கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 2011.10

Page 1
issN: 2012.6
 

多警 多
《参见\
* 月) O GN. | || el=*
ஒக்டோ

Page 2
ஒக்டோபர் - 2011
LᎠᎧᏍfr- 48 இதழ்- 08
ஆசிரியர்
லெஸ்லி ஜெயகாந்தன்
இணை ஆசிரியர்
மலர்வேந்தன்
துணை ஆசிரியர்கள்
மெற்றில்டா இராஜேந்திரம் பெஸ்லீயோ வாஸ் சந்திரசேகரன் சசீதரன் பைந்தமிழ்க்குமரன் டேவிட்
ஆலோசகர்கள்
A.G.இராஜேந்திரம் A.S.யோகராஜா
கணினி வடிவமைப்பு
S. சுபாஜெனி
வெளியீடு
சமூகத் தொடர்பு நிலையம், திரு / மட். மறை மாவட்டம்
முகவரி
சமூகத் தொடர்பு நிலையம்
அ.பெ.எண் - 44 மட்டக்களப்பு. பதிப்பகம்
வணசிங்கா அச்சகம் மட்டக்களப்பு.
多
ஆக்கங்களுக்குய் பொறு
SOCIAL COMMUNICATIONS CENTRE P. O. EBOX - 44 BATTICALOA. TEL: O65 - 2226486 E.mail: scCtribattiOgmail.com
 

eleiLULei 2 Taison (6 ................. 01.
Bib6gigs of alig56 . . . . . . . . . . . . . . . . . 02
LDITGSO16)lïL!585b • • • • • • • • • • • • • • • • • 03
&6õ60p 96aab 55öö60L ............ 04
D6 DIT25ft . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . O6
L6ofs aniõb ............................. 07
J54 ••••••••••••••••••••••••••••••••••••••• 11
தாமரைப் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 14
15T60GTu 2-65 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 15
Rypis605 elarusias . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 17
பலங்களும், பலவீனங்களும் . 18
660disasu oils . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 20
LDňLD LD6f565 . . . . . . . . . . . . . . • • • • • • • • • • • • • • • 23
36řibli6060Tuqid GIUGNOTpib . . . . . . . . . . . . . . . . . . 24
GafaliaÚIIb 35bGLJITıb . . . . . . . . . . . . . . . . . . . . . . . 27
eioo6 6GTfoUTib .................... 28
ப்பு அளித்தவர்களே (ஆர்) 後
விலை : 25/= ஆண்டு சந்தா : 400/=
(தபாற்செலவு உட்பட)

Page 3
曼
3.
R
操
‘பணிவிடை பெற அல் என்ற இயேசுவின் வார்த்தைக்கு இணங்க தொண்டது இறைவன் துணை கொண்டு அன்புடன் உங்களே
ஆண்டுகள் பல சென்றாலும் தொண்டன் மனம் மகிழ்கின்றேன். இத் தொண்டனின் சேவைக் றொகான் பேணாட்டிற்கு எனது நன்றிகளையும் பா இன்று வரைக்கும் இத் தொண்டனுக்காக ஆக்கமு ளுக்கும் எனது நன்றிகள் தொடர்ந்தும் உங்களது என இத் தொண்டனுக்கு வழங்குவீர்கள் என்ற எதிர்பார் பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித அது அரசியல் களமோ, ஆன்மீகக் குடும்பமோ ( வாழ்க்கையைத் திசைதிருப்புகின்றது; திரும்பச் செ புதிய அணுகு முறையையும் பின்பற்றி சமூகத்ை முன்வருவோம். அதற்காகப் புதிய புதிய எண்ணங்க நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்க நாட்டி ஒரு மாபெரும் மனிதர், தலைவர். இவர் இன்றும் த விட்டுத்தான் தனது பணியைத் தொடர்கிறார். அதா என்பதை இயேசுவின் வார்த்தையில் இருந்து கற்று (திரு 19:105) என் காலடிக்கு உம் வா அதேபோல் நாம் ஒவ்வொருவரும் எப்படி நடந்து ெ போது ஒரு நாட்டின் தலைவர் தொடக்கம் குடும் முறையில் புரிந்து வழிநடத்த உதவியை இறைவனிட சிந்தனையால் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கையை ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு வாழ முடிவெடுப்போம் மேலும் நடைபெற்ற மறைமாவட்ட மேய்
தீர்மானங்களும் நான் மேற்கூறிய கருத்துகளை இ
என்றும் உங்கள் குடும்பங்களை ஆசீர்வதிப்பாராக
குடும்ப ஆண்டிலே வளமான குடும்பங்கள்
"உம் ஊழியன் நா6
ஒழுங்கு
(1
 
 
 
 
 
 
 
 
 

ல பணிவிடை புரியவே’ றுக்குத் தொண்டாற்ற புதிய ஆசிரியர் என்ற முறையில் ாடு முதற்பக்கம் பதிக்கிறேன். தன் தொண்டினை திறம்பட செய்வதையிட்டு நான் | காக உழைத்த முன்னாள் ஆசிரியர் அருள்தந்தை ாட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் ம் ஊக்கமும் அளித்து வரும் ஒவ்வொரு உள்ளங்க iணத்தில் உருவாகின்ற சிந்தனைகளைத் தொடர்ந்து ப்பும் நம்பிக்கையும் எனக்குண்டு. 5 சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. வேறு எந்த விடயமோ மனிதனை மாற்றி அவனது ய்கின்றது. எனவே இத் தொண்டனின் சேவையையும் தத் திசைதிருப்பும் ஓர் ஊடகமாக மாற்ற நாம் ளை, ஆலோசனைகளை நாம் கேட்டுநிற்கின்றோம். டில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பாராட்டுப் பெற்ற தினசரி நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியைப் படித்து வது ‘எப்படி நான் இன்று நடந்து கொள்ள வேண்டும் க்கொள்கிறேன்’ என்கிறார். க்கே விளக்கு என் பாதைக்கு ஒளியும் அவரே காள்ள வேண்டும் என்று எம்மைக் கேட்டுப் பார்க்கும் பத்தலைவர் வரை மக்களை, குடும்பத்தை நல்ல
மிருந்து பெறமுடியும் அப்போதுதான்நமது செயலால் வாழ முடியும். இந்தக் குடும்ப ஆண்டிலே நாம்
ப்ப்புப் பணிச்சபை மாநாடும் அது கொண்டு வந்த 翡 ன்னும் வளப்படுத்தும் என நம்புகிறேன். இறைவன்
வளமாக வாழவே வாழ்த்தி நிற்கின்றேன்.
ன் எனக்கு நுண்ணறிவு புகட்டும். அப்போது உம் முறைகளை அறிந்து கொள்வேன்"
e (நீதிமொழி.12.23)

Page 4
ருந்து நற்செய்தியை அறிவிக்கும் பொறுப் பும் நமக்கு வந்துவிடுகிறது. இறைமகன் இயேசுக்கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த போது ஒரு குருவாகவும், நல்லஆசிரியராகவும் நல்லாயனாகவு மிருந்து மக்களை வழிநடத்தினார். இந்த மூன்று பெரும் பணிகளையும் புரியும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. அதன் காரணமாகத்தான் நமது தாய்த்திருச்சபை எதிர்வரும் 23ம் திகதி ஞாயிறு தினத்தை உலக மறைபரப்பு தினமாக அறிவித்தி ருக்கின்றது. நாங்களும் எந்த நிலையில் இருந்தாலும் நற்செய்தியை அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
பல வருடங்களுக்கு முன்பு நான் மலை நாட்டுப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணஞ்செய்து கொண்டிருந்தேன். அந்த வாகனத் தில் சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. ஒருவர் தன் கையில் விவிலியம் ஒன்றை ஏந்தியபடி பல மணிநேரம் பயனஞ் செய்துகொண்டு வந்தார். ஓரிடத்தில் நாங்கள் பயணஞ்செய்த வாகனம் நின்றது. சிலர் இறங்கினார்கள் சிலர் ஏறினார்கள். பலர் வேறு தேவைக்காகவும் இறங்கி நின்றார்கள். இந்த இடைவெளி நேரத்தில் திருவிவிலியத்ததை ஏந்திய அந்த மனிதர் அவசர அவசரமாகக் கீழே இறங்கினார். உள்ளேயும் வெளியேயும் சத்தமும் சந்தடியுமாக இருந்தது. திருவிவிலியத்தைப் பிரித்தார்; உரத்த குரலில் கூறினார். “இதோ இங்கே இருப்பவர்களே கேளுங்கள் உலகக் காரியங்களுக் காக அலைந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இயேசு கூறுகிறார். தன்னுடைய ஆன்மாவின் முடிவை நினைத்துப்பார்க்காத மக்களுக்கு இயேசு கூறுகிறார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” சில வினாடிகளில் கனிரென்று முழங்கிய அந்தக் கம்பீரக்குரல் மின்னல் வேகத்தில் ஒலித்து மறைந்தது. பெருங்கூச்சல் நிறைந்த அந்த
jI ഃഖഞ്ഞുണ്ണuി
 
 

பொழுதில் அங்கிருந்த மக்கள் ஸ்தம்பிதம் அடைந்து விட்டார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக, இந்துக்க ளாக, இஸ்லாமியர்களாக, பெளத்தர்களாக பயனஞ் செய்து கொண்டிருந்தவர்கள். அங்கே அனைவருக் கும் நற்செய்தி அறிவிப்பு முழங்கப்பட்டது.
நற்செய்தியாளர் தூய லூக்காவை, திருச் சபை நினைவு கூர்ந்து கொண்டாடுகின்றது. தூய பவுலின் பயணத்தோழராகவும், நற்செய்தி அறிவிப் பாளராகவும் இருந்து கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை நமக்கு எழுத்து வடிவில் தந்தவ ராகவும் அதன் மூலம் கிறிஸ்துவின் இளமைப்பருவ வாழ்க்கையை ஓரிரு வரிகளில் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். வசதிவாய்ப்புகள் மிக மிகக் குறைந்த அந்தக் காலகட்டத்தில் இவர்களது நற்செய்தி அறிவிப்பு பணி எவ்வளவோ மெச்சத் தக்கதாக இருக்கின்றது. அக்காலத்தில் நற்செய்தி அறிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது நற்செய்தி அறிவிப்பின் போது ஒவ்வொருவரும் பட்ட துன்பங்களும் வேதனைகளும் போராட்டங்களும் வார்த்தையால் சொல்ல முடியாதவை. ஆனாலும் அவர்கள் சோர்ந்து போகவில்லை. அவர்களது கால்களும் ஓய்ந்திருக்கவில்லலை. நாளுக்குநாள் புதிய வேகத்தோடு நற்செய்திப் பணி புரிந்தனர். இறைமகன் இயேசுவின் மேலிருந்த அன்பும் நம்பிக் கையும், ஆர்வமும் அவர்களைக் களைப்படையச் செய்யவில்லை. புதிய வாஞ்சையோடு செயற்பட்ட னர். இயேசு பணிவாழ்வின் போது மக்கள் ஆயனில்லா ஆடுகளைப் போலிருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந் தார். தாம் போக இருக்கும் ஊர்களுக்கு தமக்கு முன் சீடர்களை அனுப்பினார். அதற்காகவே 72 சீடர்களைத் தேர்ந்தெடுத்தார். நற்செய்தி அறிவிப்பை முன்னிட்டு அறுவடை மிகுதியாகவும், அதற்கான ஆட்கள் குறைவாகவும் உள்ளதாக உணர்ந்தார் இயேசு, அதேவேளை நற்செய்தி அறிவிப்போர் எதிர்நோக்கும் சவால்களையும் அறிந்ருந்தார் அவர்
o 4" Luċi ....
2)

Page 5
முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் திருச்சபை யானது உரோமையராலும், உரோமையப் பேரரசுகளி னாலும் அதிகம் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப் பட்டது. பின்னர் 313ல் “மிலான் சாசனம்’ பேரரசர் கொன்ஸ்தாந்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் உரோமையக் கலாபனையானது ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இத்தகைய கலாபனைக்காலங்களில் திருச்சபைக்கு உள்ளே புறம்பே வாழ்ந்த யூதர்களுக்கு உரோமைய அஞ்ஞானிகளிடமிருந்து துன்பங்களும் இடையூறுகளும் வந்தன. இருப்பினும் 4ம் 5ம் நூற்றாண்டுகளில் இவைகளை விட மோசமான மிகக் கொடிய எதிர்ப்புகள் திருச்சபைக்குள்ளே இருந்து எழுந்தன. இவைகளின் நிமித்தம் திருச்சபையானது மிகவும் இக்கட்டான நிலையை சந்திக்க நேர்ந்தது. அதாவது பல தவறான போதனைகளும், பதிதங்க ளும் எழுந்தது. இதனால் கிறிஸ்தவ வாழ்வு குழப்ப மடைந்து தழம்பல்களுக்குள்ளானது. இருப்பினும் “நரகத்தின் வாயில்கள் அதனை மேற்கொள்ளா” எனும் இயேசுவின் போதனைக்கமைய திருச்சபை யின் தந்தையர்களாலும், திருச்சங்கங்களாலும் திருச்சபையானது வழிநடத்தப்பட்டுக்கொண்டே வந்தது.
மேலும் 13ம் நூற்றாண்டின் முடிவிலே கீழைத் தேய கிறிஸ்தவ உலகில் இரு இறையியல் கல்லூரிகள் தோன்றின. அவை அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா கல்லூரிகளாகும். அவை முறையே செயல் முறை சாத்தியமானவற்றையும் உயர்ந்த இலட்சியங்களை யும் முன்வைத்து விளக்கமளித்து வந்தன. இவற்றில் அந்தியோக்கியர் திரித்துவத்தில் மூன்று ஆட்கள் பற்றியும், இயேசுவின் மனித சுபாவம், இறை
 

-0 ஒக்டோபர் 2011
சுபாவம்பற்றியும் முக்கியத்துவப்படுத்தி விளக்கமளித் தனர். மேலும் இறையியலின் அணுகுமுறையை அவர்களுக்குள் இருந்த தவறற்ற வேறுபாடுகள் கால ஓட்டத்தில் தீவிரமாகி போட்டி பூசல்களுக்கும் கடைசியில் பேதகங்களுக்கும் தப்பறையான கருத்து வேறுபாடுகளுக்கும் இட்டுச்சென்றது. இவைகளால் தோன்றியவையே பேதகங்களாகும்.
‘பேதகம்’என்பது தப்பறையான போதனை யாகும். அதாவது வேதாகமத்திலும், பாரம்பரியத் திலும் திருச்சபை வெளிப்படுத்திய இறைவெளிபாட்டு உண்மைகளை ஏற்க மறுப்பது அல்லது எதிராகப் போதிப்பதுமாகும். திருச்சபையின் மரபு ரீதியான போதனைகளுக்கும் கிறிஸ்தவத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒழுங்கு முறைகளுக்கும் ஏற்காத, முரணான படிப்பினைகளும் ஒழுங்கு முறையுமே பேதகம் என்கிறோம்.
இவ்வாறானவை திருச்சபையில் ஆரம்பத் தில் இருந்தே சிறிது சிறிதாகத் தோன்றின. அவைக ளாவன: இயேசு மனிதர், ஒரு தோற்றமே அன்றி உண்மையான மனிதனல்லர் எனத் தோற்றக் கொள்கையினரும், இயேசு கடவுளின் சுவீகார மகனே அன்றி அவர் சொந்த மகன் அல்ல எனச் சுவீகாரக் கொள்ளையினரும் இரு அரசுகள் ஒன்றுக்கொன்று முரணானது, ஒன்று கடவுளின் அரசு மற்றது சாத்தானின் அரசு என்று மனிக்கேயப் பேதகத்தி னரும் தவறாகப் போதித்து வந்தனர். மேலும் சாத்தானே ஆதாமை உண்டாக்கினான் என்றும், னின் வாரிசான மனிதனிடம் ஒளியின் சில சுவர்கள் இருளில் றைந்துள்ளது, @lഖങഖങിഴ്ക് ரை மீட்கவே இயுேசுவும், பவுலும் அனுப்பப் பட்டனர், மனிதன் மீன், கறி, திராட்சை இரசம், சரீர இச்சைகள் திருமணங்கள் அனைத்தையும்
போதித்தனர். தூயுபவுலும், பேதுருவும் எழுதிய திருமுகங்களில் இவற்றைப் பார்க்கலாம். மேலும் புனிதர்களான யுஸ்தீன், இரனியூஸ், கிளமன்ட், ஒரிஜன், தெர்த்துல்லியன் போன்றோரும் இதனை எதிர்த்து வாதிட்டுள்ளனர். இருப்பினும் இதனை முடிவுக்குக் கொண்டு வந்தவர் புனித அக்குஸ்தீனர். இவர் ஆரம்பத்தில் இப்பேதகத்திற்கு உடன்பட்ட வராய் இருந்தாலும் ஒன்பது ஆண்டுகளின் பின்னர் மனம் திரும்பி, தாய் மொனிக்கம்மாளின் செபத்தி னால் மனம் மாறி உண்மையினை உணர்ந்து

Page 6
6ෂ්රැග්හැc>ණිr - - கொண்டார். இப் பேதகத்திற்கு எதிராக மும்முர மாய்ச் செயற்பட்டு இதனை முற்றாக ஒழித்தார்.
அதனைவிடவும் 4ம் 5ம் நூற்றாண்டுகளில் பல முக்கிய பேதகங்கள் தோன்றி விசுவாசத்தைக் குழப்பலாயின. அவை ஆரிய பேதகம், மசதோனிய பேதகம், பெலாஜிய பேதகம், நெஸ்தோரிய பேதகங் கள் போன்றவையாகும். இவை முறையே “வார்த்தை கடவுளிலும் கீழானவர்’ தூய ஆவியின் தெய்வீகத் தன்மையை வெறுத்தும், இயேசு மெய்யான கடவுளும் மனிதனும் என்பதில் சந்தேகப்பட்டும்,
 ை10ம் பக்கத்தின் தொடர்ச்சி.
அன்னை காட்சியளித்த அன்றும் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தார்.
> 1875ம் ஆண்டு இங்கு கட்டப்பட்ட பங்குக் கோயிலிது. இங்குதான் பேர்ண்டேற் திருமுக்குப் பெற்றார்.
> 'நொர்ஸ்’- கன்னியர் இல்லம், பேர்ண்டேற் இளமைப்பருவத்தில் இருந்தபோது இயங்கிய இல்லம், தற்போது 'புனித பேர்ண்டேற் கன்னியர் இல்லம்’ என அமைக்கப்படு கின்றது. இங்குள்ள கன்னியர், ஜெவர்ஸ் நகரக் கன்னியர் குழுவினர் என்றழைக் கப்பட்டனர். இல்லத்திலுள்ள ஆலயத்தில் தான் பேர்ண்டேற் முதன்நன்மை பெற்றார். இக்கன்னியர் நடத்திய பாடசாலையில் எட்டு ஆண்டுகள் கல்வியையும் பெற்றார். வாழ் நாளில் பிற்பகுதியில் கூட இவர்களுடன் இணைந்து சமயப் பணிபுரிந்தார்.
> பார்ட்ரஸ்’ எனப்படும் இடம் அன்னை காட்சியளித்த லூர்து நகரிலிருந்து 3 கிலோ மீற்றர் தொலைவிலமைந்துள்ளது. குழந் தைப் பருவத்தில் பேர்ண்டேற் வளர்ந்த கிராமம் இது திருக்காட்சிகளின் பின் திரும்பி வந்து தன் வளர்ப்புத் தாயின் வீட்டில் அவரது ஆடுகளை மேய்த்த இடம், ஆட்டுக் கொட்டில், பண்ணை நிலம், ஆடுகளை அடைக்கலம் ஈந்த இடம் ஆகியவற்றையும் யாத்திரிகர் காணலாம். கு
(

=0 ஒக்டோபர் 2011
இயேசுவில் இரு சுபாவம் இல்லை ஒரு சுபாவம் மட்டுமே என்றும், மரியாள் இயேசுவின் தாய் அல்ல ஒரு மனிதனின் தாய்மட்டுமே என்றும் பல்வேறுபட்ட தவறான போதனைகள் தோன்றி கிறிஸ்தவ விசுவாசம் தழம்பலுற்றது. இருப்பினும் திருச்சபை யானது பல்வேறு எதிர்ப்புகள் மத்தியிலும் ஆவியின் வல்லமையாலும் இறை இயேசுவின் கிருபையாலும் திருச்சங்கங்கள் மூலமும் மேலும் மேலும் வளர்ந்ததே அன்றி தோல்வியுறவில்லை. எந்தளவிற்கு எதிர்ப் புகள் வந்ததோ அந்தளவிற்கு வளர்ச்சி கண்டது.
 ேஉலக மறை அறிவிப்பு தொடர்ச்சி .
ஒநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புகி றேன் என்று நற்செய்திப் பணியின் சவால்களை குறிப்பிடுகின்றார் இயேசு.
தூய பவுல் கூட தான் நற்செய்தி அறிவிக் கும்போது பலவேளையில் துன்புற்றதாகக் கூறுகின்றார். இவரது துன்பவேளையில் எவரும் தன்னுடன் இருக்கவில்லை, அனைவரும் அவரை விட்டு விலகி விட்டனர் என்று சொல்கிறார். அப்படி இருந்த போதும் உலகிலுள்ள எல்லா நாட்டினரும் பவுல் அறிவித்த நற்செய்தியைக் கேட்கும் அளவுக்கு ஆண்டவர் பவுலுக்கு வலுவூட்டினார் என்று தூய பவுல் கூறுகின்றார். ஆகவே ஒவ்வொருவரும் நற்செய்தியை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். உங்களது வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் நமது குடும்பங்களிலும் வாழும் சமுதாயத்திலும், பணிபுரியும் இடங்களிலும் எங்கள் அயல்களிலும் இன்னும் உங்களோடு பழகும் சகோதர இன மதத்தவர் மத்தியிலும் எங்கள் சாட்சிய வாழ்வை வெளிப்படுத்தலாம். எங்கள் அழைப்புதலுக்கேற்ற சிறு சிறு காரியங்களில் கூட நாங்கள் வாழ்ந்து காட்டலாம். கிறிஸ்துவின் நற்செய்தி எங்கும் எங்களால் பரப்பப்படும். கிறிஸ்துவைப்பற்றி நாங்கள் அறிவிப்பவராவோம். மிகப்பெரிய அளவில் நாம் நினைத்து அலுத்துக்கொள்ளாமல் சிறு சிறு | காரியங்களில் கூட நற்செய்தி அறிவிப்புச் செய்ய லாம். சில சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்றாற்போலும் நற்செய்தியைப் பகிர்ந்தோ அல்லது முழக்கஞ் செய்தோ இறை அரசின் மதிப்பீடுகளை உலக றியச் செய்ய முயலவோம்.
O G&L un glasů T.T. fOTarafarò

Page 7
@e©rেঞ্জcন্সে ( = ( பேரருட்தந்தை பைாண்ணையா யோசப் ஆண்ட8ை
திருச்சபை -
টেg্যুঞ্য৫০াে?
9055oct?
ട്ട 6 a இயேசு தி(fjófóró01/úDIII மக்கள் சக்தியில் 7^2\
ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். மக்களை முதன்மைப்படுத்தி மக்கள் இயக்கத்தைக் கட்டி யெழுப்பினார். ‘தூய்மை - தீட்டு" என்ற பாகு பாட்டினால் ஒதுக்கிவைக்கப்பட்ட மக்களோடும், குற்ற உணர்வோடு தாழ்வு மனப்பான்மையோடும் வாழ்ந்த மக்களோடும் உரையாடியது, உணவு உண்டது, பழகியது போன்ற பண்புகள் மூலம் அவர்களை ஒருங்கிணைத்து வளரச் செய்தார். மக்கள் தாமா கவே சிந்தித்து செயற்படுவதையே விரும்பினார். இயேசு தனிப்பட்ட ஆளாகச் செயற்படாமல் ஒரு கூட்டுச் செயற்பாட்டை விரும்பியதால் ஆண்களும், பெண்களும் நிறைந்த சீடர் குழுவோடு பணியாற்றி னார். (லூக்,8:1-3)
இயேசுவின் இறப்பு- உயிர்ப்புக்குப் பிறகு, சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்னும் இயேசுவின் இலட்சியத்தைத் தங்களது இலட்சியமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஓர் இயக்கமாக ஒன்றிணைந் தார்கள். இறைவனை இயேசுவின் ஆவி மூலம் கண்டு இறையனுபவம் பெற்றவர்கள் இயேசு வின் இலட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக் குப் பெற்றார்கள், வழிபாட்டுக்காக வீடுகளில் ஒன்று கூடினர்.(திப.2:42). இயேசு இயக்கத்தின் நம்பிக்கை கொண்ட உறுப்பினர்களிடையே ஏற்றத்தாழ்வோ பாகுபாடோ இல்லை. அத்தனை பேரும் ஓர் உள்ள மும், ஓர் உயிருமாய் இருந்தனர் (திப 4:32). குரு குலம் என்ற தனி அமைப்பு இல்லாததால் மக்கள் அனைவரும் வழிபாடுகளில் முழு உரிமை பெற்றி ருந்தனர். பெண்களும் எல்லா உரிமைகளையும் சரிசமமாகப் பெற்றிருந்தனர்(1 கொரி.11:7, திப.21:9, உரோ.16:1) வரங்களும் அதிகாரங்களும் ஆவியான வரிடமிருந்தே வருகின்றன (உரோ. 12:7-8, எபே.4:11-12) என்பதை மனதில் கொண்டு இறையர
(5
 

ன்ேறைய உலகில்
புரிந்துகொள்வு
எங்ஙனம் 0
சுக்காக எல்லாருமே சமமாகப் பணியாற்றினர்.
இயக்கமாக இருந்த திருச்சபை, இன்று நிறுவனமாய் மாறிவிட்டதை நாம் அறிகிறோம், கண் னெதிரில் காண்கின்றோம். நிறுவனங்கள், இவற் றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்கள், பெரிய பெரிய தேவாலயங்கள், அழகிய ஆலயங்கள், சிற்றாலயங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள், துறவற இல்லங்கள், கன்னியர் மடங்கள், பிரமிட் கட்டிட முறையிலான வலுவான, கட்டுக் கோப்பான நிர்வாக அமைப்பு முறைகள், நிர்வாகக் கூட்டமைப்புகள் ஆகிய இவையனைத்தும் தன்னுள் அடக்கியதே திருச்சபை என்று இலக்கணம் வகுக்கப்படுகின்றது.
இயேசு ஆரம்பித்தது ஒரு மக்கள் இயக்கம். அது வேறுபாடுகள், பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் அற்ற சமத்துவத் தோழமை. எனவேதான் அது ஒரு புதிய வழி எனப் போற்றப்பட்டது (திப.19:23). எனவே இன்று நாம் காண்பது போன்ற கெடுபிடியான நிறுவனத் திருச்சபையை இயேசு ஆரம்பித்தார் என்பது சுத்தப் பொய். இயேசுவின் கனவை நனவாக்க வேண்டுமெனில், அவர் துவங்கிய மக்கள் மைய, மக்கள் இயக்கத்தை மீண்டும் மலரச் செய்ய வேண்டும். அதற்கு அடிப்படையாக நம் மனங்களில் ஊறிப்போயிருக்கிற இறைவன், இயேசு, திருச்சபை, ஆன்மீகம் பற்றிய தவறான புரிதல்களை வேரறுக்க வேண்டும்.
இறைவாக்கினர் எதிர்பார்த்த புதிய வானமும், புதிய பூமியும் (எசா.66:22), இயேசு கண்ட கனவான புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் (தி.வெ.
)
S
リエ

Page 8
தொண்ட்ன் (ணை 21:5) உருவாக வேண்டுமெனில் எம்மில், எம் சிந்தனையில், எம் வாழ்வில், புதியதொரு மாற்றம் இறைவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட வேண்டும். திருச்சபை இயக்கம் என்றால் அது இயங்க வேண்டும். பயணம் போகும் திருச்சபையாக அது வாழ வேண்டும். திருமுழுக்கு என்ற ஒரு பொது துவக்க நிலையைப் பெற்று வாழ்க்கை என்ற பிரதான நீரோட்டத்தில் பயனம் செய்து, படைப்பின் முதலாம் இறைவனை, வாழ்விலும், வரலாற்றிலும் காணக் கிடக்கும் இறைவனைக் கண்டு தரிசிக்க வேண்டும், அத்தரிசனம் தந்த உந்துதலால் இப் பொதுப் பயணத்திலே. தொடந்து செல்கிறவர்களாய் புதிய வானம், புதிய பூமி, புதிய உலகம் என்ற இலக்கினை நோக்கிச் செல்ல வேண்டும்.
இயேசுவின் இயக்கத்தின் இலட்சியம் இறையரசே இறையரசு என்பது இறைவனையும் மனிதனையும் சார்ந்தது. அது இறைவனின் அரசு அல்லது ஆட்சி நடைபெறும் நிலை. மாந்தரின்
-6s
அருள் தந்தைலெஸ்லிஜெயகாந்தன் அவர்க ஏடான தொண்டன் சஞ்சிகையின் ஆசிரியரா
தற்போது வாகரை புனித பேதுரு பவர்கள் கூடவே இம் மேல
வரவேற்பதோடு இறையாசி வேண்டிபிரார்த்
壽 器
தகவலஇைண்ைதுை இலை
Os
C
 
 
 
 
 

=0 ஒக்டோபர் 2011 நல்வாழ்வுக்கு என அவர் கண்ட கனவெல்லாம், வகுத்த திட்டமெல்லாம் நிறைவுறும் நிலையே அது. தம் பிள்ளைகளெல்லாம் துன்ப துயரங்கள் நீங்கி, அநீதிகள் அடிமைத்தனங்கள் ஒழிந்து, மாண்புடனும் மகிழ்வுடனும் இருப்பதே அவரது திருவுள்ளம். மக்கள் எல்லோரும் ஆதிக்கம், அடுத்தவரை சுரண்டுதலும் இன்றி, ஏற்றத்தாழ்வுகளும், எவ்வகைப் பிளவுகளும் இன்றி, சகோதர உறவுகளுடனும், சமத்துவ உரிமையுடனும் வாழ்ந்து நிறைவு காண வேண்டும் என்பதே அவருடைய திட்டம்.
எனவே திருச்சபையானது பழகிப்போன பணிகளுக்குள், பாதுகாப்பான அமைப்புகளுக்குள், இறுகிப்போன அமைப்புகளுக்குள், சட்டங்களுக்குள் அது தன்னையே சிறைப்படுத்திக் கொள்ளலாகாது. புதிய எண்ணங்கள், கனவுகள், செயல்பாடுகள் அதில் வரவேற்கப்பட்டால்தான் அது இயக்கமாக மாறும்.
臺鑫臺凳臺臺羲臺 «О»
அணுத்தெடத்
ଅଜ୍ରାର୍ଥେ $இங்குறி
சமூகத்தொடர்புத் துறையின் இயக்குனராக ள்நியமிக்கப்பட்டுள்ளார் கூடவேமறைமாவட்ட கவும் அவர் பொறுப்பேற்றுள்ளார்.
ஆலயப் பங்குத்தந்தையாகப் பணிபுரியும் திக பொறுப்பையும் ஏற்றுள்ளார் என்பது
5ளாருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்து திக்கிறோம். e e
பணியாளர்கள், சமூகத்தொடர்புத்துறை அலைகைைக கைது கேO

Page 9
ற்ற்காலிக்கு செட்டை முளைக்க ந்ய்வுரை காணாத நூலாக புல்நுனி தவழும் பனித்துளியாக இரவுகளுக்குள் ஒளிக்கிற்றாக அடிமைப் பெட்டகத்தை உடைத்தெறிய
ராயணம் செய்தனர் விடியலின் கீதம் குயில்கள் இசைத்தன சாதிச்சனியன்கள் சமாதிக்குள் முடங்கின சரித்திரப் புகையிலையில்
அள்ளிவந்தன இரும்பு முட்டைகள்.
를 தண்ணீர்ப் பாம்புகளும் தவளைகளும்
பல்லிகளும் மண்புழுக்களும்
அவள்களும் கூடத்தான்.
கடைசித்துளிவரை காத்திருந்தாள் கண்ணனும் கூட காளிந்திக்கரைக்கு
கடா வெட்டப்போயிருந்தான்
கூனிக்கும் சகுனிக்கும் கும்மாளங் பிலாத்துவிள் கையில் மரணப்பட்டயம் மண்மாதா மடிந்து போனாள்.
எங்கும் பொசுங்கல் மனம் அதோ - மண்டையோடுகளின் மேலாக சாம்ராட் அசோகன் பவனிவருகிறாள் - ខ្វាង 3ត្រូព៌ាញរាប Ε.Σ.Σ.-
என்றாவது வருவான் தாவீது கவனுடன் 劃 * ម៉ាល មកត្រូវសំគេសំស្ល-ហ្គភ៌ ...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 10
தந்தையர் இப்பணியைச் செய்கின்றனர்.
- துமை மிகு இத்திருத்தலத்தினை அன்றா டம் பலர் சென்று தரிசித்து வருகிறார்கள். இப்புனித தலத்திலே பல முக்கிய விடயங்களுள. அங்கு சென்று வந்தோரின் பார்வையினூடாக நாம் அவற்றை அறியமுடிகிறது. அவை பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
 

-6 ஒக்டோபர் 2011
1. மலாபியெல் என்ற இடத்தில் உள்ள தேவ அன்னை
இங்கு பேர்ண்டேற் சுபிரஸ் எனும் பெண் ணுக்கு மரியன்னை 1858ம் வருடம் மாசித்திங்கள் 11ம் நாள் முதல் ஆடித்திங்கள் 16ம் நாள் வரையிலே 18 தடவைகள் காட்சியளித்தார். இக்கெபிக்கோயில் 7 யாத்திரிகளின் செபமடமாகவும், இறைவழிக் கொள்கைகள், உண்மைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தும் ஓர் இடமாகவும் உள்ளது. நாள் தோறும் திருப்பலி நிறைவேற்றப்படுகின்றது.
பேர்ண்டேற்றுக்கு 'நானே அமல உற்பவம்” என அன்னை அவ்விடத்து மக்கள் பேசும் மொழி யிலேயே குறிப்பிட்டார். இங்கு அன்னை அளித்த காட்சியானது அதே இடத்தினிலே உருவச் சிலைகளால் அமைக்கப்பட்டுள்ளமை தனிச் சிறப்பாகும். கெபிக்கோயிலின் பீடத்தின் கோடை A இடதுபுறத்திலே திறந்து மூடத்தக்க காலத்தில் A தொரு படலைக்கல் ஒன்றின் கீழ்,
புதுமை நிறை நீரூற்று ஒன்றுள்ளது.
இந்நீரூற்று 1858ம் வருடம் மாசித்திங்கள் திறந்து 25ம் நாளன்று பேர்ண்டேற்றுக்கு SOG) is e ING 50 - 3960T Uģ5 TOJğl Φ L 60) (ο) Ιu IΠά5 ζ5
இடங்களில் தோற்றமளித்த போது, நிலத்தில் ஓர் இடத்தைச் சுற்றிக்காட்டி, அதில் அறிக்கைகள் விரலால் ஒரு கோடு இழுக்குமாறு கூற, கேட்கப்படு அவரும் கோடு இழுத்தவுடன் உருவாகியது. “இந்நீரூற்றின் இனிய நீரைப் பருகு, அதில் நீராடி நலம் பெறு” என ஆசீர் அளித்தார் மரியன்னை. இன்று இது வற்றாது சுரந்து கொண்டிருக்க, பல நீாத்தாங்கிகளில் தேக்கி வைத்துப் பயன்படுத்தப்படுகின்றது. உடல் நலம் குன்றி யோர் குளிப்பதற்குக் குழாய் மூலம் அனுப்பப் படுகிறது. உலகளாவிய ரீதியில் மக்களனைவர்க்கும் இப்புனித நீர் வியத்தகு அற்புதங்களைச் செய்து வருகிறது.
இந் நீரூற்றின் இடப்புறத்திலமைந்துள்ள ஒரு பளிங்குக் கல் பதித்த உலோக மேடையொன் றிலே தேவ அன்னை, பேர்ண்டேற்றுக்குக் காட்சிய ருளிய போதெல்லாம் மொழிந்த இனிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இன்று வாழும் எமக்கும் கூறுவதாகக் கொள்ளலாம்.
8)

Page 11
2. புதுமை நீரில் குளிக்கும் அறைகள்:
1955ம் வருடத்திலே நாளுக்கு நாள் பெருகி வரும் யாத்திரிகளின் நலங்கருதி நீராடும் இடங்கள் புத்தாக்கம் பெற்றுள்ளன. நலங்குன்றியோரும் நலமுடனிருப்போரும் நீராட வரவேற்கப்படுகின்றனர். இறையன்பால் ஈர்க்கப்பட்டு வரும் ஆயிரக் கணக் கான மக்கள் இவ்விடத்தில் நாள் தோறும் முழ்கிக் களித்து. புத்துணர்வு, புதுநலம் எய்துவது உலக றிந்த உண்மை.
3. LDITEFñm éEsïSDSSTuskoï 2_uï Lorrari Lû Guyn Russi: அன்னை மரியா காட்சியளித்த வேளையில் இவ்விடத்தில் ஓர் ஆலயம் எழுப்புமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க இது அமைக்கப்பட்டுள்ளது. அன்னையின் திருக்காட்சி, இப்பேராலயத்தின்
கீழ்த்திசையிலுள்ள தாழ்நிலப்பகுதியில் நிகழ்ந்தது.
இம் பேராலயச்சிறப்புகள்:
> இப்பேராலயத்தின் இரு மருங்கிலும் அமைந்துள்ள சாளரங்கள் சில வரலாற்றுச் சிறப்புகளை, சான்றுகளைத் தாங்கியுள் ளன. புனித லூர்து அன்னை முதன்முதல் காட்சியளித்தது முதல் 1876ம் வருடம் அன்னையின் உருவச்சிலைக்கு மணிமுடி அணிவித்துச் சிறப்பித்தது வரையிலான வரலாற்றுக் குறிப்புகள் இவற்றில் பொறிக் கப்பட்டுள்ளன.
> தேவ அன்னையின் புதுமை நிறைந்த மாசற்ற தன்மை, இயேசுவை ஈன்ற உண்மை பற்றிய சான்றுகளை மேற்தளச் சாளரங்
களின் குறிப்புகள் தெளிவுபடுத்துகின்றன.
 

19ம் பத்திநாதர் மரியன்னை யின் மாசறு நிலைக்கு விளக் கந் தந்த நாள் வரையுள்ள
வழிச் சுவரில் சலவைக்கல் ஒன்றில் சமயக்குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன. ‘பர்ப் எனும் பகுதியின் ஆயராகப் பணிபுரிந்த மேதகு ஆயர் லோரன்ஸ் ஆண்டகை லூர்த்து அன்னை பற்றிய செய்திகளை நெடுநாட்களாக ஆராய்ந்து தெளிந்த பின் வெளியிட்ட குறிப்புகளே அவை. உண்மையிலேயே மரியன்னை பேர்ண்டேற்றுக்குக் காட்சியளித்தார் என்று இவை உறுதிப்படுத்துகின்றன.
4. குடித்தளத் திருக்கோயில்:
பேராலய அடித்தளத்தில் வழிபாட்டிற்கென ஒரு சிறு கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1866ம் வருடம் வைகாசித் திங்கள் 19ம் நாளில் இங்கு நிறைவேற்றப்பட்ட முதல் திருப்பலியிலே புனித பேர்ண்டேற் பங்கு பற்றினார். ஆலயத்தின் முன் மண்டபம் முழுமையான ஒரு பாறையிலிருந்து குடைந்தெடுக்கப்பட்டுள்ளது. 25 சிற்பிகள் இரவு பகலாக உழைத்து இதனை நிறைவு செய்தனர். பேர்ண்டேற்றின் தந்தை இச்சிற்பிகளில் ஒருவராவார்.
5. திருச்செபமாலை அன்னையின் மறைமாவட்டம்
GuyIcsVuið: இது காட்சிகள் நிறைவேறி 30 வருடங்களின் பின் கட்டப்பட்டது; திருச்செபமாலை அன்னைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. அன்னை கையில் திருச்செபமாலையுடன் பல தடவைகள் காட்சியளித் ததால் இவ்வாலயம் இவ்விதம் அழைக்கப்பட்டது. 1901ம் வருடம் புனிதத் தலமாக உயர்த்தப்பட்டது. கிரேக்கரின் சிலுவை அமைப்பைத் தழுவி எழுதப் பட்ட இதன் கிழக்குப் பகுதியைச் சுற்றி 15 தேவ இரகசியங்களின் நினைவாக 15 பீடங்களுள்ளன.
D

Page 12
@8©rে@ঠআcর্গে
6. புனித பாப்பரசர் 10ம் பத்தினாதர் ஆலயம்:
அடித்தளத்தில் அமைந்த இன்னுமொரு ஆலயம் இது. ஏறத்தாள 30 ஆயிரம் யாத்திகர் திருப் பலியில் பங்கு கொள்ளத்தக்க பெரிய ஆலயம். நலங் குறைந்தோரும், நலமுள்ளோரும் திருப்பலிபீடத் தைச் சுற்றியமர்ந்து பங்கு பற்றும் அமைப்பு இங்கு உண்டு. 1958ம் வருடம் பங்குனித்திங்கள் 25ம் நாளில் கருதினால் டோன் ஆண்டகையினால் திருத்தல மாக்கப்பட்டது. இவரே பின்னர் 23ம் அருளப்பர் எனும் பெயர் கொண்ட பாப்பரசரானார். “கிறிஸ்டி’ எனும் சிறப்பைப் பெறும் ஓர் ஆலயம் இப்பேராலயச் சிங்காசன மேடையின் பின்புறம் உள்ளது.
7. மலைமேல் சிலுவைப்பாதை:
1530 மீற்றர் நீளமுடைய நெடுவழிச் சிலுவைப்பாதை மலை மேல் 1972ம் வருடத்தில் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஸ்தலமும் இரண்டு மீற்றர் கொண்ட உலோகத்தாலான உருவச்சிலை களால் நிறுவப்பட்டுள்ளன. 1963ம் வருடம் பங்குனித் திங்கள் 25ம் நாளில் இன்னுமொரு சிலுவைப் பாதை வழி நலமிழந்தோர் எளிதாகச் செல்வற்காக அமைக் கப்பட்டுள்ளது. இது குளிப்பறைகளின் அருகே நதியினருகில் உள்ளது.
8 ហស 8jក៏ត្រូគ egសណ្ណ
கோடைகாலத்தில் திறந்து வைக்கப்பட்டு 50 இடங்களில் பாவ அறிக்கைகள் கேட்கப்படு கின்றன. உலகெங்கிலுமிருந்து வரும் அருட் தந்தையர் பலர் இப்பணியைச் செய்கின்றனர். உலக மொழிகள் அனைத்திலும் பாவ அறிக்கை செய்ய முடிகிறது. குளிர் காலத்தில் அடித்தளக்கோவிலில் பாவ அறிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்படுகின்றது.
9. மருத்துவர் குழு :
வெளியில் வலப்புற படிக்கட்டுகளின் அருகில் இவர்களின் அலுவலகமுள்ளது. திருத்தலத்திற்கு வரும் பயணிகளில் புதுமையாகக் குணம்பெற்றோர் தரும் தகவல்களைத் திரட்டி, நன்றாக ஆராய்ந்து உண்மையெனத் தீர்வு செய்த பின் பதிவு செய்கிறார் கள். நோயாளிகளுக்கு உதவவும், நோயின் கூறு களை ஆராயவும், மாற்று மருந்துகளை ஆய்வு செய்ய வும், தீராத நோய்களை வகைப்படுத்தவும் ஆற்றல் மிக்க மருத்துவர் பலர் இக்குழுவிலுள்ளனர். இவர்கள்
(
 

அ ஒக்டோபர் 2 பரிசோதித்து நுழைவுச் சீட்டுகளை வழங்க, அவற்றைப் பெற்றுக்கொண்டு புதுமைத் தலத்திற் கும், புதுமை நீராட்டு நீர் நிலைக்கட்கும் செல்லும் நோயாளர் சுகமடைந்தால், அன்னையின் அருளைத் தெளிவுபடுத்துகின்றனர். நோயாளர் நலம் பெற நடத்தப்பெறும் சிறப்பு வழிபாடுகள், மன்றாட்டுகள், ஆசிர்வதிக்கும் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கு பற்றுகின்றனர். ஆற்றின் அருகில் ஒரு புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
10. அன்னை பற்றிய காட்சியகம்:
திருத்தலத்தின் முக்கிய பகுதியின் வெளிப் புறத்தில் ஒரு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்றியமையாத குறிப்புகளும், புகைப்படங் களும் உள்ளன. அன்னை அளித்த திருக்காட்சி கள் எவ்விதம் இருந்தனவோ, அவ்வாறே உருவச் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புனித பேர்ண்டேற்றின் நினைவுகளும், குறிப்புகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருத்தலத்தின் சிறப்பான இடங்களையும், இன்னும் பல நிகழ்வுகளையும் புகைப்படங்களாக எடுத்து, திருத்தல வரலாற்றின் வளர்ச்சிப் படிகளை மக்களறியும் வண்ணம் செய்துள்ளனர்.
11. திருத்தலத்துடன் தொடர்புடைய தகவல்கள்: > “ón (869 T*–22, RUE DES PETITSFOSSES எனும் முகவரியிலமைந்த சிறை விடுதி யாகும். பேர்ண்டேற் தந்தையுடன் வறிய நிலையில் வாழ்ந்த இடம், அடிக்கடி விறகு பொறுக்கக் காட்டிற்குச் செல்வதுண்டு.
O 4ம் பக்கத்தில்.

Page 13
சுறுப்பிகளும் அவற்றின் பயன்
© fuឆ្នាំ ឲ្យបំបី
இச்சுரப்பி தலைப் பகுதியில் பிட்யூட்டரி சுரப்ட்
அமைந்துள்ளது. இச்சுரப்பியின் செயற்பாடுகள் பற்றி இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை. எ லுள்ள எல்லாச் சுரப்பிகளுக்கும் இதனோடு தொடர்பு என நம்பப்படுகிறது.
பீனியல் சுரப்பி சரிவர இயங்காவிட்டா பிள்ளைகளிடம் இனப்பெருக்க உறுப்புகளின் வ தடைப்படுகின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது உடலில் நீரின் அளவை கட்டுப்படுத்துவதால் சரியா செய்யாத போது உடலில் நீரைத் தேங்கவைத்து வி
இதுபற்றிய சிறப்பான ஒரு கருத்து உண்டு.
கண் என்று ஒரு பெயருள்ளது. நெற்றிக்கண் என்று அ மிகப் பழங்காலத்தில் நெற்றிப் பொட்டில் கண்ணாக இ பின்னர் அது உயிர்களின் வளர்ச்சிப்போக்கில் உ போனதாகவும் ஒரு கருத்துண்டு.
யோக நூல்களின் கூற்றுப்படி ஆக்ஞா சக் கட்டுப்பாட்டில் உள்ள இச்சுரப்பி தெய்வீக அறிவுக்கு களனாகும். தியான பலத்தினால் ஞானிகளுக்குத் அறிவும் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவும் ஏற்படு: இச்சுரப்பியை யோகப் பயிற்சிகளாலும் ஹிப்ன மெஸ்மெரிசம், யோக நித்திரை போன்ற பயிற்சிகள் நேரடியான முறையில் கட்டுப்படுத்த முடியும்.
இச்சுரப்பியைச் சீரான முறையில் இயங்க யோகாசனப் பயிற்சிகள் உள்ளன. அவை: சிரசாசன மச்சாசனம் போன்றவைகளாகும். இவற்றைக் கு தவறாமல் செய்துவர மிகுந்த பயனும் நன்மைகளும் இச்சுரப்பியை அக்யூபிரசர் பயிற்சிகள் மூலமும் சீராக இ கைப்பெரு விரல்களிலும் கால் பெருவிரல்களிலும் ! அழுத்தம் கொடுப்பதன் மூலம் இச் சுரப்பியை உற்ச
 
 

பாடுகளும்
யின் மிக அருகில் ஒருத்துவ உலகம் னினும் உடலி
இருக்கலாம்
s
A.
Ο (?
స్ట్రో
ல் சிறு গ্রোষ্ট্রে
இது க வேலை டுகின்றது. இதற்கு மூன்றாவது புழைக்கப்படும் இது இருந்ததாகவும் ள்ளடங்கிப்
கரத்தின் நிலைக் தெய்வீக கின்றது. ாட்டிசம்,
மூலமும்
வைக்கக் கூடிய ம், சர்வாங்காசனம், றிப்பிட்ட ஒழுங்கில் கிடைக்கும். மேலும் இயங்க வைக்கலாம்.
இச்சுரப்பிகளுக்குரிய புள்ளிகளில் சீரான முறையில் ாகமாக இயங்க வைக்கமுடியும்.
e e இன்னும் வரும் .

Page 14
இறைமகனின் உடலும் இரத் உடலோரும் 6 இணைகிறது
elepaab
பாவங்கள் இருக்கும் அவன் பா கொண்ட
qகிந்துணர்வு
இது இல்: பிரிந்து வ அதிகரித்
அன்னை அனைவரி இருப்பவ அனுபவிட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிழல்கள் நிஜமாகின்றன
ឆ្នាំBöööm}} ரததததோடும் நிஜங்கள் நிழலாகின்றன நாம் நிம்மதியிழக்கின்றோம்.
沅
வரை ாடு திருவிவிலியம் ாட்டமே. e s
திறப்பதற்கு இஷ்டமில்லை 参 திறந்து விட்டு லாததால தான் விழி திறந்து ாழ்வோர் அமர்ந்துள்ளோம் து விட்டனர். face book pairaoTITai)
எழும்புவதற்கு " e ඝෆ& \ أمير இஷ்ட மில்லை
ஆணுச்
அருளிய ஆயுதம் டமும் இல்லை அன்னைகள் Tகளும பதில்லை. பெற்றோரின் பலவீனத்தை பலமாய்ப் பெறுபவர்கள். யன்றால். ? இயன்றவரையும்
பெற்றுவிட்டு இல்லாத போது களின் முதல் கழற்றிவிடுபவர்கள். ர்கள்
, லி பெறாத ஆசிரியர்கள்.
> உவர்மலை கியூ

Page 15
என்றால் என்ன? நட்பு என்பது இரண்டு உள்ளங்களுக்கிடையிலான முரண்பாடற்ற உறவு, அன்பின் பிணைப்பு நட்பு எனலாம். இத்தூய நட்பு, தனிப்பட்ட நபர்களுக்கு இடையில் மட்டுமல்ல பெற்றோருக்கும் பிள்ளை களுக்குமிடையே விரிந்து செல்லலாம், சகோதரங்க ளுக்கிடையில் வளரலாம், ஏன் கணவன் மனைவிக் கிடையிலும் ஓர் அன்புப் பாலமாக அமையலாம். நட்புக்கும் காதலுக்கும் பெரிதாக ஒன்றும் இடை வெளியில்லை. நட்புக்குள் காமம் இருக்காது, காதலுக்குள் நிச்சயம் காமம் இருக்கும். இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒன்று உண்டென்றால் அது நட்பு மட்டுந்தான். இந்த நட்பின் ஆரம்பமே மனந்தான். ‘மனித மனதில் இருந்தே எல்லா நன்மை தீமைகளும் ஊற்றெ டுத்துப் பாய்வதாக” சித்தர்கள் கூறகின்றார்கள். நட்பிற்கு இலக்கியம் கூட பல்வேறு இலக்கணங்களைக் கூறுகிறது. நாலடியார்-212ல் பாடுகிறார்.
யானை அனையவர் நட்பு ஒரீ இ நாய்
geo63Outfit கேண்மை கெழி இக் கொளல் வேண்டும்
to 6066
 
 
 
 
 
 

டோபர் அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், மெய்யதா வால்குழைக்கும் நாய் எறிந்தவேல்
நட்பை இரண்டாகப் பிரிக்க முடியுமாம்,
ஒன்று யானையின் குணம் போன்ற நட்பு,
இரண்டு நாயின் குணம் போன்ற நட்பு, யானை அறிந்தறிந்தும் பழகிய பாகனையே கொல்லும் அளவிற்கு நன்றியுணர்வற்றது, ஆகையால் நம்பத்தகாதது. யானைக்கு எவ்வளவு நெருங்கிப்பழகி நன்மை செய்தாலும், ஒரு குற்றம் நேர்ந்தால் அதைப்பெரிதாகப் பாராட்டி பழிவாங்கியே தீருமாம், அதேபோன்றது சிலரது நட்பு.
நாய் நன்றி மறவாதது, சில நாட்கள் தீனியிட்டுக் காத்தவர் தன்மேல் வேலை எறிந்து புண்படுத்தியபோதிலும் அந்தவேல் உடலைத் தைத்துள்ள நிலையிலும் அவரைக் கண்டு வால் குழைக்கும் அளவிற்கு நன்றியுணர்வு மிகுந்தது. யானையின் நட்பு தீயது, நாயின் நட்பே மேலானது. நாயின் நட்பு போன்ற நட்பிற்கு உதாரணமாக சிலப்பதிகாரத்தில், கண்ணகியைக் கூறலாம். சிறிதுகாலமேனும் தனக்கு அன்பு செலுத்திய கோவலன் வேறுறொரு பெண்ணுடன் நட்புறவு கொண்டு சொத்துகளையெல்லாம் இழந்து நிர்க் கதியாக வந்தபோதும் வெறுத்தொதுக்காது, தனது விலைமதிப்புள்ள சிலம்பைக் கழற்றிக் கொடுக்கிறாள் விற்பதற்கு, ஆனால்; பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கோவலன் "கள்வன்’ எனக் குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறான். இதை அறிந்த கண்ணகி சீற்றங்கொண்டு மன்னர் முன் நீதி கேட்டது மட்டு மின்றி பூம்புகாரையே தீக்கிரையாக்கி விடுகிறாள்.
இது தீமை செய்தாலும்
நன்மை பயக்
था ।
வயலற் சந்திரசேகரம் B.com. Eip. in Ed-M.com
三喜窪三 를

Page 16
@8©রেস্ট্রেক্সCঞ্জ
盗 స్టీప్లొ-కెల్ప్స్ கும் நாயின் நட்பிற்கு ஒப்பானது. இதைத் திருவள்ளுவரும்,
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய
ஒன்று நன்று உள்ளக் கெடும்
திருக்குறள் 109 ஒருவர் கொல்வது போன்ற தீங்கின போதிலும் அவர் செய்த நன்மை ஒன்றை நினைத்து செய்த தீமையை மறந்து விடுவது, அதே வேளை L அன்பு நீங்காது வாழ்வார் நட்பிற்கு இன்றியமை நன்றியுனர்வொன்றே ஆகும்.
காதலில் நட்பை விட மிகையாகவுள்ளது கூறுகள் பற்றி இயற்கையில் அமைந்துள்ள பிை ஒன்றே. இது தவிர காதலுக்கும் நட்பிற்கும் வேறு கிடையாது. நட்பிற்காகத் தன் உயிரையே தி செய்வது போன்ற உயரிய பண்பு எதுவுமே கிடை இவ்வாறான உயிரிய பண்பு இயேசு நாத காணப்பட்டது. வள்ளுவர் கூறுவார்.
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்ே
இடுக்கண் களைவதாம் நட்பு.
788வது நண்பனுக்குத் தீமைநேரும் போது உ சென்று அத்துயரை நீக்கும்படி உதவி செய்வதே நட் ತ್ರೀ516) சரித்திரங்களில் இதிகாசங்களில் நாம் u போன்ற தீய நண்பர்களையும் இனங்காண முடி அன்றொருநாள் தீராத நோயாற் பீடிக்கப்பட்டு இயே தயை நாடி வந்தவன்தான் யூதாஸ்கரியோத் என் இயேசு அவன் நோயைக் குணமாக்கி விடுதலை கிறார். அன்றுமுதல் அவரது சீடராகி அவரது நட்ப் பாத்திரமாகியவன், முப்பது வெள்ளிக் காசுக்காக ளுக்கு இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்க அப்போது இயேசு அவனைப் பார்த்து "நண்பா, மிட்டா காட்டிக் கொடுக்கிறாய்? என்று கேட்கிறார். இ நன்மைகளைப் பெற்று விட்டு கூடயிருந்தே குழி ப நட்புகள் எத்தனை. எத்தனை எல்லாமே மண்வெ விளைந்த விளைவுதான். அந்த முப்பது வெள்ளிக் 喜 வாங்கப்பட்ட பூமி "இரத்தத்தின் நிலம்’ என்று அை படுகிறதாம். ஆனாலும், அன்று யூதாஸ்கரியோ மனச்சாட்சி அவனை உறுத்தியதால் தற்கொலை 6566_Ta. - தீய நட்பிற்கு இன்னுமோர் சிறந்த உத புரூட்டஸ். உரோமாபுரியின் பேரரசன், உலகின் ம என வர்ணிக்கப்பட்டவன் ஜூலியஸ்சீசர். உலகப்ே கிளியோபாட்ராவே சீசரின் வீரத்தால் கவரப்பட்டு அ காதலியானாள். உலகமே வியந்து நோக்கிய
(
囊 &
 
 
 
 
 
 
 
 
 

டோபர் 2011
இ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ "\ T மாமனிதனின் மரணம் உலகத்திற்கே 5rflլ լճ ఆస్రి ՁԱb LJTL–LDPTöb. 946ÖLDIbgögül. Lebl–L–6m) -
- கத்தியை பாய்ச்சியபோது சீசர் கூறிய
யில் சீசர் முப்பத்தைந்து கத்திக்குத்துக ளுடன் புடைசாய்ந்தார், மீண்டும் எழுந்தி ருக்கவில்லை, நண்பனாலேயே நாசமா ?
னார். யானை போன்ற நட்பும் இவ்வாறே அமையும். ஒரு தத்துவ ஞானியின் செபம் இது: "இறைவா! எதிரிகளிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ள எனக்குத் தெரியும், நண்பர்கள் போல நடிப்பவர்க விடமிருந்து என்னைக் காத்து மீட்ட" ருளும்” ஜூலியஸ் சீசரின் நட்பு எமக் கெல்லாம் நல்ல பாடமாக அமைகிறது. இன்னுமோர் ஞானி கூறினார்: “நாம் எதற்காக எங்கே யாரைச் சந்திக்கப் ' போகிறோம் என்பதும் எதற்காக எப்போது ?? எங்கே அவரைப் பிரியப் போகிறோம் வவாறு, : se 曹
என்பதும் வாழ்க்கையில் முன் கூட்டியே தெரியாதது உலகில் மிகப் பெரிய அதிசயம்” මධ්‍යම්
இன்னும் இலக்கியத தில் மகாபாரதப்போர் மூண்டது, மண்ணுக் ாக, சகுனியின் சூழ்ச்சியால் பஞ்ச பாண்டவர்கள் நாடிழந்து காடேகினார்கள் உறவாடிக் கெடுத்தார்கள். இங்கும் நட்பு காடரிப் பிடியானது. இராமாயணத்தில் கைகேகியின் நட்பு இராமனைக் காடாள வைத்தது, அனுமானின் நட்பு சீதையை மீட்டுத் தந்தது.
ਲੇ
23ற் பக்கற் .

Page 17
6976ంలడ
ஒன்றாகவும்,
காதலின் சின்னமாகவும்
இதனை ஷாஜகான் தனது
காதல் Dດວກລວມຕວກ மும்தாஜின்
 

நினைவாக கட்டியதாகக்
கூறப்படுகின்றது. இது
தொடர்பாக மாறுபட்ட
6. Ulp. ஆனால்
தாஜ்மகாலை உங்களுக்குத்
தெரியுமா? இந்தியாவின்
தாமரைப் பூ வடிவத்தில்
அமைக்கப்பட்டிருக்கும் பகாய்
கோயில்தான் இவ்வாறு
அழைக்கப்படுகின்றது.

Page 18
5ாலை வேலைகளைத் திருப்திகரமாக முடித்துக் கணவனுக்கு உணவளித்து, வேலைக் கனுப்பிவிட்டுக் குழந்தைகள் இருவர்க்கும் உணவளித்து முடித்த அமலி கடிகாரத்தைப் பார்த்தாள். மனி எட்டு, இன்னும் சிறிது நேரத்தில் உடுப்புகளைக் கழுவி விடவேண்டும். மழை வரு முன் சிறிது வெயிலிலிட்டு எடுத்து விடுவது நல்லது என்று எண்ணியபடி, பிள்ளைகள் இருவருடனும் சிறிது நேரத்தைக் கழித்து விட்டு அவர்களைத் தாமே விளையாட விட்டுவிட்டுத் தன் வேலையிலீடு பட்டாள். மூத்தவனுக்கு ஆறு வயது. முதலாந் தரத்தில் கற்கிறான். இன்று சனிக்கிழமை என்பதால் அவன் இன்று வீட்டில் இப்படி அவன் வீட்டில் நிற்கையில் மூன்று வயதுத் தங்கையை பார்த்துக் கொள்வதில் தாய்க்கு உதவியும், உபத்திரவமுமாயிருப்பது வழக்கம், அமலி கூடத்தின் பக்கம் காதுகளைக் கூர்மை யாக்கிக் கொண்டு வேலையிலீடுபட்டாள்.
சிரிப்பும் குதூகலமுமாக இருவரும் விளையாடுவது நிம்மதியாக இருந்தது. சிறிது நேரத்தில் அண்ணனின் சத்தம் குறைந்து விட்டதையுணர்ந்து எட்டிப்பார்த்தபோது, அவன் ஒரு சிறுவர் கதைப்புத்தகத்தை வாசிப்பதில் மூழ்கியிருப்பதும், தங்கை பொம்மையுடன் விளை யாடுவதும் தெரிந்தது. நிம்மதியுடன் மீண்டும் வேலையிலிடுபட்டாள் அன்னை சிறிது நேரத்தில் ங்கை நியோமி சிரித்துக் கொண்டு அண்ணன் வாசித்துக்கொண்டிருந்த
புத்தகத் 齐
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைத் தரும்படி அன்னனைக் கேட்க அவன் கொடுக்க மறுத்தான். மீண்டும் மீண்டும் புத்தகத் தைக் கேட்ட நியோமியின் சிரிப்பு அழுகையாக மாறியது. அழுகையைக் கேட்ட அமலி எட்டிப் பார்த்து என்ன நடந்தது என விசாரித்தாள்: அதற்கு அண்ணன் கிறிஸ்டி
"அம்மா, இவள் என்னை வாசிக்க விடுகி றாளில்லை, இதத் தரட்டாம் எண்டு தொந்தரவு செய்யிறாள்' என்றான்.
அமலி அவனிடம் மகன் நீங்க பிறகு வாசியுங்க, தங்கச்சி பாவம், அவளுக்கு ஒண்டும் விளங்காது. இப்ப குடுங்க. கொஞ்ச நேரத்தால வச்சிருவாள். பிறகு நீங்க எடுக்கலாம் சரியா எனக் கேட்க, அவனும் சரியெனத் தலையாட்டினான்.
எனவே, நியோமியைத் தூக்கிக்கொண்டு கொஞ்சம் தள்ளி இருத்திவிட்டு, "அண்ணா தருவார் வாசிச்சிட்டுக் கொடுக்கணும் சரியா? என்றாள், எல்லாம் விளங்கியது போல புத்தகம் கிடைக்கும் என்பது விளங்கித் தலையாட்டினாள் நியோமி நிம்மதியுடன் வேலையிலீடுபட்டாள் அன்னை திடீரென நியோமி அலறுவது கேட்டது. உடலி பதற ஓடிச் சென்று பார்த்தபோது, கிறிஸ் டி இருந்த இடத்திலேயே
இருந்ததும்,

Page 19
Gg(Teacఉr
புத்தகம் நியோமியின் அருகில் எறிந்த புத்தகம் விழுந்து கிடப்பது போலிருந் ததும் தெரிந்தது. அழுது கொண்டி ருந்த குழந்தையை ஓடிப்போய் அனைத்துத் தூக்கினாள் இப்போது அண்ணன் எதுவும் கூறாது நிற்க,
தங்கை அவன் புத்தகம் எறியத் தன்
கையில் விழுந்து வலித்ததைத் தன்
மழலையில்
“ஏ6 குடுக்க முடி கிறிஸ்டி "ஐே எங்களுக்கு எனக்கும் 6 உறைந்து ( அவனுக்கு பிழையானை
“(3 இப்படியா? பொருட்கை நோக்கியெறி 6Si "LIT (a) { செய்வார்கே வைத்து தி விளங்கிக்கெ வேளை இது வேதனை எ இந்தத் தவ6 வருடம் இர6 சென்று விடு Lé606 c பெருமூச்சு வி
 
 
 
 

கூறினாள். எனவே விசாரணை நடந்தது. ன், ஐயாவுக்கு எழும்பி வந்து கையில புத்தகத்தைக் யாதோ, இரு அப்பா வரட்டும்” என்றதும் பயந்த யா அம்மா எங்கட கிளாஸ் டீச்சர் இப்படித் தானம்மா க் கொப்பி, புத்தகங்களத் தாரவங்க, அந்த நேரம் பலிக்கிறதுதானே” என்றதும் அமலி அதிர்ச்சியில் விட்டாள். மகனைத் தண்டிப்பதால் என்ன பயன்? முன்மாதிரிகையாக அவனது ஆசிரியை அமைந்து தக் காட்டிக் கொடுத்து விட்டாரே!
ாம்பேறித்தனம் இருக்கலாம். ஆனால், அதற்காக திருத்தும் கொப்பிகள் மற்றும் புத்தகங்கள், வேறு ள இப்படி இருந்த இடத்திலிருந்து குழந்தைகளை வது எந்தவிதத்தில் நியாயம்? மொனிட்டரிடம் கொடுத்து பாதுமே, அவர்கள் இவ்வேலையை மகிழ்ச்சியுடன் ள, அல்லது ஒவ்வொருவரையும் அழைத்து கிட்ட ருத்திக் கொடுக்கலாமே, பிழைகளை அவர்கள் ாள்வதற்கும் இது உதவுமே. ஏன் இப்படி? நல்ல கார்த்திகை மாதம். இப்போது என் மகன் பட்ட னக்குத் தெரிந்திருப்பது மனக் கஷ்டந்தான். இனி ணைப் பரீட்சை ஆரம்பித்துவிடும். அதன்பின் அடுத்த ண்டாந்தரத்துக்குச் சென்றால், வேறு ஆசிரியையிடம் வான். இப்போது இந்த ஆசிரியையிடம் சென்று கனையே தாக்கும் எனப் பயத்துடன் நினைத்துப் டுவதைத் தவிர, எதுவும் செய்ய முடியாத ஆதங்கம்.
சவை மகத்தானது தன்னலங் கருதாததொரு சேவை. ன உருக்கி மாணாக்கர்க்கு அறிவையும் சிறந்த தயும் கற்பிக்க வேண்டிய ஆசிரியத்துவம் இன்று எங்கே ? இன்று ஆசிரியர்கள் பற்றி வரும் முறைப்பாடுகள் த்தனை? ஆசிரியர்களே உணர்ந்து திருந்தாவிட்டால், என்னவாகுமோ ධූජූfüකheඹීඝණ. . இன்றைய * இவர்களிடம் கற்றுத்தான் நாளைய தலைவர்களாக முடியும் என்றால், நாளைய உலகு. 2
põ(L)LIT- 7 ம் மொழிகளும் வளரும்
கலைகளும் பெருகும்
தானியம் பெருகிடும் பயனென்
Logo Goofs in டிந்தால்? மலர் -

Page 20
அன்று ஓர் வெள்ளி. வானம்
அழகினை இழந்த பூமி என்றவா றியற்கையெங்கும் இயல்பினைத் தொலைத்து அந்தக் குன்றினா லானபூமி கொண்டதோர் கோலந்தன்னை விண்டுநான் சொல்லமாட்டேன் வியாகுலந் தீண்டுமென்னை
வழமை போ லெழுந்து அன்றும் வந்தனை செய்து ஈசன் கழலடி புரிந்த சேவைக் களவிலை அதிசயந்தான்; தழுவிடும் மாலை வேளை தனக்கு நோ யெண்ணைய் பூச அழைத்ததும் இடிந்துபோனார் அவரது இரு குருக்கள்
படர்ந்துநோய் முற்றிவாஸோ படுக்கையில் வீழ்ந்த மாலை நெடுதுய ருற்றமற்றை இருவரும் அவரையண்டி இறுதியாய் எங்களுக்கு ஏதுரை சொல்வீரென்க அறுதியாய் ஒன்று சொன்னார் ஆங்கதன் பொருளிதுதான்
வாழ்ந்திடும் போது செய்யத் தவறிய தெதையும் மண்ணில் இவீழ்ந்திடும் போது செய்ய
துடித்தநல் 6
விழைவது ம ஆழ்மனக் க அவரவர் மன மீளுமுன் கெ முடிந்தது மு
கைகளில் ெ கனமுடன் சு 60)360)8(LIT
கசிந்திடும் ே புனிதர்வான் பெயரினை உ அணியணி பு அங்குவா ன
நேரம்நள் எளி உதித்தவோர் பூரண மனித புதுப்பிறப் ெ வானகம் நே வழியெலாந் , கண்டனர் ே காலடி எடுத்
சுடரது ஒன் சோதியாய்த் சோதியும் சே சுந்தரர் இை அன்றுதா 6ெ அமரருள் அ மன்றுவாய் பு மவுனமாய் அ
அறுபது வரு
 
 
 
 
 
 

டமையென்ற ருத்தினோசை தைத் தொட்டு firesGITITCG) ற்றுமென்றார்.
மழுகுவர்த்தி டரைவானில் லுணர்த்தி மெல்லக் வேளையெங்கள் நோக்கி யேசு ச்சரித்தார்; ாக விண்ணில் வரின் கூட்டம்
ரவு; யேசு
உச்சவேளை னாகிப் படுத்தவாஸ்லிம் ாக்கிச் செல்லும் தருக்கள் பூக்கக் DTL& UT605 துவைத்தார்
றுவானில் தோன்ற அந்தச் ாதியானார் மகள் மூடி, ாங்கள் புனிதர் மரானார் தைத்து எங்கும் ழுததனறு
டகாலம்
செண்பகக்குழல்வாய்மொழி
இரவுடன் ஒய்ந்த போது ஈழமும் அதிரலாச்சு துயரினில் அரசனன்றே தூயவ ருடலைமக்கள் வயமதில் நாட்கள் மூன்று வந்தனைக் கென்ற எளித்தார்
ஈழமெப் பாகமெங்கு மிருந்துநல் லிதயங்கொண்டோர் வாழ்ந்த அப் புனிதர்கான வந்தனர் கண்டி நோக்கி; நாளது மூன்றாமன்று ஜீ கொன்சால்வெஸ் அடிகள் தந்த : நீளுரை முடிவின் பின்னர் தெ தேயும் பாடிநின்றார் (TE DEUM)
அரசனின் ஆணை போலே ஆங்கவ ருடலையன்னார் விரும்பிய ஆலயத்துள் நிரந்தர மாகவைக்கப் பெரிதுவந் தளித்தான் பேழை : பெறுமதி உரைக்கவொண்ணா: ' அறுதியிட் டெவருஞ்சொன்னார் இ அவரொரு புனித ரென்று 墨
யோசேப்வாஸ் என்ற அந்த அரியதோர் புத்தகத்தின் மாசற்ற வரியனைத்தும் மனமாற அனுபவித்தேன்; ஈழத்தைக் கால்களினால் அளந்த ஒரே புனித னென்ற ஆழமுள்ள வரிகளுடன் அத்தியாயம் முற்றிற்று .

Page 21
@8©rে@ঠাecক্টো
ண்ணில் பிறந்த எல்லா உயிர்களிலும் பலம் இருப்பது போல பலவீனங்களும் இருக் கின்றன. மனிதனாக இருந்தாலென்ன மண் புழுவாகத்தான் இருந்தாலென்ன பலமும் பலவீன மும் சாதாரணமாக இருக்கவே செய்கின்றன. சில சமயங்களில் பலவீனமாக இருப்பதே பலமான ஓர் அம்சமாக அமைந்து விடுகிறது. உறுதியில்லா உடலோடு நெளியும் மண்புழு பலவீனமானதொரு அமைப்பு. ஆனாலும் மண்ணுக்குள் விரும்பியபடி நெளிந்து செல்லும் அது மண்ணை உண்டு அதைச் செழிப்புள்ளதாக மாற்றுகிறதல்லவா? அதனால் உருவாக்கப்படும் வலைப்பின்னல் ஊடாக காற்று நுழைந்து தாவரங்களின் வேர்களுக்குப் பலனளிப் பதில்லையா? அதன் பலவீனமானது மற்றவர்களுக் குப் பயனுள்ளதாக அமைவதால் அதை விவசாயி கள் விரும்புகின்றனர். அதுவே அதற்குப் பலன்
சில சந்தர்ப்பங்களில், சில என்ன பல சந்தர்ப்பங்களில் மனிதன் தன் பலவீனத்தைப் பலமுள்ளதாக மாற்றி அமைத்துக் கொள்வதில்லை. மாறாக, அந்தப் பலவீனத்துக்குத் தன்னை அடிமை யாக்கிக் கொண்டு அதிலே மாய்ந்து U போகின்றான். தன்னைப் படைத்தவனையும் அந்த
 
 
 
 
 

அனுபவத்தின் அடிப்படையில் விமர்சிக்கவும் செய்கின்றான்.
பலவீனங்களைப் பலமாக மாற்றிக் கொள்வதில் தான் வெற்றிகள் எம்மை வந்து சேருகின்றன. கிறிஸ்துவும் பல சந்தர்ப்பங்களில் பலவீனமாக, தனிமையாக இருந்தவர்தான். சில சந்தர்ப்பங்களில் பயப்பட்டவர்தான். ஆனாலும் தன் தனிமை யுணர்வை எண்ணி அவர் மாயவில்லை. மாறாக அந்தத் தனிமையை தன் தந்தையுடன் செபமாக உரையாடிச் செலவழிப்பதன் மூலம் பலமடை கிறதை அவர் வாழ்வில் காண்கின்றோம். இவ்வாறு பலவீனமான மனித நிலையில் இருந்துதான் யேசு அந்தப் பலவீனங்களை வென்று வெற்றி வாகை சூடினார் என்பது எமக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து சென்ற புனிதர்கள் வாழ்வு இந்த வகையில் எம்மை வழிநடத்தவும் செய்யும். அகுஸ்தினார் வாழ்ந்த வாழ்வு என்ன? இஞ்ஞாசியார் வாழ்ந்த வரலாறு என்ன? தாம் பலவீனர்களாக வாழ்ந்த வாழ்வின் அனுபவத்தை தம் பலமாக மாற்றிக்கொண்டு திருச்சபை U ဂြင်္သိန္ဓိ ႏွစ္သ_tjjf† [{ னத்ை =،سمبيري

Page 22
6gy(Teరలడ
மோதியவனை வீழ்த்தி வென்றுவிட்டான். அவனுக் குப் பெருமை பிடிபடவில்லை. அடுத்த போட்டியிலும் கொஞ்சம் சிரமப்பட்டாலும் எதிரி எதிர்பாராத நேரத்
கடைசிப் போட் ܬܽܘ அவனோடு மோத வந்தவனோ ஒரு பலசாலி மத்தியஸ்தர் அந்தப்
போட்டியை நடாத்த மனமில்லாதவராக இருந்தார். இந்தச் சிறுவன் அவனுடைய எதிராளியின் கையால் அடிவாங்கிச் செத்துவிடுவான் என்று போட்டி அமைப்பாளிடமெல்லாம் பேசிசம்மதம் பெற்று விட்டு
பூசிரியரிடம் வந்தார். ஆசிரிய ரோ போட்டி ங்கட்டும் என் மாணவன் மோதுவான்’ என்று
άλλ.Άλλαξε τα άλλά Σ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரேயடியாகச் சொல்லி விட்டார். போட்டி ஆரம்பமாகி மிகவும் சொற்ப நேரத்திலேயே சிறுவன் வென்று
விட்டான். அனைவரும் ஆச்சரியத் தோடு
建
பாராட்டலாயினர். சிறுவனுக்கும் பெரிய மலைப்பு. வீடு வரும் போது ஆசிரியரிடம் கேட்டான் "மாஸ்டர்
நான் கற்றதோ ஒரேயொரு வித்தைதான், இருந்தும்
அவர்களை எப்படி என்னால் வீழ்த்த முடிந்தது? அவர் சொன்னார் "உனக்கு நான் சொல்லித் தந்தது கராத்தே கலையின் மிக அடித்தளமான பயிற்சியை, அது ஒருவனை வீழ்த்தப் போதுமானது. அதே
சமயம் இடது கையில்லாத உனக்குப் பலவீனமாக இருந்தாலும் அதுவே உனக்கு பலமான அம்சமா
கியது. உன்னோடு மோதியவர்கள் வலது கைப்
பழக்கமுள்ளவாகள், எனவே இயல்பாக எதிரியின்
இடது கையைத்தான் பிடித்து வீழ்த்தப்பார்ப்பார்கள், உன் விஷயத்திலும் இதுதான் நடந்தது. ஆனாலும் ஒரு கையுடன் உன்னைப் பார்த்ததுமே இவ்வளவு தானா பொடிப்பயல் என்று அவர்கள் அளவுக்கு மீறிய
தன்னம்பிக்கையுடன் எண்ணியது உனக்குப்
பலமாகப் போயிற்று. அவர்களால் உன்னைப்
பிடிக்குள் கொண்டு வர முடியவில்லை. அதை வைத்தே உன் பயிற்சியின் மூலம் நீ பெற்றுக் கொண்ட பலத்தைப் பயன்படுத்தி அவர்களை
வெற்றி கொண்டாய்” என்று விளக்கினார்.
பார்த்தீர்களா? பெரிய பலவீனம் ஒன்று
பலமாகிப் போனது. மற்றவர்களுக்குப் பலமாக
இருந்த தன்னம்பிக்கை ஒரு பலவீனமாகிப் போனது.
பலவீனத்தைப் பலமாக மாற்றிக் கொண்ட சிறுவன் வெற்றிபெற்றான். இதுதான் நம் வாழ்வும். இறைவனின் துணை நம்மோடு இருக்கும் வரை நமது பலவீனங் களை நாம் வெற்றி கண்டு அவற்றைப் பலமாக மாற்றி அமைக்கவும் அதன் மூலம் மற்ற வெற்றிகளைப்
பெறவும் இறைவனைத் துணைக்கழைப்போம்.
"பலவீனன் நான் இறைவா என் பலவீனத்தைப் பலமாக மாற்றிக் கொள்ள எனக்கு ஆன்ம பலம் தாரும்”.
ஆனந்தா ஏ.ஜி. இராஜேந்திரம்

Page 23
ಕಾಫಿ - 6ीgा
ஆசிரியர் முகி டந்த மாதம் ஒன்பதாம் திகதி இன்னுமோர் (!hစ္ဆဒ္ဓိပွါးခူး என்னும் நூலை வெளி யிட்ட திரு முகில்வாணன் அவர்களது மற்றுமொரு நூலான அமைதியின் புன்னகை 17ம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மட்டக்
கிய
காலத்துக்குள் வெளியிட வேண்டியிருப்பதும் மற்றும் அவருக்குள்ள வாய்ப்பு வசதிகளும் இதற்கு காரண DITGEGOTTLÊ. Ε.Σ. Ξ -- . .Σ. ಸ್ಕೌ
நிதி Tஜெயசிங்கம்,
செல்வி Gநவரூப
TL663691656) is
ாசிரியரிடம் இருந் இயக்கத்தின் இயக்குனர் ஜனாப் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
 

எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள் தனது உரையை சுவாரஷ்யமாக ஆரம்பித்து, கடந்தகால நினை களை அனுபவங்களைக் கூறி சபையினரைக் கலகலப்பாக்கியதோடு, தற்கால தமிழ்க் கவிதை யையும் அதன் போக்கையும் - இன்று எல்லோரும் கவிதை எழுதப் புறப்பட்டு ஓசையோ சந்தமோ வார்த்தைகளை வைத்து அடுக்குவதையும் எடுத் துக்கூறி, முகில்வாணனின் கவிதையில் ஆங்காங்கே ஒருவித ஓசை இருப்பதையும் கூறினார்.
இங்கே குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்று உண்டு. முகில் வாணனின் 'அமைதியின் புன்னகை ஒரு கவிதை நூல் அன்று. கவிதைப் பாணியில் அமைந்த ஒரு வசனநூலே அது. நூலிலும் சொற்கோலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர இது கவிதை என்றோ அல்லது அவ்வாறான கருத்துப்படவோ குறிப்பிடப்படவில்லை. இன்று சொற்களை உடைத்து அடுக்கினால் அது கவிதை என்று கருதும் அளவுக்குத் தமிழ்க் கவிதை சீரழிந்து போய்விட்டது என்பது பெரும் சோகம். மேலும் அவர் பேசுகையில் இரண்டு முக்கிய விடயங்களைக் கூறினார்:
யுத்தத்தின் கொடூரத்தையும் அதனால் நடந்த அவலங்களையும் இழப்புகளையும் எடுத்துக் கூறி யுத்தத்தால் என்ன கண்டோம்? எதுவும் இல்லை என்று கூறும் முகில்வாணன் அவர்கள் யுத்தம் ஏன் தோன்றியது, யுத்தத்துக்கான காரணிகள் என்ன, அதற்கான நிர்ப்பந்தம் எழுந்த பின்ணனி என்ன என்பதையும் சொல்லியிருக்க வேண்டும் எனக் கூறினார். இந்த வேளையில் இலங்கை சுதந்திரம் அடைய முன்பே தோன்றிய தமிழ் மக்களது

Page 24
@8©rেঞ্জন্সিcক্টো தையும் நினைத்துக் கொண்டேன். அத்துடன் ஜனநாயக வழிமுறைகளுக்கும் சட்டத்துக்கும் உட்பட்ட வகையில் தமது போராட்டத்தைத் தமிழ் மக்கள் நடத்திக்கொண்டிருந்த வேளையில்தான் குடியேற்றத் திட்டங்கள் மூலமாக தமிழர் வாழ் நிலங்கள் கபஸ்ரீகரம் செய்யப்பட்டன, தமிழர்களது பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. மலையகத் தமிழர்களது குடி உரிமை பறிக்கப்பட்டது. தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழர்களது தொழில் வாய்ப்புகள், உயர்வுகள் முடக்கப்பட்டன. தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டு தமிழ் மாணவர் களது உயர்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. காலத்துக்குக் காலம் திட்டமிட்ட முறையில் இனக் கலவரங்கள் உருவாக்கப்பட்டு தமிழ் மக்கள் குத்தியும் வெட்டியும், எரித்தும் கிழித்தும் அடித்தும் ஓட ஓட விரட்டப்பட்டனர். இவையெல்லாம் தமிழர்கள் ஜனநாயக வழியில் தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த வேளையில் நடைபெற்றவைதான். சத்தி யாக்கிரகப் போராட்டம் நடத்திய போதும் இராணுவத் தினராலும், காடையர்களாலும் அடித்து விரட்டப் பட்டனர்; சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நாட்டில் ஜனநாயக, அகிம்சை வழிமுறைகளுக்குக் கிடைத்த மரியாதை இதுதான்.
என்னுடைய நினைவுகள் இப்படி ஓடிக் கொண்டிருந்த போது ஜனாப் ஹனிபா அவர்கள் இன்னுமொரு முக்கிய கருத்தையும் - எனக்குள் நீண்டகாலமாக ஓடிக்கொண்டிருந்த இந்த எண்ணத் தையும் கூறினார். சண்டை வேண்டாம் சமாதானம் வேண்டும் மன்னிக்க வேண்டும் பொறுக்க வேண்டும் என்று இங்கு மட்டும் கூறினால் போதாது, அவை பெரும்பான்மைச் சமூகத்திடமும் கூறப்பட வேண்டும். அடிப்பவனைத் தடுக்காது விட்டுவிட்டு அடிவாங்குப வனிடம் சமாதானமாய் இருப்போம் சகித்துக் கொள்வோம் என்று கூறுவது பொருத்தமற்றது. முகில் வாணனைப் போன்றோர் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
tյIյն(կն உள்ளுமுண் உை சொல்லுமுன் ສລາວແລະຄືຄໍາ ແລະ
356ñ6ffGLADL fås asi
 
 
 
 
 

“சமாதானத் தொழில் திட்டங்களைக் கொண்டி ருந்த தொண்டு நிறுவனங்களும் மற்றும் ஏனையவர் களும் அடக்கியொடுக்கப்படும் தமிழ் மக்களிடந்தான் சமாதானம், நல்லுறவு, மன்னிப்பு என்று பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக நிறை வேற்றின. இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்க ளின் படுகொலையோடு சமாதானம் அடையப்பட்ட தாகக் கூறிக் கொள்ளப்படுகிறது. ஆக, அடிபட்டு, வதைக்கப்பட்டு, அடக்கப்பட்டுக் கிடப்பவனிடம் சமாதானம் பற்றியும் சகிப்புத் தன்மை பற்றியும் பேசுவது என்பது அவனிடம் எழும் போராட்ட உணர்வுகளை மழுங்கடித்து அவனை அழித் தொழிக்கும் ஒரு முயற்சியாகும். முதலாளித்துவ சுரண்டல் நாடுகளின் ஜனநாயக நிகழ்ச்சித் திட்டம் இதுதான். சமாதான நிகழ்ச்சிகள் என்ற பேரால் பல நாடுகளில் செய்யப்பட்ட இந்தச் சதியை இலங்கையி லும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டார்கள். இது பற்றி காலஞ்சென்ற டி.சிவராம் போன்ற அரசியல் ஆய்வாளர்கள் அன்றே குறிப்பிட்டிருந்தனர்.
இறுதியில் முகில்வாணன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். ஏற்புரையில் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களின் கருத்துகளோடு தமது முரண்நிலை யைக் கூறிய அவர், அது அவர் சுதந்திரம் என குறிப்பிட்டார். இந்நூல் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சமாதான அமைப்பினால் வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவித் தார்.
எந்தவொரு நூல் வெளியீட்டு விழாவுக்கும் வராத அளவுக்கு மண்டபம் நிறைந்த கூட்டம், உறவுகள், நண்பர்கள், அபிமானிகள் என்று முகில்வாணனின் அன்புக்குரியவர்கள் அதிகம்.
சமாதனம் அமைப்பின் உறுப்பினர் திரு. ஏ. எச்.எம். ஹூசைன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதோடு நன்றியும் கூறி வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை முடித்து வைத்தார்.
)LIT - 70
ார்வாள் என்னை
குவாள் தன்னை
னெயாய் நிற்பா ளொன்னன்புக் ாதலின் தோழி.
سبحصہ If060 لمحے

Page 25
பூர்வீக முறையாகும். இதனா கூருகிறோம். சில வேளைகளி வதிக்கவும் பயன்படுவதுண்டு, ! கெஞ்சும் மன்றாட்டு வடிவமே ஆசீர் வ எல்லா ஆசீர்களினதும் ஊற்று. என6ே பெறுகிறார். ஒவ்வொரு குருவும் ஆசீர் சடங்கு நூல் குருக்கள் திருநிலைப்படுத்த6 வழங்கல் வழிபாட்டு உரிமையாக வழி வ மறைபணியாளர் மட்டுமே ஆசீர் வழங்கலாம். மும்முறை சிலுவை வரையும் வழங்கல் பொது மட்டுமே என்பதை திருத்தந்தை 7 வது பியூ, திருத்
எப்பணியை மேற்கொண்டாலும் அதன்
ளெங்களும் செல்வங்களும் இருந்தும் நிச் நாடுகளிலும் உலக மயமாக்கல் கொள்கையால் பெரு வரும் நாடுகளிலும் புது நம்பிக்கைகளை விதைத்து, அரசை அறிவிக்க வேண்டிய கடமையை வலியுறுத்தி திருத்தந்தை கழகத்தின் அங்கத்தினர்களை வத்தி அடிமைத்தளைகளிலிருந்தும் மக்களை விடுவித்து உ நோக்கில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வமுடன் கிறிஸ்தவர்க அவசியத்தையும் வலியுறுத்தினார். நற்செய்தி அறிவிப்பு சுட்டிக்காட்டிய திருத்தந்தை நாம் எந்தப் பணியை ே முடியும் என்றார்.
அத்துடன் நற்செய்தி அறிவிப்புப் பேராயத் ஆண்டகை அவர்கள் திருத்தந்தையால் நியமிக்க ஜோர்தான், பிலிப்பைன்சுக்கான திருப்பலிபீடத் தூதுவ பிரதிநிதி செயலகத்திலும் 2007ம் ஆண்டு முதல் தி
நட்பு 14ம் பக்கத் தொடர்ச்சி .
இப்போதெல்லாம் ஒருவர் மற்றவரது பொருளுக் காக, உதவிக்காக, பதவிக்காக, பணத்துக்காக நண்பர் என்னும் பேரால் சந்தர்ப்பவாதியாக மாறு வேடம் பூண்டு காரியம் சாதிக்கின்றனர். இப்போதுள்ள சுதந்திரக் காதல் ஆண் பெண்ணி டம் கையடக்கத் தொலைபேசியில் வார்த்தை ஜாலங்களால் ஆரம்பித்து, சில நாட்களிலேயே கருகி விடுகின்றது. ஆண், பெண் இரு சாராருமே சளைக்காமல் ஏமாற்றக் கற்றுக் கொண்டார்கள். திருமணமானாலும் ஓரிரு வருடங்களில் ஜீவனாம்சம் கோரி வழக்குத் தாக்கல் செய்து விடுகிறார்கள். நிலையற்ற நட்புதான் அதிகமா
கியுள்ளது. எல்லாமே எதிர்பார்க்கையின் மேல்
(
 
 
 

மக்களால் அதிகம்... ருச்சபையின் அருட் விலுக்குள் செல்லும்போது வ அடையாளமிடுதல் மிகவும் ல் எமது திருமுழுக்கை நினைவு ல் வழிபாடுகளில் சபையை ஆசிர் ஒருவர்மேல் கடவுளின் பராமரிப்பைக் ழங்கலின் பொது அர்த்தமாகும். கடவுளே
ஆசீர் வழங்குபவர் சிறப்பான இடத்தைப் வழங்கல் கடமை எனத் திருத்தந்தையின் b பகுதியில் குறித்துள்ளது.திருச்சபையின் ஆசீர் ழியாகத் தொடர்கிறது. திருச்சபையின் அதன் ஆயர்கள் இறைமக்களை ஆசீர்வதிக்கும் போது துப்பட இருந்த போதிலும் குருக்கள் ஒரு முறை தந்தை 3வது கிளமன்ற் ஆகியோர் வரைந்துள்ளனர்.
வழிநற்செய்தியை அறிவிக்க முழயும்
சயமற்ற ஒரு வருங்காலத்தை எதிர் நோக்கியிருக்கும் நம் பாலும் ஏழைகளின் எண்ணிக்கையே அதிகமாகி கிறிஸ்துவின் நீதி,அமைதி,சுதந்திரம் மற்றும் அன்பின் னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ற். மறைபனிக்கான க்கானில் சந்தித்த திருத்தந்தை அனைத்து விதமான ண்மையான சுதந்திரம் நோக்கி வழிநடத்திச் செல்லும் ள் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஈடுபட வேண்டியதன் பதிலிருந்து எவருக்கும் விலக்கு இல்லை என்பதையும் மற்கொண்டாலும் அதன் வழி நற்செய்தியை அறிவிக்க
தின் புதிய தலைவராக பேராயர் FERNANDO FILON ப்பட்டுள்ளார். இவர் இத்தாலியில் பிறந்தவர். ஈரான், ராக செயலாற்றியுள்ளார். இவர் பாப்பரசரின் இலங்கைப் நப்பீடச் செயலகத்திலும் பணியாற்றியுள்ளார். e
வரையப்பட்ட நட்புகள்தான். தியாகமோ விட்டுக் கொடுத்தலோ கிடையாது. சுயநலம் கலந்த எதிர் பார்க்கைகளின் கலவைகளான நட்பு நாளடைவில் வெறும் இளமைத் துடிப்பின் வார்த்தை ஜாலங்கள கவும் உடல் உணர்வுகளின் உந்தல் வெளிப்பாடு களாகவும் வெடித்துச்சிதறி விடுகின்றது.
உண்மையான நட்பை எங்கே தேடுவது, கண்ணகிகள் இருக்கிறார்களா? இராமர்கள் பிறப்பர்களா?
முகநக நட்பது நட்பன்றுநெஞ்சத்து அகநக நட்பதே நட்பாம்
- குறள் 736
O

Page 26
ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட முச்சங்ககால இலக்கியங்களில் ஒன்றான நற்றிணை யில் காணப்படும் 'ஒரு முலையறுத்த திருமாவுண்ணி என்னும் மறப் பெண் ஒருவர் பற்றிய செய்தி பிற்காலத்திலே வழக்கம் போல் ‘கண், மூக்கு, காது வைக்கப்பட்டு துன்பியல் சார்ந்த ஒரு கதையாக உருவெடுத்த சங்க மருவிய காலத்தில்,
 
 

- ஒக்டோபர் 2011
டி)
பழந்தமிழகத்தின் ஒரு பிரிவான சேர நாட்டின் அரச பரம்பரையைச் சேர்ந்த இளங்கோ என்னும் சமண சமயத்துறவிக்கு அதைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டுகிறது.
மலைவளமும் அலைவளமும் மண்டியுள்ள சேரநாட்டின் குன்றக்குறவர் கூலவாணிகச் சாத்தனர் ஆகியோர் ஊடாக இளங்கோ அடிகள் அக்கதையை அறிந்து கொண்ட மையைச் சிலப்பதிகாரப் பதிகம் விளக்கமாகக் கூறும்.
அரசு துறந்து குணவாயிற் கோட்டத்தில் அமர்ந்திருந்த இளங்கோ அடிகளைக் குன்றக்குறவர் சந்தித்து அக் கதையை எடுத்துக்கூறிய வேளை அங்கிருந்த தண்தமிழ்ச் சாத்தனார் என்னும் புலவர், 'யான் அறிவேன் அது பட்டது என்று மொழிந்து இன்னும் விரிவாக அதனை எடுத்து ரைக்கலானார்.
குன்றக்குறவரும், தண்தமிழ்ச்சாத்தனாரும் எடுத்துச் சொன்ன கதை இளங்கோ அடிகளின் இதயத்தைத் தொட்டுவிட்டமையாலேயே சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
"நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்'
எனப் பகர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் முதலாவது காவியத்தைப் படைக்கும் பொறுப்பினை அடிக ளார் ஏற்றுக் கொள்வதைக் காண்கின்றோம்.
அரச வாழ்வைத் துறந்து சமணசமயத் துறவியானாலும் தமிழ்ப் பற்றை மட்டும் துறக்காத இளங்கோ அடிகளின் உள்ளத்தை ஈர்த்த அப்புனை கதையின் அடித்தளமாக அமைந்திருக்கும் சங்ககாலப் பெண் திருமாவுண்ணி போல வேறு மறப்பெண்களும் அக்காலத்தில் வாழ்ந்தமையை
நரம்பு எழுந்து உலறிய நிறம்பா மெண்தோள் முளரி மருங்கின், முதியோன் சிறுவன் படை அழிந்து மாறினன் என்று பலர் கூற மண்டு அமர்க்கு உடைந்தனள் ஆயின், உண்ட எண் முலை அறுத்திடுவேன் யான் என்னும் புறநானூற்றுப் பாடலில் (278) எடுத்துக் காட்டும்.
பேர்க்களம் புகுந்து தன்மகன் புறமுதுகு காட்டினான் என்று பலர் கூறுவது உண்மையாயின் அவனுக்குப் பாலூட்டிய தனது கொங்கையை அறுத்திடுவேன் என்று வீரம் கொப்பளிக் கக் கூறும் புறநானூற்றுத் தாய் போல திருமாவுண்ணியும் ஏதோ ஒரு வஞசினம் காரணமாகவே தனது முலை ஒன்றை இழந்த னள் என்று நாம் துணியலாம்.
இத்தகு வீரம் நிறைந்த திருமாவுண்ணியின் அவதார மாகவே கண்ணகியை இளங்கோ அடிகள் தமது காவி யத்தில் காட்டியுள்ளார் என்பதனை சிலப்பதிகாரத்தில்

Page 27
(ஒத்த சொல்) என்பன உறுதி செய்யும்.
இளங்கோ அடிகளின் காலத்தில் நாடோடிக் கதையாக உலா வந்திருக்கக்கூடிய திருமா
வுண்ணியின் கதையை அடிப்ப
டையாகக் கொண்டு நெஞ்சை
அடிகள் படைக்க முற்பட்ட வேளை
குழுக்களாக (வணிகர், நாகர், குறவர், ஆயர், வேட்டுவர் ஆகியோர்) வாழ்ந்த தமிழர்களின் வரலாறு அம் மக்களின் கலை பண்பாடு, நாட்டுப் பாடல்கள், வரிக்கூத்துகள் என்பவற்றி லெல்லாம் அவர் பெற்றிருந்த ஆழமான அறிவு அவருக்கு அவ்விலக்கியப் பணியை மேற்கொள்வதற்குப் பெருந்
துணையாக இருந்தமைக்கு அக் காவியமே சான்றாக விளங்கக்
காணலாம்.
திருமாவுண் ணி எனும் கண்ணகியைக் காவிய நாயகியாகக் கொண்ட சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து கற்பவர் அக்காவியத்தின் ஊடாக இளங்கோ அடிகள்,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவது உம் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்னும் தனது மூன்று கோட் பாடுகளை வெளிப்படுத்துவதற்குத் தமக்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெரும் சிந்தனையாளரான திருவள்
தமிழ் நாடு, தமிழ் நாட்டின் பல்வேறு
ளுவரின் அரசியல், பெண்ணுக்குப் பெ நெறி ஆகியவை ெ களை நன்கு பய யைக் காவியமே !
இதிலிரு LDGOof(GLD60)G) (GLUTTGA விளங்குகின்றது. கோட்பாடு சங்க வாழ்வியலோடு ஒ அது இளங்கோ :
தமிழ் நாட்டில் நில அள்ளும் சிலப்பதிகாரமாக அதனை
பண்பாட்டின் ஆ டது என்பதையும் உணர்த்தும்.
இளங்கோ நாயகி அப்பழுக் IDLD, 5Т600ID, LJU குணங்களை அ பூண்டவள் என்னு
அடிகளே தனது 8
மாதாள் தெ
வயங்கிய ெ
காதலாள்
(மங்கல என்று எடுத்துக் பண்பாடும், அத அம்சமுமான பதிப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறம், ஊழ்வினை, ளாகக் கண்ணகி இருந்தமையை ருமை தரும் கற்பு தன் கணவன் கோவலன், மாதவியி டமிருந்து பிரிந்து தரித்திரனாக வருவதைப் பார்த்து
நலங் கேழ் முறுவல் நகை முகப்புக் காட்ழச்
ஓர் அறநூலாகவும் சிலம்பு உள; கொண்ம் எனினும் இவ்வறக்கூ (கானத்திறம் உரைத்த காதை) காலத் தமிழரின் என்று இன்மொழி பகர்வதிலிருந்து டாதது என்பதும் அறிந்து கொள்கின்றோம்.
பண்பாடும் கணவனைத் தெய்வமாக மதிக்கும் உயர்ந்த மன உணர்வும் பெற்ற தமிழ்ப் பெண் ஒருவ ரைக் கற்புக்கரசியாகப் பிரகாசிக்கச் செய்வதற்கு அடிகள் திருக்குறளையே அளின் காவிய துணையாகக் கொண்டுள்ளர் இதனை
தெய்வம் தொழாஅள்
அடிகள் காலத்தில் விய ஆரிய சமயப் திக்கத்திற்குட்பட் காவியமே தெளிவுற
கற்றவள். அச்சம், ர்ப்பு எனும் அருங் கொழுநன தொழுவாளைத
தெய்வம் தொழும் தகைமை
ணிைகலங்களாகப்
s ண்ணிதாக- தெய்வமாய் றும உணமையை தி s தி o 2 o LDGOŬG-0055 DTD 55555 விதையில், 鲁 நக கு o அணியாயக் கண்ணகி 5ாழுது இத்த 를 O
。一。 雲 விண்ணக மாந்தர்க்கு ருங்குனததுக
விருந்து
வாழ்த்துப் பாடல்) காட்டுவார்.தமிழ்ப் ண் முக்கியதொரு க்தியும் கொண்டவ
எனும் வெண்பா தெளிவுறக் காட்டும். தான்பிறந்து வளர்ந்த காவிரிப்பூம் பட்டணத்தில் ஒப்பற்ற பெண்ணாகத் திகழ்ந்த கண்ணகி, ஊழின் வழி தன்
கணவனோடு பாண்டிய நாடு ஏகுகின் றாள். அங்கே அவனுக்கு ஏதோ நடந்து விடப்போகின்றது என்பதை உணர்த்துவதுபோல் அம் மதுரை
ரவாணன்
(புறஞ்சேரி இறுத்த காதை) அவள் அது பற்றிச் சிறிதும் கவலைப்படாது அந்நகரைச் சென்ற டைகிறாள். அங் bலன் என்ப

Page 28
喜氢
வனின் வடிவில் மரணம் அவள்
கணவனைக் கொண்டு செல்கிறது.
எதிர்பாராத விதமாகத் தன்
தலையின் மீது விழுந்த இந்த இடியைத் தாங்கிக்கொள்ள முடியாத கண்ணகி, கொதித்தெழுந்து கொற்ற வைக் கோலம் பூண்டு மன்னன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்கி றாள். அவன் யானோ அரசன்? யானே கள்வன்! என்று கூறி நிலத்தில்
சாய்கிறான். அரசியும் அவனோடு |
இணைகிறாள். அத்தோடு கண்ணகி
லையைக் கையால் திருகி எடுத்து
தமிழ் வளர்த்த மதுரை நகர் மீது
றிகிறாள். அது பற்றி எரிகிறது.
கற்புக்கரசி கண்ணகியின் இந்த னிகரமான வீரச்செயல் வள்ளுவரின், பண்ணிண் பெருந்தக்க யாவுள
கற்பெனும்
திண்மை உண்டாகப் பெறின்
எனும் குறள் வழி வந்ததென நாம் கொள்ளலாம். அணி இலக்கணம் இதனை உயர்வு நவிற்சி என்று கூறும்.
மதுரை மாநகரில் தன் கற்பின் திண்மையைக் காட்டி அந்நகரை தீக்குணவாக்கிய கண்ணகி சேரநாடு செல்கின்றாள். அங்கு அவளது கற்பின் பெருமையை நிலை நிறுத்தும்
தெய்வமாக்கப்படுகின்றாள்; கோயிலும் எழுப்பப்படுகின்றது.
ாளனின் எழுத்தாற்றல், கற்பனை
வை. இதற்குக் கம்பராமாயணமே
விட்டுவிடவில்லை. தனது இட 溪
ឲ្យលំព្រឹ៨uf
இராமன், கம்பன்
மாக வலம் வரு
அற்புதமான கவி அவன் வாழ்ந்த
காரணமாகும்.
இது போன்றே
நினைவை நெஞ்
தனது தமிழ்ப்புலன
வண்ணம் இளங்கோ அடிகளால் வரலாற்றறிவு என்ப
படுத்தி கண்ணகி நாயகியாகப் பை ஒரு புலவனின் அல்லது எழுத் து
" றோம். இதற்கு ஆ ளம் சாதாரண மனிதனைக் கூடத்
தய்வமாக்கி விடும் சக்தி படைத்
பாட்டின் செல்வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக்டோபர் 2011
ஓர் இலக்கியப் படைப்பு அது எழும் காலத்தின் கண்ணாடியாக ளங்கும் என்பதற்குச் சிலப்பதிகாரம் ன்னும் செஞ்சொற்காவியமும் ஏற்ற தோர் உதாரணமாகும்.
ஒரு சிறு நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக் காவியம் மூன்றாகப் பிரிந்திருந்த தமிழ் நாட்டை ஒன்றாக்கி தமிழ்த் தேசிய உணர்விற்கு வித்திட்ட முதல் நூல் எனும் சிறப்பையும் பெற்றுக் கொள்கிறது.
கற்பனையும், வரலாறும் கலந்து கல்கியால் படைக்கப்பட்ட “சிவகாமியின் சபதம்’ என்னும் உரை நடைக் காவியத்தை ஒரு வகையில் ஒத்திருக்கும் சிலப்பதிகாரம் பிற் காலத்தில் தமிழில் எழுந்த காவியங் கள், வரலாற்று நாவல்கள் ஆகியவற்
க வழக்கு எப்படி?
ଔଷ୍ଠ୍ଯକ୍ଷ୍ମା வீட்டையு
க்கு வழிகாட்டியாக அமைந்த
|ன் சாதாரணமான காவியத்தில் தெய்வ வதற்கு கம்பனின் ந்துவம் மட்டுமன்றி
சூழ்நிலையும் ஒரு
e as (Gift சில் நிலைநிறுத்தி "
ாலத்திலும் (கி.பி.12ம் நூற்றாண்டு) கம்பர் இருபதாம் நூற்றாண்டிலும் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்தால் முன்னவர் ராமாயணத்தையும். பின்னவர்
ம, கற்பனைவளம், வற்றை நன்கு பயன் யைச் சிலப்பதிகார
டத்த இளங்கோ னொலேயே அவளைத் வதையும் காண்கின் ரியரின் சமயப் பண் க்கிற்கு உட்பட்டி த் தமிழ் நாட்டுச் க்கியமானதொரு
பொன்னியின் செல்வன்’ எனும் உரை நடைக் காவியத்தையும் படைத் திருப்பர்" - எனும் கூற்று அணி
சய்யும்.

Page 29
@8©ঞ্জেল্সcক্টো
சிறுவர்களுக்கு
மட்டும்
முடிவுத்ததிகதி 30- 10 - 2011
ഖിഖിIf
(எண்ணிக் (பொருத்தமான சொற்களைத் ெ
எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் ச உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந் SSSSS SSSS SSSSSSS S0S SS SSS SSS S SSS SSSSSSS SSSSS SSSSS SSSSSSS SSS SSS SSS S LSS0S SSSS SSSSSSS SS SS மக்களுக்குக் கட்டளையிடு; ஆ லேவியருக்குக் கொடுக்க வேண்டும். இந் நகரில் அவர்க கால்நடைகளுக்கும், மந்தைகளுக்கும், வீட்டு விலங்குகள் நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் மேய்ச்சல் நிலங்க இருக்கும். மொத்த நகர்கள் நாற்பத்தெட்டு. இஸ்
S S S S S S L S LSL L L LS SLSL LS SLSL S LSL S SL S SS SS SSL SSL S S S SL LSL S LSL L L S L L SL S LSL S SL SL SL S SS S S பொறுத்தவரை குலங்கள் குறைவாகவும் கொடுக்க வேண்டும். ஆண்டவர் மோே
SS SS SSL SSL LSL LSL SL S LSL LSL SLS SL LSL S SS S SS SS SSLSL LS S SL S L L L L L S SL S L S SL S L LSL LSL S SLS நாட்டுக்குள் நுழையும் ே கொள்ளுங்கள்; தற்செயலாய் ஓர் ஆளைக் கொல்பவன் இந்த நகர்கள் பழிவாங்குவோனிடமிருந்து உங்களுக்குப் செய்தவன் தீர்ப்புக்காக நிற்கும் முன்னே சாகவேண்டி கானானுக்குள் மூன்று நகர்களுமாக ஆறு நகர்களை அ6 கொலை செய்தவன் இரும்புக் கம்பியால் அடிக்க அவை 305 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . சாகும்படி கல்லால் அடித இறந்தாலும் இரத்தப்பழிவாங்குவோன்தான் கொலைகா அவன் அவனைக் கொல்ல வேண்டும். மேலும், பகையா பதுங்கியிருந்து எறிந்து அவன் மடிந்தால், அல்லது கையி இரத்தப்பலி வாங்குவோன் அவனை சந்திக்கும் போே திடீரென எவரையும் கொன்றுவிட்ால் இந்த நீதித்தீர்ப்பு வேண்டும். இது கொலைகாரனை . நகருக்கு அவனைக் கொண்டு வர வேண்டும். தலை ஆனால், அதன் எல்லைக்கு அப்பால் கொலைகாரன் செ பின்தான் கொலைகாரன் தன் நாட்டுக்குச் செல்லலாம். என் எவனாவது இன்னொருவனைக் கொன்றால் சாட்சிகளின் வேண்டும்; ஆனால், ஒரே சாட்சியின் கூற்றை வைத் தண்டனைக்குரியவனிடம் உயிருக்கு ஈட்டுத்தொகை எது அடைக்கல நகருக்குள் ஒடித் தஞ்சம் புகுந்து த6ை S S SSL S S SS S SS S SL S SL S 0L S L SL SL SS SL SSSLSS SS S SS SS SSL SSL SSL LS S S S S S L S L LL SLLL SS S L SLL SS SS SSL SSL S S வாங்க வேண்டாம். நீங்க சிந்தப்படும் இரத்தமே ஈடுசெய்யமுடியும். நீங்கள் வாழும் வாழ்கிறேன்; நானே இஸ்ரயேல் மக்கள் நடுவில் வாழும்
விடைகள்: கானான், விழத்தள்ளினால், ஈட்
மனிதன், கொலை, நகர்களை,
(வினாப்படிவத்திலேயே விடைகள் எழுதியனுப்பப்பட வேண்டும், பிறிதா
(
 

55GITsb-102
கை 35:1-34) தரிந்து இடைவெளிகளை நிரப்புக)
மவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது; தாங்கள் து லேவியர் குடியிருக்க நகர்களைக் கொடுக்கும் படி அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையம் ள் தங்கியிருப்பர்; இவற்றின் மேய்ச்சல் நிலங்கள் அவர்கள் ர் அனைத்துக்கும் . இருக்கும். ள் நகரின் சுவரைச் சுற்றிலும் ஆயிரம் முழம் அகலமாய் ரயேலரின் உடைமையிலிருந்து நீங்கள் கொடுக்கும் ல் பெரியவற்றிலிருந்து மிகுதியாகவும், சிறியவற்றிலிருந்து சயிடம் கூறியது; "இஸ்ரயேல் மக்களிடம் சொல்: நீங்கள் பாது, உங்களுக்காக அடைக்கல நகர்களைத் தேர்ந்து ன் எவனும் அங்கே ஓடிச் சென்று புகழிடம் பெறுவான். பாதுகாப்புத் தரும்; இதனால் . யதில்லை. யோர்தானுக்கு அப்பால் மூன்று நகர்களும், டைக்கல நகர்களாகக் கொடுக்க வேண்டும். ஒருவனைக் ர் இறந்தால் அக்கொலைகாரன் கொல்லப்பட வேண்டும். ந்து அவன் இறந்தாலும், அல்லது மர ஆயுதத்தால் அடித்து ரனைக் கொல்லவேண்டும்; அவனைச் சந்திக்கும் போது லி அவன் அவனை . அல்லது னால் அடித்து மடிந்தால் அவன் கொல்லப்பட வேண்டும். த அவனைக் கொன்றுவிடவேண்டும். பகை ஏதுமின்றி களைக் கொண்டு மக்கள் கூட்டமைப்பு தீர்ப்பு வழங்க as வேண்டும். அவன் ஒடித் தஞ்சம் புகுந்த அடைக்கல மைக் குரு இறக்குமட்டும் அவன் அதில் தங்குவான். ன்றால்,அவனைக் கொல்லலாம். தலைமைக்குரு இறந்த றும் எங்கும் உங்களுக்கு இதுவே . வாக்குமூலம் முன்னிட்டுக் கொலைகாரன் கொல்லப்பட து ஒருவனும் கொல்லப்படக் கூடாது. மேலும், மரண துவும் வாங்க வேண்டாம். அவன் கொல்லப்பட வேண்டும். bமைக்குரு இறக்குமுன் திரும்பிச் செல்பவனிடமிருந்த ள் வாழும் நாட்டை தீட்டுப்படுத்தாதீர்கள். நாட்டுக்காகச் நாட்டைக் கறைப்படுத்தக் கூடாது. நான் அதன் நடுவில்
ஆண்டவர்.
டுத்தொகை, நீதிநியமம், காப்பாற்ற, ஏற்றதாக, இஸ்ரயேல்.
க அனுப்பப்படும் விடைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது)
2)

Page 30
பரிசுப் போட்டி しつレイ?イ2イ2イ乙イ乙イ2イア
7
அறிவை வளர்ப்போம்-1 ܢܬ
(பொருத்தமான சொற்களின் கீழ் அ
1. தண்ணீர் உறைநிலையில் இருக்கும் ே
திரவ நிலையை விட அதிகம்.? (விரிவடையும், விரிவடையாது, குை
2. சராசரி மனிதனின் உடலில் இருக்கும்
(50லிற்றர், 45லிற்றர், 55லீற்றர்)
3. தமிழில் எழுதப்பட்ட முதலாவது நாவ6 (சிவகாமியின் சபதம், அகல் விளக்கு
4. இலங்கையில் தமிழ் மொழியில் முதல (உதயதாரகை, பாதுகாவலன், வீரே
5. பட்ட காலிலே படும். 2
(கெட்ட வார்த்தையே சுடும், கெட்டகு
6. "அறிந்திலன்" என்பது
(ஏவல் வினைமுற்று, படர்க்கை விை
விவிலியப
பரிசு அனுப்பவேண்டிய தபாலகம்:
LSL L L L LSL LSL LSL S LSL LSL LSL SLSL SLSL SLSL S LSL S LSL L LSL L LS S S L LSL S LSL LSL SS SLSS SLSL SS SL SL SL S S S L L S S L L SL S S S S S S S S S S S S
 

பாது,
றயும்)
நீரின் அளவு
ல் எனக் கருதப்படுவது , பிரதாப முதலியார் சரித்திரம்)
ாவது பத்திரிகை கசரி)
டியே கெடும், கெட்டதோழரை விடும்)
னமுற்று, எதிர்மறைவினைமுற்று)
S S S S S S S S S S S S S S S S S S S S S S L S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அனுப்பவேண்டிய முகவரி: b கற்போம் / அறிவை வளர்ப்போம்- 102
தொண்டன் அ. பெ. எண் - 44 மட்டக்களப்பு.

Page 31
sހަ-s
ご%
as
こ /
போட்பு2 மு
lluiD GEBLIMI
அறிவாற்றலும், தலைவர்களாக, நற்பெய தீர்ப்பிடுங்கள், ஒன்றுபோல், நீதித்த
அறிவை வளர்ப்பே
1. அக்கியோமொறிட்டா 2. 21 4. 6ggujLITG)66i 5. து
பரிசுகள் - அனுசரணை அரு
இரு பிரிவுகளுக்கும் சரியான வில்
> அ.றே.சியாமி இல.93/3 நீதி திருகோணம
ஒரு பிரிவுக்கு மட்டும் சரியான விடை
> ப.தினுசியா ஜெசிந்
91 மாமாங்கம், மட்டக்களப்பு.
சிறுவர் சிறுமியருக்கான வர்ண
> முதலாம் பரிசு - 400/= > இரண்டா செல்வி.விஷ்மிதா ச. மேரி ( மே/பா. S.N. தெய்வேதிரன், திருச்செ 1024, பாலையூற்று, கல்லடி, திருகோணமலை. மட்டக்க
போட்டியில் பங்குகொண்ட அனை
 

S.
rib - DD (Labbi
பரும், உங்கள் சதோதரனுக்குமிடையே, தீர்ப்பு, வழக்கை, அனைத்தையும்
Tio — TOO bfln(Lé866
5 3. சுப்பிரமணிய பாரதியார் ார விலகு 6. முற்றெச்சம்
ர்தந்தை. அன்ரனி குரூஸ் CRS
டை எழுதி 300/= பரிசு பெறுபவர்;
ଠେଁ திமன்ற வீதி
5ᏈᎠᎧVᏇ
களை எழுதி 200/= பரிசு பெறுவோர்
> அ. ஷிரோமி
இனிக்கோ,
புதுமுகத்துவார வீதி, கல்லடி மட்டக்களப்பு.
ம் தீட்டும் போட்டி 52 முடிவுகள்
ம் பரிசு - 300/= > 3ம் பரிசு -200/= ஹெலன் பிரீத்திக்கா அஸ்வினி அபராஜிதன்
ந்துர் வீதி, 59/1 கதிர்காமர் வீதி,
அமிர்தகழி, ளப்பு. மட்டக்களப்பு.
வருக்கும் எமது நன்றி. (ஆ - ர்)
---مستسخ"

Page 32
.. இலங்கை வானொ கத்தோலிக்கநி
நவமபர் s
கத்தோலிக்க நற்சிந்தனை - க
நாள்: 05, 06, 07, 08, 09, 10, 11 19, 20, 21, 22, 23, 24, 25 ),
சிறுவர் உலகம் - மாலை 7.00
நாள்:- 01, 15, 29 Sf
கதை, செபம், பாடல்கள் இ6
s புதிய உலகம் - மாலை 7.00 ம SOf
நாள்:- 13, 27 -
இறைவார்த்தை வழிபாடு, ே l, சிந்தனை உரை, குறுநாடக
), о
), நிகழ்ச்சித் சிதாகுப்பு : ól
மAsர்வேந்தனர்
 

/) ஐந்துவரும்.
லி தேசிய சேவையில் கழ்ச்சிகள் - தமிழ்
- 2011 R
R 505) 5.55 LD50 of
மணி
ன்னும் .
வரைத்தேடி, ஈழத்தைஅளந்த புனிதன், ம், பாடல்கள் இன்னும் .
A) O у தாடர்பு: சமூகத் தொடர்பு நிலையம் N
அ.சிப, லிண் - டிடி, A. @് tD'_ööáwửư. Z
ܐܠܦܠ ക് لحركة
്. ആ = ക മ്മ മ= മമ്മ, ബ M ණම කුණි කුණන කුණි. තුණි. කුංකු කුණක කුණක /