கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.10

Page 1
- U || Сее) U Health G RS 50/- 68. IIid
Registered at the Department of Posts
 
 

as a SLI f(6hdf60) is
ஞ October 2011
o Sri Lanka. Under No. (D/44/News/2011

Page 2
அடர்த்தியான काळ
@
奧 அதிம (6) சப்தம் நர்சிங் கந்தக முக்த
கூந்த கந்த 3ᏏᏳᏡᎧᎧ பொடு மருந்து
Guत இருபாலாருக்கும் உகந்தது. 。
தினமும் 3 வேலை 1 வில்லை வீதம்.
தலை முடியின் வேர்களிற்க்கு 9 பொடுகைக் கட்டுப் படுத்தி கூ கூந்தலை அடர்த்தியாகவும் க
மேலதிக விபரங்களுக்கு 0
நாடுபூராவும் அனைத்து பார்மசி ஹார்கோட்ஸ் தனியார் நிறுவனம்
a
 

மயான கூந்தலுக்கு
ஒரே மாதத்தில் கூந்தல் உதிர்தலை முற்றாக தடுக்கின்றது.
கன்னி 2100 mg
裘 500 mg ன் சூர்ம்ை. 300 mg ரம் 100 mg பிரதம் பூ | 60 mg ரூட்லோக சூர்ணம் 40 mg gy}}. 40 mng } gyôb 25 mg 8Ꮿ8Ꮿ fff 25 mg
ல் உதிர்தல்,
ல் வளர்ச்சி குறைதல்,
முடி உடைதல்,
குத் தொல்லை. துகள் பாவிப்பதனால் தலை முடி உதிர்தல்
போன்றவற்றுக்கு உகந்தது.
போஷாக்களிக்கின்றது. ந்தல் உதிர்தலை தடுக்கின்றது. ருமையாகவும் வளரச்செய்கிறது.
773833449, O773833450
களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
14 புகையிரத வீதி தெஹிவளை.

Page 3
STs.
ఇతి(
கே.விஜ பி.தேவிகாகுமா
esai susuLSIstil 44
1862 - 1930
 

5 GANGGANGODD
জাজটো,
6.
| Q-5 stuLT
Sail

Page 4
கங்களும் அருமை. குறிப்பாக விசேட
மாதம் முதலாம் திகதி மலரும் சுக வாழ்வு இதழிற்கு
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல் வம். சுகவாழ்வு மக்களின் ஆரோக்கிய
வாழ்விற்கு வழி ஏற்படுத்துகிறது. இன்று
நம்மில் பலர் பணம் பணம் என உடல் நலத்தை மறந்து செயற்படுகின்றனர். சுகவாழ்வு இதழ், நோய் வராமல் தடுக் கிறது. அல்லது நோய் வந்தால் அதனை கட்டுப்படுத்த உதவுகிறது என்றால் அது மிகை இல்லை. உனக்கு எனது பாராட்
è
”
அன்பார்ந்த சுகவாழ்வு ஆரோக்கிய 慕。
D6 குமுதற்கண் எனது நன்றிகளையும்
பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கி றேன். நீ சுமந்து வரும் அனைத்து ஆக்
மருத்துவ ஆலோசன்ை, ஒரு நோயின் சுயவிபரக்கோவை, யோகாசனம், விஷப் பரீட்சை, மருத்துவ முன்னோடிகள் ஆகிய அனைத்தும் சூப்பரோ சூப்பர். நான் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கு பற்றிவருகிறேன். ஆனால் ஒரு தடவை கூட தெரிவாகவில்லை. என்றோ ஒரு நாள் அதிஷ்டம் என்பக்கம் வந்து வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் காத்தி ருக்கிறேன்.
பாத்திமா, பதுளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனிய sora சஞ்சிகைக்கு,
நான் கடந்த இரண்டு வருடங்களாக
மாதந்தோறும் முதலாம் திகதி சுகவாழ்வு சுகாதார சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற்று வருகிறேன். எனது முதலா வது வாசகர் கடிதத்தை பிரசுருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகி |றேன். உனது சுகாதார சம்பந்தமான ஆக் கங்களிற்காக எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின் றேன். சுகாதார சஞ்சிகையான சுக வாழ்வை வாங்கிப் படிப்பது ஒரு மருத்து வர் அருகே இருப்பதைப் போன்றதாகும். ஆரோக்கிய கட்டுரைகள் மற்றும் ஜோக்கு
கள் அருமை. நன்றி வணக்கம்.
பிலோமினா, கண்டி
பெருமதிப்பிற்குரிய சுகவாழ்வு ஆரோக் கிய சஞ்சிகைக்கு
நான் உன்னை மாதத்தின் முதலாம் திக தியே வாங்கி விடுவேன். உன்னை வாங் கியதும் முதலில் படிப்பது ஆரோக்கிய சமையல் பகுதியையே. படித்து முடிந்த தும் அந்த ஆரோக்கிய சமையல் பகுதி யில் கூறியவற்றை செய்து பார்ப்பேன். இனிவரும் நாட்களிலும் சிறந்த ஆக்கங் களையே தெரிவு செய்து பிரசுரிப்பாய் என எதிர்பார்க்கிறேன். தவிர எழுத்து
பிழைகள், அச்சு பிழைகளை முடிந்தளவு தவிர்துக்கொள். நீ மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். .
\ சியாமளா, யாழ்ப்பாணம்
ஒக்டோபர்-2011

Page 5
காட்டை (2Bg15TasÈ5afBuUI LIuU6oOTLub
தெரிந்தோ தெரியாமலோ பிளாஸ்டிக் என்ற விடயம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. பிளாஸ்டிக் கலக்காத எந்தப் பொருளையும் இன்று நாம் பயன்படுத்துகின்றோமா என்று சற்றே திரும் பிப் பாருங்கள். அந்த அளவுக்கு பிளாஸ்டிக், பிளாஸ்டிக், பிளாஸ்டிக். இதனை பொலித்தீன், சொலோபின் என இன்னும் பல பெயர்களிலும் அழைக்கின்றார்கள். இதனை உற்பத்தி செய்யும் போது இதில் என்ன இரசாயனப் பொருட்களை கலந்து செய்கிறார்கள் என்று கூட மக்களுக்குத் தெரியுமா? இதனை மக்கள் பாவனைக்கு அனும தித்தது யார்? அரசாங்கம். அந்த அரசாங்கங்களு க்கு அனுமதி தந்தது யார்? மக்கள். இன்று பிளாஸ் ரிக் பொருட்களில் இருந்துதான் மனிதர்களின் அழி வு ஆரம்பிக்கின்றது என்பதனை இந்த இதழின் நடுப்பக்க கட்டுரையைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
அண்மையில் ஒரு நண்பருடன் காரொன்றில் பிரயாணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் பகலுணவு சாப்பிடுவதற்காக ரெஸ்டோ ரண்ட் ஒன்றுக்குச் சென்று காரை ஓரமாக பார்க் செய்துவிட்டு வந்தோம். கடுமையான Ghouse). சாப்பிட்டு முடித்துவிட்டு காரில் ஏற வந்தால் கார் நன்றாக சூடாகி தகித்துக் கொண்டிருந்தது. கத வைத் திறந்ததும் ஒருவிதமான பிளாஸ்டிக்குட னான இரசாயனம் கலந்த வாசனை மூக்கைத் துளைத்தது. உடனே நண்பரிடம் கூறினேன், " நண்பரே இப்போது உற்பத்தி செய்யப்படும் அநே கமான கார்களில் பிளாஸ்டிக் பாகங்களையே (Component) பொருத்துகிறார்கள். அவை இவ்வி தம் சூடடைந்தால் விஷவாயு காருக்குள் நிறைந்தி ருக்கும். ஆதலால் உடனேயே காருக்குள் நுழைந்து அமராமல் நான்கு கதவுகளையும் திறந்து விட்டு உள்ளிருக்கும் நச்சுக்காற்று வெளியேறிய பின்னர் தான் நாம் காருக்குள் நுழைய வேண்டும்” என அண்மையில் ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest) நூலில் படித்ததாகக் கூறினேன். அவர் சிரித்து அதனை ஆமோதித்தாலும் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை.
இது நடந்து சில வாரங்களில் பத்திரிகைகளில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. நுவரெலியா வுக்கு உல்லாசப் பிரயாணம் சென்ற சில் இளம் தம் பதியினர் இரவு உணவை ஒவன் போன்ற ஒரு கரு வியில் தயாரித்து சாப்பிட்டு உண்டு ஆடிக் களைத்த பின்னர் தத்தமது அறைகளுக்கு உறங்கச்
Giele
ஆரோக்கிய சஞ்சிகை
TF
ஒவ்வொரு மாத
ஒக்டோபர்ட்2011
—
 
 

■ク 1+1ea181 GUniGe
9,ī nിതn
மலர் 04 இதழ் 05 :
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP: 0 1 1 - 5375945 011 - 5516531 Fax: 0 1 1 - 5375944
E-mail; sugawayu (2expressneWspagers./k
சென்றிருக்கிறார்கள். அதில் ஒரு தம்பதியினர் மேற் படி சமையல் உபகரணத்தை சூடாறு முன்பே தம து அறையில் சென்று வைத்து பின்னர் குளிர் கார ணமாக கதவு, ஜன்னல்களை எல்லாம் அடைத்துக் கொண்டு உறங்கப் போனார்கள். ஆனால் அவர்கள் காலையில் உயிருடன் இல்லை. காரணத்தை ஆராய்ந்த மருத்துவர்கள் மேற்படி சமைக்கப் பயன் படுத்திய ஓவன் உபகரணத்தில் பிளாஸ்டிக் மற் றும் அலுமினியம் பொயில் (Aluminium Foil) என் பன கலந்திருந்ததாகவும் அவற்றில் இருந்து வெளி யேறிய நச்சு வாயுவே அந்த தம்பதியினர் இறக்கக் காரணம் என்றும் கண்டுபிடித்துக் கூறினார்கள்.
நாம் அன்றாடம் நாம் சமைத்த உணவு வகை களை லன்ச் சீட் (Lunch Cheet) என்ற பிளாஸ்டிக் பேப்பரிலேயே சுற்றிக் கொண்டு வருகிறோம். சாப் பாட்டுக் கடையில் கொத்து ரொட்டி வாங்கும் நாம் அவன் அதனை கொதிக்கக் கொதிக்க பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு சுற்றி பின் ரிஜிபோம் (Regifoam),பெட்டியில் போட்டுத் தருகிறான். இத னை சாப்பிட்டதும் நாம் இறந்து போய்விடுவ தில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு நம் உடலுக்குள் சென்று நம்மை படிப்படியாக கொல்கிறது என்பதுதான் உண்மை.
இப்ப்ோது பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக் கப்பட்டு வரும் நீரை ஒருமுறைக்கு மேல் பயன்ப டுத்த வேண்டாம் என்றும், சூடான நீரை அதில் ஊற்ற வேண்டாம் என்றும் அறிவித்திருக்கிறார்கள் நாம் அனைவரும் மெது மெதுவாக சுடுகாட்டை நோக்கித்தான் போய்க் காண்டிருக்கிறோம் GESLUITS)
மும் 1ஆம் திகதி வெளிவருகிறது

Page 6
E -
மனிதனுக்கு அழகைக் கொடுப்பதில் பற் களின் பங்கு மகத்தானது என்பதை அறிவீர் கள் எந்த ஒருவரும் ஒரு அழகான புன்னகை மூலம் பிறரை வசீகரிக்க முடியும் சிரிக்கும் போது மூத்துப் போன்ற பற்களைக் கண்டு புளங்காங்கிதமடைகிறோம். நட்புக்கும், காத லுக்கும், கணவன், மனைவி உறவுக்குக் கூட புன்னகையும், பளிச்சென்று வரிசைப் பற்க ளும் கை கொடுக்கின்றன.
பற்கள் அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கி யத்திற்கும் அவசியமானவை. முக்கியமாக எமது உணவை அரைத்து சுவைத்து உண்ணு வதன் மூலம் சமிபாட்டை இலகுபடுத்துவதில் பற்களின் பங்கு முக்கியமானதும் முதன்மையா னதும் ஆகும். மேலும் நாம் பேசும் மொழியை சிறப்புடன் உச்சரிக்கவும் பற்கள் உதவுகிறது.
பற்களின் ஆரோக்கியம் பேணப்படாதுவிட் டால் தேக ஆரோக்கியமும் குன்றும்.
-
 
 
 
 
 
 
 
 

இதனால் தான் தின மும் இரு தடவை பல் துலக்கி எமது பற்களைப்
பாதுகாக்கின்றோம். பற்க ளில் ஏற்படும் கிருமித்தாக் கமும் பிற தாக்கமும் எம்மை அவஸ்தைக்கு உள்ளாக்குவதுடன் எமது நாளாந்த வாழ்வையும் பாதித்து வருகிறது. கூடவே ஒருவரது தன்னம் பிக்கையையும் குறைத்து விடுகிறது.
பொதுவாக பற்களில் ஏற்படும் நோயாக பற்க ளைப் பாதுகாக்கும் இழை யங்கள் மற்றும் பற்குழி எலும்புகளில் ஏற்படும் கிருமித் தொற்றைக் குறிப் பிடலாம். இதனால் பல் லும் ஈறுகளும் சிதைவ
டைவதுடன் பல்லுக் கொதி, அழற்சி, முரசு வீக்கம் என்பனவும் ஏற்படலாம். முதலில் முரசு பாதிக்கப்பட்டு முரசு அழற்சி ஏற்படுகிறது. (Gingivitis) இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக பற் சுற்றி அழற்சி (Periodontitis)

Page 7
ஏற்படும் நிலை உருவாகின்றது. முரசு அழற் சியை இலகுவாக குணமாக்க முடியும். அதே வேளை பற்சுற்றி அழற்சி சிகிச்சை கடினமா
னது.
ஆரம்பத்தில் பல் ஈறுகளில் கிருமித் தாக்கத்தினால் அழற்சி ஏற்படுகிறது. இதன் போது நாம் உண்ணும் உணவுகளின் கூறுகள் பல்லின் இடையில் சிக்கியிருப்பின் அவை கிருமிகளின் வளர்ச்சியையும் பெருக்கத்தை யும் துரிதப்படுத்துகின்றன. குழந்தைகளில் இனிப்பு உணவுகளின் கூறுகளே அவர்களின் பற்களைத் துரிதமாக சேதமடைய வைக்கின்
றன. உணவின் பின் வாயைக் கொப்பளிப்ப தன் மூலமும் தினமும் இருதடவையாவது பல் துலக்குவதன் மூலமும் உணவுப் பருக்கைகள் பற்களின் இடையில் தேங்குதலைத் தவிர்க்க முடியும். குறிப்பாக இரவு படுக்கைக்குச் செல் லும் போதுப் பற்களைத் துலக்குதல் மிகவும் அவசியமாகும்.
பற்களின் ஈறுகளில் கிருமித் தாக்கம் ஏற்ப டும் போது முரசினை செந்நிறமாக்கி வீக்கம டைய வைக்கும். ஆரம்பத்தில் வலி எடுக்காது
என்பதனால் நாம் அதனை அதிகம் பொருட்
 
 
 
 
 

படுத்தாமல் விட்டு விடுகிறோம். உரிய நேரத் தில் சிகிச்சை எடுக்க தவறுவதனால் இந்த நிலை மோசமடைகிறது.
பற்களின் முரசுகளின் நிறமற்ற ஒரு படலமாக பக்றீரியாக்கள் படிந்து விடுகிறது. Dental Plaque) என அழைப்பார்கள். இந்தப் படலமானது ஆரம்பத்தில் மென்மையான படலமாக தோன்றுகின்றது. இதை உரிய நேரத் தில் அகற்றாதுவிட்டால் அது கடினமாகி விடும். இதனை அகற்றுவது கடினமாகிறது. இந்நிலையில் பற்சுற்றி அழற்சி ஏற்படுகிறது. இதனை அடுத்து பற்கொதி, கூச்சம், வீக்கம், என்பன ஏற்படலாம். உணவு உண்ண முடி பாமலும், வேலைகள் செய்யமுடியாமலும் போகும். நுண்ணுயிர் கொல்லி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைப் பாவித்து அழற்சியைக் குறைக்கலாம்.
பல்லிறுகளில் படிந்திருக்கும் கடினமான படலங்களை பல் மருத்துவர் மூலம் அகற்ற லாம். வருடம் ஒரு தடவையாவது கருவிகளின் உதவியுடன் பல் மருத்துவர் இப்படலங்களை அகற்றுவார். இதனால் பற்கள் சேதமடைவதை பும், அழற்சி ஏற்படுவதையும் தவிர்க்க முடி LLD.
ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கின்றன. பல்லில் ஏற்ப டும் ஏனைய நோய்கள் பற்றியும் அறிந்திருத் தல் நன்று. இதன் மூலம் பல் நோய்களிலிருந்து தப்பிட முடியும் பற்கள் சேதமடைந்து பற்களி டையே துவாரம் ஏற்படும் போது அவற்றை அடைப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.
SS

Page 8
உணவுத் துணிக்கைகள் இவ் இடைவெ: களில் தேங்கி பக்ரீறியா கிருமிப் பெருக்கத்ை ஏற்படுத்தி படிவங்கள் மூலம் பாதிப்பு ஏற்ப வதை தவிர்க்க முடியும்.
புளோரைட் கலந்த பற்பசைகளை பாவித்து பற்களின் ஈறுகளிடையே தேங்கு துணிக்கைகளை பல் துலக்கும் தூரிகைக மூலம் அகற்றுதல் நன்று. பற்களைச் சுத்தமா வைத்திருப்பதனால் கிருமித் தொற்றிலிருந் பாதுகாக்க முடியும். வாயை உப்புக் கலந் நீரினாலோ, சவலோன் கலந்த நீரினாலே அயடீன் கலந்த நீரினாலோ கொப்பளிப்பத மூலம்கிருமிகளை அகற்ற முடியும்.
பற்களில் ஏற்படும் தொற்று நோய்க்கு அ பால் அமைப்புக் குறைபாடு மற்றும் சத்து குறைபாடுகளும் கூட பற்களைப் பாதிக்கலா, வாய் நாற்றத்திற்கு பற்களின் தொற்று மட் மன்றி குடல் இரைப்பை நோய்களும் காரண மாக இருக்கலாம். சத்துக் குறைபாடுகளை
கொடுத்து அட்ல்ை ப்ரு 60 வயதில் வரவிேன்
போன்றவை
வேந்துவிடும்
 
 
 
 
 
 
 
 
 

ரி பொறுத்த வரையில் விற்றமின் சீ ಅಖ್ತ த முரசினைப் பாதிக்கும். கல்சியம் பற்பாது B காப்புக்கு அவசியமானது.
நாம் பாவிக்கும் சில மருந்து வகைகளும் ப் பற்களைப் பாதிப்பதுண்டு. ஸ்ரீநோயிட் வகை ம் மருந்துகள், இதய இரத்த அழுத்த மருந்துகள் ள் சிலவும் பற்களைப் பாதிக்கும். சில ஒமோன்க க ளின் அதிகரிப்பும் பற்களையும் ஈறுகளையும் து பாதிக்கக்கூடியவை. மேலும் புகை பிடித்தல், 点 மது என்பனவும் பற்களைப் பாதிக்கலாம், ா, இனிப்பு வகை உணவுகள், குளிரான உணவு ன் கள் பானங்கள் போன்றவற்றை அதிகமாகப் பாவித்தலும் பற்களுக்குப் பாதிப்பை ஏற்படுத் தும், அத்துடன் போஷாக்கின்மையும், நோய் க் எதிர்ப்புச் சக்தி குறைவடைதலும் கூட பற்க b ளைப் பாதிக்கும். டு நாம் நாளாந்தம் எமது பற்களின் சுகாதாரத் தைப் பாதுகாப்பதன் மூலம் சுகவாழ்வையும் ப் தன்னம்பிக்கையையும் பெறுவோம்.
. ܠ
韃 豪 蠍 க இருக்கவேண்
泷 璽
鹉、 - மனாக்காதீர்கள்
19-U ಟ್ವಿಟ್ಟೈ 臀 30 ವ್ಹೀತಿ।
: لاھgلT"# ,ھa, a, aفهي كلاسم

Page 9
C Dr. சமிந்த விஜயவர்தன D
மன்னார், அம்பாந்தோட்டை, யாழ் குடா நாட்டின் சில பகுதிகள் வறள் வலயத்திற்குரிய கடற்கரைப் பிரதேசங்களை உள்ளடக்குகின் றன. அப்பிரதேசங்களிலுள்ள நீரின் உவர்ப்புத் தன்மை காரணமாக அங்கு வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என்ன என்பதைப் பற்றி லுணுகம்ஹெகர அரச வைத்தியசாலை வைத்திய அதிகாரியான Dr. சமிந்த விஜயவர் தன அவர்கள் பல விடயங்களை முன் வைத்தார்.
இப்பிரதேசங்களில் காணப்படும் நீரானது உவர்ப்புச் சுவை கொண்டது. பூமியிலுள்ள கல்சியம், சோடியம் குளோரைட் போன்றவை நீருடன் சேர்வதன் காரணமாக இத்தகைய உவர்ப்புச் சுவை கொண்டதாக உள்ளது. இத்தகைய உவர்ப்புத் தன்மை கொண்ட நீரை
ܒ ..+1 ܛܒܬܐ ܠܟarܛܛ.
 
 

சிறுநீரகமாற்று
இப் பிரதேச மக்கள் அருந்துவதன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் மற்றும் பிரச்சினைகள் பற்றி நாம் இங்கு கூற வேண்டியுள்ளது.
முக்கிய பிரச்சினையாக சிறுநீரகத்தில் கற் a56T 2 CU56 ums556ão (Urinary Calculi discease) என்பதை இங்கு பலரிடம் பரவலாகக் காணக்
கூடியதாக வுள்ளது.
சிறுநீரகக் கல்லின் தோற்றம்
உடலில் அதிகளவு கல்சியம் உள்ளெடுக் கப்படுவதன் காரணமாக அதிகளவான கல்சி யம் சிறு நீரக மார்க்கத்தில் செறிந்து விடும் போது அவை தடிப்பான பகுதிகளாகவோ அல் லது சிறு சிறு தண்டுகளாகவோ சிறுநீரக குழா யில் படிந்து விடக்கூடும். அவை சிறுநீரகத்தி லோ அல்லது சிறுநீரக குழாய்களிலோ படிந்து விடுபவற்றையே சிறுநீரகக் கல் எனக் குறிப் பிடுவோம்.
அந்த சிறு நீரக கற்கள் சிறு நீரக வழியில் அடைபடுவதன் காரணமாக ஒருவர் நோயாளராகக் கூடிய வாய்ப்பு உள்ளது. அவ் விதம் உருவாகும் சிறுநீரகக் கற்கள் மில்லி
9 ܚܘܒܐ ஒக்டோபர்-2011

Page 10
மீற்றர் 4க்கு குறைவாக இருப்பின் சிறுநீருடன் வெளியேறச் செய்யலாம். ஆனால் அதையும் விட மிகப் பெரிதாயின் சிறுநீர் கழிக்க முடியாத வாறு தடையாக அமைந்துவிடும். இதன் குணங்குறிகள் எவை?
சிறுநீர் எரிவு, சிறு நீருடன் இரத்தம் வெளி யேறல், இடுப்பிலிருந்து கால் தொடை வரை ஏற்படும் வேதனை, வாந்தி, அடி வயிற்றில் நோவு என்பன குணங்குறிகளில் முக்கிய மானவை. இத்தகைய சந்தர்ப்பங்களில் சிறுநீர கத்தில் கற்கள் உருவாகி இருக்கக்கூடும். ஆனால் அவை சற்று பெரிதாக உருவாகி இருக்கின்ற சந்தர்ப்பங்களில் சிறுநீரகம் செய லிழந்து விடக்கூடிய நிலையையும் உருவாக் கலாம்.
இத்தகைய நேரங்களில் இடுப்பின் இரு புறமும் ஏற்படும் வேதனை அதிகமானதாக
*ஏன் அந்த ஆள் புத்தகத்தைதின்கிறார்??
*அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு
ஒக்டோபர்-2011
 
 
 
 
 
 

சிறுநீரகம் (வெட்டுமுகத் தோற்றம்) "~
':'ം' Ureter
Jethra
சிறுநீர்க்கல்
அத்தகைய சந்தர்ப்பங்களில் உடனே
வைத்தியரிடம் கொண்டு செல்வது நல்லது. முதலில் சிறுநீர்ப் பரிசோதனை செய்ய வேண் டும் (Utine full report) இதன் மூலம் சிறுநீரக கற்கள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள லாம். இதைவிட அல்றா சவுண்ட் (Ultra Sound) Luff Gang,006GT KUB Kidney Ureter Bladder மூலமும் சிறுநீரகக் கற்கள் உருவா கியுள்ளதை கண்டு கொள்ளலாம்.
ஆனால் இந்தப் பரிசோதனைகள் மூலம் சிலவேளை நோயைக் கண்டுபிடிக்க முடியாம லும் இருக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் IVU எனக் குறிப்பிடப்படும் பரிசோதனையை செய்ய வேண்டி வரும். இத்தகைய பரிசோத னைக் கூடாக ஏற்பட்டிக்கும் நிலை தொடர் பான தெளிவைப் பெற்றுக்கொள்ளலாம். இத்தகைய சந்தர்ப்பங்கள் வராமல் எவ்வி தம்ம்ைமைப் பாதுகாக்கலாம்? *
தெளிவாக எமது அன்றாட நடத்தைகள், பழக்கவழக்கங்களை மாற்றியமைக்க வேண் டும். இத்தகைய வறள் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பெரியதொரு மாற்றத்தை செய்ய முடியாவிடின் குடிநீரையாவது நன்றாக சூடாக்கி வடித்து பானம் செய்வது மிகவும் அவசியமானதொன்றாகும்.
எஸ். ஷர்மினி

Page 11
ணுகுதல் நல்லது. சாதாரண நெஞ்சுவலி
தானே என கவனியாது விட்டால் அதுவே பின் | னாளில் மாரடைப்பு உள்ளிட்ட பெரிய ஆபத்தை உருவாக்கி விடக்கூடும். ஆண்களை | விடவும் பெண்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு | கள் குறைவு என்றாலும், மாரடைப்பு வராது என்று கூற முடியாது. இரத்த ஓட்டம் தடை | படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அப் போது இதயத்தின் தசைப் பகுதிகளும் சேத
மடைகின்றன.
நெஞ்சுவலி தொடர்ந்து இருப்பது, இடது பக்க தோள்பட்டையில் அழுத்தம், முதுகில் வலி போன்றவை மாரடைப்புக்கான முக்கிய
டாக்டர் உங்ககிட்ட ஒன்று
கேட்கணும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பகுதியில் ஏற்படும் வலி, கை மற்றும் 5ாடைகளுக்குப் பர பும். மூச்சு வாங்கு 5ல், LDuš85b, வியர்த்தல், தாறுமா ான இதயத்துடிப்பு ஆகியவையும் முக்கிய அறிகுறிகளாகும். இதற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மூலமும் இதயத்துக்கு இரத்தம் செல்லும் மாற்றுப் பாதையை அமைத்து நன்கு செயல்படச் செய் பலாம். ஆகையினால் நெஞ்சுவலியை ஆரம் பத்திலேயே கவனிப்பது சாலச்சிறந்தது.
வந்து டொக்டர். எனக்கு கால் சுகமானதும் நான் மோட்டர் பைக் ஒட்ட முடியுமா?
ஒட்டவே தெரியா

Page 12
Guill: ஆணிக்கூடு
தோற்றம்
பாதங்கில் ஏ கொப்புளங்கள்.
அறிகுறிகள்: பாதவெடிப்பு, க
**
 
 

ћIJIh: S கால் ஆணி உடையவர்களில் செருப்புகளைப் பயன்படுத்தல் F காலுக்குப் பொருந்தாத சிறி ற்படும் சிறு அளவு செருப்புகளை உபயே
கித்தல். S வெறும் காலில் நடத்தல்.
Iல்வலி 9, Gaboo:
R தினமும் பாதங்களை சுத்தமாக
கழுவுதல்,
S படுக்கைக்கு செல்லும் முன்
பாதங்களில் தேங்காய் என் ணெய் பூசுதல்.
S மற்றவர்களின் செருப்புகளை
அணிவதைத் தடுத்தல்.
பாதிப்பு R இதற்கு உடனடியாக உரிய
சிகிச்சை பெறாவிட்டால் அல் ராக மாறக்கூடும்.

Page 13
ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்கப்படா விட்டால் பாதம் முழுவதும் பரவிவிடும். |
| கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணிக்கூடு இருக்கும் இடங்களில் தடவி வரவும். தொடர்ந்து ஒரு வார காலப்பகுதிக்கு இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து R துணியால் கட்டுப்போட்டு, காலையில்
GSGODGT JErfuLIITUS
 
 

எடுத்துவிடலாம். மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் விடல். மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும். உடனடியாக மருத்துவரை அணுகுதல்.
巽,鲨 தொகுப்பு :- சுபாஷினி
'
த்தப்படும் தட்டு மற்றும் டம்ளர் கழுவவில்லை என்றாலும், சமைக் சைக் காய்கறிகள், பழங்களை சுத்த தண்ணீரில் அலசவில்லை என்றா ம் கூட "அமீபியாசிஸ்" எனும் தாற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். தனால், சாப்பிட்டதும் மலம் கழிந்து டும். இதை ஆரம்பத்திலேயே கவ காமல் விட்டால் உடல் மெலிந்து ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க

Page 14
சில வைத்தியர்களிடம் சென்று வயிற்று வலி என்றால் உடனே ஈ.சி.ஜி. (B.C.G) எடுத்துக் கொண்டு வரும் படி கூறுவார்கள். உடனே வயிற்று வலிக்கு ஏன் ஈ.சி.ஜி என எண்ணத் தோன்றும். ஆனால் மருத்துவர் களின் அணுகு முறை மிகச் சரியானதே. எமக்குத்தவறு போல் தோன்றினாலும் அவர்கள் தூர நோக்கோடு சரியாகத்தான் முடிவெடுப்பர்.
அதே போல் காய்ச்சல் என மருத்துவரிடம் சென்றால் அவர் தயிர் சாதம் உண்ணச் சொல்வார். ஐயய்யோ சளி அல்லவா பிடித்து விடும் என நாம் பதறலாம். ஆனால் வைத்தியரின் நிலைப்பாடு மிகச் சரியானதே.
மாரடைப்பு எப்படி வெளிப்படலாம்? இதயத்தில் வலி, முதுகுப்புறம் வலி, இடது
கை பக்கம் தோன்றிப் பரவும் வலி இது போன்ற அறிகுறிகள் குறித்து பலருக்கு தெரிகின்றது. ஆனால் மாரடைப்பு என்பது வேறு விதத்திலும் வெளிப்படுகின்றது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
ஒருவர் தனது மேல் வயிற்றுப் பகுதியில் தொடர்ந்து வலி என்றால் நம்மில் பலர் இது
撃。
 
 

ஏதோ கேஸ் போன்ற வாயுத்தொல்லை என்றே எண்ணுவோம். இது சில வேளை மாரடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தலாம். எனவே மேல் வயிற்று வலி என்றவுடன் மருத்துவர் ஒரு ஈ.சி.ஜி எடுக்கவேண்டும் என்ற உடன் நோயாளியின் முகத்தில் வைத்தியர் மீது ஒரு வெறுப்பு வெளிப் படுவதுண்டு. வயிற்று வலி என்றால் ஈ.சி.ஜி. எதற்கு? எனக்கென்ன மாரடைப்பா என்ன என மனதில் தோன்றும். ஆனால் அது தவறு. மாரடைப்போ அல்லது வேறு சில இதய நோய்கள்ோ மேல் வயிற்றுப்புற வலியாகவும் வெளிப்படலாம். எனவே ஈ.சி.ஜி. எடுத்து இதனை உறுதிப்படுத்திக் கொள்வது நன்மையாகும்.
வேறு சிலரோ உடல் அசதி, சளிக்கட்டு
போன்ற வருத்தங்களுடன் வருவார்கள்
தொண்டை வலிகாது வலி போன்றவை கூட
ஒக்டோபர்-2011

Page 15
இருக்கக்கூடும். அவரைப் பரிசோதனை செய்து விட்டு ஐந்து நாட்களுக்கு அன்ட்டி பயடிக் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர் மருந்து களைகொடுப்பார். ஆனால் இரண்டு நாட்கள் மாத்திரம் அவற்றை உட்கொண்ட பிறகு உடலில் முன்னேற்றம் தெரியத் தொடங்கும் எனக்குத் தான் நோய் குணமாகி விட்டதே இனிமேல் எதற்கு மருந்து மாத்திரை எல்லாம் என்று இரண்டு நாட்களோடு தாமாகவே
மாத்திரை குடிப்பதை நிறுத்தி விடுவார்கள். அடுத்த இரண்டாம் நாளே மீண்டும் பழைய உடல் பிரச்சினைகள் தலைக் காட்டத் தொடங்கும். பிறகு வைத்தியரிடம் மீண்டும் வந்து நீங்கள் கொடுத்த மருந்திலே நோய் பூரணமாக குணமாகவில்லையே என வைத்தியரை குறை கூறி நிற்பார்கள். எப்படி குணமாகும்? கொடுத்த மாத்திரைகளை ஒரு (1Ք(Լք கோர்ஸ் குடித்தால் தானே நோயை ஏற்படுத்தும் பற்றீரியா, வைரசு போன்ற நுண்ணுயிர்கள் முழுமையாக அழியும்.
காய்ச்சல் என வருபவர்கள் மருந்துகளை வழங்கிய பின் போகும் போது நாங்கள் என்னென்ன உண்ணலாம்? எவற்றை உண் ணாமல் தவிர்க்க வேண்டும் என மறக்காமல் கேட்பார்கள். தயிர் சாதம் உண்ணலாம் என் றால் நம்பமுடியாமல் வைத்தியரை ஒரு மாதி ரியாக பார்ப்பார்கள். இந்தக் காய்ச்சலோடு தயிர்
ஒக்டோபர்-2011
 

சாதம் உண்டால் தடிமன், சளித்தொல்லைகள், அனைத்தும் பிடித்திடுமே என்பார்கள். தயிர்சாதம் எந்த விதத்திலும் தடிமன், சளி ஏற் பட காரணமாக அமைவதில்லை. தயிர்சாதம் ஒரு பிரச்சினை தராத உணவாகும். தவிர காய்ச்சலுக்காக வழங்கப்படும். அன்ட்டிய யடிக்குள் லக்டோவை அடிப்படையாகக் கொள்ளாதவை. அதாவது பாலின் முக்கிய சத்து இவற்றில் இல்லை. இதனால் சில சமயம் வயிற்றுப்பகுதியில் சில இலேசான பிரச்சினை களை இந்த மாத்திரைகள் ஏற்படுத்தக்கூடும். 95ഞ്ഞ് அப்படி ஏற்படாமல் தடுக்க தயிர்சாதம் பேருதவியாக
அமைகின்றது.
-இரஞ்சித் ஜெயகர்
கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம்
N அது பாதிப்படையலாம். உடல்
\ பாகங்கள் செயல் இழந்து,
N நிலைமையை மேலும்
\ சிக்கலாக்கிவிடும்
விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில்

Page 16
இதழ் தொடர்ச்சி.) மத்யாசனம் செய்யும்போது கழுத்தை வேக மாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ, வளைத்தால் சுளுக்கு ஏற்படும் அபாய முள்ளது. தலையின் உச்சிப் பகுதி விரிப்பில் படிந்திருக்க இரண்டு கைகளையும் மெதுவா கப் பிரித்து எடுத்து கால் தொடையின் மீது வைக்க வேண்டும். முடிந்தால் இரண்டு கால் களின் கட்டை விரல்களை அழுத்தமாகப்
பிடிக்க வேண்டும். இப்படி இருக்கும்போது பத்மாசன நிலை கலைய விடக் கூடாது. முழங் கால்களைத் தரை மீது விறைப்பு இன்றி வைக்க வேண்டும். 50 அல்லது 100 எண்ணிக் கையில் அப்படியே இருக்க வேண்டும். திரும் பவும் கை விரல்களைப் பிரித்துக் காதுகளுக் குப் பக்கத்தில் வைத்து ஊன்றி தலையை உயர்த்தித் தோள்பட்டை தலை ஆகியவற்றை விரிப்பின் மீது வைக்க வேண்டும். பத்மாசனம் கலையாமல் உடலை இடது பக்கம் சரித்து இடது கையை தரையில் ஊன்றி எழும்பி பத் மாசனத்தில் இருக்க வேண்டும்.
பின் கால்களை கைகளால் பிரித்து சவா சனத்தில் ,*
 
 
 
 
 
 
 

T
| Sile:A13 Gone ISALIGooist.
LLLLLaL LL SLLS S SSLS LS LLL SLLLLLLL
ஓய்வு எடுக்க வேண்டும். இந்த ஆசனத்தை ஒருமுறை மாத்திரம் செய்தால் போதுமானது.
கொழுத்தவர்கள், பத்மாசனம் போட முடியா தவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு செய்யலாம். தலையணையை முதுகுக்குக் கீழ் வைத்து பழகுவது சுலபமாகும். இவ் ஆச னத்தைத் தினம் தோறும் செய்ய வேண்டும். விட்டு விட்டுச் செய்யக் கூடாது. ஒரு நிமிடத் திற்கு மேல் செய்யக் கூடாது. வெறும் வயிற் றில் செய்ய வேண்டும். உடலும் மனமும் பதைபதைப்போ இறுக்கமோ இல்லாமல்
O) Luf(ELDL O) )
Kaufu لیے { AG LUULTE GODiffD) UUD)
பார்க்க வேண்டும். வட திசை நோக்கி அமர்ந்து செய்தால் அதிக பலன் கிடைக்கும். தண்ணின் மேலிருந்து செய்தால் மீன் போல் மிதக்க முடியும்,
மூச்சு நிலை 3-TEIJJI JJ J. மனநிலை உடல் மீன் போன்று இருக்கிறது. எப்படி மீன் புண்ணைக் கொத்தி எடுத்து கிருமிகளை அகற்றி புண்ணை விரைவில் குணப்படுத்து கிறதோ அதேபோன்று உடலிலுள்ள சகல அழுக்குகளும் கிருமிகளும் அகற்றப்பட்டு நோய்கள் ஏற்ப
6 ஒக்டோபர்-2011

Page 17
கப்படுவதோடு ஏற்பட்ட நோய்களும் விரை வில் குணமடைகின்றன என நினைக்க வேண்டும். முள்ளந்தண்டு பின்புறம் வளை வதால் நெகிழ்வுத் தன்மையடைகிறது; கூன் முதுகு நிமிர்கிறது என நினைக்க வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம், உறக்கமின்மை (Insomia) ஒற்றைத்தலைவலி, கடுமையான தலைவலி, இருதய நோய் போன்ற நோய் களால் பீடிக்கப்பட்டோர் இவ் ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் மாதத்தீட்டின் போதும் நிறைமாதக் கர்ப்பத்தின்போதும் இவ் ஆசனத்தைச் செய்யக் கூடாது. அடி வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொண்டோரும் இடுப்பு மற்றும் கழுத்து போன்ற உறுப்புக்களில் காய மேற்பட்டோரும் இவ் ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
Silsit எல்லா நோய்களையும் குணப்படுத்தும் திறனை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. * வயிறு, நெஞ்சு, கழுத்து நன்கு விரிக்கப்பு டுவதால் (Streteched) இவற்றுடன் சம்பந் தமான சகல நோய்களும் அகலும். * நெஞ்சு நன்கு விரிவடைவதால் அதனுள் இருக்கும் சுவாசப் பைகள் நன்கு விரிவ
ஒக்டோபர்-2011
 
 

டைந்து அவற்றின் கொள்ளளவு அதிகரிக் கும். இதனால் அதிகபட்ச பிராணவாயு உட்சென்று அதிகபட்ச அசுத்த இரத்தம் சுத் திகரிக்கப்படும்.
956, SyTGOOT 335ub (Cosmic Energy) உட்செல்வதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து பல்வேறு நோய்கள் ஏற்ப டாது தடுக்கப்படுகின்றன. சுவாசக் குழாய் (Brochial Tube) நன்கு விரி வடைவதால் சுவாசம் சீராக நடைபெறும். இதனால் ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி (Bronchitis) நியூமோனியா மூச்சு திணறல் காசம் போன்ற நோய்கள் குணமடையும். இருதயத்தின் தசைகள் நன்கு பலமடைவ தால் இருதயத் துடிப்பு சீராக இருக்கும். இருதயத்தின் தொழில்பாடு சீராக நடைபெ றும். கழுத்து எலும்பு நழுவல் நோய் (Spondylosis) குணமடையும் கழுத்து வலி கழுத்து பிடிப்பு அகலும். சைனஸ் பிரச்சினைகள் அகலும். நெஞ்சுக்குள் இருக்கும் தைமஸ் சுரப்பி நன்கு தூண்டிவிடப்படுவதால் அதன் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் முது மை பின்போடப்படும், 蠶
இச் சுரப்பியுடன் ெ டர்பான அணாகத சக்

Page 18
கரமும் நன்கு அழுத்தப்படுவதால் அதன் செயல் திறனும் அதிகரிக்கும். கழுத்துக்குள் இருக்கும் தைரோயிட் சுரப்பி (Thyroid Gland) 56ite, 68 fol60L61576 அதன் செயல்திறன் அதிகரித்து அதனோடு சம்பந்தமான சகல நோய்களும் ஏற்படாது தடுக்கப்படும். தைரொயிட் சுரப்பியின் அதிகரித்த செயல்பாடு அனுசேப அளவை (Metabolic Rate) 9śSesshës(sid. Sg560TT6 உடலின் சகல செயல்பாடுகளும் சீராக நடைபெறும். அதிக கொழுப்பு அரிக்கப்பு டுவதால் உடல் எடை குறையும். காயங்கள் விரைவில் குணமடையும். மூளைக்கு அதிக இரத்தம் செல்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். கண் பார்வை தெளிவடையும். விழி வெண்படல நோய் (Cataract) ஏற்படாது. தலைமுடி நரைக் காது. கொட்டாது. பல் வியாதிகள் அகலும்
முகத்தில் சுருக்கம் ஏற்ட டாது. பொலிவு அதிகரிக்கும். குரல் வளம் அதிகரிக்கும் தோல் வியாதிகள் குண மடையும். - நரம்பு மண்டலம் பலம் பெறும். தொழு நோய், யானைக்கால் நோய் குணப டையும். சகல நாளமில்லாச் சுரப்பிகளும் புத்துயி பெற்று சீராக செயலாற்றும். அடிவயிறு நன்கு அழுத்தப்படுவதால் ப லுறுப்புகளுடன் தொடர்பான நரம்புகள் நன்கு தூண்டிவிடப்படுவதால் பாலியர் கோளாறுகள் அகலும் ஆண்மைக் குறை பாடு நீங்கும். கனவில் ஸ்கலிதம் ஏற்படு தல் கட்டுப்படும்.
* கல்லீரல் (Liver) நன்கு செயல்படுவதால்
*-菁事
 
 
 
 

மஞ்சள் காமாலை நோய் (aundice) குணம டையும், கணையச் சுரப்பி நன்கு தூண்டி விடப்படுவதால் நீரிழிவு குணமடையும். வயிற்றுப் புண் (Ulcer) குடல் அழற்சி (Colitis) போன்ற நோய்கள் குணமடையும். வெளி மூலம், உள்மூலம், இரத்த மூலம் போன்றவை குணமடையம். இடுப்பு வலி அகலும். - - மலச்சிக்கல் அகலும். மலச்சிக்கலால் பீடிக் கப்பட்டோர் இரண்டு தம்ளர் நீரைப் பருகி விட்டு இவ் ஆசனத்தை செய்தால் மலம் இலகுவில் வெளியேற்றப்படும். சிறுநீரகம் (Kidneys) நன்கு தூண்டிவிடப்ப டுவதால் அதன் செயல் திறன் அதிகரிக் கும். சிறுநீரக கோளாறுகள் அகலும். அட்ரீனல் சுரப்பி (Adrenal Gland) செம்மை யாகச் செயலாற்றுவதால் மன உளைச்சல், மன அழுத்தம்
போன்றவை அகலும், மாரடைப்பு ஏற்ப டாது தடுக்கப்படும். இருதயம் மற்றும் மூளையில் உள்ள இரத் தக் குழாய்களில் இரத்தம் உறைந்து முறையே மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படு தல் தடுக்கப்படும். எலும்புகள் பலமடையும். களைப்பு அகன்று அதிக சக்தியுடன் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயலாற்ற முடி யும். கூன் முதுகு நிமிரும் பெண்களின் மாதத்தீட்டு பிரச்சினைகள், கர்ப்ப கால கோளாறுகள் அகலும் சுகப் பிர 56)utổ ஏற்படும். இடுப்பழகு அதிகரிக்கும்.
ஒக்டோபர்-2011

Page 19
நிறைவாக ណាហ្ន៎
(பெருவாழ்வு வாழ்வோம்)
க. வைத்தீஸ்வரன் இவன் ஆலோசகர்)
சமூக ஆர்வலர் ஆசிரியர் நலப்பணியாளர் வளரிளம்பருவத்தினர் குடும்பத்தலைவர்
perorGBeornritsastessor essoas (BANJOS
ஒக்டோபர்-2011
 
 
 
 
 
 
 
 

be Ii
தான் வாழும் சமூகத்தை ஊடுரு விப் பார்த்து, அங்கு மக்கள் படும் அவ லங்களை ஆராய்ந்தறிந்து, அந்த அவ லங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்ப தில் தன் பங்கு என்ன எனச் சிந்தித்து, எழுந்து நடக்க முடியாதவனுக்கு ஊன்று கோல் கொடுப்பது போல பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு உடன்பலன் தர வல்லதாக 'நிறைவாக வாழ்வோம்’ என் னும் இந்நூலைத் தந்துள்ளார் கா.வைத் தீஸ்வரன்.
இன்று போர் அனர்த்தங்களால் ஏற் பட்ட நெருக்கீடுகளாலும், புலம்பெயர்வு களாலும், சுனாமி, வெள்ளப்பெருக்குப் போன்ற இயற்கை அனர்த்தங்களினா லும் ஏற்பட்ட இழப்புக்களால் அல்லற் பட்டுத் தனிமையில், முதுமையில், வறு மையில் துணையின்றி மனநலம் குன்றி இருக்கும் எம்மவரின் மனவளத்தையும், உடல்வளத்தையும் ஒருசேர வளம்படுத் தவல்ல வழிகாட்டல்கள் நிறைந்தது இந் நூல்.
இந்நூல் அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் வெளியிட்டுவைக்கப் ملعباسكالا
"மீட்டிங்லே பேச வந்த
தலைவர் ஏன் டென்ஷனா உட் காந்திருக்கார்?
"போஸ்டர்ல அஞ்சா நெஞ் |சன்னு பிரிண்ட் பண்றதுக்குப் பதிலா, கஞ்ச நெஞ்சன்னு
Lttt LLOOTTLLLL LL 0LOtTOOTTT LLLTTO TLTLLL SSS

Page 20
நரேஷ்பாபு வித்தியாச மான உணர்வுகளுக்குட்பட்ட தும் அவன் இருப்புக் கொள்ளா மல் தவித்ததும் அதன் பின் வெளியில் சென்றதையும் &FITUIT அத்தியாயம் 55 பொருட்படுத்தியதாகத் தெரிய வில்லை. அவள் தனக்குக் கொ டுத்த பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். நரேஷ்பாபு அகழ்வாராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தை நோக் கிச் சென்றான். நியூயோர்க் நகரத்தில் இருந்து சுமார் 3000 மைல்களுக்கப்பால் உறைய வைக் கும் பனிப் பாறை பிரதேசம் ஒரு வண்ண ஒளி வீசும் பிரகாசிக்கும் தேவலோகமாகவே அவன் கண்ணுக்குப்பட்டது. அவ்வளவு மின் விளக்குகள் அங்கே பளிச்சிட்டன.
பனிப்பாறைக்குள் சுமார் 300 அடிக்கப்பால் உறைந்து கிடக்கும் விண்கல்லை பூமிக்கு மேல்
 
 
 
 

எழுதுபவர் ரகதை -ராம்ஜி
கொண்டு வருவதற்காக பகீரதப் பிரயத்தனம் அங் கே நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பொறியியலாளர்கள், கணிதவி யலாளர்கள், வானசாஸ்திர வியலாளர்கள் என்று
எண்ணற்றோர் எறும்பு போல் உழைத்துக் கொண் டிருந்தனர். சி.என்.என்.ரோய்ட்டர் முதலான செய் திச் சேவைகளைச் சேர்ந்தவர்கள் பரபரப்பாக படம் பிடித்துக் கொண்டும் செய்தி சேகரித்துக் கொண்டுமிருந்தார்கள். விஞ்ஞானி ககாரின் சகல செயற்பாட்டிற்கும் தலைமைக் கட்டுப்பாட்டாள ராக இருந்தார். அவரது பணிப்புரைக்கமையவே
அங்கு எல்லா விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. விண்கல்லை பூமிக்கடியில் இருந்து வெளியில் எடுப்பதற்காக மிகப் பாரிய கிரேன்களும், பாரந்தூக்கிகளும் பொருத்தப்பட்டி ருந்தன. அவற்றை இயக்க பொறியியலாளர்கள் கவனமுடன் தயாராக இருந்தார்கள். இன்னு ஒரு அரை மணியிலோ ஒரு மணியிலோ விண்
) ஒக்டோபர்-2011

Page 21
கல் பூமிக்கு மேல் கொண்டு வரப்பட்டு விடும்.
விஞ்ஞானி விஸ்வநாதன் விண்கல் வெளியில் படிப்படியாக எடுக்கப்படும் போது அதனை எவ் வாறு திரைப்படமாக்குவது என்பது தொடர்பில் விளக்கமாக விவரித்துக் கூறிக் கொண்டிருந்தார். விண்கல்லை வெளியில் எடுத்த பின் அதனை வைக்க ஒரு பிரமாண்டமான மேடை அமைக்கப் பட்டிருந்தது. அந்த மேடை மீது அந்த கல் ஒரு பேரரசன் போல் வீற்றிருக்கப் போகின்றது. அதன் பின்னணியில் ஐக்கிய அமெரிக்காவினதும் "நா ஸா நிறுவனத்தினதும் கொடிகள் பறக்க விடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பாரிய விண்கல்லை தோண்டி பூமியின் மேற்பரப் புக்குள் கொண்டு வரப்பட்டு அதன் மாதிரி யின்படி அதில் காணப்படுகின்ற திரவியங்கள் சரி யாக உள்ளனவா? அதன் திண்மம், எடை, ஈர்ப்பு விசை என்பன பரிசோதித்து சரி பார்க்கப்படும். இந்த பணிகளை g|T্যা, நரேஸ் பாபு, விஸ்வநா தன், காகாரின் ஆகியவர்கள் உறுதி செய்வார்கள். அதன் நம்பகத்தன்மை தொடர்பில் உறுதிப்ப டுத்தப்பட்ட பின்னர் அமெரிக்கா ஜனாதிபதி வில் கீன்சன் வெள்ளை மாளிகை ஊடாக ஒரு உத்தி யோகபூர்வமான செய்தி அறிவித்தலை செய்வது L6GT நேரடியான ஒளிபரப்பு வடதுருவத்தில் இருந்து ஆரம்பமாகும். அந்த செய்தியாளர் மா நாட்டில் விஸ்வநாதன், ககாரின், சாரா, நரேஸ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு நிருபர்களுக் குப் பதிலளிப்பதற்கு ஏற்பாடாக இருந்தது. அதனை நாஸா கட்டுப்பாட்டாளர் மைக்கல் ரொ பர்ஸ் உரிய முறையில் திட்டமிட்டிருந்தார். இதில் ஏதும் குளறுபடிகள் இடம்பெற்று விடாதபடி கவ னித்துக்கொள்ளவே டெல்டா சிறப்புப் படை அணியினர் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் சில யார்கள் தூரத்தில் கூடாரமிட்டு அங்கு செயற்படுபவர்கள் ஒவ்வொருவரது அசை வையும் மிகக் கவனமாக அவதானித்துக் கொண் டிருந்தனர்.
விண்கல்லை வெளியில் எடுக்க அவர்கள் அனைவருமே மிக ஆவலுடன் இருந்தனர். துளை யிடும் பொறி நுட்பம் வாயிலாக பனிப் பாறைக் குள் துளையிடப்பட்டு விண்கல்லின் நான்கு புற மும் கனத்த சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தது. ககாரின் மாத்திரமே சகல விடயங்களிலும் மிகுந்த
2.
ஒக்டோபர்-2011

கவனம் காட்டுபவராக இருந்தார். அவர் இரும் புச் சங்கிலிகளையும் பாரந் தூக்கிகளையும் 15 இலட்சம் தொன் பாரமான ஒரு விண்கல்லை வெ. ளியில் கொண்டு வரும் அளவு சக்தி வாய்ந்த வையா என சரி பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட் டினார். எனினும் இதனாலெல்லாம் விண்கல்லை வெளியில் எடுப்பதில் தாமதம் ஆவது தெரிந்து நாஸா அதிபர் மைக்கல் ரொபர்ட்ஸ் பொறுமை இழந்தவராக இருந்தார்.
ககாரினின் கணிப்புப்படி பல இலட்சம் கிலோ ஐஸ் பாறைகள் முதலில் குறித்த விண்கல்லின் மேல் படிந்திருப்பதில் இருந்து அகற்ற வேண்டு மென்று கணிப்பீடு செய்திருந்தார். அதன் பிரகா ரம் அதனை வெட்டி அகற்றுவதென்றால் பல ରut: ரங்கள் பிடிக்கலாம். எனவே அவர் வேறு ஒரு உபாயத்தைக் கையாண்டார். அதன்படி சூடான லேசர் கதிர்கள் விண்கல் புதைந்திருந்த மேடை மீது சுற்றி வர செலுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து நீர் உருகி ஆறாக ஓடத் தொடங்கியது. இத்தகைய செயற்பாடு இடம்பெற்ற சில மணி நேரங்களில் ஒரு மூலையில் விண் கல்லின் ஒரு சிறிய பாகம் தெரிய ஆரம்பித்ததைத் தொடர்ந்து சகலரது கவனமும் அத்திசை நோக்கித் திரும்ப ஆரம்பித்தன.
அங்கு நடப்பது என்ன என்று நரேஸ்பாபு ஒரு ஓரத் தில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தான். அவன்
தொடர்ந்தும் மனித உருவில்
இருந்த நரேஸ் பாபுவாக இல்லை. முன்பு அவனை எம
அத்தி Tui e
காதகன் என்ற பெயரிலேயே நாம் அழைத்தோம் என்பதனை வாசகர்கள் மறந்து போயிருக்கமாட் டார்கள். ஆனால் அவன் மனிதன் போல் கூர்ப்ப டைந்து எமகாதகன் என்ற நிலைமையில் இருந்து மாறி கமிசும் காற்சட்டையும் அணிந்து பேரா தனை பல்கலைக்கழகத்தில் இரசாயன விஞ்ஞான பட்டப்படிப்பில் முதல் மாணவனாக வந்தமை யும் ஜெகதாம்பாள் என்ற சக மாணவியை குண் டர்கள் கடத்திச் சென்ற போது அவர்களிடமிருந்து அவளைப் காப்பாற்றியமையும் பின் அவள் பால் மோகங் கொண்டு அவளுடன் பழகியமையும் பின் எந்த விதமான உணர்வோ பட்சாத்தாபமோ

Page 22
இன்றி அவளை அவன் மறந்து போய் விட்டமை யும் அவளுடனான காதல் காரணமாக ஜெகதா குழந்தை ஒன்றுக்கு தாயானதும் வாசகர்கள் மறந் திருக்க மாட்டீர்கள். இப்போது இதை ஞாபக மூட்ட வேண்டியதன் காரணம் ஒன்று உள்ளது. நரேஸ்பாபு அவனுடைய மனிதத் தோற்றத்தில் இருந்து படிப்படியாக இராட்சதத் தோற்றத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறான். இதற்கான கார ணத்தை அவனாலேயே உணர முடியவில்லை.
குறித்த விண்கல்லொன்று பனிப்பாறைக்குள் புதைந்து கிடக்கின்றது. அதனை இவர்கள் வெ ளியே கொண்டு வர எத்தனிக்கின்றார்கள் என்ற எண்ணமே அவனுள் ஆயிரம் மின்னல் தாக்கங் களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. எல்லோரும் பரபரப்பாக தத்தமது வேலைகளில் மூழகிப் போ யிருந்ததால் நரேஸ்பாபு என்பவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை யாரும் கவனிக்க வில்லை. அதற்கான நேரம் யாருக்கும் இருக்க வில்லை. நரேஸ்பாபுவின் பற்கள் முன்பு போல் இராட்சதத் தனமாக வெளியே துருத்திக் கொண்டு வளரத் தொடங்கின. அவன் கண்கள் பெரிதாகி சிவந்து வெளியே தள்ளத் தொடங்கின. உடம்பில் உரோமம் முன்பைப் போல் அடர்த்தியாகி வளரத்
 
 

தொடங்கியது. அவன் தோள் பட்டைகள் சட்
டையை கிழித்துக் கொண்டு வெளிவரத் தொடங்
கின. அவன் இருளான ஒரு இடத்தில் மறைந்தி
ருந்து நடப்பதை அவதானித்துக் கொண்டிருந்
தான்.
ககாரினின் உத்தரவின் பேரில் 300 அடி தடிப்
பான பனிப் பாறை எக்ஸ்ரே கதிர்களால் தாக்கப் பட்டு வெப்பமான கிரணங்களால் ஊடுருவி பனி யானது ஆறாகப் பெருகி ஓடத் தொடங்கியது. நே ரம் செல்லச் செல்ல ஒரு கரிய மலையென ஒரு பெரும்பாறை மெது மெதுவாக மேலே தெரிய ஆரம்பித்தது. அங்கே கூடியிருந்தவர்களுக்குக் கொண்டாட்டம் தாங்க முடியவில்லை. ஊச் சத் தங்களும் கூக்குரல்களும் வெற்றிக் கோஷங்க ளும் பலமாக எழுந்தன. உண்மையில் இது உண் மையாயின் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய
கண்டுபிடிப்பாக இது திகழப் போகின்றது என்ப தனை மறுக்க முடியாது.
நாஸா நிறுவன கட்டுப்பாட்டாளர் மைக்கல் ரொபர்சும் மிக உற்சாகமானவராகவே இருந்தார். அந்த பாரிய விண்கல் மிகக் கவனமுடன் நிலத் துக்கு மேல் கொண்டு வரப்பட்டுள்ளது தொடர் பில் அவரை விட அதிக மகிழ்ச்சியடைந்தவர்கள்
ஒக்டோபர்-2011

Page 23
வேறு யாருமே இல்லை. அவர் அந்த விண் രൈ எவ்வாறு வெளிக்குக் கொண்டு வந்தார் கள் என்ற செயற்பாட்டை விவரணப் படமாக தயாரித்துக் கொண்டிருந்த விஞ்ஞானி விஸ்வநாத னைப் பார்ப்பதற்காக அவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்த இடத்தை நோக்கி விரைந்தார்.
'எப்படி விஸ்வநாதன்? விவரணப் படம் எந் |န္တeးရေး மக்களைக் கவரும் அளவுக்கு வந்திருக்
கின்றது' என்று அக்கறையுடன் விசாரித்தார்.
'மிக நன்றாக வந்திருக்கின்றது என நினைக்கி றேன், இதில் பல விசேட பொறிமுறைக் காட்சிக ளையும் திருப்பு முனைகளையும் கொண்டு வர வேண்டியுள்ளது. அநேகமாக எடிட்டிங் செய்து முடிந்து விட்டது' என்றார் விஸ்வநாதன் உற்சாக
LDT.
'நல்லது விஸ்வநாதன் அமெரிக்க ஜனாதிபதி gd 356T விவரணப்படம் முடிந்த கையுடன் அத னை உடனே வெள்ளை மாளிகைக்கு 'டிஜிட்டல் டிரான்ஸ்பர்' செய்ய சொல்லியிருக்கிறார். நான் அதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் உங் கள் வேலை முடிந்ததும் செய்தியனுப்புங்கள்'
ஒரு விசயம் M மைக்கல் ரொபர்ட்ஸ் என்று ഫ്രഖഞ് நிறுத்திய விஸ்வநாதன் மேற்படி விண் கல் மிகப்பெரியது. அதனை மேடைக்கு சற்று மேலே தூக்குவதற்கு போதுமான கிறேன்களை மட்டும் ஏற்பாடு பண்ணுங்கள் தொங்கிக் கொண் டிருக்கும் சங்கிலிகளை எடிட் செய்து தெரியாத படி அழித்து விடலாம். 15 லட்சம் தொன் பாரமு டைய விசாலமான விண்கல் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கு தான் ஏற்பாடு செய்வதாகக் கூறிய மைக்கல் ரொபர்ட்ஸ் அங்கிருந்து விரைந்து சென்று மறைந்து போனார். உண்மையில் இது வரை நாஸா எத்தனையோ கண்டு பிடிப்புக்களை யும் சாதனைகளையும் செய்திருக்கின்றது. அவற்
றில் எல்லாம் வெளியாரையோ சிவில் விஞ்ஞா னிகளையோ சம்பந்தப்படுத்தியது கிடையாது. இதுதான் நாஸா தன் கட்டுப்பாட்டுக்கப்பால் அமெரிக்கா ஜனாதிபதியின் மேற்பார்வையில் பல்வேறு தொலைக்காட்சி பிரமுகர்களால் நடத் தப்படும் முதல் முதல் நாடகமாகும். இப்போது எல்லா விடயங்களும் முடிவடையும் தறுவாய்க்கு வந்திருக்கின்றது.
ஒக்டோபர்-20 2.

0 0 (0 × 0 - 0 () () () ( ) ( > 0 - 0 (0 × 0. இதுவரை கணினிக்கு முன்னால் இருந்து பல் வேறு தரவுகளையும் புள்ளி விபரங்களையும் ப குப்பாய்வுகளையும் செய்து கொண்டிருந்த சாரா வுக்கு பளிச்சென மண்டையில் ஒரு எண்ணம் சீறிப்பாய்ந்தது. நாஸா ஒரு மிகப் பாரிய தவ றொன்றினை செய்யப் போகின்றது. மேற்படி விண்கல்லின் எடை பூமியின் சுழற்சியையும் அதன் உள் விசைத் தாக்கங்களையும் பாதிக்கப் போகின்றது. அதனை அது இருக்கும் இடத்தில் இருந்து அகற்றுவது என்பது பூமியின் அழிவுக்கு வழியமைப்பதாக அமையும். இதனை எவ்வாறா வது தடுத்தே ஆக வேண்டும் அவள் அப்போது தான் நரேஸ்பாபு இல்லாததை உணர்ந்தாள். அவன் எங்கே போயிருக்கக்கூடும் அவள் தலை சுற்ற ஆரம்பித்தது.
(அடுத்த இதழில் முற்றுப் பெறும்)
ஒட்டப் பந்தயத்துல தங்க மெடல்
வாங்கினா ஊக்க மருந்துன்னு சொல்லி தடை செஞ்சிடுறாங்க சரி. கடைசில வந்தவங்களையும் ஏன் Qg。
பண்றாங்க?
இவங்க ஏதாவது தூக்க மருந்து சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.

Page 24
|× * 黔
·
 

ஒக்டோபர்-2011

Page 25
திருமணம் செய் து கொண்டு சம் சார பந்தத்தில் இணைந்தார்கள். அவர்கள் எதிர்
ஒக்டோபர்-2011
 
 
 
 
 
 
 
 
 

பார்த்தபடி விரைவிலேயே ஒரு குழந்தைச் செல்வமும் கிடைத்தது. குழந்தைக்கு தனுஷ் என்று பெயர் வைத்து சீராட்டிப் பாராட்டி கொஞ்சுவது அவர்களுக்கு பொழுது போக்காக இருந்தது. அதன் மேல் அதிக பாசம் வைத் ததால் அதற்கு சிறு சிறு பிரச்சினைகள் வந்தா லும் கலவரமும் பதற்றமும் அடைந்தனர். அடிக்கடி வைத்தியரிடம் அழைத்துச் சென்ற னர். வைத்தியரும் பார்த்து விட்டு பயப்பட ஒன்றுமில்லை என்று கூறுவார். இருந்தாலும் குழந்தை அழும்போதெல்லாம் அவர்கள் கலக் கமடைந்தனர்.
இப்படி ஒரு ஐந்து ஆறு மாதம் கழிந்தது. ரவி வேலைக்குப் போனபின் பூர்ணிமா வீட்டு வேலைகளையும் செய்து குழந்தையையும் பார்த்துக் கொள்வாள். வீட்டில் ரவியும் இல் லாத நிலையில் குழந்தை சிறு உபாதை ஏற் பட்டு அழும் போதும் பூர்ணிமாவுக்கு என்ன செய்வதென்று குழப்பம் ஏற்படும். அக்கம்பக் கத்து வீட்டுப் பெண்களிடம் தன் பிரச்சினை களைக் கூறினாள். அவர்களும் வழக்கம் போல் குழந்தையின் பிறந்த நேரம் நல்லதா கெட்டதா என ஒரு ஜோதிடரிடம் காட்டி கேட்டுவிடுவது நல்லதென ஆலோசனை கூறினார்கள்.
பூர்ணிமா ரவியை நச்சரிக்க, குழந்தை விட யம் என்பதால் வேறு வழியின்றி ஜோதிடரிடம் அழைத்துச் சென்றான். ஜோதிடரும் அப்பியா சக்கொப்பியில் நவக்கிரக படம் வரைந்து கிரக நிலையை பார்த்து குறிப்பை எழுதி கிரக நிலை போதாது என்று கூறி நேர்த்திக்கடன் வைத்து
விநாயகர் கோயிலுக்குச் சென்று ஒவ்வொரு
செவ்வாயும் வெள்ளியும் விரதமிருந்து 108
வாரங்களுக்கு பூஜை செய்ய சொல்லி விட்
Lnst.
ரவிக்கு அடிக்கடி லிவு எடுக்க முடியாததால்
அவன் முதல் நாள் மட்டுமே பூர்ணிமாவுடன்
கோயிலுக்குச் சென்றான். அடுத்தடுத்த நாட்க ளில் பூர்ணிமா மட்டுமே தனியாக குழந்தை யையும் தூக்கிக்கொண்டு கோயிலுக்கு சென் றாள். அங்கே கோயிலில் ஒரு நிழலான இடத் தில் துணி விரித்து குழந்தையைக் கிடத்தி விட்டு தனது நேர்த்திக் கடன் மற்றும் பூஜை வேலைகளைக் கவனித்தாள். குழந்தை தனு
*-茎-

Page 26
சும் அதிகம் அடம்பிடிக்காமல் அமைதியா இருந்து ஒத்துழைத்ததால் பூர்ணிமாவுக்கு தல் வேலைகளை இடையூறின்றி செய்யக்கூடிய தாக இருந்தது.
இப்படிச் சில வாரங்கள் பூர்ணிமா எதுவித் தடங்களுமின்றி குழந்தையை எடுத்து சென்று கோயிலில் கிடத்திவிட்டு தன் வேலை களை செவ்வனே செய்து வந்தாள். ஒருநாள் வெள்ளிக்கிழமையன்று பூர்ணிமா வழமை போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்று குழந்தையை உரிய இடத்தில் கிடத்தி விட்டு தன் காரியத்தில் கவனமாக இருந்தாள் அப்போது திடீரென குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டது.
பூர்ணிமா திடுக்கிட்டு என்னவென்று பார்த் தாள். ஒரு திருடன் குழந்தையின் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கச் சங்கிலியை இறுச் கிப் பிடித்து அறுத்துக் கொண்டிருந்தான் கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்க வில்லை. பூர்ணிமாவும் அலறினாள். அதைக் கேட்ட ஒரு சிலர் விரைந்து ஓடி வந்தனர் அதற்கிடையில் திருடன் பாய்ந்து ஒடி சங்கிலி யுடன் மறைந்து விட்டான். குழந்தையின் அரு கில் வந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச் சற்றுக் காணப்பட்டது. கழுத்தில் இருந்து இரத் தம் வடிந்து கொண்டிருந்தது.
பூர்ணிமா கடுமையான அதிர்ச்சிக்குள்ள னாள். ஆபத்துக்கு உதவ வந்த இரு பெண்களு டன் ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள். ஒருவாறு குழந்தை காப்பாற்றப்பட்டாலும் குழந்தை மர ணத்தின் மிக அருகில் இருந்து தப்பியிருந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு பூர்ணி மாவுக்கு நீண்ட நாட்கள் பிடித்தன.
பெற்றோர் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த தங்கமாலை அணிவித்து அழகுபார்க்கும் போது அதனால் தேடி வரும் ஆபத்தை சிந்தித் துப் பார்ப்பதில்லை. இன்று தங்கம் விற்கும் விலையில் பெரியோரே தங்கம் அணிவது ஆபத்தானது. விலைமதிப்புள்ள தங்கம் பறி போனாலும் உயிருக்கு விலை மதிப்புண்டா?
- எஸ். ஷர்மினி
*-

Bru - பாதிப்புக்குள்ளானவரா நீங்கள்? மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள் வர வேண்டும். மலச்சிக்கல் தொடர்ந் தால், அது இ த ய த் து க் கே ஆபத்தாகி
விடும்.
25 anos
'ரொம்ப சிரமமா இருக்கு டொக்டர்'
'எதுக்கு?
நேர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறதுக்கு:
ஒக்

Page 27
5ண்களின் பார்வை சம்பந் தப்பட்ட ஆய்வு களை ஒளியிய லோடு சேர்த்து, " தனது அணுகு (p. 60) D 60) LL கோட்பாடுகள் மூல மாக வும் பரீட்சார்த்த ரீதி யாகவும் மெய்ப்
பித்தார்.
BIĞI EĞUGULETIGIÚIL (1862 - 1930)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தோடு இவருடைய ஆய்வுகள் மனித சமு தாயத்திற்கு பெரும் நன்மையாக அமைந்த கார ணத்தினால் 1911 ஆம் ஆண்டு மருத்துவத் திற்கான நோபல் பரிசினை வென்ற மருத்துவ சாதனையாளர் அல்வர் கல்ஸ்ட் ரோண்ட் அவர் கள். -
வழிகாட்டி இல்லாமல் ஆய்வுசெய்தவர்
சுவீடன் நாட்டைச் சேர்ந்த அல்வர் கல்ஸ்ட் ரோண்ட் 1862 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 5 ஆம் நாள் பிறந்தார்.
பொதுவாக ஒருவர் ஆய்வில் ஈடுபடும் போது Guide எனும் வழிகாட்டி மிக மிக அவசி யமாகும். நாம் செய்யும் ஆய்வுத் துறையில் ஏற்
da DEUTUNGGUBU fra GearLANN
கனவே ஆய்வு செய்து கொண்டிருக்கும் விற்பன்னராக அவர் இருத்தலும் அவசி யமாகும். அப்போதுதான் அவரால் தான் ஆய்வில் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோமா அல்லது விலகி விட்டோமா என்று கண்டுபிடிக்கவும் வழிகாட்ட முடியும்.
இவ்வாறு வழிகாட்டி இல்லாமல் யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா என்றால் அதற்கு உதாரணங்கள் மிக மிகக் குறைவே. அத்தகையோருக்கு ஓர் உதாரணம் தான் இந்த அல்வர் கல் ஸ்ட் ரோண்ட் அவர்கள்.
an Irisoning of in Light
அல்வர் எடுத்துக் கொண்ட ஆய்வுத் துறையான கண்பார்வையும் ஒளியியலும் என்ற விடயம் தொடர்பாக அன்றைய நாள் வரை அவருக்கு வழிகாட்டும் அளவிற்கு ஏற்க னவே கோலோச்சிய எவரும் இவருக்குக் கிடைக்கவில்லை. எனவே இவரேதான் முழுக்க முழுக்க தனித்து உழைக்க வேண்டிய தாயிற்று. எனவே தன்னை அர்ப்பணித்து முழு மையாக உழைத்தார். எவருடைய Guidance ம் இல்லாமலே கலாநிதி பட்டத்திற்குரிய கட்
ஒக்டோபர்-2011

Page 28
டுரை ஒன்றை நிறைவு செய்தார் அல்வர். அது வே இன்றளவும் வியந்து போற்றப்படும் ஒரு தனி மனித பட்டத்துக்குரிய கட்டுரையாக திகழ்கின்றது.
தனியொரு மனிதனாக கண்பார்வை ஒளியி யல் ஆய்வுகளில் இவர் புரிந்த சாதனை, கற்ப னைக்கு அப்பாற்பட்டது என்கிறது நோபல் பரிசு குழு. இத்தகைய பிரத்தியேக பாராட்டுக் கள் எதனையும் எந்த ஆய்வாளருக்கும் அந்தக் குழு கொடுத்தது கிடையாது.
அல்வர் கண்ட ஆய்வின் ஆழம் நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் காட்சி யும் ஒளியாகத்தான் நமது கண்களால் அடை யாளம் காணப்படுகிறது. இந்த ஒளி, ரெட்டி னா எனும் விழித் திரையில் மிகச் சரியாக விழும் போது நாம் பார்க்கும் பொருள் புலப்படு கிறது. இல்லையெனில் விளங்காத பொருளாக எண்ணெய் தடவியது போல் தெளிவற்றுத் தோன்றும். பார்க்கப்படும் காட்சி கண்வில் லைக்குள் குவியாத இந்தக் குறைபாட்டுக்கு கண்ணுக்குள் உள்ள வில்லையின் வளைவு ஒரு முக்கிய காரணமாகின்றது. அது எப்படி அமைந்திருக்க வேண்டுமோ அப்படி அமையா விட்டால் இதுபோன்ற குளறுபடிகள் கண்க ளில் ஏற்படும்.
கண்களின் நிலையையும் கண்களின் குறை பாட்டினையும் துல்லியமாக அறிய, உபகரணம் எதுவுமே இல்லாத காலம் தான் அல்வர் அவர்க ளின் காலம். இதற்காக பயன்படுத்தப்படும் ophthalmoscope எனும் உபகரணம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முன்னேற்றம் எது வும் காணாத ஆரம்ப நிலையிலேயே இருந்தன.
。 *āy* ** os
у я м нz ocsко
***** **。
= ஒக்டோபர்-2011
 
 

எனவே தனது முதல் வேலையாக இந்த உபகர ணத்தில் முன்னேற்றங்களைக் கொண்டு வரு வதில் இறங்கினார் அல்வர். அதை அவர் வெற் றிகரமாக செய்தும் காட்டினார்.
கண் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை அறியும் வாய்ப்பு
ophthalmoscope உபகரணமானது அல்வ
ரின் முயற்சியால் கண்களின் அடி ஆழம் வரை
நுணுக்குக்
காட்டி 'ഭ' )
விழிவென் 2-s
திரை
சென்று விபரங்களை காட்டுமாறு செய்யப்பட் டது. அப்போது தான் விழி வில்லை (லென்ஸ்) யின் பிழையான அல்லது குறைபாடான தன் மையால் உருவாகும் பல்வேறு நோய்களும் இனங்காணப்பட்டன.
இவற்றுள் உதாரணத்திற்கு ஒன்று. சிலரு டைய விழி வில்லைகள் (லென்ஸுக்கள்) வீங் கிய அளவில் அமைந்து விடுவதுண்டு. அந்த நிலையில் அவர் தாங்க முடியாத தலைவ லிக்கு ஆளாவார் என்பது முதன் முதலாக அல் வரின் மேற்குறித்த முயற்சியாலேயே கண்டுபி டிக்கப்பட்டது. -
இதுதான் கண்களுக்கும் தலை வலிக்குமான அறியப்படாத தொடர்பு முதன் முதலாக கண் டுபிடிக்கப்பட்ட உச்சம்.
கண்களின் உள்ளூர உருவாகும் அழுத்தத் Sibe Intra Cranial Pressure (ICP) 6T6TD தொரு மருத்துவ பெயர் உண்டு. இதனை கட் டுப்படுத்தாத நிலையில் கண்களே வெடித்து விடக் கூடிய மாபெரும் அபாயம் உண்டு. மேலும் இதனால் மரணம் சம்பவிக்கும் நிலை
G.

Page 29
கூட ஏற்படும் என்பதனையும் அல்வர் ஆய்வு கள் மூலம் கண்டறிந்து உலகிற்கு வெளிப்ப டுத்தியதும் மருத்துவ உலகமே வியந்து புரு வத்தை உயர்த்தியது.
க்ளுகோமா
வளைந்த நிலையில் இருக்க வேண்டிய விழி (லென்ஸ்கள்) வில்லைகள், முற்றிலுமாக மிக வும் வளைந்து ஒரு கப்பல் போல் சிலருக்கு
இருப்பதுண்டு. இதுதான் Glaucoma எனும்
விபரீதமான கண் நோய்க்கான காரணம் என்
பதை அல்வரின் உபகரணம் தெளிவாக புலப்
படுத்தியது.
விடாத தொடர்ச்சியான தலைவலி Glau
Coma போன்ற கண் சம்பந்தப்பட்ட அபாய நோய்களை அல்வர் கண்டறிந்ததோடு மட்டு மல்லாது கண்களில் ஏற்படும் புற்றுநோய், கண் களின் மூலமாக தலைக்கு பரவும் என்ற மருத்
துவ உண்மையையும் அறிவித்தார் அல்வர்.
நீரிழிவு நோய் நீரிழிவு நோய் ஓர் உயிர்க் கொல்லி நோயா கவே அக்காலத்தில் கருதப்பட்டது. அது தாக் காத உடற்பாகங்களே இருக்க முடியாது. இது கண்களையும் விட்டு வைப்பதில்லை. சுருங்
கக் கூறின் நீரிழிவு தாக்கும் உடற்பகுதிகளில்
கண்களுக்கு முக்கிய இடமுண்டு விழிப்படல லென்ஸில் நீரிழிவு கை வைக்கும் போதே
நோயாளிக்கு கண் பார்வை சிதைவடைகிறது. இவை அனைத்தையும் படம்பிடித்துக் காட்டிய
 
 

வர் அல்வர் கல்ஸ்ட்ராண்ட் அவர்கள்.
இதற்கும் விழி லென்ஸ் அறுவை சிகிச்சை நன்கு உதவும் என்பதை முதன் முதலில் உல கில் முன் வைத்தவர் அல்வர் அவர்களே. அவர் கூறிய முறையை பின்பற்றியே லேசர் போன்ற நவீன அறுவை சிகிச்சை முறைகள் கண்பார் வையை இன்றும் மீட்டுத் தந்து கொண்டிருக் கின்றன.
அறுவை சிகிச்சை
அனைத்து கண் சம்பந்தப்பட்ட நோய்களை பும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றி விடலாம் என அல்வர் இறுதி பாக கூறியது கண் சிகிச்சையில் அவருடைய நிகரற்ற திறமையை பறைசாற்றுகின்றது.
அல்வர் கண்டுபிடித்த அனைத்துமே அது வரை அறியப்படாத மருத்துவ உண்மைகளா கும். இவற்றுக்கு சமன்பாடுகள் சார்ந்த கோட் பாடுகளையும் வகுத்தளிக்க அவர் தவற வில்லை. தன்னுடைய அனைத்து கண்டுபி டிப்புக்களையும் கணித, விஞ்ஞானத்தின் துணை கொண்டு கட்டுரைகளாகவும் சமன்பா டுகளாகவும் வரலாற்றில் பதிவு செய்தார். இவ ரின் சாதனைகள் அனைத்தையும் பாராட்டி 1911 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அல்வர் கல்ஸ்ட்ரோண்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மனித சமுதாயத்தில் எத்த னையோ பேருக்கு கண்பார்வை அளித்த அல் வர் 1930 ஜூலை 28 ஆம் நாள் தனது கண் கள்ை நிரந்தரமாக மூடினார். ஆனால் அவரின் அளப்பரிய சேவையால் இன்றும் கண்பார்வை பெறுவோர் மூலமாக உலகை பார்த்த வண் ணம் இருக்கிறார்.
"ஒரே வீட்ல பத்து தடவைக்கு மேலே திருடியிருக்கியே ஏன்?
ான் அவங்க பேமிலி
ضربات
திருடன் எஜமான்
露醛 స్టోక్కో
ஒக்டோபர்-2011

Page 30
శాతం) ఈenరిత్O22
\නෙජ්ඩ්‍රාව 2 ܢܘ/s 25
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதால் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு. ஒரு நாளில் கூடுதல் 2 மணி நேரம் தொலைக்காட்சி
முன்பாக உடல் உழைப்பு இல்லாமல்
குறைத்தால் நீரிழிவு நோயை குறிப்
அமர்ந்திருக்கும் நபர்களுக்கு ஐந்தில் ஒரு
பங்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும் 15 சதவீதம் இதய நோய் ஏற்படும் வாய்ப்
பும் உள்ளது.
தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை
பிடத்தக்க அளவு தவிர்க்க முடியும். அதேபோன்று இதய நோய்கள், முன் கூட்டிய மரணம் போன்றவற்றையும் தவிர்க்க முடியும்.
 
 
 
 
 
 
 

6th ஆரோக்கிய வாழ்வுக்கு அடிநாதமாக அமைவது நித்திரையாகும். ஆனால் எமது சமூகத்தில் பெருந்தொகையான மக்கள் போதியளவு நித்திரை செய்ய முடியாது அவ திப்படுவதைக் காண முடிகிறது. 'நாம் நன் றாக நித்திரை செய்கிறோம்’ எனக் கூறுகிற வர்களுக்கும் ஓய்வு (Rest) தேவை. 7-8 மணித்தியாலம் நித்திரை செய்யும் dmGGOT வனை ஓர் இருட்டறையில் விடின் 5 நிமி இடங்களில் நித்திரையாவதைக் காணலாம். இந்நிலைமை நித்திரை போதாமையை உணர்த்துவதாக உள்ளது.
இயல்பான நித்திை
நித்திரை
ஒருவருக்கு 9-9/2 மணித்தியாலங்கள் இயல்பான நித்திரை அவசியமாகும். ஆனால் எமது சூழலில் எத்தனை வீதத்தினர் 9 மணித்தியாலம் வரை நித்திரை செய்கி றார்கள்.
நித்திரை இன்மைக்கான காரணிகள் * வேலைப்பளு, கூடிய வேலை செய் யும் நிர்ப்பந்தம்.
* சினேகிதர்களின் கூடிய சேர்க்கை.
* நாள் வேலைகள் இரண்டு அல்லது 3 பகுதியாகப் பிரித்து 24 மணித்தியாலமும் மாறி மாறி வேலை செய்யும் அவலம்.
* 24 மணித்தியாலமும் ஒலி / ஒளிபரப் பாகும் கட்புல செவிப்புலச் சாதனங்களின் ஆதிக்கம்.
ஒக்டோபர்-2011

Page 31
இதன் தாக்கங்கள் * பூரணமாக நித்திரை செய்யும் நிலைமை கிடைத்தால் உற்பத்தித்திறன் கூடும். ஆக்கத்திறன் விருத்தியடையும். நாம் எடுக்கும் முயற்சிகளில் கூடியளவு கவ னம் செலுத்த முடியும்.
* நித்திரை சரிவரக் கிடைக்காவிடின் மக்களின் ஞாபக சக்தி குறைவடைய முடி யும். தீர்மானம் எடுக்கும் திறன் குறைவடை யும் கருத்தூன்ற முடியாது கற்றல் தடைப்பர் டும். வேலைத் தளங்களின் கருமங்கள் சரி யாக நிறைவேற்ற முடியாது. பிழைகள் அதி கரிக்கும்.
* உபகரணங்கள், இயந்திரங்கள் பாவிப் போர் அவற்றைச் சரிவரக் கண்காணிப்ப தில் சிரமங் கொள்வர்.
* அமெரிக்க ஆய்வு ஒன்று 10% வாகன விபத்துக்கள் ஒட்டுனர் வாகனத்தைச் செலுத்தும் வேளையில் நித்திரை அடைந் துள்ளமையை இனங்காட்டியுள்ளது. ஈடுசெய்யும் வழிமுறைகள் * சராசரி 8-9 மணித்தியாலம் நித்திரை செய்தல் வேண்டும்.
* வார இறுதியில் சனி அல்லது ஞாயிற் |றுக்கிழமை 1 மணித்தியாலத்திற்கு மேல் பிற்பகலில் நித்திரை செய்வதன் மூலம் இழந்த அமைதியற்ற நிலையைப் போக்கப் பேருதவியாக அமைய முடியும்.
* தனிமையில் இருப்போர், குடும்பத் தைப் பிரிந்திருப்போர், பிள்ளைகள் வெளி நாடுகளில் இருப்போர், சித்திரவதைக்கு ஆளானோர், குண்டு வீச்சுக்கு இலக்கா னோர், மரணங்களை நேரே கண்டு அதிர்ச் சிக்குள்ளானோர், இயற்கை அனர்த்தங்க ளில் அகப்பட்டோர், முதலானோர் நித்திரை செய்ய வேண்டிய வேளையில் மன அழுத் 。 தம் காரணமாக நித்திரைக் குழப்பத்திற்கு ஆளாதல் தவிர்க்க முடியாததாகிவிடு கின்றது. மன அமைதி பேணும் சமய அநுட் டானங்கள், ஆழச் சுவாசித்தல், மந்திர உச்
ஒக்டோபர்2011
 
 
 
 
 
 

@一 D a மின்மை நோயை ஆங்கி லத் தி ல் insomnia stairo குறி ப் பி டு கி ன் றோம். இந்த நோயைக் குணப்
படுத்தக்கூடிய தொப்
பியொன்றை மருத்து \ வர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் தொழிற்பாடு மிகவும் சுலபமானது.
இந்தத் தொப்பியோடு இணைந்த பையில் குளிர்ந்த நீர் ஊற்றப்படுகின்றது அல்லது ஐஸ்கட் டிகள் போடப்படுகின்றன. அதை தலையில் அணிந்ததும் அது தலையில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உறக்கத்தை உண்டாக்குகின்றது. எனவே மூளையை குளிர்ச்சியடைய வைத்து ஒய்வு பெறச் செய்வதுதான் இந்த தொப்பியின்
(86.606).

Page 32
பழத்தின் தோலில் காணப்படும் மெழுகுத் தன்மை கொண்ட பளபளப் பும், அதனோடு இணைந்த இரசாயன மும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மை களை அளிக்கக் கூடியது என அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று தகவல் தெரிவிக்கின்றது.
அப்பிள் பழத் தோலில் காணப்படும் அர்சோலிக் அமிலம் தசைகளை ஆரோக் கியம்ாகக் கட்டி எழுப்பக்கூடியது. இது இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவு என்பனவற்றை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கக் கூடியது. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளைச் சாப் பிடுவதால் மனிதனது சுகாதாரம் வியக்கத்தக்க ஆரோக்கியத்தைக் கொண்டிருக்குமாம்.
 

FTL60T b, ஜெபம் செய்தல் மூலம் மன அறு தல் அடைய முடியும்.
கீழ்க்காணும் முதலுதவி முறையைக் கடைப்பிடித்தால் சில நிமிடங்களில் நித்தி ரையாகலாம்.
* சமதரையில் அல்லது பலகைக் கட்டி லில் தலைநிமிர்ந்து ஆறுதலாகக் கிடத்தல், ! தலையணை பாவிப்பதில்லை.
* கண்ணை மூடியவாறு மூச்சுவிடுதல் - உள்ளெடுத்தலை அவதானிக்கவும் (அமை தியாக)
தமது வாதத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஏங்குவர், எளிதில் சினம்
கொண்டவராகக் காணப்படுவர். இந்நிலை ଅଗ୍ନି, யாவற்றுக்கும் அவர் தாய், தந்தை,சகோத ரர், அவர் வாழ்ந்த சூழல்தான் காரணம் என்
பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியவர் களாக இருக்கிறோம். இவ்வுணர்வு ஒருசில : தினங்களில் ஏற்படுவதில்லை. தொடர் நிகழ்வுகள் அவரின் நடத்தைக் கோலமாக
அமைந்துவிடுவதைக் காணலாம்.
இந்நிலையில் தாய், தந்தையர் நல்லுறவு பூண்டவராகவும், பொறுமை கடைப்பிடிப்ப வராகவும், அன்பில் திளைத்தவராகவும், மற்.
றவர்களை அனுசரித்து நடப்பவர்களாகவும், மேலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பார்களேயா
கில், குழந்தைகள் அவர்களின் முன் உதார ணத்தைக் கொண்டு அமைதி காத்தவர்களா கத் திகழ்வர். இக்குழந்தைகள், தாய் - தந் தையரிடம் மனம் திறந்து பேசும் நிலைமை உருவாக்குதல் பெற்றோர் கடமையாகும். மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்தல் யார் ஒருவர் மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செவிமடுக்கின்றாரோ அவர் களில் எமக்கு விபரிக்க முடியாத ஓர் ஈர்ப்பு ஏற்படுவதைக் காணுகிறோம். இவ்விதமான நம்பிக்கை மேலோங்குவதினால் குறிப் பிட்ட நண்பரின் கருத்துக்களுக்கு மதிப்ப ளிக்கும் நிலைமை மேலோங்கும். தான்

Page 33
வாதிட்ட - அடம்பிடித்த கருத்துக்களை மீள்
நோக்கவும் தயாராவர். இதன் மூலம் நல்லு றவு மேலும் சிறக்க முடியும். விட்டுக் கொடுக்காது வாதிடுவோர், கூடிய சினம் கொள்வோர், மனம் உளைச்சல் மேலோங்கு வதனால் எளிதில் தொற்றாத்தன்மை நோய் களுக்கு ஆளாகின்றனர். (அதி இரத்த அமுக் கம், சயரோகம், பாரிசவாதம், மனப்பதட் டம், குடற்புண், இருதய வியாதி முதலி யன)
பொறுமை காத்தல் எவன் ஒருவன் பெருந்தன்மையாகப் பொறுமை காத்து விட்டுக்கொடுத்து நடக்கி றானோ, மற்றவர்களுடன் இணங்கிப் போகி றானோ அல்லது தன்னைத் தாழ்த்திக் கொள் கிறானோ அவன் சமூகத்தால் நேசிக்கப்படு வான். உயர் இடத்தில் வைக்கப்படுவான்.
ஒருவனின் வாயிலிருந்து உதிர்க்கும் சொல்லின் தன்மையிலிருந்து அவனின் சுற் றத்தாரை பற்றி அறிந்து கொள்ள முடியும். இதில் இருந்து விடுபடுவதாகில் பிறரிடம் அன்பு பாராட்டக் கற்றுக் கொள்ளுதல் இன் றியமையாததாகும்.
பஜனை, நாம உச்சாடனம், தியானம், யோகாசனம் முதலியன கூடிய நன்மை பயக்கும். மனம் விட்டு உரத்துப் பாடுவதன் மூலம் அடக்கப்பட்ட உணர்வுகளை வெ |ளிக்கொண்டு வர முமடியும்
தியானம், யோகாசனம் முதலியனவைக ளைக் கையாளுதல் மூலம் மனம் ஒரு வழிப டவும், பொறுமை கடைப்பிடிக்கவும் பேருத
வியாக அமைய முடியும். மேலும் மனம் விட்டு ஆற்றுப்படுத்துனரின் உதவியுடன் அடக்கிய உணர்வுகளை வெளிக்கொண்டு
வருதல் சிறந்த நன்மை பயப்பதாக அமைய
| (plգպլb,
கா.வைத்தீஸ்வரன் உளவளத்துணையாளர்
= SVISLIITLIFT20 II
 
 
 

இரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகளை உட்கொண்டு அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோயை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்,
முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி
மாட்டிறைச்சி இவற்றை தவிர்த்திடுங் கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களை காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும், நெய்யால் செய்த பண்
டங்களையும் குறையுங்கள்.

Page 34


Page 35


Page 36
* இரசாயன திரவியங்கள் நீரில் கல * வெப்பத்தில் வைப்பதால் விச வ
வெளியேறுகின்றன. * இவை ஒரு முறை மாத்திரமே பய
தத்தக்கன * பிள்ளைகளிடம் இப்போத்தலில் நிரப்பி அனுப்ப வேண்டாம் * உல்லாசப் பயணம் போகும்போது இத்தகைய போத்தல்களில் பா நிரப்பிச் செல்லக் கூடாது. * சூடான நீரை இதில் ஊற்ற வேண்
நீர் மனிதனுக்கு இன்றியமையாததொன் றாகும். உணவின்றி மனிதன் பல நாட்கள் வாழ முடியும். ஆனால் நீரின்றி மனிதனால் வாழ முடியாது. ஒரு சொட்டு நீரின்றி மணி தன் மரணத்தை தழுவ வேண்டிய சந்தர்ப்பங் களும் உண்டு. இன்று நாம் நீர்க் குழாயை திறந்தவுடன் தாகம் தீர மட்டும் குடிக்க தேவையான நீர் கிடைக்கின்றது. ஆனால் சில நாடுகளில் ஒரு சொட்டு நீரின்றி கஷ்டப்படுப வர்களுக்கு ஒரு துளி நீரும் ஒரு ஒளடதமாக இருக்கின்றது.
தூரப் பயணம் செல்லும் போது நாம் எம்மு டன் பெரிய போத்தலில் நீரை கொண்டு செல்கின்றோம். அந்த போத்தலில் நீரைக் கொண்டு செல்ல முன்பு அதனை கொதிக்க வைத்து பின்பு ஆறிய பின் போத்தலில் அடைத்துக் கொண்டு செல்கின்றோம். அந்த போத்தலில் திரும்பவும் குழாயிலிருந்து தண் னிரை அடைத்து வைத்து திரும்பி அருந்து கின்றோம். இவ்விதம் அதே போத்தலில் பல நாட்களுக்கு தண்ணீரைக் கொண்டு வந்து குடிக்கின்றோம். சாதாரணமாக ஒரு நாளுக்கு 2 முதல் 3 லீற்றர் தண்ணி குடிப்பது எமது உடலுக்கு மிகச் சிறந்தது என யாவரும்
en .6ܚ
 

LITESTÜLITIEDIGDIGIUITA கின்றன
யுக்கள் -
ன்படுத்
Dr. டிலானி கருணாநாயக்க STriassif கொழும்பு வைத்திய ஆராய்ச்சி |
நிறுவனத்தின் (MRI) உணவு, நீர், நுண்கிருமியியல் ஆய்வு நிபுணர்
TIL LITLħd.
அறிந்த விடயமாகும். பிளாஸ்டிக் போத்தலில் தண்ணிரை அடைத்து பல கிழமைகள், மாதங்
கள் அதே போத்தலைப் பாவிப்பதை நாம் பல ரிடம் காணலாம். இவ்விதம் மாதக் கணக்கில் அதே பிளாஸ்டிக் போத்தலில் நீரை அடைத்து குடிப்பது சிறந்ததா? என்ற கேள்வி இப்போது எழுப்பப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கான பதிலை கொழும்பு வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் உணவு மற்றும் நீர் தொடர்புடைய நுண்ணுயிர்கள் பிரிவின் மேலதிக இரசாயன பகுப்பாய்வின் விசேடத்துவ வைத்தியர் Dr. டிலானி கருணா நாணயக்க மிக விளக்கமாக எடுத்துக் கூறி 60T Tir. -
பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர் எந்தத் தர நிர் ணயத்தின் கீழ் எந்த விதத்தில் அடைக்கப்பட் டுள்ளது எனக் கூற முடியுமா?
போத்தல்களில் அடைக்கப்பட்டு பெறப்ப டும் நீரானது கிணறு மற்றும் ஊற்றுக்களிலி ருந்து பெறப்படுகின்றது. குடிநீராகப் பயன்ப டுத்த முன்பு இந் நீர் வடிகட்டப்படுகின்றது. முதலில் மணல் கலந்த வடிகட்டலுக்கு உட்ப டுத்தப்படுகின்றது. பின்பு சிறு உயிரினங்கள்
ஒக்டோபர்-2011
■。

Page 37
இருந்தால் (பக்டீரியாக்கள்) அவற்றை நீக்குவ தற்காக மைக்ரோ பில்டர் மூலம் வடிகட்டப்ப டும். இங்கு நீரிலுள்ள தேவையற்ற பொருட் கள் வெளியேற்றப்படுகின்றன. நீரிலுள்ள இர சாயன பொருட்களும் வடிகட்டப்படும் போது நீக்கப்படுகின்றது. இதன் பின்பு மிகச் சிறிய நுண்ணுயிர்கள் இருந்தால் அவற்றையும் நீக்கு வதற்காக மிக நுண்ணிய மைக்ரோ பில்டர் மூலம் கண்ணுக்கு புலப்படாத மிக நுண்ணிய நுண்ணுயிர்கள் நீக்கப்படும். -
அதனுடன் அவை கறுப்பு மற்றும் ச வெள்ளை நிற தடுப்புத் திரைகள் மூலம் செல் லும் போது (Screening) ஒரு சிறு நுண்ணுயிர் ( காணப்பட்டாலும் அதனையும் அந்தத் திரை காட்டிக் கொடுத்து விடும். அதன் பின்பே தர நிர்ணயத்தின் கீழ் போத்தல்களில் அடைக்கப் படுவதற்கு அங்கீகாரம் கொடுக்கப்படும். விசேடமாக நீர் மட்டுமின்றி நீர் பெற்றுக் கொள்ளப்படும் கிணறு மற்றும் ஊற்றுக்கள் யாவும் தேடிப் பார்த்து பரிசீலிக்கப்படுகின் றன.
இயற்கையாக உள்ள நீரிலுள்ள உப்பு உட லுக்கு அவசியமானது. அப்படியிருக்கும் போது வடிகட்டலுக்கு இந் நீர் உட்படும் \ போது நீரிலுள்ள உவர்த் தன்மை அழிவ டையாதா?
இல்லை, வடிகட்டும் போது உவர் தன்மை அகன்று விடுவதில்லை. சரியான விதத்தில் வடிகட்டும்போது நீரில் இருக்க வேண்டிய உவர் தன்மையின் வீதமானது அழிவடையாது பாதுகாக்கப்படுகின்றது. அத்துடன் குடிநீர் பான போத்தல்களில் இருக்க வேண்டிய உவர்ப்பு வீதமானது சரியாக உள்ளதாக என்பதையும் நாம் கண்காணிப்போம்.
இது தொடர்பாக சுகாதார அமைச் சின் குழுவொன்று மேற்பார்வை செய்யும். இவை முறையாக நடக்கின்றதா என்பதை தேடிப் பார்த்த பின்பே இறுதியில் அனுமதி வழங்கப்படும். குடிநீர் பான போத்தலைப் பரீட்சித்த பின்பு சுகாதார அமைச்சு மூலம் பதிவு செய்யப்பட்டு இலக்கம் வழங்கப்ப டும். இந்த இலக்கம் போத்தலிலுள்ள லேப
ஒக்டோபர்-2011 37
 
 
 
 
 
 

லில் அச்சிடப்பட்டிருக்கும். சுகாதார அமைச் lன் இந்த முத்திரை குத்தப்பட்ட இலட்சினை ானது போத்தலில் குறிப்பிடாவிடில் அந்த பாத்தல்களை வாங்காமல் விடலாம். முறை ான மேற்பார்வையின் கீழ் உங்களுக்கு ைெடக்கும் குடிநீர் பான போத்தலானது சுகா ார அமைச்சின் முத்திரையுடன் மற்றும் தர நிர்ணயக் கட்டுப்பாட்டுச் சபையின் SLS ான்றிதழுடனும் காணப்படும்.
இந்த நீரைப் பாதுகாப்பதற்கு ஏதேனும் இர ாயன பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றதா?
எந்த இரசாயன சேர்க்கைகளும் சேர்க்கப்ப டுவதில்லை. குளோரினுடனான நீரைப் பெற் - prՋյլԻ -9,6026ւ պլԻ வடிகட்டலுக்கு உட்ப டுத்தப்பட்டு இறுதி ul60 குளோரின் ܓ 8 . அற்ற நீராகவே வெளி வருகின் றது. உண்மை uSci) ஒவ் வொரு வருட மும் நீர் பெறப் படும் கிணறு கள் ஊற்றுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்ப டும். இந்த கிணறுகள் எந்த தூசி, துகள்களும் வீழ ம ல் கொங் கி A岛 L | ச |ா ந் து பூ ச ப் Lu Loo (B)
L IT 5

Page 38
LTLLTLLLLLTS STTT LOLMLTTTLTLLLYSOSOSS 0LMMLLTLLTTLLTLLLLL
டுள்ளன. அத்துடன் வடிகட்டல் முறையும் முற்றாக மூடப்பட்டே உள்ளது.
சுமார் 100 மீற்றர் ஆழத்திற்கு பாதுகாப்பா மூடப்பட்டிருத்தல் அவசியமாகும். கிணறு மற் றும் ஊற்றுகள் பரிசீலிக்கப்பட்டு பதிவு செய் யப்படல் வேண்டும். அத்துடன் பதிவு புதுப் பிக்கப்படலும் அவசியமாகும்.
இந்த குடி நீர் அடைக்கப்பட்ட போத்தல்க ளுக்கு குறிப்பிட்ட தர நிர்ணயக் கட்டுப்பாடு உள்ளதா?
இவை காணப்படுவது பெட் வகையிலான போத்தலிலாகும். உலகின் மிகச் சிறந்த பாது காப்பான போத்தல் வகையாக இதனைக் கருத லாம். இந்த வகை போத்தல்கள் உடல் ரீதியி லான எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்து வதில்லை என சுகாதார அமைச்சு விதந்துரை செய்துள்ளது.
எனினும் மக்கள் இத்தகைய பிளாஸ்டிக் போத்தல்களை ஒரு முறை பாவித்த பின்னர் மீண்டும் மீண்டும் நீர்நிரப்பி இதனைப் | UL6GT
 

படுத்துகின்றனரே, இது எந்த அளவுக்கு பாது காப்பானது?
இத்தகைய போத்தல்கள் ஒரு தடவை பாவிப்பதற்கு மாத்திரமே பயன்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இதனை குடித்து முடித்த பின்னர் வீசி விட வேண்டும். இவை மிகுந்த மெல்லிய பிளாஸ் டிக் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை நீண்ட கால பாவனைக்கு எந்த விதத்திலும் உகந்ததல்ல.
நமது இலங்கை நாட்டின் மக்கள் இவற்றை பாவித்த பினனர் மீண்டும் இவற்றில் நீர் நிரப்பி பயன்படுத்துகின்றனர். பிள்ளைகளி டம் பாடசாலைக்குக் கொடுத்தனுப்புகின்ற
னர். அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லுகின்ற
னர். வேறும் சுற்றுலாப் பயணத்தின் போதும் இவற்றில் நீரோ, பானங்களோ நிரப்பி எடுத் துச் செல்கின்றனர்.
எனினும் சில நீர்ப் போத்தல்கள் சுமார் 15 லீட்டர் நீர் நிரப்பக் கூடிய போத்தல்கள் என் பன போதுமான தடிப்புடன் உற்பத்தி செய் யப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஆபத்தில்லை. குறிப் பாக குறைந்த தடிப்புள்ள போத்தல்களை பயன்படுத்துவதால் அவற்றை தயாரித்தலுக் குப் பயன்படுத்திய இரசாயனத் திரவி யங்கள் கசிந்து நீருடனோ, பானங்க
ளுடனோ கலக்கும் வாய்ப்பு கா ணப்படுகின்றது. இவை நீருடன் கலந்து உடலுக்குள் செல்வத னால் பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். புற்றுநோய் ஏற்படக் கூடிய அபா
மறுபுறத்தில் தொடர்ந்து இந்த நீரை போத்தல்களில் அடைத்து வைத்து பருகுதல் காரணமாக இனங் காண முடி யாத பல நோய்கள் ஏற்படுகின்றன என்றும் இவற்றின் விளைவுகள் உடனடியாகத் தெரிய வருவதில்லை என்றும் நீண்ட காலத்தின் போது இத்தகைய விளைவு கள் நோய்களாக வெளிப்படும் போது இவை எப்படி ஏற்படுகின்றன என அறிய
ஒக்டோபர்-2011
யங்கள் கூட காணப்படுகின்றன.

Page 39
வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், இளநீர், அறைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும்
உணவுகள். இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது
முடியாதுள்ளதென்றும் Dr. டிலானி கருணாநா யக்க எச்சரிக்கை விடுத்தார்.
இதில் காணப்படுகின்ற மற்றுமொரு பாரிய பிரச்சினைதான் இவற்றை போக்குவ ரத்து செய்யும் போதோ, களஞ்சியப்படுத்தும் போதோ போத்தல்கள் எந்தவிதத்தினாலும் சூரியக் கதிர்களாலோ அல்லது வேறு காரணி களாலோ சூடடையாமல் இருத்தல் வேண்டு மென்பது. ஆனால் நாம் சாதாரணமாக கடைக் காரர்கள் கடைக்கு முன் வெய்யிலில் போத் தல்களை சூடடைய வைத்திருப்பதனை அன் றாடம் பார்க்கின்றோம். இந்தக் காரணி வெறு மனே தண்ணி போத்தல்களுடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட விடயமில்லை. வேறு இனிப் புப் பானங்கள், கொக்கா கோலா, பெப்சி கோலா, ஸ்மெக் மற்றும் இது போன்ற சகல பிளாஸ்டிக் போத்தல்களிலும் அடைக்கப்பட்ட பானங்களுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இதில் உள்ள நம்மால் அறிந்து கொள்ள முடி யாத பிரச்சினை என்னவென்றால் போத்தலில் அடைக்கப்பட்ட நீர் எந்த சந்தர்ப்பத்திலாவது வெப்பமூட்டப்பட்டிருந்ததா என்பதனை நம் மால் அறிந்து கொள்ள முடியாததாகும்.
பொதுவாக இரசாயனத் திரவியங்கள் சூடாக்கப்படும் போது அவற்றில் வேறு இரசா
j;(84 MILIf-2011
 

யன திரவியங்களை சேர்த்தே புதிய இரசாய னங்களை உருவாக்குகின்றார்கள். இரசாய னங்கள் சூடாக்கப்படுவதனால் போத்தல்க ளில் இருந்து வெளியேறும் இரசாயனங்கள் அந்த போத்தலில் உள்ள பானங்களில் கலக் கின்றன. அவை என்ன விதமான இரசாயன விளைவை உண்டாக்கலாம் என்பதனை ஒவ் வொரு போத்தலிலும் உள்ள பானங்களை பரி சீலித்தே தெரிந்து கொள்ள வேண்டும். அது சாதாரண மக்களுக்கு சாத்தியமான விடய Logo.6).
இன்னொரு விடயமும் இதில் கவனிக் கற்பாலது. இத்தகைய போத்தல்கள் சூடடை யும் போது நெளிந்தும் வளைந்தும் உருவம் மாறுகின்றன. இத்தகைய உருவம் சிதைந்த போத்தல்களையும் கொள்வனவு செய்யாதி ருத்தல் வேண்டும். இறுதியாக மக்களுக்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கிய விடயம் உள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு முறை பாவித்த தண்ணி போத்தல்களை நீரூற்றி மீண்டும் பாவிக்காதீர்கள். அது கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் விழு வதற்கு ஒப்பான செயலாகும். -
"இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு
உயிர்களை காப்பாத்திட்டார்.' "அப்படியா ..! எப்படி.' "இன்னிக்கு நடக்க இருந்த நாலு ஆபரேஷனையும் தள்ளி
வச்சிட்டார். '
ܠ ܟ ܒ ܠ ܐ ܐ ܬܐ ܝܬܐ ܪܬܐ ܕ ܐܠ ܠ .

Page 40
மூலிகையின் பெயர் - வசம்பு.
தாவரப்பெயர் - ACORUS CALAMUS.
தவரக்குடும்பம் - AROIDACEAE. -
பயன்தரும் பாகங்கள் - வேர் மற்றும் இலைகள்.
வேறுபெயர்கள் - பேர் சொல்லா மருந்து,
பிள்ளை வளர்த்தி,
உரைப்பான்.
பிறப்பிடம் - தென் கிழக்கு ਭਰo
ரிக்கா
வளரும் இடம் :- சதுப்பு நிலங்கள், களி மண் மற்றும் நீர் பிடிப் புள்ள பகுதிகள்.
ஆயுர்வேதம்
 
 
 
 
 
 
 
 
 
 

தன்மை -
வசம்பு, இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்து கள் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும். வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையு டையவை. இதன் தண்டு வேர் பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற் பகுதி சாம்பல் நிறத்துடனும் இருக்கும்.
வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி நீளம் வரை படரும். வேர்கள் தான் வசம்பு என்பதா கும். நட்ட ஒரு ஆண்டில் பயிர் முதிர்ந்து மஞ் சள் நிறமாக மாறும் தருணத்தில் அதாவது ஒரு ஆண்டில் கிழங்கை வெட்டி எடுக்க வேண்டும். இந்த வசம்பில் அசரோன், அகோரின் மற்றும் கொலாமினால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இது நல்ல வாசனையையுடையது. இது கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறுது.
மருத்துவப்பயன்கள்:-
* வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக் கூடிய தன்மை உடையது.
ஒக்டோபர்-2011

Page 41
வாந்தியை உ ண் டாக்கு வ தோடு நுண்புழுக் களை அழிக்கும் தன்மையும் கொண்
.lڑتع * குமடடலை யும், வாந்தியையும் 空_氰_。盲 5 5 is issol நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட் கொள்ளவேண்டும். வசம்பை வறுத்துப் பொடி செய்து கால் கிராம் தேனில் உண்டு வர சளி, வாயு ஆகிய வற்றை அகற்றிப் பசியை உண்டுபண்ணும்.
* வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி குறையும்.
* வசம்பைக் கருக்கிப் பொரித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொரு மல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகி யவை தீரும்.
* வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைக்க, உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.
* குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல், வயிற்றுவலி குணமாக வசம்புடன் அதிமதுரம்
A "பொண்டாட்டிக்கு பயப்படுவதில் லைன்னு முடிவுக்கு வந்திட்டேன்" “சபாஷ் எப்பேலர்ந்து..?
"அவ செத்துப் போனதிலேர்ந்து'
。 go
 
 
 
 
 
 
 
 

சேர்த்து கசாயமிட்டு காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கக் குணமாகும்.
* வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு திருந்தும். * வசம்பு ஒரு பங்கும் பத்து பங்கு வெந்நீரும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி பதினைந்து மி.லி. முதல் முப்பது மி.லி. வீதம் அருந்தி வர பசி தூண்டப்படும், அஜீரணம் நீங்கும்.
* வயிற்றில் சேர்ந்த வாயுவை அகற்ற வசம்பை அடுப்பில் வைத்து சுட்டுக் கரியாக்கி, அதனை தேங்காய் எண்ணையுடன் கலந்து அடிவயிற்றில் பூசவேண்டும்.
*சகலவிதவிஷக்கடிகளுக்கும் இதன் வேரை வாயிலிட்டு மென்று வர விஷம் முறியும்.
* 一 巴汗量_量鄞
தேசத்திலும்
േ *卯** éflaos வெந்நீரில் குளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அத்தகையவர்கள் மித மான நீரில்தான் குளிக்க வேண்டும். அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணிர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிக வும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி மிகவும் மிருதுவானது. லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும்.அதனால்தலைவாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும். உட லில் மாத்திரம் ஆரோக் கியத்தை பேணாமல் கேசத்தையும் ஆரோக்கிய மாக வைத் தி ரு ப் பது || 35 600 6NO ULJ IT ULI
5 L 60) Lo uLu 6ÑO 6)6. IT?
lashطون قو3) =

Page 42
நீரின்றி உலகமே இல்லை என் பது நாம் அறிந்த விடயமே. மனிதன் தண் னின்றி ஒருபோதும் வாழ முடியாது. அத்த கைய சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது தான் நீர்.
மனிதன் உணவே உண்ணாமல் பல நாள் இருக்கலாம். ஆனால் தண்ணிரே இல்லாமல் ஒரு நாளுக்கு மேல் வாழ முடியாது.
நம் உடல் முழுவதும் 60 முதல் 70% வரை நீரால் ஆனது. உடல் முழுவதும் ஒரு இடம் கூட விடாமல் நீர் நிறைந்திருக்கிறது. நாம் உண்ணும் அனைத்து உணவுப் பொருட்களின் சத்துக்களும் நீரில் கலந்து தான் உடலினுள் செல்கின்றன. நம் உடலில் செல்களுக்குள் ளும் செல்களுக்கு வெளியேயும் நிறைந்திருப் பது நீரே.
Deafs, el Lob f'din Glaub (Shah 1. உடல் திசுக்களுக்கு சத்தை எடுத்துச் செல்தல்.
2. உடலுக்குள் சிறந்த கரைப்பானாக செயற்படல். -
3. திசுக்களில் இருந்து கழிவுப்பொருட் களை வெளியேற்றல்.
4. d L 6ÑO GolG) u Lou Lu நிலையை சீராக
பாதுகாத்தல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5. உடலின் இரத்த
அழுத்தத்திற்கு பயன்' LIL6).
廳彎勤 a Leóä 3 Saba Si Glas Gunsi
நமது உடலிற்கு நீர் பெரும்பாலும் தண்ணி அல்லது பானங்கள் குடிப்பதன் வழி யாகவே கிடைக்கிறது. அத்தோடு உடலில் நடக்கும் ஒக்ஸியேற்றத்தின் மூலம் வெளிப் படும் நீரும் நமது உடலில் சேருகின்றது.
anos e La Mab Carib series où Liq. Cu all LttT L MTTTLLLLLLLLS LLL LLLLtTTTT LLtttLLLLLLLttLL sodas el-ROM OMNEGO Gloria:Gunun Nation, NONNON,
1. தோல், நுரையீரல் மூலம் வெளியேறு கின்றது.
2. வியர்வை மூலம் வெளியேறும். 3. சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. நமது உடலின் சகல விடயங்களிலும் நீர் முக்கிய பங்காற்றுகின்றது. எனவே தண் னிரை நாம் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் நம் உடலை நோயின்றி பாதுகாக்கவும் முடியும். நோய் களை இல்லாது ஒழிக்கவும் முடியும். தண்ணி ரின் உதவியுடன் நோய் நீக்குவதற்கு தண்ணி மருத்துவம் அதாவது வோட்டர் தெரபி என அழைப்பர்.
கீழ்குறிப்பிட்டுள்ள சில சிறந்த குணங்களே தண்ணீர்மருந்தாகப் பயன்படுவதற்கும் காரணமாகும். 1. உலகில் முதல்தர கரைப்பானாக அதா வது கரைப்பதற்கு உதவுவது நீர் தான்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர்-2011

Page 43
கொள்ளும், கடத்தும், வெளிப்படுத்தும் குணம் உடையது. VA.
3. திடப்பொருளாகவும் திரவமாகவும் வாயு வாகவும் மூன்று நிலைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது தண்ணி,
4.பாத்திரத்தின் அளவின்படி, தண்ணி உருவம் கொள்கிறது. தண்ணி மருத்துவம் வோட்டர் தெரபி எனப்படும் தண்ணீர் மருத்துவத்தில் தண்ணி பல வழிகளில் பயன் படுத்தப்படுகிறது. அவை, 1. தண்ணி குடித்தல்
2. குளித்தல்
I. உடல் முழுவதும் III. இடுப்புக் குளியல். III. முதுகெலும்புக் குளியல் IV. கால் குளியல். 案 3. ஒற்றடம் கொடுத்தல். 4. நீராவிக் குளியல்.
5. எனிமா கொடுத்தல் என தண்ணீரைக் கொண்டு பல்வேறு மருத்துவங்களைச் செய்ய முடியும்
பசித்த மனிதன் தண்ணீர் அருந்தக்கூடாது. அதேபோல் தாகத்திற்கு உணவருந்தக்கூடாது. ஏனெனில் தண்ணிருக்கு எந்த ஒரு பொருளோ
முட்டையில் அதிக அளவு கொழுப் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. முட்டை யின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும் மஞ்சள்கருவில் 59 கலோரியும் உள்ளது. நா சமைக்கும் முறையைப் பொறுத்து, கலோ களின் அளவு கூடும் அல்லது குறையும்.
ஒக்டோபர்-20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணவோ பானமோ மாற் றிடாக அமைய முடியாது.
ച്ചക്രേപേr് உணவருந்த முன்போ அல்லது உணவு அருந்தும்போதோ அதிகளவு தண்ணி அருந்தக்கூடாது சமிபாடு பாதிப்படையும் உணவு அருந்தி முடிந்தவுடன் தான் தண்ணி அருந்த வேண்டும்
நீர் நமது உடலிற்கு ஆற்றும் நன்மையோ ஏராளம். தினமும் இரண்டரை லீட்டர் தண்ணி அருந்தினால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தலையிலே காயம்?
'விறகு இடிச்சிட்டது' 'பார்த்து போககூடாது. ஆமா விறகு எங்க இருந்துச்சி?
'என் பொண்டாட்டி கையில

Page 44
(TiSSue (biology)) (-9|6060g) ệlời). GTGöTLg), 62(I5 உயிர்ச் செயலை புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்க ளைப் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல் லது திசுவியல் (Histology) ஆகும். நோய்களைக் கண்டறிவது தொடர்பாக இழையவியலை ஆரா
ology) என அழைக்கப்படும்.
ஒரு குறிப்பிட்ட இழையம் ஒரே மாதிரியான உயிரணுக்களைக் கொண்டிருப்பது அவசிய மில்லை எனினும், ஒரே பிறப்பிடத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக் கூட்டங்களைக் கொண்டி ருக்கும். ஒரே தொழிலைச் செய்யக் கூடிய பல இழையக் கூட்டங்களைச் சேர்த்தே உறுப்பு
அல்லது அங்கம் உருவாகின்றது.
விலங்கு இறைய வகைகள் விலங்குகளில் நான்கு இழைய வகைகள் உள் ளன. இவற்றில் வெவ்வேறு இழைய வகைகள் இணைந்து உறுப்புகளையும், பின்னர் உறுப்புக் கள் இணைந்து உடலையும் உருவாக்கும்.
புறவணியிழையம் இவ்வகை இழையமானது புறச் சூழலுடன் தொடர்புடைய அனைத்து உள், வெளி உறுப்புக் களையும் மூடி இருக்கும். உடல் உறுப்புக்கள் உட லின் மேற்பரப்பை மூடியுள்ள தோல், சமிபாட்டுத் தொகுதி, சுவாசத்தொகுதி, இனப்பெருக்கத்
 
 
 

தொகுதி போன்றவற்றை மூடியுள்ள மேற்பரப்பு போன்றவை இவ்வகை இழையங்களால் ஆனது. இந்த இழையங்கள் உடல் உறுப்புக்களுக்கு பாதுகாப்பளித்தல், உடலிற்குத் தேவையான சில சுரப்புக்களைச் சுரத்தல், சமிபாடடைந்த உணவை உறிஞ்சல் போன்ற செயல்களைச்செய்யும். அத் துடன் இந்த இழையங்கள் ஏனைய இழையங் களில் இருந்து ஒரு அடிமென்சவ்வினால் (basal membrane) பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த இழையமானது, நுண்ணுயிர்கள், காயம் ஏற்படு தல், உடலிலிருந்து திரவ இழப்பு போன்றவற் றில் இருந்து உடலை பாதுகாக்கும்.
இணைப்பிழையம்
இணைப்பிழையம் (Connective tissue) அல் லது தொடுப்பிழையம் என்பது உடற்பாகங்களை இணைக்கும் திசு இரத்தம், எலும்பு போன்றன இவ்வகைத் திசுக்களாகும். எலும்பானது உடல்
ஒக்டோபர்-20

Page 45
உறுப்புகளுக்கு அமைப்பைக் கொடுப்பதுடன் உறுப்புக்களை இணைத்து வைத்திருக்க உதவும். இரத்தம் உடல் உயிரணுக்களுக்குத் தேவையான ஒட்சிசன், உணவு, சுரப்புக்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், கழிவுகளை அகற்றவும் உதவும்.
தசை இழையம் இவ்வகை இழையங்கள் சுருங்கி விரியும் இயல்புள்ள இழையங்களாகும். இவை உடல சைவு, உள்ளுறுப்புக்களின் அசைவுக்கு உதவும். இவை மூன்று வகைப்படும்.
நரம்பிறுைவனம் நரம்புத் தொகுதியை உருவாக்கும் இழையம் நரம்பிழையம் எனப்படும். இவ்வகைக் இழை யங்கள் மூளை, தண்டு வடம் போன்ற மைய நரம்பு மண்டலத்தையும், புற நரம்பு மண்டலத் தையும் உருவாக்கும் இழையங்கள் ஆகும். நரம் புத் தொடர்புகளில் இவ்வகை இழையங்கள் தொழிற்படும்.
anuasputín (Meristenecie tisue) இவை தொடர்ந்து கலப்பிரிவு, கலவேறுபாடு நடைபெறும் இயக்கத்திலுள்ள கலங்களைக் கொண்டிருக்கும். பொதுவாக தண்டு நுனி, வேர் நுனி, மற்றும் காழ், உரியக் கலங்களை உருவாக் கவல்ல தண்டின் உள்பகுதியில் காணப்படும் மாறிழையம் போன்றவை இவ்வகைப் பிரியிழை யமாகும்.
ജ്ഞ தண்டு, வேர் என்பவற்றின் நுனிப்பகுதியில் காணப்படும். இதன் தொடர்ச்சியான பிரிவி னால், தண்டு, வேர்ப்பகுதிகள் நீட்சியுற்று தாவர வளர்ச்சியில் உதவும். இது முதன்மையான வளர்ச்சியென்றும் நேர்வளர்ச்சி என்றும் அழைக்
கப்படும்.
ஒக்டோபர்-2 0.
 
 

蠶 綫 蠶
இவ்வகை இ த்திலுள்ள கலங்கள் ஒரு தளத்திலேயே பிரிவைக் கொண்டிருப்பதனால் இதனால் உண்டாகும் வளர்ச்சி பக்க வளர்ச்சி யாக இருக்கும். இதனால் தண்டு, வேர் போன்ற அங்கங்களின் விட்டம் அதிகரிக்கும் மரங்
經
ဓ၈စ္ဆu။
களின் வெளிப்பட்டைக்கு கீழாக இருக்கும் 55603, Loris)60 pub (cork cambium) Sct as திலைத் தாவரங்களின் கலனிழையத்தில் இருக் கும். கலனிழைய மாறிழையம் என்பன இவ்
வகை இழையங்களாகும்.
இவை நிரந்தர இழையங்களுக்கு இடையில் காணப்படும். கணுக்களின் அடிப்பகுதி, கனுக்க ளுக்கு இடையிலான பகுதிகள், இலையின் அடிப்பகுதி போன்ற இடங்களில் இவ்வகை இழையம் காணப்படும். தண்டுகளின் பக்க வளர்ச்சியிலும், தாவரங்களின் சில பகுதிகளில் நீட்சிக்கும் உதவும்.
நிரந்த இறைால் பிரியிழையத்திலிருந்து உருவாகும் கலக்கூட் டம் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்ய ஆரம் பிக்கும்போது, அவை தமது தொடர்ந்து பிரியும் தன்மையை இழந்து நிரந்தர இழையமாகின்றது. கலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு, உருவம், தொழில் என்பவற்றை அடையும் செயல் முறையே கலவேறுபாடு எனப்படுகின்றது.
一 乐-量_圆円

Page 46
Egli Siena
2 OSŘísluší
()
மனிதனின் அடிப்படை தேவைகள்
மூன்று. அவையாவன - உணவு, உடை, உறைவிடம் அதிலும் உணவு மிகவும் இன்றி யமையாதது. உணவின்றி யாராலும் வாழ முடி யாது. இது யாவரும் அறிந்த உண்மை. அதி லும் உங்களிற்கும் எங்களிற்கும் பெற்றோர்க ளிற்கும் இருக்கின்ற முக்கிய பிரச்சினை சிறு பிள்ளைகளின் சாப்பாடு மற்றும் சத்துணவு.
கூடுதலான பெற்றோர் சொல்லும் விடயம் தான் 'எனது பிள்ளை சாப்பிடுகிறார் இல்லை மெலிந்து கொண்டே போகிறார் சாதாரண பிள்ளை ஒன்றிற்கு உணவு கொடுப்பதில் ஊட்டுவதில் பெற்றோர் எத்தனையோ வழிமு றைகளை பின்பற்றி மிகவும் கஷ்டப்படுகிறார் கள். அப்படி இருக்கும் போது ஒடிசம் பிள்ளை களிற்கு உணவு கொடுப்பது என்பது லேசான காரியம் இல்லை.
ஓடிசம் பிள்ளைகளும் சாதாரண பிள்ளை களே. இவர்கள் எந்த விதத்திலும் சாதாரண பிள்ளைகளில் இருந்து வேறுபட்டவர்கள் அல்லர். ஆனால் இப்பிள்ளைகளிற்கு காலம் /
 

(355th (Time), 3Lib (Places), யார் எவர் (Persons) என்று வேறு பிரித்து அறிந்து கொள் ளும் தன்மை கிடை யாது அல்லது குறை வாகவே காணப்படும். S
எனவே இப்பிள்ளை
கள் சாதாரண பிள்ளை களில் இருந்து மாறு Dr. எஸ்.தேவாநந்தன்"
(Chairman, LILL LI p595 6-12555. OSILMO Autism Center) 606 கொண்டிருப் பார்கள். அத்துடன் இப்பிள்ளைகளின் உணவு பழக்கவழக்கங்களும் சற்று வேறுபட்டே காணப்படும்.
முதலில் நாம் ஒடிசம் பிள்ளைகள் உணவு உண்ணும் போது எவ்வாறான செயற்பாடு களை காண்பிப்பார்கள் எவ்வாறான உணவு வகைகளை விரும்பி உண்ணுவார்கள். இவர்
களது உணவு பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பன பற்றி பார்ப்போம்.
ஒடிசம் பிள்ளைகள் பொதுவாக ஏதாவது ஒரு உணவை விரும்பி உண்ண பழகிக் கொண்டால் அதனை மாற்றமாட்டார்கள். தொடர்ந்து அந்த உணவை உண்ண விரும்பு வார்கள். வேறு உணவு வகைகளை கொடுத் தால் உண்ண மறுப்பார்கள். தமக்கு பிடித்த உணவை கேட்டு அடம்பிடிப்பார்கள். பெற்
றோர் வேறு உணவு வகைகளை ஊட்ட முற்
ஒக்டோபர் 2011

Page 47
இவர்கள் விரும்பமாட்டார்கள். மனம் معنى பிரட்டுவது போல் பாசாங்கு செய்வார்கள். எப் படியாவது வேறு உணவை ஊட்டி விட்டால் உடனடியாக சத்தி (Vomit) எடுப்பார்கள். இதன் காரணமாக கூடுதலான பெற்றோர் இவர் கள் விரும்பும் உணவையே தொடர்ந்து கொடுப்பார்கள்.
இந்த இடத்தில் பெற்றோர் தொடர்ந்து இப் பிள்ளைகள் விரும்பும் உணவை கொடுக்காது சிறிது சிறிதாக இதனை மாற்ற முற்பட வேண் டும். இது நிச்சயமாக முடியும். உதாரணமாக பிள்ளை ஒன்றிற்கு சோறு சாப்பிட விருப்ப மில்லை. பப்படம் விருப்பம் எனில் முதலில் பப்படத்தின் ஒரு சிறிய பகுதியை கொடுத்து பின்னர் சோறு சாப்பிட்டால் தான் அடுத்த பகுதி தரப்படும் என்று சொல்லி சோற்றை ஊட்ட முற்பட வேண்டும். பின்னர் சோற்றின் அளவை சிறிது சிறிதாக அதிகரிக்க வேண் டும். அல்லது பப்படத்தை சிறிய சிறிய துண் டுகளாக்கி சோற்றில் சேர்த்து ஊட்ட முடியும்.
இவ்வாறு பலவிதமான வழிமுறைகளை யும் பயிற்சிகளையும் மேற்கொள்ளுவதன் மூலம் இப்பிள்ளைகளின் உணவு முறையை மாற்ற வேண்டும்.
இது லேசான காரியம் இல்லை. ஆனால் முடியாத காரியமும் இல்லை. இதற்கு பெற் றோர்களிற்கு பொறுமை மிக முக்கிய விடய மாகும். பொறுமை இல்லாதவர்களால் இதை செய்ய முடியாது. முதல் நாள் சில வேளை களில் இந்த முயற்சி சரிவராமல் போகலாம். ஆனால் திரும்ப திரும்ப இவ்வாறான முறை ) களை கையாளும் போது நாளடைவில், ெ
பிள்ளைகள் சோற்றின் சுவையை புரிந்து கொண்டாராயின் பின்னர் அதனை விரும்பி உண்ண பழகிக் கொள்வார்கள். இவ்வாறே எந்த
6) Ι60)35U IΠ60T Φ 600T6) . களாக இருந்தாலும் மாற்ற முடியும்.
ஒடிசம் பிள்ளை கள் கூடுதலாக நறுக்கு நூறுக்கு
ஒக்டோபர்-2011
 
 
 
 
 
 
 
 
 
 

என்று சத்தம் கேட்கும் உணவு வகைகளை விரும்பி உண்ணுவார்கள். உதாரணமாக (pp5(5. Mixtures, Tipitip, Short eats (Pastry) போன்றன. அது மட்டுமன்றி இவர்கள் இனிப்பு பானங்களை விரும்பி குடிப்பார்கள். அதிலும் சுறுசுறுப்பு கூடிய ஒடிசம் குழந்தை கள் இவற்றை மிகவும் கூடுதலாக எடுப்பார் கள். இவ்வாறான இனிப்பு பானங்களையோ சொக்கலேற் போன்ற பொருட்களையோ கூடு தலாக எடுப்பதன் காரணமாக இப்பிள்ளைக ளின் சுறுசுறுப்பு தன்மை (Hyper activity) இன்னமும் கூடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. எனவே இவ்வாறான செயற்கையாக தயாரிக்கப்படும் இனிப்பான சாப்பாடுகளை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
ஐந்து, ஆறு வயதிற்கு மேற்பட்ட ஒடிசம் பிள்ளைகள் கூட சாதாரண அடிப்படை உணவு வகைகளை அதாவது மரக்கறி, பழ வகைகள் போன்றவற்றை வேறு பிரித்து அறிய முடியாதவர்களாக உள்ளனர். அது மட்டுமன்றி உணவை பகிர்ந்து எவ்வாறு உண்ண வேண்டும்,
எந்த எந்த வேளைகளில் எவ்வாறான
உணவு வகைகளை சாப்பிடுதல் போன்ற விட யங்கள் கூட இவர்களிற்கு புரியாமல் இருக்கின் றது. அதாவது காலை, மதியம், இரவு சாப்பாடு மற்றும் தேநீர் வேளை என்று எதையும் இவர் களால் பிரித்து அறிய முடியாது.
SS
ബ

Page 48
ஒடிசம் பிள்ளைகளை வெளி இடங்களிற்கு கூட்டிச் சென்று ஒரு தினத்தில் (கலியான வீடு, சொந்தக்காரர் வீடு, etc) மற்றவர்களுடன் சேர்ந்து இருந்து எவ்வாறு சாப்பிட வேண்டும், எவ்வாறான நடைமுறைகளை அவ்விடத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற பகுத்தறிவு இவர்களிடம் காணப்படமாட்டாது. உதாரண மாக எல்லோரும் சேர்ந்து இருந்து சாப்பிடும் போது மற்றவர்களின் சாப்பாட்டில் தற்செ யுலாக இப்பிள்ளைகளிற்கு பிடித்த ஏதாவது தென்பட்டால் உடனடியாக கையை வைத்து அதனை எடுத்து சாப்பிடுவார்கள். இங்கு முக் கியமான விடயம் இப்பிள்ளைகளிற்கு இது ஒரு புதிய இடம், நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பவற்றை புரிந்து கொள்ளும் தன்மை கிடையாது. ஆனால் அவ் விடத்தில் இருப்பவர்கள் அப்பிள்ளையின் பெற்றோரை குறை சொல்வார்கள். இந்த இடத் தில் இவ்வாறான பிள்ளைகளை வைத்தி ருக்கும் பெற்றோரின் மனவேதனை சொல் லில் அடங்காது. இங்கு பெற்றோரில் எந்தவித மான பிழைகளும் இல்லை.
Child is NOT a problem Child HAS a problem * இதன் காரணமாக பெற்றோர் இவ்வாறான பிள்ளைகளை வெளி இடங்களிற்கு கூட்டி செல்வதில்லை. இப் பிள்ளைகள் சமூகத்துடன் சேர்ந்து பழகுதல், புரிந்து கொள்ளும் தன்ம்ை எ ன் ப என
மறுக்கப்படு
 
 
 
 

(Socialzation, Self - Help Development) இதனால் இப்பிள்ளைகளின் பிரச்சினைகள் மேலும் கூடுகின்றன.
இவ்விடத்தில் பெற்றோர் செய்ய வேண்டி யது இவ்வாறான பிள்ளைகளை வீட்டில் குடும் பத்தவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாப் பிடும் போது இப்பிள்ளைகளையும் சேர்த்து சாப்பிடப் பழக்க வேண்டும். கூடுதலான குடும்பங்களில் இவ்வாறான பிள்ளைகளிற்கு தனியாகவே சாப்பாடு கொடுப்பது அல்லது ஊட்டுவதை அவதானிக்க முடியும். இதை மாற்றி எல்லோரும் சாப்பிடும் இடத்தில் இவர் களையும் வைத்து சாப்பிட்டு பழக்க வேண்டும்.
சில ஒடிசம் பிள்ளைகளிடம் உணவை சப்பி சாப்பிடுதல் அல்லது பற்களால் கடித்து சாப்பிடும் பழக்கம் கிடையாது. சாப்பாட்டை வாய்க்குள் வைத்தவுடன் விழுங்கி விடுவார்கள். இதன் காரணமாக பெற்றோர் இவ்வா றான Gleitspots, ளிற்கு உணவை பிசைந்து அதாவது சோற்றுடன் கறி வகை களை சேர்த்து பிசைந்து
ஒக்டோபர்-2011
ܚ 9

Page 49
குழிகுழியாக செய்து வாய்க்குள் வைத்தவுடன் இப்பிள்ளைகள் அந்தக் குழிகளை விழுங்கி விடுவார்கள் இங்கு பாருங்கள் இப்பிள்ளை களிற்கு சுவை தெரியாது, சோறு மற்றும் கறி வகைகளை வேறு பிரித்து அறியும் தன்மை இல்லாது போகிறது. அதுமட்டுமன்றி கடித்து சாப்பிட வேண்டிய உணவு வகைகளை இப் பிள்ளைகளால் சாப்பிட முடியாது போகிறது.
இங்கு பெற்றோர் சிறு பராயத்தில் இருந்தே இப்பிள்ளைகளிற்கு சிறிது சிறிதாக பிசைந்து கொடுப்பதை நிறுத்தி எவ்வளவு அடம் பிடித் தாலும் சமாளித்து எல்லா வகையான சாப் பாட்டு வகைகளையும் கொடுத்து பழக்க வேண்டும். சில பிள்ளைகள் கைகளால் உணவை எடுத்து வாய்க்குள் வைத்து சாப்பிட தெரியாது. அதாவது ஐந்து ஆறு வயதில் கூட இப்பிள்ளைகளிற்கு ஊட்டி விட வேண்டிய நிலைமை உண்மையிலேயே சிறு பராயத்தில் இருந்து ஓர் இடத்தில் பிள்ளைகளை இருத்தி உணவு கொடுத்து பழக்குதல் வேண்டும்.
பிள்ளைகள் உணவை சிந்தத்தான் செய் வார்கள். ஆனால் நாம் பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும். பிள்ளைகளிற்கு பின்னால் நின்று பொறுமையாக அவர்களிற்கு பழக்கிக் கொடுத்தல் வேண்டும் தகுந்த பயிற்சிகளின் மூலம் நிச்சயமாக பழக்கத்தில் கொண்டு வர ஒவ்வொரு பிள்ளையும் நாளடைவில் நன்றாக சாப்பிட பழகிக் கொள்வார்கள்.
ஒடிசம் பிள்ளைகள் தங்களிற்கென்று ஒரு சாப்பாட்டு முறையை வைத்துக் கொள்வார் கள். உதாரணமாக எம்மிடம் உள்ள ஒரு ஒடிசம் பிள்ளை வெறும் சோற்றை மட்டும் உண்ணு வார். அதிலும் சோற்றில் காணப்படுகின்ற கட்டிகளை அதாவது நான்கு ஐந்து சோறுகள் சேர்ந்து கட்டியாக இருப்பவற்றை தெரிந் தெடுத்து சாப்பிடுவார். தற்செயலாக அவர் சாப்பிடும் சோற்றில் ஏதாவது கறி பட்டால் உடனடியாக அந்த சோற்றை கொட்டி விட்டு பீங்கானை கழுவி புதிதாக சோறு போட்டு சாப் பிடும் பழக்கம் காணப்படுகிறது.
மற்றும் ஒரு பிள்ளை உணவை சாப்பிட்டு விட்டு பின்னர் சும்மா இருக்கும் போது உண்ட உணவை திரும்ப வாய்க்குள் எடுத்து சப்பி
ஒக்டோபர்-2011 49

சாப்பிடுவார். சில பிள்ளைகள் pastry போன்ற உணவின் மூலை பகுதிகளை மட்டும் கடித்து சாப்பிட்டு விட்டு pastry ஐ எறிந்து விடுவார் கள். சில ஒடிசம் பிள்ளைகள் பயற்றங்காய், போஞ்சி போன்றவற்றினுள் காணப்படுகின்ற விதைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு கோதை எறிந்து விடுவார்கள். அதேபோன்று கறிவகைகளை தனியாக சப்பி சாப்பிட்டு அதன் சாற்றை எடுத்து விட்டு மிகுதி பகு
தியை வெளியே துப்பி விடுவார்கள். இவ்வாறு
பல விதமான உணவு முறைகளையும் பழக்க
வழக்கங்களையும் கொண்ட ஒடிசம் பிள்ளை கள் காணப்படுகின்றார்கள்.
ஆனால் முக்கிய விடயம் இவ்வாறான எந்த வகையான பிள்ளைகளாக இருந்தாலும் அவர் களுடைய உணவு முறைகளையும் உணவு பழக்க வழக்கங்களையும் தகுந்த பயிற்சிகள் மூலமாக நாளடைவில் மாற்ற முடியும். எனவே பெற்றோர்கள் பொறுமையாக உங்கள் பிள்ளை களின் தவறான உணவுப் பழக்க வழக்கங் களை நாளடைவில் முயற்சி செய்வதன் மூலம்
சரி செய்ய முடியும்.
(தொடரும்.)
扈 is
ass

Page 50
(சென்ற இதழ் தொடர்ச்சி.)
WELLINESS PLEDGE
நோயாளிகளுக்கு ஏற்ற சபதங்கள்
நான் என்றென்றும் நல்ல தேக ஆரோக்கி
யத்துடன் வாழ்வேன். நான் மிகவிரைவில் பூரண குணமடை வேன் என்னைக் கவனிப்பவர்கள் மீதும், எனக்கு அளிக்கும் சிகிச்சைகள் மீதும் பூரண நம் பிக்கை பூண்டுள்ளேன். நான் எப்போதும் உடல் உள ஆரோக்கியத் துடன் வாழ்வேன். நான் எனது உடலை எப்பொழுதும் நேசிக் கின்றேன். நான் எப்பொழுதும் நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கையாளுவேன். மதுபானம், புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களைத் தவிர்ப்பேன் போதிய ஒய்வும், உறக்கமும் பெறுவேன்.
 

)
கலாநிதி குகதாசன்
நான் சுகமானவன், தேகாரோக்கியமான வன், தைரியமானவன். நல் எண்ணங்களி னால் எனது ஆரோக்கியம் மென்மேலும் மேம்படுகின்றது.
நல் எண்ணங்களே நல் ஆரோக்கியத்திற்கு
வித்து.
கர்ப்பிணித்தாயின் சபதம் நான் ஆரோக்கியமான ஒரு தாய். எனது ஆரோக்கியமே, எனது குழந்தையின் ஆரோக்கியம். எனது வயிற்றில் அழகானதும் ஆரோக்கிய மானதுமான குழந்தை வளர்கிறது. நான் எனது குழந்தையை நேசிக்கின்றேன். என்றென்றும் நேசிப்பேன். எனது குழந்தை விவேகமாக வளர்வதற்கு நல்ல சிந்தனை நிறைந்த நூல்களை வாசிக் கின்றேன். அத்துடன் நல்ல இசைகளையும் கேட்டு ரசிக்கின்றேன். எனது குழந்தையின் நலனை பேண
ஒக்டோபர்-2011

Page 51
ஒக்டோபர்-2011
காக வந்து ஆலோசனைக ளைப் பெற்று சத்தான குளி சைகளையும் தடுப்பூசிக ளையும் உரியமுறையில் பெற்றுக் கொள்வேன். நான் நிச்சயமாக அழகா னதும் ஆரோக்கியமானது மான குழந்தையை சுகப் பிரசவம் மூலம் பெற்றுக் கொள்வேன். எனது குழந்தைக்கு பிறந்ததிலி ருந்து 6 மாதம் முடிவடையும் வரை தனித் தாய்ப்பால் மட்டுமே கொடுப்பேன். எனது குழந்தைக்கு உரிய வயதுகளில் உரிய தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப் பேன். எனது குழந்தை எதிர்காலத்தில் எவ்வாறு வாழவேண்டும் என்று எண்ணுவேன் இவ் எண்ணங்கள் எனது குழந்தையின் ஆரோக் கிய எதிர்காலத்திற்கு அவசியம்.
சிகிச்சை நிலையத்திற்கு ஒழுங்
சுகப்பிரசவ சபதம் நான் என்றும் சுகதேகியாக வாழ்வேன். எனது குழந்தை என் வயிற்றில் ஆரோக்கிய மாக வளர்கின்றது.
எனது குழந்தை ஆரோக்கியமாகவும், சுகதே
கியாகவும் வளர்வதற்கு நல்ல ஊட்டச்சத் துக் கொண்ட உணவுகளை உட்கொண்டு வருகின்றேன். எனது குழந்தை ஆரோக்கியமாக வளர்வ தற்கு நானே சில பயிற்சிகளை மேற் கொண்டு வருகின்றேன். எனது நல்லெண்ணங்களும், நல்ல சிந்த னைகளும் எனது குழந்தையின் மனவளர்ச் சிக்கு மிகமிக அவசிய
மாகும்.
 
 
 
 
 
 
 
 
 

() என்னால் இந்தக் கர்ப்பகா லத்தை மிகவும் மகிழ்ச்சிகரமான \ ஒன்றான மாற்றி மகிழ்வுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து
கொண்டிருக்கின்றேன்.
என்னால் ஒரு இலகு சுகப்பிரசவம் ஒன்றை ஏற்படுத் தமுடியும் என்று உறுதி கொண் டுள்ளேன்.
என்றும் நான் ஒரு ஆரோக்கிய மான கர்ப்பிணித்தாயாக உள்ளமையி னால் நானே என் குழந்தைக்கு தாய்ப்பா லூட்டி ஒரு நல்ல பிரஜை ஒன்றை எதிர்கா லத்தில் நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன்பெ றும் உத்தம புத்திரரை பெற்றெடுப்பேன்.
சிறு குழந்தையுடைய தாய்மார்கள் கூறவேண்டிய சபதங்கள் எனது குழந்தை எனக்கும், எனது குடும்பத்
திற்கும் விலை மதிக்க முடியாத சொத்து. நான் இன்றும் என்றும் அதனை பேணிப்
பாதுகாப்பேன். எனது குழந்தையை அன்புடன் அரவ ணைப்பேன். தாலாட்டி, பாலூட்டி
பாராட்டி, சீராட்டி, வளர்ப்பேன். ஒழுங்காக கிளினிக் சென்று தடுப்பு மருந் துகளை பெற்றுக்கொடுப்பேன். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பேன். 7ஆம் மாதத்திலிருந்து திட உணவுகளை கொடுத்து தேக ஆரோக்கிய முடைய மனமகிழ்வுள்ள குழந்தையாக வளர்ப்பேன். - தனிநபர் சுகாதாரத்தை பேணுவேன். எனது குழந்தையின் ஆளுமையை அதிகரிக்க விருத்திசெய்ய உகந்த வீட்டுச் சூழலை ஏற்படுத்துவேன். குழந்தையோடு பேச, பழக, விளையாட நானும் எனது குடும்ப அங்கத்தவர்களும் நேரம் ஒதுக்குவோம். நான் என் குழந்தையை நல்லொழுக்க முள்ள, ஆரோக்கியமுள்ள புத்தி சாதுர்ய முள்ள பிள்ளையாக உருவாக்குவேன். 9 குழந்தைக்கு 3 வயது நிரம்பிய பின்னரே இன்னொரு குழந்தையைப் பெற்றெடுப்
பேன்.

Page 52
சிலருக்கு உடலின் சில பகுதிகளில் நடுக் 35Lib ஏற்படுவதைக் காண்கிறோம். இதில் மலேரியா போன்ற காய்ச்சலின் போது ஏற்ப டும் நடுக்கம் அடங்காது. ஏனெனில் மலேரியா காய்ச்சல் குணமடைந்ததும் இந்நடுக்கம் இல் 6υπLρ6υ போய்விடும். இது நீண்டநாள் நீடிக்கும் நடுக்கமல்ல
ஆனால் பொதுவாக நடுக்கம் என்பது ஒருவ Ug கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு உடலின் சில தசைகளில் ஏற்படும் அசைவுகளைக் குறிக்கும். பெரும்பாலும் பலருக்கு கைகளும், கால்களும் நடுங்குவதை கண்டிருக்கிறோம். சிலருக்குதலை நடுங்குவதும் வேறு சிலருக்கு உடல் நடுங்குவதும் உண்டு.
நோயாளியின் கைகளை நீட்டி விரல்களை
 
 
 

விரிக்கச் சொல்லி, கூர்ந்து நோக்கினால் நடுக் கம் தெரியும். கைகளின் அடிப்பாகத்தை மெது வாக தொட்டுப்பார்த்தும் இதை உணரமுடியும்.
நச்சு நடுக்கங்கள் தைரோயிட் சுரப்பியில் ஏற்படும் கட்டிகளா லும், அதிகமாக தைரோயிட் சுரப்பதுவும் நச்சு நடுக்கங்கள் ஏற்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.
இதைத் தவிர அதிகமான குடிபோதையிலும், புகைப்பதால் உண்டாகும் நிக்கோட்டீன் விசத் தன்மையாலும் நச்சுத் தன்மையாக தோன்றும் நடுக்கம் ஏற்படும். பாதரசம் போன்ற உலோகக் கலவை மருந்துகளை உட்கொள்வதாலும் நச்சு நடுக்கம் ஏற்படும்.
உடற்கூறு சிதைவு நடுக்கங்கள் பார்க்கின்சன் எனும்
நோயால் மூளைச் சிதைவு ஏற் பட்டு இயந்திரச் சக்கர விளைப்பு ஏற்படும். கல்லீர லில் ஏற்படும் சிதைவும் சிபி லிஸ் ஏற்பட்டு, அதன் விளைவாக மனநோயும் பாரிசவாதத்துடன் கூடிய நடுக்கமும் காணப்படும். // நரம்புத் தொகுதிக் கோளா//
றினாலும் பலருக்கு நடுக்
ܚܙ9

Page 53
S
(
( 'என் மனைவிக்கு என் மீது
(c)5rator fulb” 颉
「韃 "பரவாயில்லையே என் மனைவிக்கு
- ** . م وية
என்ன் கொல்லத் தான L9) flub” * 。讓
ஒக்டோபர்-2011
 

சிறு மூளையில் உள்ள கட்டிகளாலும் நடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
முதிர்ந்த வயதில் சிறு மூளைச் சிதைவினால்
தலை நடுக்கம் ஏற்படுவதைக் காணலாம். மூளையிலுள்ள பேசல் கொங்லியாவில் பாதிப்பு ஏற்பட்டாலும் நடுக்கம் உண்டா கும்.
இவைகளைத் தவிர மனம் சார்ந்த நடுக் கங்களை மனத்தளர்ச்சிகளிலும் ஹிஸ்டீரி யாவிலும், மனவெழுச்சியைத் தூண்டும் சூழ்நிலைகளிலும் காணமுடியும். சில வகை நடுக்கங்கள் குடும்ப வம்சாவழியா கவும் அதாவது பரம்பரை காரணமாகவும் தோன்றுகின்றன.
இத்தகைய நடுக்கத்தை குணப்படுத்த ன அமைதிப் பயிற்சி மிகமிக அவசியம். அத்தோடு சில மருந்துகளும் நடுக் கத்தை குறைக்க பயன் தருகின்றன.
இரஞ்சித்
Well, Wall (NGO).
குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே மருத்துவரிடம் ஓடாதீர்கள். நாம் அமரும் இருக்கையும், அணியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந் திருப்பது தரமான செருப்புதானா? இருக்கையில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா என் பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் ாய்ந்து அமர்ந்து ரிலாக்ஸ்’ செய்து கொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வள புக்குப் பிறகும் தொல்  ைலு இருந்தால் ரு த் து வரை அணு 56).Th.
குடும்ப டொக்டர்
S S S S

Page 54
ஆயுர்வேத வைத்தியர்
Dr.குமுதிகா மல்லிகாராச்சி
உடல் வனப்பு, சருமத்துக்கு மென்மை, உடலுக்கு குளிர்ச்சி ஆகியவற்றைத் தரும் சிறந்த பானம் தார்பூசணிப்பழ ரசமாகும். குறைந்த விலையில் சந்தையில் பெறக்கூடிய பழமான இதன் குணங்கள் பல.
IV உடலை குளிர்ச்சியாக்கும். நிறத் தைக் கொடுக்கும். சிறுநீரை இலகுவாக வெளி யேற்ற உதவும். சிறுநீரக கற்கள் காரணமாக சிறு நீர் கழிக்க கஷ்டப்படுபவர்களுக்கு மிகச் சிறந் தது.
V கண் எரிவு, கண் பீளை வெளியே றல், கண்சிவப்பு நிறமாதல், கண் சொறிவு என் பவற்றை குறைக்கக் கூடியது.
V கால்கள் வீங்குதல், கால் பாதங்க ளில் வெடிப்பு ஏற்படல், காயம் மற்றும் தோல் நோய்கள் என்பவற்றை நீக்கக் கூடியது.
'பசியை ஏற்படுத்தும், தாகத்தை தீர்க்கும்.
Ey. மூல வியாதி காரணமாக கஷ்டப்ப டுபவர்களுக்கு சிறந்தது. மலச்சிக்கல், மூலக் கட்டிகள் என்பவற்றைக் குறைக்கக் கூடியது.
M முகப் பொலிவை ஏற்படுத்தும் கரு நிறப்புள்ளிகளை நீக்கக் கூடியது. தேமல், தோல் வரட்சி, தோலிற்கூடாக சூடு வெளியே றல் என்பவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.
ஒக்டோபர்-2011 6) *
 

V வாய் தொடர்புடைய நோய்களுக்கு |(Inó உதடுகள் வெடித்தல்) சிறந்தது.
V தொடர்ந்து நிலவும் தலையிடி, எரி
வு, பித்தவாந்தி, அமில பித்தம், வயிறு எரிவு
ஆகிய சூட்டுடன் தொடர்புடைய பல நோய்
களை இல்லாதொழிக்கும்.
下 V கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகச்
சிறந்தது.
பயன்படுத்தக்கூடாத சந்தர்ப்பங்கள்
இ சளித் தொல்லையால் கஷ்டப்ப டும் போது (பீனிசம், தலையிடி, நெஞ்சில் சளி, ஆஸ்த்துமா என்பவற்றால் கஷ்டப்படுபவர்க ளுக்கு சிறந்ததல்ல)
இ சளி, இருமல் அடிக்கடி இருப்பவர்க ளும் பயன்படுத்தக் கூடாது.
இந்தப் பழத்தில் உள்ள விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள்
நீர், சீனி, கனியுப்புக்கள், கல்சியம் காபோ வைதரேட், விற்றமின்கள் தார்பூசணிப் பழ பானம் தயாரிக்கும் முறை ,- 956T6 (955 தார்பூசணிப் பழம் ஒன்று, சீனி, உப்பு, எலுமிச்ச சாறு தேவையான
அளவு, கசகசா 2 தேக்கரண்டி, நீர் 01 லீற்றர்.
செய்யும் முறை
தார்பூசணிப் பழத்தை வெட்டி அதிலுள்ள விதைகளை அகற்றிய பின்பு பிலென்டரில் போட வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர், சினி, உப்பு என்பவற்றை சேர்த்து நன்டு அரைக்க வேண்டும். பின்பு அதனை ஒரு கோப்பையில் போட்டு அதற்குள் கொஞ் சம் எலுமிச்சை சாறு மற்றும் கசகசா என்ப வற்றை இட்டு பானமாக அருந்தலாம். நீரிழிவு நோயாளருக்கு சீனி சேர்க்காமல் அருந்தக் கொடுக்கலாம்.
எஸ். கிறேஸ்

Page 55
டமிருந்து வலம் 1. விருந்தின்ரைக் குறிக்கும். 3. இதுவும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான்
தெரியுமாம். 5. ஒளி தருவது. 7. குறைந்த வேகத்துக்கு உதாரணமாக கூறப்
8 9 1.
படும் உயிரினம். (குழம்பியுள்ளது) எவருக்கும் ஈயாதவர். குதிரை என்றும் சொல்லலாம். 2. அடிமேல் அடியடித்தால் இதுவும் நகரு
LD6TLT. 13. மேடையிலும் இது போடப்படுவதுண்டு. 14. கேள்வி என்றும் 15. மழைக் காலத்தையும் குறிக்கும்.
ஆ | சா | ன் (A- Sð || 3.
fib ΠΟΠ த் is
5 த ந் | த | ம்
6 7
岔 L LD 则 ö
8 9
து ற வு ଈNIIT) 10 s 11
தி ரை அ | லை
12
13 14 மி * I u III II u II மை ஆ
வெற்றி அடைந்தோர் )
ரு 1000/ வெல்லும் அதிர்ஷ்டசாலி
எம். சத்யசீலன், வத்தளை. ಡಾ. வெல்லும் அதிர்ஷ்டசாலி
எம்.இசட்யு. பரீடா, இரத்தினபுரி,
வெல்லும் அதிர்ஷ்டசாலி டி சிதம்பரநாதன், கோபாய்.
AgI GáGÍőIÁ 1) என். மஹேந்திரன், ஏழாலை, 2) நவம் யேசுசகாயம், மானிப்பாய். 3) திருமதி. அய்ஷா ஹலீம், மாவனெல்லை. 4) ரெங்கசாமி, பண்டாரவளை, 5) பூ தயாளகெளரி, இரத்மலானை. 6) சுகந்தி சிறிதரன், யாழ்ப்பாணம், 7) ஜே. நிருஷா, ஆரயம்பதி, 8) எம்.டி.எஸ். அஸ்மியா, உடதலவின. 9) லீலாவதி, மட்டக்களப்பு. 10) குழந்தைவேல், மாத்தளை.
ஒகர் ॥
 
 
 

en la 16aĵo.
மேலிருந்து கீழ் 1. நீர் வீழ்ச்சி என்றும் சொல்லலாம். 2. திசை (குழம்பியுள்ளது) 3. நிலத்தைக் குறிக்கும். 4. பெண் என்றும் சொல்லலாம். 6. கை கொட்டி ஆடும் ஒரு பாரம்பரிய
நடனம். 7. சிநேகிதம் இதனைக் குறிக்கும். 8. இது தின்ன கூலி கேட்கலாமா? 10. வர்த்தகர் என்றும் சொல்லலாம். 11. மருத்துவ குணமுள்ள ஒரு வகைக் கீரை
முடிவுத் திகதி 18, 10 2011
சரியான விடைகளை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படும். (பெயர், விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி தபால் அட்டையில் அனுப்பவும்)
2
ரு
5 6. 7
8 9 10
11| |
12 13
ம்
14 15
帕
Tகுறுக்கெழுத்துப் போட்டி இல42,T
Virakesari Branch Office, " l, i. 12-1/1, St.Sebastian Mawatha, Wattala.

Page 56
வீட்டுத் ஒரு முருங்கை மரம் இரு நம்முடன் நல்லதொரு மருத்து முருங்கைக்காய் பசியை அதிகரிக்கு வயிற்றுப் புண்ணை ஆற்றும், தலை இரத்தபேதியைக் குணப்படுத்தும், இரத்தத்ை உஷ்ணம், பித்தம், வாயு தொல்லையுடையவ குறைப்பது நல்லது.
நீரழிவு நோயைத் தீர்க்கும் ஆற்றல் முரு சேர்த்து தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால் க காய்ச்சல், உடல் அங்கங்கள் உணர்ச்சி முருங்கைமர வேரை நீர் விடாமல் அரைத்து அருந்தினால் நன்கு குணம் தெரியும். இதயத் உண்டு. முருங்கைப்பூவை அவித்து தொட பலப்படும்.
OGICuTub
அரவேற்ை அத்துடன் இவ்விழக் ஆக்கங்கள் இசைதிகள் இடித்தின் முதலானவற்றை எமக்கு எழுதியணு Ne: 2 - As St, Sebastiyala Mawatha,
一_。-oll-* mmal_
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*கிறதெனில், எப்போதும் வர் இருப்பதாக அர்த்தம்.
oleslaoui போக்கும், கடும் த, சிறுநீரைச் சுத்தப்படுத்தும்.
ர்கள் மட்டும் முருங்கைக்காயைக்
ங்கைக் கீர்ைக்கு உண்டு. இலையுடன், எள் டும் நீரழிவு நோயும் கட்டுப்படும்.
யற்றிருத்தல், நரம்புத்தளர்ச்சி இவற்றிற்கு சிறிதளவு பசும்பாலில் கலந்து காலை, மாலை துக்கு வலுவூட்டும் சக்தி முருங்கைப் பூவுக்கு iந்து உணவோடு சேர்த்து வந்தால் இதயம்
னைவரும்கலந்துகொண்டு
ர்பான உங்கள்
foi en eta Zsessores ப் பொருத்தமான உங்கள்
துனுக்குகள் நகைச்சுவைகள்
ப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
attala. TP oil 33.73945, oil-5516531, AAaVaAVVAK22,experessaaseVVB12aBe13. Ak
ஒக்டோபர்-2011

Page 57
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 300 கிராம் (தோல்சீவி
நறுக்கியது)
தேங்காய் துருவல் - % கப்
காய்ந்த மிளகாய் - 2
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 4 ஈர்க்கு
பெருங்காயம் - சிறிதளவு
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி U)
செய்முறை : இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வானலியில் எண்ணெயைச் சூடாக்கி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.
இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து
 
 
 
 

மேலும் சிறிது நேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.
பின்தனியாக தேங் காயைத் துருவல் புளி, பச்சை மிளகா யைக் கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
அத்துடன் தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்த மிளகாய் மட்டும் சேர்த்து அம்மியில் வைத்
ඊජ්l
கரகரப் பாக
1)அ  ைரத் து கடைசி
யில் வறுத்த உளுத் தம் பருப்பையும் வைத்து ஒன்றி T600TL-IT5 e460) படுமாறு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும். জন্ম
(இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மை கள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
அத்துடன் இருமல், சளி தொல்லைகள், மூட்டு வலி போன்ற உடலில் எந்த கோளாறை யும் வலிகளையும் போக்கும் வல்லமை படைத் தது இஞ்சி என்னும் இயற்கை மூலிகை)
ரேணுகதாஸ்
s
ബ

Page 58
C Dr. எம்.கே.முருகானந்தன்
(சென்றஇதழ் தொடர்ச்சி.)
எனக்கு இந்த விஷயங்கள் பற்றிச் சில தீர்க் கமான கருத்துக்கள் உண்டு.
தமிழ் மக்கள் எல்லோருமே விரும்பியோ, விரும்பாமலோ போராட்டத்தின் எல்லை விளிம்புக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.
விழுந்துவிட்டால் மரணம் நிச்சயம்.
தளர்ந்து விட்டால் இன ஒழிப்பு சர்வ
நிச்சயம்.
தவிர்க்க முடியாத மரணங்கள் சம்ப K வித்தாலும் இனத் தின் விடுதலை நிச் Gullb.
இப் படிப் பட்ட தருணத்தில் பேசா மல் ஒது ங்கியிருப் பதோ அல்லது வெ ளிநாட்டிற்குத் தப் பிச் சென்று பாது காப்பாக வாழ்வ தோ, அல்லது அங்கு சென்று
 
 
 
 
 
 
 
 
 
 
 

உழைத்துப் பணம் சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்வதோ, பச்சையான இனத்துரோகச் செயல் என நம்புகிறவன் நான்.
டாக்டராக இருந்தாலென்ன, எஞ்சினியராக இருந்தாலென்ன, இலக்கியவாதியாக இருந்தா லென்ன விரிவுரையாளனாக இருந்தா லென்ன, சாதாரண குடிமகனாக இருந்தா லென்ன, அரசாங்க உயர் அதிகாரியாக இருந் தாலென்ன, தொழிலதிபராக இருந்தாலென்ன, தொழிலாளியாக இருந்தாலென்ன, அரசியல் வாதியாக இருந்தாலென்ன, சமயவாதியாக இருந்தாலென்ன.
சுயநலத்திற்காக வெளிநாடு ஒடித்தப்புவது படு கோழைத்தனமான செயல்.
இக்கட்டான இக்காலகட்டத்தில் மக்களை ஆபத்தில் தவிக்க விட்டு விட்டு வெளிநாட்
ஒக்டோபர்-2011

Page 59
டிற்கு ஓடிச் சென்றவர்களைப் பற்றி மக்கள் நிச் சயம் ஒரு சரியான கணிப்பு எடுத்திருப்பார்கள். அதே நேரத்தில் சுய இலாபத்திற்காக வெ ளிநாடு போகாமல், மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களது கஷ்ட நஷ்டங்களில் பங் கெடுத்து அவர்களது இன்னல்களை நீக்குவ தற்கு தமது படிப்பு, அனுபவத்திலான சேவை களைச் செய்து கொண்டு ஒரு அசைக்க முடி யாத நம்பிக்கையுடனும் இலட்சிய வேட்கையு டனும் இங்கு தங்கியிருக்கும் (டாக்டர்கள் அடங்கலான) புத்திஜீவிகள் பற்றி நிச்சயம் நன்றாகப் புரிந்திருப்பார்கள். அவர்களது தியாக உள்ளத்தை உணர்ந்து நன்கு மதிப்பார் கள் என எண்ணியிருந்தேன்.
எனவே நாட்டை விட்டு ஓடாத எனக்கும் என் போன்ற மற்றைய டாக்டர்களுக்கும் மக்க ளிடத்தில் நல்ல மதிப்பும் அபிமானமும் இருக் கும். எங்கள் சேவைக்கு பொதுமக்களிடம் நல்ல மரியாதை இருக்கும் என்ற ஒருவித பெருமையும் எனக்கிருந்தது.
உயிரைக் கூட மதியாது அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர்களுக்குச் சேவை செய் பவர்கள் நாங்கள் என்ற ஒருவித இறுமாப்பும் கூட இருந்தது.
எனது எண்ண ஓட்டம் இப்படியிருக்கை யில் சம்பாஷணை மீண்டும் டாக்டர்கள் பக்கம் திரும்பியது.
'மற்றவையள் வெளிநாடு போனாலும் பர வாயில்லை. ஏனெண்டால் இண்டைய போராட்ட சூழ்நிலையில் அவையளின்ரை சேவைகளை தள்ளிப் போடலாம். அபிவிருத் திக்கு ஏற்ற சூழ்நிலை இல்லைத்தானே?
ஆனால் செல் அடி, ஹெலிச் சூடு, பொம்பர் குண்டு எண்டு எங்கேயும் காயங்க ளும், சுகயினங்களும் நிரம்பியிருக்கைக்கை டாக்டர்மார் வெளியிலை போனால் சனங்க ளுக்கு உதவி செய்யுறது ஆரெண்டு சொல் லுங்கோ..?
மனிதாபிமானத்திற்காக எண்டாலும் எங் கடை டொக்டர்மார் இஞ்சை தங்கியிருந்து சனங்களுக்கு உதவத்தானே வேணும்'
எண்டு நீண்ட லெக்சர் அடித்த அவர் ஒசிச் சுருட்டு வாயால் கரி எஞ்சின் போல பெரு மூச்சு விட்டார்.
ஒக்டோபர்-2011
 
 

"இந்தக் காலகட்டத்திற்கு அபிவிருத்தி தேவையில்லை எண்ட உங்கடை கருத்தை நான் ஒத்துக் கொள்ளயில்லை. அது கிடக்க, டாக்டர்களைப் பற்றி நீங்கள் சொல்லுறது சரி தான். ஆனால் ஒண்டு சொல்ல வேணும், வெளிநாட்டுக்கு போக வேண்டிய டாக்டர்மார் எல்லாம் வெளியாலை போட்டினம். இனி இஞ்சை இருக்கிறவையள் கெதியிலே வெளி நாட்டுக்குப் போக மாட்டி
னம்’ என்றேன்.
'மிச்சம் இருக்கிற வையள் என்ன வந் தாலும் எது நடந் தாலும் எங்கடை சமுதாயத்துக்காக இனத்துக்காக வாழ வேண்டும் எண்ட
600T is 6S (86) இருக்கிறபடி
UL IT 6A) இ ஞ்  ைச தான் இருப்பி னம், போகமாட்டி னம் என்று சொல்ல நினைத்தேன்.
ஆனால் அதற்கி 6ol use) அவர் குறுக்கிட்டார்.
"கெட்டிக்கார டாக் டர்மார் எல்லாம் நல்ல வேலை 哆 எ டு த் து க் கொண்டு வெளியிலே போட்டினம். இஞ்சை மிஞ்சி இருக்கிறவையஞக்கு கெட்டித்தனம் காணாது எண்டு போலை வெளிநாட்டுக்காரர் கள் அவையஞக்கு வேலை குடுக்கை யில்லை. வெளிநாட்டுக்கு போக தகுதியில்லா தவை, வேறை என்ன செய்யிறது? இஞ்சை தானே இருக்க வேணும்'
எங்களைப் பற்றி இப்படியும் ஒரு மதிப் பீடா? என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் முகத்தில் ஈயாடவில்லை. *。 “

Page 60
இருக்கின்றன. இவற்றின் சில நேரடியாகவும் வே மனிதனுக்கு நேரடியாக நோய்களை சில பூ உணவாகவோ அல்லது வேறு பொருளாதார ே பதம்பார்ப்பதன் மூலம் மனித சமுதாயத்திற்கு .ெ
மனிதனுக்கு நோய்களை உண்டாக்கும் பூச்சிகள் ஈக்களும் நுளம்புகளும் எல்லா இடங்களி லும் வாழ்கின்றன. இவை தவிர இன்னும் பல பூச்சிகளும் மனிதனுக்கு பெரும் தீங்கு விளை விக்கின்றன. எனினும் மனிதனுக்கு தீங்கு விளைப்பதில் ஈக்களும் நுளம்புகளுமே முதலி டத்தை வகிக்கின்றன.
ஈக்கள் (House fly) மனிதனுக்கு பல வகைகளில் தொல்லை தருகின்றன. இவை இடத்திற்கு இடம் நோய்களை பரப்புகின்றன. இவற்றின் மூலமாக தைபோயிற்றுக் காய்ச்சல், கொலரா எனப்படும் வாந்தி பேதி, வயிற்று
உளைவு, வயிற்றுக் கடுப்பு, காச நோய் வேறு goo சமிபாட்டுக்குறைப்பாடுகள் போன்ற
நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை பரப்பு
கின்றன.
ஈக்கள் மூலம் ஏற்படும் நோய்கள் உல
கெங்கும் பரவலாக காணப்படுகின்றன. இத
னால் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக் கான மக்கள் இறக்கின்றனர். ஈக்களில், விலங்கு
களில் மொய்க்கும் ஒருவகை பெரிய உருவ
அமைப்பைக் கொண்ட ஈக்கள் மனிதனுக்கு
நோய்களை விளைவிக்கும் பேராபத்தை
ܒܡܬܐܠܨܬܐ8: ܡܦܪܝܬܐ ܕ ܕܬܐܬܐ
 

ಶಿಗ್ಹಾ தரும் பூச்சிகள்
உலகில் எத்தனையோ இலட்சக்கணக் கான வகை பூச்சி இனங்கள் உள்ளன.
எனினும் இவை அனைத்தும் ܓܠ மனிதனுக்கு தீங்கு 5(56.67 அல்ல. \ எனினும் கணிசமான பூச்சி இனங்கள் னினுக்கு தீங்கு தருபனவாகவே று சில மறைமுகமாகவும் தீங்கு தரக் கூடியன. சிகள் தர, வேறு சில பூச்சிகளோ மனிதன் தவைகளுக்காகவோ வளர்க் கும் பயிர்களை
பரும் தீங்குகளை ஏற்படுத்துகின்றன.
கொண்ட ஒருவகை ஈக்களாகும்.
ஸ்ெட்ஸி (Tsetse) எனப்படும் ஒருவகை ஈக்கள் ஆபிரிக்காவில் அதிகம் காணப்படுகின் றன. இவை தூக்க நோயை (Sleeping Sickness) ஏற்படுத்தும் கிருமிகளை பரப்பு கின்றன.
மொத்(f)பிளை (moth fly) எனப்படும் ஒரு வகை ஈக்கள் மிகச் சிறியவை இவை மனித னின் இரத்தத்தை குடித்து வாழ்கின்றன.
இவை தவிர Sandfy எனப்படும் மணல் ஈக்கள் ஒரோயோ காய்ச்சல் (Oroya Fever) காலா ஆசார் போன்ற ஆட்கொல்லி நோய் களை பரப்புகின்றன.
கறுப்பு ஈக்கள் (Black fly) ஒவ்வாமையை (Alergy) யும் பிளோப்ளை (Blow fly) வாந்தி யையும் வயிற்றுக்கடுப்பையும் உண்டாக்கு கின்றன.
நூளம்புகள் ஈக்களுக்கு நிகராக சிலவகை நுளம்புகளும் மனிதனுக்கு பெரும் தீங்குகளை விளைவிக் கின்றன. இவற்றின் மூலம் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், என்ஸி பொலிட்டிஸ், யானைக்கால் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இத்
ஒக்டோபர்-2011

Page 61
தகைய நோய்களாலும் உலகில் பல்லாயிரச் கணக்கான மக்கள் ஆண்டுதோறும் இறச் கின்றனர். பெண் அனோ(f)பி லிஸ்நுளம்புகள் (Anopheline Mosquitoes) Logofsiss6f டையே மலேரியா நோயை பரப்பு கின்றன மனிதக் காவலரான ரொனால்ட் ராஸ் மலே ரியாவுக்கான காரணம் நுளம்புகள் தான் எனக்கண்டு பிடித்தபின் மலேரியாவினால் ஏற்படும் பாதிப்புக்கள் வெகுவாக குறைந்தன எனினும் இன்னும் மலேரியாவால் பாதிக்கட் படுவோர் கணிசமான அளவு இருக்கதத்தான் செய்கின்றனர்.
பெண் மஞ்சள் காய்ச்சல் நுளம்புகள் (Yollow fever, Mosquitoes) Lotéggit sittie சலை பரப்புகின்றன.
リ。 。
颗、
உடல் பேன்கள் (Body Louse) ரிலார்கிங் காய்ச்சலை (Relapsing fever) ஏற்படுத்து கின்றன. தேனீக்கள் பூவிலுள்ள நெக்ட்
clar)
*、 ಅತ್ಲಿ© s சர்ந்தவைய்ே இை
ஒக்டோபர்-2011
था ।
656
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொட்டுவதால் விஷம் ஏறுவதோடு வலியும் வீக்கமும் ஏற்படுகின்றன.
எனவே மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சி இனங்கள் விடயத்தில் நாம் கவனமாக இருப்பது நமது ஆரோக்கியத்திற்கு நன்மை
பயக்கும். -இரஞ்சித்
ஆ====
T
T
F
T
. e
行 'நீங்க செய்ற மந்திர வித்தை
T பொய்னு சொல்றேன்.'
is 'சத்தியமா நான் உண்மையான
மந்திரவாதிதான்.” 'அப்படீன்னா என் மனைவியை
மறைய வச்சு திரும்பி வராத
மாதிரி பண்ணிடுங்க பார்க்கலாம்'
- as

Page 62
இதழ் தொடர்ச்சி.
(மாவட்டசுகாதாரக் கல்வி அதிகாரி) மார்புநோய் கிகிச்சை நிலையம், கண்டி
ெேடங்கு நோய்க்காக
அல்ஹாஜ் ர். அப்துல் ஸலாம் ஒவ்வொரு வரும் B.A.HEOS/L.) ஞாபகத்தில் வைத்துக்
Gi Видиш முக்கிய விடயங்கள்
ஊசி மருந்தோ
அல்லது விஷேட மருந்துகள், சிகிச்சைகள் எது
வும் இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை.
96 காய்ச்சல் ஏற்பட்டதும் முடியுமான அளவு
ஓய்வு எடுத்துக் கொள்ளல் வேண்டும். பிள்ளை
பெங்கு நோயிலிருந்து
85ର0) ଗT
(3G) GÖÖTL LITLD.
ஓய்வு
பாடசாலைக்கு அனுப்ப முடியுமாயின் எடுக்கச் செய்வதே சிறந்ததாகும்.
26
வைத்தியசாலையில்
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ற
。 டெங்கு நுளம்பின் வாழ்க்ை
, ހ"
莆、 下 | - ||ՀԱ6) L
நிறைவுடலி
- IT
證 義 * *。*。亨”。*。
'7-11 நா
*「零下
1-2 நாட்கள்
a
ܦ ܪ ܢ Kag" །ཡོད།། கூட்டுப்புழு <=
彎 *尋 鷺鷺
G
 
 
 
 
 
 
 
 

sowOh ம் பரவி வரும்
برصےN
DENGUE FEVER"
சந்தேகம் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலை யிலிருந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ள அனு மதிக்க வேண்டும்.
୧ ଅତି அதிகமாக நீர் ஆகாரம் அருந்தச் Glg:UJU 160TLb.
96 அஸ்பிரின் அல்லது "அஸ்பிரின் கலக்கப்பட்ட மருந்துகள் கொடுக்க வேண்டாம். பெரசிட்டமோல் அல்லது பெரசிட்டமோல் கலக் கப்பட்ட மருந்து வகைகளைக் கொடுக்கலாம்.
வாரம் ஒரு முறை உங்கள் சூழலைப்பற்றி
கவனமாக செயற்படுங்கள்.
9 நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைத் தேடிப்பாருங்கள்.
ாதுகாப்பு பெறுவோம் paibi உற்பத்தியாகும் நிலைமையி
லுள்ள பொருட்கள் இருப்பின் உடனே அப்புறப்படுத்தி அழித்துவிடுங்கள்.
புல்போபிக்ட்ஸ்" எனும் இருவகை க வட்டம் எவ்வாறெனில்:-
5-7 நாட்கள்
** ****
ஒக்டோபர்-2011 is

Page 63
இலங்கையில் 1965ஆம் ஆண்டு முதலாவதாக பிடிக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து.!
வருடம் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர்
1965 O2
1966 13
1967 29
1968 O7
197O-198O வரை நோயாளர்கள் குறைந்து
1939 2O3
1990 1121.
1991 867
1992 557
199こ ご47
1994 512
1995 483
1996 413
இவ்வாறு சாதாரண நிலையிலி ஆண்டிலிருந்து நோயாளர்கள்
2011இல் டெங்கு தொற்றுக்கு
மாதம் டெங்கு தொற்று ஜனவரி 85 பெப்ரவரி 1.O LOTTě 置 ஏப்ரல் முதல் 3
வாரங்கள் வரை 4. மொத்தம் ご4
எப்பொழுதும் எமது சூழலை பாதுகாப்புடன் மூலம் டெங்கு நோயைத் தடுப்போம். நுளம்பு பெரு எமது சூழலையும் பாதுகாப்போம்.
பிரசவம் முடிந்த சி
என்பதற்காக பெரிய
தவறு. இதனால் கரு
அல்லது தும்மலின்
sħÜGasáirsé
காரணம் இது
அதற்கான பெல்ட்
ஒக்டோபர்-2011
 
 
 
 
 
 
 
 
 
 

மேல் மாகாணத்தில் 2 நோயாளர்கள் கண்டு
O5
O8
O2
சென்றனர்
2O
1.
ご2
26
15
32
2Ο
O7
ருந்து 2000ஆம் மீண்டும் அதிகரிக்கலாயினர்.
iாளானவர்கள் எண்ணிக்கை
க்குள்ளானோர் உயிரிழப்பு
58 11.
45 O8
O8 12
78 O2
89 ごご
சுத்தமாக வைத்துக் கொள்வதன்
நகத்தை தடைசெய்து எம்மையும்
ல நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது ப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு
தாய்மார்கள் கவனத்திற்கு
ன். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, டை அணியலாம்.
- வேதா

Page 64
தைரியமாக பேச பயப்படும் சுபாவம். நம்பிக் காரியத்தை செயல்படுத்த முடியாத அச்சம், ! செயல்படுத்த முடியாமை, நடுக்கம் போன்ற என்பதற்கான அறிகுறிகளாகும்.
தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படுட தைரியமாகத் தங்களுடைய கருத்துக்க:ை உறுதியுடன் எடுத்துச் சொல்லும் திறமை இ இருக்குமோ? தாங்கள் தப்பாக ஏதாவது ( மற்றவர்கள் காது கொடுத்து கேட்பார்களோ?
தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் மற்ற பிடிப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களைட் உள்ளவர்கள் மற்றவர்கள் சொன்ன ஒவ்வொ குதர்க்கமான அர்த்தங்களை கற்பனை செய்
ܥ ܬܐ ܠܐ ܛܝܼ19 ܬܐܬܐܬܐ ܀ 11 ܐܬܐ ܓܘܘܼ.
 
 

ல வீடுகளில் ஒரு குழந்தையிடம் அன்பைக் பும் மற்றொரு குழந்தையிடம் வெறுப்பைக் டியும் வளர்ப்பார்கள். வெறுப்புடன் வளர்க்கப்பட்ட தையிடம் தாழ்வு மனப்பான்மை அதன் ஆழ் தில் பதிந்து விடும். தான் எல்லோராலும் கரிக்கப்பட்டதாக அக்குழந்தை எண்ணும். அன் க வளர்க்கப்பட்ட குழந்தையின் ஆழ்மனதில் ான் உயர்ந்தவன் என்ற நினைப்பு உண்டாகும்.
குறைபாட்டுடன் வளர்க்கப்பட்ட இந்த குழந்தை பள்ளிக்குச் சென்றால் அங்கு பிற குழந்தைகள் நுண்ணறிவுடன் இருப்பது கண்டு மேலும் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறது. இப்படிப்பட்ட குழந்தை படிப்பில் பின் தங்கு வதுடன் பல தவறான பாதைகளிலும் நடக்கத் துவங்குகிறது. இக்குழந்தை மற்ற குழந்தைகளு -ன் சேராமல் தனித்து இருக்க பழகிக் கொள்கிறது. ஒருவன் தாழ்வு மனப்பான்மையால் அவதிப்பட வனது குழந்தைப் பருவத்து நினைவுகள் பான பிற அனுபவங்கள், தன்னம்பிக்கையற்ற ம ஆகிய வையே காரணமாகின்றன. தாழ்வு ன்மை உள் ளவர்கள் மற்றவர்களுடன் தலை
O
பேசவே அஞ்சு வார்கள். குனிந்த தலை, பிறரிடம்
கையில்லாத பேச்சு சூன்யம் நிறைந்த பார்வை, உயர் அதிகாரிகளைக் கொண்டு ஒரு விடயத்தை வை ஒருவரிடம் தாழ்வு மனப்பான்மை உள்ளது
வர்களுக்கு தைரியம் சிறிது கூட இருக்காது. ா மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நக்காது. இவர்களிடம் தாங்கள் சொல்வது சரியா சால்லி விடுவோமோ? தாங்கள் சொல்வதை 1ன்பது போன்ற தயக்க நிலைகள் காணப்ப்டும். வர்களின் செயல்களில் ஏதாவது குற்றம் கண்டு
பாராட்ட தெரியாது. தாழ்வு மனப்பான்மை ந வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு செயலுக்கும் து கொண்டு தங்களைத் தாங் களே வருத்திக் 52) - ஒக்டோபர்-2011

Page 65
கொள்வார்கள். சாதாரணமாக ஒருவர் சிரித்துப் பேசுவதைக் கூட தங்களைப் பற்றி கேலி செய்து பேசுகிறார் என்று நினைத் துக் கொள் வார்கள். அவர்கள் மற்றவர்களுடைய ஆதிக் கத்துக்கு உட்பட்டு அவமான கரமான வாழ்க்கை வாழ்வார்கள். மற்றவர்கள் சொல்வ தற்கு தலையாட்டும் பொம்மைகளாக காட்சி
u6 filmit56it. ,
தன்னிடம் இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியடைய வேண்டுமே தவிர தன்னிடம் இல்லாத ஒன்றுக்காக ஏங்குவது சரியல்ல. நம்மிடம் இல்லாததை நினைத்து நம்மை நாமே ஏன் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய ஒவ் வொருவரும் தம்மைத்தாமே உணருதல் அவசியம். அறிவு இருக்குமிடத்தில் திறமை வந்து விடுகிறது. திறமை இருக்குமிடத்தில் பொருளும் பதவியும் புகழும் வந்து விடு கிறது. அப்படிப்பட்டவன் நம்பிக்கையுடன் செயற்படுகிறான். அறிவும் திறமையும் நம்பிக் கையும் உள்ள உள்ளத்தில் தாழ்வு மனப் பான்மை இருப்பதில்லை. பொறாமை, பயம், பேராசை, வெறி ஆகியவை நிறைந்த சூழ். நிலையில் தான் தாழ்வு மனப்பான்மை வளரு கிறது. | , , , , , , , , , , , , , , , , ,
அறிவைப் பெருக்கிக் கொள்ள சிறந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும். நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்களை படிக்கும்போதுதான் புத்தி கூர் மையடைகின்றது. நிறைய புத்தகங்கள் படிப்பு வர்களுக்கு கடினமான பிரச்சின்ைகளுக்கு கூட சிறந்த தீர்வு காணும் திறன் ஏற்படு கின்றது.
அறிவுள்ளவரை மதிக்கும் யாருக்கும் ஒக்டோபர்-2011 G
 

தாழ்வு மனப் பான்மை ஏற்படாது.
மனிதர்கள் அனைவரும் ஐன்ஸ்டீன்களா கவோ அல்லது நியூட்டன்களாகவோ இருக்க முடியாது. அனைவராலும் எவரெஸ்ட் சிக த்தை அடைய முடியாது. பிறந்த ஒவ் வொருவருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற முடியாது. ஆனால் தங் கள் திறமைகளுக்கு ஏற்ப ஆசை களை வகுத் துக் கொண்டு தங்கள் உழைப்பின் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும். தன் அறிவின் அளவையும் திறமைகளின் எல்லை களையும் ஒருவன் அறிந்து கொண்டு தன்னால் செய்ய முடிந்த காரியத்தைச் செய்து வெற்றியடைய வேண்டும்.
வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கு பொருள் ஈட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் அதே உயிர் மூச்சாக மாறி வாழ்க்கையை சிறிது கூட அனுபவிக்காமல் இரவும் பகலும் பொருள் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளக் கூடாது. போதும் என்ற மனத்திருப்தி கொண் டால் வாழ்க்கை தேனும் பாலும்போல இனிக் கும் என்றால் அது மிகையாகாது.
Dr. தர்ஷனோதயன் t . . . . { A3 BSMS (Hons) (SL) Ad.Dip. In Counselling Psychology (UK)
, , , e.

Page 66
தெவிடாயின் போது சில பெண்கள் அதனை பொருட்படுத்தாது அலட்சியப் படுத்தி விடுவார்கள். அவ்வாறு அலட்சியப் படுத்தினால் சில ஆரோக்கிய கோளாறுகள்
Musi aus) ஏற்பட அதிக வாய்ப்புண்டு. எனவே மாதவிடாய் சமயங்களில் பெண்கள் தங்கள் ஆரோக்கிய விடயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதவிடாய் வரும் சில நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் ரீதியாகவும் மனதளவிலும் L6) அசெளகரியங்கள் ஏற்படும். மனச்சோர்வு, கவனக்குறைவு, படபடப்பு, மூட்டுவலி, நித்திரையின்மை, தலைவலி, உடல்சோர்வு, வயிறு பெருக்குதல், மார்பு மென்மையாகுதல், பருக்கள் ஏற்படுதல் இப்படி பல்வேறு பிரச்சினைகளால் தொடர்ந்து மாதவிடாய்க்கு முன்பு @ীL16ঠাeড়5া சிரமப்படுவார்கள்
இதனைத் தான் Premenstrual Syndrome (Pins) 6T607 Loggigs lifessir கூறுகின்றனர். அத்தோடு மாதவிடாயின் போது உணவு விடயத்தில் சிறிது கவனம் தேவை.
உடல் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தி 5örffs) PS அசெளகரியங்கள் மாதவிடாய்
கப்
 
 

நாட்களில் தீவிரமாகிவிடும்.
மாதவிடாயின் போது ஏற்படும் இரத்தப் போக்கினால் பெண்கள் ஒரு வருடத்திற்கு ஒரு லீட்டர் இரத்தத்தை இழக்கின்றார்கள்.
இவ்வாறு இழக்கும் இரத்தம் மூன்று முறை இரத்த தானம் செய்வதற்கு சமனாகும். அதிகளவு இரத்தப்போக்கினால் 60 பெண்களுக்கு குருதிச் சோகை ஏற்பட்டு விடுகின்றது. இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகளில் முக்கிய மானவைகளில் இதுவும் ஒன்று.
பிரச்சினைக்குத்தீர்வு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சினை களை தீர்க்க நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயங்களில் மூன்று இருக்கின்றன.
விட்டமின் சி மற்றும் பி12 சத்துக்கள் நிறைந்த உணவுகளை இரும்புச் சத்துள்ள
M600uồ (Ö00ồö.
உணவுகளுடன் சேர்த்து உண்டால் உணவி லுள்ள இரும்புச் சத்து முழுமையாக கிடைக்கும்.
2.மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்தத்தில் ஹிமோ குளோபின் அளவு சீராக இருக்கின்றதா என்று மருத்துவர் ஆலோசனைப் படி பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது
நல்லது.
5இரும்புச் சத்துள்ள மாத்திரை களையும் ஆரோக் கிய பானங்களையும் மாதவி டாயின் போது மருத்துவர் ஆலோசணைப்படி எடுத்
துக்கொள்வது நல்லது.
-ஜெயகர்
G -2011 395.5LLII

Page 67
எங்கள் மரியாதைக்
வீரகேசரி பத்திரிகையின் வரலாற்று முக்கியத்துவம் வா புத்தகவடிவில் உங்களுக்கு சமர்ப்பிப்பு
கா
O ஒரு வரலாற Weight: 250 Kg Size : 1.5 X 17"
எக்ஸ்பிரஸ் நியூஸ் வீரகேசரி கிளைக்காரிய மேலதிக தகவல்க
 
 
 
 
 
 
 
 

குரிய வாசகர்களே 30வருட கால பயணத்தில் ய்ந்த 400 முதல் பக்கங்களை தில் நாம் பெருமை கொள்கின்றோம்.
றுப்பொக்கிஷம்
பேப்பர்ஸ் வெளியீடு ாலயங்களிலும் கிடைக்கும்
ருக்கு 015322783

Page 68
蜀
盛
தொடர்பு கொள்ள
4. 52O 999 ---
நைன் வெல்ஸ் கெயார் தாய் சேய் வைத்தியசாலை
கொழும்பு 05.
இந்த இதழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லி 185ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஒக்ே
 
 
 
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
Frg,5uld goggsgO)6Hub (Sub Fertility) அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணி
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
மிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்ட்பாஸ் வீதி, டாபர் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.