கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில

Page 1


Page 2

கே.எஸ்.சிவகுமாரன்
ஏடுகளில் திறனாய்வு/ மதிப்பீடுகள் சில
01.10.2011 இல் கே.எஸ்.சிவகுமாரனின் பவளவிழாவையொட்டி
இந்நூல் வெளிக்கொணரப்படுகிறது
மீரா பதிப்பகம் (94ஆவது வெளியீடு) கொழும்பு 06.

Page 3
நூலின் பெயர்
ஆசிரியர்
பதிப்புரிமை
முதற்பதிப்பு
நூல் கிடைக்குமிடம் :
பதிப்பு
அச்சிட்டோர்
ISBN
கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு /
மதிப்பீடுகள் சில
கே.எஸ்.சிவகுமாரன்
ஆசிரியருக்கே
: 01-10-2011
21, முருகன் பிளேஸ்,
கொழும்பு-06.
T.P.: 01-94-11-2587617
Mobile: 0770392234
Email: Sivakumaranks(a)gmail.com
மீரா பதிப்பகம்
(94ஆவது வெளியீடு) 291/6 - 5/3 A, எட்வேர்ட் அவெனியூ
கொழும்பு - 06. தொ.பே. 2582539/ 0775342128
தரஞ்சி பிரின்ட்ஸ்,
நாவின்ன, மஹரகம.
: ரூபா 200/-
: 978-955-53607-0-8
2

01.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
10.
11.
12.
13.
14.
உள்ளடக்கம் நூலாசிரியர் கூற்று. O5 கே.எஸ்.சிவகுமாரன் தொடர்பான ஓர் அவதானிப்பு
(கிழக்குமண் இணையத்தளம்) . O6 சோமகாந்தனின் பத்தி எழுத்து (நிகழ்வுகளும் நினைவுகளும் நூலில் இடம்பெற்ற கட்டுரை). 11
பத்தி எழுத்தும் 'சண் அங்கிளும்' (அணிந்துரை). 15 இனிய உறவுகள் எழுச்சியுறட்டும்
(சோமகாந்தம் நூலில் இடம்பெற்ற கட்டுரை). 17 சிற்பியும் நானும் (சிற்பி பவளவிழா ஞானம் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை). 21 தெளிவத்தை ஜோசப்பும் நானும் (ஞானம் இதழில் வெளிவந்த கட்டுரை). 24 செங்கை ஆழியானின் எழுத்தும் எண்ணமும் (வீரகேசரி கட்டுரை). 27
கிடுகுவேலி - ஒரு நோக்கு (வீரகேசரி கட்டுரை) . 3O ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் (தேனருவிக் கட்டுரை). 32 மு.கனகராசனின் புடம் ('பகவானின் பாதங்களில்
என்ற நூலில் இடம்பெற்ற மதிப்பீடு). 35 [b1TG36 usb56óî6oT GJIT þ6 / Ceylonese Writing - 1 (தேனருவி). 37
சிற்பி சிவசரவணபவன் (நினைவுகள் மடிவதில்லை' நூலுக்கான அறிமுகம்). 41 திருகோணமலையிலிருந்து ஒரு பெண்பாற் புலவர் (குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்' நூலில் இடம்பெற்ற பாராட்டுரை). 42
3

Page 4
15.
16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
இவன் ஒரு. (இரவுநேரப் பூபாளம் நூலுக்கான அணிந்துரை). 47 தமிழ்க் கலைகள் யாழ்ப்பாணத்தில் மலர்ச்சி பெறுகின்றன (சுபமங்களா / தினகரன் வாரமஞ்சரி கட்டுரை).. . . . . . . . . . . . . . 49 கொழும்பு நாடகமேடை மீண்டும் சலசலப்பை ஏற்படுத்துகிறது (உதயம் ஏட்டில் வெளியான
மதிப்பீடு). 52 தகவற் பெட்டி (மல்லிகை ஏட்டில் வெளிவந்த ်ဖါWD-(၆) .......................................................................................................................................................................................... 58 கொழும்புத் தமிழ்ப் பெண்களின் ஓவியக் கண்காட்சி (மல்லிகை கட்டுரை). 61 Information Super Highway Gubgigs' L-g (வீரகேசரி கட்டுரை). 63 யாழ்ப்பாணச் சமுதாயத்தின் முன்னைய தோற்றம் (தினக்குரல் கட்டுரை). 65
'தென்றலின் வேகம்' - மற்றுமோர் இஸ்லாமியப் பெண்மணியின் எழுத்தாற்றல் (மல்லிகை கட்டுரை).71 தர்மசேன பத்திராஜாவின் புதிய சிங்களத் திரைப்படம்
(ஞானம் கட்டுரை). 76 திரையும் திறனாய்வும் (ஞானம் கட்டுரை). 82 கே.விஜயனின் பலே பலே வைத்தியர்' (மல்லிகை கட்டுரை). 87 கல்வியியல் : தமிழாக்க நூல் பயன் தருவது (ஞானம் கட்டுரை). 90 1970களில் கொழும்பு மேடை நாடகங்கள் (அரங்கம் கட்டுரை). 95
4

நூலாசிரியர் கூற்று
இத்தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் வழக்கம் போலவே ஏற் கனவே வெளிவந்தவைதான். ஆயி னும் இக்கட்டுரைகளை எல்லோருமே படித்திருப்பார்கள் என்று சொல்வதற் கில்லை. புதிய வாசகர்கள் படித்திருப் பது அபூர்வமாகத் தான் இருக்கும்.
இவற்றை மீண்டும் எனது நூல் களில் சேர்த்துக் கொள்வதற்கான நோக்கம், அவை நூல்கள் வடிவில் பதிவாகி இருக்க வேண்டும் என்பதற் காகவே. ஏன் அப்படியென்றால், பிற் கால ஆய்வாளர்கள் என் மறைவுக்குப் பின் எனது கட்டுரைகளை சிரமமின்றி வாசித்துக் கணிப்பு செய்வதற்காகவே. தவிரவும் 'கண்டு கொள்ளாமை', 'புறக் கணிப்பு’ போன்றவற்றினால் என்னை மறந்து போகாமல் இருப்பதற்காகவே இவற்றை நூல் வடிவில் தருகிறேன்.
கலை இலக்கிய வரலாற்றுச் செய்திகள் நிரம்பவும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- அன்பன்
கே.எஸ்.சிவகுமாரன்
அக்டோபர் 01, 2011
5

Page 5
கே.எஸ்.சிவகுமாரன் தொடர்பான ஒர் அவதானிப்பு
1Jத்தி எழுத்துக்களின் தொகுப்பே சொன்னாற்போல 01’ என்ற நாலாகும். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற மானுடக் கரிசனையோடு இலக்கிய ஊழியம் செய்யும் கே.எஸ்.சிவகுமாரன் இந் நூலாசிரியர் ஆவார். தமிழ், ஆங்கில வாசகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருக்கும் இவர் தான் வாசித்த சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை ஆகியவற்றையும் பார்த்து இரசித்த நாடகம், சினமா என்பனவற்றையும் ஊன்றி ஆராய்ந்து அச்சு இலத்திரன் ஊடகங்களால் தனக்கென ஒதுக்கப் பட்ட பத்திகளிலும், தனிக் கட்டுரைகளிலும் பரம்பல் செய்யும் பக்குவர். சொல்லப் போனால் அரை நூற்றாண்டுக்கும் கூடுதலாகத் தொடரும் இவ ரது இந்த இலக்கிய ஊழியம், கலை இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம் ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலையும் ஏற்படுத்தரம், எழுத்தாளர்கள் தமது எழுத்துருக்களை முதல் கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரைச் சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே.
சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர் பார்வைக்கு வருவதுமுண்டு. ‘புத்தகப் பூச்சி" எனச் சுட்டத்தக்க கே.எஸ்.சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது தன் சொந்தத் தேடலாகவோ இந்நால்களைப் பெற்று ஆக்கங் களை படித்துத் தன் கண்ணோட்டத்தைப் பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும் படைப்புக்கும் மூன்றாவது வாசகர் | f606) அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ்.சிவகுமாரன் தன் கண் ணோட்டத்தை அடக்கிய தனது எழுத்துருக்களை தொகுப்பு நாலாக்கல். இது நான்காம் நிலை.
இவ்வகையில் நூலொன்று கே.எஸ்.சிவகுமாரனின் பார்வைக்கு எட்

டும்போது இரு மேலதிக ஆதாயங்கள். படைப்பாளிக்கும் படைப்புக்கும் கவறும் இதே ஆதாயத்தை ‘சொன்னாற் போல 01’ என்ற நூலில் இடம்பெ றம் படைப்புகளும் கலை,இலக்கியவாதிகளும் பெறுவர். இந்நாலில் திரட் டப்பட்டிருக்கும் எழுத்துருக்கள் தினக்குரல் வாரவெளியீட்டில் வெளியான "சொன்னாற் போல’ என்ற பத்தியில் எழுதப்பட்டவை.
நாலாசிரியரின் விளக்கவுரையில் பத்தி எழுத்துகளின் வரைவி லக்கணத்தை “இந்த எழுத்து முறை விரிவான ஆய்வாகவோ, திறனாய் வாகவோ, விரிவான கட்டுரையாகவோ அமையமாட்டாது. ஆயினும் திறனாய்வு சார்ந்த மதிப்பீடுகளாகவும் தகவல் களஞ்சியமாகவும் விளங் கக்கூடியவை’ எனச் சுட்டப்பட்டிருக்கிறது. இக்களஞ்சியத்துள் காணப் படும் மின்னலாகத் தெறிக்கும் கருத்துக்கள் வாசகர்களுக்கு அரிதான சில தகவல்கள் அவைகளின் பெறுமானம் கருதி கீழே தரப்பட்டிருக்கின்றன. தமிழாக்கம் பெற்ற பிரான்சிய இலக்கியங்களின் சிறு பட்டியலொன்று தரப்பட்டிருக்கின்றது. பிரான்சிய மொழியாக்கம் பெற்ற தமிழ் நூல்களை யும் அறிதல் செய்ய முடிகின்றது. யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த புகலிட எழுத்தாளர் க.கலாமோகன் பற்றிக் கூறுகையில், “பிரான்ஸ் நாட்டு தமிழ் இலக்கியத்துக்கு ஆரம் சேர்ப்பது மாத்திரமின்றி பிரெஞ்சு மொழியிலும் கவிதைகளை எழுதிவருவது பாராட்டுக்குரியதே’ (பக் 28) என ஈழ நாட்டவரை சிலாகித்திருக்கிறார் நூலாசிரியர்.
புனைகதைப் படைப்பில் தமிழகத்தாரையே வியக்க வைக்கும் ஈழத்து எழுத்தாளர் சாந்தன், ஆங்கில எழுத்தாளராகவும் சாதனை புரிந் திருப்பது தமிழ் வாசகர் சிலருக்கு புதினமாக இருக்கும். ஆங்கிலத்தில் சாந்தன் வெளியிட்டிருக்கும் சிறுகதை தொகுப்பினை "IN THEIR OWN WORLD’ என்ற நூலுக்கு இலங்கை கலை கழகத்தின் பரிசு கிடைத்துள்ளது. இப்பரிசைச் சாந்தனோடு ஜின் அரசநாயகம் என்ற ஆங் கிலப் பெண் எழுத்தாளர் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கிலமொழி தேர்ச்சியுள்ள ஏனைய படைப்பாற்றலாளரும் சாந்தன் வழியைப் பின்பற்றுவது தமிழினத்துக்குச் செய்யும் பேருதவியாக இருக் கும். எமது பிரச்சினைகள், வேற்றினங்களையும் சென்றடைய உதவு

Page 6
வதோடு நோபல் பரிசு, புக்கேர்ஸ் பரிசு போன்றவைகளின் கவனத்தை யும் ஈழத்து இலக்கியம் சுகிக்கும். “சாதி வெறியாட்டம் இன்னும் சில இடங்களில் இருந்து வருவதை மறைக்க முடியாது” என இன்றைய ஈழத் தமிழ்ச் சமூகத்தை நோக்கும் நூலாசிரியர் சாதி வெறி இருப்பதை வெளிப்படுத்துகிறார் (பக் 68), சாதி ஒழிப்பின் முன்னோடியான இந்திய நாட்டவரான அம்பேத்கர் குறித்து சில வரிகளைப் பதித்து இன்றைய மக் கள் இலக்கிய அபிமானிகளுக்கு யார் இந்த அம்பேத்கர் என்ற அறிதலைப் புகட்டுகிறார்.
எழுத்தாளர் கனகசபை தேவகடாட்சம் தனது புத்தகங்களின் விற் பனை மூலமாகக் கிடைக்கும் நிதியைத் தர்ம நிறுவனங்களுக்கு அன்பளிப் புச் செய்வதாகக் குருதி மண்’ என்ற அவரது சிறுகதைத் தொகுதி குறித்த எழுத்துருவில் அறியமுடிகின்றது. முப்பத்து நான்கு ஆண்டுகளோடு தனது பூவுலகப் பயணத்தை முடித்துக் கொண்ட தீவக எழுத்தாளர் அங் கையன் கைலாச நாதன் குறித்துக் கருத்துரைக்கையில் அருமையான எழுத்தாளர், வயதுக்கு மீறிய அனுபவமும், ஆற்றலும் கொண்டு விளங் கியவர். பத்திரிகை, வானொலி ஆகிய இரு ஊடகங்களிலும், புதுப்புனை வாக அமையும் விதத்தில் பங்களிப்புகள் செய்தவர் (பக் 51) என்கிறார் நூலாசிரியர். பேராசிரியர் தில்லைநாதன் நாடக வல்லமை பேசப்படாத விடயம் தகுதி" என்ற நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருப்பது இந்நர லின் மூலமாக தெரியவருகின்றது.
இப் பத்தி எழுத்துக்கு ஊட்டமாகச் சில தமிழ் அபிமானிகளின் கடித மூலமான எழுத்தக்களும் அமைந்திருக்கின்றன. இதற்கு ஆதா ரம் தெஹிவளையைச் சேர்ந்த சா.ஆ.தருமரத்தினம் என்பவரது தகவல் குறிப்பு. அதன் காத்திரத்தன்மையை உள்வாங்கி நூலாசிரியர் இந்நா லிலும் அக்குறிப்பை சேர்த்துள்ளார். தமிழுலகால் நன்கு அறியப்பட்ட ராவ்பகதரர் சி.வை.தாமோதரம் பிள்ளை, சின்னப்பா கிங்ஸ்பெரி, வண. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி ஆகியோர் சம்பந்தப்படும் தகவல் குறிப்புகள் சா.ஆ.த.வின் குறிப்பில் படிக்கக் கிடைக்கின்றன. இவர்கள் மூவரும் தொப்புள்கொடி உறவினர் தாமோதரம், சின்னப்பா கிங்ஸ்பெரியின் மூத்த

சகோதரர். வண. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி தாமோதரரின் மைந்தர். சி.வை. தமோதரம்பிள்ளை நால் தேடலர் என்பதைத் தமிழுலகுக்கு சொல்லத் தேவையில்லை, தெரியும். தொல்காப்பியம் பொருளதிகாரம் இல்லவே இல்லையென தமிழுலகம் கைவிரித்த வேளை தன் ஓய்வற்ற தேடலால் அதை கண்டடைந்து நாலாக்கித் தந்தவர் தாமோதரர். சின்னப்பா கிங்ஸ் பெரி ஈழத்தின் முதல் நாவலைப் படைத்தவரென ஆய்வறிஞர்கள் செப்பு கின்றனர். கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய முன்னோடி தான் வண. பிரான்சிஸ் பெரி அடிகளார். இப்படி யாக இந்நூலுக்குள் நழைந்து இன்னும் பல பெறுமதியான தகவல்க ளைப் பெறலாம்.
இந்நூல் மீரா பதிப்பகத்தின் 74ஆவது வெளியீடு. வடிவமைப்பில் அதீத கவனமெடுத்துப் பொருத்தமான அட்டைப்படத்தோடு வெளியிட் டிருக்கின்றனர். ஈழத்தின் மற்றுமொரு முன்னணித் திறனாய்வாளரான ஆ.இரத்தினவேலோன் தனது பதிப்புரையில் 'கே.எஸ்.சிவகுமாரனின் திறனாய்வுக்குட்படாத புனைகதை இலக்கியங்களே ஈழத்தில் இல்லை என்னுமளவிற்கு அறுபதுகள் முதல் இன்றுவரை வெளிவந்த நரல்களில் கணிசமானவற்றைத் தன் கவனத்துக்குட்படுத்தியிருக்கும் ஈழத்தின் ஒரே யொரு திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனாகத்தான் இருக்க முடியும் என்பதில் இருகருத்து இருக்க முடியாது’ என இந்நூலாசிரியரின் நால் திற னாய்வு இருப்பின் முதிர்ச்சியைக் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
ஆகவே, இந்நூலைத் தகவல் களஞ்சியமென நிறுவும் நாலாசி ரியரின் கூற்றை அங்கீகரிக்கும் அதேவேளை படைப்புக்கள், நூல்கள் குறித்து அவர் கருத்து பரிவர்த்தனை செய்யும் போது அவற்றுள்ளிலிருக் கும் இடைக்கிடை மின்னலாகத் தெறிக்கும் கருத்துக்கள் வாசகர்களுக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டத்தக்கவை என்ற உண்மையைத் தெரியப்ப டுத்தியே ஆகவேண்டியிருக்கிறது.
இது இந்நூலாசிரியரின் சொன்னாற்போல-1’ எனும் நூல் தொடர்பான ஒரு அவதானிப்பு.
- கிழக்குமண் இணையத்தளம்
9

Page 7
கே.
Ol
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
10.
II.
12.
13.
14.
15.
6.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
எஸ்.சிவகுமாரன் தமிழில் எழுதிய நூல்கள்
. திறனாய்வு சார்ந்த கட்டுரைகள் (2011)
ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில (2011) காலக் கண்ணாடியில் கலை இலக்கியப் பார்வை (2010) ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை (2009) பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள் (2009) ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் பாகம் - 02(2008) ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் பாகம் - 01 (2008) ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை (2008) சொன்னாற் போல - 03(2008) சொன்னாற் போல - 01 (2008) பிறமொழிச் சிறுகதைகள் சில (2007) சினமா சினமா ஒர் உலக வலம் (2006) இந்திய-இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம் (2005) சொன்னாற் போல - 02(2004) திறனாய்வு என்றால் என்ன? (2004) அசையும் படிமங்கள் (2001) மரபுவழித் திறனாய்வும் ஈழத்து இலக்கியமும் (2000) ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (1999) மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் (1999) அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் இருமை-சிறுகதைத் தொகுதி (1998) ஈழத்து இலக்கியம் - ஓர் அறிமுகம் (1998) ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் (1996) திறனாய்வுப் பார்வைகள் (1996) கைலாசபதியும் நானும் (1990) கலை இலக்கியத் திறனாய்வு (1989) சிவகுமாரன் கதைகள் (1982)
10

சோமகாந்தனின் பத்தி எழுத்து
தினகரன் வாரமஞ்சரியிலே ‘காந்தனின் கண்ணோட் டம்’ தொடராக வாராவாரம் வெளிவந்து கொண்டிருந்தபோது, ஒரு பத்தி எழுத்தாளன் என்ற முறையிலே, நான் இந்த எழுத்து களை வெகு ஆவலுடனும், ஆர்வத்துடனும் வாசித்து வந்தேன். விளைவு: ஆனந்தம், தகவற்கள விரிவாக்கம், செயற்பாட்டுப்
67.
ஆனந்தம் ஏனெனில், தமிழ்மொழியின் சொல்வளம் பத்தி எழுத்தாளரின் கைவண்ணத்தில் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளகாங்கிதம் நான் அடைந்தமை.
தெரியாத சில விபரங்களைக்கோர்த்துஅவர்தரும்பாங்கு எனது அறிவை விருத்தி செய்ய உதவியமை சொல்லப்படல் வேண்டும்.
காந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத் தன்மை கொண் டவையாதலால், அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செய லூக்கம் பெறுகிறேன்.
'யார் இந்த காந்தன்? விஷயமறிந்தவர்களுக்குத் தெரியும்; யார் இவர் என்று. வேறு யாருமல்லர், ஆக்க எழுத்துத் துறையி லும், ஆய்வுத்துறையிலும் முன்னோடியாக விளங்கும் என்.சோம காந்தன் அவர்களே இந்தக் காந்தன்.
சோமகாந்தன் எழுத்து, சமயம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி, இளைப்பாறிய ஒர் உயர்தர அரசாங்க உத் தியோகத்தர். சுதந்திரன், சமூகத் தொண்டன், தினகரன் போன்ற பத்திரிகைகளில் ஈழத்து இலக்கியம் தொடர்பான சில ஆரம்ப, ஆய் வுகளை, அதாவது தரவுகளைத் தந்துதவியவர் என்பதை இன்றைய இளம் வாசகர்கள் பலர்அறிந்திராதிருக்கலாம்; ஆயினும்SpadeWork செய்தவர்களை-கொத்தி, பண்படுத்திய முன்னோடி வேலைகளை
11

Page 8
qybabefeito SporTilia / Koőůbabér áforo மேற்கொண்டவர்களை - "புதிய ஆய்வாளர்கள் புறக்கணித்தால், அவர்கள்ஆய்வு பூரணமானவை எனக் கூறமுடியாது அல்லவா?
சோமகாந்தன் ("ஈழத்துச் சோமு ) ஓர் அருமையான ஆக்க இலக்கியப் படைப்பாளி என்பதும் நாம் நினைவில் நிறுத்த வேண்டியதாகும்.
'காந்தனின் கண்ணோட்டம் ஒரு தரமான இலக்கியப் பத்தி என்பதைச் சிலர் ஏற்றுக்கொள்ளாமற் போகலாம். இந்தச் சிலர் தமது காழ்ப்புணர்ச்சி, கரவு நெஞ்சம் காரணமாக, மேலோட்ட மாக நுனிப்புல் மேய்ந்துவிட்டு, 'நூல் ஆய்வு” செய்ய முற்படுவ தும் முரண் நிகழ்வே.
பத்தி எழுத்துக்களில் திறனாய்வுப் பார்வை இருந்தேதீரும்; ஆயினும் அவை முழுமையான திறனாய்வாகா, முழுமையான மதிப்புரையாகா, முழுமையான ஆய்வாகா. கலை / இலக்கியப் பத்தி சாதாரண வாசகனுக்காக எழுதப்படுவதனால், ஒரு சில வரையறைகளைக் கொண்டிருப்பது ஆகும்.
இந்த இடத்திலே எனது 'திறனாய்வுப் பார்வைகள்’ என்ற நூலிலே இடம்பெற்றுள்ள 'திறனாய்வுத் தெளிவு" என்ற பகு தியை வாசகர் சேர்த்துப் படித்தால் பொருத்தமானதாய் இருக்கும் என நினைக்கிறேன். அண்மைக்காலங்களில் தரமான பத்திகளை எழுதி வருபவர்களுள், காந்தனையும், பல புனைபெயர்களில் எழுதிவரும் தெளிவத்தை ஜோசப், கே. விஜயன் ஆகியோரையும் குறிப்பிட வேண்டும். இவர்களுடைய பத்திகளில் வெறுமனே தகவல் மாத்திரமன்றி, தேர்வு முறையான திறனாய்வுப் பார்வைக ளும் காணப்படுகின்றன.
இவர்களுக்கு முற்பட்ட காலத்தில் எழுதிய சில்லையூர் செ ல்வராசன், கே.எஸ்.சிவகுமாரன் போன்ற பத்தி எழுத்தாளர்களும் அலை, திசை போன்ற ஏடுகளில் எழுதிய ஆக்க இலக்கியகாரரும் பத்தி எழுத்துக்கள் மூலம் பல பங்களிப்புகளைச் செய்து வந்துள்ள னர் என்பதை 'புதிய ஆய்வாளர் சிலர் நிராகரிக்கலாம். ஆயினும்
2

(8α σταυθαιοδοτΠεάτ
இவர்களும் பல புனைபெயர்களுக்குள் மறைந்துகொண்டு தரமான பத்திகளை எழுதிவருவதை நாம் அவதானிக்கத் தவறவில்லை.
பத்தி எழுத்துக்களை நிரல் எழுத்து" எனக் கவிஞரும், திற னாய்வாளருமான சண்முகம் சிவலிங்கன் கூறுவார். பெயர் எப்ப டியாயிருந்தாலும் இந்த Column Writing ஆய்வாளர்கள், திறனாய் வாளர்கள், மதிப்புரையாளர்கள் ஆகியோர், தத்தம் வழிகளில் அரிய பங்களிப்புகளைச் செய்து வரும் அதேவேளையில், இந்தப் பத்தி எழுத்தாளர்கள்தான் தமது அறிமுகங்கள் மூலம் சாதாரண வாசகனை உயர்நிலை வாசகனாக வரத் தயார்படுத்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
1950களிலிருந்து 'பத்தி எழுத்து நமது நாட்டில் தமிழ் மொழியிலே எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதைப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆய்வு செய்ய பேராசிரியர்கள் வழிநடத்த வேண்டும். அதேவேளையில், சில மாணவர்களின் 'ஆய்வு நூல் களை’ படித்துப் பார்த்தபொழுது, அவர்கள் வெளிப்படையான உண்மை விபரங்களைக் கருத்திற்கு எடுத்துக் கொள்ளாததைய றிந்து மனசு வேதனைப்படுகிறது. இத்தகையவர்கள் வாசிப்பு, தேடல் முயற்சி யாதுமின்றி "ஆய்வு’களை (ஆய்வு, திறனாய்வு, மதிப்புரை போன்றவை எவ்வளவு பெரிய விஷயம்) எழுதிப் பிரசு ரித்து விடுகின்றனர். இதற்குக் காரணம், 'பத்தி எழுத்தாளர்களை ஆழமில்லாதவர்கள்’ என்று இவர்கள் கணிப்பதனாற் போலும். சுருங்கக்கூறி விளங்க வைக்கும் முயற்சிகளிற்கூட "ஆழம் இருக் கும் என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளார் போலும்!
காந்தன் தமது பத்திகளில் சமயம், இலக்கியம், சமூகம், வர லாறு, ஆளுமை, கலை நிகழ்ச்சிகள், மனித உறவுகள் போன்ற பல பொருள்கள் பற்றி எழுதியிருக்கிறார். இவை ஆவண முக்கியத்து வம் வாய்ந்தவை என நான் நினைக்கிறேன்.
சில தலைப்புகளைப் பார்ப்போம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். வெவ்வேறு பொருள்கள் பற்றியவை.
13

Page 9
qagbabesseb Depormfuesa / Ko45'qbeber Foo
சக்தி எழுந்தாள்
ஆணாதிக்க அடக்குமுறையும், பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு நிர்ப்பந்தங்களும், கல்விப் பொருளாதாரப் பின்னடைவும், பாமரத்தனமும் பெரும்பாலான இடங்களில் நில விக் கொண்டிருப்பதை மறுக்க முடியாது.
பெரியார் எச். டபிள்யு. தம்பையா, கன்னியாய் வெந்நீ ருற்று, பஞ்சாங்கக் குழப்பங்கள், சங்கர சுவன கேசரீநந்தன, இலக் கியமும் இனஐக்கியமும், சம்பிரதாயங்கள் இல்லாத சந்திப்புகள், மறுமலர்ச்சி வரதர், உள்ளத்தைக் கிள்ளிய ஒரு 'ஓவியச் சந்தை", இதோ ஒரு வெளிச்சம், இனிப்பும் புளிப்பும், 'விபவி யின் பணி கள், கலை இலக்கியம் என்பது கிள்ளுக்கீரையல்ல, அர்த்தமுள்ள ஆய்வரங்கு, சரத் சந்திராவுக்கு அஞ்சலி.
இவ்வாறு தலைப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பத்தி எழுத்துக்கள், செய்தியறிக்கை, சிறப்புச் சித்திராம் சம், ஆசிரியத் தலையங்கம், வருணனை, விவரணை போன்ற பல பண்புகளை உள்ளடக்கி அழகாக எழுதப்பட்டவை.
'காந்தனின் ரசிகர்களில் நானும் ஒருவன்.
எனக்குப் பிடித்த சில கலை இலக்கியப் பத்தி எழுத்தாளர் கள்: க.கைலாசபதி, சில்லையூர் செல்வராசன், கே.எஸ்.சிவகு மாரன், அ. யேசுராசா, எஸ்.திருச்செல்வம், என்.சோமகாந்தன் (ஈழத்துச் சோமு), துரைமனோகரன், ஆ.இரத்தினவேலோன், செ.யோகநாதன், மானாமக்கீன், கே.விஜயன், 'சண் அங்கிள் சண் முகநாதன், கோகிலா மகேந்திரன், தெளிவத்தை ஜோசப் மற்றும் புனைபெயர்களில் எழுதுபவர்கள் எனக் குறிப்பிடலாம்.
- நிகழ்வுகளும் நினைவுகளும் நூலில் (ஜூன் 30, 2001) இடம்பெற்ற கட்டுரை.
14

பத்தி எழுத்தும் 'சண் அங்கிளும்"
'சண் அங்கிள் என்ற புனைபெயரில் மிகவும் ஜனரஞ்சக மாகவும், நகைச்சுவையாகவும் கடந்த சில வருடங்களாக யாழ்ப் பாணத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் 'உதயன்’ நாளிதழில் "நினைக்க. சிரிக்க. சிந்திக்க.." என்ற தலைப்பில் எழுதிவந்த பொ.சண்முகநாதன் தனது சொந்தப் பெயரிலும் நீண்டநாட்களாக எழுதி வரும் முக்கிய ஈழத்து எழுத்தாளர்களுள் ஒருவர்.
ஈழத்து எழுத்துலகில் சண்முகநாதன் என்ற பெயரில் ஐந் தாறு எழுத்தாளர்கள் இருந்து வந்துள்ளனர். அவர்களுள் சிலர் நம்மிடையே இப்பொழுது இல்லை. ஆயினும் நகைச்சுவையாக எழுதக்கூடிய ஒரு சில ஈழத்து எழுத்தாளர்களுள் பொ.சண்முகநா தன் முத்திரை பதித்த ஒருவர்.
இவர் தொடர்ந்து சில கட்டுரைகளைத் தொடராக எழுதி வந்ததனால், இவை "பத்தி எழுத்து’ (Column Writing) என்ற எழுத்து வகையைச் சார்ந்தது எனலாம். இத்தகைய எழுத்தை 'கனதியான எழுத்து எனப் பலர் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக ஏளனமாகவே பத்தி எழுத்தாளர்களை அணுகும் முறை விபரம றியா வாசகர்கள் சிலரிடையே இருந்து வருகிறது.
அடிக்குறிப்புகள், மேற்கோள்கள், பகுப்பாய்வு போன்றவை உள்ளடங்கிய எழுத்தை மாத்திரம் 'கனதியான எழுத்து என்று கொள்ளும் மனோபாவம் நம்மில் பலரிடையே இருந்து வருகிறது.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பும், எழுத்தும் இலகுவாக எவருக்கும் சித்திக்கிறது எனச் சொல்ல முடியாது. பலருக்கு இலகுவாகவும், எளிமையாகவும் எடுத்துக் கொண்ட பொருளைப் பரிவர்த்தனை செய்யும் ஆற்றல் எளிதில் வரப் பெறு வதில்லை.
15

Page 10
aroebereb asperila / koastisloedir do
இந்தப் பின்னணியிலே ஆழமான செய்திகளை, இலகு நடையில் வாசகருடன் பேசுவது போன்று, நகைச்சுவையையும் கலந்து ஆசிரியர் பொ.சண்முகநாதன் எழுதக்கூடியவர் என்பது இத்தொகுப்பு மூலம் நிரூபணமாகிறது.
இப்புத்தகத்தில் இடம்பெறும் கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்த பின்னர், ஆசிரியர் எழுதியுள்ள முறை சலிப்புத் தட்டாது அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்வுற்றேன்.
பல முக்கிய செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய கிளைச் செய்திகளையும் சுருக்கமாகத் தந்த பின்னர், சிந்திக்கத் தக்க கருத்துகளையும் பலவந்தமாகத் திணிக்காமல், எடுத்துக் கொண்ட பொருளுடன் ஒட்டியதாக அவர் எழுதும் முறை ஆசி ரியருடைய எழுத்து முதிர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் காட்டி நிற்கின்றது.
பாண்டியன் (நாவலர்) நெடுஞ்செழியன், மார்லன் பிராண் டோவை எனக்கும் தெரியும், பக்குவப்பட்ட எழுத்தாளர்கள், தமிழ்வாணன் / எஸ்.டி.சிவநாயகம், கண்ணதாசனுக்குப் பிடித்த அந்த மூன்று பெண்கள் ஆகிய பத்திகள், என்னைப் பொறுத்தமட் டில் சுவாரஸ்யமான தகவல்களைத் தந்தன. ஏனையவையும் படிக் கச்சுவையாக அமைந்துள்ளன.
ஆசிரியர் தொடர்ந்தும் இலகு வாசிப்புக்கான கனதி கலந்த செய்திகளையும், குறிப்புகளையும் எமக்குத் தந்து மகிழ்விப்பா ராக. பாராட்டுக்கள்!
- நினைக்க. சிரிக்க. சிந்திக்க." நூலுக்கான அணிந்துரை. ஜூன் 28, 2005

இனிய உறவுகள் எழுச்சியுறட்டும்
ஈழத்துச் சோமு என்ற புனை பெயரில் 45 வருடங்களுக் கும் மேலாக கலை, இலக்கியத் துறைகளிலும், சமய அலுவல்க ளிலும் ஈடுபட்டுவரும் திரு. நா.சோமகாந்தன் அவர்கள், இந்த நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதை இத்து றைகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் அறிவர். புதிய பரம்பரை யினருக்கு இவர் ஆற்றிய பணிகள் பற்றிய முழு விபரங்களும் தெரியாமலிருக்கலாம். ஆயினும், இலக்கிய வரலாற்றை எழுதுப வர்களும், வரலாற்றில் இத்தகைய பணிசெய்தவர்களின் ஆற்றல்க ளைப் பதிவு செய்பவர்களும், ஈழத்துச் சோமுவையோ, அவர்தம் துணைவியாரையோ புறக்கணித்துத் தமது பதிவுகளை வரைய முடியாது. சோமகாந்தன் அவர்களின் துணைவியார், 'புதுமைப் பிரியை’ என்ற புனைபெயரில் எழுதிவரும் பத்மா சோமகாந்தன் அவர்களாவர். இருவருமே தத்தம் அளவில், தனித்தும், இணைந் தும் பற்பல நற்பணிகளைச் செய்து முடித்துள்ளனர்.
1950களின் பிற்பகுதியில் சுதந்திரன் வார இதழ், இந்நாட்டுத் தமிழ் பேசும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. மூத்த பத்திராதிபராக முத்திரை பொறித்த எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் அப்பத்திரிகையின் ஆசிரி யராக இருந்து புதுமையான விஷயங்களைக் கொணர்ந்து அறிமு கப்படுத்தினார். அவற்றுள் ஒன்று, ஈழத்து எழுத்தாளர்களின் அறி முகம். இந்த அறிமுகங்களை நேர்மையாக எழுதிவந்தவர் அன்பர் சோமகாந்தன் அவர்கள். அப்பொழுது முதல் இவருடைய கட் டுரை, கதை, விமர்சனம் ஆகியவற்றைப் படித்து வருகிறேன்.
தமிழிலே ஈழத்து எழுத்தாளர்கள், அவர்களுடைய படைப் புக்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்
டது.
17

Page 11
gebaseffebASapeormsia/ogüSoeselt 6oop
சோ.சிவபாதசுந்தரம், கனகசெந்திநாதன் போன்றோர் யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளில் முன்னர் இவ்வாறான அறிமுகங்களை எழுதியிருந்த போதிலும், சோமகாந்தன் அவர்கள் 'சமூகத் தொண்டன்’ என்ற பருவகால ஏட்டில் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையைப் படித்த பின்னர் சோமகாந்தன் அவர்களின் விமர்சனப் பாங்கே எனக்கு அக்காலத்தில் மிகவும் பிடித்தமாய் அமைந்தது.
விமர்சகராக மட்டுமன்றி, ஆக்க இலக்கியப் படைப்பாளி யாகவும் சோமகாந்தன் தமது ஆற்றலை வெளிப்படுத்தி வருகி றார். இவருடைய சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் அனைத் துமே ஆய்வாளர்களின் ஆதரவைப் பெற்று உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய எழுத்து நடை, வாழ்க்கை நோக்கு, ஆக்க இலக்கியங்களைச் செம்மையாக உருவாக்கும் ஆற்றல், யதார்த்த ரீதியாகக் கதைப் பொருளைத் தேர்வு செய்யும் முறைமை அனைத்துமே பாராட்டுக்குரியவையாய் அமைகின்றன. இவரு டைய ஆக்கங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இங்கு பகுப் பாய்வு செய்ய முடியாதாகையால், பொதுப்படையாகவே, இவர் எழுத்துக்கள் பற்றி இங்கு குறிப்பிட முடிகிறது.
இவ்வாறே இவருடைய் கட்டுரைகளும், கட்டுரைத் தொகுப் புகளும், இனிய எளிமையான, கவித்துவ நடையைக் கொண் டுள்ளன. 'காந்தனின் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலே இவர் தினகரன் வார மஞ்சரியில் எழுதிவரும் பத்திகள் மிகமிகத் தரமு யர்ந்ததாகவும், பல நிகழ்ச்சிகளின் அவதானிப்புக்களை உள்ளடக் கியதாகவும் அமைவதுடன், எழுத்து நடையினாலும், வாசகர் ஆவ லைத்தூண்டுகின்றன.
ஈழத்துச் சோமு அல்லது சோமகாந்தன் ஓர் நல்ல செய்தியாளர் என்பதையும் அண்மையில் நிரூபித்திருக்கிறார். புதுடில்லியிலிருந்து தினகரன் வார மஞ்சரிக்கு இவர் எழுதிய செய்திக் குறிப்புகளையும் அவை எழுதப்பட்ட முறையையும் படித்து வியந்தேன். இவருடைய இந்த ஆற்றலும் மேலும் விருத்தி செய்யப்பட வேண்டியதொன்று.
18

Фаьенволомокоппет
கலை, இலக்கியம் தவிர்ந்து பக்தி சம்பந்தப்பட்ட பொருட் கள் அனைத்திலும் சோமகாந்தன் பல முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். முற்போக்குச் சிந்தனைகளையும், பக்திப் பரவசத்தை யும் இணைக்கும் நுட்பத்தை இயல்பாக சோமகாந்தனும் இவரு டைய துணைவியாரும் பெற்றிருக்கின்றனர். இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சிலும், திணைக்களத்திலும் பொறுப்புள்ள பதவிகள் வகித்தவர் சோமகாந்தன். அங்கு பொதுப்பணி மேலோங்கியதனால், தனித்துவம் துலங்க வாய்ப்பில்லாமற் போய்விட்டது போலும்.
சோமகாந்தன் அவர்களின் துணைவியாரான பத்மா அவர் கள் 'புதுமைப் பிரியை'யாகவே அன்றும் இன்றும் இருந்து வரு கிறார். இந்த நாட்டிலுள்ள முன்னணிப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவராய் விளங்கும் இவர், திருமணஞ் செய்வதற்கு முன்னரே, சிறுகதைகளை எழுதி ஆய்வாளரின் கவனத்தைப் பெற்றவர். பிரா மணக் குலத்தைச் சேர்ந்த பத்மாவும், அதே குலத்தைச் சேர்ந்த சோமுவும் இணைந்து, முற்போக்கு வழியிற் செல்வது அவதா னிக்கத்தக்கது.
பத்மா சோமகாந்தன் அவர்களுடைய சிறுகதைத் தொகுப் புக்கள் அவருடைய ஆக்கத் திறனின் வெளிப்பாடுகள். இவற் றையும் இங்கு தனித்தனியாகப் பகுப்பாய்வது சாத்தியமில்லை யாதலால் பொதுப்படையாகவே இவைபற்றி இங்கு குறிப்பிட முடிந்தது. கதைகள் மட்டுமன்றி, இதழாசிரியராகவும், பேச்சாள ராகவும், பெண்ணியத்தில் ஈடுபாடு கொண்ட ஆய்வாளராகவும் விளங்கி வரும் பத்மா அவர்கள் தம் துணைவர் போலவே நவீன, முற்போக்கான சிந்தனையாளர்.
இருவருமே, இந்நாட்டுத் திறமைமிகு எழுத்தாளர்கள், ஒலிபரப்பாளர்கள், பேச்சாளர்கள், ஒளிபரப்பாளர்கள், சமயத் தொண்டர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த அமைப்பாளர் கள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகள் காத்திர
19

Page 12
qbaeneb 5 pornia / Ko.Subbdir Koo மான, பயனுள்ள விழாக்களாக அமைந்தமைக்கு முக்கிய காரணம் சோமகாந்தனின் ஈடுபாடுடைய ஒழுங்கமைப்பான ஏற்பாடுக ளும், இவருடைய துணைவியாரின் பங்களிப்புமேயாகும்.
இந்த விரும்பத்தக்க தம்பதியரின் தொண்டுகள் மேலும் தொடரவும், மனுக்குலம் உய்ய வழிவகுக்கவும், இனிய இல் வாழ்க்கை ஷோபனமாய் அமைந்து மேலும் கனிவுறவும் எம் போன்றவர்களின் வாழ்த்துக்கள் என்றுமே இருந்து வரும். உயர்க அவர் தம் வாழ்வும், பணியும். மணிவிழா நாயகர் சோமகாந்த னும், அவர்தம் துணைவியார் பத்மாவும் நீடூழி வாழ்க!
- சோமகாந்தம்நூலில் (1996) இடம்பெற்ற கட்டுரை
20

“சிற்பியும் நானும்
தமிழ் இலக்கிய உலகில் 'சிற்பி’ என்ற புனைபெயரில் இருவர் தெரியவந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி பாலசுப்பிரமணியம். எனக்குப் பிடித்த கவி ஞர் அவர். மற்றையவர் நமது 'கலைச்செல்வி ஆசிரியர் சி.சர வணபவன். இவர் பிற்காலத்தில் சிவசரவணபவன் எனத் தமது பெயரை மாற்றிக் கொண்டார். பிறப்பால் இவர் ஓர் அந்தணர். இந்தியாவில் தமது முதலாவது பட்டப்படிப்பையும், பின்னர் இலங்கையில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்று கல்வி உலகில் பெரும் பதவிகளை வகித்தவர்.
'சிற்பி சிவசரவணபவனுடன் நேரில் உறவாடி மகிழ்ந்த நேரங்கள் வெகு சொற்பமே. நான்கே நான்கு சந்தர்ப்பங்களில் சந் தித்தபோது ஒரு சில நிமிடங்களே உறவாட முடிந்தது. ஆயினும், என் மனதில் மறையாத சித்திரங்களாக அவை பதிந்துள்ளன.
இற்றைக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன் அவரை முதற் தடவையாக செங்குந்தா இந்துக்கல்லூரியில் சந்தித்தேன். அப் பொழுது நான் கொழும்பிலே வசித்து வந்த ஒர் இளைஞன். 'கலைச் செல்வி என்ற அவருடைய இலக்கிய இதழைப் படித்து மகிழ்ந்தவர்களுள் நானும் ஒருவன். தமிழிலும் எழுதவேண்டும் என்பதற்காக அவரை நேரிற் சந்தித்து நான் எழுதிய கட்டுரைக ளையும், இலங்கை வானொலியில் நான் "நாவல் இலக்கியத்தின் கூறுகள்’ தொடர்பாக நிகழ்த்திய பேச்சுப் பிரதிகளையும் காண் பித்தேன். அவர் படித்துவிட்டுத் தமது ஏட்டில் பிரசுரிக்க இணங் கினார். 1960களில் அக்கட்டுரைகள் 'கலைச் செல்வி'யில் வெளி யாகின. தகுந்த குறிப்புகளையும் எனது முயற்சிகள் தொடர்பாக எழுதி என்னை ஊக்குவித்தார்.
21

Page 13
ebaseMseb SporTulea / Ko5Ůobbdir foxo
அதன் பின்னர் 1964 மட்டில், மட்டக்களப்பிலே எஸ்.பொ. ஏற்படுத்திய தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட பொழுது, அங்கு ட்ரெயினில் பயணம் செய்த வேளையிலே, கனக செந்திநாதன், சிற்பி, சு.வே. போன் றவர்களைச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. பின்னர் அம் மகாநாட்டில், மு.தளையசிங்கத்தையும், இரா.சிவலிங் கனையும் சந்தித்துப் பேசி மகிழ்ந்தோம்.
மூன்றாவது தடவையாக, யாழ். பல்கலைக்கழகத்திலே ஒரு கலந்துரையாடலுக்காகச் சென்ற பொழுது (கைலாசபதி அவர்க ளின் அழைப்பின் பேரில்) "சிற்பி அவர்களையும் சந்தித்து குசலம் விசாரித்துக் கொண்டோம்.
சிற்பி அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு வந்த பொழுது, மல்லிகை ஜீவா அவர்கள் ஏற்பாடு செய்த சந்திப் பின் போது நானும் சமுகமளித்து சிற்பி அவர்களின் பங்களிப்பு பற்றிச் சுருக்கமாக உரையாற்றினேன்.
பின்னர் "ஞானம்’ ஞானசேகரனின் ஏற்பாட்டில் சில மாதங்களுக்கு முன் நடந்த கொழும்புக் கூட்டமொன்றில் அவ ரைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது.
'சிற்பி அவர்களின் இலக்கியப் பணிகள் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை. அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க, எனது மதிப்பீட்டை எழுதி அனுப்பிவைத்தேன். அது சிலவேளை களில் அவருடைய புதிய சிறுகதைத் தொகுப்பில் வெளியாகக் கூடும்.
சிற்பி தொகுத்த 'பரிசுக் கதைகள்’, பற்றி 1963 செப்டம்
பரில் வெளியாகிய ‘தேனருவி’ ஏட்டில் மதிப்பீடு செய்திருந் தேன்.
22

Caledoaromer விரைவில் வெளிவரவிருக்கும் 'ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்’ என்ற எனது இருபாக நூல்களில், "சிற்பி’ அவர் களின் ஆக்கங்கள் பற்றிய மதிப்பீடும் உள்ளடங்கும்.
'சிற்பி அவர்கள் சிரித்த முகத்துடையவர். கருணைக் கண் கள். அகன்ற நெற்றி, இனிய வார்த்தை. பாராட்டும் பண்பு. நெறி தவறா ஒழுக்கம் கொண்ட ஓர் அறிஞர். அவரை வாழ்த்தி மகிழ்வ தில் நான் எனது காணிக்கையைச் செலுத்துகிறேன்.
- ஞானம்: 'சிற்பி சிவசரவணபவன் பவளவிழாச் சிறப்பிதழ் ஜூன் 2008
23

Page 14
தெளிவத்தை ஜோசப்பும் நானும்
மலைநாட்டில் பிறந்து தேசிய ரீதியில் ஆய்வாளர்களா கத் தொழிற்படுபவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள்: தெளி வத்தை ஜோசப், சாரல் நாடன், லெனின் மதிவாணம். அது போன்று கொழும்பில் பிறந்து மலையகம் தொடர்பாகவும், தேசிய ரீதியிலும் ஆய்வு மேற்கொள்பவர் அந்தனிஜீவா. இவர்க ளுள்ளே உலகத் தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்றவர் தெளிவத்தை ஜோசப். அண்மைக் காலங்களில் அவரு டைய பங்களிப்புகளைக் கருத்திற் கொண்டு உள்நாட்டிலும், பிற நாடுகளிலும் அவர் பரவலான முறையில் கெளரவிக்கப்பட்டமை அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது.
தெளிவத்தை ஜோசப் அச்செழுத்து, மின்னியக்கப் பங்க ளிப்பு போன்ற ஊடகங்கள் மூலம் இலக்கியச் செய்திகளை தந்து கொண்டிருக்கிறார். ஆக்க இலக்கியப் படைப்பாளியாகவும், ஆய் வாளராகவும், திறனாய்வாளராகவும் கடந்த கால் நூற்றாண்டுக் கும் மேல் அவர் பங்களித்து வரும் திரட்டுகள் மிகமிகப் பயன்தரு பவை. பல புனைபெயர்களில் எழுதிவந்த ஜோசப், நமது நாட்டு எழுத்தாளர்கள் பற்றியும், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பற்றியும் தமது பத்தி எழுத்துக்கள் வாயிலாக, கூடியவரை பக்கச் சார்பின்றி எழுதி வந்திருக்கிறார்.
சென்ற நூற்றாண்டின் இறுதி அரை ஆண்டுகளில் குரும்ப சிட்டியைச் சேர்ந்த மறைந்த கனக செந்திநாதன் எத்தகைய தகவற் களஞ்சியமாக விளங்கினாரோ, அவ்வாறே இன்றைய திகதிகளில் தமிழ் இலக்கியச் செய்திகள் தொடர்பான அறிவுக் களஞ்சியமாக தெளிவத்தை ஜோசப் விளங்கிவருகிறார்.
24

G3aodolagomer
அவரிடம் எந்தவிதமான பிரதேச சார்பும் கிடையாது என் பது குறிப்பிடத்தக்கது. அவர் நிறைய வாசிப்பவர். நிறைய எழு துபவர். அவர் நம்மிடையே பேரும் புகழுடனும் இருப்பது நாம் செய்த பாக்கியமே.
தெளிவத்தை ஜோசப்பின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய பங்களிப்புகளையும் நிறைய அறிந்து கொள்ள அவ ருடைய சுயசரிதைகளும் செவ்விகளும் உதவுவன. தெளிவத்தை ஜோசப்பை தற்செயலாக பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்திலிருந்து வெளியே வந்த பொழுது சந் தித்தேன். பல நண்பர்கள் கூட்டமாக காலி வீதி வழியாக நடந்து வந்த பொழுது எங்களுடன் மற்றொரு வாலிபரும் வந்து கொண்டி ருந்தார். அவர் யார் என்று நான் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அவருக்கும் என்னைத் தெரியாது. ஆனால் நண்பர்களின் உரையா டல் மூலம் அவர்தான் தெளிவத்தை ஜோசப் என்று அறிந்து புன் னகை செய்தேன். அவர் சங்கோஜி போல் காணப்பட்டார். நண்பர் களும் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர்.
அதன் பின்பு நாங்கள் இருவரும் இடைவேளைக்கு இடை வேளையில் நேரிலும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொள் வோம்.
தெளிவத்தை ஜோசப் ஒரு பண்பாளர், ஒழுக்கமுடையவர். கிறிஸ்தவர் ஆதலால் சில பண்புகளை நெறிப்படுத்திக் கடைப்பி டித்து வருபவர். தெளிவத்தை ஜோசப் ஆங்கிலத்திலும் பரிச்சய மானவர். எமது எழுத்துக்களைப் பாராட்டி ஊக்குவிப்பவர்.
தினகரன் வாரமஞ்சரியில் அவர் ஈழத்துச் சிறுகதை எழுத் தாளர்கள் சிலரின் கதைகளைத் தேர்ந்தெடுத்து, அக்கதைகளை மறுபிரசுரம் செய்து அக்கதைகளை எழுதியவர்களை அறிமுகப் படுத்துவதுமான ஒரு பத்தியை பல ஆண்டுகளுக்கு முன் தந்து கொண்டிருந்தார்.
25

Page 15
qababesfeb 25perowTilia / Ko3ůbaser &foo
எனக்குத் திகைப்பையும், சந்தோஷத்தையும் தரும் விதத் தில் நான் எழுதிய சிறுகதை ஒன்றையும் அப்பகுதியில் சேர்த்தி ருந்தார். இதனை நான் எதிர்பார்க்காததால் எனக்குள் ஒர் புளகாங் கிதம் ஏற்பட்டது.
சென்னையில் "இனி' மகாநாடு நடைபெற்ற பொழுது, ஏற்பாட்டாளர்கள் எனக்குத் தரப்பட்ட அறைக்கு எதிரே சாரல் நாடனுக்கும், தெளிவத்தை ஜோசப்புக்கும் ஓர் அறையைத் தங்கு வதற்குக் கொடுத்தார்கள்.
அந்தனி ஜீவாவும், சாரல் நாடனும், தெளிவத்தையும் கூடிக் கும்மாளம் அடித்த வேளையிலே நானும் அவர்களுடன் சேர்ந்து எமது வெளித் தோற்றங்களைக் களைந்து இயல்பாகவே பழகி னோம். அப்பொழுது தான் தெளிவத்தை ஜோசப்பின் மற்றொரு தோற்றத்தினை உணர்ந்தேன்.
சில அறிஞர்கள் சிலவேளைகளில் அறியாப் பிள்ளைகள் போல் இருப்பார்கள். நமது தெளிவத்தையும் அவ்வாறே இருந் தார். உதாரணமாக Lesbianism என்று அழைக்கப்படும் பெண்கள் தமக்கிடையே கொள்ளும் உடலுறவு பற்றி அவர் அறிந்திருக்க வில்லை என்பதை எமது உரையாடல்களிடையே தெரியவந்தது.
தெளிவத்தை ஜோசப் ஓர் இனிய நண்பர். அவருடன் தயக்க
மின்றிப் பழகமுடிந்தது. நல்ல மனிதர் என்றும் கூறக்கூடிய விதத்
தில் அவருடைய மனிதாபிமானம் துருத்திக் கொண்டு வெளிப்ப டும்.
- ஞானம் : கலை இலக்கிய சஞ்சிகை
Gun 2010
26

செங்கை ஆழியானின் எழுத்தும் எண்ணமும்
நமது நாட்டு நாவலாசிரியர்களில், எண்ணிக்கையில் அதிக நாவல்களைத் தந்திருப்பவர் செங்கை ஆழியான் என்ற புனை பெயரில் எழுதும் க.குணராசா. இவர் எழுதி வெளியாகிய நாவல் களின் எண்ணிக்கை 14 இன்னும் 4 நாவல்கள் வெளிவரவிருக்கின் றன. ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவரவிருக்கின்றது. இவர் 150க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். நாடகங்களும் விமர்சனங்களும் எழுதியுள்ளார். 40க்கும் மேற்பட்ட புவியியல் நூல்களை எழுதியிருக்கும், தமிழ் மொழி மூலம் முதன் முதல் புவியியல் கற்ற சிறப்புப் பட்டதாரி. இலங்கை நிர்வாக சேவை யில் இடம்பெற்ற எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். 42 வயது டைய செங்கை ஆழியான்காரியாதிகாரியாகப் பணியாற்றிய அனு பவங்களைக் கொண்டு புனைகதை படைக்கிறார். இவர் எழுதிய 'வாடைக்காற்று' என்ற நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது. பல்கலைக்கழக எழுத்தாள மாணவர்களின் சிறுகதைத் தொகுப் புக்களை மாணவ நிலையில் வெளியிட்டுள்ளார்.
சுமார்20வருடங்களாக எழுதிவரும் செங்கை ஆழியான்1961 வாக்கில் எழுத்துலகில் பிரவேசித்தார். அவரே கூறுவதுபோன்று அவருடைய எழுத்துலக வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதிரா இளமை, அனுபவக் குறைவு, கற்பனாலயப் போக்கு போன்றவை இவருடைய ஆரம்பகால எழுத்துக்களில் காணப்பட்டன. இந்த வரிசையில் 'அலைகடல் தான் ஒயாதோ?’, நந்திக்கடல், சித்திரா பெளர்ணமி போன்ற நாவல்களையும், ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல், முற்றத்து ஒற் றைப்பனை போன்ற நகைச்சுவை நாவல்களையும் எழுதினார்.
27

Page 16
q(befob ASDsomla / IoSilbser soo
செங்கை ஆழியானின் கருத்துப்படி சமுதாய ஊழல்களைச் சுட்டிக்காட்டும் நோக்கம் 1964 ஆண்டளவில் ஏற்படத் தொடங் கியது. அதாவது சமுதாயப் பிரச்சினைகளை வெறுமனே சித்தி ரிப்பது, பரிகாரம் சுட்டிக்காட்டப்படுவதில்லை என்ற அடிப்ப டையில் அவர் 'பிரளயம்', 'வாடைக்காற்று', 'இரவின் முடிவு' போன்ற நாவல்களை எழுதினார். சமூக மாற்றத்தைக் கல்வியறி வுப் பரம்பல் மூலம் கொண்டு வரலாம் என்று செங்கை ஆழியான் இக்கால கட்டத்தில் நம்பினார்.
1977 இல் வெளியான "காட்டாறு என்ற பரிசு நாவலுடன் இவர் தனது மூன்றாவது இலக்கிய வாழ்க்கைக் காலகட்டத்தில் இறங்குவதாகக் கூறிக்கொள்கிறார். சமூகக் குறைபாடுகளுக்குத் தீர்வு காண ஆசிரியர் என்ன விடைகளைத் தருகிறார்? வாழ்க்கை யைப் பொருள் கொண்டு அவர் விளங்கிய விதம் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகக் காட்டாறு விளங்குகின்றது என்று செங்கை ஆழியான் கருதுகிறார்.
நகர்ப்புறத்தவர் கிராமங்களுக்குச் செல்லும்போது பெறும் வித்தியாசமான அனுபவத்தைச் சிறைபிடிப்பது தமது நோக்கம் என்கிறார். கிராமிய சமூகத்தின் பலம், பலவீனம் இரண்டையும் சித்திரித்துக் காட்டல் ஆசிரியரின் நோக்கமாகையால் இலக்கியக் களம் புதிதாய் அமைகிறது. வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டி அதற்கான உணர்வைத் தனது எழுத்துக்கள் மூலம் பரி வர்த்தனை செய்ய முற்படுகிறார்.
வாசகர்களுக்கு நம்பிக்கையுணர்வை ஏற்படுத்துவதும், வேறுபட்ட புதிய பகைப்புலத்தை ஒவ்வொரு முறையும் வாச கர்களுக்குக் காட்டுவதும் தமது எழுத்தின் சிறப்பம்சங்கள் என்று இந்த எழுத்தாளர் கூறுகிறார்.
செங்கை ஆழியானின்சிந்தனைகள்அவர்தமதுகாட்டாறுநாவ லுக்கு எழுதிய முன்னுரையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
28

baserdofalorer இச்சின்னத்தனங்களை, தேசியத் துரோகிகளை, மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டுமென்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானது தான் காட்டாறு. என்கிறார் செங்கை ஆழியான். ஆசிரியரின் கூற்றிற்கிணங்க நாவல் அமைந்திருக்கிறது என்பது உண்மை. செட்டாகவும் எழு தியிருக்கிறார். வழ வழாத்தன்மையில்லை. வேட்டையாடல் பற் றிய விபரணை நேர்த்தியாகவுள்ளது.
செங்கை ஆழியான் யதார்த்த நெறியில் நின்று எழுதுகிறார். அவரின் நாவல்களில் சிறந்தது காட்டாறு தான்.
- வீரகேசரி : 02.01.1982
29

Page 17
"கிடுகுவேலி - ஒரு நோக்கு
Uஜனி மலர் 1, இதழ் 1 வெளியீடாக வந்திருப்பது "கிடுகுவேலி. இது ‘ஈழநாடு’ புதினத் தாளில் ஏற்கனவே பிர சுரமானது. படித்திருக்காதவர்களுக்கு இப்பொழுது படித்துச் சுவைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ரஜனி வெளியீட்டில், டாக்டர் சுகந்தன் பதில்கள், விளம்பரங்கள் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன. ந. பாலேஸ்வரி என்ற திருகோணமலை பெண் எழுத்தாளரின் பிராயச்சித்தம் என்ற புதிய நாவல் அடுத்து வெளி வருகின்றது.
நமது எழுத்தாளர்களுக்கு கைகொடுக்க முன்வந்த ரஜனி வெளியீட்டாளர் ஜே.எம்.ஆர்.குகநாதனுக்கு நன்றி!
இனி, கிடுகுவேலிக்கு வருவோம்:
ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த யாழ்ப்பாணக் கலாசா ரம், புறக்காரணங்களால் எவ்வாறு மாறுபடுகின்றது என்றும், மனித உறவுகளில் பணவசதி எப்படி மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்றும், கணவன் - மனைவி உறவுகள் எவ்வாறு பூசி மெழுகலின்றி நேரிடையாக வார்த்தைகளில் பரிமளிப்பதையும் தனக்கே உரித்தான நடையிலே செங்கை ஆழியான் இந்தக் குறுநா வலில் காட்டுகிறார்.
கிடுகுவேலிகளுக்குப் பின்னால் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு உழைப்பின் பயன் பாடு, குற்றமற்ற இளைஞரும், மொழியறியா ஆயுதப் படையி னரிடம் சந்தேகத்துக்குள்ளாகி வதையுறல், சீதனம் வாங்கும் சமு தாயத்திலே, முற்போக்காக நடந்து கொள்ளும் பழையவரும், புதியவரும், புழக்கம் என்பவை செங்கை ஆழியான் காட்டும் கோலங்கள்.
30

(Bas.erdoakangiorer இக்கதையில் வரும் நிர்மலாவின் பாத்திர உருவாக்கம் மனதில் பதிய வைக்கப்படுகிறது. சண்முகம் நடந்து கொள்ளும் விதமும் இயல்பாக இருக்கிறது. சண்முகத்தின் தாயும், தங்கை கிளியும் நடக்கும் விதந்தான் பண நாயக உலகத்தின் மனிதப்பண் புகளும் மாற்றத்துக்குட்பட்டவை என்பதைக் காட்டுகின்றன.
சில செய்திகளை நாவலாசிரியர் கூறாமற் கூறுவது அவரு டைய முதிர்ச்சியான வளர்ச்சியைக் காட்டுகிறது.
- வீரகேசரி : 01.07.84 ரஜனி (பிராயச்சித்தம் : ஜூன் - செப், 1984)
31

Page 18
ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள்
இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் 1956-62காலப் பகு தியில் எழுதப்பட்ட ‘பரிசுக் கதைகள்’. 1963ஆம் ஆண்டு தனது முக் கால் வயதையும் தாண்டிவிட்டது. (நமது சிறுகதை எழுத்தாளர் களின் வளர்ச்சி பொதுவாக நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது) இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகளை அவை எழுதப்பட்ட காலத்தை அதிகம் பொருட்படுத்தாமல் மதிப்புரை எழுதினால், இத்தொகுப்பு திருப்தியளிக்கவில்லை என்றே எழுத வேண்டும். 'திருப்தியளிக்கவில்லை (Less Saisfying) என்று பொறுப்புணர்ச் சியுடன்தான் எழுதுகிறேன். தற்காலிகமாக இக்கதைகள் பாராட் டத்தக்கவை என்று ஊக்கமளித்தாலும், காலக்கிரமத்தில் இவை 'பயிற்சி அப்பியாசங்கள்’ என்ற முறையில் மறக்கப்பட்டுவிடும் என்பதைத் திடமாகக் கூறிவிட முடியும்.
"செங்கை ஆழியான்', 'முத்து சிவஞானம் ஆகிய இருவ ரும் பத்திரிகைச் செய்தி நிருபரின் 'செய்திச் சுருள் படைப்பில் இருந்து 'சிறுகதை எழுதப் பழகும் 'பயிற்சி அப்பியாசங்களாக (Excercises)த் தங்கள் ‘கதை’களை எழுதியிருக்கின்றனர்.
'சிற்பி', 'உதயணன்', 'நவம்’ ஆகிய மூவரிடையேயும், 20ஆம் நூற்றாண்டு முற்போக்கான (பொதுப்படையான அர்த் தத்தில்) எழுத்தாளனின் மனோபாவம் அல்லது வாழ்க்கை நெறி போன்றவை இருக்கின்றன. மனிதாபிமானம் (Humanism) போன்ற மதிப்புள்ள சொற்களைப் பாவித்து அவர்களை உக்கிப் போன உச்சாணிக் கொப்பில் ஏற்றி வைக்க விரும்பாவிட்டாலும், அவர்களிடம் இருக்கும் 'ஏதோ ஒன்றை நவீன சிறுகதை வடிவத் தில் வெளிப்படுத்தத் திக்கித் திணறிச் சம்பிரதாயப் பத்திரிகை ரகக் கதையுருவில் புனைந்திருக்கிறார்கள். பொழுதுபோக்குப் பத்தி ரிகை எழுத்தாளர்களெனும் ஆசனத்திலிருந்து இவர்கள் தம்மை
32

sacreolationer விடுவித்துக் கொள்வது விரும்பத்தக்கது. அவர்களே விரும்பா விட்டால் நாம் என்ன செய்வது!
'செம்பியன் செல்வன்’ வளர்ந்து வருபவர். வாலிப வயதில் கற்பனை வேகம் தடம் புரண்டோடத்தான் செய்யும். காலப்போக் கில் முதிர்ச்சியடைய வீச்சும் கனமும் தாமாகவே மெருகடையும். இவரிடம் நம்பிக்கையுண்டு. இவருடைய எதிர்காலம் நம்பிக் கையூட்டுவதாக இருக்கும் என்று நாமும் நம்புகிறோம். எடுத்துக் கொண்ட கதையைப் பொறுத்தவரையில் ஒரு ஆங்கிலப் படத் தின் சாயல் தெரிகிறது. கதாசிரியர் அப்படியே 'கொப்பியடித்து விட்டார் என்று நான் கூறவில்லை. ஏனெனில் படம் இங்கு திரை யிடப்படுமுன்பே கதை வெளியாகி விட்டது என்று அறிகிறேன். அப்படித்தான் அருட்டுணர்வில் தழுவி எழுதியிருந்தாலும், பாத கமில்லை; வெவ்வேறு திசைகளிலும் நம் எழுத்தாளர்கள் தம் கவனத்தைச் செலுத்துகிறார்கள் என்ற திருப்தியிருக்கும். ஆகவும் கண்ட மிச்சம் என்ன? சாதிப் பிரச்சினை, வர்க்கபேதம், தமிழ்ப் பண்பாடு, தற்காலிகமான சிங்களவர் - தமிழர் பிரச்சினை, கற்பு, 'பொழுது போக்கு உல்லாசங்கள்' ('காதல் உட்பட) இது போன் றவற்றைத் தானே திருப்பித் திருப்பித் திணிக்கிறார்கள் நம் எழுத் தாளர்கள், போகட்டும்.
பெண் எழுத்தாளரையும், பத்திரிகைத் தர எழுத்தாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான்; ஆனால் அவர் எடுத்துக் கொண்டுள்ளது, சமூக வேறுபாட்டுக் கதைப் பொருள் (Inconsistencies in the attitudes of people of different social Starta) 6 u U வேற்கத்தக்கது. உண்மையிலேயே பிரக்ஞை பூர்வமாகவே அவர் இக்கதைப் பொருளைச் சித்திரிக்க வேண்டும் என்று நினைத்துச் சித்திரித்தாரோ அல்லது அது ஒரு 'விபத்தாக அமைந்து விட் டதோ, நானறியேன். சித்தரித்தவரை வெற்றியே.
"செந்தூரன் தாம் எடுத்துக் கொண்டதைச் சற்று காத்திர மாக, யதார்த்த பூர்வமாக, 'வழ வழா கொழ கொழா இல்லாமல்
33

Page 19
ஏறகளில் தறனாய்வு/மதிப்பிறகள் சிறை சித்திரித்திருக்கிறார். ஈழத்துத் தமிழ் உடனிகழ்கால இலக்கியத் தில் அவரது கதையும், ராமையாவின் கதையும், மலைநாட்டுத் தமிழர் மொழியும், வாழ்வும் என்ற முறையில் முத்தாரமாகத் தற் பொழுது இருந்து வருகின்றன.
நவீன உளவியல் போக்குக்கேற்ற முறையிலும், சிறிது நளி னமான கதைப் பொருளைக் கொண்டதினாலும், இறுக்கமாக எழுதப்பட்டதினாலும், அ.முத்துலிங்கத்தின் 'பக்குவம்", மற்றக் கதைகளினின்றும் சிறிது எழும்பி நிற்கின்றது. அவ்வளவுதான்.
பகுப்புமுறை கொண்டு இக்கதைகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டிய அவசியம் இங்கில்லாததால், அடிப்படையான சில விஷயங்களை எடுத்துக் கூறியிருக்கிறேன். வாசகர்கள் அவ சியம் இப்புத்தகத்தை வாங்கித் தாமாகவே படித்துப் பார்ப்பது பொருத்தமாயிருக்கும்.
'ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள்’ - வெளியீடு தமிழ் எழுத் தாளர் மன்றம்.
- தேனருவி : செப்டெம்பர் 1963
34

மு.கனகராசனின் புடம்
மு.கனகராசனின்தற்போதைய கதைகளுடன்ஒப்பிட்டால் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருக்கும் இக் கதையின் சிறுகதைக் கட்டுக்கோப்பு, இன்றைய சிறுகதை வளர்ச் சிப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது செறிவற்றதாகக் காணப்படினும் கதாசிரியரின் புதுப் புனைவான சொற்பிரயோகங் கள் (வசந்த முல்லையை மார்பில் சூடிக் களித்த - சந்தனப் பொய் கையின் தென்றலான - பாலைவனப் பேரீச்சமரம் - அழகைக் குடித்த திருப்தியில் - மின்னல்க் கொடிகள் மண்டைக்குள் புகுந் தனவா - மாலையும், இரவும் சந்தித்துப் பிரிந்துவிட்டவேளை - இதயத்து இரத்தமெல்லாம் இருள் கவ்விய இமைகளூடாகக் கண் ணிரைச் சொரிகிறது - வேதனைகளையெல்லாம் விம்மல்களாகப் பொதிந்து, பொதிந்து பிரசவிக்கிறாள் - தாய்மையைப் பெண்மை வெல்கிறது) நயக்கத்தக்கவை.
ஜோசப் என்ற இதயமுள்ள பாத்திரம், குமாரலிங்கம் என் பவனால் கருவுற்ற மேரி என்ற பெண்ணைக் கலியாணஞ் செய்த பின், அவளைத் தொட்டனுபவிக்க விரும்பும் வேட்கையுடன் கதை ஆரம்பமாகிறது. பின், கடந்துபோன 'சம்பவப் பாசிகள்’ விபரிக்கப்படுகின்றன.
இந்தப் பகுதியில் ஜோசப் பற்றிய ஆசிரியரின் விவரணை இடம்பெறுகிறது. கூடவே மேரியும் ஜோசப்பும் சந்தித்த விபரம், வீட்டுக்காரி தேவகி அவர்களிருவருக்கும் கலியாணத்தை ஏற்பாடு செய்தல், கலியாணத்தின் பின் மேரி தனக்கு நடந்ததை ஜோசப்பி டம் சொல்லல், ஜோசப்புக்கு தேவகியின் மீதான ஆத்திரம், மேரி சாகத் துணிதல், மேரி வாழ வேண்டும் என்று ஜோசப் வலியுறுத் தல், கதையின் இறுதிக் கட்டம் ஆகியன இடம்பெறுகின்றன.
35

Page 20
ebaseffeb 25perormula / osůsoblasdy Foxo
கதையின் இறுதிக் கட்டம் - விவிலியத் தொடருவமை. 'மரியாயின் கணவன் ஜோசப்புத்தான். ஆனால், மரியாய் பெற்ற குழந்தைக்குத் தந்தை ஜோசப்பு அல்லவே. மேரி நீ விரும்பி னால்.’
இந்தப் பெயர்ப் பொருத்தமும், சம்பவத்தின் ஒரம்சப் பொருத்தமும் (அதாவது யேசு, ஜோசப் - மேரி ஆகியோரின் பிள் ளையாயினும், யேசு மேரியின் வயிற்றில் உதிக்க ஜோசப் காரண மாயிருக்கவில்லை) இந்தத் தொடருவமையைக் கொண்டு வரு கின்றன. அந்த விதத்தில் மு.கனகராசனின் "புடம்’ என்ற இந்தப் புதுப் புனைவாக்கம் வரவேற்கத்தக்கதாய் இருப்பதுடன் ஓர் ஆழ்ந்த சோகஞ் சார்ந்த வியப்புணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
- “பகவானின் பாதங்களில்" (1980) நூலில் இடம்பெற்ற திறனாய்வுக் குறிப்பு
36

நாவேந்தனின் ‘வாழ்வு"
நாவேந்தன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு'வாழ்வு. பதினைந்து வருடங்களாக அவர் எழுதிய கதைகள், இன்றைய தர மான வாசகனுக்குத் திருப்தி தரா. நாவேந்தன் வெகு அண்மைக் காலங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பொன்றைப் படித்து விட்டுத்தான் அவரிடம் வளர்ச்சி காணப்படுகின்றதா என்று கூற முடியும். இன்று ஈழத்து எழுத்தாளர்களிடையேயும் வாசகர்க ளிடையேயும் காணப்படும் ஒரு பரபரப்பான விழிப்புணர்வுக் காலகட்டத்தில் ‘வாழ்வு" என்ற தொகுப்பு வெளி வந்திருப்பதே ஒரு முரண்பாடுதான். தொகுப்பாக வெளியிடும்போது பொறுக்கி எடுத்த கதைகளைத் தேர்ந்து தொகுக்க வேண்டாமா? அல்லது கதைகளைத்தானும் செப்பனிட்ட பின் சேர்த்துக் கொள்ள வேண் டாமா? அதுதான் ஆசிரியனுக்கே உரித்தான சுதந்திரம் இருக்கின் றதே என்று துணிந்து வெளியிட்டு விட்டார். முயற்சிக்காக நாம் உற்சாகப்படுத்துவது, அவசியந்தான். ஆனால் அறுவடை பற்றிய அபிப்பிராயம் கூறுவதற்கு வாசகர்களுக்குத்தான் உரிமையுண்டு.
கதைகள் எழுதப்பட்ட காலம், கதாசிரியரின் கோட்பாடு கள், வாழ்க்கை - இலக்கியம் பற்றிய நோக்கு, கதாசிரியரின் வச gdi g560p6.56it (Inadequacies in respect of familiarity with modern techniques and craft of short story writing) gaig, 606076Ouuylb மனதிற் கொண்டு, கனிந்த நோக்குடன் 'வாழ்வு தொகுப்பைப் படித்தால், முகஞ்சுளிக்காமல் பாராட்டி விடலாம்.
"திரைப்படங்களையும், மர்ம நாவல்களையும் பார்த்துப் படித்துக் காதல் செய்யத் துடிப்பவர்களையும், உணவுக்கு வேண் டியதை உடைக்காகவே செலவழித்து வாழத்துடிக்கின்ற ஆடம்பர பிரியர்களான ஆடவரையும், பெண்டிரையும் ஆன்மீக வழிபாட் டிலேயே தம்மைக் கரைத்துக் கொள்ள விரும்புகின்ற சிதம்பரர்க
37

Page 21
qababesrob 25paoTTia / Ko48Ůrobabér éforo ளையும் மறந்து விட்டு இலக்கியம் படைக்க என்னாலியலாது. அத்தகைய கருத்துக்கு உயர்வு கொடுக்கப்படுகின்ற காலத்தில் வாழ்பவனாக நான் இருப்பதால்.’’ என்கிறார் கதாசிரியர்.
நல்லது. நாவேந்தனின் தனியியல்பை (Individuality) இங்கு நாம் காண்கிறோம். ஆனால் அவர் 'படைத்துவிட்ட இலக் கியத்தில் அவரது நோக்கம் எவ்வளவுதூரம் வெற்றி பெற்றுள்ளது என்பதே நமது கேள்வி!
"பாத்திரங்களை அளவுக்கு அதிகமாகப் படைத்து விடுவ தில் எள்ளளவும் ஒருப்பாடில்லை’ என்கிறார். ஆனால் அவரது பாத்திரங்கள் யாவும் 'பாத்திரத் தன்மையே பெறவில்லை என்று நாம் கூறுகிறோம். அடைப்புக் கட்டடத்துள் திணித்து நிரப்பப் பட்ட தொற் கூட்டங்கள் பாத்திரத்தன்மையை உருவாக்க முனை கின்றன. உயிர்தான் வரவில்லை.
"மொழி மரபையும், தூய்மையினையும் பேணுதற்கு ஒல் லும் வகையில் முயன்றிருக்கிறேன்' என்கிறார். உண்மையில் பார்க்கப் போனால் நாவேந்தனின் இந்த 'முயற்சி” தான் அவர் கதைகளை விடமேலெழும்பி நிற்கின்றது. அம்முயற்சியிற் கூட சாதாரண கனிஷ்ட வகுப்பு மாணவன் கூட விடத் தயங்கும் மொழி மரபை மீறுந்துணிவை சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார் கதாசிரி யர். அதாவது உடனிகழ்கால இலக்கிய வகையான சிறுகதையை எழுத முனைகையில், தவிர்க்க முடியாமலே பல இடங்களில்
மொழி மரபை மீறி இருக்கிறார். இது இயற்கை.
ஆசிரியரது முன்னுரை வாசகத்தைப் பொருட்படுத்தாத அவரது மீறுதல் கதையளவிலாகுதல் வெற்றி பெற்றுள்ளதா என் றால் அதிருப்தியே. இரண்டுங்கெட்டான் நிலை. எனவே ஆசிரி யர் சொற்களைத் தூய்மைப்படுத்துவதில் இறங்கி விடுகிறார். பரிதாபமாக இருக்கின்றது.
இவ்வளவும் கூறுவது ஆசிரியரை இழிவுபடுத்தும் நோக்
38

Фа.етво.бенокоппей கத்திற்காகவல்ல. உண்மை நிலையை எடுத்துக் கூறுவதற்கா கவே. ஆசிரியரிடம் கற்பனைத் திறனும், திட்டவட்டமான சில கொள்கைகளும் இருப்பது மகிழ்ச்சிக்குரியதே. ஆசிரியர் சமூக யதார்த்தவாதியாகவோ, கற்பனாலயவாதியாகவோ, இயற்கை வாதியாகவோ, அழகியல்வாதியாகவோ, வெறுமனே யதார்த்
தவாதியாகவோ, மனோவியல்வாதியாகவோ, பண்டிதவாதி யாகவோ, எதுவாகவோ இருந்து விட்டுப் போகட்டும். அதைப் பற்றித் தட்டிக் கேட்க வாசகனுக்கு உரிமை கிடையாது. ஆனால் உடனிகழ்கால மற்றைய கதைகளுடன் ஆசிரியரது கதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களில் ஒருவரான நாவேந்தனையும் பட்டி யல் சேர்க்க முனைவது 'சுய ஏமாற்றமாகும்.
தமது ஆற்றலைச் சிறந்த முறையில் பயன்படுத்தித் தர மான படைப்பாளியாக நாவேந்தன் வரவேண்டுமென்பதே எமது அவா. ஆசிரியரால் அது முடியக்கூடியது. நாவேந்தன், நவீன எழுத்தாளர்கள் மீது கொண்டுள்ள "போலி வெறுப்பை அறவே அகற்ற வேண்டும்.
நவீன தமிழ்ச் சிறுகதைகளைப் படிக்கவேண்டும். ஆங்கில மொழி மூலமாகுதல், தமிழ்மொழி மூலமாகுதல், நவீன பிறமொ ழிக் கதைகளை வாசிக்க வேண்டும். தூய்மை வாதம், மொழி மர பைப் பேணுதல் போன்ற தீவிர தீக்கோழி மனோபாவம் ஒரு கால எல்லை வரை தான் கடைப்பிடிக்கக் கூடியவை என்பதை உணர வேண்டும். நடைமுறையில் இவை எல்லாம் சாத்தியமாகா. அப் படியில்லை தொல்காப்பிய காலத்துக்கே தான் திரும்பிப் போக வேண்டுமென்றால், போய் விடலாம். ஆனால் அந்தக் கால மதிப் புகள், சூத்திரங்களுடன் 'சிறுகதை எழுத முன் வரவேண்டாம். ஏனென்றால் சிறுகதை போன்றவையும் ‘வாழும் இலக்கியங்கள்’ என்று நிரூபணமாகி வருகின்றன.
நாவேந்தனின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு, முன்னேற்ற
39

Page 22
erobabesseib BoeorTTsuen/ lossillopoeir (Foo மடைந்த வாசகனை ஏமாற்ற மாட்டாது என்று நம்புகிறோம்.
('வாழ்வு - நாவேந்தன், தமிழ்க் குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம். விலை, ரூ.2.00)
★大大
Ceylonese Writing - 1
'ஈழத்து எழுத்து’ பகுதி ஒன்று இப்பொழுது விற்பனையா கின்றது. இது "கொம்யூனிட்டி’ என்ற ஆங்கிலப் பிரசுரத்தின் விசேட வெளியீடாகும். இரண்டாவது பகுதி அடுத்து வெளிவர விருக்கிறது. ஈழத்துச் சிங்கள, தமிழ் எழுத்து பற்றியும், எழுத்தும் அடங்கியுள்ள முதலாவது பகுதியில் சில்லையூர் செல்வராசன் எழுதிய தமிழ் நாவல் பற்றிய ஒரு அறிமுகக் குறிப்பும் இடம்பெற் றுள்ளது. அறிமுகக் கட்டுரை இடையிடையே குறிப்பாக இளங் கீரன், சொக்கன், பொன்னுத்துரை பற்றி வருணிக்கையில் விமர் சனச் சாயல் படிந்தும் இருப்பதால் கட்டுரை வாசகர்களை அலங் கமலங்க வைக்கின்றது. நவீன விமர்சனப் போக்குக்கேற்ற முறை யில் தனது பார்வையைச் செலுத்தாததால், கட்டுரை ஆசிரியரின் நோக்கு, ஏனைய கட்டுரை ஆசிரியர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றது. ஆயினும் ஆங்கில வாசகர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் மிகவும் சிரமப்பட்டுத் தகவல்களைத் தொகுத்து அழ காக எழுதியிருக்கிறார் செல்வராசன்.
மற்றும் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில எழுத்து, மாட் டின் விக்ரமசிங்க என்ற ஆசிரியரின் 'கலியுகம்" என்ற நாவலின் கணிப்பு, குணதாச அமரசேகர என்ற ஆசிரியரின் சிறுகதை. பழைய சிங்களப் பாடல்களின் மொழி பெயர்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன. ஆங்கிலந் தெரிந்த வாசகர்கள் அவசியம் வாங் கிப் படித்துப் பார்க்கவும்.
- தேனருவி: டிசம்பர் 1963
40

“சிற்பியின் நினைவுகள் மடிவதில்லை
“சிற்பி, என்ற புனைபெயரில் எழுதும் இலங்கை கந்த ரோடையைச் சேர்ந்த சிற்பி-சிவசரவணபவன், இந்நூலுக்கு ஆசி ரியர்.
1958 - 1966 காலப்பகுதியில் சிற்பி சிவசரவணபவன் வெளி யிட்ட 'கலைச்செல்வி நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுது ணையாக இருந்தது என்பது இலக்கிய விமர்சகர்களின் கணிப்பு. புதிதாக எழுத்துலகுக்கு வரமுயன்றவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது கலைச்செல்வி.
'தீபம்’ என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் யாழ்வாசி" என்ற பெயரிலே சிற்பி எழுதிய இலங்கைக் கடிதத் தொடர், அங் குள்ளவர்கள் நமது நாட்டு இலக்கிய முயற்சிகளை அறிந்துகொள் ளும் வாய்ப்பைத் தந்தது.
'ஈழத்துச் சிறுகதைகள் -தொகுப்பாசிரியராகி நமது எழுத் தாளர்கள் மீது தான் கொண்டுள்ள தன்னலமற்ற அக்கறையை வெளிப்படுத்தினார். நிலவும் நினைவும், சத்திய தரிசனம் (சிறுக தைத் தொகுதிகள்) உனக்காக கண்ணே (நாவல்) ஆகிய நூல்கள் இவருடையவை.
அகிலன், டாக்டர் மு.வரதராசன், நா.பார்த்தசாரதி போன் றோரைத் தன் ஆதர்ச எழுத்தாளராகக் கொண்டுள்ள சிற்பி, சிறந்த முற்போக்கும் சிந்தனையுடைய அறிவாளியும் பண்பாளருமா வார். அடக்கமும் பரவலான அறிவும் கொண்ட இந்த எளிய இலக் கிய நடையுடையார் ஈழத்து இலக்கிய உலகுக்கு ஆற்றிய, ஆற்றி வரும் பணி விலைமதிப்பற்றது.
- நினைவுகள் மடிவதில்லை நூலுக்கான அறிமுகம்-2008
41

Page 23
திருகோணமலையிலிருந்து ஒரு பெண்பாற் புலவர்
பூரீஸ்கந்தராஜா ஞானமனோகரி என்ற கவிஞரை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது அவருடைய 108 பாடல்கள் நூல் வடிவில் வந்துள்ளது.
அவரை அண்மைக்கால அளவுகோல்களின்படி கவிஞர் என்பதிலும் பார்க்க மரபுசார் புலவர், பாடலாசிரியர் எனக் கூற லாம். ஆயினும் அவரிடம் கவித்துவமும் இருக்கிறது என்பதைக் காட்டப் பல உதாரணங்கள் நூலில் உண்டு. 168 பக்கங்களைக் கொண்ட இந்த அழகிய பதிப்பை திருகோணமலையில் நன்கு அறியப்பட்ட சித்தி அமரசிங்கத்தின் 'ஈழத்து இலக்கியச் சோலை’ வெளியிட்டுள்ளது. இந்த நூலை 21, ஒளவையார் வீதி, திருகோ ணமலை'யில் பெற்றுக்கொள்ளலாம்.
இத் தொகுதியில் இடம்பெறும் பாடல்கள் அன்பு,அமைதி, ஆன்மீகம் போன்றவை பற்றிப் பேசுகின்றன. இந்த நூலுக்கு சுவாமி ஆத்மகனானந்தா, மூத்த எழுத்தாளர் ந. பாலேஸ்வரி (கலாபூஷணம் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கம்) காந்தி என ஆசிரியர் அறியப்பட்ட பொ.கந்தையா, சித்தி அமரசிங்கம் ஆகி யோர் நூலாசிரியர் பற்றியும், பாடல்கள் பற்றியும் நிறைய விப ரங்களைத் தந்துள்ளனர். நூலாசிரியையும், அவருடைய மறைந்த கணவர் பூரீஸ்கந்தராஜாவும் எனது துணைவிக்கும், எனக்கும் உறவினர்களாவர். பல்துறைகளில் ஈடுபாடுடைய ஆற்றல் மிக் கவராய் அவருடைய குடும்பத்தினர் இருப்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ஞானமனோகரியின் சகோதரர்களுள் ஒருவர், வைத்தியத்துறையைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆவர். இவர்
42

கே.எஸ்.சிவகுமாரன் அறிவு” என்ற பிரயோசனமான பெரும்பாலும் சிறுவர்க்கான சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.
திருகோணமலையைச் சேர்ந்த பல தமிழ் மக்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள். ஆன்மீகத்திலும் மிக நாட்டமுடையவர்கள். அங்கு 'மோகனாங்கி எழுதிய சரவணமுத்துப் பிள்ளை முதல் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும், அறிஞர்களும் இலைமறை காய்போல் இருந்து வருகிறார்கள்.
மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, மாவட்டங்களி லுள்ளவர்கள் போல, மூதூர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் ஆற்றல் பற்றி பிற மாவட்டத்தினர் நன்கு அறியார் என்றே கூறவேண்டியிருக்கிறது. சிறந்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், அரசியல் பகுப்பாய் வாளருமான பேரா சிரியர் சி.சிவசேகரம் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது பலருக்குத் தெரியாது. சிவசேகரம் விமர்சகர் என்றும் சில இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் வடிவேல் மாஸ்டர் என்றழைக்கப் பட்ட அறிஞர் (நூலாசிரியர், கதா பிரசங்க விற்பன்னர்) உட்பட சுவாமி கெங்காதரானந்தாவும் போற்றுதற்குரியவராக இருந்து வரு கிறார். அவரிடம் ஆத்மீக பிணைப்புக் கொண்டவர் நூலாசிரியை.
இப்பாடல்களை வாய்விட்டு நான் படித்த பொழுது அவற் றில் லயம் இருப்பதையும், ஆசிரியையிடம் சொல்லாட்சியிருப்ப தையும் உணர்ந்து கொண்டேன்.
இறை பக்தியைச் சமூக சேவையுடன் ஆசிரியை தொடர்பு
படுத்திக் காட்டுகின்றார். ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, அவருடைய நரயக்ஞம் என்ற பாடல் அமைகி
றது. இதோ பாடல்,
43

Page 24
qbaerio Specrmia /oSoad o
ஏழைக்கு உதவினும் சரி பசிக்கின்ற வயிறு பார்த்து அன்னம் அளிப்பினும் சரி நோயினால் வாடியே வருபவருக்கு ஒளடதம் கொடுப்பினும் சரி ஆடை அற்ற ஏழைகட்கு ஆடை வழங்கினும் சரி அதுவே நரயக்ஞம் ஆகும்.
மனத்துயர் கொள்ளும் மக்கள் வேதனை குறைப்பினும் சரி பெண்துயர் கண்டு அவர் துயர் துடைப்பினும் சரி தொழில் வளம் அற்ற சம்சாரிக்கு உதவினும் சரி குழந்தை மன வெதும்பல் தீர்த்து வைப்பினும் சரி அதுவே நரயக்ஞம் ஆகும்.
சமூக சேவை சங்கத்தால் தர்மங்கள் செய்யினும் சரி நாட்டினது அமைதிக்கு பாடுபடினும் சரி அகதிகள் இடம் நாடிச் சென்று அவர் துயர் நீக்கினும் சரி நாட்டு மண்ணிலே நல்ல ஒர் ஆட்சியை அமைப்பினும் சரி எல்லாம் நரயக்ஞம் அன்றோ
44

ംfd.goIr
நரயக்ஞம் தன்னை குறைவர
செய்துவரின் தீய கர்மாக்கள் குறையுமன்றோ.
'பூத யக்ஞம்’ என்பதனை விளக்குகையில் ஆசிரியை இவ்வாறு முடிக்கிறார்.
"அன்பு என்பது அனைவருக்கும் சொந்தம்
எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளான்
வாயது இல்லா ஜீவனை நாமே
மாண்போடு அணைப்பது பூத யக்ஞம் ஆகும் தானே’.
இந்து சமயத்தின் (சைவம்) பற்பல கூறுகளையும் அற்புத மாக விளக்கிக்கூறும் பாடலாசிரியர், மனித நேயம், சமூகத்தில் தனிமனிதன், சமூக நோக்கு, அளப்பரிய அன்பு, ஞானம் போன்ற பல விடயங்களையும் யாவரும் விளங்கக் கூடிய விதத்தில், ஓசை நயத்துடன் தந்திருப்பது பாராட்டத்தக்கது. பல விடயங்களை ஆசிரியை அறிந்திருக்கிறார். அடக்கமாக இருந்து இதுவரை தன்னை இனங்காட்டிக்கொள்ளாமல் இருந்த போதிலும், இத் தொகுப்பு மூலம் தமது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.
இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்க ளிலும், பல்கலைக்கழகங்களிலும், விதந்துரைக்கப்பட்ட பாட நூலாக இருப்பது அவசியம். ஏனெனில் எளிய முறையில் பல தத்துவங்களையும், கருத்துக்களையும் தமது பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டியிருப்பதேயாகும்.
அநேகமாக ஒவ்வொரு பாடலுக்கும் கடவுளின் சித்திரங் கள் அணி சேர்க்கின்றன.
ஞானமனோகரி எழுதிய பாடல்களுள் ஒன்றின் தலைப்பு
'கவித்துவம்'. அதனை எவ்வாறு அவர் பார்க்கிறார்?
"எண்ணத்தில் மேன்மை வேண்டும் எழுத்தினில் நல்லோசை வேண்டும்
45

Page 25
qbaseffeb 25pxTITilea / ko5ůbasdir foxo
சொற்களில் ஆட்சி வேண்டும் சுவையான கவிதை கொண்டு சாற்றியே நின்றால் இங்கு கல்லும் கசிந்தே வரும். பாக்களில் இனிமை வேண்டும் பதங்களில் பொருளும் வேண்டும் ஏற்றம் மிகு தொடர்களாக எழுதியே எடுத்துவிட்டால் நாட்டமிகு கவிதை எல்லாம் ஞாலத்தில் எட்டும் சுவையாய்.
அன்புசேர் சொற்களாலே அமிழ் தான இசையினோடு இறைவன் தனைப் பூஜித்தால் மயங்கிய பொறிகள் எல்லாம் மயக்கமே தீர்த்து நின்று
வந்த வேலையைச் செய்யும் அன்ருே.”*
தூதுவளை தொடர்பான ஒரு கதையையும் ஆசிரியை சேர்த் திருக்கிறார்.
கவனக்குறைவால் சில வார்த்தைகள் சரியாக எழுதப்பட வில்லை. உதாரணமாக கணினி, கிருஷ்ணபாலா, வீண்காலமாய் போன்ற வார்த்தைகள், வேறு உச்சரிப்பில் எழுதப்பட்டுள்ளன. தாய்க்குலம், தாய்குலம் என்று அச்சிடப்பட்டுள்ளது. தம் அன் னையின் பிறந்த தினத்தினை சரியாகப் பதிவு செய்யவில்லை.
இருந்தபோதிலும் குடத்திலிட்ட விளக்குப்போல, தமது பிள்ளைகளின் உந்தலினால் ஒரு நல்ல படைப்பை பூரீஸ்கந்தராஜா (மறைந்த கணவரின் பெயரில்) ஞானமனோகரி தந்திருக்கிறார்.
- "குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்" நூலில் (2008) இடம்பெற்ற பாராட்டுரை.
46

இவன் ஒரு.
கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கைக் கோலங்களைச் சித்திரிக்கும் புனைகதைகள் எண்ணிக்கையில் குறைவு. கறுவாக்காடு முதல் பாலத்துறை வரை பல தட்டுகளில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக் களாகத்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். கறுவாக்காட்டுத் தமிழரிற் சிலரும் முஸ்லிம்களிற் சிலரும் தமிழை அறவே புறக் கணித்துச் சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் வீட்டுப் பேச்சு மொழியாகக் கொண்டிருக்கக்கூடும். ஆயினும் பெரும்பான்மை யினர் தமிழ்மொழியையும் அதனுடன் இணைந்த கலாசாரத்தை யும் தொடர்ந்து பேணவே செய்கின்றனர்.
இந்த மொழியும் கலாசாரமும் வெவ்வேறு விகற்பங்களில் வெளிப்பட்டாலும் பின்னணியில் ஒருமைப்பாடுடையதாகத் தான் அமைகின்றன. இந்த வேற்றுமைகளையும் ஒற்றுமைகளை யும் கலப்படங்களையும் கூர்ந்து நோக்கி விபரித்து எழுதக் கூடிய வாய்ப்பு இருக்கின்றபோதிலும், நமது எழுத்தாளர்கள், குறிப்பா கக் கொழும்பில் நிரந்தரமாக வசிப்பவர்கள், கொழும்பையும் சுற் றுப்புற்த்தையும் மையமாகக் கொண்டு அதிகமாக எழுதுவதாகத் தெரியவில்லை.
இந்தப் பின்னணியிலே, ஜனரஞ்சக எழுத்தாளர் என நன்கு அறியப்பட்ட மொழிவாணன் கொழும்புவாழ் கீழ்மத்திய தர வர்க்க மக்களின் (குறிப்பாக வாலிபப் பருவத்தினரின்) வாழ்க் கைக் கோலங்களைச் சித்திரித்து வருதல் வரவேற்கத் தக்கதொன் றாகும.
மொழிவாணனின் எழுத்துத்திறன் வெளிப்படையானது தமது எழுத்தில் அவர் கையாளும் நவீன உத்திமுறைகளே.
47

Page 26
qbaoficio Spomia Vosúbsdr foo
கற்பனையும் கனவுகளும் கலந்த நிதர்சன வாழ்க்கையை அவர் மேலோட்டமாகத்தான் சித்திரிக்க முற்படுகிறார் என்று குறைபட்டுக் கொண்டாலும் அவர் வாழ்க்கைப் போக்குகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறார் என்பதை மறுக்கமுடியாது.
சமுதாய அமைப்பு முறைகளைத் தெளிந்த நோக்குடன் புரிந்து கொண்டும் பாத்திரங்களின் உறவுமுறைகளை உளவியல் அடிப்படையிலும் சித்தரிக்க முற்படுவாராயின், அவருடைய இயல்பான எழுத்து லாவகம் மேலும் வைரம் பெறும். இவ்வகை யில் அவர் படிப்படியாக தேர்ச்சிபெற்று வருகிறார் என்பதை அவ ருடைய அண்மைக்கால எழுத்துகள் கட்டியங் கூறுகின்றன.
குறிப்பிட்ட இந்தக் கதை கூட மிகவும் சுவாரஸ்யமானது. இக் கதையில் வரும் களம் பற்றிய பரிச்சயமற்ற வாசகர்கள் கூட இக் கதையினுடாகப் பல புதிய தகவல்களையும் அனுபவங்களை யும் பெறக்கூடியதாக இருக்கும். கொழும்புப் பிரதேசப் படைப்பு களை ஆசிரியர் மேலும் அளித்து இந்த நாட்டுத் தமிழ் இலக்கியம் பரவலான பெறுமானத்தைப் பெற உதவுவார் என நம்பலாம்.
- "இரவுநேர பூபாளம்” நூலுக்கான அணிந்துரை.
48

தமிழ்க் கலைகள் யாழ்ப்பாணத்தில் மலர்ச்சி பெறுகின்றன
அவர் பெயர் நீ.மரியசேவியர். ஆங்கிலத்தில் தமது பெயரை என்.எம்.சவேரி எனப் பயன்படுத்துகிறார். வயது 55. பிறப்பிடம் இளவாலை. தமது 16 வயதில் அம்பிட்டிய செமி னறியில் சமயப்பயிற்சி. 1958 இல் ரோமாபுரியில் குருவானவர் பட்டம். அங்குள்ள சமயப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுமாணிப் பட்டங்கள். 1962 இல் இலங்கை திரும்புகிறார். இலத்தின், கிரேக்கம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பரிச்சயம். சிலவற்றில் பாண்டித்தியம். சைவ சித்தாந்தமே தமிழர் தத்துவம் என்ற கோட்பாட்டில் அசை யாத நம்பிக்கை இந்த கத்தோலிக்கப் பாதிரிக்கு. 1965 முதல் யாழ்ப் பாணத்தில் திருமறைக் கலாமன்றத்தை நிறுவி அரிய பல தொண் டுகளைச் செய்துவருகிறார் மரியசேவியர்.
இவருடைய ஆற்றல்களை இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை 1964க்கும் 1971க்கும் இடையில் பயன்படுத்தியது. கத்தோலிக்க நிகழ்ச் சிகளை புதுப்பரிமாணம் கொண்டு நிகழ்த் தினார். இந்தச் சமயப் பிதாவின் திறமைகள் பல துறைகளிலும் சோபித்தாலும் நாடகம், நாட்டாரியல் போன்றவற்றிலேயே அதி கம்பரிணமிக்கின்றது.1968இல்களங்கம்,1971இல்அன்பில்மலர்ந்த அமர காவியம், 1973இல் பலிக்களம் போன்றவை இவர் படைத்த வை. இசை, உரை, அங்க அசைவு கொண்ட கதையும், காவியமும் இவருடைய சிருஷ்டிகளில் ஒன்று. இவர் முயற்சியால் திருச்சியில் இப்படைப்புகள் மேடை ஏறின. ஈழத்து நாட்டுக் கூத்துக் களஞ் சியத்தை உருவாக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். நாட் டுக்கூத்து விழா ஒன்றையும் நடத்தவும் உத்தேசம். இவருடைய முயற்சியால் கடந்த பெப்ரவரி 23இல் கொழும்பிலே ஓர் ஓவியக்
49

Page 27
erosefdb ASDomisia/opsidoodt doop கண்காட்சியும் இடம்பெற்றது. திருமறைக்கலாமன்றம் யாழ். பிர தான வீதியில் இயங்கி வருகின்றது. 32 துறைகள் தக்க தலைமை யின் கீழ் வளர்க்கப்படுகின்றன. கருத்தரங்குகள், கண்காட்சிகள், வகுப்புக்கள், அவைக்காற்றும் நிகழ்ச்சிகள், நாடகங்கள், இசை விருந்துகள், ஓவியப் பயிற்சி, நாடக நடனப் பயிற்சிகள், ஒப்பி யல் சமய ஆய்வுகள் போன்றவை இந்த மன்றத்தின் முயற்சிகளில் சில.
இவைதவிர "கலைமுகம்’ என்ற காலாண்டு ஏடு ஒன்றை யும் மன்றம் வெளியிட்டு வருகின்றது.
நெஞ்சக் கனல், மாதொருபாகம், நீயொரு பாறை, யூதகு மாரி, ஞானசவுந்தரி, சத்தியவேள்வி, சிந்தாமணி, திருச்செல்வர் காவியம் போன்ற பல்வேறு சுவை தரும் நாடகங்களை அளித்து வரும் இந்த மன்றத்தினரின் அசோகன்’ நாடகத்தை மாத்திரமே கொழும்பில் பார்க்க முடிந்தது. "வளையாபதி காவியத்தை நாட கமாக்கும் முயற்சியில் இம்மன்றத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
'வார்த்தைகளே இல்லாத நாடகம்’ என்ற பெயரில் அசோகன்’ கொழும்பில் காட்டப்பட்டது. அதேவரிசையில் 'புறம் 279/ 278 இவர்களுடைய முதலாவது முயற்சி. கடந்த ஆண்டில் பல கலைநிகழ்ச்சிகளை நடத்திப் பெரும்பாலான மக்களை திருப்திப்படுத்தி இருக்கிறார்கள். 'கலைகள் மூலம் இறைவனுக்கு ஆற்றும் பணி’ என்ற கொள்கையை கடைப்பி டிக்கும் திருமறைக் கலாமன்றத்தினர் இந்த ஆண்டிலும் நிறைய செய்யவிருக்கிறார்கள். வி.ஜே.கொன்ஸ்ரன்ரைன் மற்றும் சில ரின் உதவியுடன் திருமறைக்கலாமன்றம் செவ்வனே பணிசெய்து வருகின்றது.
இந்த மன்றம் வெளியிடும் 'கலைமுகம்" என்ற ஏட்டின் சில இதழ்களைப் படித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
மூன்று வருடங்களுக்கு முன் முதல் இதழ் வெளியாகியது.
50

ОBa.edo.Маркоплет
'சங்க இலக்கியங்களில் உலகு தழுவிய சிந்தனை” என்ற தலைப் பிலே பேராசிரியர்அ.சண்முகதாஸ் ஒர்அருமையானகட்டுரையை எழுதியிருக்கிறார். இதேபோன்று மு.புஸ்பராஜன், மல்லிகா ராஜ ரட்ணம், ஈழத்துச் சிவானந்தன், கலாநிதி இ.பாலசுந்தரம், கலா நிதி சி.மெளனகுரு, கொ.ரோ. கொன்ஸ்ரன்ரைன், ஏ.ஜே.கனக ரட்ணா, சோ.கிருஷ்ணராஜா, நீ.மரியசேவியர், கே.ஆர்.டேவிட், அருட்திரு. ஜெரோம் லம்பர்ட், ம.ஜோசெப், பக்கரி சின்னத் துரை, சில்லையூர் செல்வராஜன், கந்தையா நாகப்பு, கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை, சு. வண்ணமணி, தனபாலன், க.இரா சரத்தினம், ஜெ.அம்பலவாணர், பப்சி டொமினிக், அ. மார்க்கு, தே.குயின் சைலா, நளாயினி இராசதுரை, எஸ்.என்.ஜே.மரியாம் பிள்ளை போன்ற இன்னும் பலரின் கருத்துகள் நிறைந்த ஏடாக 'கலைமுகம் மலர்ந்திருக்கின்றது.
திருமறைக்கலாமன்றத்தின் புதிய வெளியீடு 'பலிக் களம்'. இது ஒரு நாடகப் பிரதி. 20 ஆண்டுகளுக்கு முன் இந்த இசை - உரை நாடகம் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் அரங் கேறியது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட முதல் தொலைக்காட்சி (சிறுதிரைப்படம்) படமும் இதுவாகும்.
அருட்திரு. நீ. மரியசேவியர் ஆற்றல் வியத்தகு பயன்பாடு உடையது. தலைசிறந்த ஈழத்து தமிழ் நாடக நெறியாளர்களில் ஒரு வராகிய அமரர் சுஹைர் ஹமீட்கூறுகிறார். "கத்தோலிக்க குரவர்க ளில் இவ்வளவு கலையறிவு செறிந்தவர்களும் இருக்கிறார்களா?’ உண்மைதான்.
- கலைமுகம் : தினகரன் வாரமஞ்சரி Lomrñifö 21, 1993.
51

Page 28
கொழும்பு நாடகமேடை மீண்டும் சலசலப்பை ஏற்படுத்துகிறது
இந்து நாடகங்கள் மேடைக்கு வந்தன. பயணம், ஆராரோ ஆரிவரோ, முகங்கள், தோட்டத்து ராஜாக்கள், பூகம்பம். நாடக விழா நடைபெற்று முடிந்து ஒரு வாரத்திற்குப் பின்னர், திணைக் களம் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. விழாமுடிவுகளும் இம்ம லரில் அறிவிக்கப்பட்டுள்ளன. முடிவுகளைச் செய்த நடுவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. இவர்கள் யாராயிருந்தாலும் இவர்களுக்குரிய மரியாதையையும், இவர்களின் முடிவுகளைக் கண்டனம் செய்யாமலும் தன்னிச்சையாக எனது மதிப்பீடுகளைத் தெரிவிக்கின்றேன்.
நாடகம்' என்றால் என்ன என்று நான் விளங்கிக்கொண்டது ஒரு புறமிருக்க பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்ன கூறுகி றாரோ, அது முக்கியத்துவம் கொண்டதாகத்தான் இருக்கும்.
'.பார்ப்போரின் எதிர்பார்ப்பும் ஆற்றுவோரின் (ஆற்று கைத்) திறனும் சங்கமிக்கும் பொழுதுதான்நாடகம் பூரணத்துவத்தை எய்துகின்றது. முன்னர் நடந்ததை அல்லது நடந்திருக்கக் கூடியது என்பதை அல்லது நடக்கக்கூடியது 'என்பதைப் போலச் செய்தலே நாடகத்தின் (கலையின்) அடிப்படை என்பர். நடிகர் மூலமே நாட கம் வெளிப்படுகின்றது. நோக்கத் தெளிவும் செயற்பாட்டுத்திறனும் இணைகின்ற பொழுது நல்ல நாடகம் பிறக்கும்'.
女
இந்த நாடகங்களில் என்னை மிகவும் கவர்ந்த நாடகம் "தோட்டத்து ராஜாக்கள் காரணம் மற்றைய மூன்று நாடகங்களை
52

8.ങ്ങി.@ഠ്യ
விட “பயணம் போல இது ஒரிஜினல் நாடகம். தழுவல் அல்ல. தவிரவும் உடனிகழ்கால வாழ்க்கைப் போக்கையும் அரசியல் நடைமுறையையும் விமர்சன ரீதியாகப் பார்க்கிறது. நல்ல நகைச் சுவை. நல்ல வசனங்கள், சிறிய வசனங்கள், நல்ல நடிப்பு.
கே. கோவிந்தராஜ் எழுதிய இந்த நாடகத்தை, மிகத் திற மையாக அனுபவம் வாய்ந்த ஜே.பி.ரொபர்ட் நெறிப்படுத்தியி ருக்கிறார். காட்சி அமைப்பும், ஒப்பனையும் பாராட்டத்தக்கவை. இந்த நாடகத்தில் மற்றுமொரு தனிச் சிறப்பான அம்சம் மந்திரம் பூரீ முருகனின் இயல்பான நடிப்பு, குரல்வளம், பேசும் முறை, இயல்பான அங்க அசைவுகள், திட்டமிடப்படாமல் தற்செயலா கவே பாத்திரம் இயங்குவது போன்ற பிரமையை எழுப்பும் பாணி ஆகியன யாவும் பாராட்டத்தக்கவை.
அடுத்து எனக்குப் பிடித்த நாடகம் ஆராரோ ஆரிவரோ'. சிங்கள நாடகம் ஒன்றின் தமிழ் வடிவம் இது என்று கூறப்படுகி றது. எனவே இது ஒரு தழுவலாக்கம். மடுரை கிரிய விஜயரத்ன, அந்தனிஜீவா ஆகியோர் இந்தப் பணியைச் செய்திருக்கிறார்கள். ஒரு ரஷ்ய நாடகம் எட்வர்ட் ஒல்பி என்ற அமெரிக்க அபத்த'(அப் ஸெர்ட்) நாடகாசிரியர் எழுதிய ‘ஹஸீ இஸ் எஃப்ரயிட் ஒஃப் விர்ஜினியா ஊல்ஃப்’ ஆகிய நாடகங்களின் செல்வாக்கை இந்த நாடகத்தில் அவதானிக்கலாம். இந்த நாடகத்தில் சிறப்பான அம் சங்கள் அந்தனிஜீவாவின் செட்டான நெறியாள்கை, ஹெலன் குமாரியின் வித்தியாசமான வரவேற்கத்தக்க நடிப்பு, கே.கதி ர்காமத்தம்பியின் காட்சியமைப்பு, எஸ்.கருணாரத்னவின் ஒளிய மைப்பு, எம்.ஜ.எம்.லாலின் ஒப்பனை, வி.ஜ.ஜம்பு நாதனின் இசையமைப்பு எனலாம்.
இந்த நாடகத்தில் நான்கு பாத்திரங்கள். இருவர் முதிய வர்கள், இருவர் இளையவர்கள் முதுமை, தனிமை பழங்கால
53

Page 29
q«bseficio Sparrilla / losibidir lo நாட்டம், குழந்தைப்பேறுக்கான ஆர்வக்கனிவு, பயங்கொள்ளித் தனம், தற்கொலையுணர்வு, மேலீடான கணவன் மனைவி உறவு போன்ற அம்சங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. உணர்ச்சித் தலை தடுமாற்றம், மற்றொருவரின் ஆளுமையிற்புகுந்து கற்ப னையாக மற்றொருவரின் அனுபவத்தை அனுபவித்தல் போன்ற உணர்வுகள் ஹெலன்குமாரியின் சமநிலையான நடிப்பு மூலம் வெளிப்பட்டன. அவருடைய கணவரான ராஜசேகரனின் நடிப்பு அளவாக இருந்தாலும் கற்பனைச் செறிவான வெளிப்பாட்டுத் திறனை அவர் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பூரீதர் பிச் சையப்பாவும் அவர் மனைவி நிலாமதியும் மட்டுப்படுத்தாமல் மிகைப்பட நடித்தமை இந்த நாடகத்தில் பொருந்தாதவொன்று.
★
மூன்றாவதாக, என்னைக் கவர்ந்த நாடகம் 'பயணம்’ இதற்கு முக்கிய காரணம், தமிழ் மேடையில் கத்தோலிக்க சூழ லில் ஒரு குடும்பத்தின் கதை முதற் தடவையாக நிகழ்த்தப்பட் டமைதான். சமய, தார்மீக நெறிமுறைகளை உணர்த்துவிக்கும் இந்த நாடகம், தலைதடுமாறிய இந்தக் காலகட்டத்தில் வரவேற் கத்தக்க ஒன்றாகும். அதேசமயம், உடனிகழ்கால நாடகம் ஒன் றிற்கான மெருகைக் காண முடியவில்லை. பாத்திரங்கள் ஒன்றில் நல்லவர்களாக அல்லது தீயவர்களாகத் தீட்டப்படுவதனால் நம் பகத் தன்மையற்றுப்போகிறது. இது காரணமாக நாடகத்திற்குத் தேவையான 'முரண்படுநிலை இயல்பாய் அமையாமற் போய் விடுகிறது.
நல்ல நடிப்பும், நறுக்குத் தெறித்த வசனங்கள், பொருத்த மானகாட்சியமைப்பு போன்றவை அமைந்தாலும் பார்வையாளர் நாடகத்தில் லயிக்க முடியாது போயிற்று. மிகவும் மோசமான முறையில் நடந்துகொள்ளும் நரிப்புத்தியுடைய மாமனாராக ஜே.சோமசுந்தரமும், வேலையாளாக நடித்த செ.யூ.தாஹிராவும் சிறப்பாக நடித்தனர். அம்புறோஸ் பீற்றர் நடிப்பும் பாத்திரத் தன்
54

.ബി.ആഠIér
மைக்கேற்ற விதத்தில் அமைந்தது. கதை வசனம் எழுதி நெறி யாள்கை செய்த அருள் மா.இராசேந்திரன் பாராட்டத்தக்கவர்.
லூஜி பிரெண்டெல்லோவின் 'ஆசிரியரைத்தேடி ஆறு பாத்திரங்கள்’ (சிக்ஸ் கரெக்டர்ஸ் இன்சேர்ச் ஒப் என் ஒதர்) என்ற நாடகத்தைத் தழுவியதாக மலையாள மொழியிலிருந்து தமிழாக் கப்பட்ட 'முகங்கள்’ நாடகம் அமைந்திருந்தது. இரா.சுப்பிரமணி யதாஸ் கதை, வசனம், நெறியாள்கை கே.மோகன்குமார், காட்சிய மைப்பு வோல்டர் ராஜரத்தினம், ஒளியமைப்பு எம்.வி. எட்வர்ட், இவையாகவும் கச்சிதம்.
வேஷதாரித் தனங்களையும், முகங்களை மூடும் முகமூ டிகள் கிழிக்கப்படுவதையும் காட்டி நிற்கும் இந்நாடகம் நல்ல நடிப்பை வெளிக்கொணர்ந்தது. குறிப்பாக கமலழறி, மோகன்கு மார், வி.ராஜம் நெறியாள்கை செய்த கே.மோகன்குமார், எம்.எம். ஏ. லத்தீப் ஆகியோர் வெளிப்பாடு இயல்பாய் அமைந்தது.
துணிவு, ஒளிவுமறைவில்லாமை, வேண்டுமென்றே எரிச்ச லூட்டுகின்ற தன்மை, யதார்த்தம், அதிர்ச்சி போன்ற பண்புகளை இந்நாடகத்தில் காணக்கூடியதாய் இருந்தது. ஆயினும் நாடக இறு திக் கட்டங்கள் கலையை மீறி சமூகப் பிரச்சினைகள், அரசியல் சுலோகப் பிரகடனங்களுக்கு இடங்கொடுத்து விட்டன. சொல் லாமற் சொல்ல வேண்டியதை பகிரங்கமாக கலாரீதியற்ற வகை யில் சொல்லும் பொழுது அங்கு பிரசாரம் தலைதூக்கி விடுகிறது. இதுவே எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது.
இறுதியாக, "பூகம்பம் மேடையேறியது. இந்த நாடகத் தின் துண்டுப் பிரசுரமொன்றிலே பிரபல சிங்கள நாவலாசிரியர் மார்ட்டின் விக்கிரமசிங்கவின் 'பத்தேகம நாவலைத் தழுவி இந் நாடகம் எழுதப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 'பத்தேகம என்ற பெயரில் விக்கிரமசிங்க சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறாரோ நானறியேன். ஆனால் அதே பெயரில் ஆங்கில நாவலொன்று
55

Page 30
coefb Spermia Mosbadir loo சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதை நானறிவேன். லெனாட் ஊல்ப் என்ற முன்னாள் பிரிட்டிஷ் சிவில் சேர்வண்ட் இலங்கையில் பணிபுரிந்த பொழுது த விலேஜ் இன் த ஜங்கிள்" என்ற ஆங்கில நாவலை எழுதியிருந்தார். பின்னர் இந்த நாவல் "பெத்தேகம என்ற பெயரில் சிங்களத் திரைப்படமாக லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் நெறியாள்கையில் வெளிவந்தது. இது தகவல்.
எம்.உதயகுமார் மேடைக்கதை வசனம் அமைத்திருக்கி றார். துரதிர்ஷ்டவசமாக பார்வையாளர்களின் பகுத்தறியும் பாங் கைப் புறக்கணித்து விட்டு அந்தநாள் தமிழ் திரைப்படங்களைப் போல் வசனங்களைத் திரும்பத்திரும்ப எழுதியிருக்கிறார். பிரத் தியட்சமாகக் கண்ட காட்சிகளை மீண்டும் வசனங்களில் எடுத்து ரைப்பது நாடகத்தன்மையைக் கெடுக்குமல்லவா?
ஒலியமைப்பு (எ.சி.எம்.ஹ"சைன் பாறுரக்), ஒப்பனை (முத்தையா), காட்சியமைப்பு (H.சொய்ஸா மாஸ்டர்), தயாரிப்பு (கே.செல்வராஜன்) எல்லாம் பிரமாதம். ஆனால் நாடகத்தைத் தான் நாம் காணவில்லை.
கே.ஏ.ஜவாஹர், ஆர். எஸ். சிதம்பரம் போன்ற அனுபவ சாலிகளான நடிகர்களின் ஆற்றல் 'விழலுக்கிறைத்த நீராயிற்று வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு முரணான முன்னுக்குப்பின் முரண் பாடுடையதாக வசனங்களும் சம்பவங்களும் இருந்தமையால் பார்வையாளரின் பொறுமையும், நிதானமும் சோதிக்கப்பட்டன. வெறும் மேடையலங்காரமும் காட்டுக்கூச்சலும், தத்ரூபமான தந் திரக்காட்சிகளும் நாடகமாகுமோ?
கலைஞர் எம்.உதயகுமார் நெடுநாட்களாக கொழும்பு நாடகமேடையிலும், சினிமாவிலும் அனுபவப்பட்டவர். திறமை சாலி, அவருக்குள் இருக்கும் நடிப்பாற்றல் நெறிப்படுத்தப்படா மல் வெறுமனே உணர்ச்சிக் கொப்பளிப்பாக வெளிவருவதுண்டு. ஆயினும், அவர் கவனித்து ஊக்கப்படுத்தப்பட வேண்டியவர்.
56

8,ിo.goI
பூகம்பம்’ நாடகத்தைப் பொறுத்தமட்டில் அவர் நெறி யாளர் கே.செல்வராஜனின் ஆளுகைக்கேற்ற விதமாக நாட கக் கதையை எழுதினாரோ என்னவோ, ஏமாற்றமாய் போய் விட்டது.
கமலழறி, மோகன்குமார் வெவ்வேறு பாத்திரங்களை இயல் பாக நடித்துக்காட்ட முடியும் என்பதை இந்த நாடகத்தில் நிரூபித் திருக்கிறார்.
நெறியாளர் கே.செல்வராஜனின் ஆர்வமும், ஈடுபாடும் வரவேற்கத்தக்கவை. ஆனால், 'நாடகத் தன்மையுள்ள நாடகங்க ளைத் தயாரித்து அளிக்க அவர் முன்வர வேண்டும்’.
இறுதி ஆய்வில், இந்த நாடக விழா, நாடகத்துறையினர் கொழும்பில் நல்ல நாடகங்களை அடுத்தடுத்து மேடையேற்று வர் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.
- உதயம் ஒளிகதிர் (1994)
57

Page 31
தகவற் பெட்டி
தேடல் முயற்சியில் நமது சிறார்கள் அதிகம் ஈடுபட முடியாத அளவிற்கு ரியூசன், களைப்பு, கணினி விளையாட்டுக் கள் போன்றவை அவர்கள் கவனத்தை ஈர்ப்பதனால், வாசிப்புப் பழக்கம் குறைந்து போகிறது எனலாம். ஆயினும், விபரங்களைத் தேடிப் படிக்க அவகாசம் ஏற்படாதிருக்கும் பட்சத்தில் அவர்கள் நலன் கருதி எனது வாசிப்புக் காரணமாக நான் திரட்டிய கலை, இலக்கியச் செய்திகள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும் புகிறேன். இவற்றைப் படிக்க நேரும் ஏனையோரும் முற்குறிப் பிடப்பட்ட மாணவர்களும் ஏதோ விதத்தில் பயனடையக்கூடும் என்று நம்புகிறேன்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன் நான் தயாரித்த குறிப் புப் புத்தகத்தில் இவை இடம்பெற்றன.
சோனல் ஷா என்ற இந்தியப் பெண் ஜனாதிபதி ஒபாமா வின் ஆலோசகர்களில் ஒருவர்.
大 சந்திரசேகரனின் புதல்வி அணித்தா உதிப் அமெரிக்காவிலே திரைப்படத்துறையில் பயிற்சி பெற்றவர். "I am looking for a Bride' என்ற ஆங்கிலப் படத்தை நெறிப்படுத்தியிருக்கி றாராம். 'Gulivers Travel" என்ற படத்தையும் எடுத்திருக்கி றாராம். இப்பொழுது குளிர் என்ற தமிழ்ப் படத்தை எடுத் திருக்கிறார்.
* ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்’ என்ற சிறுகதையைத் தழுவி, சசி என்பவர் பூ பூக்கும் ஓசை' என்ற படத்தை எடுத்திருக்கிறார்.
★ அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரையில் ஓர் உரை யாடல்: "அப்படி மரியாதையாய் சிலோனுக்குப் போய்
58

(8a.oтво банокопрейт வந்தேன் என்று சொல்லுங்களேன். இலங்கை இப்போது எங்கே ஸார் இருக்கிறது’ என்றார்.
ஆபிரிக்க, அமெரிக்க முஸ்லிமான மல்கம் எக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்ட போராளி. 1965 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி நியூயோர்க்கில் அவர் சுட்டுக்கொல் லப்பட்டார்.
உடம்பில் சீனியைக் குறைக்கக் கூடியது நாவல் பழரசம்.
ஜெமினி கணேஷனின் மகள்களுள் ஒருவர் டொக்டர் கமலா செல்வராஜ்.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கர்ணமோட்சம்” என்ற கதை யைத் தழுவி முரளி மனோஹர் நெறிப்படுத்திய குறும்ப டம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
பூனம் பஜ்வா என்ற நடிகையின் தகப்பன் ஒரு பஞ்சாபி. தாய் தமிழ். இவருடைய அபிப்பிராயத்தில் அசின், ப்ரியா மணி, பார்வதி ஆகியோர் நல்ல நடிகைகள்.
பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்டீபன் தேவஸி சிறந்த பியானோ வாத்தியக்காரர். ஹரிஹரன் குழுவினருடன் வெளிநாடுக ளில் பியானோ வாசித்திருக்கிறார். மஜா, தம்பி, மொழி, அபியும் நானும் போன்ற படங்களில் இவரின் பியானோ இசையைக் கேட்கலாம்.
Playboy சஞ்சிகையின் ஆசிரியராகவிருந்த ஹியூஹொப்னர் தமது 85ஆவது வயதில் இளைப்பாறி தனது சுயசரிதையை வெளியிட்டிருக்கிறார்.
கி.ராஜநாரயணன் எழுதிய 'கதவு என்ற கதை பற்றி அதிகம் பேசப்படுகிறது.
Life is Beautiful 6T6ip Lul gigs air gaoudisgog,60)u up 616i தமிழில் தந்திருக்கிறார்.
59

Page 32
qbasefib Sportua / losúbadir lo
女
திருஞானம், திருநங்கைகள் பற்றிய ஆவணவக் குறும்படத் தைத் தந்திருக்கிறார்.
சுரேஷ் கிருஷ்ணா என்ற நெறியாளர் சத்யா' என்ற படத் திலிருந்து இருவரை 40 படங்களை நெறிப்படுத்தியிருக்கி றார். சினிமா கிரிக்கெட் மாதிரி. எல்லோர் மனநிலையும் ஒத்துழைத்தால்தான் சிக்ஸர் சாத்தியம் என்கிறார்.
Satilite epGobg5Tai Cellphone Signal LIf Döspl'_G)563
றன.
Document Conversion, Image Conversion, Medical Transpiration, Clerical Work, Web Page 9 (56 indisib Gustairp வேலைகளை வெளிநாட்டு நிறுவனங்கள் Onlineஸிலேயே முடித்துத் தரும் Orderகள் கொடுக்கின்றன.
Alfred Keynsey என்பவர்தான் உலகில் முதன் முதலில் செக்ஸ் செயற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தவர்.
உலக அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற பார்வதி ஒரு மலையாளப் பெண்.
தங்கர்ப்பச்சான் 15 வருடங்களாக எழுதி முடித்துள்ள நாவ லின் பெயர் 'எமன்'.
இந்தியாவில் Re-mix தொடக்கி வைத்தவர் லெஸ்லி (Colonial Cousins)
ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா செளந்திரராஜன், ரமணிச்சந்திரன் போன்றவர்கள் தமிழ்நாட் டில் ஜனரஞ்சக எழுத்தாளர்கள். அவர்களுடைய படைப்பு கள் "Thamil Pulp Fiction' என்ற பெயரில் வெளியாகியிருக் கின்றன. காவேரி, ரஷ்மிருத் தேவதாசன் ஆகிய இருவரும் இந்த வெளியீட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
- மல்லிகை : மே 2011
60

கொழும்புத் தமிழ்ப் பெண்களின்
ஒவியக்கண்காட்சி
கொழும்பில் வாழும் சில இளம் பெண்கள் திரு. கெளஸிகன் நடத்தும் ஓவியப் பயிற்சிக்கல்லூரியின் மாணவிகள். ஓவியக் கலை ஆசிரியர் கெளஸிகன், நாடறிந்த நாடகாசிரியரும் (குறிப்பாக வானொலி நாடகங்கள்) சிறந்த சிறுகதை ஆசிரியரு மான அமரர் என்.எஸ்.எம்.ராமையாவின் புதல்வராவர்.
நவீனத்துவமும், இயற்பண்பும் கொண்ட ஓவியங்களை இவரும், இவருடைய துணைவியாரும், ஆற்றல் மிகுந்த இளம் பெண்களுக்கும் (இவர்களுள் ஒருவர் சிங்களப்பெண்) இளைஞர் களுக்கும் கற்றுத் தருகின்றனர்.
குடத்திலிட்ட விளக்காய் இருந்துவரும் இந்த இளைஞர்க ளின் கவினாற்றலை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகை யில் ஓர் ஓவியக் கண்காட்சி பெப்ரவரி மாதம் கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்டபத்தில் இடம்பெற்றது.
அத்தகையதொரு ஓவியக் கலைக்களரியில் தமிழ்மக்களின் ஓவியக்களம் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. பிறமொழி பேசுவோரும் நமது இளம் பராயத்தினரின் ஓவியச் சித்திரிப்புக ளைக் கண்டு வியப்புறுவதற்கு இது வாய்ப்பாய் அமைந்தது.
இவ் ஓவியங்களின் தனிச்சிறப்புகளை கலாரீதியாகத் திற னாய்வு செய்யும் பக்குவம் எனக்கில்லை. ஆயினும் காட்சிகளைக் கண்டு பரவசமுற்றேன்.
பல கலைகளிலும் இயல்பாகவே ஈடுபாடுடையவரும் கவிஞருமான நண்பர் மேமன்கவி, அக்கண்காட்சியின்போது உற்
61

Page 33
qboeficio SDexmilia / losúbdito சாகமாக விளக்கம் அளித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஊக்கம் அளித்தமை பாராட்டத்தக்கது.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஒவியர்களும், கொழும்பு சேகர் போன்றோரும் அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளைக் கொழும்பில்
நடத்திவருவதை நாம் பாராட்டவே வேண்டும்.
- மல்லிகை
62

"இன்ஃபர்மேஷன் சூப்பர் ஹைவே" வந்துவிட்டது
நவீன தொழில்நுட்பவியல் ஊடகத்துறைக்கு அளித்துள்ள பிரமிக்கத்தக்க, பிரமாண்டமானநுட்ப முறையைInformation Super Highway Fast Lane என்கிறார்கள். இதனை எவ்வாறு தமிழில் சொல்வது? இத்தொடரில் இடம்பெறும் ஆங்கிலச் சொற்களை வெறுமனே தமிழில் பெயர்த்துத் தந்தால் போதுமானதா? அல் லது பிரத்தியேக அர்த்தப் பின்னணியில் பொருள் கொள்வதா?
முதலில் நேரடியாக மொழிபெயர்த்துப் பார்ப்போம். தக வல் மிகநுட்ப நெடுஞ்சாலைத்துரித ஒழுங்கை, முதலில் படிக்கும் பொழுது கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருக்கிறது. ஆனால், புதுப்புதுப் பிரயோகங்கள் தொடக்கத்தில் அப்படித்தானிருப்பது இயல்பு. பின்னர், புழக்கத்தில் வரும்போது ஏற்றுக்கொள்ளப்பட் டுவிடும். உதாரணமாக Open University திறந்த பல்கலைக்கழகம் என்று சரளமாகக் குறிப்பிடப்படுகிறது.
இனி, எடுத்துக்கொண்ட பொருளுக்கு வருவோம். மிக நுட்பமான தகவல் நெடுஞ்சாலை (Information Super Highway) என்று எதனை அழைக்கிறார்கள்? நார்ப்பொருள் இழையினா லான கட்புலச் செப்புத் தொலைபேசிக் கம்பிகளை (Fibre Optic and Copper Telephone Lines) Luugirl Giggllb Ligu Ggirlfai) நுட்பவியலே அவ்வாறு அழைக்கப்படுகின்றது.
இந்தத் தொழில் நுட்பவியலின் ஒரு பரிமாணமாக, பின் னிய செயல் விளைவை ஏற்படுத்தும் தொலைக்காட்சி முறை (Interactive Television) அமைகிறது. இந்த உயர் தொழில்நுட்ப முறை வரலாற்றிலே, இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியிலுள்ள கெஸ்கிரேவ் என்ற கிராமம் பெயர்பெற்றுள்ளது.
Interactive Television - இடையில் பின்னிய தொலைக்
63

Page 34
qosefo Sparrma vosoadir Foo காட்சிமுறையின்முதலாவது உலகப் பரீட்சார்த்த நடவடிக்கையை அங்கு ஆரம்பித்துள்ளது. இதன்படி பார்வையாளர்கள் பல்வேறு வகையான திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக ளையும் கண்டுகளிக்கலாம். அது மாத்திரமல்ல, தமது தொலைக் காட்சிப் பெட்டிகளூடாகப் பல கருமங்களையும் ஆற்றமுடியும்.
மத்திய தரவு வங்கியிலிருந்து முக்கியமான சில திரைப் படங்களைச் சுமார் 400 மணித்தியாலங்கள் வரை, கேட்டவுட னேயே காணக்கூடிய வீடியோக்களை (Video on Demand) பிரி விலிருந்து கோரி பார்த்து மகிழலாம். பார்வையாளர்கள் தமது தொலைதுார இயக்கக் கருவி (Remote Control) மூலம் இக்கோரிக் கைகளை விடுக்கலாம்.
தமது வீடியோ ஒளிப்பேழைகளை தாம் விரும்பியவாறு Fast Forward (துரிதமாக முன்னுக்குள்ள காட்சிகளைப் பார்க்க எத்தனித்தல்) Re-winding (பின்னோக்கிப் பார்க்க எத்தனித்தல்) போன்றவற்றைச் செய்வது போல, இதன் மூலமும் பார்வை யாளர்கள்தாம் விரும்பிய படிமங்களை (Images) நிறுத்தி, நிறுத்தி நெறிப்படுத்த முடியும்.
இவ்விதம் ஊடகத்துறை முன்னேற்றங்கண்டு வருகையில் தொடர்பு முறைமை மிகமிக எளிதாகச் செயற்பட்டு வருகிறது. யாவரும் ஒரே சமயத்தில் பலதையும் அறியும் வண்ணம் வகை செய்யப்படுகிறது.
Asynchronous Transfer Mode (ATM) GIGOT LIG) b G5ITLSai) நுட்ப முறைதான் பல்லின ஊடக (Multi Media) விளக்கமாக egyGoldulib. Information Super Highwayu96öT elpGung5TJLb g)ig5 (up 60psi 3600Titius, Gol Teleconferencing Video on Demand, Telecommuting, Video Phones Electronic Newspapers Gustairp செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலகம் போகிற போக்கில் இந்த வசதி நலன்கள் யாவும் நமது நாட்டிற்கு வருவதில் அதிககாலம் எடுக்காது.
- வீரகேசரி : 01.01.1995
64

யாழ்ப்பாணச் சமுதாயத்தின்
முன்னைய தோற்றம்
ஆங்கிலத்திலொரு நாவல்
தனது அன்பிற்குரிய மருமகள் ஒருவரின் தூண்டுதலி னால், A.C.Barr குமாரகுலசிங்கி என்ற பெரியவர் முதலிலே Tale of Three Loves' என்ற நாவலை எழுதியிருந்தார். அம்மருமகளின் நினைவாகவும், அவருக்கு அர்ப்பணிக்கும் வகையிலும் இந்நாவ லாசிரியர் நன்றாக எழுதப்பட்ட சிறுகதையொன்றையும் ஆங்கி லத்தில் எழுதியிருந்தார். அதன் பெயர் The Late Letter'.
உடநிகழ்கால ஆங்கிலமொழி நடையில் இந்த எழுத்தாள ரின் படைப்புகள் இருக்கின்றமையால் உடனடியாகவே அவர் தமது படைப்புகள் மூலம் கூறவருவதை நாம் எளிதில் புரிந்து கொள்கிறோம். ஆயினும் அவர் எழுதிய நாவல் அவ்வளவு தூரம் இலகுவான நடை கொண்டதாக அமையவில்லை எனலாம்.
A Flower of the Field 67GöIp gyig5 (5/TG)16ó)Gij Gl DGGv (g5g5) பிட்ட சிறுகதையும் சேர்க்கப்பட்டது காரணமாக இவ்விரு படைப் புகளின் எழுத்து நடையை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
குறிப்பிட்ட அந்தச் சிறுகதையின் ஆரம்பம் இவ்வாறு அமைகிறது:
"Her name was Prudence. She was neither a prude nor a
dunce. But yet Shelton who had known her from the time she was a toddler once taunted her by calling her Prude Deuse. "I am not
65

Page 35
gebasereb 55mpeormulea / Ko45ůbsdir foop
deuse, you are dunce she retorted, stamped her foot and left him standing amazed at the quickness of her wit and temper'.
That was the beginnig of their lasting affection and respect for each other which was to built them inseparably for the rest of their lives'.
இயல்பான நடையில் கதை சொல்லப்படுவதனாலும், உளமார்ந்த அனுபவத்தைப் பரிவர்த்தனை செய்வதில் வெற்றி பெறுவதனாலும், இக்கதையை நான் பெரிதும் விரும்பினேன்.
இந்த எழுத்தாளரின் நாவலுக்கு வருமுன்னர் சில செய் திகளை வாசகருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது நாட்டைச் சார்ந்த ஒரு சிலர் ஆங்கில மொழியில் புனைகதை களை எழுதியிருக்கிறார்கள் என்ற விஷயம் நம்மில் பலர் அறி யாததொன்றாக இருக்கக்கூடும். ஆயினும் இந்நாட்டுத் தமிழ் மக்களின் வாழ்க்கைக் கோலங்களை அத்தகைய புனைகதைகள் சித்திரிக்கின்றன என்று கூற முடியாதிருக்கின்றது.
நம்மில் சிலருக்குத் தமிழ்ப்பெயர்கள் உண்டாயினும் அவர் களுள் பலருக்குத் தமிழ் மொழியில் பேசவோ எழுதவோ முடி யாத நிலையொன்று இருந்தது.
DailyNews நாளிதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த S.J.K Crowther, அழகு சுப்பிரமணியம் (இங்கிலாந்தில் பரிஸ்டரா கப் பணிபுரிந்தவர்), சி.வி.வேலுப்பிள்ளை (1947 பாராளுமன் றத்தில் உறுப்பினராகவும் தொழிற்சங்கவாதியாகவும், பின்னர் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியவர்), ராஜா ப்ரொக்டர் (இலங்கை கடற்படையில் பணிபுரிந்தவர்), ஏ.வின்சன்ட் துரை ராஜா போன்ற இன்னும் சிலர் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் களாவர். இப்பொழுது வியாம் செல்லத்துரை (பாதி தமிழர்), ஆங்கிலத்தில் நாடகங்கள் எழுதும் அரசநாயகம் (இவர் பிரபல கவிஞரும், எழுத்தாளருமான ஜீன் அரசநாயகத்தின் கணவரா
66

.ീ.gാIടr
வார்), Guy அமிர்தநாயகம், அவருடைய புதல்வர் (அமெரிக்க ராஜதந்திரி), ப்ரையன் ஜெகநாதன் (பேராசிரியர்) போன்றவர்கள் ஆங்கிலத்தில் புனைகதை, கவிதை, நாடகம் போன்றவற்றை எழு தியவராவர்.
தமிழ்ச் சமூகத்துடன் குடும்ப உறவு கொண்ட ஆனால் தமி ழர்கள் அல்லாத ஜீன் (சொலமன்ஸ்) அரசநாயகம் என்ற பறங்கி யர் போன்றவர்களும் இந்நாட்டுத் தமிழர் வாழ்வியல்களின் சில பண்புகளை மையமாகத் தீட்டி படைப்புகளைத் தந்துள்ளனர். ஜெகதீஸ்வரி நாகேந்திரன் கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதுப வர். பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, பத்மநாதன், சண் முகதாஸ் போன்றவர்களும், செல்வா கனகநாயகம், ஏ.ஜே.கனக ரத்னா, சுரேஷ், கே.எஸ்.சிவகுமாரன் போன்றவர்களும் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.
A.C.Barr குமாரகுலசிங்கி பற்றிய விபரங்கள் தெரிய வில்லை. ஆயினும் சட்டத்துறையில் Barr குமாரகுலசிங்கி குடும் பத்தினர் பிரபல்யமானவர்கள்.
இந்த நாவல் 19ஆம் நூற்றாண்டின் திருப்புமுனையின் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாதி நிலபிரபுத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்க்கைப் போக்குகளின் சிலவற்றைச் சித்திரிக்கிறது. அக்காலப்பகுதியில் தான் அமெரிக்க மிஷனரியைச் சேர்ந்தவர்கள் வடக்கிற்குச் சென்று கல்வித்துறையில் பங்களிப்பைச் செய்தது டன், மதமாற்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
அக்காலப்பகுதியிலே வாழ்ந்த பழமைபோற்றும் யாழ்ப் பாண சமூகத்தினரின் சிந்தனைப் போக்கைத் தமது செல்வாக் குக்கு உட்படுத்திய பிறநாட்டவரின் செயல்களின் பதிவாக இந்த நாவல் உருப்பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் நாவல் சுவாரஸ்ய மாக இருக்கிறது.
67

Page 36
egobarbeföb £5 pecomilia / ko45ŭdobabdiT foro
யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையை ஓரளவு சித்திரிக்கும்
முதலாவது ஆங்கில நாவலாக இது இருப்பதனால் 'வயலில் ஒரு
LDGyi' (A Flower of the Field) (updi Suggs/61 lb Gup15.pg/.
இருந்தபோதிலும் கலைத்துவ ரீதியாக இந்நாவல் குறை பாடுடையதாக இருக்கிறது. தற்கால நாவல் உத்திமுறைகளின்றி, தெளிவான பளிங்கு போன்ற நடையுமின்றி அது எழுதப்பட்டி ருப்பது குறைபாடுடையதுதான். வாசகரின் கவனம் குறைவதற் கான காரணங்களுள் ஒன்று ஆசிரியரின் ஆங்கில எழுத்து நடை விக்டோரியா காலத்து ஆங்கில மொழி நடையில் எழுதப்பட்டி ருப்பதுதான்.
நாவல் அக்காலத்து வாழ்க்கையைச் சித்திரிப்பதனால், நடையும் அக்காலத்துக்குரியதாக இருப்பதில் தப்பில்லை என்று எவராவது விவாதிக்கலாம். அக்கால சம்பாஷணை கூட ‘புத்தக ஆங்கிலமாக’ (Bookish) இருப்பது பெரிய குறைபாடு என்று கூற முடியாது எனவும் விவாதிக்கலாம். ஆயினும் இன்றைய வாசகர்க ளுக்கு இன்றைய ஆங்கில நடையில் எழுத்தாளர் எழுதினால்தான் பயனுண்டு என்பதையும் நாம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய வாசகர்களின் மனப்போக்கு, உணர்திறன், படி மப்புரிதல் போன்றவை வெகுதூரம் மாற்றத்திற்குள்ளாகிவிட் டன. இந்நாட்களில் புத்தக மொழிப் பிரயோகம் கைவிடப்பட் டுள்ளது. ஆங்கில மொழியும் பல மாற்றத்திற்குட்பட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளர் ஒருவர் ஈழத்து வாழ்நிலையை (அந்தக் காலத் திற்குரியதென்றாலும் கூட) படம் பிடிக்கும் பொழுது இன்றைய, ஈழத்துக்குரிய ஆங்கில உரைநடையிலும், உரையாடல் சார்ந்த வகையிலும் எழுதுவதே சிறப்பு. தவிரவும், இப்பொழுது ஆங்கில இலக்கியம் என்ற மகுடம் போய், பல்வேறு நாடுகளிலும் ஆங்கி லப் பிரயோக மரபுக்கேற்ப இலக்கியம் படைக்கப்படுகிறது. Va
68

(Вь.6яdo.àамеропШеѓт
rieties ofEnglish என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்று.
அந்த விதத்தில் பார்க்கும் பொழுது 'வயலில் ஒரு மலர்' (AFlower in the Field) என்ற இந்த நல்ல கதை கொண்ட நாவல், கால முரண்கொண்ட (Anachronistic) ஆங்கில நடையில் எழுதப் பட்டிருப்பது வருந்தத்தக்கதே. அக்காலத்தில் அத்தகைய நடை பெரிதும் விரும்பத்தக்கதாய் இருந்தது உண்மையே.
இந்த நாவல் கூறும் கதையின் அடிநாதம் (Theme) மிகவும் முற்போக்கானதாக இருப்பது நாவலாசிரியரின் பரந்த மனப்பான் மையைக் காட்டுகிறது. யாழ்ப்பாண அக்காலச் சாதியமைப்பை அவர் ஆதரிக்கவில்லை என்பது வெளிப்படை. அடக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, கீழே மிதிக்கப்பட்ட சமூகத்தினரின் பங்களிப்புக ளைக் கதையில் சித்திரிப்பது பாராட்டத்தக்கது.
இந்த நாவலில் அமெரிக்கப் பாத்திரங்களும் வருகின்றனர். அவர்கள் தொடர்பாக மெல்லிய இழிவரல் கதையில் பின்னப் பட்டுள்ளது. யாழ்ப்பாண இளைஞன் ஒருவன் கிறிஸ்தவ மதத் திற்கு மதமாற்றஞ் செய்யப்படுகிறான். அவனுக்கும் அமெரிக்கப் பெண்ணொருத்திக்கும் இடையே காதல் மலர்வது இயற்கையாய் சித்திரிக்கப்படுகிறது.
இந்த நாவலில் 35 அதிகாரங்கள் உள்ளன. கடைசி அத்தி யாயம் 100 வருடங்களுக்குப் பின்னான நிகழ்ச்சிகளுடன் முடிவ டைகிறது. அப்பொழுது தான் தெல்லிப்பளைக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளைக்கார மிஷனரி மார் அதற்கு முன் பல தசாப்தங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணத் தில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இந்த நாவலின் தலைப்பு எதனை உணர்த்துகிறது என்று பார்த்தால்
யாழ்ப்பாணத்திலிருந்த நிலப் பிரபுத்துவ ரீதியான குடும்
69

Page 37
qobsedio Spearma / losúpedir lo பங்கள் அனைத்துலக இரத்தமுடையவர்களாக மாறிவிட்டனர் 6Taipnigylb, ("now mingled with international blood of no great
fame or reputation as the grass in the field'' 6Taitug, gy,Sri tuff.gif கூற்று). அந்த மாற்றம் வயலின் புல்லுக்குச் சமமாகாது என்ப தையை ஆசிரியர் கூறவருகிறார். அதாவது முற்றத்து மல்லிகை மணக்கவே செய்யும் என்பது பொருள் என நாம் கொள்ளலாம். பழைய அமைப்பில் மாற்றம் ஏற்பட்டதை நாவலாசிரியர் வர வேற்கிறார்.
இந்தப் புனைகதையில், சரிதைப் பாங்கான, சுயசரிதைப் பாங்கான கட்டுமானம் இருப்பதையும் நாம் கண்டு கொள்கி றோம். அந்த விதத்தில் பார்க்கும் பொழுது இந்த நாவல் பல விப ரங்களடங்கிய ஆதார நூல்களில் (Source Book) ஒன்றாகக் கூட கருத இடமுண்டு.
இக் கதையின் கதைப் பின்னலை நான் எடுத்துரைக்க விரும் பவில்லை. நாவலின் உறுதிப் பண்புகளையும் விளக்கவில்லை. அப்படிச் செய்தால், நாவலில் காணப்படும் ஒப்பீட்டளவிலான புதுமையை நீங்கள் கற்பனை செய்ய முடியாது போய்விடும். எனவே இந்த நாவல் உங்கள் கையில் பட்டால் ஒருமுறை வாசித் துப் பாருங்கள். என்னிடமிருந்த பிரதியும் காணாமற் போய்விட்
-gl.
இந்த நாவல் பற்றி Geanings என்ற பத்தியிலே (Daily News) 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி எழுதியிருந் தேன். அதன் அடிப்படையில் இந்த அறிமுகத்தைத் தந்துள்ளேன்.
- தினக்குரல் : ஜூலை 2011
70

"தென்றலின் வேகம்" மற்றுமோர்
இஸ்லாமியப் பெண்மணியின்
எழுத்தாற்றல்
இக்கட்டுரை எனது இரசனையின் வெளிப்பாடு. எடுத்துக் கொண்ட நூல் - கவிதை சம்பந்தமானது. ‘தென்றலின் வேகம்" என்ற தொகுப்பைத் தென்னிலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி தந்துள்ளார். அவர் பெயர் வெலிகம ரிம்ஸா முஹம் மத். அவர் எழுத்தாளரிடையேயும் வாசகர்கள் மத்தியிலும் ஏற்க னவே பாராட்டைப் பெற்றவர். மின்னியக்கச் சாதனங்களும் அவ ருக்குக் கை கொடுக்கின்றன.
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை வெளி யிட்ட இந்த 19ஆவது நூலிலே 94 பக்கங்களுக்குள் கவிதை சார்ந்த 64 மனப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
இத்தொகுதி மூலமே ரிம்ஸாவின் எழுத்துத் திறமையை முதற்தடவையாக நான் வாசிக்க நேர்ந்தது. அண்மையிலே வசந்தி தயாபரன், ஏ.இக்பால், வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந் தன், மேமன்கவி, அந்தனி ஜீவா, இப்னு அஸ"மத் போன்றவர் கள் ஆசிரியையின் கவிதா ஆற்றலைத் திறனாய்வுக் கண்கொண்டு பதிவு செய்தனர்.
ஆய்வாளர், கவிஞர், விமர்சகர் ஏ.இக்பால் கண்டவை இவை:
'கவிதை, அறியாமையிலிருந்து அறிவுக்குச் செல்லும் வல் லமைக்குரியது, மதிப்புமிக்க அனுபவத்திற்குக் கவிதை உருவம்
71

Page 38
qcosofleb Spomia / losúbdito கொடுக்கும். அனுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவி தைத் தொகுதி தென்படுகிறது. மனிதத்துவ இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன. சாமான்யமாக உணர்த்துவதிலும் பார்க்க, உணர்ச்சி பூர்வமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ள கவிதைகள் உண்மையில் அதிர்வூட்டி நிற்கின்றன’.
இதனை நானும் ஏற்றுக் கொள்வதனால், மீண்டும் இதே கருத்துக்களை என் மொழியில் சொல்வதை இங்கு தவிர்த்துள் ளேன்.
கிழக்கிலங்கை இஸ்லாமியரும், யாழ்ப்பாண நகரின் இஸ் லாமியரும் தமிழைத் தம் வசமாக்கி தனித்துவமான படைப்பு களை இப்பொழுது தந்து கொண்டிருப்பதில் எமக்கு ஆச்சரியம் ஏதுமிதில்லை. ஆயினும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் வெலி கம என்ற ஊரைச் சேர்ந்த ரிம்ஸா முகம்மது தமிழை ஆள்வது எனக்கு வியப்பைத் தந்தது.
'எண்ணங்கள் வண்ணமயமாகும் நேரம்’ என்ற தலைப்பில் அவர் எழுதும் பாங்கைப் பாருங்கள்.
‘என்னுள் உற்பத்தியாகி தினமும் வதைத்துக்கொண்டிருந்த சோகத் தீ, நானறியாமலேயே ஒரு சூரியனாய் மாறி என் எழுத்துக்கு வெளிச்சம் பரப்பிய போது தான் என்னை உணர்ந்தேன்’
g)560607 Self Realization gyGüGvg| Felt Experience G1607 லாம்.
இவ்விதமான உணர்வே போலிக்கும் உண்மைக்கும் இடை யில் உள்ள வித்தியாசம் என்போம்.
72

СBaѣеяedo.deыфиопШeóт
இத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளுள் நான் முதலிற் படித்தது 'எனக்குள் உறங்கும் நான்’ என்ற எழுத்து வடிவம். இத னைப் படித்ததும் இது ஒரு சுய இரங்கற்பா என்றுதான் பட்டது.
'ஓயாத போராட்டத்தின் மத்தியில் உள்ளம் சோர்ந்து உருக் குலைகிறேன். இது எனக்குள் உறங்கும் நான்’ என்று தனது அனு பவத்தைக் கூறுகிறார் கவிஞர். விரகதாபம் உணர்த்துவிக்கப்படுகி
[Dჭნl.
‘புதுக்கவிதை” என்ற பெயரில் வழமையாகப் பலர் எழு தும் செயற்கைத் தன்மையான கேள்விகளும், சூளுரைத்தல்களும் போன்று நமது கவிஞரும் எழுதிவிடுவாரோ என்ற எனது எதிர் பார்ப்பை நிறைவேற்றாமல், அமைதி கண்டு யதார்த்த அனுப வத்தை அவர் பதிவு செய்வது எனக்குத் திருப்தியளித்தது.
சமூகச் சித்திரிப்புகளையும், சமூகப் பிரக்ஞைகளையும் விரும்பும் அதேவேளையில், அக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளை நான் அதிகம் விரும்புவதற்கான காரணம்: அவை புறக்கணிக்கப்பட்ட நிலையில் இந்நாட்டிலிருப்பதுதான்.
நுண்ணிய உணர்வுகளைக் கவிதை மொழியில் எழுதுப வற்றைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் (Lyrics) என்பர். நமது பழம் தமிழ் இலக்கிய மரபில் அகமும் புறமும் ஒருங்கே சம மதிப்பைப் பெற்று வந்தன. அகம் மனித உணர்வுகள், மனிதாயம் என்றால் புறம் போரையும், வீரத்தையும் செப்பி அதில் அழகு காண்பர் சிலர். ஆனால், அதில் அழகியல் இல்லை என்பர் நமது மார்க்சிய அறிஞர்கள் கைலாசபதியும், முருகையனும், செ.கணேசலிங்க னும், அவர்களுடைய நூல்களை நமது இளைஞர்களும் யுவதிக ளும் படித்துப் பார்க்கவேண்டும்.
1970களில் புற்றீசல்கள் போல் வளர்ந்து, 40 வருடங்களுக் குப் பின்னரும் 'கவிதை” என்ற பெயரில் கேள்விகளையும் வீரப் பிரதாபம் போன்ற சூளுரைகளையும் உள்ளடக்கிய நூல்களைச்
73

Page 39
qgbabesfeb 25 DecoTTilia / Ko3ůúbabddir &Floro சிலர் வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் மத்தியிலும் புற நடையாக சில நல்ல கவிஞர்கள் தோன்றியிருப்பதையும் நாம் மறுக்கவில்லை.
ரிம்ஸாவின் 'மெளனம் பேசியது” என்ற ஆக்கம் வாலி போன்றோர் எழுதும் சினிமாப் பாடல் போல இருந்தாலும், புதுப் புனைவான மொழியை அவர் கையாண்டிருந்தால் ‘கவிதை” என்ற தரத்திற்கு அவர் ஆக்கம் உயர்ந்திருக்கும். இருந்தபோதிலும்,
'அன்று சாளரத்தினூடே உன் பூமுகம் கண்டேன். ஒளிகண்ட தாமரையாய் உவகை கொண்டேன்’
என்ற வரிகளில் கவித்துவ வெளிப்பாட்டைக் காணக்கூடிய தாய் இருக்கிறது.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கச் சிறப்பு களை வசந்தி தயாபரன் போன்ற திறனாய்வாளர்கள் விளக்கிக் கூறியுள்ளனர். எனவே அத்தகைய விமர்சகர்களின் கருத்துக்களு டன், எனக்குப்பட்ட வரிகள் சிலவற்றையும் இங்கு குறிப்பிட
விரும்புகிறேன்.
நிலவு தூங்கும் நள்ளிரவில் (12), நிழலாட்டமாய் நெரு டுமே (14), தேள் கொட்டிய மந்தியாக என்னில் தினவெடுத்து துள்ளியோடும் தேவையற்ற நினைவுகளின் வேதனைகள் (15). பொற்பும் பொறுமையும் மெளனித்துப் போன நிலையுமே மன துக்கு இதமளிக்கின்றன (17), வசந்தம் வாசற்படிக்கு வருமென்று வாய் உராவாமல் கடினமாக உழைத்து காலடிக்கு வரவழை (19), தேசுலாவும் வீதியிலே - தினம் தூது செல்லும் தென்றலே. (34), வித்தகக் கோட்டம் அது (36), மறைந்திருந்து நான் நீ மறையும் வரை பார்ப்பது. உனக்கெங்கே தெரியப் போகிறது (38), இதயப் பாலையில் நீரூற்றிப் போனவனே (43), உடைந்த கண்ணாடியாய்
74

(Baъ.отdo.dамеbопшеöт மாறி உள்ளத்தைக் கீறிச் செல்கிறது தெரியாமல் நீ வீசிச் செல்லும் பார்வைகள் (44).
குமுறும் அலைகளை உள்ளடக்கி அமைதி காக்கும் கடல் போலவே, என் மனது தவித்ததும் உண்மைதான் (46), ஒரக் கண் பார்வையால் ஒருபோதும் என்னை நீ ஓரங்கட்டாதே (49), ஆரவா ரமில்லாமல் அடிமனதில் அமிசடக்கமாய் உறங்கும் உன் நினை வும் கனவும் ஒருகாலும் அழியாது அன்பே (56).
மலரும் தென்றலும் உரையாடும் மெளனமொழியாக மனத்துயரங்கள் கனத்து கண் வழியே கசியும், முட்டைக் கோதாய் உடைந்து நொருங்கிய இதயத்தின் செதில்கள் நெஞ்சச் சுவரில் ஒட்டியவாறு நினைவுத் துளையால் தோரணங்கட்டும் (69).
ஆன்ம உறவின் உருக்கத்தால் ஊற்றெடுக்கும் ஓர் நீரூற்று - அன்பு (90).
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளமை ஆணோ, பெண்ணோநிறைவுரை காதல் / காம உணர்வுகளை வெளிப்படுத் துவன. இவை ரிம்ஸாவின் ஆரம்ப கால ‘கவிதை முயற்சிகளை வெளிப்படுத்துவன. படிப்பதற்கு இதமாக இருப்பது உள்ளடக் கம்தான் என்பதைவிட, கவிஞரின் சொற் தேர்வே முக்கியத்துவம் பெறுகிறது. அந்த விதத்தில் கூரிய சமூகப் பார்வையுடன் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாங்கில் அவர் ஆழமான கவிதை களை இனி எழுதுவார் என்ற நம்பிக்கையை நமக்கூட்டுவன.
பல்கலைத் தேர்ச்சி பெற்ற பூரீதர் பிச்சையப்பாவின் கலை ஒவியங்கள் தொகுப்புக்கு மேலும் தகைமையைத் தருகின்றன.
- மல்லிகை: ஏப்ரல் 2010
75

Page 40
தர்மசேன பத்திராஜாவின்
புதிய சிங்களத் திரைப்படம் தமிழ் / இஸ்லாமிய மக்களின் பரிதவிப்புப் பதிவுச் சித்திரம்
கிடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் தமிழ் மக்களும், இஸ்லாமிய மக்களும் சொல்லொணா பரிதவிப்புக ளையும், இன்னல்களையும், இழப்புகளையும் (உயிர், பொருள்) அங்கலாய்ப்புகளையும், திசையறியா இக்கட்டுகளையும், எதிர் கொண்டு வருகின்றனர் என்பது உலகறிந்த செய்தி.
இனவாதம் சம்பந்தப்பட்ட இந்த அவிழ்க்க முடியாமல் செயற்படும் சிக்கல்களை எதிர்கொண்டு விடிவுகாண சம்பந்தப் பட்ட மூவினத்தினராலும் பற்பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரு வதை நாமறிவோம்.
அத்தகைய முயற்சிகளில் ஒரு கூறாக திரைப்படம் மூலம் நிலைமையை வெளிப்படுத்தும் பணியும் அமைகின்றது. இந்த திரைப்படம் கூட, கதைசார்ந்த படமாகவும் (Feature Film), குறும்படம் - ஓரளவு கதை சார்ந்ததாகவும் பெரும்பாலும் (Short film) ஆவணப்படங்களாகவும் (அந்த நாட்களில் இவ்வாறுதான் அழைத்தார்கள்) (Documentaris) புனையா மெய்விளக்கத் திரைப் படம், அல்லது இடையிடப்பட்ட விளக்கவுரைகளுடன் மெய் நிகழ்ச்சிகளை மட்டும் கலப்பின்றிக் காட்டும் இயக்கப் படமாக வும் (Doco-Feature Film) வெவ்வேறு வடிவங்களில் வெளிப்ப டுத்தப்படுகிறது.
மேற்சொன்ன திரைப்பட வகைகளுள் நாம் இங்கு எடுத்துக் கொள்வது "DoCo-Feature' என்றழைக்கக் கூடிய ஒரு மும்மொ
76

СВаъ.еяedo.8agкопШеѓт ழிப் படமாகும். அந்தப் படத்துக்கு நாம் அறிமுகமாகும் முன் இந்தப் 'புனையா மெய்விளக்கத் திரைப்படம் அல்லது இடை யிடப்பட்ட விளக்கவுரைகளுடன் மெய் நிகழ்ச்சிகளை மட்டும் கலப்பின்றிக் காட்டும் இயக்கப்படம்' பற்றியதோர் மேலும் ஒரு விளக்கம்.
உண்மை விவரங்களை / மெய்களை எதுவிதமான புனை வும் இல்லாமல் விளக்கும் நிகழ்ச்சிகள் இதில் அடங்கும். இத்த கைய படத்தில் சாதாரண மக்களே தோன்றுவர். பிரபல சினிமா நட்சத்திரங்கள் நடிக்கமாட்டார்கள். பின்னணி அலங்காரங்கள் பிரமாண்டமான செயற்கைக் கட்டடத் தொகுதிகள் போன்றவை இருக்கமாட்டா. கதை எடுத்துரைப்பு புனையப்படாமல், மெய் நிகழ்ச்சிகளின் விளக்கமாக அமையும் (பார்க்க எனது அசையும் படிமங்கள், பக்கம் 61).
தமிழிலும், சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் ஐந்நூறு திரைப் படங்களும், குறும்படங்களும், DOCo-Featuresகளும் இனத்துவே ஷம் காரணமாக நிகழ்ந்த விளைவுகளை எடுத்துக்காட்டியுள்ளன.
சிங்கள மொழியைப் பொறுத்தமட்டில், காமினி பொன் ஸேக்கா,தர்மசிறிபண்டாரநாயக்க, பிரஸன்னவிதானகே, அசோக ஹந்தேகம, சோமரத்ன பாலசூரிய போன்ற சிலர் ஓரளவிற்கு இனப்பிரச்சினை தொடர்பாகத் தாம் விளங்கிக்கொண்ட விதத் தில் ஓரிரு முகங்களைக் காட்டியுள்ளனர். தமிழர் என்ற இனவடை யாளங் கொண்டோர் இப்படங்களின் கருத்தாக்கம், வெளிப்பாடு சம்பந்தமாக அதிருப்தி கண்டுள்ளனர் என்பதை நாம் மறக்கலா காது.
இந்தப் பின்னணியில் தர்மசேன பத்திராஜா, தமிழ்-ஆங்கி லம்-சிங்களம் பேசும் பல்வேறு இனத்தவர் உரையாடல்களைக் கொண்டும் விவரணையாளர்கள் (Narater) குரல் கொண்டும் தயாரித்து நெறிப்படுத்திய மும்மொழிப் படங்களுள் ஒன்றான
77

Page 41
qybabesifeb Soerormilia / Ko5bbdir flexo ஆங்கில மொழி ஆக்கத்தை அண்மையில் பார்க்க நேர்ந்தது. படத் gait Guuit: "In Search of a Road". gigs. Lul gigait Gippsuit Giti பற்றிய சில விவரங்கள்:
இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று 'பொன்மணி’. காவலூர் இராசதுரை எழுதிய கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் அக்கறை கொண்ட சிலரினால் மெச்சப் பட்டது. அதே சமயம் எனது அதிருப்தியை ஏற்கனவே நான் தமி ழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்தேன்.
தர்மசேன பத்திராஜா சிங்கள மொழி, சிங்கள இலக்கியத் துறையில் ஒரு பேராசிரியராவார். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகமாக, மறைந்த பேராசிரியர் க.கைலாசபதி தலைமை தாங்கிய காலத்தில் இயங்கி யது. அங்கே அக்காலத்தில் சிங்களக் கல்விமான்களும், மாணவர் களும், ஆங்கில இலக்கியச் சிங்களப் போதனாசிரியர்களும் நல் லுறவுடன் செயற்பட்டனர். தர்மசேன பத்திராஜா வளாகத் தமிழ் கல்வியியலாளர் உதவியுடன் 'பொன்மணி" படத்தை நெறிப்ப டுத்தியபோதும், அப்படம் 'சினம’ என்ற முறையில் படுதோல்வி கண்டது.
இருந்தபோதிலும், பத்திராஜா சிங்களத்திரைப்பட வரலாற் றில் முக்கிய இடம் பெற்றுவரும் ஒரு தலைசிறந்த நெறியாளர் ஆவார்.
ஒரு பாதையைத் தேடி. தர்மசேன ப(த்)திராஜவின் திரைப்படம்
வடக்கே ஒடும் புகையிரத வண்டியதும் அதற்குச் சமாந்தரமாக செல்லும் ஏ-9 இனதும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப்பிணைந்த கதை ஒரு பாதையைத் தேடி.
78

.ബി.ആoIér போருக்கும் சமாதானத்திற்கும் இடையில் அகப்பட்ட நிலையில் உள்ள மக்களின் கதை. பயணக்கதை மரபில் உருவாகிய இத் தயாரிப்பு தன் கதை சொல்லும் பாணியில் ஒரு விவரணப் படமாக வெளிவருகிறது. இந்தப் புகையிரத வண்டியும் ஏ-9 உம் யுத்தம், சமாதானம், பயணம், சமூகஎழுச்சி, இடம்,இடம்பெயர்வு என்பனவற்றின் சின்னங்களாகும். 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி யாழ் நகர் நோக்கி புறப்படும் புகையிரத வண்டி இடம், நிலம், பிராந்தியம், யுத்தம் சமாதானம், இல்லம், நாடு என்பனவற்றிற்கூடாக பயணம் செய்கிறது ஒரு பூமியை நாடி, ஒரு கனவைத் தேடி.
உண்மைக்கும் புனைகதைக்கும் இடையில் உள்ள இந்தப் படம், எம்மைஒரு100ஆண்டு பயணத்துக்கூடாக, வரலாற்றுக்கூடாக, நினைவுகளுக்கூடாக, ஒரு எதிர்காலத்தை நோக்கி எம்மை இட்டுச் செல்கிறது.
இவர் ஒரு பண்பாளராவார். 45 வருடங்களுக்கும் மேலாக நல்ல (தரமான) சிங்களப் படங்களை நெறிப்படுத்தியவராவார். கிழக்கு ஐரோப்பிய படங்கள் பெரும்பாலும் அற்புதமான படங் களாக அமைவன. அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்ட தர்ம சேன பத்திராஜா அகஸ் க(G)ஷ்வ, ப(B)ம்ப(B)ரு அவித், பாரதிகே (G), சொல்தாது உன்னேஹ, மதுயம் தவஸ போன்ற பாராட்டக் கூடிய படங்களைத் தந்துள்ளார். பல தொலைக்காட்சித் சித்திரங்க ளையும், கதைசாரா மெய் விளக்கப் படங்களையும் தந்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் கலைக்கழகத்தின் தலைவராக வும் விளங்கும் தர்மசேன பத்திராஜா, சமூகப் பிரக்ஞை கொண்ட மனிதாபிமான படைப்பாளியாவார். இலட்சியவாதி என்பதை விட இவரை ஒரு சமூக யதார்த்தவாதி எனலாம்.
65)JGögFTip555/6öö76ooftus 5/60 guumd535 (Digital Film Making) முறையில் "In Search ofa Road" (பாதையொன்றைத் தேடி) என்ற
79

Page 42
egbaseffeko SporTua / obůbasdir áfoo படம் தயாரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ரயில், தெரு பாதைகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியில் அண்மைக்கால நிகழ்ச்சிகளென காட்சிப் படிமங்களாக இப்படம் நமது அரை நூற்றாண்டுக்கும் மேலான அல்லல்களைக் காட்டி நிற்கின்றன. வரலாறு தெரியாத நமது சிங்கள இனவாதி கள் திகைத்துப்போகும் அளவிற்குப் படம் உறைந்த படிமங்களாக அவர்களது மனச்சாட்சியை உலுக்கிவிடும். கூடியவரை பக்கச் சார்பாக இல்லாமல் உண்மை நிலையை வரலாற்று நிகழ்வுப்ப டப்பிடிப்புகள் மூலம் (பழைய சுவடிகள், பழைய புகைப்படங் கள்) நிதர்சன நிலைமையை சித்திரிக்கின்றன.
ஒரு தமிழன் என்ற முறையில் இப்படம் எனக்குத் திருப்தி யைத் தருகிறது. காரணம் எதுவெனில், கொழும்பிலிருந்து வெளி யாகும் சிங்கள / ஆங்கில ஊடகங்கள் இதுவரையும் வெளிப்ப டுத்தாத தமிழ் பேசும் மக்களின் பரிதாப நிலையை இப்படம் பெருமளவு காட்டி, எவரையும் சிந்திக்கவும் உணரவும் வகை செய் கிறது. அந்த விதத்தில் நெறியாளரையும் அவருடன் இணைந்து செயற்பட்டவர்களையும் பாராட்டுகிறேன்.
இந்த விதத்திலே, ஒரு தமிழ்ப் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடும் படியாக இருக்கிறது. அவர் பெயர் சிவமோகன் சுமதி. இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கி யப் போதனாசிரியராக (பேராசிரியர் என நினைக்கிறேன்) பணிபு ரிவது மாத்திரமல்லாது கி(G)ரிஷ் கர்நாட் என்ற கன்னட மொழித் திரைப்பட நெறியாளராகவும் புகழ் பெற்றவர். நாடகாசிரியரும், நடிகருமான (தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார்), இவர் கலைஞரின் நாகமண்டலம் நாடகத்தின் தமிழாக்கத்தை நாட கமாக நெறிப்படுத்தி நடத்துமிருக்கிறார். சில ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துமிருக்கிறார். அமெரிக்காவில் ஆங்கில இலக்கியம் பயின்ற பட்டதாரி இவர். இவருடைய சகோதரிகளைப் போல (நிர்மலா நித்தியானந்தன், ரஜனி திராணகம) சுமதியும் திறமைசாலி.
80

(Bardo Fangorger சிவமோகன் சுமதி ஆங்கிலத்தில் எழுதிய விவரணக் கதையை, அழகாக ஆங்கிலத்தில் தெளிவாகவும் சரியான உச்சரிப் புடனும் குரல் வழங்கியவர் ஆங்கில நூலாசிரியரும் தலைசிறந்த சிங்களத் திரைப்பட நெறியாளருமான திஸ்ஸ அபேசேகர. சுமதி யுடன் சரத்கெல்லபொத்தவும் நேர்மையாகக் கதைப் பிரதியை எழுதியுள்ளார். சன்ன தேசப்பிரியவின் ஒளிப்பதிவு பொருத்தமாய் வந்து அமைகிறது. பழைய, புதிய படப்பிடிப்புகளை இணைத்து படப்பிடிப்புக்களைத் தந்துள்ள எல்மோ ஹலிடே (இவர் ஒரு தமி ழர்) ஈழத்துச் சிங்களத் திரைப்படங்களில் குறிப்பிடும்படியான படத்தொகுப்பாளர் ஆவார்.
இந்தப் படத்தில் மறைந்த வைத்திய கலாநிதி சிவஞான சுந் தரம் (டொக்டர் நந்தி என்ற தமிழ் எழுத்தாளர்) ஒரு சில வார்த்தை களை ஆங்கிலத்தில் பேசுகிறார். இவரைத்தவிர பே(P)ர்மியஸ், லயனல், விக்கிரம, சண்முகலிங்கம், ஷார்மினி செல்லையா, ஜெயரஞ்சனி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை இளைஞர்களும் யுவதிகளும் அவசியம் பார்க்க வேண்டும். தமிழராகிய நாம் எப்படி வடக்கில் வாழ்ந் தோம், எப்படி இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பது உணர்த்துவிக்கப்படுகிறது.
முதியோருக்கும் தமது பழையகால நினைவுகளை இரை மீட்க, இப்படத்தின் காட்சிகள் உதவும். 1905 முதல் இற்றை வரை யான தமிழ், முஸ்லிம் வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் ஆவணச் சித்திரமாகவும், கதை சார்ந்த படமாகவும் கொண்டு வெளிவந் துள்ள ஒரு முக்கியமான docu - feature இது எனத் தாராளமாகவே சொல்லலாம்.
- ஞானம் : மார்ச் 2007
81

Page 43
திரையும் திறனாய்வும்
திரைப்படம் கலாபூர்வமான வெளிப்பாட்டுச் சாதனங் களிலொன்று என்பதை நாம் அறிவோம். புனைகதை, கவிதை, நாடகம், நாட்டியம், ஒவியம், இசை போன்று திரைப்படமும் அழகியல் சார்ந்தது என்பது உண்மையாயினும் அனைத்துத் திரைப்படங்களும் கலாபூர்வமான ஆக்கங்களாக அளிக்கப்படு வதில்லை. ஒரு சிலவே அவ்வாறு திரைத் திறனாய்வாளர்களால் கருதப்பட்டு வருகின்றன.
எல்லாக் கலைகளுமே களிப்பூட்டுவனவென்றாலும் பெரும்பாலானவை பெருவாரியான பொதுமக்களின் இரசனை மட்டத்தைத் திருப்திப்படுத்துவன. இவற்றை ஜனரஞ்சகமா னவை என்கிறார்கள். ஜனரஞ்சகமானவை கலைத்தரமுடைய வையாகவும் அமையலாம். ஆயினும் பெரும்பாலானவை அப்ப டியமைவதில்லை.
இது 'சினமா'வுக்கும் பொருந்தும். திரைப்படத்தைப் பொறுத்தமட்டில், வணிகப்படங்களும் தயாரிக்கப்படுகின்றன. மத்தியதர, உயர் வகுப்பிலுள்ள, இரசனை சற்று உயர்ந்த மட்டத் திலுள்ளவர்களைத் திருப்திப்படுத்தும் படங்களும் தயாரிக்கப்ப டுகின்றன. ஆயினும், சிறப்பு இரசனையுள்ளவர்கள் பாராட்டும் படங்கள் பொதுவாக இரசனை மட்டம் குறைந்த, எழுத, வாசிக்க முடியாத ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதில்லை. இது சகஜம். உலக மக்கள் பெரும்பாலும் "சினமா' வை பொழுதுபோக்க உத வும் களிப்பூட்டும் படங்களாகவே கருதுகின்றனர்.
இந்தப் பின்னணியிலே நாம் திரை பற்றியும், திரைத் திற
னாய்வு பற்றியும் சில அவதானிப்புகளை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.
82

08a.ado.daoloппет கலை தொடர்பான அறிவும், ஆய்வறிவுப் பாங்கும், நுண் ணிய கூருணர்வும் கொண்ட பார்வையாளர்கள் தமது பயிற்சி, அறிவு, பகுப்பாயும் பிரயோகம் முதலானவற்றால் நல்ல / சிறப் பான படங்களை இனங்கண்டு கொள்வர்.
அதேவேளையில் ஒரே விதமான வாய்ப்பாடுகளைக் கொண்ட படங்களை மேலும் மேலும் விரும்புபவர்கள் தமது சிந்தனையை, உணர்வினால் வித்தியாசமான படங்களை எளிதில் ஜீரணிக்கத் தவறிவிடுவர். இது இயல்பே. Conditioning of Mind என்பார்கள். திரைப்பட உத்தி முறைகள் கூட காலத்திற்குக் காலம் மாறுபடுவன.
ஒரு முக்கியமான உண்மை எதுவெனில் திரைப்படத்துறை பார்வையாளர்களுக்குக் களிப்பூட்டும் ஒரு கைத்தொழிலாகும். அது வணிக நோக்கம் கொண்டது என்பது வெளிப்படை. பொது மக்களின் இரசனை மட்டம் உயராதவரை நல்ல திரைப்படங் களை தயாரிப்பாளர்கள் வழங்கத் தயாரில்லை. கோடிக்கணக் கான பணத்தை முதலீடு செய்யும் அத்தகையவர்கள் நஷ்டம் பெற முன்வரமாட்டார்கள். எனவேதான், (உதாரணமாக) தமிழ்நாட் டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருப்பதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும் சம் பவங்களைக் கூட வசனத்தில் மீண்டும் எடுத்துரைக்கும் விதத்தி லும் (நடிகர் வடிவேலு இதனைத்தான் செய்வார்) பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழ்ப்படங்கள் ஒரு புறமிருக்க, அனைத்துலகப்படங்களை மையமாக வைத்து மேலும் சில குறிப்புகளைப் பார்ப்போம்.
19 ஆம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்த "சினமா’’ சென்ற நூற்றாண்டின் 1950 களில் பெரும் பாய்ச்சலில் வளர்ச்சி பெற்றது. ஒலியும் ஒளியும் நிழலும் கொண்ட படிமங்களாக (m- ages) உருப்பெறத் தொடங்கியது.
83

Page 44
goabešo 5Derrilia / log5ůlobabdiv foo
'சினமா'வை ஒரு கலையாக நாம் கருதும்பொழுது முத லிலே அதன் ஆக்கத் திறனையே மனதில் கொண்டுள்ளோம். அதாவது ஆக்க இலக்கியமொன்றின் நல்ல அம்சங்களூடாக நாம் எத்தகைய அனுபவத்தையும் அறிவையும் பெறுகிறோமோ அதேபோன்ற பரிவர்த்தனையை நாம் "சினமா’ மூலமும் பெறு கிறோம் எனலாம். அதேவேளையில் கட்புலக் கலைக்கும் (Visual Art) glibliaud, 3,60Gd(5lb (Sensory Art) g)6OLGuu, Girot Goupi பாட்டையும் நாம் கவனிக்க வேண்டும்.
கண்ணுக்கும் காதுக்கும் இதமான இரசனையை "சினமா’ வழங்கும் அதேவேளையில், குறிப்பிட்ட ஒரு கால ஓட்டத்தின் போது உணர்வு நிலையிலும் (emotive), ஆய்வறிவு ரீதியிலும் (intelectual) எமக்குக் களிப்பூட்டுகிறது.
'கலைத்துவமான படங்கள்’ என்று வரும் பொழுது, படத்தின் நெறியாளரே அங்கு கலைஞராவார். (Creative Artist) அந்நெறியாளர் தாம் கூறவருவதை நேர்த்தியாகக் கூறிவிடு வாராயின் அது வெற்றிப் படமாகக் கொள்ளப்படுகிறது.
இந்த இடத்திலே இன்னொன்றையும் நாம் கவனிக்கலாம். அதாவது இலக்கியத் திறனாய்வுக்குப் பயன்படும் அளவுகோல்க ளைத் திரைப்படத் திறனாய்வுக்கும் நாம் பயன்படுத்தலாம்.
திரைப்படம் தொடர்பாக அதிகாரபூர்வமாக 1950களில் எழு திய பிரிட்டிஷ் திறனாய்வாளர் Roger Manvel தமது "The Film என்ற நூலிலே இதனைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.
மக்களிடையே பிரபல்யமான படங்களில் கதம்ப நிகழ்ச்சி களே அதிகம். உதாரணமாக அந்நாளைய தமிழ்ப்படங்கள் பலவற் றில் வாய்ப்பாட்டுரீதியாக சில அம்சங்கள்திணிக்கப்பட்டிருக்கும். அதீத நாடகப் பண்பு (Melodrama), அசட்டு அபிமான உணர்ச்சி (Sentimentalism) எனக் கூறக்கூடிய பச்சாதாபம், கவர்ச்சிக் 'கா தல்’, பாட்டு, நடனம், அங்கசேஷ்டைகள், திகில், சண்டை, பிகு
84

Baberekorealizofreðr
போன்றவை மக்களுக்குக் குறுகியகால களிப்பை ஊட்டி மக்களை நிஜ உலகினின்றும் தப்பியோட வைத்து புளகாங்கிதம் அடைய உதவின.
மறுபக்கத்தில் கலைப் படங்கள் நீடித்த அனுபவத்தை மறக்க முடியாத வகையில் தருகின்றன.
இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே தரமான கலைத்துவம் வாய்ந்த படங்கள் ஐரோப்பாவில் நெறிப்படுத்தப் பட்டன. அந்நாட்களில் சிறப்பான நெறியாளர்களாக Michael Angelo Antonioni, Fellini, Vittorio de Sica, Ingmar Bergman, Alain Resnais, Cocteace, Lawrence Olivier, Orson Welles, Stanely Krammarm Goddard, De Laurentis, Satyagit Rai, Reed GluíTGöt றோர் கருதப்பட்டு வந்தனர். இன்னும் அவர்களுடைய படங்கள் Classics ஆகக் கருதப்படுகின்றன.
இவர்களுடைய படங்கள் திரைப்பட உள்ளடக்கத்திற்காக வும், உருவ உத்திச் சிறப்புகளுக்காகவும் பாராட்டைப் பெற்றன.
சமூகப் பிரச்சினைகள், நவீன வாழ்க்கைக் கோலங்கள், பயன் மதிப்புகள், மனநோய்கள், விகற்ப உறவுகள், சிதையும் நாகரிகங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய படங்கள் வெளிவந்த ன. கட்புலப் படிமங்கள், குறியீடுகள், பின்னோக்கு உத்திகள், Cut in, Cut Out, egy6öTGoldái; 5T 195Git, 51Ji 5T '956it, Landscape போன்றவை உள்ளடக்கத்தை விளக்க உதவின.
g)lüG)LuTCupG)5GüGuTub Computer, Graphics egy 95 l L1 Cameraக்கள் பயன்படுத்தப்படுவது போல, 21ஆம் நூற்றாண்டு வாழ்க் கைப் போக்குகள் மாறிவருவதைக் காட்டும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கோடம்பாக்கம் தமிழ்ப் படங்களும் கூட இந்நாட்களில் பலவிதமான கதைப் பொருட்களைக் கையாண்டு Sophisticated
85

Page 45
erbasedb 5 perorPlaN / Ko45bber oo ஆகத் தயாரிக்கப்படுகின்றன. சேரனின் 'பொக்கிஷம்" போன்ற படங்கள் கலைநயம் தரும் "சினமா' எனலாம்.
வணிகப் படங்கள் கைத்தொழில் முயற்சிகளின் விளைவு கள் எனலாம். கலைநயமான படங்கள் உயர்மட்ட இரசனையு டையவர்களின் ஆய்வறிவுக்கு (intellectualism) விருந்தளிப்பன. அவை சிறுபான்மைக் கலையாகவே இருக்கும். மக்கள் இரசனை உயரும் பொழுது ஆக்கபூர்வமான கலைப்படங்கள் தாராளமாக நமது பார்வைக்கு வரும்.
'திறனாய்வு' என்று வரும்பொழுது அது ஆக்கபூர்வமாக (Constructive) அமைய வேண்டும் என்பதே படைப்பாளிகளும், திறனாய்வாளர்களும் எதிர்பார்க்கும் ஒன்று. இது கூட அகவயப் பட்டது (Subjective). அதாவது தனிநபர் ஒருவரின் தர்க்க ரீதியான மதிப்பீடாகும். பூரணமான திறனாய்வு என்று என்றுமே இருந்த தில்லை. மறுமதிப்பீடுகளின் போது திறனாய்வாளர் தமது முன் னைய மதிப்பீட்டை புனர் மதிப்பீடு செய்யவும் கூடும்.
- ஞானம் : கலை இலக்கிய சஞ்சிகை : பெப்ரவரி 2010
86

கே. விஜயனின்
“பலே பலே வைத்தியர்*
பற்றிய சிறு குறிப்புகள்
லக்கிய உலகில், முக்கியமாக ஈழத்து இலக்கியப் பரப் பில் நன்கறியப்பட்ட போதிலும், அதிகம் கணிக்கப்படாத ஒருவர் கே.விஜயன். இவர் இதழியலாளராக இருந்தவர். இப்பொழுது "ஞானம்’ இதழில் 'பத்தி எழுத்தாளராக எழுதி வருபவர். சிறு கதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம், அங்கதச் சுவை தரும் கண்டனம், வானொலி நாடகம் போன்ற துறைகளில் ஈடுபா டுடையவர். மேடையிலும் ஆழமான கருத்துக்களைத் தெரிவிக் கக் கூடியவர். விவாதங்களில், பொதுவாக எதிர்க் கருத்துகளைத் தெரிவித்து, விவாதங்களுக்குச் சூடு கொடுக்க முயன்று மகிழ்ச்சி கொள்பவர். நிறைய வாசிப்பவர். மலையாளக் கதைகள் சிலவற் றைத் தமிழில் தந்திருக்கிறார். மார்க்சிய சிந்தனையுடையவர். அதேவேளை கலைகளை இரசித்து அனுபவிக்கக் கூடிய புலமை யும், முதிர்ச்சிப் பக்குவமும் கொண்டவர்.
ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கும் முயற்சி களையும் மேற்கொள்பவர்.
‘வீரகேசரி’ பத்திரிகையில் சில மாதங்கள் நான் இணை ஆசி ரியராகப் பதவி வகித்த பொழுது, நடைமுறை இதழியல் (Practi
cal Journalism) பரிச்சயமுடையவராக இவர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்ததை அவதானித்தேன்.
நூல் வடிவில் இவர் எழுதிய ஆக்கங்கள் பரிசில்களைப் பெற்றமையும், இவருடைய எழுத்துத் திறனைப் பறை சாற்றும்.
87

Page 46
ebaselfāb 5pormalea / ko,5úlpesdin afero
இவருடைய எழுத்து நடை பன்முகத் தன்மை கொண்ட தாக (Varied Styles) இருப்பதும் அவதானிக்கத்தக்கது.
அழகான சிரித்த முகத்தையுடைய விஜயன், தொழிலாள வர்க்கக் சூழலில் வளர்ந்து, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை உணர்ந்தவர். கேரள மாநிலப் பூர்வீகம் கொண்ட இவரின் எழுத் துக்களில் மலையாள இலக்கியச் சிற்பிகளின் தாக்கத்தை உணர முடிகிறது.
அவ்வாறான ஓர் ஆக்கமாக அவருடைய பலே பலே வைத் தியர்’ என்ற நூல் வெளிவந்திருக்கிறது.
பெரும்பாலும் சிறுவர்களைக்கவரக்கூடியதும், பெரியவர்க ளையும் திருப்திப்படுத்தக் கூடியதுமான ஒரு 98 பக்கப் புத்தகத்தை வித்தியாசமான சித்திர அட்டையுடன் விஜயன் வெளியிட்டிருக்கி றார். இந்தப் புத்தகத்தை 23/49, மயூரா பிளேஸ், ஹவ்லொக் வீதி, கொழும்பு 06 என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இருபது குறுங்கதைகள் கொண்ட இந்நூலின் மூலக்கதை கள் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்துக்கும் அதிலிருந்து தமிழுக் கும் இப்பொழுது வந்திருக்கின்றன.
நூலாசிரியர் தமது ‘என்னுரையில் குறிப்பிடுவதைத் தகவ லாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
"மலையாளச் சிறுவர்களின் குட்டிக் கதைகள், Tolstoiயின் குட்டிக்கதைகளை உள்வாங்கி வடிவமும் நிகழ்வுகளும் வித்தி யாசமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட கதைகள் இவை. நமது சிறுவர்களின் வாசிப்பிற்கும் இரசனைக்கும் ஏற்ப எழுத முயன்றி ருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தின் சிறப்புகளுள் 'சாமி'யின் ஒவியம், அனுர்ஜனின் வடிவமைப்பு, சிவரஞ்சனியின் கணினி ஆகியன மிக முக்கியமானவை.
88

C3aordio-afalgorger இக்கதைகளில் நகைச்சுவை மிளிர்கிறது. நூலாசிரியரின் கருத்தின்படி சிறுவர்களுக்கான படைப்புகளில் போதனை இருத் தல் கூடாது. அவர் கூறுகிறார்: "உட்கரு கதையோட்டத்துடன் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத் திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்படல் வேண்டும். எளிமையான மொழிநடை இதற்குப் பெரும் துணை யாக அமையும்.'
கே.விஜயன் இதுவரை வெளியிட்ட நூல்கள், இரண்டு நாவல்கள், (விடிவு கால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள்) ஒரு சிறுகதைத் தொகுப்பு (அன்னையின் நிழல்).
அவருடைய இந்த புதிய நூலில் 20 சின்னச் சின்னக் கதை கள் இடம்பெற்றுள்ளன. சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன. நீங் களே படித்துப்பாருங்கள். இரசனைக்குரியது இந்த நூல்.
-மல்லிகை : ஜூன் 2011
89

Page 47
கல்வியியல் : தமிழாக்க நூல் பயன் தருவது
ஒய்வுபெற்ற ஆங்கில / ஆங்கில இலக்கியக் கல்விக்கூட போதனாசிரியன் என்ற முறையில் எனக்குப் பிரயோசனமான தொரு நூலைத் தமிழில் நான் அண்மையில் படித்தேன். இது நல்ல முறையில் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல். அந்த நூலை எமக்குத் தந்திருப்பவர் எம்.எச்.எம். யாக்கூத் என்ற ஒய்வுபெற்ற கல்வி மான். இவருடைய தாய்மொழி தமிழ். ஆயினும் ஆங்கிலத்தை விட சிங்களத்தில் புலமை கொண்டவர். இந்த நூலை அவர் சிங் களத்திலிருந்து தமிழிற்குப் பெயர்த்துள்ளார்.
சிங்களமொழி நூல் கூட ஆங்கிலத்திலிருந்து மொழிமாற் றம் செய்யப்பட்டது. ஆங்கில ஆக்கம் கூட ஜப்பானிய மொழியி லிருந்து பெயர்க்கப்பட்டது.
மூல நூலின் பெயர் Toro - Chan. இதனை எழுதிய பெண் மணியின் பெயர்Tetsuko Kuroyanagர். இவர் பிரசித்தி பெற்ற ஜப் பானியக் கல்வியியலாளர். இந்த நூல் ஜப்பானியக் கல்வி முறை யில் புதுமைப் பிரயோகத்திற்கு வழிவகுத்தது என அறிகிறோம்.
இந்த நூல் சம்பந்தமாகப் பின்வருபவர்கள் சம்பந்தப்படு SpitisGir: Tetsuko Kuroyanagi, Dorothy Britton (g/til 5 Gulb), லீனாந்த (G) கம்மாச்சி, எம்.எச்.எம். யாகூத்.
சிங்களத்திலும், தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பண்பாளர் யாக்கூத் அவர்கள், தமது விஞ்ஞானத்துறை அறிவின் பின்னணி யில், தமிழையும் தன்வசமாக்கி இந்த நூலை நமக்குத் தந்துள்ளார். இதனால் நாம் பெருமையடைகிறோம். அவர் நன்றிக்கு உரித்தா னவராகிறார். முதலிலே நாம் அவரைப் பாராட்ட வேண்டும்.
மொழியாக்கத் துறையில், தொழில் ரீதியாக ஓரளவு அனுப
90

(8a.ordo домеоппет வம் பெற்றவன் என்ற முறையிலும் மொழியாக்கப் பயிற்சி நெறிக ளில் ஓர் அனுசரணையாளனாக இருப்பதன் காரணமாகவும் இந்தத் தமிழாக்கத்தை நமது வாசகர்களுக்கு விதந்துரைக்க விரும்புகிறேன்.
இந்த நூல் சிறப்பாக இருப்பதற்கான காரணங்கள் இரண்டு: ஒன்று தமிழ் நடை, மற்றையது நூலின் உள்ளடக்கச் சிறப்பு.
பின் அமைப்பியல் வாதம் (Post-Structuralism) என்றொரு இயக்கம் பிரெஞ்சு / ஆங்கில இலக்கிய உலகில் சிறிது காலத் திற்கு முன் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இப்பொழுது ஓய்ந்து விட்டது. பல்கலைக்கழங்களில் மாத்திரம் அந்த இயக்கம் தொடர் பானபடிப்பு இப்பொழுது இடம்பெற்று வருகிறது. காலந்தாழ்த்தி தமிழ்நாட்டுச் சிற்றேட்டுக்காரர் சிலர் இதனைத் தூக்கிப்பிடித்து வருகின்றனர். இங்குள்ள நமது சிற்றேட்டுக்காரர் சிலரும் விபரம் புரியாமல், தமிழ் நாட்டுச் சிற்றேட்டுக்காரர்களின் பார்வைகளே உகந்தவை என்று மாரடிப்பது சிரிப்புக்கிடமானது.
நிற்க, பின் அமைப்பியல் வாதிகள் தூக்கிப்பிடிப்பது "The author is dead' 676ip 6). Tg digitaogbi g stair. 915 Tougil, 905 படைப்பை எழுதியவன் முக்கியமல்ல. அவன் மரித்துவிட்டான். அவன் எழுதியதை, தம்மனம்போன வாக்கில் பொருள் கொண்டு விளங்குவதே ஆழமான விமர்சகர்கள்' என்று கூறிக் கொள்ளும் பிரகிருதிகளின் பணியாக இருந்து வருகிறது.
இது இவ்வாறிருக்க "The School is dead" (பாடசாலை மர ணித்துவிட்டது) என்றொரு எதிர்ப்புக்குரல் கல்வித்துறையிலும் ஒலித்தது. ஆயினும் பின் அமைப்பியல் வாதக் கோட்பாட்டுக் கும், கல்வியியல் கோட்பாட்டுக்குமிடையே நிறைய வேறுபாடு உண்டு. முன்னையது ஆக்கபூர்வமற்றதாக இருக்க, பின்னையது ஆக்கபூர்வமான கோட்பாடாக மிளிர்ந்து வருகிறது.
பழைய பாரம்பரியக் கல்விமுறை மரணித்துப் புதிய சூழ லுக்கேற்ப புதுப்புதுமாற்றங்கள் ஓர் Extention ஆக தொடர் நீடிப் பாக கல்வித்துறையில் ஏற்பட்டு வருவதை நான் நேரடியாக
91

Page 48
q(befob 5oomfies rostillbadir Foo
அறிந்து, உணர்ந்து கொண்டேன். மாலைதீவு, ஒமான், அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்விப் போதனைமுறை அமைந்திருப்பதை அவதானித்தேன். இங்கும் Gateway போன்ற அனைத்துலகக் கல் லூரிகளில் இந்தப் புதிய போதனைமுறை அனுசரிக்கப்பட்டு வரு வதைக் காணலாம்.
இந்தப் பின்னணியிலேதான், யாக்கூத்தின் தமிழாக்கம் மூலம், 'படிப்பினைதரும்பாடசாலை’ எனது எண்ணக்கோவைக்கு நெருங்கியதாக இருக்கிறது.
இந்த பயன்மிகு நூலுக்கு அணிந்துரை தந்துள்ள கல்வியிய லாளர் தை.தனராஜ் நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் கூறுகிறார்.
"எப்போதுமே கல்வியின்நோக்கம் மாணவர்களின்நடத்தை உருவாக்கமாகத் தான் இருந்து வந்துள்ளது. ஆனால், நடத்தை மாற் றமென்பது பிள்ளையின் முழு இயலாமையையும் கட்டி எழுப்பி, எதிர்காலத்தில் அப்பிள்ளையின் பூரணமான ஆளுமையைப் பரி மளிக்கச் செய்யக் கூடிய உறுதியான அடித்தளத்தை இடுவதா? அல்லது சமூகம் தானே வகித்துக் கொண்ட நியமங்கள், படிமங் கள், சட்டதிட்டங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் அவனது / அவளது ஆளுமையின் சகல பரிமாணங்களையும் தட்டித் தட்டி உடைத்து, நொறுக்கிதானே உருவாக்கிக் கொண்ட வாய்ப்புக்குள் அவனை/அவளை நிரப்பி சமூகத்துக்கு வழங்குவதா?’
இக்கேள்விகள் முக்கியமானவை.
எனது இலக்கியத் திறனாய்வு அணுகுமுறை எவ்விதம் பல் நெறிசார்ந்ததாக (Multi - disciplinary) அமைகிறதோ, அவ்வாறே எனது பாடசாலை விரிவுரை களமும் அமைந்து மாணவர்களை வழிப்படுத்த உதவியது என்பது ஓரளவு உண்மையாயினும், மாண வர்களை ஆளுமையுடையவர்களாகக் கருதி அன்பினால் அடிப ணியச் செய்தமையும், இங்கும், வெளிநாடுகளிலும், மாணவர்க ளிடம் இருந்து நான் பெற்ற பாராட்டுகள் சாட்சியமளிக்கின்றன.
92

.ido.goIér
இந்த நூல் (படிப்பினைத்தரும் பாடசாலை) ஒரு சுவாரசிய மான கதையை உள்ளடக்கியுள்ளது. யாக்கூத் அவர்களின் கூற்றுப் படி "சுதந்திரம், விநோதம், அன்பு போன்ற பண்புகளைப் பாட சாலையுள் வரவழைத்து வாழ்க்கை நயப்பையும் மனித நேயத் தையும் கல்வியுடன் ஒன்று கலக்கச் செய்யத்தக்க விதம் எது என் பதை, ஒரு பாடசாலையில் சிறுமியொருத்தி பெற்ற, உள்ளத்தைக் கிள்ளும் அனுபவங்களினூடாக இக்கதை விளங்குகிறது’.
உலகளாவிய வரவேற்பைப் பெற்ற இந்த நூலின் உள்ளடக் கம் வாசகர்களாகிய உங்களுக்குப் புதிய அனுபவங்களைத் தரும். பள்ளிக்கூட ஆசிரியர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் இந் நூலைப் படித்துப் பார்ப்பதன் மூலம் நிச்சயமாகப் பயனடைவர்.
அதேவேளையில், மொழியாக்கம் தொடர்பான சில குறிப் புகளை இங்கு தொட்டுச் செல்ல விரும்புகிறேன்.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற் றுவதை மொழிபெயர்ப்பு என்று பொதுவாகக் கூறி வருகி றோம். இதனை Translation என்கிறார்கள். ஆயினும், மொழி பெயர்ப்பு என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இருமொ ழிப் பாண்டித்தியமும், புலமையும் இல்ல்ாவிட்டால் மொழி பெயர்ப்பு இலகு நடையில் அமையமாட்டாது. அது தவிர, எடுத் துக் கொண்ட மூல நூல் சம்பந்தப்படும் துறையின் ஞானம் இல் லாவிட்டாலும் மொழியாக்கம் வெற்றிபெறாது.
வார்த்தைக்கு வார்த்தை அகராதி அர்த்தத்தில் மொழி பெயர்த்துக் கூறுவது உண்மையில் மொழிபெயர்ப்போ மொழியாக் கமோ, மொழிமாற்றமோ அல்ல என்பதையும் நாம் அறிவோம்.
மூல மொழியில் கூறப்பட்டிருப்பதை தமிழ் மொழியில், நமது மரபுக்கேற்ப வடித்து அல்லது எடுத்துக் கூறுவதே தமிழாக்
கம் எனலாம்.
சிலவேளைகளில், சட்டரீதியான அல்லது நமது மொழிக்கு பரிச்சயமில்லாத பிறமொழி வாக்கியங்களைத் தமிழில் தருவது
93

Page 49
Qyqbabelfdb 45 peorTTviaj / Ko5ŭdababdr éfaco சில இடையூறுகளை எமக்கு ஏற்படுத்தக் கூடும். ஆனால், ஆக்க இலக்கியங்களைப் பொறுத்தமட்டில், தமிழாக்கம் இறுக்க நிலை யைத் தளர்த்தி யாவரும் புரிந்துகொள்ளக் கூடிய இலகு தமிழில் தருவதே தமிழாக்கத்தில் விரும்பத்தக்கது.
Transliteration, Transcreation GTGirGpGibGunib ou Gos LGYb மொழியாக்க முறைகள் இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நண்பர் யாக்கூத்தின் தமிழ் வடிவம் விரும்பத்தக்கதாகவும் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் அமைவதனால் இக்கதை யின் சரிதை விபரங்களைத் துல்லியமாகவும், இலகுமுறையிலும் நாம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. இதற்கு உதாரணங் கள் புத்தகம் நிறையவே உள்ளன. நீங்களே படித்துப் பாருங்கள்.
தமிழாக்கம் தவிர்த்து, ஆசிரியர் எழுதிய முன்னுரையேStandard நடையில் (தரநிர்ணய நடை) அமைந்திருக்கும் அதேவேளை யில் எளிய பதங்களைக் கொண்டிருப்பதும் அவதானிக்கத்தக்கது.
தான் கூறவந்த செய்திகளை, வெறும் தகவற்பரிமாற்றமாக அல்லாது கதை ஒன்றைக் கூறுவதுபோல, செய் நேர்த்தியாய் எழு தியிருக்கும் பாங்கும் பாராட்டத்தக்கது.
மூல வடிவத்தை ஆங்கில / சிங்கள மொழிகள் வாயிலா கவே தமிழில் யாக்கூத் தந்திருக்கிறார். இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அந்தவிதத்தில் நமது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்குமுரிய ஓர் நல்லாசிரியனாகவும், மொழியின் செயற்பாட்டுத்தன்மையை (Functional) நோக்கத்தைப் புரிந்துகொண்டு எழுதுபவராகவும் யாக்கூத் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண் டேயாக வேண்டும்.
- ஞானம் : ஜனவரி 2007
94

1970களில்
கொழும்பு மேடை நாடகங்கள்
1970களில் பல குறிப்பிடத்தக்க தமிழ் நாடகங்கள் கொழும்பில் மேடையேறின. இவை பற்றி தமிழிலும், ஆங்கிலத் திலும் நிறையத் திறனாய்வுப் பத்திகளை எழுதி வந்தேன். அவற் றுள்ளே பின்வரும் நாடகங்கள் பற்றி ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதியமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியது ஏனெனில் சம் பந்தப்பட்ட நாடகங்களில் நெறியாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர் இவற்றை ஆங்கிலத்தில் படித்திருக்கமாட் டார்கள். அவர்களுக்காகவும், இன்றைய இளம் வாசகர்களுக்காக வும் இந்த விபரங்களைத் தருகிறேன்.
நகரத்துக் கோமாளிகள் (கோர்க்கியின் நாடகம், ஸஅஹைர் ஹமீட் நெறிப்படுத்தியது), தகுதி (பேராசிரி யர் தில்லைநாதன் எழுதி நெறிப்படுத்திய நாடகம்), காலங் கள் அழுவதில்லை (மாத்தளை கார்த்திகேசு எழுதி நெறிப் படுத்தியது), அக்கினிப் பூக்கள் (அந்தனி ஜீவா), ஐயா எலக் ஷன் கேட்கிறார் (மாவை நித்தியானந்தன்), ஏணிப்படிகள் (பெளஸஅல் அமீர்), களங்கம், கோவலன் கூத்து, நல்லை தந்த வல்லவன், கந்தன் கருணை (என்.கே.ரகுநாதன்), காலம் சிவக் கிறது (இ.சிவானந்தன்), உதயம், கிருஷ்ண லீலா (கார்த்திகா கணேசர்), பிச்சை வேண்டாம் (அ.தாஸிஸியஸ்) விழிப்பு (நா. சுந்தரலிங்கம்), இனி என்ன...? சிறுக்கியும் பொறுக்கியும் (கலைச் செல்வன்), தோட்டத்து ராணி, போராட்டம், தீர்க்க சுமங்கலி, கர்ணன் கருணை, மழை (க.பாலேந்திரா), இரு துயரங்கள் (முரு கையன்), மனிதனும் மிருகமும், ஒரு சக்கரம் சுழல்கிறது. காமன் கூத்து, இலங்கேஸ்வரன், பூதத்தம்பி, சாதிகள் இல்லையடி
95

Page 50
ebaseriffdb 25peornriea / Ko3ůbasdir Foo பாப்பா, நம்பிக்கை, நட்சத்திரவாவி, பலி, கண்ணாடி வார்ப்புகள் (பாலேந்திரா), பசி, கூடி விளையாடு பாப்பா, பயணம், அலை கள், சக்கராம் பைண்டர், யுகதர்மம், நாற்காலிக்காரர் (ந.முத்து சாமி), கோடுகள், சலனங்கள், நடைமுறைகள், ஊசியும் நூலும், பொறுத்தது போதும், ஜானகி கல்யாணம், வேட்டை, காமன் கூத்து, உன் கண்ணில் நீர் வழிந்தால், துரோணர், ஒரு மலர் கருகி யது, துயரத்தின் சுவடுகள் இவ்வாறு பல நாடகங்கள் கொழும்பு மேடைகளில் அரங்கேற்றப்பட்டுள்ளன.
இவற்றைத் தந்ததன் நோக்கம், இத்தகைய நாடகங்கள் புதுப்பரிமாணங்களுடன் இன்றும் மேடையேறக் கூடியவை என் பதையும் மறக்கப்பட்டுவிட்ட நாடகாசிரியர்கள், நெறியாளர்கள் ஆகியோரை விமர்சகர்களுக்கு நினைவூட்டுவதுமே.
தாஸிஸியஸ், பாலேந்திரா, (சுந்தரலிங்கம், ஸஇஹைர் ஹமீட் காலமாகிவிட்டனர்) போன்றோர் பிறநாடுகளில் செய லாற்றுகின்றனர்.
r
கே.எஸ்.சிவகுமாரன் தனது திறனாய்வுகளுக்கு நாடகத்துறையையும் ஈழத்தில், குறிப்பாகக் கொழும்பில் 'மனத்திரை’ என்ற தனது பத்தியில் (1960களில் நாடகத் திற னாய்வை) ஊடகங்களில் அறிமுகப்படுத்தியவர் என்பது நிதர்சனம்.
கொழும்பு மேடைகளில் அவர் பார்த்த நாடகங்கள் பற்றி தமிழுடன் ஆங்கிலத்திலும் அவர் எழுதி வந்தார். அத னைப் பதிவு செய்கிறது இச் சிறுகட்டுரை - ஆசிரியர்:அரங்
(95 D. صـ ܥ
அரங்கம் : டிசம்பர் 07, 2008
96


Page 51
கே.
505 எழுத்துக்களினாலும் முறைமையினாலும் தன்னை இலக்கியத்தின் பிரிக்க முடியா இன்றைய கல்வி முறையின் போன்றவர்கள் முக்கியமான ஓர் வாசித்தல் ஒரு புலமை நீ போற்றக்கூடிய முறையில் இவர்
தான் அறிமுகப்படுத்தும் ஆசிரி ஆராய்ச்சியையோ பக்கச்சார்பு இ நடுநிலை நின்று கூறும் ஒரு ட இந்த எழுத்துக்களை இவர் பிரதானமானதாகும்.
சிவகுமாரன் தன்னைத்தான் ஆழமான விமரிசனக் கண்ணே மதிப்புரைகளையும் இலக்கிய முடியாது. இந்த விஷயத்தில் இவ முக்கியமாகின்றது. சிவகுமாரன் தன்னைப் பற்றி கூறினாலும், அவர் திறனாற்றல் :
மீரா பதிப்பக ெ
SE
 
 
 

எஸ்.சிவகுமாரன்
அவற்றை எழுதிய ஈழத்தின் நவீன தமிழ் த ஓர் அமிசமாக்கியுள்ளார். அமைப்பிலே சிவகுமாரன் இடத்தைப் பெறுகின்றனர். நிர்ப்பந்தமாகும். அதனைப் நிறைவேற்றி வருகிறார்.
யரையோ, ஆக்கத்தையோ, இல்லாது, இயன்ற அளவுக்கு பண்பு இவரிடத்து உண்டு. எழுதும் முறைமையே
குறைத்து மதிப்பிடுகிறார். னாட்டம் ஒன்று இல்லாது ப் பத்திகளையும் எழுத பரது ஆளுமையின் இயல்பும்
எவ்வளவு தான் தாழ்த்திக் உடையவர் என்பது தெளிவு.
- பேராசிரியர் கா.சிவத்தம்பி
27-O9-1996
வளியீற - 94
BN: 978-955-53607-0-8