கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் இலக்கணம்

Page 1


Page 2


Page 3

தமிழ் இலக்கணம்
(இலக்கணச் சுருக்கம்)
ஆறுமுக நாவலரவர்கள்
முல்லை நிலையம் 43, புதுத்தெரு, மண்ணடி சென்னை - 600 001

Page 4
முல்லை முதற்பதிப்பு டிசம்பர் 1993
முல்லை - 37
நூல்
நூற்பெயர் ஆசிரியர் பதிப்புரிம்ை தாள் பக்கங்கள்
வெளியிடுவோர்
விற்பனை உரிமை
பொருள் க்னிப்ப்ோறி அச்சு
அச்சிட்டோர்
விலை
பற்றிய விவரங்கள்
Π
தமிழ் இலக்கணம் ஆறுமுக நாவலரவர்கள் முல்லை நிலையம் வெள்ளைத்தாள் 10.7 கி.கி.
216
முல்லை நிலையம்
43, புதுத்தெரு, மண்ணடி, சென்னை - 1.
பாரி நிலையம் 184 பிராட்வே சென்னை - 600 108
இலக்கணம் எல். கே. எம். கம்ப்யூட்டர் பிரிண்ட்ஸ், சென்னை - 17 பாரி ஆப்செட் பிரிண்டர்ஸ் சென்னை - 13.
es. 30.00

பதிப்புரை
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றிய பழம்பெரும் சான்றோர்கள் சிலருள்ளும் தனித்தன்மையும் பெருமையும் கொண்டவர்.
அவர் தமிழ் இலக்கணத்திற்குப் புரிந்துள்ள தொண்டு மறத்தற்கு அரிது; மகத்தானது. அவர், இலக்கணச் சுருக்கம்" என்னும் தலைப்பில் கி.பி. 1886 ஆம் ஆண்டில் யாத்து வெளியிட்ட நூலையே, எம் முல்லை நிலையம் வாயிலாகத் தமிழ் இலக்கணம்' என்னும் தலைப்பில் வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியுறுகிறோம்.
தமிழைப் பிழையற எழுதவும் பேசவும் இவ் இலக்கண நூல் அனைவர்க்கும் மிக்க பயன் தரவல்லது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் முதலியோர் இந்நூலை வாங்கிப் பெரும் பயன் எய்தலாம்.
இந்நூற் சிறப்பையும் பயனையும் அறிந்து நம் தமிழுலகம் வாங்கிப் பயனடையும் என நம்புகிறோம்.
முல்லுல் நிலையத்தார்.

Page 5
பொருளடக்கம்
எழுத்ததிகாரம்
எழுத்தியல் W பதவியல் .
புணரியல்
சொல்லதிகாரம்
பெயரியல்
வினையியல்
இடையியல் உரியியல்
தொடர் மொழியதிகாரம் தொகைநிலைத் தொடரியல் . தொகாநிலைத் தொடரியல் ஒழியியல்
பகுபதமுடிபு . சொல்லிலக்கணங்கூறுதல்
சொற்றொடரிலக்கணங் கூறுதல்
15
112
151
166
169
78
182
2O2
213
215,

தமிழ் "இலக்கணம்
எழுத்ததிகாரம
1. எழுத்தியல்
இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
2. அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழியதிகாரம் என, மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும். தேர்வு வினாக்கள் - 1. இலக்கண நூலாவதியாது? 2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?
எழுத்துக்களின் பெயர் 3. எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்.
4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும். 5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ. P, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்,
6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து
என இரண்டு வகைப்படும்.

Page 6
6 9 ஆறுமுகநாவலர்
7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
8. நெட்டெழுத்துக்கள், ஆ ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழுமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும். 9 மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப் ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத் துக்களுமாம். இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறுமாம். இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம். இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம். இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். . A உ-ம். அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்
15. எகரம் மொழிக்கு முதலிலும், ஆகாரமும் ஒகாரமும் மொழிக்குக் கடையிலும், ஏகாரம் மொழிக்கு முதலிலுங் கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.

தமிழ் இலக்கணம் - எழுத்தியல் 9 7
می
உ-ம். லிவன், "எக்கொற்றன்
கொற்றனா, கொற்றனோ ஏவள், கொற்றனே
யா என்னும் உயிர்மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும்போது வினாவெழுத்தாம். உ+ம். யாவன், யாங்ங்ணம்
16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகார்த் துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஒகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ங்கரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமுதல், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும் ஓரினமாகும்; அவை இவ்விரண் டோரினமாகாவாம்.
17. உயிர்மெய்யெழுத்துக்களாவன. பன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாலாகிய இருநூற்றுப்பதினாறுமாம்.
அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
உயிர்மெய்க்குற்றெழுத்துத் தொண்ணுறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர் மெய் இருநூற்றுப் பதினாறு.
உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர் மெய்
மெல்லெழுத்து எழுபத்திரண்டு; உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு; ஆக உயிர்மெய் இருநூற்றுப்பதினாறு.
18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஒரெழுத்தாம்.
உ-ம். எஃகு, கஃசு, அஃது, பஃறி

Page 7
8 9 ஆறுமுகநாவலர்
19. மேற்சொல்லப்பட்ட உயிர் "نتيقتين மெய்
பதினெட்டும், உயிர்மெய் இருநூற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநூற்று நாற்பத்தேழெழுத்துக்கிளுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டுகொள்க.
தேர்வு வினாக்கள் - 3. எழுத்தாவது யாது? 4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்? 5. உயிரெழுத்துக்கள் எவை? 6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 7. குற்றெழுத்துக்கள் எவை? 8. நெட்டெழுத்துக்கள் எவை? 9. மெய்யெழுத்துக்கள் எவை? 10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும். 11. வல்லெழுத்துக்கள் எவை? 12. மெல்லெழுத்துக்கள் எவை? 13. இடையெழுத்துக்கள் எவை? 14. சுட்டெழுத்துக்கள் எவை? 15. வினாவெழுத்துக்கள் எவை. 16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும்? 17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை? உயிர்மெய்க் குற்றெழுத்து எத்தனை? உயிர்மெய்க்குற்றெழுத்து எப்படித் தொண்ணுாறாகும்? உயிர்மெய் நெட்டெழுத்து எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத்தாறாகும்? உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் வல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் மெல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? உயிர்மெய் யிடையெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்? 18. ஆய்தவெழுத்தாவது எது? 19, ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?
எழுத்துக்களின் மாத்திரை 20. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று; நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.
உயிர்மெய்க்குற்றெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.

தமிழ் இலக்கணம் - எழுத்தியல் 9 9
மாத்திரையர்வது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
21. உயிரெழுத்துக்களுள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். அவ்வுகரத்துக்குக் குற்றியலுகரமென்றும், அவ் விகரத்துக்குக் குற்றியலிகரமென்றும் பெயராம்.
22. குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளினிறுதியில் வல்லினமெய்களில் ஏறி நிற்கும் உகரமாம்.
அக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத் தொடர்கின்ற அயலெழுத்தின் வகையினாலே, நெடிற் றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றிய லுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க் குற்றிய லுகரம், மென்றொடக்குற்றியலுகரம், இடைத் தொடர்க் குற்றியலுகரம் என ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பலவெழுத்து மொழியாகியும் வரும்.
உ-ம். நாகு, ஆடு . நெடிற்றொடர்க்குற்றியலுகரம்
6Too(5, கஃசு . ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம் வரகு, பலாசு . உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் கொக்கு, கச்சு . வன்றொடர்க்குற்றியலுகரம் சங்கு, வண்டு. மென்றொடர்க்குற்றியலுகரம் அல்கு, எய்து . இடைத்தொடர்க்குற்றியலுகரம்
23. தனிக்குற்றெழுத்துக்குப் பின் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும், மெல்லினமெய்களிலும் இடையின மெய்களிலும் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம்.
உ-ம். நகு, கொசு, கடு, அது கணு, திரு, வழு பூணு, வாரு
உருமு, கதவு, நெல்லு, கொள்ளு.

Page 8
10 0 ஆறுமுகநாவலர்
24. குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.
உ-ம். நாகு 十 யாது = நாகியாது
எஃகு + யாது = எஃகியாது வரகு + யாது = வரகியாது கொக்கு + யாது = கொக்கியாது சங்கு + uuT5 =சங்கியாது அல்கு + யாது = அல்கியாது
அன்றியும், மியாவென்னும் அசைச்சொல்லிலே மகரத்தின் மேல் ஏறி நிற்கும் இகரமுங் குற்றியலிகரமாம்.
25. பாட்டில் ஒசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக் களுள்ளும், ஒற்றெழுத்துக்களுள்ளும், சில சில, தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும், அவ்வுயி ரெழுத்துக்கு உயிரளபெடை என்றும், அவ்வொற்றெழுத் துக்கு ஒற்றளபெடை என்றும் பெயராம்.
26. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலி லாயினும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற நெட் டெழுத்துக்களேழுமாம். அளபெடுக்கின்ற நெட் டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும். உ-ம். ஆஅடை, ஈஇடு, ஊஉமை, ஏஎடு, ஐஇயம், ஒஒடு,
96T2060d6Nu, U6UT9|Gi; Lj6sT9.
சிலவிடங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப் பின்னளபெடுக்கும்.
உ-ம். எழுதல் = எழுஉதல், வரும் = வரூஉம், குரி = குரீஇ
27. ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையி லாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக

தமிழ் இலக்கணம் - எழுத்தியல் 9 11
ஒலித்து வருகின்ற ங்,ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்துமெய்களும் ஆய்தமுமாம். அளபெடுக்கின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ்வொற்றெழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறிலிணைக்கீழும் வரும். உ-ம். சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு,
தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்ங்கலந்த.
28. குற்றியலுகரத்துக்குங் குற்றியலிகரத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை; உயிரளபெடைக்கு மாத்திரை மூன்று; ஒற்றளபெடைக்கு மாத்திரை ஒன்று.
29. பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்ப லிலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவைக் கடந்து நீண்டொலிக்கும்.
தேர்வு வினாக்கள் - 20. குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை? நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை? ஆய்தவெழுத்துக்கு மாத்திரை எத்தன்ை? உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்துக்கு மாத்திர்ை எத்தனை? மாத்திரையாவது எது? 21. தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் எழுத்துக்கள் உளவோ? தன் மாத்திரையிற் குறைவாக ஒலிக்கும் உகரத்துக்குப் பெயர் யாது? தன் மாத்திரையிற் குறைவாக ஒலிக்கும் இகரத்துக்குப் பெயர் யாது? 22. குற்றியலுகரமாவது யாது? அக்குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? நெடிற்றொடர் எத்தனையெழுத்து மொழியாகி வரும்? 23. முற்றியலுகரமாவன எவை? 24. குற்றியலிகரமாவது யாது? 25. தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும் எழுத்துக்கள் உளவோ? அதிகமாக ஒலிக்கும் உயிரெழுத்துக்குப் பெயர் யாது? அதிகமாக ஒலிக்கும் ஒற்றெழுத்துக்குப் பெயர் யாது? 26. உயிரளபெடையாவன யாவை? 27. ஒற்றளபெடையாவன யாவை? 28. குற்றியலுகரத்துக்கு மாத்திரை எத்தனை? குற்றியலிகரத்துக்கு மாத்திரை எத்தனை? உயிரள பெடைக்கு

Page 9
12 9 ஆறுமுகநாவலர்
மாத்திரை எத்தனை? ஒற்றளபெடைக்கு மாத்திரை எத்தனை? 29. எவ்வெவ்விடங்களில் எழுத்துக்கள் தமக்குச் சொல்லிய அளவைக் கடந்து நீண்டொலிக்கும்?
முதன்லை 30. பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக் களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம். உ-ம். அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி,
ஐயம், ஒளி, ஒடு, ஒளவை. கரி, சரி, தலை, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி. 31. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம என்னும் 0ے[ மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும். உ-ம்.
. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல்,
கைதை, கொண்டை, கோடை, கெளவை.
2. சட்டி, சாந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல்,
சையம், சொன்றி, சோறு, செளரியம்.
3. தகை, தார், திதலை,-தீமை, துளை, தூசு, தெளிவு,
தையல், தொண்டு, தோடு, தெளவை.
4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை,
நைதல், நொய்து, நோய், நெளவி. 5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு,
பையல், பொன், போது, பெளவம். 6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி,
மையல், மொட்டு, மோகம், மெளவல். 32. வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
உ-ம். வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம்,
வெளவால்.

தமிழ் இலக்கணம் - எழுத்தியல் 9 13
33. யகரமெய், . அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
உ-ம். யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
34. ஞகரமெய், அ, ஆ, எ, ஒ என்னும் நான்குயிரொடு மொழிக்கு முதலாகி வரும். உ-ம். ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல் தேர்வு வினாக்கள் - 30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை? 31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்? 32. வகாமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகி வரும்? 33. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகி வரும்? 34. ஞகரமெய் எவ்வுயிர் களோடு மொழிக்கு முதலாகி வரும்?
இறுதி நிலை 35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம்,
ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம். உ-ம். விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள,
உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல்,
தெவ், யாழ், வாள். தேர்வு வினா - 31 மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள்
எவை?
எழுத்துக்களின் சாரியை
36. உயிர்நெட்டெழுத்துக்கள் காரச்சாரியை பெற்றும்; அவைகளுள், ஐ ஒள இரண்டுங் காரச்சாரியையேயன்றிக் கான்சாரியையும் பெறும்.

Page 10
14 9 ஆறுமுகநாவலர்
உ-ம். ஆகாரம், ஈகாரம், ஊகாரம், ஏகாரம், ஐகாரம், ஒகாரம்,
ஒளகாரம், ஐகான், ஒளகான். உயிர்க்குற்றெழுத்துக்களும், உயிர்மெய்க்குற்றெழுத்துக் களும், கரம், காரம், கான் என்னும் மூன்று சாரியைகள் பெறும். உ-ம். அகரம், அகாரம், அஃகான், ககரம், ககாரம், கஃகான்.
மெய்யெழுத்துக்கள், அ என்னுஞ்சாரியையும், அதனோடு கரம், காரம், கான் என்னுஞ்சாரியைகளும் பெறும்.
உ-ம். க, ங், ககரம், ககாரம், கஃகான், ங்கரம், ங்காரம்,
ங்ஃகான்.
உயிர்மெய் நெட்டெழுத்துக்கள், சாரியை பெற்றும், மெய்கள் சாரியை பெறாதும் இயங்காவாம். தேர்வு வினாக்கள் - 32. உயிர் நெட்டெழுத்துக்கள் எச்சாரியை பெறும்? ஐ, ஒள இரண்டும் காரச்சாரியை யன்றி வேறு சாரியையும் பெறுமோ ? உயிர்க்குற்றெழுத்துக் களும் உயிர்மெய்க் குற்றெழுத்துக்களும் எச்சாரியை பெறும்? மெய்யெழுத்துக்கள் எச்சாரியை பெறும் ? எவ்வெழுத்துக்கள் சாரியை பெற்று வருதலில்லை? எவ்வெழுத்துக்கள் சாரியை பெறாது வருதலில்லை.
போலியெழுத்துக்கள் 37. அகரத்தோடு யகரமெய் சேர்ந்து ஐகாரம் போன்றும், அகரத்தோடு வகரமெய் சேர்ந்து ஒளகாரம் போன்றும் ஒலிக்கும்.
உ-ம். ஐயன் = அய்யன், ஒளவை = அவ்வை தேர்வு வினாக்கள் - 33. இரண்டெழுத்துக்கள் சேர்ந்து ஒரெழுத்தைப்போல் ஒலிப்பதுண்டோ.
எழுத்தியல் முற்றிற்று.

தமிழ் இலக்கணம் - பதவியல் 9 15
2. பதவியல்
38. பதமாவது, ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாலாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிவிப்பதாம். அது, பகாப்பதமும், பகுபதமும் என இருவகைப்படும்.
39. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்பையுடைய பதமாம். அது, பெயர்ப்பகாப்பதம், வினைப் பகாப்பதம், இடைப்பகாப்பதம், உரிப்பகாப்பதம் என நான்கு வகைப்படும்.
உ-ம். நிலம், நீர், LDITth . பெயர்ப்பகாப்பதம்
bl- 6).Jff, உண் . வினைப்பகாப்பதம் மற்று, ஏ, . இடைப்பகாப்பதம் 2-0, தவ, நனி . உரிப்பகாப்பதம்
40. பகுபதமாவது, பகுக்கப்படும் இயல்பையுடைய பதமாம். அது, பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இருவகைப்படும். அவற்றுள், வினைப்பகுபதம், தெரிநிலை வினைப்பகுபதமும், குறிப்பு வினைப்பகுபதமும் என இருவகைப்படும்.
உ-ம். பொன்னன் . பெயர்ப்பகுபதம்
நடந்தான் . தெரிநிலை வினைப்பகுபதம் பெரியன் . குறிப்புவினைப்பகுபதம்."
தேர்வு வினாக்கள் - 38. பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 39. பகாப்பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 40. பகுபதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்? வினைப்பகுபதம் எத்தனை வகைப்படும்?
* தெரிநிலைவினையுங் குறிப்புவினையும் பகுபதமாகும் எனவே, அவ்விருவகைவினையாலணையும் பெயர்களும் பகுபதமாகும் என்பது பெறப்படும்.

Page 11
16 9 ஆறுமுகநாவலர்
பகுபதவுறுப்பு 41. பகுபதத்துக்கு உறுப்புக்கள், பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என ஆறாம். பகுபதம் இவ்வாறுறுப்புக்களுள்ளும் பகுதி விகுதி என்னும் இரண்டு முதலியவைகளினால் முடிவு பெறும். உ-ம். () கூனி என்பது, கூன், இ எனப் பகுதி விகுதி என்னும்
இரண்டுறுப்பால் முடிந்தது. (2) உண்டான் என்பது, உண், ட், ஆன் எனப் பகுதி, விகுதி,
இடைநிலை என்னும் மூன்றுறுப்பால் முடிந்தது. (3) உண்டனன் என்பது, உண், ட், அன், அன் எனப் பகுதி, விகுதி,
இடைநிலை, சாரியை என்னும் நான்குறுப்பால் முடிந்தது. (4) பிடித்தனன் என்பது, பிடி, த், த், அன், அன் எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்னும் ஐந்துறுப் பால் முடிந்தது. (5) நடந்தனன் என்பது, நட, த், த், அன், அன் எனப் பகுதி முதலிய ஐந்தும் பெற்று, சந்தியால் வந்த தகர வல்லொற்று நகரமெல்லொற்றாதலாகிய விகாரமும் பெற்று, ஆறுறுப்பால் முடிந்தது. தேர்வு வினாக்கள் - 41. பகுபதத்துக்கு உறுப்புக்கள் எவை? பகுபதம் இவ்வாறுறுப்புக்களும் பெற்றே முடிவு பெறுமோ?
பகுதி 42. பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே நிற்கும் பகாப்பதங்களாம்.
43. பெயர்ப்பகுபதங்களுக்குப் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சுட்டிடைச் சொற்கள், வினாவிடைச் சொற்கள், பிற மற்று என்னும் இடைச் சொற்களும், பகுதிகளாய் வரும். உ-ம்.

தமிழ் இலக்கணம் - பதவியல் 9 17
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன் (2) அவன், இவன், உவன், எவன், ஏவன், யாவன், பிறன்,
மற்றையான். 44. வினைக்குறிப்புப் பகுபதங்களுக்கு, மேற் சொல்லப்பட்டனவாகிய அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும். உ-ம்.
() பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்
(2) அற்று, இற்று, எற்று
45. மை விகுதி புணர்ந்து நின்ற செம்மை கருமை முதலிய பண்புப் பெயர்கள், விகுதி புணரும்பொழுது, பெரும்பாலும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்படுதல் பதப்புணர்ச்சிக்குங் கொள்க. உ-ம்.
அணியன் இங்கே அணிமையின் மைவிகுதி கெட்டது
கரியன்: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, நடு உகரம்
இகரமாய்த் திரிந்தது. usfél: இங்கே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டது.
பேரறிவு: இங்கே பெருமையின் மைவிகுதியோடு நடு நின்ற
உகரவுயிர் கெட்டு முதல் நீண்டது.
கருங் இங்கே கருமையின் மை விகுதி கெட்டு, வரும்
குதிரை: வல்லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுந்தது.
பைந்தார். இங்கே பசுமையின் மை விகுதியோடு நடுநின்ற சுகரவுயிர்மெய் கெட்டு, முதலகரம் ஐகாரமாய்த் திரிந்து, வரும் வல்லெழுத்துக்கு இன மெல்லெழுத்து மிகுந்தது.
வெற்றிலை: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடு நின்ற
மெய் இரட்டித்தது.
சேதாம்பல்: இங்கே செம்மையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டு,
நடு நின்ற மகரமெய் தகரமெய்யாய்த் திரிந்தது.
த.இ.-2

Page 12
18 9 ஆறுமுகநாவலர்
46. தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் நட வா முதலிய வினைச் சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச் சொற்களும், பகுதிகளாய் வரும்.
உ-ம். நட, நடந்தான் súls060Tulg
6).jst, வந்தான் நில், நின்றான் காண், கண்டான் சித்திரம், சித்திரித்தான் பெயரடி கடைக்கண், கடைக்கணித்தான் போல், பொன்போன்றான் 960Lup. நிகர், புலிநிகர்த்தான் சால், சான்றான் 2 fluig LoststuT, மாண்டான்
47. தெரிநிலை வினைப்பகுதிகள், விகுதி முதலிய வற்றோடு புணரும் போது, இயல்பாகியும், விகாரமாகியும் வரும். உ-ம்.
() தொழு தொழுதான் இயல்பாகி வந்தன
உண, உணடான
(2) சேறல் இங்கே செல்லென்பகுதி முதல் நீண்டது.
தந்தான் இங்கே தாவென்பகுதி முதல் குறுகியது. தருகின்றான். இங்கே தாவென்பகுதி முதல் குறுகி,
ருகரவுயிர்மெய் விரியப் பெற்றது. செத்தான். இங்கே சாவென்பகுதி முதலாகாரம் எகரமாய்த்
திரிந்தது. விராவினான். இங்கே விரவென்பகுதி நடுக்குறில் நீண்டது. கொணர்ந்தான். இங்கே கொணாவென் பகுதியீற்று நெடில் குறுகி, ரகரமெய் விரிந்தது. கற்றான். இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்தாய்த்
திரிந்தது.

தமிழ் இலக்கணம் - பதவியல் 9 19
சென்றான். இங்கே செல்லென்பகுதியீற்று மெய்
வருமெழுத்துக்கு இனமாய்த் திரிந்தது. 48. தெரிநிலை வினைப்பகுதிகள், வி, பி, முதலிய விகுதி பெற்றேனும், விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய் வரும். உ-ம்.
() செய், செய்வி, செய்வித்தான்
5L- நடப்பி, நடப்பித்தான் (2) திருந்து, திருத்து, திருத்தினான்
ஆடு, ஆட்டு, ஆட்டினான் தேறு, தேற்று, தேற்றினான் 9-(ÙGö, உருக்கு, உருக்கினான் (3) திருத்து, திருத்துவி, திருத்துவித்தான்
ஆட்டு, ஆட்டுவி, ஆட்டுவித்தான் தேற்று, தேற்றுவி, தேற்றுவித்தான் உருக்கு, உருக்குவி, உருக்குவித்தான்
49. பொன்னன், கரியன் முதலானவை, எட்டு வேற்றுமைகளுள் ஒன்றையேற்கும்போது பெயர்ப் பகுபதங்களாம்; முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது வினைக்குறிப்பு முற்றுப்பகுபதங்களாம்; காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இம்மூன்றுக்கும் வேறுபாடாம்.
50. நடந்தான், வந்தான் முதலானவை, காலங் காட்டும்போது தெரிநிலைவினை முற்றுப் பகுபதங்களாம்; காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாம்.
தேர்வு வினாக்கள் - 42. பகுதிகளாவன யாவை? 43. பெயர்ப்
பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 44. வினைக் குறிப்புப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 45. விகுதி புணரும்பொழுது

Page 13
20 % ஆறுமுகநாவலர்
விகாரப்பட்டு வரும் பெயர்களும் உளவோ? 46. தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை? 47. தெரிநிலை வினைப் பகுதிகள் விகுதி முதலியவற்றோடு புணரும்பொழுது எப்படி வரும்? 48. தெரிநிலை வினைப் பகுதிகள் பிறவினைப் பகுதிகளாமிடத்து எப்படி வரும்? 49. பெயர்ப்பகுபதம். குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதம் என்னும் மூன்றுக்கும் வேறுபாடு என்னை? 50. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதம் என்னும் இரண்டுக்கும் வேறுபாடு என்னை?
விகுதி
51. விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம்.
52. பெயர்விகுதிகள், அன், ஆன், மன், மான், ன், அள், ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உ-ம். குழையன், வானத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பிறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குறுந்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல். 53. தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், ஐ, கை,
வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.
உ-ம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.
மை விகுதி, செய்தமை, செய்கின்றமை என இறந்த காலவிடைநிலை நிகழ்காலவிடைநிலைகளோடு கூடியும் வரும்

தமிழ் இலக்கணம் - பதவியல் 9 21
துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.
54. பண்புப் பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு. றி, று, அம், நர் என்னும் பத்தும் பிறவுமாம்.
உ-ம். நன்மை, தொல்லை, மாட்சி, மாண்பு, மழவு, நன்கு, நன்றி,
நன்று, நலம், நன்னர் என வரும்.
55 தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பத்தெட்டும் பிறவுமாம்.
உ-ம். நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தனென், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மறால், அழேல், நடமின், . உண்ணும்.
56. குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், ஐ, ஆய், இ, இர், ஈர் என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம்.
உ-ம். கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குறுந்தாட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.
57 தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம்.
உ-ம். செய்த, செய்கின்ற செய்யும்.

Page 14
22 0 ஆறுமுகநாவலர்
குறிப்பு வினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங் காட்டலாற் குறிப்பு வினைப் பெயரெச்சத்துக்கு வாராது.
உ-ம். கரிய
58. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும். உ-ம். நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுா, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டக்கால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே.
குறிப்புவினை வினையெச்ச விகுதிகள், அ. றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து என்னும் எட்டும் பிறவுமாம். உ-ம். மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை,
அல்லாவழி, அல்லாவிடத்து. 59. பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு, து, பு, று என்னும் எட்டுமாம். உ-ம். செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு,
துயிற்று. 60. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், வினை முதற்பொருளையுஞ் செயப்படுபொருளையும் கருவிப் பொருளையும், உணர்த்தும். உ-ம்.

தமிழ் இலக்கணம் - பதவியல் 9 23
() அலரி, பறவை, எச்சம் என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது எனப் பொருள்படும். (2) ஊருணி, தொடை, தேட்டம் என்பன செயப்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடப்படுவது, எனப் பொருள்படும். (3) மண்வெட்டி, பார்வை, நோக்கம் என்பன கருவிப் பொருளை உணர்த்தின. இவை முறையே, மண்வெட்டற் கருவி, பார்த்தற்கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும். 61. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:-
விடு, ஒழி, விகுதிகள் துணிவுப் பொருளை உணர்த்தும். உ-ம். வந்துவிட்டான், கெட்டொழிந்தான் என வரும்.
கொள்விகுதி தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும். உ-ம். அடித்துக் கொண்டான்.
படு, உண் விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும். உ-ம். கட்டப்பட்டான், கட்டுண்டான்.
மைவிகுதி தன்மைப்பொருள் உணர்த்தும். உ-ம். பொன்மை, ஆண்மை
இரு, இடு என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும். உ-ம். எழுந்திருக்கின்றான், உரைத்திடுகின்றான். தேர்வு வினாக்கள் - 51. விகுதிகளாவன யாவை? 52. பெயர் விகுதிகள் எவை? 53. தொழிற்பெயர் விகுதிகள் எவை? 54. பண்புப் பெயர் விகுதிகள் எவை? 55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள் எவை? 56. குறிப்பு வினைமுற்று விகுதிகள் எவை? 57 தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள் எவை? குறிப்புவினைப் பெயரெச்ச விகுதி எது? 58. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள் எவை?

Page 15
24 9 ஆறுமுகநாவலர்
குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை? 59. பிறவினை விகுதிகள் எவை? 60. வினை முதற்பொருள் செயப்படுபொருள் கருவிப்பொருள்களை உணர்த்தும் விகுதிகள் எவை? 61. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தற்பொருட்டுப் பொரு ளுணர்த்தும் விகுதி எது? செயப்பாட்டு வினைப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை? தன்மைப் பொருளுணர்த்தும் விகுதி எது? பகுதிப்பொருள் விகுதிகள் எவை?
புணர்ந்து கெடும் விகுதி 62. முன்னிலையேவலொருமை ஆய் விகுதியும், பெயரெச்சவிகுதியும், தொழிற்பெயர் விகுதியும், வினை முதற்பொருளை உணர்த்தும் இகரவிகுதியும், செயப்படு பொருளை உணர்த்தும் ஐவிகுதியும், பகுதியோடு புணர்ந்து பின் கெடுதலும் உண்டு. கெடினும் புணர்ந்து நின்றாற் போலவே தம்பொருளை உணர்த்தும் உ-ம். நீ நட, நீ நடப்பி: இவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது. கொல்களிறு, ஓடாக்குதிரை: இவைகளிலே பெயரெச்ச
விகுதிகள் புணர்ந்து கெட்டன. அடி, கேடு, இடையீடு: இவைகளிலே தல்லென்னுந்
தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது. காய், தளிர், பூ, கணி. இவைகளிலே வினைமுதற் பொருளை
உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டது. ஊண், தீன், எழுத்து இவைகளிலே செயப்படு பொருளை
உணர்த்தும் ஐவிகுதி புணர்ந்து கெட்டது. தேர்வு வினா - 62. பகுதியோடு புணர்ந்து பின்கெடும் விகுதிகள் எவை?
இடைநிலை 63. இடைநிலைகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம்.

தமிழ் இலக்கணம் - பதவியல் 0 25
அவை, காலங் காட்டாவிடைநிலையும், காலங்காட்டு மிடைநிலையும் என இரண்டு வகைப்படும்.
64. காலங்காட்டாவிடைநிலைகள் பெயர்ப்பகுபதங் களுக்கு வரும்.
D-h. அறிஞன் . (ஞ இன்டநிலை ஒதுவான் . (வ இடைநிலை) வலைச்சி . (ச இடைநிலை) வண்ணாத்தி . (த இடைநிலை)
65. காலங்காட்டுமிடைநிலைகள் தெரிநிலைவினைப் பகுபதங்களுக்கு வரும்.
அவை, இறந்தகாலவிடைநிலையும், நிகழ்காலவிடை நிலையும், எதிர்காலவிடைநிலையும் என, மூன்று வகைப் படும்.
66. இறந்தகாலவிடைநிலைகள், த, ட, ற, இன் என்னும் நான்குமாம். உ-ம். செய்தான், உண்டான், தின்றான், ஓடினான்.
சிறுபான்மை இன்னிடைநிலை, போனான் 6T6T
இகரங்குறைந்தும், எஞ்சியது என னகரமெய் குறைந்தும் வரும்.
போயது என யகரமெய் இறந்தகாலவிடைநிலையாயும் வரும்.
67. நிகழ்காலவிடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றுமாம். உ-ம். நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான்.
68. எதிர்காலவிடைநிலைகள், ப், வ் என்னும் இரண்டுமாம். − உ-ம். நடப்பான், செய்வான்.
தேர்வு வினாக்கள் - 62. இடைநிலைகளாவன யாவை? 63. அவை எத்தனை வகைப்படும்? 64. காலங் காட்டாவிடைநிலைகள் எப்

Page 16
26 9 ஆறுமுகநாவலர்
பகுபதங்களுக்கு வரும்? 65. காலங் காட்டுமிடைநிலைகள் எப் பகுபதங்களுக்கு வரும்? அவை எத்தனை வகைப்படும்? 66. இறந்தகாலவிடைநிலைகள் எவை? 67. நிகழ்காலவிடைநிலைகள் எவை? 68. எதிர்காலவிடைநிலைகள் எவை?
எதிர்மறையிடைநிலை 69 இல், அல், ஆ என்னும் மூன்றும் எதிர்மறை யிடைநிலைகளாம். இவற்றுள், ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும், உயிராயிற் கெட்டும் வரும். உ-ம். நடந்திலன், நடக்கின்றிலன், நடக்கலன், நடவாதான்,
நடவான், நடவேன். நடவாதான் என்பதிலே தகரமெய் எழுத்துப்பேறு. தேர்வு வினாக்கள் - 69. எதிர்மறையிடைநிலைகள் எவை? எதிர் மறை ஆகாரவிடைநிலை எங்கே கெடாதும், எங்கே கெட்டும் வரும்?
காலங்காட்டும் விகுதி 70. சில விகுதிகள், இடைநிலையேல்ாது, தாமே காலங் காட்டும், அவை வருமாறு:-
து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும் எதிர்காலமுங்காட்டும்.
உ-ம். வந்து, (=வந்தேன்), வந்தும், (=வந்தேம்) வருது,
(=வருவேன்) வருதும், (=வருவேம்) எ-ம். சென்று, (=சென்றேன்) சென்றும், (=சென்றேம்) சேறு, (=செல்வேன்) ச்ேறும், (=செல்வேம்) எ-ம். வரும். கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங்காட்டும்.
உ-ம். உண்கு, (=உண்பேன்) உண்கும், (=உண்பேம்) என வரும்.
டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங்காட்டும்.

தமிழ் இலக்கணம் - பதவியல் 9 27
உ-ம். உண்டு, (=உண்டேன்) உண்டும், (= உண்டேம்) என வரும். இ என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மார் என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல் என்னும் வியங்கோண் முற்று விகுதி நான்கும், ஆய், இ. ஆல், ஏல், காண், மின், உம், ஈர் என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதினான்கு விகுதிகளும் எதிர்கால்ங்காட்டும்.
உ-ம். () சேறி, (=செல்வாய்) (2) நடப்ப, (=நடப்பார்) நடமார்,
(=நடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மறால், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணிர். உம் என்னுஞ் செய்யுமென் முற்றுவிகுதி நிகழ் காலமும் எதிர்காலமுங்காட்டும். உ-ம். உண்ணும்
எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க. தேர்வு வினாக்கள் - 70. இடைநிலையேலாது தாமே காலங் காட்டும் விகுதிகள் உளவோ? து, தும், று, றும் விகுதிகள் எக்காலங் காட்டும்?, கு, கும் விகுதிகள் எக்காலங்காட்டும்? டு, டும் விகுதிகள் எக்காலங்காட்டும்? எதிர்காலங்காட்டும் வேறு விகுதிகள் உளவோ? உம் என்னுஞ் செய்யுமென் முற்று விகுதி எக்காலங் காட்டும்?
காலங்காட்டும் பகுதி
71. கு, டு, று என்னும் மூன்றுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும். உ-ழ். புக்கான், விட்டான், பெற்றான்.
தேர்வு வினா - 71 காலங்காட்டும் பகுதிகளும் உளவோ?

Page 17
28 9 ஆறுமுகநாவலர்
சாரியை
72. சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன் இற்று, தன், தான் தம், தாம், நம், நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உ-ம். நடந்தனன், ஒருபாற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வண்டின்கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர்தாம், எல்லாநம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப் பொருள், உண்ணுவான், ஒன்றேகால், இரட்டைப் பிள்ளை, உண்குவான், செய்து கொண்டான், ஆன்.
தேர்வு வினா - 72. சாரியைகளென்பன எவை?
சந்தி
73. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்படுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.
தேர்வு வினா - 73. சந்திகளாவன எவை?
விகாரம்
74. விகாரங்களாவன, மெல்லினமெய்யை வல்லின மெய்யாக்கலும், வல்லின மெய்யை மெல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்கலும், நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தைத் தொகுத்தலும் ஆம்.
தேர்வு வினா - 74. விகாரங்களாவன எவை?
பதவியல் முற்றிற்று

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 29
3. புணரியல் 75. புணர்ச்சியாவது, நிலைமொழியும் வருமொழியும்
ஒன்றுபடப் புணர்வதாம்.
76. அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல்வழிப் புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.
77. வேற்றுமைப்புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் ஆறுருபுகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொற்கள் புணர்வதாம்.
உ-ம். வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி
மரம் வெட்டினான் . (ஐ மரத்தை வெட்டினான் கல்லெறிந்தான் . ஆல் கல்லாலெறிந்தான் கொற்றன்மகன் . (கு) கொற்றணுக்குமகன் மலைவீழருவி . இன்) மலையின் வீழருவி சாத்தன்கை . (அது) சாத்தனதுகை மலைநெல் . கண்) மலையின்கணெல்
78. அல்வழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற்புணர்வதாம். அது, வினைத்தொகை, பண்புத் தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத் தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினை முற்றுத்தொடர், குறிப்பு வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத்தொடர், இடைச் சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.
தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம்
(1) கொல்யானை . வினைத்தொகை

Page 18
30 0 ஆறுமுகநாவலர்
(2) கருங்குதிரை . பண்புத்தொகை
சாரைப்பாம்பு . இருபெயரொட்டுப் பண்புத்தொகை
(3) மதிமுகம் . உவமைத்தொகை
(4) இராப்பகல் . உம்மைத்தொகை
(5) பொற்றொடி . அன்மொழித் தொகை
தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம்
(1) சாத்தன்வந்தான் . எழுவாய்த்தொடர்
(2) சாத்தவா .. விளித்தொடர்
(3) வந்தான் சாத்தன் . தெரிநிலை வினைமுற்றுத்தொடர்
(4) பொன்னனிவன் . குறிப்பு வினைமுற்றுத் தொடர்
(5) வந்த சாத்தன் . பெயரெச்சத்தொடர்
(6) வந்து போனான் . வினையெச்சத்தொடர்
(7) மற்றொன்று . இடைச்சொற்றொடர்
(8) நனிபேதை . உரிச்சொற்றொடர்
(9) பாம்பு பாம்பு . அடுக்குத்தொடர்
79. இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும்
அல்வழியாலும் புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும்.
80. இயல்பு புணர்ச்சியாவது, நிலைமொழியும் வரு மொழியும் விகாரமின்றிப் புணர்வதாம். உ-ம். பொன்மணி சாத்தன்கை
81. விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விருமொழியுமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றை யாயினும் பலவற்றையாயினும் பெற்றுப் புணர்வதாம்.

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 31
உ-ம். வாழை + பழம் =வாழைப்பழம் தோன்றல்
மண் + குடம் =மட்குடம் திரிதல்
uoyh + வேர் = மரவேர் கெடுதல்
நிலம் + பனை = நிலப்பனை கெடுதல், தோன்றல்
பனை +காய் = பனங்காய் கெடுதல், தோன்றல்,
திரிதல்
82. தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் இவ் விகாரமூன்றும், மயக்கவிதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும்.
தேர்வு வினாக்கள் - 75. புணர்ச்சியாவது யாது? 76. அப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 77. வேற்றுமைப்புணர்ச்சியாவது யாது? 78. அல்வழிப்புணர்ச்சியாவது யாது? அது எத்தனை வகைப்படும்? 79. மொழிகள், வேற்றுமை வழியாலும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படிப் புணரும்? 80. இயல்பு புணர்ச்சியாவது யாது? 81. விகாரப்புணர்ச்சியாவது யாது? 82. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்?
மயங்கா எழுத்துக்கள்
83. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிரீற்றின் முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.
உடம்படுமெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய். நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய் எனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன்படுத்த லெனினும் ஒக்கும்.
84. மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய் வரின், நிலைமொழியீறேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.

Page 19
32 0 ஆறுமுகநாவலர்
85. மொழிக்கு ஈறாகுமெனப்பட்ட பதினொரு மெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியன வல்லாத மெய்களைச் சொல்வாம்:-
லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. னகர னகரங்களின் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. மகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் ஐந்தும் மயங்கா. ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழும் மயங்கா. நகரத்தின் முன்னே தகரமும் யகரமு மல்லாத ஏழும் மயங்கா. வகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா.
தேர்வு வினாக்கள் - 83. உயிரீற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்? உடம்படுமெய்யாவது யாது? உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ? 84. மெய்யீற்றின் முன் மயங்:தற்கு உரியதல்லாத மெய் வரின் எப்படியாகும்? 85. லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? மகர மெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா? நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா ? வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்
86. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.
உ-ம். ஆண் + அழகு = ஆணழகு மரம் + உண்டு மரமுண்டு
تخته
87. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்; இரட்டித்த மெய்யீற்றின்மேல் வந்தவுயிர் ஏறும்.

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 33
உ-ம். கல் + எறிந்தான் கல்லெறிந்தான்
பொன் + அழகிது = பொன்னழகிது தேர்வு வினாக்கள் - 86. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படிப் புணரும்? 87. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படிப் புணரும்?
உயிரீற்றின் முன் உயிர் புணர்தல் 88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர்
முதன்மொழி வந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.
உ-ம். கிளி 十 அழகு = கிளியழகு
தீ -- எரிந்தது - தியெரிந்தது
J60)6OT -- ஒலை = பனையோலை
89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.
உ-ம். பல 十 அணி = பலவணி
6) -- இலை = பலாவிலை திரு 十 Iا? = திருவடி அரும்பு = பூவரும்பு -- ولا நொ -- அழகா = நொவ்வழகா கோ -- அழகு = கோவழகு கெள + அழகு = கெளவழகு
கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும். உ-ம். கோ + இல் = கோயில்
ஒரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.
க.இ.-3

Page 20
34 ஆறுமுகநாவலர்
90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர்முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.
உ-ம். அவனே + அழகன் = அவனேயழகன்
சே * உழுதது = சேவுழுதது
தேர்வு வினாக்கள் - 88, இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர்முதன் மொழி வந்தால் எப்படிப் புணரும்? 89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழுயிரீற்றின் முன்னும் உயிர்முதன் மொழி வந்தால் எப்படிப் புணரும்? கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ? 90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர்முதன்மொழி வந்தால் எப்படிப் புணரும்?
குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்
91. குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யை விட்டுக் கெடும்; யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.
உ-ம். ஆடு + அரிது = ஆடரிது
நாகு 十 யாது நாகியாது
குற்றியலுகரஞ் சம்ஸ்கிருதபாடையில் இல்லாமை யால், சம்பு, இந்து முதலிய வடமொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படுமெய் தோன்றும்.
உ-ம். சம்பு + அருளினான் = சம்புவருளினான்
இந்து + உதித்தது இந்துவுதித்தது தேர்வு வினாக்கள் - 91, குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரத்தின் முன் யகரம் வந்தால் எப்படியாம்? குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் உண்டா இல்லையா? வட மொழிகளின் ஈற்றுகரத்தின் முன் உயிர் வரின் எப்படியாம்?

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 35
சில முற்றியலுகரவிற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல் 92. சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக் கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலு மாகிய இவ்விரு விதியையும் பெறும்.
உ-ம். கதவு + அழகு = கதவழகு
கதவு + யாது கதவியாது
தேர்வு வினா - 92. முற்றியலுகரங் குற்றியலுகரவிற்று விதி பெறாதா?
எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்
93. உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும்
வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்;
ஆயினும் இவற்றுள் ன ள ன ல என்னும் நான்கின்
முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்.
விள, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கெள, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள் என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப் புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப் புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை என்னும் வருமொழிகளையும் கூட்டிக் கண்டு கொள்க.
உ-ம். விள + ஞான்றது =விளஞான்றது
உரிஞ் + ஞான்றது - =உரினுஞான்றது விள + ஞாற்சி =விளஞாற்சி உரிஞ் + ஞாற்சி உரிதுஞாற்சி
நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அவ்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும்.

Page 21
36 9 ஆறுமுகநாவலர்
94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும். h
உ-ம். மெய் +ஞானம் =மெய்ஞ்ஞானம்
செய் +நன்றி =செய்ந்நன்றி s + Lorg) =கைம்மாறு
95. நொ, து என்னும் இவ்விரண்டின் முன் வரும் ஞ ந ம ய வக்கள் மிகும்.
உ-ம். நொ -- ஞெள்ளா = நொஞ்ஞெள்ள
U66 = நொய்யவனா
ģil -- ளுெள்ளா = துஞ்ஞெள்ளா
66 = துய்யவனா
நொ - துன்பப்படு, து - உண்
தேர்வு வினாக்கள் - 93. எல்லாவிற்றின் முன்னும் ஞ ந ம ய வக்கள் வந்தால் எப்படிப் புணரும்? 94. ஞ ந ம ய வக்கள் எந்தமொழி முன்னும் மிகாவோ? 95. நொ, து என்னும் இவ்விரண்டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல்பேயாமோ?
மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல் 96. யகரமல்லாத மெய்கள், தம்முன் யகரம் வந்தால், இகரச்சாரியை பெறுதலுமுண்டு.
உ-ம். வேள் + யாவன் = வேளியாவன்
Ln6T --LuT66Ot = மண்ணியானை
வேள்யாவன் என இகரச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.
97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய், வருமொழி யகரம் வந்தாற் கெடும்.

தமிழ் இலக்கணம் - Gorffluuio () 37
உ-ம். வேய் + யாது = வேயாது தேர்வு வினாக்கள் - 96. யகரமல்லாத மெய்களின் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்? 97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்?
மூன்று சுட்டின் முன்னும் எகரவினா முன்னும் நாற்கணமும் புணர்தல் 98. அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், எகரவினா முன்னும், யகரமொழிந்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்; யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும். உ-ம். அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை
அம்மலை இம்மலை உம்மலை எம்மலை அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி அவ்யானை இவ்யானை உவ்யானை எவ்யானை அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர் 99. அந்த, இந்த, உந்த, எந்த என மரூஜமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும் வல்லினம் மிகும். உ-ம். அந்தக்கல் இந்தக்கல் உந்தக்கல் எந்தக்கல் தேர்வு வினாக்கள் - 98. அ, இ, உ என்னும் மூன்று சுட்டின் முன்னும், எகரவினா முன்னும், யகரமொழிந்த மெய்கள் வந்தால், எப்படிப் புணரும்? இந்நான்கன் முன்னும் யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புணரும்? 99. அந்த, இந்த, உந்த, எந்த என்னும் மரூஉமொழிகளின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல் 100. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம். உ.ம்.

Page 22
38 9 ஆறுமுகநாவலர்
அல்வழி வேற்றுமை
நம்பிகுறியன் நம்பிகை விடலைசிறியன் விடலை செவி உயர்திணைப் சேய்பெரியன் சேய்படை பெயர் அவர் தீயர் அவர்தலை சாத்திகுறியள் சாத்திகள்ல் சாத்திகுறிது தந்தைசிறியன் தந்தைசெவி பொதுப்பெயர் தந்தைசிறிது ġbi
தாய்கொடியள் தாய்கை தாய்கொடிது
ரகரமெய் பொதுப்பெயர்க்கு ஈறாகாது
நம்பிக்கொற்றன், சாத்திப்பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் பண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும், வல்லின மிகுமெனக் கொள்க.
மகப்பிறந்தது, மகப்பெற்றாள். எ-ம். பிதாக்கொடியன், பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர ஆகார ஊகார ஒகாரங்களின் முன் வரும் வல்லினம் இருவழியினும் மிகுமெனக் கொள்க.
101. உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால்,
இருவழியினுந் திரியாதியல்பாம். உ-ம்.

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 39
அல்வழி வேற்றுமை
தோன்றல்குறியன் தோன்றல்கை அவள் சிறியள் அவள் செவி திணைப் அவன் பெரியன் அவன் பொருள்
| ணகரமெய் உயர்திணைப் பெயர்க்கு ஈறாகாது.
தூங்கல் குறியன் தூங்கல் குறிது
தூங்கல் கை
மக்கள் சிறியர் மக்கள் சிறிய
மக்கள் செவி
பொதுப் பெயர் ஆண் பெரியன் ண்பmம் ஆண் பெரிது ஆணபுறம சாத்தன் சிறியன் 8 சாத்தன் சிறிது சாத்தன் செவி
உயர்திணைப் பெயரீற்று 6)あび ளகரங்கள்,
மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயர்ொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.
லகர ளகரங்களின் முன்னும், ணகர னகரங்களின் முன்னும், தகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற்கூறப்படும்.
தேர்வு வினாக்கள் - 100. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வல்லினம் வரின் எப்படிப் புணரும்? இவைகளின் முன்வரும் வல்லினம் எந்தவிடத்தும் மிகாவோ? 101. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்? இவைகள் வல்லினம், வந்தால் எவ்விடத்துந் திரியாவோ?

Page 23
40 0 ஆறுமுகநாவலர்
சில வுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல்
102 னகர ரகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும், ஆறாம் வேற்றுமைத் தொகையினும், நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விருமொழியுமேனும் விகாரப்படும்.
-b.
உம்மைத்தொகை
கபிலன் + பரணன் = கபிலபரணர்
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிவன் W + பெருமான் = சிவபெருமான்
முருகன் + கடவுள் =முருகக் கடவுள்
சதாசிவன் + நாவலன் = சதாசிவ நாவலன்
கந்தன் + வேள் = கந்தவேள்
வேலாயுதன் +உபாத்தியாயன் = வேலாயுதவுபாத்தியாயன்
தியாகராசர் +செட்டியார் : தியாகராசச் செட்டியார்
விநாயகர் + முதலியார் = விநாயகமுதலியார்
வேற்றுமைத்தொகை
குமரன் + கோட்டம் = குமரகோட்டம்
குமரக்கோட்டம்
வானியர் +தெரு = வாணியத்தெரு
வேளாளர் + வீதி =வேளாளவிதி
தேர்வு வினாக்கள் - 101. எல்லாவுயர்திணைப் பெயரும், நாற்
கணங்களோடு புணருமிடத்து, இயல்பாகவே புணருமோ?
விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்
103. விளிப்பெயரீற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்

தமிழ் இலக்கணம் - LavTffluuio (d. 41
Luntub. அப்பெயரீற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.
Sl-h.
usu)6JLumTC) சாத்தா கேள் நம்பிசெல் தம்பி தா வேந்து கூறு மகனே படி விடலை போ நங்காய் பார் நாய்கீர் சென்மின் குறும்பூழ் போ தோன்றல் உறாய் மக்கள் சொல்லீர் ஆண் கேளாய் கோன் பேசாய்
விளக்கொடியை, பிதாக்கூறாய், ஆடுச் சொல்லாய், சேச் செல்லாய், கோப் பேசாய் என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.
தேர்வு வினாக்கள் - 103. விளிப்பெயரீற்று உயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்? விளிப்பெயரீற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? விளிப்பெயர் முன் வரும் வல்லினம் எவ்விடத்தும் மிகாவோ?
ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல் 104. ஆ ஏ, ஓ என்னும் மூன்றீற்று வினாமுன்னும் யாவினா முன்னும் வரும் வல்லினம் மிகாவாம். உ-ம். அவனா கொண்டான் அவனே சென்றான் அவனோ தந்தான் யா பெரிய
தேர்வு வினாக்கள் - 104. ஆ, ஏ, ஓ என்னும் மூன்றிற்று வினா முன்னும், யாவினா முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?

Page 24
42 % ஆறுமுகநாவலர்
வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தால் திரியா
தியல்பாம். உ-ம்.
தெரிநிலை வினைமுற்று
உண்டன குதிரைகள் வருதி சாத்தா வந்தது புலி உண்டீர் தேவரே உண்பல் சிறியேன் வந்தேன் சிறியேன்
உண்ணா குதிரைகள் வந்தனை சாத்தா வந்தாய் பூதா உண்டார் தேவர் உண்டாள் சாத்தி வந்தான் சாத்தன்
குறிப்பு வினைமுற்று
கரியன குதிரைகள் கரியது தகர் கரியாய் சாத்தா
கூயிற்றுக் குயில்,
குறுந்தாட்டுக்
வில்லி சாத்தா கரியை தேவா கரியீர் சாத்தரே
களிறு என
வன்றொடர்க் குற்றியலுகரவிற்றுத் தெரிநிலை வினை முற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகும்ெனக் கொள்க.
ஏவலொருமை வினைமுற்று
நட கொற்றா எறி தேவா ஒடு கொற்றா பரசு தேவா அஞ்சு கொற்றா வனை தேவா சேர் சாத்தா
வா சாத்தா கொடு பூதா வெஃகு சாத்தா நடத்து பூதா எயது சாததா செய்கொற்றா வாழ் பூதா

43
நில் கொற்றா கேள்சாத்தா உண் கொற்றா ஆறக் தின் சாத்தாப்
நொ, து என்னும் ஏடிலொருழ்ை, வினைமுற் றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
உ-ம். நொக்கொற்றா துச்சாத்தா
வினைத்தொகை
விரிகதிர் ஈபொருள் அடுகளிறு வனைகலம் ஆடுபாம்பு அஃகுபிணி பெருகுபுனல் ஈட்டுதனம் விஞ்சுபுகழ் மல்கு சுடர் உண்கலம் தின்பண்டம் கொல்களிறு கொள்கலம் செய்கடன் தேர்பொருள் வீழ்புனல்
ஏவலொருமை வினைமுற்றும் வின்ைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவிற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிகாமை காண்க.
ணகர ழகரவீறுகள், வினைத் தொகைக்கும் ஏவன் முற்றுக்குமன்றி, மற்றை வினை முற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்பு வினை முற்றுக்கு இல்லை.
தேர்வு வினாக்கள் - 105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? அச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? வல்லினம், எந்த வினை முற்றின் முன்னும் மிகாவோ? வன்றொடர்க் குற்றியலுகரவிற்று ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகுமோ? எந்த ஏவல்வினை முன்னும் வல்லினம் மிகாவோ?

Page 25
44 9 ஆறுமுகநாவலர்
பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்
106. அகரவீற்றுப் பெயர்ெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா. ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும். ·
உ-ம். உண்ட கொற்றன் கரிய கொற்றன்
உண்ணாத குதிரை இல்லாத குதிரை உண்ணாக் குதிரை இல்லாக் குதிரை
தேர்வு வினாக்கள் - 106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன்
வல்லினம் வரின் எப்படியாம்? ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகாரவிறுதி யாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
வினையெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்
107. இ, ய், ஆ ஊ, என, அ என்னும் விகுதிகளை யுடைய தெரிநிலைவினை வினையெச்சங்களின் முன்னும், அ, றி என்னும் விகுதிகளையுடைய குறிப்புவினை வினையெச்சங்களின் முன்னும், வழி, கடை என்னும் விகுதிகளையுடைய இவ்விருவகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
உ-ம். தேடிக்கொண்டான் போய்க்கொண்டான்
உண்ணாச்சென்றான் உண்ணுச் சென்றான் உண்டெனப் பசி தீர்ந்தது உண்ணப் போனான் மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான் உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான்
அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செய்வான்
108. இய, இயர், மே, மை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உ-ம். உண்ணியசென்றான் உண்ணியர் சென்றான்
உண்ணாமே போனான் உண்ணாமை போனான்

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 45
109. வன்றொடர்க்குற்றியலுகரவிற்று வினையெச்சத் தின் முன் வரும் வல்லின மிகும்; மற்றைக் குற்றியலுகர வீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உ-ம். அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான்
பொருது சென்றான் நடந்து போனான் எய்து கொன்றான் அவனல்லது பேசுவார் யார்
துவ்விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலைவினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும்.
உ-ம். உண்ணாப் போனான்
10. வினையெச்சத்தீற்று னகர லகரங்கள், வல்லினம் வந்தால், றகரமாகத் திரியும்; வான் பான் இரண்டுந் திரியா.
உ-ம். வரிற்கொள்ளும் உண்டாற்கொடுப்பேன்
அறிவான்சென்றான் உண்பான் போனான் தேர்வு வினாக்கள் - 107. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்? 108. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா ? 109. வன்றொடர்க் குற்றியலுகரவிற்று வினை யெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? வன்றொடரொழிந்த குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? துவ்விகுதி கெடநின்ற எதிர்மறைத் தெரிநிலைவினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? 110. வினையெச்சத்திற்று னகர லகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்? எல்லா வினையெச்சத்தீற்று ணகரமும் வல்லினம் வந்தாற்றிரியுமோ?
இ உ ஐயொழிந்த உயிரீற்றஃறிணைப் பெயர்முன்
- வல்லினம் புணர்தல் 11. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஆறுயிரீற்றஃறிணைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகும்.
உ-ம்.

Page 26
46 9 ஆறுமுகநாவலர்
அல்வழி வேற்றுமை விளக்குறிது விளக்கோடு தாராச்சிறிது தாராச்சிறை தீச்சுடும் தீச்சுவாலை கொண்மூக்கரிது கொண்மூக்கருமை சேப்பெரிது சேப்பெருமை கோச்சிறிது கோச்செவி
12 அகரவீற்றஃறிணைப் பன்மைப்பெயர் முன்னும், வகரவைகாரவிற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகா. உ-ம்.
அல்வழி வேற்றுமை பல போயின பல படைத்தான் சில சென்றன சில சொற்றான் உள்ளன குறைந்தன உள்ளன கொடுத்தான் உள்ளவை தகர்ந்தன உள்ளவை தந்தான்
பல சில என்னும் இரு பெயருந் தம்முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும், நிலைமொழியீற்றின் அகரங் கெட லகரம் றகரமாகத் திரிந்துந் திரியாதும், வரும். உ-ம். பலபல பலப்பல பற்பல பல்பல
சிலசில சிலச்சில சிற்சில சில்சில
பல, சில என்னும் இருபெயர் முன்னும் பண்புத் தொகையிற் பிற பெயர் வரின், நிலைமொழியீற்றின் அகரங் கெடாதுங் கெட்டும் வரும். உ-ம். பலகலை பல்கலை சிலகலை சில்கலை U6)06) பன்மலை சிலமலை சின்மலை
பலயானை பல்யானை சிலயானை சில்யானை பலவணி பல்லணி சிலவணி சில்லணி
13. ஆ மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்.

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 47
உ-ம். ஆ தீண்டிற்று மா சிறிது ஆமா பெரிது
பீ கிடந்தது " நீ பெரியை மா - இங்கே விலங்கு. ஆமா - காட்டுப்பசு 14. பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும். உ-ம். பூங்கொடி பூங்கரும்பு
பூ என்பது மலருக்கும் பொலிவுக்கும் பெயர். மலர்ப் பொருளில் வேற்றுமை; பொலிவுப் பொருளில் அல்வழி, தேர்வு வினாக்கள் - 11. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் ஆறுயிரீற்று அஃறிணைப் பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்? 12. அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர், வகரவைகாரவிற்றஃறிணைப் பன்மைப் பெயர் என்னும் இவைகளின் முன் வரும் வல்லினமும் மிகுமா? பல, சில என்னும் இருபெயருந் தம்முன்னே தாம் வரின் எப்படிப் புணரும்? இவ்விரண்டின் முன்னும் பண்புத்தொகையிற் பிறபெயர் வரின் எப்படிப் புணரும்? 113. ஆ. மா, ஆமா, பி, நீ என்னும் பெயர்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 114. பூ என்னும் பெயர்முன் வரும் வல்லினம் மிகுதலேயன்றி வேறு விதுயும் பெறுமோ?
முற்றியலுகர வீற்றுப் பெயர் முன் வல்லினம் புணர்தல்
115 முற்றியலுகரவிற்றுப் பெயர் முன் வரும் வல்லினம் இருவழியினும் மிகும். உ-ம்.
அல்வழி வேற்றுமை பசுக்குறிது பசுக்கோடு 16. முற்றுகரவிற்று அது, இது, உது என்னுஞ் சுட்டுப்பெயர் முன்னும், எது என்னும் வினாப்பெயர் முன்னும், ஒரு, இரு, அறு, எழு என்னும் விகாரவெண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகாவாம். உ-ம்.
அல்வழி வேற்றுமை
அது குறிது அது கண்டான் இது சிறிது இது சொற்றான்

Page 27
48 ஆறுமுகநாவலர்
உது தந்தான் எது பெற்றான்
உது தீது எது பெரிது
அல்வழி
ஒருகை, இருசெவி, அறுகுணம், எழுகடல் தேர்வு வினாக்கள் - 115. முற்றியலுகர வீற்றுப் பெயர் முன் வல்லினம் வரின் எப்படிப் புணரும்? 16. முற்றுகாவிற்றுச் சுட்டுப்பெயர் முன்னும், வினாப்பெயர் முன்னும், விகார வெண்ணுப்பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படிப் புணரும்?
இ ஐ ய ர ழ வீற்றஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல்
117. இகர ஐகாரவுயிர்களையும், ய ர ழ வொற்றுக் களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும். உவமைத்தொகையினும், மிகும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகாவாம். உ-ம்.
கரிக்கோடு யானைச்செவி வேற்றுமை நாய்க்கால் தேர்த்தலை பூழ்ச்செவி றறு மாசித்திங்கள் | சாரைப்பாம்பு பண்புத்தொகை மெய்க்கீர்த்தி கார்ப்பருவம் பூழ்ப்பறவை காவிக்கண் குவளைக்கண் உவமைத் வேய்த்தோள் | கார்க்குழல் காழ்ப்படிவம் தொகை பருத்திகுறிது யானைகரிது நாய்தீது வேர்சிறிது யாழ்பெரிது எழுவாய பரணி- யானைகுதிரை ܘ
கார்த்திகை |நீர்கனல் இகழ்புகழ் பேய்பூதம் 色

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 49
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, வல்லினம் மிகா. உ-ம்.
இரண்டாம் வேற்றுமை ஏழாம் வேற்றுமை
புளி தின்றான் அடவிபுக்கான் குவளை கொய்தான் வரை பாய்ந்தான் வேய் பிளந்தான் வாய்புகுந்தது தேர் செய்தான் ஊர் சென்றான் தமிழ் கற்றான் அகழ் குதித்தான்
காவித்தடம், மனைத்தூண் என உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், வல்லினம் மிகுமெனக் கொள்க. புளி தின்றான், அடவி புக்கான் என்பன, புளியைத் தின்றான், அடவியின் கட்புக்கான் என விரிதலின், உருபு மாத்திரந்தொக்க தொகை, காவித்தடம், மனைத்துரண் என்பன, காவியையுடைய தடம், மனையின் கண்ணதாகிய தூண் என விரிதலின் உருபும் பயனும் உடன்றொக்க தொகை.
ஏரிகரை, குழவிகை, மலைகிழவோன். எனச் சிறுபான்மை அஃறிணைப் பெயரிடத்து வேற்றுமையில் வல்லினம் மிகாமை காண்க.
ஒரோவிடத்து, வேய்ங்குழல், ஆர்ங்கோடு என வேற்றுமையில் யகர ரகரங்களின் முன்னும், பாழ்ங்கிணறு எனப் பண்புத் தொகையில் ழகரத்தின் முன்னும், இனமெல் லெழுத்து மிகுமெனக் கொள்க.
பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான். எ-ம். சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான். எ-ம். ஒரோ வழிச் செயப்பாட்டு வினை முடிக்குஞ்சொல்லாக வருமிடத்து, யகர ரகரங்களின் முன் வரும் வல்லினம், ஒருகால் இயல்பாயும், ஒரு காற்றிரிந்தும் வரும்.
த.இ.-4

Page 28
  

Page 29
52 () ஆறுமுகநாவலர்
தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க.
124. ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து என்னும் இடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா. உ-ம்.
அன்று கண்டான் பண்டு பெற்றான் இன்று தந்தான் முந்து கொண்டான் என்று சென்றான் ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அங்கு, ஆங்கு, இங்கு, ஈங்கு, உங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, யாண்டு என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும். உ-ம்.
அங்குக்கண்டான் ஆங்குக்கண்டான் இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான் உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான்
எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான்
யாண்டுப் பெற்றான் 25. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இருவழியினும்
இயல்பாம். உ-ம்.
அல்வழி வேற்றுமை நாகு கடிது நாகு கால் எஃகு கொடிது எஃகு கூர்மை வரகு சிறிது வரகு சோறு தெள்கு பெரிது தெள்கு பெருமை
126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவிற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும்.
உ-ம்.

தமிழ் இலக்கணம் - புணரியல் & 53
ஆட்டுக்கால் ஆற்றுக்கால்
ஆட்டுமயிர் ற்றுமணல் 8.
ஆடடதா ஆறறுாறல
பகட்டுக்கால் ಇಂದ್ಲಟ್ಟಿ*
பகட்டுமார்பு வயிற்றுமயிர் யிர்க்ெ பகட்டுவால் வயிற்றுவலி உயாததொடா பகட்டடி வயிற்றணி
காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப் பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத் தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இருவழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க.
ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தான், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க.
127 மென்றொடர்க்குற்றியலுகரவிற்று மொழிக ளுள்ளே சில, நாற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க்குற்றியலுகரமாதலுமுண்டு.
2-O.
மருந்து + பை = மருத்துப்பை சுரும்பு +நாண் = சுருப்புநாண் கரும்பு + வில் = கருப்புவில் வேற்றுமை கன்று +ஆ * = கற்றா அன்பு + தளை = அற்புத்தளை பண்புத் என்பு + உடம்பு = எற்புடம்பு தொகை

Page 30
54 9 ஆறுமுகநாவலர்
குரங்கு + மனம் = குரக்குமனம் உவமைத்
இரும்பு + நெஞ்சம் =இருப்புநெஞ்சம் தொகை 128. சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள், இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று, வரும். உ-ம்.
பண்டு + காலம் =பண்டைக்காலம் இன்று +நாள் =இற்றைநாள் அல்வழி அன்று + கூலி = அன்றைக்கூலி வேற்றுமை
இன்று +நலம் =இற்றை நலம் சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத் தொடர்மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.
நேற்று + பொழுது = நேற்றைப்பொழுது. எ-ம். நேற்று + கூலி = நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச் சாரியை பெறுதலுமுண்டு.
தேர்வு வினாக்கள் - 122. வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இருவழியினும் வல்லினம் வரின் எப்படியாம்? 123. மென்றொடர்க் குற்றியலுகரவிற்று மொழிகளின் முன் இருவழியினும் வல்லினம் வரின் எப்படியாம்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் எப்படியாம்? 124. ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று முதலிய இடைச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அங்கு முதலிய இடைச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? 125. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகரவிற்று மொழிகளின் முன் இருவழியினும் வல்லினம் வரின் எப்படியாம்? 126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரவிற்று மொழிகளின் முன் இருவழியினும் நாற்கணமும் வரின் எப்படியாம்? அல்வழியில் எங்கும் இப்படி இரட்டுத

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 55
லில்லையோ? 127. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளுட் சில, இருவழியினும் நாற்கணமும் வரின், வன்றொடராகத் திரிதலும் உண்டோ ? 128. மென்றொடர்க் குற்றியலுகரம் இன்னும் எவ்வாறாகும்? வன்றொடர்க்குற்றியலுகரம் ஐகாரச்சாரியை பெறுத லில்லையோ?
குற்றியலுகரவீற்றுத் திசைப் பெயர்களோடு திசைப் பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல்
129. வடக்கு, குணக்கு, குடக்கு என்னுஞ் சொற்களின் ஈற்றுயிர்மெய்யுங் ககரவொற்றுங் கெடும். உ-ம்.
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு மேற்கு = வடமேற்கு திசை = வடதிசை
1ՈՏՆD6Ս F 6L6) வேங்கடம் = வடவேங்கடம்
குணக்கு + திசை = குணதிசை கடல் = குணகடல்
குடக்கு + திசை = குடதிசை
நாடு = குடநாடு
கிழக்கு என்பது, ஈற்றுயிர்மெய்யுங் ககரவொற்றும் ழகரமெய்யின் மேனின்ற அகரவுயிருங்கெட்டு, முதனிண்டு வரும்; அங்ங்ணம் வருமிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும், ஒரோவிடத்து மிகுந்தும், புணரும். உ-ம்.
கிழக்கு + பால் = கீழ்பால்
திசை = கீழ்த்திசை கீழைச்சேரி, கீழைவீதி என ஐகாரம் பெறுதலுமுண்டு. தெற்கு என்பது, ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் னகரமாகத் திரிந்து வரும். உ-ம்.

Page 31
56 9 ஆறுமுகநாவலர்
தெற்கு + கிழக்கு =தென்கிழக்கு
மேற்கு = தென்மேற்கு 06) = தென்மலை
மேற்கு என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகரமாகத் திரிந்து வரும். தகரம் வரிற் றிரியாது. உ-ம்.
மேற்கு + கடல் = மேல்கடல்
வீதி = மேல்வீதி திசை = மேற்றிசை
மேலைச்சேரி, மேலைவீதி என ஐகாரம் பெறுதலு முண்டு.
இத்திசைப் பெயர்கள், வடக்கூர், தெற்கூர், கிழக்கூர், மேற்கூர், வடக்கு வாயில், தெற்கு மலை, கிழக்குத்திசை, மேற்கு மலை என இங்ங்னங் காட்டிய விகாரமின்றியும் வரும்.
வடகிழக்கு என்பது, வடக்குங் கிழக்குமாயதொரு கோணம் என, உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, வடதிசை என்பது வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை, வடமலை என்பது வடக்கின்கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை, தேர்வு வினாக்கள் - 129. திசைப்பெயர் முதலிய பெயர்கள் வந்து புணரின், வடக்கு, குணக்கு, குடக்கு என்னுஞ் சொற்கள் எப்படியாம்? கிழக்கு என்பது எப்படியாம்? தெற்கு என்பது எப்படியாம்? மேற்கு என்பது எப்படியாம்? இத்திசைப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ? வடகிழக்கென்பது என்னதொகை ? வடதிசை என்பது என்ன தொகை ? வடமலை என்பது என்ன தொகை ?
உகரவீற்றெண்ணுப் பெயர்ப் புணர்ச்சி 130. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின்,

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 57
ரகரம் உகரம் பெறும்; உயிராயின், உகரம் பெறாது முதனிளும். உ-ம்.
ஒனறு + கோடி = ஒருகோடி
கழஞ்சு = ஒருகழஞ்சு நாழி = ஒருநாழி வாழை = ஒருவாழை ஆயிரம் = ஓராயிரம்
இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய்யும், ணகர வொற்றும், ரகரத்தின் மேனின்ற அகரவுயிருங் கெடும். வந்தது மெய்யாயின், ரகரம் உகரம் பெறும்; உயிராயின், உகரம் பெறாது முதனிளும். உ-ம்.
இரண்டு + கோடி = இருகோடி
கழஞ்சு = இருகழஞ்சு நாழி = இருநாழி
U T6)6T = இருயானை ஆயிரம் == নিৰ্য্যTuljum
மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய் கெடும். நின்ற னகரமெய் வந்தது உயிராயிற்றானும் உடன் கெடும்; மெய்யாயின் முதல் குறுகி, னகரமெய் வருமெய்யாகத் திரியும். உ-ம்.
மூன்று + ஆயிரம் = ep6JTuyuh கழஞ்சு =முக்கழஞ்சு நாழி = முந்நாழி
நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய் கெடும். நின்ற னகரம், வந்தவை. உயிரும் இடையெழுத்துமாயின், லகரமாகத் திரியும்; வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்; மெல்லெழுத்தாயின் இயல்பாம். உ-ம்.

Page 32
58 9 ஆறுமுகநாவலர்
நான்கு + ஆயிரம் =நாலாயிரம்
ust =நால்யானை கழஞ்சு = நாற்கழஞ்சு மணி = நான்மணி
ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய் கெடும். நின்ற நகரமெய் வந்தவை உயிராயிற் றானும் உடன் கெடும்; வல்லெழுத்தாயின், இனமெல்லெழுத்தாகத் திரியும். மெல்லெழுத்தும் இடையெழுத்துமாயின் அவ்வந்த வெழுத்தாகத் திரியும். உ-ம்.
ஐந்து + ஆயிரம் =ஐயாயிரம்
கழஞ்சு =ஐங்கழஞ்சு மூன்று =ஐம்மூன்று வட்டி =ஜவ்வட்டி
நகரமுந் தகரமும் வரின், ஐந்நூறு, ஐந்தூணி என ஈற்றுயிர்மெய் மாத்திரங் கெடும்.
ஆறென்னும் எண் உயிர் வரிற் பொதுவிதியான் முடியும்; மெய் வரின் முதல் குறுகும். உ-ம்.
ஆயிரம் =ஆறாயிரம் + للرك
கழஞ்சு =அறுகழஞ்சு மணி =அறுமணி வழி =அறுவழி
ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற் றுகரங் கெடும்; மெய் வரின் முதல் குறுகும். உ-ம்.
бЈ(у + ஆயிரம் =ஏழாயிரம்
கழஞ்சு =எழுகழஞ்சு மணி = எழுமணி
6) =எழுவகை

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 59
ஏழ்கடல், ஏழ்ப்ரி என வருதலுமுண்டு.
எட்டென்னும் எண்ணின் ஈற்றுயிர்மெய் கெடும்; நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத் திரியும். உ-ம்.
எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்
கழஞ்சு = எண்கழஞ்சு மனி = எண்மணி
666 = எண்வளை
இவ் விகாரங்களின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழுகடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க.
131 ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் னகரமாகவும், வருமொழியாகிய பத்து நூறாகவுந் திரியும். உ-ம்.
ஒன்பது + பத்து = தொண்ணுாறு ஒன்பது என்னும் எண்முன் நூறு என்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும், வருமொழியாகிய நூறு ஆயிரமாகவுந் திரியும். உ-ம்.
ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் இது இக்காலத்துத் தொளாயிரம் என வழங்கும்.
132 ஒன்று முதல் எட்டீறாக நின்ற எண்ணுப் பெயர் கண்முன் பத்தென்னும் எண்ணுப்பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய், கெட்டாயினும், ஆய்தமாகத் திரிந்தாயினும் புணரும். உ-ம்.

Page 33
60 0 ஆறுமுகநாவலர்
ஒன்று + பத்து =ஒருபது, இருபஃது
இரண்டு இருபது, இருபஃது மூனறு s முப்பது, முப்பஃது நானகு நாற்பது, நாற்பஃது ஐந்து ஐம்பது, ஐம்பஃது
Abl அறுபது, அறுபஃது նJԱg எழுபது, எழுபஃது எட்டு எண்பது, எண்பஃது
133. ஒருபது முதல் எண்பது ஈறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின், நிலைமொழியீற்றுக்கு அயலிலே தகர வொற்றுத் தோன்றும். உ-ம்.
ஒருபது + ஒன்று = ஒருபத்தொன்று இருபது + இரண்டு =இருபத்திரண்டு முப்பது + மூன்று கழஞ்சு =முப்பத்துமூன்று கழஞ்சு
மற்றவைகளு மிப்படியே 134. பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர்மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத் திரியும். உ-ம்.
பத்து +இரண்டு =பன்னிரண்டு பத்தின் முன் இரண்டொழிந்த ஒன்று முதல் எட்டீறாகிய எண்கள் வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர்மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும். உ-ம்.
பத்து + ஒன்று =பதினொன்று
மூன்று = பதின்மூன்று நான்கு = பதினான்கு ஐந்து = பதினைந்து
= பதினாறு

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 61
منبع
பதினேழு பதினெட்டு
նJ(Ա)
στι0
135. பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஒன்று
முதலிய எண்ணுப்பெயரும், நிறைப்பெயரும், அளவுப்
பெயரும், பிற பெயரும் வரின் பண்புத்தொகையில் இற்றுச்
சாரியை தோன்றும்; அங்ங்ணந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும். உ-ம்.
பத்து + ஒன்று = பதிற்றொன்று இரண்டு = பதிற்றிரண்டு மூன்று = பதிற்றுமூன்று பத்து = பதிற்றுப்பத்து நூறு = பதிற்றுநூறு ஆயிரம் = பதிற்றாயிரம் கோடி = பதிற்றுக்கோடி கழஞ்சு = பதிற்றுக்கழஞ்சு கலம் =பதிற்றுக்கலம் மடங்கு = பதிற்றுமடங்கு
ஒன்பது + ஒன்று = ஒன்பதிற்றொன்று இரண்டு = ஒன்பதிற்றிரண்டு மூன்று = ஒன்பதிற்றுமூன்று பத்து = ஒன்பதிற்றுமூன்று நூறு = ஒன்பதிற்றுநூறு ஆயிரம் = ஒன்பதிற்றாயிரம் கோடி = ஒன்பதிற்றுக்கோடி கழஞ்சு =ஒன்பதிற்றுக்கழஞ்சு கலம் =ஒன்பதிற்றுக்கலம் மடங்கு = ஒன்பதிற்றுமடங்கு

Page 34
62 9 ஆறுமுகநாவலர்
பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன் சாரியையுந் தோன்றும்; அங்ங்னந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும். உ-ம்.
பத்து -- ஆயிரம் = பதினாயிரம்
கழஞ்சு = பதின்கழஞ்சு கலம் =பதின்கலம்
மடங்கு = பதின்மடங்கு
ஒன்பது + ஆயிரம் = ஒன்பதினாயிரம்
கழஞ்சு = ஒன்பதின்கழஞ்சு கலம் = ஒன்பதின்கலம் மடங்கு =ஒன்பதின் மடங்கு
136. ஒன்பதொழிந்த ஒன்றுமுதற் பத்தீறாகிய ஒன்பதெண்களையும் இரட்டித்துச் சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, அல்லென வெல்லாங் கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும், பெறும். உ-ம்.
ஒன்று + ஒன்று =ஒவ்வொன்று இரண்டு + இரண்டு =இவ்விரண்டு மூன்று + மூன்று = மும்மூன்று நான்கு +நான்கு =நந்நான்கு ஐந்து + ஐந்து =ஐவைந்து ஆறு =அவ்வாறு * لیگ ն) (Ա + ஏழு =எவ்வேழு எட்டு -- TG =எவ்வெட்டு
பத்து + பத்து =பப்பத்து

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 63
சிறுபான்மை. ஒரோவொன்று, ஒன்றொன்று என வருதலுமுண்டு.
தேர்வு வினாக்கள் - 130. ஒன்று என்பதன்முன் நாற்கணமும் வரின் எப்படிப் புணரும்? இரண்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப் புணரும்? மூன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப் புணரும்? நான்கு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப் புணரும்? ஐந்து என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப் புணரும்? ஆறு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப் புணரும்? ஏழு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப் புணரும்? எட்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப் புணரும்? இவ்வெண்ணுப் பெயர்கள் இவ்விகார மின்றியும் வருமோ? 131. ஒன்பது என்பதன் முன் பத்து வரின் எப்படிப் புணரும்? 132. ஒன்று முதல் எட்டீறாக நின்ற எண்ணுப் பெயர்கண் முன் பத்து வரின் எப்படிப் புணரும்? 133. ஒருபது முதல் எண்பதீறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்னும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின் எப்படிப் புணரும்? 134. பத்தின் முன் இரண்டு வரின் உம்மைத் தொகையில் எப்படிப் புணரும்? பத்தின் முன் இரண்டொழிந்த ஒன்று முதல் எட்டிறாகிய எண்கள் வரின் உம்மைத் தொகையில் எப்படிப் புணரும்? 135. பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஒன்று முதலிய எண்ணுப் பெயரும் நிறைப் பெயரும் அளவுப் பெயரும் பிறபெயரும் வரின், பண்புத் தொகையில் எப்படிப் புணரும்? பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஆயிரமும் நிறைப் பெயரும் அளவுப் பெயரும் பிறபெயரும் வரின், பண்புத் தொகையில் இற்றுச்சாரியையேயன்றி வேறு சாரியையுந் தோன்றுமோ? 136. ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்திறாகிய ஒன்பதெண்களையும் இரட்டித்துச் சொல்லுமிடத்து, எப்படிப் புணரும்?
மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர் முன்னும் ஏவல் வினை முன்னும் மெய் புணர்தல்
137. ஞ், ண், ந், ம், ல், வ், ள், ன் என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல் வினை முற்றும், தம்முன் யகரமல்லாத மெய்கள் வரின்,

Page 35
64 9 ஆறுமுகநாவலர்
உகரச்சாரியை பெறும். தொழிற்பெயரின் சாரியைக்கு முன் வரும் வல்லினம் மிகும். உ-ம்.
அல்வழி வேற்றுமை உரிதுக்கடிது உரிதுக்கடுமை உண்ணுஞான்றது உண்ணுஞாற்சி பொருநுவலிது பொருநுவன்மை உரிதுகொற்றா உண்ணுநாகா பொருநுவளவா
திரும், செல், வவ், துள், தின் முதலியவற்றோடும் இவ்வாறே யொட்டிக்கொள்க.
முதனிலைத் தொழிற்பெயராவது, தொழிற்பெயர் விகுதி குறைந்து முதனிலைமாத்திர நின்று தொழிற்பெயர்ப் பொருளைத் தருவதாம்.
இவ்வெட்டீற்று ஏவல் வினைகளுள்ளே, உண் கொற்றா, தின் சாத்தா, வெல் பூதா, துள் வளவா என, ண ன ல ள என்னும் இந்நான்கீறும், உகரச்சாரியை பெறாதும் நிற்கும்.
பொருநுதல் - மற்றொருவர்போல வேடங் கொள்ளுதல், பொருந் என்பது, தொழிற்பெயராவதன்றி, அத்தொழிலினரை உணர்த்துஞ் சாதிப்பெயருமாம்.
பொருநுக்கடிது என நகரவீற்றுச் சாதிப்பெயரும், வெரிநுக்கடிது என நகரவீற்றுச் சினைப்பெயரும், உகரச் சாரியை பெறுமெனவுங் கொள்க. வெரிந் - முதுகு.
தேர்வு வினாக்கள் - 137. ஞ ண ந ம ல வ ள ன என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல்வினை முற்றும், தம்முன் யகர மல்லாத மெய்கள் வரின், எப்படிப் புணரும்? முதனிலைத் தொழிற்பெயராவது யாது? இவ்வெட்டிற்றேவல் வினைகளுள்ளே, உகரச் சாரியை பெறாதும் நிற்பன உளவோ? பொருநுதல் என்பதற்குப் பொருள் என்னை? பொருந் என்பது,

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 65
தொழிற்பெயராவதன்றி, வேறு பெயரும் ஆமோ? நகரவீற்றுப் பெயர் பொருந் அன்றி வேறும் உண்டோ? வெரிந் என்பதற்குப் பொருள் என்னை? பொருந் என்னுஞ் சாதிப்பெயரும், வெளிந் என்னுஞ் சினைப்பெயரும், உகரச்சாரியை பெறாவோ?
னகர னகர வீற்றுப் புணர்ச்சி
138 ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல்வழியில் அவ்விரு மெய்களும் இயல்பாம். வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும். அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவுந் திரியும். உ-ம்.
அல்வழி வேற்றுமை மண்சிறிது மட்சாடி மண்டீது மட்டுண் பொன் குறிது பொற்கலம் பொன்றிது பொற்றுாண் கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத்
தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.
மண் சுமந்தான், பொன் கொடுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும் வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம். மண்கூடை, புண்கை என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன்றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.
139. ணகர னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இருவழியினும் இயல்பாம். அவ்விருவழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்; னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும். உ-ம்.
த.இ.-5

Page 36
66 9 ஆறுமுகநாவலர்
அல்வழி வேற்றுமை மண்ஞான்றது மண்ஞாற்சி மண்ணிண்டது மண்ணிட்சி மண்வலிது மண்வன்மை பொன்ஞான்றது பொன்ஞாற்சி பொன்னீண்டது பொன்னிட்சி பொன்வலிது பொன்வன்மை
140. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்தவிடத்து, இருவழியினுங் கெடும். உ-ம்.
அல்வழி வேற்றுமை தூணன்று தூணன்மை அரணன்று அரணன்மை வாணன்று வாணன்மை
செம்பொனன்று செம்பொனன்மை
141 பாண், உமண், அமண், பரண், கவண் என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமை யினுந் திரியாதியல்பாம். உ-ம்.
பாண்குடி உமண்சேரி அமண்பாடி பரண்கால் கவண்கால்
பாண் - பாடுதற்றொழிலுடையதொரு சாதி, உமண்உப்பமைத்தற்றொழிலுடையதொரு சாதி. அமண் அருகனை வழிபடுவதொரு கூட்டம்.
142. தன், என் என்னும் விகாரமொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும். நின் என்னும் விகாரமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாம். உ-ம்.
தன்பகை தற்பகை
என்பகை எற்பகை நின்பகை

தமிழ் இலக்கணம் - புணரியல் 0 67
தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற் றிரிந்தே நிற்கும்.
143 குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான்,
மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம். உ-ம்.
குயின்கடுமை - தேன்பெருமை ஊன்சிறுமை - மீன்கண் எயின்குடி -- மான்செவி எகின்சிறுமை - மின்கடுமை
குயின் - மேகம், எயின் - வேட்டுவச்சாதி, எகின் - அன்னப்புள்.
தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்தும் மிகப்பெறுதலும், தேமொழி என மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு.
தேர்வு வினாக்கள் - 138, ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், இருவழியும் எப்படிப் புணரும்? அல்வழியில் எவ்விடத்துந் திரியாவோ? வேற்றுமையில் எவ்விடத்தும் இயல்பாகாவோ ? ண ன வீறு, இரண்டனுருபும் பயனும் உடன்றொக்க தொகையில் எவ்விடத்துந் திரிந்தே வருமோ? 139. ணகர னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இருவழியும் எப்படிப் புணரும்? 140. தனிக் குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்களின் முன் நகரம் வந்தால், னகர னகரம் இயல்பாகவே நிற்குமோ? 141 எந்த மொழியினும் ணகரம் வேற்றுமையிற்றிரிந்தே வருமோ? பாண் என்பதற்குப் பொருள் என்னை? உமண் என்பதற்குப் பொருள் என்னை? அமண் என்பதற்குப் பொருள் என்னை? 142. தன், என் என்பவற்றின் னகரம், வல்லினம் வரின் எப்படியாம்? நின் என்பது இப்படி வராதோ? இம்மூன்றிடத்து னகரமும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் இவ்விதியே பெறுமோ? 143. எந்த மொழியினும் னகரம் வேற்றுமையிற்றிரிந்தே வருமோ? தேன் என்பதன் னகரம்,

Page 37
68 6 ஆறுமுகநாவலர்
இயல்பாதலன்றி, வேறு விதி பெறாதோ? மெல்லெழுத்து வரின், விகாரமடைதல் இல்லையோ?
மகரவீற்றுப் புணர்ச்சி
144 மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமை யினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லின மிகும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச்சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும். உ-ம்.
மரக்கோடு d நிலப்பரப்பு வேற்றுமை
வட்டக்கடல் ண்பக்ெ சதுரப்பலகை பணபுதcதாகை கமலக்கண் உவமைத்தொகை மரங்குறிது யாங்கொடியேம் எழுவாய
års உம்மைத்தொகை
செய்யுங்காரியம் பெயரெச்சம் உண்ணுஞ்சோறு
உண்டனஞ்சிறியேம் O தின்றனங்குறியேம் வினைமுற்று :ಞ್ಞಣ° உம்மையிடைச் சொல்
மரம் பெரிது எனப் பகரம் வருமிடத்து இறுதிமகரம் இயல்பாம்.

தமிழ் இலக்கணம் - புணரியல் 0 69
தவஞ்செய்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், நிலங்கிடந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இறுதி மகரங் கெடாது, வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
145 தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உ-ம்.
அல்வழி வேற்றுமை கங்குறிது கங்குறுமை அஞ்சிறிது அஞ்சிறுமை செங்கோழி நங்கை
தஞ்செவி எந்தலை
146 மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும். உ-ம்.
அல்வழி வேற்றுமை மரஞான்றது மரஞாற்சி மரநீண்டது மரநீட்சி மரமாண்டது மரமாட்சி
147 தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும். உ-ம்.
அஞ்ஞானம் நுஞ்ஞானம் எந்நூல் தந்நூல் நந்நூல் 148. மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத்தொகையினும், இறுதி மகரங் கெடும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும்,

Page 38
70 0 ஆறுமுகநாவலர்
இடைச்சொற்றொடரினும் இறுதி மகரங் கெடாது நிற்கும்.
2 - LAO.
tՈfյ62)
న வேற்றுமை
வட்டவாழி ண்பக்ெ வட்டவடிவம் பணபுததொகை
வலிதழ் உவமைத்தொகை
மரமரிது
மரம்வலிது எழுவுாய
வலமிடம் o நிலம்வானம் உம்மைத்தொகை உண்ணுமுணவு
பெயரெச்சம்
உண்டணமடியேம் வினைமர் உண்டனம்யாம் (UPT)g
ಸ್ಥಿಣ್ಣ:ಜ್ಜ உம்மையிடைச்சொல்
செயமடைந்தான், மரம் வெட்டினான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மாயூரமேகினான், சிதம்பரம் வாழ்ந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகை யினும், வருமொழி வினையாயவிடத்து, இறுதிமகரங் கெடாது நிற்கும்.
வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும், உயிரும் இடையினமும் வரின் சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக் கெடாது நிற்கும்; வல்லினம் வரின், சிறியேங்கை என இனமெல்லெழுத்தாகத் திரியும்.

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 71
தேர்வு வினாக்கள் - 144. மகரத்தின் முன் இருவழியினும் வல்லினம் வரின் எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும் வருமொழி வினையாயவிடத்து, எப்படிப் புணரும்? 145. தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம் இருவழியினும் வல்லெழுத்து வரின் எப்படியாம்? 146. மகரத்தின் முன் இருவழியினும் மெல்லினம் வரின், எப்படிப் புணரும்? 147. தனிக் குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், எப்படியாம்? 148. மகரத்தின் முன் இருவழியினும் உயிரும் இடையினமும் வரின் எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து எப்படியாம்? வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையில் உயிரும் இடையினமும் வரிற் கெட்டே புணருமோ? வல்லினம் வரின் எப்படியாம்?
லகர ளகர வீற்றுப் புணர்ச்சி
149 லகர ளகரங்களின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் த்ொகையினும், உவமைத் தொகையினும், இறுதி லகரம் றகரமாகவும், ளகரம் டகரமாகவுந் திரியும்; எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினுந் திரியாதியல்பாம். உ-ம்.
பாற்குடம் அருட்பெருமை . வேற்றுமை வேற்படை அருட்செல்வம் . பண்புத்தொகை வேற்கண் வாட்கண் . உவமைத்தொகை குயில்கரிது பொருள்பெரிது . எழுவாய் கால்கை பொருள்புகழ் . உம்மைத்தொகை
பால் குடித்தான், அருள் பெற்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், கால் குதித்தோடினான், வாள் போழ்ந்திட்டான் Ꭷ,Ꭲ 6ᏡᎢ மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாவெனக் கொள்க.

Page 39
72 9 ஆறுமுகநாவலர்
150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ளக்கள், வல்லினம் வரின், எழுவாய்த்தொடரினும், உம்மைத் தொகையினும், ஒருகால் இயல்பாகவும், ஒருகாற் றிரியவும் பெறும். உ-ம்.
கல் குறிது கற்குறிது s முள் சிறிது முட்சிறிது TuguTu அல் பகல் அற்பகல் உள் புறம் உட்புறம் உம்மைத்தொகை
நெல், செல், கொல், சொல் இந்நான்கீற்றின் லகரவொற்று, நூெற்கடிது, செற்கரிது, கொற்சிறிது, சொற்பெரிது என எழுவாய்த் தொடரினும் உறழாது திரிந்தே வரும். ܗܝ
செல் - மேகம், கொல் - கொல்லன்
உறழ்ச்சியாவது, ஒருகால் இயல்பாகியும், ஒருகால் விகாரப்பட்டும் வருதல். உறழ்ச்சியெனினும், விகற்ப மெனினும் ஒக்கும்.
கற்கறித்தான், கட்குடித்தான் எனத் தனிக்குற் றெழுத்தைச் சார்ந்த ல ளக்கள், இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்தும், இயல்பாகாது திரிந்தே நிற்கும்.
I5. அல்வழி வேற்றுமை இரண்டினும், லகரத்தின் முன் வருந் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வருந் தகரம் டகரமாகவுந் திரியும். உ-ம்.
அல்வழி வேற்றுமை
கற்றீது கற்றிமை முட்டீது முட்டிமை

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 73
152. தனிக் குற்றெழுத்தைச் சார்ந்த ல ளக்கள், அல்வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகத் திரிதலன்றி, ஆய்தமாகவுந் திரியும். உ-ம்.
கற்றீது கஃறீது முஃடீது لنتعا-الملا 153. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், வருந் தகரந் திரிந்தவிடத்து, அல்வழியில் எழுவாய்த் தொடரினும், விளித்தொடரினும், உம்மைத்தொகையினும், வினைமுற்றுத் தொடரினும், வினைத்தொகையினுங் கெடும். உ-ம்.
வேறிது வாடீது Q
தோன்றறியன் வேடியன் எழுவாய்த் தொடர் தோன்றாறொடராய் வேடியை . விளித்தொடர்
காறலை தாடலை . உம்மைத்தொகை உண்பறமியேன் வந்தாடேவி . வினைமுற்றுத் தொடர் பயிறோகை அருடேவன் . வினைத்தொகை
குயிற்றிரள், அருட்டிறம் என வேற்றுமையினும், காற்றுணை, தாட்டுணை எனப் பண்புத் தொகையினும், பிறங்கற்றோள், வாட்டாரை என உவமைத் தொகையினும், கெடாது திரிந்து நின்றமை காண்க. பிறங்கல் - மலை, தாரை
- 956.
வேறொட்டான், தாடொழுதான் என இரண்டாம் வேற்றுமைத்தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடுமெனக் கொள்க.
நிலைமொழி உயர்திணைப் பெயராயின், தோன்றறாள், வேடோள் என வேற்றுமையினுங் கெடும் எனவும், குரிசிற்றடிந்தான், அவட்டொடர்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்துக் கெடாது திரியும் எனவுங் கொள்க.

Page 40
74 9 ஆறுமுகநாவலர்
154. லகர, ளகரங்களின் முன் மெல்லினம் வரின்,
இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந்
திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும். உ-ம்.
அல்வழி (86ubg|60)Ln கல் - கன்ஞெரிந்தது கன்ஞெரி வில் - வின்னிண்டது வின்னிட்சி புல் - புன்மாண்டது புன்மாட்சி முள் - முண்ஞெரிந்தது முண்ஞெரி புள் - புண்ணிண்டது புண்ணிட்சி கள் - கண்மாண்டது கண்மாட்சி 155 தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இருவழியிலும், வரு நகரந் திரிந்தவிடத்துக் கெடும். உ-ம்.
அல்வழி வேற்றுமை வேணன்று வேணன்மை பொருணன்று பொருணன்மை
156. லகர ளகரங்களின் முன் இடையினம் வரின்,
இருவழியினும், இறுதி ல ளக்கள் இயல்பாம். உ-ம்.
அல்வழி வேற்றுமை கல்யாது கல்யாப்பு விரல்வலிது விரல்வன்மை முள்யாது முள்யாப்பு வாள்வலிது வாள்வன்மை
தேர்வு வினாக்கள் - 149. லகர ளகரங்களின் முன் இரு வழியினும் வல்லினம் வரின், எப்படிப் புணரும்? இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மூன்றாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, எப்படியாம்? 150. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வல்லினம் வரின், எவ்விடங்களில் ஒருகால் இயல்பாகவும், ஒருகாற்றிரியவும் பெறும்? எச்சொற்களின் ஈற்று லகரவொற்று, வல்லினம் வரின், எழுவாய்த் தொடரிற்றிரிந்தே வரும் ? உறழ்ச்சியாவது யாது? தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள்,

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 75
இரண்டாம் வேற்றுமைத் தொகையின் வருமொழி வினையாயவிடத்து இயல்பேயாமோ? 151. இருவழியினும் லகரத்தின் முன் வருந் தகரம் எப்படியாம்? ளகரத்தின் முன் வருந் தகரம் எப்படியாம்? 152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லளக்கள், வருந் தகரந் திரிந்தவிடத்து றடக்களாதலன்றி வேறு திரிபும் பெறுமோ? 153. தனிக் குற்றெழுத்தைச் சாராத லளக்கள், வருந் தகரந் திரிந்த விடத்துக் கெடுதல் எங்கும் இல்லையோ? தனிக்குற்றெழுத்தைச் சாராத லளக்கள், வருந் தகரந் திரிந்தவிடத்து, எங்கே கெடாது திரிந்து நிற்கும்? லளக்கள் வேற்றுமையிற் கெடுதல் எங்கும் இல்லையோ? உயர்திணைப் பெயரிற்று லளக்கள், வேற்றுமையில், வருந் தகரந் திரிந்த விடத்து, எப்படியாம்? 154. லளக்களின் முன் இருவழியினும் மெல்லினம் வரின் எப்படியாம்? 155. தனிக்குற்றெழுத்தைச் சாராத லளக்கள் இருவழியிலும் வரும் நகரந் திரிந்தவிடத்து, எப்படியாம்? 156. லளக்களின் முன் இரு வழியினும் இடையினம் வரின்
எப்படியாம்?
வகரவீற்றுப் புணர்ச்சி 157 அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வருஞ் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம், அல்வழியில், வல்லினம் வரின் ஆயுதமாகத் திரியும்; மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்; இடையினம் வரின் இயல்பாகும். உ-ம்.
அஃகடியன இஃசிறியன உஃபெரியன
அஞ்ஞான்றன இந்நீண்டன உம்மாண்டன அவ்யாத்தன இவ்வளைந்தன உவ்வாழ்ந்தன
158. தெவ் என்னுஞ் சொல்லிற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின், உகரச்சாரியை பெறும்; மகரம் வருமிடத்து, ஒரோவழி மகரமாகத் திரியவும் பெறும். உ-ம்.
அல்வழி வேற்றுமை
தெவ்வுக்கடிது தெவ்வுக்கடுமை தெவ்வுமாண்டது தெவ்வுமாட்சி

Page 41
76 9 ஆறுமுகநாவலர்
தெவ்வுவந்தது தெவ்வுவன்மை
தெவ்வுமன்னர் தெவ்வுமுனை
தெம்மன்னர் தெம்முனை தேர்வு வினாக்கள் - 157. சுட்டுப்பெயர்களின் ஈற்று வகரம்,
அல்வழியில் மூவினமெய்களும் வரின், எப்படியாம்? 158. தெவ்வென்னுஞ் சொல்லிற்று வகரம், யகரமல்லாத மெய்கள் வரின் எப்படியாம்? மகரம் வரின் வேறு விதியும் பெறுமோ?
எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்கள் சாரியை பெறுதல்
159. உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய எண்ணுப் பெயர் நிறைப் பெயர் அளவுப் பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப்பெயர்கள் வரின், பெரும் பாலும் ஏ என்னுஞ் சாரியை இடையில் வரும். உ-ம்.
ஒன்றேகால் காலேகாணி தொடியேகஃசு கழஞ்சேகுன்றி கலனேபதக்கு உழக்கேயாழாக்கு ஒன்றரை, கழஞ்சரை, குறுணிநானாழி எனச் சிறுபான்மை ஏகாரச்சாரியை வராதொழியுமெனக் கொள்க.
தேர்வு வினா - 159 எண்ணுப்பெயர் நிறைப்பெயர் அளவுப் பெயர்களின் முன் அவ்வவற்றிற் குறைந்த அவ்வப் பெயர்கள் வரின் எப்படியாம்?
இடைச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல்
160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் இயல்பாயும் மிக்கும் முடியும். உ-ம்.
அம்ம - அம்மகொற்றா அம்மா - அம்மாசாத்தா மியா - கேண்மியாபூதா

தமிழ் இலக்கணம் - புணரியல் * 77
மதி - சென்மதிபெரும
6T6 - பொள்ளெனப்புறம்வேரார் இனி - இனிச்செய்வேன்
6 - அவனே கண்டான்
- அவனோ ப்ோனான்
161 வினையை அடுத்த படி என்னும் இடைச் சொல்லின் முன் வரும் வல்லினம் மிகா. சுட்டையும் வினாவையும் அடுத்த படி என்னும் இடைச்சொல்லின் முன் வரும் வல்லினம் ஒருகால் மிக்கும், ஒருகால் மிகாதும், வரும். உ-ம்.
வரும்படி சொன்னான்
அப்படிசெய்தான் அப்படிச்செய்தான்
எப்படிபேசினான் எப்படிப்பேசினான்
162. வேற்றுமைப் பொருட்புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியை இடைச்சொல்லின் இறுதி னகரந் திரியா தியல்பாம். உ-ம்.
ஆன்கன்று வண்டின்கால் ,
தேர்வு வினாக்கள் - 160. உயிரீற்றிடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? 161. படி என்னும் இடைச்சொல்லின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? 162. வேற்றுமைப்பொருட் புணர்ச்சியில் வல்லினம் வரின், சாரியையிடைச் சொல்லின் இறுதி னகரம் எப்படியாம்? -
உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல் 163. உயிரீற்றுரிச் சொற்களின் முன் வல்லினம் வரின், மிக்கும், இயல்பாகியும், இனமெல்லெழுத்து மிக்கும் புணரும். உ-ம்.
தவ - தவப்பெரியன்
குழ - குழக்கன்று கடி - கடிக்கமலம்

Page 42
78 6 ஆறுமுகநாவலர்
கடி - கடிகா
岛L - தடக்கை
தட - தடந்தோள் கம - கமஞ்சூல்
நனி - நனிபேதை
கழி - கழிகண்ணோட்டம்
தோவு வினா - 163. உயிரீற்றுரிச் சொற்களின் முன் வல்லினம்
வரின் எப்படியாம்?
உருபு புணர்ச்சி
164, வேற்றுமையுருபுகள், நிலைமொழியோடும் வரு மொழியோடும் புணருமிடத்து, அவ்வுருபின் பொருட் புணர்ச்சிக்கு முற்கூறிய விதிகளைப் பெரும்பான்மை பெறும்; சிறுபான்மை வேறுபட்டும் வரும். உ-ம்.
நம்பிகண்வாழ்வு: இங்கே உயர்திணைப் பெயரீற்று உயிர்முன்
வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினமிகா என்றும், ணகரம் இடையினம் வரின் இருவழியினும் இயல்பாம் என்றும், விதித்த
படியே, கண்ணுருபின் முதலுமீறும் இயல்பாயின.
உறிக்கட்டயிர் இங்கே இகரவீற்றஃறிணைப் பெயர்முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் மிகும் என்றும், ணகரம் வேற்றுமைப்பொருளில் வல்லினம் வரின், டகரமாகத் திரியும் என்றும், விதித்தபடியே, கண்ணுருபின் முதலுமீறும் விகாரமாயின.
நம்பிக்குப் பிள்ளை; இங்கே உயர்திணைப் பெயரீற்று உயிர் முன் வேற்றுமைப் பொருளில் வரும் வல்லினம் இயல்பாம் என்று விதித்தபடி இயல்பாகாது குவ்வுருபு மிகுந்தது.
இங்ங்ணம் உருபு புணர்ச்சியானது பொருட்
புணர்ச்சியை ஒத்து வருதலும், அதின் வேறுபட்டு வருதலும், சான்றோராட்சியால் அறிந்துகொள்க. -

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 79
உறித்தயிர் என்பது, கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையுருபின்றி அவ்வுருபினது இடப்பொருள் படப் பெயரும் நிலைமொழி வருமொழிகளாய் நின்று புணர்ந்த புணர்ச்சியாதலின், பொருட்புணர்ச்சியெனப்பட்டது. உறிக் கட்டயிர் என்பது, அவ்வேழனுருபு வெளிப்பட்டு நின்று நிலைமொழி வருமொழிகளோடு புணர்ந்த புணர்ச்சி யாதலின், உருபு புணர்ச்சியெனப்பட்டது. தேர்வு வினாக்கள் - 164, வேற்றுமையுருபுகள், நிலை மொழியோடும், வருமொழியோடும், எப்படிப் புணரும்? வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாவது யாது? உருபு புணர்ச்சியாவது யாது?
விதியில்லா விகாரங்கள்
165 விதியின்றி விகாரப்பட்டு வருவனவுஞ் சிலவுள. அவை மருவி வழங்குதல், ஒத்து நடத்தல், தோன்றல், திரிதல், கெடுதல், நீளல், நிலை மாறுதல் என எழுவகைப் படும்.
அவைகளுள்ளே, மருவி வழங்குதலொன்று மாத்திரம் தொடர்மொழியிலும், மற்றவை பெரும்பாலும் தனி மொழியிலும் வரும்.
166. மருவி வழங்குதலாவது, விதியின்றிப் பலவாறு விகாரப்பட்டு மருவி வருதல். உ-ம்.
அருமருந்தன்னபிள்ளை . அருமந்தபிள்ளை பாண்டியனாடு . பாண்டி நாடு சோழநாடு . சோணாடு மலையமானாடு ... LO6uoft06 தொண்டைமானாடு . தொண்டைநாடு தஞ்சாவூர் . தஞ்சை சென்னபுரி . சென்னை குணக்குள்ளது . குணாது தெற்குள்ளது . தெனாது
வடக்குள்ளது ... 6llܝIgil

Page 43
80 % ஆறுமுகநாவலர்
என்றந்தை . எந்தை நுன்றந்தை . நுந்தை 167 ஒத்து நடத்தலாவது, ஒரெழுத்து நின்றவிடத்து மற்றோரெழுத்து வந்து பொருள் வேறுபடா வண்ணம் நடத்தலாம். அவை வருமாறு:-
அஃறிணையியற்பெயருள்ளே, குறிலிணையின் கீழ் மகரநின்றவிடத்து னகரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நட்க்கும். உ-ம்.
அகம் . அகன்
முகம் முகன் நிலம் . நிலன் நலம் . நலன்
மொழி முதலினிடகளிலே சகர ஞகர யகரங்களின் முன் அகர நின்ற, விடத்து ஐகாரம் வந்து பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும். உ-ம்.
பசல் . பைசல் : w e p மஞ்சு - மைஞ்சு" > | மொழி முதலில் ஒத்து நடந்தது
6) w 600L6) இr -இல் மொழியிடையில்
அரயர் அரையர் ஒத்து நடந்தது
ஒரோவிடத்து மொழிக்கு முதலிலும், சிலவிடத்து ஐகாரத்தின் பின்னும், யகரவொற்றின் பின்னும், நகர நின்றவிடத்து ஞகரம் வந்து, பொருள் வேறுபடா வண்ணம் ஒத்து நடக்கும். உ-ம்.
நண்டு ண்டு நெண்டு దీ@ மொழி முதலில் நமன் ளுமன் @@g 西L西莎gh

தமிழ் இலக்கணம் - புணரியல் 9 81
ஐந்நூறு , ஐஞ்லூறு | ஐகாரத்தின் பின் மைந்நின்ற கண் மைஞ்ஞன்ற கண் ஒத்து நடந்தது சேய்நலூர் |சேய்ஞலூர் யகரத்தின் பின் செய்ந்நின்ற நீலம் செய்ஞ்ஞன்ற நீலம் ஒத்து நடந்தது
ஒரோவிடத்து அஃறிணைப் பெயரீற்றில் லகரநின்ற விடத்து ரகரம் வந்து, பொருள் வேறுபடாவண்ணம் ஒத்து நடக்கும். உ-ம்.
சாம்பல் . சாம்பர் பந்தல் . பந்தர் குடல் . குடர்
அஃறிணைப் பெயர்களுள் it ஒரோவடதது மென்றொடர்க் குற்றுகரமொழி#ளிஜிறுதி: உகநின்ற் விடத்து அர் வந்து, பொருள் வேறுபட்ாவ்ண்ண்ம் ஒத்து நடக்கும். உ-ம்.
அரும்பு . அரும்பர் சுரும்பு . சுரும்பர் கொம்பு . கொம்பர்
6J6doTG ... வண்டர்
ஒரோவழி லகரநின்றவி ளகரமும், ளகர நின்றவிடத்து லகரமும் "డి வண்ணம் ஒத்து நடக்கும். உ-ம்.
அலமருகுயிலினம் . அளமருகுயிலினம் பொள்ளாமணி . பொல்லாமணி
168. தோன்றலாவது, எழுத்துஞ்சாரியையும் விதியின்றித் தோன்றுதலாம். உ-ம்.
யாது esse Ust6 gil குன்றி Od XX குன்றம் செல் உழி *** செல்வுபூழி
656 it 915g. . . விண்வத்து
த.இ.-6

Page 44
82 9 ஆறுமுகநாவலர்
169. திரிதலாவது, ஒரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதலாம். உ-ம்.
மாகி ィ*** uomef மழைபெயின் விளையும் . மழைபெயில் விளையும் கண்ணகல் பரப்பு a கண்ணகன் பரப்பு உயர்திணைமேல உயர்திணை மேன
170. கெடுதலாவது உயிர்மெய்யாயினும் மெய்யா யினும் விதியின்றிக் கெடுதலாம். உ-ம்.
யாவர் . uuri யார் se ஆர் its ஆனை யாடு ஆடு աTց: OO لگے
எவன் என்னுங் குறிப்புவினை, என் என இடைநின்ற உயிர்மெய் கெட்டும், என்ன, என்னை என உயிர் மெய் கெட்டு இறுதியில் உயிர் தோன்றியும் வழங்கும்.
171. நீளலாவது, விதியின்றிக் குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீளலாம். உ-ம்.
பொழுது போழ்து பெயர் OOOO பேர் 172 நிலைமாறுதலாவது, எழுத்துக்கள் ஒன்று நின்ற விடத்து ஒன்று சென்று மாறி நிற்றலாம். உ-ம்.
வைசாகி வைகாசி நாளிகேரம் ** நாரிகேளம் ug . . . .. (ug சிவிறி soo விசிறி தசை சதை
இந்நிலைமாறுதல் எழுத்துக்கேயன்றிச் சொற்களுக் கும் உண்டு; அங்ங்னஞ் சொன்னிலை மாறி வழங்குவன
லக்கணப் போலி எனப் பெயர் பெறும். உ-ம். இ போலி Qର பெறு

தமிழ் இலக்கணம் - புணரியல் 0 83
கண்மீ o sga மீகண் நகர்ப்புறம் புறநகர் புறவுலா உலாப்புறம் இன்முன் முன்றில் பொதுவில் பொதியில்
முன்றில் என்பதில் விதியின்றி றகரந் தோன்றிற்று. பொதியில் என்பதில் விதியின்றி இகரமும் யகர மெய்யுந் தோன்றின. தேர்வு வினாக்கள் - 165. இப்படி விதியினால் விகாரப் பட்டு வருவனவன்றி, விதியின்றி விகாரப்படுவனவும் உளவோ? அவை எத்தனை வகைப்படும்? 166. மருவி வழங்குதலாவது யாது? 167. ஒத்து நடத்தலாவது யாது? 168. தோன்றலாவது யாது? 169. திரித லாவது யாது? 170. கெடுதலாவது யாது? 171. நீளலாவது யாது? 172. நிலைமாறுதலாவது யாது? இந்நிலை மாறுதல் எழுத்துக்கே யன்றிச் சொற்களுக்கும் உண்டோ? சொன்னிலை மாறி வழங்குவன எப்படிப் பெயர் பெறும்?
புணரியல் முற்றிற்று
எழுத்ததிகாரம் முற்றுப் பெற்றது.

Page 45
இரண்டாவது
சொல்லதிகாரம்
1. பெயரியல்
173. சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ் பொருளைப் பிறர்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிதற்குங் கருவியாகிய ஒலியாம்.
தேர்வு வினா - 173. சொல்லாவது யாது?
திணை 174. அக்கருத்தின் நிகழ்பொருள், உயர்திணை, அஃறிணை என, இருவகைப்படும்.
திணை - சாதி, உயர்திணை - உயர்வாகிய சாதி அஃறிணை - உயர்வல்லாத சாதி, அல்திணை என்றது அஃறிணை எனப் புணர்ந்தது. இங்கே திணையென்னும் பண்புப்பெயர், ஆகுபெயராய்ப் பண்பியை உணர்த்தி நின்றது. சாதி பண்பு, சாதியையுடைய பொருள் பண்பி.
I75. உயர்திணையாவன, மனிதரும், தேவரும், நரகரும் ஆகிய மூவகைச் சாதிப் பொருள்களாம். V−
176. அஃறிணையாவன, மிருகம், பறவை முதலிய உயிருள்ள சாதிப் பொருள்களும், நிலம், நீர் முதலிய உயிரில்லாத சாதிப் பொருள்களுமாம்.
தேர்வு வினாக்கள் - 174. அக்கருத்தின் நிகழ் பொருள் எத்தனை வகைப்படும்? திணையென்பதற்குப் பொருள் என்ன? உயர்திணை

தமிழ் இலக்கணம் - பெயரியல் 0 85
யென்பதற்குப் பொருள் என்ன? அஃறிணையென்பதற்குப் பொருள் என்ன? இங்கே திணையென்னும் பண்புப் பெயர் எதனை உணர்த்தி நின்றது. 175. உயர்திணையாவன எவை? 176. அஃறிணையாவன எவை?
பால்
177 உயர்திணை, ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவையுடையது. உ-ம்.
அவன், வந்தான் . உயர்திணையாண்பால் அவள், வந்தாள் . உயர்திணைப் பெண்பால் அவர், வந்தார் . உயர்திணைப் பலர்பால்
பலர்பால் என்றது, ஆடவர், காளையர் என்பன முதலிய ஆண்பன்மையும், பெண்டீர், மங்கையர் முதலிய பெண்பன்மையும், மக்கள், அவர் என்பன முதலிய அவ்விருவர் பன்மையும், அடக்கி நின்றது.
178 அஃறிணை, ஒன்றன்பால், பலவின்பால் என, இரண்டு பிரிவையுடையது. உ-ம்.
அது வந்தது ump அஃறிணையொன்றன்பால் அவை, வந்தன . அஃறிணைப் பலவின்பால் தேர்வு வினாக்கள் - 177. உயர்திணை எத்துணைப் பிரிவை
யுடையது? பலர்பால் ள்ன்றது எவைகளை அடக்கி நின்றது? 178. அஃறிணை எத்துணைப் பிரிவையுடையது?
இடம்
179. இவ்விருதிணையாகிய ஐம்பாற்பொருளை
உணர்த்துஞ் சொற்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத்தையும் பற்றி வரும்.

Page 46
86 6 ஆறுமுகநாவலர்
180. பேசும் பொருள் தன்மையிடம்; பேசும் பொருளினால் எதிர்முகமாக்கப்பட்டுக் கேட்கும் பொருள் முன்னிலையிடம்; பேசப்படும் பொருள் படர்க்கையிடம்.
தேர்வு வினாக்கள் - 179. இவ்விருதிணையாகிய ஐம்பாற் பொருளை உணர்த்துஞ் சொற்கள் எவ்விடத்தைப் பற்றி வரும்? 180. தன்மையிடம் எது? முன்னிலையிடம் எது? படர்க்கையிடம் எது?
சொற்களின் வகை
181. சொற்கள், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நால்வகைப்படும்.
தேர்வு வினா - 181. சொற்கள் எத்தனை வகைப்படும்?
பெயர்ச்சொற்களின் வகை
182. பெயர்ச்சொல்லாவது, பொறிகட்கும் மனத் துக்கும் விடயமாகிய பொருளை உணர்த்துஞ் சொல்லாம்.
பொருள், இடம், காலம், சினை என்னும் நான்கும் பொருளென ஒன்றாய் அடங்கும். பொருட்கு உரிமை பூண்டு நிற்பனவாகிய பண்புந் தொழிலும் பொருளெனவும் படுமாதலின், அவைகளை உணர்த்துஞ் சொல்லும் பெயர்ச் சொல்லெனப்படும். பொருளினது புடை பெயர்ச்சி யெனப்படும் வினை நிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லாகிய வினைச் சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப் பொருளை உணர்த்தும். இங்ங்னமாகவே, பெயர்க ளனைத்தும், பொருட்பெயர், வினையாலணையும் பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் நால்வகையுள் அடங்கும்.
183. பெயர்ச்சொற்கள், இடுகுறிப்பெயர், காரணப் பெயர், காரணவிடுகுறிப் பெயர் என, மூவகைப்படும்.

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 87
184. இடுகுறிப்ப்ெயராவது, ஒருகாரணமும் பற்றாது பொருளை உணர்த்தி நிற்கும் பெயராம்.
உ-ம். மரம், மலை, கடல், சோறு இவை ஒரு காரணமும் பற்றாது வந்தமையால், இடுகுறிப் பெயராயின.
185. காரணப் பெயராவது, யாதேனும் ஒரு காரணம் பற்றிப் பொருளை உண்ர்த்தி நிற்கும் பெயராம்.
உ-ம். பறவை, அணி, பொன்னன், கணக்கன்
பறப்பதாதலிற் பறவை எனவும், அணியப்படுவதாத லின் அணி எனவும், பொன்னையுடையனாதலிற் பொன்னன் எனவும், கணக்கெழுதுவோனாதலிற் கணக்கன் எனவும் காரணம் பற்றி வந்தமையால், இவை காரணப் பெயராயின.
186. காரணவிடுகுறிப்பெயராவது, காரணங் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பல பொருள்களுக்குஞ் செல்வதாயும், காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய் நின்று ஒவ்வொரு பொருட்கே செல்வதாயும், உள்ள பெயராம்.
உ-ம். முக்கணன், அந்தணன், முள்ளி, கறங்கு முக்கணன் என்பது, காரணங் கருதியபொழுது விநாயகக் கடவுள் முதலிய பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங் கருதாத பொழுது இடுகுறியளவாய்ச் சிவபெருமானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று. அந்தணன் என்பது, காரணங் கருதியபொழுது அழகிய தண்ணளியையுடையோர் பலர்க்குஞ் செல்லுதலாலும், காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய்ப் பார்ப்பானுக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று. முள்ளி என்பது, காரணங் கருதியபொழுது முள்ளையுடைய செடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும், காரணங் கருதாத

Page 47
88 9 ஆறுமுகநாவலர்
பொழுது இடுகுறியளவாய் முள்ளி என்னும் ஒரு செடிக்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று. கறங்கு என்பது, காரணங் கருதியபொழுது சுழலலையுடைய பலபொருள்கட்குஞ் செல்லுதலாலும், காரணங் கருதாத பொழுது இடுகுறியளவாய்க் காற்றாடி என்னும் ஒருபொருட்குச் செல்லுதலாலும், காரணவிடுகுறிப் பெயராயிற்று. 187, இப்பெயர்கள், பொதுப்பெயர், சிறப்புப் பெயர் என, இருவகைப்படும்.
188. பொதுப்பெயராவது, பல பொருள்களுக்குப் பொதுவாகி வரும் பெயராம்.
உ-ம். மரம், விலங்கு, பறவை
இவற்றுள், மரம் இடுகுறிப் பொதுப்பெயர்; விலங்கு.
பறவை என்பன காரணப் பொதுப்பெயர்.
189. சிறப்புப் பெயராவது, ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாகி வரும் பெயராம்.
உ-ம். ஆல், கரி, காரி
இவற்றுள் ஆல் இடுகுறிப் பெயர்; கரி, காரி என்பன காரணச் சிறப்புப் பெயர். கரி-யானை, காரி-கரிக்குருவி.
190. பெயர்கள், இடவேற்றுமையினாலே, தன்மைப் பெயர், முன்னிலைப்பெயர், படர்க்கைப் பெயர் என மூவகைப்படும்.
தேர்வு வினாக்கள் - 182. பெயர்ச்சொல்லாவது யாது? பெயர்க ளனைத்தும் எத்தனை வகையுள் அடங்கும்? 183. பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்? 184. இடுகுறிப் பெயராவது யாது? 185. காரணப் பெயராவது யாது? 186. காரணவிடுகுறிப் பெயராவது யாது? 187. இப்பெயர்கள் மீட்டு எத்தனை வகைப்படும்? 188. பொதுப்பெயராவது யாது? 189. சிறப்புப் பெயராவது யாது?. 190. பெயர்கள் இட வேற்றுமையினால் எத்தனை வகைப்படும்?

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 89
தன்மைப் பெயர்கள் 19. தன்மைப் பெயர்கள், நான், யான், நாம், யாம், என நான்காம். இவைகளுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப்பெயர்கள்; நாம், யாம் இவ்விரண்டும் பன்மைப் பெயர்கள். r
இத்தன்மைப் பெயர்கள் உயர்திணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாம்.
உ-ம். யானம்பி, யானங்கை . தன்மையொருமை யாமைந்தர், யாமகளிர் . தன்மைப்பன்மை உலகவழக்குச் செய்யுள்வழக்கிரண்டினும், நாம், யாம் இரண்டும். நாங்கள், யாங்கள் எனவும் வரும். தேர்வு வினாக்கள் - 191. தன்மைப் பெயர்கள் எவை? இவைகளுள், எவை ஒருமைப் பெயர்கள்? எவை பன்மைப் பெயர்கள்? இத்தன்மைப் பெயர்கள் திணைபால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?
முன்னிலைப் பெயர்கள்
192. முன்னிலைப் பெயர்கள், நீ, நீர், நீயிர், நீவிர் எல்லீர் என ஐந்தாம். இவைகளுள், நீ என்பது ஒருமைப் பெயர்; மற்றவை பன்மைப் பெயர்கள்.
இம்முன்னிலைப் பெயர்கள் இருதிணையாண்பால் பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவனவாம்.
உ-ம். நீ நம்பி, நீ நங்கை, நீ பூதம்
- முன்னிலையொருமை நீர் மைந்தர், நீர் மகளிர், நீர் பூதங்கள்
- முன்னிலைப்பன்மை
* தன்மைப்பெயர்களை உயர்திணைப்பெயர்கள் என்பர் தொல்காப்பியர்; இருதிணைப்பொதுப்பெயர்கள் என்பர் நன்னூலார்.

Page 48
90 0 ஆறுமுகநாவலர்
இருவழக்கினும் நீங்கள் என்பதும் முன்னிலைப் பன்மையில் வரும். தேர்வு வினாக்கள் - 192. முன்னிலைப் பெயர்கள் எவை? இவைகளுள், எது ஒருமைப்பெயர்? எவை பன்மைப் பெயர்? இம்முன்னிலைப் பெயர்கள் திணை பால்களுள் எவைகளுக்குப் பொதுவாகி வருகின்றன?
படர்க்கைப் பெயர்கள்
193. படர்க்கைப் பெயர்கள், மேற்சொல்லப்பட்ட தன்மை முன்னிலைப் பெயர்களல்லாத மற்றைய எல்லாப் பெயர்களுமாம்.
உ-ம். அவன், அவள், அவர், பொன், மணி, நிலம்
194 அன், ஆன், மன், மான், ன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உ-ம். பொன்னன், பொருளான், வடமன், கோமான், பிறன்
195. அள், ஆள், இ, ள் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைப் பெயர்களாம்.
உ-ம். குழையள், குழையாள், பொன்னி, பிறள் 196 அர், ஆர், கள், மார், ர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உ-ம். குழையர், குழையார், கோக்கள், தேவிமார், பிறர் தச்சர்கள், தட்டார்கள் எனக் கள் விகுதி, விகுதிமேல் விகுதியாயும் வரும்.
197 துவ்விகுதியை இறுதியில் உடைய பெயர்கள்
அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்களாம்.

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 91
உ-ம். குழையது. 198. வை, அ, கள், வ் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய பெயர்கள் அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்களாம்.
உ-ம். குழையவை, குழையன, மரங்கள், அவ். 199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களுஞ் சில உண்டு. அவை வருமாறு:-
நம்பி, விடலை, கோ, வேள், ஆடூஉ முதலியன உயர்திணையாண்பாற் பெயர்கள்.
மாது, தையல் மகடூஉ, நங்கை முதலியன உயர்திணைப் பெண்பாற் பெயர்கள்.
கடுவன், ஒருத்தல், போத்து, கலை, சேவல், ஏறு முதலியன அஃறிணையாண்பாற் பெயர்கள்.
பிடி, பிணை, பெட்டை, மந்தி, பிணி முதலியன அஃறிணைப்பெண்பாற் பெயர்கள்.
தேர்வு வினாக்கள் - 193. படர்க்கைப் பெயர்கள் எவை? 194. உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை? 195. உயர்திணைப் பெண்பா லொருமைப் படர்க்கைப் பெயர்கள் எவை? 196. உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? 197. அஃறிணையொன்றன்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை? 198. அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள் எவை. 199. விகுதி பெறாது உயர்திணை அஃறிணைகளில் ஆண்பால் பெண்பால்களை உணர்த்தி வரும் பெயர்களும் உண்டோ?
இருதினைப் பொதுப் பெயர்
200. தந்தை, தாய்; சாத்தன், சாத்தி; கொற்றன், கொற்றி; ஆண், பெண்; செவியிலி, செவியிலிகள்; தான்,
தாம் என வரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை

Page 49
92 % ஆறுமுகநாவலர்
அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம். பொதுப் பெயரெனினும், விரவுப் பெயரெனினும், பொருந்தும். உ-ம்.
தந்தையிவன் தந்தையென்பது இருதிணை தந்தையில்வெருது யாண்பாற்கும் பொதுவாயிற்று. தாயிவள் தாயென்பது இருதினைப் தாயிப்பசு பெண்பாற்கும் பொதுவாயிற்று. சாத்தனிவன் சாத்தனென்பதுஇருதினை சாத்தனிவ்வெருது யாண்பாற்கும் பொதுவாயிற்று. சாத்தியிவள் சாத்தியென்பது இருதிணைப் சாத்தியிப்பசு பெண்பாற்கும் பொதுவாயிற்று. கொற்றணிவன் கொற்றனென்பது இருதிணை கொற்றணிவ்வெருது யாண்பாற்கும் பொதுவாயிற்று. கொற்றியிவள் ಇಂಗ್ಡಿ இருதினைப் கொற்றியிப்பசு பெண்பாற்கும் பொதுவாயிற்று. ஆண் வந்தான் ணென்பது
ஆண் வந்தது ဒွိစ္ကိုစ့်ဂျိုးစံr பாற்கும்
பாதுவாயிற்று.
பெண் வந்தாள்
பெண்ணென்பது இருதினைப்
பெண் வந்தது பெண்பாற்கும் பொதுவாயிற்று.
செவியிலியவன் செவியிலியென்பது
செவியிலியிவள் ಫ್ಲಿಲ್ಲೆ: யொருமைக்கும்
செவியிலியில்வெருது பாதுவாயிற்று.
செவியிலியிப்பசு
செவியிலிகளிவர் செவியிலிகளென்பது
செவியிலிகளிவை இருதிணைப் பன்மைக்கும்
பொதுவாயிற்று.
அவன்றான் தானென்பது இருதிணை
அவடான் யொருமைக்கும் பொதுவாயிற்று.
அதுதான
அவர்தாம் தாமென்பது ಡ್ದಿ
அவைதாம் பன்மைக்கும் பொதுவாயிற்று.

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 93
தாம் என்பது தாங்கள் எனவும் வரும்.
தேர்வு வினா - 200. உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்கள் எவை?
இருதிணை மூவிடப் பொதுப்பெயர் 201. எல்லாம் என்னும் பன்மைப்பெயர் இருதிணை மூவிடங்கட்கும் பொதுப்பெயராம்.
உ-ம். நாமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம்,
அவையெல்லாம்.
தேர்வு வினா - 201. எல்லாம் என்னும் பன்மைப் பெயர் எவைகளுக்குப் பொதுப்பெயர்?
உயர்திணையிற் பாற் பொதுப்பெயர்
202. ஒருவர், பேதை, ஊமை என வரும் பெயர்கள் உயர்திணையாண் பெண்ணென்னும் "இருபாற்கும் பொதுப்பெயர்களாம். உ-ம்.
ஆடவருளொருவர் பெண்டிருளொருவர் பேதையவன் பேதையவள் ஊமையிவன் ஊமையிவள்
ஒருவர் என்னும் பாற்பொதுப்பெயர், பொருட்கேற்ப ஒருமைச்சொல்லைக் கொள்ளாது, ஒருவர் வந்தார் எனச் சொற்கேற்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும். இன்னுஞ் சாத்தனார், தேவனார் என்பனவும், பொருட் கேற்ப ஒருமைச் சொல்லைக் கொள்ளாது, சொற்கேற்பப் பன்மைச் சொல்லையே கொண்டு முடியும்.
தேர்வு வினா - 202. உயர்திணை ஆண் பெண் என்னும் இருபாற்கும் பொதுப் பெயர்கள் எவை?

Page 50
94 9 ஆறுமுகநாவலர்
அஃறிணையிற் பாற் பொதுப்பெயர்
203 து என்னும் ஒருமைவிகுதியையாயினும், வை, அ, கள் என்னும் பன்மை விகுதிகளையாயினும் பெறாது வரும் அஃறிணைப் பெயர்களெல்லாம், அத்திணை ஒன்று பல என்னும் இருபாற்கும் பொதுப்பெயர்களாம். இவை பால்பகாவஃறிணைப் பெயர் எனவும், அஃறிணையியற் பெயர் எனவுங் கூறப்படும்.
உ-ம். யானை வந்தது யானை வந்தன மரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன கண் சிவந்தது கண் சிவந்தன தேர்வு வினாக்கள் - 203. அஃறிணை ஒன்றன்பால் பலவின்பால் என்னும் இரண்டற்கும் பொதுப் பெயர்கள் எவை? இவை எப்படிப் பெயர் பெறும்?
ஆகுபெயர்
204. ஒரு பொருளின் இயற்பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளிற்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகுபெயரெனப்படும்.
205. அவ்வாகுபெயர் பதினாறு வகைப்படும். அவை யாவன, பொருளாகுபெயர், இடவாகுபெயர், காலவாகு பெயர், சினையாகுபெயர், குணவாகுபெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவையாகுபெயர், எடுத்தலளவையாகு பெயர், முகத்தலளவையாகுபெயர், நீட்டலளவையாகு பெயர், சொல்லாகுபெயர், தானியாகுபெயர், கருவியாகு பெயர், காரியவாகுபெயர், கருத்தாவாகுபெயர், உவமை யாகுபெயர் என்பனவாம். உ-ம்.
(1) தாமரை போலுமுகம்: இங்கே தாமரையென்னு முதற் பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலாற் பொருளாகுபெயர்.

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 95
(2)
. (3)
(4)
(6)
(8)
(9)
(10)
(11)
(12)
(13)
ஊரடங்கிற்று; இங்கே ஊரென்னுமிடப்பெயர் அங்கிருக்கிற மனிதருக்காதலால் இடவாகுபெயர்.
காரறுத்தது; இங்கே காரென்னும் மழைக்காலப் பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்காதலாற் காலவாகுபெயர்.
வெற்றிலை நட்டான்; இங்கே வெற்றிலையென்னுஞ் சினைப் பெயர் அதன் முதலாகிய கொடிக்காதலாற் சினையாகுபெயர்.
நீலஞ் சூடினாள்; இங்கே நீலமென்னும் நிறக்குணப் பெயர் அதனையுடைய குவளை மலருக்காதலாற் குணவாகுபெயர்.
வற்றலோடுண்டான்; இங்கே வற்றலென்னுந் தொழிற்பெயர் அதனைப் பொருந்திய உணவிற்காதலாற் றொழிலாகுபெயர்.
காலாலே நடந்தான்; இங்கே காலென்னும் எண்ணலளவைப் பெயர் அவ்வளவைக் கொண்ட உறுப்பிற்காதலால் எண்ணலவையாகுபெயர்.
இரண்டுவீசை தந்தான்; இங்கே விசையென்னும் எடுத்த லளவைப்பெயர் அவ்வளவைக் கொண்ட பொருட்காதலால் எடுத்தலளவையாகுபெயர்.
நாழியுடைந்தது; இங்கே நாழியென்னும், முகத்தலளவைப் பெயர் அவ்வளவைக் கருவிக்காதலால் முகத்தலளவையாகு பெயர்.
கீழைத்தடி விளைந்தது; இங்கே தடியென்னும் நீட்டலளவைப் பெயர் அதனால் அளக்கப்பட்ட விளைநிலத்திற் காதலால் நீட்டலளவையாகுபெயர். இந்நூற்குரை செய்தான்; இங்கே உரையென்னுஞ் சொல்லின் பெயர் அதன் பொருளுக்காதலாற் சொல்லாகுபெயர். விளக்கு முரிந்தது; இங்கே விளக்கென்னுந் தானியின் பெயர் அதற்குத் தானமாகிய தண்டிற்காதலாற் றாணியாகுபெயர். தானி - தானத்தினுள்ளது. தானம்-இடம். திருவாசகமோதினான்; இங்கே வாசகமென்னுங் கருவிப் பெயர் அதன் காரியமாகிய ஒரு நூலிற்காதலாற் கருவியாகு பெயர்.

Page 51
96 9 ஆறுமுகநாவலர்
(14) அலங்காரங்கற்றான்; இங்கே அலங்காரமென்னுங் காரியத்தின் பெயர் அதனையுணர்த்துதற்குக் கருவியாகிய நூலிற்காதலாற் காரியவாகுபெயர்.
(15) திருவள்ளுவர் படித்தான்; இங்கே திருவள்ளுவரென்னுங் கருத்தாவின்பெயர் அவராற் செய்யப்பட்ட நூலிற்காதலாற் கருத்தாவாகுபெயர்.
(16) பாவை வந்தாள், இங்கே பாவை என்னும் உவமையின் பெயர் அதனை யுவமையாகக் கொண்ட பெண்ணுக்காதலால் உவமையாகுபெயர்.
கார் என்னுங் கருநிறத்தின் பெயர், அதனையுடைய மேகத்தை உணர்த்தும்போது ஆகுபெயர்; அம்மேகம் பெய்யும் பருவத்தை உணர்த்தும்போது இருமடியாகுபெயர்; அப்பருவத்தில் விளையும் நெற்பயிரை உணர்த்தும் போது மும்மடியாகுபெயர்.
வெற்றிலை நட்டான், திருவாசகமோதினான் என்பவற்றுள், இலையென்பது வெறுமையென்னும் அடையினையும், வாசகமென்பது திருவென்னும் அடையினையும் அடுத்து, ஆகுபெயராய் வருவதால், அடையடுத்தவாகுபெயர்.
தேர்வு வினாக்கள் - 204. ஆகுபெயரென்பது யாது? 205. அவ்வாகுபெயர் எத்தனை வகைப்படும்? அவை எவை?
வேற்றுமை
206. பெயர்களனைத்தும், முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம்வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என எட்டு வேற்றுமைகளையேற்கும்.

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 97
இவற்றுள், முதல்வேற்றுமை எழுவாய் எனவும், பெயர்வேற்றுமை எனவும், பெயர் பெறும். எட்டாம் வேற்றுமை விளியெனவும் பெயர் பெறும்.
207 முதல் வேற்றுமையினது உருபாவது திரிபில்லாத பெயரேயாம்.
இது வினையையும், பெயரையும், வினாவையுங் கொள்ளும்.
உ-ம். சாத்தன் வந்தான், சாத்தனிவன், சாத்தன் யார் வேற்றுமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல், முடிக்குஞ் சொல் எனவும், பயனிலை எனவும், பெயர் பெறும்.
இத்திரிபில்லாத பெயர், தானே தன் பொருளை வினைமுதற் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட வினைமுதற்பொருளே இதன் பொருளாம்.
வினைமுதல், கருத்தா, செய்பவன் என்பன ஒரு பொருட் சொற்கள். 哪
இவ்வெழுவாய்க்கு வேறுருபு இல்லையாயினும், ஆனவன், ஆகின்றவன், ஆவான் என்பவன் முதலிய ஐம்பாற் சொற்களுஞ் சிறுபான்மை சொல்லுருபாக வரும்.
உ-ம். சாத்தனானவன் வந்தான்
சாத்தியானவள் வந்தாள் சாத்தரானவர் வந்தார் மரமானது வளர்ந்தது மரங்களானவை வளர்ந்தன. மற்றவைகளும் இப்படியே. 208. இரண்டாம் வேஹ்றுமையினது உருபு ஐயொன்றேயாம்.
இது வினையையும், வினைக்குறிப்பையுங் கொள்ளும்.
த.இ.-7

Page 52
98 9 ஆறுமுகநாவலர்
இவ்வையுருபு, தன்னையேற்ற பெயர்ப்பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட செயப்படுபொருளே இவ்வுருபின் பொருளாம்.
செயப்படுபொருள், கருமம், காரியம் என்பன ஒரு பொருட்சொற்கள்.
அச்செயப்படுபொருளானது, ஆக்கப்படுபொருள், அழிக்கப்படுபொருள், அடையப்படுபொருள், நீக்கப்படு பொருள், ஒக்கப்படுபொருள், உடைமைப்பொருள் முதலியனவாகப் பலதிறப்படும்.
(உதாரணம்) குடத்தை வனைந்தான் . ஆக்கப்படுபொருள் கோட்டையை யிடித்தான் . அழிக்கப்படுபொருள் ஊரையடைந்தான் அடையப்படுபொருள் மனைவியைத் துறந்தான் . துறக்கப்படுபொருள் புலியை யொத்தான் a ஒக்கப்படுபொருள் பொன்னையுடையான் -- உடைமைப்பொருள்
209. மூன்றாம் வேற்றுமையினுடைய உருபுகள் ஆல், ஆன், ஒடு ஒடு என்பவைகளாம்.
இவை வினையைக் கொள்ளும்.
இவ்வுருபுகளுள், ஆல், ஆன் என்னும் இரண்டுருபு களும், தம்மையேற்ற பெயர்ப்பொருளைக், கருவிப் பொருளாகவும், கருத்தாப்பொருளாகவும், வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட கருவிப் பொருளுங் கருத்தாப் பொருளும் இவ்வுருபுகளின் பொருளாம். கருவி, காரணம் என்பன ஒருபொருட்சொற்கள்.
கருவி, முதற்கருவி, துணைக்கருவி என, இருவகைப்
படும். கருத்தாவும், இயற்றுதற்கருத்தா, ஏவுதற் கருத்தா என இருவகைப்படும்.

தமிழ் இலக்கணம் - பெயரியல் 40 99
ஒடு, ஒடு என்னும் இரண்டுருபுகளும், தம்மையேற்ற பெயர்ப்பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட உடனிகழ்ச்சிப் பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
(உதாரணம்)
மண்ணாலாகிய குடம் மண்ணானாகிய குடம் முதற்கருவி திரிகையாலாகிய குடம்
துணைக்கருவி
தச்சனாலாகிய கோயில் தச்சனானாகிய கோயில் இயற்றுதற்கருத்தா அரசனாலாகிய கோயில் அரசனானாகிய கோயில் ஏவுதறகருததா மகனோடு தந்தை வந்தான் I உடனிகம்ச்சிப் பொாள் மகனொடு தந்தை வந்தான் (5
இவ்வுருபுகளுள், ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரிய விடத்துக் கொண்டென்பதும், ஒடு, ஒடு உருபுகள் நிற்றற் குரியவிடத்து உடனென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உ-ம். வாள்கொண்டு வெட்டினான்
தந்தையுடன் மைந்தன் வந்தான் 20. நான்காம் வேற்றுமையினது உருபு குவ்வொன்றே штub.
இது வினையையும் வினையொடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.
இக்குவ்வுருபு, தன்னையேற்ற பெயர்ப்பொருளைக் கோடற்பொருளாகவும், பகைதொடர்பொருளாகவும், நட்புத்தொடர்பொருளாகவும், தகுதியுடைப்பொருளாக வும், முதற்காரண காரியப்பொருளாகவும், நிமித்தகாரண

Page 53
100 0 ஆறுமுகநாவலர்
காரியப்பொரிளாகவும், முறைக்கியை பொருளாகவும்,
வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட கோடற் பொருண்
முதலியன இவ்வுருபின் பொருள்களாம்.
(உதாரணம்)
இரப்பவர்க்குப் பொன்னைக் கொடுத்தான் - கோடற்பொருள் பாம்புக்குப் பகை கருடன் - பகைதொடர்பொருள் சாத்தனுக்குத் தோழன் கொற்றன் - நட்புத்தொடர்பொருள் அரசர்க்குரித் தருங்கலம் - தகுதியுடைப்பொருள் குண்டலத்திற்குவைத்த பொன் - முதற்காரணகாரியப் பொருள் கூலிக்கு வேலை செய்தான் - நிமித்தகாரணகாரியப் பொருள் சாத்தனுக்கு மகனிவன் - முறைக்கியைபொருள்
பொன் முதற்காரணம்; அதன் காரியங் குண்டலம். வேலை நிமித்தகாரணம்; அதன் காரியங் கூலி.
குவ்வுருபு நிற்றற்குரிய சிலவிடங்களிலே, பொருட்டு, நிமித்தம் என்பனவும், குவ்வுருபின்மேல் ஆகவென்பதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உ-ம். கூழின் பொருட்டு வேலை செய்தான்
கூலியினிமித்தம் வேலை செய்தான் கூலிக்காக வேலை செய்தான்
21. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் இன், இல் என்பனவாம்.
இவை வினையையும், வினையொடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, நீக்கப் பொருளாகவும், ஒப்புப் பொருளாகவும், எல்லைப் பொருளாகவும், ஏதுப்பொருளாகவும், வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட நீக்கப்பொருண் முதலியன இவ்வுருபுகளின் பொருள்களாம். உ-ம்.

தமிழ் இலக்கணம் - பெயரியல் • 101
ਨੇ ਨੀ நீக்கப்பொருள் இேதே ஒப்புப்பொருள்
| supsuuGurBi யேர்: " | எதுப்பொருள்
பாலின் வெளிது கொக்கு என்னுமிடத்து, உயர்வு
கருதின், எல்லைப்பொருளாம்.
நீக்கப்பொருளினும், எல்லைப் பொருளினும், இன், இல், உருபுகளின் மேல், நின்று, இருந்து என்பவை, உம் பெற்றும், பெறாதுஞ் சொல்லுருபுகளாக வரும்.
உ-ம். நீக்கப்பொருள். ஊரினின்றும் போயினான், ஊரினின்று போயினான் ஊரிலிருந்தும் போயினான், ஊரிலிருந்துபோயினான்
எல்லைப் பொருள் காட்டினின்றுமூர் காவதம், காட்டினின்றுார் காவதம் காட்டிலிருந்துமூர் காவதம், காட்டிலிருந்தூர் காவதம் ஒரோவிடத்து எல்லைப்பொருளிலே, காட்டிலும் பார்க்கிலும் என்பவைகள், முன் ஐகாரம் பெற்றுச் ச்ொல்லுருபுகளாக வரும். 擎
உ-ம். அவனைக் காட்டிலும் பெரியனிவன் இவனைப் பார்க்கிலுஞ் சிறியனவன் 22. ஆறாம் வேற்றுமையினுடைய உருபுகள் அது, ஆது, அ என்பனவாம்.
இவைகளுள், அது, ஆது உருபுகள் அஃறிணை யொருமைப் பெயரையும், அ உருபு அஃறிணைப் பன்மைப் பெயரையுங் கொள்ளும்.

Page 54
102 9 ஆறுமுகநாவலர்
உ-ம். சாத்தனது கை, தனாது கை, தன கைகள்
இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, வருமொழிப் பொருளாகிய தற்கிழமைப் பொருளோடும். பிறிதின் கிழமைப் பொருளோடுஞ் சம்பந்த முடைய பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட சம்பந்தப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
தற்கிழமைப்பொருளாவது, தன்னோடு ஒற்றுமை யுடைய பொருள். அது, உறுப்பும், பண்பும், தொழிலும், ஒன்றன்கூட்டமும், பலவின் கூட்டமும், ஒன்று திரிந்தொன் றாயதும் என, அறுவகைப்படும்.
(உதாரணம்) சாத்தனது கை - உறுப்புத்தற்கிழமை சாத்தனது கருமை - பண்புத்தற்கிழமை சாத்தனது வரவு - தொழிற்றற்கிழமை நெல்லது குப்பை - ஒன்றன்கூட்டத்தற்கிழமை சேனையது தொகுதி - பலவின் கூட்டத்தற்கிழமை மஞ்சளது பொடி - ஒன்று திரிந்தொன்றாயதன்
றற்கிழமை பிறிதின்கிழமைப் பொருளாவது, தன்னின் வேறாய பொருள். அது, பொருள், இடம், காலம் என மூவகைப்படும். W (உதாரணம்). முருகனது வேல் - பொருட்பிறிதின்கிழமை முருகனது மலை - இடப்பிறிதின்கிழமை மாரனது வேனில் - காலப்பிறிதின்கிழமை இவ்வுருபுகள் நிற்றற்குரிய இடங்களில், உடைய என்பது சொல்லுருபாக வந்து, இருதிணையொருமை பன்மைப் பெயர்களையுங் கொள்ளும்,
உ-ம். சாத்தனுடைய புதல்வன், சாத்தனுடைய புதல்வர் சாத்தனுடைய வீடு சாத்தனுடைய வீடுகள்

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 103
சிறுபான்மை அதுவுருபு, அரனது தோழன், நினதடியாரொடல்லால் என உயர்திணையொருமை பன்மைப்பெயர்களையுங் கொள்ளுமென வறிக.
இவ்வீடெனது, அத்தோட்டமவனது என வருவன வற்றில், எனது, அவனது என்பன துவ்விகுதியும் அகரச்சாரி யையும் பெற்று நின்ற குறிப்புவினை முற்று. எனது போயிற்று, அவனதை வாங்கினேன் என வருவனவற்றில், எனது, அவனது என்பன, மேற்கூறியபடி வந்த குறிப்பு வினையாலணையும் பெயர். இங்ங்னமன்றி, இவ்விடங் களில் வரும் அது என்பது ஆறாம் வேற்றுமையுருபன்று.
213. ஏழாம் வேற்றுமையினுடைய உருபுகள், கண், இல், உள், இடம் முதலியனவாம்.
இவை வினையையும், வினையொடு பொருந்தும் பெயரையுங் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயர்ப் பொருளையும், வருமொழிப்பொருளாகிய தற்கிழமைப் பொருளுக்காயினும், பிறிதின்கிழமைப் பொருளுக்காயினும் இடப்பொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட இடப்பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.
(உதாரணம்)
மணியின் கணிருக்கின்ற தொளி தற் பொருளிட பனையின்கண் வாழ்கின்றதன்றில் பிறி |மாயிற்று ஊரின் கணிருக்குமில்லம் தற் | இடமிட ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருந்து பிறி மாயிற்று நாளின் கணாழிகையுள்ளது தற் காலமிட வேனிற்கட்பாதிரி பூக்கும் பிறி மாயிற்று
கையின் கணுள்ளது விரல் தற் சினையிட கையின்கண் விளங்குகின்றது கடகம் பிறி மாயிற்று

Page 55
104 9 ஆறுமுகநாவலர்
கறுப்பின்கண் மிக்குள்ளதழகு தற் குணமிட இளமையின்கண் வாய்த்தது செல்வம் பிறி மாயிற்று ஆடற்கணுள்ளது சதி தற் தொழிலிட ஆடற்கட்பாடப்பட்டது பாட்டு ÚlÓ || LOrTung
மற்றவைகளும் இப்படியே.
214. எட்டாம் வேற்றுமையினுடைய உருபுகள், படர்க்கைப் பெயரீற்றில் ஏ ஒ மிகுதலும், அவ்வீறு திரிதலும், கெடுதலும், இயல்பாதலும், ஈற்றயலெழுத்துத் திரிதலுமாம்.
இவை ஏவல் வினையைக் கொள்ளும்.
இவ்வுருபுகள், தம்மையேற்ற பெயர்ப்பொருளை, முன்னிலையின் விளிக்கப்படுபொருளாக, வேறுபடுத்தும். அப்படி வேறுபட்ட விளிக்கப்படுபொருளே இவ்வுருபு களின் பொருளாம். விளித்தல் - அழைத்தல்.
(உதாரணம்)
சாத்தனே கேளாய் 6 மிகுந்தது அப்பனோ வுண்ணாய் மிகுந்தது வேனிலாய் கூறாய் ஈறு திரிந்தது தோழ சொல்லாய் ஈறு கெட்டது பிதா வாராய் ஈறியல்பாயிற்று மக்காள் கூறிர் ஈற்றயலெழுத்துத் திரிந்தது.
25. நுமன், நுமள், நுமர் என்னுங் கிளைப்பெயர்களும், எவன் முதலிய வினைப்பெயர்களும், அவன் முதலிய சுட்டுப் பெயர்களும், தான், தாம் என்னும் பொதுப் பெயர்களும், மற்றையான், பிறன் முதலிய மற்றுப் பிற என்பன அடியாக வரும் பெயர்களும் விளி கொள்ள்ாப் பெயர்களாம்.
26. சிறுபான்மை ஒரு வேற்றுமையுருபு நிற்றற்குரிய விடத்தே, மற்றொரு வேற்றுமையுருபு மயங்கி வரும்; வரின்,

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 105
பொருளுக்கியைந்த உருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும். உ-ம்.
ஆலத்தினாலமிர்தாக்கிய கோன்; இங்கே ஐயுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆலுருபு மயங்கிற்று. காலத்தினாற்செய்த நன்றி; இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்தில் ஆனுருபு மயங்கிற்று. நாகுவேயொடு நக்கு விங்கு தோள்; இங்கே ஐயுருபு நிற்றற் குரிய விடத்தில் ஒடுவுருபு மயங்கிற்று. ஈசற்கியான் வைத்தவன்பு: இங்கே கண்ணுருபு நிற்றற்குரிய விடத்திற் குவ்வுருபு மயங்கிற்று. 217. ஒரு வேற்றுமைப்பொருள் மற்றொரு வேற்றுமை யுருபோடுந் தகுதியாக வருதலும் உண்டு. உ-ம்.
சாத்தனோடு சேர்ந்தான்; இங்கே செயப்படுபொருள் மூன்ற னுருபோடு வந்தது. மதுரையை நீங்கினான்; இங்கே நீக்கப்பொருள் இரண்ட னுருபோடு வந்தது. சீர்காழிக்கு வடக்குச் சிதம்பரம்; இங்கே எல்லைப்பொருள் நான்கனுருபோடு வந்தது. வழியைச் சென்றான்; இங்கே இடப்பொருள் இரண்டனுருபோடு வந்தது. இன்னும் இப்படி வருவனவற்றையெல்லாம் ஆராய்ந்தறிந்து கொள்க. தேர்வு வினாக்கள் - 206. பெயர்களனைத்தும் எத்தனை வேற்றுமை களை ஏற்கும்? முதல் வேற்றுமை எப்படிப் பெயர் பெறும்? எட்டாம் வேற்றுமை எப்படிப் பெயர்பெறும்? 207 முதல் வேற்றுமையினது உருபு யாது? வேற்றுமையுருபினாலே கொள்ளப்படுஞ் சொல் எப்படிப் பெயர் பெறும்? எழுவாய் வேற்றுமையுருபு எச்சொற்களைப் பயனிலையாகக் கொள்ளும்? எழுவாயுருபுக்குப் பொருள் என்ன? வினைமுதற்குப் பரியாய நாமங்கள் எவை? எழுவாய்க்கு எவை சொல்லுருபாக வரும்?

Page 56
106 9 ஆறுமுகநாவலர்
208. இரண்டாம் வேற்றுமையினது உருபு யாது? இவ்வையுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளுழ்? ஐயுருபுக்குப் பொருள் என்ன? செயப்படுபொருட்குப் பரியாய நாமங்கள் எவை? செயப்படு பொருள் எத்தனை வகைப்படும்? 209. மூன்றாம் வேற்றுமையினுடைய உருபுகள் எவை? இம்மூன்றாம் வேற்றுமையுருபுகள் எதனைப் பயனிலையாகக் கொள்ளும்? இவைகளுள் ஆல், ஆன் என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன? கருவியென்பதற்குப் பரியாய நாம் எது? கருவி எத்தனை வகைப்படும்? கருத்தா எத்தனை வகைப்படும்? ஒடு, ஒடு என்னும் இரண்டுருபுகளுக்கும் பொருள் என்ன? ஆல், ஆன் உருபுகள் நிற்றற்குரியவிடத்து எது சொல்லுருபாக வரும்? ஒடு, ஒடு உருபுகள் நிற்றற்குரியவிடத்து எது சொல்லுருபாக வரும்? 210. நான்காம் வேற்றுமையினது உருபு யாது? இக்குவ்வுருபு எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? குவ்வுருபுக்குப் பொருள் என்ன? குவ்வுருபு நிற்றற்குரியவிடத்தே எவை சொல்லுருபுகளாக வரும்? 211. ஐந்தாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? இவ்வைந்தாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? ஐந்தாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்ன? நீக்கப் பொருளினும் எல்லைப்பொருளினும் எவை சொல்லுருபுகளாக வரும்? எல்லைப் பொருளிலே வேறு சொல்லுருபுகள் வாராவோ? 212. ஆறாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? இவ்வாறாம் வேற்றுமையுருபுகளுள், எவ்வெவை எவ்வெச்சொல்லைப் பயனிலை யாகக் கொள்ளும்? ஆறாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்ன? தற்கிழமைப் பொருளாவது யாது? அத்தற்கிழமைப்பொருள் எத்தனை வகைப்படும்? பிறிதின்கிழமைப் பொருளாவது யாது? அப்பிறிதின்கிழமைப் பொருள் எத்தனை வகைப்படும்? ஆறாம் வேற்றுமையுருபுகள் நிற்றற்குரிய இடங்களில் எது சொல்லுருபாக வரும்? அது வுருபு உயர்திணையொருமை பன்மைப் பெயர்களைக் கொள்ளுதலில்லையோ? இவ்விடெனது, அத்தோட்டமவனது என வருவனவற்றில் அது என்பது ஆறாம் வேற்றுமையுருபுதான்ோ? 213. ஏழாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? ஏழாம் வேற்றுமையுருபுகள் எவைகளைப் பயனிலையாகக் கொள்ளும்? ஏழாம் வேற்றுமையுருபுகளுக்குப் பொருள் என்னை? 214. எட்டாம் வேற்றுமையினுடைய உருபுகள் யாவை? எட்டாம் வேற்றுமையுருபுகள் எதனைப் பயனிலையாகக் கொள்ளும்? எட்டாம் வேற்றுமையுருபு

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 107
களுக்குப் பொருள் என்னை? 215. இவ்விளியுருபுகளை ஏலாப் பெயர்களும் உளவோ? 216. ஒரு வேற்றுமையுருபு நிற்றற்குரிய விடத்தே மற்றொரு வேற்றுமையுருபு மயங்கி வருதல் உண்டோ? 217. ஒரு வேற்றுமைப்பொருள் மற்றொரு வேற்றுமையுருபோடுந் தகுதியாக வருதலும் உண்டோ?
பெயர்கள் உருபேற்கு முறை
218 ஐ முதலிய உருபேற்குமிடத்து, யான், நான் என்னுந் தன்மையொருமைப் பெயர்கள், என் எனவும், யாம், நாம், யாங்கள், நாங்கள் என்னுந் தன்மைப் பன்மைப் பெயர்கள், எம், நம், எங்கள், நங்கள் எனவும், விகாரப்பட்டு வரும்.
உ-ம். என்னை, எம்மை, நம்மை, எங்களை, நங்களை
மற்றையுருபுகளோடும் இப்படியே யொட்டுக.
நீ என்னும் முன்னிலையொருமைப் பெயர், நின், உன் எனவும், நீர் முதலிய முன்னிலைப் பன்மைப் பெயர்கள், நும், உம் எனவும், நீங்கள் என்னும் முன்னில்ைப் பன்மைப் பெயர், நுங்கள், உங்கள் எனவும், விகாரப்பட்டு வரும்.
உ-ம். நின்னை, உன்னை, நும்மை, நுங்களை, உங்களை
மற்றையுருபுகளோடும் இப்படியே யொட்டுக. தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள், தன், தம், தங்கள் என விகாரப்பட்டு வரும்.
உ-ம். தன்னை, தம்மை, தங்களை
மற்றையுருபுகளோடும் இப்படியே யொட்டுக.
இவைகளுள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு குவ்வுருபு புணருமிடத்து, நடுவே அகரச்சாரியை தோன்றும். இச்சாரியை அகரத்தின் முன்னும், ஆறனுருபுகளின் முன்னும், தனிக்குற்றொற்று இரட்டாவாம்.

Page 57
108 9 ஆறுமுகநாவலர்
உ-ம். தனக்கு, தனது, தனாது, தன 219. உயிரையும், மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச்சொற்கள், இன்னுருபொழிந்த உருபுகளை ஏற்குமிடத்துப் பெரும்பாலும் இன்சாரியை பெறும். உ-ம்.
கிளியினை பொன்னினை நாகினை கிளியினால் பொன்னினால் நாகினால் கிளியிற்கு பொன்னிற்கு நாகிற்கு கிளியினது பொன்னினது நாகினது
கிளியின்கண் பொன்னின்கண் நாகின்கண்
இப்பெயர்கள், குவ்வுருபேற்குமிடத்துக் கிளியினுக்கு, நாகினுக்கு என இன்சாரியையோடு உகரச்சாரியையும், பொன்னுக்கு, மண்ணுக்கு என இன்சாரியையின்றி உகரச் சாரியையும், பெறுமெனவுங்கொள்க, மற்றவைகளும் இப்படியே வரும்.
220. ஆ மா, கோ என்னும் இம்மூன்று பெயர்களும், உருபேற்குமிடத்து, இன்சாரியையேயன்றி, னகரச் சாரியையும் பெறும். குவ்வுருபிற்கு னகரச்சாரியையோடு உகரச்சாரியையும், னகரச்சாரியையின்றி உகரச் சாரியையும் வரும.
உ-ம். ஆவினை ஆனை
ஆவினால் ஆனால் ஆவிற்கு ஆனுக்கு, ஆவுக்கு ஆவின் ஆனின் ஆவினது ஆனது ஆவின்கன் ஆண்கண
மா, கோ, என்பவற்றோடும் இப்படியே யொட்டுக. இங்கே மா-விலங்கு, கோ-அரசன்.
22. அது, இது, உது என்னுஞ் சுட்டுப் பெயர்களும், எது, ஏது, யாது என்னும் வினாப் பெயர்களும், உருபேற்கு

தமிழ் இலக்கணம் - பெயரியல் 6 109
மிடத்து, அன்சாரியையும், சிறுபான்மை இன்சாரியையும் பெறும். w
உ-ம். அதனை, அதனால், , அதினால் இதனை, இதனால், இதினால் எதனை, எதனால் எதினால்
மற்றவைகளும் இப்படியே.
இவை சிறுபான்மை, அதை, இதை, எதை எனச் சாரியை பெறாதும் வரும்.
222. அவை, இவை, உவை, எவை, கரியவை, நெடியவை முதலிய ஐகார வீற்றஃறிணைப் பன்மைப் பெயர்கள், உருபேற்குமிடத்து, ஈற்றைகாரங் கெட்டு, அற்றுச்சாரியை பெறும். நான்கனுருபும் ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச்சாரியை மேல் இன்சாரியையும் பெறும். உ-ம்.
அவற்றை எவற்றை கரியவற்றை
அவற்றால் எவற்றால் கரியவற்றால் அவற்றிற்கு எவற்றிற்கு கரியவற்றிற்கு அவற்றின் எவற்றின் கரியவற்றின் அவற்றது எவற்றது கரியவற்றது
அவற்றின்கண் எவற்றின்கண் கரியவற்றின்கண்
மற்றவைகளும் இப்படியே
223. பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா என்னும் அஃறிணைப் பன்மைவினாப் பெயரும், உருபேற்குமிடத்து, அற்றுச்சாரியை பெறும். நான்கனுருபும், ஏழனுருபும் ஏற்குமிடத்து, அற்றுச் சாரியைமேல் இன் சாரியையும் பெறும்.
உ-ம். பலவற்றை சிறியவற்றை யாவற்றை
பலவற்றால் சிறியவற்றால் யாவற்றால் பலவற்றிற்கு சிறியவற்றிற்கு யாவற்றிற்கு

Page 58
110 0 ஆறுமுகநாவலர்
பலவற்றின் சிறியவற்றின் யாவற்றின்
பலவற்றது சிறியவற்றது யாவற்றது
பலவற்றின்கண் சிறியவற்றின்கண் யாவற்றின்கண்
மற்றவைகளும் இப்படியே
224. மகரவீற்றுப் பெயர்ச்சொற்கள், உருபேற்கு மிடத்து, அத்துச்சாரியை பெறும்; பெறுமிடத்து, ஈற்று மகரமுஞ் சாரியை முதல் அகரமுங் கெடும். சிலவிடத்து அவ்வத்துச் சாரியையின்மேல் இன்சாரியையும் பெறும்.
உ-ம். மரத்தை மரத்தினை மரத்தால் மரத்தினால் மரத்துக்கு மரத்திற்கு மரத்தின் மரததது மரத்தினது மரத்துக்கண் மரத்தின்கண்
225. எல்லாமென்னும் பெயர், அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து, ஈற்று மகரங்கெட்டு, அற்றுச். சாரியையும், உருபின்மேல் முற்றும் மையும் பெறும்; உயர்திணைப் பொருளில் உருபேற்குமிடத்து, நம்முச் சாரியையும், உருபின்மேல் முற்றும்மையும் பெறும்.
உ-ம். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் எல்லாநம்மையும் எல்லாநம்மாலும் எல்லாநம்மையும் என்பது உயர்திணைத் தன்மைப்பன்மை.
226. உருபேற்குமிடத்து, எல்லாரென்பது, தம் முச்சாரியையும், எல்லீரென்பது நும்முச்சாரியையும் பெற்று, உருபின்மேல் முற்றும்மையும் பெறும்.
உ-ம். எல்லார்தம்மையும் எல்லீர்நும்மையும் எல்லார்தம்மாலும் எல்லீர்நும்மாலும்
எல்லாரையும், எல்லாராலும், எ-ம். எல்லிரையும்,
எல்லீராலும், எ-ம். சாரியை பெறாதும் வரும்.

தமிழ் இலக்கணம் - பெயரியல் 9 11
227 இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக்கண்ணும், வரும்.
உ-ம். என்கை, எங்கை, எங்கள் கை, நங்கை, நங்கள் கை, நின்கை, உன்கை, நுங்கை, நுங்கள் கை, உங்கை, உங்கள்கை, தன்கை, தங்கை, தங்கள் கை, எ-ம். கிளியின் கால், கொக்கின் கண், ஆவின் கொம்பு, பலவற்றுக்கோடு, மரத்துக்கிளை, எல்லாவற்றுக்கோடும், எ-ம். வரும். தேர்வு வினாக்கள் - 218. ஐ முதலிய உருபேற்குமிடத்துத் தன்மைப் பெயர்கள் எப்படி விகாரப்பட்டு வரும்? முன்னிலைப் பெயர்கள் எப்படி விகாரப்பட்டு வரும்? தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்கள் எப்படி விகாரப்பட்டு வரும்? இவைகளுக்குள்ளே, தனிக்குற்றொற்றிறுதியாக நின்ற பெயர்களோடு நான்கனுருபும் ஆறனுருபுகளும் புணருமிடத்து எப்படியாகும்? 219. உயிரையும், மெய்யையும், குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய பெயர்ச் சொற்கள் உருபேற்குமிடத்து எப்படியாம்? 220. ஆ. மா, கோ என்னும் பெயர்கள், உருபேற்குமிடத்து இன்சாரியையேயன்றி, வேறு சாரியையும் பெறுமோ? 221. அது, இது, உது என்னுஞ் சுட்டுப் பெயர்களும், எது, ஏது, யாது என்னும் வினாப் பெயர்களும் உருபேற்குமிடத்து எப்படியாம்? 222. அவை, இவை, உவை, எவை, கரியவை, நெடியவை முதலிய ஐகாரவிற்றஃறிணைப் பன்மைப் பெயர்கள் உருபேற்கு மிடத்து எப்படியாம்? 223. பல, சில, சிறிய, பெரிய, அரிய முதலிய அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர்களும், யா வென்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரும் உருபேற்குமிடத்து எப்படியாம்? 224. மகரவீற்றுப் பெயர்கள் உருபேற்குமிடத்து எப்படியாம்? 225. எல்லாமென்னும் பெயர் அஃறிணைப் பொருளில் உருபேற்குமிடத்து எப்படியாம்? 226. உருபேற்குமிடத்து எல்லார் என்பது எப்படியாம்? எல்லீர் என்பது எப்படியாம்? 227. இவ்வாறு உருபு புணர்ச்சிக்குக் கூறிய முடிபுகள், உருபு தொக்க பொருட்புணர்ச்சிக்கண்ணும் வருமோ?
பெயரியல் முற்றிற்று.

Page 59
12 9 ஆறுமுகநாவலர்
2. வினையியல்
228. வினைச்சொல்லாவது, பொருளினது புடை பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம்.
புடைபெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெணி னும் பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒருபொருட் சொற்கள்.
தேர்வு வினாக்கள் - 228. வினைச்சொல்லாவது யாது? புடைபெயர்ச்சியென்பது என்ன? வினைக்குப் பரியாயநாமம் என்ன?
வினை நிகழ்ச்சிக்குக் காரணம்
229. வினையானது வினைமுதல், கருவி, இடம், செயல், காலம், செயப்படுபொருள் என்னும் இவ்வாறுங் காரணமாகவேனும், இவற்றுட் பல காரணமாகவேனும், நிகழும். உ-ம்.
வணைந்தான் இத்தெரிநிலைவினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமுதல் குயவன்; முதற்கருவி மண், துணைக்கருவி தண்டசக்கர முதலியன; இடம் வனைதற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு முதற்காரணமாகிய செய்கை, காலம் இறந்தகாலம்; செயப்படு பொருள் குட முதலியன. இருந்தான். இத்தெரிநிலைவினை, செயப்படு பொருளொழிந்த ஐந்துங் காரணமாக வந்தது. உடையன்: இக்குறிப்புவினை, கருவியுஞ் செயப்படு பொருளுமொழிந்த நான்குங் காரணமாக வந்தது. 230 வினைமுதன் முதலிய ஆறனுள்ளே, தெரிநிலை வினைமுற்றின்கண், வினைமுதலுஞ் செயலுங் காலமு மாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங் குறிப்பாகவுந் தோன்றும்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 11.
தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங் களின் கண் செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுந் தோன்றும்.
வினைமுதல் பால் காட்டும் விகுதியினாலும், செயல் பகுதியினாலும், காலம் இடைநிலையும் விகுதியும் விகாரப்பட்ட பகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினாலுந் தோன்றும். எச்சவினைகட்குப் பால் காட்டும் விகுதி யின்மையால், அவற்றில் வினைமுதல் வெளிப்படத் தோன்றாதாயிற்று. உ-ம்.
உண்டான். இத்தெரிநிலை வினைமுற்றிலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுதலும் வெளிப்படையாகவும், மற்றவை குறிப்பாகவுந் தோன்றின. உண்ட இத்தெரிநிலைவினைப் பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், மற்றவை குறிப்பாகவுந் தோன்றின. كر" - உண்டு. இத்தெரிநிலை வினையெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற்காலமும் வெளிப்படையாகவும், மற்றவை குறிப்பாகவுந் தோன்றின. 231. வினைக்குறிப்பு முற்றின்கண் வினை முதன் மாத்திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந் தோன்றும். --
வினைக்குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்களின் கண், வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றும். உ-ம். கரியன் இக்குறிப்பு வினைமுற்றிலே, விகுதியால் வினை முதல் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந்

Page 60
14 9 ஆறுமுகநாவலர்
கரிய இக்குறிப்புவினைப் பெயரெச்சத்திலே, வினைமுதன்
முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.
இன்றி. இக்குறிப்புவினை வினையெச்சத்திலே, வினைமுதன்
முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின. தேர்வு வினாக்கள் - 229. வினையானது எவை காரணமாக நிகழும்? 230. தெரிநிலை வினைமுற்றின்கண் வினை முதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்? தெரிநிலைவினைப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்? வினைமுதல், செயல், காலம் என்னும் மூன்றும் எவ்வெவ் வுறுப்புக்களினாலே தோன்றும்? யாது காரணத்தால் எச்சவினைகளில் வினை முதல் வெளிப்படத் தோன்றாதாயிற்று? 231. வினைக் குறிப்பு முற்றின்கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்? வினைக் குறிப்புப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண் வினைமுதன் முதலிய ஆறும் எப்படித் தோன்றும்?
காலம்
232. காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூவகைப்படும்.
இறப்பாவது தொழிலது கழிவு நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை. எதிர்வாவது தொழில் பிறவாமை. தேர்வு வினாக்கள் - 232. காலமாவது யாது? இறப்பாவது யாது? நிகழ்வாவது யாது? எதிர்வாவது யாது?
வினைச்சொற்களின் வகை 233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச் சொற்கள், தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் என, இருவகைப்படும். w
234. தெரிநிலைவினையாவது, காலங்காட்டும் உறுப் புண்மையினாலே, காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாம். உ-ம்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 115
நடந்தான். இது, தகரவிடை நிலையினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும்படி நிற்றலினாலே, தெரிநிலைவினை.
உண்கும். இது, கும் விகுதியினால் எதிர்காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்றலினாலே, தெரிநிலைவினை.
பெற்றான். இது, பெறு, பெற்று என விகாரப்பட்டு நின்ற பகுதியினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும்படி நிற்றலினாலே, தெரிநிலைவினை.
தெரிநிலை வினைகள் தோன்றுதற்குரிய முதனிலை யடிகள் இவையென்பது பதவியலில் நாற்பத்தாறாம் வசனத்திற் கூறப்பட்டது.
235. குறிப்புவினையாவது, காலங்காட்டும் உறுப் பின்மையினாலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது குறிப்பினாலே தோன்றும்படி, நிற்கும்
வினையாம். உ-ம்.
பொன்னன். இது, பொன்னையுடையனாயினோன் என இறந்தகாலங் கருதியாயினும், பொன்னையுடையனாகின்றான் என நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடையனாவான் என எதிர்காலங் கருதியாயினுந் தன்னை ஒருவன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாற் கேட்போனுக்குத் தோன்றும்படி நிற்றலினாலே, குறிப்புவினை.
பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒருவனுக்குப் பெயராய் நின்று எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது பெயர்சொல்; முக்காலம் பற்றிப் புடை பெயரும் ஒருவனது வினை நிகழ்ச்சியை உணர்த்திப் பெயர்க்குப் பயனிலையாய் வரும்போது குறிப்பு வினைமுற்றுச்சொல்; அங்ங்ணம் வினைமுற்றாய் நின்று பின் அவ்வினை நிகழ்ச்சி காரணமாக அவனுக்குப் பெயராகி எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்.

Page 61
16 9 ஆறுமுகநாவலர்
குறிப்பு வினைகள் தோன்றுதற்குரிய முதனிலை யடிகள் இவையென்பது பதவியலில் நாற்பத்து நான்காம் வசனத்திற் கூறப்பட்டது.
236. தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் இரண்டும், முற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும் என்ன மும்மூன்று வ்கைப்படும். எனவே, தெரிநிலை வினை , முற்றும், தெரிநிலைவினைப் பெயரெச்சமும், தெரிநிலை வினையெச்சமும், குறிப்பு வினைமுற்றும், குறிப்பு வினைப் பெயரெச்சமும், குறிப்பு வினை வினையெச்சமும் என, வினைச் சொற்கள் அறுவகையாயின.
237 இவ்வறுவகை வினைச்சொற்களும், உடன்பாட்டி லும் எதிர்மறையிலும் வரும்.
உடன்பாட்டு வினையாவது. தொழிலினது நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும், விதிவினையெனினும், பொருந்தும்.
உ-ம். நடந்தான் நடந்த நடந்து பெரியன் பெரிய மெல்ல
எதிர்மறைவினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம். எதிர்மறை வினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.
உ-ம். நடவான் நடவாத 5L6) isg
இலன் இல்லாத இன்றி 238. வினைச்சொற்கள், இருதிணையைம்பான் மூவிடங்களுள் ஒன்றற்கு உரிமையாகியும், பலவற்றிற்குப் பொதுவாகியும், வழங்கும். தேர்வு வினாக்கள் - 233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய வினைச்சொற்கள் எத்தனை வகைப்படும்? 234. தெரிநிலை வினையாவது யாது? 235. குறிப்பு வினையாவது யாது? பொன்னன் என்பது எத்தனை வகைச் சொல்லாகும்? அது எப்பொழுது

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 117
பெயர்ச்சொல்? எப்பொழுது குறிப்புவினைமுற்றுச் சொல்? எப்பொழுது குறிப்பு வினையாலணையும் பெயர்? 236. தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் இரண்டும் தனித்தனி எத்தனை வகைப்படும்? 237. இவ்வறுவகை வினைச்சொற்களும் எவ்வெப் பொருளில் வரும்? உடன்பாட்டு வினையாவது யாது? எதிர்மறை வினையாவது யாது? 238. வினைச் சொற்கள் இருதிணையைம்பான் மூவிடங்களைப் பற்றி எப்படி வழங்கும்?
முற்று வினை
239 முற்றுவினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.
இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன: பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம்.
உ-ம். செய்தான் சாத்தன் நல்லன் சீர்த்தன்
குளிர்ந்தது நிலம் நல்லது நிலம் வந்தது கார் நல்லது கார் குவிந்தது கை நல்லது கை பரந்தது பசப்பு நல்லது பசப்பு ஒழிந்தது பிறப்பு நல்லது பிறப்பு
தேர்வு வினாக்கள் - 239. முற்றுவினையாவது யாது? முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன எவை?
படர்க்கை வினைமுற்று
240. படர்க்கை வினைமுற்று, உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கை வினை முற்றும், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணையொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றும்,

Page 62
118 9 ஆறுமுகநாவலர்
அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றும் என, ஐந்து வகைப்படும்.
241. அன், ஆன் என்னும் விகுதிகளை f இறுதியில் உடைய வினைச் சொற்கள், உயர்திணையாண்பா லொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். உ-ம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி.
நடந்தனன் நடக் நடப்பன் குழையன் அவன் நடந்தான் கின்றனன் நடப்பான் | குழையான்
நடக் கின்றான்
242. அள், ஆள் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், உயர்திணைப் பெண்பா லொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம். உ-ம்.
இ.தெரி, நிதெரி. எ.தெரி. குறி.
நடந்தனள் நடக் நடப்பள் குழையள் வள்
கின் 8 A مه || || நடநதாள னறனள நடபபாள குழையாள
நடக் கின்றாள் 243. அர், ஆர் என்னும் விகுதிகளை இறுதியில்
உடைய வினைச்சொற்கள், உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்புவினை
முற்றுமாம். உ-ம்.
இ.தெரி, நிதெரி. எ.தெரி. குறி.
நடந்தனர் நடக் நடப்பர் குழையர் அவர் நடநதாா கின்றனர் நடப்பார் குழையாா
நடக் கின்றார்

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 19
செய்யுளிலே பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ்விகுதிகளின்றி, ப, மார் என்னும் விகுதிகளும் வரும். அவை இடைநிலையின்றித் தாமே எதிர் காலங் காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
உ-ம். நடப்ப நடமார் - அவர்
இவ்விரண்டற்கும் நடப்பார் என்பது பொருள்.
244. து, று என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் அஃறிணையொன்றன்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். இவற்றுள், றுவ்விகுதி, இறந்தகாலவிடைநிலையோடன்றி, நிகழ்கால வெதிர்காலவிடைநிலைகளோடு கூடி வராது.
2--D.
இதெரி நிதெரி எதெரி குறி
நடந்தது நடக்கின்றது நடப்பது குழையது கூயிற்று - | — 9ےT00
றுவ்விகுதி, வந்தன்று, உண்டன்று, சென்றன்று எனத் தடற வொற்றிடைநிலைகளின் முன்னும், புக்கன்று விட்டன்று, பெற்றன்று என விகாரப்பட்டிறந்தகாலங் காட்டுங் கு,டுறு வீற்றுப் பகுதிகளின் முன்னும், அன்சாரியை பெற்று வரும். இவை, முறையே, வந்தது. உண்டது, சென்றது, புக்கது, விட்டது, பெற்றது எனப் பொருள்படும். றுவ்விகுதி, கூயிற்று, ஒடிற்று என இன்னிடை நிலையின் முன் மாத்திரம், சாரியை பெறாது வரும்.*
لیگ
அற்று, இற்று, எற்று என்பவை, சுட்டினும் வினாவினும் வந்த வினைக்குறிப்பு முற்றுக்கள். இவை,
* தந்தின்று என, றுவ்விகுதி தகரவிடைநிலையின் முன் இன்சாரியை பெற்றதன்றோ எனின்; அன்று. அது, தந்தன்று என்னும் உடன்பாட்டு வினையை மறுத்தற்குத் தகரவிடைநிலைக்கும் றுவ்விகுதிக்கும் இடையே இல்லென்னும் எதிர்மறையிடைநிலை ஏற்று வந்த மறைவினையென்றறிக. தந்தின்று தந்ததில்லையெனப் பொருள்படும்.

Page 63
120 0 ஆறுமுகநாவலர்
முறையே, அத்தன்மைத்து, இத்தன்மைத்து, எத்தன்மைத்து எனப் பொருள்படும்.
டுவ்விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃறிணையொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்றாம். இவ்விகுதி தெரிநிலை வினைமுற்றிற்கு இல்லை.
உம் பொருட்டு (=பொருளையுடையது)
ஆதிரைநாட்டு (= ஆதிரை நாளினிடத்தது) 93ےl குண்டுகட்டு (= ஆழமாகிய கண்ணையுடையது) 245. அ என்னும் விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃறிணைப் பலவின்பாற்படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்புவினை முற்றுமாம்.
இவ்விகுதி, அன்சாரியை பெற்றும், பெறாதும், வரும்.
ad-D.
இ.தெரி. நி.தெரி. எ.தெரி. குறி. நடந்தன நடக்கின்றன நடப்பன கரியன நடந்த நடக்கின்ற நடப்ப* கரிய
ஆ என்னும் விகுதியை இறுதியில் உடைய வினைச்சொல், அஃறிணைப் பலவின்பாற்படர்க்கை யெதிர்மறைத் தெரிநிலைவினை முற்றாம். இவ்விகுதி குறிப்புவினை முற்றிற்கு இல்லை. உ-ம்.
நடவா - அவை
அவை
* நடப்ப என்னும் உயர்திணைப்பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினை முற்றும் வேறு நடப்ப என்னும் அஃறிணைப் பலவின்பாற்படர்க்கைத் தெரிநிலைவினைமுற்றும் வேறு. முன்னையது, நட என்னும் பகுதியும், ப என்னும் எதிர்காலப் பலர்பாற்படர்க்கை விகுதியுமாகப் பகுக்கப் பட்டு வரும். பின்னையது, நட என்னும் பகுதியும், ப் என்னும் எதிர்கால விடைநிலையும், அ என்னும் பலவின்பாற்படர்க்கை விகுதியுமாகப் பகுக்கப்பட்டு, வரும்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 121
தேர்வு வினாக்கள் - 240. படர்க்கை வினைமுற்று எத்தனை வகைப்படும்? 241. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? 242. உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? 243. உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகளும் வருமோ? 244. அஃறிணையொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? து, று என்னும் இருவிகுதிகளும் முக்கால விடைநிலைகளோடும் வருமோ? றுவ்விகுதி எவ்விடங்களின் எச்சாரியை பெற்று வரும்? எவ்விடத்துச் சாரியை பெறாது வரும்? அஃறிணை யொன்றன்பாற் படர்க்கை வினைமுற்றுக்குத், து, று என்னும் இருவிகுதிகளுமன்றி, வேறு விகுதி இல்லையோ? 245. அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றுக்கள் எவை? அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினை முற்றுக்கு வேறு விகுதி இல்லையோ?
தன்மை வினைமுற்று
246. தன்மை வினைமுற்றுத், தன்மையொருமை, வினைமுற்றும், தன்மைப் பன்மை வினை முற்றும் என, இருவகைப்படும். له به
247 என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுமாம். உ-ம்.
இ.தெரி. நிதெரி.
உண்டனென் உண்கின்றனென்
உண்டேன் உண்கின்றேன்
உண்டனன் உண்கின்றனன் A.
எ.தெரி. குறி.
உண்குவென் குழையினென்
உண்பேன் குழையினேன்
உண்பன் குழையினன்

Page 64
122 0 ஆறுமுகநாவலர்
செய்யுளிலே, தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றிற்கு, இவ்விகுதிகளன்றி, அல், கு, டு, து, று என்னும் விகுதிகளும் வழங்கும்.
இவைகளுள், அல் விகுதி எதிர்காலவிடைநிலைக ளோடு மாத்திரம் வரும். மற்றை நான்கு விகுதிகளும் இடை நிலையின்றித் தாமே காலங்காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
(உதாரணம்)
விகு. இ.தெ. எ.தெ.
அல் உண்பல் கு a- உண்கு us G உண்டு -- ĝi வநது வருது
சென்று சேறு
248. அம், ஆம், எம், ஏம், ஒம் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், தன்மைப்பன்மைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். உ-ம்.
இ.தெரி நிதெரி
உண்டனம் உண்கின்றனம்
உண்டாம் உண்கின்றாம்
உண்டனெம் . உண்கின்றனெம்
உண்டேம் உண்கின்றேம் உண்டோம் உண்கின்றோம்
LUFTO
எ.தெரி. குறி.
உண்பம் குழையினம்
உண்பாம் குழையினாம்
உண்பெம் குழையினெம்
உண்பேம் குழையினேம்
உண்போம் குழையினோம்

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 123
செய்யுளில்ே, தன்மைப்பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ்விகுதிகளின்றி, கும், டும், தும், றும் என்னும் விகுதிகளும் வழங்கும்.
இவை இடைநிலையின்றித் தாமே காலங் காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
விகு. இ.தெரி. எ.தெரி.
கும் உண்கும்
டும் உண்டும் ким ULO
தும் வந்தும் வருதும்
றும் சென்றும் சேறும் தேர்வு வினாக்கள் - 246. தன்மை வினைமுற்று எத்தனை
வகைப்படும்? 247. தன்மையொருமை வினை முற்றுக்கள் எவை? தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றிற்கு இவ்விகுதிகளன்றி வேறு விகுதிகளும் வழங்குமோ? அல் விகுதி எக்காலவிடைநிலைக ளோடு வரும்? 248. தன்மைப்பன்மை வினைமுற்றுக்கள் எவை? தன்மைப்பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகளின்றி வேறு விகுதிகளும் வழங்குமோ? ,' ه
முன்னிலை வினைமுற்று 249 முன்னிலை வினைமுற்று, முன்னிலையொருமை வினைமுற்றும், முன்னிலைப் பன்மை வினைமுற்றும் என இருவகைப்படும்.
250 ஐ ஆய், இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். உ+ம்.
இதெரி. நி.தெரி. எ.தெரி. குறி.
உண்டனை உண்கின்றனை உண்பை குழையினை நீ உண்டாய் உண்கின்றாய் உண்பாய் | குழையாய்
ഉ_ങ്ങ് உண்ணாநின்றி சேறி வில்லி

Page 65
124 9 ஆறுமுகநாவலர்
இகரவிகுதி எதிர்காலத்தை இடைநிலையின்றித் தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
251. இர், ஈர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், முன்னிலைப்பன்மைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். உ-ம்.
இ.தெரி. நி.தெரி எதெரி. குறி.
உண்டனிர் உண் உண்பிர் குழையினிர் நீர் உண்டீர் கின்றனிர் உண்பீர் குழையீர்
உண்கின்றீர் தேர்வு வினாக்கள் - 249. முன்னிலை வினைமுற்று எத்தனை
வகைப்படும்? 250. முன்னிலையொருமை வினைமுற்றுக்கள் எவை? 251. முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்கள் எவை?
எதிர்மறை வினைமுற்று
252. எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றுக்கள், அல், இல் என்னும் எதிர்மறைப் பண்படியாகத் தோன்றிப் பால்காட்டும் விகுதிகளைப் பெற்று, வருவனவாம். உ-ம்.
படர்க்கை - அல்லன்; அல்லள்; அல்லர்; அன்று; அல்ல (அல்லன)
இலன், இலள், இலர்; இன்று; இல; இல்லன) தன்மை - அல்லேன்; அல்லேம்; இலேன்; இலேம்; முன்னிலை - அல்லாய்; அல்லீர்; இலாய்; இலிர்
இன்மை என்பது, ஒரு பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடைமைக்கும் மறுதலை, உண்மை உளதாதல். உ-ம்.
உண்மை இன்மை
ங்கே சாத்தனுளன் ங்கே சாத்தனிலன் வனிடத்தே அறமுண்டு வனிடத்தே அறமின்று

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 125
266)) இன்மை
வன் பொருளுடையன் வன் பொருளிலன் து குணமுடையது குணமில்லது
அன்மை என்பது, ஒருபொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மறுதலை; பிறிது பொருளாதலைக் காட்டும் என்றபடி, உ-ம்.
இவன் சாத்தனல்லன்; (கொற்றன்) இஃதறணன்று; (மறம்
253 எதிர்மறைத் தெரிநிலை வினை முற்றுக்கள், இல், அல், ஆ என்னும் எதிர்மறை இடைநிலைகளோடு* பால் காட்டும் விகுதிகளைப் பெற்று, வருவனவாம்.
இவற்றுள், இல் இடைநிலை இறந்தகாலவிடைநிலை யோடும், விகாரப்பட்டிறந்த காலங்காட்டும் பகுதியோடும், நிகழ்கால விடைநிலையோடுங் கூடி வரும். இனி இடைநிலையோடுகூடாது, இல் இடைநிலை குச்சாரியை பெற்றும், அல், இடைநிலை குச்சாரியை பெற்றும் பெறாதும், ஆகாரவிடைநிலை சாரியை பெறாதும் எதிர் காலமுணர்த்தி வரும்.
உ-ம். நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம். நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற
விகுதிகளோடும் இப்படியே யொட்டிக் கொள்க.
* இல், அல், ஆ இம்மூன்றையும் எதிர்மறை விகுதியென்பர் சிலர். எதிர்மறை யிடைநிலையென்பதே சேனாவரையர் சிவஞானமுனிவர் முதலியோர் துணிவு. நடவா என்னும் அஃறிணைப்பலவின்பாற் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம், வேறுவிகுதி வேண்டாது, தானே எதிர்மறைப் பொருளோடு பலவின்பாற்படர்க்கைப்பொருள்ையுந் தந்து நிற்றலின், அங்கு மாத்திரம் விகுதியேயாமென்றறிக.

Page 66
126 % ஆறுமுகநாவலர்
ஆகாரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக் கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.
இங்ங்னமன்றி, உடன்பாட்டுத் தெரிநிலைவினை முற்றுக்களே, அல் என்னும் பண்படியாகத் தோன்றிய எதிர்மறைச் சிறப்பு வினைக்குறிப்போடாயினும், இல்லை யென்னும் எதிர்மறைப் பொதுவினைக்குறிப்போடாயினுங் கூடி, ஒரு சொன்னீர்மைப்பட்டு, எதிர்மறைத தெரிநிலை வினைமுற்றுக்களாயும் வரும்.
உ-ம். உண்டானல்லன், உண்டேனல்லேன், உண்டாயல்லை, எ-ம்.
வந்தானில்லை, வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.
தேர்வு வினாக்கள் - 252. எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றுக்கள் எவை? இன்மையென்பது என்னை? அன்மையென்பது என்னை? 253. எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? இவற்றுள், இல் இடைநிலை எப்படி வரும்? அல் இடைநிலை எப்படி வரும்? ஆகார விடைநிலை எப்படி வரும்? எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் இங்ங்ணமன்றி இன்னும் எங்ங்ணம் வரும்?
முன்னிலையேவல் வினைமுற்று
254. முன்னிலையேவல் வினைமுற்று, முன்னிலை யேவலொருமை வினை முற்றும், முன்னிலையேவற்பன்மை வினைமுற்றும் என இருவகைப்படும்.
255. ஆய், இ, அல், ஏல், ஆல் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்களும், ஆய் விகுதி புணர்ந்து குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் வினைச் சொற்களும், முன்னிலையேவலொருமைத் தெரிநிலை வினைமுற்றுக்களாம்.
இவற்றுள், அல், ஏல், ஆல் என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையிடத்து வரும். உ-ம்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 127
略 d - 2 TTLU $2) — [[უ]T
உண்ணல் உண்ணேல் மறால்
ஏவல் விகுதிகள் இடைநிலையின்றித் தாமே எதிர்காலங்காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.
எதிர்மறையேவலொருமை வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதி என, எதிர்மறை ஆகார விடைநிலையின்முன் தகரவெழுத்துப்பேற்றோடு ஏகார விகுதி இகரவிகுதிகளுள் ஒன்று பெற்றும் வரும்.
256 ஈர், உம், மின் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள், முன்னிலையேவற்பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்களாம்.
உ-ம். உண்ணீர்? உண்ணும் உண்மின்-நீர்
எதிர்மறையேவற் பன்மை வினை முற்றுக்கள், உண்ணன்மின், நடவன்மின் எனப் பகுதிக்கும் மின் விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்றுவரும்.
1. உண்ணாய் என்னும் முன்னிலையொருமையெதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றும் வேறே; உண்ணாய் என்னும் முன்னிலையேவ லொருமைத் தெரிநிலைவினைமுற்றும் வேறே. முன்னையது, உண் என்னும் பகுதியும், ஆ என்னும் எதிர்மறையிடை நிலையும், ஆய் விகுதியும் பெற்று, ஆகாரவிடைநிலை கெட்டு முடிந்தது. பின்னையது, உண் என்னும் பகுதியும், ஆய் விகுதியும் பெற்று, முடிந்தது.
2. உண்ணிர் என்னும் முன்னிலைப்பன்மையெதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றும் வேறே, உண்ணிர் என்னும் முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலைவினைமுற்றும் வேறே. முன்னையது, உண் என்னும் பகுதியும், ஆ என்னும் எதிர்மறை இடை நிலையும், ஈர் விகுதியும் பெற்று, இடைநிலை ஆகாரங் கெட்டு, முடிந்தது. பின்னையது, உண் என்னும் பகுதியும், ஈர் விகுதியும் பெற்று, முடிந்தது.

Page 67
128 9 ஆறுமுகநாவலர்
தேர்வு வினாக்கள் - 254. முன்னிலையேவல் வினைமுற்று எத்தனை வகைப்படும்? 255. முன்னிலையேவலொருமைத் தெரிநிலை வினை முற்றுக்கள் எவை? இவற்றுள், எவை எதிர்மறையிடத்து வரும்? எதிர்மறையேவலொருமை வினைமுற்றுக்கள் இன்னும் எப்படி வரும்? 256. முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினை முற்றுக்கள் எவை? எதிர்மறையேவற் பன்மை வினைமுற்றுக்கள் எவை?
வியங்கோள் வினைமுற்று
257 க, இய, இயர், அ. அல் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்சொற்கள் வியங்கோள் வினைமுற்றுக்களாம்.
வியங்கோளாவது, இருதிணையைம்பான் மூவிடங் கட்கும் பொதுவாகிய ஏவல்.
ககரவிகுதி - வாழ்க உண்க யான், யாம், இயவிகுதி - ா உண்ணிய நீ, நீர், இயர்விகுதி - வாழியர் உண்ணியர் அவன், அகரவிகுதி - வர உண்ண அவள், அவர், அல்விகுதி - ஒம்பல் எனல் அது, அவை
வாழிய என்பது, ஆ வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர்மெய் கெட்டு வரும்.
வர = வருக, உண்ண = உண்க ஒம்பல் = ஒம்புக, எனல் = என்க சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே, நடக்கக்கடவன், நடக்கக்கடவள், எ-ம். நடப்பானாக, நடப்பாளாக, நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற் குரியவாய் வருமெனவுங் கொள்க.
எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க, உண்ணற்க எனப் பகுதிக்குங் ககரவிகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்று வரும்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 129
அன்றியும், மகனெனல் என்னுமிடத்து மகனென்று சொல்லற்க எனவும், "மரீஇயதொரால்' என்னுமிடத்து மரீயதொருவற்க. எ-ம். பொருள்பட நிற்றலால், அல், ஆல் இரண்டும் எதிர்மறை வியங்கோள் விகுதிகளாய் வருமெனவும் அறிக.
மேற்கூறிய ஏவல் விகுதிகளும் இவ்வியங்கோள் விகுதிகளும் இடைநிலையின்றித் தாமே எதிர்காலங் காட்டல் பதவியலிற் பெறப்பட்டது. தேர்வு வினாக்கள் - 257. வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை?
வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினை முற்றுக்கள் எவை?
செய்யுமென் முற்று 258. செய்யுமென்னும் வாய்பாட்டுத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாய் வரும்.
உ-ம். அவனுண்ணும் அவளுண்ணும்
அதுவுண்ணும் அவையுண்ணும் இம்முற்று வினைச்சொல்லில் உம் விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங் காட்டுதல் பதவியலிற் பெறப் ull-gil. தேர்வு வினா - 258. செய்யுமென்னும் வாய்பாட்டுத் தெரிநிலை வினை முற்றுக்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?
பொதுவினைக் குறிப்ட
259. வேறு, இல்லை, உண்டு என்னும் இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச் சொற்களும், யார் என்னும் வினா
த.இ.-9

Page 68
130 9 ஆறுமுகநாவலர்
வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாகி வரும். உ-ம்.
அவன் அவள் அவர் o அது அவை யான் வேறு, இல்லை, யாம் s நீர் உண்டு, யார்
இல்லையென்பது 'எஞ்ஞான்றுமில்" எனக் கடைக் குறைந்து வருதலுமுண்டு.
அஃறிணையொருமைக்குரிய டுவ்விகுதி பெற்று நிற்கும் உண்டு என்னும் வினைக்குறிப்பு முற்றும் வேறே; விகுதியின்றிப் பொதுச் சொல்லாயே நிற்கும் இவ்வுண் டென்னும் வினைக் குறிப்பு முற்றும் வேறே. முன்னையது இன்று என்பதற்கு மறுதலை; பின்னையது இல் என்பதற்கு மறுதலை.
யார் என வகரங்கெட்டு நிற்கும் பலர்பாற் படர்க்கை வினைப்பெயரும் வேறே; யார் என்னும் இவ்வினா வினைக்குறிப்பும் வேறே.
யாரென்பது ஆரென விகாரப்பட்டும் வரும்.
260. எவன் என்னும் வினை வினைக் குறிப்பு முற்றுச்சொல் அஃறிணையிருபாற்கும் பொதுவாகி வரும்.
உ-ம். அஃதெவன் அவையெவன் எவன் என்னும் உயர்திணையாண்பாற் படர்க்கை வினாப் பெயரும் வேறே; எவன் என்னும் இவ்வினா வினைக்குறிப்பும் வேறே.
எவன் என்பது என், என்ன, என்னை என விகாரப் பட்டும் வரும். V− தேர்வு வினாக்கள் - 259. வேறு, இல்லை, உண்டு என்னும்
இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச் சொற்களும், யார் என்னும் வினாவினைக் குறிப்புமுற்றுச் சொல்லும், எவ்வாறு பொதுப்பட வரும்?

தமிழ் இலக்கணம் - வினையியல் 6 131
260. எவன் என்னும் வினாவினைக் குறிப்பு முற்றுச்சொல் எவ்வாறு பொதுப்பட வரும்?
பெயரெச்சம்
261 பெயரெச்சமாவது, பால் காட்டும் முற்று விகுதி பெறாத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினையாம்.
இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன், வினை முதற்பெயர், கருவிப்பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், செயப்படுபொருட்பெயர் என்னும் அறுவகைப் பெயருமாம். உ-ம்.
உண்டசாத்தன் - வினைமுதற்பெயர் உண்ட கலம் «swawo கருவிப்பெயர் உண்ட வீடு • இடப்பெயர் உண்ட ஊண் - தொழிற்பெயர் உண்ட நாள் ··· காலப்பெயர் உண்ட சோறு - செயப்படு பெர்ருட்பெயர்
262. தெரிநிலை வினைப்பெயரெச்சம், செய்த வென்னும் வாய்பாட்டிறந்தகாலப் பெயரெச்சம் எனவும், செய்கின்றவென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சம் எனவும், செய்யுமென்னும் வாய்பாட்டெதிர்காலப் பெயரெச்சம் எனவும் மூவகைப்படும்.
263. செய்த வென்னும் வாய்பாட்டிறந்தகாலப் பெயரெச்சங்கள், இறந்தகால விடைநிலையோடும், விகாரப் பட்டிறந்தகாலங் காட்டும் பகுதியோடும், அகரவிகுதி பெற்று வருவனவாம்.
உ-ம். வந்த குதிரை போய குதிரை
உண்ட குதிரை புக்க குதிரை

Page 69
132 9 ஆறுமுகநாவலர்
தின்ற குதிரை விட்ட குதிரை வருந்தின குதிரை உற்ற குதிரை 264. செய்கின்றவென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள், நிகழ்கால விடைநிலையோடு அகர விகுதி பெற்று வருவனவாம்.
உ-ம். உண்ணாநின்ற குதிரை உண்கின்ற குதிரை
உண்கிற குதிரை 265. செய்யுமென்னும் வாய்பாட்டெதிர்காலப் பெயரெச்சங்கள், இடைநிலையின்றித் தானே எதிர்காலங் காட்டும் உம் விகுதி பெற்று வருவனவாம்.
உ-ம். உண்ணுங் குதிரை நடக்குங்குதிரை 266. எதிர்மறைத் தெரிநிலைவினைப் பெயரெச்சங்கள்
எதிர்மறை ஆகார விடைநிலையுந் தகரவெழுத்துப் பேற்றோடு கூடிய அகரவிகுதியும் பெற்று வருவனவாம்.
செய்யாத என்பது, செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் மூன்றற்கும், எதிர்மறையாம். இவ்வெதிர்மறைப் பெயரெச்சம், செய்கலாத, செய்கிலாத என அல், இல் என்னும் இடைநிலைகளை ஆகாரச்சாரியையோடு பெற்று வரும்.
உ-ம். உண்ணாத குதிரை நடவாத குதிரை உண்ணாக்குதிரை, நடவாக்குதிரை என ஈற்றுயிர் மெய் கெட்டும் வரும்.
267 குறிப்புவினைப் பெயரெச்சங்கள், அகரவிகுதி பெற்று வருவனவாம்.
உ-ம். கரிய குதிரை பெரிய களிறு நெடிய வில்
செய்ய மலர் தீய சொல் புதிய நட்பு உள்ள பொருள் முகத்த யானை படத்த பாம்பு

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 133
268. எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சங்கள், அல், இல் என்னும் பண்படியாகத் தோன்றி, ஆகாரச் சாரியையுந் தகரவெழுத்துப்பேற்றேடு கூடிய அகர விகுதியும் பெற்று வருவனவாம்.
உ-ம். அல்லாத குதிரை இல்லாத பொருள்
அல்லாக்குதிரை, இல்லாப்பொருள் என ஈற்றுயிர் மெய் கெட்டும் வரும்.
269. பெயரெச்சங்கள், இருதிணையைம்பான் மூவிடங் கட்கும் பொதுவாக வரும். உ-ம்.
உண்ட யான், யாம்,
5, நீர்,
அவன், அவள், அவர், அது, அவை. தேர்வு வினாக்கள் - 261. பெயரெச்சமாவது யாது? பெயரெச்சங்
கொள்ளும் பெயர்கள் எவை? 262. தெரிநிலை வினைப் பெயரெச்சம் எத்தனை வகைப்படும்? 263. செய்தவென்னும் வாய்பாட்டிறந்தகாலப் பெயரெச்சங்கள் எவை? 264. செய்கின்றவென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள் எவை? 265, செழியுமென்னும் வாய்பாட்டெதிர்காலப் பெயரெச்சங்கள் எவை? 266. எதிர்மறைத் தெரிநிலை வினைப் பெயரெச்சங்கள் எவை? செய்யாத என்பது எவற்றிற்கு எதிர்மறை? இவ்வெதிர்மறைப் பெயரெச்சம் இன்னும் எங்ங்ணம் வரும்? 267. குறிப்புவினைப் பெயரெச்சங்கள் எவை? 268. எதிர்மறைக் குறிப்புவினைப் பெயரெச்சங்கள் எவை? 269. பெய ரெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்?
வினையெச்சம்
270. வினையெச்சமாவது, பால் காட்டும் முற்று விகுதி பெறாத குறைசெசொல்லாய், வினைச்சொல்லைக் கொண்டு முடியும் வினையாம்.
இவ்வினையெச்சங்கொள்ளும் வினைச்சொற்க ளாவன:- உடன்பாடும் எதிர்மறையும் பற்றிவருந் தெரி

Page 70
134 9 ஆறுமுகநாவலர்
நிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும், பெயரெச்சமும், வினையெச்சமும், வினையாலணையும் பெயரும், தொழிற் பெயரும் ஆகிய ஐவகை வினைச் சொற்களுமாம். உ-ம்.
(1) தெரிநிலை வினையெச்சந் தெரிநிலை வினை விகற்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
உண்டு வந்தான்; உண்டுவாரான் - தெரிநிலை வினைமுற்று
உண்டுவந்த; உண்டு வாராத - தெரிநிலைப் பெயரெச்சம் உண்டுவந்து, உண்டு வாராது - தெரிநிலை வினையெச்சம் உண்டுவந்தவன், உண்டு வாராதவன் - தெரிநிலை வினையா
லணையும் பெயர் உண்டுவருதல்; உண்டு வாராமை - தெரிநிலைத்
தொழிற் பெயர்
(2) தெரிநிலை வினையெச்சங் குறிப்புவினை விகற்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
கற்றுவல்லன் - குறிப்பு வினைமுற்று
கற்றுவல்ல - குறிப்பு வினைப் பெயரெச்சம் கற்று வல்லவன் - குறிப்பு வினையாலணையும் பெயர் கற்றுவன்மை - குறிப்புத் தொழிற்பெயர்
(3) குறிப்பு வினையெச்சந் தெரிநிலைவினை விகற்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்.
அறமன்றிச் செய்தான்; அறமன்றிச் செய்யான் - தெரி
வினைமுற்று அறமன்றிச் செய்த; அறமன்றிச் செய்யாத - தெரி
பெயரெச்சம் அறமன்றிச் செய்து அறமன்றிச் செய்யாது - தெரி
வினையெச்சம்
அறமன்றிச் செய்தவன்; அறமன்றிச் செய்யாதவன் - தெரி
வினையாலணையும் பெயர் அறமன்றிச் செய்தல்; அறமன்றிச் செய்யாமை - தெரி
தொழிற் பெயர்

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 135
(4) குறிப்பு ‘வினையெச்சங் குறிப்பு வினை விகற்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
அறமன்றியிலன் - குறிப்பு வினைமுற்று அறமன்றியில்லாத - குறிப்பு வினைப்பெயரெச்சம் அறமன்றியில்லாது - குறிப்பு வினையெச்சம் அறமன்றியில்லாதவன் - குறிப்பு வினையாலணையும் பெயர் அறமன்றியின்மை - குறிப்புத் தொழிற்பெயர்
27. பதவியலிற் கூறப்பட்ட வினையெச்ச விகுதிகளுள் உகரவிகுதி இறந்தகால விடைநிலையோடு கூடி வரும் என விகுதி இறந்தகாலவிடைநிலையோடும் விகாரப பட்டிறந்த காலங்காட்டும் பகுதியோடுங் கூடி வரும். மற்றை விகுதிகளெல்லாம் இடைநிலையின்றித் தாமே காலங் காட்டும்.
272, தெரிநிலை வினையெச்சங்கள், செய்து என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம் எனவும், செய வென்னும் வாய்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினை யெச்சம் எனவும், செயின் என்னும் வாய்பாடிடெதிர்கால வினையெச்சம் எனவும், மூவகைப்படும். .
273. செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள், உ, இ, ய் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுத் தன் கருத்தாவின் வினையையே கொண்டு முடிவனவாம்.
இங்கே இறந்தகாலமென்பது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் முன்னிகழ்தலை.
(உதாரணம்)
நடந்து தேர்ந்து உகரவிகுதி உண்டு கேட்டு வந்தான்
சென்று கற்று

Page 71
136 6 ஆறுமுகநாவலர்
இகரவிகுதி யகரவிகுதி
எண்ணி போய்
வந்தான்
இங்கே வினையெச்சத்தால் உணரப்படுந் தொழிலை நிகழ்த்தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிற்கும் வினை முதலாதல் காண்க.
விகுதி விகாரப்பட்டும், விகுதி பெறாது சில பகுதியே
விகாரப்பட்டும்,
வினையெச்சங்களாய் வரும். உ-ம்.
இச்செய்தென்வாய்பாட்டிறந்தகால
தழுவிக்கொண்டான் தழிஇக்கொண்டான் விகுதி விகாரப் மருவி வந்தான் மரீஇவந்தான் பட்டு வந்தன Լ{(Ց புக்கு வந்தான் விகுதி பெறாது விடு விட்டு வந்தான் சில பகுதியே பெறு பெற்று வந்தான் விகாரப்பட்டு
வந்தன இச்செய்தெனெச்சம், ஒரோவிடத்துக் காரணப்
பொருட்டாயும் வரும்.
கற்றறிந்தான் அறஞ்செய்து புகழ் பெற்றான்
உ-ம்.
செய்யுளிலே, இச்செய்தென்வாய்பாட் டிறந்தகால வினையெச்சங்கள், பு, ஆ ஊ என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும். உ-ம்.
புகரவிகுதி உண்குபு தேடுபு O ஆவிகுதி உண்ணா தேடா வநதான உள்விகுதி உண்ணுT தேடு
274. செய என்னும் வாய்பாட்டு முக்காலத்திற்கும் உரிய வினையெச்சம், அகரவிகுதியை இறுதியிற் பெற்றுத் தன் கருத்தாவின் வினையையும், பிறகருத்தாவின் வினையையுங் கொண்டு முடிவதாம்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 137
(I) செயவென்வாய்பாட்டு வின்ையெச்சம், இறந்த காலத்திலே காரணப் பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையுங் கொண்டு முடியும்.
காரணப் பொருளில் வருதலாவது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் காரணமென்பது பட வருதல். உ-ம். மழை பெய்யப் புகழ் பெற்றது - தன் கருத்தாவின் வினை
மழை பெய்ய நெல் வினைந்தது - பிற கருத்தாவின் வினை மழை பெய்யப் புகழ் பெற்றது என்றவிடத்து, வினையெச்சத் தால் உணரப்படுந் தொழிலை நிகழ்த்தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிற்கும் வினை முதலாதல் காண்க. மழை பெய்ய நெல் விளைந்தது என்றவிடத்து, வினையெச்சத் தால் உணரப்படுந் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே; முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறேயாதல் கான்க. செய்யுளிலே, இச்செயவென்வாய்பாட் டிறந்தகால வினையெச்சம், என என்னும் விகுதியைப் பெற்றும் வரும். உ-ம். மழைபெய்தெனப் புகழ் பெற்றது - தன் கருத்தாவின் வினை மழை பெய்தென நெல் விணைந்தது-பிறகருத்தாவின் வினை (2) செயவென்வாய்பாட்டு வினையெச்சம், எதிர் காலத்திலே காரியப் பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையுங் கொண்டு முடியும்.
காரியப் பொருளில் வருதலாவது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் காரியமென்பதுபட வருதல்.

Page 72
138 9 ஆறுமுகநாவலர்
உ-ம். தானுண்ணவந்தான் - தன்கருத்தாவின் வினை யானுண்ணத்தந்தான் - பிறகருத்தாவின் வினை
இச்செயவென்வாய்பாட் டெதிர்கால வினையெச்சம் கு என்னும் விகுதியைப் பெற்றும் வரும்.
உ-ம். தானுணற்கு வந்தான்-தன்கருத்தாவின் வினை யானுணற்குத் தந்தான்-பிறகருத்தாவின் வினை
உண்ணும்படி, உண்ணும் பொருட்டு, உண்ணும் வண்ணம், உண்ணும்வகை என்பன உணற்கென்னும் பொருள்பட வரும்.
செய்யுளிலே, இச்செயவென்வாய்பாட் டெதிர்கால வினையெச்சம், இய, இயர், வான், பான், பாக்கு என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும். இவற்றுள், முன்னைய இரண்டு விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையுங் கொண்டு முடியும்; பின்னைய மூன்று விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையைக் கொண்டு முடியும். உ-ம்.
இயவிகுதி நீரிவைகாணியவம்மின்-தன் கருத்தாவின் வினை * |அவர் காணிய வம்மின்பிற கருத்தாவின் வினை
இயர்விகுதி நாமுண்ணியர்வந்தேம்-தன் கருத்தாவின் வினை
நீருண்ணியர் வழங்குவேம்-பிறகருத்தாவின் வினை
வான்விகுதி - தான் கொல்வான் சென்றான் ன்கருக்காவின் பான்விகுதி - தானலைப்பான் புகுந்தான் ருததாவன
o 606 பாக்குவிகுதி - தான்றருபாக்கு வருவான்
(3) செயவென்வாய்பாட்டு வினையெச்சம்,
தனக்கென நியமமாக உரிய நிகழ்காலத்திலே, இது நிகழா நிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருள்பட வந்து, பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 139
இங்கே நிகழ்காலமென்றது, முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலோடு வினையெச்சத்தால் உணரப் படுந் தொழில் முற்பிற் பாடின்றி உடனிகழ்தலை,
உ-ம். சூரியனுதிக்க வந்தான்-பிறகருத்தாவின் வினை
275. செயின் என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள், இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்றுக் காரணப் பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு முடிவனவாம்.
இவ்வினையெச்சம், எதிர்காலச்சொல்லையே முடிக்குஞ்சொல்லாகக் கொள்ளும். இவ்வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில், ஒருதலையாகவே சொல்லுவான். சொற்குப் பின்னிகழ்வதாயும், முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிற்குக் காரணமாக முன்னிகழ்வதாயும் உள்ளது; ஆதலால், இவ்வினையெச்சம் எதிர்காலம் பற்றிக் காரணப்பொருளில் வருவதாயிற்று. ஒருதலை - துணிவு.
έ
(உதாரணம்)
இன் யானுண்ணி னுவப்பேன் தன்கரு
உண்ணிற் பசிதீரும் பிறகரு
ல் நீ வந்தால் வாழ்வாய் தன்கரு
நீ வந்தான் யான் வாழ்வேன் பிறகரு گ
நீ கற்றக்காலுவப்பாய் தன்கரு
உண்டக்காற் பசிதீரும் பிறகரு
நல்வினை தானுற்றக் கடையுதவும் தன்கரு
*" |நல்வினை தானுற்றக்கடைத் தீவினை வராது பிறகரு
நல்வினை தானுற்ற வழியுதவும் தன்கரு
வழி நல்வினை தானுற்றவழித் தீவினை வராது பிறகரு இடத்து நல்வினை தானுற்றவிடத்துதவும் தன்கரு |
நல்வினை தானுற்றவிடத்துத் தீவினை வராது பிறகரு

Page 73
140 0 ஆறுமுகநாவலர்
உண்டலு முவப்பாய் தன்கரு
92 LO உண்டலும் பசிதீரும் பிறகரு
வந்தால் என்பது துச்சாரியை பெற்றது. உண்டக்கால் என்பது துச்சாரியையும் அகரச்சாரியையும் பெற்றது: உற்றக்கால், உற்றக்கடை, உற்றவழி, உற்றவிடத்து என்பன அகரச்சாரியை பெற்றன. உண்டலும் என்பது துச்சாரியை யும் அல்லுச் சாரியையும் பெற்றது.
உண்பானேல், உண்பானெனின், உண்பானாயின், உண்பானேனும் என, முற்றுவினைகள், ஏல், எனின், ஆயின், ஏனும் என்னும் நான்கனோடும் இயைந்து, ஒரு சொன்னிர் மைப்பட்டுச் செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சங் களாய் வருமெனவும் அறிக.
276. எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் எதிர்மறை ஆகாரவிடைநிலையோடு உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.
செய்யாது என்பது செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்பனவற்றிற்கு, எதிர்மறையாம். செய்யாது என்பதிலே தகரம் எழுத்துப்பேறு. செய்யாது என்பது, செய்கலாது, செய்கிலாது என, அல் இல் என்னும் இடைநிலைகளை ஆகாரச்சாரியையோடு பெற்றும் வரும்.
செய்யாமல் என்பது, செய என்பதற்கு எதிர் மறையாம்.
செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யா மைக்கு என்னும் நான்கும், செயற்கு, செய்யிய, செய்யியர் என்பனவற்றிற்கும், செயற்கு என்பது படவருஞ் செயவெ னெச்சத்திற்கும் எதிர்மறையாம்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 141
செய்யாக்கால்,
செய்யாக்கடை, செய்யாவழி,
செய்யாவிடத்து னெனும் நான்கும், செயின் என்பதற்கும், அப்பொருள்பட வருவனவாகிய செய்தால், செய்தக்கால்,
செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து என்பன வற்றிற்கும் எதிர்மறையாம்.
(உதாரணம்)
விதிவினை மறைவினையெச்சம் யெச்சம்
உண்டு வந்தான்
உண்ணாது வந்தான்
ԼՈ60) பெய்யப் பயிர் தழைத்தது
மழை பெய்யாமற் பயிர் வாடிற்று ங்கே பெய்யாமல் என்பதற்குப் பய்யாமையால் என்பது பொருள்
அவன் காண
அவன் காணாமல் வந்தேன்.
வந்தேன் இங்கே காணாமல் என்பதற்குக் காணாதிருக்க என்பது பொருள்
நீ விடெய்தற்கு நீ நரகெய்தாமல் வணங்கு :
வணங்கு நீ நரகெய்தாமே வணங்கு
நீ நரகெய்தாமை வணங்கு நீ நரகெய்தாமைக்கு வணங்கு இங்கே எய்தாமல் என்பது முதலிய நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு என்பது பொருள்
யானுணற்கு யானுண்ணாமல் விதித்தான்
விதித்தான் யானுண்ணாமே விதித்தான்
யானுண்ணாமை விதித்தான் யானுண்ணாமைக்கு விதித்தான் இங்கே உண்ணாமல் என்பது முதலிய நான்கிற்கும் உண்ணாதொழிதற் பொருட்டு என்பது பொருள்

Page 74
142 9 ஆறுமுகநாவலர்
யானுண்ணின் யானும்ணாக்கான் மகிழேன்
மகிழ்வேன் யானுண்ணாக்கடை மகிழேன்
யானுண்ணாவழி மகிழேன் யானுண்ணாவிடத்து மகிழேன் இங்கே உண்ணாக்கால் என்பது முதலிய நாந்கிற்கும் உண்ணாதொழியின் என்பது
பொருள் உண்ணிற் உண்ணாக்காற் பசி தீராது பசிதீரும் உண்ணாக்கடைப் பசி தீராது
உண்ணாவழிப் பசி தீராது உண்ணாவிடத்துப் பசி தீராது
277 உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள், பண்படியாகத் தோன்றி அகரவிகுதியைப் பெற்று வருவனவாம்.
உ-ம். மெல்லப் பேசினான் சாலப்பல
பைய நடந்தான் உறக்கரிது வலியப் புகுந்தான் மாணப் பெரிது
மெல்ல என்பது, லளவொற்றுமை பற்றி, மெள்ள
வெனவும் வழங்கும். 278. எதிர்மறைக் குறிப்பு வினையெச்சங்கள், அல் இல் என்னும் எதிர்மறைப் பண்படியாகத் தோன்றி, றி து மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று வருவனவாம். உ-ம்.
றி அறமன்றிச் செய்யான் அருளின்றிச் செய்தான்
ğlı அறமல்லாதில்லை அருளில்லாது செய்தான்
அறமல்லதில்லை dm
மல் அறமல்லாமலில்லை யாணில்லாமல் வந்தான்
ഥ அறமல்லாமேயில்லை யானில்லாமே வந்தான்
6) அறமல்லாமையில்லை யானில்லாமை வந்தான்
ஆல் நீயல்லாலில்லை ra
கால் அவனல்லாக்கானியார் யானில்லாக்கால் வருவான்
கடை அவனல்லாக்கடைநீயார் யானில்லாக்கடை வருவான்
வழி அவனல்லாவழிநீயார் யானில்லாவழி வருவான்
இடத்து அவனல்லாவிடத்து நீயார் யானில்லாவிடத்து வருவான்

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 143
இவ்வினையெச்சக் குறிப்புக்களில் வரும் ஆகாரமும் அகரமுஞ் சாரியை.
279. வினையெச்சங்கள், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாக வரும். உ-ம்.
நடந்து வந்தான், வந்தேம்
வந்தாய், வந்தீர் வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன 280. தன்கருத்தாவின் வினையையே கொள்ளுதற் குரிய் வினையெச்சங்கள் சினைவினையாயின், அவை அச்சினைவினையைக் கொண்டு முடிதலுமன்றி, ஒற்றுமை பற்றி முதல் வினையையுங் கொண்டு முடியும். உ-ம்.
சாத்தன் காலொடிந்து வீழ்ந்தான். இங்கே ஒடிதல் சினைவினை; வீழ்தல் முதல்வினை ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தான் என்னும் முதல்வினை கொண்டு முடிந்தது.
.
காலொடிந்து வீழ்ந்தது. இங்கே ஒடிதலுஞ் *சினைவினை வீழ்தலுஞ் சினைவினை. ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தது என்னுஞ் சினைவினை கொண்டு முடிந்தது. மாடு காலொடிந்து வீழ்ந்தது. இங்கே வீழ்தல் மாட்டின் வினையாதலிற் சினைவினையெச்சம் முதல்வினை கொண்டு முடிந்தது.
281 பிறகருத்தாவின் வினையைக் கொள்ளும் வினை யெச்சங்கள்; தன்கருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்களாகத் திரிந்தும் வரும். திரியினும், அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம். உ-ம்.
ஞாயிறு பட்டு வந்தான். இங்கே பட என்னுஞ் செயவென் வாய்பாட்டு வினையெச்சம் பட்டு எனத் திரிந்து நின்றது.

Page 75
144 9 ஆறுமுகநாவலர்
மழை பெய்து நெல் விளைந்தது. இங்கே பெய்ய என்னுங் காரணப்பொருட்டாகிய செயவென்வாய்பாட்டிறந்தகால வினையெச்சம் பெய்து எனத் திரிந்து நின்றது.
தேர்வு வினாக்கள் - 270. வின்ையெச்சமாவது யாது? வினை யெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன எவை? 271 வினை யெச்ச விகுதிகளுள், எவ்விகுதிகள் காலங் காட்டும் இடைநிலை யோடு கூடி வரும்? எவ்விகுதிகள் இடைநிலையின்றித் தாமே காலங் காட்டும்? 272. தெரிநிலைவினையெச்சங்கள் எத்தனை வகைப்படும்? 273. செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள் எவை? இங்கே இறந்தகாலமென்றது எதை? இச்செய்தென் வாய்பாட்டிறந்தகால வினையெச்சங்கள் வேறு விகுதிகளைப் பெற்றும் வருமோ? 274. செயவென்னும் வாய்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினையெச்சம் யாது? செயவென் வாய்பாட்டு வினையெச்சம், இறந்தகாலத்திலே எப்பொருளில் வந்து, எவ்வினையைக் கொண்டு முடியும்? காரணப்பொருளில் வருதலாவது என்னை? இச்செயவென் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம் வேறு விகுதியைப் பெற்றும் வருமோ? செயவென் வாய்பாட்டு வினையெச்சம், எதிர்காலத்திலே எப்பொருளில் வந்து, எவ்வினையைக் கொண்டு முடியும்? காரியப் பொருளில் வருதலாவது என்னை? இச்செயவென் வாய்பாட்டெதிர் கால வினையெச்சம் வேறு ” விகுதியைப் பெற்றும் வருமோ? வேறெவைகள் உணற்கென்னும் பொருள்பட வரும்? செய்யுளிலே இச்செயவென் வாய்பாட்டெதிர்கால வினையெச்சம் வேறு விகுதிகளைப் பெற்றும் வருமோ? இவற்றுள், எவ்வெவ்விகுதி பெற்றவை எவ்வெவ் வினையைக் கொண்டு முடியும்? இங்கே நிகழ்காலமென்றது எதை? 275. செயினென்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள் எவை? இவ்வினையெச்சம் எக்காலச் சொல்லை முடிக்குஞ் சொல்லாகக் கொள்ளும்? செயினென்னும் வாய்பாட்டு வினை யெச்சங்களாய் வருவன பிறவும் உளவோ? 276. எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் எவை? செய்யாது என்பது எவைகளுக்கு எதிர்மறை? செய்யாது என்பது இன்னும் எப்படி வரும்? செய்யாமல் என்பது எதற்கு எதிர்மறை? செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னு நான்கும் எவைகளுக்கு எதிர்மறை? செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யா விடத்து என்னு நான்கும் எவைகளுக்கு எதிர்மறை ?

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 145
277. உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள் எவை? 278. எதிர்மறைக் குறிப்பு வினை யெச்சங்கள் எவை? 279. வினையெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்? 280. தன்கருத்தாவின் வினைன்யயே கொள்ளுதற் குரிய வினையெச்சங்கள் பிற கருத்தாவின் வினையைக் கொண்டு முடிதல் இல்லையோ? 281. பிறகருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்கள் தன்கருத்தாவின் வினையைக் கொள்ளும் வினை யெச்சங்களாகத் திரிந்து வருதல் இல்லையோ?
முற்றுவினை எச்சப்பொருளைத் தருதல்
282 தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றும், தமக்குரிய பயனிலை கொள்ளாது, வினையெச்சத் திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருள்ையும், பெயரெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளு மிடத்துப் பெயரெச்சப் பொருளையுந் தரும். உ-ம்.
கண்டனன் வணங்கினான்; இங்கே கண்டனன் என்னுந் தெரிநிலை வினைமுற்று, கண்டு என வின்ையெச்சப் பொருளைத் தந்தது. உண்டான் சாத்தனூர்க்குப் போயினான்; இங்கே உண்டான் என்னுந் தெரிநிலை வினைமுற்று, உண்ட எனப் பெயரெச்சப் பெரளுளைத் தந்தது. உச்சிக்கூப்பிய கையினா தற்புகழ்ந்து; இங்கே கையினர் என்னுங் குறிப்பு வினைமுற்று, கைய்ையுடையவராகி என வினையெச்சப்பொருளைத் தந்தது.
வெந்திறலினன் விறல் வழுதியொடு; இங்கே திறலினன் என்னும் குறிப்பு வினைமுற்று, திறலினனாகிய எனப் பெயரெச்சப் பொருளைத் தந்தது.
தேர்வு வினா - 282, வினைமுற்றுக்கள் எச்சப்பொருளைத் தருதல் இல்லையோ?
த.இ.-10

Page 76
146 9 ஆறுமுகநாவலர்
இருவகைவினைக் குறிப்பு
283. வினைக்குறிப்புச் சொற்கள், ஆக்கவினைக் குறிப்பும் இயற்கை வினைக்குறிப்பும் என இருவகைப்படும்.
அவற்றுள், ஆக்கவினைக்குறிப்பாவது, காரணம் பற்றி வரும் வினைக்குறிப்பாம். அதற்கு ஆக்கச்சொல் விரிந்தாயினுந் தொக்காயினும் வரும்.
உ-ம். கல்வியாற் பெரியனாயினான் கல்வியாற் பெரியன்
கற்றுவல்லவராயினார் கற்று வல்லர் இயற்கை வினைக்குறிப்பாவது, காரணம் பற்றாது இயற்கையை உணர்த்தி வரும் வினைக்குறிப்பாம். அது ஆக்கச்சொல் வேண்டாதே வரும்.
உ-ம். நீர் தண்ணிது
தீ வெய்து தேர்வு வினாக்கள் - 283, வினைக்குறிப்புச் சொற்கள் இன்னும் எத்தனை வகைப்படும்? ஆக்கவினைக்குறிப்பாவது யாது? இயற்கை வினைக்குறிப்பாவது யாது?
தெரிநிலை வினைப்பகுப்பு
284. தெரிநிலைவினைச்சொற்கள், செயப்படு பொருள் குன்றிய வினை, செயப்படுபொருள் குன்றாத வினை. எ-ம். தன்வினை, பிறவினை, எ-ம். செய்வினை, செயப்பாட்டு வினை, எ-ம். வெவ்வேறு வகையிற் பிரிவு பட்டு வழங்கும்.
285. ச்ெயப்படுபொருள் குன்றிய வினையாவது, செயப்படுபொருளை வேண்டாது வரு முதனிலை அடியாகத் தோன்றிய 'வினையாம்.
உ-ம். நடந்தான், வந்தான், இருந்தான், உறங்கினான்.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 147
இவை, இதை நடந்தான், இதை வந்தான் எனச் செயப்படு பொருளேற்று வாராமை காண்க
286 செயப்படுபொருள் குன்றாத வினையாவது, செயப்படுபொருளை வேண்டி நிற்கு முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம். al-h. உண்டான், கொடுத்தான், கண்டான், படித்தான், இவை, சோற்றையுண்டான், பொருளைக் கொடுத்தான் எனச் செயப்படுபொருளேற்று, வருதல் காண்க. 287 தன் வினையாவது, தன்னெழுவாய்க் கருத்தாவின் றொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம். இத்தன்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையெனப்படும்.
செயப்படுபொருள் குன்றிய முதனிலை, செயப்படு பொருள் குன்றாத முதனிலை என்னும் இருவகை முதலினையும், தன்வினைக்கு முதனிலையாக வரும். உ-ம். சாத்தனடைந்தான், தச்சன் கோயிலைக் கட்டினான்.
இவைகளிலே, நடக்கையுங் கட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள் எழுவாய்க் கருத்தாவின் றொழிலாதல் காண்க. 288 பிறவினையாவது, தன்னெழுவாய்க் கருத்தா வல்லாத பிறகருத்தாவின்றொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம். இப் பிறவின்ை ஏவுதற்கருத்தாவின் வினை எனப்படும்.
செயப்படுபொருள் குன்றிய முதனிலை, செயப்படு பொருள் குன்றாத முதனிலை என்னும் இருவகை முதனிலைகளும், பிற வினைவிகுதி பெற்றேனும், தாம் விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய், வருதல் பதவியலிற் கூறப்பட்டது.
உ-ம். கொற்றனடப்பித்தான், அரசன் கோயிலைக் கட்டுவித்தான்.

Page 77
148 9 ஆறுமுகநாவலர்
இவைகளிலே நடக்கையுங் கட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள், எழுவாய்க் கருத்தாவின் றொழிலாகாது பிற கருத்தாவின்றொழிலாதல் காண்க.
செயப்படுபொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள், அம்முதனிலைக் கருத்தாவைத் தமக்குச் செயப்படுபொருளாகக் கொண்டு வரும்.
உ-ம். கொற்றன் சாத்தனை நடப்பித்தான்
செயப்படுபொருள் குன்றாத முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகளுள்ளே, சில அம்முதனிலைக் கருத்தாவைத் தமக்குச் செயப்படுபொருளாகவும், சில
வரும்.
உ-ம். கொற்றன் சாத்தனைக் கடப்பித்தான்
அரசன் றச்சனாற் கோயிலைக் கட்டுவித்தான்
289. தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற்கும் முதனிலைகளுஞ் சிலவுளவாம். உ-ம்.
முதனி தன்வினை பிறவினை
೧ಳ್ಲಾಯ್ತು
அழி நீ யழி காட்டை யழி
கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு வெளு நீ யுடம்புவெளு துணியை வெளு
éᏏᏛ000Ꭻ நீ கரை புளியைக் கரை
தேய் நீ தேய் கட்டையைத் தேய்
இம்முதனிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.

தமிழ் இலக்கணம் - வினையியல் 9 149
முதனிலை தன்வினை பிறவினை அழிந்தான் அழித்தான் அழி அழிகின்றான் அழிக்கின்றான்
அழிவான் அழிப்பான் கெட்டான் கெடுத்தான் கெடு கெடுகின்றான் 1 கெடுக்கின்றான்
கெடுவான் கெடுப்பான் வெளுத்தான் வெளுத்தான் வெளு வெளுக்கின்றான் வெளுக்கின்றான்
w வெளுப்பான் வெளுப்பான்
கரைந்தான் கரைத்தான் 8,60) கரைகின்றான் கரைக்கின்றான்
கரைவான் கரைப்பான் தேய்ந்தான் தேய்த்தான் தேய் தேய்கின்றான் தேய்க்கின்றான்
தேய்வான் தேய்ப்பான்
290 பிறவினைகள், ஒரோவிடத்துப் பிறஷினைவிகுதி தொக்கும் வரும். உ-ம். , i.
அரசன் செய்த தேர். இதிலே செய்வித்த என்னும் பிற வினை செய்த என விவ்விகுதி தொக்கு நின்றது. கோழி கூவிப் பொழுது புலர்ந்தது. இதிலே கூவுவித்து என்னும் பிறவினை கூவி என விவ்விகுதி தொக்கு நின்றது. 291. செய்வினையாவது, படு விகுதி புணராத முதனிலை அடியாகத் தோன்றி, எழுவாய்க்கருத்தாவைக் கொண்டு வரும் வினையாம்.
உ-ம். சாத்தனடந்தான் நடப்பித்தான்
சாத்தன் கட்டினான் கட்டுவித்தான் 292. செயப்பாட்டு வினையாவது, படு விகுதி புணர்ந்த முதனிலை அடியாகத் தோன்றி, வினைமுதல் மூன்றாம் வேற்றுமையிலும், செயப்படுபொருள் எழுவாயிலும் வரப்பெறும் வினையாம்.

Page 78
150 0 ஆறுமுகநாவலர்
பிறவினை முதனிலைகளும், செயப்படுபொருள் குன்றாத தன்வினை முதனிலைகளும், படுவிகுதியோடும், இடையே அகரச்சாரியையேனும், குச்சாரியையும் அகரச் சாரியையுமேனும் பெற்று, செயப்பாட்டு வினை முதனிலைகளாக வரும்.
உ-ம். சாத்தனா லிம்மாடு நடப்பிக்கப்பட்டது கொற்றனா லிச்சோ றுண்ணப்பட்டது.
293. செயப்பாட்டுவினை, ஒரோவிடத்துப் படுவிகுதி தொக்கும் வரும். உ-ம்.
"இல்வாழ்வானென்பான்”, இங்கே எனப்படுவான் என்னுஞ் செயப்பாட்டு வினை என்பான் எனப் படுவிகுதி தொக்கு நின்றது.
உண்டசோறு; இங்கே உண்ணப்பட்ட என்னுஞ் செயப்பாட்டு வினை உண்ட எனப் படுவிகுதி தொக்கு நின்றது.
தேர்வு வினாக்கள் - 284. தெரிநிலை வினைச் சொற்கள் இன்னும் எவ்வெவ் வகையிற் பிரிவுபட்டு வழங்கும்? 285. செயப்படுபொருள் குன்றிய வினையாவது யாது? 286. செயப்படுபொருள் குன்றாத வினையாவது யாது? 287. தன்வினையாவது யாது? தன் வினைக்கு பிறவினைக்கு முதனிலையாக வருவன எவை? செயப்படுபொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் எதனைத் தமக்குச் செயப்படுபொருளாகக் கொண்டு வரும்? செயப்படுபொருள் குன்றாத முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் அம்முதனிலைக் கருத்தாவை யாதாகக் கொண்டுவரும் ? 289. தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற்கும் முதனிலைகளும் உளவோ? 290, பிறவினைகள் ஒரோவிடத்துப் பிறவினை விகுதி தொக்கும் வருமோ? 291 செய்வினையாவது யாது? 292. செயப்பாட்டு வினையாவது யாது? எவ்வெம் முதனிலைகள் எவ்வெவ்வாறு செயப்பாட்டு வினைக்கு முதனிலைகளாக வரும்? 293. செயப்பாட்டுவினை ஒரோவிடத்துப் படுவிகுதி தொக்கும் வருமோ?

தமிழ் இலக்கணம் - இடையியல் 9 151
வினையாலணையும் பெயர் விகாரப்படுதல்
294 வினையாலணையும் பெயர்கள், சிறுபான்மை இயல்பாகியும், பெரும்பாலும் விகாரப்பட்டும் வரும். உ-ம். நடந்தானை, குழையானை, குழையினனை, எ-ம். நடந்தோன், குழையோன், நடந்தவன், குழையவன், எ-ம். நடந்தன,
குழையன. எ-ம். நடந்தவை, குழையவை. எ-ம். வரும். தேர்வு வினா - 294. வினையாலணையும் பெயர்கள் எங்ங்ணம் வரும்?
வினையியல் முற்றிற்று.
3. இடையியல் 295 இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய், அப் பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருஞ் சொல்லாம்.
தேர்வு வினா - 295, இடைச்சொல்லாவது யாது?"
இடைச் சொற்களின் வகை
296 இடைச்சொல்: () வேற்றுமையுருபுகளும், (2) விகுதியுருபுகளும், (3) இடைநிலையுருபுகளும், (4) சாரியை யுருபுகளும், (5) உவமவுருபுகளும், (6) பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருபவைகளும், (7) ஒலி, அச்சம், விரைவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருபவைகளும், (8) இசைநிறையே பொருளாக வருபவைகளும், (9) அசை நிலையே பொருளாக நிற்பவைகளும் என, ஒன்பது வகைப்படும்.
இவைகளுள், வேற்றுமையுருபுகள் பெயரியலிலும்,
விகுதியுருபுகளும் இடைநிலையுருபுகளுஞ் சாரியையுருபு களும் பதவியலிலுஞ் சொல்லப்பட்டன.

Page 79
152 9 ஆறுமுகநாவலர்
இசைநிறை ன்ெபது, வேறுபொருள் உணர்த்தாது செய்யுளில் ஒசையை நிறைத்து நிற்பது.
அசைநிலை என்பது, வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச்சொல்லோடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்பது, அசைத்தல் ட் சார்த்துதல்.
தேர்வு வினாக்கள் - 296. இடைச்சொல் எத்தனை வகைப்படும்? இசைநிறையென்பது யாது? அசைநிலையென்பது யாது?
உவமவுருபிடைச் சொற்கள்
297 உவமவுருபிடைச் சொற்களாவன, போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய முதலியனவாம்.
இவைகளுள்ளே, போல என்பது முதலிய பதினொன்றும், இடைச்சொல்லடியாகப் பிறந்த வினை யெச்சவினைகள். அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ், மான், கடு, இயை, ஏய், நேர், நிகர், பொரு என்னு முதனிலைகளே இடைச் சொற்கள். ܗܝ
அன்ன, அனைய என்பவைகள், இடைச்சொல்லடி யாகப் பிறந்த பெயரெச்சவினைக் குறிப்புக்கள். அவைகளிலே, அ என்னு முதனிலையே. இடைச்சொல். அன்ன என்பதில் னகரமெய் சாரியை, அனைய என்பதில் னகரமெய்யும் ஐகாரமுஞ் சாரியை.
தேர்வு வினாக்கள் - 297 உவமவுருபிடைச் சொற்களாவன எவை? இவைகளுள்ளே, இடைச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள் எவை? அவைகளிலே இடைச்சொற்கள் எவை? இடைச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக்குறிப்புக்கள் எவை? அவைகளிலே எது இடைச்சொல்?

தமிழ் இலக்கணம் - இடையியல் 9 153
தத்தம் பொருளை உணர்த்தும் இடைச்சொற்கள்
298 பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள், ஏ, ஓ, உம் முத்லியவை களாம்.
299, ஏகாரவிடைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய ஏழுபொருளையுந் தரும்.
தேற்றம் உண்டேகடவுள். இங்கே உண்டென்பதற்கு ஐயமில்லை என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.
வினா நீயே கொண்டாய். இங்கே நீயா கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா. எண் நிலமே நீரே தீயே வளியே. இங்கே நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றலால் எண். *3
பிரிநிலை அவருளிவனே கள்வன். இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற் பிரிநிலை.
எதிர்மறை | நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
. என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை. இசைநிறை "ஏயே யிவளொருத்தி பேடியோ வென்றார்." இங்கே
. வேறு பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து
நிற்றலால் இசைநிறை. ஈற்றசை "என்றுமேத்தித் தொழுவோ மியாமே." இங்கே வேறு பொருளின்றி இறுதியிலே சார்த்தப்பட்டு நிற்றலால் ஈற்றசை.
300. ஒகாரவிடைச்சொல், ஒழியிசையும், வினாவும், சிறப்பும், எதிர்மறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும், அன்சநிலையுமாகிய எட்டுப் பொருளையுந் க(ாகம்,

Page 80
154 9 ஆறுமுகநாவலர்
சிறப்பு உயர்வு சிறப்பும் இழிவுசிறப்பும் என இருவகைப்படும். உயர்வு சிறப்பு ஒரு பொருளினது உயர்வைச் சிறப்பித்தல். இழிவுசிறப்பு ஒருபொருளினது இழிவைச் சிறப்பித்தல். இங்கே சிறப்பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும் அதனது மிகுதியை விளக்குதல்.
(உதாரணம்)
ஒழியிசை | படிக்கவோ வந்தாய். இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை.
SOTrr குற்றியோ மகனோ. இங்கே குற்றியா மகனா என வினாப் பொருளைத் தருதலால் வினா.
உயர்வு ஒஒ பெரியன். இங்கே ஒருவனது பெருமையாகிய சிறப்பு உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு. இழிவு 3. கொடியன். இங்கே ஒருவனது சிறப்பு காடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவுசிறப்பு. எதிர்மறை | அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத் தருமிடத்து எதிர்மறை. தெரிநிலை ணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று.
ங்கே அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலாற் றெரிநிலை. கழிவு உறுதியுணராது கெட்டாரை ஒஓ தமக்கோருறுதி
யுணராரோ என்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற் கழிவு. கழிவிரக்கம் - கழிந்ததற்கிரங்குதல். பிரிநிலை | இவனோ கொண்டான். இங்கே பலருணின்றும்
ஒருவனைப் பிரித்து நிற்குமிட்த்துப் பிரிநிலை. அசை "காணிய வம்மினோ" இங்கே வேறுபொருளின்றிச் நிலை சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை.

தமிழ் இலக்கணம் - இடையியல் 9 155
301 உம் என்னுமிடைச்சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும், தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்.
எச்சம், இறந்தது தழிஇய எச்சமும், எதிரது தழீஇய
எச்சமும் என இருவகைப்படும்.
(உ-ம்)
எதிர்மறை | களவு செய்யினும் பொய் கூறலை
இங்கே களவு செய்யலாகாது என்னும் பொருளைத் தருதலால் எதிர்மறை.
உயர்வு "குறவருமருளுங்குன்றம்."இங்கே குன்றினுயர்வைச் சிறப்பு. சிறப்பித்தலால் உயர்வுசிறப்பு. இழிவு "புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை." சிறப்பு ಫಿ: உடம்பினிழிவைச் சிறப்பித்தலால்
ழிவுசிறப்பு: M. ஐயம் அவன் வெல்லினும் வெல்லும். இங்கே
துணியாமையை உணர்த்தலால் ஐயம்.
எச்சம் சாத்தனும் வந்தான். இங்கே தொற்றன் வந்ததன்றி என்னும் பொருளைத் தந்தால் இறந்தது தழிஇயவெச்சம். இனிக் கொற்றணும் வருவான் என்னும் பொருளைத் தந்தால் எதிரது தழிஇயவெச்சம்.
முற்று எல்லாரும் வந்தார். இங்கே எஞ்சாப்பொருளைத்
தருதலால முறறு. எண் இராவும் பகலும். இங்கே எண்ணுதற்கண்
வருதலால் எண்.
தெரிநிலை ணுமன்று பெண்ணுமன்று. இங்கே இன்னதெனத்
ಫೆಜ್ಜೆ:::::
ஆக்கம் பாலுமாயிற்று. இங்கே அதுவே மருந்துமாயிற்று
என்னும் பொருளைத் தருதலால் ஆக்கம்.

Page 81
156 9 ஆறுமுகநாவலர்
302. எதிர்மறைவினை அடுத்து வருமிடத்து, முற்றும்மை எச்சவும்மையுமாம். உ-ம்.
எல்லாரும் வந்திலர். அவர் பத்துங் கொடார். இங்க்ே, சிலர் வந்தார், சில கொடுப்பார் எனவும் பொருள் படுதலால், எச்சவும்மையுமாயிற்று.
303. எச்சவும்மையாற் றழுவப்படும் பொருட் சொல்லில் உம்மை இல்லையாயின், அச்சொல் எச்ச வும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படும்.
உ-ம். சாத்தன் வந்தான்; கொற்றணும் வந்தான்.
இங்கே சாத்தன் எச்சவும்மையாற் றழுவப்படு பொருள் 304. என, என்று என்னும் இரண்டிடைச் சொற்களும், வினையும், பெயரும், எண்ணும், பண்பும், குறிப்பும், இசையும், உவமையும் ஆகிய ஏழுபொருளிலும் வரும். உ-ம்.
வினை மைந்தன் பிறந்தானெனத் தந்தையுவந்தான். இங்கே வினையோடியைந்தது.
பெயர் "அழுக்கா றெனவொரு பாவி” இங்கே பெயரோ
டியைந்தது.
எண் நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப்
பூதங்களைந்து, இங்கே எண்ணோ டியைந்தது.
u6TL வெள்ளென விளர்த்தது. இங்கே பண்போ
டியைநதது.
குறிப்பு "பொள்ளென வாங்கே புறம் வேரார்." இங்கே
குறிப்போடியைந்தது.
இசை “பொம்மென்ன வண்டலம்பும் புரிகுழலை." இங்கே
இசையோடியைந்தது.
»),660 LO "புலி பாய்ந்தெனப் பாய்ந்தான். இங்கே
உவமையோ டியைந்தது.

தமிழ் இலக்கணம் - இடையியல் 0 157
என்று என்பதையும், இப்படியே இவைகளோடும் V ஒட்டிக்கொள்க.
305. மேற்கூறிய ஏ, உம், என, என்று என்னு நான்கிடைச் சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் எண்ணுப்பொருளில் வரும்
உ-ம். நிலனென்றா நீரென்றா தியென்றா
நிலனெனா நீரெனாத் தீயெனா நிலனொடு நீரொடு தீயொடு
306. பெயர்ச்செவ்வெண்ணும், எண்ணிட்ைச் சொற்கள் ஏழனுள்ளும் ஏ, என்றா, எனா என்னு மூன்றும், தொகைச்சொற் பெற்று வரும். உம், என்று, என, ஒடு எனணு நான்கும், தொகைச் சொற் பெற்றும் பெறாதும், வரும்.
பெயர்ச்செவ்வெண்ணாவது, பெயர்களினிடத்தே எண்ணிடைச் சொற்றொக்கு நிற்ப வருவது.
(உதாரணம்)
செவ்வெண் | சாத்தன் கொற்ற ரிைருவரும் வந்தார்.
ஏகாரவெண் | சாத்தனே கொற்றனே யிருவரும் வந்தார்.
என்றாவெண் | சாத்தனென்றா கொற்றனென்றா விருவரும்
வந்தார்.
எனாவெண் | சாத்தனெனாக் கொற்றனெனா விருவரும்
வந்தார்.
உம்மையெண் | சாத்தனுங் கொற்றணு மிருவரும் வந்தார்.
என்றெண் சாத்தனென்று கொற்றனென் றிருவருளர்.
எனவெண் சாத்தனெனக் கொற்றனென விருவருளர்.
ஒடுவெண் சாத்தனொடு கொற்றனொ டிருவருளர்.
உம்மையெண் | சாத்தனுங் கொற்றணும் வந்தார்.

Page 82
158 9 ஆறுமுகநாவலர்
என்றெண் நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்
றளவறு காயமென் றாகிய வுலகம்.
எனவெண் நிலவென நீரெனத் தீயெனக் காற்றென
வளவறு காயமென் வாகிய உலகம்.
ஒடுவெண் நிலனொடு நீரொடு தீயொடு காற்றொ டவளறு
காயமொடாகிய வுலகம்.
307 என்று, என, ஒடு என்னும் இம்மூன்றிடைச் சொற்களும், எண்ணப்படும் பொருடோறு நிற்றலேயன்றி, ஓரிடத்து நிற்கவும் பெறும்; அப்படி நிற்பினும், பிரிந்து மற்றைப் பொருடோறும் பொருந்தும். உ-ம்.
என்றெண் "வினைபகை யென்றிரண்டி னெச்ச
நினையுங்காற் றியெச்சம் போலத் தெறும்." இங்கே என்றென்பது, வினையென்று, பகை யென்று என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது. எனவெண்' |"பகைபாவ மச்சம் பழியென நான்கு - மிக வாவா மில்லிறப்பான் கண்." இங்கே எனவென்பது, பகையெனப் பாவமென அச்சமெனப் பழியென என்று நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது. ஒடுவெண் "பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து
- மிருடிர வெண்ணிச் செயல்." இங்கே ஒடுவென்பது, பொருளொடு கருவி யொடு காலத்தொடு வினையொடு இடனொடு ' என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ்சென்று பொருந்தியது. 308. வினையெச்சங்கள், எண்ணப்படுமிடத்து, ஏற்பன வாகிய எண்ணிடைச் சொல் விரியப் பெற்றும், தொகப் பெற்றும், ஓரிட்த்து நின்று பிரிந்து கூடப் பெற்றும் வரும். அவை தொகைபெறுதலில்லை. உ-ம். '
உம்மையெண் - கற்றுங் கேட்டுங் கற்பனை கடந்தான் என்றெண் - உண்ணவென் றுடுக்கவென்று வந்தான்

தமிழ் இலக்கணம் - இடையியல் 9 159
எனவெண் - உண்ணவென வுடுக்கவென வந்தான் செவ்வெண் - கற்றுக் கேட்டுக் கற்பனை கடந்தான் பிரிந்து கூடுமெண்- உண்ண வுடுக்கவென்று வந்தான்
309. அ, இ, உ என்னு மூன்றிடைச் சொற்களும் சுட்டுப் பொருளையும், எ, ஆ யா என்னு மூன்றிடைச் சொற்களும் வினாப் பொருளையுந் தரும்.
உ-ம். அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்
எக்கொற்றன், கொற்றனா, யாவன் ' s 310 கொல் என்னும் இடைச்சொல், ஐயமும் அசைநிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும். உ-ம்.
ஐயம் இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல். இங்கே
குற்றியோ மகனோ என்னும் பொருளைத்
தருதலால் ஐயம். அசைநிலை |"கற்றதனா லாய பயனென்கொல்." இங்கே வேறு
பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை.
31. மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றும், பிறிதும், அசைநிலையுமாகிய மூன்று பொருளையுந் தரும்.
இங்கே வினைமாற்றென்றது கருதியதற்கு இனமாகிய மறுதலைவினை; பிறிதென்றது கருதியதற்கு இனமாகிய் பிறிது.
(e) -th.)
வினை "மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது” . மாற்று இங்கே கருதியவினையாவது நல்வினையை
விரைந்தறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலைவினையாவது நல்வினையை விரையா தறிவாம் என்பது. மற்றென்றது, இங்கே, விரைந் தறிவாம் என்னும் வினையை ஒழித்து, விரையா தறிவாம் என்னும் மறுதலைவினையைத் தருதலால், வினைமாற்றுப் பொருளில் வந்தது.

Page 83
160 0 ஆறுமுகதாவலர்
பிறிது
"ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று, "இங்கே கருதியதாவது ஊழொன்றென்பது.
அதற்கினமாகிய T6Qig5 ஊழல்லதொன்றென்பது. இங்கே ஊழல்லதொன்றென்னும் பொருளைத் தருத லால், பிறிதென்னும் பொருளில் வந்தது.
அசை நிலை
"மற்றென்னையாள்க". இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை,
32. மன் என்னும் இடைச்சொல், ஒழியிசையும், ஆக்கமும், கழிவும், மிகுதியும், அசைநிலையுமாகிய ஐந்து பொருளையுந் தரும். உ-ம்.
ஒழியிசை
"கூரியதோர் வாண்மன்"இங்கே இரும்பை அறத் துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை.
ஆக்கம்
“பண்டு காடுமன்” இங்கே இன்று வயலாயிற்று என்னும் ஆக்கப்பொருளைத் தருதலால் ஆக்கம்.
கழிவு
"சிறியகட் பெறினே யெழக்கியு மன்னே" இங்கே
இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் கழிவு.
மிகுதி
"எந்தை யெமக்கருளுமன்" இங்கே மிகுதியும் அருளுவன் என்னும் பொருளைத் தருதலால் மிகுதி.
அசைநிலை
"அதுமற் கொண்கன்றேரே" இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசைநிலை.
313.
கொன் என்னும் இடைச்சொல், அச்சமும்,
பயனின்மையும், காலமும், பெருமையும் ஆகிய நான்கு பொருளையுந் தரும். உ- ம்.
அச்சம்
கொன்வாளி” இங்கே அஞ்சும் வாளி என்னும் பொருளைத் தருதலால் அச்சம்.

தமிழ் இலக்கணம் - இடையியல் 9 161
பயனின்மை|"கொன்னே கழிந்தன் றிளமை" இங்கே
பயனின்றிக் கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் பயனின்மை.
காலம் "கொன் வரல் வாடை” இங்கே காதலர் நீங்கிய
காலம் அறிந்து வருதலையுடைய வாடை என்னும் பொருளைத் தருதலாற் காலம்.
பெருமை "கொன்னூர் துஞ்சினும்” இங்கே பெரிய
ருறங்கினும் என்னும் பொருளைத் தருதலாற் ಕ್ಲಿಲ್ಲ:
314. அந்தில் என்னும் இடைச்சொல், ஆங்கென்னும் இடமும், அசைநிலையுமாகிய இரண்டு பொருளைத் தரும்.
உ-ம்.
ஆங்கு "வருமே-சேயிழை யந்திற் கொழுந்ந் காணிய"
|இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத்
தருதலால ஆங்கு. அசை "அந்திற் கழலினன் கச்சினன்” இங்கே வேறு
|ப்ொருளின் ச் சார்த்தப்பட்டு நிற்றலால் அகைநிலை.
. 315. மன்ற என்னும் இடைச்சொல், தெளிவுப் பொருளைத் தரும். உ-ம்.
தெளிவு 'இரத்தலி னின்னாது மன்ற” இங்கே ஒரு
தலையாக என்னும் பொருளைத் தருதலாற் றெளிவு.
316. அம்ம என்னும் இடைச்சொல், ஒன்று சொல் வேன் கேள் என்னும் பொருளிலும், உரையசைப் பொருளிலும் வரும்.
உரையசை - கட்டுரைக்கண் வரும் அசைநிலை ஒன்று சொல்வேன் கேள் - "அம்ம வாழி தோழி" உரையசை - "அது மற்றம்ம"
317 ஆங்க என்றும் இடைச்சொல், உரையசைப் பொருளில் வரும். உ-ம்.
த.இ.-11

Page 84
162 0 ஆறுமுகநாவலர்
உரையசை - "ஆங்கத்திறனல்ல யாங்கழற" 318. ஆர் என்னும் இடைச்சொல், உயர்த்தற் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும் வரும்.
உயர்த்தற்பொருட்டு வரும்போது ஒருமைச் சொல்லிற்றில் வரும். அசைநிலையாகும்போது உம்மை முன்னும், உம்மீற்று வினைமுன்னும் வரும்.
(உதாரணம்)
உயர்த்தற் தொல்காப்பியனார் வந்தார். தந்தையார் வந்தார். பொருள் அசைநிலை "பெயரினாகிய தொகையுமா ருளவே." இங்கே
பூர் அசை நிலையாக உம்மை முன் வந்தது. 器、 வுயிரொடுஞ் rெமுதஃ இங்கே ஆர் அசைநிலையாக உம்மீற்று வினைமுன் வந்தது.
319 தொறும், தோறும் என்னும் இவ்விரண்டிடைச் சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந் தரும். உ-ம். இடப்பன்மை - சோழநாட்டி லூர்தொறுஞ் சிவாலயம் தொழிற்பயில்வு - படிக்குந் தொறு மறிவு வளரும்
தோறும் என்பதையும் இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.
320 இனி என்னும் இடைச்சொல், காலவிடங்களின் எல்லைப்பொருளைத் தரும். உ-ம்.
காலவெல்லை - இனி வருவேன் இடவெல்லை - இனியெம்மூர் 32. முன், பின் என்னும் இடைச் சொற்கள், காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வரும். உ-ம்.

தமிழ் இலக்கணம் - இடையியல் 0 163
காலம் - முன் பிறந்தான். பின் பிறந்தான் இடம் - முன்னிருந்தான், பின்னிருந்தான்
முன், பின் என்பவைகள், முன்பு, பின்பு, எ-ம், முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம். விகாரப்பட்டும் வழங்கும். 322. வாளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத் தரும்.
உ-ம். வாளா விருந்தான், சும்மா வந்தான். 323 ஆவது, ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் விகற்பப் பொருளைத் தரும்.
விகற்பமாவது, அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.
உ-ம்.
ஆவது - தேவாரமாவது திருவாசகமாவது கொண்டு வா
ஆதல் - சோறாதல் கூழாதல் கொடு " ஆயினும்- வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன் தான் - பொன்னைத்தான் வெள்ளியைத்தான் கொடுத்தானா
324. அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ ஆஅ, ஒஒ என்றாற்போல வருவன, இரக்கப் பொருளைத் தரும் இடைச்சொற்களாம். -
325. o gogo, சிச்சீ, சை என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
326. கூ, கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல
வருவன, அச்சப்பொருளைத் தரும் இடைச்சொற்களாம்.
327 ஆஅ, ஆகா, ஒஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற்போல வருவன, அதிசயப்பொருளைத் தரும் இடைச்சொற்களாம்.

Page 85
164 () ஆறுமுகநாவலர்
தேர்வு வினாக்கள் - 298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச்சொற்கள் எவை? 299, ஏகாரவிடைச் சொல் எவ்வெப்பொருளைத் தரும்? 300. ஒகாரவிடைச்சொல் எவ்வெப்பொருளைத் தரும்? சிறப்பு எத்தனை வகைப்படும்? உயர்வு சிறப்பாவது யாது? இழிவுசிறப்பாவது யாது? இங்கே சிறப்பித்த லென்றது என்னை? 301. உம் என்னும் இடைச்சொல் எவ்வெப் பொருளைத் தரும்? எச்சம் எத்தனை வகைப்படும்? 302. ஒரு பொருளில் வரும் உம்மை மற்றொரு பொருளையுந் தருமோ? 303. எச்சவும்மையாற் றழுவப்படும் பொருட்சொல்லில் உம்மை இல்லை யாயின், அச்சொல் எச்சவும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படுமோ ஈற்றிலே சொல்லப்படுமோ? 304. என, என்று என்னும் இரண்டிடைச் சொற்களும் எவ்வெப்பொருளைத் தரும்? 305. எண்ணுப் பொருளில் வரும் இடைச்சொற்கள் எவை? 306. எவ்வெவ் வெண்கள் தொகைச்சொற் பெற்று வரும்? எவ்வெவ் வெண்கள் தொகைச்சொற் பெற்றும் பெறாதும் வரும்? பெயர்ச்செவ்வெண்ணா வது யாது? 307. எண்ணிடைச் சொற்கள் எண்ணப்படும் பொருடோறும் நிற்கவே பெறுமோ? 308. வினை, எண்ணப்படு மிடத்து, எண்ணிடைச் சொற் பெறாதோ? 309. அ, இ, உ, எ-ம். எ, ஆ, யா, எ-ம். வரும் இடைச் சொற்கள் எவ்வெப் பொருளைத் தரும்? 310. கொல் என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளைத் தரும்? 31. மற்று என்னும் இடைச்சொல் எவ்வெப் பொருளைத் தரும்? இங்கே வினைமாற்றென்றது என்ன? பிறிதென்றது என்ன? 312. மன் என்னும் இடைச்சொல் எவ்வெப் பொருளைத் தரும்? 313. கொன் என்னும் இடைச்சொல் எவ்வெப் பொருளைத் தரும்? 314. அந்தில் என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளைத் தரும்? 315. மன்ற என்னும் இடைச்சொல் எப்பொருளைத் தரும்? 316. அம்ம என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளில் வரும். 317. ஆங்க என்னும் இடைச்சொல் எவ்வெப்பொருளில் வரும். 318. இது உயர்த்தற் பொருட்டு வரும்போது எவ்விடத்து வரும்? அசைநிலையாகும்போது எவ்வெவ்விடத்து வரும்? 319. தொறும், தோறும் என்னும் இரண்டிடைச் சொற்களும் எவ்வெப் பொருளைத் தரும்? 320. இனி என்னும் இடைச்சொல் எப்பொருளைத் தரும்? 321. முன், பின், என்னும் இடைச்சொற்கள் எவ்வெப் பொருளைத் தரும். 322. வாளா, சும்மா என்னும் இடைச்சொற்கள் எப்பொருளைத் தரும்? 323. ஆவது,

தமிழ் இலக்கணம் - இடையியல் 9 165
ஆதல், ஆயினும், தான் என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? விகற்பமாவது என்ன? 324. இரக்கப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை? 325. இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 326. அச்சப்பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 327. அதிசயப் பொருளைத் தரும் இடைச்சொற்கள் எவை?
குறிப்பின் வரும் இடைச்சொற்கள்
328 அம்மென, இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபட்ெடன. எ-ம். வருவன, ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
329 துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென என்றாற்போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்களாம்.
330. பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற்போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்க்ளாம். தேர்வு வினாக்கள் - 328. ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 329. அச்சக் குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 330. விரைவுக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?
இசைநிறை
33. ஒடு, தெய்ய என்பன, இசைநிறையிடைச் சொற்களாம்.
தேர்வு வினா - 331. இசைநிறையிடைச் சொற்கள் எவை?
அசைநிலை
332. மா என்பது, வியங்கோளைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொல்லாம்.

Page 86
166 0 ஆறுமுகநாவலர்
333. மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ என்னும் பத்தும், முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.
334. யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஒரும், போலும், அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப என்னும் இருபத்தொன்றும், மூவிடத்தும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம். தேர்வு வினாக்கள் - 332. வியங்கோளைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொல் எது? 333. முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொற்கள் எவை? 334. மூவிடத்தும் வரும் அசைநிலையிடைச் சொற்கள் எவை?
இடையியல் முற்றிற்று.
4. உரியியல்
335 உரிச்சொல்லாவது, பொருட்கு உரிமை பூண்டு நிற்கும் பண்பை உணர்த்துஞ் சொல்லாம்.
336 உலகத்துப் பொருள், உயிர்ப் பொருளும், உயிரல் பொருளும் என, இருவகைப்படும்.
337. இப்பொருள்களுக்குரிய பண்பு, குணப்பண்புந் தொழிற்பண்பும் என இருவகைப்படும்.
338. உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகளாவன: அறிவு, அச்சம், மானம், பொறுமை, மயக்கம், விருப்பு, வெறுப்பு, இரக்கம், நன்மை, தீமை முதலியனவாம்.
339. உயிர்ப்பொருள்களின் றொழிற்பண்புகளாவன: உண்ணல், உடுத்தல், உறங்கல், அணிதல், தொழுதல், நடத்தல், ஆக்கல், காத்தல், அழித்தல் முதலியனவாம்.

தமிழ் இலக்கணம் - உரியியல் 9 167
340. உயிரல்ப்ொருள்களின் குணப்பண்புகளாவன: பல்வகை வடிவங்களும், இருவகை நாற்றங்களும், ஐவகை நிறங்களும், அறுவகைச் சுவைகளும், எண் வகைப் பரிசங்களுமாம்.
பல்வகை வடிவங்களாவன: வட்டம், இருகோணம், முக்கோணம், சதுர முதலியன.
இருவகை நாற்றங்களாவன: நறுநாற்றம், தீநாற்றம் என்பவைகளாம்.
ஐவகை நிறங்களாவன: வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என்பவைகளாம்.
அறுவகைச் சுவைகளாவன: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவ்ர்ப்பு, கார்ப்பு, இனிப்பு என்பவைகளாம்.
எண்வகைப் பரிசங்களாவன: வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழுமெனல், சருச்சரை என்பவைகளாம்.
341. உயிர்ப்பொருள், உயிரல்பொருள் என்னும் இருவகைப் பொருள்களுக்கும் உரிய தொழிற்பண்புகளா வன: தோன்றல், மறைதல், வளர்தல், சுருங்கல், நீங்கல், அடைதல், நடுங்கல், ஒலித்தல் முதலியவைகளாம்.
342. மேற்கூறிய குணப்பண்பும், உண், உறங்கு முதலிய முதனிலையளவிற் பெறப்படுந் தொழிற்பண்பும், ஆகிய பொருட்பண்பை உணர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும். தொழிற்பண்பின் காரியமாகிய பொருட்புடை பெயர்ச்சியை உணர்த்துஞ் சொற்கள் வினைச் சொற்கள் எனப்படும். பண்புந் தொழிலும் பொருளெனவும்படும். ஆதலால், அவைகளை உணர்த்தும் உரிச்சொற்களும் ஒரோவிடத்துப் பெயர்ச்சொற்கள் எனப்படும்.
343. இவ்வுரிச் சொற்கள், ஒரு குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும்.

Page 87
168 9 ஆறுமுகநாவலர்
344. சால், உறு, தவ, நனி, கூர், கழி என்பன, மிகுதி என்னும் ஒரு குணத்தை உணர்த்தும் உரிச்சொற்களாம். உ-ம்.
சால் - "தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்" உறு - "உறுபுனறந் துலகூட்டி"
தவ - "ஈயாது வீயு முயிர் தவப் பலவே"
நனி - "வந்து நனி வருந்தினை வாழிய நெஞ்சே" கூர் - "துணிகூ ரெவ்வமொடு”
கழி - "கழிகண் ணோட்டம்"
345 செழுமை என்பது, வளனுங் கொழுப்பும் என்னும் இருகுணத்தை உணர்த்தும் உரிச்சொல்லாம். உ-ம்.
வளம் - "செழும் பல் குன்றம்" கொழுப்பு - "செழுந் தடிதின்ற செந்நாய்" இவ்வாறே ஒரு குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும் உரிச்சொற்களெல்லாவற்றையும் நிகண்டு வாயிலாக அறிந்து கொள்க.
தேர்வு வினாக்கள் - 335, உரிச்சொல்லாவது யாது? 336. உலகத்துப் பொருள் எத்தனை வகைப்படும்? 337. இப்பொருள்களுக்குரிய பண்பு எத்தனை வகைப்படும்? 338. உயிர்ப்பொருள்களின் குணப்பண்புகள் எவை? 339. உயிர்ப்பொருள்களின் றொழிற்ப்ண்புகள் எவை? 340. உயிரல்பொருள்களின் குணப்பண்புகள் எவை? பலவகை வடிவங் களாவன எவை? இருவகை நாற்றங்களாவன எவை? ஐவகை நிறங்களாவன எவை? அறுவகைச் சுவைகளாவன எவை? எண்வகைப் பரிசங்களாவன எவை? 341. உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுக்குமுரிய தொழிற் பண்புகள் எவை? 342. தொழிற்சொல்லை மேலே வினைச் சொல்லென்றும் இங்கே உரிச்சொல்லென்றுஞ் சொல்லியது என்னை? 343. இவ்வுரிச் சொற்கள் பொருட்குணங்களை எவ்வாறு உணர்த்தி வரும்? 344. ஒருகுணத்தை உணர்த்தும் உரிச்சொற்கள் எவை? 345. பலகுணங்களை உணர்த்தும் உரிச்சொல் எது?
உரியியல் முற்றிற்று. சொல்லதிகாரம் முற்றுப் பெற்றது.

மூன்றாவது தொடர்மொழியதிகாரம்
1. தொகைநிலைத் தொடரியல்
346. தொடர்மொழியாவது, ஒன்றோடொன்று பொருள் படத் தொடர்ந்து நிற்கும் இரண்டு முதலிய சொற்களினது கூட்டமாம்.
347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி, தொகைநிலைத்தொடர், தொகாநிலைத்தொடர் என இரு வகைப்படும்.
348. தொகைநிலைத் தொடராவது, வேற்றுமையுருபு முதலிய உருபுகள் நடுவே கெட்டு நிற்ப, இரண்டு முதலிய சொற்கள் ஒரு சொற்றன்மைப்பட்டுத் தொடிர்வதாம்.
ஒரு சொற்றன்மைப்படுதலாவது பிளவு Lll-sigil நிற்றல், தேர்வு வினாக்கள் - 346. தொடர்மொழியாவது யாது? 347 சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி எத்தனை வகைப்படும்? 348. தொகைநிலைத் தொடராவது யாது?
தொகைநிலைத் தொடர்ப்பாகுபாடு
349. அத்தொகைநிலைத்தொடர் வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத் தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என, அறுவகைப்படும்.
தேர்வுவினா - 369. தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்?

Page 88
170 0 ஆறுமுகநாவலர்
வேற்றுமைத் தொகை
350. வேற்றுமைத் தொகையாவது, ஐ முதலிய ஆறு வேற்றுமையுருபும் இடையிலே கெட்டு நிற்கப், பெயரோடு பெயரும் பெயரோடு வினை வினைக்குறிப்புப் பெயர்களுந் தொடர்வதாம். உ-ம்.
நிலங்கடந்தவன் - இரண்டாம் வேற்றுமைத்தொகை தலைவணங்கினவன் - மூன்றாம் வேற்றுமைத்தொகை சாத்தன்மகன் - நான்காம் வேற்றுமைத்தொகை ஊர்நீங்கினவன் - ஐந்தாம் வேற்றுமைத்தொகை சாத்தன்கை - ஆறாம் வேற்றுமைத்தொகை குன்றக்கூகை - ஏழாம் வேற்றுமைத்தொகை
கையையுடைய களிறு என்பது கைக்களிறு எனவும், பொன்னாற் செய்த குடம் என்பது பொற்குடம் எனவும், வருவன, உருபும் பொருளும் ஒருங்கு கெட்ட வேற்றுமைத் தொகை எனக் கொள்க.
351. ஐயுருபுங் கண்ணுருபும், தொடர்மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டுநிற்கும். உ-ம்.
கடந்தானிலம் - ஐயுருபு தொக்கது இருந்தான்மாடத்து - கண்ணுருபு தொக்கது இவ்வாறு வருவனவெல்லாம், உருபு கெட்டு நிற்கினும் ஒருசொற்றன்மைப் படாது பிளவுபட்டு நிற்றலினாலே, தொகாநிலைத் தொடரெனவே கொள்ளப் படும்.
352. வேற்றுமையுருபுகள், விரிந்து நிற்குமிடத்து எப்பொருள் படுமோ அப்பொருள் படுமிடத்தே, தொக்கு நிற்கப் பெறும்; அப்பொருள் படாவிடத்தே தொக்கு நிற்கப் பெறாவாம். உ-ம்.
சாத்தனை யடித்தான் என ஐயுருபு விரிந்து நிற்குமிடத்துச் செயப்படுபொருள் படுதல்போலச் சாத்தனடித்தான் என

தமிழ் இலக்கணம் - தொகைநிலைத் தொடரியல் 9 171
ஐயுருபு தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால்,
இங்கே ஐயுருபு தொக்கு நிற்கப்பெறா தென்றறிக.
சாத்தனொடு வந்தான் என ஒடுவுருபு விரிந்து நிற்குமிடத்து
உடனிகழ்ச்சிப்பொருள் படுதல்போலச் சாத்தன் வந்தான் எனத்
தொக்கு நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே
ஒடுவுருபு தெரிக்கு நிற்கப்பெறாதென்றறிக. தேர்வு வினாக்கள் - 350. வேற்றுமைத் தொகையாவது யாது? 351. தொடர்மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு நிற்கும் உருபுகள் உளவோ ? 352. வேற்றுமையுருபுகள் எவ்விடத்துந் தொகப்பெறுமோ?
வினைத்தொகை 353. வினைத்தொகையாவது, பெயரெச்சத்தின் விகுதியுங் காலங்காட்டும் இடைநிலையுங் கெட்டு நிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச்சொற் றொடர்வதாம், உ-ம்.
நேற்றுக் கொல் களிறு இறந்தகால வினைத்தொகை
முன் விடு கணை
ன்று கொல் களிறு நிகழ்கால வினைத்தொகை ப்பொழுது விடு கணை
நாளைக் கொல் களிறு எதிர்கால வினைத்தொகை
பின் விடு கணை
இவை, விரியுமிடத்துக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும், எ-ம். விட்ட, விடுகின்ற, விடும். எ-ம். விரியும் எனக் கொள்க. கொல்களிறு, விடுகணை என்றாற்போல்வன, முக்காலமும் பற்றி வரின், முக்காலவினைத்தொகை எனப்படும். வருபுனல், தருசுடர், நடந்திடுகுதிரை என வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத்தொகை வரும். தேர்வு வினாக்கள் - 353. வினைத்தொகையாவது யாது? கொல்களிறு முதலியன, முக்காலமும் பற்றி வரின், எவ்வாறு பெயர் பெறும்? வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத்தொகை வருமோ?

Page 89
172 9 ஆறுமுகநாவலர்
பண்புத்தொகை 354. பண்புத்தொகையாவது, ஆகிய என்னும் உருபு
கெட்டு நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப்பெயர் தொடர்வதாம்.
பண்பு, வண்ணம், வடிவு, அளவு, சுவை முதலியனவாம்.
ஆகிய என்பது, பண்புக்கும், பண்பிக்கும், உளதாகிய ஒற்றுமையை விளக்குவதோரிடைச் சொல்.
(உதாரணம்) செந்தாமரை வண்ணப் பண்புத்தொகை கருங்குதிரை வட்டக்கல் வடிவுப் பண்புத்தொகை சதுரப்பலகை ஒருபொருள் அளவுப் பண்புத்தொகை முக்குணம் துவர்க்காய் சுவைப்பண்புத்தொகை இன்சொல்
இவை, விரியுமிடத்துச் செம்மையாகிய தாமரை, வட்டமாகிய கல், ஒன்றாகிய பொருள், துவர்ப்பாகிய காய் என விரியும்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகையாவது, ஆகிய என்னும் பண்புருபு கெட்டு நிற்கப், பொதுப்பெயரோடு சிறப்புப் பெயராயினுஞ் சிறப்புப் பெயரோடு பொதுப் பெயராயினும் ஒரு பொருண்மேல் வந்து தொடர்வதாம்.
2-LD.
ஆயன் சாத்தன் - பொதுப்பெயரோடு சிறப்புப் பெயர் சாரைப்பாம்பு - சிறப்புப் பெயரோடு பொதுப்பெயர்
இவை விரியுமிடத்து, ஆயனாகிய சாத்தன், சாரையாகிய பாம்பு என விரியும். ஆயன் சாரை என்பன பண்பல்லவாயினும் பண்பு

தமிழ் இலக்கணம் - தொகைநிலைத் தொடரியல் 9 173
தொக்க தொதைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவது மாகிய இயைபுபற்றி, இவை போல்வனவும் பண்புத்தொகை
*
எனப்பட்டன. தேர்வு வினாக்கள் - 354. பண்புத்தொகையாவது யாது? பண்பென்பன எவை? ஆகிய ன்ெபது என்ன சொல்? இரு பெயரொட்டுப் பண்புத்தொகையாவது யாது?
உவமைத்தொகை
355. உவமைத்தொகையாவது, போல முதலிய உவமவுருபு கெட்டு நிற்க, உவமானச் ச்ொல்லோடு உவமேயச் சொற்றொடர்வதாம்.
இவ்வுவமை, வினை, பயன், மெய், உரு எனபன பற்றி வரும்.
(உதாரணம்) புலிக்கொற்றன் - வினையுவமைத் தொகை மழைக்கை - பயனுவமைத்தெர்கை துடியிடை - மெய்யுவமைத்தொகை பவளவாய் - உருவுவழைத்தொகை
இவை, விரியுமிடத்துப் புலிபோலுங் கொற்றன், மழை போலுங் கை, துடிபோலு மிடை, பவளம்போலும் வாய் என விரியும். தேர்வு வினாக்கள் - 355. உவமைத் தொகையாவது யாது? இவ்வுவமை எவை பற்றி வரும்?
உம்மைத்தொகை 356 உம்மைத்தொகையாவது, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகையளவைகளாற் பொருள்களை அளக்குமிடத்து, எண்ணும்மை இடையிலும் இறுதியிலுங் கெட்டு நிற்கப், 'பெயரோடு பெயர்
தொடர்வதாம். உ-ம்.

Page 90
174 () ஆறுமுகநாவலர்
இராப்பகல் எண்ணலளவையும்மைத் தொகை ஒன்றேகால்
கழஞ்சேகால் எடுத்தலளவையும்மைத் தொகை தொடியேகஃசு
கலனேதுTணி முகத்தலளவையும்மைத் தொகை நாழியாழாக்கு
9. TGOOT6ory நீட்டலளவையும்மைத் தொகை சாணங்குலம்
இவை, விரியுமிடத்து, இராவும் பகலும், ஒன்றுங் காலும்,
கழஞ்சுங் காலும், கலனுந் தூணியும், சாணுமரையும் என
விரியும்.
357 உயர்திணை யொருமைப்பாலில் வரும் உம்மைத் தொகைகள், ரகரமெய்யுங் கள்விகுதியுமாகிய பலர்பால் விகுதியையுடையனவாய் வரும்.
உ-ம். சேரசோழ பாண்டியர்
தேவன்றேவிகள்
அஃறிணையொருமைப் பாலிலும் பொதுத்திணை யொருமைப்பாலிலும் வரும் உம்மைத் தொகைகள், பன்மை விகுதி பெறாதும், பெற்றும் வரும்.
உ-ம். நன்மை தீமை நன்மை தீமைகள்
தந்தை தாய் தந்தை தாய்கள் தேர்வு வினாக்கள் - 356. உம்மைத் தொகையாவது யாது? 357. உயர்திண்ையொருமையில் வரும் உம்மைத் தொகைகள், ஒருமை விகுதியோடு நிற்குமோ பலர்பால் விகுதி பெறுமோ? அஃறிணை யொருமைப்பாலிலும் பொதுத்திணையொருமைப் பாலிலும் வரும் உம்மைத் தொகைகள் பன்மை விகுதி பெற்று வராவோ?
அன்மொழித்தொகை 358 அன்மொழித் தொகையாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம்

தமிழ் இலக்கணம் - தொகைநிலைத் தொடரியல் 9 175
பொருள்படுமளவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிறமொழிப்பொருள் படத், தொகுவதாம். உ-ம்.
()
§ என்பது இரண்டாம் வேற்றுமைத்
தாகைநிலைக் களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவையுடைய குழலினையுடையாள் என் விரியும்.
பொற்றொடி என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை
நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாலாகிய தொடியினையுடையாள் என விரியும்.
கவியிலக்கணம் என்பது நான்காம் வேற்றுமைத் தொகை
நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது கவிக்கிலக்கணஞ் சொல்லப்பட்ட நூல் என விரியும்.
பொற்றாலி என்பது ஐந்தாம் வேற்றுமைத் தொகைநிலைக்
களத்துப் பிறந்த அன்மொழித்த்ொகை. இது பொன்னினாகிய தாலியினையுடையாள் என விரியும்.
கிள்ளிகுடி என்பது ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைக் களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கிள்ளியினது குடியிருக்குமூர் என விரியும்.
கீழ்வயிற்றுக்கழலை என்பது வேற்றும்ைத் தொகை
நிலைக் களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது கீழ்வயிற்றின்கண் எழுந்த கழலைபோல்வான் என விரியும்.
(2)
தாழ்குழல் என்பது வினைத்தொகை நிலைக்களத்துப்
பிறந் அன்மொழித்தொகை. இது தாழ்ந்த குழலினையுடையாள் என விரியும். . ...
(3)
கருங்குழல் என்பது பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது கருமையாகிய குழலினை யுடையாள் என விரியும்.
(4)
தேன்மொழி என்பது உவமைத்தொகை நிலைக்களத்துப்
பிறந்த அன்மொழித்தொகை. இது தேன் போலு மொழியினை யுடையாள் என விரியும்.
(5)
உயிர்மெய் என்பது உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது உயிருமெய்யுங் கூடிப் பிறந்த எழுத்து என விரியும்.

Page 91
176 9 ஆறுமுகநாவலர்
தேர்வு வினா - 358. அன்மொழித் தொகையாவது யாது?
தொகைநிலைத் தொடர்மொழிகள் பலபொருள் படுதல்
359 தொகைநிலைத் தொடர் மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, ஒரு பொருளைத் தருவன வன்றி, இரண்டு முதல் ஏழெல்லையாகிய பலபொருள் களைத் தருவனவும் உளவாம். உ-ம்.
() தெய்வ வணக்கம் - இரண்டு பொருள். (1) தெய்வத்தை வணங்கும் வணக்கம், (2)தெய்வத் திற்கு வணங்கும் வணக்கம்.
(2) தற்சேர்ந்தார் - மூன்று பொருள் () தன்னைச் சேர்ந்தார், (2) தன்னொடு சேர்ந்தார் (3) தன்கட் சேர்ந்தார்.
(3) சொல்லிலக்கணம் - நான்கு பொருள் (1) சொல்லினதிலக்கணம் (2) சொற்கிலக்கணம் (3) சொல்லின் கணிலக்கணம் (4) சொல்லினதிலக்கணஞ் சொன்ன நூல்.
(4) பொன்மணி - ஐந்து பொருள் () பொன்னாலாகிய மணி (2) பொன்னர்கிய மணி (3) பொன்னின் கண் மணி (4) பொன்னோடு சேர்ந்த மணி (5) பொன்னு மணியும்
(5) மரவேலி - ஆறு பொருள் () மரத்தைக் காக்கும் வேலி (2) மரத்திற்கு வேலி (3) மரத்தினது வேலி (4) மரத்தின் புறத்து வேலி (5) மரத்தா லாகிய வேலி (6) மரமாகிய வேலி
(6) சொற்பொருள் - ஏழு பொருள் () சொல்லாலறியப்படும் பொருள் (2) சொல்லினது பொருள் (3) சொற்குப் பொருள் (4) சொல்லின்கட் பொருள்

தமிழ் இலக்கணம் - தொகைநிலைத் தொடரியல் 0 177
(5) சொல்லும் பொருளும் (6) சொல்லாகிய பொருள் (7) சொல்லானது பொருள். தேர்வு வினா - 359. தொகைநிலைத் தொடர்மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, அவைகளுள், ஒரு பொருளைத் தருவன வன்றிப், பல பொருள்களைத் தருவனவும் உளவோ?
தொகைநிலைத் தொடர்மொழிகளிற் பொருள் சிறக்கும் இடங்கள்
360. தொகைநிலைத் தொடர்மொழிகளுள்ளே, வேற்றுமைத் தொகையிலும், பண்புத் தொகையிலும், முன் மொழியிலாயினும், பின்மொழியிலாயினும் பொருள் சிறந்து நிற்கும்; வினைத் தொகையிலும், உவமைத் தொகையிலும், முன்மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்; உம்மைத் தொகையில் அனைத்து மொழியிலும் பொருள் சிறந்து நிற்கும்; அன்மொழித் தொகையில் இருமொழியுமல்லாத புறமொழியிற் பொருள் சிறந்து நிற்கும்.
(உதாரணம்)
: দুৰ্গ
i
வேங்கைப்பூ வெண்டாமரை என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன் மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம்முன் மொழிகளிற் பொருள் சிறந்தன. கண்ணிமை, செஞ்ஞாயிறு என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்குதலின்றி நிற்றலால், பின்மொழிகளிற் பொருள் சிறந்தன. ஆடுபாம்பு, வேற்கண் என வரும் வினைத்தொகை உவமைத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால் அம்முன்மொழிகளிற் பொருள் சிறந்தன.
இராப்பகல், சேரசோழ பாண்டியர் என வரும் உம்மைத் தொகைகளிலே, அனைத்து மொழிகளும் இனம் விலக்கலும்
த.இ.-12

Page 92
178 9 ஆறுமுகநாவலர்
விலக்காமையுமின்றி நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும் பொருள் சிறந்தன. பொற்றொடி, உயிர்மெய் என வரும் அன்மொழித்தொகை களிலே, சொல்லுவோனுடைய கருத்து இவ்விருமொழிப் பொருண் மேலதாகாது, இவ்விரு மொழியுமல்லாத உடையாண் முதலிய புறமொழிப் பொருண்மேலதாதலால், அப்புறமொழி , களிற் பொருள் சிறந்தன.
தேர்வு வினா - 368. தொகைநிலைத் தொடர்மொழிகளுள், எந்தெந்தத் தொடரில் எந்தெந்த மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்?
தொகைநிலைத் தொடரியல் முற்றிற்று.
2. தொகாநிலைத் தொடரியல் 361. தொகாநிலைத் தொடராவது, இடையே வேற்றுமையுருபு முதலிய உருபுகள் கெடாமலும், ஒரு சொற்றன்மைப்படாமலும், சொற்கள் பிளவு படத் தொடர்வதாம்.
தேர்வு வினா - 361 தொகாநிலைத் தொடராவது யாது?
தொகாநிலைத் தொடர்ப்பாகுபாடு
362. அத்தொகாநிலைத்தொடர், எழுவாய்த்தொடர், விளித்தொடர், வேற்றுமைத் தொகாநிலைத்தொடர், வினை முற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடுக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும். உ-ம்.
() சாத்தன் வந்தான் எழுவாய்த்தொடர்
(2) சாத்தா வா விளித்தொடர்

தமிழ் இலக்கணம் - தொகாநிலைத் தொடரியல் 9 179
(3) |குடத்தை வனைந்தான்
வாளால் வெட்டினான் இரப்போர்க்கீந்தான் வேற்றுமைத் மலையினிழிந்தான் தொகாநிலைத் தொடர் சாத்தனது கை மணியின்க ணொளி
(4) உண்டான் சாத்தன் 8
குழையன் கொற்றன் வினைமுற்றுத் தொடர்
(5) பெயரெச்சத்தொடர்
(6) உண்டு வந்தான் வினையெச்சத்தொடர்
இன்றி வந்தான் (7) 1 மற்றொன்று இடைச் சொற்றொடர் (8) கடிக்கமலம் உரிச்சொற்றொடர் (9) பாம்புபாம்பு அடுக்குத்தொடர்
363. வேற்றுமைத்தொகை, விரிந்தவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடராம். வின்ைத்தொகை விரிந்தவிடத்துப் பெயரெச்சத் தொகாநிலைத் தொடராம். பண்புத் தொகையும் உம்மைத்தொகையும் விரிந்தவிடத்து இடைச்சொற்றொடராம். உவமைத் தொகை விரிந்தவிடத்து முன்னது இடைச்சொற்றொடரும், பின்னது இடைச் சொலடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சத் தொடருமாம். அன்மொழித்தொகை விரிந்தவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் முதலேற்பனவாம்.
தேர்வு வினாக்கள் - 362. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? 363. வேற்றுமைத் தொகை, விரிந்தவிடத்து என்ன தொகாநிலைத் தொடராம்? வினைத்தொகை, விரிந்தவிடத்து என்ன தொகாநிலைத் தொடராம்? பண்புத் தொகையும் உம்மைத் தொகையும் விரிந்தவிடத்து, என்ன தொடராம்? உவமைத் தொகை, விரிந்தவிடத்து என்ன தொடராம்? அன்மொழித் தொகை, விரிந்தவிடத்து என்ன தொடராம்?

Page 93
180 0 ஆறுமுகநாவலர்
எழுவாய்த் தொடர்க்கும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை
364. எழுவாய்க்கு வினைமுற்றைப் பயனிலையாகக் கொள்ளுமிடத்து, வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாம். வினைமுற்றிற்குப் பெயரைப் பயனிலையாகக் கொள்ளுமிடத்து வினை விசேடணமாக வினைமுதல் முக்கியப் பொருளாம். உ-ம்.
சாத்தன் வந்தான்; இங்கே சாத்தன் இது செய்தான் என
வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.
வந்தான் சாத்தன், இங்கே இது செய்தான் சாத்தன் என
வினை விசேடணமாக வினைமுதல் முக்கியப் பொருளாயிற்று. தேர்வு வினா - 364. சாத்தன் வந்தான் என்னும் எழுவாய்த் தொடர்க்கும், வந்தான் சாத்தன் என்னும் வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை என்ன?
இடைப்பிற வரல்
365. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும்,
பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு முடியும்
பெயர்க்கும் வினைக்கும் இடையே, வருமொழியோடு இயையத்தக்க பிறசொற்கள் வரவும் பெறும். உ-ம்.
() சாத்தன் (வயிறார) உண்டான்
அறத்தை (அழகுபெறச்) செய்தான் வாளான் (மாய்) வெட்டினான் தேவர்க்குச் (செல்வம் வேண்டிச்)
சிறப்பெடுத்தான் மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான் சாத்தனது இத்தடக்கை) யானை ஊர்க்கண் (உயர்ந்த வொளி) மாடம் சாத்தா (விரைந்து) ஒடி வா
(2) வந்தான் (அவ்வூர்க்குப்போன) சாத்தன் வினைமுற்று
வேற்றுமையுருபு

தமிழ் இலக்கணம் - தொகாநிலைத் தொடரியல் 9 181
(3) வந்த (வடகாசி) மன்னன் பெயரெச்சம் (4) வந்து (சாத்தனின்றவனூர்க்குப்) வினையெச்சம்
பாயினான்
உண்டு விருந்தோடு வந்தான் என்னுமிடத்து, இடையில் வந்த விருந்தென்னுஞ் சொல் வருமொழியோடு இயைதலன்றி, விருந்தோடுண்டு வந்தான் என நிலைமொழி யோடும் இயைதலால், இது போல்வன இடையில் வரப்பெறாவென்றறிக. தேர்வு வினா - 365. வேற்றுமையுருபுகளும் வினைமுற்றுக்களும் பெயரெச்சங்களும் வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே பிறசொற்கள் வருதல் உண்டோ?
முடிக்குஞ் சொன்னிற்கு மிடம் 366. ஆறனுருபொழிந்த வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருஞ் சொற்கள், அவைளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டு. உ-ம். ・リ
() வந்தான் சாத்தன்
வெட்டினான் மரத்தை வெட்டினான் வாளால் கொடுத்தானந்தணர்க்கு வேற்றுமையுருபு நிங்கினானூரின் சென்றான் சாத்தன் கண் வா சாத்தா
(2) சாத்தன் போயினான் வினைமுற்று
(3) போயினான் வந்து வினையெச்சம்
தேர்வு வினா - 366. வேற்றுமையுருபுகளையும் வினைமுற்றையும் வினையெச்சத்தையும் முடிக்க வருஞ் சொற்கள், அவைகளுக்குப் பின்னின்றி, முன் வருதலும் உண்டோ?
தொகாநிலைத் தொடரியல் முற்றிற்று.

Page 94
182 9 ஆறுமுகநாவலர்
3. ஒழிபியல்
தொடர்மொழிப் பாகுபாடு
367 தொடர்மொழி, முற்றுத் தொடர்மொழியும் எச்சத் தொடர்மொழியும் என இருவகைப்படும்.
368 முற்றுத் தொடர்மொழியாவது, எழுவாயும் பயனிலையுஞ் செயப்படுபொருண் முதலியவைகளோடு கூடாதாயினுங் கூடியாயினும் முடிவு பெற்று நிற்குந் தொடர்மொழியாம். வடநூலார் இம்முற்றுத் தொடர் மொழியை வாக்கியமென்பர்.
உ-ம். சாத்தன் வந்தான்
சாத்தன் சோற்றை யுண்டான் 369. எச்சத் தொடர்மொழியாவது, முடிவு பெறாது அம்முற்றுத் தொடர்மொழிக்கு உறுப்பாக வருந் தொடர் மொழியாம்.
உ-ம். யானைக் கோடு
யானையது கோடு தேர்வு வினாக்கள் - 367. தொடர்மொழி எத்தனை வகைப்படும்? 368. முற்றுத்தொடர் மொழியாவது யாது? 369. எச்சத் தொடர் மொழியாவது யாது?
வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணம்
370. வாக்கியத்தின் பொருளை உணர்தற்குக் காரணம், அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்னு நான்குமாம்.
37. அவாய்நிலையாவது, ஒரு சொற் றனக்கு எச்சொல் இல்லாவிடின் வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி நிற்றலாம். உ-ம்.

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 9 183
ஆவைக்கொனா என்னுமிடத்து, ஆவை என்பது மாத்திரஞ் சொல்லிக் கொணாவென்பது சொல்லாவிடினும், கொணா வென்பதுமாத்திரஞ் சொல்லி ஆவை என்பது சொல்லா விடினும், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது. ஆவைக்கொணா என இரண்டுஞ் சொல்லின், அவாய்நிலை காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாதல் அறிக.
372. தகுதியாவது, பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமையாம். உ-ம்.
நெருப்பானனை என்னுமிடத்து நனைத்தலின் நெருப்புக் கருவியன்று என்கிற உணர்ச்சி தடையுணர்ச்சி. இவ்வுணர்ச்சி இருத்தலால், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது.
நீரானனை என்னுமிடத்து நனைத்தலின் நீர் கருவியாதலாற் றடையுணர்ச்சி யில்லை; ஆகவே தகுதி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
373. அண்மையாவது, காலம் இடையீடின்றியும் வாக்கியப் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத சொல் இடையீடின்றியுஞ் சொல்லப்படுதலாம். உ-ம்.
ஆவைக் கொணா என்பது யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாகச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. ஒரு தொடராக விரையச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
மலையுண்டானெருப்புடையது தேவதத்தன் என்னுமிடத்து, மலை நெருப்புடையது என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத உண்டான் என்னுஞ் சொல் அச்சொற்கட்கு இடையீடாக நின்றது; உண்டான் றேவதத்தன் என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத நெருப்புடையது என்னுஞ் சொல் அச்சொற்கட்கு இடையீடாக நின்றது. இப்படி இடையிட்டுச் சொல்லாது, மலை நெருப்புடையது; உண்டான் றேவதத்தன் எனச் சொல்லின், அண்மை காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

Page 95
184 9 ஆறுமுகநாவலர்
374. கருத்துணர்ச்சியாவது, ஒருசொல் எப் பொருளைத் தரல் வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப் பட்டதோ அக்கருத்தைச் சமயவிசேடத்தால் அறிதலாம். 2--ub.
மாவைக் கொண்டுவா என்னுமிடத்து, மாவென்பது பல பொருளொரு சொல்லாததால் வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. இது பசித்தோணாற் சொல்லப்படிற் றின்னுமா வெனவும், கவசம் பூண்டு நிற்பானாற் சொல்லப்படிற் குதிரை யெனவும், சொல்லுவான் கருத்துச் சமயவிசேடத்தால் அறியப் படும். அப்போது அக்கருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக. தேர்வு வினாக்கள் - 370. வாக்கியத்தின் பொருளை உணர்தற்குக் காரணம் என்ன? 371. அவாய்நிலையாவது யாது? 372. தகுதியாவது யாது? 373. அண்மையாவது யாது? 374. கருத்துணர்ச்சியாவது யாது?
உருபும் வினையும் அடுக்கி முடிதல் 375. வேற்றுமையுருபுகள் விரிந்தாயினும் மறைந் தாயினும் ஒன்று பல வடுக்கி வரினும், கலந்து பல வடுக்கி வரினும், வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பலவுந் தம்மை முடித்தற்குரிய ஒரு சொல்லைக் கொண்டு முடியும். உ-ம்.
சாத்தனையுங் கொற்றனையும் உருபுகள் விரிந்தும் வாழ்த்தினான். சாத்தனுக்குங் மறைந்தும் ஒன்று பல கொற்றணுக்குந் தந்தை. வடுக்கல் அருளற முடையன். அரசன் பகைவனை வாளால் உருபுகள் விரிந்தும் வெட்டினான். அரசன் வாள் கைக் மறைந்தும் கலந்து பல கொண்டான். வடுக்கல்
டினான் பாடினான் சாத்தன் வினைமுற்று ஒன்று பல ளையண் மெல்லியண் மடந்தை வடுக்கல்

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 9 185
--
கற்ற கேட்ட பெரியோர் பெயரெச்சம் ஒன்று பல நெடிய கரிய மனிதன் வடுக்கல் கற்றுக் கேட்டறிந்தார் வினையெச்சம் ஒன்று பல விருப்பின்றி வெறுப்பின்றி வடுக்கல்
யிருந்தார்.
376. வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வருமிடத்து, ஒருதொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றைப் பெயர்களெல்லாவற்றினுந் தொக்கு வருதலுமுண்டு.
உ-ம். பொருளின்பங்களைப் பெற்றான்
சேரசோழபாண்டியர்க்கு நண்பன் தந்தை தாயி னிங்கினான் 377 ஒருதொடரினுள் ஒருபொருளுக்கே பல பெயர் வருதலும், அப்பெயர்தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவாம். வரினும், பொருளொன்றே யாதலால் எண்ணும்மை பெறுதலில்லை. உ-ம்.
சங்கரனை யெண்குணனைச் சம்புவைநால் வேதனொரு கங்கரனை நெஞ்சே கருது.
தேர்வு வினாக்கள் - 375. வேற்றுமையுருபுகள் ஒன்று பலவடுக்கி வரினும், கலந்து பலவடுக்கி வரினும், வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பலவடுக்கி வரினும், அப்பலவும் எப்படி முடியும்? 376. வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று, மற்றப் பெயர்களெல்லாவற்றிலுந் தொக்கு வருதலும் உண்டோ? 377, ஒரு தொடரினுள், ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப்பெயர் தோறும் ஒருவேற்றுமையுருபே வருதலும் உளவோ?
திணைபாலிட Աքկվ
378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது, திணைபால் இடங்களின் மாறுபடாது

Page 96
186 6 ஆறுமுகநாவலர்
இயைந்து நிற்றல் வேண்டும். இயைந்து நில்லாதாயின் வழுவாம். உ-ம்.
நம்பி வந்தான் வழாநிலை நங்கை வந்தாள் அந்தணர் வந்தார்
நான் வந்தேன்
நீ வந்தாய்
நம்பி வந்தது திணை வழு நங்கை வந்தான் பால் வழு அவன் வந்தேன் 9ւ հմ(Ա
379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கை யெழுவாய் அடுக்கி வரின், பலர்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும். இரண்டு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், பலவின்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும்.
உ-ம். நம்பியு நங்கையும் வந்தார்
யானையுங் குதிரையும் வந்தன 380. முன்னிலையெழுவாயோடு படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், முன்னிலைப் பன்மைப்பயனிலை கொண்டு முடியும். அது உளப்பாட்டு முன்னிலைப்பன்மை எனப்படும்.
உ-ம். நீயு மவனும் போயினிர்.
381. தன்மையெழுவாயோடு முன்னிலையெழுவா
யேனும் படர்க்கையெழுவாயேனும் இவ்விரண்டெழுவாயு
மேனும் அடுக்கி வரின், தன்மைப்பன்மைப் பயனிலை
கொண்டு முடியும். இது உளப்பாட்டுத் தன்மைப்பன்மை
எனப்படும்.
உ-ம். யானு நீயும் போயினோம்
யானு மவனும் போயினோம் யானு நீயு மவனும் போயினோம்

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 6 187
382 திணையையந் தோன்றியவிடத்து உருவு வடிவு என்னும் பொதுச்சொற்களாலும், உயர்திணைப் பாலையந் தோன்றியவிடத்து அத்திணைப் பன்மைச் சொல்லாலும், அஃறிணைப்பாலையந் தோன்றியவிடத்துப் பால்பகா வஃறிணைச் சொல்லாலுங் கூறல் வேண்டும். உ-ம்
() குற்றியோ மனுடனோ திணையையம்
அங்குத் தோன்றுகிற உரு?
(2) ஆண்மகனோ உயர்திணைப்பாலையம்
பெண்மகளோ அங்கே தோன்றுகிறவர்? .
(3) | ஒன்றோ பலவோ அங்கு அஃறிணைப்பாலையம்
வந்த குதிரை? .
383. இருதிணையில் ஒருதிணை துணிந்தவிடத்தும், இருபாலில் ஒருபால் துணிந்தவிடத்தும், மற்றொன்றல்லாத தன்மையைத் துணிந்த பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும். இது சுருங்கச் சொல்லல் என்னும் அழகைப் பயப்பித்தலாற் சிறப்புடைத்தாம். உ-ம்.
() (குற்றியெனின்) மனுடனன்று எ-ம். (மனுடனெனின்) குற்றியல்லன் 6T-h.
(2) (ஆண்மகனெனின்) பெண்மகளல்லன் எ-ம். (ப்ெண்மகளெனின்) ஆண்மகனல்லள் எ-ம்.
(3) 1 (ஒன்றெனின்) பலவன்று T-th.
(பலவெனின்) ஒன்றல்ல எ-ம். கூறுக.
தேர்வு வினாக்கள் - 378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது எப்படி இயைந்து நிற்றல் வேண்டும்? 379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? இரண்டு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 380. முன்னிலையெழுவாயோடு படர்க்கையெழுவாய் அடுக்கி வரின்,

Page 97
188 9 ஆறுமுகநாவலர்
எப்பயனிலை கொண்டு முடியும்? 381. தன்மையெழுவாயோடு, முன்னிலையெழுவாயேனும், படர்க்கையெழுவாயேனும், இவ்விரண் டெழுவாயுமேனும் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 382. திணையையத்தையும் பாலையத்தையும் எந்தெந்தச் சொல்லாற் கூறல் வேண்டும்? 383. இருதிணையில் ஒருதிணை துணிந்த விடத்தும், இருபாலில் ஒருபால் துணிந்தவிடத்தும், மற்றொன்றல்லாத தன்மையை எப்பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும்?
திணைபாலிடப் பொதுமை நீங்குநெறி
384. திணை பாலிடங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருஞ் சிறப்புப் பெயருஞ் சிறப்புவினையும், அவற்றின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை யுணர்த்தும். உ-ம்.
சாத்தனிவன், சாத்தனிது. எ-ம். சாத்தன் வந்தான்; சாத்தன் வந்தது. எ-ம். பெயர்த்திணைப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும் நீக்கி ஒருதிணையை யுணர்த்தின.
ஒருவரென்னையர்; ஒருவரென்றாயர். எ-ம். மரம் வளர்ந்தது; மரம் வளர்ந்தன. எ-ம். பெயர்ப்பாற் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும் நீக்கி ஒரு பாலை யுணர்த்தின. யாமெல்லாம் வருவம், நீயிரெல்லாம் போமின்; அவரெல்லா மிருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன் வந்த சிறப்புப் பெயரும் பின் வந்த சிறப்பு வினையும் நீக்கி ஒவ்வோரிடத்தை யுணர்த்தின.
வாழ்க அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத்திணை பாலிடப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி ஒருதிணையையும் பாலையும் இடத்தையும் உணர்த்தின. 385 பெயர் வினையிரண்டும் உயர்திணை யாண் பெணிரண்டற்கும் பொதுவாகவேனும், அஃறிணை யாண் பெணிரண்டற்கும் பொதுவாகவேனும் வருமிடத்து,

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 9 189
அப்பாலிரண்டனுள் ஒருபாற்கே யுரிய தொழின் முதலிய குறிப்பினால், அப்பாலானது துணியப்படும். உ-ம்.
ஆயிரமக்கள் போர் செய்யப் போயினார் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் போயினாரென்னும் வினையும் உயர் திணை யாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், போர் செயலென்னுந் தொழிற்குறிப்பினால் ஆண்பால் துணியப் ULL-5j.
பெருந்தேவி மகவின்ற கட்டிலினருகே நால்வர் மக்களுளர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பால் துணியப் பட்டது.
இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தனவென்னும் வினையும் அஃறிணையாண் பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுந் தொழிற் குறிப்பினால் எருது துணியப்பட்டது.
இப்பெற்றங் கறத்தலொழிந்தன என்னுமிடத்துப் பெற்ற மென்னும் பெயரும் ஒழிந்தனவென்னும் வினையும் அஃறிணை யாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், கறத்தலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பசு துணியப்பட்டது. தேர்வு வினாக்கள் - 384. திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை உணர்த்துவன யாவை? 385. பெயர், வினை இரண்டும், உயர்திணை யாண் பெண் இரண்டற்கும் பொதுவாகவேனும், அஃறிணையாண் பெண் இடண்டற்கும் பொதுவாகவேனும் வருமிடத்து, அப்பாலி ரண்டனுள் ஒன்று எதனாலே துணியப்படும்?
உயர்திணை தொடர்ந்த அஃறிணை
386. உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதியாறும், உயர்திணை வினையான் முடியும்.

Page 98
190 9 ஆறுமுகநாவலர்
உ-ம் நம்பி பொன்பெரியன்
நம்பி நாடு பெரியன் இங்கேஉயர்திணையெழுவா நம்பி வாழ்நாள் பெரியன் யின் பயனிலையோடு நம்பி மூக்குக் கூரியன் அஃறிணை யெழுவாயும் நம்பி குடிமை நல்லன் முடிந்ததறிக நம்பி நடை கடியன்
மாடு கோடு கூரிது என்னுமிடத்தும், மாடு என்னும் அஃறிணை யெழுவாயின் பயனிலையாகிய கூரிது என்னும் வினையோடு அதன் கிழமைப் பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிவதறிக.
தேர்வு வினா - 386. உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து, எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதியாறும் எத்திணை வினையான் முடியும்?
கலந்த திணை பால்களுக்கு ஒரு முடிபு
387. இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒருதொடராக வருமிடத்தும், சிறப்பினாலும், மிகுதியினாலும், இழிவினாலும், ஒருமுடிபைப் பெறும்.
2-D.
"திங்களுஞ் சான்றோரு மொப்பர்" என் இருதினைப் பொருள்கள் கலந்து சிறப்பினால் உயர்திணை முடிபைப் பெற்றன. சான்றோர் திங்கள் போல மறுத் தாங்கமாட்டாமை இங்கே சிறப்பு.
“பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தோர் குழவியெனு மிவர்கள்" என இருதிணைப் பொருள்கள் கலந்து மிகுதியால் உயர்திணை முடியைப் பெற்றன. அஃறிணைப் பொருள் ஒன்றேயாக உயர்திணைப் பொருள் ஐந்தாதல் இங்கே மிகுதி.

தமிழ் இலக்கணம் - ஒழியியல் 9 191
"மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா” என இருதினைப் பொருள்கள் கலந்து இழிவினால் அஃறிணை முடியைப் பெற்றன. மூர்க்க குணமுடைமை இங்கே இழிவு. தேவதத்தன் மனைவியுந் தானும் வந்தான் எனப் பாற்பொருள்கள் கலந்து சிறப்பினால் ஆண்பான் முடிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு. தேர்வு வினா - 387. இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி முடியும்?
திணை பால் வழுவமைதி
388. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால், ஒருதிணைப் பொருள் வேறுதிணைப் பொருளாகவும், ஒருபாற் பொருள் வேறுபாற் பொருளாகவுஞ் சொல்லப்படும். உ-ம்.
ஒராவினை என்னம்மை வந்தாள் என்றவிடத்து, உவப்பினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது. பசுங்கிளியார் தூது சென்றார் என்றவிடத்து, உயர்வினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது. "தம்பொருளென்ப தம்மக்கள்" என்றவிடத்துச் சிறப்பினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது. பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவனை இந்நாய் குரைக்கின்றது என்றவிடத்து, கோபத்தினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது. நாங்கடவுளுடைமை என்றவிடத்து இழிவினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது. தன்புதல்வனை என்னம்மை வந்தாள் என்றவிடத்து; மகிழ்ச்சி யினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது. ஒருவனை அவர் வந்தார் என்றவிடத்து, உயர்வினால் ஒருமைப் பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது.

Page 99
192 9 ஆறுமுகநாவலர்
தேவன் மூவுலகிற்குந் தாய் என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது. "எனைத்துணைய ராயினு மென்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்" . என்றவிடத்துக், கோபத்தினாற் பன்மைப்பால் ஒருமைப்பாலாகச் சொல்லப்பட்டது. பெண்வழிச் செல்வானை இவன் பெண் என்றவிடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது. தேர்வு வினா - 388. ஒருதிணைப் பொருள் வேறு திணைப் பொருளாகவும், ஒருபாற் பொருள் வேறு பாற்பொருளாகவுஞ் சொல்லப்படுமோ?
ஒருமை பன்மை மயக்கம்
389. ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லையும், பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துத் தழுவிச் சொல்லுதலும் உண்டு. உ-ம்.
வெயிலெல்லா மறைத்தது மேகம் என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைப்பாலில் எல்லாமென்னும் பன்மைச் சொற் சேர்த்துச் சொல்லப்பட்டது. இரண்டு கண்ணுஞ் சிவந்தது என்னுமிடத்து, இரண்டென்னும் பன்மைப்பாலிற் சிவந்தது என்னும் ஒருமைச் சொற் சேர்த்துச் சொல்லப்பட்டது. தேர்வு வினா - 389. ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லையும் பன்மைப் பாலில் ஒருமைச் சொல்லையுஞ் சொல்லுதலும் உண்டோ?
இடவழுவமைதி 390. ஒரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் சொல்லுதலும் உண்டு. உ-ம்.
சாத்தன்றா யிவை செய்வேனோ என்னுமிடத்து, யானெனச் சொல்லல் வேண்டுந் தன்மையிலே சாத்தன்றாயெனப்

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 9 193
படர்க்கைச்சொற் சேர்த்துச் சொல்லப்பட்டது. சாத்தன் றாயாகிய யான் என்பது பொருள். “எம்பியை யீங்குப் பெற்றே னென்னெனக் கரியதென்றான்." என்னுமிடத்து, நின்னையெனச் சொல்லல்வேண்டு முன்னிலை யிலே எம்பியையெனப் படர்க்கைச் சொற் சேர்த்துச் சொல்லப் பட்டது. எம்பியாகிய உன்னை என்பது பொருள்.
யானோ வவனோ யாரிது செய்தார்; நீயோ வவனோ யாரிது செய்தார்;
நீயோ யானோ யாரிது செய்தார்; நீயோ வவனோ யானோ யாரிது செய்தார்.
என ஒரிடத்திற் பிறவிடம் விரவி வருதலும் உண்டெனக் கொள்க. தேர்வு வினா - 390. ஒரிடத்திற் பிறவிடச் சொல்லைச் சொல்லுதலும் உண்டோ?
காலவழுவமைதி 39. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறாமல் ஒரு தன்மைய வாய் நிகழும் பொருள்களின் வினையை நிகழ்காலத்தாற் சொல்லத்தகும். A
உ-ம். மலை நிற்கின்றது
தெய்வ மிருக்கின்றது கடவு ளளிக்கின்றார் மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், கடவுட்கு அளித்தலும் முக்காலத்திலும் உள்ளனவாதல் காண்க.
392 விரைவு, மிகுதி, தெளிவு என்னும் இம்மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும், ஒருகாலம் வேறொருகாலமாகச் சொல்லவும் படும். உ-ம்.
உண்பதற்கிருப்பவனும் உண்கின்றவனும் விரைவிலே தம்மை உடன்கொண்டுபோக அழைப்பவனுக்கு, உண்டேன்
த.இ.-13

Page 100
194 9 ஆறுமுகநாவலர்
உண்டேன்; வந்தேன் வந்தேன் என்றவிடத்து, விரைவு பற்றி எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலமாகச் சொல்லப் பட்டன.
களவு செய்ய நினைப்போன் கையறுப்புண்டான் என்ற விடத்துக், களவு செய்யிற் கையறுப்புண்ணல் மிகுதியாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கையறுப் புண்ணல் தவறினுந் தவறுமாதலால் மிகுதியெனப்பட்டது. எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் மழை பெய்தது என்றவிடத்து, எறும்பு முட்டையெடுத்து மேட்டிலேறினால் மழை பெய்தல் தெளிவாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.
யாம் பண்டு விளையாடுவ திச்சோலை யாம் பண்டு விளை யாடுகிறதிச்சோலை இவைகளில், அக்காரணங்கள் இல்லா மலே, இறந்தகாலம் எதிர்காலமும் நிகழ்காலமுமாகச் சொல்லப் பட்டன.
தேர்வு வினாக்கள் - 391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறா மல் ஒருதன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையை எக்காலத் தாற் சொல்லத்தகும்? 392. ஒருகாலம் வேறொரு காலமாகச் சொல்லவும்படுமோ?
வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல்
393. செயப்படுபொருளையும், கருவியையும், இடத் தையும், செயலையும், காலத்தையும், வினைமுதல் போல வைத்து, அவ்வினை முதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டு. உ-ம்.
இம்மாடியான் கொண்டது - செயப்படுபொருள் இவ்வெழுத்தாணியானெழுதியது - கருவி இவ்வீடியானிருந்தது - இடம் இத்தொழில் யான் செய்தது - செயல் இந்நாள் யான் பிறந்தது - காலம்

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 9 195
தேர்வு வினா - 393. செயப்படுபொருளையுங் கருவியையும் இடத்தையும் செயலையுங் காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டோ?
அடைமொழி
394. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும், அடைமொழிகளாய் வரும.
அடையினால் அடுக்கப்பட்டது அடைகொளி யெனப்படும். அடையெனினும் விசேடணமெனினும் பொருந்தும். அடைகொளியெனினும் விசேடியமெனினும் பொருந்தும்.
(உதாரணம்) இனமுள்ளன இனமில்லன நெய்க்குடம் உப்பளம் பொருள் குளநெல் ஊர்மன்று இடம் கார்த்திகை விளக்கு நாளரும்பு காலம் மரம் இலைமரம் சினை சந்தாமரை செம்போத்து குணம் ஆடுபாம்பு தோய்தயிர் தொழில்
தேர்வு வினர் - 394. பொருளாதியாறும், இனமுள்ள பொருள்களுக் கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும் அடைமொழிகளாய் H(hGunff ?
சிறப்புப்பெயர் இயற்பெயர்
395 ஒருகாரணம் பற்றி வருஞ் , சிறப்புப் பெயரி னாலும், காரணம் பற்றாது வரும் இயற்பெயரினாலும்,

Page 101
196 9 ஆறுமுகநாவலர்
ஒருபொருளைச் சொல்லுமிடத்துச், சிறப்புப் பெயரை முன் வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல் சிறப்பாம்.
உ-ம். சோழியன் கொற்றன்
பாண்டியன் குலசேகரன் தமிழ்ப்புலவன் கம்பன் இனிக் கொற்றன் சோழியன் என இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன் வருமிடத்து, வைத்தியநாத நாவலன் கச்சியப்பப்புலவன் என இறுதி விகாரமாக வருதலுங் காண்க.
தேர்வு வினாக்கள் - 395. ஒரு காரணம் பற்றி வருஞ் சிறப்புப் பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற்பெயரினாலும் ஒரு பொருளைச் சொல்லுமிடத்து, எதை முன் வைத்து, எதைப் பின் வைத்தல் சிறப்பாம்? இயற்பெயர் சிறப்புப் பெயருக்கு முன் வருதல் இல்லையோ? இயற்பெயர் முன் வருமிடத்து, அதனிறுதி விகாரமாக வருதலும் உண்டோ?
வினாவிடை
396, வினாவாவது, அறியக் கருதியதை வெளிப் படுத்துவதாம். விடையாவது, வினாவிய பொருளை அறி விப்பதாம்.
வினா, உசா, கடா என்பன ஒரு பொருட்சொற்கள். விடை, செப்பு, உத்தரம், இறை என்பன ஒரு பொருட் சொற்கள்.
397 வினாவையும் விடையையும் வழுவாமற் காத்தல் வேண்டும்.
உ-ம். உயிரெத்தன்மைத்து வினாவழாநிலை உயிருணர்தற்றன்மைத்து விடைவழாநிலை கறக்கின்ற வெருமை பாலோ சினையோ ? வினாவழு

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 9 197
தில்லைக்கு வழியாது? எனின் சிவப்புக்காளை முப்பது பணம் என்பது விடைவழு 398. வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல் என அறுவகைப்படும். உ-ம்.
() ஆசிரியரே இப்பாட்டிற்குப் பொருள் அறியாமை வினா
யாது? (2) குற்றியோ மகனோ? ஐயவினா (3) | மாணாக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் அறிவினா
யாது? (4) | பயறுண்டோ செட்டியாரே? கொளல்வினா (5) தம்பிக்காடையில்லையா? Qas, Tsont-lauiTaT (6) தம்பி யுண்டாயா? ஏவல்வினா
399 விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினாவெதிர்வினர்தல், உற்றதுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டுவகைப்படும். இவர் ள், முன்னைய மூன்றுஞ் செவ்வணிறை; பின்னைய ஐந்தும் ,றை பயப்பன.
(உதாரணம்) வினா விடை
() தில்லைக்கு வழி இது கட்டு
யாது? (2) இது செய்வாயா? செய்யேன் எதிர்மறை (3) y செய்வேன் உடன்பாடு (4) நீ செய் ஏவல் (5) s செய்யேனோ வினாவெதிர்
வினாதல் (6) g உடம்பு நொந்தது உற்றதுரைத்தல்

Page 102
198 6 ஆறுமுகநாவலர்
(7) உடம்பு நோம் உறுவது கூறல்
(8) gg மற்றையது இனமொழி
செய்வேன்
தேர்வு வினாக்கள் - 396, வினாவாவது யாது? விடையாவது யாது? 397. வினாவையும் விடையையும் எவ்வாறு காத்தல் வேண்டும்? 398. வினா எத்தனை வகைப்படும்? 399. விடை எத்தனை வகைப்படும்ய
சுட்டு
400 படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்து வரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளு மிடத்து அதற்குப் பின் வரும்; முடிக்குஞ் சொற் கொள்ளா விடத்து அதற்குப் பின்னு முன்னும் வரும். உ-ம்.
(1) நம்பி வந்தான்; அவனுக் குச்சோறிடுக
எருது வந்தது; அதற்குப் புல்லிடுக
(2) நம்பியவன்; அவனம்பி தேர்வு வினா - 400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்து வரின், அச்சுட்டுப்பெயர் அப்படர்க்கைப் பெயர்க்கு எவ்விடத்து வரும்?
LOJL
40. மரபாவது, உலகவழக்கிலுஞ் செய்யுள் வழக்கிலும் எப்பொருட்கு எப்பெயர் வழங்கி வருமோ, அப்பொருளை அச்சொல்லாற் கூறுதலாம்.
உ-ம். ஆனைமேய்ப்பான் பாகன் குதிரைக்குட்டி
ஆடுமேய்ப்பான் இடையன் பசுக்கன்று
ஆனையிலண்டம் கீரிப்பிள்ளை ஆடடுப்புழுக்கை கோழிக்குஞ்சு யானைக்குட்டி தென்னம்பிள்ளை யானைக்கன்று மாங்கன்று
தேர்வு வினா - 401. மரபாவது யாது?

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 9 199
முற்றும்மை 402. இத்தனையென்று தொகை உற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மை பெற்று வரும். உ-ம்.
() தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்
(2) ஒளிமுன்னிருள் எங்குமில்லை தேர்வு வினா - 402. இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?
ஒருபொருட் பன்மொழி
403 சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இரு சொற்கள் தொடர்ந்து வருதலும் உண்டு.
உ-ம். நாகிளங்கமுகு மீமிசைஞாயிறு
புனிற்றிளங்கன்று உயர்ந்தோங்கு பெருவரை
தேர்வு வினா - 403. ஒரு பொருண்மேல் இருசொற்கள் காரண மின்றித் தொடர்ந்து வருதலும் உண்டோ?
அடுக்குச்சொல் 404 ஒரு சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம்,
துன்பம் முதலிய காரணம் பற்றி இரண்டு முதல் மூன்றளவு அடுக்கிக் கூறப்படும். உ-ம்.
(1) உண்டேனுண்டேன்; போ போ போ விரைவு (2) எய்யெய்; எறி எறி எறி கோபம்
(3) வருக வருக; பொலிக பொலிக பொலிக Զ-5ՌJնԾ085

Page 103
200 9 ஆறுமுகநாவலர்
(4) பாம்பு பாம்பு, தீத் தீத் தீ அச்சம் (5) உய்யேனுய்யேன், வாழேன் வாழேன் துன்பம்
வாழேன்
அசைநிலைக்கு இரண்டளவும், இசைநிறைக்கு இரண்டு முதல் நான்களவும் அடுக்கிக் கூறப்படும். உ-ம்.
() |அன்றேயன்றே அசைநிலை
(2) ஏயேயம்பன் மொழிந்தனள் யாயே
நல்குமேநல்குமே நல்குமே ராமகள் இசைநிறை பாடுகோபாடுகோபாடுகோபாடுகோ
சலசல, கலகல என்பவை முதலியன பிரியாது இரட்டைச் சொல்லாகவே நின்று பொருள்படுதலால், அடுக்கிய சொல்லல்ல.
தேர்வு வினாக்கள் - 404. அடுக்குத் தொடருள், ஒருசொல்லே அடுக்கிக் கூறப்படும்போது, எவ்வெவ்விடத்தில் எத்தனை எத்தனை அடுக்கிக் கூறப்படும்? இக்காரணங்களின்றி ஒருசொல் இங்ங்ணம் அடுக்கிக் கூறப்படுதல் இல்லையோ? சலசல, கலகல என்பவை முதலியன அடுக்கிய சொல்லல்லவோ?
சொல்லெச்சம்
405 சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒரு சொல் எஞ்சி நின்று வருவித் துரைக்கப்படுவதாம். உ-ம்.
பிறவிப் பொருங்கட னிந்துவர் நீந்தா ரிறைவ னடிசேரா தார் இதிலே சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப் படுதலாற் சொல்லெச்சம்.
தேர்வு வினா -405. சொல்லெச்சமாவது யாது?

தமிழ் இலக்கணம் - ஒழிபியல் 9 201
இசையெச்சம்
406. இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ் விடத்திற்கு ஏற்ப இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி நின்று வருவித்துரைக்கப்படுவதாம். உ-ம்.
"அந்தாமரையன்னமே நின்னையானகன்றாற்றுவனோ" இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சம். தேர்வு வினா - 406. இசையெச்சமாவது யாது?
ஒழிபியல் முற்றிற்று
தொடர்மொழியதிகாரம் முற்றுப் பெற்றது.
த.இ.-14

Page 104
பகுபதமுடிபு
பெயர்ப்பகுபதங்கள்
அவன் என்னுஞ் சுட்டுப்பொருட் பெயர்ப் பகுபதம், அ என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, இடையில் வகரமெய் தோன்றி, அம்மெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
தமன் என்னுங் கிளைப்பொருட் பெயர்ப் பகுபதம், தாம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதி யும் பெற்று, பகுதி முதல் குறுகி, இறுதி மகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது. w
பொன்னன் என்னும் பொருட் பெயர்ப் பகுபதம், பொன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று னகரமெய் இரட்டித்து, இரட்டித்த னகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
நிலத்தன் என்னும் இடப்பெயர்ப் பகுபதம், நிலம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே அத்துச்சாரியையும் பெற்று, பகுதியீற்று மகரமெய்யுஞ் சாரியையின் முதல் அகரமும் ஈற்று உகரமுங் கெட்டு, உகரங் கெட நின்ற மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
பிரபவன் என்னுங் காலப்பெயர்ப் பகுபதம், பிரபவம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால், விகுதியும் பெற்று, பகுதியீற்று அம் குறைந்து வகரமெய்யீறாக நின்று, அவ்வகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.

தமிழ் இலக்கணம் - பகுபதமுடிபு 9 203
திணிதோளன் . என்னுஞ் சினைப்பெயர்ப் பகுபதம், திணிதோள் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று ளகரமெய்யின்மேல் விகுதி அகவுயிரேறி முடிந்தது.
நல்லன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், நன்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மைவிகுதி கெட்டு நல்ல என நின்று, லகர மெய் இரட்டித்து, இரட்டித்த லகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
கரியன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், கருமை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மைவிகுதி கெட்டு, இடை உகரம் இகரமாகத் திரிந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
செய்யன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், செம்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், பெற்று பகுதியீற்று மைவிகுதி கெட்டு, இடை நின்ற மகர மெய் யகரமெய்யாகத் திரிந்து, அது இரட்டித்து, இரட்டித்த மெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
ஒதுவான் என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், ஒது என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே வகரவிடைநிலையும் பெற்று, இடைநிலை மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி, முடிந்தது. ஒதுதலுடையவன் என்பது பொருள்."
* ஒதுவான் என்பது எதிர்காலத் தெரிநிலைவினைமுற்றுப் பகுபதமாயின்; ஒது பகுதி, ஆன் விகுதி, வகரமெய் எதிர்காலவிடை நிலை. எதிர்காலவினையெச்சப்பகுபதமாயின், ஒது பகுதி; வான் எதிர்கால வினையெச்ச விகுதி.

Page 105
204 9 ஆறுமுகநாவலர்
நன்மை என்னும் பண்புப்பெயர்ப் பகுபதம், நல் என்னும் பகுதியும், மை என்னும் பண்புப் பெயர் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.
வருதல் என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், வா என்னும் பகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, பகுதி முதல் குறுகி ரகரவுகரம் விரிந்து முடிந்தது.
உடுக்கை என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், உடு என்னும் பகுதியும், கை என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, விகுதிக் ககரமிகுந்து, முடிந்தது.
உடுக்கை என்னுஞ் செயப்படு பொருட் பெயர்ப் பகுபதம், உடு என்னும் பகுதியும், ஐ என்னுஞ் செயப்படு பொருள் விகுதியும், அவைகளுக்கிடையே குச்சாரியையும் பெற்று, சாரியைக் ககரம் மிகுந்து. சாரியையீற்றுகரங் கெட்டு, உகரங்கெட நின்ற ககரவொற்றின்மேல் விகுதி ஐகாரவுயிரேறி, முடிந்தது.
எழுத்து என்னுஞ் செயப்படுபொருட் பெயர்ப் பகுபதம், எழுது என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயப்படுபொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டுக், கெட்டவிடத்துத் தகரமிரட்டித்து முடிந்தது.
ஊண் என்னுஞ் செயப்படுபொருட் பெயர்ப் பகுபதம், உண் என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயப்படு பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு, பகுதி முதல் நீண்டு, முடிந்தது.
காய் என்னும் வினைமுதற்பொருட் பெயர்ப் பகுபதம், காய் என்னும் பகுதியோடு இ என்னும் வினை முதற்பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது.

தமிழ் இலக்கணம் - பகுபதமுடிபு 9 205
வினைமுற்றுப் பகுபதங்கள்
உண்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் டகரவிடை நிலையும் பெற்று, இடைநிலை டகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
உண்கின்றான் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும் பெற்று, இடை நிலையீற்று உகரங் கெட்டு, உகரங் கெட நின்ற றகர மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
உண்ணுவான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும் வகரவிடைநிலையும், பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே உகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று ணகரமெய் இரட்டித்து, இரட்டித்த ணகர மெய்யின் மேற் சாரியை உகரமேறி, இடைநிலை வகர மெய்யின்மேல் விகுதி ஆகாரவுயிரேறி, முடிந்தது.*
நடந்தனன் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுந் தகரவிடை நிலையும், இடை நிலைக்கும் விகுதிக்கும் இடையே அன்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரமிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று * உண்ணுவான் என்பது எதிர்கால வினையெச்சப் பகுபதமாயின், உண் பகுதி, உ சாரியை, வான் எதிர்கால வினையெச்ச விகுதி.

Page 106
206 9 ஆறுமுகநாவலர்
மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர மெய்யின்மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியையீற்று னகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
வருகின்றனன் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், வா என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன் சாரியையும் பெற்று, பகுதி முதல் குறுகி, ரகரவுகரம் விரிந்து, இடைநிலையீற்று உகரங் கெட்டு, உகரங் கெடநின்ற றகரவொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியையீற்று னகர மெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
நடப்பான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினை முற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும் பகர விடைநிலையும் பெற்று, இடைநிலைப் பகரம் மிகுந்து, இடைநிலைப் பகரமெய்யின்மேல் விகுதி ஆகார வுயிரேறி முடிந்தது.
நடந்தது என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், து என்னும் ஒன்றன்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங்காட்டுந் தகர விடைநிலையும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அகரச்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர வல்லொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறி முடிந்தது.
நடப்பித்தான் என்னும் பிறவினைப் பகுபதம், நட என்னும் பகுதியும், பி என்னும் பிறவினை விகுதியும் பெற்று, விகுதிப் பகரமிகுந்து, அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், பகுதிக்கும் விகுதிக்கும்

தமிழ் இலக்கணம் - பகுபதமுடிபு * 207
இடையே இறந்தக்ாலங் காட்டுந் தகரவிடைநிலையும் பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, இடைநிலைத் தகர மெய்யின்மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
அடிக்கப்பட்டான் என்னுஞ் செயப்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும், அகரச்சாரியையும் பெற்று, சாரியைக் ககரம் மிகுந்து, சாரியையீற்று உகரங்கெட்டு, உகரங்கெட நின்ற ககர மெய்யின் மேலே சாரியை அகரவுயிரேறி, விகுதிப் பகர மிகுந்து, அடிக்கபபடு என அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, படு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய்யின் மேல் விகுதி ஆகாரருயிரேறி முடிந்தது.
நடவான் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினை முற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், ஆன் என்னும் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்மறை ஆகார விடைநிலையும் பெற்று, அவ்விடைநிலை (கெட்டு, வகர வுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின்மேல் விகுதி ஆகார வுயிரேறி முடிந்தது.
நடக்கின்றிலன் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் விகுதியும், அவைகளுக்கு இடையே கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும், இல் என்னும் எதிர் மறையிடை நிலையும் பெற்று, கின்றிடைநிலையின் ககரம் மிகுந்து, ஈற்றுகரங் கெட்டு, உகரங்கெட நின்ற றகர மெய்யின் மேல் எதிர்மறையிடைநிலை இகரமேறி, அவ்விடைநிலையீற்று லகர மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
எழுந்திட்டான் என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், எழு என்னும் பகுதியும், இடு

Page 107
208 9 ஆறுமுகநாவலர்
f
என்னும் பகுதிப்பொருள் விகுதியும், அவைகளுக்கு இடையே துச்சாரியையும் பெற்று, சாரியைத் தகர மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டுச் சாரியையீற்றுகரங் கெட்டு, உகரங் கெட நின்ற தகர மெய்யின் மேல் விகுதி இகரவுயிரேறி, எழுந்திடு என அனைத்தும் ஒரு பகுதியாக நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, இடு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய் இரட்டி உகரவுயிர் கெட்டு, உகரங்கெட நின்ற டகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
கழிந்தன்று என்னும் இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங் காட்டுந் தகரவிடை நிலையும், இடை நிலைக்கும் விகுதிக்கும் இடையே அன் என்னுஞ் சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரமிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர வல்லொற்றின்மேற் சாரியை அகரவுயிரேறி, முடிந்தது, கழிந்தது என்பது பொருள்.
கழிந்தின்று என்னும் எதிர்மறை இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுந் தகரவிடைநிலையும், அவ்விடை நிலைக்கும் விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறையிடைநிலையும் பெற்று, காலவிடைநிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகரமெய்யின் மேல் எதிர்மறையிடைநிலை இகரவுயிரேறி, இடைநிலையீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது. கழிந்திலது என்பது பொருள்.
கோடும் என்னும் எதிர்காலத் தெரிநிலைவினை முற்றுப் பகுபதம், கொள் என்னும் பகுதியும், தும் என்னுந்

தமிழ் இலக்கணம் - பகுபதமுடிபு 9 209
தன்மைப்பன்மை எதிர்கால விகுதியும் பெற்று, பகுதி முதல் நீண்டு, பகுதியீற்று ளகரங் கெட்டு, விகுதித் தகரம் டகர மாகத் திரிந்து முடிந்தது.
அற்று என்னுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும் பெற்று, விகுதி றகரவல்லொற்று மிகுந்து முடிந்தது.*
كسر அனையர் என்னுங் குறிப்பு வினை முற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும், அர் என்னும் பலர்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே னகரச்சாரியையும் ஐகாரச் சாரியையும் பெற்று, சாரியை னகரமெய்யின்மேற் சாரியை ஐகாரவுயிரேறி, யகரவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
இன்று என்னுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், இல் என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெடிாகத் திரிந்து முடிந்தது. *;
உணர்த்துகிற்பன் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உணர்த்து என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங்காட்டும் பகரவிடைநிலையும், பகுதிக்குங் காலவிடைநிலைக்கும் இடையே கில் என்னும் ஆற்றல் இடைநிலையும் பெற்று, ஆற்றலிடை நிலையீற்று லகரமெய் றகரமெய்யாகத் திரிந்து, இடைநிலைப் பகரத்தின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
செய் என்னும் முன்னிலை யேவலொருமை வினை முற்றுப் பகுபதம், செய் என்னும் பகுதியோடு ஆய் என்னும்
* அற்று என்பது இறந்தகால வினையெச்சப்பகுபதமாயின், அறு பகுதி; உகரமூர்ந்த றகரமெய் இரட்டித்து முடிந்தது எனக் கொள்க.

Page 108
210 9 ஆறுமுகநாவலர்
முன்னிலையேவல் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது.
பெயரெச்சப் பகுபதங்கள்
அடித்த என்னும் இறந்த காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும், அ என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலாங் காட்டுந் தகரவிடைநிலையும் பெற்று, இடைநிலைத்தகரம் மிகுந்து, இடைநிலைத் தகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
அடிக்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும், அ என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே கின்று என்னும் நிகழ்காலவிடைநிலையும் பெற்று, இடைநிலைக் ககரம் மிகுந்து, இடைநிலையீற்றுகரங் கெட்டு, உகரங் கெட, நின்ற றகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
அடிக்கும் என்னும் எதிர்காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும் பகுதியும் உம் என்னும் எதிர் காலப் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, சாரியைக் ககரம் மிகுந்து, சாரியையீற்றுகரங் கெட்டு, உகரங்கெட நின்ற ககரமெய்யின் மேல் விகுதி உகரவுயிரேறி முடிந்தது.
வினையெச்சப் பகுபதங்கள்
நின்று என்னும் இறந்தகால வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், உ என்னும் வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் றகரவிடை நிலையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் இடைநிலை றகர

தமிழ் இலக்கணம் - பகுபதமுடிபு 9 211
மெய்க்கு இனமாகிய னகரமெய்யாகத் திரிந்து, இடைநிலை றகரமெய்யின் மேல் விகுதி உகரவுயிரேறி முடிந்தது.
நிற்க என்னும் முக்காலத்திற்கும் உரிய வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், அ என்னும் வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் றகரமெய்யாகத் திரிந்து, சாரியை யீற்று உகரங் கெட்டு, உகரங்கெட நின்ற ககரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.*
நிற்கின் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், நில் என்னும் பகுதியும், இன் என்னும் எதிர்கால வினை யெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே குச்சாரியையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் றகர மெய்யாகத் திரிந்து, சாரியையீற்று உகரங் கெட்டு, உகரங் கெட நின்ற ககர மெய்யின் மேல் விகுதி இகரவுயிரேறி முடிந்தது.
தோன்றியக்கால் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், தோன்று என்னும் பகுதியும், கால் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவிைகளுக்கு இடையே இன் சாரியையும் அகரச் சாரியையும் பெற்று, பகுதியீற்று உகரங்கெட்டு, உகரங் கெட நின்ற றகர மெய்யின்மேற் சாரியை இகரவுயிரேறி, சாரியையீற்று னகரமெய் குறைந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின் மேற் சாரியை அகரவுயிரேறி, விகுதிக் ககரமிகுந்து முடிந்தது
நிற்க என்பது வியங்கோள்ஜினமுறிப்ப்குபதமாயின், நில் பகுதி, க வியங்கோள் விகுதி.

Page 109
212 9 ஆறுமுகநாவலர்
பின்வரும் பொதுப்பகுபதங்களை முடிக்க
சாவான்: () உடன்பாட்டுத் தெரிநிலை வினைமுற்று
(2) எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்று (3) எதிர்கால வினையெச்சம் செய்யாய்: ) () முன்னிலையேவரொருமை வினைமுற்று
(2) முன்னிலையொருமை யெதிர்மறை வினைமுற்று செய்யீர் () முன்னிலையேவற் பன்மை வினைமுற்று
(2) முன்னிலைப்பன்மை யெதிர்மறை வினைமுற்று தழைப்ப: (1) பலர்பாற் படர்க்கை வினைமுற்று
(2) பலவின்பாற் படர்க்கை வினைமுற்று (3) செயவெனெச்சம் அன்ன; () குறிப்பு வினைமுற்று
(2) குறிப்புவினைப் பெயரெச்சம் செவ்விய () குறிப்பு வினைமுற்று
(2) குறிப்புவினைப் பெயரெச்சம் வேட்கும். () எதிர்கால வினைமுற்று
(2) எதிர்காலப் பெயரெச்சம் வந்து: (1) தன்மையொருமை வினைமுற்று
(2) இறந்தகால வினையெச்சம் உண்டு: () தன்மையொருமை வினைமுற்று
(2) இறந்தகால வினையெச்சம் A. (3) அஃறிணையொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு
வினைமுற்று தேடிய: () இறந்தகால வினைமுற்று
(2) வியங்கோள் வினைமுற்று (3) இறந்தகாலப் பெயரெச்சம் (4) எதிர்கால வினையெச்சம்

தமிழ் இலக்கணம் - சொல்லிலக்கணங் கூறுதல் 0 213
சொல்லிலக்கணங் கூறுதல்
அவன் வந்தான்
அவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்; திரிபின்மையாகிய எழுவாயுரு பேற்றது; அது வந்தான் என்னும் வினைப்பயனிலை கொண்டது.
வந்தான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; அது அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையர்ய் நின்றது.
கொலை செய்தவன் நரகத்தில் வீழ்ந்து வருந்துவான்.
கொலை, எ-து. தொழிற்பெயர்; ஆக்கிப்படுபொருளில்
வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது செய்தவன் என்னும் வினை கொண்டது.
செய்தவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை வினையா லணையும் பெயர்; திரிபின்மையாகிய எழுவாயுருபேற்றது; அது வருந்துவான் என்னும் வினைப்பயனிலை கொண்டது.
நரகம். எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; பிறிதின்கிழமைப் பொருட்கு இடமிடமாக நிற்கும் இடப்பொருளில் வந்த இல் என்னும் ஏழனுருபேற்றது; அது வீழ்ந்து என்னும் வினை கொண்டது.
அத்து, எ-து. சாரியையுருபிடைச்சொல்.

Page 110
214 9 ஆறுமுகநாவலர்
வீழ்ந்து, எ-து. செய்தென் வாய்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவினை வினையெச்சம்; வருந்துவான் என்னும் வினை கொண்டது.
வருந்துவான். எ-து. உயர்திணையாண்பாலொருமை படர்க்கை யெதிர்கால உடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; செய்தவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.
கொற்றனானவன் தன்னை யெதிர்த்த பகைவரை வாளான்மாய வெட்டினான்.
கொற்றன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப்பெயர், ஆனவன் என்னும் எழுவாய்ச் சொல்லு ருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினைப்பயனிலை கொண்டது.
தான், எ-து. ஒருமைப்படர்க்கைப் பொதுப்பெயர்; அடையப்படுபொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுரு பேற்றது; அது எதிர்த்த என்னும் வினை கொண்டது.
எதிர்த்த, எ-து. செய்தவென்வாய்பாட்டிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலைவினைப் பெயரெச்சம்; பகைவர் என்னும் வினைமுதற்பெயர் கொண்டது.
பகைவர், எ-து. உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயர்; அழிக்கப்படுபொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.
வாள், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; கருவிப்பொருளில் வந்த ஆல் என்னும் மூன்றனுரு பேற்றது; அது வெட்டினான் என்னும் வினை கொண்டது.

தமிழ் இலக்கணம் - சொற்றொடரிலக்கணங் கூறுதல் 9 215
மாய, எ-து. செயவென்வாய்பாட்டு முக்காலத்திற்கு முரிய தெரிநிலைவினை வினையெச்சம்; இங்கே காரியப் பொருளில் வந்தமையால் எதிர்காலத்தது; வெட்டினான் என்னும் வினை கொண்டது.
வெட்டினான், எ-து. உயர்திணையாண்பாலொருமை படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; கொற்றன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.
சொற்றொடரிலக்கணங் கூறுதல்
அவன் வந்தான் - அல்வழிச்சந்தியில் எழுவாய்த் தொடர்.
கொலை செய்தவன் - வேற்றுமைச் சந்தியில் இரண்டாம் வேற்றுமைத் தொகை
செய்தவன் நரகத்தில் - அல்வழிச் சிந்தியில் தழாத் தொடராகிய எழுவாய்த்தொடர்.
நரகத்தில் வீழ்ந்து வேற்றுமைச் சந்தியில் ஏழாம் வேற்றுமை விரி
வீழ்ந்து வருந்துவான் - அல்வழிச்சந்தியில் வினை யெச்சத்தொடர்.
தழாத்தொடராவது நிலைமொழியானது வரு மொழியைப் பொருட்பொருத்தமுறத் தழுவாத தொடர். பொருட்பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவுதொடர்.
தமிழ் இலக்கணம் முற்றுப் பெற்றது.

Page 111
ஆறுமுக நாவலர்
யாழ்ப்பாணத்துத் தமிழறிஞருள் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் ஆறுமுக நாவலர் (கி.பி. 1822-1889). அவர் சிலகாலம் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் தங்கித் தமிழ்த் தொண்டு செய்ததும் உண்டு. சைவ சமயப் பற்று மிகுந்த அவர், பெரிய புராணம் முதலான நூல்கள் பரவுவதற்குப் பெரும் பணி புரிந்தார். சென்ற நூற்றாண்டில் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் வல்லவராக விளங்கினார். பைபிலின் தமிழ் மொழி பெயர்ப்புக்குப் பெருந்துணையாக இருந்து செம்மைப் படுத்தியவர் என்பர். பலர் தமிழ் நூல்கள் படிக்குமாறு iy f7" «FfT g63) 63) ஏற்படுத்தியதோடு, அவர்களுக்குத் தேவையான பாட நூல்களை அச்சிட்டுத் தருவதற்கு அச்சகமும் வைத்து நடத்தினார். அவற்றை நடத்துவதற்கு ஆகும் பணத்திற்கு வீடு வீடாகச் சென்று அரிசிப்பிச்சை, எடுத்துத் தமிழ்த் தொண்டு செய்த சான்றோர் அவர். தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் நூல்களை அச்சிட்டுத் தரும் வகையில் சிறந்த வழிகாட்டியாக விளங்கினார். மாணவர்களுக்கு உரிய தொடக்கப் பாடப் புத்தகங்களை எளிய தமிழில் - இலக்கணப் பிழை அற்ற தமிழில் - தாமே எழுதினார். சைவ சமயத்தை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினார். இலக்கணத்தை எளிதில் கற்பதற்கு உதவும் நூல்களும் எழுதினார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய செய்யுள் நூல்களை உரைநடையில் எழுதிப் பலர்க்கும் பயன்படுமாறு செய்தார். வேறு சில செய்யுள் நூல்களுக்கும் நன்னூலுக்கும் உரை எழுதினார். சென்ற நூற்றாண்டில் தமிழில் உரைநடை வளர்ச்சிபெறத் தொடங்கிய சூழ்நிலையில், அதற்கு நல்ல வழிகாட்டிப் பிழையற்ற எளிய உரைநடைத் தமிழை வளர்த்தார். தமிழ் உரைநடையின் தந்தை என்று அவரைக் குறிப்பிட்டுப் போற்றுதல் தகும். நன்றி : மு.வ.வின் தமிழ் இலக்கிய வரலாறு


Page 112


Page 113
எமது நரல்கள் நந்திக் கலம்பகம் பழமொழி நானூறு நன்னூல் காண்டிகையுரை தொல்காப்பியம் எழுத்து இளம்பூ நாலடியார் முத்தொள்ளாயிரம் காளமேகம் தனிப்பாடல்கள் ஒளவையார் தனிப்பாடல்கள் பாஞ்சாலி சபதம் கைவல்ய நவநீதம் செல்வப்பெட்டகம் டாக்டர் அம்பேத்கர்
அருட்சுடர் வள்ளலார்
டாக்டர் இராதாகிருஷ்ணன் குயிற்பாட்டும் புரட்சிக்கவியும் புத்தர் போதனைகள் நாலாயிரம் பழமொழிகள் தில்லைத் திருநடனம் கண்ணனின் காதல் ஓவியம் தமிழ்ச் சான்றோர்கள் அஷ்டபிரபந்தம்
sis TLL
కొపాడి
முல்லை நிலையம்
43, புதுத்தெரு, மண்ணடி, சென்னை- 500 001.
 

täTlf