோனி விதானத்தையும் கூபகப் பக்கக் கவர்களுடன் இணைக்கும் பக்கத்துக்கொன்ரு க இருந்து கருப்டையைத் தாங்கும் முக்கிய இணையங்களாகும். இந்த இணையவிரிவின் பிற்பக்கத் தடித்த நாரிழைய - மழமழப்புத் தசைப் பகுதிகள், கருப்பை-திருவென் புடன் இணைந்து, சருப்பையைத் தாங்கும் ஒரு முக்கிய கட்டமை வாக இருந்து உதவுவதுமல்லாமல் கருப்பையை முற்பக்கமாகவும் சரிக் கின்றது. இவ்விரு தொகுதி இணையங்கள் பிறப்பிலேயே இல்லாத காரணத்தினுலும், வளர்ச்சிக் குறைவான காரணத்தினுலும், கன் ளிப் பெண்களில் கருப்பையிறங்கல் நிகழுகின்றது. பேறல் நிகழ்ச்சி களில் வலுவும் கட்டமைவும் குன்றில் இவை கருப்பையை இறங்கச் செய்கின்றது.
கூடகப் பட்டிப்பு: இது கூபகத்தின் பக்கச் சுவர்களைப் போர்த்து, குதவுயர்த்திகளுக்குக் கீழாக நாரிய-நேர்குடல் குழிவின் பக்கச் சுவராகத் தொடர்ந்து இருக்கின்றது.
இப்பட்டிப்பிலிருந்து விரிவுகள் குதவுயர்த்திகளின் மேற்பரப்புகீழ்ப்பரப்பு ஆகியவற்றைப் போர்க்கும். முன் கூறியதுபோல் ஊறித் தாரை, யோனி, நேர் குடல் குதவுயர்த்திகளுக்கு உயரவாகவும், குதக் காவ்வாய்க்குக் கீழாகவும் கூபகவுயர்த்திப் பிரிதசைத் தட்டு வழியாகவும் இந்தப் பட்டிப்புக்கள் நடுக்கோட்டில் செல்லும், குதவு யர்த்திகளின் பட்டிப்பு மேற் கூறப்பட்ட அகவுறுப்புக்களின் உறைப் பட்டிப்புக்களுடன் தொடர்புறுவது மல்லாமல் இவ்வகையான தொடுப்பால் அவ்வுறுப்புக்களுக்கு ஒரு வலிவான தாங்கலேயும் உதவுகின்றது. இப்பட்டிப்பு முக்கோண இணையத்துடனும் தொடர் புறும். உயரவாக ஊறித்தர் களைப் போர்க்கும் இழையங்களுடனும் கூபக இழையங்களுடனும் தொடர்புறும்.
பூப்பென்புப் பிற்பக்கத்தையும் கருப்பைக் கழுத்தையும் குத வுயர்த்திகளின் முற்பக்க விளிம்புகளையும் இணைக்கும் பட்டிப்பு விரி வுண்டு. இது சிலரில் ஒரு வலிவான பட்டிப்பாகும். இதை பூப்புக் கழுத்து படடிப்பு (இணையம்' என்பர். இது ஊறுநீர்ப்பைக்கு ஒரு தாங்கல் கட்டமைவுத்தாவளமாக அமையும். நாரிய-நேர் குடல் குழிவில் குதக்கால்வாய்ப்பட்டிப்பு குதவுயர்த்தியின் கீழான பட்டிப் புடன் தொடர்புடையது. சகடை யில் ஒரு "சப்பறம்" தாங்கப்படு வதுபோல் கூபக என்புக்கூட்டில் வெவ்வேறு பட்டிப்புக்களாலும் இணையங்களாலும் கூபக அக உறுப்புக்கள் தாங்கப்படுகின்றன. ஒரு தாங்கலுக்கு நிகழும் கெடுதியானது ஏனைய தாங்கல்களின் உறுதிக் கட்டமைவையும் குலையச்செய்கின்றது.
 

இயல் 3
பெண்ணின் சலப்பையும் ஊறித்தாரையும் ஊறித்தரும்
சலப்பை இது வெறிதாக இருக்கும் பொழுது இதற்கு உச்சி, தளம் அல்லது பிற்பக்கம், உயர்பரப்பு, இரு கீழ்ப்பக்கல் பரப்புகள் என உண்டு. உச்சியானது முன்ணுக நோக்கி பூப்பென் பின் பிற்பக் கத்தில் கிடக்கும், உச்சியிலிருந்து நடுக் கொப்பூழ் இணையமானது கொப்பூழைச் சென்றடையும். இது உருக்கசைக் குறிக்கும். தள மானது பின்னுகவும் கீழாகவும் கருப்பைக் கழுத்துத் திக்கிலிருக்கும். உயர் பரப்பு உயரவாக நோக்கும். இரு கீழான பரப்புகளும் கீழா கவும் முன் ணுகவும் பக்கலாகவும் நோக்கும். சலப்பை குத உயர்த்தி களின் சரிவுப் பள்ள முன்பகுதியிற் கிடக்கும். பொதுவாக இதன் கொள்ளளவு 14 அவுன்சுகளாகும், மாதவிடைவுக்குப் பின்னர் இதன் கொள்ளளவு குறைவடையும், ஊறித்தர்கள் இதன் பிற்கவரைத் துளைத்து, 1ச.மீ. தூரத்துக்குச் சுவரில் போக்குச் செய்த பின்னர் தளத் தின் பக்கல் கோணங்களில் சலப்பைக் குழியை யடையும். ஊறித் தாரையானது தளத்தின் முற்பக்கத்திலிருந்து வெளிச்செல்லும், இந்த மூன்று துவாரங்களும் ஊறுநீர்ப்பைத் தளத்தில் ஒரு முக்கோணப் பரப்பை (திரிகோணி) உருவாக்கும். இதன் மென்சவ்வு திட்டுகள் சுருள்கள் இல்லாதது. வெறிதான ஊறுநீர்ப்பையின் விவரம் சிறி தானது. இதன் சுவரானது விழைவில் (இச்சையில்) தசையாலானது. இவ்வுறுப்பு முக்கியமான கட்டவிழ் தசையுறுப்பாகும். இதன் சுவர் தசைகளால் ஆன ஒரு வெளியான நெட்டாங்கு அடுக்கும், உள் ளான நெட்டாங்கு அடுக்கும், நடுவடுக்கும் உடையது என விட ரிப்பர். இச்சுவர் ஊறித்தாரைக்குட் செல்வதில்லை (தனகோவின தும் பிறரினதும் கருத்தின்படி). பிறிதொரு விபரிப்பு, (வூட்போன்) தசைகள் ஒர் அரில் வலைய அமைவுடையன வென்றும், தசைநார்கள் ஒன்று மற்ருென்றுக்குக் குறுக்கு மறுக்காகச் செல்வனவென்றும் கூறுகின்றது. ஊறித்தாரையின் உட்போ குளை இருக்கும் இடத்தில் முற்பக்க நார்கள் போகுளேக்குப் பிற்பக்கமாகவும், பிற்பக்க நார்கள் முற்பக்கமாகவும் போகுளேயை வளைத்து இருக்கும். இவ்வமைவு ஊறித்தாரையின் உள்ளிறுக்கியாக அமையும். சில நார்கள் ஊறித் தாரையின் தசைநார்களுடன் தொடர்புடையன. சலப்பையின் குழி யானது நிலைமாறு மேலணியால் நுதி க்கப்படும். ஊறுநீர்ப்பையானது ஊறுநீரைப் பெய்யா வேளையில் ஊறித்தாரையுடன் முன்னுக நோக்கியிருக்கும், கோணங் கொண்டிருக்கும் (100-110). ஊறு நீரைப் பெய்யும் வேளையில் இக்கோணம் மறைந்து திரிகோணி

Page 35
鑫& இளம் பெண் நோயியல்
யானது ஊறித்தாரையுடன் நேர்சரிவிலிருக்கும். இணுறுநீர் அடக் கலாமை நிலைமைகளைச் செப்டம் செய்வதற்கு இப்போது கூறப்பட் 4. --- G02 66) A \ A LA REJ GÜ)j 6892 - 24 / 607 :
சலப்பையின் அயல் தொடர்புகள்
இது முற்பக்கமாகப் பூப்பென் பிலிருந்து ஒரு மெல்லிய இலவ விழையத்தாற் பிரிக்கப்பட்டிருக்கும். பிற்பக்கமாக கருப்பையின் உயர் யோனிப் பகுதியும், யோனிமடலின் முற்சுவரின் உயர் பகுதியு மிருக்கும். ஐதாக அமைந்திருக்கும் கலவவிழையத்தால் அவை சலப்பையிலிருந்து பிரிபட்டிருக்கும். கருப்பையுடலுக்கும் ஊறுநீர்ப் பை உயர்சுவருக்கும் இடையில் கருப்பை ஊறுநீர்ப்பை அடைப்ப முண்டு. பூப்பென்பு-கழுத்துப் பட்டிப்பு திண்ணியதாகக் காணப் படுபவரில், இப்பட்டிப்பு ஊறுநீர்ப்பைத் தளத்தை முற்பக்க யோனிச் சுவரிலிருந்து பிரிக்கும்.
ஊறுநீர்ப்பையை அடைவதற்கு முன்னம் ஊறித்தர்கள் பக்கத் துக்கு ஒன்ரு கச் சிறிது தூரத்துக்குக் கருப்பைக் கழுத்தின் யோனி மடற் சுவரின் உயர் பகுதியில் கிடக்கும். ஊறித்தர்களைக் கருப்பை நாடிகள் அவ்வவ்விடங்களில் முன்பின் திக்கிலும் பக்கலிலிருந்து நடுசார்ந்தும் கடக்கின்றன. ஊறித்தர்கள் ஒரு நாரிழையத்தால் அமைவு பெற்ற கால்வாயில் கிடக்கும்.
ஊறித்தாரை இது 12 அங்குல நீளமுடையது. கீழ் நோக்கியும் முன் நோக்கியும் பூப்பென் பின் கீழ் ஒரமட்டத்தில் சிறிதளவு வளைந்து மிருக்கும். இதற்கு மூன்று உறைகளுண்டு. தசை, நிமிர் இழையம் மியூக்கசு ஆகியனவாம். மியூக்கசு மென்சவ்வானது நிலைமாறு மேல ணியால் நுதிக்கப்படும். மென்சவ்வுள் எண்ணற்ற நுனிவளர் சுரப் பிகளுண்டு. இவை அருமையாகச் சிறைப்பைகளை உருவாக்கும். இவை சீழுறக் கடும். போகுளை இருமருங்கிலும் ஒரு சோடி சிறப்புத்திறன் சுரப்பிகளுண்டு. இவற்றை இஸ்கீன் புன்குழாய்கள் என்பர். இவை ஆணின் முன்னிலைச் சுரப்பிகளுக்கு ஒத்த கட்டமைவை உடையன
if a
ஊறித்தாரையின் தொடர்புகள்
இதன் முற்பக்கத்து அயலானது பூப்பென்புகளின் பிற்பக்க மாகும். இது ஐதான இணைய இழையத்தால் ஊறித்தாரையிலிருந்து பிரிபட்டிருக்கும். இப்பகுதியில் இது கீழ் பூப்பென்புக் கவர்களுடன் நாரிழைய இணையங்களால் நிலைபடுத்தப்படும். (பூப்பு-ஊறித்தாரை யிணையங்கள்) பிற்பக்கத்தில் யோனிமடலில் முற்பக்கச் சுவரி லிருக்கும். ஊறித்தாரையின் உயர் மூன்றில் இருபகுதியானது,
 

பெண்ணின் சலப்பையும் . ஊறித்தரும் శ్రీక్ష
யோனிச் சுவரிலிருந்து இணையிழையங்களால் பிரிபட்டிருக்கும். கீழான மூன்றின் ஒரு பகுதி முற்பக்க யோனிச் சுவருடன் ஒரளவுக்குத் திட மாகக் கட்டுப்பட்டிருக்கும். இதன் நடுப்பகுதியானது முக்கோண இணேயத்தினூடாகச் செல்லும் பொழுது ஊறித்தாரை இறுக்கியால் சூழப்படும். இது ஒரு விழைவில் இச் சைவழித்) தசையாம். ஊறித் தாரையின் வெளிப்போகுளேயானது சீறிதழ்களுக்கிடையில் யோனி வாய்க்குச் சற்று உயரவாகவும் கிளைத்துருவிலிருந்து அங்குலம் கீழாகவும் இருக்கும். இதன் முற்பக்கச் சுவரும், பிற்பக்கச் சுவரும் சிறுநீர் விடாத வேளையில் நெருங்கி ஒட்டியிருக்கும். வாயானது ஒரு வெட்டுப் பிளவு போன்றது. இரு சொண்டுகளால் எல்லைப்படுத் தப்படும். ஊறித்தாரையை உணர்வழிப்பு நிலைமைகளில் சுட்டுவிரலை உட்புகுத்தக்கூடிய அளவுக்கு அகட்டலாம். இதன் இயல்பான விட்டம் * அங்குலம்,
தசையுறை: இது ஊறுநீர்ப்பைத் தசை உறையுடன் தொடர் புடையது. இதற்கு வெளிவட்ட எளிய தசைப்படையும் உள்ளான நெட்டாங்கு எளிய தசைப்படையும் உண்டு வெளித் தசையுறை ஊறு நீர்ப்பையின் வெளிநெட்டாங்குத்த சை, ஊறித்தாரை வெளி வட்டத்தசை என்பவற்றுடன் தொடர்புடையது. இவ்வூறித்தாரைத் தசை உண்மையில் வசிவடைந்த தசைநார்கள் இறுக்குண்டிருப்ப தால் புரிபோன்று இருக்கின்றது. இவை குறுக்குமறுக்காக ஒன்று மற்றென்றைக் கடந்தும், ஊறுநீர்ப்பையின் முன்நார்களுடனும், ஊறித்தாரையின் உள்ளிறுக்கியுடனும் தொடர்புடையன ஊறுநீர்ப் பையின் உள் நெட்டாங்குத் தசை ஊறித்தாரையின் உள் நெட் டாங்குத் தசையுடன் தொடர்புடையது ஊறிநீர் விடா வேளையில் ஊறித்தாரை இறுக்கியுடன் இவையும் இறுக்குண்டு ஒரு வட்ட அமை வைக் காட்டும். இவ்விரு தொகுதித் தசைகளும் ஊறித்தாரை யை இறுக்கி, ஊறுநீர் உள்ளே புகாது தடுக்கும். ஊறுநீர் விடாவேளையில் ஊறித்தாரையின் பிற்க வருக்கும் ஊறுநீர்ப்பை அடித்தளத்துக்கு மிடையில் 100-110 பாகை கோணமுண்டு. இச்சை முறையில் ஊறு நீரை விடவும் ஊறுநீர்ப்பையின் உள்ளிறுக்கி தளரும். இதே வேளை ஜில் ஊறித்தாரைத் தசை வசிவுகளின் சுருள் குலையும், குலேயவும், ஊறித்தாரை விவரம் அகலும், ஊறுநீர்ப்பையின் தளமும், உயர் ஊறித்தாரைப் பகுதியும் இறங்கும். ஊறுநீர்ப்பைத் தளமும் ஊறித் தர் குழாயும் ஒரே சரிவிட்டத்திலிருக்கும். இப்போது இவற்றிற் கிடையிலிருக்கும் கோணம் மறையும். ஊறுநீர் இலகுவில் வெளியே பாயும். இந்தப் பிற்கவரின் மறைவுதான் ஊறுநீர் அடக்கலா மைக் குக் காரணமெனக் கருதப்படும். இது இன்னும் சரியாக உறுதிப் படுத்தப்படவில்லை. ஊறுநீர்ப்பையை உயர்த்தி இக் கோணத்தைப் பேணல் செய்யும் அறுவை வினைகள் இவ் இடரைச் செவ்வையாக்கும்.
4.

Page 36
荡0 இளம் பெண் நோயியல்
நிமிரிழைய உறையானது சிற்றிட வெளி இழையங்களும், மீள் சக்தி இழையங்களும் நிறைந்த நாளப் பின்னல்களாம், வரிகொண்ட தசைகள் சேய்மையாக ஊறித்தாரை யைச் சூழ்ந்து ஒரு வெளியிறுக் கியை உருவாக்கும். மேலும் குதஇறுக்கிகளின் உள் விளிம்பு நாச் கள் ஊறித்தாரை, சலப்பைச் சந்தியின் பர ஊறித்தாரை இழையத் துள் செருகுறும்.
பெண்ணின் ஊறித்தர் 12 அங்குல நீளமாகும். இது ஊறுநீரியின் கூபகத்திற் தோற்றமாகி கீழ் நோக்கியும், உள்நோக்கியும், மருங்குல் தசைகள் மேலும், சூலக நாடிகளுக்குக் கீழாகக் கிடந்தும், கூடக விளிம்பைப் பொதுபுடைதாங்கி நாடி கவர் விடும் இடத்திற்குச் சற்று முன்னதாகத் தாண்டிக் கூபகக் குழியை படையும் கூடகப் பக்கச் சுவரில் இது கீழ் நோ க் கி யும் உள்நோக்கியும் சென்று, அழிவுற்ற, கீழ் உதரி நாடிக்கும், நெருங்கல் நா டி க் கும், நெருங்கல் நரம்புக்கும் நடுசார்ந்து சூலகக் குழிவுக்குப் பின்ணுக நாரிய என்புமுள்ளேயடையும். பின்னர் இதிலிருந்து ஸ்நோக் இயும், முன்னுேக்கியும் அகலிணையத்தின் பின் சுவரில் ஊர்ந்து, பின்னிருந்து முன் ணுகக் கருப்பை நாடிக்குக் கீழாகவும் கருப்பை நாளப் பின்னல்களுக்கு முன்னுகவும் ஒரு நாருறையால் அமைந்த சுரங்கமூடாகச் சென்று யோனிப் பக்க விதானத்தைக் கடந்து ஊறு நீர்ப்பைத் தளத்தையடையும், முதன்மையிணையத்தின் உயர் விளிம்பி லுள்ள நார்ச் சுரங்கத்தில் கிடக்கும்பொழுது இது கருப்பைக் கழுத்திலிருந்து 2 ச. மீ அளவிலாம். பக்கல் விதானத்தைக் கடக்கும் பொழுது இது தன் எதிரி ஊறித்தரிலிருந்து 35 ச. மீ.-5 ச. மீ. அள வில் விலகியிருக்கும். இடது ஊறித்தரானது கருப்பைக் கழுத்துக் கும் யோனி விதானத்துக்கு வலதிலும் பார்க்கக் கிட்டவாகக் கிடக்கும். இதன் குருதி வழங்கல், சூலக நாடி, உயர் , நடு ஊறு நீர்ப்பை நாடிகள், கருப்பை நாடிக்கிளை ஆகியவற்றிலிருந்தாம்.
ஊறித்தரானது கழலைக்கட்டிகளால் இடம்பெயரவும், நீளவும் கூடும். அறுவைவினை வேளையில் சேதமடையவும்கூடும்.
நேர்குடல்
இது கூடகப் பெருங்குடலின் தொடராகும். கூபக நேர் குடற் சந்தியிலிருந்து குதக் கால்வா யின் தொடக்கத்துக்கு உயரப் பரவும். கூபக - நேர் குடற் சந்தி எல்லோரிலும் கூபக எல்லைகளைப் பொறுத்த மட்டில் ஒரேமட்டத்தில் இல்லையாம். பொதுவாகக் கூறின், இது 3ஆம் திருவிருத்த என்புக்கு எதிராகக் கிடக்கும். கூடகக்குடல் - நேர் குடற்சந்தியில் கூபகப் பெருங்குடலின் நடுமடிப்பானது முடிவடையும், கூடக - நேர் குடற் சந்திக்கு 2 அங்குலம் உயரவாகப் ಇ-ಅ“ಅ-*
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்ணின் சலப்பையும் . ஊறித்தரும் ) {
நாடாக்கள் இரண்டு ஒடுங்கி- ஒன்று முற்பக்கத்திலும் மற்றையது பிற் பக்கத்திலும் - அகலமான பட்டிகளாக மாறும். மேற்பரிவிரிய வளரி 8ள் மறையும், உயர் நேர்குடல் நாடி இரு கிளைகளாகப் பிரிவுற்று நேர் குடல் இருபக்கங்களிலும் போக்குச் செய்யும் புன்சாக்கங்கள் இதிற் காணப்படுவதில்லை. நேர்குடலின் திக்கு தொடக்கத்தில் செங்குத் தாகக் கீழாகவும், பின்னர் சிறிது பின்னுேக்கியும், இன்னும் பின்னர் கீழ்நோக்கியும் முன்னுேக்கியும் இருக்கும். நீளம் 5 அங்குலம் மட்டி லாம். விட்டம் மிகுதியான பகுதியில் வெறிதான் நிலேயில் 14 அங்குல மாகும். ஆணுல் குதக் கால்வாய்க்கு உயர அது விரிவடைந்திருக்கும். இவ்விரிவை நேர் குடலின் குடுவையுரு எனச் சொல்வர். வெறித்தாக இருக்கும்பொழுது முற்பக்கச் சுவரும் பிற்பக்கச் சுவரும் நெருங்கி ஒட்டியிருக்கும். குறுக்கு வெட்டுமுகம் ஒரு கிடைவெட்டுப் பிரிவு போன்றிருக்கும் நேர்குடலுக்கு நடுமடிப்பில்லை. இதன் உயர் பகுதி யில் மட்டும்தான் பரிவீரியம் முற்பக்கமாகவும் பக்கலாகவும் இதனைப் போர்க்கும். கீழான மூன்றிலொரு பகுதிக்குப் பரிவிரியப் போர்வை நேர்குடலுக்கு முன்பின் திக்கிலும் பக்கல் திக்குகளிலும் வளைவுகளுண்டு. -
அடில் தொடர்புகள்
முற்பக்கத்தில் நேர்குடல் - கருப்பை அடைப்பமும் இதனுள் அடக்கப்பட்ட சிறுகுடற் சுருள்களுமாகும். இதற்கு அப்பால் கருப் பையின் பிற்பக்கப் பரப்பும், கருப்பைக் குழல்கள் சூலகங்கள் ஆகியன வாகும். இப்பகுதிக்குக் கீழாகவே யோனிமடலின் பிற்பக்கச் சுவரின் உயிர் பகுதியாகும். இவை ஒரு பட்டிப்பால் இடைப்பட்டிருக்கும்.
பிற்பக்கத்தில்; கீழாக இருக்கும் 3 திருவிருத்த என்புகளும், குயிலலகென்பும், குதவுயர்த்திகள் குத- குயிலலகின் குடல், நடுசார் திருகுருதிக் கலன்கள், பக்கல் குருதிக்கலன்கள், திரு நிணையச் சுரப் பிகள் ஆவனவும், திருநரம்புகளும், பரிவு நரம்பித்தாம்பும் பேரை யுருத்தசையுமாகும். நேர்குடலுக்குப் பின்னுகப் பெருமளவில் சிற்றிட வெளியிழையமுண்டு.
பக்கலாக இரு கருப்பை - திரு இணையங்களும், பரிவு நரம்புப் பின்னல்களும், குதவுயர்த்திகள், குயிலலகுத் தசைகள் உயர் நேர் குடல் நாடியின் பக்கல் பிரிவு நாடிகள், நாளங்கள் ஆகியனவுமுண்டு,
குதக் கால்வாய் இது பெருங்குடலின் முடிவுப் பகுதியாக கூபக மென்ற கட்டு மட்டத்தில் நேர்குடலுடன் தொடர்புறும். இது கீழாகக் குதவாய்(ஏனசுவரைக்கும் பரவும். நீளம் 13 அங்குலமாகும்,

Page 37
莎蕊 இளம் பெண் நோயியல்
இதன் பக்கச் சுவர்கள் ஒன்று மற்ருென்றுடன் நெருங்கியிருக்கும் கீழ் நோக்கியும் பின் நோக்கியும் சென்று முடிவடையும். இதன் விட்டம் தீ அங்குலத்திலிருந்து 3/4 அங்குலம் அளவிலிருக்கும்.
அயல் தொடர்புகள்: முற்பக்கம் பரியேனவுடல். இதனை யோனியி
லிருந்து பிரிக்கும். பிற்பக்கம்: குத-குயிலலகின் உடல். டத் தல் ? நாரிய-நேர்குடற் குழிவு. குதக்கால்வாய் ஆனது கீழ்க்காணப்படும் தசைகளாற் காவல் பெறும்.
1. உள் குதவிறுக்கி-இது குடலின் வட்டத் தசையுறையுடன் தொடர்புடையது,
2. நெட்டாங்குத் தசைநார்கள், குதவுயர்த்தித் தசைநார்கள் இதனுடன் சேர்ந்திருக்கும்.
3. மிகப் புறமாக வெளிக் குதவுயர்த்திகள் காணப்படும். இத் தசைத் தொகுதிகள் பட்டிப்பு நார் விரிவுகளால் வேறுபடுத்தப்படும். நேர்குடலே-இரு பகுதிகளாகக் கருதலாம். ஒன்று கூபக நேர் குடல் சந்தியிலிருந்து கூஸ்ற்றணின் மூன்ரும் மடிப்பு வரைக்குமாம். இது பரிவிரியக் குழிக்குள் பொங்கும். கீழான பகுதி பரிவிரிய மட்டத் துக்குக் கீழாகவும் - கூஸ்ற்றணின் மூன்ரும் மடிப்பிலிருந்து குத வான் வுகளுக்குக் கீழாகவும் முடிவடையும். இது நேர் குடல் குடுவை உருவை அடக்கும். இது விரிவடையும் பொழுது கூபக இழையங்க ளுள்ளும் யோனிக்குள்ளும் பொங்கும், குதக்கால்வாய் குதவால்வு களிலிருந்து குதத்தோல் வரைக்கும் பரவும். இப்பகுதிதான் இறுக் கிகள் சூழப்பெற்றதாயிருக்கும். மலம் கழிக்கும் வேளைகளில் இவ் விறுக்கிகள் தளரும் குதக்கால்வாய் தட்டையாக்கப்படும். நேர் குடல் மியூக்கசு மென்சவ்வு வெளியே தோற்றும். ஆகவே இப் பகுதிகள் முளையவியல் முறையில் (1) பிற்குடல், (2) பின் அலன் ரோக்குடல், (3) குதவாய்ப் பகுதி ஆகியனவற்றைக் குறிக்கும். நேர் குடலை மலத்துக்கு ஒரு சேமிப்புக் குடலாகக் கருத வேண்டாம். இது தொழில் முறையில் பெருங்குடலின் ஒரு பகுதியாம். கூபகத்தின் மூட்டுக்கள்
1. நாரிதி-ருமூட்டுகள்-இது ஐந்தாம் நாரி விருத்த என்பி னதும் திருவென் பின் அடியினதும் இணைப்பாம். இது ஏனைய விருத்த என்பு மூட்டுகள் போல் அதே வகை இணையங்களால் மூட்டுறும். இதனுடன் நாரி-திருஎன்பு இணையமும் புடைதாங்கி-நாரி இணையமும் கூட்டா கவுண்டு. நாரி 5ஆம் விருத்த எலும்பானது திரு என்புக்கு முன் ணுக நழுவமுடியும்,
 
 
 

பெண்ணின் சலப்பையும். ஊறித்தரும் 53
2. திரு-புடைதாங்கி மூட்டு-திருவென்பினதும் புடை தாங்கியி னதும் சோணைப் பரப்புகள் இணைவுறும், பேற்று வேளையில் தளரும்: சேதங்களில் காயமுறும் ; நோய்ப்படவும்கூடும். கடிநரம்புடன் நெருங்கிய தொடர்புடையது.
3. பூப்பிணைப்பு-இதுவும் பேற்று வேளையில் தளரும். விலகவும் கூடும் ,
4. திரு குயிலலகு மூட்டுகள்-5ஆம் திருவென்பும் முதலாம் குயிலலகென்பும் மூட்டுறும். குயிலலகென்புகள் தம்மிடையில் இணை வுறும் . இவற்றில் விலகலும் முறிவுகளும் நிகழ்ந்து கூடக நோயறி குறிகளைக் காட்டும்.
விருத்தத்தண்டுக் கோணல்வாதையில் கூபகக் குழி பக்க ஒருக்கல் உற்று உறுப்புகளின் இடஅமர்வை மாற்றும்.

Page 38
இயல் 4
கூடகக் குருதிக்கலன்களும் நிணையக்கலன்களும் நரம்புகளும்
கூபகக் குருதிக் கலன்கள் (நாடிகளும் நாளங்களும்)
கூடகத்து அகவுறுப்புக்களுக்கு மூன்று முக்கிய நாடிகள் குருதி வழங்கல் செய்யும். அவற்றுடன் இணைந்து செல்லும் நாளங்களால் நாளக்குருதி அகற்றப்படும்.
முக்கிய நாடிகளாவன: சூலக நாடிகள், உள்புடை தாங்கி நாடி கள், உயர் குருதி இரியதி நாடி என்பனவாம்.
சூலகநாடி (தாளம்) 3 பக்கத்துக்கு ஒன்ருக இரு நாடிகள் உள. இவை பெருநாடி முற்பக்கத்திலிருந்து ஊறுநீரி நாடிகளுக்கு ஒர் அங்குலத்துக்குப் பணியக் கிளம்பிப் பிரிந்து பக்கத்துக்கு ஒன்ரு கப் பரிவிரியத்துக்குக் கீழாகப் பணிய நோக்கியும் பக்கலாகவும் செல்லும். இவற்றின் முளேக்குமிடங்கள் பெருநாடி முன்சுவரில் அண்மித்திருக்கும். இவை நீண்ட மெல்லிய நாடிகளாம். இந்நாடி ஐ பரவிருந்து பணிவாக பெருநாடி முன் சுவர் மேலும் மாமருங் குல் தசை மேலும் கிடந்து இவ்விடத்தில் ஊறித்தரையும் பிறப் புத்தொடை நரம்பையும் கடக்கும். வலது நாடி கீழ் குகைநாளத் துக்கு முன்னுகவும் முன் சிறுகுடலின் (பன்னிருவிரலி) மூன்ரும் பகுதிக்குப் பின்னுகவும் வலது பெருங்குடல் சுருள்குடல்-பெருங் குடல் நாடிகள், சுருள்குடலின் முடிவுப் பகுதி ஆகியன வற்றுக்குப் பின்னுகவும் கிடக்கும். பின்னர் கூபக விளிம்பை (வலது பொதுப்புடைதாங்கியைக் கடந்து) ஊறித்தருக்கு முன்னுகக் கடந்து, சூலகத் தொங்கு இணையத்துள் புகும், இடது சூலக நாடி யானது இடது பெருங்குடற் கலன்களுக்கும் இறங்கு பெருங் குடலின் புடைதாங்கிப் பகுதிக்கும் பின்னுகச் சென்று Glo).27 CE (a) 5 நாடி போக்குச் செய்யும் வகையில் சூலகத்தை யடையும் வயிற்றுப் பகுதியில் இது ஊறித்தருக்குக் கிளைகளால் குருதி வழங்கும். கூபகத்தில் இது கருப்பைக்குழாய்க் கிளேகால் கருப்பைக் குழாய்க்கும், கருப் பைக் கிளை பால் கருப்பைக்கும், இணையக்கிளையால் கருப்பை உருண்டை பிணையத்துக்கும் குருதிகை அளிக்கும். கருப்பைக் குழாய் கருப்பைக் கிளைகள் ஆகியன கருப்பை நாடிகளின் கிளைகளுடன் பொதுவாய்க ஒளால் பொருந்தும்,

கூபகக் குருதிக்கலன்களும். நரம்புகளும் 磊蟹
உள் புடைதாங்கி நாடி (நாளம்) (உதரக்கீழ்); இது பொது புடை தாங்கி நாடியிலிருந்து நாரி-திருசந்தி மட்டத்தில், திரு-புடை தாங்கி மூட்டைக் கடந்து பெரிய, கடிப்பொள்ளலின் உயர் விளிம் புக்கு எதிராக முற்பக்க பிற்பக்கப் பிரிவுகளாகப் பிரிவுறும். இதன் நீளம் 14 அங்குலம் மட்டிலாம். இது கீழ்நோக்கியும் பின் நோக்கியும் செல்லும்.
இதன் அடில் உறுப்புக்களாவன
முற்பக்கத்தில் பரிவிரியமும் ஊறித்தரும், கீழாகச் சூலகமும் கருப்
பைக் குழாயின் மரூக்களுமாம். வலது பக்கத்தில் சுருட்குடலும்,
இடது பக்கத்தில் கூடகப் பெருங்குடலும் முன்னுகவிருக்கும்.
பிற்பக்கத்தில் தொடக்கத்தில் பொதுப்புடைதாங்கி நாளமும் உட்புடைதாங்கி நாளமுமாம் நாளங்களுக்குப் பின்னுக நாரி-திரு நரம்புத் தாம்பும் திரு-புடைதாங்கி மூட்டும் உண்டு.
பக்கலாக பெருமருங்குல் தசையும், வெளிப் புடைதாங்கி நாளமும், மிகப் பணிய கூபகத்தின் பக்கச்சுவருமுண்டு. நெருங்கல் நரம்பு இப்பகுதியில் இடைப்பட்டிருக்கும். -
நடுசார்ந்து பரிவிரியம் காணப்படும்.
முற்பக்கப் பிரிவின் கிளைகளாவன
இவை கூபக ஆகஉறுப்புக்களுக்கானவை.
ஊறுநீர்ப்பைக்குரியவை (அ) உயர் ஊறுநீர்ப்பை நாடிகளும் நாளங்களும்-வழக்க
மாக இரு நாடிகளுள. - இது பொக்குழ்நாணின் புழையுடைய பகுதியிலிருந்து கிளம்பி கீழாகவும் முன்னுகவும் சென்று சலப்பையின் முற்பக்க-உயர் பரப் புக்குக் குருதி வழங்கும்.
(ஆ) கீழ் ஊறுநீர்ப்பை நாடி (நாளம்). இது நடுசார்ந்து ஊறுநீர்ப்பையின் கீழான பகுதிக்கும் அதன் கழுத்துக்கும் யோனிக்கும் செல்லும்,
2 பிறப்புறுப்புக்குரிய ைஇ
(அ) கருப்பை நாடி : இந்நாடியும் அடிக்கடி பொக்குழ்நாணின் புழையுடைய பகுதியிலிருந்து கிளம்பும் வழக்கமாக கீழ் அஹறுநீர்ப்பைநாடி அல்லது நடுநேர்குடல் அல்லது நெருங் கல் நாடி ஆகியவற்றுடன் ஒரு பொதுவிடத்திலிருந்து

Page 39
இளம் பெண் நோயியல்
கிளம்பும் . இது குதவுயர்த்தி மேலாக நடுசார்ந்து சென்று கருப்பைக் கழுத்தையடையும். கருப்பைக் கழுத்தின் பக் கல் பக்கத்தில் 1 அங்குலத்துக்கப்பால் ஊறித்தரைக் கடந்து, கருப்பையின் பக்க ஒரத்தையடையும். இக்கடக் கும் இடத்தில் ஊறித்தருக்கு ஒரு கிளேயை வழங்கும். பின்னர் அகல் இணையத்தின் இருபடைகளுக்கிடையில் கருப்பையோரமாகக் கருப்பைக் குழாய் - கருப்பைச் சந்தியையடைந்து சூலகநாடிகளின் சூலகக் கிளையுடனும் கருப்பை க்குழாய் நாடியுடனும் பொதுவாய்களால் தொடர்புறும். இது கருப்பையுடலுக்கும், கழுத்துக்கும், கருப்பைக் குழாய்களுக்கும், உருண்டை இணையத்துக்கும் கிளைகளால் குருதியை வழங்கும். வேறு கிளைகள் கீழாக யோனியை யடைந்து யோனி நாடிகளுடன் பொதுவாய் களால் தொடர்புறும்
(ஆ) யோனிநாடி (நாளம்) ; இது கருப்பை நாடி அல்லது கீழ் ஊறுநீர்ப்பை நாடி அல்லது நடுநேர்குடல் நாடி ஊற் றெடுக்குமிடத்திலிருந்து தோன்றும். இது கீழாகவும் முன் ணுகவும் சென்று யோனியின் உயர் பகுதியையடைந்து எதிர்ப்பக்கத்து யோனி நாடியுடனும் கருப்பை நாடியின் இறங்கு கிளைகளுடனும் பொதுவாய்களால் தொடர்புறும். இவ்விதமாக அவையிணேந்து யோனியின் முற்பக்கமாகவும் பிற்பக்கமாகவும் இருநடு நெட்டாங்குக் கலன்களை உரு வாக்கும். (இணை படா யோனி மடல் நாடிக் கலன்கள்) இவை குருதியை யோனிக்கு வழங்கும்.
3. நேர்குடற் கிளைகள் பிற்பக்கத்துக் கிளைகள்)
நடு நேர்குடல் நாடி (நாளம்), (நடு குருதியிரிவு நாடி): இவை அடிக் கடி கீழ் ஊறுநீர்ப்பை நாடியுடன் சேர்ந்து ஒரு பொதுவிடத்தில் தோன்றும். இருந்திட்டொருக்கால் கீழ் நாண நாடியிலிருந்து கிளம் பும். இது நேர்குடலுக்குக் குருதி வழங்கும். இது உயர் நேர்குடல் நாடி (கீழ் நடுமடிப்பினது கிளை) , கீழ் நேர்நாடி (உள் நாண நாடிக் கிளை), அதே பக்கத்து கீழ் ஊறுநீர்ப்பை நாடி, எதிர்ப்பக்கத்து கீழ் ஊறுநீர்ப்பை நாடி ஆகியவற்றுடன் பொதுவாய்களால் இணைப்புறும்.
4. பக்கச் சூ இர்ேக்கி2ள ஆஸ்
இது நெருங்கல் நாடியாகும். இது கூபகப் பக்கச் சுவர் வழியாக
நெருங்கல் கால்வாயையடையும். நெருங்கல் நரம்பு அதற்கு உயர வாகவும் நெருங்கல் நாளம் கீழாகவும் ஊறித்தரை நடுசார்ந்து
 
 

கூபகக் குருதிக் கலன்களும் .நரம்புகளும்
மிருக்கும். சூலகக் குருதிக்கலன்களும் அகலிணையமும், நடுசார்ந்த அயல் என்புகளுக்கும் இவ் வென்புகளுடன் தொடர்புடைய தசை களுக்கும் ஊறு நீர்ப்பைக்கும் குருதியை வழங்கும்.
5. முடிவு நாடிகள்
உள்நான நாடி (நாளம்)
2. கீழ்ப்பிட்ட நாடி (நாளம்)
உள் நாண நாடியானது கீழ்ப்பிட்ட நாடியுடன் பேரியுருத்தசை, திருநரம்புகள் மேலாகச் சென்று பெரிய கடிக்குடையத்தின் கீழ்ப் பாத்தகமூடாக கூபகத்திலிருந்து வெளிவரும். இது கூபகத் தசை களுக்குக் குருதி வழங்கிய பின் நாரிய முள்ளின் புறப்பக்கத்தைக் கடந்து சிறிய கடிக்குடையமூடாக பரியேனத்தின் குதக் கால்வாய்ப் பிரிவையடையும். இது நா ரியக் கழலையத்தின் கீழ் விளிம்புக்கு 1: அங்குல உயர்வில் நானக் கால்வாயில் (அல்கொக்சின் கால்வாய்) கிடந்து பின்னர் முன்னுக ஊர்ந்து மேற்பரப்பையடையும். பரியேன மென்சவ்வின் ஒரத்துக்கு உயரவாக, நாரிய பூப்புக்கவருக்கு அண் மித்து, ஊறித்தாரையிறுக்கியைப் பொள்ளல் செய்து, குமிழுக்கு ஒரு கிளை நாடியை விட்டுப் பின்னர் பூப்புக்கோணத்துக்குக் கீழாக, இது இறுதிக் கிளைகளான கிளைத்துருவின் ஆழநாடியையும் புறப்பக்க நாடியையும் விடுகின்றது.
நாரிய-நேர்குடல் குழிவின் பக்கச் சுவரில் போக்குச் செய்யும் பொழுது இது (அ) கீழ் நேர் குடல் நாடியையும் (கீழ் குருதியிரிவு) (ஆ) மேற்பரப்புப் பரியேனக்கிளையையும், (இ) குறுக்கு பரியேனக் கிளே யையும் விடும். கீழ்நேர் குடல் (கீழ் குருதியிரிவுக் கிளைகள்) ஒன் முக அல்லது இரண்டு மூன்று கிளைகளாக நானக் கால்வாயிடத்தில் உள் நாண நாடியிலிருந்து கிளம்பி நடு சார்ந்து குதக்கால்வாயை அடையும், இது பட்டிப்பு (பேசியா) உறையால் போர்க்கப்பட்டிருக் கும். இந்நாடியானது வெளிக் குதவாயிறுக்கி, குதவுயர்த்தி, குதக் கால்வாய்நுதி, பரியேனத்தின் ஏனசுப் பகுதியின் மேற்பரப்புக் கட்டமைவுகள் ஆகியவற்றிற்குக் குருதி வழங்கும். இது ஏனைய நேர் குடல் நாடிகளுடனும் அதன் எதிர்ப்பக்கத்து ஒத்த நாடியுடனும் பொதுவாய்களால் பொருந்தும்,
உயர் நேர்குடல் நாடி (உயர் குருதியிரிவு நாடி)
இது நடுமடிப்புக் கீழ் நாடியின் தொடராகும். இடது பொதுப் புடைதாங்கிக் கலன்களைக் கடந்த பின்னர் இது கூபகப் பெருங் குடல் மடிப்பு அடியூடாக நேர் குடல் தொடக்கப் பகுதியை யடை பும். இவ்விடத்தில் அது வலது இடது உயர் நேர்குடலின் கிளை

Page 40
莎& இளம் பெண் நோயியல்
நாடிகளாக நேர் குடலின் இரு பக்கங்களிலும் இறங்கும். கூஸ்ற்ற னின் மூன்ரும் மடிப்பின் மட்டத்துக்குக் கீழாக வலது கிளையானது முற்பக்கப் பக்கல், பிற்பக்கப் பக்கல் கிளைகளாகப் பிரிவுறும். இடது கிளை இவ்வகையில் பிரிவடைவதில்லை. இம்மூன்று பிரிவுகளும் பின்னர் நேர்குடல் தசையைத் துளைத்து மென்சவ்வுக்குக் கீழான பரப்பை யடையும். இவ்விதமாக அவை கீழாகப் போக்குச் செய்யும் பொழுது தாம் விடும் கிளைகளால் நடு, கீழ் நேர்குடல் நாடிகளின் கிளைகளுடன் பொதுவாய்களால் பொருத்தமுடைய நாடி வலை யமைவை மென்சவ்வுக்குக் கீழாக அமைக்கும். முக்கிய முடிவுக் கிளை களும் வேறு பெரும் கிளைகளும் நேர்குடல் கம்பங்களுக்குக் கீழாகக் கிடந்து கீழ்நோக்கி, குதக்கால்வாய் வால்வுகள் மட்டம் வரைக்கும் தமக்கு ஒத்த நாளங்களுடன் செல்லும், இந்த நேர்குடல் சிம்பங்களின் கீழ் முடிவிடத்தில்தான் குருதியிரிவு வளையம் உண்டு. இந்தக் கம்பங்க ளுள் அடக்கப்பட்ட நாளங்கள்தான் விரிபருக்கங்களைத் தோற்றும். எனவே இந்தக் குருதியிரிவு வளையத்துக்கு மூன்று வெளிகாவுகுருதி வழங்கலுண்டு-இடது பக்கல், வலது-பிற்பக்கப் பக்கல், வலது-முற் பக்கப் பக்கல் ஆகியனவாம் இவ்விடங்கள்தான் மூன்று முதலாய குருதியிரிவுகளுக்குக் (மூலக்கட்டிகளுக்கு) காரணமாம். மேலும் உயர் நேர்குடல் நாடிக்கும், கீழ் இடது பெருங்குடல் நாடியின் கீழான கிளேக்குமிடையில் (சூடெக்கின் அவதிப் புள்ளியிடம்) பொதுவாய்ப் பொருத்துக்கள் குறைவாம். எனவே கூபகப் பெருங்குடலை அறுவை வினைசெய்து சிறிது நகரச் செய்வதற்கு, இந்தப் பகுதியிலிருக்கும் பொதுவாய் பொருத்துகளுக்கு இடர் செய்யாது-இடது பெருங் குடலின் உயர் நாடிகளில் இரண்டொன்றை வெட்டிச் செய்யவும்.
கூடகத்தின் நாளங்கள்
கூடக உறுப்புக்களாவன: கருப்பை, யோனி, சலப்பை, நேர்குடல் ஆகியன. ஒவ்வொன்றும் நாளப் பின்னல்களால் சூழ்ந்திருக்கும். ஒவ்வொன்றும் மற்றையதுடன் தொடர்புடையது. ஒவ்வொரு உறுப் பினதும் நாளப் பின்னல் கூட்டமானது சிறப்பாக அவ்வுறுப்பை விட்டேகும் முக்கிய நாளங்கள் வழியாக நாளக்குருதி வடிக்கப் படும். நேர் குடலுக்குச் சிறப்பாக அமைந்த உன் நேர்குடல் நாளப் பின்னலும் வெளி நேர்குடல் நாளப் பின்னலுமுண்டு. உள்ளானது நேர்குட்ல் தசையூடாக வெளிப் பின்னலுடன் தொடர்புடையது. உள் நேர்குடல் பின்னல் நேர்குடல் மியூக்கசு மென்சவ்வுக்குக் கீழாக இருக்கின்றது.
கருப்பை நாளப் பின்னல் :
இது கருப்பை அகலிணையத்தின் இரு படைகளுக்கிடையிலுண்டு. சிறப்பாக இந்நாளம் கருப்பை நாளங்களுடாக உள் புடைதாங்கி

கூடகக் குருதிக்கலன்களும் . நரம்புகளும் 蠢9
நாளங்களை யடையும், உயர் கருப்பை நாளக் குருதியும் பெருமளவில் சூலக நாளங்கள் வழியாகச் செல்லும், நாளக்குருதி சிறிதளவில் ஊறித்தாரையைச் சூழ்ந்திருக்கும். நாளப் பின்னலுடனும், யோனிப் பின்னல்களுடனும் தொடர்புறும். இந் நாளங்களுக்கு வால்வுக
யோனிப் பின்னல் நாளங்கள் : இவை ஊறித்தாரைப் பின்னல், சலப்பை நாளப் பின்னல், தலைவாயில் குமிழ் நாளங்கள், நேர்குடல் நாளப் பின்னல்கள், கருப்பைப் பின்னல்கள் ஆகியவற்றுடன் தொடர் புடையன. இம் முன் கூறப்பட்ட பல நாளங்கள் வழியாக குருதி உள்புடைதாங்கி நாளத்தையடையும்.
ஊறுநீர்ப்பை நாளப் பின்னல் : இது ஊறுநீர்ப்பையின் அடிக்குழி யையும் பக்கங்களையும் சூழும். சிறப்பாக ஊறுநீர்ப்பையின் கழுத் தையும் அடித்தளத்தையும் அடர்த்தியாகச் சூழும். ஊறித்தாரை நாளப்பின்னலுடன் தொடர்புடையது. ஊறுநீர்ப்பையின் நாளங்கள் வழியாக குருதி வெளிச் செல்லும். இவை யோனி, கருப்பை ஆகிய வற்றின் நாளப் பின்னல்களுடன் தொடர்புடையது. கிளைத்துருவின் புறப்பக்கநாளம் இதனுள் வடியும், வெளிகாவு நாளங்கள் உள்புடை தாங்கி நாளங்களை யடையும்.
நேர்குடல் நாளப்பின்னல் : இது நேர்குடலின் கீழ்ப் பகுதியைச் சூழும். இதிலிருந்து குருதியானது உயர் குருதியிரிவு நாளங்கள் வழி யாகக் கீழ் நடுமடிப்பு நாளத்துக்கும், நடுக்குருதியிரிவு நாளங்கள் வழியாக உள் புடைதாங்கி நாளங்களுக்கும், கீழ் குருதியிரிவு நாளங் கள் வழியாக உள் நாண நாளங்களுக்கும் செல்லும், இவற்றிற்கு வால்வுகளில்லை. கீழ் மென்சவ்வுப் பின்னல் நாளங்களும், நேர்குடற் புறத்து நாளப் பின்னலும் மிகச் செறிவுடையது. இவை தான் விரிபருக்கமடையும்பொழுது குருதியிரிவுகள் அல்லது மூலக் கட்டி கள் எனப்படும்.
உள்புடைதாங்கி நாளம் : இது உள்புடைதாங்கி நாடியின் கிளே களே அணைந்து செல்லும் நாளக் கிளைகளால் உருவாக்கப்படும். இது உள்புடைதாங்கி நாடியின் உட்பக்கத்திலும் பிற்பக்கத்திலும் கிடக்கும். திரு-புடைதாங்கி மூட்டு மட்டத்தில் வெளிப்புடைதாங்கி நாளத்துடன் இணைந்து பொதுப்புடைதாங்கி நாளத்தை உரு வாக்கும்.
சூலக நாளங்கள் : இவை சூலகத்தின் கிலத்திலிருந்து உருவாகும். தந்துருப் பின் னல் நாளங்களிலிருந்து உருவாகும். இது அகலிணேயப் படைகளுக்கிடையில் கிடக்கும் கருப்பைக் குழாய்களிலிருந்து ம்

Page 41
60 இளம் பெண் நோயியல்
உருண்டை இணையத்திலிருந்தும் நாளக்குருதியைப் பெறும். இவ் விடங்களிலிருந்து குருதி நாளங்கள் இரு சூலக நாளங்கள் வழியாகச் சென்று பின்னர் ஒரு நாளமாக இணைந்து, வலது பக்கத்தில் கீழ் குகை நாளத்துடனும், இடது பக்கத்தில் இடது ஊறு நீரி நாளத் துடனும் சேரும் ,
கூடகவுறுப்புக்களின் நினை டிவடிப்பு
கூபகத்துள் அடக்கப்பட்ட ஒவ்வோர் உறுப்பின் மியூக்கசு மென் சவ்வுக்குக் கீழாகவும் அவற்றைச் சூழ்ந்தும் நிணையக் கலன்களின் பின்னல்களுண்டு. ஆகவே சலப்பை சூலகங்கள், கருப்பைக்குழாய் கள், கருப்பை, யோனி, நேர் குடல் ஆகியவற்றில் இவ்வமைப்புக ளுண்டு. கீழ் மென்சவ்வு நிணையக்கலங்கள் தசையூடாகப் புறத்துப் பின்னல்களுடன் தொடர்புறும். இவற்றிலிருந்து அவ்வவ்வுறுப்புக் களுக்கு வழங்கும் நாடிகளுடன் நிணையக் கலன்கள் அணைந்து சென்று அவற்றிற்காகிய நிணையக்கனுக்களை யடையும்.
நி2ணயக் கணுக்களின் இடவமர்வு
(அ) முற்பக்கச் சுவரின் கீழ்ப்பகுதியும் (கவட்டுப் பகுதியும்)
உயர் தொடைப் பகுதியும்
(ஆ) கூடக அகத்துள்.
மேற்பரப்புக் கவட்டு நிணையச் சுரப்பிகள்
இவை எண்ணிக்கையில் வேறுபடும். பொதுவாக 10-12 சுரட் பிகள் உள. இரு தொகுதிகளாக அமைவுபெறும். ஒன்று கிடைக் கோட்டுத் தொகுதி மற்றையது நெட்டாங்குத் தொகுதியாகும். கிடைக்கோட்டுத் தொகுதியானது மேற்பரப்புக் கவட்டுச் செவ்விய சுரப்பிகள் எனக் கூறுவர். இவை கவட்டு இணையத்துக்குச் சிறிது கீழாகவும் அதற்குச் சமாந்தரமாகவும் கிடக்கும். இவற்றின் நடு சார்ந்த பகுதி, மேற்பரப்புப் புறத்து நாண நாடியை அணைந்திருக் கும் (பூப்பு நிணையச் சுரப்பிகள்).
நெட்டாங்குத் தொகுதிச்சுரப்பிகள் (மேற் பரப்பு கவட்டுக் கீழ் சுரப்பிகள்) சல்லரி உருப்பட்டிப்புப் பிரதேசத்திலும் நீள்காட்சி நாள அண்மை முடிவிடத்தில் இரு மருங்கிலுமுண்டு. இதில் பெரியதொன்று முற்பக்கத் தொடைத் தோல் நாளத்துக்கும் நீள்காட்சி நாளத்துக்கு மிடையிலுள்ள கோணத்திலுண்டு. நெட்டாங்குச் சுரப்பிகளுக்கு நிணையக்கலன்கள் பாதத்தின் வெளிப்பகுதியிலிருந்தும் காலின் முற் பக்கக் கெண் டைப்பகுதியில் இருந்தும் சென்றடையும் தொடையின் கெண்டைப் பகுதி, குண்டி, முற்பக்க வயிற்றுச்சுவரின் வால் பகுதி

கூபகக் குருதிக் கலன்களும். நரம்புகளும் 岱夏
ஆகியவற்றிலிருந்து வரும் நிணையக்கலன்கள் மேற்பரப்புக் கிடைக் கோட்டுச் சுரப்பிகளின் பக்கல் தொகுதியையடையும். பிறப்புறுப் புக்கள், பரியேனம், குதவாய் ஆயபகுதிகளின் மேற்பரப்பு நினையக் கலன்கள் மேற்பரப்புக் கவட்டுச்சுரப்பிகளின் நடு சார் தொகுதியைச் சென்றடையும், வெளிக்காவு கலன்கள் காட்சி நாளத் துளையை அடைந்து சல்லடையுருப்பட்டிப்பூடாகச் சென்று, சில கலன்கள் ஆழ் கவட்டுச் சுரப்பிகளுக்கும், ஏனையவை தொடைக் யூடாக வெளிப்புடைதாங்கிச் சுரப்பிகளுக்கும் செல்லும்.
ஆழ் கவட்டுச் சுரப்பிகள் எண்ணிக்கை 2 அல்லது 3 மட்டிலாம். இவை தொடை நாளத்தின் அண்மைப் பகுதியின் நடுசார் பக்கத் தில் கிடக்கும். இவற்றிலொன்று குளொக்கேயின் சுரப்பியெனப் படும். இதன் பக்கல் பக்கத்தில் தொடை நாளமும் நடுசார் பக் கத்தில் க் வட்டு இணையத்தின் (கிம்பநாற்றின் இணையம்) சீப்புப் பகுதி யின் சார்பற்ற விளிம்புக்குமிடையில் இது கிடக்கும். இவை கால் களில் ஆழ்பகுதிகளை வடிப்பதுமல்லாமல் கிளைத்துருவின் நிணையக் கலன்களையும் மேற்பரப்புக் கவட்டுச் சுரப்பிகளின் வெளிகாவு கலன்களின் சேர்க்கையையும் பெறும். -
உள்புடைதாங்கி நிணையச் சுரப்பிகள்
இவை எண்ணிக்கையில் 10-12 ஆகும். பெரும்பாலும் உள் புடைதாங்கி நாடிக் கிளைகள் முளைக்குமிடங்களில் காணப்படும். இவற்றின் ஒழுங்கு ஒரு வில் வளைவு போன்றதாம். இவ்வளைவு அழிப்புற்ற கொப்பூழ் நாடிக்கும், நெருங்கல் நாடிக்குமிடையி லிருக்கும் சுரப்பியில் தொடங்கி, கருப்பை, கீழ்பிட்ட, உள் நாண, நடுநேர்குடல், உயர் பிட்ட, திருசுரப்பிகள் ஆதியன இதனில் இட அமர் வைப் பெறுகின்றன. இவை பரிவிரியத்துக்குக் கீழாக விருக்கும், உள்புடைதாங்கி நிணையச் சுரப்பிகளுக்கு, குதக்கால்வாய் நேர்குடலின்கீழ்ப்பகுதி, கருப்பையுடல், கருப்பைக்கழுத்து யோனி, பரியேனத்தின் ஆழ்பகுதிகள், குண்டியின் ஆழ்பகுதிகள் தொடையின் உயர்பகுதியின் ஆழ்பகுதிகள் ஆகியவற்றிலிருந்து நிணையக் கலன்கள் சென்றடையும். நிணையக் கலன்கள் உள்புடைதாங்கியிலிருந்து வெளி புடைதாங்கிச் சுரப்பிகளுக்கும் செல்லும், இதன்பின்னர் இவை ஒருங்கே பொதுப்புடைதாங்கி சுரப்பிகளைச் சென்றடையும். கருப் பைக் கழுத்துக்கு அண்மையில் ஒரு பரகழுத்து நிணையச்சுரப்பியும் உண்டு.
திருவென் பின் முற்பக் கத்தில் முற்பக்கத் திருச்சுரப்பிகள் (பர
நேர்குடல்) உண்டு. இது கருப்பைக் கழுத்து-திரு இணைய மூடாக வரும் கலன்களைப் பெறும்.

Page 42
62 இளம் பெண் நோயியல்
நிணே யச் சுரப்பிகளின் பரவலைப் பற்றியும், அவை வடிக்கும் பகுதிகளைப் பற்றியும் பெண்ணுேய் வைத்தியன் தெளிவான அறிவைப் பெற்றவனுக இருக்கவேண்டும்.
ଛୁଞ୍ଛି ପ୍ରୀ) କ୍ୟୁଞ
வல்வம் பரியேனம், குதம், இவற்றிற்கு அடுத்தாற்போலிருக்கும் தோல் ஆகிய பகுதிகளின், நிணையக் கலன்களாவன கவட்டிணேயத் துக்குக் கீழாக நடு சார்ந்திருக்கும் மேற்பரப்புக் கவட்டுச் சுரப் பிகளை யடையும். சில தொடை மேற்பரப்புச் சுரப்பிகளை (நெட் டாங்கு கவட்டுத் தொகுதி) யடையும். பின்னர் ஆழ் கவட்டு தொகுதிக் (தொடை) குச் செல்லும். இத்தொகுதியின் முக்கிய சுரப்பியானது குளோக்கேயின் சுரப்பியாகும். கிளேத்துருவின் முன் ருேலின் நிணையக் கலன்கள் வல்வத்தின் பேரிதழ்களின் நிணையக் கலன்களை அணைந்து சென்று மேற்பரப்புக் கவட்டுச் சுரப்பிகளை யடையும். கிளேத்துருமுகை நிணையக் கலன்கள் கிளைத்துருவின் முதுகுக்கு மேலாகச் சென்று பூப்பிணைப்பின் முற்பக்கத்தில் ஒரு வலையுரு அமைவுற்று பின்னர் ஆழ் கவட்டுச் சுரப்பிகளுக்குச் செல் லும், பின்பு இச் சுரப்பிகளிலிருந்து நிணையக்கலன்கள் தொடைக் கால்வாயூடாக வெளிப்புடைதாங்கி நிணையத் தொகுதியின் நடு சார் கோர்வையை அடையும். சில கவட்டுக் கால்வாயூடாக வெளிப் புடைதாங்கிச் சுரப்பிகளின் பக்கல் கோர்வையை அடையும், பல் குகையுடல்களின் நினையக் கலன்கள் உள்புடைதாங்கிச் சுரப்பிகளை யடையும் ஒரு பக்கத்து நினையக் கலன்கள் எதிர்ப்பக்கத்துக் கலன் களுடன் தொடர்புறும்.
யோனிமடல் இதை வடிக்கும் நிணையக் கலன்கள் இரு தொகுதி களாக அமைவுபெறும். இவை உயர் தொகுதி, கீழ்த்தொகுதி ஆகியனவாம்.
உயர் நிணையக்கலன்கள் : இவை யோனியின் உயர் மூன்றிலிரு பகுதியை வடிக்கும். இப்பகுதியின் நிணையக்கலன்கள் : 1) வெளிப் புடைதாங்கிச் சுரப்பிகளின் நடுக்கோர்வையையும் (2) உள்புடை தாங்கிச் சுரப்பிகளையும் அடையும்,
கீழ் நிணேயக்கலன்கள் : இவை யோனியின் கீழ் மூன்றில் ஒரு பகுதியையும், கன்னித் திரையின் யோனிப் பரப்பையும் வடிக்கும். இவை பொதுப்புடைதாங்கிச் சுரப்பிகளின் நடுசார் கோர்வைகளை யடையும், கன்னித் திரையின் பரியேனப் பக்கப்பரப்பு, நினேயக் கலன்கள் கவட்டுச் சுரப்பிகளை யடையும். இவ்விரு தொகுதிகள் தம்முள் தடையில்லாத் தொடர்ச்சியுறுவது அல்லாமல் உயர் தொகுதி கருப்பைக் கழுத்து நிணையக் கலன்களுடனும் கீழ்த்தொகுதி வல்வத்தின் தொகுதியுடனும் தொடர்புறும்.
 
 
 
 
 

கூபகக் குருதிக்கலன்களும். நரம்புகளும் 爵岛
கருப்பையின் நினேய வடிப்டை இரு பகுதிகளாக விபரிக்கலாம்.
(1) கருப்பையின் உடல் : கருப்பையின் அடிக்குழியிலிருந்தும் உட லின் உயர் பகுதியிலிருந்தும் வரும் நிணையக் கலன்கள் உயரவாகவும் வெளிநோக்கியும் அகலிணையத்தாற் செல்லும், இங்கே கருப்பைக் குழாய், சூலகம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நிணேயக் கலன்க ளுடன் இணைந்து புடைதாங்கி, நாரி, உயர் பெருநாடி ஆகிய நிணையச் சுரப்பித் தொகுதிகளை யடையும். சில கலன்கள் உருண்டையிணையம் வழியாகக் கவட்டின் மேற்பரப்புச் சுரப்பிகளையும் அடையும் கருப்பை யுடலின் கீழான பகுதி கருப்பைக் கழுத்து நிணையக்கலன்களுடன் தொடர்புறும்
(2) கருப்8:க் கழுத்து : இப்பகுதியில் நிணையக் கலன்கள் பெரு வாரியாம். (1) முக்கிய கலன்களின் தொகுதியானது கருப்பைக் குருதிக் கலன்களுடன் அணைந்து அகலிணையத்தின் அடிப்பகுதியி லிருக்கும் கலவ இழையத்தில் போக்குச் செய்து உள்புடைதாங்கிச் சுரப்பிகளையும், பின்னர் வெளிப்புடைதாங்கிச் சுரப்பிகளின் நடுக் கோர்வையையும் பொதுப்புடை தாங்கிச் சுரப்பிகளின் நடுசார் கோர்வையையும், சென்றடையும். இவை தம் போக்கில் ஊறித்தரை உயரவாகவும் கீழாகவும் கடக்கும். இவ்விடத்தில்தான் பரகழுத்துச் சுரப்பியுண்டு. சிலரில் இது காணப்படுவதில்லே. கருப்பைக் கழுத்துக் கான்சர் நோயில் முதலாவதாகத் தாக்கப்படும் சுரப்பி இதுவே யாகும்.
கருப்பைக் கழுத்திலிருந்து பல நிணையக் கலன்கள் பின்னுேக்கி கழுத்து-திரு இணையம் வழியாகச் சென்று முன்திரு அல்லது பரநேர்குடல் சுரப்பித்தொகுதிகளுடன் இணையும். இச் சுரப்பிகளி லிருந்து கலன்கள் கீழ்ப்பெருநாடிச் சுரப்பிகளை யடையும். மிகச் சில நிணையக் கலன்கள் நெருங்கல் குருதிக்கலன்கள் வழியாக நெருங்கல் சுரப்பிகளேயடையும். இவை உள் நெருங்கற் தசை மேற்பரப்பில் கிடக்கும். -
கருப்பைக் குழாயும் சூலகமும் -
இவ்வுறுப்புக்களிலிருந்து வரும் நிணையக் கலன்கள் கீழ் சூலக நிணையப் பின்னலுடன் இணைந்தும் பின்னர் கருப்பையின் உயர் பகுதிக் கலங்களுடன் இணைந்தும் சூலகக் குருதிக் கலன்வழியாகப் பெருநாடிச்சுரப்பிகளின் உயர் தொகுதியை யடையும்,
நேர்குடல் : குதவாய்ப் பகுதியும் நேர்குடலின் கீழ்ப்பகுதியும் மேற்பரப்புக் கவட்டுச் சுரப்பிகளை யடையும். நேர்குடலின் உயர் பகுதி பர நேர் குடல் சுரப்பிகளையடையும்,

Page 43
ή 4. இளம் பெண் நோயியல்
சலப்பையும் ஊறித்தாரையும்
சலப்பையின் முற்பக்கச்சுவரையும் உயர் சுவரையும் வடிக்கும் கலன்கள் கீழாகவும் பக்கலாகவும் சென்று வெளிப்புடைதாங்கிச் சுரப்பிகளை யடையும், பிற்பக்கக் கீழான பகுதி, தளம், ஊறித்தாரை ஆயபகுதிகளின் நிணையக் கலன்கள் கருப்பைக் கழுத்து, உயர் யோனிப் பகுதி, கருப்பையுடற் கீழ்ப்பகுதி ஆகியவற்றின் கலன்க ளுடன் இணையும், கருப்பைக் கழுத்துத் தொற்றில் ஊறுநீர்ப்பையும்
பாதிக்கப்படக் கூடும்.
கான் சர் நோய் பரவலிலும், மற்றும் தொற்றுப் பரவலிலும் விவரிக்கப்பட்ட நினேயத் தொகுதிகள் முக்கியம் வாய்ந்தவை.
ཡོད། கூடகவுறுப்புக்களின் நரம்பு வழங்கீடு
இந்நரம்பு வழங்கல் இரு தொகுதிகளிலிருந்து ஊற்றெடுக்கும். ஒன்று மைய நரம்புத் தொகுதி (மூளை-முண்ணுண்), மற்றையது தன் ஞட்சி (தன்னியக்க) நரம்புத் தொகுதியாம் மைய நரம்புத் தொகுதியானது இச் சைவழித் தசைகளுக்கு (இதனுள் கூபக இச்சை வழித் தசைகளும் அடங்கும்) நரம்பு வழங்கல் செய்யும். தோலும் அதனுடன் தொடர்புடைய கட்டமைவுகளிலிருந்து புலன்சார் கணத்தாக்கங்களையும் காவும். தன்னுட்சி நரம்புத்தொகுதி (இச்சைபரிவு) இச்சையில் (விழைவில்) வழியில் இயங்கும் கூபக உறுப்புக் களுக்கு - கருப்பை, கருப்பைக்குழாய்கள், யோனிமடல், நேர்குடல், ஊறுநீர்ப்பை, ஊறித்தாரை ஆகியனவற்றிற்கு-நரம்பு வழங்கல் செய்து அவ்வுறுப்புக்களின் செயல்களைச் சீரமைவு செய்யும். மேலும் நினைவு கூரவேண்டியது யாதெனில் அவை இத் தசைகளையும் இவற்றிற்குச் செல்லும் குருதி நாடிகளையும் பாதிக்கும். நரம்பு ஆதிக்கங்களைப் பற்றி முழு அறிவு இன்னமும் பெறவேயில்லை. இன்னும் கூறின் இவ்வுறுப்புக்கள் மழமழப்புத் தசைகளால் கட்டமை வுடையன. இவை தன்னியல் பில் சுருக்கங்களுறக் கூடியன. இர சாயன, ஓமோன் பதார்த்தங்களால் பாதிக்கக் கூடியவை. மகப் பேறு உற்றவர்களின் உறுப்புக்களும், கன்னிப் பெண்களினது உறுப்புக்களும், கருக்கட்டுண்ட கருப்பையும், கருவுருக் கருப்பைகளும் ஒரே மாதிரியான விளைவை ஒரு தூண்டலுக்குக் காட்டுவதில்லை.
மைய நரம்புகள் (உடல்)
புடைதாங்கி-கவட்டுநரம்பு இது முதலாம் நாரி நரம்பின் உயர்
பிரிவிலிருந்து கிளம்பும். இது தன்முன்னுகச் செல்லும் போக்கில், புடைதாங்கி உச்சி நீளமாகவும் புடைதாங்கிப் பட்டிப்புக்குக்
 

கூபகக் குருதிக் கலன்களும்.நரம்புகளும் 65
கீழாகவும் சென்று இந்த உச்சியின் பாதி வழித்தூரத்தில் இப்பட்டிப் பூடாக குறுக்கு வயிற்றுத்த சைக்கும் வயிற்று உள் சரிவுத் தசைக்கும் இடையிலுள்ள பரப்பைய டைந்து முற்பக்க உயர் புடைதாங்கி முள்ளுக்குக் கிட்டவாக உட்சரிவுத்த சை நார்களைப் பொள்ளல் செய்து கவட்டுக் கால்வாயை அடைந்து, வெளிக் (மேற்பரப்பு) கவட்டு வளையத்தூடாக வெளிவந்து பூப்பு மேட்டுக்கும் பேரிதழுக்கும் புலன்சார் நரம்புகளை வழங்கும்.
பிறப்புறுப்பு-தொடை நரம்பு : இது முதலாம் நாரி நரம்பின் கீழ்ப்பிரிவிலிருந்தும் 2ஆம் நாரி நரம்பின் உயர் பிரிவிலிருந்தும் தோற்றும். பெரும்பாலும் மருங்குல் தசையின் நாருறையைப் பொள்ளல் செய்து, ஊறித்தருக்குப் பின்னகப் போக்குச் செய்து உறை மேல், கீழாகச் செல்லும், கவட்டு இணையத்துக்கு உயரவாக இரு கிளைகளாகப் (பிறப்புறுப்பு, தொடை) பிரிவுறும். பிறப்புறுப்புப் பிரிவானது வெளிப் புடைதாங்கி நாடிமேற் கிடந்து பின்னர் ஆழ் கவட்டு வளையமூடாகக் கவட்டுக் கால்வாயை அடைந்து இத னுரடாக வரும் உருண்டை இணையத்துடன் அணைந்து வெளிக்கவட்டு வளையமூடாக வெளிவந்து பேரிதழுக்குப் புலன்சார் நார்களை
வழங்கும்.
பிற்பக்கத் தொடைத் தோல் நரம்பு இது 1, 2, 3ஆம் திரு நரம் புகளின் பிற்பக்கத்திலிருந்து தோன்றி கூபகத்திலிருந்து பெரிய கடிக் குடையத்தூடாக நாரிய கழலையத்துக்கும், பெரிய உச்சிமுனை (தொடைஎன்பின்) க்குமிடையி லிருக்குமிடத்தை அட்ைந்து பெரும் பிட்டத் தசைக்குக் கீழாகக் கிடந்து தொடையின் பிற்பக்கமாகக் கீழே போக்குச் செய்யும். பெரும்பிட்டத் தசைக்குக் கீழாகவிருக்கும் பொழுது இது ஒரு பரியேனக் கிளையை விடும். இது வளைந்து நடுசார்ந்து பரியேனத்தின் முற்பகுதிக்குச் செல்லும். இது அகல் பட்டிப்பை நாரிய கழலையத்துக்கு முன்னகத் துளைத்து நாரியபூப்புக் கவர்மேலாக மேற்பரப்புப் பரியேனப் பட்டிப்பின் ஆழ்படை யைத் துளைத்து மேற்பரப்புப் பரியேன நரம்புகளுடன் அணைந்து பேரிதழுக்குப் புலன்சார் நார்களை வழங்கும்.
நாண நரம்பு: இது திரு நரம்புப் பின்னலின் கீழான பட்டியின் தொடர்ச்சியாகும். இது மூன்று வேர்கள் வழியாக 2ஆம் திருநரம் பின் வயிற்றுப்புறப் பிரிவிலிருந்தும் 3ஆம் திருநரம்பின் கீழ்பிரிவி லிருந்தும் 4ஆம் திருநரம்பின் உயர் பிரிவிலிருந்தும் கிளம்பிப் பெரும் கடிக்குடையத்துக் கீழான பாத்தகத்தூடாக வந்து நாரிய முள்ளின் பிற்பக்கத்துக்கு மேலாகப் போக்குச் செய்து (இவ்விடத்தில் நாணக் குருதிக் கலன்களை நடுசார்ந்திருக்கும்) சிறிய கடிக்குடை

Page 44
66 இளம் பெண் நோயியல்
யத்தூடாகச் சென்று நாரிய-நேர்குடற் குழிவின் பக்கச் சுவரை அடைந்து நாணக் கால்வாய்க்குள்ளாகக் கிடந்து பின்னர் கீழ்க் குருதி இரிவு நரம்பை வழங்கியபின் பரியேன நரம்பாகவும் கிளைத்துருப் புறப்பக்க நரம்பாகவும் கிளைகள் விடும். பரியேன நரம்புகள் வல்வத் துக்கும், தலைவாயில் குமிழுக்கும் புலன்சார் நரம்புகளை வழங்கும். இது மேலும் வெளிக்குத இறுக்கிகளுக்கும், குதவுயர்த்திகளுக்கும் மேற்பரப்புப் பரியேனத்தசைகளுக்கும் நரம்பு வழங்கல் செய்யும். கிளைத்துருப் புறப்பக்க நரம்பானது புலன்சார் நரம்பாகும்.
குயிலலகுப் பின்னல் : இது 4ஆம், 5ஆம் திருநரம்புகள், குயிலலகு நரம்பு ஆகியவற்றின் முற்பக்க முதல் பிரிவுக் கிளைகளிலிருந்து உரு வாகும். 4ஆம் திருநரம்பானது திருப் பின்னலுடன் தொடர் புடையது 4ஆம் திருநரம்பின் கீழ்ப்பிரிவு குயிலலகுப் பின்னலை அடைய முன்பு கூபக அக உறுப்புக் கிளைகளையும். தசைக்குச் செல் லும் கிளைகளையும் வழங்கும். அகவுறுப்புக் கிளைகள் மிகுதியாக கூடகப் பின்னல்களைச் சேரும். சில கிளைகள் சார்பற்ற விதத்தில் கூபக அகவுறுப்புக்களுக்குச் செல்லும். தசைக்கிளைகள் குதவுயர்த்திகளுக்கும் குயிலலகுத் தசைக்கும் வெளிக்குத இறுக்கிக்கும் வழங்கும். மேலும் இவற்றின் சில நார்கள் (குதவாய்-குயிலலகு நரம்புகள்) திரு-கழலே இணையத்தைத் துளைத்துக் குயிலலகுக்கும் குதவாய்க்குமிடையிலுள்ள தோலுக்குப் புலன் சார் நரம்புகளை வழங்கும்.
குதவுயர்த்திகளுக்கு முக்கியமாக 3ஆம், 4ஆம் திருநரம்புகள் வழங்கீடு செய்யும். புலன்சார் நரம்புகளின் உண்மைப் போக்குப் பாதையை அறிவது முக்கியமாகும். பல நிலைமைகளில் இந் நரம்பு களை ஓரிட உணர்வழிப்புச் செய்யவேண்டிவரும்,
தன்னியக்க (பரிவு) நரம்புத் தொகுதி
கூபக உறுப்புக்களின் முக்கிய பரிவுத் தொகுதிப் பின்னல் நாரிப் பின்னல் அல்லது உதரக் கீழ்ப் பின்னலாகும். இனப்பெருக்க உறுப் புக்களிலிருந்து போக்குவரத்துச் செய்யும் பரிவு நரம்புகள் எல்லாம் இச் சந்திப் பின்னல் வழியாகத்தான் செல்லவேண்டும்.
உதரக் கீழ்ப் பின்னல் பெருநாடிப் பிரிவுப் பின்னலிலிருந்து கீழாகச் செல்லும் பல நார் நூல்கள் (பக்கத்துக்கு ஒன்ரு கப் பின்ன லுற்ற நாடாக்கள்) பொதுப்புடைதாங்கி நாடிகளைக் கடந்த பின்னர் ஒருங்கு இணைவுறும். நாரிப் பரிவு நரம்புக் காம்புகளின் திரளியன் களிலிருந்து (உயர் இரு நாரித் திரளியன்கள்) வரும் கிளைகளும் இவற்றுடன் சேரும். இவ்விதமாக உருவாகிய கீழ் உதரப் பின்ன லானது 5ஆம் நாரிவிருத்த என்பின் உடலினதும் திருஎன்பின் முகைப்பினதும் முற்பக்கத்திற் பொதுப்புடை தாங்கிக் అతని
 

கூபகக் குருதிக் கலன்களும்.நரம்புகளும் 67
கலன்களுக்கிடையில் கிடக்கும். இப் பின்னல் தொகுதியானது நரம்பு நார்களும் திரளியன் கலங்களும் கலந்து பரவிய பின்ன லாகும். இது ஒரு பெரிய தட்டையான பின்னலாகும். அகலத்தில் 1 அங்குல முடையது; இதை முன் திரு நரம்பென்று கூறுவர்.
இதிலிருந்து பிரிந்து இரு கூபகப் பின்னல்கள் செல்லும் கூபகப் பின்னல் ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க பருமனுடையது. கூபகத் துள் இது உட்புடைதாங்கி நாடியின் நடு சார் பக்கமாகச் சென்று நேர் குடலினதும் கருப்பைக் கழுத்து யோனியுயர்ப்பகுதி ஆகிய வற்றின் பக்கங்களிலும் உள்ள கலவவிழையத்துள் கிடக்கும். இப் பின்னல் ஒவ்வொன்றுடனும் திருப்பகுதி பரிவுக் காம்பின் உயர் ஒன்று அல்லது இரண்டு திரளியன்களிலிருந்து வரும் கிளைகள் 2ஆம் திரு நரம்பினதும் 3 ஆம் திருநரம்பினதும் அல்லது 3ஆம் திருநரம்பி னது 4ஆம் திருநரம்பினது முற்பக்க முதலாய பிரிவுகளி லிருந்து வரும் பரப்பரிவு நார்களும் இப்பின்னலுடன் சேரும். இவை சேரும் சந்திகளில் சிறு திரளியன்கள் உள. இந்தப் பரப் பரிவு நார்களைக் கூபக உடலக நரம்புகள் அல்லது நிமிர்த்து நார்கள் என்பர். இவை பரிவு நரம்புக் கோர்வையுட் செல்லாது நேராகப் பின்னலுக்குச் செல்லும். இந்தப் பின்னல் ஒவ்வொன்றிலிருந்தும் பரிவு, பரப்பரிவு நார்கள் கொண்ட பின்னல்கள், உள்புடைதாங்கி நாடியின் ஒவ்வொரு கிளையுடனும் இந்நாடி வழங்கும் உறுப்புக்குச் செல்லும். இவை கருப்பை, யோனி, தலைவாயில், ஊறுநீர்ப்பை ஆகியனவாம். இவற்றின் முக்கிய கிளைகள் கருப்பைக்கு வழங்கப் படும். தசைக்குருதிக் கலன்களை யடைய முன்னம், நரம்பு நார்க ளாவன இரு வரையறுக்கப்பட்ட தொகுதித் திரளியன்களுட் புகும். இத் திரளியன்கள் கருப்பையின் மேற்பரப்பிலும், கழுத்துத் தசைச் சுவருள்ளும் கிடக்கும். சிலர் உதரக் கீழ்ப் பின்னலை உயர், நடு, கீழ் என வகைப்படுத்துவர். முன் திருநரம்பும் உயர் பின்னல் தொகுதியைச் சேர்ந்தது. 5ஆம் நாரிய என்பு முன் கிடக்கும், நடுத் தொகுதி திருமுனையின் மேல் கிடக்கும். நேர்குடலுக்குப் பக்கமாக இருக்கும் கூபகப் பின் னல் கீழான வகுப்பைச் சேர்ந்த தாம். இது ஒரு தேவையற்ற பிரிப்பாகும். முன் திருநரம்பு எனப் பெயரிடுவதும் ஒரு தவருண பெயரீடாம். இது நரம்பும் இல்லை; திருவென்புக்கும் முன்பாகவும் இல்லை.
சூலகம் : இது சூலகக் குருதிக்கலன்களை அணைந்து செல்லும் பின்னல்களிலிருந்து நரம்பு வழங்கல் பெறும். இப் பின்னல் குலக நாடி ஊற்றெடுக்கும் இடத்திலுள்ள சூலகத் திரளியனில் இருந்து நார் களைப் பெறும் வயிற்றுக் குழிப் பின்னலுடனும் ஊறுநீரிப் பின்னலுடனும் தொடர்புடையது.

Page 45
68 இளம் பெண் நோயியல்
கருப்பைக் குழாய்கள் முக்கிய நரம்பு வழங்கல் தசைச் சு வருக்கும் குருதிக் கலன்களுக்குமாம். சூலகப் பின்னலிலிருந்தும் கூபகப் பின்னலிலிருந்தும் கிளைகளைப் பெறும்.
கூபக அகவுறுப்புக்களுக்கு இந் நரம்புகளின் செயற்பாடு
பரிவு நார்கள் வழியாகக் கருப்பைத் தசைக்கும் கருப்பைக் குழாய்த் தசைக்கும் இயக்கக் கணத்தாக்கங்கள் செல்கின்றன. இந்நார்கள் கலனெடுக்கக் கணத்தாக்கங்களையும் காவும். நோவைத் தரும் தாக்கங்கள் கருப்பையிலிருந்தும் கருப்பைக் கழுத்திலிருந்தும் பரிவு நரம்புகளால் காவப்படும். சில்ர் பரப்பரிவு நார்கள் இனப் பெருக்க உறுப்புக்களுக்கு இன்னமும் காட்டப்படவில்லையென க் கருதுகின்றனர். இவை பரிவு நார்களுடனும் சேர்ந்து செல்லும். உணரவேண்டியது யாதெனில் கருப்பைக்குத் தன்னியல்பில் சுருங்கும் பான் மையுண்டு என்பதேயாம் ; பேறல் விளைவிலும் நரம்பகற்றலுற்ற விலங்குகளிலும் பரப்பிழைவு நோயுற்றவர்களிலும் தன்னியல்பில் சுருக்கம் நிகழும். கீழ் உதரப் பின்னலைக் கருப்பை நோய் நிலைமை களிலும், சில நோய் நிலைமைகளிலும் தன்னுல் இயங்கி ஊறுநீர் வெளிஏகும் நிலைமையை உண்டாக்குவதற்கு வெட்டுவர்.
குறிப்பு :- ஒர் ஐரோப்பியப் பெண் நரை மைய அழற்சி (போலியோ) நோயால் வருந்தினர். இவளின் முதுகுத் தசைகளும் இரு கால்களும் பிழைவுற்றன. ஆணுல் அவளின் கருப்பம் ஒருவித தடையின்றி நிறைமாதமடைந்தது. ஒருவித இட ரில்லாது தன்னியல்பில் ஒரு 8 இருத்தல் குழந்தையை அவள் பெற்ருள்.
 

இயல் 5
முளையவியலும் பெண்ணின் பிறப்புறுப்புக்களின் தழைப்பும் வளர்ச்சியும்
இதைப்பற்றி நன்கு அறிவதற்கு முளையங்களின் வரலாற்றுக் குறிப்புகள் உதவும். ஒரு கருக்கட்டுண்ட முட்டை ஏறத்தாழ 150 மி. யூ. விட்டமுடையது. இது கண்ணுக்குப் பிறிதொரு உதவி இல்லாமல் தென்படும். இது இரு புணரிகளின் சேர்க்கையால் உண் டாகிய ஒர் உயிராம். இத் தனிக்கலம் பெருக்கலும் வியர்த்தமு மடையும். இதன் நோக்கம் ஒரு புதுஆளை இறுதியில் உண்டுபண் ணுவதுமல்லாமல், அடுத்த சந்ததியை உண்டாக்குவதற்காகிய புணரிக் கலங்களை உண்டுபண்ணலுமாம். கருவுருவின் கருப்பையக வாழ் காலத்தில் அதற்குத் தேவையான மென்சவ்வுகளையும் ஏனைய சேர்மானப் பகுதிகளையும் உண்டாக்கும். ஒர் ஆளின் முளைப்பு, தழைப்பு, வளர்த்தி வரலாற்றை மூன்று பிரிவுகளாக வகுத்துக் கூறலாம். அவையாவன (i) முன் முளையக் கால வரலாறு, (i) முளையக்கால வரலாறு, (ii) கருவுருக் காலவரலாறு.
1. முன் முளையக் காலக்கூறு (2 கிழமைகள்) இக் காலத்தில் வளர்ந்து கொண்டுவரும் கருக்கட்டுண்ட சூல் (நுகம்) கருப்பை மியூக்கசு மென்சவ்வுள் நாட்டலுறும்.
2. முளையக் காலக்கூறில் மனித முளையம் ஒரு வரையறுக்கப் பட்ட மனித வடிவ நிலையை அடையாதபோதிலும் எல்லா உறுப் புக்களின் முதல் தோற்றவுருக்கள் உண்டாக்கப்பட்டு இருக்கும். இது நிகழ 2 கிழமைகள் மட்டிற் செல்லும்.
3. கருவுருக்காலக்கூறு-இப்போது மனித முளையம் சரியாக வரையறுக்கப்பட்ட மனித உருவத்தை அடையும். வளர்ச்சியும் வியர்த்தமும் பேறல் காலம் வரைக்கும் இதன் பின்னரும் இவை தொடர்ந்து நிகழும்.
கருவுருவின் தழைப்பு மலர்ச்சியில் இரு சிறப்பு வளர்த்தி நிகழ்ச்சிகள் காணப்படும்:
1. கலங்கள் பெருக்கமடையும்-தம்மைத் தாமே பெருக்கிக்
கொண்டு போகும். 2. கலங்கள் தணிவினைத்திறன் மாற்றங்களை அடைந்து பல்வேறு இழையங்களையும் உடலுறுப்புக்களின் முதல் தோற்றங்களை யும் உண்டாக்கும்.

Page 46
70 இளம் பெண் நோயியல்
முளையத்தின் அச்சுசார்ந்த கட்டமைவுகளின் தோற்றமானது ஆதி இரேகையின் இழையங்களில் குடியிருக்கும் இரசாயனக் கூட்டுக்களின் (அங்கவாக்கிகளின்) ஆதிக்கங்களினலாம் எனக் கருதப் படும். (ஆதி இரேகை முளையத்தட்டில் தோன்றும் ஒரு ஒளிபுக விடாப் பகுதி)
கருநுகத்திலிருந்து (கருக்கட்டுண்ட சூல்) பெறப்படும் கலங்களுள்
மிகுதியானவை, உடல் இழையங்களின் கலங்களாம் (மூர்த்தக் கலங்கள்). எஞ்சிய சிறு தொகையிலுள்ள கலங்கள் பெற்ருே ரின் சந்ததி மறை ஆற்றல்களை அடக்கியிருப்பனவாம். இவற்றை முத லான மூலவுயிர்க் கலங்கள் என்பர் (மூலவுயிர்க் கலமுதல்கள்). இந்த மூலவுயிர்க் கலமுதல்கள் தனிப்படுத்தப்பட்டுப் பின்னர் மூலவுயிர்க் கலங்களாக உருவாக்கம் அடையும். மிக மிக இளம் காலக்கூறில் கருவூண்டைச் சுவர்களிலிருந்து இவை குடிபெயர்ந்து முளையத்தின் உற்பத்திப் பீடத்தைச் சென்றடையும். இவ்விரு வகுப்பைச் சேர்ந்த கலங்களின் கட்டமைப்பு இயல்புகளைப் பொறுத்தமட்டில் ஒரே மாதிரி யானவை. ஒரே யெண்ணிக்கைத் தொகை நிறமூர்த்தங்களையும் (குரோமசோம்கள்) அடக்கியிருக்கும். அதாவது 22 சோடி தன் மூர்த்தங்களையும் (ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவை பொதுவாம்), ஒருசோடி பாலின மூர்த்தங்களையும் அடக்கி இருக்கும். ஒவ்வொரு மூலவுயிர் கல முதல்கள் பல சந்ததிகளைத் தோற்றும். இவை கொனடுகளில் (சனனிச் சுரப்பி) குடியிருப்புச் செய்யும்.
பெண்பாற் கலங்கள் (முட்டைச் சனனி) சூலகங்களிலும்
ஆண்பாற் கலங்கள் (பேம்சனணிகள்) தெசுத்திசுகளிலும்
(விதைகள்) வதியும்.
ஊறுநீரியுறுப்புக்களினதும் பிறப்புறுப்புக்களினதும் முளைப்பும் வளர்த்தியும், வளர்ச்சி மலர்ச்சியும்
ஊருேப் பிறப்பு உறுப்புக்களின் தொகுதிகள் ஆவன, இடைப்பட்ட இடையுரியிலிருந்து (இடைக்கலத் திணிவு) உண்டாகும். இதன் பரப்பை உடற்குழி மேலணி நுதிக்கும். 25 மி.மீ. நீள முளையத்தில் கழுத்துக்குக்கீழ்ப்பகுதியிலிருந்து உயர் நெஞ்சுப்பிரதேசம் வரைக்கும் (7-14 கடிகைகள்) ஒரு கலவத் திணிவாக வியர்த்தமடையும் (முற் கழிநீரகம்). இதில் 6-7 குறுக்குக்கிடையிலிருக்கும். இவற்றில் 6-7 புன்குழாய்களுண்டு. புன் குழாய்கள் ஒரு முடிவிடமாக உடற்குழிக் குள் வாய்விடும் (ஊறுநீரிக் கடிகைக் கான்கள்). இவற்றின் குருட்டு முடிவிடங்கள் வால் பக்கமாகத் திரும்பி ஒன்று மற்முென்றுடன் இணைந்து ஒரு நெடுங்கானை (முன் ஊறுநீரிக்கான்-முதலாம் கழிவுக் கான்) உருவாக்கும்.
 

முளையவியலும் பெண்ணின் . வளர்ச்சியும் 71
மனித முளையத்தில் இந்த முற்கழிவு நீரகம் செயலில் ஈடு படுவதில்லை எனக் கருதப்படும். இது விரைவில் ஒரு உறுப்பெச்ச மாகும். முதலாம் கழிவுக்கான் ஆனது மேற்பரப்பு மேலணிக்குச் சரிகிழாகக் கிடக்கும். வால்திக்கில் இது ஊரோப்பிறப்பி நாண் எனப்படும். இடையுரித் திணிவுள் வளர்ந்து கழியறையின் பக்கத்தை அடையும், இந்தக் கான் அழிப்புறுவதில்லை. முற் கழிவு நீரிக்கானுக்கு வால்பக்கமாக இருக்கும் இடைக்கலத் திணிவு (இடைப்பட்டையுரி) இந்தக் கானப் பயன்படுத்தும். நெஞ்சறைக் கடிகைகளிலும் நாரிக் கடிகைகளிலும் உள்ள இடைக்கலத் திணிவின் பகுதியானது முளைய வியல் முறையில் ஒரு தொழிற்படும் ஊறுநீரியை உருவாக்கும் (இடைக்கழி நீரகம்). இந்தக் கட்டமைவு பயன்படுத்தும் முற்கழி வுக் கானின் பகுதியானது இடைக்கழி நீரகக் காணுகிவிடும் (வூல் பியன் கான்). முற் கழிவு நீரகம் அல்லூட்டமடைய, இடைக்கழி நீரகக்கான் இடைக் கழி நீரகத்தின் பக் கற் பக்கத்தில் கிடக்கும். 6ஆம் கிழமை முடிவில் இடைக்கழிநீரகம் ஒரு நீண்ட ஊசியுருவான உறுப்பாய்ப் பக்கத்துக்கு ஒன்ரு கப் புறத்து நடு மடிப்புப் பக்கங்களில் கிடக்கும். விரைவில் இது அனுகழி நீரகத் தால் மாற்றீடு செய்யப்படும். இருபாலினரிலும் இடைகழி நீரிக் கானின் தலைப்பக்க முடிவிடம் அல்லூட்டமடைந்து மறைந்து போகும். 20 மி. மீ. முளையங்களில் இது முதல் மூன்று நாரிக் கடிகைகளில் மட்டும்தான் உண்டு. 26 புன்குழாய்களையும் உள்திரணை யன்களையும் அடக்கியிருக்கும். இவற்றில் தலைப்பக்கத்து 6-12 புன்குழாய்கள் பெண்களில் மேல்முட்டை தாங்கியை உருவாக்கும். வால் பக்கத்துப் புன்குழாய்கள் பரமுட்டை தாங்கியை உருவாக்கும். இடைகழி நீரகக்கான் பெண்களில் மேல்முட்டை தாங்கியின் கிடைக் காணுக அமையும். கழியறையிடத்தில் இது இடைக்கலத் திணிவை ஒரு பிரி சுவரால் புறப்பக்கப் பகுதியாகவும் வயிற்றுப்புறப் பகுதி யாகவும் பிரிக்கும் இடைகழி நீரகக் கான்கள் வயிற்றுப்புறப் பகுதிக் கழியறையில் முடிவடையும். கழியறையின் தலைப்பக்கப் பகுதி ஊறுநீர்ப்பையின் மிகுதியான பகுதியையும் அலந்தோயி யையும் உருவாக்கும் (ஊரோக்கசு), பெண்களில் வால்பக்கப் பகுதி ஊறுநீரி-பிறப்புக் குடா வை உண்டாக்கும்.
பிறப்புச் சுரப்பிகள் : வூல்பியன் முகட்டின் நடுசார் பகுதியில் உண்டாகும்.
அணுக்கழி நீரகம் அல்லது நிலையான ஊறுநீரி 5 மி. மீ நீள முளையத்தில் இடைக்கழி நீரகக்கானின் புறப்பக்க நடுசார் பக்கத்தில் கழியறைக்குள் முகத்துவாரம் வைக்குமிடத்தில் ஒரு முளைப்பு உண் டாகும். இதுதான் ஊறித்தரின் குழாய்க் கிளை யாகும். இது வளர்ந்து

Page 47
72 இளம் பெண் நோயியல்
ஊறித்தரையும், ஊறித்தரின் கூபகத்தையும் ஊறுநீரியின் திரட்டுக் குழாய்களையும் உருவாக்கும். பின்பு ஊறுநீரியை அடைந்து இணைப்புச் செய்யும்.
பிறப்பிச் சுரப்பிகள் -
ஆண்களிலும் பெண்களிலும், பிறப்பிச் சுரப்பிகள் உருவாகின்றன என்பதற்காகிய குறிப்பானது, ஐந்தாம் கிழமையளவில் இடைக்கழி நீரக முகட்டில் நடுசார் பகுதியில் ஒரு தடிப்புற்ற மேலணிப் பரப்பு தோற்றுவதேயாம். இவ்விடத்தில் மேலணி பல அடுக்குகளை உடையது. ஏனைய இடங்களில் ஒன்று அல்லது இரண்டு கலங்கள் தடிப்புடையன. இந்தத் தடிப்பு விரைவில் நெட்டாங்குத் திக்கில் பரவி முடிவில் ஏறத்தாழ முகட்டின் நடுசார் பரப்பை முற்ருக மூடும். தடிப்புற்ற மேலணி பெருக்கமடைந்து இடைக்கழி நீரகத் தைப் புறப்பக்கமாகவும் பக்கல் பக்கமாகவும் இடம் பெயர்த்து உடற் குழிக்குள் முளைக்கும்:
7ஆம் கிழமை வரைக்கும் இச்சுரப்பியை ஆண், பெண் எனப் பாலின வேறுபாடு செய்ய முடியாது, மேலணி பெருக்கமடைந்து பல கலவ நாண் களைக் கீழாகவிருக்கும் இடைக்கழி நீரக முகட்டின் இடையுரிக்குள் விடும். இந்த நாண் களில் பாலினக் கலங்கள் காணப் படும். பெண்ணில் இக்கலங்களிற் பல மேலணிப் பரப்பிலேயே தங்கியிருக்கும்.
பிறப்பி முகட்டை உருவாக்கும் இழையம் 6ஆம் நெஞ்சுக் கடிகையிலிருந்து 2ஆம் திருக்கடிகை வரைக்குமுண்டு. இம்முகட்டின் தலைப்பக்க முடிவிடமானது இதற்கு மிக அப்பாலாகி வாற்பக்கப் பிரதேயத்தில் மூலவுயிர் மேலணியைத் திட்டப்படுத்த முன்னம் அல்லூட்டமடையும். இந்த முகட்டின் 4 - ஆ/ நீளம் மட்டும்தான் நிலைபேருன சனனி (கொணுடு) யைத் தோற்றுவிக்கும். சனணி வளர்த்தியடைந்து ஒரு நடுமடிப்பால் (பெண்ணில் சூலக நடுமடிப்பு) இடைக்கழி நீரகத்தின் நடுசார் பக்கத்தில் தொங்கிக்கொண் டிருக்கும். பெண்ணில் பல பெரிய முதலான முட்டைக் குழியங்கள் மூலவுயிர் மேலணிக்குக் கீழாக விருத்தியடையும் சூலகத்தின் பஞ்சணையிற் காணப்படும். இவை கருவூண் பையின் அகவணியி லிருந்து, நடு மடிப்பின் அடிவேர் வழியாக விருத்தியடைந்து சூலகத் துக்குக் குடிபெயரும். முதலில் முதலான முட்டைக் குழியங்கள் தனிப்படுத்தப்பட்டிருக்கும். பின்னர் 5ஆம் கிழமை மட்டில் உடற் குழிமேலணியிலிருந்து பெறப்படும் சிறிய கலங்களால் சூழப்பெற் றிருக்கும். இவை முதலான புடகங்கள் ஆகும். குழந்தை பிறக்கும் பொழுது இது தனது முதலான முட்டைக் குழியத்தின் முழு நிறைவைப் பெறும்.

முளையவியலும் பெண்ணின் . வளர்ச்சியும் 73
பிறப்பிக்கான்கள் - பர இடைக்கழி நீரகக் (முல்றேறியக்) கான்கள்
இவை ஆரும்கிழமை மட்டில் உருவாகும். இடைக்கழி நீரக முகட்டின் புறப்பக்கப் பக்கல் (Lateral) பரப்பில் உடற்குழிவு மேலணியில் பக்கத்துக்கு ஒன்ரு க ஒர் அகழ் போன்ற ஒரு புற மறிப்பு உண்டாகும். இது முகட்டின் தலைப்பக்க முடிவிடத்திலாம். இம் மடிப்புகலங்களால் ஆகிய ஒரு மென்னுணுக வால்திக்குக்கு வளரும். இது நீண்டுகொண்டு செல்லும்பொழுது ஒரு விவரத்தையும் பெறும். இடைக்கழிநீரகம் முழு நீளத்துக்கும் இடைக் கழிநீரகக் கானின் பக்கல் பக்கத்தில் கிடக்கும். 8ஆம் கிழமை மட்டில் அது வால் திக்கு முடிவிடத்தையடையவும் அது நடுசார்ந்து மடிந்து இடைக் கழி நீரகக் கானுக்கு வயிற்றுப் பக்கமாக இதைக் கடந்து பிறப்பி நாணை யடையும். இவ்விடத்தில் இது எதிர்ப்பக்கத்து தனக்கு ஒத்த கானுடன் நெருங்கிய அண்மிப்புக் கொண்டு, வால்திக்கு நோக்கி வளைந்து செல்லும், 3ஆம் மாதம் மட்டில் இவ்விரு கான்களும் கழி யறையின் வயிற்றுப் பக்கப் பிரிவின் புறப்பக்கச்சுவரையடைந்து இடைக்கழி நீரகங்களுக்கிடையில் குருடாக முடிவடையும் அடையு மிடத்தில் (ஊரோப் பிறப்பிக் குடாவின் பிற்பக்கச்சுவர்) அவர்களின் குருட்டு முடிவிடங்கள் சேர்ந்து ஒரு மேட்டை உண்டாக்கும். இதை முல்லரின் சிறுமுகிழ் அல்லது மேம்படுதிட்டு என்பர். ஒவ்வொரு பர இடைக்கழி நீரகக் கானுக்கு ஒர் உயர் செங்குத்தான பாகமும், ஒர் இடையிட்ட கிடைக்கோட்டுப் பாகமும், ஒரு கீழான செங்குத் தான பாகமும் உண்டு. உயர் செங்குத்தான பகுதி கருப்பைக் குழா யாக மாறும். தொடக்க உடற்குழி மேலணியின் புறமறிப்பானது கருப்பைக் குழாயின் கூபகவாயாகும். மருவுகளாவன இடைக் கழி நீரகத்தின் தலைப்பக்க முடிவிடத்தின் சிதலத்தால் உண்டாகும் கட்டமைவுகளாகும். இரு கான்களின் கீழான செங்குத்தான வால் திக்குப் பகுதிகள் ஒருங்கி ஒன்ருகி கருப்பை யோனிக் குழாயாக மாறும். கிடைக்கோட்டுப்பாகங்கள் ஒருங்கி கருப்பையடிக் குழியை யும் கருப்பையுடலின் மிகுதியான பகுதியையும் தோற்றும்.
கருப்பை-யோனிக் கால்வா யின் வால்திக்கு முடிவிடமானது இதன் மேலணி நுதி பெருக்கமடைவதால் புழையடைப்புறும்.
இக்கலவப் பெருக்கமானது ஒரு மையமுடிவிடத்தையும் இரு பக்கல் யோனிக் குமிழ் களையும் உண்டாக்கும். இந்த திண்ம மேல ணித் திணிவுகள் வால்திக்கில் நீண்டு ஊரோப்பிறப்பிக்குடா யோனி யுடன் தொடுகை உறும் பரப்பை மிகைப்படுத்தி குடாவின் பிற்பக் கச்சுவரில் ஒரு வியப்பான முனைப்பை உண்டாக்கும். யோனி மிக விரைவாகத் தன் அயல் பகுதிகளிலும் பார்க்க வளரும், இதன்

Page 48
74 இளம் பெண் நோயியல்
முடிவிடம் பெருத்து ஊரோப்பிறப்பிக் குடாவை யிடம்பிடித்து இதைக் குறுகச் செய்யும். இந்த யோனியை உருவாக்கும் திண்ம கலவத்திணிவு பின்னர் காணுகித் தன் தலைப்பக்கமாகக் கருப்பை யோனிக் கால்வாயுடன் தொடர்புறும். சிறிது காலத்துக்கு யோனிக் குழியானது ஊரோப்பிறப்பிக் குடாவிலிருந்து ஒரு பிரீசுவரால் வேறு படுத்தப்படும். இப்பிரிசுவருக்கு இரு அடுக்குகள் உண்டு உள்அடுக்கு யோனிக்குழியிழையத்தின் படையாகும். வெளியடுக்கு ஊரோப் பிறப்பிக் குடாவின் சுவராகும். இப்பிரி சுவர் பின்னர் பிரிபட்டு ஒரு துளையை உண்டாக்கும். இக்கட்டமைவுதான் கன்னித் திரையாகும். ஊரோப்பிறப்பிக் குடாவின் வாற்பக்கப் பகுதியுள் ஊறித்தாரை யின் வாயும் யோனிவாயும் திறக்கும். இவ்விரு துவாரங்களுக்கும் வாற்பக்கமாக இருக்கும் குடாவின் பகுதியானது தலைவாயிலாகும். ஊரோப்பிறப்பி மென்சவ்வு பிரியவும், குடாவின் அப்பகுதியானது பிறப்புறுப்பு மடிப்புக்களாற் பக்கங்களில் எல்லைப்படுத்தப்பட்ட ஒரு பிளவால் வெளியே வாய்விடும்.
சூலகத்தின் இறக்கம்: பொது நிலைமைகளில் சூலகமானது கூபகக் குழியிலிருந்து வெளிவராத ஒர் உறுப்பாகும். சூலக நடுமடிப்பால் இடைக்கழியூறுநீரக மடிப்பின் நடுசார் பாகத்துடன் தொடுக்கப் பட்டிருக்கும். மேலும் இது வயிற்றுப் புறச்சுவருடன் கவட்டு மடிப் பால் தொடுக்கப்பட்டிருக்கும். இந்த மடிப்பில்தான் நார்-தசை இழையத்தாலாகிய ஆட்சிநாண் கிடக்கும். இது இடைக்கழி நீரக மடிப்பூடாகச் செல்லும்பொழுது கருப்பையின் கொம்புடன் பிறி தொரு தொடுப்பையும் செய்யும். இந்நாணின் உயர் பகுதி சூலக இணையமாகும். கீழான பகுதி உருண்டையிணையமாகும். இத் தொடுப்பால் சூலகம் நிலைப்படுத்தப்படும். முதலில் சூலகம் இடைக் கழி நீரகக் கானின் நடுசார் பக்கத்தில் தொடுபட்டிருக்கும். பின்னர் இடைக்கழிநீரக மடிப்புக்கள் ஒருங்கிணைந்து பிறப்புறுப்பு நாணை உருவாக்கும் விதத்தில் சூலகம் மூத்தோரில் கருப்பையகல் இணையத்தின் பிற்பக்க மடிப்புடன் தொடுக்கப்பட்டிருக்கும். இடைக் கழிநீரக இணையமும் முன்பின்னக நிலைக்குத்தாக மாறிய பின்பு கிடைக்கோடாக கருப்பையகலிணையத்தை உருவாக்கும். இதன் பரப்புக்களும் பக்கலாக இருந்த விதம் மாறி முன், பின் பக்கங்க ளாக மாறும். மடலுறைச் சாக்கானது கொப்பூழ் நாடி வழியால் புறப்பக்கச் சுவரிலிருந்து வயிற்றுப் புறச்சுவருக்குப் போக்குச் செய்யும்பொழுது இது இழக்கப்பட்ட ஒரு பரிவிரிய மடிப்பாகும். இது ஒரு குழிவையுண்டாக்கும். இந்தக் குழிவு ஆட்சிநாண் வழியாக நீள மாகச் சென்று கவட்டுக் கால்வாய்க்குள் முளைக்கும். இது மடலுறை முளையெனப்படும். ஆண்களில் விதையின் மடலுறையாக அமையும். பெண்களிலும் (ஆண்களிலும்) இது பெரும்பாலும் அழிப்பு ஒழிப்புறும். பெண்களில் நிலைத்திருப்பின் இதை நக்கின் கால்வாயென்பர். பிறக் கும் வேளையில் சூலகமும் கருப்பைக் குழாயும் பொய்க்கூபகம் மேல் கிடக்கும். கூபகம் பெருக்கவும் இவை கூபகத்துள் இறங்கும்.
 
 

முளையவியலும் பெண்ணின் . வளர்ச்சியும் 75
வெளிப் பிறப்புறுப்புக்கள்
இவை கழியறை மென்சவ்வுப் பிரதேயத்திலுருவாகும். தொடக்க வளர்ச்சி நிலைகளில் ஆணினதும் பெண்ணினதும் உறுப்புக்கள் ஒரே மாதிரியானவையாம். முதலில் இம் மென்சவ்வு ஏறத்தாழ வாலி லிருந்து கொப்பூழ் வரைக்கும் உடலின் வயிற்றுப் புறப்பக்கத்தில் பரவியிருக்கும். இதன் தலைப்பக்க முடிவிடத்தில் ஒரு சிறு முகிழ் உண்டு. இது பிறப்புறுப்புச் சிறுமுகிழ் எனப்படும். இதன் குயிலலகு முடிவிடத்தில் ஒரு குயிலலகுச் சிறு முகிழுமுண்டு. கழியறை மென் சவ்வானது ஊரோ-நேர்குடல் இடையுரிப் பிரிசுவரால் ஒரு குத மென்சவ்வுப் பகுதியாகவும் (இது குயிலலகுச் சிறு முகிழுக்கு முன் ணுகக் கிடக்கும்) ஊரோப் பிறப்புறுப்புப் பகுதியாகவும் வேறு படுத்தப்படும். இது ஊரோ-நேர்குடல் (குடல்) மென்சவ்வுப் பிறப் புறுப்புச் சிறு முகிழுக்கு இடையிலிருக்கும். இப் பிந்திய பகுதியில் முன்னுகப் பிறப்புறுப்புச் சிறுமுகிழ் இருக்கும். இவ்விரு மென்சவ்வுக ளும் விரைவில் பிரிந்து அற்றுப்போகும். குதவாய் முற்ருக ஒரு வட்ட வரையால் சூழப்படும். இது ஒரு புறத்து மேலணிக்கிடங்கின் தளத் தில் கிடக்கும் (இதைக் குதவழி யென்பர்). இது குதக் கால்வா யின் கீழ்ப்பகுதியை உருவாக்கும். ஊரோப் பிறப்பு மென்சவ்வுக்கு ஊரோப் பிறப்புறுப்புக் குடாவானது வெளியே ஒரு பிளவு போன்ற துவாரங்கொண்டு திறக்கும். இதுதான் ஆதி ஊரோப் பிறப்புறுப்புத் துவாரமாம். இதன் விளிம்புகள் உயர்த்தட்பட்டு பிறப்புறுப்பு மடிப் புக்களை உருவாக்கும், மேலும் ஒரு சோடி நிலைபேருண மடிப்புக்கள் (பிறப்புறுப்பு வீக்கங்கள்) பிறப்புறுப்பு மடிப்புக்களுக்குப் பக்கலாகத் தோற்றும். பிறப்புறுப்பு வீக்கங்கள் பேரிதழ்களை யுருவாக்கும் (ஆண்களில் கரோட்டத்தை விதைப்பை). பிறப்புறுப்பு மடிப்புக்கள் சிறிதழ்களை உருவாக்கும் (ஆண்களின் பீனத்தின் வயிற்றுப்புறப் பகுதியை) பிறப்புறுப்புச் சிறு முகிழ் கிளைத்துருவை உருவாக்கும் (ஆண்களின் பீனத்தை) கிளைத்துருவில் மிக இளம்படு நிலையில் முகைப்பகுதியானது ஒரு சூழ்ந்திருக்கும் சாலால் அடையாளம் காட்டப்படும்.
இவ் வீக்கங்களும் மடிப்புக்களும் பிற்பக்கமாக ஒருங்கி பிற் காலத்தில் குதவாயை வல்வ இடத்திலிருந்து பிரிக்கும். இவை முற்பக்கமாகப் பிறப்புறுப்புச் சிறு முகிழைச் சூழ்ந்து ஒருங்கும். இக் கட்டமைவுகள் வளர்ந்து வியர்த்தமடையும், பிறப்புறுப்புச் சிறுமுகிழ் கிளைத்துருவாகும். பிறப்புறுப்பு மடிப்புக்கள் சீறிதழ்களாக வும் கிளைத்துருவின் கடிவாளமாகவும் முற்தோலாகவும் மாறும். வெளிப் பிறப்புறுப்பு வீக்கங்கள் பேரிதழ்களையுருவாக்கும். இறுதியில் ஊரோ பிறப்புறுப்பு மென்சவ்வு மறையவும் தலைவாயில் புறத்து வெளியுடன் வல்வமூடாகத் தொடர்புறும். இது மூத்தோரின் நிலை பேருன நிலைமையாகும்,

Page 49
இயல் 6
பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல்
பெரும்பாலும் மனித இனத்தை ஆண்பாலினர் பெண் பாலின எனத் திட்டப்படுத்துவர். இதனுல் அறிவது ஆண் பாலின மனித ருக்கு ஆணின் தோற்றமைவுடன் விதைகள் (தெசுதிசுகள்) உண் டென்றும், பெண் பாலினருக்கு பெண்ணின் தோற்றமைவுடன் சூலகங்கள் உண்டென்றும் உணரப்படும். ஆனல் சிலரில் சனணிகள் (கோனுடுகள்) ஒரு பாலின எக்சு (X) வகுப்பைச் சேர்ந்தவை; ஆனல் இவர்களின் உடலின் தோற்றமைவும் பிறப்புச் சுவட்டின் கட்டமைப் பும் மற்றைய பாலின வகுப்பைச் சேர்ந்தவையாய் இருக்கும். மிகவும் அருமையாக ஒருவருக்கு தெசுதிசுவும் சூலகமும் உளதாகக் காணப் படும். இவ்வகையான ஒருவரைக் கண்டுள்ளேன். இவ்வகையினரின் கோனுடுகள் பெரும்பாலும் செயற்படுவதில்லை. வேறு பிறழ்வு நிலைமைகள் உண்டு. இவற்றில் கோனடுக் கழலையங்கள் பாலின வகை ஒமோன்களை மட்டுமீறிய அளவுகளிற் சுரந்து அரைகுறை ஆண் பெண் பாலின ஆக்கத்தைச் செய்யும். இவற்றைத் தவிர உளஇயல் முறைப்பு பாலினவகை நடத்தையில் நேர்மாறல் நிலை மைகள் நிகழக்கூடும். எனவே சிலரைப் பொறுத்தமட்டில் பாலினப் பாகுபடுத்துதல் ஒருவகையில் கடினமாகும்.
25-30 ஆண்டுகளுக்கு முன்னம் பாலினப் பகுப்பைப் பற்றிய விளக்கம் குறைவாக இருந்தது. அண்மைக் காலத்தில் இதைப் பற்றிய அறிவு பெருகி வருகின்றது. ஒரு வகையான தெளிவான விளக்கமும் பெறக் கூடியதாக இருக்கின்றது. இவ்விளைவுக்கு முக்கிய துணையாக இருந்தவை ஆய்வுகூட முறைகளில் புதுப் புதுத் திருத்தங் களும் பெண்ணுேயியல் மருத்துவர்களின் கூர்ந்த நோக்கல்களு மாகும்.
குறிப்பிடத்தக்க் ஒரு புதுத் திருப்பம் ஆனது கருவக் குருே மற் றின் (அல்லது பால் எக்சு) (X) உடலியின் புதுக் கண்டுபிடிப்பாகும் (1949), பிறிதொரு முக்கிய நிகழ்ச்சியானது மனிதக் கலங்களின் நிற மூர்த்தங்களின் பகுப்பாய்வு முறைகளில் திருத்தம் செய்த புது ஆய்வு முறைகளாகும். இந்த "பாறின் உடலிகள் அல்லது பாலினப் பகுப்புக் குருேமற்றின் உடலிகள், பெண்களின் மிகுதியான இழையங்களின் வெட்டு முகங்களின் கலவக் கருக்களின் சுற்றில் காணப்படும். கருவின் பாலினப்பகுப்பைக் குருதிப் படலங்களிலுள்ள பல்வடிவ வெண்குழியங்களிலிருந்து உறுதியிட முடியும். இவற்றின் கருக்களுக்கு ஒரு பொல்லுப் போன்ற தொடுப்புறுப்பு உண்டு. ஆணுல் குழியங்களின்
 
 
 

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் 77
கருத்தோற்றம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இல்லாதபடியால் வகைப்படுத்தல் அவ்வளவு இலகுவானதல்ல. கலங்களின் கருவக் குருே மற்றின் உடலிகளைப் படினம் செய்வதற்குப் பெரும்பாலும் உள்வாயின் சொக்ன்மியூக்கசு மென்சவ்விலிருந்தும் (30% கலன்களில் இவையுண்டு) யோனி மடலுறை மியூக்கசுவி லிருந்தும் (அவை 60% கலங்களிலுண்டு) பெற்ற சுறண்டல்களை அப்பல்களாக்கி தெரி பேறுகளைப் பெறுவர். இந்தப் பாலினப் பகுப்பு உடலிகள் கருவ மென் சவ்வுடன் நெருங்கியிருக்கும். சிறப்பாக இதன் இரண்டு குவிவான பரப்புக்கள் எக்சு (X) கருவின் மையத்தை நோக்கியிருக்கும் பார் உடலிகளின் எண்ணிக்கையானது கலத்திலுள்ள Xநிற மூர்த்தங்களின் எண்ணிக்கையிலிருந்தும் ஒன்று குறைவானதாகும். இதற்கு விதி விலக்குகளும் உண்டு. நாம் அறிவது யாதெனில் ஒரு X நிற மூர்த்தம் ஒவ்வொரு கலத்தின் அனுசேபச் செயற்பாட்டுக்கும் இன்றியமையாத தொன்று என்பதாம். ஆணுல் இதற்கும் மேலதிகமான X நிற மூர்த் தங்கள் சூலக வியர்த்த மாற்றங்களுக்கு இன்றியமையாததாயிருந்த போதிலும் இவை கலவச் செயற்பாட்டில் மேலும் தொடர்ந்து பங்கு எடுப்ப்தில்லை. இவை கலவச் செயற்பாட்டில் யாதுமொரு பங்கும் எடுக்காது இடை அவத்தைக் கலங்களின் கருவ மென்சவ்வுக்குக் கீழ் திரண்டு ஒடுங்கி ஒதுக்கமுற்றிருக்கும். எனவே பாலினக் குருே மற்றி ணுனது ஒரு தனி ஒடுக்கமுற்றதும் தடிப்புற்றதுமான X நிறமூர்த் தத்தைக் குறிக்கும், பெண்களில் ஏனைய X நிற மூர்த்தத்தினதும் தன் மூர்த்தங்களினதும் இடையவத்தை நிலையில் நிகழ் DNAஇன் தொகுப்புக் கால அளவையானது ஒரு X நிற மூர்த் தத்தின் இடை பவத்தை நிலையில் நிகழ் DNAத் தொகுப்பின் கால அளவுடன் ஒப் பிடும்பொழுது பிந்தியதிற்குச் சுணக்கம் உண்டாகும் என்பதை அறிய முடியும். இது காட்டுவது யாதெனில் இந்த இரண்டு X நிற மூர்த்தங்களும் இயல்பில் ஒரேமாதிரியானவையல்ல வென்றும் சுணங்கித் தொகுப்புறும் Xநிற மூர்த்தம்தான் ஒடுங்கி பாரின் (Bar)
உடலியை உருவாக்கும் என்பதுமேயாம்.
பாலினப் பகுப்பைக் காண்பதற்குக் கருவக் குருே மற்றினின் படினம்தான் முக்கிய உதவியாக இருக்கும். பாலின நிறமூர்த்தங் களின் தொகுப்பில் புதிர்கள் தோன்றின் இந்தக் கருவக் குருே மற் றினக் கொண்டுதான் ஒரளவுக்குப் பால் பகுப்பைத் திட்டப்படுத்த முடியும். படினம் செய்வதற்காகிய ஆய்வு முறைகளாவன இழை யத்தை வளர்ப்புச் செய்து கலங்களின் பிரிவின் அனு அவத்தையில் கொலிசீன் கொண்டு இழைய உருப்பிரிவைத் தடுத்து நிறுத்தியபின் கண்ணுடி ஆய்வுத் தகடுகளுக்கிடையில் இழையத்தை நசித்துக் கருக்களைப் பிரித்துப் பின்னர் சாயமூட்டலாம். கண்ணுடிக் குழாய்க் குள் வளர்ப்புச் செய்தாற்தான் வேண்டிய தொகைக் கலங்

Page 50
78 இளம் பெண் நோயியல்
களைப் பெற முடியும். கொலிசீன் ஆனது இழையக் கலப் பிரிவைத் தடுத்து நிறுத்தும். கலங்கள் பிரிவுறத் தொடங்கவும் மேலும் இவை தொடர்ந்து பிரிவுருது அனுஅவத்தையில் நிறுத்தப்படும். கொலசீன் சேர்த்து பல மணிநேரம் கழிந்த பின்புதான் கலங்களைப் பெற்று, பின்னர் அவற்றிற்குக் குறைதொனி உவரி நீர் சேர்க்கப் படும். இச்செயலால் நிற மூர்த்தங்கள் குலையும். இப்போது நுணுக்கு நோக்கியால் அவற்றைப் பகுப்பாய்வு செய்ய முடியும். அல்லது ஒளி நுணுக்கி இவற்றைப் பகுப்பு ஆய்வு செய்ய முடியும் இதன்பின் நிற மூர்த்தங்களின் பருமனைக் கொண்டு கருக்களை வகைப்படுத்தல் செய்யப்படும். ஒரு தொகுதிக் கலன்களின் நிறமூர்த்தங்களின் எண் ணிக்கையைக் கணக்கிட முடியும். மேலும் சில கலங்களின் கருவின் வகைகளை ஆய்வுகளால் திட்டப்படுத்த வேண்டும். இவ்வகையான பகுப்பாய்வுகளிற் சில குறைபாடுகள் உள. ஒடுக்கற்பிரிவு வேளையில் பகுப்பாய்வு செய்யின் மேலும் பல பிறழ்வுகளைக் காணலாம். நாம் செய்யும் இவ் ஆய்வு இழையவுருப் பிரிவுநிலை வேளையிலேயாம்.
உருவமுறையில் x நிறமூர்த்தத்தை ஆறு பன்னிரண்டு சோடித் தன்மூர்த்தங்களிலிருந்து வேறுபடுத்தவே முடியாது. இதற்கு மேலும் சான்றுகள் பெறவேண்டும். பாலின குருே மற்றினின் இட நிலையைப் பற்றி அறியவேண்டும். இதிலிருந்து X நிறமூர்த்தங்களின் எண்ணிக் கையைக் கணக்கிட முடியும் இவற்றைத் திட்டப்படுத்த வேறு ஆய்வு முறைகளுண்டு. Y நிறமூர்த்தமானது தன்மூர்த்தம் 21, 22இன் சோடிகளைப் போலிருக்கும். இது நுண்ணிய மயிர்களுடையதாயிருக் கும். இதன் உடன்பிறவி குருே மற்றிட்டுகள் (அரைநிற உருக்கள்), சமாந்தரமாகவும் நெருங்கியுமிருக்கும். சில சமயங்களில் ஒர் ஐயப் பாடில்லாதவிதத்தில் Y நிறமூர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அண்மையில் சில ஆய்வாளர் புளோர் ஒளிர்வு அக்கிறிடீன் மருந்துப் பொருளைப் பயன்படுத்தி பாரின் உடலியைக் காட்டியதுபோல் வளர்ப்புச் செய்யாக் கலங்களில், ஒரு புளோர் ஒளிர்வைக் காட்டும் Y நிறமூர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம் என்கின்றனர்.
பொதுவாகக் கூறின் பாலினப் பகுப்பு ஒரு இனத்தின் இருஉருவ உடைமையைத் தெரிவிக்கும். இது வெவ்வேறு மட்டத்தில், சன னிகள் (கொணுடு) பாலின பகுப்புக் கான்கள், புறத்துப் பிறப்புறுப் புக்கள், உடல் அமைப்பு, வழிவந்த பாலினவியல்புகள், நடத்தைகள், உளவியற் பாங்கு ஆயவற்ருற் குறித்துக் காட்டும். நிறமூர்த்தப் பாலினப் பகுப்பும் சனணிப்பாலின பகுப்பும் பெயர் ஈடுகளாலேயே விளக்கப்படும். தோற்றமைவுப் பாலினப் பகுப்பானது புறத்து இயல் #ಣಿ கொண்ட ஒருவரின் தோற்றப்பாட்டுப் பாலின வகையாம்
 

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல்
இடைப்பால் வகுப்பினர். இவர்களின் தோற்றப்பாடுகளுக்கிடையில் முரண் பாடுகள் உண்டு. அல்லது ஒருவரின் பாலின இயல்புகள் வறி தாக விருத்தி அடைந்திருந்தால் அவரின் பாலினப் பகுப்பைத் திட்டப் படுத்துவது வில்லங்கமாயிருக்கும். ஆனே, பெண்ணுேவென்ற ஐயப் பாடு உண்டு. கூட்டலாக X நிறமூர்த்தத்தையோ (XXX) அல்லது Y நிறமூர்த்தத்தையோ (YYY) கொண்டிருப்பவர் உண்மையில் இடைப்பாலின வகுப்பைச் சேர்ந்தவரல்லர்.
பொதுவாக நாம் கூறுவதுபோல், மனித குலம் வரையறுக்கப் பட்ட தனி ஆண் பாலினரையும் பெண் பாலினரையும் மட்டும் உடைய தல்ல. உயிரியல் முறையில் இது ஒரு நிறமாலையியல்புடையது. நிற மாலையின் ஒர் எல்லையில் மிக்க ஆணியல்புகளையும் மற்றைய எல்லையில் மிக்க பெண்ணியல்புகளையும் அடக்கியவர்கள் இருப்பர். இவ்விரு வகையினருக்கும் இடையில் நெருங்கிய முறையில், எஞ்சிய மக்கள் வகுப்பினர் இருப்பர். நிறமாலை"யின் இடைப்பரப்பில் உயிரியல் முறையில் ஆண் பெண் பாலின வகுப்பைச் சேராதவர் இருப்பர்.
மனிதனிற் காணப்படும் நிறமூர்த்தங்களின் செவ்வன் நிறைவு
நேமஉடற் கலங்கள் இருமடியமானவை. ஒவ்வொரு கலத்தின் நிறமூர்த்த எண்ணிக்கை 46 ஆம். இவற்றின் 22 சோடிகள் தன் மூர்த்தங்களாம். இவை பாலின நிறமூர்த்தங்கள் அற்றனவாம். ஒரு சோடியானது X, X அல்லது X நிறமூர்த்தமும் Y நிறமூர்த்தமும் (ஆணின் பாலினத்தை பொறுத்து) ஆகும்.
நிறமூர்த்தங்களுக்கு ஒரு குறித்த இரசாயனக் கட்டமைவுண்டு. இதுதான் இறுதியில் பிறப்புரிமைப் பரிபாடைச் சட்டமாக அமைக்கும். இதன் முக்கிய மூலக்கூறு DNA ஆகும். (தி. ஒ. இஅ). இம் மூலக்கூறுகள் மிக நீளிப்படையக்கூடியதும், இரு பக்கங் களிலும் தாங்கு சட்டங்களுடையதுமான நெடும் ‘ஏணி’ச் சுருள் அமைப்பை உருவாக்கும். நிறமூர்த்தத்தின் நீளத்திலும் பார்க்க இது மிக நீளிப்படையைக் கூடியது. இந்த DNA மூலக்கூறு சீனி யினதும் தி ஒட்சியிறைபோசு ஆகியவற்றின் பொசுபேற்று எசுற்றர் களாலும் ஆக்கம்பெற்ற இரு பக்கப் பட்டைகளுடையது. இந்தப் பக் கப் பட்டைகளுக்கிடையில் நான்கு நைதரசன் மூலகங்களாலாகிய குறுக்குக் கற்றைகள் (மிதிபடிகள்) உள. இந்நான்கு நைதரசன் மூலகங்களாவன-அடினின், குயானின், ஆகிய இரு புயூறீன்களும், சிசுற்ருேகின் தை மீன் ஆகிய இரு பிறிமிடீன்களுமாம். இம் மூலக் கூறுகளில் ஒவ்வொன்றும் தாங்கு பக்கச் சட்டங்களுக்கிடையில் அரைவாசித் தூரத்துக்குச் செல்லும். குரோமசோம் ஆனது பரம்

Page 51
8{} இளம் பெண் நோயியல்
பரை அலகுகளாலாகிய (ஜீன்) ஒரு நெடுங்கோட்டுக் கூட்டமை வாகும். ஒவ்வொரு பரம்பரையலகும் , DNA இரட்டைச் சங்கிலி நீளமாகத் தொடர்ந்து வரும் சோடி நியூக்கிளிய்ோற்றைட்டுக்களின் கூட்டமைவாகும் பரம்பரையலகை ஒரு ஏணிப் பகுதியாகக் கருதின், ஒவ்வொரு பகுதியும் 300 குறுக்குக் கம்பிகள் உடையதாயிருக் கும். ஒரு நிற மூர்த்தத்துக்கும் 15,000 அல்லது இதற்குக் கூடிய ஏணிப் பகுதிகள் (பரம்பரையலகுகள்) இருக்கக்கூடும். நாங்கள் இந்த நிறமூர்த்தங்களைக் காணமுடியும். ஆனல் ஒவ்வொரு நிற மூர்த்தத்திலுள்ள பரம்பரை யலகைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறப்புரிமைப் பரிபாடையின் கடத்துகைக்கு DNA மூலக் கூறிலிருந்து ஒரு இறைபோநியூகிளிக் கமில (RNA) க் கூறு உண்டாக்கப்பட்டு முதற் பிரசத்தின் இறைபோசோம் சிறுமணிகளுக்கு ஒரு வழிகாட்டுத் தட்டமாகக் கொண்டு செல்லப்படும். இவை நொதியங்களினதும் புரதத்தினதும் உருவாக்கத்தை முதற் பிரசத்திலிருந்து ஆக்கல் செய்யும்.
உடற்கலப் பிரிவில் அல்லது இழைய உருப்பிரிவில், நிறமூர்த்தங் கள் தம் நீளமாகப் பிளவுண்டு குருே மற்றீட்டுகளாகும். பிளவால் உருவாகிய இச்சோடியில் ஒன்று மகள்கலத்துக்குச் சென்று இரு மடிவ 46 நிறமூர்த்த எண்ணிக்கையைப் பேணல் செய்யும். இதற்கு வேண்டிய DNA ஆனது இடையவத்தை நிலையில் தொகுக்கப்படும். கருவில் இழையஉருப் பிரிவு நிகழப் போகின்றதென்ற முதல் அறிகுறி தோன்றும்பொழுது, இருமகள்கலன்களுக்கும் வேண்டிய DNA நிறை வில் இருக்கும். நிறமூர்த்தங்களை அனுஅவத்தைக் காலத்திற் படினம் செய்ய முடியும். இவ் அவத்தையில் இவை சுருங்கி ஒன்று மற்றென்றி லிருந்து புறம்பாக விருக்கும். இவை தம் முடிவிடங்களில் (அந்தலை களில்) ஏற்கனவே பிளவுற்று குருே மற்றிட்டுகள் ஆகிவிடும். இவை பின்னர் மகள்கலங்களுக்கு அசைந்து செல்லும். ஆனல் வருங்காலக் குருே மற்றிட்டுகள் மையப்பாத்தி இடத்தில் ஒன்ருகப் பற்றப்படும். இவை உயிர்க்கலத்தில் கலவக் கருவின் விட்டத்தின் தளத்தில் ஒழுங்கமைவுபெறும். பின்னர் முழுப் பிரிவுற்று குருே மற்றிட்டுக்க ளாகும். கலவக் கருவைப் பிரிக்கும்பொழுது (உடைக்கும்பொழுது) இவை மூடுகண்ணுடித் தகட்டிற் சிதறுண்டு கோலங்களே ஆக்கும். இவை அனுஅவத்தை நிறமூர்த்தங்களைக் காட்டும். இவற்றின் ஒளிப் படங்களிலிருந்து இவற்றை வெட்டியெடுத்துச் சோடிப்படுத்திக் குழியவியல் அறிஞர் ஒப்புக்கொண்ட முறையில் ஒழுங்காக்கம் செய்ய வேண்டும். தனி நிறமூர்த்தங்களைத் திட்டப்படுத்துவதற்காகிய முறைகளுண்டு. இவற்றுள் நிறமூர்த்தத்தின் முழு நீளவளவு மையப் ாத்தியிலிருந்து அளவிடப்பட்ட புயங்களின் தொடர்புசார் நீள |ளவு, துணைக்கருவின் பொருட்திணிவுகள், ஒடுக்கங்கள் ஆகியனவும்
 
 
 
 
 
 

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் 81
அடங்கும். இவ்வொடுக்கங்கள் சில தனிச் சிறப்பு நிறமூர்த்தங் களின் சில குறித்த இடங்களில் காணப்படுவனவாக அனுபவமுடைய ஆய்வாளர் கூறுவர். இவற்றை அவற்றின் பெருப்பத்தின் அளவைக் கொண்டும், மையப் பாத்தின் இடம் அமர்வைக் கொண்டும் 22 சோடி தன்மூர்த்தங்களாகத் தொகுப்பர். எனவே, இவ்வகையான ஒழுங்கமைவு செய்த தன்மூர்த்தங்கள் 7 தொகுப்புக்குள் அடங்கும். இவற்றை எழுத்துக்கள் A(1-3) B(4-5) C(6-12) X (எக்சு) உம், D(13–15) E(16–18.) F(19–20) G(21-22)g). Lb, Y g) lib egy6) III வற்றைக் கொண்டு குறிக்கப்படும். X நிறமூர்த்தமானது ஒரு நடுத் தரவளியான கீழ் அனு மையநிறமூர்த்தமாகும். (அதாவது மையப் பாத்தினது நடுவுக்கும் ஒரு அந்தலைக்குமிடையில் உண்டு.) இதை தன் மூர்த்தம் 6-12 சோடியிலிருந்து வேறுபடுத்தவே முடியாது. 'திரைத் தியம் குறியீடு பெற்ற தைமிடீனைக் கொண்டு செய்த ஆய்வுகள் தொகுப்பு 6-12இல் உள்ள சிறிய நிறமூர்த்தங்களில் ஒன்ரு க இருக்கக்கூடும். நிறமூர்த்தமானது அந்தலைக்குக் கிட்டவுள்ள மையப் பாத்துடைய சிறிய நிறமூர்த்தமாம். இது பருமனில் தன் மூர்த்தங்கள் 21-22 போன்றது. ஆனல் இதைப் பிழைபடாது திட் டப்படுத்த முடியும்
மூலவுயிர்க்கல முதிர்வு மாற்றங்கள்
அடுத்த சந்ததியில், இனத்துக்குரிய இருமடிய நிறமூர்த்த எண் ணிக்கையைப் பேணுவதற்கு நுகத்தை ஒன்றிய புணர்ச்சியால் உருவாக்கிய ஆண் புணரி, பெண் புணரி ஆகிய ஒவ்வொன்றும் நிறமூர்த்த எண்ணிக்கைத் தொகையில் அரைப்பாதி நிறமூர்த்தங் களை (ஒரு மடியம்) அடக்கப்பட்டிருக்க வேண்டியது முக்கியமாகும். இந் நிலைமை நிறமூர்த்தங்களின் ஒடுக்கற் பிரிவால் எய்தப்படும்.
முதலாம் முதிர்வுப் பிரிவின் ஒடுக்கற் பிரிவில்-ஒவ்வொரு சோடி நிறமூர்த்தத்தின் ஒரு முழு நிறமூர்த்தமானது (ஏலவே இது இழை யுருப் பிரிவின் அரைகுறை பிளவுபடலைக் காட்டும்) ஒவ்வொரு மகட்கலத்துள் செல்லும். எனவே இதற்கு ஆக 23 நிறமூர்த்தங்கள் மட்டும்தான் உள.
இரண்டாம் முதிர்வுப் படிநிலையில் நிறமூர்த்தங்கள் பிரிந்து வேறுபடல் முற்ருகும். ஒரு நிறமூர்த்தம் ஒவ்வொரு மகட்கலத்துட் சென்று ஒரு மடிய எண்ணிக்கையான 23ஐ நிலைக்கச் செய்யும். முதிர்வுற்ற புணரிகளுக்காகிய எல்லா DNAஉம் ஏற்கனவே கொடியின் கடைசி இரு மடியக் கலத்தில் ஒடுக் கற்பிரிவு தொட முன்பு தொகுக்கப்பட்டிருக்கும்.
6

Page 52
&2 இளம் பெண் நோயியல்
பேம்பிறப்புக் கலங்கள் (விந்து பிறப்புக்கலம்) - இவை குழந்தை பிறக்கும்பொழுதே விதைப் புன்குழாய்களில் உண்டு. இவை வாழ்க்கைக்காலம் முழுதும் நிலைபேருகவிருக்கும். மேலும் இவை இழையவுருப் பிரிவால் பலதரம் பிரிவுற்று இறுதியிற் கடைசி இரு மடிய நிலையை ஒடுக் கற்பிரிவு நிகழமுன்னம் அடையும். (முதலாம் பேம் குழியம்) முதலாம் பேம் குழிய நிலையிலிருந்து (இருமடியம்) இரண்டாம் பேம்குழிய நிலையை (ஒருமடிய) எய்தும்பொழுது இரண் டாம் பேம் குழியத்துள் ஒவ்வொரு சோடி நிறமூர்த்தங்களில் ஒன்று இதனுட் செல்லும். எனவே நிறமூர்த்தங்களின் எண்ணிக்கைத் தொகை ஒரு மடிய எண்ணுண 23ற்குக் குறைவுறும். (முதலாம் முதிர்வுப் பிரிவான ஒடுக்கற்பிரிவு) இதன் பின்னர் ஒவ்வொரு ஒரு மடிய இரண்டாம் பேம் குழியமானது இழையவுருப் பிரிவுற்றுப் பிள வுற்று இரு பேமற்றிட்டுக்களை (இரண்டாம் முதிர்வுப் பிரிவு) உரு வாக்கும். இவை மேலும் பிரிவுருது பேமுயிரிகளாக (புணரி) வளர்ந்து விதையின் புன்குழாய்க்களுள் விடுத்தலுறும்.
முட்டை யைப் பிறப்பித்தல்
பேம்பிறப்புக் கலத்துக்கு நிகழ்வது போலன்று, இதில் நிகழ்வது ஒரு பெண் இறுதியில் வைத்திருக்கக் கூடிய எல்லா முட்டைப்பிறப்புக் கலங்களையும் அவள் பிறக்கும்போதே அடக்கி வைத்திருப்பள் எனக் கருதப்படும். இவை முதல் 14 நாட்களுள் பிளவுற்று முதலாம் (இருமடிய) முட்டைக் குழியங்களை உருவாக் கும். பூப்புக் காலம் வரைக்கும் இந்த முதலாம் முட்டைக் குழியங்கள் தமக்கொத்த நீடிப்புற்ற சோடி நிறமூர்த்தங்களுடன் மிக நெருங்கி ஒட்டியிருக்கும். பூப்படைந்தபின்னர் ஒவ்வொரு மாத வட்டத்திலும் அவை கூட்டம் கூட்டமாக முதிர்வு மாற்றங் களை அடையும். இவற்றுள் ஒன்றும் வழமைபோல் இருந்திட்டொருக் கால் இரண்டும் முதலாம் முட்டைக் குழியங்கள் தொடக்கப் புடைப்பு ஆக்கப்படி நிலைகளை மட்டுமீறிச் சென்று பெருத்து சூலகத் தின் பரப்பில் முன்னதாக விம்மிச் சூலைவிடுதல் செய்யும். இரு முதிர்வுப் பிரிவுகள் இதற்கு நிகழும். முதலாம் பிரிவானது (ஒடுக் கற் பிரிவு) புடைப்பு உடையும் வேளையில்தான் நிகழும். இதனல் ஒருமடியக் கருக்களில் ஒன்றும் முதலாம் முனைவுடலியும் உருவாகும். இந்த ஒருமடிய இரண்டாம் முட்டைக் குழியமானது இரண்டாம் முதிர்வுப் பிரிவான ஒடுக்கமுழுப் பிரிவைப் (இழையவுருப்பிரிவை) பேமுயிரி சூலகத்துள் புகுந்தபின் நிகழ்த்துமெனக் கருதப்படும். இதன் விளைவாக ஒர் ஒருமடிசூலும், இரண்டாம் முனைவுடலியும் உருவா கும். தொகுத்துக் கூறின் அடிப்படைப் பாலின வேறுபடுத்தலானது
பரம்பரை அலகுகளால் நிறுவப்படும். இவ்வலகுகள் நிறமூர்த்தங் ன் காட்சிக்குத் தென்படாத பகுதிகளாம். மனிதரின் தோற்ற
 

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல்
அமைவை வரையறுக்கும் பரம்பரை அலகுகள் பாலின நிறமூர்த்தங் களில் இடம்பெறுவதும் அல்லாமல் தன் மூர்த்தங்களுள்ளும் சிந்தப் பட்டிருக்கும். கலங்களின் ஆய்வு எத்தனை X நிறமூர்த்தங்கள் இருக்கின்றனவென்பதைக் கூறும். செவ்வன் ஆண்களில் ஆக ஒரே யொரு X நிறமூர்த்தம் மட்டும்தான் உண்டு புணரிக் கலங்களின் உருவாக்கலில் சூல் (முட்டை) 22 தன் மூர்த்தங்களையும் ஒர் X மூர்த் தத்தையும் அடக்கியிருக்கும். இறுதியில் ஒவ்வொரு பேம் குழியத்தி லிருந்து தோற்றும் 4 பேமுயிரிகளுக்கு இரண்டுக்கு 22 தன் மூர்த்தங்க ளுடன் ஒரு X பாலின மூர்த்தமும் மற்றைய இரண்டுக்கு 22 தன்மூர்த் தங்களுடன் ஒரு Yபாலினமூர்த்தமுமுண்டு. இந்தப் புணரிக் கலங்களின் செவ்வன் அமைவானது முதலாம் முதிர்வுப் பிரிவு வேளையில் (ஒடுக்கற் பிரிவு) நிகழும். பாலின நிறமூர்த்தங்களின் செவ்வன் பிரிவுமுறையில் (மகட் கலங்கள் சமனண்ணிக்கையுடைய நிறமூர்த்தங்களைப் பெறும்) தங்கியிருக்கும். இப்பிரிவு முறையானது பிறழ்வுறின் செவ்வனற்ற பேமுயிரிகளும் (22XY: 22 - ) செவ்வனற்ற சூல்களும் (- 22XX, 22-) நிகழும். இவ்வித புணரிகளின் கலப்பால் சில குறித்த சாரக ஒருங்கோட்டிகள் நிகழக்கூடும். இந்தப் புணரிக்கலங்களைப் பொறுத்த மட்டில் எந்தக் கலம் நிறமூர்த்தங்களின் எந்தச் சோடியிலொன்றைப் பெறுமென்பது அதனின் நற் காலத்தைப் பொறுத்திருக்கும் (இது சூதாட்ட விளைவு போலாம்). எந்த இரு மூல உயிரிக் கலங்களின் முதிர்விலும் பின்னர் அவற்றின் கருக்கட்டற் கலப்பு விளைவிலும் நிறமூர்த்தங்கள் இருபது இலட்ச வகைக்கு மேலதிகமான வெவ்வேறு கூட்டிணைப்புகளை உறுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே தலை முறையுரிமையைப்பற்றிய நிறமூர்த்தக் கருதுகோளானது தனிப் பட்ட சிறப்பியல்புகளின் எண்ணிக்கை செய்யமுடியாத மாதிரிக ளுக்கு விளக்கம் தரக்கூடியதாக இருக்கின்றது.
கருவுருவின் பாலின வியர்த்தம்
கருவுருவின் பிறப்புரிமைப் பாலினப் பகுப்பானது, சிறப்பு முறை யில் பேமால்தான் அறுதியிடப்படும். சூல் முட்டையுடன் இது தொடர்புடையதல்ல. கருவுருவின் பாலின வியர்த்தமானது பிறப்புரி மைப் பாலின வகையுடன் ஒத்திருக்கும். ஆனல் சூழல் ஆதிக்கங்கள் ஒழுங்கற்ற வளர்த்திகளை உண்டாக்கும் தோற்ற அமைவுப் பாலின வகையானது, பிறப்புரிமைப்பாலின வகையுடன் ஒத்திராது.
தொடக்கத்தில் கரு உருவுக்கு தன் கலங்களின் நிறமூர்த்த நிறை வைத் தவிர்ந்த வேறு பாலின ச் சிறப்பியல்புகள் இல்லை. இளமைக் காலவேளையில் ஆதிச் சனனி (கொணுடு) யானது தூண்டிகளின் (எனப் படுவனவற்றின்) தாக்க விளைவாய் வளர்த்தி மலர்ச்சி அடைந்து

Page 53
84 இளம் பெண் நோயியல்
விதையை அல்லது ஒரு சூலகத்தை உருவாக்கும். சனனிப் பிறப் பைப் பொறுத்தமட்டில் ஆதிமூலவுயிர்க் கலங்கள் பிறப்புத்திட்டுக் குக் (வரை) குடிபெயர்ந்து அங்கு பெற்றுப் பெருக்கல் அடையும். இந்த ஆதிசனனிப் பகுதி பின்னர் ஒரு சுற்றயல் காரோ டாகவும் ஒரு மைய மத்திமையாகவும் பிரிக்கப்படும். பெண்ணில் காரோடு சூலகமாக மாறும். ஆணில் மத்திமையானது விதையாக மாறும் . காரோட்டின் ஆட்சி அல்லது மத்திமையின் ஆட்சி பிறப்புரிமை வகையில் தீர்மானிக்கப்படும். ஆனல் ஓமோன்களும் ஏனைய சூழற் காரணிகளும் இதனைப் பாதிக்கும்.
பிறப்புக் கான்கள் : ஆதிக் கருவுரு தன் பாலினத்தைப் பெற முன்பு, முல்லேறியாக் கான்களும் வூல்லியன் கான்களும் ஒரு சோடிக் கட்டமைவுகளாக நிலைக்கும். ஆதிச் சனணி ஒரு சூலகமாக மாறின் முல்லேறியன் கான்கள் கருக் குழாய்களையும் கருப்பையையும் யோனி மடலின் உயர் பகுதியையும் ஆக்கும். வூல்லியன் கான்கள் மறையும். ஆதிசனனி விதையாக மாறின் வூல்லியன் தான் தள் மேற்றிணிவையும் அகற்றுக்கான் , சீமன்புடகம் ஆகியவற்றையும் ஆக்கும். முல்லேறியன் கான்கள் அல்லூட்டம் அடையும்.
ஊருேப்பிறப்புக்குடாவானது ஆணினது அல்லது பெண்ணினது வெளிப் பிறப்புறுப்புக்களே உருவாக்கும். மனித இனப் பாலின வளர்ச்சித்தலைப்பில் பிறழ்வமைப்புகள் பாலின நிற மூர்த்தங்களின் மாற்றங்களாலும், ஒமோன் அல்லது சூழல் காரணங்களால் நிகழும் பாலின வியர்த்தப் பிறழ்வுகளாலும் தோன்றும்.
இவற்ருல் நிகழும் சாரக நோய் நிலைமைகள் பெண்ணுே யியல் மருத்துவனின் ஆலோசனைக்கும் கவனிப்புக்கும் கொண்டு வரப்படும். அல்லாமலும் பிள்ளை வளக் குறை நிலைமைகளுக்கு இவற் றில் சில (ஆண்களினதும் பெண் களினதும்) ஏதுவாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் ஒருவரை ஆணுே, பெண்ணுே என்று திட்டப்படுத்து வதற்குக் கொண்டுவருவர். எல்லாவற்றிற்கும் நிறமூர்த்தங்களைப் படினம் செய்தல் பயனுடையதாக இருக்கும்.
பின்னர் நிகழ் பாலின வியர்த்தம்: தொடக்கத்தில் முளையத்துக்குத் தன் கலங்களின் நிறமூர்த்தக் கொள்ளீட்டைத் தவிர்ந்த ஏனைய இயல்புகளில் பாலின வேறுபாடுகள் இல்லையென்றும் பின்னர் "தூண்டி களால் விதையும் சூலகமும் உருவாகின்றதென்றும் விதையும் சூலக மும் தம் மூலவுயிர்க் கலங்களைப் பொறுத்தமட்டில் வேருனவை என்றும் கூறினுேம், தெசுதிசுவின் (விதை) மூலவுயிர்க் கலன்களின் நிறமூர்த்தக் கட்டமைவு XYஆம். இவை பேமுயுரிகளை (XY) உரு வாக்கும், சூலக மூலவுயிர்களின் கட்டமைவு (XX)ஆம். இவை X,X

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் 35
சூல்களை (முட்டைகளை) உருவாக்கும். மேலும் கூறின் இவ்விரு உறுப்புக்களும் பித்துயிர்த்தறிச் சுரப்பிச் சனனிவளர்த்தி ஓமோன் களின் தூண்டலுக்குச் சுரக்கும் : அகச் சுரத்தல்களைப் பொறுத்த மட்டில் வேறுபடும். விதையும் சூலகமும் முறையே ஈத்திரசனையும் அந்(ஆண்)திரசனையும் சுரந்தபோதும் ஆணில் அந்திரசனின் சுரத்தல் மேம்பட்ட காரணத்தினுலும் பெண்ணில் ஈத்திரசனினதும் புருே செசுற்றெணுேனினதும் சுரத்தல் மேம்பட்டிருப்பதினுலும் இச்சுரத்தல் ஓமோன்கள் அவ்வப் பாலினரில் அவர்களுக்குரிய சிறப்பு வியர்த்த மாற்றங்களை உண்டாக்கும்
பெண் உடற் கலம்
A. ്. N.
நுகம் A விந்து ഗ് ஆண் உடற்கலம் ()
a
பெண் XX
வரைபடம் 8
பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் X நிறமூர்த்தம் பெண் Y நிறமூர்த்தம் ஆண்
தொடக்க காலத்தில் இருவகை உருேப்பிறப்பிக் கான்கள் (வூல்லியன், முல்லேறியன்) உருவாகியனவென்றும். பின்னர் அவ்வப் பாலின ஒமோன்களின் ஆதிக்கத்தால் அவற்றிற்கு ஒத்தவொன்று, வியர்த்தமடைகின்றதென்றும் மற்றையது அல்லூட்டம் அடைகின்ற தென்றும் கூறினுேம். இதே சனணி ஒமோன்களின் ஆதிக்கத்தினுல் புறத்து வெளியுறுப்புக்கள் அவ்வப் பாலினத்துக்கு ஒத்த முறையில் தழைப்பு வளர்ச்சியடைந்து வெளிப்பிறப்புறுப்புக்களை உருவாக்கும் எனவும் கூறினுேம். இதன் பின் சூலகங்களும் விதைகளும் தொடர்ந்து சனணி ஒமோன்களால் தூண்டப்பட்டு வளர்த்தி அடைவதுமல்லாமல் அவை முறையே சுரக்கும் ஈத்திரசன், புருே செசற்றெருேன் , தெசுத்தொத்தரோன் ஆகிய ஒமோன்களின் துணை உதவியால்

Page 54
86 இளம் பெண் நோயியல்
இரண்டாம் பாலின இ ய ல் புக ளு ம், மூலவுயிர்க்கலன்களின் தழைப்பும் வளர்த்தியும் நிகழ்ந்து, சூல்களும் பேம் குழியங்களும் உருவாகும். மனிதரில் பெண் கட்ட  ைம  ைவ ப் பொறுத்த மட்டில் தொடக்கத்தில் அது ஏறத்தாழ ஒரு நடுநிலைமைக் கட் டமைவை ஒக்கும். அதாவது ஒர் இரண்டாம் பாலின ஒமோன் அல்லது 'வியர்த்தம் செய்யும் பாலின ஒமோன் இல்லாவிடினும் அல்லது பாலின சனணி தழைத்து வளர்ச்சியடையாவிடினும் ஒரு வரின் பாலினத்தோற்ற அமைவு, பெண்ணினது போன்று நிலைக்கும். எனவே ஆண் வகைத் தழைப்புக்கும் வளர்த்திக்கும், இவ்வழியை ஊக்குவிப்பதற்கு ஒர் ஆதிக்கம் தேவையாகும். இது முரணிக்கப் படின் அல்லது போதாதாகில் நிறைவடையா. ஆணுக்கம் உண்டா கும். பெண்முளையங்களுக்கு இவ்வகையான ஊக்குவிப்புத் தேவை யில்லை. ஆனல் ஒரு நிறைவடையா ஆணுக்கத்தை ஒரு ஆணுக்க ஆதிக்கம் செயற்படின் அது ஒரு நிறைவடையா ஆண் கோலத்தை நிறைவடையச் செய்யக்கூடும். ஆணுல் பெண்குழந்தையில் மேலும் தொடர்ந்து பிறப்புச் சுவட்டுக்குத் தழைப்பும் வளர்த்தியும் பாலின வியர்த்தமும் நிகழ்வதற்கு உடலும், முலைபோன்ற அதன் மற்றைய உறுப்புக்களும் வளர்ந்து ஒரு பூப்புப் பருவக்கட்டை அடைவதற்குச் சூலகங்கள் செவ்வனே தொழிற்பட்டுச் செவ்வன் அகச்சுரத்தல்களைச் சுரக்கவேண்டும். முல்லேறியத் தொகுதியோ அல்லது வூல்வியன் தொகுதியோ முலைச்சுரப்பிகளோ சிறப்புக் கோல அமைவுத் தழைப்புறின் பாலின ஒமோன்கள் சிறிய மாற்றங் களைச் செய்யும் (பெண்ணில் அந்திரசன்கள் கிளைத்துருவைப் பெருப் பிக்கும். ஆணின் ஈத்திரசன்கள் முலைகளைப் பெரிதாக்கம் செய்து சுரக்கவும் செய்யக்கூடும்). பாலின தெரோயிட்டு ஒமோன்கள் வினையச் செயற்பாட்டைத் தூண்டுவதுமட்டுமல்லாமல் உடற்கட்டை மாற்றது. இவை பாலினப் பகுப்புச் செய்வதில்லையாம்.
ஒருவரின் பாலின உளவியற் பாங்கும் நடத்தையின் கோலமும் ஒரளவுக்குப் பாலின ஒமோன்களின் சம நிலையைப் பொறுத்திருக்கும். சமூகப் பழக்க வழக்கங்கள் வளர்ப்பு ஆகியன உளப்பாங்கை ஆளுகை செய்யக்கூடும். முடித்துக்கூறின் பிறழ்வான பாலின ஆண் பெண் நடத்தையானது பெரும்பாலும் உள்ளத்தின் முதிர்வு குறைநிலைக் குழப்பத்தாலுண்டாகின்றது; அல்லாமலும் கட்டமைவு அல்லது ஒமோன்கள் அல்லது பிறப்புரிமைக் குழப்பங்களாலல்ல எனக் கூறலாம்.
எனவே, ஒரு செவ்வன் பொருத்தமான நிறமூர்த்தமும் சனணிப்
பாலின வகைக் கூட்டமைவும் நிலைப்பின் ஆக இரண்டு அடிப்படை வகை இடைப்பாலினர் உருவாகுவர்:

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல்
1. நிறமூர்த்த ஆண் சளுக்கும் சனனிவகை ஆண்களுக்கும்
முகிழ்ந்த (முற்ரு காத) ஆணுக்கல், 2. பெண்களில் அரைகுறை ஆணுக்கல் ஆகியனவாம்.
மனிதரின் அடிப்படைப் பாலினம் பெண்பாலாகும். கருவுரு விதைகள் அந்திரசன் களைச் சுரக்கவும் ஆணின் புறத்துத்தோற்ற அமைவையும் உண்டாக்கும். விதைகள் தம் வளர்த்தியில் வழுவக் கூடும். வழுவல் நிகழும், படிநிலையைப் பொறுத்து ஆணுக்கல் மாற்றங்களின் அளவும் எய்தப்படும்.
எனவே, பிறழ்வு நிலை செயற்படும் தழைப்பு மட்டத்தைப் பொறுத்து, இடைப்பாலினரை வகைப்படுத்தலாம். இவை:
(1) நிறமூர்த்த (2) சனணி (3) நிறமூர்த்தப் பெண்களிலும் சனனிவகைப் பெண்களிலும் அரைகுறை ஆணுக்கல் (4) நிறமூர்த்த ஆண்களிலும் சனனிவகை ஆண்களிலும் முகிழ்ந்த ஆணுக்கல் என்பனவாம்.
நிறமூர்த்த இடைப்பாலினரும் பாலின நிறமூர்த்த பிறழ்வுகளும்
தேணரின் ஒருங்கோட்டி இடைப்பாலின நிலைமை யைப் பற்றி நன்கு அறியப்பட்ட ஒருங்கோட்டி இதுவேயாகும் ஆணுல் பல அறிஞர்கள் இவ்வுடல் நிலைமையைப் பற்றிப் பலவிதமான கருத்துக் களைத் தெரிவித்திருக்கின்றனர். 1938இல் தேணர் கூறிய நிலைமை இதுவேயாகும். இதனுல் பெண்கள் பாதிக்கப்படுவர். இவர்களின் பாலின வளர்ச்சியில் குழந்தைப்பிள்ளை நிலைமையும், உடல்வளர்த்திக் குறைவும், இருபக்க முழங்கைகளில் உள் வளைவும், கழுத்தில் தோல் படலமும் காணப்படும். 1944இல் இவ்வகையானவர்களில் சூலகங் கள் இல்லையென்றும், இவர்கள் நீண்ட மெல்லிய கீலம் போலான சனணிகள் உடையவரென்றும் தெரிவிக்கப்பட்டது. (சனணியின் அல்பிறப்பு, பிறப்பிடர்கள், அல்வளர்ச்சி) பின்னர் இவ்வகைத் தோற்றங்களைத் தேணர் ஒருங்கோட்டியில்லாதவர்களிலும் கண் டனர். இவ்வகையானவர்களில் மேலும் வேறு அடையாளக் குறிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆண்களிலும் இவ்வொருங்கோட்டி தோன்றக் கூடுமெனத் தெரிவிக்கப்பட்டது. இவர் களின் சனணி உறுப்பானது முற்முக இல்லாத நிலையிலிருந்து, செவ்வன் விதைகள் வரைக்கும் விதைகள் காணப்படும்.
1966இல் யோன் சுவும் ஏனையோரும் தேனர் ஒருங்கோட்டிக்கு ஒர் இலக்கணம் வகுத்தனர். பாதிக்கப்பட்டவர் பெண்கள், (நீள்

Page 55
இளம் பெண் நோயியல்
கோட்டு சனனிகளினுல்தான்). இவர்கள் குழந்தைப்பருவக் கட் டமைவு உடையவர்கள். வளர்ச்சி தடைப்பட்டிருக்கும். கூட்டலாக வேறு உடல்தோற்ற அமைவுகள் இருக்கும். செவ்வன் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே பாலின தழைப்புடைய எவராகிலும், தேன ரின் ஒருங்கோட்டிக் குறிகளைக் காட்டின், இவர்களைத் தேணரின் தோற்றமைவாளர் எனக் குறிப்பிடவேண்டுமெனத் தெரிவிக்கப் பட்டது. தேனர் ஒருங்கோட்டிப் பெண்களை நிறமூர்த்தப் பகுப்பு, ஆய்வு செய்யின் மிகுதியானுேருக்கு எல்லாக் கலங்களிலும் 45XO நிறைவும் அல்லது 46XXP அல்லது 46XXq நிறைவும் உண்டு. P நிற மூர்த்தத்தின் குறள் புயம் q நிறமூர்த்தத்தின் நீள்புயம் (Lசமநிறமூர்த் தம் நெட்டாங்கிப் பிளவுருது குறுக்காகப் பிளவுண்டு ஒரு நீள் புயத்து சமநிறமூர்த்தத்தையும் ஒரு குறள் புயத்து சமநிற மூர்த்தத்தையும் ஆக்கும்.) இவற்றின் இழப்பால் இவற்றிற்கு மாற்ருக மேற்கூறப் பட்ட கலக்கொடியுடைய சித்திரக்கல அமைவை உண்டாக்கும். பிறழ்வான கலக் கொடியானது சனனியற்ற இழையத்தைப் பாதிப் பின், சனணியானது, பிறப்பு உறுப்புக்களில் இடர்களில்லாது தேனர் அடையாளக் குறிகளை மட்டும் தோற்றும். இக்கல அமைவு வெவ்வேறு கருவகைகளின் கூட்டுக்கலங்களை அல்லது இரண்டிற்குக் கூடிய கலக் கொடிகளையுடைய கட்டமைவு உடையவரெனக் குறிக் கும். (சித்திரவடிவு) நுகத்தின் பிளவுப் பிரிவுகளில் கலப்பிரிவு பிறழ் வானபடியால் மகட்கலங்கள் சமனற்ற எண்ணிக்கையுடைய நிற மூர்த்தங்களைப் பெறும். (ஒன்று குறையெண்ணிக்கை உடைய நிற மூர்த்தங்களை உடையது).
பிறழ்வான X நிறமூர்த்தங்களின் படினம் தெரிவிப்பது யாதெனின் பிறப்புரிமையலகுகள் (ஜின்கள்) நீள்புயம், குறள் புயம் ஆய இரண்டிலுமுண்டு என்பதாம். இவை செயற்படும் சூலகத்தின் தழைப்புக்குத் தேவையானவையாம். 45Xo தேணர் ஒருங்கோட் டியில் அடிக்கடி தோன்றும் குறள் உயர்வும், ஏனைய பிறழ்வுகளும், 46XXP அல்லது 46XXq நிறைவுடையவர்களிற் காணப்படுவதில்லை. ஆகவே குறிப்பிட்ட இயல்புகளின் செவ்வன் தழைப்புக்குப் பொறுப் பான பிறப்புரிமையலகுகள் (ஜீன்கள்) X நிறமூர்த்தத்தின் குறள் புயத்திலிருக்க வேண்டும். செவ்வன் தழைப்பு நிகழ்வதற்கு 2X நிற மூர்த்தங்களின் குறள் புயங்களும் இருக்கவேண்டுமென்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
பேற்றுக்குப்பின் காணப்படும் தேணர் ஒருங்கோட்டியர் தோற்றும் பாரதூரமான வழமை மீறிய தோற்றங்களைக் கருதின், சில முளையங்கள் உயிருடன் வாழக்கூடிய இயல்புகள் அற்றனவாம். Xo நிறமூர்த்தமுடைய பல முளையங்கள் உயிருடன் வாழக்கூடிய
 
 

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் 8.9
بت به سه گی
660 JULI) : 9 தேணரின் ஒருங்கோட்டி

Page 56
90 இளம் பெண் நோயியல் -
பருவம் அடைய முன்னம் இறந்து போகின்றன எனச் சான்றுகள் தெரிவிக்கப்பட்டன. இவை உயிர் தப்பின் தேணர் ஒருங்கோட்டிக ளாக வரக்கூடியவை. மேலும் நிறமூர்த்தப் பிறழ்வுகள் (45X) தன் னியல்பில் நிகழ் கருச்சிதைவுகளில் செயற்கைத் தூண்டலால் உண் டா க்கப்பட்ட கருச் சிதைவுகளிலும் பார்க்க 10 மடங்கு கூடவாம். எனவே நிறமூர்த்தப் பிறழ்வுகள் கருச்சிதைவை உண்டாக்கும். சிறப்பாக 45Xo நிறை அமைவு நிறமூர்த்தங்களுடைய முளையங்கள், சித்திர வடிவ நிறமுர்த்தப் பிறழ்வுகளுடைய முளையங்கள் ஆகியன உயிருடன் தப்பி வாழ்ந்து தேனர் ஒருங்கோட்டிகளாகக் கூடியவை யாகும்.
குறள் உயர்வுதான் தேணர் ஒருங்கோட்டியின் மிகச் சிறப்பான குறியாம். இதற்கு ஒருவிலக்கு XXqi நிறைவுடைய நிறமூர்த்தங் éᎦ5ᎧiᎢ ᎱᎸ ᎥᏝ0 .
இந்த ஒருங்கோட்டியில் அல்மாத இரிவுடனும் இரண்டாம் பாலின இயல்புகளின் குறைவுத் தழைப்புடனும் நீள்கோட்டுக் கீலச் சனனி கள் சேர்ந்து காணப்படும். கழுத்துத் தோற்படலமும், பணியக் கிடப்பதுமான தலைமயிர் எல்லையோரமும் பொதுவாகக் கானப் படும். புனிற்றுப் பிறப்புக்களில் பக்க அந்த லை உறுப்புக்கள் நினைய எழுமியால் பாதிக்கப்பட்டனவாயிருப்பின் அவை தேணர் ஒருங் கோட்டியா குமோ என்ற பயத்தையும் உண்டாக்கும். நீள்கோட்டுக் கீலச் சனணிகள் பொதுவாக நாரிழையத்தை அடக்கியிருக்கும். இருந்திட்டொருக்கால் சிலரில் தீட்டுந் தோன்றும். தேனர் ஒருங் கோட்டி தோற்றும். உடற்குறள்மைக்குரிய காரணம் இன்னமும் ஒரு மறைபொருளாம். வளர்ச்சிசெய் ஒமோன் குறைவும் காணப் படுவதில்லை. சூலக இடர் பிறப்பு அமைவுகளில் வேறு பல்வகைத் தோற்றங்களும் உள.
கிளைன் பெல்ரர் ஒருங்கோட்டி (சீமன் காவிப் புன் குழாய் இடர்ப் பிறப்புகள்)
இவ்வகையான ஒருங்கோட்டிகள் அடிக்கடி குழந்தை வளமின் மைச் சாரகங்களுக்கு வருவர். 1000 ஆண் தோற்ற அமைவுப் பிறப் புக்களில் இரண்டு பிறவிகள் இவ்வொருங்கோட்டிகளாக இருப்ப ரென அறியப்படும்; உளப்பிறழ்வுகளால் வருந்தும் ஆண்கள் கூடிய தொகையில் இவ்வொருங்கோட்டிகளாக இருப்பர். இதன் சிறப்பியல் புகளாவன-ஆண் தோற்ற அமைவு ஆட்களில் அல் பேமுயா, பெண் முலையுயா அல்லூட்டத் தெசுத்திசுகள் (விதைகள்) ஆகியனவாம். இழையவியல் ஆய்வுகளில் விதைகள் புன்சீமன்காவிப் புன்குழாய்க ளின் சிதலமாற்றங்களைக் காட்டும். இலேடிக் கலங்களில் மிதமிஞ்சிய வளர்ச்சி உண்டு. இவற்றின் கருக்கள் குருே மற்றின் உடலிகள்
 

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் 9
உடையனவெனத் தெரியப்பட்டன. நிறமூர்த்த கருவகையீட்டில் இவற்றின் வழமையான நிறமூர்த்தக்கோலம் 47XXY என அறியப் பட்டது. சிலரில் நிறமூர்த்தப் பிறழ்வு காணப்படவில்லை. எனவே இதனை சீமன்புன்குழாய் இடரெனக் குறிப்பிடல் பொருத்தமானது. குருே மற்றின் உடலிகள் உடையவர், விதையழிப்புற்றவர் போலிருப் பர். பாத-பூப்பு மட்ட நீளம் மிகவும் நீளம்கூடியதாகும். இவர்களுக் குச் சிறிய விதைகளும் முன்னிலைச் சுரப்பிகளும், உடலிலும் முகத் திலும் மயிர் அடர்த்தி குறைவும் உண்டு. கொணுடோதுரோபின் கழிவும் உயர் மட்டத்திலாம். இவர்களின் மூளை விவேகம் குறை வானதாகும். சிலரின் குறிப்புகள்படி பிள்ளை வளத் தீர்வுச் சார கங் களுக்கு வரும் ஆண்களில் 1-27 ஆண்களுக்குச் சீமன் புன்குழாய்ச் சிதலமுண்டு எனக் கருதப்படும். இதனுல் அறியப்படுவது ஒவ்வொரு குருே மற்றின் உடலியுடைய ஆணுக்கும் பிள்ளை வளக் குறைவுண் டெனக் கருதப்படாது. XYIXXY ஆட்களில் சில XY கலங்கள் விதை அமைப்பில் ஈடுபடின், பேம் உண்டாக்கல் நிகழக்கூடும்.
ஊடறிதல்: சொக்கு நுதி சுரண்டற் படலங்களைக் குருே மற்றின் உடலிகளுக்குச் சோதித்துப் பாலினத்தைத் திட்டப்படுத்த முடியும். திட்டப்படுத்திய பின் தீர்வு செய்வது இயலாத செயலாம். பெரிய முலைகளை அறுவை வினைகளால் சிறுப்பிக்கலாம். பலர் செவ்வன் கலவிப் புணர்ச்சியில் ஈடுபடுபவராம். தாம் இடைப்பாலின வகுப் பைச் சேர்ந்தவரென அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் உண்மைநிலையை அவர்களுக்குத் தெரிவித்தல் நன்றன்று; இதனுல் ஒருவித பயனும் கிடைப்பதில்லை. இது அவரைத் துக்கவாழ்வில் அமிழ்த்திவிடக் கூடும். சுரப்பிகளில் சிறு பிறழ்வுண் டெனக் கூறல் நன்ருகும். ஏனெனில் இவ்வகையினரில் ஒரு சிறிய கண்டுபிடிக்க முடியாத XY கலக்கொடி இருக்கக்கூடும் என உணரவும். வேறு வகை நிறமூர்த்த இடைப்பாலின வகைகளும் உண்டு. இவை ஆண்க ளேயும் பெண்களையும் பாதிப்பன.
சனனி இடைப்பாலினர்
ஆமகடுமை : இந்நிலைமையில் ஒரே ஆளில் விதையிழையமும் சூழ கவிழையமும் உண்டு. இதை உண்மை ஆமகடுமை எனக் குறிப்பர். போலி ஆமகடுமை என்னும் ஒரு நிலையில்லை. இவர்களில் குலக இழையத்தினதும், விதையிழைத்தினதும் ஒழுங்கமைவு மிகவும் வேறுபட்டு இருக்கும். இதேவிதமாக, பிறப்பிக்கானினதும் புறத்து பிறப்பியுறுப்புக்களின் தழைப்பும் மிக வேறுபட்டிருக்கும். நிற மூர்த்த நிறைவு XXIXY இல்லையாம். மிகுதியானேருக்கு குருே மற்றின் உடலியுண்டு. சுற்றயல் குருதியின் நிறமூர்த்த நிறைவு 46XX (6) ιρσό) Lριμπέ5) εg tiι 3)(b bgILi XXIXXX, XO/ΧΥ , XX/ΧΧΥ/

Page 57
92 இளம் பெண் நோயியல்
XXYYY நிறமூர்த்த நிறைவு உண்டெனத் தெரிவிக்கப்பட்டது XXIXY ஆட்களும் உளரெனப் பின்னர் வந்த அறிவிப்புகள் தெரி வித்தன.
தூய சனணிப் பிறப்பிடர்கள் : தேணரின் ஒருங்கோட்டியில் சன னிப் பிறப்பிடருண்டு. இதனுல் பாலினவகை வளர்த்தியில்லை; குறள் நிலைமையுண்டு; வேறு அடையாளக்குறிகளு முண்டு. ஆனல் இந் நிலைமையை விட ஒரு தூய சனணிப் பிறப்பிடருண்டு. இவை குழந் தைப்பருவ வல்வம், யோனி, கருப்பை ஆதியன. பாலின வளர்த் தியில் குழந்தை நிலை மட்டும் தானுண்டு. இவர்களில் நிறமூர்த்தப் பிறழ்வுகளில்லை. சனணிகள் உண்டாகாத நிலைகளில் மென் தோற்ற அமைவு உண்டாகுமென்பது அறியப்பட்டதொன் ருகும். இவர்களின் நிறமூர்த்த நிறைவு, இந்நிலையுடன் சேர்மானமில்லை. XX, XY நிறமூர்த்த வகைகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு யாதெனின் XY நிறமூர்த்தம் உள்ளவர்கள் மூலவுயிர் இடரோமா (இடிஸ் சேமினுேமா) அல்லது செமினுேமா (சீமெனுேமா) வகைத் தீங்கிழை கழலையங் களைத் தோற்றும் தன்மையுடையவர்களாவர். இவர்களில் முத லாவதான அல்மாதஇரிவு யாவுண்டு. முலைகள் தழைப்பதில்லை. பூப் பிடத்திலும் கமுக்கட்டிலும் மயிர் வளர்த்தியுண்டு இந் நிலைமையின் காரணம் இன்றுமொரு மறைபொருளாகும். நிறமூர்த்தம் பழுதுற்ற தென்று எண்ணப்படும்.
கலப்பு சனனிப் பிறப்பிடர்கள்
இந்த இடைப் பாலினரில் ஒரு பக்கத்து சனணியானது விதை யாகும். மற்றையது ஒரு நீள் வெண் கோட்டுக் கீலம் ஆகும். (நான் ஒரு பக்கத்தில் விதையிழையமுள்ள கட்டியும் மற்றப் பக்கத்திற் சூலகமும் இருக்கக் கண்டுள்ளேன். பெண் தோற்றமைவுடன் யோனி மடலும் சூலகப் பக்கத்து முல்லேறியன் கான் வளர்த்தியும் காட்டப் பட்டது. மாதஇரிவின் மையுடன் பிள்ளை வளம்தேடி ஆலோசனைக்கு வந்தவர்) ஒரு பக்கத்தில் முல்லேறியன் வளர்த்தியும் புறத்துப் பிறப் புறுப்புக்களில் அரைகுறை ஆணுக்கலும் காணப்படும். நிறமூர்த்த கட்டமைவு 45X146XY சித்திர வடிவமாம். விதை செமினுே மாவால் அல்லது இடிஸ் சேமினுேமாவால் மாற்றமடையக் கூடும்.
நிறமூர்த்தப் பெண்களினதும் சனணிப் பெண்களினதும் அரைகுறை ஆணுக்கல் உடன்பிறவி அதிரனல் அதி விளைசலுயா: (அதிரனல் பிறப்புறுப்பு ஒருங்கோட்டி)
அதிரனல் சுரப்பியின் நோயியற் காரணத்தால் எனக் கருதப் படும் மாற்றங்கள் பிறப்புறுப்புக்களுக்கும் அவற்றின் வினை யங் களுக்கும் உண்டாகும் ஒரு நிலைமையை இது குறிக்கும். இதில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் 93
(1) பல்வகை புதுவளர்ச்சி, (2) மயிரியம், மாதவிடாய்க் குழப்பங் கள் உடைய நோய்நிலைமைகள், (3) ஒரளவுக்கு வரையறுக்கப்பட்ட உடன் பிறவி அதிரனல் அதிவிளைச்சல் நிலை (இது ஒரு உடன்பிறப்பு அனுசேபப் பிழைபாடாலாம்) ஆகியன அடங்கும்.
உடன் பிறவி அதிரனல் அதிவிளைசலுயர்வான, இந்த இடைப் பாலின வகையின் காரணம், அறியப்பட்டதொன் ருகும். இதற்குச் சிறப்புத்தீர்வு முறைகளுமுண்டு.
காரணம்: இது ஒர் அனுசேப நொதியக் குறைபாட்டிலாலாகும். இது பின்னிடைவுறு பிறப்பு உரிமை அலகாலாகும். இதில் பல நொதி யங்கள் கோட்டிக்கோத்தெரோயிட்டுகளின் உயிரியல் தொகுப்பு முறைகளில் ஈடுபடும். சாராகத் தோற்றமும் நொதியத்தைப் பொறுத்து வேறுபடும். பாலினத் தோற்றமைவைப் பொறுத்தமட்டில் மிக வேறுபடும். இதில் பெண்ணுனவள் ஆணுக்கல் ஆக்குவினைக்கு உட்படுவள். இன்னமும் வேறு வகைகளும் உண்டு. சில ஆண்கள் அரை குறையாக ஆணுக்கமடைவர் அல்லது முற்ருக ஆணுக்கமடைவ தில்லை. இவர்கள் பிறக்கும்பொழுது பெண் வடிவமுடையவராவர். இந்த அதிரல் அனுசேபப் பிழைபாடுகளுள், பலவகை இடைப்பா லினர் உண்டு. ஆணுக்கம் பெற்ற பெண்களிலிருந்து ஆணுக்கம் முற் முகப் பெருத ஆண்கள் வரைக்கும் பல்வகைத் தோற்றங்கள் உள. கோட்டிக்கோத் தெரோட்டியின் செவ்விய உயிரியல் தொகுப்புப் பாதைமுறை தெரியவேண்டும், வெவ்வேறு படிகளில் நொதியக் குறைபாட்டால் அதிரனல் அதிவிளைசலுயா உண்டாகக் கூடும். பொதுவான வகையில், பெண்குழந்தைகள் ஆண் மாற்று நிலையை அடைகின்றனர். இதில் 21 ஐதரொட்சிலேசுக் குறைபாடுண்டு. இதனுல் 17 ஐதரொட்சி புருெசெசுற்றறேனும் இதன் பெறுதி
களும் பெருக்கமடையும்.
உயிரியற் தொகுப்புப் பாதை வழியில் ஒழுங்கு முறையில் நிகழ் இடர்கள் கொலெத்தரோலிலிருந்து பிறெக்னெனலோன் தடுப்புஇது மிகவும் கடுமையான பிழைபாடாம். பிறந்த சிறு வேளைக்குள் குறை அதிரனலியத்தால் குழந்தையிறக்கும். அதிரனல் காரோட் டில் நிறைய இலைப்போயிட்டு உண்டு. இந்நிலைமை சனணிகளையும் பாதிக்கும். ஆகவே ஆண் கருவுருக்கள் அந்திரசனை உண்டாக்கா, பிறக்கும் பொழுது அவை பெண் குழந்தைகள் போலாகும்.
11. 3B ஐதரொட்சிதெரோயிட்டு-தி ஐதரசனசுக் குறைவு: பிறெக் னெனலோன் புருேசெசுற்றருேணுக மாற்றமடையாது. அல்டொசுத் த ரோன் ஆக்கமும் உட்தடுப்புறும். பெண் குழந்தை அவ்வளவு

Page 58
on இளம் பெண் நோயியல்
ஆணுக்கமடைவதில்லை. ஆனல் ஆண் குழந்தைகள் முற்ருக ஆணுக்கம் அடைவதில்லை. இளம்படு காலத்தில் இக்குழந்தைகள் இறக்கும்.
11. 17B ஐதரொட்சிலேசுக் குறைவு : புருேசெசுற்றமுேன் ஆனது 17 ஐதரொட்சி புருேசெசுற்றருேணுக மாறுவதை இது தடுக்கும். ACTH (ஏ. சீ. ரீ. ஏச்.) இன் விஞ்சல் கோட்டிக்கோத்தெரோனையும் தி ஒட்சி கோட்டிக்கோத் தெரோனையும் மேலதிகமாக உண்டாக்கி நாடி அதிஇறுக்கத்தையும் உண்டாக்கும். பெண்கள் மட்டும்தான் பாதிக்கப் படுவதாக இற்றைவரைக்கும் அறியப்படும். நொதியப் பிழைபாடு சூலகங்களையும் தாக்கி பாலின வளர்பதியையும் சேதப் படுத்தும், முதலான அல்மாத இரிவு யாவும் இரண்டாவதாக நிகழும் பாலின இயல்புகளின் இல்லாப்பாடும், அதிபரநாடி இறுக்கமும் குறைகல் சிக் குருதி யாவும் தோற்றப்படும்.
IV. 21 ஐதரொட்சிலேகக்குறை-சிலர் உப்பை இழப்பர். வேறு சிலர் உப்பை இழப்பதில்லை. முதலாம் வகைக் குழந்தைகள் புனிற்றுப் பேற்றுக் காலத்தில் பெரும்பாலும் தீர்வு பெருவிடின் குழந்தைகள் இறக்கும். குழந்தைகள் பிறக்கும்பொழுது செவ்வன் குழந்தைகள் ஆணுல், பெண்களில் வெளிப் பிறப்புறுப்புக்கள் ஆணுக்கமடைந்திருக் கும். ஆணுக்கம் பெற்ற கிளைத்துருவானது பீனமெனக் கருதப்படும். ஒடுங்கிய வல்வ இதழ்கள் விதைப்பையெனக் கருதப்படும். தோல் சாயமூட்டமடையக் கூடும்.
V, 11 ஐதரொட்சிலேகக் குறைவு -இதில் ஆண் மாற்றுத் தோற் றங்களும், தோல் சாயமூட்டலும், அதிபர நாடியிறுக்கமும் காணப் படும். உப்பிழப்பிகளாக இருப்பர்.
VI, 18 ஐதரொட்சிபேசினதும் 18 தி ஐதரொசனேசின் குறை யும் உண்டு. பெண் குழந்தைகளில் ஆணுக்கம் நிகழ்வதில்லை. அலு டொசுத் தெரோன் குறையுண்டு. அதிரனில் பிறப்புறுப்பு ஒருங்கோட்டி அருமையாக பேற்றுக்கு நீடிய காலத்துக்குப் பின் தோன்றும். பூப்புக் கால அளவில் மயிரியம் தோன்றும் ஊறுநீர் பிறெக்னன் ட யோல் மதிப்பீடுகள் இதைக் கண்டுபிடிக்கும். அந்திரசன்களின் உட்சேப விளைவு தசைகளை மிகவும் வளர்த்தியடையச் செய்யும். இந்நோயில் வருந்தும் பெண்கள் மற்றைய பெண்களிலும் பார்க்க மிக வலிவுடையவர். ஆகவே களியாட்டங்களில் வெற்றிகாண் வீரர்களாகுவர்.
இடைப்பாலின புனிற்றுக் குழந்தை நோய்ப்படின், மின் பகு பொருள்களில் உள்ள அளவை, குருதியில் சோதிக்கப்பட வேண்டும். பின்னர் ஒத்த தீர்வு செய்யவேண்டும் (கோட்டிசோன்).
 

பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல் 95
தீர்வு பெரு விடின் குழந்தையின் வளர்ச்சி மெல்லவாகும். தசை கள் வளரும் பருவத்துக்கு முன் பூப்பிடத்தில் மயிர்கள் முளைக்கும். இதைத் தொடர்ந்து உடல் ஏகலும் மயிரிய நிலையுண்டாகும். மாதவிடாய் தோன்றது. முலைகள் வளர்வதில்லை.
கோட்டிசோன் தீர்வு முறைகளால் மாதவிடாய் மீண்டும் தோன்றும். பிள்ளைவளமும் பெறமுடியும். பெருத்த கிளைத்துருவை அகற்ற வேண்டிவரும். வல்வத்தை மூடும் மென்சவ்வையும் பிரிக்க வேண்டிவரும். கோட்டிசோணுனது (ACTH) அதிரனல் கோட்டிக் கோயிட்டு ஒமோன் சுரத்தலைத் தடுக்கும். இவ்வகையான தீர்வு பெற்று குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் பலரை நான் கண் ணுரடாகக் கண்டுள்ளேன்.
புறமிருந்து வரும் ஓமோனுல் பெண்களுக்குத் தூண்டப்படும் ஆணுக்கம்
இதுகாறும் பெண் குழந்தைகள் தாம் வருந்தும் ஒர் உடன் பிறவி அனுசேபக் குழப்பத்தால் உடலில் உண்டாக்கப்படும் அந்திரசனுல் ஆணுக்கம் உறுவதைக் கூறினுேம். நொதியம் 21 ஐதரொட்சிலேசு გაჭრზir குறைபாடானது புருேசெசற்றேன் ஐதரோகோட்டி சோனுக மாறுவதை உட்தடுப்புச் செய்யும் . இப்பதார்த்தம் பொது வாகப் பித்துயித் தறியானது அதிரனுேக் கோட்டிக்கோ குதுரோப்பி (ஊட்டி) ஓமோன் சுரப்பைத் தடுக்கும். இப் பிறழ்வில் ஐதரகோட் டிக்கோத்தெரோயிட்டு குறைவு உண்டு. ஆகவே மிதமிஞ்சிய அளவில் ACTH சுரக்கப்படும். இவ்விதமாகக் கருப்பகாலத்தில் தாய்க்குப் புறமிருந்து பெற்ற அந்திரசன் களை வழங்கின் குழந்தை ஆணுக்க முறும். தெசுத்தொத்தரோன் பெறுதிகள் பலருக்கு இவ்விளைவை உண்டுபண்ணும்: புருேசெசுற்ற ருேனைக் கருச்சிதை வைத் தடுப்ப தற்குக் கொடுப்பர் சிலர் ஆணுக்கம்பெற்ற பெண் குழந்தைகளே உயிர்த்தனர். நோர் எதிசுற்றெருேன் (பிறை மிலுயூற்று N) இவ்வகை யான கெடுதியை மிகவும் விளைவிக்கக்கூடியதொன் ருகும்.
வல்வ இதழ்கள் ஒருங்கி, ஒரு கட்டமைவாகக் கூடும். கிளேத்துரு அதிபர வளர்ச்சியடையும். ஆணுல் குழந்தைப்பேறு நிகழ்ந்தபின் ஆணுக்க விளைவுகள் மேலும் தொடர்ந்து கூடுவதில்லை. ஊறுநீரில் தெரோயிட்டுக் கழிவு செவ்வ ன் அளவிலாம். கலக் கருவில் குருே மற்றின் உடலியுண்டு,
கிளைத்துரு பெருத்திருப்பின் அதை அகற்றலாம். இதழ் ஒருங் கலைப் பிரித்துவிடலாம். -

Page 59
96. இளம் பெண் நோயியல்
நிறமூர்த்த ஆண்களிலும் சனணியப் பெண்களிலும் முகிழ்ந்த ஆணுக்கம் தெசுத்திசுவ (விதை) பெண்ணுக்கல் ஒருங்கோட்டி
இது ஒரு வியப்புக்குரிய இடைப்பால் ஆகும். இதில் கருவ குருே மற்றின் உடலி இல்லாது 46XY நிறமூர்த்த நிறைவுடைய (செவ்வன் ஆண்) ஆட்கள் ஒரு பெண் தோற்றமைவு வகை உட லுடன் பிறப்பர். விதைகள் பொதுவாக வயிற்றுள் உண்டு. ஆனல் புறத்து பெண் கட்டுத் தோற்றம் முழுமுற்றனது. அல்மாதஇரியுயா பெரும்பாலும் உண்டு. யோனி மடலோ குறுகியதும் ஒரு குருட்டுறை யாக இருக்கும். பெரும்பாலும் பூப்புப் பருவத்தில்தான் இது தெரிய வரும். சிலரில் அறுவை வினை வயிற்றுள் செய்ய நேரிடின் சனனி களின் நிலைமையையும் கருப்பையின் நிலைமையையும் அறியமுடியும். தன்னியல்பில் பூப்புப்பருவத்தில் முலைகள் வளர்ச்சியடையும். குரல் பெண் குரல் போன்றது. பூப்புப் பிரதேயத்திலும் கமுக்கட்டுள்ளும் மயிர் முளைப்பதில்லை. அல்லது இது மிக அற்பணுகும். புறத்துப் பிறப் புறுப்புக்கள் பெண்ணினது உறுப்புக்களாம். கிளைத்துரு அதிர்வளர்ச்சி யடைவதில்லை. யோனியுறை குருடாக முடிவடையும், 2-2த் அங்குல நீளமுடையது. கலவிக்குப் போதியளவானது. கருப்பை இல்லையாம் அல்லது ஒருநீள் கீலமாம். பேம் கான்களினது அல்லது கருக் குழாய் களின் எச்சங்கள் காணப்படும். விதைகள் உண்டு. இவை கவட்டுப் பிரதேயத்தில் அல்லது வயிற்றுள்ளேயாகும். விதைகளின் இன்மைத் தோற்றமானது ஆணில் பைக்குள் இறங்கா விதைகளின் தோற் றத்தைக் காட்டும். மிகுதியானுேரில் நிறமூர்த்த நிறைவு 46XY ஆகும். (சுற்றயல் நிணையக் குழியங்களின் படினம்) உளவியல் முறையில் இவர்கள் மிக விவேகமுடையர். சுறுசுறுப்பானவர். உளப்பாங்கில் மிகப் பெண் மையுடையவர். கலவியில் இன்பம் காண் பவர். மாத இரிவு முற்ருக இல்லாதபோதும் வாழ்க்கையைச் சீராக நடத்துபவர் . உள அமிழ்வே இல்லாதவர்.
இது ஒரு குடும்பத்தினரைப் பாதிக்கும் இயல்புடையது. எவ் விதமான பிறப்புரிமையலகு செயற்படுகின்றதென்று, அறியப்பட வில்லை. இதற்கு நிறமூர்த்தமட்டக் குறைபாடில்லை. பரம்பரை யலகின் குறைபாடெனத்தான் கருதவேண்டும்.
ஊடறிதல் : இதைத் திட்டப்படுத்துவதற்கு கலக்கருச் சோதனை செய்து குருே மற்றினுடலியில்லையெனக் காட்டவேண்டும்.
இவ்வகையான விதைகள் கழலையங்களாக மாறுகிறபடியால் விதைய கற்றல் வினைசெய்யவேண்டும். இவ்விடைப்பாலின சிக்கலில் பாதிக்கப்பட்டவருக்கு அவரின் உண்மை நிலையைக் கூரு திருத்தல்
 
 

நன்று. அவர்கள் இவ்விதையகற்றல் வினைக்குப் பின்பும் இன்ப மான இல்லறவாழ்வைத் தொடர்ந்து நடத்தக் கூடியவர்கள்.
இளம் பெண் நோயியல்
முற்றக ஆணுக்கமும் இதனில் தோற்றும் ஏனைய வழுவல்களும்
இடைப்பாலினரின் பிறப்புறுப்புக்களில் தோற்றமாகும் மிகச் சிறிய வழுவல் தோற்றமானது கீழ்ப்போகு நிலையாகும். மிகப் பெரிய வழுவல் முற்ரு ன முல்லேறியன் தழைப்பு வளர்த்தியாகும். இவற்றைவிட வேறு இடைப்பிறழ்வு, இடை நிலைமைகளும் உண்டு. கரவு விதைகளும் இடைநிலைமைகளுள் அடங்கும். இவையெல் லாம் தெசுத்திசுக் குறைவால் உண்டாவதெனக் கருதப்படுகின்றது.
இடைப்பாலினரின் நிலைகளும் சனனியத் தீங்குவிளை நிலமை களும்
இடைப்பாலின ஆட்கள் சனணியில் புது வளர்ச்சிகளுக்கு ( சிறப்பாக தீங்குவிளை வளர்ச்சிகளுக்கு ) உட்படும் பான்மை உடையவரென நீண்டகாலமாக அறியப்பட்டு வருகின்றது. தற் காலத்தில் நிறமூர்த்தப் படினங்கள் சில நிலைமைகளிற்ருன், இவை நிகழ்கின்றதென்பதை தெரிவிக்கின்றன. வயிற்றுப்புறத்து விதை கள் இல்லாவிடின், xy நிறமூர்த்தமுடையவருக்கு தீங்குகள் விளே யக் கூடும்.
வயிற்றுக்கு வெளியாக விதைகளில்லா xy நிறைவு உடைய இடைப் பாலினர் மூன்றுவகையினராம். -
1. தெகத்திசு பெண்ணுக்க ஒருங்கோட்டியர். இவர்களில் வழமையாகக் காணப்படும் நிறமூர்த்த நிறைவு பல வண்ண வடிவ மற்ற 46 xy ஆகும். இதனுடன் இயங்காநிலையில் காட்சிச் செவ் 3) Gör விதைகளும் உண்டு.
1. தூய அல்லது பல வண்ண xy கலக் கொடியுடையவர். இவர்களின் சனணிகள் பிறப்பு இடர்களுடையன.
11. ஆண்மகடுகள் - இவர்களுக்கு xy கலக்கொடியுண்டு. பல் வண்ணம் - நுகப் பிறப்புக் கொடியிலிருந்து உருவாகிய உயிர். கிமேயிற வடிவம் - இரு தனிப்பட்ட பிறப்புக் கொடி
களிலிருந்து உருவாகிய உயிர்.
இவை விளைவிக்கும் தீங்கானது இவற்றின் வகைகளைப் பொறுத்திருக்கும். தெசுத்திசு பெண்ணுக்க ஒருங்கோட்டியில் தெசுத்திசுச் சுரப்பியோமா (அடினுேமா) பொதுவாகத் தோற்

Page 60
98 இளம் பெண் நோயியல்
றும். இது தீங்கு விளைவிக்கும் வளர்ச்சி அல்ல இடர் பிறப்புச் சனணி ஆட்களில் xy தூய சனணிப் பிறப்புகளும், 45 x| 46 xy தேனர் ஒருங்கோட்டிகளும் அடங்கும். இவர்களில் தீங்கு விளைவிக் கும் இயல்புகள் அதிகமாகக் காணப்படும். இவர்களுக்கு சிமனுேமா அல்லது மூலவுயிரிட ரோமா, (இடிஸ்சே மினுேமா) ஆகியன பெரும் பாலும் தோற்றும் . இப்பிறப்பிடர் நோயாளிகளில் பெரும் பாலும் கொனடோ துரோபின் உயர்மட்டத்தில் காணப்படும் . இதுவும் y நிறமூர்த்தமும் உள்ள நிலையில் சூலகம் புதுவளர்ச்சியை உண்டாக்கும் .
தீங்கு விளையாது இருப்பதற்குத் தடுப்பு முறைகள்
1. தேனர் ஒருங்கோட்டியில் அல்லது xy கலக்கொடி உள்ள தூயசனனியிடர்களில் சனனிக் கீலங்களை அகற்றுதல் நன்று.
2 தெசுத் திசு பெண்ணுக்க ஒருங்கோட்டியில் பூப்புப் பரு வம் (பக்குவம் ) அடைந்த பின்பு சனனியை அகற்றுதல் நன்று.
ஆண் மகடுகளில் வயிற்றை அறுவை வினைத் திறத்தல் செய்து ஊடறிதல் நன்று. ஒரு பெண்ணுக வளர்க்கப்பட்டிருப்பின் தெசுத் திசு இழையம் காணப்படின் இதனை மட்டும் அகற்றல் நன்று. அல்லாவிடின் பூப்புப் பருவ மட்டில் ஆண் மாற்றுக் குறிகள் தோன் றக்கூடும். இவற்றை அகற்றுவதால் வளர்ச்சியிடர்களும் தவிர்க் கப்படும் .
நோயாளரின் வைத்தியப் பார்வை முறைகள்
இது மிகவும் முக்கியம் வாய்ந்தது. குழந்தை பிறந்தவுடன் அதன் பாலினத்தை உறுதிப்படுத்த வேண்டும். எக்குழந்தையா யினும் பிறந்தபின்பு தன் பாலினத்தை மாற்றுவதில்லை. எனவே புனிற்றுக்குழந்தைகளைக் கவனமாகச் சோதிக்கவேண்டும் . இக் குழந்தைகளின் வெளிப்பிறப்புறுப்புக்களில் கட்டமைவுப் பிறழ் வுகள் தோற்றின் மிகவும் கூர்ந்து ஆராய வேண்டும். பிழையான வகையீடு செய்யின் குழந்தை பிழையான பாலினர் போல் சமூகத் தில் வளர்க்கப்பட்டு பின்னர் இடர்படும். சரியான பாலின வகை யிடல் முக்கியமாகும். பொதுவாக நிகழும் பிழையானது அதி ரனல் பிறப்புறுப்பு ஒருங்கோட்டியால் வருந்தும் பெண் குழந்தை ஒர் ஆணுகப் பிறப்புப் பதிவு செய்யப்படுவதாம். இதேபோன்று தாயானவள் கருப்பைக்காலத்தில் ஆண் ஆக்கம் செய் அந்திரசன் ஒமோன்களை உட்கொண்டிருப்பின் ஒரு பெண் குழந்தையானது ஆணின் உறுப்புக்களைப் போன்ற உறுப்புக்களுடன் பிறக்கும். இவ்விருநிலைமைகளுக்கும் தீர்வு செய்யலாம். அவர்களின் பிள்ளை
 

இளம் பெண் நோயியல்
வளம் பாதிக்கப்படுவதில்லை. பிறிதொரு பிழையான பிறப்புப் பதிவானது விதைகளிறங்காத கீழ்ப்போகுளை உடைய ஆண்களைப் பெண்களெனப் பதிவு செய்தலாம். இவர்கள் பூப்படையும் வேளே யில் ஆணுக்கம் உறுவர். ஆனல் இக்காலம் வரைக்கும் இவர்கள் இளம் பெண்களுடன் கூடியாடித் திரிவர். (இவ்வகையான விப ரீத நிலைமைகள் எய்திய இரு இளைஞரை நான் கண்டுள்ளேன்.)
பிழைகள் நிகழும் வேறு நிலைமைகள் - உண்மை ஆண்மகடுகள்: (கிமேயிரு) XX/xy இடைப்பாலினர்; ஆண் தேணர் ஒருங்கோட்டி பரும் இந்த இனத்தைச் சேர்ந்தவராம். இந்த பாலின உறுதிப் படுத்தலின் பின்புதான் குழந்தை பெண் குழந்தையாகவோ ஆண் குழந்தையாகவோ வளர்க்கப்படும். பாலின வகைப்படுத்தலில் முக்கியமானது உடலின் தோற்றவமைவு ஆகும். இடைப்பாலின ரிற் அதிகமானேர் நடுநிலைமைப் பாலினராம். எனவே இவர்கள் பெண் தோற்ற அமைவு உடையர். இவ்வகையினருக்கு அறுவை வையித்தியனின் உதவி கொண்டு வேண்டிய பால் வகையினரின் உறுப்புக்களை அமைப்பதைப் பற்றி ஆலோசனை பெற வேண்டும் . பெண் குழந்தைகளின் உறுப்புக்களை செம்மைப்படுத்துதல் இலகு வாகும். தவருண பாலேக்காட்டும் பெரும் கிளைத் துருவை யகற்று தல் நன்று. ஆண்களின் கீழ்ப் போகுளையைச் செம்மைப்படுத்தல் வேண்டும். குழந்தைகளின் பாலினப் பகுப்புக்கு நிறமூர்த் தங்களேக் கொண்டும் சனணி உறுப்புக்களைக் கொண்டும் மதிப்புச் செய்வ தற்கு, பாலின வைத்தியக் குழுவினரின் ஆலோசனை வேண்டியதல்ல. இருந்தும் ஐயப்பாடு தோன்றின் காலம் தாழ்த்தாது நிறமூர்த்த நிறைவைப் பற்றியும் சனணிகளைப் பற்றியும் முழு ஆய்வுகள் செய் தல் வேண்டும்.
தேனர் ஒருங்கோட்டியர் போன்று பிழைபடுவளர்ச்சிக் குறிகள் தோன்றும் பொழுது உதாரணமாக இரண்டாவது பாலின இயல் புகள் அல்லது மாதவிடாய் தோன்ருத காரணத்திற்கு ஆலோச னேக்கு வருவர். சிலர் மேலும் பிறழ்வான பாலின இயல்புகள் அல்லது ஆணுக்கம் நிகழும் பொழுது பெண்களும் வைத்திய ஆலோசனைக்கு வருவர். வேறு சிலர் அல் மாதயிரிவுயா அல்லது பிள்ளை வளமின்மை அல்லது கலவிப் புணர்ச்சியில் நிகழும் இடர் கள் போன்றவற்றிற்கு ஆலோசனைக்கு வருவர்.
இவர்களின் நோய் வரலாறு, குடும்ப வரலாறு ஆகியவற்றின் குறிப்புக்களைப் பெற்ற பின்பு பிறப்புச் சுவட்டுச் சோதனை செய்ய வேண்டும். இதனுடன் சேர்ந்து காணப்படும் பிறவி வளர்ச்சிக் குறைகளையும் குறிக்கவேண்டும். சொக்குச் நுதிச் சுறண்டற்படலம்

Page 61
100 இளம் பெண் நோயியல்
வெண்குழியங்கள் ஆகியனவற்றைச் சோதித்து குருே மற்றின் உட லிகள் மேளக் கோல்கள் (பொல்லு) உண்டோவென அறிய வேண்டும். ஊறுநீரின் கீற்ருே தெரோயிட்டுகளின் அளவை அள விடவேண்டும். இது அதிரனல் பிறப்புறுப்பு (பொய்) ஆண் மகடு நிலைமைகளைக் காட்டும். வயிற்று அறுவை வினைத்திறத்தலால் சனணிகளின் நிலைமையும் அறியவேண்டும் .
பிறப்புறுப்புக்களும் உடற்கட்டும் பெண் தோற்றமைவாக இருந்து நிறமூர்த்தக் கருவக்குருே மற்றின்உடலி இல்லாதிருப்பின் நோயாளி (1) தேனர் ஒருங்கோட்டி (45,x0) அல்லது சனணிப் பிறப்பிடர்கள் (46xy) அல்லது தெசுத்தி சுப் பெண்ணுக்கம் (46xy) அல்லது கீழ்ப் போகுளேயுடன் விதையிறங்காநிலை ஆய வொன்றினுல் வருந்தக் கூடும் ,
நோயாளியானவள் ஆண் கட்டமைப்புடன் கருக்கள் குருே மற்றின் உடலிகளேக் காட்டின் நோயாளி (1) அதிரனல் பிறப்பு றுப்பு ஒருங்கோட்டி (46xx) (2) அல்லது கருப்ப காலத்தில் அவ ளின் தாயானவள் அந்திரசன் மருந்துப் பொருள்களை உட்கொண்ட படியால் உண்டாக்கிய ஆணுக்கம் (46XX) (3) அல்லது கிளெயின் பெல்ரரின் ஒருங்கோட்டி (47xxy) ஆய ஒன்றினுல் வருந்து வள்.
இவ்விதமான நோயாளரில் வயதுபோனவர்கள் செம்மையாக சமூக ஒப்புரவுற்று வாழும் பொழுது இவர்களுக்கு செய்த சோதனை எந்த ஒரு முடிவைத் தெரிவித்தாலும் முடிவை அவர்களுக்குத் தெரிவிக்கவேபடாது. எல்லாவகை இடைப்பாலினரைப் பொறுத்த மட்டில் நோயாளியின் உளவியல் நிலைமை முக்கியம் வாய்ந்தது. இதனேக் கெடுதி செய்யவே படாது. ஒரு புத்தியான விளக்கத்தை அல்லது யோசனையைக் கூற வேண்டும்.
1. தேனர் ஒருங்கோட்டியிலும் 45x/46xy நோயாளரிலும் கீலக் கோட்டுச் சூலகங்களையகற்றல் நன்று. இது தீங்கிளைக் கழ லேயங்களை அதனில் உண்டாகாது தவிர்க்கும். இதைப் பற்றி நோயாளிக்குப் பின்னர் கூறவே படாது.
2. தூய சனனியிடர்களில் (46xy) மேற்கூறிய விதம் தீங்குவிளைக் கழலையங்கள் இடர் மூலயுயிரோமா (டிஸ்சே மினுேமா) செமினுேமா, சனனியரும்பரோமா கொனடோ பிளாசுத்ற் ருேமா பிறெனர் கழலையம் ஆகியன உண்டாகாது தடுப்பதற்கு கீலக்கோட்டு சூகலங்களே யகற்றல் நன்று.
3. தெகத்திசுப் பெண்ணுக்கத்தில் பெண் வசீகரமான பெண் தோற்ற அமைவு உடையவள். அவளின் ஒரோயொரு குறை
 

இளம் பெண் நோயியல் 0.
மாதவிடாய் இன்மையாம். இவர்களே பூப்புப்பருவம் அடைய முன்பு ஆலோசனைக்கு கொண்டுவர மாட்டார்கள். குடும் பத்தில் இவ்வகையானவர்கள் இருந்திருக்கக்கூடும், இவர்கள் ஒகரமானவர்கள். பெண்மைக் குணங்கள் குறிகள் மிகவும் உடையவர். கலவிப் புணர்ச்சியில் யாதாயினும் ஒரு இடர் இல்லாதவராய் இருக்கலாம். இன்பமான குடும்ப வாழ்க்கை செய்வர். இவர்களின் ஒரே ஒரு குறை மாதவிடாய் இன்மை யாம். இவர்களுக்கு வெளியேயிறங்கா விதைகள் ம ட் டு ம் உண்டு. இதனே அகற்றிய பின்பு நோயாளிக்கு விதைகளுடன் தான் வாழ்ந்ததைப் பற்றி ஒன்றுமே தெரியப்படாது. இவர்கள் அறுவை வினைக்குப் பின்பு மிக இன்பமான இல்லற வாழ்வு தொடர்ந்து நடாத்த வேண்டியவர்கள்,
4. கீழ்ப்போகுளேயும்; விதைகள் இறங்கா நிலையும்
கீழ்ப்போகுளேப்யில் உள்ள பிழையை அறுவை வவினை மருத்து வனின் உதவியால் செம்மைப்படுத்தல் வேண்டும். இறங்கா விதைகளுக்கு ஏற்ற வயதில் ஏற்ற அறுவை வினேவைத்தியம் செய்யவேண்டும்.
5. அதிரனல் - பிறப்புறுப்பு ஒருங்கோட்டி (46xx) உடன்பிறவி நோய். இவ் இடைப் பாலினக் குழந்தைகளுக்கு பிறந்தவுட னேயே ஏற்ற தீர்வு முறைகள் செய்யவேண்டும். இவர்களுக்கு ஏற்ற எடைகளில் ஐதரோகோட்டிசோனைக் கொடுக்க வேண் டும். (நாளாந்தம் 1 இருத்தல் உடல் நிறைக்கு 0 3 மிகி. அள வில்). இது மிதவிஞ்சிய ACTH ஆக்கத்தைத் தடுக்கும். உப்பு இழக்கப்படும் ஒருங்கோட்டியில் உப்பைத் தேக்கும் ஐதரோ கோட்டிசோனைக் கொடுக்கவும்.
6. அந்திரசன் மருந்துப் பொருள்களால் விழைந்த ஆணுக்கம் ஒரு கெடுதியையும் விளைவிக்காது (46xx), கால கதியில் குறிகள் பின்னிடைவுறும். வல்வத்தின் இதழ்கள் ஒருங்கின் இவற்றை அறுவை வினை மூலம் பிரிக்க வேண்டும்.
7. கிறெயின் பெல்ரரின் ஒருங்கோட்டி (47xxy)
பிள்ளை வளமின்மைக் காரணத்தினுல் இவர் தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு பிள்ளை வளச் சாரகங்களுக்கு ஆலோசனைக்காக வருவர். இவருக்கு பேமுயிரிகளோ இல்லை. விதைகள் அல் லூட்டம் அடைந்தவை. முலைகள் பெருத்திருக்கும். முன் கூறியதுபோல் உடலில் மயிர்கள் குறைவு. இவர்களின் கருக்களில் கருவக் குருே மற்றின் உடலியுண்டு. ஆகவே இவருக்கு ஒருவகைத் தீர்வும்

Page 62
102 இளம் பெண் நோயியல்
செய்யவே முடியாது. உண்மை நிலையைக் கூறி நோயாளியைத் துக்கப்படுத்தல் நன்று அல்ல. எனவே அவருக்கு இது ஒரு சன னிக் குறைவாலென விளக்கம் கூறி பிள்ளைவளக் குறைவைத் தீர்ப்பது வில்லங்கமெனவும் நல்ல காலத்துக்கு ஒரு xyக் கொடி அவரில் இருப்பின் பிள்ளையுண்டாகுமெனக் கூறவும். பிள்ளையாசை மிக இருப்பின் ஒரு பிள்ளையை எடுத்து வளர்த்தல் நன்று எனக் கூறி முடிக்கவும்.
 

இயல் 7
இனப்பெருக்கமும் பரியகமும்
இனம் பெருக்கல் வினையத்தில் ஈடுபடும் பல்வேறு உறுப்புக் களையும் சுரப்பிகளையும் ஆளுகை செய்வது கபத்திதான் (பித்து யித்தறி) என இதுகாறும் கருதப்பட்டது. இது தன் முற்பக்கப் பகுதியிலிருந்து ஆறு ஆட்சிசெய் ஒமோன்களைச் சுரந்து இவ் வினையை ஆற்றும் என்னும் கருத்தும் வேரூன்றியிருந்தது. தற் ᏪᎭ5 ᎱᎢ 6u) ஆராய்ச்சிச் சான்றுகள் இக்கருத்தை பிழையென தெரிவிக்கின்றன. க பத்திச் சுரப்பியின் முற்பக்கப் பகுதியால் சுரக்கப்படும் ஆறு ஒமோன்களும் கீழ்ப் பரியகத்தால் நேராக ஆளுகை செய்யப்படுகின்றன என்றும், பெரும் அளவில் அவற்றின் சுரத்தல் கீழ்ப்பரியகத்தில் தங்கியிருக்கு மென்றும் காட்டப்பட் டுள்ளது.
முற்பக்க கபத்தி சுரக்கும் ஆறு ஒமோன்கள் : 1. அதிரனல் கோட்டிக்கோத் துரோபின் (அ. கோ. து ACTH) இது அதிரனல் காரோட்டை ஆட்சி செய்யும் (அதிரனல் காரோட் டுட்டி ஒமோன்) 2. தைரோத் துரோபின் (ஊட்டி T. S. H) இது கேடயச் சுரப்
பியின் செய்கையை ஆட்சி செய்யும். 3. சோமத்துரோபின் (உடல் வளர்ச்சியூட்டி ஒமோன் S.T.H.) இது வளர்ச்சியையும், பல அனுசேபச் செயல்முறைகளையும் ஆளுகை செய்யும் . 4. புடைப்புத் தூண்டி ஒமோன் (பு. து. ஒ , F, S, H) இது குல
கப் புடைப்புகளை முதிர ச் செய்யும். 5. இலூற்றினுக்கம் செய் ஒமோன். (இ.ஒ. L.H) சூலிடல் நிகழ்ந்த
பின்பு இலூற்றின் உடலியைத் தோற்றுவிக்கும். 6. பால் தூண்டி ஒமோன் (பா. தூ. ஒ L. T. H) (புருே லற்றின்)
இது பாலாக்கத்தில் ஈடுபடுகின்றது. இவற்றில் ஒன்றும் மற்றைய ஒமோன்களுடன் சேராது தனிப் படச் செயலாற்றுவதே இல்லை. இதில் இருந்து எல்லா ஒமோன் களும் உடலில் ஒரு ங்கி இயங்கும் , என்ற பேருண்மையை அறி யவும் .
இங்கு கூறப்பட்டவையை விட, க பத்தியின் இடை நடுப் பகுதியானது மெலனின் ஆக்கலை ஊக்குவிக்கும் ஒமோனையும்

Page 63
104. இளம் பெண் நோயியல்
பிற்பக்கப் பகுதியானது ஊடுற்றெதிரி ஒமோனையும் ஒட்சிரே சின் ஒமோனையும் சுரக்கும். இவை பரியகத்தில் சில கருக்களின் நியூரன்களுள் தொகுக்கப்பட்டு பிற்பக்கக் க பத்தியை உரு வாக்கும் நரம்புக் கலங்களின் விரிவுற்ற சேய்மை முனைப் புகளில் சேமிக்கப்படும். ஊடு ஊறுநீற்றெதிரி ஒமோனே வாசே பிறெசின் (கலன முக்கி) எனவும் கூறுவர். இது ஊறுநீரிப் புன் குழாய்கள் நீரை மீளகத் துறுஞ்சல் செய்வதை ஆளுகை செ யும். இது பெரும் எடைகளில் கலன முக்கத்தை உண்டாக்கும் ஒட்சிரோசின் என்பது பிறப்புறுப்புச் சுவட்டுக்குச் சுருக்கத்ை யும் குழந்தை முலேயுண்ணும் பொழுது முலேயுள்ளிருக்கும் தசை மேலணிக் கலங்களைச் சுருக்குவதையும் உண்டாக்கும். ஆகவே கீழ்ப் பரியகமும் க பத்திச் சுரப்பியும் சேர்ந்து மிகுதியான அகச் சுரப்பிச் செயற்பாட்டின் நரம்பு ஆளுகைக்கு ஒர் இறுதிப் பொதுப் பாதையாக அமைகின்றது. இவ்வகையான எல்லா ஒமோன்களும் எல்லா ஆண்களினதும் பெண்களினதும் க பத்திச் சுரப்பிகளிலுல் உண்டு. இவ் ஒமோன்கள் பெண்ணேப் பாதிக்கின்ற முறையில் கூறப்பட்ட போதும் அவை ஆண்களிலும் செயற்படுகின் றன. ஆண்களில் தாக்கப்படும் உறுப்பு விதையாகும். முளையஇயல் முறையில் க பத்திச் சுரப்பியானது இரு தோற்றுவாய்களில் இருந்து உருவாகும். ஒன்று, கரு உருவின் தொண்டையின் கூரையி லிருந்து மேலணியால் அமைந்த ஒரு முளே யாக உயர வாக வளர்ந்து, மேலணிக் கலங்களால் ஆக்கிய சுரப்பிக் கீழ்வளரியை உண்டாக்கும். இரண்டு முற்பக்கப் பித் துயித்தறி. இதன் முளை யானது ஆதி நரம்புக் குழாயின் பகுதியிலிருந்து கீழ் நோக்கி வளரும் புற மறிப்புக்குச் சரிமுன்னுகக் கிடக்கும். நரம்புக் குழாய் பகுதியிலிருந்து கீழ் நோக்கி வளரும் முளை யானது பிற்பக்கப் பித்துயித்தறியாக மாறும் (நரம்புக் கீழ்வளரி), முழுத் தழைப் புற்ற சுரப்பியின் கீழ்வளரிக்கு மூன்று பகுதிகளுண்டு. ஒன்று மேலணிப் பெருக்கத்தால் உருவாகிய முற்பக்கப் பகுதி, (அடைப் பத்தின் முற்பக்கச் சுவர்). இரண்டாவது கீழ் வளரும் நரம்பு முளை யுடன் நெருங்கியிருக்கும் பகுதியான இடைநடுப்பகுதி; மூன்ரு வது - பக்கத்துக்கு ஒன்முக அடைபத்தின் மிக உயர்ந்த பகுதியி லிருந்து தோன்றி நரம்புக்குக் கீழாகச் செல்லும் முனையைச் சூழும் சிறுமுகிழ்ப் பகுதி ஆகும். நரம்புக்கு கீழாக வளரும் முளையானது தொடக்கத்தில் கோறை உடையது. பின்னர் அது நரம்புக் கீழ்வளரியின் 3 முக்கிய பகுதிகளாக மாற்றம் அடையும். அவையாவன: நடு சார் மேம்பாடு, நரம்புக்காம்பு, நரம்பு மடல் என்பனவாம். நரம்பு மடலானது கீழ்ப்பரியக நரம்புக் கலங்க ளின் முளைகளின் விரிந்த முடிவிடங்களாம். இக்கலங்களின் முளை கள் குருதிக் கலன்களுக்கு இடையில் முடிவடையும் . முற்பக்கப்
 
 
 
 
 
 

இனப்பெருக்கமும் பரியகமும்
பகுதியானது வெவ்வேறு வகைக் கலங்களால் ஆக்கப்பட்டது. DI GŐ) (3)J நிற வெறுப்பிகளும் (சாயமூட்டப்படாதன நிற நாடிகளும் |பல்வேறு சாயங்களால் நிறமூட்டப்படுபவை) செவ்விய சாயமூட் டற் கலன்களுமாம். இவற்றை ஆறு வகையாகப் பிரித்துள்ள னர். ஒவ்வொரு குறித்த கலவ வகை க்கும் தனித் திறன் ஒமோ னின் சுரப்புக்கும் தொடர்பு உண்டெனக் கண்டனர். நிறவெறுப்பிகள் யாதாயினும் குறித்த கல வகையின் ஒய்வு நிலைத் தோற்றமாக அல்லது விஞ்சிச் செயலாற்றும் கலங்களாகத் தோற்றந்தரும். இவற்றின் சுரத்தல் விளைவுகள் சுரக்கப்பட்ட உடனேயே விடு விக்கப்படும். இதனுல் சாயம் பெறக்கூடிய சுரப்புச் சிறு மணிகள் கலத்தில் இல் லேயாம்.
கீழ் பரியகம்
நரம்புத் தொகுதியில் இது ஒரு சிறு உறுப்பாக இருந்த போதிலும் இது பல பகுதிகளாலாகிய ஒரு கூட்டு உறுப்பாகும். இதன் அடிப்பகுதியானது பார் வைக் குறுக்கு மறுக்குடனும் |கய சுமா), நரம்புக் காம்புடனும், சிறுமுலைச் சிற்றுடல்களுடனும் தொடர்புடையது. இதன் அகமானது எண்ணிக்கை மிக்க நரம் புக் கலங்கள் அல்லது கருக்கள் ஆகியவற்றின் தொகுதிகளால் அமைவு பெறும் தனித் திறன் வினை செய் கருக்கள் இதற் குண்டெனக் கண்டபோதிலும் அவற்றை ஒரு செவ்விய வரை அறுப்புச் செய்யக் கூடியதாக இல்லை இலகுவான விளக்கத்தில் இதற்கு மூன்று முக்கிய பகுதிகள் உண்டென விபரிக்கப்பட்டுள் ளது. அவையாவன உயர் பார்வைப் பகுதி, (இது பார்வைக் கயசு மாவுக்கு மேலாகக் கிடக்கும்) நடு முகிழ்ப் பகுதி (நரைமுகி ழும் நடுசார் மேம்பாடும் பிற்பக்கச் சிறுமுலைப் பகுதி (சிறுமுலை உடலிகளை அடக்கும்) என்பனவாம்.
நரம்புக் கீழ்ப் பகுதியுடன் நாலு கீழ்ப்பரியகக் கருக்கள் பக் கத்துக்கு இரண்டாகச் சேர்ந்திருக்கும். அவை உயர் பார்வைக் கருக்கள் (பார்வைக் கய மாவுக்கு மேலாக) இரு பரவரைக் கரு க் கள் (மூன்ரும் அறைச் சுவரிலுண்டு) என்பன இவற்றின் சிறப் பியல்பு ஏறத்தாழ முழுதாக பெரும் நியூரன்களையடக்கி இரு ப் பதே ஆகும். இவற்றின் முளைகள் கபத்தியின் காம்பு வழியாக நீள மாகச் சென்று புனலுரு முளைகளின் குருதிக் கலன்களின் சுற்றில் முடிவடையும். இவை நான்கும் 'நரம்புச் சுரப்பிக் கருக்களாகும் நரம்புக் கலங்கள் தாமே பிற்பக்கப் பித்துயித்தறி ஒமோன்க ளைச் சரிக்கட்டும். இவை முளைகள் வழியாக நரம்புப் பகுதிப் பித்துயித்தறியை அடைந்து முளைகளிலேயே சேமிக்கப்பட்டு,

Page 64
106 இளம் பெண் நோயியல்
குருதியோட்டத்தை அடைகின்றன. பரியகத்திலிருந்து வரும் நரம்புக் கணத்தாக்கங்களின் விளைவால் ஒமோன்கள் கபத்தியி லிருந்து விடுபடும் .
உயர்பார்வைக் கருக்கள் ஊ, எ, ஒ ஊடு ஊற்றெதிரி ஒமோ னையும், பரவறைக் கருக்கள் ஒட்சிரொசினையும் உருவாக்குகின் றன என்பதற்குச் சில சான்றுகள் உள.
முற்பக்கப் பித்துயித்தறியின் செயற்பாட்டின் ஆட்சி : இவ்வாட்சியா னது தளபரிய கத்துக்கும் சுரப்பிக்கும் இடையிலுள்ள ஒரு குருதிக் கலன இணைப்பில் தங்கியிருப்பதாக எல்லா ஆராய்வாளராலும் ஏற்கப்பட்ட உண்மையாகும் இந்தக் குருதிக் கலன இணைப்பைப் பித்துயித்தறி வாயிற் தொகுதி என்பர். இவை தனித் திறனு டைய மயிர்க் குழாய்க் கலன அமைப்பு உடையவை. இவை நடு சார் மேம்பாட்டிலும், காம்பிலும் உண்டு. இவை 1 மி.மீ. மட் டில் நீளமுடைய எளிய வசிவுகளாகவும் அல்லது கூட்டு கூரி அமைப்புக்களாகவும் நரம்பிழையத்துள் ஊடுரு விச் செல்லும் . உட் சிரசு நாடிகளில் உயர வாக இருக்கும் கீழ் வளரிப் கிளைகள் இந்த முதலான மயிர்க்குழாய் மெத்துவின் உயர் பகுதிகளுக்குக் குருதியை வளங்கும். இக்குருதியை ஒரு நிரல் நீள் வாயில் புன்னுளங்களுள் வடிக்கும். இவை காம்பின் மேற் பரப்பில் பரவி முற்பக்கப் பகுதியின் அடர் மயிர்க்குழாய் மெத்துக்குள் புகும். இவ்விதமாகவே புன்சலாகை நாடியும் (உயர் கீழ்வளரி நாடியின் கிளை) பணியவாகவிருக்கும். கீழ்வளரிக் கலன்களின் கிளைகளும் குருதியை வழங்கும். முதலான மயிர் க்குழாய் மெத்துவின் கீழான பகுதி, குறள் வாயிற் புன் ணுளங்கள் வழியாக முற்பக்கப் பித்துயிர்த்தறியின் பிற்பக்கத்துக்குக் குருதியை வடிக்கும். நரம்பு நார்களிலிருந்து, கீழ்ப்பரியக விடுத்தல் செய் காரணிகள் நடு சார் மேம்பாட்டிலுள்ள மயிர்க்குழாய் அமைப்புக்கள் ஊடாகச் செல்லும் குருதிக்குள் சுரக்கப்பட்டு, முற்பக்கப் பித்துயித்தறி யின் சுரப்புக் கலங்களின் செயற்பாட்டை ஆதிக்கம் செய்யும் . எனவே வாயிற் புன்னுளங்கள் முதலான மயிர்க்குழாய்ச் சிக்க லின் தோற்றுவாயாகும். இச் சிக்கலானது காம்பு, சுரப்பியகப் பகுதி ஆகியவற்றின் முழு நீளத்திற்கு பரியகத்திலிருந்து பரவு கின்றது. மனிதப் பித்துயித்தறியின் முற்பக்கப் பகுதிக்கு ஒரு குறிப்பிடக்கூடிய நேர் குருதி வழங்கலும் இல்லை. நரம்புப் பகுதி யின் கலனத் தொகுதியுடன் பெருமளவில் தொடர்பும் இல் லே ஆனல் இதற்கு சிறிது அளவில் பணிவான கீழ்ப்பரியக நாடிகளி லிருந்து மயிர்க்குழாய்க் கூரிகள் குருதி வழங்கலைச் செய்கின்றது
 

இனப்பெருக்கமும் பரியகமும் 07
மேலே கூறப்பட்டவை மையநரம்புத் தொகுதிக்கும், க பத் இக்கும் இடையிலுள்ள வினையத் தொடர்புகளை விளங்குகின்றது. தற்காலத்து ஆராய்வாளரின் கருத்தின்படி முற்பக்கப் பித்துயித் தறி நேரடியாகக் கீழப்பரியகத்தின் ஆணைக்குள் அடங்குகின்றது. இது வாயில் நாள வழங்கலால் நடுவிணைத்தல் செய்யப்படும் . நேரடி நரம்பு வழங்கலால் ஆட்சி செய்யப்படுவதில்லை. பொது வாக இச்சான்றுகள் விலங்கு ஆய்வுகளில் இருந்து பெற்ற போதும் இவை மனித னிலும் அமையக்கூடிய ஒர் ஆட்சி முறை ULI IT" (55 LAD .
பரியக விடுத்தல் செய் காரணிகள்
வாயில் நாளக் குரு தியால் காவப்பட்ட சில காரணிகளா னவை, பித்துயித்தறியின் நரம்பாட்சியில் முக்கியமான ஈடுபாடு  ைடயன எனக் கூறினுேம் . இவற்றை 'விடுத்தல் செய் காரணி கள் எனக் குறிப்பர் ஆராய்சியானது ACTH (அ. தே. து. ஒ.) T.S. H 1 goas. 5.T. J. S.T. H. IG 3 st-g|T. gal (F.S.H.) L. g|T. g. L. H. Ig).3 ஆகிய ஐந்து ஒமோன்களின் விடுதலைச்செய்யும் காரணிள் எல்லாவற் றையும் பரியகம் தன்னுள் அடக்கியிருக்கும் எனவும் மேலும் L.T.H (இலூ தூ. ஒ) ஒமோனே உட் தடுப்புச் செய்யும் ஒரு காரணியை யும் கூட அடக்கியிருக்குமெனவும் இவை நன்னேகிராம் அளவுக ளில் உன் டென்றும், இவை தம்மிலும் பார்க்கக் கூடிய நிறை உடைய ஒமோன்களை விடுத்தல் செய்யும் எனவும் காட்டப்பட் டது. இவையெல்லாம் குறை மூலக்கூறு நிறையுடையன. இவற்றை விடுத்தல் செய் ஒமோன் (R.H) வி. ஒ எனவும் குறிப்பின் பிழை இல்லை. புதூ ஓ. வி. ஒ (R. S. H. R. H) ஊ, எ, ஒ (ADH) உம் இவற்றை ஒத்த னடுவும் விடுத்தல் செய் ஒமோன்களாகச் செயலாற்றும். ஆனல் நேம நிலைமைகளில் இவை முற்பக்கப் பித்துயித்தறியின் ஆட்சியில் அவ்வளவு பங்கு எடுப்பதில்லையெ னக் கருதப்படும்.
பின்ட்னுடுப் பொறி முறைகள்
தற்போது பலராலும் ஏற்கப்படுகின்ற கருத்து யாதெனின் முற்பக்கிப் பித்துயித்தறியானது நரம்புத் தொகுதியின் நேரடி ஆட்சியில் அடங்குகின்றது என்றும் ஆணுல் இது உண்மையில் நேரடி சுரப்பு - இயக்கு நரம்பு ஊட்டலால் அல்லவென்றும், இந்த ஆட்சியானது வாயிற் குருதிக் கலனேத் தொகுதியால் நடு விணைத்தல் செய்யப்பட்ட ஒர் ஒமோன் பொறிமுறை யாலெனக் கொள்ளப்படும். இந்த ஆட்சியானது எம்முறையில் ஒழுங்காக்
கம் செய்யப்படுமென்பதைக் கருதுவோம்.

Page 65
இளம் பெண் நோயியல்
ஒரளவுக்கு சுரப்பிக் கீழ்வளரி தன் செயலேத் தானே ஒழு ஒராக்கம் செய்யும். A.C.T.H (அ. கோ. து. g?J, T.S.H [ G0),35 து. ஒ1 P. S, H (பு. து. ஒ) உம் L. H (இ. ஒ) உம் தம் சுரப்பி குறியிலக்கு உறுப்புக்கள் வழியாக ஒரு பின்னுாட்டு ஆட்சிக்குள் அடங்கும். எடுத்துக்காட்டாக, குருதியில் தை ரொட்சினின் மட் டம் உயரவும் அது பித்துயித்தறியிலிருந்து தை. து. ஓமோனின் விடுத்தலே அடக்கும். எனவே கேடயச் சுரப்பிக்கு தை. து. மோனை சுரப்பதற்காகிய தூண்டல் குறையும். எனவே தைரொட் சின் மட்டம் நிலைபேருன மட்ட அளவை அடையும். மற்றைய ஒமோன்களின் குருதி மட்டம் இங்கு கூறப்பட்ட முறையால் பேனப்படும், ஆணுல் கீழ்ப்பரியத்துக்கோ அல்லது பித்துயித்தறி யின் முற்பக்கத்துக்கோ தாக்கம் நிகழ்ந்து ஒமோனின் குருதி மட் டம் குறைக்கப்படுகின்றதா என்ற கேள்வி பிறக்கின்றது. ஆய்வு களின் படி தைரொட்சின் நேரடியாக முற்பக்கப் பித்துயித்தறியை பும் கீழ்ப்பரியகத்தையும் தாக்குவதால் தைரொட்சின் சுரப்பா னது கட்டுப்படுத்தப்படும். ஏனைய ஓமோன்களைப் பொறுத் மட்டில் அவற்றின் பின்னுரட்டல் கீழ்ப்பரியகத்தை மட்டும் தாக்குவதால் அவற்றின் சுரத்தல் கட்டுப்படுத்தப்படுமென ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
கீழ்ப் பரியகத்து மையங்கள்
கீழ்ப்பரியகம் է 168 உடல் வினையங்களுடன் ஈடுபடும் பல்வேறு செயல்களை ஆட்சி செய்யும் பல மையங்கள் அதில் இருப்புச் செய் வனவெனக் கருதப்படும். சில கீழ்ப் பரியகப் பரப்புகளே சில தனித்திறன் வினையங்களுடன் தொடர்புபடுத்த முடியுமெனக் கருத் துக்கள் தெரிவிக்கப்பட்டது. உயர் பார்வைக் கருக்களும் பரஅ றைக் கருக்களும் முறையே ஊ, எ, ஒ (A. D. E) இன் சுரப்புட னும் ஒட்சிரோசின் சுரப்பு உடனும் தொடர்பு உடையன. முகிழ் பரப்பு (நடுசார் மேம்பாடு) சில குறித்த நியூரன்களின் கூட்டத்தை அடக்கியிருக்கும். இவற்றின் நுனைகள் வாயிற் கலங்களுள் வடிக் கும் தனித்திறன் மயிர்க்குழாய் அமைவில் முடிவடையும். இந்நீயூ ரன்கள் சுரப்பிக் கீழ்வளரிச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும். விடுத்தல் காரணிகளை (R. H) வாயிற் குகுதிக்கலன்களுள் சுரக்கும். வேறு சில ஆய்வுகள் கீழ்ப் பரியகத்தின் சில குறிப்பிட்ட பரப்பு கள் பித்துயித்தறியிலிருந்து விடுபடும் சில தனித் துரோப்பி ஒமோன்களுடன் தொடர்புடையதெனக் கூறுகின்றன. ஆனல்
 
 
 
 
 
 
 
 
 
 

இனப்பெருக்கமும் பரியகமும் 109
அது ஏனேயோரின் உறுதிப்படுத் தலைப் பெறவில்லை. கீழ்ப்பரியகத் இல் வேறு பல ஆட்சி மையங்கள் உள. அவை கீழே தரப்படு கின்றது.
1. நீர் - உள்ளெடுப்பு (2) இதய - கலனச் செ யற் பா டு (3) உடல் வெப்பநிலையாட்சி (4) துயில் (5) மன நெகிழ்வு நடத்தை (6) தன்னியக்கத் தொகுதி ஆணுல் பரியகத்தில் இவற்றை உணர்த்திக் காட்டக்கூடிய வரையறுப்புற்ற பரப்புகள்
இன்னும் காட்டப்படவில்லே,
மேலும் , பரியகத்தின் சில பிரதேயங்கள், பசியெடுத்தல், உணவு உள்ளெடுத்தல், குடற் செயற்பாடு ஆயவற்றுடன் ஈடு பாடு உடையன. குமிழ் பிரதேயத்து நைவுகள் உடற்கொழுமை யையும் மலட்டு நிலைமையையும் உண்டாக்குமென அறியப்படுகி றது. இக் குறிப்புகள் முக்கியம் வாய்ந்தன. ஊட்டவளமும் இனப் பெருக்கல் வினேயமும் ஒர் இணைவுற்ற தொழிற்பாடுடையன. அல் மாத இரிவானது மிகப் பருத்த கொழுமை வாய்ந்த பெண் களிலும், நரம்பு அல்லூட்டஉயாவிலும் தோன்றக் கூடும். எனவே நாம் உணரவேண்டியது சிக்கலமைவுடைய கீழ்ப்பரியகத்தில், யாதாயினும் ஒரு சிறுநைவு பல சிக்கல் விளைவுகளை விளைவிக்கும் என்பதாம் .
பிள்ளைப் பேற்று வேளையில் நிகழும் கடும் குருதியிழப்பில் அல் லது துளக்கு நிலையில் பெரும்படியாக குறை பித்துயித்தறியநோய் கோமா ஆகியன தோன்றி தாயானவள் இறக்கக்கூடும். (குருதி நாடிகளுக்கு கடும் பிடிப்பு நிலையுறுவதாலாம்). சில கிழமைகள் சென்று இறப்பவரில் முற்பக்கப் பித்துயித்தறியில் பெரும்படி யான பிணைத்தல் வாதை காணப்படும். சிறிதளவில் தாக்கப்பட்டு உயிர் தப்புவர்களில் குறைப்பித்துசயித்தறிய நிலைமை உண்டா கும். அல்மாதயிரிவு பெரும்பாலும் பல குறிகளுடன் ஒரு குறி யாகத் தோன்றும் .
பித்துயித்தறியும் சனனியூட்டிச் செயலும் இவற்றைப் பற்றிய அறிவு விலங்குகளில் செய்த ஆய்வுகளா
லும் மனிதனில் பல்வகைச் சாரக நோய் நிலைமைகளில் இருந்து பெற்ற குறிப்புகளாலும் பெறப்பட்டதாகும். விலங்குச் சோதனை

Page 66
0 இளம் பெண் நோயியல்
களில் இனத்துக்கு இனம் வேறுபாடு இருந்த போதிலும் இவற்றி லிருந்து பெற்ற அறிவைக் கொண்டு மனிதனில் நிகழும் நிலை மைகளை ஒரளவு பிழைபடாது அறியலாம்.
மீண்டும் நிகழ் இனப்பெருக்க வட்ட நிகழ்ச்சிகள்
மனிதப் பெண்ணையும் அடக்கிய உயர் விலங்குகளில் மாதந் தோறும் நிகழ் குருதியிரிவு ஒரு சிறப்பியல் பாகும். கீழினவிலங்கு கள் வெம் காம வட்ட நிகழ்ச்சிகளைத் தோற்றும். இனத்துக்கு இனம் இது வேறுபடும் , எ லிகளில் 4-5 நாட்களுக்கு ஒரு முறை யும், ஆடுகளில் ஆண்டுக்கு ஒரு முறையும் தோற்றும் . இவ்விலங் குகளில் பெண்ணுனது பாலின அமைதி நிலையிலிருந்து (அல்வெம் காம) பாலினக் கலவி நிலையை எய்தும். இதனுல் கருப்ப நிலைய டையும் அல்லது முன்னிருந்த அல்வெம் காம நிலையை மீண்டும் எய்தும். வெம் காம நிலையில் சூலகத்தில் முழு வளர்ச்சி அடைந்த முட்டை உண்டு. கருப்பையக வணியானது கருக்கட்டுண்ட முட்டை பதிந்து வளர்ச்சி அடைவதற்காகிய நிலையை அடையும் . விலங்குகளில் கருக்கட்டல் நிகழாவிடின் அகவணியானது அகற் றப்படாது மீளச் சுருங்கி முன்னிலையை அடையும்,
ஆணுல், மாதக் குருதியிரிவு மாற்றங்களோ வேறுபட்டவை. மனிதப் பெண்ணில் இது 28 நாட்களுக்கு (ஏறத்தாழ) ஒரு முறை நிகழும். கருப்பை அகவனி பெற்றுப் பெருக தழைப்பு மாற்றங் களே அடையும். கருப்பையக வணி தடித்து கடும் குருதிக்கலனச் செறிவை அடையும். இந்த அவத்தை நிலையானது நடுவட்டக் காலத்தில் சுரப்பு அவத்தை நிலைக்கு மாறும் . இதில் கருப்பைச் சுரப்பிகள் சுரத்தல் செய்து வீங்கி முறுகுறும். கிளேக்கோசனும் பாயியும் அகவணிப் பஞ்சணையத்தில் குவியும். கருக்கட்டல் நிகழா விடின் அகவணியின் அடிப்பகுதியைத் தவிர்ந்த எல்லாப் பகுதியும் உடைந்து மாதயிரிவாக வெளியகற்றப்படும். மீண்டும் வட்ட நிகழ்ச்சிகள் நிகழும் . அகவணியின் அடிப்படை மீண்டும் தழைப் புற்று பெற்றுப் பெருக அவத்தை நிலையை அடையும்.
மாத வட்டங்கள் முற்பக்கப் பித்துயித்தறியால் ஆட்சி செய் யப்படும். சனணி துரோப்பின்களால் சுரப்புக்கள் சுரக்கப்படா விடின் வட்டங்கள் நிகழா. வட்டத்தின் முதற் பாதி காலத்தில் கபத்தி பு: தூ. ஒ (F, S, H) புடைப்பு துண்டு ஒமோனைஐயும் சிறித ளவு இ. ஒ. (L, H) (இலூற்றிய ஒமோன்) ஐயும் சுரக்கும். இவை சூலகத்தைச் செயற்படுத்தி புடைப்பின் முதிர்வை உண்டாக்கும்;

இனப்பெருக்கமும் பரியகமும்
புடைப்புக் கலங்கள் ஈத்திரசனைச் சுரக்க சூலகத்தைத் துரண்டும் , குருதியில் ஈத்திரசனின் அளவு கூடி பித்துயித்தறி சுரப்பியை பின்னுரட்டுப் பொறிமுறையில் இயங்கச் செய்யும். இதனுல் F, S, H இன் சுரத்தல் விழுக்காடடையும். அதே வேளையில் L. H இன் சுரத்தல் தூண்டப்படும். இதன் செறிவு குருதியில் மிகை யடையும். சூல் (முட்டை) இடல் நிகழ 10 மணித்தியாலங்க ளுக்கு முன்னம் L. H இன் சுரத்தல் சுரக்க ஆரம்பமாகி, இறுதி இரு மணித்தியாலங்கள் மட்டில் இது விரைவில் நிகழ்வதுமல்லா மல் அளவில் மிக்க கூடுதலையும் அடையும். இக்கால வேளையில் சூலகமானது F S H ஆலும் சிறிதளவு L. H ஆலும் பதம் செய் யப்பட்டிருக்கும். இந்நிலையிலுள்ள சூலகத்தை L H இன் கொந்த ளிப்பானது செயற்படுத்தி முதிர் புடைப்பைப் பீறல் செய்து சூலை (முட்டையை) விடுதல் செய்யும் . இது உடனேயே கருப் பைக் குழலுட் சென்று பல நாட்கள் அதன் புழையுள் போக்குச் செய்து பின்னர் சுருப்பைக் குழியை அடையும். அனுபவ முறை யில் பிள்ளை வளம் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் குளோமி பின் போன்ற சனனியூட்டிப் பதார்த்தங்கள் சூலகங்களை மட்டு மீறித் தூண்டல் செய்து பல குல்களை (முட்டைகளை) இடுவதற் குத் தூண்டும்.
புடைப்பு உடைந்த பின்னர் L. H ஆனது மடிவுற்ற புடைப்பை நுதிக்கும். சிறும ணிக் கலங்களைச் செயற்படுத்தி இலூற்றிய உடலி யின் தழைப்பை ஊக்கிவிக்கும். அல்லாமலும் இதைத் தூண்டி புருேசெ சுற்றே னைச் சுரக்கச் செய்யும். L. H (இ. ஒ) ஆனது ஒரு இலூற்றிய ஊக்கியல்ல முட்டையானது கருக்கட்டலுறின், இலூற் றியவுடலியானது மனித கோறியோன் சனனியூட்டியின் (ம கோ. ச. து H. C. G) செயலால் பின்னர் பேணப்படும். கருக்கட்டல் நிகழாவிடின் 16 நாட்களுள் இலூற்றியவுடலியானது உட்சுருள் புறும் . புருெசெ சுற்றே னின் குறைவுபடுத்தல் உண்டாக்கப்பட்டு பின்னர் செவ்வ ன் மாதத் தீட்டு நிகழும்.
பல்வகை ஒமோன் தீர்வு முறைகள் குருதியிரிவை உண்டாக் கும். இவற்றுள் ஈத்திர சன் வழங்கலை நிறுத்தல் , ஈத்திரசனுல் பதப்படுத்திய அகவணிக்கு புருே செ சுற்ருேனை வழங்கல் அல்லது புருேசெ சுற்றே னை வழங்காது நிறுத்தல் ஆகியனவும் அடங்கும்.
பித்துயித்தறிச் செயற்பாட்டினுல் ஆணின் தோற்றக் கோலங்களும் பெண்ணின் தோற்றக் கோலங்களும்
ஆணின் பித்துயித்தறியும் பெண்ணின் பித்துயித்தறியும் F, S, H ஐயும் L. H ஐயும் சுரக்கும். F, S, H ஆனதுஆணில் சீமன்

Page 67
2 இளம் பெண் நோயியல்
காவிப் புன் குழாய்களின் தழைப்பைத் தூண்டும். சிலர் இந்த கலத்துரண்டு ஒமோன் ஆணில் முக்கியமில்லையென்றும் , ஒமோன் (1 C. S. H இ. க. தா. ஒ) தனியாகவே விதையின் முழுத் தழைப்பு வளர்ச்சியையும் பேம் உயிரிகளின் ஆக்கத்தையும் உண்டு பண்ணு மெனக் கருகின்றனர். இருந்தும் இந்த L, H (இ.ஒ.) பேம் பிறப் பித்தலின் பிந்திய படிநிலைகளில் கட்டாயமாகத் தேவைப்படும் மேலும் இது விதையின் இழைய இடைக்கலங்களின் வளர்ச்சி யையும் அந்திரசனின் சுரத்த லேயும் துரண்டும். ஆணில் F. H. S இன் சுரத்தல் ஒரு நிலைபேரு ன மட்ட அளவிலாகும். பெண்ணில சூல் இடல் வேளையில் ஓமோ னில் நிகழும் கொந்தழிப்பு ஆணில் நிகழ்வதில் லே. இதனுல் பெண்ணிலும் ஆணிலும் F.S.H இன் சுரத் தல் முறைகள் வேறுபடும். பித்துயித்தறியின் முற்பக்கப் பகுதி பரியகத்தின் ஆனேக்குள் அடங்கி வெவ்வேறளவில் சுரத்தலேச் சுரக்கின்றது. இந்த நரம்புத் தொகுதியின் ஆதிக்கப் பங்கைப் பற்றிய அறிவு பெரும் அளவில் விலங்கு ஆய்வுகளிலிருந்து பெறப் பட்டதே என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விலங்கினத்தில் எலியில் நிகழ்த்தப்பட்ட சோதனைகள் தெரிவிப் பது இந்தப் பரியகத்தினதும் பித்துபித்தறியினதும் கூட்டுத்தொ ழிற்பாடு எலி பிறக்கும் பொழுது ஆண் அல்லது பெண் என வகைப்படுத்தி காட்டுவதில்லை என்பதையே, எ லியின் பிறப்புறுப் புக்களைப் பொறுத்த மட்டில் தெளிவாக அது ஆணுகவோ அல் லது பெண்ணுகவோ இருக்கும். புனிற் று எ லிப்பேற்றுக்குப் பின் னர் எலி தன் சந்ததி அலகமைப்பை ஒட்டி வளரும். இதன் அகப் பிறந்த ஒமோன் சுரத்தலில் மேம்பட்ட அளவு ஈத்திர சகு கும். பூப்பு வேளையில் சிறப்பு மாத வட்ட சனணித்துரோப்பின் கள் சுரக்கப்படும். முளையத் தழைப்பில் ஆணின் விதைகள் செயற் படத் தொடங்கி அந்திரசன் சுரக்கப்பட்டு படிப்படியாக மேலும் ஆண் பிறப்புறுப்பு மாற்றங்களே தழைக்கப்பண் ணி முடிவில் ஒரு முற்றன ஆணை உருவாக்கும்.
புனிற்றுப் பேற்றுக் காலத்தில் அந்திரசன்கள் பரியகத்தை ஆண் கோலத் தன்மைகளுக்குரிய பரியகமாக மாற்றி பூப்பு வேளையில் L. H இன் கொந்தளிப்பில்லாத ஆண் வகைச் சனணித் துரோபின் (ஊட்டி) சுரத்தல்களை நிகழ்த்தும்.
இந்தத் தெரிபேருனது எலிகளிலிருந்து பெற்றபோதும் மனித கருப்பநிலையைப் பொறுத்த மட்டில் முக்கியம் வாய்ந்ததாகும்.
 
 
 
 
 
 
 
 
 

இனப்பெருக்கமும் பரியகமும் 113
தாயானவள் கருப்ப காலத்தில் அந்திர சன் அல்லது ஈந்திரசன் செயலாற்றல்களுடைய பதார்த்தங்களை உட்கொள்ளின், முதிர் வடையும் பரியகம் இவற்றல் பாதிக்கப்படும் தகமை உடையது. இதனுல் பரியக - பித்துயித்தறிக் கூட்டுத் தொடர்பு மாற்றம்
அடையக் கூடும் .
பூப்புப் பருவம் (பக்குவபடல்)
இது ஒரு திடீர் நிகழ்ச்சியில்லே. ஒர் அவத்தைப் படிநிலையில் வளர்ச்சியின் மலர்ச்சியாகும். இப் பக்குவமடை காலத்தில் இனப் பெருக்க உறுப்புக்கள் கட்டமைவிலும் தொழில் வினையங்களிலும் முதிர்ச்சியடையும். பித்துயித்தறியிலிருந்து வரும் துரோபின் (ஊட்டி) ஓமோன்களின் செயலாற்றலால், சனணிகளில் படிப்படி யாக நிகழும் மாற்றங்கள் முற்ருகவும், பெண்ணில் மூலவுயிர்க் கலங்கள் முறையே சூலிடலாகவும் ஆணில் சீமன் வெளிவீசலாக வும் நிகழ்த்தப்படும். இந்நிகழ்ச்சிகளின் காரணம் சனணி ஒமோன் களின் கூடுதலான சுரத்தல்களே. இவை இரண்டாவது பாலின இயல்புகளைத் தோற்றிய பின்புதான் நிகழும்.
மேலே கூறப்பட்டது போல் இனப்பெருக்க வினையத்தைப் பற்றிய அறிவும் பூப்புப் பருவத் தொடக்கமும், இதன் ஒமோன் பின்னண்ணியும், கபத்தியினதும் நரம்புத் தொகுதியினதும் செயற் பாட்டின் பங்கைப் பற்றிய அறிவும் விலங்கு ஆய்வுகளின் உதவி யால் பெற்ற வையாம்.
பூப்புப் பருவத்தின் தொடக்கக் காலம் பல காரணிகளால் பாதிக்கப்படும். ஒன்று பிறப்புரிமை இயல்புகள் மற்றையது முக் கியமாக ஊட்ட வளம் ஆகும். குறையுணவூட்டமானது பூப்புப் பருவத்தின் தொடக்கத்தைச் சுணக்கம் செய்யும். கூடிய ஊட்ட வளம் பூப்பை இளம் காலத்திலேயே தொடக்கிவிடும். இன்னும் பல புறத்துச் சூழற் காரணங்கள் பூப்புப் பருவத்தின் தொடக் கத்தை பாதிக்கும்.
குழந்தை வளம் : இவ்வளம் பெண்களில் 28-30 வயதிற்கு மேல், படிப்படியாகக் குறைவடையும். எலிகளில் வயதுகூடவும் சூல் இடும்புடைப்புக்கள் குறைவு அடையும். சூலும் அவ்வளவு இலகுவில் கருக்கட்டல் அடையாது. கருக்கட்டலுற்ற சூல்கள் நிறை மாத வளர்ச்சியடைவதில்லை. சூலிடலுக்கும் கருக்கட்டலுக் கும் கிடைக்கக்கூடிய சூல் குழியங்களின் எண்ணிக்கையும் குறை வடையும். -

Page 68
114 இளம் பெண் நோயியல்
இவ்வகையான காரணிகளே பெண்களையும் பாதிக்கின்றன.
பரியக - பித்துயித்தறி வினையத்தின் குறைபாடுகள் குழந்தை வளத்தைக் குறைக்கும். இது சிறப்பாக சூலகங்களுக்கே வழு வலே உண்டாக்கும். இவ்வகை வளக்குறைவை சனனித்துரோப் பின் (ஊட்டி) ஓமோன்களைக் கொடுப்பதால் தீர்வு செய்யலாம். மனித பித்துயித்தறிச் சுரப்பிகளிலிருந்து பெற்ற தயாரிப்புக்கள் மிகவும் செயற்றிறனுடையன. குளோமிபினையும் சனனித் துரோப் பின்களையும் கொண்டு சூலிடலை நிகழ்த்தலாம் , பின்னர் இத் இர்வு முறைகள் விபரிக்கப்படும்.
கருப்பநிலை
கருப்ப நிலையில் பரியகத்தினதும் பித்துயித்தறிச் சுரப்பியின தும் முக்கியத்துவமானது கருப்ப அவத்தை நிலையையும், கருப்ப முண்ட விலங்கினத்தையும் பொறுத்திருக்கும். முளையத்தின் அரும் பர் சிறைப்பையின் நாட்டப்படும் அவத்தை நிலைக்கும், கரு ப் பையில் இதன் இளம்பருவ வளர்ச்சிக் காலத்திற்கும் இலூற்றிய உடலி தொடர்ந்து புருேசெ சுற்ருேனைச் சுரக்க வேண்டும். இந்த இலூற்றியச் சுரப்பு (பரியக ஆட்சிக்குக் கீழான) பித்துயித்தறி யில் (இ. ஒ) தங்கியிருக்கும்.
இவ்வகையான இளம் படு கருப்ப அவத்கை நிலைகளில் சில விலங்கினங்களில் மீண்டும் சூலகங்களின் வளர்ச்சிக்கு கரு வானது பித்துயித்தறியை எதிர்பார்த்திருக்கும். மனித இ ன த்  ைத ப் பொறுத்த மட்டில் இவ் வளர்ச்சியானது ஈத்திரசனையும் புருே செசுற்முேனையும் சுரக்கும் வித்தகத்தில் தங்கியிருக்கும். சூலகங்கள் இவர்களுக்குக் கருப்ப நிலையைத் தொடர்ந்து பேணுவதற்குத் தேவையில்லையாம் .
மாதவிடைவு
இனப்பெருக்கலுடன் தொடர்புடைய ஒமோன் சுரத்தல் வட் டங்களின் நிறுத்தமானது பரியக - பித்துயிதறிக் கூட்டில் வினைய இழப்பு நிகழ்வதால் அல்ல. சிறப்பாக சூலக வழுவலாலாம். இவ் வழுவலால் பித்துயித்தறிக்கு ஒருவித பின்னூட்டத் தடுப்பும் இல்லாத படியால், இது கூடிய அளவுகளில் சனனியூட்டிகளைச் சுரக்கும். மாதவிடைவுக் காலத்தில் மனிதப் பெண்ணின் பித்து யித்தறியில் கூடிய F.S.H (பு. தூ. ஒ) அடக்கப்பட்டிருக்கும். ஆனல் க்கு (இ. ஒ) இவ்வகையான அதிகரிப்பு உண்டாவதில்லை.

இனப்பெருக்கமும் பரியகமும் 15
மாதவிடைவு காலத்தில் தோற்றும் குழப்பங்கள் குலக 6)/(ԼՔ 67/ லால் மிகவும் கூடும். விஞ்சிய பித்துயித்தறிச் சனனிது துரோ பின்களும் இக் குழப்பங்களுக்குக் காரணமாக இருக்கக்கூடும்.
மாதவிடாய் நிறுத் தத்தினுல் சூலக வினேயத்துக்கு இறுதி நிறுத்தல் உண்டாகிவிட்டதென்ற கருத்து சரியானது இலலை. சிலரில் மாதவிடாய் நின்று பல மாதங்கள் சென்ற பின்னும் அல்லது பல ஆண்டுகள் சென்ற பின்னரும் இருந்திட்டொருக் கால் கருப்பம் உண்டாவதைக் கண்டிருக்கின்றேம்.

Page 69
இயல் 8
நரம்பு அகச்சுரப்பி, பித்துயித்தறி, சூலக ஒமோன்கள் ஆகியவற்றினது ஒருங்கிணை வினையங்கள்.
1. கூம்புருச் சுரப்பி
நரம்பு அகச் சுரப்பிகளுள் கூம்புருச் சுரப்பியும் வினையத் இல் பங்கு எடுக்கின்றது, என்னும் கருத்தானது தற்காலத்தில் வலியுறுத்தப்படுகின்றது. ஆண் குழந்தைகளில் கூம்புருச் சுரப்பிக் கழலையங்கள் இருப்பின் பாலியல் முதிர்ச்சியானது பருவத்துக்கு முன்நிகழ்வதாக அறியப்படுகின்றது. இன்டோல்கள் என்னும் பதார்த்தங்கள் சனனித் துரோப்பின் (ஊட்டி) வினையத்தைப் பாதிக்குமெனக் காட்டப்பட்டது. ஒரு தனிச் சிறப்பு இன்டோல் வகுப்பைச் சேர்ந்த மெலரொனின் ஆனது கூம்பகச் சுரப்பியால் சுரக்கப்படும். இது திரிப்பரோபானில் இருந்து சிறப்பு நொதி பங்களின் தாக்கத்தினுல் பெறப்படும். பாலூட்டிகளின் கூம்பகச் சுரப்பியின் முக்கிய உட்காவு தூண்டல் சூரிய ஒளியாகும். வேறு சில ஆய்வாளர் கூம்பகச் சுரப்பி ஒரு சுரப்பி அல்ல என்றும் பரியகத்து மையங்கள் போல் இது நரம்பகச் மரப்பி " ஊடுகடத்தி என்றும், இவை குருதியோட்டம் ஊடாகத் தாக்கல் செய்யாது நரம்பு வழியாக பரிபாடைத் தூதுச் செய்திகளைச் சுரக்கும் என றும் கூறுவர்.
மனிதனில் இச் சுரப்பியைப் பற்றிய விளக்கம் இன்னமும் தெளிவாகவில்லை.
2. பரியக விடுத்தல் செய்காரணிகள்
பரியக நரம்பு மையங்கள் நரம்பு ஊடுகடத்திகளாம். இவை தம் நரம்பு நுனைகளிலிருத்து விடுத்தல் செய்காரணிகளே உண் டாக்கி, இவை வாயிற் குருதிச் சுற்ருேட்டம் வழியாகப் பித்து யித்தறிக்குச் சேர்க்கப்படும். சிறப்பாகப் பரியக நரம்புக் கார னிகளை ஏழு வரையறுக்கப்பட்ட நரம்பு ஒமோன்களாக வகைப் படுத்தலாம். இவற்றைவிடச் சில ஐயப்பாட்டு வினையச் செய்கை யுடைய ஓமோன்களும் உள. இவற்றுள் சனனித் துரோப்பின் விடுத்தலை ஆட்சி செய்யும், முக்கிய பதார்த்கங்கள் பற்றி கீழே
விபரிக்கப்படும்.
 

நரம்பு அகச்சுரப்பி. ஒருங்கிணை வினையங்கள் 117
இலூற்றினுக்க ஒமோனே விடுத்தல் செய்காரணி (இ. வி. கா L. R. F)
இது மனிதனிலும் உண்டென்பதற்குச் சான்றுகள் உள. இந்த ஒமோன் பரியகத்தின் உயர் கயசு மாப்பகுதி. வில்லுருப் பகுதி ஆகிய இரு பிரதேயங்களில் இருந்தும் சுரக்கப்படுமென நம் பப்படுகின்றது. இது நடுசார் மேம்பாட்டிடத்தில் இடவைப்புறும். இந்த ஒமோனின் சுரத்தலை ஆட்சி செய்யும் முறைகள் செவ்வி தாக அறியப்படவில்லை. ஈத்திர சன்கள் இடநேர்த் தாக்க லாலும் அல்லது உடற் ருெ குதி முறைத் தாக்கலாலும் இ.வி. காரணிகளின் சேமிப்பைக் குறைக்கும். ( நெடு எதிர்முறை பின் னுரட்டு) சிறிய தொகையளவில் ஈத்திரசன்கள் இ. ஒ (L. H ) சேமிப்பைக் குறைத்து பிளாசுமா இலுரற்றிய ஒமோனைக் கூட்டு மெனவும் அறியப்படும். (நெடு நேர்முறை பின்னுரட்டு முறை), வேறு ஆட்சிமுறைக் கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டன. இ.வி. கா (L, R, H) மனிதப் பெண்களில் பிளாசுமா இ. ஒமோனைக் கூட்டு மெனவும் காட்டப்பட்டுள்ளது.
புடகத்தூண்டி ஒமோன் விடுத்தல் செய்காரணி (பு. தூ. ஒ. வி. Eft F. S. H. R. F)
இது முந்திய இலூ. வி. காரணியில் இருந்தும் புறம்பான தெனக் காட்டப்பட்டது. இது பரிய கத்தின் பரவறைப் பகுதியி லுள்ள தனி மையத்தில் தொகுக்கப்பட்டு நடுசார் மேம்பாட்டில் சேமிக்கப்படும் என எண்ணப்படும். இப் பதார்த்தம் தீர்வு முறைக் குப் பயன்படக் கூடும் . எரு தின் புதூ. ஒ. வி. காரணியைப் பயன் படுத்தி முன்னரே குல் உலுர்த்தல் நிகழ்த் தாப் பெண்களில் சூல் களை உதிரச் செய்தனர்.
இப் ப ார்த்தங்கள் சனணியூட்டி (துரோபின்) ஒமோன்களின் பேருரு மூலக் கூறுகள் போலன்று; சிறிய மூலக்கூறுகளால் ஆன
60 at u I T if
சனனியூட்டிகள் (கொணுடோதுரோபின்கள்)
இவையாவன புடகம் தூண்டு ஒமோன் (பு. தூ. ஒ F, S, H) இலூற்றினுக்கு ஒமோன் (இ. ஒ L, H) இலூற்றியதுரோபின் (ஊட்டி) ஓமோன் (இ. தூ. ஒ-புருே லாற்றின்) என்பனவாம். சூலக ஆளுகை செய்வதில் முதலிரண்டும் தொழிற்படும். மனித னில் விலங்குகளிலிருப்பது போலன்று, புருே லாற்றின் புறம்பான ஒரு பதார்த்தமாக இருக்கின்றதென்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனல் இது மனித வளர்ச்சி ஓமோனுடன் (ம. வ. ஒ S. T. H)

Page 70
8 இளம் பெண் நோயியல்
சேர்ந்திருக்கும். இருந்தும் சாரகச் சான்றுகள் இது புறம்பாக இருக்கக் கூடுமெனப் பகரும். பு, தூ ஒ (R. S H), இ. ஒ (L. H) னையும் உயிரியல் முறையில் தூய நிலையில் ஊறுநீரிலிருந்து பெற முடியும் .
பு: தூ. ஒ (R. S. H) புடகம் தூண்டு ஒமோன்
உயிரியல் முறைச் செயற்பாடுகளுக்காக மிகத் தூய மனித பு. து. ஒமோன் தயாரிப்புகள் தற்காலத்தில் உண்டு. இப்பதார் தம் புடகங்களே முதிர்வடையச் செய்யும். ஆணுல் தெரோயிட்டுப் பதார்த்தங்களே உண்டாக்கா. அவை புருெசெ சுற்றருேன் , 17 ஐத ரொட்சி புருேசெசுற்றேன், ஈத்திர டயோல் என்பன, சிறைப் பைப் புடகங்களையும் முட்டையிடற் புடகங்களையும் எலிகளில் @_GöT_霹T芭巴历fT。
இலூற்றிய ஓமோன் (இ. ஒL. H)
இது முதிர்வடையா விலங்குகளிலும் கீழ்வளரி அகற்றிய விலங்குகளிலும் சூலகங்களைப் பாதிக்காது. இது முதிர்வுற்ற விலங்கு களிலும்-கீழ்வளரி அகற்றப்பட்டு பு. தூ. ஒமோனுல் தீர்வுபெற்ற விலங்குகளிலும் , சூலிடலேயும் இலூற்றினுக்கத்தையும் குறி பிலக்கு உறுப்புக்களில் சுரக்கப்பட்ட தெரோயிட்டுக்களின் விளை வுகளையும் உண்டாக்கும் .
மனித இலூற்றிய உடலியைப் பொறுத்த மட்டில் இதன் வாழ்க்கைக் காலத்தை வரையறுப்புச் செய்வது வில் லங்கமாகும். இதற்குரிய கால வரையறுப்பு உண்டு. ஆணுல் கருக்கட்டுண்ட சூல் கருப்பையக வணியுள் உறைந்த பின்னர் மனித கோறியோன் சனனியூட்டி ஒமோனுனது (H. C. G) இதன் வினையத்தைத் தானே ஏற்றுக் கொள்ளும் . இலூ. ஒ (L. H) ஐக் கொண்டு தூண்டின் புருேசெசுற்றேன் தொகுப்பும் கலவக் கொலெத்த ரோல் வைப் புக்களின் வறிதாக்கலும் நிகழும். இது புதிதாக கொலெத்த ரோலைத் தொகுக்கின்றது என்பதற்குச் சான்றுகள் இல்லை.
சூலகத்தில் குளுக்கோ சின் அனுசேபம் கூடும். ஆணுல் இலூற்றிய ஓமோன் தூண்டலால் மிகையுற்ற கொலெத்த ரோல் - புருே செ சுற்றறென் மாற்றமானது சூலகத்தில் உண்டாவதில்லை. எனினும் இவ்வனுசேபம் இ. ஒமோனல் வறிதாக்கம் பெற்ற கொலெத்த ரோலை மீண்டும் நிறைவுறுத்துவதில் பங்கெடுக்கக் கூடும்.
சூலகமும் அதிரனல் காரோடும் தெரோயிட்டுகளின் է 167) தொகுப்புப் படிகளைப் பொறுத்த மட்டில் ஒரே மாதிரியான
 

19
வையாம், இதற்கு வியப்பு அடையத் தேவையில்லை. ஏனெனில் முளைய இயல் முறையில் சூலகமும் அதிரனல் காரோடும் டு ஆர் மான மான உறுப்புக்களாகும்.
சூலகத்திலிருந்து பெறப்படும் தெரோயிட்டுகளான ஈத்திரசன் களும், புருேசெ சுற்ற ருேனும் விதைகளிலிருந்து பெறப்படும் அந் திரசன்களும், சைக்கிளோ பென்ரீன் பினன் திறீனின் பல்வேறு பெறுதிகளாகும். இவற்றின் உயிரியல் தொகுப்பு முறைகளே உயி ரியல் இராசாயன நூல்களில் பார்க்கவும்.
விலங்குச் சூலகங்களே பு: தூ. ஒ (F, S, H) ஆல் தூண்டிப் பதப் படுத்திய பின்பு இ. ஒ (L, H) ஐக் கொண்டு தூண்டின்
i) சூலகங்களின் பஞ்சனையத்திலிருந்து அந்திரொசுத்தெனி டியோன், திஐதரோஎப்பிஅந்திர ரொசுத் தெரோன், தெ சுத்தொ சுற்ற ருேன் ஆகியவற்றையும் சிறிதளவில் ஈத்திர டயோல் புருேசெ சுற்றருேனேயும் தொகுப்புச் செய்யும்.
i) இவற்றிலிருக்கும் புடங்கள் சிறப்பாக ஈத்திரச டயோலே யும் சிறிதளவு புருேசெ சுற்ருேனையும் அந்திரசன்களேயும் தொகுப்புச் செய்யும்.
i) இலூற்றியவுடலியானது பெரும் அளவில் புருேசெ சுற் ருேனையும், குறிப்பிடத்தக் கவளவு ஈத்திரச டயோலேயும் சுரக்கும்.
மனித மாதவிடாய் வட்டத்தில் கலவ மாற்றங்களுடன் நிக ழும் தெரோயிட்டுப் பிறப்புகளைப் பற்றிய தருபேறுகள் மிகக் குறைவாம். ஆனல் பெருமளவில் விலங்குகளில் தெரோயிட்டுக் களுக்கு நிகழ்வன போலெனக் கண்ணுடியக இலூற்றியவுடலியின் தெரிபேறுகள் தெரிவிக்கின்றன.
ஈத்திரசன்கள் இவை யெல்லாம் அந்திரசன் பிறப்பி முன்தோற் றங்களில் இருந்து உண்டாக்கப்படுவன. சிறப்பாக சூலகப் புட கங்களிலிருந்தும் பின்னர் இவற்றிலிருந்து உருவாகும் இலூற்றி யின் உடலியில் இருந்தும் உருவாகும். உயர் ஊறுரிறிக் காரோட்டி லிருந்தும் சிறிதளவில் இவை சுரக்கப்படும். கருப்பகாலத்தில் கருவுருவின் உயரூறுநீரிக்காரோடு, ஈரல் ஆய உறுப்புக்களிலிருந்து பெருமளவில் உருவாகி சூல்வித்தகம் ஊடாகத் தாயின் சுற்றேட் டத்தை அடைந்து ஊறுநீரில் கழிக்கப்படும்.

Page 71
20 இளம் பெண் நோயியல்
சூலகமானது ஈத்திரசடயோலே (கொலெத்தரோலில் இருந்தும் , புருே செசுற்ருே னில் இருந்தும்) உருவாக்கும். இவை இழிந்து, முக்கிய ஈத்திரசன்களான ஈத்திரோன், ஈத்திரியோல் ஆக மாறும்.
மனிதக் குருதியில் மாதவிடாய் வட்டத்தில் ஈத்திரசன்களின் செறிவு மிகக் குறைவா ம் . இவற்றின் அளவை ஆய்வு செய்வ தற்குப் பல ஆய்வு முறைகள் உள.
ஈத்திரசன்களின் வினையச் செய்கைகள்
1. இரண்டாவது நிகழ் பாலினச் சிறப்பியல்புகள்.
பூப்பு பக்குவ வளர்ச்சி காலத்தில் உடற் தோற்ற மாற்றங் களை நிகழ்த்திப் பாலின முதிர்வை முன் ணுணர்த்தல் செய்யும் . இவையெல்லாம் சிறிதளவில் சுரக்கப்படும் ஈத்திரசனுலாம். உடற் கட்டு மாற்றங்களாவன - முலைகள் அதி வளர்ச்சியடையும். பூப்பு கமுக்கட்டுப் பிரதேசங்களில் மயிர்கள் முளைக்கும். அபச் சுரப்பி கள் சுரக்கும். குரல் மாறும் . முகமும் உடற் கட்டும் மாறும் . கொழுப்பானது குண்டிகளிலும் தொடைகளிலும் இடப்படும்.
2. கருப்பை, கருப்பைக் குழாய்கள், கீழ் பிறப்புச் சுவடு என்ப வற்றை ஈத்திரசன்களின் சுரப்பானது அதியூட்டம் செய்து வளர்க் கும். கருப்ப நிலையில் இவற்றிற்கு அதியூட்ட வளர்ச்சியும் கடும் கலனச் செறிவும் செய்யும். மாத விடைவுக்குப் பின் இச் சுரத்தல் குறைவு அடைந்து இவ் உறுப்புக்கள் அற்கல் (அல் லூட்டம்) அடையும் .
எலிகளில் செய்த சோதனேயில் ஈத்திர டயோலே அவற்றிற்குக் கொடுப்பின், உடனடி விளைவை உண்டாக்கக் கூடிய இழையங் களான கருப்பை, யோனியுறை பித்துயித்தறி ஆகியன அதனை தம்முடன் கூட்டிணைப்புச் செய்து நீடிய கால அளவுக்குத் தம்முள் அடக்கி வைத்திருக்கும். உடனடி விளைவை உண்டாக்க முடியாத ஈரல், ஊறுநீரி, தசை, போன்றவற்றில் இதன் செறிவு குருதி யுள்ளுள்ள செறிவிலும் பார்க்க குறைந்து இருக்கும்.
கருப்பையானது ஈத்திர டயோலைப் பிணைப்பது போல், ஈத்தி ரோனைப் பிணைக்காது. ஆய்வாளர்களின் கருத்தின்படி ஈத்திரசன் களை பிணைப்புறக் கூடிய உறுப்புக்களில் குறிப்பிலக்கு இழையச் சிறப்பு வாங்கியொன்றுதான் பிணைக்கும்.
ஈத்திரசனுனது சுருப்பை அக வணியில் மாதந்தோறும் நிகழும் பெற்றுப்பெரு கல் அவத்தையை ஆளுகை செய்யும். இது மாத
 

2.
வட்டத்தில் நிகழும். சுரப்பு அவத்தையில் கருப்பையக வணிக்குத் தடிப்பை உண்டாக்கும். இதனுல் வினையத்தில் ஈடுபடும் பிரதே யத்திலுள்ள புரியுற்ற புன்னுடிகளுக்கு குறிப்பிடத்தக்க நீட்சியை
உண்டாக்கும்.
ஈத்திர சனை பின்னிடைவு செய்யின் அது மாதவிடாயை உண் டாக்கும் .
ஈத்திரசன்கள் கருப்பைக் கழுத்துச் சுரப்பினைத் துண்டி மிதமிஞ்சிய தெளிவான கார மியூக்கசைச் சுரக்கச் செய்யும். இது பேம் உயிரிகள் யோனிப் பாயியின் அமிலத்தால் கொல்லப்படா மல் இருக்க பாதுகாப்பை அளிக்கும். சூலிடும் வேளையில் ஈத்திர சன்களின் குருதிச் செறிவானது உச்ச அளவில் இருப்பதால் யோனியின் அமில நிலையும் உயர்ந்திருக்கும். மாதவிடாயின் முதற் பாதிக் காலத்திற் சுரக்கப்படும் கழுத்து மியூக்கசை, கண்ணுடிச் சிறு தகட்டில் பரப்பி உலரவிடின் அதிலிருக்கும் சோடியம் குளோ றைட்டுப் பளிங்குகள் ஒரு பேண்’ FERN, செடி இலை போன்ற அமைப்பினை அடையும். சூலுற்று இருப்பின் பிந்திய பாதி வட் டத்தில் இவ்வகையான தோற்றத்தை மியூக்கசு அடைய மாட் LIT gil.
ஈத்திரசன்கள் யோனியின் மேலணிக் கலங்களைப் பெற்றுப் பெருக்கம் அடையச் செய்து மேற்பரப்பில் படைகளாக அமைந்த அடுக்குகளைத் தடிப்புறச் செய்து, இக்கலங்களுள் கிளைக்கோசனை கூடிய அளவில் அடக்கும். இச்சூழலில் டோடலன் பசில சுகள் பெருக்கமடைந்து கிளைக்கோசனை இலற்றிக்கமிலமாக மாற்றும். யோனி PH ஆனது தாழ்த்தப்படும். இலற்றிக் அமிலமானது நுண்ணுயிரிகளை உட்செல்லாது கொன்று யோனிக்குப் பாதுகாப் பளிக்கும்.
கருப்பைக் குழாய்கள். ஈத்திரசன் இவற்றின் நகரும் தகமையை மிகைப்படுத்தும். இதனுல் சூல்களை (முட்டைகளை) குழாய்களு டாகக் கருப்பைக்கு நகர்த்தும். ஈத்திரசன் உடலில் நீரையும் உப்பையும் தேக்கம் செய்யும். சிறப்பாக இத்தேக்கம் மாத விடாய்க்கு முன்பு நிகழும்.
பித்துயித்தறிச் செயற்பாடு
பித்துயித்தறியானது சூலகங்களைத் தன் ஆணைக்குள் உட்படுத்தி மாதவிடாயை நிகழ்த்துமென முன்னர் அறிந்தோம். ஆனல் இதன்

Page 72
*2名 இளம் பெண் நோயியல்
பேணலில் ஈத்திரசன்களும் முக்கிய பங்கெடுக்கும். தொடக்கத் தில் குருதியில் நிகழும் ஈத்திரசனின் உயர் செறிவு பித்துயித் தறியைத் தூண்டி F.S.H ஒமோனின் சுரத்தலை உட் தடுப்புச் செய்து இலூற்றினுக்க ஓமோனை (L. H) யும், இலூற்றியவூட்டி ஒமோனையும் சுரப்புறத் தூண்டும். கருப்பநிலை நிகழாவிடின் இலூற்றிய உடலியானது சிதலமடையும். ஈத்திரசனின் செறிவும்
விழுக்காடுறும் .
முலேகள் -
ஈத்திரசன் முலைகளின் கான் தொகுதிகளே பெருக்கம் அடை யச் செய்யும். புல்லறைகளின் தழைப்புக்கு புருே செ சுற்ற்றேன் தேவைப்படும். தீர்வு முறையில் ஈத்திரசன்களை கொடுத்து, பித்து யித்தறியைத் தாக்கி பாற் சுரத்தலை நிறுத்துவதற்குப் பயன்படுத்து வர். முலைக் காசினுேமாவில் சூலகங்களை அகற்றுவர்.
கருப்ப நிலையில் ஈத்திரசன்கள் பெருமளவில் சுரக்கப்படும். இதில் பெருந்தொகை கரு உரு வின் உயர் ஊறுநீரியின் காரோட் டில் உருவாகும். சிறிய தொகை சூல்வித்தகத்தில் உருவாகும். ஊறுநீர் வழியாக நிகழும் ஈத்திரசனின் கழிவு ஈத்திரியோலாக கருப்பநிலைக்கு முன்பு 0.12 மிகி அளவிலிருந்து கருப்பம் நிறைவு அடையவும் 10.15 மி.கி அளவுக்கு உயரும். இதனுல் கருப்பை யானது அதியூட்டம் அடைந்து பெருக்கும் முலைகள் முழுத் தழைப்பை அடையும். அதிகுருதிமையும் உண்டாகும். நீரும் உப்பும் தேக்கம் அடையும் .
புருேசெசுற்றறேன்
இது இலூற்றிய உடலியால் ஈத்திர டயோலுடன் சுரக்கப் படும். இது சூலிடலுக்கும் பின்பு கருப்பையக வணிக்கும் சுரப்பு மாற்றங்களை இயற்றும். இது ஈரலில் பிறெக்னன் டயோல் ஆக வும் வேறு பதார்த்தங்களாகவும் மாற்றப்பட்டு ஊறுநீரிலும் பித் தத்திலும் கழிக்கப்படும். பிறெக்னன் டயோல் ஊறுநீரில் உறும் செறிவைப் பல சிறப்பு ஆய்வு முறைகளாலும், குருதியில் நிலவும் புருேசெ சுற்றமுேன் செறிவை வாயு-திரவ நிற வரையி முறை யாலும் மதிப்பிட முடியும் . 1 1
புருேசெசுற்றறேனின் தொழிலியல் வினையங்கள்
1. கருப்பையகவணி சூலிடலுக்குப் பின் கருப்பையக வணிக்கு இச் சுரப்பானது அதிபரவூட்ட வளர்ச்சியை உண்டாக்கும். இது

93
நிகழ்வதற்கு முன்பு ஈத்திரசன் அகவணியைப் பதப்படுத்தல்
செய்ய வேண்டும்.
சூலிடலைத் தொடர்ந்து நிகழும் மாதவிடாய்க்கு இதன் செறி வுக் குறைவுதான் காரணமெனக் கூறுவர். ஆணுல் பலர் ஈத்திரசன் செறிவுக் குறைவுதான் இதற்குக் காரணமெனக் கூறுவர்.
கருப்ப நிலையில் இது கருக்கட்டலுற்ற சூல் நாட்டல் உறுவ தற்கு கருப்பை அகவணிக்கு அதிபரவூட்டல் வளர்ச்சியையும், பின்னர் உதிரி மாற்றங்களையும் நிகழ்த்தும். இது சூலிடலுக்கு முன்பு கருப்பையில் அடிக்கடி நிகழும் கிறிய சுருக்கங்களே சுணக்கியும் மெதுவாக்கியும் , அவற்றின் வலிவைக் கூட்டியும், அவை நிலைக்கும் கால அளவைக் கூட்டியும் செயலாற்றுகின்
நிறது :
கருப்ப நிலையைப் பேணல் செய்வதற்குப் புருேசெ சுற்ற ருே னின் சுரப்பு முக்கியமாகத் தேவைப்படும். முதற்கிழமைகளில் இலூற்றிய உடலியானது கோறியோன் விரலின்களின் சுரப்பால் தூண்டப்பட்டு புருேசெ சுற்றமுேனைக் சுரக்கின்றது. இது 10 - 14 ஆம் கிழமைகள் அளவில் கோறியோனுலும் பின்னர் சூல் வித்தகத் தாலும் சுரக்கப்படும். ஈத்திரசனுல் முன்னதாகப் பதப்படுத்திய முலைச் சிற்றறைகளின் சுரப்பு இழையத்தை வளரச் செய்யும்.
புறேலற்றின் இது சிறப்பாக விலங்குகளில் ஈத்திரசனுலும் புருே செ சுற்றருேனலும் பதப்படுத்திய முலைகளில் பாலாக்கத்தைத் தொடக்கி நிலைபேருகப் பேணும். செயலில் இது சனனியூட்டி ஒமோனன இலூற்றியோ துரோபினைப் போன்ற தாம். ஆனல் பெண்களில் பேற்றுக்குப் பின்னர் இது இம்மாதிரியான விளைவை உண்டாக்குவதில்லை.
ஒட்சிரோசின் இது கருப்பையின் மழமழப்புத் த  ைச  ைய த் தூண்டி வலிவான சுருக்கங்களை உண்டாக்கும். கருப்ப நிலையின் பிந்திய காலத்தில் இதன் சுரப்பு கூடுதலடையும் .
கொணுடோதுரோபின்களினதும் (சனனியூட்டி ஒமோன்) சூலகத்தெரோயிட்டுகளினதும் சுரப்பும் கழிப்பும்
சூலிடல் வட்டங்களில்
கொனடோ துரோபின்கள் (சனனியூட்டி ஒமோன்கள்) பி துயித்தறியிலிருந்து இவற்றின் ஆக்கம் , சேமிப்பு, சுரப்பு ஆகிய

Page 73
24 இளம் பெண் நோயியல்
வற்றைப் பற்றிய தெளிவான அறிவு மனிதனிலிருந்து பெறப் படவேயில்லை. குருதி, ஊறுநீர் போன்ற பாயிகளைப் பொறுத்த மட்டில் கூடிய தெளிவான அறிவுண்டு. இதுவும் 1960 ஆம் ஆண் டுக்குப் பின்னர் கூடிய செவ்விதமுடைய மதிப்பீடுகளைக் கண்டு பிடித்த பினனர்தான் தெளிவு எய்தப்பட்டது. தற்காலத்தில் ஏம வளிப்பு அளவு மதிப்பீடுகளும், இறேடியோ ஏ மவளிப்பளவு மதிப்பீடுகளும் உள. *、
1967 ஆம் ஆண்டு மட்டில் இவ்வகையான ஆய்வு முறைக ளால் மாதவிடாய் வட்டத்தில் பு. தூ. ஒ (F, S, H) சுரப்பைப் பொறுத்தமட்டில் இதற்கு இரு ஏற்றச் சிகரங்கள் உண்டு என அறிந்தனர். முதலாவது கூரியேற்றமானது பெருக்கல் அவத்தை நிலையிலும், இரண்டாவது ஏற்றம் சூலிடல் வேளையில் அல்லது அதனை அண்மித்தும் நிகழும். பு, தூ. ஒ. வின் மட்டங்கள் மாத விடாய்த் தொடக்கத்திலிருந்து உயர்வடைந்து 4 ஆம் நாள் அள வில் புடகத் தழைப்பு சிகர உச்ச அளவை அடையும். பின்னர் F, S, H பு: தூ. ஒ விரைவில் தாழ்தல் அடைந்து மிகத் தாழ்வை நடு வட்ட நாட்களுக்கு முன் எய்தும். இதனைத் தொடர்ந்து உயர்வில் குறைவான செறிவு உச்சத்தை (இரண்டாம் சிகரம்) எய்தும். இது பெரும்பாலும் இலூ. ஒ (L. H) ஆனது எய்தும் நடு வட்ட காலச் சிகரத்துடன் ஒத்திருக்கும். (28 நாள் மாத வட்டத்தில்) இலூற்றிய அவத்தையில் இதன் செறிவு மட்டம் திடீர் விழுக்காடடைந்து அடுத்த மாதத்திட்டு வருவதற்குப் பல நாட்களுக்கு முன்பு இதன் செறிவு மட்டம் தொடர்ந்து தாழ்வடையும். இதன் பின்பு மாதத்தீட்டு உண்டாகி 4 ஆம் நாளவில் இது படிப்படியாக உச்ச உயர்வை அடையும் (முன்னம் கூறிய முதலாம் உயர்வுச் சிகரம்).
இலூற்றிய ஒமோனைப் பொறுத்த மட்டில் (L. H) மாத வட்ட நடுப்பகுதியில் இதன் குருதிச் செறிவும், ஊறுநீர்ச் செறிவும் சிகர உச்சியை எய்தும். எஞ்சிய சுாலப் பகுதிகளில் "தாழ்ந்த செறிவு மட்டங்களே எய்தும், இலூற்றிய அவத்தை நிலையிலும் இது புடக அவுத்தை நிலையிலும் பார்க்க மிகத் தாழ்வான மட் டத்தை எய்தும். இந்த நடுப்பகுதி உயர்வானது மிகுதியான பெண்களில் குறைந்த உயரமுடைய பு. துர. ஓமோனின் இரண் டாம் சிகர வேளையில் அதனுடன் ஒத்து நிகழும். இதன் பின்னர் விரைவில் தாழ்ந்து எஞ்சிய இலூற்றிய அவத்தைக் காலக்கூறில் தாழ்வு மட்டங்களிலேயே நிலைக்கும். மாதத் தீட்டு காலக் கூறில் மெதுவாக செறிவில் கூடி 4 ஆம் நாள் அளவில் புடகச் செறிவு மேட்டுத் தள அளவுகளை எய்தும். 10 ஆம் நாள் அளவில் இந்த மட்டான மேட்டுத் தள மட்டங்கள் நடு மாத வட்டச் சிகர
 
 

125
உயர்வை அடையும் வரைக்கும் ஒரு மாற்றமும் அடையாத அளவுகளில் நிலைக்கும் .
2. சூலகத் தெரோயிட்டுகள்
இவற்றின் செறிவு புடக அவத்தைக் காலம் முழுதாகவும் குருதியிலும் ஊறுநீரிலும் அவை குறைந்த மட்டங்களிலேயே உள்ளது. பு, துT. ஒ (F, S, H) னினதும் இலூ. ஒ. (LH) னினதும் நடுவட்ட சிகர வுயர்வுக்குப் பின்பு பிளாசுமாப் புருேசெ சுற்றமுேன் செறிவு உயரத் தொடங்கி இலூற்றிய உடலியின் உச்சச் செயல் வேளையில்தான் மி. இலீக்கு 10-19 மி / uமில்லிகிராம் அளவு செறிவைக் குருதியில் அடைகின்றது.
முன்னைய காலத்தில் ஊறுநீரின் பிறை க்ன்னடயோல் அளவு மதிப்பீடுகளைச் செய்தனர். இது பெரும்பாலும் குருதிச் செறிவு களே ஒத்திருக்கும். புடக அவத்தை நிலையில் பிதெ க்னன் டயோ லின் கழிவுத் தொகை மட்டமானது. நாளுக்கு 1 மிலி. இலும் மிகக் குறைவாகும். இது ஆண்களில் அறியப்படும் அளவுகளாம். இந்த ஊறுநீர் பிறெக்னன் டயோலின் தோற்றுவாய் அதிரனல் காரோடாகும். சூலிடல் நிகழ்ந்த பின்னர் தான் சூலக புருே செற் ருே ஞனது ஊறுநீர்ப் பிறெக்னன் டயோல் மட்டங்களைப் :( கும். மாதவிடாய்க்கு முன்பு ஊறுநீரில் இதன் மட்டம் 24 மணி களுக்கு 2. 5-8 மி. கி. அளவாகும்.
ஈத்திரசன்கள்
போட்டிமுறை புரதப் பிணிப்பு ஆய்வுகளைப் பயன்படுத்தி இதன் மட்டங்களே அறிந்தனர். மட்டங்கள் புடக அவத்தைக் காலக் கூறில் இலூற்றிய அவத்தை க் காலக் கூறிலும் பார்க்கக் குறைவாம். ஒரு 28 நாள் வட்டத்தில் 1-10 நாட்களில் மிஇ லீக்கு 6. 5 பி. கி. ( பிக்கோகிராம் ) அளவிலும் 11-20 நாட் களில் மிஇலீக்கு 124 பிக்கோகிராம் அளவிலும், 21-25 நாட் களில் மி. இ. லிக்கு 136 பி. கி. அளவிலும் இருப்பதாக ஒர் ஆய்வு குழுவினர் தெரிவித்தனர். குருதியில் இலூ ஒ. பு, துர. ஒ. செறிவுச் சிகரங்கள் ஊறுநீரில் ஈத்திரசன் செறிவுச் சிகரங்கள் ஆகியன நிகழும்பொழுது இவற்றின் நாளாந்த மட்டங்களைக் குருதியில் செவ்வையாக அறியவில்லை.
ஊறுதீரில் கழிக்கப்படும் ஈத்திர டயோல், ஈத்திரோன், ஈத்ரியோல் ஆகியனவற்றின் ஊறுநீர் செறிவுகள் தெரிவிப்பது கழிப்பு மாதிரியாவது இருபடி நிலைகளை உடையது என்பதையாம்

Page 74
26 இளம் பெண் நோயியல்
மாதத்தீட்டு வந்த மூதல் மூன்று நாட்களிலும் ஈத்திரசன் கழி வானது தாழ்வு மட்டத்திலாகும். நடுவட்டத்தில் மிகவிரைவாக உயர்ந்து ஒரு சிகர உயர்வை (சூலிடலுயர்வு) எய்திப் பின்னர் ஈத்திரசன் கழிவு குறைந்து குறைந்து ஒர் இரண்டாவது அகல் தளஉயர்வை எய்தும். இதுவே இலூற்றிய உயர்வாகும். மாத வட்ட இறுதி நாட்களில் ஈத்திரசன் கழிவு குறைவு மட்டங்களை அடையும். இதனைத் தொடர்ந்து மாதத்தீட்டு நிகழும் (ஈத்தி ரசன் குறைவால் மாதயிரிவு நிகழும்). கருப்பைக் கழுத்து மேலணி யின் வளர்ச்சியும் சுரப்புச் செயலும் ஒரளவுக்கு ஈத்திரசன்களின் செயல்களினலாம். இது கழுத்து மியூக்க சின் இரசாயன பெள திக இயல்புகளை மாற்றும் .
ஏனைய தெரோயிட்டுகள்
ஏனைய தெரோயிட்டுகளும் - பிறெக்னனெற்றியோலும் , தெசு தோற்றேனும் - மாதவிடாய் வட்டகாலத்தில் , ஈத்திரசன்களும் , புருேசெ சுற்றருேனும் மாதவிடாய் காலத்தில் அடையும் மாற்றங் களைப் போன்ற மாற்றங்களைக் காட்டும். பிறெக்னனெற்றியோ லின் கழிவு மாற்றங்கள் பிறெக்னன்டியோ லின் வட்ட மாற்றங் களைப் போன்ற தாம். பிறெக்னனெற்றியோல் உயிரியல் வினைய மற்ற பதார்த்தமாகும். தெசுத் தெற்றமுேன் செயலாற்றல் மிக்கது. இலூற்றிய அவத்தையில் ஊறுநீரில் நிகழும் இதன் செறிவுகள், புடக அவத்தையில் ஏற்படும் செறிவுகளிலும் பார்க்கக் கூடிய தாம். நோய் முறையில் வளரும் இளம்பெண்களில் இதன் விளைவு க ளால் முகப்பருக்கள் தோன்றும் . தெசுத் தெற்ற ருேனையும் ஏனைய சூலக அத்திரசன்கனையும் உண்டாகாது உட்தடுப்புச் செய் தால் ( சூலிடலைத் தடுப்புச் செய்தல் ) பருக்கள் மாறுவதைக் 55 FT GðØTG) IT LÈ) .
கருப்பநிலையில்: புடைப்புத் தூண்டி ஒமோனினதும் தெரோ யிட்டு ஒமோன்களினதும் சுரப்பளவு சூல்வட்டத்தில் கருப்பம் தோன்ருத பொழுது 21 நாட்கள் வரைக்கும் நிகழும் சுரப்பு அளவுகளை ஒக்கும். கருக்கட்டலுற்ற 7 ஆம் நாள் மட்டில், கரு வானது கருப்பை அக வணியுள் புகவும் இ த ன் (கருவினது) ஊட்டரும்பர் சுரக்கத் தொடங்கும். கருக்கட்டலுற்ற 11 நாட் கள் மட்டில் மனித கோறியோன் சனணி ஒமோன் ( கோ. ச. ♔ ) மட்டம் குருதியில் உயரும் . இது இலூற்றிய ஒமோன் போன்ற தல்ல. இது இலூற்றிய ஊட்டியாகும். இது இலூற்றியவுடலி யின் வாழ்நாட்களையும் தெரோயிட்டு ஒமோன்களின் வெளியீட் டையும் மிகைப்படுத்தும் . 24 ஆம் நாள்ளவில் ஈத்திரசனும்
၊ ဇိမ်မှီနီအစိ##ဒ်//### குறைவடையாது தொடர்ந்து

127
மேலும் மிகையுறும். இவற்றில் ஒரு பகுதியானது வளரும் ஊட்டி யரும்பர்களால் சுரக்கப்படக்கூடும்.
கோறியன் சனனியூட்டி ஓமோன் (கோ. கோனுட்டு ஊட்டி)
இந்த ஒமோனை, சூல் வித்தகத்திலிருந்து பிரித்து எடுத்திருக் கின்றனர். இது கோறியன் விரலிகளிலிருந்து சுரக்கப்படும், கருப்ப காலத் தொடக்கத்தில் முற்பக்க பித்துயிர்த்தறியைப் போல் செயற்பட்டு இலூற்றியவுடலியைத் தூண்டி 2-3 மாதங் கள் வரைக்கும் புருேசெ சுற்ருே னைச் சுரக்கச் கெய்யும். பின்னர் வித்தகம் தானுவே இந்த ஒமோனைச் சுரந்து வேறு ஒமோன்களேச் சுரக்கும் ஒர் அகச் சுரப்பிபோல் அமையும் .
மனித கோறிய சனனியூட்டி (HCG)
இது கருக்கட்டல் நடந்த 10 நாட்களுக்குப் பின் குருதியின் சீரத்திலும் ஊறுநீரிலும், காணப்படும். கருநாட்டல் நிகழ்ந்த 24 நாட்களுக்குப் பின் இதன் பிளாசுமாச் செறிவு கூடி 60ஆம் நாள் மட்டில் உச்ச அளவை அடையும். பின்பு இம்மட்டத்தில் 14 நாட்கள் மட்டில் நிலைத்து பின்னர் விழுக்காடுற்று ஒரு தாழ்வு மட்டத்தை அடைந்து நிறை மாதம் அடையும் வரைக்கும் இம்மட் டத்தில் நிலைக்கும். இலூற்றிய ஊட்டு வினையமானது கருநாட்ட லுறும் வரைக்கும் நிகழும்.
மனித சூல்வித்தக இலற்றசன் (பால்பிறப்பி) ஓமோன் (HPL)
இது பாலாக்கத்தில் ஈடுபடுகின்ற பொழுது புருேசெ சுற்ற
ருேன், ஈத்திரசன்கள் ஆகியன பெருமளவில் சூல்வித்தகத்தால்
உண்டாாக்கப்படும் .
ஏனைய தெரோயிட்டு ஒமோன்கள்
வித்தகத்திலிருக்கும் அந்திரசன்கள் தாயிலிருந்தும் கரு உரு
வில் இருந்தும் பெறப்படும். இவை வித்தக ஈத்திரசன்களின் முன்னுேடிகளாம். -

Page 75
களில் பெண் குழந்தைகள் உருண்டையாகவும் கொ
இயல் 9,
வளர்ச்சிப் பக்குவமும் இளமைக் (கட்டிளம்) காலமும்
வளர்ச்சிப் பக்குவம்: இப்பக்கு வ காலத்தில் உடற் கட்டமைப்பில் பல வளர்ச்சிகள் நிகழும், பாலின வியர்த்த மாற்றங்களும் உண் டாகும். பாலின உறுப்புக்கள் தம் செயற்பாட்டைத் தொடக் கும். இது பெண்குழந்தைகளில் முதற்றரமாக மாதவிடாய் (மாத பிரிவு, தீட்டு, முழுக்கு, துடக்கு, பூப்பு, சூதகம்) தோன்றி அவள் பக்குவமுற்று இளம்பெண் நிலைமை யை அடைந்துள்ளாள் என்பதனைக் குறிக்கும். ஆணுல் இவள் முழுதாக உளவுளர்ச் சியையும் உடல் வளர்ச்சியையும் இந்நேரத்தில் அடைவதில்லை. கட்டிளம் பருவத்தில் (நிறை யிளமை) அதாவது 20 வயது வரைக் கும் அவள் நிறைவு முதிர்வை அடைந்து உள வளர்ச்சியையும் (புத்தியறிதலையும்) பாலினை வினையங்களுக்கும் பாலினக் கிளர்ச்சி நிலைமைகளுக்கும் இசைவுபடு மனமாற்றங்களையும் அடைகின்ருள்.
குழந்தைப் பருவத்தில் பரியகத்தின் ஆணேக்குக்கீழ், முற்பக் கப் பித்துயித்தறி உடலின் வளர்த்தியில் மட்டும் பெருமளவில் ஈடு படும். வவர்ச்சிப் பக்குவம் அடையும் காலத்தில் இதன் எல்லா வினையங்களும் மிகைஅடையும் . மாதவிடாய் தொடக்கத்து அண் மைக் காலத்தில் உடல் கிசுகிசுவென உயரும் (வளர்ச்சிஓமோன்); இதனுல் கடும் உடல் வளர்த்தி அனுசேபங்களின் தேவைக்கு ஏற்ப கேடயச் சுரப்பியும் பெருக்கும். அதிரனல் காரோட்டு வினை யம் கூடுதலடையும் (அதிரனல் காரோட்டுவூட்டி ஒ ). தோல் நிறம் ஊட்டல டையும் ( மெலனேக்குழியத் தூண்டி. ஒ. ). சூலக வினையம் தொடங்கவும் சூல்கள் இடப்படும். பாலின விளைவுகள் தோன்றும் (சனனியூட்டி ஒமோன்). தொடக்கத்தில் பு. தூ , ஒ மட்டுங் சுரக்கப்படும். பின்னர் இலூற்றிய ஒமோன் தோன்றும் . சூலகங்களால் கரக்கப்பட்ட ஈத்திரசனுலும் அதிரனல்களால் சுரக்கப்பட்ட அந்திரசன்களாலும் மூளை மூடல் நிகழும். இதனல் வன்கூட்டு வளர்த்தியும் நின்றுவிடும். முதிர்வு முற்ரு கும். இதன் பின்னர் முற்பக்கப் பித்துயித்தறியானது இனப்பெருக்கல் வினை யத்துடன் சிறப்பாக ஈடுபடும், உணவினதும் நற்குழலினதும் மிகுதியான தேவைப்பாட்டை, இம் மாற்றங்கள் உணர்த்தும். சிலருச்கு குழந்தைப் பருவத்திலும் கூட சில பாலின வியர்த்த மாற்றங்கள் உண்டாகும். பெண் குழந்தைகளில் 3 ஆண்டு வயது மட்டில் முலைக்காம்புகள் சிறிதளவில் பெரிதாகும். 6-8 ஆண்டு L
 
 
 
 

வளர்ச்சிப் பக்குவமும் இளமைக் (கட்டிளம்) காலமும் 129
பர். 7-11 ஆண்டுகளில் கூபகம் விரியும், 9-10 ஆண்டுகளில் பக்குவமடைவதற்கு உரிய சில உண்மையான குறிகள் தோன் றும் . முலைகள் ஒரு முலைவட்டப் பரப்பில் ஒர் அரும்பு முளை யாகத் தோன்றிப் படிப்படியாகப் பெருக்கும். இக்காலத்தில் உடலில் மயிர்கள் முளைக்கும். இது சிறப்பாக பூப்பு மேட்டுக்கு மேலேயே நிகழும். இதற்கிடையிற் சிறிது சிறிதாக உடற்கட்டு வளைவுகள் தோன்றும். இவை கொழுப்பானது சிற் சில இடங் களில் பெருமளவில் இடப்படுவதாலாம். வல்வத்தின் நிறம் கரு நிறம் அடையும். கருங் கோடும் கீழ் வயிற்றில் தோன்றும். இதன் பின்பு மாதவிடாய் முதற்றரமாக நிகழும். கமுக்கட்டுப் பிர தேய மயிர்கள் பெரும்பாலும் முதல் மாதவிடாய்க்குப் பின் னர்தான் தோன்றும், 13 வயது மட்டில் முதலாவது மாதவிடாய் தோன்றும். ஆனல், இவ்வயதும் குழந்தையின் சாதி, குலம் சமூகப் பொருளாதாரநிலை, சூழல், உணவு, பொது உடல் நல வளப்பம், ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். இது வான்நிலையின் த்ட்ப வெப்பநிலைகளில் (அயன நாடுகள், குளிர்ப் பிரதேயம்) த்ங்கியிருப்பதில்லை. ஊட்டவளம் மிகுந்த குழந்தைகளிலும் நோய் வாய்ப்படாத குழந்தைகளிலும் பக்குவப்படல் மிக இளம்வயதில் நிகழ்கின்றது. இலங்கையில் 11-12 வயதுக் குழந்தைகளிலும்ா நிகழ்வதை நானறிவேன், பட்டினவாசிகளிலும் கலப்பு இனத் வர்க்குப் பிறக்கும் குழந்தைகளிலும் மிக இளம் வயதில் நிகழ் கின்றது. முதலாம் மாதவிடாய் தொடங்க 2 ஆண்டுகளுக்கு முன் பிறப்புறுப்புச் சுவடு வளர்த்தி அடையும். முதலாம் மாத பிரிவுக்கு முன்னம் அடிக்கடி மியூக சுஇரிவும் அடிவயிற்றில் நோவும் தோன்றக்கூடும். இது கருப்பைச் சுருக்கங்களாலாம். உடற்கட்டு சீரானநிலையை எய்தும், குரலும் மாறி மென் குரலாகும். பெண் ணின் உளநிலையும் மாறும். விளையாட்டுக் குணங்களும் குறும்பு நடத்தையும் மாறி, அடக்க, ஒடுக்க ஒப்புரவுடைய பெண்ணுக மாறுவாள். விவேகமும் (புத்தியும்) வளரும். பாலின உந்தல்கள் அவளை அலைக்கும். தோழிமாரை நம்புவள். அவர்களுடன் இர கசியங்கள் பரிமாறுவாள். விரைவில் இவ்வித நடத்தைகள் மாறி ஆண்களில் விருப்பங்கொள் மாற்றங்கள் உண்டாகும்.
பக்குவப்படுங் காலத்தில் கேடயச்சுரப்பி வீங்கும். முகத்தி லும் முதுகிலும் பருக்கள் தோன்றி அவளின் அழகுக்குக் கெடு
தல் விளேக்கும். விரைவில் வெட்கமடைவாள். அவள் உடற் கட்டு முதிர்வும் மனமுதிர்வும் அடையாதபோது தனக்கு இவை உண்டாகிவிட்டன என்ற கருத்தில் நடப்பாள். உடற்கட்டு
முதிர்வும் மன முதிர்ச்சியும் அடையப் பல ஆண்டுகள் செல்லும்.

Page 76
130 இளம் பெண் நோயியல்
ணுல் ஏற்படும் மாற்றங்களையும் விளங்கி வளர்க்கவேண்டும். தன் னியல் பில் செய்ய எத்தனிக்கும் பான்மையைச் சிரித்துக் கேலி பண்ணுது அவற்றை விளங்கிச் சில கட்டுப்பாட்டுக்குள் அடக்கித் தன்னியல் பில் நடக்க விடவேண்டும். பெற்றேர் அவள்மேல் வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் தளரவிடாது பேணவேண்டும். அவள் உடைகளைத் தன் விருப்பப்படி அணிய விரும்புவாள். அவை அவளின் உடற்கட்டு மாற்றத்துக்கு ஏற்றன வாக அமையவேண்டும். நேரப்போக்கு, களியாட்டம் ஆகியவற் றில் விருப்பம் உடையவளாக இருப்பாள். அவளுக்கு ஏற்ற களி யாட்டங்கள், இசைப் பயிற்சி, சினிமா பார்த்தல் ஆகியவற்றில் ஈடு படுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். உணவைப் பொறுத்தமட் டில் மிக நுணுக்கமுடையவளாய் இருப்பாள். பக்குவப்படுங் காலத் தில் உடல் வளர்ச்சிக்கு மிகுதியான அளவிற் சிறந்த உணவுகள் வழங்கவேண்டும். (உணவியல் நூல்களைப் பார்க்க). அவளின் உள வளர்ச்சிக்குச் சிறந்த கவிதைகளும் படக் காட்சிகளும், நன்மக் கள் இருக்கும் நற்குடும்ப வாழ்வும் இன்றி அமையாதனவாகும். உலகில் இருபாலாருக்கும் நிகழக்கூடிய கெடுதிகளைப்பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியேயுள்ள உலகம் வேரு னது. பெண்களுக்குப் பல கெடுதிகள் விளையக்கூடிய நிகழ்ச்சிகள் நாள்தோறும் நிகழ்கின்றன. எனவே நாம் பாலின அறிவை அவர்கள் படிப்படியாகப் பெற்றுக் கொள்ளவும், குடும்பத்தின ருக்கிடையில் இவற்றைப்பற்றி நிகழும் உரையாடல்களை அவர்க ளுக்கு மறைக்காமல் அவர்களும் அவற்றைக் கேட்கக்கூடியதாய் ச் சந்தர்ப்பத்தை அளிக்கவேண்டும். தற்காலத்தில் நல்ல செய்தித் தாள்கள் வழியாகவும் கெட்ட செய்தித் தாள்கள் வழியாகவும் அவர்கள் இவற்றைப் பெறுகின்றனர். தற்காலத்தில் பெண் மாணவிகளுக்குப் பாலின உந்தல்களைப்பற்றியும், இனப்பெருக்க உறுப்புக்களைப்பற்றியும், உந்தல்களைப் பிழைபட நிறைவுசெய்வ தால் விளையும் கெடுதிகளைப் பற்றியும் மரியாதை இழப்புக்களைப் பற்றியும் அறிவு புகட்டப்படுகின்றது. உடல் நிலையைப் பேணும் நல்லறிவும் நல்ல விளையாட்டுகளும் நேரப்போக்கும் முக்கியமாகத் தேவையாம். பெண்ணை அடிப்படையாகக் கொண்டு புனையும் கவி தைகள் , ( கொலைகள், காதல்கள் ) அழகுபடுத்தல், பெண் அலங் கார உடை, ஆகியவற்றை விளம்பரம் செய்யும் செய்தித் தாள்கள், மலர்கள் ஆகியவற்றைப் படிப்பதிலும் தனியின்பம் காண்பாள். அவற்றைத் தடைசெய்யவே படாது. போகக் கூடாத இடங்களுக்குச் செல்பவரினதும் ஒழுக்க மற்ற நடையில் ஒழுகுபவரினதும் வாழ்க்கைகளை அறிவது எதிர்காலத்தில் ஒரு மனைவியாகவும் தாயாகவும் போகுன்றவளுக்கு நன்மையே பயக் கும். பல வகையான அறிவை இவற்றின் மூலமும் படக்காட்சிகள் மூலமும் பெறுவாள்.

வளர்ச்சிப் பக்குவமும் இளமைக் (கட்டிளம்) காலமும் 131
வளர்ச்சிப் பக்குவப்படல் காலத்திலும் கட்டிளம் காலத்திலும் நிகழ் பிறழ்வுகள்:
1. கொழுமை : கட்டிளம் காலத்தில் சிலர் கொழுப்படைவர். இது பெரும்பாலும் மிதமிஞ்சிய உணவை உட்கொள்வதாலும் காபோஐதரேற்று உணவுப்பொருள்களை மிதமிஞ்சி அருந்துவதா லும் நிகழ்கின்றது. சிறிய கொழுமை நிலையானது. உணவைக் கட்டுப்பாடு செய்யின் 20 ஆண்டு வயது மட்டில் மறைந்து போகும். பெரும்படியான கொழுமையைக் கட்டாயமாக உணவுக் கட்டுப் பாட்டு முறைகளாலும் ஏனைய முறைகளாலும் வளம் படுத்த வேண்டும்.
2. சுணங்கிய பக்குவப்படல்: 16 ஆண்டு வயதுக்கு முன்பு இரண் டாவது படிநிலைப் பாலினச் சிறப்புக் குறிகளும் மாதவிடாயும் தோன்ரு விடின், பொதுவாக இந்நிலையைச் சுணங்கிய நிலை என் பர். சிலருக்கு (இவர்கள் மிக அருகிய தொகையினர்) 16 ஆண்டுக் குப் பின் மாதவிடாய் தோன்றும். 20 - 25 வயதில் மாத விடாய் தோன்றிய குறிப்புக்களைப் பற்றி வைத்திய ஏடுகள் கூறும். இந்நிலையை முதலாவது அல்மாதயிரிவு யா எனக் குறிப் பர். இதன் தீர்வு முறைகள் பின்னர் விபரிக்கப்படும்.
பருவத்துக்கு முன் நிகழ் பக்குவப்படல்
வழமையாக 10 ஆண்டு வயதுக்கு முன் ஏனைய பக்குவ அறி குறிகளுடன் ( முலைகள் பெருத்தல் பூப்புப் பிரதேயத்தில் மயிர் முளைத்தல் ஆகியன ) மாதவிடாய் தோன்றின் இந் நிலைமையை பருவத்துக்கு முன் நிகழ் பக்குவப்படல் எனக் குறிப்பர். சில அறிஞர் வயதெல்லையை 8 - 9 ஆண்டுகளெனக் கருதுவர். இவர் களில் கெதிப்படுத்தப்பட்ட உடல் வளர்ச்சி ஆனது பருவ வளர்ச்சி ஆகாது. மீமுளைகளும் முன்னதாகவே மூடப்பட்டு குறள் வளர்த்தியை உண்டாக்கும். உள வளர்ச்சியும் தடைப் படும்
முன்னதாகப் பக்குவப்படலின் காரணங்கள்
1. மிகுதியானவர்களில் அவர்கள் பெற்ற உடலானது அவர் களின் வாசி நிலையாலாம். அகச் சுரப்பிகள் எல்லாம் பருவகாலத் துக்கு முன்பு முழு வளர்ச்சியடைந்து இயங்குவதாலாம். சிலருக்கு இவ்வயதுகளில் பிள்ளைகள் பிறந்த செய்திகளைப் பற்றி நூல்கள் கூறும். இது மண்டை ஒட்டுத்தளத்துக்கு விஞ்சிய வளர்ச்சியை உண்டாக்கி பித்துயித்தறியைப் பாதிப்பதால் உண்டாவதெனக் கருதுவர்.

Page 77
  

Page 78
134 இளம் பெண் நோயியல்
அடைந்து கரும் சிவப்பு நிறம் அடையும். சிதலமுறுவதாலும் பற் றிறியத் தோற்றுறுவதாலும், வல்வத்தின் நெய்ச் சுரப்பிகளும் அபச்சுரப்பிகளும் தம் சுரத்தல்களே இதனுடன் சேர்ப்பதாலும் இதற்கு ஒரு சிறப்பு நாற்றமுண்டு. இதன் அடக்கற் பொருள்க ளாவன குருதி, கருப்பையக வணிச் சுரப்பு, கருப்பைக் கழுத்துச் சுரப்பு, கருப்பை அக வணிக் கழி பொருள்கள், பற்றிறியங்கள் ஆகி யனவாம். இந்த இழப்பின் மொத்த அளவு 25-30 மி.இலீ அளவி லாகும். ஆணுல் இது 5-100 மி. இலீ அளவிலும் இருக்கக்கூடும் , பிசுபிசுப்புத் தன்மையுடையது. இது மியூக்கசு கலந்திருப்பதா லாம். மிகச் சிறிய கட்டிகளும் இருக்கக்கூடும். பெரும் கட்டிக ளில்லையாம். நோய் நிலைமைகள் இதன் கன அளவைக் கூட் டும். கூடிய குருதி வடிதலாற் பெரிய கட்டிகள் தோன்றக்கூடும், பொதுவாக பெண்கள் நாள் தோறும் 2 துண்டுகளும் இரவில் ஒரு துண்டும் வடியும் குருதியிரிவை ஒற்றுவதற்குப் பயன்படுத் gs (3).J IT -
மாதயிரிவு வேளையில் யோனி உறையுள் நிலவும் P H இன் பெறுமானம் காரநிலையை எய்தும். இதனுல் யோனி அறையில் உள்ள குருதியில் தொற்றுக்கள் பரவக் கூடும் .
மாதவிடாயுடன் காணப்படும் பொது உயவுகள்
100 க்கு 20 பெண்கள் வரையில் உடல்நலக் குறைவுறுவர். இளம் கன்னிப் பெண்களில் பெரும்பான் மையர் மாதவிடாய்க்கு முன் நிகழ் உயவுகளால் வருந்து வர். தொடக்க மாதங்களில் சூல் உதிராத காரணத்தால் மாதவிடாய்க்கு முன்னிகழ் குத்து, வலி அடிவயிற்றில் நோ ஆகியன தோன்ரு: , உயவுகளின் கடுமையா னது மாதவிடாய்க்கு முன் பெண், இருக்கும் மனநிலையைப் பொ றுத்திருக்கும். இது ஒர் இயற்கை நிகழ்ச்சி யெனக் கருதி நாளாந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ஒழுக முயல் பவளுக்கு இந்த உயவுகள் தொந்தரவைக் கொடாது. பள்ளி மாணவிகளி லும், மூளையைப் பயன்படுத்தும் வேலைகளில் ஈடுபடுபவர்களிலும் சிறிய வலியும் பெரிய உயவாக அவர்களுக்குத் தோன்றும். மிகுதி யானவர்கள் தீட்டு வேளையில் அல்லது அதற்கு முன்பாகக் கீழ் வயிறு, கூபகம், நாரி ஆகிய இடங்களில் கடும் வலியும் வயிற்றுக் குத்தும் நோவும் உடையவராவர்.
பொதுவான நோய்த் தோற்றங்களாவன, சோம்பல், களை ப்பு, உடல்நலக் குறைவு மனஅமிழ்வு, மனம் அருட்டலுறும் தகைமை, சீற்றமுறும் தகவு, தலையிடி ஆகியனவும் முலைகளில் நொய்வும், மூளை வேலைகளிலும் உடற்றெழில் வேலைகளிலும் ஈடு

வளர்ச்சிப் பக்குவமும் இளமைக் (கட்டிளம்) காலமும் 135
படும்பொழுது செயல்திறன் குறைவும் காணப்படும். சிலரில் வலித்துக் குத்தும்வேளையில் வாந்தி உண்டாகும். சோம்பல், களைப்பு, காணப்படுவதால் படுக்கையில் ஆறுதல் எடுக்க விரும்பு Gufi . மாதவிடாய் தோன்ற முன்பு கூபகம் பாரமாயிருக்கும். உடல் பொரு மியும் இருக்கும். சிலருக்கு மலக்கட்டும், வேறு சிலருக்குக் குடற்கழிவும் உண்டாகும். கண்மடல்கள் சாயமுறும். முகம், முதுகு, நெஞ்சு ஆகிய பகுதிகளில் பருக்கள் தோன்றக் கூடும். கேடயச் சுரப்பி வீங்கும். உடல் நிறையும் கூடும். குருதி யின் பாகுநிலை மூன்ரும் கிழமை அளவில் மிகைப்பட்டு மாதவிடாய் வேளையிற் குறையும் . கால்களில் நாளவிரிபருக்கம் மாதவிடாய் நிகழ்வதற்கு முன் வீங்கிக் காட்சிக்குத் தென்படும்.
மாதவிடாய் நாட்களில் எடுக்கும், கவனிப்பு முறைகளை மாத விடாய் உடலில் ஒரு தொழிலியற் தோற்றப்பாடு என உணர்ந்து செய்யவேண்டும். இதன் பழைய கருத்தாகிய உடல் துப்புரவாக் கப்படுதல் என்பது, பொய்மொழிகளாம். உண்மையைக் கூறின் கருவுறல் நிகழாத வேளையில் தான் இக்குருதியிரிவு நிகழும். இவ் வேளையில் உடற் சுத்தம் மிகத் தேவைப்படும். குருதி வடிதலை உறிஞ்சி. எடுப்பதற்காக உறிஞ்சும் இயல்புடைய துணித் துண்டு களைக் கட்டுவர். வியாபார முறையில் மாதவிடாய் காலத்துக் குத் தேவையான உறிஞ்சு கோசுத் துணிக்கட்டுக்கள் கொண்ட பெட்டிகள் விற்பனைக்கு உண்டு. ஒரு நாளுக்கு 3 துணிக்கட்டு கள் தேவைப்படும். இதற்குப் பணம் வேண்டும். சீலைத் துணி களேக் கட்டவேண்டின் அவை தூயனவாயும், கிரு மியளிப்புச் செய்தனவாயும் இருப்பின் நன்று. பொதுவ்ாக விற்கப்படும் உறுஞ்சு துணிக்கட்டுகள் கிருமியழிப்புச் செய்யப்படாதவை. உள் புகுத்து தம் பனங்கள் உகந்தவையல்ல. தற்காலத்தில் பல வகை யான உறிஞ்சு துணியங்கள் உண்டு. கடும் விளையாட்டுகளில் ஈடு படுதல் குருதி வடிதலைக் கூட்டும். மட்டான விளையாட்டுகளில் ஈடுபடலாம். ஏனைய நாடுகளில் உட்புகுந்து தம் பனங்களைப் பெண்கள் பயன்படுத்தி நாளாந்தர வேலைகளில் ஈடுபடுவர். எங்கள் பெண் களில் கல்யாணம் பண் ணினவர் மட்டுந்தான் இதனைச் செய் யக்கூடிய நிலைமையிலிருப்பர். இந்த உட்புகுத்திகளால் கெடுதி களும் விளையக்கூடும்.
கூபக அழற்சி நோயுள்ளவர் இக்காலக்கூறில் ஆறுதலெடுத் தல் நன்று. கீழைத்தேய நாடுகளில் இக்கால வேளையில் வேலை களைக் குறைத்தும், மனக் கிளர்ச்சி நிலைக்ளைக் குறைத்தும் ஆறுத லெடுப்பர் . கலவியில் ஈடுபடார். கிராமப் பெண்கள் ஒரு துடக்கு உற்றவர்போல் தம்மைத் தனிப்படுத்தி ஒரு வகையான

Page 79
16 இளம் பெண் நோயியல்
தொற்றும் உருவண்ணம் தம்மைப் பாதுகாத்துக் கொள்வர். பொதுவாக இவர்களின் வாழ்க்கை பட்டின மக்களினது வாழ்க்கை போன்று சொகுசானது அல்ல. உடற்சுத்தம் மிகத் தேவையா கும். நாள்தோறும் குளித்துச் சுத்தமாயிருத்தல் நலனைத் தரும் . கிராமப் பெண்கள் தம் நாளாந்த வேலைகளில் இடுப்புக்கு பல வகையான அசைவுகளே உறுத்துவர். ஆகையால் இவர்களுக்கு மாதயிரிவுடன் தோன்றும் நோய்கள் குறைவாம்.
மாதவிடாயைப் பிந்தி நிகழச் செய்தல் அல்லது முந்தி நிகழச் செய்தல்,
பல காரணங்களை முன்னிட்டு கல்யாணமான பெண்கள் தம் மாதவிடாயை முந்தி நிகழ அல்லது பிந்தி நிகழ மருத்துவம் வேண்டுவர். கன்னிப் பெண்கள் கல்யாண நாட்களில் அது நிக ழாது முன் நிகழச் செய்யவும், கல்லூரி மாணவிகள் ஆண்டுச் சோதனை நாட்களில் நிகழாது பின்போடும் படியும் வேண்டுவர். இவ் வேண்டுகோள்கள் தேவைகளைப் பொறுத்து பலவிதமாக அமையும்.
இவ்வகையான நிலைமைகளில் ஒரு வகையான தீர்வும் கொ
டாதுவிடில் நன்று. இவ்வகையான நிலைமைகள் தாமே மாத விடாயை முன்னுகத் தோற்றும் அல்லது சுணக்கியும் விடும். தீர்வு முறைகள் மாதவிடாயை முன்னுகத் தோற்றச் செய்யுமோ அல் லது செய்யமாட்டாதோ வன்ற ஐயப்பாடும் உண்டு. சில சம யம் விபரீத நிகழ்ச்சிகளையும் உண்டாக்கிவிடும். மாதவிடாயைத் தள்ளிப்போடுவது முன்னக நிகழ்த்துவதிலும் பார்க்க உறுதியா னது. சூலக ஒமோன்களை மிக உயர் மட்டங்களில் பேணின் பலன் காணமுடியும். இதற்காக புருேசெசற்ருேணை அல்லது நோர் எதிசுற்ருேனைப் பயன்படுத்தலாம். தீர்வுமுறையை மாதவிடாய் தோன்றும் நாளுக்கு 3 நாட்கள் முன்பாகத் தொடங்கி அவர் கள் குறிப்பிட்ட விசேட நாள் கழியும் வரைக்கும் கொடுக்க வேண்டும். பின்னர் தீர்வை நிறுத்தவும் மாதவிடாய் 2-3 நாட்களில் நிகழும் . ܢ
புருேசெசுற்றேன். தசை யூடாக 25-50 மி. கி. எடைகளில் நாள்தோறும் கொடுக்க வேண்டும்.
நோர் எதிசுற்றேனயும் ( 4 மி. கி) எதினேல் ஈத்திரச டயோலே யும் (0.05 மி.கி) அளவில் சேர்த்து வாய்வழியாக நாள்தோறும்

வளர்ச்சிப் பக்குவமும் இளமைக் (கட்டிளம்) காலமும் 137
ஒரு முறை அல்லது இரு முறை கொடுக்கலாம். இதனைப்போன்று இயங்கும் வேறு கருக்கட்ட்லெதிரி மருந்துச் சேர்வைகளையும் கொடுக்கலாம். ஆறு நாட்களுக்கு முன்னம் கொடுக்கத் தொடங்கு வது புத்திசாலித்தனமாகும்
மாதவிடாயை முன்னுக நிகழ்த்துதல் : தீர்வுமுறையை மாதவிடாய் வட்டத்தின் மிகத் தொடக்கத்தில் கொடுத்துச் சூல் உதிர்தலைத் தடைசெய்யவேண்டும். தீர்வுமுறையை மாதவிடாய் வந்த 5 ஆம் நாள் தொடங்கி 14 ஆம் நாள் கழியும் வரைக்கும் தொடர்ந்து கொடுக்கவேண்டும். | " . , ''' ''' ''''''''''''';
மருந்துப் பொருள்கள்: ஸ்ரில் பிசுத்தரோல் 1 மி. கி. அளவில் நாள்தோறும் 3 தடவை அல்லது எதினைல் ஈசுத் திரடயோல் 0 05 மி. கி. நாள்தோறும் 3 தடவை நோர் எதிநோடிறெல் (மென் சுறணுலுடன்) 5-10 மி. ம். நாள்தோறும் ஒரு முறை கொடுக்கவும். தீர்வை நிறுத்தியவுடன் 2-3 நாட்களில் மாதவிடாய் தோன்றும், தோன்ற வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னமாக இதே தீர்வு முறையை 28 நாள் வரைக்கும் கொடுப்பின் மாதவிடாய் சுணங்கி
நிகழும் ,

Page 80
இயல் 10.
கருக்கட்டலும் கருப்பநிலையும்
கருப்ப நிலை
ஒரு விடுத்தலுற்ற சூலானது பேமுயிரியால் கருக்கட்டல் அடை யும் பொழுது கருப்பநிலை உண்டாகும். சூலிடல், அடுத்துவரும் மாதவிடாய் முதல்நாளிலிருந்து 14 நாட்கள் முன்னமாக நிகழும் . இது ஒரு வரையறுக்கப்பட்ட காலமாகும். மனிதப் பெண்களில் வேறுவிதத் தூண்டல்கள் இல்லாது தன்னியல் பில் நிகழும். சில விலங்குகளில் உதாரணமாக முயலில் புணர்ச்சிவேளையில் கருப் பைக் கழுத்து அசைக்கப்படும் பொழுது, கணத்தாக்கங்கள் பரி யகத்தை யடைந்து முதிர்வடைந்த சூலை உதிரச் செய்யும் . மனித ரைப் பொறுத்தமட்டில் சீமன் பாயியானது கலவிவேளையில் உயர் யோனி உயர் பகுதியிலும் கருப்பைக் கழுத்து வெளிவாய் மேலும் இடப்படும். சில வேளைகளில் வல்வப் பிளவுக்கு மேலே இடப் பட்ட சீமனிலிருந்தும் பேமுயிரிகள் உட்சென்று கருக்கட்டலே நிகழ்த்தும் . கன்னிப் பெண்களில் உட்புகுத்தல் நிகழா நிலைமை களிலும் இடைத் தடைப்படும் கலவியிலும், வல்வம் மே லிட்ட சீமன் வியக்கத்தக்க முறையில் கருக்கட்டலை நிகழ்த்தியதை நானறிவேன். கருப்பைக் கழுத்து உயர நோக்கி யோனி உறை முற்சுவருடன் நெருங்கி இருப்பின், இக் கருப்பைக் கழுத்து வெளி வாயை சீமன்பாயி அடைவதற்குத் தடையை உண்டாக்கும். பேமுயிரிகள் புகுதல் செய்யமுடியாத நிலைமை உண்டாகும். சீமன் ஆனது சீமன் புடகங்களாலும் முன்னிலைச் சுரப்பியாலும் சுரக்கப் பட்ட கீரபாகுப்பாயியில் தொங்கவிடப்பட்ட முதிர்வுப் பேம் உயிரிகளாலும் அமைவுபெறும். இதில் 5-10 முதிர்வு அடையா உருக்களும் உண்டு,
பேம் உயிரிகள் விதைகளை விட்டேகும் பொழுது அவை முத லாம் முதிர்வுப் பிரிவு மாற்றங்கள் அடைந்து நிற மூர்த்தங்களே 46 இலிருந்து 23 ஆக ஆக்கிவிடும். இவை நிறை முதிர்வை அடை யாதவை. கருக்கட்டல் நிகழ்வதற்கு வல்லமை அற்றவை. இவை விதை மேற்றிணிவின் புன் குழாய்களூடாகப் பயணம் செய்வதற்கு 2 கிழமைகள் மட்டில் செலவாகும். சீமன் வெளிவீசல் நிகழச்சி சற்று முன்னம் சீமன் பாயியுடன் கலந்து நகரும் தகைமையை அடையும். பேமுயிரிகள் பேம்புடகங்களில் சேமிக்கப்படுவதில்லை. பெண்ணின் பிறப்புறுப்புச் சுவட்டுக்குள் புகுந்து கருப்பைக்குள்
 

கருக்கட்டலும் கருப்பநிலையும் 139
ளும் கருப்பைக் குழாய்களுள்ளும் 2 - 4 மணித்தியாலங்களுக்கு வாழ்வை நிகழ்த்தினலொழிய பின்பு அவை கருக்கட்டல் வல் லமையை முற்ருகப் பெருவென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சீமன் பாயியைப் பொறுத்தமட்டில் வெளிவீசல் நிகழ்ந்த 30 நிமிடங்களுள் அது தெளிவான நீர் மயப் பாயியாகும். நீர் மய மானது முன்னிலைச் சுரப்பியின் சுரப்பி நீரால் உண்டாகின்றது. இதனுள் புறம் ருே சு (பழச் சீனிவகை ) அடக்கப்பட்டிருக்கும். இது பேமுயிரிகளுக்குச் சக்தியுணவாகும். ஆனல் வெளிவீசலுக் குப் பின்பு இதன் அடக்கல் அளவு விரைவில் குறைவடையும். இந்தச் சீமன்பாயியில் உயர் செறிவில் புருெ சுற்ருே கிளான்டின் பதார்த் தங்களுண்டு. இவற்றிற்கு மழமழப்புத் தசையைத் தூண் டும் சக்தியுண்டு. இந்த மழமழப்புத் தசைத் தூண்டல் சிறப்பாக இப்புருே சுற்ருே கிளாண்டின்களினுல்தான் நிகழ்கின்றது. 13 வெவ் வேறு வகைப் புருே சுற்ருே கிளான்டின் களைச் சீமனிலிருந்து பெற் றிருக்கின்றனர். முன்னிலைச் சுரப்பியின் சுரப்பில் அதிக அளவில் இப்பதார்த்தம் இல்லை.
சீமன் வெளிவீசலின் முதற்பகுதியானது முன்னிலைச் சுரப்பியி லிருந்துவரும் சீமனில் அமிலப் பொசுபற்றே சு மிகுதியாகக் காணப்படும். இரண்டாவது பகுதியின் பாயியானது தெசுத் திசு (விதை) மேற்றிணிவு கவசம் போக்கி (அப்பால் அகற்றுகான்) ஆகியனவற்றில் இருந்துவரும். இதில்தான் பேமுயிர்கள் உண்டு: மூன்ருவதான பகுதி சீமன் புடகங்களிலிருந்துவரும். இதில்தான் பெரும் அளவில் பழச் சீனி உண்டு. (புறம் ருே சவுண்டு) மனிதச் சீமனில் காணப்படும் புருே சுற்ருே கிளான்டின் பதார்த் தங்கள் சீமன்புடங்களிலிருந்து தோன்றுவனவாம். இப்பதார்த் தங்கள் குருதிக்கலன அகட்டலாலும் மழமழப்புத் தசைத் தூண்டலாலும் துணைச் சுரப்பிகளை வெறி தாக்கம் செய்து வெளி விச2லச் செவ்வையாக நிகழ்த்த உதவுமெனச் சிலர் கருதுகின்றனர்:
மேலும் பெற்ற தெரிபேறுகள், மனித சீமனை அல்லது அதன் பாயிப்பொருள்களை யோனிக்குள் இடும்பொழுது அவற்றிற்கு கருப்பைக்குள் நகரும் இயல்புண்டாகுமென்றும் பின்னர் அவ் வியல்பு குறையுமென்றும் தெரிவிக்கின்றன. கலவி வேளையிலும் சச்சு (காம உச்சம்) நிலையிலும் பின் பக்கப் பிய்த்துயித்தறி ஓமோன் களான ஒட்சிரொசினும் வாசோப்பிறெசினும் சுற்ருேட்டத்துள் விடுத்தல் உறும் பெண்களில் யோனியுள் சீமன் புருே சுற்றே, கிளான்டின்களை இடும்பொழுது முழுக் கருப்பையின் அசையும் தகவும் குறைவடையும். மேலும் பாலினவகைத் தூண்டல் வேளையி லும் சச்சு வேளையிலும் கருப்பையானது கூடுதலான அசையும்

Page 81
140 இளம் பெண் நோயியல்
தகவைக் காட்டுமெனவும் இது சிறிது நேரத்தின் பின்னர் இல் லாதுபோகுமெனவும் சிலர் கருதுகின்றனர். சீமன் வீசலுக்குப் பின் சிமனை புருெ சுற்ருே கிளான்டின்களால் கிளர்த்தப்பட்ட குறை வான கருப்பை அசைவானது, கருப்பைக் கழுத்தைச் சுற்றியிரு க் கும் சீமன் மடுவிலிருந்து பேம் உயிரிகள் அமர்முறையில் கருப்பைக் குழியை அடைய உதவுமெனக் கூறுவர். சீமன்வீசல் வேளையில் பீனமு ைகயானது கருப்பைக் கழுத்து வெளிவாய்க்கு அடுத் தாற் போல் கிடக்கும். எனவே கருப்பைக் கழுத்திலிருந்து சொரியும் காரச் சுரப்புடன் சீமன் பாயி கலப்புறும். இவ்வித (3 it if G 6) யோனி அமிலப்பாயியானது சீமனுக்கு அதிக கெடுதியை விளைவிக் காது. கருப்பை பின்திரும்பிய நிலையில் பின முகை யோனியின் பின்விதானத்துள் கிடந்து, பாயியை அதனுள் வடிக்கும். இதி விருக்கும் உயிரிகள் யோனி அமிலப்பாயியால் கொல்லப்படக் கூடும் . இவை கருப்பை வாயை அடையவும் வில் லங்க முறும் (குதிரை, பன்றி, நாய், எ லி ஆய விலங்குகளில் பேம்பாயி நேரடி யாகக் கருப்பைக் குழிக்குள் இடப்படும் ).
பொதுவாகக் கூறின் வெளிவீசலுக்குப் பின் மேன் பாயியானது யோனிக்குள் இடப்படும். யோனிப்பாயி அமிலத் தன்மை உ ையது. பேமானது இதில் இறக்கும் தன்மையுடையது. எனவே இதில் உயிர் தப்பவேண்டின் விரைவில் தப்பிக் கருப் பைக் குட் புக வேண்டும். சீமன் பாயியானது காரநிலையுடை யது. இதன் pH, 7 8 ஆகும் யோனிப்பாயியுடன் கலப்புறும் பொழுது சீமன் கலப்புநீரின் பெறுமானம் 6 2 ஆகும். கருப்பைக் கழுத்திலிருந்தும் பாதோலின் சுரப்பிகளிலிருந்தும் வரும் இரிவு கள் குறைபடின் அதாவது நீர் சொரியாவிடின் இது 5 5 ஆகக் கூடும். பேமுயிரிகள் உயரப் பயணம் செல்லாது இரு மணித் தியா லங்களுக்கு அல்லது இதனைவிட நீண்ட நேரத்துக்கு யோனியுள் இருப்பின், அவை கொல்லப்படும். சொற்ப நிமிடங்களுள் கரு ப் பைக் கழுத்துள் புகுதல் செய்யக் கூடியனவைதான் தம் கருக்கட் டல் வல்வமையைப் பேணும். கழுத்துக்கானுள் pH இன் பெறு மானம் 8-9 ஆகும். தாமே தம்மை முன்செலுத்தும் வல்லமை யாற் கழுத்துட் புகும். இச்செய்கை இரசாயனப் பெயர்வுமுறை யால் நிகழ்த்தப்படும். பேம் உயிர்களை அமிலப் பொருளானது வெறுத்துத் தள்ளிவிடும். காரப் பொருளானது அதை ஈர்ந்திழுக் கும். இந் நல்வாய்ப்புடைய பேமுயிரிகள் கழுத்துக்கானே அடைப் புச் செய்யும் மென் மியூக்கசு ஊடாகப் பயணம் செய்யும். மியூக் கசுவானது சூலுதிர்வேளையில் பேமுயிரி அதனூடாகப் போக்குச் செய்வதற்காக மென்மையாகும். கழுத்தைக் கடந்து கருப்பைக் குட் புகுந்தவுடன் கருப்பையினதும் கருப்பைக் குழாய்களினதும்

கருக்கட்டலும் கருப்பநிலையும் 14
சுருக்கங்களால் கடுகதியில் சூலை அடையும், இந்தக் கதிப்படுத் தல் முன் கூறியதுபோல் புருே சுற்ருே கிளான் டின்களின் ஆற்றலால் ஆகும். எண்ணற்ற பே முயிரிகள் தன் ச வுக்கு முளைகளின் உதவி யால் சூலின் ஆரை முடியையும் அதன் உறையையும் துளைத் துக் செல்லும் . ஆனல் கருக்கட்டல் ஒரேயொரு பிந்திவருபவரால் மட்டுமே நிகழ்த்தப்படும். முந்திவந்தடைந்த எண்ணற்ற உயிரி கள் கயலுருே னிடேசை விடுத்தல் செய்து சூலின் கவிகை யுறையை மென்மையாக்குகின்றன. இவற்றைச் சூலின் தெளிவு வலயத்தில் காணமுடியும் . இறுதியில் ஒரேயொரு பே முயிரிதான் சூலுட் புகு கை செய்யும். பின்புதான் வாலையும் உடலையும் இழக்கும். இதன் தலையிலுள்ள முதிர்வு வழிக்கரு (முன்னு ன கரு) வானது சூ லின் முதிர்வு வழிக் கரு வுடன் ஒன்றி 46 நிறமூர்த்தங்கள் கொண்ட ஒரு தனிக்கருவை உண்டாக்கும். கருக்கடலுற்ற பின்பு சூலானது தன் இரண்டாவது ஒடுக்கற்பிரிவை அடையும் . பேமுயிரிகள் யோனியிலிருந்து கருப்பைக் குழாய்களே அடைவதற்கு செலவா கும் கால வளவு 1 மணி மட்டிலாம். சிலர் 6-24 மணித்தியாலங் கள் எடுக்கு மென்பர். இப்பே முயிரிகளிற் பல பயண வழியில் அழிப்புறப்படும். கருக்குழாய்களுட் செல்பவை குழாய்ப்பிசிர் ஒட்டத்துக்கு எதிராகப் போக்குச் செய்யும். கருப்பைக் குழாயுட் தான் கருக்கட்டல் நிகழும். இதன்பின் கருக்கட்டலுற்ற குலா னது கருப்பைக் குழாயுள்ளேயே ஒரு தொடர்ச்சியான கலப்பிரிவு களே நிகழ்த்தும். முதல் 7 நாட்களுக்கும் அரும்பற் சிறைப்பை பரு மனில் கூடுவதில்லை. இது 0 13 மிமீ. விட்டமுடையது. கரு க்கட்டலுருச் சூலின் விட்டம் 0 1 மிமீ. ஆகும். தெளிவு வலய மானது, அரும்பற் சிறைப்பை, கருப்பை அகவ ணியுள் பதிவுறும் காலம் வரைக்கும் நிலைக்கும். அரும் பற்சிறைப்பைக்கு இவ்வளர்ச்சி நிலைமையில் ஊட்டு அரும் பற்படை தோன்றி பின்னர் இது ஊட்டு அரும் பராகவும் ஒன்றிய ஊட்டு அரும் பராகவும் மாறும். ஊட்ட அரு ம்பரின் வினையமானது அரும்பற் சிறப்பையைக் கருப்பைச் சு வருடன் தொடுத்துப் பின்னர் அதற்கு ஊட்ட வளம் அளிப்பதே UL I IT (œg5 LD .
கருக்கட்டுண்ட சூலானது கருப்பைக் குழாயூடாகக் கருப்பைக் குழித் திக்கில் கருப்பைக் குழாய்ப் பிசிர்களாலும் குழாய்த் தசை களின் பரியிறுக்கங்களாலும் இடம் பெயர்க்கப்படும். இக்காலத் தில் இதன் உணவூட்டம் இதன் ஆரை முடியாலும் கருக்குழாய் அகக் சுரத்தல் நீராலும் ஆகும் , 4 நாட்களுக்குப் பின்னர் இது கருப்பைக் குழியை அடைந்து கருப்பைச் சுரத்தல் மியூக்கசுவால் அங்கு மிங்கும் இரு நாட்களுக்கு அலசப்பட்ட வெளியகற்றலுக்குத் தப்பின் மியூக்கசு சுரப்பி வாய்களுக்கிடையிலுள்ள மேட்டை

Page 82
42 இளம் பெண் நோயியல்
யடைந்து 7 ஆம் நாள் மட்டில் இவ்விடத்து அரும்பர் சிறைப்பை கருப்பையக வணியுடன் தொடுக்கப்படும். இது நிகழ்வது பெரும் பாலும் கருப்பையின் உயர் பகுதியிலாகும். விரைவில் இது அக வணியை அரித்து உட்புகும். புகு கைப்பொந்து விரைவில் மூடப் படும். கருப்பைக்குள் செலவழிக்கப்படும் 2 - 3 நாட்களுக்கும் , இதற்கு அகவணியிலிருந்து வடியும் புருே செசுற்றே ன் நீரால் உண வூட்டப்படும். பின்பு தன் கருப்பை வாழ்வைத் தொடங்கி, கரு வுருவை உருவாக்கி மேலும் நிகழ் கருப்பைநிலை வளர்த்தி மாற்றங் களே அடையும்.
கருப்பநிலை
பேமுயிரிகள் எவ்வளவு நாட்களுக்கு கருக்கட்டல் வல்லமை யுடன் பெண் பிறப்புச் சுவட்டுள் வாழமுடியுமென்பதைப்பற்றி தற்காலத்தில் ஆராய்வு மூலம் முடிபேறுகள் பெறப்பட்டுள்ளன. கருப்பைக் கழுத்துள்ளும் கருப்பைக்குள்ளும் 5-7 நாட்களுக்கு உயிருடன் இருக்கக்கூடுமெனவும் ஆணுல் இப்பருவத்தில் இவற் றிற்குக் கருக்கட்டல் வல்லமை இல்லாதிருக்குமெனவும் யோனிக் குள் புகுந்தபின் 24 மணிகளுக்குள் வல்லமையை இழக்குமென வும் சான்றுகள் தெரிவிக்கின்றன.
முதிர்வடைந்த சூல் 24 மணிகள் மட்டும் உயிருடன் வாழும். இதற்கு சூலகத்தினை விட்டேகினயின்பு 8 - 12 மனிதன் வரையில் கருக்கட்டலுறும் வல்லமை உண்டு. எனவே கலவியா னது சூல் உதிர்தலுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் னர் அல்லது சூல் உதிர்ந்தவுடனேயே நிகழ்ந்தாலொழிய இதற் குப்பின்பு எந்நிலையிலும் கருக்கட்டல் நிகழமுடியாதாகும். கருக் கட்டலுறுவதற்கும் கருக்கட்டலைத் தடுப்பதற்கும் மேற்கூறிய குறிப்புகள் பயனுடையவையாகும்.
மாதவிடைவும் சனணிகள் அல்குகாலப் பருவமும்
மாதவிடைவு ஆனது மாதவிடாய் மேலும் நிகழாது நிறுத் தப்படுவதைக் குறிக்கும். இது சனனிகளின் அல்கு பருவத்தில் நிகழும் ஒரு தோற்றப்பாடாகும். இதற்குப் பருவம் 1-5 ஆண்டுக ளாகும். இக்காலக் கூறில் சூலகங்கள் தம் செயலைக் குறைத் துக் கொண்டேபோகும். ஏனைய பிறப்புறுப்புக்களும் அலலுரட்ட மடையும். மாதவிடைவுக்குப் பின்பு முற்ருக அற்றுப்போவதற்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் எடுக்கும். இக்காலக் கூறில் ஈத்திரசன்கள் சூலகப் பஞ்சணையாலும் அல்லது அதிரனல் காரோட்

கருக்கட்டலும் கருப்பநிலையும் 143
டாலும் சுரக்கப்படும். கீழின விலங்குகளில் சூல் உதிர்தலும் குட்டி கள் ஈனும் வளமும் மூப்புப் பருவத்திலும் நிகழும். மாதவிடைவு நிகழும் வயது, பெண்ணின் பழனித இன வகுப்பையும் குலத்தை யும் அவளின் பொருளாதார நிலைமையையும் பொறுத்திருக்கும். பெண்ணின் மாதவிடைவு தோற்றும் வயது, அவள் அடைந்த கருப்பநிலைகளின் எண்ணிக்கை. அவள் வசிக்கும் நாட்டின் தட்ப வெப்பநிலை சூழல் ஆகியவற்றில் தங்கியிருப்பதில்லை. இலங்கை யில் மாதவிடைவு பொதுவாக 45 - 50 ஆண்டுகளில் நிகழும். சிலரில் 50 வயதுக்கப்பாலும் நிகழும் , 45 வயதுக்கு முன்னதாக வும் நிகழும். சிலரில் மாதவிடைவு திடீரெனவும் நிகழக்கூடும். பொதுவாகப் படிப்படியாகக் குருதியிழப்பின் அளவு குறைந்து கொண்டேபோய் இறுதியில் நின்றுவிடும். இவ்விதமாக நிகழ்வ தற்குப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் செல்லும். மாத விடாய் நிறுத்தப்படுவதற்குக் காரணம் சூலகங்கள் முற்பக்கப் பிய்த் துயித்தறியால் மேலும் தூண்டமுடியாத நிலேமையேயாகும். எல்லாச் சூல் குழியங்களும் இக்காலத்தில் அற்றுப்போகும். ஆனல் தொடர்ந்து முற்பக்கப் பித்துயித்தறி ஓமோன்கள் செயலாற்றும். பு, து. ஒ. (FSH) பெருமளவில் சுரக்கப்படும். கடும் மாத இரிவு கள் இக்காலத்தில் அவ்வளவு தோன்றுவதில்லை. தோன்றின் இதற்கு வேறு காரணங்கள் இருக்கக் கூடும், கேடயச் சுரப்பிகளும் அதிரனல்களும் செயற்திறன் குறையக்கூடும்.
இவ்வகையான மாற்றங்களினல் பிறப்புறுப்புச் சுவடும் படிப் படியாக அல்குதல் அடையும். முலைகள் சிறுத்துச் சுருங்கும். கொழுப்பு அடர்த்தியுடைய முலைகளில் இது தோற்றது. பெண் கொழுப்பானவளாகின் தோள்கள் பெருக்கும். இடுப்பும் வயிறும் பெருக்கும். அதிரனல் விளைவால் முகத்தில் மயிர்கள் முளைக்கது கூடும். கமுக்கட்டு மயிர்களும் பூப்புப்பிரதேய மயிர்களும் உதிர்வ தில்லை. உடல்நிறை கூடவும் கூடும். இது கூடுதலாக உண்பதா லும் அனுசேப விளைவுகளின் அகச்சுரப்பி ஆட்சி பிழைபடுவதாலு
DIT Lisb .
உளமாற்றங்கள்
இவை பெண்ணின் மனநிலையைப் பொறுத்து வேறுபடும் . அவள் இக்காலத்தை எதிர்நோக்கும் மனப்பாங்கு முக்கியமானது. அவள் தனியணு, கல்யாணம் உற்றவ ளா, பிள்ளை குட்டிகள் பேரப் பிள்ளைகள் ஆகியன அவளுக்குண்டா, நண்பர்கள் சுற்றம் உண்டா ஆகிய காரணங்களிலும் அவை பொறுத்திருக்கும். இவ்வித நற்

Page 83
144 இளம் பெண் நோயியல்
சூழல் களேப் பெற்றிருப்பின், அவள் அவ்வளவு பாதிப்படைய மாட்டாள். ஆனல் உளமாற்றங்கள், தான் இனிமேல் குழந்தை பெறமுடியாத எண்ணத்தினுலும், பாலினச் சேர்க்கையில் விருப் பம் குறைவதனுலும், கணவனின் அன்பை இழக்கக்கூடிய நிலை உண் டாகும் என்ற எண்ணத்திஞலும் இன்னும் இவ்விதமான பல கார ணங்களாலும் ஏற்படும். மேலும் கல்யாணம் செய்து பிள்ளை வளம் உள்ளவர்கள் பிள்ளைகளின் நடத்தையாலும் மனவேதனை அடையக்கூடும். வீட்டு வேலைகளும் கூடும். சுற்றத்தார் நண்பர் ஆகியவரின் நடத்தையால் மனமாற்றங்கள் நிகழும் . மேலும் பேரப்பிள்ளைகளைக் கவனிக்க வேண்டிய நிலைகள் ஆகியனவும் விரும் பாத தொந்தரவுகளை விளைவிக்கும். மேலே கூறப்பட்ட நிலைக ளால் உண்டாகும் இடர்கள் அவளின் உளநிலைமையைப் பாதிக்
கும்.
சூலகங்களின் அல்குதலின் அறிகுறிகள்
இவை மாதவிடைவுற்ற பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் சென்ற பின்பு நிகழும். மாதவிடாய் ஒழுங்காக நிகழும் வரைக்கும் இவ் அறிகுறிகள் தோன்ரு. பெரும்பாலும் இவ்விதமாகக் காணப் படும் அறிகுறிகளை இம் மாதவிடாய் நிறுத்தலால்தான் என, அவள் தப்பிதமாக எண்ணுவாள் அல்லது மற்றவர்கள் அவளுக்கு இதனுற் தானெனச் சொல்லுவர். இவ்வறிகுறிகள் முதலாய பிய்த்துயித் தறி இல்லாதவர்களிலும், சூலக ஒமோன்களால் எக்காலத்திலும் பாதிக்கப்படாதவர்களிலும் இரு பக்க சூலக அகற்றல் பக்குவ மடை தற்காலத்துக்குமுன்பு நிகழ்த் தப்பட்டவர்களிலும் தோற் றப்படுவதில்லை. எனவே இவ்வறிகுறிகள் ஒரு புது அகச்சுரப்புச் சீராக்கல் காலத்தில் நிகழ்வன எனக் கருதப்படும்.
இச்சூலக அல் குதற் காலத்தில் பெண்கள் 75 வீதம் சில மனக் குழப்பங்களையும் உடற்குழப்பங்களையும் தோற்றுவர். ஆனல் 20-25 நூற்றுவீதத்தினருக்கே வைத்திய ஆலோசனை தேவைப் படும். மிகச் சிலருக்கு வேறு தீர்வுமுறைகள் தேவைப்படும் மாத பிரிவு காலத்தில் மன உறுதியுடன் இருக்கும் பெண்கள் அவ்வளவு பாதிக்கப்படுவதில்லை. இவர்கள் ஈடுபடும் வேலைகளில் இவர்க ளுக்கு ஊக்கமும் திறனும் மனக்குவிவும் ஏற்படுவதில்லை.
மாதவிடைவுகாலத்தில் காணப்படும் நோய்களின் அறிகுறிகள் :
நரம்பியல் அறிகுறிகளிலும் மனக் கிளர்ச்சி அறிகுறிகளி இம் அடங்கு வனவே மன அமிழ்வு, மனநடுக்கம் மன அருட்டற்

கருக்கட்டலும் கருப்பநிலையும் 145
றகவு, மனவூன்றல், தலைக்குத்து, துயில முடியாமை, கைகள் கால்களில் பர உணர்ச்சியுயா, தலைக்கிறுகிறுப்பு ஆகியன.
2. உள்முக மனஅமிழ்வுயா: மனஅமிழ்வு உண்டாகின் அது மேலும் மேலும் சீர்கெட்டு நிலைபேருண மன ஒசிவு நோயை உண் டாக்கும். சிறப்பாக முன்பு மனநோய்களால் வருந்திய குடும் பத்தினரிலேயே இது இலகுவில் தோன்றும். எல்லாவகையான இடர்களைப் போன்றே சூலக அல்குதல் விளைவுகளையும் போலிக் கருப்பநிலையையும் தோற்றுவிக்கும்.
3. அனுசேப அறிகுறிகள் சில பெண்கள் தம் உடலின் நிறையில் கூடுவர். உடலின் பல பாகங்களில் சிறப்பாக வயிற்றுச் சுவரில் கொழுப்படைவர் . உடற்பாரம் கூடுதலால் கால்களின் பொருத் துக்கள் பாதிக்கப்பட்டு அழற்சிக் குறிகளைத் தோற்றும். தசையின் தொனிகளும் தாங்கு இழையங்களின் வலிவும் குறைவு அடையும். கருப்பை, ஊறுநீர்ப்பை ஆகியன இறக்கம் அடையக்கூடும்.
4. இதயக்கலன அறிகுறிகள்: இதயப் படபடப்பும், இதய நோக் களும் வினைய அல் ஒத்திசைப்பு உயாக்களும் தோன்றக்கூடும். இதய முடக்குவலியாலும் வருந்தக்கூடும். மிகச்சிறப்பான குறிக ளாவன வெம் இறுமல்களாம். ( சிவத்தல் ) இந்த அறிகுறியின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு இதன் நாளாந்தத் தோற்ற எண் ணிைக்கையை மதிப்பிடுவர். இந்த இறு மல்கள் சிறப்பாக முகத் திலும் கழுத்திலும் உண்டாகும். இவை மன அருட்டல், மனப் பெல க்குறை, வெப்பமான காலநிலை ஆகிய நிலைமைகளிலும் தோன்றும், அடிக்கடி கடும் வியர்வையுடன் தோன்றும் தெரி பேறுகளின்படி இவை 24 மணிகளுக்கு 1 - 2 எண்ணிக்கையி லிருந்து 40 - 50 வரையில் இரவிலும் பகலிலும் தோன்றும். இதனல் துயிலும் கெடும். கலன அகட்டலின் பின் கலன ஒடுக்கம் நிகழ்வதால் ஓர் இறு மலுக்குப்பின் குளிர்நடுக்கம் தோன்றக் கூடும். இதற்குக் காரணம் செவ்வையாக அறியப்படவில்லை. பித்துயித்தறி சனனியூட்டி ஒமோன்களாலெனக் கருதப்படுகின் றது. ஈத்திரசன்களும் அந்திரசன்களும் இவற்றை நிகழாது தடுக் கும். அதி பரகலன இறுக்க நோயும் இப்பருவ வேளையில் உண் டாகக் கூடும்.
ஏனைய அறிகுறிகளாவன : முலைகளில் நோ, நாட்பட்ட முலை யழற்சி, மூட்டுநோ என்புக்கோறை வாதை, தசையழற்சி, தோல் நிறம்படல் ஆகியனவும் உண்ணிகளும் மறைகளும் தோன்றக் கூடும். - - |

Page 84
1 46 இளம் பெண் நோயியல்
சூலக அல்குதல் காலத்துக்குப் பின்பு இதய முடியுரு நாடி திரைப்பு வரிதையும் தோன்றக் கூடும். :
மாதவிடைவினதும் சூலக அல்லூட்ட அல்குதற் பருவத்தினதும் நலன்
பேணல் முறைகள் eeeSuSiS S S S S S S0 S S S S S
() Y
'பொது : சூலக அல்குதலானது உறுப்பு நோயியல் காரணிக ள்ான குறைதைரோடியம், பித்தப்பையழற்சி என்பவற்றல் தோன்றவில்லை என்பதை முதலில் திட்டிப்படுத்தவேண்டும். அவ ளுடன் உரையாடி அவளின் நிலையை விளக்கி, பீதியை அகற்றி மனத்தைப் பெலப்படுத்த வேண்டும் டி இது ஒரு வாழ்க்கைத் இருப்ப்மென விளக்கி அதற்கேற்றவாறு வாழ்க்கையை நடித்தப் புத்திமதிகள் கூற்வேண்டும். அவள் தன் தோற்ற வசீகரத்தை இழக்கவேண்டியதில்லை. அதனை இன்னமும் நிலைப்படுத்தி மன மகிழ்வுட்ன் வாழ்லாம் என்று கூறவேண்டும்.  ே
Y Yo»
... , , is . . . .
உணவு உட்கொள்ளுதலில் மிதமிஞ்சி உண்ணல் நல்லது அல்ல என்று வற்புறுத்தவேண்டும். ஓர் உண்வுப் பட்டியலைத் தயா ரித்து உதவுதல் நன்று. குடும்ப அலுவல்கள் இல்லாத பெண்கள் புதுப்புது நலன்வளர்ச்சி இயக்கங்களிலும், சமய ஈடுப்ாடுகளிலும், சமய வளர்ச்சிச் சங்கங்களிலும் ஏனைய பலவிதமான பெண்களுக் காகிய இயக்கங்களிலும் சேர்ந்து தனிமையைப் பேர்க்கி வாழ்வில்
m 、、、、。 km)、リ/ ( لل؟ மேலும் மகிழ்ச்சியை உண்டுபண்ணி வாழவேண்டும். Y. „A (ვა „ს . - 1 უკ \ური სა 。 r ) 、○、 -
மருந்து முற்ைகள் : மிகுதியானுேருக்கு மரு ந்து மருத்துவம் தேவைப்படாது. சிலருக்கு மட்டும் தான் அவை தேவைப்படும்.
VAKA 5 Aws 2. * * * * - t . . . . ༦༨ }, ༣), 《ལྷོ་
1. தணிப்புசெய் மருந்துகள் : பீனபாபிற்றேன். அல்லது புருேமைட்டுகள் பயனுடையன. 11 ܪ) 11 ܠܰܝܬܐ
- 。 い s, 4. 3, Y. Vg V "" T- 。 、 リ、 پیشتاب
2. தை ரொட்சின், ஓமோன், கல்சியம் ஆகியன கேடயச் சுரப்பிக் குறையையும் உடற் கல்சியக் குறையையும் தீர்க்கும்.
リ 、 Q。 நரம்பியல் அறிகுறிகளுக்கு : இவை கட்டுப்படுத்த முடியாதவை யானுல் மன நடுநிலைஇயக்கிகளைக் (திரான்குலைசர்) கொடுக்கலாம்.
V, KI
1) : ------- « Ties riĉo (eo, EG - NPR வியர்வை இறுமல்கள் தொந்தரவு கொடுப்பன. அற்ககோல், கோப்பிதிவெந்நீர்க் குளிப்புகள், கறிக்கு இடும் சரக்குப் பொருள் கள், மிளகாய் முதலியன தவிர்க்கவேண்டும். 、。

கருக்கட்டலும் கருப்பநிலையும் 147
அகச்சுரம்பித்தீர்வுமுற்ைகள்? வீேறுவகைத் தீர்வுமுறைகள் பயன் தராவிடின் அக்ச்சுரப்பித் தீர்வுகளைக் கையாளவும். 40 ܨ
SLLSu S S SSK S iS S S S S ** * · · r 18:33, 1. ஈத்திரசன்கள்: தில் பீத்திரோல் 072- 05. மிகி, எதினைல் ஈத்திரடயேரில் 0 0 மிகி இவற்றில் ஒன்றை 2-கிழமைகளுக்கு நாள்தோறும் ஒரு குளிகையாகக் கொடுக்கவும். இறு மல்களின் எண்ணிக்கையைக் கொண்டு தீர்வை மதிப்பீடு செய்யவும். சில சமயங்களில் இறு மல்கள் தோன்ருது இருக்க மருந்தின் எடை  ையக் கூட்டிலும், குணமடையின் அதே எடையில் 1 மாத காலத் துக்குக் கொடுக்கவும். பின்பு படிப்படியாகக் குறைக்கவும்.
K & K & 3 & 4, 8 SY'N 'SI' S '\:)"
l ר"י ל , שמא ר" , " ..." וא SLS S SSiiS ܝ ܢ .¬ ܓܡ1 , 1 ܦܨܢܝ το και και τα δ ή , 1 = "*'++'
இப்பொருள்கள் வாந்தியை உண்டாக்கின், ஈத்திரடயோலை அல்லது ஈத்திரோசனைக் கொடுக்கவும்.
நீடியகாலத்துக்குப் பெண்கள் தீர்வை மருந்துகளை உட்கொள் ளார். நீடிய காலத்துக்குக் கொடுப்பின் குரு திவாரிகளும் , கருப்பை அகவணி விளைசலும் உண்டாகும்.
ஈத்திரசன்களினதும் புருேசெசுற்றேன்களின் கூட்டு : நோர் எதி சுத்தருேனைத் தவிர்ந்த ஏனையவை நலன் செய்யா. புருே \ செ சுற்ருே ன் அல்குதல் அறிகுறிகளை மாற்ற மாட்டாது. ஆனல் கருப்பை அகவணி வளர்ச்சியைத் தடுக்கும். எனவே கருப்பைத் தடைக் குளிகைகளைத் தனி ஈத்திரசனுக்குப் பதிலாகப் பயன்படுத்துவர், 7-8 நாட்கள் இடைவிட்டு 21 நாட்களுக்கு இக் குளிகைகளை எடுப்பர்.
3. ஈத்திரசன் அந்திரசன் கலவைகள் : இவை இந்த அறிகுறி களைத் தணிப்பதற்கு பயன் உடையன அல்ல. ஆனல் அந்திரசன் நற்சுகநிலை எண்ணத்தை உண்டாக்கும்.
1. மாதவிடைவுப் பிறழ்வுகள் : முன் முதிர்வு மாதவிடைவு 40 வயதுக்கு முன்னம் மாதவி ைடவு நிகழ்வது அருமையாகும். இவ்வகையில் நிகழும் குடும்பங்களும் உள. இருந்தும் அம்மாத பிரிவுயாவின் எல்லா ஏதுக்களையும் சோதித்து இல்லை என்று அறிந்தபின் அது மாதவிடைவுதான் என்னும் முடிவுக்கு வரவேண் டும். இதற்குத் தீர்வுமுறையில்லை.

Page 85
48 இளம்பெண் நோயியல்
2. பிந்திய மாதவிடைவு : 52-53 ஆண்டுகளுக்குப் பின் நிக ழும் மாதவிடாய் வேறு நோய்களால் ஆகக்கூடும். கருப்பை நாரோமாக்களும் , மதுநீரிழிவுநோயும், சூலக ஈத்திரசன் பிறப்பிக் கழலையங்களும்தான் இதற்கு முக்கிய காரணிகளாகும். சிலரில் இவ்விதமாகக் காணப்படுவது அவர்களின் குலம், இனம் ஆகியவற் றின் தனியான சிறப்பு இயல்பாகும். இவ்வகையானுேருக்கு கருப் பைக் காசினுேமா உண்டாகின்றது என்ற குறிப்புக்களும் உள.
3. இரு சூலகங்களை அறுவை வினையால் அகற்றியபின்னரும், ஆழ் X(எக்சு) உக் கதிர் தாக்கத்தாலும் செயற்கை மாதவிடைவை உண்டாக்கலாம். இவ்விதம் நிகழ்த்தப்படும் மாதவிடைவு வேறு கடும் உயாக்கங்களை உண்டாக்கும்.
 

இயல் 11.
பெண்ணின் பிறப்புச் சுவட்டினதும் சூலகங்களினதும் பிறழ் உருவாக்கங்களும் தழைப்புகளும்
முன்னர் ஒர் இயலில் இடைப் பாலினரின் பிறப்புறுப்புக்க ளில் சில உருவாக்கப் பிறழ்வுகள் பற்றி விளக்கினுேம் மேலும் இவ் வுறுப்புக்களிலும் சூலகங்களிலும் வேறு பிறழ்வு அமைவுகளும் உள. இவற்ருல் வருந்துகின்ற மிகுதியானேரில் நிறமூர்த்தப் பிறழ்வுகள் இல்லை. சூலகங்களில் பிறழ்வுகள் இல்லையாயின் ஓமோன் சுரப்புப் பிழைபாடுகளும் இல்லை.
முல்லர்கான்களின் பிறழ்வுகள் : இரு முல்லரின் கான்களும் இல் லாத நிலைமை அல்லது தழைப்பு முற்றடையாத (முகிழ்வு) நிலை எனவும் உண்டு.
1. முல்லரின் கான்கள் இல்லாதவர்கள் : இவர்களுக்குக் கருப் பைக் குழாய்கள். கருப்பையோனியின் உயர் பகுதி ஆகியன இல்லே யாகும். வல்வக் கட்டமைவுகள் நேம உருக்களாகும். யோனி இரு க்கும் இடத்தில் ஒரு தாழ்வு உண்டு. இது மென்திரையால் கூரை பட்டிருக்கும். இத்தாழ்வு பெரிய பள்ளமாயின் இது ஊறு நீர் பிறப்புறுப்புக் குடாப்பகுதியாகும். இதற்குக் கூரையாக மென்திரை அமையும். வேறு வகையில் இவ்வகையான பெண் ணுக்குப் பாலின உடற்கட்டமைவும் உளக்கிளர்ச்சிகளும் காணப் படும். மாதவிடாய் தோன்றுவதில்லை. கலவியை நிகழ்த்தமுடியா நிலையும் நிலவும். இவர்கள் விரும்பின் செயற்கை யோனியை அறுவை வினைமூலம் உண்டாக்கலாம். மிகுதியானுேர் இதை விரும்புவதில்லை. இருந்திட்டொருக்கால் இவ்வகையான குறை யுடைய கன்னிப்பெண்களை ஆலோசனைகளுக்குக் கொண்டு வருவர்.
2. முல்லரின் கான்களின் கடும் உருவாக்கக் குறைவு : இவர்களுக்கு முழுப் பிறப்புச் சுவடும் குறைவளர்த்தி அடையும். கருப்பைக் குழாய்கள், கருப்பை, யோனி உயர் பகுதி, ஆகியன தொடக்க அரும்பர்த் தோற்றங்களாக அமையும்.
3. முல்லர்க்கான்களின் கீழான பகுதிகள் முகிழ்வு வளர்த்தி அடை யும் : கருப்பைக் குழாய்களின் வயிற்றுப் பக்கத்தில் புனலுருப்

Page 86
750 இளம்பெண் நோயியல்
பகுதிகள் உண்டு. கருப்பைக் குழாய்களும் கருப்பையும் யோனி உயர் பகுதியும் இல்லாமல் இருக்கும் அல்லது இப்பிந்திய பகுதி கள் குறை வளர்த்தியுடன் இருக்கும்.
மேற்கூறிய' மூன்று பகுதியின்ரிலும் உடல் வளர்த்தியோ பாலின வளர்த்தியோ, அல்லது பாலின இரண்டாம் தோற்றப் பாடுகளோ, எல்லாம் நன்நிலையில் காணப்படும். ஆனல் இவர்க ளுக்கு மாதவிடாய் மட்டும் தேர்ன்றுவதில்லை கலவியும் நிகழ்த்த முடியாது. வயிற்றுத்திறப்பு அறுவை வினையால்தான் இக்கட்டமை வுப் பிறழ்வுகளைத் திட்டப்படுத்த முடியும் மாதவிடாய் தோன் ருத காரணத்திற்கு ஆலோசனைக்கு வரும் ப்ொழுதுதான் இவர் களின் உண்மைநிலையை அறிந்து திட்டப்படுத்தலாம். கல்வியை மட்டும் விரும்புகிறவர்களுக்குச் செயற்கையோ னியைச் செப்பம் செய்ய முடியும் .
اسة : ) جالس ، هي 1 م
- ܉ ܥܼ ܛܜ ܛܢl1 ふい。リ ー **
4. சிலரு க்கு கருப்பைக் குழாய்களும் கருப்பையும் g; it 600TL படும். யோனிமட்டும் இல்லாதிருக்கும் அல்லது எச்சமாயிருக்கும். ஏனைய பகுதிகள் நிறைவளர்த்தி அடைந்திருக்கும். இவர்கள் எல்லா வகையிலும் செவ்விய் பெண்க்ள்ர்வ்ர். ப்க்குவமடையும் காலத்தில் மாதவிடாய் மட்டும் தோன்றுவதில்லை. இதற்குப் பதிலாக மாதவிடாய்க் காலத்தில் அடிவயிற்றில் குத்தும் வலியும் தோன்றி மறையும். மாதங்கள் செல்லச் செல்லச் கருப்புைக்குள் குருதி தேங்கி கருப்பையைப் பெருப்பித்து வலியையும், குத்தையும் கூட்டும். குருதியானது கருப்பைக் குழ்ாய்களுட்ாக கூப்கக் குழிக் குள் வடிந்து நோவை உண்டாக்கும். ய்ோன்ரி எச்சமாக இருப்
பவர்களில் யோனியின் உயர் பகுதிய்ானது கான் ஆக்கல் மாற் றங்களை அடையும், நடுப்பகுதியும் p பகுதியும் அதாவது
மென்றிரைக்கு உயரவாக இருக்கும் பகுதி, கானக்கல் மாற்றங் களை அடைவதில்லை. மாதவிடாய்க் குருதி" யோனி உறையுள் வடிந்து தேங்கி உயர் பகுதியை விங்கச் செய்யும். யோன்யுறை மிகவும் விரிவு அடையக் கூடியபடியால் பல மாதங்களுக்கு குருதி இதனில் கு ைவந்து இதன் நீரானது அகத்துறிஞ்சப்பட்டு குருதிப் பாயி ஒரு கரும் மங்கல் நிறம் ஆகும்.இது தடித்து பிசுபிசுப்பான பாயி ஆக மாறும். இக்காலத்தில் மோதிவிட்iri தேர்ன்ருத
في خة. لا أنه
காரணத்தினுலும் இக்கட்டி ஊறுநீர்த்தடங்கலையுண்டுபண் வதனலும் இளம் பெண்களை 14-16 வயதளவில் ஆலோசனை களுக்குக் கொண்டுவரு வர். இவர்கள் பாலின தோற்றப்பாடுக ளுடன் மற்றெல்லாவகையிலும்பக் குஜம் அழ்ைந்து ஏனைய இளம் பெண்கள் போன்றிருப்பர். பாலின தோற்றப்பாடுகளும் உளர்.

கருக்கட்டலும் கருப்பநிலையும் 5.
யோனிச் சோதனை செய்யும்பொழுது ஒரு கரும் மங்கல் நிறமுடைய நீர்க்கட்டி யோனிவாயிலில் விம்முவதைக் காணமுடியும் கருப்பை யானது இக்குருதிச் சிறை (யோனிக்குருதிச் சிறை) க்குமேல் இருப்ப தாக அறியப்படும். இதனுல் கருப்பையும் உயர்த்தப்பட்டு, இதுஅடி வயிற்றின் தடவு சோதனையில் தென்படும் . இக்கட்டியால் ஊறு நீர்ப்பையும் உயர்த்தப்படும். ஊறுநீர்த்தடங்கல் காணப்படின் கதீற்றர் கொண்டு ஆறுநீர்ப்பையை வெறித்தாக்கம் செய்யும் பொழுது ஊறித்தாரையும் நீண்டிருப்பதை அறியமுடியும். நேர் குடற்சோதனையில் ஒரு நீண்ட உருளை உரு வீக்கம் நேர்குடலில் முன் சுவரைத் தள்ளுவதாக அறியப்படும். இவ் இளம் பருவ காலத்தில் இதைத் திட்டப்படுத்தத் தவறின் யோனியுள் அமுக்கம் மிக உயர்வடையும். குருதியானது கருப்பையை விரிக்கும். இத னேக் கருப்பைக் குருதிச் சிறை என்பர், குருதியானது கருப்பைக் குழாய்களூடாக கூபகக் குழிக்குள் வடியும். நர்ட்செல்ல இக் குழாய் ளின் மருவிகள் ஒட்டுண்டு கருப்பைக் குழாயின் வெளி
GJIT GO) ULI அடைக்கும். இதுவே கருப்பைக் குழாய்க் குருதிச் சிறை யாகும். இப்ெ பாழுது கருப்பையும், கருப்ை யக் குழாய்களும் குருதி உள்ளே தேங்குவதால் வீங்கிப் பெருக்கும். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நிலைமை எய்திய பின்புதான் பெண்கள் ஆலோசனைக்கு வருவர். இப்பொழுது குறிகளும் அறிகுறிகளும் தோன்றி இளம் பெண்ணுனவள் மாதந்தோறும் வயிற்றுக் குத்தும், நாரிக்குத்தும் ஏனைய மாதவிடாய் உயாக்களும் இருப்பதாகக் கூறுவள். வலியும் குத்தும் வர வரத் தனக்குக் கூடுவதாகக் கூறுவள். ஊறு நீர்த் தடங்கல்களும் இக்காலங்களில் தோன்றும். சில நாட்களின் பின்பு நிலைமை திரு நீதி மாதவிடாய் காலத்தில் நிலைமை முன்போன்றே இருக்கும். ' 。" km 。 リ。 - ܗܝܗ
- , ξε W、\ 、
S S S S S S S S S S S S S S S S S S S
சோதிக்கும் பொழுது பெண் நல்ல. பாலின வளர்த்தியை அடைந்திருப்பள். அடிவயிற்றில் ஒரு பெருங் கட்டியிருப்பதாக அறியப்படும். யோனிச் சோதனையில் முன்னர் கூறப்பட்ட குறி கள் தோன்றும் . is a
யோனி அல்ல்துளையுயர் ஆனது கருப்பைக் கழுத்துக்குக் இட்ட வாகின் யோனி விரியாது. யோனி காணப்படாத பெண்களில் மேலே இலக்கம் (4) இல் 'குறிப்பிட்ட முறையில் கருப்பையில் விக்கம் மட்டும்தோன்றி அதிற்கூறப்பட்ட குறிகளைத் தோற்றும்.
| , இரு கருப்பைகளும் இரு யோனிகளும் இரு ப்பவர்களில் Øp(Ü பக்கக் கருப்பையும், யோனியும் மேலே கூறப்பட்ட முறையில் பாதிக்கப்படும். இவர்களில் ஒரு பக்கத்தில் முன் கூறப்பட்ட

Page 87
52 இளம்பெண் நோயியல்
அறிகுறிகள் தோன்றும். ஆனல் மாதவிடாய் மாதந் தோறும் தோன்றும். பெரும்பாலும் ஒரு கூபகக் கட்டியெனத் திட்டப் படுத்தியபின்னர்தான் அறுவை வேளையில் உண்மை நிலைமை அறியப்படும்.
தீர்வு அறுவை வினை தேவைப்படும். யோனிக் குருதிச் சிறப்பையைக் குறுக்கு மறுக்காக துமித்து துளை செய்து குருதியை வடிக்கவேண்டும். குருதியை மெல்லமாக தன்னியல்பில் வடிய விட வேண்டும். கருப்பையை அழுத்திப் பிசுக்கி குருதியை அகற்றவே படாது. தொற்று நிகழாது இருப்பதற்காக நுண்ணு யிரெதிரி மருந்துகளைக் கொடுக்கவேண்டும். பொழிச்சற் கழுவல் களும் ஒற்றல்களும் கெடுதியை விளைவிக்கும். பின்னர் யோனிப் புழையொடுக்கம் நிகழின் அதற்குத் தீர்வை அளிக்கவும், யோனிக் குறையுள்ளவர்களில் செயற்கை யோனிச் செப்பவினையை ஆற்ற வேண்டும். சிலருக்கு இந்தக் குறையைச் செப்பம் செய்வதற்கு "மக்கின்டோவி வின் செப்பமுறையைப் பயன்படுத்தினேன். இவர்களின் பிந்திய மணவாழ்வு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை. பலரால் ஆசைப்பட்ட ஒரு அழகிய பெண் மற்றையோருக்குக் காரணம் கூருது ஈற்றில் கன்னியர் மாடம் சேர்ந்தாள். கருப் பைக் குழாய்த் தடுப்பு நிகழின் இதற்கு ஏற்ற அறுவை வினைத் தீர்வுகள் செய்ய வேண்டும்.
5 ஒருபக்க முல்லர்க்கான் பிறழ்வு
மேலே விபரிக்கப்பட்ட எல்லா வளர்த்திக்குறைகளும் இதற்கு உண்டாகக் கூடும். இம் முகிழ்வுக் குறையால் மற்றைய பக்கத் துப் பகுதியானது ஒரு கொம்பர்க் கருப்பை அமைவைப் பெறும். ஒரு கொம்பர்க் கருப்பை அவ்வளவு அறிகுறிகளைக் காட்டாது கருப்ப நிலையில் முழு வளர்த்தியையும் அடையும். பேற்று நிலை யிலும் சரியாகச் சுருங்கும். ஆனல் கருச்சிதைவு குறை மாதப் பேறு, குண்டி உதயப் பிள்ளைப்பேறு ஆகியன இதனில் கூடுதலாகத் தோன்றும்.
ஊடறிதல் வயிற்றை திறத்தற் துமி செய்து தான் உண்மை நிலையை அறியமுடியும். கருப்பை எக்சுக் கதிர் வரையம் நிலைமை யைச் செவ்விதாகக் காட்டாது. இவ்வகை வளர்த்திக் குறை யுடைய பெண்ணை அண்மையில் அறுவை வினை செய்தேன். பிள்ளை வளம் இல்லாக் குறைபற்றி ஆலோசனைக்காக என்னிடம் வந் தாள். சோதனையில் ஒரு நல்வளர்த்தி உடையதும் பின்னுக மடிவுற்றதுமான கருப்பை இருப்பதாக அறியப்பட்டது. இப்பின் மடிவைச் செவ்வையாக்குவதற்கு வயிற்றைத் திறந்தேன். நான்

கருக்கட்டலும் கருப்பநிலையும் 53
எதிர்பார்த்ததற்கு மாருக, அது ஒர் நல் வளர்த்தியுடைய இடது கொம்பர் கருப்பையாக இருந்தது. மற்றைய பக்கத்துக் கரு ப் பையும், கருப்பைக் குழாயின் மிகுதியான பகுதியும் இல்லை. அவை தடித்த சவ்வு நாராகத் தோன்றியன. எஞ்சிய புனலுருப் பகுதி யும், சூலகமும் வலது வயிற்றுள் உள் வளையத்துள் இடர்கள் புகு தல் செய்ய எத்தனிக்கின்ற மாதிரித்தோற்றின. இந்நோயாளிக்கு வேறு மாதவிடாய் இடர்கள் இல்லை.
சிலர் வளர்த்திக் குறையுடைய கருப்பைகளை அவற்றின் அள வைப் பொறுத்து எச்சக் கருப்பை, சிறு குழந்தைக் கருப்பை என வகுப்பர். இவை மரபுவழி வந்த சொற்கள். இவை வழக்கிலிருந்து மறைந்து போகாமல் வைத்திருப்பதற்கு மட்டுமேயாகும். இவ் வகைப் படுத்தல் வேண்டியதில்லையாகும்.
முல்லர்கான்களின் செப்பமற்ற ஒருங்கல்
இவ்வொருங்கற் செப்பக் குறைபாடுகள் பலவகையானவை. அடிக்கடி பெருங்குறைபாடுகளும், சிறு குறைபாடுகளும் உடைய ஒருங்கல் காணப்படும்.
1. இரு கருப்பை - பிரிசுவர் யோனி,
இரு கொம்பர் இருக முத்துபிரிசுவர் யோனி, இரு கொம்பர் ஒரு கழுத்து செவ்வன் யோனி, இரு கொம்பர் ஒரு கழுத்து - பிரிசுவர் செவ்வ ன் கருப்பை - பிரிசுவர் யோனி
குறை பிரிசு வர் க் கருப்பை,
வில் வளைவுக் கருப்பை, செவ்வன் கருப்பையும் குறைபிரிசுவர் யோனியும்.
ஒரு கொம்பர்க் கருப்பை,
இரு கொம்பர் ஒரு கழுத்துக் கருப்பை
ஒரு கொம்பானது எச்சம். 11. இரு கொம்பர் ஒரு கொம்பானது கருப்பைக் குழியுடன்
தொடுப்பதில்லை. 12. இரு கொம்பர் கருப்பையுடன் இரு கழுத்துக்களும் பிரி சுவர் யோனியும் , யோனியின் ஒரு பாதி பொள்ளல் அடையாது இருக்கும்.

Page 88
54 இளம்பெண் நோயியல்
விபரிப்புக்கள் இவற்றின் உருவாக்கப் பிறழ்வுகளை விளக்கும்.
முதலாவதையும், நான்காவதையும் தவிர மற்றைய வகை க2ளக் கண்டுள்ளேன்.
1936-ம் ஆண்டு, நான் முதன் முதற் செய்த அறுவை வினை பதினுெராம் வகையைச் சேர்ந்தது. புறத்துக் கருப்பைக் குழாய் கெற்ப மென ஊடறியப்பட்டு தீர்வு அளிக்கப்பட்டது. கருப்பைக் குழியின் உருவமே மகப்பேற்றில் வரும் இடர்களுக்கு முக்கிய காரணமாகும். இதனைப் பொறுத்தமட்டில் பொதுவாக அறிகுறி கள் தென்படுவதில்லை. பெரும்பாலும் கருப்ப நிலையில் அல்லது கருப்பச் சிதைவுகளிற்ருன் இப்பிறழ்வுகள் கண்டுபிடிக்கப்படும். அருமையாகக் கல்யாண காலத்தில் உண்டாக்கப்படும் பல இடர் களுக்காகப் பெண்கள் ஆலோசனை பெற வரும்பொழுதுதான் பிறழ்வு நிலைமைகள் கண்டுபிடிக்கப்படும். இரண்டாம் வகை பிறழ்வுடைய இரு மங்கையரைக் கண்டுள்ளேன். ஒருத்திக்கு இரு கழுத்துக்களும், யோனியின் முழு நீளத்துக்கும் பிரிசுவர் காணப் பட்டது. இவள் அறுவை வினைச் செப்பம் வேண்டாம் என்ருள். மற்றவளுக்கு அரை குறைப் பிரிசுவர் இருந்தது. இது செப்பம்
செய்யப்பட்டது.
வேறு ஒருத்தி க்கு கருச்சிதைவுண்டாகியது. இது கருப் பைக்குப் பின்பாக இருக்கும் நாரோமா என ஊடயறிப் பட்டு வயிற்றைத் திறக்கும் பொழுது இரு கருப்பைகள் உளாம் நிலை தென்பட்டது. வரைவிலக்கணங்கள் கட்டமைவுப் பிறழ் வுகளின் வடிவத்தை உணர்த்தும் . மேற் கூறப்பட்ட உரு க் கேடுகள் பல்வகையில் கலந்திருக்கக் கூடும். இவை ஒரு பக்க அல்லது இரு பக்க முல்லரின் கான்களின் பிறழ்வுகளுடன் தோன் றும். இந்த முல்லரின் கான்கள் ஒருங்கி ஒன்ரு கி கருப்பையையும், யோனி உயர் பகுதியையும் ஆக்குவதில் பிறழ்வுகளை உண்டாக் கும். பிறழ்வுகள் இருந்தி ட்டொருக்கால் ஊடறியப்படும். அவை பிள்ளை வளம் இல்லாதவர்களிலும் , பிள்ளை வளம் உள்ள வர்களிலும் காணப்படும்.
இவை உண்டாவதற்குரிய காரணங்கள் செவ்வையாக அறி
யப்படவில்லை .
அறிகுறிகள்
இவை கலவி நிகழ முன்னம் ஒரு வகையான அறிகுறிகளையும் தோற்றுவதில்லை. பிரிமென்றகடு, பொள்ளல் உருதாகின் குருதி

கருக்கட்டலும் கருப்பநிலையும் 夏55
கருப்பைக்குள்ளும், உயர் யோனிப் பகுதியுள்ளும் தேங்கும். மாதத் துக்கு மாதம் நோ தோன்றுமேயொழிய மாதவிடாய் தோன்றது. இறுதியில் விரிவுற்ற யோனி ஒரு கட்டியாக அடிவயிற்றில் தோன் றும். இதே விதமாக யோனி ஆக்கம் இல்லாதவர்களிலும் யோனி (அல்துளையுயா) கருப்பைக் கழுத்து அல்துளையுயாவிலும், கருப் பைக் குழியுடன் தொடுக்கப்படாத கொம்பர் (எச்சம்) கருப்பை யிலும் அல்லது யோனியுடன் தொடர்பு அற்ற ஒரு கொம்பரு டைய இரு கொம்பர்க்கருப்பையிலும் குருதி கருப்பைக் குட் தேங்கி அறிகுறிகளைத் தோற்றும். இதனைப் புறத்திடக்கருப்பம், புதுவளர்த்திக் கழலையங்கள், அகலிணையக் குருதிச் சிறப்பை, சூல கச் சிறப்பை எனத் தவருக ஊடறியப்படும்.
1. கலவிவேளையில் யோனிப் பிரிசுவர்ப் பிறழ்வுகள் இருப் பின் இது இடர் க் கலவியுயாவை உண்டாக்கும். இப்பிரிசு வர் காயப்படின் குருதி ஒழுக்கை உண்டாக்கும். இவ்வகையான சிக்கல் உள்ள அழகிய பெண்ணுெருத்தி முதல் தடவை திருமணமாகி மாப் பிள்ளை இடர் கலவியு யாவால் வருந்தி இவளைக் கைவிடவும், பின் பிறிதொரு வரும் மணம் செய்து அவரும் இதே விதமாக வருந்தி இவளைக் கைவிடவும் பெண் ணின் தகப்பனுர் என்னிடம் ஆலோ சனைக்கு அவளைக் கொண்டு வந்தார் . அவளுக்குப் பிரிசு வர் யோனி இருந்தது. இதனை அகற்றிய பின்பு அவள் மூன்ரும் தரம் கல் யாணமாகி பிள்ளை குட்டிகளைப் பெற்று இன்பமாக வாழ்ந்தாள். பிறிதொரு பெண் ஒரு அழகி பலர் அவளை ஆசைப்பட்டு கல்யா ணம் செய்ய விரும்பினர். ஆனல் அவ்ளுக்குத் தனக்கு ஒரு தடவை யாவது மாதவிடாய் வருவதில்லையென்று தெரியும், ஆலோசனைக்கு என்னிடம் வந்த பொழுது யோனியும் கருப்பையும் இல்லை யென்று கண்டேன். ஈற்றில் அப்படித்த பெண் காரணம் கூருது கன்னிமாடம் சென்ருள். சில ஆண்கள் தம் இனப்பெருக்க உறுப் புக்களில் கடும் குறைபாடு இருந்து கலவி செய்ய இயலாமல் இருக்கின்றனர். இதனுல் பிள்ளை வளம் இல்லாக் குறையை தாம் திருமணம் செய்த பெண்களிடமே சுமத்தி விடுகின்றனர். எனவே வைத்தியர் ஆணையும் பரிசோதிக்க வேண்டும்.
2. பிள்ளை வளக் குறைவுண்டாகக் கூடும்.
3. கரு க் சிதைவுகளும், குறை மாதப் பேறுகளும் நிகழக் கூடும். சிறப்பாக கருக்கட்டலுற்ற சூலானது கருப்பைப் பிரிசுவரில் பதி வுற்று வித்தகம் செவ்வையாக உருப்பெருத காரணத்தினுல் கருச்சிதைவு ஏற்படும். இவ்வகையான நிலைமையை பலரில் கண்டுள்ளேன்.

Page 89
Y**ዛs
156 இளம்பெண் நோயியல்
4. அரை குறைப் பிரிசு வர் இருப்பின் கரு வுரு வானது குறுக் குக் கிடையிலிருக்கக்கூடும். இதன் தலே ஒரு பாத்தகத்துள்ளும், குண்டியும் கால்களும் மற்றைய பாத்த கத்துள்ளும் இருக்கும்.
5, சூல் வித்தகம் பிரிந்து வெளியகற்றல் நிகழ்வதிலும் இடர்கள் இருக்கக்கூடும். இது பேற்று மூன்ரும்படி நிலைமையில் பெரும்பாலும் செயற்றிறன் குறைந்த கருப்பைச் சுருக்கங்கள் துண்டாகுவதாலாகும். பேற்றுக்குப்பின் குருதி வாரி நிகழும் .
ஊடறிதல் அவதானத்துடன் செய்யப்படும் யோனிச் சோத ஜரயில் யோனிப்பிரிசுவர் இடர்களைப் பற்றி தவறவிடாது கவ ஒளிக்கவேண்டும். பிரிசுவர் முழு நீளமுடைய இரு யோனிகளும் இரு கழுத்துகளும் உள்ள இரண்டு பெண்களை மட்டும் எனது நீண்டகால அனுபவத்தில் கண்டுள்ளேன். பல அரை குறை யோனிப் பிரிசுவர் களையும் கண்டுள்ளேன். இவ்வகையான தோற் றங்கள் உண்டென்று அறியப்படின் கருப்பையிலும், ஒருங்கற் பிறழ்வுகள் உண்டு என்று ஐயப்படவேண்டும். சோதனையில் இரு கொம்பர்கள் உண்டென்று அறியப்படும் அல்லது கருப்பை அடிக்கு ஒரு வளைவுண் டென்றும் அல்லது மிக அகலமாகயிருப்பதாகவும் அறி யப்படும். சிலரில் கருப்பைச் சுவரில் ஒரு நாரோமா உண்டென்ருே அல்லது ஒரு திண்ணிய சூலகக் கழலையம் உண்டென்ருே அல் லது கருப்பை பின் திருப்பமுற்றதென்ருே அறுவை வினை செய் யும் பொழுதுதான் உண்மைநிலை அறியப்படும். புற இடத்துக் கெற்ப மென்று வயிற்றைத் திறக்கும் பொழுது ஒரு கொம்பில் கருப்பம் தங்கியிருந்த தோற்றத்தை முன் கூறியுள்ளேன்.
கருப்பைப் பிரிசுவர் இதனைப் பெரும்பாலும் கருச்சிதைவு வேளையில் கருப்பையுள் அடக்கப்பட்டவைகளை அகற்றும் பொழுது தான் அறியப்படும். இவ்வகையான நிலைமையில் ஒரு பெண் ணுக்கு மூன்ருவதான கருச்சிதைவை அகற்றும் பொழுது ஏறத் தாழ ஒரு முழுநீளப் பிரிசு வரைக் கருப்பையுள் கண்டேன். இதனை அகற்றிய பின் அவள் நிறை மாதக் குழந்தைகள் இரண்டைப் பெற்ருள். சீசர் அறுவை வினேகளின்போதும் அரைகுறைப் பிரி சுவர்கள் இருப்பதாக அறியப்படும். ஒரு வளைவுக் கருப்பையில் கருப்பைக் குழிக்கு இரு குடாக்கள் இருப்பதாக சில வேளைகளில் கருப்பை-கருப்பைக் குழாய் எக்சுக்கதிர்(x)வரையம் தெரிவிக்கு ம் .
தீர்வு முறைகள் நிலைமையைப் பொறுத்து வேறுபடும்
யோனிப் பிரிசு வர்களை கல்யாணமான பெண்களில் அகற்ற வேண்டும். கருப்பைக் கொம்பர் எச்சங்கள் சிறப்பாக, இவை

கருக்கட்டலும் கருப்பநிலையும் 157
கருப்பையுடன் தொடுப்பு உரு தபோதும் அறிகுறிகளைக் காட் டும் அல்லது ஒரு கொம்பர் பருத்துப் பேற்றுக்குத் தடையை உண்டாக்கும், இந்நிலைமைகளில் இதனை அகற்றவேண்டும். கருப் பைப் பிரிசு வரை அகற்றிய பின் பேற்று வேளையில் கருப்பை பிரியக் கூடும். எனவே முன்னமாகவே சீசர் அறுவை வினை செய் தல் நன்றென்று அறுவை வினைச் செய்திகள் கூறும். நான் அறுவை வினைச் செப்பம் செய்த ஒரேயொரு கர்ப்பிணியில் நிறை மாதப் பேறு யாதுமொரு வில்லங்கமும் இல்லாது நிகழ்ந்ததைக் கண்டுள் ளேன். இவர்களை மருத்துவமனையில் பெறுவிப்பது முக்கியமாகும்.
முல்லேறியன் கான்களின் இரட்டிப்பும் குழாய்க் கிளைகளும்
இரண்டு உண்மையான கரு ப்பைகளுக்கு 4 கருப்பைக் குழாய் கள் உண்டாகும்நிலைமை மிக மிக அருமையாகும். இரு கருப் பைகள் காணப்படின் ஒவ்வொரு கருப்பைக்கும் ஒரேயொரு கருப்பைக் குழாய் தான் காணப்படும். வலதுக்கு வலது குழாயும், இடதுக்கு இடது குழாயும் உண்டு. பெரும்பாலும் கருப்பைக் குழாய்களில், குழாய்க் கிளேகள் இருந்திட்டொருக்கால் காணப் படும். இப்பிறழ்வான, மேலதிகமான கருப்பைக் குழாய்கள், கருப் பைக் குழாயின் கிளைகள் அல்லது மேலதிகமான குழாயின் வயிற்று வாய்கள் காணப்படும். கருப்பையைக் காணும்பொழுது கருப் பைக் கிளைக்குழாய்களையும் காணலாம். இவ்வகையான ஒரேயொரு பிறழ்வு நிலைமையை மட்டுந்தான் நான் கண்டுள்ளேன்.
முல்லேறியன் கான்களின் உடன்பிறப்பு அல்துளை நிலை:
முல்லேறியன்கான் அல்லது இடைஊறுநீரிப்புடைபரா(பரா)க் காணுனது தொடக்கத்தில் பக்கத்துக்கு ஒன்ருக இரு திண்மக்கலவ முளைகளாக உண்டாகி வூல்வியன் கானுக்குப் பக்கலாக வால் திக்கை நோக்கி நீண்டு வளரும் . முளைகள் வளர்ந்து செல்லவும் இவற்றின் கானுக்கமும் தொடர்ந்து நிகழும். கூபகத்தில் இவை நடு சார்ந்து வளர்ந்து, ஒன்று தனக்கு இணையான மற்றதுடன் இணைந்து ஒன்ரு கும். மேலும் இவை ஒரு தனிக்கலங்களாலாகிய திண்ம முளையாக வால்த்திக்கிலும் வயிற்றுப் புறப் பக்கமாக வும் வளர்ந்து ஊறு நீரி பிற ப் புறுப் புக் குழாயின் பிற்பக் கத்து மிகப் பணியவான பகுதியுடன் பொருந்தும். முடிவில் கலங்களாலாகிய இத்திணிவு நாணுனது கானுக்கம் அடையும். தொடக்கத்தில் முற்ருகாத பிரிசு வருண்டு. இது பின்னர் மறைந்து போகும். சிலரில் இது அரைகுறையாக நிலைக்கும். இந்த விவரம் தான் கருப்பை யோனிக்கால்வாயாகும். இது 12 கிழமை வய துடைய கருவுருவில் முற்ருக நிகழ்ந்து விடும். 10 ஆம் கிழமை மட்டில் தான் கருப்பையுடலும் கருப்பைக் கழுத்தும் வேருக

Page 90
58 இளம் பெண் நோயியல்
இருப்பதைத் திட்டப்படுத்தலாம். 12 ஆம் கிழமை மட்டில்தான் கழுத்தானது யோனியிலிருந்து வேறுபடுத்தப்படும். குழந்தைப் பருவத்தில் கருப்பை அவ்வளவுக்கு வளர்த்தியடைவதில்லை. இது பக்குவமடைவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென விரை வில் வளர்ந்து நீளம் இரு மடங்காகும். நிறையும் 10 மடங் காகக் கூடி, மூத்த பரு மனை அடையும் . இன்னமும் 2 - 3 ஆண்டுகள் செல்ல முழு வளர்த்தி அடைந்து விடும். பேற்று வேளை யிலும் பிள்ளைப் பருவத்திலும் இது வளைவோ அல்லது திருப் பமோ அடைவதில்லை . இவ்வியல்புகள் பூப்புப் பருவத்தில் தான் நிகழும்.
பிறழ்வுகள்:
1. மே ற் கூற ப் ப ட் ட பகுதிகளின் கானுக்கம் நிகழாது
அல்லது அரைகுறையாக நிகழ்ந்து பிறப்புக்கால் வாய்க்குப் புழை
யடைப்பை உண்டாக்கும். கரு ப்பையும் யோனியும் கானுக்கமுழுத
திணிவாக நிலைக்கும்.
2. அல்துளையுயா அல்லது அரைகுறைக்கானுக்கம் ஒரு பக் கத்து முல்லேறியன்கானை மட்டும் பாதிக்கக்கூடும். எனவே இரு கொம்பர்கரு ப்பையின் ஒரு கொம்பானது கழுத்துக் கால் வாயு டன் தொடுக்காது அல்லது பிரிசுவர் யோனியுறையில் ஒரு பகுதி ஒரு மூடு குழியாக நிலைக்கும். இதனுல் ஒரு பக்கத்துக் குருதி யோனியமும் மியூக்கசு யோனியமும் அல்லது தொற்று நிகழின் சீழ் யோனியமும் உண்டாகும் .
1936 ஆம் ஆண்டில் நான் செய்த முதலாவது அறுவை வினே யானது, இரு கொம்பர் கருப்பையிலிருந்து ஒரு கொம்பை அகற் றல் செய்ததாகும். இக் கொம்பு, கழுத்துக் கா ல் வா யு டன் தொடுப்புறவில்லை. இதைப் புற இடக்கருத்தங்கல் என ஊடறி யப்பட்டு அறுவை செய்யப்பட்டது. ஆனல் அது ஒரு குருதிக் கருப்பையாகக் காணப்பட்டது. இவ்வகை கொம்பரில் கருத்தங் கல் நிகழக் கூடும் சில சமயங்களில் இது வெளியே காத மாத யிரி வால் நிறைவுற்று அதற்குரிய அறிகுறிகளையும் காட்டும். மிக அண்மையில் ஒரு பெண்ணில் பக்கத்துக் கருப்பை மட்டும் முற் மு ன அல்துளை (அற்றுளை) உற்ற நிலையில் நாணுக, நார் நாணுல் கருப்பைக் கழுத்துடன் தொடு ப் புற் றிருந் த தை க் கண்டேன். யோனி மற்றைய பக்கத்துக் கரு ப்பையுடன் தொடுப்புற்றிருந்தது.
அல்துளையுயா யோனிப்பகுதி !
இது முற்ருகத் துளையுருது இழையத் திணிவாக இருக்கும். இவ்வகையான மூன்று மங்கையர்களைக் கண்டுள்ளேன். ஒரு வ

சுருக்கூட்டலும் கருப்பநிலையும் 59
ருக்கு முற்முக கருப்பை ஆக்கமும் யோனி ஆக்கமும் இல்லையாம். னைய இரு வருக்கும் கருப்பை உடலும் கழுத்தும் இருந்தது. யோனியுறையாக்கம் உயர் பகுதியில் மட்டும் தான் உருவாகி இருந்தது. யோனிக் கீழ்ப்பகுதியானது கானுக்கம் அடைவதில்லை.
கருப்பையும் யோனியும் இல்லாதவர்:
பாலினத் துணைக்குறிகளெல்லாம் நல் தழைப்பில் காணப்பட் டன. ஆனல் மாதயிரிவோ தோன்றுவதில்லை. பாலினவுறுப்புக் களின் நிலைமை பற்றி அறிய வந்தவளுக்கு யோ னி யு  ைற யு மில்லையென அறியத் துக்கப்பட்டாள். குலப்பெண் நல்ல அழகு டைய மங்கையான படியால் பலர் அவளே மணக்க விரும்பினர்.
1. மற்றைய இரு வர் அடிவயிற்றில் மாதம்தோறும் நோவுண் டாகின்ற காரணத்தினுலும் இன்னமும் பக்குவக் குறிகள் தோன் ருத காரணத்தினுலும் ஆலோசனைக்கு வந்தனர். இரு வருக்கும் அறுவை வினைமுறையில் செயற்கையோனி உருவாக்கல் செய்து செப்பம் செய்யப்பட்டது.
2. அரை நிறைவுத் தழைப்புடைய கருப்பை உடலுடனும் , நிறை தழைப்புடைய யோனியுடனும் . ஒரு முற்ரு ன கருப்பைக் கழுத்துத் துளையில்லாத நிலையை நான் இன்னமும் காணவில்லை. இவ்வகையான கருப்பை, யோனித் தோற்றப்பாடுகளுடன் ஒடுங் கியதும் மிகவும் நெருங்கியதுமான துளையுடைய கருப்பைக் கழுத் தைக் கண்டுள்ளேன். இது மாதயிரிவுக்குத் தடையையுண்டாக்காது. ஆனல் பேற்று வேளையில் எவ்வகைமுறையிலும் விரிவுருக்கழுத் துக்களை கண்டிருக்கின்றேன், இவ்வகைப் பேற்றுத் தடைக்கு இரர் அறுவை வினைதான் செய்யவேண்டும்.
3. கருப்பைக் கழுத்தின் யோனிப்பகுதி மிக நீண்டு யோனிக் குகைக்குள் முனைப்பின் கலவிவேளையில் கல விக்கு தடை உண்டா கும். இதனுல் பேம்பாயி விதானத்துள் இடப்பட்டு கருப்பைக் கழுத்து வாயை பேமுயிரிகள் அ டையமுடியாதநிலை எய்தப்பட்டு மலட்டு நிலை எய்தப்படும்.
4. பெரும்பாலும் காணப்படுவன யோனி அரைகுறை அல் துளே (அற்றுளை) நிலைமைகளாகும்.
யோனிக்குறுக்கு மென்சவ்வுகள்:
இவை அடிக்கடி யோனிமென் திரைக்கு உயரமாக யோனியின் கீழ்ப்பகுதியில் காணப்படும். சிலருக்கு இவை மிகவும் தடித்திருக்

Page 91
60 இளம்பெண் நோயியல்
கும். இது மென்மை யாயும் , மெல்லியதாயும் துளையுருததாயும் இருக்கும். இவற்றை அல்பொள்ளல் யோனி என்பர். இது முல் லேறி பன்முனையும், குடாயோனியும் சந்திக்குமிடத்தில் உள்ள பிரி சுவரானது அற்று மறையாத காரணத்தினுல் நிகழ்கின்றது.
மங்கையவள்: பூப்புப் பக்கு வக் குறிகளைப் காட்டுவள். ஆனல் மாத பிரிவு உறுவதில்லை. செவ்வன் கருப்பையிலிருந்து வடியும் குருதி இக் குறுக்கு மென்சவ்வுத்தளத்துக்கு மேலாகக் குவையும் . இது மறைவிட மா த பி ரி வு யா மாதம் மாதம் குவையும் குருதியாலும் மியூக்கசுவாலும் யோனியானது விரிவாக்கமடையும் (குருதி யோனியம்). இது வேளைக் குத் தீர்வு பெரு விடின் கருப்பை விரிந்து குருதிக்கரு ப்பையம், குருதிக்கரு ப்பைக் குழாயம் என்பன படிப்படியாகத் தோன்றும். இந்த மாறுண்ட குருதியானது குழாய் களில் அழற்சியை உண்டாக்கிக் குழாய்களுக்குப் புழைத் தடுப்பை யும் உண்டாக்கும். குழாய்களுடாக பரிவிரியக்குழிக்குள் வடி யும் குருதி கூபகக் க ரு ப்பை அகவணிவாதையை உண்டாக்கும். யோனிக்குள் குவியும் குருதி ஒரு கழலை யக் கட்டியாகி அயல் உறுப்புக்களான ஊறுநீர்ப்பை கருப்பை, யோனிக் குறுக்கு மென் சவ்வு ஆகியவற்றை அழுத்தி இவற்றில் நோய் அறிகுறிகளே
காட்டும் ,
குறுக்குப் பிரிசுவரைப் பொறுத்த மட்டில் இது விரிக்கப்பட்டு கீழாக பேரிதழ்களுக்கிடையில் ஒரு கருநீலச்சவ்வாக விம் மும்,
அறிகுறிகளும் குறிகளும்:
இளமங்கையர்களைப் பெரும்பாலும் பக்குவகால மாதயிரிவு தோன்ருத காரணத்துக்காக ஆலோசனைக்குக் கொண்டுவரப்பட மாட்டார்கள். தற்காலத்தில் கருப்பை, கருப்பைக் குழாய்கள் நிரம்பி வீங்கும் காலம் வரைக்கும் பெற்ருேர் இவளைக் கவனியா திருக்கமாட்டார்கள். மாதா மாதம் குருதியிரிவு காணப்படாது நோவுண்டாகும்போது, ஊறித்தாரைத்துளை குருதித் தேக்கத்தால் நெரிக்கப்பட்டு சடுதியாக ஊறுநீர் விட இயலாமை (அடைப்பு) ஏற்படும்போது ஆலோசனைக்கு வருவர். முதல் மறைவு மாத விடாய் தொடங்கி 3-4 மாதங்களுள் 15-18 ஆண்டு வயதுடைய இளமங்கையர்களை ஆலோசனைக்கு கொண்டு வருவர். நிலைமை யைப் பற்றி வினவும் பொழுது மாதம் தோறும் அடிவயிற்றில் நோ, நாரிவலி, முலையதைப்பு ஆகியன தோன்றுவதாகக் கூறுவர். இவற்றுடன் ஊறுநீர்க்கோளாறுகளும் தோன்றும் (அடிக்கடி ஊறு நீர்விடல்).

கருக்கட்டலும் கருப்பநிலையும் 16
சோதனை : அடிவயிற்றில் உயர்த்தப்பட்டதும் விரிந்ததுமான சலப்பை தென்படும். இதனை வெறிதாக்கிய பின்பும் ஒரு கட் டிக்கு மேல் கருப்பை இருப்பதைத் தடவி அறியமுடியும்.
யோனிச் சோதனையில் : ஒரு விரிந்த மெல்லிய நீல நிறமுடைய குறுக்கு மென்சவ்வு விம்மிக் கொண்டிருப்பது தென்படும். நேர் குடலூடாகச் சோதிக்கும் பொழுது இந்த நிறைந்து விம்மும் கட்டி குடலுள் முனைக்கும். இதே விதமான அறிகுறிகளை பொள்ளலுரு மென்றிரை. நிலைமையிலும், ஒரு வகையான வேறு பாடும் இல்லாது காணமுடியும்.
யோனியின் உயர் பகுதியில் ஒரு பொள்ளலுரு குறுக்கு மென்சவ்வு இருக்குமாயின், இதுவும் இதே அறிகுறிகளைக்
góðustóðrtoII60T LI) sé15ð5UIslóð : இந்நிலைமையானது புணர்ச்சி இடர்களையும், மலட்டு நிலைமையையும் ( பிள்ளை வளமின்மை ) உண்டாக்கும். இந்நிலைமைகளில் அம்மங்கையரை ஆலோசனைக்கு விரைவில் கொண்டு வருவர்.
ஆனுல் இந்தக் குறுக்குமென்சவ்வு உயர் யோனிப் பகுதியில் ல்லேறியன் முளைகள் அல்துளையுரு த காரணத்தால் உண்டாகும். இது முற்ருகப் பொள்ளல் இல்லாத மென்சவ்வாகலாம். அல் லது பக்க ஒரத்தில் ஒரு சிறுதுளையுடைய மென்சவ்வாகலாம். இந்தச் சிறு பொள்ளலைக்கண்டு பிடிப்பது சிலருக்கு வில்லங்கமா கும். பொள்ளலானது குறுக்கு மென்சவ்வு நடுவிலும் இருக்கும். இந்தக் குறுக்கு மென்சவ்வு, கருப்பைக் கழுத்து வெளிவாய்க்குக் கிட்டவாக மிக உயரவாக இருக்கும். பொள்ளலிருக்கும் பொழுது தேக்கம் உருது மாதக் குருதியிரிவு வெளியே வடியும். பொள்ளல் சிறிதாயினும் சரி பெரிதாயினும் சரி கலவி இதனில் நிகழமுடியு மாயின் உயர விருக்கும் பொள் ளற்குறுக்கு மென்சவ்வுகளில் இருந்து பேம்கள் அப்பொள்ளல் ஊடாக உட்செல்லமுடியும். பெரும்பாலும் உட்செல்லுவதில்லை. பின்னர் இதன் காரணம் விளக்கப்படும். இதனுலும் மலட்டு நிலையை எய்தக் கூடும்.
உயர இருக்கும் குறுக்கு மென்சவ்வு :
(அ) பொள்ளல் இராவிடின் - இது மறை குருதி வடிதலால்
இதற்கு உயரவாக குருதித் தேக்கத்தை உண்டாக்கி முன்னர் விபரிக்கப்பட்ட நிலைமைகளை ஏற்ப்படுத்தும். था ।

Page 92
l62 இளம்பெண் நோயியல்
(ஆ) பொள்ளல் எவ்வளவு சிறிதாயிருந்தாலும், குருதித் தேக்கம் நிகழாது. இதற்குரிய அறிகுறிகளும் தோன் ருது,
(இ) கல்யாணம் முடித்தவர்களில் கலவியிடர்கள் தோன் றும். மென்சவ்வு தடிப்பாய் இருந்து, அது ஈய்ந்து கொடுக்காது விடின் புணர்ச்சி வேளையில் கடும் நோ உண்டாகும். பெரும் பாலும் புணர்ச்சி வேளையில் குறுக்கு மெ ன் ச வ் வு க் கு நடுவில் உள்ள து வார த் தி ன் வழியாக புணராது, 1. jaj; 95 LD IT dg5, LT. புணரும்பொழுது ப க் க த் தி ல் L_j 6ĥT @Fo Lib. உண்டாகிறது. ( சிலரில் இவ்வகையான மிக நீண்ட ஆழ மான பள்ளம் உண் டா க் க ப் பட்ட  ைத ந n ன் கண்டுள் (୫ ଜୀtତt .. ) இது புணர்ச்சித் தேவைப்பாடுகளுக்கு உதவும் . ஆணுல் பெண்ணைப் பொறுத்த மட்டில் மென்சவ்வும் இதன் பொள்ளலும் ஒரு பக்கமாகத் தள்ளப்பட்டு ஒதுக்கு நிலையை அடையும். கலவி இவர்கட்கு நோவைக் கொடுப்பதே அன்றி இன்பத்தைக் கொடுப்பது இல்லை. பேம்பாயியானது கருப்பைக் கழுத்துக்குக் கிட்டவாக இடப்படாத காரணத்தால், இலகு வில் அது வெளியே வடிந்தும், பேமுயிர்கள் உட்செல்லமுடியா நிலைமையை எய்தும் இவர்களும் பிள்ளை வளமில்லாமல் வைத் திய ஆலோசளைக்கு வருவர்.
1. தற்செயலாக இந்நிலைமை களில் கருப்பமுற்றவர்களில், வேளைக்கு இந் நிலைமை ஊடறியப்படாவிடின் பேற்றுத்தடை உண்டாகி சீசர் அறுவைப் பேறு நிகழ்த்தப்படும்.
2. உயர மறைவுற்றிருக்கும் கருப்பைக் கழுத்து நேம முழு விரிவடைந்தபோதும் நடுப் பொள்ளலுற்ற குறுக்கு மென்சவ்வை பேற்றுவேளையில் விரிவுருக் கருப்பைக் கழுத்து என பிழை யாக ஊடறியப்பட்டு தேவையற்ற அறுவை வினைக்குப் பெண்ணை உட்படுத்தியிருக்கின்றனர்.
மிகவும் அருமையாகச் சிலரில் நடுப்பொள்ளலுற்ற குறுக்கு மென்சவ்வானது யோனிக்கால்வாயின் ஓரிடத்தில் கடும் ஒடுக்கம் செய்து இடர் செய்ததை நான் அறிவேன்.
இளம் வயதுள்ள வளரும் பெண் குழந்தைகளில் பொள்ள லுருக் குறுக்கு மென்சவ்வு காணப்படின், அது உயரவாக
இருந் டியூம் மியூக்கசுவைத் தேங்கச்செய்து மியூக்கசு யோனி :: *** TT

கருக்கட்டலும் கருப்பநிலையும் 163
பொள்ளலுரு மென்சவ்வால் உண்டாகிய தேக்கக்கட்டியை -
ஊடறிதல் செய்தல்
1. கருப்பநிலை - அல்மா தயிரிவு காணப்படுவதால் கரு ப் பமோ என்ற ஐயப்பாட்டை உண்டாக்கும். வேறு கருப்பநிலைக் குறிகள் இல்லை. பொள்ளலுரு மென்சவ்வும் காணப்படும்.
2. தூபக்கிள் பரிவிரிய அழற்சி - இதில் வயிற்றகச் சிறைப்
களும், அல் மாத இரிவும் தோன்றும்.
கூர்ப்பு அல்லது குறைக்கூர்ப்பு குடல் வால் அழற்சி,
உண்மை அல் மாதயிரிவை உண்டாக்கும் ஏனைய ஏதுக்கள்.
3.
4。
5. சூலகச் சிறைப்பை,
6.
கூபக ஊறுநீரி ஆகியன.
தீர்வு: 1. மறை அடைப்புற்ற குருதித்தேக்கத்தை அறுவை வினைமூலம் வெளியே விடவேண்டும். தடைசெய்யும் மென்சவ வையும் அகற்றவேண்டும். வெறும் கத்திக்கீறலால் உண்டாக்கப் பட்ட பொள்ளல் பின்னர் மூடப்படக்கூடும்.
அறுவை வினையை பிணிதீர் மனையில் எல்லாச் சீழெதிர்ப்பு முறைகளையும் கையாண்டு ஆற்றவேண்டும்,
யோனிப்பாயிக்கு உடோடல னின் வசில சுகளின் பாதுகாப் பில்லாத படியால் பற்றிரியத் தொற்று பயங்கர விளைவுகளே உண் டாக்கக் கூடும். ஏனெனின் பொதுவாக இவர்களில் யோனியில் உடோடலனின் பசில சுகளின் இயற்கைப் பாதுகாப்பு இல்லாத படியால் ஆகும்.
தேக்கமுற்றவர்களில் : பிசிபிசிப்புடைய கரும்பாயியை தன் வலிய வடியவிடவும். கருப்பையை அழுத்தி அதனை விரைவில் வடியச் செய்யவே படாது. யோனிச் சோதனைகளையும் தவிர்க்க வேண்டும். இறப்பர் குழாய்கள் போன்றவற்றை யோனிக்குள் இடவே படாது. கிருமியழிப்புச் செய்த ஒற்றுத்துண்டை எப் பொழுதும் அணியவேண்டும் 1 - 2 மாதங்களுக்கு இவ்வகையான தீர்வு பெற்றபின்புதான் வேறு சிக்கல் உண்டோ என அறியச் சோதிக்கவேண்டும். பொதுவாகக் கரு ப்பைக் குழாய்கள் பாதிப்புற்றிருப்பினும் விரைவில் இவை நன்னிலைமையை அடை யும். இவ்வகையான பெண்களுக்கு பிள்ளை வளக் குறைவு உண் டாவதில்லை .

Page 93
இளம் பெண் நோயியல்
2. பொள்ளலுற்று உயரவாக இருக்கும் குறுக்கு மென்சவ் வுகளை யோனி ஆயுதங்களைக் கொண்டு பொள்ளலே அகட்டலாம். அல்லது யோனி செப்பம் செய்முறைகளைக் கையாண்டு ஒடுங்கிய பொள்ளல் உற்ற மென்சவ்வை அகற்றவேண்டும்.
சூலகம்
உருக்கேடுகள் சூலகங்கள் இரண்டை அல்லது ஒன்றை மட் இம் பாதிக்கும் அவையாவன:
1. சூலகங்களின் இல்லாப்பாடு - இது மிகவும் அருமையா துவே காணப்படும் .
2. சூலகங்களின் குறைவளர்த்தி - அநேகரில் இவ்விதமாக மிகச் சிறிய அளவுகளில் சூலகங்களே காணக் கூடியதாயிருக்கும். இவற்றுள் சூல்கள் இல்லையாம். இவை வினையங்களிலும் ஈடுபடு வதில்லை. இவை பாலின நிற மூர்த்தக் கோலங்களின் பிழைபா பாடுகளுடன் அணைந்திருப்பதால், இவற்றை சூலக அல் பிறப்பு நிலைமையாலும் , சனனி (கொனடு) பிறப்பிடர்களாலும் உண் டாகின்றன என எண்ணப்படும். இந்தச் சனணி இடரில் (தேன ரின் ஒருங்கோட்டியில்) வல்வம் , யோனி, கரு ப்பை, கருப்பைக் குழாய்கள் ஆகியன மகவுப் (சிறு குழந்தைப் பரு மனிலேயே) பரு மன் அளவிலேயே நிலைக்கும். மு னணிகளில் பா லினக் கலங்கள் (3) ουδου. இவர்களில் முதலாய அல் மாத இரிவு யாவும், முற் முன குழந்தை வளக்குறைவும் உண்டு.
3. மேலதிகச் சூலகங்கள் - வயிற்றின் வல இடப்பக்கங்களில் தோன்றக் கூடும். இவை பெரும்பாலும் ஒரு சூலகம் இரு பாகங் களாக நாரிழையததால் பிரிவு அடைவதாலாகும். இருந்தும் உண் மைச் சூலக இழையங்கள் , அகலிணையத்திலும் வேறிடத்திலும் காணப்படுகின்றன.
4. நீண்டமாலைபோன்ற சூலகங்கள் - இவை நீண்ட தட்டைத் திணிவுகளாகக் காணப்படும். மாதயிரிவுக் குழப்பங்களுடனும் , குழந்தைவளக் குறைவுடனும் காணப்படும். இத்தோற்றமும் நிற மூர்த்தப் பிறழ்வால் அதிகரிக்கும். இவ் வகுப்பினருள் ஒருவருக்கு ஒரு குழந்தை மட்டும் இருந்ததை நான் கண்டுள்ளேன். -
5. சூலகம் இறங்கத்தவறல்: இது கீழ் இறங்காது ஊறு நீரிக் குக் கீழாக அல்லது கூபக விளிம்பு மட்டத்தில் இருக்கக்கூடும். உள் வயிற்று வளையப் பள்ளத்துள் ஒன்றிருந்ததையும் , ஏணியச் சாக்குக்குள் இறங்கியிருந்ததையும் கண்டுள்ளேன்.
 
 
 

கருக்கூட்டலும் கருப்பநிலையும் 165
6, சூலகமும் - விதையமும் இது இடைப் பாலின நிறமூர்த்தக் கோளாறுகளாகும். y பாலின நிறமூர்த்தம் தான் பாலின வியர்த் தத்தை ஆளுகை செய்வதாகும். சனணியின் பாலின சாகையை யும் அது தீர்மானிக்கும். இரு y பாலின நிறமூர்த்தங்கள் இருப்பின் கரு வுரு ஆணுகும். y இல்லாவிடின் அது பெண்ணுகும். சனணி கொனடுக்கு உறுத்தப்படும், நிறமூர்த்தக் கட்டளை , பிறழ்வு றின், விதையிழையமும் சூலக யிழையமும் புறம்பாகக் காணப்படும் அல்லது இரண்டும் சேர்ந்து சூலகவிதை உறுப்பை உருவாக்கும். சூலகமும் ஆண் விதையும் உள்ள பெண் உடல் உடைய ஒரு வரை நான் அறுவை வினை வேளையில் கண்டுள்ளேன்.
7. கருப்பைக் குழாய் இரு குழாய்கள் முழுதும் இல்லா நிலை அமைந்திருக்கும். அல்லது இதன் ஒரு பகுதி மட்டும் தான் இல்லாத நிலையும் உண்டாகும். இதன் ஏனைய உரு க்கேடுகளான குறைவளர்த்தி, உடன்பிறப்பு அல்துளையுயா, மிகமிக நீளல், இரட்டிப்பு, மேலதிகக் குழாய்கள் , மேலதிக வயிற்றுவாய்கள், குழாய்க்கிளைகள் ஆகியனவாம்.
8. கருப்பையுருக்கேடுகள்: (அ) முற்ருக இல்லாதநிலை - இது முல்லேறியக்கான்கள் உண்டாகாத காரணத்தினுல் இருந்திட் டொருக்கால் காணப்படும். இதனுடன் உயர் யோனிப் பகுதி யும் இல்லாமற்போகும்.
(ஆ) குறை விளைசலுயா இவ் உருக்கேடு பேற்றுக்கு முன்னர் அல்லது பின்னர் உண்டாகும் . இவை ஒரு சிறு கணுத் திணிவு, சிறிய பரு மாஞன கருப்பை, கழுத்து நீண்டதும் உடல் குறுகி யதும் ஆன கருப்பை என்ற பல வடிவங்களில் காணப்படும். இதற்காகிய காரணங்கள் முல்லேறியன்கானின் இழையங்களின் பிறழ்வுகளாலும் அல்லது இவ்விழையங்கள் ஈததிரசன் ஒமோன் களால் ஊட்டவளத்தைப் பெறமுடியாத நிலைமையினுலும் பின் னர் பக்குவகாலத்தில் ஈத்திரசன் குறைவால் பூப்புக்கருப்பை மேலும் தழைப்பு அடையமுடியாத நிலைமையினலும் ஏற்படக் கூடும்.
கரு ப்பையானது முழு நீளத்தையும் அகலத்தையும் பொறுத்த மட்டில் தொடர்பு சார் முறையில் கழுத்து நீளமாயிருந்தபோதி லும் சிறிதாய் இருக்கும். கருப்பையக வணி மெல்லியது. இத னில் சிறிய தூண்டல் பெருச் சுரப்பிகள் உண்டு. முதலான அல்மா தயிரிவு யாவே. சிறப்பான அறிகுறியாகும். ஏனைய குறி கள் காணப்படின் அவை அகச்சுரப்பிப் பிறழ்வுகளால் ஆகும்.

Page 94
66 இளம்பெண் நோயியல்
ஊடறிதல்: இந்நிலைமையின் முக்கிய அறிகுறிகளும் , குறிகளு மாவன: (1) செவ்வனம் குறைந்த ஒன்றரை மாதவிடாய் சுழல் நிகழ்வுகள். (2) ஒன்றரை அங்குல நீளத்துக்குக் குறைந்த கருப் பைக் குழி. (3) நுணுக்கு நோக்கித் தோற்றத்தில் தூண்டல் அடை யா கருப்பையக வணி என்பன வாகும். இவை யெல்லாம் காணப்பட் டால் தான் குறைவிளைச்சலுண்டென்று ஊடறியவேண்டும். கருப் பையின் நீளத்தை மதிப்பீடு செய்வது என்பது உண்மையில் அதன் குழியை அளவிடுவதே. யோனிவழியாகச் செய்யும் கைச் சோதனை, தப்பான முடிவுகளைத் தரக் கூடும் .
வழிவந்த அல்மா தயுரிவு யாவுடன் சிறிய கருப்பை காணப் படின் அது அல்லூட்டம் உற்ற தென அறியப்படும்.
தீர்வு : குறை விளைசலுயா வானது ஈத்திரசனின் குறைவால் ஆகும். ஆனல் , ஈத்திரசன்களைக் கொடுப்பின் (0.05 மிகி ஈத்திர ட யோல் அல்லது 1 மிகி தில் போத்திரோல்) கருப்பை வளரும். ஆனல் இது குறுகிய காலப் பொழுதுக்குத் தான் வினை செய்யும். சூலக வினையம் காலப்போக்கில் செவ்வ னமாயினுற்ருன் , அது தன்னியல் பில் தொடர்ந்து வளரும். எனவே அதன் உருவாக் கத்தைத் தடுக்கும் நோய்களுக்கு தீர்வு வேண்டும் அல்லாவிடின் தீர்வை நிறுத்தவும், அது மீண்டும் நோயுற்று தன்முன்னிலை மையை எய்தும் .
கரு ப்பையானது ஈத்திரசன்களுக்கு மறுகை செய்யாது இருப் பின் ஈத்திரசன்களால் ஒரு நலனும் விளையாது. ஈத்திரசன் தீர்வு, ஈத்திரசன்களை முன் கூறிய எடைகளில் நாளுக்கு மூன்று தரம் 3 கிழமைகளுக்கு விழுங்கக் கொடுக்கவும். பின்பு ஒரு கிழமை இடைக்காலம் விட்டு மீண்டும் அவ்வகையான 3 நடை மருந்துத் தீர்வை வழங்கவும்.
(இ) நத்தையுருக்கருப்பை இது இளம் மூத்த மங்கையர்களில் பெரும்பாலும் காணப்படும் ஒரு பிறழ்வுக் கருப்பைத் தழைப் பாகும். இதுஒரு வகையான குறைவிளைசலாலும் உண்டாவது அல்ல. இவர்கள் உரிய வயதில் பக்குவம் அடைவார்கள். மாதயிரிவும் ஒழுங்காக யாதொரு தடையும் இன்றியும் நிகழும். இந்த பிறழ்வுத் தழைப்பானது கரு ப்பைக் கழுத்து உள்வாய் மட்டத்திலாகும். இந்த மட்டத்தில் கருப்பைக் கழுத்துச்கு மிதமிஞ்சிய நாரிழை யத் தோற்றப்பாடுண்டு. கருப்பையுடலின் நிலைப்பும் வாட் டமும் செவ்வனமாய் இருக்கும். ஆனல் கழுத்தானது கருப்பை உடலுடன் கடும்கோணமுற்று முன்நோக்கி அல்லது உடலுடன் உயர்நோக்கி இருக்கும். செவ்வன் நேம கருப்பையானது கருப்
 
 
 
 
 

கருக்கட்டலும் கருப்பநிலையும்
பைக் கழுத்துடன் 170° கோணமுற்று முன் ணுக மடிந்திருக்கும். இம் மடிப்பு கழுத்தின் உள் வாய் மட்டத்திலாகும். கருப்பைக் கழுத்தும் யோனி அச்சுடன் 90° கோணமுற்று, முன் னுகச் சரிந் திருக்கும். (மு ன் திருப்பம்) திருப்பமும் மடிப்பும் பிற்பக்கமாக நிகழக்கூடும். 10% பெண்களுக்கு கருப்பையானது பிற்திருப்பம் அல்லது பின்மடிவு அல்லது இவ்விரு மாற்றங்களும் சேர்ந்திரு க் கும். இவை நோயியல் நிலைமைகளால் ஆகும். நன்னிலே மங் கையரில் கழுத்தின் உள் வாய், பூப்பென்பு இணைப்பின் உயர் விளிம்பு மட்டத்திற்கு அண்ணளவில் இருக்கும். (OG Gf GJ IT யானது நாரிமுள்ளு நுனிக்கு எதிராக இருக்கும்.
கருப்பையானது நத்தைச் சுருள் மடிவு அல்லது கொம்பு வளைவு உறும். இவ்வகையான மடிவு பிற்பக்கமாகவும் நிகழக் கூடும். இந்நிலைமைகளிலும் கருப்பை நல் தழைப்புற்றிருக்கும், கருப்பையக வணியமும் வினைத் தி ற னு  ைடய து. கருப்பைக் கழுத்தோ நீண்டும் ஒடுங்கியும் கூடிய கூம்புரு வடிவம் எடுக் கும். இவ்வகையான தோற்றப்பாடு ஒரு குறை விளைச்சலால் உண்டாவது அல்ல. மாதவிடாய் ஒழுங்காகத் தோன்றும் சிலருக்கு இடர் மாதயிரிவுயா உண்டு. பலருக்கு குழந்தை வளம் குறைவாய் இருக்கும். கருப்பம் தங்கி நேமப்பேறுகள் இவ்வகைக் கருப் பையில் நிகழ்ந்திருக்கின்றன, என்பதை நான் அறிவேன்.
அறிகுறிகள் : பெரும்பாலும் ஒருவித அறிகுறிகளில்லாது சோதனை வேளையில் தான் ஊடறியப்படும். சிலர் இடரான மாத பிரிவுக்குறிகளுடன் வருவர். மாதயிரிவு தோன்ற முன்னர் கடும் கீழ்வயிற்றுக்குத்துக்காக இளம் பெண்ணை ஆலோசனைக்குக் கொண்டு வருவர். கல்யாணமான மங்கை யருள் இவ்வகையான கருப்பையுடைய பலர் பிள்ளை வளக் குறைவுக்கு மட்டும் ஆலோ சனைக்கு வருவர். மலட்டுத்தன்மை இக்கழுத்தின் நிலைமையால் உண்டாகக் கூடும். மிக முன்நோக்கியிருக்கும் கழுத்தின் வெளி வாயானது யோனிக்குள் சீமன் மடுவில் தோய்வதில்லை. வேறு சிலரின் கருத்தின்படி கழுத்துக்கால்வாயானது கடும் ஒடுக்கமும் கோணலும் உற்றிருப்பதால் பிறற்ரோசு (பழவெல்லம்) நிறைந்த கTர மியூக்கசு, தடிப்புற்று பேம்கள் ஊடு செல்ல முடியாத முறையில் தடுப்புச் செய்யுமெனக் கருதுவர். இப் பிறழ்வு பெரும்பாலும் இளம் மங்கையரில் உண்டு. இவருட் பலர் கல்யாணம் செய்தவர்களாவர். கடும் முந்நோக்கி நிலையுடன் இருக்கும் கருப்பைக் கழுத்தானது முன்நோக்கு மடிந்திரு க்கும் கருப்பையுடலுடன் கடும் முடக்குக் கோண மடைந்திருக்கும்.

Page 95
68 இளம்பெண் நோயியல்
தீர்வு: அறிகுறிகள் தோன்றினுல் ஒழிய பெண்ணுக்குத் தீர்வு தேவைப்படாது. இசிப்பிடர்களிலும், பிள்ளை வளக் குறைவு நிலை மையிலும் கருப்பைக் கழுத்தை அகட்டல் கெடுதி விளைவிக்கக் கூடிய செயலாகும். பலர் அதனைக் கிழித்துப் பொள்ளல் செய் ததையும் நானறிவேன். இச்செயல்களால் அவ்வளவு நலம் உண்டாகாமல் , கெடுதிகளே விளைவிக்கப்பட்டன.
நான் செய்யும் தீர்வு அறுவை முறை: இந்த அறுவை வினையின் நோக்கமானது கருப்பைக் கழுத்தின் முடக்கை நேராக்கி யோனி அச்சுடன் ஏறத்தாழ 80 கோணமுறச் செய்வதாகும். கழுத்துக் கோணப்பகுதியில் மிதவிஞ்சிய நாரிழையமுண்டு. முற்பக்கத்தின் கழுத்தின் உள் வாய் மட்டத்தில், பரிவிரியத்தை குறுக்காகக் கீறி கழுத்தின் உள்வாய் பகுதியை வெளிவைப்புச் செய்யவேண் டும். கருப்பையை கழுத்திலிருந்து சிறிது பிரித்து பின் ஞகச் சிறிது தூரத்துக்குத் தள்ளவேண்டும். உள் வாய் மட்டத்தின் நாரிழையத்தை, கழுத்துக்கால் வாய் வரைக்கும் குறுக்காக வெட்டிப் பிரிக்கவும். கழுத்தை உரிய நிலைக்குத் திருப்புவதை இச் செய்கை இலகுவாக்கும். பிற்பக்கத்தில் உள் வாய் மட்டத் தில் பரிவிரியத்தை கழுத்திலிருந்து உரித்து, கழுத்தின் உள் வாய்க்கு அண்மித்த பகுதியை வெளிவைப்புச் செய்யவும். பின் னர் இப்பகுதியில் ஒர் ஆப்புரு வடிவ இழையத்திணிவை வெட் டவும் ஆப்புரு வின் கூர்ப்பகுதி கழுத்தின் உள்வாய்க்குக் கிட்ட வாக இருக்கும் வகையில் வெட்டவும், கருப்பையை நேம நிலைக்குத் திருப்பும் பொழுது கழுத்தின் பிற்பக்க நாரிழைய மானது கழுத்து மட்டத்தில் குவிந்து நேராக்கலைத் தடுக்கும் . எனவே இக்குவிவு நிகழாது நாரிழையத்தை ஒர் ஆப்புருத்திணி வாக வெட்டி அகற்றவேண்டும். பின்னர் பருமன் 2 கற்கட்நூ லால் (Cat - ஒரு வகை வீணை Gut - குடல் இழையநூல்) பிற்பக்கச் சுவரை செப்பம் செய்து பரிவிரியத்தால் மூடவும். பின்னர் முற்பக்கச் சுவர் பிரிப்பை கருப்பை நீளத்துக்கு செப்பம் செய்யவேண்டும்.
(ஈ) இப்பொழுது கருப்பை ஏறத்தாழ 90° கோணத்தில் யோனி அச்சுடன் நிலை க்கும். பலரு க்கு இவ் அறுவைவினை செய்தபோதும், இவர்களில் ஒருவர் தான் பிள்ளையை ஈன்முள் கூம்புருக்கழுத்தும், ஊசித் துளை வெளிவாயும் உடைய தோற்றப் பாடுகளுடன் கருப்பை காணப்படும். இதன் கழுத்து நீண்டு! இடுங்கியுமிருக்கும். பொதுவாக இக்கருப்பை ஏதாவது ஒரு அறிகுறியை தோற்றும். மாதயிரிவுயா இடர் உண்டாகக் கூடும். பிள்ளை வளம் குறைவாகும். (பேம் உயிரிகள் விரைவில் உட்புக முடியா ) கருப்பம் தரிப்பின் பலரில் கழுத்து விரிவதில்லை.
 
 

கருக்கட்டலும் கருப்பநிலையும் 169
இப்பிறழ்வு பேற்றுத் தடையை உண்டாக்கும், கருப்பைக் கழுத்துக் கால் வாயை அ கட்டின் பேம் உயிரிகள் இலகுவாகப் புகுகை செய்யும் எனக் கருதப்படும் . கர்ப்பம் உற்றவர்களில் பேற்று வேளையில் கழுத்து விரியாத காரணத்தால் சீசர் அறுவை வினை தேவைப்படும் .
(உ) கருப்பைக் கழுத்தின் உடன் பிறப்பு அதியூட்டநிலை :- இது ஒரு தழைப்பு உருக்கேடாகும். உடன்பிறப்பு நோய் நிலை மையாகப், பிள்ளைப்பேறு உரு தவரில் யோனிப் பகுதிக் கழுத்து மிதமிஞ்சி நீண்டிருக்கும். இது யாதுமொரு அறிகுறிகளையும் தோற்றுவதில்லை. இதனுல் பிள்ளை வளக் குறைவுண்டு. பேமுயிரி கள் இலகுவில் புகுகை செய்ய முடியாது. கலவி வேளையில் , யோனி
யுள் ஒரு தக்கைத் தடை இருப்பதாக உணரப்படும். இலரில் முக்கும் பொழுது யோனிவாயூடாக ஒரு திணிவு வெளிவருவதைக் 5 FT 3031 G) IT b .
தீர்வு: கருப்பைக் கழுத்தை அறுவை வினையால் துண்டித்து உரிய நீளத்துக்குக் குறுக்கவேண்டும்,
(கழுத்தைத் துமித்தலும் பின்னர் அதனைச் செப்பம் செய் தலுமாம்)
யோனி :
. இது பல் வகையது
(அ) முற்ரு ய் இல்லாத நிலை (ஆ) முல்லேரியன் பகுதி மட்டும்தான் இல்லாத
நிலை (இ) ஊறுநீர் - பிறப்புறுப்புக் குடாப்பகுதி. இது மட்டும்தான் ஒரு தாழ்வாக இருக்கும். சிலர் இடைப்பாலின வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும்.
அறிகுறிகள் கருப்பை மட்டும் இருப்பின் குருதிக் கருப்பை யம் ஆனது, பூப்புக்குப் பின்னர் உண்டாகும். மாதம் தோறும் அடிவயிற்றில் நோ உண்டாகும். துணைப்பா லினக் குறிகள் இருந்தபோதிலும் மாதபிரிவு வெளியே தோன்ருது, கருப்பை யானது வினைய ஈடுபாடு இல்லாதபோது, முதலாவதான அல் மாதபிரிவுயா, இடர்கலவியுயா அல்லது கலவி செய்ய இயலா நிலைமை உண்டாகும்.

Page 96
E 70 இளம்பெண் நோயியல்
தீர்வு: மறை குருதி மாத பிரிவு யா இருப்பின் செயற்கை யோனியை அறுவைமுறையால் ஆக்கம் செய்யலாம். கருப்பைக் கும் வல்வத்துக்குமிடையில் ஓர் அறுவை வினை செய்து ஒரு யோனியை உருவாக்கலாம். கல்யாணமானபின்பு 6-9 மாதங் களில் கணவனின் ஒத்தாசை யுடன் கலவி செய்தல் நன்று. யோனியின் கீழ்ப்பகுதி மட்டும் இருப்பின் (தாழ்வு அல்லது சிறு குழிவு) இதனை ஆழமாக்கலாம். மாதக் கணக்காக இப்பகுதியை அழுத்தியைக்கொண்டு அழுத்தினுல் தேவைக்குப் போதியளவு ஆழத்தை உண்டாக்கலாம்.
செப்பம் செய் அறுவை வினேகன் : (a) பேரிதழ்களின் மயிரற்ற உட்பகுதிகளைச் சேர்த்து யோனித் தலைவாயிலுக்கு முன்னுக ஒரு புகுவாயையுடைய ஒரு குழாய் அமைப்பைச் செய்யவும்,
tb ஊறுநீர்ப்பைக்கும் நேர் குடலுக்குமிடையில் ஒர் இடை வெளியை ஆக்கி இதனை தோல் ஒட்டலால் நுதிக்கவும். இந்தத் தோல் ஒட்டை ஒரு பிளாஸ்திக் பொருளால் அமைத்த நீண்ட உருண்ட வார்ப்பின் மேல் இட்டு இதனே அந்த இடைவெளிக்குள் புகுத்தி நிலைத்தல் செய்ய வேண்டும். ஒட்டானது பதிந்து இயங்கிய பின்னரும் குழியானது ஒடுங்காது அந்த வார்ப்பை 6-9 மாதங் களுக்கு அடிக்கடி அதனுள் புகுத்தி வைத்திருக்க வேண்டும். இது யோனி ஆக்கு வினையமுறையில் நன்முக இயங்கும் ஒரு முறை ஆகும் . ( மக்கின்டோவின் செப்பம் செய் அறுவை).
2. குறைவிளைசலுயா : யோனி ஆனது குறைவுத் தழைப்புறும் , அது குறுகியும் ஒடுங்கியும் இருக்கும். விதானங்கள் தளமானவை ( ஆழமற்றவை ). மேலணி ஆனது செயற்படாத மெல்லியது தியாகும். பெரும்பாலும் குறைவிளைசல் உற்ற கருப்பையுடன் சேர்ந்து இருக்கும். இதற்கு ஈத்திரசன் தீர்வுமுறையால் பல னுண்டு .
3. உடன்பிறப்பு அல்துளை நிலைமையும் ஒடுக்கமும் . 4. குறை பிரிசுவர் யோனியும், பிரிசுவர் யோனியும். 5. இரட்டை யோனி,
இவற்றையுடைய இரு நோயாளரைக் கண்டு உள்ளேன். இந் நிலைமை மிகவும் அருமையாகவே உண்டு. உண்மையில் இது ஒரு பிரிசுவர் யோனியாகும். இவ் இரட்டைக் கருப்பை இரட்டை வல்வம், இரட்டை சலப்பை, இரட்டை ஊறித்தாரை ஆகிய வற்றுடன் பிறந்த உருக்கேடுகள், பிறந்த உடனேயே இறந் ததைப் பற்றிச் செய்திகளுண்டு,
 

அல்மாதயிரிவுயா 7.
1. இது இல்லா நிலே மையும் குறை தழைப்பும் இரட்டிப்பும், இது உருக்கேட்டுக் கருவுரு ப் பிறப்புக்களில் காணப்படும். பெரும்பாலும் இவை பிறந்தவுடன் இறந்துபோகும்.
2. குறைவல் வவிளைசலுயா இது பொதுவாக பிறப்புறுப்
புச் சுவட்டின் குறைவிளைசலுடன் சேர்ந்திருக்கும்.
3. இரட்டை கிளேத் துருக்கள். இது பெரும்பாலும் வேறு பல ஊறுநீரித் தொகுதி உறுப்புக்களின் பிறழ்வுகளுடனும், வயிற்றுச் சுவர் பூப்பென்புக் குறைபாடுகளுடனும் தோன் றும் . புறவிடச் சலப்பை, மீக்கிழிவு, கீழ்ப்பகுதி வயிற் றுச் சுவர்க்குறை, வல்வப் பேரிதழ்கள் இரண்டாக அப் பாற்படுதல் , பிளவுக் கூபகம் ஆகியன காணப்படும்.
தீர்வு நிலைமையைப் பொறுத்துச் செப்பம் செய்யவேண்டும். ஊறித்தர்களைப் பெருங்குடலுள் மாற்றுநாட்டல் செய்யவேண்டி யும் வரும் .
4. கிளைத் துரு வின் அதியூட்ட வளர்த்தி.
இடைப்பாலினப் பிறழ்வுகளால் பெரும்பாலும் இது நிகழும். இதனை அறுவை வினையால் அகற்றவேண்டும்.
5. மென்திரையின் பிறழ்வுகள் இல்லாமை-பொள்ளலில்லாமை. இத்தகைய மென்திரை தடித்துப் பிரிக்கமுடியா நிலைமையில் உண்டு. இது அல்கலவியுயாவை உண்டாக்கும்.
சிறிதழ்கள் : இவற்றின் விளைவுகளாவன :
1. அல்விளைசல் நிலை அல்லது இவை இரண்டும் ஒருங்கியநிலை. இது ஒருங்கிய நிலையாயிருப்பின் இதழ்களைப் பிரித்து
வேறுபடுத்தலாம். 2. சீறிதழ்களின் அதியூட்ட வளர்த்தி. ஒன்று அல்லது இரண்டு இதழ்களும் பாதிக்கப்படும். இவை பெரும்பாலும் ஒர் இடரையும் உண்டாக்கமாட்டாது. அழகுக் குறைவை உண்டாக் கின் அல்லது ஏனைய விதத்தில் அவை இடர் செய்யின் அவற்றை அறுவை வினையால் செவ்வன் அளவுக்கு மாற்றலாம் .
கழிவு அறைப் பிறழ்வுகள்
கழிவு அறையானது பின் குடற் பகுதியாகவும், ஊறுநீரிப்
பிறப்புறுப்புக்குடா ஆகவும் ஒரு பிரிசு வரால் வேறுபடுத்தப்படும்
இதில் பிறழ்வுகள் உளதாயின் பல பிழையான நிலைமைகள்
ஏற்படும் .

Page 97
72 இளம்பெண் நோயியல்
1. அவையாவன சலப்பை, யோனி, குடல் ஆகியன கழிவு அறையை ஒரு பொது கழிவு வாய் ஆக பயன்படுத்து கின்றன. இது மிக அருமையாகவே காணப்படும் ,
2. நேர் குடல் யோனிப்புரை அல்லது ஏனசு யோனிப்புரை .
கழிவிடவயல் (பெரினீயம்) ஏன சுப்புரை அல்லது தலை வாயில் ஏன சுப் புரை அல்லது யோனி ஏ னசுப்புரை என்பவற்றில் ஒன்று தான் பெரும்பாலும் காணப்படும் குறையாகும். கீழ்க்குடலானது யோனிப் பின் சுவரில் அல்லது கடிவாளத்தில் வாய்விடும். யோனி ஏனசுப்புரையை புனிற்றுப் பேறுகளில் இலகு வில் திட்டப்படுத்த முடியும். இதன் வாய் பெரிதாயிருப்பின் இதற்கு அறுவை வினை செய்யாது விட்டுவிடுதல் நன்று. கைக் குழந்தை என்று லும் நாட் கள் செல்ல அது மலத்தை நல்ல இறுக்க அடக்கல் செய்யும் . குழந்தை வளர்ந்து மூத்த வயதை அடைந்தாலும் இது ஒரு வில் லங்கத்தையும் உண்டாக்காது. எனவே ஒரு வகை அறுவை வினையும் செய்யாது விட்டு விடுதல் நன்று. யோனியில் மட்டும் பிறழ்வு காணப்படின் செப்பம் செய் அறுவை வினை செய்யவேண் டும் . இந்த யோனி ஏனசை அல்லது கழிவிடவயல் ஏனசை புற இடத்தில் அமைக்கும் பொழுது தசைகளால் மலக் குடலுக்கு அடக்கல் ஆட்சியளிப்பது மிக வில் லங்கமாகும். பெரும்பாலும் நேர்குடல் -யோனிப்புரை அல்லது ஏனசு யோனிப்புரை தான் காணப்படும். இவர்களில் வாயு யோனியால் பறியும் . நீர்ம ய மான மலமும் கழியும். இது பெண்ணுக்கு இடரை உண்டாக் கும். இவற்றை அறுவை வினேயால் செப்பம் செய்யவேண்டும் ,
ஊறு நீரிப்பிறழ்வுகள்
1. புற இடத்து சலப்பை, மீப்போகு
2. கீழ்ப் போகு :
3. ஊறித்தாரைக் குழாய்க்கிளை - இவை நோயுற்றுக் கழலே
யங்களே உண்டாக்கும் .
4. மேலதிக ஊறித் தரும் நிலைவிலகிய ஊறித் தரும் .
5. ஒர் ஊறுநீரியும், ஊறித் தரும் இல்லாமை. இது பெரும் பாலும் முல்லேறியன் கான் இல்லா நிலையுடன் சேர்ந் திருக்கும்.
6. குதிரை இலாடன் ஊறு நீரி (ஊறு நீரிகளின் ஒரு ங்கல்) கூபக ஊறுநீரி, கூபக விளிம்புக்கு அண்மித்து அல்லது திரு - பு ைட என்டி மூட்டுக்கு எதிராகவிருக்கும். பெரும்பாலும் இது யோனி அல் பிறப்பித்தலுடன் தோன்
றும் - கூபக (X ) எக்சுக்கதிர் வரை யமுறையால் திட் டப்படுத்தலாம். " "

இயல் 12.
அல்மாதயிரிவுயா
இது உணர்த்துவது மாதந்தோறும் மாதவிடாய் நிகழாத நிலைமையை ஆகும். பாலினப் பக்குவமடைய முன்பு இது ஒர் இயல்பான நிலைமையாகும் பக்கு வக் குறிகள் தோன்றிய பின்பும் மாதயிரிவு தோன்ற தாயின், அது கருப்பையில்லா நிலைமை அல் லது கருப்பைக் கழுத்து , யோனி, வல்வம் ஆகியவற்றில் குருதி யிரிவுக்குப் புழைத் தடை ஏற்படுவதால் ஆகும். இந்தப் பிந்திய வகை நிலைமையை மறை மாதயிரிவு யா என்பர். இந்த நிலைமையை பொய் மாதயிரிவு யா எனவும் கூறுவர்.
மாதயிரிவுக்கால ப் பகுதியில் இரு மாதச் சுழல்களுக்கு அல்லது கூடிய காலத்துக்கு இந்த அல்மா தயிரிவு நிலைமை நிலைப்பின் உண்மை மாதயிரிவுயா உண்டெனக் குறிப்பர். இந்நிலைமையில் மாதயிரிவு உண்டாகாது அடக்கப்படும் . இதன் தோற்றம் உடற் ருெழில் இயல் நிலைமைகளாலும் , நோய் நிலைமைகளாலும் உண்டாகின்றது.
உடற்றெழிலியல் அல்மாதயிரிவுயா - வகைப்படுத்தல்
அ. பூப்புப் பக்குவத்துக்கு முன்பு :
இலங்கையில் இளம் கன்னியர்களின் தலை மாதயிரிவு முதல் முத லாக 11-14 ஆண்டு வயதில் நிகழும். மிகச் சிலருக்கு 11 வயதுக்கு முன்னிட்டும் , வேறு சிலருக்கு 16 வயதுக்குப் பின்னிட்டும் நிக ழும் , பக்குவமடையும் வயதானது பாரம்பரியத் தகைமை 9 மக்கள் இனம் , தேச தட்பவெப்பத் தன்மை, சூழல் வாழ்க்கை , ஊட்ட வளம் , என்பவற்றில் தங்கியுள்ளது.
இந்நூலில் முன்னர் கூறியபடி, இவ்வயதுக் காலப் பொழு துக்கு வெகு முன்னமாகவே சூலகங்கள் வினையாற்றத் தொடங் கிய போதும் , இவற்றல் குருதியில் சுரக்கப்படும் ஈத்திரசன் அளவு பூப்புக் காலத்திலேயே கருப்பையக வணியிலிருந்து குருதி வடிதற்காகிய உயர்வை எய்துகின்றது. இதனுல் இக்காலம் வரைக்கும் அல் மாதயிரிவு யா நிலை க்கும்.
ஆ. மங்கைப்பருவம் --
பெரும்பாலும் முதலாவது தலை மாதபிரிவுக்குப் பின்னர் ஒரிரு ஆண்டுகளுக்கு மாத யிரிவு மாதம் தோறும் நிகழ்வதில்லை. அடிக்கடி

Page 98
174 இளம்பெண் நோயியல்
சிலவேளைகளில் 2 - 12 மாத காலங்களுக்கும் மாதயிரிவு தோன் றுவதில்லை. பின்னர் செவ்விய ஒழுங்கில் மாதயிரிவு தோன்றும் . பிள்ளை வளத்தைப் பொறுத்தமட்டில் இவ்வகையான நிகழ்ச்சி யால் ஏதாவது ஒரு கெடுதியும் விளைவதில்லை. இவ்வகையான தோற்றம் நூற்றுக்கு 50 வீதம் இளம்படு மங்கையரில் நிகழும்.
இ, கருப்பநிலையில் : கருப்பநிலையில் முழுக்காலத்துக்கும் மாத பிரிவு நிகழ்வதில்லை. இந்நிலைதான் கருப்பம் தங்கினதற்குரிய முதற் குறியாகும். முதற் 12 கிழமைகளுக்குக் கருப்பகாலத்தில் குருதியிரிவு தோன்றக்கூடும். அதனை இயல் வகை மாதயிரிவு எனக் கருதுவது பிழையாகும். இந்த அல்மா தயிரிவானது பெரும் தொகை அளவில் இடையருது ஈத்திரசன்களையும் புருே செசுற் முேனையும் கோறியோன் சுரப்பதால் உண்டாவதாகும்.
ஈ. பால்சுரத்தற்காலம் : பேற்றுக்குப் பின்னரும், கருச்சிதை வுக்குப் பின்னரும் மாதயிரிவு நிகழாது அடக்கப்படும். ( பெரும் பாலும் பேற்றுக்குப் பின்னர் 3 - 6 மாதங்களுக்கும் கருச்சிதை வுக்குப் பின்னர் 6 கிழமைகள் மட்டிலும் ஆனல் 30 சதவீதத் தாய்மாரில் பால் சுரத்தலானது குழந்தைக்கு ஊண் மறப்புச் செய்த சில கிழமைகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கும். இவர் களில் பால் சுரத்தல் காலத்திலேயே சூல் இடலுடனும், மஞ்சட் சடல ஆக்கத்துடனும் மாதயிரிவு தோன்றும். பால் சுரத்தற் காலத்தில் புருேல க்ரின் ஒமோனும் உலூற்றிய துரோபினும் பெரும் தொகை அளவுகளில் பித்துயிர்த்தறி மடலால் சுரக்கப் படும். பால் சுரத்தற் காலத்தில் இந்த மூன்று ஒமோன்களும் மிகுதி யானேரிற் சுரக்கப்படும். ஆனல் இலூற்ரீனுக்கம் செய்ஓமோன் குறைவுபடச் சுரக்கப்படுகின்றது. எனவே, சூல் இடல் அவத் தையும் நிகழ்வதில்லை. இவை பரியக-பித்துயித்தறித் தொகுதிப் பிறழ்வால் நிகழ்கின்றது.
உ. மாதவிடைவுக்குப் பின்னர் : மாதவிடைவுக் காலக்கூறில் சூலகங்களிலுள்ள கிராபியன் புடைப்புக்கள் அற்று மேலும் இல்லா பிற்போனதினுல், சூலகங்கள் கொனடோ துரோபின்களுக்கு (சனனி யூட்டிகள் ) உணர்ச்சித் திறனுடன் செயலாற்றுவதில்லை. சில சமயங்களில் சூலக வினைய நிறுத்தத்துடன் மிதவிஞ்சிய படைப் Hத் தூண்டு ஒமோன் உண்டாக்கப்படும். இதுதான் மாதவிடைவு கால இறைத்தல்களுக்கு ஏதுவாகுமென நம்பப்படும் பல பெண் *ளுக்கு மாதவிடைவுக் காலக் கூறில் மிதமிஞ்சிய புடைப்புத் தூண்டு ஒமோன் குருதியில் இருப்பதில்லை. எனவே மாதவிடைவு அறிகுறிகளும் தோன்றுவது இல்லை. இவை ஈத்திரசன் சுரத்த

அல்மாதயிரிவுயா 75
லால் படிப்படியாக குறைவடையும் என எண்ணப்படும். பித் துயித்தறியானது மிதமிஞ்சிய கொனடோத் துரோபின்களைச் சுரப்பதைத் தடுக்கும் அளவுக்கு ஈத்திரசன்களுண்டு. ஆணுல் மாதந்தோறும் சுழற்சிக் குருதியிரிவை உண்டாக்குவதற்குப் போதிய அளவில் இல்லை. பெரும்பாலும் மாத விடைவு 40 வய துக்கு முன்னர் நிகழ்வதில்லை . பொதுவாக 45 வயதுக்கும் 5253 வயதுக்குமிடையில் நிகழும். இது நிகழ முன்பு சிலருக்கு மாதயிரிவு 3 - 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது அடிக்கடி தோன்றும் .
நோயியல் மாதயிரிவுயா : அல் மாத யிரிவுயா வானது ஒர் அறிகுறி யாகும். மாதம் தோறும் நிகழ்நேம மாதயிரிவானது கீழ்ப்பரியகம், முற்பக்கப் பித்துயிர்த்தறி, சூலகம், கருப்பை ஆகியன இ ையந்து நிகழ்த்தும் இயக்கத்தால் ஆகும். இதில் யாதாயினும் ஒரு பகுதி, அல்லது பகுதிகள் இல்லாவிடின் அல்லது நலிந்து இருப்பின் அல் மாத யிரிவுயா தோன்றும். முற்பக்கப் பித்துயித்தறி சூலகம் , கருப் பை ஆகிய பகுதிகளில் அல்லது இவற்றின் தழைப்பில் பெரும் படியான பிழைபாடுகள் உளதாகின் மாதயிரிவு தோன்றுவதே யிலலை. தீர்வும் திருத்தத்தை அளிக்காது. வழிவந்த அல் மாதி யிரிவு யா பெரும்பாலும் கருப்பைநிலையாலும் அல்லது இதுபற் றிய நோய்நிலைமைகளாலும் உண்டாகும். இவற்றை ஒரளவுக் குச் சீர்படுத்தலாம்.
கீழ்ப்பரியகம் கீழ்ப்பரியகம் அல்லது நடுமூளைப் பிரதேசத்தில் ஏற்படும் நோய்கள், காயங்கள் அல் மாதயிரியுயாவை உண்டாக் கும். மூளை அழற்சி மேனின் அழற்சி, மண்டையோட்டின் அடித் தள முறிவுகள் ஆகியன. இவ் ஏதுக்களுள் அடங்கும். பெரும் பாலும் காரோட்டின் உயர இருக்கும் மையங்கள் தம் கணத் தாக்கங்களால் பரியகத்தையும், பித்துயித்தறியையும் நேமவினை யங்களிலீடுபடாது தடுக்கும். இவ்வகையான நிலைமைகளாவன, மன அமிழ்வு நிலைமைகள் ( உளநோய்கள் ), மூளைத் துளக்கு, மன நெகிழ்வு நிலைமைகள், சூழற் காரணிகள் என்பனவாகும். இவை மாதயிரிவு யாவை நிகழாது தடுக்கும். இக்காரணங்களுள் அடங்கு வன, வீட்டிலிருந்து பள்ளிக்கூட விடுதியில்லங்களுக்கு வசிக்கச் செல்லல், இருப்பிடப் பெயர்வு, பிற தேசப் பயணங்கள், சோத னைப் பீதி, காதல் காரியங்கள், கல்யாணம், உறவினர், நண்பர் ஆகியோரின் பிரிவு, குடும்பத்தில் துக்க நிகழ்ச்சிகள், திடீர் பீதி கள் வேறும் யாதாமொரு மூளைத் தகைப்பு ஆகியனவாம். யுத்த காலங்களிலும் சமூகச் சாதியினரிடையில் நிகழ் குழப்பங்களிலும் சிறை வாழ்க்கைக் காலங்களிலும் அல் மாதபிரிவு யா நிகழும் பள்ளிக்கூட மாணவிகளுக்கு இது ஒரு தொந்தரவு கொடுக்கு

Page 99
| 76 இளம்பெண் நோயியல்
நிகழ்ச்சியாகும். சிலரில் கடும் பரியகத் த கைப்பு நிலைமைகள் உடலின் நிறை , நீர்த்தேக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் , இதனுல் ஆட்சிமுறைகள் பாதிக்கப்பட்டு உடல்நிறை கூடுதலும், உடலில் நீர்த்தேக்கமும் உண்டாகின்றது.
மைய நரம்புத் தொகுதி ஆதிக்கங்களினல் பரியகம் பாதிக் கப்படுவதால் உண்டாக்கப்படும் வேறு அல் மாதபிரிவு யா நிலைமை களில் ஒன்று, போலிக் கருப்ப நிலைமையாகும். இதில் ஒரு வள் தான் கருப்பமுற்ருளெனக் கருதி அல் மாதயிரிவு, வயிற்று வீக்கம் , முலை மாற்றங்கள், வாந்தி, உடல் நிறை கூடுதல் ஆகிய அறிகுறி களைக் காட்டுவள். கருவுரு அசைவுகள் உண்டென்றும் கூறுவள் : வயிற்று வீக்கம் குடல்களின் வாயுப் பொருமலா ல் ஆகும். இது அவள் தன் வயிற்றுத் தசைகளை தளர்த்தி மு ன் தள்ளுவ தாலும், முள்ளந்தண்டை முற்திக்குக்கு வளைவு செய்வதாலும் ஏற் படுகின்றது. இவ்விதப் போலி நிலையானது கருவுற வேண்டும் என் னும் கடும் வேட்கையாலும் அல்லது கருவுறக் கூடும் என்னும் பீதி பினுலுமாகும். சோதனை முறைகளால் உண்மை நிலைமையை அறிய முடியும். பெரும்பாலும் இந்நிலைமையானது குழந்தை வளமில் லாத மலடுகளிலும், மாதவிடைவு கர்லத்தை அண்மிக்கும் மூத்த பெண்களிலும் ( கருவுற்றே மெனும் பீதியினுல் ) காணப்படும் இந்த ஒருங்கோட்டிக் குறிகளெல்லாம் சேர்ந்து, முழுநிறைவாக ஒரு வரில் காணப்படா. சிலரில் அல் மாதயிரிவுயா மட்டுந் தான் தோன்றும். -
மேலும் குறிப்பிட வேண்டியது யாதெனின் இந்தக் குறிக ளெல்லாம், அவளின் மைய நரம்புத் தொகுதி ஆதிக்கங்களினல் திடீரென மறைந்து மாதயிரிவு தோன்றும் என்பதையே
வேறு பரியக நோய் நிலைமைகளாவன:
1. புருே லிக் ஒருங்கோட்டி (ஊட்டவிடர் கொழுப்பு அல்லது ஈனலுறுப்புயுயா) இதில் குழந்தைப் பருவம் முதல் கீழ்ப் பரியகத்தில் குழப்பநிலையுண்டு. இதனுல் ஈன லுறுப்புக்களில் குறை வளர்த்தியும் அல்மா தயிரிவு யா கொழுமை, துரக்கநிலை ஆகியன தோன்றும் .
2. உலோறென்சு-மூன் பீடில் ஒருங்கோட்டி,
இதுவும் முன்னது போன்றதே, கூட்டலாக இதற்குச் சாயமூட்டிய விழித்திரையழற்சியுயா, உளக் குறைபாட்டு நிலே, பல்விர விநிலை ஆகியனவுண்டு. ஆனல், பல கன்னி யரும் இளம் மங்கையரும் அல்மாதபிரிவுயா, மிதமிஞ்சிய உடல்நிலை நிறை ஆகியவற்ருல் வருந்தியபோதும் இவர்

அல்மாதயிரிவுயா 177
களுக்குப் பரியகப் பிழை பாடோ அல்லது வேறு அகச் சுரப்புக் கோளாறுகளோ காணப்படவில்லை. இந்நிலைமை மிதமிஞ்சிய உணவை அல்லது பிழையான உணவை உட்கொள்வதாலாகும் , சரிபத்திய உணவானது இந்நிலையைச் சீராக்கும்.
3. சில மருந்துப் பொருட்கள் அல் மாதபிரிவுயாவையும், இதனுடன் அணைந்து பால் சுரத்தலேயும் உண்டாக்கும். அவை இறிசேப்பினும், திரளியனைத் தடைசெய்யும் வேறு மருந்துப் பொருட்களுமாகும்.
4. ஏனைய பரியகப் பிறழ்வுகளால் உண்டாக்கப்படும் பாவிரி வுயா நிலைமைகள் " சியா றி - புருே மல் ஒருங்கோட்டியும் '; * போப்பின் ' ஒருங்கோட்டியும் ஆகும். முந்தியதில் கருப்பநிலை முடிந்தபின்பு பல ஆண்டுகளுக்கு அல்மா தயிரிவு யாவும், பால் சுரத்தலும் இவற்றுடன் சேர்ந்து கருப்பையின் அதி உட்சுருள் வும் காணப்படும். கொணுடோ துரோப்பின்களின் கழிவு குறைக் கப்படும் பரியகமும் பிய்த் துயித்தறியும் புருே லற்றினைச் சுரக் காது மீண்டும் புடைப்புத்துண்டு ஒமோனைச் சுரத்தல் செய் யாததினுல் இந்த வழுவல் ஏற்படுகின்றது என எண்ணப்படும். பின்னர் இவ்வகையான பெண்களில் 50 வீதத்தினருக்கும் பிய்த் துயித்தறி கழலேயங்கள் தோன்றுமென அறியப்படும்.
பிந்திய போப்பின் ஒருங்கோட்டியில் கருப்பநிலை தோன் முது, கருப்பக் குறிகள் தோன்றும். இவர்களின் பிய்த்துயித்தறியில் சில வேளைகளில் நிறப்பிதிச் சுரப்பியோமாக்கழலை யம் காணப் L (5) th:
பித்துயித்தறி (கபத்தி) இதனுடைய நோய் நிலைமைகளிற் சில அல்மாதயிரிவுயாவை உண்டாக்கும். .
1. பித்துயித்தறியின் உடன்பிறப்புத் தழைப்பில் வழுவல், இதில் அல்மாதயிரிவு யாவுடன் குறண்மையும், பாலினத் தழைப்புக் குறை பாடும் காணப்படும். (உலோறே னின் ஒருங்கோட்டி அந்த உறுப்புக்களான கை கால்களில் பாரிப்பு அல்லது பேருரு நிலைமை காணப்படும். *, 、
2. வேறு நோய் நிலைமைகளாலும் பிய்த்துயித்தறி வழுவல் தோன்றும். இதில் கொணுடோவூட்டு ஒமோன்கள் குறைந்த அளவில் அல்லது முற்முகச் சுரக்கப்படாத நிலையில் வழிவந்த அல்மா தயிரிவுயாவை உண்டாக்கும். அவையாவன: ,

Page 100
178 இளம்பெண் நோயியல்
1. பித்துயித்தறியின் அடைகுரு திமைப் பிணத்தல் வாதை. (சிமண்டின் நோய் , சிகானின் நோய் ) இந்நிலைமையானது கடும் துளக்கு நிலையாலும், அல் குரு தி ைமயாலும் உண்டாகும். பெரும் பாலும் பித்துயித்தறிக் குருதிக் கலன்களின் திரைப்பால் பேற்றுக் குப்பின் நிகழும் கடும் பேற்றுக் குருதிவாரியிலும் இது ஏற்படும. முற்பக்கப் பிய்த்துயித்தறிதான் நோய்ப்படும். இதனுல் சனணி (கொனட்டு) யூட்டு, தைரோவூட்டு, அதிரனலூட்டு, ஒமோன்க வின் சுரப்பு நிறுத்தப்படும். அல்லது அவற்றின் சுரத்தல் மிகக் குறைபடு நிலையை எய்தும் ,
பேற்றுவேளையில் மூன்ரும் அல்லது நான்காம்படி நிலைகளில் கடும் குருதி இறைப்புற்றவர்களில் 50 வீதப் பெண்களுக்கு பித் துயித்தறிப் பிணத்தல் வாதை உண்டாகும்.
சிலருக்கு அரைகுறையாக இவ்வாதை பித்துயித்தறியில்
உண்டாகும் .
முற்பக்கப் பித் துயித்தறியில் 95 வீதம் முற்றழிப்புற்றவர்க ளில் ஒருங்கோட்டி தன் முழு வடிவத்தையும் காண்பிக்கும். முற் பக்கப் பித்துயித்தறியின் எல்லா வினையங்களும் கேடுறும் பேற் றுக்குப் பின்பு முலையில் பாலாக்கம் நிகழ்வதிவ்லே . அல் மாத யிரிவு, குறைதைரோடியக் குறிகள், பாலின வேட்கையிழப்பு என் பனவும் தோன்றும் , நோயாளியானவள் ஊக்கக் குறைவான நிஜலமையை அடைந்து குளிரையும் தாங்கமாட்டாள். (3560) (1) இ2ளஒக் குருதிமையும் தன்னியல்பிலேயே தோன்றி, ஏனைய சுரப்பிகளின் தொழிற்பாட்டில் குறைபாடும் காணப்படும்.
2. அமிலநாட்டக் கழலை யக்கள் (பித்துயித்தறியில் ) இவை காலப்போக்கில் அந்தப்பாரிப்பு, அல் மாதயிரிவு யா என்பவற்றை உண்டாக்கும்.
3. பித்துயித்தறி அரைக்குறையாக ஒழிப்புறும் பொழுது அற்ப மாதயிரிவுகளையும், இருந்திட்டொரு க்கால் நிகழ் மாத யிரிவுகளையும் உண்டாக்கும் .
சூலக அல்மாதயிரிவுயா : அல் மாதயிரியுயாவை உண்டாக்கும் ஒமோன் பிறழ்வு நிலை மைகள் முதலில் சூலகங்களிலேயே தோன் QOI LD .
1. சிலரில் சனணிகள் (கொனடுகள் ) செவ்விய உருவாக்கம் பெறுவதில்லை. இவை வெண்ணிற இணையயிழைய நாண்களாகக் காணப்படும். உடலமைப்பு பெண்ணுக்குரிய முழு வளர்ச்சியை

அல்மாதயிரிவுயா 179
யும் அடைவதில்லை. ஈனலுறுப்புக்கள் சிறு குழந்தைப் பருவத் தழைப்பு நிலையிலேயே இருக்கும்.
2. இன்னுெரு வகையினரில் உடல் கட்டையாகவும், சனனித் தழைப்பு இடரும், ஏனைய பிறழ்வு நிலைமைகளும் காணப்படும். (தேனரின் ஒருங்கோட்டி ) முலைகள் தழைப்பதில்லை. பெண்ணுக் குரிய உடலில் உருண்டை வளைவுகளில்லை. ஆனல் வல்வம் நேமப் பெண் ணினது போன்றது. கருப்பையும் யோனியும் இருந்தும் மா தயிரிவு தோன்றுவதில்லை. துணைப்பாலினத் தோற்றப்பாடு களும் தோன்றுவதில்லை.
சூலகங்கள் மெல்லிய வெண் தடிப்புக்களாகக் காணப்படும். இதில் புடைப்புச் செயற்பாடுகளும் காணப்படுவதில்லை . கட் டமைவும் நாரிழையப் பஞ்சணையத் தாலாகும். இந்நோயில் ஏனைய உடற் பிறழ்வுகளும் காணப்படும். தேணர் ஒருங்கோட்டியுடைய வருள் மிகுதியானுேருக்கு 45 நிறமூர்த்தங்களுள், ஒரு X (எக்சு) நிறமூர்த்தம் இல்லையாகும்.
எளிய சனனிடர்களில் நிறமூர்த்தப் பால்வகை XY ஆகும். ஒரு நிலையில் நோயாளி நெடியவளாயும், ஆண்மகடுத் தோற்ற முடையவளாயும் இருப்பின் இவளுக்கு முதலாய அல் மாதயிரிவு யா உண்டு. முலைகள் தழைப்பதில்லை. பூப்பிடத்திலும், அக்குளிலும் மயிர் வளர்த்தி உண்டு. இவ்வகையினரில் நிறமூர்த்தம் பிழை பட்டிருக்குமெனக் கருதப்படும். முதலாய அல்மாதயிரிவுயா உடையவர்களை முதலில் இடைப்பாலினர் என எண்ணவேண்டும். குலக நோய்களில் மிகுதியானவை அல் மாதயிரிவு யாவை உண் டாக்குவதில்லை. முழு முற்ருக சூலக இழையம் அழிந்தால் ஒழிய நிலை பேருன அல்மாதயிரிவுயா உண்டாவதில்லை.
ஆனல் வேறு காரணங்களாலும் சூலகங்கள் முற்முக அழிக் கப்படும். -
1. x ( எக்சுக் ) கதிர்களாலும் இறே டியத்தாலும் சூலகம் புடைப்புக்கள் அழிக்கப்படும் . சிறப்பாகச் செயற்கை மாத விடைவை உண்டாக்கவேண்டிய நிலைமைகளிலும், கருப்பைக் கான்சர் நோய்த் தீர்வுக்குப் பின்பும் இது நிகழும். கருப்பைக் குழாயுள் புகுத்திய இறேடியம், சூலகங்களின் புடைப்புக்களை ஒழிப்புச் செய்யும்.
2. சில நிலைமைகளில் ( காசினுேமா போன்றவை )
இரண்டு சூலகங்களும் அகற்றப்படின் அல்மா தயிரிவு உண் டாகும். சூலகங்களை அகற்றவேண்டிய நிலையேற்படின் நன் னிலே யில் உள்ள சூலக இழையத்தைப் போதியளவில் எஞ்சவிட்டே

Page 101
80 இளம்பெண் நோயியல்
அகற்றவேண்டும். சில சூலகக் கழலையங்களில் கழலையத்தை மட்டும் சூலகங்களிலிருந்து பிரித்தெடுக்கலாம். சூலக கருப்பை யக வணி ஒமாக்களில் கருப்பை பகவ ணி நுதியைச் சூலகங்களி
விருந்து பிரித்து எடுக்கலாம்.
குலக் இழைய ஒட்டுக்கள் எனது அனுபவத்தில் ஒட்டித் தழைக்கவேயில்லை. நாட்கள் செல்ல அவை அல்லூட்டமடைந்து, நலிந்து வினையச் செயல்களும் இல்லாமற் போகும்,
3. மிதவிஞ்கிய அந்திரசனுக்கம் : அந்திரசன்கள் கருப்பையக வணியின் செயற்பாட்டையும், சூலகப் புடைப்பின் வளர்ச்சி யையும் உட் தடுப்புச் செய்யும். ஆனல் சூலகங்களின் ஆணுக்கம் செய் கழலேயங்கள் பெரும்பாலும் வழிவந்த வகை அல் மாதயிரி வு யாவை உண்டாக்கும். இவ்வகையான கழலேயங்கள் இருப்பின் முகப்பருக்கள், தலைமயிர் உதிர்தல், முகத்தில் மயிர் வளர்ச்சி, குரற் ருெனி மாற்றம், கிளேத்துருப் பெருப்பம் ஆகியன தோன் றும். மாதபிரிவும் நின்றுவிடும். யோனி, கருப்பை, முலைகள் ஆகியன அல்லூட்டமடைந்து நலியும். பெண்மை அடக்கப்படும். ஆணுக்க மாற்றங்கள் உண்டாகும். ஆணுக்கம் செய் கழலே யங் களில் மிகுதியானவை (ஆண்) அறினுே அரும்பரோமாக்களாகும். இவை இளம் பெண்களிலேயே காணப்படும். சிறப்பாக இவை தெசுற்றேன் ஓமோனில் காணப்படும் அந்திரசன்களைச் சுரக் கின்றன. கழலையத்தை அகற்றின் ஆணுக்க மாற்றங்கள் மறைந்து மீண்டும்பெண்ணுக்க மாற்றங்கள் உண்டாகும். முதன்முதலாகத் தோன்றும் நோய்க்குறி அல்மா தயிரிவுயா என்பதை மனதில் வைத்திருக்கவும்.
4. ஈத்திரசனினதும் புருேசெசுற்றேனினதும் இடையருத ஆக்கம்: இவ்வோமோன்கள் சுழல்முறையில் உண்டாக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்படும்பொழுது மாதயிரிவு உண்டாகும். ஆணுல் இடை பருது உண்டாக்கப்படின் அல்மாதயிரிவு உண்டாகும். எனவே நிரந்தரமாக இருக்கும் புடைப்புச் சிறைப்பையிலும், இலூற்றிய (மஞ்சள்) ச் சிறைப்பையிலும், சிறு மணிக்கலவக் கழலையங்களி லும், தீக்காக் கலவக் கழலையங்களிலும் அல்மாதயிரிவுக்கான அவத்தைநிலை தோன்றக்கூடும். முன்னர் ஊட்டவரும்பர்க் கழ லேயத்தால் வருந்திய பெண்ணுக்குப் பின்னர் அல்மாதயிரிவுயா தோன்றின் நிலை பேருன ஊட்டவரும்பர்ச் செயற்பாடு உண்டு என்று கருதவேண்டும். இவர்களின் சூலகங்களில் இலூற்றின் சிறைப்பைகள் தோன்றுவதால் சூலகங்கள் பெருக்கின்றன.

அல்மாதயிரிவுயா 181
5. இஸ்ற்றேயின் இலவெந்தால் ஒருங்கோட்டி : இந்நோயாள ருக்கு குழந்தை வளம் இல்லை. இவர்களுக்கு முக்கிய இடர் அல் மாதயிரிவுயா அல்லது ஒல் குமா தயிரிவுயா ஆகும். சூலகங்கள் சிறிதளவு பெருத்திருக்கும். இவற்றுள் சிறைப்பைகள் பல பொதிந்திருக்கும். இதன் உறை தடித்து மினுங்கு வெண்ணிற முடையதாய் இருக்கும்; சூல்கள் உண்டாவதில்லை. ஆனல் புடைப்புக்கள் பெருத்து சிறைப்பைகளாக மாறும், சிறைப்பை யின் அகவுறையானது அதிவிளைசல் உற்றுப் பருமனில் கூடும்.
பெரும்பாலும் இவ்வொருங்கோட்டி 20 - 40 ஆண்டு வய துள்ளவரையே பாதிக்கும். 50 வீதம் நோயாளரில் சிறிதளவு நாடி அதியிறுக்கமும், கொழுமையும், ஆண்மையும் காணப்படும் உடற்கட்டுப் பெருத்து மயிரியமும் உண்டாகும். இவ்விதமான தோற்றப்பாடுகளுக்கு இன்னமும் உறுதியான காரணம் காணப் படவில்லை. இது பெரும்பாலும் புருேசெ சுற்ருே னிலிருந்து ஈத் திரசன் தொகுக்கப்படும் பொழுது ஒரு பிழைபாடு ஏற்படுவதால் உண்டாகின்றது. எனவே அந்திரசன்களின் மிதமிஞ்சிய ஆக்கத் தால் சிறைப்பை அகவணி அதிவிளைசல் நிலையை அடைகின்றது.
சூலகங்களில் புடைப்புச் சிறைப்பைகளும், இலூற்றின் சிறைப் பைகளும் இருக்கக்கூடும். முதிர்ச்சி உற்ற கனிவான புடைப்புக் களும், இருந்திட்டொருக்கால் உயிர்ப்பு மஞ்சட் சடலங்களும் இதில் காணப்படும். சூல் உதிர்தல் நிகழ்கின்றது என்பதனை இதிலிருந்து அறியலாம். இந்நிலையிலும் உயிரிரசாயனப் படி னங்கள் குலக உயிரிரசாயனப் பொருள்களின் தொகுப்பில் குழப்பம் இருக்கின்றதென்றும் புருேசெசுற்ருேனது தெசுதெற்ற முேன் ஆகவும் அந்தி0சன்களாகவும் மாற்றப்படுகின்றதென்றும் தெரிவிக்கின்றது. சில சமயங்களில் இப்படினங்கள் இதற்கு மாறன குறிப்புக்களையும் தெரிவிக்கும். ஈத்திரசன்கள் நேம அளவுகளில் உண்டாக்கப்படுகின்றதென்றும் தெரிவிக்கும். மிகுதி யானேரில் அந்திரசன்களின் ஆக்கம் மிகையடைந்து தனது குருதிச் செறிவையும் உயர்த்தும் ,
கருப்பையும் , யோனியும் அல்லுரட்ட விளைவுகளைத் தோற்ற மாட்டாது. யோனி மேலணிக் குழியப் படினங்களும், கருப்பை பதவ ணிக் குழியப் படினங்களும் ஈத்திரசன் செறிவின் உயர்வான அல்லது குறைவான ஆக்கத்தைக் காட்டும். கருப்பையக வணி சிலரில் தூண்டலுருது. இருந்திட்டொருக்கால் சுரப்பு மாற்றங் களையும் அதிவிளைசல் மாற்றங்களையும் காட்டும். இவ்வகை அக வணி சிலரில் காசிளுேமாவாக மாறும். சிலரில் முலைகள் நல் வளர்த்தி அடைந்து ஒரு போலிக் கருப்பநிலையைத் தோற்றக் கூடும். 盛莺。 扈,卤鹉
鷺鷺
یعنی: . . . . . . . . . به بیر

Page 102
82 இளம்பெண் நோயியல்
இந்த உயிரிரசாயனப் பிறழ்வானது சூலகங்களில் நிலைப்ப தில்லை. இரண்டு சூலகங்களும் பாதிக்கப்படுவதால் இது ஒரு புறத்துக் காரணியாலாகும். பித்துயித்தறி ஒரு ச ம நிலை யைப் பேணுது ஒழுங்கற்ற முறையில் கொணுடோதுரோ பின்களே ஆக்கம் செய்வதே பெரும்பாலும் இ த ற் கு ரி ய காரணமாகும். மேலும் நோக்கின் இது கீழ்ப்பரியகத்தின் சீரற்ற வினையத்துடன் தொடர்புடையது. இது புருே லக்றினை ஆக்கம் செய்வதால்தான் முலைமாற்றங்கள் உண்டாகின்றதென்றும் கரு து வர். சிலர் அதிரனல் காரோ ட்டின் வினையப் பிறழ்வும் இதனுடன் அணைந்திருக்குமென்றும், முக்கியமாகப் பித்துயித்தறியானது அதிரனல் காரோட்டு ஊட்டு ஒமோ னின் விடுத்தலைப் பிழை படுத்துவதால் இது நிகழ்கின்றதென்றும் கரு துவர். சூலக உறை யின் தடிப்பை அந்திரசன்கள் உண்டாக்கக் கூடும்.
தீர்வு : பொதுவாக இதற்குரிய தீர்வுமுறையானது, இரு சூலகங்களிலுமிருந்தும் ஆப்புரு த் திணிவை வெட்டி அகற்றுவதே யாகும். இதனுடன் சூலகத்தில் பொதிந்து காட்சிதரும் சிறைப் பைகள் எல்லாவற்றையும் பொள்ளல் செய்து நீரகற்றல் செய் வேன். என் அனுபவத்தில் மிகுதியானுேருக்கு மீண்டும் நேம மாதவிடாய் தோன்றியது. சிலர் கருப்பங்கள் தங்கி நிறைமாதக் குழந்தைகளையும் பெற்றனர். இவ் அறுவை வினையைமுதன்முதலாக இலங்கையில் நானே அறிமுகப்படுத்தினேன். அறுவை வினையின் நோக்கம் அந்திரசன்களை உண்டாக்கும் இழையத்தை அகற்று வதேயாகும். ஆப்புரு வெட்ட கற்றலில் அந்திரசனைச் சுரக்கும் சூலகப் பஞ்சணையத்தையும், பெரும் தொகையில் சிறைப்பைக ளுடன் அதி விளைசலுற்ற புடைப்பு அகவுறைக் குழியவிளைசலை ஆகற்றுவதேயாகும். மிகச் சில ரிலேயே பலன் இடைக்க
ഭ്.
இவ் அறுவைவினை ஆற்றியவுடன் ஏற்படும் நல் மன நிலையால் பரியகமும் பித்துயித்தறியும் ஒழுங்காக இயங்கி நேம மாத விடாயும், பிள்ளை வளமும் ஏற்படுகின்றது என்று கூறுவர். ஆணுல் இதனை முற்முக ஏற்றுக்கொள்ளமுடியாது. இவர்களில் சிலருக்கு தன்னியல் பிலேயே முற்ருக மாறும் நிலை உண்டாகுமெனச் சிலர் கூறுவர். ஆனல் இது உண்மையோ தெரியவில்லை. சிலர் குளோமி பீன் தீர்வுமுறையைக் கையாளவேண்டும் என்றும் , இது தவறி னல் மனித பித்துயித்தறி கொனடோ துரப்பின்களைக் கொடுக்க வேண்டும் என்றும் கூறுவர்.
1. தேவைப்படின் குளோமிபீன் சிற்றேற்றை 5-7 நாட்க ளுக்கு வாய்வழியாக நாள்தோறும் 50-100 மி. கி. அளவில்
6 தடவை தொடர்ந்து கொடுக்கலாம்.

அல்மாதயிரிவுயா 83
2. 150 - 500 1, U H. C. G. ஐ நாள் தோறும் 4-10 நாட் களுக்குக் கொடுக்கவும். படினங்கள் கிருபியன் புடைப்பு (10-12 நாட்களில் ) முதிர்கின்ற தென்று காட்டும்பொழுது நாள்தோறும் மூன்று நாட்களுக்கு 3,000 - 6,000 ( , U. H. C. G. ) மனித கொணுட்டோதுரோபின் ஒமோனை தசையூடாகக் கொடுக்கவும். இது புடைப்பை முதிரப்பண் ணிச் சூலை உதிரச் செய்யும்.
கருப்பை அல்மாதயிரிவுயா : 1. பிறப்பிலேயே கருப்பை இல் லாத பிறழ்வுநிலையில் அல்லது கருப்பையை அறுவை வினையகற் றல் செய்த நிலையில் இந்நோய் தோன்றும்.
2. தூபக்திள் நோயால், கருப்பை அகவணி அழிப்புற்று, மாதயிரிவைத் தோற்ற முடியாத நிலையைச் சிலர் எய்துவர்.
3. கருச்சிதைவுக்குப் பின்பு, நோய் வசில சுகளின் கடும் தொற் றிருக்கும்பொழுது செய்யும் கடும் கருப்பையக வணித்துருவல் வினை, கருப்பையக வணியைச் சேதப்படுத்தி கருப்பைத் தசையை யும் அதன் கலன்களையும் கேடுறுத்தி அல்மாதயிரிவுயாவை உண்டாக்கும் எனச் சிலர் தெரிவிக்கின்றனர். பிள்ளை வளக் குறை வுக்குச் சிலர் பல தடவை கருப்பைய கவனித்துருவல் வினையைச் செய்து, அவர்கள் ஒல் குமாதயிரிவு அல்லது மாதயிரிவு இல்லா நிலையை எய்தியதை நான் கண்டுள்ளேன். இவ்வகையாகச் சேத முற்ற கருப்பைகளின் தசைகள் அழற்சியுற்று நார்மயமாகி ஒர் தடித்த கருப்பையாக மாறிய நிலைமையையும் கண்டுள்ளேன்,
அல்மாதயிரிவு யாவுக்குரிய காரணிகளுட் பொதுவாக அகச் சுரப்பிகளின் பிறழ்வு வினையங்களும், உடலைப் பிணிக்கும் நோய் களும், உடல், நன்னிலைப் பிறழ்வுகளும், சூழல் மாற்றங்களும், ஊட்ட வளப் பிழைபாடுகளும் அடங்கும்.
அகச் சுரப்பிப் பிறழ்வுகள்
1. கேடயச் சுரப்பி (தைருேயிட்) குறைதைருேடியமும், அதி தைருேடியமும் சூலகவினையத்தை அமிழ்த்தி அல் மாதயிரிவு யாவை உண்டாக்கும். குறைதைருேடியம் பெரும்பாலும் மாத வாரியை உண்டாக்கும். இக்குறைபாட்டு வினையமானது பித் துயித்தறியைத் தாழ்த்தி அல் மாதயிரிவுயாக் காலக்கூறையும், இதனைத் தொடர்ந்து மாத வாரியையும் உண்டாக்குகின்றது அதிதைருேடியம் பெரும்பாலும் ஒல் குமாதயிரிவுயாவை உண் டாக்கும். கடும் நோயாயின் அல்மாதயிரிவு யாவை உண்டாக்கும்

Page 103
184 இளம்பெண் நோயியல்
- 2. அதிரனல் காரோடு : இதில் அதிவிளைசல் அல்லது அதிரனல் கழலை யமுண்டாகின், அல் மாதபிரிவுயா தோன்றும். இம் மாதபிரிவு நிகழாமையானது அதிரனல் - ஈனலுறுப்பு ஒருங்கோட்டியிலும், குசிங்கின் ஒருங்கோட்டியிலும் காணப்படும். இந்நிலைமைகளி லேயே ஏனைய ஆண்மாற்றுக் குறிகளும் தோன்றும். மேலும் நேமச் சூலகவினையமுடைய (நே ம மாதயிரிவுச் சுழல்களுள்ள பெண் களுக்கு கோட்டிசோன் பதார்த்தத்தை வழங்கின், அது சில வேளைகளில் அல்மாதயிரிவை உண்டாக்கும். முற்ரு:ன அதிரனல் வழுவலிலும் (அடிசனின் நோயில் ) சூலக வழுவலிலும் அல்மாத யிரிவு யா உண்டாகும். இவ்வகையோருக்கு கோட்டிசோன் மீண் டும் மாதயிரிவையும், நேமாதச் சூலகச் சுழலையும் கொடுக்கும்.
3. சதையி குழந்தைப் பருவத்திலும் , மங்கையருக்குக் கட் டிளம் பருவத்திலும் தோன்றும். மதுநீரிழிவு நூற்றுக்கு 50 பேரில் அல்மாதயிரிவு யாவையும், ஈனலுறுப்புக் குறைவளர்த்தியையும் உண்டாக்கும். பிந்தியதைப் பொறுத்தமட்டில் மதுநீரிழிவைக் கட்டுப்படுத்தினும், அது பெரும்பாலும் நேமத் தழைப்பை அடைவதில்லை .
உடற்பிணிகள் : நாட்பட்ட பிணிகளும் மாதயிரிவைத் தோன் முது தடுக்கும். பெரும்பாலும் நுரையீரல் தூபக்கிள் நோயில் அல்மாதயிரிவு யாவானது முதலாவதாகத் தோன்றும் அறிகுறி யாகும். இதன் காரணம் தூபக்கிள் தொட்சின்கள் சூலகங்க ளைத் தாக்கி வினைய இடர் செய்வதாக எண்ணப்படும். அல் மாத யிரிவானது நிணையச் சுரப்பியோமா, குருே னின் நோய் ஆகியவற் றிலும் தோன்றும்.
ஊட்டவளக் குறைபாடுகள்
குழந்தைப் பருவத்திலும், பூப்புப் பருவத்திலும் உள்ள உண வுக் குறைபாடுகள் அல் மாதயிரிவை உண்டாக்கும். மூத்தோரில் பஞ்சகாலத்திலும், யுத்த காலத்திலும் நிகழும் பட்டினிநிலைகள் அல்மாதயிரிவை உண்டாக்கும். இளம் மங்கையரில் உடல் நிறை யானது விஞ்சியிராதபோதும், இவர்கள் தம் உணவைக் கடுமை யாகக் குறைப்பின் (நோக்கம் நிறையைக் குறைத்தல்) அல் மாத யிரிவு தோன்றும் உணவுக் குறைபாட்டு நோய்களில் உதாரண மாக பீற்று (sprue) நோய் போன்றவற்றிலும், இது தோன்றக் கூடும் .

அல்மாதயிரிவுயா 85
சில இளம் பெண்களுக்கு உளமாற்ற நிலைமைகளால் அல் உணவுயா தோன்றும். இவர்களுக்கு உளமாற்றங்கள் உணவுக்கு அ வாவையுண்டாக்குவதில்லை . இவர்கள் உண்ணவிரும்புவதும் இல்லை. பெரும்பாலும் குடும்பப் பொறுப்புக்களையும், நிலைமை களையும் ஏற்கவிரும்பாத காரணத்தினுல் இவ்விதமான பாசாங் கைச் செய்து, இறுதியில் அவர்கள் கெடுதிநிலையை அடையக்கூடும். இவர்கள் நிறைகுறைந்து, உயிருக்குக் கெடுதி விளையக் கூடிய நிலைமையையும் எய்துவர். இவர்களில் ஈனலுறுப்புச் சுவடு அல்லூட்டமடைந்து நலியும். அல்மா தயிரிவுயா மிதமிஞ்சி உண் பதாலும் உண்டாகக் கூடும். அடிக்கடி இவர்கள் கொழுமை நிலைமையை அடைந்திருப்பர். இவர்கள் உணவைக் கட்டுப் படுத்தி உடல் நிறையைக் குறைப்பின் மாதயிரிவு மீண்டும் தோன்றும். இவர்களின் கொழுமை நிலையானது மிதமிஞ்சி
உணவை உண்பதா லாகும் .
சூழல் சிலரில் வானிலை மாற்றங்கள், தொழில் மாற்றங்கள், குடியிருப்பு மாற்றங்கள் ஆகியன அடிக்கடி அல்மாதயிரிவை உண் டாக்கும். மாணவிகளில் விடுதி வாழ்க்கை, நீடியகாலப் புத்தகப் படிப்பு, சோதனைகளைப் பற்றிய ஏக்கம் ஆகியனவும் அல் மாத யிரிவை உண்டாக்கும். இதேவிதமாக நலம்பேணிகள், ஏனைய தொழிற் பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் ஆகியோரும் அல் மாத யிரிவால் வருந்த க் கூடும்.
ஆய்வுச் சோதனைகள் எந்நோயையும் தீர்வு செய்வதற்கு முன்பு அதன் காரணத்தை அறியவேண்டியது முக்கியமாகும். இளம் மங்கையரைப் பொறுத்தமட்டில் பலர் வயது கடந்து பக்கு வ மடைவதால் இவர் களில் விரிவான சோதனைகளே நிதானத்துடன் செய்யவேண்டும். இவர்களின் உடற்கட்டு மற்றும் தழைப்பு மாற்றங்கள் செவ்வ னமாயின் சோதிப்பதைத் தள்ளிப்போடலாம். 15 - 16 வயது மட்டில் பக்குவமடையா விடின் உடல் நோய்கள், அகச் சுரப்பி வினைய இடர்கள் அல்லது மறை மாதயிரிவு ஆகியன உண்டோவென்னும் நோக்கில் சோதனை செய்ய வேண்டும். பல ருக்குக் காலங்கடந்து முதலாம் மாதவிடாய் தோன்றும் . பொது வாக மங்கையருக்கு உடற்கட்டும், பாலினத் தழைப்பும் செவ் வனமாயிருந்தால், அவளுக்கு உணவு, உடற்பயிற்சி, தொழிற் பாடு, ஒய்வுகாலத்தைப் போக்கும் மாதிரி, மற்றும் நலம்பேணல் முறைகள் பற்றி உணர்த்தினுல் மட்டும் போதுமானதாகும். தேவையற்ற சோதனைகளும் விஞ்சிய தீர்வு முறைகளும், செய்ய வேண்டியதில்லை. 18ம் வயதிலும் மாதவிடாய் தோன்ருதாகின் அவளைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

Page 104
186 இளம்பெண் நோயியல்
வயது மூத்தோரைப் பொறுத்தமட்டில் பலருக்குச் சூழற் காரணங்களாற் சிறிது காலக் கூறுக்கு மாதவிடாய் தோன்ரு து இருப்பது ஒரு பொது நிகழ்ச்சியாகும். இவரை தேவையற்ற சோதனைகளுக்கு உட்படுத்துதல் நல்லதன்று. இருந்தும் மாத விடாய் நிறுத்தலுக்கு போதியளவு காரணம் இல்லாவிடின் அவர் களை விரிவான சோதனைக்கு உட்படுத்தவேண்டும். இதற்குத் தூபக்கிள் நோய், அரினுேபிளாசுற்ருே மா, பித்துயித்தறிக் கழலே
யம் ஆகியன ஏதுக்களாக இருக்கக்கூடும்.
சாரகச் சோதனை : எல்லாவிதச் சோதனைகளிலும் பார்க்க இது மிகவும் பயனுடையது. அல் மாதயிரிவு யாவின் காரணத்தைப் பெரும்பாலும் ஊகித்தறிய முடியும். பெண் ணின் குடும்பத் தினரினதும், அவளின் நோய் வரலாற்றை ப் பற்றியும் அறிய வேண்டும். அல் மாத பிரிவு யாவுடன் சேர்ந்து காணப்படும் மற்ற அறிகுறிகளையும் கொண்டு காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். பிணியாளியின் வயதும் அவளின் முந்திய மாதயிரிவின் வரலாறும் நோயை ஊடறிவதற்கு உதவும் அறிகுறிகளைப் பற்றியும் அறிய வேண்டும். உடல் நிறை கூடிவிட்டதா? அல்லது குறைந்துவிட் டதா? அவள் கருப்பவதியா? குரலோசை மாற்றமடைந்ததா? அல்மாதயிரிவுயா ஒரு முதலாய தோன்றலா? அல்லது வழிவந்த மாதயிரிவு யாவா? மாதவிடைவுக்குறிகளும் அறிகுறிகளுமுண்டா என்பதையும் அறியவேண்டும். சீகான் ஒருங்கோட்டியிலும், உளத்து அல்லுணவு உயாவினுல் தோன்றும் அல் மாதயிரிவிலும், பித்துயித்தறி, பரியக , கருப்பை அல் மாதயிரிவு நோய்களிலும் மாதவிடைவு, இறுமல்கள் உண்டாவதில்லை.
உடற்கட்டைப்பற்றியும் பாலினத் தழைப்புப் பற்றியும் நோக் கிக் குறைபாட்டின் அளவை மதிப்பிட வேண்டும். உடற் கட் டானது குறண்மையுற்றிருப்பது பித்துயித்தறிப் பிறழ்வால் அல் லது ஊறுநீரிக் காரணத்தினுல் அல்லது அனுசேபப் பிறழ்வுக ளால் ஆகும். தேனர் ஒருங்கோட்டியில் பெண்கள் கட்டையாக வும், எளிய சூலக இடர்களால் நீண்டு உயரமாகவும் இருப்பர். உடற்கட்டும், பாலினத் தழைப்பும் வயதுக்குப் போதுமானதா யிருந்தும், அல் மாதயிரிவுயா காணப்படின், அது கருப்பையில் லாமை அல்லது அதன் குறைதழைப்பு அல்லது மறை மாதவிடா யாக இருக்கக்கூடும், கருப்பையைப் பற்றி யோனி அல்லது நேர் குடற் சோதனையால் அறியலாம். வல்வமும் , யோனியும் சூலகங் களின் தொழிலாற்றல் அளவைத் தெரிவிக்கும். முலை வளர்த்தி
இல்லாவிடின் அது சூலகப் பிறப்பு இடர்களால் ஆகும்.
 

96) Lorragu ililaju u T 187
சிறப்பாய்வுகள்: இவ்வாய்வுகள் மிகச் சிலருக்கு மட்டுந்தான் தேவைப்படும். சாரகச் சோதனைகள் எந்த எந்த சிறப்பாய்வு களைச் செய்யவெண்டு மென்பதை உணர்த்தும் .
1. சோதனைகள்
1. நுரையீரலில்-தூபக்கிள் நோய் உண்டோ வென்பதற்கும், மண்டையோட்டு அடித்தளத்தில்(துருக்கிச் சேணம்)-பித் துயித்தறிக் கழலையங்கள் உண்டோ என்பதற்கும், பரி யூறுநீரிப்பிரதேயத்தில் - அதிரனல் கழலையம் உண்டோ என்பதற்கும் எக்சுக் (X) கதிர்ப்பதிவு செய்யவேண்டும்.
2. கண்ணுய்வு:-விழித்திரை நோக்கல்கள், பார்வைப் புலங்க ளின் ஆய்வு, பித்துயித்தறிக் கழலை யம் உண்டோ வென் பதை யுணர்த்தும் .
3. ஆய்வுகூடச் சோதனைகள் :- மதுநீரிழிவு இடருக்கு ஊறு நீரிலும், குருதியிலும் குளுக்கோசின் மட்டத்தை அறிய வேண்டும். மேலும் குருதியில் சோடியம், பொற்ருசியம், கொலெத்த ரோல் ஆகியவற்றின் இடர்கள் உண்டோ என்றும் அறியவேண்டும்.
4. ஒமோன் ஆய்வுகள் : கொனடோ துரோபின், ஈத்திரசன் , பிறெக்னன் டயோல் பிறெக்னெனெற்றியோல் , 17 கீற் ருே தெரோயிட்டுகள், 17 ஐதரொட்சிகோட்டிக் கோயிட் டுகள் ஆகியவை ஊறுநீரில் கழிக்கப்படும். இவற்றின் அளவை மதிப்பிடுவதற்கு சிறப்பாய்வுகூடங்கள் தேவைப் படும் ,
பரியக பித்துயித்தறி இணைப்புச் செயலில் பிழைபாடுகள் இருப்பின் கொணுடோ துரோபினின் அளவு குறைவடையும். ஈத்திரசன் கழிவு மிகக் குறைவாகும் அல்லது இல்லாதிருக்கும். எக்காரணத்தினுலாயினும் முதலாய சூ ல க வழுவலிருப்பின் கொணுடோதுரோபின்கள் பெருமளவிலும், ஈத்திரசன்கள் மிகக் குறைந்த அளவிலும் ஊறுநீரில் கழிக்கப்படும்.
இஸ்ரெயின் லெவந்தால் ஒருங்கோட்டியில் இவற்றின் கழிவு ஒரு மாற்றமும் அடைவதில்லை.
5. யோனிக்கலவச் சோதனை : கிழமைக்கொருக்கால் 5 தடவை
கள் யோனி அப்பல்களைச் சோதித்து யோனி மேலணிக் கலங்க ளின் நிலைமையை அறியலாம். ஈத்திரசன் தூண்டல் பெற்ற அப்

Page 105
88 இளம்பெண் நோயியல்
பல்கள் மாதவிடாய்க் காலத்தில் , பெரும் கொம்பாக்கமுற்றதும் அடர்த்திக் கருக்கள் கொண்டதுமான பருமனில் பெரிய மேலணிக் தலங்களை உயர்ந்த தொகையில் தோற்றுவிக்கும் , ஈத்திரசன் தூண்டல் பெருத யோனிக் கலங்கள் , நன்நிலைக்கருக்கள் கொண்ட சிறிய அடித் தளவகைக் கலங்களைத் தோற்றும்.
6. கருப்பநிலைச் சோதனை : கருப்பநிலையை அறிவதற்குப் பல சோதனைகள் உண்டு.
அ. கருப்பைக் குருதி வடிதலே உண்டாக்கும் ஈத்திரசன் புருே செசுற்றேன் சேர்வைக் குளிகைகளைக் கொடுப்பின் கர்ப்ப மாயின் குரு திவடிதல் நிகழாது.
ஆ. அசேம் சொண்டைச் சோதனை - பிறீட்மன் சோதனை, செனுேப்பசுச் சோதனை ஆகியவற்றைச் செய்தும் அறிய ου ΓΓιf) .
இ. ஏமவளிப்புச் சோதனைகள் : குருத்யொரு ங் கொட்டற் சோதனைகள், இலேற்றெச்சுப் படிவு வீழ்த்தற் சோதனை கள், இவற்றின் எளிதாக்கமான கிராவின் சோதனைகளை யும் செய்து நிலைமையை அறியலாம்.
ஈ. தீர்வுச் சோதனைகள்: நியோஸ்ரிக்மீன் உள்ளேற்றல், புருே செ சுற்ருே ன் ஈத்திரசன் சேர்வை உள்ளேற்றலைச் செய்த பின்பு கருப்பநிலை இல்லையாகின் 6 - 7 நாட்களில் கருப் பைக் குருதிவடிதல் உண்டாகும் .
உ. பேண் இலைச் சோதனை : கருப்பைக் கழுத்து மியூக்கசு உலரும்பொழுது கருப்பநிலையாயின் அது பேணிலையுரு வடிவமெடுக்காது. பெரும் தொகையில் ஈத்திரசனைக் கொடுப்பினும், மியூக்கசு உலரும்பொழுது இது பேணிலை
உருவ அமைப்பை எடுக்காது.
7. நிறமூர்த்தப் படினங்கள் : பாலின நிறமூர்த்தக் கோலத்தை யும், பாலின நிறமூர்த்த அமைப்பொழுங்கையும் முதலாய அல் மாதயிரிவு மங்கையர்களில் அறியவேண்டும். வாய்ச் சொக்கு அப் பல்களை ஒரு குழிய இயல் அறிஞனைக்கொண்டு சோதிக்கவேண்டும். இது இலங்கையில் ஒரு வில்லங்கமான காரியமாகும்.
8. கூபகச் சோதனை : கருப்பையக வணித் திருவலின் இழைய இயற்சோதனை கருப்பையக வணியின் கட்டமைப்பையும், குருதி யில் ஈத்திரசன் அளவையும் தெரிவிக்கும்.
 

அல்மாதயிரிவுயா 189
9. யோனி வழியாக்கக் கூபகக்குழி நோக்கலும், வயிற்றுச் சுவர் வழியாகப் பரிவிரியக்குழி நோக்கலும் சில நிலைமைகளில் பரிவிரியக்குழி நோக்கலானது நிலைமையை ஊடறிவதற்கு மிக முக்கியமாகும். இவை அறுவை வினையறையில் ஆற்றப்படும் சோதனைகளாகும். இஸ் ரெயின் இல வெந்தால் ஒருங்கோட்டியில் பொலி சிறைப்பைச் சூலகங்களையும், தூபக்கிள் கருப்பைக் குழாய் அழற்சியையும் இந்நோக்கல்கள் மூலம் நோக்கித் திட்டப்படுத்த முடியும் .
11. ஈத்திாசன்-புருேசெ சுற்றேன் சோதனை : கருப்பைக் குறைவிளைசலுயா இது குறை சூலக வினையத்தால் அல்லது ஒமோன்களுக்குக் கருப்பை மறுகை விளைவு செய்ய இயலாததால் ஏற்படுகின்றது. முதலாய அல் மாதயிரிவுயாவில் 1 மி.கி, எடை கொண்ட ஸ்ரில் பிசுத்தரோலை அல்லது 0.05 மி.கி. எதினைல் ஈத் திர டயோலே நாளுக்கு மூன்று தடவையாக 21 நாட்களுக்குக் கொடுத்தபின்பு மீண்டும் 7 நாட்களுக்குப் பின்பு இவ்விதமாகக் கொடுக்கவேண்டும். கரு ப்பை மறுகை விளைவு செய்யின் மருந்து வழங்காத இடைவேளைக் காலத்தில் குருதிவடிதல் நிகழவேண் டும். குருதி வடிதல் நிகழாவிடின் திரும்பவும் இதே நடைமருந் தையும் கடைசி 7நாட்களுக்கு புருேசெசுற்ற ருேனையும்(5-10 மி.கி.) கொடுக்கவும். இதற்கும் குருதிவடிதல் நிகழாவிடின் கருப்பை யானது கடும் குறைவிளைசலுயா உற்றது எனக் கருதவேண்டும்.
வழிவந்த அல்மாதயிரிவுயா ஆகின், மேலே கூறப்பட்ட நடை மருந்துமுறை குருதிவடிதலை உண்டாக்காதுவிடின் இந்நிலைமை கீழ்க்காணும் ஏதுக்களாலும் ஏற்படக்கூடும். (1) கருப்பை நிலை (2) கழலையங்கள் சுரக்கும் அந்திரசனல் (3) கருப்பைத் தூபக்கிள் வாதை காணப்படும். (4) உள்ளத்தின் நிலைமையாலும் உட் தடை ஏற்பட்டு அல் மாதயிரிவு யா உண்டாகும்.
தீர்வு : பெண்கள் மாதந்தோறும் மாதயிரியுவு தோன்றவிடின்
தாம் நல்லுடல் நிலையில் இல்லை என்றும் , தாம் பெண் ணியல்பு களில் குறை வென்றுங் கருதித் தீர்வுக்கு வருவர். மாதயிரிவா னது பல உடல்நோய் நிலைமைகளாலகின் தீர்வுசெய்து, சூல் உதி ரும் மாதயிரிவை உண்டாக்க எத்தனிக்க வேண்டும். சிலருக்குப் பல தீர்க்க முடியாத காரணங்களினுல் மாதயிரிவை உண்டாக் கவே முடியாது. இவர்களுக்கு மாதந்தோறும் மருந்துப் பொருட்
களைக் கொடுத்து கருப்பையக வணியைத் தூண்டிக் குருதிவடிதலை உளை டாக்குதல் நல்ல தீர்வுமுறை இல்லையாகும். இவர்களுக்கு
உண்மை நிலையை விளக்கி, இந்நிலை மையானது உடலுக்கு ஒரு
கெடுதியையும் விளைவிக்காதெனக் கூறி, அவர்களின் மனத்திற் குத் தென் பைக் கொடுக்கவேண்டும்.

Page 106
罩90 இளம்பெண் நோயியல்
தீர்வு : 1. பூப்புப் பருவகால உடலியல் அல் மாதயிரிவுயா சில மங்கையர் பக்குவமடைவதற்கு 17 - 18 வயது செல்லும். அதிகமானுேர் முன்னர் கூறியபடி, 16 வயதுக்கு முன்பு, பக்குவ ம ைடவர் . இவ்வயது எல்லேயுள் பக்குவமடையாதவர்களைச் சோதிக்கவேண்டும். இவர்கட்கு உடல் நோய்கள் தூபக்கிள் வாதை அகச்சுரப்புப் பிறழ்வுகள், மறைமாதயிரிவு ஆகியன உண்டோ வென்றும், இவர்களின் ஊட்டவளம், தொழிலீடுபாடு, பொழுது போக்கு, நல்லுடல் நிலை ஆகியவற்றைப் பற்றியும் அறியவேண்டும்.
கன்னி மங்கையின் உடல் வளர்த்தி, உடல்நிலை, பாலினத் தழைப்பு ஆகியன செவ்வ னமாயிருந்தால் அவளுக்கு வேறு மன இடரைக் கொடுக்கக் கூடிய சோதனைகளைச் செய்யாது. ஏதாவது உணவுக் குறையிருப்பின் அதனைச் சீராக்கவேண்டும் . பெண்கள் பக்குவமடையும் காலத்தில் உடல் வளர்த்தியும், மற் றும் உறுப்புக்களின் வளர்த்தியும் மிகக் கதிக்கப்படும். எனவே இக்காலக் கூறில் உடல் வளர்த்திக்குத் தேவையான புரதங்கள், விற்றமின்கள், கணிப்பொருட்களான இரும்பு, கல்சியம் , பொசு பரசு அயடீன் ஆகியன கூடிய அளவில் தேவைப்படும். நல்லுடல் நிலைக்கு, உடற்பயிற்சி நடனம், விளையாட்டு, நற்சூழல் நன் நேரப்போக்கு ஆகியன தேவைப்படும். இவ்வயதுப் பருவத்தில் உடல்நோய்கள் இருப்பின் அவற்றிற்கு அவசியம் தீர்வுசெய்ய வேண்டும்.
ஆனல் 18 வயது எல்லேயுள் மாதயிரிவு தோன்முவிடின், விரி வான சோதனைகளைச் செய்து காரணத்தை அறியவேண்டும். பரியக முற்பக்கப் பித்துயித்தறி, சூலக கருப்பைத் தொடர்பில் யாதா யினும் பிறழ்வுண்டோவென அறிவதற்கு, விரிவான சோதனை களை செய்ய வேண்டும். இத்தொடர்பைப் பற்றி முன்னர் விளக் கப்பட்டுள்ளது.
கட்டிளம் பருவகால அல்மாதயிரிவுயா.
1. முதலாம் பூப்புத் தலை மாதயிரிவு யா தோன்றியபின்பு முதல் ஓர் இரு ஆண்டுகளுக்கு அல் மாதயிரிவுக் காலக் கூறுகள் காணப்படும். இவை பெரும்பாலும் 2 - 12 மாதங்கள் வரைக் கும் நிலைக்கும். உடல்நிலை, உடல்வளர்த்தி ஆகியன செவ்வன மாய் உள்ளவர்கள் 1-2 ஆண்டுகளில் நேம மாதயிரிவுப் பரு வத்தை யெய்துவர். இவர்களின் கருத்தரிக்கும் ஆற்றலும் செவ் 6) I (60TLDIT (5 L D.
தீர்வு : முன் பந்தியில் கூறியபடி அதே முறையில் தீர்வைச் செய்யவும் கணிப்பொருட்குறை, ஊட்டவளக்குறை শুন”।
 

அல்மாதவுயிரியா 19
வற்றைச் செம்மைப்படுத்தவேண்டும். தைருேயிட்டு ஒமோனைச் சிறு எடைகளில் கொடுப்பின் உறுப்புக்களின் வளர்த்தியைச் சிறப்பாக ஈனலுறுப்புக்களில் சீராக்கும்.
இப்பருவ காலத்திலும், பலர் கல்வி பயிலும் காலத்திலும் ஊட்டநிலை, சூழல்நிலை , உளநிலை ஆகியன குழப்பத்தைத் தரக் கூடும். இவற்றைச் சீராக்கவேண்டும். இக்காலத்தில் கருப்பநிலை யும் அடையக் கூடும். தலைமாதயிரிவுக்குப் பின்னர் கருப்பமுற்ற இளம் மங்கையரைக் கண்டுள்ளேன். இது பின்னர் சோதனை யால் அறியப்படும் .
நேம மாதயிரிவு உற்றவர்களில் : நற்சுகநிலையில் இருப்பவர்கள்.
1. கருப்பநிலை : இது சோதனையால் அறியப்பட்டுப் பின்னர் கெற்பப் பேணல் செய்யப்படும்.
2. மகப்பேற்றுக்குப் பின் அல் மாதயிரிவுயா 3 - 6 மாதங்க ளுக்கு நிலைக்கும். கூடிய மாதங்களுக்கு நிலைப்பின், அவள் மீண் டும் கருப்பமுற்ருளோவெனச் சோதனையால் அறியவேண்டும். பலர் தம்பிள்ளைகளுக்கு மாதக்கணக்காக முலையூட்டல் செய்வர். இதனுல் பித்துயித்தறி பரியக உறுப்புக்கள் செயலிழப்பு அடைந்து, சூலக வினைய நிறுத்தலானது நீடிய காலத்துக்கு நிகழ்த்தப்படும். இவர்கள் முதலாம் மாதயிரிவு தோன்றும் மாதத்திலேயே கல வியை நிகழ்த்துவர். இதனுல் முதலாம் மாதயிரிவு தோன் ருது. இவர்கள் தமக்கே தெரியாது கருப்பநிலையை அடைவர். இவர் களுக்கு இப்போ கருப்பநிலைப் பேணல் தேவைப்படும். சிலருக்கு மேற்கூறிய காரணங்களால் பல மாதங்கள் சென்றும் மாதயிரிவு தோன்றக் கூடும்.
இவர்கள் முலையூட்டலை நிறுத்தித் தம் உடல்நிலையை நேம நிலைக்குக் கொண்டு வர மாதயிரிவு பெரும்பாலும் தோன்றும். நீண்டகால மூலையூட்டல் பித்துயித்தறிக்குச் சேதத்தை ஏற்படுத் துவதால் மிகச் சிலருக்கு மீண்டும் மாதயிரிவு தோன்றுவதில்லை.
3. சிறப்பாகப் பல காரணங்களினுல் மாதயிரிவு தோன்றின வர்களில், மூளையுயர் மையங்களிலிருந்து வரும் கணத்தாக்க ஆதிக் கத்தினுல் அல் மாதயிரிவு உண்டாகும். இவற்றுள் மன அமிழ்வு, தொழில் மாற்றம், விடுதி மாற்றம், இடமாற்றம், தூரதேசப் பயணம், காதல் மனக்குழப்பங்கள், கல்யாணம், குடும்பத்தில் சாவு, உறவினர், நண்பர் ஆகியோரின் பிரிவு. திடீர் அபாயநிலை கள்" மறியல் வாழ்க்கை, சோதனைகளில் வெற்றியின்மைபோன்ற

Page 107
192 இளம்பெண் நோயியல்
குழப்பங்களாலும் மாதயிரிவு நின்றுவிடும். நிலைமை மாற மாத யிரிவும் ஒழுங்காகத் தோன்றும். சில கூர்ப்பு நோய் நிலைமை களுக்குப்பின் வரும் அல் மாதயிரிவு சில மாதங்களுக்கு நிலைக்கும்.
இவையெல்லாம் காலப்போக்கில் செவ்விதமடையும். சிறப் புத் தீர்வு முறைகள் தேவையில்லை. இருந்தும் பல மாதங்கள் கழிந்தும் மாதயிரிவு தோன்ருதாகின் ஈத்திரசன் - புருே செசுற் ருேன் சுழல்முறைத் தீர்வை மூன்றுதடவை வழங்கவும். ஒவ் வொரு தடைவை நிறுத்தும் பொழுதும் 2- 3 நாட்களில் மாத விடாய் தோன்றும். இவ்விதத் தீர் வைத் தொடர்ந்து வழங் காதபோதும் சூல் உதிர் மாதயிரிவு ஒழுங்காக மாதந்தோறும் தோன்றிக் கருக்கட்டல் நிகழ்வதை பலரில் நான் கண்டுள்ளேன்.
மாதயிரிவு தோன்ருது ( பல ஆண்டுகளுக்கு ) 3 - 4 ஆண்டுக ளுக்கு ஒரு க்கால் 4 குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண்ணே நான் அறிவேன். பெண்விலங்குகளில் மாதயிரிவு தோன்றது. மாத அகத்துறிஞ்சல் நடைபெறுவதுபோல் இப்பெண்ணிலும் நிகழ்கின் றதோவென ஐயப்பட்டேன்.
மாதவிடைவுக் காலத்தில் அடிக்கடி அல் மாதயிரிவுக் காலக் கூறுகள் நிகழும். இதற்கு மருத்துவம் வேண்டியதில்லை.
சிலருக்கு மாதவிடாயானது பருவகாலத்துக்கு முன்னதாகவே நிகழும், 37 - 38 வயதில் இந்நிலையைப் பலர் எய்துகின்றனர். இவர்களுக்கு மீண்டும் மாதயிரிவை நிகழச் செய்வதற்குத் தீர்வு தேவையில்லை. உடல்நிலைக் கவனிப்பு மட்டுந்தான் தேவைப் படும்.
5. கட்டிளங் காலத்திலும், இளம் மங்கைப் பருவத்திலும் மிதமிஞ்சிய உணவை உண்ணுவது அல் மாதயிரிவு யாவை உண் டாக்கும். இவர்களுட் பலர் கொழுமைநிலையிலிருப்பர். விஞ் சிய உணவு கொழுமைநிலையை உண்டாக்கும். நாள்தோறும் 1000 கலோஹி அளவு உணவானது மூன்று மாதங்களில் 30 - 40 இருத்தல் வரை உடல்நிறையில் இழப்பை உண்டாக்கும். இவர் களின் உடல்நிறை செவ்வ னமாக, மாதயிரிவும் தோன்றும். சிலர் தாம் மெலிவதற்காக உணவை உட்கொள்வதை மிகவும் குறைப் பர். இவர்களும் நிறையைச் செவ்விதமாக்க மாதயிரிவு ஒழுங் காக மீண்டும் தோன்றும். வலுவில் நிறையைக் குறைப்பதால் ஏற்படும் ஒரு முக்கிய விளைவு அதிரனல் காரோட்டின் வினைய மாற்றமாகும். மு ன்னர் மனப்பிறழ்வு அல்லுணவு அவா உயா வைப் பற்றிக் கூறினுேம், சிறப்பாக இப்பெண்களில் காணப்படும்

அல்மாதயிர்வுயா 93
அல்மாதயிரிவானது உளவாதையால் ஆகும். இதனுல் சிலரில் உணவுநிலை செவ்விதமானுலும் அல்மா தயிரிவு செவ்விதமாவதில்லை.
நோய்நிலைமைகளால் உண்டாக்கப்படும் அல்மாதயிரிவு
1. தூபக்கிள் நோய் தூபக்கிள் எதிரி மருந்துப் பொருட் களைக் கொடுக்கவும்.
2. மது நீரிழிவு இன்சுலின்போன்ற மதுநீரிழிவெதிரி மருந் துப் பொருட்களைக் கொடுக்கவும். இத்தீர்வுமுறையைச் செய்தும் சிலரில் மர்தயிரிவு தோன்றுவதில்லை.
3. உளநோய்களை மாற்றின் மாதயிரிவு பலரிற் தோன்றும். எல்லாவகை உளநோய்களும் மாதயிரிவை உண்டாக்குவதில்லை.
சுரப்பிகளின் பிறழ்வுகள்
1. குறைதைருேடியம் : இதில் தைருேயிட்டு ஒமோனை வழங் குவதால் நன்மை ஏற்பட்டு ஒழுங்கான மாதயிரிவும், கருக்கட் டலும் நிகழ்ந்து நிறை மாத மகப்பேறு நிகழ்வதையும் கண்டுள் ளேன். கன்னி மங்கையரில் கேடயச் சுரப்பிக் குறைபாட்டா லும், அல்மாதயிரிவு யாக் காலக் கூறுகள் தோன்றும். இவர் களுக்கு ஏற்ற எடைகளில் தைருேயிட்டு ஒமோனைக் கொடுப்பின் ஒழுங்கான மாதயிரிவுகள் நிகழும்.
2. ஈத்திரசன் புருேசெசுற்றேன் சுழல்த்தீர்வுமுறை
அ. சூலக மாற்றச் சுழல் வட்டம் யாதாயினுமொரு கார ணத்தால் தடுப்புறின் அல்லது நிறுத்தப்படின் முன்னர் விபரிக்கப்பட்ட முறையில் சுழல்தீர்வு முறையை வழங் கவும் இது மீண்டும் உறுப்புக்களைச் செவ்விதமாக வினை யாற்றத் தொடக்கிவிடும். இது பின்னர் தொடர்ச்சியாக நிலை பேருக நிலைத்து, மகப் பேறுகள் நிகழ்வதையும் கண்டுள்ளேன் .
ஆ. சனணி இடர்களில் சில பெண்கள் குழந்தைகளின் உடற் கட்டு அமைப்பிலிருப்பர் அல்லது துணைப்பாலின மாற் றங்களில் மிகக்குறைவான தழைப்பையும் எய்தியிருப் பர். ஈத்திரசன்களைக் கொடுப்பின் முகத்தில் மாற் றங்கள் தோன்றி, இளமைப் பொலிவுடன் காணப்படு வர். முலைகள் தழைத்து வளரும், உடலில் மயிர் வளர்த்தி

Page 108
2.94. இளம்பெண் நோயியல்
யையும் உண்டாக்கும். ஈனலுறுப்புக்கள் வளரும். யோனி தழைப்புறும். எலும்பு வளர்த்திக்கு ஈத்திர சன்கள் ஒரு தடையையும் உண்டாக்காது.
3. குளோமிபீன் : சில அல் மாதயிரிவு நோயாளரில் உதா ரணமாக இஸ்ற் ரெயின் இலெவந்தால் ஒருங்கோட்டியிலும், ஏனைய இவ்வகை நோயாளரிலும் இம் மருந்துப் பொருள் சூலிடலைத் தூண்டும். மாதயிரிவையும் ஒழுங்காகத் தோற்றுவிக்கும். சிறப் பாக மலட்டுநிலை உற்றவர்களுக்கு இம் மருந்து வழங்கப்படும். இவர்களில் 30 வீதம் பெண்கள் கர்ப்பம் அடைவர். நிறை மாதப் பேறுகள் 10 - 15 வீதம் பெண்களிலேயே நிகழ்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனை நடைமுறைத் தீர்வாக 5 நாட்களுக்கு நாள்தோறும் 50-100 கி. எடையில் வாய் வழியா கக் கொடுக்கவேண்டும். இத்தீர்வு முறையை மூன்று தடைவை மட்டுமே கொடுக்க வேண்டும்.
4. கொணுடோதுரோபின்கள் இந்த ஒமோ னின் ஆக்கம் பிழை படின் சூலிடல் நிறுத்தப்படும். இந்த ஒமோனைக் கொடுத்து சூலிடலைச் செம்மைப்படுத்தலாம். சிறப்பாக, இதற்கு மனித கொனடோ துரோபின் ஒமோன்களே உகந்தவையாகும் . புடைப்புத் தூண்டி ஒமோன் (பு. துர.ஒ.) (F.S.H. ) மனித பித் துயித்தறிகளிலிருந்து அல்லது மாதவிடைவு உற்றவர்களின் ஊறு நீரிலிருந்து பெறப்படும். இலூற்றினுக்கஒமோன் மனித சூல் வித்தகங்களிலிருந்து பெறப்படும். 150-500 IU புது. ஒ. ஐ நாள்தோறும் 4 - 10 நாட்களுக்கு வழங்கிய பின்பு 10-12 ஆம் நாள் மட்டில் கிருபியன் புடைப்புக் கனிவுறும். மேலும் 3 நாட் களுக்கு 3,000 - 6000 ( Iu பு:துர.ஒ., HCG ) ஓமோனை வழங்கச் சூல் உதிர்தல் உண்டாகும். கலவியும் உதிர்தல் காலத்தில் நிகழ வேண்டும். சிறப்பாக இது மலட்டு நிலைமையைச் செப்பஞ் செய்வதற்கே அன்றி, மாதயிரிவை மாதந்தோறும் ஒழுங்காக நிகழ்த்துவதற்கு அல்ல.
5. கோட்டி சோன் பிறெட்னிசோன் அல்லது பிறெட்னி சொலோனை 5 - 10 மிகி. அளவில் நாள்தோறும் வழங்கிய பின்பு இரு பெண்களுக்கு மாதயிரிவு நிலை சீராகியதை எனக்கு நன்ரு கத் தெரியும். இவ்விரு வருக்கும் உடல் மயிர் வளர்த்தியுடன் அல்மாதயிரிவுயா காணப்பட்டது. பாலின வளர்த்தியிருந்தது. ஈனலுறுப்புக்களின் அமைப்பில் பிறழ்வு இல்லை. வயிற்றுத் திறத் தல் சோதனையில் பெற்ற சூலகத்துண்டங்கள் அதிரனல் அதி விளைசலேக் காட்டியது. இவர்களுக்குக் கோட்டிசோன் வழங்கப் மா தயிரிவு மீண்டும் தோன்றி இவர்கள் கருவுற்று,
 
 

அல்மாதயிரிவுயா 195
நேம மகப்பேறுகளும் இவர்களுக்கு நிகழும். இத்தீர்வில் அதி ரனல் காரோட்டுத் தொகுப்பில் நிகழும் பிறழ்வை இம்மருந்து சீராக்கும் எனக் கருதப்படுகின்றது. எனவே ஸ்ரெயின் இலெ வந்தால் ஒருங்கோட்டியிலும், பூப்புக்குப் பின் நிகழும் அதிரனல் காரோட்டு அதிவிளைசலுயாவுக்கும் இதனைப் பயன்படுத்தில்ை சில சமயங்களில் நிலைமை சீராக்கப்படும்.
6. பித்துயித்தறியையும் சூலகங்களையும் முன்னேய காலத்தில் (X) எக்சுக் கதிர் வீசலுக்கு உட்படுத்தினர். இதனுல் பல கெடு திகள் விளைந்தன. இது ஒர் விலக்கப்பட்ட முறையாகும்.
7. அறுவை வினை : அல் மாதயிரிவுயாவில் அ று  ைவ வினை தேவைப்படும் நிலைமைகள்.
1. ஸ்ரெயின் இலவெந்த ல் ஒருங்கோட்டியில் காணப்படும் அல்மா தயிரிவுய்ாவில் பொலிசிறைப்பைச் சூலகங்களுண்டு. சூல கங்களிலிருந்து ஒரு ஆப்புரு ப் பகுதியை வெட்டி எடுக்கவேண்டும். பலர் இவ்வறுவை வினையால் மீண்டும் நல் மாதயிரிவும், பின்னர் பிள்ளைப்பேறும் பெற்றிருக்கின்றனர். இது என் அனுபவமாகும். வேறு அறிஞர் இது நலனைத் தருவதில்லையென்பர். இந் நல்விளை வானது ஒரு நல்வாய்ப்பாகக் கிடைத்தது என்றும் இந்நல்விளைவு அறுவை வினையால் ஏற்படவில்லை என்றும் உளமாற்றநிலையினுல் நிகழ்கின்றது என்றும் கூறுவது முற்றிலும் உண்மையில்லையாகும்.
2. முதலாவதான அல் மாதயிரிவுயாவில் அல்லது சில ஆண்டு கள் நேம மாதயிரிவு நிகழ்ந்த பின்பு ஏற்படும் நிலைபேருண அல் மாதபிரிவுயாவிலும் சூலகப் பிறப்பிடர்கள் உண்டோவென அறிவ தற்கு வயிற்றுத் திறத்தல் செய்யவேண்டும். பலரில் அடையாள மாக வெண்கோட்டுச் சூலகங்கள் காணப்படும். இவை இயங்கு வதில்லை. பிந்தியவரில் மிகச் சிறிய சுருக்குண்ட சூலகத் திட்டுக்கள் காணப்படும். இவை சில ஆண்டுகள் செயற்பட்டு இருக்கலாம். தற்பொழுது சூல் புடைப்புக்கள் அற்றதும் வினைய மொழிந்த குல கங்களுமாகும். இதற்கு ஒரு தீர்வுமுறையும் வேண்டியதில்லை.
பல நிறமூர்த்தப் பிறழ்வு உள்ளவர்களில் காணப்படும் அல் மாதயிரிவுக்கும் முல்லேரியன் கான் தழைப்பு, கருப்பைத் தழைப்பு இல்லாதவர்களில் தோன்றும் அல் மாதயிரிவுக்குத் தீர்வே இல்லை. சவ்வுகளின் தடுப்பால் தோன்றும் அல்மாதயிரிவுக்குத் தீர்வே இல்லை. சவ்வுகளின் தடுப்பால் உண்டாகும் மறை அல் மாத யிரிவை அறுவை வினையால் மாற்றலாம்.

Page 109
96. இளம்பெண் நோயியல்
9. ஆண்மாற்றுச் சூலகக் கழலேயங்கள்: அறினுேபிளசுற்ருேமா தான் இதில் முக்கிய கழலையமாகும். வேறு ஆண் மாற்றுத் கழலே யங்களும் உள. இது பெண்மையை அடக்கி ஆணுக ஆண் மாற் றம் செய்யும். இவற்றில் அல்மாதயிரிவு தோன்றும்; யோனி கருப்பை முலைகள் அல்ல லுரட்டமுற்று நலியும். கிளேத் துரு பெருக் கும், உடலிலும் முகத்திலும் மயிர்கள் முளேக்கும். இக்கழலையங் களை உடைய பெண்களுக்கு முன்னர் , நேம மாதயிரிவுகள் நிகழ்ந்
திருக்கும். சிலர் பிள்ளைகளையும் பெற்றிருப்பர் .
இக்கழலையத்தை அகற்றின் மீண்டும் பெண்மையாக்கம் நிகழ்ந்து, மாதயிரிவும் ஒழுங்காகத் தோன்றும் ,
சொற்பவளவு மாதயிரிவு (குறைமாதயிரிவுயா)
இதில் குருதிவடிதல் மிகக் குறைந்த அளவில் காணப்படும், அல்லது குறுகிய காலத்துக்கு நிலைக்கும். ஆனல், இந்தக் குறை பாட்டை நோய் நிலைமையாலெனக் கூறுவது தவருகும். சிலரில் இந்நிலைமை நோய் நிலைமையினுல் அல்ல.
ஏதுக்கள் : குறை மாதயிரிவுயா சிலருக்கு ஒரு நேமப்பிறவி இடராகும். இது மாதவிடைவு வரை நிலைக்கும். சிலருக்கு மாத நிகழ்ச்சியாக சில காலத்துக்குக் கூடியளவு குருதியிரிவு நிகழ்ந்த பின்பு இது தோன்றும். சில ஒரைகளுக்கு நிலைக்கும் மாதயிரிவு உடையவருட் பலர் கருப்பமடைவர். இவர்களில் சூலக கருப்பை அகவணிச் சுழல் மாற்றங்கள் நேமமாயிருக்கும். கருப்பையக வணிக் கலனத் தொகுதியானது வழக்கத்துக்கு மாறு ன ஒழுங்கு அமைப்பை உடையதாலும், உணர்ச்சித்திறன் குறைவாய் இருப் பதாலும் இந்நிலைமையானது ஏற்படுகின்றதெனக் கூறுவர்.
கருப்பை கருப்பையக வணியின் வடிபரப்புக் குறைக்கப் படின் குருதிவடிதலும் குறையும். கருப்பைக் கழலையங்களை அகற்றும்போது கருப்பைக் குழியானது குறைவடைவதாலும் இது நிகழ்கின்றது.
3. ஓமோன் குறைபாடு : முற்ரு:ன அல் மாதயிரிவு யா தோன்ற முன்பு ஒமோன் குறைபாட்டாலும் குறை மாதயிரிவு யாவானது நிகழக்கூடும்.
4. உள ஆதிக்கங்கள் : குலக, கருப்பைச் சுழல் மாற்றங்களே மன ஆதிக்கங்கள் முற்முக நிறுத்தாத நிலைமைகளிலும் குறை மாத பிரிவுயா தோன்றக்கூடும். போலிக் கருப்பைநிலையிலும் இவ் வகையான அற்ப மாதயிரிவு நிகழக்கூடும் ,
 
 
 

அல்மாதவுயிரியா 197
தீர்வு : ஏதுக்களிருப்பின் அவற்றிற்குரிய தீர்வை வழங்கவும் பெண்ணுக்கு உடல்நலமும், பிள்ளை வளமும் இருப்பின் இவ்வகை யான அற்பமாதயிரிவானது 4 ல் ஒரைக்கு இருந்தாலும் அரை நாளுக்கு அல்லது ஒரிரு நாட்களுக்கிருந்தாலும் இதனைப் பற்றிப் பொருட்படுத்த வேண்டியதில்லையாகும்.
இருந்திட்டொருக்கால் நிகழ் மாதயிரிவு
இதில் மாதயிரிவுச் சுழலானது 35 நாட்களுக்குக் கூடுதலாக நீடிக்கும். மாதயிரிவு இருந்திட்டொருக்கால் ஒழுங்கற்றமுறை யில் நிகழும் அல்லது ஒழுங்கு முறையில் இருந்திட்டொருக்கால் நிகழும். இந்தப் பிழை பாடு சூலகத்திலும், இதனை ஆட்சிசெய் யும் காரணிகளிலும் தங்கியிருக்கின்றது. கருப்பையில் பிழை பாடில்லே யாகும். அல் மாதயிரிவு யாவுக்குரிய காரணங்களே இதற் கும் உரிய காரணங்களாகும்.
ஏதுக்கள் : மிகுதியானுேரில் இவ்வகையான குறை மாதயிரிவு யா விற்குரிய காரணம் அவர்களிள் விசித்திர மனப்போக்கே யாகும். இது இவர்களின் தனிப்பட்ட உடல் அமைப்பாலும் செய்யும் தொழிலாலும் ஏற்படுகின்றது. இது இவர்களில் காணப்படும் பரம்பரைக் கொடியின் இயல்பாகும் பலர் உடல் நலனுடனும், பிள்ளைப் பெறும் வளத்துடனும் நன்நிலையில் இருப்பர். குருதி வடி தல் சூலகச் சுழல் மாற்றத்தாலாகும். சில அவத்தை நிலைகளை எய்தியபின்பு, மேலும் தழைப்பு உண்டாவதில்லை. பெரும்பாலும் சூலக புடைப்பு அவத்தையானது நீடிக்கும் அல்லது தொடங்க மிகச் சுணங்கும். ஆனுல் மாதயிரிவுக்கு 14 நாட்களுக்கு முன்பு இலூற்றியவத்தையைத் தொடங்கும்.
இது, பெரும்பாலும் தலைப்பூப்பு இரிவைத் தொடரும் அல் லது மாதவிடைவுக்கு முன்னம் சில காலத்துக்குக் காணப்படும். அகச்சுரப்பிச் சுழலின் வற்றுப்பெருக்கு மாற்றங்களால் இந்நிலைமை ஏற்படுகின்றது.
கட்டிளம் மங்கையரில் இவ்வகையான மாதயிரிவு இரண்டொரு ஆண்டுகளில் நேமமாகும். ஆனல், சிலரில் முதலாம் கருப்பம் உறும் வரைக்கும் நிலைக்கும். பேற்றுக்குப் பின்பு நேம மாதயிரி வுச் சுழல்கள் நிகழும்.
ஓமோன் காரணங்கள்: சூலக வினையம் குறைவடையின் இவ்
வகையான மாதயிரிவு நிகழும். துணைப் பாலின உறுப்புக்கள் குறை வளர்த்தி அடையும். பூப்புக் காலத் தலைமாதயிரிவு மிகச்

Page 110
98 இளம்பெண் நோயியல்
சுணங்கி நிகழும் கருப்பையும் யோனியும் குறைதழைப்புறும் , இந்தச் சூலகக் குழப்பமானது பெரும்பாலும் பரியக பித்துயித் தறி, கேடயச் சுரப்பி, அதிரனல் சுரப்பிகளின் வினைய இடர்க ளாலேயே ஏற்படுகின்றது. ஆகவே இச் சுரப்பிகளின் வினைய இடர் களால் கொழுமை, அதிமயிரியம், குறைவான பிள்ளை வளம் ஆகி யன தோன்றும். கொழுமையும் ஒல்கு மாதபிரிவுயாவும் அணைந்து காணப்படும், அல்லது ஒல் குமா தயிரிவுயா வும் அதிமயிரியமும் சேர்ந்து காணப்படும்.
இவையெல்லாம் பரம்பரைக் கொடியின் இயல்பாகும். அல் லது ஜீன் (ஈன்) பிறழ்வுகளாலும் நிகழக்கூடும். ஸ்ரெயின் இலெ வந்தல் ஒரு ங்கோட்டியிலும் இவ்வகை மாதயிரிவு தோன்றும்.
நிறமூர்த்த ஒழுங்கின் பிறழ்வு அமைப்பாலும் இது நிகழக் கூடும். (XXX ) இந்நிறமூர்த்த ஒழுங்கமைவு இருந்திட்டொருக் கால் காணப்படும் .
தீர்வு : குறை மாதபிரிவு யாவுக்கு ஆய்வுகளும் தீர்வுகளும் தேவைப்படும். இதில் சூலகத்தினதும் , கருப்பையினதும் பிறழ் வமைப்புக்கள் குறைவாகக் காணப்படுவதால் தீர்வு சிலசமயங் களில் பலனைத் தரும். இதில் உடல் அமைப்பு நேமமற்று தனி யியல் புத் தோற்றமாய் இருப்பினும், பிள்ளை தரிக்கும் வளம் குறைந்து இருப்பினும் தீர்வு தேவையில்லை. இவர்களுக்கு நிலை மையை விளக்கி மனத்தென் பை அளிக்கவும்.
இளம் மங்கையருக்குத் தேவையற்ற விஞ்சிய தீர்வு தேவை யில்லை. பலரில் தன்னியல் பில் நிலைமை சீராகும் என்று பேரா சிரியர் யெவ்கோற்று கூறுவர். இதை மனதில் நிறுத்தி வைத் திருப்பின் நன்று.
 
 

யோனி இவற்றில் நிகழும் பிறழ்வுக் குருதி வாரிகள்
மிதவிஞ்சிய கருப்பைக் குருதி வாரி ( மாதஇறைப்பு ) நோய்
நிலைமைகளுக்கு ஒர் அறிகுறியாகும். உண்மையில் இது ஒர் நோயல்ல, ஆனுல் பல்வகைக் காரணங்களால் உண்டாகும்,
கருப்பை,
சாரக வகைகள்
1. அதி மாதயிரிவு யா (மாதக்குருதிவாரி - இறைப்புயா)
இது நேம இடைக் காலங்களுக்கு ஒரு முறை நிகழும் சுழற் சிக் குருதி வடிதலாகும். இவ்வடிதல் தொகையளவில் கூடியிருக் கும் அல்லது நீண்ட நாட்களுக்கு நிலைக்கும். இது பெரும்பா லும் கருப்பையும் அதன் கலனத் தொகுதியும் பாதிக்கப்படுவ தால் உண்டாகின்றது. இதில் சூலகப் பிறழ்வுகள் இதனுடன் இணைந்து இல்லையாகும். ஏதுக்கள் கருப்பைக் கழலையங்கள் நாரோ மாக்களும், கருப்பையகவணியோமாக்களும் கருப்பையின் குருதிவடியும் அகவணிப் பரப்பை அக லிப்பதால் இது நிகழ் கின்றது.
கருப்பையானது கூர்ப்பு முறையில் அல்லது அமர்முறையில் குருதி நெருக்கம் உறுவதாலும் இது உண்டாகும். கொணக்கொக் கசு அகவணியழற்சி, கூபக அழற்சி, வேறு தொற்றுக்களாலுண் டாகும் அகவணியழற்சி ஆகியனவும் இம்மாத இறைப்பை உண் டாக்கும். இதய வழுவல் நோயாளரிலும் இது நிகழக்கூடும். இது தூபக்கிள் கருப்பையக வணி அழற்சியிலும் கருப்பை பிற் பக்கம் திருப்பமுறினும் உண்டாகும்.
பிழைபடு கட்டியாதலே உறைதல் ) உண்டாக்கும் குருதி நோய்களில் குருதிவாரி உண்டாகும். இந்நோய்கள் பொதுவாக அருமையாகும். திரைப்புக் குழியக்குறை ஊதாப்பு யா, குருதி நாட்ட உயா, கூர்ப்பு வெண்குழியக் குருதியுயாபோன்ற நோய் கள் இவ் வகுப்புள் அடங்கும்.
2. பொலிமா தயிரிவுயா (மீமாதயிரிவுயா) இதனில் சுழற்சி முறையில் நேம வளவில் குருதி வடிதல் நிகழும் ஆணுல் இது குறுகிய இடைக்காலக் கூறுகளுக்கு ஒரு தடவை நிகழும். பொது

Page 111
இளம்பெண் நோயியல்
வாக இது நாலு நாட்களுக்கு நிலைத்து 21 நாட்களுக்கு ஒரு முறை நிகழும். சூலகமானது இதில் நோய்ப்பட்டிருக்கும் அல் லது வினையப் பிறழ்வுற்றிருக்கும். பெரும்பாலும் இவ்வகை இரிவு பித்துயித்தறி சூலக இடைத்தொடர்புகள் பிழைபடுவ தால் ஏற்படுகின்றது. வேறு காரணங்களாவன.
(அ) கூர்ப்பு அல்லது அமர் சூலக நெருக்கும். இது கலன இயக்கப் பிழைபாடுகளுடன் அனேந்திருக்கும். சூலகம் பொலி சிறைப்பை நிலைமையை அடையக் கூடும்.
(ஆ) கூபகத் தொற்றுக்கள் இவை சூலகங்களேயும் கரு ப்
பையையும் பாதிக்கும் .
(இ) சூலக கருப்பையக வணிவாதையும் இதனை உண்டாக்
கும்.
3. பொலி மாதக் குருதிவாரியுயா ( மீமாதக் குருதி வாரியுயா) இதுவும் ஒரு சுழற்சிக் குருதி வடிதலாகும். இது அடிக்கடி நிக ழும் (821) குருதியும் விதவிஞ்சிய அளவில் வடியும். சூலகமும் கருப்பையும் பிழைபட இயங்கும். சிறப்பாக இது கூபக பரவல் அழற்சியிற் காணப்படும். எல்லாக் கடக உறுப்புக்களும் குருதி நெருக்கமுறும்-உடலினதும், உளத்தினறும் நோய் நிலைமை களாலும் இது நிகழும். இந்நிலைமை திருந்தவும் மாத இரிவும் நேமமாகும். பெரும்பாலும் இது கல்யாணமாகின மங்கையரில் தொடக்க மணவாழ்வுக் காலத்தில் உண்டாகின்றது. இக்காலக் கூறில் நிகழும் ஏக்கங்களும், எதிர்பார்த்த பாலின கலவி வாழ்வி ஞல் ஏற்பட்ட தோல்வியும் பொலிமாதபிரியுயாவை அல்லது பொலிமாத வாரியை உண்டாக்கும். மணவாழ்வு நேமமாக இக் குழப்பங்களும் திருந்தும் உறவினரின் நோய் நிலைமைகள் சா நிகழ்ச்சிகள், தற்காலத் தொழில் வில்லங்கங்கள், வசிக்க குடி மனதேடும் வில்லங்கங்கள், சோதனை வில்லங்கங்களும், கணவ னின் வில்லங்கங்களும் மேலே கூறப்பட்ட மாதயிரிவு யாக்களே உண்டாக்கும். இவ்வகை ஏக்கநிலைமை பரியகத்தைப் பாதிக்கின் றது. இப்பாதிப்புப் பித்துயித்தறியைக் கதிப்படுத்தி மாதயிரி வுயாவை உண்டாக்கும். இது ஒரு குறுகியகாலப் பரியக பித் துயித்தறிச் சூலகவினைய இடரால் உண்டாகின்றது. . ܬܐ
கருப்பைக் குருதிவாரியுயா ( இறைப்பு) இது நேமச் சுழற்சிமுறையி லிருந்து விலகிய ( அல்சுழற்சி ) கருப்பைக் குருதிவாரியாகும். இது ஒழுங்கற்ற முறையில் அல்லது இடைபருதும் நிகழும் ஏதுக்க (F{Töll (jöf .
 

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 201
1. சூலக ஒத்திசைப்பு முறையில் உள்ள படிநிலைகளில் ஏற் படும் கடும் மாற்றங்களை உண்டாக்கும் சுருேடரின் நோய் : பொலி குழிய சூலகங்கள்.
2. ஈனற்சுவட்டில் காணப்படும் மேற்பரப்பு நைவுகள்.
அ. எளிய அல்லது தீங்குவிளை வளர்த்திகள் புண்ணுகிக் குருதி வடிதல். இதனுள் எளிய சுரப்பி ஒமாக்களும், தீங்கு விளைகாசினுேமாக்களும் அடங்கும்.
ஆ. கருச்சிதைவு அல்லது புறத் திடக் கருப்பநிலையும் இவ் வகைக் குருதிச் சொரிதலை யுண்டாக்கும். கருப்பைக் குழாய் , யோனி ஆகிய பகுதிகளிலிருந்து யோனி வழி யாக வெளியேறும் குருதிவடிதல்களும் இதனுளடங்கும்.
பிறழ்வான குருதிவாரியை உண்டாக்கும் ஏதுக்கள் : இவற்றைப் பொதுக்காரணிகள் என்றும் இடத்துக் காரணிகளென்றும் இரு வகைப்படுத்தலாம்.
உளவியற் பிறழ்வுகள் : மனநெகிழ்வுப் பிறழ்வுகளும், நரம் பியற் பிறழ்வுகளும் மிதவிஞ்சிய குருதிவடிதலை உண்டாக்கும். இவை அல்மாதயிரிவுயாவை உண்டாக்கக்கூடும். மேற்கூறிய பிறழ்வுகளில், மனவுலைச்சல், எல்லாவகைக் காரணங்களாலாகிய ஏக்கநிலைகள், மிதவிஞ்சிய வேலைப்பாடு, நிறைவுபெருப் பாலின உந்தல், கல்யாணக் குழப்பங்கள் ஆகியன எல்லாம் அடங்கும். இவ்வுளவியற் புயல்கள் அடங்கிய சிறிது காலத்திற்குப் பின்னர் இம்மாத இறைப்புத் தோன்றக்கூடும், இவை அகச்சுரப்பிக் காரணங்களாலும், தன்னியக்க நரம்புத் தொகுதியின் பிறழ்வு நிலைமைகளாலும் உண்டாகக் கூடும். முந்தியது பரியகத்தால் ஆதிக் கம் செய்யப்படுவது. பிந்தியன கூபக உறுப்புக்களின் குருதி வழங்கலுக்கு ஆட்சியானது மாற்றங்களைச் செய்வதாலாகும். உயிர்ப்புமுறை அல்லது அமர்முறைக் கருப்பைக் குரு தி நெரு க் கம் கருப்பையின் தசைக்கும் அகவணிக்கும் அதியூட்டம் நிகழ்த்தி கருப்பையைப் பருமனில் பெரிதாக்கக்கூடும். ( இது 2-6 மடங்கு பெருப்பமடையக்கூடும் ). இதேபோன்ற குருதிக்கலனப் பிறழ்வு ஆனது சூலகங்களையும் பொலிசிறைப்பை நிலைமை அடையச் செய்து பொலிமா தயிரிவு யாவை உண்டாக்கும்.
Աւնւյն பருவகாலக் குருதிவடிதலும், மாதவிடைவுக்காலக் குருதி இறைப்பும் உளவியல் மாற்றங்களால் நிகழக்கூடும்

Page 112
20ኃ இளம்பெண் நோயியல்
2 அகச்சுரப்பிப் பிறழ்வுகள் : பரிய கநோய்களும் பித்துயித்தறி நோய்களும் கொனட்டுத்துரோபின்களை மிதவிஞ்சிய அளவில் சுரந்து சூலகங்களைத் தூண்டும். இவை மிதவிஞ்சிய கருப்பைக் குருதி வடிதலேயும் உண்டாக்கக்கூடும். ( அந்தப் பாரிப்பு தொடக்க நிலைமையில் தோன்றும் ). குறை தைரோடியம் பெரும் பாலும் மாதவாரி உயாவையும் மீ ( பொலி ) மாதயிரிவுயாவை யும் 30 - 40 வீத நோயாளரில் உண்டாக்கும்.
ஈத்திரசன்களின் அனுசேபமும், செயலொழிப்பும் பிழைபடின் மாத வாரியுயா அல்லது கருப்பைக் குருதி வடிதலுண்டா கும். அனுசேபப் பிறழ்வுகள் ஈரலால் ஆற்றப்படும். இச்செயலாற் றலைப் பிறழ்வு செய்யும் எந்தநோயும், ஈரலைப் பாதித்து கரனே வாதையையும் பிறழ்வுக் குருதி வாரிகளையும் உண்டாக்கும்.
பெரும்பாலும் வல்வத்தின் அரிப்பு, மாதவிடைவுக் குழப்பங் கள், கருப்பைக் குருதி வடிதல் ஆகியவற்றிற்காக செயற்கை ஈத் திரசன்களை வழங்குவர். இவை குருதிவடி தலையும் மாதக்குருதி வாரியுயாவையும் பொதுவாக உண்டாக்கும். கூர்ப்பு நோய்கள், அறுவை வினைகள், பெரும்பாலும் பருவகாலத்துக்கு முன் மாத யிரிவை உண்டாக்கும். நாட்பட்ட நோய்கள் பெரும்பாலும் மாதயிரிவை அடக்கும்.
இடத்துக் காரணிகள்
1, கருப்பை நிலையில் : இளம் படு கருப்பத்தில் மூலவுயிர்க்கரு, கருப்பையக வணியில் உட்பதித்தலுறும் வேளையிலும், கருச் சிதைவு, அயிடரிட்டுரு ஊனை, புறவிடக் கருப்பம் ஆகிய நிலைமை களிலும் பிறழ்வுக் குருதிவடிதலுண்டாகும் . இதனை உரிய இயல் களில் படிக்கவும்.
2. கருப்பைப் பிறழ்வுத் தழைப்பினுல் ஏற்படும் பிழைபாடு கள் : பொதுவாக இது இரு அறைக் கருப்பையில் அல்லது இரு கொம்பர்க் கருப்பையில் சேர்ந்து தோன்றும். குருதி வடிவதற் குக் கூடிய கருப்பையக வணிப் பரப்பு இருப்பதால் இந்நிலைமை உண்டாகின்றது எனக் கருதப்படுகின்றது.
3. கருப்ப நிலைமைகளில் : இளம்படு கருப்பநிலையில் குருதிவாரி கள் நிகழக்கூடும். குருதிவாரியானது கருக்கட்டலுற்ற சூல், கருப் பையக வணிக்குள் புகுந்து பதிதல் உறும் வேளையில், கோறியன் ஊட்டவரும்பர்கள் தாயின் குருதிநாடிகளைப் பொள்ளல் செய் வதினுலும் உண்டாகின்றது. முற்றிய இளம் படு நிலைமைகளில்

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 203
செவ்வன் சூல்வித்தகம் சிறிதளவு பிரிதலுறுவதால் (கருச்சிதைவு) குருதிவாரி நிகழும். பிறழ்வு மாற்றங்கள் அடைந்த கோறியன் விரலிகள் தாயின் கருப்பை நாடிகளை அரிப்பதால் கடும் குருதி வாரிகள் நிகழக்கூடும். (ஐடற்றிட்டுரு ஊன) புறத்திடக்கருப்பம் கருச்சிதைவு ஆகிய நிலைமைகளில் கருப்பையக வணியிலிருந்து குருதிவடிதல் நிகழக் கூடும். கருப்ப நிலைமைகளில் கடும்மு யக்கம் செய்வதால் கருப்பைக் கழுத்து உராஞ்சப்பட்டுக் குருதி வடிதல் நிகழக்கூடும்.
4. சேதங்கள் : முயக்கவேளையில் யோனிமென்றிரை, யோனிக் சுவர்கள் , பிரிசுவர்கள் கிழிபட்டு மிகப் பயங்கரக் குரு திவாரிகள் உண்டாகும். பெரும்பாலும் புதிதாகக் கல்யாணமாகிய மங்கை யர்களுக்குத் தேன் நிலா முயக்கங்களுக்குப்பின் இவ்வகையாக நிகழும். ஒர் ஆண்டில் 5-6 பெண்களுக்கு இவ்வகையான சேதங் களுக்குத் தீர்வு செய்திருக்கின்றேன். வேறுசிலர் வலுவில் கருச் சிதைவைச் செய்விப்பர். இவ்வேளைகளில் யோனிச் சுவர், கருப்பை ஆகியன சேதமுற்று குரு திவாரி நிகழக்கூடும். புற பொருட்களை யோனியுட் புகுத் தி யோனிச்சுவரைச் சேதம் செய்யின் குருதி வாரியை உண்டாக்கும். ஒரு மங்கையானவள் கண்ணுடி ஆய்வு குழாயைப் புகுத்தும்பொழுது அது உடைந்து யோனிச்சுவரைக் காயப்படுத்தியதை நான் கண்டுள்ளேன். யோனிச்சுவர் இறக் கத்தைத் தாங்குவதற்காக இடும் வளையங்கள், யோனிச்சுவரைச் சேதம் செய்து குருதி வடிதலை உண்டாக்கும்.
கருப்பையகத்துள் புகுத்தும் கருத்தடை இடுகைப் பொருட் கள் அடிக்கடி குருதி வடிதலை உண்டாக்கும்.
யோனியறுவை வினைக்குப் பின்பு வெட்டுக்காயங்களுக்கு மேலா கத் தோன்றும் குறும ணியாக்க வளர்த்திகள் குரு திவாரியை அடிக் கடி உண்டாக்கும்.
தொற்றுக்கள் : எல்லாவகைக் கூபகவுறுப்புத் தொற்றுக்க ளும் பிறழ்வான கருப்பைக் குரு திவாரிகளை உண்டாக்கும். இவற் றுள் கூபக பரிவிரிய அழற்சி, கூபகக் கலவ அழற்சி, கருப்பைக் குழாய் சூலக அழற்சி ஆகியனவடங்கும். இவை சூலகங்களைப் பாதிக்கும் அல்லது குருதிக்கலன நெருக்கம் செய்து அவற்றின் வினையத்தைப் பிறழ்வு செய்து குருதிவாரியை உண்டாக்கும். அழற்சியின் தொடக்கநிலையில் இப்பிறழ்வு திடீரென நிகழ்ந்து, குறுகிய காலத்திற்கு நிலைக்கும். தொற்று நாட்பட்டு நிலைக்கும் பொழுது கடும் குருதிவாரிகள் நிகழ்ந்து, அதன் கால அளவும் நீடிக்கும். இளம் பெண்களில் தூபக்கிள் அகவணியழற்சி குருதி

Page 113
204 இளம்பெண் நோயியல்
வாரிகளை உண்டாக்கும். மூப்புக்கால கருப்பையக வணி அழற்சி யும், யோனியழற்சியும் குருதி வடித லே உண்டாக்கும். கருப்பைக் கழுத்தழற்சியில் குருதி வடிதல் நிகழ்வதில்லை. ஆனுல் இவை கூபகக் கலவ அழற்சியை உண்டாக்கின் கருப்பைக் குருதிவாரி கள் நிகழக்கூடும். கூர்ப்பு திறைக் கோமனசு யோனியழற்சியில் சாதாரண சோதனைக்குப் பின்பும் குருதிவடிதல் நிகழக்கூடும்.
6. கருப்பை இடம் பெயர்தல் : கருப்பைப் பின் நோக்கிய திரு ப் பம் பொதுவாகக் குருதி வாரிகளை உண்டாக்குவதில்லை. சிலரில் இத்திருப்பம் நாளங்களின் குருதிப் பாய்வைத் தடைசெய்வதிளுல் சூலகமும் கருப்பையும் நெருக்கமுற்று குருதி வாரி உண்டாகும். சில சமயங்களில் கருப்பைப் பின்திருப்பமானது அழற்சியினுல் சவ்வுக்கட்டல்களைத் தோற்றுவிக்கும். கூபகப் பரிவிரிய அழற்சி, சூலக அழற்சி ஆகியவை குருதிவாரிக்கு முக்கிய காரணிகளாகும். பேற்றுக்குப்பின் நிகழும் கருப்பைப் பின்நோக்கிய திருப்பம் மேற் கூறப்பட்ட குரு திவாரிகளை உண்டாக்கும்.
கருப்பையிறங்கல், சூலகங்களின் இறக்கம் ஆகியன குருதி நாளப் பாய்ச்சலைத் தடைசெய்து நெருக்கங்களையுண்டாக்கிக் குருதி வாரிகளைத் தோற்றுவிக்கும்.
7. கருப்பையக வணியோமா . சூலகக் கருப்பையக வணி வாதையில் பொலிமா தயிரிவுயா அல்லது பொலிமாதக் குருதி வாரி நிகழக்கூடும். கருப்பையக வணியோமா நேமமாகத் தவ ருது மாதக் குருதிவாரியை உண்டாக்கும்.
கழலையங்கள் : சிறைப்பைகள், மேற்பரப்பு வளர்த்திகள், புது விளைசல்கள் ஆகியன குருதி வாரியை உண்டாக்கும்.
சூலக சிறைப்பைகள் : இவை குருதி வாரிக் சுருப்பையுயாவிலும், சுருேடரின் நோயிலும் இஸ்ரேயின் இல வென்தால் ஒருங்கோட்டி யிலும், தோற்குலகங்களிலும் காணப்படுய்.
இவை புடைப்புச் சிறைப்பை வகையை அல்லது தீக்காஇ லூற் றின் வகையைச் சேர்ந்தவை. இச்சிறைப்பைகள் கிராவியன் புடைப்புக்கள் உடையாத காரணத்தினுல் உண்டாகும். இவை எண்ணிக்கையில் தனி ஒன்முக அல்லது பலவாக இருக்கும். இவை மிகச் சிறியவை. இப்புடைப்புக்களை குறுமணிக்கலம் அல் லது தீக்காக்கலம், இலூறிறியக்கலம் ஆகியன நுதிக்கும். இவற் றின் கலங்களின் வகையைப் பொறுத்து இவை ஈத்திரசனை அல்" லது அந்திரசனை அல்லது புருே செசுற்முேனைச் சுரக்கும். சுருே

கருப்பை ய்ோனி இவற்றில் நிகழும். . . 205
டரின் நோயில் ஈத்திரசனைச் சுரக்கும் குறுமணிக் கலங்களும், இஸ்ரேயின்இல வெந்தால் ஒருங்கோட்டியில் அ ந் திர ச னை யு ம் இலுாற்றினையும் சுரக்கும் கலங்களும் உண்டு.
11. புது விளைசல்கள்: ஈத்திரசன் ஆக்கம் செய்யும் புது விளைசல்கள் சூல் இல்லாத சுழற்சிக் குருதி வாரியை உண்டாக்கும்.
பெரும் சூலகக் கழலேயம் சுழன்று முறுக்குண்டு தன்னுடைய குருதி வழங்கல் நாடியின் குருதிஓட்டத்தையும் தடைசெய்து, கருப்பையின் குருதி வழங்கலேயும் தடைசெய்கின்றது. இதனுலும் குருதி வாரி நிலைமைகள் உண்டாகக் கூடும்.
செயலற்ற் சூலகக் கழலேயங்கள்: இவை பிறெனர் கழலேயங்கள், சிறைப்பைச் சுரப்பியோமாக்கள், நாரோமோக்கள், சூலகங்களி னுள் பொதியும் காசினுேமா எறிகைகள் ஆகியனவாகும். இவை, இவற்றிற்கு அடுத் தாற்போலிருக்கும் சூலகப் பஞ்சணையத்தைத் தூண்டி ஈத்திரசன்களை அல்லது அந்திரசன்களைச் சுரக்கச் செய்யும். ஈத்திரசன் சுரக்கப்படின், சிறப்பாக மாதவிடைவுக்குப் பின்பு குருதி வாரிகள் உண்டாகக் கூடும் .
கருப்பைக் கழலேயங்கள்: இவை வரவரப் பெரிதாகி மாதவாரியை உண்டாக்கும். பெரும்பாலும் 2ஆம் 3ஆம் நாளில் குருதி இறைக் கும். கருப்பையக வணிக்குக் கீழான நாரோமாக்கள் வயிற்றுள் தள்ளப்பட்டு போலிக்கால் நாரோ மாக்களாக மாறும். இவையும் குருதி இறைப்பை உண்டாக்கும் .
மேற்பரப்பு விளைசல்கள்: இவையும் குருதி வாரியை உண்டாக் கும். இவற்றுள் சுரப்பியோமாக்களும், காசினுேமாக்களும் அடங் கும். இவற்றுட் சில போலிக்கால் விளைசல்களாக மாறும். பெரும் பாலும் இவை சீரற்ற குருதி வடிதலை அல்லது இடையருக் குருதி வடிதலே உண்டாக்கும். ஏனைய கருப்பைக் கழலேயங்களும் இவ் வகையைச் சேர்ந்தவை. இக் கழலையங்கள் பெரும்பாலும் கருப்பை யினது கழுத்தையும், குழியையும் பாதிக்கும். காசினுேமாக்கள், வல்வம், யோனிக்கழுத்து, கருப்பையுடலம், கருப்பைக் குழாய், ஆகியனவற்றைப் பாதிக்கும்.
கருப்பையின் நாட்பட்ட சமஅளவுப் பெருப்பம்: சில வேளைகளில் சீரான கருப்பைப் பெருப்பத்துடன் (இதில் அதன் தசையும் அகவணியும் தடித்துப் பெருத்திருக்கும்) கடும் கருப்பைக் குருதி வடிதல் எந்த வயதிலும் தோன்றும் . இது எத்தனை பிள்ளைப்பேறு கள் நிகழ்ந்தனவென்பதில் தங்கியிருப்பதில்லை. பெரும்பாலும்

Page 114
206 இளம்பெண் நோயியல்
30 - 35 வயதுக்சிடையில் தோன்றும். எல்லாவகையிலும் இதனை நோக்கும்பொழுது கருப்பையானது ஒரு பெரிய பருமனடைந்த கருப்பைபோல் தோற்றும். இவ்விதமாகத் தோற்றுவதற்குரிய காரணம் ஒரு மறை பொருளாகும்.
பழைய கருதுகோள்கள்: சில அறிஞர் இந்நிலைமையானது நாட் பட்ட கருப்பைத் தசையழற்சியால் என்றும், வேறு சிலர் கருப்பை நார் வாதையால் என்றும், இன்னும் சிலர் கருப்பநிலைக்குப் பின்பு ஏற்படும் நாட்பட்ட குறைபடு கருப்பையுட் சுருங்கலால் என் றும் கருதுவர். தற்காலத்தில் இப் பழைய கருதுகோள்கள் ஏற்ற சான்றுகளில்லாத காரணங்களினுல் ஏற்றுக்கொள்ளப்படா.
தற்காலக் கருத்தின்படி, கீழே தரப்படும் நிலைமைகளினுலென
எண்ணப்படும்.
1. தற்பரிவுத் தழைக்கை அதியூட்டம். இதன் காரணம் அறியப்படவில்லை. இவ்வகையான நிலைமை முலைகளிலும் தோன் றுவதை நாம் அறிவோம். இந்நிலைமை சூலக மாத வாரியை உண்டாக்கும் .
2. பரவலான கருப்பைத் தசை அதிவிளைசல் - இது மித விஞ்சிய அல்லது நீடிய கால ஈத்திரசன் ஆதிக்கத்தால் உண்டா கும். இது ஒரு நோயியல் கருப்பைக் குரு திவாரிநிலை யாகும். ( சுருேடரின் நோய் ). இதில் குலிடல் நிகழாதபடியால் ஈத்திர சன் நீடிய காலத்துக்குச் சுரக்கப்படும். இது மட்டாக அல்லது உயர்வாக அல்லது குறைவாகச் சுரக்கப்படும். கருப்பையும் கரு ப் பையக வணியும் அதியூட்ட நிலைமையை அடையும். பின்னர் இது விபரிக்கப்படும் . -
3. பரவல் அதியூட்ட்ம் : இது நாட்பட்ட உயிர்ப்பு முறை யால் அல்லது அமர்முறைக் குருதிக்கலன நெருக்கத் தாலாகும். இதைத் தோற்றும் காரணங்கள் : கூபக நோய்நிலைமைகள், வேறு பல பொதுக்காரணிகள், கல்யாண வாழ்விடர்கள், பாலின உந்தல்கள் தீர்க்கப்படாத நிலைமைகள், ஏக்க நிலைமைகள், உள வியற் குழப்பங்கள் ஆகியன இதனைத் தோற்றும், கருப்பையக இணைய நாளப் பின்னல்களின் விரிபருக்கம் இதனை உண்டாக்கு மெனக் கருதுவர். இந்நோய் நிலைமையில் சூலகங்கள் கலன நெருக்கமடையின் மாத வாரிஉயா அல்லது பொலிமாத வாரி உயா தோன்றக்கூடும். பெரும்பாலும் இதனை பரவல் அதியூட்டம், சுரப்பித் தசையோமா அல்லது நார்த்தசையோ மாவென ஊடறிவர்.

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 207
இடர் கருப்பை வினையக் குருதிவாரி: இதற்கு ஒரு நோய் நிலைமை யானது காரணமாக இருப்பதைக் காண்பது அரிதாகும். பெரும் பாலும் சூலகங்களிலோ அல்லது கருப்பையக வணியிலோ யாதா யினும் குறிப்பிடத்தக்க பிறழ்வுநிலைமை காணப்படுவதில்லை. சூல கங்கள் ஒர் ஒத்திசைவு முறையில் ஒமோன்களை ஆக்குவதில்லை. இது பல மனநெகிழ்வு நிலைகளைப் பொறுத்துச் செயற்படும். மற்றைய குருதிவாரியேதுக்களை விலக்கினுற்ருன் இந்நோயினை ஊடறிய முடியும். பெரும்பாலும் இது பூப்புப் பருவத்திலும் மாத விடைவுக் காலத்திலும், பேற்றுக்குப் பின்னரும் காணப்படும்.
இக் நிலைமையானது சூலிடற் காரணங்களால் அல்லது அல்குலி டற் காரணங்களாலும் நிகழ்கின்றது,
4. சூலிடற் காரணங்கள் : கருப்பைக் குரு திவாரியானது சூல கத்தின் நேமச் சுழல் நிகழ்ச்சிகள் விரைவில் நிகழ்வதால் ஏற்படு கின்றது. சூலிடலின் புடைப்பு அவத்தை விரைவில் நிகழும். இலூற்றிய அவத்தை கதிப்படுத்தப்படுவதில்லை. இதனுல் பல புடைப்புகள் ஒரே வேளையிற் கனியும் . எனவே பல புடைப்புச் சிறைப்பைகள் சூலகத்திற் சேர்ந்து காணப்படும். கருப்பையக வணியின் தழைப்பும் கதிப்படுத்தப்படும். மாதயிரிவும் 2-கிழமை களுக்கொருக்கால் நிகழும்.
பூப்புப் பருவத்தில் நிகழ் பொலிமா தயிரிவு சில மாதங்களுள் அல்லது 1 - 2 ஆண்டுகளுள் சீர்நிலை அடையும். இது பித்துயித் தறியினதும், சூலகங்களினதும் தழைப்புக் குறைவாலாகும். பேற் றுக்குப்பின் நிகழும் பொலிமா தயிரிவும் , பித்துயித்தறியானது தன் முன்னிலைமையை அடையச் சிறிதுகாலம் செல்வதாலேயே தோன்றுகின்றது என எண்ணப்படும்.
சூலகங்கள் கலனநெருக்கமுறின் மேற்கூறப்பட்ட நிலைமையை எய்தக்கூடும். மனநெகிழ்வு நிலைமைகள் கூபகவுறுப்புத் தொற் றுக்கள் சூலகங்களில் நெருக்கத்தை யுண் டாக்கி நோய்நிலைமை யைத் தோற்றும். எனவே பேற்றுக்குப் பின் நிலைக்கும் நோய் நிலைமைக்கு, நாட்பட்ட கருப்பைக் குழாய் சூலக அழற்சி கார மாக இருக்கக்கூடும். -
சாரகக் குறிப்புக்கள் : பெரும்பாலும் 30 - 35 வயதுக்குட்பட்ட வர்கள் இந்நோய் வாய்ப்படுவர். பேற்றுடன் உண்டாகிய தொற் றெனவும் முறையிடுவர். பலர் குழந்தைகளை வளர்ப்பதிலும் சீரில்லா வீட்டுநிலைமையாலும் மனத்தொந்தரவை அடைவர். ஒய்வோ மன அமைதியோ இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

Page 115
208 இளம்பெண் நோயியல்
இலங்கை மக்களைப் பொறுத்த மட்டில் பெண்ணுக்குப் பிறந்த வீட்டினரும் புகுந்த வீட்டினரும் அமைதியைக் கொடுப்பதில்லை. இவ்வகையான மன இடர் நிலைமைகளால் மாதயிரிவு காலத்துக்கு முன் தலைவலி, மனவ மிழ்வு, அல்துயில், மனக்கொதிப்பு, எரிச் சல், சோம்பல் , பெருங்குடல் நோ , கூபக நோ ஆகியன (மாத யிரிவுக் கொதிப்பு) பெரும்பாலும் கூபக கலனநெருக்க ஒரு ங் கோட்டியுடன் சேர்ந்து தோன்றி, பொலிமா தயிரிவாக அல் லது பொலிமாதவாரியாகும். பெருமளவில் இது ஒர் உளவியல் சேர்ந்ததும் சூழற் காரணங்களாலும் ஏற்படும் குழப்பமாகும்.
* சூலகவினைய மாதவாரி (இறைப்பு): நேம இடைக்காலங் கொண்ட கடும் அல்லது நீடிய காலக் குருதியிறைப்புக்கள் மஞ்சட்சடலத் தின் குறைவினையப் பிறழ்வுகளால் ஏற்படுகின்றது. இக் குறைவினை யமானது மஞ்சட் சடலத்தின் குறையாக்கத்தால் அல்லது முற் றற்ற மஞ்சட் சடலமானது நீண்ட காலத்துக்கு சிதல மாற்றங் கள் அடைவதாலும் ஏற்படுகின்றது.
1. குறையாக்கமும் குறைவினேயமும் இதனுல் கருப்பையக வணி சீரற்ற தழைப்பை அடைகின்றது. கருப்பையக வணியும் செவ்வையான இலூற்றிய ஓமோனின் தாங் கலைப் பெறுவதில்லை. சிறிதளவு குருதியிழப்புக்கள் நிகழ்ந்த சில அல்லது பல நாட்க ளுக்குப் பின்பு நேம இரிவு நிகழும். இவ்வகையான ஒரு தனி மாதயிரிவு இருந்திட்டொருக்கால் ஒரு நேம மாதச் சுழல்களுடைய பெண்ணில் தோன்றக்கூடும். இது ஒரு பிழைபடு முறையில் மஞ் சட் சடலம் வினை செய்வதால் ஏற்படுகின்றது.
ஊடறிதல்; மாதயிரிவு வேளையில் அகற்றப்பட்ட கருப்பையக வணி பில் அங்குமிங்கு மாக க்ருப்பநிலைக்கு முன் நிகழும் மாற்றங் கள் காணப்படும். தீர்வு அளிக்க முன்னம் மாதயிரிவின் போக்கைக் கவனிப்பதற்குச் சில மாதங்கள் கழியவிடுவது நல்லதாகும்.
மஞ்சட்சடலத்தின் முகிழ்வுச் சிதலம் : செவ்வன் மாத யிரிவுக்குப் பின்பு சிறிதளவு குருதிவடிதல் பலநாட்களுக்கு நிலைக்கும். கருப் பையக வணியைச் சோதிப்பின் இளம் படு கருப்பை அகவணி பெருக்கும்பொழுது கருப்பநிலைக்கு முன்நிகழ் மாற்றங்கள் உள்ள பகுதிகளைக் காணலாம்.
அல்சூலிடற் காரணங்கள் கருப்பைநோய்க் குருதிவாரியுயா : ( சுருேடரின் நோய் ) இது
முன்பு மிகவும் தெளிவாக வரைவிலக்கணம் கூறப்பட்ட ஒரு நோயாகும். *

கருப்பை யோனி இவற்றில் நிகழும். .
நோயியல்: சூலகத்தில் மஞ்சட் சடல இழையம் இல்லையாகும். புடைப்பானது உடையாது முற்றிக் கனியும். சூலானது இறக்கும். பின்னர் புடைப்பு சிறைப்பை நிலையை அடையும். சிறைப்பை யாக உரு மாறிஞ்லும் சரி அல்லது மாரு விட்டாலும் சரி அது சிறிது காலத்துக்கு ஈத்திரசனை உண்டாக்கும். இந்த ஒமோன னது புருே செசுற்ற ருே னின் எதிர்ப்பில்லாது கருப்பையைத் தாக் கும். இந்த ஈத்திரசன் சுரப்பு பெரும்பாலும் மட்டான அளவி லாகும். சிலரில் கூடிய அளவிலும் குறைந்த அளவிலும் சுரக் கப்படும் ,
இதன் தாக்கத்தினுல் கருப்பைத் தசையும் அதன் அகவணி யும் அதியூட்டம் அடைகின்றது. அகவணியும் பல்காலித் தழைப்  ைபயடையும். இதன் வெட்டு முகத்தில் சிறைப்பையுரு அதி விளைசலுற்றிருப்பதனை அறியவும் முடியும். சிலரில் இந்த விளைசல் சுரப்பி இழையத்தையும் பாதிக்கும்.
சாரக நோய்க் குறிப்புக்கள்: மன நெகிழ்வும் மனப் பீதியுமு டை யவர்களில் இக் குருதி வடிதல் சீரான சுழல்முறையில் இல்லை. நூற்றுக்கு ஐம்பது பேரில் ஒரு குறுகிய ( 10-12 கிழமைகள் ) அல்மாதயிரிவுக் காலக் கூறுக்குப் பின்னர் குருதிவடிதல் தோன்றி 2-8 கிழமைகளுக்கு நிலைக்கும். குருதி வடிதல் பெருமளவில் நிகழ்ந்து உயிருக்குக் கெடுதி விளைக்கக்கூடும். பெரும்பாலும் மாதவிடைவுக்குப் பின்னரும் பூப்புப் பருவத்திலும் தோன்றும் (14 ஆண்டுகளில்) குருதி வடிதலானது கூடும். செறிவிலிருந்த ஈத்திரசன் குறைவு மட்டத்தை எய்தவும் உண்டாகிறது. குருதி வடிதல் நோவுடன் நிகழாது.
அறிகுறிகள்: கருப்பை சிறிது பெருத்திருக்கும். சிறைப்பை கொண்ட சூலகத்தைத் தடவித் திட்டப்படுத்திக் கொள்ளலாம்.
கருப்பை அக வணித் திருவல் அதன் சிறப்புத் தோற்றத்தைக் காட்டும்.
எதிரநிவு: பூப்புப் பருவ சூலகவினையக் குருதி வாரியானது
பெரும்பாலும் தன் னியலில் சீராகும். பரியகம், காரோடு ஆகிய பகுதிகள் செவ்வ னம் அடையவும் நிலைமை சீராகும்.
நுழைவாயிற் குருதி வடிதல்
இது முன்னையது போன்றது. ஆணுல், ஈத்திரசனின் அதி செறிவால் நிகழ்கின்றது அல்ல. குருதி வடிதல் உண்டாக்க முடி யாவளவில் குருதியில் ஈத்திரசன் குருதி மட்டமுண்டு. குருதியில்

Page 116
210 இளம்பெண் நோயியல்
ஈத்திரசனின் செறிவு கூடி, வடிதலை யுண்டாக்கக்கூடிய மட்டங் களே அடையும்பொழுதுதான் குருதிவாரி நிகழும். இது சூல கக் குறை வினையச் செய்கையாலாகும். சுரப்பானது பெருக்கு அடையும்பொழுது, குருதிவடிதலே உண்டாக்கக்கூடிய மட்டங் களே யடையும்.
கருப்பைத் திரு வலின் நுணுக்கு நோக்கிச் சோதனை ஒரு மெல் லிய அகவணி மிகநலிந்த பெருக்க அவத்தை நிலைமையை அடைந்திருப்பதைக் காட்டும்.
இடர் வினையக் கருப்பைக் குருதிவாரியின் ஊடறிவு
ஊடறிய முன்னம்: கருப்பைக் குருதிவாரியானது உண்மையில், ஈனற்சுவட்டிலிருந்து வடிகின்றதென்பதைத் திட்டப்படுத்த வேண்டும். எருவாய் (ஏனசு) நேர் குடல், ஊறித்தாரை, சலப்பை ஆகிய பகுதிகளிலிருந்து வடியும் குருதியை யோனிவழி வடிதல் எனப் பிழையாகக் கருதுபவர் பலர். மன நோயாளருட் சிலர் நிறப்பாயிகளேயும், போத்தலிலடைத்த குருதியையும் சீலேயில் இடடு, தமக்குக் குருதி வாரி நோயுண்டெனப் பாசாங்கு செய்வர். தமக்குக் குரு திவாரியானது நீடிய காலத்துக்குக் கடுமளவில் உண்டெனக் கூறுபவருமு ளர். ஆணுல், அவர்களின் யோனிச் சோதனை இதனை உண்மையெனத் தெரிவிக்காது, சிலர் தாம் பல வல்வச் சீலைத் துண்டுகளை அல்லது மெத்துக்களைப் பயன் படுத்த வேண்டுமெனக் கூறுவர். இவருட் பலர் தம்முடல் தூய்மை காரணமாகத் தேவையற்றவளவில் மெத்துக்களைப் பயன்படுத்து வர். எப்பொழுதும் குருதிவாரி நிகழும் நிலைமைகளில், இவர் களைச் சோதிப்பது நன்ரு கும்.
சாரகச் சோதனை: குருதி வாரியானது பூப்புப் பருவத்திலோ" கருவுறல் காலத்திலோ, அல்லது மாதவிடைவுக் காலத்திலோ, அல்லது மாதவிடைவுப் பிற்காலத்திலோ உண்டாகி உள்ளது என அறியவேண்டும். மாதயிரிவுகள் தோன்றின், கடைசி மாத யிரிவுடன் இக்குருதி வாரியின் தொடர்புகள் என்னவென்று அறிய வேண்டும். குருதியிழப்பின் அளவு நிலைக்கும் கால வளவு, அது தோற்றும் முறை ஆகியவற்றைப் பற்றி வினவி அறியவேண்டும். நோயாளி தன் மாதயிரிவைப் பற்றிப் பல மாதங்களுக்குரிய ஒரு பதிவேடு வைத்திருப்பின், அதனை நுணுக்கமாகப் படிக்கவும். நோயாளியின் சூழல், குடும்பவாழ்க்கை, கல்யாணச் சிக்கல்கள், மனக்கிளர்ச்சி நிலைமைகள் ஆகியவற்றைப் பற்றி அறியவேண்டும். நாசியிலிருந்து குருதி வடிதல், அல்லது சிறிய காயங்களிலிருந்து குருதிவடிதல் ஆகியன உண்டோ என வினவ வேண்டும். (குருதி
 
 

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 2
நோய்கள் இவற்றை உண்டாக்கக் கூடும்). உடற் சோதனை ஈன லுறுப்புத் தொகுதியுடன் ஏனைய உடற்ருெ குதிகளையும் அடக்க வேண்டும். ஈனற்சுவட்டை முழுக் கவனத்துடன் சோதித்தபின்பு சிறப்புச் சோதனைகளைச் செய்யவும்.
ஊடறிவுக் கருப்பைத் திருவல்: இது தேவைப்படின் இதனையும் ஆற்றவேண்டும். இலங்கையில் தேவையில்லாத காரணங்களுக்கு எல்லாம் இத்திரு வலைச் செய்வர். வேண்டியவர்களுக்குச் செய் யார். இளம்படு மங்கையர்களில் பலருக்குச் செய்யப்படும் இத்திருவல் வினை தேவையற்றதாகும். பிள்ளைவளக் குறைவுக்கு ஆய்வுகளைச் செய்யாது யாதாமொரு அறுவை வினையைச் செய் தாற்ருன் தாமும் தீர்வுசெய்வதாகக் கருதி பலர் இதனைச் செய் கின்றனர். இதனுற் கெடுதிகளுண்டு. இது தீர்வு மல்ல, ஊடறி வதற்குத் தேவையானதொன்று மல்ல. உண்மையில் திரு வலின் முக்கிய நோக்கம் சில கருப்பை நைவுகளை விலக்கல் செய்து திட் டப்படுத்துவது மட்டுமேயாகும். முகிழ்வுக் கருச்சிதைவு, கருப் பைப் போலிக்காலி, தூபக்கிள் கருப்பையக வணியழற்சி, காசி னுேமா அகவணியின் ஒமோன் மறுகைகள் ஆகியனவற்றிற்கு மட் டும் திட்டப்படுத்துவதற்கு இதனைச் செய்யலாம். இது அறுவை யறையில் உணர் வழிப்பு முறையுடனும் மற்றும் சீழ்பாதுகாப்பு முறைகளுடனும் செய்யும் ஒர் அறுவை வினையாகும், என்பதனே உணரவேண்டும். திரு வற் பெறுதிகளைப் இழையவியற் சோதனை செய்து அதன் மாதச் சுழல் நாளைப் பொறுத்து அதன் ஒமோன் தோற்றப்பாட்டைப் பற்றி அறியவேண்டும். துர பக்கிள் நோயானது இவ்வகையான மாதயிரிவை உண்டாக்கும் காரணியான படியால், திருவல் அகவனிக் கலத்தை வளர்ப்புச் செய்து கினிப்பன்றியில் ஏற்றல் சோதனை செய்தும் நோயைத் திட்டப்படுத்தலாம்.
யோனி கருப்பைக் கழுத்துக் கலங்களின் சோதனை
இது கலங்களின் ஈத்திரசன் செறிவைத் தெரிவிக்கும். குலி டல் வகையை அல்லது அல்குலிடல் வகையைச் சேர்ந்த குருதி வாரியா என்பதைத் திட்டப்படுத்தவும், நுழைவாயிற் குருதிவடி தலையும் கருப்பை நோய்க் குருதிவடிதலையும் வேறுபடுத்த உதவு கின்றது.
ஊடறிவுத் திருவல், கருப்பைக் கழுத்துத் துண்டுச் சோதனை ஆகி யன காசினுேமா உண்டோ, இல்லையோ என்பதை அறிவதற்கு உதவும்.

Page 117
22 இளம்பெண் நோயியல்
சிறப்பாய்வுகள்
1. குருதிச் சோதனையில் சிறுதட்டு எண்ணிக்கை, குருதிவடி த ல் நேரம் , திரளல் நேரம், ஆகியவற்றை அறிதல் முக்கியமா கும்.
2. கேடயச் சுரப்பி வினையச் சோதனை - இளம்படு காலத்தி லும் மாதவிடைக்கு அண்மைக் காலத்திலும் இதனை முக்கியமாகச் செய்தல் வேண்டும்.
3. கருப்பை, கருப்பைக் குழாய் என்பவற்றின் ''எக்ஸ்றே வரையம்? பல மறைக் காரணங்களாலாகிய குரு திவாரிகள், தடவி யறிய முடியாத கருப்பையகக் காரணிகளால் உண்டாகின்றது. இரு கொம்பர்க்கருப்பை கருப்பையக வணிப்போ லிக்காலிகள் சுரப் பித்தசையோமோ, தனித்தசை - நாரோ மாப் போலிக்காலி, ஆகியனவும் இதனில் அடங்கும். இவை இந்த இறேடியோப் பதி வாற்காட்சிக்குத் தென்படும்.
வேறுபல காரணிகளையும் விலக்க முடியும் . கூபகஅழற்சி யொட்டுக்கள், கருப்பையக வணிவாதை நிலைமைகள், சுரப்பிக் கருப்பைத் தசையோ மாக்கள் ஆகியனவற்றை விலக்குவதற்கு பரிவிரிய நோக்காய்வு, யோனிப் பொள்ளல் நோக்காய்வு ஆகிய வற்றைச் செய்து, இவற்றுள் சிலவற்றை விலக்கலாம்
தீர்வுமுறை இ ைதயளிக்க முன்னர் நோயின் தீர்வைப் பற்றிய சில குறிப்புக்களை அறியவேண்டும்.
1. நோயின் காரணத்தை அறியவேண்டும்.
2. 20 ஆண்டு வயதுக்குட்பட்டவரு ட் பலர் தன்னியல்பில் நோயிலிருந்து மாறுவர். பெரும்பாலும் இவர்கள் சிறிது காலத் துக்கு மட்டுந்தான் சூலக வினைய விடரில் வருந்துவர். பின்னர் நிலைமை சீராகும்.
3. கருப்ப காலத்தில் கருப்பத்துடன் தொடர்புடைய கார ணங்களினலாகக் கூடும். ( கருச்சிதைவு, ஊனை, கோறியோன் கள் சினுேமா),
4. மாதவிடைவுக் காலத்தில் சூலக வினையப் பிறழ்வுகளும் ஏனைய ஒமோன் பிறழ்வுகளும் உண்டாகும். ஆனல் இக்காலத் தில் சாந்தக் கழலையங்களும் தீங்குவிழை கழலையங்களும் அடிகோ லும் என்பதை மறக்கவே படாது.
 

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 218
5. மாதவிடைவுக்குப் பின் கான்சர் நோய் பொதுவாகத் தோன்றும். இந்நோயுண்டோவெனவும் அறியவேண்டும். அறி யப்படாத கருப்பைக் குருதி வடிதலுக்கு கருப்பை அகவணித் திருவல் செய்து, கான்சர் நோயை விலக்கவேண்டும்.
தீர்வு
பொதுவிதிகள் : கடும் குருதி வடிதலுக்கு பெண்ணைக் கட்டி லில் கிடத்தவேண்டும். பெண்ணுனவள் ஏக்கம் பீதி அடைந் திருப்பின் தணிப்பு மருந்துகளைக் கொடுத்து மனநெகிழ்வு நிஜல மைகளைச் சீராக்கவும். உணவைப் பொறுத்த மட்டில் குறைகள் இருப்பின் சீராக்கவும். போதிய அளவு புரதங்கள் விற்ற மின் கள் கணிப்பொருட்கள் செறிந்த உணவுப் பொருட்கள் ஆகியவற் றைக் கொடுக்கவேண்டும். முக்கியமாக, வளரும் மங்கையருக்குக் கொடுக்கவும் . இளம் தாய் மார்கள் பிள்ளைப் பராமரிப்பில் இடைஞ்சல் உறின் , அவர்களுக்கு வேண்டிய உதவியைக் கொடுத்து அவர்களின் மன இறுக்க ( கொதிப்பு) நிலையைச் சீராக்க வேண் டும். சில ஒரைகளுக்கு ( நாழிகைகளுக்கு ) துயில் கொள்ள வேண்டும். அல்குரு திமை உண்டாகின் இதற்குத் தீர்வுசெய்ய வேண் டும். இள மங்கையர் நல் உளநிலைச் சூழலில் வளரவேண்டும். மனப்புயல்களுக்கு உட்படாதிருக்க வேண்டும். பெரும்பாலா னுேர் இம்முறைகளால் நலனடைவர். குரு திவாரியை நிறுத்த முடியாதாகின் குருதி வழங்கல் செய்து குருதிப்பாயி இழப்பைச் சீராக்கவும். இளம் படு மங்கை யரில் நோய் அறிகுறிகளைச் சிராக் கின், நிலைமை காலப் போக்கில் முழுத் திருத்தமடையும் .
மருந்துப் பொருட் தீர்வு
குருதி வாரியை உடனடியாக நிறுத்தத் தக்க மருந்துப் பொருட்கள் இல்லை. கருப்பை சுருக்கி மருந்துப் பொருட்களாற் பயனில்லை. பலர் கல்சியம், விற்றமின் B, விற்ற மின் C, s94 till டீன், இரும்பு ஆகிய பொருட்களைக் கொடுப்பர். இவற்ற் கெடுதியில்லை. இவை ஓரளவுக்குக் குருதியின் குறைபாட்டு நிலைமையைச் சீராக்கும்.
ஓமோன் தீர்வு : இளம்படு மங்கையரிலும், வயதாகின. பெண் களிலும் இதனைப் பயன்படுத்தவேண்டும். மாதவிடைவுக்கு அண் மைக் காலத்தில் இவை தேவைப்படா. இவ்வயதினருக்கு வேறு அறுவை வினைத் தீர்வுகள் வழங்கவேண்டும்.
இளம்படு மங்கையரில் தைறேயிட்டு (கேடயச் சுரப்பு)
இவ் வகைத் தீர்வுமுறை பூப்புக்காலக் கருப்பை நோய்க்குருதி வாரிக்கும், ஏனைய இப் பருவகாலக் குருதிவாரிக்கும் பயனுடை

Page 118
214 இளம்பெண் நோயியல்
யது. இக்காலத்தில் உடல் கடும் வளர்ச்சி அடைவதால் ஒழுங் கான இழைய வளர்ச்சிக்கு வேண்டிய தைரோயிட்டு ஒமோனின் அளவு குறைவுபடக் கூடும். சூலகங்களும் பித்துயித்தறியும் நல் தழைப்பை யடையக் கூடும் ,
இவ்வகையான குருதிவாரிக்கு நாள்தோறும் 100 - 200 மைக் கிருே மிலிக்கிராம் எடைகொண்ட சோடியம் தை ரொட்சினைச் சில மாதங்களுக்குக் கொடுப்பின் செவ்வ ன் மாதயிரிவு தொடர்ந் தும் ஒழுங்காக நிகழும். ( என் அனுபவத்தில் ) உடல் நல் வளர்த்தி யடையவும், உணவும் வேண்டிய புரதம், கணிப் பொருள்கள், (கால்சியம், இரும்பு, அயடீன் ஆகியன) விற்ற மின் பொருள்கள் ( A, D, B, C ஆகியன ) கொண்ட உணவையுட் கொள்ளவும் நிலமை சீராகும். கருப்ப நிலைக்குப்பின் தோன்று பொலிமாதவாரியுயாவிற்கு தைருேயிட்டு ஒமோனைக் கொடுப் பின் நிலைமை நன்கு திருத்தமடையும். 50 - 100 மி. கிராம் அளவில் தைருேட்சின் நாளாந்தம் 3 - 4 மாதங்களுக்குக் கொடுக்க வேண்டும்.
புருேசெசுற்றேன்கள் : இதற்குப் பல்வகைத் தயாரிப்புக்கள் உண்டு. புருேசெ சுற்றேன், நோரெதி சுற்றமுேன், நேர் எதினுே டிறெல், அலைன் ஈத்திரனுேல் ஆகியவை இதனை அடிப்படையா கக் கொண்டவை. மாத வாரி பொலிமா தயிரி வால் வருந்தும் பெண்களுக்கு இவற்றில் ஒன்றை மாதச் சுழலின் 15 ஆம் நாளி லிருந்து 25 ஆம் நாள் வரைக்கும் நாள் தோறும் 5-10 மி.கி அள வில் கொடுப் பின் சுழலின் சுரப்பவத்தை நீடிக்கப்பட்டு மாத விடாய் தோன்றும்- ஆனல் அவ்வளவு நற்பலனை இத்தீர்வுமுறை தராது. சுழல்முறையில் குருதி வடிதல் உண்டாகின் ஈத்திரசன் புருேசெ சுற்றேசன் சேர்க்கைக் குளிகையை கருப்பத் தடைக்குக் கொடுப்பதுபோல 20-21 நாட்களுக்குக் கொடுப்பின் நலமுண்டு. சில மாதங்களுக்கு இவ்வகையான தீர்வுமுறையைச் செய்தபின் சுழல்முறை மாதயிரிவு பெரும்பாலும் தோன்றும் .
நுழைவாயிற் குருதிவடிதலில் போதியளவில் ஈத்திரசன் அகவணி யைப் பதப்படுத்தாத காரணத்தினுல் மேற்கூறப்பட்ட ஒன்றும் Li t i GöT U LI LITT.
இளம்படுகால கருப்பைநோய்க் குருதிவாரிக்கு மருந்துமுறைத் திருவல் : மருந்துப் பொருள்களால் அதிவிளைசல் உற்ற அகவணியைச் சுரப்பு அவத்தைநிலைக்கு மாற்றித் தீர்வை நிறுத்தும்பொழுது அகவணி உதிரும் .
 
 

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 215
குருதி வடிதல் வேளையில் நாள் தோறும் புருேசெ சுற்ருேனை அல்லது இவ்வினத்தைச் சேர்ந்தவையை 10-30 மிகி, எடைகளில் குருதிவடிதல் நிற்கும் வரைக்கும் கொடுக்கவும். இது நிகழ 3-8 நாட்கள் செல்லும் தீர்வை நிறுத்தவும், குருதி வடிதல் 2 - 3 நாட்களுக்குப் பின் நிகழும். இது தன்னியல் முறையில் நிற்கும். மீண்டும் கடும் குருதிவடிதல் நிகழின் , பின்னரும் ஒரு முறை நடைத்தீர்வைப்போல் வழங்கவும். இளம் படு மங்கையரில் இவ்வகையான 2 - 3 நடைமருந்துத் தீர்வுக்குப் பின்னர் நேமச் சுழல் மாதபிரிவு நிகழும். வேறுசிலர் தொடர்ந்து சில மாதங் களுக்கு, மீண்டும் மீண்டும் கொடுத்தபின்பு தீர்வை நிறுத்துவர்.
நுழைவாயிற் குருதிவடிதல் : ஈத்திரசன்களைக் கொடுத்து அக வணியை முழுத்தழைப்புறச் செய்து நேம மாதயிரிவை உண்டாக் கவும். தீர்வுமுறையானது ஸ்ரில் பித்தரோலை 1 மி. கி. எடை யில் (அல்லது 0.05 மி.கி எதினையில் ஈத்திர டயோலை ) நாள் தோறும் 3 தடவையாக 21 நாட்களுக்குக் கொடுக்கவும் 2-3 நாட்களுக்குள் குரு திவடிதல் நிற்கும். தீர்வின் கடைசி 7 நாட் களுக்கு 5-10 மி.கி. புருேசெ சுற்ருே னைக் கொடுக்க , கருப்பை அகவணி முழுத் தழைப்புறும். தீர்வை நிறுத்தவும். 2-10 நாட் களுக்குப்பின் குருதி வடிதல் நிகழும். அகவணியும் உதிரும்.
கருப்பைநோய்க் குருதிவாரி : இந்நோயில் நிகழும் குருதிவாரியை நிறுத்துவதற்கும், ஈத்திரசன் களைப் பயன்படுத்த முடியும். இக் குரு திவாரியானது ஈத்திரசன் எவ்வேளையிலும் குருதிவடிக்கும் நுழைவாயில் மட்டத்தில் இருப்பதினுல் நிகழ்கின்றது. இம்மட் டத்தைக் குறைப்பது வில்லங்கமாகும். ஆனல் குருதியில் ஈத் திரசனின் நுழைவாயில் மட்டத்தை மேலாக உயர்த்தின் குருதி வடிதல் நின்றுவிடும். இதற்காகப் பெரும் எடைகளில் இதனைக் கொடுக்கவேண்டும். 5 மி.கி. இஸ்ரில் பித்தரோலை 4 ஒரைகளுக் கொருக்கால் கொடுப்பின் சிறிது காலத்திற்கு அது குருதி வடி தலை நிறுத்தும் ஆணுல் அகவணி உலுர்த்தப்படாதபடியால் மருந்தை நிற்பாட்டவும் மீண்டும் குருதி வடியத் தொடங்கும். எனவே இதைத் தவிர்ப்பதற்கு ஈத்திரசன்-புருேசெசுற்ருேசன் சேர்ந்த சேர்வையைக் கொடுக்கவும். குருதி வடிதல் நின்ற பின்பு மேலும் இச்சேர்வையை 3 - 4 மாதங்களுக்குச் சுழல்முறையில் கொடுக்க வேண்டும்.
இடர்வினையக் கருப்பைக் குருதிவடிதல் : இது எவ்வகையினதாய் இருந்தபோதும் அந்திரசன்கள் ( ஆணுக்கி ) குருதிவடிதலைக் கட் டுப்படுத்தும். இளம்படு மங்கையர்களுக்கு இதனை வழங்கினுல் ஆண்மைக் குறிகளைத் தோற்றுவிப்பள். ஆனல் 40 வயதுக்கு

Page 119
216 இளம்பெண் நோயியல்
மேற்பட்டவர்களிற் காணப்படும் இடர்வினையக் கருப்பை வடித லுக்கும், நுழைவாயிற் குருதிவடிதலுக்கும் கருப்பை நோய்க் குரு திவாரிக்கும் அந்திரசன் மருந்துப் பொருள்களைக் கொடுக்க லாம். பெரும்பாலும் மிதைல் தெசுதொற்றருேனை 5 - 10 மிகி. எடைகளில் நாள் தோறும் இரு மாதங்களுக்கு வழங்குவர். கடும் குரு திவாரி தோன்றின் இவ்வெடைகளில் குரு திவாரி கட்டுப்படுத் தப்படும் வரை சில நாட்களுக்குக் கொடுக்கலாம். வேறு அந்திர சன் தயாரிப்புகளும் உள. ஆணுக்கி ஒமோன்களை ஒரு மாதத் திற்கு 300 மிகி. அளவுக்கு மேலதிகமாகக் கொடுத்தால் ஆண் மைக் குறிகள் தோன்றக்கூடும்.
கொணுடோதுரோபின்கள் : ( சனனியூட்டு ஒமோன் ) இவை இந் நோய்க்குப் பயனுடையனவல்ல .
அறுவை வினை : இளம் படு மங்கையருக்கும் இளம் பெண்க ளுக்கும் ( 40 வயதுக்குக் குறைய ) இத்தீர்வு உகந்ததல்ல. இவர் களின் இனமபெருக்கும் வல்லமையைப் பேணவேண்டும் என்னும் காரணத்தினுலும், மேலும் இவர்களுட் பலருக்குத் தன்னியல் பில் நோய் மாறுகின்றபடியாலும் அறுவை வினையை இவர்களுக்கு விலக்கல் நன்று. அறுவை வினே செய்யப்பட்டவர்களில் பலர் தமது ஈனலுறுப்புக்கள் சேதப்படுத்தப்பட்டனவென்று தீர்க்க முடியாத உளநோயால் வருந்துவர். 40 வயதுக்கு மேற்பட்டவர் களில் கருப்பையானது வேறு நோய்களாலும் பாதிக்கப்படுவ தால், அறுவை வினை செய்து நிலைமையைத் திருத்தலாம்.
கருப்பைத் திருவல் - கருப்பைநோய்க் குருதிவாரி இவ்வறுவை வினே முறை, விரைவில் மாத விடைவை அடையப்போகின்றவர்களுக்கு நோயை மாற்றும். வேறு சிலருக்குச் சில மாதங்களுக்கு ( 5 மாதம் மட்டில் ஒழுங்கான சுழல் மாதயிரிவையுண்டாக்கும். இதன் பின்பு நிலைமை முன்போலாகும். 40 வயதுக்கு மேற்பட்டவர்க ளுக்குப் பலனையளிக்கும். ஆணுல், இவ்வயதிற்குக் குறைந்தவர் களுக்கு மீண்டும் மீண்டும் திருவல் செய்யவேண்டிய நிலை ஏற் படும். பொலிமாதயிரிவுக்கு இது பயனுட்ையதல்ல.
கருப்பைநோய்க் குருதிவாரி : இதில் சூலகங்கள் பல சிறைப்பை களை அடக்கியிருக்கும். சூலகங்களுக்கு ஆப்புருவெட்டல் செய்து சிறைப்பைகளின் பெரும் பகுதி அகற்றப்படும். இவ்வகற்றலைத் தொடர்ந்து, சிறு சிறைப்பைகளையெல்லாம் பொள்ளல் செய்து, அவற்றுள் உள்ள நீரை வெளியேற்றி யாதாயினுமொரு தீர்வு முறையாலும், ஒரு வகையிலும் முன்னர் கட்டுப்படுத்த முடியாத குருதிவாரியை இவ் அறுவைவினைமூலம் நிறுத்தியுள்ளேன். விளைவு
 
 
 

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 27
கள்-குருதிவடிதல் ஓரிருநாட்களில் நின்றது, மீண்டும் நேமமாதச் சுழ லிரிவு நிகழ்ந்தது. பலர் கெர்ப்பமுற்று நல்லமைப்புடைய குழந்தைகளையும் பெற்றனர்.
இளமங்கையரில் இருந்திட்டொருக்கால் நிகழும் குருதிவாரி. இது புடைப்புச் சிறைப்பை பீறலடையாத காரணத்தினுல் உண் டாகின்றது. யோனிமுறைச் சோதனையில் இச் சிறைப்பை திடீ ரெனப் பீறலுறவும் நோய்நிலைமை மாறுவதை , ஒவ்வொரு பெண் நோய் மருத்துவரும் தம் அனுபவத்தில் கண்டிருப்பர்
கருப்பைத் துமி ( கிருப்பையகற்றல்)
40 வயதுக்கு மேற்பட்டவர்களில் : எவ்வகையான குருதி வடிதலே யும் எளிய முறைகளால் தீர்க்க முடியாவிடின், இவர்களுக்குக் கருப்பையகற்றல் நல்லதாகும். இதனுல் நோயாளிக்கு யாதா யினுமொரு கெடுதியும் விளையாது. இது பிள்ளை வளம் மிகக் குறைந்த அல்லது அற்றுப்போகும் காலக் கூருகும். கருப்பையை அகற்றுவதனுல் பெரும்பாலானேர் மனநோயடையார் . இவ் வறுவை வினேயில் நிலைமையைப் பொறுத்துச் சூலகங்களையும் சேர்த்து அகற்றல் நன்று.
இளம்பெண்களுக்கு : தீர்க்கமுடியா நிலைமைகளில் கருப்பையை மட்டும் அகற்றி சூலகங்களை விட்டுவிடுதல் நன்று வயிற்றைத் திறந்து இவ்வறுவை வினையை ஆற்றவேண்டும். கருப்பையை அகற்ற முன்னம் அதனைத் திறந்து சோதிக்க வேண்டும். சிலரில் சோதனைக்குத் தப்பினதும், தீர்க்கக்கூடியதுமான நைவுகளிருக்கக் கூடும். ஒர் மருத்துவ நண்பன் இளம்பெண்ணுக்கு கருப்பை யகற்றல் செய்வதற்கு ஆயத்தம் செய்தான். தற்செயலாக நான் அறுவை வினையறைக்குட் புகுந்து என்ன காரணத்திற்காகச் செய் யப் போகின்ருயென வினவ, " நான் எல்லாத் தீர்வுமுறைகளையும் கையாண்டும் இக்குருதிவடிதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினன். கருப்பையை அகற்ற முன்னம் அதனைத் திறந்து பார்க்குமாறு கூறினேன். திறந்து பார்க்கும்பொழுது அக்குழி யில் ஒரு சிறிய சுரப்பியோமோப்போலிக் காலியிருக்கக் கண்டு எல்லோரும் வியப்பற்ாே? ம. இது அகற்றப்பட்டது. நோயாளி பாதாயினுமொரு உறுப்பும் சேதமடையாது மீண்டாள்.
என் அ பைவத்தில் கருச்சிதைவு அகற்றலுக்குப் பின்பு பல மாதங்களாகப் பலதரம் செய்யப்பட்ட திருவலாலும்கூடத் தீர்க்க முடியாத குருதிவாரியை உடைய ஒர் இளம்பெண்ணில் கருப்பை நேரடி நோக்க லுக்கப் பின்பு, வயிற்றைத் திறந்து கருப்பையைத்

Page 120
2 8 இளம்பெண் நோயியல்
திறந்து உள்ளே பார்க்கும் பொழுது யாதாமொரு நைவுகளும் காணப்படவில்லை. மீண்டும் கருப்பையைக் கூர்ந்துநோக்கும் பொழுது ஒரு மெதுவான சிறிய திட்டு ஒன்று முற்பக்கச் சுவரி லிருந்தது. இதனைத் திறந்து பார்க்கவும் 3 - 4 சிறிய ஐடாற் றிட்டு ஊனைப் புடகங்கள் அடக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். இத்திட்டைமட்டும் அகற்றிய பின்பு அவளை மீசோ றெக்சேற்று மருந்துத் தீர்வுக்கு உட்படுத்தினேன். அவள் நிலைமை முற்ருகக் குணமடைந்து மீண்டும் நேம மாதச் சுழல் மாதயிரிவு மாதம் தோறும் நிகழ்ந்தது.
இறேடியோத் தீர்வுமுறை : 1. இது இளம் பெண்களுக்கு உகந்த தல்ல.
2. 40 வயதுக்குக் கிட்ட உள்ளவர்களுக்கு சிறப்பாக நோயாளி நன்னிலையில் இல்லே யாயின் ( அறுவைவினை இவர்களுக்குக் கெடுதி யைச் செய்யும் ), கருப்பைக் குழிக்குள் இறே டியம் இடல் பய னைத் தரும். இவர்களுக்கும் கருப்பையுடல், கழுத்து ஆகிய இடங் களில் நோய் நிலைமையில்லையென்று திட்டப்படுத்திய பின்பு தான் இடவேண்டும். ( 50 மி. கி. 40 ஒரைகளுக்கு . இதை விஞ்சின் கருப்பையக வணி பிணத்தல் வாதையும் கழுத்து ஒடுக்கமும் நிகழும்.
3. ஆழ் (X) எக்சுக் கதிர்வீசலைப் பயன்படுத்தி இரு சூலகங் களையும் வினைத் தடுப்புச் செய்யலாம். (இதற்கு 300 - 600 அளவு X எக்சுக் கதிர்களைப் பயன்படுத்துவர்).
இந்த எக்சுக் கதிர்வீசல், இறே டியம் இடல் ஆகியவற்றல் கெடுதிகளுண்டு. எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய்ந்தபின் இவ் வகைத் தீர்வைச் செய்யவேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவ ருக்கும் கருப்பையகற்றல் தீர்வுமுறை சிறந்ததாகும்.
வேறுவகைச் சிறப்புக் குருதிவடிதல்கள் : சூலிடற் குருதிவடிதல் : சில பெண்கள் குலு திரும் வேளையில் சிறிதளவு குருதியை அல்லது குருதிதோய்ந்த மியூக்கசை இழப்பர். இதனுடன் நோவும் அணைந்து நிகழக்கூடும். சிலர் குருதி வடிதல் இல்லாது பெருமளவில் மியூக்கசை இழப்பர்.
இது சில மாதங்களுக்குத் தோற்றும். பின்னர் பல ஆண்டுக ளுக்கு இல்லாதிருந்து மீண்டும் தோற்றும். குருதிவடிதல் சில ஒரைகள் மட்டும் நிலைக்கும். சிலருக்கு 2 - 3 நாட்களுக்கு வடி யும். இதைப் பொலிமா தயிரிவெனவும் கருதுவர். பெரும்பாலும் சிறிய அளவில் கொஞ்சம்பட்டதெனக் கூறுவர்.
 
 

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . .
இக் குருதி வடிதல் கருப்பையக வணியிலிருந்து சூலிடல் வேளை யில் நிகழும் ஈத்திரசன் செறிவு மட்டமானது நுழைவாயிற் குருதி வடிதல் மட்டத்துக்குச் சிறிது பொழுதுக்கு வீழ்வதால் உண்டா கின்றது எனக் கருதப்படும்.
தீர்வு : இதனை ஓர் இயல்பான தோற்றப்பாடெனக் கருத வேண்டும். இதற்குத் தீர்வு தேவையில்லை. இந்தக் குறித்த நாட்களே அறிந்து இந்நாளுக்குக்கிட்ட கலவியை நிகழ்த்தின் கருக்கட்டல் நிகழக்கூடும். பிள்ளை வளம் குறைந்தவர்களில் தீர்வு வேண்டப்படின் குருதிவடிதல் நாளுக்கு 2-3 நாள் முன்னமாக ஈத்திரசன்களை அல்லது புருெ செ சுற்றேன்களைக் கொடுத்து அது உண்டாவதைத் தடுக்கலாம்.
முன்பூப்புக்காலக் குருதிவடிதல் : - பத்துவயதுக்கு முன் நிகழும் யோனிக் குருதி வடிதலே முன் பூப்புக் காலக் குருதி வடிதல் எனக் கூறுவர்.
பருவகாலத்துக்குமுன் நிகழ் ( குழந்தைப்பருவ ) பூப்பு : இதில் சுழல்முறை மாத யிரிவு நிகழும். இதனுடன் அணைந்து முலைகளின் தழைப்பு, பூப்பென்புப் பிரதேயத்தில் மயிர்வளர்த்தி ஆகியன வும் உண்டாகும். பெரும்பாலும் இது 8 - 9 வயதளவில் நிக ழும். உடல் வளர்த்தியும் நிகழக்கூடும், ஆனல் மூளை வளர்த்தி தடைப்படும் அல்லது மேம்பட்டிருக்கும். ஏதுக்களைப் பொறுத்த மட்டில் நூற்றுக்கு 90 பேரில் யாதாமொரு பிறழ்வும் நிகழவில்லை. பித்துயித்தறி, அதிரனல் சூலக உறுப்புக்கள் மிக இளம்வயதி லேயே முதிர்வடைகின்றன.
வேறு நோய்நிலைமைகளும் இவ்வகைப் பூப்புக் குருதிவடித ஆலத் தோற்றுவிக்கும். அவை அல்பிறைற்றின் ஒரு ங்கோட்டி, சூலக ஈத்திரசன் கழலையங்கள் சிறுமணிக்கலக் கழலை யம். தீக் தாக்கலக் கழலை யம், தீங்குவிளை தெறற்ருேமா, அதிரனல் காரோட் டுக் கழலை யம், சூலக அந்திரசன் பிறப்பிக் கழலையங்கள் ஆகியன வாகும்.
தீர்வுமுறை : இவ்வகைக் குழந்தைகளைச் செவ்வையாகச் சோதிக்கவேண்டும். துணைப்பாலின வளர்த்திக் குறிகள் நடு மூளை நைவுகள் ஆகியன உண்டோ வென்றும், இவை காணப்படின் குல கக் கழலேயங்கள், அதிரனல் கழலையங்கள், மண்டையக நைவுகள் உண்டோவென்றும் திட்டப்படுத்தவேண்டும்.

Page 121
”“os
220 இளம்பெண் நோயியல்
துணைப் பாலினக் குறிகள் தோன்ரு விடின் இது மாதயிரிவால் அல்ல வென்றும் ; கருப்பை, யோனி ஆகிய பகுதிகளிலிருந்து நிகழ் கின்றதென்றும் கருதவேண்டும். மிகுதியானுேரில் இந்நிலைமை உடலமைப்பு முறையால் அல்லது கீழ்ப்பரியகக் காரணங்களினுல் ஏற்படுகின்றது"
தீர்வு : ஒரு வகையான தீர்வும் தேவையில்லை. குழந்தையை மனிதரிலிருந்து பாலினத் தாக்கம் உருது பாதுகாக்க வேண்டும்.
மாதயிரிவு அல்லாத குருதிவடிதல் : குழந்தைகளில் துணைப்பாலின உறுப்புக்களின் தழைப்பு இல்லாவிடின், வடிதல் வேறுகாரணங் களினுலோ என அவர்களைச் சோதிக்கவேண்டும். யோனிக்குள் புதுப்பொருட்கள் புகுத்தப்பட்டிருக்கும் . ( பாதுகாப்பு ஊசிகள் போன்றவை ) வேறு புதுவளர்ச்சிகள் யோனிக்குள்ளும், கருப் பைக் கழுத்து ஆகிய பகுதிகளிலும் இருக்கக்கூடும்.
புனிற்றுக் குழந்தைகளில் நிகழும் ஈனலுறுப்புக் குருதிவாரி ; பேற் றுக்கு 2-3 நாட்களுக்குப் பின்பு சில குழந்தைகளில் சிறிதளவு குருதிவடிதல் கருப்பையிலிருந்து நிகழும். இது தாய்க்கு வேண்டா ஏக்கத்தையும் கவலையையும் உண்டுபண்ணும். மு லேகளும் சிறி தளவு பெருத்திருக்கும். இது சில ஒரைகளுக்கு அல்லது நாட்க ளுக்கு நிலை க்கும்.
சூல்வித்தகத்தால் உண்டாக்கப்பட்ட பெரும் தொகை ஈத்திரச னின் செறிவானது, புனிற்றுக் குழந்தையில் திடீரென வீழ்ச்சி அடைவதால் இது ஏற்படுகின்றது. இதற்கு எவ்வகையான தீர் வும் வேண்டியதில்லை.
பூப்புப் பிற்காலக் குருதிவாரி : இது பூப்பு அடைந்தபின் 20 ஆண்டு வயதிற்குள் நிகழும் மிதவிஞ்சிய குருதிவடிதலாகும். பூப்படைந்த பின் முதல் இரு மாதயிரிவுகளும் மிகையடையும் அல்லது நீடித்து ஒழுங்கற்றதாயுமிருக்கும். பின்னர் நேம மாதயிரிவுகள் தோன் றும். சிலரில் ஒரு நேமமான மாதயிரிவுச் சுழல் நிலைபேருகமுன் னம், 2-3 ஆண்டுகளுக்கு கடும் குரு திவாரி காணப்படும் , இது கடும் அல்குருதிமை நிலைமையை உண்டாக்குவதுமல்லாமல், சில ருக்கு உயிர்க்கெடுதியையும் விளைவிக்கக்கூடும்.
இவ்வகையான நோய்நிலைமையில் குருதி மாற்றுாட்டம் செய்து உயிரைப் பாதுகாப்புச் செய்து, தப்பவைக்கப்பட்ட பல இளமங்கை யரின் வரலாறுகளே நான் கூறமுடியும். இப் பயங்கரக் குருதிவாரி கள் பெரும்பாலும் மிகப் பயந்த மனப்பான்மையுடைய பெற்
 
 

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 221
ருேருக்குப் பிறக்கும் குழந்தைகளில் நிகழ்வதாகச் சிலர் கருது வர் . எனவே இது ஒர் உளநிலையால் ஏற்படுவது எனக் கூறுவர்.
இவ்வகையான குருதி வாரிகள் பெண்ணுனவள் அந்த மாதத் தில் சூலிடத் தவறுவதாலெனக் கூறுவர். எனவே புருே செசற் ருேன்கள் உண்டாக்கப்படாத காரணத்தினுல் குருதி வாரி நிகழ் கின்றது. சிலருக்குப் பல மாதங்களுக்கு மாதயிரிவு தோன்றது. பின்னர் கடும் குருதியிறைப்பு நிகழும். (கருப்பைநோய்க் குருதி @rfl).
தீர்வு இடர்வினையக் குருதிவாரி விபரிப்பில் இதன் இர்வு கூறப்பட்டுள்ளது,
மாதவிடைபு, முன்மாதவிடைவு, பரமாதவிடைவுக் குருதிவடிதல் : பொதுவாக மாதவிடைவு நிகழும் வயதில் தோன்றும் குருதிவடி தலை மேற்கூறப்பட்ட சொற்கள் குறிக்கும். இக்காலக் குருதி வடிதல் இறைப்பாகின் அல்லது நீடித் திருப்பின் அல்லது அல் சுழல்முறை வடிதலாகின் உடனடியாகச் சோதனைசெய்யவேண்டும்.
ஏனெனின் இவ்வவையினுேரில் சிலருக்கு கருப்பையுடற் கான்சர்நோய் உண்டு. பலர் கருப்பை நோய்க குருதிவாரியிலும் சூலிடல் அற்ற குரு திவாரியிலும் வருந்துவர். குருதி வடிதலுக்கு வேறும் பல காரணங்கள் உண்டு. மிகுதியோர் ஈத்திரசன் தீர்வு பெற்றிருப்பர் ஈனலுறுப்புக்களில் பல்வேறு கழலையங்களும் அழற்சி நிலைமைகளும் காணப்படும். பல்வகையான காயங்களும் இருக்கக்கூடும். புற பொருள்களும் யோனியுள் இருக்கக்கூடும். அல்லது அவள் குருதிநோய்களால் வருந்தக்கூடும். குருதிவடிதல் ஊறுநீருறுப்புகளிலிருந்து நிகழவும் கூடும்.
கூபகச்சோதனை, யோனி, கருப்பைக் கழுத்துக் கலங்களின் ஆய்வு, கருப்பைக் கழுத்து உயிர் இழையச் சோதனை, கருப்பைத் திருவல் ஆகிய செவ்விய சோதனைகளைச் செய்து ஊடறியவேண் டும்.
மாதவிடைவுக் காலத்தில் காணும் குறிகளுக்கு ஈத்திரசன்க ளேக் கொடுப்பர். இவை குரு திவாரியை உண்டாக்கும். அல்லது வடிதலை நீடிக்கும்.
மாதவிடைவுகாலப் பெண்களுக்கு நாளாந்தம் வாய்வழியாக 05 மி.கி. ஸ்ரில் பீஸ்ற் ருேலைக் கொடுப்பின் 8 வீதப் பெண்க

Page 122
222 இளம்பெண் நோயியல்
ளுக்குக் குருதிவடிதலும், 10 மிகி, எடையளவில் கொடுப்பின் 36 வீதப் பெண்களுக்குக் குருதிவடிதலுமுண்டாகும்.
மாதவிடைவுப் பிற்காலக் குருதிவடிதல் : பொதுவாக ஒர் ஆண்டுக்கு மாதயிரிவு தோன் ருதாகின் பெண்ணுனவள் மாதவிடைவுற்று ளெனக் கணிக்கப்படும். ஆனல் இந்த வயதுக் கூறிலும் இதற் குப் பின்னரும் குருதிவடிதல் நிகழின் அவளைக் கடுஞ்சோதனைக்கு உ ட் ப டு த் தி குருதி வடிதலின் ஏ துக்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
பொதுவாக ஈத்திரசன்களை வைத்தியனின் விதிப்பின்றி உட் கொள்ளல் ஒரு முக்கிய ஏதுவாகும். இதனைத் தவிர்த்து மற் றைய ஏதுக்களை வகைப்படுத்தின் நூற்றுக்குப் பத்துப்பேர் கரு ப் பைக் கழுத்து அல்லது கருப்பை உடற் கான் சரால் வருந்துவர். குரு திவடிதல் நீடித் திருப்பவரை மதிப்பிடின் 30-50 வீதப் பெண் கள் கான்சர் நோயால் வருந்துவர். எஞ்சியவர் சூலகக் கழலையங் களாலும் ஈத்திரசனையாக்கும் கழலையங்களாலும் பெரும் சூலகக் கழலையங்களாலும், தொற்றுக்களாலும் யோனியழற்சி, கழுத்து அரிப்புகள், கருப்பையக வணியழற்சி, கருப்பைச் சீழ்த் தம் என்ப வற்ருல் வருந்துவர்.
இடர்வினையக் கருப்பைக் குருதிவாரி இது சிலரில் உளவியற்
காரணங்களால் உண்டாகும்.
கருப்பைநோய்க் குருதிவாரி நுழைவாயிற் குருதி வடிதல், உண் மைச் சூலிடற் குருதிவடிதல், என்பவற்றலும், காயங்களாலும் , நேரடி வன்தாக்கம் புறப்பொருட்களாலும் (X) எக்சுக் கதிர் வீசற்புண்களாலும் குருதியினதும் பயிர்க் குழாய்களினதும் நோயா லும், ஊறுநீருறுப்புக் குருதி வடிதலாலும் வருந்துவர்.
சிலரில் யாதாயினுமொரு காரணமும் காணப்படுவதில்லை. (உளவியல் ), நூற்றுக்குப் பத்துப் பெண்களில் சூலகவினையிடர்க ளாலும், கருப்பைநோய்க் குரு திவாரியாலும் கருப்பையக வணி அதிவிளைசலுயாவாலும் குருதி வடிதல் ஏற்படும். சிலருக்கு மாத விடைவுப் பிற்காலத்தில் தோன்றும். குருதி வடிதல் பிந்திநிகழ் சூலிடலால் ஏற்படுகின்றது.
கருப்பையக வணி அதிவிளைசலுயா நோயாளர்கள் பின்பு கான் சர் நோயால் வருந்தக் கூடும். இவர்கள் குளுக்கோசுச் சகிப்புப் பிறழ்வுகளையும் காட்டுவர்.
 
 
 
 
 

கருப்பை யோனி இவற்றில் நிகழும். . . 223
மாதவிடைவின் பின்னர் ஒரேயொரு தரம் குருதி வடிதலைத் தோற்றினவர்களில் பெருந்தொகையினர் யாதாயினுமொரு பிறழ்வு நோயாலும் வருந்துவதில்லை. இவ்வகையினுேருக்குக் கருப் பைத் திரு வலை ஒரு தடவை செய்யின் அதிகமானேருக்குக் குருதி வடிதல் தோன்றுவதில்லை.
ஊடறிதல் இவர்கள் ஈத்திரசன் மருந்துப் பொருட்கள் அருந்துகிறவரோவென அறியவேண்டும். பல வகைச் சோதனைகள் தேவைப்படும். அவை கூபக ஆய்வு, கருப்பைக் கழுத்து, உயி ரிழைய ஆய்வு, கருப்பைத் திரு வல் ஆகியனவாகும்.
தீர்வு : காரணங்களைப் பொறுத்து ஏற்ற தீர்வு அளிக்கவேண் டும். காரணம் காணப்படின் கருப்பையகற்றல் நன்று. காரணம் காணப்படாது மீண்டும் குருதி வடிதல் நிகழின் வயிற்றைத் திறந்து, சூலகங்கள், கரு ப்பைக் குழாய்கள் கருப்பை முதலான ஈனலுறுப்புக்களே அகற்றல் நன்று.

Page 123
இயல் 4.
இடர்மாதயிரிவு
இச்சொல் நோவுடன் தோன்றும் மாதயிரிவைக் குறிக்கும். ஆனல் இச்சொல்லே மிகவும் வேறுபடும் இரண்டு முக்கிய அறி குறிகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்துவர்.
1. உண்மையான இடர் மாதயிரிவு : . இது எவ்வித காரண மும் இன்றி மாதயிரிவு கருப்பையில் தோன்றும். இதை முதலாய இசிப்பு, வினைய, உள்ளிட்டு மாதயிரிவெனவும் கூறுவர்.
2. நெருக்க இடர் மாத யிரிவு :- இந்நோவானது கருப்பை யைத் தவிர்ந்த ஒர் உறுப்பு அல்லது இழையத்தில் தோன்றி, மாதபிரிவுடன் அணைந்து நிகழும். இது ஒரு புற ஈட்டு நோவா கும். உளம் சார்ந்த காரணிகளும் மாதபிரிவுடன் நோவை உண்
டாக்கும்.
இவ்விடரால் இளம் மங்கையரில் 10 - 15 வீதத்தினர் வருந்து வர். மாதந்தோறும் சில ஒரைகளுக்கு அல்லது ஒரு நாளளவுக்கு இவர்கள் ஒரு முயற்சியிலும் ஈடுபட முடியாத நிலையை எய்துவர். தற்காலத்தில் பிந்திய வயதுகளில் மணவினை நிகழ்வதால் இளம் பெண்கள் இதனுல் கூட வருந்துவர். மூத்த பெண்களைப் பொறுத்த மட்டில் 45 - 50 வீதத்தினர் இவ்விடரால் வருந்துவர். பல காரணிகளில் இவ்விடர், மக்களின் பொருளாதார நிலை, தொழிற் பாடு, வயது, குடும்பநிலை ஆகிய பல கார ணிகளில் தங்கியிருக் கும். இளமங்கையர்கள் தற்காலத்தில் சிறிது கூ டு த லா க நோவைப் பற்றி முறையிடுகின்றனர். அமைதியான குடும்ப வாழ்க்கை இப்போ குலைந்துவிட்டது. அவர்கள் தம் பிற்காலத் தைப் பற்றியும், தொழிற்பாடு மணவினை, பாலின உந்தல்களைப் பற்றியும் வாழ்க்கையிடர்களைப் பற்றியும் இளம் வயதிலேயே சிந் திக்கின்றனர்.
முன்னையோர் விதித்த வீட்டுவிலக்கு உண்மையில் அவர்கள் கடும் வீட்டு வேலையிலிருந்து ஒய்வும் மன ஆறுதலும் பெறுவதற் காகும். மற்றவர்களிலிருந்து தொற்று உண்டாகும் என்ற *TU, ணத்திற்காக இவர்களை விலக்கி வைப்பர். இக்காலங்களில் சா வீட்டினர், பிள்ளைப்பேற்று வீட்டினர், தொற்றுநோய் சாவிட்டி னர் ஆகியோரை ஏனையோர் தொற்று நிகழாவண்ணம் ஒரு துடக்கு ( விலக்கு ) நிலையில் விலக்கிவைப்பர். தொற்றை மற்றையோ
 
 

இடர்மா தயிரிவு 岑罗5
சேர்க்காதிருப்பதற்கும் இவ் ஒழுங்கை நம் முன்னுேர் வகுத்தனர் வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவினரும் சில ஒழுங்குகளில் தொடக் குற்றவர் எனக் கணிக்கப்படுவர். சுகாதார முறையில் இவர்க ளைத் தொற்றுக்காவிகளாகக் கருதுவர்.
மாதயிரிவைப் பற்றிய பிழைபடு நோக்கல்கள் : நாள்தோறும் வேலை களில் ஈடுபடும் நாட்டுப்புற இளமங்கையர்களுக்கு நோ தோன் றுவதில்லை. இவர்கள் பல புறத் தொழில்களிலும் வீட்டு வேலைப் பாடுகளிலும் ஈடுபடுவர் அவர்கள் கிணற்றில் நீர் இறைக்க வேண்டும். நீர் நிரப்பிய குடங்களை இடுப்பில் வைத்தோ அல் லது நீர்நிரப்பிய வாளிகளே இடுப்பைப் பக்கத்துக்குப் பக்கம் வளைத்தோ அல்லது அசைத்தோ  ைக ய ர ல் காவவேண்டும். பொருளாதார நிலையில் மேம்பட்ட குடும் பத்தினர் வீட்டு வேலைப் பாடுகளில் ஈடுபடாதிருந்தபோதும், பரதநாட்டியம் , களியாட் டம் ஆகிய ஆட்டங்களில் ஈடுபடுவர். இவர்களுக்கு அவ்வளவு நோ தோன்றுவதில்லை. முற்காலத்தில் சிறு பெண்களுக்காகிய பல விளையாட்டுக்கள் (பந்துவிளையாடல், கோலாட்டம், தென்னு, தெள்ளுநடனம், தெள்ளேணம் இன்னும் பல நூல்களிற் கூறப்படும் பல மறைந்துபோன விளையாட்டுக்கள்) நோ தோன்றப்படா என்ற காரணங்கொண்டும் உடலப்பியாசத்துக்குமாக அவற்றை விதித் தனர் போலும். தற்காலத்தில் இந்நோவைத் தோன்ருது தடுப் பதற்காக இடுப்பசைவு அப்பியாசங்களை விதிப்பர்.
தற்காலத்தில் மாதயிரிவு காலத்துக்கு முன்னதாகவோ அல் லது அது நிகழும் வேளையிலோ பல நங்கையர் உடல் நலக் குறைவு எய்துவர். அவர்கள் உளநிலையும் இந்நாட்களில் திடமாகவில்லை. எவ்வகையான நோவுக்கும் வேண்டா அச்சநிலையடைவர். ஆகவே நோவுனரக்கூடிய இதன் நுழைவாயிலளவும் குறைவுபடுத்தப் படும். இது சிறு உடல்நலக் குறைவான நோவாகப் பெருப்பிக் கப்படும். வேலைப்பாடுகளில் ஈடுபடுவதற்கு விருப்பமில்லாவிடின் இவற்றைத் தவிர்ப்பதற்கு ஒரு சாட்டாகச் சில பெண் க ள் பொய்க்கு நோவுண்டென முறையிடுவர்.
மாதயிரிவுடன் நோ கட்டாயம் தோன்றும் என்று தாய் மார் தம் பெண்பிள்ளைகளுக்குக் கூறுவதுமுண்டு. தாய்மார் தம் இளம் பருவத்தில் நோவையனுபவித்திருக்கக்கூடும். அம்மாவும் பேத்தி யும் இப்படித்தான் வருந்தினரெனவும், இது எங்கள் குடும்பத் தில் கொடிவழியாகவுண்டென்றும் இளம்பெண்கள் கூறுவதைக் கேட்டுள்ளேன். என்வே, இது ஒரு வேண்டாத எதிர்நோக்காகும்.
சூழற்காரணிகளால் உண்டாக்கப்படும் மனக்கொந்தளிப்பு: இது போன்ற காரணிகள், பொதுவாகப் பொருட்படுத்தப்படாத

Page 124
226 இளம்பெண் நோயியல்
சிறிய நோக்கங்களையும் மிகைப்படுத்தும். வீட்டிலும் , வேலைப்பாட் டிடங்களிலும் விளையும் மகிழ்ச்சிக் குறைவு இரு ப் பின் கல்யாண மாகாத இளம் பெண் ஆசிரியர்களையும், பெண் தொழிலாளிகளை யும் மாதவிடாய் வேளை வருத்தும். மாணவிகளைப் பொறுத்த மட்டில் பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழகச் சோதனைகளைப் பற்றிய நிரந்தர ஏக்கம், வேண்டாப் பாலின உந்தல் நிகழ்ச்சிகள் ஆகியன விளையும் காலம் இக்கால மாம். மணவினேயானது பலருக்கு இந்நோய் தோன்ருது செய்யும். புது வாழ்வும், மகிழ்ச்சியும் கண வனின் பல வகையான பாதுகாப்பும் நோவைத் தோன்ருது செய் யும். ஆனல் மணவாழ்வில் இரு வரும் மனமொத்த மகிழ்ச்சி யுடன் வாழாராயின் பலரில் இடர் மாதயிரிவு தோன்றக்கூடும். கணவன் தன் பிழையான வாழ்க்கை முறையைத் திருத்தாமல் இதற்கு வைத்தியர்களே நாடின் இது ஒரு பிழையான செய்கை Η Π (5 LD .
உடல்நலக் குறைவு இக்குறைவானது நோ உணரப்படும் நுழை வாயிலளவைக் கட்டாயமாகக் குறைத்து நோவை உண்டாக்கும். எனவே நோய்கள், உடல்நலக் குறைவு ஆகியன ஏதுக்களாக அமையும் நாட்டு மங்கை யருக்கு நல்லுணவு , புறத்து வாழ்வு, ( காற்று சூரிய வெளிச்சம் , வேலைப்பாடுகளில் ஈடுபாடு, நன் மன நிலை , இளம்வயதில் கல்யாணம் ) ஆகிய நல்ல காரணங்கள் இருப்பதனுல் இவர்கள் நோவால் வருந்துவது குறைவாகும். இத னைப் பட்டினப் பெண்களின் நோயெனக் கூறின் மிகையாகாது.
கூபக நெருக்கம் : கூபகவுறுப்புக்கள் யாதாமொரு க* ரனத் தால் கலனநெருக்கமுறின் இடர் மாதயிரிவு உண்டாகும். சோம் பல், நாற்காலி இருக்கை வாழ்க்கை, பாலின உந்தல் அடக்கல் கள் கூபகவுறுப்புக் கலன நெருக்கத்தை உண்டாககுமெனக் கூறு வர். மணவயது எய்தியும் கல்யாணம் நிகழ நீடியகாலமெடுப்பின் இவ்வகையான நெருக்கம் சிலருக்கு உண்டாகும்.
உண்மை இடர்மாதயிரிவு : இதில் நோவானது கருப்பையிலிருந்து கிளம்பும். இது அதன தசைகளின் சுருக்கங்களுடன் தொடர் புடையது. நோவானது மாதயிரிவு தொடங்க முன்னம் அல்லது தொடங்கியபின் சில ஒரைகளுக்கு உணரப்படும். அருமையா கவே இந்நோ 12 ஒரைகளுக்குமேல் நிலைப்பதில்லை. இது ஒரு *முடக்கி நோவாகும்; விட்டு விட்டுக் கொந்தளிக்கும். வயிற்று வலி' எனப் பெண்ணுனவள் கூறுவள். சிறப்பாக, கீழ்வயிற்றுப் பிரதேயத்திலும் பூப்பென்புக்கு உயர வாகவும் வலிக்கும். இந் நோ தொடைகளின் நரம்புகளால் முற்பக்கத்துக்கும் உட்பக்கத் துக்கும் மாட்டெறியப்படும் ( நெ 12. நாரி 1, 2 ). முழங்கா
 

இடர் மாதயிரிவு 227
லுக்குக் கீழாகவும் காலின் பிற்பக்கத்துக்கும் பரவுவதில்லை. கடும் நோத் தாக்கத்தினுல் மங்கை வெளிறுவாள். வியர்வை சிந்துவள். குமட்டலும் வாந்தியும் பலருக்கு உண்டு. நேர் குடல் சலப்பை, முறுக்கலும் குடற் கழிவும் நிகழக் கூடும்.
50 வீதம் மங்கையர்களில் பொதுவாகப் பக்குவமடைந்த 2 - 3 ஆண்டுகளுக்குப் பின்புதான் நோ உண்டாகும். மற்றவர் களிற் பலர் நோ சிறிதளவில் இருந்து பின்புதான் அது தாங்க முடியாத நோவாக மாறியது எனக் கூறுவர். உண்மை இடர் மாதயிரிவுயா படிப்படியாகக் கூடி, 18 - 24 ஆண்டு வயதுக்கிடை யில் உச்சநிலையையடைந்து பின்பு தணியும். இவ்வகையான நோ 25 ஆண்டு வயதுக்குப் பின்னர் தொடங்குவதில்லை . 30 ஆண்டு வயதுவரை க்கும் நிலைப்பது அரிதாம். கருப்பநிலையும் நிறை மாதப் பேறும் இந்நோவைப் பின்னர் முற்ருக நீக்கும். இது சிறப்பாகப் பேற்றுவேளேயில் கருப்பைக் கழுத்து கடும் விரிப்பு உறுவதாலாம். கருப்பநிலையில் நிகழ் கருப்பைத் தசை வளர்ச்சி யும் குருதிக்கலனமிகையும் கருப்பையை ஒரளவுக்குச் செம்மை யாக்க உதவுகின்றதுபோலும். இந்நிலைமையானது பேற்றுவேளை யில் சில சமயங்களில் நிகழும இசிப்பு ஒத்தியங்கா கருப்பைச் சுருக்கங்களுக்குக் காரணமாக அமையாது.
நோயுண்டாகும்விதம் : பல கருதுகோள்கள் உள. நோவானது கருப்பைச் சுருக்கங்களுடன் அணைந்து உண்டாகும். இடர் மாத யிரிவு நோயாளருக்குக் கருப்பை சுருக்கி மருந்துப் பொருள்களா லும் , கருப்பைக் கழுத்துள்ளும் கருப்பைக் குழியுள்ளும் செய்யும் ஆயுதப் பிரயோகத் தாலும் நோவைத் தூண்டலாம். கருப்பைச் சுருக்கங்களுக்கிடையில் ஒர் ஒத்தியங்கா நிலைமையை உண்டுபண்ணி" அடை குரு திமை நிலைமையை எய்துவித்து நோவை உண்டாக்கு மெனச் சிலர் கூறுவர். வேறு சிலர் இந்நோவானது கருப்பைக் கழுத்தின் இறுக்கநிலையால் எனவும் கூறுவர். இன்னும் சிலர் இது மாதயிரிவுக் குருதி பின்னுகக் கூபகக் குழிக்குள் வடிவதால் என வும், இன்னும் சிலர் மூளையானது கருப்பையிலிருந்து வரும் நேபச் செய்திகளை செவ்வனமாக உணராதபடியால் எனவும் கூறுவர். உளநிலைகளாலான ஏக்கம், திடுக்காடு ஆகியவற்றை உணர்ச்சியூட் டம்பெற்ற மூளைத் தொகுதியானது நோவை மிகைப்படுத்தி உண ரச் செய்யுமெனக் கருதப்படும். இக்கருத்துக்கள் அவ்வளவு ஏற் கக்கூடியனவையல்ல. ஏனெனின் கருப்பநிலை, வயது முதிர்வு ஆகி யன நிலைமையைச் சீராக்கும்.
பிறழ்வுக் கருப்பைவினை செய்கையின் காரணங்கள் : பல கருதுகே குள் உள.

Page 125
இளம்பெண் நோயியல்
1. கருப்பைக் கழுத்துத் தடை : கருப்பைக் கழுத்துக் கால் வாய் மிக இடுங்கியபடியால் மாதபிரிவுப் பொருள்கள் வெளியேறத் தடைசெய்யும். ஆனுல் ஊசிக்க ண், கூம்பு கருப்பைக் கழுத்து ஆகிய நிலைமைகளிற் பலருக்கு நோவுண்டாகுவதில்லை. இது தற் காலத்தில் ஏற்கமுடியாத கருத்தாகும். இதன் அடிப்படையி லேயே கருப்பைக் கழுத்து அகட்டல் வினையைத் தீர்வுக்காகச் செய்வர்,
2. கருப்பைக் குறைவிளைசலுயா : சிலர் நத்தையுருக் கருப்பை அல்லது நீணட கருப்பைக் கழுத்து, இந்த இடரை உண்டாக்கு மென்றும், சிலர் கருப்பைத் தசையில் நாரிழையம் மிதவிஞ்சி இருப்பதால் சுருங்கும் முறை பிறழ்வடைகின்றதென்றும் , இத ஞல் நோ உண்டாகுமென்றும் கூறுவர். இவ்வித கருத்துக்க ளுக்கு ஒரு வகையான இழையவியற் சான்றுகளோ அல்லது வேறு சான்றுகளோ இல்லே .
இசிப் பிடர் மாதயிரிவில் மிகுதியானேருக்கு க ரு ப்  ைப த் தழைக் கை செவ்வ னமாகும். இடருடைய பெண்களுக்குக் கரு ப் பையானது பருமனில் நேமவளவாகும் . இவர்கள் இளம் படு காலத்தில் பக்குவமடைந்து பின்னர் நேம மாதயிரிவுகள் உறு வர் குறைதழைப்பாலாயின் பூப்புக் காலத்திலேயே நோவுண் டாகவேண்டும். இம்முறையில் நோ உண்டாவதில்லை. கருப்பை முதிர்ச்சியடையவும் அதுதானே தோன்றுகின்றது. சான்றுகள் காட்டப்பட்டுள்ளன. குறைவிளைசலுயாவில் இடர் மாதபிரிவு தோன்றுவதேயில்லை என இழையவியல் ஆய்வுகள், நோவானது நாரிழையத்தின் தொகையில் தங்கியிருப்பதில்லையெனத் தெரிவிக் கும். நத்தைக் கருப்பையில் ( கூர்ப்பு மடிவு) ஒரு வகையான குறை, தழைப்பும் இல்லை .
ஒமோன்கள் ஏற்ற அளவுகளில் இல்லாமை : சூலிடலற்ற குருதி வடிதலில் இசிப்பிடர் மாதயிரிவு இல்லையாகும். காரணம் புருே செசுற்ருேன் தூண்டல் இல்லாத நிலைமையிலைாகும். சூலிடல் நிகழும் மாதச் சுழல்களில் மட்டுந்தான் இந்த நோ தோன்றும் முதல் ஒரிரு ஆண்டுகளில் இச்சூலிடல் நிகழாத காரணத்தினுல் தான் நோவானது அக்காலத்தில் தோன்றுவதில்லை.
தசை அல்லிசைவாக்கம் : பலர் நோவானது கருப்பைத் தசை களின் இசைந்தியங்கும் குறைபாட்டாலெனக் கருதுவர். தசை யின் தன்னியக்க நரம்பாட்சியில் ஓர் இசைவான நிலை நிலவாத படியால் பரிவுநரம்பு நார்கள் மிதமிஞ்சிச் செயற்பட்டு, வட்ட ர்களுக்கு (தொடு கழுத்தினதும் உள்வாயினதும்)அதி தொனிப்பு
 
 
 

இடர் மாதயிரிவு 229
நிலையை உண்டுபண்ணும். இவ்வகை நோவில் வருந்துபவர் தழம் பாது ஒரு மனநிலையுடையவரும் ஏனேய தன்னியக்கப் பிறழ்வு களைச் சலப்பைகளிலும் நேர் குடலிலும் உறுபவராகவும் காணப்படு வர். ஆணுல் என்ன முறையில் பிள்ளைப்பேறும் மூப்பும் இந்நோயை நீக்குகின்ற தென்பதைப்பற்றிக் கூறமுடியவில்லை.
சிலர் இந்தத் தசை இசிப்பானது ஒரு மாதயிரிவுத் தொட்சி ஞல் அல்லது இவ்வருத்தமுறும் பெண்களின் மாதயிரிவுறும் கருப் பையில் கூடிய தொகையில் பிருே ஸ்ரோ கிளான் டின்கள் தோன்று வதாலெனக் கூறுவர்.
புருே செ சுற்ருே ன் கருப்பையின் தொடு கழுத்திலும் உயர் கழுத்துப் பகுதியிலும் தசைநார்களின் தொனிப்பைக் கூட்டும். இந்தத் தொனிப்புக் கூடுதல் நிகழின் நோவுண்டாகுமெனவும் கூறுவர். கருப்பைக் கழுத்தை நிலைபேருக அகட்டல் செய்யின் நோ நீக்கப்படும். இது அகட்டிகள் கொண்டு அகட்டுவதாலும் அல்லது நிறை மாதப் பேற்றுவேளையில் அகட்டப்படுவதாலும் பெறப்படும். -
தீர்வு : (தடுப்பு) பிள்ளைகளுக்குப் பூப்படையமுன்னம் மாத யிரிவைப் பற்றியும் ஒரு வித இடரில்லாது அது நிகழ்வதற்காகிய தடுப்புமுறைகளைப் பற்றியும் புகட்டவேண்டும். உடலப்யியாசங் கள் நல்ல உணவூட்டம் , ஒரு மகிழ்வுடைய இல் வாழ்வு, மாதயிரி வைப் பற்றிய செவ்விய அறிவு ஆகியன வேண்டப்படும். மாத பிரிவு தோன்ற முன்னம் ஒரு மெல்லிய பேதி மருந்தைக் கொடுத்து மலச்சிக்கலைச் செம்மையாக்கல் நன்று.
பொதுத் தீர்வு சூழற் ( வீட்டு, புறத்து ) காரணிகளைச் செவ் வியதாக்கவேண்டும். ஊட்டவளக் குறைவு நிகழாது உடற் தேவைக்கும் அதன் விரைவான தழைப்புக்கும் வேண்டிய உண வுப் பொருள்களைப் போதிய வளவில் வழங்கவேண்டும். உடல் நோய்களுக்குத் தீர்வு பெறவேண்டும். பெண்ணின் வாழ்க்கை மூறைகளைச் சீராக்கவேண்டும். ஏனைய உடல்நலம் பேணல் முறை களைத் ( அப்பியாசம் ஆயன ) தொடர்ந்து பேணல் வேண்டும். கடும் நோவாகின் படுக்கையில் பேணல் நன்று, இந்நோவானது சிறிது காலப் பொழுதுக்குத்தான் என மனத்தென்பூட்டவேண்டும்.
பலர் இந்நாட்களில் நோரீக்கி மருந்துகளையும் இசிப்பெதிரி மருந்துகளையும் எடுப்பர். இலங்கையில் டிஸ்ப்பிறின் குளிகை கள், வலியம், பனடோல் போன்ற மருந்துக் குளிகைகளைப் பெ நம் பாலும் பயன்படுத்துவர். இவற்றை நீடிய காலத்துக்குப் பயன்

Page 126
230 இளம்பெண் நோயியல்
படுத்தல் கெடுதியை விளைவிக்கக்கூடும். சிலருக்கு டிஸ்பிறின் போன்றவை இரைப்பை அழற்சி செய்து குருதிவடிதலையும் உண் டாக்கும். பெதி டீன், மோபியா போன்றவற்றைக் கொடாதிருத் தல் நன்று.
ஒமோன் தீர்வு
சூலிடலைத் தடுத்தல் : சூலிடப்படாத மாதச் சுழல்களில் நோவுண் டாவதில்லை. உண்மையான இடர் மாதபிரிவில் சூலிடலைத் தடுப் பின் நோத் தணிப்பு நிகழும். தில் பீத்த ரோல் (300 மிகி. நாள் தோறும் ) அல்லது எதினேல் ஈத்திர டயோல் ( 0' 15 மிகி. நாள் தோறும் ) மாதச் சுழல் 5 ஆம் நாள் தொடக்கம் 21 ஆம் நாள் வரைக்கும் வழங்கின் இது மிகுதியோருக்கு சூலிடலைத் தடுக்கும். ஈத்திரசன் புருே செசற்றேசன் குளிகையை நாள்தோறும் ஒரு குளிகை யளவில் 5 ஆம் நாளிலிருந்து 25 ஆம் நாள் வரைக்கும் எடுப்பின் சூலிடல் நிறுத்தப்படும். இத்தீர் வால் வேறு கெட்ட விளைவுகள் நிகழா. இத்தீர்வு அந்த மாத நோவை மட்டுந்தான் தணிக்கும். தீர்வைத் தொடர்ந்து 6 மாதங்களுக்குக் கொடுப் பின் பின்னர் ஒரு நிலைபேருண் நோவில்லாச் சுழல்களை உண் டாக்கலாம்.
வேறு அறிஞர் ஈத்திரசன்களை மட்டும் மாதச் சுழலில் முதல் இரு கிழமைகளுக்குக் கொடுப்பர். வேறுசிலர் கருப்பைச் சுருக்க நோவைக் குறைப்பதற்காக புருேசெ சுற்ருே னைக் கொடுப்பர். ( 5 - 25 நாள் வரைக்கும் 5 மிகி. அளவில் நாளுக்கு இரு தரம் ) மேற்கூறிய இருமுறைகளாலும் பலன் உண்டாவதில்லை. நோயா ளிக்கு வீண்செலவும் தொந்தரவும் கொடுத்ததாகவே முடியும்.
அறுவைவினே முறைகன் : இவற்றை மணவினைக்கு முன்னம் நிகழ்த் துவது புத்தியல்ல. எதையும் அவசரப்பட்டுத் தீர்க்க ஆலோசளை செய்யாது செய்யவே படாது. இது உண்மையான இசிப்பிடர் மாதயிரிவோவென்றும், உளநெகிழ்வுக் காரணது களால் கூடுமோவெனவும் அறியவேண்டும். அறுவை வினைத் தீர்வு சிலருக்கு நோ நீக்கம் செய்யாது. அறுவை வினை மூறைகள் கீழ் வருவனவாகும்.
1. கருப்பைக்கழுத்தகட்டல் : இதில் கருப்பைக் கழுத்தின் உள் வாய் மட்டத்தில் தசை - நார் இழையங்களை அகட்டி அவற்றின் தொனியைக் குறைத்தல், நரம்பு நார்களும் சேதமுறுமோவென் பகி தெரியப்படவில்லை.
 
 

இடர்மாதயிரிவு
கெடுதி வினேவுகள் : கருப்பைக் கழுத்து கிழிந்து குகுதி வடித லும், தொற்றும் உறக்கூடும். உள்வாய் சுருக்க இயலாமை உண் டாகிப் பின்னர் மீண்டும் மீண்டும் கருச்சிதைவு உண்டாகக் கூடும் .
2. கூபக நரம்புப் பின்னல் உணர்வழிப்பு உள்ளேற்றல் சிலருக்கு இதனுல் பலனுண்டு. பரிவு நார் அகற்றல்வினைக்கு முன்பு இதனைச் செய்து விளைவை அறிவது நன்று.
முன்திருவென்பு நரம்புப் பின்னற் துமி இது கருப்பை இசிப்பை உண்டுபண்ணும் இயக்க நரம்புக் கணத்தாக்கங்களையும், கருப் பையை விட்டேகும் புலன்சார் நரம்புப் பாதைவழிகளையும் அகற் றும். கருப்பைக் குக் குருதி வழங்கலைக் கூட்டும். வேறு தீர்ப்பு முறைகள் பலனளிக்காதபோது இம்மூறையானது நான் துமித்த போது பல நோயாளருக்கு நோ நீக்கம் செய்தது. சிலரில் நோ நிலைமை முற்ருக மாற்ருது, நோ வேதனையை மிகவும் குறைத்து நலனைச் செய்தது,
வேறு அறுவை வைத்தியர்கள் இத் துமியானது உண்மை இடர் மாதயிரிவுயாவுக்குப் பலனளிப்பதில்லையெனக் கூறு வ ர். இவர்களின் கூற்று முற்முக உண்மையல்ல.
கருப்பையற்றல் : இளம் மங்கையர்களிலும் பெண்களிலும் இது செய்யவே படாது. நடுவயதுப்பெண்களில் வேறு கருப்பை நோய்களுடன் நோ சேர்ந்திருந்தால் கருப்பையகற்றலைப் பயன் படுத்தவும்.
இசிப்பிடர் மாதயிரிவு : சிறப்பு வடிவங்கள். 1. மாதயிரிவா னது பெரும்பாடாக இறைப்பின் கருப்பைக் குழியுள் குருதியா னது பெருங்கட்டிகளாகும். இவை வெளியகற்றப்பட முன்னம் கடும் குத்துடன் நோ தோன்றும்.
தீர்வு : குரு திவாரியை உண்டாக்கும் காரணங்களுக்குத் தீர்வு செய்யவும்.
மென்சவ்வு இடர் மாதயிரிவு : இதில் கருப்பையக வணி பெருங் கீலத் துண்டுகளாக அல்லது குழிவார்ப்பாக அகற்றப்படும். அகற் றப்பட முன்பும் அகற்றும் வேளையிலும் நோவுண்டாகும். இதன் காரணம் முற்ருக அறியப்படவில்லை. கருப்பையக வணியானது ஒமோன் தூண்டலுக்கு உணர்ச்சி காட்டாதபடியால் இது உண் டாவதாகக் கருதுவர்.

Page 127
இளம்பெண் நோயியல்
இவ்வகை இடரானது கருப்பமுறுவதற்கும் கருப்பநிலையை அடைவதற்கும் ஒரு வகையிலும் தடைசெய்யாது பிள்ளைப்பேற் றுக்குப் பின்பும் இது குணமடைவதில்லை. இதற்கு ஒரு வகை யான தீர்வும் இல்லை. சூலிடலை 1 - 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி னுல், நிலைமை திருந்துமென ஒரு சிலர் கூறுவர்.
கருப்பையின் பெரும்படியான உருக்க்ேடுக்ள் - இவற்றுடன் அணைந்து நிகழும் இடர்மாதயிரிவு பிரிசுவர் கருப்பையிலும், இரு கொம்பர் க் கருப்பையிலும் கடும் குத்து நோ உண்டாகும். இது பிறழ்வான தசையொழுங்கமைப்பால் ஏற்படுகின்றது. இதனுல் ஒவ்வொரு பக்கத்திலும் நோ தோன்றும் . ஒரு கொம்பரில் மட்டும் நோ தோன்றின் அதே பக்கத்திலேயே நோவும் தோன்றும். ஒரு கொம்பர்க் கருப்பையும், இரு கருப்பை நிலை மையும் நோவை உண்டாக்குவதில் லே. எச்ச வகைக் கொம்பர் கருப்பைக் குழி யுடன் தொடர்புரு விடின் நோவுண்டாகும். இதைக் கருப்பை யக வணியோமா எனப் பிழையாக ஊடறிவர். எச்சவகைக் கொம்பரானுல் இதனை அகற்றல் நன்று.
ஏனையவற்றிற்கு நோ தீர் வைப் பொறுத்தமட்டில், அவற்றை முன் கூறிய முறைகளில் தீர்க்கலாம்.
வழிவந்த இடர்மாதயிரிவு இது கருப்பை அகவணி வாதை, சுரப்பி-தசை வாதை, தசையோ மாக்கள் ஆகியவற்ருல் உண்டா கும். 20 வயதுக்குமேல் பொதுவாக எந்த வயதிலாயினும் கருப்பையக வணி வாதையால் ஆகக்கூடும். இளம் படு பெண் களில் புறத்துக் கருப்பையக வணி வாதையாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் கருப்பையக வணி வாதையாலும் இ டர் உண்டாகக் கூடும், 30 வயதுக்குக் குறைந்த பலருக்கு நான் கருப்பையின், கருப்பையக வணி வாதைக்காகத் தீர்வுசெய்திருக் கிறேன். கருப்பையக வணி வாதையில் நோ உண்டாகும் இட மானது நோயிருக்கும் இடத்தைப் பொறுத்திருக்கும். LDT.g இரிவு தொடங்க 2 - 3 நாட்களுக்குமுன்பு நோ தோன்றிப் படிப்படியாக வலிகூடிக் குருதிவடிதல் நிகழும் பொழுது அல்லது அது முடிவடையும் பொழுது உச்ச அளவை எய்தும். இது புறத் துக் கருப்பையக வணியானது, தானே தன்னுள் மாதயிரிவுறுவ தால் உண்டாகின்றது. நோ சில நாட்களுக்கு நிலைத்து, மாத யிரிவு நின்றபின்புதான் முற்ருக மறையும். இப்பொழுது புறத் துக் குருதிவடிதல் அகத்துறிஞ்சப்படும்.
தீர்வு : கருப்பைய கவணி வாதைக்குரிய தீர்வு. இத்தீர்வு முறையானது அதன் பரவல், தோற்றிடம், அறிகுறிகள், நோயாளி
 
 
 

இடர்மாதயிரிவு 233
யின் வயது ஆகியவற்றில் தங்கியிருக்கும் சிறிய நைவுகள் உண் டாகின், அவற்றுட் பல காலப்போக்கில் அவிந்து ஒழிந்துவிடும். கருப்பநிலை உண்டாகின், சிறிய நைவுகள் இற்றுப்போம். சூலகக் கருப்பையக வணிச் சிறைப்பைகளைச் சூலகங்களுக்குக் கெடுதி விளைவிக்காது வெட்டி அகற்றலாம். கூபகக் குழியுள் உள்ள வையும், கருப்பைத் திருவென்பு இணையங்கள். நேர் குடல் (3 tri filo - 6gf) , t oj , t. 9) f) 532 rj*. கொப்பூழ்க்கீழ் , டக்கில சுப் பொக் கணம் ஆகிய இடங்களில் உள்ளவையையும் அகற்றவேண்டும். வயது மிக மூத்தோரில் கூபகத்திலும், கருப்பையிலும் பரவலாக நோயிருப்பின் சூலகங்களேயும் கருப்பையையும் அகற்றல் செய்ய வேண்டிவரும். இதற்கு ஏனைய ஒமோன்தீர்வு முறைகளும் உண்டு. இவை சிறிய பரவலான நைவுகளுக்குப் பயன் ம்ெ. ஆணுல் பெரும் நைவுகளுக்கும், மிகப் பரவலான நைவுகளுக்கும் இவை பயன்படா. புருேசெசுற்ருேசன்களையும் பயன்படுத்துவர். இதனைப் புருே செசுற்முேன்-ஈத்திரசன் கூட்டாகவும் அல்லது தனிப் புருே செ சுற்ருேனுகவும் கொடுப்பர். அந்திரசன்களும் பயன்படும். ஆணுல், நீடியகாலத் தீர்வுக்கு இவை பயன்படா.
நெருக்கம் உண்டாக்கும் காரணங்களாலாகிய இடர் மாதயிரிவு : இது பல காரணங்களால் அதாவது கூபக இழையங்கள் வீக்கமுறுவ தால் உண்டாகும். மாதயிரிவு தோன்ற 2-3 நாட்களுக்கு முன்பு நோவுண்டாகும் அல்லது நிலை யாக சிறிய நோ அல்லது நாரி வலி இருக்கும். சிலரில் இது உச்சநிலையை அடைந்து நோயாளிக்குக் கடும் நாரி வலியையும் அடிவயிற்று நோவையும் உண்டாக்கும். பின்பு மாதயிரிவு தோன்றவும், நோவும் வலியும் திடீரெனக் குறையும். அவள் நற்சுகநிலையில் இருப்பது இந்நாட்களிலே யாகும். மாதயிரிவும் பெரு வாரியாக இருக்கும்.
ஏதுக்கள் : பெரும்பாலும் கீழேதரப்பட்டுள்ளவையே ஆகும்
1. நாட்பட்ட கரு ப்பைக் குழாய் - சூலக அழற்சி.
2. அகலிணைய நாள விரி பருக்கம்.
வீட்டு இடர்கள் சோம்பல் வாழ்க்கை, கல்யாணவில்லங்கங்களும் பாலுறவு இடர்கள் என்பவற்றிலும் , மன நெகிழ்வுக்காரணங்களாலும் இது உண்டாகும்.
தீர்வு : காரணத்தைப் பொறுத்துத் தீர்வு அளிக்கப்படும். கூடக உறுப்புக்களில் நைவுகள் காணப்படின் அவற்றை அகற்றல்
நன்று. மற்றைய உளம் காரணமான பிறழ்வுகளுக்கு உளத் தீர்வு முறைகளைக் கையாளவும்.

Page 128
24 இளம்பெண் நோயியல்
1. சூலகங்களாலாகக் கூடிய நோ 3 மஞ்சட் சடலத்துள் உறும் சிறிதளவு குருதிவடிதல் நோவையுண்டாக்கும். இது தன்னியலில் நிகழும் வடிதலாகும் முயக்க வேளையில் இது உண்டாகி நோவை புண் டாக்கியதை நான் பலரில் கண்டுள்ளேன். கண்டிய நடனம் செய்யும் ஒரு மங்கைக்கு இவ்வடிதல் நடன வேளையில் திடீரென நிகழ்ந்தது. சிறிதளவு மாதயிரிவுக் குருதியானது கருப்பைக் குழாய் வழியாக கூபகக் குழிக்குள் வடியின் நோவுண்டாகும். குடல் வால் அழற்சியென பொது அறுவை வைத்தியர்கள் ஊடறிவு செய்து வயிற்றைத் திறக்கும்பொழுது இவ்வுண்மை நிலைமை களேக் கண்டனர். இந்நிலைமைகளில் சூலகங்களே அகற்றவே படாது.
அறிகுறிகள் மாதச் சுழலின் இரண்டாம் கிழமையில் தோன் றும் நோயாளி அடிவயிற்றில் நோவுண்டெனக் கூறுவள். குலகம் சிறிதளவு பெருத்து நொய்மையாக இருக்கும். சில நாட்களுக்கு
பார்வையில் வைத்திருப்பின் அறிகுறிகள் மறைந்துபோகும்.
2. சூலிடல் நோ : ( இசிப்பு நோ ) 90 உக்கு 45 - 50 பெண்களில் மாதச் சுழலில் 10 - 14 நாள் மட்டில் அடிவயிற்றில் பக்கப் புடைதாங்கிப் பிரதுே யத்தில் நோ தோன்றும் நோ வானது தோன்றி 12 - 24 ஒரைகளுக்கு நிலைக்கும். அது சிறி தளவிலாகும். இந் நோவானது சிலரில் குவிடலுக்கு முந்தியும் வேறு சிலருக்கு அதைத் தொடர்ந்தும் நிகழும்.
இந் நோவுண்டாகுவதற்கு உரிய காரணங்கள் கீழ்வருவன.
1. குலகப் புடகத்தில் ( கிராபியன் ) அல்லது சூலகத்தில் 9.17. It நெருக்கம். (2) பரிவிரியம் ஆனது புடகத்துப்பிறுநீரால் அருட்டப்பட ல் , (3) கருப்பையும், கரு ப்பைக் குழாய்களும் இவ்வேளையிற் சுருங்கல் (4) கூடகக் கோலன் குடல் அல்லது சீக்கம் ஆகியவற்றின் தசைகள் பிடிப்புறல்,
தீர்வு : இதற்குத் தீர்வு தேவையில்லை. இதனைப்பற்றி நோயா ளிக்கு விளக்கம் கொடுப்பின் அவர் தீர்வை வேண்டார். சூலிட லேத் தடுப்பின் நோவுண்டாகாது.
இடர் மாதபிரிவுயாவுடன் பல வயிற்றுநைவுகளும் நாரியாகூபகவென்பு நோய்களும் அணேந்து நிகழக்கூடும்.
1. கோலோன்குடல் நோ - மலச்சிக்கல், ஏனைய குடல் நோய்களுt பக் குழியுறுப்புக்களுடன் தொடர் புறின் நோவுண்
LIT GU I i.

இடர்மாதயிரிவு 235
2. நாரி நோவைக் கொடுக்கும் நாரிய நோய்களும், நாரி இணையவழற்சியும், தசை நோக்களும் நோவையுண்டாக்கும்.
மாதச் சுழல் மாற்றங்கள் நிகழும்பொழுது நாரிய இணையது களும் கூபக இணையங்களும் மென்மையடைந்து தம்வலிவில் குறை வடையக்கூடும். நோயாளியின் உடல் நிறையும் மாதச் சுழலின் பிந்திய இரு கிழமைகளிற் கூடும். நாரிய, கூபக இணையங்கள் நலிந்திருப்பதால் சிறிய கூடுதலான உடல் நிறையைத் தாங்க முடியா நிலை எய்தக் கூடும். மாதச் சுழலானது பிந்திய இரு இழமைகளில் உடல் நிறை கூடாமலும் மலச்சிக்கல்லில்லாமலும் இருப்பதற்குத் தீர்வு முறைகளைக் கையாளவேண்டும். (நீர், உப்பு உணவு ஆகியவற்றைக் குறைத்து பேதி மருந்துக்களை உட்கொள் ளல் நன்று. )
ஏனைய மாதயிரிவுத் தோற்றப்பாடுகள்
1. முன் மாதயிரிவுக் கொந்தளிப்பு - சாரகத் தோற்றப்பாடுகள்: தற்காலத்தில் இலங்கையில் பட்டினப்புறங்களில் 30 - 45 வய துக்குட்பட்ட பெண்களிற் பலர் இம் முன்மாதயிரிவுக் கொந் குளிப்பால் வருந்துவர். நாட்டுப் புறப் பெண்கள் அவ்வளவு வருந்துவதில்லை. இவர்களுக்கு வாழ்க்கை வில்லங்கங்கள் மிகக் குறைவாகும். இவர்கள் நல்ல இல் வாழ்வு, நல்ல அறவாழ்வு எனக் கருதி தங்கள் குடும்ப வாழ்க்கையைச் சீராக்கி மகிழ்வுடன் வாழ் கின்றனர். தெய்வ நம்பிக்கையுடையவர்கள், வீண் நேரங்களில் கோயில் யாத்திரை, புராணப் படிப்புக்கள் கேட்டல், அக்கதை களிலிருந்து அறிவுபெற ல் , தம் வில்லங்கங்களுக்கு ஒரு தீர்வு பெறல், கணவனின் அன்பு, பிள்ளேகளின் அன்பு, தம் சமூகத்தின ரின் அன்பும் மதிப்பும் பெற்று திருப்தியுடன் வாழ்வர். குடும்ப வாழ்க்கைக்கும் ஒப்புரவு வாழ்க்கைக்கும் ஏற்ப மகிழ்வுடன் இயைந்து வாழ்வர். மாதயிரிவையும் ஓர் இயற்கை நிகழ்ச்சி யெனக் கருதுவர். இவ்வகையான மக்கள் முன்மாதபிரிவுக் கொந் தளிப்புத் தொந்தரவுகளுக்கு உட்படுவதில்லை. நோய்தீர் சாரகங் களில் இவ்வகையினரைக் காண்பதரிது. இவர்கள் உளக் குழப் பங்களால் வருந்துவதும் குறைவாகும். இவ்வகையான வாழ்க்கை முறையில் இவர்கட்கு மாதபிரிவு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நன் னிகழ்ச்சியாக அமையும்.
நகரப் புறத்து மக்களைப் பொறுத்தமட்டில் நிலைமை நேர் மாரு னது. சிலர் மாதயிரிவு அவர்களின் வாழ்க்கைக்கு ஒர் இடைஞ்சல் எனக்கரு துவர். இவர்கள் பாலின வாழ்க்கைச் சூழ லில் வாழ்பவர். நகரப் புற மங்கையரையும் பெண்களையும் கவ

Page 129
236 இளம்பெண் நோயியல்
னிப்பின் பலர் உள நன் னிலையும் இதஞல் விளையும் உடல் நன் னிலையும் பிறழ்வுற்றவராகக் காணப்படுவர். பொதுத் தெரு ப் பேச் சில் எத்தனே கோணங்கிகள், அப்பா! ஒவ்வொரு வரும் வெவ்வேறு மனப்போக்கும், வெவ்வேறு உடையணிகளும், வெவ் வேறு நடைப்போக்கும் வெவ்வேறு தரக் கல்வியறிவும், உடைய வராய் பல்வகை உந்தல்களால் இன்புற்று அலை வதைக் காண் கின்ருேம். இவர்களின் குடும்ப வாழ்க்கையும் இத்தகையதே. அவர்கள் எதிர்பார்த்த குடும்ப இன்ப வாழ்க்கைக்குப் பல இடர்கள் உண்டாகின்றது. அவையாவன குடும்பச் சண்டைகள், கரைவன் சினேவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள், பண்பாட்டுக் குறைவுகள் ஆகியனவும் எதிர்பார்த்த விளைவுகள் நிகழாமை, இதற்கு பதிலாக ஏமாற்றங்கள் பணக்குறைவு, வீட்டு வசதி வில்லங்கங்கள், உணவுக்குறைவு, வேலைக் குறைவு, உறவினருடன் மனநிலையைக் குழப்பும், இத் தொந்தரவுக்களுற்றவர்களுக்கு மாத யிரிவும் ஒரு தொந்தரவாகும். சிலர் தம் உள உடற் தொந் தரவுகள் எல்லாவற்றையும் மாதயிரிவின் மேல் சுமத்திவிடுவர். பொதுவாக மாதியிரிவுக்குமுன் நிகழ்ந்த சில உள. உடல் நலக் குறைவைப் பெரிதாக்கி ஒர் உள-உடல் கொந்தளிப்பு நிலையாக எண்ணி வருந்துவர் ( முன் மாதபிரிவுக் கொந்தளிப்பு)
சாரகக் குறிப்புக்கள் : தற்காலத்தில் பட்டின் பெண்கரு கும், நாட்டுப்புறப் பெண்களுக்கும் பல தொழில் வாய்ப்புக்கள் உள. ஆசிரியர்களாகவும், அரசாங்கப் பெருந்தினைக்க (I யோகத் தர்களாகவும், பொறியியல் நிபனர், வைத்தியம், அரசியல் ஆகிய துறைகளிற் பணியாற்றுவத ற்கு உள்நாட் W է : வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புத் தேடுகின்றனர் இதற்காகிய சோவிகள் பலவாகும். மற்றைய பெண்கள் கமத்து வாழ்வில் வெறுப்புண்டு, நீடிய கால மாணவிகளாகவும், நலம் பேணிகளா கவும் ஆசிரியர்களாகவும் சிறிய அலுவலகங்களிலும் புனிசின்ே களிலும் பணியாளர்களாகவும் தொழில் ஆலைகளில் பெண் தொழி லாளிகளாகவும் வருவதற்கு மிகவும் முயற்சிக்கின்றனர். இவற் றிற்காக நீடிய காலத்துக்குக் கல்விபயில்வர். சோதனைகள் எடுப்பர். அத்துடன் கல்யாணம் செய்வதற்காக சமூக வொழுங்குக்கமைய உகந்த மாப்பிள்ளையையும் தேடிய வண்ணமிருப்பர். மிகப் L}ff இதில் தோல்வி காண்கின்றனர். இவ்விரு சாராரும் இளம்வயதுக் கணுக்கள் எண்ணங்கள் எல்லாம் வயது கழிந்தும் கைகூடாநிலையில்
பிற்காலத்தைப் பற்றிக் கடும் ஏமாற்றமும் ஏக்கமும் உறுவர் 30 - 45 வயதுப் பெண்களில் இம் மனக் கொந்தளிப்புக் குறிகள் தோன் றும். கல்யாணம் பண்ணினவர்களும், குடும்பப் பொறுப்புக்கள், கடமைகள், பூசல்கள் ஆகியவற்றைத் தாங்கமுடியாநி3
ாங்கமுடியாநில பெய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடர்மா தயிரிவு 岑岛?
துவர். அவர்களுக்கும் சேர்ந்த குடும்பத்தினருக்கும் நோய், பிள் ளைத் தொந்தரவுகள், கணவன் தொந்தரவுகள், வறுமை, தொழில் வாய்ப்பின்மை, உணவுக் குறைவு, இடவசதிக் குறைவு ஆஇ வில்லங்கங்கள் இருப்பின் இவை நிகழக்கூடும். சிலர் பிறக்கும் பொழுதே மனத் தென்பற்றவர்களாகக் காணப்படுவர். இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பித்துநிலையையும் அடையக்கூடும். இவை யெல்லாம் மாதவிடாயுடன் தொடர்புற்று முன்மாத அறிகுறி களின் கொந்தளிப்பை உயர்த்தும். எனவே இவை மாதபிரிவுடன் பொதுவாகக் கானப்படும்; சிறிய (மெல்லிய ) உடல், உளக் குழிப் பங்களைச் சுருக்கிக் கூறுவோம். இவ்வகையாக நூற்றுக்கு 20 பெண்கள் மட்டில் இக் குழப்பங்களால் வருந்துவதில்லை. பெரும் பாலும் σιέ σ5) με அடையாதவர்களும் 97 வீதம் மட்டில், இவற்
முல் வருந்துவதில்லை. குழப்பங்களின் தாக்கத்தின் உரம் பெண் சீனப் பொறுத்திரு க்கும். அவள் மாத பிரிவை எ வ்வகையில் நோக்
ன்ருள் என்பதிலும் எவ்வளவில் தன் நேம வாழ்க்கையை
லும் தங்கியிருக்
அது பாதிப்புச் செய்யாமல் நடத்துகிருள் என்பதி கும். மிகவும் மின் வலிவு குறைந்தவர்கள் மாதபிரிவைப் பற்றி μή ο ή σαρ றுவர். பொதுவாகக் காணப்படும் முன்மாதயிரி வுக்குழப்பங்களாவன சோம்பல், இளைப்பு, நலன் குறைவு,
ஓ, இலகுவில் :னக் கிளர்ச்சி, மன அருட்டல்நிலைமை, முலேகள் விம்மி தொய்மையடைதல், மனக் குவிவு செய்ய இயலாமை, டச் செயற்பாடுகளிலும் உடற் செயற்பாடுகளிலும் காட்டப்படும் గ్స பற்றிறன் }}} ஆகியன. மாதபிரிவு தோன்ற பகத்துள் பார் சி புண்டாகும். நாரி நோவும் தோன்றும் பருக்கள் தோன்றக்கூடும். உடற் பாரமும் கூடும். இந்நிலைமைகளினுற்ருன் பெண்கள் பழைய வழக்கமான விட்டுவிலக்கு மறியல் பழக்கம் வந்ததுபோலும், மேலே கூறப்பட்ட அறிகுறிகளும் குறிகளும் மிகைப்படுத்தப் படும். சிலரின் கால்களும் வீங்கும். பெண்ணுக்கும் தன் மனநிலை மாற்றம் அடைகின்றதென்பது தோன்றும். மேலே கூறப்பட்ட எல்லா அறிகுறிகளும் ஒரேயளவில் மிகைப்படுவதில்லை. சிலருக் தக் கன்னஇடியும் வேறு சிலருக்கு எழுமியும், இன்னும் சிலருக்கு மலே நோவும் உண்டாகும். முன் மாதபிரிவுக் கொந்தளிப்பால் வருந்துபவர் கூடுதல் வேலைகளில் ஒபாது ஈடுபடுவர். வீட்டைத்
முன்னம் :
துடைப்பர், துலக்குவர், கணவன், பிள்ளைகளில் பிழை காண்பர். எல்லாக் காரியங்களைப் பற்றியும் வேண்டா யோசனையும் அச்சு மும் கொள்வர். கணவன், பிள்ளைகளுக்கு அவளின் நிலைமை விளங்காதபடியால் மாதம் தோறும் வீட்டில் சச்சரவும், பூசல் களும் நிகழும். இவை மேலும் நிலமையைக் கேடுறுத்தும். இவ ளுக்கு என்ன பைத்திய மோவென்று கணவன் கூறுவர். பிள்ளை கள் அம்மா, தங்கள் மேல் கோபமுறுவாள் என்றும் மொழிவர்

Page 130
238 இளம்பெண் நோயியல்
இந்நிலைமைக்காகிய காரணங்கள் பல கூறப்படும். ஒன்று பரியக டபித்துயித்தறிக் குழப்பத்தாலென்பர். வேறு அறிஞர் தொட் இன் தள் அலுடொசுதத்ரோன், விற்ற மின்கள் ஆகியன தான் காரணமென ஊகிப்பர். உண்மைக் காரணம் தெரியப்படவில்லை.
பெண் ணின் மனநிலையை விளக்குவதற்காகவும் பின்னர் உளத் தீர்வும், புத்தி மதிகளும் கூறி மனத்தைத் தென்படுத்துவதற்காக வும் நிலைமை சிறிதளவில் விரித்துக் கூறப்பட்டது.
தீர்வு: இத்தீர்வில் நோயுண்டாக்கும் சூழற் காரணிகளை முக் கியமாகச் செம்மைப்படுத்த வேண்டும். வயதும் அனுபவமுமுடைய ஒரு குடும் பதாரியாய் பிள்ளைகளுடன் இன்பமாய் வாழ்ந்த பெண் ணுேயியில் வைத்தியனுக்குப் பல காரணிகள் விளக்கமுறும். பெண்ணின் வில் லங்கங்களைப் பற்றியும், ஏக்கம் , தொந்தரவுகள், குடும்பவாழ்க்கை ஆகியவற்றைப் பற்றியும் அனுதாப உணர் வுடன் கேட்டு விளங்கவேண்டும். கல்யாணமாகாத மங்கை யாகின் அவளுக்கும் அவளின் பெற்ருேர் க்கும் அல்லது அவள் கல்யாணம் ஆகியவளாயின் அவளுக்கும் அவளின் கணவனுக்கும் அவளின் நோய் பற்றிய தெளிவான விளக்கம் கொடுப்பது நன்மையாகும். பெண்ணுனவள் தன் உள்ளார்ந்த சக்தியை மிஞ்சி தொழிலிலும் குடுப்பக் கடமைகளிலும் மனக்கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டால் அவள் மனம் உடைவுறக் கூடும். எனவே அவளின் வீட்டு வேலைப் பாடுகள், குடும் பக் கடமைகள் எல்லாம் அவளின் சக்திக்கு இயைபாக அமைக்கப்படவேண்டும். இதில் அவளுடன் தொடர் புடைய குடும் பத்தினரின் ஒத்துழைப்பு வேண்டும். போதிய நேரத்துக்கு இரவில் உறங்கவேணடும். பகலில் 2 - 2; ஒரை களுக்குத் துயில் கொள்ளல் வேண்டும்.
நிறைமிகையைக் குறைத்தல் : இதற்கு மாத பிரிவுக்கு 7 - 10 நாட்களுக்கு முன்னமாகவே உணவில் சோடிய உப்பின் அளவை மிகவும் குறைக்கவேண்டும். நீர் உட்கொள்ளலையும் குறைக்க வேண்டும். ஒரு மெல்லிய பேதி மருந்தைக் கொடுத்து ( சென் ஞக்குளிகைகள் ஆகியன ) மலத்தை இளக்கிப் போக்குவிக்க வேண்டும். அறிகுறிகளிலிருக்கும் பொழுது பெண் வரு வாளாகில் குளோற தய ைசட்டை 0. 5 - 1.0 கிராமளவில் கொடுத் கும் அல்லது மேற்கூறிய ஊடுற்றிகளைக் உள்ளேற்றல் செய்தும் ஊறு நீரைப் போக்கல் செய்யவேண்டும்.
ஒமோன்கள் ஏனைய தீர்வு முறைகள் இக் கொந்தளிப்பை தீர்க்காதாகின் புருேசெ சுற்றமுேன் நல்விளைவை உண்டாக்கும். இதற்கு எதி சுற்றேனே 30 - 50 மிகி அளவிலும் அல்லது டுபா

இடர் மாதபிரிவு 339)
சுற்றேன் ( டைஐதரோ சுற்றருேன் ) 10-20 மி.கி. அளவிலும் நாள் தோறும் முன் மாதயிரிவுக் காலக்கூறில் 7 - 10 நாட்களுக் குக் கொடுக்கவும். ஏனைய புருேசெசுற்றருேன்கள் உப்பை தேக்கம் செய்யும்.
நடுநிலையாக்கி மருந்துப் பொருள்களும் உளம் கிளர்த்தும் மருந்துப் பொருள்களும் உளம் தழும்பல் நிலைமைகளில் சிறிய எடைகளில் பீனுேபாபிற்றேன் இறிசேப்பின், குளோர் புருே மன்ே, ஏனைய இவைபோன்ற பீைேதயசீன் பொருள்களையும் ஏனைய நடுநிலை யாக்கிகளையும் சில நாட்களுக்கு மாதபிரிவுக்கு முன்னம் கெர்டுக் கவும். மனவ மிழ்வு நிலைமைகளில் அம்பிற்றமீன், வலியம், ஆகியன கொடுப்பர். இவை மருந்துககு அடிமை நிலைமையை உண்டாக் கக்கூடும். வியாபார மருந்துப் பொருள்களாக மேற்கூறப்பட்ட எல்லா மருந்துப் பொருள்களும் உண்டு.
மாதயிரிவுக் கன்னவிடி
சாரகக் குறிப்புக்கள் : பெரு ப்பாலானுேருக்கு இவ்விடிகளின் தாக்கம் மாதபிரிவுடன் அணேந்துநிகழும். இதற்கு மு ன்னமாக வும் அல்லது உடனுயும் நிகழும். உண்மையான மாதயிரிவுக் கன்ன இடி எப்பொழுதும் மாதபிரிவு வேஃாயில் நிகழும். இந்நோய் அடிக்கடி ஒரு குடும்ப வழிநோயாகும். இடியானது ஒரு குறித்த இடத்தில் அடிக்கடி குமட்டல் வாந்தியுடன் உணடாகும். மிகவும் உரமாயின் பெண்ணைச் சோர்வடையச் செய்யும். கருப்பநிலை இதைத் தோற்ருது செய்யும். ஆனல் பால் சுரப்புக்காலத்தில் அது மீண்டும் தோன்றக் கூடும். மாத விடைவுக் காலத்தில் அது 9P(b மாதவிடைவுக்கால இடராகத் தொடர்ந்து இருக்கக்கூடும். இதன் காரணத்தைப் பற்றித் செவ்விதமாகத் தெரியவில்லை. பல காரணங்களேக் கூறுவர். அவையாவன பித்துயித்தறிச் சுரப் பியின் வீக்கம், மூளை நெருக்கமும் வீக்கமும், மண்டையக அழுத்த உயர்வு, செருேற்றினின் இடத்துத் தோற்றல், மூளை யடை குரு திமை, உளவியல் காரணிகள் ஆகியனவாம். பலர் அது இடத்துக் குருதிக்கலன மிகையால் அல்லது சோடியம், பாயி ஆகியவற்றின் அடக்கல் அளவினது மாற்றங்களால் உண்டாகின்ற தென்று கரு துவர். இது சிறப்பாக மிக இனப்புற்றவர்களிலும் அல்லது மித விஞ்சிய வேலைப்பாடுகளில் ஈடுபடுபவர்களிலும் மனவேதனை களால் வருந்துபவர்களிலும், கடுமையாகச் சுருட்டுப்புகைப்பவர் களிலும் தோன்றும். கன்னஇடியை உண்டாக்கக்கூடிய ஏ னேய காரணிகளே தவிர்க்க வேண்டும்.
தீர்வு : முன்மாதயிரிவுக்காகிய அதே தீர்வு முறைகளேயாகும். கன்ன இடிக்கு கோடேயின் , அசுபிறின் அல்லது பெனுசிற்றின் ஆகியவற்றைக் கொடுக்கவும். இருட்டித்த அறையில் படுத்தல்

Page 131
240 இளம்பெண் நோயியல்
செயற்கை மாதவிடைவை உண்டாக்கவேபடாது. இது நிலை மையை மேலும் கேடுறுத்தும் .
முன்மாதயிரிவு முலே நோவுயா - சாரகக் குறிப்புக்கள் : மு ன் மாத யிரிவுக் காலத்தில் மிகுதியானுேருக்கு முலைகள் சிறிதளவில் வீங்கி நொய்மை யடையும். ஒருவிதமான சிலிர்ப்படையும். இவை மிகைப்படின், இது முன்மாத பிரிவுக் கொந்தளிப்பொருங்கோட்டி யின் ஒரு குறியாகும். முலே கள் கொம்மி, கட்டிகளுறும். நொய் மையுமடையும். இவ்வகையான தோற்றம் பெரும்பாலும் சூலிடல் மாதபிரிவில் தோன்றுவதுபோலாகும். முலைகளின் தோற்றம், பருமன், ஆகியன இரு பக்கங்களிலும் ஒரே மாதிரியில்லாத படி யால் நோவின் அளவும் ஒரு பக்கத்து முலையில் கூடியதாயிருக் (3) D.
உளவியல் மாற்றங்கள் : இந் நிலைமையின் உரமான தோற் றம் பிள்ளைப் பெருத நடுவயதுப் பெண்களில் காணப்படும். இவர்களின் மணவாழ்வு, பல வாழ்க்கை ஏமாற்றங்கள் அடைந்த வாழ்வாம். மனக் கொந்தளிப்பும் சேர்ந்து காணப்படும். கான்சர் ஏற்படுமோ என்ற அச்சமுண்டு முலைகளின் கொம்மல் , சுரப்பி களின் மிதவிஞ்சிய செயற்பாட்டாலும், சுரப்பியிடையிழையங்கள் நெருக்கமும் எழுமியும் உறுவதாலாம்.
தீர்வு கான்சர் நோய்யல்லவென்று அவளுக்கு மனத் தென்பு அளிக்க வேண்டும். மு லேகள் செவ்வையாகவும் அழுத்தமுறுத்தா விதத்திலும் தாங்கப்பட வேண்டும். உரைவில் நீரும் உப்பும் தவிர்க்கப்பட வேண்டும். -
ஒமோன் தீர்ப்பால் பயன் விளையாது. நிலைமைமேலும் கேடு றக்கூடும். ஈத்திரசன்கள் மேலும் நிலைமையைக் கேடுறுத்தும். ஆகவே இவ்வகை ஓமோன் தீர்வை தவிர்க்கவும்.
முன்மாதபிரிவுக் கொந்தளிப்புக்கு அளிக்கும் தீர்ப்பை அளிக் கவும்.
மாதச் சுழலில் வாயும் வல்வமும் புண்ணுதல் : மீண்டும் மீண்டும் வாயினுட்பக்கத்தில் புண்கள் தோன்றும் . சிலவேளைகளில் சுமல் முறையில் மாதவிடாயுடன் இது தோன்றும். இவை மாதச் சுழல் நடுப் பகுதியிலும் அல்லது மாத பிரிவுக்கு முன்னமும் தோன்றும். மாதயிரிவுக்கால வேளையில் மாறு ம் அல்லது அதன் பின் மாறும். கருப்ப காலத்திலும் பால் சுரப்பு காலத்திலும் மறைந்து பின்னர் முன்போல் தோன்றும். இந்த நைவுகள் கணுக்களாக அல்லது

இடர் மாதயிரிவு 24 Α
புன் சிம்பிகளாகத் தொடங்கி பின்னர் உடைந்து மிகவும் நோ வுடையதளப் (ஆழமற்ற) புண்களாகும் . இவற்றிற்கு ஒரு மஞ்சள் கழறியும் செம் கரையுமுண்டு. இவை தனியன்களாக அல்லது கூட்டமாகக் காணப்படும். 1 ச.மீ விட்டமும் வட்ட வடிவமும் உடைய புண்களாகத் தோற்றும் . சிலரில் இப்புண்கள் மாதயிரி வுடன் யாதாமொரு தொடர்பும் இல்லாது அடிக்கடி தோன்றி மறையும். இதன் காரணங்கள் அறியப்படவில்லை.
ஒரு வகை வைரசுவால் உண்டாகும் அக்கியெனவும், இது ஓர் அலசை விளை வெனவும், ஓமோன்களாலாகிய விளை வெனவும், வாய்ச்சீழ்க் கிருமிகளால் உண்டாகும் என்றும், உளவியல் மாற் றங்களாலென்றும் பலவிதமாகக் கருதப்படும்.
தீர்வு பொதுத் தீர்வு முறைகளைக் கையாளவும், எல்லாக் கூறுகளையும் அடக்கிய விற்றமின்களையும் கொடுக்கவும். உணவுக் கூறுகளும் ஏற்ற அளவில் இருக்கவேண்டும். உயிரெதிரி மருந் துப் பொருள்களும் , ஒமோன் பொருள்களும் பயனற்றவை. அலசை விளைவுக்கு கோட்டிசோன் நன்மை பயக் கும்.
இடத்துச் சீழெதிரிகள்: ஐதரசன் பரஒட்சைட்டால் கழுவலும் ஒரு வித சில்வர் நைற்றேற்ருல் இடத்து இடுதலும் அல்லது அரை வித சென்சன் ஊதா அல்லது 'திரவ-பென்சோயின் இடத்து இடுதலும் நோவைத் தீர்க்கக்கூடியவை. இவை புண்கள் மாறவும் 후 56L이
வேற்றிட மாதயிரிவும்(நாசிக்குருதி வடிதல்)மாதச்சுழல் குருதிநெஞ்சறையும்
குருதி நெஞ்சறை ஆனது அருமையாக மாதயிரிவுக் காலத்தில் தோன்றும். பலரில் வேற்று நோய்கள் இதற்குக் காரணிகளாக இருக்கக்கூடும். இவற்றில் புறத்திடக் கருப்பையக வணி வாதை யும் ஒன்ரு கும். அறிகுறிகள், மாதயிரிவு நின்றவுடன் குறைந்து மறைந்து போகும்.
இவ்வகையில்வேறு பல நோய்களும், மாதயிரிவுக் காலத்தில் மட்டும் தோன்றும் . இவற்றையும் மாதயிரிவுக் காரணிகளால் எனக் கருதக் கூடாது.

Page 132
இயல் 15.
பாலின உந்தல்களும் மணம்புரிதலும்
மனிதனின் அடிப்படை உள்ளார்ந்த உந்தல் இயல்புகளில் ஒன்று பாலின உந்தலாகும். எவ்விதமாக பசியைத் தீர்ப்பதற் காக உணவுத் தேட்டத்தில் ஒருவர் உந்தப்படுகின் ருரோ அதே முறையில் பாலியல்பு முதிர வும், எதிர்ப்பாலின வகுப்பினரைத் தம் இனம் பெருக்கும் நோக்குக்காகத் தேடுவர். (இலங்கையில் பிறர் தேடிக் கொடுப்பர்).
இந்த இயல்பு மனித இனத்தில் ஒவ்வொருவரிலும் மிகவும் வலிவாக அமைந்திருக்கின்றது. இந்தத் தேட்ட உந்தலானது ஒரு வன் அல்லது ஒரு த்தி நடத்தையில் அத்துமீறி நடக்காமல் இருப்பதற்காகப் பல சூழற் கட்டுப்பாடுகளும், சமூகப் பழக்க வழக்கங்களும் ஒழுக்க நீதிகளும், அரசுச் சட்டங்களும் உண்டு. ஒவ்வொரு சமூகமும் மணம் புரிவதற்குரிய காலக் கூறைத் தம் கூட்டத்தினருக்கு வரையறுத்திருக்கும். சமூகத்துக்குச் சமூகம், ஒரு வன் ஒரு த்தியை மட்டும் , ஒருவன் பல பெண்களே மணம் புரியும் மக்கட் கூட்டமும், ஒரு த் தி பல ஆண்களை மணம் புரியும் தொகுதியினரும் இன்னும் வெவ்வேறுவகை மணம் புரியும் முறை களும் இப்பரந்த உலகத்திலுண்டு. இலங்கையைப் பொறுத்த மட்டில் பல வகை மக்கட் கூட்டத்தினர் இத்தீவில் வசின்றனர். தமிழ் மக்களுள் மிக மேம்பட்டு நிலவும் முறை ஒரு வன் ஒருத்தியை மனம் புரியும் முறையாகும். ஒவ்வொரு இனத்தவரும் தமது முறையையே இந்தப்பாலினத் தேட்டத்தைத் தீர்வு செய்வதற்கும் , கட்டுப்படுத்துவதற்கும் ஒரு பண்பான முறையெனக் கரு துவர். ஒரு சமூகம், தனது ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் மேலோங் கச் செய்து சீராக்குவதற்கு இந்த உந்தல்களைத் தீர்ப்பதற்காகிய சமூக வாழ்வையும், வீட்டு வாழ்வையும் கூடிய கவனத்துடன் சீராக்கும்.
இது இளம் படு குழந்தைப் பருவத்தில் தோன்றும். சிறு பெண் குழந்தைகள் தம் உடையணிகளிலும், தோற்றத்திலும் கவனம் செலுத்துவர். பின்னர் ஒரு வித பா லின விருப்பமும் காட்டாது இளமங்கைப் பருவத்தை அடைவர். இக்காலத்தில் இளம் மங்கையானவள் தன் வயதுப் பிள்ளைகளுடன் அல்லது பெண் களுடன் விருப்பங்கொண்டு பேசியாடித் திரி வள். ஆணும் இதே விதமாக இளம் விடலைப்பருவம் அடையும் தன்வயதுக்குக் கூடிய இளம்காள்களுடன் அல்லது இளம் வாலிபருடன் பேசி உலாவித்
 
 

பாலின உந்தல்களும் மணம்புரிதலும்
திரிய விரும்புவான். வயது முதிரவும், இரு பாலினரும் தம்முன் னைய வாழ்க்கையைவிட்டு எதிர்ப்பாலினரில் வேட்கை யுறுவர். வயது இன்னும் "முதிரவும் பெண்கள் 19 - 20 ஆண்டு வயது மட்டில் மணம் புரிந்து, இல்லற வாழ்க்கை நடத்திக் குழந்தை குட்டிகளைப் பெற விரும்புவர். இலங்கையில் பெரும்பாலானோர் இவ்வயதளவில் மட்டில் மணம் புரிந்துவிடுவர். தற்காலத்தில் கல்விகற்றல், தொழிலில் ஈடுபடல், ஏற்ற மாப்பிள்ளை அல்லது மணவாட்டி கிடையாமை, வேறு குடும்ப வில்லங்கங்கள் ஆகிய காரணங்களினுல் சில ஆண்களும் பெண்களும் வயது மிகவும் மூத்த பின்னர் தம் இல்லறவாழ்வில் இறங்குகின்றனர். இலங்கை யில் உள்ள பெரும்பாலான ஆண்களினதும் பெண்களினதும் மணம் புரிவதன் முக்கிய நோக்கம் குழந்தைகளைப் பெறுவதேயாகும். இத்தகைய மணம் செய்த இரு வரும் பாலினப் புணர்ச்சிச் செயல் களை மாத்திரம் செய்து மட்டுமீறிய காமவேட்கையைத் தீர்ப் பதற்கு அல்லவென்று எண் ணித் தம்மிருவரின் உறவை ஒரன்பு நிறைந்த உறவாக மாற்றி, மனநிறைவுடன் இல்லற வாழ்வுக்கு அமைய ஒழுகி, நல்லறமாக வாழவேண்டும் எனக் கரு துவர். ஆண் பெண் பாலின உறவில் காணப்படும் பிறழ்வுகள் காரண மாக இவர்கள் தம் இயல்புகளைத் தாமே மாற்றி ஒரு யிரும் ஈரு டல்களுமாக இசைந்து வாழ முடியாநிலை எய்துகின்றனர். இதனுற் குடும்பவாழ்வு சீர்கெடவும் பெண்ணுேய் வைத்தியரையும், கல் யாணத்தைத் தள்ளுபடி செய்வதற்கு நீதிமன்றத்தையும் நாடு வர். இரு வரும் இசைந்து வாழ்ந்தால் இப் பாலினப் பிறழ்வுகள் தோன்ருது என்பதையும் அல்லது இரு வரும் எல்லா வகையிலும் மனம் இசைந்து ஒத்து வாழ்ந்தால் பிறழ்வுகள் தோன்ருது என் பதையும் வைத்தியர் உணரவேண்டும்.
இவ்வகைப் பிறழ்வுகளைத் தீர்க்கும் பெண்ணுேய் வைத்தியன் வாழ்க்கைக் கடலில் வெற்றிகரமாக தீந்திக் கரைசேர்ந்த வகை வும், வாழ்க்கை முறைகளை ப்பற்றி நல்ல அனுபவ முள்ளவனுகவு மிருக்க வேண்டும். வயது முதிர்ந்த வனுயிருக்க வேண்டும். ஆலோ சனைக்குவந்த கணவன் மனைவியாகிய இரு வரையும் புறம்பு புறம் பாக வினவிச் சோதித்து, விருப்பு வெறுப்புக் காட்டாது நம் பிக்கையூட்டும் விதத்திலும் அவர்கள் மனநோகா முறையிலும் ஆலோசனைகளை அளித்துத் தீர்வுசெய்து வாழ்க்கை ஒடத்தை இரு வரும் இணைந்து வலித்துச் செலுத்த உதவவேண்டும். இவர்கள் குடும்ப வைத்தியரிடம் தம் மனங்களைத் திறந்து பேசார் . அவரும் பல உள்ளார்ந்த தடை நிலைமைகளால். உண்மையையறிய முடி யாமலிருப்பர். இலங்கைத் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பொறுத்த மட்டில் கல்யாணத்தை உருவாக்கும் முக்கிய முன் தேவைப்பாடுகள் சாதகப் பொருத்தமும், சீதன ஒழுங் கும்.

Page 133
244 இளம்பெண் நோயியல்
இவற்ருல் பல விபரீதங்கள் கல்யாணம் முடிந்தபின்பு நிகழும் . கலவிப் பாலுறவுத் திருப்தியே முக்கிய நோக்கமாக இருக்கக் கூடாது. ஆனல், மணவாழ்வில் இது காணப்படாவிடின் மண வாழ்வும் முறிந்துபோகும். அல்லது அவர்கள் வாழ்வில் இடர்கள் தோன்றும் . -
உடற் புணர்ச்சி கலவி-செயல்முறை:
சிலருக்கு ( ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட ) இக்கலவிச் செயல் முறையைப் பற்றிச் செவ்வையாகத் தெரியாது. மேலும் பெண்களின் ஈன லுறுப்புக்களின் சரியிடங்களைப் பற்றிய அறிவும் , கலவி வேளையில் பீனம் இலகுவில் யோனியுட் செல்வதற்கு இடுப் பினதும் தொடைகளினதும் கிடையைப் பற்றிய அறிவும் இவர் களுக்குத் தெரியாது. பல ஆண்டுகளாகக் கால் இடைவெளி யில் மட்டும் தொடர்புடைய சிலரை எனக்குத் தெரியும். இக் காரணத்தினுல் அவர்கள் குழந்தை வளமில்லா நிலைமையையும் எய்தினர். கலாச்சாரத்தில் மேம்பட்ட ஆண்களுக்கும் பெண் களுக்குமிடையில் உள்ள பாலினத் தொடர்புகளும் விளைவுகளும் , உடற்கட்டமைப்பிலும் ஈனல் உறுப்புக்களின் தொழிற்பாட்டிலும் தங்கி யிருப்பதில்லை. பாலினக் கலவியின் முற்பகுதியில் நிகழ்த்தும் பண்பு சார்ந்த இன்பச் செயல்களும் கலவிச் செயற்றிறனின் அழ கும் கலவியைச் செவ்விதமாக முடிக்கக் கூடிய கிடைநிலைகளும் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும். இதைப் பற்றி உடற்றெழிலி யல் அறிஞரும் பெண்ணுேய் வைத்தியப் பேராசிரியர்களும் வைத்திய மாணவர்களுக்குக் கற்பிப்பதில்லை. மக்கள் இரகசியமாக இதைப் பற்றிய பிழையான முடிபுகளைப் பிறரிடமிருந்தறிவர்.
இரு பாலின முதியோர்களுக்கிடையில் நிகழும் காதல் ஈர்ப் பின் நோக்கமானது ஆணும் பெண்ணும் ஒர் இன்பமயமான உடற்ருெடுகையை எய்துவித்தற்கேயாகும். இது பின்னர் இயல் பான முடிவுநிகழ்ச்சியான புணர்ச்சியில் நிறைவுற்று, இனப்பெருக்க விளைவு (கருப்பம்) உண்டாகும். ஒரு பெண் தன் முக வழகு, வளைவு கள் கொண்ட தன் உடற்கட்டு, நடையழகு, தன் நடத்தைப் பாங்கு, குரலோசை, உடையணிகள், உளப்பண்புகள் (நற்குணம்) தயை, அன்பு, ஆகியவற்ருல் ஒர் ஆணைத் தன்வசம் ஈர்ப்பாள். ஆணைப் பொறுத்த மட்டில் அவன் காட்டும் நடைபாவனையின் ஆண் மைத்தனத்தில் பெண்ணுனவள் ஈர்க்கப்பட்டு, அவனுக்குக் கீழ டங்கி வாழவிரும்புவள். ஆண்மை நிறைந்தில்லாத ஒரு வனின் தோற்றம், உடற்கட்டு, அறிவு, பொருளாதார நிலைமை, சமூகத் தில் அவன் எய்தியிருக்கும் நிலைமை ஆகியவற்றைப் *

பாலின உந்தல்களும் மணம்புரிதலும்
பொருட்படுத்துவதில்லை. ஆனல், இவையெல்லாம் அவனே ஈர்க் கும் ஆண்மைத் தனத்துடன் சேர்ந்திருப்பின் அவள் அவனைப் பெரிதும் விரும்புவாள்.
இரு வரும் புணர்ச்சி வேளையில் இயற்கையான இனப்பெருக் கம் நிகழ்வதற்குரிய நோக்குடன் யோனிக்குள் பேமுயிரிகளை இடச் செய்வர். இதற்குப் பீனத்தின் நிமிர்ந்த நிலையும் பின்னர் இந்நிலையில் பேம்பாயியானது யோனிக்குள் வெளிவீசப்படவும் வேண்டும். இவை இரண்டும் தெறிப்புவினை விளைவுகளாகும்.
பீனத்தின் முகையை அல்லது பீனத்தைச் சுற்றும் தோல் அல்லது முற்பக்க வயிற்றுச் சுவர் அல்லது தொடைகளின் முற் பக்க அல்லது உட்பக்கப் பரப்புக்களைத் தடவி யருட்டும்பொழுது மறுகை விளைவுகளாக ஒய்வுநிலையில் சிறிதாயும் தளதளத்தும் சுருங்கிய தோலால் மூடப்பட்டதுமான பீனம் தடித்துத் திண்ண மாகி, மிகநீண்டு பெரு தாகி, யோனிக்குள் புகுதற்குரிய நிலையை எய்தும் ; விதைகள் மேலிழுக்கப்படும். விதைப் பொத்தித் தோல் சுருங்கும். இது தொங்குட்டான் தசையும் டாற்ருே சுத் தசையும் செயற்படுவதாலாம். மேலும் இந்த அருட்டலுடன் மனக்கிளர்ச்சி மகிழ்ச்சி நிலைமைகளும் புலனுறுப்புக்களால் வரும் பல்வேறு நரம் புக் கணத்தாக்கங்களும் பீனம் நிமிர்தல் உறுவதற்கு உதவும் . யாதாமொரு காரணத்தால் மனம் அமிழ்வுறின் பீனம் தளர்ந்து விழும். வீங்கிய விம்மிய பீனமானது உடல்மட்டத்துடன் உறும் கோணம் யோனி உடலுடன் வரும் கோணத்துக்கு ஒப்பாகவிருக் கும். இதற்குப் பெண் ணின் இடுப்பினதும் தொடைகளினதும் கிடை முக்கியமாகும். தொடைகள் மடிக்கப்பட்டும் வெளிவாங் கப்பட்டும் தளர்த்தப்பட்டும் இருக்கும். இதனுல் இடுப்புச் சிறிது உயர்த்தப்படும். பீனத்தின் நீளம் , சாதாரண உடலமைப்புடைய பெண்ணின் யோனியின் பிற்பகுதிக்கு உயர வாகச் சீமனை (விந்து சம்) இடுவதற்குப் போதியதாகும். பீனத்தை உட்புகுத்திய பின் னர் பீனமுகைக்கும் யோனிச் சுவருக்குமிடையில் விட்டு விட்டு நிகழ்த்தப்படும் உராய்வால், பெண் ணில் இவ்வேளையில் யோனிவிரி யும் மியூக்க சுவானது ஒர் உராய்வு நெய்யாகப் பீனத்தின் நுனியைத் தோய்க்கும். மனநெகிழ்வு மகிழ்ச்சிகளும், ஏனைய புலன்களிலிருந்து வரும் நரம்புக்கணத் தாக்கங்களும் பரிவுநரம்புத் தொகுதி நீளமாக சீமன் பாதை வழியில் ஒரு தெறிவினை நரம் பிறக்கத்தை யுண்டாக் கும். விதை மேற்றிணிவு, வெளிகாவு சீமன் கான், சீமன் புடகங்கள் முன்னிலைச்சுரப்பி ஆகியவற்றைச் சூழும் தசையுறை சுருங்கத் துணைச் சுரப்பிகள், சீமன் புடகங்கள், முன்னிலைச் சுரப்பி ஆய வற்றின் சுரப்புநீரில் சீமன் உயிரிகள் முதல் முதலாக அசைய த்

Page 134
246 இளம்பெண் நோயியல்
தொடங்கும். இச் சுருக்கத்தால் சீமன் கலந்த சுரப்புநீர் ஊறித் தாரையின் பிற்பகுதிக்குள் செலுத்தப்படும். பின்னர் கலவி மகிழ்வு உச்சநிலையில் (சச்சு) குமிழ்-குகைத் தசை, நாரி-க் குகைத் தசை ஆகியன விட்டுவிட்டு நிகழ்த்தும் ஒத் திசைப்புச் சுருக்கத்தால் ஊறித் தாரை வழியாக யோனிப் பிற்பக்க உயர் பகுதியில் கருப் பை வாய்க்கு அண்மையில் சீமன் வீசப்படும். இதுவே சச்சுநிலை யின் உச்சமாகும். இரு வரின் உடல் முழுதும் ஊடுருவி நிறைந்து உருக்கும் மனமகிழ்வு நிலையை எய்துவர். இந்நிலைமையில் பெண் ணும் சச்சுநிலையை எய்தியிருக்கவேண்டும். இவளுக்கு இந்நிலை வரைக்கும் ஒத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறலாம்.
கலவி வேளையில் காம உச்சநிலையை அடைவதற்கு பல்வகை யான காமமூட்டும் செயல்களில் (சுர சலீலைகளில்) இரு வரும் ஈடுபடு வர். பாலினத் தொடுகையானது விருப்பத்தையும் புதிய இன் பத்தையும் உண்டாக்கும், துழாவும் பொழுதும் நெருடல் செய் யும் பொழுதும் காமவிருப்பத்தையும் , மகிழ்ச்சியையும் உண்டுபண் ணும் பரப்புக்களான சொண்டுகள் , நாக்கு, கழுத்தின் பிற்பக் கம், தோள்கள், முலைகள் , தொடைகள், வயிற்று முன் சுவர் , வெளியீனலுறுப்புக்கள் என்பன. இத்தொடுகை யருட்டலுடன் முத்தமிடல், தடவி அன்பு காட்டல் கைச் சரச லீலைகள் ஆயனவும் அணைந்து நிகழ்த்தப்படும், இவ்வேளையில் பாதோலின் சுரப்பி களும் கருப்பைக் கழுத்துச் சுரப்பிகளும் சுரப்பி நீரைச் சொரி யும் ; யோனிப் புகு வாய் தளரும் கிளேத்துரு நிமிர்ந்து கிளம்பும் யோனிக்குள் புகுத் தப்பட்ட பீனமானது விட்டுவிட்டு நிகழ்த்தும் அசை வால் யோனியைச் சுற்றியிருக்கும் தசைகளிலும் விட்டுவிட்டு நிகழ் சுருக்கங்கள் ஒத்துநிகழும். இருவரும் சச்சுநிலையையெய்துவர். இவ்வேளையில் சீமன் உள்ளே வீசப்படும். உச்ச அக இன்ப நிலை எய்தப்படும். இது எய்தப்பட்டவுடனேயே இருவருக்கும் உண் டாகிய உள உடற் கொந்தளிப்பு நிலைகள் தணியும். இதைத் தொடர்ந்து ஒரு சிறு மகிழ்ச்சித் திருப்தி நிலையும், சோம்பலும், துயில் நிலையும், (ஆயாசம் போகநித்திரை) எய்தப்படும். யோனி யுள்ளே வீசப்பட்ட சீமனனது யோனிக்குள்ளே பெருமளவிற் சுரக் கப்பட்ட கருப்பைக் கழுத்து மீயூக்கசுச் சுரதநீருடன் கலக்கும். இச் சுரத நீரூடாகக் கணணுக்குத் தென்படாத பே முயிரிகள் கருப் பைக் குட் புகும். சுரத நீர் உட்செல்லுவதேயில்லை. பலர் உட் செல்வதில்லையென முறையிடுவர். இந்நீரும் பாதோலின் சுரப்பு நீரும் பின்னர் வெளியே வடியும். கலவிவேளையில் பாதோலின் சுரப்பிகளிலிருந்து வடியும் மீயூக்க சுவும் அசைவு நிகழ்ச்சியுடன் வெளியே பிதுக்கப்படும். பலர் பேம்பாயியும் வெளியே சேர்ந்து தள்ளப்படுகின்றதென அஞ்சுவர் .
 

பாலின உந்தல்களும் மணம் புரிதலும் 247
கலவி நிகழ முன்னம் பீனத்தைத் தொடர்ந்து மேலும் அருட்டின் ஆணுக்கு சச்சுநிலை யுண்டாகி சீமன் பாயி வெளியே வீசப்படும். அதே போல் பெண்ணின் வெளியீனலுறுப்புக்களை நீடித்தரு ட்டின் (கைச்சரச மா டின்) அவளும் கலவிக்கு முன்னம் சச்சுநிலையை அடைவாள்.
பெண்ணைப் பொறுத்த மட்டில் ஆணுடன் ஒப்பிடும்பொழுது அவளின் பாலின உணர்ச்சிகள் ஓர் உறக்க நிலையிலிருக்கும். இவை படிப்படியாக அனுபவம் கூடவும் மலரும் . ஈனலுறுப்புக்குப் புறம்பான வேறு பரப்புக்களிலிருந்து காமப்புலனுணர்ச்சிகள் இல குவில் தோன்றும். பெண்ணுக்குச் சச்சுநிலை தரக் கூடிய கலவி நிகழ்த்துவதற்கு நீண்ட நேர உணர்த்து லீலைகள் (கைச் சரச மாடல்) தேவைப்படும். பொதுவாக இந்நிலையை எய்துவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே, கணவன் அவசரம் காட்டாது பொறுமையுடனும் முழுவிளக்கத்துடனும் நோக்கத்தை மறவாது கலவியில் ஈடுபடவேண்டும்.
புற ஈனலுறுப்புக்களை அருட்டுவதால் உண்டாகும் சச்சுநிலை (கி ளைத் துருச்சச்சு) வழக்கமாக யோனிச் சச்சுநிலை க்கு முன்னமாக நிகழும். இந்த யோனிச் சச்சுநிலையானது, முந்திய சச்சுவிலும் பார்க்கக்கூடிய இன்பநிலையை எய்துவிக்கும். ஆணும் இதைப் பற்றித் தெரிந்திருத்தல் நன்று. ஏனெனின், தன் மனைவி சச்சி நிலையெய்த முன்னம் தான் தன் சச்சு நிலையைப் பெரும்பாலும் எய்துவன். ஆணுனவன் உள்ளத்தில் ஒரு வித தடையுமில்லாது விரைவில் பீனநிமிர்தலையும் சச்சுநிலையையும் எய்தித் தன் மன நிறை வைப் பெறுவான் . ஆனல் பெண்ணுக்குச் சிலர் ஒரு வகை யான பால் வேட்கைக் கிளர்ச்சி யில்லாத சமயம் அவள் கலவி யில் அவளை ஈடுபடுத்துகின்றனர். அவள் கிளர்ச்சியுற்றுத் திருப்தி யடைவதற்கு இன்ப அருட்டல்களைக் கலவிக்கு முன்னரும் , பின் னரும் செய்யவேண்டும். ஆணுே, பெண்ணுக்கு கலவிச்செயல் முறையைக் கற்பிக்கின் முன். இரு வரும் தமக்கிடையில் நிகழ்த் தும் இன்பமூட்டும் பல செயல்களின் உச்சநிலையில் இந்தக் கலவி யும் ஒரு செயலாக வேண்டும். அதனுல் இரு வரும் ஒரே காலத்
தில் சச்சு இன்பநிலையை எய்தவேண்டும். அப்பொழுதுதான் உச்சச் சுகிப்பு நிலே எய்தப்படும். சில பெண்கள் யோனிச் சச்சு
நிலையை ஒரு போதும் எய்துவதில்லை. அவளின் மகிழ்ச்சி (இன்பம்) நிறைவுக்காக மேலும் நிகழ்த்து கிளைத் துரு அருட்டலும், உளர்த் துதலும் ஈனலுறுப்புக்ளைத் தவிர்ந்த ஏனைய இன்பம் தரும் பரப் புகளில் அருட்டலும் செய்யப்படவேண்டும். கணவன் தன் இன்ப நிலை நிறைவு எய்தியவுடன் மனைவியின் நிலைமையை மறக்கவே படாது. இவை யொரு வெட்கத்துக்குரிய செய்கைகள் ...

Page 135
as இளம்பெண் நோயியல்
வென்பதை உணரவும். காலப்போக்கில் கலவியனுபவம் கூடக் கூட இருவரும் ஒத்திசைந்து கலவியை நிகழ்த்தி ஒரே வேளையில் சச்சுநிலையை எய்துவர். இவ்விபரிப்பில் கலவியானது பெண்
முதுகுக்கிடையில் இரு க்கும்பொழுது ஆற்றப்பட்டது வேறு கிடை களும், செயல்முறைகளும் உள. பல இலங்கைப் பெண்கள் சச்சு நிலை யடையாது கலவியில் திருப்தி அடைகின்றனர். இவர்களுட் பலர் கணவனை மகிழ்ச்சி செய்தாற் போதுமென்றும் அல்லது தான் கருப்பவதியாகப் போவதை எண்ணி மகிழ்ச்சியுற்றும் கலவி யில் ஈடுபடுகின்றனர்.
மணவினையை முற்றுச்செய்தல்
கலவி செவ்விதமாக நிகழ்ந்தாற்ருன் மணவினை முற்றிற்று என்று கூறமுடியும் இரு வரும் "கன்னி ஆட்களாயின் இவர்கள் பெரும்பாலும் முதலிரவில் கலவியைச் செய்யமுடியாத நிலையை எய்துவர். இதற்குப் பல காரணங்களுண்டு. கல்யாணகால உலேச் சல்களாலும், நித்திரையின்மையாலும், வேறும் பல தொந் தரவுகள் மனஏக்கங்கள் பீதிகள் ஆகிய காரணங்களினலும் புது மணமான இரு வரும் மனச்சோர்வும் உடற்களைப்புமுற்றிருப்பர். இதனுடன் வாழ்வில் முன்னெரு போதும் இவ்வகையான அனுபவ மில்லாத காரணத்தால் (பட்டறிவு இல்லாதபடியால் ) ஒரு வன் கலவியைச் செவ்வையாக முடிக்க முடியுமோவென வெட்கமும் ஏக்கமும் உள்ளத் தடையும் அடைவன். இதன் விளைவாகப் பீன வலுவின்மை ஏற்படும். அல்லது சீமன் வெளி வீசல் யோனிக்குட் புகுகை செய்யமுன்னம் நிகழும். சிலவேளை ஆணில் ஒரு குறையில் லாத போதும் பெண்ணில் யோனி மிக ஒடுங்கியிருக்கும். அல்லது கன்னிமென்திரை தடிப்பாயுமிருக்கும். இதைப் பிரிக்க பீனத்தால் அழுத்தும் பொழுது நோவுண்டாகும். எனவே, பெண்ணுனவள் கலவிமேலும் நிகழ்த்த மறுப்பள். யோனியை நெருக்கித் தடுப் பள். சில கன்னிப் பெண்கள் பீனத்தின் நீளத்தைக்கண்டு யோனி பீறிப் போகுமோகுமோவென அஞ்சி கலவி நிகழாது யோனியை நெரித்துத் தடுப்பர். (யோனி யொடுக்க இடர் ). முதலாவது இரவில் செவ்விய கலவி நிகழாத காரணத்தினுல் இரு வரும் மனச் சோர்வடைவர். பெண்ணுனவள் தனக்கு யாதாமொரு ஈனலுறுப் புப் பிழை பாடுண்டோவென்றும், கணவன் பீனவலுவின்மைக் குறை யைக் காட்டின், ஆண்மகனுக்குத் தன்மேல் நேசம் இல்லையோ வென்றும் அஞ்சுவாள். பெரும்பாலும் இவ்வகையான இடர்களி லிருந்து மணமக்கள் விரைவிற் கரையேறுவர். இவர்கள் கலவி யைப் பற்றிய தெரிபேறுகளே முன்னமே அறிந்திருப்பின் தம்நிலை திருந்துமெனக் கருதி உற்சாகமாக விருப்பர். சிங்கள மக்கள் தேன் நிலாக் காலம் கழிந்து வீடு திரும்பியதும் மருமகள் கலவிநிகழ்ந்து

பாலின உந்தல்களும் மணம்புரிதலும் 249
மனவினை முற்றிற்று என்பதற்குச் சான்றுகளை மாமியாரு க் குக் காட்டவேண்டும். (சிங்கள மக்களிடையில் இவ்விடர் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்). 3 - 4 நாட்களில் ஒரளவுக்குக் கணவன் உட்புகுத்த இயலும் நிலையெய்துவன்; 3 - 4, கிழமை களில் திருப்தி தரும் செவ்விய கலவியை ஆற்ற இவ்விரு வர்களுக் கும் முடியுமாகும். மேலும் பெண்ணுனவள் ஒழுங்காக ஒவ்வொரு தரமும் நிறைவான சச்சு இன்பம் அனுபவிக்க 1-2 ஆண்டுகள் செல்கினும் செல்லும்.
முதலாம் கலவி முயக்கத்தில் மென்றிரை கிழிவுஒரங்களும், போனியின் புகு வாயும் கன்றி நோவையுண் டாக்கும். சில நாட் களில் நிலைமை சீராகும். சிலருக்கு மென்றிரைக் கிழிவிலிருந்தும் யோனிச் சுவர் க் கிழிவிலிருந்தும் அஞ்சத் தக்க கடும் குருதி வாரி நிக ழக்கூடும். ஒர் ஆண்டில் இவ்வகையான குருதி வாரியால் வருந் தும் 3 - 4 தேன்நிலா புதுமணப் பெண்களுக்கு நான் தீர்வு செய் வது வழக்கமாகும். கலவி வேளையில் ஒத்து நிகழ் செய்கை நிகழா விடினும் அல்லது கு தயுயர்த்திகள் பிடிப்பு நிலையெய்தி யோனி வாய் அடைப்புறினும் பீனம் தலைவாயிற்திக்கில் அல்லது ஊறித் தாரைவாய்க்கு விலக்கப்பட்டு அப்பகுதிகளேக் காயம் செய் வ தாலும் வன்தாக்க ஊறித்தாரையழற்சி, ஊறுநீரிடல், LJ GN) தரம் ஊறுநீர் விடல் ஆகிய இடர்கள் தோன்றும் 13, 14 ஆம் நூற்ருண்டு மட்டில் தமிழ்ப் பெண்கள் தாம் கற்ற கலைகளுடன் காமசாத்திரங்களும் கற்பர். இவ்வழக்கம் இப்பொழுது இல்லை LITT GU5 LD .
கலவி நிகழ்ச்சிகள் -
புது மணச் சோடிகள் நற்சுக நிலையிலிருப்பின் முதற் சில மாதங்களுக்கு நாள்தோறும் ஒருமுறை அல்லது இருமுறை புணர் வர். ஆனல் 1-2 ஆண்டுகளில் கிழமைக்கு 2-3 தரம் செய்வர். வயது முதிரவும் வேட்கை குறையவும் கிழமைக்கு ஒரு தடவை GO) F uit Gri .
காலம் செல்ல இரு வரும் மன நிலையைப் பொறுத்து இருந் திட்டொரு க்கால் செய்வர். இங்கு கூறப்பட்ட ஒழுங்கு விதியில் விலகிய வருமுளர். கபடச் சமயப் போதகர், மாலுமிகள்-பிந் திய வகுப்புள் அடங்குவர்.
மாதயிரிவுக் காலத்தில் கலவி
இக்காலக் கூறில் இலங்கையில் எல்லா வகுப்பினரும் கலவி
யைத் தவிர்ப்பர். பிற நாடுகளில் சில இனத்தவர் இக்காலத்
திலும் புணர்வர். ஒரு விதக் கெடுதியும் விளையாது எனவும் கூறு

Page 136
250 இளம்பெண் நோயியல்
வர். இந்நாட்டு மக்கள் இந்தக் காலக்கூறை ஒரு துடக்குக் gnra மாக வாழ்வை அழகுபடுத்துவர். (ஒதுக்கிவைத்து வாழ்வர்).
கருப்ப காலத்திலும் அதற்குப் பின்னரும் கலவி
கலவியானது பெரும்பாலும் கடைசி இரு மாதங்களுக்கும் விலக்கப்பட வேண்டும். தாயாகப் போகிறவர்களுக்கும் கலவி யில் விருப்பமிராது. செயலும் வில்லங்கமாகும். இவ்விதமாக ஒழுகல் மனித வாழ்க்கைக்கு அழகுக் குறைவாகும். யாதா மொரு கருச்சிதைவுக் குறிகள் காணப்படின் கலவியைத் தவிர்த்தல் நின்று .
பேற்றுக்குப் பின்னர்
யோனியிரிவுகள் முற்ருக நின்றபின் முதலாம் மாதயிரிவு தோன்றிய பின் புணர்தல் நன்று. சிலர் 4 கிழமைக்குப் பின்பு தொடங்கலா மெனக் கூறுவர். சமூகப் பழக்கங்கள் விதிவிலக்கு கள் நிடிய கால விலக்கலைக் கட்டாயமாக்கும். கிழக்குத் தேச நாடுகளில் குடும்பக் கட்டுப்பாட்டுச் செயற்கை முறைகள் இல் லாத காரணத்தினுல் நீண்ட காலத் தடைவிதித்தல் நன்றுபோல் தோன்றுகின்றது.
அடக்கல்
கலவியை இடைக் கிடை நிகழ்த் தாவிடில் உடலுக்குக் கெடு தியை விளைவிக்குமெனச் சிலர் கருதுவர். இது உண்மையல்ல. ஒரு வகையான கெடுதியும் விளையாது. ஆனல் இவர்களுக்குத் துயில் நிலையில் வெளிவீசல் நிகழக் கூடும். இது ஒரு நேமக் கெடுதி விளைவிற்கான நிகழ்ச்சி யெனக் கருதவேண்டும்.
ஈனலுறுப்புக்களைத் தானே அருட்டல்
ஒரு வித கெடுதியையும் விளைவிக்காது. வயது முதிரவும் இரு பாலினருக்கும் புறத்து ஈனலுறுப்புக்களை அருட்டல் பாலி இன்ப உணர்ச்சிகளை ஊட்டுமெனவும் சச்சுநிலையை உண்டாக் மெனவும் அறிவர். எனவே தன்னருட்டலில் ஈடுபடுவர். இவ கள் இதனைப் பாபச் செயலெனக் கருதுவது பிழையாகும். பொ வாகப் பலரின் கருத்தின் படி இச்செயலானது, இவ் வயதுப் ப வத்தினரில் ஒரு உடல் வளர்த்தியின் விளைவெனக் கருத வே டும். வயது முதிரவும் இப்பழக்கத்தைக் கைவிட்டு மணவாழ்வு சேர்க்கையில் ஈடுபட விரும்புவர் மணமும் முடிக்கத் துணிவர்
 
 
 
 
 
 
 
 

பாலின உந்தல்களும் மணம்புரிதலும் 25 I
மிகச் சிலர் இப்பழக்கத்தை ஒரு நிரந்தர பழக்கமாகப்பழகி மணம் புரிதலையும் வெறுப்பர். ஆணுல் பெற்றேர் இவர்களை மணம் செய்து வைத்தால் இப்பழக்கத்திலிருந்து விடுபடுவர் எனக் கருதி மணம் செய்து வைப்பர். இருந்தும் இவர்கள் பெண்ணுறவில் விருப்பம் கொள்ளார். தாம் விரும்பிய வாழ்க்கை முறையி லேயே தொடர்ந்தும் வாழவிரும்புவர். இதனுல் பல குடும்பக் சச்சரவுகளும் விவாக முறிப்புகளும் நிகழும்.
புணர இயலாயுயாவும், இடர்புணர்ச்சியுயாவு
புணர இயலா உயாவென்பது கலவியை நிகழ்த்த முடியாத நிலையாகும். இடர் புணர்ச்சியுயாவில் கலவிச் செயலானது வில் லங்கமாயும் நோவுடையதாயும் அல்லது உட்புகுகையானது முற் முகவில்லையென்ற நிலேயையும் குறிக்கும். இப் பிந்தியதில் கலவி யின்போது யோனியின் வாயை விலத்தி அதற்குக் கீழாக பொய் யோனியாக்கமும் செய்வர். அடிக்கடி அரைகுறை பொய்யோனி ஆக்கத்தைப் பலரில் கண்டிருக்கின்றேன். பால் உந்தலைப் பொ றுத்தமட்டில் இவ்விதமாக கலவியில் இரு வரிலும் விறைப்பமும் இடர்புணர்ச்சியு யாவும் நெருங்கியணைந்து காணப்படும் பெரும் பாலும் பெண் பாதிக்கப்படுகின்ற போது ஆணும் பாதிக்கப்படு வான். ஆணில் (பீன) முகை வாதை உளதாகின் (முன்ருே ல் பின் னிழு பட முடியா நிலைமை) அல்லது பெண்ணில் யோனிக்குள் கரு ப்பைக் கழுத்து மிக நீண்டிருப்பின் அல்லது புறப்பொருள்கள் இருப்பின் அல்லது பிரிசு வரிரு ப் பின் ஆணுக்கு எதிர்பாராத நோ வுண்டாகும். செயற்றிறன் குறைவால் நோவானது இரு வருக்கும் உண்டாகக் கூடும். பின்னர் இவர்கள் உளக் குழப்பம் அ ைடவர். சிலருக்குக் குறுகிய நீளமுடைய யோனியுண்டு. வேறு சில ஆண்க களுக்கு மிக நீண்டதும் மிகப் பரு மனுடையதுமான பீனமுண்டு. இவர்கள் உட்புகுத்துவதற்கு முடியாநிலை யெய்தினர். (இவ் வகை நிலை மையுடைய ஆண்கள் இருப்பதை நான் கண்டுள்ளேன்) சோதிடனுல் இவர்கள் யோனிப் பொருத்தமுடையவர்களெனக் கணிக்கப்படுவர். ஆணுல் பெண்களிடம் வினவும் பொழுது நான மிகுதியால் கல விக்கு ஒரு இடரும் இல்லையெனப் பொய் கூறுவர். செவ்வையாகப் புணர இயலாநிலைமை (யோனிப்பு குகை) யுடைய பலருக்குக் கலவியைப் பற்றிய போதிய அறிவு இல்லை. இவர்கள் பெரும்பாலும் காலிடை அல்லது கவட்டடிப் புணர்ச்சியிலீடுபடு வர். பிள்ளை வளமற்ற வருட் 5 நூற்று வீதத்தினர் இவ்வகை யினர் என அறிக்கைகள் கூறும்.

Page 137
2岛器 இளம்பெண் நோயியல்
காரணங்கள்
1. ஆணில் காணப்படும் ஏதுக்கள்
பீனம் நிமிர்தலை எய்த முடியாமை அல்லது அந்நிலையை யெய் தியபின் அதைப் பேண முடியாமையும் ஆகும்,
2. பீனத்தின் கட்டமைப்பு பிழைபாடுகள்:
மிக நீண்டு பருத்து நிமிர்ந்த நிலையில் முற்பகுதி வளையக் கூடியதுமான பீனம். மிகக் குறுகியது அல்லது மீதுக் கிழி வுடைய சிறுபீனம். இவை யோனியை அணுக முடியாது.
முற்கூறிய வகையில் இரண்டு ஆண்களையும், குறுகிய வகை யில் சிலரையும், மீக்கிழிவு நபர் ஒரு வரையும் கண்டுள்ளேன். இந்நிலைமையைக் கண்டு மனைவி மனஅமிழ்வு அடைவள். கண வனும் மிக ஏக்கமடைவான்.
3. கடும் கொழுமைநிலை
செல்வத்தில் மிதப்பவர் பலரும், இருக்கை நிலைத்தொழில் களில் ஈடுபடுபவர் பலரும் கொழுமை நிலையை யெய்துவர். இவர்கள் ஈனலுறுப்புக்களை அண்மித்துப் புணர முடியா நிலையை எய்துவர். பெண்களில் இந்நிலையானது - ஆண்களுக்கு ஒரு தடையாக அமையும். பலர் பற்பல காரணங்களால் மித மிஞ்சிய கொழுமைநிலையை அடைவர். இவர்கள் புணர்ச் சிக் கிடை முறைகளை ( கரணங்களை ) அவரவரின் நிலைமைக் கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளல் வேண்டும் .
4. கலவியைப் பற்றிய அறிவு இல்லாமை
இதனுற் பலர் இடர்ப்படுவர். கல்விகற்று மேல்நிலையிலிருப் பவர்களிலும் கல்வி யில்லாதவர்களிலும் இந்நிலையைக் கண் டுள்ளேன். கலவியை விலங்குகளைப்போல் அழகும் இன்பம் அற்ற முறையில் நிகழ்த்துவதாலும் மனைவி விரும்பிய வேளை களில் மனைவியைத் திருப்தி செய்யாது இருப்பதாலும் மனைவி யானவள் யோனி ஒருக்கத்தால் வருந்து வாள். இவ்வகுப்பில் பல ஆண்கள் அடங்குவர்.
பெண்ணில் காணப்படும் ஏதுக்கள்
1 திரையும், யோனிப் புகுவாயும்
இவை படிப்படியாகவும் மெதுவாகவும் விரிக்கப்பட வேண் டும். கலவியின் தொடக்கத்தில் இவை வில்லங்கத்
 
 

பாலின உந்தல்களும் மணம்புரிதலும் 25.3
தையும் நோவையும் உண்டாக்கும். சிலருக்கு யோனி ஒரு க்க முண்டாகவும் கலவியானது யோனியுள்வாயை விலத்தி, குதவு யர்த்திகளுக்குப் பணிய நிகழ்த்தப்பட்டும் நாளடைவில் பொய்யோனியானது மென்சவ்வு உயர வாகத் தள்ளப்படுவ தால் உண்டாகும். சிலரில் மிக அழகுள்ள பொய் யோனியை யும் கண்டுள்ளேன். மென் திரை யுயரவாகத் தள்ளப்படும்.
2. வல்வத்தை அணுக இயலாமை
பிள்ளை வளமில்லாப் பெண்களிற் பலருக்கு இக்குறையானது அவர்களில் காணப்படும் கடும் கொழுமையாலாகும். இவர் களுக்கு முண்டமும் வயிறும் பெருத்திருப்பதால் ஈனலுறப் பைத் தொடுகை செய்ய இயலாது இடர்ப்படுவர். மேலும் அவள் கடும் கொழுமையால் தொடைகள் மிகப் பருத்து வெளி வாங்கல் செய்து மடிக்க முடியாத நிலையை அவள் எய்துவள். ஆண் பெண் இருவரும் இந்நிலைமையிலிருப்பின் கலவிமுறை யானது வில் லங்கமாய் இருக்கும். சிலர் இடுப்பு நோய்க் காரணங்களினுல் இரு கால்களையும் உள்வாங்கச் செய்து நெருக்கவைப்பர். இதனுல் இவர்கள் கலவிக்காகிய கிடை நிலைகளை மாற்றியமைக்க வேண்டும்.
3. யோனிப் புகுவாய் மட்டத்தில் தடுப்பு நிலைமைகள்
அ திண்ணிய நார்வகை மென்றிரை: இதனை விரிக்க அல்லது கிழிக்க மிக வில்லங்கமாகும். இதனுல் கடும் நோவும் யோனி யொருக்கமும் கால்கள் உள்வாங்கல் அடைந்து கலவியிடர் உண் _ாகும். கால்கள் உள்வாங்கல் அடையாது, யோனி யொருக்க முடையவர்களில் பொய் யோனி உண்டாக்கப்படக்கூடும். பெரும்பாலும் வயதில் மிக மூத்த பெண்களில் இது காணப்படும். தற்காலத்தில் பலருக்கு 30 வயதுக்குமேல் கல்யாணம் நிகழ்கின்ற படியால் நிலைமையை ஊகித்து அறிய வேண்டும்.
ஆ. யோனிப் புகுவாய் உடன் பிறப்பு இடுக்கமும், விரிவுரு இயல்பும் பெரும்பாலும் வயது மிக மூத்த பின், மணம் புரியும் பெண்களில் காணப்படும். சூலகவினையம் குறைந்த பின்பு யோனி அல் லூட்டமடைந்து சிறிதாகும். மேலும் இற்குறைபாடு பெண் னினது ஈனலுறுப்புக்களில் வல்லாப்புறும் மேலணி ஊட்டவிடர் காரணமாய் இருக்கக்கூடும். நாட்பட்ட பொறிமுறையருட்டல் களான சொறிதல், விருண்டல், தேய்த்தல் ஆய காரணங்களினுல் தட்டை, இலைக்கண், தோல் நோய் தோன்றும் . இவை மனநெருக் கத்தாலும் வேறும் உளவியற் பிறழ்வுகளாலும் உணவுக் கூறு களின் குறைபாட்டாலும் கூடுதல் அடையும் இரும்பு, போலிக்

Page 138
254 இளம்பெண் நோயியல்
கமிலம், விற்ற மின் B 12 இறைபோபிளேவின் வேறும் முக்கிய காரணிகளால் இந்நிலையுண்டாகும். அல்குரு திமை, பெலாகிரு நோய் , தனிய இருப்பதனல் ஊட்டவளக் குறைவாலும் வேறு பிறரில் நாட்பட்ட குடல் ஊடிரிவும் (கழிச்சல்) அல்குளோர் ஐதிரி யுயா நிலைமைகளாலும் இது உண்டாகும். அலசைத் தாக் கங்கள் உடை, வல் வஅணி மெத்துக்கள், வாசனைப் பொருட் கள், (துகள் வாசநீர்) ஆகியவற்றினுல் தோல் அலசை உண் டாக்கக்கூடும். அனுசேபப் பிறழ்வுகள்-வல் வஅழற்சியையும், வெண் படருயா போன்ற மாற்றங்களையும் உண்டாக்கும். மதுநீ ரிழிவி ஞல் வல்வஅழற்சியானது மிகவும் அறியப்பட்டதொன்ரு கும்.
இவ்வகையான ஊட்டவள இடர்கள் கடும் வல்வ அரிப்பை உண்டாக்கும். தோல் வெடிப்பில் (விருண்டுவதால்) தொற்று நிகழ்ந்து நோவைத் தோற்றும் . அல்லது நார்த் தழும் பாக்கம் உண்டாகும்.
4. தழும்பாக்கமும் இதனுல் யோனிப் புகு வாய் உறும் சுருக்க மும்-பரியேனக் காயங்களாலும் அறுவை வினைகளாலும் எரி காயங்களாலும் இது உண்டாகும். பரியே னச் செப்பம், கருப்பை இறக்கச் செப்பம் ஆயவற்றிற்குப் பின்னர்-முன்னையதில் யோனியை மிக உயரவாகத்தைப்பதாலும், பிந்தியதில் யோனியை ஒடுக்குவதாலும், பரியேனத் தையலே உயரவாக இடுவதாலும் மருவுயா உண்டாகும்.
5, யோனி யொருக்கம் பெரும்பாலும் கலவியிடரு யாவுக்குரிய மிகவும் முக்கியமான காரணம் இதுவேயாகும். இதனைக் கல்யான மாகாத பலரில் காணலாம். இவர்கள் பொதுவல் வச் சோதனைக்கு உடன்படாது, யோனியையும் ஒரு க் கிக் கால்களேயும் அண்ணித் துச் சோதனை செய்ய இயலா நிலை மையை உண்டாக்குவதைப் பெண்ணுேய் ஆலோசகர் பலருக்குத் தெரியும், பொதுவாக இது ஒர் உளப் பிறழ்வு என எண்ணப்படும். இப்பெண்கள் மிகவும் பீதியடைந்தவர்களாகவும் அழகானவர்க வும் இருக்கக்கூடும். இவர்கள் வளரும்பொழுது செல்லம் கொடுக் கப்பட்டுப் பழுதாக்கப்பட்டவர்களாகவும் பாலின உறவைப் பற் றிப் பிழைபடு கருத்துக்களைக் கற்றவர்களாயும் அல்லது இத னைப்பற்றி அறியாதவர்களாயும் இருப்பர். இளம்வயதில் வல்வச் சோதனைக்கு உட்பட்டு பயம் உற்றவர்களாகவும் இருக்கக் கூடும். சித்தபிரமை உயாவால் வருந்தியுமிருப்பர். இவ்வகை உள நோ யால் வல்வ உறுப்புக்கள், தொடைகள், ஆகிய பகுதிகளில் அதி யுணர்ச்சிநிலை உடையவர்களாயும் இருப்பர். இவர்கள் தம் ஈன லுறுப்புக்களைப் பாதுகாப்பதற்காக இவ்வொரு க்க நிலையை உண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாலின உந்தல்களும் மணம்புரிதலும் 255
டாக்குவர். மிக மகிழ்ச்சியுடன் கல்யாணமும் பண்ணுவர். கண வன் கலவி நிகழ்த்த எத்தனிக்கவும் யோனியொருக்கம் நிகழும். யோனியிறுக்கித் தசையும் ஏனசு (ஆன சு - ஆசன) உயர்த்தித் தசைகளும் கடும் பிடிப்பு நிலைமையுற்று யோனியின் கீழ்ப்பகுதியை ஏறத்தாழ முற்ருக இடுக்கிமூடும். கணவனும் மனைவியும் யாதா யினுமொரு தடுப்புநிலை யுண்டோவென்று ஆலோசனைக்கு வருவர். கடும் பிடிப்புநிலை உண்டாகின் தொடைகளின் உள்வாங்கு தசை களும் பிடிப்புறும் . இதனுல் ஈனலுறுப்புப் பிரதேயத்தை (கவட் டடியை) அணுகவே முடியாதநிலை யெய் தப்படும். இந்நிலைமையை குழந்தை பெற்ற சிலருக்கு நிகழக்கூடும்.
இது ஒரு கடும் தன்னியல் வல்வப் பாதுகாப்பு நிலை மையாகும். எல்லாப் பெண்களுக்கும் யாதாயினுமொரு நோத் தரும் நிலைமை கூபகத்திலிருப்பின் அவர்கள் கலவியை விரும்பமாட் டார். சிறப்பாக இது மிகவும் முற்கூறப்பட்ட வகைப் பீதியடைந்த புதுமணப் பெண்களில் காணப்படும். என் அனுபவத்தில் இளம் பெண்களிற் சிலர் தம் அழகும் உடற் கட்டும் பாழாகப் போகு மெனவும் கருப்பநிலை யுறக்கூடுமெனவும் கருதிப் பீதியடைவர். இவர்கள் பிள்ளைப் பேறடையவும் விரும் பார். பிள்ளைப் பெற்ற வர்களிலும் சிலர் மேலும் பிள்ளைப் பேறடைய விரும்பார். புது மணப் பெண்களும் சரி, பிள்ளைப் பேறடைந்தவர்களும் சரி கருப் பத்தடை முறைகளைக் கையாள விரும்பார். அவர்கள் மனதுக்கு அம்முறைகள் சரியானது அல்லவென்றும் , அவை வெறும் வேண்டா உடற் தொந்தர வெனவும் எண்ணுவர். உளமுறையில் கலவி வேளையில் அவர்கள் தற் பாதுகாப்புக்காக ஒரு யோனியொருக்கு நிலைமையை ஏற்படுத்துவர். ஆண் வலுவில் சென்று கலவி நிகழ்த்தின் நோவுண்டாகும். உறவுக்கும் கேடு விளையும். புது மணப் பெண்களைப் பொறுத்தமட்டில். இவ்வகை யோனியொ ருக்க நிலையுடைய வருட் பலர் கடும் கலவி விருப்பமுடையவர். கலவி நிகழ்த்த எத்தனிக்கவும் நிலைமை மேலும் கெடும் அல்லது நோவுண் டாக்கப்படும். அவள் கலவியை மேலும் விரும்பாள். குடும்பச் சச்சரவுகள் கூடும். சில புது மணப் பெண்கள் பலவகை முன் கூறப்ப்ட்ட பீதியால் (அழகு கெடல் ஈனலுறுப்புக் காயம் , கருப்பமுறப் பயம் பிள்ளைப் பேற்றுக்குப் பயம் ஆகியன) தொடக் கத்திலேயே கலவியை விரும் பாது விறைப்பம் அடைவர். அவள் மற்றைய வேளைகளில் அன்பைச் சொரியும் நல்ல பெண்ணுக அமை வாள். கணவனின் அன்பையும் பெறுவாள். கணவன் மிக அன்பு கொண்டவனுயும் , இளகிய மனமுடையவனுயும், தன் ஆண்மை வலுலில் மனஏக்க முடையவனுயும் இருப்பின் அவளுக்கு விட்டுக் கொடுத்துப் புறத்து இன்பச் செய்கைகளில் ஈடுபடுவன். தன்

Page 139
256 இளம்பெண் நோயியல்
மனைவியின் நிலைமையைப் பின்னர் செப்பமாக்க முடியாதவனயும் இருப்பன். ஓரளவுக்கு சிலர் இவ்வகை வாழ்வுக்கு இணங்கி இசைந்து வாழ்கின்றனர். பலர் வைத்திய ஆலோசனைக்குச் செல் வர். இவ்வகையினரு க்கு அனுபவமுடைய வைத்தியன் தகுந்த ஆலோசனை வழங்கி நம்பிக்கை அளித்து ஒரு செவ்விய மண வாழ்வு நிகழ்த் தி மகப்பேறும் அடைய உதவமுடியும் என்பதை என் அனுபவத்தில் இருந்து கூறமுடியும். இவர்களிற் பலர் சிறந்த கல்வி மான்கள் நாட்டிய மணிகள் அரசியல்வாதிகள், சமய போத கர்கள், சங்சீத மணிகள் பெரும் செல்வந்தர் ஆகியோராய் இருப் பர். இவ் வகுப்பினருள் ஆண் பெண் இரு பாலாரும் அடங்குவர்.
6. யோனிப் புகுவாய் உலர்நிலை
பாதோலின் சுரப்பிகள், வேட்கை விறைப்பம், பீதி, நன் மனநிலைக் குறைவு, ஈத்தரசன் குறைவு ஆகிய காரணங்களினல் சுரப்பதில்லை. கருப்பைக் கழுத்துச் சுரப்புகளும் சுரப்பதில்லை . இவ்வகையான நிலைமைகள் கலவிவேளையில் புகுகை செய்வதற்கு உராய்வுப் பாயி இல்லாக் காரணத்தினுல் இடரையும் வில்லங்கத் தையும் உண்டாக்கும் ,
7. வல்வத்திலும் யோனி உறைக் கீழ்ப்பகுதியிலும் காணும்
பெரும் கழலை யங்கள்
யோனிக் கால்வாய்த் தடுப்பு
8. யோனி குறைவிளைசலுற்று சிறிய ஆழமுடையதாயும் விரியுமியல்பு அற்றதாயும் இருக்கும். சிலருக்கு யோனியேயில்லை. இந்தப் பாக்கியக் குறை வைச் சில அழகான பெண்களில் கண் டுள்ளேன்.
9. பிரிசுவர்கள் (நெட்டாங்கு) இவை யோனியுள் இருக்கும் துவாரமுடைய குறுக்கு மென்சவ்வுத் தடைகளாகும். இவ்விரு வளர்த்திப் பிறழ்வுகளை அடிக்கடி காணலாம். இரு யோனிகளின் உறை நீளத்துக்கும் பிரிசு வர்கள் இருக்கும். அல்லது அரைகுறை நீளத்துக்கு இருக்கும். யோனியை இரு யோனிகளாகப் பிரிக்கும் ஒரு முழுநீளப் பிரிசு வரை இரு தடவைகளும் அரைகுறைப் பிரி சுவருடைய இளம் மணப்பெண்கள் இரு வரையும் கண்டிருக் கின்றேன்.இது கலவிவேளையில் கடும் நோ வைக் கணவனுக்கு உண் டாக்கும்.
குறுக்கு மென்சவ்வு மென்தகட்டைப் பலமுறை கண்டிருக் கிறேன். இது யோனியின் கீழ்ப் பகுதியுள் இருக்கும் பொழுது
 
 
 
 
 

பாலின உந்தல்களும் மணம்புரிதலும் 257
ஆணுக்கும் பெண்ணுக்கும் நோவை உண்டாக்கும். பெண்ணுக்கு அதன் இடத்துக்குக் கீழாகப் பொய் யோனியையும் உண்டாக்கிக் குழந்தைப் பேற்றையும் இல்லாமற்செய்யும், உயர இருப்பதாலும் சிலருக்குப் பிள்ளைப்பேறு இல்லாது இருக்கும். பிள்ளே பெற்றவர்களுக்கும் இதுபேற்று வேளேயில் தடையை ஏற்படுத்தும். அறுவைவினே முறையால் இவற்றைச் செப்பம் செய்யவேண்டும்.
10. குறுகிய யோனியுறை:- இது நீளத்தில் குறைவாகும். இது வளர்த்திக் குறைபாட்டால் அல்லது யோனிச்செப்பம்செய் அறுவை வினேயாலும், முற்ருன கருப்பையகற்றல் அறுவை வினேக்குப் பின்பும் தோற்றப்படும். இவையெல்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் கலவியிடர் நோவை உண்டாக்கும். குறுகிய யோனியை விரிவடையச் செய்யும் பொழுது நோவுண்டாகும். கிழியவும்கூடும். செப்பம்செய் அறுவை வினைக்குப் பின் யோனி ஒடுக்கமடையக்கூடும். கருப்பை அகற்றலுக்குப் பின்னர் யோனியுறையில் உயர்பகுதியை வெட்டியகற்றின் அது குறுகும். இதன் விதானத்தில் நார் தழும்பு உண்டாக்கப்பட்டிருக்கும். இது கலவி வேளையில் இருவருக்கும் கடும் நோவை உண்டாக்கும், இதனைச் செப்பம்செய்ய முடியும்.
11 காயங்களுக்குப்பின் ஒட்டுக்களும் நார்வளைய இடுக் கமும்:- இவை யோனி அறுவை வினேகளுக்குப் பின்பு நிகழும். இதனில் யோனி மிகவும் ஒடுக்கப்படும். அல்லது யோனியுறை வெட்டுக் காயங் கள் ஒன்றுமற்ருென்றுடன் ஒட்டுண்டு பீனப் புகுத்தலுக்குத் தடுப்புச் செய்யும். இதே விதமாகப் பேற்று வேளே யோனிக் காயங் களும் கிழிவுகளும் குறுக்காக ஒட்டுண்டு கலவி வேளையில் கடும்நோவை ஆணுக்கு உண்டாக்கும்,
12. பெருங் கூபகக் கழலேயங்கள் (கருப்பையுடலிலும் கருப்பைக் கழுத்திலும் வளர்பவை). இவை யோனியுறையைக் கீழே தள்ள யோனியைக் குறுக்கும். இதனுல் நோவும் இடரும் ஆணுக்கும் பெண் ணுக்கும் உண்டாகியதை நான் அறிவேன்.
1 3 (8լլյրr 6ծի அழற்சிகளும், ஈனலுறுப்பு அழற்சிகளும் பெண்ணுக்கு நோவை உண்டாக்கும். இவற்றுடன் திரிக்கோமனுசு அழற்சியும், அமீபவழற்சியும் அடங்கும். யோனியிலும், வெளியினலுறுப்புகளிலும் நொய்மையுடைய வடுக்களிருப்பின் நோவுண்டாகும். ஏனசில் குருதி யிரிவுக் கட்டிகளும் புரைகளுமிருப்பின் இடர்க்கலவியுயா காணப்படும்.
14 ஆழமாகக் கூபகத்துள் இருக்கும் நைவுகள்: கலவி வேளையில் யோனி விரிக்கப்பட்டு உயரத் தள்ளப்படும் வேளையில்

Page 140
258 இளம்பெண் நோயியல்
வேண்டாம் என்னும் அளவுக்கு இதனில் நோ தோற்றப்படும். அவை
1 T GY! GÖT
ஆ. நாட்பட்ட கூபகக் கலவஜழற்சி.
இ. கருப்பைக் குழாய் சூலக அழற்சி.
ஈ. கருப்பையகவணியோமா, ஒருத்திக்கு இவ்வாண்டில் நேர்குடல் யோனிப் பிரிசுவரில் நிலேத்த கருப்பையகவனியோமவை அகற்றினேன். இதிலிருந்து யோனிக்குள் குருதியும வடிந்தது.
கருப்பைத் திருவென்பு இணையங்களில் நிலைக்கும் அகவணியோ மாக்கள் ஒரு பொதுவான நைவாகும். இவை கடும்நோவைக் கலவி வேளையிலே பெண்ணுக்குக் கொடுக்கும். இதனைக்கொல்லும் நோவெனக் கூறினும் பிழைபடாது.
உ கருப்பைப் பின்திருப்பம்:- கருப்பை பின்னுகத் திரும்பி யிருப்பின், கருப்பையடியானது நேர்குடல் யோனிப் பொக்கணத்துள் விழும். இவற்றைக் கீழிருந்து ஆண் இடிப்பதால் கடும்நோ பெண் னுக்கு உண்டாகும். சிறப்பாகச் சூலகங்கள் வீழ்ந்திருப்பின், இவை நசிபடும்பொழுது தாங்க முடியாத நோ உண்டாகும். ஆணுக்கும், யோனி குறுகியபடியால் நோவுண்டாகும். மேலும் இதனுல் மலட்டு நிலையை எய்தக்கூடும். இந்நைவானது பெண்களுக்குப் பொதுவாக வுண்டு, பேற்றுக்குப் பின்னரும் கருப்பை பின்திருப்பம் அடைந்து நோநிலைமையை உண்டாக்கும்.
ஊ. நேர்குடல் அழற்சி, பிடிப்புக் கோலோன் ஆகியன கலவி வேளையில் நிகழும் அழுத்தங்களால் பெண்ணுக்கு நோவையுண்டாக்கும். சிலருக்கு நேர்குடலுள் மலப்புழுக்கைகள் நிறைந்திருப்பினும் கலவி வேளையில் நோவுண்டாகும்.
கலவிவேளையில் கருப்பைச் சுருக்கங்களுடன் கோலன்குடலும் சுருக் கமுறும் ஊடறிதல்:
இருவரையும் முழு ஆராய்வுச் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் ஆணையும் முக்கியமாகச் சோதிக்கவேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 

பாலின் உந்தல்களும் மணம்புரிதலும் 259
பீனவலுவின்மை: சிலருக்கு மதுநீரிழிவால் பீனநிமிர்த்தல் உண்டா வதில்லை. அல்லது அரைகுறைவாக நிமிர்ந்து விரைவில் சோர்ந்துவிடும். மிகுதியானுேருக்குப் பலவகையான உள உட்தடுப்பு நிலைம்ைகளுண்டு. ஒருசாரார் பாலுறவு பற்றிய அறிவுக் குறைவால், தாம் கலவியை நிகழ்த்த முடியுமெனும் மனத்தென்பை இழப்பர். வரையறுப்பு அற்ற பாலுறவில் தோல்வியைக் கண்டிருப்பவர் பலர் இவ்வகுப்பினருள் அடங்குவர். பலர் காம் நோய்ப்பட்டிருந்திருப்பர். தான் பெண்ணுக்கு நோயைத் தொற்றச் செய்வேனே என்னும் ஏக்கமும் கலவி நிகழ்த்த முன்னம் தோன்றும். அல்லது தான் நோயுறுவேனே என்னும் ஏக்கமு மடைவான். சில சமயக் கொள்கையினர் மணம்புரிந்த பின் இதனைச் செய்வது ஒரு பாபச் செயலாகுமெனக் கருதுவோரும் உளர். என்னிடம் ஆலோசனைக்கு வந்தவருள் சிலர், பகல் முழுதும் இரண்டொரு ஆசை நாயகிகளுடன் உடலுறவு கொண்டபின், இரவில் பண்புமிக்க தன் மனைவியுடன் உடலுறவு நிகழ்த்த வலி இல்லாதவர்களாகக் காணப் பட்டனர். மிக மிகச் சிலர் தன் பாலினத்தவருடன் உறவு கொள்பவர். இவர்கள் இந்த உறவில் மட்டும்தான் இன்பங் காண்பர். இது ஒர் உளக் குறைபாட்டாலான பிறழ்வாகும். இவர்களும் ஏனைய உலக மக்களைப்போல் வாழ்வற்கு மணம்புரிகின்றனர். ஆனல் பெண்ணுறவில் இவர்களுக்கு விருப்பமேயில்லை. மனைவியை அணுகினவுடன் பீனவலு வலுவின்மையுறுவர். தம்மைப் போன்ற ஆண்களைத் தேடித்திரிவர் இவ்வுள நிலைமையை பலருக்கு மாற்றமுடியும்.
றுேவ சிலருக்கு பல வளர்த்திக் குறைபாடுகளுண்டு. பீனம் குறுகியதுமாயிருக்கும், மீக்குழிவுடைய ஒரு குறுகிய பீனத்தை நான் கண்டுள்ளேன். இன்னும் சிலருக்கு விதைகளைப் பாதிக்கும் ஒதநீர்க் குவிவு மிகமிகப் பெரிதாகிவிதைப் பொத்தித் தோலை விரித்து நீளித்த பின்னர் பீனத்தின் தோலையும் தன்மேலடக்கும். பீனமானது இத் தோலுள் அரை குறையாக மறைந்திருந்து புணர்ச்சி செய்ய முடியா நிலைமையை எய்தும்பெண்ணைத் திருப்தி செய்ய முடியா நிலைமை ஏற்பட்டு அவளும் மனக்குழப்பத்தை அடைவாள். இதனுலும் யோனி யொருக்கம் உண்டாகும் அடிக்கடி இவ்வகையான நோயாளர் ஆலோ சனைக்கு என்னிடம் வருவர்.
2. பெண்ணைச் சோதிக்கும்பொழுது தனியனுக வினவ வேண்டும். கணவன் முன்பு அவள் இயல்மறிப்பும் நாணமுமடையவதால் உண்மை யைக் கூருள். சிலர் உடனடியாகத் தம் பண்புக்கமை கணவனைப் பற்றி ஒருகுறையும் கூருர், கலவிவேளையில் நோவில்லை என்றே கூறுவர். இந்தநோ அல்லது வில்லங்கமானது யோனிப் புகுவாயிலோ அல்லது யோனி உயர்ப் பகுதியிலோவென வினவ வேண்டும். சிலர் பீனம்
உட்புகுவதில்லை யெனக் கூறுவர் அல்லது உட்புகத் தடுப்பு

Page 141
260 இளம்பெண் நோயியல்
கின்றதெனக் கூறுவர். (பிரிமென்றகடு, பிரிசுவர், யோனியொருக்கும் ஆகியன இருப்பின்) வேறு சிலர் புகுவாய் மட்டத்தில் புணர்ச்சி தொடங்கும் பொழுதே கடும் நோவுண்டாகின்ற தெனக் கூறுவர். இவர்களிற் பலரில் மென்றிரை கிழிவுருதிருக்கும். சிலர் மென் திரைக்குப் பணிய ஏனசு-உயர்த்திகளுக்குக் கீழாக அழுத்திப் பொய்யோனி (பொக் கணம்) ஒன்றை உண்டாக்கி இருப்பர். இதில் சீமன் யோனிக்குள் இடப் படுவதில்லை. நோவைப் பெண் பொறுமையுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அனுபவிப்பாள். சீமன்பாயி உடனேயே வெளியேவடியும்.
பலர் பினம் முழுப்பு:குகை செய்கின்றதென்றும், இடிக்கும் வேளேயில் நோவுண்டாகின்றதென்றும், சிலரில் (கூபகத்துள் காணப் படும் நோவைப்பொறுத்து) கொல்லும் நோ உண்டாகின்ற தென்றும் கூறுவர்.
முற்கூறிய வகையினர் கலவியை இருந்திட்டொருக்கால் நிகழ்த்த விடுவர். நோவானது பலநாட்களுக்கு நிலைக்கின்றதென்றும் பொய்ச் சாட்டுகள் கூறுவர். பின் கூறிய வகையினர் கலவியை விரும்பவே மாட்டார். இதுதான் மணம்புரிதலின் விளைவு என ஐயமுற்று 岛一@ ளேயும் நோவர்.
புதுமணப் பெண்களையும் கலவிக்குப் பின்பு நாரி நோ, தோள் நோ ஆகியன உண்டென்று ஆலோசனைக்குக் கொண்டுவருவர். இது அவ்வேளையில் முற்பழக்கமில்லாத கிடையின் காரணத்தினுல் உண் டாகின்றது.
கலவியிடரானது மணவாழ்வுத் தொடக்க நாளிலிருந்ததா அல்லது அறுவைவினே. நோய்நிலைமை, பிள்ளேப்பேறு கருச் சிதைவு ஆகிய நிலைமைகளுக்குபின் வழிவந்த நோவா என்றும் வினவவேண்டும்.
முக்கிய வினவுதல், அவளுக்கு யாதாமொரு மனநெகிழ்வுக் காரணிகளுண்டா எனறும் அறிவதற்காகும். இருப்பின் இவற்றின் தோற்றுவாயைப்பற்றி ஆராயவேண்டும். மனிதனின் பாலின உந்தல் களப்பற்றிய அறிவைக் கற்றிருக்கின்ருளா? இது தொடர்பான அனுபவங்கள் உண்டோவென்றும் அறியவேண்டும். கணவனைக் கருதும் முறைப்பாங்கு என்னவென்றும், கருப்பமுற விருப்பமுண்டோவென்றும், மேலும் தன்னைப்பற்றியும் கருவுறுதலைப்பற்றியும் கணவனின் எண் ணங்கள் யாதாய் இருக்குமெனவும் அவளிடமிருந்து அறியவேண்டும். அவனின் முறையீடென்ன, நோவுண்டென்று முறையிடும் ஒவ்வொரு பெண்ணையும் வேறு நோய்கள் நோவை உண்டாக்குமோ என்று செவ்விதமாகச் சோதிக்க வேண்டும். ஏனேய நோய் அறிகுறிகள் உண்டோ வென்றும் அவற்றையும் சோதனைக்குட்படுத்த வேண்டும். இறுதியிலேயே உளவியற் காரணங்களைப்பற்றிக் கவனிக்க வேண்டும்
 
 
 
 

பாலின் உந்தல்களும் மணம்புரிதலும் 261
தீர்வு: கலவியிடர் நோவுக்குத் தீர்வு அதன் காரணத்தைப் பொறுத்திருக்கும். இருவருக்கும் பால் உந்தல்களைப் பற்றியும் மன வாழ்வுடன் தொடர்பான ஏனைய பாலுறவு முறைகளைப்பற்றியும் விளக்கவேண்டும். கருப்பமுறப் பீதியுறின், க்ருப்பத் தடை முறை களைப்பற்றிக் கற்பித்து வேண்டிய காலத்தில் குழந்தையைப் பெற முடியுமென மனத்தென்பு அளிக்கவேண்டும். யாதாம்ொரு நோயியல் காரணமிருப்பின் அதற்கு ஏற்ற தீர்வு செய்யவேண்டும். அறுவை விண்கள் சில சமயங்களில் வேண்டப்படும். நொய்மையுடைய தழும்பு களை உணர்வழிப்புப் செய்த பின்பு நீளிப்புச் செய்யலாம் அல்லது வெட்டி அகற்றலாம். யோனியுடன் தொடர்பான சுரப்பிகள் சுரக்காது உலர் யோனியாயிருப்பின் நீரிற் கரையும் யெல்லிக் களிம்பைப் பயன்படுத்தவும்.
சூலகங்கள் தொழிற்படாத நிலைமைகளில், யோனியினதும் வல் வத்தினதும் கட்டமைவை சூலக ஒமோன்களை வழங்கிச் சீர் செய்
Lil Gh) i'r llif).
யோனியொருக்கமுடைய பெண்களுக்கு
பெரும்பாலும் இது உண்டாவது பீதியாலும் சித்த உயாவாலு மாம். முன்னர் விபரித்தபடி அவளுடன் உரையாடி அவளின் மன நிலையையும், அவள் மணவாழ்வைப்பற்றியும் புணர்ச்சியைப் பற்றியும் கொண்ட கருத்துக்களை அறிய வேண்டும். இவற்றை விளக்கி அவளுக்கு மனத்தென்பை ஏற்படுத்திய பின்பு யோனிச் சோதனைசெய்ய எத் தனிக்கவும். இதனைச் செய்யவிடாது யோனிப் பிடிப்பு நிலையெய்தின் மேலும் தெண்டித்து விரலைப் புகுத்த வேண்டாம். இவள் மேலும் விதிக்கப்படும் தீர்வுக்கு ஒத்துழையாள். ஆனல், ஒருவிரலை உட்புகுத்து வதற்கு ஒத்துழைத்தால் ஒரு விரலிலிருந்து மேலும் சிறிய யோனி அகட்டியை முதலாவதாகப் புகுத்தி, படிப்படியாக அளவைக் கூட்டி இரு விரல்களையும் புகுத்தும் அளவு வரும்வரைக்கும் அகட்டவேண்டும். பின்னர் யோனி அசுட்டிகளை, அவளைக்கொண்டு புகுகை செய் விக்கவும். இவ்விதமாய் அவளுக்குப் படிப்படியாகத் தென்பு பிறக்கும். இந்த இரு விரல்கள் விட்டமுடைய அகட்டியைத் தானே இலகுவில் புகுத்துவதை உணரும்பொழுது மிகவியப்பும் மகிழ்ச்சியும் அடைவாள், தனக்கு உள்ளே ஒருவித தடுப்பும் இல்லையென்று அறிந்து பின்னர் கலவியில் ஈடுபடத் தொடங்குவாள்,
அவன் சோதனை செய்யும் பொழுது விரலைப் புகுத்துவதற்கு மறு கையாக யோனி யொருக்கத்தைத் தோற்றின் அவள் யோனிய கட்டலுக்கு ஒத்துழையாள் என்னும் முடிவுக்கு வரவேண்டும், அவளுக்கு யோனியொடுக்கம் உண்டென்றுகூறி, அதனை அகட்டின் குறைபா

Page 142
262 இளல்பெண் நோயியல்
டானது செப்பமாக்கப்படும் என்றும் கூறவும். பின்னர் அவளின் ஒத்துழைப்புடன் அவளை உணர்வழிப்புச் செய்து மூன்று கை விரல்கள்
புகுத்தக்கூடிய அளவுக்கு யோனியை அகட்டவும். மென்றிரை கிழி வு றின் இழைகள் போடவும். இரண்டு நாட்களில் இடத்து நோவானது குறையவும் யோனிய கட்டிக்ளைக்கொண்டு படிப்படியாக யோனிை அகட்டவும். முதலில் மிகச்சிறிய அகட்டியைப் பயன்படுத்தி, நாள் தோறும் அகட்டியின் அளவைக் கூட்டிச் சில நாட்களுக்குப்பின் பெரிய அகட்டியைப் புகுத்தவும். புகுத்திய பின் அகட்டியை 10-15 நிமிடங் களுக்கு வெளியே எடுக்காது விட்டுவிடவும். இது ஒரு வைத்தியனல் பழக்கப்பட்ட நலம் பேணியால் செய்யப்பட வேண்டும். பின்னர் இந்த புகுத்தலை நோயாளி தானே செய்யவேண்டும். தானே மிகப் பெரிய அகட்டியைப் புகுத்தி 10-15 நிமிடங்களுக்கு வெளியே எடுக் காது வைத்திருக்க முடியுமாயின் அவளை வீடுசெல்ல விடலாம். பின் னரும் 2.கிழமைகளுக்குத் தொடர்ந்து தானே பெரிய அகட்டியைப் புகுத்தி எடுக்கத் தக்கதாக இருக்கும் பொழுது அவளின் பீதியகன்று தன் நன்னிலையைப்பற்றி மகிழ்வாள்.
யோனிப் புகுவாய் இடர்களுக்கு:
புகுவாயை அறுவைவினையால் பெருப்பிக்கவேண்டும். இதற்காக நடுசார் அல்லது நடுசார் பக்கல் பரியேனத்துமி வெட்டுக்காயத்தைக் குறுக்காகத் தைக்கவேண்டும். மென்றிரை கிழியாதிருப்பின் துமிசெய்து இழைகளைப் போடவும், யோனியையும் அகட்டிகள் கொண்டு முழு அகட்டல் செய்யின் நன்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாலின உந்தல்களும் மணம்புரிதலும் 263
இயல்: 16
விறைப்பம்
பால்வேட்கை (உந்தல்) இல்லா நிலைமையை விறைப்பம் என்பர். சிலர் சக்சு நிலையெய்த முடியாதாகின் அவர்கள் தாம் விறைப்பம் உற்ருர் எனக் கருதுவர். இவை இரண்டும் அணைந்து நிகழ்ந்தாலும் நிலைமைகள் வெவ்வேறேயாகும்.
உண்மை விறைப்பம்: (பால் வேட்கை பாலுணர்ச்சி உந்தல் இன்மை).
ஏதியல்: இதைப்பற்றி விளக்க முன்பு சில குறிப்புகளை மனதில் பதிக்க வேண்டும். உள்ளமே பாலுந்தலின் முதல் இருக்கையாகும். மனிதரில் பாலுந்தலுக்குக் சூலக வினையம் முக்கியம் வாய்ந்ததல்ல. இதற்கு ஒரு சிறிய பங்குதான் உண்டு. ஆண்களின், பால் உந்தலானது பெண்களின் உந்தலிலும் பார்க்கக் கூடிய வலிவுடையதாகும். ஆனல் அதைக் கிளர்த்த வேண்டும். விறைப்பமானது இடர்மருவுயுயாவால் தோற்றப்படக்கூடும். ஆனுல் இந்நிலைமை யாதாயினுமொரு நோயோ அல்லது அகச்சுரப்புப் பிறழ்வோ காரணமாக அமையாது சிறப்பாக உடல் சார்ந்த காரணிகளாலும், உளவியற் சூழற் காரணிகளாலும், என விளக்கம் அளிக்க வேண்டும்.
தொழிலியற் காரணிகள் : இளம் படு காளேகளில் கிளர்த்தப்பட முன்னரும் வயது மூப்படையும் காலத்திலும் விறைப்பம் ஒரு நேம நிலைமையிலேயாகும் , பெண்களில் நூற்றுக்கு 60 வீதத்தின ருக்கு மாதவிடைவு நிகழமுன்னம் பாலினஉந்தல் தேயத் தொடங்கும். மேலும் நூற்றுக்கு 20 வீத பெண்கள் மாதவிடைவுக்குப்பின் தேய் வடைவர். எஞ்சிய நூற்றுக்கு 20 வீத பெண்கள் மூப்பை அடையும் வரைக்கும் படிப்படியாகப் பால் உந்தல் வேட்கையை இழப்பர்.
கருப்பநிலையில்: பெண்களுக்கு கருப்பநிலையில் அவ்வளவு பாலுந்தல் தோன்றுவதில்லை. அத்துடன் அவள் இதனை அவ்வளவு விரும்புவதில்லை. ஆனல் கணவனின் உந்தலைத் தீர்பதற்கு உடன் படுவாள். கருப்பநிலைப் பிந்திய மாதங்களில் கணவன்கூடப் புணர்ச் சிக்கு விருப்பம் இழப்பன் பெண் க்ருப்பவதியாகினவுடன் தன் வயிற்றுள்ளுள்ள குழந்தையைப் பற்றிய நினைவிலேயே இருப்பாள்.
பேற்றுக்குப் பின்னர்; பேற்றுக்குப் பின்னரும் தாயானவள் குழந்தையைப் பற்றியே முழுஎண்ணமும் கொண்டிருப்பதால் பாலுந்

Page 143
264. இளம்பெண் நோயியல்
தல்களைப் பற்றிப் பல மாதங்களுக்குச் சிந்திப்பதில்லை. குழந்தை வளரவும், தன்னுடல்நிலை தேறவும் பாலுந்தல் உண்டாகும். ஆனல், கனவனின் பாலுந்தலோ விரைவில் தலைகாட்டும். இதற்குச் சில பெண்கள் விட்டுக்கொடுப்பர். பலர் மறுப்பர். கணவன் தன்னிலோ, பிறந்த குழந்தையிலோ, நலன் கருதாது தொந்தரவு கொடுக்கின்றனெனக் கருதி, கலவிக்கு உடன்படாள். வீண் சச்சரவு தோன்றி, பலர் தம் தாய் வீட்டுக்குச் செல்வர். சில பெண்கள் விட்டுக்கொடுப்பர். இவர்களுள் பலர் மீண்டும் கருப்பநிலையடைவர். இவ்வகை மனநிலையுடைய கணவனை மகிழ்விக்க வேண்டுமாயின் கருப்பத் தடைமுறைகளேக் கையாளவேண்டும். ஆனல் பெண்ணுக்குத் தன்னேயும் குழந்தையையும் பேணவேண்டிய ஆறுதல் கிடைப்பதில்லை. பழைய வழக்கமுறையில் கருவுற்ற பெண்ணுனவள் பிள்ளையைப் பெறுவதற்கும் முன்னர் அதை ஒருநிலைக்குக் கொண்டுவரவும், வேண்டிய உடலாறுதலையும் உடல் நலனையும் பெறுவதற்கும் தாய்வீடு செல்வாள். கணவன் சென்று அவர்களைப் பார்ப்பான். ஆனல் புறம்பாக இருக்கவேண்டும். இது நல்ல முறையாகும்.
உடலமைப்புக் காரணிகள்: மனிதருக்கு மனிதர் அடிப்படைப் பாலுத்தலின் உள்ளார்ந்த வலிவு மிகவும் வேறுபடும். மனிதருக்கு மனிதர் உணவுக்குத் தெரிவிக்கும் வேறுபாடு பதிநிலைபோல் கலவிக்கு உறும்பசியும் வேறுபடும். இதை மாற்றவே முடியாது.
கலவிக்குப் பசியில்லாதவர் மிக மிக அரும்ையாகும் அநேகமான பெண்களுக்குக் சரியான சூழல் நிலைமைகளில் வேண்டிய மனித னிருப்பின் ஒரளவுக்கு பால் உந்தலேக் கிளர்த்த முடியும். ஆனல் பாலுந்தலைப் பொறுத்தமட்டில் மிக நலிவு நிலையிலிருப்பவர் பெரும் பாலும் பாலுந்தலை கிளர்த்தும், சூழல் நிலைம்ைகளே விலக்கி வாழ்வர் இவர்கள்தான் விறைப்பம் அடையக்கூடியவர்கள். பாலுந்தல் மிக வலிவாக இருப்பின் எந்தவகையான குறையையும் மேவிக் கிளர் ததலுறும்.
விறைப்பத்தை உண்டாக்கக்கூடிய ஏதுக்கள் இளம்படுகால எண்ணப் பதிவுகள்
பால் விறைப்பம் உட்ைய பலர் இளம்படு காலத்தில் ஒழுக்க நீதிகளுக்கும். சமயக் கோட்பாடுகளுக்கும் அமைய வளர்க்கப்பட் டிருப்பர். ஆண்களுக்குப் பெண்கள்தான் இவ்வுலகத்துத் தொந்தரவு
களுக்குக் காரணம் என்றும் அதே மாதிரியாகப் பெண்களுக்கு, ஆண்கள்தான் பாலினத் தொடர்பு மோசம் செய்பவரென்றும் கற்
 
 

விறைப்பம் 265
கற்பிக்கப்பட்டிருப்பர். ஆண்கள் பெண்களைத் தூரத்தில் வைக்க வேண்டுமென்றும், பெண்கள் ஆண்களே வெறுக்க வேண்டுமென்றும் பழக்கப்பட்டிருப்பர். ஆணுறவு பரவச்செயல் எனக் கூறும் சமூகங் களும் உள. கல்யாணம் செய்தபின் அச்செயலில் விரும்பியோ விரும் பாமலோ ஈடுபடுவது ஒரு மனைவியின் கடமையென்றும் அறிவுறுத் தியிருப்பர். ஒரு விதவை தன் ஒரே மகளைத் தன்னுேடு நெடுங் காலம் இருப்பதற்காக மகளை உரிய வயதிற் கல்யாணம் பண்ணிக் கொடாள். குழந்தைப் பிள்ளைக் காலத்திலும், பின்னர் முதிரும் காலத்திலும், பெற்ருே ரினதும் உறவினரதும் சீரற்ற வாழ்வும், இளம் வயதில் தன் ஈனலுறுப்புக்கள், கீழ்க்குடல் ஆகியவற்றில் நிகழ்த் திய சோதனைகள், தீர்வுமுறைகள், ஆகியவற்ருல் உண்டாகிய பீதியும் ஈன லுறுப்புத் தன்னருட்டல், தற்பாலின உறவுச் செய்கைகள் எல் லாம் பின்னர் தனக்கு நிகழும் பால் உந்தலை உட்தடுப்புச் செய்யும்.
கணவனைக் காதலிக்காமை: சில பெண்குழந்தைகள் தகப் பனில் அன்பு மிகுதியாகக் கொண்டிருப்பர் . ஒருசில பிள்ளைகள் தன் தாயுடன் அன்பாக இருப்பர். சில அழகான மங்கையர் நன்முக உடை பணிந்து தம்மை அழகாக்கி தம்மிலேயே மிக அன்புகொண்டவராக இருப்பாரேயொழிய, கணவனை நேசிக்கம்ாட்டார்கள், கருப்பவதியாகவும் விரும்பார். ஒரு பெண்ணின் பால் உந்தலானது அவள் பிறிதொரு மனிதனில் விருப்பம் கொள்வதால், அல்லது அவளது கணவன் அவளேக் அவனியாது புறத்துப் பெண்களை விரும்புவதால், அல்லது பிறழ்வுப் பாலுறவு இன்பங்க்ளே நாடுவதால் எதிர்ப்பாலரை நாடும்பாலுந்தலே இழக்கக்கூடும்.
பீதி: விறைப்பத்துக்கு இது ஒரு முக்கியமான ஏதுவாகும். கருப்பை நிலையுறுவதற்கும், பிள்ளைப் பெறுவதற்கும் கடும் பீதியடைவாள். அவளின் முதலாம் க்ருப்பநிலை நோய்க்கொந்தளிப்பால் கடும் பீதியை யுண்டாக்கியிருக்கும். பேறும் வில்லங்கம்ாயிருந்தால் தொடர்ந்து உயிர்வாழமுடியுமோவென்ற ஏக்கத்தையும் அது உண்டாக்கியிருக்கும். அவள் பேற்றுவேளையில் சேதமுற்று நோய்ப்பட்டுமிருக்கக்கூடும், கருப்ப நிலையுருதவர்கள் தம் நண்பரிடமிருந்து மற்றும் பெண்களிலிருந்தும் வில்லங்கமுற்ற பேற்று வரலாறுகளைப் பற்றிக்கேள்வியுற்றிருப்பர், மேலும் கணவன் நல்ல உடற்கட்டும், பெலவானுயுமிருப்பின் லவி வேளையில் மிக விலங்குத்தனமாய்ப் புணர்ந்து நோவையும் மனவேத னையையும் கலவிக்கு வெறுப்பையும், அவளுக்கு உண்டாக்கியிருப்பான். அல்லது பலரிலிருந்து ஒருவன் அப்படி உண்டாக்கின செய்திகள் அவள் காதில் எட்டியுமிருக்கும், கதைப் புத்தகங்களில்படித்துமிருப் பாள். எல்லாவகையிடர்க் கலவிகளும் பால் விறைப்ப நிலையை உண் டாக்கும் என அறியவும்.

Page 144
இளம்பெண் நோயியல் கலவி, கருவுறல் ஆயவற்றலாகிய மனக் குழப்பங்கள்:
நல்ல ஒழுக்க வழக்கமுள்ள குடும்பங்களில் பிறந்து வளர்ந்த பெண்கள் ஒழுக்கத்துக்கமைய குழந்தைப் பேறடைய விரும்புவார்கள். கருப்பத்தடை முறைகளை விரும்பார். இவை கடவுள் நீதிக்குத் தகாது என்ற கருத்தும் கொண்டவர். நீதி நூல்களால் கூறப்பட்ட இல்வாழ்க்கையை தன்னைப்போன்ற கணவனுடன் வாழவிரும்புவ ள். கணவன் பண்பு குறைந்தவனுயும், குடிகாறஞயும், மச்சம் மாமிசம் உண்பவனுயுக், புற மதக் கோட்பாடுகளுடையவனுயும் இருப்பின் இவை அவளுக்கு மனவேதனையையுண்டாக்கும். அல்லாமலும் அவன் வற்புறத்தும் கருப்பத்தடை முறைகளை விரும்பாதவளாயும் அதற்கு வெறுப்புடையவளாயுமிருப்பாள். இல் வாழ்வில் இவர்களைப் போன் றவர் மிகுதியானோர்.
பிறிதெரு வகுப்பினரும் உண்டு. வயதுமிக முதிர்ந்தவர்கள் மிக இளம் பெண்களைப் பல காரணங்களுக்காக மணம்புரிவர். பெண் களையும் பல காரணங்களுக்காக பெற்றேர் அவ்வகை ஆண்களுக்கு கல்யாணம் பண்ணிவைப்பர். இளம் பெண்கள் மனதில் கட்டியிருந்த மணவாழ்வுக் கோட்டைகள் எல்லாம் பொடியாக ஓர் ஏமாற்றமும் நிரந்தர மனவடமிழ்வுமடைவர். பெண்ணின் பாலுந்தல் (ஊக்கம்) ஓர் உறைநிலையிலுண்டு. அதைத்தட்டியெழுப்புவதற்கும் பின்னர் செவ்வையாக வளர்ப்பதற்கும் பின்னர் இருவரும் அதைப் பேணு வதற்கும் ஓர் இளம் மனிதன் வேண்டும். மனிதன் கிழட்டு நிலை எய்தும் வயதிலிருப்பின் அல்லது பாலுந்தலில் நலிவுற்ற சோம்பேறி யாயும் பாலுறவுகளைப்பற்றி அறிவு இல்லாதவனுயும் அல்லது பெண் னின் வயதுப் பாலுந்தற் தேவைப்பாடுகளை அறியாதவனுயுமிருப்பின் அவள் ஏமாற்றமடைவள்.
வேறுமொரு முக்கிய வகுப்பினருண்டு.
கல்யாணமாகி 3-4 ஆண்டுகளில் பிள்ளைவளம் இல்லாதவர் பலர் உண்டு. இவர்களில் ஒருபகுதியினர் வைத்திய ஆலோசனையை நாடிச் செல்வர். தம் வாழ்க்கை முறையைச் சீராக்கி அல்லது அறுவைவினை மருந்து ஆகியவற்ருல் பிள்ளைவளம் பெற்று இன்பமாய் வாழ்வர்.
இன்னெரு பகுதியினர் வைத்திய ஆலோசனைபெருது, பாலுறவிற் சோம்பி வாழ்ந்து காலம் வரும் பொழுது பிள்ளைப்பேறு கிடைக்கு மென்று கோவில் குளம், நோன்பு, மந்திரம், மாயம் ஆகியவற்றி லிறங்கிச் சலித்து ஏமாற்றமடைந்து மூப்படைவர். பாலுந்தல்கள் பயன்தரவில்லையென்னும் ஏமாற்றத்தால் கலவிக்கு ஊக்கமில்லாதவர் களாகின்றனர்.
 

விறைப்பம் 267
வேறுபலர் வைத்திய ஆலோசனைக்குப்பின் தாம் பிள்ளே வளம் என்னவிதத்திலும் அடையமுடியாதென அறியவும், தம் உந்தல்களேயும் படிப்படியாக இழந்துவிடுவர், தீர்வு பெற்றும் வேண்டிய காலத்துள் பிள்ளைவளம் பெருதவரும்கூட அதே நிலையடைவர்.
தற்காலத்தில்
கணவன் பல காரணங்களுக்காகப் தன் மனைவியிலிருந்து பிரிந்து வாழவேண்டிய நிலையுண்டாகி வருகின்றது. சில குடும்பங்களில் மனேவியும்தன் கணிவன் பிள்ளைகளிடமிருந்து பிரிந்து வாழவேண்டிய நிலைமைகளும் உண்டாகி வருகின்றன. வியாபாரம், தூர நாட்டில் தொழில், படிப்பு ஆகிய காரணங்களினுல் கணவன்பிரிந்திருப்பின் தன் பாலுந்தல்களை வேணுமென்றுஅடக்கி அவள் வாழ்வாள். அன் பைத் தம்பிள்ளைகள் பாற் செலுத்தி பாலுறவை மறந்துவிடுகிருள். நல்ல ஆண்களும் அப்படியே மனைவி, மக்களையும் எண்ணி வாழ்வர். கணவன் மீண்டும் திருமபவும், தான் அடக்கிய உந்தல்களை தூண்டி எழுப்ப முடியாதவளாயும் ஆவாள்.
உடலையும் மனதையும் வேறு செயல்களில் கடும் ஈடுபாடு செய்தல் பாலுந்தலை உறையச் செய்யும், என்பதையும் உணரவும்.
உடல்நலக் குறைவு உடல் இளைப் பு: ஏனேய மனம்சார்ந்த ஈடுப டுகள் ஆகியன பாலுந்தலையுறையச் செய்யும் கூர்ப்பு அல்லாத நாட்பட்ட நோயில் வருந்துபவருக்கு பாலுந்தல் குறைக்கப்படும். இதில் அவருக்கு விருப்பமேயிராது. ஆனல் காச நோயால் வருந்து பவருக்கு உந்தல் மிகையடையும்.
அகச் சுரப்புக் காரணங்கள் :
சூலக வினைய நிறுத்தம் சிலருக்கு விறைப்பத்தையுண்டாக்கும். அதிரனல் காரோட்டு வினையவழுவலும் முற்பக்கப் பித்துயித்தறி பிணத்தல் வாதையும் உந்தலைத் தணிக்கும்.
தீர்வு முறைகள். விறைப்பத்தின் காரணத்தைக் கண்டுபிடித்து விளக்கம் பெறவேண்டும். பெண்ணுக்கும் அவள் கணவனுக்கும் நிலேமையின் காரணத்தை விளக்கி அதன்படி ஒழுகச் செய்தால் முழுத் திருத்தமடையும் நீடிய விறைப்பநிலைக்குப் மிகப் பொறுமை யாகவும் மீண்டும் மீண்டும் நிலைமையை விளக்கி அவர்களே ஊக்கு வித்தால் நிலைமை மிகத் திருந்தும் உடல் சார்ந்த கீாரணங் களினலாகின் நிலைமையைத் திருத்துவது வில்லங்கமாகும்.

Page 145
இளம்பெண் நோயியல்
அவர்கள் வாழ்வை வேறு திக்கிற் (சமயம், தொண்டு) திருப்பி அவர்களை இன்பமாய் வாழ உதவலாம். யா தாமொரு காமவூக்கிப் பொருளோ அல்லது ஒமோன் பொருளோ பலன்தருவதில்லை. ஒமோன் குறைபாட்டு நோயிருப்பின் ஏற்ற ஒமோனை (தைருேட்யிட்டு, கோட் டிசோன்) ப் பயன்படுத்தவேண்டும். சிலர் பெண் விறைப்பத்துக்கு மெதில் தெசுத்தற்றமுேன் 5 மி, கி, எடைகளில் நாளுக்கு இருதரம் சில கிழமைகளுக்கும் அல்லது கோட்டிசோனைச் சிறிய எடைகளிலும் கொடுப்பின் பலன் தரும் எனக் கூறுவர்.
ஆந்திரசன் பொருள்கள் உடல் நல் நிலையை ஊக்குவிக்குமென்றும் உளத் தூண்டல்களுக்கு ம்றுகை நிகழ உதவும் என்றும், ஈனலுற புக்களுக்குக்கூடிய உணர்ச்சியை ஊட்டுமெனவும் காரணம் கூறுவர். இலங்கைப் பெண்களில் மிகுதியானுேர் மட்டுப்படுத்தப்பட்ட பாலுந்தல் உடையவர். இது நீண்ட காலச்சூழல் நிலைமைகளால் பெற்றவொரு பண்பாகும். பாலுந்தல் லீலைகளில் ஈடுபடுவதில் விருப்பம் கொள் வதிலும் பார்க்க குழந்தைகள் பெறுவதிலேயே மிக விருப்பம் கொள்வர். இலங்கை இந்துப் பெண்களை பொறுத்தமட்டில் கலவிக்கு நாட்கள் விதிக்கப்பட்டிருக்கும். சிலமாதங்களில் இதைத் தவிர்ப்பர் குறிக்கோள் நல்ல பிள்ளை பெறுவதற்காம், கலவியானது வரையறுப் பில்லாத காம வின்பம் அனுபவிப்பதற்கன்று.
சச்சு இன்பம் எய்த இயலாமை
ஏதியல் 1, பால் விறைப்பத்தையுண்டாக்கும் எல்லா ஏதுக் களும் : சச்சு எய்தவியலா நிலையை உண்டுபண்ணும். இதில் οι ύ காரணிகளும், உளவியற் சூழல் ஆகியவற்றின் காரணிகளும் பங்கு பெறும். பெரும்பாலும் அது உளமட்டத்தில் நிகழ் உட்தடுப்பாலாம்:
2. கணவன் தன் கலவிச் செய்கையைக் கட்டுப்படுத்தி தன் மனேவிக்கு சச்சு எய்தும் பொழுது அதற்கேற்பத் தானும் எய்தத் தவறல். என்ன முறையிலாயினும் அவளுக்கு இந் நிலையையெய்தப் பண்ணவேண்டும். ஜெவ்கோற் என்பவர் கூறுவது இங்கிலாந்தில் நூற்றுக்கு 25 வீதப் பெண்கள் கல்ாணமாகி முதல் நான்கு ஆண்டு களுக்கு இந்த இன்பத்தைப் பட்டறிவதில்லையென்றும், ஐந்தாம் ஆண்டில் இவ்வீதம் நூற்றுக்கு 15 வீதமாகிறதென்றும், 20 ஆண்டு மட்டில் 10 நூர்வீ. ஆகுமென்பதாம். இது சிலருக்கு அனுபவத்தால். தான் கிளர்த்தப்படுமென்பதாம். வேறு சிலரின் கூற்றின்படி பெண்ணுக்கு உகந்த மனிதனிருப்பின் அவள் சச்சு நிலை எய்தமுடியு மென்பதாம். சில பெண்கள் இதை நம்பி இந்த உகந்த மனிதனைச் சந்திக்கும் வரைக்கும் வரையறுக்கப்படா வாழ்விலீபடுவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விறைப்பம் 269
3. மிகவும் விரிக்கப்பட்ட யோனியுடன் தளர்ந்த குதவுயர்த் திகளிருப்பின் நெருங்கிய தொடுகை நிகழாதாம். அவள் சச்சு நிலை யெய்தாள்.
4. சிலர், கிளைத்துரு, யோனி அல்லுணர்ச்சி நிலை, என்பன ஏது வகாக் கூடுமென ஏற்கார், சச்சுநிலை ஒருக்காலும் எய்தாப் பெண்களுக்கு ஒர் உடன் பிறவி கச்சு அறியாப்பண்பு உண்டுபோலும், அவர்கள் சித்துயா அல்லது உடற்காரண அல்லுணர்ச்சி நிலை கிளேத்துருவிலும் யோனியிலும் அல்லது இவ்விருவுறுப்புக்களிலும் உறுகின் ருர் போலும், அவள் எம்முறையிலாயினும் (பாலுறவு தன்னருட்டல் ஆகியன) அல்லது துயில் நிலையிலாயினும் சச்சுவை அறியாவிட்டால் அது அல்லுனுர்ச்சி நிலையாலெனெக் கருதமுடியும்,
தீர்வு: விறைப்பத்துக்கு போலாம். நிலைமையை பெண்ணுக்கும் அவள் கணவனுக்கும் விளக்க வேண்டும். ஏனெனின் அவள் தனக்கு ஒரு கண்டறிய முடியாப் பிறழ்வு உண்டென எண்ணுவள். கணவனுே தன் மனைவி தன்னை நேசிப்பதில்லை எனத் தப்பெண்ணம் கொள்வன், இவ்விளக்கத்தால் சச்சரவு நிகழும். யோனித் தளர்தலிருப்பின் இதனைச் செப்பம் செய்யலாம்.
ஆணில் தோன்றும் BK, Guð6) u ft BG6i T
1. வலுவின்மையும் ஆண் விறைப்பமும்
இவை வெவ்வேறு நிலைமைகளாகவிருந்த போதும் பெரும்பாலும் அணைந்து நிகழ்வனவாம். இது கணவனுக்கும் மனேவிக்கும் நிகழும் மிகத் துன்பமான நிலைமையாம். இருவருக்கும் மிகச் சினமூட்டும் நிலேமையாம். இப்பிறழ்வைத் தீர்வு செய்வது மிக வில்லங்கமாம். இதில் பல்வகைகள் உண்டு.
1. பாலுறவு விருப்பமின்மை. ஆகவே பின நிமிர்த்தல்
நிகழ்வதில்லை,
2. பாலுந்தல் இருந்தபோது நிமிர்த்தல் உற இயலாமை,
3. நலிந்ததும் மிகச் சிறிது பொழுதுக்கு தோன்றி மறையும் நிமிர்த்தல். இது உட்புகை செய்ய முன்னம் விழுக் காடுறும் ,
4. செவ்வனமான நிமிர்த்தலும் புகுத்தலும், ஆணுல் சிமன் வெளிசெலுத்தப்படுவதில்லை, சச்சு இன்பமும் நிகழாது. இதை ஊடறிவது வில்ல இக்மாம், யோனிக்குள் அல்லது

Page 146
270 இளம்பெண் நோயியல்
பீனவுறைக்குள் கலவியின் பின் சீமன் காணப்படாவிடின் தான் அறியப்படும்.
பிற் திக்கில் சீமன் சலப்பைக்குள் வீசலுறல் நிலையி யோனிக்குள் சீமனிராது, ஆணுணவன் சச்சு நிலையெய்துவன்
5. முன்னமாக நிகழ் வெளிவீசல் பின்னர் விளக்
கப்படும்.
ஏதியல்: ஆணில் தோன்றும் விறைப்பமும் வலுவின்மையும் ஏதியல் காரணங்களைப் பொறுத்தமட்டில் பெண்ணில் தோன்றும் விறைப்பக்காரணங்கள் போலானவாம். அவை உடற் கட்டம்ைப்யியல் உளவியல் காரணங்களினலாம். வலுவின்ம்ையானது ஆணுக்கு அவன் பாலுறவில் வல்லவன் என்ற மேம்பாட்டையிழக்கச் செய்யும். இவ் விழப்பானது திரும்ப வலுவின்மையைக் கூட்டும். ஒருவன் பலதரம் கலவியையியக்க வழுவின் அவன்மேலும் அதில் ஈடுபடின் அவன் கட்டாயமாக இயக்க வழுவுவானுவன்.
உடற்றெழிலியற் காரணிகள்:
பூப்புப் பருவத்துக்கு முன்னமும் மூப்படையும் காலத்திலும் வலு வின்மை நேம் நிகழ்ச்சியாம் . எவ்வயதிலும் பலதரம் அடிக்கடி நிகழ்த்து கலவியானது சிறிதுகாலத்துக்கு பாலுறவு விருப்பத்தையும் வல்லமையையும் குறைக்கும். 50 வயது வரைக்கும் ஆணுக்கு பாலுறவு நிகழ்த்தும் தகமை மிக வலிவாம். இதன்பின் படிப்படியாக நலிவுறும். சிலருக்கு மூப்படைந்த பின்னரும் (70-க்கும் மேலாகவும்) பாலுறவு வலு இன்னமும் உண்டு என செய்திகள் கூறும்.
உடலமைப்புக் காரணங்கள்:
சில ஆண்கள் பிறவியிலேயும் கட்டமைப்பு முறையிலும் பாலுந்தல் குறைந்தவர்கள். இவர் பணம், பதவி, குலம் இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும் அல்லது தோழமைக்கும் மணம்புரிவர். இவர் களுக்கு பாலுறவைப் பற்றியக்கறையில்லை. இவர்கள் தன்னருட்டல் எக்காலத்திலாயினும் நிகழ்த்தியிரார். கனவிலும்கூட பாலுறவு அனு பவம் உற்றிரர். பிறவியாகப் பாலுந்தலில் நலிந்தவர் உடற் கட்ட மைப்பில் நலிந்தவராகார், அல்லது கொழுப்புடையவர். சிலர் நல்ல உடற்கட்டும் அழகும் உடையவர். இவர் தன்னைப் பற்றியே சிந்திப் பாரொழியத் தன் மனைவியை நேசியார். இதேபோல் சிலபெண்களு
முளர்,
 
 

விறைப்பம் 271
இளம்படுகால எண்ணப் பதிவுகள். இளம்படு காலம் துவங்கி பாலுந்தலைக் கட்டுப்படுத்த வேண்டும், என்றும் அது பேரின்பநிலை அடைவதற்கு ஒருதடையெனக் கருதும் சமூகத்தில் பிறந்தவராகவும் இருப்பர். அது 'பாவர் ஒண்ண மென்றும் கூறுபவரும் உளர், ஒரு இளம் பெண்ணைக் கண்டால் கவனமாயிரு சிக்கிக்கொள்ளாதே' என்று மிக அன்புடையதாய் மகனுக்குக் கூறக்கூடும்.
தொழில்: போதகர், பிரசங்கியார், எழுதுவினைஞர் ஆகிய தொழில்களிலீடுபடுபவருட் பலர் வலுவின்மையைால் வருந்துவர். வேலையில் கடும் ஈடுபாடு, மிதமிஞ்சிய உடற்களைப்பு, வியாபாரத் தொந்தரவுகள் இவையெல்லாம் பாலுந்தலைக் குறைக்கும். வலுவின் மையை உண்டாக்குவதுமல்லாமல் அதை மிகைப்படுத்தும் பல வியாபாரக் குடும்பங்கள். பிள்ளைவளக் குறைவால்வருந்துவர்.
மனேவியில் அன்பில்லா நிலைமை சிலர் தன் மனைவியை நேசிப் பதில்லை. தாயைத் தன் மனைவியிலும் பார்க்கக் கூடுதலாக நேசிப்பர். சிலர் தம் தங்கைமாரை நேசிப்பர். சிலர் புற மனைப் பெண்களைக் கடுமையாக நேசிப்பார்.
மனப்பீதியும், மனத் தென்புக் குறைவும்:
முதலாம் தடவை நிகழ்த்தும் பொழுது கலவியைச் செவ்வனே இயக்க முடியுமோவெனும் வேண்டா மன அவலமும் ஏக்கமும் வலு வின்மையுண்டாக்கி ஏமாற்றத்தையுண்டாக்கும். நீடிய காலம் பிரிந்து வாழ்ந்தவர் மீண்டும் உறவு கொள்ளும்பொழுது வியப்புக்குரிய முறையில் வலுவின்மையுண்டாகும். இது சிறிது காலத்துக்குமட்டும் தான் நிலைத்து பின் முந்திய வலுவடையுமென அறியாத கணவ னுக்கும் மனைவிக்கும் திகிலையும், இதனுல் மேலும் வலுவின்மையையும்
உண்டாக்கக்கூடும் .
வேறுபல காரணங்களும் உள. சிலர் தம் புதுமனைவியை துன் புறுத்தலாகாது என்னும் காரணத்தினுலும் அல்லது அவள் உடனடி யாகக் கருவுறக் கூடாதென்பதற்காகவும் மணவினையை முற்ருக்கார். சிலர் தானும் தன் மனைவியும் அனுபவிக்கும் இன்பத்தை பிறிதொரு புதுப் பிறப்பு குழப்பப்படாதெனும் காரணத்தால் மணவினையை முற்ருக்கார். சிலரில் தன் மனைவி கருவுறக்கூடாதென்னும் உட்தடுப் பால் கலவியில் உட்புகுத்தப்பட்ட பின்பு வெளிவீசல் நிகழாது. சில ஆண்கள் வாணி நோய்களால் வருந்தியிருக்கக் கூடும். வேறு பெண்களுடன் முன்னர் உடலுறவு கொண்டிருக்கக்கூடும். தலவி வேளையில் இவ்வெண்ணம் மனதில் உதிக்கவும் வலுவின்மையுண்டாகும்

Page 147
272 இளம்பெண் நோயியல்
ஏனைய கலவியிடர்கள்!
கணவன் உந்தலுற்று உடலுறவு செய்ய எத்தனிக்கவும் மனைவி மறுகை செய்யாளாகில் அவனின் துணிவு குறைந்து மேலும் செய் வதற்கு ஊக்கத்தையிழப்பான். இதன் விளைவானது கணவனுக்குக் குறையுண்டென மனேவி பிழைகாணின் பின்னர் இது ஒரு நிலை பேருரன வலுவின்மை நிலைக்கு அவனே எய்துவிக்கவும் கூடும். மனைவி யானவளுக்கு சச்சு நிலேயெய்த முடியாக் குறையானது அவனுக்கு உட்தடுப்பு வலுவின்மையை யுண்டாக்கக்கூடும். பீனவுறைகளைப் போர்த்து கருவுறற் தடைசெய்யின், உறையானது பினத்துக்கு உண்டாக்கப்படும் அருட்டலைக் குறைவுபடுத்திச் சிலருக்குப் பாலுந் தலில் நலிவுற்றவருக்கும் வயதில் மூத்தவருக்கும் வலுவின்மையை யுண்டாக்கக்கூடும்.
தற்காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் கருப்பத்தடைக் குளிகை கள், ஏனேய கருப்பையகச் சாதனங்கள் பெண்களுக்குக் கலவியில் உள்ளார்ந்த ஊக்கத்தையும் மகிழ்வையும் உண்டாக்குவதில்லை எனப் பலர் எனக்கும் கூறியிருக்கின்றனர். இளம் பெண்கள் இதைப் பற்றித்தான் கணவன்மாருடன் சண்டையிட்டதையுமறிவேன். ஒரு வேளை இது சிலருக்கு மட்டும் நிகழ் உட்தடுப்புநிலையாகக் கூடும்.
நோய்க் காரணங்கள்
(1) உடல்நலக் குறை, உடல் சோர்வும், மனச்சோர்வு (2) விதை துட்டல் (சிலருக்கு) (3) விதைக் குறைவுவிளேசலுயா மறைவிதையம் (இவை ஒமோன் ஆக்கத்தையும் வலுவையும் பெரும்பாலும் பாதிப் பதில்லை), (4) பித்துயித்தறிவழுவல், மைய நரம்புத் தொகுதி நோய்கள், அமிழ்வு செய்யும் மருந்துப் பொருள்கள் ஆகியன வலு வின்மையையுண்டாக்கும்.
தீர்வு: பிறவி உடற்கட்டமைப்புப் பாலுந்தலின்மைகளுக்கு யாதா மொரு தீர்வில்லை. ஏனைய நிலைமைகளில் கணவன்மனைவியிருவருக்கும் உளக் காரணிகளைப் பற்றியும் சூழற் காரணிகளைப் பற்றியும் விளக்கம் கொடுத்து பலரை நேமநிலையுறச் செய்யலாம். மனைவியை புறம்பாக வைத்து விண்சண்டை சச்சரவுகள் நிலைமையை மேலும் பாழாக்கு மெனக் கூறி அவனே ஊக்குவிக்கச் செய்யவேண்டும். அவனின்
ஆண்மைக்குறை அவல நிலையை இழுத்து வம்புப் பேச்சுக்களில் இறங்கவேபடாதெனக் கூறவேண்டும். அவனின் குறைந்த மனத்
தென்பு மேலும் விழுக்காடுறும்.
 
 
 
 
 

விறைப்பம் 273
ஓமோன்கள்: விதை ஓமோன்கள் குறைவென அறியின் அந் ()/f), JF GÖT HÖGT வழங்கவேண்டும். மற்றும் நிலைமைகளில் ୯୬|ଜ0) ଦ) । பயனுடையதல்ல.
பின்ம் தாங்கு மட்டை பிளாசுதிக்கு மட்டைகள் பினத்தை நேராக நிலைப்புச் செய்வதற்கு உண்டு. உட்புகுகை எய்தியபின், யோனிச்சுவரின் அருட்டல் சீமன் வெளிச் செலுத்துதலையும் சிலரில் நிமிர்த்துதலையும் உண்டாகக் கூடும்.
செயற்கைச் சீமன் உட்புகுத்தல்
கணவன் சீமனை தன்னருட்டாலால் வழங்கி இதை யோனியுட் புகுத்தின் கருவுறலை உண்டாக்கக் கூடும். இது குடும்ப மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும். சிலருக்கு இதன்பின் வலுவின்மையும் மறையு மெனவும் செய்திகள் பகரும்.
முன்முதிர் சீமன் வெளிவீசல்:
இதில் பீனம் யோனிக்குள் புகமுன்னம் அல்லது புகுந்தவுட னேயே வெளிவீசல் நிகழும். நிமிர்த்துதலும் வலுவாக அல்லது நலிந்திருக்கும். ஆணுல் சிறிது காலப்பொழுதில் நிலைதளரும்.
ஏதியல்: 1. வலுவின்மையையுண்டாக்கு எல்லாக் காரணங்களும் (11) மணவாழ்க்கையின் தொடக்கத்தில் மனப்பதறலும் அனுபவ அறிவுக் குறைபாடும். (1) நிமிர்த்தல் திண்ண மடையமுன்னம் உறவு உற எத்தனித்தல் (iv) இருந்திட்டொருக்கால் நிகழ்த்து கலவி ஆயனவாம்.
தீர்வு வலுவின்மைக்கு அளிக்கும் தீர்ப்புப்போல 1, பாலுந் வுலில் நிகழும் மிதமிஞ்சிய மனப்பதறலால் முன்முதிர் வெளிவீசல் நிகழின் இருவரையும் அடிக்கடி உறவு கொள்ள ஊக்குவிக்கவும். மேலும் குறுகிய இடைக் காலங்களுக்குப்பின் மீண்டும் மீண்டும் உறவு கொள்ளவேண்டும். பீனமுறும் அருட்டலே பீனவுறை (கொண்டோம்) யணிவதால் குறைக்க முடியும் கூபகத் தசைகளின் அப்பியாசத்தால் ஊறுநீர் விடலே இடைத்தடை செய்து நிறுத்தப் பழகினுல் வெளி வீசலையும் கட்டுப்படுத்த முடியுமென அறியப்படும். பரிவு நரம்புத் தொகுதியில் நிகழ் கணத்தாக்கக் கடத்துகையை தடுப்புச் செய்யும் மருந்துப் பொருள்களைக் கொடுத்து (ஐசோகாபோசசிட்டு 20, 40 மி. கி. நாள்தோறும் நீடியகாலத்துக்கு) வெளிவீசலைச் சுணங்கி நிகழச் செய்யலாம் என அறியப்படும்.

Page 148
274 இளம்பெண் நோயியல்
ஏனேய பாலுந்தற் பிறழ்வு நோய்கள் உள:
இவை பெரும்பாலும் உளவியல் மருத்துவரால் தீர்ப்புப் பெறும் ஆனல் இவற்றைப் பற்றி ஒவ்வொரு பெண்ணுேயியல் ஆலோசகரும் அறிந்திருக்க வேண்டும். பலர் இவரையே முதல் ஆலோசனைக்காகத் தேடுவர்.
நிமை மனயுயா (நிமை-இமை, இதள்-Nympha)
இந்நோயில் மிதமிஞ்சியதும் கட்டுப்படுத்த முடியாததுமான பாலுறவு விருப்பமுண்டாகும். ஆண்களைக் கலவிக்கு தேடிக் கொண் டோயிருப்பாள். அவள் உடலுறவு பலதரம் உற்ருலும் சச்சு இன்பம் அடையவதில்லை. ஆகவே இன்பம் அளிக்கக்கூடியவனைத் தேடி
இது விறைப்புக்குக் கூறப்பட்ட ஏதுக்களாலாம். உடலமைப்பு, உளநோய்கள், நரம்பு வாதைகள் ஆகியனவற்ருலாம். மாதவிடைவுக் காலத்தில் மிதமிஞ்சிய பாலுறவு உந்தல் உண்டாகக்கூடும். இது விரைவில் பெண்ணுனவள் தன் பெண்மை, அழகு, கவர்ச்சி ஆகியன விரைவில் இழப்பாளென்னும் பீதியால் இடைக்காலத்தை வீணுக்க கழிக்காது மிதமிஞ்சிய உடலுறவில் ஈடுபடுவள்.
இதற்கு உளவியல் மருத்துவம் தேவைப்படும். தீர்வு பெரும்பாலும் மனத்தென்பும் செவ்விய வாழ்வுக்குமாகிய புத்திமதிகளுமாகுமாம் புருேமைட்டுகளும் இதற்கு உதவும். பெண்நோய் ஆலோசகர் இவ்வகை நோயாளரிடம் முன் எச்சரிக்கையுடனும் தற்பாதுகாப்புடனும் ஆலோ சனே நடத்தவேண்டும். சூலகங்களே அகற்றும்படி வேண்டுவள் இதனல் ஒரு பயனும் விளையாது.
தற் பாலினருடன் பாலுறவு:
இது ஒர் பால் வளர்ச்சியின் நிலையாகும். பொதுவாக இளம் வயதில் காணப்பட்டு பின்னர் மணவாழ்வு வயதை எய்தியவுடன் கைவிடப்படும். சில சமூகத்தினர் இதனே நேமமெனவும் ஏற்கப்பட்ட பழக்கமெனவும் கருதுவர். சிலசமயவாதிகள் இது ஒரு பாவச் செயலெனக் கருதுவர். இம்முறைப்பிறழ்வான உறவானது எண்ணப் படுவதுபோல் அவ்வளவு கெடுதியை உடலுக்கு விளைவிக்காது. ஆனல் சமூக ஒப்புரவுக்கு உகந்ததில்லை. இயற்கை முறைக்கும் முரணுனதாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளம்பெண் நோயியல் 275
எதிர்ப்பாலினர் வேடகத்துக்கு கடும் விருப்பவுயாவும் எதிர்ப் பாலினராக வரக் கடும் விருப்பவுயாவும்
முதலில் எதிர்ப்பாலினரின் உடைகளையணியக் கடும் விருப்ப முண்டாகி அணிந்து மகிழ்வர் பின்னர் எதிர்ப்பாலினராக மாற்றப்பட விருப்பமுறுவர். அறுவை வினையாலும் மருந்துப் பொருட்களாலும் தம் பால்தோற்றத்தை மாற்றமுயல்வர். இதனை உளவியல் மருத்துவனே தீர்க்கவேண்டும். இவ்வகையான பாலின நடத்தைப் பிறழ்வுகள் நிலவிக்கொண்டேயிருக்கும். இவை சமூகத்தால் ஏற்க்கப்பட்டு பரவிய காலமும் பின்னர் வெறுக்கப்பட்டு ஒதுக்கிய காலமும் உலகமும் உலக வரலாறுகளும்கூறும். தற்காலத்திலும் சில நாடுகளில் அதிர்ச் சியையும் வெறுப்பையும் கொடுக்கும் முறையில் கெடுதிகள் விளை விக்கப்படுவதைச் செய்திகள் கூறும். நான் இலண்டனில் வசிக்கும் பொழுது கென்சிங்ரனில் உள்ள வாடி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந் தேன். அப்பொழுது அவ்விடுதியில் அனைத்துலகப் பாற் பிறழ்வு மக்களின் ஆண்டுக் கூட்டம் நடந்தது. அதில் ஒர் இலங்கையர் முகச் சவரம்செய்து, பெண்ணின் உடைகளுடன் உலாவித்திரிந்தது என் வியப்புக்குரிய காட்சியாகும். ஒரு நாட்டின் மக்கள் தொகை கூடவும் இவ்வகையானவரின் தொகையும்கூடும். இவை யெல்லாம் பிறவிப் பாற் பிறழ்வுகளாகும்.

Page 149
276 யோனியிரிவுகள்
இயல் 17
யோனியிரிவுகள்
யோனி வாயூடாக வடியும் இரிவானது இருவகைப்படும் 1, குருதி தோய்ந்தயிரிவு 11. குருதிச்சாயமற்றயிரிவு. இவ்வகையான இரிவையே வெள்ளே, படுகின்றதெனக் கூறுவர். இது பல்வகை நிறமுடையது. இவை மியூக்கசுப்போல (வெண்கரு) வெள்ளை, கீரம்போல மஞ்சள், அல்லது பச்சை ஆகிய நிறங்களாகும். பூப்புப் பருவத்துக்குப் பின்னர் பெண்ணின் ஈனலுறுப்புக்கள் இயல்பாகவே கருப்பைக்கழுத்து, யோனி, வல்வப் பகுதிகளினுள் சுரப்பிகளிலிருந்து வரும். சுரத்தல் நீர்களால் ஈரம்பட்டிருக்கும். கருப்பையிலிருந்தும் அருந்தலாகச் சுரப்புநீர் வடியக் கூடும். இது பெரும்பாலும் மாதயிரிவுக்கு முன்னர் கூடுதலாக இருக்கும். யோனி ஈரப்பதனனது யோனிச் சுவர்களுக்கு ஒர் உராய்வு நெய்யாக அமைந்து, அவற்றைச் சேதமுருது பாதுகாக்கின்றது. அல்லாமலும் யோனிக் குழியை பேணுவதற்கு ஒர் ஏற்ற அமிலச் செறிவாக (டோடலன் இலற்றிக்கு பசிலசு) உதவுகின்றது. (P.H. 4, 4.) இவ்வமிலயிரிவு ஆனது நோய்தரு பசிலசுகள் உட்செல்லின் அவற் றைக் கொல்லும், பக்குவமடையாத சிறு பெண்குழந்தைகளிலும், மாதவிடைவுக்குப் பின் மூப்புற்றேரிலும் இப்பாதுகாப்பில்லாதபடியால் யோனி இலகுவில் தொற்றும் , யோனி மேலணியிருந்து மீயுரிக் கலங்கள் சொரியும். இவ்விரிவுறு பெரும்பாலும் ஒர் உலர்ந்ததும் வெண் ணிைறமானதுமான தோற்றத்தையளிக்கும். விரல்களுக்கிடையில் மசிப் ப்பின் ஒரு பிசுபிசுப்புத் தன்மை இரிவுக்கு இருப்பதாக அறியப்படும். யோனிக்குள் வடியும் இரிவிற் பெரும்பகுதி மீளகத்துறிஞ்சப்படும். எனவே சிலர் தமக்கு இரிவில்லையெனவும் கூறுவர். வேறு சிலருக்கு இது பெருமளவிலுண்டு.
இவ்விரிவினளவும் தன்மையும் சூலகச் சுழல்களுடன் வேறுபடும். சூல் இடும் நாட்களில் அது சிறிது கூடியும் பேம் புகுவதற்காகப் பதப்படுத்தவும்படும். இதற்கு ஒருவகையான சிறப்பு மணமுண்டு.ஆனல் போதியளவு உடற் துப்பரவு பேணுபவர்களில் இம்மணத்தை அக்கம் பக்கம் உள்ளவர்கள் உணரவே முடியாது, சூலகச் சுழல் காலத்தில் வல்வத்திலிருந்து ஒரு சிறப்பு மோப்பு மணம் உண்டாகும். சூலிடும் காலத்தில், பாதோலின் சுரப்பிகளிலிருந்தும் வல்வப் புறப்பரப்புள் ளுள்ள கடும் செறிவான சுரப்பிகளிலிருந்தும் சுரப்புநீர்வடியும், இப் பிந்தியவை நெய்ச் சுரப்பிகளும் (சீபம்) வியர்வைச் சுரப்பிகளுமாம். வியர்வைச் சுரப்பிகளுட் பல பெரியதானவை, மருளுற்றிருக்கும் இவை தனித்திறன் சுரப்பு செய்யும், இவை அபச் சுரப்பிகளாகும். இவற்றின் சுரப்பு நீரானது பற்றிறியத் தாக்கமடையும்பொழுது
 

இளம்பொண் நோயியல் 277
ஒரு கடும் சிறப்பு நாற்றத்தை உண்டாக்கும். சூலிடம் காலத்தில் இது கடும் மணமாகவிருக்கும். விலங்குகளில் இம்மணம் சிறிது தூரத் துக்குக் கடத்தப்பட்டு இவ்விலங்கு ஆண்களை தோற்று வாயிடத்துக்கு ஈர்த்து அவற்றிற்கு பாலுந்தலைக் கடுமையாகக் கிளர்த்துவிக்கும் தன்மை யுடையது. மனிதகுலத்தில் பெண்கள் உடற் துப்பரவை பலவேறு முறைகளால் பேணுவதால் மணம் அவ்வளவுண்டாவல்லை. இம்மணஒ துக்குப் பதிலகாச் செயற்கைவாசனைப் பொருள்களைப் பயன்படுத்துவர்.
இயல்பான இரிவுகளுக்கு அவற்றின் வகையீடும் ஏதுக்களும்.
வல்வத்திலும் யோனியுறைக்குள்ளும் நோம நிலைகளில் காணப் படும் அருந்தலான இரிவு கீழ்வரும் தோற்றவாய்களிலிருந்தும் பெறப்
பட்டவற்றின் கலவையாம்.
வல்வம்: பாதோலின் சுரப்பிகள் (பெரும் தலைவாற்பி சுரப்பி) நெய்ச் சுரப்பிகள், அபச் சுரப்பிகள் ஆகியற்றிலிருந்து சுரக்கப்படு கின்றது. இவற்றின் அளவு சூலக வினையத்தின்படி நிலையையும் பெண்ணுறும் பால் வேட்கையருட்ட்லேயும் பொறுத்து வேறுபடும். இது யோனிக்கு உராய்வு நெய்யாகமைந்து பீனப் புகுகையை இல குவாக்கும். யோனி அமிலத்தாக்கத்தைக் குறைக்கும்.
யோனி: யோனிச் சுரப்பானது அரை குறை திண்ம வெண் துணிக்கைகளாகத் தோற்றும், இவை யோனியுறை மேற்பரப்பு மேலணிக் கலங்கள் சிதலமடைவதாலாம். இவற்றினளவும். சூலகச் சுழலைப் பொறுத்தும் பாலின அருட்டலைப் பொறுத்தும் வேறுபடும்.
கழுத்துச் சுரப்பிகள்:
இது ஒரு காரமினுங்கு மியுக்கசுப் போன்ற சுரப்பாம். இதில் புறற்ருேசுச் (பழ) சீனி கடும் செறிவிலுண்டு. இனிக்கும் இதன் அளவு சூலகச் சுழற்படி நிலையிலும் கழுத்தின் குருதிக்கலனச் செறிவிலும் தங்கியிருக்கும். இது சூலிடல் வேளையில் மிகக் கூடியும் பாகுத் தன்மையில் குறைந்துமிருக்கும். இம்மாற்றமானது பேம் விரும்பிபுகுகைசெய்வதற்கே ஆகும்.
கருப்பைச் சுரப்பி: இது காரத்தன்மையுடயது. நிறமற்றதும் நீர் மயமானதுமாகும் குளுக்கேகாசும் புறற்ருேசும் (பழவெல்லம்) மிகக்கூடிய செறிவில் காணப்படும். இதன் வடிதலளவு சூலகச் சுழலின் சுரத்தல் அவத்தையிலும் மிகக் கூடியதாகும். స్కో

Page 150
278 விறைப்பம்
பலோப்பியக் குழாய்:
இது அல்புமின் செறிவு மிகுந்த நீர்மயப் பாயியைச் சுரக்கும். இதனில் பரிவிரியப் பாயியும் சிறிதளவில் இருக்கக்கூடும். இப்பாயி
யானது யோனியை அடையக்கூடும்.
இரிவு நீரின் அளவு. (மூத்தோரில்)
இயற்கையான நிலைமைகளில் (நேம) யோனிவாயானது ஒரு நல் நிலையைத்தரும் ஈரத் தன்மையுடையது. ஆணுல் இருந்திட்டுடொருக்கால் மட்டும்தான் பெண்ணின் உள்ளுடைக்கு ஒரு கறையையுண்டாக்கும் அல்லது பொதுவாக அது மிகச்சிறியவளவிலாகும். -
கீழ் தரப்படும் நிலைமைகளில் இது பொதுவாக மிகையடைந்து பெண்ணுனவள் உணரக்கூடிய அளவிற் காணப்படும்.
1. சூலிடல் வேளைகளில் கருப்பைக் கழுத்திலிருந்து சூலிடற் சொரிவு உண்டாகும். 2. மாதயிரிவு தோன்ற முன்னம் சில நாட்களுக்கு ஈனற் சுவட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சுரத்தல் அளவில் கூடும். 3 பால் அருட்டல் (அகத்தருட்டல்); காமநூல்களைப் படித்தல், சிற்றின்பக் காட்சிகள் எண்ணங்கள், ஆண்களுடன்கூட்டு வாழ்வு, தொழிலீடுபாடு, கலவன் கல்லூரி வாழ்வு ஆகியன உள்ளத்தில் கட்டுப்படுத்தமுடியா அடிப்படைப் பாலுந்தல்களைக் கிளப்பும். மேலும் ஆண்களில் வரையறுக்கப்படா அன்பு, நேசம், காதல் ஆகியவற்றை உணர்த்தும் முறையிலான புறத்துறவுகளாவன: மென் இன்பத் தடவல் கள், முத்தங்கள், கொஞ்சுகைகள், இன்ப மொழிகள் ஆகிய பிரியம் தெரிவிக்கும் செயல்கள் இரிவைக்கூட்டும்.
தற்காலத்தில் வரையறுக்கப்படாத முறையில் பல காரணங்களால் இவ்வகையான நடத்தை பரவுகின்றது. முன்னைய காலம் தொட்டு இளம் மங்கையருக்கும் பெண்களுக்கும் குடும்பத்து ஆண்களைப்பொறுத்த மட்டிலும் புறத்து ஆண்களைப் பொறுத்தமட்டுலும் ஒரு கட்டுப்பாட்டு நடத்தையொழுக்கம் இருந்து வருகின்றது. இவர்களுக்கு இவ்விரிவுப் பாடுகள் மிகக்குறைவாம்.
4. பாலினபுணர்ச்சி வேளையிலும் முன்னுேடி மதன்லிலேகளாலும் கூடல் நிகழ்ச்சிகளாலும் ஒரு தெளிந்த மியூக்கசு சுரப்பு தோன்றும், இது பின்னர் வெளியே வடியவேண்டும் ஆணுல் இலங்கையிற் சிலர்
இதுவும் பேம்பாயியும் கருப்பைக்குள் புகவேண்டியவை எனக் கருதி
ஆலோசனைக்கு வருவர்.
 
 
 
 
 

இளம்பெண் நோயியல் 279
5. கருப்ப நிலையில் கருப்பைக் கழுத்திலிருந்தும் யோனியிலிருந்தும் இரிவுகள் மிகையாகக் காணப்படும். இது குருதி வழங்கல்கள் இப் பகுதிகளுக்குக் கூடுதலானபடியாலும் ஒமோன் தூண்டல் கூடுத லானபடியாலும் நிகழ்கின்றது.
பால்வளர்த்தியில் முதிர்வடைந்து கருப்பம் தரியப் பெண்களில் அவ்வளவில் காணப்படுவதில்லை. சூலிடல்வேளையில் இதுசிறிதளவுகடும்.
நோயியல் இரிவுகள் வெண்ணிரிவுயா (வெள்ளைபடல்)
யோனிவாயால் வரும் இரிவு, இந்நிலைமைகளில் மிகைப்படும். சிறப்பாக இது கருப்பைக் கழுத்திலிருந்து வடியும். இதுதெளிவாய் அல்லது வெண்ணிறமாய் அல்லது கீரமாயிருக்கும். இது உலரும் பொழுது ஒரு செங்கல் மங்கல் மஞ்சளான ஒரு கறையை உடைக்கு உண்டாக்கும். கருப்ப நிலையிலும் இது தோன்றக்கூடும்.
நுணுக்குநோக்கித் தோற்றம் மாதச் சுழலில் முதலிருகிழமை களுக்கும் தெளிவான மியூக்கசுவும், யோனி மேலணிக் கலங்களும் பல்வகை உயிரிகளும் இவ்விரிவில் காணப்படும். பிந்திய இரு கிழமை குளில் இவற்றுடன் குருதி வெண்குழியங்களும் காணப்படும். பெரும் பாலும் சீழ்க் கலங்கள் தென்படா.
வெண்ணிரிவு யா, இது ஒரு தொந்தரவான நிகழ்ச்சியாம், மனத் துன்பத்தையும் உண்டாக்கும் உடைகளுக்குக் கறையையுண்டாக்கும். சிலருக்கு தெளிந்த சளி நீராக இடையருது சொரியும். இந்நோயில் வருந்துமொரு இளம் மங்கையைக் கண்டேன். தெளிவான மியூக்கசு நீர் ஒழுகிக்கொண்டேயிருந்தது. தனக்கு ஒரு கெட்ட நோயுண்டெனக் கல்யாணமே வேண்டாமென்று வாழ்ந்தாள். அடிக்கடி கட்டு துணியை மாற்றி, குளித்து உடல் நலத்தைப் பேணுவிடில், வல்வப் பகுதித் தோலானது அழச்சியுற்று புண்ணுக்கும்.
இவ்வனேயயிரிவு அரிப்பை (கடி), கெட்ட நாற்றத்தை உண்டாக்கு வதில்லை.
நோய்ப்பட்டவர் பலர் உடல் நலம் குறைந்தவர்களாய் இருப்பர் இவ்வுடல் நலக்குறைவு இந்தயிரிவாலெனக் கருதுவர். ஆணுல் உடல் ஊட்டவளக் குறையானது வேறு காரணங்களாலாம்.

Page 151
280 விறைப்பம்
1. ஏதுக்கள்: பேற்றுக்குப் பின்-புனிற்றுக் குழந்தைகளில் 2 கிழ மைகள் மட்டும் தெளிவான மியூக்கசு இரிவு உண்டாகக்கூடும். இது வித்தக ஈத்திரசன்கள் குழந்தையின் கருப்பையையும் யோனியையும் தூண்டுவதால் உண்டாகின்றது.
2. பூப்புப் பருவம்: சிலருக்கு வெண்ணிரிவானது பக்குவமடைய முன்பு ஒரு முன்னுேடிக் குறியாக சில ஆண்டுகளுக்குத் தோன்றக்கூடும். இது பக்குவமடைந்த பின் சிறிது காலத்துக்கு நிலைக்கும். தீர்வு தேவையில்லை. பெண்ணை பீதி கொள்ளக்கூடிய சோதனையில் ஈடுபடுத்த வேண்டTம்.
3. கூபகவுறுப்புக்களுக்கு சிறப்பாகக் கருப்பை கழுத் துக்கு நிகழும் கூர்ப்பு அல்லது அமர் நெருக்கம்; சுரப்பிகள் கூடுதலாக சுரக்கும். திகில் நிலேமை மனவேக்கங்கள், நீடிய உடல் நலக்குறைவு, இருக்கை நிலைத்தொழிலில் ஈடுபடுதல், நீடிய காலப் பொழுது நிற்றல், கருப்பையிறங்கல் தீர்க்கமுடியாப் பாலுந்தல் ஆகியன இத்தெளிவான இரிவையுண்டாக்கக் கூடும். கலியான வாழ்வில் இசை வின்மை, கருப்பமடைதற்குப் பீதி, கான்சர்நோய், மதன நோய் களுக்குப் பீதி, ஆகியவற்ருலும் இது உண்டாகும்.
4. கருப்பைக் கழுத்து அரிப்பு - இது உடன் பிறவி நோயாக இருக்கக்கூடும். கழுத்துக் கால்வாய்ச் சுரப்பிகள் அத்துமீறி கழுத்து யோனிப் பரப்புள் பரவியிருக்கும்.
5. யோனியலசற் கழுவல்: சிலர் சீழெதிரி மருந்துக் கரை சல்களை நாள்தோறும் யோனியைச் சுத்தம் செய்வதற்குப் பயன் படுத்துவர். இது சுரப்பிகளே அருட்டி மியூக்கசுயிரிவைச் சுரக்கச் செய்யும். இதனுல் உண்டாக்கப்பட்ட இரிவு பிள்ளைவளக் குறைவை சிலருக்கு உண்டாக்கியது. அரிப்பை அழற்றுதல் செய்யவும் கருத் கட்டல் நிகழ்ந்தது.
6. யோனிச் சுரப்பி வாதை: அருமையாக யோனியில் பிழைபடு முல்லேறியயிழைய வியர்த்தத்தால் சுரப்பிகள் காணப்படக்கூடும். இவைசுரக்கும்,
அழற்சி நிலைமைகளால்
யோனி வன்தாக்கமுறல்: (அ) பெரும்பாலும் புறத்துப் பொருட்கள் உட்புகுத்தப்படுவதால் இந்நிலை ஏற்படுகின்றது. தேங்காய் எண்ணெயில் தோய்த்த சீலைத்துண்டுகள், காப்பூசிகள், மனித "
 
 
 
 
 
 
 
 

இளம்பெண் நோயியல்
கற்றுண்டுகள், குச்சுக்கள், கண்ணுடித் துண்டுகள் பீனவுறை இறபர், ஆகியவற்றை நான் யோனியிலிருந்து வெளியெடுத்திருக்கின்றேன். மூத்தோரில் பஞ்சுத் திணிவு அடைப்பன்கள், உட்புகுத்திகள், கருத் தடைப் பெருட்கள், ஆகியன இருக்கக்கூடும். நலம் பேணிகள் பேற் றுக்குப்பின் பயன்படுத்திய பஞ்சுத்திணிவுகளையகற்ற மறந்துபோவர். உளநோய்ப் பித்துப் பிடித்தவர்கள் தம் யோனிக்குள் எல்லா வகைப் பொருள்களையும் புகுத்தி அடைப்புச் செய்த இருவரை நான் கண்டுள் (3GYTGöT :
(ஆ) காயம் - உராய்வுக் காயங்கள், கிழிவுகள் நிகழக்கூடும். குவாவட்டைக் கடிகளுக்குப் பின்னர் இரிவால் வருந்திய ஒருத்தியையும் நான் கண்டுள்ளேன்.
(இ) செறிவு மிக்க சீழெதிரி மருந்துக் கரைசல்கள், மருந்துப் பொருட்களுடன் நிகழ்த்தும் தற்ருெகுப்புத் தாக்கம் கருப்பத்தடை மருந்துப் பொருள்களும் அழற்சியை உண்டாக்கும்.
(ஈ) துப்பரவில்லாத குளத்தில் குடைந்து முழுகின பெண் ணுெருத்திக்கு குளத்துநீர் யோனிக்குள் புகுந்து சீழ்த்த அழற்சியை யுண்டாக்கியது. மலத்தில் காணப்படும் தானப்புழுவாலும், யோனி யுறை மேலணிப் பங்கசுப்பயிரிகளாலும் இரிவு உண்டாகும்.
2. தொற்றுக்கள்:
(அ) வல்வ - யோனியழற்சி -கொனக் கொக்கசு யோனித் திரிக்கோமனுசு அமீபா, இசுற்றேலிரிக்கா கண்டிடா அல்பிக்கான் ஆகியவற்றலாகிய தொற்று மூத்தோரிலும், தனித்திறனற்ற சீழுயிரி களால் ஆகிய தொற்று குழந்தைகளிலும் மூத்தோரிலும் உண்டாகும். யோனி அமீபங்களால் உண்டாக்கப்பட்ட அழற்சியைப் பலரில் கண்டுளேன்.
(ஆ) கருப்பைக் கழுத்தழற்சி-கொனக்கொக்கசு, சிவிலிசு பேற் றுக்குப்பின் கழுத்தரிப்புத் தொற்று ஆகியன இதனை உண்டாக்கும்.
(இ) கருப்பையகவணியழற்சி- சிறப்பாகப் பேற்றுக்குப் பின் அல்லது மூப்படைந்தோரில் அல்லது தூபக்கிள்வாதையில், நலம் குறைந்தோரில் இது காணப்படும்.
(ஈ) காயங்களும் புது வளரிகளும்-காயங்கள் புண்ணுக்கிப் பின்னர் தொற்றுறுதல். அறுவை வினைக்காயங்களில் சிறு மணியிழைய வளர்த்தி மாற்றமடைவதாலும் இரிவு உண்டாகும்.

Page 152
282 விறைப்பம்
3. புது வளர்த்திகள்:
சிறப்பாகக் கருப்பைக் குழிக்குள்ளும், கருப்பைக் கழுத்துவாயிலும் வளரும் சுரப்பியோமாக்கள் தெளிவான மியூக்கசைச் சுரக்கும். புண்ணுக்கினல் இரிவின் இயல்பும் மாறும் தீங்கிழை புதுவளர்ச் சிகளும் (கான்சர்) அகவணிக்கீழ் நாரோமாக்களும் புண்ணுக்கமுன்பு பெருந்தொகையில் மியூக்கசைச் சுரக்கும். தொடக்ககால தீங்கிழை கலங்கள் இரிவின்போது காணப்படின், இளம்படு கான்சர் நோயெ ஊடறியலாம். அண்மையில் ஒரு மூத்த பெண்ணுனவள் கடும் மா. இரிவுக்கும் இடைக்காலத்து அடிக்கடி நிகழும் கடும் மியூக்கசு பாய்வுக்கும் வந்தாள். கருப்பைக் குழிக்குள் ஒரு மியூக்கசு அகவண போர்த்த நாரோமாப் பல்காலியும், கருப்பைக் குழிக்குள் பெரு தொகையில் மியூக்கசுத் தேக்கமும் காணப்பட்டது. இவ்வகையா வேருெரு நோயாளி மிகத் தடித்த கருப்பையகவணியுடனும் மியூக்க பல்காலி வளர்த்திகளையும் கருப்பைக்குழி நிறைய மியூக்கசுவையு கொண்டிருந்ததை சில மாதங்களுக்கு முன்னர் கண்டுளேன்.
4. ஊறுநிரிப் புரைகள், மலக்குடற் புரைகள்
விரியயோத நீர் கருப்பைக் குழல் வழியாக யோனிக்குள் வடியும்
ஆய்வு:
நோயாளியைச் சோதிக்க வேண்டும். வயது, இரிவினளவு தொடங்கின விதம், சூலகச் சுழலுடன் உறும் தொடர்பு, கருப்பநி ஆகியவற்றைப் பற்றிக் கேட்டறியவேண்டும்.
இரிவின் நிறம், தன்மை, மணம் ஆகியவற்றைப் பற்றியு வல்வப் பிரதேயத்தில் அரிப்புப்புண்களுண்டோவெனவும் வினவ வேண்டும்
சோதனை: வல்வம், பரியேனம், யோனி ஆகியன சோதிக்கப்ப வேண்டும். யோனியுள்ளிருந்து எடுத்த இரிவு மாதிரிக் கூறுகளே நுணுக்கு நோக்கி ஆய்வு செய்யவும். சீழ்க்கலங்கள், யோனித் திரிக் கோமனுசு, கண்டிடா அல்பிக்கான்சு உண்டோவென அறியவேண்டும் சீழ்க்கலங்கள் காணப்படின் உண்மை வெண்ணிரிவில்லையெனக் கருதிகொனக் கொக்கசுத்தொற்று, திரிக்கோமனுசு மொனிலியா வாதைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

... இளம்பெண் நோயியல் 283
உண்டோவென அறியவேண்டும். சோதனையால் புறப்பொருள்களும், சுரப்பியோமாக்கள் நார்த்தசையோமாக்கள் காசினுேமாக்கள் ஆகிய னவும் அறுதியிடப்படும்.
தீர்வுமுறைகள்:
இது ஏதுவைப் பொறுத்து வேறுபடும். புறத்துப் பொருள்கள் அகற்றப்படும். கான்சர், சுரப்பியோமாக்கள் ஆகியவை அவற்றிற் கேற்ற தீர்வுபெறும். அவ்வாறே தொற்றுக்களுக்குமாம். புரைகளும் அறுவைவினை முறையால் தீர்வுபெறும்.
உண்மை வெண்ணிரிவுக்கு ܘܬܐ
ஏலவே கூறியதுபோல பெரும்பாலும் இது நோய் நிலைமையாலல்ல. ஆகவே, இவர்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்து காலப்போக்கில் மறையுமென்னும் மனத்தென்பளிக்கவேண்டும். மருந்துப் பொருட்கள், மருந்திடல்கள், யோனி அலசல்கள் பயனற்றனவே, குளிப்பும் இடத்து நலம் பேணலும் (உள்ளுடை மாற்றல்) தேவைப்படும். ஊட்டவளக் குறைவும் வேறு நோய்களும் இருப்பின், இவை தீர்வு பெறவேண்டும். மனக் கோளாறுகளிலிருப்பின் இவையும் தீர்க்கப்படவேண்டும். மலச் இக்கல் உண்டாகாது உணவு முறைகளைக் கையாளவும். உடலப் பியாசங்களைச் செய்யவேண்டும். குளிப்பு முழுக்கு தேவைப்படும்.
கழுத்தரிப்பு: இருப்பின் இதை அழற்றுதல் செய்யவேண்டும். உண்மை வெள்ளைபடலுக்கு இதை மிஞ்சிய தீர்வில்லை.
வல்வப் பிரதேய அரிப்பு (கடிச்சொறி)
அரிப்பு இவ்விடத்தில் சொறிப்புலனுணர்வைக் குறிக்கும். சாராக ஆலோசனைக்கு வரும் பெண்களில் நூற்றுக்கு 5-10 வீதம் இவ்வறி குறியால் வருந்துவர். சிலருக்கு இது தாங்கமுடியாத துன்பத்தை யுண்டாக்கும். வெளியினலுறுப்பு அரிப்பும், பரியேன அரிப்பும் பொது வாகக் காணப்படும். இவ்வகை நோய் நிலேமையில் அருட்டல், அழற்சி சியல் காண்பதுபோல் நோவும் நொய்மையும் எரிவுமுட்ைய இடங்கள் இல்லை. இது யோனி, புறவல்வப் பகுதி, அல்லது பேரிதழ் உட்பகுதி அல்லது கிளைத்துரு பக்கப் பள்ளப்பகுதி அல்லது ஆணசுப் பகுதியை (ஏனசு)ப் பாதிக்கும். சிலருக்கு யோனிக்குள் அரிப்புண்டாகி அவ் விடத்தைச் சொறிவர். இது துயிலைக் குழப்பும். மனக்கொதிப்பை யுண்டாக்கும் விருண்டுவதால் காயங்கள் உண்டாக்கிப் பின்னர்
தொற்றுறவும்கூடும். சிலரின் கருத்தின்படி இழிவளவு நோப்புலனு

Page 153
284 விறைப்பம்
ணர்ச்சியானது அரிப்பையுண்டாக்குமாம். சொறியரிப்பானது நரம்பு மையத் தொகுதியிலிருந்தும், சுற்றயலிலிருந்தும் வரும் தூண்டல் களாலும் உண்டாக்கப்படும். அரிப்பைப்பற்றி எழுதும்பொழுது, படிக்கும்பொழுது, எண்ணும்பொழுது ஒருவருக்குச் சொறிய விருப்ப முண்டாகும். சிலர் சொறியும்பொழுது பார்த்துக் கொண்டிருப்ப தனுல் சொறிய விருப்பம் வரும். நேரத்தைப் போக்கத் தெரியாதவர் என்னசெய்வதென்று யோசனையில் ஈடுபடுவர். தம் உடலின் சில குறித்த பகுதிகளைச் சொறிவதைக் கண்கூடாக அறியமுடியும். ஒருக் கால் அரிக்குதென்று சொறியத் தொடங்கின் இது ஒரு ஒப்புரவுக் குறைப் பழக்கமாகிவிடும். இதை மாற்றுவது வில்லங்கமாம். இந்த அரிப்பு இரவுப் படுக்கை வேளையில்கூடும். படுக்கையுடைகள் வெப் பத்தையூட்டும். நரம்புத் தொகுதியும் இளைத்துச் சோர்வு நிலையி லிருக்கக்கூடும்.
சில பெண்களுக்கு மாதச் சுழல் நடுப்பகுதியில் புறத்து ஈன லுறுப்புக்களுக்குக் குருதிச் செறிவு கூடவும் அப்பகுதிகள் இன்பம் தரும் அரிப்புச் சொறி தொடங்கும். இவ்வகை அறிகுறிகளுடைய பலர் ஆலோசனைக்கு வருவர். கணவனைக் கொண்டு சொறிவிக்கும் பலருளர். இத்தொல்லையால் மனைவியை ஆலோசனைக்குக் கொண்டு வந்தவரும் பலருளர்
ஏதுக்கள்
சொறியரிப்பை உண்டாக்கக்கூடிய இரசாயனப் பொருள்கள் உடலிலுண்டு. அவையாவன பொற்ருசியம், இசுற்றமீன் 5 ஐதரொட்சி திரிபற்றமைன், பிளாசுமாகைனின்கள் ஆகியவனவாம். இவை ஈன
லுறுப்புப் பிரதேயத்தில் இழையங்களுட்விடுதல் உறும்போல் தோற்றும்.
1. பொது மருத்துவக் காரணிகள்: சில அனுசேபப் பிறழ் வுகளும் அரிப்பையுண்டாக்கும். இவற்றுள் மதுநீரிழிவு, செங்கமாரி, ஊரிக்குருதிமை, மாதவிடைவு மாற்றங்கள், மூப்புக் காலத் தோ லூட்டம், ஊட்டவளக் குறைவுகள் ஆகியன அரிப்பை உடல் ஏகலும் உண்டாக்கும். பாழ் அல்குருதிமையிலும் தோன்றக்கூடும்.
2. நேர் குடல் ஏனசு (ஆண்க) நோய்களும், குடலில்
புழுக்களின் தாக்கமும்
மலமடக்கலாமை, ஏனசுப் பிளவு, குருதியிரியதிகள் ஒட்டுண்ணி
குடற் புழுக்கள், ஏனசழற்சி ஆகியன சிறப்பாகப் பரியேனப் பிர தேயத்தில் அரிப்பையுண்டாக்கும். நூற் புழுக்கள் (தானப் புழுக்கள்)
 

இளம்பெண் நோயியல் 285
பரியோனத்திலும் வல்வப் பிரதேயத்திலும் அரிப்பைப் பெரும்பாலும் உண்டாக்கும். இப்புழுக்கள் யோனிக்குள் குடிபெயர்ந்து இருந்த நிலையைச் சிலரில் கண்டிருக்கிறேன். பரியேனயரிப்பு (ஏன் வல்வயரிப் பும்கூட) பங்கசுத் தொற்ருல் உண்டாக்கப்பட்டதை அறிவேன். இது (தீனியா) சிறப்பாக ஒரு வளையக்கரப்பனல் உண்டாக்கப்பட்டது. இது யோனிக்குள்ளும் பரவக்கூடும். பரியேன மொனிலியாத் தாக்கத் தாலும் (கண்டிடா அல்பிக்கான்சு) இவ்வரிப்பு இப்பிரதேயங்களில் உண்டாகும்.
8. ஊறுநீரிக் காரணிகள்: வசிலசுயூறுநீருயா, உயர்செறிவு அமில ஊறுநீர், ஊறுநீர் அடக்கலாமை நிலைமைகள் குருதியூறுநீருயா ஆகிய தோற்சிதம்பலையும் நோத்தன்மையையும் உண்டாக்கியபோதும் அரிப்பும் சேர்ந்து காணப்படும். கிளைக்கோசு ஊறு நீருயாதான் (குருதிச் சீனிச்செறிவு மிகையடைந்திருக்கும்) இதையுண்டாக்கும் முக்கிய காரணியாம்.
பெண் நோயியற் காரணிகள்!
1. நேம நிகழ்ச்சியாக சிலருக்குச் சூலிடல் வேளையிலும் அல்லது மாதயிரிவுக்குச் சில நாட்களுக்கு முன்பும் மாதயிரிவு காலத்திலும் புறத்து ஈனலுறுப்புக்களில் அரிப்புக் காணப்படும். இது முன்னர் விபரிக்கப்பட்டது. இது ஒரு நோய் நிலைமையல்ல.
11. புறத்து ஈனலுறுப்புக்களில் துப்பரவு பேணுநிலை. இவை பல கசிவு நீர்களாலும், வியர்வையாலும், சுரப்பு நெய்களாலும் ஊறுநீர் ஆகியவற்ருலும் அழுக்குற்றிருக்கும். இவர்களுக்கு அரிப்பு உண்டாகும். சிலர் இதழ்களுக்கிடையிலுள்ள மடிப்புக்களையும், கிளேத்துருக்கும் சிறிய நிமைக்குமிடையிலுள்ள பள்ளங்களையும் சுத்தம் செய்யார், இதனுல் சீப நெய்ச் சுரப்புக்கள் சீபநெய்க் கட்டியாகி அல்லது கழியாக விருக்கும். மேலும் இப்பகுதிகளைச் சுத்தம் செய்யும் பொழுது கிளைத்துரு முன் தோற் கீழுள்ள சுமெக்மாச் சுரப்புப் படிவங்களைச் சுத்தம் செய்யார். இது காலப்போக்கில் திண்மமாகி அரிப்பையுண்டாக்கும். இவ்வகையான மங்கையொருத்தியைச் சோதிக்கும்பொழுது சுமெக் மாச்சுரப்புத் திண்மத்தை ஒரு கட்டியான வளேயமாகக் கழற்றமுடிந்தது. அரிப்பும் அதன் பின்புநின்றுவிட்டது.
11 யோனியிரிவுடன் அணைந்து நிகழ் அரிப்பு நூற்றுக்கு 80 பெண்களில் இவ்வகையானது, யோனித் திரிக்கோமனசாலும் கண்டிடா அல்பிக்கான்சுவாமலுமாகும். அரிப்பானது வல்வமேற்பரப்பிலும் யோனியுள் வாய்க்குள்ளும் காணப்படும் இவ்வுயிரிகளால் சிறிதளவில்

Page 154
286 விறைப்பம் உண்டாக்கப்படும் தார்த்தாற்றிக் கமிலத்தினுல் உண்டாகின்றது. ஏனைய வகை யோனியிரிவுகள் பொதுவாக அரிப்பை உண்டாக்கு வதில்லை. சிலரில் கருப்பையழற்சி, கழுத்து அரிப்புநைவு, ஆகிய வற்றிலிருந்து வடியும் இரிவானது அரிப்பை உண்டாக்கும்.
ஏனைய நைவுகளில் நிகழும் இரிவானது வல்வத் தோற் சிதம்பலை யுண்டாக்கி நோவையும் எரிவையும் உண்டாக்கும். சிலருக்கு யோனி பிரிவு இல்லாது அரிப்புமட்டும் காணப்படும்.
பொதுவாகத் தோல் நோய்கள் அரிப்பையும் உண்டாக்கக்கூடும். இவற்றுள் சோறியா சிசுவாதை, சீபயிரிவுத் தோலழற்சி, சிரங்கு ஆகியன அடங்கும். நோய்களைக் கண்ணுரடாகக் காணலாம். அபச் சுரப்பித் தினமணிவாதையும் அரிப்பைத் தரும். இதில் அபச் சுரப்பி களின் கான்கள் அல்லது வினையங்கள் தடைப்படுவதால் தோலில் சிறிய தனியனை தோல் நிறப் புன்சிம்பிகள் தோன்றும். இவை அரிப்பை உண்டாக்கும். செதிட் கலக்காசினுேமாவின் இளம்படு காலத்தில் அரிப்பு தோன்றக்கூடும். இதேவிதமாக வல்வக் காசினே மாவும், பசற்றின் நோயும் அத்துமீறிப்பரவும், வரை பல ஆண்டு களுக்கு அரிப்புமட்டும் தோற்றும்.
V. விலங்கு ஒடடுண்ணித் தொற்றுக்களும் தாவர ஒட்டுண்ணி நைவுகளும்:
பூப்புப் பிரதேயப்பேன் கடியையும் அரிப்பையும் பூப்புப் பிரதே யத்தில் உண்டாக்கும். மொனிலியாத் தொற்றுக்களும், மேற்ருேல் பயிரிகளின் தொற்றும் (தீனியா - வளையக்கரப்பன்) பெருமளவில் வல்வத்தையும் கவடுப் பிரதேயத்தையும் பாதித்திருப்பதைக் கண் டிருக்கிறேன்.
wi அலசையும் மருந்துப் பொருள் உணர் திறனும்:
பல இரசாயன பொருள்கள் சவர்க்காரம், சீழுெதிரிக் கரைசல்கள், பொடித்துகள்கள், அழகு செய் பொருள்கள் யோனிக் கரைசல்கள், கருப்பத்தடை இறப்பருறை, கீரங்கள் நிறவுடைகள், வல்வ மருந் தேற்றிய மெத்துக்கள் ஆகியன தோலில் அலசைத் தாக்கத்தை உண்டாக்கக்கூடும். சிலர் பென்சிலின், சலிசிலிக்கமிலம் பொருளுக்கும் சீழெதிரி சீரங்களுக்கும் பரவல் அலசைத் தாக்கத்தை காட்டுவர் வல்வமும் கடும் அலசைத் தாக்க விளைவைக் காட்டும். இவை அரிப்பை
உண்டாக்குவனவாம்.

இளம்பெண் நோயியல் vi உணவூட்டக் குறைவு நிலகள்:
அல்விற்றமின் வாதையில் (A, B,2 8, 12 போலிக்கமிலத்து குறை பாடுகளில்) அரிப்பு உண்டாக்கப்படும். இவற்றில் குறைநிறம் மாண் குழிய அல்குருதிமையும் சேர்ந்திருக்கும்.
wi. உளவியல் நிலைமைகள்:
9. தோலுக்கும் மூளைக்கும் ஒரு தொடர்புண்டு. இவையிரண்டும் (தோலும், மூளையும்) ஒரே மாதிரியான தோற்றுவாயிலிருந்து உண் டானவை. நரம்புச் சோர்வு நிலைமைகளில் மேற் பரப்பு அருட்டிகள் அரிப்புச் சொறிவை உண்டாக்கும். இதனுல் விருண்டும் பழக்கம் நிரந்தரமாக நிலைக்கக்கூடும். இதனுல் நாட்பட்ட தோலழற்சியுண்டாகி எப்பொழுதும் சொறிய வேண்டிய நிலைமை ஏற்படும்.
2. காதற் தோல்விகளும், ஏமாற்றமும், தன்னருட்டல், ஏனைய பாற்பிறழ்வு நடத்தைகள் ஆகியவற்ருலுண்டாக்கப்பட்ட தவமுன கருத்தும் கான்சர், சிவிலிசு ஆகிய நோய்ப் பீதியும் அரிப்பு நிலையை உண்டாக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியிருவருக் குமிடையில் இசைவும், இணக்கமும் இல்லாவிடில் பல மனைவியார் இவ்வகையான அரிப்பு நிலையை எய்திக் கலவியைத் தவிர்ப்பர்.
நாட்பட்ட தோல் ஊட்டவளக் குறைபாடுகள். இவற்றுள் வெண் LI L-ĠL5ULIET வல்லாப்பு இலைக்கண்நோய், வல்வக் கருகல்வாதை முதலாய அல்லுரட்டநிலை ஆகியன நிலைபேருன கடும் அரிப்பை உண்டாக்கும்.
ஆய்வு:
அரிப்பின் ஏதுவைக் கண்டுபிடிப்பதற்குக் கடும் முயற்சி செய்ய வேண்டும். வேண்டிய சோதனைகள் எல்லாவற்றையும் செய்யவேண்டும். தோல் உயிரியல், வெட்டுத்துண்டாய்வு ஆகியன செய்துநோய்களைத் தவிர்க்கவேண்டும்.
தீர்வு நோய் நிலைமைகளுக்கேற்ற தீர்வு செய்யவேண்டும். 1 யோனி இரிவுகளாலாகின் அவற்றைத் தீர்வு செய்யவேண்டும்.
2. தோல் நோய்களுக்கும் காரணம் கண்டு பிடித்துத்தீர்வு செய்யவேண்டும். உதாரணமாக சிரங்கு, சொறயசீசு ஆகியவை

Page 155
288 விறைப்
3. தீனியவகைபோன்ற பங்கசுத் தோல் வியாதிகளாயின் விற் சீல்டின் களிம்பு, நுண்ணியிரெதிரிகள், கிறிசியோ புல்வின் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். வேறுபல மருந்துப் பொருட் கள் உண்டு, தோல் நோய் நூல்களைப் பார்க்க.
4. நேர்குடல், ஊறுநீரித்தொகுதி ஆகிவற்றிலுள்ள நோய்களைத்
தீர்க்கவேண்டும்.
அலசை நோய் நிலைமைகளைத் தவிர்க்கவேண்டும் அழற்சி யெதிரி மருந்துப் பொருள்களான ஐதரகோட்டிசோன் போன்ற வற்றையும் அலசைக்காக இசிற்ற மீனெதிரிப் பொருள்களை வழங்கியும், களிம்பாகப் பயன்படுத்தியும் தீர்வு செய்ய வேண்டும். அலசைத் தாக்கம் செய்யும் பொருள்களை, உடை களே, பூசும்துகள்களே, களிம்புகளே, கரைசல்களே, மருந்துப் பொருட்களைத் தவிர்க்கவேண்டும்.
6. ஊட்டவளக் குறைவைச் சீராக்கவேண்டும்.
7. தோல் ஊட்டக் குறைபாட்டு நோய்கள், நாட்பட்ட தோல் அழற்சி ஆகியவற்றிற்கு மருந்துத் தீர்வு பலன் தராவிடின் இடத்து நரம்புகளே வெட்டல் செய்யலாம். அல்லது உணர் வழிப்புச் செய்யலாம். இவ்விருமுறைகள் பலருக்கு நலளே உண்டாக்கியதை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். மிகப் பல ஆண்டுகளுக்குப் பல தேசங்களிலும் சென்று பலவகை யான தீர்வுபெற்று மாறுதல் அடையாத நோயாளிக்கு நிரந்தர வகுதல் செய்து அவளின் நாட்பட்ட தோலழற்சிப் பிரதேயத்தை முற்ருக வல்வ அகற்றல் அறுவை வினே செய்தபொழுது அதைமாற்றமுடியும் என்பதை என் அணு
பவத்தில் கண்டுள்ளேன்.
8. கான்சர் நோயைக் காட்டும் நைவுகளுக்கு அவற்றிற்கு
ஏற்ற தீர்வு செய்யவேண்டும்.
9. உளவியல் நோய் நிலைமைகளுக்கு ஏற்ற புத்திமதிகள் கூறி, அவர்களே இப்பழக்கத்தைக் கைவிடச் செய்யலாம். பெரும் பாலானுேர் மீண்டும் நன்னிலேயடைவர்.
10. அழற்சியும் புண்பட்டும் வரும் தோயாளருக்கு முதலில் அழற் சியையும் புண்ணையும் பொது முறைகளால் மாற்றவேண்டும்.
தீர்வு முறைகளால் காலப்போக்கில் குணமடையச் செய்யலாம் என்
இவ்வரியண்டமான அரிப்பைப் பொறுமையிழக்காது இடையருத் Lது பலர் கண்ட அனுபவமாகும். *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நரரி வலி @uឆ្នាំ 18
நாரி வலி
பெண்கள் நாரியில் உளைவு, வலி, குத்து, நோ வேதனே, பிடிப்பு, கொதிப்பு உண்டென முறையிடுவர். இவை நோவின் வெவ்வேறு நிலைமைகளேக் குறிக்கும். ஆணுல், இச்சொற்களெல்லாம் அடிப்படையில் ஒரு புலனுணர்வுத் துன்ப நிலையை உணர்த்தும். நாரிப் பிரதேயமானது நெஞ்சறைக் கீழ்விலாவென்புகளிலிருந்து இடுப்புவரைக்கும் உள்ள முதுகுப் பிரதேயமாகும். சிலரில் இடுப்பில் அல்லது இதற்குக் கீழாக மேற்கூறப்பட்ட முறைப்பாட்டு அறிகுறிகள் உன்டென்றும் கூறுவர். இடுப்புகள் என அவர்கள் குறிப்பது திரு வென்பு புடைதாங்கி மூட்டுப் பகுதிகளையாம். பூப்பென்பு மூட்டுப் பிரதேயத்திலும் சிலருக்கு நோ, வலி உண்டெனவும் கூறுவர். தற் காலத்தில் பொருளாதார நிலையிலும் சொகுசு வாழ்விலும் மிதந் திருப்பவர்களுட் பலர் இந் நாவலியால் வருந்துவர்.
நாரிப் பகுதியும் இடுப்பு மூட்டுகளும் முண்டத்தின் உயர் பகுதியைத் தாங்குவதற்கும் அப்பகுதியில் என்புக்களுக்கிடையே நிகழாப் பல்வகையான அசைவுகள் நிகழ்வதற்கும் ஒரு முக்கிய களமாகும். விருத்த என்புகளின் கம்பத்தின் ஒருசிறிய பகுதிதான் இந் நாரியாகும். இது உடல் நிறையைத் தாங்குவதற்கும் அதில் பல வகையாக அசைவுகள் நிகழ்வதற்கும் போதிய அளவு பெலனற்றது, இது முற்காலப் புலவர்கள் நாரியானது அவ்வளவு ஒடுங்கியபடியால் ஒடிந்து போமோவென்றும் அஞ்சினர். ஆஞல், அதற்கு கெடுதிகள் விளேயாது தடுப்பதற்குப் போதியளவு தாங்கும் இனேயங்களும் தசைத் திணிவுகளுமுண்டு. பெண்கள் இளம் வயதிலிருந்து வேலைப் பாடுகளில் ஈடுபட்டும், தேவைக்கு மிஞ்சி உண்ணுததாலும் அவர்களுக்கு இவ்வாதை அவ்வளவு தோன்றுவதில்லை. தற்காலத்தில் சொகுசு வாழ்வு,ம் மிதமிஞ்சிய உண்ணலும், தசை அப்பியாசக் குறையும் பலருக்கு வயது முதிரவும் இவ்வாதையை உண்டாக்கும். பல்வேறு உடல் நிலைமைகள் நாரியைப் பெலக் குறைவு செய்யும் சிறப்பாகக் கருப்பநிலையிலும் அதன்பின் நிகழ்பேறிலும் விளேக்கூடிய நிலைமைகள் நாரியின் வலிப்பை பாதிக்கும் சில ஈனலுறுப்பு நோய்கள் நாரிநோவைத் தோற்றும். ஈனலுறுப்பு நோய் அறுவைவினைத் தீர்வுக்காகிய சில கிடைகள் பின்னர் நோவைத் தோற்றும் ஈனலுறுப்புக்குப் புறம்பான நோய் நிலைமைகளும் நாரிப் பிரதேயத்தில் நோவை உண்டாக்கும். இவற்றை விளக்குவோம்.
g, 'ജഃ', ീഖ്
ി . :െള്ള

Page 156
290 இளம்பெண் நோயியல்
உளைவு, வலி, குத்து, நோ, வேதனை. பிடிப்பு, எரிவு ஆகிய சொற்களுக்குத் தனிப்பட்ட உணர்வு குறிப்பு உண்டா? நோயா விகளின் முறையீடுகளை 50 ஆண்டுகள் மட்டில் கேட்டதிலிருந்து சில வேறுபாடு உணர்வு நிலைமைகள் இச் சொற்களுக்குண்டென்றே கூற வேண்டும். உளைவானது மேலும் தசைகள் இயங்கத் தயங்கி உண் டாக்கும் ஓர் இடத்து நலன் குறைவாகும். வலியானது இடையருது நிலைக்கும் ஒரு மட்டமான நோவாகும். குத்து என்பது நோ நிலை ம்ையில் விட்டுவிட்டு நிகழ் நோவின் விம்முதலாம். சிறப்பாகக் கோறை அகவுறுப்புக்கள் கடும் சுருக்கம் உறும்பொழுது குத்து இடைக்கிடை கூடி வலிக்கும் அல்லது கொதிக்கும். நோவானதும் தோன்றும். காயப்பட்ட அல்லது அழகியுற்ற இடங்களிலுள்ள சிலற் குறித்த நரம்புத் துணையுறுப்புக்களிலிருந்து கணத்தாக்கங்கள் மைய நரம்புத் தொகுதிக்குக் காவப்பட்டு அங்கே ஒரு வகை நோவாகப் புலனுணர்வுப் பதிவுபெறும் இடையருது காவப்படின் அது வலியாக நிலைக்கும். விட்டு விட்டு உணரப்படின் அது குத்தாகும். (குடக்கிநோ) வேதனையென்பது மனத்தில் இடத்துச் சேதங்களால் உண்டாக்கப்படும் ஒரு துன்புறு நிலையாம். உடற் காயங்களிலிருந்தும் வயிற்று அகவுறுப் புக்களிலிருந்தும் மைய நரம்புத் தொகுதிக்கு அவை செல்லும். புலனுணர்வுகளால் அவள் ஒரு துன்புறு நிலையெய்துவள் சிலர் நோவில்லை, ஆனல் வேதனையாயிருக்குது என்பர். வேறுசிலர் இது நோ வில்லை ஆனுல் ஒரு குத்துவலி எபன்ர். பிடிப்பு எபன்து இடுப்பில் சில அசைவுகளை நிகழ்த்த முடியாநிலையாகும். தசைகள் பிடிப்பு நிலையி லிருக்கும். பாதிக்கப்பட்ட தசைகளை அசைக்க எத்தனிக்கவும், நோ வுண்டாகும். நாரியில் எரிவு, கொதிப்பு உண்டெனவும் கூறுவர். இவை இணையங்களும் இழையங்களும் நீளிப்புத் தாக்கமடைவதாலும் அல்லது சிறு அழற்சி உறுவதாலும் தோன்றும் மென்நோக்கள் ஒர் "எரியும் கொதிக்கும் புலனுணர்வை" உண்டாக்கும்போலும், கூடிய நோக்கணத்தாக்கங்கள் உடையதாகின் இது (3Бт6ытта, மாறும் கருப்பை திருஇணையங்கள் நீளிப்புறவும் பெரும்பாலும் ஒர் * எரிவு கொதிப்பு உணர்ச்சியை நாரியில் உண்டாக்கும். பின்னர் நாரியில் வலிதோன்றும். ஆனுல் அவை முற்முக நீளிப்புற்றபின் நோ குன்றும்.
நோவையுண்டாக்கும் காரணிகள்
ஈனற் சுவட்டில் உண்டாகும் நைவுகள் ஒரு பரவலான நாரி வலியையோ அல்லது நோவையோ உண்டாக்கும். இது 4 ஆம் நாரி விருத்தத்துக்கு உயரவாக இராது. நாரிப் பிரதேயத்தை அல்லது திருவென்புப் பிரதேயத்தை மட்டும் பாதிக்கும். வலியானது நாரியின் நடுக்கோட்டில் உணரப்படும் அல்லது நாரியின் இரு மருங்கிலும் தோன்றும்,
 

நாரி வலி 2.91.
கூபகஅக உறுப்புக்களால் உண்டாக்கப்படும் நாரி நோவானது நாரியிரு பக்கங்களிலுமுண்டு. நோவையுண்டாக்கும் ஒரு தனியிடம் குறித்துக் காட்டப்படின் நோவானது கூடக அகவுறுப்பு நைவுகளால் அல்லவெனக் கணிக்க வேண்டும்.
1, மாதயிரிவு: முன்னேடி அறிகுறிகளாகச் சிலருக்குக் கூபக (கீழ்க் வயிற்றுள்) உளைவும் இதனுடன் சேர்ந்து நாரி வலியும் தோன்றும். இவை முதலிரு நாட்க்ளுக்கு நிலைக்கக்கூடும். இது கூபகவுறுப்புக்கள், தாங்கும் இணையங்களில் கடும் குருதிக்கலன் செறிவும், நீர் உப்பு ஆகியவனவற்றின் தேக்கமும் அடைந்து நெருக்கமுறுவதாலாகும். கருப்பையின் பாரம் மிகையடைந்து, தாங்கு இணையங்களை இழுப்புச் செய்யும்.
2. கருப்ப நிலையில் உடல் நிறை (சிறப்பாக உடலின் உயர் பகுதியினது)
கருப்பநிலையில் உடல் நிறை கூடும்.
கூபக் வென்பு மூட்டுக்கள் சிறிது தளரும் கூபக உறுப்புக் களினதும், இணையங்களினதும் நிறைகூடும். சிறப்பாக கருப்பை மிகப் பாரமுறும். ஆகவே, இவை நாரிய திருமூட்டுக்களுக்கு இடரை யுண்டாக்கும். மூட்டுக்களைத் தாங்கு தசைகள் பெண்களுக்கு அவ்வளவு வலிவுடையனவல்ல. இலகுவில் நாரிவலி தோன்றும் கருப்பையானது பெருத்து வயிற்றுக் குழிக்குட் புகுகை செய்து இன்னும் பெருக்க பெண்ணுனவள் தன் உடல் நிற்கும் நிலையைப் பேணுவதற்கு வில் விளைவு நிற்கும் நிலைசெய்யவேண்டும். நாரியானது மிகவும் தாக் கமுறவும் நாரிவலி, நாரி நோ தோன்றும். மேலும் படுக்கும்பொழுது கட்டில் தொய்யின் இது நாரி நோவையுண்டாக்கும்.
பல புதும்னப் பெண்கள் தம் கணவருடன் ஆலோசனைக்கு வருவர். முன்னம் ஒரு பொழுதும் தோன்ருத நாரி நோவும் வலியும், இதனுடன் சேர்ந்து சிலருக்கு முதுகுவலியும் தோன்றி உள்ளதென முறையிடுவர். புதுமண வாழ்வில் அடிக்கடி நிகழ்த்தும் கலவி விளையாட்டில் பழக்க மில்லாத இருவருக்கும் நாரியும் இடுப்பும் புதுப் புதுக்கிடை நிலைகளில் இருப்பதால் நோவும் வலியும் தோன்றுகின்றது. இதைப் பற்றி விளக்கம் செய்யும்பொழுது அவர்கள் சிரித்துக்கொண்டு விளக்கத்தை ஏற்பர்.
3. பேற்று வேளையில் கூபகப் பொருத்துக்கள் மிகவும் தளர்ந் திருக்கும். பிள்ளையின் தலையானது வில்லங்கப்பட்டுப் பிறக்குமாயின்

Page 157
292 இளம்பெண் நோயியல்
மூட்டுக்கள் மேலும் தளர்தலுறக்கூடும். முற்காலத்தில் கூடக உயர் பகுதிச் சாவணப் பேறு நிகழ்த்தும்பொழுது மிகச் சிலருக்கு திருபுடை தாங்கி மூட்டுக்களின் விலகலும் பூப்பு மூட்டு விலகலும் நிகழ்ந்ததை நானறிவேன். நான் கம்பி நூலால் பூப்பு முட்டைச் செப்பம் செய்த காலம் கடைசியாக 1966ம் ஆண்டேயாகும்.
பேற்று வேளையில் பயன்படுத்தப்படும் கிடைகளும் சாவணப் பேற்று நிலைமையில் பெண்ணின் கிடைகளும் மூட்டுகளை உளுக்குறச் செய்யும்,
இதனுல் நாரி நோ வலி ஆகியன ஒரு நிரந்தரத் துன்பத்தைத் தரும் பேற்றுக்குப் பின் மூட்டுக்கள் தேறி முன்னிலையை அடைய முன்பு, அவற்றை விகாரப் படுத்தின் நாரி நோக்கள் தொடர்ந்து நிலைக்கும். பாரமான கருப்பை பின்திருப்ப முறுவதால் இணையங்கள் இழுக்கப்பட்டு நாரி நோவையும், வலியையும் உண்டாக்கும்.
1. பெண்ணுேய்களால் ஆகிய நாரித் துன்பம்,
இந்நோய்களால் உண்டாகும் நாரிவலி (நாரிக்கொதிப்பு. நாரிநோ) நாரியில் பரவலாகவுண்டு. பெரும்பாலும் இது திருவென்பு பிரதே யத்திலும் நாரி-திருவென்புப் பிரதேயத்திலும் காணப்படும்.
கருப்பையின் இடம் பெயர்தல் நிலைகள்:
கருப்பையின் பின்திருப்பம்; பேற்றுக்குப்பின் நிலைபேருகக் கருப்பை பின்திருப்பம் அடையும். இது சிலரில் நாரி உளேவையும், நாரி நோவையுமுண்டாக்கும். மாதயிரிவுக்கு முன்பு இவ்வறிகுறிகள் மிகையடையும். கருப்பையைத் தாங்கும் இணையங்கள் இழுப்புறும்
கருப்பை இறக்கம்:
இறக்கத்தின் தொடக்கப்படி நிலைகளில் கருப்பையைத் தாங்கும் இணையங்கள் இழுப்புறவும் நாரியில் நோ வலி, தோன்றும் முற்ருக இழுப்புற்றபின் இந்நோத்தணியவும்கூடும். கிடைநிலையில் இந்த நாரிக் குறிகள் தணியும்.
11. அழற்சி நிலமைகள்:
1. கூபக அழற்சி:
எவ்வகையான கூபகவழற்சியும் நாரிக்கு வலியையும் Gis
ாவையும் அல்லது உளேவையும் உண்டாக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாரி வலி
2. கருப்பைக் கழுத்தழற்சி
இதிலிருந்து அழற்சியானது கருப்பையைத் தாங்கு இணையங்களுக்கும் கூபகக்க்லவவிழையத்துக்கும் பரவி நாரியில் நோவையும், வலியையும் உண்டாக்கும்.
3. கூபகக் கழலேயங்கள்:
25 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய சூலகச் சிறப்பைகளுடனும் கருப்பை நார்த் தசையோமாக்களுடனும் பெண்கள் வருவர். இவர்கள் கடும் பின் வளைவுற்று நிற்பு நிலையிலிருப்பர். இதற்கு ஏற்ப நாரியில் நோவாக அல்லது வலியாகத் துன்பமிருக்கும்.
கழலையங்கள் கூபகக் குழிக்குள் அமுக்கப்பட்டிருப்பின் அல்லது கூபகக் குழிக்குள் கருப்பையகவணியோமாவும் அல்லது கருப்பைக் கழுத்துக் காசினுேம்ாவும் படர்ந்து இணையங்களையும் இழையங்களையும் தாக்கினும், நாரிநோ, வலி, கொதிப்பு ஆகியன உண்டாகும்.
எவ்வகையான கூபகவிழையக் கடும் நெருக்கமும் நாரியுளைவையோ, கொதிப்பையோ, நோவையோ, வலிப்பையோ உண்டாக்கும்,
பெண்ணுேய் அறுவை வினைகள்!
1. முள்ளந்தண்டு உணர்வளிப்பு முறைகள்-விருத்த வென்பையும் இணையங்களையும் காயப்படுத்தி நாரிநோவை உண்டாக்கும். இது சில நாட்களில் மாறும்.
2. அறுவைவினேகளில் பெண்ணைக் கிடத்தும் நிலைகள்=நீடிய காலப் பொழுதுக்குத் தட்டையானதும் திண்மமானதும்ான கட்டிலில் கிடத்த வேண்டும். அறுவை வினைக்காகிய தசைத் தளர்த்தல்கள் மேலும் கெடுதியைக் கூட்டும்.
கற்றுமிக்கிடை என்பது கூபகம் முன்னுக வளைக்கப்பட்டும், கால்கள் மடித்தும் வெளிவாங்கப்பட்டும் இருக்கும் நிலையாகும். திருபுடை
தாங்கி மூட்டுக்கள் காயமுறக்கூடும்.
முதலாவது கிடையில் நாரிக்கு ஒரு சிறு மெத்தனையிட்டு நீாரி வளைவைத் தாங்கவேண்டும்.
பிந்தியதில் இரு கால்களையும் உயர்த்தியும் தாழ்த் தியும் நிலைப்புச் செய்யவேண்டும். *

Page 158
294 இளம்பொண் நோயியல்
கூபகவுறுப்புக்களால் அல்லாத காரணிகள்
1. களைப்பு நிலைமைகள்
நீடிய காலப்பொழுது நிற்புநிலையில் தொழிலில் ஈடுபடுதல் நீடிய வேளே நாற்காலி இருப்புநிலையில் தொழில்களில் ஈடுபடுதல் ஆகியன தட்டெழுத்து வினைஞர்கள், கணக்குப் பதிவுவினைஞர்கள், அடுக்களைப் பணியாளர், பெண்ணுேய்அறுவை மருத்துவர் ஆகிய பெண்களில் நாரி உளேவு தோன்றும். சிலரில் நாரிப் பிடிப்பும் தோன்றும்.
இவ்வாருன, பெண்கள் உடலப்பியாசம் சிறப்பாக நாரித் தசை களுக்கு செய்யின் வருந்தமாட்டார்.
2. உடல் மேற்பகுதி கொழுமையடைதல்
பெரும்பாலும் இது 30-40 வயது மட்டில் பல பெண்களுக்குத் தோன்றும் நிலைமையாகும். இதனுல் நாரித் தசைகளுக்குப் பெலன் குறைவும், இணையங்களுக்கு மெலிவுக் குறைவும் உண்டாகும். உடலின் மேற்பகுதிப் பாரத்தைத் தாங்கமுடியா நிலைமையில் நாரி நோ, நாரிவலி நாரிப்பிடிப்பு, நாரிக் கொதிப்பு ஆகியன தோன்றும்.
உடலின் நிறையைக் குறைக்கவேண்டும். கொழுமை நிலைமைக் காகிய ஏனைய காரணங்களையும் கண்டுபிடித்துத் தீர்வுசெய்ய வேண்டும்.
3. உடல் நிலைப்பு
தொழிலில் ஈடுபடும்பொழுது முதுகை நெடுநேரமாக வளைத்து வைத்திருக்க வேண்டிய நிலமைவரும். இது குனிந்து பாரம் உயர்த்தும் வேலையாகவுமிருக்கும். தலே மேல் பாரம் காவும் வேலேயாகவுமிருக்கும். தட்டைப் பாதங்கள் தொந்தி வயிறு, கால் பாதஅணிகளின் பிழை பாடுகள், நீடியகால நாற்காலித்தொழிலிலீடுபாடு ஆகியனவும் திருபுடை தாங்கி மூட்டுக்களையும் நாரிய விருத்தக் கம்பத்தையும் பாதிக்கும்.
4. நாரீய-நாரிணயங்களின் அழற்சி, தசையழற்சி
ஆகியன
நாரி மட்டத்து அசைவுகள் நோவையும் பிடிப்பையும் உண்டாக் கும். நாரியை வளைக்கவோ, நீட்டவோ அல்லது சுழற்றவே முடியாத நிலை தொடக்கத்தில் எய்தப்படும். இவை குணமடைய 3-4 கிழமைகள்
மட்டிலெடுக்கும்.

நாரி வலி 295
சிலரில் இவ்வழற்சிகள் சிறப்பாக உடலின் பிறிதொரு பகுதியிலுள்ள சீழ் நிலைமையினுலாகும். பற்களின் உச்சிச் சீழ்த்தங்கள், தொண்டு ளேத்தொற்று, பித்தப்பை, குடல்வளரியழற்சி ஆகியன உடலின் பலவிடங்களில் தசையழற்சியையும் நாரிழையழற்சியையும் மூட்டழற்சி பையும் உண்டாக்கும். சிறப்பாக நாரியில் நோவும் கொதிப்பும் உண் டாகும். ஓர் இளம்படு மங்கைக்கு மாற்றமுடியாத நாரி நோவும் சிறு காய்ச்சலும் உண்டாகியது. என்பு நோய் வைத்தியன் இதனை நாரி விருத்தவென்பு துரபாக்கிள் வாதையென ஊடறிவு செய்து நீண்டகாலப் பிள்ார்த்தர் படுக்கைக்கு உட்படுத்தினர். துரபாக்கிள் வாதைக்குச் சிறப்பு மருந்துகளும் அளிக்கப்பட்டது. பின்னர் இவற்ருல் நலன் பெருதபடியால் என்னிடம் காட்டினர். பல ஆய்வுகள் செய்யப் பட்டன. பற்களே கதிர் பதிவு செய்யப்பட்டன. ஒரு பல்லின் உச்சிப் பகுதியில் ஒரு சீழ்த்தக்குகை தென்பட்டது. எல்லா விதத் திலும் வெளித்தோற்றத்துக்கு நல்லநிலையிலுள்ள, அந்தப் பல்லுப் பிடுங்கப்பட்டது. அதன்பின் அவள் முற்ருகக் குணமடைந்தாள்.
இவ்வழற்சி நிலையானது ஒரிடத்தில் காணப்படின், 1% புருேகேன் கொண்ட இடத்து உணர்வழிப்பு ஆனது நோவைத் தணிக்கும். இடத்து வெப்பமிடலும் நோவைத் தணிக்கும்.
5. நாரி-திருவென்புப் பிரதேய கொழுப்புக் கட்டிகள்
இப்பகுதியில் உள்ள என்பு வளைவுகள், பள்ளங்கள் ஆகிய விடங்களில் வைப்புறும் கொழுப்பானது ஒரு திண்ணக் கட்டியாகி என்புடன் அழுத்தப்படும்பொழுது கடும் இடத்துநோவை உண்டாக்கும். பலருக்கு அறுவை வினைமுறையால், நன்ருக வரையறுக்கப்பட்டும் சிறைப்படுத்தப்பட்டதுமான இந்தக் கொழுப்பு வைப்புக்களை அகற்றி நோவை மாற்றினேன்.
6. விருத்த வென்பிடைத் தட்டு முன்னுக வெளித் தள்ள
லுறல் என்பிடைத் தட்டின் சதைக்கரு வெளித்தள்ளப்பட்டு அடுத் திருக்கும் நரம்பையழுத்தி நோவையுண்டாக்கும். இது நாரி விருத்தத தண்டு நடுக்கோட்டில் நிகழும் இடத்து நொய்மையானது குறித்த விடத்தில் உண்டு. ஆணுல் பரவலாக இல்லே. கால்களே முழங்கால்களில் மடிக்காது, நின்ற நிலையிலேயே குனிந்து பாரத்தை உயர்த்துவதாலும் சிறப்பாகப் பேற்றுக்குப் பிந்திய காலத்தில் என்பு மூட்டுக்களும், நாரியைத் தாங்குதசைகளும் தளர்நிலையிலிருக்கும்பொழுது கால்களை மடிக்காது நாரியை வளைத்துப் பாரப்பொருட்களைத் தூக்குவதாலும் நாரி காயமடைகின்றது. ஏனேய குனிந்து செய்யும் செயல்களையும் நாரியை தாக்காத நிலையில் வைத்துச் செய்யவேண்டும்.

Page 159
இளம்பெண் நோயியல்
பேற்றுக்குப்பின் உடம்பின் உயர்ப் பகுதியின் பாரமும் கூடு தலடையாது உடல் நலனைப் பேணவேண்டும்.
7. விகுத் தவென்பு நசிமுறிவு
இதனுல் நாரிநோவும் பிடிப்புமுடைய ஒரேயொரு பெண்ணே மட்டும் கண்டுள்ளேன். ம்ோட்டார் பேரூந்து வேகமாகச் சென்று ஒரு பள்ளம் மேலாகச் செல்லும் பொழுது கடும் குலுக்கல் நிகழ்ந்தது. பெண்ணுனவள் உயர வீசப்பட்டுப் பின்னர் "தொப்பனெ" அமர்த் தப்பட்டாள். இந்நிகழ்ச்சியால் ஒரு நாரிய விருத்தம் நசி முறிவுற்றது.
8. ஏனய விருத்த T நோய்கள்:
இது மூட்டழற்சி விருத்தவிணையங்களின் அழற்சி ஆகியன வற்றில் இதுகாணப்படும் பெரும்பாலும் வயது மூத்தோரில் வயது மூப்படையவும் உண்டாகும்.
முற்காலத்தில் விருத்தவென்புத் தூபக்கிள்வாதை ஒரு பொது வான நோயாகும். தற்காலத்தில் இந்நோயானது உணவுக்குறைவாலும் நல்வாழ்வு வசதிக் குறைவாலும் தடுப்புமுறைக் குறைவாலும் மீண்டும் பரவக்கூடும்.
இவ்வகையான நாரிநோ, பிடிப்பு ஆகியன முறையீடுகளுடன் தோன்றும் கோணல்வாதை, சுனல்வதை உருக்கேட்டு விருத்த வழற்சிவாதை, நாரியவிருத்திவென்பு முன்விலகல், நாரிய-திருவிருத்த வென்பு ஒருங்கல் ஆகியன அருந்தலாகத்தோன்றும். இந்நோய்களால் வருந்தும். பல பெண்களே என் நீண்டகால அனுபவத்தில் கண்டுள்ளேன். இவற்றுடன் தீர்வுபெருத பழைய பூப்பென்பு விலகல்களையும், திரு புடைதாங்கி மூட்டுப் பெயர்தலையும் கண்டுளேன். தற்காலத்தில் சீசர் அறுவை வினைத் தீர்வு வழமையில் இருப்பதாலேயே மேலே கூறப்பட்ட சேதங்கள் தற்காலத்தில் மிகக் குறைவாகும்.
விருத்தவென்பிடைக் குடையங்களில் நரம்புவேர்கள் நசிபடக் கூடும். இது பெரும்பாலும் விருத்தவென்பழற்சியில் நிகழக்கூடிய வில்லங்கமாகும்.
9. ஊறுநீரியினதும் ஊறித்தரினதும் நோய்கள்:
ஊறு நீரிநோவும் நாரிய உயர்பகுதியில் தோன்றும். ஊறுநீரிக் குடக்கியும் இதே பிரதேயத்தில் குத்தாகத் தோன்றும், ஊறித்தர் வழிக்குடக்கியும், ஊறித்தரில் தடைநிகழும் இடத்தைப் பொறுத்து நாரிப் பிரதேயத்தில் குத்தையுண்டாக்கும்,
 
 
 

நாரி வலி 297
குடல் வளரி சீக்கத்துக்குப் பின்னக இருப்பின் அல்லது ஊறு நீரித் திக்கிலிருப்பின் இதன் குடக்கியானது தாரியில் குத்தைத் தோற்றுவிக்கும்.
இதேபோல் புறவிடக் கருப்பப் பீறலில் குருதியானது ஊறு நீரிப் பள்ளத்தையடையின் ஊறுநீரிக் குடக்கிபோன்று நாகியில் குத்தைத் தோற்றுவிக்கும். இவ்விதமாக நிகழ்ந்த ஒரு பெண்ணுக்குப் பின்னர் ஊறுநீரிச் சுவட்டில் கல் உண்டோவென்று எச்சுப் பதிவு செய்த ஒருவரைப் பின்பு நான் அறுவை வினேக்குட்படுத்தினேன்.
கருப்பநிலைக் கருப்பை கடும் சுருக்கமுறும்பொழுது நாரியில் நோவும் குத்தும் உண்டாகும்.
10. நேர்குடல் நோய்கள்
நாட்பட்ட மலக்கட்டலானது நாரியில் உளைவையும் நாரி நோ வையும் உண்டாக்கும். நேர்குடலானது காசினுேமாவால் பீடுறின் அல்லது அழற்சி நிலேயால் பிடிப்புறின் திருவென்புப் பிரதேயத்தில் இது உளேவை அல்லது கொதிப்பை உண்டாக்கும்.
பல உளவியற் காரணங்கீளால் சிறப்பாக மணம் புரிந்து இணைந்து இசைந்து வாழமுடியாத பெண்கள் ஆணில் வெறுப்புற்றுக் கலவியைத் தவிர்ப்பதற்கு நாரிதோ, வலிப்பு ஆகியன பொறுக்கமுடியாதெனப் பாசங்கு செய்து தவிர்ப்பர். பராமரிப்பும் தீர்வும்:
முக்கியமாக இந்த நாரி வலியின் ஏதுவைக் கண்டு பிடிக்க வேண்டும். முன்கூறப்பட்ட காரணிகளே மனதில் வைத்துக்கொண்டு நோவைப் பற்றி அறிந்து அதன் இயல்பு, தோன்றும்வகை, அதன் இருப்பிடம், பரவல் ஆகியவற்றைப் பற்றியும் அறியவேண்டும்.
ஆறுதல் நிலையில் அது தணிகின்றதோ வென்றும் உடல் அசைவு களும் ஏனைய காரணிகளும் அதை மிகைப்படுத்துகின்றனவோ வென்றும் அறியவேண்டும் முழு உடற் சோதனையும் கூடகச் சோதனையும் செய்யவேண்டும். ஒவ்வொரு உடற்ருெகுதியும் (என்புத் தொகுதியையும் அடக்கிய) சோதிக்கப்பட வேண்டும். இறேடியோயியற்சோதனைகளும் செய்யவேண்டும். பிள்ளைப் பேறுகள் நிகழ்ந்திருப்பின், அவற்றின் விபரங்களைப்பற்றியும் தீர்வு முறைகளைப்பற்றியும் அறியவேண்டும்.
தீர்வு: இது காரணத்தைப் பொறுத்து வேறுபடும். இக் காரணங்களே விளக்கும் இயல்களில் இவற்றைப்பற்றிப் படிக்க,

Page 160
298 இளம்பெண் நோயியல்
பொதுப்பட்ட முறையில் உடல்நிறை, "நிற்பு நிலைப் பிறழ்வுகள் உடல்நலக்குறைவு ஆகியவற்றைச் செம்மைபடுத்த வேண்டும். இவர் களின் தொழிற்பாட்டில் மாற்றம் செய்ய வேண்டுமோவென்று ஆலோசனை செய்யவேண்டும்.
உடல் அப்பியாசம், சிறப்பாக நாரித் தசைகளைப் பெலனுரட்டும் தசை அப்பியாசங்கள், நலனைத்தரும்.
அழற்சி நிலைம்ைகள், கழலையங்கள் ஆகியனவற்றின் அவற்றிற் சுேற்ற தீர்வு முறைகளும் அறுவை வினைகளும் செய்யவேண்டும். பொது என்பு நோய்களாயின் என்புநோய் மருத்துவரின் ஆலோ சனேயைப் பெறவேண்டும்.
 
 
 

ஊறுநீரி அறிகுறிகள் 299
இயல்: 19
ஊறுநீரி அறிகுறிகள்
பெண்களில் பொதுவாக நீர்த்தற் (ஊறுநீர்விடல்) பிறழ்வுகளுண்டு. சிறப்பாகப் பலதரம் நீர்த்தல் செய்யவேண்டிய நிலைமைகளும் உண் டாகும். பெண்ணின் சிறப்பு நோய்களும், அவளின் ஈனலுறுப்புக்கு நிகழும் கருப்ப நிலைமாற்றங்களும், குழந்தைப்பேறும் நீர்த்தற் பிறழ் வுகளை உண்டாக்கும். அல்லாமலும் அவளுக்கு ஆற்றப்படும் அறுவை வினைகளும் எதிர்பாரா ஊறுநீர் விடற் பிறழ்வுகளை உண்டாக்கும். ஊறுநீர்ப்பையும், ஊறித்தரும், ஊறித்தாரையும் ஈனலுறுப்புத் தொகுதியுடன் உறும் நெருங்கிய தொடர்பை எண்ணும் பொழுது பிறழ்வுகளைப்பற்றி நாம் வியப்புறத் தேவையில்லை. இந்தக் கட்ட மைப்புத் தொடர்பானது முன்னர் விபரிக்கப்பட்டது. நீர்த்தல் வினைப்பாட்டின் தொழிலியலும் முன்னர் விபரிக்கப்பட்டது. நீர்த்தல் பிறழ்வுகள் ஈனலுறுப்புக்களின் நைவுகளால் உண்டாக்கப்படுவதுமல் லாமல் ஊறுநீரிச் சுவட்டில் நிகழ்பிறழ்வுகளாலும் உண்டாகும் சலப்பைச்சுவர் நோய்கள் சலப்பைக் கீழ்தள்ளு தசையைத் தூண்டும் அல்லது சுவரிலுள்ள நீளிப்பு வாங்கிகளின் உணர்திறனைக் கூட்டிச் சுவர்த்தசையைச் சுருங்கச் செய்யும். மேலும், ஊறுநீர் விட லேக் கட்டுப்படுத்தும் மைய நரம்புத் தொகுதியின் உட்தடுப்பு வினையம் தளர்த்தலுற்றிருக்கும். எவ்விதமாக இருந்தபோதிலும் எவ்வகையிலும் சுவர்ப்பையின் இறுக்கிப் பொறிமுறையில் பிழைபாடில்லையாகும். ஆனல் சலப்பையோ சினத்துச் சிறிதளவு நீரையும் வெளியகற்றும், சலப் பைச் சுவரானது பிடிப்புநிலை எய்தின் நோவும் இடருறு நீருயாவும் தோன்றும். ஊறித்தாரையிலும் வல்வத்திலும் காயங்கள் நோய்கள் ஆகியன இருப்பின் இடரூறு நீருயா (எரிவு) தோன்றும். நீர்த்தல் பிறழ்வுகள் பல்வகையானது அவையாவன பொலி நீர்த்தலுயா, அவசர நீர்த்தலுயா, அடக்கலாமையிடருயா, ஊறுநீர்வாதை இடர் ஊறுநீர்வாதை ஆகியனவாம்.
1. பொலி நீர்த்தலுங்ா: இது இரவிலும் பகலிலும் நிகழும். கூடிய ஊறுநீர் கழிக்கப்படுவதாலாம்.
1. கூதிர் வான்நிலை விக்ர்வை சிந்துவதனைக் குறைப்பதால்
கூடியளவு நீர் ஊறுநீரிகளாற் கழிக்கப்படும்.
11. கூடியளவு நீரையுட்கொள்ளல். இந்நீரானது தண்ணீரா கவும் அல்லது வேறுதிரவநீர்களாகவும் இருக்கலாம். சில உளவிறுக்கம் உள்ளவர்களும் தனியணுக வாழ்பவரும் மனத்துயரமடைந்தவர்களும்

Page 161
300 இளல்பெண் நோயியல்
நேரத்தைப் போக்குவதற்கும் தமக்கு மகிழ்ச்சியை உண்டாக்கு வதற்கும் குடிப்பர். இவ்வகைாக மிகைப்படுத்தப்பட்ட கழிப்பு நிலையானது பல்தர நீர்த்தல் நிலைமையையுண்டாக்கும். கருப்பவதி களும் தேவைக்குமிஞ்சிய நீரை உட்கொள்வர். நீரைக்கழிப்பது கருப்பநிலைக்கு நல்லதென்ற தப்பெண்ணத்தால் இவ்வகையாக நீரை உட்கொள்கின்றனர். இதனுல் கெடுதியும் விளையக்கூடும்.
111 பொதுவாக கருப்பநிலையில் கூடியளவு நீர் வெளியே கழிக்கப்படும். இதற்கமைய நீரும் மிகைப்படக் குடிக்கப்படும். இது கீழ்ப்பரியகத்தின் விளைவாலெனக் கருதப்படுகின்றது. இவ்வகையான நீர்த்தல்வாதை மிகுதியான கருப்பவதிக்ளுக்குண்டு. இவர்கள் இர விலும் பக்லிலும் நீர்த்தல் செய்வர்.
IV. மது நீரிழிவிலும், கருநீரிழிவிலும் பெருமளவில் நீர் ஊறு நீரிகளால் கழிக்கப்படும். ஊறுநீரிகளின் வினைய வழுவல்களால் சிறப்பாக மூப்படைந்தோரில் இவ்வகையான நிலைமையுண்டாகும். ஊறு நீரில் ஒட்சலேற்று அல்லது பொசுப்பேற்றுப் பளிங்குகளிருப்பின் பல்திரப் பட்ட நீர்த்தல்வாதை உண்டாக்கக்கூடும்.
11. ஊறுநீரிகளிலும் ஊறுநீர்ச் சுவட்டிலும் உள்ள
நோய்கள்
1. ஊறுநீரிக் கூபகவழற்சியிலும் ஊறித்தரில் சிறுகற்கள் உள்ள நிலைமையிலும் பல்தர நீர்த்தல் உண்டாகக்கூடும்.
2. சலப்பைச் சுவர் வாதைகள்,
சலப்பையழற்சி. இதற்கு ஒரு மிக முக்கியம்ான காரணியாகும் பெண்களில் மிகுதியோர் சலப்பையழற்சியால் வருந்துவர். பலரில் முன்னர் நிகழ்த்திய கதீர்த்தராக்கச்செயலால் தொற்றுண்டது. ஊறித் தாரையானது பெண்களில் மிகக் குறுகியதான படியால் சீழ்நிலைமை யோனியிலும் அயற் பிரதேசங்களிலும் இருப்பதாலும் சலப்பையானது இலகுவில் தொற்றுறுமெனப் பலர் கருதுவர். பெரும்பாலும் இது குழந்தைப் பருவத்தில் நிகழ்வதெனக் கருதுவர்.
தொற்ருனது ஊறுநீரியிலிருந்து சலப்பையை அடையக்கூடும். தூபாக்கிள்வாதையில் இவ்வகையான தொற்று நிகழும். oಿ' நிலாச் சலப்பையழற்சியானது புது மணச் சோடிகளில் நிகழும். இது பலதடைவை கலவிசெய்வதால் உண்டாகின்றது. பேற்றுக்குப் பின் னரும் கூபக அறுவை வினைக்குப் பின்னரும் சலப்பை தொற்றுறும் கதீத்தராக்கத்தால் மட்டும் தொற்று நிகழ்வதில்லை. சலப்பையானது
 
 
 
 
 
 

ஊறுநீரி அறிகுறிகள் 301
அறுவை வினைவேளையில் கன்றின் தொற்று இலகுவில் நிகழும். இறேடியோத் தீர்வில் சலப்பை மியூக்கசு சேதமுறக்கூடும். மூப்புற் றவர்களில் சலப்பையிறக்கம் உண்டாகி, ஊறுநீர்த் தேக்கம் உண் டாகும். இது இலகுவில் தொற்றுறும் (இதனுல் கற்கள் உருவாகும். நாட் பட்ட சலப்பை இறக்கங்களில் பலரில் கற்களையும் அகற்றியிருக் கின்றேன்).
மூப்புற்றவர்களில் சலப்பை அல்தொனி (செயல் இழந்த) நிலைமை உண்டாகும். இதனுல் ஊறுநீர் பெருமளவில் தேங்கித் தொற்றுறும். நீர் மிகவிஞ்சவும் அது சிறிதளவில் வெளிவரும். இவ்வகையான நிலைமையுண்டாகாது தடுப்பதற்கு கதித்தரால் நீரை அகற்ற வேண்டும்.
3, ஊறுநீரிச்சுவட்டு துரபாக்கிள் வாதையிலும்,
4. சலப்பைக் கற்கள் நிலைமையிலும்,
5. சலப்பைக் காசினுேமா, பபில்லோமா ஆகிய நிலைமைகளிலும் பல்தர நீர்த்தலுயாவும் சிலசமயம் குருதியூறுநீருயாவும் உண்டாகும். இதனுடன் நோவும் உண்டாகக்கூடும் கருப் பையகவணியோமா சலப்பைச் சுவரைத் தாக்கிப் பல்தர நீர்த்தலேயும் குருதியூறுநீருயாவையும் உண்டாக்கக்கூடும்.
சலப்பையழற்சியை உண்டாக்கும் பற்றிறியங்கள் சிறப்பாக பசிலசு கோலை வகுப்பைச் சேர்ந்தவை, ஏனேய பற்றிறியங்கள் இசுற்றபிலோ கொக்கசு, இசுறெப்ரோகொக்கசு ப. புருேரியசு ஆகியன இவை கதித்தர் வழியாகத் தொற்றுறக்கூடும். கொனக்கொக்கசுவும் சலப் பையழற்சியை உண்டாக்கும்.
நோயியல் தோற்றங்கள்:
கூர்ப்புச் சலப்பையழற்சியில் மேலணியானது நெருக்கமும், விக்கமும் உறும், புடகங்களும் தோற்றும் மியூகசுச் சீழ்வடியும். கடும் தாக்கங்களில் புண்களும் தோன்றும்
நாட்பட்பட்ட சலப்பையழற்சியில் மேற்கூறப்பட்ட தோற்றங் களுடன் சலப்பைச் சுவரும் மிகத் தடித்திருக்கும்.
தூபக்கிள் அழற்சியில் ஊறித்தர் வாய்களுக்கு அண்மையில் தூபாக்கிள் புண்கள் தோன்றும்.

Page 162
302 இளம்பெண் நோயியல்
6. ஊறித்தாரை நோய்கள்:
1. ஊறித்தாரையழற்சி, ஊறித்தாரைச் சேதம் கலவிமுயக்கத்தில் வெளி ஊறுநீர்ப்போகுழையும் ஊறித்தாரையும் நசிக்கப்படின் அழற்சி புண்டாகி பலதடவை ஊறு நீர்த்தல் நிகழும்.
1. ஊறித்தாரை மியூக்கசு இறக்கம், இது சிறப்பாக வயது மூத்தோரில் நிகழும். இதில் போகுழை அல்லூட்டமடையவும் அது திறபடும். மியூக்கசு இவ்வழியாக இறக்கமுற்று ஒரு சிறு கழலையம் போல் தோற்றும். கூர்ப்புமுறையில் தோற்றின் நோ, இடரூறுநீருயா, திடீரெனப் பல்தர நீர்விடல் ஆகியன தோன்றும்.
ஊறித்தாரையழற்சியானது சிறப்பாக கொனக்கொக்கசுவால் உண்டாகும். திரைக்கோமனசாலும் உண்டாகக்கூடும்.
7. ஊறித்தரின் வேறு நோய்கள்:
இவற்றுள் ஊன்றலை, பப்பிலோமா, பரஊறித்தாரைச் சிறைப் பைகள், ஊறித்தர்குழாய்கிளைகள், காசினுேமா, ஆகியன அடங்கும்.
7. யோனி வல்வ நோய்கள்:
இவற்றில் அழற்சிப்புண்களிருப்பின் ஊறுநீர் இவற்றின் மேலாகச் செல்லும்பொழுது, எரிவுயிடருயாவை உண்டாக்கும்.
8. மைய நரம்புத் தொகுதி நைவுகள்:
மூளைக் கலனக் குருதிவாரியிலும் வல்லாப்பு வாதையிலும் பல்தர நீர்த்தல் நிலைமையும் அவசர நீர்த்தலும் உண்டாகும். இவர்களில் நூற்றுக்கு 60 பேர் அவசர நீர்த்தலாலும் 50 பேர் பல்தர நீர்த்தலாலும் 35 பேர் அடக்கலாமையாலும் வருந்துவரென அறிக்கைகள்கூறும்.
சிலரில் சலப்பையின் உணர்வு நிலையும் இழக்கப்பட்டு, தன்னி யக்கமாய்ச் சலப்பை இயங்கி நிலைமை நிகழும். சலப்பை நிரம்பியதும் உணரப்படாது தன்வலிய வெறிதாக்கமடையும்.
9. உளப்பழக்க நீர்த்தல் நிலை:
சிலருக்கு பல்தரம் நீர்த்தல் பாதாமொரு காரணமில்லாத நீடிய காலப் பழக்கமாகும். இவ்வகை இடரால் வருந்தும் பெண்கள் பெரும் பாலும் உளத்தாக்கமுற்றவர்களாவர். பெரும்பாலும் இவர்கள்
 
 

ஊறுநீரி அறிகுறிகள் 303
தனிவாழ்வு நிகழ்த்துபவராக அல்லது வீட்டு வாழ்க்கை துக்கமானதா கவும்பிதியுடையதாகவும் இருக்கக்கூடும். சிலருக்குக் குடும்பச் சச்சரவு காலத்திலிருந்தும் அல்லது மிகவும் நேசத்துக்கும் அன்புக்கும் உடை யவரான ஒருவர் இறந்த வேளையிலிருந்தும் இவ்விடர் தொடங்கும் எனவும் அறியப்படும். இவர்கள் பல்வகையான தீர்வு முறைகளையும் பெற்று இருப்பார்கள். ஆனல் உண்மையில் இவர்களுக்கு சலப்பையின் ஒரு கொள்ளளவில் குறைபாடும் இல்லையாகும். பெரும்பாலும் இவர்கள் இரவில் நீர்த்தல் செய்வதில்லை. அவசர நீர்த்தலும் பல்தர நீர்த் தலும் பகலிலே மட்டுமே நிகழும்.
ஊறித்தாரை சலப்பை இறேடியோ வரையங்கள் கருப்பைக்
கழுத்தில் ஒர் ஒடுக்கம் இருப்பதாகக் காட்டும். இது வரையம் எடுக்கும் பொழுது நோயாளியின் மனப்பயத்தால் உண்டாவதாகும். உண் மையாக ஒடுக்கம் இருப்பதில்லை. உள நிலையால் நீர்த்தல் விட்டு விட்டுச் செய்யப்படும் உள் இறுக்கியானது விட்டு விட்டுத் திறப் பதாலும் அடைப்பதாலும் இது உண்டாகின்றது. அடைபடும்பொழுது சலப்பைக் கழுத்துத் தடுப்பு நிலையெனத் தப்பாக எண்ணப்படும். இவ் விதத் தடுப்பை உண்மையான தடுப்பெனக் கருதி பலதடவை உறித் தாரையகட்டிகளால் அகட்டியுமிருக்கிறேன். இதனில் நிலைமை சீராகும் அல்லது பல நாட்களுக்குப் பின் மீண்டும் முன்போலாகும்.
11. ஈனலுறுப்புக்களின் நோய்களால் சலப்பையிடர்கள் உண் டாகும். யோனி முற்சுவரினதும் கருப்பைக் கழுத்தினதும் நோய்கள் திரிகோனுக்கு நெருக்கத்தையும் அழற்சியையும் உண்டுபண்ணிப் பல்தர நீர்த்தலையும் ஊறுநீருயாவையும் உண்டாக்கும்.
11, சலப்பைத் தளத்தைப் பாதிக்கும் யோனி முற்பக்கச் சுவர்ச் செப்பம், முற்ருன கருப்பையகற்றல், சீசர் அறுவைவினை போன்ற் வற்றில் கலப்பைத்தளம் வகுவை செய்து வேறுபடுத்தப்படும். இதன் பின் சலப்பையழற்சியும் அருட்டலும் உண்டாகும்.
11. கருப்பைக் கழுத்து முற் சொண்டிலும் முற்பக்கச் யோனிச் சுவரிலும் கருப்பையகவணியோமா உண்டாக்கினும் கருப்பைக் கழுத்துக் காசினுேமா காணப்படினும் சலப்பைத்தளம் அருட்டப்படும்.
ஊடறிதல்:
நோய் தோற்றிய விதத்தை அறியவேண்டும். மேற்கூறப்பட்ட
நோய் நிலைமைகளை மனதில் வைத்து வினவவேண்டும். பின்னர் ஊறுநீரியுறுப்புக்கள், ஈனலுறுப்புக்கள் ஆகியவற்றை விழிப்புடன்

Page 163
304 இளம்பெண் நோயியல்
கவனமாகச் சோதிக்க வேண்டும். மைய நரம்புத் தொகுதி சோதிக் கப்படவேண்டும். பின்னர் நோயாளியின் உள நிலையைப்பற்றியும் அதனை உண்டாக்கத்தக்க சூழற்காரணிகளைப் பற்றியும் வினவவேண்டும்.
ஊறுநீர்ச் சோதனை, "நடுத்தாரை ஊறுநீர் மாதிரிக் கூற்றைச் சோதித்துவேண்டும். பற்றிறிய ஆய்வும் செய்யவேண்டும்.
சிறப்புச் சோதனைகள்: ஊறுநீர்ச் சுவட்டின் நிலைமையை இறேடி யோயியல் முறையால் அறியவேண்டும். ஊறுநீர்ப்பை நோக்கல், ஊறுத்தாரை நோக்கல் செய்து நிலைமையை அறியவேண்டும். ஊறுநீரை யும், யோனி, ஊறித்தாரை ஒற்றுக்களையும் பற்றிறிய வளர்ப்புச் செய்து பற்றிறியங்களைப்பற்றி அறியவேண்டும். திரைக்கொமனேசு ஆகிய உயிரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். சலப்பைக் கொள்ளவை அளவிடமுடியும். ஊறித்தாரை சலப்பை வரையங்கள் சலப்பை வினையவிடர்களைப்பற்றி அறிய உதவும். கூனரின் புண்ணுனது பெரும் பாலும் சலப்பை உச்சியில் பூப்புப் பொருத்துக்கு உயரவாகவிருக்கும்.
தீர்வு நோயையுண்டாக்கும் ஏதுக்காகிய சிறப்புத் தீர்வைப் பயன்படுத்தவும்.
இது யாதாமொரு காரணத்தால் இல்லாதபோலும் ஊடறிவானது இது ஒர் உளப் பிறழ்வுச் சலப்பைவினேய இடராகின் கீழ்தரப்படும் முறைகளைப் பயன்படுத்தவும். நோயாளியைப் பிணிதீர் மனேயில் கடுங் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும். அவளுடன் அன்பாயு மிருக்கவேண்டும்!
நிலைமையையுண்டாக்கிய பின்னணிக் காரணிகளைத் திருத்த வேண்டும். நோய் என்ன காரணத்தினுல் உண்டாகினதென்று விளக்க வேண்டும். உளவிறுக்க நிலக்கும் துயிற் குறைவு நிலக்கும் நடு நிலையாக்கிகளும் துயில் செய் மருந்துகளும் கொடுக்கப்படவேண்டும். சலப்பை வெளிதள்ளு தசையின் மிதவிஞ்சிய செயலாற்றலேத் தணிக்கும் மருந்துகளைக் கொடுக்கவேண்டும். இதற்கு கயகியாமசு, கயன்ே, பியூரைல் புருேமைட்டு, புருேபென்தலின் புருேமைட்டு ஆகிய பொருள்களைக் கொடுக்கவேண்டும்.
ஊறித்தாரை அகட்டல்:
இது சிறிது காலத்துக்கு இடரைத் தீர்க்கும். உணர்வழிப்புச் செய்தபின் சலப்பையை நிரப்பி விரித்தல்,
நீரைச் சலப்பையுள் புவியீர்ப்பு முறையால் நிரப்பியபின் வெளிப் பாயவிடவும். சிலர் இதனுல் நன்மையுண்டென்று கூறுகின்றனர்,
 
 
 

ஊறுநீரி அறிகுறிகள் 305 சலப்பையைக் கட்டுப்பாட்டு முறையில் பழக்குவித்தல்:
பிணியாளி தான் நினைத்த நேரத்தில் நீர் பெய்தல் செய்வதில்லை. குறித்த நேரங்களில் பெய்யவேண்டும். நேர இடைவேளையை ஓர் ஒரையிலிருந்து 3-4 ஒரைகளுக்குக் கூட்டவும். இடைநேரத்தில் பெய்ய விருப்பம் வரும்பொழுது அடக்கவேண்டும்.
இதனுடன் கூபகத்தளத் தசைகளின் அப்பியாசமும் இதற்கு தேவைப்படும். ஊறுநீர் விடுதலை அடக்கப்பழகவேண்டும், இந்தப் பழக்கத்தைக்கைவிடாது தொடர்ந்து அதை ஒர் ஒழுக்கமுறையாக்க வேண்டும். பலர் 2-4 கிழமைகளில் ஒர் கட்டுப்பாட்டு நிலைமை அடைவர். பழைய பழக்கம் தலைகாட்டின் மீண்டும் கூறப்பட்ட கட்டுப்பாட்டு முறையில் ஒழுகவேண்டும்.
சலப்பைப் புண்கள்: (கூனரின் புண்). இவை மாருதாகின் ஏனைய அறுவை வினைமுறைகளைக் கையாளவேண்டும்.
Cust அழுத்தம்: பரியேனத்தை திடமாக அழுத்தின் நீர்த்தல் உடனடியாக நிறுத்தப்படும். இது உள் ஊறித்தாரை இறுக்கியானது பிற்பக்கமாக விரியாது தடுக்கப்படும். சலப்பையின் வெளித்தள்ளு தசையின் ஆற்றல் நிறுத்தப்படும். நீர்த்தல் செய்வதற்காகிய விருப் பமும் அற்றுப்போகும். பரியேனத்தை அழுத்துமிடம் சரியான இடமாக இருக்க வேண்டும். முறைப்படி நீர்த்தல் செய்வதைப் பழகும் பொழுது இவ்வழுத் த முறையையும் பயன்படுத்தல் பலனைத்தரும்.
கீழ் உதர நரம்பகற்றல்;
கீழ் உதர நரம்பு நார்களே, சிறப்பாக நரம்புத் தொகுதி நோயால் உண்டாகும் பல்தர நீர்த்தலுயாவுக்கும் அவசர நீர்த்தல் நிலைமைக்கும் சலப்பையை சந்திக்குமிடத்தில் வெட்டியகற்றல் நன்மையைத்தருமென அறியப்படும். இதுக்கு உணர்வழிப்பு செய்தல்வேண்டும்.
ஊறுநீர்ப்பை (சலப்பை) யழற்சி:
பெரும்பாலும் இதனை உண்டாக்குவது பற்றிறியம் கோலேதான் ஆகும்.
இதைத் நீர்ப்பதற்குப் பொது முறைகளைக் கையாளவேண்டும். போதியவளவு நீரைக் குடிக்கக் கொடுக்கவேண்டும். பொற்ருசியம் சிற்றேற்றுக் கலவைகளையும் ஏனைய ஏற்றசல்போனமைட்டுக்களையும் நுண்ணுயிரெதிரிகளையும் கொடுக்கவும், ப. புருேரியசுத் தொற்று, ஊறுநீரை கடும் அமோனிய மணம் உறச்செய்யும்.

Page 164
306 இளம்பெண் நோயியல்
ஊறுநீரிக் கூபக-ஊறுநீரியழற்சி:
ஊறுநீரியின் கூபகமும் ஊறுநீரியிழையமும் கீழிருந்து உயரச் செல்லும் பற்றிறியங்களால் தாக்கப்படும். இது கருப்ப நிலையில் ஊறித்தர்கள் விரிவதாலும் தடையுறுவதாலும் ஊறுநீர்ப்பாய்வானது தடையுறும். இது பற்றிறியங்கள் வளர்வதற்கு வாய்ப்பளிக்கும்.
இதை உண்டாக்கும் பற்றிறியங்களாவன: பொதுவாக ப. கோலை (பெரும்பாலும்) இசுராபிலக்கொக்ககவும் இசுற்றெப்ரோக் கொக்க சுக்களுமாகும். இவற்றுட் பல மருந்துப் பொருட்களை எதிர்க்கும் தன்மையை உடையன. தீர்வு-முன்கூறிய பொது முறைகளையும் பற்றிறியச் சோதனைக்குப் பின்பு அவற்றிற்கு வேண்டிய சிறப்பு நுண்ணுயிரெதிரிகளையும் சல்போனமைட்டுகளையும் கொடுக்கவும்.
முதியோரில் நிகழும் பல்தர நீர்த்தல்:
தற்காலத்தில் சில பெண்கள் மிக நீடிய காலத்திற்கு வாழ்கின் றனர். இறுதிக் காலத்தில் ஊறுநீர் தேங்குவதும் சலப்பை நிரம்பிப் பின்னர் மிதமிஞ்சிய ஊறுநீரானது வெளியே ஒழுகிப் பாய்வதும் ஒரு தொந்தரவான நிகழ்ச்சியாகும். இவர்களின் சலப்பை நரம்புக் கட்டுப் பாடானது வயதால் சீர்கெட்டு இருக்கும். மேலும் சலப்பையின் கொள்ளளவும் குறைவடையும். சலப்பையும் திரிகோனி அழற்சியால் அருட்டலடையும். இதனைத் தீர்வு செய்வது மிக வில்லங்கமாகும் புருேபந்தலினை 30 மி. கி. அளவில் நாள்தோறும் (புருே-பந்தின்) கொடுத்தல் சலப்பையின் பிறழ்வான செயலைத் தடுத்து நலனைத் தருமெனக் கூறுவர்.
நீரூறுவாதை:
குழந்தைகளைப் பொறுத்தமட்டில் அதிகமான குழைந்தைகள் இரவில் படுக்கையை நனைக்கின்றனர். இவர்கள் பின்பு விழிப்பு நிலை யிலும் துயில் நிலையிலும் இந்தத் தன்வலிய நிகழும் நீர்த்தலைக் கட்டுப்படுத்தப் பழகுவர்.
சிலருக்கு இத்தொந்தரவானது இளம்படு மங்கைப் பருவ காலம் வரைக்கும் நிலைக்கக்கூடும். சில மூத்தோரில் உள நிலைமைகளால் முதலில் தோன்றுகின்றது. ஆணுல் இது பெரும்பாலும் அவசர அடக் கலாமை நிலமையாயிருக்கும். இரவில் நனைப்பவருட் பலர் பகலில் அவசர நீர்த்தல் நிலைமையை எய்துபவராயும் இருப்பர். சிலர் இவ் வகையான நிலைமை குடும்பத்தினரில் பலருக்கு சிறுபிள்ளைக் காலத்தில்
இருந்ததென்றும் கூறுவர்.
 

ஊறுநீரி அறிகுறிகள் 307
இவ்வகையான நீரூறுவாதை பல காரணிகளினல் ஏற்படக்கூடும். இதனை சிலருக்கு கட்டுப்படுத்தும் வயது மிகப் பிந்தியதாயும் இருக்கும். வேறு சிலருக்கு நரம்புத்தொகுதி முதிர்ச்சியடைய காலக் கணக்கம் எடுக்கும் இவ்வாதை 8 ஆண்டு வயதுக்கு மட்டும் 7 நூ. வி. குழந்தை களுக்கு நிலைக்குமென அறியப்படும், 1% குழந்தைகளுக்குப் பூப்புப் பருவம் வரைக்கும் நிலைக்கும்.
ஏதுக்கள்: சிலருக்கு மைய நரம்புத் தொகுதி நைவுகளும் ஊறுநீர்ச் சுவட்டுத் தொற்றுக்களும் இருக்கக்கூடும். மதுநீரிழிவும் கூடியளவில் இரவில் நீர் அருந்துவதும் மிகச் சீனி செறிந்த பானங்களைத் துயில முன்பு குடிப்பதாலும் இது உண்டாகும். சலப்பை நிரம்பியிருக்கவும் துயிலை முறிக்க விருப்பமில்லா நிலைமையாலும் இந் நீரூறுவாதை
நிலமை உண்டாகும்.
சிலருக்கு உளவியல் காரணங்களாலும் ஏற்படக்கூடும்:
சூழல், குடும்பக் கவனம் தம்மில் குறைவாயிருப்பின், தங்கள்பால் பெற்ருேர் கவனத்தைச் செலுத்துவதற்காகச் சிலர் இந்நிலைமையைக் கொள்வர். இது சிறு பிள்ளைகளிலும் மிகவும் மூப்படைந்தவரிலும் நிகழக்கூடும். அல்லது உண்மையில் அவர்களுக்கு மாற்றமுடியாத நரம்புத்தொகுதிப் பிறழ்வுகளிருக்கக்கூடும்.
தீர்வு; குழந்தைகளில் காலப்போக்கில் இது திருந்திச் செவ்விதமும் அடைவதால் இதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை. அவர்களே வைதல், வெட்கப்படுத்தல் ஆகிய செயல்கள் நன்மையைத் தரா. தன்னியல்பில் அது நன்னிலையெய்தும். மூத்த வயதில் இது நிகழின் காரணத்தை அறிவதற்குச் சோதனைக்குட்படுத்த வேண்டும். நரம்புத் தொகுதி நோய்கள், மேலதிகமாய் உள்ள ஊறித்தர்கள் பற்றி ஆய்வு செய்யவேண்டும். யாதாமொரு காரணமும் இல்லாதாகின் பொது முறைகளைக் கையாளவேண்டும். அவையாவன:
1. வீட்டில் குழந்தையின் வாழ்வை மகிழ்வுள்ள வாழ்வாக ஆக்கவேண்டும். அதன் தேவைப்பாடுகள் (அன்பும் நேசமும்கூட) நிறைவுபெற வேண்டும். ஒரு வேண்டாப்பிள்ளையாக வளர்க்கப்படாது குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடல், தானுக விளையாடுதல் அகியன ஊக்குவிக்கப்படல் வேண்டும். குறும்புகள் செய்யின் அதிகம் தண்டியாது கற்றல் கால் வேளை, விளையாட்டு முக்கால் வேளை நலனைத்தரும் என்ற முறையில் வளர்க்கவேண்டும்.
2. சலப்பையைக் கட்டுப்படுத்தி பழக்கவேண்டும். பகலிலும் குறித்த நேரங்களில் நீர்த்தல்செய்து பழக்கவேண்டும்.

Page 165
(g நாயியல்
308 இளம்பெண்,
3. படுக்கைக்குச் செல்ல முன்பு 3 ஒரைகளுக்குள் யாதாமொரு
பானமோ அல்லது நீரோ குடிக்கக் கொடுக்கவேபடாது. குழந்தைகள்
அழுதாலும் இக்காலக்கூறில் இதனை தவிர்த்தே தீரவேண்டும்.
4 துயில் நிலையிலிருப்பின் 3-4 ஒரைகளுக்கொருக்கால் கண்டிப் பாக எழுப்பி கட்டுப்பாட்டுக்குள் நீர்த்தல் செய்யவிடவேண்டும். இதையவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனல் கட்டுப்பாரட்டுக்குள் அடக்கிப் பழக்கவேண்டும்.
5. எபெடிறீன் அல்லது கயகியாமசுத்திரவம் 1-2 | ||8. இலீ. அளவில் கொடுக்கவும். மருந்துப் பொருள்கள் விரும்பப்படாதபோது பொது முறைகளை பயன்படுத்த வேண்டும்.
6. மூத்தோரில் இது நிகழின் உளவியல் மருத்துவ உதவி பெற்றுத் தீர்வு செய்யவும்.
 
 
 

ஊறுநீர் அடக்கலாமை 309
இயல்: 20
ஊறுநீர் அடக்கலாமை
இந்நிலைமையில் யாதாமொரு இச்சைவழி நீர்த்தலும் இல்லாது ஊறுநீர் தன்னியலில் வடிந்துகொண்டேயிருக்கும். பெரும்பாலும் சலப்பையிலிருந்து ஒழுகும் அல்லது ஊறித்தாரையிலிருந்து ஒழுகும் . அருமையாகவே ஒர் ஊறித்தரிலிருந்து ஒழுகும். ஊறுநீர்தான் ஒழுகு, கிறதென அதன் நாற்றமே தெரிவிக்கும். பொதுவாக இது நால் வகையாகப் பாகுபடுத்தப்படும்.
1. உண்மை அடக்கலாமை
2. மிதவிஞ்சி ஒழுகல்
3. அவசர நீர்த்தல் 4. அடர்நிலைமை en haaraon.
1. உண்மை ஊறுநீர் அடக்கலாமையில் ஊறுநீரானது இடை பருது நெடுகலும் ஒழுகிக்கொண்டேயிருக்கும். இது பெரும்பாலும் ஊறுநீரிச் சுவட்டில் உண்டாகும் புரையாலாகும். இவை சலப்பையோனி, ஊறித்தாரை யோனி, ஊறித்தர் யோனிப் புரை என வகைப்படும். அருமையாகவே உடல் தழைப்புப் பிறழ்வுகள் காரணங் களாக இருக்கக்கூடும். இப்பிறழ்வுகள் புறவிடத்துச் சலப்பை, மேலதிக ஊறித்தர் ஆகியன.
11. மிதவிஞ்சி ஊறுநீர் தேக்கமுறுவதால் சலப்பை அளவுக்கு அதிகமாக விஞ்சி விரிந்து ஊறுநீரைத் தேக்கும். இதனுல் உள்ளி றுக்கி இழுபட்டுத் திறபடும். σΤσότGo), ஊறுநீரானது ஒழுகும். பெரும்பாலும் இது சிறுபிள்ளைகளிலும் வயதுமிக்க மூப்புற்ருேரிலும் நிகழ்கின்றது.
11. அவசர நீர்த்தல்: நீர்த்தல் செய்ய விருப்பமுண்டாகவும் அதனை விரைவில் நிகழ்த்தவேண்டும். ஆணுல், உடனடியாக நிகழ்த்த வசதியில்லாவிடின் உடனடியாகவே ஒரு நீர்த்தல் நெறிவினையுண்டாகி, இச்சை வழியற்ற முறையில் தேங்கிய ஊறுநீர் முழுதும் நீர்த்தல் செய்யப்படும் அல்லது பெருமளவில் பெய்யப்படும். இதனுல் உடைகள் நனைந்து அவர்களுக்கு வெட்கமும் மனவேதனையும் உண்டாகும். இது ஒரு நீடிய காலத் தொந்தரவாயிருக்கும். வேறு சிலர் பேற்றுக் காலத்தில் தொடங்கினதெனக் கூறுவர். சிலருக்கு ஊறுநீரானது

Page 166
310 இளம்பெண் நோயியல்
அதிஅமில நிலையிலிருப்பின் இந்நிலைமையுண்டாகும். சலப்பை இறக்கம் அல்லது சலப்பையை அமிழ்த்தும் ஒரு கழலையத்தினுலும் இந் நிலமை உண்டாகக்கூடும். -
சில நரம்பு நோய்களில் (பரம்பிய வல்லாப்பு போன்றவை) இது முதலில் தோன்றும் அறிகுறியாகும். மிக மூப்புற்றவரிலும் இது பெரும்பாலும் தோன்றும்.
இவர்களில் நீர்ப்பையின் வெளிதள்ளு தசை அதிஅருட்டல் நிலையில் இருப்பதால் சலப்பை அதி. தொனிப்பு நிலையைளய்தும். சிலரில் இவ்வவசரநிலை அடர் அடக்கலாமையுடன் சேர்ந்திருக்கும்.
தீர்வு முன்னர் கூறியதுபோல் ஊறுநீர்விடுதலே குறித்த கால வேளையில் நிகழ்த்தப் பழக்கவேண்டும்.
அடர் அடக்கலாமை:
வயிற்றக அமுக்கம் உயர்த்தப்படும் அடர் நிலைமைகளில் (முக்கல், இருமல், உரத்துப் பேசல், அப்பியாசம் செய்தல், தும்மல்) ஊறித்தாரை வழியாக ஊறுநீர் ஒழுகும் அல்லது சிறப்படும். சிலரில் படுக்கையில் உருண்டு திரும்பும்பொழுது நிகழும். வயிற்றக அமுக்கம் சலப்பையக அமுக்கத்தை உயர்த்தும் (20-30 ச. மீ. நீர் அமுக்கம்) பெரும்பாலானே ருக்குப் போதுமாகும். (மெல்லிய பிறழ்வில் 70-80 ச. மீ. நீரமுக்கம் எய்தப்படவேண்டும்) ஊறுநீரானது சில சொட்டுக்களாக ஒழுகும். தொகையாக ஊறுநீர் வடிவதில்லை என்பதனை நினைவுகூரவும். இவர் களுக்கு நீர்த்தல் செய்யவும் விருப்பம் இராது. உடையணிகள் அடிக்கடி ஊறுநீர் விட்டபோதும் அல்லது மிகக் குறைந்த அளவில் நீரைப் பருகினபோதும் தொந்தரவு மாறுவதில்லை. சலப்பைக்குள் தேங்கும் நீரில் இது தங்கியிருப்பதில்லை. இவர்கள் வீட்டு வாழ்வையே பெரிதும் விரும்புவர். வேலை செய்யாது கொழுமை அடைவர்.
இப்பிந்திய வகுப்பினரில் பேற்றுக்குப் பின் சில கிழமைகளில் நிலைமை முன்னிலையை அடையும். பின்னர் நிகழ் பேறுகளிலும் தொடர்ந்து தோன்றக்கூடும். இவ்விதமாகப் பலதரம் தோன்றி நிரந் தரத் தொந்தரவாக நிலைக்கவும்கூடும். இவ்விதமாக அதிகமானுேருக்கு நிகழ்வதில்லை. பிள்ளைப் பெருதவர்களில் இது மிகக் கடுமையான நிலை மையை அடையவும்கூடும்.
இதைத் தோற்றும் பொறிமுறை:
வயிற்றக அமுக்கம் உயர்வடையும்பொழுது ஊறித்தாரை வழியாக இச்சை வழியற்ற முறையில் ஊறுநீர் வெளியேகும். ஊறுநீர்ப்பையின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊறுநீர் அடக்கலாமை 311
செயல்முறைத் தொனிப்பு, தசையின் சகிப்புத்தன்மை எல்லாம் நேம மாகும். ஆணுல், ஊறித்தாரை இறுக்கிப் பொறிமுறை பிழைபட்டிருக்கும்.
சலப்பையின் இச்சைவழியற்ற தசைநார்கள் கீழ்நோக்கி ஊறித் தாரையை அடைந்து ஏறத்தாழ அதன் தசையுறை முழுவதையும் அமைக்கும். உள் ஊறித்தாரைப் போகுழையில் ஒரு சிக்கலான அமைவைப்பெறும். முற்பக்கப் பிற்பக்கக் கவண்களாகத் தாங்கி உள்ளிறுக்கியை திறக்கவும் மூடவும் உதவும். ஊறித்தாரைச் சுவரின் இச்சையில் தசையானது இரு சுருள்களாக இருக்கும். ஒன்று வலமிருந்து இடதுக்குச் சுற்றும் மற்றையது இடமிருந்து வலதுக்குச் சுற்றும். சலப்பையின் வெளிதள்ளுதசையானது சுருங்கவும் சுருளிகள் அவிழ்க் கப்படும். ஊறித்தாரையானது உயரவிருந்து கீழாகப் படிப்படியாகத் திறபடுவதற்கு உதவும்.
இச்சைவழித்தசை: இது ஊறித்தாரை நெருக்கியாகும். இது ஊறுநீரி ஈனலுறுப்புப் பிரிமென்றகட்டு இரு அடுக்குகளுக்கிடையில் கிடக்கும், இது சுருங்கவும் ஊறுநீர் விடல் நிறுத்தப்படும் (இதுவெளியிறுக்கியாக அமையும்).
கலப்பையானது நிரம்பியபொழுதும் ஊறித்தாரையின் உட்புறம் வெறிதாகத்தானிருக்கும். இரு சுவர்களும் நெருங்கியிருக்கும் வயிற்றகவ முக்கம் உயர்த்தப்படும் பொழுதும் அது வெறிதாகத்தான் இருக்கும்.
ஊறுநீரடக்கல் நேமநிலையில் உள்ளிறுக்கியும் ஒர் இரண்டாவது பாதுகாப்பாகும்.
நோயியல்: முன்கூறியபடி இந்த அடக்கலாமையில் பிறழ்வு உள்ளி றுக்கியால் ஆகும். பக்கல் சலப்பை நோக்கி, எக்சு (X) கதிர் வரையங்கள் காட்டுவது பிற்பக்க ஊறித்தாரையானது சலப்பைக் கோணம் இழக்கப் பட்டிருக்கப்பட்ட நிலைமையிலிருப்பதையே. சலப்பைத் தள திரிகோ ணிையும் ஊறித்தாரைத் தளமும் ஒரே வாட்டமட்டத்திலேயே அமைந்து இருக்கின்றது.
அறுவை வினைக்காயங்கள் உற்றவர்களில் சிலரில் சிறப்பாக ஊறித்தாரையின் உயர்பகுதி பிளவு வாய்போல் அகண்டதாயிருக்கும். சிலருக்கு இப்பகுதி ஒருவிறைத்த விரிவுறயியலாக் குழாய்போலிருக்கும்.
சாரகக் குறிப்புக்கள்:
அடர் அடக்கலாமை நிலைமை கருப்பையிறக்கத்துடன் சேர்ந் திருக்கும். சில கருப்பை இறக்கங்களில் அடர் அடக்கலாமையில்லே யாகும். ஆக நூற்றுக்கு 40 பேரில் மட்டுந்தான் அறிகுறிகள் தோன்றும் (சிறியவளவில் அல்லது கடுமையாக).

Page 167
312 இளம்பெண் நோயியல்
கருப்பையிறக்கமும் அடர் அடக்கலாமையும் வெவ்வேறு நிலைமை களாம். இது ஊறித்தாரையின் நீளத்தில் தங்கியிருப்பதில்லை.
கருப்பநிலை ஊறுநீர் அடக்கலாமைக்கு காரணியல்ல. பிள்ளை பெருதவர்களில் 40% மட்டில் இதனுல் வருந்துவதாக அறியப்படும். முதலாம் கருப்பத்தில் 50% மட்டில் இவ்விடரால் வருந்துவர். இதனல் கருப்பநிலைக் காலம்கூடவும் நிலமை மிகவும் கெடவுங்கூடும். இது பேற்றுக்குப்பின் சில கிழமைகளில் முன்னிலையை அடையும். இந்நிலை பின்னர் உறும் கருப்ப நிலைகளில் மீண்டும் தோன்றக்கூடும். சிலரில் நிரந்தரமாக கருப்பகால இடைக்காலத்தில் நிலைக்கவும்கூடும்.
ஒருவருக்காயினும் பேற்று அண்மைக் காலத்தில் முதன்முதலாக இது உண்டாவதில்லை. கருப்ப நிலைக்கு முன்னமோ அல்லது கருப்ப நிலைக் காலத்திலோ உண்டானதாயின் பிறழ்வானது ஒர் உள்ளிறுக் கியின் பலவீன நிலைமை அல்லது புத்தம் புதிதாக உண்டாக்கப்பட்ட பலவீன நிலைமைகாரணமாக இருக்கக்கூடும். இதற்கு மேலும் பிறழ் வைகசுட்டும் மிக அருமையாகவே காயங்கள் கேட்டை உண்டாக்கும்.
வயது: தீர்ாை9க்கு வருவோரில் (90%) அதிகமானுேர் 55 வயதுக்குக் குறைந்தவராகும். இதில் 70% மட்டில் மாதவிடைவுக்கு முன்பு தீர்வைக்கு வருவர்.
மாதவிடைவுக்குப் பின்னர் கூபகத் தசைகளும் பட்டிப்புக்களும் அல்லூட்டமடையும். இறுக்கிப் பொறிமுறையும் தளர்தலடையும். வன்தாக்கம்:
1. சலப்பை-யோனிப்புரைச் செப்பமாக்கம்
11. கருப்பையிறக்கச் செப்பமாக்கம் ஆகியவற்றின் பின்பு ஊறித் தாரை-சலப்பைச் சந்தியின் கட்டுக்கோப்புச் சீர்குலைவதால் இது உண்டாக்கப்படும்.
அடர் அடக்கலாமையில்லாது கருப்பையிறக்கச் செப்பவினைக்கு வருபவர்களில் 2-3% பெண்கள் அறுவைவினையின் காரணத்தால் புதிதாக ஊறித்தாரை அடக்கலாமையால் வருந்தக்கூடும்.
எந்தவொரு அறுவைவினையும் ஊறித்தாரையைச் சுற்றிகடும் நாரிழைய ஆக்கத்தை உண்டாக்கின், அது, முழு ஊறித்தாரை இறுக்கிப் பொறிமுறையை அழிப்பொழிப்புச் செய்து அடக்கலாமையை உண் டாக்கும்,
 

ஊறுநீர் அடக்கலாமை 313.
εναντι (ή 35ου:
1 மையநரம்புத் தொகுதியின் ஆட்சிக்குறைவால் உண்டாகும்
ଜୃମ୍ଭ୍ (4;$ଓ:
11. ஊறுநீரிச் சுவட்டில் நைவுகள்-புரைகள், மிதமிஞ்சிய ஊறித் தர்கள் ஆகியனவற்ருல் உண்டாகும் உண்மை அடைக் கலாமை நிலைகள்.
11. அவசர நீர்த்தல் நிலைமையை முன்கூறியவற்றிலிருந்து வேறுபடுத்தப்படல் வேண்டும். பிந்திய நிலைமையில் அடக் கலாமைப்போல் சில சொட்டுகள் நீர்த்தப்படுவதில்லை. பெருமளவு ஊறுநீர் பெய்யப்படும். இவற்றைப் பற்றி முன்னர் கூறப்பட்டது.
சிறப்புச் சோதனைகள்: பக்கல் ஊறித்தாரை சலப்பைபற்றிய இறேடியோவரையம் உண்மை நிலையைத் தெரிவிக்கும்.
தீர்வு:
1. கூபகத் தளத் தசைகளை அப்பியாசம் செய்தல், இது அவசர
நீர்த்தலுக்கு நலனைச் செய்தபோதும் இறுக்கிப் பொறிமுறைக்கு
உதவவே மாட்டாது.
11. அறுவை வினைத் தீர்வு:
(1) சலப்பையிறக்கமும் நேர்குடலிறக்கமும் இருப்பின் உள்ளிறுக்
கியை மடிப்புச் செய்து செப்பம் செய்யமுடியும்.
(i) உள்ளிறுக்கியை இறுக்கம் செய்தல். இதனைக் கெல்லியின் அறுவை வினைமுறையால் செய்யலாம். பக்கத்து பூப்பு:கழுத்துப் பட்டிப்பையும் பூப்பு-குயிலகுத் தசைவிளிம்புகளையும் நடுக்கோட்டுக்கு இழுத்துத் சேர்த்துத் தைக்கவேண்டும்.
(i) அல்டிறிச்சின் தாங்கு கவண் அறுவைவினை. இதற்கு வயிற்றுச் சுவர்ப் பட்டிப்புக் கீலங்களைப் பயன்படுத்துவர். யோனி வழியாகச் செப்பம்முற்ருகும்.
(w) இன்னும் பவ்வேறு செப்பம் செய்முறைகளும் உள. அறுவைப்
பகுதியில் படிக்குக.
இம்முறைகளால் 60% பிணியாளரை முற்முக மாற்றமுடியும்.

Page 168
இளம்பெண் நோயியல்
ஊறுநீர்த் தேக்கம்
இந்நிலைமையில் ஊறுநீர் யாதாமொரு பிறழ்வும் இல்லாது கரக்கப்பட்டு சலப்பையை அடையும். ஆணுல் இது வெளியேக முடியாது தேங்கும்.
இக் கெடுதிவிளைவின் முக்கிய காரணங்கள் g, Lland; கழலேயங் களும், கூபகக் கட்டிகளுமாகும். ஏனைய ஏதுக்கள் நரம்புத் தொகு தியின் காரணங்களாகும். ஊறித்தாரையின் புழையடைப்பாலும் தேக்கம் உண்டாகும்.
இக்கழலேயங்களும் கட்டிகளும் கீழே தரப்பட்டுள்ளன.
1. குருதியோனியம்.
2. பின்திரும்பிய சூலுற்ற கருப்பை (சிறப்பாக 14ஆம் திங்களில்),
3. பின்திரும்பிய சூலுற்ற கருப்பையாலாகிய தொடக்க வேளேக்
கருச்சிதைவு, -
4, புறத்துக் கருப்பத்தாலாகிய கூபகக் குருதிச்சிறை. 5. கருவுருவின் பின்தலை கூபகக் குழிக்குட் சிறைப்படல்.
6. கருப்பை நார்-தசையோமா கூபகக் குழிக்குட் சிறைப்படல்.
7. கூபகக் குழிக்குட் சிறைப்பட்ட சூலகச் சிறைப்பை, 8. கூடகச் சீழ்த்தக் கட்டி,
9. யோனியை கோசுத்துணியால் நெருக்கி அடைத்தல் ஆகியன
6)յր լի.
மேற்கூறப்பட்ட நோய் நிலைமைகளுக்காகிய சிறப்புக் குறிகள் காணப்படும்.
குருதியோனியத்தில் மாதத்தீட்டு தோற்ற வேண்டிய காலக்கூறில் இத்தேக்கம் நிகழக்கூடும். பின்னர் குருதிநீர் அகத்துறிஞ்சப்படவும் நிலைமை திருந்தக்கூடும். வேளேக்குத் தீர்வு அளிக்காவிடின், நீர்த் தேக்கத்துடனும் ஏனைய நோய் அறிகுறிகளுடனும் தீர்வுக்கு வருவர். சிறைப்பட்ட நார் - தசையோமா, மாதயிரிவு காலத்தில் வீங்கி ஊறுநீர்த் தேக்கத்தை உண்டாக்கும். பின்பு இரிவு நின்றபின் நிலைமை திருந்தும், இம்முறையில் தீர்வு பெறுவதற்குக் காலச் சுணக்கம் ஏற்படக்கூடும்.
 
 
 
 
 

ஊறுநீர் அடைக்கலாமை 315
கூர்ப்புத் தேக்கத்தையுண்டாக்கும் பொறிமுறை :
இவ்வகையான தேக்கநிலைமைகளில் ஊறித்தாரைச் சலப்பைச் சந்தியானது கூபகத்தில் தன் நேம இடத்தில் இருக்கும். ஊறித்தாரை நீளிப்புறுவதில்லை. ஆனல், கழலையமோ கட்டியோ உள் ஊறித்தாரை யிறுக்கியின் திறப்புப் பொறிமுறைக்குப் பிறழ்வுசெய்யும். இவையெல் லாம் பிற்பக்க ஊறித்தாரை-சலப்பை ஆகியவற்றின் கோணத்தை நீர்த்தல் வேளையில் தளர்தலுருது தடைசெய்து நிலைக்கச் செய்யும். தேக்கம் உண்டாகுவதற்குப் பல ஏதுக்கள் உதவிசெய்யும்.
1. சலப்பைக் கீழ்தள்ளுதசை சுருங்கத் தவறி உயர் ஊறித் தாரை திறபடாது செய்யும்.
(அ) இவர்கள் நீர்த்தலைத் தொடக்குவதற்கு வயிற்றுத் தசைகளைச் சுருக்குவதில்லை.
(ஆ) சித்துயா,இயல் தடுப்புப் பீதியடைதல் ஆகியன உள நெகிழ்வு
நிலைமைகளில் கீழ்தள்ளுதசை இயங்காது. உட்தடுப்புறும்.
(இ) சலப்பைக்கு வழங்கப்படும் அருட்டல் நரம்புகள், விரிவான கூபக அறுவைவினேகளிலும் சில நரம்பு நோய்களிலும் முறையே காயப்படக்கூடும் அல்லது நோய்ப்பட்டு பரவிழி சலுறும்.
(ஈ) சலப்பையானது ஊறுநீர்த் தேக்கத்தால் நிறைந்து சலப் பைத் தசை மிதமிஞ்சி விரிக்கப்பட்டு அல்தொனிப்பு நிலையை அடையும். இந்நிலைமையில் ஊறுநீர் தேக்கத்தை உடனடி யாகத்தீர்வு செய்யாவிடின் நிலைமை ஒரு பெரிய இடராக மாறிவிடும்,
(உ) கடும் மூப்புற்றேரில் கீழ்தள்ளுதசை அல்லுட்டமுற்று நலியும்,
11 உள்ளிறுக்கியின் போகுழை திறக்கப்படாத நிலைமை, இது பிற்பக்க ஊறித்தாரை சலப்பைக் கோணம் ஒழிப்புரு நிலைமையின லேயே உண்டாக்கின்றது. இதை உண்டாக்குவன கீழ்வருவனவாகும்.
(அ) கூபகக் குழிக்குள் நெருங்கிய நிலேமையில் பின்திரும்பிய சூலுற்ற கருப்பை (14 திங்கள்), கழுத்து நார்தசையோமா, கருப்பைப் பிற்பக்கத் தசையோமா, நெருக்கிச் செருகுண்ட சூலகச் சிறைப்பை, பேற்றுஇறுதி வேளையில் கருவுருவின் தலை,

Page 169
316 இளம்பெண் நோயியல்
(ஆ) தகைப்பாலான ஊறுநீர் அடைக்கலாமையில் ஊறித்தாரை
சலப்பைச் சந்தியை உரிய கோணத்தில் வைத்திருப்தற்காக அறுவைவினையால் செப்பம்செய்த இழையங்களும் பட்டிப்புக் களும் நீர்த்தல் வேளையில் கோணத்தை விரியவிடாது தடைசெய்யும்,
(இ) கருப்பைக் கழுத்து, யோனிக் கான்சர் ஆகிய நோய்கள் பரவி மேற்கூறிய சந்தி இழையங்களை விறைப்புச் செய்து விரிவுருது செய்யும்.
(ஐ) ஊறித்தாரைகசலப்பைக் கோணத்தையுயர்த்திசரி கோணத்தில் தாங்கல் செய்யும் பட்டிப்புக் கவன்களால் கோணம் மிக நெரிக்கப்படின் (செப்பம் சரியாகச் செய்யப்படாத காரணம்),
111, இச்சைவழி வெளி ஊறித்தாரையிறுக்கியானது பிடிப்புநிலை எய்தின் (பொதுவாக இது ஊறுநீர் பெய்தலை இச்சையால் தடை செய்வது போன்ற நிலைமையாகும்). இதில் சலப்பைக்கும், ஊறித் தாரைச் சலப்பைக் கோணத்துக்கும் ஒரு பிழையுமில்லையாகும்.
(அ) பீதியாலும் இயல் மறிப்பு நிலைமைகளாலும், (ஆ) பேற்று வேளைகளில் பெரினிய காயங்களாலும். (இ) பரியேன பெரினிய அறுவைவினைகளாலும்,
சிறப்பாக ஏனசு உயர்த்திகளும் அறுவைவினைக்கு (யோனிப் பிற்கவர் செப்பம்) உட்படுத்தும்போது, இவ்வெளியிறுக்கியும் பிடிப்பு நிலையெய்தி ஊறுநீர் விடமுடியா நிலையை உண்டாக்கிவிடும்.
ஊறித்தாரைப் புழையடைப்பு: (இது பொதுவாகக்கானப்படாத நிலைமைகளாம்).
1. உடன் பிறப்பு அல்துளையுயா, வால்வுகள் ஆகியன கருப் பைக்குள்ளிருக்கும் கருவுருக்குக் கடும் விரிவைச் சலப்பைக்கும் ஊறித்தர்களுக்கும் உண்டாக்கிவிடும்.
2. புறத்து பொருட்களான சிறு கற்கள் சிலசமயங்களில் புழை
படைப்புச் செய்யக்கூடும்.
காயங்களாலுண்டாகிய அல்துள்ையுயா சிலரால் ஊறித்தா)ை அறுவை வினைகளில் உண்டாக்கப்படக்கூடும்,
 
 
 
 

ஊறித்தாரை அடைக்கலாமை 317
4. புறத்திலிருந்து ஊறித்தாரை அழுத்தல் ஊறித்தாரை மருங்கில் இருக்கும் சிறைப்பைகளும் சீழ்த்தக் கட்டிகளும் அழுத்தல். ஊறித்தாரைக் கான்சர் நோய் அல்லது வல்வ, யோனிக் கான்சர் நோய் பரவல்,
5
6. கடும் சலப்பையிறக்கத்துடன் சேர்ந்து நிகழும் கருப்பை இறக்கத்தில் ஊறித்தாரையின் திக்கு தலைகீழாகிவிடும். முக்கும் பொழுது ஊறித்தாரை கூடிய கோணலுறும், கருப்பையை விரலால் உயர்த்தின் நீர்த்தல் நிகழும்.
தீர்வு: உடனடியாக இத்தேக்க நீரை வெளியேக விடவேண்டும். பின்னர் நிலைமையை உண்டாக்கிய காரணிக்குத் தீர்வு காணவேண்டும்.
ஊறிநீரானது வெளிப் பாய்வதற்குக் கதீத்தர் ஆக்கம் செய்ய வேண்டும்.
1. கருப்பை சிறைபட்டு நெருக்குவதால் உடனடியாக ஊறு நீரைக் கதித்தரால் லெளிப்பாயச் செய்யவேண்டும். இவ்வெளிப் பாய்வும் மெதுவாக நிகழ வேண்டும்; அல்லது தாயானவள் துளக்கு மடிப்பு நிலையெய்துவள். அவளைப் பின்னர் குப்புறபடுத்தின் அல்லது முழந்தாள்-முழங்கை கும்பிடு நிலையில் வைப்பின் கருப்பை தன் வலிய முன்னகத் திரும்பும், N
2. அறுவைவினைக்குப் பின்நிகழ் தேக்கம். சில அறுவை மருத்துவர் சுபத அறுவைவினைகளுக்குப் பின் கதித்தர்களே (தானுய் நிலையுறும்) உட்புகுத்தி நோயாளியைக் காவல் அறைக்கணுப்புவர். இவர்களில் தேக்கம் உண்டாகாது. ஆணுல், அழற்சிக் கெடுதிகள் மிகத் தொந் தரவைக் கொடுக்கும். பலர் கதித்தர்களைப் புகுத்தமாட்டார்.
ஆணுல் ஊறுநீவிட ஊக்குவிப்பார் படுக்கைக்கு அண்மையிலிருக்கும் மலசல இருக்கையைப் பயன்படுத்தின் பலர் நீர்த்தலைச் செய்வர். படுக்கைச் சட்டியில் பல நோயாளர் இடர்படுவதால் நீர்த்தலைச் செய்யார்; வல்வத்தைப் பொஞ்சிக் கழுவல் செய்து நோயாளியை உட்காரச் செய்தால் பலர் ஊறுநீர்விடுவர். சலப்பைத்தசையை காப்க்கோல், புருேஸ்ரிக்மீன் (ஆகிய மருந்துப்பொருட்களை) உள்ளேற்றி தூண்ட முடியும். இச் செயல்முறைகள் பலனைத் தராவிடின் கதித்த ரைப் புகுத்தி ஊறுநீரை வெளிப்பாய்வு செய்யவேண்டும். சிலரில் அறுவை வினையைப் பொறுத்துத் தாணுக நிலக்கும். கதித்தரைப் புகுத்தி 24 ஒரைகளுக்கு விட்டுவிடவும் பெரும்பாலும் அறுவைவினைக் குப்பின் முதல் 12 ஒரைகளுக்கும் சிறிதளவில்தான் ஊறுநீர் சுரக்கப் படும். 24 ஒரைகளுக்கும் ஊறுநீர் விடப்படாவிடின் அல்லது சலப்பை

Page 170
318 இளம்பெண் நோயியல்
விரிந்து இருக்கின்றதற்காகிய குறிகளிருப்பின் கதித்தரைப் புகுத்த வேண்டும். தொடக்கத்தில் உட்புகுத்திய கதீத்தரை எடுத்த பின்னர் பலர் தன்வலிய நீர்த்தலைச் செய்வார். சிலருக்கு 8 ஒரைகளுக்கு ஒருமுறை கதீத்தரைப் புகுத்த வேண்டிவரும். சிலருக்குச் சலப்பை பல நாட்களுக்குச் செயற்படுவதில்லை (5 - 6-7 நாட்களாயினும் செல்லும்). இவர்களுக்குத் தானுய் நிலையுறும் கதீத்தரைப் புகுத்தி இடையமுது நெடுகலும் வடிய 48 ஒரைகள் வரையில் விடவேண்டும். சலப்பை வெறிதாக இருப்பின் அது மீண்டும் தன் தொணியை விரைவில் பெறும்.
சிலருக்கு அறுவைவினை நோவைத் தணிப்புச் செய்வதற்கு மருந்துப் பொருட்களை கொடுத்தும் மூன்ரும் நாள் எனிமாக்கழுவலும் செய்வர். இதன் பின்னர் நீர்த்தலும் தன்வலிய நிகழும்.
மீதித் தேக்கம்:
சிலரில் நீர்த்தல் செய்தபோதும் சிறிதளவு ஊறுநீர் எஞ்சி யிருக்கும். படிப்படியாக இதன் அளவும் கூடிக்கொண்டுவரும். இதனல் தொற்று நிகழும் சலப்பையும் தன் தொணியை மீளப் பெறச் கணக்கம் உண்டாகும். இவர்களுக்கும் கதீத்தரைப் புகுத்தி 24 ஒரைகள் மட்டில்விடின் நிலைமை முற்ருகத் திருந்தும்.
கதீத்தர்; உட்புகுத்துமுறையால் மருந்துபொருட்களாலும் அடக்க முடியாத தொற்றுக்கள் விளையும். எனவே கதீத்தரைப் புகுத்தும் போது சீழற்ற முறைகளையும், சீழெதிரி முறைகளையும், கையாள வேண்டும்.
1. தற்காலத்தில் கிருமியழிப்புச் செய்த விறைத்த பிளாஸ் திக்குக் கதீத்தர்களை சரைகளில் உடனடிப் பாவிப்புக்குப் பெறமுடியும். 2. கையால் தொடாது புகுத்த வேண்டும். 3. சீழெதிரி யெல்லி களைப் பயன்படுத்தவேண்டும். கதீத்தரின் வெளிமுடிவிடத்தை கிருமி யழிப்புச் செய்த ஏதனத்துள் இடவேண்டும். சீழ்க்கிருமிகளை ஒழிப்புச் செய்வதற்கு சல்பனமைட்டுகளையும் நுண்ணுயிரெதிரிப் பொருள்களையும் பயன்படுத்தவும். முறையற்ற கதீத்தரால் கடும் கெடுதியும் உடலுக்கு வேண்டா நோயும் வீண் பணச்செலவும் நிகழுமென்பதை மறக்கவே வேண்டாம். பெண்களில் காணப்படும் ஆணசு (ஏனசு) நோய்களும் நேர்குடல் நோய்களும்.
ஆனசு அரிப்பு (கடி)
இது முன்னர் கூறப்பட்ட வல்வ அரிப்புடன் சேர்ந்து தோன்றும். அறிகுறிகளும் தீர்வும் அதில் குறிக்கப்பட்டது போலாம்.
 
 
 
 

ஊறுநீர் அடைக்கலாமை
நாட்பட்ட அரிப்பில் தோல்தடித்தும் நிறம் மாறியுமிருக்கும். அல்லுரட்ட மாற்றங்களைக் காட்டும். ஆனசு ஒரத்திலும் குண்டியிடைப் பிளவிலும் தோல் வெடிக்கக்கூடும்.
ஏ துக்கள்: பொதுவாகத் தோல் நோய்களாலும், கசிவு நீர், சீழ், குருதி, ஊறுநீர் மலம் ஆகியன இப்பகுதியை அழுக்குறுத்துவதாலும் நூற் புழுக்களும் இராசாயனப் பொருள்களும் அரிப்பை உண்டாக்கும்.
1. ஆனசுக் குருதியிரியதிகளும், ஏனசு வெடிப்புக்களும், புரை களும் மூப்புற்றவர்களில் கருப்பையிறக்கத்துடன் நேர்குடலிறக்கமும்,
2. நூற்புழுக்கள். இதுதான் மிகப் பொதுவான காரணமாம். 3. பங்கசுத் தொற்றுக்கள் வல்வ அரிப்பில்போல்.
4. மருந்துப் பொருள்களுக்குக் காட்டப்படும் அலசையானது அரிப்பையுண்டாக்கும். இவற்றுள் சவர்க்காரமும் ஏனைய நீர்களும். கடதாசிகளும் அணிகளும் அடங்கும்.
தீர்வு: மது நீரிழிவு, நூற்புழுக்கள், ஏனைய தோல் திணிவுப் பயிரிகள் ஆகியவை தீர்வு பெறப்படவேண்டும்.
2. உடலில் ஏனைய இடங்களிலுள்ள தினவுகளும் தீர்வு பெற வேண்டும். -
3. ஆனகப் பகுதிகளை நலம்பேணல் செய்தல் முக்கியமாகும். மலம் கழித்தவுடனேயே நல்ல சவர்க்காரம் கொண்டும், நீர் கொண்டும் துப்பரவாகக் கழுவவேண்டும்.
இந்நலன் பேணல் முறையைப் பேணின் சில மாதங்களுள் அரிப்பு மாறும். மேலும் மருந்து தேவைப்படின் பங்கசு கொல்லிக் களிம்பை அல்லது பொடித்தூளைக் கழுவலுக்குப் பின் இடவும். நிகற்ருற்றின் களிம்பும் தூளும் பயனுடையது. கோட்டிசோன் களிம்பும் அரிப்பைத் தணிக்கும்.
மாற்ற முடியாதவர்களில் ஆனசைச் சுற்றியிருக்கும் தோல் நரம்பு களைத் தூண்டவும்.
2. ஆனசப் பிளவு:
இது ஆணசு ஒரத்தில் ஒரு வெடிப்பாகத் தோற்றம் தரும். கூர்ப்பு வெடிப்பாகவிருக்கும் அல்லது நாள்ப்பட்ட புண்ணுகவிருக்கும். குரு

Page 171
320 இளம்பெண் நோயியல்
தியிரியதிகளும் சேர்ந்திருககும். பேற்றுக்கு பின் திண்ணமான பெரும் மலக்கட்டி வெளியேறும். ஏனசு வால்வுகளிலொன்று கிழிபடக்கூடும்.
மலம் கழிக்கும்பொழுது கடும் வெட்டும் நோவுமுண்டாகும். நோத் தணிய 2-3 ஒரைகள் செல்லும், குருதியும் வடியக்கூடும்.
தீர்வு பொதுமுறைகளான மலத்தை இலகுவாக்கல், ஒழிங்காக நாள்தோறும் கழித்தல், கழிக்கும்போது முக்காதிருத்தல், சுத்தமாக வைத்திருத்தல். உணர்வழிப்புக் களிம்பையிடல் ஆகியன, இவை பெரும்பாலும் பயன்தரா,
பிளவுப் புண் மாருதவர்களுக்கு:
1 . உணர்வழிப்பு மருந்தை பிளவின் தளத்துக்குக் கீழாக ஏற்றிப் பின்னர் விரலால் ஆனசை அகட்டவும். பலருக்கு இத்தீர்வு முற்ருன மாறுதலையுண்டாக்கும்.
2. சிறந்த முறையானது பிளவை வெட்யகற்றிய பின் ஆணசு உள்ளிறுக்கியையும் பிரித்து விடவும். இது தவருது குணப்படுத்தும்,
3. குருதியிரியதிகள்-கருப்பநிலைக் காலத்தில் பெண்கள் பலருக்கு இவ்விரியதிங்கள் தோன்றும் ஆணுல், கவனமாய் நலம் பேணினல் அவை தொந்தரவு கொடா, மலம் ஒழுங்காகவும் இலகுவாகவும் கழிக்கப்படவேண்டும். கழிக்கும்பொழுது குருதியிரியதிகள் இறங்கின் மீள உள்ளே தள்ளிவிடவும். பின்னர் படுக்கையில் மல்லாந்து கிடப்பின் நிலைமை சீராகும். நிற்கும்பொழுது கூபகத் தசைகளையிறுக்கிக் கொண்டு நிற்கவேண்டும். உட்காரும்பொழுது ஒரு மெத்துத்துண்டு அணிவது நல்லதாகும்.
இக்குருதியிரிகள் பேற்று இரண்டாம் வேளையில் வெளியே தள்ளப் படும். ஆணுல், பேற்றுக்கு பின் பொதுத் தீர்வை முறைகளுக்கு சீராகும். மல்லாந்து படுக்கையில் சில நாட்களுக்கு இருப்பின், அவை சுருங்கி இல்லாமற் போகும் உட்காரின் விரைவில் குணமடையா. அறுவைவினை பொதுவாகத் தேவைப்படாது.
4. பெரிணியா, பரியேனப் புரைகளும் அரிப்பைத்தரும் அறுவை வினே இவற்றைத் தாக்கும்.
நேர்குடல் காசினுேமாக்களிலும், பலதரம் மலக் கழிவு நிகழ்வதால்
s பிந்தேயம் அரிப்புறக்கூடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊறுநீர் அடக்கலாமை 321
5. இறேடியாத் தீர்வுக்குப் பின் (கழுத் காசினுேமா) நேர் குடலழற்சியுண்டாக்கி, புண்ணுகவுங்கூடும். குருதியும் சீழும் வடிந்து பரியேனப் பரப்பில் அரிப்பையுண்டாக்கும்.
இவற்றைத் தீர்வு செய்வதற்குப் பொதுமுறைகளைக் கையாள வேண்டும். உடல் நலம் பேணல், கழுவல்கள், களிம்புகள், நோத் தணிப்பிகள் ஆகியன.
6. நேர் குடலிறக்கம், மூப்புற்றவர்களில் பெரும்பாலும் யோனி கருப்பையிறக்கத்துடன் சேர்ந்து தோன்றும்.
அவர்களின் உடல்நிலை நல்ல தாஇன் அறுவை (ρό) 11:11 LI IL IGT
IB C {0}' (LP) படுத்திச் செப்பம் செய்யவும்.

Page 172
இறேடியோவரைபடம்: ஒளிபுகாப் பாயியை உள்ளேற்றியபின் எடுத்த கருப்பை, கருப்பைக் குழாய்கள். பாயி, கருப்பைக்குழாயூடாகச் சென்று பரிவிரியக் குகைக்குள் சென்றது.
 
 

(மலடும் கருவளமின்மை) குறைகருவளமும், 323
மலடும் (கருவள மின்மை) குறைகருவளமும்,
இலங்கையைப் பொறுத்தமட்டில் இத்தீவில் வசிக்கும் எந்தச் சமூகத்தினரின் கல்யான நோக்கும் உடனடியாகக் குழந்தையைப் பெறுவற்காகவாம். பணம் மிகுந்தவர்களுள்ளும் சரி, பாமர மக்க ளுள்ளும் சரி, இந்நோக்குக்குத்தான் தலையாய நோக்காம். ஒரு மங்கையானவள் கல்யாணமானவுடன் அவளின் முதல் இன்ப எதிர் பார்ப்பு ஒரு நற்குழந்தையை ஒர்ஆண்டில் பெறவேண்டுமென்பதாம். கணவன் என்ன சருத்தைக் கொண்டிருந்தாலும் சரி அவளினதும் அவளின் பெற்ருேர்களினதும் முதல் நோக்கு விரைவில் அவள் ஒரு குழந்தையைப் பெறவேண்டுமென்பதே. ஆகவே, கல்யாணப் பொருத்தம் பார்க்கும்பொழுது முக்கியமாகப் பிள்ளைப் பொருத்தமும் யோனிப் பொருத்தமும் பார்ப்பர். (இப்படிப் பொருத்தம் பார்த்து மணவினை செய்த சிலருக்கு குழந்தை வளக்குறைவு இருந்தது). தொழிலிலீடு படும் மங்கையர், பட்டின சுகவாழ்வு வாழ்பவர். இவர்களின் நோக்கு சில ஆண்டுகளுக்குப் பிள்ளைப்பேற்றைத் தவிர்த்து வாழ்வைத் தாம் இருவரும் சுகிக்க வேண்டுமென்பதேயாம். இவ்வகையாக வாழும் ஆயிரம் ஆயிரம் மங்கைகளுட் பலர் தொடக்கத்திலேயே கருவள மின்ம்ை நிலை (மலடு) அல்லது குறைக்கருவள நிலே உடையவராயிருப்பர். பின்னர் காலம் சுணங்கித் தீர்வுக்கு வரும்பொழுது தங்கள் உண்மை நிலையை அறிந்து வருந்துவர்.
மலடு நிலையென்பது ஒரு வகையிலும் கருவுரு இயலா நிலையாம். இவ்விரு நிலைமைகளும் பெண், ஆண், இருபேரையும் பாதிக்கும். இலங்கையில் குடிமக்கள் தொகை மிகக் கூடியபடியாலோ அல்லது வேறு பல சமூக பொருளாதார காரணங்களாலோ தெரியாது பலர் இக்குறைகளுக்காக ஆலோசனைக்கு வருவர்.
ஆண்களைப் பொறுத்தம்ட்டிலும் பெண்களைப் பொறுத்தமட்டிலும் நிறமூர்த்த (குருேம்சோம்) பிறழ்வுத் தொகுப்புக்களால் அல்விளைசல் அல்லது குறைவிளேசல் விதைகளுடனும் சூலகங்களுடனும் குழந்தைகள் பிறப்பர். இவர்கள் பேமுயிரிகளே முற்ருக விளேவிக்க முடியாதிருப்பர். அல்லது போதியவளவு தொகையில் கருக்கட்டும் வல்லமையுடைய பேமுயிரிகளை உண்டாக்க முடியாதவராவர். பெண்களைப் பொறுத்த மட்டில் சூல்க்ள் இல்லாதவராவர் அல்லது கருக்கட்டலுறக்கூடிய சூல்களை உண்டாக்குவதில்லை. குடிமக்களின் தொகைகூடவும் இப்பிறழ் வுடைய மக்களும் கூடுதலாக விருப்பர். ஆணுல், இவர்களில் பொது | श7* காணப்படும் நூற்றுவீதம் மாற்றமடையாது.

Page 173
324 இளம்பெண் நோயியல்
பெண்ணைப் பொறுத்தமட்டில் அவளின் கர்ப்பமுறும் தகைமையும் 17-18 ஆண்டு வயதிலிருந்து படிப்படியாகக் 25-26 ஆண்டு வயதில் மிகுதியானவோர் உச்சநிலையை அடையும். அதன் பின்னர் படிப் படியாகக் குறைந்து 35 ஆண்டு வயதடையவும் மிக்வும் குறை வடைந்து மாதவிடைவடைவர். சிலர் 25-26 ஆண்டு வயதுக்கு முன்னமே வளக்குறைபாடு நிலையையடைவர். வேறு சிலர் 25-26 ஆண்டு வயது கழிந்த பின்னரும் வளம் குறையாதிருப்பர்.
பூப்படையும்பொழுது சூலகங்களிலுள்ள சூல்களின் எண்ணிக் கையும் குறைவடையும். ஒரு நேமக் குழந்தைக்கு 300-500 ஆயிரம் முதலாய சூல்குழியங்கள் உண்டென்றும் பூப்புப் பருவமடையவும் இது 15-25 ஆயிரமாகின்றதென்றும் இதில் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கைக் காலத்தில் ஏறத்தாழ 500 மட்டுந்தான் முதிர்வடையு மெனவும் கருதுவர். இவ்வெண்ணில் பெருந்தொகை 30 வயதுக்கு முன்னரே முதிர்வடைந்துபோம். இதன் பின்னர் முதிர்வடையும் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும். ஆணுல், வங்கியில் இருக்கும் பணம்போல் எல்லோருக்கும் பணவைப்பில்லை. சிலருக்கு மிகச் சிறிய தொகைதான் உண்டு. இளம்படு காலத்தில் முழுதும் செலவாகிப் போம். வேறு பலருக்கு இளம் காலத்தில் பெரும் தொகையிருந்த போதும் யாதாமொரு காரணத்தினுலும் பயன்படுத்தப்படுவதில்லை. எனினும், இவை செலவாகி, பின்னர் வயது மூப்புறவும் வளம் பொருந்திய சூல்களின் எண்ணிக்கை குறைவடையும். ஆண்களைப் பொறுத்தமட்டில் முன்கூறியதற்கமைய மிகுதியோருக்கு கருக்கட்டக் கூடிய வளம் மிக்க பேமுயிரிகள் 40 ஆண்டு வயதுக்குப் பின்னர் குறைவடையத் தொடங்கும். இதற்கும் முன்பு சூல்களுக்குக் கூறியது போல் விதிவிலக்குகளும் உள.
சமூக வாழ்கையும் கல்யாண வயதும்:
இலங்கையில் தற்பொழுது ஆண்களின் தொகை பெண்களின் தொகையிலும் பார்க்கக் குறைவாம். பல மங்கையர் உகந்த வயதில் கல்யாணம் பண்ண முடியாதவராக இருக்கின்றனர். வயது மூத்த பின்னர் (28-30 மட்டில்) தங்களிலும் பார்க்க வயதில் மூத்த ஆண்களே மணம்புரிவர். சிலர் படிப்பு, தொழில் ஆகிய காரணங்களினுல் கல்யாணத்தைத் தள்ளிப்போடுவர். வயதில் மூப்படைவர். இவர்கள் பின்னர் மணம்புரியும் மாப்பிள்ளைகளும் இவர்களிலும் பார்க்க மூத் தோராவர். இருவரும் கருவளக் குறைவடைந்த வயதுடையவரr
யிருப்பர். பூப்படையும்பொழுதே தருவளம் குறைந்தவர்களாயிருப்பின் நிலைமையை நீங்களே யூகிக்கவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும்,
இறேடியோ வரைபடம்:
(கருப்பை) பாயி, கருப்பையூடாகச் சென்று கருப்பை
குழாய்களுட் சென்றது. குழாய்களின் உள்வாய்கள்
அடைபட்டு நீர்வீக்கம் அடைந்திருக்கின்றன. பாயி யானது குழிக்குள் செல்ல முடியவில்லை.

Page 174
326 இளம்பெண் நோயியல்
வேறு சிலர் கல்யாணம் பண்ணியும், கல்யாணத்தின் நோக்குப் பற்றி யாதாமொன்றுமறியாதபடியால் கருப்பமுறுவதைத் தடுப்பதற் காகப் பல உபாய முறைகளைக் கையாளுவர். பின்னர் கருவுற எத் தனிக்கும்பொழுது வயது மிக மூத்தோராகி அருவளம் குறைந்தவர் களாகிவிடுவர். அல்லாமலும் இச் செயற்கை உபாய முறைகளால் கருவளத்துக்குக்கெடுதி விளைவித்துக் குழைந்தைச் செல்வம் அற்றவர்
g;6; it 6) Fi.
சிலர் பொருளாதாரக் குறைவால், சீதனம் கொடுக்கமுடியாத படியால், பின்னர் இப் பண வசதிவந்தபின் அவர்கள் கல்யாணம் பண்ணும்பொழுது வயது முதிர்ந்தவராகின்றனர். அவர்களுக்கு வரும் மாப்பிள்ளையும் வயது முதிர்ந்தவராகின்ருர், க்ருவளக்குறைவு உடைய வயதினராகின்றனர்.
பொருளாதார நிலை மிகக் குறைவாகின், அவர்களின் an ill. வளக் குறைவால் நலிந்து நோயுற்றவராகின்றனர். இதனுல் கல்யா னமும் இலகுவில் கிட்டாது கருவளமும் குறைந்திருக்கும்.
இக்குறைபாடுகள் நிலவும் வீதம்
இலங்கையைப் பொறுத்தமட்டில் இக்கணக்கீடுகள் செவ்வனவாகச் செய்யப்படவில்லை. சில சமூகங்களில் இது குறைவாகும். வேறு சில சமூகங்களில் இது கூடலாம். ஆனல், பலர் ஆலோசனைக்கு வரு கின்றனர். ஐரோப்பிய நாடுகளேப் பொறுத்தமட்டில் 15% கல்யா ணங்கள் பிள்ளைப்பேறற் கல்யாணங்களாகின்றன. அச்சமூகங்களில் பல காரணங்களுள. கருப்பைத்தடை முறைக்ளேயும் கலவிப் பத்தி யத்தையும் (இச்சைவழித் தடுப்பு) பெரும்பாலும் கையாளுவர். இலங்கையைப் பொறுத்தமட்டில் பொருளாதார நிலையில் மிக மிகுந் தவர்களினது கலவியைப் பொறுத்தமட்டில் இவர்களின் பழக்கம் ஐரோப்பிய நாட்டு மக்களின் பழக்கம் போலாம். முன்னேய காலத்தில் மலடு நிலையுற்ற கணவனேயும் மனேவியையும் ஒரு குறைபாடுற்றவர் களாகக் கருதினர். மங்கள காரியங்களில் முன்னிற்காது அவர்களே விலக்குவர். அவர்கள் ஒரு குறையுற்ருே ரெனக் (வெட்கி ஒதுங்க வேண்டுமென்ற பொருள்பட) கருதப்படுவர். இது விதியின் விளை யாட்டென்று கருதி கருவுறுவதற்குப் பல செயல்களில் ஈடுபடுவர். முற்காலம் இக்கருவளமடைவதைப் பற்றிய அறிவு குறைந்த காலமாம்.
ஈனலுறுப்புகளைப் பற்றியும், அவையியங்கும் முறையைப் பற்றியும் குல் (முட்டை) இடலேப் பற்றியும் ஆணின் ஈனலுறுப்புக்கள் பேமுயிரி புண்டாக்கல், பேமுயிர்களின் வாழ்நாட்களைப் பற்றியும், போகம் செய்யும் காலத்தைப் பற்றியும் முற்காலத்தில் அறிவு குறைவாம்.
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும். 327
சென்ற நூற்றண்டில்தான் பெண் மாதம் தோறும் சுருக்கீட்டலுக்கு இன்றியமையாது வேண்டிய சூலிடுகின்ருள் என்று அறியப்பட்ட கால மாகும். அவர்கள் கையாண்ட முறைகள் சிரிப்புக்குரியனவல்ல. இதன் வாசம் இன்னமும் எம் பெண்களை விட்டகலவில்லை.
18-ஆம் நூற்றுண்டில் பிள்ளை வளமுறுவதற்கு ஒரு மூத்த பெண் கையாண்ட முறைகளைக் கூளப்பன் நாயக்கன் விறலிவிடுதூதுவில் அழகாகக் கூறப்பட்டது.
"மாணிக்கமாலை எனும் மங்கையொரு பெண்ணடிதன்
காணிக்குத் தேடக்கருத்தாகி ஊனைத் தரைமெழுகி, உண்டு. தவங்கிடந்து (ம்) எந்தக் குறைகள் எனக்குறிகள் கேட்டும் - பெறுவதற்குச் செப்புத் தகடெழுதிச் செம்பொன் கழுத்திட்டும், கெர்ப்பத்துக்கா (ய்) மருந்து கிண்டியுண்டும் - தப்பாத் திருவனந்தல் சேவித்தும், செண்பகப்பூவாசம் மருவனந்த நந்தவனங்கள் வைத்தும் திரையுடலே வேற்ருெருவர் கண்டு விரும்பாதநாள் தாழை காற்றடிக்கப்
பூத்த கதைபோல் அவ்வரிவை கர்ப்பம் படைத்தாள்.
சுப்ரதீபக் கவிராயர்.
தற்காலத்தில் க்ருப்பந் தரித்தலைப் பற்றிய உண்மையறிவு கழிந்த 50 ஆண்டுகளுள் படிப்படியாகப் பெற்ற அறிவாம். இவ்வறிவு பொதும்க்களுக்கும், சுவறியிருப்பதால் அவர்களுட் பலர் ஆலோசனைக்கும் தீர்வுக்கும் வருவர்.
இது இருவரையும் பொறுத்த ஒரு புதிராம். தனிப்பட்ட முறையில் மிகச் சில பெண்களும் மிகச் சில ஆண்களும்தான் முறையே கருவள முற்ருனகுறைவும் பேம்வள முற்ருன குறையுமுடையவராம் ஆண், பெண் இருவரும் நல்ல பிள்ளைவளச் செழுமையுடையவராக்கூடும். இவர் களுக்குப் பிள்ளைச் செல்வக் குறைபாடில்லை. மிகப் பலரில் இவ்விரு வரில் ஒருவருக்குக் குறைவான வளமுண்டு. ஆணில் சிறிது குறைந்தும் பெண்ணில் குறைபாடில்லாமலும் அல்லது பெண்ணில் குறைந்தும் ஆணில் குறைபாடில்லாமலுமிருக்கும். இருந்தும் இவர்களுக்குப் பிள்ளே வளமுண்டு, வேறு சிலரில் இருவருக்கும் குறைபாடு காணப்படும். இவர்களுக்குப் பிள்ளே வளமும் குறைவாம், அல்லது இல்லாமலிருக்கும். இவர்கள் மண ஒப்பந்தத்திலிருந்து பிரிந்து பிறிதொரு கல்யாணம் செய்யின் இருவருக்கும் பிள்ளைச் செல்வம் உண்டாகும்.

Page 175
இளம்பெண் நோயியல்
இறேடியோ வரைபட
காட்டும்.
鸞
LI L-IAD 10) 6095589
b sg/60) I
(CU) DIT L/55 (GY5Lİ)
இரு
 
 

மலடும் (கருவகாமின்மை) குறைகருவளமும். 329
திருட்டாந்தம். 1. ஒரு பிரபல சட்டத்தரன்னியின் மகளும் ஒரு பிரபல வைத்தியனும் மணமுடித்தார்கள். பலவாண்டுகளாகக் கருப்பந் தரிக்கவேயில்லை. தீர்வுசெய்து சில தடைகளை அகற்றியபின் ஒரேயொரு தரம் கருப்பம் தரித்து அதுவும் ஐந்தாம் மாதம் தன்னியலில் கருச் சிதைவுற்றது. மூத்த வயதும் அடைந்தனர். பின்னர் இக்காரணத்தால் இருவரும் பிரிந்து வேறு கல்யாணம் செய்தனர். இரு குடும்பங்களுக்கும் பிள்ளைகள் பிறந்தன.
ஆண், பெண் இருவருக்கும் யாதாம்ொரு கருவளக்குறைவுமில் லாதபோதும் பெண்ணின் கருப்பைக் கழுத்துக் கசிவு நீருக்கும் பேம் களுக்கும் ஒரு வெறுப்புநிலையுண்டு. பேமுயிரிகள் இக்கசிவு நீருள் உட்புக மறுக்கின்றன.
சில பெண்களுக்கு பேம் உயிரிகள் முரண்ஈனியாக அமைந்து பெண் களின் கற்ருேட்டத்தின் பேமுக்கு எதிராக (இவற்றை யொருங் கொட்டல் செய்யும்) ஒருங்கொட்டிகள் படைக்கப்படுகின்றன.
மேலும் பெண்ணைப் பொறுத்தமட்டில் காலத்துக்குக் காலம் அதே பெண்ணில் கருக்கட்டல் வளம் பெருக்கமும் வற்றுமடையும். எனவே, அடிக்கடி சிலகாலத்துக்கு உடற்ருெலியல் மலடு நிலை எய்தப்படும். ஆணைப் பொறுத்தமட்டில் பூப்புப் பருவத்துக்கு முன் னமும் மூப்பு வயதிலுந்தான் பெரும்பாலும் இம்ம்லட்டு நிலை எய் தப்படும். பெண்ணில் மலட்டுநிலை அல்லது குறைபாடுவளம் பக்குவ மடையமுன்னமும் பக்குவமடைந்த பின்னரும் ஈனலுறுப்பு முதிர்ச்சி படையும் வரைக்கும் நிலைக்கும். இம் முதிர்ச்சி பெரும்பாலும் 16-18 வயது மட்டில் முழுமுற்ருகும். பின்னர் பலரில் 28 ஆண்டு வயதுக்குப் பின்னர் குறைவடையத் தொடங்கும்.
தொழிலியல் மலடுநிலை அல்லது வளக்குறைவு: கீழ் தரப் படும் நிலைகளில் தோன்றும்.
1. பூப்புக்குமுன்: முதலாய முட்டைக்குழியங்களின் எண்ணிக்கை நாள்தோறும் குறைவுற்று பூப்புப்பருவம் எய்தும்பொழுது ஒரு நூற் றைம்பது இருநூற்றைம்பது ஆயிரத்துக்குமிடையில்லுண்டு. இவற்று ஐந்நூறு மட்டில் முதிர்வடையக்கூடும். ஏனையவை சிதலமடைந்து இழக்கப்படும். இரண்டாவது முட்டைக் குழியந்தான் (புணரிக்குழியம் சூல்) கருக்கட்டலடையக்கூடிய முட்டையாகும். இது மாதவிடாய் தோன்றும் காலத்தில் உலுரும். இவ்வகையான சூலிடல் ஒரு ஒழுங்கு முறையில் 16-17 ஆண்டு மட்டில்தான் நிகழும்.

Page 176
30 இளம்பெண் நோயியல்
முதலாம் பூப்பு மாதவிடாய் தோன்றமுன்னம் அம் மாதத்தில் புணர்ச்சி நிகழின் பூப்பு பருவ மாதவிடாய் தோன்ருது கருப்ப நிலை நிகழும்.
2. மாதவிடைவுக்கு முன்னும் பின்னும்: 40 ஆண்டு வயதுக்குப் பின் வளம் விழுக்காடுறும். இக்காலத்தில் ஒழுங்கற்ற முறையிலும் அடிக்கடியாகச் சூலிடல் நிகழும். கடைசி மாதவிடாய்க்குப் பின் தொடர்ந்து நிகழும் சூலிடல், கருக்கட்டலுறின், தப்பாக கருப்ப நிலையை மாதவிடைவெனக் கருதுவர்.
சில வேளைகளில் பூப்பு வயது முன்பதாகவும், மாதவிடைவுக்குப் பின் பல ஆண்டுகளுக்குப்பின்னும் ஒரு தவறிய முதலாய முட்டைக் குழியம் முதிர்ச்சியடையும். இது கருக்கட்டலுறின் எதிர்பாரத கருப்ப நிலையெய்துவதை நாம் அறிவோம். சூலிடல் ஒழுங்காக அல்லது இருந்திட்டொருக்கால் மாதவிடைவு வரைக்கும் நிகழும். சிலரில் மாத விடைவுக்குப் பின்னும் அவ்விதத்தில் சில ஆண்டுகளுக்கு நிகழும். பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் சென்றபின் பெண்கள் கருக்கட்ட லுறுவதை உண்மை அறிக்கைகள் உறுதிப்படுத்தும், மாதவிடைவுக் காலம் 40 ஆண்டு வயதிலிருந்து 50 ஆண்டுகள் வரைக்கும் இருக்கக்கூடும் என்பதையும் நினைவுறவும். 52-ஆம் ஆண்டு வயதில் கருப்ப நிலை யடைந்த பெண்ணை நான் கண்டிருக்கிறேன். 45-50 வயதுக்குள் இவ் வகைய நிலைமையைப் பலரில் கண்டிருக்கின்றேன்.
3. கருப்ப நிலையில் சூலிடல் அடக்கப்பட்டு நிறுத்தப்படும்.
4. பால் சுரத்தல் காலத்தில்: கருச்சிதைவுக்குப் பின் 6-8 கிழமை மைகிளுக்குப் பின் பெரும்பாலும் மாதவிடாய் தோன்றும். 75% பெண்களில் இக்காலத்தில் சூலிடல் (இரண்டாம் முட்டைக்குழியம்) நிகிழும். கருச்சிதைவுக்குப் பின்பும் புறத்திடக் கருப்பத்துக்குப் பின்பும் அடுத்த மாதத்திலேயே சூலிடல் பலருக்கு நிகழும்.
பால் சுரத்தலானது சூலிடலைத் தடுக்குமென்பது உண்மையாம். ஆரூல், அது நீடிய காலத்துக்குத் தடுப்புச் செய்யவதில்லை. இக்கருத்தை முழு முற்ருக நம்பி கைமகவுக்குப் பல மாதங்களுக்குப் பால் ஊட்டுவர். அவர்கள் தாம் கருப்பநிலை எய்திவிட்டனர் என்று அறியாமல் பாலூட்டிக் கொண்டிருப்பர். நீடிய காலத்துக்குப் பாலூட்டின் அதன் சூலிடலை அடக்கும் வல்லமை குறைந்து பலர் பால்சுரத்தற் காலத் திலேயே மாதவிடாயையும் சூலிடலையும் எய்துர்ை.
மாதவிடாயானது பெரும்பாலும் பால்சுரக்கும் பேண்களில் நூற் றுள்கு 20-30 பேருள்கும், அரைகுறையாக பால்சுரக்கும் பெண்களில்
 

மலடும் (கருவளமின்மை குறைகருவளமும், 331
நூற்றுக்கு 60 பேருக்கும் மூன்று மாதங்களில் மீண்டும் தோன்றும். மாதவிடாய்த் தடுப்பு பாலூட்டலைப் பொறுத்திருக்கும். செயற்கைப் பாலை ஊட்டத் தொடங்கவும் மாதவிடாய் தோன்றும். சூலிடலும் கருப்ப நிலையும் மாதவிடாய் தோன்ருது நிகழும். இதன் விளக்கம் முன்பு கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் பால் சுரத்தல் குறைவு அடைந் தால் மாதவிடாய் தோன்றும், இது சிலரில் நீடிய கால முலையூட்ட லையும், ஒருநிலைபேருன அல்மாதயிரிவுயாவையும் சூலிடப்படா நிலைம்ை யையும் சிலருக்கு உண்டாக்குவதை நான் அறிவேன். முலையூட்டல் பித்துயித்தறியை சூலிடல் வினையத்தை செய்யவிடாது தடுக்கப்படு வதினுல் இந்நிலைம்ை உண்டாகின்றது.
மலட்டு நிலக்கு ஏதுவாகியவை
மலட்டு நிலைக்கு ஏதுவாகிய காரணங்கள் எப்பொழுதும் உண்டு. ஒரு செவ்விய ஆய்வு செய்யின் இவற்றைக் கண்டு பிடிக்கலாம். பிழை பாடு பெரும்பாலும் ஆண்களிலும் பார்க்க பெண்களிற்ருன் உண்டு. சீமன் ஆய்வு பொதுவாக நூற்றுக்கு 40 ஆண்கள் குறைவளமுடை யவர் எனத் தெரிவிக்கும். கல்யாணம் செய்யும் ஒவ்வொரு நூறு மனிதருக்குள் ஒருவர் மலடாக இருப்பர், என அறியப்படும். இருவரும் வளக்குறைவு உடையவராகில் இலகுவில் மலட்டு நிலை அடையக்கூடும்.
ஆண்களில் தோன்றக் கூடிய ஏதுக்கள் :
போதிய அளவில் பேமுயிரிகளைப் படைக்க முடியாம்ை. இதில் போதிய தொகையில் போதிய கருக்கட்டற்றிறனுடைய பேமுயிரிகள் உண்டாக்கப்படுவதில்லை.
(அ) 10 வயதுக்கு மேற்படவும் வளங்குறையத் தொடங்கும். ஆணுல, பேமுயிரிப் படைப்பு வயது மூப்படையும் வரைக்கும் தொ டர்ந்து நிலைக்கக்கூடும். இவ்வகுப்பினருள் அதிகமாஞேருக்கு பேமுயிரி களின் தொகை, அமைப்பு, சிறப்பியல்புகள் பழுது அடையக்கூடும், வயதை அடைந்தவர் சிலர் வளங்குறையாது குழந்தைப் பேறுற்ற உண்மைக் கதைகள் உண்டு. -
(ஆ) விதை (தெசுத்திசு)ச் செயற்பாடு பல காரணங்களால் குறைபடும். பொதுவாக நிகழும் உடல்நலக் குறைவு, சோம்பல் வாழ்க்கை, மருந்துப் பொருள்கள், நஞ்சு மருந்துப்பொருள்கள், நீடிய ஆாலம் சிறையில் இருத்தல் ஏனேய அகச்சுரப்பிகளில் குறைபாடுகள் ஆகியன செயற்பாட்டைக் குறைக்கும் சல்போனமைட்டுகள் செயற் LA TIL GR) L-së தாழ்த்தும்

Page 177
332 இளம்பெண் நோயியல்
(இ) விதைகளை வெப்பத்துக்கு உட்படுத்தல் இது பேம் படைப் பைச் சிறிது காலத்துக்காயினும் தாழ்த்தும். வெப்ப எஞ்சின் பொறி களில் வேலைசெய்வோர், வெந்நீரில் எப்பொழுதும் குளிப்பவர், வியர் வையை உறிஞ்சி ஆவியாக்க இயலாத நைலோன் போன்ற வெப்பத்தைக் கடத்தமுடியாத துணிகளால் ஆக்கிய விதை தாங்கு கச்சகைளே அணிபவர்களுக்கு குருேட்டத்தில் (விதைப்பையில்) வெப்ப நிலை கூடுவதால் பேற்படைப்புத் தாழ்த்தப்படும். விதையில் நாள விரிபருக்கமும் இவ்விதமாக வெப்பநிலையையுயர்த்துவதால் பிள்ளை வளக்குறைவு உண்டாகின்றது. இதேபோன்று கடுங் குளிரும், கடுங் குத்துயரங்களின் குளிர்நிலையும் பேமின் விளைவுகளைத் தாழ்த்து மெனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
(ஈ) முன்னர் பாதித்த விதையழற்சியானது பேம்படைக்கும் இழையங்களை அழிப்பொழிப்புச் செய்யும். கூவைக்கட்டு, கடுஞ் சுரங்கள், கொனுெறியா ஆகிய நோய்கள் தெசுதிசு பேம் இழையத்தை அழிக்கக்கூடும். கவட்டு கட்டு நோயினுல் பொதுவாக நூற்றுக்கு 25-30 பேரில் (14 ஆண்டு வயதுக்கு மேற்பட்டவர்களில்) விதை பாதிக்கப்படும். அறுவை வினை முறைகளாலும் ஏனைய தீர்வு முறை களாலும், விபத்துக்களாலும் பேம்படைப்பானது அழிக்கப்படக்கூடும்.
அறுவை வினைகள்: ஏணியா அறுவை வினைகளில் ஓர் அறுவை வைத்தின் இருபக்கங்களிலும் இரு விதைகளுக்குச் செல்லும் நாடி களுக்குத் தடம் போட்ட காரணத்தினுல் இரு விதைகளும் அல்லூட்ட மடைந்து நார்மயமாகின.
இறக்க முரு விதைகளை அறுவைவினை முறையால் இறக்கம் செய் யும்பொழுது விதைகளின் குருதி வழங்கல் கேடுறும், அறுவை வினையால் பேமிய நாண்களை நறுக்கல் செய்தவர்களும் கல்யாணம் செய்கின்றனர்.
11. எக்சுக் கதிர்த் தீர்ப்பு முறைகள் பேம்படைப்பு இழையத்தை சேதம் செய்யும். இம்முறையைச் செயற்படுத்தும் பொறியியற் தொழி லாளரும் இவ்வகையான சேதத்தை அடையக்கூடும்.
11. தற்செயலாக நிகழ் விபத்துக்களினல் விதைகள் காயமுறல் நசிபடல் ஆகியனவும், "கிறிக்கற்றுக்' விளையாட்டில் கல்லுப் பந்தானது விதைகளைக் காயப்படுத்தி சீழ்நிலைமையை உண்டாகி மலட்டு நிலையை எய்திய ஒரு நோயாளரை நான் கண்டுள்ளேன்.

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 333
விதைகள் வெகுகாலம் கழித்து இறங்கல் அல்லது முற்றக இறங்கா நிலமை
விதைகளைப் பாதிக்கும் நோய்கள் :
1. இவற்றுள் கழலேயங்கள், தூபக்கிள்வாதை சிவிலிசு ஆகியவை அடங்கும். இவற்றுடன் நோய்களின் சிறப்புக் குறிகளும் காணப்படும்.
11. ஓதம், விதைவிரிபருக்கம் ஆகியன பேம் தொகையைக் குறைக்கக்கூடும்.
விதைகள் காலம் சுணங்கி இறங்கல் அல்லது இறங்காது வயிற்றுட் கிடத்தல்
விதைகள் வயிற்றுக்குப் புறத்தே கிடந்தால்தான் பேம் உண்டாக்கீல் நிகழும். வெப்பம் இதனைக்குறைக்கும் அல்லது இல்லாமற் செய்யும், புறத்து விதைப்பைக்குள் கிடக்கும் விதையின் வெப்பமானது உடலின் ஏனைய இடங்களிலும் பார்க்க 2 பாகை (சதம) குறைவாகும்.
இரு பக்கங்களிலும் விதை மேற்றிணிவு, காவுகலன், வீசுகான்கள் ஆகியவற்றில் ஒரு பகுதியில் புழைத்தடுப்பு உண்டாகும்.
1. அறுவை வினேகளில் சிறப்பாக, இருபக்க ஏணியாச் செப்ப வினையில் இக்கெடுதி விளேயக்கூடும். சிலர் தற்காலத்தில் இருபக்கக் காவு கலன்களே (பேம்நாண்களே) கருப்பத்தடை முறையாகத் திருமணம் செய்தபின்பு நறுக்கல் அறுவை வினே செய்கின்றனர். சில காமப் பித்தர்கள் இவ்விதமாக நறுக்கலைச் செய்து பெண்களுக்குத் துரோகம் இழைக்கின்றனர்.
2. கொனறியா வியாதியால் இருபக்கத்து மேற்றிணிவுகள் புழைத்தடுப்புறும்.
3. காவு கலன்கள் உடன்பிறவிக் குறைபாடாக இல்லாமற் போகும் அல்லது குறைவிச்சலடையும், யேர்மனியில் நிகழ்ந்த இன அழிப்புக் கொடும் செயல்களில் ஆண் மக்களின் பேம்காவும் கலன்களே நாசியேர்மனியர் துமித்தல் செய்தனர். இதனுல் ஆயிரத்தில் ஒருவர் இக்கான்கள் இல்லாத நிலையிலிருந்ததை அறிந்தனர்.

Page 178
இளம்பெண் நோயியல்
பீனத்தின் அமைப்பு பிறழ்வுகள்:
1. முகைவாதை - இதில் பீன முன்ருேல் வாய் மிக ஒடுங்கி பின்னுகத் தள்ள இயலாமை.
2. பீன ஊறித்தாரையில் மீக்கிழி, கீழ்க்கிழி துவாரங்கள் காணப் படுதல். பம்பாய்ப் பட்டின பிரபல வணிகன் ஒருவன் நீடிய காலத் துக்குப் பிள்ளை இல்லாது ஆலோசனைக்கு வந்தான். பெண்ணில் ஒரு குறையுமில்லே. ஆனல் அவனுக்கு ஒரு சிறு மீக்கிழி பீன அடியில் இருந்தது புணர்ச்சியின் உச்சநிலையில் சீம்ன் கடுமையாக வெளிவீசும் சமயத்தில் யோனியில் வீசப்படாது இந்த மீக்கிழிவழியாக மயிர்ப் பிரதேசத்துள் வெளியே வீசப்படும். கீழ்க்கிழியுள்ள ஆணின் மண வாழ்வானது துக்கமாக முடிந்ததை நானறிவேன்.
3. நீண்ட பெரும் பீனம். இது சிலரிற் காணப்படும் உடன் பிறப்புப் பிறழ்வாகும். காளைப் பருவத்தில் இருந்தே இதனை மறைப் பதற்காக இறுக்கமான கச்சையணியை அணிவார்கள். பீனம் வளைந் திருக்கும். நிமிர் நிலையிலும் அது வளைவுண்டு இருக்கும். அழுத்தும் பொழுது மடியும். யோனி வாய்க்குள் புகமுடியாமல் பெரிதாயிருக்கும். புகுகை செய்ய எத்தனிக்கும்பொழுது மடிவுறும். இவ்வகையான இரு நபர்களேச் சென்ற இரு ஆண்டுகளில் கண்டிருக்கின்றேன். கடைவி யாகக் கண்டவரில் அது 7 அங்குலத்தில் நீளமாயிருந்தது.
4. முதிரமு ன் சீமன்வீசல், புணர்ச்சியை நிகழ்த்த எத்தனிக்கும் பொழுது இந்திரியம் கழன்றுவிடும்' இதனல் பீன நிமிர் நிலையும் வீழ்ச்சியடையும்.
5. வலுக்குறை-இதில் இருவகையுண்டு, ஒன்று பீனத்தை உட் புகுத்துவதற்கு வலுக்குறைந்து காணப்படும். ம்ற்றையது நிமிர்தலுற்று உட்புகுத்தியபோதும் சீமன்வெளிப்பாய்வு நிகழாத நிலையாகும்.
6. புணர்ச்சி வேளையில் வீசாது சலப்பைக்குள் பின்னுேக்கி செலுத்தப்படல் சில ஆண்டுகளில் இது அருமையாக காணப்படும் குறையாகும். உடனடியாக ஊறுநீரைச் சோதிப்பின் அதில் பேம்களைக் öfraððra)frth.
7. சிலரில் பேம்கள் நேம அடிைப்புடன் உண்டாக்கப்படுவதில்லை. இவை கருக்கட்டல் செய்யக்கூடிய வல்லமையில்லாது உண்டாக்கப் படும். அல்லது தொகை குறைந்து பிறழ்வு அம்ைப்புடனும், அசைவு
கீளுடனும் உண்டாக்கப்படும்.
 
 
 

கருவளமின்மையும் குறைகருவளமும், 335
பெண்ணில் காணப்படும் பிழைபாடுகள்:
1. வயது: முன்னர் இதனைப் பற்றிக் கூறப்பட்டது. கருக்கட்டலுறும் வளம் 17-18 வயதிலிருந்து படிப்படியாகக்கூடி, 26-27-இல் உச்ச நிலையை அடைந்து பின்னர் குறைந்து 35 வயதை வயதடையவும் வீழ்ச்சி அடையும்.
2. சிலரில் நேமச் சூல்கள் அடிக்கடி படைக்கப்படுவதில்லை. ஆனல் கருக்கட்டலுறும் வல்லமை இல்லாத சூல்களே படைக்கப்படும்.
(அ) நேம உடலமைப்புடைய பெண்கள் ஒழுங்காக மாதவிடாயுறின் அவர்களுக்கு மலடு நிலை பெரும்பாலும் உண்டாகுவதில்லை. இவர்கள் எல்லோருக்கும் சூல் உதிரல் ஒழுங்காக நிகழும்; மாதவிடாயும் சூல் உதிரல் மாதவிடாய் ஆகும். ஆனல் இவர்களுக்கு ஒரு நேம நிகழ்வாக இருந்திட்டொருக்கால் சூல் உதிரா நிலை எய்தப்பட்டு சூல் உதிரா ம்ாதவிடாயும் உண்டாகும். இதில் ஒரு சூல் புடைப்பு கனியும் ஆனல், உதிரல் நிகழாது. வேறு பல மனநிலைகளும், சூழற் காரணங்களும் சூல் உதிரா நிலையை நேம் மாதவிடாயுடைய பெண்களுக்கு உண் டாக்கும். 17-19 வயதுக்கிடையே நிகழும் மூன்று மாதச் சூழல்களில் ஒன்று சூல் உதிராச் சூழல் என்றும், 20-40 வயதுக்கிடையே நிகழும் 10-50 மாதச் சூழலில் ஒன்று சூல் உதிரா மாதச் சூழல் என்றும் 40 ஆண்டு வயதுக்குப் பின்னர் 4 மாதச் சூழலில் ஒன்று சூல் உதிராச் சூலாக இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலரில் மாதவிடை வுக்குப் பின்னர் (24 மாதங்கள் வரைக்கும் சிலரில் 10-11 ஆண்டுகள் வர்ைக்கும் தவறு முறையாகச் சூல் உதிர்தல் நிகழும் என்று உண்மை அறிக்கைகள் கூறுகின்றன. எனவே மாதவிடைவு உற்ற பின்னர் 4-5 ஆண்டுகளுக்கு கருப்பமடையக் கூடிய பீதிநிலைம்ை உண்ம்ையி லுண்டு. இவ்வகையான பெண்களை ஒர் ஆண்டில் 3-4 பேர்களை நான் கவனிப்பது வழக்கமாகும். இவர்கள் பெரும்பாலும் கருச் சிதைவு உண்டாகும் நிலைமையில் தீர்வுக்கு வருவர்.
நேம் ஒழுங்காக சூல் உதிரா மாதவிடாயானது பல நோய் நிலை மைகளால் உண்டாகக்கூடும். சிறப்பாக ம்றை நிலை அடிசனின் நோயா லும், (கோட்டிசோன் குறையாலாகும்) குறை தைருேடியத்தாலும். (தைருேட்சின் குறையாலும் உண்டாகும் அல்மாத இரிவுயாவையும், ஒல்குமாதா யிரிவுயாவையும் உண்டாக்கும் எல்லாப் பொதுக் காரணி களும் சூல் உதிரா ம்ாதயிரிவையும் உண்டாக்கும். சதையி நோய் களாலும் இந்நிலைமை உண்டாகும்.
(ஆ) சூலகக் குறைவிளைசலுயா நில்ேமைகளிலும் சூல் உதிருதல் நிகழ்வதில்லை. இந்நிலைம்ைகள் பெரும்பாலும் நிறமூர்த்தப் பிறழ்வு

Page 179
336 இளம்பெண் நோயியல்
களால் ஆகும். (தேணர் ஒருங்கோட்டியில் சூலகங்கள் மிக இளம்படு நிலையில், பாற் கலங்க்ள் அற்றவையாகும். மேலும் அவ்வியல்களைப் Lrriféé5).
(இ) இசுரேயின் இலெவென்தால் ஒருங்கோட்டி, இவர்கள் அல் மாதயிரிவுயா அல்லது ஒல்கும்ாத யிரிவுயா நிலைமையை உறுவர் புடைப்புக்களில் சூல் உதிருதல் நிகழாது.அவை சிறைப்பைகளாக மாறும். அந்திரசன்கள் பெருமளவில் சுரக்கப்படுவதால் இது நிகழ்கின்றதென எண்ணப்படும். சிலர் அடிக்கடி சூலகங்களில் நிகழும் உயிரியற் பொருள்களின் தொகுப்பு முறை பிறழ்வதால் எனக்கருதுவர் மேலும் இதனை விளக்கும் இயலைப் பார்க்க,
(ஈ) நோய் நிலைமைகள், ஊட்டுவளக் குறைவுகள், நெகிழ்வு நிலைமைகள் சூலுதிர்தலைத் தடைசெய்யக்கூடும்.
3. கருப்பைக் குழாய் ஊடாக சூலகத்திலிருந்து சூலானது செல் வதற்குத் தடை.
(அ) கூபக ஒட்டுச் சவ்வுகள். இவை மருவிகளே ஒட்டுறச் செய்து, அவை சூலுக்கு ஆற்றும் வினையத்தைத் தடுக்கும்.
(ஆ) அரைகுறை அல்லது முற்ருன கருப்பைக் குழாய்ப் புழை யடைப்பானது பலருக்கு மலட்டு நிலைமைக்குக் காரணமாகும்.
புழையடைப்பை உண்டாக்கும் ஏதுக்கள் - முன்னேய கருப்பைக் குழாய் அழற்சி கருப்பைக்குழாய் கருப்பைச் சந்தியில் பிடிப்பு, கருப் பைக்குறைவளர்த்தி நிலைமை ஆகியன உண்டாகும். ஈற்றில் கூறப்பட்ட உடன் பிறவிப் பிறழ்வானது உண்மையில் இல்லையெனப் பலர் கீருதுவர்.
ஆனல் அது இருக்கக்கூடும்பென்பதே எனது நோக்கல்கள் ஆகும். ஆணுல் முழு ஆக்கத்தழைப்புடைய கருப்பைக் குழாய்களுடன் சிறிய எச்சக் கருப்பைகளே நான் கண்டிருக்கிறேன். பிடிப்பு நிலைமையானது கருப்பையின் கழுத்துக்கால் வாயிலும், கருப்பைக்குழாய் கருப்பைச் சந்தியிலும் (கருப்பைக்குழாய் உளவாய்) நிகழ்வதை பொதுவாக ஆய்வு வேளைக்ளில் அறியலாம்.
 
 

மலடும் (கருவள மின்மை) குறைகருவளமும், 337
lcS 00 0 t Lm OO tmtuT S S TTtt t tT S T Y T TT t t S T tt
மலட்டு நிலே 1. ஆணில்
(1) பெரும்பாலும் கொணக்இொக்கசு நோயால் உண்டாகும் மேற் றிணிவு அழற்சியும், விதையழற்சியும், சீமன்காவு கான்களின் அழற்சியும் இந் நிலைமைக்கு முக்கிய காரணமாகும். முற்காலத்தில் பலர் கொனுெ றியாவால் ஆக்கப்பட்ட ஊறித்தாரைப் புரைகளுடன் வருவர்:
ஏனைய தொற்றுக்களான கூவைக்கட்டு, தூபக்கிள் நோய், சிவிலிசு நோய்களால் விதைகள் அழற்சியுற்று இற்றுப்போகும்.
(2) விதைக் கழலேயங்கள் ஆகியவற்ருல்,
(3) ஈனலுறுப்பு அமைப்புப் பிறழ்வுகள் முன்னர் விபரிக்கப்பட்டன. உடன்பிறப்பு ஊறித்தாரைக் கிழிவுகள், பேம் கலனக்குறைவு, இறங்காத விதை நிலைமை ஏணியா ஒதம், (கடும் ஒதமானது விதைகளே நசிக்கும்) கலவியை நிகழ்த்த முடியா நிலைமையும் உண்டாகும்) பின அமைப்புப் பிறழ்வுகளும் உள. முன்ருேற் பிறழ்வு, பின நீளப் பிறழ்வு நோய் நிலைமைகளாலும் மலட்டு நிலைமை உண்டாக்கப்படும்.
0S ttttt S 00 0 t tttt tlt S S ttt t tt St t tt ttt 0ttSttSS
**
ஈனலுறுப்புக்கள் முற்முகத் தழைப்புருமை அல்லது அரை குறை யாகத் தழைப்படைதல்,
(அ) நேமச் சூலகங்கள் இருந்தும் கருப்பைக்குழாய், கருப்பை, யோனி ஆகியன முற்முக இல்லாதநிலை,
(ஆ) சிலரில் நேமச் சூலகங்களுடன் கருப்பைக்குழாய்ப் பிறழ்வு களும், கருப்பைப் பிறழ்வுகளும் உள. யோனியில்லா நிலை அடிக்கடி காணப்படும் ஒரு பிறழ்வாகும்.
(ஈ) நிறமூர்த்தப் பிறழ்வுகளில் சூலகங்களினதும் ஈனலுறுப்புக் களினதும் நிலை முன்னர் விபரிக்கப்பட்டுள்ளது.
உடன் பிறவிக்கருப்பைப் பின்திரும்பல் நிலே அடிக்கடி மலட்டு நிலைமையையுண்டாக்கும். இவர்களுக்குக் கருப்பமுண்டாகின் அது

Page 180
338 இளம்பெண் நோயியல்
சிதைவுறும். பல அனுபவம் மிக்க பெண்ணுேயியல் ம்ருத்துவர் கொண்டிருக்கும் கருத்துக்கு மாருக நான் கூறுவது உடன் பிறவிக் கருப்பைத் திரும்பல் உடைய சிலர் கருப்ப நிலேயடைவதே இல்லே என்பதையே. மேலும் முன்னர் கருப்பமடைந்தவர்களுட் சிலர் கருப் பைப் பின்திருப்பம் அடைவர். இவர்களுட் சிலர் பின்னர் கருப்ப மடைவதில்லை. இவர்களுக்கு அறுவைவினை முறையால் கருப்பையை முன் திருப்பிச் செப்பம் செய்வதால் இவர்களுட் பலர் கருப்ப மடைவதை காணலாம். இவ்வகைய நிலைமையில் கருப்பைக் கழுத் தானது யோனியடிக்குழி மடுக்குள் தோய்வதில்லை. கலவி வேளையில் உயரவாகவும் முனனுேக்கியும் உயர்த்தப்படும். பேமுயிரிகள் யோனி மடுக்குள் மாய்வதுமல்லாமல் தப்பிப் பிழைத்தவை கழுத்து வாய்க்குட் செல்லவும் வில்லங்கமுறும். மேலும் கருப்பை திரும்பும்போது குல கங்களும் கீழாக விழுந்து தொங்கும். யோனிச் சோதனையில் கருப் பையடிக் குழி இருமருங்கிலும் அவை கிடப்பதை அறியலாம். இவை கலவி வேளையில் பீனத்தின் தாக்குதலில் நசிபட்டு நோவை உண் டாக்கும். பெண்ணை வினவின் அவள் கணவனுடன் புணர்வதற்குப் பயப்படுவாள். இப்பயத்தால் சிலருக்குக் கழுத்து வாயிலும் கருப் பைக்குழாய் உள்வாயிலும் பிடிப்பு நிலைமை உண்டாகி, பேம்கள் ஊடு செல்வது தடைபடும். மேலும் இப்பீதியால் கருப்பைக் கழுத் திலிருந்து சுரத்தல் சுரக்காது நிறுத்தப்படும். பேம்கள் புகுந்து செல்வதற்கு அது தாரையாக வடிவதில்லை.
மேலும் கருப்பைக்குழாய் முறுக்குறும். இதனுல் உட்புகுந்த பேமுயிரிகளுக்கு மேலும் ஒரு தடையுண்டாகும். சூலகங்கள் தொங்கு வதால் இவற்றில் குருதி நெருக்க முண்டாகி சூல்புடைப்புக்களின் முதிர்வு மாற்றங்கள் தடைபடக்கூடும். என் நீண்ட கால அனு பவத்தில் இக்காரணங்களை வைத்து முதன் CUP, GOTT 35 இலங்கையில் பின் திரும்பிய கருப்பைகளை அறுவை வினையால் முன்திருப்பம் செய்து நீண்டகால மலட்டு நிலையுற்ற பல பெண்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கருப்ப நிலையுற்றதைக் கண்டிருக்கிறேன்.
பின்திரும்பிய நிலை வேறுபல நேயியற் காரணங்களால் உண்டாகக் கூடும். சிறப்பாக கூபக அழற்சி, அகக் கருப்பைத் தசையோமா (அகமெற்றியோமா) வாலும் உண்டாகும்.
3. தொற்றுக் காரணங்கள்:
கொனக்கொக்கசு, தூபக்கிள் பசிலசு, அல்லது கருச்சிதைவிலும்
பேற்றுவேளையிலும் தொற்றும் சீழ்க் கிருமிகள் ஆகியவற்ருல் மலட்டு
நிலையுண்டாகும். கருப்பைக் குழாய் அழற்சியானது குழாய்களுக்கு
புழைத்தடுப்பை உண்டாக்கும். கூபகத்துள் விளையும் சவ்வுகளின்
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 339
ஒட்டுக்கள் கருப்பைக்குழாய் மருவிகளை ஒட்டுறச் செய்தும், குழாய்களை நெரித்தும் கோணலாக்கியும் விடும். தூபாக்கிள் நோய் குழாய் களையும் கருப்பையகவணியையும் தாக்கும், இவை கருப்பைக்குழாய் புழையடைப்பையும், மாதயிரிவுக் கோளாறுகளையும் உண்டாக்கும். தூபாக்கிள் பசிலசுகளை கருப்பையகவணித் திருவல்களிலிருந்து வளர்ப்புச் செய்தும், கினிப் பன்றிக்குள் உள்ளேற்றியும் துரபாக்கிள் பசிலசுகள் உண்டென அறியலாம்.
4. கழலையங்கள்:
(அ) நாரோமாக்கள், நார் கருப்பைத் தசையோமா என்பன உண்மையில் என் அனுபவத்தில் இவை நேமமாதயிரிவுறும் பெண்களில் மலட்டு நிலைமையை உண்டாக்கும்.
இவை கருப்பைக் குழாய்களை பொறிமுறையால் கடும் நீளிப்புச் செய்வதுமல்லாமல் குழாய்களின் உள்வாய்களை அழுத்தி அடைப்புச் செய்யவும் கூடும். குழாய் மருவிகளை சூலகங்களின் அயலிலிருந்து இடம்பெயர்க்கவும்கூடும். கருப்பைச் சுவர்க் கழலேயங்கள் கருப்பையை இடம் பெயரச் செய்யும். பிற்கவர்க் கழலையங்கள் முன்னுகவும் முற் சுவர்க் கழலையங்கள் பின்னுகவும் கருப்பையை இடம் பெயர்த்தல் செய்யும், யோனியின் ஆழத்தையும் குறைக்கும். கலவி வேளேயில் நோவையும் உண்டாக்கும். சீமன் நீரும் சுரதநீரும் சமபோக வேளை யிலேயே இலகுவில் வெளியேறும். கழுத்து நாரோமாக்கள் கருப்பைக் கழுத்தை நீடித்தும் புழையடைப்பும் செய்யும். சூலகங்களும் செவ் விதமாக இயங்குவதில்லை. இவற்றை அகற்றிய பின்பு பலர் கருப்ப நிலையடைவதை நான் கண்டுள்ளேன்.
(ஆ) கருப்பையக வணியோமா
இதில் சில முக்கிய வகைகள் மலட்டு நிலையை உண்டாக்கக்கூடும். புறத்துச் சூலகக் கருப்பையகவணியோமா, கருப்பை - திருவென்பு இணையக்கருப்பையகவணியோமா, நேர்குடல் - யோனிப் பிரிகவர் கருப்பையகவணியோமா, பரவல் வகை கருப்பைத் தசை அகவணி யோம்ா (சுரப்புத் தசையோமா) என்பனவே பெரும்பாலும் மலட்டு நிலைமையையுண்டாக்கக்கூடியனவாகும்.
இவை எவ்வயதிலும் தோன்றும். 20-30 வயதுக்குட்பட்ட பல மங்கையரில் நான் சூலகக் கருப்பையகவணிச் சிறப்பைகளுக்கும், கருப் பைத் தசையகவணிச் சுரப்பி யோமாவுக்கும், கருப்பை யகவணியோமா வாதைக்கும், நேர்குடல் - யோனிப்பிரிசுவர் கருப்பையகவணியோமா வுக்கும் அறுவைவினை செய்திருக்கிறேன்.

Page 181
340 இளம்பெண் நோயியல்
இரண்டொரு குழந்தைகள் பெற்றவர்களுக்கு மேற்கூறப்பட்ட வளர்த்திகளால் மேலும் குழந்தைவளம் இல்லாத காரணத்திற்காக அறுவைவினே செய்திருக்கின்றேன். இவ்வகையானுேர் வேளைக்கு அறுவைத்தீர்வு பெற்றிருப்பின் அவர்களுக்குமேலும் சில குழந்தைகள் பிறக்கக்கூடும்.
பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் இவை புத்தம் புதிதாகத் தோன்றும், அல்லது முன்னேய சிறிய நைவுகளில் இருந்து கடும் தழைப்புறும். எனவே, 30 வயது தொடக்கம் மாதவிடைவுக் காலம் வரைக்கும் அது வளர்ந்து பல்வகை இடர்களை உண்டாக்கும். பலர் பிள்ளைப்பேற்றைப் பல தடுப்பு முறைகளால் பல ஆண்டுகளுக்கு தள்ளிப் போடுவதாலும் இளம்படு வயதில் மணவினை செய்யாது வயதை முற்றவிடுவதாலும் இது உண்டாகின்றதென மீக்ஸ் என்னும் அமெரிக்க மருத்துவர் எனக்குக்கூறியிருக்கின்ருர், கலியானத்தை இளம்படுவயதில் செய்து உடனடியாகப் பிள்ளைப் பேறில் ஈடுபடுவதே இந்நோயைத் தவிர்ப்பதற்கு ஒரு நல்ல ஒழுக்க விதியாக அமையும்,
கருப்பைப் பிற்பக்கத்திரும்பலில், பிற்பக்கமாக மாதயிரிவும் பாய்ந்து வயிற்றுக் குழிக்குள் வடியும். எனவே இந்நோயின் தோற் றங்கள் பல்வகையில் பரவலாக உண்டாகும். கருப்பைத் தசைக்குள் கருப்பை அகவணியோமா தோன்றின் (சுரப்பித் தசையோமா) பெரும்பாலும் குழைந்தைவளம் குறைவடையும்.
(இ) புறத்து கருப்பை கவனியோ மா வாதை
(1) சூலகத்துள் கருப்பையகவணியோமாச் சிறைப்பை சூலகங்களை பொதுவாகத்தாக்கும், இதில் நூற்றுக்கு 30-40 பேருக்குச் சூலகம் பாதிக்கப்படும். பொரும்பாலும் இரு சூலகங்களும் நோயுறும். இச்சிறைப் பைகள் மிகப் பெரியவையாகக்கூடும். வேளைக்கு இவற்றை அகற்ருவிடின் பீறி, ஒட்டுச் சவ்வு வலைகளை உண்டாக்கி கருப் பையைப் பின்னுக இழுப்புச் செய்யும் கருப்பைக்குழாய்களுடன் ஒட்டுண்டும்விடும்.
கருப்பை - திருஇணைய, நேர்குடல் - யோனி கருப்பையகவணியோமாக்கள்-எல்லாம் வளர்ந்து சிறு கரும்பாயி கொண்ட சிறைப்பைகளே உண்டாக்கும். இழையங்கள் தடித்தும் சவ்வுண்டுமிருக்கும். கருப்பை, நேர்குடல் ஆகியன ஒட்டுக் களால் இழுபட்டு, கருப்பையானது பின்திரும்பலுற்றும், நேர்குடலுடன் நெருங்கிய ஒட்டுக்களும்று இருக்கும்.
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 341
அறிகுறிகளும் குறிகளும்
1. நீண்ட காலத்துக்கு ஒரு வகையான அறிகுறிகளைக் காட்டாது நோய் தழைத்து வளரும். பலரில் அறிகுறிகள் 30 வயதுமட்டில் காட்டும். பின்னர் இடர் மாதபிரிவு தோன்றும். வலியும் நோவும் மாதயிரிவுக்குச் சில நாட்களுக்கு முன்னமாகத் தோன்றிப் பின்னர் மாதயிரிவு நாட்களிற் கொந்தளித்து, கடும் வலியை உண்டாக்கும். இதற்குரிய காரணம் குருதியானது சிறைப்பட்ட வெளிக்குள் வடிவதே ஆகும். பின்னர் படிப்படியாகக் குறையும். ஆணுல், முற்றுகிற நோயில் மாதயிரிவு இடைநாட்களிலும் இருக்கும். நோவானது நோய் பற்றிய இடத்தைப் பொறுத்து நாரியில், அடிவயிற்றில் நேர்குடல் ஆகிய இடங்களில் தோன்றும். புறத்து நோய் நிலைமைகளில் 100-க்கு 63 பேரில் குருதிவாரி மிதமிஞ்சிய முறையில் நிகழும். மாதச்சுழல் மாற்றமடையின் குலகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கருத வேண்டும்.
2. மணவினை முடிந்தபின்புதான் குறிகள் துன்பத்தை விளை விக்கும். கலவி இடருயா வேளையில் தாங்கமுடியாத நோவை உண் டாக்கும். பெண்ணுனவள் இதற்குத்தானுே பெற்றேர் தன்னைக் கல்யாணம் செய்து வைத்தார்களெனவும் கருதுவாள். இது சிறப்பாக கழுத்துத் திருஇணையம், இடக்குளசுப் பொக்கணை, நேர்குடல்-யோனிப் பிரிசுவர் ஆகிய இடங்களில் உள்ள வளர்த்திகளால் உண்டாக்கப்படு வனவாகும். சிறைப்பட்ட கரும் குருதித் தேக்கங்களும் தடித்த இழை யங்களும் அழுத்தி நெரிக்கப்படும்பொழுது கொல்லும் வகையில் வலியும் நோவும் உண்டாகும். பெண்ணுக்கு கலவியில் விருப்பமே இருக்காது. தன் மனைவிக்கு நோவையுண்டாக்கக்கூடாது என்று கருதும் அன்புக் கணவன் இருப்பானுகின் கலவியில் இருந்திட்டொருக்கால் ஈடுபடுவான். பின்னர் இக்குறைபாட்டுக்கும், பிள்ளை தங்கா நிலைக்கும் ஆலோசனைக்கு வருவர்.
இவ்வகையான இடர் மாதயிரிவு யா நூற்றுக்கு 50 பேரில் தோன்றும்.
மணவினை முடிந்தவர்களில் நூற்றுக்கு 30-40 பெண்கள் பிள்ளே தங்கா நிலைக்கும், கலவி இடருயாவுக்குமாக ஆலோசனைக்கு வருவர். நோய் மலட்டு நிலைமையை உண்டாக்கும். மீண்டும் வஞ்சிப்பதுபோல் கலவியிடர்களையும் உண்டாக்கி அரிவைக்கு, இன்டத்துக்கு ' துன்பத்தையும் உண்டாக்கும்

Page 182
342 இளம்பெண் நோயியல்
5. கன்னிப்பருவ கருப்பையிறக்கம்:
கருப்பையைத் தாங்கும் இழையங்கள் உடன்பிறப்புக் குறை பாடாக நலிந்திருப்பதால் கன்னிப் பருவமடையவும் கீழாக இறங்கும். இது கருப்பை படிப்படியாக வளர்ந்து பாரமுறுவதால் நிகழ்கின்றது. ஏனைய காரணங்களால், ஒரிரு பேற்றுக்குப் பின்னர் கருப்பையிறக்க மடைந்து கலவி நிகழ்த்த முடியா நிலையை உண்டாக்கிவிடும். கருப்பை வெளியே முனைக்கும்.
6. கருப்பைக் கழுத்து நீளல்;
இதுவும் ஒரு உடன் பிறப்புக் குறைபாடாகும், ஒரு தடைபோல் யோனிக் குழிக்குள் கருப்பைக்கழுத்து முனைக்கும் ஆனுல் யோனி மடுவுள் தோயாது, உள்வீசப்பட்ட பேம் பாயிலிருந்து பேம்கள் உட்புக முடியாதநிலையில் கழுத்தானது நீண்டு இருக்கும்.
7. மற்றும் யோனியைத் தடைசெய்யும் பிரிமென்தகடுகளும் கிழிக்க முடியா யோனி மென்றிரைகளும், பீனப்புகுகைக்குத் தடுப்பையும் , சீமன்பாயியுட் செல்வதற்குத் தடுப்பாயுமிருக்கும்.
8. உடன் பிறப்புக் கருப்பைப் பின்திரும்பல்:
இதைப்பற்றி முன்னர் கூறிவிட்டோம். நத்தையுருக்கருப்பை, இது கூர்ப்பாக முன்மடிப்புற்று இருக்கும் கருப்பையாகும்.
9. நிறமூர்த்தப் பிறழ்வுகளும் இடைப்பாலினரும்:
நிறமூர்த்தப் பிறழ்வுகளைப்பற்றி முன்னர் சிறிதளவில் விளக் கினுேம், இடைப்பாலினர் பல்வகையினர்.
ஒரு வகையினரில் யோனியும் கருப்பையுமுண்டு. ஆணுல், கொணுட் டுக்களில் தெசுத்திசுகள் (ஆண்விதைகள்) மட்டும் காணப்ட்டும். இதனுல் வருந்தும் ஒரு பெண்ணுக்குத் தீர்வு செய்தேன். இப் பெண்ணேப்போல் பிறிதொரு பெண்ணையும் கண்டுள்ளேன்.
10 அருமையாக கழுத்துப் பல்காலி அல்லது கழலையம் அல்லது உடன்பிறப்புக் கழுத்து அரிப்பு (கடும் ஈத்திரசன் தூண்டலால் கழுத்து மியூக்கசு யோனிக்குள் பரவல்) ஆகியன அருமையாகவே காரணங்களாக அமையும், கழுத்தரிப்பால் பல ஆண்டுகள் வருந்திய பெண்ணுெருத்திக்கு அழற்றுதல் செய்து அதனே மாற்றினேன். அதன் பின் அவள் கருத்தரித்தாள்,

மலடும் (கருவள மின்மை) குறைகருவளம், 343
10. கருப்பையின் வெறுப்பு எதிர்ப்பு: பே முயிரிகளுக்கும் அல்லது புதுக்கருக்கட்டலுற்ற சூலுக்கும்.
சிலரில் கடும் குறைவிளேசலுற்ற கருப்பையானது பேமுயிரிகள் உயரவாகச் செல்வதற்கு உதவாது தடைசெய்யும். இதிலும் பார்க்க மட்டான விளைசற் குறையுடைய கருப்பையானது பேம்களை உயர வாகப் பயணம் செய்ய உதவினுலும் கருக்கட்டுண்ட சூலானது அகவணியிற் பதிய உதவாதெனக் கருதப்படும். கருப்பையகவணியானது சூலக ஒமோன்களுக்கு ஏற்றவளவு மறுகை செய்யாத காரணத்தினுல் அது கருக்கட்டலுற்ற சூலைப்பதிவதற்கு ஏற்ற பதத்தில் இல்லை யாகும்.
இது மீண்டும் மீண்டும் நிகழ், 'கருச்சிதைவாலான' மாதக் குருதிவாரி எனக் கருதப்படும்.
கருப்பைக் கழுத்து-பேமுயிரிகளுக்கு எதிர்ப்பை உறுத்தும்.
வெறுப்பும் எதிர்ப்பும்:
(அ) நாட்பட்ட அகக்கழுத்துத் தொற்று அல்லது "அரிப்பு வளர்த்தி' கருப்பையகத்துள் (PH) இன் பெறுமானத்தைத் தாழ்த்து வதால் பேமுயிரிகள் இதனுள் ஊடுருவிச் செல்லமுடியாது.
(ஆ) கருப்பையகக் கழுத்தைப் பேமுகயிரி ஊடுருவிச் செல்ல முடியாது. அகக் கழுத்தில் தடிப்புற்ற மியூக்கசு தக்கைபோன்று அமையும்,
11. யோனியின் வெறுப்பும் எதிர்ப்பும்:
(91) மிதமிஞ்சிய நிலை. பேமுயிரிகள் காரப் பாயியில் உயிருடன் வாழும். நேமகழுத்துச் சுரத்தல் நீரின் PH ஆனது ஏழுக்கும் எட்டுக்கும் இடையிலாகும். இது பேம்களின் உயிருடன் வாழும் காலத்தை நீடிப்பதற்கும் அவை இயங்குவதற்கும் உகந்த தாகும் , யோனிச் சுரப்பி நீர்கள் அமிலமுடையது (PH 4.5-5) இச்சூழலில் சிறிது நேரப்பொழுதுக்கு மட்டுந்தான் பேமுயிரிகள் உயிருடன் வாழும். நேம சீமன்பாயில் PH 7.5 ஆனது ஆகும். இதில் அவை 24 ஒரை காலத்துக்கு உயிருடன் வாழும். கூடிய அமிலத்தன்மையுடைய பாயியில் அவை சுறுசுறுப்புடன் அசையும் கதவுடையன ஆணுல் விரைவில் மாண்டுபோகும் கலவியின் விளேவில் பெற்ற சிமன்பாயி, யோனிச் சுரத்தல் நீர்கள் கழுத்து மியூக்கசுப்பாயி

Page 183
34 இளம்பெண் நோயியல்
ஆகியவற்றின் கலவையான யோனி விதானக் கலவையின் PH ஆனது ஏறத்தாழ 6, 2 ஆகும். சீமன் பாயியுடன் குலுதிர்தல் வேளையில் பெற்ற கருப்பைக் கழுத்து மியூக்ககத் துளியை அதன் அருகிலிடின் இவ்விரு பாயியின் சந்திப்பில் பேமுயிரிகள் நிரல் செய்யும். பின்னர் கூட்டங்கூட்டமாக ஒரு கூம்பு அமைப்பில் கழுத்துச் சுரத்தல் நீருடாக ஊடுருவிச் செல்லும், யோனிமடுப்பாயி கடும் அமில நிலையில் இருப்பின் பேமுயிரிவுகள் மாண்டுபோகும். பல ஆண்டுகளாகக் குழந்தை வள மில்லா ஒரு பெண் இலண்டன் நகரில் சில ஆண்டுகளாகத்தீர்வு பெற்ற பின்னும் கருக்கட்டல் வளமில்லாது மனம் தளர்ந்து இலங் கைக்கு மீண்டும் வந்து, என்னிடம் ஆலோசனைக்கு வந்தபோது யோனியின் அமிலநிலையானது கலவிக்குப் பின் சோதிக்கப்படவுமில்லை என்பதனை அறிந்தேன். இச்சோதனையைச் செய்யும்பொழுது யோனிப் பாயிக் கலவை கடும் அமலநிலையிலிருப்பதையும் பேம்கள் இறந் திருப்பதையும் கண்டேன். சூல் உலுரும் காலக்கூறில் கலவியை நிகழ்த்த முன்பு யோனிப் பாயியின் அமில நிலை காரநீரால் குறைக்கப்பட்டது. இதனுல் காலம் சுணங்காமல் அவள் கருத்தரித்து பிள்ளைப்பேறும் பெற்ருள்.
(ஆ) மிதமிஞ்சிய கார நிலையும் பேம்களை இயங்காது தடுக்கும். மியூக்கசுச் சீழ் நிலைமைகளில் சிலருக்கு இது நிகழக்கூடும். சீழ்நிலை மைகளை அகற்றுதல்வேண்டும். உகந்த அமில நிலை எய்துவதற்கு பெற்ரு. இலற்றிக்கமிலத்தைச் (1%) சேர்க்கவும் வேண்டும். இதில் பலனுன்டு. கெடுதி இல்லை.
12: உடல் காட்டும் எதிர்ப்பு:
பேம் ஒருங்கொட்டிகள் கன்னியோனிப் பாயியில் ஒருபோதும் காணப்படுவதே இல்லை. ஆணுல், மலட்டுப் பெண்களின் இழையப் பாயிகளில் பெருமளவிலுண்டு. இது கணவனின் பேமுக்கு எதிராக உண்டாக்கப்பட்ட முரனுடலிகாளாகும். ஒவ்வொருவரின் சீமனும் தனித்திறனுடைய முரணுக்கியை உண்டாக்குமோ என்பது அறியப் படவில்லை. பலதடைவைகள் கலவியை நிகழ்த்திய, பின்பு செய்யப் பட்ட ஆய்வுகள் மீண்டும் மீண்டும் இறந்த பேமுயிரிகளைக்காட்டின் இந்த ஒருங்கொட்டி நிலையைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டும்.
13 முயக்கப் பிழை பாடுகள்:
மணம் முடிப்பதற்கு ஆணுே, பெண்ணுே மறுக்காது இணங்குவர். ஆணுல், இவர்களுட் பலர் பின்னர் உடனடியாக முயக்கத்தில் ஈடுபட்டு அதனை நிறைவு செய்வதற்கு இயலாதவர்களாகின்றனர். இருவரும் சேர்ந்து நிறைவு செய்வதற்கு வில்லங்கப்படுகின்றனர். ஆனல் காலப் போக்கில் முயங்கி நிறைவு செய்வதற்குப் பழகிவிடுகிருர்கள்.
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 345
சிலர் ஆண்டுகள் பல சென்றும் முயங்க இயலாது வருந்துகின் றனர். சமூகக் கட்டுப்பாடுகளுக்கமைய தங்கள் தலைவிதி இதுதான் என எண்ணி வாழ்நாள் முழுவதும் முயங்காது இன்பமாயும் இன்ப மில்லாமலும் வாழுகின்றனர். மலட்டு நிலையைத் தீர்ப்பதற்காக வரும் பெண்களில் (பலர் வருவதில்லை) நூற்றுக்கு 3-4 பெண்கள் உண்மை முயக்கத்தில் ஈடுபடாதவர்களாகக் காணப்படுவர். எங்களிட மிருந்து இவ்வுண்மை நிலையைப்பற்றி அறியும்பொழுதுதான் அவர்கள் தம் நடத்தையைப்பற்றி அறிந்து வியப்புறுகின்றனர். இல்லற வாழ்வின் இன்பம் நல்லமகவுகளைப் பெற்று இன்பம் அடைவதுதான் என்னும் கொள்கையுடையவர் பலர் வேறு பல மணவாழ்வானது தாமிருவரும் சுகித்து வாழ்வதற்கென்றும் பிள்ளைப்பேறு ஒரு வழிவந்த வேண்டா விளைவென்னும் கருத்துடன் வாழ்வர். வேறு சில ஆண்களும் பெண் களும் மணம் வேண்டியோ அல்லது வற்புறுத்தலிலோ திருமணத்தை செய்து பின்னர் ('சாமிப்போக்கில்') துறவறத்தைக் கடைப்பிடிக் கின்றனர். இவ்விருவருள் ஒருவர் பிள்ளைப்பேற்றையும் விரும்புவர். வேறுசிலருக்கு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ கலவியில் ஆசை யில்லை. இன்னும் மிகச் சிலர் தற்பாலினக்காமவுறவில் கடும் விருப்ப முடையவர். இவர்கள் கல்யாணம் செய்வர், ஆனல் எதிர்ப்பாலினரை விரும்பமாட்டர். வேறு சிலர் மிகக் கொழுமையுடையவர். முயக்கத்தை நிகழ்த்த முடியாதவர்களாய் இருப்பர்.
கிழக்கு நாட்டுத் தேசங்களில் துறவுநிலை பரவிய காலமொன் றிருந்தது. மக்களுட் பெரும்பாலானுேர் இதை வெறுத்தனர். இதைத் தொடர்ந்து ஒரு காமவொழுக்கநீதி நிலவியது. மதன நூல்கள் எழுதப்பட்டும் கற்கப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வந்தன. சிறப்பாகப் பெண்கள் இதைக் கற்றனர். முயக்கத்துக்குப் பயன் படுத்ததும் பல்வகை உடல் நிலேக் கரணங்களைப்பற்றி உணர்த்துவர். எல்லாக் கணவரும், மனேவியாரும் இலக்கியத்தில் கூறப்பட்ட உடலமைப் புக்கள் இல்லாதவர்களாவர். சில ஆண்களும், சில பெண்களும் பெருத்திருப்பர். வயது செல்லவும் இருவரில் ஒருவர் மிகக் கொழு மையடைவர் அல்லது இருவரும் கொழுமையடைவார்கள். நடைமுறை யில் இதனைக் கற்பதற்கும் பழகுவதற்குமாக காமசுந்தரி, மதனுபிசேகம், மதனமுத்து ஆகியோரின் வீடுகளுக்கு ஆண்கள் சென்றனர். பெண்கள் திருமணம் செய்யமுன்பு மதன சாத்திரங்களைக் கற்றிருந்தனர். கல்யாண விழாவில் தேவடியாள்கள், பாலினவுறவில் எதிர்பார்க்கப் படும் கைச்சரச ஆடல்களைப் பற்றிய ஆடல், பாடல் மற்றும் கரணங்களால் அவர்கள்முன் நடித்து அபிநயஞ் செய்து மறைமுகமாகக் காட்டுவர். அக்காலத்தில் மணம் செய்வதின் நோக்கம் பற்றி ஆணும், பெண்ணும் அதிகம் அறிந்திரார். எனெனில் அவர்கள் இளம்படுகாலத்திலேயே மணம் செய்வர். தற்காலம் அறிவுபெருகிய

Page 184
346 இளம்பெண் நோயியல்
காலமும், அறிவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் நிரம்பிய காலமுமாகும். எவ்வித உடற் குறையுமில்லாத ஆண்களும் பெண் களும், மன நிலையாலோ, பாலின உறவைப் பற்றி அறியாத காரணத் தினுல்ோ செவ்விய முயக்கம் நிகழ்த்தாது மலட்டு நிலைமைக்காக ஆலோசனைக்கு வருகின்றனர். இவர்களுட் பலர் பெண் மருத்து வரைத்தேடுவர். இவர்களுட் பலர் தம்மைப் போன்று முயக்க நுட்பங் களையும் அதற்கு வேண்டிய உடற் காரணங்களைப்பற்றியும் யறியா தவர்கள். பலர் கல்யாணமாகாதவர்களாவர். இவர்களுள் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், பூசகர், போதகர் ஆகியோரும் பட்டின மக்களும் கிராமிய மக்களும் அடங்குவர். எனவே, மலட்டு நிலைமையைத் தீர்வு செய்யும் பெண்ணுேய் மருத்துவருக்குப் பெண்ணுேய்களைப்பற்றிய அறிவுடன் மதன கலைகளைப்பற்றிய அறிவும் பொது அறிவும் கட்டாயமாக இருக்கவேண்டும்.
பொதுவாக மலட்டு நிலைமையை உண்டாக்கும் முயக்க இடர் களைப்பற்றி அறியவேண்டும்.
1. அல் மருவுயா: இது முன்னர் பாலின உந்தலும் மணம் புரி புரிதலும் என்னும் இயலில் விபரிக்கப்பட்டுள்ளது.
11. இடர் மருவுயா? இதனைப் பற்றி மேலே கூறப்பட்ட இயலில்
படிக்கவும்.
தன் மனைவியை மருவும்பொழுது எய்தும் உச்சச் சுகிப்பு நிலயில் சில காமப்பித்தர்கள் தன் மனைவியின் முலைகள், கீழ்வயிறு, நிதம்பம், அல்குல் ஆகிய பகுதிகளைக் கடித்து மகிழ்கின்றனர். நல்ல பண் பாட்டில் வளர்ந்த பெண்ணுக்கு நோவையும் சிலருக்குக் கடிகாயங் களையும் மன அருவருப்பையும் இவ்விதமான செயல்களால் உண்டாக் குவர். கணவன் சினத்தாலும் சரி தங்களுக்கு இவ்வகையான கலவி வேண்டாமென்று சில பெண்கள் இச்செயலைத் தவிர்க்கின்றனர். சென்ற ஆண்டில் மலட்டு நிலைத்தீர்வுக்காக வந்த இருவரின் கதையை இங்கு குறிப்பிட வேண்டும். சரசமாடல் வேளைகளில் கணவன் தன் மனைவியை மேற்கூறப்பட்ட இடங்களில் கடிப்பதினுல் (முற்காலத்தில் நகங்களால் கிள்ளுவார்களாம். இது கரடிக் கடிக்குறிபோலும் ,) இவ்வகையான கலவி வேண்டாமென்று பல ஆண்டுகளாகப் பத்தியம் காத்தாள். கணவனுே தோற்றத்திலும் அழகன், உரையாடலிலும் கெட்டிக்காரன் தான். ஆணுல் இருவரும் பலவகையான புத்திமதிகளே பெற்ற பின்பு தான் ஒரு குழந்தையைப் பெற்று மகிழ்ந்தார்கள்
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும். 347 மற்றையது ஒரு கணவன் விஸ்க்கி மது’ப் போதையில் வந்து கலவி நிகழ்த்தி முடியமுன்னம் நிதம்பத்தையும் அல்குலையும் (வல்வப் பிரதேயம்) கடித்துக் கடும் காயம் செய்து விட்டான். குருதி வடி தலுக்கும் காயங்களுக்கும் முதலுதவி அளிக்கவேண்டிய நிலைமை எய்தியது. பின்னர் இந்தக் கல்யாணம் முறிந்துவிட்டது. இதுவும் ஓரிடர் மருவுயாவெனக் கருதவேண்டும்.
முயக்கம் நிகழ்த்த வேண்டிய காலக்கூறும் - நிகழ்த்த வேண்டிய தடவைகளும்
நான் அறிந்தவரையில் அறிவுக்குறைவானது கணவன் மனைவி இருபேரிலும் உண்டு. சாதாரண பெண்ணுெருத்தி தான் விரைவில் ஒரு குழந்தையைப் பெறவேண்டும் என்ற பெரும் அவாவில் புணர் வதற்கு விருப்பமில்லாவிடினும் நாள்தோறும் அல்லது ஒரு நாளில் பலதடைவையும் புணர்வதற்கு இணங்குகின்றனர். தன் ஆண்மையை உற்ருருக்கும் நண்பருக்கும் மனைவிக்கும் காட்டுவதற்கு நாள்தோறும் திருமணமாகிய முதல் 2-3-4 ஆண்டுகளுக்கு முயங்குவர். இவர்கள் மலட்டு நிலைமைத் தீர்வுக்காகவருவர். பெண்ணுக்கு இயல்பாகவே கணவனுடன் உறவுகொள்வதற்கும், கலவியிலிடுபடுவதற்கும் ஒரு கடும் விருப்பம் மாதச் சுழலின் நடுப்பகுதியில் உண்டாகும். இக்காலம்தான் (சூலிடு காலம்) முயக்கத்திற்கு உகந்த காலமாகும். உடல்வெப்ப நிலைகூடும். ஈனலுறுப்புக்கள் குருதிச் செறிவுறும். உளம் பூரிக்கும். புலன் நரம்புகள் உணர்ச்சித் திறனடையும். காம விருப்பமும், ஆணுறவு விருப்பமும் ஒரு மிடுக்கும் கவர்ச்சியும் பெண்ணுக்கு
உண்டாகும்.
ஆணும் இவற்ருல் ஈர்க்கப்படுவான். ஒரு பிள்ளைப் பேற்றை நிகழ்த்துவதற்காக பெண்ணின் உடல் நிலையைச் சூலிடும் காலத்தில் மாற்றிச் ஆணை அதில் ஈர்க்கச் செய்வது இயற்கைச் செயலாகும். (மன்மதன் கணையெய்தல்) இதிலிருந்து நாம் அறிவது பிள்ளைப்பேறு வேண்டின் சூலிடப்படும் காலக்கூறில்தான் கலவி (இணைவிழைச்சு) செய்ய வேண்டும். இந்நாட்களிற்ருன் பெண்ணுக்கும் உச்சநிலை எய்த முடியும், சரச ஆடல்களையும் விரும்பித் தாங்குவாள். மற்றைய நாட் களில் ஒருவகையான விருப்பமும் இல்லாது அவள் கணவனின் விருப் பத்திற்கமைய இசைந்துநடப்பாள். ஆனல் தனது மனநிலை பற்றிக் கணவனிடம் கூருள். -
அவளிடும் முற்றின சூலும் (இரண்டாம் புணரிக்குழியம்) 24 ஒரைகளுள் சிதலமடையும். சூலகத்தைவிட்டேகியபின் 8-12 ஒரைகள் மட்டுந்தான் உயிரியற் சிறப்புடன் வாழும். பின்னர் இது கருக்கட்ட ஆக்கு உதவாததாகும் இதை இடும் காலக்கூறில் சிறந்த ஆளுன

Page 185
348 இளம்பெண் நோயியல்
வன் ஒன்று விட்ட ஒரு நாள் கலவியை நிகழ்த்தல் வேண்டும் (பேம் எண்ணிக்கைத் திறனுடைய ஆணுக்கு ஒரு கசமீப் பாயியில் 100-200 கோடி, அல்லது 1000-2000 இலட்சம் பேம்களிலிருக்கும்.) மட்டான பேம் எண்ணிக்கை கொண்டவனில் (ஒரு கசமீக்கு 300 கோடி அல்லது 3000 இலட்சம்) பேம்கள் எண்ணிக்கையைப் பொறுத்து கருக்கட்டல் வளமும் பேறுபடும். 10 கோடி பேம் எணணிக்கையுடயவர்கள் கருக் கட்டல் வல்லமைக்கு குறைந்தவர்கள். இவர்கள் சூலிடலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் சூலிடும் நாளிலும் முயங்கவேண்டும்.
ஒரு நாளில் எத்தனே தரம் முயங்கவேண்டும்:
நாளுக்கு ஒரு தடவை முயங்கினுல் போதியளவு முதிர்வுற்ற பேமுயி ரிகளை யோனிக்குள் இடலாம். ஒரு நாளில் இரு தடவைகள் முயங்கின் இரண்டாம் தடவை வீசப்பட்ட சீமனில் பேமுயிரிகளின் எண்ணிக்கை முதலாவதிலும் பார்க்க நூற்றுக்கு ஐம்பது வீதம் குறைவாகவிருக்கும் மூன்ரும் தடைவை வீசின் மேலும் குறையுமென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, கருக்கட்டல் வல்லமையும், பேம்களின் கட்டமைப்பும் அசையும் தகமையும் எண்ணிக்கையைப் பொறுத்துப் படிப்படியாகக் கூடும் அல்லது குறையும். முக்கியமாக இதைப்பற்றிக் கணவனும் மனைவியும் அறிதல் நன்று.
சீமனில் பேம்கள் முதிர் பருவத்தில் 70% வீதமும் முதிர்வுற்ற பருவத்தில் 10-15 வீதமும் காணப்படும். விதைகளிலிருந்து பேமுயிரிகள் விட்டேகும்பொழுது அவை முதலாவது முதிர்வுப் பிரிவு உறும். ஆணுல் இவை முழு முதிர்வடைந்த நிலையில் இல்லை. பருவத்தினது கருக்கட்டல் வல்லமை அற்றவை. இவை விதையின் மேற்றிணிவின் புன் பிஞ்சுகள் குழாய்களில் பயணம் செய்வதற்கு 2 கிழமைமட்டில் எடுக்கும் இவை சீமன் வெளிவீசலுக்குச் சற்று முன்பாகவே சீமன் பாயிக்குட் செலுத் தப்பட்டு உடனடியாகவே அசையத் தொடங்கும். யோனிக்குள் உள்ள அமிலப் பாயிக்குள் இடப்பட்டவுடனேயே அவை உயிருடன் வாழ வேண்டுமாயின் விரைவில் (இராசயன-ஈர்ப்பு) அமிலத்தை வெறுத்து காரப்பாயிக்குட் செல்லவேண்டும். பின்னர் கருப்பைக் குழாய்களை 6-24 ஒரைகளுள் அடைந்து அங்கு ஒரு முதிர்வான சூலிடப்பட்டிருப்பின் அதனுடன் கருக்கட்டலுறும்.
எனவே ஒருநாளில் பல தடவைகள் சீமனை வீணே வெளி வீசு வதனல் வேண்டியகாலமான மாதச் சூழல் நடுப்பகுதியில் கருக்கட்ட லுறுவதற்கு போதிய எண்ணிக்கை கொண்டதும் நல்லமைப்புடையதும் முதிர்ந்ததும் (கனிந்த) கருக்கட்டல் வல்லமையும் உடையதுமான பேமுயுயிரிகளைப் பெறமுடியாது. மட்டுக்கு விஞ்சிய புணர்ச்சிகள் ஒருவகையிலும் நன்மைதராது. அடிக்கடி கூடியியற்றும் இணை விழைச்சும்
 
 
 

(மலடும் கருவளமின்மை) குறைகருவளமும், 349
சூலிடும் நாட்களைத் தவறவிடும். இயல்பானதாய் நோக்குத் தவருது மனம் விரும்பி இசைந்து செய்வதுமான முயக்கம் கருக்கட்டலை நிகழ்த்தும் இதை விரித்து எழுதுவதின் நோக்கம் தக்காலத்துச் சூழ்நிலையில் தொழிலில் ஈடுபடும் இடங்களில் இருவரும் சேர்ந்து ஒன்ருய் வாழ்வதற்கு வாய்ப்பில்லை. இதில் பாதிக்கப்படுபவர் தம் மனைவியாரைப் பல காரணங்கள் கொண்டு தம் ஊரை விட்டுவிட்டுப் புற ஊர்களில் தொழில்களில் ஈடுபடுகின்றனர். இடவசதிக் குறைவு, போக்குவரத்து, தற்பாதுகாப்பு, கூடிய செலவாணி, உதவியின்மை ஆகிய காரணங்களால் இப்புதுவகையான மணவாழ்வை நிகழ்த்துவர். மாதத்துக்கொருக்கால் வீட்டில் சில நாட்கள் தங்கல், ஆண்டுக்கு 2-3 தடவை வீடு வரல் அல்லது கிழமை முடிவில் இரு நாட்களுக்கு மட்டும் வீடு வரல் ஆகியன தற்காலக் குடும்ப வாழ்க்கையில் பொது நிகழ்ச்சிகளாகும். கடற்படைவீரர், நாவாய்வீரர், ஊர்ஊர் செல்லும் வைத்தியர், சமய போதகர் ஆகியோரும் அடிக்கடி வீடுசெல்லும் வாய்ப்புக்கிடைப்பதில்லை. இரண்டொரு நாள் வீடு சென்றவுடன் கடும் முயக்கத்தைப் பலதடவை நிகழ்த்துவர். சில வேளைகளில் மனைவி அவர்களை ஏற்கும் நிலையிலிராள். அல்லது பெரும்பாலும் அவன் கருக்கட்டலடையக்கூடிய (சூலிடலில் நாட்களாக) நாட்களாகவும் இராது. இவ்வித காரணங்களினல் ஆண்டுக்கணக்காக மலடாக இருப்பவர்களை நானறிவேன். அவர்கள் வீடு செல்லும் நாட்களை மாற்றி மனைவியரின் சூலிடற் காலத்துக்குப் பொருந்த வீடு சென்று கலவியில் ஈடுபடவேண்டும். பெண்கள் ஆணுசையைப் பொறுத்த மட்டிலும் பிள்ளை பெறும் ஆசையிலும் வேறுபடுவர்.
உராய்வு நெய்கள் (மியூக்கசுச் சுரப்பு)
நீர்க் குறைவால் யோனி உலர் நிலையிலிருக்கும். பெண்ணுக்கு கலவியில் விருப்பம் இல்லாதிருப்பினும் அல்லது பீதி, துக்கம் ஆகிய நிலைமைகளிலும் இது நிகழக்கூடும். எனவே முயக்கமும் வில்லங்க மாகும். இதைச் சரிப்படுத்துவதற்காகப் பலர் உராய்வு நெய்களையும் யெல்லிகளையும் பயன்படுத்துவர். இலங்கையில் வறியவர்கள் தெங்கு எண்ணெயையும் எள் எண்ணெயையும் பாவிப்பதை அவர்கள் ஆலோ சனைக்கு வரும்பொழுது அறிந்தேன். இது பேம்களை மாளச் செய்யு மென்பதை அறியார். சில ஆண்கள் முன் முதிர் வீசல் நிகழாது தடுப் பதற்குக் கொக்கேன் யெல்லிகளைப் பின முகைக்கு இடுவர். முன்னேயன போன்று பேம்களைக் கொல்லும் கெடுதியை விளைவிக்கும்.
சிலர் இவற்றைக் கருப்பத் தடைக்காகப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறின் வியப்பு அடையத்தேவையில்லே. உலர் யோனியை இம்முறையாற் பதமாக்கி, கலவியில் ஈடுபட்டுப் பிள்ளேப் ". எதிர்பார்ப்பார்களானல், ஏமாற்றத்தையே அடைவார்கள்.

Page 186
350 இளம்பெண் நோயியல்
ஏனைய காரணிகள்:
மலட்டு நிலைமையிலிருக்கும் பலர் பல கேள்விகளுக்கு விடை வேண்டுவர். கரிசனையுடனும் பொறுமையுடனும் கேட்கப்படும் வினுக் களுக்கு உண்மையான விடையளிக்க வேண்டும்.
1. சீமன் யோனியிலிருந்து வெளியொழுகல்:
சிலர் முயக்கம் முடிந்தவுடனேயே சீமன்பாயி யோனியில் இருந்து வெளியொழுகுதென்றும் தாம் இதன் காரணமாக நீடிய நேரம் படுக் கையில் கிடைநிலையில் இருப்பவரென்றும் கூறுவர். இவ்வாறு உடனடி யாக நிகழும் ஒழுங்கு மலட்டு நிலையை உண்டாக்குமா? என்ற கேள் விக்கு பதிலைப்பார்ப்போம். பெரும்பாலும் எந்தப் பெண்ணுக்கும் முயக்கம் முற்ருகினவுடனேயே யோனிப் பாயி வெளியே வடியும். இது ஒரு நேம நிகழ்ச்சியாகும். போதியளவு சீமன்பாயி யோனி விதானத்துள் கிடைக்கும். இது மலட்டு நிலையையுண்டாக்காது. ஆணுல், ஒரு கூர்மை மருத்துவன் கருப்பையிறக்கம், கருப்பைக் கழலையங்கள், கூபகத்துள்ளிருந்து யோனியைக் கீழே தள்ளி அதன் ஆழத்தைக் குறைத்தல், பெரும்பாலான கிழிவுகள், குறுகு யோனி, சிறிய (நீளம் கட்டையான) பீனம், பீனமானது முழு யோனி ஆழத்துக்கும் புகுத் தப்படாது யோனி வாய்க்குள் இடப்படல் அல்லது மென்றிரை வன் மையால் அதன் கீழாக “பொய்யோனிக் குழி உண்டாக்கப்படல் ஆகியனவும் உண்டோவென்று சோதித்து அறிவாள்.
2. சச்சு நிலை:
சில பெண்கள் தாம் சச்சு நிலையை எய்தாதபடியால் தாம் கர்ப்ப நிலை அடையவில்லை எனக் கருதுவர். கருக்கட்டலுறுவதற்குச் சச்சு நிலை வேண்டியதில்லை. பலர் சச்சுநிலை எய்தாது கர்ப்பவதியாகின்றனர். பெண் சச்சு நிலையை எய்தின் அது கருப்பைக்குழாயின் பிடிப்பு நிலையைத் தளர்த்தியும், சுரத்தல் நீர்களைக் கூட்டியும் பேம்கள் உயரவாகச் செல்வதற்கு உதவுகின்றது.
3. கருவுறவேண்டும் என்னும் கடும் விருப்பமும் அது நிகழுமோ அல்லது நிகழாதோ சிலரில் கருக்கட்டல் வளத்தைக் குறைக்குமெனக் கருதுவர். ஒரு பிள்ளையை எடுத்துத் தம் பிள்ளைபோல் வளர்த்தால் இப்பீதி குறையுமேன்றும் பிள்ளைவளம் உண்டாகும் என்றும் ஓர்
தப்பெண்ணம் பரவி நிலைக்கின்றது.

மலடும் (கருவளமின்மையும்) குறைவளமும், 351
பரம்பரைக் கருவளத் தகைமை:
சில குடும்பங்களில் பிள்ளேவளம் கூடியிருக்கும். சில குடும் பங்களில் குறைந்தும் இருக்கும். நிறமூர்த்தப் படினங்கள் இவற்றைத் தெளிவாக்குகின்றன. காலம் மிகத் தொலைவில் இல்லையாகும்.
கொழுமை, பெரும் உடற்கட்டு, ஆண்மைக்குறிகள் ஆகியன உள்ள ஒருத்திக்கு பிள்ளை வளம் பெரும்பாலும் குறைவாம்.
தொழில் ஈடுபாடும் சூழலும்,
நாட்டுப்புற மக்களுக்குப் பட்டின வாசிகளிலும் பார்க்க பிள்ளை வளம் கூடவாம். கை வேலைகளில் ஈடுபடுவோரின் வளம் மூளை வேலை செய்வோர்களிலும் பார்க்கக் கூட என அறியப்படுகின்றது.
கருப்பத் தடை முறைகள்:
சில கருப்பத்தடை முறைகள் பிள்ளை வளத்துக்குக் கெடுதியை விளைவிக்கக்கூடும். ஒவுயலென் கருப்பத்தடைக்குளிகைகளை மாதந் தோறும் உண்ட ஒருத்திக்கு மீண்டும் மாதவிடாய் நீடிய காலத் துக்குத் தோன்றவேயில்லே. முலேகள் சுருங்கி தோற்பையாகின. உடல் மெலிவு உண்டாகியது. இதற்காக அவள் தன் கணவனைத் திட்டினுள்.
கருப்பையக கருப்பத்தடைக் கருவிகள் சிலருக்குச் சீழ்நிலைமையைக் கருப்பைக் குழியுள் உண்டாக்கி, கருப்பைக் குழாய்களையும் நோய்ப் படுத்தி நிலைபேருண குழாய்ப் புழையடைப்பை உண்டாக்கக்கூடும்.
மூத்த வயதில் மணம்முடிப்பவர் (28 வயதுக்கு மேற்பட்டு) கருப் பைத் தடை முறைகளே உடனடியாகவே சில ஆண்டுகளுக்குக் கையா ளுதல் உகந்த முறையல்ல. பின்னர் கருப்ப நிலையை எய்துவதற்கு முயலும்பொழுது அது தோல்வியில் முடியக்கூடும். ஏனெனில், அவர்கள் தற்சமயம் இயல்பாகவே வளம் மிகக் குறைந்த வயதெல்லையை அடைந்து இருக்கின்றனர்.
மலட்டு நிலை ஆராய்வு:
நான் இலண்டனிலுள்வ செல்சி பெண்ணுேய் பிணிதீர் மனேயில் சிலகாலம் பயிலும் பொழுது கருப்பம் எய்துவதற்கு முயன்று பின்னர்
கருப்ப நிலையை எய்திய இளம் கல்யாணச் சோடிகள் 65% ஆறு மாதங்களிலும் 81% ஒர் ஆண்டிலும், 90.5% இரு ே

Page 187
352 இளம்பெண் நோயியல்
கருப்பநிலையை எய்தினர். எஞ்சிய 9.5% பெண்கள் கருப்பநி)ே எய்துவதற்கு இரண்டு அல்லது கூடிய ஆண்டுகள் எடுத்தனர். இதி லிருந்து நேம புதுமணச் சோடிகளில் நூற்றுக்கு தொண்ணுர்பேர் இரண்டு ஆண்டுகளில் கருப்பம் உறுவர். இவர்கள் இரண்டாண்டுகளில் கருப்பம் தரிக்காவிடின் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்கு போக வேண்டும். அதிலும் மணம் முடிக்கும்பொழுது மணப்பெண் 28-40 வயதுக்கு இடையிலிருப்பின் உடனடியாகவே ஆலோசனைக்கு போக வேண்டும். 30வயதுக்கு மேலாகின் ஈனலுறுப்புக்களை ஒரு சிறு சோ தனக்கு உட்படுத்துதல் நன்று. இவர்களிற் சிலருக்கு பல இடங்களின் அரும்புத் தோற்றங்களைக் கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கும். கருப்பையகவணிவாதை, கருப்பை நார் - தசையோமா, சூலகச் சிறைப்பைகள் ஆகியன இருக்கக்கூடும். கருத்தரிக்கும் வல்லமை 18-28 வயதுக்கு இடையில் உச்சநிலையில் இருக்கும். இலகுவாகக் கருத்தரித்து வில்லங்கமில்லாத பிள்ளேப்பேறும் வேண்டின், இளம் வயதிலேயே மணவினேயில் இறங்குவது கருத்தரிப்பதற்கும் மலட்டு நிலையை தவிர்ப்பதற்கும் ஒரு சிறந்த வாழ்க்கை முறையாக அமையும்.
மேற்கூறப்பட்ட குறிப்புக்களில் இருந்து இரண்டாண்டுகளில் கருத்தரிக்காதவர்கள் ஏறத்தாழ நூற்றுக்குப் பத்துப் பெண்கள் மட்டுமே ஆகும். இவர்கள் இச்சை வழியற்ற மலட்டுநிலை வகுப் பிலடங்குவர். இவர்களுள் 50% மட்டில் ஆலோசனைக்காகப் பிள்ளை வளச் சாரகத்துக்கு வருவர். இவர்களுள் நூற்றுக்கு 50 பெண்கள் பின்னர் கருப்பம் தரிப்பார்கள். இலங்கையில் இவ்வகையான குறிப் புக்கள் இன்னமும் திரட்டப்படவில்லை. என் அனுபவத்தில் இலங் கையில் குடியிருக்கும் வெவ்வேறு சமூகத்தினரின் நிலைமையும் ஏறத்தாழ இதுவேயாகும். ஆணுல், தமிழ் இனத்தைப் பொறுத்தமட்டில் மணமுடிக்கும் வயது வரவர முப்பதுக்கு அப்பால் போகின்றது. கல்யாணம் பண்ணுத 35 வயதுக்குமேற்பட்ட பெண்கள் பலர் உளர். இவர்கள் கல்யாணம் செய்யினும், இவர்களின் பிள்ளைவளம் குறை வாகவே இருக்கும்.
அமெரிக்காவில் கல்யாணம் செய்து ஒர் ஆண்டுக்குள் விதிப்படி ஒழுங்காக முயங்கி, கருப்பநிலை அடையாவிடின், அக்கல்யாணத்தை மலட்டு நிலையெய்தியதென்று கணிப்பர்.
ஆணுல் கல்யாரச் சோடிகளில் புதியவரும் நாட்பட்டவரும் எவ்வயதினரும் ஆசோசனக்கு வருவர். இவர்கள் எல்லோரும் சோதிக் கப்பட வேண்டும். ஆணுல் பல காரணங்களுக்காகவும் (குடும்பக்கார ணங்கள் தொழிற் காரணங்கள், கணவன் புறநாடுகளுக்கு உடனடியாகச்

மலடும் கருவள மின்மையும் குறைகருவளமும், 353
செல்ல வேண்டிய நிலைமைகள் ஆகியன) பெற்ருேளின் சீதனப் பொருள். கணவனின் தேட்டம், முதிசப் பொருள் ஆகியவற்றை பெறுவதற்கும் இதனையுடனடியாக உறுதிப்படுத்துவதற்கும் சிலர் சுணக்கமின்றிக் கருப்பநிலையெய்த விரும்புவர்.
சில நோய்கள் அரும்பும் காலத்தில் மட்டுமே பிள்ளைப் பேற்றை அடையமுடியும். தன்னியல் அதிநாடியிறுக்கம். கருப்பையகவணிவாதை இளம்படு இதய இருகூர் துளையிடுக்கம், போன்ற பல நிலைமைகளே இளம்படு பருவகாலங்களில் கண்டு பிடிப்பது நன்று. இவை காணப் படின் கருப்பம் உறுவதைத் தள்ளிப் போடல் நன்று அல்ல.
ஆணுல் ஆலோசனைக்கு வருபவரில் இதய நோய், அதி நாடி யிறுக்க நோய், காச நோய், அல்லது ஊறுநீரியழற்சி ஆகியன கேடுறுத்தும் நிலைமையில் இருப்பின் இவர்கள் கருப்பநிலை அடைவது தீங்கை விளைவிக்கும். கருப்பமுறுவதைத் தடுக்கும் முறைகளேயே இவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
1. இருவரையும் வினவல்-கணவனையும் மனேவியையும் புறம்பு புறம்பாக வினவவேண்டும் ஒருவர் மற்றவர்மு ன் முழு விபரங்களைக் கூறத் தயங்குவர். இவ்விதமாக இருவரையும் தனித்தனியாக வின வியபின் இருவுரையும் முன் வைத்து வினவவேண்டும். சிறப்பாக அறியவேண்டியவை அவர்களின் வயது, தொழில், கல்யாண காலத்தின் கால நீட்சி முன்னர் கணவன் கல்யாணம் ஆகினவனு அப்படி யாகின் கணவனின் முந்திய தாரத்துக்கு குழந்தைகள் பிறந்தனவா, கருச்சிதைவுகள் நிகழ்ந்தனவா இவற்றைப்பற்றியறியவேண்டும்.
2. கலவி நிகழ்த்துவதில் நிகழும் இடர்கள்:
இவை முன்பு விபரிக்கப்பட்டுள்ளன.
3. முன்னர் கருப்பம் தரித்தவர்: முன்னர் கருப்பம் தரித்தவ ராயின் உயிருடன் எத்தனே குழந்தைகள் பிறந்தன என்றும், சாப் பேறுகள், குறைமாதச் சேதங்கள் எத்தனை என்றும் குறிப்புக்கள் எடுக்கவேண்டும்.
4 முன்னர் வேறு கல்யாணம் பண்ணியிருப்பின் எத்தனே கருத்தங் கல்கள் என்றும் குறிப்புக்கள் எடுக்கவேண்டும்.
5. குடும்பத்தினரின் பிள்ளே வளத்திறன்,
6. முன்னேய நோய்கள் கொனறியா, சிவிலிசு, சுவைக்கட்டு, விஜனகளாலும் வன்தாக்கங்களாலும் விதைகள் காயமுறல் ஆகியன முன்னர் ஏற்பட்ட, தோஎன அறியவேண்டும்.

Page 188
3.54 இளம்பெண் நோயியல்
7. கருப்பமுறுவதற்கு ஒவ்வா நோய்கள்-மதுநீரிழிவு, தூபாக்கிள் வாதை, தன்னியல் அதிபரவிறுக்கம் நாட்பட்ட ஊறுநீரியழற்சி ஆகியன உண்டோ என்றும் அறியவேண்டும். மேற் கூறப்பட்ட குறிப்புக்களை இருவரிடமும் இருந்து பெற்று மேலும் ஆய்வுகள் செய்யவேண்டும்.
8. மாதயிரிவைப் பற்றிய செய்திகள்:
பக்குவமடைந்த வயது-மாதச் சூழலின் நீடிப்புக்காலம், மாத பிரிவின் நீடிப்புக்காலம், மாதயிரிவில் இழக்கப்படும் குருதியின் அளவு, (கடும் -நேம்-சொற்பம்) இடர்மாதயிரிவு யா,-சிலர் தம் நாளாந்த உடலின் தளவெப்ப நிலைக் குறிப்புக்களையும் வைத்திருப்பர். இதி லிருந்து சூலிடப்படும் பருவ நாட்களே உத்தேசமாக மதிப்பீடு செய்ய முடியும் .
உடற் சோதனை:
சிறப்பாக இளம்படு தூபாக்கிள் வாதை, அதியிறுக்க இதயக் கலன நோய்கள், நாட்பட்ட ஊறுநீரியழற்சி ஆகியன உண்டோ அல்லது இல்லையோவென அறிய வேண்டும். இவை உளதாகின் கருப்பம் தரித்தல் உகந்ததல்ல.
1。母、山函酶 சோதனை: சேதமுருத மென்றிரை பலரில் காணப்படும். இதை விலத்தி ஆண்களால் உண்டாக்கப்பட்ட யோனிப் பொக் கணைகளைப் பல பெண்களில் கண்டிருக்கிறேன். நிறைவுரு மன வினைக்கு ஏதுவாக நூற்றுக்கு ஐந்து பெண்களில் இது இருந்தது.
சிலரில் யோனிப் பிரிசுவர்களும் காரணமாயிருந்ததை நானறிவேன்
2. பின்திரும்பிய கருப்பை:
இது சிலருக்கு கருக்கட்டல் நிகழ்வதைத் தடுக்கும். இதைப்பற்றி முன்னர் விபரிக்கப்பட்டது. என அனுபவத்தில் இக்காரணங்களால் பல ஆண்டுகளாகக் கருவுருப் பெண்களுக்கு இப் பின்திருப்பத்தை அறுவை வினையால் முன்திருப்பம் செய்தேன். பலர் இரண்டொரு மாதங்களுள் கருப்பம் தரித்துக் குழந்தையைப் பெறுவதையும் பின்னர் தொடர்ந்தும் பெறுவதையும் நான் அறிவேன். அழற்சிசவ்வு ஒட்டல் களால் பின் திரும்பிய கருப்பைகளைக் கட்டாயமாக முன்திருப்பம் செய்யவேண்டும். பலர், பின்திருப்பமுற்ற கருப்பையானது கருத் தரித்தலைத் தடுக்காது என்ற கருத்துடையவர். ஆனல் இக்கூற்று முற்ருன மெய்க்கூற்றில்லை. அனுபவம் கூடவே கருப்பமுருர் என வைத்தியர் அறிவார். முன்திருப்பம் செய்தபின் கணக்கமின்றிப் பலர் கருப்பறிலே அடைவர்
- (

as
மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 5
3. (Up 6öT LD Lq ji5g5 சுருப்பை: பலரில் இவ்வகையான கருப்பைகளைக் கண்டிருக்கிறேன். இந்நிலைம்ையில் ஒரேயொரு பெண் தான் கருப்பம் உற்றதை வியப்புடன் கண்டேன். இவ்வகையான பெண்கள் எல்லோரும் கருப்பமுறுவதில்லை எனக் கூறின் மிகையாகாது. இதற்கு இந்த முன் வளைவைத் திருத்தம் செய்வதற்கு ஒரு புது செப்பம் செய் அறுவை வினையைக் கையாளுகிறேன். இதில் கருப்பைக் கழுத்து மட்டத்தில் முன்பக்கத்தில் குறுக்கு வெட்டும், பிற்பக்கத்தில் நீள்வெட்டும் இதனுடன் ஒர் ஆப்புரு வடிவில் கருப்பைக் கழுத்திழையகற்றலையும் (பிற்கவரில் கழுத்துக் கால்வாயையடக்காது) செய்வேன். முற்பக்கக் குறுக்கு வெட்டை நெட்டாங்காகவும் பிற்பக்க நீள்வெட்டைக் குறுக் காகவும் தைக்க வேண்டும்.
4. குறைவளர்த்திக் கருப்பையைச் சிலர் ஓமோன்கள் கொடுத்து வளர்ப்பர். இதனுற் கெடுதியொன்றும் விளையாது, ஆனல் கழைப்புச் செய்ய முடியா கருப்பைகளுமுள. சிலருக்கு நீடிய காலத்துக்கு அல்ம்ாதயிரிவு காணப்படின் கருப்பையானது குறைவளர்த்தியுற்றிருக் குளோமிபீன் அல்லது மனித கொனுட்டுத் துரோபின் தீர்வு செய்ய வேண்டியவர்கள் முன்னதாக ஈத்திரசன்களைக் கொடுத்து கருப்பையைத் தழைப்புச் செய்தல் முக்கியமாகும்.
5. கூபகச் சோதனை: நார் தசையோமாக்கள் சூலக்க் கழலேயங்கள் ஆகியன இருக்கக்கூடும். சூலக கருப்பையக வணியோமாக்கள் பெரும் பாலும் கருக்கட்டலைத் தடைசெய்யும். கலவி இடருயுயாவால் கலவி ஆனது அருகிலாக நிகழலாம். சிறப்பாகக் கருப்பை நாரோமாக்கள் குலிடலைச் சோம்பிக்கும். பல நாரோமாக்களையடங்கிய கருப்பைகளு டையவர் நீண்ட கால மலட்டுநிலை எய்திய பின்னர் ஆலோசனைக்கு வருவர். இவர்க்ளுட் பலர் தொடக்கத்தில் இரண்டொரு குழந்தை களையும் பெற்றவர்களாயுமிருப்பர். பின்னர் மேலும் தழைப்புறம் நாரோம்ாக்களால் மலட்டு நிலை எய்துவர். நீண்டகால மலட்டு நிலை யுற்ற ஒரு வைத்தியனின் ம்ன விக்கு அறுவை வினை முறையால் பல் பரும் ன்களுடைய கருப்பையிலிருந்து 28 நாரோம்ாக்களை அகற்றினேன். மூன்று மாதங்கள் பின்பு அவள் முதற்றடவையாக கருப்பமுற்ருள். நாரோம்ாக்கள் கருப்பைக்குழாய்களின் உள்வாய்களைத் தடைசெய்யக் கூடும். கருப்பைக்குழாய்களை மிக நீளச்செய்யும். சூலகங்களையும் கருப் பைக்குழாய்களின் வயிற்றுக் குழிவாய்களிலிருந்து இடம் பெயர்க்கும். நாரோம்ாக்கள் கருப்பையையும் இடம் பெயர்க்கும். கலவிக்கு இடர் களையும் உண்டாக்கும் .
சூலகச் சிறைப்பை நிலை (இசுரெயின்-இலெவெந்தால் ஒருங் Gasr L.L9-)

Page 189
356 இளம்பெண் நோயியல்
கூடகச் சோதனையில் இரு சூலகங்களும் பெருத்திருப்பதாக அறியப் படும். கூபகப் பொக்கணை நோக்கலில் செய்யும் நோக்கியை யோனி வழியாக உட்புகுத்தி சிறைப்பைகளுடன் பெரிதானதும் தட்டை யானதும் வெண்ணிறமுமான சூலகங்களின் சிறப்புத் தோற்றத்தை
சில வைத்தியர் இவ்வகைப்பட்டவருக்கு குளோமிபீன் தீர்வு செய்து கருக்கட்டலை உண்டாக்கியிருக்கின்றனர்.
பெரும்பாலும் நான் சூலகங்களின் சிறைப்பைகளைப் பொள்ளல் செய்து அடக்கியிருந்த பாயியைப் பிசுக்கியகற்றியபின் ஆப்புருயிழைய அகற்றலே இரு சூலகங்களுக்கும் செய்வேன். பலர் இதன் பின் கருத் தரித்து நிறைமாதம் அடைந்ததையும் நானறிவேன். இலங்கை வைத்தி யருக்கு இச்சிறப்பு அறுவைவினையை நான்தான் முதன் முதலாக அறிமுகம் செய்தேன். இது பலன் விளேவிக்கும் அறுவைவினையாகும். மாதயிரிவுகள் பின்னர் ஒழுங்காகத் தோன்றி கருக்கட்டலும் நிகழும்,
ஆய்வுகள்.
ஆண் மலட்டு நிலை:
ஒரு குழந்தைக்குத் தகப்பணுகினுகின் அது அவனின் பிள்ளை வளச் செறிவுக்கு ஒரு சான்ருகும். பல ஆண்கள் ஒரு குழந்தைக்குப் பின்னர் தகப்பணுகும் வல்லமையில் குறைவடைகின்ருர்கள். இவர்கள் தொடக் கத்திலேயே வல்லமைக் குறைவடைந்தவர்களாகவிருந்து பின்னர் மிகக்குறைவான நிலைமையடைந்தவர்களாவர். இளம் ஆண்கள் 2-3 குழந்தைகளுக்குத் தகப்பணுகின் அவர்களின் சீமன்வளம் செயற்திற னுடையதென கணிக்கமுடியும். வயது மிக மூத்தோரிலும் நோய் வாய்ப்பட்டவரிலும் இவ்வளம் குறைவாம். நூற்றுக்கு 50 குறைவள முடையவரிற்கு புறவீனலுறுப்புக்களில் பிறழ்வுகள் காணப்படும். சீமன் ஆராய்வும் பிறழ்வுகளைக் காட்டும்.
1. சீமன் ஆராய்வு: 2-3 நாட்களுக்குச் சீமனை வெளிவிசாது அடக்கல் செய்தபின்பு அல்லது ஈனலுறுப்புச் சிற்றருட்டலுக்குப் பின்னர் சீமன் வெளி வீசப்படும். கலவி நிகழும் பொழுது வெளிவீச எத்தனிக்கும் சீமனே ஓர் உலர்ந்த தூய கண்ணுடிக் குப்பியுள் இட்டு வானிலை வெப்பநிலையிற் பேணி உடனடியாக ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். நீர்பாயமாகிய 3 மணி நேரத்துக்குள் அதனைச் சோதனைக் குட்படுத்தவேண்டும். விட்டு சூழல் நிலைமைகளில் சீமன் மாதிரிக்கூறே சிறந்த முடிவுகளைத் தெரிவிக்கும். இரு தடவையாகினும் இவ்வாய்வைச் செய்யவேண்டும். சிலரில் உளத்தடை நிலைமைகளிஞல் " .
 

மலடும் (கருவளமின்மை குறைகருவளமும், 357
அருட்டியும் சீம்ன்பாயி போதியளவில் வெளிவருவதில்லை. வீட்டில் நிகழ்ந்த கலவியில் சீமன் பெரும் தொகையில் வெளியேறும் பின்னர் கூடத்தில் சீமனின் பல கூறுகளை ஆய்வர். ஒரு க. சமீ, கனவளவுடைய பேம்களின், எண்ணிக்கை அசையும் தகைமை, தலேமுண்டம், வால் ஆகியவற்றின் உருவமைப்பு, சீழ்க்கலங்களுண்டா, எனவும் அறிவர். சீழ்க்கலங்கள் வளத்தை அவ்வளவு பாதிப்பதில்லை. பேம்களின் கோலங் கள் ஆகியனவும் கீழ்த்தரப்படும் அட்டவணைக் கூறுகளில் விளக்கத் தைத் தெரிவிக்கும்.
நல்லவளம் LDL ".IL LITT GÖT குறை மிக இழிவான
6 u 6ar Lhb gj GT i କର ! ତtTit)
மி. இலீ. அளவில்
பாயியின் கனவளவு 2-5 1 - 2 0 1 سے 5 سے り。5
க்கு குறைவு
g; . gr, L8 C3 i Luth
எண்ணிக்கை 60-120 கோடி 30 கோடி 30 கோடி 10 கோடி
க்கு கூட க்கு குறைய க்கு குறைய க்கு குறைய
6-8 ஒரைகளில்
அசையும் தகைம்ை நூ. வி. 40 0 30 30
அளவில் L (5G0IDL க்கு குறைய க்கு குறைய
தலை, மூண்டம்,
வால் உருவமைப்பு 80 50 50 50
குறைய (U5GŪ) MOULI
இரசாயன ஆய்வில் பேம்பாயியில் புறற்ருேஸ் அளவு (பழலெல்லம்) முக்கியம் ஆகும். இது பேமுயிரிகளின் அனுசேபத்துக்கு முக்கியம் வாய்ந்தது. இது இவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும். சீமன் வீசுவேளையில் புறற்ருேஸ் அளவு 200-300 மிகி. 4-8 ஒரை களுக்குபின் 100 மி. கி. ஆகும். அல்பேமுயிரியுயாவில் புறற்றேஸ் பெரும்பாலுமில்லை.
விதை உயிரிழைய ஆய்வு
இது பேம் பிறத்தலில் வழுகலுண்டா என்றும், இவை படைக் கீப்பட்டபின் பீனத்தையடைவதற்குத் தடைகள் உண்டா என்பதை யும் உணர்த்தும்,

Page 190
58 இளம்பெண் நோயியல்
11. சூலிடல்:
நேம உடற்கட்டுடன் ஒரு பெண் ஒழுங்கு முறையில் மாதந் தோறும் மாதயிரிவு தோன்றின் அவள் சூலையிடுகின்ருள் என உணர வேண்டும். அவளுக்கு ஒல்கும்ாதயிரிவு ஒழுங்காக தோன்றினும் அவள் அடுத்த மாதயிரிவு தோன்ற ஏறத்தாழ 2 கிழமைகளுக்கு முன்பு சூலிடுகின்ருளெனக் கருதவேண்டும். அவளுக்குப் பல மாதங்களுக்கு மாத யிரிவு தோன்ருதாகின் அவள் அல்மாதயிரிவுயாவால் துன்புறுகிரு ளென்றும் அவள் சூவிடுவதில்லையெனவும் எண்ணவேண்டும்? நீடியகால இடைவேளைக்கு பின்பு அவளுக்கு நீடியகாலக் குருதிவடிதலும் ஒழுங் கற்ற முறைக் குருதிவடிதலும் தோற்றின் அவள் கருப்பைவாதைக் குருதியுயாவால் (சுருேடரின் நோய்) வருந்துகிருளெனக் கருதவேண்டும்.
இப்படிக் கருதினுலும் வேறு உண்மைச் சான்றுகள் கொண்டு சூலிடலை நிச்சயிக்கலாம்.
1. தள உடல் வெப்பப் பதிவுகள்:
பெண்ணுவள் காலையில் கண் விழிக்கும்பொழுது தன் உடலின் வெப்பநிலையை அளவிட்டு ஒரு தாளில் திகதியையும் வெப்ப வளவையும் பதிவு செய்யவேண்டும். இவ்விதமாக 2-3-4 மாதங்களுக்குக் குறித்து வரின் குலிடல் நாளேயும் மாதாந்தம் இரண்டொரு நாள் அது உறும் விலகலையும் அறியமுடியும். பெரும்பாலும் மாதச் சூலிடப்படும் காலப் பகுதியை அறிய முடியும்.
இவ் வெப்ப அளவுப் பதிவு ஏறத்தாழ நூற்றுக்கு 78-80 பெண் களில் சூலிடலை உணர்த்தும். சிலரில் சூலிடலைக் காட்டும் வெப்பநிலை யானது ஒர் சிறப்பு உயர்வை அந்நாட்களில் காட்டுவதில்லை.
ஓரித யோனி அப்பல்கள் : இந்த அப்பல் கண்ணுடித் தட்டுக் களைச் சம அளவில் ஈதரையும் 95% அற்ககோலேயும் கொண்ட ஏதனங் களில் இட்டுப் பின்னர் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் பின்னர் சிறப்பு சாயமூட்டி யோனிக் கலங்கள் வகைப்படுத்தப்படும். இவை கொம்பாக்கம் பெற்ற கலங்கள், கொம்பாக்கம் உறும்கலங்கள் மேற் பரப்புத் தளக் கலங்கள், ஆழ்தளக் கலங்கள் என நான்கு வகையாகப் பிரிக்கப்படும்.
(ஈத்திரசன் ஆதிக்கத்தில் சூலிடலும் கொம்பாக்கத்தின் உச்ச அளவை எய்திப் பின்னர் நாவாயுருவாக்கமடையும் (புருேசெசுற்றேன்). இந்த ஆய்வு ஒர் இலகுவான முறையாகும் ஆணுல், இதனைச் சோதிப் பதற்கு கலங்களேப் பற்றிய அனுபஅறிவும் நீடிய கால நேரமும் தேவைப்படும்.
 
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 359
கருப்பையகவனி உயிரியற் கீல ஆய்வு:
இதனை உத்தேச மாதயிரிவுத் தொடக்கத்திற்கு இரண்டொரு நாள் முன்னதாகச் செய்யவேண்டும். இவ்விழையச் சோதனை ஒரு நற்றழைப் புற்ற சுரப்பு அவத்தைக் கருப்பையக வணியைக் காட்டும். இவ் வாய்வால் கருப்பையக வணித் தூபாக்கிள்வாதையும் வெளிப் படுத்தப்படும். இதற்காக ஒரு சிறப்பு திருவல் கருவியுண்டு.
ஊறுநீரில் பிறெக்னன்டயோல் அளவின் மதிப்பீடு:
மஞ்சள் சடல அவத்தையில் நாள்தோறும் 2 மிகி, அளவு பிறெக்னன் டயோல் 24 ஒரைகளுக்குத்திரட்டிய ஊறுநீரில் காணப் படும். இதற்கு ஒரு சிறப்பு ஆய்வுகூடம் தேவைப்படும்.
ஈனற் சுவட்டுத் துர பாக்கிள் வாதை:
இதில் கருப்பைக்குழாயும் கருப்பையகவணியும் பாதிக்கப்படும். சில மலட்டு நிலைமைகள் இதனலுண்டாகின்றது. எனவே, தூபக்கிள் நோய் ஈனற்சுவட்டில் தற்காலத் தூபக்கிள் நோய் தீர்வையே அளிக்கவேண்டும்.
பெண்ணின் கருக்கட்டல் வளத்தை மதிப்பீடு செய்தல்:
1. கருப்பைக் குழாய் நிலைமை பற்றிய ஆய்வுகள், அவை திறந் திருக்கிறனவா?
இந்த ஆய்வை மாதயிரிவு நின்றபின் 7-10 நாட்களுள் Garufu Lu வேண்டும். இக்காலக் கூறில் கெடுதிகள் விளேயா. கருப்பைக் குருதி வடிதல் இருக்கும் வேளையில் இவ்வாய்வை செய்யவேபடாது.
2. சோதனை உறுப்பினுள் கருப்பையூடாக வாயுவை உட் புகுத்தல்:
வாயு வயிற்றுக்குழிக்குட் புகின் ஒரு குழாயாயினும் திறந்திருக் கின்றவென்பதனை அறியலாம் வளிமண்டலக் காற்றை அல்லது C0 ஐப் இதற்கு பயன்படுத்த சிறப்பான ஆய்வுக் கருவிகள் உள.
3. கருப்பை கருப்பைக்குழாய் இறேடியோ வரைபு. இறேடியோக் கதிர்புகவிடாப் பாயியை பயன்படுத்திக் குழாயின் நிலைமையை அறியமுடியும், இது குழாயானது புழையடைப்புற்ற இடத்தைக் காட்டும் கருப்பைக்குள் உள்ள ஏனய நைவுகளே இடம் பிடித்து

Page 191
360 இளம்பெண் நோயியல்
குறித்து தெளிவாகக் காட்டும், இதற்கு வேண்டிய கருவி ஒரு வில் கின்சன் கானுளியும் சிவிறி நிறைந்த இலிப்பயடோல் பாயியு மாகும். இதைச் சுெய்வதற்கு உணர்வழிப்பு அல்லது பெதிடீன் மருந் தேற்றல் செயவேண்டும்.
யாதாவது உளதா கின் இவற்றை நிகழ்த்தும் வேளையில் கருப்பைக் குழாயில் பிடிப்பு நிலையுண்டா கி பழையடைப்பு உண்டென்ற தவருன முடிவைத் தெரிவிக்கும். இது மேலே கூறப்பட்ட ஆய்வுகளிலுள்ள குறைபாடாகும். குறைந்தவள வில் மூன்று தடவையாயினும் குழாய் வாயு உட்புகுத்தல் அல்லது கருப்பைக்குழாய் வரையம் ஆகியன செய்த பின்னர்தான் புழையடைப்புண்டென்ற முடிவுக்கு வரவேண்டும். இந்த வகைப் புழையடைப்பு உளவிறுக்க நிலையாலாகக்கூடும். சிலரில் இவ் வாய்வுகள் ஒரு முழுதும் பிழைபடாத முடிவுகளைத் தெரிவிப்பதில்லை. சிறப்பாகப் புழை படைப்புண்டென்று தெரிவிப்பனவற்றில் 37 நூ.வி. புழையடைப்புக் காணப்படவில்லை. கருப்பைக்குழாய் வரையத்தில் புழையடைப்புண்டென்று காட்டப்பட்டவையில் 15 நூ. விக்குப் புழையடைப்பில்லையாம்.
இந்த ஆய்வுகளில் இருந்திட்டொருக்க்ால் விரும்பா விளைவுகள் உண்டாகக்கூடும். திடீர் நோ, மடிவு, வாந்தி ஆகியனவும், நாள முள்ளே இறேடியோக் கதிர்புக விடாப்பாயியானது அத்துமீறிப் புகுவதும் உண்டாகக்கூடும். பரிவிரிய அருட்டலும் தொற்றும் உண் டாகக்கூடும். பரவலாக அயடீன் உணர்ச்சியூட்டலும் தோலுக்கு உண்டாகும். கருப்பைக் குழாய்களில் பிற்காலத்தில் எண்ணெய்ச் சிறுமணியோமா வளர்த்திகளும் உண்டாகும். கருப்பம் தொடக்க கால கருப்ப நிலையிருப்பின் சிதைவுறக்கூடும். இச்சோதனையால் பல சிதைவுரு திருப்பத்தை நான் கண்டிருக்கிறேன். இவ் ஆய்வுகளை மாத பிரிவு வேளைகளிலும், இதற்கு மிக நெருங்கிய நாட்களிலும் கருப்பைத் திருவலுக்குப் பின்பும் சீழ் நிலைமைகளிலும், கருப்ப நிலைமைகளிலும் செய்யவேபடாது.
4. கல விக்குப் பின் நிகழ்த்தும் ஆய்வு:
(சிம்சின் அல்லது கூனரின் ஆய்வு)
இதன் நோக்கம்-கழுத்துப் பாயியானது குலிடல் வேளையில் கருக் கட்டலுக்கு உகந்த பண்புகள் உடையதாவென்றும், பேம்கள் பெண்ணின் ஈனற்சுவட்டின் உச்ச இடத்தை அடைந்து என்ன விதத்தில் இயங்குவனவென்றும் அறிவதற்காம்.
இச்சோதனே பானது பேம் கள் கழுத்துக் கால்வாயைக் கலவி யின் பின் அடைகின்றன வாவென்று தெரிவிக்கும். இவை கால்வாய்க்குட் புகின் முயக்கச் செயல்முறையானது விளவுத் திறனுடையதென்று
(
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும். 361.
காட்டும். இதில் கருக்கட்டல் நிகழவே வேண்டும். இந்நிலைமையில் கணவனின் மேனுல் செயற்கைபே முயிரியூட்டல் செய்யவேண்டியதில்லை. இச்சோதனையினது பேம்களின் மோய்ப்புத் தன்மையையும் இயங்கு தகைமையையும் உணர்த்தும்,
இவ்வாய்வைச் சூவிடலுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னம் செய்யின், கருப்பைக் கழுத்து மியூக்கசுவின் சிறப்புத் திறனையும் சூலிடற் குறிகளேயும் மியூக்கசுவிலிருந்து அறியமுடியும். இவை செவ் வையாகயிருப்பின் பேம்கள் இலகுவாகக் கருப்பைபைக் குழிக்குட் செல்லும் இச்சிறப்புக்கள் இல்லா நிலைமையில் கழுத்துப் பாயியானது பேம்களுக்கு எதிர்ப்பை காட்டும். குவிடல் வேளையில் கழுத்து மியூக்கசுகூடுதலாக வடியும். இது தெளிந்தும் கலங்களற்றுமிருக்கும். இதனை நுணுக்கு நோக்கிக் கண்ணுடித் தட்டிலிட்டு மூடுகண்ணுடித் துண்டால் மூடிப் பின்னர் இத்துண்டை மெல்லமாக உயர்த்தும் பொழுது மியூக்கசு ஒரு நூல்போன்று 10 சமீ நீளத்துக்கு இழுக் கப்படும். இதை இசுபின்பாக்கின் விளைவெனக் குறிப்பர். பிறிதொரு சிறப்பியல்பும், இச்சூலிடல் வேளையில் மியூக்கசுவுக்குண்டு. மாதச் சுழலில் குவிடல் காலத்தினதும் பிற்குலிடல் காலத்தினதும் கழுத்து மியூக்கசை நுணுக்கு நோக்கிக் கண்ணுடித் தட்டில் உலரவிடின் அது ஒரு பேண் தாவர இலையின் உருமாதிரிக் கோலமடையும். இது உயர் மட்டச் செறிவிலுள்ள ஈரத்திரசன் சோடியம் குளோறைட்டைப் பளிங்காக்கம் செய்வதால் உண்டாகின்றது.
செயல்முறை
முதலாவதாகச் ருவிடல் நாளை ஒரளவுக்கு கணக்கிட வேண்டும். முன்னைய உடல் வெப்பநிலை வரையங்களைக் கொண்டு உத்தேசமாக மாதயிரிவுத் தொடக்க நாளிலிருந்து 14 நாட்களைக் கழித்துக் குவிடல் நாட்களே கணக்கிடலாம். இந்நாளில் இருவரும் புணர்ந்த பின் உடனடி யாகக் கருவள ஆய்வுச் சாரகத்துக்குச் சென்றடைய வேண்டும். இதற்கு முன்னமாக 3 நாட்களுக்காயினும் புணர்ந்திருக்கவேபடாது. சோதனையை உடனடியாக மிகச் சுணக்கமின்றி நிகழ்த்தின் நன்று. காலேயில் புணர்ந்தபின் உடனடியாகச் சாரகத்துக்குச் (கிளினிக்கு) சென்று 2-6 மணித்தியாலத்துக்குள் மியூக்கசுவின் மாதிரிக் கூறினே எடுக்கவேண்டும். அல்லது மிகுதியான பேம்கள் போலவே உயர வாகப் பயணம் சென்றுவிடும்.
ஒரு சிம்சினிரின் தாரா புகுத்தியை யோனிக்குள் மெதுவாகச் செலுத்தி, அலகுப் கருப்பைக் கழுத்தைத் திட்டப்படுத்த வேண்டும். அதைக் கோசுத் துணி கொண்டு மொதுவாக உலர் நிலேயடையத் துடைக்கவேண்டும். பின்னர் ஒரு கிருமியழிப்புற்ற சிவிறியுடன் அல்லது

Page 192
362 இளம்பெண் நோயியல்
இறப்பர் குமிழுடன் தொடுப்புற்ற மழுங்கின ஓரங்களுடைய கண்ணுடிக் குழாயை கழுத்துக் குழாய்க்குட் புகுத்தி மியூக்கசை வெளி உறிஞ்சல் செய்து நுணுக்கு நோக்கிக் கண்ணுடித் தட்டின்மேல் இடல் வேண்டும். பின்னர் இசுபின் பாக்கின்சன் சோதனையைச் செய்து மூடு கண்ணுடித் தட்டை அதன் மேல் இட்வும். யோனி மடுப்பாயியில் இருந்து ஒரு மாதிரிக் கூறை யெடுத்துச் சோதிக்க வேண்டும். இது கடும் அமிலநிலையில் இருக்கும். இதனில் பேம்கள் அசையமாட்டாது. பேம்கள் இல்லையாகின் கணவன் அல்பேமியனே அல்லது அல்கு ஒல்கு பேமியணு எனவும் கலவிச் செயல்முறையிற் பிழையுண்டோ எனவும் இப்பாயியை அறியவேண்டும். சிலர் பிளாற்றினம் வசிவால் அல்லது உறிஞ்சு குழாயால் எடுப்பர். குருதி வடிதலே உண்டாக்கவே படாது. யோனி மடுவில் இருந்து பாயியை எடுப்பதற்குக் கறண்டிகளையும் பாவிப்பர் அல்லது கான் உளி கொண்டு வெளி உறிஞ்சலையும் செய்வர். சோதனையானது திருப்தியான முடிவு ஒன்றைத் தெரிவிக்காவிடின் மீண்டும் இரண்டொருதரம் செய்தல் நன்று.
சோதிக்கும்பொழுது:
கருப்பைக் கழுத்தின் நிலையை அறியவேண்டும். கருப்பை கடும் பின் திருப்பம் அடைந்து இருப்பின் பேம்கள் வெளிவீசலுற்ற வேளையில் புகுகை செய்ய இயலா நிலையை அடையும். அவை யோனி மடுவி லிருந்து பயணம் செய்யவேண்டிவரும்.
கருப்பைக் கழுத்தில் அரிப்புப் புண் உண்டோவென்றும் பார்க்கவும. சில கன்னிகளில் உடன்பிறப்பு அரிப்பும் உண்டு.
மியூக்கசுவின் சிறப்புக்கள்:
முன்னர் அதன் பெருகும் அளவையும் தெளிவையும் யாதா மொரு கலம் அற்ற தன்மையையும் குறிப்பிட்டோம். கவணவனின் பேம்பாயி திறனுடையதாகின் மியூக்கசுவில் 20 அல்லது கூடிய தொகைப் பேம்கள் நுணுக்கு நோக்கிப்பின் உயர் வலுப்புலத்தில் தென்படும். அவை அசைந்து முன்னேறும். ஒரு சில இதனில் அசையும் தகவு அற்றவை.
போதியளவு கழுத்து மியூக்கசு இல்லாத நிலைமை:
அற்ப அளவிலும், கலங்கள் நிறைந்தும் கட்டியாகிப் பிசின் போன்றும் இருக்கும். இவ்விதமாகக் காணப்படுவது கழுத்து மியூக்கசு வானது சூலிடல் மியூக்கசுவாகாது. ஈத்திரசன் ஆதிக்கத்தின் குறை வையே உணர்த்தும். அல்லது இது சூலிடலுக்குப் பின்பு நிகழ்த்திய ஆய்வாக இருக்கலாம். சில பேம் திறனுடைய ஆண்கள் உளமறிப்பு நிலைமைகளினுல் போதியளவு பேம்களை வெளிவீசல் செய்வதில்லே என்பதனை மனதில் வைத்திருக்கவும்,

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 363
சில பெண்கள் கணவனின் பேம்களை ஒருங்கொட்டி செய்யும் முரண் உடலிகளைச் சுற்ருேட்டத்தில் அடக்கியிருப்பர்.
கேசுருெக்மில்லர் அத்துமீறிப் புகுகைச் சோதனை, கருப் பைக் கழுத்துப்பாயி காட்டும் எதிர்ப்பு:
இந்த ஆய்வுக்கு ஒரு நுணுக்கு நோக்கிக் கண்ணுடித் தட்டில் கணவனின் பேம்பாயியை ஒரு சொட்டளவில் இடவும். இதன் பின்பு மனைவியின் கழுத்துப்பாயியில் ஒரு சொட்டளவில் மேற்கூறப்பட்ட சொட்டுக்கருகாமையில் இட்டுப் பேம்களின் போக்கைக் கவனிக்கவும். பேம்கள் சிக்கலுற்று கும்பல் உறும் அல்லது கழுத்துப் பாயிக்குள் கூட்டம் கூட்டமாக எல்லையைக் கடந்து செல்லும், முந்திய இயலா விளைவு கழுத்துப் பாயி பேம்களுக்குக் காட்டும் எதிர்ப்பைத் தெரி விக்கும். இதனைச் சிலர் பேம் ஒருங்கொட்டிகளால் நிகழ்வதென இருதுவர். கழுத்துப் பாயியின் தடித்த நிலையானது ஈத்ரசனின்குறைவால் எனக் கருதப்படும்.
மியூக்கசு காட்டும் இந்தப் பேம் எதிர்ப்பை ஒமோன்கள், நுண் ணுயிரெதிரிகள் உணவு முறைகள் ஆகியவற்ருல் திருத்தம் செய்யலா மெனப் பலர் போதிய சான்றுகளைக் காட்டாது கூறுகின்றனர் இதனை ஏற்கவே முடியாது.
வேறு சிறப்பு ஆய்வுகள்
பரிவிரியக் குழி நோக்கல், யோனிவழி கூபகக்குழி நோக்கல் ஆகிய வற்றைச் சில நிலைமைகளில் செய்வர். நீடிய கால மலட்டுநிலைக்கு ஓர் அறியமுடியாத காரணத்தைக் கண்டு பிடிப்பதற்காகவும் கருப்பைக் குழாய் ஆய்வுகள் ஒரு திடமான முடிவுகளைத் தெரிவிக்காத காரணங் களுக்காகவும் செய்வர். சிலர் இதனில் பெரும்பாலும் பரிகுழாய் அல்லது பரிசூலகச் சவ்வொட்டிகளும் கருப்பையகவணி ஒமாக்களும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும். ஒரு கருவளச் சாரத்தில் நேம ஈனலு றுப்புக்கள் உடையவரெனக் கருதப்பட்டவர்களில் நூற்றுக்கு 30 - 50 பெண்கள், ஓர் கருக்கட்டற் தடைக்காரணியைப் புதிதாகத் தெரி வித்தனர்.
இவ் ஆய்வு வசதிகள் இல்லாப் பிணி தீர்மனைகளில் வயிற்றைத் திறந்து கண்கூடாஇ இந் நிலைமைகளேக் கண்டுபிடிக்கலாம். இதனுல் வேறு ஆய்வுகளையும் தொடர்ந்து செய்து தீர்வு செய்யலாம்.

Page 193
364 இளம்பெண் நோயியல்
தீர்வு முறைகள்:
மணமக்களில் சுணக்கமின்றிக் கருவுற வேண்டும் என்று விருப்பம் காட்டும் இருவரின் ஈனலுறுப்புக்களின் அமைப்பையும் வினையங்களையும் இலவியின் காரணத்தையும் கலவிச் செயல் முறையையும் விளக்க வேண்டும். யாதாமொரு குறையும் இல்லையென்றுகூறி அவர்களின் மனநிலை தளராதிருக்க ஊக்கம் அளிக்கவேண்டும்.
2. முயக்கம் நிகழ்த்துவதற்கு இடர்கள் இருப்பின், அவற்றைத் தீர்ப்பதற்காகிய முறைகளை விளக்கிக்கூறவும். சில உடல்நிலைம்ை களிலும், சாதாரண உடற்கிடைகளிலும் கலவியை நிகழ்த்தவே முடியாது. கடும் கொழுமை நிலை (பெண்ணுக்கும் ஆணுக்கும்), சிறிய பீனம் ஆகியன இருப்பின் பின்னிருந்து முயங்கும் உடற்கரணத் தைப் பயன்படுத்த வேண்டும்.
3. அல்பேமுயாவிலும் ஒல்குபேமுயாவிலும் நாட்பட்ட உடல்நலக் குறைகள் இருப்பின் அதனைச் செவ்வையாக்க வேண்டும். மிதவிஞ்சிய வேலைப்பாடு, ஏக்கநிலைகள், கொழும்ை, சீழ்த்தநிலை, குடிவெறி, புகைத்தல் ஆகியவற்றைச் சீர்ப்படுத்த வேண்டும். சீழ்த்த நிலை தீர்க் கப்பட வேண்டும். கொழும்ையை உணவுப் பத்தியமுறையால் குறைக்க வேண்டும். சிலருக்கு அந்திரசன்கள் 5-10 மிகி. அளவில் சில கிழமை களுக்குக் கொடுப்பின் பயனுடையதெனக் கூறப்படும். இது பீன வலுவைச் சிறிதளவு கூட்டும். ஆனல் பேம்பிறப்பித்தலைக் கூட்டுவதை யான் இன்னமும் காணவில்லை. பித்துயித்தறி மூலமே அந்திரசன்கள் செயலாற்றும்ெனக் கருதுவர்.
நல்ல ஒரு உல்லாசப்பிரயாணமும், அதஞல் அடையும் மகிழ்ச் சியும் உடல் ஒய்வும் சீமன்பாயியின் சிறப்பைக் கூட்டும்.
4. பீன வலுக்குறைவையும், முதிரமுன் நிகழ் பேம் வீசலைத் தீர்ப் பதைப் பற்றியும் முன்னர் கூறப்பட்டது.
5. ம்றைவிதைய நிலைமைகளில் செய்ய வேண்டிய தீர்வைப் பற்றி
முன்னர் கூறப்பட்டுள்ளது.
6. விதைகளின் நாளப்பரிவிரிக்கமானது பேம் எண்ணிக்கையைக்
குறைக்கும்.

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 365
ஒல்குபே முயா:
ஒமோன் தீர்வு முறையால் பேம்பிறப்பித்தலே கொணுடோ துரோபின் (சனனஊட்டி) குறைவால் உண்டாக்கப்படும் குறை பேமுயா விற்கு மனித கோறியோன் கொணுடோ துரோப்பினுரடாக (HC)ே தூய புடைப்புத் தூண்டு ஒமோனையும் (FSH) சேர்ப்பின் இவை பேம்பிறப்பித்தலைத் தூண்டுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற் றுடன் மனித மாதவிடைவுக் கொணுடோதுரோபினை (பேகொணுல்) சேர்ப்பின் இளம் பேமுயிரிகள் முதிர்ச்சியடையும் எனத் தெரிவிக்கப் படுகின்றன.
இத்தீர்வு முறை வெற்றிதரக்கூடிய நிலமைகள்
1. குறை கொணுடிய குறைவிதயம்
2. அல்பேமுயிரியுயா குறை பேமுயிரியுயா
இலேடிக் கலங்களையும் சீமன் கீாவிப் புன்குழாய்களையும் முன்னரே மனித கொணுடோ துரோபினுல் பதப்படுத்திய பின்பு மனித மாதவிடைவு கொணுடோ துரோபினேயும் (பேகொணுல்) சேர்த்து வழங்கவும். இதில் முழுமையாக பேமினல் நிகழ்ந்தது எனப் பல ஆய்வாளர் காட்டியிருக்கின்றனர். மனித பித்துயிர்த்தறி ஓமோன் கிடைப்பின் பேகொணுல் வேண்டியதில்லை.
3. பித்துயித்தறி துமி அகற்றலானது மது நீரிழிவு வாதைக்கும் பித்துயித்தறி சுரப்பி ஒமாக்களுக்கும் செய்யப்படும். செம் செல் (1958) மனித பித்துயித்தறியிலிருந்து பித்துயித்தறி ஓமோனைப் பிரித் தெடுத்தார். அவர்கள் இவை பேமுயிரிக் கலங்களேத் தழைக்கச் செய்து முதிர்வு மாற்றங்களேச் செய்யுமெனக் காட்டினர். இதனுலேயே பேகொணுலை 5 மி.கி. அளவில் நாளாந்தம் 64 நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்கின்றனர்.
வேறு சிலர் தெசுத் தெற்ருேனேக் கொடுப்பதால் பேமினல் நிகழு மெனக் கூறுவர். இது மீள்உதைப்பு முறையால் பித்துயித்தறியைத் தூண்டுவதெனக் கூறுவர். தற்காலத்தில் இம்முறையால் யாதாமொரு திருத்தமும் நிகழ்கின்றதில்லையென நம்பப்படும். என் அனுபவமும் அதுவேயாம்.
மனித விதைகளில் நிகழும் தொழிலியல் மாற்றங்கள் இன்னமும் செவ்வையாக அறியப்படவில்லே. விதையில் உருவாகும் தெசு தெற்முேன் ஆனது இலேடிக் கலங்களிலிருந்தும் விதையிலிருக்கும் பேம்கோனியங்

Page 194
366 இளம்பெண் நோயியல்
கிளிலிருந்தும் பல அவத்தை நிலைகளையடைந்து பேமுயிரிகளாக ம்ாறு கின்றது. (பேமீனல் முறை) பேமினல் மேலணியிலிருந்து உதிர்ந்த பின் ம்ே லும் முதிர்வு மாற்றங்களேயடையும். முழு மாற்றங்கள டைந்து பேமுயிரிகளாகுவதற்கு ஏறத்தாழ 74 நாட்களாகுமென்றும், வேறு சிலர் இவ்வகையான ஒரு பேம் நிகழ 90 நாட்கள் எடுக்கும்ெனவும் கூறுவர். முதலாவதாக பேம்ை உண்டாக்கும் மூல மேலணிக் கலங்கள் இருக்கவேண்டும். இது விதையிலிருந்து பெறும் உயிரிழைய கலஆய்வால் அறியப்படும். விதையின் தொழிலியல் பற்றியும் அதில் நிகழும் உயிரியல் இரசாயன மாற்றங்களைப்பற்றியும் தெளிவான நல்ல விளக்கம் இன்னமும் பெறப்படவில்லை. தெசுருெ?ற்றமுேன், 1935-ம் ஆண்டில் தான் அதன் தூய வடிவத்தில் இடேவிட் என்பவரால் பிரித்தெடுக்கிப் பட்டது பேம்கோனியத்திலிருந்து பேம்ாற்றிட்டுக்கள் வரை நிகழும் மாற்றங்களையும் ெேகானல் ஆட்சிசெய்யும். இந்த முழுச் சுழல் நிகழ ஏறத்தாழ 74 நாட்கள் எடுக்கும், இது வெவ்வேறு வளர்த்திக் காரணி களின் உயிரியல் - இரசாயன மாற்றங்களைப் பற்றி நல் விளக்கம் ஒன்றும்ே பெறவில்லை.
மனித க்ோறியன் துரோபின்கள் (H. C. G.) இலேடிக் கலங்களைத் தூண்டி அந்திரசன் ஆக்கத்தை ஊக்குவித்து அந்திரசன் போதாக் குறையைத் தீர்க்கும். இவை சீமன் பிளாசும்ாவின் சுரத்தலை மிகைப் படுத்தும். துணைச் சுரப்பிகளால் துணைப்பாலின தோற்றச் சிறப்புக் களையும் ஊக்குவிக்கும். எனவே, இந்த ஒமோன் ஏற்படுத்தும் சீமன் பிளாசும்ாக் குறைவையும் வெளிவீசுகின்ற சீமன்பாயியின் அளவு 1.5 மி. இலீக்குக் குறைவாயிருக்கும் போது துணைப் பாலின தோற்றப் பாட்டுக்குறைவிளைசலையும் கூட்டுதற்கு பயன்படும். இதன் செயற்றி றணுனது அகப்பிறப்பு புடைப்புத்தூண்டு ஒம்ோனின் தூண்டல ளவிலும் சீமன் காவிப் புன்குழாய்களின் தழைப்புநிலையிலும் தங்கி யிருக்கும். ஆகவே, இக்குறைகளிருப்பின் புடகத் தூண்டு ஒமோனையும் இடைக்கலங்கள் தூண்டு ஒமோனையும் (1. C. S. H.) சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
சில ஆய்வாளரின் கருத்துப்படி மனிதனின் பேமினற் பொறி முறையில் பித்துயித்தறி சனனியூட்டி ஒமோனினது பங்கு இளம் படு பேமற்றிட்டுகளை முதிர்வு செய்து முதிர் பேமுயிரிகளாக மாற்றுவதற்கு உதவுவதேயாகும். ஆனல், தொடக்க கால பேம்ற்றிட்டுவரைக்கும் உள்ள பித்துயித்தறி தழைப்பு ஒமோன்களால் அல்லது தன்னியல் பிலேயே நிகழ்கின்றது.
கீழ்வளரி பித்தியித்தறி அகற்றப்பட்ட ஒருவரில் பேம்காவிப் புன் குழாய்களின் உட்சுருக்க மாற்றங்கள் முழுவளர்த்தி அடைந்தபின்பு மிாளாந்தம் மாதவிடைவு ஒமோன்தீர்வு 67 நாட்களுக்குக் கொடுக்கப்

(மலடும் கருவளமின்மை) குறைகருவளமும், 367
பட்டது. பின்னர் செய்த பிரிவிழையச் சோதனையானது விவரத்துள் உதிர்தல் அடையக்கூடிய பருவ வளர்ச்சியுடைய பேமுயிரிகளை உரு வாக்கும். உட்கருக்க முற்று பேமினும் மேலணியானது தழைப்புற்ற தெனக் காட்டியது. 100 நாட்களுக்குப் பின் செய்தவிதையின் உயிரிழை யச் சோதனையானது கொள்ளளவில் ஒருமுழு நிறைவுற்றபேமினல் மீளத் தோன்றிவிட்டதைக் காட்டியது. ஆனல் இலேடிக்கங்கள் பெருக்க மடைவதற்கும் ஒரு திறனை வெளிவீசல் நிகழ்ததென்றதற்கும் சான் றுகள் கிடைக்கவில்லை. இது பேகொணுலின் குறைபாட்டை உணர்த்தி யது. பின்னர் பேகொணுலினதும் இழைய இடைக்கலத் தூண்டுஒமோ னினதும் கொள்ளீட்டைக் கூட்டும்பொழுது சீமன் பிளாசுமாவின் அளவு கூடியது. பேம் எண்ணிக்கையும் கூடியது. ஆகவே, இவ்வூட் டிப் பொருள்களின் விளைவுகளைப் பொறுத்து பிணியாளிகளை மூன்று வகுப்புக்களாக வகைப்படுத்தலாம், 1 அல்பேமுயிரி குறைவு 2. ஒல்கு (குறை) பேமுயிரி. (3) குறைவளமுடையவர் (பிறழ்வு பேம் எண் ணிைக்கை குறைவு பேம் அசைவுக்குறைவு அல்லது இரண்டும் சேர்ந்து காணப்படும்.)
மேலும் முதலாம் வகுப்பினரை தீர்வுக்கு முன் செய்த உயிரிழை யச் சோதனையைக் கொண்டு கீழ் வகுப்புகளாகப் பிரிக்கலாம். (அ) சிறிய புன்குழாய்களில் விவரங்களில்லை. மடலமைப்பில் சேற்ருேலிக் கலங்களும், பேம்கோனிய அமைப்பு வரைக்கும் உள்ள கலவக் சிஉறு
களும் உள. ஆணுல் பேம்மினல் மாற்றங்கள் இல்லை.
(ஆ) நேம புன்குழாய்கள் நேம, மட்டான தடிப்புடைய சுவர் கள் -இதில் பேம் கோனியங்களும் சேற்ருேலிக் கலங்களும் அடக்கப் பட்டிருக்கும்.
(இ) சில புன்குழாய்களில் இருந்திட்டொருக்கால் பேம் குழியங் கள் காணப்படும். ஆணுல் மிகுதியான புன்குழாய்களில் சேற்ருேலிக்
கலங்கள் மட்டுந்தான் உண்டு.
வகுப்பு (2) (ஒல்குபேமுயா) இது இருவகைப்படுத்தப்படும்.
(i) பேம் எண்ணிக்கையானது ஒரு மி. இலீக்கு 10 கோடிக்குக் குறைவாம்.
(i) பேம் எண்ணிக்கையானது. ஒரு மி. இலீக்கு 10 20 கோடிக்
குக் குறைவாகவும் காணப்படும்.
வகுப்பு (3) (நேம) அளவுக்குக் குறைந்த பேம் எண்ணிக்கை.
வெளிவீசலுற்ற ஒரு ஒரைக்குள் மி. லீ 20-40 கோடியாகவும் அல்லது

Page 195
368 இளம்பெண் நோயியல்
இவ்வெண்ணிக்கையுடன் 10% அயுையுந் தகவும் குறைவாக இருக்கும். அல்பேம் உயா விதைய உயிரிழையைச் சோதனை செய்யப்பட்ட பின்பு தான் சனனவூட்டி ஒமோன் தீர்வு செய்யப்பட்டது.
வகுப்பு 1. அ, ஆ, இல் தீர்வுக்குப் பின் பேம்ானல், பேம்முற் றிய பருவ மாற்றங்கள் ஆகியன தோன்றின.
வகை 2 இல் ஒரு மறுகை விளேவும் அவ்வளவாக உண்டாக வில்லை.
இதிலிருந்து-பெகொணுல் ஆனது பித்துயிர்த்தறி சனணியூட்டி ஓமோன்களின் போதாமையிருப்பின்தான் அது பேம்ஈனலேயும் பேம் களே உருவாக்குவதற்கு உதவும். இந்தப் போதாமையானது பித்துயித் தறிச் சுரப்பியால் சுரக்கப்பட்ட ஒமேஞனது குருதியில் விடுபடாததாலும் அல்லது உண்டாக்கப்படாததாலாம். உயிரிழையச் சோதனை ஆதி பேம்பிறப்புக் கலங்களின் முதற்தோற்றக் கலங்கள் காணப்படும்.
தீர்வை குறைந்த அளவில் 80 நாட்களுக்கு மட்டுமாயினும் கொ டுக்கவேண்டும். அல்லது விதை ஆய்வு இலேடிக் கலவப் பெருக்கம் காட்டினபோதும் வழங்கப்படவேண்டும்.
வகை 1, ஒல்கு பேமிகள்-சிலரில் குறிப்பிடத்த்க்க திருத்தம் காணப்பட்டது. மி. லிக்கு பத்துக் கோடிக்குக் குறைவாகவிருந்தவர்க ளில் பேம் எண்ணிக்கை 10-20 கோடிகளாகின
வகை 2. குறைவளமுடையவர்களில் நல்ல திருத்தம் தொகை யிலும் அசைவிலும் காணப்பட்டது. இவர்களுக்கு 30-60 மி. கி. பெகொணுல் தேவைப்பட்டன.
தீர்வைச் செய்யும்பொழுது ஒன்றை நினைவு கூரவேண்டியது, மணி தப் பேமினல் முறையானது சூழலில் நிகழ் மாற்றங்களுக்கு மிக உணர்ச்சித் திறனுடன் செயற்படுமென்பதையே. சில நோய் நிலைமை களிலும், அலசைத் தாக்கங்களுக்குப் பின்னும், சில பதார்த்தங்களே உட்கொண்ட பின்னரும், விதைகளைப் பல்வகைக் கதிர்வீசல்களுக்கு வெளிவைப்புச் செய்யினும், வெப்பத்துக்கு உட்படுத்தினும் இப் பேமி னல் தழைப்புக்கு அமிழ்வுகளும் பிறழ்வு மாற்றங்களும் தோன்றும். மனக் கிளர்ச்சி நிலைமைகளும் விதைகளுக்கு அடர் நிலைமைகளே உண்டாக்குமெனவும் கருதுவர். விதைகளில் நிகழ் நாளக் குருதிச் சுற் ருேட்டத்துக்கு இடத்து மாற்றமானபின் நாளப் பரிவிறுக்கம் நிகழின் அது வெப்பத்தையும் கூட்டி பேமுயிரித் தழைப்புக்கு அளவிலும்,
ಐಡಾ மாற்றங்களே உண்டாக்கும்.

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 369
நோய் நிலைமைகள்-வைரசுவாலாகிய நோய்கள் (சின்னமுத்து, பொக்கிளிப்பான், நி மோ னி யா , அக்கி) பேம் எண்ணிக்கை களுக்குக் குறைவையும் பேம் அமைப்புக்கு மாற்றங்களையும் உண் டாக்கும். எண்ணிக்கையானது அல்பேமி நிலையையும் எய்தக்கூடும். பின்னர் நிலைமை திருந்தி செவ்வன் நிலையையெய்துவதற்கு பல மாதங் களாகினும் செல்லும். எண்ணிக்கைக் குறைவுடன் அசைவுக் குறைவும் உண்டாகி பல்வகையான அமைப்பும் பிறழ்வான பேம் கொடிக்கலங் களும் உண்டாகக்கூடும்.
பேமினலெதிரிப் பதார்த்தங்களும் மேற்கூறப்பட்ட முறையில் தாக்கும். பேமினல் முறையில் தோன்றும் பேமற்றிட்டுகள்தான் சூழல் மாற்றங்களுக்கு அதிகம் உணர்ச்சியுடையனவாகும்.
விதை நாளப் பரிவிறுக்கம்:
சிறப்பாக இடது விதையைப் பாதிக்கும். இது காணும்பொழுது கடும் ஒல்குபேமுயுயாவும் வேறு பேமமைப்புப் பிறழ்வுகளும் காணப்படும். இடது பக்கத்திலும் நைவுகள் இருந்தபோதும் இரு விதைகளும் இது னல் தாக்கப்படும். இடது நாளக்குருதித் தேக்கம் அல்லது பின்நோக் கிய குருதிப் பாய்வும் நிகழ்ந்து, இரு விதைகளின் வெப்ப நிலையைக் கூட்டி குளிராக இருக்கவேண்டிய நிலையைத் தடுக்கும். அல்லது நாள நெருக்கம் பேமினலைத் தடைசெய்யும்,
நாளப் பரிவிறுக்கம்:
இது உள்ளவர்கள் மிகுதியோரில், அடர் நிலேமையால் பல வகையான சீமன் கலவத்தோற்றப்பாடுகள்காட்டப்படும். நான்எடுத்த குறிப்புகளில் இலங்கை ஆண்களைப் பொறுத்த மட்டில் தீர்வுக்கு வரும் பல ஆண்களில் மிகுதியோர் வடமாகாணம், கிழக்குமாகாணம், வடமேற்கு மாகாணம் ஆகியவறண்ட வெப்பப் பிரதேசங்களிலிருந்து வருபவர். இவர்களுட் பல ருக்கு விதைநாளப் பரிவிறுக்கங்கள் உண்டு. ஒர் ஆண்டில் பல மாதங்க ளுக்குச் சூழல் வெப்ப நிலையால் தளர்ந்து தூங்கும் விதைகளைத் தாங்கல் செய்வர். இப்பல்வகைக் கச்சுக்கள் வெப்ப நிலையை மேலும் கூட்டி பேமினலைப் பாதிக்கும், கலவி விருப்பத்தையும் தாழ்த்தும், குளிர்ப் பிரதேசங்களில் இவ்வகை மாற்றங்கள் நிகழ்வதில்லை. குளிர்ப் பிரதுே சங்களில் இக்காரணங்களால் பிள்ளைப்பேறுகளும் கூடவாகும். இது ஆராய்ச்சி செய்யவேண்டிய ஒரு குறிப்பாம். சூழல் காரணிகளைப் பற்றி மேலும் ஆராய்வு வேண்டும். பல தெரிந்தும் தெரியாத காரணி கள் மாற்றங்கூடிய காரணிகள் ஆகியன பேம் பிறழ்வு மாற்றங்களுக் குக் காரணமாகும்.

Page 196
370 இளம்பெண் நோயியல்
பேமினற் பொறிமுறையை அடக்கல்:
ஈத்திரசன் தெரோயிட்டுக்களினதும் அந்திரசன் தெரோயிட்டுக்க ளினதும் ஒர் உகந்த கூட்டுப் பொருளை உட்கொள்ளின் அது முற்முக மனிதப் பேமினற் பொறிமுறையை அடக்கல் செய்யுமென்பது தெரிந்த நிகழ்ச்சியாகும். இவற்றைத் தொடர்ந்து சிறிது காலம் சென்ற பின்பு அவற்றை நிறுத்தும்பொழுது பேமினற் பொறிமுறை மீண்டும் முன் போல்) தொழிற்படும். இவ்வகையான தெரோயிட்டுக்களில் ஒன்ரு:ன 6மெற்ரோட்சி புருேசெசற்றேன் அசிற்றெற்று (டிபோபுருேவீரா) கொண்ட ஒரு தனி உள்ளேற்றல் ஆனது பேமினலை முற்முக 150 நாட்கள் மட்டுக்கும் அடக்கல் செய்யும். ஆணுல், முதல் 21-30 நாட்களின் பின்பு பேம்களின் உருவத்திலும் அசைவுத் தகைமையிலும் கடும் மாற் றங்களைச் செய்யும். 35 நாட்களில் அவர் ஒரு மலட்டு நிலையை எய்து வார். மருந்துப்பொருள் இயங்கும் காலத்தில் பேம் உருவ வடிவங்கள் ஏனைய நோய் நிலைமைகளில் உண்டாக்கப்பட்ட அடர் கோலத்தைப் போன்று காட்டும். சில ஆதிவாசிகள் பேமினற்றடை செய்வதற்குச் சில தாவரப் பொருட்களைப் பயன்படுத்துவர். சில செயற்கை மருந் துப் பொருட்களும் உள. ஆனல் இவை பரவலான பாவிப்புக்கு உகந் தனவல்ல.
மனித விதைகள் பல்வகையான வன் தாக்கங்களுக்கு உட்படும். இவற்றல் சிறிது காலத்துக்கு பேம் உயிரியீனல் வினையம் மிகவும் பாதிக்கப்படக்கூடும். இருந்தும் காலப்போக்கில் நேம வினையமானது மீண்டும் நிலைக்கும். ஆண் மலடுகளில் பெருந் தொகையினருக்குச் சூழற் காரணங்கள்தான் இப்பேம் குறைபாட்டை உண்டுபண்ணுகி றது. இக்காலக் கூறில் பேம் எண்ணிக்கைக் குறைவு நிலைமையைக் காட்டும். இவர்களுட் பலர் பின்னர் நேம நிலையடைந்து குழந்தைப் பேறடைவர். புறத்துக் காரணிகளின் தாக்க விளைவைப் பற்றி மேலும் ஆராய்ந்து அறிய வேண்டும்.
சூலிடலைத் தூண்டுவித்தல்:
1. மட்டான குறைதைருேடிய நோயாளருக்குத் தைரொட்சினை வழங்கின் மாதயிரிவு சிலரில் ஒழுங்காக்கம் பெற்று கருப்பமுறுவதை நானறிவேன்.
2. சிலர் தம் உடலமைப்பு அழகைப் பேணுவதற்கு உணவைப் போதியவளவில் உண்ணுதிருப்பர். இதனுல் உடல் நிறையை இழந்தும் அல்மாதயிரிவும் உறுவர். நிறையானது முன்னளவுக்குக் கூட ஒழுங் கான மாதயிரிவு தோன்றி மீண்டும் சூலிடலும் நிகழும்.
 
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளம். 371
3. நீண்ட கால அல்மாதயிரிவுயா உள்ளவர்களுக்கு 3-4 மாதங் களுக்கு மாதந்தோறும் முதலிரு கிழமைகளுக்கு ஈத்திரசனையும் புருே செசுற்றமுேனையும் ஏற்ற எடைகளில் கலந்து கொடுத்து மாதந்தோ றும் மாதயிரிவையுண்டாக்கவும். மருந்துப் பொருட்களைக் கொடுத்து கருப்பை அகவணியை அகற்றுதல் மூலம் கருப்பைக் கழுவல் செய்து இத்தீர்வை நிறுத்தவும். பின்னர் ஒழுங்கான மாதயிரிவும் இத்துடன் சேர்ந்து சூலிடலும் சிலருக்கு உண்டாகி கருப்பம் தரித்தவர்கள் பலர். பின்பு சிலசமயங்களில் யாதாமொரு காரணத்தாலும் இந்த அகச்சுரப் பிகளின் சுழல் மாற்றங்கள் தடைபட்டு மாதயிரிவும் சிலரில் உண்டா டாவதில்லை.
4. மாதவிடைவு இதே விதமான அதிரனல் ஈனலுறுப்பு ஒருங் கோட்டியில் வருந்தும் சிலருக்குக் கோட்டிசோனை வழங்கி ஒழுங்கான மாதயிரிவுகளையும் கருத்தங்கலையும் உண்டாக்கலாம்.
5. அல்மாதபிரிவும் அல்குலிடலும் உடைய மலட்டு நிலைப் பெண் ணுக்கு மாதயிரிவையும் சூலிடலையும் உண்டாக்கக்கூடிய ஒரு தீர்வா னது குளோமிபீன், சிற்றேற்றை அல்லது இத்தீர்வுக்குமுன் ஒர் ஆண் டில் 2-3 தரத்துக்கு மேலாக மாதயிரிவுக் காலத்தில் சூலிடா நிலைமை காணப்பட்டால் மனிதப் பித்துயிர்த்தறியை (H. P. .ே) அல்லது மாதவிடைவு கொனுேடோதுரோபின்களைக் கொடுத்து தூண்டல் செய் வதேயாகும்.
கணவனின் சீமன் சோதிக்கப்படவேண்டும். இது திறமுடையதா கின் முதலிரு கிழமைகளுக்கு 0.25 மிகி. அளவில் தில்பிற்றமுேலை நாளாந்தம் வழங்கிச் சூலிடல் வகையில் கழுத்து மீயூக்கசுவை உண் டாக்கவேண்டும். பின்னர் கலவியின் பின்பு ஆய்வு (கூனரின் சோதனை) செய்யப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து கருப்பைக் குழாய்களின் விவரங்கள் திறந்திருக்கின்றனவோ என்று அறியவேண்டும்.
ஊறுநீரில் கொனடோதுரோபின்களின் அளவை மதிப்பீடு செய்த தெரிபேறிலிருந்தே குளோமிபீன்தீர்வோ அல்லது பித்துயிர்த்தறி கொணு டோதுரப்பின்களின் தீர்வோ இதற்குத் தேவைப்படுமென அறியப்படும்.
குளோமிபீன் சில சூலகவினையயிடர் நிலைமைகளில் சூலிடலைத் தூண்டியும், சிலரில் கருப்ப நிலையையும் உண்டாக்கும்.
நிலைமைகளாவன-வழிவந்த அல்மாதவிரிவுயா, சூலக வினையயி டர் கருப்பைக் குருதிவாரி, இசுரேயின் இலெவந்தால் ஒருங்கோட்டி கருப்பையகவணி அதிவினைசலுயா நிலைபேருன அலமாதயிரிவுயா பால் சுரத்தல் ஒருங்கோட்டி ஆகிய நிலைமைகளுக்கு குளோமிபீன் பயன்படும்.

Page 197
372 இளம்பெண் நோயியல்
இத்தீர்வில் நிகழும் கெடுதி விளைவுகள் சூலகச்சிறப்பைகளும், பேம் இறுத்தல்களுமாகும். (சிவத்தல்) சிறிது காலத்துக்குத் தலைமயிர் கொட்டுண்ணக் கூடும். வயிற்றில் நலன் குறைவு தோன்றும். உடல் நிறைகூடும். தலையிடி, வாந்தி, உறக்கக்குறைவு, இடர்மருவுயா ஆகி யனவும் தோன்றக்கூடும்.
செயலாற்றும் விதம்:
குளோமீபினுனது பித்துயித்தறியை நேராகத் தாக்கியும் அல்லது ஈத்திரசனை எதிர்ப்புச் செய்தும் சூலிடலையுண்டாக்கலாம் எனக் கருதப் படும். இம்மருந்துப் பதார்த்தத்தால் வினையவிடர் கருப்பைக் குருதி வாரியிலும், இசுரேயின் லெவந்தால் ஒருங்கோட்டியிலும், ஒல்கு மாதபிரிவிலும் வழிவந்த அல்மாதயிரிவுயாவிலும் சூலிடலைத் தூண்ட லாம். மிகவும் முக்கியமாக பித்துயித்தறி-சூலகஅச்சு ஓரளவுக்குச் சேதமடையாது நன்னிலமையில் செயற்றிறனுடன் முன் நிலைமையில் இருந்தால் சூலிடல் நிகழும். இவ்வகையான நோயாளரில் குளோமி பீனே மனித மாதவிடைவு சனனியூட்டியிலும் பார்க்கத் தீர்வுக்கு உகந்ததாகும். இதனே இலகுவில் விலே குறைவாகப் பெறமுடியும். இதன் செயற்றிறன் நோயாளிக்கு, நோயாளி வேறுபடுவதில்லை. இதனை வாய் வழியால் வழங்க முடியும்.
நோயாளிக்கு முதலான சூலக அல்லது பித்துயித் தறிவழுவல் இருப்பின் பலனேப் பெறமுடியாது.
மருந்தின் எடை
பெரும்பாலும் பயன்படுத்தப்படும் எடையானது 25-50 மி.கி. அள வில் 5 நாட்களுக்கு மட்டுமாம், சிலருக்கு 100 மிகி. அளவில் தேவைப் படும். சூலிடல் பெரும்பாலும் தீர்வுக்காலக் கூறில் அல்லது தீர்வை நிறுத்திய சில நாட்களுள் நிகழும். சிலரில் நிகழுவதில்லை.
3-4 நடை மருந்துத் தீர்வுகள் போதுமெனக் கருதுவர் ஆணுல் வேறு ஆய்வாளர் ஒரு தனி நோயாளிக்கு இதிலும் கூடிய காலத்துக்கு இத்தீர்வை வழங்கியிருக்கின்றனர்.
சாரக நிலமை சூலிடல் %
வினையஅல்மாதயிரிவுயா 85% வழிவந்த அல்மாதயிரிவுயா 85% முதலாம் அல்மாதபிரிவுயா 278% இசுரேயின் இலெவந்தால் (ஒருங்கோட்டி) 85% வினேய கருப்பைக் குருதிவாரி 886%
 

மலடும் (கருவளமின்மை) குறைகருவளமும், 37
சூலிட்டவர்களில் ஏறத்தாழ நூற்றுக்கு 20 பெண்கள் கருப்பம் தரித்தார்கள். குளோமிபீன் தீர்வு காலத்தில் கீழே வருவனவற்றை ஆய்வுக்கு செய்வதற்கு பெறவேண்டும்.
(1) யோனி அப்பல்கள் (நோயாளி தானுகவே எடுப்பள்) (2) தள உடல்வெப்பம்-இதுவும் அவளே பதிவு செய்வள். (3) கழுத்து மியூக்கசுச் சோதனை. (4) ஊறுநீரின் கொனடோ துரோபி னின் மதிப்பீடு எடுக்க
வேண்டும்.
முடிவுகள்:
(அ) யோனி அப்பல்கள். 1. உடனடி மறுகையானது எல்லோரி லும் ஈத்திரசன் பிறப்பிக் கலங்களின் குறைவு. 2. அதைப்பு, மறுகை ஆகியவற்றின் விளைவுகளாவன சூலிடல் நிகழும் அல்லது குலி டலற்ற குருதி வடிதல் உண்டாகும். சிலரில் குருதி வடிதல் நிகழாது சூலக வினையம் திருந்தும். அல்லது முன்னைய நிலைமை மீண்டும் எய்தப் படும். சூலக வினையம் திருந்தியவர்களுக்கு மனித கோறியோன் கொணு டோதுரோபினைக் கொடுத்தபொழுது சூலிடல் சிலருக்கு நிகழும்.
(ஆ) தளவெப்ப நிலை-குளோமிபீன் தீர்வு காலத்தில் இது மிக வும் தளம்பியது. ஒரு திடமான வெப்ப உயர்வானது குலிடலேக் குறிக்கும். இது உயர்ந்து 3-4 கிழமைகளுக்கு நிலைக்கின், கருக்கட்டல் நிகழ்ந்ததென்பதற்கு ஒர் உறுதியான அறிகுறியாகும்.
(இ) கழுத்து மியூக்கசு-சிலரில் இது காணப்படுவதில்லை. வேறு சிலரில் சொற்பமாயும் தடித்துமிருந்தது. சூலிடலுக்கு-பெருமளவில் சொரியும் தெளிவான மியூக்கசுவே அறிகுறியாகும்.
(ஈ) ஊறுநீர் கொனடோதுரோபின்கள் மதிப்பீடு செய்யப்பட்ட வர்களில் சிலரில் இது அதிகமாகவும் மதிப்பிட முடியாதளவிலும் காணப்பட்டது. வேறு சிலருக்கு ஒருவகையான விளைவும் குளோமிபி ணுல் உண்டாக்கப்படவில்லை. மட்டான அளவில் கொனுடோதுரோ பின்கள் தோற்றப்படின் இது குளோமிபீனுல் உண்டாக்கப்பட்ட ஒரு நல் விளைவு எனக் கருதவேண்டும்.
பித்துயித்தறிக் குறைபாடுடையவர்களுக்கு குளோமிபின் யாதா மொரு நல்விளைவையுமுண்டாக்கவில்லை.
9. வேறு சிலரில் முதலில் ஈத்திரசன்களால் 2 - 3 6მყევით In கொண்ட தீர்வு நடைமுறைகளை வழங்கி இரண்டு அல்லது மூன்று கிழமைகளுக்கு கருப்பையைப் பதம்படுத்திய பின் தில்பித்தரோல்

Page 198
374 இளம்பெண் நோயியல்
3 மிகி, அல்லது எதினைல் ஈத்திரடயோல் (0-15 மிகி) நாளாந் தம் வழங்கி கருப்பையைப் பதம்படுத்திய பின்னர் குளோமிபீனை வழங்குவர். ஒவ்வொரு வைத்தியரும் உருவாக்கிய முறைகளைச் சான் றுகளுடன் பயன்படுத்துவர்.
சிலர் ஒரு நடைமருந்தை வழங்கிய பின் சிறிதுகாலம் பொறுத்தி ருப்பர். சூலிடல் நிகழின் தொடர்ந்து கொடார். 6 கிழமைகளின் பின்னர் தன்னியல் சூலிடல் நிகழாதாயின் மேலும் ஒரு நடைமருந்தை வழங்குவர். குளோமிபீன் தீர்வுக்கு விளைவு நிகழாவிடின் இன்னும் இரண்டொரு நடைமருந்துத் தீர்வுக்குப் பின்னர் தீர்வு நிறுத்தப்படும்.
மனித பித்துயித்தறிக் கொஞடோதுரோபின் தீர்வு
இது மிகவும் சிக்கலான தீர்வாகும். இதில் சூலகங்கள் மிதமிஞ் சித் தூண்டப்படவும் கூடும். ஒரு நியம நடைமுறைத் தீர்வு இன்ன மும் வரையறுக்கப்படவில்லை. ஆளுக்கு ஆள் தீர்வு வேறுபடும். மனித பித்துயித்தறி ஓமோன் மனிதனின் பித்துயிர்த்தறிகளிலிருந்து பிரித் தெடுக்கப்படும். மாதவிடைவுக் கொணுடோதுரோபின் மாதவிடைவுப் பெண்களின் ஊறுநீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும்.
இருப்பைக்-கழுத்து நைவுகளிருப்பின்:
அரிப்பு, அழற்சி, ஆகியவற்றை அழற்றல் செய்யவேண்டும்.
கருப்பை:
பின்திருப்பமிருப்பின் நீடிய காலத்துக்குக் கருத்தரிக்க முடியாநில காணப்படின் அறுவைவினையால் உருண்டை இணையங்களைக்குறுக்கி கருப் பையை முன்திருப்டம் செய்யவேண்டும்.
கருப்பைக் குழாய்கள்:
காற்ருல் அல்லது CO2 ஆல் ஊதல் செய்து விவரங்களைத் திறக்க வேண்டும். கருப்பைக் குழாயை எக்சுக்கதிர் பதிவு செய்யவும். இச் செயலால் கருப்பைக் குழாய்களை விரிப்புச் செய்யலாம்.
கருப்பைக் குழாய்களைச் செப்டம் செய்தல்: (
1. புழையடைப்பு ஆனது குடல் வளரியழற்சி, பரிவிரிய வழற்சி அல்லது கொனக்கசுத் தொற்று, கருச்சிதைவுத் தொற்று ஆகியவற்ருல் உண்டாக்கப்படும். -

மலடும் கருவளமின்மையும் குறைகருவளமும், 375
(அ) இது புறத்து அழற்சி ஒட்டுச் சவ்வுகளால் உண்டாகி இருப் பின் இவற்றை அகற்ற வேண்டும். குழாய்களைச் சேதப்படுத்தக் கூடாது. குழாய்ச் சவ்வுகளகற்றல்-செய்ய 30-40% கருப்பமுறுவர்.
(卷) சேதமுற்ற அல்லது புழையடைப்புற்ற பகுதியை வெட்டி யகற்றியபின் நன்நிலைப் பகுதியை மீண்டும் கருப்பைக்குள் புகுத்தி நாட்டல். இதில் 10-20% பெண்கள் கருப்பமுறுவர்.
(இ) கருப்பைக் குழாயில் சேய்மைப் பகுதிக்குழாயில் அடைப் புற்றிருப்பின் ஒரு புதுவாயை உண்டாக்க வேண்டும். இதில் 10-20% பெண்கள் கருப்பமுறுவர்.
(ஈ) சிலர் சூலகங்களைக் கருப்பைக்குள் நாட்டுவர். பெரும்பாலும் கருப்பம் நிகழாது சிலர் கருப்பமுற்றனரென்று அறிக்கைகள் கூறும்.
இவ்வகையான தீர்வுகளுக்கு பெண் வயதில் குறைந்தவளாகவும், கணவன் பேம்வளம் மிகுந்தவனுகவும், மேலும் வேறு குறைவளத்தை உண்டாக்கும் காரணிகள் இல்லாமலும் இருக்க வேண்டும்.
(உ) சிலரில் பேம்களுக்கு முரணுண இயல்புகள் உண்டு. ஒரு தனி பேம் நிறைந்த சிமன்பாயியை பெண்ணின் குருதிச் சீரத்துடன் சேர்க் கும்பொழுது பேம்கள் தம்தலைகள் அல்லது வால்களால் ஒட்டுண்டு அசைந்து போக இயலாமல் கும்பல்களாக இருக்கும் யோனிப் பாயிஇது கடும் அமிலாமாயின், அமிலத்தன்மையை சோடிய காபனேற்றுக் கரைசலாற் (1%) தாழ்த்தின் பேம்கள் மாளாது அவை மேலே ஏறுவ தற்கு உதவும். யோனிப்பாயி கடும் கார நிலைமையில் இருப்பின் சிறி ୬୩Tତ! இலற்றிக்கமி த்தைச் (1%)ச் சேர்க்கின் பாயியை பேம்களுக்கு கந்த பாயியாக மாற்றமுடியும். இக்கரைசல்களே இரவில் படுக்கைக்குச் செல்லுமுன்னம் சிறிதளவில் யோனிக்குள் இடவேண்டும்.
இவ்வகைத் தி வில் சிலருக்கு நம்பிக்கையில்லை. என் அனுபவத் இல் எல்லாவகைத் தீர்வும் பெற்றபின் வந்தவருட் சிலரில் கலவிக்குப் பின்பு யேனிப்பாயி சோதிக்கப்படவில்லை. இவ்வாய்வைச் செய்யும் பொழுது யோனி மடுப்பாயி சிலரில் கடும் அமில நிலையிலிருந்ததைக் கண்டேன். அமில நிலையை உகந்த PHஉக்குச் அதாவது காரநிலைக்கு செப்பமாக்கிய பின்பு கருப்பம் தங்கியது. இவ்வகையான இருவரைக் கண்டுள்ஜோன்.
கூடி முயங்குவதற்கு முன் யோனிப் பாயியின் H பெறுமானத்தை மாற்றி, பேமுயிரிகளுக்கு உகந்ததாகச் செய்யவேண்டும். யோனிப் நிலைமை குறைந்திருப்பின் கலவிக்கு 10-15 நிமிடங்

Page 199
376 இளம்பெண் நோயியல்
ளுக்கு முன்னம் 1% சோடியம் இருகாபனேற்றுக் கரைசலை யோனிக் குள் இடவேண்டும். அமில நிலைமை குறைந்திருப்பின் முன்போல், குளுக்கோசுடன் இறிங்கர்லொக் கரைசலை யோனிக்குள் விடவும். இதனற் சிலர் கருவுற்றதை நான் அறிவேன்.
மலட்டு நிலைமையைத் தடுத்தல்:
1. மலட்டு நிலைமையை உண்டாக்கும் பல நோய்கள் தடுக்கக் கூடியவை. சிறப்பாகப் பேற்றுக்குப் பின்னும் கருச் சிதைவுக்குப் பின்னும் நிகழ் தொற்றுக்களும், கொனறியாத் தொற்றும் கருப்பைக் குழாய்ப் புழையடைப்பை உண்டுபண்ணும். எனவே இவை உண்டா காது தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
2. இளம்படு பருவத்திலேயே குழந்தைகளைப் பெறுதற்கு ஊக்கு விக்க வேண்டும். வயது கூடக் கூட பிள்ளை வளமும் குறைந்தே போகும்
அல்பே முயாவிலும், மிகக் குறையே முயாவிலும்:
சில நாடுகளில் கணவனின் அல்லது புறத்து வழங்கியினதும் சீமன் கொண்டு சீமனேற்றல் (பேம் ஏற்றல்) செய்வர். இலங்கையிலும் சில கணவர், சமூக ஒழுங்கு, அரசாங்கச் சட்டம், உளவியலறிவு ஆகிய வற்றைப் பற்றிச் செவ்விய அறிவு இல்லாதபடியால் புறத்துச் சீமன் உள்ளேற்றல் செய்து பிள்ளைக் குறையைத் தீர்க்கச் சொல்லிப் பரிந்து வேண்டுவர். ஆனல் இவ்வகையான செய்கை ஒழுக்க நீதிக்கு ஒவ்வா ததொன்ருகும். சமயக்கோட்பாடுகளுக்கும் ரணுனதாகும். இவை ஒப்புக்கொள்ள முடியாதவை. சைவசமயக் கோட்பாட்டைப் பொறுத் தமட்டில் தன் கணவனின் சீமனை இவ்வுள்ளேற்றலுக்குப் பயன்படுத் துவதில் அவர்களின் ஒழுக்கத்துக்கு அச் செயற்கை முறை உள்ளேற் றல் தவருக இருக்காது. இருவரின் மனநிலைக்கும், பிறக்கும் குழந் தைக்கு இவர்கள் காட்டும் அன்புக்கும் பங்கம் விளையாது. ஆணுல், புறத்து ஆண்களின் சீமனைப் பயன்படுத்திப் பிறந்த குழந்தை உண் மையில் வம்பிற் பிறந்த குழந்தைகளாகிவிடும். பின்னர் இதைப்பற்றி அக்குழந்தை அறியவரின் பெற்ருேருக்கும் ழந்தைக்கும் மனவே தனையுண்டாகும். விபரீத கெடுதிகளும் விளையக்கூடும்,
சட்டத்தைப் பொறுத்தமட்டில் இவ்விதமாகப் பிறந்த குழந் தையை, சொந்தக் கணவனுக்குப் பிறந்ததாகப் பதிவு செய்யின் அது ஒரு கட்டத்துக்கு விரோதமான செயலாகி அவர்கள் தண்டனைக்கும் உட்படக்கூடும்.
 

மலடும் (கருவளமின்மை குறைகருவளமும், 377
இவ்வகையான குழந்தைக்கு முதிச ஆதனங்களையும் குடும்பத்தில் பதவியையும் பெறுவதற்கு உரிமையும் இல்லை. ஆகவே, இவ்வகை யான செயலில் ஈடுபட வேண்டாமென ஆலோசனை கூறவேண்டும். மருத்துவனுயினும் இவ்வகையான செயலில் ஈடுபடின் தண்டனைக்குட் படுவான். பொது மக்களின் வெறுப்புக்கும் ஆளாகுவான்.
சில காரணங்களால் கணவன் முயங்க முடியாதாகின் அல்லது யோனிக்குள் அவனுல் இடப்பட்ட பேமுயிரிகள் உட்செல்ல முடியாதா கின் கணவனின் சீமனைச் செயற்கை முறையால் உள்ளேற்றல் ஒழுக் கத்துக்கும் சமய கோட்பாட்டுக்கும் தவருகவிருக்கமாட்டாது.
பேம்குறையுடைய சீமனுடன் புறத்து நன்னிலைச் சீமன்களைக் கலந்து பின்னர் உட்செலுத்தின், இதுவும் முன்கூறியபடியே கருக்கட்டலானது புறத்துப் பேமுயிரிகளினல் உண்டாகிறபடியால் தவறு அதே போன்ற தேயாகும். மருத்துவன் இதற்கு உதவுவது எல்லா நீதிகளுக்கும் புறம்பான செயலும் தகாத செயலும் தண்டனைக்குரிய செயலுமாகும்.
கணவனின் சீமனை (விந்து இந்திரியம்) செயற்கை
முறையால் உள்ளேற்றல்;
இம்முறையானது மிகவும் அருகலாகத்தான் தேவைப்படும். சிறப் பாக ஒரு பேம்வளம் செறிவான ஒரு கணவன் சிற்சில காரணங்களால் கூடி முயங்க முடியாதநிலையிலும் பேமுயிரி கருப்பைக் கழுத்துக் கால் வாயூடாகச் செல்ல முடியா நிலையிலும் இம்முறையைக் கையாளலாம்.
கூடி முயங்காது வேறு முறையால் (ஈனற் தற்றருட்டல் முறை யால்) வெளிவீசிய சீமனைத் திரட்டி, 2. ஒரைகளுள் கருப்பைக் கழுத் துக்கால்வாய்க்குள் (கருப்பைக் கழுத்துட் செலுத்தல்) அல்லது யோனி உயர் பகுதிக்குள் கழுத்து வாய்க்கு அருகாமையில் (யோனிஉள்ளிடல்) புகுத்தல் செய்யவேண்டும்.
ஒரு சிறிதளவு (02-05 மி. இலீ. அளவில்) கொண்ட சீமனை ஒரு கண்ணுடிச் சிவிறியை அல்லது கானுளியைப் பயன்படுத்தி, வலுவில் செலுத்தாது, பொதுவாக கழுத்து உள்வாய்க்குச் சிறிது உயரமாக இடவேண்டும். இக் கொள்ளளவுக்குக் கூடாமல் கழுத்துவாய் மட்டத் துக்கு உயர்ாது கழுத்துவாயில் இடவேண்டும். இச்செயலின்போது கருப்பைக் கழுத்தைக் காயப்படுத்திக் குருதிவடிதல் செய்யக்கூடாது. யோனிக்குள் இடவேண்டின் கருப்பைக் கழுத்தைச் சுற்றியிடவும்.

Page 200
378 இளம்பெண் நோயியல்
மாதச் சுழலில்:
சீமனே இடப்படும் நாட்களாவன, கருக்கட்டல் வளம் மிகுந்த காலப்பகுதியில் 2 நாட்களுக் கொருக்கால் இடவேண்டும். உடல் வெப்ப நிலையைக்கொண்டு வேறு முறைகளாலும் இக் காலப்பகுதியை எல்லேப்படுத்த முடியும். இவ்விதமாகப் பல மாதங்களுக்கு இச் செயற்கை உள்ளேற்றலை நிகழ்த்த வேண்டும். இச்செய்கை முறைக்கு பேமானது ஆற்றல் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
கழுத்து மியூக்கசுத்
தடையுள்ள மனைவியருக்கு இணைவிழைச்சு (முயக்க) வேளையில் சீமனே உள்விடாது ஒரு கண்ணுடி ஏதனத்தில் பெற்று உள்ளேற்ற லுக்குப் பயன்படுத்தவும். பல தரம் வெளிப்பட்ட சீமன் கூறுகளைத் திரட்டிக் குளிர் சேமிப்புச் செய்து பின்னர் இதைப் பயன்படுத்தவும் முடியும். இதனுல் பேமுயுயிரிகளின் செறிவைக் கூட்டவும் முடியும்.
மலட்டு நிலைத் தீர்வில் பெற்ற அனுபவ அறிவுகள்:
கணவனுக்கும் மனைவிக்கும், இவர்கள் பிள்ளேவளத்தில் யாதா மொரு குறையில்லாதவராகின் பாலின உறவு, கருவுற்ற காலம் ஆகிய செய்திகளே அறியப்படுத்திய பின் அவர்களுட் பலர் கருப்பம் தரித் துக் குழந்தைகளைப் பெறுவர். வேறு சிலருக்கு யாதாமொரு தடை இருப்பின் அவற்றைச் செப்பம் செய்தபின் கருவுறுவர். பலர் தீர் வுக்குப் பின் பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் (15-20 ஆண்டுகள்) ஒரு குழந்தையைப் பெற்று இவர்கள் மேலும் கருவுற முடியாத வர்களாய் இருப்பர். வேறு சிலர் மாதவிடைவு உற்று ஆண்டு கள் பல கழிந்த பின் கருவுற்று குழந்தைகள் பெற்ற உண்மைச் செய்திகள் பலவுண்டு.
ஆலோசனைக்கு வருபவருக்குக் கருவுறுதலுக்குப் பாரதூரமான தடைகள் இல்லாதாகின், அவருக்குக் கருப்பம் தரிக்க முடியாத தெனக் கூறவேபடாது. பெண்களிலும் ஒரு சிருபியின் புடைப்பு தப்பித் தவறி ஒரு நிறைவான தழைப்பையடைந்து சூலிடல் நிகழ்ந்து கருக்கட்டலுறக் கூடும். குறை பேமுயாவில் வருந்தும் கணவனும் அடிக்கடி நிலைமை திருந்தி நேமபேமுயிரித் திருத்தநிலை அடைந் ததை நானறிவேன். எனவே ஆலோசனை கூறுவதில் மிகக் கவன மாக இருக்கவேண்டும் . உடனடியாக ஒரு திட்ப முடிவுக்கு வந்து நீவிரிருவரும் குழந்தையைப் பெறவே முடியாது என அவர்களுக்குக் கூறுவது பிழையாகும். அவர்களுக்கு ஒரு வேண்டா மனத்துன்பத்தை உண்டாக்குவதாகவே முடியும். அவர்களுட் சிலர் பல ஆண்டுக்குப் பின்பு கருப்பம் தரித்துக் குழந்தையைப் பெறுவர். அவர்களுக்கு வேண்டா மனத்துன்பத்தையும், வாழ்வில் இன்பக் குறையையும் உண்டாக்கிய மருத்துவர்களைத் திட்டுவதையும் நானறிவேன். எங்கள் முடிவுக்கு மாருகப் பலர் கருத்தரிப்பதையும் கூட அறிவேன்.

இயல்: 22
தடுங்கோள் (கருப்ப)
கலவியைத் தவிர்ந்த ஏனைய செயல் முறைகளால் சூல் கொள் ளலைத் தவிர்த்தல் தடுங்கோள் எனப்படும். இவற்றைப் பயன்படுத் திக் குடும்பத்தின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். பாலுந்த லால் இயற்கையானது ஆணையும் பெண்ணையும் கூட்டி உயிரினத் தைத் தொடர்ந்து நிலைக்கச் செய்யும். ஆனல் மனிதனே விஞ் ஞான அறிவைப் பயன்படுத்தி, பாலுந்தலின் இனிப்பைச் சுகித்துப் பிள்ளைப் பெறுவதைத் தடை செய்கிருன் தடைகளை நீக்கிக் குழந் தைகள் வேண்டிய வேளையில் பிள்ளைப்பேற்றை நிகழ்த்துகிருன். சமூகக் கட்டுக்கமைய மணம்முடித்த ஆண், பெண் ஆகிய இருவர் களால் ஒழுகவேண்டிய முறையுமாகும். இது இயற்கைக்கு முரணுன முறையென்றும், மிதமிஞ்சிய காம இன்பங்களில் ஆண், பெண் ஆகிய இருவரையும் மூழ்கச் செய்யுமென்றும் சிலர் கூறுவர். ஆனல் நடைமுறையில் தற்காலத்தில் இது பரவலாகவும் ஆரவாரமில்லா தவாகவும் பழக்கத்திலுள்ள ஒரு முறையாம். தற்காலப் பெண் ணுேய் மருத்துவத்தின் பெரும்பகுதி இந்தத் தடுப்பைப் பற்றியும் இதனுல் உண்டாகும் விளைவுகளைப் பற்றியுமாகும். சில நாடுகளில் இத்தடுப்பு முறைகளுக்கு நீதிச்சட்டங்கள் முழு ஆதரவையளிக்கின்றன
குடும்பத்தின் அளவைத் திட்டப்படுத்தல்
இதைப் பற்றிய தப்பான கருத்து மக்களுக்கு உண்டு. இந்தத் தடுப்பு முறைகள் குடிமக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கும் அல்லது குறைப்பதற்கும் என மக்கள் கருதுகின்றனர். சனத்தொ கையைக் கொண்டு நிர்ணயிக்கும் ஆட்சி முறையில், சமூகமானது இக்கட் டுப்பாடுகளுக் கமையாததாகப் பெருகி, ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆனல், இவர்கள் வறுமையையும் மற்றும் இடையூறுப் பொதிகளையும் சுமந்தவர்களாவர். இத் தடுப்பைப் பற்றிய பிரசார முறைகள் தவருகச் செய்யப்பட்டு வருகின்றன குடும்ப உறுப்பினர் எண்ணிக் கையை அதாவது அவர்களின் குழந்தை பெறும் வளத்தை கட்டுப் படுத்த விரும்புவோருக்குத்தான் இந்தக் கட்டுப்பாட்டுத் திட்ட முறை களுள. இற்றைவரைக்கும் இம் முறைகளைக் கையாண்டவர் பெரும் பாலும் அறிவிலும் செல்வத்திலும் திகழ்ந்த உயர்ந்த மக்களாகும். வறியவருக்கு இவை எட்டவில்லை. எனவே ஒரு மக்கள் கூட்டத்தினருள் உள்ள பல்வேறு பகுதியினரிடையில் சமூகத்தின் பொது நலனுக்கு வேண்டிய சமநிலை பேணப்படவில்லை. இதனுல் வறியவர் பெருகினர்.
ಹಾಗೆ அருகினர். இந்தப் பிந்திய வகுப்பினர் சூல் கோற் தடுப்பு

Page 201
380 இளம்பெண் நோயியல்
முறைகளையும், மலடாக்கல், சட்ட ஆதாரம் பெற்ற கருச்சிதைவு செய்தல் ஆகிய முறைகளை கையாண்டு ஒழுகினர். வறியவர்களுக்கு இவை எட்டவில்லை. இந்தக் குடும்ப எண்ணிக்கையை வரையறுப்புச் செய்யும் முறைகளை வறிய குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். உண்மையைக் கூறின் இவ்வரையறுப்பு ஒரு குடும்பத்திற்கு வேண்டிய நலன் பேணல் போன்றது. வறிய நாட்டுப்புற மக்கள் மிக இளம்படு வயதில் (13ஆம் ஆண்டு வயதுமட்டில்) மணம் முடிப்பர். பலர் மருத்துவ மனைகளிற் பிள்ளைப் பேறுற்றபோதும் மருத்துவ மனைப் பணியாளரிடமிருந்து ஒரு சிறு தொகையினர்தான் (0.5% பெண் கள்வரையில்) குடும்ப வரையறுப்பைப்பற்றிய அறிவைப் பெற்றனர். (வைத்திய கலாநிதி விசுவரத்தினம் - சுகாதார நிலையம் குருநாக்கல் இலங்கை வைத்திய ஏடு-1073)
மேலும் இந்த அறிக்கை கூறுவது, முதலிரு கருப்பங்களில் கருச் சிதைவும், சாப் பேறுகளும் குழைந்தைச் சாக்களும் நிகழவேயில்லை. என்பதையே மேலும்
1000 உயிர்ப் பிறப்புகளில் 1000 கருப்பங்களில் குழந்தைச் சாக்கள் சாப்பேறுகளும் கருச்
சிதைவுகளும் 3-4 கருப்பம் தரித்தவரில் ፵7 28 5-6 SS 舅 舅 47 45 7-12 , , 9 is ჭ56 39
என அறியப்படும்.
எனவே, ஒரு தாயின் கருப்பநிலைகள் கூடவும் அதற்கு ஒப்பக் கருச் சிதைவுகளும், சாப்பேறுகளும், குழைந்தைப் பருவச் சாக்களும் மிகைய டையயும், கெடுதிகளும், கருப்ப எண்ணைப் பொறுத்து கூடுதலடையும். 7-12 ஆம் கருப்ப நிலைகளில் 1-2 ஆம் கருப்பநிலைகளில் நிகழாத விளை வுகள் விளைந்தன.
மேலும் குடும்பம் பெருகவும் குழைந்தைகளின் எண்ணிக்கைக்கு ஒப்பக்குழந்கைளும் (1) ஒர் ஆண்டில் இரைப்பை-குடலழற்சி நோயில் வருந்தும் நாள் விகிதமும்கூடும்.
(2) ஊட்டவளக் குறைவும் உண்டாகியது.
(3) தாயின்கண்காணிப்புக் குறைபாட்டால் கைமகவுகளுக்கும்,சிறு குழந்தைகளுக்கும் நிகழும் விபத்துக்களின் எண்ணிக்கை கூடியது.
(4) பணக் குறைவு, வசிப்பதற்கு ஏற்ற வீட்டு வசதிக்குறைவு, சுகாதார வசதிக் குறைவு, இவற்றைத் தொடர்ந்துநிகழும் ஏனைய சுகக்குறைவு நிலைமைகளும் கூடியன. உடல் நலக்குறைவு ஊட்டவளக்

தடுங்கோள்(கருப்ப) 381
குறைவு குழந்தையின் வளர்த்தியைக் குறைத்ததுமல்லாமல் வேறு இடர்களையும் உண்டாக்கியது.
(5) கருப்பிணியின் நிலைமை எப்படி எனின், கருப்ப எண்ணிக்கைக்கு ஒப்ப அவளின் சா வீதமும் கூடியது. பல கருப்பமுற்றவர்களின் சா வீதம் மிகக் கூடவாம். இச் சாக்களிலிருந்து தப்பின், பல தாய்மார் பருவத் துக்கு முன் மூப்படைவர். பலர் சாக வேண்டிய வயதுக்கு முன்னதாகவே இறந்துவிடுவர். வேறு பலருக்கு நோய் நிலைமைகள் உண்டாகும். மன முடைந்தவரும் பலர் உளர்.
(6) பிள்ளைகளின் எண்ணிக்கை கூடவும், உணவு, உடை கல்வி ஆகியவற்றிற்கு வேண்டிய செலவும் கூடும். பண நெருக்கடியுற்று ஊட் டவளக் குறைவும் மற்றும் குறைபாடுகளுமடைவர் - நிலைமையைச் சமாளிக்க முடியாமால் நல்லதங்காள் கதைபோல வாழ்க்கைக்கு முற் றுப்புள்ளிபோடும் ஆண்கள் பெண்கள், குழந்தைகள் பலர்
(7) அடிக்கடி தொடர்ந்து பெறுவதால் (குறுகிய இடைக்காலம் விட்டு) மகவும் சாப்பேறு கூடுவதாவுகம், ஊட்ட வளக் குறையுண்டா கவும், முன்முதிர்வுப் பேறுகள் நிகழ்வதாகவும் அறிக்கைகள் கூறும் இவ்வகைய குழந்தைகளின் மூளையும் இதனல் சேதமுறக் கூடுமெனவும் சான்றுகள் காட்டியிருக்கின்றனர்.(கருக்கொள்ளற்றடுப்புப் பொறியியல் 1973-74) இதைப் பற்றிய அறிவானது மாதவிடாயின் தொழிலியல் தோற்ற முறையும் இதை ஆளும் அகச் சுரப்பிகள் கீழப்பரியகம் ஆகியவற்றின் ஆளுகைத்திறனும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இது வேண்டற்பாலதாம். அன்றியும் ஆணப் பற்றிய பாற் தொகுதி களின் தழைப்பும் இவை இயங்கும் முறையும் கருப்பம் நிகழும் பொறிமுறை ஆகியவற்றைப் பற்றிய அறிவும் ஆணுக்கும் பெண்ணுக் கும் தேவையாம். கருப்ப நிலையின் அறிகுறிகளும், குறிகளின் நிலையை மிக இளம்படு காலத்தில் ஊடறிதல் செய்யும் பரிசோதனைகளைப் பற்றிய அறிவும் இவர்களுக்குத் தேவையாகும். சூலிட்டபின் இது கருக்கட்டலுறின் 3-4 ஆம் கிழமைகளுக்குப்பின்பு சூல்வித்தகம் சுரக்கும் மனித கோறியன் கொனடோதுரோபின் ஒமோனுனது ஊறுநீரில் காண லாம். இதைப் பரிசோதித்து கருப்ப நிலையை ஊடறிவர். சில நாடு களில் நிலவும் இச்சை வழிக் குடும்ப எண்ணிக்கை வரையறுப்புத்திட் டங்களில் வேண்டாக் கருப்பங்களை மிக இளம்படு பருவத்தில் சிதைவு செய்வதும் (யப்பான், ரூசியா.) மலடாக்கலும் அத்திட்டத்தில் அடங்கிய முக்கிய முறைகளாகும். மாதவிடாயைப் பற்றியும் குல் கொளலைப் பற்றியும் தொடக்க இயல்களில் விபரிக்கப்பட்டது. (படிக்க) வேண்டாக் கருப்பங்களைச் சிதைவு செய்வதை அனுமதிக்கும் நாடுகளில் கருப்ப நிலையை மிக இளம்படுகாலத்தில் (3-4 சிழமைகளில்) மளமறிவ. ஏனெனில் இக் காலத்தில் செய்யும் கருச்சிதைவானது பெரும்பாலும்
உயிருக்குக் கெடுதியை விளேவிக்காது.
●

Page 202
382 இளம்பெண் நோயியல்
வேறு காரணங்களுக்காகக் கருப்பம் தரித்தலைத் தடுப்பர். அவை ListTG) I GÖT
1. சிறிது கால உடல் நலக்கேடு.
2. அல்லது நிரந்தர நாட்பட்ட நோய்கள். இவற்றுள் இதய நோய்கள், ஊறுநீரி நோய்கள், மன நோய்கள் ஆகியனவும் அடங்கும். இவர்களில் கருப்ப நிலையும், பேறும் உயிர்க் கெடுதியையே தாய்க்கு விளைவிக்கும். -
3. முன்னைய மகப்பேற்று நிலைமைகளில் கோளாறுகள் மீண்டும் மீண்டும் நிகழ் தொட்சிக் குருதிமை, கருச் சிதைவுகள், சீசர் அறுவை வினைகள், சலப்பைப் புரைகள் போன்ற காயங்களும் கருப்பையிறக் கத்துக்கு நிகழ்த்திய செப்ப அறுவை வினைகளும் காணப்படின் கருப்ப நிலைக்கு கெடுதியை விளைவிக்கும்.
4. கருவுருவைப் பாதிக்கும் சில நோய்கள் சிவிலிசு, குருதிவாரி நோய்கள், செவிடு ஊமையாம், ஈமொபிலியா (குருதி நாட்டயுயா). ஆயநிலைமைகளும்.
5. பேறுகளை திட்டப்படுத்திய இடைக்காலங்களுக்குப் பின் நிகழ்த் துவதற்கும், பல குடும்பச் சோலிகள், படிப்புக்காரணங்கள், வேலைப் பாடுகள் ஆகிய காரணங்களுக்காகவும் கருப்பம் தரித்தலைச் சிறிது கால த்துக்குத் தள்ளிப்பேடுவர்.
6. இளம்படு வயதில் மணம் முடித்த மங்கையர் சில ஆண்டு களுக்குக் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு நடாத்த முடியா காரணத்திற்காகவும்.
7. வேண்டிய குழந்தைகளைப் பெற்றபின், பிந்திய மணவாழ்வில் மேலும் குழைந்தைகளை விரும்பாத காரணத்திற்காகவும்.
8. தற்காலத்தில் புறநாட்டு உல்லாசப் பயணங்கள், படிப்புக்கள் நீண்டகால புறநாட்டுக் குடியிருப்பு ஆகியவற்றிக்காகவும் கருக்கட் டலைத் தடுப்பர்.
9. சில பிறழ்வு மனநிலையுடைய சோடிகள் மணவாழ்வை விரும் புவர். குழந்தைகளைப் பெற விரும்பார், அல்லது இரண்டைப் பெற்றபின் மேலும் பெற விரும்பாதவர்களும் இம்முறையைப் பயன் படுத்துவர் ஆனல் நலனுக்காகிய முறைகள் தவறுதலாக வேண்டா கருப்பநிலை களுக்கும் பயன்படுத்தப்படும்.
 
 

தடுங்கோள் (கருப்ப) 383
10. விலை மாதுக்கள் பெரும்பாலும் இம்முறைகளைக் கையாளுவர். மனம் முடியாப் பெண்களுட் சிலரும் வேலையில் ஈடுபட்டு இருப்பு வருட் சிலரும், பல காரணங்களுக்காக, இம்முறைகளைக் கையாள்வர். இந் நிலைமையை எய்துவதற்கு நடைமுறையில் பல தடுப்பு முறைகள் உண்டு. பெண்களும் ஆண்களும் இவற்றை நடைமுறையில் பயன் படுத்தும் பொழுது அச் செயல்முறைகளின் செயற்றிறனைப் பற்றி உணர்ந்திருத்தல் நன்று. சிலர் இம்முறைகளைப் பயன்படுத்துவதற் காகிய விதிகளுக்கு ஒழுகத் தவறுவர், அல்லது இதனைக் கையாளும் புொழுது போதிய கவன இன்மையால் வேண்டிய விளைவை எய்தாது மனமுடைவர். எனவே இம்முறைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வரும் அதைப் பற்றிய விளக்கத்தை முக்கியமாக அறிந்து இருத்தல் வேண்டும். சூல் கொள்ளற்றடுப்பு முறையை இவ்வொழுங்குமுறை யிலே தவருது கையாளவேண்டும். அவர்கள் என்ன காரணத்துக்காக சூல் கொளல் தடுப்பை வேண்டுகின்றனர்? எவ்வளவு காலத்துக்கு தடுப்பு முறையை பயன்படுத்த எண்ணியிருக்கின்றனர்? இருவரும் எவ் வளவுக்கு மனம் விட்டு இம் முறைகளைப் பற்றித்தம்முன் விவரிதித் திருக்கின்றனர் என்பதைப் பற்றி அறியவேண்டும். இவற்றைப் பயன் படுத்ததுவதைப் பற்றி முன்னர் எவ்வளவு கற்றிருக்கின்றர்கள் எனவும் அறியவேண்டும். விதித்தபடி ஒழுங்காக இம் முறைகளை கையாளு வதற்கு விரும்பாக் கருப்பங்கள் உண்டாகும் என்பதையும் அறியப் படுத்தவும்.
இத் தடுப்பை எய்துவதற்குப் பல செயல்முறைகள் உள. அவற் றிற்குச் செயல வழுவலும் அடிக்கடி உண்டாகும். எனவே சிலர், ஒரு தனி முறையைப் பயன்படுத்தாது இரண்டு மூன்று துணை செய் முறைகளை ஒரே வேளையிற் பயன்படுத்தி சூல் கொள் தடுப்புக்கு வழுவல் நிகழாது செய்வர் (அல்லது வழுவல் வீதத்தை இன்னமும் குறைப்பர்.)
கருப்பநிலை தடுப்பு முறைகள் பல உள:
இவற்றுள் எல்லாவற்றையும் திறமெனக் கொள்ளமுடியாது. அவை மணச் சோடிகளைப் பொறுத்து வேறுபடும். எந்த ஒரு செயல் முறையை அவர்கள் பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு அது மிக இயல்பான தாயும் இடர்கள் ஒன்றும் தோற்ருது இன்பமானதொன்ரு யும் இருப் பின், அவர்களுக்குச் சிறந்த பிறப்புக் கட்டுப்பாட்டு முறையெ னக் கருதவேண்டும். பல தடுப்பு முறைகள் இருந்தாலும் எவ்லாத் தடுப்பு முறையும் நூற்றுக்கு நூறு வீதம் வெற்றியைத் தராது. சில சந்தர்ப்பங்களில் வழுவல் ஏற்படக் கருப்பம் தங்கும். இவ்விதமானது பேளி என்பவரின் விதியைப் பயன்படுத்தி கணக்கிடப்படும் ஓர் ஆண்டில் 100 பெண்கள் எத்தனை கருப்பங்கள் உற்ருள் என்ற பெறுமதியானது

Page 203
384 இளம்பெண் நோயியல்
வழுவல் வீதத்தைக் குறிக்கும். கீழ்த்தரப்படும் பெறுமானங்கள் சூல் கொள்ளற் தடுப்பு (1973 - 1974 அமெரிக்கா அத்லாந்த பல்கலைக்கழக வைத்தியக் கல்லூரி) அறிக்கையிலிருந்து பெறப்பட்டன.
வழிவல் வீதம் (ஒரு ஆண்டுக்கு 100 பெண்கள் எத்தனை கருப்பங்கள்)
தடுப்பு முறை இடையருது நெடுகலும்
பயன்படுத்துபவர்களில் கருச்சிதைவு O இச்சைவழி இணைவிழைச்சின்மை 0 தடுப்பு முறையற்ற கலவியில் நிகழ்ந்தது 80
(பொதுக்கலவி வாழ்க்கை) இடைத்தடை செய்முயக்கம் 15 6 பீன உறை 2' 6 பிரிமென்றகடு 2 3 அலசல் க. அ. பொ (கருப்பை அகப்பொறி (IU) 1 * 0-2, 7 வாய்மூலம் கருப்பத்தடை மருந்து 09 I----II•0 தசைஊடாக நீடிய காலச் செயற்படு 0, 23
புருேசெசுற்றின் (மெட்ருெக்சி புருேசெசுற் ருேன் அசற்ேேறற்று)
ஊறு நிகழா மாத நாட்கள் 14. , பேம்கொல்லி நுரை 3 ° 05 - 3 Ι 4 உறையும் பேம் கொல்லிச் யெலியும் கலன (வாசு) த்துமி "15க்குக் குறைய குழாய்த் தடமிடல் 0.04 கருப்பையகற்றல் 000 l.
இவர்கள் நீடிய காலப் பழக்கமுறையால் போதிய அறிவுபெற்றவர். குறுகிய கால பழகுமுறையால் கூடிய தோல்வியைக் காண்பர்.
வைத்தியனின் உதவி வேண்டப்படா கருப்ப நிலைத் தடைச் செயல் முறைகள்:
1. இச்சைவழி முறை இணைவிழைச்சு இன்மை
(பாலுறவை விட்டிடுதல்)
செயற்றிறன் வாழ்க்கையைத் துறந்தவர்களே தம் வைராக்கியத் தையும், மன அசையா மன நிலையையும் சில வேளைகளில் இழக்கின் முர்கள் எனின் சாதாரணமாக மணம் செய்து வாழ்க்கை நடாத்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இது ஓர் வில்லங்கமான செயல் என்பதை யுணரவும், சிலசமயங்களில் இவர்கள் தம் தீர்மானத்திலிருந்து பிறழ்வர்.
 
 

தடுங்கோள் (கருப்ப) 385
யோசனை கூறல்
இருவரும் மனம் ஒத்தவராகி இருந்தாற்தான் இவ்வகையான முறையைக் கையாண்டு கருப்ப நிலையைத்தடுக்கலர்ம். யாதாயினுமொரு தடுப்பு முறையைச் செவ்வையாகப் பயன்படுத்தத் தவறுவதிலும் பார்க்க மேற்கூறப்பட்ட முறையை உண்மையாகக் கடைபிடித்தல் நல்லதாகும். இளம் மங்கைப்பருவப் பெண்கள் சூல் கொள் தடுப்பு முறைகளைப் பிழைபடாது பயன்படுத்துவது அருமையாகும். இதனுல் குடும்பத்திட்டத்துக்கு மாருக விரும்பாக் கருப்பங்களையும் தரிப்பர்.
கெடுதி விளைவுகள்: இதில் இல்லையாகும். வேறு சாரகப் பலன்கள்: இம்முறையில் இல்லையாகும். Աp|Մ ணு ன விளைவுகள்: ஒன்றும்மில்லை. ஆனல் இவர்கள் வேறு விதமான சரச லீலைகள் நிகழ்த்தின் அவை சிலவேளைகளில் எல்லா வகைத் தீர்மானங்களையும் காற்றில் பறக்க வைத்து இணைவிழைச்சில் முற்றுப் பெறும்.
செலவு-ஒருவகையான பணச் செலவுமில்லாத முறையாகும், 2. இடைத் தடை முயக்கம் (பின்னிழுப்பு)
இது ஒரு பண்டுதொடுட்டுப் புழக்கத்திலுள்ள ஒரு தடுப்பு முறை யாகும். இதற்கு வேறு பொறிமுறைப் பொருட்களும் இரசாயனப் பொருட்களும் வேண்டியதில்லை. விரும்பிய எவ்வேளையிலும் செயற் படலாம். இதற்கு ஒரு வகையான பணச் செலவுமில்லையாகும். இருவரும் விரும்பும் எந்த வகையான கரணத்திலும் முயக்கம் நிகத்த லாம். ஆனல், சீமன் வெளிவீசல் நிகழச் சற்றுமுன்னுக, ஆணுணவன் பினத்தை பின்னிழுப்புச் செய்து யோனிக்குப் புறத்தேயும் ஈனலுறுப் புக்களுக்கு அப்பாலும் வெளிவீசல் செய்வான். ஆண், பெண் இருவரும் திருப்தியான இன்பநிலையை எய்துவர். பின்னிழுப்புச் செய்வதற்கு உறுதியான உளக்கட்டுப்பாடு வேண்டும். இதில் சிறிது சுணக்கம் ஏற் படின், பீனம் வெளியிழுக்கப்பட முன்னமே சிறிதளவு பேம்செறிந்த முதல் தோற்ற வெளிவீசற் பாயி உட்செலுத்தப்படக்கூடும். இதனுல்
கருப்பம் எய்தக்கூடும்.
செயற்றிறன்:
இது சோடிகளுக்கு வேறுபடும் திருப்தியையுண்டாக்கும். சிலர் இதைச் செய்யமுடியாத நிலையிலிருப்பர். சிலர் மனத்திருப்தியடைவர். இச் செயலில் வெறுப்புருது இதனை விரும்புவர். சிலர் இதனை இருந் திட்டொருக்கால் கையாளுவர். சிலர் வேறு முதல்முறையுடன் இதனே

Page 204
386 இளம்பெண் நோயியல்
ஒரு துணை முறையாகக் கையாளுவர். இதன் வழுவல் வீதம் ஒர் ஆண்டுக்கு 100 பெண்களில் 15.6 கருப்பங்களாம். இச்செயல் முறை யில் பல வழுவல்கள் நிகழ்ந்ததாலும் இம்முறையைப் பின்பற்றிய சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பிறப்பு வீதம் கூர்ப்பாகக் குறைக்கப்படுகின்றது.
யோசனை கூறல்;
இம்முறையால் அவர்கள் வெற்றிகரமாக தம் இன்ப நிலைக்கு இடையூறு இல்லாமல் பிறப்புத் தடையைச் செய்திருப்பின் அவர்க ளைத் தொடர்ந்து இம்முறையைப் பயன்படுத்த விடவும். இருந்தும் ஒரு வகையான வழுவலும் நிகழாதிருக்க விரும்பின் இத்துடன் பிறி தொரு முறையையும் பயன்படுத்துவது நன்று.
பல்கலைக் கழக இளம் சோடிகளுக்கும், வேறு உயர் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் தற்காலத்தில் பிறப்புக் கட்டுப்பாடு முறை களை பேச்சாலும், படங்களாலும் அறிமுகப்படுத்துவர். யாதாமொரு தடுப்பு முறையில்லாத முயக்கத்தில் ஈடுபடுவதிலும் பார்க்க ஒரு தடுப்பு முறையைப் பயன்படுத்தும் முயக்கத்தில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது என்பதை இவர்கள் அறிந்து இருக்கவேண்டும்.
விளைவுகள்:
இம் முறையால் சில சோடிகள் திருப்தியான இன்ப நிலை யெய்ய துவதில்லை. சீமனனது முன் முதிர் வீசலுறுமென்னும் பீதியானது இருவருக்கும் உண்டாகி இன்பநிலை தடையுறும். இவ்வகையான நீடிய காலக் கூடலால் மணவாதைகளும் மாதக் குருதிவாரிகளும் இடர் மாத யிரிவும் உண்டாகக்கூடும்.
வேறு சாரகப் பயன்படுத்தல்:
இம் முறைக்கு இல்லையாகும். முரண் விளைவுகள்: முன் முதிர் சீமன் வீசல் நிகழின் கருக்கட்டல் நிகழும். வேறு வகையான கரணங்களையும் சிலர் பயன்படுத்துவர். இவ்வகையான முயக்கங்க ளிலும் முன் முதிர் சீமன் வீசல் நிகழக்கூடும். (நேம முயக்கம்) இன்னும் சிலர் உட்புகுத்திஒரு நேச அணைப்பில் பீனத்தை வைத் திருப்பர். ஆணுக்கு இவ்விரு செயல்களுக்கும் உறுதிமிகுந்த உளக் கட்டுப்பாடுதேவையாகும்.
 

தடுங்கோள் (கருப்ப)
தொடையிடை முயக்கங்கள்:
பெரும்பாலும் இளம்படு வயதினருக்கிடையில் யாதாமொரு கருப் பம் நிகழாதெனத் தப்பாகக் கருதப்பட்டு இது நிகழ்த்தப்படும். இம் முறையால் பல இளம் மணம் முடியாத மங்கையர் கருப்பமுற்று இடருற்றதை நானறிவேன். இதில் வல்வப் பிரதேயத்தில் இடப் பட்ட சீமனிலிருந்து பேமுயுரிகள் யோனியிலிருந்து சொரியும் மியூக் கசுப் பாயிவழியாக உட்சென்று கருக்கட்டல் அடைகின்றன.
3. கருக்கட்டலுற முடியா மாதச் சுழற்கூறு:
மாதச் சுழல் நாட்களில் கருக்கட்டல் வளம் நிறைந்த சில நாட்க ளுண்டு. இக்காலக் கூறில் ஒரு உயிருடன் வாழும் பேமுயிரியானது முட்டையுடன் (சூல்-ஊவம்) சேர்ந்து கருக்கட்டல் அடையும். இக் காலக்கூறில் இணைவிழைச்சில் ஈடுபடாதிருப்பின் கருப்பம் உண்டாகாது கருக்கட்டல் வளம் நிறைந்த நாட்களைத் தவிர்ந்த மற்றைய நாட் களில் கருக்கட்டல் நிகழாது. இந்த கருக்கட்டல் வளச் செறிவு டைய காலக்கூறை மதிப்பீடு செய்வதற்கு மூன்று தொழிலியற் கருதுகோள்களைப் பயன்படுத்துவர். 1. சூலிடல் (ஊவம் உதிரல்) இது மாதவிடாய் தோன்ற முன்னம் 14+2 நாட்கள் முன்னதாக நிகழும். °、 பேமுயிரி உயிராற்றலுடன் 48 ஒரைகளுக்கு வாழும். 3. ஊவமானது (முட்டையானது) 28 ஒரைகளுக்கு ஆற்றலுடன் வாழமுடியும். சிலர் ஊவம் 8 ஒரைகளுக்குப் பின்பு சிதலமடையு மெனக் கூறுவர். பெண்ணுனவள் 12 மாத காலத்துக்கு (ஒர் ஆண்டு) தன் மாதச் சுழலின் நீட்சிக் காலத்தைக் குறிப்ப புள் சுழலின் மிகக் குறுக்கமுடைய காலத்தையும் மிக நீண்ட கால மாதச் சுழலையும் குறிப்பாள். குறுகிய சுழலில் நாளைக் கொண்டு மிக விரைவாக மாதயிரிவு தோன்றக் கூடிய நாளையும் மிக நீண்ட சுழலிலிருந்து மிகவும் சுணங்கி நிகழக் கூடிய நாளையும் த6ரிப்பாடுள், பின்னர் மிகவும் வெள்ளனவாகத் தோன்றும் நாளிலிருந்து 8 நாட்க ளைக் கழித்தும், மிகச் சுணங்கி நிகழக்கூடிய நாளிலிருந்து 11 நாட் களைக் கழித்து தன் கருக்கட்டல் வளம் செறிந்த நாட்களைக் கணிப் பாள். இந்தக் கால இடையில் கலவியைச் செய்யாது தவிர்த்தால் கருக்கட்டல் நிகழாது.
முன்னம் கூறப்பட்ட மொறி பல்கலைக் கழக வைத்தியக் கல்
லூரி அறிக்கையில் இக்கருக்கட்டல் செறிவுடைய காலக்கூறை ஓர் அட்டவணையாகத் தந்திருக்கின்றனர்.

Page 205
388 இளம்பெண் நோயியல்
உம்முடைய மிகக் உம்முடைய முத உம்முடைய மிக உம்முடைய
குறுகிய மாதச் லாம் வளம் செறி நீண்டகால மாதச் வளம் செறிந்த சுழல் கீழ்தரும் ந்த நாள்(இடர் சுழல் கீழே தரும் கடைசி நாள்(இடர் நாட்களாயின் விளையும் நாள்) நாட்களாயின் விளையும் நாள்)
21 நட்கள் 3ஆம் நாள் 21 நாட்கள் 10ஆம் நாள்
22 4 و و 22 و و II و و 23 5 , , 23 , , l2, , , وو، 13 , , 24 , , 6 وو , 24 25 , , 7 25 , , 14, و 26 , , 8 , , 26 , , 15 , , 27 , , 9 , , 27 , , I6 , , 28 , , 10 , , 28 , , 17 , , 29 , , III , , 2918 و و , , , , I9 , , 30 و و I2 و و 0ژ
20 , , 31 , , 13 , , 31ه 3.2 , 14 , , % . 2 II , ,
, , 22 و و 3.3 و و 5 T و و 3 3
34 16 , , 34 , , 23 , ,
, , 24 و و 35 , , 17 و و 35
உதாரணமாக ஒரு பெண்ணின் குறுகிய நாட்கள் 26 நாட்களா யும் நீடிய நாட்கள் 30 நாட்களாயுமிருப்பின் அவளின் முதலாம் கருக் கட்டல் வளம் செறிந்தநாள் 8ஆம் நாளாகும். அவளின் கடைசி வளம் செறிந்த நாள் 19ஆம் நாளாகும். அவள் 8ஆம் நாள் தொடக் கம் 18ஆம் நாள் வரைக்கும் கலவி செய்யவேபடாது. ஒரு பெண் னின் மாதச் சுழல் ஒழுங்காக நிகழின், வழுவல் வீதம் அதற்கமைய குறைவாகவிருக்கும்.
இக் கருக்கட்டுவதற்கு வளமுடைய நாட்களே பிறிதொரு முறை யால் அறியலாம். சூலிடலுக்கு முன்னம் பெண்ணின் உடல் வெப்ப மிறங்கும். 24 ஒரைகளுக்குப் பின்னர் உடல் வெப்பம் ஏறும், தள மட்ட உடல் வெப்பத்தை அளவு செய்து சூலிடப்படும் நாட்களை மதிப்பீடு செய்யலாம். இதற்கு மிகச் செவ்விய முறையில் நாள்தோ றும் காலையில் துயிலிருந்து கண் விழிக்கும்பொழுது உடனடியாகவே தன் உடல் வெப்பத்தை வெப்பமானியைக் கொண்டு அளவிடவேண் டும். பல மாதங்களுக்கு (குறைந்தளவு 3 மாதங்களுக்காயினும்) அள விட வேண்டும். இப் பதிவுகளிலிருந்து மாதச் சுழலில் சூலிடல் நாளின் விக்கை அறியமுடியும்.
 

தடுங்கோள் (கருப்ப) 389
இவற்றைப் பிழைபடுத்தும் காரணிகள்:
தொற்றுக்களும் மனநெருக்கங்களும் தளவெப்பத்தை யுயர்த்தும். பெண்ணுனவள் வெப்பமானது உயர் மட்டத்தில் 3 நாட்களுக்குத் தொடர்ந்து நிலைத்த பின்புதான் கலவியில் ஈடுபடவேண்டும். இம் மூன்று நாட்களும் (இந்நாட்கள் கடும் விருப்பமுடைய நாட்களாகும்) தவிர்க்கப்பட வேண்டும். இளம் மங்கையரினது மாதவிடைவுக் கால வயது மூத்த பெண்ணினது மாதச் சுழல்களினின்றும் மிக வேறுபடும். ஆகவே, இணை விழைச்சு இல்லாத காலக்கூறு மிக நீட்சிக் காலமாயி ருக்கக் கூடும். இக் காரணத்தால் இத்தகைய பெண்களுக்கு இம்முறை யானது உகந்ததல்லவென்று கருதி வேறு முறைகளை வைத்தியர் அறி முகப்படுத்துவர்.
செயற்றிறன்:
இதன் வழுவல் வீதமானது ஒர் ஆண்டில் ஒழுங்காக இம்முறையைப் பயன்படுத்தும் 100 பெண்களுக்கு 15 கருப்பங்களாகும். சோடிக்குச் சோடி இவ்வழுவல் வீதம் மிக வேறுபடும். ஏனெனில் பிள்ளைப்பேறு உறும் வயதுடையவருள் ஆக 8 வீதம் பெண்கள் மட்டும்தான் ஒழுங் கான மாதச் சுழல்கள் உடையவராவர். மாதச் சுழலில் எந்த அவத்தை நிலையிலும் சூல் உதிரக் கூடுமென அறிக்கைகள் பகரும். சிலர் முயக்க மானது சில விலங்குகளில் நிகழ்வதுபோல் சூல் உதிர்தலைத் தூண்டு மெனவும் கூறுவர். ஆகவே இந்த முறையில் செயற்றிறன் குறை வுக்கு அதுவும் ஒரு காரணமாகக் கூடும்.
ஆலோசனைக்கு வரும் சோடிகளுக்கு அறிவுறுத்தல்:
இந்த மாசச் சுழல் முறைப் பிறப்புக் கட்டுப்பாட்டொழுங்கைத் திறம்படச் செய்வதற்கு சில அறிவுறுத்தல்கள் பயன்படும்.
இந்த மாதச் சுழல் காலத்தை ஒர் ஆண்டுக்காயினும் கணக்கிட வேண்டும். இவ்வகை முறையால் நீண்ட காலப்பிறப்புக் கட்டுப்பாட்டு முறையையும் இதனுடன் சேர்த்து நிகழ்த் தின் இன்னும் செயற் றிறனுடையதாயிருக்கும்.
மேலே விபரிக்கப்பட்ட அட்டவணையையும் பயன்படுத்தல் நன்று.
பக்க விளைவுகள்:
1. மாதச் சுழலில் கருக்கட்டற் செறிவுக் காலக்கூறில்தான் பெண் கள் ஆணுறவு விருப்பினுல் உந்தப்படுவர். இக்காலப் பகுதியில் கல

Page 206
390 இளம்பெண் நோயியல்
வியை நீடிய காலத்துக்கு இச்சை வழிமுறையாற் தவிர்ப்பின் பல ருக்கு மனவேதனை உண்டாகும்.
2. பூப்புத் தழைப்பு முதிரும் பருவத்திலும் மாதவிடைவுக் காலங் களிலும் மாதச் சுழலானது ஒழுங்கற்ற முறையில் நிகழும். இக் காலப் பகுதிகளில் இந்த மாதச் சுழல் பிறப்புத் தடுப்பு முறையை கையாள்வது தோல்வியிலேயே முடியும். எனவே ஒழுங்கற்ற முறை யாக நிகழும் மாதச் சுழலுடையவர்கள் இம்முறையால் பயனடை யார். இவர்கள் வேறு முறைகளையே கையாளவேண்டும். பூப்புப் பருவத்திற்குப்பின் மங்கையர் இதைப்பற்றி அறிந்திருத்தல் நன்று
4. பினவுறைகள்: இவை பீன உருபோன்று, ஒரு வட்ட குழாய் அமைப்பில் முடிவடையும். இறப்பர் பொருளால் அல்லது கொல்லாசன் இழையங்களால், செம்மறியாட்டுக் குட்டிகளின் சிக்கத் தால் ஆக்கப்படும். இவை நிமிர்த்தலுற்ற பீனத்துக்குச் சரிபொருத் தமான உறையாக அணியப்படும். இது யோனிக்குள் பேம் ஏகுவதைத் தடுக்கும். பேம் கொல்லி நெய்யால் உராய்வு நீக்கம் செய்யப்படும். பீனம் நிமிர்தலுற்றவுடனேயே இது அணியப்படும். உராய்வு நீக்கம் செய்யப்படின் அது கிழியாது. வசலின் இதற்கு உகந்ததால் பீனத் தையுட்புகுத்த முன்னம் உறையை அணிதல் செயற்றிறனே அளிக் கும். வெளிவீசல் உற்றவுடனேயே பீனமானது தளர்ந்து சுருங்கமுன், உறையின் விளிம்பைப் பிடித்துக் கழற்றவேண்டும். எனவே, வெளி விசலுற்றவுடனேயே பீனத்தை வெளியெடுப்புச் செய்ய வேண்டும். தற்காலத்தில் யப்பானிலிருந்து மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் உடைய உறைகள் (மிகக் கவர்ச்சியானவை) விற்பனை செய்யப்படுகின்றன. இவை கலவிக்கு ஒரு யிலுக்கை உண்டாக்கி சோடிகளுக்கு ஒரு மனக் கிளர்ச்சியையும் உண்டாக்கும்.
பக்க விளைவுகள்:
சில ஆண்களும் பெண்களும் இவ்வுறைகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் இறப்பர் பொருள்களுக்கு உணர்ச்சித் திறனுடை யவராயிருப்பர். இதனைப் பயன்படுத்துவதால் உண்டாக்கப்பட்ட பின முகையழற்சியையும், யோனியழற்சியையும் நான் கண்டுளேன். கலவி அவத்தை நிலைகளுக்குத் தடையுறுத்தாமல் அவற்றை அணிந்து கொள்ளப் பழகவேண்டும். இது இயற்கைக்கு மாமுனது எனச் சிலர் கூறுவது பொருத்தமில்லாத உரையாகும். இயற்கைக்கு ԼՈtr(0,3։ எத்தனையோ பல வினைகளில் (நாளாந்தம் ஈடுபடுகின்ருேம்,
 

தடுங்கோள் (கருப்ப) 391
வேறு நற்பிரயோகங்கள்:
செவ்வையாக இதனைப் பயன்படுத்தத் தெரியின், இவை மதன நோய்களைத் தடுப்பதற்கு மிகவும் பயனுடையன. இவை கொனறியா, சிவிலிசு போன்ற நோய்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும். கலன (வாசு)த் துமி அறுவைவினைக்குப் பின் வெளிவீசற்பாயியில் பேமுயிரி கள் இல்லாது நிலைக்கும் வரைக்கும் இவ்வுறையணிகளை ஒரு பிறப்புத் தடுப்பு முறையாகக் கருதி, கலவி வேளையில் அணியவேண்டும். முன் முதிர் வெளிவீசல் இடரால் வருந்தும் சில ஆண்களுக்கு கலவி வேளை யில் இவ்வுறையானது உணர்ச்சித் தூண்டல்களை மந்தமாக்கி, வெளி வீசலைச் சுணக்கம் செய்யும். சில பெண்கள் பேமுயிரிகளை ஒருங்கொட் டல் செய்யக்கூடிய முரணுடலிகளே உண்டாக்குவர். இதனுல் கருக் கட்டல் வளம் குறைவடையும். இவ்வகையான மலட்டு நிலையுடை யவர்கள் பீனவுறையை அணிந்து 6-12 மாதங்களுக்கு கலவியை நிகழ்த்திய பின்பு கணவனின் பேம்களுக்கு எதிராக உண்டாகி இருந்த முரனுடலிகள் இல்லாமற் போகின்றன. இதன் பின் உறையை அணி யாது செய்த கலவியானது சிலருக்குக் கருக்கட்டலையுண்டாக்கிய தென அறியப்படும்.
இவ்வுறைகள் பணச் செலவை உண்டாக்கா, மலிவாகப் பெறமுடியும் மருத்துவனின் விதிப்புக் கடிதமும் இதற்குத் தேவை
எனவே ஆண்களுக்கு மருத்துவன் இப்பிறப்புக் தடை முறைக ளேக் கற்பித்து அதன்படி ஒழுகச் செய்யவேண்டும்.
5. பேம் கொல்லி மருந்துப் பொருள்களில் (நுரை, யெல்லிகிரம்) பேமைக் கொல்லும் ஒர் இரசாயனப் பொருளுண்டு. இந்த நுரை, அல்லது யெல்லி கீரமானது கருப்பைக் கழுத்தருகாமையில் இடப்படும். முயக்க அசைவுகள் இப்பொருளைக் கழுத்து சுற்றிய அயல் இடங்களில் பரப்பும். ஓர் ஆண்டில் தொடர்ச்சியாக இதைப் பாவிப் போரில் வழுவல் 5% கருப்பநிலையாகும். (நெடுகிலும் பாவிப்போரில்)
இதன் குறைபாடுகள்:
மருந்தைப் போதியளவில், பயன்படுத்தாமை வேண்டும்பொழுது மருந்துப் பொருள் கிடையா நிலைமை, இந்நுரையும் ஏனைய பொருட் களும் தேவையில்லை என்றும் முயக்கத்தைக் குழபபுமென்னும் மனப் பான்மை கொண்டும் பயன்படுத்தாவிடில், இவ்வகைச் சோடிகளில்
வழுவல் விதம் 15-25 மட்டிலாகும்.

Page 207
392 இளம்பெண் நோயியல்
இவற்றைப் பாவிப்போருக்கு கூறுவன:
நுரை: மருந்துப் பொருள் அடக்கியைப் பாவிக்க முன் நன் முகக் குலுக்கவேண்டும் (20 தரம் மட்டில்). இதுகுழாயை முழுதாக நிரப்பியபின் கழுத்துக்குக் கிட்டவாகப் புகுத்தி இடவும், 0, 1, 2 பிள்ளைகள் உள்ளவர், நுரையை இருதரம் இட்டபின்தான் முயக்க வேண்டும். கூடிய பிள்ளைகள் உள்ளவர் 3 தரம்ாயினும் இட்டபின்பு தான் முயக்கவேண்டும். இதனை அரை மணித்தியாலத்திற்கு முன்ன தாக இ ட ப் படாது. முயக்கம் முடிந்தபின் யோனி அலசலை 8 மணித்தியாலத்துள் செய்யப்படாது. தொடக்க இடுதலுக்குப்பின் 8 ஒரைகளுள் முயக்கம் நிகழின் மீண்டும் நுரையை இடல் வேண்டும்.
பக்க விளைவுகள்:
அலசை விளைவுகள் அருக்லாகத் தோன்றும் பலர் இந்த இடு முறைகளை அழகுக் குறையுடையனவெனக் கருதுவர். சில சோடி கள் யோனி அருட்டல் அல்லது பீன அருட்டல் எரிவுண்டெனக் கூறுவர். சிலர் நுரைகளின் நாற்றம் விரும்பத்தக்கனவல்லவெனவும் மற்றையோருக்கும் இம்மணம் மணக்கும் எனக்கருதி பீதி அடைவர். கூறப்பட்ட எல்லா முறைகளும் தடைமுறையில் மிகவும் புழங் கப்படுவன.
வைத்தியனின் உதவி பெற்றுக் கையாளும்
எதிர்ப்புச் செயல்முறைகள் ஒமோனுலாகிய சூல்கொள்ளல் எதிர்ப்பு.
(அ) வாய்வழியாக எதிர்ப்புப் பொருள்கள் (குளிகை-பில்) பாவித்தல்
இது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். இச்சொல் பொதுக் கலந்துரையாடலின்போது நான மில்லாது கதைக்கப்படும் ஒரு சொல்லாகும். வாய்வழியாக எடுக்கும் கருப்பத்தடை ஓமோன் மருந்துப்பொருள்களே மூன்று பிரிவுகளா திப் பிரிக்கலாம்,
1. மாதச்சுழல் அவத்தை முறையில் தயாரிக்கப்பட்டவை இதில் 14 குளிகைகளில் ஈத்திரசன் மட்டுமுண்டு. இதைத்தொடர்ந்து பயன் படுத்தப்படும் 7 குளிகைகளில் ஈத்திரசனும் புருேசெசுற்றழுேனும் அடக்கப்பட்டிருக்கும்.
2. வாய்வழியாக கூட்டு ஒமோன் பொருள்கள்-21 குளிகைகளும் ஈத்திரசனையும் புருேசெசுற்முேனையும் அடக்கியிருக்கும்.
 

தடுங்கோள் (கருப்ப) 393
3. புருேசெசுற்றமுேன் வகைக் குளிகைகள் குறைந்தளவில் புருே செசுற்றினை (நோர் எதிஸ்ற்றமுேன்) அடக்கியிருக்கும். இது பக்க விளை வுகளை உண்டாக்கும். இதில் ஈத்திரசனனது இல்லையாகும். வியாபார ஓமோன் வகை மருந்துப் பொருள்கள் எல்லாம் செயற்கை ஈத்திரச னேயும் புருேசெசுற்றினையும் அடக்கும்.
இக்குளிகைகளை முழு மாதச் சுழல் நாட்களுக்கும், நாளுக்கு ஒன் முக விதித்த முறைப்படி எடுக்க வேண்டும். வியாபாரக் குளிகைகளும் பக்க விளைவுகளை உண்டாக்கும்.
செயற்படும் முறை:
1. இக்குளிகைகள் கீழ்ப் பரியகத்தையும் பித்துயித்தறியையும் தாக்கிச் சூலிடலுக்குத் தேவையான பித்துயித்தறி சனணியூட்டி ஒமோனை (கொனடோத்துரோபின்) விடுதல் செய்வதை உட்தடை செய்யும்.
2. கருப்பையகவணி தாக்கப்பட்டு பஞ்சணையத்தில் முன் உதிர் மாற்றங்களையும், சுரப்பிகளில் சுருங்கு மாற்றங்களையும் உண்டாக்கும். இம் மாற்றமுற்ற அக்வணியில் கருவரும்பர்ப்பை பதியாது.
3. கழுத்து மியூக்கசு புருேசெசுற்றேனுல் பாதிக்க்ப்பட்டு அதன் பாகுநிலை கூடிப் பேம்கள் ஊடுசெல்லத் தடையை உண்டாக்கும்.
4. புணரிகள் உயிருடன் வாழும் தகைமையும் பாதிக்கப்பட்டு அரும்பற்சிறைப்பையின் வாழும் தகைமையும் குறைக்கப்படும்.
கூட்டு வகைப் பொருளின் வழுவல் 100 பெண்களில் ஓர் ஆண் டுக்கு 0 1 கருப்பபங்களாகும். அவத்தை வகைப் பொருள்களின் வழுவல் வீதம் 0.5 கருப்பங்களாகும். புருேசெசுற்றின் பொருட்களின் வழுவல் சிறிது கூடவாகும். நடைமுறைப் படுத்தலில் இன்னும் மிகக் கூடவாகும்.
ஒரு ஆண்டுக்கு 1 00 (o) LJGżjoT 9;GirlGi)
குறிகிய காலப் புழக்கத்தில் 16 கருப்பங்கள் நீடிய காலப்புழக்கத்தில் 24 கருப்பங்கள் மட்டிலாகும்
பெண்களுக்குக் கூறப்படும் அறிவுரைகள்:
இக் குளிகைகளை பாவிக்கும்போது முக்கிய நான்கு விரும்பப் படா அறிகுறிகள் தோற்றக்கூடும். அவையாவன:

Page 208
394 இளம்பெண் நோயியல்
1. கடும் பிடிப்புக்கள் கால்களில் தோன்றும். 2. தாங்க முடி யாத் தலைவலிகள், 3. சடுதியாகப் பார்வை மங்கும் அல்லது இழக் கப்படும். 4. வெளிச்சப் பரிச்சுக்கள் தோன்றும் உடனடியாக வைத் தியனேக் கண்டு யோசனை பெறவும். வைத்தியன் மேலும் வாய்வழி சூல்கொள் எதிரிப் பொருள்களின் செயற்றிறன் முறையை அறிவு ரைகளாற் விளக்கவேண்டும்.
(அ) குளிகையை ஒவ்வொரு நாளும் ஒரு குறித்த நேரத்தில் அல்லது ஒரு குறித்த நாளாந்தச் செயலுக்குப் பின் விழுங்குக.
(ஆ) ஒரு குளிகையை எடுக்கத் தவறின் அடுத்த நாள் இர ண்டு குளிகைகளே எடுக்க,
(இ) இரு நாட்களுக்குக் குளிகைகளே எடுக்கத் தவறின், பின்னர் தொடரும் நாளில் இரு குளிகைகளையும் இதற்கு அடுத்த நாளில் இரு குளிகைகளேயும் எடுக்க. இதனைத் தொடர்ந்து எஞ்சிய சாதாரண நாட்களில் பிறிதொரு செயல் முறையைப் (உறை அல்லது நுரையை) பயன்படுத்தவும்.
ஈ. மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து குளிகையை எடுக்கத் தவ றின், பிறிதொரு செயல்முறையைப் பயன்படுத்தவும், பின்னர் ஒரு கிழமை கழித்தபின், இன்னமொருதரம் 21 நாட்களுக்கு குளிகைகளே எடுக்கவும். இந் நடைமுறையில் முதலிகு கிழமைகளுக்கும் பிறி தொரு வகைத் தடுப்பு முறையையும் பயன்படுத்தலாம்.
5. எப்பொழுதும் விட்டில் உறை அல்லது நுரை வகைப் பொருள் காப்பாக இருக்கவேண்டும்.
6. ஒரு தடவை மாதவிடாய் தோன்ருது இருந்தாலும் குளிகை களைத் தொடர்ந்து எடுக்க வேண்டும். இரு தடவையும் தோன் ரு தாகின் கருப்பம் உற்றதோவென அறிய மருத்துவனேக் கொண்டு சோ திக்கவும். பொதுவாக ஒரு நடைமுறையானது 3 கிழமைகளுக்குத் தொடர்ந்து குளிகை (21 குளிகைகள்) எடுத்தலும் பின்னர் ஒரு
கிழமைகளுக்குத் தவிர்த்தலுமாம்.
7. முதல் மாதங்களில் சொற்ப வேண்டா விளைவுகள் தோன் றும் (குமட்டல், உடல் நிறைகூடல்) ஆணுல் மூன்று மாதங்கள் கழி யின் இவை, தோன்ரு நிலேமை கேடுறின் வைத்தியனைக் காணவும்.
8. இம்முறையானது 100 சதவீதம் செயற்றிறனுடையதல் வென்பதை யுணர்த்த வேண்டும்.
 
 

தடுங்கோள் (கருப்ப) 395
9. குளிகைகளே எடுக்கும் பொழுது குருதிபடுதல் உண்டாகின் குளிகைகளே இரட்டிப்புச் செய்து எடுக்கவும். இரண்டாம் மாதமும் குருதிபடுதல் காணப்படின் வைத்தியனைக் காணல் வேண்டும்.
ஏனைய சாரகப் பிரயோகங்கள்: பின்னர் விளக்கப்படும். பக்க விளைவுகள்: கருக்கட்டல் வளம் உட்தடையுறும்.
கெடுதி விளைவுகள்:
1. நீடிய கால அல்ம்ாதயிரிவுயாவும் இதனுடன் அணைந்து மலடு நிலைமையும் மிக அருமையாகக் காணப்படும் ஒரு விளைவாம்.
2. மொனிலியா யோனியழற்சி உண்டாவதற்கு இது வாய்ப்
3. ஈத்திரசன்கள் விலங்குகளுக்கு கழலேயங்களையும், தீங்கு விளை கழலேயங்களையும் உண்டாக்குவதால் நீடிய காலத்துக்குப் பெண்களும் பாவிப்பதால், இவர்களுக்கும் கழலேயங்கள் உண்டாகக் கூடுமெனக் கருதுகின்றனர். இதனுல் கூபகவுறுப்புக்கள் அடிக்கடி சோதிக்கப்பட வேண்டும்.
4. குளிகைகள் பாவனையில் இருக்கும்போதே சிலரில் தடையை முறித்து குருதி வடிதல் நிகழும். இது ஈத்திரசன் புருேசெசுற்றருேன் குறைவு இருப்பின் நிகழும்.
5. இத்தடுப்பு முறையால் பால் சுரத்தல் குறைக்கப்படும். அல் லது நிறுத்தப்படும்.
6. கருப்பைத் தசையோமாக் கழலேயங்கள் பெருக்கும்.
7 முலைகள் வீங்கி நொய்மையைக் கொடுக்கும். முலைகளில் சாந்த வகைக் கீழலையங்கள் உண்டாகாது, அவற்றைப் பாதுகாக்குமெனவும் கருதப்படும்.
இதய கலனத் தொகுதியில்:
1. திரைப்பு - எறிகையம்-இந்நோய் இருப்பவர்கள் சிலர் சூல் கொள்ளெதிரிப் பொருட்களைப் பயன்படுத்துவதால் இறக்கின்றர்க ளென அறிக்கைகள் கூறுகின்றது. இறக்கும் விகிதம் 20-34 வயதுப் பிரிவில் 15 என்றும் 35-49 பிரிவில் 39 என்றும் அறியப்படும். வாய் வழியாக சூல்கொள் எதிரிகளே ப்யன்படுத்துபவர்களில் இறக்கும் விகிதம் முறையே 0.2 உம் 05 உம் ஆகும்.

Page 209
396 இளம்பெண் நோயியல்
நாளத் திரைப்பு-எறிகை தோற்ற வீதம்:
குளிகைகளைப் பயன்படுத்தாதவரில் 100,000 பெண்களில் பேரும் பயன்படுத்துபவரில் 66 என்றும் அறியப்படும்.
எனவே 100,000 பெண்களில் 60 பேர் இம் மருந்துப் பொருள்களால் இந்நோய் நிலைமையை அடைகின்றரென அறியப்படும். எனவே இக் குளிகைகளை எடுப்பதாற் சிறு கெடுதிகளே விளையக்கூடும்.
3. அதி நாடியிறுக்கம்:- இந்நோய் ஈத்திரசன் அஞ்சியோ தென் சின் பிறப்பியை உடலில் உண்டாக்குவதால் தோன்றுகின்றது, இதுவும் இறெனின் அடக்கல் நிகழாததாதல் உண்டாகின்றது,
4. நரம்பு மையற் தொகுதி விளைவுகள்:
இக்குளிகைகளை எடுப்பதனுல்
தலையிடிகளும் உள அமிழ்வு அல்லது ஏக்கம். குமட்டல் முதற் சில மாதங்களுக்குத் தொந்தரவு பாலுந்தல் குறைவுறல் என்பன தோன்றும்.
வேறு தொகுதிகளில் தோன்றும் கெடுதியான விளைவுகள்:
கீழே தரப்படும் நோய் நிலைமைகள் இக் குளிகைகளின் நீடியகா லப் பாவனையின்போது சிலரில் ஏற்படுகின்றது.
1. உடல் மெலிதலும், முலை சுருங்கலும் மாதயிரிவு நீடிய கால நிறுத்தலும், இதனுல் மன அமிழ்வும், குடும்பச் சச்சரவுகளும், பருக் கள் முகத்தில் போடுதலும், கண்மடல்கள் கருமையடைதலும் நிகழ்ந் ததை நான் அறிவேன். இச்சிக்கல் சில சமயம் மாறி முன்நிலை அடை வதில்லை. தலை வழுக்கையாகவும் தோன்றக்கூடும்.
2, செங்கண்மாரி சிலரில் தோன்றும். 3, மது நீரிழிவைப் பிறப்பிக்கக்கூடும். மது நீரிழிவுப் பெண்க ளுக்கு வேறு தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
4. கேடய வினையம் மாற்றமடையக்கூடும், 5. உடலில் நீர் தேங்கக்கூடும். இதனுல் உடல் நிறை கூடும். 6. சூல் கொள்ளல் எதிரிப் பொருட்களைப் பாவிப்பவரில் பித் தப்பை நோய் கூடுதலாக உண்டாகுமென அறிக்கைகள் கூறும் , சாதா ரன பெண்களிலும் பார்க்க இவர்களுக்கு இருமடங்கு கூடியவளவில்
தோன்றும், C
 
 
 
 
 

தடுங்கோள் (கருப்ப) 397
7. விழி வெண்படலி (கோணியா) இதனில் (நீர்த்தேக்கல் எழுமி தோன்றி கண்ணரிப்பு தோன்றக்கூடும்.
8. விழித்திரை நாளத் திரைப்பு சிலருக்கு உண்டாகியதென அறிக் கைகள் பகரும்.
வாய்வழியாக சூல்கொள் எதிரிப் பொருட்களே:
வழங்குவது கெடுதியை விளைவிக்குமெனக் கருதப்படும் நிலே GOLDGIT
2. திரைப்பு-நாளஅழற்சி-திரைப்பு-எறிகை நோய்கள் மூளைக் குருதித் தடைவாதை (அபோபிளெக்சி)
2. முலைக் காசினுேமா அல்லது இனப்பெருக்கத் தொகுதியில் காசினுேமா.
3. கருப்பநிலை, 4. முன் மது நீரிழிவு நிலைமை அல்லது குடும்பத்தில் மதுநீரிழிவு தோன்றியிருப்பின் இலகுவாக இவர்களுக்குத் தோன்றும்.
5. ஊடறிதல் பெரு யோனிக் குருதியிரிவு. 6. ஈரல் நோய் உள்ள நிலை, அல்லது முன்னே தோன்றியிருப்பின் 7. உள வளர்த்திக் குறைபாடு. 8. குருதியமுக்கம் 90 க்கும் அல்லது இதற்கு உயரவாகவும் இருக்கும்.
சூல் கொள்ளெதிரிப் பொருட்களைக் கொடுத்தல் நன்றன்று. கெடுதி விளைவுகளும் தோன்றக்கூடும். இந்தவகைத் தடுப்பில் முக்கிய நயம் யாதெனில் குளிகைகள் மிக மலிவில் கிடைக்கக் கூடிய ஒன்றே ULIITG5 LC -
இம்மருந்துப் பொருட்கள் வழங்கப்படும் ஏனைய
சாரக நோய் நிலைமைகள்
1. இடர் மாதயிரிவுயா-மாதவிடாயுடன் நோ தோன்றுவதில்லை. மாதச்சுழல்களில் சூலிடப்படா மாதச்சுழல்கள் காணப்படும்.
2. மாதயிரிவுப் பாயியின் அளவு குறைக்கப்படும். 5-6 நாட்க விலிருந்து 2-3 நாட்களுக்குக் குறைக்கப்படலாம்.
3. மாதவிடைவுக் காலத்தில் ஒமோன் பற்ருக்குறை சரிப்படுத்தல். இக்காலப் பகுதியில் பெண்கள் கருவுற விரும்பார். மாதவிடைவுக் கால அறிகுறிகளிலும் துன்புற விரும்பூார். ஆனல் திரைப்பு-நாள விழற்சிக்கும் கழலேயங்களும் தோன்றும் காலப் பகுதி இதுவேயாம்.

Page 210
398 இளம்பெண் நோயியல்
கருப்பமுற விரும்பாராகின் வேறுவகைத் தடைமுறைகளைப் பயன் படுத்த வேண்டும்-பிறப்புத்தடையை ஏற்படுத்தும் பொருட்களை (கருப் பைக வசிவு, சுருளி, பித்தளை (1) ஆகியன) பிரிமென்றகடுகளை பயன் படுத்துவர் அல்லது கருப்பைக் குழாய்க்குத் தடம் போடுவர். ஆனல் வாய்வழித் தடைக்குளிகைகள் கருப்பத்தை மாதவிடைவுத் துன்பக அறிகுறிகளையும் குறைக்கும். தீர்வின் பலாப லன்களைக் கருதி மருந்துகளை வழங்கவும்.
4. முகப்பரு-புருேசெசுற்றின் உள்ள சூல் கொள் எதிரிக் குளி கையை வாய்வழியாக உட்கொள்ளுவதால் இவை தணியும். இதைத் தொடர்ந்து புருேசெசுற்றின் இல்லாத சூல்கொள் எதிரிக் குளிகையை முதல் இரு கிழமைகளுக்கும் அருந்தின் பருக்கள் தோன்றது.
5. பாலுந்தற் கொந்தளிப்பு-வாய்வழியாக சூல்கொள் எதிரிப் பொருட்களை விழுங்குவதால் சரசச்செயற் கொந்தளிப்பு கலவியில் திருந் திய இன்பம் ஆகியன தோன்றும். இந்நிலமையானது கருத்தரிப்புப் பீதி நிலை அகற்றப்படுவதாலும் உண்டாவதாகச் சிலர் கருதுவர்.
6. முன்மாதயிரிவுறல், ஏக்கம் அல்லது அமிழ்வு
சூல்கொள் எதிரிப் பொருட்களை விழுங்குவதால் இவை கூடுத லடையும் அல்லது குறைவடையும். இவ் விளைவுகளை குறித்து மதிப்பீடு செய்து பின்னர் ஏற்ற விதத்தில் தீர்வை ம்ாற்றவேண்டும்.
7. மாதயிரிவை ஒழுங்குபடுத்தும்.
மாதச் சுழலை ஏற்றவகையில் மாற்றல்:
8. தேன்நிலா நாட்களில் மாதயிரிவு வராமற் பண்ணுவதற்கும் கிழமை முடிவில் மாதயிரிவு உண்டாகாமல் இருப்பதற்கும் அல்லது மாதச்சூழல் இடைக்காலத்தை நெடு நாட்களுக்கு நீடிப்புச் செய்வ தற்கும் இதனைப் பயன்படுத்தமுடியும். உள வளர்த்தி தடைப்பட்ட பெண்கள் தீர்வுபெறும் காவறைகளில் இந்நோயுடைய எல்லோருக்கும் ஒரே வேளையில் மாதயிரிவைத் தோற்றுவதற்கு இம்மருந்துப் பொருட் களைக் கொடுக்கலாம்.
9. உடல் நிறை கூடுவதற்கு இதனைக் கொடுப்பர். உடலில் நீரும் உப்பும் தேங்கும்.
10. முலை பெருத்தல் சிலருக்கு முலைகள் வளர்த்தியுற்று பெருப் பதற்கு இதனைக் கொடுப்பர். இதனல் இவர்கள் மகிழ்ச்சியடைவர்.
 
 
 
 

தடுங்கோள் (கருப்ப)
11. ஏனைய பிரயோகங்கள்
மாதச் சுழல் நடுக்கால நோ, குருதிவடிதல் ஆகியவற்றைத் தடுப் பதற்கும், கருப்பையகவணிவாதையைத் தீர்ப்பதற்கும் சனணி இடர் ஈனல் நிலைமைகளிலும், இளம் பெண்களில் சூலகங்களின் அகற்றலுக்குப் பின்பும் மேலும் இவைபோன்ற நிலைமைகளிலும் மீளவும் நிலைமையை முன்னிலைமை போல் ஆக்குவதற்கும் பயன்படுத்துவர்.
இக்குளிகைகளைத் தீர்வுக்காகத் தற்பரிவுத்திரைப்புக்குழிய ஊதா வாதை, மயிரியம், வல்வ இடர்வளர்த்தி நோய்கள் ஆகியவற்றிற்கும் பயன்படுத்துவர். -
வாய்வழி குல்கொள்ளெதிரிகள் (அமெரிக்க ஐக்கிய நாடு, யூலை 1973)
1. வாய்வழியாகச் சூல்கொள் எதிரிகள்
:ெ பொருட்கள் ஈத்திரசன் புருேசெசுற்றின் Giglio Liri
நோர்குவென் 14 மெஸ்திரனுேல் ... இன்ரெக்ஸ்
80 மிக்குருேகிராம் ..." 6 மெஸ்திரைேல் நோர்எதிஸ்தருே?ன்
80 மிக்ருேகிராம் 2 மி. இ.
ஒருக்கொன் 16 எதினைல் ஈத்திரட LfS o G3: Ifr GörgFGör
(ஒவின்) யோல் 100 மிக்குருே, கி
5 எதினேல் ஈத்திரடயோல் டைமெஸ் தெரோன் 25 மி. கி.
ஒர்தோநோவும் 14 மெஸ்திரனுேஸ் ஒர்தோ (ஒர்தோ நோவின் 80 மிக்ருேகிராம் தொவியூலம் 5
6. மெஸ்திரனுேல் நோர்எதின்டிறேன் 80 மிக்குருேகிராம் 2 மிக்கிருே கிராம்
புருேசெசுற்றின் வாய்வழி சூல் கொள் எதிரிகள்
மிக்ருே:நோர் நோர் எதின்டிமுேன்
0.35 மி, தி நோர் ". நோர் எதின்டிமுேன் சின்ரெக்ஸ்
ருே:ன்.

Page 211
400 இளம்பெண் நோயியல்
கூட்டு வாய்வழி சூல் கொள் எதிரிகள்
டெமுபூலென் எதினேல் ஈத்திர எதினுேடயோல்டை
GuLITT GÖT 50 மிக்ருேகிராம் அசற்றேற்று சேன்
I - 0 LÉS). GG)
இநோவிட் மெஸ்திரனுேல் நோர் எதினுேடிசெற் முேன் (கொனுேவிட்) 100 மிக்ருே:கிராம் 5.0 மி. கி
இநோவிட்டு 5 மெஸ்திரனேல் நோர் எதினுேடிறெக் ரேன் (கொனுேவிட் 75 மிக்ருேகிர்ாம் 5.0 மி. கி
இனடிறெல்) - லோயிசுற்றின் 1/20 எதினைல் ஈத்திரட நோர்எதின்டிருேன் பாக்டேவில்
G3 LITTG) அசற்றேற்று 20 மிக்ருேகிராம் 1.0 மி. கி நோரினல் மெஸ்திரனுேல் நோர்எதின்டிருேன் சின் ரெக்ஸ் நோரிடே 50 மிக்கிருேம் கி. 1.0 மி. சி. நோரினில் 2 மெஸ்திரனுேல் நோர் எதின்டிருேன் சின்ரெக்ஸ்
100 மிக்ருே கிராம் 1.2 மி. கி.
நோர்லெசுற்றின் எதினேல், ஈத்திர நோர் எதின்டிருேன் பாக்
பேல் ፵ ኃ 2 50 மிக்ருேகிராம் 1 - 0 լ(), ց), (BLଗ୩ ଜn)
Ο Α. 28 நோர்லெசுற்றின் 2.5 எதினைல், ஈத்திரட நோர் எதின்டிருேன்
(8ш6і) L_IFTiĥ (3 6ĵ76) 50 மிக்ருேகிராம் 2. 5 L f5). G). ஓர்தோநேவாம் 1 மெஸ்திரனுேல் நோர் எதின்டிருேன் ஒர்தோ
50 மிக்ருே:கிராம் 1.0 மி. கி. ஒவ்ருல் எதினைல், ஈத்திரட நோர்தெசுற்றெல் வையத்
யோல், 50 மிக்ருேகிராம் 0.5 மி, கி.
முயக்கத்தின் பின்பு விடியற்கால மருந்து ஒழுங்கு:
டைஎதிசுல்தில் பித்தரோல் 25 மி. கி. நாளுக்கு இரு தடவை
5 நாட்களுக்குப் பாவிக்குக (இவ்வட்டவணை மிக நன்றிதெரிவிப்புடன்,
எமொறி பல்கலைக்கழக அற்லாந்த யோர்சியாகுல் எதிரிப் பொறியியல் 1് இலிருந்து பெறப்பட்டது). "
(
 
 

401
5@så Gorgir (505 s'il 1)
ஒமோன் கூட்டுக்களை மிதவிஞ்சிய அளவில் உபயோகிக்கும் காலத்தில் நிகழ் அறிகுறிகள்
ஈத்திரசன்மிகை
&5&pt (-1)∈ GTQ ploupů osrőül ollq l’il që நிறை கூடல்களும் தலைக்கிறுக்கம் வெண்ணிரிவு 5 Gogol puußLDT
Los LDG flow @ LIOEË 5ấv
கண் மடல் கறுப்புறல் 505 saeulio į olą. Lil 13:56ït
புருேசெசற்றின் மிகை
| 1@&al_offs)
5ồT L’ILĮ அமிழ்வு Litréisë,5@ LOT så spið
நெய்த்தலைத்தோல்
(sp&sı'nı 105 பித்தத்தடைச் Glæssig;6(Tıptriĥ Loiraeus flop1’ Litrů os காலக்குறுக்கம்
ஈத்திரசன்குறை புறேசெசுற்றின் குறை சினத்தல்Los ou Qsp, ɓisių Logostos@s ju irioj. ĜiLITrù6||
Glouisìஇறுமல்கள்கடும் மாதக் 5(5)(a)ljus sp3b@@@susrüssựub< +>h Gli ofrɑɑfgŵuu Ġu jfr gyf,
·upp sö@
GÆTL&&, [5@uðIT,5)#மாதயிரிவு சுணங்கி சுழற்குருதிவாரி
Loirae; † 3. spjög, soortriĥ
Lor susifos utrujoļšoj gosp

Page 212
@@rī mēsī|- Œ œ9@ 1çosq'oog)s)g(Hgsgs、Q園g』Q95 #ife@@@ șFisigods)
gogođĩae oog-i ușo) GỮ09@199.§ 11@soq9osog) @nuri49-iriyos?ஒருஇை oos goo (15 £) og osno gos@sooo @@Hqọoğ1@@@.smuri‘uīnsolis gydag (f) 塔Q997,9994硕瑜心qosofo ɑfo ɑsɑ)?qs@gi -signago
igog@s o mguas uso os so sĩ reg, 1,9 os@@ĵo filogi Qog gas use@@oguin@rı, qoys us so mes@giog.Logo sosios 1991. g. g) &
Z0;spinnaeLogoTTØq119ữ

தடுங்கோள் (கருப்ப) 403
கருவுக்கு ஆண்மையை வலுப்படுத்தும் குளிகைகள்
பலவகைப் புருேசெசுற்றின்களைக் குளிகை ஆக்கத்தில் சேர்த்த போதும், நோர் எதின்டிருேன் மட்டுமே இவ்வலுவை உடையதென அறியப்பட்டது. சீப நெய் ஆக்கத்தாலும், கருவுரு ஆணுக்கத்தாலும் இதன் தன்மையை அறியலாம். குளிகைகளுக்குச் சேர்க்கப்படும் சிறியளவு அந்திரசன்பொருள் அதிக அளவில் ஆணுக்கவிளைவுகளை உண்டாக்காது.
ஒரு பெண்ணுக்கு வாய் வழிவழங்கு குளிகையைத் தேர்தல்
எமொறி பல்கலைக்கழக குளிகைத் திட்ட வேலையொழுங்கின்படி
1. இவ்வகையான குளிகையானது திறம்படு சூல்கொள்ளெதிரியாக அமைவதுடன் விளைவுகளாகத் தோற்றும் பாரதூரமான விளைவுகளையும், அற்ப விளைவுகளையும் இழிவு மட்டத்துக்கும் குறைக்கவேண்டும்.
2. ஈத்திரசன்கள் தான் இவ்விளைவுகளை புருேசெசுற்றின்களிலும் பார்க்க உண்டாக்குவன. இவர்களின் கருத்துப்படி நோரினில் 1 உம், ஒதோநோவமும் இவற்றிற்கு உகந்தவையாகும். இவை 50 மிக்கோகிரா ஈத்திரசனையும் 1 மி. கி. நோர்எதின்டிருேனேயும் அடக்கும். முறிப்புக் குருதி வடிதல் அல்லது அல்மாதாயிரிவுயா காணப்படின் கூடிய ஈத்தி ரசன் புருேசெசுற்றின் வலிவுடைய குளிகைகளுக்கு மாற்றவும்.
ஏனைய ஒமோன் கூட்டுக்கள் கீழே தரப்பட்டுள்ள நோய் நிலைமை களுக்கு பயன்படுத்துவர்.
முகப்பருக்கள், சூலிடலற்றமாதச் சூழல்களாலுண்டாக்கிய அல் மாதயிரிவுயா, மயிரியப்பிணியாளர்.
உயர் எடைக் குளிகைகள்:
நடுச் சுழற் குருதிவடிதல் அல்லது குறைஎடைக் குளிகைகளுக்கு உண்டாகும் இருந்திட்டொருக்கால் நிகழ் நீண்டகால அல்மாதபிரிவு வுயாவுக்கும் முலைவிம்மல் விரும்பும் பெண்களுக்கும், கருப்பைய கவணிவாதையாளருக்கும் இவற்றை கொடுப்பர்.
பல கருதுகோள்கள் உள
1. கீழ்ப்பரியகக் கலக்கருவில் அல்லது உயர்நரம் புமையங்களில் நிகழ் மாற்றங்கள்-இவை இலுற்றினுக்கம் செய்யும் ஒமோனின் தொ குப்பை அல்லது விடுத்தலைப் பாதிக்கும். இது நடுச் சுழல் இலுற்றி ணுக்க ஓமோன் சுரப்பை அடக்கி சூலிடலையும் இலுற்றியச் சடல ஆக்கத்தையும் தடைசெய்யும்.
(

Page 213
404 இளம்பெண் நோயியல்
2. சூல் கொள் ளெதிரி குளிகைகள் கருப்பையகவணியின் இழைய வியல் உயிரிழைய மாற்றங்களே மாற்றி, சிறைப்பையரும்பரை பதிய வாய்ப்பு அளிப்பதில்லை.
3. கழுத்து மியூக்கசு பாதிக்கப்பட்டு பேமின் அசைவையும் உயிர் வாழ்தகைமையையும் அல்லது இவற்றிலொன்றையும் மாற்றும் (மியூக் க#ப் பகை).
4. கருப்பைக் கழுத்து, கருப்பைச் சூழல்களில் மாற்றமடைந்து பேம்களைத் தலை மடிவுறச் செய்யும்.
செயற்றிறன்-இது ஏனேய அவத்தைத் தொடர்ச்சி அல்லது கட்டு வாய்வழி சூல்கொள் எதிரி ஒமோன் பொருள்களிலும் பார்க்க செயற் றிறன் குறைந்த பொருளாகும்;-கர்ப்பங்கள்
பொது கருப்பம் தரிவிதம் ஆண்டுக்கு 100 பெண்கன்
ஆண்டுகளுக்கு 3.72% மினி க் குளிகை ஆண்டுக்கு 100 பெண்கள்.
ஆண்டுகளுக்கு 2.54% ஈத்திரசன் புருேசெசுற்றின் குளிகை பெண்கள்
ஆண்டுகளுக்கு 1.95%
மாதவிடாய் முதலாம் நாளிலிருந்து (முழு ஆண்டுக்கு) ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு குளிகை எடுத்தல்)
1. நாளாந்தம் ஒரு குளிகையைத் தவருது எடுக்க, LDIT 556?)LITus நாட்களிலும் எடுக்கப்படும். நிற்பாட்டு விதித்தல் ஒன்றுமில்லை.
2. ஒரு நாள் எடுக்கத் தவறின், இது நினைப்புக்கு வந்த நேரத்தில் ஒன்றையெடுக்க, பின்னர் முன்போல் எடுக்க இரு நாட்கள் தவறின் நினைப்புக்கு வந்தவுடன் எடுக்கவேண்டிய குளிகையுடன் இன்னுமொரு குளிகையை எடுக்க, அடுத்த மாதவிடாய் வரைக்கும் பிறிதொரு தடுப்பு முறையையும் உபயோகிக்க.
3, 45 நாட்களுக்குள் மாதவிடாய் தோன்ருதாகின் ஒரு வைத் தியனிடம் ஆலோசனை பெறவும். கருப்பம் உண்டோவென்ச் சுணங் காது அறிக.
நீடிய நாட்களுக்கு குருதிவடியின் முன்போல் ஆலோசனைக்கு () ()
மினிக்குளிகைகள் செயற்றிறன் குறைந்தவை உறைகளே அல்லது நுரையத்தைத் துணையாகப் பாவிக்கவேண்டிவரும்,
 
 
 
 

தடுங்கோள் (கருப்ப) 405
山岛函 விளைவுகள். மினிக் குளிகைகள் எடுக்கும்பொழுது குளிகைகளுக்குக் கூறியதுபோல்
1. முறிப்புக் குருவடிதல், துளிபடுதல் மாதபிரிவுப் பாய்வு மாற் றங்கள், அல்மாதயிரிவுயா ஒழுங்கற்ற சுழல்கள் ஆகியன நிகழும்.
2 மைய நரம்புத் தொகுதி:
தலையிடியாதியனவும் எழுந்து, உடல்நிறை கூடல், செங்கண்மாரி, மயிரியம் ஆகியனவும் தோன்றும் திரைப்பு எறிகை நோயும் கூடுத லாகத் தோன்றுமென அறிவிப்பர். இதைக் கொடுத்து, இடர் மாத பிரிவுயாவைத் தணிக்கமுடியும். -
முயக்கத்துக்குப் பின் விடியற்காலே (வைகறை)க் குளிகை
{டை எதில்பித்தரோல்)
மாதச் சுழலின் நடுப் பகுதிக் கலவிக்குப்பின் கருப்பம் தரித்தலைத் தடுப்பதற்கு (ஒரு விபத்துற்றதென்னும் கருத்தில்) திடீர் தீர்வைக்கு மட்டும் பயன்படுத்துவர். இது இடையருது அல்லது அடிக்கடி எடுக்கும் மருந்தல்ல.
இம் மருந்தால் கருவுண்டாவதை தடுக்க முடியாதாகின் உடனடி யாகக் கருச்சிதைவு செய்யவேண்டும் எனச் சில அறிஞர் கூறுவர். ஏனெனில், அசுர ஈனலாகவும் பல்வகை உடலமைப்புப் பிறழ்வு களுடன் குழந்தை பிறக்கக்கூடும்.
செயல்முறை: அரும்பற்சிறைப்பை அகவணியில் பதியவிடாது, அதன் உயிரிரசாயன வினையத்தையும், ஏனைய வினேயங்களையும் மாற்றும்.
செயற்றிறன்:- மிக்க உடையது. வழுவல்களின் காரணங்கள்: 1. தீர்வு தொடங்க முன்னம் ஏலவே கருப்பம் தரித்துவிட்டால், 2. பாதுகாப்பு இல்லாத முயக்கத்துக்கும் மருந்து உட்கொள்வதற்குமிடையில் நீடிய காலச் சுணக்கம். (3) போதிய எடைகளில் மருந்து எடாதிருத்தல் (4) குளிகைகளைச் சத்தியெடுத்தல் (5) ஒர் இரண்டாவது முயக்கம் (6) மருந்துப் பொருள் வினையவழுவல்.
விதிப்புக்கள்:
இக்குளிகைகளைச் செவ்வையாக ஏற்ற வேளேயில் உபயோகிக்கின்
செயற்றிறனுடையது. செவ்விய எடைகளில் அதை பாதுகாப்பு இல்லா
முயக்கத்துக்குப் பின் காலச் சுணக்கமின்றி எடுக்கவேண்டும் செய
U

Page 214
406 இளம்பெண் நோயியல்
லாற்ற வேண்டின் 73 ஒரைகளுள் எடுக்கவேண்டும். முயக்கத்திற்குப் பின் உயர்ந்த எடையான டைஎதில் பித்தரோல் நாளுக்கு இருதடவை 25 மி. கி. எடைகளில் (50 மி. கி. நாளுக்கு) 5 நாட்களுக்குத் தொ டர்ச்சியாக எடுக்கவேண்டும். குமட்டல் வாந்தியுண்டாகின் குளிகை எடுத்தலை நிறுத்தாது சாரக வைத்திய ஆலோசனையைப் பெறுக.
தீர்வு காலத்தில் மீண்டும் கலவி நிகழ்த்த வேண்டின் பிறிதொரு காப்பு முறையையும் கையாளுக. இம்முறைகள் பயன்படாது கருப்பம் தரிப்பின், கருச்சிதைவு செய்யவேண்டிய அவசியத்தை உணர்ந்து வைத்தியனுடன் ஆலோசிக்க.
பக்க விளைவுகள்:
குமட்டலும், வாந்தியும், தலையிடியும் மாதயிரிவுக் குழப்பங்கள் காணப்படும். முலை நொய்மை-தாய்க்கும் சேயுக்கும் யாதாமொரு காசி னுேமா உண்டோவென்று இன்னமும் தெரியவில்லை.
ஏனைய உபயோகங்கள்:
மாதவிடைவு அறிகுறிகளையும், யோனியழற்சியையும், பால்சுரத் தலையும் அடக்குவதற்குப் பயன்படுத்துவர். பெண்ணு ன வ ள்: ஏலவே கருப்பமுற்றிருப்பின் இம்மருந்தைப் பாவிக்க (Ա)ԼԳ. Ա. IITՖl.
நீடிய காலச் செயலாற்று புருேசெசுற்றறேன் உள்ளேற் றல்கள்:
இத்தடை மருந்துத் தீர்வு பெறுகிறவர் இதனுற்திர்வுக்கு ஒப்புக் கொள்ளுகின்றேன்' என்று சம்மதம் எழுதிக் கொடுக்கவேண்டும். அவருக்கு இதன் விளேவுகளைப் பற்றிய ஒரு விளக்கப் பட்டியலும் கொடுக்கவேண்டும்.
மருந்துப் பொருள்-மெட்ரொட்சி புருேசெசுற்றமுேன் (டிபோபு ருேவீரு), இது குறையளவில் புருேசெசுற்முேன் அடங்கிய நீடிய காலத்துக்குச் செயற்படும் மருந்துப் பொருளாகும். இது தசையூடாக உற்ளேற்றப்படும்.
150 மில்லி கிராம் எடைகளில் மூன்று மாதத்துக்கொருக்கால் தசையூடாக வழங்கப்படும்.
 

தடுங்கோள் (கருப்ப) 407
இது 1. இடையருது புருேசெசற்றருேனை விடுத்தல் செய்து மாதச்சூழலில் நடுப்பகுதி இளற்றினுக்க ஓமோனின் (C. I.) கெம்பலே உட்தடைசெய்யும். சூல் உதிர்தல் நிகழாது.
(2) கழுத்து மியூக்கசுவை முன்கூறிய முறையில் தடிக்கப் பண்ணி பேம்சள் ஊடுசெல்வதைக் தடுக்கும்,
(3) ஏனைய தடுப்பு மருந்துப் பொருள்களுக்குக் கூறியதுபோல கருப்பையகவணியைச் சீர்குலைக்கும்.
செயற்றிறன்: நடைமுறைப் புழக்கத்தில் ஓர் ஆண்டுக்கு 100 பெண்கள் 5-10 கருப்பங்கள் உண்டாகக் கூடும்.
பக்க விளைவுகள் :
1. மித விஞ்சிய கருப்பையகவனிக் குருதிவடிதல், மாதக்குருதி வாரியுயா உண்டாகும். முறிப்புக் குருதிவாரியை வாய்வழியாக டை, எதினைல் ஈசற்றடயோல் பொருளை 0.5 மிகி அளவிலும் அல்லது மற் றைய கூட்டுக் குளிகைகளைக் கொடுத்தும் தடுக்கலாம்.
2. அல்மாதயிரிவுயா அடிக்கடி தோன்றும். இதை மாதவிடை வெனக் கருதாது கருப்பம்,உற்றிருக்கலாமோவென ஆலோசனை பெறவும்.
3. மலட்டு நிலைமையை உண்டாக்கும் தகமை இதற்குண்டு,
4. தலையிடிகள், தலை கிறுகிறுப்புக்கள் உடல் நிறைகூடல் ஆகியன நிகழக்கூடும்.
5. ஆணுல், பாலுந்தல் குறைவடையக்கூடும்.
தீர்வுக்கு ஒவ்வாத நிலைமைகளாவன:
(1) மேலும் கருப்பம் தரிக்க விருப்பம் (2) இப்போ கருப்பம் தரித்திருப்பின் (3) பிறப்பு உறுப்புக்களில் கழலையங்கள். (4) மாதக் குருதிவாரியுயா அல்லது அல்மாதயிரிவுயா நிலைமைகள்.
கீழ்வரும் நோய் நிலைமைகளுக்கு இவ்வகை வழங்கலக் கருதுக.
1. பெண் தனக்கு மேலும் கருப்பங்கள் வேண்டாமெனத் தீர்மா னிப்பினும் அல்லது அவளின் நிலைமைகளுக்கு மேலும் கருப்பம் தரித்தல் கெடுதியை விளைவிக்குமென ஆலோசனிை கூறவும்.

Page 215
408 இளம்பெண் நோயியல்
2. முன்னர் உபயோகித்த தடுப்பு முறைகள் இரண்டும் பயனளிக் காததினுலும்.
3. வாய்வழி சூல்கொள் எதிரிகள் சிக்கல்களையுண்டாக்கியிருப் பினும் அல்லது வாய்வழி சூல் கொள்ளதிரிகளைச் சில நோய்நிலைமை களில் வழங்குவதற்கு விதிப்பெதிர்ப்பு கூறப்பட்டிருப்பின் இப்புருே? விருவைப் பயன்படுத்தலாம்.
அந்நிலைமைகளாவன-மதுநீரிழிவு, நாள அழற்ச்சித் திரைப்பு எறிகை இதயநோய், அதிபர நாடியிறுக்கம், நாட்பட்ட ஊறுநீரியழற்சி, குருதி வாரி நோய்கள், உடன்பிறப்பு நோய்கள், குருதி நாட்டவுயா, செவிடு, ஊமையம் ஆகியனவும் வேறு சில நரம்பியல் அறிகுறிகள், வாந்தி ஆகியன. இவர்களுக்கு மினிக்குளிகைகளை வழங்க முடியும்.
கருப்பையக சூல்கொள் எதிரிப் பொறிகள்:
தற்போது கிடைக்கக்கூடிய இவ்வகையான பொறிகள் 'கறள்' பிடியா இரும்பு அல்லது பொஎதிலீன் பொருள்களால் ஆக்கப் பட்டவை. இவற்றின் "வால்கள் நைலோன்' கயிறுகளாகும். இவை கருப்பைக் குழிக்குள் புகுத்தப்படும். வால்கள் கருப்பைக் கழுத்து வெளிவாயிலில் முனைத்திருப்பதை பெண்ணுவள் தன் விரலால் தொட் டறிவாள். இவற்றை வேண்டுமாயின் இந்த வாலைப் பிடித்து வெளியே இழுத்தெடுக்கலாம். மூடுண்ட பொறிகள் ஆவன வளையங்கள், வில்லுகள் போன்றவை. கருப்பையானது துளையுறின் அவை வயிற்றுக் குழிக்குட் புகுந்து சூடல் தடுப்பு நோயையுண்டாக்கும். ஆகவே இவற்றைப் பயன் படுத்தல் நன்றன்று. திறந்த பொறிகளைத் (பொறிகளின் அந்தலைகள் சந்தித்து மூடலடையாதவை) தான் தற்காலத்தில் உபயோகிப்பர். இவை பல் பருமனும் தோற்றமும் உடையன. இலங்கையைப் பொறுத்த மட்டில் நூற்றுக்குநூறு வீதம் இலிப்சின்வசிவுகளைப் பயன்படுத்துவர்.
இலிப்சின் வசிவுகள் பெரியது, பொலிஎதிலீன் வால் நைலோன்
சிறியது (பேறியம்பொதிந்த)
கைனிகோயில் வசிவுகள் பெரியது - * s
LIDITrig, Gorff) வசிவுகள் சிறியது * 原 劇 屬 კყაგ.;/ ''|'' T வடிவம் சிறியது ●岛 o 3 கொப்பர் ' வடிவம் சிறியது ().ց,րrլյլ լր * 邺 புருேசெசுற்றேன் T, புருேசெசுற்றின் 粤 剔
(பொதிந்த) ' , , டல்கன் கேடயம் பெரிது பொலிஎதிலின் 島 歸
சிறியது . பேறியம்பொதிந்த
 
 
 

தடுங்கோள் (கருப்ப) 4.09
வசிவுகள் பல் பருமன்களில் கிடைக்கும். வேறு சுருள்களும் சுருளி களும் பல பருமன்களிலுண்டு. சில கேடயவுரு T (ரி) வடிவமுடையன. இவை மனிதரில், விலங்குகளிற் போலன்று சூலிடலை உட்தடுப்புச் செய்வதில்லை,
இவை செயற்படும் விதம்:
முன்னைய காலத்தில் இவை கருப்பைக் குழாய்களின் அசைவு தகைமையைக் கூட்டி சூலை விரைவில் வெளியகற்றுமென்று கருதப் பட்டது. கருக்கட்டல் தடுக்கப்படும். இதுநிகழின் அது விரைந்து கருப்பையை அடையும் பொழுது கருப்பையானது அரும்பர் சிறைப்பை நாட்டல் உறுவதற்கு ஏற்ற நிலையில் இருக்காது. இதற்குச் சான்றுகள் இல்லையாம்.
இந்தக் கருப்பையகப் பொறிகள் கருப்பையகச் சூழலை மாற்றிச் சிறைப்பையரும்பர் உயிருடன் வாழமுடியாத நிலையை அல்லது நாட்டல் உறமுடியா நிலையை எய்துவிக்கும். கருப்பைத் தசை கூடிய அளவிற் சுருக்கங்கள் உறக்கூடும். (சான்றுகள் விலங்குச் சோதனைகளிலுண்டு) அல்லது கருப்பையகவணி மாற்றங்களையுண்டாக்கும். இதற்கும் சான் றுகள் உண்டு. கருப்பையகவணியில் வசிவுகளால் ஒரிடத்து அழற்சி யுண்டாகும். பல்வடிவ வெண்குழியங்கள் இவ்விடங்களில் குவிந்து பேமை அல்லது அரும்பர்ச் சிறைப்பையை இழிசல் செய்யும்.
சிலரில் இந்தப் பொறிகள், மடிந்து ஒட்டியிருக்கும் கருப்பைக் குழியை விரித்து ஒர் உண்மைக் குழியாக்குமொன்றும் இதனுல் கருப்பைச் சுவர்கள் நெருங்கி அண்மித்துக் கிடந்து அரும்பர்ச் சிறைப்பையை வெளிச் செல்லாது தடுத்து நாட்டலுற உதவவே முடியாது. இப்போது குழி அகண்டு இருப்பதால் அச்சிறைப்பையானது வெளிச் செல்கின்ற தென்ற கருத்தைக் கூறுவர்.
கருப்பையகவனிப் பரப்பில்:
வசிவு அழுத்துவதால் உண்டாகிய பதிவுகள் உண்டு. வசிவு களுக்கிடையில் கொம்மும் பகுதிகள் எழுமியுற்றும், அதிகுருதிமை யுற்றுமிருக்கும். இடத்து அழற்சிக்கு நிகழ்மறுகை விளைவுகள் காணப் படும். இத்தோற்றங்கள் இரண்டாவதாகக் கூறிய கருத்தை வலியு றுத்தும் பற்றிறியப் படினங்கள் தெரிவிப்பது யாதெனின் கருப்பைக் குழியின் பற்றிறிய இனங்கள் இந்தப் பொறியை இடுவதால் மாற்ற மடைவதில்லை என்பதாம் .

Page 216
410 இளம்பெண் நோயியல்
செயற்றிறன்:
இலிப்சின் வசிவு D ஐப் பற்றிய படினங்கள் பகர்வது யாதெனின் இவற்றை முதலாவதாக உட்புகுத்திய பின் தொடர்ந்து ஒராண்டு கழியவும் 78.5% வீதப் பெண்கள் இன்னமும் அதைத் தொடர்ந்து உபயோகிப்பதாக அறிபப்படுவதாகும். இவற்றுட் சிலருக்கு வசிவு ஆனது வெளித்தள்ளல் அல்லது எடுத்தல் நிகழ்ந்தபின்பும் மீண்டும் உட்புகுத்தப்பட்டது. 10.8% வீதப் பெண்கள், நோ அல்லது குருதி வடிதற்கு காரணத்திற்காகத் தொடர்ந்து உபயோகிக்கவில்லை. இன்னும் 9.6% வீதப் பெண்களுக்கு வசிவுகள் வெளித்தள்ளலுறும், அவை தொடர்ந்து மீண்டும் உட்புகுத்தலை விரும்பார். 2.6% வீதப் பெண்கள் வசிவு உள்ளேயிருந்தபோதும் கருப்பம் உற்றனர்.
6 ஆண்டுகள் மட்டும் கருப்பம் உருது வசிவுகளைப் பயன்படுத்திய வர்களைக் கண்டிருக்கிறேன். வசிவுகள் உள்ளிருக்கும் நிலையில் கருப்பமு மிருப்பதை சிலரில் கண்டிருக்கின்றேன். வசிவுகள் கருப்பையைத் துளைத்து கூபகக் குழிக்குள் கிடக்கும் பிணியாளரையும் கண்டிருக் கின்றேன் ஆணுல் பல ஆண்டுகளுக்கு உபயோகிக்க வேண்டும் கருப் பமுறும் விதமும், வெளித்தள்ளப்படும் விதமும் படிப்படியாகக் குறையுமென அறிக்கைகள் கூறும்.
5 ஆண்டுகளுக்குப் பின் கருப்பமுறு வீதம் ஆண்டொன்றுக்கு 100 பெண்களில் 10 பேர் மட்டில் என அறியப்படும்.
Lãi), Gör (GG, LUI LID:
இது மிகவும் அண்மையில் உபயோகத்துக்கு வந்த பொறியாகும். பிள்ளைப் பெருதவர்களுக்கு மிகவும் பயனுடையது. இவற்றின் வெளித் தள்ளலுறுவீதம் மிகக் குறைவாகும். இற்றைவரைக்கும் பெற்ற அறிவைப் பொறுத்தமட்டில் இவற்தை நீடிய காலத்துக்குத்தொ டர்ந்து பெண்கள் பாவிக்கின்றனர் என்றும் இது மிகக்குறைந்த வெளித்தள்ளல் வீதமுடையதென்று அறியப்படும்.
கருப்பையக சூல் கொள்ளெதிரிப் பொறியை கருப்பைக் குழிக்குள் புகுத்தல்: இதற்காகிய முறையை விளக்கும் குறிப்புக்கள் பொறியுடன் ഉ61)
யுள் இருக்கும். இதைப் புகுத்தும்பொழுது கருப்பையானது பொள்ளல் உறும் என மனதில்கொண்டு, அவதானமாகப் புகுத்தவேண்டும்.

தடுங்கோள் (கருப்ப) 4
உள்ளிடும் காலப் பகுதியும் செயல் முறையும்:
பெண்ணின் வாழ்வில் இதை இடுவதற்குச் சிறந்த நாள் மாதச்
சுழலின் இறுதிப் பகுதியிலாகும், அவளின் கருப்பைக் கழுத்து திறந் திருப்பதால் உள்ளிடல் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும். பெண் ணுனவள் கருப்பம் உற்று இருப்பின் உள்ளிடலைச் செய்யவேபடாது பேற்றுக்குப் பின் முதலாம் கிழமையில் இவை பெருமளவில் வெளித்தள்தல் உறும் மேலும் இக்காலப் பகுதியில் கருப்பை மென்மையாக இருப்பதால் பொள்ளலுறக்கூடும். பேற்றுக்குப் பின்பு 6 கிழமைகள் கழிந்து இதை இடுவதே உகந்ததாகும். உள்ளிடல் ஒரு விளையாட்டு வேலை’ எனக் கருதப்படாது. இது ஒரு அறுவை வினைச் செயல்போன்றதாகும் பொறியையும் கருவிகளையும் கிருமியழிப்புச் செய்யவேண்டும். வெப்பமுறைக் கிருமியழிப்பு பொலியெதிலினைச் சேதப்படுத்தும். எனவே இவற்றை நீர்மய அயடீனுள் (ஒரு பகுதி அயடீன் 2000 பகுதி நீர்) 5 நிமிடங்களுக்கு அமிழ்த்தின் போதுமான தாகும்.
இடமுன்னர் கூபகச் சோதனை செய்து கருப்பையின் பருமன், இடம் ஆகியன பற்றி அறியவேண்டும். கருப்பைக் கழுத்து அப்பலே எடுத்து குழியியற் சோதனை செய்யவேண்டும், யோனியைச் சவ்லோன் (டெற்ருேல்) கரையத்தால் தூய்மை செய்தபின் கழுத்தின் முற் சொண்டை வல்சலெத்தால் (கழுத்துக் கல்வி) வல்சலே கீழாக இழுத்து கருப்பை-கழுத்து வாயை நேராக்க வேண்டும். கழுத்தானது கீழே இறக்கப்படுவதால் உட்புகுத்தல் இலகுவாக இருக்கும். புகுத்தும் பொழுது உயரவாக நிகழும் உதைப்பை, கவ்வியால் கீழிமுக்கப்பட்ட கருப்பை எதிர்க்கும். இது பொள்ளல்நிகழாது பாதுகாக்கும். கழுத்தைக் கீழே (நடுக் கூபக நிலை) இழுத்தபின் ஆழம் காண் கம்பியால் கருப் பையின் ஆழத்தையும், திக்கையும் அறிவது முக்கியமாகும். அல்லது இடும்பொழுது மென்மையான கருப்பை இலகுவில் பொள்ளலுறக்கூடும்.
சில பெண்கள் நோகுது எனக் கூச்சல் செய்து செயலை முடிக்க விடார். இவர்களுக்கு கழுத்தின் பக்கங்களே உணர்வழிப்புச் செய்ய வேண்டும். இதற்கு சைலோகேன் போன்ற உணர்வழிப்புக் கரை யங்கள் போதுமானதாகும். முழு அளவில் 2.5% செறிவுடைய 2.5 கசமீ சைலோகேன் கரைசலை கழுத்தைச் சுற்றி 5 இடங்களில் குத்தியுட் செலுத்துக. மணிக்கூட்டு முகப்பு 12, 9, 3, 5, 7, ஒரை யெண்களின் இடங்களுக்கு ஒப்ப குத்திச் செலுத்த வேண்டும். குத்தமுன் சிறிது உள்ளுறிஞ்சல் செய்ய வேண்டும். (குருதிக் கலனே விலத்து வதற்கு). உணர்வழிப்பு 2 நிமிடங்கவில் நிகழும், ஊசியானது மியூக் கசுவுக்குச் சற்றுக்கீழாகப் புகுத்தப்படும்.

Page 217
412 இளம்பெண் நோயியல்
வசிவு அல்லது கருளி அல்லது சல் ' உருவச் சுருளையிடுவதற்கு கழுத்தை அகட்டத் தேவையில்லே. டல்கன் கேடயத்தை இடவேண்டின் கழுத்தைச் சிறிதளவில் அகட்டவேண்டும். இதற்கு இலடமினேறியாத் தேடிகளைப் பயன்படுத்தவேண்டும். இவை இரண்டு அங்குல நீள முடையதும், வித்தியாசமான தடிப்பளவும் உடையன. இவை கழுத்து நீரையுறிஞ்சுவதால் ஐந்துமடங்கு மட்டில் வீங்கி கழுத்துக்கால் வாயை அகட்டும். புகுத்தியைக் கொண்டு பொறியை நீட்டி நேராக்கிய பின்பு அதனைக் கழுத்துக் கால்வாயூடாகக் கருப்பைக் குழிக்குள் இடவும். புகுத்தியின் நுனி கழுத்துக் கால்வாயின் உள்வாய்க்குச் சற்று உயரவாக இருக்கவேண்டும். ஆணுல் கருப்பையடிக்கு கீழாக இருக்கவேண்டும். புகுத்தியை மேலும் உயரப் புகுத்தின் கருப்பை பொள்ளல் அடையும் ஓர் அங்குலம் மட்டுக்குப் புகுத்தவேண்டும். இப்போ அது கழுத்துக் கால்வாய் உள்வாய்க்குச் சற்று உயரவாகவிருக்கும். பொறியை உட் தள்ளும்பொழுது புகுத்தியானது வெளியெடுக்கப்படும். நைலோன் வால் இப்போ கழுத்துக் கால்வாய்க்குச் சற்றுக் கீழாக முனைக்கும். இது இவ்விதம் இருப்பதைத் தடவியறிய முடியும். மேலும் வசிவை வெளி யெடுக்கவேண்டிவரின் அதைப் பிடித்து இழுத்து வெளியே எடுக்கலாம்.
8 மாதங்கள் கழிந்த பின்பும் ஆறுமாதங்களுக்குப் பின்பும் சோதித்து வசிவுகள் இருக்கின்றனவோ என அறியவேண்டும். ஒருவித மான உடல்நலக் குறைவும் இல்லாது ஆண்டுகள் கணக்கில் இது வெளியகற்றப்படாமல் உள்ளே கிடக்கும். இருந்தாலும் 2-3 ஆண்டு களுக்கொருக்கால் அவற்றை மாற்றின் நன்று (கலாநிதி த. குமாரசாமி)
பெண்களுக்கு:
கலவி வேளையில் ஆண்கள் நைலோன் வால்கள் உள்ளேயிருப்பதை உணரமாட்டார்கள். ஒவ்வொரு மாதவிடாய்க்குப் பின்னரும் விரலால் நைலோன் வால்கள் சரியான நிலையிலிருக்கின்றனவோ என்று தடவி யறியவும் (முதல் 6 மாதங்களுக்கு).
சிக்கல் எதுவும் இல்லாவிடின் ஏற்ற வைத்திய உதவியுடன்
இடைக்கிடை மாற்றி மாதவிடைவுக் காலம் வரைக்கும் இவற்றை அணியலாம்.
கொப்பர் பொறிகளை இரண்டு ஆண்டுகளுக்குகொருமுறை
மாற்றவே வேண்டும்.
G
 

தடுங்கோள் (கருப்ப) 413
இக்கல்கள்
(1) கூபகத்துள் நோவானது பொறியை இட்டபின் தோன்றும். இந்நோவானது பிடிப்பு வகை நோவாகும். தாங்க முடியா நோவா கவும் இருக்கும். ஆனல் விரைவில் தணியும். சிறப்பாக பிள்ளைப் பெருதவர்கள்தான் பெருமளவில் வருந்துவர். இதற்கு அல்பிறின் மருந்து போதுமானதாகும்.
(11) நாரிவலியாலும், இடர்மாதயிரிவுயாவாலும் பலர் வருந்துவர் இது கடுமையாகவும் இருக்கக்கூடும், இது வசிவுபொறிக்கும் கருப்பைக் குழிக்குமிடையில் சரிபொருத்தமில்லாத காரணத்தினுலெனக் கூறப் பட்டது. சில கருப்பைகளின் குழி சிறியது. இவற்றிற்கு சிறிய அள வுடைய வசிவுகளே தேவைப்படும். கருப்பைக் குழிக்கு ஏற்ற வசிவுகளை இதற்குத் தீர்வாகும்.
3. குருதி வடிதல்:
வசிவைப் புகுத்தியபின் 1-2 நாட்களுக்கு குருதிவடிதல் நிகழும். அடுத்துவரும் 2-3 மாதயிரிவுகளில் குருதி வடிதல் கூடுதலாக இருக்கும் சிலருக்கு மாதச் சுழல் இடைப்பகுதியில் வடிதல் நிகழும். இந்த இடைப்பகுதிச் குருதிவடிதலேக் ஓமோன் மருந்துப் பொருள்களால் அடக்கவே முடியாது. இவ்வடிதல் பிதிதரும் அளவிலிருப்பின் வசிவை அகற்றியபின்பு கருப்பைத்திருவல் செய்யவேண்டும். 2-3 மாதங்களுக்குப்
பின்னர் வசிவையிடலாம்.
4, சிழ்நிலைமை:
வி சிவை இடமுன்னர் கூபகத் தொற்றிராவிடினும் செயல்முறையில் முழு அல்சீழ் முறைகளைக் கையாளின், கூபகத் தொற்ருே அல்லது கருப்பைத் தொற்ருே வசிவால் உண்டாக்கப்படுவதில்லை,
5. வசிவு இடம் பெயர்தல்:
வசிவை இடும்பொழுது கருப்பை பொள்ளல் உறுவதால் வவு பரிவிரியக் குழிக்குட் செல்லும், செயல் முறையானது அவதான துடன் செய்யப்பட்டிருப்பின் இச்சிக்கல் தோன்றவே முடியாதொ பலர் கருதுவர். இடம்பெயர்ந்து வயிற்றுக் குழிக்குள்ளிருப்பின் அா வெளியெடுத்தல் நன்று குடற் சிக்க்ல்கள் நிகழாது அதனை சொ யெடுத்தலே நன்று.
O 6. கான்சர் பீதி இதனுல் கருப்பைக் கான்சர் தூண்டப்பா என்பதற்கு இன்னமும் சான்றுகள் இல்லை.

Page 218
al. இளம்பெண் நோயியல்
7. கருப்பம் தரித்தல்:
வசிவு கருப்பைக்குள் நிலைத்திருக்கவும், கருப்பம் தங்கி, (p(L) நிறைவடையக்கூடும். இள்வகையான 3 தாய்மாரைக் கண்டிருக்கின் றேன். சிலர் அடிக்கடி பேற்றுக்குமுன் சொற்ப குருதிவடிதல் உறுளர் (முன் பேற்றுக் குருதிவாரி) வித்தக்ம் வெளியகற்றப்படும்பொழுது வசிவும் வெளிவரும்.
வசிவுடன் கருப்பம் தங்கின், அதிகமானேருக்கு யாதாயினு மொரு சுெடுதியும் நிறைமாதம் வரைக்குமோ அல்லது பேற்று வேளை யிலோ உண்டாகுவதில்லை. இதற்கு ஒரு சிறப்புத்தீர்வும் வேண்டியதில்லை. இலிப்சின் வசிவுடன் 2% பெண்கள் கருப்பம் உறுகிருர்கள் என அறிக்கைகள் கூறும்
சவ் T கருளியில் இக் கருப்ப விளைவு மிகக் குறைவாம், சுருப்பை அகவணி சூல் கொள்ளெதிரிப் பொருள்கள்:
இப் பொறிமுறைகள் கருக்கட்டல்வளத்துக்குக் கேடுசெய்வதில்லை. அதிகமானேர் வசிவையகற்றிய பின் அல்லது வெளித்தள்ளல் உற்றபின் காலச் சுணக்கமின்றி விரைவில் கருப்பமாகின்றனர்.
வசிவுடன் கருப்பம் நிகழாதிருக்க வேண்டின் கருப்பைக்கு ஏற்ற அளவுடைய வகிவைப் புகுத்தவேண்டும். சிலருக்கு இவ்விதமாகச் செய்தாலும் வசிவுடன் கருப்பம் தரிப்பார்கள். ஆகையால் கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இக் சுெடுதி“ யைப் பற்றிய விளக்கம் கொடுப்பின் குடும்பச் சச்சரவு நிகழாது,
வசிவிடலுக்கு முரணு ன நைவுகள்
1. கூபகத் தொற்றுக்கள். 2. கருப்பைத் தசைநாரோமாக்கள் இருந்தால் பொறியைச் சரியாக இடவே முடியாது.
3. பிறழ்வான குருதிவடிதல்.
4. ஈனற்சுவட்டுக் கான்சர் நிலைம்ை. (கலாநிதி த. குமாரசாமியின்
51-660)ir 360,5 GT upg, ifle, alth - 560 31). Jaffna Clinical Journal Vo
10-2-1970)
 

தடுங்கோள் (கருப்ப) 45
பொறி அளவு கருப்பமுற்ற வெளித்தள்ளல் வெளி அகற்றல் பொன்ௗல்
வீதம் வீதம (வைத்தியனல்) வீதம் இலிப்சின் A (சிறிய 8/100 6.9/100 1.7/100 1/1,000 வசிவு B 5.8 6.5 21, 1 C 4。五 5。3 19.2 D 2.6 3.. 6 19.5 மாகுலி சுருளி சிறிய 2,9 9.6 129
பெரிய 1,9 7.4 19.8 சவ் I சுருள் 3.. 6 7.8 25。2 டல்கன் சிறிய l, I 2.3 2,0
கேடயம்
கருப்பைக் கழுத்து வெளிவாயை மூடும் பொறிகள்:
இவ்வகையான பொறிகள் பலவுள. கழுத்து பிரிமென்றகடு கழுத்துக் குல்லா (இடச்சுக்குல்லா) ஆகியன.
இவை புழக்கத்திலிருந்து மறைகின்றன. ஆனல் ஆராய்ச்சியாளர் புதுப்புது சூல் கோள் எதிரிகளைத் தயாரிப்பதில் ஊக்கம்ெடுக்கின்றனர். ஸ்புருேஸ்ரோ கிளான்டிகள் சூல் கொள்ளலுக்கு காட்டும் எதிர்ப்பு ஆராயப்பட்டு வருகின்றது,
ஒரு புதுப் பிறப்புக் கட்டுப்பாட்டு முறை உலகம் முழுவதிலும் புழங்கப்பட்டு வருகின்றது. இதில் மாதவிடாயானது நிகழச்சில கிழமைகள் பிந்தின் கருப்பையகவணியை வெற்றிட அகத்துறிஞ்சல் முறையால் அகற்றுவர். இதை மாதவிடாய் ஒழுங்காக்கமெனக் குறிப்பர்.
இவ்வகையான வெற்றிடவெளி உறிஞ்சல்களில் பல இளம்படு கர்ப்பங்கள் அகத்துறிஞ்சப்படும். பொதுவாகக் கருப்பத்தைக் ஊடறியும் சோதனைகள் கடைசி மாதவிடாயிலிருந்து 40 நாட்கள் சென்ருலொழிய கருவுற்ருள் என்பதைச் சான்றுகள் தெரிவிக்க முடியாது இந்நாள் எல்லைக்கு முன்பாக செய்யும் ஊடறிவு சோதனை முடிவுகள் நம்பக் கூடியனவல்ல ஒரு புதுச் சோதனையான இறேடியோ ஏமவளிப்பு மதிப்பீட்டு மூறையானது மனித கோறியன்கொனடோ துரேபின் ஒமோனுக்குண்டு. தவறப்போகும் மாதவிடாயை நாளுக்கு 4-5 நாட் களுக்கு முன்பாக ஊடறிந்து கருப்பநிலையை அறியலாம். ஆல்ை இது இங்கு இன்னமும் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லே ஊடறிந்து தீர்வு செய்வதால் முன்னைய காலத்தில் முதல் ஆறு மாதங்களுள் நிகழ்த்தப்படும் கருச்சிதைவுகளும் அதலுல் லிளேயும் சாக்களும் நோய் லைநிமைகளும் தற்காலத்தில் குறைவர்கும்.

Page 219
46 இளம்பெண் நோயியல்
இது ஒரு எளிய ஆரவாரமற்ற செயலாகும். சாரக அறைகளில் சில நிமிடங்களிற் ஆற்றப்படக் கூடியவை. முழு உணர்வழிப்பு நிலை தேவையில்லை. சிக்கல்கள் மிகக் குறைவாகும்.
செயல்முறையும் மிக எளிதாகும் ஒர் ஏற்ற விட்டமுடைய காமன் (Karmen) கானுளியை உட்புகுத்தி வெற்றிடம் உண்டாக்கும் எந்திரத்துடன் இது தொடுக்கப்படும். (மின் முறை வெற்றிடமாக்கல், அல்லது பாதம் அல்லது கையால் பம்பி இயக்கப்படும். ஒரு 50-70 ச. மீ. எதிர் அமுக்கம் கொண்ட வெற்றிடத்தை உண்டாக்கிப் பின்னர் அகத்துறிஞ்சுவர். கானுளியுடன் அமைத்த ஒரு திருவியை கொண்டு கருப்பையகப் பகுதியைத்திருவல் செய்வர். இதனில் கருச்சிதைவில் காணப்படும் பொள்ளல், கிழிவு தொற்று குருதிவடிதல், குறைய முக்கத் துளக்கு ஆகிய சிக்கல்ஞகம் இம்முறையிலும் தோன்றக் கூடும்.
இந்த மாதவிடாய் ஒழுங்காக்கத்தைப் பற்றிய இரு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கர்ப்பம் தங்கியிருக்கக் கூடுமெனக் கருதின் இவ்வொழுங்காக்கத்தைப் பின்னர் ஒரு சூல் கொள்ளற் தடுப்பு முறை யாகக் கருதி பெண் வேண்டுவாளா சிலர் மாதவிடாய் பிந்தின ாோதும் கருவுற்றிரார். ஆகவே நீர்வானது ஒருநேவையற்ற தீர்வாகும்.
ஒருஆராய்ச்சிப் படினத்தில் ஒரு கிழமை கழிந்து மாதவிடாய் அடையாதவர்களில் 50% பெண்கள் கருவுற்றிருந்தனர். மற்றைய 50% தேவையற்ற ஒழுங்காக்கம் செய்தனர் எனக் கருத வேண்டும்.
இருகிழமைகள் கழிந்தும் மாதவிடாய் தோன்ருதவர்களில் 25% கருவுற்றிருந்தனர். எனவே இரு கிழமைகளுக்கு சுணங்கிச் செய்யின் இது பல தேவையற்ற மிாதவிடாய் ஒழுங்காக்கங்கள் செய்வதைக் குறைக்கும்.
அடுத்தகேள்விக்கு விடைகாண்பதற்காக ஒவ்வொரு முறையும் வேண்டுவர். தேடியும் செல்வர். அவர்களைத்திருத்தவே முடியாது. இது ஒவ்வொரு பெண்ணின் மனநிலையைப் பொறுத்து இருக்கும், புது முறைகளை உதறி எறியாமல் நல்ல தடுப்பு முறைக் குடும்பக் கட்டுப் பாட்டு அறிவையும், உதவியையும், அளிப்பின் இப்புது முறைகள் தேவைப்படா.நாயின் வாலை நிமிர்த்த முடியுமா? ஒழுங்காக்க முறையைப் பற்றி அறிய நூல்களைப் பார்க்க.
தற்காலத்து அகத்துறிஞ்சல் முறையானது, பழைய முறையை (கருச்சிதைவையும் பொருள்களையகற்றுவதற்கு கருப்பைக் கழுத்தை அகட்டி திருவல் செய்யும் பழைய முறையைப் புழக்கத்திலிருந்து மறையைச் செய்துவிட்டது. சிலருக்குக் கழுத்துக் கால்வாய் அகட்டல் தேவைப்படும். இதற்கு கேகார் அகட்டிகள் அல்லது இலடமினேறியாத் தடிகள் தேவைப்படும்.

தடுங்கோள் (கருப்ப)
சில நாடுகளில்
இந்தமுறையானது சட்ட ஆதரவு பெற்ற பெருமளவில் புழங்கப் பட்டு வருகின்றது. அகத்துறிஞ்சப்பட்ட கருப்பையடக்கல்களைச் சோதிப்பின் இவற்றுட்பல நேமக் கருப்பங்களாயிருக்கும். சில பிறழ் வான கருப்பங்கள்ாயிருக்கும். மேறு சில கருவுரு நிலையைக் சாட்டும்.
குறிப்பு: இலடமினேறியாத் தடிகள், ஒரு கடற் செடியிலிருந்து செய் யப்படும், பலவிட்டங்களில் உள்ளது. எதிலின் ஒட்சைட்டு அல்லது கம்மாக் கதிர்வீசலால் கிருமியழிப்புச் செய்யப்படும்.
12. கிழமைக் கர்ப்பத்துக்கு 1 அல்லது 2 சிறிய பருமனுடைய தடிகள் தேவைப்படும்.
13. கிழமைக் கர்ப்பத்துக்கு 1 மட்டான தடி போதுமானதாகும். சேய்மை நுனி கருப்பைக் கழுத்து உள்வாய்க்கு சிறிது உயரவாகவும் அண்மைப் பகுதி கருப்பைக் கழுத்துக்கு வெளியாகவும் இருக்கும்.

Page 220
48 இளம்பெண் நோயியல்
இயல்: 23
கருப்பைக் குழாய்களுக்குத் தடம் போட்டுப் புழையடைப்புச் செய் தலே சூல்கொள் எதிர்ப்பின் உச்சத்தடுப்புச் செய்கையாகும், இவ்வ கையான தீர்வுக்குப் பின்பும் செயல் முறைப் பிழைகளினல் அல்லது கருப்பைக் குழாய்கள் மீண்டும் கானுக்கம் அடைவதால் சூல்கொள் ளல் நிகழும். குறை கருப்பையகற்றலுக்குப் பின் (கழுத்தைத் தவிர்ந்த ஏனைய பகுதி அகற்றப்பட்டது) கருப்பைக் கழுத்தில் கருப்பம் தங்கி யதை நான் தீகவு செய்திருக்கிறேன். கருப்பை அகற்றல் அல்லது இரு சூலகங்களையும் அகற்றல்தான் கருவுரு நிலைமையை உண்டாக்குய். மலடாக்கல் செய்வதற்கும் சட்டத்தடையில்லே. ஆனல் கணவனும் மனைவியும் இவ்வறுவை வினைக்கு ஒத்தாசை தருகின்ருேமென்று கை யொப்பமிடல் வேண்டும். மற்றும் எவ்வகைய பெண்ணும் தனக்கு விருப் பராயிருப்பின் தன் கருப்பைக் குழாய்களை அகற்றிவிக்கலாம். சமூகத் துத்குச் சமூகம் இந்த விடயத்தைப் பற்றிய விதிப்பு வேருகும்.
பெண்கள் இவ்வறுவை வினையை விரும்பிச் செய்விப்பர். பின்னர் எவ்விதமான உடல் நோயும். மனநோயும் தோன்றின் இந்த அறுவை வினைமேல் பழியைச் சுமத்தி விடுவார்கள். சிலர் குழாய்களே மீண்டும் செப்பம் செய்யும்படி கேட்பர்.
வேறு சிலர் குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி, நன்நடத்தை புடையவராய் இருப்பர். இந்த மலடாக்க அறுவைவினைக்குப் பின்பு ஒழுக்கத்தில் தவறிப் பலருக்குத் துன்பத்தை உண்டாக்கிய செய்திகள் பல எனக்குக் தெரியும்.
பலர் தமத்கு வேண்டிய குழந்தைகளைப் பெற்றபின் இவ்வறுவை வினையை வேண்டுவர். வேறு பலர் பல்வேறு நோய் நிலைமைகளுக்கும் மகப்பேற்று இடர்களுக்குமாக இவ்வறுவை வினேக்கு உட்படுத்தப்படுவர் இவர்களுக்கு உண்மையில் இவர்களின் உயிர் பாதுகாப்புக்காக இவ் அறுவை வினை செய்யப்படுகின்றது. வேறு சிலர் பிள்ளைப்பேற்றை வெறுத்து ஒரு தொல்லேயில்லா இன்ப வாழ்க்கை வாழ்வதற்காகச் செய்விக்கின்றனர்.
செயல்முறை : குழாயைப் பிரிப்பதற்குப் பல செயல்முறைகள் உள
1. வயிற்று வழியாகவோ அல்லது யோனி வழியாகவோ கருப் பைக் குழாய்களைத் தடம் போட்டபின் நறுக்கியகற்றுவர். சிலர் இரு தடங்களுக்கிடையிற் குழாயைப் பிரித்துவிடுவர். சிலர் முழுக் குழா யையும் அகற்றுவர்,

மலடாக்கம் 49
2. யோனிவழியாக (பிற்பக்கவிதான மூடாக) இதனை விரைவில் செய்து முடிக்கலாம்.
3. வயிற்று வழியாகச் செய்யின் பலர் சமய கோட்பாட்டுக ளுக்கமமைய இவ்வறுவை வினைக்கு உடன்படார். ஆனல் யோனி யால் ஒர் இழை போடவேண்டுமென்ருல் உடன்படுவார். வயிற்று வழியாகக் குழாய் பிரித்தலைச் செய்யின் விரும்பார். இந்த அறுவை வினையைக் கருப்பைப் பிரட்டல்’ எனக் கூறிச் செய்யின் அவர்கள் சம் மதம் தருவார்கள்.
செய்யப்படும் அறுவை வினைகளாவன:
1. மருத்துமியும் (குழாய் முடிவிட மருக்களும்) குழாயின் பக்கப் பகுதியும் அகற்றப்ற்டும்.
3. பொமருேய் அறுவை வினே :- இதில் குழாயானது ஒரு வசிவாக அகத்துறிஞ்ச சப்படாத் தடித்தநூலால் கட்டியபின் வசிவுப் பகுதி அகற்றப்படும்.
3. றமலும் ஒரு பாதுகாப்பாக எஞ்சிய கருப்பைப் பகுதிக் குழாயைப் புரிவிரியத்துக்குக் கீழ் இட்டு பரிவிரியத்தால் மூடிவிடவேண் டும். என்பர் கருப்பைத் தசைக்குள் புதைத்து மூடுவதே நான் கையாளும் அறுவை வினையாகும்.
யோனி வழி அறுவை விளேக்கு 10-15 நிமிடங்கள் மட்டும் எடுக் மெனக் கூறுவர். இதற்காகிய சிறப்புக் கருவிகள் தேவைப்படும்.
இவ்வறுவை வினேயின் வழுவல் 1% மட்டுமேயாகும் பெண் அறுவை வினைக்கு பின்பு வீடு செல்லலாம். அறுவைவினைக்குப் பின்பு நோய் நிலைமைகள் இதனில் குறைவாகும். ஆணுல், இவ்வறுவை வினைக் குப்பின் ஒரு பெண் கடும் கூபக அழற்சியால் வருந்தியதை நான் கண் டுள்ளேன். வயிற்று வழியால் செய்வதின் நன்மை என்னவெனின் கூபகத்துள் உள்ள உறுப்புக்கள் என்ன நிலையிலிருக்கின்றன என்பதை நேரில் காணமுடிவதே. கருப்பையக நிலைமையையும், ஒரு வெட்டின வாய் வழியாகப் பார்த்து நிலைமையைக் கண்டு சிராக்கலாம். யோனி வழி அறுவை வினையில் நிகழ்வதுபோல் இதனில் குடல்கள் தடையுறுத்தாது. பெண்ணை அலங்கோலக் கரணங்களில் கிடத்தத் தேவையில்லே . மேலும் வீடு திரும்பியபின் முயக்கத்தில் ஈடுபட்டு கெடுதிக்குள் உட்படக்கூடும். இவர்கள் 6 - 8 கிழமைகளுக்கு இதனில் ஈடுபடக்கூ டாதென அறிவுறத்தவேண்டும் யோனிவழி அறுவை விளக்கு பல முரணை நிலைமைகள் உண்டு. அவை தொற்று, பாகருப்பைத் திணி வுகள், ஒட்டுக்கள், கடும் கொழுமை. ஒடுங்கிய ஆழமான யோனி9/, (ĥ) LA 160] . -

Page 221
420 இளம்பெண் நோயியல்
இவையெல்லாம் இருந்தபோதும் வயிற்றுவழித் தடம்போடல் அறுவை வினையில் மற்றும் நோய் நிலைமைகளையும் இதேவேளையில் தீர்க்கலாம். யோனிவழி அறுவைவினையில் சிக்கல்கள் முற்ருக இல்லை யென்று கூறமுடியாது. கடும் தொற்றுநிலை ஒருவருக்கு உண்டாகி னதென்று நான் முன்கூறினேன். குருதியொழுக்குகள் வெளிப்படை யாகவும் மறைமுகமாகவும் உண்டாகக் கூடும்.
பெரும்பாலும் யோனிவழி முறையில் கருப்பைக் குழாயின் சேய்மை மூன்றில் ஒரு பகுதியை மருக்களுடன் துமிப்பர்.
வயிற்று நோக்கியூடாக மலடாக்கல்:
இவ்வழியாக அறுவைவினையாற்றப் பழக்கப்பட்ட அறுவை வைத் தியர் நேரடி நோக்கியால் கருப்பைச் குழாய்களைத் துமிப்பர். அல்லது வெப்பத்திரளல் செய்வர். இதற்கு இரு சிறு கீறல்கள்தான் தேவைப் படும் என இவர்கள் சொல்வர். கூபகத்துள் இருக்கும் கண்நோக் கானது யோனிக்குள் இருக்கும் இரு விரல்களின் உணர்ச்சித்திறனி லும் சிறந்தது என்பர். இது முற்றும் உண்மையே.
இவ்வறுவை வினையில் வழுவல்வீதம் நூறு அறுவை வினைக ளுக்கு 01-2 வீதமாகும். நோய்படல் விதம் 5% ஆகும். இது விரை வில் குணமடையும். சிலவேளைகளில் திடீர் கெடுதி நிலைமைகளுக்கு வயிற்றுத்திறப்பு அறுவை வினையும் தேவைப்படும்.
சிறப்பாக கடும் இதய, நுரையீரற் பிறழ்வுகளும். ஏணியா, முன் னேய வயிற்று அறுவைவினை, கடும்கொழுமை, கர்ப்பு அல்லது நாட் பட்ட கூடக வழற்சி நிலைமைகள் உள்ளவர்களுக்கு இவ்வித மலடாக் கத்தை நிகழ்த்தவேகூடாது.
சிறப்பாக மேல் கூறப்பட்ட இறுதிப் செயல்முறையில் வயிற்றகக் குருதிவாரிதான் பெரும்பாலும் தோன்றும் முக்கிய சிக்கலாகும். இது வெட்டப்பட்ட அல்லது கிழிவுற்ற குழாயிலிருந்தும், கருப்பை, கருப் பைக் குழாய்ச் சந்தியிலிருந்தும் உண்டாகலாம். வெப்ப அழற்சி. குடல், களையும், கருப்பையையும் சுட்டுத் சேதமாக்கும். குடற்பொள்ளல்; நுரையீரல் எறிகை பரிவிரியவழற்சி ஆகிய காரணங்களினல் சிலருக் குக் சாவும் நிகழ்ந்தது.
( தற்காலத்தில் பெருமளவில் கருப்பைக்குழாயகறறல்கள் நிகழ்த்தப் படுவதால் விரைவில் நிகழ்த்தப்படும் முறைகளும், செலவு குறைவான முறைகளும் உயிருக்குக் கெடுதி இழைக்கா முறைகளுமே தேவைப்படும்.
 

பிழை திருத்தம் ii, , ) is is
உண்டாகக் கூடும் உண்டாக்கக் கிடும் 27 ? 7 தீர்ப்புப் தீர்வு (J 273 I9 பாலுற்வு லில் பாலுந்தலில் C/ 7.3 20 நீர்புப் தீர்வு 27 4 瑟 தேடிக்கொண்டோ தேடிக்கொண்டே N
யிருப்பாள் யிருப்பாள் N 27.4 7 வீனுக்க விணுகக் ' - 27.4 14 வேடகத்துக்கு வேடகத்துக்கு 275 தலைப்பு இவ்விரிவுறு இவ்இரிவு - 276 夏& சூலிடம் சூலிடும் 277 Z வுண்டாவில் இல வுண்டாவதில்லை 27 7 6 தோற்றவாய் தோற்றுவாய் 277 9 ஆகியற்றிலிருந்து ஆகியவற்றிலிருந்து 267 I 2 நெய்யா கமைந்து நெய்யாக அமைந்து 277 5 அவத்தையிலும் அவத்தையில் 277 30 இளம்பொண் இளம்பெண் 277 தலைப்பு பரியோனத்திலும் பரியேனத்திலும் 2&芭 I வசில சுயூறுநீருயா வசிலசு ஊறுநீருயா 28 5 9 அவ்பிக்கான் அல்பிக் காண்சுவாலுமாம்
சுவாலுமாகம் 235 ? தார்த்தாற்றிக் காத்தாறிக் 286 I சீல்டின் ί φοι) ι η σor 288 3. ஆகிவற்றிலுள்ள ஆகியவற்றிலுள்ள 2 8 5 அழசியுற்ற அழற்சியுற்ற 29 I சிவ ற் ፵)6) 29 () | I இளம்பொண் இளம்பெண் 294 தலைப்பு நாரிய நாரிய 2 () 4 2.3 உண்டாக்கக்கூடும் உண்டாகக்கூடும் 30{} 16 சோதித்து சோதிக்க 304 あ ஊறுத் காரை ஊறித்தாரை 304 8 கொள் ளவை (BrrഎTള മറ്റുള1 3O4. I வெளிப்பாய வெளியே பாயவிடவும்
விடவும் 3O4. 28 கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தப் () 7 3.3 செய்து பழக்க செய்யப்பழக்கவேண்டும் வேண்டும் ፵ር0 ? 34 உண்டாக்கின்றது உண்டாகின்றது 26
அடைக்கவாமையில் அடக்கலாழை 36 I

Page 222
அடைக்கலாமை ஊறுநீவிட இராசாயன அடைக்கலாமை தாண்டவும் வெட்யகற்றிய (@) if? Göf?tų FT
நிகழும் ஆண்டுகளில் இருவ வென்தால் Git bait fitti si) கதவுடையன
L. GR)
இராசயன தெளிவாக்குகின்றன இலண்டனிலுள்வ இடங்களின் அ ையுயுந் கருப்பைக தர்ப்பங்கள் டு பண் தன் குருவடிதல் புருே:செசற்றருேனே இளற்றினுக்க
அடக்கலாமை) ஊறுநீர்விட இரசாயன egy L. 3545 62/1"GÖ) 10
துமிக்கவும்
வெட்டியகற்றிய பெரிணிய நிகழும் ஆண்களில் இலவெந்தால் 6ề LD6öT t_prr#9ụoìả}
ɑ 62/633), 4... !!! Gly!" L}ff @TFT HJ 657 தெளிவாக்கும் இலண்டனிலுள்ள இடங்களில்நோயின் அசையுந் 45(lјLIGA LJILI 5 கருப் u ritg, 6ïT பெண்கள் குருதி வடிதல் புருே செசுற் முேனை
இலற்றினுக்க
3 1 7
3 7
39
219
319
320
3 2η
330
3.34.
3.36
岛萱3
3.43
岛奥&
@5及
リ 5 五
53
368
398
4 Ο Α.
at G4
4G 5.
4芭}?
経む7
g
台


Page 223


Page 224
6)
யாழ்ப்பாணம், prõõLLI யில் சிறந்த ஒரு சித்த வைத்தி யர் குடும்பத்தில் 7-9-1911 இல்
உதித்த செல்வன் சின்னத்தம்பி
மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் கொழும்பு ருேயல் கல்லூரியிலும் கல்வி கற்ருர் புலமைப் பரிசில் பெற்று இலங்கை மருத்துவக் கல் லூரியில் கற்று 1935 இல் L. M.S. தேர்வில் முதலாம் பிரிவில் முதல் வராகச் சித்தியடைந்த வைத்திய கலாநிதி சின்னத்தம்பி அவர்கள் 1941 வரையும், வவுனியாப் பகுதியில் மலேரியாடுகள் இ நோய் பரவிய காலத்தில் பெருஞ் சேவையாற்றிஞர். பின்னர், உயர் மருத்துவப் படிப்பிற்காக யும் பல சிறப்புக்களோடு பெறு லாய பல உயர் நிலைப்பட்டங் திரும்பி கொழும்பு பெரிய பிணி அறுவை வைத்தியராய் அமர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பேராதனையிலும்) மகப்பேற்று ெ பணிபுரிந்தார் . 1967 இல் ஓய்வு ଶ୍gଜି ()}f. பேராசிரியர் சின்னத் யும், கல்வி நிலையங்களையும் நிறு முடைய ஆழ்ந்தகன்ற கல்விப் புல வங்களையும் அமைத்துப் பல பு மொழி பெயர்த்தும் அச்சிட்டுப் ப
தமிழ்ப் பல்கலைக்கழக இயக்க வனம், பேராதனைக் குநஞ்சிக் குடி வற்றை இயக்குவதில் முழு மூச் இப்போ பல அறிவியல் நூலாக்
N
 

இங்கிலாந்து சென்று, அங்கே நற்குரிய F.R.C.S (Ed) முதி களையும் பெற்றத் தாய் நாடு தீர் மனேயில் பெண்ணுேயியல் ந்தார். சில ஆண்டுகள் கழித்து
(முதல் கொழும்பிலும் பி பண்ணுேயியல் பேராசிரியராக பெற்றுத் தனித் தொழில் செய்து தம்பி பல சைவக் கோயில்களே வி நிர்வகித்து வந்துள்ளார். தம் மையையும் பரந்து செறிந்த அனு ருத்துவ நூல்களே இயற்றியும் திப்பித்துள்ளார்.
ம், உலகத் தமிழாராய்ச்சி நிறு ரன் ஆலயத் திருப்பணி முதலிய சோடு பெரும் பணி புரிந்தார், க வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.