கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்

Page 1

ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்
தென் புலோலியூர்
மு. கணபதிப் பிள்ளை
UTIf É2oub
59.5until 66.6afsirèkoF1.

Page 2
b
V
ஆராய்ச்சியாளர்க்கு விட்டு, இருந்து மறைந்த அறிஞர் பலரைப் பற்றியும் இங்கு விளக்கியுள்ளார். இன்னும் சில ஆண்டுகள் கழியின், இத்துணைக் குறிப் புக்கள் கிட்டுதல் அரிதாகும் இவற்றுள் பல மறக்கப் பட்டுப் போதல் கூடும். அந்நிலை நேரும் முன்னரே, அரும்பாடுபட்டுக் குறிப்புக்களைத் திரட்டி ஒழுங்கு படுத்தி, அகர வரிசையில் புலவர்களை அமைத்துச் செம்மையுறத் தந்துள்ளார். புலவர்கள் இயற்றிய நூல்களின் அகர வரிசை இறுதியில் உள்ளது; தமிழ்ச் சுடர்மணிகளின் அகர வரிசையும் அடுத்து உள்ளது. இவ்விரண்டும் இந்நூலைப் பயன்படுத்த விரும்புவோர்க்கும் ஆராய்ச்சியாளர்ச் கும் உதவுவன ஆகும்.
இந்நூலாசிரியர் நடுநிலையில் நின்று எழுதி யுள்ளமை போற்றத்தக்கது. "அவருக்கு உறுதுணை யாய் விளங்கியவர் இவரேயாவார்’ முதலான தொடர் களால் நன்கு தெளிந்த செய்திகளைப் புலப்படுத்து கிருர்; ' என அறியக் கிடக்கின்றது', 'எனத் தெரி கின்றது' முதலான தொடர்களால அத்துணைத் தேற்றம் பெருத செய்திகளை உணர்த்துகிருர். புலவர் களின் பலதிறத் தமிழ்த் தொண்டுகளை விளக்குத லோடு, அவர்களின் வாழ்க்கையில் பலவகையாலும் தொடர்பு கொண்டிருந்த மற்றவர்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நூலைப் பெற்றமை யால், இலங்கைத் தமிழர் வரலாறு மேலும் தெளிவு பெறுதல் உறுதி; தமிழிலக்கிய வரலாறும் விளக்கம் பெறுதல் திண்ணம். நூலாசிரியரின் நன்முயற்சியைத் தமிழகமும் இலங்கையும் உவந்து வரவேற்கும் என நம்புகிறேன். Հ* மு. வரதராசன்'

முகவுரை
ரெலாற்றுக்கு எட்டாத மிகப் பழைய காலந் தொடங்கியே ஈழநாடு பண்டைத் தமிழகத்தின் பகுதி யாக விளங்கித் தமிழ் வளர்த்து வந்துள்ளது. தலைச் சங்கத்திலிருந்து தமிழாராய்ந்த முரஞ்சியூர் முடிநாக ராயரே ஈழநாட்டினர்-நாகர் குடியினர்-என ஆராய்ச்சியாளர் எடுத்தோதுகின்றனர். தொல் காப்பியர் பிறப்பகங்கூட ஈழநாட்டினைச் சார்ந்த தொரு பகுதியே என நிறுவுவதற்கான சான்றுகளை இன்றைய ஆராய்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. எனினும், ஈழத்துப் பூதந்தேவனர் காலந் தொடங் கியே இன்றைய ஈழத்து இலக்கிய வரலாறு எடுத் தாயப்பட்டு வருகின்றது.
எப்படியெனினும், நீண்ட காலமாக ஈழநாட்டிலே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்திருக்கிருர்கள் என்பதும், அவர்களிடையே தமிழ்ச்சுடர் காட்டக் காலத்துக்குக் காலம் பற்பல பேரறிஞர்களும் புலவர்களும் தோன்றி யிருக்கிரு ர்கள் என்பதும், மாரு உண்மைகள் ஆகும். அங்ங்னம் வெவ்வேறு காலங்களில் ஈழத்திற்ருேன்றி அரும்பணி ஆற்றிச் சென்ற பேரறிஞர்களின் வரலாறு முழுதுறழ் வகையில் இதுவரை எழுதப்படவில்லை.
கி.பி. 1859-ஆம் ஆண்டிலே, சைமன் காசிச் செட்டி அவர்கள் "Tamil Plutarch" என்னும் பெயருடன் ஒரு நூலினை, ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்கள். அது, தமிழ்ப் புலவர் வரலாற்றினை எடுத்தோ துவதாய்

Page 3
ν
அமைந்தது. அவருக்குப் பின் 1886-ஆம் ஆண்டில், மானிப்பாயினைச் சேர்ந்த ஆணல் சதாசிவம் பிள்ளை யவர்கள் 'பாவலர் சரித்திர தீபகம்’ என்னும் நூலினை எழுதி வெளியிட்டார்கள். அதன் பின் 1916-ஆம் ஆண்டில், சுன் கைத்தைச் சேர்ந்த அ. குமாரசுவாமிப் புலவரவர்கள் ‘தமிழ்ப் புலவர் சரித்திரம்” என்னும் நூலினை இயற்றி வெளியிட்டார்கள். நாவலர் கோட் டத்து ஆ. முத்துத் தம்பிப் பிள்ளையவர்கள், 1922-ஆம் ஆண்டில், 'ஈழ மண்டலப் புலவர் சரித்திரம்’ என்னும் நூலினை எழுதி வெளியிட்டார்கள். 1939-ஆம் ஆண்டிலே, வித்துவான் சி. கணேசையர் அவர்கள் ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்’ என்னும் நூலினை எழுதினர்கள். அவரது நூல், 235 பக்கங்களைக் கொண்டதாய்ச் சுன்னகம் திருமகள் அழுத்தகத்தின ரால் வெளியிடப்பட்டது.
இங்கு குறிப்பிடப்பட்ட நூல்களை எழுதியோர் பணிகள் ஒன்றினென்று உள்ளது சிறத்தல் முறையில் மேம்பாடுற்றிருப்பினும், ஈழத்துப் புலவர்கள் வரலாறு முழுதுறழ் மு  ைற யி ல் வெளிவந்துவிட்டதாகக் கொள்ள முடியாது. இங்ங்னமாகப் புலவர்கள் வரலாறுகளைத் தேடித் தேடித் தொகுத்துக் கொள் வதும் எளிதான பணியன்று.
இத்துறையில், ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள்வரை யான் முயன்று தொகுத்த வரலாற். றுக் குறிப்புகளை அகர வரிசைப்படுத்தி, இந் நூலினை உருவாக்கியுள்ளேன். இந்நாள்வரை எழுந்த புலவர் வரலாறுகளை நோக்கியும், பிறர் வரலாறுகளைத் தேடித் தேடித் தொகுத்தும் உருவாக்கப்பட்டது இந், நூல், 231 புலவர்களின் வரலாறு இந் நூலகத்தே.

vii
உள்ளது. எனவே, முன்னதாக நூல்களை எழுதி யோர்க்கும், பின்னதாக வரலாற்றுக் குறிப்புகளை உதவியோர்க்கும் யான் பெரிதும் கடப்பாடுடையேன்.
"ஈழநாடும் தமிழும்” என்னும் பெயர் கொண்ட தாய் ஒரு நூல் செவ்விய முறையில் உருவாக்கப்படுதல் வேண்டும் எனப் 'பாரி நிலைய உரிமையாளர் திரு. க. அ. செல்லப்பன் அவர்கள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்கி எழுதத் தொடங்கியது இந்நூல். நூல் ஆக்கத்தின்போது விரிவுபெற்று வந்தமையால், ஈழ நாட்டுப் பேரறிஞர்கள் வரலாறு"ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்” என்னும் பெயருடன் இப்போது வெளிவருகின்றது. பிற வரலாறுகள் இதைத் தொடர்ந்து வரிசையாக வெளிவருவனவாகும். வெளி பீட்டுப் பொறுப்பினை ஏற்று அழகு பெற அச்சேற்ற உளங்கொண்ட திரு. செல்லப்பன் அவர்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இந் நூலினுக்கு "முன்னுரை' வழங்கி என்னை ஊக்குதல் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதற் கிணங்கி முன்னுரை அளித்த பேராசிரியர் கலை நிதி மு. வரதராசன் அவர்களையும் நன்றியறிதலுடன் நெஞ்சகத் திருத்திப் போற்றுகின்றேன்.
மு. கணபதிப் பிள்ளை
oಷ್ಟ್ರೇಟ್!
3-10-1967.

Page 4

ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
அகிலேசபிள்ளை, வே.(1853-1910)
ஈழநாட்டின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருக் கோணமலையிலே, 1853ஆம் ஆண்டு மாசித் திங்களில், வேலுப்பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோற்றி யவர் இவர். இளமைக் காலத்திலே இவர் குமார வேலுப் பிள்ளை என்பவரிடத்தில் தமிழ் நூல்களைக் கற்ற துடன், தமது சிறிய தந்தையாராகிய தையல்பாகம் பிள்ளையவர்களிடம் ஆங்கிலமும் பயின்று கொண்டார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை படைத்த இவர் பதினேர் ஆண்டுகள் வரை அரசினர் கல்லூரி யொன்றின் முதல்வராகவும் பணிபுரிந்து கொண்டிருந் தார்.
கந்தசாமி கலிவெண்பா, நெஞ் ச றி மாலை, விசாலாட்சி விருத்தம் ஆகிய நூல்களை இவர் இயற்றி யுள்ளார். திருக்கரசைப் புராணம், வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி காதல் ஆகிய இருநூல்களை இவர் பதிப்பித்துள்ளார்.

Page 5
6 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
அசளு லெப்பை( - 1918)
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சுலுத் தான் முகியித்தீன் அவர்களின் இரண்டாவது புதல்வர் இவர். இலங்கை அரசாங்கத்தில் எழுதுவினைஞராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தவர். முசிலிம் மக்க ளிடையே முதன்முதலாக அரசாங்க சேவையிற் சேர்ந்து கொண்டவர் இவரே என்பர். தமிழ் மொழியில் மட்டு மன்றி அறபுமொழியிலும் ஆங்கிலத்திலும் இவர் மிகுந்த புலமையுடையவராய் விளங்கினர். இலங்கையிலும் இந் தியாவிலும் புலவர்கள் பலருடன் இவர் தொடர்பு பூண்டிருந்தார். தென்னிந்தியாவைச் சேர்ந்தவரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவருமான குலாம் காதிறு நாவலருடன் மிகுந்த நட்புப் பூண்டிருந்தவர். அவரியற்றிய "ஆரிபு நாயகம்’, ‘நாகூர்ப் புராணம்", "பிக்குகுமாலை', 'திரிமக்கா திரிபந்தாதி ஆகிய நூல்களுக்கு இவர் சாற்றுக்கவி. வழங்கியுள்ளார்.
திருப்புகழ்ப் பாவணி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம் ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். திருப்புகழ்ப் பாவணி எ ன் னு ம் நூலினுக்கு இவரது நண்பரான மு. சுலைமான் லெப்பை சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார். இந்நூலின்கண், தபிகள் நாயகம் (சல்) அவர்கள்மீது நவரத்தினத் திருப் புகழும், முகியித்தீன் அப்துல் காதிறு ஆண்டவர்மீது ஆசிரிய விருத்தமும், அகமதுல் கபீறுற்றியாகி ஆண் டகை மீது அந்தாதியும், சாகுல் கமீது ஆண்டவர்மீது முனுசாத்தும் பாடிச் சேர்க்கப்பட்டுள்ளன. "குதுபு நாயக அனுசாசனம்" இருநூற்று நாற்பத்து நான்கு பாடல்களைக் கொண்டதாகும். −

அந்தோனிக்குட்டி அண்ருவியார் 2
இந்தியர் வான சாத்திரத்தினையும் அரேபிய வான சாத்திரத்தினையும் நன்கு பயின்று, ஒப்பியல் முறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார் என்பர். ஆராய்ச்சிக் குறிப்புகள் எவையேனும் கிடைத் தில. இவர், 1918ஆம் ஆண்டில் இவ்வுலக வாழ்வின நீத்தார்.
தமிழ்மொழி வாயிலாக ஆறுமுக நாவலரவர்கள் சைவ சமயத்தினை வளர்த்தமைபோல, இவர்களும் தமிழ் மொழி வாயிலாக இஸ்லாம் மதத்தினை வளர்த்தார்கள் என்பர்.
அந்திரிசுப்பிள்ளை (19ஆம் நூற்ருண்டு-பிற்பகுதி)
யாழ்ப்பாணத்திலே தோன்றிய இவர் அன்னை அழுங்கல் ஒப்பாரி என்னும் நூலின (1893) இயற்றி
யுள்ளார். இவரது வரலாறு பற்றிய குறிப்புகள் எவை யும் கிடைக்கவில்லை,
அந்தோனிக்குட்டி அண்ணுவியார்
(18ஆம் நூற்ருண்டு) திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் சிற்றுாரிலே பிறந்தவர். ஈழுவர் குலத்தைச் சார்ந்தவர் இவரெனக் கூறப்படுவதால், இவர் முன்னேர் ஈழநாட்டினைச் சேர்ந்தவர் என்பர். தென்னிந்தியாவில் வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டும் சமயத் தொண்டும் புரிந்துகொண்டிருந்த காலத்திலேயே இவர் வாழ்ந்து கொண்டிருந்தார் என அறியக் கிடக்கின்றது. கத்தோ லிக்க சமயத்தினரான இவர் பிறருக்குக் கல்வி கற்பித்துக் கொண்டும், தமிழ் நூல்கள் இயற்றிக் கொண்டும், சமயத்தொண்டு புரிந்துகொண்டும் வாழ்ந்தார் எனத் தெரிகின்றது. இவருடைய போக்கு அக்காலத்திலிருந்த

Page 6
d ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள் ர்
பாதிரிமாருக்குப் பிடிக்காத காரணத்தால் இஇவர் தென் னிந்தியாவை விட்டு நீங்கி, யாழ்ப்பாணத்திதில் வாழ்ந்து கொண்டிருந்தார் எனத் தெரிகின்றது. இவnவர் இயற்றிய பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சுச்சாத்தாபம், தன்மேற்குற்றஞ் சுமத்தல், ஆசைப்பத்து, , அருள் வாச கம், சேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனானந்தமஞ்சம் கீர்த்தனை முதலான பாடல்கள் கிறிஸ்து சமயuய கீர்த்தனம் (யாழ்ப்பாணம், 1891) என்னும் திரட்டு நூலாலாக யாழ்ப் பாணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அப்துல் காதிர் புலவர், அருள்வாக்கியர் (18866-1918) மலைநாட்டினைச் சார்ந்த கண்டிக்கு அண்மையி லுள்ள வீரபுரி எனப்படும் தெல்தோட்டைனயைச் சார்ந்த போப்பிட்டியில் வாழ்ந்து கொண்டிருந்த ஆஆ. பி. அல்லா பிச்சை ராவுத்தர் அவர்களுக்கும் ஹவ்வா உம்மா என் னும் அம்மையார்க்கும் புதல்வராக 1866ஆம்பூம் ஆண்டிலே தோற்றியவர் இவர். கண்டியிலுள்ள இராoாணி கல்லூரி (இப்போது, திரினிற்றிக் கல்லூரி)யில் தமிமிழும் ஆங்கில மும் பயின்றபின், தென்னிந்தியாவுக்குச் செசன்று, திருப் பத்தூர்த் தமிழ் வித்தியாசாலைத் தலைமைமயாசிரியராய் விளங்கிய வித்துவசிரோமணி, மகமூது முடிமுத்துபாவாப் புலவரிடம் தமிழ் இலக்கண விலக்கியங்கள்ைளை முறையே கற்றுக் கொண்டார்.
இவர், தமது பதினேராவது வயதிலேலே ஒர் அருட் காட்சி கிடைத்தபின், தாமாகவே பாக்கவிகள் இயற்றும் வன்மை பெற்றரென்று கூறப்படுகின்றது.து. பதினெரு வயதிலேயே பாடசாலை ஆசிரியர்களும் வியியந்து போற் றும்படி பாடல்களை இயற்றினர் எனவும், பதினறு வயதிலே கவியரங்குகளிற் கலந்து "யாழ்ப்பாண சங்கன்", "மெய்ஞ்ஞான அருள் வாக்கி’ எனன்னும் சிறப்

அப்துல்காதி* புலவf
புப் பெயர்களைப் பெற்ருர் எனவும் அறியக் கிடக் கின்றது.
யாழ்ப்பாணத்திலே சீருப்புராணம் இராமாயணம் ஆகியவைபற்றி இவர் ஆற்றிய விரிவுரைகளின் விழுப்பத் தைக் கண்ட புலவர்கள், அசனுலெப்பைப் புலவரவர் களின் தலைமையில், இவருக்கு "வித்துவ தீபம்" என்னும் பட்டத்தினை 1912ஆம் ஆண்டில் வழங்கினர்கள்.
இவர், போப்பிட்டியிலே திண்ணைப்பள்ளி ஒன்றினை நிறுவி நடாத்தி வந்தார் எனவும் அறியக் கிடக் கின்றது. உடுதெனியா, பட்டியகாமம் ஆகிய இடப்பகுதிகளில் செய்கு சுலைமானுல் காதிரியவர் களுடன் சேர்ந்து சமூகசேவை புரிந்து, பல பள்ளிவாயில் களையும் நிறுவுவதற்குத் துணை புரிந்தார். இவர், பத்திப் பாடல்கள் பாடிப் பல்லாண்டுகளாகத் தீரா திருந்த பிணி களைப் போக்கினர் எனவும் கூறப்படுகின்றது.
இவர், தமது ஐம்பத்திரண்டாவது வயதில்,1918ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 18ஆம் தேதி கண்டியிலுள்ள தமது இல்லத்தில் இவ்வுலக வாழ்வினை நீத்த்ார்கள்.
இவரியற்றிய நூல்கள் :-கண்டிக் கலம்பகம், கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி, கண்டி நகர்ப்பதிகம், சலவாத்துப் பதிகம், தோவாரப் பதிகம், பதாயிகுப் பதிகம், பிரான் மலைப் பதிகம், திருபகுதாதந்தாதி, மெய்ஞ்ஞானக் குற வஞ்சி, மெய்ஞ்ஞானக் கோவை, கோட்டாற்றுப் புரா ணம், உமரொலியுல்லா பிள்ளைத் தமிழ், காரணப் பிள்ளைத்தமிழ், சித்திரக் கவிப்புஞ்சம், பிரபந்த புஞ்சம், ஆரிபுமாலை, பேரின்ப ரஞ்சிதமாலை, ஞானப் பிரகாச மாலை, புதுமொழிமாலை, திருமதீனத்துமாலை, வினுேத பதமஞ்சரி, நவமணித் தீபம், சந்தத் திருப்புகழ்-முத லாகப் பலவாம்.

Page 7
ாழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
அப்துல் ரகுமான் ஆலிம் புலவர்( -1850)
மட்டக்களப்பினைச் சார்ந்த அட்டாளைச் சேனை என்னும் ஊரிலே தோன்றிய இவர், தமிழ் மொழியில் மட்டுமன்றி அறபு மொழியிலும் மிகுந்த புலமையுடைய வராய் விளங்கிய இவர், முசிலிம் மதஞானிகளுக்குப் பொதுவான ஆலிம் என்னும் பெயரினைத் தமக்கே சிறப்பாக்கிக் கொண்டவர். இவரைப் பேணிப் புரவல ராக விளங்கியவர் அக்கரைப் பற்றினைச் சேர்ந்த மகுமூது போடி என்பவராவர். அவருடைய பெயரினைத் தமது பாடல்களிலே "வள்ளல்" எனப் பாராட்டியுள்ளார்.
நபிநாயகம்(ஸல்) அவர்களின் புதல்வியாராகிய பீபி பாத்திமாவுக்கும் அலி (ஜலி) அவர்களுக்கும் நடந் தேறிய திருமணச் சிறப்பினை எடுத்தோதுகின்ற சமண மங்கலமாலை" என்னும் அரியதொரு நூலினை இவர் இயற்றியுள்ளார். இவரால் இயற்றப்பட்ட தனிப் பாடல் களும் பல உள்ளன. இவை அச்சேறவில்லை.
அப்துல் ஹமீது மரைக்காயர்( -1952)
இலங்கையின் தென்பகுதியிலமைந்த வேர்விலைக்கு அருகாமையிலுள்ள மக்கூன் என்னும் ஊரிலே தோன் றியவர் இவர். இவர் பாடிய பாடல்கள் "தோத்திரப் புஞ்சம்" என்னும் பெயருடன் வெளியிடப்பட்டிருக் கின்றன. "பாலகர் தாலாட்டு" என்னும் ஒரு நூலும் இவரால் இயற்றப்பட்டுள்ளது. செய்கு அஸ்றப் ஒலி யுல்லாவைப் புகழ்ந்தும் இவர் சில பாடல்கள் இயற்றி nyesin strmt iř. அப்பாப்பிள்ளை (19ஆம் நூற்ருண்டு-பிற்பகுதி)
இவர் யாழ்ப்பாணத்திலே தோன்றியவர். "மருதடி அந்தாதி" (1891) என்னும் நூலினை இயற்றியுள்ளார். பிற விவரங்கள் கிடைத்தில,

அம்பலவாண நாவலரி 11
அப்புக்குட்டி ஐயர்(1997-1891)
நல்லூர்ச் சிகிவாகன ஐயரின் புதல்வர் இவர். வட மொழியிலும் தென் மொழியிலும் மிகுந்த புலமை படைத்தவராய் விளங்கிக் கொண்டிருந்தார்.
சூது புராணம்", "நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ்" ஆகிய இரு நூல்களை இவர் இயற்றி யுள்ளார். தனிப் பாடல்கள் பல இயற்றியுள்ளார் என அறியப்படுகின்றபோதிலும், அவற்றுள் எவையேனும் கிடைத்தில.
அம்பலவாண நாவலர் (20-ஆம் நூற்ருண்டு-மும்
பகுதி) வட்டுக் கோட்டையில் வாழ்ந்து கொண்டிருந்த ஆறுமுகப் பிள்ளைக்கும் சுந்தரவல்லியம்மையாருக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். தமிழிலக்கண விலக் கியங்களை மட்டுவில் உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களிடத்திலும், வடமொழி நூல்களை நீர்வேலிச் சிவப்பிரகாச பண்டிதர் அவர்களிடத்திலும், ஆங்கிலத் தைச் சுளிபுரம் கனகரத்தின முதலியாரிடத்திலும் கற்றுக் கொண்டார். மதுரைத் திருஞானசம்பந்தர் மடத்து மகா சந்நிதானமவர்களிடம் மந்திர காசாயம் பெற்று நைட்டிகப் பிரமசிரிய மாதுல்ய மகா சந்நி யாசியாய் விளங்கினர் என்பர். வட்டுக் கோட்டையிலே பாதிரிமாரால் நிறுவப்பட்டிருந்த பாடசாலைகளில் சைவப் பிள்ளைகள் சென்று கல்வி கற்பதைத் தடுக்கும் வகையில், ஒரு சைவத் தமிழ்ப் பாடசாலையை அமைப் பித்து, அப் பாடசாலையிலே தாமும் ஓர் ஆசிரியராக அமர்ந்து கல்வி கற்பித்து வந்தார்.
நாவலர் பெருமான் காட்டிய வழியைப் பின்பற்றிச் சமய விரிவுரைகள் நிகழ்த்துவதிலும் இவர் ஈடுபட்டுக்

Page 8
ΙΣ ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
கொண்டிருந்தார். இவரது விரிவுரைகளின் பெருமையை உணர்ந்து இவரை உற்சாகப்படுத்தியவருள் வலிகாமம் மேற்குப் பகுதி மணியகாரணுய் அக்காலத்து விளங்கிய வட்டுக்கோட்டை இளந் த  ைழ ய சிங்கமாப்பாண இரகுநாத முதலியார் சிறப்பாகக் குறிப்பிடப் படுகிறர். இவரது விரிவுரைச் சிறப்பினைக் கேள்வியுற்று நாவலர் பெருமானே இவரை அழைத்துப் புகழ்ந்து ஊக்கப் படுத்தினர் எனச் சொல்லப்படுகின்றது.
அக்காலத்தில் வாணிகஞ் செய்வதற்காக யாழ்ப் பாணத்துக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டைச் செட் டியார் இருவர்-பெரிய சொக்கலிங்கச் செட்டியார், சின்னச் சொக்கலிங்கச் செட்டியார் ஆகிய இருவரும்இவரது கல்வியறிவினையும் விரிவுரை வன்மையினையுங் கண்டு, விரிவுரைகள் செய்விப்பதற்காக இந்தியாவி லுள்ள திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனர். அங்கே இவர் நெல்லையப்பர்-காந்திமதி திருக்கோயிலில் சமயவிரிவுரை யொன்று ஆற்றினர். அவ்விரிவுரை முடிந்ததும் அங்குள்ள செல்வர்களால் இவருக்கு ஆயிரம் ரூபா அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அதன்பின் ஏறக்குறைய ஓராண்டுக் காலம் வரை இவர் அங்கே தங்கியிருந்து திருவாதவூரர் புராண விரிவுரை செய்தார் எனவும் அறியக்கிடக்கின்றது.
அத்திருக்கோயில் வீதியிலே, திருஞானசம்பந்தர் மடாலயம்" என்னும் பெயருடன் ஒரு மடத்தினையும் இவர் அமைப்பித்தார். கண்டனுரர், காரைக்குடி, தேவகோட்டை, நாட்டரசன் கோட்டை ஆகிய இடங் களில் வாழ்ந்து கொண்டிருந்த செல்வர்களே இவரைப் பெரிதும் ஆதரித்தவராவர்.
இந்தியாவிலுள்ள திருக்கோயில்களை யெல்லாம் தரிசித்துக்கொண்டு வந்தவர், திருவாவடுதுறைக்குச்

அம்பலவாண நாவலர் 19
சென்றபோது அங்குள்ள மடத்துக்குச் சென்று, திருப் பெருந்திரு அம்பலவாண தேசிகரையும் சந்தித்தார். இவருடைய கல்வியறிவையும் விரிவுரை வன்மையையும் கண்ட தேசிகரவர்கள் இவருக்கு "நாவலர்" என்னும் பட்டப் பெயரினைச் சூட்டி, பொன்னடையும் போர்த்திப் பெருமதிப்புச் செய்தார்.
பலரது வேண்டுகோளுக்கு இணங்கி இரண்டு ஆண்டு கள் வரை அவர் தேவகோட்டையிலே தங்கியிருந்து, பெரியபுராண விரிவுரைகள் செய்து கொண்டிருந்தார். அவ் விரிவுரை முடிவடைந்ததும் பன்னீராயிரம் ரூபா இவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதெனத் தெரிய வருகின்றது,
சிதம்பரத்திலே, "ஆறுமுகநாவலர் சந்தான ஞான சம்பந்த சுவாமி ஆதீனம்" என ஒரு மடத்தையும் இவர் அமைப்பித்தார். இவர், தமது முதுமைப் பருவத்தினை அம்மடத்திலேயே கழித்தார் எனக் கூறப்படுகின்றது.
இவரால் இயற்றப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும் வெளியிடப்பட்ட நூல்கள் :- 1. அகோர சிவாசாரியர் பத்ததி (நிர்மலமணி வியாக்கியானம்). 2. பிரும தருக்கஸ்தவம், 3. பெளஷ்கர சங்கிதா பாஷியம், 4. அருணுசல மான்மியம், 5. சற்குருமணிமாலை, 6. சிவத்துரோக கண்டனம், 7. திருவாதிரைத் திருநாள் மகிமைப் பிரபாவம், 8. வேணுவன லிங்கோற்பவம், 9. திருச்சுழியற் புராணம், 10. நடன வாத்திய ரஞ்சனம், 11. சண்முக சடாட்சரப் பதிகம்.
அச்சேருத நூல்கள் :
1. ஆரிய திராவிடப் பிரகாசிகை, 2. சித்தாந்தப் பிரபோதம், 3. சைவ சந்நியாச பத்ததி, 4. தக்ஷா

Page 9
14 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
தர்சம், 5. பெரிய புராணபாடியம் (பாடியப் பிரகாசிகை պւ-6ճ7).
அம்பலவாணர், பண்டிதர் (1814-1879)
யாழ்ப்பாணத்தைச் சேர் ந் த தெல்லிப்பழை என்னும் ஊரிலே வாழ்ந்துகொண்டிருந்த அருளம்பல முதலியாரின் புதல்வர் இவர். சேனதிராச முதலியா ரிடத்திலே இவர் தமிழ் நூல்கள் பலவற்றையுங் கற்ருர் எனத் தெரியவருகின்றது.
சேனதிராச முதலியார் இயற்றிய நல்லை வெண்பா", *நீராவிக் கலிவெண்பா' ஆகிய இரு நூல்களையும் இவரே பரிசோதித்து வெளியிட்டுள்ளார்.
அம்பிகைபாகர் (1854-1904)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணுவில் என்னும் ஊரிற் பிறந்தவர் இவர். ஆறுமுகநாவலரவர்களிடத்திலே தொல்காப்பியம் சேஞவரையத்தையும், நடராசையர் என்பாரிடத்திலே சிவஞான சித்தியார் முதலிய சித்தாந்த நூல்களையும் பயின் ருர் என்று கூறப்படு கின்றது.
சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களும் இவரும் சிறந்த நண்பர்களாய் விளங்கி, ஒருவருக்கொருவர் இலக்கியப் பணிகளில் துணைபுரிந்து வந்தனர். மகா வித்துவான், சி. கணேசையர் அவர்கள் இவரிடமே தணிகைப் புராணத்துக்குப் பொருள் கேட்டறிந்தாரி என அறியக் கிடக்கின்றது.
இவரியற்றிய நூல்கள் :- 1. இணுவையந்தாதி, 2. தணிகைப்புராண உரை (நகரப்படலம் வரை) 3. தணிகைப்புராணம் - பொழிப்புரை (அச்சேறவில்லை). 4. குளாமணி வசனம்,

அருணுசலப் பிள்ளை 15
அரசகேசரி
யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்து அரசாண்ட பரராசசேகர மன்னனின் மருகர் இவர். திருநெல்வேலி யில் வாழ்ந்த பகண்டி மழவன் மரபிலே தோன்றியவளும் பரராசசேகர மன்னனின் இரண்டாம் மனைவியுமாகிய வள்ளியம்மையின் மகளை இவர் மணம் முடித்திருந்தார். இவர், வடமொழி தென் மொழி ஆகிய இருமொழி களிலும் பெரும் புலமை படைத்தவராய் விளங்கினர். பழந்தமிழ் நூல்களிலும் மிகுந்த பயிற்சியுடையவர். காளிதாசரால் இயற்றப்பட்ட வடமொழி இரகுவமிசத் தினை இவர் தமிழில் மொழிபெயர்த்தியற்றியுள்ளார். செய்யுள் வடிவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந் நூலில் 2404 பாடல்கள் உள்ளன.
யாழ்ப்பாணத்தில் இவர் வாழ்ந்த இடமானது இப்பொழுதும் "அரசகேசரி வளவு" என்னும் பெய ருடன் நல்லூரிலுள்ள யமுனுரி எனப்படும் ஏரிக்கு அண்மையில் உள்ளது. அருணுசல ஐயர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதகல் என்னும் ஊரிலே, அப்பாசாமி ஐயர் என்பவருக்குப் புதல்வராக இவர் பிறந்தார். நல்லூர் வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளையவர்களிடம் தமிழ் நூல்களை இவர் முறையே பயின்ருர் என அறியக் கிடக்கின்றது. வட மொழியிலும் தென்மொழியிலும் மிகுந்த புலமை வாய்ந்தவராய் விளங்கினர். வடமொழி நூல்கள் சிலவற்றுக்கு இவர் தமிழுரை செய்துள்ளார். அருளுசலப் பிள்ளை
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அராலி என்னும் வரில் இவர் பிறந்தார். மாதகல் சிற்றம்பலவரிடம் இவர் தமிழ் இலக்கண விலக்கியங்களைக் கற்ருர்,

Page 10
16 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவர், கவி புனையுந் திறன் மிகுதியாகப் பெற்றிருந் தார் எனக் கூறுவர். சோதிட நூலிலும் நல்ல அறிவுடை யவராய் விளங்கினர். இவரால் இயற்றப்பட்ட தனிப் பாடல்கள் பலவெனக் கூறப்படுகின்றது. பாடல்கள் கிடைத்தில.
அருணுசலம், பொன். சேர். (1853-1924)
யாழ்ப்பாணத்து மானிப்பாயைச் சேர்ந்தவர்களாக வும், வாழையடிவாழையாகப் பொதுப்பணியும், கல்விப் பணியும், சமயப் பணியும் புரிந்து புகழ்பெற்ற குடும்பத் தினராகவும் விளங்கிக் கொழும்பு மாநகரில் வாழ்ந்து கொண்டிருந்த முதலியார் பொன்னம்பலம் அவர்களுக் கும் செல்லாச்சியம்மையாருக்கும் புதல்வராக, 1853ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 14ஆம் தேதியன்று தோன் றியவர் இவர். சேர். பொன். இராமநாதன் அவர்கள் இவரது தம்பியாராவர்.
இளமைக்காலத்திலே, இன்று "ருேயல் கல்லூரி" என வழங்கும் "ருேயல் அக்கதெமி'யில் இவர் ஆரம்பக் கல்வி பயின்று வந்தார். இங்கு கல்வி பயின்றுகொண் டிருந்தபோது, இராணி கல்விச் சகாய நிதியினையும் இரேணர் பரிசினையும் பெற்ருர். 1870ஆம் ஆண்டில் ஆங்கிலப் பல்கலைக் கழகச் சகாயநிதிப் பரிசினையும் பெற்று, கேம்பிறிச் நகரிலுள்ள கிறித்துவக் கல்லூரியில் உயர்தரக் கல்வி பெறுவதற்காகச் சென்ருர், சிறிது காலத்துக்குள்ளேயே அவர் தமது திறமையைக் காட்டி பவுண்டேசன்" கல்விச் சகாய நிதியைப் பெற்று, பண்டைய இலக்கியங்களிலும் கணித சாத்திரத்திலும் வல்லுநராகிப் பெரும் புகழீட்டினர். கிறித்து கல்லூரியில் "எம். ஏ. பட்டம் பெற்றர். பின் "பாரிஸ்டர்" ஆஞரி,

அருணசலம், பொன். சேர். iፃ
நியாய துரந்தரராவதற்கே விருப்பங்கொண்டிருந்த இவரை, இவருடைய மாமனரான சேர். முத்துக்குமார சுவாமியவர்கள், *சிவில் சேவை'த் தேர்வுக்குத் தோற்றும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார். அவ ருடைய கட்டளைப்படி தோற்றிய அத் தேர்வில் முதன் முதலாகச் சித்திபெற்ற இலங்கையர் இவரேயாவர்.
இலங்கைக்குத் திரும்பிவந்ததும், 1875ஆம் ஆண் டிலே கொழும்பிலுள்ள மாகாண அதிபர் அலுவலகத்திற் பதவி ஏற்ருர். பின்னதாக, கண்டிப் பகுதிப் பொலிசு நீதி மன்றத்தில் நீதிவானக அமர்த்தப்பட்டார். அங்கிருந்து பற்பல இடங்களுக்கு மாற்றம் பெற்றுச் சென்று கடமையாற்றிக் கொண்டிருந்தார். 1883ஆம் ஆண்டில் மானிப்பாயைச் சேர்ந்த நமசிவாய முதலியார் அவர் களின் செல்வப் புதல்வியான சொர்ணம் என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார்.
அக்காலத்தில் இலங்கைத் தேசாதிபதியாயிருந்த சேர். ஆதர் கோடன் அவர்கள் இவர் திறமையினைக் கண்டு, 1887 ஆம் ஆண்டில், பதிவாளர் நாயகமாக ( lRegistrar General)ayib GBuo6äv DIT smrGOOTLI : ? si காலாகவும் இவரை நியமித்தார். இவர் பதவியேற்ற காலத்திலே பதிவாளர் நாயக அலுவலகமும் பிசுக்கால் அலுவலகமும் ஒன்ருய் அமைந்திருந்தன. ஊழல்கள் மிகுந்திருந்த அந்த அலுவலகத்தினை இருவேறு அலுவலகங்களாக அமைத்து இவர் சீர்திருத்தம் செய் தார். பதிவாளர் நாயக அலுவலகத்திற் காணிப்பதிவுக் கென ஒரு பிரிவினையும், பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகளுக்கென இன்னெரு பிரிவினையும் ஏற்படுத்தியவர் இவரே. 1901ஆம் ஆண்டிலே குடிசன மதிப்பு வேலையை ஒப்புக்கொண்டு, புள்ளி விவரங்களைச் சேகரித்து, இலம்

Page 11
18 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
கைக்கு ஒரு குடிசன சூசிகையை முதன் முதலாக அளித்தவரும் இவரேயாவர்.
1903ஆம் ஆண்டிலே குருநாகலில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 1906ஆம் ஆண்டிலே சட்ட நிரூபண சபையில் ஓர் உறுப்பினராக நியமிக்கப் பட்டார். 1912ஆம் ஆண்டிலே சட்ட நிருவாக சபையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
1913ஆம் ஆண்டில், இவர் "சிவில் சேவை" உத்தி யோகத்திலிருந்து இளைப்பாறிக்கொண்டார். அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறியபின் சிறிது காலத்துள்இவருடைய சிறந்த சேவைகளைப் பாராட்டி மன்னர் பிரானல் இவருக்குச் சேர்" பட்டம் வழங்கப்பட்டது. 1919ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய காங்கிரசு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. அதற்குத் தலைமை பூண்டவர் இவரே. முதன்முதலாக இவரே அக் காங்கிர சின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை யில் தொழிலாளர் துயர் துடைப்பதற்காகவும் அவர் களது நிலவுரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் முதன் முதலாகத் தொழிற்சங்கமொன்றினை 1919ஆம் ஆண்டில் நிறுவிய பெருமையும் இவரையே சாரும்.
அக்காலத்தில் நடைமுறையிலிருந்த கல்வித்திட்டத் தில் மனநிறைவு கொள்ளாத இவர், 1900 ஆம் ஆண்டில் அக்காலத்தே கல்விப் பணிப்பாளராயிருந்த எஸ். எம். பரோஸ் அவர்களுக்கு ஒர் அறிக்கை சமர்ப்பித்தார். இவரே இலங்கையில் 'தாய் மொழிக் கல்வி'யின் தந்தையும் ஆவர்.
இலங்கையில் ஒரு பல்கலைக் கழகத்தினை நிறுவுதல் வேண்டுமென முதன்முதலாக முயன்றவரும் இவரே யாவர். இவரது பெரு முயற்சியினலேயே 1906ஆம்

அருணசலம், பொன். சேர். 19
ஆண்டிலே இலங்கைப் பல்கலைகழகச் ஆங்கம் தொடங்கப் பட்டது. இவரை நினைவு கூரும் வகையில், இப்போது பேராதனையில் அமைக்கப்பட்டிருக்கும் பல்கலைக் சழகத் திலும் ஒரு கட்டடம் “அருணுசல மண்டபம்" என அமைக்கப்பட்டுள்ளது.
பொறுப்புகள் மிகுந்த அரசாங்க சேவையில் இவர் அமர்ந்திருந்த காலத்திலும் பண்டைய இலக்கியங் களையும், வரலாறு புதைபொருளாராய்ச்சி, கீழைத்தேய மேலைத் தேயத் தத்துவஞானம் ஆகியவற்றையும் சிந்தை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார். தமது ஓய்வு நேரம் முழுவதையும் கலைகளுக்காகவும் சலையாராய்ச்சிக் காகவுமே அர்ப்பணித்தார்.
அக்காலத்தில் இவரே ருேயல் ஆசியசங்கத்தின் (R. A. S. C.) தலைவராகவும் விளங்கினர். "கொழும் புச் சைவ பரிபாலன சபை' ствотiju -1- 60érou d'LDш தாபனத்தினை "இலங்கைச் சைவ பரிபான சபை' எனச் சீருறுத்தி மீட்டமைத்துச் சிறப்புற நடாத்தி வந்தவரும் இவரேயாவர். இவரே அச்சபையின் முதலாவது தலைவ ராகவும் விளங்கிக் கொண்டிருந்தார்.
தஞ்சாவூரைச் சேர்ந்தி இலக்கணம் இராமசாமிப் பிள்ளை என்னும் திருப்பெருந்திரு. அருட்பரானந்தி தேசிகர் அவர்கள் இவரது ஞானசாரியர் ஆவர்.
1923ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் இந்தியாவி லுள்ள திருக்கோயில்களுக்கு யாத்திரை செய்வதற்காகச் சென்ற இவர், 1924ஆம் ஆண்டு சனவரி மாதம் 9ஆம் தேதி மதுரையில் இறைவன் திருவடி சேர்ந்தார்.
இவருடைய பூதவுடல் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு, கொழும்புப் பொது மறுானத்தில் ஈமக்கிரி யைகள் செய்யப்பட்டன.

Page 12
èÓ ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
1930ஆம் ஆண்டில், இலங்கை நாட்டினுக்கு இவர் புரிந்த பெருந்தொண்டுகளை மதித்துப் பேணி நினைவு கூரும் வகையில், இலங்கைப் பாராளுமன்ற முன்றிலில் இவரது வெண்கலச் சிலையொன்று தேசாதிபதியவர் களால் நிறுவப்பட்டுள்ளது.
இவர் எழுதியன :
1. 1901ஆம் ஆண்டின் குடிசன மதிப்புச் சூசிகை கொழும்பு 1901, 2. 1901ஆம் ஆண்டின் இலங்கைக் குடிசனமதிப்பு, தொகுதி. 1-4., கொழும்பு 1902; 3. அறிதுயில்-வெஸ்ற்மினிஸ்ரர் ரிவியூ-லண்டன் நவம்பர். 1902, 4. இலங்கைச் சரித்திரச் சுருக்கம்-இலங்கைத் தேசிய சஞ்சிகை தொகுதி. 1-1906, 5. இலங்கைக்கு ஒரு பல்கலைக் கழகத்தின் அத்தியாவசியம்-இலங்கைப் பல்கலைக் கழகச் சஞ்சிகை தொகுதி.1 பகுதி-2-1906: 6. எங்கள் அரசியல் தேவைகள்-கொழும்பு, 1917, 7, இக்கால அரசியல் நிலைமை-கொழும்பு, 1919; 8. தலைமையுரையும் வேறு அரசியற் சொற்பொழிவுகளும், இலங்கைத் தேசிய காங்கிரஸ் கைநூல், 1918-1919, கொழும்பு, 1928; 9. ருேயல் ஆசியச் சங்க இலங்கைக் கிளைச் சஞ்சிகைக்கு வழங்கிய கட்டுரைகள் : 1. ஞான வாசிட்டம், தொகுதி-XXi. இல. 63-1910; i. கண்டி மாகாணங்கள், தொகுதி. xxi. இல. 68-1916, it, பொலநறுவை வெண்கல உருவங்களும் சிவவழிபாடும், தொகுதி xxiv. இல. 68, 1916; iv. முருக வழிபாடு (கதிர்காமக்கடவுள்), தொகுதி xxiw. இல, 77, 1924; w. ருேயல் ஆசிய சங்கத் தலைமைப் பேருரை, Kai., இல. 67., 1904; 10. கொழும்புப் பொருட்காட்சிச் சாலையி லுள்ள புராதன வெண்கல உருவங்கள்-ஸ்பொலியா சிலோனிக்க சஞ்சிகை-தொகுதி. wi. பகுதி. xxi,- கொழும்பு, 1909; 11. கிழக்குத் திசையின் ஜோதி

அவியார் மரிக்கார் கக்கம் 21
எட்வேட் காப்பென்டர் பதிப்பு-லண்டன், 1928; 12. சேர் பொன்னம்பலம் அருணுசலம்-சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்-கொழும்பு, 1934; 13. சமயத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும்-சேர் பொன்னம்பலம் அருணசலம்-கொழும்பு, 1937.
அலி உதுமான் (1880)
இவர், புத்தளப் பகுதியைச் சார்ந்த புளிச்சாக் குளம் என்னும் ஊரிலே தோன்றியவர். தமிழிலக்கண விலக்கியங்களும் சிறப்பாக யாப்பணியும் நன்கு கற்றவர். "கீர்த்தி மஞ்சரி" என்னும் நூலினை இயற்றியுள்ளார். இவரியற்றிய தனிப்பாடல்கள் கிடைக்கவில்லை.
அலியார் மரிக்கார்
வேர்விலையிலே தோன்றியவர் இவர். தமிழ்ப் புலவராய் விளங்கியதுமன்றிச் சிறந்த தமிழ்ப்பற்றுடைய வராகவும் புரவலராகவும் விளங்கினர். இவர் பாடிய பாடல்கள் கிடைத்தில. பாசிப்பட்டணம் நயினர் முகம் மதுப் புலவர் இயற்றிய "முன் கிரீன் மாலை" என்னும் நூலினை இவரே தம் முயற்சியால் வெளியிட்டுள்ளார்.
அலியார் மரிக்கார் கக்கீம்
வேர்விலையைச் சேர்ந்தவராகிய இவர் தமிழிலும் உருதுவிலும் மிகுந்த அறிவுடையவராய் விளங்கினர் என அறியக் கிடக்கின்றது. இவர் தமது மதத்தொடர் பான பாடல்கள் பல இயற்றியுள்ளார். வேர்விலையில் வாழ்ந்து மத விரிவுரைகள் செய்து கொண்டிருந்த செய்கு முஸ்தபா ஆலின் சாகிபு அவர்களின்மேல் இவர் பாடிய பாடலொன்று இன்றும் எல்லோராலும் பாராட்டப்படு கின்றது.
『、p・ー』

Page 13
s ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
அஹ்மது லெப்பை மரைக்காயர், மக்கோனை.
இலங்கையின் தென்பகுதியிலமைந்த வேர்விலையிலே தோன்றியவர். இவர். பத்திச்சுவையும் கருத்துப் பொதிவுமுடையனவாய்க் கன்னெஞ்சும் உருகும்படி இசையுடன் பாடத்தக்க பாடல்கள் பலவற்றை இவர் இயற்றியுள்ளார்.
ஆறுமுகத் தம்பிரான்
சோழநாட்டைச் சார்ந்த கருவூரிலே தோன்றியவர் இவர். இவர், ஆறுமுக நாவலரவர்களிடத்திலே இலக் கிய நூல்களைக் கற்றுக் கொண்டார் எனக் கூறுவர். நாவலரவர்களால் வண்ணுர்பண்ணையில் நிறுவப்பட்ட பாடசாலையிலே சிறிது காலம் ஆசிரியராகவும் பணி யாற்றினர். யாதோ ஒரு காரணத்தால் அப்பாட சாலையை விட்டு நீங்கி, இந்தியாவிலுள்ள திருவண்ணு மலைக்குச் சென்று, அங்குள்ள ஆதீனத்திலே சைவசித் தாந்த நூல்களை முறையே பயின்று கொண்டார். இவர் தருமபுர ஆதீனத் தம்பிரான்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றர். இவருக்குத் தருமபுர மகாவித்துவான்" என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
இவர் தமது மாணவர் சிலருடன் தென்னுட்டிலும், ஈழநாட்டிலும், வடநாட்டிலுமுள்ள திருக்கோயில்களைத் தரிசிப்பதற்காகத் தல யாத்திரை செய்தார். யாத்திரை முடிந்து திரும்பியதும் இவர் சென்னையிலே தங்கியிருந்த போது, ஞானமுழுக்குப் பெற்றுக் கிறித்தவ சமயத்தைத் தழுவிக் கொண்டார். 1836ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 7ஆம் தேதியன்று ஞான முழுக்குப் பெற்றுக்கொண்டதின் பின் இவர் பெயர் "வெஸ்லி ஆபிரகாம்' என மாற்றப் படுவதாயிற்று. இவர் கிறித்து சமயம் புகுந்த பின் அம் மதத்தொடர்புபட்ட சில நூல்களை இயற்றியுள்ளார்.

ஆறுமுக நாவலர் 23
அவை பின் வருமாறு :-1. அஞ்ஞானக் கும்மி, 2. அஞ்ஞானம், 3. இரட்சகர் அவதாரம், 4. செகவுற் பத்தி, 5. நரகம், 6. மோட்சம், 7. வாழ்த்து. இவை, சென்னைக் கிறித்தவ சங்கத்தினரால் 1878ஆம் ஆண்டிலே வெளியிடப்பட்டன. இவர் கிறித்த சமயத்தினைத் தழுவு வதற்கு முன், தாம் பயின்றுகொண்ட சைவசித்தாந்த நூல்களின் துணைகொண்டு, சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்துக்குச் செறிவும் நுட்பமும் வாய்ந்ததோர் உரையினை முதன்முதலாக எழுதிப் பெரும் புகழ்பெற்ருர், இவர் எழுதிய பெரிய புராணவுரையானது 1885ஆம் ஆண்டு தொடக்கம் பகுதிபகுதியாக அச்சேற்றப்படுவதா யிற்று. அவ்வுரை இன்றும் மிகச் சிறந்ததெனப் போற்றப் பட்டு வருகின்றது.
ஆறுமுக நாவலர் (1822-1879)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரிலே, ஞானப் பிரகாச சுவாமிகள் மரபிலே, கந்தப்பிள்ளைக்கும் சிவகாமி அம்மையாருக்கும் கடைசிப் புதல்வராகத் தோன்றியவர் இவர். ஐந்து வயதிலே ஏடு தொடங்கியவுடன், நல்லூ ரிலே ஒருதிண்ணைப் பள்ளிக்கூடத்தை நிறுவி நடாத்தி வந்த சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் சென்று இவர் கல்வி கற்று வந்தார். அக்காலத்தில் வழக்கிலிருந்த முறைப்படி, மூதுரை முதலிய நீதி நூல்களும் நிகண்டு முதலிய கருவி நூல்களுமே இவருக்கு முதன்முதலாகக் கற்பிச்கப்பட்டன. இவருடைய கல்வி வன்மையினைக் கண்டு உவகைகொண்ட தமையன்மாரது விருப்பப்படி, இருபாலைச் சேனதிராய முதலியார் அவர்களிடத்தும், சரவணமுத்துப் புலவர் அவர்களிடத்தும், மேலும் இவர் கல்வி பயின்று, தமிழ்மொழியிலும் சமக்கிருதத்திலும் மிகுந்த புலமை வாய்க்கப் பெற்றவராக விளங்கினர்.

Page 14
4 சழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவரது தனித்திறமையைக் கவனித்து வந்த தமையன் மார், ஆங்கிலத்திலும் இவருக்குப் போதுமான அறிவு இன்றியமையாதது எனக் கருதி, பீற்றர் பேர்சிவல் பாதிரியார் நடாத்திவந்த ஆங்கிலப் பாடசாலையிற் கல்வி பயிலுவதற்காக இவரை அனுப்பி வைத்தனர். இவர், மேல்வகுப்பிற் கல்வி பயின்றுகொண்டிருந்த வேளையில், இவருடைய இருமொழிப் புலமையினை நேரிற் கண்டும்-மும் மொழிப் புலமையினைப் பற்றிக் கேள்வியுற்றும்-பேர்சிவல் பாதிரியார் வியப்படைந் தார். இவருடைய கல்வியறிவு தமது பாடசாலைக்கு எவ்வகையிலும் பயன்பட வேண்டுமெனக் கருதிய பாதிரியார், கீழ் வகுப்புகளுக்கு ஆங்கிலமும், மேல் வகுப்புகளுக்குத் தமிழும் கற்பிக்க இவரை ஓர் ஆசிரிய ராக நியமித்துக்கொண்டிருந்தார். A.
இவர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், பாதிரியார் இவருடன் நெருங்கிப் பழகி, இவருடைய கல்வி நலத்தினையும், தமிழறிவினையும், ஆங்கில மொழிப் புலமையையும், மொழி பெயர்ப்பு வன்மையையும் நேரிலே கண்டறிந்தார். எனவே, தாம் நெடுநாளாகக் கருதியிருந்த "பைபிள்" மொழி பெயர்ப்பினை இவரைக்கொண்டே செய்வித்து முடிக்க விரும்பினர்; ஆங்கிலத்திலுள்ள பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி இவரைக் கேட்டார். இவரும் அதற்கு இணங்கி, அதனை இனிமையும் எளிமை யும் வாய்ந்த நடையில் மொழிபெயர்த்துக் கொடுத் தார். பேர்சிவல் பாதிரியாரும் இவருமாகச் சேர்ந்து பைபிளை யாழ்ப்பாணத்தில் மொழிபெயர்த்துக் கொண் டிருந்த காலத்தில், சென்னையிலுள்ள கிறித்த சபை யினரும் பைபிளை மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடு க3rச் செய்திருந்தனர். எனவே, சென்னையிலுள்ள

ஆறுமுகநாவலர்
கிறித்தவ சபையினர் தாம் செய்வித்த மொழிபெயர்ப் பினை ஏற்றுக்கொள்வார்களோ என்ற ஐயமும் அச்சமும் பேர்சிவல் பாதிரியாருக்கு உண்டாயின. எனவே, பாதிரியார் இவரையும் அழைத்துக்கொண்டு சென்னைக் குச் சென்ருர், சென்னையிலிருந்தோரோ சென்னைக் கிறித்தவ சபையினர் செய்த மொழிபெயர்ப்பே சிறந்த தென வாதாடி நின்றனர். எனவே, இரு மொழி பெயர்ப்புகளையும் ஒப்புநோக்கிப் பார்த்துச் சிறந்தது எது எனக் காணும் பணியானது அக் காலத்திலே மிகுந்த புலமையாளராக விளங்கிக்கொண்டிருந்த மழவை, வித்துவான் மகாலிங்க ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகாலிங்க ஐயரோ, நடுநின்ற செம்மையால், ஒரவார மின்றிப் பேர்சிவல் பாதிரியார் செய்வித்த மொழி பெயர்ப்பே சிறப்பும் செம்மையும் வாய்ந்தது எனத் நீர்ப்புக் கூறினர். ஆகவே, பேர்சிவல் பாதிரியார் செய் வித்த-நாவலரவர்கள் செய்தளித்த-மொழிபெயர்ப்பே அச்சேற்றப் படுவதாயிற்று.
பைபிளை மொழிபெயர்க்கும்போது இவர் அதனை நுணுகியாராய்ந்து கிறித்து சமயம்பற்றி விளக்கமாக அறிந்து கொண்டார்கள். அக்காலத்திலேயே, கிறித்து சமயம் தழைத்தோங்குவதையும், தம் நாட்டினதாகிய சைவ சமயம் தளர்வடைவதையும் இவர் கண்டார். பேர்சிவல் பாதிரியாரின் தன்னலமற்ற வாழ்க்கையும், சமயப்பற்றும், அவர் ஆற்றி வந்த சமயத்தொண்டு களும் இவரது மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. சிறுவர்கள் கல்வி பயிலுவதற்கான பள்ளிகள்- ஆண் களும் பெண்களுமாகச் சென்று வழிபாடு செய்வதற் காக அமைத்துச் செவ்விய முறையில் நடாத்தப்பட்டு வந்த கோயில்கள்-சமய அறிவினை மக்களிடையே பரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு நெறி

Page 15
26 சழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
முறைகள்-இவை யாவும் இவருடைய உள்ளத்தில் ஒரு தனி உணர்ச்சியை எழுப்பின.
"தமிழ், சமயம் ஆகிய இரண்டும் என் இரு கண்கள் அவ்விரண்டும் ஒளி குன்ருமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன். அவை வாழப் பணி புரிதலே என் வாழ்வின் குறிக்கோள்" எனக் கூறி, தமிழும் சைவமும் வளர்க்கக் கங்கணங் கட்டி நின்ருர், இவர், "தங்கள் நாட்டுக்கல்லாது பிற நாடுகளுக்குமேற் றவையோ வென்று நினையாது, தங்கள் ஒழுக்கங்களே சிறந்த ஒழுக்கங்கள், தங்கள் வாழ்தலாறே சிறந்த முறை யெனக் கடைப்பிடியுடையோராய்த், தங்கள் பழக்க வழக்கங்களையும், சமயக் கோட்பாடுகளையும் தமிழ் நாட் டில் நிலைநாட்டிச் சில்லாண்டுகளிற் றமிழரென்ற மக்கட் கூட்டத்தினர் உலகத்தில் இல்லையெனும்படி ஒழித்துவிட வந்த பாதிரிமார்களையும்’ போருக்கு வரும்படி அறை கூவினர்.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான துண்டுக் கட்டுரைகளும், சிறு நூல்களும் அச்சேறி நாடெங்கும் உலவத் தொடங்கின. திருக்கோயில்களிலும் பாடசாலை களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. அவற்றி லெல்லாம், "விழிமின், எழுமின், அறியாமையாய விருளி லாழ்ந்து துயிலாதீர், உங்கள் முன்னுேரளித்த அருஞ்செல்வமாகிய பழமையைக் கைவிடாதீர்!" என்ற எச்சரிக்கையே செறிந்திருந்தது.
தமிழினையும் சைவத்தினையும் ஒருங்கே வளர்க்கும் நோக்கத்துடன், 1848ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வண்ணுர்பண்ணையிலே "சைவப் பிரகாச வித்தியாசாலை” இவரால் நிறுவப்படுவதாயிற்று. 1864 ஆம் ஆண்டில், சிதம்பரத்திலும் இவரால் "சைவப் பிர

ஆறுமுக நாவலர் 7
காச வித்தியாசாலை" யொன்று நிறுவப்பட்டது. அது, இன்றும் "நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை" என நடைபெற்று வருகின்றது. 1875 ஆம் ஆண்டளவில் புலோலியிலும் சைவவித்தியாசாலை யொன்று இவரால் நிறுவப்பட்டதென்று அறியக் கிடக்கின்றது.
கிறித்த மதத்தினர் அச்சகம் அமைத்து யாழ்ப் பாணத்தில் நூல்களையும் அறிக்கைகளையும் வெளியிடு வதைக் கண்ட இவர், சென்னையிலிருந்து அச்சுப்பொறி யொன்றினைத் தருவித்து, 1849ஆம் ஆண்டில் யாழ்ப் பாணத்தைச் சார்ந்த வண்ணுர்பண்ணையில், "வித்தியாது பாலன யந்திரசாலை'யினை அமைத்தார். அவ்வச்சகத் திலேயே இவர் வெளியிட்ட நூல்கள் பல அச்சிடப் பெற்றன. அவ்வச்சகம் தமது பணிகளை நிறைவேற்று வதற்குப் போதாதிருந்தமையால் அதை விற்றுவிட்டு, சென்னையிலே புதிதாக வந்த ஒரு அச்சகத்தினைச் செவ் வியதாக அமைத்துக் கொண்டார்.
இவருடைய தமிழறிவினையும் சமய ஞானத்தினையும் மதித்தும், சொற் பொழிவு வன்மையைப் போற்றியும், திருவாவடுதுறை ஆதீனத் தலைவர்கள் இவருக்கு நாவலர்' என்னும் அரும்பெரும் பட்டத்தினை அளித் துப் பாராட்டினர்கள்.
நாவலரவர்களே "தமிழ் உரை நடையின் தந்தை" எனவும், ‘வசன நடை கைவந்த வல்லாளர்" எனவும் போற்றப்படுகின்ருர். மேல் நாட்டவர் கையாண்டு வந்த முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, விஞக்குறி, வியப்புக் குறி முதலான குறியீடுகளை யெல்லாம் முதன்முதலாகத் தமிழ் மொழியில் எடுத்தாண்டவரும் நாவலரே ஆவர். நூல்களைப் பிழையின்றிச் செம்மைபெறப் பதிப்பிப்பதில் இவருக்கு நிகராவார் பிறரிலர் என்பர்.

Page 16
சழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
ஆறுமுக நாவலரவர்கள் 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் தேதி) வண்ணுர் பண்ணையில் தாம் வாழ்ந்து வந்த இல்லத்திலேயே இறை வனடி சார்ந்தார்கள்.
இவர், பரிசோதித்தும், புதிதாய் இயற்றியும், புத்துரை வகுத்தெழுதியும் வெளியிட்ட நூல்கள்:-
1. சூடாமணி நிகண்டு-உரையுடன். 2. செளந் தரியலகரி-உரையுடன், 3. முதற் பாலபாடம். 4. இரண் LTub U TGuUnrub. 5. 5rr6östlb UnravUTLh. 6. பெரியபுராண வசனம். 7. நன்னுரல் விருத்தியுரை. 8. திருமுருகாற்றுப்படை. 9. திருச்செந்தினிரோட்ட கயமகவந்தாதியுரை. 10. சிவாலய தரிசன விதி. 11. சைவ தூஷண பரிகாரம், சுப்பிரபோதம். 12. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ். 13. கந்தரலங்காரம், 14. கந்தரனுபூதி. 15. ஏாெழுபது. 16. திருக்கை வழக்கம். 17. புட்பவிதி. 18. மறைசை யந்தாதி. 19. கோயிற்புராணமூலம். 20. திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தி. 21. சிதம்பர மும்மணிக்கோவை. 22. உப நிடதவுரை. 23. பட்டணத்துப் பிள்ளையார் பாடல். 24. அருணகிரிநாதர் வகுப்பு. 25. சைவவினவிடைமுதற்புத்தகம். 26. சைவவினவிடை-இரண்டாம் புத்தகம். 27. மருதூரந்தாதியுரை. 28. திருச்செந்தூ ரகவல். 29. விநாயக கவசம், சிவகவசம், சத்திகவசம். 30. திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும். 31. திருச் சிற்றம்பலக் கோவையுரை. 32. சேதுபுராணம், 33. பிரயோக விவேகஉரை. 34. தருக்க சங்கிரகம், 35. உபமான சங்கிரகம். 36. இரத்தினச் சுருக்கம். 37. இலக்கணக் கொத்து. 38. தொல்காப்பியச் சூத்திர விருத்தி. 39. இலக்கண விளக்கச் சூருவளி. 40. கந்த

ஆனந்த, கே. குமாரசுவாமி, டகீதர். 29
புராணம். 41. பதினெராந் திருமுறை. 42. நால்வரி நான்மணிமாலை. 43. கோயிற் புராணவுரை. 44. சைவ சமய நெறியுரை, 45. தொல்காப்பியச் சொல்லதி காரம்-சேனவரையருரை. 46. இலக்கணச் சுருக்கம். 47. சிதம்பர மான்மியம். 48. கந்தபுராண வசனம் 49. அனுட்டானவிதி-முதற் புத்தகம். 50. அனுட் டானவிதி-இரண்டாம் புத்தகம். 51. சிவஞான போதச் சிற்றுரை. 52. யாழ்ப்பாணச் சமயநிலை. 53. இலக்கண விஞவிடை. 54. இலங்கைப் பூமிசாத்திரம். 55. நன்னூற் காண்டிகையுரை. 56. பெரிய புராண வசனம். 57. திருவிளையாடற் புராண வசனம்.
ஆனந்த, கே. குமாரசுவாமி, டக்தர். (1877-1947)
ஈழநாட்டின் தனிச்சிறப்புக்கும் ஆக்கத்துக்கும் வாழையடி வாழையாகச் சிறந்த தலைவர்களை அளித்துப் பெரும் புகழ்படைத்ததொரு தமிழர் குடும்பத்திலே, தலைசிறந்த நியாயவாதியும், புகழ்வாய்ந்த எழுத்தாள ரும், இலங்கைச் சட்டசபையின் நந்தா விளக்காக நிலவியவருமான சேர். முத்துக்குமாரசுவாமி அவர்களின் புதல்வர் இவர். இவருடைய முழுப்பெயர் 'ஆனந்த கென்ற்றிக குமாரசுவாமி” என்பதாகும். எனினும் இவர் பெயர் இன்று, *ஆனந்தக் குமாரசுவாமி” எனவே வழங்கப்பட்டு வருகின்றது.
சேர். முத்துக்குமாரசுவாமியவர்கள், இங்கிலாந்து தேசத்திலே தங்கியிருந்த காலத்தில், "கென்ற் என்னும் பிரதேசத்திற் பிறந்தவரும் "எலிசபெத் கிளேபீபி" என்னும் பெயரினைக் கொண்டவருமான ஆங்கிலப் பெண்மணியை 1875ஆம் ஆண்டில் மணந்துகொண்டு இலங்கைக்குத் திரும்பினர். இலங்கைக்குத் திரும்பிய சேர். முத்துக்குமாரசுவாமியவர்கள் தமது மனைவி

Page 17
O ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
யாருடன் கொழும்பு நகரிலே கொள்ளுப்பிட்டியிலுள்ள *இறைன்லண்டு மாளிகையிலே வாழ்ந்துகொண்டிருந்த போது, 1877ஆம் ஆண்டு ஒகத்து மாதம், 22ஆம் தேதி யன்று அவர்களுக்குப் புதல்வராக, “கலாயோகி’ என உலகெங்கும் இன்று போற்றப்படும் ஆனந்தர் தோற் றினர்.
ஆனந்தர் பிறந்து சில மாதங்களின்பின், திருமதி. முத்துக்குமாரசுவாமியவர்கள் உடல்நலங் குன்றியிருந்த மையால், தமது தாய்நாடாகிய இங்கிலாந்துக்குக் குழந்தை ஆனந்தருடன் புறப்பட்டுச் சென்ருர், சேர். முத்துக்குமாரசுவாமியவர்கள் அவசிய அலுவல்கள் காரணமாக இலங்கையிலே தங்கியிருக்கவேண்டி இருந்த மையால், அவர்களுடன் செல்லவியலாதவரானர்.
1879ஆம் ஆண்டிலே, தமது அருமை மனைவியாரை யும் செல்வக் குழந்தையையும் பார்ப்பதற்காக இங்கி லாந்து செல்வதற்கான ஏற்பாடுகளேச் செய்திருந்தார். ஆயின், இங்கிலாந்து செல்வதற்குக் கப்பலேறும் நாள் எனக் குறிப்பிட்ட 1879ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதியன்றே இவ்வுலக வாழ்வினை நீத்தார்கள்.
இளமைக் காலத்திலேயே தமது அருமைத் தந்தை யாரை இழந்துவிட்ட ஆனந்தர், தமது தாயாரின் மேற் பார்வையில் வளர்ந்து வந்தார். தமது அருமைப் புதல்வர் இந்து சமய வுண்மைகளையும் நீதிநெறிகளையும் மட்டுமன்றி, வேதம் உபநிடதம் முதலியவற்றையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும் எனக் கருதி, திருமதி முத்துக்குமாரசுவாமியவர்கள் சிறப்பான கல்வி அளிப் பதற்கான வசதிகள் செய்தமைத்திருந்தார். "இசுப் பிறிங்பீல்ட்"டிலமைந்த 'உவைக்கிளிவுக் கல்லூரியில் பன்னிரண்டு வயதினரான ஆனந்தர் 1889ஆம் ஆண்டிலே

ஆனந்த, கே. குமாரசுவாமி, டகீதர். 31
சேர்ந்துகொண்டார். அங்கே, இவர் ஆறு ஆண்டுகள் வரை தங்கியிருந்து கல்வி பயின்ருர். 1893-ம் ஆண்டிலே அக் கல்லூரியின் புலக்களரிப் பாதுகாவலராகவும், மாணவ மூப்பராகவும் தெரிவு செய்யப்பட்டு, புகழோங்க விளங்கினர்.
அங்கு பேராசிரியராய்ப் பணியாற்றிக்கொண்டிருந்த டக்தர். ஆதர் சிற்பி என்பார், ஆனந்தருக்கு அறிவியலில் ஆர்வமுண்டாக்கி, 1895ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வெளியாகிய மாசிகையொன்றினுக்கு தொவருேக் குன்றத்தின் புவியியல் விளக்கம்" என்னும் பொருள் பற்றியதாய்ச் சிறந்ததொரு ஆராய்ச்சிக் கட்டுரை வழங்குமாறும் அவரை ஊக்கினர்.
1895ஆம் ஆண்டு யூன் மாதம் 4ஆம் தேதியன்று, கல்லூரி இலக்கியக் கழகத்தில், "உயிரினங்களை ஊணுக் காகக் கொலை செய்வது இன்றியமையாததன்று பயனு டையதுமன்று நீதியான செயலுமன்று' என இவர் வாதித்து வெற்றி பெற்ருர்,
1895ஆம் ஆண்டிலே, ஆனந்தர் ஒருமுறை இலங் கைக்கு வந்து, 1897ஆம் ஆண்டிலே இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்ருர்,
கல்லூரியிலிருந்து இடைநிலைத் தேர்விலே சித்தி பெற்றதும், இலண்டன் பல்கலைக் கழகத்திலே சேர்ந்து படித்து, "B. Sc." பட்டத் தேர்விற் சித்தியடைந்தார். அத் தேர்வின் சிறப்பியல் உபகாரச் சம்பளம் இவருக்குக் கிடைத்தமையால், பூகர்ப்ப சாத்திரத்திலும் தாதுப் பொருளாராய்ச்சியிலும் இவர் சிறப்பான பயிற்சியும் தனியாற்றலும் பெற்றுக்கொள்ள இயலுவதாயிற்று
1903 ஆம் ஆண்டிலே, 26 வயதினராகிய ஆனந்தர் இலங்கைக்குத் திரும்பி வந்தார். வந்தவர் ஒராண்டுக்

Page 18
its ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
காலம்வரை தமது செலவிலேயே தாதுப்பொருளாராய்ச்சி யும் பூகர்ப்ப சாத்திரவாராய்ச்சியும் செய்துகொண்டிருந் தார். 1903ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இலங்கைத் தாதுப்பொருளாராய்ச்சித் துணைக்களத் தலைவர் பதவி யினை, ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாக, 4 ஆண்டுக் காலத் துக்கு இவர் ஏற்றுக்கொண்டார். இவர் பதவியிலிருந்த (1903-1907) காலத்தில் வெளிவந்த நிருவாக அறிக் கைகள் இக்காலத்திலும் அத்துறையில் மிகச் சிறந்தன வாகப் போற்றப்படுகின்றன. இங்ங்ணம் இவரால் வெளி யிடப்பட்ட அறிக்கைகளைப் பாராட்டி 1906 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக் கழகம் இவருக்கு "அறிவியற் கலா நிதி" (D. Sc.) பட்டத்தினை வழங்கியது. இவர், தாதுப் பொருளாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இக்காலப் பகுதியில் *தோறிய%னற்று" (Thorianite) என்னும் புதிய தாதுப் பொருள் ஒன்றினைக் கண்டுபிடித்தார்.
இக்காலப் பகுதியிலுேடஆங்கிலம் கற்ற இலங்கை மக்களிடையே நடையுடை பாவனைகளிற் காணப்பட்ட அந்நிய நாகரிக மோகத்தினை ஒழிப்பதற்கும், தேசிய உணர்ச்சியை உருவாக்குவதற்குமாக 1905ஆம் ஆண்டில் *இலங்கைச் சமூக சீர்திருத்தக் கழகம்" (The Ceylon Social Reforms League) 6T60r 3CD sp5.55% or goint நிறுவினர். அக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "gapi 6055 (3.5 Su Fé5960s' (The Ceylon National Review) எனப்பட்ட வெளியீட்டுக்கும் இவரே ஆசிரிய ராகவிருந்து பணிபுரிந்து வந்தார். இச் சஞ்சிகையின் வாயிலாக, தேசிய மொழிகளே நாட்டின் போதன மொழிகளாக இருத்தல் வேண்டும் என்றும், நாட்டின் கலைகளுக்கெல்லாம் மக்கள் ஊக்கம் அளித்தல் வேண்டும் என்றும், மேல்நாட்டு நாகரிகத்தினைப் பின்பற்றுதல் நாட்டுப்பற்றுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்கம்
விளைவிப்பதாகும் என்றும் எடுத்துக்காட்டி வந்தார்.

ஆனந்த கே. குமாரசுவாமி, டக்தர்.
தமது தந்தையாருடைய முன்னேர்கள் வாழ்ந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்திலே இலங்கைச் சமூக சீர்திருத்தக் கழகத்தின் கிளை யொன்றினை அமைத்தல் வேண்டும் எனக் கருதி இவர் தமது மனைவியாருடன் சேர்ந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது, இவர்க ளிருவர்க்கும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஒரு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவ் வரவேற் புக்கு, அக்காலத்தில் தமிழ்ப் பிரதிநிதியாய்த் திகழ்ந்த கெளரவ அ. கனகசபை அவர்கள் தலைமை தாங்கினர். அக்காலத்திலே சுன்னகம், அ. குமாரசுவாமிப் புலவர், த. கைலாயபிள்ளை முதலான தமிழ்ப் பேரறிஞர்களால் நிறுவி நடத்தப்பட்டு வந்த தமிழ்ச்சங்கமும் இவர்களுக்கு வண்ணுர் பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஒரு வரவேற்பு விழா நடத்தியது. அம்மாபெரும் விழா வில் டாக்டர். குமாரசாமியவர்களுக்கு "வித்தியா விநோதன்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இவரது மனைவியாரான திருமதி. எதெல் குமாரசுவாமியவர்க ளுக்குத் தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் சைவ சமய ஆராய்ச்சியிலும் அவர் காட்டிவந்த பேரூக்கத்தினை மதிக்குமுகமாகச் 'சிவஞானபோத’ப் புத்தகமொன்று அன்பளிட்பாக வழங்கப்பட்டது.
ஆராய்ச்சித் துறையிலே மிகுந்த ஊக்கமும் படைப் பாற்றலும் மிக்க ஆனந்தர், இலங்கைத் தாதுப்பொரு ராய்ச்சித் தலைவராகக் கடமையேற்ற பின் சிறிது காலத்துள் "இலங்கையில் நிலவியல் நூல்" என்னும் நூலினை எழுதினர். இலங்கையிலுள்ள சிற்பங்களும் ஒவியங்களும் இந்தியக்கலையின் பண்பினை யடியொற்றி யிருந்தமையால், முதலில் இந்தியக் கலையினை இவர் ஆராயத் தொடங்கினர்.

Page 19
4. ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
டக்தர், குமாரசுவாமியவர்கள் தமது ஒய்வு வேளே
களிலெல்லாம் பண்பாடு, சிற்பக்கலை, ஓவியக் கலை ஆதி யானவற்றைப் பற்றி ஆராய்ச்சி புரிவதில் ஈடுபட் டிருந்தார். இவருடைய வாழ்க்கைத் துணைவியான திருமதி. எதெல் எம். குமாரசுவாமியவர்கள் சிறந்த ஓவியராக விளங்கிக் கொண்டிருந்தமையால், அவரும் இவ்வாராய்ச்சிகளிலே ஈடுபட்டு உழைக்கக்கூடியவரா யிருந்தார்.
தமது உத்தியோக அலுவல்களுக்காக இவர் இலங் கையின் பற்பல பகுதிகளுக்கும் சென்ருர். அவ்வே%ள களி லெல்லாம் பண்டைய பெளத்த சபைகளிலும், விகாரை களிலும், அரண்மனைகளிலும், மலைச்சுவர்களிலும் எழுதப் பட்டிருந்த ஒவியங்களையும் சிற்ப உருவங்கள் பிறவற் றையும் கண்டு அனுபவித்தார். நாளடைவில், கலைப் பொருள்களைத் தேடுவதிலும் அவற்றை ஒன்றுபடுத்தி ஆராய்வதிலும் ஈடுபட்டார். இவைகளைக் காணக்கான இலங்கையின் பழைய வரலாற்றினையும், பண்பாட்டி னையும், அவற்றின் இலக்கணங்களையும் துருவி ஆராய்தல் வேண்டும் என்னும் எண்ணம் பெருகியது.
இவர், இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத் தில் வெளியிட்ட "இலங்கையின் வெண்கல உருவங்கள்" என்னும் சிறந்த ஆராய்ச்சி நூலானது இவர் அக்காலத் திலே இலங்கை அரும்பொருட்காட்சித் திணைக்களத் துடனும் தொல் பொருளாராய்ச்சித் திணைக்களத் துடனும் கொண்டிருந்த ஈடுபாட்டுக்கு ஒரு நற்சான்று ஆகும். இவ்விரு திணைக்களங்களுக்கும் இவர் எத்த னையோ பல அரும்பொருளைச் சேகரித்து வழங்கியுள்ளார். இக் காலப் பகுதியிலேதான் இலங்கையின் கலை வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சிகளுக்கு ஆதாரமான பொருள்களை யெல்லாம் இவர் திரட்டிக்கொண்டார்.

ஆனந்த, கே. குமாரசுவாமி, டக்தர். 3S
1907ஆம் ஆண்டிலே, இவர் தமது உத்தியோகத்தி னின்றும் நீங்கி, தாம் சேகரித்த கலைப் பொருள்களையும் குறிப்புகளையுங் கொண்டு இங்கிலாந்து சென்ருர், ஏறக் குறைய இரண்டு ஆண்டுகள் வரை அயராது உழைத்து, “GOLä5íTGdji SRJä5 GMTši 35&av” (Mediaeval singalese Art) என்னும் நூலினை முதல் நூலாக வெளியிட்டார். 1908 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்நூலானது இலங்கை யின் கலை வளர்ச்சியையும், இக் கலை வளர்ச்சிக்குத் துணை யாயமைந்த பிறநாட்டுக் கலைகளையும், பின்னர் இக்கலை வீழ்ச்சியடைந்த வரலாற்றுடன் பொருத்தமான படங் களுங்கொண்டு விளக்கிக் காட்டுவதாய் அமைந்துள்ளது. மேல் நாட்டவர்க்கு இலங்கையை அறிமுகஞ்செய்து வைப்பதாய் முதலிலெழுந்த நூல் இதுவேயாகும் என்பது மிகையாகாது.
1907ஆம் ஆண்டு தொடங்கி 1917ஆம் ஆண்டு வரை யிலும், டக்தர் குமாரசுவாமியவர்கள் கிழக்கு நாடு களிலும் மேற்கு நாடுகளிலும், சிறப்பாக ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பற்பல இடப் பகுதிகளுக்குச் சென்று, கீழைத் தேயப் பண்பாட்டு இயல்புகளையும் மேலைத் தேயப் பண்பாட்டு இயல்புகளையும் இவை ஒன்றுட னென்று கலந்து கொண்டமையால் ஏற்பட்ட பலாபலன் களையும் செவ்வனே ஆராய்ந்து கண்டு கொண்டார்.
1919ஆம் ஆண்டிலே, அமெரிக்காவிலுள்ள போஸ் டன் (Boston)நகரத்திலமைந்துள்ள கலைப்பொருட்காட்சி நிலையத்தில், கீழைத்தேய நுண்கலைப் பொருட்பகுதித் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத் தின் பின் கலைத்துறையில் மேலும் உழைப்பதற்கு அரிய தொரு சந்தர்ப்பம் இவருக்குக் கிடைப்பதாயிற்று. "இந்து மதத்தின் தத்துவங்கள் யாவும் அகத்தோற்றத்தி லன்றி வெறும் புறத்தோற்றங்களில் அமைந்தனவல்ல

Page 20
sø ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
எனக் கூறி "இந்தியக் கலையில் சில எடுத்துக் காட்டுகள் (Selccted Examples of Jndian Art), “ gju Spuž 56öv (Gopig” (Mirror of Gesture) egy62u 15Taivsőn (3).jög மதச்சார்பினை உலகினுக்கு விளக்கும் வகையில் எழுதி வெளியிட்டார். நடராச வடிவத்தின் கலைச் சிறப்பினை மட்டுமன்றி இந்து மதத் தத்துவங்களையும் செவ்வனே விளக்குகின்ற ‘சிவ நடனம்" (Dance of Shiva) என்னும் நூலும் வெளியிடப்பட்டது. டக்தர். குமாரசுவாமி யவர்களின் ஆராய்ச்சி வன்மைக்கு ஒர் எடுத்துக்காட் டாக விளங்குவது "இந்திய இந்தோனேசியக் கலை வர Gostp' (History of Indian - and Indonesian Art) என்னும் நூலாகும். "இராசபுத்திர சித்திரக்கலை (Rajput Painting) 676ð gojth (5TGó)Gylb '9) sögus 85g) ரங்கள்' என்னும் நூலிலும் இந்துக்களின் ஆத்தும ஒளி யினையும் முசிலிம்களின் பண்பட்ட கலாசாரத்தையும் பிரித்து விளக்கிக் காட்டுகின்ருர்,
1947 ஆம் ஆண்டிலே, டக்தர். குமாரசுவாமியவர் களின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவினை உலகமெங்கும் வாழும் மக்கள் சிறப்பாகக் கொண்டினர்கள். 1948ஆம் ஆண்டில் டக்தரவர்கள் இளைப்பாறிக்கொண்டு, இமய மலைச் சாரலிலே அமைதியான வாழ்க்கையினை நடாத் துதல் வேண்டுமென விருப்பங் கொண்டிருந்தார்கள். ஆயின், 1947ஆம் ஆண்டிலே இவர் இவ்வுலக வாழ்வினை நீத்தார். இருபதாம் நூற்றண்டிலே உலகம் போற்றும் பெருமையுடன் வாழ்ந்த ஈழத் தமிழ்ப் பெருமகன் இவராவர்.
ஆனுப்பிள் an
மன்னர்ப் பகுதியிலே இலந்தைவான் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். வடமொழியிலும் தென்

இரத்தினேசுவர ஐயர் 37
மொழியிலும் மிகுந்த புலமையுடையவராய் விளங்கினர் என்பர். இலந்தைவான் கீத்தாம் பிள்ளைப் புலவர்மீது ஒரு சாற்றுக் கவி பாடியுள்ளார். இவர், கி. பி. 1800 வரையில் வாழ்ந்தவர் எனத் தெரிகின்றது. இப்பொலித்துச் சாமியார்
யாழ்ப்பாணத்திலே தோன்றி வளர்ந்து, ஐரோப்பா விலே கல்வி பயின்று பெரும்புலமையுடையவராய் விளங்கியவர் இவர். இவர் மொழிபெயர்த்தியற்றிய நூல்களுக்குள்ளே ‘சத்தியவேத தர்ப்பணம் என்னும் பெயருடன் நான்கு காண்டங்களாக வெளியிடப்பட்ட நூல் மிகச் சிறப்பு வாய்ந்ததெனக் கூறப்படுகின்றது. இவர் கீர்த்தனங்களும் பல பாடியுள்ளார். "மருதமடுத் திருப்பதிமாலை" என்னும் பெயருடன் அந்தாதி வகையி லமைந்த சதகமொன்றினையும் இவர் இயற்றியுள்ளார், இரகுநாதய்யர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கொக்குவில் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். சோதிட ஞானம் மிகப் பெற்ற இவர் வாக்கிய கணித பஞ்சாங்க மொன்றினைக் கணித்து ஆண்டு தோறும் வெளியிட்டு வந்தவர். இவர் தொடங்கிய பஞ்சாங்கம் இன்றும் தொடர்ந்து கணித்து வெளியிடப்பட்டு வருகிறது. :
இவர், பல சோதிடச் சுவடிகளை ஆராய்ந்து அச் சேற்றியுமுள்ளார். போசராச பண்டிதர் இயற்றிய சரசோதிமாலை'யினையும் இவரே 1892ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளிப்படுத்தினூர். இரத்தினேசுவர ஐயர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த உடுவில் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். சுன்னகம், அ. (5ԼDոց
fog-ತಿ

Page 21
38 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
சுவாமிப் புலவரிடத்தில் இலக்கண விலக்கியங்களை முறையே கற்றுக்கொண்டார்.
இவர் செட்டிநாட்டிலிருந்து *சிவநேசன்" என்னும் பத்திரிகையினை நீண்டகாலமாக வெளியிட்டுக்கொண் டிருந்தவர். புராணங்களுக்குப் பயன் சொல்லும் யாழ்ப் பாணப் பரம்பரையினைப் பேணி, பல இடங்களிலும் புராண படனங்களைத் தொடக்கிப் பயன் சொல்லி வந்தவர்.
சுன்னுகம் வரதபண்டிதர் இயற்றிய "கிள்ளை விடு தூது" என்னும் நூல் இவராற் பதிப்பிக்கப்பட்டது.
இவர் இயற்றிய நூல்கள் : 1. பிரசங்க இரத்தின தீபம், 2. செந்தமிழ்ப் பூம்பொழில்.
இராசநாயகம், செ. முதலியார். (1870-1940)
யாழ்ப்பாணத்தைச் சார் ந் த நவாலியூரிலே, அரசாங்கக் கட்டடவேலைத் திணைக் களத்திலே எழுது வினைஞராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த செல்லப்பா பிள்ளை என்பாருக்குப் புதல்வராக, 1870ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதம் 22ஆம் தேதியன்று இவர் தோன்றினர். இளமையிலே தமிழையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றபின், கொழும்பிலுள்ள அர்ச். தோமாசுக் கல்லூரி யிலே சேர்ந்து கல்வி பயின்ருர், கல்லூரிப் படிப்பு முடிந் ததும் 1889ஆம் ஆண்டிலே இலங்கை அரசாங்க சேவை யில் எழுது வினைஞராகச் சேர்ந்தார். சேர்ந்தவர், நீதி மன்றங்களிலே பேச்சு மொழிபெயர்ப்பாளராகவே மிகுதியுங் கடமையாற்றிக் கொண்டிருந்தார். இவரது நுண்ணறிவினையும் தொழில் வன்மையையுங் கண்ட அரசினர், 1920ஆம் ஆண்டிலே உயர் நீதிமன்றத்து மூன்றம் துணைப் பதிவாளராக இவரை நியமித்து,

இராசநாயகம், செ. முதலியாரி. 39
*முதலியார்” என்னும் சிறப்புப்பட்டத்தையும் இவருக்கு அளித்தனர்.
1923ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 1ஆம் தேதி யன்று இவரை நாட்டாட்சிச் சேவை (Civil Service) பதவிக்கு உயர்த்தி, யாழ்ப்பாணக் கச்சேரியில் அதிகார உத்தியோகத்தருள் ஒருவராகவும் நியமித்தனர். இவர் யாழ்ப்பாணத்திலிருந்தபொழுது நாடகக் கலையினை வளர்ப்பதில் மிகுந்த ஊக்கங் காட்டினர். 1929ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் அரசாங்க சேவையிலிருந்து இவர் இளைப்பாறிக் கொண்டார்.
மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்ட காலந் தொடங்கி, ஒய்வு வேளைகளிலெல்லாம், முதலியாரவர்கள் இலங்கையின் வரலாற்ருராய்ச்சியிலே ஈடுபட்டிருந்தார் கள். யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆராய்ச்சியையே இவர் தமது வாழ்க்கையின் குறிக் கோளாகக் கொண். டிருந்தார். பிற மொழியாளரும் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமைகளை உணர்ந்து கொள்ளுதல் வேண்டு மெனக் கருதிப் ‘பண்டைக்கால யாழ்ப்பாணம்’ (Ancient Jaffna) என்ற பெயருடன் சிறந்த வரலாற் முராய்ச்சி நூலொன்றினை ஆங்கிலத்தில் இயற்றினர். * யாழ்ப்பாண வரலாறு' விரிவாகவும் தெளிவாகவும் அவர்களாலேயே தமிழிலும் எழுதப்பட்டு, இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. முதலியாரவர்கள் இலங்கையின் பழைய திருக்கோயில்களுள் ஒன்ருகிய *கதிர்காமம்' பற்றியும் ஒரு நூலினை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்கள். முதலியாரவர்கள் அயரா துழைத்துத் தொகுத்து வந்த "தமிழ்நூற் பெயரகராதி" சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதொன்றகும். அவ் வகராதியிலே வரலாற்றுக் கெட்டிய காலந் தொடங்கித் தமிழ் மொழியில் வெளி வந்த நூல்களின் பெயர்கள்

Page 22
40 ஈழநாட்டின் தமிழ்ச் சுட ர் மணிகள்
- நூலாசிரியர்களின் பெயர்கள்- அந் நூல்களை வெளி யிட்ட அச்சகங்களின் பெயர்கள்-பதிப்பித்தவர்களின் பெயர்கள்-பதிப்பித்த ஆண்டு விவரங்கள் ஆகிய இவை யாவும் நிரன்முறையிலே தொகுக்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய 35,000 நூல்களைப்பற்றிய விவரங்கள் இந் நூலிலே தொகுக்கப்பட்டிருந்தன எனத் தெரிகின்றது. இங்ங்னமாகத் தொகுக்கப்பட்ட அகராதியானது, சென்னை நூல் நிலையக் கழகத்தாரிடம், அவர்களது வேண்டுகோளின்படி அனுப்பப்பட்டதாக அறியக் கிடக் கின்றது. இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை,
அரசாங்க சேவையிலிருந்து முதலியாரவர்கள் இளைப் பாறிக்கொண்டபின், இங்கிலாந்துக்குச் சென்று பிரித் தானிய அரும்பொருட் காட்சிச் சாலையிற் கிடைத்த பழைய யாழ்ப்பாண வரவாறுகளாகிய கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவ மாலை, ஆகிய இரு நூல்களையும் பார்த்துப் படியெடுத்துக்கொண்டு வந் தார் கள். "கைலாய மாலை'யின் பதிப்பொன்று முதலியாரவர்கள் முன்னுரையுடன் கூடியதாய், சென்னை செ. வெ. ஜம்புலிங்கம் பிள்ளையவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. "யாழ்ப்பாண வைபவமாலை" யானது பல குறிப்புக் களுடன் இலங்கைக் கல்வித் திணைக்களத்தினர் வெளி யிட்டு வந்த "வித்தியா சமாச்சாரப் பத்திரிகை"யிலே தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தது. இதனை விரிவான ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் திரு குல. சபாநாதன் அவர்கள் (1949) வெளியிட்டுள்ளார்கள். முதலியார் இராசநாயகம் அவர்கள் "யாழ்ப்பாண வைபவமாலை"யினை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த் துள்ளார்கள். அது இன்னும் வெளியிடப்படவில்லை. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பொன்று சி.பிறிற்றே (C. Britto) அவர்களால் (1899) வெளியிடப்பட்டுள்ளது.

இராசையனர், சு, பண்டிதர். 41
கொழும்பு அரும்பொருட் காட்சிச்சாலை (Colombo Museum) மேற்பார்வையாளர் குழுவில் முதலியாரவர் களும் ஒர் உறுப்பினராகவிருந்து தமிழ்ப் பகுதி வளர்ச் சிக்காகப் பல தொண்டுகள் புரிந்து கொண்டிருந்தார். வேத்தியல் ஆசியச் சங்கத்தின் (R. A. S. C.) உறுப்பின ராக விளங்கியும் தமிழர் வரலாற்ருராய்ச்சிக்குத் தம்மா லியன்ற சிறப்பு அளித்து வந்தார். இலங்கை வானெலி நிலையத் தமிழ்ப் பிரிவின் ஆலோசனைக் குழுவில் உறுப் பினராக விளங்கி, நிகழ்ச்சிகளைச் செம்மையும் சிறப்பும் சார ஒலி பரப்புவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி அமைப்பித்தார்கள். வரலாற்றுத் தொல்லேட்டாராய்ச்சி gaOord, Jitp555 air (Historical Manuecripts Commission) உறுப்பினராகவும் விளங்கி, பழைய இலங்கை மன்னர் களின் தமிழ்க் கடிதங்களைத் தொகுத்துச் செப்பனிட்டு, வெளியிடப்படும் வண்ணம் செய்தவரும் இவரேயாவர்.
இவர் பதிப்பித்த நூல்கள் : 1. கதிரை நான்மணி LDrah)-1938. 2. Historical Manuscripts CommissionBulletin. No. 3.--Tamil Documents in the Archives -Selected and Translated, 1937.
இவர் இயற்றி வெளியிட்ட நூல்கள் : ஆங்கிலம் 1. A incint Jaffna-1926. 2. Katragama-1930. தமிழ் : 1. யாழ்ப்பாணச் சரித்திரம்-1933. 2. யாழ்ப் பாணச் சரித்திரம்-ஆங்கிலேயர் காலம்-1934.
இராசையனுர், சு. பண்டிதர்.
வடமாகாணத்தைச் சார் ந் த வவுனியாவிலே தோன்றியவர் இவர். இலங்கை அரசாங்கப் பாடசாலை கள் பலவற்றில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். மறைமலையடிகள் தனித் தமிழியக்கத்தினைத் தொடங்கி நடாத்திய காலத்தில், இலங்கையிலே, அவ்வியக்கத்

Page 23
42 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
துக்குத் துணைபுரிந்து கொண்டிருந்தவர். தனித் தமிழில் தெளிவு பெற எழுதவும் பேசவும் வல்லவராய் விளங்கி, நாவலர் சோமசுந்தர பாரதியாரின் இலக்கியக் கொள்கை களுக்குத் தனிப்பட்ட உரமளித்து வந்தவர் இவர். இவருடைய வரலாறு முற்றிலும் கிடைக்கப்பெறவில்லை.
இராமசாமி ஐயர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டையிலே சுப்பிரமணியஐயர் என்பவருக்குப் புதல்வராகத் தோற் றியவர் இவர். அருச்சுனன் மனைவியாகிய அல்லியின் சரித்திரம் இவரால் நாடகமாகப் பாடப்பட்டுள்ளது. கதிரமலைக் கந்தகவாமி பேரில், இவர் பற்பல கீர்த்தனை களும் விருத்தங்களும் பாடியுள்ளார்.
இராமநாதன், பொன், சேர், (1851-1930)
யாழ்ப்பாணத்து மாணிப்பாயைச் சேர்ந்தவர்களாக வும், வாழையடிவாழையாகப் பொதுப்பணியும், கல்விப் பணியும், சமயப்பணியும் புரிந்து புகழ்பெற்ற குடும்பத் தினராகவும் விளங்கிக் கொழும்பு நகரில் வாழ்ந்துகொண் டிருந்த முதலியார் பொன்னம்பலம் அவர்களுக்கும் செல்லாச்சியம்மையாருக்கும் புதல்வராக, 1851ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 16ஆம் தேதியன்று தோன்றியவர் இவர். சேர். பொன். அருணுசலம் அவர்களின் தம்பியா
Ter.
இளமைக் காலத்திலே, இப்போது "ருேயல் கல்லூரி' என வழங்கும் "ருேயல் அக்கதெமி'யில் ஆரம்பக்கல்வி பயின்று வந்த இவர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் உயர்தரக் கல்வி பெற்ருர். பின், வழக்கறி ஞர் தொழிலில் ஈடுபட்டுப் பெரும் புகழ் ஈட்டினர்.

இராமநாதன், பொன். சேரி 43
1879ஆம் ஆண்டில்,இவர் இலங்கைச் சட்டசபையிலே தமிழரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இந்தத் தானத்தில் ஏறக்குறைய 14 ஆண்டுகள்வரை தொடர்ச்சி யாக இருந்துவந்தார். 1892ஆம் ஆண்டிலே இவர் தமது சட்டசபைத் தானத்தை விட்டு விலகி "சட்டவறிஞர் நாயகமாக (Solicitor General)ப் பதவியேற்று, 13 ஆண்டுகள்வரை அப்பதவியில் இருந்தார்.
1905 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற் பல இடங் களுக்கும் சுற்றுப்பிரயாணம் செய்து விரிவுரைகள் நிகழ்த்துமாறு அழைப்பு வந்தது. அழைப்பினை ஏற்றுக் கொண்டு தமது உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ருர், அமெரிக்கா சென்று, பல பல்கலைக் கழகங்களிலும் பேரறிஞர் கழகங்களிலும் விரிவுரையாற்றிவிட்டு, 1906 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிவந்து அரசியலில் ஈடு படத் தொடங்கினர்.
1911ஆம் ஆண்டில் முதலாவது சீர்திருத்தச் சட்ட சபையில் கற்ற இலங்கையர் தானத்துக்குப் பெரும் பாலான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார் 1915ஆம் ஆண்டிலே இலங்கையில் ஏற்பட்ட கலகங்களுக் குப்பின், அதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கெதிராகசிங்களவர்களின் சார்பில்-அவர் தீரத்துடன் போராடி ஞர். 1915 ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதம் 14ஆம் தேதி யன்று, பிற்பகல் 2-30 மணி தொடங்கி மறுநாட் காலை 1 மணிவரை நடைபெற்ற சட்டசபைக்கூட்டத்திலே கலகங்களைப்பற்றிய தமது சரித்திரப் புகழ்வாய்ந்த விரி வுரையை ஆற்றிஞர். அக்காலத்துச் சட்டசபையில் அதிகாரிகள் பெரும்பான்மையினராக இருந்தபடியால். இவருடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, இவர் அக்காலத்தில் நடைபெற்றுக்கொண் டிருந்த உலகப் பெரும்போரின் ஆபத்துகளைக்கூடப்

Page 24
44 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
பொருட்படுத்தாமல், சிங்கள மக்களின் கட்சியினைப் "பிரிட்டிஷ்" பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்காக் இங்கிலாந்து சென்ருர், கலகங்கள் சம்பந்தமாக இவர் காட்டிய தீரமும் உறுதியும் இவருக்கு மங்காப் புகழினை அளித்தன.
இவர், தஞ்சையிலிருந்த இலக்கணம் இராமசாமிப் பிள்ளை அவர்களிடம் தமிழிலக்கண இலக்கிய நூல்களை யும், வேதாந்தம் சித்தாந்தம் ஆகியவற்றையும் முறை யாகக் கற்றுணர்ந்தார். அரசியலில் ஈடுபட்டும், வேறு. பற்பல சமூகப் பணிகளுக்காக அயராது உழைத்துக் கொண்டுமிருந்த இவர், தமிழிலும் ஆங்கிலத்திலும் சிந்தை செலுத்திப் பல நூல்களை எழுதியமை போற்றப் படவேண்டிய தொன்ருகும். இவர், சிறந்த அரசியல் ஞானியாகவும் சிறந்த கல்விமானகவும் விளங்கியதுடன் சிறந்த தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார்.
யாழ்ப்பாணத்திலே, 1919ஆம் ஆண்டில்-திருநெல் வேலியில் பரமேசுவரக் கல்லூரி என ஒரு கல்லூரியை யும், 1913ஆம் ஆண்டில்-சுன்னகத்தில்-இராமநாதன் கல்லூரி என ஒரு விடுதிப் பெண் கல்லூரியையும் நிறுவி யுள்ளார். கொழும்பு நகரில், கொச்சிக் கடையிலுள்ள பொன்னம்பலவாணேசர் கோயிலும் கருங்கல் கொண்டு திராவிட சிற்ப முறைப்படி இவராற் கட்டுவிக்கப்பட்ட தாகும்.
இவர் இலங்கைக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டு களே மதித்து, இவரது வெண்கல உருவச்சிலை யொன்று இலங்கைப் போராளுமன்ற முன்றிலில் நிறுவப்பட்டிருக் கின்றது.
இவர், 1930ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி இறைவனடி சார்ந்தார். இவருடைய பூதவுடல் இராமநாதன் கல்லூரிவளவிலே சமாதி வைக்கப்பட்டது

இராமலிங்கம், க. வித்துவான். 45
இவரால் இயற்றப்பட்ட நூல்கள் :- 1. பகவத் கீதை-விரிவுரை. 2. திருக்குறட் பாயிரம்-இராமநா தீயம். 3. செந்தமிழ் இலக்கணம். 4. மந்திர விளக்கம்.
இராமலிங்க ஐயர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரிலே சந்திர சேகர ஐயர் என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். தமிழ் மொழியிலும் வட மொழியிலும் மிகுந்த புலமையுடையவராய் விளங்கினர். வான சாத்திரத் திலும் நல்ல அறிவு படைத்தவராய்த் திகழ்ந்தார் எனக் கூறப்படுகின்றது. இவர், "சந்தான தீபிகை" என்னும் சோதிட நூல் ஒன்றினை இயற்றியுள்ளார். "சரசோதி மாலை" என்னும் நூல் இவராற் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இராமலிங்கம் பிள்ளை, வ. ( -1885)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதுமலையிலே வயிர முத்து உடையார் என்பாருக்குப் புதல்வராகத் தோன் றியவர் இவர். நவாலியூர், கா. முத்துக்குமார பிள்ளை யிடம் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்ருர் எனத் தெரிகின்றது. ஆங்கிலத்திலும் நல்ல புலமையுடைய வராய் இவர் விளங்கினர். இவரால் இயற்றப்பட்ட தனிப் பாடல்களும் கீர்த்தனங்களும் பல உள்ளன.
இவர், 1885 ஆம் ஆண்டு பெப்புரவரி மாதம் 16ஆம் தேதியன்று-கொழும்பில்-இவ்வுலக வாழ்வினை நீத்தார். இவரியற்றிய நூல்கள் :- 1. சங்களை அந்தாதி. 2. மாணிக்கவாசகர் விலாசம். 3. நளச்சக்கரவர்த்தி விலாசம் (தமயந்தி விலாசம்). இராமலிங்கம், க, வித்துவான். (1880-1953)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரசாலை என்னும் ஊரிலே, கந்தையா பிள்ளை என்பாருக்கும் தங்கமுத்து என்பாருக்கும் புதல்வராக 1880ஆம் ஆண்டு நவம்பர்

Page 25
46 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
மாதம் 8ஆம் தேதி-தோன்றியவர், இவர். இளமையிலே உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களின் திண்ணைப் பள்ளியிலே தமிழும், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலே ஆங்கிலமும் படித்து வந்தார். நீராவியடியில் அக்காலத் தில் வாழ்ந்துகொண்டிருந்த வேதாரணியம் ஐயாசாமிக் குருக்களிடம் இசைக்கலை பயிலத் தொடங்கி, இசைத் தமிழ்வல்ல புத்துவாட்டிச் சோமசுந்தரம் அவர்களிடம் முறையாகப் பன்னுட் பயின்று மிகுந்த தேர்ச்சி பெற்ருர், இவருடைய தோற்றமும் இனிமை மிகுந்த சாரீரமும் இவரை இசைக் கலையுடன் நாடகக் கலையிலும் ஈடுபடு மாறு செய்தது. நண்பர்களுடன் கூடி இவர் பல நாடகங்களிலே நடித்துள்ளார். அக்காலத்திலே யாழ்ப் பாணத்தில் நிறுவப்பட்ட "சரஸ்வதி விலாச சபை'யில், 1914ஆம் ஆண்டு தொடங்கி 25 ஆண்டுகள்வரை அள வற்ற தொண்டுகள் ஆற்றிக்கொண்டிருந்தார். மட்டுவில் வடக்கு- கமலாசனி வித்தியாசாலை என்னும் சைவப் பாடசாலை இவரது பெரு முயற்சியாலும் அயரா உழைப் பினலும் நிறுவப்பட்டதாகும்.
இவர், "நமசிவாயம் அல்லது நான் யார்?" என்னும் பெயருடன் சமய நாடக நூல் ஒன்றினை இயற்றியுள்ளார். பல்லாயிரக்கணக்கான பாடல்களும் கீர்த்தனைகளும் இவரால் இயற்றப்பட்டுள்ளன. அவை இன்னும் அச்சேறவில்லை.
வித்துவான் அவர்கள் 1953 ஆம் ஆண்டு யூன் மாதம் 14ஆம் தேதி மாலை 5 மணியளவில் இறைவனடி சார்ந் தார்கள். இராமலிங்கம், வே.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உடுப்பிட்டியிலே வேலுப்பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றி யவர் இவர்,

இலக்கணச்சாமி 47
நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடுவோர் நிலை யையும், அல்லல்களையும் வழக்கறிஞர்களின் தந்திரங்களை யும் எடுத்துக்காட்டி "கோட்டுப் புராணம்" என்னும் பெயருடன் ஒரு நூலினை இயற்றியுள்ளார். அந்நூலின் பாடல்கள் ஒரு சில மட்டும் கிடைத்துள்ளன.
இருபாலைச் செட்டியார்(19ஆம் நூற்றண்டு முற்பகுதி)
யாழ்பாணத்தைச் சார்ந்த இருபாலை என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். தமிழறிவில் மட்டுமன்றி வைத்திய அறிவிலும் தனியொளி காட்டித் திகழ்ந்த இவர் வைத்திய விளக்கம், சரக்குச் சுத்தி ஆகிய வைத் தியத் துறை சார்ந்த நூல்களை இவர் இயற்றியுள்ளார். இந்நூல்களை ஏழாலையில் வாழ்ந்த ஐ. பொன்னையா வைத்தியரவர்கள் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள் 6Trrri.
இலக்கணச்சாமி, முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்
(1885-1949) யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணையில் வாழ்ந்துகொண்டிருந்த வெற்றிவேற் பிள்ளை என்பாருக் குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இவரின் இயற் பெயர் 'முத்துக்குமாரசுவாமி” என்பதாகும்.
இவர், தமது பதினுன்காம் வயதில் தமது உற்ருர் உறவினர் அறியாத வகையிலே இலங்கையை விட்டு நீங்கி, தல யாத்திரை தீர்த்த யாத்திரை செய்வதற் காக இந்தியாவுக்குச் சென்றர். அங்கே, சில காலம் யாத்திரை செய்தபின், சிதம்பரம் செல்லப்ப சுவாமிகள், ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் ஆகிய பெரியோர்களிடத்திலே இலக்கண இலக்கியங்களை

Page 26
48 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
முறையே கற்ருர். பின்னர். சூரியனர் கோயில் ஆதீன மகாசந்நிதானம் திருப்பெருந்திரு. முத்துக்குமார தேசிக ரிடம், வடமொழியிலும் தென் மொழியிலும் ஞான நூல்களை ஒதியுணர்ந்து, முத்தீட்சைகளையும் பெற்றுக் கொண்டார். சிறிது காலம்வரை அங்கே தங்கியிருந்த பின், சிதம்பரத்துக்குச் சென்று அதையே தமது நிலை யான இருப்பிடமாக்கிக்கொண்டார்கள். சிதம்பரத்திலே தம்மை நாடிவந்த பலருக்குச் சைவசித்தாந்த நூல்களை யும் இலக்கண இலக்கியங்களையும் முறையாகப் பாடஞ் சொல்லிப் பயிற்றுவித்து வந்தார்கள். இவரிடத்திலே பாடங் கேட்டோருள்ளே சிவக்கவிமணி, சி. கே. சுப்பிர மணிய முதலியார் சிறப் பாகக் குறிப்பிடப்பட வேண்டியவராவர்.
சிவஞான மாபாடியத்தை ஆராய்ந்து முதன்முதல் முழு நூலாக வெளியிட்டவர் இவரே. சிவாக்கிரயோகி கள் அருளிச்செய்த சிவாக்கிரபாடியம், கிரியாதீபிகை என்னும் இரு வடமொழி நூல்களும் இவராலேயே வெளியிடப்பட்டன. தருமபுர ஆதீனத்து ஆணையின்படி முத்திநிச்சயப்பேருரை முழுவதையும் ஒப்பிட்டுப் பார்த்து, ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியளித்தவரும் இவரேயாவர். சைவசந்நியாச பத்ததி, திருநாரையூர்ப் புராணம் ஆகிய நூல்களும் இவரால் வெளியிடப் பட்டுள்ளன. இவர் தொகுத்து வைத்த திருவுந்தியார் திருக்களிற்றுப்பாடியார் உரையும் இப்போது வெளி வந்துலவுகின்றது. சிவக்கவிமணி, சி. கே. சுப்பிரமணிய முதலியார் எழுதி வெளியிட்ட பெரிய புராண உரை சுவாமிகள் பரிசோதித்த பின்னரே அச்சிடப்பட்டு வந்த தாகும். "ஞானவர்ண விளக்கம்' என்னும் நூலினை வெளியிடுவதற்காக இவர்கள் ஆராய்ச்சி செய்து வந்தார்கள். ஆயின், அது முற்றுப்பெறவில்லை.

இன்னசித் தம்பி 49
சுவாமிகள், விரோதி ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் தேதி (22-4-1949) வெள்ளிக்கிழமை பகல் 10-30 மணியளவில் இறைவனடி சார்ந்தார்கள்.
இன்பக்கவி ( -1835)
தென்னிந்தியாவைச் சேர்ந்த மணப்பாறை என் னும் ஊரிலே தோன்றியவர் இவர். இவர் பெற்றேரி இவருக்கு இட்டபெயர் சவியார் என்றிக்லேயாம் என்பதாகும். இவர் இலங்கைக்குச் சென்று யாழ்ப் பாணத்தில் ஆபிரகாம் என்பாருடைய இல்லத்திற் றங்கியிருந்தார் என்று தெரிகின்றது. இவர், பல தனிப் பாடல்கள் பாடியுள்ளார். அக்காலத்தில் கச்சேரி முதலி யராக விளங்கிய பிலிப்பு உரொட்டிறிக்கோ முத்துக் கிருட்டிணர் மீது குறவஞ்சி யொன்றினை இயற்றியுள்
6TITIT.
இன்னுசித்தம்பி
யாழ்ப்பாணத்திலே தோன்றி, திருக்கோணமலை யிலே தங்கியிருந்து வாழ்ந்தவர் இவர்; இவர், அந் தோனிக்குட்டி அண்ணுவியாரால் இயற்றப்பட்ட * கிறித்து சமயக் கீர்த்தனை’ (1891) என்னும் நூலினை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இவரே ஈழநாட்டின் முதலாம் தமிழ் நாவலின எழுதியவராகப் போற்றப்படுகின்றர். இவர் எழுதிய "ஊசோன் பாலந்தை கதை" என்னும் நாவல் 1891ஆம் ஆண்டு யூலாய் மாதத்தில் அச்சேற்றி வெளியிடப்பட்டது. அச்சு வேலியைச் சார்ந்த எஸ். தம்பிமுத்துப்பிள்ளை இந்த நாவலினை முதன்முதலாகப் பதிப்பித்தார். இதன் இரண்டாம் பதிப்பு, நல்லூர், சுவாமி ஞானப்பிரகாச ரால் பரிசோதிக்கப்பட்டு 1924ஆம் ஆண்டில் வெளி வந்தது.

Page 27
50 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
ஈழத்துப் பூதந்தேவனுர்
இவர், கடைச்சங்க காலத்துப் புலவர்; பரணர் காலத் தவர். இவர் பெயர் "மதுரை ஈழத்துப் பூதந்தேவனர்' எனவும் வழப்படுகின்றது. மதுரைக்கண் வந்து தங்கிய ஈழத்துப் பூதனது மகனுண தேவன் எனக் கொள்ளலாம். சங்க நூல்களில் இவர் பாடியனவாக ஏழு பாடல்கள் காணப்படுகின்றன: அகநானூறு: 88, 231, 307 குறுந்தொகை: 189, 343, 360; நற்றிணை: 366. உலோறன்ஸ்பிள்ளை
மன்ஞர்ப் பகுதியில் மாதோட்டத்திலே தோன்றி யவர் இவர்; பாசிக்குளத்தில் (சைவலப்பேரியில்) வாழ்ந் தவர் என அறியக் கிடக்கின்றது. கிறித்துநாதரின் திருவவதாரத்தைப் பற்றிக் கூறும் "மூவிராசாக்கள் வாசகப்பா" இவரால் இயற்றப்பட்டதாகும். பல பாடல் கள் பாடியுள்ளார் என அறியக் கிடப்பினும் பாடல்கள் அச்சேற்றப்படவில்லை. இவர் மரபிலே தோன்றிய மக்கள் வழிப் பேரன்தான் இலந்தைவான் கீத்தாம் பிள்ளைப் புலவர் ஆவர்.
உவில்லியம்பிள்ளை (1891-1961)
மட்டக் களப்பினைச் சார்ந்த தம்பிலுவில் என்னும் ஊரில் 1891ஆம் ஆண்டிலே தோன்றியவர் இவர். இவரது இளமைக் காலத்துப் பெயர் மூத்ததம்பி என்பதாகும். நாடகத்துறையில் இவர் ஆற்றிய பணிகள் பல.
இவரியற்றிய நூல்கள் :- 1. கண்டிராசன் சரிதை, பவளேந்திரன் நாடகம், 3. புவனேந்திரன் விலாசம், நச்சுப் பொய்கைச் சருக்கம், 5. சுந்தர விலாசம், மதுரைவிரன், 7. இந்திராபுரி இரகசியம் (நாவல்), மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் (நாவல்.)
:

ஏகாம்பரம், கீ. 51
உவில்லியம்போல்
மானிப்பாயிலிருந்து அறிவியல் நூல்களை முதன்முத லாகத் தமிழில் மொழி பெயர்த்து அச்சேற்றிய கிறீன் வைத்தியரின் மாணவர் இவர். வைத்தியத்துறையில் அச்சேற்றப்பட்ட நூல்களுக்கு இவர் புரிந்த பணிகள் பல. நோய் தீர்க்க வைத்தியர்களுக்கு உதவிபுரியும் வகையில், "வைத்தியாகரம்" என்னும் நூல் (Hooper's Physicians Vade Mecumj, 26Tuileir Goa'uğ3}u 605 வாகடம் தமிழில் இவரால் மொழி பெயர்க்கப்பட்டு, 1872ஆம் ஆண்டில் கிறீன் வைத்தியராற் பிரசுரிக்கப் பட்டது.
என்றி மார்ட்டின்
வட்டுக்கோட்டையிலே "உதய தாரகை (1841) என்னும் செய்தித்தாள் தொடக்கப்பட்டபோது இதழா சிரியர்களுள் ஒருவராய் இருந்தவர் இவர். "எஸ்தர் விலாசம்” என்னும் நூலினை இவர் இயற்றியுள்ளார். இவரின் பெயரினைக் கொண்டதாய் ஒரு வீதி இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளது. "யாழ்ப்பாணம் பற்றிய குறிப்புகள்' (Notes of Jaffna) என்னும் நூலினையும், *யாழ்ப்பாணத்து ஆசனக் கோவிலின் வரலாறு என்னும் நூலினையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
ரேகாம்பரம், க.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வல்லுவெட்டியிலே தோன்றியவர் இவர். இருபாலைச் சேனதிராய முதலி யாரிடம் இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக்கொண்டார் எனத் தெரிகின்றது. தென் னிந்தியாவுக்குச் சென்று திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இலக்கண நூல்களைச் சிறப்பாகவும்

Page 28
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
விரிவாகவும் கற்றுக் கொண்டார் எனக் கூறப்படு கின்றது.
இவர், விடையூழியர்க்கும் ஆங்கில உத்தியோகத்தர் களுக்கும் தமிழ் பயிற்றிக் கொண்டிருந்தார் என அறியக் கிடக்கின்றது.
கந்தரந்தாதிக்கு இவர் சிறந்த உரையொன்று எழுதி யுள்ளார்.
ஏகாம்பரம், நா. (1844- )
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வல்லுலெட்டித் துறை யிலே, 1844ஆம் ஆண்டில் இவர் தோன்றினர். தமது ஊரிலுள்ள பாடசாலை யொன்றில் ஒரளவுக்குக் கல்வி பயின்றபின் வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சென்று ஆங்கிலக் கல்வி பயின்ருர், அதன் பின், இந்தியாவுக்குச் சென்று, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்விலே சித்தி பெற்ருர். அக்காலத்தே தொடர்ந்து ஆங்கிலக் கல்வி கற்க வேண்டிய இவர், யாதோ காரணத் தால் ஆங்கிலம் பயில்வதை நிறுத்தி விட்டு, தமிழ் இலக் கண இலக்கியங்களை முறையே பயில்வதில் ஊக்கம் காட் டினர். வித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளை, இராச கோபால்பிள்ளை, இராமலிங்கம்பிள்ளை ஆகியோரிடம் சில காலம்வரை தமிழிலக்கியங்களைப் பயின்ருர் என அறியக் கிடக்கின்றது. அக்காலத்திலே, இவர் அட்டாவ தானமும் பயின்று கொண்டார் எனத் தெரிய வரு கின்றது. இலங்கையில் முதன்முதலாக அட்டாவதானஞ் செய்தவர் இவரேயாவர். ஏரம்பையர், சு. (1847-1914)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மாதகல் என்னும் ஊரிலே, 1847 ஆம் ஆண்டில், சுப்பிரமணிய சாத்திரியார் என்பவருக்குப் புதல்வராகத் தோற்றியவர் இவர்,

ஏரம்பையர், சு. 53
தமது தந்தையாரிடத்திலே தமிழையும் வடமொழியை யும் சிறிது காலம்வரை பயின்றபின், சங்கான வேலுப் பிள்ளை ஆசிரியரிடத்திலும், நல்லூர்ச் சம்பந்தப் புலவ ரிடத்திலும் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றர். சங்கர பண்டிதரிடத்திலும் இவர் வடமொழி நூல்களைக் கற்ருர் என்றும் அறியக் கிடக்கின்றது. ஆறுமுக நாவலரிடத்திலும் இவர் சென்று தமது ஐயங்களைக் கேட்டுத் தெளிவதுண்டு என்பர்.
இவர் மாணவர் பலர்க்குங் கல்வி கற்பித்து வந்தது மன்றி, ஊர்கடோறுஞ் சென்று சைவ விரிவுரைகளும் ஆற்றிக் கொண்டிருந்தார். வண்ணுர் பண்ணையிலே தொடங்கப் பெற்ற சைவப் பரிபாலன சபையில் அச் சபையின் சைவப் பிரகாசகராகவும் விளங்கினர். ஆறுமுகநாவலரவர்கள் வண்ணுர் பண்ணையில் நிறுவிய தமிழ்ச் சங்கத்திலும் உறுப்பினராக இவர் விளங்கினர். கீரிமலையிலே ஆறுமுக நாவலர் தருமப் பொருள் கொண்டு த. கைலாசபிள்ளையவர்கள் நிறுவிய வித்தியாசாலையிலும் இவர் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். 1914ஆம் ஆண்டில் இவர் இவ்வுலக வாழ்வினை நீத்தார். இவர், வடமொழி நீதிசாத்திரத்தினைத் தமிழில் மொழிபெயர்த்து, "நீதிசாரம்" என்னும் பெயருடன் செய்யுள் நூலாக இயற்றியுள்ளார். சேதுபுராண வசன மொன்றும் இவரால் இயற்றப்பட்டுள்ளது.
இவரியற்றிய நூல்கள்:- 1. நீதிசாரம், 2. சேது புராணவசனம், 3. கனநூல், 4. குரனுடைய முற் பிறப்பு வரலாறு, 5. சிரார்த்த விதி, 6. ஆசெள தீபிகை வினவிடை, 7. மிருகாவதி விலாசம் (நாடகம்), 8. கண்ணப்பர் சரித்திரம் (நாடகம்), 9. மனுநீதிகண்ட சோழன் சரித்திரம் (நாடகம்), 10. நாகேஸ்வரி தோத்
ሠ• ሠ--4

Page 29
54 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
திரம், 11. சிவபெருமான் ஊஞ்சல், 12. வைரவர் ஊஞ்சல், 13. பிள்ளையார் ஊஞ்சல், 14. கதிரேசன் ஊஞ்சல்,
ஒசிங்ரன் பண்டிதர்
வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த சாஸ்திரக் கல்லூரியின் தலைவராகப் பத்து ஆண்டுகள் வரை பணி யாற்றிக்கொண்டிருந்தவர் இவர். தமிழினத் துறை போகக் கற்றுக்கொண்டதுமன்றி, சைவசமய சாத்திர நூல்களையும் கொள்கைகளையும் துருவி ஆராய்வதில் இவர் ஈடுபட்டிருந்தார். அக் கல்லூரியில், கந்த புராணத்தினை முதன்முதலாக இலக்கிய பாடமாக வைத்தவரும் இவரே. *தத்துவக் கட்டளை", "சிவஞானபோதம்’, ‘சிவட்பிர காசம்' ஆகிய நூல்களே இவர் 1854 ஆம் ஆண்டில் ஆங் கிலத்தில் மொழிபெயர்த்தியற்றினர். பிற்றை நாளில், சிவஞானபோதம் முதலான நூல்களை மொழிபெயர்த் தியற்றிய நல்லசாமிப் பிள்ளையவர்களுக்கு இவை மிகுதி யும் பயன்படுவனவாயின.
கணபதி ஐயர் (1709-1784)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டையில் வாழ்ந்துகொண்டிருந்த பாலக்கிருட்டின ஐயருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். தமது சுற்றத்தவருள் ஒருவராகிய சண்முக ஐயர் என்பார் இயற்றியதும் நிறை வேற்றப்படாது கிடந்ததுமான "சுந்தரி நாடகத்தினை, *வாளபிமன் நாடகம்" எனப் பெயர் மாற்றிக்கொண்டு இயற்றி முடித்தார் எனக் கூறப்படுகின்றது.
வண்ணை வைத்தியலிங்கர் குறவஞ்சி, மலையகந்தினி நாடகம், அலங்கார ரூப நாடகம், அதிரூபவதி நாடகம் ஆகிய நால்களை இவர் இயற்றியுள்ளார்.

கணபதிப் பிள்ளை, வ. 55
வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளியம்மைபேரிற் பதிகமும் ஊஞ்சலும், பருத்தித்துறைச் சித்திவிநாயகர் மேல் பாவிகற்பம் பெற்ற நூறு கவிகளும் இவர் பாடினர் என்பர். பாடல்கள் கிடைத்தில,
கணபதிக் குருக்கள்
இந்தியாவிலுள்ள வேதாரணியத்தைச் சேர்ந்த சைவக் குருக்கள் இவர். யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மாதகலில் வாழ்ந்துகொண்டிருந்த சிற்றம்பலப் புலவர் இவரது மாணவராவர். ஆண்டுதோறும் வேதாரணியஞ் சென்று திரும்பும் இவர், தோணிக்காரருக்குப் பயன் படத்தக்கதாக * கப்பற் பாட்டுக்கள்" சில பாடியுள் ளார். அவற்றுள் ஸ்காந்த புராண சரிதம் முற்றும் அடங்கியுள்ளது என்பர். இவரைப் "பஞ்சலக்கணக் கணபதிக் குருக்கள்" எனக் குறிப்பிடுவதுமுண்டு.
கணபதிப் பிள்ளை, வ. (1845-1894)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித்துறையிலே, புலோலியூரில், வல்லிபுரநாத பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர்.
இளமைக் காலத்திலே புலோலியில் அமைந்திருந்த பாடசாலையொன்றிற் கல்வி கற்றபின், தமிழ் இலக்கண இலக்கியங்களை உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்திலே கற்றுக்கொண்டார். பின், சென்னைக்குச் சென்று ஆங் கிலமும் சமக்கிருதமும் பயின்றதுடன், பல்கலைக் கழகப் புகு முகத் தேர்விலும் சித்தியடைந்தார். சமக்கிருதத் திலே மிகுந்த விருப்பிருந்தமையால் இவர் சமக்கிருத நூல்கள் பலவற்றை முறையே கற்று, அவற்றில் மிகுந்த புலமையும் பெற்ருர்,

Page 30
66 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவர், காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் கல்லூரி யிலே தமிழ்ப் பண்டிதராகவும், திருவனந்தபுரத்திலுள்ள மகாராசாக் கல்லூரியிலே பிரதம ஆசிரியராகவும் பணி யாற்றிக் கொண்டிருந்தார். சிறிது காலம் சென்னைத் 'திராவிட வர்த்தனிச் சங்கத்தின் பண்டிதராகவும் விளங் கினர்.
மொழிநூல் ஆசிரியரான மாகறல் கார்த்திகேய முதலியாரும், பூரீநிவாசாசாரிய சுவாமிகள் என்னும் சமக்கிருத வித்துவ சிரோமணியும் இவருடைய மாணவர் களுட் சிறந்தவராவர்.
புலோலி, வ. குமாரசுவாமிப் புலவர் இவருடைய தம்பியாராவர். இவருடைய தங்கையாராகிய பார்ப் பதியம்மையாரும் தமிழிலும் சமக்கிருதத்திலும் பெரும் புலமை வாய்ந்தவராய் விளங்கினர் என்று அறியக் கிடக் கின்றது.
இவரியற்றிய நூல்கள் :- 1. வில்ஹணியம் (வட மொழியிலிருந்து மொழிப் பெயர்த்தது. 2. இரகுவமிசச் சுருக்கம், 3. வாதபுரேசர்கதை-(வடமொழி ஆலாசிய புpான்மிய மொழிபெயர்ப்பு). 4. வேதாரணியேசுவரர் ஊஞ்சற் பதிகம். 5. இந்திரசேன நாடகம். 6. இரகு வமிச மொழிபெயர்ப்பு. 7. மார்க்கண்டேய புராணம். 8. பதப்பிரயோக விவரணம். 9. தருக்க சாஸ்திர வின விடை. இவற்றுள் இறுதியிலுள்ள நான்கும் அச்சேரு தவை.
கணபதிப்பிள்ளைப் புலவர்
மட்டக்களப்பினைச் சார் ந் த செட்டிபாளையம்
என்னும் ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த இளையதம்பி
என் பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர்.

கணேச பண்டிதரீ 57
இளமைக்காலத்திலே, அவ்வூரில் பேரறிஞராக விளங்கிக் கொண்டிருந்த சின்னவர் கணபதிப் பிள்ளை என்பாரிடத் தில், நிகண்டு, கந்தபுராணம், மகாபாரதம் போன்ற பல நூல்களையும் பயின்றுகொண்டார்.
அதன்பின், இவர் நாட்டு வைத்தியம் பயில்வதில் விருப்புடையவராய், கினியா என்னும் ஊரிலே புகழ் வாய்ந்த வைத்தியராக விளங்கிய கொம்பன் பரிகாரியா ரிடத்தில் முறையே வைத்தியக் கலையினைப் பயின்று சித்தி யுடைய வைத்தியராக விளங்கினர். தமது வைத்தியத் தொழிலுடன் சோதிடமும்பயின்று கொள்ளுதல் பயனு டையதாகும் எனக் கருதி, களுதாவளை என்னும் ஊரிற் பிரசித்தி பெற்று விளங்கிய சோதிடவல்லுநரான மூத்த தம்பிச் சாத்திரியாரிடத்தில் சோதிடக் கலையினையும் கற்றுக் கொண்டார்.
முருகக் கடவுள்மீதும் திருக்கதிர் காமத்தின்மீதும் பத்தி மிகுந்தவராய் விளங்கிய இவர், "கதிர்காமத்தம் மானை", "கதிர்காம சதகம்", "மாணிக்க கங்கைக் காவியம்" ஆகிய மூன்று நூல்களை இயற்றியுள்ளார். திருக்கோவிலுக்கு அண்மையிலே சங்க மாங்கண்டிக்குன் றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும், "சங்கமாங்கண்டிப் பதிகம்" என ஒரு நூலினை பாத்துள்ளார். கணேச பண்டிதர் (1843-1881)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர்பண்ணையிலே தோன்றியவர் இவர். தமிழிலக்கண விலக்கியங்களையும், வடமொழி வியாகரணங்கள் காவியங்களையும் நன்கு சுற்று மிகுந்த புலமை பெற்றிருந்தார்.
இவர், இந்தியாவிலே இளையாற்றங்குடியில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், அந்நகர வணிகர்

Page 31
59 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
வேண்டிக்கொண்ட மைக்கு இணங்கி, அத்தல மான்மியத் தைத் தமிழில் மொழிபெயர்த்து, இளசைப் புராணம்" என விருத்தப் பாக்களால் இயற்றியுள்ளார்.
திருவண்ணமலை ஆதீனத்திலும் இவர் ஆதீனவித்து வானக விளங்கினர் என்று அறியக் கிடக்கின்றது.
கணேசையர், சி. மகாவித்துவான் (1878-1958).
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புன்னலைக் கட்டுவன் என்னும் ஊரிலே சின்னையர் என்பார்க்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர்.
இளமைச்காலத்தில் ஏடு தொடக்கப்பட்டபின், இவர் புன்னலைக் கட்டுவன் சைவவித்தியாசாலையிலே சேர்ந்து, எட்டாம் வகுப்பு வரையில் அங்கே படித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்திலேயே தமது பெரிய தந்தையாராகிய கதிர்காம ஐயரிடம் நன்னூல், நிகண்டு, திருக்குறள் ஆகிய நூல்களையும் சமக்கிருதத்தையும் பயின்று வந்தார். அதன்பின், வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளையவர்களின் அறிவாற்றலைப் பற்றிக் கேள்வியுற்று அவரிடம் கல்வி பயிலுதல் வேண்டு மென உறுதிகொண்டார். இவரின் மூத்த தமக்கை யாரும் அவரது சணவராகிய சுந்தர ஐயரவர்களும் அக் காலத்தே வண்ணுர்பண்ணையில் வாழ்ந்துகொண்டிருந்த மையால், இவர் அவர்களுடன் தங்கியிருந்து வித்துவ
சிரோமணியிடம் கல்வி பயில்வதற்கான ஒழுங்குகள்
செய்யப்பட்டன. பொன்னம்பலப் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்றதுடன், சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடத்தும், உரையாசிரியர் ம. க. வேற் பிள்ளே யவர்களிடத்தும் உயர்தரத் தமிழிலக்கண விலக் கியங்களையும், தருக்க சாத்திரம், சமச்கிருதம் ஆகியவற் றையும் நன்கு கற்ருர்,

கணேசையர், சி., மகாவித்துவான். 59
முதலிலே, நயிதீைவிலிருந்த சைவ வித்தியாசாலை யிலே தலைமையாசிரியராய்ப் பணிபுரிந்தபின், ஏறக் குறைய ஐந்து ஆண்டுகள் வரையில் மல்லாகத்திலிருந்த சைவத் தமிழ் வித்தியாசாலைத் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். அதன்பின், யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் ஆதர விலே தி. சதாசிவ ஐயரவர்களால் நடாத்தப் பெற்று வந்த பிராசீன பாடசாலையின் 1921ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ்ப் பகுதித் தலைவராகவிருந்து எட்டு ஆண்டுகள் வரை பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். 1938ஆம் ஆண்டிலே, இவருக்கு அறுபதாம் ஆண்டு நிறைவு விழா மிகச் சிறந்த முறையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாயிற்று. அவ் வேளையில், ஈழத் தமிழன் பர்கள் இவருக்குப் பொற்கிழியும் வழங்கிச் சிறப்பித் தார்கள்.
இவர்கள், பிராசீன பாடசாலையை விட்டு நீங்கிய பின், தனிப்பட்ட சில மாணவர்களுக்குக் கற்பிப்பதிலும், நூல்கள் எழுதுவதிலும் தமது காலத்தைக் கழித்து வந்தார்கள்.
மகா வித்துவான் ரா. இராகவையங்கார், மு. இராக வையங்கார் முதலானேர் வேண்டிக்கொண்டபடி "செந் தமிழ்" என்னும் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீட்டுக்கு நீண்டகாலமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வந் தார்கள். கணேசய்யரவர்களின் தமிழ் மொழி யறி வினையும் ஆராய்ச்சி விழுப்பத்தினையும் நோக்கி, யாழ்ப் பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினர் இவருக்கு "வித்துவ சிரோமணி’ என்னும் பட்டத்தினை, 1952ஆம் ஆண்டிலே விசேஷ பட்டமளிப்பு விழா ஒன் றினை நடாத்தி, வழங்கினர்கள்.

Page 32
Ꮾ9 ாழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்
ஐயரவர்களின் வாழ்க்கையில், அவர்கள் தொல்காப் பியத்துக்கு எழுதியளித்துள்ள உரைவிளக்கம் உச்சநிலை யினைக் காட்டுகின்றது. தொல்காப்பிய உரைகளை ஐயரவர்களின் தெளிவும் திட்பமும் வாய்ந்த உரை விளக்கத்துடன் செவ்வியதொரு முறையில் வெளியிட் டுதவிய "ஈழகேசரி" அதிபர் நா. பொன்னையா அவர் களின் பெரும்பணி என்றும் தமிழ் வழங்கும் உலகினுற் போற்றப்படுவதாகும்.
இவரியற்றிய நூல்கள் :- குமாரசுவாமிப் புலவர் சரித்திரம், 2. குசேலர் சரித்திரம், 3. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம், 4. இரகுவமிசம்-உரை, 5. அக நானுாறு-உரை 6. வறுத்தலைவிளான் மருதடி விநாயகர்மேல் இருபாவிருபஃது, 7. தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் - நச்சிஞர்க்கினியர் உரைவிளக்கம், 8. தொல்காப்பியம்: சொல்லதிகாரம்-சேனவரையர் உரைவிளக்கம், 9. தொல்காப்பியம்: பொருளதிகாரம் (முன் ஐந்து இயல்கள்)-நச்சினர்க்கினியர் உரை விளக் கம், 10. தொல்காப்பியம்: பொருளதிகாரம் (பின் நான்கு இயல்கள்)-பேராசிரியர் உரை விளக்கம், 11. மேகதூதக் காரிகை- உரை.
கதிரேசுப் புலவர் (1800-1844)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலி என்னும் ஊரிலே முத்துக்குமாரு என்பாருக்குப் புதல்வராகத் தோற்றியவர் இவர்.
"பதுமழரணி நாடகம்' என்னும் நாடக நூல்
இவரால் இயற்றப்பட்டதாகும். தெல்லியோடை. அம்மன் பேரிற் பல விருத்தங்களையும் இவர் பாடியுள்ளார்.

கதிரைவேற்பிள்ளை, கு. உவைமன். 61
கதிரைவேற்பிள்ளை, கு. உவைமன். (1829-1904). யாழ்ப்பாணத்தைச் சா ர் ந் த உடுப்பிட்டியில் வாழ்ந்து கொண்டிருந்த குமாரசுவாமி முதலியாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்தி லேயே ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகுந்த புலமை வாய்ந்த இவர், வழக்கறிஞர் தொழிலினை மேற்கொண் டிருந்தார். வழக்கறிஞராகக் கடமையாற்றிக் கொண் டிருந்த காலத்தில் நாகரிகம் வாய்ந்த பிறநாடுகளைப் போல யாழ்ப்பாணமும் சிறந்த பத்திரிகையொன்றினைத் தொடக்கி நடாத்துதல் வேண்டுமென ஆசை கொண் டார். எனவே, 1863ஆம் ஆண்டிலே "இலங்கைத் தேசாபி மானி" என்னும் பெயருடன் ஒரு வாரப்பத்திரிகையைத் தொடக்கி நடாத்திவந்தார்.
அக்காலத்திலே இலங்கைத் தேசாதிபதியாக விளங் கிய சேர். உவில்லியம் கிரெகரியவர்கள் இவருடைய திறமையைக் கண்டு இவரை 1872ஆம் ஆண்டிலே ஊர் காவற்றுறை நீதிபதியாக நியமித்தார். சிறந்த நீதிபதி யாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இவர் 1884ஆம் ஆண்டில் சிவில் சேவை அங்கத்தவராகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பருத்தித்துறை, ம ல் லா கம், சாவகச்சேரி ஆகிய பட்டணங்களில் பொலிஸ் நீதிபதி யாகவும், யாழ்ப்பாணத்து உயர்நீதி மன்ற நீதிபதி யாகவும், இவர் கடமை புரிந்ததுண்டு.
இவர் நீதிபதியாய் விளங்கிய காலத்திலே, தமிழ் மொழியின் வளர்ச்சிவேண்டி மிகப் பெரியதொரு தொண்டினை இவர் மேற்கொண்டிருந்தார். ஆங்கிலம் முதலான மொழிகளுக்கு அமைந்திருப்பது போன்ற பேரகராதி ஒன்றினைத் தமிழ் மொழிக்கும் தொகுத்த மைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதே அவர் உயிர்த் துடிப்பாய் இருந்தது. அதற்காக இவர் அல்லும் பகலும்

Page 33
62 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
உழைத்து வந்தார். இவருடைய பெரும் பணிக்கு அருஞ் சொற் குறிப்புகளை உதவியதுமட்டுமின்றி, பிறவகை களிலும் பெருந்துணை புரிந்தவர் சுன்னுகம் அ. குமார சுவாமிப் புலவர் அவர்களாவர். உடுப்பிட்டி ஆறுமுகம் பிள்ளை, ஊரெழு, சு. சரவணமுத்துப் புலவர் முதலானுேர் சிலரும் இவருக்குத் துணைபுரிந்தனர் என அறியக் கிடக் கின்றது. இவரால் ஆக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதி தகரவருக்கம் வரையுமே கொண்டதாயிருந்தது. அகராதி முடிவு பெறுவதற்கிடையில் இவர் இறைவனடி சார்ந்தமையால் இவரது புதல்வரும் சட்டநிரூபண சபைப் பிரதிநிதிகளுள் ஒருவராயிருந்தவருமான கெளரவ க. பாலசிங்கமவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினரைக் கொண்டு இதனை முற்றுவிப்பித்து அச்சேற்றுமாறு செய் தனர். "தர்க்க பரிபாஷை என்னும் நூலும் கதிரை வேற் பிள்ளையவர்களாற் பரிசோதிக்கப்பட்டு அச்சேற்றப் பட்டதெனத் தெரிகின்றது.
கதிரைவேற்பிள்ளை, தம்பலகாமம்.
திருக்கோணமலையினைச் சார்ந்த தம்பலகாமம் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். இவர், கோணேசர் பதிகம்" என்னும் நூலினைப் பாடியவர். இந் நூலானது, 1889 ஆம் ஆண்டிலே வல்லுவெட்டித் துறையில் அச்சிடுவித்து வெளியிடப்பட்டுள்ளது.
கதிரைவேற்பிள்ளை, நா. (1844-1907)
யாழ்ப்பாணம்-பருத்தித் துறையைச் சார்ந்த புலோலியூரிலே, நாகப்ப பிள்ளை என்பாருக்குப் புதல்வ ராய்த் தோன்றியவர் இவர். இளமைக்காலந் தொடங் கியே மிகுந்த புத்திக்கூர்மையும் மிகுந்த ஞாபகசத்தியும் வாய்ந்தவராய் விளங்கியவர். ஏடு தொடக்கியபின்

கதிரைவேற்பிள்ளே, நா. 63
அவ்வூரில் அமைந்திருந்த பாடசாலை யொன்றிலே சேர்ந்து கல்வி கற்று வந்தார். பாடசாலையில் ஆரும் வகுப்பிற் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போதே, அவ் வூரிலே "நொத்தாரிசு" (Notary Public) வாகக் கடமை யாற்றிக்கொண்டிருந்த சிதம்பரப் பிள்ளை என்பா ரிடத்தில் எழுதுவினைஞராகவும் பணியாற்றினர். பிற ரெவர்க்கும் கீழமைந்து வாழ்தலில் விருப்பற்ற இவர், தமது இருபத்திரண்டாவது வயதிலே, நொத்தாரிசு, சிதம்பரப் பிள்ளைக்கும் தமக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினைச் சாட்டாகக்கொண்டு எழுதுவினைப் பணியிலிருந்து விலகி, இந்தியாவுக்குச் சென்ரு?ர். இந்தியாவிலே, சென்னையிலே தங்கியிருந்து, தி. த. கனகசுந்தரம் பிள்ளையிடத்தில் தொல்காப்பியம், இலக் கணவிளக்கம் முதலான நூல்களையும் பிற இலக்கியங் களையும் கற்றுக்கொண்டார். சில ஆண்டுகளுக்கிடையி லேயே வடமொழியிலும் மிகுந்த புலமை வாய்ந்தவ ரானுர்,
இவர், சென்னையிலே தங்கியிருந்த காலத்தில், சென்னையிலும் பிற வெளியூர்களுக்குஞ் சென்று, சைவ சமய விரிவுரைகள் நிகழ்த் தி வந்தார். மாயாவாதத் தினைத் திறம்பெற மறுத்தொதுக்கிப் பேசும் வன்மை வாய்ந்தவராய் விளங்கிய காரணத்தால் சென்னையில் வாழ்ந்த புலவர்கள் இவருக்கு " மாயாவாத தும் சகோளரி" என்னும் பட்டம் வழங்கினர்கள். இப் பட்டமளிப்பு விழாவினுக்குத் தலைமை தாங்கியவர் காசிவாசி செந்தி நாதையர் ஆவர். இவர் ஆரணி சமஸ்தானத்தில் வித்துவானக இருந்த காலத்தில், சமஸ்தானத் தலைவர் இவருக்கு "அத்துவித சித்தாந்த மகோத்தாரனர்" என்னும் பட்டத்தினை வழங்கினர்.

Page 34
A Arpps (Tilig-dty stálybé a L-f Loadsáh
விரிவுரைகள் ஆற்றுவதில் மட்டுமன்றி அட்டாவ திானம், சதாவதானம் செய்வதிலும் இவர் மிகுந்த வன்மை படைத்திருந்தார்.
வி. உலகநாத முதலியார், வி. கலியாணசுந்தர முதலியார் முதலானேர் பலர் இவருடைய மாணுக்கர் களாக விளங்கினர். வி. கலியாணசுந்தர முதலியார் இவருடைய வாழ்க்கை வரலாற்றினை விரிவாக எழுதி (சென்னை, 1908) வெளியிட்டுள்ளார்.
இவர் இயற்றிய நூல்கள் :- 1 கூர்ம புராண விரி வுரை, 2. பழனித்தல புராணவுரை, 3 சைவ சந்திரிகை, 4. சைவ சித்தாந்தச் சுருக்கம், 5. சிவாலய மகோற்சவ விளக்கம், 6. சுப்பிரமணிய பராக்கிரமம், 7. கருவூர் மான்மியம், 8. புத்தமத கண்டனம், 9. மருட்பா மறுப்பு 10. தமிழ்ப் பேரகராதி (யாழ்ப்பாண அகராதி)
கதிர்காமையர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புன்னுலைக் கட்டுவன் என்னும் ஊரிலே, சங்கர ஐயர் என்பாருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர் இவர். மகாவித்துவான் கணேசைய ரின் பெரிய தந்தையாராவார். இளமையிலே இவருடைய தந்தையாரே இவருக்கு ஏடுதொடக்கி, தமிழும் சமக்கிரு தமும் கற்பித்து வந்தார். அதன்பின், ஊரெழு மயில் வாகனப் புலவரிடத்திலே தமிழிலக்கணவிலக்கியங்களை முறையே கற்ருர். இணுவில் நடராசையரிடத்திற் சைவசிந்தாந்த நூல்களைப் பயின் ருர், ஊரெழு சரவண முத்துப் புலவர், காசிவாசி செந்திநாதையர், மகா வித்துவான் கணேசையர் ஆகியோர் இவருடைய மாணவராவர்.
புன்ஞலைக் கட்டுவனிலே இவர் ஒரு தமிழ்ப் பாட vrräasuu நிறுவி, நன்கு நடாத்தி, அரசினர் நன்கொடை

கந்தப் பிஸ்க்ள, வி. 65
யும் பெறச் செய்தவர். இப்போது அப்பாடசாலையினை அரசினரே ஏற்று நடாத்தி வருகின்றனர்.
கந்தப்பிள்ளை, ப. (1766-1842)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரிலே வாழ்ந்து கொண்டிருந்த பரமானந்தர் என்பாருக்குப்புதல்வராகத் தோற்றியவர் இவர். இவரே ஆறுமுகநாவலரவர்களின் அருமைத் தந்தையாராவர்.
இளமைக் காலத்திலே சண்முகச் சட்டம்பியார் என்பவரிடத்திற் கல்வி பயின்று கொண்டிருந்த இவர் கூழங்கைத் தம்பிரானிடத்தில் இலக்கணவிலக்கியங்களைக் கற்றுப் பெரும் புலமை வாய்ந்தவரானர். இவருக்கு ஆங்கிலம், போர்த்துக்கேசியம், ஒல்லாந்தம் ஆகிய மொழி களிலும் போதுமான அறிவு இருந்ததென அறியக்கிடக் கின்றது. இவர், பதினெட்டு ஆண்டுகளாக அரசாங்கத் திற் பணியாற்றிக் கொண்டிருந்தவர். இவரால் இருபது நாடகங்கள் இயற்றப்பட்டன என அறியக்கிடக்கின்றது. இவர் எழுதத் தொடங்கி முடிக்கப் பெருதிருந்த இரத்தினவல்லி விலாசம்' என்னும் நூலினை இவரது புதல்வரான ஆறுமுகநாவலரவர்களே பாடி முடித்தார்.
இவரியற்றிய நூல்கள் சில :- 1. இராம விலாசம், 2. ஏரோது நாடகம், 3. கண்டி நாடகம், 4. சந்திர காச நாடகம், 5. நிக்கிலாஸ் நாடகம், 6. இரத்தின வல்லி விலாசம், 7. நல்லைநகர்க் குறவஞ்சி.
கந்தப் பிள்ளை, வி. (1840-1913)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வேலணை என்னும் ஊரிலே, வினுசித்தம்பி என்பாருக்குப் புதல்வராக,

Page 35
66 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
1840ஆம் ஆண்டிலே தோற்றியவர் இவர். தமிழிலக்கண விலக்கியங்களிலும் சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் மிகுந்த புலமையுடையவராய் விளங்கியவர். இவர் தமிழிலக்கணவிலக்கியங்களை ஆறுமுகநாவலரவர்களிடத் திலும் சித்தாந்த சாத்திரங்களை இணுவில் நடராசைய ரிடத்திலும் முறையே கற்றவர். நாவலரவர்கள் கட்டளைப்படி தமது ஊரிலே தமிழ் வித்தியா சாலை ஒன் றினைத் தாபித்து, அதிபராயிருந்து, அதனைச் சிறந்த முறையில் நடாத்தி வந்தவர்.
சைவசித்தாந்தம் பற்றிய விரிவுரைகள் செய்வதில் இவர் மிகுந்த திறமை படைத்தவர். யாழ்ப்பாணம், கொழும்பு, சிதம்பரம் ஆகிய இடங்களிலெல்லாம் சைவ சமயத்தின் சிறப்புக்களை எடுத்துக்காட்டி விரிவுரைகள் பல நிகழ்த்தி வந்தவர். சைவ நெறியின் விழுப்பத்தைப் பற்றிய கட்டுரைகள் பலவற்றை அடிக்கடி பத்திரிகை களுக்கு எழுதிக் கொண்டிருந்தவர்.
இவர், தமது ஊரிலே ஓர் அச்சகத்தினை நிறுவி, "சைவ சூக்குமார்த்த போதினி” என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையை மாதந்தோறும் வெளியிட்டு வந்தார். வேலணையிலுள்ள மகாகணபதிப் பிள்ளையார்மீது திருவூஞ்சல் முதலியனவும், தனிக் கவிகள் பலவும் பாடியவர். "தத்துவப் பிரகாசம்” என்னும் சித்தாந்த நூலினை உரையுடன் ஆராய்ந்து பதிப்பித்தவர். கொழும்புச் சைவபரிபாலன சபையிலே பல ஆண்டு களாகச் சைவசமயம் பற்றிய விரிவுரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்தவர்.
வேலணையில் வாழ்ந்த பேரம்பலப் புலவரும், ஆசிரியர் நமசிவாயம், ஆசிரியர் தம்பு முதலானேரும்

கவிராசரி 67
இவருடைய மாணவர்களாவர், இவர் 1913ஆம் ஆண் டிலே இவ்வுலக வாழ்வினை நீத்தார்.
கந்தையா பிள்ளை, பண்டிதர். ச. (1880-1958)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோப்பாய் என்னும் ஊரிலே, சபாபதிப் பிள்ளை என்பாருக்கும் காமாட்சியம் மைக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர் சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களின் மாணவருள் ஒருவ ராவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமைபெற்று விளங்கினர். கொழும்பு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலே தமிழ் விரிவிரையாளராகப் பத்து ஆண்டு கள் வரை கடமை புரிந்தபின், கல்வித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழ்ப் பரீட்சகராகவும் இவர் பணியாற்றியதுண்டு. 1922ஆம் ஆண்டிலே அர சாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்று, இந்தியாவுக்குச் சென்று சிறிது காலம் புதுச்சேரியில் வாழ்ந்து கொண் டிருந்தார்.
"உண்மை முத்திநிலை ஆராய்ச்சி", "திருவாசக உண்மை" என்னும் நூல்களை இவர் இயற்றியுள்ளார். *வித்தகம்’ என்னும் பெயருடன் சிறந்த வாரப் பத்திரிகை யொன்றினையும் பல ஆண்டுகளாக இவர் நடாத்தி வந்தார்.
கவிராசர்
திருக்கோணமலையிலே பிறந்து, பண்டிதராசர் காலத் தில் வாழ்ந்துகொண்டிருந்தவர் இவர். பண்டிதராசரால் இயற்றப்பட்ட சோணுசல புராணத்துக்கு இவர் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளார், கோணேசர் கல்வெட்டு என வழங்கும் கோணேச சாசனத்தினைப் பாட்டாலும் உரையாலும் இயற்றியளித்தவர் இவர்.

Page 36
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
கனகசபைப் பிள்ளை, வி (1855-1906)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மல்லாகம் என்னும் ஊரிலே தோன்றிய விசுவநாதபிள்ளை, டக்தர். உவிஞ்சிலோ, பேர்சிவல் முதலியோரால் சி. வை. தாமோதரம் பிள்ளை முதலானவர்களுடன் சென்னையிலே கல்வி பயில்வதற்காக அனுப்பப்பட்டவர். விசுவநாத பிள்ளையோ சென்னைப் பல்கலைக்கழகத்திலே கலைமாணிப் பட்டம் பெற்று, சென்னை அரசாங்கத்திலேயே தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிக்கொண்டு கோம ளேஸ்வரன்பேட்டையில் வாழ்ந்துகொண்டிருந்தார். அக் காலத்திலே விசுவநாத பிள்ளையின் அருந்தவப் புதல்வ ராகச் சென்னையிலே 1855ஆம் ஆண்டு மேமாதம் 25 ஆம் நாளில் தோன்றியவரே கனகசபைப் பிள்ளை. இவர் சென்னை அரசாங்கக் கல்லூரியிலே சேர்ந்து கல்வி பயின்று மிக இளமையாயிருக்கும்போதே 'கலைமாணிப் பட்டம் பெற்றுக் கொண்டமையால் "பட்டதாரிப் பையன்’ (Boy Graduate) எனக் கொண்டாடப்பட்டவர். சேர். பொன். இராமநாதன் அவர்கள் இவருடன் கற்ற ஒரு சாலை மாணவராவர். இவர் சட்டப் பரீட்சையிலும் தேறி மதுரையிலே சிறிது காலம் வழக்கறிஞராகவும் விளங்கினர் என அறியக்கிடக்கின்றது.
சென்னை அஞ்சற்றிணைக்களத்தில் உயர்நிலை மேற் untigopal unt 6Turts (Supdt of Post Office) 1567L staph பணியாற்றிக்கொண்டிருந்தவர் இவர். தமது உத்தி யோகப் பணிகளுடன் தமிழ் ஆராய்ச்சித்துறையில் மிக ஊக்கத்துடன் உழைத்தார். இவர் தமது திறம்பட்ட ஆராய்ச்சியின் பயனுகத் தமிழுலகத்துக்கு எழுதியளித்த The Tamils Eighteen Hundred Years Ago' ('gu'ug தெண்னுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்) என்னும் ஆங்கில நூல், தமிழ் மொழியின் தொன்மை

கனகசபைப் பிள்ளை, வி. 69
யையும் தமிழ் மக்களின் பண்பாட்டையும் பிறமொழி யாளர்களும் அறிந்துகொள்ளத் தக்கபடி செய்வதற் கென முதன்முதலாக எழுந்த நூல் எனல் மிகையாகாது. இந்நூலினை. பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத் துரையவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் இதனை "ஆயிரத்தெண்ணுாறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்" என 1956ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்கள்.
இவர் தமது உத்தியோக அலுவல்களுக்காகச் சென்ற இடங்களிலெல்லாம் கிடைத்த தமிழ் நூல்களின் ஏட்டுப் பிரதிகளை முயன்று பெற்றுத் தொகுத்து வைத் திருந்தார். ஏறக்குறைய 20 ஆண்டுக் காலமாக அப்பாவுப் பிள்ளை என்பார், இவர் அரிதின் முயன்று சேகரித்த ஏடுகளையெல்லாம் பிரதி செய்யும் தொழி வினைப் புரிந்துகொண்டு, இவரின்கீழிருந்து இவருக்குத் துணை செய்து வந்தார். டக்தர் உ. வே. சாமிநாதைய ரவர்களுக்கு இவர் தாம் தொகுத்து வைத்திருந்த பத்துப் பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய வற்றினை உ த வினர் என அறியக்கிடக்கின்றது. "டாக்டர். உ. வே. சாமிநாதையர் அவர்கள் புற நானூறு என்னும் நூலை அச்சிட்டபோது, அதில் அரசர் களைப்பற்றிக் கூறும் இடத்தில் "துஞ்சிய' என்னும் சொல்லுக்குப் பொருள் விளங்காமல், கனகசபைப் பிள்ளையைக் கேட்க, பிள்ளையவர்கள்'துஞ்சிய' என்னும் சொல்லுக்கு விளக்கம் எழுதியுதவினர். அவ்விளக்கம் புறநானூறு முதற் பதிப்பின் இறுதியில் அச்சிடப் பட்டது," என்பர். இங்ங்ணமாக, நூல் வெளியீட்டுத் துறையிலும் இவர் சிறந்த தொண்டுகள் ஆற்றியுள்ளார். பிறர் எவரும் இலக்கிய ஆராய்ச்சியிற் புகுவதற்கு
முன்னதாக, இவர் தமது கூர்த்த மதித்திறத்தால்
ஈழ.-5

Page 37
ጎ0 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
ஆராய்ச்சியிற் புகுந்து, சில தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "இந்திய புராதன கலைஞன்” (The Indian Antiguary) பத்திரிகையில் வெளியிட்டு வந்தார். அவற்றுள்ளே சிறப்பு வாய்ந்தவை பின்வருமாறு * 1. Kalavali or the Battle-field” (Vol. XVII, 1889: pp. 258-265) 2. 'The Kalingathu Parani” (Vol XX. 1890. pp. 329-345) 3. “The Vikrama Cholan Ulla” (Vol. XX M. 1 893 : pp. 14 1 - 1 50 ).
இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட "The Conquest of Bengal and Burma by the Tamils. Raja Raj Chola" என்னும் நூலும் ஆராய்ச்சியாளரால் இன்றும் போற்றப்பட்டு வருகிறது.
கனகசபைப்புலவர், வே. (1829-1873)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அளவெட்டி என்னும் ஊரிலே, வேலுப்பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். தமிழிலக்கண விலக்கியங்களையெல் லாம் முறையே கற்றவர். இளமைக் காலத்திலேயே கவிகள் யாக்கும் வன்மை மிகப் பெற்றிருந்தார். சுன்னகம் குமாரசுவாமிப் புலவர் முதலானேர் பலர் இவரிடம் இலக்கணம் கற்றனர் என அறியக் கிடக் கின்றது. பெற்றேர் சைவசமயத்தினராய் இருந்த போதிலும், கல்வி கற்பதற்காகக் கிறித்து சமயத்தைத் தழுவி, தொடர்ந்து கிறித்தவராகவே வாழ்ந்தவர் இவர். வைத்தியத் துறையிலும் மிகுந்த அறிவும் தேர்ச்சியும் பெற்றவராய் விளங்கி, ஆங்கில-தமிழ்வைத்திய முறைகளை நன்கு ஆராய்ந்தவர். கவி புனை வதில் மிகுந்த திறமையுடையவராய் விளங்கிய இவரைப் புலவன்’ எனவும், "புலவன் கனகசபை" எனவும், ஊரார்
குறிப்பதுண்டு.

கனகசுந்தரம் பிள்ளை, தி. த.
கிறித்து சமயத்தில் இவருக்கு ஏற்பட்ட ஈடுபாட் டாலும் தனிப்பற்றினலும், கிறித்துநாதரின் அறிவுரை களையும் வரலாற்றுப் பெருமைகளையும் எடுத்தோதும் வகையில் 'திருவாக்குப் புராணம்’ என்னும் நூலொன் றின. 1751 விருத்தப் பாக்களாற் பாடியுள்ளார். இந் நூலேயன்றி, புலவரவர்கள், ஒரு சொற் பல பொருட் டொகுதியாக ஒரு நிகண்டும், "அழகர் சாமி மடல்" என இன்னுெரு நூலும் இயற்றியுள்ளார்.
கிறித்து சமயத்தைக் கண்டித்துச் சுன்னுகம் முத்துக் குமார கவிராசர் பாடி வெளியிட்ட "ஞானக்கும்மி" என்னும் நூலுக்கு மறுப்பாக, “அஞ்ஞானக் கும்மி மறுப்பு' என்னும் பெயருடன் இவர் ஒரு கும்மி பாடி வெளியிட்டார். இவருடைய கும்மியைக் கண்டித்து, கொக்குவில் சிலம்பநாத பிள்ளை என்பார், "அஞ்ஞானக் கும்மி மறுப்புக்கு மறுப்பு" என்ற பெயருடன் ஒரு கும்மி பாடி வெளியிட்டார்.
இவர் 1873ஆம் ஆண்டு சனவரி மாதம் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வினை நீத்தார்.
கனகசுந்தரம் பிள்ளை, தி. த. (1863-1922)
ஈழத்தின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருக் கோணமலையிலே, 1863ஆம் ஆண்டில், தம்பிமுத்து என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலே இவர், கதிரைவேற்பிள்ளை, கணேச பண்டிதர் ஆகியோரிடத்திலே தமிழிலக்கண விலக் கியங்களும் ஆங்கிலமும் பயின்றுவந்தார். அதன்பின் சென்னக்குச் சென்று, செல்வ நாயக்கர் பாடசாலையிற் கல்வி பயின்று, மத்திய பாடசாலைப் பரீட்சையிற் சித்தி பெற்ருர். பின்னர், பச்சையப்பன் கல்லூரியிலே

Page 38
7ዷ , சழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்
எவ். ஏ. வகுப்பிற் சித்துபெற்று, பிரசிடென்சிக் கல்லூரி யிலே கற்றுக் "கலைமாணி’ (B.A.)ப் பரீட்சையிலும் சித்தியடைந்தார். இந்தியாவிலே, இவர் அரசாங்க ஊழியராகவும் ஆரம்பத்திற் பணியாற்றியதுண்டு.
சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய கந்தசாமி முதலியார், மணி. திருநாவுக்கரசு முதலியார், கிறித்தவ கல்லூரித் தமிழ்ப் பண்டிதராயிருந்த சுப்பிரமணிய சிவா, தமிழ்ப் பண்டிதர் எதிராஜலு நாயுடு ஆதியானேர் தென்னிந்தியாவிலே இவரிடம் கல்வி பயின்ற மாணவர்களுள்ளே குறிப்பிடத் தக்கவராவர். யாழ்ப்பாணத்தவர்களுள்ளே மேலைப் புலோலியூர், நா. கதிரைவேற் பிள்ளையவர்கள் இவ ரிடத்தே தொல்காப்பியத்தையும் சங்க நூல்களையும் முறையே கற்ருர் என அறியக் கிடக்கின்றது.
இவர், தமது ஓய்வுவேளைகளிலெல்லாம் பழந்தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் ஆராய்வதையே தொழிலாகக்கொண்டிருந்தார். இராமாயணம், தொல் காப்பியம், நற்றிணை. நம்பியகப் பொருள் முதலான நூல்கள் இவராற் செவ்வனே ஆராயப்பட்டவையாம். இவர், நீண்ட காலமாகச் சென்னைப் பல்கலைக் கழகப் பரீட்சகராகவும், பரீட்சைக் குழுத் தலைவராகவும் விளங்கினர். மதுரைத் தமிழ்ச்சங்கப் பரீட்சகர் குழு விலும் இவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். கிறித்தவ கல்லூரியிலும் பச்சையப்பன் கல்லூரியிலும் இவர் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்ததுமுண்டு. சாண்டிலர் துரையவர்கள் தொடங்கி நடாத்தி வந்த மாபெரும் தமிழகராதிக்கும் துணைப் பதிப்பாசிரியராகச் சிறிது காலம் பணிபுரிந்துகொண்டிருந்தார் என அறியக் கிடக்கின்றது. சென்னைப்பல்கலைக் கழகத்தினரால் வெளி யிடப்பட்ட தமிழ்ப் பேரகராதித் தொகுப்பே இதுவாகும்.

காசி செட்டி, சைமன் ,
7.g.
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் 4. கினி உரையும், தொல்காப்பியம் - જે நச చిత్తి ** சேணுவரையர் உரையும், பல ஏடுகளின் காரம் இவரால் ஆராயப்பட்டுத் திருத்தங்களூ? s o: தாந்த நூற்பதிப்புக் கழகத்தினராற் பதிN :" S5 பின்னத் தூர் நாராயணசாமி ஐயரவர்கS t 6. றிணை உரையின, அவர் இவ்வுலக * பரிசோதித்து வெளியிடுவதற்கு இவரே * வி 4; 6. வான்மீகி ராமாயணத்தே கிட்கிந்தா பகுதியையும், சுந்தரகாண்டத்தையும் ರಾ? ಜಿಲ್ಲ பெயர்த்தியற்றினர். சுன்னுகம், அ. மோே புலவருடன் நட்புப் பூண்டு, அவருடன் t εί பொருளுக்கு ஒர் உரை எழுதி வெளியி : யகப் அறியக் கிடக்கின்றது. கம்பராமாயணத்" 76°à பிரதிகள் பலவற்றுடன் ஒப்புநோக்கி, * ::::€ துடனும் அரும் பதவுரையுடனும் . ده இவர் முயன்றுகொண்டிருந்தார். பாலக" 2றகு அவ்வாறு வெளியிடப்பட்டது. "தமிழ் T" ம்ே என்னும் நூலும் வேறு சில நூல்களும் ೩°C ಆಗ್ಹ கட்பட்டுள்ளன. "இல்லாண்மை’ என்வூ”"ரி பதிப்பிக் நூலும் இவரால் இயற்றப்பட்டதாகும். to go 68pr 560
கனகரத்தின உபாத்தியாயர்
யாழ்ப்பாணத்திலே தோன்றியவர் શ) Iի நாவலர் வரலாற்றினை 1892ஆம் འཇིགས་ ಶೈಲಿ: வெளியிட்டுள்ளார். l முதி,
காசிச்செட்டி, சைமன். (1807-1860)
புத்தள் தீதைச் சார்ந்த கற்பிட்டிடி எண் 够 ாதம் 21ஆம் தேதியல* 1807-gh ஆண்டு மார்ச்சு மாதம் 21ஆ ததி “a தோன்றிய
&

Page 39
74 சழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
வர் இவர். தமிழ் மொழியினை நன்கு கற்றதுமன்றி ஆங்கிலம், இலத்தீனியம், கிரேக்கம், போர்த்துக்கேசியம், ஒல்லாந்தம் முதலான மொழிகளையும் இவர் பயின்ருர், சிங்களம், சமக்கிருதம், எபிரேயம், அரபு ஆகிய மொழி களிலும் இவருக்கு நல்ல பரிச்சயம் இருந்தது.
கற்பிட்டிப்பொலிசு நீதிமன்றத்திலே மொழிபெயர்ப்பு முதலியாராகக் கடமையாற்றத் தொடங்கிய இவரின் திறமையைக் கண்ட அரசாங்கம், 1828ஆம் ஆண்டிலே இவரைப் புத்தள மணியகாரணுக நியமித்தது. 1833ஆம் ஆண்டில் இவர் மாவட்ட முதலியாராக நியமிக்கப் பட்டார். 1838ஆம் ஆண்டிலே தேசாதிபதியால் சட்ட நிரூபண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர் 1845ஆம் ஆண்டுவரை அதில் பணியாற்றிக்கொண்டிருந் தார். 1845ஆம் ஆண்டிலே சிவில் சேர்விஸ்" (Civil Service) எனப்பட்ட நாட்டாட்சிச் சேவைப் பதவியைச் சேர்ந்த பொலிசு நீதவான் பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், கற்பிட்டிப் பொலிசு நீதவானகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அரசாங்க சேவையிலிருந்து தமது உத்தியோகக் கடமைகளைச் செவ்வனே புரிந்ததுமன்றி. இவர் இலக்கிய ஆராய்ச்சியிலும் வரலாற்று ஆராய்ச்சி யிலும் ஈடுபட்டு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றை எழுதியும் அரிய பல நூல்களை இயற்றியும் வெளியிட் (8)ci Grtfi.
இவர் இருபத்தேழு வயதினராய் இருந்தபோது திரட்டி எழுதியதுதான் Ceylon Gazetteer" என்னும் இலங்கை அரசாங்கச் செய்தி நூலாகும். அக்காலத்தில் இலங்கைத் தேசாதிபதியாகவிருந்த சேர். உரொபேட் 666âvudith G3Ampar. L. Går (Sir Robert Wilmot Horton) இவ ருக்கு இம் முயற்சியிலே ஊக்கமும் உதவியும் அளித்தார். இந் நூலினை அச்சேற்றுவதற்கு அரசாங்கமே வசதி செய்

காசிச் செட்டி, சைமன். 75
தளித்தது எனத் தெரிகின்றது. இம் முயற்சியைப் பாராட்டி, அக்காலத்துக் குடியேற்ற நாட்டுச் செயலாள ரவர்கள் இவருக்கு 100 "கினி"கள் பணப் பரிசாக வழங் கினர் என்றும் அறியக் கிடக்கின்றது.
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த புலவர்களின் வரலாற்றினத் திரட்டித் தொகுத்து “Tamil Plutarch" Grað7 goph Gollu uu(jL6ör (1859-ih ஆண்டில்) முதன்முதலாக ஆங்கிலத்தில் வெளியிட்ட பெருமையும் இவருக்கே உரியதாகும்.
தமிழுணர்ச்சி மிகுதியும் பரவாத காலத்திலே தமிழுக்காக அரும்பணியாற்றி இலங்கையின் பழம் பெருமையினை எடுத்துக்காட்டிய இவர், 1860ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி இவ்வுலக வாழ்வினை நீத்தார்.
இவர் இயற்றிய நூல்கள் -1. தமிழர் சாதிப் பகுப்பு முறை-1831, 2. புத்தளப் பகுதியிலுள்ள முக்கு வரின் உற்பத்தியும் வரலாறும்--1831. 3. தமிழர் சடங்கு முறைகள்-1831. 4. இலங்கைச் சோனகரின் பழக்க வழக்கங்கள்-1832. 5. Ceylon Gazettee (சிலோன் கசற்றீயர்)-1834, 6. மலையகராதி. 7 இலங்கைச் சரித்திர சூசனம் தமிழ் மொழிபெயர்ப்பு1839, 8. யோசேப்பு வாஸ் முனிவர் சரித்திரம்-1848. 9. இலங்கையில் கத்தோலிக்க சமய அபிவிருத்தி-1848. 10 பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம்; இந்து முகமதிய மதச்சான்றுகளுடன் விளக்கவுரை-1853, 11. குதர்க் கதிகாரம்-மஸ்தான் சாயபு என்னும் முஸ்லிம் கிறிஸ்து மதத்தைக் கண்டித்து எழுதிய "கிறிஸ்து மத கண்டனம் வச்சிாகண்டம்" நூலுக்கு மறுப்பு-1854, 12. Tamil Plutarch (தமிழ்ப் புலவர் வரலாறு)-1859,

Page 40
76 *ụpg5qrt Lig-éừ 3Lógoề & L-ff (a solo ẩữ
காசிநாதப் புலவர் (1796-1854)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலி என்னும் ஊரிலே நீலகண்டர் என்பாருக்குப் புதல்வராகத் தோன் றியவர் இவர். தமிழிலக்கண விலக்கியங்களிலும் சோதிட நூலிலும் இவருக்கு மிகுந்த புலமை இருந்த தெனத் தெரிகின்றது.
"தால புராணம்" என்னும் பெயருடன் இவர் ஒரு நூல் இயற்றியுள்ளார். அது, பனங்காய்ப் பாரதம்" எனவும்படும்.
காசீம் ஆலிம் பாவலர் (1887- )
மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரிலே சிறப்புடன் வாழ்ந்துகொண்டிருந்த முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் என்பாருக்கு முதல் மகனகத் தோன்றியவர் இவர். தமிழில் மட்டுமன்றி இந்தி, உருது ஆகிய மொழிகளிலும் இவருக்கு மிகுந்த புலமை இருந்த தாகத் தெரிகின்றது. பாட்டுக்கள் யாப்பதில் மிகுந்த வன்மை படைத்தவராக விளங்கிய இவர் பாடிய பாடல் கள் பன்னுாற்றுக் கணக்கானவை என்று அறியக் கிடக் கிறது. பாடல்கள் கிடைக்கப் பெறினும், இதுவரை நூல் வடிவில் வெளிவந்தில.
கார்த்திகேசு, பொலிய விதானே.
மட்டக்களப்பினைச் சார்ந்த கோட்டைக் கல்லாற் றிலே தோன்றியவர் இவர். தமிழிலக்கியத்தில் மட்டு மன்றி வைத்தியம். சோதிடம், மாந்திரிகம் ஆகிய துறை களிலும் புலமை பெற்று விளங்கியவர். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் பல வழக்கிலுள்ளன. "இலக்கண விளக்கக் குறிப்புகள்" என இவர் இயற்றிய நூலொன்று இன்னும் அச்சேருததாகக் கிடக்கின்றது.

கார்த்திகேயப் புலவர், மு. 77
காத்திகேய ஐயர், வே.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் வாழ்ந்து கொண்டிருந்த வேங்கடாசல ஐயர் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இருபாலைச் சேனதி ராய முதலியாரிடத்தில் தமிழிலக்கண இலக்கியங்களை முறையே கற்றவர். தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பெரும் புலமை வாய்ந்தவ ராகத் திகழ்ந்தவர் இவர். வேதாந்த சித்தாந்த நூல் களும் நன்கு பயின்றவர். யாழ்ப்பாணம் வண்ணர் பண்ணையிலுள்ள வைத்தீசுவரர் கோயிலிலும் பிறவிடங் களிலும் நல்லூர் ஆறுமுக நாவலர்களுடன் கூடிப் பற்பல விரிவுரைகளை இவர் நிகழ்த்தி வந்தார்.
கார்த்திகேயப் புலவர், மு.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த காரை நகரிலே, முருகேசய்யர் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலே இவர் தமது தந்தையா ரிடத்திலே தமிழும் அவ்வூரினைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகரிடத்திலே சமக்கிருதமும் கற்று வந்தார். அதன் பின் சிறிதுகாலம் அவ்வூரினைச் சேர்ந்த சண்முகம் பிள்ளை ஆசிரியரிடம் கற்றுக்கொண்டிருந்தார். இளமையிலேயே கவிதை யாக்கும் வன்மையுடையவராய்த் திகழ்ந்த இவர் தமது தந்தையாராற் பாடப்பட்ட "தன்னையமகவந் தாதி" யின் கடைசி முப்பது செய்யுள்களையும் பாடி நிரப்பினர் என்பர். உயர்நிலைத் தமிழிலக்கணவிலக் கியங்களை இருபாலைச் சேனதிராய முதலியாரிடத்திலே பயின்றுகொண்டார் எனக் கூறப்படுகின்றது. இவர் தமது ஊரிலே ஒரு வித்தியாசாலையைத் தாபித்து, தாமே ஆசிரியராகவுமிருந்து கற்பித்துப் பலரைத் தேர்ச்சி பெறும்படி செய்துகொண்டிருந்தார்,

Page 41
78 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
சிதம்பரத்துச் சபாநாதர்மீது பல்சந்தமாலை" என்னும் பிரபந்தத்தினையும், பல தனிநிலைச் செய்யுள் களையும் இவர் பாடியுள்ளார்.
கிங்ஸ்பரித் தேசிகர் (1873-1941).
தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களுள் ஒருவ்ரும் பழைய தமிழ் நூல்களை முதன் முதலாகப் பதிப்பித்து வழிகாட்டியவருமான இ ரா வ் பகதூர், சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களுக்கும் நாகமுத்து அம்மை யாரவர்களுக்கும் நான்காவது புதல்வராகத் தோன்றி யவர் இவர். சென்னையிலுள்ள தண்டையார்ப்பேட்டை என்னும் ஊரிலே 1873ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 8ஆம் தேதியன்று பிறந்தார் என அறியக்கிடக்கின்றது. பெற்றேர் இவருக்கு இட்ட பெயர் "அழகசுந்தரர்" என்பதாகும்.
உரிய காலத்திலே இவர் கல்வி கற்கத் தொடங் கினரெனினும், சென்னையிலும் யாழ்ப்பாணத்திலுமாக மாறிமாறிச் சென்றமையால்-கல்லூரி மாற்றங் காரண மாக-கல்வி இடையிடை தடைப்பட்டதுண்டு. சென்னை யிலே படித்துக்கொண்டிருந்தவர், யாழ்ப்பாணத்துக்கு வந்து கொழும்புத் துறையில் அக்காலத்திலமைந்திருந்த தமிழ்ப்பாடசாலையிலே ஓராண்டுக் காலம் கல்வி பயில வேண்டியும் நேர்ந்தது. இவர், இளமைக் காலத்திலேயே நிகண்டு, நன்னுரல் ஆகியவற்றைச் செவ்வனே கற்றுக் கொண்டார். சென்?னக் கிறித்தவக் கல்லூரியிலே டக்தர். மில்லர் (Dr. Miller), டக்தர். இசுக்கினர் (Dr. Skinner) ஆகிய பேராசிரியர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டுவதாயிற்று.
சைவக் குடும்பத்திலே தோன்றிச் சைவராகவே வாழ்ந்துகொண்டிருந்த இவர், 19-2-1893 ஞாயிற்றுக்

கிங்க்ஸ்பரித் தேசிகர் 79
கிழமையன்று கிறித்தவ மதத்தவராக ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார், அக் காலத்திலே, ஆந்திர நாட் டினைச் சார்ந்த நெல்லூரில் வைத்திய சேவை புரிந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தவரான சிதம்பரப் பிள்ளை யவர்களின் மகள் மரியம்மாள் இரத்தினம் சமாதானம் அம்மையாரவர்களை 1893ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 14-ம் தேதியன்று திருமணஞ் செய்துகொண்டார்.
1898ஆம் ஆண் டி லே தென்னிந்தியாவிலுள்ள பசுமலைத் தேவாலயத்தில் உதவிப் போதகராக நியமனம் பெற்ற இவர், அடுத்த ஆண்டில் அத்தேவாலயத்திலேயே தேசிகராக அபிடேகமும் பெற்றர். 1906ஆம் ஆண்டிலே கிறித்தவ வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து அயராது உழைத்தார். ஓராண்டுக் காலமாக இலங்கை, இந்தியா, பர்மா ஆகிய இடங்களுக்குச் சுற்றுப் பிரயாணஞ் செய்தார். அடுத்த ஆண்டிலே, இந்திய கிறித்தவ வாலிப சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்த, யப்பானில் நடைபெற்ற அகில உலகக் கிறித்தவ மாநாட் டுக்குப் பிரதிநிதியாகச் சென்றர். 1908ஆம் ஆண்டிலே பசுமலைக்குத் திரும்பிய இவருக்கு, 1910ஆம் ஆண்டு தொடக்கமாகப் பங்களூரிலமைந்திருந்த ஆன்மபோதகக் கலாசாலையில் தமிழ் சமக்கிருதம், சைவம் ஆகிய பாடங் களைக் கற்பிக்கும் விரிவுரையாளர் பதவி கிடைப்ப தாயிற்று. 1919ஆம் ஆண்டிலே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விரிவுரையாளர் பதவியினின்று இவர் நீங்கி, இந்தியப் பட்டாளத்துக்குப் புரோகிதராகச் சேவை புரிந்தார். 1923ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் அச் சேவையிலிருந்து இளைப்பாறிக்கொண்டார்.
1924ஆம் ஆண்டு சனவரி மாதத்திலே, சென்னைத் தமிழகராதிக் குழுவினருள் இவரும் துணையாசிரியராக நியமனம் பெற்று இரண்டு ஆண்டுகள் வரை பணியாற்

Page 42
80 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
றிக்கொண்டிருந்தார். 1926ஆம் ஆண்டு யூன் மாதத்திலே இவர் கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த பல்கலைக் கழகத் தில் விரிவிரையாளராக நியமனம் பெற்ருர்,
இவர் சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்தபோதே கிறித்தவ தேவாலயக் குழுவினர் இவரை மத விரோதி என்று குற்றஞ்சாட்டினர். தேசிகருடைய நியாயங்களைச் சீர்தூக்கியாய்ந்த சபையினர் ஏற்க முடியாதவராய்த் தயங்கினர். 1927 ஆம் ஆண்டிலே பசுமலையிற் கூடிய தென்னிந்திய ஐக்கிய திருச்சபையின் பொது மாநாடு தேசிகரவர்களின் சமயக்கொள்கை, நடைமுறை பற்றிக் கண்டனஞ் செய்து, "தேசிகர்ப்" பட்டத்தினை நிராகரிப் பதாயிற்று. எனினும், தேசிகரவர்களின் நடைமுறை களை நன்முக ஏற்றுக்கொண்டு, அத்திவார வாதிகள் (Unitarian Church) gaugou.5 sung god F60U 60 ud சேர்ந்தவராக ஏற்றுக்கொண்டனர்.
தேசிகரவர்கள் கொழும்பிலே புரிந்துகொண்டிருந்த தொண்டுகள் பலப்பல. பல்கலைக் கழகத்தில் விரிவுரை யாற்றினர்; தேவாலயங்களிலும் நண்பர்கள் பற்பலர் வீடுகளிலும் போதித்தார்; வானெலியிற் பேசினர்; விவேகானந்த சபை-இராமக்கிருஷ்ண மிஷன்-அன்பு மார்க்க சங்கம் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளிலே பங்கு பற்றினர்; கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கு மாக என்றும் ஓயாது உழைத்தார்.
1936ஆம் ஆண்டிலே, கொழும்புப் பல்கலைக் கழகத் திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். \
சிறிது உடல்நலம் குன்றியிருந்த இவர், 1941ஆம் ஆண்டு ஏப்பிரல்மாதம் 12ஆம்தேதி சனிக்கிழமையன்று பிற்பகல் 3 மணியளவிலே, கொழும்பு அரசினர் வைத்திய சாலையில், இவ்வுலக வாழ்வினை நீத்தார்.

கிறீன் பாதிரியார், டாக்டர். 81
இவர் இயற்றிய நூல்கள் :- 1. ஏசு வரலாறு. 2. இராமன் கதை. 3. பாண்டவர் கதை, 4. சாந்திர காசம் (வசனநாடகம்). 5. கடவுள் வாழ்த்துப்பா. 6. 985 Court (DL. gp6it. 7. Life of Jesus, 8. Jesus of Nazareth.
கிறீன் பாதிரியார், டாக்டர். (1822- )
டாக்டர் சாமுவேல் பிஸ்க்கிறீன் அவர்கள், அமெரிக் காவிலுள்ள "கிறீன் ஹில்' என்னும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உவில்லியம் ஈ. கிறீன் என்பாருக்குப் புதல்வராக, 1322ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதம் 10ஆம் தேதி, தோன்றினர். பாடசாலைக் கல்வி முடிந்ததும் தமது பத்தொன்பதாவது வயதிலே, நியூயோர்க்கு நகரிலிருந்த வண. டாக்டர். வர்கீஸ் அவர்களின் கீழ் ஒரு சாதாரண எழுது வினைஞராகப் பணியாற்றத் தொடங்கிய இவர், வைத்தியங் கற்றல் வேண்டும் என்னும் ஆசையால் உந்தப்பட்டு டாக்டர். யோன். ஏ. மாக்விக்கர் என்னும் வைத்தியரின் கீழ் வைத்தியம் கற்கத் தொடங்கினர். அவ்வாண்டிலேயே நியூயோர்க்கு நகரில் அமைந்திருந்த ஒரு வைத்தியக் கல்லூரியிற் சேர்ந்து, படித்து, விரைவிலே சிறந்த ஒரு வைத்தியராக வெளியேறினர். அதன்பின் ஆங்கிலம், இலத்தீனியம், செருமானியம், பிராஞ்சியம், கிரேக்கம் ஆகிய மொழி களையெல்லாம் நன்கு கற்றுக்கொண்டார். தொண்டு புரிவதற்காக ஈழ நாட்டுக்கு வருவதற்கு முன்னதாகவே இவர் தமிழும் ஒரளவு பயின்றுகொண்டார் என அறியக் கிடக்கின்றது.
1847 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 20ஆம் தேதி அமெரிக்க மிஷன் ஆதரவில் அமெரிக்காவிலுள்ள பொஸ்ரன் நகரிலிருந்து புறப்பட்டு- ஏறக்குறைய

Page 43
82 ஈழநர்ட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
நான்கு மாதங்களின் பின்-சென்னைக்குப் போய், ஒற்ருேபர் மாதம் 6ஆம் தேதியன்று, ஈழத்தின் வட கரையிலுள்ள பருத்தித் துறையினை அடைந்தார். பருத்தித்துறையிலிருந்து வல்லுவெட்டிக்குச் சென்று. அங்கு மிஷன் ஊழியராகக் கடமையாற்றிக்கொண் டிருந்த கோப்ஸ் என்பாருடன் தங்கியிருந்தார். அதன் பின், தெல்லிப்பழை, பண்டத்தரிப்பு, மானிப்பாய், உடுவில் ஆகிய இடங்களில் அமைந்திருந்த மிஷன் நிலையங்களுக்கும் சென்ருர், வட்டுக்கோட்டையிலே சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு, 1848 ஆம் ஆண்டிலே மான்ரிப்பாய்க்கு வந்தார். மாணிப்பாயிலிருந்து டாக்டர். கிறீன் தமது வைத்தியத் தொழிக்லத் தொடங்கினர். அங்கே வாழ்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோது, வைத்தியர்களுக்குக் கற்பித்துப் பயிற்சியளிப்பதற்கென வைத்தியக் கல்லூரி ஒன்றினையும் நிறுவினர். தாம் கற்பிப்பதையெல்லாம் தமிழ்மொழியிலேயே கற்பித்தல் வேண்டும் என முனைத்தார். வைத்தியம் கற்பிப்பதற்கு இன்றியமையாத அக்காலத்து வைத்திய நூல்களைத் தமிழ்மொழியில் எழுதியும், தாமே மொழிபெயர்த்தும், தம் மாணவரைக்கொண்டு மொழி பெயர்ப்பித்தும் பதித்து வெளியிட்டு வந்தார். மொழிபெயர்ப்பதற்கு இன்றியமையாத கலைச்சொற்களை திட்டவட்டமான நியதிமுறைகளை ஏற்படுத்தி அமைத்துக்கொண்டுஆக்கி அளித்தார். தம்மிடம் கல்வி பயிலும் மாணவர் களுக்கு உதவும் வகையில் அக்காலத்திலே பிரசித்தி பெற்றிருந்த நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தும் மொழிபெயர்ப்பித்தும் அச்சேற்றி வந்தார்.
டாக்டர் கிறீன் அவர்களின் முதன் மானுக்கர் களுள்ளே, டாக்டர். தானியேல், உ. சப்மன் (Daniel W. Chapman), L.-Ivá-rž. Gg. Gr. 67ац"ev (J. A. Evarts)

கிறீன் பாதிரியார், டாக்டர். 33
டாக்டர். ய. டன்வதர் ஆகியோர் தலை சிறந்தவ ராவர். இவர்கள் அளித்த உதவியுடன், 1850ஆம் ஆண்டு தொடங்கி, தேவையான பல வைத்திய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. 1855 ஆம் ஆண்டிலே, டாக்டர். கிறீன் அவர்கள் ஆங்கில வைத்திய முறையினைத் தமிழிலேயே கற்பிக்கத் தொடங்கிவிட்டார். இவரும் இவருடைய மாணுக்கர் களும் தமிழில் மொழிபெயர்த்த நூல்கள் இந்தியாவிலும் யாழ்ப்பாணத்திலுமாக. அச்சிடப்பட்டன இந்தியாவிலே பெரும் புகழ் வாய்ந்தவராய் விளங்கிய வைத்தியர் மெடொக் என்பாரும் டாக்டர். கிறீன் அவர்கள் அளித்த உதவியுடன் பல அறிவியல் நூல்களைத் தமிழில் வெளி யிட்டார் என அறியக்கிடக்கின்றது. இவருடைய ஞாய கார்த்தமாகவே மானிப்பாயிலுள்ள வைத்தியசாலை "கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை" என இன்றும் வழங்கி வருகின்றது.
இவர் வெளியிட்ட நூல்கள்:-1. மனுஷ அங்காதி Luirgilb, (Human Anatomy Compiled from Gray, Horner, Smith and Wilson) 6. FILD6it மொழி பெயர்ப்பு. பக். 900-1மானிப்பாய் அச்சுக்கூடம், 1872. 2. LogD) 6 si F5 UT GOOT tih (Physiology) Prof. John C. Dalton எழுதிய நூலைத் தழுவி கிறீன் வைத்தியர் இயற்றியது. பக். 134, 1872, 3. வைத்தியாகரம். (Hooper's Physician's VadeMecum) 6176j6öluub Luayai) எனப்படும் உவில்லியம்போல் மொழிபெயர்ப்பு. பக். 918. நாகர்கோயில் லண்டன் மிஷன் பிரஸ், 1872. 4. Loga Jidsuaorth (Human Physiology) Prof. John C. Dalton) வி. சப்மன் மொழிபெயர்ப்பு. கிறின் வைத்தியர் திருத்திப் பதிப்பித்தது. மானிப்பாய் அச்சுக் கூடம். பக் 590, 1883. 5. இரண வைத்தியம். (The

Page 44
84 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
Science and Art of Surgery by Erichsen and Druitt) ய. டன்வதர் மொழி பெயர்ப்பு. பக். 504, 1867. 6. அங்காதி பாதம். (Gray's Anatomy) சப்மன் மொழி பெயர்ப்பு. பக். 838, 1872, 7. கெமிஸ்தம். (Wel's Chemistry) என். சாமிநாதன், டி. டபிள்யு. சப்மன் என்போர் உதவியுடன் கிறீன் வைத்தியர் மொழி பெயர்த்தது. நாகர்கோயில் லண்டன் மிஷன் அச்சுக் கூடம். பக். 576, 1875, 8. இந்து பதார்த்த சாரம். (Warring's Pharmacopeia of India) Flycogit Gudrif பெயர்ப்பு. மானிப்பாய் இலங்கை அமெரிக்கன் மிஷன் அச்சியந்திரசாலை, பக். 574, 1884. 9, அங்காதிபாத spra007 a fiburta)607 15 Tai. (Anatomy, Physiology, Hygiene-Cutter) கிறீன் வைத்தியர் மொழிபெயர்ப்பு. 1857. 10. Surgol 606153 uli), (Obstetrics-Maunsell) மானிப்பாய் அச்சுக்கூடம், பக். 258, 1857.
கீத்தாம்பிள்ளைப்புலவர்
மன்னர்ப் பகுதியிலே தோன்றியவர் இவர். * மன்னர்-மாதோட்டம் - இலந்தைவான் கீத்தாம் பிள்ளைப் புலவர்' எனவும் அழைக்கப்பட்டவர். இவர், கி. பி. 1800 வரையில் வாழ்ந்தவர் என்பர்.
எருமை நாடகம், நொண்டி நாடகம், எம்பிரதோர் நாடகம், புரிசீனகன்னி நாடகம், நாய் நாடகம் ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
குஞ்சித்தம்பி, பண்டிதர்.
மட்டக்களப்பினைச் சார்ந்த தம்பிலுவில் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். மட்டக்களப்பு நகரி லமைந்த அர்ச். மைக்கேல் கல்லூரியிற் கல்வி கற்றதின் பின், தென்னிந்தியாவுக்குச் சென்று மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து தமிழ் மொழியினை நன்கு கற்றுக்

குமாரகுலசிங்க முதலியார் 85
கொண்டார். இயற்றமிழில் மட்டுமன்றி, இசைத்தமிழ் நாடகத் தமிழ் ஆகியவற்றிலும் இவர் மிகுந்த புலமை வாய்ந்தவராய் விளங்கினர். சிறுத்தொண்டர் சரித்திரத் தினையும், அலாவுதீன் என்னும் அரேபியக் கதையினையும் இவர் நாடகமாக இயற்றினர் எனக் கூறப்படுகின்றது. அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலையில் இவர் சிலகாலம் வரை ஆசிரியராகப் பணியாற்றியதுண்டு. "திருக்கோவிற் சிவசுப்பிரமணியக் கடவுள் மீது வருக்க மாலை" (1953) எனும் நூலொன்றினையும், "கண்ணகை யம்மன் பேரிற் பஜனமிர்தம்" (1953) எனும் நூலொன் றினையும் இவர் இயற்றியுள்ளார்.
குணசேகரம், எஸ். ஜே.
இலங்கைக் கல்வித்திணைக் களத்தில் உதவிக் கல்வி அதிபதியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தவர் இவர். தமிழர் பண்பாடு வரலாறு ஆகிய துறைகளில் மிகுந்த, ஈடுபாடு காட்டி அரிய ஆராய்ச்சிகளைப் புரிந்து இலங்கை நாளிதழ்களில் அடிக்கடி எழுதி வந்தவர். "தென்கிழக் காசியாவில் தமிழர் செல்வாக்கு", "மன்னன் விஜயன் பற்றிய மரபுரைகள்" என இரு நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.
குமாரகுலசிங்க முதலியார் (1826-1884)
யாழ்ப்பாணத்தைச் சேர் ந் த தெல்லிப்பழை என்னும் ஊரிலே அமெரிக்க மிஷன் உபதேசியாராய் விளங்கிய சோடன் என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர்.
வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையிலே கல்வி பயின்றபின், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். மல்லாகம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்த நீதி
Eቻ.p,– 6

Page 45
86 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
மன்றங்களில் இவர் பேச்சு மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினர். இவரது சேவை நலத்தினை அரசாங்கம் மதித்து இவருக்கு "முதலியார்” என்ற பட்டத்தினை வழங்குவதாயிற்று.
கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆதியன பல இவராற் பாடப்பட்டுள்ளன. "பதிவிரதை விலாசம்’ என்னும் நாடக நூலினை இவர் இயற்றியுள்ளார்.
குமாரசுவாமி ஐயர்
மட்டக்களப்பினைச் சார்ந்த ஆரைப்பற்றையிலே வாழ்ந்த சின்னத்தம்பியார்க்கும் அவர் மனைவியாராகிய சின்னம்மையாருக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இவர், தமது இளமைக்காலக் கல்வியை மட்டக் களப்பிலே பெற்றுக்கொண்ட பின், யாழ்ப்பாணம் சென்று, த. கைலாசபிள்ளையவர்களிடத்தில் சைவசமய இலக்கியங்களையும் சமக்கிருதத்தையும் சிறப்புறக் கற்றுக் கொண்டார்.
இவருக்குத் தமிழிலக்கியத் துறையில் மட்டுமன்றி. நாட்டு வைத்தியத் துறையிலும் மிகுந்த புலமை இருந்த தென அறியக் கிடக்கின்றது. "ஆயுள்வேத வைத்தியக் கருவூலம்" என்னும் நூலினையும், மலேரியா என்னும் காட்டுச் சுரம் (1931) என்னும் நூலினையும் இவர் இயற்றியுள்ளார். "ஆயுள்வேத வைத்தியக் கருவூலம்’ என்னும் நூல் இன்னும் அச்சேற்றப்படவில்லை.
அரசடித் தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இவர் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினர் எனக் கூறுவர். விபுலானந்த அடிகளுக்குச் சமக்கிருதம் கற்பித்த ஆசிரியர் இவராவர்.

குமார்சுவாமிப் புலவர், வா. 8ኞ
குமார சிங்க முதலியார்
மன் (ர்ைப் பகுதியைச் சார்ந்த மாதோட்டத்திலே நாவற்குளம் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். தமிழிலக்கண இலக்கியங்களில் மட்டுமின்றி ஆயுள்வேத வைத்தியத்திலும் இவர் மிகுந்த வன்மையும் தேர்ச்சியும் பெற்றவராய் விளங்கினர். அக்காலத்தே தேசாதிபதி யாய்த் திகழ்ந்த நோர்து என்பார், 1800ஆம் ஆண்டிலே "பூஞரக்குத்தகை" என்னும் வரியொன்றினை விதித்ததும் பொதுமக்கள் புரட்சி செய்தார்கள். இவரின்றி அப் புரட்சி நடைபெற்றிராது எனக் கருதி அரசாங்கம் இவர் மேல் வழக்குத் தொடர்ந்தது. விசாரணையின்போது குற்றவாளியாகக் காணப்பட்ட இவருக்குக் * கசையடி கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. கத்தோலிக்க கிறித்தவரான இவர் தேவமாதா பேரில் ஆசுகவியாய்ப் பல பாடல்கள் பாடியுள்ளார். இவராற் பாடப்பட்ட கீர்த்தனங்கள் பல மாதோட்டத்த வராற் பூசை வேளை களில் இன்றும் படிக்கப்படுவதுண்டாம்.
குமாரசுவாமிப் பிள்ளை, வா. (1875-1936)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழையில், டாக்டர் வ. வன்னித்தம்பி அவர்களுக்கும் தெய்வானைப் பிள்ளையவர்களுக்கும் புதல்வராக 1875ஆம் ஆண்டு யூலாய் மாதம் 4ஆம் தேதியன்று தோன்றியவர் இவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மத்திய கல்வி பயின்றபின், உயர்தரக் கல்வி கற்பதற்காகக் கல்கத்தாவுக்குச் சென்று, 1896ஆம் ஆண்டிலே கலை மாணித் தேர்விலே சித்திபெற்றுப் பட்டம் பெற்றுக் கொண்டு இலங்கைக்குத் திரும்பி வந்தார். அதன்பின் சட்டக்கல்வி பயின்று 1900ஆம் ஆண்டிலே வழக்கறிஞ ராகக் கடமையாற்றத் தொடங்கினர். சில ஆண்டு

Page 46
88 ஈழநாட்டின் தமிழ்ச் சுடரி மணிகள்
களுக்கிடையிலேயே சிவில் வழக்குகளில் மிகுந்த திறமை வாய்ந்தவரென்று புகழ் பெற்ருர். 1908ஆம் ஆண்டிலே சு. வயிரவப் பிள்ளையவர்களது புதல்வியாரான செல்லம் அவர்களைத் திருமணஞ் செய்துகொண்டார்.
இவர், தாம் வழக்கறிஞர்த் தொழிலினை மேற் கொண்டிருந்த போதிலும், யாழ்ப்பாணத்திலுள்ள பழைய ஏட்டுப் பிரதிகளைத் தேடிப்பெற்று, ஆராய்ச்சி செய்து, பிழைகள் திருத்தி அச்சேற்றுவதிலே கண்ணும் கருத்துமாய் இருந்தவர். "தண்டிகைக் கனகராயன் பள்ளு" "கதிரைமலைப் பள்ளு ஆகிய இரு நூல்களையும் தேடிப்பெற்று, ஆராய்ந்து, சிறந்த ஆராய்ச்சிக் குறிப்பு களுடன் அச்சேற்றி வெளிப்படுத்தினர்.
இவருடைய மூத்த புதல்வரான வன்னியசிங்கமவர் கள் தமிழரசுக் கட்சியிலிருந்து நாட்டுக்காகப் பல பணிகள் புரிந்தவர்; இறைவனடி சார்ந்துவிட்டார். இளைய புதல்வரான திரு. பாலசிங்கம் அரசாங்கத்தில் உயர்நிலைப் பதவியில் அமர்ந்திருக்கிருர்,
குமாரசுவாமிப் புலவர், அ. (1855-1922)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சுன்னுகத்திலே, உடுவில் முத்துக்குமார கவிராயர் மரபிலே, அம்பலவாண பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலே மல்லாகத்தில் அமைந்திருந்த ஆங்கில வித்தியா சாலையிலே இவர் கல்வி பயின்ருர், தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற வைத்தல் வேண்டுமென்னும் நோக்கத்துடன் இவரது தந்தையார் இவரை அவ்வூரில் வாழ்ந்துகொண்டிருந்த முருகேச பண்டிதரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார். அவரி டத்திலே இலக்கிய இலக்கணங்களையும் இவர் நன்கு

குமாரசுவாமிப் புலவர், அ. 89
கற்று, சிறந்த கவிகள் புனையும் ஆற்றலும் பெற்றுக் கொண்டார். அதன்பின், சமக்கிருதமும் பயிலுதல் வேண்டுமென்னும் நோக்கத்துடன், அவ்வூரினைச் சார்ந் தவரும் குற்ற விசாரணை நீதிமன்ற மொழிபெயர்ப்பாள ராய் விளங்கிக்கொண்டிருந்தவருமான நா க நா த பண்டிதரிடம் சென்று கற்று வந்தார். அக்காலத்தில் இவர் இரகுவமிசம், சாகுந்தலம் ஆகிய சமக்கிருத நூல் களே நன்கு பயின்று, அவற்றைத் தமிழில் மொழிபெயர்க் கவும் பயின்றுகொண்டார். அக்காலத்தில் அளவெட்டி என்னும் ஊரில் விளங்கிய கனகசபைப் புலவரிடத்திலும் இவர் இலக்கண நூல்களையும் தருக்க நூல்களையும் கற்ருர் எனத் தெரிகின்றது.
இங்கனம் புலமையுடையவராய் விளங்கிய இவரை, 1878ஆம் ஆண்டிலே, இராவ்பகதூர் சி. வை. தாமோ தரம் பிள்ளையவர்கள் தாம் ஏழாலையிலே நிறுவிய தமிழ்ப் பாடசாலையிலே ஆசியராக நியமித்துக்கொண் டார்; சிறிது காலத்தின்பின் இவரே அப் பாடசாலையின் தலைமையாசிரியராகவும் விளங்கிஞர். ஏழாலையிலே படிப்பித்தபின் தமது வீட்டிலும் ஒரு வகுப்பினைத் தொடங்கி நடாத்தி வந்தவர். 1902ஆம் ஆண்டு தொடங்கி, ஆறுமுக நாவலரவர்களால் நிறுவப்பட்ட வண்ணுர் பண்ணைச் சைவப் பிரசாச வித்தியாசாலையிலே தலைமையாசிரியராகவும் பணியாற்றினர். அக் காலத் திலே, அவ்வித்தியாசாலையின் அதிபராய் விளங்கிய த. கைலாச பிள்ளைவர்கள், ஒரு தமிழ்ச் சங்கத்தினை நிறுவி, இவரையே பிரதம வித்துவானகவும் நியமித் தார்கள். அதன்பின், மதுரையிலே பாண்டித்துரைத் தேவரால் நிறுவப்பட்ட தமிழ்ச் சங்கத்திலும் அவரது வேண்டுகோளின்படி உறுப்பினராகச் சேர்ந்து பணி புரிந்துகொண்டிருந்தார்கள்.

Page 47
90 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
1931ஆம் ஆண்டிலே, சான்ட்லர் அகராதி தொகுக்கப்பட்டபோது, சிறந்த ஆலோசனைகளை நல்கிய வருள் இவருமொருவராவர். 1932ஆம் ஆண்டிலே, சான்ட்லர் யாழ்ப்பாணம் வந்து, அகராதி தொகுக்கும் பணிபற்றி விரிவாக விவாதித்தபின் இவரிடம் அச் சேறும் நிலையிலிருந்த அகராதியொன்றினைப் பணம் கொடுத்துப் பெற்றுச் சென்ருர் எனக் கூறப்படுகின்றது. கு. கதிரைவேற்பிள்ளை பேரகராதி" தொகுத்தபோதும்
அவருக்கு உறுதுணையாய் விளங்கியவர் இவரேயாவார்.
இவர் சமக்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்தியற் றிய நூல்கள் :-1. மேகதூதக் காரிகை. 2. இராமோ தந்தம். 3. சாணக்கிய நீதிவெண்பா.
இவர் இயற்றிய நூல்கள் :-1. தமிழ்ப் புலவர் சரிதம். 2. வினைப்பகுபத விளக்கம். 3. சிசுபால சரிதம். 4. இதோபதேசம், 5. இலக்கியச் சொல்லகராதி. 6. சிவதோத்திரக் கவித்திரட்டு. 7. இரகுவமிச சரிதா மிர்தம். 8. ஏகவிருத்த பாரதாதி, 9. மாவைப் பதிகம். 10. இலக்கண சந்திரிகை. 11. கலைசைச் சிலேடை வெண்பா-அரும்பதவுரை. 12. கம்பராமா யணம்-பாலகாண்டம்-அரும்பதவுரை. 13. நீதிநெறி விளக்கம்-புத்துரை. 14. தண்டியலங்காரம்-புத்துரை, 15. யாப்பருங்கலக்காரிகை-புத்துரை.
குமாரசுவாமிப் புலவர், வ. ( -1925)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புலோலியூரிலே வல்லி புரநாத பிள்ளை என்பாருக்குப் புவல்வராகத் தோன்றிய வர் இவர். இவரைக் கோவிந்த பிள்ளை' எனக் குறிப்ப துண்டு. இளமையிலே தமது தங்கையாராகிய பார்வதி யம்மையாரோடும் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரவர்க

குமாரசுவாமிப் புலவர், வ. 9 I
ளிடத்திலே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்ருர். இளமைக்காலந் தொடங்கியே இவருக்குப் பஞ்ச இலக்கணங்களில் உளம் சென்றமையால், அவற்றைச் சிவசம்புப் புலவரிடத்திலும் வித்துவசிரோமணி பொன் னம்பலப் பிள்ளையவர்களிடத்திலும் பயின்று அவ்விலக் கணத்துறையிற் பெரும் புலமை படைத்தவராய் விளங் கினர். இவர், சாமானிய மக்களுடன் பேசும்போதும் இலக்கண வழுவின்றியே பேசிவந்தமையால், மக்கள் இவரை "இலக்கணக் கொத்தர்" எனக் கூறுவதுண்டு.
இவர் தமையனுராகிய பண்டிதர் வ. கணபதிப் பிள்ளை இவருக்குச் சமக்கிருதமும் கற்பித்தார். இலக் கணத்தில் மட்டுமன்றித் தருக்க நூலிலும் இவருக்கு தகுந்த புலமை இருந்ததெனக் கூறுவர். தமிழிலக் கணத்தில் இவருக்கு நிறைந்த அறிவும் பயிற்சியும் உண் டென்பதை இவர் எழுதி வெளியிட்ட "நன்னுாற் காண்டிகையுரை விளக்கம் காட்டுவதாகும். தமிழிலக் கியங்களுள் இவர் மிகுந்த ஈடுபாடு காட்டிய நூல் வில்லி புத்தூராழ்வார் இயற்றிய பாரதமாகும். பாரதத்திலே "குது போர்ச் சருக்கம்" முதலான சில சருக்கங்களுக்கு இவர் எழுதி வெளியிட்டுள்ள உரையே இவரது ஈடுபாட் டுக்குச் சான்று பகரும்.
யாழ்ப்பாணத்து வண்ணுர் பண்ணையிலுள்ள இந்துக் கல்லூரியிலும் சில ஆண்டுகள் இவர் தமிழ்ப் பண்டித ராகப் பணி புரிந்தவர் என அறியக் கிடக்கின்றது.
இவருடைய இளைய புதல்வரான டக்தர் சிவப்பிர காசம் அவர்கள் உளநூல் ஆராய்ச்சியிற் பெரும் புலமை படைத்தவர்; திருநெல்வேலிப் பரமேசுவர பண்டித ஆசிரிய கலாசாலையின் அதிபராக விளங்கி இப்போது ஓய்வு பெற்றுள்ளார்,

Page 48
92 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
குமாரசுவாமி முதலியார். (179(1874)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த உடுப்பிட்டியிலே, வல்லுவெட்டிஎன்னும் ஊரில் சந்திரசேகர முதலியாரின் புதல்வியாராகிய வள்ளியம்மையைத் திருமணஞ் செய்து கொண்டு வாழ்ந்த கதிர்காம பூபதி முதலியாருக்குப் புதல்வராக 1791ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 11ஆம் தேதி தோன்றியவர் இவர் ச. குமாரசுவாமிப் புலவரின் மருமகன். தாய்மாமனுகிய முத்துக்குமாரு முதலியார் இவருக்கு ஆசிரியராய் விளங்கினர். இளமைக் காலத்தி லேயே இவர் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றுப் பெரும் புலமை பெற்றிருந்தார். பலவகைக் கவிகளைச் சிரமமின்றி இயற்றும் தனி வன்மையும் இவருக்கு அமைந்திருந்தது. புண்ணியமணியத்தின் புதல்வியா ராகிய சிவகாமிப் பிள்ளையை இவர் திருமணஞ் செய்து கொண்டார்.
ஊர்காவற்றுறையில் நீதிபதியாகக் கடமையாற்றிய வரும், இலங்கை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட தமிழ்ப் பேரகராதியின் ஆக்கியோனுமாகிய கதிரைவேற் பிள்ளை இவரது இளைய புதல்வராவர். மூத்த புதல்வர் யாழ்ப்பாணத்திலுள்ள பிசுக்கால் அலுவலகத்தில் முதலி யாராக விளங்கி 1884ஆம் ஆண்டில் இறைவனடி சார்ந்த சபாபதி என்பார் ஆவர்.
இவரியற்றிய நூல்கள் -1. கந்தவன நாதர் ஊஞ்சல். 2. மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல். 3. அருளம்பலக் கோவை. 4. தீருவிற் சுப்பிரமணியர் பதிகம். 5. நல்லைக் கலித்துறை, 6. இந்திரகுமார் நாடகம,

கைலாச பிள்ளை, சிற். 93
கூழங்கைத் தம்பிரான் ( - 1795)
தென்னிந்தியாவினைச் சேர்ந்த காஞ்சிபுரத்திலே தோன்றியவர் இவர். தஞ்சையிலுள்ள திருவத்தூர் மடத்திலே தம்பிரானக விளங்கிக்கொண்டிருந்த இவர், மடத்திலுள்ள பிறருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக மடத்தினைவிட்டு நீங்கினர். ஈழத்துக்குச் சென்று, யாழ்ப்பாணத்திலே வண்ணுர் பண்ணையில் வாழ்ந்துகொண்டிருந்த வைத்தியலிங்கச் செட்டியார் என்பாருடைய ஆதரவிலே தங்கியிருந்தார். முதலிலே செட்டியாருக்கும் அவருடைய மக்களுக்கும் கல்வி கற்பித்துக்கொண்டிருந்த இவருடைய புகழானது விரை விலே இலங்கை முழுவதுமே பரவலாயிற்று. கொழும்பு முதலான பெரு நகரங்களிலுள்ள பாதிரிமாரும் பிறரும் இவரை அழைத்துக் கல்வி பயின்றர்கள். பிலிப்பு தமெல்லோ என்னும் பாதிரியார் இவருடைய சிறந்த நண்பராக விளங்கினர். m
* தேவப்பிரசையின் திருக்கதை", "யோசேப்புக் புராணம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். நன் னுாலுக்கு ஒரு விருத்தியுரை இவரால் எழுதப்பட்தெனக் கூறுவர். "நல்லைக் கலிவெண்பா', 'கூழங்கை யர் வண்ணம்" என்னும் நூல்களும் இவரால் இயற்றப் பட்டவை எனக் கூறப்படுகின்றது.
இவர், யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்துகொண் டிருந்து, சிவியாதெருவிற் காலமானர் என்பர்.
கைலாச பிள்ளை, சிற். (1857-1916)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரிலே, 1857ஆம் ஆண்டிலே, திருச்சிற்றம்பலம் என்பாருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலேயே இவர் தமது உறவினராகிய நல்லூர்ச் சம்பந்தப் புலவ

Page 49
94 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
ரிடத்தே ஓரளவு தமிழ் பயின்ருர், அதன்பின், யாழ்ப் பாணத்திலுள்ள அர்ச். யோன்ஸ் கல்லூரியிலே ஆங்கிலத்தைப் பயின்று உயர்தர வகுப்புகளிலும் சித்தி பெற்ருர். சித்தி பெற்றபின், அரசினர் எழுது வினைஞர் தேர்விலே சித்தியடைந்து அரசினர் கட்டட வேலைத் திணைக்களத்திலே எழுது வினைஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அரசாங்கப் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், இவர் தமிழிலக்கண விலக்கியங்களையும் சமக்கிருதத்தையும் ஒய்வு நேரங்களிலே தாமாகப் பயின்று பெரும் புலமை வாய்ந்தவராய் விளங்கினர். சில ஆண்டுகள்வரை பணியாற்றியபின், உடல்நலம் குன்றியிருந்தமையால் அச்சேவையிலிருந்து விலகி, தென்னிந்தியாவிலுள்ள திருக்கோயில்களுக்குச் சென்று வழிபாடியற்றிக் கொண்டிருந்தார். அக்காலத்திலே மிகப் பெரிய பணிகளை மேற்கொண்டு அல்லும் பகலும் ஓயாதுழைத்துக் கொண்டிருந்த சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள், இவரது புலமை நலத்தினைக் கண்டு, தமது பழந்தமிழ் நூலாராய்ச்சிப் பணிக்குத் துணைபுரியு மாறு வேண்டிக்கொண்டார். இவரும், அவரது வேண்டு கோளுக்கு இணங்கி, சிறிது காலம் அவருடன் தங்கி யிருந்து துணைபுரிந்துகொண்டிருந்தார். அக்காலத்தி லேயே சென்னை முதலாய பிற தென்னிந்திய நகரங்களில் வாழ்ந்துகொண்டிருந்த பேரறிஞர்கள் இவருடன் நட்புரிமை பூண்டு நெருங்கிப் பழகினர். அவர்களுள்ளே சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இந்தியப் பேரறிஞர் டாக்டர். உ. வே. சாமிநாதையர் அவர்களாவர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவராய் விளங்கிய சுப்பிர மணிய தேசிகரவர்கள் இவருக்கு “வித்துவான்' என்ற பட்டமும் அளித்துப் பொன்னடை போர்த்தியதும் அக்காலத்திலேயாம்.

கைலாச பிள்ளை, சிற். 95
ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் வரை தென்னிந்தி யாவிலே தங்கியிருந்தபின், தனது தாயாரின் விருப்பத் துக்கிணங்கி மீண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்து, அரசாங்கத்தில் உயர்நீதிமன்ற மொழிபெயர்ப்பாள ராகச் சில ஆண்டுகள் பணியாற்றிக்கொண்டிருந்தார். யாழ்ப்பாணக் கச்சேரியிலும் மட்டக்களப்புக் கச்சேரி யிலும் தலைமை முதலியாராகக் கடமையாற்றியபின், தேசாதிபதியின் தலைமைத் தமிழ் முதலியாராகவும் சிறிது காலம் இவர் கடமையாற்றியதுண்டு.
இவர் கொழும்பிலே பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில், சேர். பொன், இராமநாதன் அவர்கள் இவரிடம் தாயுமான சுவாமிகள் பாடல் முதலான நூல்களைக் கற்ருர் என அறியக்கிடக்கின்றது. சேரி. பொன். அருணுசலம் அவர்களும் இவரின் உற்ற நண்ப ராய் இவரை உசாத்துணைவராகக் கொண்டு சங்க நூல்களையும் பிற இலக்கண விலக்கியங்களையும் முறையே கற்றுக்கொண்டிருந்தார். புறநானூறு, பத்துப்பாட்டு, கல்லாடம், திருவாசகம், தாயுமான சுவாமிகள் பாடல் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கும்போது சிறந்த செய்யுள்களை அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளவும் துணைபுரிந்தார் என அறியக்கிடக்கின்றது. அக்காலத்தில் இலங்கைத் தேசாதிபதியாய் விளங்கிய பிளேக்கு என்பார் தலைமையிற் கூடியதொரு சமரசக் கூட்டத்திலே, இவர் சமக்கிருத சுலோகங்களைப் படித்து அவற்றின் பொருளினை ஆங்கிலத்தில் விளக்கிக் காட்டிய போது, இவரது உச்சாரணத் தொனியைக் கேட்டு மகாமகோபாத்தியாய சர்வேசுவர சாத்திரிகளும், பூரீ சுமங்கலதேரர், தர்மராமதேரர் ஆகிய பெளத்த குருமாரும் வியப்புற்று நாணி நின்றனர் என்பர்.

Page 50
96 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவர் இசைக்கலையிலும் மிகுந்த திறமை வாய்ந்தவ ராய் விளங்கினர். கொழும்பு விவேகானந்த சபை உறுப்பினர் பலருக்குச் சித்தாந்த சாத்திரங்களையும் தேவார திருவாசகங்களையும் பல ஆண்டுகளாகக் கற்பித்து வந்தார் எனத் தெரிகின்றது. அரசினர் கட்டளைச் சட்டங்களை முதன் முதலாசச் செவ்விய தமிழில் மொழி பெயர்த்தியற்றியவர் இவரேயாவர். இவர், தனிச் செய்யுள்களும் பல இயற்றியுள்ளார். "வட திருமுல்லை வாயில் மும்மணிக்கோவை" என ஒரு நூலினை இவர் இயற்றியுள்ளார்.
கைலாச பிள்ளை, த,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரிலே, ஞானப் பிரகாசர் மரபிலே, தம்பு என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். ஆறுமுக நாவலரவர்களால் வண்ணுர்பண்ணையிலே தாபிக்கப்பட்டதான சைவப் பிரகாச வித்தியாசாலையிலே இவருடைய இளமைக் கல்வி தொடங்கிற்று. இவர் அங்கே கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில், அவ்வித்தியாசாலையிலே ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த செந்தி நாதையரிடம் தமிழ் நூல்களை முறையே கற்றர். அவ் வித்தியாசாலையை விட்டு நீங்கிய செந்திநாதையர் இந்தியாவுக்குச் சென்றதும், உரையாசிரியர் ம. க. வேற் பிள்ளையவர்களிடம் இவர் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்ருர். தமிழ் ஆங்கில மொழிகளில் மட்டுமன்றிச் சமக் கிருதத்திலும் நல்ல அறிவு இன்றியமையாததெனக் கருதி, சமக்கிருதத்தையும் நன்கு பயின்ருர். பின், ஆறுமுக நாவலரவர்களிடத்திலே சித்தாந்த சாத்திரத் தையும் முறையே கற்றறிந்தார்.
இவர், ஆகமங்களையும் உபநிடதங்களையும் நன்கு பயின்றுகொண்டதுடன், நல்லொழுக்கமும் சைவாசார

கைலாச பிள்ளை, த. g?
மும் உடையவராய் விளங்கினர். ஆறுமுகநாவலரைப் போன்று, சைவாபிமானத்துடன் சைவசமய வளர்ச்சிக் கான பல பணிகளை இவரும் செய்துகொண்டிருந்தார். சைவபரிபாலன சபையினர் வெளியிடும் "இந்து சாதனம்" என்னும் பத்திரிகையானது தொடக்ககாலத் தில் இவரையே ஆசிரியராகக் கொண்டிருந்தது. வித் துவ சிரோமணி, ச. பொன்னம்பலப் பிள்ளையவர்களுக் குப் பின், சைவப் பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி புதுவதாகச் செம்மை வாய்ந்த வகையில் ஒரு தனிக் கட்டடத்தை அமைப்பித்து நடாத்தி வந்தவர் இவரே யாவர். அக்காலத்தில் அவ் வித்தியாசாலையின் தலைமை யாசிரியராகப் பணியாற்றியவர் சுன்னகம், அ. குமார சுவாமிப் புலவராவர். அவ் வித்தியாசாலையின் ஒரு பகுதியிலே, ஒரு காவிய பாடசாலையை அமைப்பித்து நடாத்தி, அரசினர் உதவிபெறச் செய்தவரும் இவரே யாவர். அவ் வித்தியாசாலையை நிலை க் கள மாக க் கொண்டு, சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர், மானிப் பாய் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை மா த கல் சு. ஏரம்பையர், மாதகல் அ. அருணுசல ஐயர், நீர்வேலி ச. சிவபிரகாச பண்டிதர், ஊரெழு சு சரவணமுத்துப் புலவர் முதலானுேரை உறுப்பினராகக்கொண்டு ஒரு தமிழ்ச் சங்கத்தினை அமைத்துத் திறம்பெற நடாத்தி வந்தவர். இச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம் உருவாவ தற்கு முன்னதாக அமைக்கப்பட்டதாகும். இச் சங்கத் தின் அமைப்பு முறையினை உசாவியறிந்தே பாண்டித் துரைத்தேவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை அமைத் தனர் என அறியக்கிடக்கின்றது.
ஆறுமுகநாவலரவர்களுக்குப் பின், தமிழுக்கும் சைவத்துக்கும் ஆக்கம் தேடும் வகையில் பெரும்பணி யாற்றியதுமன்றி, நாவலர் கல்வி விருத்தித் தருமங்களைச்

Page 51
98 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
செவ்விய முறையிற் பரிபாலனஞ் செய்து பேணி வளர்த் தவரும் இவரேயாவர்.
சிவஞானசித்தியார்-சுபக்கம்-இவரால் ஆராயப் பட்டுத் திருத்தமான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலரவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விரிவாக எழுதி, "ஆறுமுகநாவலர் சரித்திரம்" என வெளியிட் Goit GMTITrio.
கொஸ்தான்
இவர், மாந்தையில் வாழ்ந்த கொஸ்தான் என்ப வருக்குப் புதல்வராகத் தோன்றியவர். இவர் இயற்றிய "பூதத்தம்பி விலாசம்’ என்னும் நூலினை மயிலிட்டி நல்லையா பிள்ளை 1888இல் வெளியிட்டுள்ளார்.
சங்கர பண்டிதர் (1821-1891)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுன்னுகம் என்னும் ஊரிலே, சிவகுருநாதர் என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். நீர்வேலியிலே வாழ்ந்துகொண் டிருந்தவர். கந்தரோடை அப்பாப் பிள்ளை உபாத்தி யாயரிடம் இவர் தமிழிலக்கணவிலக்கியங்களைக் கற்றர். வேதாரணியத்திலே சுவாமிநாத தேசிகரிடத்திற் சமக் கிருத வியாகரணம், தருக்கம், காவியம் முதலியனவற் றைக் கற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சமக்கிருத பண்டிதர்களுள்ளே இவர் தலைசிறந்தவர்.
சுன்னகம் முருகேச பண்டிதர், கீரிமலைச் சபாபதிக் குருக்கள், சிவப்பிரகாச பண்டிதர் (இவர் புதல்வர்) ஆகிய பலர் இவருடைய மாணவராவர்.
இவர் இயற்றிய நூல்கள் -1. சைவப்பிரகாசனம். 2. சத்த சங்கிரகம், 3. அகநிர்ணயத் தமிழுரை.

சண்முகச் சட்டம்பியார், வ. 99
4. சிவபூசையந்தாதி உரை. 5. கிறிஸ்துமதகண்டனம். 8. சிவதூஷண கண்டனம். 7. அனுட்டான விதி.
சங்கரப்பிள்ளை யோன்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மாணிப்பாய் என்னும் ஊரில் உடுவிலிலே தோன்றியவர் இவர். "யாழ் பாணச் சரித்திரம்" என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரு டைய புதல்வர், டக்தர் தானியேல் யோன் அவர்கள் இவருடைய வரலாற்ருராய்ச்சியுடன் தொடர்புபட்ட நவீன ஆராய்ச்சி முடிபுகள் பலவற்றை எழுதிக் கொண்டு வட இந்தியாவில் வாழ்ந்தவராவர்.
சண்முகச்சட்டம்பியார், சு-(1794 - )
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டையிலே அராலி என்னும் ஊரில், சுவாமிநாதர் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத் திலே இவர் தமது தந்தையாரிடத்திற் கல்வி பயின்றபின், இருபாலைச் சேணுதிராய முதலியாரிடத்திலே தமிழிலக் கணவிலக்கியங்களைக் கற்றுக்கொண்டார். இவருக்கு ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை இருந்ததாகக் கூறுவர். இவர் ஆசிரியராகவிருந்து மிஷனரிமார் பலருக்குக் கல்வி கற்பித்தவர் எனத் தெரிகின்றது. இவர் சைவராயிருந்து பின்னதாகக் கிறித்து சமயத்தைத் தழுவியவர்.
சண்முகச்சட்டம்பியார், வ. (1831-1885)
மட்டக்களப்பினைச் சார்ந்த கோட்டை முனையிலே தாமரைக்கேணி என்னும் ஊரில் வல்லிபுரம் என்பாருக் குப் புதல்வராக 1831ஆம் ஆண்டிலே தோன்றியவர் இவர். கல்லாற்றிலே வாழ்ந்துகொண்டிருந்த கார்த்தி கேசு (பொலியவிதான) அவர்களிடத்திலே தமிழ்

Page 52
100 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இலக்கணவிலக்கியங்களைக் கற்ருர். இளமைக் காலந் தொடங்கியே கவிதை யாக்கும் வன்மை பெற்றிருந்தார் எனக் கூறப்படுகின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த அறிஞராகத் திகழ்ந்த இவர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும், வின்சன்ற் மகளிர் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
இவர், நைடதத்துக்கும் கந்தபுராணத்துக்கும் உரை வகுத்தெழுதினர் என அறியக்கிடக்கின்றது. நூல்கள் எவையேனும் அச்சேறவில்லை.
சதாசிவ ஐயர், தி. முகாந்திரம். ( -1950)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சுன்னுகத்திலே தோன் றியவர் இவர். தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மிகுந்த புலமை படைத்தவராய்த் திகழ்ந்தவர். கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் எவ். ஏ. (F. A.) தேர்வில் முதற் பிரிவிலே தேறியவர். மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலும் கந்தரோடை ஆங்கில வித்தியாசாலையிலும் ஆசிரிய ரா கப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். 1910ஆம் ஆண்டு தொடக்கம் கல்வித்திணைக்களத்தில் வித்தியா தரிசியாகவும், 1927ஆம் ஆண்டு தொடக்கம் பகுதி வித்தியா தரிசியாகவும் பணி யாற்றிக் கொண்டிருந்தவர்.
யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமானது. இவருடைய அயரா உழைப்பினலே 1921ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது; நீண்டகாலம் இவரே செயலாளராகவும் பணியாற்றிக்கொண்டிருந் தார். சுன்னுகத்திலே தொடங்கப்பெற்ற "பிராசீன பாடசாலை'யும் இவரது முயற்சியாலேயே நிறுவப்பட்ட

சதாசிவம் பிள்ளை, ஆணல். iod
தாகும். யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் வெளியீடாகிய "கலாநிதியும் இவர் தோற்றுவித்ததே ஆகும்.
இவர் இயற்றிய நூல்கள் -1. தேவி தோத்திர மஞ்சரி. 2. இருதுசங்கார காவியம். 3. தேவிமானச பூசை அந்தாதி. 4. பெருமாக்கடவைப் பிள்ளையார் இரட்டைமணிமாலை. 5. தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும்.
வெளியிட்ட பிற நூல்கள் :-1. கரவை வேலன் கோவை, 2. வசந்தன் கவித்திரட்டு. 3. ஐங்குறுநூறு.
சதாசிவ பண்டிதர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணேயிலே நாச்சிமார் கோயிலடி என்னும் ஊரில் நமச்சிவாயம் என் பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். தமிழிலக் கண விலக்கியங்களிலே மிகுந்த பயிற்சியுடையவர் என்று தோன்றுகின்றது.
வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். சித்திர கவிகளும் பல இவராற் பாடப்பட்டுள்ளன என அறியக்கிடக்கின்றது. இந்நூல்கள் 1887 ஆம் ஆண்டிலே அச்சிடப்பட்டுள்ளன.
தாசிவம் பிள்ளை, ஆணல். (1820-1895)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மானிப்பாயில் நவாலி என்னும் ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த அருணுசலம் பிள்ளைக்கும் அவரது மனைவியாரான ஆனந்தப் பிள்ளைக் கும் புதல்வராக, 1820ஆம் ஆண்டு ஒற்ருேபர் மாதம் 11ஆம் தேதியன்று தோன்றியவர் இவர்.
ዘሾ•p•~7

Page 53
102 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இளமைக்காலத்திலே தமது ஊரிலுள்ளதொரு தமிழ்ப் பாடசாலையிலும், பின் அமெரிக்க மிஷன் பாட சாலையிலும் கல்வி கற்றபின், 1831 ஆம் ஆண்டில் மாணிப் பாய் ஆங்கிலப் பாடசாலையிலே சேர்ந்தார். அடுத்த ஆண்டிலே வட்டுக்கோட்டைச் செமினரி எனப்பட்ட சாத்திரசாலையிற் சேர்ந்தார். எட்டு ஆண்டுகள்வரை அங்குக் கல்வி பயின்றபின், தமது வகுப்புத் தோழர்களான நெவின்ஸ் சிதம்பரப் பிள்ளை, கறல் விசுவநாத பிள்ளை, டக்தர் எட்வேட்ஸ் ஆகிய அறிஞர்களுடன் 1840 ஆம் ஆண்டிலே சாத்திரசாலையிலிருந்து அரங்கேறினர்.
முதலிலே, மானிப்பாயிலும் சாவகச் சேரியிலும் உடுவிலிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினர் எனத் தெரிகின்றது. 1846ஆம் ஆண்டிலே கோவிந்த உடை யார் சயம்பரின் புதல்வியான மார்கறெற் நிற்சி (Margaret Nitchi) முத்துப் பிள்ளை என்பாரைத் திருமணஞ் செய்துகொண்டார். 1847ஆம் ஆண்டில் உடுவில் பெண் பாடசாலையிலே ஆசிரியராக நியமனம் பெற்ருர். 1654 ஆம் ஆண்டில் அப் பாடசாலையின் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்.
*உதயதாரகை”ப் பத்திரிகைக்குச் சில காலம்வரை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த கறல் விசுவ நாத பிள்ளையவர்கள் 1857 ஆம் ஆண்டிலே சென்னைக்குச் சென்று வேறு முயற்சியில் ஈடுபட்டமையால், அவ் வாண்டு யூன் மாதம் 1ஆம் தேதியன்று இவர் 'உதய தாரகை”யின் ஆசிரியராகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அன்று தொடங்கி ஏறக்குறைய 40 ஆண்டு களாக இவரே அப் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கிக் கொண்டிருந்தார். பின், யாழ்ப்பாணக் கல்லூரியிலே 1881ஆம் ஆண்டு தொடக்கம் தலைமைத் தமிழ்ப்பண்டித ராக விளங்கிய இவர். 1891ஆம் ஆண்டு யூன் மாதத்

சந்திரசேகர பண்டிதர், நா. 103
துடன் கற்பிக்குந் தொழிலினைவிட்டு இளைப்பாறிக் கொண்டார்.
இவர், 1895 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 20ஆம் தேதியன்று இவ்வுலக வாழ்வினை நீத்தார்.
இவர் இயற்றிய நூல்கள் :-1. இரட்சாபெருமான் மீது பாடிய திருச்சதகம் (1849) 2. மெய்வேத சாரம் (1852) 3. நன்னெறிக் கொத்து (1859) 4 இல்லற நொண்டி (1897) 5. கீர்த்தணு சங்கிரகம் (1890) 6. வெல்லை அந்தாதி (1890) 7. சாதாரண இதிகாசம் (1858) 8. வான சாத்திரம் (1861) 9. நன்னெறிக் கதா சங்கிரகம் (1869) 10. பாவலர் சரித்திர தீபகம் (1886), "குடும்ப தருப்பணம்’ என்னும் நூலும் "ஞான வெண்பா”வும் இவர் பதித்து வெளியிட்ட நூல்கள்.
சந்திரசேகர பண்டிதர், அ. ( -1878)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த உடுவில் என்னும் வளரிலே, அம்பலவாணர் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெரும் புலமை படைத் வர். உவிஞ்சிலோ அகராதி தொகுத்து வெளியிடுவதற் குத் துணை புரிந்தவர். யாழ்ப்பாண அகராதி" எனப்படும் மானிப்பாய் அகராதி (1842)யினை வெளியிட்டவரும் இவரேயாவர்.
சந்திரசேகர பண்டிதர், நா.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரில், பிராமண குலத்தில், நாராயண பட்டர் என்பவருக்குப்புதல்வராகப்
பிறந்தவர் இவர். தமிழிலும் சமக்கிருதத்திலும் பெரும் புலமை வாய்ந்தவர். இவர், நல்லூர்க் கந்தசுவாமிமீது

Page 54
104 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
ஒரு கிள்ளைவிடு தூது பாடியுள்ளார். அந்நூல், கரண வாய் என்னும் ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த திரு. கை. நமச்சிவாய தேசிகரவர்களால் அச்சேற்றுவிக்கப்பட் டுள்ளது.
சபாபதி நாவலர் (1844-1903)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கோப்பாய் என்னும் ஊரிலே, சுயம்புநாத பிள்ளை என்பாருக்குப்புதல்வராகத் தோன்றியவர் இவர். அவ்வூரில் வாழ்ந்த ஜகநாதையர் என்பவரிடத்தில் முதலிலே கல்வி பயின்றுகொண்டிருந் தவர். தமிழும் சமக்கிருதமும் முறையே பயின்று கொள்ள விரும்பி, நீர்வேலி சங்கரபண்டிதரிடம் சென்று ஒழுங்குறக் கல்வி கற்று வந்தார். ஆறுமுக நாவலர் வித்துவ சிரோமணி பொன்னம்பலப் பிள்ளை ஆகியோ ரிடத்திலும் இவர் சில நூல்களைக் கற்றனர் என்று தெரி கின்றது. இளமைக் காலத்திலேயே இவர் ஆங்கிலமும் பயின்று நல்ல புலமையெய்தினர்.
இவருடைய புலமையையும் ஒழுக்கத்தையும் அறிந்த ஆறுமுக நாவலரவர்கள், சிதம்பரத்திலே தாம் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலையிலே, இவரைத் தலைமை யாசிரியராக இருக்கும்படி கேட்டுக்கெர்ண்டார். இவரும் அதற்கு இணங்கி, அங்குச் சென்று, சில ஆண்டுகள்வரை செவ்விய முறையிற் கல்வி கற்பித்து வந்தார். இவ் வித்தியாசாலேயிலிருந்து இவர் விலகி, திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்றபோது, அக்காலத்தில் அவ் வாதீனத்துப் பதினருவது சந்நிதானமாகத் திகழ்ந்த திருப்பெருந்திரு சுப்பிரமணிய தேசிகரிடம் அருளுப தேசம் பெற்றுக்கொண்டார். இவர், அங்குத் தங்கி யிருந்து சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்று மிகுந்த புலமையெய்தினர். இவரின் கல்வி விருப்பத்தினைக்

சபாபதி நாவலர் 105
கண்ட சந்நிதானமவர்கள் இவரை ஆதீன வித்துவானுக இருக்கும்படி செய்தனர். இவரது உரைவன்மையையும் அறிவின் தரத்தையும் நோக்கி மிக மகிழ்ந்த சந்நிதான மவர்கள் இவருக்கு "நாவலர்" என்னும் சிறப்புப் பட்டத் தினேயும் வழங்கினுர்,
இவர், கிறித்துசமயக் கொள்கைகளைக் கண்டித்து தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பற்பல விசவுரை களை ஆற்றிக்கொண்டிருந்ததுமன்றி, பத்திரிகைகளிலும் சிறந்த கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார். "யேசு மத சங்கற்ப நிராகணம்' என்னும் செய்யுள் நூலொன் றும் இவரால் இயற்றப்பட்டுள்ளது.
இராமநாதபுரத்தரசராகிய பாஸ்கர சேதுபதி இவ ரிடத்திற் பெருமதிப்புடையவராய் விளங்கினர். இவர் சிறிதுகாலம் பாஸ்கர சேதுபதியவர்களுடன் தங்கியிருந்து சமய விரிவுரைகள் ஆற்றிக்கொண்டிருந்தார். முடிவில் அவ்விடத்தைவிட்டு நீங்கிச் செல்லும்போது, சேதுபதி யவர்கள் இவருக்கு மூவாயிரம் ரூபா சன்மானமாக அளித்தார். அப் பணத்தினை முதலாகக்கொண்டு, சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலை என ஒரு அச்சகத்தைச் சென்னையிலே நிறுவி, "ஞானுமிர்தம்" என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையை இவர் நடாத்தி வந்தார். நெடுங்காலம் இவர் சென்னையிலேயே தங்கி யிருந்தார் எனத் தெரிகின்றது.
பின், சிதம்பர நடராசரைத் தரிசிப்பதற்காகச் சிதம்பரத்துக்குச் சென்று, சில மாதங்கள் தமது இல்லதி திலே தங்கியிருந்தார். 1903ஆம் ஆண்டிலே, தமது 58ஆம் வயதிலே இவர் இவ்வுலக வாழ்வினை நீத்தார்.
மாகறல் கார்த்திகேய முதலியார், திருமயிலை சிங்காரவேலு முதலியார், பாலசுந்தர முதலியார், சுழி

Page 55
106 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
புரம் சிவப்பிரகாச பண்டிதர் முதலான பலர் இவருடைய மாணுக்கர் என அறியக்கிடக்கின்றது.
இவர் இயற்றிய நூல்கள்:-1. இயேசுமத சங்கற்ப நிராகரணம் (1879) 2. சிதம்பர சபாநாத புராணம் (1885) 3. சிவகர்ணுமிதம் (1885) 4. பாரத தாத்பரிய சங்கிரகம் (1884) 5. இராமாயண தாத்பரிய சங்கிரகம் (1884) 6. சதுர்வேத தாத்பரிய சங்கிரகம் (1876) 7. திருச்சிற்றம்பல யமகவந்தாதி 8. திருவிடைமரு தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி 9. மாவையந்தாதி. 10. நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம். 11. திரா விடப் பிரகாசிகை (1899) 12. இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு (1894) 13. வைதிக காவிய தூஷண மறுப்பு, 14. சித்தாந்த மரபு கண்டன கண்டனம் (1893).
இவர் பதிப்பித்த நூல் :-சிவஞான சுவாமிகள் இயற்றிய சிவசமவாத உரைமறுப்பு.
சபாரத்தின முதலியார் (1858-1922)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கொக்குவில் என்னும் ஊரிலே, முல்லைத்தீவுக் கச்சேரியிலே எழுதுவினைஞராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த சபாபதிப் பிள்ளை என் பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர்.
ஏடு தொடக்கியபின் சுயம்புநாத பிள்ளை என்பா ரிடத்திலே தமிழ் பயின்று கொண்டிருந்த இவர், ஆங்கிலக் கல்வி பெற்றுக்கொள்வதற்காக, "கொக்" பாடசாலை எனப்பட்ட மத்திய கல்லூரியிலே சேர்ந்து படித்தார். வண்ணுர்பண்ணையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையிலே இவர் ஆறுமுக நாவலரவர்களிடத் திலும் கற்ருர் என அறியக்கிடக்கின்றது.

சம்பந்தப் புலவர், வே. ፲07
1878ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணக் கச்சேரியிலே எழுதுவினைஞராகச் சேர்ந்த இவர், முல்லைத்தீவு, கொழும்பு, கண்டி, காலி முதலிய இடங்களிலும் பணி யாற்றிக்கொண்டிருந்தார். அதற்குப் பின், யாழ்ப் பாணக் கச்சேரியிலே தமிழ் முதலியாராக நியமிக்கப் பட்டார். 1905ஆம் ஆண்டிலே இவருக்கு "முதலியார்’ப் பட்டமும் அரசினரால் அளிக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டிலே சமாதான நீதவானக நியமிக்கப்பட்ட இவர், 1919 ஆம் ஆண்டில் "இராசவாசல் முதலியார்' என்னும் பட்டத்தினைப் பெற்ருர். 1921ஆம் ஆண்டிலே அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறிக்கொண்டார்.
பத்தொன்பது வயதினராயிருக்கும்போதே "உதய பானு'ப் பத்திரிகையிலே நிரீச்சுரவாதத்தை மறுத்து இவர் பல கண்டனங்களை எழுதியுள்ளார். அரசாங்க சேவையிலிருந்த காலத்திலும் "இந்து சாதனம்" என்னும் பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் பல. இவர் தமிழ் நூல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பர். விரிவுரைகள் ஆற்றுவதிலும் மிகுந்த திறமையுடையவராய் இவர் விளங்கினர்.
இவர் இயற்றிய நூல்கள் :-1, சீவான்ம பேதம், 2. ஈச்சுர நிச்சயம், 3. பிரபஞ்ச விசாரம், 4. நல்லை förrar un Goof orðav, 5. Essentials of Hinduism, 6. Life of Thiru Gnana Sambanthar.
சம்பந்தப் புலவர், வே.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் வேலாயுத முதலியார் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். நல்லூர் ஆறுமுக நாவலரவர்களுடன் மிகுந்த நட்புப் பூண்டிருந்தவர். இருபாலைச் சேஞதிராய முதலி யூாரிடத்திலும், சரவண முத்துப் புலவரிடத்திலும்

Page 56
፲08 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இலக்கிய இலக்கணங்கள் பயின்றவர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரும், புன்னலைக்கட்டுவன் செந்திநாதை யரும் இவருடைய மாணவர்கள் ஆவர். இவர் கதிர் காம சுவாமிபேரிற் பல கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
ayt in uli
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சாவகச்சேரியில் *மறவன்புலம்’ என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். இருபாலைச் சேதிைராய முதலியாரிடத்திலே கல்வி பயின்றவர் என அறியக்கிடக்கின்றது. உமாபதி மாலை" என்னும் நூல் ஒன்றினை இவர் இயற்றியுள்ளார். சரவணமுத்துப் பிள்ளை, அ. (1882-1929)
மட்டக்களப்பு நகரில் வாழ்ந்துகொண்டிருந்த அருணகிரியார் என்பவருக்கு 1882ஆம் ஆண்டிலே புதல்வராகத் தோன்றியவர் இவர். பிற்றைநாளில், இவர் தமது பெயரினைத் தனித் தமிழில் "நாணலம் நித்திலக்கிழார்" என வழங்கி வந்தார். (சரவணம்முத்து-பிள்ளை - நானல்-நித்திலம்-கிழார்.)
இளமைக் காலத்திலே பள்ளிப் படிப்பிற் சிந்தை செல்லாத காரணத்தால் இவர் ஆங்கிலம் ஏழாம் வகுப்பு வரை படித்ததுடன் பாடசாலையை விட்டு நீங்கி, இந்து வாலிபர் சங்கத்தினரால் நடாத்தப்பட்டு வந்த வாசிக சாலைக் காப்பாளராகக் கடமையேற்ருர், வாசிகசாலையிற் பணிபுரியத் தொடங்கியதன்பின் இவருக்கு நூல்களைக் கற்கும் ஆவல் இயல்பாக உண்டாவதாயிற்று. வாசிக சாலையிலுள்ள நூல்களைப் படித்து வந்ததுடன், அக் காலத்தில் அர்ச். மைக்கேல் கல்லூரி ஆசிரியராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த பண்டிதர், மயில்வாகன ஞர் (சுவாமி விபுலானந்தர்) அவர்களிடம் இலக்கிய இலக்சண நூல்களை முறையே கற்றுக்கொண்டார்,

சரவணமுத்துப் பிள்ளை, சு. Og
பின், வாசிகசாலைக் காப்பாளர் பதவியைத் துறந்து அரசாங்க சேவையில் எழுதுவினைஞராகச் சேர்ந்து கொண்டார்.
சந்தக் கவி பாடுதலிலும், வசனங்களிற் சிலேடை வழங்குதலிலும், கண்டனங்கள் வழங்குவதிலும் வல்லமை மிக்கவராய் விளங்கினர். பாடல்களை இயற்றியதுடன் இவர் நாடகங்களும் எழுதியுள்ளார். தாம் எழுதிய நாடகங்களிலே தாமும் சிறப்புக்குரிய பாகங்கள் தாங்கி நடித்து வந்தார் என அறியக்கிடக்கின்றது. இவர், 1929ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்கள்.
இவர் இயற்றிய நூல்கள் -1. மாமாங்கப் பிள்ளை யார் பதிகம் (1915) 2. கதிர்காமவேலவர் தோத்திர மாலை, 3. சனி வெண்பா.
நாடகங்கள் -1. இலங்கா தகனம். 2. பாதுகா பட்டாபிஷேகம், 3. வனவாசம்.
சரவணமுத்துப் பிள்ளை, சு. (1848-1916)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊரெழு என்னும் ஊரிலே சுப்பிரமணிய பிள்ளை என்பாருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலே, புன்னுலைக்கட்டுவன் ச. கதிர்காமஐயரிடம் தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றர். அதன்பின், சுன்னுகம் முருகேச பண்டிதரவர்களிடம் உயர்தரத் தமிழிலக்கணங்களையும் இலக்கியங்களையும் பயின்ருர். சுன்னகம் அ. குமார சுவாமிப் புலவரவர்களும், நாவலர் கோட்டத்து ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையவர்களும் இவருடன் ஒரு சாலை மாணுக்கராய்ச் கல்வி பயின்றனர் என அறியக் கிடக்கின்றது.
இவர், "சைவ உதயபானு' என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையைத் தொடங்கி, ஆறு ஆண்டுகள் வரை

Page 57
110 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
அதன் ஆசிரியராயிருந்து அதனை நடாத்தி வந்தார். அதன் காரணமாக, "பத்திராதிபர் சரவணமுத்து" எனவும் இவரைக் குறிப்பிடுவதுண்டு.
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் சமயச்சார் பான விரிவுரைகள் ஆற்றியும், கோயில்களிலும் மடங் களிலும் புராணபடன வேளைகளிற் பொருள் கூறியும் வந்தவர் இவர். இராமநாதபுரத்துப் பாஸ்கரசோதுபதி மீது ஒரு பிரபந்தம் பாடி, அதற்காகப் பரிசிலும் பெற்ரு ரென்று அறியக்கிடக்கின்றது.
தென்கோவை, பண்டிதர். ச. கந்தையா பிள்ளை, சேர். அம்பலவாணர் கனகசபைப் பிள்ளை, முகாந்திரம் சி. கந்தையா பிள்ளை, நல்லூர் வைத்தியர் கா. பொன் னைய பிள்ளை ஆகியோர் இவருடைய மாணுக்கர் என அறியக் கிடக்கின்றது. இவர், ஊர்காவற்றுறையில் நீதிபதியாய் விளங்கிய கு. கதிரைவேற் பிள்ளையவர்கள் தமது அகராதியைத் தொகுத்த காலத்திலே, அவருக்குச் சிறிது காலம் துணைபுரிந்து கொண்டிருந்தவர் எனத் தெரிகின்றது.
!
சரவணமுத்துப் பிள்ளை, தி. த.
இவர், திரு. தி. த. கனகசுந்தரம் பிள்ளை அவரி களின் சகோதரர் ஆவர். "தத்தை விடுதூது" "முத்துக் குமாரசுவாமி இரட்டை மணிமாலை" ஆகிய நூல்களை, யும், இலங்கையின் இரண்டாம் நாவலான "மோக ஞங்கி" என்னும் நூலினையும் இவர் இயற்றியுள்ளார்.
சரவணமுத்துப்புலவர், ம. (1802-1845)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் வாழ்ந்து கொண்டிருந்த மனப்புலி முதலியாரின் இரண்டாவது

சவுந்தரநாயகம் பிள்ளை *メ 111
புதல்வர் இவர். இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் தமிழிலக்கணவிலக்கியங்களை முறையே கற்று வேதாந்த சித்தாந்த நூல்களிலும் தெளிந்த அறிவுடையவராய் விளங்கினர். நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் இவரிடத் தில் நீண்ட காலமாகக் கற்றவர். சிவசம்புப் புலவர், கார்த்திகேய உபாத்தியாயர், சம்பந்தப்புலவர் ஆகியோ ரும் இவரிடம் கல்வி பயின்றவர்கள் எனத் தெரிகின்றது. இவர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருந்தவர் என்றும் கூறப்படுகின்றது. உதயதாரகைப் பத்திரிகை யில் களத்தூர் வேதகிரி முதலியார் முதலான புலவர் களுடன் வாதித்து இலக்கணவிலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இவர் எழுதியதுண்டு.
இவர் இயற்றிய நூல்கள் -1. வேதாந்த சுயஞ் சோதி, 2. ஆத்துமபோதப் பிரகாசிகை, 3. நெல்லை வேலவருலா.
சவுந்தரநாயகம் பிள்ளை
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வட்டுக் கோட்டையிலே, பழைய வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் ஆசிரியரா யிருந்து பெரும் புகழ்படைத்த கபிரியேல் திசேரா என் பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இவரது தாயார் யாழ்ப்பாணத்திலிருந்த ஒந்தாச்சியார் என்பா ரது புதல்வியாவர்.
வட்டுக் கோட்டைச் சாத்திர சாலையிற் கல்வி பயின்றபின், சென்னைக்குச் சென்ற இவர் B. A. B. L." பட்டங்களைப் பெற்று, அங்கேயே நியாயதுரந்தரராய் விளங்கிக் கொண்டிருந்தார். இவர், ஆங்கிலப் பத்தி ரிகை ஒன்றினைச் சில காலம்வரை நடாத்தி வந்தார் என அறியக் கிடக்கின்றது.

Page 58
112 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
"நன்னூற் சுருக்கம், தெலுங்கு இலக்கணம்." மெய்ஞ்ஞானக் கீர்த்தனை" ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
சாங்கோபாங்கர்
இவர், யாக்கோமே கொன்சால்வெஸ்" என அழைக்கப்பட்டு வந்த கோவைப் பிராமண விடையூழியர் (மிஷனரி) ஆவர். அக்காலத்தில் வழக்கிலிருந்த கல வைத் தமிழை அடியொற்றி, வடமொழிச் சொற்கள் மிகுதியாய் விரவிவர, உரை நடையில் பல நூல்களை எழுதியவர். இவர் சிங்களத்திலும் பாளிச் சொற்களை மிகுதியாகச் சேர்த்து எழுதி வந்தார் எனக் கூறப்படு கின்றது. "சுகிர்த தர்ப்பணம், "அற்புத வரலாறு." தர்ம உத்தியானம், “ஞானவுணர்ச்சி" என்னும் சிறு நூல்களையும், ாசுவிசேஷ விரித்துரை." புராந்திம பச்சிம காண்டம்’ எனும் பெரிய நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவர், மிக விரிவானதொரு போர்த்துக்கேய-தமிழ்-சிங்கள அகராதி" ஒன்றினை இயற்றினர் என்றும், அது வெளிவரவில்லை எனவும் அறியக் கிடக்கின்றது. இவர் எழுதிய திரை விருத்தம் (கட்டியம்), ஆனந்தக் களிப்பு சிந்து, பதம் முதலான பாவகைகள் இவரது பாவியற்றும் வன்மையினைத் துலக்க மாக எடுத்துக் காட்டுகின்றன என்பர்.
சித்துப் புலவர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுன்னகத்திலே உடுவில் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். தமிழிலக்கணவிலக்கியங்களிலே மிகுந்த பயிற்சியுடையவ ராய் இவர் விளங்கினர் என்பர். விடவைத்தியத்திலும் இவருக்கு மிகுந்த பயிற்சி இருந்ததென்று தெரி கின்றது.

சிதம்பரம் பிள்ளை, 113 .نهق
பதிகங்கள், ஊஞ்சல்கள், தனிப்பாடல்கள் பல
வற்றை இவர் இயற்றியுள்ளார்
சிதம்பரப்பிள்ளை, உவில்லியம் நெவின்ஸ்,
(1820-1889) யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சங்குவேலி என்னும் ஊரிலே, முத்துக்குமாரபிள்ளை என்பாருக்குப் புதல் வ ராகத் தோன்றியவர் இவர். இளமையிலே தமிழிலக்கண விலக்கியங்களை மட்டுமன்றி, ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தருக்க நூலிலும் கணித நூலிலும் சிறந்த புலமை யுடையவராய்த் திகழ்ந்தவர்; சமக்கிருதத்திலும் நல்ல அறிவு படைத்தவர். யாழ்ப்பாணக் கல்லூரி முதலிய கல்லூரிகளிலும் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற் றியவர். "உவீஞ்சிலோ அகராதி" தொகுக்கப்பட்ட காலத் தில் அப்பணிக்குத் துணைபுரிந்து கொண்டிருந்தவர் *இலங்கை நேசன்" முதலான பத்திரிகைகளிலும் அடிக் கடி கட்டுரைகள் எழுதி வந்தவர்.
இவர் இயற்றிய நூல்கள் :-1. இலக்கிய சங்கிரகம்" 2. தமிழ் வியாகரணம், 3. நியாய இலக்கணம்.
சிதம்பரப்பிள்ளை, வே. ( -1955)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறையில் மேலைப் புலோலியூரிலே தோன்றியவர் இவர். பதின் மூன்றுவது வயதிலே கண்பார்வையை முற்ருக இழந்த போதிலும், கல்வியறிவு பெற்றுக் கொள்ளுதல் வேண்டு மென்னும் ஆர்வத்தினுல், பிறர் வாசிக்கக் கேட்டுக் கொண்டிருந்தும் அறிஞர் படிப்பிக்குமிடங்களிலும் புராண படனம் நடைபெறுமிடங்களிலும் போய்க் கேட்டு மனத்திற் பதித்தும் மிகுந்த புலமைபடைத்தவ ராஞர். புராணங்களுக்குப் பொருள் கூறுவதிலும் பாக்

Page 59
114 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
களியற்றுவதிலும் நல்ல திறமை பட்ைடத்தவராக விளங் கினர். மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைக் கற்பிப் பதற்காகத் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றினையும் நடாத்தி வந்தார் w
கந்தபுராணத்துச் சூரபன்மன்வதைப் படலத்துக்கு இவர் சிறந்த உரையொன்றினை எழுதியுள்ளார். இவர் இந்த உரையினை எழுதிக் கொண்டிருக்கும்போது பயன் படுத்தப்படுவதற்காக உரையாசியர் க. க. முருகேச பிள்ளையவர்கள் தம்மிடமிருந்த பழைய உரை (முதல் 100 பாடல்கள்) ஒன்றினையும், நல்லூர்ப் பொன்னம் பலப்பிள்ளை உரைக்குறிப்பினையும், தாம் எழுதி வைத் திருந்த அரும்பதக் குறிப்பின்யும் வழங்கினர்கள். சுப்பிரமணிய சாஸ்திரிகளும் நூல்களையும் குறிப்புகளையும் வழங்கித் துணை புரிந்தார்கள். கந்தபுராணத்துத் தெய்வயானை திருமணப் படலத்துக்கும் திருவானைக் காப்புராணத்துக்கும் இவர் உரை எழுதியுள்ளார் எனத் தெரிகின்றது. 1955-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் இவ்வுலக வாழ்வினை நீத்தார்.
சிவசம்புப்புலவர் (1830-1910)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த உடுப்பிட்டி என்னும் ஊரிலே, அருளம்பல முதலியாருக்குப் புலவராகத் தோன்றிவர் இவர். நல்லூர்ச் சரவண முத்துப்புலவர் நல்லூர்ச் சம்பந்தப் புலவர் ஆகியோரிடத்திலே தொல் காப்பியம் முதலிய இலக்கணங்களையும் பாரதம், இராமா யணம் முதலிய இலக்கியங்களையும் இவர் கற்றுணர்ந் தார். இளமைக் காலத்திலேயே கவியாக்கும் வன்மை இவருக்கு இயல்பாக அமைந்திருந்தது. ஈழநாட்டிலே பிரபந்தம் பாடிய புலவர்களுள் மிகுதியான பிரபந்தங் களைப் பாடியவர் இவரேயாவர். இராமநாதபுர மன்னர்

சிவசுப்பிரமணியக் குருக்கள் 115
பாஸ்கர சேதுபதிமீது இவர் கல்லாடக் கலித்துறையும், நான்மணிமாலையும், இரட்டை மணிமாலையும் பாடியுள் ளார். பாண்டித் துரைத்தேவர் மீதும் ஒரு நான்மணி மாலையை இவர் பாடியுள்ளார். பாடுவதில் இவருக் கிருந்த வன்மையை நோக்கி ஆறுமுக நாவலரவர்கள் இவருக்குப் ‘புலவர்" என்னும் பட்டத்தினை வழங் கினர்.
இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வயித்தியலிங்க பிள்ளை, புலோலியூர் ம. தில்லை நாதநாவலர், புலோலி யூர் வ. குமாரசுவாமிப் புலவர். அ. வேன்மயில் வாகனப் புலவர், புலோலியூர் ம. முத்துக்குமாரசுவாமிக் குருக் கள் முதலான பெரும்புலவர்கள் பலர் இவருடைய மாண வராவர்.
இவர் இயற்றிய நூல்கள் -1. மறைசையந்தாதி உரை (1893), 2. யாப்பருங்கலக்காரிகை உரை, 3. கந்தபுராணம்-வள்ளியம்மை திருமணப்படலம்உரை, 4. மயில்வாகன வம்ச வைபவம், 5. பாற்கர சேதுபதி கல்லாடக் கலித்துறை, 6. பாற்கர சேதுபதி நான்மணிமாலை, 7. பாற்கரசேதுபதி இரட்டை மணி மாலை, 3. பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை, 9. கந்தவனநாதர் பதிகம், 10. வல்லிபுரநாதர் பதிகம், 11. செந்தில் யமகவந்தாதி (1888, வல்வை), 12. திரு வேரக அந்தாதி, 13. எட்டிக்குடிப் பிரபந்தம், 14. புலோலி நான்மணிமாலை (1889, வல்வை), 15. திருச் செந்திற்றிருவந்தாதி (1888, வல்வை). சிவசுப்பிரமணியக் குருக்கள்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வட்டுக்கோட்டையிலே தோன்றியவர் இவர். உவில்லியம் நெவின்ஸ் சிதம்பரப் பிள்ளையவர்கள் நாடோறும் யாழ்ப்பாணப் பட்டணத்

Page 60
i 16 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
துக்கு நடந்து நடந்து செல்ல, அவரைப் பின்தொடர்ந்து வழக்கியாற்றுப் பாலம்வரை போய், நன்னுரற் சூத்திரங் களேப் படித்து வந்தவர் எனக் கூறுவர். "இலங்கை மான்மியம் முதலிய பல நூல்களை இயற்றிஞர் எனக் கூறப்படுகின்றது.
சிவப்பிரகாச பண்டிதர் (1864-1916)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நீர்வேலி என்னும் ஊரிலே சங்கரபண்டிதருக்குப் புதல்வராகத் தோன்றிய வர் இவர். தமது தந்தையாரிடத்திலே தொல்காப்பியம் நன்னூல் முதலான தமிழிலக்கணங்களையும், இரகு வமிசம் மாகம் முதலிய சமக்கிருத காவியங்களேயும், முக்த போதம் ஆசுபோதம் முதலிய சமக்கிருத வியாகரணங் களையும் நன்கு கற்றுக்கொண்டார். இவர், கவி புனையும் திறமையும் வாய்ந்திருந்தவர்.
திருச்செந்தூர்ப் புராணவுரை, சிவானந்த லகரித் தமிழுரை முதலான உரைகளும், பாலபாடம், பாலா மிர்தம் முதலான நூல்களும், பிற மொழிபெயர்ப்புக்கள் சிலவும் இவரால் இயற்றப்பட்டனவாகும்.
சிவபாத சுந்தரம், சு. (1877-1953
யாழ்ப்பாணத்தைச் சார் ந் த புலோலியூரிலீ, 1878ஆம் ஆண்டிலே, சுப்பிரமணிய பிள்ளை என்பrருக் குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இவரது தந்தை வ. குமாரசுவாமிப் புலவர், வ. கணபதிப் பிள்ளை, பார்வதி அம்மையார் ஆகியோரும் இவருக்குத் தமிழும் சமக்கிருதமும் கற்பித்தார்கள்.
தென்னிந்தியாவிலே உயர்தர ஆங்கிலக் கல்வி கற்பதற்காகச் சென்ற இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் கலேமாணி (B A.)த் தேர்விலே சித்தியடைந்

சிவானந்தையர், ச, வித்துவான்
தார். அதன்பின், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி வந்து, 1924ஆம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகளாகச் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபராகக் கடமையாற்றினர்.
1939ஆம் ஆண்டிலே இலங்கைக் கல்வி முறையினைத் திருத்தியமைப்பதற்காக நிறுவப்பட்ட ஆணைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுக் கடமையாற்றி வந்தார். அதன்பின் அமைதியான வாழ்க்கையினை விரும்பி, "கந்தவனம்’ என்னும் முருகன் கோயிலுக்கு அண்மையிலே ஒரு திருமடத்தினை நிறுவி அங்கு வாழ்ந்துவந்தார். அங்கே, சித்தாந்த சாத்திரமும் புராணமும் பாடங் கேட்கச் சென்ற மாணவர்களுக்குக் கற்பித்துக்கொண் டிருந்தார். திருக்கேதீச்சரக் கோயிற்றிருப்பணியில் ஊக்கமுடையவராய் உழைத்து, அதற்கென அமைக்கப் பட்ட சபையின் தலைவராகவும் பணியாற்றி வந்தார். கிறித்து சமயத்தவர் சைவ சமயத்தினை இகழ்ந்துரைப் பதையும், சைவர்களை மதம் மாற்றுவதையும் கண்டு மனந்தாங்காது கிறித்து மதத்தைக் கண்டித்துச் சைவ சமயத்தை வளர்த்து வந்தார்.
இவர் இயற்றிய நூல்கள் :-1. சைவபோதம்-1, 11 2. திருவருட்பயன் விளக்கவுரை, 3. சைவக்கிரியை விளக்கம், 4. கந்தபுராண விளக்கம், 5. திருவாசக மணிகள், 6. அளவை நூல், 7. அக நூல், 8. படிப் பிக்கும் முறைகளும் விதிகளும், 9. திருப்பெரு வடிவம், 10. Saiva School of Hinduism, ll. Essentials of Logic, 12. Glories of Saivaism.
சிவானந்தையர், ச. வித்துவான். (1873-1916)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பன்னலை என்னும்
ஊரிலே, சபாபதி ஐயர் என்பாருக்குப் புதல்வராகத்
தோன்றியவர் இவர். இளமையிலே அவ்வூரில் வாழ்ந்த
ሠ•ሠ•=8

Page 61
118 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
புலவரொருவரிடம் கல்வி பயின்றுகொண்டிருந்த இவர், தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்பதற்காக ஏழாலையி லுள்ள உயர்தரப் பாடசாலையொன்றுக்கு அனுப்பப் பட்டார். இராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை யவர்களால் நிறுவப்பட்ட அப் பாடசாலையிலே சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர் அக்காலத் தலைமையாசிரிய ராய் விளங்கிக்கொண்டிருந்தார். புலவரவர்கள் இவருக் குத் தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்பித்ததோடமை யாமல், சமக்கிருத நூல்களையும் முறையே கற்பித்து வந்தார், யாப்பு அணி ஆகியவற்றையும் நன்கு பயின்று கவி யாப்பதிலும் இவர் மிகுந்த திறமையுடையவராய்த் திசழ்ந்தார்.
இவர், பின்பு சிதம்பரத்தை அடைந்து, பச்சையப்ப முதலியாரால் நிறுவப்பட்ட ஆங்கிலப் பாடசாலை யொன்றிலே தமிழ்ப் பண்டிதராகச் சில ஆண்டுகள்வரை பணியாற்றிக்கொண்டிருந்தார். சிதம்பரத்திலே அக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சாத்திரியாரொருவ ரிடம் இவர் தருக்க சங்கிரக நூலைக் கற்றதோடமை யாமல் தருக்க குடார தாலுதாரி' எனப்பட்ட திரு ஞான சம்பந்த பிள்ளையவர்களின் உதவியோடு அவற்றுட் சிலவற்றை மொழிபெயர்த்து நியாயபோதினி, பதகிருத் தியம், அன்னம்பட்டீயம், நீலகண்டீயம் எனத் தமிழில் வெளியிட்டார். நாற்கவிராசநம்பி இயற்றிய "அகப் பொருள் விளக்கம்" என்னும் நூலுக்கு ஓர் உரையும் எழுதி வெளியிட்டார் என அறியக்கிடக்கின்றது. இவ ருடைய புதல்வியாரைப் பண்டிதர் ப. இரத்தினேஸ்வர ஐயர் திருமணஞ் செய்துகொண்டார்.
இவர் இயற்றிய நூல்கள் -1. புலியூர்ப் புராணம், 2. புலியூரந்தாதி, 3. சனி துதி.

சின்ன ஆலிம் அப்பரி 19 சிற்றம்பலப் புலவர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாதகல் என்னும் மாரிலே தோன்றியவர் இவர். இந்தியாவிலுள்ள வேதா renaயத்துக்குச் சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயர் என் பாரிடம் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டு, திரும்பி வந்து தமது ஊரிலே வாழ்ந்தார் எனத் தெரிகின்றது. இருபாலைச் சேஞதிராய முதலி யார், அராலி அருணுசலம் பிள்ளை முதலியோர் இவரிடம் கல்வி கற்றவர்கள் என அறியக்கிடக்கின்றது.
கண்டி மன்னன் மீது "கிள்ளைவிடு தூது’ என்னும் பிரபந்தமொன்றினை இயற்றி, அதனை அரங்கேற்றுவதற் காக அவனிடம் சென்றவர், அம் மன்னன் ஆங்கிலேய ரால் அகப்படுத்தப்பட்டான் என்ற செய்தியினை வழி யிலே கேள்வியுற்று, தமது ஊருக்குத் திரும்பி வந்தார் எனக் கூறப்படுகின்றது.
பின்ன ஆலிம் அப்பா
மட்டக்களப்பினைச் சார்ந்த மருதமுனை என்னும் ஊரில், செய்கு இப்ரகீம் லெப்பை என்பாருக்கும் குறைப் பாத்தும்மா என்பாருக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக்காலத்தில் இவரது பெயர் "மீரா லெப்பை" என வழங்கியது. தமிழிலும் அரபு மொழி யிலும் மிகுந்த புலமையுடையவராய் விளங்கினர். இந்தியாவுக்குச் சென்று மதக்கல்வி பயின்று திரும்பிய இவர் 'ஆலிம்" (மதப் பேரறிஞர்) ஆகித் தொண்டுகள் புரிந்துகொண்டிருந்தார்.
இவர், "ஞானரை வென்ருன்" என்னும் நூலினை
இயற்றியுள்ளார். நீண்டகாலமாக மழையின்றி இருந்த போது, ஆண்டவனை மழை பெய்விக்கும்படி வேண்டுதல்

Page 62
20 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
செய்து இவர் பாடிய பாடல்கள் மழைக் காவியம்" என்னும் பெயருடன் தொகுத்துப் போற்றப்பட்டு வருகின்றன. மருதமுனே ஆ சிரி ய ர் சங்கத்தினர் "ஞானரை வென்றன்" என்னும் நூலினை அச்சேற்றி வெளியிட்டுள்ளனர்.
சின்ன இபுருகீம் மொ தியதீன்
மன்னர்ப் பகுதியிலே தோன்றியவர் இவர். எருக் கலம்பிட்டிக்கு விதானேயாக இருந்தவர். இவரை 'அட்டாவதானி" எனக் கொண்டாடுவர். ஒருநாள் இவர் அட்டாவதானஞ் செய்யும்போது பாடிய பாட லொன்றினை முகம்மது காசிம் என்பார், வேண்டுமெனவே பிழையாக எழுதிக்கொடுத்து அதிற் குற்றம் உள்ளது எனச் சாதித்தார் என்றும், அதனேத் தாங்கமுடியாத வராய், :ஆவென்னு மட்சரத் தாதியென்றறியாத" என்று தொடங்கும் பாடலொன்றினைப் unt 19-(a)f என்றும் கூறுவர். இவர் இயற்றிய பாடல்கள் கிடைத்தில.
சின்னக்குட்டிப் புலவர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழையிலே தோன்றியவர் இவர். மாதகல் சிற்றம்பலப் புலவரிடம் இவர் கல்வி பயின்ருர் எனத் தெரிகின்றது. தெல்லிப் பழையிலிருந்த கனக தண்டிகைக் கனகராய முதலியார் ல்ே ககதண்டிகைக் கனகராயன் பள்ளு' என ஒரு பள்ளு நூல் இயற்றியுள்ளார். இந்நூலின தெல்லிப் பழை வழக்கறிஞர் வ. குமாரசுவாமிப் பிள்ளையவர்கள், விளக்கக் குறிப்புக்களுடன் 1932ஆம் ஆண்டிலே அச்சிற் பதிப்பித்துள்ளார்.

சின்னத்தம்பிப் புலவர், சி. 2
சின்னத்தம்பி உபாத்தியாயர், தா. (1830-1878)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த உடுப்பிட்டி என்னும் ஊரிலே, தனக்காரக் குறிச்சியில், தாமோதரம் பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். தியாகராச பண்டிதரிடம் தமிழிலக்கணவிலக்கியங்களைக் கற்றவர். கணித சோதிட சாத்திரங்களிலும் இவர் மிகுந்த அறிவும் பயிற்சியும் உடையவராய் விளங்கினர். தமது ஊரிலே ஒரு தமிழ்ப் பாடசாலையினை நிறுவி, அரசினர் உதவிப் பணம் பெருது, தாமும் அப்பாடசாலை யில் ஆசிரியராக இருந்துகொண்டு, அதனைச் செம்மை யான முறையில் நடாத்தி வந்த பெருமை இவருக்கு உண்டு. இவர் தமது வாழ்க்கையைச் சைவத் துக்கும் தமிழுக்குமாக அர்ப்பணஞ் செய்து பிரமசாரி யாகவே வாழ்ந்துகொண்டிருந்தார்.
இவர் இயற்றிய நூல்கள் -1. நில அளவைச் சூத்திரம். 2. சோதிடச் சுருக்கம். 3. மதனவல்லி விலாசம். 4. இராம விலாசம். 5. சிவதோத்திரக் கீர்த்தனை. 6. புதுச்சந்நிதி முருகன் பதிகம். 7. விக்கி னேசுவரர் பதிகம். 8. வீரபத்திரர் ஊஞ்சல், 9. வீர மாகாளியம்மன் பதிகம். 10. வீரபத்திரர் சதகம். 11. வீரபத்திரர் பதிகம்.
சின்னத்தம்பிப் புலவர், சி. (1745- )
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த இணுவில் என்னும் ஊரிலே, சிதம்பரநாதர் என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலேயே கவி பாடும் வன்மை பெற்றிருந்தவர். இவர், ஒல்லாந்த அரசினரிடம் சாதனம் எழுதும் உத்தியோகம் பெற் றிருந்தவர் என அறியக் கிடக்கின்றது. அக்காலத்திலே

Page 63
置2易、 ஈழநாட்டின் தமிழ்ச் சுடரி மணிகள்
ஒரு நாள், காத்திராத வகையில், நகர் காவலர் கையில் அ க ப் பட் டு க் காவலில் வைக்கப்பட்டாரென்றும், அப்போது இவர் அக்காவற் கூடத்திலிருந்துகொண்டே தமது வழிபடு தெய்வமாகிய சிவகாமசுந்தரியம்மைமீது ஒரு பதிகம் பாடினர் என்றும், காவலர்கள் இரக்கத் தினுல் இவரை விடுதலை செய்தார்கள் என்றும் கூறுவர்.
இவர் இயற்றிய நூல்கள் -1. பஞ்சவர்ணத் தூது. 2 நொண்டி நாடகம். 3. அநுருத்திர நாடகம். 4. கோவலன் நாடகம், 5. இணுவிற் சிவகாமியம்மை மீது திருவூசல், இரட்டைமணிமாலை, சதகம். சின்னத்தம்பிப் புலவர் வி. (1716-1780)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரில் வாழ்ந்து கொண்டிருந்த வில்லவராய முதலியாருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்தார் என்றும், வீதியிலே மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் விளையாடிக்கொண் டிருந்த இவர், "வில்லவராய முதலியார் வீடு எது? என வினவிய புலவரொருவர்க்குக் கவியினல் விடை யளித்தார் என்றும் கூறுவர். இவர் தந்தையார், ஒரு செய்யுளின் முதலிரண்டு அடிகளையும் இயற்றிவைத்து விட்டு வெளியே சென்று திரும்பி வந்து பார்த்தபோது தன் மககிைய இவரே பின்னிரண்டு அடிகளையும் சீருறப் பாடி வைத்திருந்தமை கண்டு, பெரிதும் மகிழ்ச்சி யடைந்தார் என்றும் கூறுவர். இவருடைய பிரபந்தங் களிலே இவரது இலக்கண அறிவும், இலக்கியப் பயிற் சியும், புலமையும் நன்கு புலனுகின்றன.
இவர் இயற்றிய நூல்கள் -1. மறைசையந்தாதி 2. கல்வளையந்தாதி. 3. கரவை வேலன் கோவை. 4 பருளைப் பள்ளு.

சின்னவப் புலவர் 129
யாழ்ப்பான மக்களின் தேச வழமைச் சட்டத்தின. 1706ஆம் ஆண்டில், திருத்தியமைத்தவர்களுள்ளே இவரும் ஒருவர் என அறியக் கிடக்கின்றது.
சின்னப்பபிள்ளை, சி. வை.
யாழ்ப்பாணத்தைச் சார் ந் த சிறுப்பிட்டியிலே வாழ்ந்துகொண்டிருந்த வைரவநாதருக்குப் புதல்வராகத் தோன்றியவர். சி. வை. தாமோதரம் பிள்ளையவர் களின் தம்பியார வர். இவர், இந்தியாவிலே உயர்ந்த உத்தியோகத்தில் அமர்ந்திருந்தவர். இளைப்பாறிய பின் இலங்கைக்கு வந்து கல்வி விருத்திக்கான தொண்டுகள் பல புரிந்துகொண்டிருந்தார். இலங்கையில் நாவல் இலக்கியம் ஒரு நிறைவான உருவம் பெறும் வகையிலே பல நாவல்களை முதன் முதலாக ஆக்கியளித்தவர் இவரே பாவர். வீரசிங்கன் கதை", "இரத்தின பவானி" "விஜயசீலம்" (1916) ஆகிய நாவல்களை இவர் இயற்றி யுள்ளார். இவற்றுள், விஜயசீலம் ஈழ நாட்டின் வரலாற்றுடன் தொடர்புபட்ட விஜயனின் கதையாகும்.
சின்னவப் புலவர் (1877-1962)
மட்டக்களப்பினைச் சார்ந்த செட்டிபாளையம் என்னும் ஊரில் தோன்றியவர் இவர். இவர் தந்தையார் கணபதிப் பிள்ளைச் சட்டம்பியார்" எனப்பட்ட தமிழா சிரியர் ஆவர். கவிதை புனைவதில் மிகுந்த வன்மை படைத்தவராய் விளங்கிய இவர் பல பாடல்களை இயற்றி யளித்துள்ளார். இவரியற்றிய மழை வேண்டிக் கந்தையன் பேரிற் பாடிய காவடிப் பாட்டு" (1984) இன்றும் மக்கள் உள்ளத்தைக் கவர்வதாய் வழங்கி வரு கின்றது. 'அம்பாரைக் கொலனி", "இலங்கைச் சுதந் திரம்" என இவர் புனைந்த பாடல்களும் அச்சேறி யுள்ளன,

Page 64
124 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
சுப்பிரமணிய சாஸ்திரிகள், ச. (1875-1950)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலோலியிலே தும்பளை என்னும் ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த சபாபதி ஐயர் என்பாருக்குப் புதல்வராக 1875 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 17ஆம் தேதியன்று தோன்றியவர் இவர். தாய் வழிப் பாட்டனுகிய மகாதேவக் குருக்களே, இவருக்கு ஏடு தொடக்கி, தமிழ் சமக்கிருதம் ஆகிய இரு மொழி களையும் கற்பித்து வந்தார். அதன்பின், இவர் தமது தாய் மாமனும் ஆரிய திராவிட மகாபண்டிதருமான முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழிலக்கணவிலக் கியங்களையும், சமக்கிருதம், தருக்கம், வியாகரணம், சோதிடம் ஆகியவற்றையும் முறையே கற்றுக்கொண் டார். இங்ங்ணம் கற்றுத் தேறியபின் இரண்டு ஆண்டு கள் வரை மேலைப் புலோலியிலுள்ள சைவ வித்தியாசாலை யிலே ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந் தார். தமிழிலக்கணவிலக்கியங்களிலும், சமக்கிருதத் திலும், சோதிடத்திலும் இவருக்கிருந்த பெரும்புலமை யைக் கண்ட பெரியோர் அவரைச் ‘சாஸ்திரிகள்" என அழைத்தனர்.
அக் காலத்திலே, யாழ்ப்பாணத்திற் கணிக்கப்பட்டு வெளியிடப்பட்ட பஞ்சாங்கங்கள் சீரான முறையிற் கணிக்கப்படாமையைக் கண்டு, அவற்றிலுள்ள குறை பாடுகளை நீக்கிக்கொள்ளுதல் வேண்டுமெனச் சாஸ்திரி கள் முயன்ருர்கள். இலரது பெரு முயற்சியினலே, பருத்தித் துறையிலிருந்து வாக்கிய கணித பஞ்சாங்க மொன்று ஆண்டுதோறும் வெளிவந்துகொண்டிருந்தது; அப் பஞ்சாங்கத்தினைக் கணித்து இவரே வெளியிட்டு வந்தார். முதலிலே, பிற, அச்சகங்களிலேயே அப் பஞ்சாங்கம் அச்சிடுவிக்கப்பட்டமையால், விலை மிகுதி யானது மட்டுமன்றி உரிய காலத்தில் அச்சிட்டு எடுத்துக்

சுப்பிரமணிய சாஸ்திரிகள், ச. 12
கொள்வதிலும் தொல்லை ஏற்பட்டது. அதனை நீக்கிக் கொள்வதற்காகத் தும்பளையில், தமது இல்லத்திலேயே "சோதிட விலாச யந்திரசாலை’ என்னும் பெயருடன் அச்சகமொன்றினை நிறுவிக்கொண்டனர். சாஸ்திரிகள் பஞ்சாங்கம் கணித்துப் பதிப்பிப்பதுடன் நின்றுவிடாமல், சாதக ரத்னகரம், இருதுசாதகம், பால சிகூடிா மஞ்சரி, சமஸ்கிருத பிரதம பால பாடம், சிவராத்திரி மகிமை முதலான நூல்களையும் தமது அச்சகத்திலேயே பதித்து வெளியிட்டார். 1904ஆம் ஆண்டிலே, தமது தம்பி யாராகிய சோமசுந்தர ஐயரவர்களின் துணையுடன் புதியதொரு அச்சகத்தினைக் கலாநிதி யந்திரசாலை" என்னும் பெயருடன் நிறுவிக்கொண்டனர். அவ்வச்சகத் திலேயே இவரது நூல்கள் யாவும் அச்சேற்றப்பட்டன. இவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும், பாண்டித் துரைத்தேவர், டாக்டர். உ. வே. சாமிநாதையர் ஆகியவர்களுடனும் மிகுந்த தொடர்பு பூண்டிருந்தவர். நாவலரவர்களின் முன்னேராகிய திருநெல்வேலி ஞானப் பிரகாச சுவாமிகள் சமக்கிருதத்தில் எழுதி ஏட்டு வடிவிற் கிடந்த பிரமாண தீபிகா விருத்தி, சிவஞான போதவிருத்தி, சித்தாந்தசிகாமணி ஆகிய சைவ சித்தாந்த நூல்களையெல்லாம், நல்லூர், த. கைலாசப் பிள்ளையவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ம. முத்துக் குமாரசுவாமிக்குருக்களுடன் கூடவிருந்து, அச்சிடுவதற் காகப் பிழையறப் பரிசோதித்துதவினர். சங்கானை, அருணுசல சாஸ்திரியாரவர்கள் (அண்ணுச்சாமிக் குருக் கள்) 'ஆபஸ்தம்ப அபரப் பிரயோகம்" என்னும் சமக் கிருத நூலினை அச்சேற்றியபோதும் அதற்குப் பல திருத்தங்கள் செய்துதவிஞர்.
கோயில்களில் நடைபெறும் புராண படனங்களிலும் பிற இடங்களில் நிகழும் விரிவுரைகளிலும் இவர் பங்கு

Page 65
26 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
பற்றிப் பெரும்பணியாற்றிக்கொண்டிருந்தார். “வித்தி யா விருத்தித் தருமாலயம்" என்னும் பெயருடன் ஒரு நூல் நிலையத்தினையும் இவர் தாம் வாழ்ந்துகொண் டிருந்த இல்லத்திலேயே நிறுவி வைத்துள்ளார்.
இவர், "சொற்பொருள் விளக்கம்" என்னும் தமிழகராதியினை வெளியிட்ட காலத்திலே, சிறந்த தமிழறிஞரும் சோதிட வல்லுநருமான தும்பளை மு. சின்னைய சாத்திரியாரவர்களுக்கும் இவருக்கு மிடையில்-கண்டன மறுப்புப் போர் ஒன்று-நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. (இவ்வாறு கண்டனங் கள் தீட்டிய தமிழறிஞரே-சின்னைய சாத்திரியாரவர் களே அழகிய சிற்றமபலக் கவிராயர் குடும்பத்தினர்க்குக் கல்வி புகட்டிக்கொண்டிருந்தவராவர். 'செட்டி நாடும் தமிழும் பக்கங்கள்: 146-147 நோக்குக.)
இவர் இயற்றிய நூல்கள் -1. கந்தபுராணம்-உற் உற்பத்திகாண்டம் உரையுடன். 2. கந்தபுராணம்அகர காண்டம் உரையுடன். 3. கந்தபுராணம்மகேந்திர காண்டம் உரையுடன். 4. கந்தபுராணம்யுத்தகாண்டம் (பகுதி) உரையுடன். 5. நீதிவெண்பா விரிவுரை. 6. கந்தரனுபூதி யுரை. 7. ஏகாதசிப் புராணக் குறிப்பு. 8. சொற்பொருள் விளக்கம்-தமிழ் அகராதி.
சுப்பிரமணிய பிள்ளை
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மானிப்பாய் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். வைத்தியத்துறையில் மிகுந்த ஊக்கங் காட்டிய இவர், பின்வரும் நூல்களை இயற்றியுள்ளார் : 1. பதார்த்த விஞ்ஞானம் 1887. 2. பால வைத்தியம் 1889, 3. பிரசவ வைத்தியம் 1892.

சுப்பையனர் 127
சுப்பு ஐயர், க.
யாழ்ப்பாணத்தைச் சார் ந் த மானிப்பாயிலே வாழ்ந்துகொண்டிருந்த கதிரேசையருக்கும் அவரது மனைவியாராகிய அன்னப்பிள்ளை அம்மாளுக்கும் புதல்வ ராகத் தோன்றியவர் இவர். இவர் "தம்பையர்" (தம்பு ஐயர்) எனவும்படுவர்.
தமிழிலக்கண இலக்கியங்களை நவாலி கா. தம்பைய ரிடத்தில் இவர் முறையே பயின் ருர். புராண இதி காசங்களுக்குப் பொருள் கூறுவதில் ஒப்பாரும் மிக்காரு மில்லாது இவர் திகழ்ந்தார் என அறியக்கிடக்கின்றது. சோதிடத்திலும் இவருக்கு அறிவும் ஆட்சியும் மிகுதி யெனத் தெரிகின்றது.
இவரிடத்தில் ஆனல் சதாசிவம் பிள்ளையவர்கள் சமக்கிருதத்தையும், காந்த புராணம், காரிகை ஆகிய நூல்களையும் பயின்ருர் எனக் கூறப்படுகின்றது.
சுப்பையர், மே ,
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த காரை தீவிலே (காரை நகரிலே) மேருகிரி ஐயர் என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். தமது தந்தையாரிடத்துக் கல்வி பயின்று, தமிழ் மொழியிலும், சமக்கிருதம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சிறந்த அறிவுடையவராகத் திகழ்ந்தார் என்பர். இசைக்கலையிலும் இவருக்கு நல்ல பயிற்சி அமைந்திருந்ததெனக் கூறப்படுகின்றது.
நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
சுப்பையகுர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணையிலே தோன்றியவர் இவர், மேளகார வகுப்பைச் சார்ந்தவர்

Page 66
128 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவர். இவரை "நட்டுவச் சுப்பையர்” எனவே பலர் வழங்குவர். இவர், இளமையிலே தெல்லிப்பழையி லிருந்த அமெரிக்க மிஷனரிமாரைச் சேர்ந்து சில காலம் கிறித்தவராய் இருந்தார். பின், சைவசமயத்தவராய் மாறி, தமது இறுதிக்காலம் வரை சைவராகவே விளங்கி னர். இவர், ஏழாலையிலே திருமணஞ் செய்து அவ் வூரிலேயே வாழ்ந்துகொண்டிருந்தார் என அறியக் கிடக்கின்றது.
வண்ணுர்பண்ணைச் சிவன் கோயிலிலே அக்காலத் திருந்த தாசிகளுள் ஒருத்தியாகிய கனகி" என்பவள் பேரில் "கனகி புராணம்" என ஒரு "புராணம்" பாடி யுள்ளார். இந்நூல் முழுவதும் ஒருங்கே கிடைக்கப்பெற வில்லை. நவாலியூர், திரு. ந. சி. கந்தையாபிள்ளையவர் கள் தமக்குக் கிடைத்த கவிகள் சிலவற்றைத் தொகுத்து 1937ஆம் ஆண்டில் வெளியிட்டார்கள். வட்டுக் கோட்டை, மக்கட்கவிமணி, திரு மு. இராமலிங்கம் அவர்க்ள், முந்திய கவிகளுடன் தமக்குக் கிடைத்த கவிகளையும் வைத்தாராய்ந்து, பொழிப்புரை குறிப்புரை களுடன் அழகியதொரு பதிப்பினை 1961ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்கள். (இப்பாடல் முழுவதையும் எடுத்துக் கொடுப்பவர்களுக்கு 500 ரூபா பரிசாக வழங்குவதெனச் சில ஆண்டுகளுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் தீர்மானித்து முயன்ருர்களாம்!
சுலைமான் லெப்பை w
இவர் தோன்றிய இடம் எதுவெனத் தெரியவில்லை. தமிழ்ப் புலமையுடையவராய் விளங்கினர் என்றும், அ. அசனலெப்பை அவர்களின் சிறந்த நண்பர் என்றும் தெரியவருகின்றது. அசனலெப்பையவர்கள் இயற்றிய நூல்களுக்கு இவர் பாயிரம் செய்திருக்கின்றர்.

சுவாமிநாத பண்டிதர், சி. 129
சுவாம்பிள்ளைப் புலவர் (1784-1844)
யாழ்ப்பாணத்துப் பண்டத்தரிப்புக் கோயிற்பற்றி லமைந்த விளான் என்னும் ஊரிலே வாழ்ந்துகொண் டிருந்த பேதுருப்பிள்ளையவர்களுக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர்.
சில நூல்களிலே அமைந்து கிடந்த காப்புச் செய்யுள் களைத் தமது கடவுளுக்கேற்ற காப்புகளாக இவர் அமைத்துப்பாடிச் சேர்த்துக்கொண்டார் எனக் கூறப் படுகின்றது.
இவர் இயற்றிய நூல்கள் : 1. கடவுண் மணிமாலை. 2. வெல்லை மணிமாலை, 3. கணக்கதிகாரம்.
சுவாமிநாத பண்டிதர், சி.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணையிலே கந்தர்மடம் என்னும் ஊரில், சின்னத்தம்பி என்பாருக்கு புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்தில் அவ்வூரிலுள்ள பாடசாலையொன்றில் இவர் கல்வி பயின்றுகொண்டிருந்தார். அதன் பின், வித்துவ சிரோமணி பொன்னம்பலப் பிள்ளையவர்களிடம் சிவ குருநாதபிள்ளை என்பாருடன் சேர்ந்து தமிழிலக்கண இலக்கியங்களைப் பயின்ருர்.
பொன்னம்பலப் பிள்ளையவர்கள் தாம் புராண படனத்துக்காகச் செல்லுந் திருக்கோயில்களுக்கும் மடங் களுக்கும் புராணம் வாசிப்பதற்காக இவரை அழைத்துச் செல்வதுண்டு. புராணபடன வேளைகளிலே பொன்னம் பலப் பிள்ளையவர்கள் எடுத்துரைக்கின்ற சொல்நயம், பொருள் நயம், விளக்கவுரைகளையெல்லாம் இவர் உற்றுக் கேட்டுத் தமது அறிவினை நன்கு விருத்தி செய்துகொண் டார். நாளடைவில், பொன்னம்பலப் பிள்ளையவர்கள்

Page 67
130 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
பொருள்கூறும் அழகும் திறனும் இவருக்கும் கைவந்து விட்டது. இலங்கையின் தென்கோடியிலமைந்துள்ள காலியிலே வியாபாரஞ் செய்துகொண்டிருந்த நாட்டுக் கோட்டைச் செட்டிமார் அங்குள்ள சிவன் கோயிலிற் பெரிய புராண படனஞ் செய்வதற்காக ஒருமுறை பொன்னம்பலப் பிள்ளையவர்களை அழைத்தார்கள். அவர்கள், செல்ல முடியாமலிருந்தமையால் சுவாமிநாத பண்டிதரவர்களையே அனுப்பி வைத்தார்கள். இவர் அங்குச் சென்று புராண படனத்தைச் செவ்வனே முடித்து, அவர்கள் அன்புடனளித்த பொருளையும் பெற்றுக் கொண்டு திரும்பினர்கள். பின், தேவ கோட்டை, நாட்டுக்கோட்டை முதலிய செட்டி நாட்டுப் பகுதிகளுக்கும் இவர் சென்று புராண படனங்கள் நடாத்தியதுண்டு. செட்டிநாட்டில் இவருக்குப் பெருமதிப்பு ஏற்பட்டமையால் இவர் அங்கே தங்கியிருந்து செட்டிமார்களுடைய பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருக்க நேர்ந்தது. இவர் அங்கே தங்கியிருந்த காலத்தில் இந்திய நாட்டுப் புலவர் களுடனும் நெருங்கிப் பழகி நட்புரிமை பூண்டிருந்தார். அக்காலத்தில் இவருக்கு ஆதீனங்களின் தொடர்பும் ஏற் படுவதாயிற்று. சிதம்பரத்தில் இவர் தங்கியிருந்த போது சபாபதி நாவலரவர்களிடமிருந்து சிவஞான பாடியத்திற் சில பாகங்களைப் பெற்று, அச்சிட்டு வெளிப்படுத்தி யுள்ளார். சென்னையிலே இவருக்கு ஒர் அச்சகமும் இருந்ததாகத் தெரிகின்றது. மூவர் தேவாரத்தினைப் பல பிரதிகளோடு ஒப்பு நோக்கி வெளியிட்டதுடன், திருக்கோவை யாருண்மை என்னும் நூலும் இவரால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திருச்செந் தூரிலே இவர் ஒரு பாடசாலையை அமைப்பித்துச் சில காலம்வரை அதனைச் செவ்வனே நடாத்தி வந்ததுமுண்டு.

செகராசசேகரன் 13i
இவர், மேலைப்புலோலியூர், நா. கதிரைவேற் பிள்ளை யவர்களுடன் மிகுந்த நண்புடையவராய் விளங்கினர் என்றும், அருட்பா மறுப்பு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலே அவருக்கு மிகுந்த துணை யளித்தார் என்றும் கூறப்படுகின்றது.
சுவாமிநாதர், அ. (1819- )
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மானிப்பாயிலே அருணு சலம்பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்தில், மானிப்பாய் வேரகப் பிள்ளையார் கோயிலில் கந்தபுராண படனம் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, புராணத்தைப் படித்துக் கொண்டிருந்த இவர் இராகத்தைத் தவறுபட இசைத் தாரென்றும், பொருள் சொல்லிக் கொண்டிருந்தவர் இவரைப் பழித்தாரென்றும், அதனுல் இவர் இந்தியா வுக்குச் சென்று பல்லாண்டுகளாக இசை பயின்று திரும்பி இசை வல்லாராகத் திகழ்ந்தார் என்றும் கூறப்படு கின்றது. இசை பாடுவதிலன்றி நாடகம் இயற்று வதிலும் இவர் வன்மை மிக்கவராய் விளங்கினர் என்று தெரிகின்றது. "இராம நாடகம்", "தருமபுத்திர நாடகம்" ஆகிய நாடகங்களை இவர் இயற்றியுள்ளார்.
செகராசசேகரன்
யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த இம்மன்னன் பரராசசேகர மன்னரின் தம்பி ஆவன்; கனக சூரிய சிங்கையாரிய மன்னரின் புதல்வன். யாழ்ப் பாணத்திலே தமிழ்ச் சங்கமொன்றினை நிறுவித் தமிழ் வளர்த்தவன். அழிவுற்ற "சரசுவதி மகாலயம்" என்னும் நிலையத்தினைப் புதுக்குவித்து நடாத்தி வந்தவன். இவன் 'தக்கிண கைலாச புராணம்" என்னும் நூலினை இயற்றியவனவன். இவனது ஆட்சிக் காலத்தில் சோம

Page 68
132 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
ஐயர் என்பார் செகராச சேகரமாலை" என்னும் சோதிட நூலினை இயற்றியுள்ளார். செகராசசேகரம், *பரராசம்சேகரம்", "அங்காதிபாதம்" ஆகிய வைத்திய
நூல்களும் இம்மன்னனின் ஆட்சிக் காலத்தில் இயற்றப் பட்டனவே. இவ்வைத்திய நூல்களை, ஏழாலை வைத்தியர் ஐ. பொன்னையா அவர்கள் ஆய்ந்து அச்சிட்டு வெளிப் படுத்தியுள்ளார்.
இம்மன்னன் காலத்திலே, பண்டிதராசர் என்னும் புலவரும் "தகூதிண கைலாச புராணம்" என்னும் பெய ருடன் ஒரு புராணத்தினை இயற்றியுள்ளார் என அறியக் கிடக்கின்றது. செகராசசேகர மன்னனல் 632 விருத்தப் பாக்களால் இயற்றப்பட்ட தக்கிண கைலாசபுராணம்' அரசகேசரியின் பாயிரத்தினைக் கொண்டதாய் அமைந் துள்ளது. பண்டிதராசர் இயற்றிய நூலுக்கு, கவிவீர ராகவன் என்னும் புலவர் பாயிரம் அளித்துள்ளார்.
செந்திநாதையர், காசிவாசி. (1848-1924)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த ஏழாலை என்னும் ஊரிலே, சிந்நய ஐயர் என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். ஏடு தொடக்கப் பெற்ற பின், புன்னலைக் கட்டுவன் என்னும் ஊரில் வாழ்ந்துகொண் டிருந்த தமது மாமனராகிய கதிர்காமையரிடத்திலே தமிழும் சமக்கிருதமும் கற்று வந்தார். பின், யாழ்ப் பரண மத்திய கல்லூரியிற் சேர்ந்து ஆங்கிலம் கற்று வந்தார். இரு ப து வயதுடையவராயிருந்தபோது ஆங்கிலக் கல்வி பெறுவதை நிறுத்தி விட்டு, நல்லூர்ச் சம்பந்தப் புலவரிடத்தே தமிழிலக்கணவிலக்கியங்களை முறையாகக் கற்று வந்தார். 1871-ஆம் ஆண்டிலே, இவர் தமது தந்தையாருடன் இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள திருக்கோயில்களைத் தரிசித்துக் கொண்டு

செந்திநாதையர், காசிவாசி 13
திரும்பி வந்தார். அடுத்த ஆண்டிலே நாவலரவர்களால் வண்ணுர் பண்ணையிலே நிறுவப்பட்ட சைவ வித்தியா 1%லயில் ஆறு ஆண்டுகளும், அவரால் நிறுவப்பட்ட ஆங்கில வித்தியாசாலையிலே ஓர் ஆண்டும் ஆசிரியராக விருந்து பணியாற்றிக் சொண்டிருந்தார். 1878ஆம் ஆண்டிலே, ஆசிரியத் தொழிலிலிருந்து விலகி இந்தியா வுக்குச் சென்ருர். இந்தியாவிலே திருவனந்தபுரத்துக்கு சென்ற இவர், திருவனந்தபுரப் பிரதம நீதிபதியாய் விளங்கிய தா. செல்லப்பா பிள்ளையவர்கள் துணையாலும் ஆறுமுக நாவலரவர்கள் அளித்த குணநலச் சான்றி தழின் துணையாலும், அங்கு வாழ்ந்து கொண்டிருந்த சுப்பா சாஸ்திரியார், அனந்தகிருஷ்ண சாஸ்திரியார் ஆகி யவர்களிடம் சமக்கிருத காவியம், வியாகரணம், தருக்கம் முதலியவற்றைக் கற்றுக்கொண்டிருந்தார்.
அதன் பின், திருச்செந்தூர் பழனி ஆகிய திருத்தலங் களைத் தரிசித்துக் கொண்டு தமது தந்தையார் அழைப் பின்படி யாழ்ப்பாணம் திரும்பினர். 1880ஆம் ஆண்டிலே கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்த தம்பையா முதலி யாரின் வேண்டுகோளின்படி கொழும்புக்குச் சென்று அவருடைய தருமசத்திரத்திலே ஏறக்குறைய ஆறுமாத காலம்வரை சைவ சித்தாந்த விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தார். பின் அங்கிருந்து கதிர்காமத்துக்குச் சென்று அக்கோயிலிலிருந்து கந்த புராணத்தினைப் பன்னிரண்டு நாட்களுக்குள்ளே படித்து முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்தை அடைந்தார். 1882ஆம் ஆண்டிலே இவர் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று திருநெல்வேலியிலுள்ள சைவப் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1883ஆம் ஆண்டிலே திருநெல்வேலி முன்சீப் சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் நடாத்திவந்த 'சுஜனமநோரஞ்சனி” என்னும்
*・鼻・一9

Page 69
134 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணி யாற்றத் தொடங்கினர். அக்காலத்திலே, தமக்கு ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் கோயில்களிலும், சமயச் சபைகளிலும், மடங்களிலும் அரியவிரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தார். 1888ஆம் ஆண்டிலே 'அமிர்த போதினி” என்னும் வார வெளியீடு ஒன்றினைத் திருப் பற்றுாரிலிருந்து சில காலம் வெளியிட்டு வந்தார்.
1888ஆம் ஆண்டு தொடங்கி 1898ஆம் ஆண்டு வரை இவர் காசியிலே வசித்து வந்தமையால் இவர் சகா சிவாசி செந்திநாதையர்’ எனப்பட்டார். 1902ஆம் ஆண்டிலே திருப்பரங்குன்றத்துச் சந்நிதி வீதியிலே வைதிக சுத்தாத்துவித சைவ சித்தாந்த வித்தியா சாலை" என்னும் பெயருடன் ஒரு வித்தியாசாலையினை நிறுவி, அதிலே தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கற்பித்து வந்தார்.
கருங்குழி இராமலிங்க பிள்ளையின் பாடல் காரண மாகப் புலோலியூர் நா. கதிரைவேற்பிள்ளையவர்களுக்கும் சென்னையிலிருந்தோர் சிலருக்குமிடையிலே சென்னைத் தலைமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிற் சாட்சி யளித்தவர்களுள் இவரும் ஒருவராவார்.
தேவகோட்டை, அரு. சோம. சோமசுந்தரச் செட்டியாரவர்களும், மெ. அரு. நா. இராமநாதச் செட்டியாரவர்களும் அளித் த பொருளுதவியைக் கொண்டு 1906ஆம் ஆண்டிலே, "செந்திநாதைய சுவாமி யந்திரசாலை" என்னும் அச்சகமொன்றினை நிறுவினர். அவ்வச்சகத்திலேயே இவர் இயற்றிய நூல்களுட் பெரும்பாலானவை வெளியிடப்பட்டன.
இவர் இயற்றிய நூல்கள் -1. கந்தபுராண நவ நீதம். 2. ஞானரத்தினவளி (1888). 3. சைவ வேதாந்

செய்கு அலாவுதீன் புலவர் 35
திம், 4. தேவாரம் வேதசாரம். 5. தத்துவ விளக்கம் மூலமும் உரையும் (1918), 6. சிவஞானபோத வசனலங் காரதீபம். 7. வஜ்ரடங்கம். 8. வச்சிரதண்டம், 9. சாண் rத்திரியப் பிரசண்டமாருதம். 10. ஞானபோதவிளக்கச் குருவளி. 11. சிவனுந்தேவன என்னுந் தீய நாவுக்கு ஆப்பு. 12. வீரபத்திராஸ்திரம். 13. விவிலிய குற்சித கண்டன திக்காரம். 14. விவிலிய குற்சிதக் குறிப்பு 1. தாந்திரிக துண்ட கண்டன கண்டனம். 16. மகா வுக்கிர வீரபத்திராஸ்திரம் (1915). 17. வைதிக கீத்தாத்துவித சைவசித்தாந்தப் படம், 18. வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவப்பட வினவிடை. 19. பூg சீகாழிப் பெருவாழ்வின் ஜீவகாருண்ய மாட்சி (1907). 20. நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழி பெயர்ப்பு.
செப்பறைச் சிதம்பர சுவாமிகள்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் இவர். இந்தியா விலே சிதம்பரத்திலும் திருநெல்வேலியிலும் செப்பறை யிலும் வாழ்ந்துகொண்டிருந்து, தில்லையில் இன்றும் நின்று நிலவும் சிவஞானத் திருத்தளியை நிறுவியவ ராவர். அப்பர் சுவாமிகள் திருவிருத்தத்துக்கும் சிவப் பிரகாசத்துக்கும் செவ்விய உரை வகுத்துள்ளார். தொல்காப்பியச் சண்முகவிருத்தி மறுப்பு என்னும் கண்டன நூலும் இவரால் எழுதப்பட்டதேயாகும்.
ரெய்கு அலாவுதீன் புலவர்
புத்தளத்தைச் சேர்ந்த கரைத்தீவு என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். பள்களிக்கூடத்திற் கல்வி பயிலும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லையாயினும், இயற்கை யாகக் கவிபாடும் ஆற்றல் இவருக்கு அமைந்திருந்தது .

Page 70
136 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
என அறியக்கிடக்கின்றது. இடைக்காலத்தில் இவர் தமது கண்பார்வையை இழந்துவிட்டார் என்றும், தம்முடன் பழகுவோரை அவரவர் குரலிலிருந்தே மட்டிட்டுக்கொள்ளும் ஆற்றல் மிக்கவராயிருந்தார் என்றும் கூறுவர். புலவரவர்கள் பிராணுயாமம் செய் பவர் என்றும், அதனைக் குறித்துச் ‘சர நூல்" என்னும் பெயருடன் தத்துவஞானம் சிந்துவதாய் ஒரு நூல் இயற்றினர் என்றும் தெரிகின்றது. அது வெளியிடப்பட வில்லை. இவரியற்றிய வழிநடைச் சிந்து" என்னும் நூலும் கிடையாதொழிந்தது.
இவரியற்றியவற்றுள், "நவவண்ணக் கீர்த்தனை
என்னும் நூலும், திரு. அ. வி. மயில்வாகனன்தொகுத்து வெளியிட்ட சில பாடல்களுமே இதுவரை கிடைத்தவை யாகும். புளிச்சான்குளத்தினைச் சேர்ந்த அலி உதுமான் என்பார் இயற்றிய "கீர்த்திமஞ்சரி’ என்னும் நூலினை இவர் விதத்துப் பாடியுள்ளார்.
செய்கு முஸ்தபா
இலங்கையின் தெற்குப் பாகத்திலுள்ள வேர்விலை என்னும் ஊரிலே இவர் தோன்றினர். இஸ்லாம் தத்து வங்களை எடுத்து விளக்குகின்ற நூல்களை இவர் இயற்றி ஞர் எனத் தெரிகின்றது. இவர் இயற்றியவற்றுள் * மெய்ஞ்ஞானத் தூது" என்னும் நூல் மட்டும் இப்போது கிடைத்துள்ளது. செய்குமுஸ்தபா அலியுல்லா
இலங்கையின் தெற்குப் பாகத்திலுள்ள வேர்விலை என்னும் ஊரிலே வாழ்ந்துகொண்டிருந்த பவா ஆதம்
என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். மீஸான் மாலை" (1864) என்னும் நூலினை இவர்

செல்லையா, நெ. வை. 137
இயற்றியுள்ளார். இஸ்லாம் மதத்தின் உயர்ந்த தத்துவங் க%ள எடுத்துரைப்பது இந்நூல். இந்நூலுக்கு இவ ருடைய புதல்வரான செய்கு முகம்மது உரையெழுதி இருக்கிருர்,
செல்லப்பா பிள்ளை, தா., B.A., B.L.
யாழ்ப்பாணத்திலே தோன்றி, திருவனந்தபுரத்தில் பிரதம நீதியரசராகப் பணிபுரிந்துகொண்டிருந்தவர் இவர்; "வஞ்சி மாநகர்" என்னும் ஆராய்ச்சி நூலினை எழுதிய திரு. தா. பொன்னம்பல பிள்ளையவர்களின் சகோதரர். யாழ்ப்பாணச் சைவபரிபாலன சபையினை நிறுவியோருள் இவரும் ஒருவராவர். ஆங்கில இந்து சாதனப் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராகக் கடமையாற்றியவரும் இவரேயாவர்.
செல்லையா, நெ. வை. (1878-1940)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணையிலே வைத்தியலிங்கம் என்பாருக்கும் அவர் மனைவியாரான சீனியம்மாளுக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக்காலத்திலே அவ்வூர்ப் பாடசாலையிலேயே கல்வி பயின்றுகொண்டிருந்த இவர், ந. ச. பொன்னம்பலம் பிள்ளையவர்களிடத்தில் புராணங்கள், இலக்கியங்கள் இலக்கணங்களைக் கற்றுக்கொண்டார்.
1925ஆம் ஆண்டிலே, சிங்கப்பூர் சென்று ஈப்போ நகரிலே திருவள்ளுவர் கலாசாலையின் தலைமையாசிரிய ராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய எட்டு ஆண்டுகளின் பின் இலங்கைக்குத் திரும்பி வந்து, கொழும்பு நகரில் எத்தனையோ பலருக்குக் கல்வி கற்பித் துக்கொண்டிருந்தார். நூல்களை எழுதுவோருக்கும் நூல் களைப் பதிப்பிப்போருக்கும் இவர்புரிந்துகொண்டிருந்த

Page 71
139 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
உதவிகள் பல. யாழ்ப்பாண வரலாற்றினைத் தெள்ளதீ தெளிய ஆராய்ந்துகொண்டிருந்த முதலியார் செ. இராச நாயகம் அவர்களுக்கு இவர் அளவிறந்த உதவிகள் புரிந்து ஆராய்ச்சித்துறை சிறப்பெய்துமாறு தொண் டாற்றிக்கொண்டிருந்தார். இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் அக்காலத்து இலக்கிய இதழ்களிலும் நாளிதழ்களிலும் வெளிவந்துகொண்டிருந்தன.
இவர் இயற்றிய நூல்கள் :-1. அரிநாம தோதீ திரம், 2. ஆத்மாநுபவ தீபிகை, 3. ஆராய்ச்சிக் கட்டு ரைகள், 4. இரமண மகரிஷி பஞ்சரத்தினம், 5. ஈப்போ தண்ணீர்மலை வடிவேலர் மும்மணிக்கோவை, 6. ஊஞ்சல், பதிகம், 7. ஒழுக்க மஞ்சரி, 8. கதிரை நான் மணிமாலை, 9. காந்தி இயன்மொழி வாழ்த்து, 10. திருமால் அவதார நாமாவளி. 11. நல்லைச் சண்முக மாலை, 12. நல்லைச் சுப்பிரமணியர் திருவிருத்தம், 13. நாவலர் பதிகம், 14. பாலர் பாடல், 15. மதுவிலக்குப் பாட்டு, 16. வடிவேலர் திருவிருத்தம், 17. வண்ணைத் திருமகள் பதிகம், 18. வண்ணை வேங்கடேசப் பெருமாள் ஊஞ்சல்.
செல்லையா, மு.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினர். "ஈழ கேசரி’ வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து "அநுசுயா' என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வாஞெலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப்

செல்லையா பிள்ளை, சி., திக்கம். 139
போட்டியிலே, இவர் இயற்றிய "புதிய வண்டுவிடு தூது’ என்னும் கவிதை முதற் பரிசினைப் பெறுவ தாயிற்று. இவர், வளர்பிறை" குமாரவேள் பதிகம்" ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
செல்லையா, ஜே. வி.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வட்டுக்கோட்டையி லுள்ள "யாழ்ப்பாணக் கல்லூரி"யில் நீண்டகாலம் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் இவர். 1921ஆம் ஆண்டளவில் அரசியலிலும் ஈடுபட்டு, வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர். 50 ஆண்டுகள்வரையில் யாழ்ப்பாணக் கல்லூரியில் விளங்கும் அரிய நூலகத்திலுள்ள ஆங்கில நூல்களையெல்லாம் துருவித் துருவிப் படித்த இவர், 1936ஆம் ஆண்டு தொடக்கமாகத் தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடு காட்டத் தொடங்கினர். பழந்தமிழ் இலக்கிய நூல்களை யெல்லாம் நன்கு பயின்ற இவர் "பத்துப்பாட்டு" என்னும் நூலினை, செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தியற்றியுள்ளார்.
செல்லையா பிள்ளை, சி., திக்கம்,
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலியில், நொத் தாரிசு சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகத் தோன் றியவர் இவர். யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் திருக் கோயில்களுள் ஒன்முக விளங்கும் கந்தவன ஆலயத்தின் ஆதீனகர்த்தராக விளங்கி, அத் திருக்கோயிலின் பூசை கள் விழாக்கள் யாவற்றையும் செவ்வியதொரு முறையில் நடாத்துவித்து வந்தவர். சைவ சித்தாந்த சாத்திரங் களிலும் பெரிய புராணத்திலும் மிகுந்த புலமை

Page 72
140 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
பட்ைத்த இவர், துகளறுபோதத்துக்கு ஓர் அரிய உரை வகுத்து வெளியிட்டுள்ளார். பெரிய புராணம், கந்த புராணம் ஆகியவை புராணப் படனமாகப் படிக்கப் பெறும் திருக்கோயில்களுக்குச் சென்று பயன் சொல்லி யும் விரிவுரையாற்றியும் வருவது இவருடைய பெரும் பணியாகவிருந்தது. பெரிய புராணத்திலுள்ள சிறந்த பாடல்கள் பலவற்றுக்கு இவர் உரை விளக்கங்களும் எழுதியுள்ளார்.
செவ்வந்திநாத தேசிகர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரணவாய் என்னும் ஊரிலே, திருஞானசம்பந்த தேசிகர் என்பவருக்கும் அவரது மனைவியாராகிய சிவபாக்கிய அம்மையாருக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இவர் பிறந்து சில ஆண்டுகளுக்கிடையில் இவருடைய தந்தையார் இறந்து விட்டார். திருஞானசம்பந்த தேசிகரின் தம்பியாரான நமசிவாய தேசிகர், இவரையும் இவருடைய தமையனு ராகிய கயிலாயநாத தேசிகரையும் வளர்த்து வந்தது மன்றி. இவர்களுக்குத் தாமே தமிழ் சமக்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கற்பித்தும் வந்தார். அக்காலத்திலே சுன்னகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிராசீன பாடசாலை யிலே இவர்களைச் சேர்த்துவிட்டால் இவர்கள் சிறந்த கல்வி பெறுவார்கள் எனக் கருதி, அப் பாடசாலையிலே சேர்க்கப்பட்டனர். மகாவித்துவான் சி. கணேசையர் அவர்களிடம் இவர்களிருவரும் தமிழிலக்கணங்களைப் பயின்ருர்கள் என்றும், சித்தாந்த நூல்களை நன்கு ஆராய்ந்து கற்றர்கள் என்றும் கூறப்படுகின்றது.
செவ்வந்திநாத தேசிகர், தமது இளமைக் காலத்தி லேயே கவி புனையும் வன்மை பெற்றிருந்ததுமன்றிக் கவி

சேகு மதாறு சாகிப் புலவர் 4.
யிதயம் தெள்ளிதிற் புலப்படுமாறு விளக்கிக்காட்டுந் திறமையும் பெற்றிருந்தார் எனக் கூறுவர். தமிழின் ஆக்கம் கருதியவராய் இவர், கரணவாயிலே, வித்தியா விருத்திச் சங்கம்" என ஒரு சங்கத்தினையும், ஒரு வித்தியா சாலையையும் தொடக்கி நடாத்திவந்தார். அவ்வித்தியா சாலைக்கு அரசாங்க நன்கொடைகளும் கிடைத்தன. அவ் வித்தியா சாலையிலே திங்கடோறும் தமிழ் விரிவுரைகளும் சைவ விரிவுரைகளும் நடைபெறுவதற்கும் ஒழுங்குகள் செய்தமைக்கப்பட்டன. பிறவூர்களிலுள்ள சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்கி இவர் இயற்றிய விரிவுரைகளும் பலவாகும். இவரிடம் கல்வி பயின்ற மாணவர்களும் பலராவர்.
சின்னத்தம்பிப் புலவரால் இயற்றப்பட்ட "கரவை வேலன் கோவை"யினை அச்சேற்றுவதற்காக ஆராய்ந்து செப்பமிட்டு உதவியதுடன், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்களின் பிரபந்தங்களையெல்லாம் தொகுத்து அச்சேற்றியவரும் இவரேயாவர்.
இவர் இயற்றிய நூல்கள் :-1. மாவைக் கந்தசுவாமி பேரில் மும்மணிமாலை. 2 நல்லூர்க் கந்தசுவாமி பேரில் கோவை, 3. தமிழ்மொழியாராய்ச்சி.
சேகு மதாறு சாகிப் புலவர்
மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரிலே மீரான்குட்டி என்பாருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர் இவர், "இறைவன் பேரில்
வேண்டுதல்", "முகையதின் ஆண்டகைமீது வேண் டுதல்", "நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை பேரில் ஒருபா வொருபஃது", "புசற் காவியம்", "பிள்ளைக்
காவியம்" எனப் பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

Page 73
14 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
சேதிை:ாய முதலியார் (1750-1840)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த தென்கோவையிலே இருபாலை என்னும் ஊரில், நெல்லைநாத முதலியாருக்குப் புதல்வராகத் தோற்றியவர் இவர். தமது தந்தையா ரிடத்திலும், கூழங்கைத் தம்பிரான், மாதகல் சிற்றம்பலப் புலவர் ஆகியோரிடத்திலும் தமிழிலக்கணவிலக்கியங் களைக் கற்ருர். ஆங்கில மொழியிலும் போர்த்துக்கேய மொழியிலும் இவருக்கு நிரம்பிய புலமை இருந்ததாகத் தெரிகின்றது. நீதிமன்ற நியாயவாதியாகவும், மொழி பெயர்ப்பாளராகவும், மணியகாரராகவும் இவர் பணி யாற்றிக் கொண்டிருந்ததுண்டு.
நல்லூர் ஆறுமுக நாவலர் இவருடைய மாணவ ராவர். நல்லூர் சரவணமுத்துப் புலவர், நீர்வேலி பீதாம்பரப் புலவர், தென்கோவை அம்பலவாண பண் டிதர் ஆகியோரும் இவருடைய மாணவரென்று அறியக் கிடக்கின்றது. ஐரோப்பிய உத்தியோகத்தரும் பலர் இவரிடம் தமிழ் பயின்றதுண்டாம். நல்லூர்க் கந்த சுவாமி கோயிலிலே முதன் முதலாகப் புராண விரிவுரை செய்யத் தொடங்கியவர் இவரே என்பர். இவருக்குப் பின் சரவண முத்துப் புலவரும். அவருக்குப்பின் ஆறுமுக நாவலரும், அவருக்குப்பின் பொன்னம்பலப் பிள்ளையும் அதனை முறையே தொடர்ந்து நடாத்தி வந்தனர் எனத் தெரிகிறது. மானிப்பாயில் வெளியிடப்பட்ட தமிழ் அகராதி தொகுக்கப்பட்டபோது இவரே முதல்வ ராயிருந்து தொகுத்தனர் என அறியக்கிடக்கின்றது.
இவர் இயற்றிய நூல்கள் :- 1. நல்லை வெண்பா, 2. நல்லையந்தாதி, 3. நல்லைக் குறவஞ்சி, 4. நீராவிப் பிள்ளையார்மீது கலிவெண்பா, 5. மாவிட்டபுரம் சுப்பிர மணியக் கடவுள்மீது ஊஞ்சல் பதிகம் ஆதியன.

சோமாஸ்கந்த பண்டிதர் 243
சோமசுந்தரப் புலவர், க. (1878-1953)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவாலியூரிலே கதிர் காமர் என்பார்க்கும் இலக்குமியம்மையாருக்கும் புதல்வ ராகத் தோன்றியவர் இவர், கவிதைகள் புனைவதில் மிகுந்த திறமைபெற்று விளங்கியவர். சைவ சித்தாந் தத்திலும், கந்தபுராணத்திலும் தடித்த பற்றுடையவர். இளமைக் காலத்திலேயே ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் வரை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சைவசித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய "உயி ரிளங்குமரன்" என்னும் ஒரு நாடகத்தினையும், "இலங்கை வளம்" என்னும் நூலினையும் பல்லாயிரக் கணக்கான தனிப் பாடல்களையும் பாடி அளித்துள்ளார். பனையின் வரலாறும் பயனும் பற்றியதாய்த் தால விலாசம்" என இவரால் எழுதப்பட்டிருக்கும் நூலானது பொருட்செறிவும் பொருணயமும் கொண்டதெனப் போற்றப்படுகின்றது. சிறுவர்களுக்கென இவர் பாடிய "கத்தரி வெருளி" ஆடிப் பிறப்பு", "ஆடு கதறியது" முதலான பாடல்கள் இன்றும் பாலர்முதற் பண்டிதர் வரை எல்லோரது உளங்களையும் ஈர்த்துக் கவர்வனவாய் அமைந்துள்ளன.
கதிர்காமம், நல்லூர், கந்தவனம் ஆகிய திருக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுள் மீது ஆரா அன்பினுல் இவர் பாடித் தொகுத்துள்ள பாடல் களும் பற்பலவாகும்.
சோமாஸ்கந்த பண்டிதர் ( -1931)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த தாவடி என்னும்
ஊரிலே தோன்றியவர் இவர். மகாவித்துவான் கணே
சையரவர்களுடன் சேர்ந்து வித்துவசிரோமணி பொன்

Page 74
144 ஈழநாட்டின் தமிழ்ச் சுடரி மணிகள்
னம்பலப்பிள்ளையவர்களிடம் கல்வி கற்றவர். யாழ்ப் பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சித்தாந்த சபையிலே செயலாளராகப் பணிசெய்து கொண்டிருந்தவர். சுன் னகம் குமாரசுவாமிப் புலவர் இந்தியாவுக்குச் சென்ற பொழுது அவருடன் கூடிச்சென்று பற்பல இடங்களைத் தரிசித்தவர். புலவரவர்களுடன் மதுரைத் தமிழ்ச் சங்க துக்குச் சென்றிருந்த வேளையில், பாண்டித்துரைத் தேவர் கேட்ட இராமாயணச் செய்யுள்களுக்குச் சிறந்த பொருள் கூறி அவரை மகிழ்வித்தார் எனத் தெரி கின்றது. இவர், மகாவித்துவான் கணேசையர் இயற் றிய இரகுவமிச உரைக்குச் சிறப்புக் கவியொன்று அளித் துள்ளார்.
ஞானப்பிரகாச சுவாமிகள்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த திருநெல்வேலி என் னும் ஊரிலே தோன்றியவர் இவர். ஈழ நாட்டிலே போர்த்துக்கேயர் ஆட்சி நிலவிக் கொண்டிருந்த காலத் திலே, யாழ்ப்பாணத்திலிருந்த போர்த்துக்கேய அதிகாரி கள் உணவின் பொருட்டு, குடிகளாயுள்ளோர் ஒவ் வொருவரும் முறையாக ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பசு கொடுக்க வேண்டும் என்று கட்டளை விதிக்கப்பட் டிருந்தது. இவர் தமது முறை வருவதற்கு முன்ன தாகவே கண்ணுக்கெட்டாத தேசத்துக்குப் போய் விடுவது நல்லதென்று நினைத்து இந்தியாவுக்குச் சென் முர். அங்கே, சிறிது காலம் சிதம்பரத்திலே தங்கியிருந் தார். அங்கிருந்து கெளட தேசஞ்சென்று, வடமொழி நன்கு பயின்று கொண்டபின் திரும்பி வந்து, திருவண்ணு மலை ஆதீனத்தையடைந்து சந்நியாகம் பெற்றர். சிதம் பரத்திலுள்ள ஞானப்பிரகாசம் என்னுந் திருக்குளத்தினை வெட்டிக் கட்டுவித்தவர் இவரேயாவர்.

ஞானப்பிரகாசர், வண. சுவாமி. 145
ஞானப்பிரகாசர், வண. சுவாமி. (1875-1947)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மானிப்பாய் என்னும் ஊரிலே, சுவாமிநாதபிள்ளை என்பாருக்கும் தங்க முத்து அம்மையாருக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்தில் இவர் பெற்றேர் இட்ட பெயரால் வைத்தியலிங்கம்" என அழைக்கப்பட்டார். வைத்திய லிங்கம் சிறுபிள்ளையாக இருந்தபோதே தந்தையார் இறந்துவிட்டபடியால், அச்சுவேலியில் வாழ்ந்தவரும் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவருமான தம்பிமுத்து பிள்ளையை இவருடைய தாயார் மணம் செய்து கொண் L-ITii.
தம்பிமுத்துப்பிள்ளை கத்தோலிக்கராக இருந்தமை யால், வைத்தியலிங்கமும் ஞானஸ்நானம் பெற்று,
ஞானப்பிரகாசம்" எனப் பெயர் குட்டப்பெற்ருர்,
பாடசாலைக் கல்வி முடிவுற்றதும், அரசாங்கப் புகை வண்டித் திணைக்களத்தில் இவருக்கு உத்தியோகம் கிடைத்தது. அத்துறையில் இவருடைய சிந்தை செல் லாததால், 1901ஆம் ஆண்டிலே இவர் கிறித்தவ மத போதகராகி, "வணகவாமி ஞானப்பிரகாசர்" எனப் பெயர் சூட்டப்பெற்றர்.
கிறித்தவ குருவாகப் பணியாற்றத் தொடங்கியபின் மக்களுக்கான தொண்டுகள் புரிந்து வந்ததுமன்றி, தமிழ் மொழியினை நன்கு பயின்று உலக மொழிகள் பிறவற் றுடன் ஒப்புநோக்கி ஆராய்ச்சிகள் புரிந்து வந்தார்கள். தமது ஒப்பியலாராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் ஏறக் குறைய 20 மொழிகளை நன்கு பயின்று கொண்டார்கள். சொற்பிறப்புப் பற்றிய தமது புதுக் கருத்துக்களை எடுத்து விளக்கி அரிய பல நூல்களை இயற்றினர். இலத் தீனியம், கிரேக்கம், சுமேரியம், சமக்கிருதம் முதலான

Page 75
46 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
மொழிகளிலெல்லாம் பழந்தமிழடிச் சொற்கள் புகுந்து உருமாறியிருப்பதை எடுத்துக் காட்டிய இவர் இயற்றிய "தமிழ்ச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி" தமிழினத்தின் வரலர்ற்றிலே பொன்னெழுத்துக்களாற் பதிக்கவேண்டிய நிகழ்ச்சியாகும். இவருடைய அகராதிப் பதிப்புக்குத் தென்னிந்தியாவிலும் , பிறநாடுகளிலுமிருந்தும் உதவி கிடைப்பதாயிற்று.
இவர் இயற்றிய நூல்கள்:-(தமிழ்) 1. ஆண்டவர் சரித் திரம், 2. கத்தோலிக்க திருச்சபையும் அதன் போதகங் களும், 3. கிறித்துநாதர் சரித்திர ஆராய்ச்சி, 4. தமிழ் அமைப்புற்ற வரலாறு, 5. தருக்க சாத்திரச் சுருக்கம், 6. தமிழரின் பூர்வசரித்திரமும் சமயமும், 7. திருச் சபைச் சரிதம், 8. துறவி ஞானம், 9. தேவ ஆராதனை முறை, 10. போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண சரிதை, 11, யாழ்ப்பாணச் சரித்திர ஆராய்ச்சி. (ஆங்கிலம்) 1. தமிழரின் சாதி உற்பத்தி, 2. பண்டைய இந்திய சரிதையும் ஆண்டு வரிசையும், 3. யாழ்ப்பாண அரசர்.
டன் சுவாமிகள், வண. பற்றிக்.
யாழ்ப்பாணப் பட்டினத்திலுள்ள சம்பத்திரிசியார் (St. Patricks) கல்லூரியிலே நீண்ட காலமாகத் தலைவ ராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் இவர். அக் காலத்தில் அக் கல்லூரிப் பண்டிதராய் விளங்கிய சுபவாக்கியம் பிள்ளை அவர்களுடன் சேர்ந்து தமிழ் மொழியினை நன்கு கற்றுத் தேர்ந்தவர். சுப வாக்கியம் பிள்ளையவர்களின் துணையுடன் ஆங்கிலத் தமிழ் அகராதி யொன்றினை எழுதினர். அவ்வகராதி 1900ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இவர் இயற்றிய தமிழ்-ஆங்கில அகராதியொன்றும் இப்போது வெளிவந்து உலவு

தம்பையா உபாத்தியாயர் , 147
கின்றது. தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறை (யென்றினையும் இவர் வகுத்தமைத்து "தமிழ்த் தீவிர விகிதம்' என்னும் பெயருடன் வெளியிட்டுள்ளார்.
தம்பாபிள்ளை
யாழ்ப்பாணத்திலே தோன்றியவர் இவர். "ஜோர்ஜ் சி. தம்பாபிள்ளை' எனவே இவர் பெயர் குறிப்பிடப்படு கின்றது. இவரால் "இலங்கைப் பூமி சாத்திரம்" என காழுதப்பட்ட நூலொன்று 1891-இல் யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
நம்பிமுத்துப் பிள்ளைப் புலவர், எஸ். (1857-1921)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலி என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். ஈழநாட்டின் முதல் நா வலெனப் போற்றப்படும் "ஊசோன் பாலந்தை கதை யினை அச்சு வேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிர காச அச்சியந்திரசாலையில் 1891ஆம் ஆண்டிற் பதிப்பித் தவர் இவர். "மேகவர்ணன்', 'தாமோதரன்", "இரத்தின சிங்கம்", "சந்திரகாசன் கதை" முதலான வேறு சில நாவல் களையும் இவர் பதிப்பித்துள்ளார். "அழகவல்லி" (1904), "சுந்தரன் செய்த தந்திரம்" (1905) என இவர் இரண்டு நாவல்களும் இயற்றியுள்ளார் என அறியக்கிடக்கின்றது. "எஸ்தாக்கியர் நாடகம்’ (1890) "பாலியக் கும்மி" (1886) ஆகியனவும் இவரால் இயற்றப்பட்டவை யாகும்.
தம்பையா உபாத்தியாயர்
யாழ்ப்பாணத்திலே தோன்றியவர் இவர். கொழும் பிலே தங்கி வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் "பிரலாப கவிதை" என்னும் நூலினை இயற்றினர் என அறியக்

Page 76
148 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
கிடக்கின்றது. இந்நூல் 1896 ஆம் ஆண்டிலே கொழும் பில் அச்சேற்றப்பட்டிருக்கிறது. தம்பையா, ஐசக், டக்தர், (1869-1941)
யாழ்ப்பாணப் பட்டணத்திலே 1869ஆம் ஆண்டு ஒகத்து மாதம் 19 ஆம் தேதியன்று தோன்றியவர் இவர். யாழ்ப்பாணம் அர்ச். யோன் கல்லூரியிலே சில ஆண்டு கள் வரை கல்வி பயின்றபின் கொழும்புக்குச் சென்று அர்ச். தோமஸ் கல்லூரியிலே கல்வி பயின்ருர். இளமைக் காலத்திலேயே இவருக்குப் பத்திரிகைத் துறையிலும் இலக்கியத்துறையிலும் மிகுந்த பற்றுதலிருந்தது. 1893ஆம் ஆண்டிலே, "சிலோன் றிவியூ" (Ceylon Review) என்னும் பெயருடன், ஒர் ஆங்கிலத் திங்களிதழைத் தோற்றுவித்து, அதிலே இலங்கையின் பெரியார் பலரது வரலாறுகளைத் தமது கூர்த்த மதித்திறத்தால் முறையாக எழுதிக்கொண்டு வந்தார். இரண்டு ஆண்டுகளின் பின் * பீரியட்' (Period) என்னும் பெயருடன் ஒரு பத்திரிகை யைத் தொடங்கினர்; அதுவும் சில மாதங்களின் பின் நின்றுவிட்டது.
அதன்பின், 1899 ஆம் ஆண்டு தொடங்கி 1901ஆம் ஆண்டுவரையும் யாழ்ப்பாணத்தில் நியாயதுரந்தரராகத் தொழில்புரிந்து கொண்டிருந்தார். 1912ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்துக்குச் சென்று, "கிரேய்ஸ் இன்’ (Gray's Inn) சட்டக் கலாசாலையிலே "பரிஸ்டர்" (Barrister) பட்டம் பெற்றுக் கொண்டார். இலங்கை யிலிருந்து முதன்முதலாகக் கிரேய்ஸ் இன்" பரிஸ்டர்ப் பட்டம் பெற்ற பெருமை இவருக்கே உரியதாகும்.
1913ஆம் ஆண்டிலே இவர் மலேயாவுக்குச் சென்று நியாய துரந்தரராகத் தொழில் புரிந்துகொண்டிருந்த போதுதான் கிறித்து சமய சாத்திரத்தில் இவருக்குக்

தம்பையா பிள்க்ள, எல். i49
'கலாநிதி" (Doctor) என்ற பட்டம் கிடைப்பதாயிற்று. அகன் பின், இவர் இலங்கைக்குத் திரும்பி வந்தபோது, 1924 ஆம் ஆண்டிலே, கிறித்தவ சமய குருவாக நியமனம் பெற்ருர்,
சட்டநூற் புலவராகவும் சமயநூற் புலவராகவும் விளங்கியது மட்டுமன்றி. இவர் தமிழிலும் சைவ சமயத் திலும் கொண்டிருந்த ஆர்வமும் புரிந்த ஆக்கவேலை களும் இன்று மங்காப் புகழுடன் நின்று நிலவுகின்றன. சமயாதீதக் கொள்கையுள்ள தாயுமான சுவாமிகளது திருப்பாடல்களை ஆங்கில மக்களும் அறிதல் வேண்டு (alpairgjib (8pT3555jL6ër “Psalms of a Saiva Saint' என்னும் நூலாக மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இந்நூலினுக்கு இவர் எழுதியிருக்கும் முகவுரையொன்றே தமிழ் இலக்கியங்களிலும் திருமந்திரம், தேவாரம், திரு வாசகம் முதலியவற்றிலும், சைவ சித்தாந்த சாத்திரங் களிலும் சிறந்த புலமை பெற்றிருந்தார் என்பதைத் துலக்கமாகக் காட்டி நிற்கின்றது. அம் முகவுரையிலே தமிழ் மொழியின் தொன்மை வரலாறு முதலான ஆழ்ந்த ஆராய்ச்சிப் பொருள்கள் பல மிளிர்கின்றன. இந்த அரிய நூல் 1925ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தாகும். இவர் சட்டவியல் நூல்களும் பல இயற்றி யுள்ளார்.
gouri guibou girisair :- 1. Psalms of a Saiva Saint. 2. A Tamil Mystic. 3. Forgleams of God. 4 Erangelism in Ceylon. 5. The Salt of the Earth. es. In the Days of Sambasiva. 7. Golden Verse Collection of Ceylon.
தம்பையா பிள்ளை, எஸ்.
இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய குறிப்புகள் எவையும் கிடைத்தில. "திருமரியாயிபேரில் தோத்திரப்
『・』・一10

Page 77
150 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
பதிகம்" என்னும் நூலினை எழுதி, 1888ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற் பதிப்பித்துள்ளார்.
தாமோதரம் பிள்ளை, சி. வித்துவான். (1863-1921). யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணையில் வாழ்ந்துகொண்டிருந்த சின்னத்தம்பியார் என்பாருக் கும் அவருடைய மனைவியாராகிய அன்னம்மையார்க்கும் புதல்வராகத் தோன்றியர் இவர். ஐந்தாம் வயதிலே, நாவலரவர்களால் நிறுவப்பட்ட சைவப்பிரகாச வித்தியா சாலையிலே நாவலரவர்களாலேயே இவருக்கு ஏடு தொடக்கப்பட்டது. இவர், அங்கு கல்வி கற்றுக்கொண் டிருக்கும்போது, மேல் வகுப்புக்களில் செந்திநாதையர், இளையதம்பி உபாத்தியாயர் முதலியோர் கற்பித்துக் கொண்டிருந்தமையால் அவர்களிடம் நன்னூல், திருக் குறள், அந்தாதிகள், திருக்கோவையார், யாப்பருங்கலக் காரிகை முதலான பல நூல்களே முறையே கற்றுக்கொண் டார். அக் காலத்தில் வண்ணுர் பண்ணை வைத்தீசுவரன் கோயில் வசந்த மண்டபத்திலும் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் வாரந்தோறும் நடைபெற்றுவந்த சைவப் பிரசங்கங்களைத் தவருமற் கேட்டு வருவது இவர் இயல்பாயிருந்தது.
1879ஆம் ஆண்டில், தமது தாய்தந்தையருடனும் தம்பியாராகிய நாகலிங்க பிள்ளையுடனும் சிதம்பரத்துக் குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார்கள். சிதம்பரத் திலே ஒரு பாடசாலையில் இவர் ஆசிரியராக அமர்ந்திருக் குங் காலத்தில், சிதம்பரத்திற்கு மேற்கே எட்டு மைல் தொலைவிலுள்ள உடையூர்க் கிராமத்தில், தாமே சொந்த மாக ஒரு பாடசாலையை நிறுவி நடாத்தி வந்தார். அதன்பின், சென்னையிலே சபாபதி நாவலர் தாபித்து நடாத்தி வந்த சித்தாந்த வித்தியானுபாலன யந்திர

தாமோதரம் பிள்க்ள, சி., வித்துவான். 151
சாலையில் அவர் பிரசுரித்து வந்த “ஞானமிர்தம்" என் னும் பத்திரிகைக்கு இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் அமர்த்தப்பட்டார். சென்னையில் அக் காலத்தில் நிறுவி நடாத்தப்பட்டு வந்ததும் பூரீநிவாச சாஸ்திரியாரைத் துணைத்தலைவராகக் கொண்டதுமான "இந்துலகுலேக சங்கம்" (இந்து டிகாக்ட் சொசைட்டி) சைவசமயத்தினை வளர்ப்பதற்கும் கிறித்து சமயம் பரவாதபடி தடுப்பதற்கு மாக நடாத்திவந்த பெரும் பணிகள் இவரது மனத் தைக் கவர்த்தன. எனவே, இவர் அச்சங்கத்தின் சார்பில் சென்னை தொடங்கித் திருநெல்வேலி வரையுள்ள ஊர்கள் எல்லாவற்றுக்கும் சென்று சமயப் பிரசங்கங்கள் செய்து வந்தார்: அக் காலத்தில் சமய ஆக்கம் கருதி " விஜயத் துவஜம்" என்னும் பத்திரிகை ஒன்றினையும் நடாத்தி வந்தார். இந்தப் பத்திரிகையானது பாளையங்கோட்டை யில் அ. சங்கரலிங்கம் பிள்ளையவர்கள் அளித்த நிதியுதவி கொண்டு நடாத்தப்பட்டு வந்ததாகும். பின், இவர் தேவகோட்டையிலே தங்கியிருந்து செட்டிமார்களுக்குச் சிவஞானபோதம் முதலிய நூல்களைப் பாடஞ் சொல்லி வந்தார்.
நீண்ட காலத்தின் பின் இலங்கைக்குத் திரும்பிய இவர், கொழும்பிலும் தங்கியிருந்து சைவப்பணி ஆற்றிக்கொண்டிருந்தார். கொழும்பு விவேகானந்த சபையின் பிரசாரகராக இருந்து நாடோறும் இவர் நிகழ்த்தி வந்த சமய விரிவுரைகள் சைவ மக்களிடையே ஒரு தனிக் கிளர்ச்சியை ஏற்படுத்தி வந்தன. இவர், இங்கு தங்கியிருந்துகொண்டு காலி, கண்டி, குருநாகல் முதலிய இடங்களுக்கும் சென்று விரிவுரைகள் ஆற்றி வந்தார்கள்.
யாழ்பாணத்துக்குச் சென்று தமது தாய்தந்தை யருடைய உறவினர் பலர் கூடி வாழ்ந்து கொண்டிருந்த

Page 78
153 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
தும் கரவெட்டியைச் சார்ந்ததுமான வதிரி என்னும் ஊரில் இவர் வாழ்ந்துகொண்டிருந்தார். இவர் கரவெட்டியிலே நிகழ்த்திய சைவ விரிவுரைகளைக் கேட்டு உணர்ச்சி பெற்ற அவ்வூர் மக்கள் தங்கள் குழந்தைகள் கல்வி பயில்வதற்கு ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையினை நிறுவுதல் வேண்டுமென உறுதி கொண்டார்கள். அதன் பயணுகத் தொடங்கப் பெற்ற பாடசாலையே இன்று * விக்கினேசுவரக் கல்லூரி" யாகப் புகழ்படைத்து விளங்குகின்றது.
இவர், சைவசமய ஆக்கங்கருதி “ஞானசித்தி" என்னும் பெயருடன் ஒரு திங்கள் வெளியீட்டினை நடாத்தி வந்தார்கள். இவ் வெளியீடானது, இவர் இறைவன் திருவடி சார்ந்தபின், இவரது தம்பியாராகிய "வித்துவான், சி. நாகலிங்கபிள்ளை’ அவர்களாற் சிறந்த் முறையில் நடாத்தப்பட்டு வருவதாயிற்று.
இவர் இயற்றிய நூல்கள் :-1, சந்தியாவந்தன ரகசியம், 2. சைவசிரார்த்த ரகசியம். 3. சிவஞான சித்தியார் உரை (அச்சேறவில்லை). 4. கதிர்காம புராண வசனம். 5. சைவசித்தாந்த சாரமான மரபு. 6. கடம்பவனம், இரத்தினசலம், மரகதாசலம், தல மான் மியங்கள் (1881.)
தாமோதரம் பிள்ளை, சி. வை , ராவ்பகதூர், B.A., B L.
(1832-1901) யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரிலே, வைரவநாத பிள்ளை என்பாருக்கும் அவர் ம%னவியாராகிய பெருந்தேவியம்மாளுக்கும் புதல்வ ராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலே தமிழ்ப் புலமை நிரம்பிய தம் தந்தையாரிடத்திலே

தாமோதரம் பிள்ளை, சி. வை., ராவ்பகதூர். 15
ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி முதலான நீதி நூல்களையும், சூடாமணி நிகண்டு, நன்னூல், திருக் குறள் ஆகிய நூல்களையும் கற்றுணர்ந்தார். அதன்பின், சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவரின் பாட்டனராகிய முத்துக்குமாரக் கவிராயரிடத்து உயர்தர இலக்கண் இலக்கியங்களைப் பயின்றுகொண்டார். தெல்லிப்பழை யிலிருந்த அமெரிக்க மிஷின் பாடசாலையில் முதலிலே ஆங்கிலம் கற்றுக்கொண்டபின், வட்டுக்கோட்டையிலே அமைந்திருந்ததும், 1922ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய டக்தர். பூர் (Dr. Poor) Grairu3ugtita) is pyan நடாத்தப்பட்டு வந்ததுமான- செமினரி" என வழங்கும்-சாத்திரக் கலாசாலையிலே 1844 ஆம் ஆண்டிலே சேர்ந்து ஏறக் குறைய எட்டு ஆண்டுகள்வரை கல்வி பயின்றுகொண் டிருந்தார். அங்கு கற்பிக்கப்பட்ட கணிதம், அறிவியல் முதலான எல்லாப் பாடங்களிலும் இவரே முதலாவதாக வந்துகொண்டிருந்தார். இவர் அக் கலாசாலையிலே கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலே கனம் சி. பி. மில்ஸ், ஆசிரியர் நெவின்ஸ், ஆசிரியர் இலைமன். ஆசிரியர் இறப்ஸ், ஆசிரியர் பிறெக்கென்றிக், ஆசிரியர் கறல் விசுவநாதபிள்ளை ஆகியோர் இவருக்கு ஆசிரியராக விளங்கினர்கள். தென்னிந்தியாவிலும் பார்க்க யாழ்ப் பாணமே சிறப்பியற் படிப்புக்கு ஏற்றதாய் அமைந் திருந்தமையாலும், அதிலும் பார்க்கச் சிறந்த மேற்படிப் புக்கு வேறு கல்லூரிகள் இல்லாமையாலும், கோப்பா யிலிருந்த போதன சக்தி வித்தியாசாலையில் இவர் ஆசிரிய ராகப் பணியாற்றத் தொடங்கினர். இவர் அங்கே ஆசிரியராக விளங்கிய காலத்தில்-1853ஆம் ஆண்டிலே "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலினை உரையுடன் பதித்து வெளியிட்டார்.

Page 79
『I54 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
யாழ்ப்பாணத்திலே பாதிரியாராகத் தொண்டாற் றிக் கொண்டிருந்தவரும், நாவலரவர்களைக் கொண்டு * பைபிள்' மொழி பெயர்ப்பினை இயற்றுவித்தவரும்ான பேர்சிவல் பாதிரியார், பாதிரி உத்தியோகத்தினை விட்டு விட்டு சென்னைக்குச் சென்று தினவர்த்தமானி" என்னும் பெயருடன் தமிழ்ப் பத்திரிகையொன்றினை நடாத்திக் கொண்டிருந்தார். தாமோதரம்பிள்ளையவர்கள் யாழ்ப் பாணத்திலே "செமினரி'யிற் கல்வி பயின்று கொண் டிருந்த காலத்திலேயே இவருடைய திறமைகள் பற்றித் தாம் அறிந்திருந்தமையால், இவரையே தமது பத்திரி கைக்கு ஆசிரியராக்குதல் வேண்டுமென்று தீர்மானித்து இவரைச் சென்னைக்கு அழைத்துத் தமது பத்திரிகைக்கு ஆசிரியராக நியமித்துக் கொண்டார். அக்காலத்திலே தமது ஒய்வுவேளைகளில் ஆங்கிலேயப் பிரபுக்கள் சிலருக்கு இவர் தமிழ் கற்பித்து வந்தார். இவருக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உளதான புலமையையும் திறமையை யும் எல்லோரும் அறிந்துகொண்ட காரணத்தால் அரசி னர் சென்னை இராசதானிக் கல்லூரியில் இவரைத் திமிழ் பண்டிதராக நியமித்தனர்.
தாமோதரம்பிள்ளை பத்திரிகாசிரியராகவும் தமிழ்ப் பண்டிதராகவும் திகழ்ந்து கொண்டிருந்த அக்காலத் திலேதான் சென்னைப் பல்கலைக் கழகம் அரசினரால் நிறுவப்படுவதாயிற்று. அப் பல்கலைக் கழகம் முதன் முதலாக நடாத்திய "கலைமாணி" (B. A.) தேர்வில் இவர் முதல் மாணவனுகச் சித்தி பெற்றர். யாழ்ப்பாணச் "செமினரியிலே இவரது ஆசிரியருள் ஒருவராய் விளங் கிய சுதுமலை, கறல். விசுவநாதபிள்ளை இரண்டாம் மாணவனுகச் சித்திபெற்ருர், கலைமாணிப் பட்டம் பெற்றபின், இவர் கள்ளிக்கோட்டையிலுள்ள அரசாங்க வித்தியாசாலையிற் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சென்னை அரசாங்க வரவு செலவுத் திணைக்களத்தில் உயர்

தாமோதரம் பிள்ளை, சி. வை. ராவ்பகதூர். 158
நிலை உத்தியோகத்தராக நியமனம் பெற்ருர். அந்தப் பதவியினை வகித்துக் கொண்டிருந்தபோது 1871ஆம் ஆண்டிலே "முறைமாணி" (R. L.) தேர்வுக்கும் தோற்றிச் சித்தி பெற்ருர். அதன்பின் உத்தியோகத்தினின்றும் இளைப்பாறிக் கொண்டு சென்னை நகரினை விட்டு நீங்கி திருக்குடந்தை (கும்பகோணம்) நகரத்துக் கறுப்பூரிலே தங்கி வாழ்ந்து கொண்டிருந்தார். அங்கே சில காலம் நியாயதுரந்தரராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1884ஆம் ஆண்டிலே புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டார். 1890 ஆம் ஆண்டுவரை அப்பதவியிலிருந்து பணியாற்றிய பின் இளைப்பாறிக் கொண்டார். 1895ஆம் ஆண்டிலே அரசினர் இவருக்கு "ராவ் பகதூர்’ப் பட்டத்தினை வழங் கினர்கள்.
பாடசாலையிலிருந்து படிப்பினை முடித்துக்கொண்டு, ஆசிரியராகப் பணியேற்றதும் இவர் கொண்ட வாழ்க் கையின் குறிக்கோள் ஒன்றே. *செல்துளைத்த துளை யன்றி மெய்ப்புள்ளி விரவாத சென்னளேடு"களைத் தேடி யெடுத்துப் பெயர்த்தெழுதி அச்சேற்றுதல் வேண்டும் என்பதே அதுவாகும். இந்தக் குறிக்கோளினை இவர் என்றுமே மறவாமல் தமக்குக் கிடைத்த ஓய்வு வேளை களிலெல்லாம் தமிழினைக் கற்று ஏடுகளைத் தேடிச் சேக ரித்து அவற்றைப் பெயர்த்தெழுதி ஆராய்ந்து கொண்டு வந்தார். அப்படி ஆராய்ந்தவற்றைச் செ ம்  ைம யான முறையில் அச்சேற்றி வெளியிட்டார். இவரி நல்லூர் ஆறுமுக நாவலரவர்களின் அறிவுரைகளைப் பெற்றே, அவர்களின் விருப்பப்படி நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வழிகாட்டினர். இவர் காட்டிய வழி யினைப் பின்பற்றியே பின்வந்தோர் நூல்களைப் பதிப் பித்து வெளியிடுவாராயினர்,

Page 80
156 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவர் பதிப்பித்த நூல்கள்:- 1. வீரசோழியம் -1881, 2. இறையனரகப் பொருள்-1883, 3. தொல் காப்பியம்-பொருளதிகாரம்-1885, 4. தொல்காப் பியம்-சொல்லதிகாரம்-1900, 5. இலக்கணவிளக்கம் -1900, 6. சூளாமணி-1883, 7. கலித்தொகை1883, 8. தணிகைப் புராணம்-1883, 9. நீதிநெறி விளக்கம்-1853.
இவர் எழுதிய நூல்கள்:- 1. கட்டளைக் கலித் துறை, 2. சைவமகத்துவம், 3. சூளாமணி வசனம், 4. நட்சத்திரமாலை.
தானியேல் யோன், டாக்டர்.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த உடுவில் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். "யாழ்ப்பாணச் சரித்திரம்" எழுதிய சங்கரப்பிள்ளை யோன் அவர்களின் புதல்வர். இந்தியாவிலே, பேராற்றிலுள்ள புல்தானையில் வைத்திய ராகப் பணியாற்றி வந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவரான இவர் இலங்கையின் வரலாற்றில் ஈடுபட்டு இந்தியாவிலும் இலங்கையிலும் நடை பெற்றுவந்த ஆங்கிலத் தமிழ்ப் பத்திரிகைகளிலே சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்தவர். "கந்த புராண மறைபொருள்", "Garden of Eden" என்னும் நூல் களை இயற்றியுள்ளார்.
திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சுளிபுரம் என்னும் ஊரிலே, செல்வநாயகச் செட்டியார் குலத்திலே தோன் றியவர் இவரி. ஆறுமுகநாவலரவர்களிடத்திலே தமிழி லக்கணவிலக்கியங்களை முறையே கற்றவர். கந்த புராணம், பெரிய புராணம், பாரதம் ஆகிய நூல்களில்

திருஞானசம்பந்தர், ம. க. வே. 157
இவர் மிகுந்த பயிற்சியுடையவராய் விளங்கினர். விரிவுரையாற்றும் வன்மையும் கவிகள் யாக்கும் திறமை யும் படைத்தவராய்த் திகழ்ந்தார்.
மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலவர் திருவருட்பா ஆகிய இரு நூல்களையும், பல தனிநிலைக் கவிகளையும் இவர் இயற்றியுள்ளார்.
திருஞானசம்பந்தப் பிள்ளை (1849-1901)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரிலே தோன்றி யவர் இவர். நாவலரவர்களிடத்திலும் வித்துவ சிரோ மணி பொன்னம்பலப் பிள்ளையவர்களிடத்திலும் இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களும், சித்தாந்த நூல்களும், தருக்கமும் கற்றவர் என்று அறியக் கிடக்கின்றது. தருக்க சாத்திரவாராய்ச்சியிலும், தருக்கவாதஞ் செய் வதிலும் மிகுந்த விருப்புடையவராய் விளங்கிய காரணத் தினுல் இவரைத் தருக்க குடார தாலுதாரி' எனவும் குறிப்பிடுவதுண்டு. இந்தியாவிலே சிதம்பரத்திலும் கும்பகோணத்திலுமாகப் பல ஆண்டுகள் இவர் தங்கி வாழ்ந்து கொண்டிருந்தார். இவரிடம் கல்வி பயின்றேர் பலராவர்.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. அரிகரதாரதம்மியம், 2. தர்க்காமிர்தம் (மொழிபெயர்ப்பு) 3. நாராயண பரத்துவ நிரசனம், 4. வேதாகம வாததீபிகை.
திருஞானசம்பந்தர், ம. க. வே.
உரையாசிரியர் எனப் போற்றப்படும் ம. க. வேற் பிள்ளையின் மூத்த புதல்வர் இவர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப்பண்டிதராகவும், "இந்து சாதனம்" என்னும் பத்திரிகையின் ஆசிரியராக வும் நீண்ட காலமாகப் பணியாற்றியவர். நாடகாசிரிய

Page 81
158 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
ராகவும் உரையாசிரியராகவுங்கூடத் தொண்டாற்றிக் கொண்டிருந்த இவர் "உலகம் பலவிதம் (1921) என்ற வரிசையில் "கோபால-நேசரத்தினம்" "காசிநாதன்நேசமலர்" (1924) என இரண்டு நாவல்களையும் எழுதி யுளளாா.
திருவிளங்கம், மு.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மாணிப்பாய் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். கொழும்பில் வழக்கறிஞ ராகவும் நொத்தாரிசு ஆகவும் தொழில் புரிந்து வந்தார். சைவசித்தாந்தத்தில் மிகுந்த புலமை வாய்ந்தவராய் விளங்கினர்.
இவர் சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகிய நூல்களுக்கு மிகச் சிறந்த உரை எழுதியுள்ளார். அருண கிரிநாதர் இயற்றிய கந்தரலங்காரத்துக்கும் திருப்புகழ்த் திரட்டுக்கும் இவர் எழுதியுள்ள உரைகள் நுட்பம் வாய்ந் தவை என இன்றும் போற்றப்பட்டு வருகின்றன. தில்லைநாத நாவலர், ம. (1854-1939)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த தென் புலோலியூரிலே மயில்வாகனன் என்பாருக்குப் புதல்வராகத் தோன்றி யவர் இவர். இளமைக்காலந் தொடங்கியே தமிழிலக் கணவிலக்கியங்களில் ஆர்வம் மிகுந்தவராய் விளங்கிய இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்தில் நீதி நூல் களையும் இலக்கணங்களையும், புராணங்களையும் முறை யாகப் பயின்று வந்தார்
இளமைக் காலத்திலேயே இந்தியாவுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றிக் கொண்டிருந்த இவரை பாண்டித்துரைத் தேவரவர்களே வரவேற்றுப் போற்றி யுள்ளார். குன்றக்குடியிலே திருவாவடுதுறை ஆதீனத்

தொம்பு பிலிப்பு 59
தினைச் சார்ந்த அம்பலவாண தேசிகரும் மதுரை யாதீ னத்தினைச் சார்ந்த திருஞானசம்பந்த தேசிகரும் திருவண்ணுமலை யாதீனத்தைச் சார்ந்த தாண்டவராய தேசிகருமாகக் குழுமிப் போற்றி, "நாவலர்’ப் பட்டம் வழங்கினர். இராமநாதபுரம், கொத்தமங்கலம், தேவ கோட்டை முதலிய இடங்களிலேயே செட்டிமார்களால் ஆதரிக்கப்பட்டு சைவ சமரசப் பிரசங்கங்கள் நிகழ்த்திக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தங்கியிருந்த போது சமய விரிவுரைகள் ஆற்றியதோடமையாது, கந்தபுராண, பெரிய புராண, திருவிளையாடற் புராண படனங்களுக்கும் சென்று பயன் கூறி வந்தார்கள்.
திருவிளையாடற் புராணத்தின் வேதப் பொரு ளரருளிச் செய்த படலத்துக்கு அகலவுரையெழுதி வெளி யிட்டுள்ளார். "திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு' என்னுமொரு நூலும் இவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.
தொம்பு பிலிப்பு
யாழ்ப்பாணத்தைச் சார் ந் த தெல்லிப்பழை என்னும் ஊரிலே வாழ்ந்து கொண்டிருந்தவர் இவர் தமிழிலக்கண இலக்கியங்களில் மிகுந்த புலமையுடை யவராய் விளங்கிய இவர் தொம்தியோகு முதலியின் வேண்டுகோளுக்கிணங்கி விசுவாச விளக்கமும் சத்திய வேதாகமத்தின் சுருக்கமுமாகிய "ஞானனந்த புராணம்" என்னும் நூலினை 1104 விருத்தப் பாக்களாற் பாடியுள் ளார். அந்நூலினை, சென்னை இராயபுரம் அ. சவரியப்ப முதலியார் புதல்வரான ஜெகராவு முதலியார் பரி சோதித்து 1874ஆம் ஆண்டிலே வெளியிட்டார்,

Page 82
160 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
நடராசையர் (1844一1905)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த இணுவில் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். நல்லூர் ஆறுமுகநாவல ரவர்களிடத்திலே இலக்கணவிலக்கியங்களையும் சித்தாந்த சாத்திரங்களையும் ப யி ன் ற வர். சமக்கிருதத்திலும் மிகுந்த புலமை படைத்தவராய் விளங்கினர். கவிகள் யாப்பதிலும் திறமை வாய்ந்தவர். சோதிடம், மந்திரம் வைத்தியம் ஆகியவற்றிலும் இவருக்கு நல்ல பயிற்சி இருந்ததென அறியக் கிடக்கின்றது.
இவர் தனிநிலைப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள் ளார். சிவஞான சித்தியார்-சுபக்கம்-ஞானப்பிரகாசர் உரையினை இவர் ஆராய்ந்து அச்சிற் பதிப்பித்து வெளி யிட்டுள்ளார்.
நடேசபிள்ளை, சு.
சேர். பொன். இராமநாதன் அவர்களின் மருகர் இவர். யாழ்ப்பாணம் பரமேசுவரக் கல்லூரி அதிபரா கவும் (1924-52) சேர். பொன். இராமநாதன் அவர் களால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களின் மேற்பார்வை யாளராகவும் விளங்கினர். நீண்ட காலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் (1952-1956 வரை) தபால், தந்தி, வானெலி அமைச்சராகவும் திகழ்ந்தார்.
இலங்கைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட இலங்கை வரலாற்று ஆங்கில நூலின் பகுதிகளில் சில இவரால் எழுதப்பட்டுள்ளன. சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினர் வெளியிட்ட கலைக் களஞ்சியத்திலும் சில கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன. "சகுந்தலை வெண்பா" என்னும் நூலினை இவர் இயற்றி வெளியிட் டுள்ளார்,

நல்லதம்பி, மு. முதுதமிழ்ப் புலவர். 16
நமச்சிவாயப்புலவர், சு.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த ஆவரங்கால் என்னும் மாரிலே வாழ்ந்துகொண்டிருந்த சுப்பிரமணியபிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். உடுப் பிட்டி சிவசம்புப் புலவர், மட்டுவில் உரையாசிரியர் ம. க. வேற்பிளை ஆகிய இவர்களிடம் இவர் தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்ருர் என அறியக் கிடக்கின்றது. இவருக்கு இசைக்கலையிலும் மிகுந்த திறமை இருந்த தாகத் தெரிகின்றது. இவர், பல தனிநிலைச் செய்யுள் கஃாயும் கீர்த்தனங்களையும் இயற்றியுள்ளார்.
ஈழமண்டல சதக ஆசிரியரான அல்வாய் ஆரிய திராவிட பண்டிதர் வே. கணபதிப்பிள்ளை, "சுதேச நாட் டியப் பத்திராதிபராய் விளங்கிய ஆசுகவி, வயாவிளான் க. வேலுப்பிள்ளை ஆகிய பலர் இவருடைய மாணவர் எனத் தெரிகின்றது.
நல்லதம்பி, மு. முதுதமிழ்ப்புலவர். (1896-1951)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வட்டுக்கோட்டை பபிலே திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராய்ப் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருந்த முருகுப்பிள்ளை என்பாருக்கும் அவர் மனைவியாராகிய தங்கம்மையாருக்கும் ஏழாவது புதல்வராக 1896ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 13ஆம் தேதியன்று தோன்றியவர் இவர்.
இளமையிலே தமது ஊராகிய வட்டுக்கோட்டையி லிருந்தே கல்வி கற்றபின், தெல்லிப்பழைக்குச் சென்று உயர்தரக் கல்வி பயின்ருர், இளமைக் காலத்திலேயே கவிகள் புனைவதிலும் நாடகங்களில் விகடனுகப் பாத்திரந் தாங்கி நடிப்பதிலும் சிறந்து விளங்கினர். அக்காலத்திலே பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்லுதல் வேண்டுமென்பதில் இவருக்கு நாட்டம் மிகுதியாக இல்

Page 83
164 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
லாதபோதிலும், எப்படியோ என்றும் வகுப்பில் முதல் மாணவனுகத் திகழ்ந்தார்.
தெல்லிப் பழையில் அமைந்திருந்த போதனமுறைப் பயிற்சிக் கழகத்திலே 1914ஆம் ஆண்டிலே சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியரானர். ஆசிரியராகிய பின் பண்டத்தரிப்பு, மண்டை தீவு, ஆனக்கோட்டை ஆகிய ஊர்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இவர், 1918ஆம் ஆண்டிலே கொழும்புச் சகிராக் கல்லூரியிலே தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பதவியேற்று, ஏறக்குறைய இருபத்தெட்டு ஆண்டுகள் வரை அங்கே கல்வி பயிற்றி, இலங்கைவாழ் முஸ்லிம் மக்களிடையே தமிழார்வத்தை வளர்த்து வந்தார். இவர் கொழும்புக்கு வந்தபின் தென்கோவை ச. கந்தையாபிள்ளை அவர்களிடம் தொல் காப்பியம் முதலான இலக்கண நூல்களையும் சங்க நூல் களையும் பாடங்கேட்டுத் தமிழிலே மிகுந்த புலமை யடைந்தார். ஆங்கில நாகரிகத்தில் அக்காலத்திற்றிளைத் திருந்த கொழும்புத் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்ச்சியை ஊட்டியவருள் இவரும் ஒருவராவர். அக் காலத்தில் இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும் அவற்றின் தத்துவங்களைப் பற்றியும் அறிந்த தமிழ்ப் புலவர் இவரே.
காலத்துக்குக் காலம் இவர் பத்திரிகைகளுக்கு வழங்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பலப்பல. பல ஆண்டுகளாகக் கல்வி பயிற்றிய அனுபவத்தைக்கொண்டு இவர் எழுதியமைத்த "ஈழவாசகம்’ என்னும் பாட நூல் வரிசையினைச் சென்னை மாக்மில்லன் கொம்பனியாளர் பெற்றுத் தமது பதிப்பாக வெளியிட்டனர். 1945ஆம் ஆண்டில் இவர் ஆசிரியத் தொழிலிலிருந்து ஒய்வு பெற்றுக் கொண்டார். ஓய்வு பெற்றபின் இலங்கைப் பல்கலைக் கழகத்தினர் இவரைத் தமிழ் விரிவுரையாள

நவநீதகிருஷ்ண பாரதியார், &fe பண்டிதமணி. 168
ராகச் சில ஆண்டுகளுக்கு நியமித்தனர். கொழும்பி லுள்ள தமிழ் மக்கள் பலர் இவரிடம் தமிழ் நூல்களை முறையே கற்று வந்ததுமுண்டு.
இலங்கைச் சுதந்திர விழாவினை முன்னிட்டு (1950ஆம் ஆண்டில்) நடைபெற்ற "மரதன் தமிழ்க் கவிதைப் போட்டியிலே இவர் கலந்து 'மணித்தாய் நாடும் மரதனுேட்டமும்" என்னும் நூலினை இயற்றி, முதற் பரிசினைப் பெற்றர். அக்கவிதைப் போட்டியிலே நாவலியூர், க. சோமசுந்தரப் புலவரவர்களும் கலந்து கொண்டாரெனினும், முதற்பரிசு இவருக்கே கிடைப்ப தாயிற்று.
சிறுவர்க்கான இனிய, எளிய பாடல்களை இயற்றுவ திலும் இவர் தனித்திறமை பெற்றிருந்தார். இவருடைய பாடல்கள் பல பாடப் புத்தகங்களிலே வெளிவந்துலவு கின்றன. இவரால் இயற்றப்பட்ட பாடல்கள் சில 'இளை ஞர் விருந்து' என்ற பெயருடன் வட்டுக்கோட்டை இளைஞர் மன்றத்தினரால் நூலுருவில் வெளியிடப்பட் டுள்ளன. நல்லையாபிள்ளை
இவருடைய வரலாறு எதுவும் கிடைத்திலது. மாந்தையில் வாழ்ந்த கொஸ்தான் என்பார் இயற்றிய "பூதத்தம்பி விலாசம்’ என்னும் நூலினை இவர் பார்வை யிட்டு, 1888ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் பதிப் பித்துள்ளார்.
நவநீதகிருஷ்ண பாரதியார், சு. பண்டிதமணி.
(1889-1952.)
இந்தியாவிலே தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணபுரத்தில், 1889ஆம் ஆண்டிலே, சுப்பிரமணிய

Page 84
164 ஈழநாட்டின் தமிழ்ச் Fl-fuðsaflsár
பாரதியார் என்பார்க்கும் அவருடைய மனைவியாராகிய தையலம்மையார்க்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக் காலத்திலே சர்க்கரை இராமசாமிப் புலவரிடம் தமிழ் கற்று வந்தார். யாப்பிலக்கணம் கற்கத் தொடங்குவதற்கு முன்னதாகவே இயல்பாகக் கவிபாடும் வன்மை பெற்றிருந்தார். பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியம்பொருளதிகாரத்தினையும் கற்றர். பின் சில காலம்வரை பண்டிதர் அ. கோபாலையரிடம் கல்வி கற்றபின், சோழ வந்தான் அரசன் சண்முகனரிடம் தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகியவற்றை முறையே பாடங்கேட்டார்.
பதினெட்டாவது வயதில் பாலைக்காடு விக்ரோறி யாக் கல்லூரியில் இவர் தமிழ்ப் பண்டிதராகப் பணி யாற்றத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் திருவாவடுதுறை ஆதீன மகாசந்நிதானம் திருப்பெருந் திரு. அம்பலவாணதேசிக சுவாமிகளுக்குத் திருமுறை யாராய்ச்சித் துணைவராக விளங்கினர். இரண்டு மூன்று ஆண்டுகள்வரை திருவாரூர்க் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
1917ஆம் ஆண்டில் இவர் இலங்கைக்கு வந்து சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் நிறுவப்பட்டதும், சுன்னுகம் மருதன மடத்தில் அமைந் துள்ளது:0ான இராமநாதன் மகளிர் கல்லூரியிலே தலைமைத் தமிழாசிரியராகக் கடமையேற்றர். 1912ஆம் ஆண்டிலே, "உலகியல் விளக்கம்" என்னும் நூலினை இயற்றினர். அந்நூலின் பதிப்பாசிரியர் பண்டிதர் மயில்வாகனஞர் எனப்பட்ட விபுலானந்த அடிகள் ஆவர். 1923ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 12ஆண்டு கள் வரை திருநெல்வேலி பரமேஸ்வரக் கல்லூரியில்,

நவரத்தினம், க, கலைப்புலவர். I65
தலைமைத் தமிழ்ப் பண்டிதராக விளங்கினர். 1936ஆம் ஆண்டிலே, பரமேஸ்வர பண்டித ஆசிரிய கலாசாலை நிறுவப்பட்டதும், அங்கே தலைமைத் தமிழ் விரிவுரை யாளராக நியமிக்கப்பட்டார்.
1929ஆம் ஆண்டில் "புத்திளஞ் செங்கதிர்" என்னும் செய்யுள் நூலும், 1934ஆம் ஆண்டில், பறம்பு மலைப் பாரி" என்னும் நாடக நூலும் இவரால் இயற்றப் பட்டன. "பாரதியம்" என்னும் பெயருடன் மூன்று பகுதிகளாகச் சிறுவர்க்கான இலக்கண நூலொன்றும் இவர்களால் எழுதி வெளியிடப்பட்டது. இவர்கள் இயற்றிய திருவாசகப் பேருரை” செம்மையான முறை யில் அச்சேற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டிலே வெளியிடப் பட்டது. இவராற் காலத்துக்குக் காலம் பாடப்பெற்ற தனிநிலைப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
நவரத்தினம், க, கலைப்புலவர் ( - 1962)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணையிலே தோன்றியவர் இவர். யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி யில் ஏறக்குறைய 38 ஆண்டுகள் வரை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர். 'கலாநிலையம்" என் னும் இலக்கிய வளர்ச்சித்தாபனத்தினை யாழ்ப்பாணத் தில் நிறுவி “ஞாயிறு" என்னும் உயரிய செந்தமிழ்த் திங்கள் வெளியீட்டினைச் சிறந்த முறையில் வெளியிட்டு வந்தவர். இப்பணிக்கு வேண்டிய ஊக்கமும் ஆக்கமும் அளித்து இவருக்குத் துணை புரிந்து கொண்டிருந்தவர் சுவாமி உருத்திர கோடீசுவரர் ஆவர்.
*தென்னிந்திய சிற்ப வடிவங்கள்", "இலங்கையிற்
கலை வளர்ச்சி ஆகிய தமிழ் நூல்கள் இரண்டினை மிகச்
செவ்விய நூலுருவிற் படங்களுடன் வெளியிட்டுள்ளார்,
Bp.-11

Page 85
166 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
நாகநாதபண்டிதர், அ. (1814-1884)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கன்னகம் என்னும் ஊரிலே வாழ்ந்துகொண்டிருந்த சிங்கமாப்பான முதலியார் மரபில் அம்பலவாணப் பிள்ளைக்குப் புதல் வராகத் தோன்றியவர் இவர். தமிழ், ஆங்கிலம், சமக் கிருதம், சிங்களம் ஆகிய நான்கு மொழிகளிலும் பெரும் புலமை வாய்ந்தவராய் விளங்கினர். முல்லைத் தீவிலும் கற்பிட்டியிலும் நீதிமன்றப் பேச்சு மொழிபெயர்ப்பாள ராகக் கடமை யாற்றினர் என அறியக்கிடக்கின்றது.
இவர் வடமொழி நூல்களான மானவ தரும சாத் திரம், பகவத்கீதை, மேகதூதம் ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துச் சங்கர பண்டிதர் கற்றுக்கொள்வதற் காகக் கொடுத்தவர். இதோபதேசம், சிசுபாலவதம் முதலியவற்றைத் தமிழில் விளக்கிச் சுன்னகம் அ. குமார சுவாமிப் புலவர் கற்பதற்காகக் கொடுத்தவர். சாந் தோக்சியம் முதலாய உபநிடதங்கள் சிலவற்றையும் சாங்கிபத்தையும் தமிழில் மொழிபெயர்த்தளித்தவர். இவரால் மொழிபெயர்க்கப்பட்ட "இதோபதேசம்" சுன்னுகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களால் அச்சிட்டு வெளியிடப்பட்டது இவராற் பாடப்பட்ட தனிக் கவிகள் பல. ச.உதயதாரகை”ப் பத்திரிகையிலும் அக்காலத்தில் வெளிவந்துள்ளன. ‘இலங்காபிமானி'யிலும் இவர் பல கட்டுரைகள் எழுதியதுண்டு
நாகமணிப் புலவர் (1891-1933)
யாழ்ப்பாணத்தை மருவிய நயினு தீவிலே தோன் றியவர் இவர். அவ்வூரில் வீரகத்திப் பிள்ளை என்னும் ஆசிரியர் நடாத்தி வந்த திண்ணைப் பாடசாலையிலே இளமைக் கல்வியைக் கற்றுக்கொண்டபின், தில்லையம்பல

நாகலிங்கம் பிள்ளை, சி. வித்துவான். 167
வித்தியாசாலை ஆசிரியராயிருந்த சோமசுந்தர ஐய ரி.ந்தே தமிழிலக்கணவிலக்கியங்களைக் கற்றுவந்தார். கிறிது காலம், யாழ்ப்பாணத்திலே வணிகர்களுக்குக் கணக் கெழுதுந் தொழிலில் இவர் அமர்ந்திருந்ததுண்டு. பின், அத்தொழிலினை விட்டு நீங்கி நயினு தீவுக்குத் திரும்பி வந்து, அவ்வூர்க் கிராமச் சங்கத்தலைவராக ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள்வரை பணியாற்றிக்கொண்டிருந்தார்.
“நயினை நிரோட்டக யமகவந்தாதி”, “நயினை மான் மியம்" ஆகிய இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
நாகலிங்கம் பிள்ளை, சி. வித்துவான்.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணையில் வாழ்ந்துகொண்டிருந்த சின்னத்தம்பியார் என்பாருக்கும் அவருடைய மனைவியாராகிய அன்னம்மையார்க்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். வித்துவான், சி. தாமோதரம் பிள்ளையவர்களின் தம்பியார். நாவலர் பெருமானுல் நிறுவப்பட்ட வண்ணுர் பண்ணைச் சைவப் பிரகாச வித்தியாசாலையிலே நாவலரவர்களாலேயே இவருக்கு ஏடு தொடக்கப்பட்டது. இவர் அங்கே கல்வி பயின்றுவரும்போது செந்திநாதையர், இளையதம்பி உபாத்தியாயர் முதலானேர் இவருக்கு மேல் வகுப்பு களிற் கற்பித்துக்கொண்டிருந்தார்கள். நன்னூல், திருக் குறள், திருக்கோவையார், யாப்பருங்கலக்காரிகை, ஆகியவற்றுடன் சித்தாந்த சாத்திரங்களையும் அவர் களிடம் இவர் கற்றுக்கொண்டார். செந்திநாதையர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில், சமக்கிருதமும் முறையே படித்து வந்தார். அக்காலத்தில் நாவலர், பொன்னம்பலப் பிள்ளை ஆகியோர் வண்ணுர்பண்ணை வைத்தீசுவரன் கோயில் வசந்த மண்டபத்தில் வாரந்

Page 86
168 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
தோறும் நிகழ்த்திவந்த சமய, புராண, விரிவுரைகளை யெல்லாம் தவருமற் கேட்டுவந்தார்.
1879ஆம் ஆண்டிலே, தமது தந்தை, தீாய் தமையன் ஆகியோருடன் சிதம்பரத்துக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார்கள்.
1930ஆம் ஆண்டளவில் இலங்கைக்குத் திரும்பிய இவர், அச்சியந்திரசாலையொன்றினை வ தி ரி யிலே தாபித்து, "ஞான சித்திப் பத்திரிகையினை முறையே நடாத்திவந்தார். அக்காலத்திலேயே இவர் பல நூல்களை யும் அச்சிற் பதித்துப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
இவர் இயற்றிய நூல்கள் : 1. திருநெல்வாயிற் புராணம்-1934. 2. தகழிண கைலாச புராணம். 3. கதிர்காம புராணம், (செய்யுள்)-1932. 4. திரு வைகற் புராணம்,-1942. 5. திருத்திலதைப் பதிப் புராணம்.
இவர் பதிப்பித்த நூல்கள் -1. நாலு மந்திரி கும்மி. 2. கரவை வேலன் கோவை- உரை, 3. சி. தாமோதரம் பிள்ளை சரித்திரம். 4. நல்லைவெண்பா. 5. தஞ்சை வாணன் கோவை-சொக்கப்ப நா வ ல ர் உரை. 6. சந்தியாவந்தன ரகசியம்.
நாகேச ஐயர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவட்டுக்கோட்டையிலே, இராமசாமி ஐயர் என்பாருக்குப் புதல்வராகத் தோன்றி யவர் இவர். தமது ஊரில் அமைந்துள்ள அடைக்கலந் தோட்டத்திலே கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் கந்தசுவாமி பேரில் "நாணிக்கண் புதைத்தல்" என்னுந் துறைமேல் இவர் 100 செய்யுள் பாடியுள்ளார். "அமுத நுணுக்கம்" என்னும் பெயருடன் ஒரு விஷ வைத்திய

நீக்கிலாஸ்பிள்ளை 169
நூலினையும் இவர் இயற்றியுள்ளார் என அறியக் கிடக் கின்றது.
நாராயணபிள்ளை
இவர், வல்லிபுரம் சிதம்பரநாதர் என வழங்கப் பெறுவர். ஊரும், புலோலியூரையடுத்த வல்லிபுரக் கோயிலை யடுத்துள்ள வல்லிபுரம் போலும். இவர் விட்டுணு தூஷண பரிகாரம் (1885), கெளளி நூற் றெளிவு (1885), சிவதூடண பரிகாரம் (1889) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
நீக்கிலாஸ்பிள்ளை
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த "சண்டிலிப்பாய்" என் னும் ஊரிலே வாழ்ந்து கொண்டிருந்த பரமானந்தர் என் பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். "குலத் துங்கர்" என்பதே இவரது சொந்தப் பெயராகும். கிறித்து சமயத்தினை இவர் தழுவியபோது இவரது பெயர் நீக்கிலாஸ் பிள்ளை' என மாற்றி வைக்கப் Lull-gil.
ஆங்கிலமொழியிலும் தமிழ் மொழியிலும் பெரும் புலமை படைத்திருந்த இவர் அரசாங்க மொழி பெயர்ப்பு முதலியாராகச் சிலகாலம் நெடுந்தீவிலே பணி யாற்றிக் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டை "செமி ஞரி’ எனப்படும் சாத்திரக் கலாசாலையிலும் சில காலம் (ஆணல் சதாசிவம்பிள்ளை அங்கு கல்வி பயின்ற காலத் தில்) ஆசிரியராய் விளங்கி, ஆங்கில இலக்கணம் ஆதியன கற்பித்துக் கொண்டிருந்தார்.
*கந்தரந்தாதி முதலான நூல்கள் சிலவற்றுக்குப் பொருள் சொல்வதில் இவர் மிகுந்த திறமை வாய்ந்தவர்

Page 87
179 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்
எனக் கூறப்படுகின்றது. "எக்காலக் கண்ணி" என ஒரு நூலினை இவர் இயற்றியுள்ளார்.
நெல்லைநாத முதலியார்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த கோப்பாயில் இருபாலை என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். கூழங்கைத் தம்பிரானிடத்தில் இவர் தமிழிலக்கணவிலக்கியங்களைப் பயின்(?ர் என அறியக் கிடக்கின்றது. தமிழிலக்கண இலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததுமன்றி, ஞாபகசத்தியிலும் ஈடிணையற்றவராய் இவர் விளங் கினர்.
அக்காலத்திலே, இவரது இல்லம் ஒப்பற்ற கலைமன்ற மாக விளங்கிக் கொண்டிருந்தது என அறியக் கிடக் கின்றது. புலவர்களும் நூலாசிரியர்களும் அங்கே சென்று தமது நூல்களை இவர் முன்னிலையில் அரங் கேற்றிச் சிறப்படைந்தனர் என்பர். இவரியற்றிய தனி நிலைச் செய்யுள்களும் பிறநூல்களும் இப்போது கிடைத் தலரிதாயின.
இருபாலை, சேனதிராய முதலியார் இவரது புதல்வ ராவர். r
L61 Ig, TT Ji
திருக்கோணமலையிலுள்ள கோணேசுவரர் கோயிலில் அருச்சகராய் விளங்கியவர் இவர். வடமொழியிலும் தென்மொழியிலும் பெரும்புலமை படைத்தவராயிருந் ததுமட்டுமன்றிக் கவிகள் யாப்பதிலும் மிகுந்த திறமை வாய்ந்தவராய் விளங்கினர். தக்கிண கைலாச புராணம் எனப்படும் கோணுசல புராணம் இவரால் இயற்றப்பட்ட தாகும். இவர் தமது குருவணக்கத்தில் மயில்வாகனப் புலவரைக் குறிப்பிட்டிருக்கிருர்,

unro)&tish, d5. 171
UT y Tayo-Gogorogi, J6T
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரிலே அரசுபுரிந்தி குணவீரசிங்கையாரியனின் மகஞன கனகசூரிய சிங்கை யாரியனுடைய புதல்வர் இவர். பகைவர்களுக்குப் பயந்து கனகசூரிய சிங்கையாரியன் இந்தியாவுக்குச் சென்றபோது இவரையும் இவரது தம்பியாராகிய செகராசசேகரனையும் உடனழைத்துச் சென்று திருக் கோவலூரிலே புலவரொருவரிடம் கல்வி பயில வைத் தான் என்றும், பதினன்கு ஆண்டுகளின் பின் இவர்களை அழைத்துக்கொண்டு வந்து பகையரசனை வென்று , இவனை இளவரசனுக்கிக் கொண்டு, யாழ்ப்பாணத்தை அரசாண்டான் என்றும் தெரிகின்றது. இவன் அரசன யிருந்த காலத்திலே,"அந்தகக் கவி வீரராகவ முதலியார்" தாம்பாடிய வண்ணக் கவியை இவன் முன்னிலையில் அரங் கேற்றி, பொற்பந்தமும் மத்த யானையும் பரிசு பெற்ருர் என்னும் கூறுவர். அந்தகக் கவி பாடிய திருவாரூருலா வைக் கேட்டபோதுமன்றி, அவர் கல்வித் திறமையைப் போற்றியும், அவரியற்றிய வண்ணக்கவியைப் புகழ்த்தும் இம்மன்னன் பாடினன் எனத் தெரிகின்றது.
பாலசிங்கம், க. (1876-1953)
மதுரைத் தமிழ்ச் சங்க அகராதியினைத் தொகுத்த கு. கதிரைவேற்பிள்ளையின் புதல்வர் இவர். ஈழநாட் டின் சட்ட நிரூபண சபையிலும், சட்ட நிறைவேற்றுச் சபையிலும் நீண்ட காலம் உறுப்பினராய் விளங்கியவர். ஈழத்தின் வளர்ச்சிக்கான பல திட்டங்களை வகுத்து விளக்கிய இவர், நாட்டின் பழைய வரலாற்ருராய்ச்சி யிலும் ஈடுபட்டுப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கி லத்தில் எழுதியவர். நாட்டு மொழிகளின் வாயிலா கவே அரசாட்சியலுவல்களை நடாத்துதல் வேண்டும்

Page 88
17 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
என்னும் கருத்தினை 1931ஆம் ஆண்டிலேயே வெளியிட் டவர் இவர்.
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மயிலிட்டியிலே வயா விளான் என்னும் ஊரிலே தோற்றியவர் இவர். தமி ழிலக்கணவிலக்கியங்களிலே மிகுந்த தேர்ச்சியும் செய் யுள் யாப்பதிற் சிறந்த வன்மையும் இவருக்கு அமைந் திருந்தனவென அறியக் கிடக்கின்றது. ஆயுள்வேத வைத்தியத்திலும் இவருக்கு மிகுந்த ஞானமும் தேர்ச்சி யும் இருந்தனவெனக் கூறுவர்.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. மூவிராசர் வாச கப்பா, 2. தசவாக்கிய விளக்கப் பதிகம், 3. இரட்சகப் பதிகம், 4. திருவாசகம், 5. பிள்ளைக்கவி, 6. கீர்த் தனத் திரட்டு,
பிலிப்பு தெமெல்லோ (1723-1790)
கொழும்பு நகரில் இராசவாசல் முதலியாராய் விளங் கிய சைமன் தெமெல்லோ அவர்களின் புதல்வர் இவர். தமிழில் மட்டுமன்றி எபிரேயம், கிரேக்கம், இலத் தீனியம், போர்த்துக்கேயம் முதலாய மொழிகளிலும் பெரும் புலமை படைத்தவராய் விளங்கினர். சமய ஊழியம் புரிந்துகொண்டிருந்த இவர், பின்னர் கொழும்பு நார்மல் பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றினர். 1753ஆம் ஆண்டிலே வடமாகாணத்துச் சிரேட்ட மதகுரு வாக நியமிக்கப்பட்டார்.
*சத்தியத்தின் செயம்", "புதிய ஏற்பாடு", "ஒல்லாந்த இறப்பிறமாதுச் சபையின் சரித்திரம்" *இறப்பிறமாதுச் சபைச் செபங்கள்" ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். கொழும்பில் இராசவாசல்

பீதாம்பரப் புலவரி 7.
முதலியாராய் விளங்கிய மருதப்ப பிள்ளை அவர்கள்மேல் "மருதப்பக் குறவஞ்சி" என்னும் நூலினையும் இவர் இயற்றியுள்ளார் என்று அறியக்கிடக்கின்றது. இவர் சூடாமணி நிகண்டின் இரண்டாம் பகுதிக்கு 20 பாடல் களையும், பன்னிரண்டாம் தொகுதிக்கு 100பாடல்களையும் புதிதாய்ச் சேர்த்துள்ளார் என்றும், அவர் பாடல்கள் 1856ஆம் ஆண்டில் மானிப்பாய் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட பத்துப் பகுதிகளடங்கிய சூடாமணி நிகண்டிற் காணப்படுகின்றன என்றும், மீதி யாழ்ப் பாணத்து வழங்கும் கையெழுத்துப் படிகளில் உள்ளன என்றும் சைமன் காசிச்செட்டி கூறுவர்.
கூழங்கைத் தம்பிரான் அவர்களால் இயற்றப்பட்ட "யோசேப்புப் புராணம் இவருக்கு உரிமை செய்யப் பட்டதாக அறியக் கிடக்கின்றது. கிரேக்க மொழி யிலிருந்து இவரால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு" (விவிலிய வேதம்) 1749ஆம் ஆண்டில் ஒல்லாந்தருடைய அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்ட தாகத் தெரிகின்றது.
பீதாம்பரப் புலவர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீர்வேலியில், சண்முகம் பிள்ளை என்பாரின் புதல்வராக இவர் தோன்றினர். தெல்லிப்பழையிலே அமெரிக்க மிஷன் திாபித்த ஆங்கில வித்தியாசாலையில் ஒரளவு ஆங்கிலம் கற்ருர். பின், இருபாலைச் சேனதிராய முதலியாரிடம் தமிழிலக்கண விலக்கியங்களை முறையே கற்றுக்கொண்டார். கவி புஜன வதில் மிகுந்த திறமையுடையவராய் இவர் விளங்கினர். இவர் இயற்றிய நூல்கள் : 1. மறைசைக் கலம் பகம். 2. மறைசைத் திருப்புகழ், 3. நீர்வை வெண்பா, 4. வல்லிபுரநாதர் பதிகம்,

Page 89
174 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள் பூபால பிள்ளை, ச. வித்துவான், (1856-1921)
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பில் வாழ்ந்துகொண்டிருந்த சதாசிவப் பிள்ளைக்கும் அவரது மனைவியாராகிய வள்ளிப் பிள்ளைக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமையிலே தமது ஊரிலுள்ள கிறித்தவ மத்திய கல்லூரியிலே கல்வி பயின்று ஆங்கிலத் திலும் தமிழிலும் சிறந்த தேர்ச்சியும் திறமையும் பெற்று விளங்கினர். தமிழிலக்கணவிலக்கியங்களையும், புராண இதிகாசங்கஃாயும், சித்தாந்த சாத்திரங்களையும் இவர் முறையே வல்வை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ச. வயித்தியலிங்கம் பிள்ளை அவர்களிடத்துப் பயின்ருர், கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இவர் அரசாங்க சேவையில் எழுது வினைஞராகச் சேர்ந்தார். ஏறக்குறைய 30 ஆண்டு கள் வரையிலே சேவை செய்தபின் அரசாங்கக் கட்டட வேலைத் திணைக்களத்திற் சிறப்பியல் உயர்பதவியும் பெற்று விளங்கினர். 1915ஆம் ஆண்டிலே அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறிக்கொண்டார். அதன் பின்புதான் இவர் தமிழ் மொழிக்கும் சைவசமயத்துக் கும் மிகுதியான தொண்டுகள் புரிந்துகொண்டிருந்தார்.
இவரால் இயற்றப்பட்ட சமயசம்பந்தமான நூல்கள் பத்தினைக் கோவைசெய்து திருமயிலை செ. வெ. ஜம்பு லிங்கம் பிள்ளையவர்கள் 1923ஆம் ஆண்டில் வெளியிட் டார்கள்.
இவர் இயற்றிய நூல்கள் : 1. திருமுருகர் பதிகம் (1882). 2. சீமந்தனி புராணம் (1884). 3. விநாயகர் மான்மியம் (1905). 4. புளியநகர் ஆனைப்பந்தி விக் னேஸ்வரர் பதிகம் (1905). 5. சிவ தோ த்தி ரம். 6. முப்பொருளாராய்ச்சிக் கட்டுரை (1918). 8. அரசடி கணேசர் அகவல் (1920). 8. கணேசர் கலிவெண்பா (1921). 9. தமிழ்வரலாறு.

பேரம்பலப் புலவர் 175
பூர் ஐயர்,
அமெரிக்க மிஷன் சங்கத்தினரால் யாழ்ப்பாணத் துக்கு அனுப்பட்ட இவர், (Batticotta Seminary) என் ஆறும் யாழ்ப்பாணச் சர்வசாத்திரக் கலாசாலையினை வட்டுக் கோட்டையில் நிறுவியராவர்.
1841ஆம் ஆண்டிலே அமெரிக்க மிஷன் வட்டுக் கோட்டையிலே தொடக்கிய 'உதயதாரகை முற்றிலும் இவருடைய உழைப்பினுலேயே தொடங்கப்பெற்ற காகும்.
பூலோகசிங்க முதலியார்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த காரை தீவிலே தோன் றியவர் இவர்; தெல்லிப்பழையிலே வாழ்ந்துகொண்டிருந் தார். இவர், "அருளப்ப நாவலர்" எனவும் படுவர்.
ஆயிரத் துத் தொள்ளாயிரம் செய்யுள்களைக் கொண்டதாய்த் திருச்செல்வராசர் காப்பியம்" என் னும் பெயருடன், ஒரு காப்பியத்தினை இயற்றியுள்ளார். அது, இருபத்தைந்து படலங்களைக் கொண்டது.
பேரம்பலப் புலவர் (1859-1935)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வேலணை என்னும் ஊரிலே, கோணுமலை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். முதலில் அவ்வூரிலுள்ள அமெரிக்க மிஷன் பாடசாலையிலே இவர் கல்வி பயின்று வந்தார். பாடசாலையிலே கல்வி கற்றதுடனமையாது, பாடசாலைப் படிப்பு முடிந்த பின்னும் அப் பாடசாலைத் தலைமை யாசிரியராக விளங்கிய கனகசபைப் பிள்ளையிடம் தமி ழிலக்கண விலக்கியங்களை முறையே கற்று வந்தார். அதன்பின், அவ்வூரிற் பெரும் புலவராய்த் திகழ்ந்த

Page 90
17ፀ ஈழநாட்டின் தமிழ்ச் சுடரி மணிகள்
கந்தப் பிள்ளையவர்களிடம் சங்க நூல்களையும், உயரிய தமிழிலக்கணங்களையும், சைவ சித்தாந்த சாத்திரங்களை யும் பயின்ருர். அவ்வூரிலே சோதிடத்தில் வல்லவராய்த் திகழ்ந்த குமாரு அவர்களிடம் சோதிட நூல்களையும் கற்றுக்கொண்டார்.
அவ்வூரில் வாழ்ந்த நொத்தாரிசு முருகேசு என்பா ருக்கு இவர் எழுதுவினைஞராகவிருந்து சில காலம் பணி யாற்றிக்கொண்டிருந்தார். பின், அத்தொழிலினின்றும் நீங்கி, கமத்தொழிலையே மேற்கொண்டு வாழ்ந்தார்.
இவர் இயற்றிய நூல்கள் : 1. வண்ணைச் சிலேடை வெண்பா, 2. வேலணை இலந்தைக்காட்டுச் சித்தி விநாயகர் இரட்டை மணிமாலை, 3. கடம்பரந்தாதி.
பேர்சிவல் பாதிரியார், பீற்றர்.
உவெஸ்லிய மிஷனரிமாருள் தமிழறிவில் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவர் இவர். நீண்டகாலமாக யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்து பணியாற்றியவர்" நல்லூர் ஆறுமுக நாவலரைக் கொண்டு பைபிளைத் தமிழில் மொழிபெயர்ப்பித்து வெளியிட்டவர். பாதிரி யார் தொழிலினைத் துறந்து, சென்னைக்குச் சென்று, "தினவர்த்தமானி" என்னும் தமிழ்ப் பத்திரிகையினை நடாத்திக் கொண்டிருந்தவர். அப் பத்திரிகையின் ஆசிரியராக சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களும் சில காலம் பணியாற்றியதுண்டு. மெதடிஸ்த விஞவிடை, *ஆராதனை ஒழுங்கு முதலிய நூல்களையும், "ஆங்கில தமிழ் அகராதி" ஒன்றினையும் இயற்றியுள்ளார்.
பொன்னம்பலபிள்ளை, ச. (1870-1946)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சாவகச் சேரியிலே தோன்றியவர் இவர். இராமநாதன் கல்லூரியிலோல

பொன்னம்பலப் பிள்ளை, தா. 177
ஆண்டுகளாகத் தமிழ்ப் பண்டிதராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தவர்.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. இராமநாத மான் மியம், 2. அருணசல மான்மியம், 2 இலங்கை மான் மியம், 4. பன்றிக்கிரி அரசன் கோவை, 5. கந்த புராணம்-மார்க்கண்டேயப்படல விருத்தியுரை.
பொன்னம்பலப் பிள்ளை, தா.
ஈழநாட்டிலே யாழ்ப்பாணத்திலே தோன்றியவர் இவர். தென்னிந்தியாவுக்குச் சென்று திருவிதாங்கூரில் "எக்சைஸ் கமிஷனர் உத்தியோகத்தில் அமர்ந்திருந் தவர். நீண்ட காலமாக நெல்லை மாவட்டத்திலுள்ள சிவசைலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர். "மலபார் குவாட்டேளி (Malabar Quartery) 'தமிழியன் அன்ரி g5Gaiti' (Tamilian Antiquary) (p56) TGOT gigaud சஞ்சிகைகளில் அநேக ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டவர். வரலாற்ருராய்ச்சியில் மிகுந்த ஈடுபா டுடையவராய் விளங்கிய இவர் இயற்றிய "வஞ்சிமா நகர்" என்னும் நூல் சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புகளைக் கொண்டதாகும். மனேன்மணிய நாடகாசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் உற்ற நண்பர். 1912ஆம் ஆண்டிலே காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தென்னிந்திய சைவ சித்தாந்த சமரச ஆண்டு விழாவுக்கு இவர் தலைமை தாங்கினர்.
இவர் எழுதிய கட்டுரைகளில், "மாணிக்க வாசகரும் பூர்விக மலையாளக் கிறித்தவர்களும்’, ‘கொடுங்கோளூர்க் கோயிலின் தோற்ற வரலாறு', 'நாஞ்சில்நாடு செங் கோடு ஆகியவற்றின் பண்டைப் பெருமை", "இராமா யணத்தின் தருமம்", "தென்னிந்திய பிரதிநிதித்துவச் சபைகள்" ஆகியன குறிப்பிடப்படத் தக்கவையாகும்.

Page 91
178 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
1911ஆம் ஆண்டிலே, பாளையங்கோட்டைச் சைவ சமயாபிவிருத்திச் சபை மலரிலும் இவர் "திருவிடமும் சைவமும்" என்னும் தலையங்கத்துடன் ஒரு தமிழ்க் கட்டுரை எழுதியுள்ளார். இவர் திருவனந்தபுரத்திற் பிரதம நீதிபதியாய் விளங்கிய திரு. தா. செல்லப்பா பிள்ளை, B.A., B.L., அவர்களின் சகோதரர் ஆவர். தனித் தமிழ் இயக்கத்துக்கு அடிகோலியவர்களுள் இவருமொருவராவர்.
பொன்னம்பலப் பிள்ளை, ந. ச. (1836-1902)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரிலே சரவண முத்துப் பிள்ளை என்பவருக்குப் புதல்வராகத் தோன் றியவர் இவர். இவர் தாயார், ஆறுமுக நாவலர்க்குத் தமக்கையார் ஆவர். எனவே, இவர் ஆறுமுகநாவலரவர் களின் மருகர். இளமைக் காலத்திலே, நல்லூரில் வாழ்ந்து கொண்டிருந்த கார்த்திகேய உபாத்தியாயரிடத்தே தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றுக்கொண்டிருந்தார். பின், தமது மாமனுராகிய நாவலர்களிடத்தில் நீண்ட காலம் கற்றவர். எல்லேயற்ற ஞாபக சத்தியும், கூர்த்த மதியும், நுண்ணிய ஆராய்ச்சிப் பேராற்றலும் படைத் தவர். தொல்காப்பியத்தையும், சிலப்ப தி கா ரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, இராமாயணம் பாரதம் முதலாய இலக்கண விலக்கியங்களையும் பன்முறை கற்றுத் துருவித் துருவி ஆராய்ந்தவர். கவியாப்பதிலும் மிகுந்த வன்மை படைத்தவர். புராணங்களுக்குப் பொருள் கூறுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். இயல் பாயமைந்த இன் குரலுடன், சொல்லின்பமும் பொரு ளின்பமும் ஒருங்குசேரப் பொருள் கூறும்போது நூற்றுக் கணக்கானுே ர்சத்தமின்றி அவாவுடன் கேட்டுக்கொண் டிருப்பது வழக்கம் என்பர். இவர் புராணங்களுக்குப்

பொன்னம்பலப் பிள்ளை, ந. ச. 1ጎፅ
பொருள் கூறும்போதும், விரிவுரை செய்யும்போதும், இவர் கூறும் உரை நுட்பங்களையும் இலக்கணக் குறிப்பு களையும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பிறரும் கேட்டு எழுதிச் செல்வது வழக்கம் எனவும் அறியக் கிடக்கின்றது. அங்ங்ணமாக எழுதப்பட்ட குறிப்புப் படிகள் இன்றும் யாழ்ப்பாணத்தின் பற்பல பகுதிகளிற் காணப்படுகின்றன.
இந்தியாவிலும் இலங்கையிலும் இவரிடம் நேரிலே கற்றுத் தேறிய மாணவர் பலர். இந்தியாவிலே, உரத் தூர் வைத்தியலிங்க பிள்ளை. திருவாவடுதுறை பொன் ணுேதுவார், திருவாவடுதுறை சுப்பிரமணிய ஒதுவார், காரைக்குடி சொக்கலிங்சஞ் செட்டியார், பழனி குமார சுவாமித் தம்பிரான் ஆதியானேர் இவருடைய மாணவர் களுட் குறிப்பிடத்தக்கவராவர். யாழ்ப்பாணத்திலே, உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, வண்ணுர்பண்ணை சி. சுவாமிநாத பண்டிதர், வண்ணுர்பண்ணை சி. பொன் னுத்துரை ஐயர், சாவகச்சேரி ச. பொன்னம்பலப் பிள்ளை, கொக்குவில் ச. சபாரத்தின முதலியார், தாவடி சோமாஸ்கந்த பண்டிதர், கந்தர் மடம் சிவகுருநாத பிள்ளை, கொக்குவில் வ. தம்பு, மகாவித்துவான் சி. கணே சையர் ஆதியானுேர் இவருடைய மாணவர்களுட் சிறந்த வராவர்.
தேவகோட்டை வேதாரணியம் முதலிய இடங்களி லும் சிறிது காலம் இவர் தங்கி வாழ்ந்தார் எனத் தெரி கின்றது. வேதாரணியத்திலே வாழ்ந்துகொண்டிருந்த போது, நற்றிணை உரையாசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், சிலப்பதிகாரம் முதலான நூல் களிலே தமக்கு ஏற்பட்ட ஐயங்களை இவரிடம் கேட்டுத் தெளிந்தாரென நற்றிணை நூன்முகம் கூறுகின்றது.

Page 92
180 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவர் பல நூல்களும் உரைகளும் எழுதி வெளியிட் டுள்ளார். பாரதத்திலே சில பருவங்களுக்கும், மயூர கிரிப் புராணத்துக்கும் விரிவான உரை எழுதி வெளியிட் டுள்ளார். அரசகேசரியவர்கள் தமிழில் மொழிபெயர்த் தியற்றிய இரகு வம்சம் என்னும் நூலானது முதன் முதலாக இவராலேயே பரிசோதித்து அச்சேற்றப் பட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலைமையாசிரியராகவும், பரிபாலக ராகவும் இவர் கடமையாற்றியதுமுண்டு.
பொன்னுத்துரை ஐயர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வண்ணுர் பண்ணையிலே தோன்றியவர் இவர். ஆறுமுக நாவலரிடத்திலும், வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடத்திலும் தமிழிலக்கணவிலக்கியங்களைக் கற்றவர் எனக் கூறப்படு கின்றது. இளமைக் காலத்திலேயே கவி இயற்றும் வன்மை இவருக்கு இயல்பாயமைந்திருந்ததெனக் கூறுவர்.
இவர், "நல்லூர் நிரோட்டகயமக வந்தாதி" என்னும் பெயருடன் அந்தாதி நூல் ஒன்று பாடியுள் ΘΤΙΤΠ . .
மகாலிங்கசிவம், பண்டிதர்.
உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை அவர்களுக்கும் புலோலியூர் குமாரசுவாமிப் புலவர் குடும்பத்தைச் சேர்ந்த மகேசுவரியம்மையார்க்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இவர், தமது தந்தையாரிடத் திலேயே கல்வி கற்று வந்தார். இராமநாதன் கல்லூரி யிலும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும்

மயில்வாகனப் புலவர், க. 181
விரிவுரையாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தார். ベ
இவர், பன்னிரண்டு வயதுடையவராய் இருக்கும் போது "பழனிப் பதிகம்" என்னும் நூலினை இயற்றினர். அந்நூலின் காரணமாக இவருக்குக் குருகவி' என்னும் பட்டப்பெயர் வழங்கி வருவதாயிற்று. சிந்தைகொளச் சொன்மாரி பொழிவதிலும் கேட்டதற்கெல்லாம் உட னுக்குடன் கவிகள் இயற்றுவதிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய்த் திகழ்ந்தவர். மயில்வாகனப் புலவர் (1779-1816)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மாதகல் என் னும் ஊரில், வையா என்னும் புலவரது மரபிலே, தோன்றிய வர் இவர். மாதகல் சிற்றம்பலப் புலவரது ԼD(5ւo&657 என்று தெரிகின்றது.
கூழங்கைத் தம்பிரானிடத்தில் இவர் தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றர் என்பர். வண்ணுர்பண்ணேத் சிவன்கோயிலைப் புதிதாகக் கட்டுவித்த வைத்தியலிங்கச் செட்டியாரும் இவரும் ஒருசாலை மாணுக்கர் என அறியக் கிடக்கின்றது. 4.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. யாழ்ப்பான வைபவ மாலை, 2. புலியூர் யமக வந்தாதி, 3. காதி யாத்திரை விளக்கம், 4. ஞானுலங்காரரூப நாடகம். மயில்வாகனப் புலவர், க. (1875-1918)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த தெல்லிப் வறுத்தலைவிளான் என்னும் ஊரிலே, இலங்கைநாத முதலியார் மரபிலே கணபதிப்பிள்ளை என்னும் ஆசிரிய ருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இளமைக்
காலத்தில் அவ்வூரிலமைந்திருந்த அமெரிக்க மிஷன்
Fy9—18

Page 93
is 2 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
தமிழ்ப் பாடசாலையிற் கல்வி பயின்று கொண்டிருந்தவர். பன்னிரண்டாம் ஆண்டு நிரம்பப் பெற்றதும் தமிழ் பயில்வதை நிறுத்தி விட்டுத் தெல்லிப் பழையிலமைந்த அமெரிக்க மிஷன் ஆங்கில வித்தியாசாலையில் ஆங்கிலம் கற்கத் தொடங்கினர். அங்கே சில காலம் வரை பயின்ற பின், யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக் கல்லூரிக்குச் சென்று பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பிற் சேர்ந்து படித்து வந்தார். அவ்வேளையிலும் ஒய்வு கிடைக்கும் போது தமிழிலக்கணவிலக்கியங்களைத் தாமே கற்று, நேர்ந்த ஐயங்களை அக்கல்லூரியிலேயே தமிழ்ப் பண்டித ராய் விளங்கிய ஆ. சோமாஸ்கந்த பிள்ளையிடத்திற் கேட்டுத் தெளிந்தார். அக்கல்லூரிப் படிப்பு முடி வடைந்ததும், தமிழிலக்கணவிலக்கியங்களைத் தனிப் பட்ட முறையில் அவரிடஞ்சென்று கற்றுக்கொண்டு வந்தார்.
இவர், இருபத்திரண்டு வயதினராய் இருக்கும் போது, யாத்திரைக்காக இந்தியாவுக்குச் சென்ருர், அக் காலத்தில் இராமநாதபுரத்திலே தங்கியிருந்த உடுப் பிட்டிச் சிவசம்புப் புலவரைக் காணுவதற்காகச் சென்ற இவர், அவருடன் கூடிச் சென்று, சேதுபதி மன்னரைத் தரிசித்தார். அவ்வேளையில் இவரும் புலவரென அறிந்த மன்னரின் விருப்பத்திற்கேற்ப ஒரு கவி பாடி, அவரின் விதப்பைப் பெற்று மீண்டனர் என்று அறியக் கிடக் கின்றது.
அதன்பின், சிறிது காலம் இவர் ஆசிரியராகத் தெல்லிப்பழையிலும் மல்லாகத்திலுமுள்ள ஆங்கில வித்தியாசாலைகளில் ஆங்கிலவாசிரியராகக் கடமை யாற்றிக் கொண்டிருந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலே நொத்தாரிசு (Notary) மாருக்குரிய தேர்வுகளிற் சித்தியெய்தி நொத்தாரிசுவாக

மன்னம்பாடியார் 183
நியமனம் பெற்ருர், வட்டுக் கோட்டையிலும் மயிலிட்டி யிலும் நொத்தாரிசுவாகக் கடமையாற்றிக் கொண்டிருந் தார். மயிலிட்டியில் நொத்தாரிசுவாகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், "இந்து பரிபாலன சபை" என ஒரு சபையை நிறுவி அதற்கும் தாமே தலைவராகவும் விளங்கினர்.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. இணுவைப் பதிற் றுப் பத்தந்தாதி, 2. மயிலை மும்மணிமாலை, 3. விநா யசரகவல், 4. மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், 5. ஊஞ்சல், 6. வைரவர் தோத்திரம், 7. மாவைப்பதிகம் 8. இனுவைப் பதிகம், 9. துணவைப் பதிகம், 10. கீரி மலை நகுலேசுவரர் மீது வினேதசித்திரகவிப்பூங்கொத்து, 11. திருநீலகண்டநாயனர் சரித்திரம் (நாடகம்).
மன்னம்பாடியார்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக் களப்பிலே தோன்றியவர் இவர். இவருடைய தந்தை தாயாரைப் பற்றிய செய்திகள் எவையும் கிடைத்தில. இவருடைய இயற்பெயர்கூட இதுவெனத் தெரிய வில்லை. இவருடைய பெயர் மன்னம்பாடியார்’ எனவே வழங்கப் பெற்று வந்துள்ளது. இப்பெயரினை "மன்னன் பாடியார்”, “வண்ணம் பாடியார்’ என்று திரித்து வழங்கு வரெனினும், இவரது பெயரினை "மன்னம்பாடியார் எனவே ஏடுகள் குறிக்கின்றன.
இவர், தமது இளமைக் காலத்திலேயே தமிழ் கற்று முற்றத் துறைபோகியவர் என்பர். இந்தியாவிலே பிறந்து, மட்டக்களப்பிலே குடியேறி, ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தை நடாத்திவந்தவரான "ஆரியமாநாகர்’ இவரே என்பர்.

Page 94
Ꮧ Ᏸ4 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவர், தமது இருபத்துநான்காம் வயதில், "வள்ளி நாச்சி" என்னும் பெண்மணியை மணந்தார் என்றும், இவருக்கும் அப்பெண்மணிக்கும் "முருகன்" என ஒரு புதல்வன் இருந்தான் என்றும், அச்சிறுவன் இளமையிலே இறந்துவிட்டான் என்றும் தெரிகிறது.
இளமைக் காலந் தொடங்கியே இவர் கடவுட்பற்று மிகுந்தவராக விளங்கினுர் என்றும், தமது பதினருவது வயதிலே தொடங்கி ஆண்டுதோறும் கதிர்காமத்துக்குச் சென்று வழிபட்டு வந்தாரென்றும் கூறுவர். மாந்தி ரீகம், சோதிடம், விஷ வைத்தியம் ஆகியவற்றிலும் இவ ருக்கு மிகுந்த புலமையிருந்ததாகத் தெரிகின்றது.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. கதிரைமலையந் தாதி, 2. தோன்றிச் சிலேடை வெண்பா, 3. தோன் றித் தல புராணம், 4. மட்டுநகர்ப் புதுமை.
மாப்பாண முதலியார்
யாழ்ப்பாணத்துத் தென்மராட்சிப் பகுதியைச் சா ர் ந் த எழுதுமட்டு வாள் எ ன் னு ம் ஊரிலே, வைரவ சந்தானக் குருமரபிலே தோன்றியவர் இவர். இவருக்கு "இருமரபுந்துய்ய குலசேகரப் புது நல்ல மாப் பாணமுதலியார்’ என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. தமிழ் மொழியில் மட்டுமன்றி ஆங்கிலம் சமக்கிருதம் ஆகிய மொழிசளிலும் இவருக்கு நல்ல புலமை இருந்த தெனத் தெரிகின்றது. தென்மராட்சிப் பகுதிக்கு மணியகாரனகவும் சிலகாலம் இவர் பணி புரிந்ததுண்டு என அறியக் கிடக்கின்றது.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. சோமகேசரி நாட கம், 2. பரிமளகாச நாடகம், 3. குறவஞ்சி, 4. விரத நிச்சயம், 5. ஆசௌச விதி, 6. திருச்செந்தூர்ப்புராண விரிவுரை

முகம்மது காசீம் மரைக்காயர் 85
மீரான் முகைதீன்
யாழ்ப்பாணத்திலே தோன்றியவர் இவர். யாழ்ப் பாணம் செய்யிது முகம்மது பலீல் அவர்களிடம் இவர் கல்வி பயின்ருர் என்று தெரிகின்றது. இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களை வினவிடையாக விளக்கு கின்ற 'சன்மார்க்க இலகுபோத வினவிடை’ என்னும் நூலினை இவர் இயற்றியுள்ளார். இந் நூலின்கண்ணுள்ள மேற்கோள்கள் யாவும் அரபு மொழியிலுள்ளன.
முகமது இபுருகீம், செ. மு.
வேர்விலையில் வாழ்ந்த செய்துமுகம்மது என்பா ருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். முகம்மது நபியின் பேரில் இவர் பாடியுள்ள கீர்த்தனைகள் "அதி நூதன அலங்காரக் கீர்த்தனை" என்ற பெயருடன் வெளி வந்து உலவுகின்றன. சாத்தான்குளத்தைச் சார்ந்த கா. மீ. மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது என்று தெரிகின்றது.
முகம்மது காம்ே புலவர்
காலியிலே தோன்றியவர் இவர். இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகள் எவையும் கிடைத்தில. "செய்கு முஸ்தபா ஒலியுல்லா காரண அலங்காரக் கும்மி" என்னும் நூலினை இவர் இயற்றி யுள்ளார். வேர்விலையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா ஒலியுல்லாவின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர் ஆற்றிய பணிகளையும் எடுத்து விளக்கிக் கூறுவது இந் நூல். முகம்மது காசீம் மரைக்காயர்
மன்னர்ப் பகுதியிலே தோன்றியவர் இவர். இவ ருடைய வாழ்க்கை வரலாறு கிடைத்திலது. இவர்,

Page 95
18 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
"மெய்ஞ்ஞான நவமணிமாலை" என்னும் நூலினை இயற்றி யுள்ளார். முகம்மது தம்பி மரைக்காயர்
புத்தளத்தைச் சார்ந்த கற்பிட்டியிலே தோன்றிய வர் இவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை படைத்திருந்தார் என அறியக் கிடக்கின்றது. இவர், புலவர்கள் பலரை ஆதரித்துப் புரவலராகவும் விளங்கினர் எனத் தெரிகின்றது கீழைக்கரையைச் சார்ந்த அப்துல் மஜீது என்பார் இயற்றிய "ஆசாரக் கோவை"யில், ஒவ் வொரு பாடலிலும் இறுதியில் "முகம்மதுத் தம்பி மரைக் காய சகாயனே" என இவரது பெயர் வருகின்றது. இவர் இயற்றிய பாடல்கள் எவையுங் கிடைத்தில.
முகம்மது ருபிப் புலவர்
மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரிலே வாழ்ந்த சேகுமதாறு சாகிப் புலவரவர்களின் அருமைப் புதல்வர் இவர். வேளாண்மைத் தொழிலினை மேற்கொண்டிருந்தவர் எனவும், சிறந்த தமிழறிஞர் எனவும் அறியக் கிடக்கின்றது. இவர் பாடியுள்ள தனிப் பாடல்கள் பல. இவற்றுளெல்லாம் சிறந்ததாகக் கருதப் படுவது, இவர் தமது நண்பராகிய இசுமாலெவ்வை முகையதின் பெரும் பிரிவு குறித்துப் பாடிய "முகையதின் ஒப்பாரி" ஆகும். இவராற் பாடப்பெற்றவற்றுள் இப் போது கிடைக்கும் பாடல்கள்கூட இன்னும் தொகுக்கப் பட்டில.
முத்திராசர்
இவர், உறையூர்ச் செந்தியப்பரின் புதல்வரென்றும்,
யாழ்ப்பாணத்திலே தங்கி வாழ்ந்தார் என்றும் அறியக்
கிடக்கின்றது யாழ்ப்பாணக் குடியேற்ற வரலாற்றினைக்

முத்துக்குமார கவிராசர் 87
கூறுகின்ற "கைலாய மாலை" என்னும் நூல் இவரால் இயற்றப்பட்டதாகும். இந்நூல் கலிவெண்பாவால் இயன்றுள்ளது. முதலியார் செ. இராசநாயகம் எழுதிய ஆராய்ச்சி முன்னுரையுடனும், ஆ. முத்துத்தப் பிப் பிள்ளையின் மொழிபெயர்ப்புடனும் 1939 ஆம் ஆண்டில் இந்நூல் செ. வே. ஜம்புலிங்கம் பிள்ளையால் வெளியிடப் பட்டது. அதற்கு முன்னதாக 1906ஆம் ஆண்டில் தீ. கைலாச பிள்ளையால் பதிப்புக் குறிப்புகள் எவையு மின்றி அச்சேற்றுவிக்கப்பட்டதாகும். முத்துக்குமார கவிராசர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சுன்னகத்திலே உடுவில் என்னும் ஊரில், சந்திரசேகர மாப்பாணர் மரபிலே அம்பலவாண பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். சுன்னகம் அ. குமாரசாமிப் புலவர் இவருக்குப் பெளத்திரர் ஆவர்.
இளமைக் காலத்திலேயே இவர் தமிழிலக்கண விலக் கியங்களை நன்கு பயின்று பெரும் புலமையுடையவராய் விளங்கினர். செய்யுள்கள் இயற்றுவதிலும் மிகுந்த வன்மையுடையவராய்த் திகழ்ந்தார். இவரது தனிப் புலமையையும் கவியாக்கும் வன்மையையும் கண்ட பெரியோர் இவரைக் "கவிராசர்" என அழைத்து வந்த னர். காலத்துக்குக் காலம் இவரியற்றிய தனிநிலைக் கவிகள் பல. இக் கவிகளுட் சிலவற்றைத் திரட்டித் தொகுத்து "முத்தக பஞ்ச விஞ்சதி" என்னும் பெயருடன் சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவரவர்கள் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளார்கள்.
சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களின் தமிழா சிரியர் இவரேயாவர். தாம் பதிப்பித்த நூல்களின் பாயிரங்களிலெல்லாம் குரு வணக்கத்தில் அவர் இதனை வெளியிட்டுள்ளார்கள்,

Page 96
188 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இவர் இயற்றிய நூல்கள் : 1. யேசுமத பரிகாரம், 2. ஞானக் கும்மி, 3. சுன் கைம் அரிகரபுத்திரனர் ஊஞ்சல், 4. நடராசர் பதிகம், 5. சகத்திரானிக நாடகம், 6. முத்தக பஞ்ச விஞ்சதி (தனிநிலைக் கவித் தொகுதி.)
முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், (1853-1936)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித்துறையிலே, புலோலியூரில் மகாதேவ ஐயர் என்பாருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர் இவர். இவருடைய தந்தையாரே, உரிய காலத்தில் ஏடு தொடக்கி இவருக்குத் தமிழும் சமக்கிருதமும் கற்பித்து வந்தார். சமக்கிருதத்திற் சிறந்த புலமையுடையவராக இவர் விளங்குதல் வேண்டு மென விரும்பிய தந்தையார், இவரை வண்ணுர் பண்ணை யிலே வாழ்ந்துகொண்டிருந்த ஐயாத்துரை ஐயரிடம் ஒப்படைத்துச் சமக்கிருதம் கற்பிக்கும்படி வேண்டிக் கொண்டார். காவிய வியாகரணங்களை இவர் முறையே கற்று முடித்தபின், பிராமணர்க்குரிய வைதிகக் கிரியை களையும் அவரிடம் கற்றுக்கொண்டார். அதன்பின், உயர்தரத் தமிழிலக்கண விலக்கியங்களை உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்தே கற்றுத் தமிழிலும் பெரும் புலமை உடையவராய்த் திகழ்ந்தார். வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளையவர்களிடத்தும் சிறிது காலம் இவர் தமிழ் நூல்களைப் பயின்றதுண்டு.
பதினெட்டாவது வயதிலே ஆசாரியாபிடேகம் செய்யப்பெற்றபின், இவர் தாம் ஆசாரியராகவிருந்து ஆலயக்கிரியை பாதியவற்றைச் செய்வதற்கு இன்றி யமையாத பத்ததிகளைத் தேடிப் படித்துக்கொண் டார். சைவ சித்தாந்த நூல்களையும் அக்காலத்திலே தெளிவுபெறக் கற்றுப் புராணங்களிலும் மிகுந்த பயிற்சி

முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. 189
யுடையவரானர். புலோலிப் பசுபதீசுரன் கோயிலுக்கு அக்காலத்து அர்ச்சகராயிருந்தவரும் இவரேயாவர். சோதிட கணித சாத்திரத்திலும் இவர் மிகுந்த புலமை யுடையவராய் விளங்கினர் என அறியக் கிடக்கின்றது.
நாவலர் பெருமானின் முன்னேராகிய திருநெல்வேலி ஞானட்பிரகாச சுவாமிகள் சமக்கிருதத்தில் எழுதிய பிரமாண தீபிகாவிருத்தி, சிவஞானபோத விருத்தி, சித்தாந்த சிகாமணி ஆகிய சைவ சித்தாந்த நூல்களை நல்லூர் த. கைலாச பிள்ளையவர்கள் அச்சிடுவதற்காகப் பரிசோதித்துக் கொடுத்தவர் இவரேயாவர்.
உரையாசிரியர் ச. சுப்பிரமணிய சாத்திரிகள், டக்தர் க. கணபதிப் பிள்ளை முதலானேர் பலர் இவரது மாணவராவர்.
இவர் இயற்றிய நூல்கள் : 1. சிவபெருமான் அலங் காரம், 2. பசுபதீசுரர் அந்தாதி.
முத்துக்குமாரர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வட்டுக்கோட்டையிலே தோன்றியவர் இவர். இருபாலைச் சேனதிராய முதலி யார் இவர் மாணவரென்றும், தமிழிலக்கண விலக்கியங் களை இவரிடமே முறையாகக் கற்றனரென்றும் அறியக் கிடக்கின்றது. இலக்கியங்களுள்ளும் அவர் சிறப்பாகக் கற்றுக்கொண்ட நூல் கம்பராமாயணம் எனக் கூறப் படுகின்றது.
கஞ்சன் காவியம், வலைவீசு புராணம் ஆகிய இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார். முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. (1858-1917)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மானிப்பாயில் வாழ்ந்து கொண்டிருந்த ஆறுமுகம்பிள்ளை என்பாருக்கும் அவர்

Page 97
190 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
மனைவி சீதேவிப்பிள்ளைக்கும் மூ த் த புதல்வராக 1858ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18ஆம் தேதியன்று தோன்றியவர் இவர். இளமையிலே தமது ஊரிலுள்ள பள்ளிக்கூடத்திற் கல்வி பயின்று கொண்டிருந்தவர். உயர்தரக் கல்வி பெறுவதற்காக, பீற்றர் பேர்சிவல் பாதிரியாரவர்களால் நிறுவப்பட்டதும் இப்பொழுது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என வழங்கப் பெறுவது DItgo உவெஸ்லியன் மத்திய unr F mt&avu Gav சேர்ந்தார். அப்பாடசாலையில் இவர் சோந்த காலத் திலே அதன் தலைமையாசிரியராகத் திகழ்ந்தவரான உவில்லியம் நெவின்சு சிதம்பரப்பிள்ளை அவர்களிடத் திலேயே இவர் தமிழிலக்கண இலக்கியங்களையும் ஆங்கி லத்தையும் நன்கு பயின்று தேர்ச்சி பெற்றுப் புலமை மிகுந்து விளங்கினர்.
இவர், 1876ஆம் ஆண்டிலே பாடசாலையை விட்டு நீங்கி, நாவலப்பிட்டிக்குச் சென்று, அங்கே ஓர் ஆசிரிய ராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். 1880ஆம் ஆண்டில் ஆசிரியத் தொழிலினை விட்டு நீங்கி, தென் னிந்தியாவுக்குச் சென்ருர். அங்கே, இவரின் கல்வியறி வினையும் ஆற்றலையுங் கண்ட திருத்துறைப் பூண்டி அழகிய நாட்டம் செட்டியாரவர்கள் தமது பிள்ளை களுக்குக் கல்வி கற்பிப்பதற்கு இவரை ஆசிரியராக ஏற்படுத்தினர்கள். சில காலம் வரை அங்கு பணி யாற்றிக் கொண்டிருந்தபின், நாகப்பட்டினத்துக்குச் சென்று, அண்டேர்சன் கம்பனியில் (Anderson & Co.) தலைமை எழுதுவினைஞராகவும் கணக்காளராகவும் கட மையாற்றிக் கொண்டிருந்தார். அத் தொழிலும் கல்வி யறிவு வளர்ச்சிக்கு ஏற்றதாய் அமையாததால் அதனை யும் விட்டு நீங்கினர். காரைக்காலிலே புரையாறு என்னும் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த தவசிமுத்து

முத்தத்தம்பிப்பிள்ளை, ஆ. 19
நாடார் என்னும் புரவலரின் வேண்டுகோளுக்கு இணங்கி "சத்தியாபிமானி" என்னும் வாரப் பத்திரிகைக்கு ஆசிரி யராகப் பொறுப்பேற்றுச் சில ஆண்டுகள் வரை அதைச் செம்மையான முறையில் நடாத்தி வந்தார். அப் பத்திரிகையின் ஆசிரியர்ப் பதவியினின்று பிள்ளையவர் கள் விலகியபோது நாடார் சமூக மக்கள் ஒரு தொகைப் பணத்தினை இவருக்க நன்கொடையாக அளித்து அதைத் தமிழ்மொழி வளர்ச்சிக்காகப் பயன்படுத்து மாறு வேண்டிக் கொண்டனர். பிள்ளையவர்கள் அப் பணத்தைக் கொண்டு சென்னை மாநகரிலே அண்டேசர்ன் வீதியில் யுபிலி அச்சகம்" (Tubilee Press) என ஒரு அச்சகத்தினை 1885ஆம் ஆண்டிலே நிறுவித் தமிழ்த் தொண்டு புரிந்து வந்தார்கள். சில ஆண்டுகள் வரை சென்னையில் வாழ்ந்துகொண்டிருந்த பின் தமது தாயக மாகிய யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் செல்வதற்கு ஆவல் கொண்டார்கள். 1893ஆம் ஆண்டிலே யாழ்ப் பாணத்துக்கு வந்து, வண்ணுர் பண்ணையில் ஆறுமுக நாவலர் வாழ்ந்த இல்லத்தினை விலைக்கு வாங்கி, அவ் வில்லத்துக்கு "நாவலர் கோட்டம்" எனச் சிறப்புப் பெயர் கொடுத்து, அதற்குப் பக்கலிலே ஒரு புத்தகசாலையையும் 'நாவலர் அச்சகம்" என ஒர் அச்சகத்தையும் நிறுவி, தமிழ்த் தொண்டும் சைவத் தொண்டும் புரிந்து கொண்டிருந்தார்கள். சுகாதார அறிவும் வைத்திய சாத்திர அறிவும் நாட்டில் வளர்ச்சி பெறுதல் வேண்டு மெனக் கருதி மூன்று ஆண்டுகள் வரை, "வைத்திய விசாரணி" என்னும் பெயருடன் ஒரு மாதப் பத்திரிகை யையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
மதுரையிலே, இராமநாதபுரம் பாண்டித்துரைத் தேவரவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை நிறுவிய போது பிள்ளையவர்கள் அவருடன் ஒத்துழைத்து வேண்

Page 98
192 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
டிய உதவியளித்தார்கள். சங்கத்தாரால் நடாத்தப் பட்ட பரீட்சைகளுக்கும் இவர் பரீட்சகராகவிருந்து பணி புரிந்தார்கள். சங்கத்தாரால் நடாத்தப்பட்டு வந்தி *செந்தமிழ்த் திங்கள் வெளியீட்டுக்கும் அடிக்கடி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வந்தார்கள்.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. இலங்கைச் சரித்திர சூசனம் (1886). 2. காளிதாச சரித்திரம் (1886) 3. அபிதான கோசம் (1902), 4. பாரதச் சுருக்கம் (1903), 5. நன்னூல் இலகுபோதம் (1904), 6. ஆங்கிலஆங்கில-தமிழ் அகராதி (1907), 7. கைலாயமாலைஆங்கில மொழி பெயர்ப்பு (1907). 8. சிவிலியன் தமிழ் இலக்கணம் (1911), 9. யாழ்ப்பாணச் சரித்திரம் (1912), 10. நன்னூல் உதாரண விளக்கம், 11. தென் மொழி வரலாறு (1920).
இவர் வெளியிட்ட நூல்கள்:- 1. வினைப்பகுபத விளக்கம்-சுன்னுகம், அ. குமாரசுவாமிப் புலவரி, 2. பகவத் கீதை-தமிழ் மொழிபெயர்ப்பு-சேர். பொன். guit. DIBIT56ir, 3. The Ethical Epigrams of Auvaiyarகுமராசுவாமி பூரீகாந்தா.
தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலைகளுக்கும், சைவ சமயத்துக்கும், நாட்டுக்கும் அளவு கடந்த தொண்டுகள் செய்து கொண்டு வந்த பிள்ளையவர்கள் 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று இவ்வுலக வாழ்வினை நீத்தார்கள்.
தமிழ் மொழியில் முதன் முதலாகக் கலைக்களஞ்சியம் ஒன்றினை இயற்றிய பெருமை இவருக்கே உரியதாகும். *அபிதான கோசம்' என்னும் பெயருடன் எழுதப்பட்ட அக்கலைக் களஞ்சியம் முடிவு பெறுவதற்கு 16 ஆண்டுகள் சென்றன என்று முகவுரை கூறுகின்றது.

முருகேசையர் ig
முருகேச பாண்டிதர், பூ. (1330-1898)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுன்னகம் என்னும் ஊரிலே, பூதப்பிள்ளை என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் நீரி வேலிச் சங்கர பண்டிதர் ஆகியோரிடத்தே தமிழிலக் கணவிலக்கியங்களைக் கற்றவர். புலமைத் திறமின்றி நூல்களையும் உரைகளையுஞ் செய்வோரையெல்லாம் தாக்கி, அவர்களின் நூல்களிலுள்ள குற்றங் குறைகளை எடுத்துக் காட்டி, கண்டனந் தீட்டும் வழக்கமுடையவ ராய் இருந்தமையால் "இலக்கணக் கொட்டர்" என்னும் பட்டப் பெயரும் இவருக்கு வழங்கியது.
இந்தியாவிலே சிதம்பரம், கும்பகோணம், சென்னை, திருப்பற்றுார் ஆகிய இடங்களிலே தமிழாசிரியராக விளங்கித் தமிழ்க் கல்வியைப் பரப்பி வந்தார். சுன்னு கம், அளவெட்டி, கோப்பாய், சிறுப்பிட்டி, மல்லாகம் முதலான ஊர்களிலும் ஈழநாட்டிலே தங்கியிருந்தபோது தமிழ்க் கல்வியை ஊட்டிக் கொண்டிருந்தார் எனவும் அறியக் கிடக்கின்றது.
சுன் ணுகம் அ. குமாரசுவாமிப் புலவர், வண்ணுர் பண்ணை நாவலர் கோட்டத்து ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை முதலானேர் பலர் இவருடைய மாணவர் எனத் தெரியவருகின்றது.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. மயிலனிச்சிலேடை வெண்பா, ஊஞ்சல், பதிகம், 2. சந்திரசேகர விநாயக ரூஞ்சல், 3. குடந்தை வெண்பா, 4. நீதிநூறு, 5. பதார்த்த தீபிகை,
முருகேசையர்
யாழ்ப்பாணத்துக்கு அண்மையிலுள்ள காரை தீவிலே கார்த்திகேசு ஐயர் என்பாருக்குப் புதல்வராகத்

Page 99
194 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
தோன்றியவர் இவர். தமிழிலும் சமக்கிருதத்திலும் பெரும்புலமை வாய்ந்தவராய் இவர் விளங்கினர் என அறியக் கிடக்கின்றது.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. தன்னை யமக வந்த வந்தாதி, 2. தன்னை நாயக ரூஞ்சல், 3. குரு க்ஷேத்திர நாடகம்.
வயித்தியலிங்கபிள்ளை, ச. வல்வை, (1852-1901)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வல்லுவெட்டித் துறை யிலே, சங்கரக்குரிசில் என்பாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். முதலிலே, அவ்வூரிலுள்ள பாட சாலையொன்றுக்குச் சென்று கல்வி பயின்று கொண்டிருந் தார். பின், உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்களிடத் திலே தமிழிலக்கணவிலக்கியங்களை முறையே கற்ருர், தென்னிந்தியாவுக்குச் சென்று சமக்கிருத நூல்களையும் நன்கு பயின்ருர், தருக்கம், சோதிடம், வானசாத்திரம் முதலிய துறைகளிலும் இவருக்கு மிகுந்த புலமை கைவருவதாயிற்று.
சென்னையிலிருந்து ராவ்பகதூர் சி. வை. தாமோ தரம் பிள்ளையவர்கள் "சைவ மகத்துவம்" என்னும் நூலினை எழுதி வெளியிட்டதும், அதற்கு மறுப்பாக, அருளப்ப முதலியார் என்பார் "சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம்’ என ஒரு நூலினை இவர் எழுதி வெளியிட்டு முதலியாரை அமையச் செய்தார். அதைக் கண்ட சென்னை நகரத்துப் பேரறிஞர்கள் இவருக்கு "இயற்றமிழ்ப் போதகாசிரியர்” என்னும் பட்டத்தினை அளித்துப் போற் றினர்.
சைவசமய ஆக்க ங் கருதி, "சைவாபிமானி" என்னும் பெயருடன் இவர் ஒரு பத்திரிகையும் நடாத்தி வந்தார் என அறியக் கிடக்கின்றது. இப் பத்திரிகை

வரதப்பண்டிதர் is
யினை அச்சிடுவதற்கும். பிற நூல்களைப் பதித்து வெளி யிடுவதற்குமாக இவர் தமது ஊரிலே ஒர் அச்சகத்தை யும் நிறுவி நடாத்தி வந்தார்.
இவர் இயற்றிய நூல்கள்:- 1.சைவ மகத்துவ திக்கார நிக்கிரகம், 2. சிந்தாமணி நிகண்டு, 3. செல்வச் சந்நிதி முறை, 4. வல்வை வயித்தியேசர் பதிகம், 5. சாதி நிர்ணய புராணம், 6. கந்தபுராணம்-அண்ட கோசப் படலவுரை, 7. கந்தபுராணம்-தெய்வயானை திருமணப் படலவுரை, 8. கந்தபுராணம்-வள்ளியம்மை திருமணப் படலவுரை, 9. கந்தபுராணம்-சூரபன்மன் வதைப் படலவுரை. (இது முற்றுப்பெறவில்லை ) 10. கல்வளையந்தாதியுரை, 11. கந்தரலங்காரவுரை.
இவர் பதித்து வெளியிட்ட நூல்கள்:- 1. நாற்கவி ராச நம்பியகப் பொருளுரை, 2.சிவராத்திரி புராணம் -1881, 3. சூடாமணி நிகண்டு-1875. w
வரதப்பண்டிதர்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுன்னகம் என்னும் ஊரிலே அரங்கநாதையர் என்பாருக்குப் புதல்வராக இவர் தோன்றினர். தமிழிலக்கிய விலக்கணங்களிலும் வேதாந்த சித்தாந்த சாத்திரங்களிலும் மிகுந்த அறிவு படைத்தவர். சோதிடம் வைத்தியம் ஆகிய துறைகளி லும் சிறந்த அறிவுடையவராய் விளங்கினர் என அறிய கிடக்கின்றது. வாழவுங் கெடவும் பாடும் ஆற்றலுடை யவராய்த் திகந்ழ்தமையால், இவர் "வரகவி’ எனவும் படுவர்.
இவர் இயற்றிய நூல்கள்:- 1. சிவராத்திரி புராணம், 2. ஏகாதசிப் புராணம், 3. கிள்ளை விடுதூது, 4. அமுதாகரம் (வைத்திய நூல்). 5. பிள்ளையார்
éኔ@ዽj• -

Page 100
éé ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
விசுவநாத சாஸ்திரியார் ( -1835)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அராலி என்னும் ஊரிலே, நாராயண சாஸ்திரியார் என்பாருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர் இவர்.
தமிழிலக்கண விலக்கியங்களில் மட்டு மன்றிச் சோதிட கணிதத்திலும் மிகுந்த புலமையுடையவராய் இவர் விளங்கினர். அக்காலத்திலே கணிக்கப்பட்ட பஞ்சாங்கங்களுக்குள்ளே இவராற் கணிக்கப்பட்ட பஞ் சாங்கத்துக்கே நல்ல மதிப்பு இருந்ததென்று தெரிகிறது. இலங்கைத் தேசாதிபதியவர்கள். இவருடைய திற மையை நோக்கி, இவருக்கு "அரச கணிதர்' என்னும் பட்டத்தினை வழங்கினர் என்பர்.
இவர் இயற்றிய நூல்கள்:- வண்ணைக் குறவஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி, வாக்கிய கரண கிரகணம்.
விசுவநாத பிள்ளை, கரல். (1820-1880)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சுதுமலை என்னும் ஊரில் வாழ்ந்துகொண்டிருந்த ஆயுள்வேத பண்டிதரான வைரவநாத பிள்ளை என்பாருக்குப் புதல்வராகத் தோன் றியவர் இவர். இவரின் உறவினருள் ஒருவராகிய வைரவநாத உபாத்தியாயர் என்பார் இவருக்கு வித்தியா ரம்பம் செய்து வைத்தார். இளமையில், இவர் வைரவ நாத உபாத்தியாயர் அவர்களிடம் தமிழும், கங்கபட்டர் அவர்களிடம் சமக்கிருதமும் கற்றுக்கொண்டிருந்தார்.
1832ஆம் ஆண்டிலே இவர் வட்டுக்கோட்டைச் செமினரியிற் சேர்ந்து கல்வி பயிலத் தொடங்கினர். தாம் கல்வி பயின்ற கல்லூரியிலேயே சிலகாலம் ஆசிரிய ராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார். "உதயதாரகை” என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இவர் பணி யாற்றிக்கொண்டிருந்தார்.

விசுவநாதபிள்ளை, கரல், 197
இவர் இந்தியாவுக்குச் சென்று, சென்னைப் பல்கலைக் கழகத்திற் சேர்ந்து படித்து, "பி. ஏ. பரீட்சையிலே சித்தி பெற்றர். சென்னைப் பல்கலைக் கழகத்தினர் முதன் முதலாக நடாத்திய அப் பரீட்சையிற் சித்திபெற்ற யாழ்ப்பாணத்தவர் இருவர். ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை ஒருவர்; மற்றவர் இவர்.
இளமைக் காலந் தொடங்கி இவரும் நல்லூர் ஆறுமுக நாவலரவர்களும் பல ஆண்டுகளாகப் பத்திரிகை களில் ஆராய்ச்சிவாதங்கள் நடாத்தியதுண்டு. 1840ஆம் ஆண்டில், "கண்ணுக்குச் சுயஒளி உண்டோ இல்லையோ? என்னும் பொருள்பற்றி இவர்களிருவரும் நடாத்திவந்த வாதம் 1840ஆம் ஆண்டில் வெளிவந்த "உதிய தாரகை" யிற் காணப்படுகின்றது.
நாவலரவர்கள் வெளியிட்ட"சைவதூஷண பரிகாரம், என்னும் நூலுக்குக் கண்டனமாக, இவர் "சுப்பிரதீபம்’ என்னும் நூலின எழுதி வெளியிட்டார். உபகாரச் சம்பளம் பெற்றுப் படிப்பதற்காக அறியாப் பருவத்தி லேயே கிறித்தவராக மாறிய இவர், சிதம்பரத்தில் 92O5 நாள் நாவலரவர்களுடன் சமயவாதஞ் செய்தார். வாதத்திலே தோற்றுப்போனதும், f5 total protifsanfair கொள்கைகளுக்கு இணங்கி, அன்று தொடக்கம் அவர் களைக் குருவாகவும் மதித்து நடந்துவந்தார். தமது தவறுதல்களுக்குக் கழுவாயாக, சிதம்பரக் கோயிலிலே நடராசப் பெருமான் திருச்சந்நிதியில், பொன்னுரசி காய்ச்சி, கண்டனஞ் செய்த தமது நாவினைச் சுட்டுச் சைவ சமயத்தினைத் தழுவிக் கொண்டார். தாம் முன்ன தாக எழுதிய "சுப்ரதீபம்’ என்னும் கண்டன நூலுக்குத் தாமே மறுப்பும் எழுதினர். அதை வெளிப்படுத்து வதன் முன் இவர் உயிர் நீத்தமையால், அக் கையெழுத்
ஈழ.-13

Page 101
298 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
துப் பிரதியினை அவருடைய கிறித்தவ உறவினர் கையாடி எரித்துவிட்டனர் எனக் கூறப்படுகின்றது.
இவரியற்றிய நூல்கள் :-ஆங்கில - தமிழ் அகராதி, வீச கணிதம், தமிழ்ப் பஞ்சாங்கம், சுப்ரதீபம், கால தீபிகை (அச்சேறவில்லை.)
விநாயகர், புலவர்.
யாழ்ப்பாணத்து மானிப்பாயைச் சார்ந்த சுதுமலை என்ற ஊரிலே வாழ்ந்த அழகர் என்பாருக்குப் புதல்வ ராகத் தோன்றியவர் இவர்.
*கதிரைமலைக் குறவஞ்சி", "குருக்கள் கோடரி" என்னும் இரு நூல்களை இயற்றியுள்ளார். தனிப் பாடல் களும் பல இவராற் பாடப்பட்டன என அறியக்கிடக் கின்றது.
விபுலானந்த அடிகள் (1892-1947)
மட்டக்களப்பினைச் சார்ந்த காரைத்தீவு என்னும் ஊரிலே, 1892ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27ஆம் தேதி (கர வருடம் பங்குனி மாதம் 16ஆம் தேதி) ஞாயிற்றுக் கிழமையன்று, சாமித்தம்பியார்க்கும் கண்ணம்மையார்க் கும் புதல்வராகத் தோன்றியவர் இவர், பல ஆண்டு களுக்கு முன் யாழ்ப்பாணத்து உடுவில், வட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்று மட்டக்களப்பிற் குடி யேறி வாழ்ந்த யாழ்ப்பாணப் பழந்தமிழ்க் குடிகள்தாம் கண்ணம்மையாருடைய முன்னேர் ஆவர். இளமைக் காலத்திலே இவருடைய தந்தையார் இவருக்கு இட்ட பெயர் "மயில்வாகனன்' என்பதாகும்.
மயில்வாகனனருக்கு எழுத்தறிவித்தவர் குஞ்சுத் தம்பி ஆசிரியர் என்பவராவர். காரைத்தீவில் அமைந்

விபுலானந்த அடிகள் 199
திருந்த சைவப் பாடசாலைத் தலைமையாசிரியராய் விளர்டு புலோலியூர், பொ. வைத்தியலிங்க தேசிகரவர் கள் இவழுக்குத் தமிழும் ஓரளவு சமக்கிருதமும் கற்பித்து வந்தார்.
இவர் தமது இளம் பருவத்திலேயே திருக்குறள்" நன்னூல், சூடாமணி நிகண்டு முதலிய நூல்களைப் பயின்றதுமல்லாமல், தமது தந்தையாரிடத்திலும் தாய் மாமன்ராகிய சிவகுருநாத பிள்ளை, வசந்தராச பிள்ஜா என்பவர்களிடத்திலும் பாரதம், கந்தபுராணம் முதலிய நூல்களை முறையே கற்ருர். யாப்பு அணி படியாமல் விளையாட்டுப் போலப் பாட்டுப் | unrGith வன்மை இயல்பாக இவருக்கு அமைந்திருந்தும், யாப்பு அணியிலச்கணங்களைச் செவ்வனே படித்தறிய வேண்டு மென்னும் ஆசையால் உந்தப்பெற்று, அவற்றைப் படித்துச் செய்யுள் யாக்கவும் பயின்றுகொண்டார்.
வீட்டிலிருந்தே ஆங்கிலத்தைப் படித்துக் ورقة"pgeل) கொண்டிருந்தவர், 1902ஆம் ஆண்டிலே கல்முனை மெதடிஸ்சி பாடசாலை தொடங்கப்பெற்றதும், அதிலே படிக்க வக்கப்பட்டார். பின், மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் அர்ச் மிக்கேல் கல்லூரியிலுமாக இவர் படித்து, 1908ஆம் ஆண்டிற் பதினறு வயது கழிவதன் முன்னதாகவே, கேம்பிரிச் பல்கலைக் கழகத்தினரால் நடத்தப்பட்ட சீனியர் வகுப்புப் பரீட்சையிற் சித்தி பெற்றனர்
19ஆம், 1912ஆம் ஆண்டுகளில் அரசினர் ஆசிரிய பயிற்சிக் லாசாலையிலே சேர்ந்து படித்துச் சித்தியடைந் தார். அந்காலத்தில், தமிழினை மேலுங் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவாவினல் ஆங்கிலத்திலும் பார்க்கத் தமிழ் படிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டார்,

Page 102
200 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
தNழைப் பாடங்கேட்டுப் படிப்பதற்குக் கோப்பாயைச் (ஒர்ந்த பண்டிதர் எஸ். கந்தையா பிள்ளை அவர்களும்,
தலியார் எஸ். கைலாச பிள்ளையும், வித்துவான் சி. ஆமோதரம் பிள்ளையும் வந்து வாய்ப்பாராயினர். இங் ாம் கல்வி பயின்றுகொண்டிருக்கும் காலத்திலேயே இவருக்குக் கொழும்பு விவேகானந்த சபையுடன் தொடர்பு ஏற்படுவதாயிற்று.
இரண்டு ஆண்டுகள்வரை (1913-1914) மட்டக் fப்பு அர்ச். மிக்கேல் கல்லூரியில் ஆசிரியராகக் கடமை ாற்றிக்கொண்டிருந்தவர். 1915 ஆம் ஆண்டிலே அர ஒார் நுண்டொழிற் கல்லூரியிலே சேர்ந்து மேற்கல்வி கற்கத் தொடங்கினுர், பேராசிரியர்கள் ஏ. எவ். இராசேப்பு, டபிள்யு. என். றே என்னும் இருவரிடத்தும் ஒஞ்ஞான சாத்திரம் பயின்று. 1916ஆம் ஆண்டிலே ஆடபெற்ற பரீட்சையில் முதலாவது பிரிவிற் சித்தி இதுய்தி "டிப்புளோமா' பட்டமும் பெற்றுக்கொண்டார்.
அக்காலத்திலே, மதுரைத் தமிழ்ச் சங்கத்தினரால் பண்டிதர்ப் பரீட்சைக்குத் தோற்றி سان الاتفاقيقTمن பூதிற் சித்தியுமெய்தினர். இலங்கையிலிருந்து முதன் அப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்திபெற்றவர் துரேயாவர். அக்காலத்திலேயே இவர் இராமகிருஷ்ண ஷனைச் சேர்ந்த சுவாமி சர்வாநந்தருடன் தொடர்பு ண்டார். இதுவே, இராமகிருஷ்ண மிஷனுடன் இவ લકંઉ முதன் முதலாக ஏற்பட்ட தொடர்பாகும்.
1817ஆம் ஆண்டின் முகனையிலே அரசினர் நுண் டிாழிற் கல்லூரியில் இரசாயன உதவி ஆசிரியராக இருந்தவர். யாழ்ப்பாணத்துச் சம்பத்திரிசியார் கல்லூரி uo இரசாயன சாத்திர விரிவுரையாளராகக் கடமை நூற்றத் தொடங்கினர். இங்கே ஏறக்குறைய மூன்று

விபுலானந்த அடிகள் 201
ஆண்டுகள்வரை பணியாற்றிக் கொண்டிருந்தபோது சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களுடனும் பிற தமிழறிஞர்களுடனும் நெருங்கிய தொடர்பு பூண்ராணுர்,
சம்பத்திரிசியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் போதுதான் லண்டன் பல்கலைக் கழகத்தாரால் நடாத்தப்பட்ட "பி. எஸ். சி. பரீட்சையிலும் சித்தியடைந்தார்.
1920ஆம் ஆண்டில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பிரதம ஆசிரியராகக் கடமையேற்று இரண்டு ஆண்டுகள் வரை கல்லூரியின் முன்னேற்றத்துக்கு வேண்டியவற் றைச் செய்துகொண்டிருந்தார். அக் காலத்தில் யாழ்ப் பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் சீரான தொரு முறையில் நடைபெறவில்லை. அதனைக் கவனிதி துக்கொண்டிருந்த இவர், தமிழறிஞர் பலருடன் ஆலோசித்து, சங்கத்தைப் புதுக்கியமைப்பித்தார். நாளடைவில், சங்கத்தின் பண்டிதர்ப் பரீட்சைகளுக்குப் பரீட்சகராகவும் கெளரவ உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
1922ஆம் ஆண்டிலே, இவர் சென்னையிலுள்ள இராம. கிருஷ்ண மிஷனைச் சேர்ந்தார். அங்கிருந்துகொண்டு "இராமகிருஷ்ண விஜயம்" என்னும் தமிழ் மாதாந்த வெளியீட்டுக்கும், "வேதாந்த கேசரி’ என்னும் ஆங்கில மாதாந்த வெளியீட்டுக்கும் ஆசிரியரானர். அக் காலத் திலேதான் மகாமகோபாத்தியாயர், டாக்டர் உ. வே. சாமிநாதையர் முதலான தமிழறிஞர் பலருடன் இவ ருக்கு மிகுந்த தொடர்பு ஏற்பட்டதுண்டு. "செந்தமிழ்" தமிழ்ப் பொழில்" ஆகிய தமிழிலக்கிய வெளியீடு களில் இவர் எழுதிய கட்டுரைகள் அடிக்கடி வெளி

Page 103
0. ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
வந்தன. இவரது கட்டுரை மாண்பினையும் ஆராய்ச்சிதி திறனையும் கண்டு தமிழுலகம் இவரைப் போற்றத் தொடங்கியது. இச் சிறப்புக்களையும் இவரது திறனை யும் ஒரே நோக்காக நோக்கிக் கொண்டிருந்த ஈழத்துதி தமிழ் மக்கள், சேர் பொன்னம்பலம் அருணுசலம் அவரி களைத் தலைமையாகக் கொண்டு, கொழும்பு சைவ பரிபாலன சபை விவேகானந்த சபை ஆகிய பல சங்கங் களின் சார்பாக, தாங்கள் புதுவதாக நிறுவிக்கொண்ட பல்கலைக் கழகக் கல்லூரிக்கு இவரைத் தமிழ்ப் பேராசிரிய ராக வரும்வண்ணம் அழைத்தார்கள்.
"பண்டிதர் மயில்வாகனன்" என அழைக்கப்பட்ட வர் "சுவாமி விபுலானந்தர்" என அழைக்கப்படதி தொடங்கியது 1924ஆம் ஆண்டு சித்திரை மாதப் பெளர்ணமையிலன்ருகும். அன்றே, இராம கிருஷ்ண மடாலயங்களின் தலைவர் சுவாமி சர்வானந்தர் மயில் வாகனனருக்குக் குருப்பட்டஞ் சூட்டிப் புதுப் பெயரிட்ட நன்னளாகும்.
இலங்கையிலுள்ள இராமகிருஷ்ண மிஷனின் பாட சாலைகளை, 1925ஆம் ஆண்டு தொடக்கமாக ஆறு ஆண்டு கள்வரை, சுவாமிகள் திருத்தியமைப்பித்துக் கொண் டிருந்தார்கள். பின், இவர் திருக்கோணமலை இந்துக் கல்லூரியின் பிரதம ஆசிரியராகவும் சிறிது காலம் பணி யாற்றிக் கொண்டிருந்தார்.
தமிழ்ப் பல்கலைக் கழகக் குழுவொன்று, 1926ஆம் ஆண்டில், இந்தியாவிலே நியமிக்கப்பட்டது. இராம நாதபுர அரசர் ஆணைக் குழுவுக்குத் தலைமை தாங்கினர். அப்பொழுது, சென்னைப் பல்கலைக் கழகத்தினர் வேண்டு கோளுக்கிணங்கி, சுவாமிகள் மதுரைக்குச் சென்று முத லாவதாகச் சாட்சியம் கூறினர்கள். அதன் பயணுகவே

விபுலானந்த அடிகள் 203
அண்ணுமலைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டதாகும். செட்டிநாட்டரசர் ராஜா சேர். அண்ணுமலைச் செட்டி யார் விரும்பிக்கொண்டபடி அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக 1931ஆம் ஆண்டிலே பதவியேற்று 1933ஆம் ஆண்டுவரையும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தார். 1935ஆம் ஆண் டிலே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறை சம்பந்தமாக நியமிக்கப்பட்ட ஆனைக் குழுவில் மகா மகோபாத்தியாய டாக்டர். உ. வே. சாமி நாதையர் மதுரைத் தமிழ்ச் சங்க உபதலைவர், டீ. பூரீநிவாச ஐயங்கார் முதலியவர்களுடன் கூடியிருந்து விசாரணை செய்து அறிக்கை எழுதுவதில் சுவாமியவர்கள் முக்கிய மாகத் துணைபுரிந்தார். பின், துணைவேந்தரின் கேள்விப் படி பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சி சம்பந்தமாக விரிவானதொரு திட்டத்தையும் அமைத்துக் கொடுத் தார். 1936ஆம் ஆண்டிலே, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில், "கலைச்சொல்லாக்க மகாநாடு" கூடியது. அம் மகாநாட்டுக்குப் பொதுத் தலைவராகத் தலைமை தாங்கிய பெருமை சுவாமியவர்களுக்கே உரிய தாகும்.
1937ஆம் ஆண்டிலே, சுவாமிகள் இமயமலையைதி தாண்டி, தீபெத்துக்குப் போய்த் திருக்கயிலையைத் தரிசித்துக்கொண்டு திரும்பினர். திரும்பி வந்ததும், சென்னைப் பல்கலைக் கழகத்தினர் தமது ஆராய்ச்சிச் சபை யில் உறுப்பினராக்கிக் கொண்டதுமல்லாமல், பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பரீட்சகர்களுள் ஒருவராகவும் சுவாமி யவர்களை நியமனஞ் செய்துகொண்டார்கள்.
1930ஆம் ஆண்டிலே, "பிரபுத்த பாரதம்" எனப் பட்ட கலையாக்கங் கருதிய ஆங்கில வெளியீட்டின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1943ஆம் ஆண்டின்

Page 104
B0ፈ% ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
பிற்பகுதியிலே, சுவாமிகள் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்ருர், பேராசிரிய ராகப் பதவியேற்றபின், பரீட்சைச் சபை, பாட நூற் சபை கல்வி ஆராய்ச்சிக் குழு ஆகியவற்றில் உறுப்பின ராய் விளங்கிச் சுவாமிகள் புரிந்த பணிகள் மிகப் பல.
சுவாமிகள் 14 ஆண்டுகளாகச் செய்துவந்த ஆராய்ச் சியின் பயனுக இயற்றப்பட்ட "யாழ் நூல்" கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 5-6-47-ல் இந்தியாவிலுள்ள திருக்கொள்ளம்பூதூர்த் திருக்கோவிலிலே, ஆளுடைய பிள்ளையார் திருமுன்னிலையில், சுவாமியவர்களாலேயே அரங்கேற்றப்படுவதாயிற்று. தமிழ்நாட்டின் பல பாகங் களிலுமிருந்து இயற்றமிழ்ப்புலவர்களும், இசைத்தமிழ்ப் புலவர்களும், புரவலர்களும், அன்பர்களும் ஒருங்கே கூடி அரங்கேற்று விழாவிற் கலந்துகொண்டார்கள்.
யாழ் நூலினை அரங்கேற்றி முடித்தபின், சுவாமிகள் 30-6.47-ல் கொழும்புக்குத் திரும்பி வந்தார்கள். யாழ் நூல் அரங்கேற்றத்துடன் தொடர்புபட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையாலும், தென்னிந்தியாவிலிருந்து கொழும்புக்கு வந்ததனல் ஏற்பட்ட களைப்பினலும் சுவாமிகளுடைய உடல் சிறிது தளர்ந்திருந்தது. தளர்ச்சி காரணமாக, நாளடைவில், சுவாமிகள் நோய் வாய்ப்பட்டார்கள். நோய் தணியாமையால், சகல வசதி களுங்கொண்ட கொழும்பு வைத்தியசாலை யொன்றிலே சிகிச்சை பெறுவதற்காக இவர்கள் கொண்டு செல்லப் பட்டார்கள். நிலைமை மிகக் கவலைக்கிடமாகிக்கொண்டு வந்ததைக் கண்டு, இராமகிருஷ்ண மடாலயத்தினரும் அன்பர்கள் பிறருமாக, சுவாமிகளுக்கு அமைதியான தோர் சூழ்நிலையை ஆக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், சுவாமிகள் 19-7-49 சனிக்கிழமை இரவு

விஞசித்தம்பி, புலவர். ዷ05
ஒன்றரை மணியளவில்-தமது ஐம்பத்தைந்தாவது வய தில் இறைவனடி சார்ந்தார்கள்.
இவர் இயற்றிய நூல்கள்:-1. மதங்க சூளாமணி 2. யாழ் நூல்.
வில்லவராய முதலியார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரிலே தோன்றிய வர் இவர். ஒல்லாந்த அரசினர், "தேச வளமை என்னும் நூலினைத் திருத்தியமைப்பதற்காக நியமித்த அறிஞர்களுள் இவரும் ஒருவராவர்; இவரும் பெரும் புலவராகத் திகழ்ந்தவராவர். கரவை வேலன் கோவை முதலான நூல்களை இயற்றிய சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாராவர்.
வினுசித்தம்பி, புலவர் (1887-1930)
மட்டக்களப்பினைச் சார்ந்த தில்லைமண்டூரிலே தோன்றியவர் இவர். புலோலியூர்ச் சந்திரசேகர பண் டிதரிடத்திலும் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த முருகேசு உபாத்தியாயரிடத்திலும், இவர் தமிழிலக்கண விலக் கியங்களையும் புராணவிதிகாசங்களையும் கற்றுக்கொண் டார் என அறியக் கிடக்கின்றது. இவர் தமது இல்லத் தினையே ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக்கிப் புராணங் களையும் நீதி நூல்களையும் பிறர்க்குக் கற்பிப்பதிலேயே தமது ஓய்வு வேலைகளைக் கழித்தார் எனத் தெரிகின்றது. இயற்றமிழில் மட்டுமன்றி நாடகத் தமிழிலும் இவருக்கு ஈடுபாடு இருந்ததென்றும், அவ்வீடுபாட்டின் காரண மாக, மட்டக்களப்பில் வழக்கிலிருந்த "வடமோடி" "தென்மோடி" நாட்டுக்கூத்து வகைகளை ஆடவும் இவர் நன்கு பயின்றிருந்தார் என்பர்.

Page 105
206 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
முருகக் கடவுள்மீது மிகுந்த பக்தியுடையவராய் விளங்கிய இவர், முருகன் திருவருளைப் போற்றிப் பல பிரபந்தங்களை இயற்றியுள்ளார்.
இவர் இயற்றிய நூல்கள்:-மண்டூர் முருகன் காவடிப்பாட்டு, மண்டூர் வடிவேலவர் குறம், கதிர் காமத்தந்தாதி. திருச்செந்தூர் முருகன் பதிகம், தில்லை நடராசர் பதிகம்.
வெற்றி வேலர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சாவகச் சேரியிலே மீசாலை என்னும் ஊரில் மாப்பாண முதலியார் என்பவ ருக்குப் புதல்வராய்த் தோன்றியவர் இவர். இருபாலை நெல்லைநாத முதலியாருடன் இவர் மிகுந்த நட்புரிமை பூண்டிருந்தவர். இலக்கண விலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியும் புலமையும் வாய்ந்தவராய் விளங்கியது மட்டுமன்றி, தாமே கவிகளை அழகுகளமைய யாக்கும் வன்மையும் உடையவராயிருந்தார். வன்னியிலுள்ள செல்வரொருவர் மீதும், மல்விற்கோவின் மீதுமாக இரு குறவஞ்சிகள் இவராற் பாடப்பட்டன என அறியக் கிடக்கின்றது. 3.
வேடப் பிள்ளை (1836-1906)
மட்டக்களப்பினைச் சேர்ந்த கோட்டை முனையிலே தோன்றியவர் இவர். நாட்டு வைத்தியத்தினை முறை யாகப் பயின்று வைத்தியம் புரிந்துகொண்டிருந்த இவர் தமிழ் மொழியிலும் மிகுந்த ஈடுபாடுடையவராய் விளங் கினர்.
இவரியற்றிய நூல்கள்:-ஆரப்பற்றை திருநீலகண்ட விநாயகர் பதிகம், கொத்துக்குளத்து மாரியம்மன் பதிகம், கோட்டை முனை வைரவன் காவியம், தாமரைக்

Gasvff Gmgumff 207.
கேணி மாரியம்மன் பதிகம், விஷ்ணு பதிகம், கண்டி ராசன் ஊஞ்சல், வள்ளியம்மன் ஊஞ்சல், மாரியம்மன் குளுத்தி. வேதநாயகம் பிள்ளைப் போதகர் (1865 - )
யாழ்ப்பாணத்துப் பருத்தித் துறையைச் சார்ந்த கற்கோவளம் என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். 1885ஆம் ஆண்டிலே மட்டக்களப்புக்குச் சென்ற இவர், அரசடி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் போதனுசிரிய ராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிறிது காலத்தின் பின், இவர் ஆசிரியத் தொழிலினை விட்டு நீங்கி, கிறித்து மத போதகரானர். இவருடைய இறுதிக் காலம் சமயப் பணி செய்வதிலேயே கழிவதாயிற்று.
இவர், 'தீபம்" என்னும் பெயருடன் ஒரு பத்திரிகை யினையும், தாமே ஆசிரியராகவிருந்து நடாத்தி வந்தார் என அறியக் கிடக்கின்றது. தீபம்’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி அதிலிருந்து விலகிக்கொண்ட பின், "இலங்கை வர்த்தமானி" என்னும் வார இதழுக்கும் இவர் ஆசிரியராக விளங்கினர். இவரே மட்டக்களப்பில் நல்ல உரைநடை எழுவதற்கும் கல்வி பரவுவதற்கும் முன்னுேடியாக விளங்கினர் எனக் கூறப்படுகின்றது.
*உழவர் சிறப்பு", "மலேரியாக் கும்மி" முதலான பாடல்கள் சிலவற்றையும் இவர் இயற்றியுள்ளார்.
வேலாப் போடியார் (1804-1880)
மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப் பற்றிலுள்ள கோளாவில் என்னும் ஊரில் சின்னத்தம்பிப் போடியா ருக்கும் கெங்காந்தை என்பாருக்கும் புதல்வராகத் தோன்றியவர் இவர். இவர் தலை வழுக்கையுற்றிருந்த

Page 106
20 ஈழநாட்டின் தமிழ்ச் சுடரி மணிகள்
மையால் மொட்டை வேலாப் போடியார்" என அழைக்கப்பட்டார் என அறியக் கிடக்கின்றது. நகைச் சுவை மலிந்த சிலேடைப் பாடல்களும் பள்ளுப் பாடல் களும் பல இவரால் இயற்றப்பட்டுள்ளன.
இவரியற்றிய நூல்கள்:-தம்பிலுவிற் பள்ளு, திருக் கோயில் ஊஞ்சல்.
வேலுப் பிள்ளை க., ஆசுகவி. (1860-1944)
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயாவிளான் என்னும் ஊரிலே, கந்தப் பிள்ளை என்பவருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். பலாலியிலே திண்ணைப் பள்ளிக் கூடம் வைத்து நடாத்திக் கொண்டிருந்த வேலுப் பிள்ளைச் சட்டம்பியாரிடம் முதலிலே தமிழ் பயின்ருர், இளமைக் காலத்திலேயே, பெரும்புலமை வாய்ந்த அறிஞர்கள் பலரிடத்திற் கல்வி கற்று, தமது அறிவினை விருத்தி செய்துகொண்டார். எந்நேரத்தில், எவ்விடத் தில், எவர், எவ்விடத்தைக் குறித்துப் பாட வேண்டும் என்ருலும் உடனே சீருறப் பாடி முடிக்கும் வன்மை இவ ரிடத்திலமைந்திருந்தது. இவர் எழுதிய கட்டுரைகளும் பாக்களும், கண்டனங்களும் எப்பொழுதும் மிகுந்த சுவை யுடையனவாய் விளங்கின. நகைச்சுவை ததும்பும் வகையில், தம்மை எதிர்த்தோர் அஞ்சும்படியாகக் குத்த லாகவும் கிண்டலாகவும் இடிமுழக்கம் போன்ற வீரச் சொற்களை எடுத்தாண்டு கண்டனங்கள் தீட்டுவதில் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவர் இவர்.
* சுதேச நாட்டியம்" என்னும் பத்திரிகையொன் றினைத் தொடங்கி எட்டு ஆண்டுகள் வரையில் மிகச் சிறந்த முறையில் நடத்திவந்தார். இங்கிலாந்தில் வெளி யிடப்படும் "பஞ்ச்" (Punch) என்னும் ஆங்கில நகைச்

வேற்பிள்ளை, ம. க., உரையாசிரியர் 209
சுவைப் பத்திரிகையைப் போன்று சுதேச நாட்டியமும் அக்காலத்தில் மிகுந்த மதிப்புப் பெற்றிருந்தது. காள மேகப் புலவரைப்போல இன்பக் கவிகள் பல பாடினமை யால் இவரும் 'ஆசுகவி' எனப்பட்டார்.
முருகக் கடவுள்மீது இவர் பாடிய தோத்திரப் பாக் கள் பல. அவைகள் யாவும் பத்திச் சுவை "நனிசொட் டச் சொட்டப் பாடப் பட்டுள்ளன. தமிழ்ப் பற்றும் தெய்வ பத்தியும், தாய் நாட்டன்பும் நிறைந்தவராக இவர் விளங்கினர்.
இவரை, "கல்லடி வேலுப் பிள்ளை" எனவும் "ஆசுகவி' எனவும், "கண்டனப் புலி’ எனவும் குறிப் பிடுவதுமுண்டு.
இவர் "யாழ்ப்பாண வைபவ கெளமுதி" என்னும் நூலினை எழுதியுள்ளார்.
வேற்பிள்ளை, ம. க., உரையாசிரியர் (1847-1930)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த மட்டுவில் என்னும் ஊரிலே, கணபதிப்பிள்ளை உடையாருக்குப் புதல்வராகத் தோன்றியவர் இவர். இவரை "உரையாசிரியர், ம. க. வேற்பிள்ளை' எனவே குறிப்பிடுவதுண்டு. கணபதிப் பிள்ளை உடையாரின் தந்தையார், புலோலியூரைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை அவர்களாவர்.
இளமையிலே, மட்டுவில் சண்முகம் பிள்ளை என்னும் ஆசிரியரிடத்தில் நீதி நூல்களையும், இலக்கண நூல்களை யும் நிகண்டினையும் இவர் கற்றுக்கொண்டார். கல்வியிலே மிகுந்த ஊக்கமிருந்ததனை இவருடைய தந் தையார் கண்டு, நல்லூர்க் கார்த்திகேய உபாத்தியாய ரிடம் உயர்ந்த இலக்கண விலக்கியங்களைக் கற்றுக்கொள் வதற்காக அனுப்பி வைத்தார். இவர், ஆசிரியர் தமக்குக் கற்பித்தவற்றுடன் அ  ைம ய 7 து, 5IT Loirés G66) a

Page 107
210 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
அரிய நூல்களைத் தெரிந்தெடுத்தும் கற்று வந்தார். தமக்கு ஐயங்கள் ஏற்பட்ட வேளைகளில், இவர் ஆறுமுக நாவலரவர்களிடம் சென்று ஐயங்களைத் தீர்த்துக்கொண் டதுமட்டுமன்றி, அவர்களிடம் உயர்ந்த தமிழ்ச் சைவ நூல்களையும் பயின்றுகொண்டதுண்டு. ஆறுமுக நாவல ரவர்களிடத்தே சபாபதி நாவலரும் இவரும் ஒரு சாலை மாணவராய்க் கற்றதுண்டு என்பர். நல்லூர்ப் பொன் னம்பல பிள்ளையவர்களிடம் இவர் தொல்காப்பியம் இராமாயணம் ஆகியவற்றைக் கற்ருர் என அறியக்கிடக் கின்றது. NA
சிதம்பரத்திலுள்ள நாவலர் சைவப் பிரகாச வித்தி யாசாலையின் தலைமையாசிரியராகவும் இவர் பல ஆண்டு கள் பணிபுரிந்து கொண்டிருந்தார் எனத் தெரிகின்றது. ஆசிரியத் தொழிலிலிருந்து இளைப்பாறிய பின்பும், இவர் சிதம்பரத்திலேயே தங்கியிருந்தார். 17-2-1930-ல் இவர் இறைவனடி சார்ந்தார்.
சாவகச்சேரி-பண்டிதர். ச. பொன்னம்பல பிள்ளை, ஆவரங்கால்-நமச்சிவாயப் புலவர், வித்துவான் சுப் பையா பிள்ளை ஆதியானேர் பலர் இவரிடம் கல்வி பயின்ருேராவர்.
இவர் இயற்றிய நூல்கள்:-திருவாதவூரர் புராண விருத்தியுரை, புலியூரந்தாதியுரை, கெவுளி நூல் விளக்க வுரை, ஈழ மண்டல சதகம், புலோலிப் பர்வதவர்த்தனி யம்மை தோத்திரம், புலோலி வைரவக் கடவுள் தோத் திரம், வைரவ ஸ்தோத்திர மாலை (அச்சிடப்படவில்லை.) ஆருயிர்க் கண்மணி மாலை.
வேன்மயில்வாகனப் புலவர்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலி என்னும் ஊரிலே, அரிகரபுத்திரச் செட்டியாரின் புதல்வராகத்

வேன்மயில்வாகனப் புலவர் èl
தோன்றியவர் இவர். புலோலியூரில் வாழ்ந்துகொண் டிருந்த வைத்தியநாதச் செட்டியாரின் புதல்வி முத்தாச்சியம்மை இவருடைய தாயார் ஆவர்.
முதலிலே, தமது ஊரிலிருந்த பாடசாலையிலே தமிழ் பயின்றுகொண்டிருந்தவர். தமது தந்தையார் விருப்பத் நின்படி, உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்தில் இராமா யணம், பாரதம், கந்த புராணம், பெரிய புராணம், தொல்காப்பியம் ஆகிய நூல்களை முறையே கற்ருர், அதன்பின், ஆறுமுக நாவலவர்களிடத்தில் இவர் சித்தாந்த சாத்திரங்களைத் தெளிவுபெறப் பயின்று கொண்டார். வித்துவசிரோமணி ச. பொன்னம்பலப் பிள்ளையவர்களிடத்திலும் இவர் சில நூல்களைப் பயின்ற
gab 09.
நாவலரவர்களால் புலோலியூரிலே நிறுவப்பட்ட சைவ வித்தியா சாலைக்கு இவர்களே தலைமையாசிரிய rாக விளங்கினர்கள். அக்காலத்திலே இவரிடம் தமி ழிலக்கண விலக்கியங்களைக் கற்றுப் பெரும் புலமை யெய் தினேர் பலர். திக்கம் சி. செல்லையா பிள்ளை, "ஞான இத்திப் பத்திராதிபர் வித்துவான் சி. நாகலிங்க பிள்ளை ஆதியானேர் பலர் இவருடைய மாணவராவர்.
தேவகோட்டைத் தனவைசியர் சிலர் வேண்டிக் கொண்டதற்கிணங்கி, இவர் அங்கே சென்று ஏழு ஆண்டு கள்வரை மாணவர்களுக்குக் கற்பித்துக்கொண்டும், சைவ சமய விரிவுரைகள் நிகழ்த்திக்கொண்டும் தங்கியிருந் கார்கள். அங்கிருந்து இலங்கைக்குத் திரும்பி வந்தபின், றைத்தாழ மூன்று ஆண்டுகள்வரை கொழும்பிலுள்ள தம்பையா முதலியார் சத்திரத்திலே சைவ சமய விரிவுரைகள் வாரந்தோறும் நிகழ்த்திக்கொண்டிருந் தார்கள்.

Page 108
213 ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
அதன்பின், இவர் தமது ஊருக்குத் திரும்பிவந்து வாழ்ந்துகொண்டிருக்கையில், தமது நாற்பத்தேழாவது வயதிலே இறைவனடி சார்ந்தார்கள்.
வைத்தியநாதச் செட்டியார் (1753-1844)
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அச்சுவேலி என்னும் ஊரிலே அரிகரபுத்திரச் செட்டியாரின் புதல்வராகத் தோற்றியவர் இவர். தமிழிலக்கண விலக்கியங்களில் மிகுந்த தேர்ச்சியுடையவர். இளமைக் காலத்திலேயே இவர் கவிகளியற்றும் வன்மையுடையவராய் விளங்கினர் என்பர்.
இவரி, தம்மாற் பூசிக்கப்பட்ட நெல்லியோடைத் தேவிமீது தனிப் பாக்கள் பலவற்றை இயற்றியுள்ளார். பிள்ளைக்கவி' என்னும் ஒரு பிரபந்தமும் இவரால் இயற்றப்பட்டுள்ளது.
வைத்தியநாத தம்பிரான்
யாழ்ப்பாணத்தைச் சார்ந்த அளவெட்டி என்னும் ஊரிலே தோன்றியவர் இவர். தமிழ் மொழியிலும் சமக் இருதத்திலும் மிகுந்த புலமையுடையவராக விளங் இயவர். திருநெல்வேலி ஞானப்பிரகாச சுவாமிகள் காலத்தவர் இவர் என்பர்.
உடன் பிறந்தாருடன் நிலபுலம் பற்றி ஏற்பட்ட மனக்கசப்பால், ஊரினை விட்டு நீங்கி, கண்டியில் அரசாண்டுகொண்டிருந்த முத்துச்சுவாமி மன்னன்மீது ஒரு பிரபந்தம் பாடி விருதும் பரிசிலும் பெற்ருர் எனக் கூறப்படுகின்றது.
இவர், சில ஆண்டுகள்வரை அவ்விடத்திலே தங்கி யிருந்துவிட்டு, சிதம்பரத்துக்குச் சென்று நிலையாக அங்கேயே வாழ்ந்துகொண்டிருந்தார் எனக் கூறுவர்.

வையாபுரி ஐயர் 218
இவர், சமக்கிருதத்திலுள்ள வியாக்கிரபாத முனிவர் சரித்திரத்தினை மொழிபெயர்த்துத் தமிழிற் புராண மாகப் பாடியுள்ளார்.
வையாபுரி ஐயர்
யாழ்ப்பாணத்துப் பண்டத்தரிப்புக் கோயிற்பற்றைச் சேர்ந்த மாதகலிலே தோன்றியவர் இவர். சயவீர சிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் காலத்தில் (கி. பி. 1380-1414) சமஸ்தானப் புலவராய் இவர் புகழுடன் விளங்கினுர் என்று தெரிகின்றது.
1வையா பாடல்", "பரராசசேகரன் உலா', 'பரராச
சேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இவர் இயற்றி யுள்ளார்.
#p=14

Page 109

நூல் அகர வரிசை
அகமதுல் கபிற்றுற்றியாகி
ஆண்டவர்மீது அந்தாதி 6 அகநானுTறு 59 அகநானூறு-உரை 60 அகநிர்ணயத் தமிழுரை 98 அகநூல் 7 அகப்பொருட் குறள் 8. அகப்பொருள் விளக்கம்
உரை அகோர சிவாசாரியர்
பத்ததி (நிர்மல மணி
8
வியாக்கியானம்) 3 அங்கrதிபாத சுகரண
உற்பாலன நூல் 84 அங்காதிபாதம் 84, 132 அஞ்ஞானக் கும்மி 23
அஞ்ஞானக் கும்மி மறுப்பு 71 அஞ்ஞானக் கும்மி
மறுப்புக்கு மறுப்பு 7.
ானம் 23 அதிநூதன அலங்காரக்
கீர்த்தனை I 85
அதிரூபவதி நாடகம் 54 அநுருத்திர நாடகம் 122 அப்பர் சுவாமிகள்
திருவிருத்த உரை 135 அபிநயக் கண்ணுடி 36 அபிதானகோசம் 93 அம்பாரைக் கொலனி 123 அமிர்தபோதினி-வார
வெளியீடு 134 அமுத நுணுக்கம் 68 அமுதாகரம் 195
அரசினர் கட்டளைச்
சட்டங்கள் 96 அரிகரதாரதம்மியம் 157 அரசடி கணேசர் அகவல் 174 அரிநாம தோத்திரம் 138 அருட்பர்மறுப்பு 18 1 அருணகிரிநாதர் வகுப்பு 28 அருணுசல மான்மியம்
13, 177 அருள் வாசகம் 8 அருளம்பலக் கோவை 92 அல்லி சரித்திர நாடகம் 42
அலங்காரரூப நாடகம் 54 அலாவுதீன் நாடகம் 8莎 அழகர்சாமி மடல் 7. அழகவல்லி 147 அளவை நூல் 7 அற்புத வரலாறு 112 அறிதுயில் 20 அன்னம்பட்டீயம் 18 அன்னை அழுங்கல் ஒப்பாரி 7 அனுட்டான விதி 99
அனுட்டான விதி-முதற்
lig55& D அனுட்டானவிதி
இரண்டாம் புத்தகம் 29 ஆங்கில இந்து சாதனப்
பத்தரிகை 137 ஆங்கில தமிழ் அகராதி 146
176, 192, 98 ஆடு கதறியது 48 ஆசாரக்கோவை 86 ஆசைப் பத்து A.

Page 110
216
ஆசௌச தீபிகை
வினு விடை 53 ஆசௌச விதி 1 & 4 ஆடிப்பிறப்பு 43 ஆண்டவர் சரித்திரம் 46 ஆத்துமபோதப்
பிரகாசிகை ஆத்மாநுபவ தீபிகை 38 ஆபஸ்தம்ப அபரப்
பிரயோகம் 【25 ஆயிரத்தெண்ணுரறு
ஆண்டுகளுக்கு முற்பட்ட
தமிழர் 67, 69
ஆயுள்வேத வைத்தியக்
கருவூலம் ஆரப்பற்றை திருநீலகண்ட
விநாயகர் பதிகம் O6 ஆராதனை ஒழுங்கு 76 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 138 ஆரிபு நாயகம் 6 ஆரிபுமாலை 9 ஆரிய திராவிடப்
பிரகாசிகை 3 ஆருயிர்க் கண்மணி
மாலை 2O ஆறுமுக நாவலர்
சரித்திரம் 98 ஆறுமுக நாவலர்
வரலாறு 73 ஆனந்தக் களிப்பு 12 ஆனந்த மஞ்சம் 8 இக்கால அரசியல்
நிலைமை 20 இடைக்காலச் சிங்களக்
52%) @5 இணுவிற் சிவகாமி
அம்மைமீது இரட்டை
மணிமாலை 重22
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இணுவிற் சிவகாமி
அம்மைமீது சதகம் 22 இணுவிற் சிவகாமி
அம்மைமீது திருவூசல் 122 இணுவைப் பதிகம் 83 இணுவைப் பதிற்றுப்
பத்தந்தாதி 183 இணுவையந்தாதி 4 இதோபதேசம் 90, 66 இந்திய இந்தோனேசியக்
கலை வரலாறு 36
இந்தியக் கலையில் சில
எடுத்துக்காட்டுகள் 36
இந்தியச் சித்திரங்கள்
இந்து பதார்த்தசாரம் 34
இந்திய புராதன கலைஞன் 70
இந்திரகுமார் நாடகம் 92 இந்திரசேனை நாடகம் 56 இந்திராபுரி இரகசியம்
(நாவல்) 新0 இந்து சாதனம்
பத்திரிகை 57 இயேசுமத சங்கற்ப
நிராகரணம் 06 இரகு வமிச உரை
சிறப்புக்கவி l44
இரகு வமிச சரிதாமிர்தம் 90 இரகு வமிசச் சுருக்கம் இரகு வம்சம்
முதற் பதிப்பு 18) இரகு வமிசம்-உரை 60 இரகு வம்சம் -
மொழிபெயர்ப்பு 14 இரகு வம்ச
மொழிபெயர்ப்பு ፳ 6 இரட்சகப் பதிகம் 172
இரட்சகர் அவதாரம் 23 இரட்சா பெருமான்மீது
பாடிய திருச்சதகம் 103

நூல் அகரவரிசை
MT6ãầrnruh LurrayLusruth 28
இரண வைத்தியம் இரத்தின சிங்கம் 47 இரத்தினச் சுருக்கம் 28
இத்தின பவானி 3 இரத்தினவல்லி விலாசம் 65
இரத்தினசலம்
மான்மியம் 52 இரமண மகரிஷி பஞ்ச
ரத்தினம் 38 இராசபுத்திர சித்திரக்
கலை இராமகிருஷ்ண விஜயம்
பத்திரிகை 20. இராம நாடகம் 13 இராமநாத மான்மியம் 177 இராம விலாசம் 65, 121 இராமன் கதை 81 இராமாயணத்கின்
தருமம் 177 இராமாயண தாத்ரிய
சங்கிரகம் 06 இராமோதந்தம் 90 இருது சங்கார காவியம் 101 இருது சாதகம் 25 இல்லற நொண்டி 103 இலக்கணக் கொத்து 28 இலக்கண சந்திரிகை 90 இலக்கணச் சுருக்கம் 29 இலக்கண விளக்கச்
குருவளி 28 இலக்கண விளக்கம் 56
இலக்கண விளக்கக்
குறிப்புகள் 76 இலக்கண விளக்கப்
பதிப்புரை மறுப்பு 06 இலக்கண வினவிடை 29 இலக்கியச் சொல்லகராதி 90 இலக்கிய சங்கிரகம் 3 இலங்காதகனம் (9
7
இலங்காபிமானி
பத்திரிகை 66 லங்கைக் குடிசன மதிப்பு ( 190 1) 2O
இலங்கைக்கு ஒரு பல்கலைக்
கழகத்தின் அத்தியா வசியம்
இலங்கைச் சரித்திரச்
சுருக்கம் 20 இலங்கைச் சரித்திர
சூசனம் 192
இலங்கைச் சரித்திர
குசனம்-தமிழ்மொழி பெயர்ப்பு இலங்கைச் சுதந்திரம் இலங்கைச் Gerratisfair
பழக்கி வழக்கங்கள் 75 இலங்கைத் தேசாபிமானி 61 இலங்கை நேசன்
123
பத்திரிகை 13 இலங்கைப்
பூமி சாத்திரம் 29, 147 இலங்கை மான்மியம்
1 Ꭵ6 , 177
இலங்கை வர்த்தமாணி
வார இதழ் 207 இலங்கை வரலாற்று
ஆங்கில நூல் 160
லங்கை வளம் 43
இலங்கையில்கத் தோலிக்க
சமய அபிவிருத்தி 75 இலங்கையிற் &്
வளர்ச்சி 65 இளசைப் புராணம் 58 இளைஞர் விருந்து 63 இறப்பிறமாதுச் சபைச்
செபங்கள் 172
இறையனரகப்பொருள் 156
வேண்டுதல் 4.

Page 111
28
ஈச்சுர நிச்சயம் 107 ஈப்போ தண்ணிர்மலை
வடிவேலர் ஊஞ்சல் 138 ஈப்போ தண்ணீர்மலை
வடிவேலர் பதிகம் 138 FlGurt gairaofri LDa)
வடிவேலர் மும்மணிக் கோவை 138 ஈழகேசரி 38 ஈழநாட்டுத் தமிழ்ப்
புலவர் சரித்திரம் 60 ஈழமண்டல சதகம் 210 ஈழ வாசகம் 62 உண்மை முத்திநிலை
ஆராய்ச்சி 67 உதயதாரகை
பத்திரிகை 51, 12 166, 175 உபநிடதவுரை 28 so.Luprr66r Fñ6presb 28 உமரொலியுல்லா பிள்ளைத்
தமிழ் 9 2-Lorrl 16) tDfrða) 108 உயிரிளங்குமரன் 3 உலகம் பலவிதம் 58 உலகியல் விளக்கம் I 64 உவிஞ்சிலோ அகராதி
103, 113 உழவர் சிறப்பு 2O7 ஊசோன் பாலந்தை
கதை 49, 147 எக்காலக்கண்ணி 1? 0 எங்கள் அரசியல்
தேவைகள் 20
எட்டிக்குடிப் பிரபந்தம் 115,
எம்பிரதோர் நாடகம் 84 எருமை நாடகம் 84 எஸ்தர் விலாசம் 51 எஸ்தாக்கியர் நாடகம் 147 ஏகவிருத்த பாரதாதி 90
ஈழநாட்டின் தமிழ்ச் சுடரி மணிகள்
ஏகாதசிப் புராணக்
குறிப்பு 126 ஏகாதசிப் புராணம் I95 ஏசு வரலாறு 81 ஏரெழுபது 28 ஏரோது நாடகம் 65 ஐங்குறு நூறு 0
ஒருசொற் பல பொருட்
டொகுதி-நிகண்டு 71 ஒல்லாந்த இறப்பிறமாதுச்
சபையின் சரித்திரம் 172 ஒழுக்க மஞ்சரி 138 கஞ்சன் காவியம் 89 கட்டளைக் கலித்துறை 156 கடம்பரந்தாதி 176 கடம்பவன மான்மியம் 15 ? கடவுண் மணிமாலை 1:9
கடவுள் வாழ்த்துப்பா 8.
கண்டிக் கலம்பகம் 9 கண்டிநகர்ப் பதிகம் 9 கண்டி நாடகம் 65 கண்டிப் பதிற்றுப்
பத்தாந்தி கண்டிராசன் ஊஞ்சல் 207 கண்டிராசன் சரிதை 50 கண்ணகையம்மன் பேரிற்
பஜணுமிர்தம் 85 கண்ணப்பர் சரித்திரம்
(நாடகம்) 53 கணக்கதிகாரம் 12 கணேசர் கலிவெண்பா 174 கத்தரி வெருளி 143
கத்தோலிக்க திருச்சபையும் அதன் போதங்களும் 146
கதிர்காமசதகம் 57 கதிர்காம சுவாமி பேரிற்
கீர்த்தனைகள் 08
கதிர்காம வேலவர்
தோத்திர மாலை 109 கதிரேசன் ஊஞ்சல் 54

நூல் அகரவரிசை
கதிரிகாமத் தந்தாதி
206 கதிர்காமத் தம்மானை 57 கதிர்காம புராணம் 68 கதிரிகாம புராண
வசனம் 152 கதர்காமம் 39 கதிர்காம வேலவர்
திருவருட்பா 57 கதிரைமலைக் கந்தசுவாமி
கீர்த்தனைகள் 42 கதிரைமலைக் கந்தசுவாமி
விருத்தங்கள் 42 கதிரை நான்மணிமாலை
41, 138 கதிரைமலைக் குறவஞ்சி 198 கதிரைமலைப் பள்ளு 88 கதிரைமலை யந்தாதி 184
கந்தசாமி கலிவெண்பா 5 கந்தபுராணத்துச்
சூரபன்மன் வதைப் படலத்து உரை கந்தபுராணத்துத் தெய்வயானை திருமணப்
படலம்-உரை 114 கந்தபுராண நவநீதம் 134 கந்தபுராணம் 28 கந்தபுராணம்-உரை 100 கந்தபுராண மறை
4
பொருள் 156 கந்தபுராண வசனம் 29 கந்தபுராண விளக்கம் 117 கந்தபுராணம்
அசுரகாண்டம் உரை 128 கந்தபுராணம்-அண்ட
கோசப் படலவுரை 95 கந்தபுராணம்-உற்பத்தி
காண்டம் உரை 26
கந்தபுராணம்-சூரபன்
மன்வதைப் படலவுரை195 கந்தபுராணம்-தெய்வயானை
Ᏸ19
திருமணப்படலவுரை 195 கந்தபுராணம்-மகேந்திர
காண்டம் உரை 26 கந்தபுராணம்-மார்க்கண்
டேயப் படல விருத்தி
யுரை 177 கந்தபுராணம்- யுத்த
காண்டம் (பகுதி)
உரை 126 கத்தயுராணம்-வள்ளியம்மை
திருமணப்படலம்
உரை 115, 195 கந்தரந்தாதி 169 கந்தரந்தாதி உரை 52 கந்தரலங்காரம் 28 கந்தரலங்காரம்-உரை 158 கந்தரலங்கார வுரை Ig5 கந்தரனுபூதி 28 கந்தரனுபூதியுரை 16 கந்தவனநாதர் ஊஞ்சல் 92 கந்தவனநாதர் பதிகம் 15 கப்பற் பாட்டுக்கள் 55
albLIrrtuorruaboth
பாலகாண்டப் பதிப்பு 73 stburnt Dntuadorth-Urra)
காண்டம்-அரும் பதவுரை 90 கரவை வேலன் கோவை
101, 122, 14 கரவைவேலன் கோவை
e6) 16 R கருவூர் மான்மியம் 64 கல்வளையந்தாதி H 22 கல்வளையந்தாதியுரை 195 கலித்தொகை 156 கலைக் களஞ்சியம் 92
கலைசைச்சிலேடை வெண்பா-அரும் பதவுரை 90

Page 112
虏20
கனகதண்டிகைக் கண்க
ராயன் பள்ளு 120 கனகி புராணம் 128 கணுநூல் Hኝ8 காசிநாதன்.நேசமலர் 158
காசியாத்திரை விளக்கம் 181 காந்தி இயன் மொழி
வாழ்த்து 138 காரணப் பிள்ளைத்தமிழ் 9 காரைக் குறவஞ்சி 27
காலதீபிகை 98 காளிதாச சரித்திரம் 192 கிரியாதீபிகை 4 கிழக்குத் திசையின்
ஜோதி 20
கிள்ளைவிடு தூது
38, 104, 119, 195 கிறித்து சமயக் கீர்த்தனை 49 கிறித்துநாதர் சரித்திர
ஆராய்ச்சி 146 கிறிஸ்துசமய கீர்த்தனம் 8 கிறிஸ்துமத கண்டனம் 99 கீர்த்தனத் திரட்டு 172
கீர்த்தணு சங்கிரகம் 03 கீர்த்தனை ዕ፥ கீர்த்தி மஞ்சரி 21, 136
கீரிமலை நகுலேசுவரர்மீது
னேத சித்திரகவிப்
பூங்கொத்து 83 குசேலர் சரித்திரம் 50 குடந்தை வெண்பா 193 குடிசன மதிப்புச்
சூசிகை ( 901) 20 குடும்ப தருப்பணம் 103 குதர்க்கதிகாரம் 7 5
குதுபுநாயக அனுசாசனம் 6 குமாரசுவாமிப் புலவர்
சரித்திரம் 60 குமாரவேள் பதிகம் 39 குருக்கள் கோடரி 198
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
குருக்ஷேத்திர நாடகம் 194 குளத்தூர் அமுதாம்பிகை
பிள்ளைத் தமிழ் 28 குறவஞ்சி 184 குறுந்தொகை 50
கூர்மபுராண விரிவுரை 64 கூழங்கையர் வண்ணம் 93
கெமிஸ்தம் 84 கெவுளி நூல்
விளக்கவுரை 20 கைலாயமாலை 40, 187 கைலாயமாலை-ஆங்கில
மொழிபெயர்ப்பு | 92 கொடுங்சோளுர்க்
கோயிலின் தோற்ற s வரலாறு 77 கொத்துகுளத்து
மாரியம்மன் பதிகம் 206 கொழும்புப் பொருட்காட்சிச் சாலையிலுள்ள புராதன வெண்கல உருவங்கள் 20 கோட்டாற்றுப் புராணம் 9 கோட்டுப் புராணம் 47 கோட்டைமுனை வைரவன்
காவியம் 206 கோணேசர் கல்வெட்டு 67 கோசேனர் பதிகம் 62 கோபால-நேசரத்தினம் 158 கோயிற் புராண மூலம் 28 கோயிற் புராணவுரை 29
கோவலன் நாடகம் l 22 கெளளி நூற்றெளிவு 169 சகத்திரானீக நாடகம் 188 சகுந்தலை வெண்பா 160
சங்களை அந்தாதி 45 சங்கமாங்கண்டிப் பதிகம் 57 சண்முக சாடாட்சரப்
பதிகம் 3. சத்தி-கவசம் && சத்தியத்தின் செயம் Ꭵ 72

நூல் அகரவரிசை
சத்தியவேத தர்ப்பணம் 37 சத்தியாபிமானி-வாரப்
பத்திரிகை 191 சதுர்வேத தாத்பரிய
சங்கிரகம் 10 to சந்தத் திருப்புகழ் 9 சந்தான தீபிகை 45 சந்திரகாச நாடகம் 65 சந்திரகாசன் கதை 47 சந்திரசேகர விநாயக
ரூஞ்சல் 193 சந்தியாவந்தன ரகசியம்
152, 168 சபாநாதர்மீது பல்சந்த
områžav 78
சமயதத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மொழி பெயர்ப்புகளும் 21
சமஸ்கிருத பிரதம பால
Linfl-th 25 சரசோதி மாலை 37, 45 சரநூல் 36 சலவாத்துப் பதிகம் 9 சற்குரு மணிமாலை 3 சன்மார்க்க இலகுபோத
வினவிடை 485 சனி துதி 8 சனி வெண்பா 109
சாகுல்கமீது ஆண்டவர்மீது
முனுசாத்து 6 சாண்கூடித்திரியப் பிரசண்ட
மாருதம் 135 சாணக்கிய நீதிவெண்பா 90 சாதக ரத்கைரம் 25 சாதாரன இதிகாசம் 103 சாதி நிர்ணய புராணம் 195 சாந்திரகாசம்
(வசன நாடகம்) 3.
e21
சாந்தோக்கியம் முதலாய
சில உபநிடதங்கள்
மொழிபெயர்ப்பு 66 சிங்கை நகரந்தாதி 1 சிசுபால சரிதம் 90 சிசுபால வதம் 66
சித்தாந்த சிகாமணி
125, 189
சித்தாந்தப் பிரபோதம் 13
சித்தாந்த மரபு கண்டன
கண்டனம் 106 சித்திரக்கவிப் புஞ்சம் 9 சிதம்பர சபாநாத
புராணம் O3 சிதம்பர மான்மியம் 29 சிதம்பர மும்மணிக்
கோவை 28 சிந்தாமணி நிகண்டு 195 சிரார்த்த விதி 53 சிலோன்றிவியூ 18 சிவகர்ணுமிர்தம் 6 சிவகவசம் 28 சிவசமவாத உரை
மறுப்பு O சிவஞான சித்தியார்
ഉ ഞu് 152, 158 சிவஞான சித்தியார்ச்
சுபக்கம் 98
சிவஞான சித்தியார்ச்
சுபக்கம்-ஞானப்பிரகாசர்
260T 160 சிவஞான பாடியம் I 30 சிவஞான போதச்
சிற்றுரை 29 சிவஞான போதம் 54 சிவஞான போத
வசனலங்கார தீபம் 135 சிவஞான போத
விருத்தி 25, 189
சிவஞான மாபாடியம் 48

Page 113
222
சிவத்துரோக கண்டனம் 13 சிவதுடன பரிகாரம் 169 சிவதூஷண கண்டனம் 99 சிவதோத்திரக் கவித்
திரட்டு 90 சிவதோத்திரக் கீர்த்தனை121 சிவதோத்திரம் 174 சிவ நடனம் 36 சிவ நேசன் 38 சிவப்பிரகாசம் 54 சிவப்பிரகாக ட -உரை
135, 158
சிவபூசை யந்தாதி.
உரை 98 சிவபெருமான்
அலங்காரம் 189
சிவபெருமான் ஊஞ்சல் 54 சிவராத்திரி புராணம் 195 சிவராத்திரி மகிமை I 25 சிவனுந் தேவன என்னுந்
தீய நாவுக்கு ஆப்பு 135 சிவாக்கிரபாடியம் 48 சிவாலய தரிசன விதி 28 சிவாலய மகோற்சவ
விளக்கம் 84 சிவானந்தலகரித்
தமிழுரை 16 சிவிலியன் தமிழ்
இலக்கணம் 92
சிறுத்தொண்டர் சரித்திரம் - நாடகம் 85
சீமந்தனி புராணம் 74 சீவான்மபேதம் 107 சுகிர்த தர்ப்பணம் 12 சுத்த சங்கிரகம் 98 சுதேச நாட்டியம் 2む& சுந்தர விலாசம் 50 சுந்தரன் செய்த தந்திரம்147 சுந்தரி நாடகம் 54 கப்ரதீபம் 197, 198
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்
e 9DD 6
பராக்கிரமம் 64 சுவிசேஷ விரித்துரை Η Ι 2 சுன்னகம் அரிகரபுத்திரனர்
ஊஞ்சல் 188 சுஜனமநோரஞ்சனி
பத்திரிகை சூடாமணி நிகண்டின் இரண்டாம் பகுதி
133
173
சூடாமணி நிகண்டு 95
சூடாமணி நிகண்டு
உரையுடன் 28
சூது புராணம்
சூரனுடைய முற்பிறப்பு
வரலாறு சூளாமணி 156 சூளாமணி வசனம் 14, 156 செகராச சேகரம் 132 செகராச சேகரமாலை 132 செகவுற்பத்தி 23 செந்தமிழ் இலக்கணம் 45 செந்தமிழ்-திங்கள்
வெளியீடு 92 செந்தமிழ்-பத்திரிகை 201 செந்தமிழ்ப் பூம்பொழில் 38 செந்தில் யமகவந்தாதி 115 செய்கு முஸ்தபா
ஒலியுல்லாகாரண
அலங்காரக் கும்மி 185 செல்வச் சந்நிதி முறை 195 சேசுநாதர் மரணம் 8 சேது புராணம் ዷ8 சேது புராண வசனம் 53 சேர் பொன்னம்பலம்
அருளுசலம் 21 சைவ உதயபானு
பத்திரிகை 09
சைவக்கிரியை விளக்கம் 117 சைவ சந்திரிகை 64

நூல் அகரவரிசை
சைவ சந்நியாச பத்ததி
13, 48 சைவ சமய நெறிவுரை 29 சைவ சித்தாந்தச் சுருக்கம்64 சைவ சித்தாந்த
சாரமான மரபு 152 சைவ சிரார்த்த ரகசியம் 152 சைவ சூக்குமார்த்த
போதினி 66 சைவ தூஷண பரிகாரம் 197 சைவ தூஷண பரிகாரம்
சுப்பிரபோதம் 28 சைவப் பிரகாசனம் 98 சைவ போதம் 7 சைவ மகத்துவம் 156, 194
சைவ மகத்துவ திக்காரம்
h 194 சைவ மகத்துவ திக்கார
நிக்கிரகம் 194, 195 சைவ வினவிடை
முதற் புத்தகம் 28
சைவ வினவிடை
இரண்டாம் புத்தகம் 28
சைவ வேதாந்தம் 134 சைவாபிமானி
பத்திரிகை சொற்பொருள் விளக்கம்.
தமிழ் அகராதி 126 சோதிடச் சுருக்கம் சோமகேசரி நாடகம் 184 செளந்தரியலகரி.
உரையுடன் 28 ஞாயிறு-திங்கள்
வெளியீடு 165 ஞானக் கும்மி 71, 188 ஞானசித்தி-திங்கள்
வெளியீடு 52 ஞானசித்தி-பத்திரிகை 168
ஞானப்பிரகாச மாலை 9
e23
ஞானபோத விளக்கம்
குரு வளி 135 ஞான ரத்திஞவளி Χ 34 ஞானரை வென்றன்
119, 120 ஞான வுணர்ச்சி 112 ஞான வெண்பா 103 ஞானமிர்தம்
பத்திரிகை 105, 751 ஞானனந்த புராணம் 159
ஞானுலங்கார ரூப
நாடகம் 18 ஞானவர்ண விளக்கம் 46 தக்கிண கைலாச புராணம்
131, 132 தக்கிண கைலாச புராணம் எனப்படும் கோணுசல
புராணம் 170 தசவாக்கிய விளக்கப்
பதிகம் 172
தஞ்சை வாணன் கோவை.
சொக்கப்ப நாவலர்
உரை 168 தண்டிகைக் கனகராயன்
பள்ளு 88 தண்டியலங்காரம்=
புத்துரை 90
தணிகைப் புரrண உரை
(நகரப்படலம் உரை) 14
தணிகைப் புராணம் 156 தணிகைப் புராணம்
பொழிப்புரை 14 தத்துவக் கட்டளை 54 தத்துவப் பிரகாசம் 66 தத்துவ விளக்கம்
மூலமும் உரையும் I35 தத்தை விடு தூது 110 தம்பிலுவிற் பள்ளு 208 தமிழ் அமைப்புற்ற
வரலாறு 14A

Page 114
224
தமிழ் ஆங்கில அகராதி 146 தமிழ்ச் சொற் பிறப்பு
ஒப்பியல் அகராதி 146 தமிழ் நாவலர் சரிதை 73 தமிழ் நூற் பெயரகராதி 39 தமிழ்த் தீவிர லிகிதம் 147 தமிழ்ப் பஞ்சாங்கம் 198 தமிழ்ப் புலவர் சரிதம் 90 தமிழ்ப் பேரகராதி 62 தமிழ்ப் பேர ராதி
(யாழ்ப் பண அகராதி)64 தமிழ்ப் பொழில்
பத்திரிகை 201 தமிழ்மொழிப் பயிற்சியும்
தேர்ச்சியும் 0. தமிழ் மொழியாராய்ச்சி 141 தமிழ் வரலாறு 74
தமிழ் வியாகரணம் I 13
தமிழர் சடங்கு முறைகள் 75 தமிழர் சாதிப் பகுப்பு
முறை 75 தமிழரின் சாதி உற்பத்தி 146 தமிழரின் பூர்வ சரித்திரமும்
சமயமும் 1 46 தர்க்கபரிபாஷை 63 தர்க்காமிர்தம்
(மொழிபெயர்ப்பு) 157 தர்ம உத்தியானம் 1 22 தருக்க சங்கிரகம் 28 தருக்க சாத்திரச்
சுருக்கம் 46
தருக்க சாஸ்திர வினவிடை
56
தரும புத்திர நாடகம் 131
தலமான்மியங்கள் (கடம்ப வனம், இரத்தினுசலம், மரகதாசலம்)
தலைமையுரையும் வேறு
அரசியற் சொற்பொழிவு களும் 20
I52
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
தன்மேற் குற்றஞ்சுமத்தல் 8
தன்னை நாயக ரூஞ்சல் 194 தன்னையமகவந்தாதி
77, 194 தக்ஷா தர்சம் ፲ 8-14 தகதிண கைலாச புராணம்
132, 168 தாந்திரிகதுண்ட கண்டன
கண்டனம் 135 தாமரைக் கேணி 207 தாமோதரம் பிள்ளை(சி)
சரித்திரம் ይ தாமோதரன் 147 தால புராணம் 76 தால விலாசம் 43
திராவிடப் பிரகாசிகை 106 திருக்கரசைப் புராணம் திருக்கருவைப் பதிற்றுப்
பத்தாந்தி 28 திருக்களிற்றுப்படியார்
2-60)ЛТ 48 திருக்குறட் பாயிரம்
இராமநாதீயம் 45
திருக்குறள் மூலமும்
பரிமேலழகருரையும் 28 திருக்கை வழக்கம் 2እ{
திருக்கோயில் ஊஞ்சல் 208 திருக்கோவிற் சிவசுப்பிர மணியக் கடவுள் மீது வருக்கமாலை 85 திருக்கோவையா
ருண்மை 130 திருச்சபைச் சரிதம் ፲ 46
திருச்சிற்றம்பலக் கோவை
யுரை 28 திருச்சிற்றம்பல யமக
வந்தாதி 106 திருச்சுழியற் புராணம் 13 திருச்செந்திற் திருவந்தாதி

நூல் அகரவரிசை
திருச்செந்தினிரோட்டக
யமகவந்தாதி யுரை 28 திருச்செந்தூர்ப் புராண
விரிவுரை 84 திருச்செந்தூர்ப் புராண
வுரை | 6 திருச்செந்தூர் முருகன்
பதிகம் 2O6 திருச்செந்தூரகவல் 28 திருச்செல்வராசர்
காப்பியம் 75 திருத்திலதைப்பதிப்
புராணம் 168
83 திருநெல்வாயிற் புராணம்
68 திருப்புகழ் 8 திருப்புகழ்த் திரட்டு-உரை. திருப்புகழ்ப் பாவணி 6 திருப்பெரு வடிவம் 17 திருபகுதாதந்தாதி 9 திரிமக்காதிரிபந்தாதி 6 திருமதீனத்து Lחמr&9 ע திருமரியா பேரில்
தோத்திரப் பதிகம் 149 திருமால் அவதார
நாமவாளி 38 திருமுருகர் பதிகம் 74
திருமுருகாற்றுப்படை 28 திருவருட் பயன்
விளக்கவுரை 17 திருவள்ளுவர் சமணர்
என்னும் கொள்கை
மறுப்பு 159 திருவாக்குப் புராணம் 7. திருவாசக உண்மை b7 திருவாசகப் பேருரை 165
225
திருவாசகம் 72
திருவாசக மணிகள் 17
திருவாதவூரர் புராண
விருத்தியுரை 20
திருவாதிரைத் திருநாள்
மகிமைப் பிரபாவம் 13
திருவாரூருலா ] 71
திருவானைக்காப் புராணம்=
gdao 4
திருவிடமும், சைவமும் 178 திருவிடைமருதூர்
பதிற்றுப்பத்தாந்தி 106
திருவிளையாடற் புராணத் தின் வேதப் பொருளரு ளிச்செய்த படலம்
அகலவுரை 59 திருவிளையாடற் புராண
வசனம் 29 திருவுந்தியார் 49 திருவேரக அந்தாதி 5 திருவைகற் புராணம் 168 திரை விருத்தம்
(கட்டியம்) Η Ι. 2 தில்லை நடராசர் பதிகம் 206 தினவர்த்தமானி.
பத்திரிகை 154, 176 தீபம்-பத்திரிகை 2O7
தீருவிற் சுப்பிரமணியர்
பதிகம் 92
துகளறுபோத உரை 40 துணவைப் பதிகம் 83 துறவிஞானம் 1 4 6 தெலுங்கு இலக்கணம் 112 தென்கிழக்காசியாவில்
தமிழர் செல்வாக்கு 85
தென்மொழி வரலாறு 192 தென்மோடி-நாட்டுக்
கூத்து 205 தென்னிந்திய சிற்ப
வடிவங்கள் 65

Page 115
A26
தென்னிந்திய பிரதி
நிதித்துவச் சபைகள் 77
தேவ் ஆராதனை முறை 146 தேவப் பிரசையின்
திருக்கதை 93 தேவாரப் பதிகம் 9 தேவாரம் வேதசாரம் 35
தேவி தோத்திர மஞ்சரி 104 தேவி மானச பூசை
அந்தாதி 0. தொல்காப்பியச் சண்முக
விருத்தி மறுப்பு 185 தொல்காப்பியச் சூத்திர
விருத்தி 28 தொல்காப்பியம் எழுத்ததி
காரம்-நச்சினர்க்கினியர்
உரை விளக்கம் 60 தொல்காப்பியம்
சொல்லதிகாரம் 6 தொல்காப்பியச் சொல்லதி
காரம்-சேனவரைய
ருரை 29 தொல்காப்பியம் சொல்லதி
காரம்-சேனவரையர்
உரை விளக்கம் 60 தொல்காப்பியம்
பொருளதிகாரம் 156
தொல்காப்பியம் பொருளதி காரம்-(முன் ஐந்து இயல் கள்) நச்சினர்க்கினியர் உரை விளக்கம் 60
தொல்காப்பியம் பொருளதி
காரம்-(பின் நான்கு இயல்கள்-பேராசிரியர்
உரை விளக்கம் 60 தோத்திரப் புஞ்சம் 10 தோன்றிச் சிலேடை
வெண்பர் 184
தோன்றித் தலபுராணம் 184 நகுலமலைக் குறவஞ்சி 196
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
நச்சுப் பொய்கைச்
சருக்கம் 50 நட்சத்திரமாலை 56 நடராசர் பதிகம் 188 நடன வாத்தியரஞ்சனம் 13 நபிகள் நாயகம் (சல்)
அவர்கள் மீது நவரத்தினதி திருப்புகழ் 6 நம்பியகப் பொருள்-உரை73 நமசிவாயம் அல்லது நான்
யார்? (நாடகம்) 46 நயினை நிரோட்டக யமக
வந்தாதி 67 நயினை மான்மியம் 67 நரகம் 28 நல்லூர்க் கந்தசுவாமி
பேரில் கோவை நல்லூர்ச் சுப்பிரமணியர்
பிள்ளைத் தமிழ் நல்லூர் நிரோட்டக யமக
வந்தாதி 180 நல்லைக் கலித்துறை 92
4
நல்லைக் கலிவெண்பா 93 நல்லைக் குறவஞ்சி 42 நல்லைச் சண்முகமாலை 138 நல்லைச் சுப்பிரமணியக்
கடவுள் பதிகம் 06 நல்லைச் சுப்பிரமணியர்
திருவித்தம் 38 நல்லை நகர்க் குறவஞ்சி 65 நல்லை நாயக நான்மணி
uðsrð0 7 நல்லை நான்மணிமாலை 107 நல்லை யந்தாதி 142 நல்லை வெண்பா 14, 142, 168 நவமணித் தீபம் 9
நவரத்தினத் திருப்புகழ் 6 நவவண்ணக் கீர்த்தனை 136

நூல் அகரவரிசை
நளச்சக்கரவர்த்தி விலாசம்
(தமயந்தி விலாசம்) 45 நற்றிணை 50 நற்றிணை-உரை 79 நன்னூல் இலகு போதம் 192 நன்னூல் உதாரண
விளக்கம் நன்னூல்-விருத்தியுரை
92
93
நன்னூற் காண்டிகையுரை
9
விளக்கம்
நன்னூற் சுருக்கம் 2 நன்னெறிக் கதா
சங்கிரகம் 103 நன்னெறிக் கொத்து 103
நாகூர் சாகுல் ஹமீது
ஆண்டகை பேரில் ஒருபா வொருபஃது 14 நாகூர்ப் புராணம் 6 நாகேஸ்வரி தோத்திரம் 53 நாஞ்சில்நாடு செங்கோடு
ஆகியவற்றின் பண்டைப் பெருமை 177 நாட்டுக் கூத்து - Ր 5 நாணிக் கண் புதைத்தல் 168 நாய் நாடகம் 84 நாராயண பரத்துவ
நிரசனம் 7 நால்வர் நான்மணிமாலை 29 நன்னூற் காண்டிகையுரை29 நாலு மந்திரி கும்மி 68 நாவலர் பதிகம் 38 நாற்கவிராச நம்பியகப்
பொருளுரை 195 g5rtersnub Lunrøvl Jarl-th 28 நிக்கிலாஸ் நாடகம் 65 நியாய இலக்கணம் 3
guru (3uroof 8 நில அளவைச் சூத்திரம் 121 53
நீதிசாரம்
222
நீதி நூறு 93 நீதிநெறி விளக்கம் 156 நீதிநெறி விளக்கம்
உரை 53 நீதிநெறி விளக்கம்
புத்துரை 90 நீதி வெண்பா
விரிவுரை 126 நீர்வை வெண்பா 173
நீராவிக் கலிவெண்பா 4
நீராவிப் பிள்ளையார்மீது
கலிவெண்பா 142
நீலக்கண்ட பாஷ்யத் தமிழ்
மொழிபெயர்ப்பு 135 நீல கண்டீயம் 18 நெஞ்சறி மாலை う
நெல்லியோடை அம்மன்
பேரிற் பல விருத்தங்கள் 60 நெல்லை வேலவருலா ll. நைடதம்-உரை 100 நொண்டி நாடகம் 84, 122 பகவத் கீதை 66 பகவத் கீதை-தமிழ் மொழி
பெயர்ப்பு | 92 பகவத் கீதை-விரிவுரை 45 பச்சாத்தாபம் 8 பசுபதீசுவரர் அந்தாதி 189 பஞ்சவர்ணத் தூது 22 பட்டணத்துப் பிள்ளையார்
urL6) 28 படிப்பிக்கும் முறைகளும்
விதிகளும் (p ளு 7 பண்டைய இந்திய சரிதை
யும் ஆண்டு வரிசையும்146 பண்டைக்கால யாழ்ப்
பாணம் 39 பத்துப்பாட்டு-ஆங்கில
மொழி பெயர்ப்பு 39 பத கிருத்தியம் 18 பதப்பிரயோக விவரணம் 56

Page 116
228
பதாயிகுப்பதிகம் 9 பதார்த்த தீபிகை 193 பதார்த்த விஞ்ஞானம் 126
பதிவிரதை விலாசம் &疗 பதினுெராந் திருமுறை 29 பதுமயூரணி நாடகம் 60 பரராச சேகரம் 38 பரராச சேகரன் இராச
முறை 23 பரராச சேகரன் உலா 213 பரிமளகாச நாடகம் 184 பருத்தித்துறைச் சித்தி
விநாயகர்மேல் பாவி கற்பம் 55 பவளேந்திரன் நாடகம் 50 பழனித்தல புராணவுரை 64
பழனிப் பதிகம் 8. பழைய இலங்கை மன்னர்
களின் தமிழ்க்
கடிதங்கள் 41 பழைய ஏற்பாட்டின்
ஆதியாகமம் 75 பறம்புமலைப் பாரி
நாடகம் 165 பருளைப் பள்ளு 122 பன்றிக்கிரி அரசன்
கோவை 67 பனங்காய்ப் பாரதம் 76
பாடல்களும், கீர்த்தனைகளும் 46
பாண்டவர் கதை 8. பாண்டித்துாைத் தேவர்மீது
நான்மணி மாலை 1 1 Ꭳ பாதுகா பட்டாபிஷேகம்109 பாரதச் சுருக்கம் 92 பாரத தாத்பரிய
சங்கிரகம் 06 பாரதத்திலே சில பருவங்கள்
உரை 180
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
பாரதியம்-மூன்று
பகுதிகள் 65 பாலகர் தாலாட்டு 0 பாலசிசுஷா மஞ்சரி I25 பாலத்தியானம் 8 turfa) unt Lib 16 Lunar inrL-6) 38 பால வைத்தியம் 26 பாலாமிர்தம் | 6 பாலியக் கும்மி 47
பாவலர் சரித்திர தீபகம் 103 பாஸ்கர சேதுபதி
இரட்டை மணிமாலை 115 பாஸ்கர சேதுபதிமீது
கல்லாடக் கலித்துறை 115 பாஸ்கர சேதுபதி
நான்மணிமாலை 15 பிக்குகு மாலை 6 பிட்டிவயற் பத்திரகாளி
யம்மை பேரிற் பதிகமும், ஊஞ்சலும் 55 பிரசங்க இரத்தின தீபம் 38 பிரசவ வைத்தியம் 84, 126 பிரபஞ்ச விசாரம் O7 பிரபந்த புஞ்சம் 9 பிரபுத்த பாரதம்-ஆங்கிலப் பத்திரிகை O பிரமாண தீபிகா விருத்தி
l25, 189 பிரயோக விவேக உரை 28
பிரலாப கவிதை I49. பிரான்மலைப் பதிகம் 9 பிருமதருக்கஸ்தவம் 13 பிலிப்பு உரொட்றிக்கோ
முத்துக்கிருட்டினர் குறவஞ்சி 48 பிள்ளைக் கவி 17
பிள்ளைக் காவியம் 141 பிள்ளையார் ஊஞ்சல் 54 பிள்ளையார் கதை 95

நூல் அகரவரிசை
பீரியட்-பத்திரிகை 48 புசற் காவியம் 14 புட்ப விதி 28 புத்தமத கண்டனம் 64
புத்தளப் பகுதியிலுள்ள
முக்குவரின் உற்பத்தியும்
ஒரலாறும் 75 புத்திளஞ் செங்கதிர் I65 புதிய ஏற்பாடு 172 புதிய ஏற்பாடு (விவிலிய
வேதம்) 73 புதிய வண்டுவிடு துரது 139 புதுச் சந்நிதி முருகன்
பதிகம் புது மொழி மாலை 9 புராந்திம பச்சிம காண்டம்
12
புரசீனகன்னி நாடகம் 84
புலியூர்ப் புராணம் 18 புலியூர் யமகவந்தாதி 181 புலியூரந்தாதி 18 புலியூரந்தாதி யுரை 210
புலோலி நான்மணி
Lorra) 115 புலோலிப்பர்வத வர்த்தனி த்யம்மை தோத்திரம் 210 புலோலி வைரவக்கடவுள்
தோத்திரம் 210 புவனேந்திரன் விலாசம் 50 புளியநகர் ஆனைப்பந்தி
விக்னேஸ்வரர் பதிகம் 174 பூதத் தம்பி விலாசம்
98, 163 பெரிய புராண பாடியம் (பாடியப் பிரகாசிகை
պւ 6նr) 14 பெரிய புராண வசனம்
28, 29
பெரிய புராணவுரை 23
15-سن-هgp.کB
29
பெருமாக் கடவைப் பிள்ளை
யார் இரட்டை மணி Lorra) Ol பேரின்பக் காதல் 8 பேரின்ப ரஞ்சிதமாலை 9 போர்த்துக்கீசர் ஒல்லாந்தர்
சால யாழ்ப்பாண
சரிதை 46 போர்த்துக்கேய-தமிழ்
சிங்கள அகராதி 113 பெளஷ்கர சங்கிதா
பாஷியம் 13 மகாவுக்கிர வீரபத்தி
ராஸ்திரம் 3.
மஞ்சட்பூதம் அல்லது இழந்த செல்வம் (நாவல்) 50 மட்டுநகர்ப் புதுமை 184 மண்டூர் முருகன் காவடிப்
பாட்டு 206 மண்டூர் வடிவேலர் குறம்206
LDGOOTLIDIštis Go onrðao O மணித்தாய் நாடும்
மரதனேட்டமும் 63
மதங்க சூளாமணி Ꭼ05 மதனவல்லி விலாசம் 121 மதுரைத் தமிழ்ச்சங்க
அகராதி 7. மதுரைவிரன் , 50 மதுவிலக்குப் பாட்டு 38 மந்திர விளக்கம் 45 மயில்வாகன வம்ச
600au Lu 6 lb மயிலனிச் சிலேடை
வெண்பா ஊஞ்சல்
பதிகம் 193 மயிலைச் சுப்பிரமணிவர்
ஊஞ்சல் 183

Page 117
230
மயிலைச் சுப்பிரமணியர்
விருத்தம் ፲ ዶ?8
மயிலை மும்மணிமாலை 183
மயூரகிரிப் புராணம்உரை180
மரகதாசலம் தலமான்
மியம் 丑52
மரதன் 'தமிழ்க் கவிதைப்
போட்டி 63 மருட்பா மறுப்பு 64 மருதடி அந்தாதி 10 மருதப்பக் குறவஞ்சி 17.3
மருதமடுத் திருப்பதி மாலை37 மருதூரந்தாதியுரை 28
மல்விற்கோ குறவஞ்சி 206
மலேரியா என்னும்
காட்டுச் சுரம் 86 மலேரியாக் கும்மி மலையகந்தினி நாடகம் 54 மலையகராதி 75
மழைக் காவியம் 20 மறைசைக் கலம்பகம் 73 மறைசைத் திருப்புகழ் 173 மறைசையந்தாதி 8, 122
மறைசையந்தாதி-உரை 115 மன்னன் விஜயன் பற்றிய
மரபுரைகள் 85 மனுநீதிக்கண்ட சோழன்
சரித்திரம் (நாடகம்) 53 மனுஷ அங்காதிபாதம் 83
மனுஷ சுகரணம் 83 மாணிக்க கங்கைக்
காவியம் あ7 Lorraonflšasů Llairčbntumori
திருவருட்பா 157
மாணிக்கவாசகர் விலாசம் 45 மாணிக்கவாசகரும் பூர்விக மலையாளக் கிறித்தவர்
களும் 177 Lom Lont ils l', 196itåmulmorf
பதிகம் 109
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
மாவிட்டபுரம் சுப்பிர மணியக் கடவுள் மீது ஊஞ்சல் பதிகம் மாவைக் கந்தசுவாமி
பேரில் மும்மணிமாலை 141 மாவைப் பதிகம் 90, 180 மாவையந்தாதி 106 மார்க்கண்டேய புராணம் 56 மாரியம்மன் குளுத்தி 207 மாரியம் ல் பதிகம் 207 மானவ தரும சாத்திரம் 168
142
மானிப்பாய் அகராதி 103 மானிப்பாய் தமிழ்
அகராதி 42 மிருகாவதி விலாசம்
(நாடகம்) 53 ܓ LöGmbr6ör Lonr&ə) 136
முகியித்தீன் அப்துல் காதிறு
ஆண்டவர்மீது ஆசிரிய விருத்தம் முகையதின் ஆண்டகை
மீது வேண்டுதல் 141 முகையதின் ஒப்பாரி 186 முத்த பஞ்சவிஞ்சதி (தனி
நிலைக்கவித் தொகுதி)
1 & 7, 188 முத்தி நிச்சயப் பேருரை 48
முத்துக்குமாரசுவாமி
இரட்டைமணி மாலை 110 முதற் பாலபாடம் 28 முப்பொருளாராய்ச்சிக்
கட்டுரை 74 முன் கீரின் மாலை 21 மூவர் தேவாரம் 30 eupgurt off Gurgfelsbl umr l72 மூவிராசாக்கள்
6.urt Fessunt 50
மூளாய்ச் சித்திவிநாயகர்
ஊஞ்சல் 92 மெதடிஸ்த விஞவிடை 176

நூல் அகரவரிசை
மெய்ஞ்ஞானக் கீர்த்தனை 112 மெய்ஞ்ஞானக் குறவஞ்சி 9 மெய்ஞ்ஞானக் கோவை 9
மெய்ஞ்ஞானத் தூது 136 மெய்ஞ்ஞான நவமணி
LDirke 186 மெய்வேத சாரம் 103 மேகதூதக் காரிகை 90 மேகதூதக் காரிகை
D60) pr 60 மேக துரதம் 166 மேகவர்னன் 147 மோகனங்கி 10 GSLDirt Fth 23 யாப்பருங்கலக்காரிகை
O 63) put யாப்பருங்கலக் காரிகை=
புத்துரை 90 ulumtib MT6ão 204, 205
யாழ்ப்பாண அகராதி
(மானிப்பாய் அகராதி) 103 யாழ்ப்பாண அரசர் 146 யாழ்ப்பாணச் சமயநிலை 29 யாழ்ப்பாணச் சரித்திர
ஆராய்ச்சி (ஆங்கிலம்)'48 யாழ்ப்பாணச் சரித்திரம்
41, 99, 156, 192 யாழ்ப்பாணச் சரித்திரம்
ஆங்கிலேயர் காலம் 41 யாழ்ப்பாணத்து ஆசனக்
கோவிலின் வரலாறு 51 யாழ்ப்பானம் பற்றிய
குறிப்புகள் 5. யாழ்ப்பாண வரலாறு 39 யாழ்ப்பாண வைபவ
கெளமுதி 209 யாழ்ப்பாண வைபவ
181 ,40 פ&זחפש
afflurrent Goal audita
A3
ஆங்கில மொழி
பெயர்ப்பு 40 யேசுமத சங்கற்ப
நிராகரணம் 05 யேசுமத பரிகாரம் 189 யோசேப்புப் புராணம்
93, 173
யோசேப்புவாஸ் முனிவரி
சரித்திரம் 7 வச்சிரதண்டம் J35 வசந்தன் கவித்திரட்டு 101 வஞ்சிமாநகர் 137, 177
வடதிரு முல்லை வாயில்
மும்மணிக்கோவை 96 வடமோடி-நாட்டுக்
கூத்து 205 வடிவேலர் திருவிருத்தம் 188 வண்ணக் க 171
வண்ணக் குறவஞ்சி 196 வண்ணைச் சிலேடை
Go)6u 6öat unr 176 வண்ணைத் திருமகள்
பதிகம் 138 வண்ணை நகரூஞ்சல் 101 வண்ணையந்தாதி 0. வண்ணை வேங்கடேசப்
பெருமாள் ஊஞ்சல் 138
வண்ணை வைத்தியலிங்கர்
குறவஞ்சி 54 வல்லிபுரநாதர் பதிகம்
115, 173 வல்வை வயித்தியேசர்
பதிகம் 195 வலைவீசு புராணம் 189 வழிநடைச் சிந்து 36 வள்ளியம்மன் ஊஞ்சல் 207 வளர்பிறை 139
வறுத்தலைவிளான் மருதடி விநாயகர்மேல் இருபா விருபஃது 60

Page 118
232
வன்னிச் செல்வர்
குறவஞ்சி 206 வனவாசம் 109 வஜ்ரடங்கம் 35 வாக்கிய கணித
பஞ்சாங்கம் 37, 124 வாக்கிய கரண கிரகணம் 196 வாதபுரேசர் கதை 56
வால்மீகி ராமாயணம்-கிட்
கிந்தா காண்டம்
மொழிபெயர்ப்பு 73 வால்மீகி ராமாயணம்
சுந்தரகாண்டம்
மொழிபெயர்ப்பு 7ጃ வாழ்த்து 23
வாளபிமன் நாடகம் 弯4 வான சாத்திரம் 103 விக்கினேசுவரர் பதிகம் 121
விசாலாட்சி விருத்தம் 5
விட்டுணு தூஷண
பரிகாரம் 169 வித்தகம் 67 வித்தியா சமாச்சாரப்
பத்திரிகை 40 விநாயக கவசம் 28 விநாயகர் மான்மியம் 174 விநாயகரகவல் 183 ی வியாக்கிரபாத முனிவர்
புராணம் 23 விரத நிச்சயம் 184 வில்லி பாரதம்-குதுபோர்ச்
சருக்கம் உரை 91 வில்ஹனியம் 56 விவிலிய குற்சிதகண்டன
திக்காரம் I ፵5 விவிலிய குற்சிதக்
குறிப்பு 35
வினைப்பகுபத விளக்கம்
90, 192
வினேதபத மஞ்சரி 9
சழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
விஜயசீலம் 123 விஜயத்துவஜம்
பத்திரிகை 丑5夏 விஷ்ணு பதிகம் 207 வீசகணிதம் 198 வீரசிங்கன் கதை 23 வீரசோழியம் 56 வீரபத்திரர் ஊஞ்சல் 120 வீரபத்திரர் சதகம் 12 வீரபத்திரர் பதிகம் 181 வீரபத்திராஸ்திரம் 135 விர மாகாளியம்மன்
பதிகம் 12
வெருகலம்பதி சித்திர
வேலாயுத சுவாமி காதல் 5 வெல்லை அந்தாதி 103 வெல்லை மணிமாலை 29 வேணுவனலிங்கோற்பவம்13 வேதாகம வாத தீபிகை 157 வேதாந்த கேசரி-ஆங்கிலப்
பத்திரிகை 201 வேதாந்த சுயஞ்சோதி 111 வேதாரணியேசுவரர்
ஊஞ்சற் பதிகம் 56 வேலணை இலந்தைக்காட்டுச்
சித்தி விநாயகர் இரட்டைமணிமாலை 176 வேலணை மகாகணபதி
திருவூஞ்சல் 66 வைத்திய விசாரணி
மாதப் பத்திரிகை 191 வைத்தியாகரம் 5 1 . 88 வைதிக காவிய தூஷண
மறுப்பு வைதிக சுத்தாத்துவித
சைவ சித்தாந்த தத்துவப்
106
பட விஞவிடை 135 வைதிக சுத்தாத்துவித
சைவ சித்தாந்தப்
Lillb 135

நூல் அகரவரிசை
6o chun ins It imrt léi) 213 வைரவர் ஊஞ்சல் 54
வைரவர் தோத்திரம் 183 வைரவர் ஸ்தோத்திர
штàu 210
ருேயல் ஆசியச் சங்க இலங்கைக் கிளைச் சஞ்சிகைக்கு வழங்கிய கட்டுரைகள் 20
பூரீ சீகாழிப் பெருவாழ்வின்
ஜீவகாருண்ய மாட்சி 135
ஸ்காந்த புராண சரிதம் 55
Ancient Jaffna 41 .
A Tamil Mystic
Ceylon Gazetteer
(சிலோன் கசற்றீயர்)74,75
Essentials of Hinduism 107
49
Essentials of Logic 17 Evangelism in Ceylon 149 Forglams of God 49 Garden of Eden 56 Glories of Saivaism 117
Golden Verse Collection
of Ceylon 149
Historical-Manuscripts
Commission 41 In the Days of
Sambasiva la9
纷33
Jesus of Nazereth 81 Kalavali or the Battle
field 70 Katrgama 41 Life of Jesus 81 Life of Thiru Gnana
Sambanthar 107
Psalms of a Saiva Saint 149 Saiva School of
Hinduism 117 Tamil Documents in the
Archives 4.
Tamil Plutarch
(தமிழ்ப் புலவர் வரலாறு) 7虏 The Conquest of Bengal
and Burma by the Tamils: Raja Raja Chola 70 The Ethical Epigrams of
Auvaiyar 9. The Kalingathu Parani 70 The Salt of the Earth 149 The Tamils Eighteen
Hundred years ago 68 The Vikrama Cholan
Ulla 70

Page 119

ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
12.
13. 14.
5.
16.
17.
8.
9.
20.
21.
易2。
23.
24。
25.
廖6。
盛7。
(அகரவரிசை)
அகிலேசபிள்ளை, வே. 5 அசனலெப்பை 6 அந்திரிசுப் பிள்ளை 7 அந்தோனிக் குட்டி அண்ணுவியார் 7 அப்துல்காதிர் புலவர், அருள்வாக்கியர். 8
அப்துல் ரகுமான் ஆலிம்புலவர் O அப்துல் ஹமீது மரைக்காயர் 0. அப்பாப் பிள்ளை O அப்புக் குட்டி ஐயர் 11 அம்பலவாண நாவலர் அம்பலவாணர், பண்டிதர் 14 அம்பிகை பாகரி 14 அரச கேசரி அருணுசல ஐயர் 5 அருணுசலப் பிள்ளை 15 அருணுசலம், பொன். சேர். 16 அலி உதுமான் 21 அலியார் மரிக்கார் 2 அலியார் மரிக்கார் கக்கீம் 2. அஹ்மது லெப்பை மரக்காயர், மக்கோனை22 ஆறுமுகத் தம்பிரான் 22 ஆறுமுக நாவலர் 23 ஆனந்த, கே. குமாரசுவாமி, டக்தர் 29 ஆனுப் பிள்ளை 36 இப்பொலித்துச் சாமியார் 37 இரகுநாதய்யர் 37
இரத்தினேசுவர ஐயர் 37

Page 120
ይ36
28.
29. 30.
31.
岛罗。
33. 34. 35 36. 8ሃ.
38. 39.
40.
41 . 42. 43.
64. 45. 46. 47.
48.
49. 50。 51 .
5岛。
53。
54.
55. 56. 57。 58. 59.
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
இராசநாயகம், செ. முதலியார் இராசையனுர், சு., பண்டிதர் இராமசாமி ஐயர் இராமநாதன், பொன். சேர். இராமலிங்க ஐயர் இராமலிங்கம் பிள்ளை, வ. இராமலிங்கம், க. வித்துவான் இராமலிங்கம், வே. இருபாலைச் செட்டியார்
இலக்கணச்சாமி, முத்துக்குமாரசுவாமித்
தம்பிரான் இன்பக் கவி இன்னசித் தம்பி ஈழத்துப்பூதந் தேவனர் உலோறன்ஸ் பிள்ளை உவில்லியம் பிள்ளை உவில்லியம் போல் என்றி மார்ட்டின் ஏகாம்பரம், க. ஏரம்பையர், சு. ஒசிங்ரன் பண்டிதர் கணபதி ஐயர் கணபதிக் குருக்கள் கணபதிப் பிள்ளை, வ. கணபதிப் பிள்ளைப் புலவர் கணேச பண்டிதர் கணேசையர், சி. மகா வித்துவான் கதிரேசுப் புலவர் கதிரைவேற் பிள்ளை, கு. உவைமன். கதிரைவேற் பிள்ளை, தம்பலகாமம் கதிரைவேற் பிள்ளை, நா. கதிர்காமையர் கந்தப் பிள்ளை, ப.
38
4l
4.
4&
45
45
45
46
47
47
49
尘9
50
50
50
5 I
öI
öI
52
54
54
55
55
56
57
58
60
6.
62
62
64
65

60
61.
62。
63.
64。
65
66. 67.
b 8.
69.
70, 7
72.
73.
74. 75.
76
7罗。
78.
79.
80.
81.
82.
8.
84.
&5。
86.
87. 88.
89.
90. 91.
92.
அகரவரிசை
கந்தப் பிள்ளை, வி. கந்தையா பிள்ளை, பண்டிதர். ச. கவிராசர் கனகசபைப் பிள்ளை, வி. கனகசபைப் புலவர், வே. கனகசுந்தரம் பிள்ளை, தி த. கனகரத்தின உபாத்தியாயர் காசிச் செட்டி, சைமன். காசிநாதப் புலவர் காசீம் ஆலிம்பாவலர் கார்த்திகேசு, பொலியவிதான கார்த்திகேய ஐயர், வே. கார்த்திகேயப் புலவர், மு. கிங்ஸ்பரித் தேசிகர் கிறீன் பாதிரியார், டாக்டர் கீத்தாம் பிள்ளைப் புலவர் குஞ்சித் தம்பி, பண்டிதர் குணசேகரம், எஸ். ஜே. குமார குலசிங்க முதலியார் குமாரசுவாமி ஐயர் குமாரசிங்க முதலியார் குமாரசுவாமிப் பிள்ளை, வா. குமாரசுவாமிப் புலவர், அ. குமாரசுவாமிப் புலவர், வ. குமாரசுவாமி முதலியார் கூழங்கைத் தம்பிரான் கைலாச பிள்ளை, சிற். கைலாச பிள்ளை, த. கொஸ்தான் சங்கர பண்டிதர் சங்கரப் பிள்ளை யோன் சண்முகச் சட்டம்பியார், சு. சண்முகச் சட்டம்பியார், வ
65
67
67
68 70 71
73
73
76
76
76
77
77
79
8.
84
84
85
85
86
87
87
88
90
92
93
93
96.
98
98
99
99
99
37

Page 121
98
93. 94. 95。
96
97.
98.
99.
00.
0. 102. 03. 104. 105. 106. 107. 08. 09.
10.
1ll.
12.
13.
14.
15. 16.
117.
18.
I9.
120.
21.
丑22。
23. 124. 125.
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
சதாசிவ ஐயர், தி. முகாந்திரம் சதாசிவ பண்டிதர் சதாசிவம் பிள்ளை, ஆனல் சந்திரசேகர பண்டிதர், அ. சந்திரசேகர பண்டிதர், நா. சபாபதி நாவலர் சபாரத்தின முதலியார் சம்பந்தப் புலவர், வே. Fu buff சரவணமுத்துப்பிள்ளை, அ. சரவணமுத்துப் பிள்ளை, சு. சரவண முத்துப் பிள்ளை, தி. த. சரவண முத்துப் புலவரி, ம. சவுந்தரநாயகம் பிள்ளை smrti Goes Turíšestř சித்துப் புலவர்
00 10. 101 1ቦ8 03 104 106 107 108 108 109 110
10 111 H 12
112
சிதம்பரம் பிள்ளை, உவில்லியம் நெவின்ஸ்113
சிதம்பரம் பிள்ளை, வே. சிவசம்புப் புலவர் சிவசுப்பிரமணியக் குருக்கள் சிவப்பிரகாச பண்டிதரி சிவபாத சுந்தரம், சு. சிவானந்தையர், ச. வித்வான் சிற்றம்பலப் புலவர் சின்ன ஆலிம் அப்பா சின்ன இபுரு:கிம் மொகியதீன் சின்னக் குட்டிப் புலவர் சின்னத்தம்பி உபாத்தியார், தா. சின்னத்தம்பிப் புலவர், சி. சின்னத்தம்பிப் புலவர், வி. சின்னப்ப பிள்ளை, சி. வை. சின்னவப் புலவர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், ச.
13
14
15
16 16 117
9
9 120
120
2.
121
盈22
23 123 124

le. 197, 2. 29. 30 3. 32. 33.
l34.
35. 36. 187 38 39. 140 le
42.
63.
le4.
145. 46
J47. 148. le.9. 50 151. 152. 53. 154.
55. 156.
57.
及58。
அகரவரிசை
rt' gruparafu téfrast சுப்பு ஐயர், க.
சுப்பையர், மே,
சுப்பையனர் дариотеir (olepticot ... சுவாம் பிள்ளைப் புலவர் சுவாமிநாத பண்டிதர், சி. சுவாமிநாதர், அ. செகராச சேகரன் செந்திநாதையர், காசிவாசி செப்பறைச் சிதம்பர சுவாமிகள் செய்கு அலாவுதீன் புலவர் செய்கு முஸ்தபா செய்கு முஸ்தபா அலியுல்லா செல்லப்பா பிள்ளை, தr. செல்லையா, நெ. வை. செல்லையா, மு. செல்லைய்ா, ஜே. வி. செல்லையா பிள்ளை, சி. திக்கம் செவ்வந்திநாத தேசிகர் சேகுமதாறு சாகிப் புலவரி சேனதிராய முதலியார் சோமசுந்தரப் புலவர், க. சோமாஸ்கந்த பண்டிதர் ஞானப்பிரகாச சுவாமிகள் ஞானப்பிரகாசர், வண. சுவாமி டன் சுவாமிகள் வண. பற்றிக். தம்பா பிள்ளை தம்பிமுத்துப் பிள்ளைப் புலவர், எஸ். தம்பையா உபாத்தியாயர் தம்பையா, ஐசக் டக்தர். தம்பையா பிள்ளை, எஸ். தாமோதரம் பிள்ளை, சி. வித்துவான்
126
27 27
127
128
29
29
3.
31
132 I35
35
36
36
37
37
38
39
- 39 140
ld 142
43
143
44
及45
丑46
47
47
47 148
49
50
2.99

Page 122
a40
9,
160. 6l. 162
63.
64.
I65。
66.
67.
168
69.
70.
171 .
72
卫73。
174. 75
176,
77
178
79.
- 80
181.
82. 1830
及84。
85.
86.
87.
88. 189
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
தாமோதரம் பிள்ளை, சி. வை.
ராவ்பகதூர், தானியேல் யோன், டாக்டர் திருஞான சம்பந்த உபாத்தியாயர் திருஞான சம்பந்தப் பிள்ளை திருஞான சம்பந்தர், ம. க. வே. திருவிளங்கம், மு. தில்லைநாத நாவலர், ம. தொம்பு பிலிப்பு நடராசையர் நடேச பிள்ளை, சு. நமச்சிவாயப் புலவர், சு. நல்லதம்பி, மு., முதுதமிழ்ப் புலவர் நல்லையா பிள்ளை நவநீத கிருஷ்ண பாரதியார், சு.
பண்டிதமணி நவரத்தினம், க. கலைப்புலவர் நாகநாத பண்டிதர், அ. நாகமணிப் புலவர் நாகலிங்கம் பிள்ளை, சி. வித்வான் நாகேச ஐயர் நாராயண பிள்ளை நீக்கிலாஸ் பிள்ளை நெல்லைநாத முதலியார் பண்டிதராசர் பரராச சேகரன், பாலசிங்கம், க. பிரான்சீஸ் பிள்ளை பிலிப்பு தெமெல்லோ பீதாம்பரப் புலவர் பூபால பிள்ளை, ச. வித்துவான் பூர் ஐயர் பூலோக சிங்க முதலியார்
I52
56
双56
157 57 罩58
58
59
60
160
16
16
I63
63
65
166
66
167
168
169 169
170
170
7. 17
卫72
72 173
17
I75
175

190.
1Ꮽ 1 .
92.
193.
194.
95.
196.
197.
198.
99.
200.
201o
202.
203.
204.
205.
206 •
207.
208.
209.
20.
211.
2丑2。
93.
24.
25.
86.
21 7 .
28.
29.
820。 22】。
222.
அகரவரிசை
பேரம்பலப் புலவர் பேர்சிவல் பாதிரியார், பீற்றர் பொன்னம்பல பிள்ளை, ச. பொன்னம்பலப் பிள்ளை, தா. பொன்னம்பலப் பிள்ளை, ந. ச. பொன்னுத்துரை ஐயர் மகாலிங்கசிவம், பண்டிதர் மயில் வாகனப் புலவர் மயில்வாகனப் புலவர், க. மன்னம்பாடியார் LDrtu'il nr 6007 Cup,5 Gö)uun rf மீரான் முகைதீன் முகமது இபுருகீம், செ. மு. முகம்மது காசீம் புலவர் முகம்மது காசீம் மரைக்காயர் முகம்மது தம்பி மரைக்காயர் முகம்மது ருபிப் புலவர் முத்திராசர் முத்துக் குமார கவிராசர் . முத்துக் குமாரசுவாமிக் குருக்கள் முத்துக்குமாரர் முத்துத் தம்பிப் பிள்ளை, ஆ. முருகேச பண்டிதர், பூ. முருகேசையர்
வயித்தியலிங்க பிள்ளை, ச. வல்வை.
வரதப் பண்டிதர் விசுவநாத சாஸ்திரியார் விசுவநாத பிள்ளை, கரல். ap5/russi, qəlpəlurf. விபுலானந்த அடிகள் வில்லவராய முதலியார் வினவித்தம்பி, புலவர் வெற்றி வேலர்
175
76
76
77
778
180
80
18
181
83
84
185
185
185
185
786
186
186
187
188
189
189
193
93
94
195
196
190
98. 199
205
205
206
841

Page 123
242
223. 224. 225。 名26。 227. 228。 229。
230。 23 lo
ஈழநாட்டின் தமிழ்ச் சுடர் மணிகள்
வேடப் பிள்ளை
வேதநாயகம் பின்ளைப் போதகர் வேலாப் போடியார் வேலுப் பிள்ளை, க. ஆசுகவி G3ajb,96iräaiT, LD. *• • உரையாசிரியர் வேன்மயில் வாகனப் புலவர் வைத்தியநாதச் செட்டியார் வைத்தியநாதி தம்பிரான் வையாபுரி ஐயர்
206 207 27 208 209
210 212
2丑2 23