கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2011.10

Page 1
CULTURE HRAG: TRADIT VOLUME: 02 ISSUE: 10 Registered in the De
சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வத்தை சிவன் கோவில்
முன்னேஸ்வரத்திலுள்ள ETSF60Ti,861
FTLDL6) மலையால் அழிந்த நகரம்
२२
NR 100.00 CANADA SRI ANKA SR 200,00 SINGAPORESGS 400 SYSS .
 

ALA KIESAR
49 / News / 2011
இணைப்பு யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி - சிறப்பு மலர்
ANS 000 USA...USS 1000 USS 000 KGB 3. CHF 000 EUROPEBUG 70.

Page 2
"D99迴L固 匈9到增0n@fé
 

XII'səļņxəļųsəue6www uuoo'sə|ņxəļųsəue6@oju! :||eu-5 L£689 VZ -Q194?rio) 8.L0Notosz ’8ZI SZEZAgrig,09091€e) ‘I I fiquối) loo) osgo 1990ndie) og 8-18
IT-TITUȚIĻ9(Trog) (109ưT)
IŲJŲTŲJŲņTĘ ĖJIMŲJĘo
“gogo@100909$ qoy99ņJÚg 9 109/m0/Qogo@

Page 3
Departure
Kochi
Colombo
Colombo
rivandrum
Colombo
Kingfisher Airlines is pleased to announce three daily and dire Colombo starting 1st Oct, 2011. These are in addition to our re Chennai. Rest assured, whichever city you choose to fly to experience will be truly a herished one. What's more King
earn double King Miles on bookings done on or before 30th De
 

Arrival
Colombo
Kochi
Colombo Tiruchirapali
Colombe
Trivandrum
ct flights from gular flights to your inflight lub members c. 2011.
01:15 (+1 day) O4: 5
02:00 (+1day O7:30

Page 4

鬱 畿 c60°6O)DLILILLID :
முன்னேஸ்வரத்தில் உள்ள தமிழ் சாசனம் எழுதப்பட்ட பாவை விளக்கு
உள்ளடக்கம்
10 இந்து திருமண சடங்கின்போது
அறுகரிசியிடல்
12 கலைச் சிறப்புமிக்க பனைமலை
தாளகரீசுவரர் கோயில்
பிரபஞ்ச செயற்பாட்டில் 40 (65 DLITTLLg2 தாண்டவ நடனங்கள்
60 கொழும்பு நூதனசாலையில்
கலாசாரப் பகுதி

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
TP. + 94 11 5234338 WWW, kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai editor(CDkalaikesari.com
SUB EDITOR Bastiampillai Johnsan editorOkalaikesari.com
MEDIA CO-ORDNATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. C. Pathmanathan Prof. S. Sivalingaraja Prof. P. Pushparatnam Prof. S. Jeyarasa Dr. K. Nageswaran S. Laleesan K. Thangeswary Subashini Pathmanathan Pathma SOmakanthan Thakshayiny Prabagar T. Manoharan K. Sridaran
PHOTOS S. Surendiran Dushiyanthini K. LAYOUT S. A. Eswaran
ICT
S. T. Thayalan
ADVERTISING
A. Praveen marketingGDvirakesari. Ik
CIRCULATION
K. Dilip Kumar
SUBSCRIPTIONS
Arjun Jeger arjunG)expressnewspapers.net
PRODUCTION
L. A. D. Joseph ISSN 2012 - 6824
கலைக்கேசரி வ
கலைக்கேசரியி
சந்திப்பதில் மிக்க ம
பஞ்சபூதங்கள் ஒன்றென்பதை நா அகழ்வாரையும் : நிலமகளை பூமிம நிலைகள், மலை, அனைத்து உயிர்க மனித குலத்தையும் பின்னர் அகழ்வுகள் தான்!
அத்தகையதான இவ்விதழில் கட்டுை கொள்வீர்கள்! அவ்
உங்கள் சிந்தனைக் கடந்த கலைக்ே அனுசரணையுடன் நடத்துகின்ற யாழ் அரிய வாழ்வியல் தமிழ்ப் பண்பாட்டுட் நேற்றைய நிகழ்வு, மீண்டும் சந்திப்( நன்றி
6600Ti585 b
ਹੈ। vieg ܒܚܟܕܟ ܗ̄Gy
 

ஆசிரியர் பக்கம்
புராதன வரலாற்றுப் பெருமைகள்
ாசகர்களுக்கு வணக்கம். ன் 21 ஆம் இதழின் மூலமாக உங்கள் அனைவரையும் கிழ்ச்சி.
என நாம் பயபக்தியுடன் போற்றுபவற்றுள் நிலமும் ம் அறிவோம். அவற்றுள் நிலமெனும் நல்லாள் தன்னை தாங்கும் பேரன்பினள். எனவே பொறுமை வடிவான ாதா எனப் போற்றுகின்றோம். மரம், செடி, கொடி, நீர் மடு என அற்புதங்கள் காட்டி இயற்கைச் செல்வங்களை ளுக்கும் வாரி வழங்கும் பூமித்தாய், சில சந்தர்ப்பங்களில் ) அவர்தம் பெருமைகளையும் மண் மூடிப்போகச் செய்வதும்
ரின்போது ஆச்சரியமாக வெளிக்காட்டுவதும் கூட அற்புதந்
ா இரு வரலாற்று ஆச்சரியங்களைக் கலைக்கேசரி ரையாகத் தந்திருப்பதையிட்டு நிச்சயமாக நீங்கள் மகிழ்ச்சி விதமே எமது அறிஞர்களின் ஏனைய ஆய்வு ஆக்கங்களும் க்கு ஊட்டந்தரும். கேசரி இதழில் நாம் அறிவித்ததற்கிணங்க, கலைக்கேசரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நான்கு நாட்கள் ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி காலத்தால் மறைந்த பல பொருட்களை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து, புத்துணர்ச்சியை தரும் என மனப் பூர்வமாக நம்புகிறோம். இன்றைய வரலாறு அல்லவா?
போம்
آS هسس

Page 6
អ៊ែងហ្គ្រាម៉ារ៉ៃរឺ 06 புராதன செல்வம்
‘ழ்ப்பாணம் பற்றிய தமிழ் - சிங்கள வரலாற்று
இலக்கியங்களில் எடுத்து உரைக்கப்படும் மிக
முக்கியமான இடங்களில் சவகிரி என்னும் இடம் வரலாற்று முக்கியத்துவம் பெற்று விளங்குவது சிறப்பாக நோக்கத்தக்கது. இங்கு குறிப்பிடப்படும் சவகிரி என்னும் இடம் தற்கால சாவகச்சேரி பிரதேசத்தைக் குறிப்பதாகக் கருத முடியும். அந்த வகையில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள மட்டுவில் கிராமம் வரலாற்றுப் பழைமை கொண்ட ஒர் இடமாக நோக்கக் கூடியவாறு உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அதற்காக மட்டுவில் பிரதேசத்தின் வரலாற்று பழை
 
 
 

நரிய சோழர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோவில்
பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்
பற்றியும் அதன் வரலாற்று ஆதாரங்களோடு கூடிய முக்கியத்துவம் பற்றியும்தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
இவ் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு 1267 ஆம் ஆண்டுக்குரிய இரு சோழக் கல்வெட்டுகள் உதவி புரிகின்றன. அதாவது 12 ஆம் நூற்றாண்டுக்குரிய சோழக் கல்வெட்டுக்களான பல்லவராஜன் பேட்டைக்
கல்வெட்டும் திருவாலங்காட்டுக் கல்வெட்டும் சோழப் படைத் தளபதியான இரண்டாம் இராஜாதிராஜ சோழன் வட இலங்கை மீது படையெடுத்தது பற்றிக் குறிப்பிடுகின்றன. மேலும் அப்படையெடுப்பின் போது அக்கால கட்டத்தில்

Page 7
துறைமுகமாக விளங்கிய மட்டுவில் என்னும் இடத்தையும் அங்கு நிலை கொண்ட யானைகளையும் படை வீரர்களையும் சிறைப் பிடித்து சோழப் படைகள் தமிழ் நாடு கொண்டு சென்றதாகவும் குறிப்பிடுகின்றன.
இவற்றை விட மிக முக்கியமாக சங்கிலிய மன்னனோடு தொடர்பு பட்ட செய்தி ஒன்றும் கூறப்படுகிறது. சங்கிலிய மன்னன் போர்த்துக்கேயப் படைகளோடு போரிட்ட போது, அங்கிருந்து கோப்பாய்க்குத் தப்பியோடி கடல் வழியாக மட்டுவில் ஊடாக தென்மராட்சி சென்றதாக யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றது. அத்துடன் யாழ்ப்பாண மன்னர்களுக்கு உரிய படைக் கருவிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக பலாலி, ஏழாலை மற்றும் மட்டுவில் ஆகிய கிராமங்கள் விளங்கியதாக போர்த்துக்கேய ஆசிரியரான கொய்ரோ சுவாமி அவர்கள் குறிப்பிடுவது அடுத்த மிக முக்கியமான விடயமாகக் கருதப்படுகிறது.
இந்த வரலாற்று பின்னணியுடன் இக்கிராமத்திலுள்ள வரலாற்று பழைமை வாய்ந்த ஆலயமாக கல்வத்தைச் சிவன் கோயில் விளங்குகின்றது. ஒரு துறைமுகத்தை அண்டி அமைந்திருந்த இடத்தை வத்தை எனச் சிறப்பாக அழைக்கும் மரபு உண்டு. எனவே தான் இக்கோயில் அமைந்த இடத்தை கல்வத்தை என அழைத்திருக்கலாம் எனவும் அதன் காரணத்தாலேயே இக்கோயிலுக்கு கல்வத்தை சிவன் கோயில் ଗTର୪til') பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத முடியும்.
சங்கிலிய மன்னன் தொடர்பான வரலாற்றுக் குறிப்புக்கள், சோழ கல்வெட்டுச் சாசனங்கள், பாளி மற்றும் சிங்கள இலக்கியங்களில் பொதுவாகக் கூறப்படும் சவகிரி ஆகியவற்றை ஒப்பு நோக்கும்போது, யாழ்ப்பாண நகரில் இருந்து தென்மராட்சிக்குப் போகின்ற மிக முக்கிய பாதைகளில் ஒன்றாக மட்டுவில் கிராமம் அமைந்திருக்கின்றது என்பது தெரிகிறது. அதிலும் கோப்பாயில் உள்ள சங்கிலியன் கோட்டையில் ஒரு காவலரண் காணப்படுவதும் அக்காவலரணில் இருந்து பார்க்கும்போது மட்டுவில் கிராமத்தின் ஒரு எல்லை தெரிவதும் குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய குடாநீரேரிக்கு எதிரில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் கிராமமும் அதை அடுத்து கல்வத்தை சிவன் கோயிலும் அமைந்துள்ளன. ஆகவே இத்தகைய வரலாற்றுப் பின் புலத்திலே இங்கு ஒர் ஆலயம் அமைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு.
தற்போது இலங்கையில் ஏறத்தாழ 3000 ஆலயங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான ஆலயங்களின் கட்டடங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் கட்டப்பட்டன. கட்டப்பட்ட ஆலயங்களில் பெரும்பாலானவை தமிழக விஜய நகரக் கலை மரபுகளை பிரதிபலிக்கும்படி கட்டப்பட்டுள்ளன. அத்துடன் சுதேச கலை மரபுகளின் செல்வாக்கும் அதிகம் உள்ளமை சிறப்பாக நோக்கத்தக்கது. ஆனால் கல்வத்தை


Page 8
ក្រុងញញត្អែអ្វី 鑫 08
சிவன்கோயில் கலை மரபானது முழுமையாக திராவிட கலை மரபில் அமைக்கப்பட்டிருப்பதால் இவ்வாலயம் மிகப் பழைமையான ஒர் ஆலயம் எனக் கருத முடியும். அக்கோயிலின் இடிந்த சில பாகங்கள் தற்போது இல்லை. 1990 களில் நான் அக்கோயிலைப் பார்த்தபோது, மிகவும் பழைமை வாய்ந்த தமிழக திராவிடக் கலை மரபை எடுத்துக் காட்டும் வகையில் அக்கோயிலின் அமைப்பு இருந்ததை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களின் தூண் அமைப்புகள் அப்படியே இவ்வாலயத்தில் பின்பற்றப்பட்டுள்ளன. மேலும் கர்ப்பக்கிருகத்துக்கு மேலே காணப்படுகின்ற விமானம் முற்று முழுதாக திராவிடக் ᏯᏏᎶᏡ) ᎶᏇ மரபிலே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோதிகை, கூடு, கும்மட்டம், சாலை போன்ற அம்சங்கள் திராவிட கலை மரபிலே உருவாக்கப்பட்ட ஆலயங்களில் உள்ளன. தற்போது உள்ள ஆலயத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் மிகப் பழமையான ஆலயத்தின் கலை அம்சங்கள் முற்று முழுதாக ஒரு திராவிட கலை மரபைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
உருத்திரபுரம் சிவன் கோயிலைப் பலரும் சோழர் காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அங்கு காணப்படும் சிவலிங்கமும் ஆவுடையும் சோழர் கலை மரபில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது சதுர வடிவில் அமைக்கப்பட்ட சிவலிங்கமாக உள்ளது. அதேபோலவே கல்வத்தை சிவன் கோயிலிலும் சதுர வடிவிலாலான சிவலிங்கம் ஆரம்ப காலத்தில் இருந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு. பல்லவர் சோழர் காலக் கலை வடிவங்களில் யாழிச் சிற்பங்கள் சிங்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. உருவங்கள் ஆகிய கலை வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேபோல கல்வத்தை சிவன் கோவிலில் உள்ள கலை வடிவங்களும் அமைந்திருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. அவ்வாறான சிங்க வடிவங்கள் பல்லவர் மற்றும் சோழர் காலக் கலை வடிவங்கள் என எண்ணத் தோன்றும் அளவுக்கு மிகவும் நெருங்கிய ஒற்றுமை கொண்டவையாகக் காணப்படுகின்றன.
தற்போது உள்ள ஆலமானது தோற்ற அமைப்பில் சிறிதாக இருந்தாலும் பழங்காலத்தில் ஒரு மிகப் பெரிய ஆலயத்துக்கு உரிய அனைத்து அம்சங்களும் இவ்வாலயத்தில் இருந்தமைக்கான ஆதாரங்கள் இங்கு செறிந்து காணப்படுகின்றன. அதாவது கர்ப்பக்கிருகம் அமைந்த பகுதி, அந்திராளம், மண்டபம், சுற்றி உப தெய்வங்களுக்கான சிறு சிறு ஆலயங்கள் ஆகியவை காணப்படுகின்றன. தற்போது சுற்று மதில் கட்டப்பட்டு ஆலயத்தின் அமைப்பு புதிய வடிவம் பெற்றிருந்தாலும், கோவிலின் பிரதான வாசலில் காணப்படுகின்ற சிறு தெய்வ ஆலயம் மிகப் பழமையான கலை வடிவம் மிக்க ஒன்றாகவே காணப்படுகின்றது. பொதுவாகத் தமிழகத்தில் 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட வடிவத்தில்


Page 9
ஆலயத்துக்கு முன்புறம் உள்ள மண்டபம் காணப்படுகிறது. அத்தூணில் காணப்படுகின்ற சிற்ப வடிவங்கள் சுதை மற்றும் செங்கட்டி ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்ட கலை மரபு ஆகியன அவ்வாலயம் மிகப் பழமையான ஆலயம் என்பதை உறுதி செய்கின்றன. அதேபோல வாசல் பகுதியில் உள்ள உப தெய்வ ஆலயம் சீமெந்து பயன்படுத்தப்படாமல் முருகைக்கல் சுதை மற்றும் செங்கட்டி ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
கடந்த 200-300 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செறிவான மக்கள் குடியேற்றம் அப்பகுதியில் காணப்படவில்லை. தற்போதும் அங்கு அவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. அதாவது மிகவும் ஒதுக்குப் புறமான பகுதியில் அவ்வாலயம் அமைந்துள்ளது. பிற்காலத்தில் அவ்விடத்தில் அவ்வாலயம் தோன்றியிருந்தால் அங்கு செறிவான மக்கள் குடியிருப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்திருக்கும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை. கல்வத்தைச் சிவன் கோயிலில் இருந்து மேற்குப் பக்கமாக சில அடி தூரம் சென்றால் தொண்டமானாறு கடல் நீரேரியை அடையலாம். ஆகவே அவ்வாலயத்தின் அமைவிடத்தை நோக்கும்போது தொண்டைமானாறு கடல்நீரேரிக்கு மேற்கே இருந்து வருகின்ற மக்களின் போக்குவரத்து மையமாக இவ்விடம் அமைந்திருக்கலாம் எனக் கருதமுடியும். இவ்வாலயத்திற்குக் கிழக்குப் பக்கமாக சற்றுத் தொலைவில் பிராமணர் குடியிருப்புக்கு உரிய பல கட்டட எச்சங்கள் காணப்படுகின்றன. மரங்கள் வளர்ந்த மிக மறைவான இடத்திலேயே அவை காணப்படுகின்றன. அம்மண்டபங்களின் இருப்பிடங்கள் ஒவ்வொன்றும் இரண்டு அடி அகலம் கொண்ட சுதையால் கட்டப்பட்ட மிகப் பெரிய கட்டடங்களாகக் காணப்படுகின்றன. அக்கட்டடங்கள் இடிந்து காணப்படுகின்ற பகுதி ஆலயத்திற்கு எதிரில் மிகப்பெரிய அளவில் மேடாகக் காட்சியளிக்கின்றது. அவ்விடத்தை ஆய்வுக்கு உட் படுத்தியபோது தொடர்ச்சியாக பிராமணக் குடியிருப்புக்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள ஆலயங்கள் பலவற்றுடன் ஒப்பிடும்போது கலை மரபு, கட்டட நிர்மாணமுறை ஆலய அமைப்பு ஆகியவற்றில் மிகப் பழைமையான ஆலயமாக இவ்வாலயத்தைக் கருதுவதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. அங்குள்ள விமானச் சிற்ப வடிவங்கள் ஆலயத் தூண் சிற்பங்கள் சம கால யாழ்ப்பாணக் கலை வடிவங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்துவமான அம்சங்களாகவே உள்ளன. ஆலயத்தில் உள்ள பழைமையான கோமுகி தற்போது அகற்றப்பட்டுள்ளது. ஆனால் 90 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கோமுகி ஆலயத்தில் இருந்தது. அது பெரும்பாலும் தென்னிலங்கையில் 12 ஆம் 13 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்து ஆலயங்களில் உள்ள கோமுகிகளையும், தமிழகத்தில் உள்ள ஆலயங்களில்
உள்ள கோமுகிகளையும் ஒத்த விதமாகக் காணப்பட்டது.

& கலைக்கேசரி
இவ்வாலயத்தில் முன்னர் வழிபடப்பட்ட ஏறத்தாழ ஒன்பது விக்கிரகங்கள் கேணிக்குள் போடப்பட்டிருந்தன. அவற்றை வெளியில் எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியதுடன், புகைப்படங்கள் எடுத்த பின்னர் அவற்றை மீண்டும் கேணிக்குள் போட்டுள்ளோம். தற்போது ஆலயத்தில் உள்ள சிலைகள் பிற் காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கேணிக்குள் செப்புச் சிலைகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆலயக் கேணிக்குள் நீர் இருப்பதால் திட்டமிட்ட முறையில் அந்நீரை அகற்றி கேணியை அகழ்வுக்கு உட்படுத்துவதன் ஊடாக ஆலயத்தின் பழைமையை எடுத்துரைக்கக்கூடிய எழுத்துச் சாசனங்கள்
பொறித்த விக்கிரகங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டுத்
தொகுப்பு : உமா பிரகாஷ்

Page 10
អ៊ែាកាប៉ារ៉ៃរឺ 彦 10 ១rflធំ អាy
இந்து திருமண ඡමI[0]ජ්
ங்கல நிகழ்வுகளில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் நம்மவரிடையே காணப்படுகின்றது.
அட்சதை என்றால் குற்றப்படாததும், பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சட் பொடி, மலர்கள் என்பவற்றைச் சேர்த்த கலவை என்பர். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை 'அறுகரிசி எனவும் அழைக்கின்றனர்.
கன்னிகா தானம், தாலிகட்டுதல், ஆசீர்வாதம் ஆகிய முக்கிய நிகழ்வுகளின் போது அட்சதை இட்டு வாழ்த்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எனினும், ஆசீர்வாதத்தின் போதே பலரும் அட்சதை தூவி வாழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர்.
முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு. அறுகு வம்ச விருத்தியின் குறியீடு. ஆனால், தற்காலத்தில் அழகுக்கு முதன்மை வழங்க வேண்டும் என்பதற்காக வெள்ளை அரிசிக்கு மஞ்சள் நிறச் சாயம் பூசி அட்சதையாகப் பயன்படுத்தும் பரிதாப நிலையையும் சில திருமணச் சடங்குகளில் காணமுடிகின்றது.
சங்க காலத்தில்.
திருமண நடைமுறைகள் காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்தாலும் சங்க காலத்தில் நெல்லும் மலரும் தூவி ஆசீர்வதிக்கும் நடைமுறை காணப்பட்டிருக்கின்றது. தற்போது எம்மவர் திருமணங்களில் தாலி கட்டுதலே முக்கிய நிகழ்வு. சங்க காலத் திருமணங்களில் தலைவன், தலைவியின் கூந்தலில் பூச்சூடுதலே முக்கிய நிகழ்வு. இதன்பின் வாழ்த்து நடைபெறும்.
கற்பினில் வாழாஅ நற்பல உதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகளன நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றை
 

ச் சடங்கின்போது
uLD
என்ற சங்க இலக்கியத்தில் ஒன்றான அகநானூறின் 66 ஆவது பாடல் இதற்கான ஆதாரமாகவுள்ளது.
பெண்ணை வாழ்த்தும் போது 'கற்பு ஒழுக்கத்தினின்றும் சிறிதும் வழுவாமல் நல்ல பலவாகிய உதவிகளையும் செய்து உன்னை மனைவியாகப் பெற்ற உனது கணவனை நீ பெரிதும் விரும்புகிறவள் ஆகுக' என்று கூறி வாழ்த்துக் கூறினர். பெண்ணின் கூந்தலின் மேல் நெல்லையும் மலர்களையும் தூவி வாழ்த்தினர். வாழ்த்து நிகழ்ச்சியில் முதலில் பெற்றோரே இடம்பெற்றனர்.
கந்தபுராணத்தில். சோழர் காலத்தில் எழுந்த கந்தபுராணத்தில் வள்ளியம்மை திருமணப் படலத்தில் ஆசீர்வாதத்திற்காக மலரும் அறுகும் தூவியதாகச் சித்திரிக்கப்படுகின்றது.
"புல்லிய குறவர் மாதர் பொருவில் சீர் மருகன் தானும்
வல்லியு மின்னே போல வைகலும் வாழ்க என்று
சொல்லியல் ஆசிகூறித் தூமாறுகு தூர்த்தார்’
என்கிறார் கச்சியப்பர்.
தற்போதைய இந்து திருமணங்களில்.
தற்போதைய இந்துத் திருமணங்களில் அறுகரிசி இடுவதில் பலரும் வெவ்வேறு உத்திகளைக் கையாள்கின்றனர். ஆசீர்வதிக்கும் போது உச்சியில் மட்டுமே அட்சதை இட வேண்டும் என்றும் அறுகரிசியை இரு கைகளாலும் எடுத்து மணமக்களின் சிரசில் தனித் தனியே மூன்று தரம் தூவி ஆசீர்வதித்தலே நன்று என்றும் மூத்தோர் கூறுவர். அந்தணோத்தமர்களின் திருமணச் சடங்குகளில் இந்நடைமுறையே கைக்கொள்ளப் படுகின்றது.
அட்சதையிடும் போது மூன்று இடங்களில் இட வேண்டும் என வாதிப்போரும் உளர். சிரசு, தோள்கள், முழந்தாள்கள் என்பனவே அவ்விடங்களாம்.
இறைவனுக்கான உபசாரங்கள் பாதாதி கேசமாகச் (பாதத்தில் இருந்து தலையை நோக்கி) செய்யப்பெறுதலே மரபு. கோவிலில் தீபம் அர்ப்பணிக்கப்படும் போது

Page 11
பாதத்தில் இருந்து சிரசை நோக்கியே காட்டப்படுகின்றது.
திருமணத்தின் போது மணமக்கள் சிவன் அம்மை ரூபமாகப்
பாவனை செய்யப்படுகின்றனர் என்பதால் பாதாதி கேசமாக அட்சதை இட வேண்டும் எனச் சிலர் வாதிக்கின்றனர்.
காப்பு நாண் கழற்றிய பின்னரே எம்மவர்களால் ஆசீர்வாதம் மேற்கொள்ளப்படுகின்றது. காப்பு அகற்றப்பட்ட பின்னர் மணமக்கள் மணமக்களே. இவர்களை வாழ்த்துவோர் அனுபவத்தில் பெரியோரே. எனவே கேசாதி பாதமாக (சிரசில் இருந்து பாதம் நோக்கி) அட்சதை இடுதலே சரியானது எனச் சிலர் வாதிக்கின்றனர்.
எது எவ்வாறெனினும் அந்தணணோத்தமர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசீர்வாதம் சிரசில் மட்டும் மூன்று முறை அறுகரிசி இடப்படுவதாக அமைகின்றது.
காலில் இருந்து தலையை நோக்கி அட்சதை இடப்படும் செயற்பாடு பிதிர்க்கடமையை நினைவூட்டிவிடும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் சிரசில் மாத்திரம் மும்முறை அறுகரிசி இடுவதே சரியானதாகத் தோன்றுகின்றது.
மக்கட் செல்வம் பெற்ற நிறைவாழ்வுடைய தம்பதியரே முற்காலங்களில் அறுகரிசி இட்டு வாழ்த்தும் தகைமையைக் கொண்டிருந்தனர். ஆண்கள் தம் நிறைவாழ்வின் அடையாளமாகத் தலைக்குத் தலைப்பாகை அணிந்து அட்சதை இடும் காரியங்களில் ஈடுபட்டனர்.
இன்றைய திருமணச் சடங்குகளில் அட்சதை இடும் செயற்பாடு ஆசி வழங்கும் செயற்பாடு என்பதற்கு அப்பால் வரவு பதிதல் செயற்பாடாகவும் அமைந்திருக்கிறது. திருமணச் சடங்கை ஆவணப்படுத்தும் காணொளிக் (வீடியோ) கலைஞர் அட்சதை இடும் செயற்பாட்டைப் பிரதானமாகப் பதிவுசெய்து கொள்கிறார். ஆகவே திருமணச் சடங்கிற்கு வருகை தந்தவர்கள் மணமக்களை அறுகரிசியிட்டு வாழ்த்துவதன் மூலம் தங்கள் வரவைப் பதிவு செய்வதோடு, பரிசுப் பொருட்களையும் வழங்குவதையும் காண முடிகிறது. இந்நிலையில் அவசர உலகில் கைகளில் அகப்பட்ட அரிசியை எப்படியும் இட்டுவிடுவோம் எனப் பலர் துடிக்கின்றனர்.
அட்சதை இடுவதன் தத்துவத்தை மனதிருத்தி மும்முறை சிரசில் மாத்திரம் இடுவதே நலந்தருவதாகும். இந்துக்களின் திருமணச் சடங்குகளில் ஒருமைத்தன்மை பேணப்பட வேண்டும். இதுவே ஆரோக்கியமானதுது
ச.லலிசன் விரிவுரையாளர்
 


Page 12
ਵ
கலைக்கே நீ
12 ஓவியக்கலை
RAJAAN ∎ گی ۔۔۔۔۔۔ ܬܐ ܬܐ *A uSMSTSqS ATATqMqMMqTqA Aq qq Shhh SAAAAS
னைமலை தாளகரீசுவரர் கோயில் பல்லவர், நாயக்கர் கால கலைச் சிறப்பை எடுத்துக்காட்டும் ஓர் அற்புதக் கோயிலாக விளங்குகிறது. தமிழகத்துக்கு பெருமை அளிக்கும் இத்திருக்கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவில் சூரப்பட்டு என்னும் ஊரில் வடமேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் பனைமலையை சென்றடையலாம். செஞ்சி திருக்கோயிலூர் சாலையில் சுமார் 17 கி.மீ தொலைவில் அனந்தபுரம் என்னும் ஊருக்கு அருகே பனைமலை அமைந்துள்ளது.
இவ்வூரில் உள்ள சிறிய குன்றில் தாளகரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. மலைக்குன்றின் தொடக்கத்தில் படிக் கட்டுகளுக்கு அருகில் பல்லவர் கால புடைப்புச் சிற்பமாக விநாயகர் காட்சி தருகிறார். பிற்காலத்தில் இவ்வடிவத்திற்கு சிறிய கோயிலை அமைத்துள்ளனர். கட்டடக் கலைப்பாணி தூண் அமைப்பு ஆகியவற்றை நோக்கும்பொழுது அக் கோயில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்க
வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது.
கலைச்சிறப்புமி
தாளகரீசுவ
 
 
 
 
 

க்க பனைமலை
ரர் கோயில்
மேலே செல்லும் வழியில் ஒரு பாறைக்கு அருகில் ஏரியைப் பார்த்தவாறு சிறிய குகை உள்ளது. அதன் உட்புறம்
அழகிய துர்க்கை சிற்ப வடிவினைக் காணலாம். சிம்மத்தின் மீது இடது காலை ஊன்றி வலக்காலை தரையில் நிறுத்தி தனது எட்டுக் கரங்களில் ஆயுதங்களை ஏந்தி காட்சி தரும் கோலம் அற்புதக் கலைப்படைப்பாய் விளங்குகிறது. அது போன்ற சிற்பத்தை பல்லவ மன்னன் இராசசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் காணலாம். பனை மலையில் துர்க்கை சிற்பத்தின் அருகில் பாறையில் பல்லவ கிரந்த எழுத்து அமைதியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில்:
‘ராஜஸிம்ஹோ ரணஜய
பூரீ பரஸ்சித்ர கார்முக
ஏக வீரஸ்சிரம் பாது
சிவசூடாமணி மஹிம்
போர்களில் வெற்றியைத் தருபவனும் செல்வத்தின் இருப்பிடமும் வில்லாளியும் தனியொரு வீரன் (ஏகவீரன்) சிவசூடாமணியுமான ராஜஸிம்ஹன் பூமியை நெடுங்காலம் பாதுகாக்கட்டும் என்ற பொருளில் காணப்படுகிறது.

Page 13
இதனைக்கடந்து மேலே சென்றால் தாளகரீசுவரர் கோயிலை சென்றடையலாம். கோயில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம், திருச்சுற்று மண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது.
கலைக்கடல் - சிவச்சூடாமணி - ஆகமப்பிரியனான இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி 700 - 728) என்னும் இராசசிம்மன் கட்டிய இக்கோயிலின் கருவறை அமைப்பு சற்று வித்தியாசமானது. கருவறையின் மூன்று பக்கங்களிலும் சற்று வெளியே வந்து சிற்றாலயம் சிறிய கருவறை போன்று அமைந்துள்ளது. இவற்றில் முன்பு வழிபாடு நடைபெற்றதற்கு அடையாளமாக 16 பட்டைகள் கொண்ட தாராலிங்கம் மூன்று சிற்றாலயங்களிலும் காணப்படுகிறது. இதே போன்று கருவறை போன்ற அமைப்பு இராஜசிம்மனால் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலும் காணப்படுவது சிறப்பாகும்.
கருவறையில் இறைவன் லிங்க வடிவிலே காட்சி தருகிறார். கருவறைச் சுவரில் லிங்கத்துக்கு பின்னால் சோமாஸ்கந்தர் காட்சி தருகிறார். அர்த்த மண்டப சுவரில் திருமால்- திருமகள், பிரம்மா - சரஸ்வதி சிற்பங்களைக் கண்டு மகிழலாம். அர்த்த மண்டப வாயிலில் துவாரபாலர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கருவறை வெளிப்புறம் அதிட்டானத்தில் யானைகள் தாங்குவது போன்ற சிற்ப அமைப்புடன் காணப்படுகிறது. மேலும் இங்கு பட்டிகையில் பல்லவர் கிரந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் பல்லவர் வம்சத்தின் தோற்றம் மற்றும் அவர்களின் காலமும் குறிக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டபத்தின் வெளிச்சுவர் பீடத்தில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக் காணப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை 'குன்றுடைய மகாதேவர் எனக் குறிப்பிட்டு அழைக்கிறது.
கருவறையின் வெளிப்புறம் மடிப்பு முனைகளில் சிம்மங்கள் நின்றவாறு தலையில் சுமப்பதுபோல விமானம் காட்சி தருகிறது. விமானம் இரண்டு தளத்துடன் அமைந்துள்ளது. ஒவ்வொரு தளத்திலும் சாலை, கர்ணகூடு அமைப்புகள் மாறி மாறி அமைந்து விமானத்திற்கு அழகைத் தருகிறது. தற்பொழுது காணப்படும் மூன்றாவது தளமும் உச்சிப் பகுதியும் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாகக் காட்சி தருகிறது.
இக்கோயிலில் பல்லவர் காலச் சிற்பங்கள் அதிக அளவில் காணப்படவில்லை எனினும் இங்கு காணப்படும் ஒவியம் பல்லவர் கால ஓவியக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
கருவறையின் வடக்குப் பகுதியில் உள்ள சிற்றாலயத்தில் லிங்கத் திருமேனியின் பின்புறம் நடனமாடும் ஆடவல்லானின் வண்ண ஒவியம் காணப்படுகிறது. இறைவன் வலது காலை ஊன்றி இடது காலை மேலே உயர்த்தி தாண்டவம் புரிகிறார். இவ்வோவியம் ஆங்காங்கே உதிர்ந்து போய்க் காணப்படுகிறது. இதன் பக்கத்துச் சுவரில்

***T 闇淤
پیڈیپیڈیا پیمان
懿
薄 قبائياً

Page 14

ஆடவல்லானின் ஆடலை ஒயிலாக நின்று காலை மடக்கி நின்று காணும் நிலையில் பார்வதிதேவியின் ஒவியம் தீட்டப்பட்டுள்ளது. தேவியின் முகபாவத்தை எடுத்துக் கூறும் மென்மையான கோடுகள், சிவப்பு வண்ணக் கோடுகள் உமா தேவியின் தலைக்கு மேலே அழகிய வண்ணக் குடை அதன் விளிம்புகளிலிருந்து தொங்கும் தொங்கல்கள் அழகாகக் காட்சி தருகின்றன. இடையில் அணிந்திருக்கும் ஆடையில் அழகிய வேலைப்பாடுகள் இவை பல்லவர் கால ஓவியக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வோவியம் போன்றே காஞ்சி கைலாசநாதர் கோயிலில் ஆடவல்லான் அருகே உமாதேவி ஆடலை லயிக்கும் காட்சி சிற்பமாகக் காணப்படுகிறது.
கருவறைக்கு முன்பு திருச்சுற்று மண்டபம் உள்ளது. இது நாயக்கர் கால கட்டட அமைப்புடன் காணப்படுகிறது. அம்மண்டபத்தின் வடக்குப்பகுதியில் தெற்கு நோக்கி அம் மன் சந்நிதி அமைந்துள்ளது. அஸ்த தாளாம்பிகை என்ற பெயருடன் நான்கு கரங்களுடன் அம்மன் காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் அங்குசம், பாசம், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரை தாங்கி காட்சி தருகிறார். இச்சந்நிதி நாயக்கர் கால கட்டடப் பாணியுடன் அமைந்துள்ளது.
55 தூண்களுடன் காணப்படும் இம்மண்டபத்தில் விநாயகர், ஆறுமுகப் பெருமான், பைரவர் ஆகியோருக்கு பரிவார ஆலயங்கள் உள்ளன.
பல்லவர் காலத்தில் எடுக்கப்பட்ட இக்கோயில் சோழர் காலத்தில் "குன்றுடைய மகாதேவர் GT65T அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. பிற்காலத்தில் கல் வெட்டில் பனைசை நகர் தாளகரீசுவரர் எனக் குறிப்பிடுவதால் இக்கோயில் தாளகரீசுவரர் (பனைமலை) எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
திருச்சுற்று மண்டபம் யாரால் கட்டப்பட்டது என்பதை அறிய இயலவில்லை. இப்பகுதியில் ஆட்சி செய்த 'செஞ்சி நாயக்கர் காலத்தில் இம்மண்டபம் கட்டப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.
பல்லவர் காலம் தொடங்கி சோழர் காலத்தில் உரிய ஆதரவு பெற்று நாயக்கர் காலத்தில் கோயில் விரிவடைந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. பல்லவர் கால கட்டடக் கலை ஓவியக்கலைச் சிறப்புக்கு சான்றாக L ᎫᎶᏡ)ᎶᏡᎢᏞ Ꮭ)ᎶᏡ)ᎶuᎩ தாளாகரீசுவரர் கோயில் விளங்குகிறது என்றால் மிகையில்லை. இக்கோயில் இந்திய அரசின் தொல்பொருள்ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது. இயற்கை அழகுடன் காட்சி தரும் இக்கோயிலையும் ஒவியத்தையும் கண்டு மகிழ்வோம்.
இத் - கி. பூநீதரன் தொல்லியல் துணைகண்காணிப்பாளர் (ஓய்வு) தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை

Page 15
€MPORIUM (Pvt) Ltd.
WELLAWATTE
As you celebrate our world of fashi
雛 317, 317 A, Galle Road, Wella 94.1250 4470,2500098 F. 9411 250
 

You deserve it.
Our gift to you is choice.
Celebrating Οι
decade ofдifting youfashion. SINCE 1999
CHOLI I MEN'S WEAR || KID'S WEAR
摄
n, we wish you Joy, Hope & Peace. watte, Colombo 06, Sri Lanka.
3934 || E. info@ liteleasiak I writeleasiak

Page 16
ជាញញអំពីអ្វី 扈 16 கட்டிடக்கலை
சாம்பல் மலையால் அ
1500 வருடங்களின் பின் மீ ம்பல் மலையாலும் எரிமலைக் குழம்புகளினாலும் GEIT ஒரு நகரம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போவதும், ஆயிரக்கணக்கான வருடங்களின் பின் முன்பு போலவே இருக்க வெளிப்பட்டதும் உலகில் நடந்த ஓர் ஆச்சரியமான சம்பவம் அல்லவா?
பிள்ஸ் நகரத்துக்கு அண்மையில் இருந்த பொம்பி (Pombei) நகரத்தின் ஒரு பகுதி தான் இந்த பேரணர்த்தத்திற்கு
உளளானது.
கி.பி 79 ஆம் ஆண்டில் பொம்பி நகருக்கு அண்மையில் உள்ள வெசு வியஸ் (Vesuvius) மலையில் இருந்து வெடித்துப் பாய்ந்து கிளம்பி இரண்டு நாட்கள் கக்கப்பட்ட எரிமலைக் குழம்பின் கற்களும் சாம்பலும் குவிந்ததன் ЈБПЛ600TLDПЈ95, ஹேர்குலேனியம் (Herculaneume) Llj5LDIT60T 9yi நகரம் அழிவுற்று முற்றாக மூடப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 

பழிந்த பொம்பி நகரம் ண்டும் தெரிய ஆரம்பித்தது
இந்த எரிமலைக் குமுறலினால், 4 முதல் 6 மீற்றர் வரை
சாம்பலும், எரிமலைக் குழம்புக் கற்களும் குவிந்து பொம்பி நகரை, அழுத்தி முற்றாக மூடிவிட்டது. சுமார் 1700 வருடங்கள் சுவடே இல்லாமல் அமிழ்ந்துபோன இந்நகரம், 1749ஆம் ஆண்டு மீண்டும் தற்செயலாகத் தெரிய ஆரம்பித்தது!

Page 17
அந்தக் காலகட்டத்தில் இருந்து அங்கு மேற் கொள்ளப்பட்டு வருகின்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் ரோமன் சாம்ராஜ்யத்தில் உச்ச நிலையில் இருந்த அந்நகரத்தின் வாழ்க்கை குறித்து, மிக ஆழமான விபரங்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன. ஐ.நா உலக மரபுரிமை இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இப்பகுதி இந்தாலியின் மிக பிரசித்திப்பெற்ற உல்லாப் பயணிகள் இடமாக விளங்குகின்றது. வருடாந்தம் இந்நகரினைப் பார்க்க சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், இந்த இயற்கைப் பேரணர்த்தம் நடந்த அந்தப் பயங்கரச் சம்பவங்கள் குறித்து இச்சம்பவம் நிகழ்ந்த 25 வருடங்களுக்குப் பின்னர் இளைய பிலினி (Pliny) என்பவர் தமது நண்பர் கோர்னெலிஸ் ரசிற்றஸ் என்பவருக்கு எழுதிய கடிதமாகும்.
இந்த போரழிவின் போது பிளினியின் மாமா கொல்லப்பட்டார் அவரது குடும்பத்தவரும் பெரும்பாலும் அழிக்கப்பட்டனர். அவ்வேளை பிளினிக்கு பதினெட்டு வயது. அவர் தனது மாமா வீட்டில் மிஸினம் (Misenum) நகரில் வாழ்ந்தார்.
அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விபரங்கள் அந்த பயங்கர இயற்கை அனர்த்தத்தை எமக்கு படம் பிடித்து காட்டுவதாக அமையும். அது வருமாறு:
எனது மாமா மிஸினமில், கப்பற்படையின் கமாண்டராக இருந்தார். ஆகஸ்ட் 24 ஆம் திகதி பிற்பகல் நேரம், எனது தாயார், வானத்தில் வழமையற்ற அளவிலும் தோற்றத்திலும் தோன்றிய ஒரு முகிலை அவருக்கு காட்டினார். வெய்யிலில் நின்ற அவர், குளிர் நீரில் ஸ்நானம் செய்தார். கீழே இருந்தவாறு மதிய உணவை சாப்பிட்டுவிட்டு தமது புத்தகங்களோடு வேலையில் இருந்தார். பின்னர் சப்பாத்தை
வாங்கிப் போட்டுக்கொண்டு ஓர் உயரமான இடத்தில் போய் நின்றவாறு அந்த முகிலையும் சூழலையும் அவதானித்தார். அது எந்த மலையில் இருந்து வருகிறது என்பது அப்போது தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் தான் அது வெசுவியஸ்
 

កែខៃយ៉ាំរ៉ៃរឺ
17
மலையிலிருந்து வருகிறது என்பது தெரிந்தது. அதைப் பொதுவாக நோக்கும்போது ஒரு விரிந்த குடை போல, அடிப்பகுதி போல, ஒன்றிலிருந்து, மிக உயரமாகச் சென்று பின்னர் கிளைகள் போன்று விரிந்து செல்வதாகத் தோன்றியது. முதலாவது எரிமலை வெடிப்புடன் மேலே உயரப் பறந்து, பின்னர் அழுத்தம் போதாததால் சென்று பின்னர் படிப்படியாக மறைந்துள்ளது என்பதாக நான் கற்பனை செய்தேன். சில இடங்களில் அது வெள்ளையாகத் தோன்றியது. வேறு வேறு இடங்களில், அது கொண்டு சென்ற சாம்பல் மற்றும் மண்ணுக்கு ஏற்ப் மங்கலாகவும், அழுத்தமாகவும் தோன்றியது.
இதற்கிடையில் வெசுவியஸ் மலையில், பல்வேறு இடங்களில் நெருப்புக் கொளங்கள் வெடித்து இருளில் ப ளிச்செனத் தெரிந்தன. பயப்படாதீர்கள் அதொன்று மில்லை. அதெல்லாம் குடியானவர்கள் பயத்தினால் மூட்டி விட்டிருக்கும் தீயாக இருக்கலாம். அல்லது விட்டுச்சென்ற வீடுகளுக்கு வைக்கப்பட்ட தீயாக இருக்கலாம்! என்று தனது தோழர்களை IL DI TIL DIT சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். பின்னர் அவர் போய்ப் படுத்துக் கொண்டவர், நிச்சயமாகத் தூங்கி இருக்க வேண்டும். அவர் ஒரு பருத்த மனிதர். தூங்கினால் குறட்டைச் சத்தம், அவரது அறை வாசல் வரைக்கும் கேட்கும்.
இந்தவேளை அவரது அறைக்கு முன்னால் உள்ள முற்றத்தில் எரிமலைக் குறுங்கற்கல் கொண்ட சாம்பல் பரவி மேலும் மேலும் பெருகிக் கொண்டிருந்தது. அவர் அங்கு மேலும் தங்கி இருப்பாரானால் வெளியில் வர முடியாத நிலை ஏற்படும் எனக் தோன்றியது. எனவே அவர் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார். அங்கு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த ஏனையவர்களுடன் சேர்ந்து கொண்டார். ***அதே வேளை கட்டடங்கள் பலமான அதிர்ச்சியில், அத்திவாரமற்ற வை போன்று முன்னும் பின்னுமாக ஆடத்தொடங்கின. அத்துடன் வெளியில்
படபடவென வந்து விழும் எரிமலைக் கற்களினாலும் ஆபத்து ஏற்படுமெனத் தோன்றியது. உள்ளே இருப்பதா,

Page 18
អ៊ែងហ្គ្រាម៉ាហ្វ្រីឌ័ 差 18
அனைவரும் பாதுகாப்பாக தலையில் தலையணையை வைத்துக் கட்டிக்கொண்டு வெளியில் ஓடி வந்தார்கள். எங்கும் பகல் வெளிச்சம் இருந்தாலும், அவர்கள் சாதாரண இரவில் நிலவுகின்ற இருட்டினை விட, கரிய இருளில் இருந்தார்கள். சிறு சிறு விளக்குகளைக் கொளுத்தி வைத்து, தம் பக்கத்தில் இருளைப் போக்க முனைந்து கொண்டிருந்தார்கள்.
கடல் மூலமாகத் தப்பி விடலாமா என்று பார்ப்பதற்காக மாமா கடற்கரைக்குச் செல்லத் தீர்மானித்தார். ஆனால் கடலலைகள் ஆக்ரோஷமாக எழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்தன. பின்பு நிலத்தில் படுத்துக்கொண்ட அவர் குடிப்பதற்கு மீண்டும் மீண்டும் குளிர்ந்த நீர் தருமாறு கேட்டார்.
பின் தீ நெருங்குகிறது என்பதற்கு அபாய அறிவிப்பாக, நெருப்புச் சுவாலையும் கந்தக மணமும் வந்து கொண்டிருந்தது. பலரும் ஒடத் தயாரானார்கள். மாமாவை எழும்புமாறு தூண்டினார்கள் அவர் மெல்ல எழும்பி இரண்டு அடிமைகள் மீது சாய்ந்து கொண்டு நின்றவர் திடீரென மயங்கி விழுந்தார். கடுமையான புகையினால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்க வேண்டும் என நான் எண்ணினேன்.
அந்த நாளைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 26ஆம் திகதி வெளிச்சம் ஏற்பட்டது. அப்போது அவரைப் பார்த்த
 
 

அவரது சடலம், காயங்கள் ஏதுமின்றி அதே முழு உடைகளுடன், தூங்குபவர் போலக் காணப்பட்டது.
சாம்பல் வீழ்ந்து கொண்டிருந்தது. கடுமையாக அல்ல, நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். கரிய முகில் எங்களுக்கு பின்னால் வெள்ளம் போல சூழ்ந்து வந்து கொண்டிருந்தது.
நாம் இன்னமும் சூழலைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்ற வேளையில், விதியைக் கடந்து செல்வோம். இல்லாவிட்டால், இந்த இருட்டில், பின்னால் வந்து கொண்டிருக்கும் சனக் கூட்டத்தால் இடித்து வீழ்த்தப்பட்டு நிலத்தில் நசுக்கப்பட்டு விடுவோம். என்று நான் கூறினேன். இருள் வந்தபின் நாம் கீழே இருந்தது மிகவும் குறைவு. அந்த இருள் சந்திரனில்லாத நேரத்து இரவோ அல்லது முகில்கள் சூழ்ந்ததால் வந்த இரவோ அல்ல. அந்த இருள் மூடப்பட்ட அறைக்குள் விளக்கு வெளிச்சம் அணைக்கப்பட்டபோது ஏற்படும் இருள் போன்றதாகும்.
பெண்கள் அச்சத்தால் அலறினார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுதார்கள். அந்த இருளில் சிலர் தமது பெற்றோரை உரத்துக் கூப்பிட்டார்கள். சிலர் தமது
பிள்ளைகளை எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டு அழைத்தார்கள். சிலர் தமது மனைவியரைக் கூப்பிட்டார்கள். அவர்களது குரல் மூலம் அவர்கள்
எங்கிருக்கிறார்கள் என்று அடையாளம் காண்பதற்காகத் தான். சிலர் தமது சொந்த விதியை எண்ணிக் கத்தினார்கள். சிலர் பயத்தில் மரணத்தை அழைத்தார்கள். பலர் இறைவனைக் கூவி அழைத்தார்கள். இன்னும் சிலரோ, உலகம் நித்திய இருளில் மூழ்கி விட்டதாகக் கத்தினார்கள்.
மிஸினத்தின் ஒரு பகுதி அழிந்து விட்டதாகச் சிலரும், இன்னொரு பகுதி தீயில் எரிவதாகச் சிலரும் பொய்த் தகவல்களைக் கூறி மற்றவர்களை நம்ப வைக்க
முயற்சித்தார்கள் ஆனால் அவ்வேளை ஒரு வெளிச்சம்
மீண்டும் வந்தது. இனி வரப்போகும் தீச்சுவாலைகளுக்கு ஒர் அபாய அறிவிப்புத்தான் அந்த ஒளி என நாம்
நம்பினோம்.
இருந்தபோதும் தூரத்தில் தான் அந்த ஒளி நின்றது. மீண்டும் இருள் 2Kბ2x சூழ்ந்து சாம்பல் மீள விழ
ሯ....... ஆரம்பித்தது.

Page 19
ஆனால் இம்முறை சாம்பல் துகள்கள் அடர்த்தியாக விழ ஆரம்பித்தன. நாம் அடிக்கடி சாம்பலைத் தட்டிக் கொண்டிருந்தோம் இல்லாவிடில் நாம் அதில் புதைந்து விடுவோ. ஆனால் நான் பயத்தால் அழவோ கத்தவோ இல்லை எனப் பெருமையாக கூறிக்கொள்ளலாம். அகில உலகமும் என்னோடு சேர்ந்து அழிகிறது அதில் நானும் இருக்கிறேன் என்று நினைப்பதில் ஒரு திருப்தி எனக்கு!
இம்மாபெரும் அனர்த்தத்தில் சுமார் 20 ஆயிரம் பொம்பியன் வாசிகள் உயிரிழந்தார்கள். இந்நகரை மூடிய சாம்பல், முழு நகரையும் அப்படியே அடக்கம் செய்து விட்டது போல ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது எரிமலை வெடித்துச் சிதறியபோது இருந்தது போலவே, அனைத்தும் மலைபோன்ற சாம்பலின் படிவின் கீழ் கிடந்தன. கலைப்பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. கட்டடங்கள் பாதுகாக்கப்பட்டன. சில முக்கிய தடயங்கள் விடப்பட்டிருந்தன. அந்தத் தடயங்கள் கடந்தகாலத்தைச் சிறிது சிந்தித்து பார்க்க வைத்துள்ளன.
ஒவ்வொரு இருள் மேகத்திலும், ஒர் ஒளிக்கீற்று தெரியும் என என் தந்தை அடிக்கடி கூறிக் கொள்வார். அவர் கூறியதை போல் இந்தத் தடயங்கள் சில ஒளிக்கீற்றுக்கள் என்பதை பொம்பி நகர அழிவுகளை நீங்கள் சென்று பார்க்கும் போது உணர்வீர்கள். இவ்விதமாக மிளினி தெரிவித்தார்.
புதையுண்டு போன பொம்பி நகரின் ஒரு பகுதி ஆயிரத்து நாநூறு வருடங்களுக்கு மேல் அனர்த்தம் நடந்த காலத்தில் இருந்தது போல் அப்படியே தெரிய ஆரம்பித்தது ஒர் ஆச்சரியமே. அப்போது இந்நகரம் பற்றி மேலும் பல சரித்திர உண்மைகள் தெரிய வந்தன.
1599 ஆம் ஆண்டு நிலத்துக்கு அடியிலான கால்வாய் ஒன்றினை வெட்டுவதற்காக நிலத்தின் ஒரு பகுதியை அகழ்ந்தபோதுதான் புதையுண்ட நகரப்பகுதி ஒன்று வெளிப்பட்டது. அப்போது புதையுண்ட சுவர்கள், ஒவியங்கள், கல் சாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 1500 வருடங்களுக்கு பின்னரும், புதையுண்ட நகரப்பொருட்கள் பெரும்பாலும் முன்னர் இருந்தது போல அப்படியே பாதுகாக்கப்பட்டவையாகக்
போதாமல் இருந்த காரணத்தால் பழுதடைதலும் மிகவும் குறைவாகவே இருந்தன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட LIGO அகழ்வாய்வுகள் பொம்பி நகரம் குறித்து மேலும் தகவல்களைத் தந்தள்ளன.பொம்பியின் பழைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆழமான அகழ்வு ஆய்வுகள், சமீபத்தைய அகழ்வுகளின் முக்கிய சான்றுகள் ஆகியன ஒழுங்கற்ற மண் படிவங்களின் வரைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. இவை இந்நகரம் அதற்கு முன்னரும் எரிமலை வெடிப்பு அனர்த்தம் மற்றும் பூகம்பங்கள் ஆகியவற்றுக்கு இலக்காகி இருக்கலாம். என்பதை வெளிக்காட்டி நிற்கின்றன. அவற்றுள்
 

5}ញត្អែ
19
மிருகங்களின் எலும்புத்துண்டுகள், மட்பாண்டத்துண்டுகள் மற்றும் பூண்டுகள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டன.
கி.பி. 62 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஏற்பட்ட கடும் பூகம்பத்தால், பொம்பி நகரம் பெரும் அனர்த்தங்களைச் சந்தித்தது. பொம்பி மட்டுமன்றி பக்கத்து நகரங்களான ஹேர்குலேனியம் மற்றும் நுசெரியா ஆகியனவும் பாதிப்புக்குள்ளாகின. கட்டடங்கள், ஆலயங்கள், விதிகள், வீடுகள் யாவும் அழிவுக்குள்ளாகின. 62ஆம் ஆண்டு வரை நகரில் மீள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எரிமலை வெடித்த 79 ஆம் ஆண்டில் இவை பூர்த்தியாகவில்லை.
79 ஆம் ஆண்டின் எரிமலை வெடிப்பு அனர்த்தம் ஏற்பட்டபோது மக்கள் பிரதானமாக சாம்பல் மழைக் காரணமாகத் தான் மூச்சுத் திணறி மரணமானார்கள் என நம்பப்பட்டாலும், வெசுவியாஸிலும் மற்றும் சுற்றியுள்ள நகரங்களிலும் தாங்கவொனா வெப்பம் தான் மரணத்துக்கு காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.
காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராய்ச்சிகள் பல கலைத்துவமான சுவர்ச் சித்திரங்கள், ஒவியங்கள், கட்டடங்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் பல முக்கிய தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அன்றைய காலத்து ரோம இராச்சியத்து வாழ்க்கை முறைகயைக்
க ண் டு பி டி க் க உதவியுள்ளது.
I860 ஆம்
ஆ ண் டு பியோறெல்லி 6T 65T ற பொம்பியின் அ க ழ் வு ஆ ரா ய் ச் சி யா ளர்
ஆராய்ச்சிகளைப் பொறுப்பு ஏற்றார். இவரது ஆய்வின் போது விறைத்துப்போன
மனித உடலங்கள்

Page 20

போன மனித உடல்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றிற்கு பிளாஸ்டரை ஏற்றி வெசுவிய எரிமலையால் உயிரிழந்தவர்களின் உடலாக மீளப்பார்க்க முடிந்தது. இவர்கள் எரிமலை அனர்த்தத்தின் போது ஒடித் தப்ப முடியாமல் அகப்பட்டவர்கள். அவர்களது முகத்தில் அந்தப் பயக்களை தெரிந்தது. இந்தத் தொழில் நுட்ப முறை இன்றும் உபயோகிக்கப்படுகிறது. ஆனால் பிளாஸ்டருக்குப் பதில் நீண்ட காலம் நின்று பிடிக்க கூடிய மரப் பிசின் ஒன்று உபயோகிக்கப்படுகிறது.
பொன்ரனா என்ற ஆய்வாளர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்த வேளை, பாலியலைச் சித்திரிக்கும் சுவர்ச் சித்திரங்களைக் கண்டெடுத்தார் எனவும் அவரது காலத்து சமூக ஒழுக்கக் கட்டுப்பாட்டுணர்வின் காரணமாக அவர் அவற்றை மீண்டும் நிலத்தில் புதைத்து விட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது மட்டுமல்ல, வீட்டுப் பாவனைப் பொருட்கள் கூட, காமத்தைத் தூண்டும் வகையில் இருந்தன என கண்டுபிடிக்கப்பட்டது. இப் பொருட்கள் மற்றும் கலைப்படைப்புகள் பாலியலைப் பெரிதும் சார்ந்ததாக, அன்றைய ரோமன் கலாசாரம், வெகு சுயேச்சையாக இருந்ததை எடுத்து காட்டுவதாக இருந்தது. இருப்பினும் இவை கலாசார மோதல்களை உருவாக்கக் கூடியன என்பதால் மீண்டும் புதைக்கப்பட்டன. பல பொருட்கள் அறையில் பூட்டி வைக்கப்பட்டன.
1819 ஆம் ஆண்டு நேப்பிள்ஸின் முதலாவது பிரான்சிஸ் மன்னன் தனது மனைவி மற்றும் புத்திரியுடன் தேசிய நூதன சாலையில் பொம்பி பொருட்காட்சியை பார்க்கச் சென்றார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாலியலைத் தூண்டும் கலைப்படைப்புகளைக் கண்டு அசெளகரியம் அடைந்தார். அவற்றை எடுத்துப் பூட்டி வைத்து வயது வந் தோருக்கு மட்டும் காட்டும்படி கூறினார்.
கிட்டத்தட்ட 100 வருடங்கள், இப்பகுதி மூடுவதும் திறப்பதுமாக இருந்து வந்துள்ளது. 1960 களில் மீண்டும் திறக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில் அனைவருக்குமாக திறக்கப்பட்டாலும் வயது குறைந்த பிள்ளைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முன்னிலையில் தான் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். பொம்பி நகரம் அழிந்து போவதற்கு அதன் ஒழுக்கச் சீர்கேடுகள் தான் காரணம்
என்றும், இது கடவுளின் தண்டனை என்றும் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட இந்நகரின் புராதனப் பொருட்கள் பெருமளவானவை நேப்பிஸ் தேசிய அகழ்வாராய்ச்சி நூதன சாலையில் பாதுகாக்கப்படுகின்றன.
- கங்கா

Page 21
To place your
advertisement
in
* سوسسه مه و 856ODGOőh Göëff
CUIURE 萎 fRÁĝiffON WENTS FASHIN INTERVIEWS 裘封莓
Conta Ct US OM
+94 11 5322733/734/7
ΟΥ marketing@virakesarilk
 
 
 
 

Send the World's Best
Home Appliances
to your loved ones in
Sri Lanka
Simply visit singerson, the website of Sri Lanka's No. 1 retailer of home appliances. Choose any number of items among over 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We'll deliver then to your loved ones in any part of Sri Lanka. Guaranteed
SINGER SISIL and Prestige real
AWAcurae HITACHI PESSO

Page 22
ក្តម៉ារ៉ៃរឺ 22 தொல்லியல்
ருக்கோவில் 8
தொடர்ச்சி.
வல்ல பதம் நீர் வாகித்தல் அகத்தில் கொண்டு புரியுமென்று மாகோனும் வகுத்துப் பின்னும்
(3 ஆம் பாடல்) இக்கல்வெட்டு பாடல் குறிப்பிட்டபடியே திருக்கோவில் பகுதியில் குடிகள் வகுக்கப்பட்டு கோவில் நிர்வாகம் நடை பெறுகிறது. அவ்வாறு மாகோன் வகுந்த வன்னிமை கலி ஆண்டு 4250 (கி.பி. 1148) என மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. ஏற்கனவே நாம் கூறிய மாகோன் காலத்திற்கும் இங்கு குறிப்பிடும் ஆண்டுகளுக்கும் ஆண்டு சற்று வித்தியாசம் காணப்படுகின்றது. இது கலி ஆண்டு கணிப்பில் ஏற்பட்ட தவறு எனலாம்.
ஆகவே திருக்கோவில், கொக்கட்டிச்சோலை முதிய திருப்படைக் கோவிலில் மாகோன் வகுத்த வன்னிமையே இன்றும் நிர்வாக நடைமுறையில் உள்ளன. எனவே திருக்கோவில் காணப்படும் தூண், துண்டுக் கல்வெட்டுகள் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என கி.பி. 1215 - 1255 வரை முழு இலங்கையுமே ஆட்சி செய்த காலிங்க விஜயபாகு எனப்பட்ட கலிங்கமாகன் என்பதே பொருத்தமானது லிங்க வழிபாடு உடைய மாகன் சிவஞான சங்கரர் என அழைக்கப்பட்டதிலும் ஆச்சரியமில்லை.
- திரிபுவன சக்கரவர்த்திகள்
பூரீ சங்கபோதி விஜயபாகு யார்? திரிபுவன சக்கரவர்த்தி, பூரீசங்கபோதி, சிவஞானசங்கர்
எனப்பட்ட விஜயபாகு யார் என்ற கேள்விக்கு விடையை
ஆராய்வோம். இலங்கை வரலாற்றிலே விஜயபாகு எனப்
 

நல்வெடீடுக்கள்
முதலாம் விஜயபாகு (கி.பி. 1055 - 1110)
இலங்கை வரலாற்றில் நீண்டகால ஆட்சியைக் கொண்ட அவன் தமிழருக்கு எதிராக போராடியவன். சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டுவதையே நோக்கமாகக் கொண்டு, விரட்டியமையால் சிங்களவர்களால் போற்றப்பட்டவன். இவன் பூரீ சங்கபோதி என்ற பெயரைப் பெற்றிருந்தாலும் திரிபுவனச் சக்கரவர்த்திகள் விருது பெற்றிருக்கவும் இல்லை. தமிழ் மக்கள் சிவஞான சங்கரர்
என போற்றவும் இல்லை.
இரண்டாம் விஜயபாகு (கி.பி. 1186 - 1187) இவன் ஆட்சிக் காலம் மூன்று வருடங்கள் மட்டுமே பொலனறுவையை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். பண்டித விஜயபாகு எனப்பட்டவன். திருக்கோவில் கல்வெட்டு பத்தாவது ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது.
மூன்றாம் விஜயபாகு (கி.பி. 1232 - 1236) தம்பதேனியவை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன் ஐந்து வருடங்கள் மட்டுமே ஆட்சி. வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவு தொடர்புடையவன். மாயரட்டையில் சிங்கள வன்னியை ஆண்டான் என பூஜாவளிய கூறுகிறது. தமிழ் மக்களோடு ஒரளவு தொடர்புடையவனாக இருந்தான் என சூளவம்சம் கூறினாலும் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்யவில்லை.
நான்காம் விஜயபாகு (கி.பி. 1271 - 1273) A. தம்பதேனியாவில் ஆட்சி புரிந்த இவன் போசத் விஜயபாகு எனப்பட்டவன். அனுராதபுரத்துக்கு போன போது வன்னியர் இவனை சேவித்து திறை செலுத்தியதாக சூளவம்சம் கூறுகிறது.

Page 23
இவனும் திருக்கோவில் கல்வெட்டை பொறித்தவன் அல்ல.
ஐந்தாம் விஜயபாகு (கி.பி. 1335 - 1347) இவன் கம்பளையிலிருந்து ஆட்சி புரிந்தவன். சவுலு விஜயபாகு என்னும் பெயருடையவன். மாகோன் காலத்திற்கு பிற்பட்டவன். 13 ஆண்டுகள் ஆட்சி புரிந்தாலும் திருக்கோவில் போன்ற தென்பகுதி வரை இவன் ஆட்சி பரவவில்லை. எனவே திருக்கோவில் கல்வெட்டு இவனதும் அல்ல.
ஆறாம் விஜயபாகு ( கி.பி. 1397 - 1409) அநேக இடங்களைக் கைபற்றி கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்தவன் 'சிவஞானசங்கர் என்ற பெயரை தமிழ் மக்கள் கொடுக்குமளவிற்கு தமிழர் மத்தியில் செல்வாக்கு பெறவில்லை. இவனும் திருக்கோவில் கல்வெட்டுக்கு உரியவன் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆகவே திருக்கோவில் கல்வெட்டுகள் நிச்சயமாக தமிழ் மன்னன் ஒருவனாலே பொறிக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இது மட்டுமல்ல தமிழர்கள் மத்தியில் பிரபலமானவன், சைவக் கோவில்களுக்கு திருப்பணி செய்தவன். பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரிந்தவன். இவனே மட்டக்களப்பு மான்மியம், சூளவம்சம் குறிப்பிடும் மாகோனாவான். இவன் திருக்கோவில் கோயிலுடன் தொடர்புடையவன் என்பதையும் அறிகிறோம். இப் பிரதேசங்களில் ஆட்சி புரிந்தவன் எனினும் இவனது இயற் பெயர் (மாகோன்) இடம் பெறாது விஜயபாகு என்ற பெயரே இடம் பெறுகின்ற மாகோன் என்னும் காலிங்க மன்னன் சிங்கள மக்கள் ஆதரவைப் பெறும் பொருட்டு பூரீசங்க போதி, விஜயபாகு என்ற விருதுப் பெயரையும் கொண்டிருக்கலாம். சோழ, கலிங்க தொடர்புடையவன் என்பதால் திரிபுவனச் சக்கரவர்த்தி என்ற விருது பெயரையும் கொண்டிருக்கலாம். மேலும் விஜய, கலிங்க சக்கரவர்த்தி எனவும் சில இடங்களில் இவனது பெயர் குறிப்பிடப்படுகிறது. எனவே அவன் திருக்கோவிலுக்கு செய்த திருப்பணி காரணமாகவும் வீர சைவ ஞான கலிங்க மாகனுக்கு சிவஞான சங்கர் என தமிழ் மக்கள் அழைத்திருக்கலாம். எனவே திரிபுவனச்சக்கரவர்த்தி, பூரீசங்கபோதி என்பவன் அழைக்கப்பட்டவன் கலிங்க மாகோன் என்பது பொருத்தமானது. சூள வம்சத்திலே மாகோன் பெறி கோவிலை பெளத்த இனத்தவரை வருத்தினான் என பல விதமாகக் கூறப்பட்டுள்ளது. கால சூழ்நிலை 5ΠΠ 600TL Ο Πέ5 இவனது பெயர் மறைக்கப்பட்டாலும் திருக்கோவில் கல்வெட்டுகள் கலிங்க மாகோன் என்பதனையே வலியுறுத்துகின்றன. மாகோனது பத்தாவது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளே இவை. மாகோன் ஆட்சிகாலம் 21, 40, 44 வருடங்கள் என வரலாறு கூறுகின்றது.
இவன் சிங்கள மக்கள் எதிரியாக மகாவம்சம் போன்ற நூல்கள் குறிப்பிடுவதால் ஏனைய இடங்களில் இவனது புகழ் மறைக்கப்பட்டாலும் திருக்கோவில், கொக்கட்டிச்
 

& கலைக்கேசரி
23
சோலை போன்ற தமிழ் மக்களின் பிரதேசங்களில் இவன் புகழ் மறைக்கப்படவில்லை. மாறாக பலவிதமாக புகழ் பெற்றுள்ளான். மகோனும் குளக்கோட்டனும் இணைந்த
செயற்பாடுகள் கிழக்கிலங்கை முழுவதும் காணப்பட்டுள்ளன. ஆகவே திருக்கோவில் கல் வெட்டுகளை பொறித்தவன் கலிங்க மாகோன் என்பதில் ஐயமில்லை.
அடிக்குறிப்புகள்
1. Monograph of the Batticaloa District by S.O. Kanagaratnam pp4 2. சிந்தனை - ஈழநாட்டுச் சாசனங்கள் கட்டுரை. ஜூலை அக்டேபர் இதழ் -
பேராசிரியர் இந்திரபாலா பேராதனை - 1968 3. Ceylon Tamil Inscriptions part -1 by Dr.A. Velupillai page -2 4. சிந்தனை - ஈழநாட்டுச் சாசனங்கள் கட்டுரை - ஜூலை - அக்டோபர்.
பேராசிரியர் இந்திரபாலா - 1968 பேராதனை பக். 42. 5. குளக்கோட்டன் தரிசனம் - தங்கேஸ்வரி - B.A Hons, தொல் பொருளியல் -
மட்டக்களப்பு - புதிய பதிப்பு 2003 - பக் 84 6. சிந்தனை - ஈழ நாட்டுச் சாசனங்கள் கட்டுரை - 1968 பேராதனை.
Ceylon Tamil Inscriptions - by Dr. Velupillai PP5 7. குளக்கோட்டன் தரிசனம் - by க. தங்கேஸ்வரி B.A தொல் சிறப்பு
மட்டக்களப்பு மறுபதிப்பு - பக் - 93 - 98 8. மட்டக்களப்பு மான்மியம் - பதிப்பு FX.C. நடராசா - பக் 70 - 71- 1952.
மட்டக்களப்பு. 9. History of Ceylon Vol. part-ii chronological list of Ceylon - Kings W. if Lab rooy. Epigraphic a Zelanica vo — iii chronological
Mahavamsa — Gaiger (Translaled) (g5 GTG) u bg-Lb gỊUJSF பட்டியல்,
*
- செல்வி. க. தங்கேஸ்வரி B. A. - தொல்லியல் சிறப்பு

Page 24


Page 25
இந்துக்களின் பண்டைய இருப்பை கொழும்பு முத்து விநா
(ଗ) ழும்பில் இருந்து கண்டியை மையப்படுத்தி 5Tமட்டக்களப்பு வரையான ஒரு நேர்கோட்டில் பழைமை மிகு மூன்று சிவாலயங்கள் இன்று விநாயகப் பெருமானின் திருக்கோயில்களாகக் குறிப்பிடப்படுவதைக் காணமுடிகின்றது. இன்னுமொரு முறையில் கூறுவதானால் பிள்ளையால் தந்தை பெருமை பெற்ற திருத்தலங்கள் இவையென்றும் கூறலாம்.
ஆம். மேற்கு இலங்கையில் பலநூறு ஆண்டுகளாகச் சிறப்புடன் விளங்கிய கொழும்பு சோமசுந்தரேஸ்வரம் என்னும் சிவாலயம் இன்று பூரீமுத்து விநாயகர் ஆலயமாகவும் அதேபோன்று பழைமை கொண்ட நாட்டின் மத்தியில் கண்டியில் இருந்த தொன்மை மிகு சிவாலயமான சோமசுந்தரேஸ்வரம் கட்டுக்கலை செல்வவிநாயகர் ஆலயமாகவும், இராமபிரானால் பூசிக்கப்பட்ட பெருமை கொண்ட மாமாங்கேஸ்வரர் சிவாலயம் இன்று மாமாங்கப் பிள்ளையார் ஆலயமாகவும் திருப் பெயர்களுடன் திகழ்கின்றன, அருள் தருகின்றன.
இலங்கையில் ஆங்கிலேயர் அடியெடுத்து வைப்பதற்கு முன் அதாவது ஒல்லாந்தர் காலத்தில் பெருமைபெற்ற சிவாலயமாக கொழும்பு செட்டியார் தெருவில் விளங்கிய ஆலயம் இன்று பூரீமுத்து விநாயகர் ஆலயம் என்னும் திரு நாமத்துடன் விளங்குகிறது. இவ்வாலயம் சோமசுந்தரேஸ்வரம் என்ற திரு நாமத்துடன் திகழ்ந்துள்ள மையை வரலாறு தெளிவு படுத்துகின்றது. ஆங்கிலேயர் இலங்கைக்கு வருவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 1754 இந்தச் சிவாலயம் பிள்ளையார் ஆலயமாக பெயர் கொண்டது.
இலங்கைத் தீவின் வட மேற்குத் திசையில் கடலில் முத்துக் குளிக்கச் சென்றவர்களுக்கு 1754 ஆம் ஆண்டில் முத்துக் குளியல்களுக்கு மத்தியிலிருந்து ஒரு விநாயகர் திருவுருவம் கிடைத்துள்ளது. அத்திருவுருவை சோமசுந்தரேஸ்வரம் என்ற சிவாலயத்தில் திருநிலைப்படுத்தியதன் பின் அதாவது முத்துக்குளியலின் மத்தியிலே இருந்த காரணத்தை அத்திருவுரு கொண்டிருந்தமையால் முத்து விநாயகர் ஆலயம் என்று பெருமையுடனும், பக்தியுடனும் அழைக்கப்படும் பேறுபெற்றது. இதுவே சிவாலயம் விநாயகராலயம் என்று பெயர் மருவிய வரலாற்று நிகழ்வாகும்.
இன்றும் பண்டைய சிவலிங்கத் திருவுருவம் மூலமூர்த்தியாகத் திகழும் அதேவேளை சிவனுக்கு வலது புறத்தில் உள்ள கருவறையில் முத்துவிநாயகப் பெருமான் மூலமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இன்று சோம சுந்தரேஸ்வரம் முத்து விநாயகர் ஆலயமாகப் பெயர் கொண்டு ஆண்டுகள் இருநூற்று ஐம்பத்தைந்தைக் கடந்து விட்டது. மேற்கிலங்கையில் இந்துக்களின், தமிழர்களின்

வெளிப்படுத்தும் பகர் ஆலயம்

Page 26
கலைக்கேசரி கீ 26
 
 
 
 

பண்டைய இருப்பு, பெருமை, வரலாறு ஆகியவற்றிற்கான வரலாற்று சான்றாகவும் இத்திருத் தலம் கொள்ளப்படும் பெருமை கொண்டது.
ஐந்து தள இராஜகோபுரத்தைக் கொண்டதாகவும் அழகிய பன்னிரெண்டு தூண்களைக் கொண்டதாக LD55T மண்டபமும் பதினாறு தூண்களைக் கொண்டதாக ஸ்நாபன மண்டபமும் உள்ள இத்திருக் கோயிலின் கோபுர வாசல் கிழக்கு நோக்கியதாக அமையப்பெற்றுள்ளது. கர்ப்பக் கிருகமும், அர்த்த மண்டபமும் கருங்கல்லால் அமைக்கப்பட்டவையாகும்.
தினசரி ஆறுகாலப் பூசைகள் நியமப்படி இடம் பெறுவதுடன் இந்துசமயத்தவருக்குரிய சிறப்புத் தினங்கள் சகலவற்றிலும் விசேட பூசைகளும் ஆண்டுதோறும் மகோற்சவமும் சிறப்புற நடைபெற்று வருகின்றது.
தினசரி நடைபெறும் ஆறுகால பூசைகளில் சூரிய உதயத்தின் முன் நடைபெறும் திருவனந்தல் பூசை வைரவர் சுவாமியிலிருந்தும் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து வரும் சூரிய உதயத்தின் பின் நடைபெறும் காலைச்சந்தி பூசை சூரிய பகவானிலிருந்து ஆரம்பமாகின்றது. உச்சிக் கால பூசை முத்துவிநாயகப் பெருமானிலிருந்தும் சாயரட்சை பூசையும் முத்து விநாயகரிலிருந்தும் ஆரம்பமாகின்றது. இரண்டாம் கால பூசை சந்திர பகவானிலிருந்து ஆரம்பமாவது போன்று அர்த்தசாமப் பூசை விநாயகப் பெருமானிலிருந்து ஆரம்பமாகின்றது. திருவனந்தல் பூசை பால் பூசையென்றும் கூறப்படுகின்றது.
உற்சவ காலங்களில் வசந்த மண்டபத்தில் தீபாராதனைகளும், உள்வீதி வலமும் இடம்பெறுகின்றது.
முத்து விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தலைநகரிலுள்ள இந்து திருத் தலங்களில் நடைபெற்று வரும் மகோற்சவங்களில் இவ்வாலய மகோற்சவம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒவ்வோராண்டும் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாவது வழமையாயுள்ளது. மகோற்சவத்தின் எட்டாம் நாளான பங்குனி மாதம் 30 ஆந் திகதி வேட்டைத் திருவிழா நடைபெறும். அடுத்து வரும் நாளான சித்திரை வருடப்பிறப்பு நாளான சித்திரை முதலாந் திகதி முத்து விநாயகப் பெருமான் தேரேறி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நன்னாளாக அமைகின்றது.
சித்திரை மாதம் 24 ஆந் திகதி முதல் வைகாசி மாதம் 14ஆந் திகதி வரையும் அக்கினி நாளை முன்னிட்டு சோமசுந்தரேஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் இடம்பெற்று வருவது வழமையாகும். அதேபோல் வைகாசி மாதம் பூரணைதினமான வைகாசி விசாக நன்னாளில் முருகப் பெருமானுக்கு அபிஷேகமும், உள்வீதி உலாவும் இடம்பெறுகின்றது. வைகாசி மாதத்தில் இருபது தினங்கள் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டு

Page 27
இருபத்தோராவது நாளான ஆனி உத்தரத்தன்று உள்வீதி உலா உட்பட சிறப்பு நிகழ்வுகள் வழமையாக இடம் பெறுகின்றன.
ஆடிமாதத்து ஆடிப்பூரணை தினத்தன்று மீனாட்சி அம்மனுக்கும், ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜயந்தியன்று திருமாலுக்கும் உயரிய சிறப்பு வழபாடுகள் இடம் பெறுவதுடன் ஆவணி மாத ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியன்று முத்துவிநாயகப் பெருமானுக்கு விசேட வழிபாடுகளுடன் விநாயகப் பெருமான் அலங்காரத்தில் வெளிவந்து அடியார்களுக்கு 45ТLog) கொடுத்து அருள்பாலிக்கும் நிகழ்வும் இடம் பெறுகின்றன.
புரட்டாதி மாதத்தில் முப்பெருந் தேவியரான அன்னையருக்குரிய நவராத்திரி விழா இடம் பெற்று பத்தாம் நாள் விஜயதசமியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விரதமும் கார்த்திகை மாத முதலாவது திங்கட்கிழமை கார்த்திகை சோமவாரத்தன்று சோமசுந்தரேஸ்வரப் பெருமானுக்கு உள் வீதி உலாவுடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும், அதே மாதம் பூரணை தினத்தில் திருக்கார்த்திகை விரதமும், சர்வாலய, குமாராலய, விஷ்ணுவாலய தீபங்களும் இடம்
பெறுகின்றன.
இதைத் தொடர்ந்து விநாயக சஷ்டியும் கொண்டாடப்படுகின்றது. மார்கழி மாதத்தில்
திருவெம்பாவையும் அதன் இறுதிநாளான பத்தாம் நாள் திருவாதிரை அன்று ஆருத்திரா தரிசனமும் இடம்பெறுகின்றன.
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்ட சுவர்க்கவாயில் ஏகாதசி விரதம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெறுகின்றது. தை மாதத்து பூரணை தினத்தன்று தைபூசமும் LDTg) மாதமாத நட்சத்திர தினத்தில் மாசி மகமும் பங்குனி மாத பூரணை தினத்தில் பங்குனி உத்தரமும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதுடன் சித்திரை மாத சித்திரா பூரணைத் தினத்தன்றும் அம்மனுக்குரிய விசேட
வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாலயத்திலே மூல மூர்த்திகளாக பூரீமுத்து விநாயகப் பெருமான் ஆதி சிவலிங்கப் பெருமானுக்கு வலது பக்கக் கருவறையில் வீற்றிருக்க வலது புறம் அன்னை மீனாட்சி அம்மன் கருவறையில் இருந்து அருள் தருகின்றாள்.
மேற்கூறப்பட்ட தெய்வங்களுடன் சூரிய பகவானுக்கும், சந்திர பகவானுக்கும் உரிய சந்நிதிகளின் அவர்கள் வீற்றிருக்கின்றனர். பூதேவி, பூரீதேவி சமேத திருமாலுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப்
பெருமாக்ைகம் பள்ச(மக விநாயகர்,
ருமானுககு ஞசமு ந
ஆஞ்சநேயர், வைரவர், காளியம்மன், துர்க்கையம்மன், சண்டேஸ்வரர்,
நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் தனிச்
 
 
 
 
 
 
 


Page 28

சந்நிதிகள் உள்ளன. 1979, 1990 அடுத்து 2002 ஆம் ஆண்டு என்று முறைப்படி தொடர்ச்சியாக விதிப்படி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இந்து சமய சாஸ்திர முறை தவறாது 9,GDU கிரியைகள் புனருத்தாரணங்கள் நடைபெற்று வரும் சிறப்புக் கொண்டது கொழும்பு செட்டியார் தெரு பூரீமுத்து விநாயகர் திருக்கோயில் என்பது பெருமையுடன் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். ஆதி மூல மூர்த்தியாக வரலாறு குறிப்பிட முடியாத காலத்தைக் கொண்ட சிவலிங்கப் பெருமான் சந்நிதியிலேயுள்ள சகல அம்சங்களும் கொண்ட பழைமை வாய்ந்த நந்தியும், பலிபீடமும் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை. ஆதிசங்கரர் இந்து சமயத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்து நெறிப் படுத்தினார். அந்த ஆறு பிரிவுகளும் அவற்றிற்குரிய வழிபாட்டு முறைகளும் விதிப்படி ஒரே ஆலயத்தில் இடம் பெற்று வருவது பூரீ முத்து விநாயகர் திருக்கோயிலின் சிறப்பு. இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளையும் ஒரே கோயிலுக்குள் அடக்கியிருப்பது பெருமை தருவதாகும்.
மேற்கிலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் முதல் காலி மீனாட்சி சுந்தரேஸ்வரம் வரை பழைமையும், பெருமையும் வாய்ந்த சிவாலயங்கள் பலவுள்ளன. புத்தளம் மாவட்டத்திலுள்ள மானாவாரி சிவன் கோயிலில் இரத்மலானையிலுள்ள திருநந்தீஸ்வரம் என்பவற்றுடன் கொழும்பு சோமசுந்தரேஸ்வரமும் ஆதிச் சிவத்தலங்கள் வரிசையிலே இடம்பெற்றுள்ளன. ஒரு சமூகத்தின் பண்டைய இருப்பு, தொன்மை, வரலாறு சிறப்பு என்பவற்றிற்கு ஆதாரங்களாகத் திகழும் முக்கிய சான்றுகளாக அச்சமுகத்தின் வழிபாட்டுத் தலங்கள் விளங்குகின்றன. குறிப்பிட்ட ஒரு சமய தலத்தின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்யின் அச்சமுகத்தின் வரலாறும் அதில் அடங்கி விடும். இந்நிலையிலே கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள பூரீ முத்து விநாயகர் ஆலயமென்ற பெயருடன் கடந்த இரண்டரை நூற்றாண்டுகளுக்கு மேல் சிறப்புற்று விளங்கும் திருக் கோயில் அதற்குமுன் எத்தனை நூற்றாண்டுகள் அல்லது ஆயிரம் ஆண்டுகள் சோமசுந்தரேஸ்வரம் என்ற பெயருடன் பிரகாசித்துள்ளது என்பது ஆய்வுக்குரியது.
எவ்வாறாயினும் இந்துக்கள், தமிழர்கள் வாழ்ந்த பகுதி இலங்கையின் மேற்குப் பகுதி என்பது ஆதாரபூர்வமாக நிரூ பணமாகும் சான்றாக இத்திருக்கோயில் திகழ்கின்றது. மேற்கிலங்கை தமிழர்கள் வந்து குடியேறிய பகுதியல்ல, பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பகுதியென்பது நிருபணமாவதற்கு வேறு ஆதாரங்கள் அவசியமில்லை அல்லவா? இன்று பூரீமுத்து விநாயகர் ஆலயமாகத் திகழும் அன்றைய சோமசுந்தரேஸ்வரத்தின் பெருமை மிக்க வரலாறு, சிறப்பு என்பன இலங்கையின் வரலாற்றில் இந்து சமயத்தின் பரம்பல், தொன்மை, மேன்மை, இருப்பு என்பவற்றையும் உறுதிப்படுத்தி உலகிற்கும் வெளிப்படுத்துகின்றது.ஆ - த. மனோகரன்

Page 29
V nereVer yOU turn, Whether you are ooking for a communications Syste | office interiors, copiers, scanners, lig hances are we've got what you are looking for. W. ჯ8ჯვაწვდ8;$ა:::::::::::: Metropolitan has solutions f
No 85, Braybrooke Place
WWWe
AizstrA acer alvarion Canon 'skદિક ટ્ટિકૃદ્ધિ દક્રિટ્ટોફરક భభణిణళ్లభభ్యునళ్లఖభ్య
jleoh riseon 狄 සූ රැුඳී සූ Controis
ఓబ్లః బ్లభభ##జx
^ಜ್ಡ =
O THORN
奪リ
(Cface
fechhologies
PRÄAFROAXK
 
 

We've got Solutio sm, a laptop, networking support, Smart card technology, hting, air-conditioning or even a Camera, hatever your business, whatever your workplace needs,
On the leaders of each industry. }};S
CLIPSA اليا O
évey ráját, egy herré
Novel - Ra: || metropolitan
aYork Powered by the best
SDS LLLDD DDD gDL LDGGGGGSLSGGEES

Page 30
நாதஸ்வி
(6ტ)(6ტბT (6 T
வைத்திய என்றதும்
நாதஸ்வரம் என் மனதில் இடம் 1 உச்சமான இன் அணுக்களிலும் 6 தியாக மிளிர்ந்த அவர்களும் நா திசையெல்லாம்
ஒரு காலத்தில் பொன்னுஸ்வாமி விட்டதென ரசி காற்றில் மிதந்து தட்டியெழுப்பி
காற்றிசைக் கருவி
கற்பனையை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ரத்தினம் பிள்ளை
ன்றதும் பாலசந்தரும், வயலின் என்றதும் குன்னக்குடி நாதனும், புல்லாங்குழல் என்றதும் ரமணியும், கோகிலகானம் எம்.எஸ். சுப்புலெட்சுமியும் மனதில் தோன்றுவதுபோலவே 1றதும் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களே பிடிப்பார். அத்தனை தூரம் அவர் கையாண்ட நாதஸ்வரத்தின் ப லயிப்புக்கள் அவரது இரத்தோட்டத்தின் ஒவ்வொரு வியாபித்து இருந்தன. கம்பன் எப்படிக் கவிதையில் சக்கரவர்த் ாரோ அதேபோல் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை தஸ்வர வாசிப்பிலே தன்னிகரில்லாச் சக்கரவர்த்தியாகத் புகழ் பொலிய விளங்கினார். ஸ் நாதஸ்வர இசையில் மேதாவிலாசத்துடன் விளங்கிய மதுரை ப்ெபிள்ளை மறைந்ததும் இவ்விசையுலகே இருள் மண்டி கர்கள் ஏங்கி அலமலந்திருந்த வேளையிலே எங்கிருந்தோ வந்த இம்மேதாவியின் நாதஸ்வர இசை மக்களை எல்லாம் புதுத் தென்பைக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்ததான நாதஸ்வரத்தில் தனது பயும் கவித்துவத்தையும் இசையின் மென்மையான நுட்பங்களையும் அளவாகக் குழைத்து இனிய கானத்தில் மக்களை திளைக்க வைப்பதில் பெரும் மேதைமைமிக்க இவ்வித்துவானைப் பெற்ற பெற்றோர் உண்மையில் வஞ்செய்தவர்களென்றே துணியலாம். திருவாவடுதுறையில் பரம்பரை பரம்பரையாகச் கீதத்தையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த குப்புசுவாமிப் பிள்ளை என்பவரே அவரது தந்தையார். அவரும் ஒரு நாதஸ்வர வித்துவானாகவே வாழ்ந்தார். இளமைக் காலத்திலே சிறுவன் ராஜரத்தினம் பிள்ளை கர்நாடக இசையை வாய்ப்பாட்டாகவே பயின்றார். இனிமையான குரல் வளமும் இயல்பாகவே ராகம் கல்பனாஸ்வரம், கமகங்கள், பிர்க்காக்கள் என்பன அலை அலையாக வந்து அவரது தொனியிலும் இசையிலும் மெருகூட்டிக் குதித்தோடி வருவதைப் பார்த்த இவரது ஆசிரியர்களே பிரமித்தனர்.
ஆரம்பத்தில் இவர் திருக்கோடிக்காவல் பிடில் மேதை பூரீ கிருஷ்ணையரிடமே வாய்ப்பாட்டைக் கற்றார். பின் பூரீ மார்க் கண்டம் பிள்ளை என்பவரிடமே நாதஸ்வரம் கற்கத் தொடங்கினார். பிரபல நாதஸ்வர வித்துவான் திருமருகல் பூரீ நடேசபிள்ளை, ராஜரத்தினம் பிள்ளையின் தாய்மாமனாவார். எனவே தாய்மாமனிடமும் செல்லமும் செருக்குமாக வளர்ந்தாலும் உறவு முறையிலான உரிமைகளையும் எடுத்துக் கொண்டது போல நாதஸ்வரத் தேனையும் பற்றிப் பருகிக் கொண்டார். மாமனார் திருவாவடுதுறை ஆதீனத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையால் சிறுவன் இராசரத்தினமும் மாமனோடு ஆதீனத்தில் இடம்பெறும் இசை விழாக்கள், கச்சேரிகள் யாவற்றையும் நன்கு அனுபவித்துக் கேட்டுத் தன் கேள்வி ஞானத்தையும் நன்கு விரிவுபடுத்திக்

Page 31
கொண்டார். நாதஸ்வரத்திலும் கர்நாடக இசையிலும் மாத திறமையும் வாய்ந்தவராக இல்லாமல் ‘ஷெனாய் வாத்திய பிடில் மிருதங்க வாத்தியங்களோடு இணைந்து கச்சேரி செய்வ ஒசையில் புதிய புதிய பாணிகளை உருவாக்கி மக்களைக் கவர அளவிறந்த ஆர்வமும் தேடலும் வல்லமையும் மிக்கவராகே இசையோடு தொடர்புடைய சகல விஷயங்களிலும் மேதை இராஜரத்தினம் பிள்ளை அவர்கள் சாகித்திய கர்த்தாவாகவும் கலை வேந்தனாவார். கவர்ச்சியாகவும் கம்பீரமாகவும் ( நிகழ்த்தக்கூடிய மேதைமைமிக்க பிள்ளை அவர்கள் நாதஸ்வ 5ாதலால் வாய்ப்பட்டு இசையைத் தள்ளி வைத்துவிட்டு நா முழுக்கவனத்தையும் மையப்படுத்திக் கொண்டார். 5ாதஸ்வரத்துடன் வாழ்வைக் கழித்த பிள்ளையவர்கள் தன் இறு கூட நாதஸ்வரத்தைக் கையிலேந்தி இசையை மீட்டு வாசி இல்லை. அத்துடன் இறை உபாசனைபோல நாதஸ்வர இ முற்றுமுழுதாக மூழ்கடித்து ஒன்றிக் கொண்டமையே அவ6 ஒரு சக்கரவர்த்தியாக மேன்மைப் படுத்தியுள்ளது எனலாம்.
அக்காலத்திலே நாதஸ்வரத்தில் மாபெரும் மேதாவிகள் வித்துவான்கள் கூறைநாடு பூரீ நடேசபிள்ளை, பிள்ை 5ாய்மாமனாகிய திரு மருகல் பூரீ நடேச பிள்ளை செம்பொன் ாமசாமி பிள்ளை எனப் பல மேதைகள் பெரும் 1 விளங்கினாலும் அவர்கள் மத்தியில் அதி மேதைமை வல்லுனராகப் பிள்ளையவர்களின் கலை ஆற்றல் பெருச் நாதஸ்வரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ை ர்ேத்தியை எவராலுமே தாண்டமுடியவில்லை.
கல்யாணி, காம்போதி கரகரப்பிரியா, சண்முகப்பிரியா, பவு பைரவி, நடபைரவி, வாரளி, சுபபந்துவராளி, நவரோஸ், பெ போன்ற ராகங்களையெல்லாம் பல வித்துவான்கள் தம புெணத்துவத்துக்குமேற்ப வெளிப்படுத்தியிருந்தாலும் நாதஸ் நிருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளையவர்கள் கையான விதமோ இவற்றுக்கு மென்மேலும் மெருகேற்றுவது பு கேட்போரின் சுவையைப் பலமடங்கு பெருகச் செய்து அந்த ஊற்றோடு கட்டி வைக்கும் தன்மையானது. எல்லா இராக நாதஸ்வர ஒசையில் நர்த்தனமிடும் என்றாலும் அவரது ெ இராகத்திற்கு தனி ஒரு மவுசு உண்டென்பதை யாருமே ட ஆகையால் தான் 'திருவிழாவின் தோடி என்றொரு சிறப்பும் இ டண்டு. தனித்துவமாகக் கொடிநாட்டிய அப்புகழுக்கேற்ப பிலி அந்த இராகத்திற்கு உயிரூட்டி உணர்வூட்டி உருவம் ெ முத்திரை பதித்து மெருகேற்றியுள்ளார்.
பிள்ளையவர்கள் தொட்ட கலையெல்லாமே பொன் மிளிர்ந்தன. இராக ஆலாபனைகளின் போதெல்லாம் மற்றையோர் வெகு சாதாரணம், இலகு எனத் தள்ளி வைத்த பகுதிகளையெல்லாம் அள்ளி எடுத்து அவற்றிற்கும் உயிரூட்டி மெருகேற்றி கேட்போர் அற்புதமென வியக்கும் வகையில் துல்லியமான ாதத்தில் நாதஸ்வர இசையைப் பொழிந்து தள்ளும் ஆரோக்கியமான துணிச்சல் அவரது புகழை எங்கும்
வியாபிக்கச் செய்தது.
மகாவித்துவான் பிடில் கிருஷ்ணையரிடம் கற்றுக்
கொண்டிருந்த வேளையிலே பியாகடை வர்ணத்தைப்
 
 

ந்திரம் தேர்ச்சியும் பத்திலும் வீணை, பதிலும், நாதஸ்வர ப்பண்ணுவதிலும் வ வலம் வந்தார். 5யாகவே திகழ்ந்த ) விளங்கிய பல் இசைக்கச்சேரியை ரத்தின் மேலுள்ள தஸ்வரத்திலேயே இரவு பகலாக றுதிவரை ஒருநாள் கிக்காத நாட்களே சையுள் தன்னை
ரை இத்துறையில்
ாாக புகழ் பூத்த )ளயவர்களுடைய ானார் கோயில் பூரீ பிரபலம் பெற்று
வாய்ந்த இசை $கெடுத்தமையால் ளை என்ற பெரும்
பப்பிரியா, ஆனந்த ஹாக், வாசஸ்பதி து திறமைக்கும் வரச் சக்கரவர்த்தி ண்டு அனுபவித்த துமை சேர்ப்பது இசையின் இனிய ங்களுமே அவரது வாசிப்பில் தோடி மறுக்க முடியாது. இந்த இராகத்திற்கு ாளை அவர்களும் காடுத்துச் சிறப்பு

Page 32
பிள்ளை பாடுகி
கமகங்கள் கவ வித்துவானுக்கு வில்லினால் பிள் இரத்தம் பீரிட்டு மொட்டையாக லாவகமாக இை குருவின் கோபத் வாழ்க்கைக்குப்
பல்துறைத் தி பணியாத வணங் அத்தகைய போ: அன்புக்கும் வழிக்கொணர மு புதிய புதிய முறைகளைப் நாதஸ்வரத்துக்கு வந்தாலும் பிள்டு சுருதியாக வைக் சுருதி நாதஸ்வ காலகதியில் இவ நீண்ட மணித் சேரிகள் ஒவ்6ெ அபரிமிதமான ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

]றார். மகாவித்துவான் பிடில் வாசிக்கிறார். இவர் பாடிய னம் போதாமையால் சொர சொரப்பாகவே விழவும் கோபம் தாங்க முடியவில்லை. கையிலிருந்த பிடியில் ளையவர்களின் மூக்கில் ஒரு குத்துக் குத்தினார். மூக்கிலிருந்து வந்தது. அன்றைய அந்த நிகழ்வின் பின் என்றுமே அவர் சுரம் பாடுவதோ நாதஸ்வரத்தில் வாசிப்பதோ இன்றி மிக சத்துத் தனது இசைப்பயணம் சோபிக்கச் செய்ததோடு தன் தையும் ஆசிர்வாதமாக ஏற்று இவற்றையெல்லாம் தன் இசை பசளையாக ஆக்கிக்கொண்டார். திறமையும் துணிச்சலும் மிக்கோரிடம் எதற்குமே அஞ்சாத, கா முடித்தன்மையும் மிகுந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். க்கில் பிள்ளையவர்களும், சங்கீதத்துக்கும் இனிய நட்பிக்கும் கட்டுப்படுவாரேயன்றி வேறெவ் வகையிலும் ஆளை OLQ-U IП.5.
துறைகளில் வளர்ச்சி நோக்கிய போக்கில் சில புதிய புகுத்துவதில் வல்லமை மிக்க இவர் காலங்காலமாக சுருதியாக 'ஒத்து' என்பதையே பலரும் பயன்படுத்தி ளை அவர்களே கச்சேரிகளில் தம்புரா சுருதியைத் தமக்கும் கும் முறையை அறிமுகப்படுத்தினார். பலர் எப்படித் தம்புரா ரத்துக்கு ஒத்துவரும் என்ற சர்ச்சையைக் கிளறினாலும் ரது முறையைப் பலரும் ஏற்றுக் கொண்டனர். - தியாலங்கள் தொடர்ந்து நடைபெறும் இவரது நாதஸ்வரக் கச் வான்றையும் புதுப் புதுப் பாணியில் நன்கு திட்டமிட்டு டிமுறைகளில் அவற்றை ஒழுங்கு செய்து நடத்துவார். எடுத்த ப்பிலேயே இராகத்தின் ஜீவநாடியைக் குறிப்பாகத் தொட்டு டு அதன் ஆரோக அவரோகண எல்லைகளை எடுத்துக்காட்டி ஸ்தாயி வாரியாகத் துரிதமான பிருகாக்களைப் பொழிந்து ளூவார். பிரமிக்கத் தக்கவகையில் கமகங்களெல்லாம் ாகத்தின் பாவத்தைக் கோலமிட்டுக் காட்டும். இசை பயிலும் மாணவர்களுக்கும் இசைப் பயிற்சி றுவோருக்கும் இசையின் அதி நுட்பமான நெளிவு வுகளையும் ஜீவகளை மிக்க ஸ்வரஸ்தானங்களையும் விளங்கிக் "ள்வதற்கு நாதஸ்வரம் ஒரு சிறந்த ஆசான் எனினும் பிள்ளை ர்கள் போன்ற மாமேதாவிலாசம் கொண்டோரிடமிருந்து ற்றையெல்லாம் தெளிவு பட விளங்கிக் கொள்வதற்கே ஒரு நம் அதிர்ஷ்டமும் கொடுப்பனவும் வேண்டும். இவருக்கு மனைவிமார் ஐவர். மூத்த மனைவி பெயரே தாம்பாள் இவர் மாத்திரமே கணவருடன் எங்கும் பயணம் வார். இவருடைய ஐந்தாவது மனைவியாரும் நாதஸ்வரத்தில் கு பயிற்சி பெற்றவராக விளங்கினார். பிள்ளையவர்களின் புகழ் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகளா நிலையில் எங்குமே பரவியிருந்தது. தன் சொந்த நாட்டில் டுமல்ல சிங்கப்பூர், பினாங்கு, இலங்கை, டோக்கியோ என்ற தேசங்களிலெல்லாம் சிறப்புற நிலை நாட்டி சாதனையும் டத்தார். ஒரு தடவை மலேயா சென்று திரும்பிய வேளை சென்னை துவச் சபையில் பிள்ளையின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. ளமான சனக்கூட்டம் படேகுலாம் அலிகானின் கச்சேரி முடிந்து த்ததாகவே பிள்ளையினுடைய நேரம் இரவு 9 மணியானதும்

Page 33
கூட்டம் சாப்பிடப் போகக் கலைந்தது. 9.30 க்கு இவர் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம். காரணம் வானொலி நிகழ்ச்சி அஞ்சல் செய்கின்றது. நேரமாகவும் கச்சேரி ஆரம்பமாக வே6 சபையிலே செட்டியாரொருவரும் பால சரஸ்வதி அம்மாவும் இருந்தனர். கலைஞர் ஒருவர் இருந்தால் போதுமே என என கொண்டு கச்சேரியைத் தொடங்கினார் சக்கரவர்த்தி.
கச்சேரி தொடங்கவும் ஒரே சனக்கூட்டம் சேர்ந்தது. வரிசையில் செம்மங்குடி பூரீநிவாசஐயர், அரியக்குடி ரா ஐயங்கார், முடிகொண்டான் வெங்கட்ராமையர், ஆ சகோதரர்கள், திருவாலங்காடு சுந்தரேச ஜயர், வெங்கட்ராமையர், திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை, காட்டு மணிஜயர், பழனி சுப்பிரமணியபிள்ளை, அண்ணாளி பாகவதர் என ஒரே வித்துவசபை அத்தனை பெரும் வித்துவான்களெல்லாருமே கோஷ்டி கோஷ்டியாகப் படைெ வந்து மண்டபத்தை நிறைத்துக் கொண்டனர். கச்சேரியும் க பேகடை, வராளி என ஒவ்வொன்றின் சுவையும் ஒன்றைவிட மேன்மையுற வெகு பிரமாதமாக 5 , 6 மணித்தியாலங்கள் நாதஸ்வரப் பிரம்மம்தான். இப்பூவுலகிலா இப்படி ஓர் இ இத்தகைய ஒரு சபையும் எனப் பார்த்தோர் பரவசமுற்றனர்.
பிறவிக் கலைஞரான பிள்ளையவர்கள் நாடகங்கள், 8 போன்றவற்றிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எள் கிட்டப்பாவின் உற்ற நண்பரான இவர் "காளமேகம்' என்ற ப நடித்து நற்புகழ் பெற்றவர். தமிழில் சில கீர்த்தனைகளைத் இயற்றியும் அவற்றைத் தன் கச்சேரிகளில் வாசித்துப் பாராட்டு பெற்றுள்ளார்.
இவரது தமக்கையாரின் மகன் கக்காயி நடராஜசுந்த காருகுறிச்சி அருணாசலம் பிள்ளையும் இவருடைய மிக முக்கி இசையின் ஆர்வமிகுதியால் நோயுற்ற போதெல்லாம் : நாதஸ்வரத்தையே வாசித்தபடி பொழுது கழிப்பார். சுடை போது தான் தனக்கும் தனது நாதஸ்வரத்துக்கும் ஒய்வு கி கூறியபடியே காலம் கடத்துவார்.
அவர் கூற்றுபடியே 1956 இல் அவர் மரணித்தார். மரண ஊ வழிமுழுவதும் அவருடைய நாதஸ்வர இசையே ஒலித் விருப்பப்படியே இந்நிகழ்வு அமைந்தது.
1954 இல் இந்திய ஜனாதிபதியின் கெளரவத்திற்கு பாத்திரமான இம்மாமேதை திருவாங்கூர், மைசூர் ஆ பெருமைக்குரிய வித்துவானாகவும் திருப்பனந்தாள், திருவாவ ஆகிய ஆதீனங்களினதும் செல்வாக்கு மிக்கவராகவும் வாழ்ந் குடும்பத்தினருக்கும் தான் பிறந்த பூமிக்கும் இசை மூல வழிகாட்டிச் சென்றுள்ளார்.
கடந்த 27-08-11 சனியன்று சக்கரவர்த்தியின் 112 ஆவ இதனையொட்டிச் சென்னையிலே அவர் பெயரில் ஒரு கலை வைக்கப்பட்டுள்ளது.
- பத்ம

கச்சேரி
கெளை
ண்டும். தான்
ண்ணிக்
முன்
LDSÖ)/g? லத்தூர்
LJT TIL ITT பாலக் ஸ்வாமி பெரும் படுத்து
T60TL IT, மற்றது T ஒரே
சையும்
FAGOfOL DIT
ს. 6%). டத்தில்
தாமே கெளும்
ரம் பிள்ளையும் கிய சீடர்களாவர்.
ஒய்வெடுக்காமல், லக்குப் போகும்
ைெடக்கும் எனக்
ர்வலத்தின் போது தது. அவர் மன
நம் விருதுக்கும் ஸ்தானங்களிலும் டுதுறை தர்மபுரம் து தனக்கும், தன் 2ம் மேன்மையுற
து பிறந்த நாள். அரங்கம் திறந்து
மா சோமகாந்தன்

Page 34
அட்டைப்பட விளக்கம் : மதுரை பாகனேரியிலிருந்து இலங்கை வந்து தங்கியிருந்த கிருஷ்ணபிள்ளை என்பவர் முன்னேஸ்வரத்தின் பெருமைகளை உணர்ந்து தானம் செய்த பாவை விளக்கு இது. இதுபோல் இன்னொரு பாவை விளக்கும் காணப்படுகின்றது. இவை ஜோடியானவை இவற்றின் உயரம் 23 அங்குலமாகும். இவை பிந்திய நாயக்கர் 95 TGoNU) கலைமரபின் அம்சங்களை கொண்டுள்ளன. பாவையின் வடிவம் வட்ட முத்தள
பீடத்தின் மேல் அமைந்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

முன்னேஸ்வரத்தில் காணப்படும்
தமிழ்ச் சாசனம் எழுதிய
ܬܬܐ
அரும்பொருட்கள்
- கலாநிதி சி. பத்மநாதன் தகைசார் பேராசிரியர், வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
லங்கையிலுள்ள தமிழ்ச் சாசனங்களைப் பற்றிய தேடுதல் முயற்சிகளின் பயனாகச் சில கோயில்களிற்
சுருக்கமான தொடர்கள் எழுதிய உலோகப் பொருட்கள் இருப்பதனை அறிய முடிந்தது. அத்தகைய தொல்பொருட் சின்னங்கள் பழம் பதியான முன்னேஸ்வரத்தில் உள்ளன.
இலங்கையில் புராதனமான சிவன் கோயில்களில் ஒன்றான முன்னேஸ்வரம் பல சிறப்புகளைக் கொண்டது. அது சைவர்கள் மிகுந்த பக்தியோடு யாத்திரை போகின்ற தலம். இந்நாட்களில் நேர்த்திக் கடன்களைத் தீர்ப்பதற்கும் பெரும் தொகையான சைவர்கள் அங்கு போகின்றனர். முன்னேஸ்வரத்திலே பாவ விமோசனங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது சைவர்கள் பலரின் நம்பிக்கையாகும். அரக்கர் கோனாகிய இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக இராமபிரான் மாயவனாற்றங் கரையிலே லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு ஆற்றினார் என்பது கோயிலின் உற்பத்தி பற்றிய ஐதீகமாகும். இம்மையில் ஏற்படும் இன்னல்களைப் போக்கி, நல்வாழ்வு பெறுவதற்கும், மறுமையில் நற்கதி
அடைவதற்கும், அடியார்கள் ஆசார சீலங்களோடு, முன்னேஸ்வரத்தில் இறைவனை வேண்டி வழிபடுகின்றனர்.
பாடல் பெற்ற தலங்களான திருக்கேதீஸ்வரம்,
திருக்கோணேஸ்வரம் ஆகியவற்றில் ஆலயங்கள் இல்லாது ஒழிந்துவிட்ட நெடுங்காலப் பகுதியிலும் முன்னேஸ்வரம் சிறப்புற்று விளங்கியமை குறிப்பிடற்குரியது. அதன் காரணமாக அது சைவர்களின் நோக்கில் ஐரோப்பியரின் ஆட்சி ஏற்பட்டிருந்த காலத்திலே, அவர்களின் முதன்மைத் தலமாகி விட்டது. வேதாகம நெறி விற்பன்னராகவும் ஆசார சீலராகவும் விளங்கிய அந்தணர் பலர் காலாகாலமாக ஆராதனைகளைச் சிறப்பாகப் புரிந்து சிவனடியார்களின் அன்பினையும் அபிமானத்தையும் பெற்றிருந்தனர். கோட்டை இராசதானி மன்னர்களும் அவர்களைக் கெளரவித்துப் பட்டம் பதவிகளை வழங்கியதோடு கோயிலுக்கும், அந்தணருக்கும் மானியங்களை வழங்கினர்.4
இலங்கையிலுள்ள சைவர்களிடையே பிராந்திய வேறுபாடுகளையும் சமூக வேறுபாடுகளையும் கடந்த நிலையில் முன்னேஸ்வரம் உணர்ச்சி பூர்வமான ஆதரவினையும் அபிமானத்தையும் பெற்றுள்ளது. அங்கு

Page 35
இலங்கைத் தமிழரான சைவரும் இந்திய வம்சாவழித் தமிழரான சைவரும் ஒன்று கூடி, சிவ தர்மங்கள் புரிந்து, வழிபாடு செய்யும் வழக்கம் கடந்த இருநூறு வருடங்களாக நிலைபெறுகின்றது.
இலங்கையிலுள்ள சைவர் அனைவரதும் தேசத்துக் கோயிலாக அதனைப் பிரகடனஞ் செய்வது காலத்தின் தேவையாகும். கோயிலின் அமைவிடமும் வரலாறும் வழமைகளும் அதற்கு அடிப்படையானவை. கோயில்
வரலாறு பற்றிய தொல்பொருட் சின்னங்கள் முன்னேஸ்வரத்திற் குறிப்பிடத்தக்க அளவிற் காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள வேறெந்தப்
புராதனமான சிவாலயத்திலும் அவற்றைப் போன்ற தொல்பொருட் சின்னங்கள் காணப்படவில்லை. அவை காட்சிக்கு வைக்கப்பட வேண்டியவை; பாதுகாப்பிற்கு உரியவை. அவற்றைப் பற்றிய புரிந்துணர்வு சைவர்களிடையிலும் அரசாங்க அதிகாரிகள் மட்டத்திலும் அவசியமானவை. சைவ சமயத்தை ஒரு பாடமாகப் படிக்கும் கல்லூரி மாணவரும் பல்கலைக்கழக மாணவரும் சமயப் போதனாசிரியரும் நேரிலே பார்த்து அவதானிக்க வேண்டிய அரும்பொருள்கள் பல அங்குள்ளன.
முன்னேஸ்வரத்திலுள்ள அரும்பொருள்கள் ஒரு நிலைப்படாது GETuគាល់គ្នា L JG6) பாகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மூலஸ்தானம் ஓர் அரிய தொல்பொருட் சின்னம். அது 15 ஆம் நூற்றாண்டுக்குரிய விஜயநகர கலைப்பாணியில் அமைந்தது. அது பழைய கட்டடத்தின் எஞ்சியுள்ள பகுதி. அதன் மேலமைந்த விமானத்தையும் மண்டபங்கள், கோபுரங்கள், சுற்றுப் பிரகாரங்கள் ஆகியவற்றையும் போர்த்துக்கேயப் படைகள் இடித்து விட்டனர். மூலஸ்தானத்தின் அதிஷ்டானப் பகுதியில் ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்து (1412 - 1467)ச் சாசனம் காணப்படுகின்றது. அது முன்னேஸ்வர ஆலயம் பற்றிக் கிடைக்கின்ற வரலாற்று ஆதாரங்களில் முதன்மையானது.9
போர்த்துக்கேயர் காலத்துக்கு முற்பட்ட சில உலோகப் படிமங்களும் வேறு அரும்பொருட்களும் அங்குள்ளன." அவற்றை விட அங்கு தாபனமாகியுள்ள வேறு பல படிமங்களும் சிற்பங்களும் ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
கண்டியில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னனாகிய கீர்த்தி பூரீ ராஜசிங்கனது காலத்தில் முன்னேஸ்வர ஆலயம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலத்து திருப்பணி வேலைகளாற் கட்டுமானங்கள் விசாலமாகி, ஆலயம் புதுப் பொலிவுடன் விளங்குகின்றது.
முன்னேஸ்வரத்திலுள்ள அரும் பொருட்களிலும் விளக்குகள், கற்பூரத் தட்டுகள், தூபக்கால்கள் போன்ற உலோகப் பொருட்கள் தனியொரு வகைக்குரியவை. சிலவற்றிலே சுருக்கமான
வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை நன்கொடை
 
 


Page 36

வழங்கியோரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. முற்காலங்களில் நன்கொடை பற்றிய விபரங்களைச் சிலர் சாசனங்களில் எழுதுவது வழமை. ஒரு காலகட்டத்தில் நன் கொடையாக வழங்கப்பெற்ற உலோகப் பொருட்களிலும் தானம் பற்றிய விபரங்களை எழுதத் தொடங்கினார்கள். இலங்கையிலும் அந்த வழமை ஏற்பட்டிருந்தமை அண்மைக் காலத்துத் தேடல்கள் மூலம் தெளிவாகியுள்ளது. சாசனம் எழுதிய உலோகப் பொருட்களிற் கூடுதலானவை முன்னேஸ்வரத்தில் உள்ளன.
எழுத்துப் பொறித்த உலோகப் பொருட்கள் முன்னேஸ்வரத்தில் இருவேறு இடங்களிற் காணப்படுகின்றன. முதலாவது தொகுதியில் உள்ளவை பெரிய கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தொகுதியில் அடங்கியவை மடத்துக் கோயில் என்னுஞ் சிறிய கோயிலிற் காணப்படுகின்றன. பெரிய கோயிலின் உள் வீதியிற் சுவரின் ஒரமாக நிறுத்தப்பட்டிருக்கும் மஞ்சம் ஒன்றிலே சாசனம் எழுதிய பித்தளைத் தகடு பதிக்கப்பட்டுள்ளது. எழுத்துப் பொறித்த மற்றைய உலோகப் பொருட்கள் யாவும் களஞ்சிய அறையிலே
வைக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலம் வரை இவற்றின் சிறப்புகள் பற்றி அங்குள்ள அந்தணர்களைத் தவிர வேறெவரும் அறிந்திருக்கவில்லை. வருடாந்த திருவிழாக் காலத்திலும் வேறு சிறப்பு நாட்களிலும் அப் பொருட்கள் பாவனைக்காக வெளியே எடுத்து வரப்படும்.
சாசனம் எழுதிய விளக்குகள் வேறு உலோக பொருட்கள் என்பன பற்றிய விபரங்களை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும்.
குத்துவிளக்கு - 1
உயரம் 5 10 ’ (180 செ.மீ),
தகளியின் விட்டம் - 21
தகளியின் சுற்றளவு - 66’ (165 செ.மீ)
தகளியில் எழுதப்பட்டுள்ள சாசனம் :
உ 1899 விகாரி வநில ஆவணி மத உ திகதி கொளும்பு தட்டாரத் தெருவு. தா. கதிரவேலு பண்டாரம் யாசகம் செய்து முன்னேஸ்வரம் வடிவளகி அம்மனுக்கு உபயம். கூ 120
குத்து விளக்கு -2
இதன் அளவுப் பிரமாணங்களும் வடிவமைப்பும் முதலாவது விளக்கில் உள்ளவற்றுக்கு நிகரானவை. இதில் மேல் வரும் வசனம் தகளியில் எழுதப்பட்டுள்ளது.
1899 விகாரி வூல ஆவணி மி- 1. தி.வெள்ளிக்கிழமை கொளும்பு தட்டாரத் தெருவு. தா. கதிரவேலு பண்டாரம். யாசகம் செய்து முன்னேஸ்பரம் வடிவளகி அம்மனுக்கு உபயம் நு 120
இரண்டு விளக்குகளையும் கோவிலுக்கு நன் கொடையாக வழங்கியவர் கதிரவேலு பண்டாரம். அவர் கொழும்பிலுள்ள தட்டார் தெருவில் வாழ்ந்தவர். யாசகம் பண்ணிய பணங் கொண்டு அவர் விளக்குகளைச்

Page 37
செய்வித்து, நன்கொடையாக அவற்றைக் கோயிலுக்கு வழங்கியதால் அவர் கொடுத்த
தானம் நேர்த்திக்கடன் தொடர்பானதாகும். விளக்குகள் முன்னை நாதருக்கன்றி \ வடிவழகி அம்மனுக்கு வழங்கப்பெற்றமை 戮 குறிப்பிடற்குரியது. இரண்டாவது விளக்கிலுள்ள சாசனத்தில் வெள்ளிக்கிழமை என்பது மேலதிகமாகச் ー சொல்லப்படுகின்றது. இந்த விளக்குகள் கி.பி. 1899 ஆம் ஆண்டு விகாரி வருஷம் ஆவணி மாதம் மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன. விளக்கு ஒவ்வொன்றும் 120 பலம் நிறை கொண்டது.
பாவை விளக்குகள் சாசனம் எழுதிய பாவை விளக்குகள் சோடியானவை அவை 23 அங்குலம் உயரங் கொண்டவை. ஒவ்வொரு விளக்கிலும் தகழியில் மேல்வருமாறு எழுதப்பட்டுள்ளது
உ முனிஸ்பரம் வடிவளகி அம்மனுக்கு பாகனேரி நவ. அ. கிஷ்ட்ன பிள்ளை உபையம். பாகநேரி என்னும் ஊரைச் சேர்ந்த நவ. அ. கிருஷ்ணபிள்ளை என்பவர் முன்னேஸ்வரத்து வடிவழகி அம்மனுக்கு உபயமாகப் பாவை வினக்குகளை வழங்கினார் என்ற விபரம் இதிற் பதிவாகியுள்ளது. பாகநேரிக் கூற்றம் என்பது பாண்டி நாட்டு நிலப் பிரிவுகளில் ஒன்று. அது மதுரைக்கு அண்மையில் இருந்தது. பாவை விளக்குகளைத் தானம் பண்ணிய கிருஷ்ணபிள்ளை பாகநேரியிலிருந்து வந்து இலங்கையிலே தங்கியிருந்தவர். அத்தகைய ஒருவர் முன்னேஸ்வரத்தின் பெருமைகளைக் கேட்டு அதன் மேல் அபிமானங் கொண்டிருந்தமை குறிப்பிடற்குரியது.
பாவை விளக்குகளில் எழுதிய சாசனங்களில் நன்கொடை வழங்கிய காலம் பற்றிய விபரங்கள் எழுதப்படவில்லை. எனவே, அந்த விளக்குகள் வழங்கப்பட்ட காலத்தை நிச்சயிப்பது இலகுவானதன்று.
வரிவடிவங்களின் அடிப்படையிலும் பாவைகளின்
வடிவமைப்பினைக் கொண்டும் அதனை ஒருவாறு
நிச்சயிக்கலாம். ஆனால், அந்த முயற்சியில் ஏற்படக் é5f6).L Q-ULI கட்டுப்பாடுகளையுங் அவதானிக்க வேண்டும். பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளிலே தமிழ் வரிவடிவங்களின் வளர்ச்சி முழுமையாகிவிட்டது. இவ் விளக்குகளிற் காணப்படும் எழுத்துகள் அழகாகவும் சீராகவும் அமைந்துள்ளன. அவை அனைத்தும் ஒரே அளவினதாகக் காணப்படுகின்றன. அவற்றின் வளர்ச்சி நிலை கொழும்பிலுள்ள ஆவணக் காப்பகத்திற் காணப்படும் 18 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் வெளியிட்ட தமிழ்ப் பிரசுரங்களில் அமைந்த எழுத்துகளைக் காட்டிலும் ஓரளவு முன்னேற்றமானவை. அதனால் இச்சாசனங்கள் 19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் பாகநேரிக் கிருஷ்ணபிள்ளை அந்நூற்றாண்டின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 38
ឆ្នាអ្វីឆី 38
பிற்பகுதியில் விளக்குகளைக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்தார் என்றும் கொள்வது பொருத்தமானது.
முன்னேஸ்வரத்திலுள்ள L I I TG6Ċ5) (6) I விளக்குகளின் மற்றொரு பிரதான அம்சம் பாவை வடிவங்களின் வடிவமைப்பாகும். உலோக வார்ப்பான பாவை விளக்குகளை உற்பத்தி செய்யும் மரபு யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலம் வரை நிலவியது. அந்த மரபும் நெடுங் காலமாக நிலவிவந்த ஒன்றாகலாம்.
முற்காலங்களில் உலோக வார்ப்புச் சாலைகள் முன்னேஸ்வரத்தில் இருந்திருக்கக் கூடும். கோயிற் பணிகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளிற் பலவிதமான சேவைகளைப் புரிகின்றவர்களின் குடியிருப்புகள் பற்றியும் கம்மாளர் குடிகளைப் பற்றியும் சொல்லப்படுகின்றது. முன்னேஸ்வரத்தில் விழாக் காலங்களிற் பெருந்தொகையான விளக்குகளையும் பாத்திரங்களையும் பயன்படுத்துவது வழக்கம். அவற்றுட் பெரும்பாலானவை கோயிலுக்குப் பந்தமான குடிகளைச் சேர்ந்த விற்பன்னர்களால் உற்பத்தி செய்யப்பட்டன என்று கருதலாம். எனினும் இலங்கையிலுள்ள சைவக் கோயில்களை ஆதாரமாகக் கொண்டு வளர்ச்சிபெற்ற உலோக வார்ப்புக் கலையிலே தென்னிந்தியச் செல்வாக்கு மிகுந்தளவில் ஏற்படுவது இயல்பானது. அது பிந்திய நாயக்கர் காலக் கலை மரபின் அம்சங்களைக் கொண்டிருக்கும்.
சமபங்க நிலையிலுள்ள பாவையின் வடிவம்
ஒவ்வொன்றும் முத்தள பீடத்தின் மேல் அமைந்துள்ளது.
தளம் ஒவ்வொன்றும் வட்டவடிவமானது. மேலுள்ள தளம்
ஒவ்வொன்றும் அதன் கீழிருப்தைக் காட்டிலுஞ் சிறியது. ஒடுக்கமானது. பாவைகளின் அங்கலட்சணங்களிலே
 

தென்னிந்திய உலோக படிமங்களிலுள்ள வனப்பைக் காண முடியவில்லை. உடலுறுப்புகள் பொருத்தமான அளவுப் பிரமாணங்களில் அமையவில்லை. உதரமும் இடையும் கால்களும் மெலிந்த தோற்றங் கொண்டவை.
உடலின் மேற்பாகம் அளவுக்கு மேலாக விசாலமானதாகி விட்டது. கைகளும் அவற்றின் விரல்களும் தடித்த கோலத்தில் அமைந்துள்ளன. தோள் மட்டத்தில் உடல் மிகுதியாக அகன்றுள்ளது. கைகள் இரண்டும் வழமை போல முழங்கை மட்டத்தில் மடித்து முன் புறமாக நீட்டிய நிலையில் விளக்கினை ஏந்தியுள்ளன. தனங்கள் விகாரமடையாத கோலத்தில் அமைந்திருப்பது படிமங்கள் இரண்டினதும் ஒரு சிறப்பம்சமாகும். முகம் அளவுக்கு மேற் பெரிதாகிவிட்டதால் அழகியற் கோட்பாடுகளுக்கு அமைவாகப் பாவையின் தோற்றம் விளங்கவில்லை. கண்களில் உயிரோட்டமான கோலம் தெரியவில்லை. பாவைகளின் அணி அலங்காரங்கள் UFLD5ITG) வழமைக்கேற்ப அமைந்துள்ளன.
கற்பூர தீபத்தட்டு, தாம்பாளம் போன்ற பல உருப்படிகளில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள் அடையாளமிடப்பட்டுள்ளன. முழுப் பெயருக்குப் பதிலாக முதல் எழுத்துகள் மட்டுமே வெட்டப்பட்டிருக்கும். சிலவற்றில் காலம் குறிக்கப்பட்டிருக்கும். முநியிஷசுபறம் வடிவழகி அம்மாழுக்கு உ சு த உபையம் என்று கற்பூரத் தட்டொன்றில் எழுதப்பட்டுள்ளது.
- தொடரும்

Page 39
អ៊ែងហ្គបវ៌ 廖 39 நிகழ்வுகள்
கலைக்சேகரியுடன் பூரண ஆதரவுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நடத்தும் யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி தொடர்பாக ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு 15.09.2011 அன்று மாலை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது. பொருட்காட்சி குறித்து ஊடகவியலாளருக்கு விளக்கமளித்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் என்.ஞானகுமாரன், பொருட்காட்சி திட்டத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் சந்திப்பின் போது சமூகமளித்த தொல்லியல் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கலாநிதி ஷிரான் தெரணியகலை, தொல்லியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கலாநிதி நிஹால் பெரேரா உட்பட ஊடகவியலாளர்களையும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தொல்பொருட்கள் சிலவற்றின் படங்களையும் இங்கு காணலாம்.
 
 
 

OF HISTORY OF JAFFNA
OF AFFINA வாழ்வியல் 36DలCOE)
September 2011
2) SFM) ANKA F3S జ్ఞళ్త

Page 40
பிரபஞ்ச செயற்பாட்பு தாண்டவர
எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமா யிருத்தலா லெங்கெங்கும் நங்கும் சிவனருள் தன்விளையாட்டத்தே!
-திருமூலர் திருமந்திரம்
திருக்கூத்துத் தரிசனம்) தாண்டவம் என்பதற்கு கூத்து என்றும் நிருத்தம் என்றும் பொருள்கொள்ளப்படுகின்றது. பரத முனிவர் தனது நாட்டிய சாஸ்திரத்தில் இதற்குப் பயன்படுத்தியிருக்கும் சொல் உத்ததம் ஆகும். தூள லயமும் அங்க சுத்தமும் சிறிதேனும் குறைவின்றி, கலைமெருகும் ஆண்மையின் கம்பீரமும் நிறைந்த ஆடலாகத் தாண்டவம் அமைகின்றது.
 
 
 
 
 

ன் வெளிப்பாடாகும் நடனங்கள்
பரதரின் நாட்டிய சாஸ்திரத்தின் நான்காவது அத்தியாயத்தில் சிவன் தான் அந்திவேளையில் ஆடும் ஆட்டங்களை தண்டு என்ற தனது கணத்தின் மூலம் பரத முனிவரின் நாட்டியக் குழுவினருக்கு கற்பித்தாரெனவும் தண்டு மூலம் கற்பிக்கப்பட்ட காரணத்தினால் அது தாண்டவம் எனப்பட்டதெனவும் குறிப்பிடப்படுவதைக் காணலாம்.
நூற்றியெட்டு வகையான தாண்டவ நடனங்கள் சிவனால் ஆடப்பட்டதாகப் பொதுவான தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. இதில் சிவன் தனியாக ஆடியவை 48 எனவும் தனது சக்தியான உமாதேவியாரோடு இணைந்து ஆடியவை 36 எனவும் காலச் சூழலின் தேவையின் நிமித்தம் திருமாலுடன்சேர்ந்து ஒன்பதை ஆடினாரெனவும் முருகனுடன் சேர்ந்து ஆடியவை மூன்றெனவும் தேவர்களது வேண்டுகோளின் நிமித்தம் பன்னிரெண்டு ஆடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும் கலைகள் அறுபத்தினான்கு என்பதால் சிவனால் ஆடப்பட்ட தாண்டவ நடனங்கள் அறுபத்தி நான்கே எனச் சிலர் வாதிடவும் செய்கின்றனர். தாண்டவ நிலைகள் அனைத்துமே நவரசத்தின் வெளிப்பாடாக அமைவதால் இவற்றை ஒன்பது வகைக்குள் உள்ளடக்கமுடிவதாகவும் சில நாட்டிய விற்பன்னர்கள் கருதுகின்றனர்.
---- எனினும் சிவ தாண்டவம் தொடர்பில் . இதுவரை வெளிவந்த ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் சிவபெருமான் ஆடிய
தாண்டவ நடனங்களை பின்வருமாறு பட்டியலிடமுடிகின்றது.
சப்த தாண்டவம் (பிரபஞ்சச் செயல்பாடு) 01. காளிதாண்டவம் - திருநெல்வேலி 02. கெளரி தாண்டவம் - திருப்பத்தூர் 03. சந்தியா தாண்டவம் - மதுரை 04. சங்காரத் தாண்டவம் - மதுரை 05. திரிபுர தாண்டவம் - திருக்குற்றாலம் 06. ஊர்த்துவ தாண்டவம் - திருவாலங்காடு 07. ஆனந்தத் தாண்டவம் - சிதம்பரம்
சப்தவிதங்க நாட்டியங்கள்
OI. அஜப தாண்டவம்
- திருவாரூர்
02.பிரம்ம தாண்டவம் -
திருக்கோளிலி
03. உன்மத்த தாண்டவம்
- திருநள்ளாறு 04. பரவரதரங்க தாண்டவம் -
நாகபட்டினம்
05. கம்ச தாண்டவம் - வேதாரணியம்

Page 41
06. கமல தாண்டவம் - திருவைமூர் 07. குக்குடதாண்டவம் - திருக்காரயில்
வெவ்வேறு இடங்களில் ஆடப்பட்ட ஏனைய நடனங்கள்
01. அஞ்சிதபாத கரண தாண்டவம் - திருச்செங்காட்டன்குடி
02. சுவஸ்திகா தாண்டவம் -பட்டடைக்கல்
(பதாமி- கர்நாடகா) 03. அர்த்தமத்தினி தாண்டவம் -புவனேஸ்வரம் (ஒரிசா) 04. அர்த்தரேசித தாண்டவம் - திருமலப்புரம் 05. அலத்தகா தாண்டவம் - கோலார் (கர்நாடகா) 06. கதிசாம தாண்டவம் - திருவக்கரை 07. சதுர தாண்டவம் - திருநள்ளூர் 08. சுந்தர தாண்டவம் - கீழியலூர் 09. லதாவிருச்சிக தாண்டவம் - திருமழப்பாடி 10. மயூரதாண்டவம் - மயிலாடுதுறை
அஷ்டவீரட்ட நாட்டியங்கள்
01. காலசம்கார தாண்டவம் - திருக்கடவூர்
02. கபால தாண்டவம் - திருக்கண்டியூர் 03. சம்கார தாண்டவம் - திருக்கோவிலூர் 04. திரிபுரசம்கார தாண்டவம் - திருவாதிகை 05. தக்ஷ சம்கார தாண்டவம் - திருப்பறையூர் 06. சலம்தரசம்கார தாண்டவம் - திருவிற்குடி 07. கஜசம்கார தாண்டவம் - திருவழுயவூர் 08. சந்த தாண்டவம் - திருக்குருக்கை
கைலையில் ஆடிய சிவ தாண்டவங்கள் 01. பாண்டரங்கம் 02. கொடுகட்டி 03. ஊழி
தாண்டவ நடனங்களில் சப்த தாண்டவங்கள் மிக முக்கியப்படுத்தப்பட்ட தன்மையைக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். இதில் ஆனந்தத் தாண்டவம் கெளலை ராகத்தினையும் சதுஸ்ர துருவம் தாளத்தினையும் கொண்டமைந்ததாகும். சந்தியா தாண்டவமானது சல்லாப ராகத்திற்கும் சதுஸ்ர மத்தியம் எனும் தாளத்திற்கும் ஆடப்படுவதாகும். காளிகா தாண்டவம் ஹம்சநாதம் ராகத்தினையும் சதுஸ்ர ரூபகம் தாளத்தினையும் கொண்டதாகும். திரிபுர தாண்டவம் பிலஹரி ராகத்தினையும் சதுஸ்ர ஜம்ப தாளத்தினையும் கொண்டமைந்தது. ஊர்த்துவ தாண்டவமானது பிரிந்தாவனி ராகத்தினையும் சதுஸ்ரதிரிபுடை தாளத்தையும் கொண்டது. கெளரி தாண்டவம் றஞ்சனி ராகத்தினையும் சதுஸ்ரஅட தாளத்திற்கும் ஆடப்படுவது. சம்கார தாண்டவம் லதாங்கி ராகத்திற்கும் சதுஸ்ர ஏகம் தாளத்திற்குமானது.
பிரபஞ்சச் செயற்பாடுகள் அனைத்தும் இடையறாது நடைபெற சிவன் நடராஜர் வடிவில் தனது ஈஸ்வரத் தன்மை மூலம் ஐந்தொழிலையும் தொடராக நிகழ்த்திக்கொண்டிருப்பதையே தாண்டவம்

塞 អ៊ែងហ្វិញត្អែ 41
வெளிப்படுத்தவதாக நம்பப்படுகின்றது. சிவ வடிவில் ஆடப்படும் முனி தண்டவம், சிவ சக்திவடிவில் ஆடப்படும் காளிகா தாண்டவம் ஆகிய இரண்டையும் படைத்தல் தொழிலுக்காக திருநெல்வேலி தாம்பிரசனத்தில் ஆடினாரெனவும் காத்தல் தொழிலை மேற்கொள்ள கெளரி தாண்டவம், சந்தியா தாண்டவம் ஆகிய இரண்டினையும் முறையே திருப்புத்தூர் சிற்சனத்திலும் மதுரை வெள்ளியம்பலத்திலும் ஆடினாரெனவும் அழித்தல் தொழிலுக்காக சங்கார தாண்டவத்தினை இருண்ட நள்ளிரவில் சுடலையில் நின்று ஆடினாரெனவும் மறைத்தல் தொழிலை மேற்கொள்ள திரிபுரா தாண்டவத்தினை திருக்குற்றாலம் சித்திரச் சபையில் ஆடினாரெனவும் அருளல் தொழிலை மேற்கொள்ள ஊர்த்துவ தாண்டவத்தினை திருவாலங்காட்டில் இரத்தின சபையில் / ஆடினாரெனவும் திருப்புத்தூர் புராணம் கூறும். இவ்வைந்து தொழில்களையும் / ஒருசேர நிகழ்த்தும் தன்மையே ஆனந்த தாண்டவமாகும். இதனாலேயே / தில்லைச் சிதம்பரத்தில் சிவன் /
ஆனந்தத் தாண்டவத்தை

Page 42
42
ந |ா ஸ் டே த ர று ம் ஆடிக் கொண் டி ரு ப் பதாக நம்பப்பட்டுவருகின்றது.
சிதம்பரத்தில் ஆனந்தத் தாண்டவம் நாள்தோறும் ஆடப்பட்டுவருவதால் அது சதா தாண்டவம் என்ற பெயரினையும் பெறுகின்றது. சிவனின் எல்லா நடன ரூபங்களையும் சிதம்பரத்தில் நம்மால் ஒருசேரத் தரிசிக்கமுடியும். அண்டமெங்கும் வியாபித்த தன்மைகொண்ட நாதாந்தம்’ எனும் தில்லையம்பலவனின் பிரமாண்டமான நடனத் திருவுருவத் தோற்றமானது நமது சிந்தையைத் தொட்டிழுக்கும் சக்திமிக்கதாகவே விளங்குகின்றது. நான்கு கைகள், மூன்று கண், பரந்த சடை, தலையில் கங்கையுடன் பிறைச் சந்திரன் என்பவற்றுடன் இடக்காலைத் தூக்கியவண்ணம்
புலித்தோலை இடையில் கட்டியவாறு பொன்னார் மேனியனாகச் சிவன் காட்சியளிப்பது பார்ப்போரைப் பரவசப்படுத்துவதாகும்.
பிரபஞ்சப் படைப்பின் முன்னோடியே சிவன் என்பதுவும் அவரே சகல சக்திகளையும் ஒருசேரப் பெற்றவர் என்பதுவும் முனிதாண்டவம் மூலம் வெளிவருவதைக் காணமுடியும். கடவுளை மறுதலித்து தாரகா வனத்தில் வாழ்ந்த ரிஷிகளுக்குப் பாடம் புகட்ட சிவன் முனைந்தவேளை சிவனுக்கு எதிராக ரிஷிகள் செய்த யாகத்தில் வெஞ்சினத்தோடு வெளிப்பட்டுவந்த
 
 
 
 
 
 
 
 
 
 

கொடிய புலியைக் கிழித்து அதன் தோலை உடுத்தியும் படமெடுத்துவந்த நச்சரவத்தை கழுத்தில் மாலையாக அணிந்தும் பெரும் சக்தியோடு வெளிப்பட்ட முயலவன் எனும் அசுரனை காலில்போட்டு அழுத்தியும் அவர்களை ஆட்கொள்வதே இந்நடனத்தின் வெளிப்பாடாகும். இதன் ஆடல் தோற்றத்தினை திருநெல்வேலியிலும் சிதம்பரத்திலும் நம்மால் காணமுடிகின்றது.
படைத்தல் தொழிலினைக் காளிகா தாண்டவம் புலப்படுத்துவதாக அமையும். இதில் சிவன் தனது சக்தியாகிய காளிதேவியுடன் இணையும் தன்மையில் உடலின் ஒருபாதி வெண்முகிலின் நிறமாகவும் மறுபாதி கருமுகிலின் நிறமாகவம் மாறுகின்றது. வெண்மை இசிவனரின் வெளிப்பாடாகவும் கருமை சக்தியின் வெளிப்பாடாகவும் அமையும். இவ் ஆண் பெண் இணைவு என்பது உயிர்களின் தோற்றப்பாட்டைக் குறிப்பதாகப் பொருள்படும்.
காத்தல் தொழிலுக்கான சந்தியா தாண்டவத்தை இறைவன் அம்மையப்பன் எனும் நிலையில் சாந்த சொரூபியாக ஆடியதாகக் கூறுவர். கெளரி தாண்டவமும் இதனையொத்த தன்மையையே கொண்டுள்ளது. மூவுலகுக்கும் தாயாராக விளங்குகின்ற உமாதேவியார் தங்க ஆசனத்தில் வீற்றிருக்க, சரஸ்வதி வீணை மீட்ட, இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, விஷ்னு மிருதங்கம் வாசிக்க, பிரமா நட்டுவாங்கம் பண்ண, இலக்குமி பாட, கைலை மலையில் சிவன் ஆடிய இந்நடனத்தையே மதுரை வெள்ளியம்பலத்திலும் ஆடியதாகச் சொல்லப்படுகின்றது. இந்நடனத்தின் அழகுத் தோற்றத்தினை மதுரையில் நம்மால் கண்டுகளிக்கமுடியும்.
அழித்தல் தொழிலுக்கான சங்கார தாண்டவம் குறித்த தகவல்களின் அடிப்படையில் சரியான விளக்கங்கள் இதுவரை எட்டப்படவில்லை. என்றாலும் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் இது நள்ளிரவு வேளையில் சுடலையில் ஆடப்பட்டதாக கூறப்படுகின்றது. பிரளய தாண்டவம், பூதத் தாண்டவம், புஜங்க தாண்டவம் போன்றவையும் இதன் அடக்கமாகவே சொல்லப்படுகின்றது. இதில் சிவன் மூன்று கண், எட்டுக் கை மற்றும் பரந்த சடையுடன் சூலம், பாசம், அபயம், தமருகம், உடுக்கு, கபாலம், அக்கினி பாத்திரம் என்பவற்றை ஏந்திய தோற்றத்தில் தென்படுவதைக் காணமுடியும்.
மறைத்தலுக்கான திரிபுரதாண்டவமானது தாரகா அசுரனின் மைந்தர்களால் உயிர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தைப் போக்கவேண்டி அவர்களது அசுரத்தன்மையை அழிக்க பதினாறு கைகளுடன் இடப்பாகத்தே கெளரிதேவி நிற்க சிவன் ஆடிய ஆட்டமாகக் கூறப்படுகின்றது. இது மாயையால் பீடிக்கப்படும் ஆன்மாவை அதிலிருந்து விடுவிப்பதாக அமையும்.
அருளலுக்கான ஊர்த்துவ தாண்டவம் சாந்தத்தையும் நளினத்தையும் கொண்டதாகும். மாயையிலிருந்து

Page 43
விடுபட்ட ஆன்மாவை அருளல் மூலம் இறைவனுடன் ஒன்றாக இணைத்துக்கொள்ளும் தன்மையின் வெளிப்பாடாக இது அமையும்.
இந்தியப் படிமங்களில் தலைசிறந்து விளங்குவது நடராஜ வடிவமாகும். உலக அரங்கிலும் அது சிறப்பான இடத்தினைப்பெற்றேயுள்ளது. நடராஜர் பற்றிய தமிழிலெழுந்த இலக்கியங்கள் அனேகமாகவேயுள்ளன. கலித்தொகையில் கடவுள் வாழ்த்துப் LITL 6), சிலப்பதிகாரத்தில் கொடுகட்டி மற்றும் பாண்டரங்கம் பற்றிய பாடல்கள், காரைக்கால் அம்மையாரின் பாடல்கள், திருமூலரின் திருமந்திரம், தேவார திருவாசகங்கள் என அனைத்திலுமே ஆடும் கூத்தனின் பெருமைபற்றி அறியமுடியும். திருமூலர், திருமந்திரத்தில் திருக்கூத்துத் தரிசனம் பற்றி எண்பத்தியிரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். இவை கூத்தபிரானின் திருநடனங்களை மிகச் சிறப்பாகவே விளக்கியுள்ளன.
இறைவனுக்கம் காளிக்குமிடையே நடந்த ஆடல்போட்டியில் ஊர்த்துவ தாண்டவமாடிக் காளியைத் தோல்வியுறச் செய்தார் இறைவன். அண்டம் அனைத்தையுமே ஒருசேர அடக்கும் வண்ணம் இப்போட்டியிருந்ததை
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழேலோ
என மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். இத்தாண்டவத்தை மையமாகக் கொண்டு எழுந்த நடராஜர், காளி சிலைகளை மதுரைப் புது மண்டபத்திலும் தென்காசி விஸ்வநாதர் கோவிலிலும் பேரூர்க் கோவிலிலும் காணமுடியும்.
தாண்டவ நடனங்களிலே மிக முக்கியப்படுத்தப்படும் கரணங்கள் மிகமிகக் கடினமானவை என்பது நாட்டிய விற்பன்னர்களின் கருத்தாகும். தேளின் பெயர்கொண்ட விருச்சிகம், விருச்சிக குட்டிதம், லதா விருச்சிகம், விருச்சிக ரேசிதம் போன்ற கரணங்களை உள்ளடக்கிய ஆட்டங்களில் தேள் எவ்வாறு தனது கொடுக்கைப் பின்னால் தூக்கிக்கொண்டு ஒடுமோ அதேபோல் ஒரு காலினைப் பின்னால் தூக்கிக்கொண்டு ஆடவேண்டும். லலாடதிலக கரணத்தில் பின்னால் வீசப்பட்ட காலின் பாதத்தினால் நெற்றியின் நடுவில் தொடவேண்டும். சக்கர மண்டல கரணத்தில் கைகளையும் கால்களையும் மடித்தவாறு ஊன்றி உட்காரவேண்டும். அர்களம் கரணத்தில் உடலை மல்லாக்க வளைத்து கை கால்களால் தரையைத் தொட்டவாறு ஆடவேண்டும். தண்டபாத கரணத்தில் ஒரு காலை நேராகத் தூக்கி தலை வரை அதனை நிறுத்தவேண்டும். உத்வுருத்த கரணத்தில் உடலை இடுப்பின் மேல் முன்பின்னாகத் திருப்பவேண்டும். சகடாஸ்யம் கரணத்தில் வண்டியின் சகடையைப்போல் வயிறு தரையில் படிய பின்புறமாக உடலையும் கால்களையும் ஒருசேர வட்டமாய் வளைத்து கைகளால் கால்களைப் பிடித்தவண்ணம் நிற்கவேண்டும்.
கங்காவதரணம் என் 108 வது கரணத்தில் கைகளை
த TD து 芭

& ត្រពាបាម៉ាអៃ
43
நிலத்தில் பதித்து காலைமேலே தூக்கியவாறு கையிலே தலைகீழாய் நிற்கவேண்டும். பகீரதனின் தவத்தால் கங்கா வானிலிருந்து நிலத்தில் விழுந்த நிலையை கங்காவதரணம் எனும் பெயர் சுட்டுவதாக அமையும்.
சிவனால் ஆடப்பட்ட கடினமிக்க தாண்டவ
அம்சங்கள் ஆண்களுக்குரியதெனவும் உமாதேவியால்
ஆடப்பட்ட நளினமான GDITGvu J அம்சங்கள்
பெண்களுக்குரியவை எனவும் பொதுவாகக் கருதப்பட்டாலும் இக்கரணங்கள் இரு சாராராலுமே ஆடப்படலாம் என்பதனை தஞ்சையில் காணப்படும் ஆண் பெண் சிற்பங்களாலும் சிதம்பரத்தில் காணப்படும் பெண் சிற்பங்களாலும் நம்மால் உணரமுடிகின்றது.
பொதுவாகப் பார்க்குமிடத்து இப்பிரபஞ்சச் செயற்பாட்டின் அனைத்துத் தன்மைகளையும் தாண்டவ நடனங்கள் மூலமாக நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடியும் என்பதனை மறுப்பதற்கில்லை. డ్డ
- தாக்ஷாயினி பிரபாகர்
நடனத்துறை விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்

Page 44
உலகின் அ
பொறொபு
 

அற்புத மரபுரிமை இடமான துர் பெளத்த கோயில்
த்திய ஜாவாவில் அமைந்துள்ள பொறொபுதுர் ஆலயத் தொகுதி, உலகில் உள்ள மிகப்பெரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும். அதன் வயது திட்டவட்டமாகத் தெரியாத போதும் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் இருந்து 8 ஆம் ஆண்டின் முற்பகுதி பெைெர கட்டப்பட்டிருக்கலாம் ଗTଗ014 கருதப்படுகிறது.
சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக ஜாவாவில் பெளத்த ஆன்மீக நிலையமாக விளங்கி வந்துள்ளது. பின்னர் அது மறைந்து போய் 18 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாலய கட்டடத் தொகுதியில் உள்ள பெளத்த ஆலயத்தில் 1460 சிற்பக் காட்சி அமைப்புகள் மற்றும் 504 புத்த உருவங்கள் ஆகியன காணப்படுகின்றன. உலகின் அற்புத மரபுரிமை இடமென பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனைப் பார்த்து ரசிக்க ஆவல் கொண்டு விஜயம் செய்கின்றனர்.
சைலேந்திரா வம்சத்தின் வழிவந்த பழைய மாதரம் ராஜ்ய மன்னர்களில் ஒருவரான சமரதுங்க மன்னன் பொறொபு துரைக் கட்டினான். கிட்டத்தட்ட 100 வருடங்கள் கட்டுமானப் பணிகளோடு இருந்த இந்த பெளத்த ஆலயம் 824ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி கட்டி முடிக்கப்பட்டு வணங்குவதற்குரிய ஒர் இடமாக இருந்தது என இந்தோனேஷியரான ஹ"டயா கந்தஹ்ஜய என்பவர் தெரிவித்தார் என கயும்வுன்கன் கல் வெட்டுகள் தெரிவிக்கின்றது.
சிலர் பெறொபுதுர் என்றால் படிகள் உள்ள மலை எனச் கூறுகின்றனர். வேறு சிலர் இதுவோர் உயரமான இடத்தில் உள்ள மடாலயம் என கூறுகின்றனர்.
அது பத்து தளங்கள் உள்ள கட்டடமாக உருவாக்கப்பட்டுள்ளது. புனர்நிர்மாணம் செய்யப் படுவதற்கு முன் இதன் உயரம் 42 மீட்டராகவும் புனர் நிர்மாணத்தின் பின் உயரம் 34.5 மீட்டராகவும் விளங்குகின்றது.
முதல் ஆறு தளங்களும் சற்சதுர வடிவடிவிலும் மேலுள்ள இரு தளங்களும் வட்டவடிவினதாகவும் மிக மேலே உள்ளது ஸ்தூபி போன்றும் உள்ளது. மேல் தளத்தில் மேற்கை நோக்கியவாறு புத்தரின் உருவச்சிலை உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு தளமும் மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் உருவகப்படுத்திக் காட்டுவதாக உள்ளது. மஹாயான பெளத்தத்தின் கொள்கைப்படி, வாழ்வில் ஒருவர் கெளதம புத்தர் போல ஆன்மீக உயர்வு பெற வேண்டுமானால், இந்த வாழ்வுக் கட்டங்களின் ஊடாகச் செல்ல வேண்டும்.

Page 45
பொறொபுதுரின் அடித்தளப் பகுதி மனிதர்கள் இன்னமும் மிகுந்த இச்சையால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கிறது. இந்த அடித்தளம் காமதது என அழைக்கப்படுகிறது. ரூபதது என அழைக்கப்படுவது அடுத்த நான்கு தளங்களுமாகும். இவை மிக்க ஆசையில் இருந்து மனிதர்கள் விடுபட்டாலும் தோற்றத்திலும் வடிவத்திலும் இன்னமும் கட்டுப்பட்டவர்கள் என்பதைக் காட்டுபவையாகும். இந்த நான்கு தளங்களில் முதலாவதில் புத்தர் சிலைகள் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று தளங்களில் புத்தரின் சிலைகள் துவாரங்கள் உள்ள சிறு சிறு துவாரம் போன்றவற்றில் வைக்கப்பட்டுள்ளன. இவை அரூபத்து Ꮆ ᎢᎶᏡᎢ அழைக்கப்படுகின்றன. இந்த தளங்கள் ஆசைகளில் இருந்தும் தோற்றங்கள் வடிவங்களில் இருந்தும் விடுதலை பெற்ற மனிதர்களை உருவகப்படுத்துகின்றன.
உச்சித் தளம் அரூபம் என அழைக்கப்படுகின்றது. புத்தர் இருக்கும்இவ்விடம் நிர்வாணத்தைக் குறிப்பதாகும்.
ஒவ்வொரு தளத்திலும் காணப்படுகின்ற அழகிய சிற்பங்கள் அவற்றைச் செதுக்கிய சிற்பங்களின் கை வண்ணங்களையும் நேர்த்தியையும் புலப்படுத்துகின்றன. இந்த சிற்ப காட்சிகளின் கதைகளை அறிய வேண்டுமானால் நீங்கள் ஆலயத்தின் வாசலில் இருந்து இடதுபுறமாகச் சென்று வலது புறமாக வர வேண்டும். இந்தச்
சிறப்புக் காட்சிகள் இராமாயண காப்பியத்தின் கதைகளை எடுத்துக் கூறுகின்றன. அதுவுமன்றி அன்றைய காலகட்டத்தின் விவசாயிகளின்
 

& கலைக் ម៉ៃ
45
நடவடிக்கைகள், பெர்கொட்டாவில் (செமராங்) கடல் போக்குவரத்தின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வள்ளத்தின் பயணத்தைக் காட்டும் உருவச்சிலைகள் ஆகியனவும் உள்ளன.
பொறொபுதுர் ஆலயத்தின் எல்லா சிற்பக் காட்சிகளும் புத்தரின் போதனைகளைச் சித்திரிக்கப்பவையாகவே உள்ளன. எனவே இந்தக் காரணத்தினால், பெளத்தத்தைக் கற்க விரும்புபவர்களுக்கு இவ்வாலயம் ஓர் கல்வி ஊடகமாக விளங்குகின்றது.
பெளத்த சித்தாந்தத்தை அறிய வேண்டுமானால் பொறொபுதுர் ஆலயத்தின் ஒவ்வொரு குறுகிய பாதை ஊடாகவும் செல்ல வேண்டும் என யொக்யெஸ் ஆலோசனை கூறுகிறார்.
கம்போடியாவில் உள்ள அங்கர் வற் ஆலயத்துக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பும் ஐரோப்பாவில் உள்ள மகாகதீட்ரல்களுக்கு 4 நூற்றாண்டுகளுக்கு முன்பாகவும் கட்டப்பட்ட இந்த பெறொபுதுர் ஆலயத்துக்கு 10 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து அதிஷ என்ற பெளத்த துறவி ஒரு தடவை விஜயம் செய்தார். இங்கிருந்து அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றதும் அவர் புத்தரின் போதனைகளை மேலும் கூடுதலாக செய்யக் கூடியதாக இருந்தது. அத்துடன் அவர் விக்கிரமசில பெளத்தம் என்னும் சமயத்தையும் உருவாக்க முடிந்தது. பின்னர் அவர் விக்கிரமசில மடாலயத்தின் தலைவரானார். திபெத்தியர்கள் தர்மத்தைப் பின்பற்ற பின்னர் அவர் போதித்தார்.

Page 46
ញញញម៉ាស៊ែប៊ីប៊ី
 

இக்கோயிலின் அத்திவாரம் கட்டப்பட்ட ஆரம்ப காலத்தில், கோவிலை சுற்றிய இடத்தின் நிலை எப்படி இருந்தது அதை மீளக் கண்டுபிடித்தவேளை, கோவில் ஏன் புதையுண்டு இருந்தது என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை. இவ்வாலயத்தின் ஆரம்பகால அத்திவாரக் கட்டடத்தின்போது, அது சதுப்பு நிலத்தால் சூழப்பட்டு இருந்தது எனவும், மெரபி மலையின் எரிமலை வெடிப்பினால் அது மூடப்பட்டது எனவும் சில ஊகங்கள் எழுந்தன.
அமவா’ என்னும் எழுத்துடன் காணப்படும் கல்குத்த கல்வெட்டின் அடிப்படையில் அவ்விதம் கூறப்படுகிறது. அமாவா’ என்றால் பாற்கடல் என்பதாகும். அனர்த்தம் நடந்ததை விபரிக்க இந்த சமஸ்கிருத வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. பாற்கடல் என்பது பின்னர் மெரபி எரிமலைக் குழம்பு என மொழி பெயர்க்கப்பட்டது.
மெரபி குளிர் எரிமலைக் குழம்பினால் பொறொபுதுர் புதையுண்டது எனச் இசிலர் கூறுகின்றனர். பெருமைகளோடும் மர்மங்களோடும் விளங்கும் இவ்வாலயத்தினை தம் வாழ்வில் ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும் என மக்கள் ஆர்வம்
கொள்ளுகின்றனர்.
பொறொபுதுர் கலைப்பாணி இந்திய செல்வாக்கின்
(குப்தா மற்றும் குப்தாவுக்குப் பிற்பட்ட காலப் பாணி) ஒரு
கிளையாக விளங்குகிறது. இவ்வாலயத்தின் சுவர்களில்

Page 47
பின்னணியிலிருந்து உருவங்கள் சிறிதாகவே புடைத்ததிருக்கும் படி சிற்பங்கள் கல்லினால் செதுக்கப் பட்டிருக்கின்றன. இது 6 கிலோ மீட்டருக்கு விஸ்தரிக்கின்றது. உலகிவேயே மிகப் பெரியதும், மிகவும் புராதனமானதுமான பெளத்த சிற்பங்களின் அமைப்புக் கொண்டது எனவும் போற்றப்படுகின்றது. அத்துடன் சிற்ப உருவாக்கம் அதிநுட்பமும் அழகும் வாய்ந்தது.
மறைக்கப்பட்ட பாதத்திலுள்ள கர்ம விபங்கா சிலை உரு வமைப்புகள் கர்ம விதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. லலித விஸ்தார தொடர் அமைப்புகள் பூரணமான புத்தர் வரலாற்றைத் தரவில்லை. ஜாதகக் கதைகள் என்பது புத்த இளவரசர் சித்தார்த்தராகப் பிறப்பதற்கு முன்னர் அவரது கதையைக் கூறுவதாகும்.
அவதான கதைகளும் ஜாதகக் கதைகள் போன்றவையே. ஆனால் பிரதான உருவம் போதிசத்துவரல்ல. துறவு ரீதியான நடவடிக்கைகளும் ஏனைய இதிகாச தலைவர்களுக்கும் உரியதாக உள்ளன. இக்கதைகள் திவ்விய வாதன (பிரசித்தி பெற்ற சுவர்க்க செயல்கள்) மற்றும் அவதான சாதக (நூறு அவதானங்கள்) ஆகியவற்றில் இருந்து
தொகுக்கப்பட்டுள்ளன.
முதலாவது தாழ்வாரத்தின் கீழான தொடரில் உள்ள முதல் இருபது அடைப்புப்பலகை சுதான குமார வதன கதையை விளக்குகிறது. இரண்டாவது தாழ்வார சுவரில் அமைந்திருக்கும் உருவத் தொடர்கள், சுத்தோதனர் அதி
 

BODY - 6
#######ಚ
tenceseñêñt
i i

Page 48
கலைக்கேசரி கி 48
உயர்ந்த பூரண ஞானத்தைத் தேடி சளைக்காமல் அலைந்து திரிவதைச் சித்திரிப்பதாக உள்ளது. இதே கதைதான் மூன்றாம் நான்காம் தாழ்வாரத்தில் உள்ள சுவர் மற்றும் கைப்பிடிச் சுவரில் தொடரும் சிற்ப அமைப்புகளாக உள்ளன.
450 சிற்ப அடைப்புப் பலகையின் பெரும்பாலான விபரணம் புனித நகாயான நூலான காந்தவ்யுகவினை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இறுதிக் காட்சிகள் மற்றொரு நூலான பத்ரகரியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. கி.பி 842 ஆம் ஆண்டின் கல் வெட்டின் அடிப்படையில் பொறொபுதுர் ஒரு காலத்தில் வணங்குவதற்குரிய ஒர் இடமாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றனர். அதில் "கவுலன் பூமி சம்பத்ரா என்ற ஒரு வாசகம் வருகிறது. கவுலன் என்றால் புனிதத்துவத்தின் ஆரம்பம் என்பதாகும். பூமி சம்பத்ரா என்பது பொறொபுதுரில் உள்ள ஓர் இடமாகும்.
பொறொபுதுர் ஆலயம் இரட்டைக் கருத்து வெளிப்பாட்டுடன் கூடிய ஸ்தூபி அமைப்பைக் கொண்ட ஆலயமாகும். என போல் மஸ் தெரிவித்தார். ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்ற போது இவ்வாலயம்
"மூடப்பட்ட ഉ_ണ്ഡകLb ' என்னும் எண்ணத்தை
 

பிரதிபலிக்கிறது. ஒருவர் கோவில் உள்ளே நிற்கும்பொழுது இந்தக் கருத்தினை உணரமுடியும்.
ஒருவனோ அல்லது ஒருத்தியோ கோவிலின் உள்ளே நிற்கும் போது அவரது சிந்தனை சிற்பக் காட்சிகளுடன் கூடிய உயர்ந்த சுவர்களுடன் மட்டுப்பட்டுவிடும். கோவிலின் ஏனைய பகுதிகளை ஏன் ஒரே தளத்தில் இருப்பவற்றைக் கூட பார்க்கமுடியாதவாறு விறாந்தை எப்போதும் சற்சதுரமாகவே தோன்றுமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் அரூபதது சுற்று மேடையில் நிற்க நேர்ந்தாலும் அதே உணர்வுதான் வரும். அந்த மட்டத்தில் ஒருவர் நின்றால் தான் மேலும் காட்சியைப் பார்க்க முடியும் ஆனால் ரூபதது மற்றும் காமன்ததுவில் ஒருவர் நிற்பது போன்று, கீழ் தளத்தையோ அல்லது மேல் தளத்தையோ பார்க்கமுடியாது
பொறொபுதுர் வானக் கூரையால் மூடப்பட்ட பிரபஞ்சம் தொடர்பான மலையின் சின்னம் எனவும் தனித்து விடப்பட்ட குறுகிய சந்து மூலம் அடையக்கூடிய ஒரு தனித்துவமான உலகம் எனவும் கூறலாம். அதாவது மற்றைய நிபுணர்கள் கூறியவாறு தொழில்நுட்பக் காரணங்கள் தான் எனக் கொள்ள இயலாது. து
- லசஷ்மி

Page 49
மயில் தோகை ே
AMLA KING COCONUT - STRONG & LONG HAR - - SOFT & SILKY HAIR
All Shampoos Available in 200m, 100ml & 7.5ml (sach
Sasks:
ReeBonn Products are available at all - Super Markets - Fancy Shops - Cosmetic Shops - Pharmacies - General GOCeries
எங்களது ஏனைய கேசப்பராமரிப்பு உற்பத்திகள் ShompOO || Conditioner || Block Henno
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: 0
 
 

ALOE VERA TEATREE OIL - DRY & DAMAGED HAR - - ANTI DANDRUFF HAIR
ALOE VERA
"எனது அழகின் இரகசியம்"
ፏሠ” ̆
*
Praveena
ReeBot. Brad Arrassador
உங்கள் கேசத்திற்கு இயற்கையான பராமரிப்பு
1-5344422 NC || U | C |y Cosmetics

Page 50
អ៊ែងហ្គ្រាម៉ាឌ័ 彦 50 சுதேச மருத்துவம்
யாழ்ப்பாணத்தா சுதேச தமிழ் மரு
கி.பி. 12 - 15 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாண தமிழ் மன்னர் காலத்தில் பரராசசேகரம், செகராசசேகரம், இலங்கைச் சிங்கை மன்னன் நயனவிதி முதலான நூல்கள் தோற்றம் பெற்றன. இவை யாவும் தொகுப்பு நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிலே கூறப்பட்டுள்ள மருந்துகளில் LIGR) தற்போதும் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பெருவழக்காயுள்ளன. கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டளவில் அமுதாகரம், இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம், பாதார்த்த சூடாமணி, சொக்கதாதர் தன்வந்திரியம் போன்ற நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நூல்கள் பலவற்றையும் யாழ்ப்பாணத்திலே வெளி வந்த வேறுபல சித்த மருத்துவ நூல்களையும் அச்சு வாகன மேற்றிய பெருமை ஏழாலையைச் சேர்ந்த சுதேச வைத்தியர்
ஐ.பொன்னையாப்பிள்ளை அவர்களையே சாரும். அவை
முன்னர் ஏட்டு வடிவிலே இருந்தன. செகராசசேகரம் நூலை
 

ர் காலத்தெழந்த நத்துவ நூல்கள்
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் முன்னாள் தலைவர், மொழித்துறை, சபரகமுவ பல்கலைக்கழகம் அச்சுவேலியைச் சேர்ந்த சதம்பிமுத்துப்பிள்ளையும் அமுதகாரத்தை திருகோணமலையைச் சேர்ந்த சதம்பையாபிள்ளை என்பவரும் பதிப்பித்துள்ளளனர்.
சித்த மருத்துவ கலாநிதியும், கைதேர்ந்த சித்த வைத்தியரும் யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி சே.சிவசண்முகராஜா அவர்கள் குறிப்பிடும் சித்த மருத்துவ - சுதேசமருத்துவ நூல்களின் விபரம் வருமாறு :
அங்காதிபாதம், அமுதாகரம், இருபாலைச் செட்டியார் வைத்தியவிளக்கம், பதார்த்த சூடாமணி, ஏட்டு வைத்தியம், கிறிஸ்தவ பண்டிதர் வைத்திய நூற்றிரட்டு, சித்த ஒளடத சங்கிரகம் , சித்த வைத்திய சிகிச்சைக் கிரமம், சுதேச வைத்திய அவுடதத்திரட்டு, சுதேசவைத்திய மருத்துவ மூலிகைக் கையகராதி, செகராச சேகரம், சொக்கநாதர் தன்வந்திரியம் , நயனவிதி குணமும் மருந்துமும், பரராசசேகரம், வைத்தியசிந்தாமணி, வைத்தியபூரணம் I(2000 : 62)
சுதேசமருத்துவ இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் எடுத்துக் காட்டும் ஆவணங்களில் இலங்கையிலே வெளிவந்த சித்த - சுதேசமருத்துவ நூல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இலங்கையின் பல பாகங்களிலும் சிதறிக் காணப்படும் சுதேச - சித்த வைத்தியம் சம்பந்தமான ஏட்டுச் சுவடிகள் இங்கு ஈழத்திலே சுதேச மருத்துவம் ஒரு காலத்தில் செழிபுற்றிருந்ததை எடுத்து காட்டுகின்றன. 1994 ஆம் ஆண்டு ஏட்டுவைத்தியம்’ என்னும் நூல் வைத்திய கலாநிதியும் இன்று பேராசிரியருமான சு. பவானி அவர்களினாலே ஆயுர்வேதத் திணைக்களத்தினால்
வெளியிடப்பட்டது.
1980 இல் சித்த ஒளடத சங்கிரகம் என்னும் சித்த மருந்துகளின் தொகுப்பு நூல் ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. 1992 இல் திலகராகப் பணிபுரிந்த ஏழாலையைச் சேர்ந்த திரு. சி. முருகவேல் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்திலே காணப்பட்ட தமிழ் சுதேச வைத்திய ஏட்டுச் சுவடிகளின் பெயர் பட்டியலொன்றை (அப் போதைய பிரதம நூலகராக இருந்தபோது) வெளியிட்டார்.
சுதேச மருத்துவ நூலாக்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வைத்தியர்களும் பெரும்
பணியாற்றியுள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த வைத்தியர் சி. ஆறுமுகம்பிள்ளை 1931 இல் 'நோய் நிதானங்கள்’ என்னும் அரிய தமிழ் மருத்துவ நூலைத்

Page 51
தொகுத்து வெளியிட்டார். சித்த - சுதேச மருத்துவ நோய்நாடல் சம்பந்தமாக எமக்குக் கிடைத்த முதலாவது நூல் இதுவென்றே கூறலாம்.
ஆயுர்வேத வைத்தியத்தில் ‘மாதவன் நிதானம் போன்ற நோய் நிதான நூல்கள் பல இருப்பினும் சித்த மருத்துவத்தில் நோய் நிதானத்துக்கென்று தனியான நூல் எதுவும் இலங்கையிலே இல்லாதிருந்தது. அக் குறைபாட்டைப் போக்கும் நோக்கத்துடனேயே தாம் இதனைத் தொகுத்ததாக நூலாசிரியர் தமது முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார். அங்காதிபாதம் என்னும் பெயரில் இதே நூலாசிரியர் எழுதிய ஒரு நூல் இற்றைவரை கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. அதுபோலவே திரு கோணமலையைச் சேர்ந்த ப. சின்னத்தம்பி என்பவர் 1906இல் எழுதிய அற்காதிபாதம் என்னும் நூலும் கையெழுத்து பிரதியாகவே இருந்து வருகிறது.
ஆதி காலத்தில் சுதேச - சித்த மருத்துவமானது இலங்கை முழுவதும் பரவியிருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் மேலாதிக்கம், நட்புறவு என்பன இலங்கையில் ஏற்பட்டிருந்த காலங்களில் இவ்வைத்திய முறை புத்துயிர் பெற்று வளர்ச்சி அடைந்திருக்கக் கூடும். பொலனறுவையிலமைந்துள்ள பொற்கல் விகாரையில் (Potgal vehera) SÐ GřTGIT சிலைகளில் ஒன்று சித்த மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் அகத்திய முனிவருடையது என்ற கருத்து இதனை வலுப்படுத்துவதாக அமைகிறது. 5ஆம் நூற்றாண்டளவில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட வைத்திய சிந் g5 TLDGODif? GOLJSFTIggg gFJĖJ55 UgJLib (Vaidya Cintamani Bhaisady
 
 

க்கலைக்கேசரி 51
sangrahaya) என்னும் நூல் வைத்திய சிந்தாமணி என்னும் தமிழ் மருத்துவ நூலைத் தழுவி எழுதப்பட்ட ஒன்றாகும். இவை சிங்களவர் மத்தியில் சித்த - சுதேச மருத்துவத்துக்கிருந்த செல்வாக்கை நன்கு காட்டும். சித்த மருத்துவம் கூறும் சித்தர்களில் ஒருவரான 'கோரக்கர் திருகோணமலையில் சித்தியடைந்தார்.
பதினெண் சித்தர்களிலே புலத்தியர், சட்டநாதர் ஆகிய இருவரும் சிங்கள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் கரு தத்தக்கது. "சிங்களம்' என்பது இங்கு இலங்கை’ எனும் நாட்டை குறிப்பதாக அமைகிறது. எனவே இத்தமிழ்ச் சித்தர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்று சித்த மருத்துவ வளர்ச்சியில்ஈடுபடுத்தியிருக்க வேண்டும்.
பரராசசேகர மன்னனின் சகோதரனான பரநிருபசிங்கன் என்பவன் சிறந்த சித்த மருத்துவராகத் திகழ்ந்ததுடன் கண்டியரசரின் மனைவிக்குச் சிங்கள வைத்தியர்களால் குணப்படுத்த முடியாதிருந்த வயிற்று வலியைக் குணப்படுத்தினான் என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது. இது யாழ்ப்பாண அரசபரம்பரையினருக்குச் சுதேச - சித்த மருத்துவத்தில் இருந்த ஈடுபாட்டைக் காட்டுவதுடன் சித்த மருத்துவம் GF) JĖJJ5GIT மக்களுக்கும், e 9dᎠᎢéᎭ குடும்பத்தினருக்கும் பயன்பட்டிருப்பதற்கும் சான்று பகர்வதாகவுமுள்ளது. தற்போது கூட சிங்கள பாரம்பரிய மருத்துவர்களிடம் தமிழ் ஏட்டுச்சுவடிகள் பல இருப்பதாகக் கூறப்படுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. எனினும் பிற் காலத்தில் தமிழ் மருத்துவமானது இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலேயே பெருமளவில் கையாளப்பட்டு வந்துள்ளது.*

Page 52
壽
隱
 

ப் பண்பாடு: %D6յպtb
1ങ്ങppgഞഖub
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
தொடர்ச்சி.
கோப்பாயில் நடைபெற்ற களவுச் சம்பவத்தைப்பற்றி முருகேச பண்டிதர் பாடிய பாடலையும் அரைவாய்மொழிப் பாடலாகக் கருதமுடியும். அந்தப் பாடல் பின்வருமாறு
வெள்ளை வேலன் வைரவன் காசிதான் வீரனோ டருளம்பலம் என்றிடும் கள்வர் நால்வரும் கோவையிற் தன்மதம் காட்டும் கென்ஸ்மன் வீட்டை நெருப்புறி (க்) கொள்ளை கொண்டு மறியலிற் சேர்த்திடக் கூரையேறி இருவர் பிழைத்திட (ப்) பள்ளனோ டருளம்பலமும் சிறைப்
பட்ட ஆண்டு விபவப் பெயரதே
- (விபவவருஷம்) - பண்டிதர் பாடியதாகக் கூறப்படும் இன்னொரு பாடலும் வாய்மொழியாக வழங்கி வருகின்றது. (மரங்களை) வேலியை மட்டமாக வெட்டும்படி சட்டம் போட்டாராம். வெய்யில் காலம் ஆனபடியால் மரங்கள் பட்டு விடும் என்று அவர்பாடிய பாடல் பின்வருமாறு :
‘வெட்டி நட்ட முட்கிழுவை மெத்த உயரமென்று மட்டமாய் வெட்ட ‘ம றைஸ் துரையும் - சட்டமாய் இட்டானே கட்டளையை இட்டபடி யாகிலிது பட்டுவிடும் பட்டுவிடும் பார் செந்நெறிப்பாங்கான இந்தப்பாடலும் வாய் மொழியாகவே வழங்கி வருகின்றது. (அச்சில்வெளி வந்ததோ தெரியவில்லை) அந்தப் பாடலை அரைவாய் மொழிப் பாடலாகக் கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது. புலவர் ஒருவராற் பாடப்பட்டு வாய் மொழியாக வழங்கிவரும் இத்தகைய பாடல்களை எந்த வகையிலே உள்வாங்குவது என்பது பிரச்சினையாகவே உள்ளது. இத்தகைய பாடல்கள் தேடித் தொகுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
கோடு பற்றியும் கோட்டு வழக்கு பற்றியும் சட்டத்தரணிகள் பற்றியும் அரைவாய்மொழிப் பாடல்கள்
பல யாழ்ப்பாணத்திலே பெருமளவு தோன்றியுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்கூறிலே நடந்த பெண்
கடத்தல் வழக்குப் பற்றிய விபரமான செய்திகளைக்
றிப்பிடும் கும்மிப் பாடல்கள் மிக அண்மைக்காலம் வரை யோதிபர்களிடையே வாய்மொழியாக வழங்கி ந்துள்ளன.
முற்றவெளி பறங்கித்தெரு கோட்டடி முற்றுஞ் சனங்களால் மூடியிருந்து பத்து நாள் மட்டும் விளக்கம் நடந்தது

Page 53
பாராத நூதனம் பாருமடி பட்டியிற் செம்மறியாடு நரிக்குப் பயந்து குனிந்து தலையைப் பதுங்கல் போற் கிட்ட விருந்த தரணி யொருத்தர் கெடிமண்ட வில்லையோ கேளுமடி (இப்பாடல் நூலை மகாவித்துவான் FXC நடராசா அவர்கள் உபகரித்தார்கள்)
மேற்படி பாடல் கல்லடி வேலுப்பிள்ளையாற் பாடப்பட்டது என்று கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்து அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளையும் வரலாற்றுச் செய்திகளையும் கூறும் கும்மிப் பாடலான உத்தியோகர்லசுஷ்ணக் கும்மியில் இடம் பெற்ற பாடல்களும் வாய்மொழியாக வழங்கி வருகின்றன.
உத்தியோகர்லசுஷ்ணக் கும்மியிலே இடம்பெறும் பிரபல கோட்டு வழக்கொன்றை இவ்விடத்திலே சுட்டிக்காட்டுவது நலம். 19 ஆம் நூற்றாண்டிலே பொய் மரணசாதன வழக்கு பற்றிய பல விபரங்களை இக்கும்மிப் பாடலினுாடு காணமு டிகின்றது. (இக்கும்மிப் பாடல் நூலையும் மகாவித்துவான் FXC நடராசா அவர்களே உபகரித்தார்கள்) குருக்கள்மார் பட்சத்தி லாதனத்துக்காகக் கூல் அப்புக்காத்துத் தொடுத்த பொய்ச்சாதன வழக்குப்போல் முன்னுமறிந்த துண்டோ வந்த வழுவை நீ பார்பின்னே ஞானப் பெண்ணே
கூல் அப்புக்காத்து குழப்பத்தின் மேலே கொழும்பில் இருக்கும் சனங்கள் சகலரும் பேர்பெற்ற கள்ளர்தான் யாழ்ப்பாணத் தாரென்று பேசுகிறாரெடி ஞானப் பெண்ணே
மானம் மருங்கு பணங்களும் போச்சுது மறிய லிருக்கத் தலையில் விதியாச்சு ஈனமல்லோ வேழைப் பார்ப்பார் பணத்துக் கிவராசைப் பட்டது ஞானப் பெண்ணே இத்தகைய பாடல்கள் பல இன்றும் யாழ்ப்பாணத்தில் வாய்மொழியாக வழங்கி வருகின்றன. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப இக்கும்மிப் பாடல்கள் சிலவற்றை முதியவர்கள் கூறுவதை இக்கட்டுரையாசிரியர் சிறிது காலத்துக்கு முன்னர் (1977 - 78) நேரடியாகவே கேட்டுள்ளார்.
உத்தியோகலசுஷ்ணக் கும்மியைப் பாடியவரின் பெயரை அறியமுடியவில்லை. கொக்குவில் கிழக்கு m.s. துரை என்பவர் 1936 ஆம் ஆண்டு சோதிடப் பிரகாச யந்திரசாலையில் இதனை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு வகையான அம்சங்களையும் இந்நூலினுாடு கண்டு கொள்ளலாம்.
19ஆம் நூற்றாண்டிலே வேகமாக பரவிய 'கொலரா என்னும் நோய் பற்றியும் அரைவாய்மொழிப் பாடல்கள் பல

ជាចាញ់
\ 53
தோன்றின என அறியமுடிகின்றது. கொலரா நோயைக் கோதாரிக் கழிச்சல் என்றே அக்காலத்தில் யாழ்ப்பாணத்தவர் அழைத்தார்கள். கோதாரிக் கழிச்சல் நோய்தீர வேண்டு மென்று இறைவன் மீதும் பிரபந்தங்கள் கீர்த்தனைகள் எழுந் தமை குறிப்பிடத்தக்கது. வல்லிபட்டிகுமாரசுவாமி முதலி யார் கொலரா நோய்பற்றி ஒரு கீர்த்தனை நூலை எழுதினார். நாம் அந்நூலை (1977) சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் இல்லத்திலே பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று எங்கு தேடியும் அந்த நூலைப் பெற முடியவில்லை என்பது கவலை தருவதே.
யாழ்ப்பாணப் பிரதேசதத்திலே வெய்யில் காலங்களில் (அக்காலத்தில்) சிரங்கு என்னும் தோல் நோய் ஏற்படுவது வழக்கம். சிரங்கு நோய் பற்றியும் சில அரைவாய்மொழிப் பாடல்கள் எழுந்துள்ளன. இன்றும் யாழ்ப்பாணப் பகுதியில் வழங்கி வரும் சிரங்கு பற்றிய அரைவாய்மொழிப்பாடல்
ஒன்றைச் சுட்டிக்காட்டலாம்.

Page 54
கலைக்கேசரி கி 54
'சிரங்கப்பனாரே - குஷ்ட
ராஜன் பெற்ற செல்வக் குபேரா
அகங்கைக்கும் புறங்கைக்கும்
அழகான முழங்கைக்கும்
சொறியச் சொறிய நல்ல
சுகத்தைத் தந்தாயே - சிரங்கப்பனாரே
(தகவல் - மன்னவன் கந்தப்பு)
இப்பாடலை நாடகக் கவிமணி எம்.வி.கிருஷ்ணாழ்வார். இயற்றினார் என்று கூறப்படுகின்றது. கிருஷ்ணாழ்வார் சிறந்த கவிஞராக, கலைஞராகத் திகழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பாடல் நாடக மேடைகளிலே இடைப்பிறவரலாகப் பாடப்பட்டதோடு துண்டுபிரசுரமாக அச்சடித்து வழங்கப்பட்டது என்றும் அறியமுடிகின்றது.
மலேரியா, சின்னமுத்து, கொப்புளிப்பான் முதலான
நோய்கள் பற்றியும் அரைவாய்மொழிப் பாடல்கள் பல இப்
 

பிரதேசத்திலே தோன்றி மறைந்தன என்பதும் மனங் கொள்ளத்தக்கது.
சமூக சீர்த்திருத்தத்தை வலியுறுத்தும் வகையிலே யாழ்ப்பாணப் பிரதேசத்தில் அரைவாய்மொழிப் பாடல்கள் பல தோற்றம் பெற்றுள்ளன. குறிப்பாக மது விலக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாடு பொருளாக அரைவாய்மொழிப் பாடல்களிலே இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மக்கள் கூடும் இடங்களான திருவிழாக்கள், சந்தை, கடைத்தெரு முதலான இடங்களிலே, பிரசார நோக்கில் மது விலக்குப் பற்றிய பாடல்கள் பாடப்பட்டன எனக் கூறப்படுகின்றது. மது விலக்குப் பற்றிய பாடல்கள் செந் நெறி இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரைவாய்மொழிப் பாடல்கள் நகைச்சுவை கிண்டல், கேலி, நையாண்டி முதலிய பண்புகளைக் கொண்டமைவதையும் அவதானிக்கலாம். சிறப்பாக மதுவிலக்குப் பாடல்களிலே இத்த்கைய் பண்புகள் மேலோங்கிக் காணப்படுகின்றன எனலாம். வட மராட்சிப் பகுதியில் இன்றும் வழங்கி வ்ரும் அரைவாய் மொழிப்பாடலொன்று பின்வரமாறு : "
'சோக்கான தென்னங்கள்ளு சொக்க வைக்கும் எந்தன்கள்ளு சோதிச்சுக் குடிச்சுப் பாக்க வாருங்கோ நயினார் - உங்களைச் சூறையாட்டி விழுத்தாவிட்டால் பாருங்கோ நயினார் கொப்பாட்டன் பாட்ட னெங்கள் கோந்துறுவும் மாந்துறுவும் தப்பாமல் சீவிப்புகழைத் தாவினோம் நயினார் இப்போதும் எங்களுக்குப் பெயர் ஏற்றம் தான் நயினார்’ (தகவல் - மன்னவன் கந்தப்பு) இப்பாடலை நாடகக்கவிமணி எம்.வீ. கிருஷ்ணாழ்வார் இயற்றினார் என்று கூறப்படுகிறது. இப்பாடல் நாடக மேடைகளில் இடைப்பிறவரலாகப் பாடப்பட்டுப் பின்னர் வாய் மொழியாக வழங்கிவருகின்றது. நாடகத்திற்கு அடிக்கும் நோட்டீஸுகளின் பின் பக்கத்தில் இப்பாடல் அச்சிடப்பட்டிருந்ததென்று முதியவர் ஒருவர் கூறினார். மக் கள் விரும்பிக் கேட்கும் அரைவாய்மொழிப் பாடல்கள் நாடக விளம்பர நோட்டீஸுகளின் பின் பக்கத்தில் அச்சிட்டு விநியோகிக்கப்படுவதும் வழக்காறாக இருந்துள்ளது. அரைவாய்மொழிப் பாடல்களின் நிலைபேற்றுக்கு நாடகமே டைகளும் களனாக அமைந்தன எனக் கருதலாம்.
- தொடரும்

Page 55
Ļ9190 's@gjų9şos@@@rıņ@71? qıhn@os19 --Ido10@coog? 119orgioso qission quoqolig 七闽因mg@499习自un900习唱因坦自治 1949mgank Q9函é過üggPug過un ĢooĝGI@o sąsg)Ģ Ģ9ų9æųoĝo mųĵo) @ņIIGI IỆTI@@ poloog) spoos?-19íh 」「ngggsTQ191ņ91||RoŢI1911099-00)
bog os@osoɛɛ *@ ‘oss ogsè|
的自信函 @Two@die loạılmoidesnis sąjæIG 1909goslobo Ģĝiĝuogo sąžuos@ın sooĝơ1@o sąs@gi-Tysogi @so snugis) 'q1@ligầgsg)ơi gầgigigo @@ @@@@@@e Į9org/~es 1ņ9€1098) őiune) sıfmısı QoriųGIỮg) IIGeg) ee) .morg/~ilo 119ootooɓ9đì sẽ giố gầgi@ 119&susiąjo ‘riqi@ēlog) ‘quo@qje “úlsē9ĝIG’ ‘Q9190ų9190
uogoT uoņɔɔŋold ouep uns pəɔue^p\! os sousuoņoT Åpog Åsneæg seque H oslaus
oog og so ooooo@'oss og?
os@@jųosog), qimnosoz), og? 'oog ogÈ soos ogsè ņuonuori qimmoo@nooportolo) loogi mos dios@go 19ų9-a Q9ĝĝ01@e qølgĒĢĻsını'q1@10.109@11e ĝqiqiyo @@ @? s@qiųTu@0 spoloog) őılıne, quomo sumno sąjno@sourig) hljóIstoe) qi@riĝiso Q9ơng) isos LLLS0r LKKKLL LLLL LLLLL LLLL YLLLLSK ZLLLLLYYLLL L0Y Inıī£ ©ile fiņ01@ņ1@ 109 umgogo@jm@ @@@@jis spoloog) possung).Lalog) loog) ee)
uoņ01 ssəuused ossousuoņOT ou osoquos os sous
*** TỊnųossumos qosmosiologogo| | Tugoliolo sposòŋɔ sɔdɔgɔɖo sɔsolossuntoņođò poigrē
 
 
 
 
 

sau, suollows:lleu, 8,9998;/zoolozi 10 soloesquelo) 'euronseq.opeos. Apues ploos/80: “Q11||Md].opsyllaWS000IHHS 0011010$0|10|1900 +$puis211110)\, ·oos os@soooo *@ ‘oos os@oaes os@osoɛɛ *@ "oog og?·
"Noĵipologijos@ırı moodido 19@ 1ņ9ĝĢ01@o 617 fmbo? sự9@ sąjælē qıfmı909gogio)? qitnogoșđDI@ @ĝilo Ģdoğ01@e os@mloņITIG @I e I1909110] @jo spoloog) IIúrtog) loog)19 1109980
uoņ01 edoA oosv ossousS
os@@jųos?ņ90 m-igornaldolgogle) sąžuos@ırı moodidoņ9@gŘÍÐ posson@o sīļņ990-II-as oligionsg) igo-Thomsofi Q9ĘĘơng De sooloog) sąlygınlıúgọ19Ųnılgı: 1098) ee)
uoņ013ulsųnnslow olsaus
o aes ogÈ sogg •@ ‘oos os@
"Noĵiĝosĝosĝ@rı@điło musųogię, !pgsql-a sąs@g mgogęsgods) !pgsqjais) e osso ooooooooooi oos@@jųososmoso mondonesiune) gầdoğal 6171@sms@sh loogi moodidolgogữ gầqïsos-a白的雪白的6,u9Q9的函l09的過強恩Q9g過üg| Ipoloģ01@o sūņ9e07-as Iso-Thomsoft qosoq qi@e@T9明leun@ @PI的過q白的 @過低的函6。 os@imollstos@@gi spoloog) somitos poloņ19 JQ99)詞。*1ņ9-Thomsofi Qogi@sosos| £0 mĘPĘI-io (əuoɔļųļauĮG). 1911??)$$g10-109Gio:Do 19911098)ốlurie) mosgi ilo T13)||1919 ||
3 golgi-i-Iso solosurtos@@gi pollosg) őıllne) uoņoT ɔAĻA38 upIS ossous
田 直9km그녀l들평9 uCeg}98 m용5편그k部, Q9üm學部 Zıņ9ơsfē ‘ọ9ựmfē urī1889180 - 1991-IIae |
'qılısı19ų91.gooogof hipofi) osoɛ ‘ao ‘osť oso’oei oso uoņoT Åpog o usuen||A. oslaus @@@oņITŲīgi Oz-çI ©ąjąĞroling) Ọ9Țn

Page 56
கலைக்கேசரி கி
காலத்தை வென்று நி 6ாளிய
மிழர்களின் நாட்டுப்புறக்கலைகளில் இதிகாச நிகழ்வுகளை உணர்த்தக்கூடிய கலைகள் ஏராளம் உண்டு. அவற்றில் முக்கியமானது காளியாட்டம். 21ஆம் நூற்றாண்டில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு காளியாட்டம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் அதைச் சார்ந்துள்ள கும்பகோணம், ஆடுதுறை, திருப்புவனம், திருமங்கலக்குடி, திருவிடைமருதூர், சாத்தனூர், அம்பாசமுத்திரம், தேப்பெருமாநல்லூர், திருப்பனந்தாள் முதலான ஊர்களிலும், திருச்சி மாவட்டத்தில் கீழ்ப்பமூர், கோடாலிக் கருப்பூர், பூரீபுரத்தான், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், ஆகிய ஊர்களிலும் சித்திரை, வைகாசி மாதங்களில் நடக்கும் கிராம கோவில் திருவிழாக்களில் காளியாட்டம் தவிர்க்கமுடியாத நிகழ்வாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனைய பிற மாவட்டங்களில் கிட்டத்தட்ட இது வழக்கொழிந்து போய்விட்ட நிலையில்தான் இருக்கிறது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கோவில் திருவிழாக்களில் காளி வேடமிட்டு ஆடக்கூடிய சிவபாலனை சந்தித்து காளியாட்டம் பற்றிய
தகவல்களைச் சேகரித்தோம். 'காளியாட்டம் என்பது வழிபாடாகவோ அல்லது பொழுதுபோக்கினை அடிப்படையாகக் கொண்டோ தோன்றியிருக்கலாம்
இதற்கு காளிவேடம், காளி திருநடனம், காளி வீதிஉலா என
பிற பெயர்களும் உண்டு’ என்கிறார்.
 

ற்கும் கிராமியக் கலை jSteuö
"கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் தவறாமல் இடம்பெறுவது மகாபாரதக் கதை. இதை வில்லுப்பாட்டு மூலமாகவோ கனியன்கூத்து மூலமாகவோ அந்தந்த ஊர் வழக்கப்படி செய்துவருவர். இந்தக் கதை நிகழ்த்தப்படும்போது அர்ஜூனன் மகனாகிய அரவானைக் காளிக்குப் பலி கொடுக்கும் நிகழ்ச்சி தொடங்கும். அந்தப் பலிகொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஆண் ஒருவர் காளி வேடமிட்டு ஆடிக்கொண்டே ஊரைச் சுற்றி வருவார். பார்ப்பதற்கு உண்மையான காளி தேவியைப் போன்றே காட்சியளிக்கும் அவர், தலையில் கிரீடம், கண்களில் வெள்ளியிலான கண்மலர், கழுத்தில் நீண்ட மாலை, கையில் உடுக்கை, கத்தி, சங்கு போன்றவற்றுடன் தலைவிரி கோலத்துடன் செந்நிற முகத்தில் வாய்க்கு வெளியே வெண்ணிறக் கோரைப் பற்கள்நீட்டிக் கொண்டிருக்க தொங்கிய நாக்கும், பெருத்த மார்போடும், சிவப்பு அல்லது பச்சைப் பட்டுச் சேலை உடுத்திய காளிதேவியாக வருவார். இக் காளி தேவியை ஒருவர் கயிற்றால் இடுப்பில் கட்டிப் பின்புறமாகப் பிடித்துவருவார். காளிக்கு முன்னர் கத்திச் சண்டையும் சிலம்பாட்டமும் நடைபெறும். இந்தக் காளியாட்டத்தில் பச்சைக் காளி, சிவப்புக் காளி என இரு பிரிவுகளும் உண்டு.
கிராமத்தில் பேய் பிடித்து ஆட்டும் பெண்கள் காளிதேவியாக வலம்வரும் இவரை வணங்குவர். அப் பெண்களைத் தன் கையில் வைத்திருக்கும் துடைப்பத்தால்
அடிப்பாள் காளிதேவி. இவ்வாறு அடிக்கும்போது

Page 57
பெண்களுக்குப் பிடித்திருக்கும் பேய் விலகிவிடும் என்பது மரபு. ஆனால் இன்றைய கம்பியூட்டர் காலத்தில் அந்த நிலையெல்லாம் மாறிவிட்டது’ என்கிறார் சிவபாலன்.
இன்று காளியாட்டம் என்பது ஒரு சடங்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டு காலத்தில் காளியாட்டம் வேறுவிதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதாவது காளியாட்டம் நிகழ்த்தப்படுவதற்கு முன்னர் 25 அடி நீளத்திற்கு மிகப்பெரிய அரவான் உருவத்தை மண்ணால் படுத்திருப்பது போல் செய்வர். படுத்திருக்கும் அரவான் உருவத்திற்குப் பக்கத்தில் மிகப்பெரிய காளிதேவியின் உருவமும் செய்யப்படும். பொதுவாக கோயிலின் முன்பகுதியிலேயே இந்த உருவங்கள் செய்து வைக்கப்படும். கோவில் பூஜை தொடங்கும்போது காளிதேவியின் உருவத்திற்கு முன்பாக கோழி ஒன்றைப் பலி கொடுப்பர். பின்னர் அரவான் உருவத்தின் மேல் பூசணிக்காய் ஒன்றை வைத்து அதைத் துண்டாக வெட்டி எறிவர். கோவில் பூசாரி துரோபதையின் வேடமிட்டு அரவானைச் சுற்றிவந்து ஒப்பாரி வைத்து பாட்டுப்பாடி மார்பில் அடித்துக்கொண்டே அழுவார். இதுதான் பண்டைய தமிழ் கிராமத்துக் கோவில்களில் முக்கிய அங்கம் வகித்தது. அதன்பிறகு நாளடைவில் மெல்ல மெல்ல இந் நிகழ்ச்சி காளிவேடமிட்டு ஆடும் நிகழ்ச்சியாக மாறியிருக்க வேண்டும்’ என முந்தைய கால காளியாட்டத்தைப் பற்றிக்கூறும் சிவபாலன் பரத நாட்டியத்தை முறையாகக் கற்றவர்.
 

基
57
சினிமாவிற்குப் பாட்டெழுதி மீண்டும் @ଏ5 கண்ணதாசனாக மாறிவிட வேண்டும் என்பதுதான் சிவபாலனின் சின்னவயது ஆசை. அதற்காகவே கம்பனையும், வள்ளுவனையும், சித்தர்களின் பாடல்களையும் நூலகங்களில் தேடிப்போய்ப் படித்து தன் கவித்திறனை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் விதி வலியது. எல்லாமே தலைகீழாகிப்போனது. இன்று காளி வேடமிட்டு திருவிழாக்களில் ஆடிக் கொண்டிருக்கிறார். பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்ட சிவபாலன் காளியாட்டத்திற்கு எப்படிமாறினார்? அவரிடமே கேட்டோம்.
'ஒருமுறை நண்பர் ஒருவரிடம் கடன் வாங்குவதற்காகச் சென்றிருந்தபோது, ‘என்னுடன் வா.சின்ன வேலை ஒன்று தருகிறேன். அதற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள் என்றார். அந்த நண்பரின் பெயர் ஜானகிராமன். அவரின் தொழில்தான் கோவில்களில் காளி வேடமிட்டு ஆடுவது. அவர் எமக்குக் கொடுத்த வேலை, எந்த ஊருக்கு அவர் காளிவேஷம் போடச் செல்கிறாரோ அவருடன் நானும் செல்லவேண்டும். காளி வேஷம் போடுவதற்குத் தேவையான பொருட்களை மூன்று பைகளில் சுமந்து சென்று வேஷம் போடும்போது அவருக்கு உதவியாக இருக்கவேண்டும்.
முதன் முறையாக இருபது கிலோமீட்டர் தொலைவிற்கு
அப்பால் உள்ள கிராமத்தில் இரவு நேரத்திருவிழாவிற்கு
எம்மை அழைத்துச் சென்றார். மறைவான இடத்தில்

Page 58

வைத்து காளி வேஷத்தைப் போட ஆரம்பித்தார். அவர் சொல்லச் சொல்ல ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொடுத்தேன். அந்த வேஷத்தைப் போட்டு முடிக்கவே மூன்றுமணி நேரத்திற்கும் மேல் ஆயிற்று. அன்றைய தினம் நடு இரவில் அவர் காளிவேஷமிட்டு ஊர்கோவிலில் ஆடியதைப் பார்த்த போது, நானே பயந்து போனேன். பணத்தேவையின் காரணமாக அவரோடு பல மாதங்கள் உதவிக்குச் சென்றேன். இதனால் அவர் எப்படி வேஷம் போடுகிறார், எப்படி ஆடுகிறார் என்பதை நேரிடையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஒருநாள் அவருக்கு உடல்நலக் குறைவு. அன்றைய தினம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தின் கோவில் திருவிழாவுக்கு காளிவேஷமிட்டு ஆடுவதற்கு முன்பணம் வாங்கியிருந்தார். அவரால் இயலவில்லை. "சிவபாலா. நான் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறேன். போய் ஆடாவிட்டால் ஊர் மக்களை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். என்ன செய்யலாம்? என்று என்னிடம் கேட்க, நான் போய் ஆடிவிட்டு வரட்டுமா?' என்று பதிலுக்கு நான் சொல்ல, அவரும் துணிச்சலாகச் சம்மதித்தார். பரதம் கற்றிருந்த எனக்கு காளிவேஷமிட்டு ஆடும்போது பரத நாட்டியத்தின் நாட்டிய பாவனைகள் எளிதாகக் கைகொடுத்தன. அன்றைய தினம் எமது ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது. நான்தான் காளிவேஷமிட்டு ஆடுகிறேன் என்பது தெரியாமலேயே நான் கடன் வாங்கியிருந்த பலரும் எனது ஆட்டத்தை ரசித்தனர். அவர்களோடு எமது தந்தையும் நின்றிருந்தார். இப்படித்தான் எனது கவிஞர் கனவு காளியாட்டமாக மாறிப்போனது' என்றபடியே காளிவேடம் போடுவது எப்படி என்பதை நம் முன்னே நிகழ்த்திக் காட்டினார்.
வேஷம் போடுவதற்கு முன்னர் காளியை நினைத்து அரைமணி நேரம் தியானம் செய்ய ஆரம்பித்தவர், அதன்பிறகு செந்தூரத்தால் ஆன பச்சை வண்ணத்தை உடலெங்கும் பூச ஆரம்பித்து, படிப்படியாக காளிதேவியாக மாறுவதற்கு மூன்றரை மணிநேரம் ஆயிற்று. உண்மையாகவே மேலுலகில் இருந்து பத்திரகாளியே நம் முன் காட்சி தந்ததைப் போல் அவதாரம் எடுத்திருந்த சிவபாலனுக்கு தேங்காய், பழம் படைத்து கற்பூர ஆரத்தி 麟 க்கலாம் போலிருந்தது எமது மனநிலை.
/இந்தக் காளிவேடம் தஞ்சை மாவட்டப் பகுதிகளில்தான்
கவும் பிரசித்தம். மரத்தில் செய்யப்பட்ட ஆறு கைகள், அவற்றில் வாள், சூலாயுதம் ஏந்தியபடியே கோவில் திருவிழாக்களில் ஆடுவது மகத்தான விடயமும்கூட. பொதுவாக காளிவேடம் போடுபவர்கள் எந்தக் கோவிலுக்காக காளிவேடம் போடவேண்டுமோ, அந்தக் கோவிலுக்கு காப்பு கட்டிய நாள்முதல் விழா முடியும் வரை விரதம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். நம் தமிழகத்தைப் போன்றே கேரளாவிலும் காளிதேவி வேடமிட்டு ஆடும் விழா நடைபெறுகிறது. சென்னையில் சிவபாலன் மட்டுமே தற்போது காளி வேடமிட்டு ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 寫 ஆர். ஜி.

Page 59
Var Merrn ,
WWWyar
மேலதிக தகவல்களுக்
 
 

Connect with Jaffna
mann.Ik
R --94-773-186-987

Page 60
கலைக்கேசரி கி 60 ry flu fi
 

கொழும்பு நூதனசாலையின் கலாசாரப் பகுதி
ழும்பு நூதனசாலையானது அன்னியர் கெ ITஆட்சிக்கால கட்டத்தில் அஃதாவது கி.பி 1877 ஆம் ஆண்டளவில் அரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தேசாதிபதி பூரீ வில்லியம் கிறகறி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூதனசாலை ஐம்ஸ் சமிந்தார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த நூதனசாலை 1942 ஆம் ஆண்டு பி.சி.பி. திறனியகலை என்பவரின் முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் தேசிய அந்தஸ்துப்பெற்ற ஓர் உயரிய கலைக்கூடகமாக விளங்க வித்திடப்பட்டது.
இந்நூதனசாலையில் சரித்திர கலாசார தேவைக்கு அமைய 1967 தொடக்கம் 1973 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பல வரலாற்றுச் சின்னங்கள், தேசிய மரபுரிமைச் சின்னங்கள் என்பன அருங்காட்சிக்காக
வைக்கப்பட்டுள்ளன. யாவருக்கும் பயனுள்ள வகையில்
சரித்திர, வரலாற்று, பண்பாட்டு அம்சங்களை நினைவுகூரும் வகையில், காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளமையால் ஆசியாவிலேயே அதிசிறந்த அருங்காட்சியகமாக இன்று இந்நூதனசாலை
விளங்குகின்றது. ஏறத்தாழ முந்நூறுக்கு மேற்பட்ட அரும்பெரும் காட்சிப் பொக்கிஷங்கள், அம்சங்கள் செறிந்ததாகவும் மற்றும் விலங்கியல் சார் அம்சங்கள், சரித்திர ரீதியில் கூர்ப்பியல் சார், ஆய்வுக்கான அம்சங்கள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அருங் காட்சியகமாகவும், ஆய்வகமாகவும், இந்நூதனசாலை விளங்குகின்றது.
இங்கு பாதுகாக்கப்படும் இங்கு பாதுகாக்கப்படும் மரச் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற் சிற்பங்கள் மூலம் பண்டைக்காலச் சிற்பங்களின் பழைமையினை, அவற்றின் தொன்மையினை வடிவமைப்பினை, வழிபாட்டு நிலைப்பாட்டினை, நாம் இன்றும் அறிய முடிகின்றது. குறிப்பாகப் பண்டைய இந்து, மற்றும் பெளத்தமத வழிபாட்டுச் சின்னங்களின், பண்டைய மகத்துவத்தை உன்னதத்தினை வெளிப்படுத்தும் கேந்திர ஸ்தானமாக இக்கலையகம் விளங்குகிறது. இந்து மதச்சமய குரவர் நால்வருள் சுந்தர மூர்த்தி சுவாமிகள், அப்பர், திருஞானசம்பந்தப் பெருமான், ஆகியோரது சிற்பங்களை இங்கே காண முடிகின்றது. இந்து சமயத் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிச் சின்னங்கள், சிவன் பார்வதி உருவச் சின்னங்கள், எருது வாகனச் சின்னங்கள், நந்தி, மூவீக வாகனம், அக்கால வழி பாட்டில் இருந்தமை குறிப்பாகப் பொலநறுவை காலகட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்து சமயச் சின்னங்கள், இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர பலதரப்பட்ட நோய்களுக்கு என வடிவமைக்கப்பட்ட முகமூடிகள், பெளத்த மதச்

Page 61
சின்னங்கள், புத்த பிரானது பல வகைப்பட்ட சிலைகள், ஆகியவற்றை ஆங்காங்கே நாம் காணமுடிகின்றது. பண்டைய இசைக்கருவிகளின் தொகைகளையும், பண்டைய மக்களின் நாரிசை வாத்தியங்களான வீணை, தம்புரா, சங்கு, புல்லாங்குழல், தோல்வாத்தியங்களான மேளங்கள் என்பவற்றையும் இங்கே காணமுடிகின்றது.
பெறுமதிமிக்க ஒவியப்படங்கள், வரலாற்றுப் பெருமைமிக்கவை. தத்ரூபமான சித்திரிப்பு ஒவியப்
படங்கள், பிரமிக்க வைப்பவை. அவற்றுள் சில ஆன்மீகம்
சார்ந்தவையாகவும், சில பெளத்தமத ஜாதகக் கதைகளை எடுத்தியம்புபவையாகவும், மேலும் சில தேவர்கள் அணியாகச் செல்லும் அற்புத அலங்கார அலங்கரிப்புக் காட்சிகள் செறிந்தவையாகவும் காணப்படுகின்றன. இவை தவிர சிகிரியா, தம்புள்ள, பொலநறுவை, ஒவியங்கள் என்பன மிகவும் பிரமிக்க வைப்பவையாக விளங்குகின்றன. அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த g) GirGT55 விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த விளையாட்டுக் கருவிகள் பொருட்கள் என்பன இக்கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பண்டைய கால விளக்குகள், கூரைமுகப்பில் இருந்து தொங்கும் வேலைப்பாடு செறிந்த கலையம்சம் செறிந்த விளக்குகள், பண்டைய பயன்பாட்டில் நடைமுறை வழக்கத்தில் இருந்த மரத்தளபாடங்களான மேசைகள், கதிரைகள், அவற்றின் கலைத்துவம் செறிந்த மற்றும் தேவைப்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தவற்றை இந் நூதனசாலையினுடாகக் காணும் வாய்ப்பு கிட்டுகின்றது.
மரத் தளபாட அம்சங்களைக் கருத்தில் எடுத்து நோக்கும்போது குறிப்பாக மரத்தள பாடத்தில் உரிய வகையில், உயரிய முறையில் உயர்ந்த தர மரத்தில் செதுக்கப்பட்ட தேக்கு மரக் கப்புகள், கதிரைகள், மேசைகள், கட்டில்கள், வாசல் நிலைகள், ஒல்லாந்தர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட அலுமாரிகள், சிறிய பண்டச் சேமிப்பு அலுமாரிகள், என்பன இந்நூதன சாலையில்
பெரிதும் காணப்படும் சிறப்பு மிக்க அம்சங்களாகும்.
இலங்கையின் முதல் பிரதமரான டி. எஸ். சேனாநாயக்க அவர்களால் பயன்படுத்தப்பட்ட மேசைத் தளபாட நினைவுச் சின்னங்கள் அவரது வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய புகைப்படங்கள், அவரது தந்தை - தாயின் புகைப் படங்கள் என்பன காட்சிக் கூடங்களை அலங்கரிக்கும் வரலாற்றுப் பெருமை மிக்க பொக்கிஷங்கள் எனலாம். மேலும் முற்காலத்தில் சமூகமட்டத்தில் உயரிய அந்தஸ்து பெற்றவர் பயன்படுத்திய போக்குவரத்து ஊடகமான வண்டி என்பவற்றையும் கண்ணுறும் வாய்ப்பு எமக்குக் கிட்டுகிறது.
இவைதவிர பல வகைப்பட்ட ஆபரணங்கள் பண்டைய இலங்கையில் குறிப்பாகத் தென் இலங்கை மக்களால் பயன்படுத்தப்பட்ட ஆபரணங்கள் அவற்றின் கைப்பணி வேலைப்பாடுகளை வெளிப்படுத்துவதாக விளங்குகின்றன. கண்டி ராஜதானியின் கடைசி மன்னனால் பயன்படுத்தப்பட்டு வந்த சிம்மாசனம், இறுதியில் அதாவது அன்னியரால் சிறைப்பிடிக்கப்பட்ட போது மன்னனால்


Page 62
கலைக்கேசரி கி 62
 
 

அணியப்பட்டிருந்த இரத்தக்கறை தோய்ந்த உடைகள், கால்கள் வைக்க சிம்மாசனத்தின் கீழ் பயன்படுத்தப்படும் சிறிய மேசை, ஒலைகள், ஒலைச்சுவடிகள், அக்கால வழக்கத்தில், இருந்த சிறிய உபகரணங்களான கத்திரிக்கோல், கத்தி, என்பனவும், இலங்கையின் பண்டைய கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைச் செவ்வனே எடுத்தியம்புகின்றன. ஆபரண வகைகளில் பரவலாகக் கழுத்து அணிகலன்கள், நீண்ட கழுத்துச் சங்கிலிகள், தலை சீவ உதவும் சீப்பு, தோடுகள், சிங்கள மகளிர் பெரிதும் அணியும் சேலை அலங்கரிப்பு 'புறோச் வகைகள் என்பனவும் மற்றும் கைகளுக்கு அணியும் காப்பு வகைகள், மணிக்கட்டை ஒட்டிய கையணி ஆபரணமான பிறேஸ்லட், கால் விரல்களுக்கு அணியும் மெட்டிகள் போன்றன அணிகலன் வரிசையில் இடம்பெறும் ஆபரணங்களாகும். கண்டி கடைசி அரசனின் கிரீடமும் இங்குள்ளது. இவையாவும் 1815 ஆம் ஆண்டளவில் கண்டி இராசதானியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிரித்தானிய ஆட்சியாளரால் பிரித்தானியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் இலங்கையிடம் 1930 ஆம் ஆண்டளவில் ஒப்படைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
ஆயினும் அவற்றில் சில 1820 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் பொது ஏலத்தில் விற்பனைக்கு விடப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. கலைத்துவம் செறிந்த ஒர் அரும் பெரும் நூதனசாலையாக விளங்கும் தொன்மையான பித்தளையினாலான கலை அம்சம் நிறைந்த பொருட்கள், ஒவியம் தீட்டப்பட்ட மட்பாண்ட அம்சங்கள், ஏராளம். சரித்திர, சமய சமூக, சம்பிரதாயபூர்வமான கல்வெட்டுகள், இலங்கைச் சரித்திரத்தில் இடம்பெற்ற பலதரப்பட்ட நாணயங்கள், நூதனசாலையில் சிறந்த
வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்நூதனசாலையில் உல்லாசப் பயணிகளாலும், LID TIL 9F TGŐ) (GoNU) மாணவர்களாலும் கல்வித்துறைசார் ஆய்வுக்கும், ஆய்வாளர்களுக்கான ஆக்கங்களுக்கும்
உரிய வகையில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் காட்சிக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சரித்திர வரலாற்றுச் சின்னங்களை சீரிய வகையில் கண்ணுற்று வரலாற்றுச் சான்றுகளுடன் தமது அறிவினை மெருகூட்டி வளர்க்கவும் இந்நூதன சாலை பெரும் பங்காற்றி வருகின்றது. இந்நூதனசாலையில் சில அரும்பெரும் தொல் பொருள் கலையம்சங்கள் சில காலக்கிரமத்தில் கொழும்பு தேசிய நூதனசாலையில் இருந்து எடுக்கப்பட்டு தேசிய தொல்பொருள் நூதனசாலைக்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றமையும், இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு ஒரு பகுதியில் காணப்படும் நூதன சாலையின் நூலகம் தொன்மை வாய்ந்த பல தகவல்களை ஒருங்கே பெற்றுக்கொள்ளப் பூர்த்தி செய்யும் ஒர் தகவல் கூடமாகத் விளங்குகின்றது.*
- சுபாஷிணி பத்மநாதன்

Page 63
4 W. - s Secrets C Atv
Aloe
fOOlt C
For Feet
Heas Crack Prevents dry Speeds up C Relieves itch by cold weat A Erminates
foot odours
莓 5. | ● Visibly reduc
=}ଞ୍ଜି]] O legs
35ml : 140s, 80ml ; 250s
:
World Class Herbal Cosmetics made to Eu
GET ថាចាញចាំម៉ែភ្លែ DEL
Please complete the form given below, along with your Cheque/ (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.185 Te:+94-11-5322700/5738046 Fax:+94-11-5517773 For more details, please contact. Overseas Subscriptions Arju Local Subscriptions S. Sa
Online Payment: www.kalaikesari.com/Subscri
ORDER FORM : Title
First Nome
இ 絮蒿羲魏懿魏藏载籍
656O)6Oh Giff, as Nam ક્રિહિટ્ટિ Institution
Manager Subscriptions Apartmen Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, Street / Ro
e Sri Lanka. ow /City Tel: +94-11-5322783 /+94-11-5738046 Count Fax : +94-11-5517773 Country E-mail: subscription (akalaikesari.com AmoUni Ei
Cheque should be drawin in favour of Mode of p
E Ν lom) (Pvt) Limi 鲁
xpress Newspapers (Ceylon) (Pvt) Limited Online Pa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

X39 ES CT603A
& Legs
el renewal liness caused ther npleasant
es dry skin
ropean recognized GMP & ISO standard
| , SSSR
IVERED TOYOUR HIOME
Money Order written in favour of 'Express Newspapers „Grandpass Road, Colombo 14, Sri Lanka.
n-on arjun(a)expressnewspapers.net/Mobile:+94777 801034 ndrasegar – +94 77 5359106 / +94 - 11 - 5322783
ption
: Mr. Mrs. / Miss Dr. Prof.
LLLLLYYLLLYYLLLLLL0LLLLLLLLS0000000LSL0000S0L0000000z000z0000zY00L000C00LCLCCCC000000LLL00LL0000LLLLLL0
A p LLLSYYSSYYYYYSYC00SYY0YYS 00 0 00SC0 SCS Y00LSL LSSLLLLLSSLLLS 000L Y 0C L CLC CCY00SY00YY0000Y0S0Y00SY0L 0S00SS00S000S0L LLLL0LL0S
SLS00S00SSSYS0S0SC LLSCCLCCCYC 00 CCLL CSSCC 00000 CL L LCLS () в 84 в 8 ко вва S0000 Y 0L00 0L0 000Y00YY00SS0000S00LSS0SSSLSSL0000SLLLS
SłOłe
Y0Y0000S S0000000SY00S0000C000C00 CCCCCC C000S00L0Y0SC0000Y00S0000C0L0 S LL0SLL0YLSLL00S0SYJE0E0SL0E ф + + + {}} {}} {0, «», «», «», «», «» ()
势游沙抄》沙沙#*》、**************鲁************鲁 Y0Y00L00000L00S C00YC00S 0L L0 0000000LL000LSY000L000000LL00L00L0S
closed 12 / 6 issues
dyment heque Money Order
/ment : www.kalaikesari.com/Subscription

Page 64
56DSDö5 (Bö5öFrq Ak 64 ஆளுமை
இந்துபோர்ட் இ செறிந்து பரந்த கல்வி
ரித்தானிய ஆட்சியின் சமூக விளைவுகள் தமிழர் L9) கல்வியின் 'மீட்டுருவாக்கத்துக்கு இட்டுச் சென்றன. அந்த மீட்டுருவாக்கம் பண்பாட்டு வேர்களோடு ஆழ்ந்து தொடர்பு கொண்டும் அதேவேளை நவீனத்து வத்தை உட் கொண்டும் மேலெழுந்தது. அவ்வகையிலே தோற்றம் பெற்று எழுச்சி கொண்ட ஒரு கல்வி நிறுவன அமைப்பே இந்துபோர்ட் என்று அழைக்கப்பட்ட சைவ வித்தியா விருத்திச் சங்கம். இந்து போர்ட்டின் எழுச்சியும் வளர்ச்சியும் எஸ்.இராசரத்தினம் அவர்களின் ஆளுமை உடனும் வினைப்பாடுகளுடனும் தொடர்புபட்டு இருந்தமையால் அவரது பெயருடன் இந்து போர்ட்டும் இணைக்கப்பட்டு பொதுமக்களிடையே வழங்கி வரலாயிற்று.
இந்து போர்ட் இராசரத்தினம், மனேச்சர் இராசரத்தினம், பயில்வான் இராசரத்தினம், கிறிக்கெட்டர் இராசரத்தினம், அப்புக்காத்தர் இராசரத்தினம், பள்ளிக் கூட இராசரத்தினம் எனப் பல பெயர்கள் அவர் தொடர்பாகக் கிராமங்களில் வழக்கில் இருந்தன.
வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஊட்டம்,
விடுதலைப் போராட்டச் சூழலிலே கல்கத்தாவிலே கற்றுப்
 

ராசரத்தினமும் பிச் செயற்பாடுகளும்
பேராசிரியர் சபா. ஜெயராசா பட்டம் பெற்ற அனுபவங்கள், ஆசிரியராக இருந்து திரட்டிக் கொண்ட பட்டறிவு, சட்டம் பயின்று 'அப்புக்காத்து ஆகிப்பெற்ற பயிற்சி இலங்கையினுடைய சட்டசபையின் யாழ்ப்பாணம் மத்திய தேர்தல் தொகுதியின் உறுப்பினராக இருந்து திரட்டிக் கொண்ட ஊடாட்டங்கள், அக்காலத்தைய கல்வி முறைமை தொடர்பான பட்டறிவு முதலியவை அவரது ஆளுமையிலும், வினைப்பாடுகளிலும் பன்மைப் பரிமாணங்களைத் தோற்றுவித்தன.
இந்துக்களுக்கெனத் தனியான ஒரு கல்விக் கட்டமைப்பின் வரலாற்றுத் தேவை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் கூற்றிலும் இருபதாம் நூற்றாண்டின் முற் கூற்றிலும் எழுச்சிகொண்டது. ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன் அவர்களால் தனி நிலையிலே மேலெழுந்த அந்தத் தேவை சைவ வித்தியாவிருத்திச் சங்கம் என்ற நிறுவன அமைப்பாகப் பின்னர் படிமலர்ச்சி கொண்டது.
நிறுவனமாக்கல், முகாமை செய்தல், தரமுயர்த்துதல், உதவி நன்கொடை பெறல் முதலியவை கல்வியில் உட்புகுந்த காலகட்டத்தில் சைவ வித்தியா விருத்திச் சங்கம் 1923 ஆம் ஆண்டிலே கால்கோள் ஆனது. அதன் முதலாவது அமர்வுக்கு சேர் பொன். இராமநாதன் தலைமை தாங்கினார். அன்று இணைந்து கொண்ட இராசரத்தினம் அவர்களின் பணிகள் பின்னர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்ற லோடு தொடர்ந்தது.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலே பாடசாலைக் கல்வி முறைமை மூன்று தளங்களிலே செயற்பட்டு வந்தது. அவை
1. தாய் மொழிப் பாடசாலைகள் 2. தாய் மொழியும் ஆங்கிலமும் இணைந்த இரு
மொழிப் பாடசாலைகள் 3. ஆங்கிலப் பாடசாலைகள் இந்து போர்ட் இராசரத்தினத்தின் செயற்பாடுகள் முதல் இரண்டு வகையோடும் இணைந்ததாக அமைந்தன. தனித்து ஆங்கில மொழிவாயிலாக இணைந்த கல்வி இந்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் அந்நியமாகி நின்றமை அவரது கவனத்தை ஈர்த்தது.
பிரித்தானியாவில் வளர்ச்சி பெற்று வந்த மானிட வாதம், தாராண்மைவாதம், தொழிற் கட்சியினர் முன்னெடுத்த மக்கள் மயப்பாட்டு நடவடிக்கைகள் முதலியவற்றைத் தாம் பெற்ற ஆங்கிலக் கல்வியினூடாக அறிந்து கொண்ட இராசரத்தினம் அவர்கள் அவற்றைத் தமது வினைப்பாட்டுக்குரிய கருத்தியலுடன் இணைத்துக் கொண்டார்.
அதன் பிறிதொரு சமூக விரிவாகக் கலவன் (Mixed) பாடசாலைகள் என்ற அமைப்பு வளரத் தொடங்கியது. அதாவது ஆண்களும் பெண்களும் இணைந்து கற்கும் ஒரு புதிய மாதிரிகைத் தோற்றம் பெற்றது. கிராமப்புறத்துப்

Page 65
பெண் கல்வி விரிவாக்கத்துக்கு அந்த அமைப்புப் பெருமளவிலே கைகொடுத்தது.
கல்வியில் நவீனமயமாக்கல்' என்ற செயற்பாடு சைவ மரபோடு இணைந்து ஆறுமுக நாவலர், சேர்.பொன் இராமநாதன் முதலியோரால் முன்னெடுக்கப்பட்டது. அதாவது மரபு வழியான திண்ணைப் பள்ளிக்கூட மரபிலிருந்து பாடசாலை முறைமைக்குத் தாவியமை நவீன மயமாக்கலோடு இணைந்த கல்விச் செயற்பாடாகும். அதனை பரந்த அளவில் முன்னெடுத்த வினைப்பாட்டை இராசரத்தினம் அவர்கள் மேற்கொண்டார்.
நவீனமயமாக்கலின் ஒரு பரிமாணம் கல்வியைத் தொழில் பெற்றுக் கொள்வதற்குரிய கருவியாக்கலாகும். ஆங்கிலக் கல்வி எழுதுவினைஞர் தொழிலைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய நேரடிவாய்ப்பை அக்காலத்திலே பெற்றுக் கொடுத்தது. தமிழ்மொழிக் கல்வி தமிழாசிரியர்களாக மாறும் வாய்ப்பை வழங்கியது. இராசரத்தினம் அவர்கள் கிராமங்கள் தோறும் பாடசாலைகளைத் திறந்தமையால் தமிழ் ஆசிரியர்களுக்கு உரிய தேவையும் பெருக்கமடையத் தொடங்கியது. கல்விக்கும் தொழிலுக்குமுள்ள இணைப்பு இலங்கையிலே மத்திய தர வர்க்கம் என்ற புதிய சமூக வகுப்பின் தோற்றத்துக்கு இட்டுச் சென்றது.
மத்திய தர வர்க்கம் இரு பக்கச் செயற்பாடுகளைக் கொண்டதாக மேலெழுந்தது. ஒரு புறம் பழைமைகளுக்கு மதிப்பளித்தல், மறுபுறம் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்குரிய புதுமைகளை உள்வாங்கல் என்பவை கல்வியால் இசைவியக்கம் பெற்ற மத்திய தர வகுப்பினரிடத்துக் காணப்பட்டன. அதன் ஒரு பரிமாணமாகத் தீண்டாமை ஒழிப்பிலே அவர்கள் ஆர்வம் காட்டினர். இந்திய விடுதலை இயக்கம் மற்றும் தமிழகத்தில் மேலெழுந்த சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றின் செல்வாக்குகளும் அவர்களிடத்திலே காணப்பெற்றன. மார்க்சியத்தின் செல்வாக்கும் ஒரு சிலரிடத்தே மேலோங்கியிருந்தது.
மேற்கூறிய சமூகவிசைகளை உள்வாங்கிச் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தை இயக்கிமை இராசரத்தினம் அவர்களுக்குரிய தனித்துவமாயிற்று. மேலோர் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது தாழ்த்தப்பட்டோர் என்போருக்கம், நலிவுற்ற நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டோருக்கும் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினர் பாடசாலைகளிலே கற்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டன.
இராசரத்தினம் அவர்கள் பிரித்தானியாவில் இயங்கிய அனைத்து அடக்கற் பாடசாலை முறைமைபற்றி அறிந்திருந்தமை அவரது பாடசாலை அமைப்புச் செயற்பாடுகளில் இருந்து தெரியவருகின்றது. தெரிவு முறைமை அன்றிக் கற்க வருவோர் அனைவருக்கும் கல்வி வழங்குதல், ஏட்டுக் கல்வியை நடைமுறைகளோடு தொடர்புபடுத்துதல் தொழில் கல்வியையும் அணைத்து

& கலைக்கேசரி 65
வழங்குதல் என்ற செயற்பாடுகள் அவரால் முன்னெடுக்கப்பட்டன.
இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலே காந்தி முன் வைத்த கல்விச் செயற்பாடுகளின் ஈர்ப்பும் இவரிடத்தே காணப் பெற்றது. சைவ வித்தியா விருத்திச் சங்கம் நிறுவிய பாடசாலைகளிலே காந்திய மாதிரிகையைப் பின் பற்றி நூல் நூற்றலும் நெய்தலும் கற்பிக்கப்பட்டமை சிறப்பாக சுட்டிக் காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
காந்திய தரிசனத்தை அடியொற்றி சாதியத்தைத் தகர்ப்பதற்கென சமஆசனம், சமபோசனம் முதலிய செயற்பாடுகளும் பாடசாலைகளிலே முன்எடுக்கப்பட்டன. காலனித்துவ கல்வி முறையோடு இணைந்த ஒரு நவீனத்து வப் பரவலாக ஆசிரியர் பயிற்சி என்பது வலுப்பெறத் தொடங்கியது. பயிற்றப்படாத ஆசிரியர்களினாலே கல்வித்
தரம் பின்னடைந்த நிலையிலே இருத்தலை அரச

Page 66

ட அறிக்கைகள் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டு வந்தன. ஆசிரியருக்குப் பாட அறிவு இருந்தால் மட்டும் போதாது,
கற்பித்தலியல் அறிவும் வேண்டுமென்ற நவீனத்துவ
நோக்கில் இராசரத்தினம் அவர்கள் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையை நிறுவினார்.
கலாசாலையிலே கற்பிப்போரைத் தெரிவு செய்வதிற் புலமை உறுதியை வழுவாது கடைபிடித்த அவர் அக்காலத்தைய சூழலிலே ஆற்றலும் திறனும் வாய்ந்தவர்களைத் தெரிந்தெடுத்து நியமனம் வழங்கினார். அத்துடன் தமிழ்ப் புலமையை ஆழ்ந்து வளர்க்கும் நோக்குடன் காவிய பாடசாலை ஒன்றையும் அங்கே ஒருங்கிணைத்தார். பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் புலமைச்செறிவுள்ள கற்பித்தல் அங்கே நிகழ்த்தப்பட்டது. ஆற்றல் மிக்க பண்டித மரபு வளர்ந்தெழுவதற்குக் காவிய பாடசாலை தளமிட்டது. காலனித்துவப் பொருளாதார முறைமையும், நிர்வாக முறைமையும் பிரதேசங்களிடையே சமநிலை குன்றிய வளர்ச்சியை ஊக்குவித்தன. கல்வி நிலையிலே வாய்ப்பான பிரதேசங்கள் என்றும் LDIT[n)JL I ITL LITG60T நிலைகள் வளர்ச்சியடையத் தொடங்கின. அத்தகைய முரணுறு நிலைக்கு எதிரான ஆக்கமுன்னெடுப்புகள் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. அதற்குரிய கருத்தியல் வலிமையையும் வினைப்பாட்டு முறைமைகளையும் இராசரத்தினம் அவர்கள் முன்னெடுத்தார்.
ஒதுக்குப் புறத்திலிருந்த யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் மட்டுமன்றி, வன்னிப் பகுதி, சிலாபம், புத்தளம் பகுதிகள், பதுளை, பண்டாரவளை, பூநகரி என்றவாறு பல்வேறு பகுதிகளிலும் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் பாடசாலைகள் திறக்கப்பட்டன. கிராமப்புறங்களில் வாழ்ந்த மனித நேயம் கொண்ட புலவர்களினாலே திறக்கப்பட்ட பின்னர் இயக்கப்படமுடியாது இடர்ப்பட்ட பாடசாலைகளையும் சைவ வித்தியா விருத்திச் சங்கம் பொறுப்பேற்று இயக்கியமை பிறிதொரு ஆக்கப் பரிமாணமாகச் சுட்டிக்காட்டப்படத்தக்கது. அக்காலத்திலே பிரித்தானியாவில் வறியவர்களுக்கு உதவும் இயக்கங்களும் சட்டங்களும் ஆக்கம் பெற்றன. அவற்றின் அறிக்கைத் தெறிப்பு ஒருபுறம் நிகழ்ந்தது. மறுபுறம் ஆறுமுகநாவலர் உருவாக்கிய கஞ்சித்தொட்டி தர்மத்தின் கருத்து நிலை தொடர்ந்த வண்ணமிருந்தது. அவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக திருநெல்வேலியில் அவர் ஆதரவற்ற சிறுவர்களைப் பராமரித்துக் கல்வி வழங்கும் நிலையத்தை ஆரம்பித்தார். அவரின் ஆக்கப் பணிகளின் நெடிதுயர்ந்த உச்சமாக அது அமைந்தது.
சமூக நிலை, கல்வி நிலை, சமய நிலை ஆகியவற்றிலே அவரின் பங்களிப்புகள் அழியாத பதிவுகளாகவுள்ளன. கல்வியும் சமூகமும் தொடர்பான மாற்றுச் சிந்தனைகள் கல்வியை விற்பனைப் பொருளாக்கி வரும் சம காலத்தில் அவரின் ஆக்கப்பதிவுகள் சமூக நீதியோடு சங்கமமாகின்றனது

Page 67
w_w * * * • •澎爵wmሞ” (stoso@ (1598-/66) og soo 1,91%)
¿-/OOOoo@ @@jóIIŲ09f@
(Rosso@ (also 8-/g, og soo solos)
%
|-/OOOZ, QD QQŪőlıç09f@ E9唱旨gh写与9点3唱暹唱 ĢģĶĒølghausmoņols @Ų@mssine ĢĪhĻIIae This -/ooooooool's
 
 

0LLLLLLLL LLLLLLL LLLL LLLLL 0LLKK LLLLLL LLLLLLL LL LSLL000LS
uuoooexue|o|Iowa oquiogornjogoooo TTGĀ ç6v 06ç zı 10 :ợ9ægfoocoloče) · ·: 8 – 96ç oss z110 ±rig)o9(ao loše) | LLz zçç zı 10 HQðicos@ 6.109 T-3 || //O 34X3L/||2O ,
mm환mm g트트g國철교 quesīs. Kollod əJIT əund sullo
yruoqe Alhoeoud'mmm
;-/OOOoo@s@QUỐI 1909’sē, JĀI
(koosooo (so & -//log) og sigoo solos)

Page 68
O5.
呼
பீடிய, கென
KOM
சேய் வைத்தியசாலை
ழும்பு
ய் வத்தை, நாரஹேண்
கெயார் தா
W.
best & tere
sae
55/1, Քյի
{ణ
Printed and published by Express Newspapers (Ceylon)(
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
翼 பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
Tg55ud, 33.3606iTub (Sub Fertility)
அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களினுாடாக எல்லா வயதுடைய பெண்மணிகளையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
vt) Ltd, at No.185,6randpass road,Colombo -14, Sri Lanka.